text
stringlengths
328
398k
KineMaster என்று சொல்லக்கூடிய இந்த செயலியை KineMaster Corporation என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலி 2013 டிசம்பர் 26 ஆம் நாள் கூகுள் ப்ளே ஸ்டோரில் KineMaster Corporation நிறுவனம் வெளியிட்டது. இதுவரை இந்த செயலியை 10,00,00,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலியை நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் 75.78 எம்பிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலிக்கு ப்ளே ஸ்டோரில் இதுவரை 5 க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த செயலியின் பயன்கள் கீழே பார்க்கலாம். COMPARED TO PC SOFTWARES கணினியில் உங்களது வீடியோக்களை எடிட் செய்வதற்கு Adobe premiere Pro மிகப்பெரிய மென்பொருளாக உள்ளது. அதைப்போன்று மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு முதலிடத்தில் உள்ள செயலி Kinemaster. இதை யாராலும் மறுக்க முடியாது. பிரீமியர் புரோவிலுள்ள அனைத்து அம்சங்களும் இந்த Kinemaster உள்ளது. எனவே மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு இந்த செயலி மிக சிறந்த ஒன்றாக உள்ளது. HOW TO USE THIS BLACK SCREEN EFFECT இந்த வீடியோ விளைவைக் கொண்டு உங்கள் வீடியோ அல்லது புகைப்படங்களை மேலும் அழகாக வடிவமைக்க இந்த விளைவு உதவுகிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்று கூறுகிறேன். உங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோவில் மேல் இந்த விளைவை வைத்துவிட்டு வீடியோவை தேர்வு செய்த பின்னர் பிலண்டிங் என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும். அதில் ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும் பின்னர் உங்களது வீடியோ அந்த விளைவுடன் சேர்ந்து விடும். HOW TO USE THIS GREEN SCREEN EFFECT இந்த விளைவை கொண்டு உங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அழகாக மாற்ற முடியும். இந்த விளைவில் பல வகையான வடிவங்கள் உள்ளது. இதை எப்படி பயன்படுத்துவது என்று கூறுகிறேன். உங்களது புகைப்படத்தின் மேல் விளைவு வீடியோவை வைத்துவிட்டு குரோமோ கீ என்ற ஒரு ஆப்சன் இருக்கும் அதை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் விளைவில் உள்ள அனைத்தும் உங்களது புகைப்படத்தின் மேல் சேர்ந்துவிடும். HOW TO USE THIS INTRO TEMPLATE இந்த டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உங்களது இன்ட்ரோ வீடியோ உருவாக்க முடியும். இதில் உங்களது லோகோ மற்றும் டெக்ஸ்ட் மட்டும் சேர்த்து ஒரு இன்ட்ரோ வீடியோ உருவாக்கிக்கொள்ள முடியும். இதை மொபைல் மூலம் உருவாக்க முடியும் என்பது தனிச்சிறப்பு எனலாம். இந்த டெம்ப்ளேட்டை கையாள்வது மிகவும் எளிமையான ஒன்று. எனவே அனைவரும் இதை பயன்படுத்தி உங்களது யூட்யூப் சேனலுக்கான இன்ட்ரோ வீடியோ உருவாக்கிக்கொள்ள முடியும். KINEMASTER PREMIUM FEATURES MULTIPLE LAYERS KineMaster அப்ளிகேஷனில் உங்களது விருப்பமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ஒன்றன் பின் ஒன்றாக add செய்து உங்களால் எடிட் செய்ய முடியும். பல செயலிகள் இருந்தாலும் இந்த சிறப்பம்சம் Kinemaster அப்ளிகேஷனில் மட்டுமே உள்ளது. இதனால் உங்களது விருப்பமான வீடியோக்களை சரியாக எடிட் செய்துகொள்ள முடியும். BLENDING MODE கூகுள் ப்ளே ஸ்டோரில் வீடியோ எடிட் செய்வதற்காக பல செயலிகள் உள்ளது. ஆனால் அவற்றை எதிலுமே இந்த ப்லண்டிங் ஆப்ஷன் கிடையாது. இந்த செயலில் மட்டுமே உள்ளது. இந்த ப்லண்டிங் ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது விருப்பமான வீடியோ மற்றும் புகைப்படங்களை ஒன்றாக இணைக்க முடியும். CHROMA KEY வீடியோவின் பேக்ரவுண்ட் ஐ அளிக்க இந்த chroma key ஆப்ஷன் பயன்படுகிறது. வீடியோவின் பேக்ரவுண்ட் ஒரே கலராக இருந்தாள் சுலபமாக அளிக்கமுடியும். உதாரணமாக வீடியோவின் பேக்ரவுண்ட் பச்சை நிறத்தில் இருந்தால் ரிமூவ் செய்வதற்கு எளிதாக இருக்கும். வீடியோவில் கலர் எது என்று தெரிந்து கொண்டு ரிமூவ் செய்யும்போது கீ கலர் அதே கலராக செலக்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் வீடியோவின் பின்புற பேக்ரவுண்ட் ரிமூவ் செய்ய முடியும். VOICE RECORDING வீடியோவை எடிட் செய்யும்போது தேவையான இடத்தில் உங்களது குரலை பதிவு செய்ய இந்த செயலியில் அதற்கான அம்சமும் உள்ளது. குரலைப் பதிவு செய்வதற்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் பல செயலிகள் உள்ளது இருப்பினும் உங்களது வீடியோக்களை நீங்கள் எடிட் செய்யும்போதே வாய்ஸ் ரெக்கார்ட் செய்வதற்கு இந்த செயலியில் அம்சம் உள்ளது. HANDWRITING இந்த அம்சம் மூலம் உங்களது வீடியோக்களில் தேவையான இடத்தில் சில குறியீடுகளை அமைக்க முடியும். இதனால் உங்களது வீடியோக்களை பார்க்கும் பார்வையாளர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது குறியீடு மூலம் காட்டும்போது அவர்களுக்கு எளிதாக புரியும். VOICE CHANGER உங்களது உண்மையான குரலை மாற்றவும் அல்லது வீடியோவில் உள்ள பிற குரலை வேறு குரலாக மாற்ற இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. உதாரணமாக உங்களது குரலை ரோபோட் பேசினால் எப்படி இருக்கும் அதுபோன்று மாற்றவும் இந்த செயலியில் அம்சங்கள் உள்ளது. EQ MODES ஆடியோவில் பல விளைவுகளை ஏற்படுத்த இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது ஆடியோ கேட்பதற்கு தெளிவாகவும் அந்த ஆடியோவை கேட்டுக்கொண்டே இருக்க செய்ய பல ஆப்ஷன்ஸ் இதற்குள் உள்ளது. உதாரணமாக கூறினால் ராக் கிளாசிக் போக் இதுபோன்ற ஆடியோ பில்டர்ஸ் இதில் உள்ளது. இதை பயன்படுத்தும் போது உங்களது ஆடியோ கேட்க இனிமையாக இருக்கும். PREMIUM COLOUR FILTER வீடியோ மற்றும் புகைப்படங்களில் கலரை பிடித்த மாறி மாற்றிக்கொள்ள இந்த கலர் பில்டர் ஆப்ஷன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது வீடியோ மற்றும் புகைப்படத்தின் கலரை மாற்றுவதன் மூலம் அதன் தோற்றம் அழகாக இருக்கும். இதை பயன்படுத்திப் பார்த்தால் மட்டுமே அதன் அனுபவம் உங்களுக்கு தெரியும். EXPORT QUALITY இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் எடிட் செய்யும் வீடியோக்களை 4K 60fps வரை அவுட்புட் எடுத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் உங்களது வீடியோக்களை பார்க்க தெளிவாக இருக்கும். பார்ப்பவர்களுக்கு வீடியோவில் உள்ள தகவல்களை எளிதாக புரிந்து கொள்ள முடியும். இதில் உங்களுக்குப் பிடித்த பார்மட்டில் வீடியோக்களை மாற்றிக் கொள்ளவும் முடியும். உதாரணமாக உங்களுக்கு 720p 30fps வரை போதும் என்றால் அந்த அளவுக்கு உங்களது வீடியோக்களை அவுட்புட் எடுத்துக்கொள்ளலாம். SPEED CONTROL உங்களது வீடியோக்களை வேகமாக மற்றும் மெதுவாக இயக்க இந்த ஸ்பீட் கண்ட்ரோல் ஆப்சன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது வீடியோவை தேவையான இடத்தில் வேகமாக இயக்கவும் அல்லது மெதுவாக இயக்கவும் முடியும். இதை பயன்படுத்தி எடிட் செய்யும்போது பார்வையாளர்களை கவர்ந்து இழுக்க முடியும். ஏனென்றால் வேகமாக நடக்கும் நிகழ்ச்சியை மெதுவாக பார்க்கும் அனுபவம் புதிதாக இருக்கும். இதை நீங்கள் பயன்படுத்தி பார்த்தால் மட்டுமே இந்த அம்சத்தின் சிறப்பை நீங்கள் உணர முடியும். VIDEO REVERSE MODE ஒரு நிகழ்வை தொடக்கத்திலிருந்து பார்க்காமல் கடைசியிலிருந்து முதல் பகுதிக்கு மாற்றி பார்க்க இந்த ரிவர்ஸ் ஆப்சன் பயன்படுகிறது. உதாரணமாக உங்களுக்குப் புரியும் படி கூறினாள் ஒரு மிதிவண்டி சென்றுகொண்டிருக்கிறது அதை அப்படியே பின்புறமாக வரச்செய்யுவும் மற்றும் பழையபடியே அதை செயல்படுத்தவும் பயன்படும் ஆப்ஷன் வீடியோ ரிவர்ஸ் மூடு ஆகும். THREE TYPE OF VIDEO RATIO உங்களது வீடியோக்களை உங்களுக்கு பிடித்த பார்மெட்டில் எடிட் செய்ய இந்த செயலியில் அம்சங்கள் உள்ளது. உதாரணமாக கூறினால் வாட்ஸ்அப் ஃபுல் ஸ்க்ரீன் வீடியோ சைஸில் எடிட் செய்யவும் யூடியூப் வீடியோ சைஸில் எடிட் செய்யவும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் சைஸில் வீடியோ எடிட் செய்யவும் இதில் ஆப்ஷன்ஸ் உள்ளது. இதை பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த வடிவத்தில் உங்களது வீடியோக்களை எடிட் செய்ய முடியும். CLIP GRAPHICS இந்த ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது வீடியோக்களில் நடுவில் புதிய விளைவுகளை ஏற்படுத்த முடியும். உதாரணமாக கூறினால் ஒரு வீடியோவை நடுவில் இரண்டாக கட் செய்திருந்தால் அந்த இடத்தில் ஒரு புதிய எபெக்ட்ஸ் கொடுக்க முடியும். இதன் மூலம் ஒரு வீடியோவில் இருந்து மற்றொரு வீடியோவிற்கு மாறும்பொழுது நீங்கள் ஏற்படுத்திய எபெக்ட்ஸ் நடுவில் இருக்கும். அப்பொழுது அந்த வீடியோவை பார்க்க அழகாக இருக்கும். ஏனெனில் ஒரு வீடியோவில் இருந்து மற்றொரு வீடியோ மாறும்போது நீங்கள் ஏற்படுத்திய விளைவு அந்த வீடியோவை அழகாக்கும். ROTATE AND MIRRORING OPTION வீடியோ மற்றும் புகைப்படங்களை உங்களுக்கு ஏற்றார்போல் ஏற்ற திசைக்கு மாற்றிக்கொள்ள இந்த ரோட்டைட் அண்ட் மிரர் ஆப்சன் பயன்படுகிறது. உதாரணமாக கூறினால் உங்களது வீடியோ கிழக்கு திசையை பார்த்து இருந்தால் அதை மேற்கு மற்றும் உங்களுக்கு பிடித்த திசையில் மாற்றிக்கொள்ள இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. இதை உங்கள் பிச்சர் மற்றும் வீடியோவில் பயன்படுத்திக் கொள்ளலாம். COLOUR ADJUSTMENT உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களில் கலர் வெளிச்சம் கம்மியாக இருந்தால் உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்க்கும்போது ஒரு தெளிவு இருக்காது. அப்படி இருக்கும் உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களை இந்த கலர் அட்ஜஸ்ட்மெண்ட் ஆப்ஷனை பயன்படுத்தி தேவையான இடத்தில் காண்ட்ராஸ்ட் லெவல் பிரைட்னஸ் அட்ஜஸ்ட் செய்யும் போது பார்க்க ஒரு அளவுக்கு தெளிவாகவும் அழகாகவும் மாற்ற இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. எனவே தெளிவில்லாத மற்றும் மங்கலாக இருக்கும் பிச்சர் மற்றும் வீடியோக்களில் இந்த ஆப்ஷனை பயன்படுத்தினால் பார்க்க ஓரளவு நன்றாக இருக்கும். VOLUME ENVELOPE இந்த ஆப்ஷன் Kinemaster அப்ளிகேஷன் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல உதவியது எனலாம். ஏனெனில் இந்த ஆப்சன் கணினியில் எடிட் செய்வதற்கு மட்டுமே உள்ளது. ஆண்ட்ராய்டு செயலியில் அரிதாக காணலாம். அது இந்த இந்த செயலிலும் உள்ளது. இதன்மூலம் உங்களது வீடியோ மற்றும் ஆடியோவில் தேவையான இடத்தில் வால்யூம் அதிகப்படுத்தவும் தேவையற்ற இடத்தில் வால்யூம் முழுமையாக குறைக்கவும் முடியும். VIGNETTE MODE இதைப் பயன்படுத்தி வீடியோ மற்றும் பிச்சர் இன் கரையில் கருநீல ஷேடோ ஏற்படுத்தமுடியும். இதனால் நடுவிலுள்ள அனைத்தும் தெளிவாக பார்க்க முடியும். இதற்காக இந்த ஆப்ஷன் பயன்படுத்துகிறோம். இது வீடியோவை தனித்துவமாக காட்ட உதவுகிறது. நீங்கள் எடிட் செய்ய விரும்பும் போது இதை ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள் இதன் சிறப்பம்சம் உங்களுக்கு புரியும். EXTRACT AUDIO இதுவும் ஒரு சிறந்த அம்சம் எனக் கூறலாம் இந்த செயலியில் ஏனெனில் வீடியோ எடிட் செய்யும் போது அந்த வீடியோவுக்காண பாடல் உங்களிடம் இல்லை என்றாலும் அந்த ஆடியோ விற்கான வீடியோ உங்களிடம் இருந்தால் அந்த வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரித்தெடுக்க முடியும் எடுத்துவிட்டு நமக்குத் தேவையில்லாத வீடியோவை டெலிட் செய்து கொள்ளலாம். நீங்கள் பாடல் டவுன்லோட் செய்யாமலே உங்களுக்கு தேவையான பாடலை தனியாக எடுத்துக்கொள்ள இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. TRIM AND SPLIT OPTION வீடியோ ஆடியோ மற்றும் புகைப்படங்களை தேவையில்லாத இடத்தை வெட்ட இந்த ட்ரிப் அண்ட் ஸ்பிளிட் ஆப்ஷன் பயன்படுகிறது. இந்த ஆப்ஷன்ஸ் சிறப்பாக செயல்படுகிறது. ஏனெனில் கூகுள் ப்ளே ஸ்டோரில் வீடியோ எடிட் செய்வதற்கான செயலிகள் பல உள்ளது. அவற்றை ஒப்பிடும்போது இந்த செயலியில் நாம் விரும்பும் இடத்தை சரியான இடத்தில் வெட்டி மற்றொரு இடத்தை சேர்க்கவும் முடியும். PAN AND ZOOM இந்த ஆப்ஷன் மூலம் உங்களது வீடியோக்களை பார்வையாளர்களுக்கு மிக அருகாமையில் காட்ட இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. உதாரணமாக கூறினால் மிக பின்புறத்தில் உள்ள ஒரு சப்ஜெக்ட்டை மிக அருகாமையில் அதாவது திரைக்கு முன்பாக மிக அருகே கொண்டுவர இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. PREMIUM TEXT இந்தச் செயலியில் அளவுக்கு அதிகமான அகராதிகள் உள்ளது. உங்களுக்கு பிடித்த மொழியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். Kinemaster asset Store ல் உங்களுக்கு தமிழ்மொழி தேவை என்றால் தமிழ் மொழியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த செயலியில் டிபால்ட் ஆக ஆங்கில அகராதிகள் உள்ளது. இதை நீங்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். OVERLAY AND STICKERS வீடியோ மற்றும் புகைப்படங்களை மேலும் அழகாக்க இந்த ஓவர்லே அண்ட் ஸ்டிக்கர்ஸ் ஆப்ஷன்ஸ் பயன்படுகிறது. உதாரணமாக கூறினால் உங்களது வீடியோவில் தீப்பொறி பறப்பதுபோல் விளைவை ஏற்படுத்தலாம் மற்றும் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதுபோல் விளைவும் ஏற்படுத்த முடியும். இதுவே ஓவர்லே அண்ட் ஸ்டிகர்ஸ் ஆப்ஷன் ஆகும். SPECIAL EFFECTS இதிலும் ஓவர்லே அண்ட் ஸ்டிக்கர்ஸ் ஆப்ஷனை போன்று உங்களுக்குப் பிடித்த விளைவுகளை உங்களது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த ஆப்ஷனை வீடியோ மற்றும் புகைப்படங்களில் குறிப்பிட்ட இடத்தில் சரியாக பயன்படுத்த முடியும் தேவையில்லாத இடத்தில் அதை நிறுத்திக் கொள்ளவும் முடியும். இதன் மூலம் உங்களது வீடியோ மற்றவர்கள் வீடியோவிலிருந்து தனித்துவமாக தெரியும். ANIMATION AND TRANSITION EFFECTS எழுத்துக்களில் விளைவுகளை ஏற்படுத்த அனிமேஷன் எபெக்ட்ஸ் பயன்படுகிறது. Transition புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் விளைவுகளை ஏற்படுத்த உதவுகிறது. இதில் தொடக்கத்தில் ஒரு அனிமேஷன் ஆப்ஷனை பயன்படுத்த முடியும் முடிவில் ஒரு ஆப்ஷனை பயன்படுத்த முடியும். தெளிவாகக் கூறினால் ஒரு எழுத்துக்களின் தொடக்கத்தில் ஒரு விளைவையும் அந்த எழுத்து மறையும் பொழுது ஒரு விளைவையும் கொடுக்க முடியும். KINEMASTER TIPS: WHY DO I HAVE IMAGE INSERT OF MEDIA ? இந்த செயலியில் லேயர் ஆப்ஷனில் மீடியாவிற்கு பதிலாக இமேஜ் என்று இருந்தால் வீடியோக்களை பயன்படுத்த முடியாது. அதை எப்படி மீடியா என மாற்றுவது என்று கூறுகிறேன். Kinemaster அப்ளிகேஷனை ஓபன் செய்ததும் ரேஷியோ செலக்ட் செய்வதற்கு கீழ் ஒரு கியர் ஐகான் இருக்கும். அதை கிளிக் செய்த பிறகு பல ஆப்ஷன்ஸ் அதில் வரும் அவற்றில் மூன்றாவதாக DEVICE CAPABILITY INFORMATION என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்த பிறகு உங்கள் மொபைலை பற்றிய விவரங்கள் அதில் கூறப்பட்டிருக்கும். அதன்பிறகு மேலே மூன்று புள்ளிகள் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள் செய்தபிறகு RUN ANALYSIS NOW என்று வரும் அதை கிளிக் செய்யுங்கள் செய்தபிறகு இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் அது பிராசசிங் ஆகும். அதுவரை வேறு எந்த ஒரு செயலிக்கும் நீங்கள் செல்லக்கூடாது. இது நீங்கள் செய்தபிறகு அப்ளிகேஷனை ஓபன் செய்து பாருங்கள் லேயரில் இமேஜ் என்று இருந்தால் அது மீடியாவாக மாற வாய்ப்பு உள்ளது. இந்த முறையைப் பயன்படுத்தி அனைவருக்கும் மாறும் என்றால் அது கிடையாது உங்களது மொபைலின் process ஐ பொருத்து மாறக்கூடும்.
Sakshi Agarwal – 22 November 2022 – சாக்ஷி அகர்வால் ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் திரைப் படங்களில் தோன்றினார். அவர் நடிகர் சூர்யாவுடன் மலபார் கோல்டின் விளம்பரத்தில் நடித்திருந்தார். பின்னர் நடிகையாக அவதாரம் எடுக்க சாக்க்ஷி ஜனவரி 2013 இல் தனது வேலையை விட்டு விலகினார். அகர்வால் பின்பு ஜில்லினு ஒரு கலவரம் என்ற வீடியோ ஆல்பத்தில் நடித்தார். அவர் தனது முதல் தமிழ் திரைப்படத்தில் 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ராஜா ராணியில் கௌரவ தோற்றத்தில் நடித்தார். தொடர்ந்து நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிக பிரபலமடைந்த இவர், தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.8 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள சாக்க்ஷி , சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்களின் தொகுப்பு. View this post on Instagram A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) Tags: Bigg Boss Tamil 6 Naan Kadavul Illai Sakshi Agarwal Share on Share on Facebook Share on Twitter Share on Pinterest Share on WhatsApp Share on WhatsApp Share on Linkedin Share on Tumblr Share on Reddit
இலங்கை –சீன உறவுகள் சாதகமான நிலையில் ஆரோக்கியமான முறையில் வளர்ச்சியடைந்து வருவதாகவும், தலைமுறைகளைக் கடந்து நிற்கும் இலங்கையுடனான பாரம்பரிய நட்புறவை முன்ன கர்த்துவதற்கு சீனா பணியாற்றும் என்று சீன பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இருநாடுகளும் உயர்மட்ட தொடர்புகள் மற்றும் அரசியல் தொடர்பாடல்களை பேணி வருவதாகவும், பரஸ்பரம் கரிசனைக்குரிய விவகாரங்களில் இருநாடுகளும் ஒன்றுக்கொன்று ஆதரவு அளித்து வருவதாகவும் சீன அதிபர் கூறினார். அணை மற்றும் சாலை கட்டுமானத் திட்டத்துக்கு இலங்கை ஆதரவளிப்பதற்கு சீனாவின் சார்பில் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். வர்த்தகம், துறைமுக இயக்கம், உட்கட்டமைப்பு கட்டுமானங்கள். துறைமுகங்களை அண்டிய கைத்தொழில் பூங்காக்கள், உற்பத்தி ஆற்றல் மற்றும் வாழ்வாதார துறைகளில் இருநாடுகளுக்கும் இடையில் ஆழமான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் சீன அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பு துறைமுக நகரம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற பாரிய கூட்டுத் திட்டங்களை இருதரப்புகளும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். சுற்றுலா, சமுத்திரம், பாதுகாப்பு, மற்றும் அனர்த்த தயார் நிலை, மற்றும் குடிவரவு ஆகிய துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவாக்குவதற்கும் அவர் பரிந்துரைத்துள்ளார். அத்துடன் அனைத்துலக மற்றும் பிராந்திய விவகாரங்களில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் சீன அதிபர் கோரிக்கை விடுத்தார். இந்தச் சந்திப்பின் போது, கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, மைத்திரிபால சிறிசேன, இலங்கையின் அபிவிருத்திக்கும், அனைத்துலக அரங்கிலும் இலங்கைக்கு சீனா அளித்து வரும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார். பாரிய திட்டங்கள் உள்ளிட்ட சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட பொருளாதார மற்றும் வர்த்தக உடன்பாடுகளை துரிதமாக நடை முறைப்படுத்துவதற்கும் ஜனாதிபதி விருப்பம் வெளியிட்டார்.இலங்கையில் சீன தொழிற்துறையினரின் முதலீடுகளையும் அவர் வரவேற்றுள்ளார். கோவாவில் நடைபெறும் எட்டாவது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கும், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்றிரவு இருதரப்புப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. இந்தியா கோவாவில் பிரிக்ஸ் மாநாடு துவக்கம் கோவாவில் இன்று நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம், பிரதமர் மோடி, தீவிரவாதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பிரிக்ஸ் நாடுகளின் 2 நாள் மாநாடு இன்று பனாஜி நகரில் தொடங்குகிறது. இதில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் விதமாக ரஷிய, சீன அதிபர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளைக் கொண்ட அமைப்பு 'பிரிக்ஸ்' ஆகும். இதன் உச்சி மாநாடு ஆண்டுதோறும் ஒவ்வொரு நாட்டில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு மாநாடு ரஷியாவின் உபா நகரில் நடந்தது. இந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாடு இந்தியாவின் கோவா மாநிலத் தலைநகரான பனாஜி நகரில் இன்றும், நாளையும் நடக்கிறது. முதல் நாளில் பிரிக்ஸ் மற்றும் இந்தியா, வங்காளதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் அடங்கிய வங்கக் கடல் பகுதியில் பல்துறை தொழில் நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான 'பிம்ஸ்டெக்' அமைப்பு மாநாடு நடக்கிறது. இதில் இந்த நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதைத்தொடர்ந்து பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்தியத் தலைமையின் கீழ் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமீர் புதின், சீன அதிபர் ஜின்பிங், பிரேசில் ஜனாதிபதி மைக்கேல் தெமர், தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா ஆகியோர் பங்கேற்கின்றனர். பிரிக்ஸ் மாநாட்டின் இடையே புதின், ஷின்பிங் ஆகியோரை மோடி சந்தித்து இருநாடுகள் உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது காஷ்மீரின் உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது பற்றி மோடி எடுத்துக் கூறி பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதற்கும் முயற்சி மேற்கொள்கிறார். மேலும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் மற்றும் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் அவர் வற்புறுத்துவார். பாகிஸ்தான் சேட்டைகள் செய்தால், இந்தியா பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது, பதிலடி கொடுத்தே தீரும் என்று ஜின்பிங்கிடம், மோடி தெரிவிக்க உள்ளார். இவ்விரு தலைவர்களும் மாலை 5.40 மணியளவில் சந்திக்க உள்ளதாகவும், சீன அதிபர் மதியம் 1.10 மணிக்கு இந்தியா வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Retinitis Pigmentosa, Macular Degeneration, Corneal dystrophies மற்றும் பல நோய்கள் மரபணு குறைபாடுகளால் ஏற்படுகின்றது. இதில் முதன்மையானது மாலைக் கண்நொய் (Retinitis Pigmentosa), இந்தியாவில் 100-க்கு ஒருவர் இதை சுமந்து கொண்டும் இருக்கிறார்கள். ​ மரபணுவினால் ஒன்றுக்கும் மேற்படி கண் நோய்கள் கோர்வையாகி ஏற்படுவது மாலைக்கண்நொய் ஆகும். இந்நோய் உள்ளவருக்கு மாலையில் மட்டும் கண் பார்வை இருக்காது என்ற கூற்று பொய்யானது. மேலும் வெளிச்சம் குறைவான இடங்களிலும் கண் பார்வை இருக்காது. இந்த நோய் உடல் சார்ந்த மரபுக்கடத்தல் எனும் கருவிழியை பாதிக்கும் 60 வகையான GENE மூலமாக வேறுபடுவதால் நோயின் தன்மை, வீரியம், வேகம் மனிதன் வித்தியாசப்படுகின்றது. பார்வை குறைபாட்டை குழந்தை பிறந்தவுடன் அல்லது வளர்ச்சியின் நடுவில் கண்டுபிடித்தால் எந்த மரபணு குறைபாட்டால் வந்தது என்பதை Genetic testing மூலம் அறிந்து கொள்ளலாம். இந்நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்தால் நோயின் தன்மைக்கேற்ப Sujok needle - களை கண்களைச் சுற்றி மற்றும் உடலில் உள்ள அக்குபுள்ளிகளிலும் குத்தி தொடர் வைத்தியம் செய்வதன் மூலம் நோயை முழுவதுமாக குணப்படுத்திவிடலாம்.
மனிதர்களின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூங்குவதில் செலவிடுகின்றனர், சராசரியாக ஒரு மனிதர் 60 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்கிறார் என வைத்துக்கொண்டால் 20 வருடங்கள் உறக்கத்தில் கழிகிறது. குறட்டை என்பது நாம் தூங்கும் போது, நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்று ஓய்வுக்கு உள்ளாகும் வகையில் தளர்ந்து விடும். நாக்கு, மேலண்ணம், தொண்டை சதை, மூக்கின் பின் பகுதி சதை இவை இறுக்கம் தளர்ந்து ஓய்வெடுத்துக் கொள்கின்றன. இந்த தளர்ச்சியால், இவை சுவாசக்குழாயை அழுத்துகின்றன. சுவாசக்குழாய் இதனால் சுருங்கி இருக்கும் போது வரும் காற்று சிறிது கஷ்டப்பட்டு தான் அதை கடக்க வேண்டி வரும். மூச்சுக் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது. மூச்சு வெளியேறும் போது இந்த அடைப்பை மீறி காற்று வெளியேறுவதால், விதவிதமான ஒலிகளை எழுப்புகிறது. இது தான் குறட்டைச் சத்தமாக நமக்கு கேட்கிறது. இந்தப் பாழும் குறட்டையினால் பல தம்பதிகள் விவாகரத்து வரை போய் விடுகின்றனர். குறட்டை பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு முடிவு : மனிதர்கள் விடும் குறட்டை குறித்தும், அதை தடுப்பது பற்றியும் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர். சாதாரண மனிதர்களிடமும், நோயாளிகளிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மூச்சு விடுதலில் ஏற்படும் சிரமங்கள் தான் குறட்டையாக வெளி வருகிறது. இந்த பிரச்னை உள்ளவர் ஓர் இரவில் அதிகபட்சமாக 100 தடவை குறட்டை விட வாய்ப்பு உள்ளது என்றும், ஒவ்வொரு குறட்டையும் 10 வினாடிகள் வரை நீடிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உங்களது கழுத்தின் தசைகள் பலப்படுத்தப்பட்டு இருந்தால் பெரும்பாலும் மூச்சு விடுவதில் உள்ள சிரமம் குறையும். காற்று மூச்சு குழல் வழியே சிரமம் இன்றி பயணிக்கும். மல்லாந்து படுப்பதால் குறட்டை ஏன் அதிகமாகின்றது ? நாம் தூங்கும் போது நாக்கு, தொண்டை, மேலண்ணம் போன்ற வாய்சதைகள் இறுக்கம் குறைந்து தளர்ந்து விடுகின்றன. மல்லாந்து படுத்தால் புவி ஈர்ப்பு சக்தியால், இந்த சதைகள், டான்ஸில்ஸ் இவையெல்லாம் பின்னோக்கி ஈர்க்கப்படுகின்றன. பின்னோக்கி சரியும் போது இந்த தசைகள் சுவாசக் குழாயை அழுத்துவதால் அதில் காற்றுத்தடை உண்டாகி, குறட்டை சப்தம் எழும்புகிறது. குறட்டையை தவிர்க்க : மல்லாந்து படுப்பதும் குறட்டைக்குக் காரணம். பக்கவாட்டில் படுத்தால் குறட்டை விடுவது குறையும் அல்லது நிற்கும். தலைப்பக்கம் கூடுதல் தலையணைகளை வைத்து உயர்த்துவதால் குறட்டையை குறைக்கலாம். யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தாடை, தொண்டை, நாக்குகளுக்கான பிரத்யேக பயிற்சிகள், பிராணாயாமம் போன்ற சுவாசப் பயிற்சிகள் குறட்டையை குறைக்க உதவுகிறது. ஸ்பைரோ மீட்டர் கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மை. தினந்தோறும் காலையில் எழுந்ததும் நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி 15 – 20 நிமிடம் கொப்பளித்து வந்தால், நாளடைவில் குறட்டைச் சத்தம் நின்றுவிடும். இதற்கு பெயர் ஆயில் புல்லிங்.
சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில், 1992-ஆம் ஆண்டில் முதன் முதலாகத் 'உலகத் தமிழாசிரியர் மாநாடு' நடைபெற்றது. இதுவரை ஒன்பது உலகத் தமிழாசிரியர் மாநாடுகள் சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, மொரிசியசு, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சிறப்பாக நடந்தேறியுள்ளன. இந்த நிலையில், பத்தாம் உலகத் தமிழாசிரியர் மாநாடு 2013 ஆம் ஆண்டு, சூன் திங்கள் 3 - 5ஆம் நாள் வரை மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் மிகச்சிறப்பாக நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டின் நோக்கம்:- 1. தமிழ் கற்றல் கற்பித்தல் ஆகியவற்றில் மேம்பாடு காணத் திட்டமிடுதல். 2. தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள், தகவல் தொடர்பு தொழில்நுட்ப வளமைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் வழிவகைகளை ஆராய்தல். 3. உலகத் தமிழாசிரியர்களிடையே தமிழ் கற்றல் கற்பித்தல் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களும் பகிர்வுகளும் நிகழ வகை செய்தல். 4. பல நாடுகளைச் சேர்ந்த தமிழாசிரியர்களிடையே அணுக்கத் தொடர்பும் நிபுணத்துவ ஒத்துழைப்பும் ஏற்பட வழிவகுத்தல். ஆய்வுக் கட்டுரைகள் கட்டுரைகள் 20 நிமிடங்களுக்குள் படைக்கப்படும் வண்ணம் அமைந்திருக்க வேண்டும். ஒருங்குறி (Unicode) முறையில் தட்டச்சு செய்து 28.02.2013 தேதிக்குள் மாநாட்டுக் குழுவினருக்குக் கிடைக்குமாறு அனுப்பி வைக்கவும்.
கல்விப்பொதுத் தராதர உயர்தர பரீட்சை திகதியை பிற்போட்டால் 10 ஆயிரம் பாடசாலைகளை ஒரு மாத காலத்துக்கு மூடவேண்டிய நிலைமை ஏற்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். க.பொ.த உயர்தர பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு பிற்படுத்தினால் 10ஆயிரம் பாடசாலைகள் ஒரு மாதகாலத்துக்கு மூடவேண்டி ஏற்படுகின்றது. மாணவர்களுக்கு ஏற்கனவே பாடசாலை நாட்கள் குறைவாகவே காணப்படுகின்றன. ஒரு மாதத்துக்கு பாடசாலைகளை மூடிவிடுவதால் மாணவர்களின் பாடத்தவணைகளை உரிய காலத்துக்கு முடித்துக் கொள்ள முடியாமல் போகின்றது. அதேநேரம் பாடசாலை நேர அட்டவணைக்கும், பரீட்சை நேர அட்டவணைக்கும் இடையில் முரண்பாடு ஏற்படுகின்றது. அத்துடன் உயர்தர பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு பிற்போடுவதனால் அடுத்து இடம்பெற ஏற்பாடாகி இருக்கின்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையை நடத்த முடியாமல் போகின்றது. இவ்வாறு சென்றால் ஒரு நிலைமைக்கு கொண்டுவர முடியாமல் போகும். கோவிட் தொற்று காரணமாக அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டிருந்தன, அதனால் ஏற்பட்ட இந்த பிரச்சினையை தற்போதுதான் ஓரளவுக்கு சரி செய்து வருகின்றோம். அத்துடன் உயர்தர பரீட்சையை டிசம்பர் மாதத்தில் நடத்துவதால் குறிப்பிட்ட சில மாணவர்களுக்கே கஷ்டமான நிலை ஏற்படுகின்றது. முதல் தடவையாக பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இரண்டாம் முறை பரீட்சை எழுதுவதற்கு எதிர்பார்த்திருக்கும் மாணவர்களுக்கு பரீட்சைக்கு தயாராவதற்கு 3 மாதம் வரை காலம் இருக்கின்றது. அவர்கள் பரீட்சைக்கான பாடநெறியை பூரணப்படுத்தி இருக்கின்றனர். என்றாலும் பரீட்சை விடயதானங்களை மாற்றி பரீட்சைக்கு முகம்கொடுப்பவர்களுக்கு சற்று சிரமம் ஏற்படலாம். அத்துடன் பரீட்சைகளை பிற்படுத்தும்போது அடுத்த வருட புதிய பாடசாலை தவணையை மார்ச் மாதம் 28ஆம் திகதி ஆரம்பிக்க முடியாமல் போகும். கடந்த வருடம் புதிய பாடசாலை தவணை ஏப்ரல் மாதத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. அதனால் இரண்டு தவணைகளையே எமக்கு பூரணப்படுத்த முடிந்தது. அடுத்த வருடமும் இந்த நிலையே ஏற்படும். என்றாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய, உயர்தர பரீட்சை திகதியில் மாற்றத்தை செய்ய முடியுமா என பரீட்சை திணைக்களத்திடம் முன்வைக்கின்றேன். திகதியில் மாற்றம் ஏற்படும் போது ஏனைய மாணவர்களுக்கும் அநீதி ஏற்படக்கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கின்றது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தரம் ஒன்றில் இருந்து மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் பழக்கத்தை அதிகரிக்க 2023ஆம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இதற்கமைய அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரச பாடசாலைகளின் முதலாம் மற்றும் இரண்டாம் தரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 13,500 ஆசிரியர்களை நவம்பர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் பயிற்றுவிப்பாளர்களாகப் பயிற்சியளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். எதிர்காலத் தேவைக்கு ஏற்ற வகையில் பாடசாலை மாணவர்களுக்கு ஆங்கில மொழியைக் கற்பிப்பதற்கு முன்னுரிமை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார விடுத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். ஆங்கில மொழிமூலப் பாடப்புத்தகங்களில் உள்ள இலக்கணப் பிழைகள் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், அவ்வாறான இலக்கணப் பிழைகள் உள்ளதா என்பதைக் கண்டறியுமாறு தேசிய கல்வி நிறுவகத்துக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார். அத்துடன் இலங்கையிலுள்ள தமிழ் மொழிமூலப் பாடசாலைகளில் உள்ள பிள்ளைகள் விரும்பினால் சிங்கள மொழிமூலத்தில் கல்வி கற்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் இங்கு பரிசீலிக்கப்பட்டது. தற்பொழுது பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருப்பதாகவும், இதனைத் தடுப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கருத்துத் தெரிவித்ததுடன், இது தொடர்பில் ஏற்கனவே நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் பதில் வழங்கினார். Videos play பிம்ஷானியை அவரது பதவியில் இருந்து நீக்க முயற்சிக்கும் பொலிஸ் மா அதிபரின் வெள்ளை மற்றும் கருப்பு மகன்கள்!
அரசாங்கத்தின் கொடூரத்தன்மையின் முக்கிய விடயமாக கைது செய்யப்பட்ட ஐந்நூறு போராளிகளுக்கும் 27 குழந்தைகளின் நிலை என்ன? அவர்களுக்கு என்ன நடந்தது என அரசு கூறமறுப்பது ஏன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வியுள்ளார். இன்று முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இருந்து வட்டுவாகல் கடற்படை முகாம்வரை பேரணியாக சென்றடைந்தது. இப் பேரணியில் கலந்து கொண்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், இராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட 500 மேற்பட்ட போராளிகள் மற்றும் 27குழந்தைகளுக்கு என்ன நடந்தது? காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கடந்த பத்து வருட காலமாக தங்கள் உறவுகளை தேடிக்கொண்டு பல போரட்டங்களை நடாத்திக்கொண்டு இருக்கின்றார்கள். இதற்கு ஐநா மனித உரிமைபேரவையும் அரசாங்கமும் பதில் சொல்லவேண்டும். உயிருடன் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்கள் தற்போது உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்ற பதிலை முன்னாள் ஆட்சியாளர்களும் சரி இந்நாள் ஆட்சியாளர்களும் சரி உரிய பதிலை வழங்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் நீர்த்துப்போக செய்வதற்கு அரசாங்கம், ஐநா மட்டுமல்லாது தமிழ் மக்களின் வாக்குகளை பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய காரணகர்த்தாக்களாகவுள்ளனர். இதேவேளை, ஜெனிவா மனித உரிமை பேரவையில் மூன்றுதடவை காலநீடிப்பை பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்கத்தின் நான்கு வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரிக்கவும் ஐம்பத்து இரண்டு நாள் அரசியல் குழப்பத்திற்கு ஆதரவு வழங்கி அரசாங்கத்திற்கு முண்டுகொடுத்துக்கொண்டு இருக்கின்றனர். இவர்கள் அரசாங்கத்திற்கு நிபந்தனை அற்ற ஆதரவு வழங்கி இவர்களது போராட்டத்தை நீர்த்துபோகச்செய்துள்ளனர். அரசாங்கத்தின் கொடூரத்தன்மையின் முக்கிய விடயமாக போராளிகளோடு கைதுசெய்யப்பட்ட 27 குழந்தைகளின் நிலை என்ன? அவர்களுக்கு என்ன நடந்தது என அரசு கூறமறுப்பது ஏன் என்றார்.
Colombo (News 1st) நாட்டிலிருந்து வௌியேறுவதற்காக காபூல் விமான நிலையத்திற்கு செல்வதை தவிர்க்குமாறு தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் விமான நிலையத்தை தாக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் காரணமாக இது அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய வாயில்களுக்கு வெளியே பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல் காணப்படுவதாக அமெரிக்கா தமது பிரஜைகளுக்கு தெரிவித்துள்ளது. அரச முகவர் ஒருவர் தனிப்பட்ட அறிவிப்பை வெளியிட்டால் மாத்திரம் விமான நிலையத்திற்கு செல்லுமாறு அமெரிக்கா தனது பிரஜைகளுக்கு அறிவித்துள்ளது. இந்தநிலையில், ஆப்கானிஸ்தானின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி தற்போது ஒருவாரமாகின்ற நிலையில், அங்குள்ள வௌிநாட்டுப் பிரஜைகள் தற்போது தத்தமது நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். இதனிடையே, விமான நிலையம் மிகவும் ஆபத்தானது எனவும் விமான நிலையத்திற்கு செல்வது சாத்தியமில்லை எனவும் ஜெர்மனி அரசாங்கம் அறிவித்துள்ளது.
டெல்லி: இந்தியாவிலிருந்து எங்கும் எந்த மொபைலுக்கும் குறைந்த கட்டணத்தில் பேசும் வசதி கொண்ட தொலைபேசி அழைப்பு அட்டைகளை இந்திய தொலைபேசித் துறை அறிமுகப்படுத்தப் போகிறது. பிஎஸ்என்எல் மட்டுமின்றி, நாட்டின் பிற தொலைபேசிகளிலும் பயன்படுத்தும் வண்ணம் இந்த காலிங் கார்டுகள் இருக்கும். இதனால் அதிக பில் வந்துவிட்டதே என வாடிக்கையாளர் புலம்பத் தேவையில்லை. அவரவருக்கு கட்டுப்படியாகும் அளவுக்கே பேசலாம். அந்த அளவு கட்டணம் கொடுத்து அட்டைகளை வாங்கிக் கொள்ளலாம். தொலைபேசித்துறையின் இந்தத் திட்டத்துக்கு தொலைபேசிக் கட்டண ஒழுகங்குமுறை ஆணையமான டிராய் ஒப்புதல் அளித்துள்ளது. தனியார் பால் விலை அதிகரிப்பு ஆனால் சில தனியார் தொலைபேசி நிறுவனங்கள், இப்படிச் செய்வதால் தங்கள் வர்த்தகம் பாதிக்கப்படும் என எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளன. சிலருக்காக இந்த நல்ல திட்டத்தை நிறுத்த முடியாது என்றும், மக்களுக்குப் பலன் தரும் இது போன்ற திட்டங்களை எதிர்க்கக் கூடாது என்றும் ட்ராய் அறிவித்துள்ளது. இந்த காலிங் கார்டுகள் இருந்தால் தொலைபேசி மட்டுமல்ல, இன்டர்நெட் வசதி கொண்ட கம்ப்யூட்டர் மூலமும் மொபைல் அல்லது லேண்ட் லைனுக்குப் பேச முடியும். இப்போது, ஒரு கம்ப்யூட்டரிலிருந்து வேறொரு கம்ப்யூட்டருக்கு மட்டுமே பேசும் வசதியுள்ளது. இந்த கார்டுகளைப் பெற்றுக் கொண்டால் ஒரு இன்டர்நெட் கம்ப்யூட்டரிலிருந்தே எந்த போனுக்கும் பேச முடியும். கட்டணமும் குறையும். Source & Thanks : thatstamil.oneindia.in ஜெயலலிதா நடிப்புக்காக தமிழீழத்தை உச்சரிக்கிறார் என்றால், அந்த அளவுக்கு கூட கருணாநிதி உச்சரிக்கவில்லையே”: கொளத்தூர் மணி
லாகூர்: தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்ததும், பஸ்சிலிருந்து கீழே குதித்து தரையில் படுத்து உயிர் தப்பினோம் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் மஹிளா ஜெயவர்த்தனே கூறியுள்ளார். லாகூர் பயங்கரம் குறித்து திகில் மாறாத உணர்வுடன் ஜெயவர்த்தனே விவரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,நாங்கள் கடாபி ஸ்டேடியத்திற்குப் போய்க் கொண்டிருந்தபோது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டது. எங்களது பஸ்சை நோக்கி கையெறி குண்டுகள் வீசப்பட்டன. தொடர்ந்து துப்பாக்கிகளாலும் சரமாரியாக சுட்டனர். முதலில் பஸ்சின் சக்கரங்களை குறி வைத்து சுட்டனர். இதனால் பஸ் போக முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் பஸ்ஸை நோக்கி சுட ஆரம்பித்தனர். இதையடுத்து பஸ்சுக்குள் இருந்த அனைவரும் வேகமாக வெளியே குதித்து தரையில் படுத்துக் கொண்டோம். வங்கதேச துறைமுகங்களை இந்தியா பயன்படுத்தலாம்’: ஷேக் ஹசீனா இந்த சம்பவத்தில் ஐந்து வீரர்கள், உதவிப் பயிற்சியாளர் பால் பேர்பிரேஸ் ஆகியோர் காயமடைந்தனர். அனைவருக்கும் லேசான காயங்களே ஏற்பட்டது. அவையும் கூட கீழே விழுந்ததாலும், குண்டுச் சிதறல்களாலும் ஏற்பட்டவை என்றார் ஜெயவர்த்தனே.
50 சதவீத மானியத்தில் வேளாண் கருவிகள் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு50 சதவீத மானியத்தில் வேளாண் கருவிகள் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தில், விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் தெரிவித்துள்ளதாவது : வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில், விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் READ MOREREAD MORE ஆடு வளர்ப்பு மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி !ஆடு வளர்ப்பு மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி ! நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி..! காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூர் உழவர் பயிற்சி நிலையம் சார்பாக, வருகின்ற ஜனவரி 30-ம் தேதி அன்று நாட்டுக் கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் நாள் : 30.01.2020 READ MOREREAD MORE ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் உதவிஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் உதவி ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் உதவி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது; தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்
“உலகக் கோப்பையை நடத்தும் உரிமையை வென்றபோது கத்தார் கொடுத்த அனைத்து மனித உரிமைகள் உறுதிமொழிகளையும் நிறைவேற்றும் போது, ​​​​கத்தார் வருவதற்கு நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று பாப் ஸ்டார் கூறுகிறார். துவா லிபா உள்ளது நவம்பர் 20 ஆம் தேதி கத்தாரின் தோஹாவில் தொடக்க விழாவுடன் தொடங்கும் 2022 FIFA உலகக் கோப்பையில் அவர் விளையாடுவார் என்ற செய்திகளை சுட்டு வீழ்த்தினார். நவம்பர் 13, ஞாயிற்றுக்கிழமை அவர் பகிர்ந்து கொண்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், பாப் நட்சத்திரம் தான் நிகழ்ச்சி நடத்த முன்பதிவு செய்யப்படவில்லை என்றும், அதைப் பற்றிய விவாதங்களில் கூட இருந்ததில்லை என்றும் கூறுகிறார். “கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை தொடக்க விழாவில் நான் விளையாடுவேன் என்று தற்போது நிறைய ஊகங்கள் உள்ளன. நான் நடிக்க மாட்டேன், மேலும் நடிப்பதற்கான எந்த பேச்சுவார்த்தையிலும் நான் ஈடுபட்டதில்லை, ”என்று அவர் எழுதினார். “நான் தூரத்திலிருந்து இங்கிலாந்தை உற்சாகப்படுத்துவேன்.” அவர் தனது பதிவில், நடத்தும் நாடான கத்தார் அதன் மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார். 2010 ஆம் ஆண்டு முதல் FIFA கத்தாரை 2022 புரவலன் நகரமாகத் தேர்ந்தெடுத்தது முதல், 90 சதவிகித தொழிலாளர்களை உள்ளடக்கிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மோசமான முறையில் நடத்தப்படுவது குறித்த கவலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பிபிஎஸ் குறிப்புகள். கத்தாருக்கு புரவலன் நாடு அந்தஸ்து வழங்கப்பட்டதில் இருந்து 6,500 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்துள்ளனர். கத்தாரில், ஒரே பாலின உறவுகள் மற்றும் செயல்பாடுகள் குற்றமாக்கப்படுகின்றன, மேலும் பிராந்தியத்தைச் சேர்ந்த பெண்கள் பயணம், வேலை மற்றும் திருமணம் செய்ய ஆண் பாதுகாவலரிடம் அனுமதி கேட்க வேண்டும். பேச்சு சுதந்திரமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. “உலகக் கோப்பையை நடத்தும் உரிமையை வென்றபோது கத்தார் கொடுத்த அனைத்து மனித உரிமைகள் உறுதிமொழிகளையும் நிறைவேற்றிய பிறகு, நான் அங்கு செல்வதை எதிர்நோக்குகிறேன்” என்று துவா லிபா தனது பதிவில் மேலும் கூறினார். நவம்பர் 20 ஆம் தேதி தோஹாவில் உள்ள அல் பேட் ஸ்டேடியத்தில் நடைபெறும் தொடக்க விழாவில் BTS உறுப்பினர் ஜங் குக் நிகழ்ச்சி நடத்த உள்ளார், மேலும் அவர் உலகக் கோப்பையின் ஒலிப்பதிவில் பங்கேற்கிறார். நவ., 20ல் நடக்கும் முதல் போட்டியில், நடத்தும் நாடான கத்தார், ஈக்வடாரை எதிர்கொள்கிறது. 32 நாடுகளைச் சேர்ந்த அணிகள் மோதும் போட்டிகள், தோஹாவை சுற்றியுள்ள எட்டு வெவ்வேறு மைதானங்களில் நடக்கின்றன. இது டிசம்பர் 18 அன்று இறுதிப் போட்டியுடன் முடிவடைகிறது.
Arun Vijay’s action crime thriller ‘Aakrosham’ is to release in theatres on December 9 on a grand scale Business வடபழநி ஃபோர்டிஸ் மருத்துவமனையில் நடைபெற்ற அதிக அபாய இதய அறுவை சிகிச்சை 68 வயது விவசாயியின் உயிரைக் காப்பாற்றியது Cinema ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ வெப் சீரிஸ் சிறப்புத் திரையிடல்.. ப்ரைம் வீடியோ, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் ஏற்பாடு
கன்னட சினிமாவில் இருந்து தெலுங்குக்கு வந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அவர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த கீதகோவிந்தம், டியர் காம்ரேட் படங்கள் ஹிட்டாயின. தொடர்ந்து மகேஷ்பாபு உள்பட முன்னணி நடிகர்களுடன் அங்கு நடித்து வருகிறார். தமிழில் கார்த்தி ஜோடியாக ’சுல்தான்’ படத்தில் நடித்திருந்தார். அவர் நடித்து சமீபத்தில் வெளியான ’புஷ்பா’ படம், அவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது. ராஷ்மிகா, ரன்பீர் கபூர் அவர் இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். சித்தார்த் மல்ஹோத்ராவுடன் ’மிஷன் மஜ்னு’ அமிதாப் பச்சனுடன் ’குட்பை’ ஆகிய இந்திப் படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்கள் விரைவில் வெளிவர இருக்கின்றன. இதற்கிடையே மேலும் ஒரு படத்தில் அவர் ஒப்பந்தமாகி இருக்கிறார். பிரபல இளம் இந்தி ஹீரோ ரன்பீர் கபூர் நடிக்கும் ’அனிமல்’ படத்தில் ராஷ்மிகா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்தில் முதலில் பரினீதி சோப்ரா நடிக்க இருந்தார். கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் விலகியதை அடுத்து, ராஷ்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் படத்தில் இடம் பெற்றுள்ளதை, தயாரிப்பு நிறுவனமான டி-சீரிஸ் உறுதிப்படுத்தி உள்ளது. கோடையில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதில் அணில் கபூர், பாபி தியோல் உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தை ’அர்ஜுன் ரெட்டி’ சந்தீப் ரெட்டி வங்கா இயக்குகிறார்.
பிரித்தானியாவின் பிரபல மருத்துவமனை ஒன்றில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு விஷ ஊசி போட்டதாக சந்தேகத்தின் பேரில் பெண் மருத்துவமனை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் Blackpoolஇல் அமைந்துள்ள Victoria மருத்துவமனையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட அந்த நபர் மருத்துவரா, நர்ஸா என்னும் தகவல்களோ, அவரது பெயர் போன்ற அடையாளங்களோ வெளியிடப்படவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த மருத்துவமனையில் பணியாற்றிய அந்த பெண் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு விஷ ஊசி போட்டிருக்கிறார். கைது நடவடிக்கையை தொடர்ந்து அந்த பெண் மருத்துவமனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சில நோயாளிகளின் உடல் நலம் மோசமடைந்ததைக் கவனித்த மருத்துவமனை நிர்வாகிகள் பொலிசாரை வரவழைத்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு வேதியியலாளர் (A chemist) (from Greek chēm (ía) alchemy; replacing chymist from Medieval Latin alchimista[1]) என்பவர் வேதியியல் ஆய்வுகளில் பயிற்சி பெற்ற ஒரு அறிவியலாளர் ஆவார். வேதியியலாளர்கள் பொருட்களின் இயைபு மற்றும் அவற்றின் பண்புகளைப் பற்றி ஆய்வு மேற்கொள்கிறார்கள். வேதியியலாளர்கள் மிகக் கவனமாக மூலக்கூறுகளைப் பற்றி அவற்றில் இயைந்துள்ள அணுக்கள் பற்றி விரிவாகவும் அளவுகளின் வாயிலாகவும் குறிப்பிடுகிறார்கள். வேதியியலாளர்கள் மிகக்கவனமாக பொருட்களின் விகிதாச்சார இயைபுகள், வினையின் வேகங்கள், மற்றும் இதர வேதிப்பண்புகளை அளந்தறிகிறார்கள். வேதியியலாளர் என்ற வார்த்தை பொதுநலவாய ஆங்கிலத்தில் மருந்தாளுநர்களைக் குறிப்பிடும் வார்த்தையாகவும் பயன்படுத்தப்படுகிறது. வேதியியலாளர்கள் தங்களின் இந்த அறிவை பொருட்களின் இயைபு மற்றும் பண்புகளை அறிந்து கொள்வதற்கு பயன்படுத்துகின்றனர். அதே போல், பெருமளவில் பயனுள்ள இயற்கையாக கிடைக்கும் பொருட்களை ஆய்வகத்தில் மறு ஆக்கம் செய்வது, தொகுப்பது மற்றும் புதிய செயற்கை பொருட்கள், பயனுள்ள செயல்முறைகளை உருவாக்குதல் ஆகியவற்றையும் வேதியியலாளர்கள் செய்கிறார்கள். வேதியியலின் எந்தவொரு உட்பிரிவுகளிலும் வேதியியலாளர்கள் நிபுணத்துவம் பெற்றிருக்கலாம். பொருளியல் அறிவியலாளர்கள் மற்றும் உலோகவியல் வல்லுநர்கள் ஆகியோர் வேதியியலாளர்களுடன் தங்கள் திறமைகளையும், அறிவையும் பகிர்ந்துகொள்கின்றனர். வேதியியலாளர்களின் வேலை பெரும்பாலும் வேதியியல் பொறியியலாளர்களின் பணியுடன் தொடர்புடையது, அவை, மிகவும் இலாபகரமான அளவில் பெரிய அளவிலான இரசாயன ஆலைகளின் முறையான வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் மதிப்பீட்டைப் பற்றி அக்கறை கொண்டுள்ளனர். மேலும், புதிய செயல்முறைகளை மேம்படுத்துவதில் தொழில்துறை வேதியியலாளர்களுடன் நெருக்கமாக வேலை செய்கின்றனர். வேதிப்பொருட்கள் மற்றும் தொடர்புடைய பொருட்களின் வணிக அளவிலான உற்பத்திக்கான வழிமுறைகளை உருவாக்குவதிலும் இவர்கள் ஈடுபடுகின்றனர். கேப்ரியேல் மெட்சு என்பவரால் வரையப்பட்ட மருந்து செய்பவர் அல்லது வேதியியலாளர் (c. 1651–67). வேதியியலின் வரலாறுதொகு ருஷ்ய வேதியியலாளர் திமீத்ரி மெண்டலீவ் - முதல் தனிம வரிசை அட்டவணையின் உருவாக்குநர் வேதியியலின் வேர்கள் எரிதல் நிகழ்விலிருந்து தொடங்கப்படலாம். நெருப்பு ஒரு மாய சக்தியைப் போன்று இருந்தது. அது ஒரு பொருளை மற்றொன்றாக மாற்றியது. இதனால் மனிதகுலத்திற்கு நெருப்பைப் பற்றி அறிவதில் முக்கிய ஆர்வம் இருந்தது. நெருப்பே இரும்பு மற்றும் கண்ணாடியின் கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தது. தங்கம் கண்டுபிடிக்கப்பட்டு, விலையுயர்ந்த உலோகமாக மாறியதும், மற்ற பொருள்களை தங்கமாக மாற்றும் முறையை கண்டுபிடிப்பதில் பலர் ஆர்வமாக இருந்தனர். இது ரசவாதம் என அழைக்கப்படும் பிரிவிற்கு வழிவகுத்தது. வேதியியல் என்பது அல்கிமிஸ்டா (இரசவாதி என்பதன் சுருக்கமான, புதிய இலத்தீன் பெயர்ச்சொல் கிமிஸ்டா என்பதிலிருந்து பெறப்பட்டது. நவீன வேதியியல் வளர்ச்சிக்கு வழிவகுத்த பல வேதியியல் செயல்முறைகள் வேதியியல் அறிவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. 1783 ஆம் ஆண்டில் வேதியியல் அந்துவான் இலவாசியே என்பவரால் பொருண்மை அழியா விதி கண்டுபிடிக்கப்பட்டது. வேதியியல் தனிமங்களின் கண்டுபிடிப்பு, தனிம வரிசை அட்டவணை உருவாக்குவதற்கான முயற்சியின் நீண்ட வரலாறு, திமீத்ரி மெண்டலீவால் உருவாக்கப்பட்ட தனிம வரிசை அட்டவணை போன்றவை தற்காலத்தில் நாம் படிக்கும் வேதியியலுக்கான அடிப்படையாக இருந்தன எனலாம். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வேதியியல் கண்டுபிடிப்புகளுக்கான நோபல் பரிசு ஒரு சிறந்த கண்ணோட்டத்தை அளிக்கிறது. வேதியியலுக்கான வேலைகளுக்காக பொதுவாக குறைந்தபட்சம் ஒரு இளங்கலை பட்டம் வேண்டியுள்ளது. ஆனால், பல நிலைகளில், குறிப்பாக ஆராய்ச்சிகளில், முதுகலை அறிவியல் அல்லது ஆய்வியல் நிறைஞர் (PhD) பட்டம் தேவைப்படுகிறது. வேதியியல் என்பது அறிவியலின் மையமாகக் கருதப்படுகிறது. இதனால் வேதியியலாளர்கள் அறிவியலைப் பற்றிய நன்கு அறியப்பட்ட முழுமையான அறிவைக் கொண்டிருக்க வேண்டும். பெரும்பாலான இளங்கலை பட்டப்படிப்புகள் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகியவற்றை வலியுறுத்துகின்றன. முதுகலைப் பட்டம் மற்றும் அதற்கு மேல் உள்ள படிப்புகளில் மாணவர்கள் குறிப்பிட்ட துறையில் மட்டும் நிபுணத்துவம் பெறுகின்றனர். உயிர் வேதியியல், அணுசக்தி வேதியியல், கரிம வேதியியல், கனிம வேதியியல், பலபடி வேதியியல், பகுப்பாய்வு வேதியியல், இயற்பியல் வேதியியல், கருத்தியல் வேதியியல், குவாண்டம் வேதியியல், சுற்றுச்சூழல் வேதியியல் மற்றும் வெப்ப இயக்கவியல் வேதியியல் போன்ற பல சிறப்பு வாய்ந்த பிரிவுகள் வேதியியலில் உள்ளன. சில பணிகளுக்கு ஆராய்ச்சி பட்டத்திற்குப் பிறகான பணி அனுபவம் தேவைப்படலாம்.
நிலவேம்பு செடியினத்தை சேர்ந்தது. அதிக கசப்பு தன்மை கொண்டது. கிராமங்களில் சிறியாநங்கை என்று அழைப்பார்கள். மேலும் பெரியாநங்கை, கொடிக்குருத்து, மிளகாய் நங்கை போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. செடி முழுவதும் மருத்துவ பயனுடையது. மயக்கம், நீர்க்கோவை போன்றவை குணமாக்கும். இது நீரிழிவு நோய்க்கும் நல்ல பலனை தருகிறது, வைரஸால் ஏற்படும் சீரணக்கோளாறு மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. மலச்சிக்கலை குணமாக்குகிறது. பசியின்மையை போக்கும். தொடர் காய்ச்சலுக்கு தொடர் காய்ச்சலை கட்டுப்படுத்த நிலவேம்பு இலையை நன்றாக அரைத்து சுண்டக்காய் அளவு காலை, மாலை என இருவேளை சாப்பிட்டுவர காய்ச்சல் குணமாகும். கல்லீரல் நோய்கள் குணமாக நிலவேம்பை அரைத்து சிறிது தண்ணீர் கலந்து வடிகட்டி 25மிலி வீதம் காலை, மாலை இருவேளை 3 நாட்களுக்கு குடித்த்து வர கல்லீரல் சம்பந்தமான நோய்கள் தீரும். வயிற்றுப்புழுக்கள் வெளியேற 5 கிராம் அளவு நிலவேம்பு பொடி, 2 கிராம் சீரகப்பொடி சேர்த்து தண்ணீரில் கலந்து இரவில் 3 நாட்களுக்கு சாப்பிட்டு வர வயிற்றுப்புழுக்கள் வெளியேறும். தோல் நோய்கள் தீர செடி முழுவதையும் காயவைத்து அரைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு குளிக்கும்போது தண்ணீரில் குழைத்து உடலில் தேய்த்து 10 நிமிடங்கள் ஊறவைத்து குளித்து வர சொறி, சிரங்கு உட்பட தோல்நோய்கள் தீரும். நோய் எதிர்ப்பு சக்தி சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் நிலவேம்பு மூலிகை அதிக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் டைபாய்டு காய்ச்சலுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது. பசியை தூண்டும் வாயுக்கள் வயிற்றில் மந்த தன்மையை உருவாக்கி பசியின்மையை உருவாக்கி விடுகின்றன. இதுபோன்ற வயிறு மந்த நிலையில் இருப்பவர்கள் நிலவேம்பை நன்றாக உலர்த்தி பொடி செய்து 5 கிராம் வீதம் தண்ணீரில் கலந்து காலையில் ஒரு வேளை மட்டும் குடித்து வர பசி உண்டாகும். அடிக்கடி மயக்கம் போன்று ஏற்படுதல் சிலருக்கு அடிக்கடி மயக்கம் ஏற்படுவது போல் மந்த நிலையாக இருக்கும் அவர்கள் அடிக்கடி நிலவேம்பு கஷாயம் குடித்து வருவது நல்லது. பித்தம் நீங்க பித்த நீர் அதிகமானால் உடலில் பல வித நோய்களை உண்டாக்குகிறது. நில வேம்பு கசாயம் குடிப்பதனால் பித்தம் குறையும். தலைவலி நீங்கும் தலையில் நீர்கட்டு இருந்தால் அடிக்கடி தலைவலி தோன்றும். அவர்களுக்கு நிலவேம்பு கசாயம் குடித்து வர தலைவலி நீங்கும். இருமல், தும்மல் போன்றவை நீங்கும். தைராய்டு பிரச்சினைகளுக்கு தைராய்டு பிரச்சினை உள்ளவர்களுக்கு நிலவேம்பை பொடி செய்து கசாயமாக செய்து குடித்து வர தைராய்டு பாதிப்புகள் குறையும். மேலும் பெண்களுக்கு எற்படும் கர்ப்பபை பிரச்சினைகள் நீங்கும். நிலவேம்பு கசாயம் கசாயம் 9 வகையான மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இக்கசாயம் டெங்கு உள்ளிட்ட வைரஸ் கிருமிகளால் ஏற்படும் காய்ச்சலை குணமாக்குகிறது. கடந்த காலங்களில் வைரஸ் காய்ச்சலுக்கு எதிராக சிறப்பாக செயல் பட்டது நிரூபிக்கப்பட்டது. நிலவேம்பு கசாயம் செய்முறை குறிப்பு : சிறுவர்களுக்கு மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் கொடுக்க கூடாது. கர்பிணி பெண்களும் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது சாப்பிடுவது நல்லது.
களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஒருங்கிணைப்புச் செயலாளரின் வீட்டிற்கு முன்பாக “கப்புட்டு காக் காக்” என கூச்சலிட்ட குற்றச்சாட்டின் பேரில் களுத்துறை மாவட்டச் செயலாளரால் பத்து பாடசாலை மாணவர்கள் மீது தடியினால் தாக்கியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அங்குருவாதொட்ட பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்புச் செயலாளராக இருப்பவர் பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாடசாலை மாணவர்கள் வெசாக் பண்டிகையை அனுசரிக்கச் சென்றிருந்த வேளையில் வீட்டின் முன் “கப்புட்டு காக் காக்” என்று கூச்சலிட்டமையினால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இரு தரப்பினரும் பொலிஸில் முறைப்பாடு செய்ததைக் கேட்டறிந்த பின்னர், இரு தரப்பினருக்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்) Share Previous News Next News யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒரு கிலோ நெல்லின் விலை இருபத்தி நான்கு ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் நேற்று (24ஆம் திகதி) நிலவரப்படி ஒரு கிலோ நெல் 101 ரூபாவாக குறைந்துள்ளது. ஒன்றரை மாதங்களுக்கு முன், ஒரு கிலோ நெல் 125 ரூபாவுக்கு, ஆலை உரிமையாளர்கள் கொள்வனவு செய்தனர். ஆலை உரிமையாளர்கள் அறுபத்து நான்கு கிலோகிராம் கொண்ட நெல் மூடையை எட்டாயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்த போதிலும், நேற்று (24) ஒரு நெல் மூடை ஆறாயிரத்து ஐநூறு ரூபாவுக்கு விற்பனையானது. இந்தப் பருவ அறுவடையின் போது விவசாயிகளிடம் இருந்து ஒரு மூடை நெல் 4500 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய பாரிய ஆலை உரிமையாளர்கள் மத்தியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அண்மைய செய்திகள் 33.7 மில்லியன் டொலர்கள் செலவில் இறக்குமதி செய்யப்பட்ட 4995 கறவை மாடுகளில் 3991 மாடுகள் உயிரிழந்துள்ளன ! யாழ்ப்பாணம் தொண்டைமானாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் முதலையொன்று வீதியில் இறந்தநிலையில் காணப்பட்டுள்ளது ரணில் விக்கிரமசிங்கவின் கதைகள் என்பது எவ்ளவு தூரம் உண்மையானது?சுரேஸ் பிறேமச்சந்திரன்கேள்வி!! ஒருவர் அமரும் ஆசனத்தில் இருவர் அமர்ந்து கொண்டும் தரையில் அமர்ந்தும் கல்வியை கற்கும் அவலநிலை? இணைந்த கரங்கள் அமைப்பின் பிரதிநிதி கஜரூபன் கருத்து
இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே, 2022 பிப்ரவரி மாதம் 18-ந்தேதி கையெழுத்தான வரலாற்றுச் சிறப்பு மிக்க விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (சிஇபிஏ) இன்று முதல் அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஆபரணங்களைக் கொண்ட முதல் தொகுதி பொருட்களை மத்திய வர்த்தகத் துறை செயலர் திரு பிவிஆர் சுப்பிரமண்யம் கொடியசைத்து துவக்கிவைத்தார். புதுதில்லி புதிய சுங்கத்துறை அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்ததன் அடையாளமாக, இந்தியாவின் ரத்தினம் மற்றும் நகை பிரிவைச் சேர்ந்த மூன்று ஏற்றுமதியாளர்களின் சான்றிதழ்களை வர்த்தகத் துறை செயலர் வழங்கினார். இந்த ஒப்பந்தப்படி இந்த ஏற்றுமதி பொருட்களுக்கு சுங்க வரி விதிக்கப்படமாட்டாது. இந்தப் பொருட்கள் இன்று துபாய் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அதிக அளவில் நகை, ஆபரணங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ஒப்பந்தம் மூலம், இந்தப் பொருட்களுக்கு வரிவிதிக்கப்படாது என்பதால், இந்தப் பிரிவு ஏற்றுமதியாளர்கள் பயனடைவர். நகை, வைரங்கள், ஜவுளி, தோல், காலணிகள், விளையாட்டு பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், மரப்பொருட்கள், வேளாண் பொருட்கள், பொறியியல் பொருட்கள், மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், வாகனங்கள் போன்ற தொழிலாளர் உழைப்பில் உருவாகும் பொருட்கள் இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ஒப்பந்தம் காரணமாக கட்டண விலக்கு கிடைக்கும் என்பதால், இந்தியா பெரும் பயன் அடையும் எனக் கூறப்படுகிறது. சிஇபிஏ ஒப்பந்தம் இருதரப்பு பொருட்கள் வர்த்தக மொத்த மதிப்பு அடுத்த ஐந்து ஆண்டுகளில், 100 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உயரும் என்றும், வர்த்தக சேவைகள் மதிப்பு 15 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1821785 *************** (Release ID: 1821807) Visitor Counter : 142 Read this release in: English , Urdu , Marathi , Hindi , Telugu வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இந்தியா- யுஏஇ விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்தது Posted On: 01 MAY 2022 2:49PM by PIB Chennai இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே, 2022 பிப்ரவரி மாதம் 18-ந்தேதி கையெழுத்தான வரலாற்றுச் சிறப்பு மிக்க விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (சிஇபிஏ) இன்று முதல் அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஆபரணங்களைக் கொண்ட முதல் தொகுதி பொருட்களை மத்திய வர்த்தகத் துறை செயலர் திரு பிவிஆர் சுப்பிரமண்யம் கொடியசைத்து துவக்கிவைத்தார். புதுதில்லி புதிய சுங்கத்துறை அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்ததன் அடையாளமாக, இந்தியாவின் ரத்தினம் மற்றும் நகை பிரிவைச் சேர்ந்த மூன்று ஏற்றுமதியாளர்களின் சான்றிதழ்களை வர்த்தகத் துறை செயலர் வழங்கினார். இந்த ஒப்பந்தப்படி இந்த ஏற்றுமதி பொருட்களுக்கு சுங்க வரி விதிக்கப்படமாட்டாது. இந்தப் பொருட்கள் இன்று துபாய் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அதிக அளவில் நகை, ஆபரணங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ஒப்பந்தம் மூலம், இந்தப் பொருட்களுக்கு வரிவிதிக்கப்படாது என்பதால், இந்தப் பிரிவு ஏற்றுமதியாளர்கள் பயனடைவர். நகை, வைரங்கள், ஜவுளி, தோல், காலணிகள், விளையாட்டு பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், மரப்பொருட்கள், வேளாண் பொருட்கள், பொறியியல் பொருட்கள், மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், வாகனங்கள் போன்ற தொழிலாளர் உழைப்பில் உருவாகும் பொருட்கள் இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ஒப்பந்தம் காரணமாக கட்டண விலக்கு கிடைக்கும் என்பதால், இந்தியா பெரும் பயன் அடையும் எனக் கூறப்படுகிறது. சிஇபிஏ ஒப்பந்தம் இருதரப்பு பொருட்கள் வர்த்தக மொத்த மதிப்பு அடுத்த ஐந்து ஆண்டுகளில், 100 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உயரும் என்றும், வர்த்தக சேவைகள் மதிப்பு 15 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1821785
தென்காசி மாவட்டம் நெல்கட்டும் செவல் பச்சேரியில் உள்ள ஒண்டி வீரன் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோபாலசுந்தரராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், நெல்கட்டும் செவல் பச்சேரி பகுதியில் விடுதலைப் போராட்ட வீரர்; மாவீரன் ஒண்டிவீரன் நினைவிடம் உள்ளது. அவரது நினைவு நாள் அனுகப்பட்டது. ஒண்டி வீரன் நினைவிடத்தில்; தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்களை நினைவு கூறும் விதமாக தமிழக அரசின் சார்பில் அவர்களது பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தென்காசி மாவட்டத்திலுள்ள விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் ஒண்டிவீரன் 250 வது நினைவு நாளில், அவரது புகழை கொண்டாடும் விதமாக அவரது நினைவிடத்தில் தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பொதுமக்கள் அதிகமாக கூடாத வகையில் தமிழக அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் ஹஸ்ரத் பேகம், வாசுதேவநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, சிவகிரி வட்டாட்சியர் ஆனந்த், உட்பட அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வைஃபை ஆன் செய்ததும் டெலிகிராமில் சில டாக்குமெண்ட்டுகள் வந்து விழுந்தன. அவற்றைப் படித்துப் பார்த்துவிட்டு சில குறிப்புகளை வாட்ஸ் அப்புக்கு அனுப்பியது டெலிகிராம். அவற்றைத் தொகுத்து டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப். “அமைச்சர் செந்தில்பாலாஜி திமுக கரூர் மாவட்டச் செயலாளராகியிருக்கிறார். ஏற்கனவே கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் இருக்கிறார். பொறுப்பு அமைச்சர் என்றால் அரசு நிர்வாகத்துக்கு மட்டுமல்ல, கட்சி நிர்வாகத்துக்கும் கோவை மாவட்டத்துக்கும் செந்தில்பாலாஜிதான் பொறுப்பு. அதாவது கோவை மாவட்டத்தில் தற்போது தேர்தல் மூலம் வந்திருக்கும் மூன்று மாவட்டச் செயலாளர்களுமே செந்தில்பாலாஜியின் செலக்‌ஷன்தான். இன்னும் சொல்லப் போனால் திமுகவில் கரூர், கோவை ஆகிய இரு பெரும் மாவட்டங்களை தற்போது முழுமையாக கையில் வைத்திருக்கிறார் செந்தில்பாலாஜி. கட்சிரீதியாக இப்படி என்றால் ஆட்சிரீதியாக மிகப் பெரும் வலிமையான துறைகளான மின்சாரத்துறை, மதுவிலக்கு ஆயத் தீர்வை ஆகிய துறைகளுக்கு அமைச்சராக இருக்கிறார். சீனியர் அமைச்சர்களே முதல்வர் ஸ்டாலினை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் அது இது என சம்பிரதாயங்கள் செய்ய வேண்டிய நிலையில் முதல்வரை எந்த நேரத்திலும் சென்று சந்திக்கும் அளவுக்கு நெருக்கமானவராக இருக்கிறார் செந்தில்பாலாஜி. இந்த நிலையில் நடந்து முடிந்த உட்கட்சித் தேர்தலில் கரூர் மாவட்டத்துக்கென இன்னொரு ஸ்பெஷல் அந்தஸ்தையும் பெற்றிருக்கிறார் செந்தில்பாலாஜி. பொதுவாகவே திமுகவில் உட்கட்சித் தேர்தலில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒருவர் என்றும், பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு இருவர் என்ற அளவில்தான் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். ஒரு சில மாவட்டங்களில் இந்த எண்ணிக்கையில் ஒன்றிரண்டு அதிகமாகியிருக்கிறது. ஆனால் கரூர் மாவட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை, பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையைப் பார்த்து மற்ற மாவட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. அப்படிப் பார்த்தால் தொகுதிக்கு ஒரு தலைமைச் செயற்குழு உறுப்பினர் என நான்கு பேரும், தொகுதிக்கு இரு பொதுக்குழு உறுப்பினர்கள் என்ற கணக்கில் 8 பொதுக்குழு உறுப்பினர்களும்தான் தேர்ந்தெடுக்கப் படவேண்டும். ஆனால் தலைமைக் கழக அறிவிப்பில் கரூர் மாவட்டத்துக்கு எட்டு தலைமைச் செயற்குழு உறுப்பினர்களும், 13 பொதுக்குழு உறுப்பினர்களும் இடம்பெற்றிருந்தார்கள். அப்படியெனில் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக இருக்கிறது கரூரின் தலைமைச் செயற்குழு, பொதுக்குழு எண்ணிக்கை. எப்படிப் பார்த்தாலும் செந்தில்பாலாஜியை தலைமை ஒரு படி மேலே வைத்து பார்ப்பது தெளிவாகத் தெரிகிறது’ என்கிறார்கள். இப்படி திமுக தலைவரான முதல்வர் ஸ்டாலினுக்கும், உதயநிதி, சபரீசன் ஆகியோருக்கும் மிகவும் நெருக்கமாக இருக்கும் செந்தில்பாலாஜிக்கு அரசுத் தரப்பில் இருந்தே இன்னொரு கடுமையான செக் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்துதான் குழப்பம் அடைந்திருக்கிறார்கள் செந்தில்பாலாஜி ஆதரவாளர்களே. 2011 – 2015 காலக்கட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக செந்தில்பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர். அதன் பேரில், செந்தில் பாலாஜி, அன்னராஜ், பிரபு மற்றும் சகாயராஜ் உள்ளிட்டோர் மீது 2017 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில் 47 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகன் மனுத்தாக்கல் செய்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் கிடைத்துவிட்டதாகவும், சமரசமாக போக விரும்புவதாகவும் அவர் மனுவில் கூறியிருந்தார். இதை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜி உட்பட 4 பேர் மீதான வழக்கை ரத்து செய்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி தர்மராஜ் என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பல கட்டங்களாக நடந்து வந்த வழக்கில் நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்வதாக நீதிபதிகள் கூறினர். அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி புகாரை மீண்டும் நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். சமரசம் செய்வதால் மட்டும் குற்றவாளி இல்லை என்று கருதமுடியாது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் அந்த வழக்கு மீதான தடையை நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு செந்தில்பாலாஜிக்கு லேசான அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் சார்பில் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் அளித்திருக்கும் மனு செந்தில் பாலாஜிக்கு ஹை வோல்டேஜ் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றம் செந்தில்பாலாஜி மீதான ஒரு வழக்கு ரத்தானதை ரத்து செய்த நிலையில் செப்டம்பர் 29 ஆம் தேதி இந்த விவகாரத்தை விசாரிக்கும் சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீசார் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சிவஞானத்திடம் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். ‘ அதில், ‘மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மீது கடந்த 2017-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வேலை வாய்ப்புக்கு பணம் வாங்கிய வழக்கு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, இந்த குற்றத்தில் அவருக்கு எதிரான போதுமான ஆதாரங்களை சேகரித்துள்ளோம். ஒரே மாதிரியான குற்றச்சாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள மூன்று வழக்குகளில் ஒன்றில் 21 சாட்சிகளை விசாரித்துள்ளோம். எனவே இவ்வழக்கில் விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளது மத்திய குற்றப் பிரிவு போலீஸ். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மத்திய குற்றப் பிரிவு போலீஸார் செயல்படுவதாக போலீஸ் வட்டாரங்களில் கூறுகிறார்கள். மேலும் அன்று தமிழக அரசின் கூடுதல் பிபியான ராஜ் திலக், செந்தில்பாலாஜி மீதான வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி ரத்து செய்திருப்பதை சுட்டிக் காட்டினார். இதையடுத்து விசாரணையை அக்டோபர் 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி. ஒருபக்கம் கட்சி ரீதியாக செந்தில்பாலாஜிக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் போலீஸ் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அரசு வேலைக்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தலையீட்டை நிரூபிக்கக் கூடிய ஆதாரங்கள் இருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது செந்தில்பாலாஜியையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது ஆதரவாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. செந்தில்பாலாஜியை நோக்கி எப்போது பாயலாம் என்று காத்திருக்கும் அமலாக்கத்துறைக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
சுமார் இருபத்து நான்கு வருடங்களுக்கு முன்பு நானும் நண்பர்கள் இருவருமாக ஒரு வேலையாகக் கணுவாய் என்ற ஊருக்குப் போயிருந்தோம். போன வேலையை முடித்துவிட்டு பஸ்ஸு காகக் காத்திருந்தோம். அப்போது எதேச்சையாக என் காலடியைப் பார்த்தபோது தரையில் நூறு ரூபாய் நோட்டு ஒன்று கிடந்தது. (இன்றைய மதிப்பு ஐநூறு ரூபாய் பெறும்) ஆஹா! நூறு ரூபாய்! யாராவது நான் எடுப்பதைப் பார்த்து என்னுடையது என்று கேட்டுவிட்டால் என்ன செய்வது என்று குனிந்து பாதத்தைச் சொரிவதுபோல் பாவனை செய்து யாரும் கவனிக்காமல் எடுத்துக்கொண்டேன். சந்தோசப்பட்ட அதேவேகத்தில் இதைத் தொலைத்தவர்கள் மனசு என்ன பாடு படும் என்றும் நினைத்துப் பார்த்தேன். சரி பஸ் வருவதற்கு முன்னால் யாராவது தேடினால் கொடுத்துவிடலாம். இல்லாவிட்டால் என்ன செய்வது வைத்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன், ஆனால் பஸ் வரும்வரை யாரும் கேட்காததால் பாதி மகிழ்ச்சியும் பாதி வருத்தமுமாக திரும்பினேன். வரும் வழியிலேயே ஒரு எண்ணம். கீழே கிடந்தது எடுத்ததுதானே! நாம் மட்டும் வைத்துக்கொள்வது சரியல்ல என்று எண்ணியதோடு நண்பர்களிடமும் சொல்லிவிட்டேன். கோவை வந்ததும் நல்ல ஹோட்டலுக்குப் போய் அந்த நூறு ரூபாயையும் செலவு செய்தேன். அந்த ஓட்டலுக்குப் பணம் செலுத்த பர்சை எடுத்தபோதுதான் அதில் நூறு ரூபாய் குறைவாக இருந்ததைப்பார்த்தேன்! நானே கீழே போட்டுவிட்டு அதைக் கண்டெடுத்ததாகச் சொல்லி இத்தனை கலாட்டாவும் செய்து.......கொடுமை! வேட்கக்கேட்டை யாரிடமும் நீண்டநாள் சொல்லவில்லை!
தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இந்நிலையில் ஹரி மற்றும் ஹரிஷ் என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் உருவான யசோதா படத்தில் நடிகை சமந்தா நடித்துள்ளார். இந்த படம் நேற்று முன் தினம் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பல்வேறு திரை விமர்சனங்களை பெற்றுள்ளது. அதே சமயம் மயாசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா சிகிச்சை பெற்று வருவதாக வேதனையும் தெரிவித்துள்ளார். இத்தகைய பதிவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தற்போது நடிகை சமந்தா தன்னுடைய டிரைனரை டேக் செய்து ஜிலேபி கொடுத்தற்கு மிக்க நன்றி என தெரிவித்துள்ளார். அடுத்த படத்திற்கு நிறைய ஆக்‌ஷன் சீன்ஸ் இருப்பதால் தன்னுடைய உடல் எடையை குறைக்க, தீவிரமாக பயிற்ச்சி எடுத்து வருகிறார். அதோடு “நான் ஜிலேபி சாப்பிடுவதற்கு கொடுத்த வைச்சவலான்னு எனக்கு தெரியல… என்னை ஒருபோதும் விட்டுகொடுக்க மாட்டிங்கன்னு எனக்கு தெரியும்”.. என தன்னுடைய டிரைனரை டேக் செய்து தற்போது வைரலாகி வருகிறது. Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
ஜெயந்திநகர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் மரண விசாரணைகளில் சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் சட்ட வைத்திய அதிகாரி சம்ப இடத்தை பார்வையிட்டார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திநகர் பகுதியில் நேற்று (19.12.2021) சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகளில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் இன்றைய தினம் மாலை சட்ட வைத்திய அதிகாரி ஆர்.தனுசன் சம்பவம் இடம்பெற்ற இடத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான வகையில் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் நேற்று (19) அடையாளம் காணபட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று முந்தினம் (18) இரவு இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்தது. வாடகை வீட்டில் வசித்து வந்த சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தரான முன்பள்ளி ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி விநாயகபுரம் இயக்கச்சி பகுதியை சேர்ந்த இவர் தொழிலின் நிமித்தம் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். 32 வயதுடைய நிலகரட்ண ஜெயசீலி என்ற 03 பிள்ளைகளின் தாயாரே இவ்வாாறு தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது கணவர் பிரிந்துள்ள நிலையில் 3 பிள்ளைகளுடன் தனித்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் இவரது மூத்த பிள்ளைகள் இரண்டும் தாயாருடன் பணிபுரியும் பெண்ணின் வீட்டில் வழமையாக தங்குவர். சம்பவம் இடம்பெற்ற இரவும் வழமைபோல இரண்டு பிள்ளைகளும் சென்றுள்ளனர். அதே வேளை கடைசி பிள்ளை தாயாருடன் வழமைபோல நின்றுள்ளது. இந்த நிலையில் ஆரம்பகட்ட விசாரணைகளில் பெண்ணின் மரணத்தில் பலத்த சந்தேகம் எழுந்திருந்தது. குறித்த மரணம் தொடர்பில் நேற்றைய தினம் (19.12.2021) திடீர் மரணவிசாரணை அதிகாரி சிங்கராசா ஜீவநாயகம் விசாரணை மேற்கொண்டிருந்தார். தொடர்ந்து குறித்த சடலம் பிசிஆர. பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட இன்று பிரேத பரிசோதனை இடம்பெற்றிருந்தது. இந்த நிலயைில் இன்றைய தினம் (20.12.2021) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உடற்கூறற்று பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு மன்று கட்டளையிட்டிருந்தது. இந்த நிலையில்இ மரண விசாரணைகளின் போது எழுந்துள்ள சந்தேகத்தை அடுத்து சட்ட வைத்திய அதிகாரி இன்று சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தீம்பொருள் என்பது உங்கள் அறிவு மற்றும் தகவல் இல்லாமல் செயல்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை மென்பொருளாகும். இந்த கருவி உங்கள் சாதனத்திற்கு கடுமையான சேதங்களை ஏற்படுத்தக்கூடும் மற்றும் சில நொடிகளில் உங்கள் தனிப்பட்ட தரவையும் பணத்தையும் திருடலாம். செமால்ட் வாடிக்கையாளர் வெற்றி மேலாளரான ரோஸ் பார்பர் எப்போதுமே தனது வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற திட்டங்கள் கணினிகளின் செயல்திறனை இழக்கக்கூடும், பாப்-அப் விளம்பரங்களை உருவாக்கலாம், இணைய அணுகல் மற்றும் கட்டண கோரிக்கைகளைத் தடுக்கலாம் மற்றும் பல்வேறு தீங்கிழைக்கும் செயல்களை உருவாக்கக்கூடும் என்று எச்சரிக்கிறார். வைரஸ் தடுப்பு மென்பொருளை வாங்கி நிறுவவும் நீங்கள் எப்போதும் சிறப்பாக செயல்படும் வைரஸ் தடுப்பு மற்றும் தீம்பொருள் எதிர்ப்பு மென்பொருளை வாங்க வேண்டும். உங்கள் கணினியில் நூறாயிரக்கணக்கான வைரஸ்கள் இருந்தால், அவற்றை சீக்கிரம் அகற்ற வேண்டும். நீங்கள் உண்மையான வைரஸ் தடுப்பு மென்பொருளை வாங்கி நிறுவும்போது மட்டுமே அது சாத்தியமாகும். இலவச மென்பொருளுடன் செல்ல வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் இதுபோன்ற கருவிகள் எதற்கும் நல்லது. உங்கள் பாதுகாப்பு தீர்வுகளை புதுப்பிக்கவும் வாங்குவதற்கு பல்வேறு புகழ்பெற்ற வைரஸ் தடுப்பு மற்றும் தீம்பொருள் எதிர்ப்பு கருவிகள் உள்ளன என்பது உண்மைதான். உங்கள் இணைய சேவை வழங்குநர் அல்லது தொழில்நுட்ப நிபுணர் ஒரு நல்ல திட்டத்தை எவ்வாறு பெறுவது என்பது பற்றி உங்களுக்கு சிறந்த வழிகாட்ட முடியும். உங்கள் பாதுகாப்பு தீர்வுகளை புதுப்பித்துக்கொள்வது முக்கியம். காலாவதியான தீர்வுகள் உங்கள் சாதனத்திற்கு கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் மற்றும் உங்கள் ஆன்லைன் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம். சிறந்த இயக்க முறைமைகளை நீங்கள் பதிவிறக்கி நிறுவ வேண்டும், மேலும் அடோப், ஜாவா மற்றும் பிற மீடியா பிளேயர்களின் பழைய பதிப்புகளை முயற்சிக்கக்கூடாது. தள ஆலோசகர் நீங்கள் ஒரு தள ஆலோசகரை நியமிக்கலாம் அல்லது உங்கள் வலைத்தளத்தின் தவறு என்ன என்பது குறித்து உங்களை எச்சரிக்கும் தள ஆலோசகர் திட்டத்தை நீங்களே பெறலாம். வயதுவந்தோர் தளங்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான வைரஸ்களைக் கொண்ட சூதாட்ட தளங்கள் போன்ற ஆபத்து வலைத்தளங்களையும் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். இந்த வலைத்தளங்களில் பெரும்பாலானவை உங்கள் கணினி அமைப்புக்கு ஆரோக்கியமற்றவை, எனவே அவற்றிலிருந்து விலகி இருப்பது நல்லது. அவை உங்கள் கணினியை பெருமளவில் சேதப்படுத்தும் தீங்கிழைக்கும் குறியீடுகளைக் கொண்டிருக்கலாம். கோப்பு பகிர்வு வலைத்தளங்கள் பிரபலமான கோப்பு பகிர்வு வலைத்தளங்களான பியர்ஷேர், விக்ஸ்எம்எக்ஸ், பைரேட்பே மற்றும் கசா போன்றவை தீங்கிழைக்கும் மென்பொருள் மற்றும் வைரஸ்களைக் கொண்டிருக்கலாம். அதனால்தான் நீங்கள் இந்த வலைத்தளங்களை தவறாமல் பயன்படுத்தக்கூடாது. இந்த வலைத்தளங்களைப் பயன்படுத்தும் போது, முக்கியமானவற்றை மட்டுமே பதிவிறக்கம் செய்து முக்கியமில்லாத விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. காலம் ஸ்கேன் தீம்பொருள் மற்றும் வைரஸ்களைப் போக்க உங்கள் கணினிக்கு அவ்வப்போது ஸ்கேனிங் நல்லது. ஸ்பைபோட் தேடல் மற்றும் மால்வேர்பைட்டுகள் போன்ற பல்வேறு இலவச நிரல்கள் உள்ளன; உங்கள் கணினியில் வைரஸ்கள் மற்றும் தீம்பொருளை எளிதில் கண்டறிந்து பெரிய மற்றும் சிறிய தீம்பொருள் அச்சுறுத்தல்களை அகற்றக்கூடிய இந்த நிரல்களை நீங்கள் முயற்சி செய்யலாம். மின்னஞ்சல்களை ஜாக்கிரதை ஒவ்வொரு நாளும், எங்கள் ஸ்பேம் கோப்புறைகள் ஏராளமான மின்னஞ்சல்களால் நிரப்பப்படுகின்றன. மக்களை கவர்ந்திழுக்க மற்றும் அவர்களின் கணினி அமைப்புகளைத் தாக்க ஹேக்கர்கள் அந்த மின்னஞ்சல்களை அனுப்புகிறார்கள். அத்தகைய மின்னஞ்சல்களில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் அறியப்படாத மின்னஞ்சல்களைக் கிளிக் செய்ய வேண்டாம். மின்னஞ்சல் இணைப்புகளைத் திறப்பதில் இருந்து உங்களை ஒதுக்கி வைப்பதும் முக்கியம். முறையாக இருங்கள் கிராக் மற்றும் பைரேட் புரோகிராம்களில் வைரஸ்கள் மற்றும் தீம்பொருள் இருக்கலாம்; உங்கள் முக்கியமான தரவைப் பெறுவதன் மூலம் அவை பெரும்பாலும் உங்கள் கணினி சாதனங்களின் செயல்பாட்டைத் தடைசெய்கின்றன. அதனால்தான் நீங்கள் எப்போதும் சரியான தகவல்களை இணையத்தில் எழுத வேண்டும். கிளிக் செய்வதற்கு முன் சிந்தியுங்கள் எந்தவொரு இணைப்பையும் கிளிக் செய்வதற்கு முன் நீங்கள் கடைசியாக சிந்திக்க வேண்டும். முறையான வலைத்தளங்களில் கூட தாக்குதல்காரர்களால் உங்களுக்கு அனுப்பப்பட்ட இணைப்புகள் அல்லது விளம்பரங்கள் இருக்கலாம். அவர்கள் உங்கள் தகவல்களைத் திருட விரும்புகிறார்கள்; அதனால்தான் நீங்கள் எந்த விலையிலும் அறியப்படாத இணைப்புகளைக் கிளிக் செய்யவோ திறக்கவோ கூடாது. போலி மற்றும் வயதுவந்த வலைத்தளங்கள் மற்றும் அவற்றின் அழகான சலுகைகள் என்று அழைக்கப்படுபவர்களிடமிருந்து உங்களை ஒதுக்கி வைக்கவும்.
நடிகர் அஜித் நடித்த வலிமை படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிடுவதற்கு தடை தடைவிதிக்க மறுத்துவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், பிரதான வழக்கின் விசாரணையை ஏப்ரல் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. ஜே.கே.கிரியேஷன்ஸ் நிறுவன உரிமையாளர் ஜெ.ஜெயகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "வசதியான வாழ்கைக்காக சங்கிலி பறிப்பது, போதைப் பொருள் கடத்தலில் தம்பிக்கு தொடர்புள்ளதை அறிந்து கொள்ளும் கதாநாயகன், தம்பியை கொல்வதுபோல காட்சிப்படுத்தப்பட்டுள்ள பிற மொழிகளில் `மெட்ரோ' படத்தை தயாரிக்க உள்ள நிலையில், அதே அம்சங்களுடன் `வலிமை' படமாக்கப்பட்டது காப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது. எனவே `வலிமை' படத்தை சாட்டிலைட் சேனல், ஓடிடி தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும். ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்'' என்று கோரியிருந்தார். இதற்கிடையே, `வலிமை' திரைப்படம் மார்ச் 25-ம் தேதி ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளதால் அதற்கு தடை கோரி கூடுதல் மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, இயக்குநர் ஹெச்.வினோத் தரப்பு பதில் மனுவை வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் தாக்கல் செய்தார். அதில், செய்தித்தாள்களில் அன்றாடம் வரும் சங்கிலி பறிப்பு, போதைப்பொருள் கடத்தல், கொலை போன்ற செய்திகளின் அடிப்படையில் உருவானதுதான் `வலிமை' படத்தின் கதை, கரு, கதாப்பாத்திரங்கள். மனுதாரர் குறிப்பிடும் உச்ச காட்சி அனைத்தும் வெவ்வேறானவை. `மெட்ரோ' படத்தின் கதை, கதாப்பாத்திரம் பயன்படுத்தப்பட்டதாக கூறுவது தவறு. எந்த காப்புரிமையையும் மீறவில்லை. இணையதளங்களில் வெளியான விமர்சனங்களில் `மெட்ரோ' படத்தை ஒப்பிட்டு கூறப்படவில்லை. எனவே, தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வழக்கு தாக்கல் செய்த ஜெயகிருஷ்ணனுக்கு எதிராக 10 கோடி ரூபாய் இழப்பீடு கோரி வழக்கு தொடர உள்ளோம். பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட `வலிமை' படத்தை, ஓடிடி தளங்களில் வெளியிடவும், சாட்டிலைட் உரிமை தொடர்பாகவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்நிலையில் தடை விதித்தால் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே, `மெட்ரோ' படத் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது. இந்த பதில் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வலிமை படத்தின் ஓ.டி.டி. வெளியீட்டிற்கு தடைவிதிக்க மறுத்து, பிரதான வழக்கின் விசாரணையை ஏப்ரல் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
ஒடிசாவின் பல்லஹாரா ஒன்றியம் சசகுர்ஜாங் ஊராட்சி கிராம சபா (கிராமக்குழு) கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. 5,000 மக்கள்தொகை இந்த ஊராட்சியில், முழு அளவிலான அங்கன்வாடி இல்லாத தொலைதூர குக்கிராமங்களில் மினி அங்கன்வாடி மையங்களை திறக்க வேண்டும் என்று மாநில அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல்லஹாரா, ஒடிசா: அது, 2019 ஆம் ஆண்டு இந்தியாவின் சுதந்திர தினத்தின் காலைப்பொழுது. ஜெயபுரா கிராமத்தைச் சேர்ந்த 30 வயது குணா முண்டா, 30, கிராமவாசிகள் 70 பேருடன் சசகுர்ஜாங் ஊராட்சி கிராம சமுதாய கட்டிடத்தில் கூடியிருந்தனர். 150 முதல் 300 மக்கள் வசிக்கும் குழந்தை பராமரிப்பு மையம் - ஒரு மினி அங்கன்வாடி தங்கள் கிராமத்தில் அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர். ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தின் பல்லஹாரா ஒன்றியத்தின் சிறிய குக்கிராமத்தில் வசிக்கும் முண்டா, “கிராமத்தில் அங்கன்வாடி இல்லாததால் எங்கள் குழந்தையின் ஊட்டச்சத்து விஷயத்தில் விட்டுக்கொடுத்து போகிறோம் என்றவர், “நாங்கள் அருகில் உள்ள அங்கன்வாடி செல்ல நதியைக் கடக்க வேண்டும். எனது நான்கு வயது மகனை ஒவ்வொரு நாளும் மையத்திற்கு அனுப்புவது எப்படி?” என்றார். ஏழ்மையான மக்கள் - "மிகக்குறைந்த செல்வம்" அல்லது 20% குறைந்த அளவு செல்வம் கொண்டவர்கள் - மற்றும் சிறிய குக்கிராமங்களில் வாழும் பட்டியலின சாதியினர் (எஸ்.சி) மற்றும் பட்டியலின பழங்குடியினர் (எஸ்.டி) போன்ற பிற பின்தங்கிய சமூக குழுக்களுக்கு பல்லஹாரா போன்ற கிராமங்கள், அங்கன்வாடி வைகளுக்கு மிகக் குறைந்த அணுகலைக் கொண்டுள்ளதாக, நான்காவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (என்.எஃப்.எச்.எஸ்) தரவுகள் காட்டுகின்றன. பட்டியலின மக்கள் (எஸ்.டி.) இந்தியாவின் மக்கள்தொகையில் 8% (10.4 கோடி), ஆனால்; பட்டியலின மலைவாழ் மக்களில் (எஸ்.டி) 45.9% பேர் மிகக் குறைந்த செல்வத்துடன் உள்ளனர்; இது வேறு எந்த சமூகக் குழுவையும் விட அதிக விகிதம் என்று பிப்ரவரி 2018 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்துள்ளது. 2015-16 ஆம் ஆண்டில், ஐந்து வயதிற்குட்பட்ட எஸ்.டி குழந்தைகளில் 19.7% பேர் வளர்ச்சி குறைபாடு - வயதுக்கேற்ற உயரமின்மை - கொண்டிருந்தனர். இது, எஸ்சி குழந்தைகளில் 19.0%, இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளில் 16.4% மற்றும் ‘பொது’ சாதிகளில் 11.9% என்று இருந்ததாக, நான்காவது என்.எஃப்.எச்.எஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. எஸ்.டி. போன்ற தொலைதூர பகுதிகளில் வசிப்பவர்களுக்க் இந்த அணுகலின்மை என்பது அதிகரிக்கிறது. பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கான மினி அங்கன்வாடிகள் குறைந்த, நடுத்தர வருவாய் கொண்ட சமூகக் குழுக்கள், துணை உணவுகள், சுகாதார சோதனைகள் மற்றும் பிற ஐ.சி.டி.எஸ் சேவைகளை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று என்.எஃப்.எச்.எஸ்-4 தரவுகள் காட்டுகின்றன. 2015-16இல், 63.3% ஏழை குழந்தைகளுக்கு சுகாதார பரிசோதனை கிடைக்கவில்லை, இதில் இரண்டாம் நிலை செல்வமுள்ள 54.9% குழந்தைகள் (மக்கள் தொகையில் ஏழ்மையான 21% முதல் 40% வரை) என்றுள்ளது. சிறப்பாக உள்ளவர்கள், தனியார் சேவைகளை விரும்புகிறார்கள், எனவே ஐசிடிஎஸ் சேவைகளின் குறைந்த பயன்பாடு உள்ளது. 2015-16 ஆம் ஆண்டில், எஸ்.டி குழந்தைகளின் அதிக விகிதம் மற்ற சமூகக் குழுக்களை விட உணவுச் சத்துக்கள், சுகாதார பரிசோதனைகள் மற்றும் முன்பள்ளி கல்வி ஆகியவற்றைப் பெற்றது, ஆனால் இந்த சேவைகள் தேவைப்படும் எஸ்.டி.க்களைச் சேர்ந்த ஏழை மக்களின் விகிதத்துடன் ஒப்பிடும்போது இது குறைவாக உள்ளது. உதாரணமாக, எஸ்.டி மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி (45.9%) ஏழ்மையானவர்கள் (ஏழ்மையான 20%), மற்றும் 24.8% இரண்டாம் நிலை மிகக்குறைந்த செல்வம் உள்ளவர்கள் என்றாலும், 60.4% குழந்தைகள் ஐ.சி.டி.எஸ் இன் கீழ் துணை உணவுகள் பெற்றதாக என்.எஃப்.எச்.எஸ் தரவு காட்டுகிறது. இதை, இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருடன் ஒப்பிட்டால்: அவர்களின் மக்கள்தொகையில் 18.3% மிகக் குறைந்த செல்வக்குழுவைச் சேர்ந்தவர்கள், 19.3% இரண்டாவது மிகக் குறைந்தவர்கள், அதே நேரத்தில் 45.6% குழந்தைகள் ஐ.சி.டி.எஸ் இன் கீழ் உணவுப் பொருட்களைப் பெற்றனர் என்று தரவு காட்டுகிறது. நிர்வாக குறைபாடுகள் முண்டா பங்கேற்ற கூட்டத்தில் கிராம ஊராட்சி உறுப்பினர்கள் (தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமக்குழு) மற்றும் சமூகத் தலைவர்களால் மக்களின் குறைகளை கேட்கவும், மினி அங்கன்வாடியின் அவசியம் குறித்து அவர்களுக்குக் கற்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. "நாங்கள் தொலைதூர குக்கிராமங்களில் இரண்டு மினி அங்கன்வாடி மையங்களை அமைக்க முன்மொழிகிறோம்" என்று சசகுருஜாங்கின் கிராமத்தலைவர் (சர்பஞ்ச்) 47 வயதான சஷாங்க் சேகர் நாயக் கூறினார். "தொலைதூர கிராமங்களில் வசிக்கும் பட்டியலின பழங்குடியினரின் குழந்தைகளுக்கு மினி அங்கன்வாடி மையங்களை கிடைக்கச் செய்வதே எங்கள் முன்னுரிமை. இங்குள்ள குழந்தைகளுக்கு வீட்டிற்கு எடுத்துச் செல்லும் உணவுப் பொருள் கிடைப்பதில்லை; பெற்றோர்கள் ஒவ்வொரு நாளும் அவர்களை அங்கன்வாடி மையத்திற்கு அழைத்துச் சென்று தங்களது தினக்கூலியை இழப்பது என்பதும் சாத்தியமில்லை” என்றார். கடந்த 1975 முதல், ஐ.சி.டி.எஸ். திட்டத்தின் கீழ் ஒரு துணை ஊட்டச்சத்து திட்டத்தை அரசு நடத்தி வருகிறது. இது ஒடிசாவில் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் உணவு பொருட்களை - சாதுவா (தானிய மாவு), முட்டை மற்றும் பருப்பு வகைகளை - கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்குகிறது. இது ஆகஸ்ட் 2019 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்துள்ளபடி, குழந்தைகளுக்கு சூடான, சமைத்த உணவும், மூன்று முதல் ஆறு வயது வரை குழந்தைகளுக்கு முன்பள்ளி கல்வியும் அங்கன்வாடிமையங்களில் வழங்குகிறது. இது குழந்தையின் முதல் 1,000 நாட்கள் - அதன் வளர்ச்சியும் அறிவாற்றல் வளர்ச்சியும் மிக வேகமாக இருக்கும்போது - அந்த பருவத்திலேயே வாய்ப்பின் பெற்றுத்தரும் ஒரு சாளரமாகும். அனைத்து சமூக மேம்பாட்டுத் தொகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் ஐ.சி.டி.எஸ், 1995-96ல் உலகமயமாக்கப்பட்டது, இப்போது நாட்டின் தொலைதூர மூலைகளை அடைகிறது. இருப்பினும், ஏழைகள், குறிப்பாக பின்தங்கிய குழுக்களைச் சேர்ந்தவர்கள், பிப்ரவரி 2018 இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது போல், இன்னும் பின்தங்கியுள்ளனர். ஒடிசா போன்ற சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் கூட, சமூக ஏணியில் மிகக் குறைவானது பெரும்பாலும் தொலைதூரப் பகுதிகளில் வசிப்பதால் விலக்கப்படுகின்றன. "அங்கன்வாடி பணியாளர்கள் எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல; எங்களின் குழந்தைகள் மையங்களுக்குச் சென்றாலும், அவர்கள் கடைசியாக உணவளிக்கப்படுகிறார்கள்" என்று பஞ்சாயத்து உறுப்பினரான 44 வயதான முண்டா சாண்டோ கூறினார். "துணை செவிலியர் மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஆஷாக்கள் (அடிமட்ட சுகாதார ஊழியர்கள்) கரடுமுரடான நிலப்பரப்பு காரணமாக எங்கள் கிராமத்திற்கு வருவதில்லை" என்றார். "தொலைதூர குக்கிராமங்களில் இருந்து குழந்தைகள் எனது அங்கன்வாடி மையத்திற்கு வர வேண்டும்; ஆனால் அவர்களின் வருகை மிகக் குறைவு" என்று உதய்பூர் கிராமத்தில் அங்கன்வாடிபணியாளரான, 31 வயது நிருபமா நாயக் கூறினார்; இது ஜெயபூர் கிராமத்தையும் உள்ளடக்கியது. “அவர்கள் தினமும் 3 கி.மீ தூரம் தனியாக மையத்திற்கு செல்ல முடியாது. இதன் விளைவாக, அவர்கள் சூடான சமைத்த உணவை இழக்கிறார்கள்; அவர்களுக்கு பள்ளிக்கு முந்தைய கல்வியும் கிடைக்காது” என்றார். கடந்த 2007இல், 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 116,848 மினி அங்கன்வாடி மையங்களை அமைக்க அரசு அனுமதித்தது என தேசிய பொது ஒத்துழைப்பு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் தரவுகள் காட்டுகின்றன. ஆனால், அவற்றில் தற்போது எத்தனை மினி அங்கன்வாடிக்கள் செயல்படுகின்றன என்பது குறித்த தரவுகள் இல்லை. 2005 வரை, ஐ.சி.டி.எஸ் இன் கீழ் ஒரு மினி அங்கன்வாடியில் ஆறு சேவைகளில் ஒன்றில் மட்டுமே - சூடான சமைத்த உணவு வழங்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டில், ஆறு சேவைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற வகையில் விதிமுறைகள் ஐசிடிஎஸ் வழிகாட்டுதல்களின்படி திருத்தப்பட்டன. பல்லஹாராவில் உள்ள கிராமவாசிகள் ஒரு அங்கன்வாடியை விரும்பினாலும், நிர்வாக பிரச்சினை உள்ளது: குனா முண்டாவின் கிராமம் ஜெயபூர், மற்றொரு கிராம பஞ்சாயத்துடன் பாதி இணைந்திருக்கிறது; பாதிக்கும் மேற்பட்ட மக்கள் அந்த பஞ்சாயத்தின் கீழ் வருகிறார்கள்; அதாவது ஒரு மினி அங்கன்வாடி மையம் அமைப்பதற்கான தகுதியான குறைந்தபட்சம் 150 பேர் என்ற எண்ணிக்கை ஜெயபூரில் இல்லை. ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் ஒன்று என இரண்டு மினி அங்கன்வாடிக்களை கிராம மக்கள் முன்மொழிந்துள்ளனர். கூட்டம் நடைபெறும் சசகுருஜாங் ஊராட்சியின் கீழ் தான் முண்டாவின் ஜெயபூர் கிராமம் வருகிறதா அல்லது மற்ற ஊராட்சிக்கு அவர் சென்றிருக்க வேண்டுமா என்பது ஊராட்சி உறுப்பினர்களுக்கு கூட தெரியவில்லை. “ஒரு அங்கன்வாடி கூட இல்லாத குக்கிராமங்களில், மினி அங்கன்வாடி மையம் அமைக்கும் திட்டத்தை அரசிடம் நாங்கள் சமர்ப்பித்துள்ளோம், அங்கு குழந்தைகள் அருகிலுள்ள மையத்தை கால்நடையாக அடைய முடியாது. இது பரிசீலனையில் உள்ளது, அரசு விரைவில் அதை அனுமதிக்கும் ”என்று அங்குல் மாவட்ட ஆட்சியர் மனோஜ் மொஹந்தி கூறினார். ஐ.சி.டி.எஸ் சேவைகளை மேற்பார்வையிடும் அங்குல் மாவட்டத்திற்கான குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர் ரேணு பதி, மினி அங்கன்வாடி அமைப்பது தொடர்பாக இதுவரை எந்த திட்டமும் தனக்கு கிடைக்கவில்லை என்று கூறினார். வேறு எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்க அவள் மறுத்துவிட்டாள். அரசு சுமை குறைந்தது; ஆரோக்கியம் மேம்பட்டது ஊட்டச்சத்துக்கான அணுகல் பற்றாக்குறை பின்தங்கிய சமூகங்களில் மிகவும் தீவிரமாக உணரப்படலாம். உதாரணமாக, 2013 ஆம் ஆண்டில், ஒடிசா அரசு பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்கள் - இது எஸ்.டி.க்கள் இடையே மிகவும் பின்தங்கியவர்கள் - வளர்ச்சிக்காக ஒரு சிறப்புத்திட்டத்தை நடத்தியபோது, ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 19 குழந்தைகள் இறந்தனர். இந்த திட்டத்தின் கீழ், 216 குழந்தைகள் கடும் எடை குறைபாடு கொண்டவர்களாகவும், ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களாகவும் அடையாளம் காணப்பட்டனர், இவர்களில் 60 பேர், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய குழுக்களில் இருந்தவர்கள் எந்த மருத்துவமனைக்கும் பரிந்துரை செய்யாதது, சமீபத்திய 2017 தலைமை கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) அறிக்கையில் கண்டறியப்பட்டது. "ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிக்க மைக்ரோ திட்டங்களால் எந்தவொரு தீர்வு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை" என்று அறிக்கை கூறியது. குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உதவுவதோடு மட்டுமின்றி, மினி அங்கன்வாடி மையங்கள், அரசின் சுமையை குறைக்கும். தற்போது, ஊட்டச்சத்து மறுவாழ்வு மையங்கள் அதிக ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் தாய்மார்களை ஆதரிக்கின்றன, ஒடிசாவில் ஒரு குழந்தை மற்றும் தாய்க்கு ஒரு நாளைக்கு ரூ.125 செலவிடுகின்றன. ஒரு ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை, அவர்களின் தாயுடன் சேர்ந்து, குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு ஊட்டச்சத்து மறுவாழ்வு மையத்தில் நெருக்கமான கண்காணிப்பில் வைக்கப்பட்டு, அவர்களின் ஊட்டச்சத்தில் கவனம் செலுத்துகிறது. ஜனவரி 2019 இல், அங்கன்வாடி பணியாளர் நாயக், மூன்று குழந்தைகளை கிராமத்தில் இருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ள பல்லஹாரா ஒன்றிய சமூக சுகாதார மையத்தின் ஊட்டச்சத்து மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பினார். குழந்தைகளில் இருவர், அபாயகரமான சிவப்பு நிறை வகைப்பாட்டில் - உயரத்திற்கேற்ற எடை இல்லாதது; கடும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறிக்கிறது - இருந்தனர்; மூன்றாவது குழந்தை, மிதமான ஊட்டச்சத்து குறைபாட்டை குறிக்கும் ஆரஞ்சு நிற வகைபாட்டில் இருந்தது. அருகாமையில் இருக்கும் அங்கன்வாடி மையம் இருந்திருந்தால், இந்த தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் அவர்களின் ஊட்டச்சத்துக்கு துணைபுரிவதற்கும், கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டைத் தவிர்ப்பதற்கும் உதவியிருக்க முடியும். (அலி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப்பணியாளர்). உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.
சற்றொப்பப் பத்து ஆண்டுகளாக, தமிழ்நாட்டின் பெரிய அரசியல் ஆளுமைகளான கலைஞரும், ஜெயலலிதாவும் உடல் நலிவுற்ற நிலையையும், அவர்களின் மறைவையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கட்சி வளர்க்கக் காத்திருந்தனர் இந்துத்துவவாதிகள் பா.ஜ.கவினர்! அவர்கள் நினைத்தபடியே ஊழலில் திளைத்த அடிமைகள் கூட்டமாம் அ.தி.மு.க.வினர் பா.ஜ.க வலையில் விழுந்தனர். அவர்களை வைத்து ஆட்சி, அதிகார மட்டங்களில் சாதிய மதவாத ஆட்களை ஊடுருவச் செய்த பின்னர், திட்டமிட்டபடி அந்தக் கட்சியை உருக்குலைத்தனர் காவிகள். கடந்த தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியை முடிந்த அளவு தடுக்கப் போராடி, தளபதியின் உழைப்புக்கு ஈடுகொடுக்க முடியாமல் தோற்றுப்போயினர் அந்த மதவாதக் கூட்டத்தினர். எதிர்க் கட்சி என்ற நிலை கூட அ.தி.மு.க. வுக்கு மறந்துவிடும் அளவு அவர்களுடைய முகங்களை, அவர்களுடைய பேச்சுகளை, அவர்களுடைய எழுத்துகளை, அவர்களுடையப் பதிவுகளை எதிர்மறையாக இடம்பெறும் வண்ணம் எல்லா எழுத்து மற்றும் காட்சி ஊடகங்களையும் வளைத்துப் போட்டனர். இன்றளவும் சமூக வலைத்தளங்கள் இல்லாவிடில், அவர்களுடையத் தகிடுதத்தங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது எந்த அமைப்புக்கும் சவாலான செய்தியே! கட்சி வளர்ப்புக்கும், சித்தாந்தத் தொடர்ச்சிக்கும் கலவரங்களையும், வெறுப்பு அரசியலையும் நம்பி இருக்கும் வரலாற்றுப் பெருமை பா.ஜ.க மதவாதச் சக்திகளிடம் உண்டு! அதன்படியே மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றது முதல், கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தத் துடித்தார்கள்! ஆனால் தி.மு.க. ஆட்சியைக் குறை சொல்லக் கிடைக்கும் எல்லா வாய்ப்புகளும், ஒன்றிய பா.ஜ.க. அரசின் தோல்வியைப் பிரகடனப்படுத்துவதாக முடிந்து விடுகின்றது. எதைச் செய்வது எனக் கையைப் பிசைகிறார் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை! ஆ.ராசா வின் பேச்சுக்கு காவல்துறையில் வழக்குகள் போட்டது, ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது, கடையடைப்பு நடத்தியது, மிரட்டல் விடுத்தது, கைதானது என ஒரு பரபரப்பு அடங்குவதற்கு உள்ளாகவே இதோ, அக்டோபர் 2 அன்று தமிழ்நாட்டில் 51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி பெற்றிருக்கிறார்கள். அன்று காந்தி ஜெயந்தி. அதற்கும், ஆர்.எஸ்.எஸ்க்கும் என்னத் தொடர்பு?! பா.ஜ.கவினர் ஊர்வலத்திற்கு அனுமதி வாங்கச் சொல்லி இருக்கும் காரணங்கள், இந்திய சுதந்திரதின 75ஆம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்ததின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவையே! இது வெளிக் காரணங்கள்! காந்தியாரின் பிறந்த நாளைத் தன்வயப்படுத்தி, அதை மக்கள் மனதிலிருந்து அப்புறப்படுத்தலும், அந்த நாளையும் பா.ஜ.கவினருக்கானதாக மாற்றுதலும்தான் அவர்களின் நோக்கம். அப்படித்தானே ரத ஊர்வலம் நடத்தினார்கள்? டிசம்பர் 6, அம்பேத்கரின் நினைவு நாளை மறைத்து, பாபர் மசூதி இடிப்பு நாளாக ஆக்கினார்கள். ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்தினால் கம்பும் கையுமாகத்தான் போவார்கள். காந்தி பிறந்தநாளில் கம்புகளை வைத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்வார்கள்? கம்புகள் வேறெவர் கையிலும் இருப்பதைக் காட்டிலும் ஆர்.எஸ்.எஸ். கைகளில் இருப்பதை நாம் ஆபத்தானதாகத்தான் பார்க்க முடியும். அமைதியில் வாழும் தமிழகத்தை இந்துத்துவவாதிகள் கலவர பூமியாக மாற்ற எண்ணுவதைப் பார்வையாளராகக் கடக்க இயலாது.
Share on Facebook Follow on Facebook Add to Google+ Connect on Linked in Subscribe by Email Print This Post பூமியில் உள்ள நகரங்கள் வாணவேடிக்கையுடன் புதிய வருடத்தை ஆரம்பிக்க, சூரியன் தனது சொந்த வாணவேடிக்கையுடன் புது வருடத்தை தொடங்கியுள்ளது. நாசாவின் (NASA) தகவல்களின்படி கடந்த திங்கள்கிழமை (மார்கழி 31, 2012) தொடங்கிய சூரிய சுவாலை வீச்சுக்கள் (solar eruption அல்லது solar flare) சுமார் 4 மணித்தியாலங்கள் நடைபெற்றுள்ளது. கடந்த திங்கள் இடம்பெற்ற சுவாலையின் அதியுயர் நீளம் சுமார் 257,500 km ஆகும். இந்த சுவாலையின் நீளம் நமது பூமியின் விட்டத்துடன் (12,714 km) ஒப்பிடுகையில் சுமார் 20 மடங்காகும். ஆனால் நாசாவின் கருத்துப்படி இந்த சுவாலை வீச்சு ஒரு சிறிய அளவிலான வீச்சே. NASA Web link இந்த சூரிய சுவாலை கதிர்வீச்சு மணித்தியாலம் ஒன்றுக்கு சுமார் 2 தொடக்கம் 8 மில்லியன் km கடந்து சென்று பூமியை 1 தொடக்கம் 3 நாட்களில் அடையும். பெரிய அளவிலான சுவாலை வீச்சுக்கள் உருவாக்கும் electromagnetic வீச்சுக்கள் பூமியில் உள்ள இலத்திரனியல் உபகரணங்கள், செய்மதிகள் போன்றவற்றை பாதிக்கலாம். 257,500 km நீள சூரிய சுவாலை added by admin on January 5, 2013 View all posts by admin → © 2022, ↑ Truth is knowledge © www.navakudil.com 2020. All materials on this Web site are the property of www.navakudil.com. Unauthorized use and/or duplication of these material without express and written permission is strictly prohibited. Links with small excerpts may be used, provided that clear credit is given to this Web site. Powered by WordPress - Gabfire Themes
ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்... இராட்சத தொட்டாச் சுருங்கி, எங்கள் காலடிக்கு வந்துவிட்ட ஆக்கிரமிக்கத் துடிக்கும் அபாயம். - ஏ.எம். றியாஸ் அகமட் (சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை) Mimosa pigra (Giant sensitive plant) (giant mimosa), இ... கடல்களில் உருவாக்கப்படும் ”அமிழ்த்தப்படு வாகனச் சூழற்றொகுதி” சுற்றுச்சூழலுக்கு உகந்ததா? -ஏ.எம். றியாஸ் அகமட், (சிரேஸ்ட விரிவுரையாளர் தென்கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை) உலகெங்கும் பாவித்து, ஒதுக்கப்பட்ட அல்ல கழிக்கப்பட்ட தரையிலோட... வெள்ள அனர்த்தங்கள்: கற்றுக்கொள்ள வேண்டியவைகளிலிருந்து கற்கத் தவறிய பாடம். ஏ . எம் . றியாஸ் அகமட் ( சிரேஸ்ட விரிவரையாளர் , கிழக்குப் பல்கலைக்கழகம் , இலங்கை ). உலகின் பலநாடுகளில் பாதிப்பினை ஏற்படுத்தும் ...
நேற்று முன் தினம், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 காசுகள் அதிகரித்து ரூ.102.40க்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து ரூ.98.26க்கு விற்பனை ஆனது. பெட்ரோல், டீசல் விலை நேற்றும் உயர்ந்தது. நேற்று, பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்தது. டீசல் விலை 33 காசுகள் உயர்ந்தது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.70-ஆகவும், டீசல் ரூ.98.59-க்கும் விற்பனையானது. பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்துள்ளது. டீசல் விலை 33 காசுகள் உயர்ந்துள்ளது. இதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.01-ஆகவும், டீசல் ரூ.98.92-க்கும் விற்பனையாகிறது. நடப்பு மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை 16 ஆவது முறையாக உயர்ந்துள்ளது.பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாவ்.. செம கியூட்.! வெளிநாட்டில் மனைவி ஷாலினியுடன் ரொமான்டிக்காக நடிகர் அஜித்.! இணையத்தை கலக்கும் புகைப்படம்!! பிரம்மாண்டமாக நடந்த கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம்.. நேரில் வாழ்த்திய பிரபலங்கள்., குவியும் வாழ்த்துக்கள்.! அட.. காமெடி நடிகர் சாம்ஸின் மகனா இது.! ஹீரோ மாதிரி சூப்பரா இருக்காரே.! தீயாய் பரவும் புகைப்படம்!! கோடை விடுமுறையை கணக்கில் வைத்து ரிலீசாகும் படங்கள்... அசத்தல் லிஸ்ட் இதோ.. மக்களே ரெடியா?..! ஒரே கும்மாளம்தான்.! வெளிநாட்டில் தோழிகளுடன் செம ஆட்டம் போட்ட ஹன்சிகா.! வைரல் வீடியோ.!! 18 வயது பட்டாம்பூச்சியான அனிகா.! ப்பா.. பார்ட்டியில் செம ஹாட்டாக எப்படி ஜொலிக்கிறார் பார்த்தீங்களா!! வைரலாகும் கிளிக்ஸ்!! 23 ஆண்டுகளுக்கு பின்னர் கடனை திருப்பி கொடுத்த நடிகை மும்தாஜ்.. யாரிடம் எவ்வுளவு வாங்கினார் தெரியுமா?..! #PandianStores: எம்பொண்ணு கழுத்துல நகை எங்கே?.. வில்லத்தனத்தில் வச்சி செய்யும் முல்லையின் அம்மா.. வைரல் ப்ரோமோ..! நபர் ஒருவர் பிக்பாஸ் சுரேஷுக்கு தொடர்ந்து போன் அடித்துக்கொண்டே இருந்ததால் தான் நேரலையில் இருப்பது தெரியாமல் அந்த நபரை கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார் பிக்பாஸ் சுரேஷ். 16 பேருடன் செம ஜாலியா தொடங்கிய பிக்பாஸ் சீசன் நான்கு தற்போது சண்டை, அழுகை, போட்டி என காரசாரமாக நடந்துவருகிறது. இந்த 16 பேரில் ஒருவராக கலந்துகொண்டவர்தான் மொட்டை தாத்தா சுரேஷ் சக்ரவர்த்தி. சமையல் செய்வதில் கில்லாடி, நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத்திறமையுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் போன இவரை அனைத்து போட்டியாளர்களும் ஒரு காட்டு காட்டித்தான் வெளியே அனுப்பினர். என்னதான் இவரை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகிவிட்டார் சுரேஷ். கடும்போட்டியாளராக இருந்த இவர் கடந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது ஒவ்வொரு யூடியூப் சேன்னலாக சென்று பேட்டி கொடுத்து வருகிறார் சுரேஷ். அந்தவகையில் சமீபத்தில் நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுக்கொண்டிருந்த அவருக்கு நபர் ஒருவர் தொடர்ச்சியாக போன் செய்துள்ளார். இதனால் கோப்பட்ட சுரேஷ் நேரலை நிகழ்ச்சி முடிந்துவிட்டது என நினைத்து போன் செய்த நபரை அசிங்கமாக திட்ட தொடங்கிவிட்டார். சார், இன்னும் லைவ் முடியவில்லை என அங்கிருந்தவர்கள் கூற, அதை கேட்டு சற்று ஜார்காகிவிட்டார் சுரேஷ். இதோ அந்த காட்சியை நீங்களே பாருங்கள். Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here Tags: #Bigg boss #Bigg Boss suresh Copy Link தற்போதைய செய்திகள் பெங்களூரில் தமிழனுக்கு புளிப்பு மிட்டாய் கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்.. ரூ.20 க்கு இணங்கி 400 லாஸ்.. குமுறலோ குமுறல்..! என்ன ஓவியா பாதியா வந்துருக்கா.! பூமர் அங்கிளாக கலக்கும் யோகிபாபு! ரசிகர்களை கவர்ந்த ட்ரைலர் இதோ !! ஏன் இப்படி?? அந்த உடையில் பாத் டப்பில் படுத்து பிரியா பவானி ஷங்கர் கொடுத்த போஸ்! வைரல் புகைப்படம்!! வாவ்.. செம கியூட்.! வெளிநாட்டில் மனைவி ஷாலினியுடன் ரொமான்டிக்காக நடிகர் அஜித்.! இணையத்தை கலக்கும் புகைப்படம்!!
இஸ்லாத்தின் அடிப்படையில் அவ்ரத் மறைக்கப்பட்டு ஒரு ஆண் ஜனாஸா நீராட்டப்படும் வீடியோ படத்தை, எந்தவொரு பெண்ணும் மார்க்க விளக்கம் பெறும் வகையில் பார்ப்பது கூடுமா? – சகோதரி. ஜியா சித்தாரா. தெளிவு: வ அலைக்கும் ஸலாம் வரஹ்…. ஜனாஸாவைக் குளிப்பாட்டும் முறையைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் சகோதரி கேட்டிருக்கிறார். அவரின் மார்க்க ஆர்வத்தை அல்லாஹ் அதிகப்படுத்துவானாக! 'நபி(ஸல்) அவர்களின் மகளின் ஜனாஸாவைக் கழுவும் பெண்களிடம் நபி(ஸல்) அவர்கள், "அவரின் வலப்புறத்திலிருந்து கழுவ ஆரம்பியுங்கள். மேலும் அவரின் உளூவின் உறுப்புகளையும் கழுவுங்கள்" என்று கூறியதாக உம்மு அதிய்யா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதீ) நபி(ஸல்) அவர்கள் தங்களின் மகள் மரணித்துவிட்டபோது எங்களிடம் வந்து, "அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து, தேவையெனக் கருதினால் அதற்கதிகமான தடவைகள் குளிப்பாட்டுங்கள். இறுதியில் கற்பூரத்தைச் சிறிது சேர்த்துக் கொள்ளுங்கள். குளிப்பாட்டி முடிந்ததும் எனக்கு அறிவியுங்கள்'' எனக் கூறினார்கள். குளிப்பாட்டி முடிந்ததும் அவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் வந்து தம் கீழாடையைத் தந்து, "இதை அவரின் உடலில் சுற்றுங்கள்" எனக் கூறியதாக உம்மு அதிய்யா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதீ) "மேலும், நாங்கள் மய்யித்தின் முடியை மூன்று சடைகளாகப் பின்னி அதை மய்யித்தின் முதுகுப்புறமாகப் போட்டு வைத்தோம்" என்று உம்மு அதிய்யா(ரலி) அவர்கள் கூடுதலாக அறிவிக்கும் செய்தி புகாரியில் வேறு அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. மேலும், ''நாங்கள் அவரது தலைமுடியைப் பிடரிப் பகுதியில் இரண்டும் முன்னெற்றிப் பகுதியில் ஒன்றுமாக மூன்று பின்னல்களிட்டோம்'' என்று உம்மு அதிய்யா(ரலி) அவர்கள் கூடுதலாக அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்) பெற்ற மகளின் ஜனஸாவாக இருந்தாலும் பெண் ஜனாஸாக்கள் குளிப்பாட்டப்படும் பொழுது ஆண்கள் பார்க்கக்கூடாது என்று மேற்கண்ட அறிவிப்புகளிலிருந்து அறிந்துக் கொள்ள முடிகிறது. அதே போன்று பெற்றத் தந்தையாக இருந்தாலும் ஆண் ஜனாஸாக்கள் குளிப்பாட்டப்படும் பொழுது பெண்கள் பார்க்கக் கூடாது என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். ஜனாஸாவைக் குளிப்பாட்டும் போது வலது புறத்திலிருந்து துவங்க வேண்டும். உளூவின் உறுப்புகளை கழுவ வேண்டும். ஒற்றைப்படை எண்ணிக்கையில் தண்ணீர் ஊற்றிக் குளிப்பாட்ட வேண்டும். ஜனாஸாவைக் குளிப்பாட்டும் போது இறுதியில், ''கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து உடல் சுத்தமாக வேண்டும் என்பதால் சோப்பு அல்லது அது போன்ற நறுமணப் பொருள்களைப் பயன்படுத்திக் குளிப்பாட்டலாம். பெண் ஜனாஸா என்றால் அவர்களின் சடையைப் பிரித்து குளிப்பாட்டிய பின் மீண்டும் சடைப் பின்னி விடலாம். ஆணின் ஜனாஸாவை ஆண்கள் நீராட்ட வேண்டும், பெண்ணின் ஜனாஸாவை பெண்கள் நீராட்ட வேண்டும். இதை வாசித்தீர்களா? : ஆண்கள் மேலாடையின்றித் தொழலாமா? ஜனாஸாவைக் குளிப்பாட்டும் விதிகள் இவை தான். பொதுவாக அன்னிய ஆண்களைப் பெண்களும் அன்னியப் பெண்களை ஆண்களும் அவசியமின்றிப் பார்க்க இஸ்லாம் தடை செய்துள்ளது. கற்றுக்கொள்தல் போன்ற அவசியக் காரியங்களுக்கு இத்தடை பாதகம் இல்லை என்றாலும் "ஜனாஸாவைக் குளிப்பாட்டுதல்" என்ற விஷயத்தில் அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற ஒரு விளக்கத்தை நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்து விட்டார்கள். எனவே இவ்விஷயத்தில் மேலதிகமாகக் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. வணக்க வழிபாடுகளைப் பற்றிய (தொழுகை போன்ற) விளக்கம் என்றால் அதைப் படக் காட்சிகளில் விளக்கலாம். குளியல் அந்தரங்கம் மறைக்கப்பட்டு, மறைவாகச் செய்ய வேண்டியது. அது ஜனாஸாவாக இருந்தாலும் அதன் அந்தரங்கம் மறைக்கப்பட்டு, அதன் உடலிலுள்ள குறைகளும் மறைக்கப்பட வேண்டும் என்பதால் ஜனாஸாவைக் குளிப்பாட்டுவதை பொது காட்சியாக்குவதும் அதனை அன்னியர்கள் போட்டுக் காண்பதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதல்ல.
ஓமலூர் கிளை சங்கத்தின் 8வது கிளை மாநாடு, ஓமலூரில் 22.10.2016 அன்று சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர் C . ராமசாமி, தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக, தோழர் கௌசல்யன் சங்க கொடியை ஏற்றினார். தோழர் செல்வகுமார் அஞ்சலியுறை வழங்கினார். தோழர் கௌசல்யன் கிளை செயலர் அனைவரையும் வரவேற்றார். தோழர் S . தமிழ்மணி, மாநில உதவி செயலர் முறைப்படி மாநாட்டை துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள், M . பன்னீர்செல்வம், R . வேலு, கிளை செயலர்கள் தோழர்கள் P . செல்வம் (கொண்டலாம்பட்டி) வெங்கடேசன் (மெய்யனுர் OD) இளங்கோவன் (உதவி செயலர், செவ்வை) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாவட்ட செயலர் தோழர் E . கோபால், மாநாட்டு சிறப்புரை வழங்கினார். ஆண்டறிக்கை, வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஏற்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், தோழர்கள் கௌசல்யன், செல்வகுமார், காட்டுராஜா ஆகியோர் தலைவர், செயலர், பொருளாராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். தோழர் செல்வகுமார் புதிய கிளை செயலர் நன்றி கூறி, மாநாட்டை முடித்து வைத்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.
சின்னத்திரையின் கலகலப்பான சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. நகைச்சுவையுடன் சமையலும் செய்து அசத்தும் குக் அந்த ஆசையால் சினிமாவிலிருந்து தூக்கி வீசப்பட்ட காமெடி நடிகர் கவுண்டமணி! பலருக்கு தெரியாத ரகசியம் இது? தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக பல வருடங்களாக வலம் வந்தவர் கவுண்டமணி. ஆசை யாரை விட்டது ? எல்லா நடிகர்களுக்கும் கமலின் விக்ரம் ! சாதனை !! ரஜினி, விஜய், அஜித் படங்களை முந்தியது உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் தான் விக்ரம். இது இந்திய அதிரடி த்ரில்லர் படம் ஆகும். இந்த படத்தை நடிகர் பசுபதியா இது..! இளம் வயது புகைப்படம் ; எப்படி இருக்கிறார் பாருங்க மாயன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, அதன்பின் விருமாண்டி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் பசுபதி. நடிகர் சிவாஜி கணேசன் நடித்து தோல்வி அடைந்த படங்கள் என்னென்ன? சிவாஜி கணேசன் 1969ல் மட்டும் 9படங்களில் நடித்தார் அதில் 7படங்கள் தோல்வி 2 படம் வெற்றி. இது இந்த காலத்தில் நிகழ்ந்திருந்தால் lyrics.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content. Tamil film songs lyrics. Database with collection / list of all Tamil movie song lyrics. தமிழ் சினிமா பாடல் (கள்) வரிகள் அடங்கிய‌ கள‌ஞ்சியம்.
சென்னை: ‘இரும்புத்திரை’, ‘விஸ்வாசம்’ உள்பட பல படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றிய ஆண்டனி பாக்யராஜ் இயக்கும் ‘சைரன்’ என்ற படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, யோகி பாபு நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் கீர்த்தி சுரேஷ் மீண்டும் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இதற்கு முன்பு ஓடிடியில் வெளியான ‘சாணிக் காயிதம்’ என்ற படத்தில் அவர் போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்திருந்தார். ஆண்டனி பாக்யராஜ் கூறுகையில், ‘நான் இயக்கும் ‘சைரன்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஹீரோ ஜெயம் ரவிக்கு நிகரான கேரக்டர் என்றாலும், ஜெயம் ரவிக்கு அவர் ஜோடி இல்லை. கீர்த்தி சுரேஷின் திரைப்பயணத்தில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும்’ என்றார். Related Stories: தமிழகத்தில் 26 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு ஊனமாஞ்சேரி சினிமா ஷூட்டிங்கில் பரபரப்பு ரோப் கயிறு அறுந்ததில் உதவி ஸ்டண்ட் மாஸ்டர் பலி: போலீசார் விசாரணை குஜராத், லக்னோவிலிருந்து வண்டலூர் பூங்காவுக்கு புதிதாக 3 சிங்கம் விரைவில் வருகை பஸ், ரயில் நிலையங்களில் சுற்றித்திரிந்த ஆதரவற்ற முதியவர்கள் குடும்பத்தினரிடம் சேர்ப்பு கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்ட 45 கட்டுமான இடங்களில் ரூ.51 ஆயிரம் அபராதம்: மாநகராட்சி நடவடிக்கை ஒருநாள் சிறப்பு தணிக்கையில் திருந்தி வாழப்போவதாக 26 குற்றவாளிகள் உறுதிமொழி கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு ரூ.24.17 கோடி சொத்துவரி நிலுவை வைத்துள்ள 39 உரிமையாளர்களின் முழு விவர பட்டியல் இணையதளத்தில் வெளியீடு: மாநகராட்சி அதிரடி ஆதம்பாக்கம் ஜீவன் நகரில் ரூ.5 கோடியில் பாலம் கட்ட பூமிபூஜை ‘முதல்வரின் முகவரி’ துறை மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? பொதுமக்களிடம் நேரடியாக பேசி விவரம் கேட்டார் முதல்வர் ஸ்டாலின்: சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு பாராட்டு ரூ.4000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கு சுரானா நிறுவன பங்குதாரரின் ஜாமீன் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகத்தில் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு: ரயில், விமான நிலையங்களில் கண்காணிப்பு குடியரசு தலைவர், கவர்னர் அலுவலகங்களில் தமிழக அரசின் 66 மசோதாக்கள் தேக்கம் தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பான முறையில் சேவையாற்றியவர்களுக்கு மாநில விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் தமிழகம் முழுவதும் 220 ஜோடிகளுக்கு திருமணம் மு.க.ஸ்டாலின் தலைமையில் 30 ஜோடிகளுக்கு திருமணம்: சென்னை திருவான்மியூரில் இன்று நடக்கிறது கொரோனா பணியில் தொற்று பாதித்து உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு மாற்றுத்திறனாளிகள் தினம் தலைவர்கள் வாழ்த்து தமிழ்நாடு ஊர்காவல் படையினரின் பணிநாள் குறைப்பை எதிர்த்த வழக்கு; ஐகோர்ட் தள்ளுபடி உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் மாற்றுத்திறனாளிகள் மரியாதை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு
வரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்: வேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும். குறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு (நடப்பு | முந்திய) 00:41, 20 சூன் 2022‎ Thulabarani (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (908 எண்ணுன்மிகள்) (+9)‎ (நடப்பு | முந்திய) 09:28, 23 ஜனவரி 2018‎ OCRBot (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (899 எண்ணுன்மிகள்) (+175)‎ (நடப்பு | முந்திய) 05:45, 13 மே 2015‎ Gopi (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (724 எண்ணுன்மிகள்) (-59)‎ . . (Text replace - "பகுப்பு:பிரசுரங்கள்" to "") (நடப்பு | முந்திய) 02:24, 13 மே 2015‎ Gopi (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (783 எண்ணுன்மிகள்) (-5)‎ . . (Text replace - "<br/>" to "") (நடப்பு | முந்திய) 04:24, 10 மே 2015‎ Gopi (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (788 எண்ணுன்மிகள்) (-12)‎ . . (Text replace - "வகை=பாடசாலை வெளியீடு|" to "வகை=பாடசாலை மலர்|") (நடப்பு | முந்திய) 08:56, 8 மே 2015‎ Gopi (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (800 எண்ணுன்மிகள்) (+30)‎ (நடப்பு | முந்திய) 04:05, 2 மே 2015‎ Gopi (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (770 எண்ணுன்மிகள்) (-1)‎ . . (Text replace - "=={{Multi|வாசிக்க|To Read}}== * [http" to "=={{Multi|வாசிக்க|To Read}}== * [http") (நடப்பு | முந்திய) 08:29, 22 ஏப்ரல் 2015‎ Gopi (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (771 எண்ணுன்மிகள்) (-1)‎ . . (Text replace - "{{ பிரசுரம்|" to "{{பிரசுரம்|") (நடப்பு | முந்திய) 05:18, 5 பெப்ரவரி 2015‎ Pilogini (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (772 எண்ணுன்மிகள்) (+772)‎ . . ("{{ பிரசுரம்| நூலக எண் = 13827..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) "https://noolaham.org/wiki/index.php/Annual_Inter-House_Athletic_Meet_2010" இருந்து மீள்விக்கப்பட்டது
பூமிக்கு அடியில் விளையும் காய்கறியில் ஒன்று முள்ளங்கி, முள்ளங்கிக்கு என்று பல தனி சிறப்புகளும், ஆரோக்கிய நன்மைகளும் உண்டு. முள்ளங்கிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. முள்ளங்கி இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் இயற்கை நைட்ரேட்டுகளின் நல்ல தொடக்கமாகும். உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய நோய்க்கான அபாயங்களில் இருந்து பாதுகாக்கவும் இது உதவுகின்றது. முள்ளங்கி புற்றுநோயைத் தடுக்க உதவும் என்பது ஆச்சரியமான ஒன்றாகும். மலச்சிக்கலை தடுக்க முள்ளங்கி ஒரு சிறந்த உணவாகும். மேலும் உடல் எடை குறைக்க முள்ளங்கியை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முள்ளங்கி மட்டுமில்லாமல் அதன் இலைகளும் ஒரு சிறந்த கீரை ஆகும். இந்த கீரை மிகவும் சுவையாக இருக்கும். இதில் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன, இது செரிமானத்திற்கு மிகவும் உதவியாக உள்ளது. இது பல்வேறு வகைகள் மற்றும் வண்ணங்களில் கிடைக்கிறது. பொதுவாக வெள்ளை நிறத்தில் கேரட் வடிவில் கிடைக்கிறது. தொண்டை புண், பித்த கோளாறுகள் மற்றும் ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய சீன மருத்துவத்தில் ஏற்படும் அழற்சி போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்க முள்ளங்கி பயன்படுத்தப்படுகிறது. முள்ளங்கியின் வாசனை காரணமாக பலர் அதை உணவில் இருந்து தவிர்க்கின்றனர். ஆனால் அதில் ஏராளமான நன்மைகள் உள்ளன. உதாரணமயாக சிறுநீரகக் கற்களை தடுக்கிறது, பசியைத் தூண்டும், தொண்டை சம்பந்தமான நோய்களை குணமாக்கும்.
இதுவரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்பதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. வடிவமைப்புக் கோவைக்காக இக்கட்டுரை வரிசை CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து அமைத்துள்ளேன். ஆனால் இக்கட்டுரைத் தொடர் வெறும் தமிழாக்கம் அல்ல. இந்தத் கட்டுரை வரிசையில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்டுவதாக உத்தேசம். இத்தொடரின் சில பகுதிகளில் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு குழு எவ்வளவு முக்கியம், மாற்றங்களை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும், விற்பதா/வளர்ப்பதா, ஆராய்வதா/ஆரம்பிப்பதா, விமர்சகர்கள் முக்கியத்துவம், வருமான/லாப திட்டம், விற்பனை வழிமுறைகள் போன்ற பல யுக்திகளைப் பார்த்துள்ளோம். முற்பகுதியில் நுகர்வோர் மற்றும் நிறுவன மென்பொருட்களுக்கான தற்கால எதிர்பார்ப்புக்களை விவரிக்க ஆரம்பித்தோம். இப்பகுதியில் அதைத் தொடரலாம் வாருங்கள்! ***** கேள்வி: கடந்த பல்லாண்டுகளாக மென்பொருள் துறை பல மாற்றங்களை அடைந்துள்ளது. இப்போது உருவாக்கப்படும் மென்பொருள் சேவைகளுக்கும், விற்பொருட்களுக்கும், பயனர் எதிர்பார்ப்புக்கள் என்ன? புது மென்பொருள் உருவாக்குகையில் நான் எந்தெந்த அம்சங்களுக்கு அதிகக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது? கதிரவனின் பதில்: மென்பொருட்களில் பலவகை உள்ளதால் ஒவ்வொரு வகைக்குமான எதிர்பார்ப்புக்கள் வித்தியாசமாக உள்ளன என்று பார்த்தோம். நுகர்வோர் மென்பொருட்கள், மின்வலை மற்றும் இணையச் சேவைகள், நிறுவன மென்பொருட்கள் (enterprise software), மற்றும் கட்டமைப்பு மென்பொருட்கள் என்னும் வகைகளைப்பற்றி குறிப்பிட்டோம். மேலும் முற்பகுதியில், கைக்கணினிகளில் நுகர்வோர் பயன்படுத்தும் மென்பொருட்களுக்கான எதிர்பார்ப்புக்களைப் பற்றியும், நிறுவன மென்பொருட்களுக்கான எதிர்பார்ப்பு விவரங்களையும் பார்த்தோம். இப்போது கட்டமைப்பு (infrastructure) மென்பொருட்களுக்கான எதிர்பார்ப்புக்களைப் பார்ப்போம். மென்பொருள் வகைகளிலேயே, மிக அதிக எதிர்பார்ப்பு மாற்றங்கள் கட்டமைப்பு மென்பொருட்களில்தான் என்பது என் கருத்து என்று கூறியிருந்தேன். அது உங்களுக்கு ஆச்சரியத்தை அளித்திருக்கலாம். மற்ற மென்பொருள் வகைகள் எவ்வளவு பளபளப்பான வியத்தகு மாற்றங்கள் அடைந்துள்ளன, அதையெல்லாம் விட்டுவிட்டு, போயும் போயும் வெறும் வெறிச்சென்று சுவாரஸ்யமற்ற கட்டமைப்பு மென்பொருட்களைப்பற்றி கதை அளக்கிறானே என்று அங்கலாய்த்திருக்கக் கூடும். மன்னித்துக் கொள்ளுங்கள். நுகர்வோருக்கும் (consumers) நிறுவனப் பயனர்களுக்கும் (enterprise users) கட்டமைப்பு ஒரு சுவாரஸ்யமற்ற துறை என்பதாலேயே கட்டமைப்பின் எதிர்பார்ப்புகளுக்கு விளைந்துள்ள மாற்றங்கள் பெரிது, வியக்கத்தக்கது. திரைக்குப் பின் வசிக்கும் கட்டமைப்பில் மற்ற மென்பொருட்கள் போல் அதைப் பயன்படுத்துபவர்கள் பொதுவாகப் பெரும் மாற்றங்களை எதிர்பார்ப்பதில்லை. மாறாக, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற்றங்களை ஏற்றுக் கொள்கிறார்கள். அவ்வாறிருக்க, அப்பப்பா? சென்ற சில வருடங்களில் கட்டமைப்பின் மேல் உள்ள எதிர்பார்ப்புக்கள் எவ்வளவு மாறிவிட்டன. இவற்றில் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்த்துள்ள மூன்றே மூன்று எதிர்பார்ப்புக்களை மட்டும் சுருக்கமாகக் குறிப்பிட்டு முடித்துக் கொள்கிறேன். (இல்லாவிட்டால் இதுவே ஆஞ்சநேயர் வால்போல் நீண்டுகொண்டே போகும்!) முதல் எதிர்பார்ப்பு, பெட்டிகளாக மட்டுமே கிடைக்கப் பெற்ற கட்டமைப்பு இப்போது பெட்டிகளிலிருந்து விடுதலையடைந்து மென்பொருளாகவும், அது மட்டுமல்லாமல் மென்பொருள் சேவைகள் மற்றும் வலைமேகச் சேவைகளாக அளிக்கப்பட வேண்டும் என்பதுதான். சிஸ்கோ, ஜூனிப்பர், நெட்டேப், ஈஎம்ஸி, போன்ற பெரும் நிறுவனங்களிலிருந்து பெட்டிமேல் பெட்டியாக வாங்கித் தள்ளிய நிறுவனங்கள் தற்போது பெரிய பெட்டிகள் (scale-up boxes) வேண்டாம், எங்கள் வலைமேக அமைப்புக்களில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொள்ளக் கூடிய (scale-out) மெய்நிகர் தனிமங்களாக (virtual instances) அளிக்க வேண்டும் என்று வழியமைப்பி (router), தீச்சுவர் (firewall) போன்ற பல கட்டமைப்புக்களை மெய்நிகர் மென்பொருட்களாகவும், தீயமென்பொருட்களைத் தடுக்கும் (malware prevention) வெப்ஸென்ஸ் போன்ற சேவைகளாகவும் கேட்கிறார்கள். அதனால், புதிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்க எண்ணினால், பெட்டிகளாக மட்டும் அளிக்க எண்ணாமல், மெய்நிகர் மென்பொருளாகவும் அளிக்க வேண்டிய எதிர்பார்ப்பு உள்ளது என்பதை மனதிலிருத்திச் செயல்படுங்கள். மேல் குறிப்பிட்டதோடு நெருங்கிப் பிணைந்துள்ள இரண்டாம் எதிர்பார்ப்பு மென்பொருள் இயக்கக் கட்டமைப்பு (software defined infrastructure). கட்டமைப்பு மென்பொருளாக மட்டும் இருக்க இயலாது. ஆனால் வெகு வேகத்துக்கான பெட்டிகள் எங்கு தேவையோ, அங்கு முன்போல் எல்லாம் கூடி மூடப்பட்ட (closed proprietary) கட்டமைப்பாக இல்லாமல், வேகத்துக்கான பகுதியை மட்டும் பெட்டிகளில் வைத்துவிட்டு அவற்றுக்குத் திறந்த இடைமுகமளித்து, அறிவுபூர்வமான கணிப்புக்களையெல்லாம் வெளியுள்ள மென்பொருளில் செய்து பெட்டிகளின் இயக்கங்களைத் தேவையான மாதிரி ஆக்குவது. அப்படியாக்கப் பட்டால், பெட்டிகள் வகை பெருகி விலை குறையும் என்பது வாடிக்கையாளர் எதிர்பார்ப்பு. இது மின்வலையில் ஆரம்பித்து (software defined networking), இப்போது சேமிப்பகம், பாதுகாப்பு மட்டுமன்றி மொத்தத் தகவல் மையத்துக்கே பரவியுள்ளது (software defined data center). இந்த மென்பொருள் இயக்கக் கட்டமைப்பு எதிர்பார்ப்பையும் புரிந்துகொள்ள வேண்டும். கட்டமைப்பு மென்பொருட்களுக்கு வேறொரு திக்கிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கைக்கணினி மென்பொருட்கள் ஸிரி போல் அறிவுற்றிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புள்ளது என்று பார்த்தோம் அல்லவா? அதே எதிர்பார்ப்பு கட்டமைப்பு மென்பொருட்களையும் ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டது! பெரும்தகவல் அலசல் (Big data Analysis) என்ற ஒரு விஷயம்பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது, பல்வேறு வகைப்பட்ட தகவல்துளிகளை எண்ணமுடியா அளவுக்கு சேர்த்து அலசி ஆராய்ந்து அதிலிருந்து கடற்கரை மணலை அலசி வைரம் கண்டெடுப்பது போல் மிக முக்கியமான விவரத்தைக் கடைந்தெடுப்பது. இந்த நுட்பத்தைக் கட்டமைப்பு மென்பொருட்களும் பயன்படுத்தி, கட்டமைப்பு முன்னேற்றத்துக்கும், தகவல் மையங்களை மென்பொருளால் இயக்கவும் பயன்படுத்தப் படவேண்டும் என்பது முக்கிய எதிர்பார்ப்பு. அதிலும், இன்னொரு முன்னேற்றம் என்னவென்றால் ஸிரி போல் இயந்திரக்கற்றல் (machine learning) எனப்படும் செயற்கையறிவு நுட்பத்தால், நாளாக நாளாக இன்னும் மேன்மேலும் அறிவுவளர்ச்சியுற்று, இன்னும் பலமான பலனளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்தத் துறைக்கு தகவல்நுட்ப இயக்க அலசல் (InfoTech Operational Analytics) என்ற புதுப்பெயரே அளிக்கப்பட்டு வளரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இத்தகைய இயக்க அலசல் பலவிதங்களிலும் பயன்படுத்தப் படுகிறது. ஒரு முக்கியமான விதம், மின்வலை மற்றும் பயன்பொருள் பாதுகாப்பு (network and applications security). சமீபத்தில் ஏற்பட்ட பல கணினித் தாக்குதல்களால் டார்கெட் போன்ற பெரும் நிறுவனங்கள் பாதிக்கப் பட்டதாலும், அமெரிக்க தேசீய பாதுகாப்புச் செயலாண்மை (national security agency – NSA) பற்றிய செய்தி வெளிப்பாடுகளாலும் மின்வலைப் பாதுகாப்பு மிக அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதுவும், உள்புகுதல்களை மொத்தமாகத் தடுக்க இயலாமையும், உள்ளாட்கள் தாக்குதல்கள் (எட்வர்ட் ஸ்னோடென் போல்) வெளிவந்துள்ளதாலும், மின்வலைப் போக்குவரத்து அலசல் (network traffic analysis) மூலந்தான் தாக்குதல்களைக் கண்டுபிடித்து முட்டுக்கட்டையிட இயலும் என்ற முடிவுக்குப் பெரும்பாலோர் வந்துள்ள படியால், மேற்கண்ட பெருந்தகவல் அலசல்பற்றி இத்துறையில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்னொருவிதம் என்னவெனில், மின்வலையில் உண்டாகும் இடைஞ்சல்களுக்கான மூலகாரணங்களையும், மின்வலை இயக்கத்தை எவ்வாறு செம்மைப்படுத்துவது என்பதற்கும், பெருந்தகவல் அலசலும், இயந்திரக்கற்றலும் பயன்படுத்தும் எதிர்பார்ப்பு. மேற்கண்ட விவரிப்பில் மென்பொருட்களுக்கானத் தற்கால எதிர்பார்ப்புக்களைச் சிறிதேனும் விளக்கியிருப்பதாக நம்புகிறேன். இன்னும் விவரித்துக் கொண்டே போகலாம் என்றாலும், இப்போதைக்கு இத்தோடு நிறுத்திக்கொள்வது நல்லது என்று கருதுகிறேன். இதுவரை இக்கட்டுரைத் தொடரில் பத்து ஆரம்பநிலை யுக்திகளைப் பார்த்துள்ளோம். இன்னும் பலப்பல யுக்திகள் உள்ளன. ஆனால் இந்தப் பத்து யுக்திகளுக்கே பதினெட்டு மாதங்களாகி விட்டன! (ஒரு யுக்தியே ஏழு பகுதிகளாக விரிந்து விட்டது!) அதனால், ஆரம்பநிலை யுக்தித் தொடரைத் தற்போதைக்குப் பரணில் ஏற்றி வைத்துவிட்டு வேறு தொடரை ஆரம்பிக்க எண்ணுகிறேன். அத்தொடரை முடித்துவிட்டு, இந்த யுக்திக் கட்டுரைகளை மீண்டும் தொடர்வோம். (இடைவேளை) கதிரவன் எழில்மன்னன் ***** மீண்டும் 'சூர்யா துப்பறிகிறார்' முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! தொழில்நுட்ப நிபுணர் சூர்யா தனது துப்பறியும் திறமையால், கிரண் மற்றும் ஷாலினியோடு இணைந்து பல தொழில்நுட்ப குற்ற மர்மங்களை இதற்கு முன்னர் தீர்த்து வைத்துள்ளது தென்றல் வாசகர்களுக்குத் தெரியும். இந்த வரிசையில் இன்னொரு விறுவிறுப்பான கதையைச் சொல்ல வருகிறார் கதிரவன் எழில்மன்னன். மெய்ப்பதிவு தொழில்நுட்ப நிறுவனம் (Bio-3D printing) ஒன்று பெரும் சிக்கலில் மாட்டியிருப்பதைச் சூர்யாவின் கவனத்துக்குக் கொண்டு வருகிறாள் ஷாலினி. கிரணும் ஷாலினியும் புடைசூழ, இந்த மர்ம முடிச்சை அவிழ்க்கக் கிளம்பிவிட்டார் சூர்யா. எப்படியென்பதை வரப்போகும் தென்றல் இதழ்களில் வாசிக்கத் தவறாதீர்கள்!
ஸகாத் கட்டாயக் கடமை என்பதையும், அதனை முறையாக நிறைவேற்றுபவர்களுக்குக் கிடைக்கும் சிறப்புகளையும், அதை நிறைவேற்றாதவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் தண்டனைகளையும் கடந்த இதழ்களில் விரிவாகப் பார்த்தோம். இந்தத் தொடரில் ஸகாத்தைப் பெறுவதற்குத் தகுதியானவர்கள் யார்? என்பதை நாம் விரிவாகக் காண இருக்கின்றோம். திருக்குர்ஆன் 9:60 வசனத்தில் ஸகாத் வழங்கப்படுவதற்குத் தகுதியானவர்களாக எட்டு வகையினரை அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். அவர்கள் 1. யாசிப்பவர்கள் 2. ஏழைகள். 3. ஸகாத்தை வசூல் செய்பவர்கள் 4. உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்கள் 5. அடிமைகளை விடுதலை செய்வதற்கு 6. கடன் பட்டவர்கள் 7. அல்லாஹ்வின் பாதையில் செலவிடுதல் 8. நாடோடிகள். ஆகியோராவார்கள். யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன் (அல்குர்ஆன் 9:60) மேலும் நபியவர்களும் ஸகாத்தைப் பெறுவதற்குத் தகுதியானவர்கள் யார் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமனுக்கு (ஆளுநராக) அனுப்பினார்கள். அப்போது அவரிடம், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; நான் அல்லாஹ்வின் தூதர் என்ற உறுதி மொழியின்பால் அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களில் செல்வர்களிடம் பெற்று, ஏழைகளுக்கு வழங்குவதற்காக அவர்களின் செல்வத்தில் இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவிப்பீராக!” என்று கூறினார்கள். நூல்: புகாரி (1395) செல்வந்தர்களிடம் பெற்று ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். ஏழைகள் என்றால் தேவையுடையவர்கள் என்று பொருளாகும். மேற்கண்ட 9:60 வசனத்தில் கூறப்பட்டவர்களில் அனைவருமே தேவையுடையவர்களாகத் தான் உள்ளனர். அதன் காரணமாகத் தான் நபியவர்கள் பொதுவாக செல்வந்தர்களிடம் பெற்று ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். யாசிப்பவர்களுக்கும் ஏழைகளுக்கும் வித்தியாசம் மேற்கண்ட 9:60 வது வசனத்தில் யாசிப்பவர்கள் என்பதற்கு அரபியில் “ஃபுகரா” என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இது “ஃபகீர்” என்ற சொல்லின் பன்மையாகும். “ஃபகீர்” என்ற சொல்லிற்கு தேவையுடையவன் என்பது நேரடிப் பொருளாகும். ஏழைகள் என்பதற்கு அரபி மூலத்தில் “மஸாகீன்” என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இது “மிஸ்கீன்” என்ற சொல்லின் பன்மையாகும். மிஸ்கீன் என்றால் யார் என்பதை நபியவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில், அவன் (தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளப் பிறரிடம் கேட்க வெட்கப்பட்டு) தன்மானத்துடன் நடந்து கொள்வான். நீங்கள் விரும்பினால், “அவர்கள் மக்களிடம் (எதையும்) வற்புறுத்திக் கேட்க மாட்டார்கள்” எனும் (இந்த 2:273வது) இறை வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (4539) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில் அவன் தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள எந்தச் செல்வத்தையும் பெற்றிருக்க மாட்டான்; பிறரும் அவனது நிலையை அறிந்து தர்மம் செய்ய மாட்டார்கள், தானும் வலியச் சென்று கேட்கமாட்டான். (இத்தகையவனே உண்மையான ஏழையாவான்.) அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி(1479) மேற்கண்ட ஹதீஸ்களில் ஏழை என்பதற்கு அரபி மூலத்தில் மிஸ்கீன் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. அதாவது மிஸ்கீன் என்பவன் தன்னுடைய வறுமை நிலையை யாரிடமும் வெளிப்படுத்தாமல், பிறரிடம் யாசகமாகக் கேட்பதற்கு வெட்கப்பட்டு, தன்மானத்துடன் வாழ்பவராவார். இவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஸகாத்தை வழங்குவது முஃமின்கள் மீது கடமையாகும். ஆனால் ஃபகீர் என்பவரும் வறுமை நிலையில் உள்ளவர் தான். ஆனால் இவர்கள் தங்களின் நிலையை வெளிப்படுத்தி உதவி கேட்பார்கள். அல்லது அவர்களின் வறிய நிலைமை வெளிப்படையாகத் தெரியும். ஒருவர் இந்நிலைக்கு உள்ளாகும் போது அவனது தனது நிலைமையை வெளிப்படுத்தி ஸகாத்தைப் பெறுவது மார்க்கத்தில் குற்றமாகாது. செல்வந்தன் என்றால் யார்? தன்னுடைய உழைப்பின் மூலம் தனது மற்றும் தன்னுடைய குடும்பத்தின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்பவர்கள் அனைவரும் செல்வந்தர் ஆவார்கள். இவர்கள் அனைவரும் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்கு அதிகமாக ஸகாத் நிறைவேற்ற வேண்டிய அளவிற்கு செல்வத்தைப் பெற்றிருந்தால் அவர்கள் கண்டிப்பாக அதனை நிறைவேற்ற வேண்டும். செல்வந்தர்கள் ஸகாத் பெறுவது கூடாது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செல்வந்தனுக்கும், தெளிவான அறிவுள்ள, ஊனமில்லாத திடகாத்திரமானவனுக்கும் ஸகாத்தைப் பெறுவது ஹலாலாகாது. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) நூல்: திர்மிதி (589) இரண்டு மனிதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் தர்மப் பொருளிலிருந்து கேட்டு வந்தனர். நபியவர்கள் அந்த இருவரின் மீதும் பார்வையை (மேலும் கீழுமாகப்) பார்த்தார்கள். அந்த இருவரையும் திடகாத்திரமானவர்களாகக் கண்டார்கள். பிறகு நீங்கள் இருவரும் விரும்பினால் உங்களுக்கு நான் வழங்குகிறேன். ஆனால் இதில் செல்வந்தருக்கும், சம்பாதிக்கும் வலிமை பெற்றவருக்கும் எந்த பாத்தியதையும் கிடையாது என்று கூறினார்கள். நூல்: அஹ்மத் (18001) செல்வ நிலையில் உள்ளவர்கள் பின்வரும் ஐந்து நிலைகளில் இருந்தால் அவர்கள் ஸகாத் பொருளைப் பெற்று, பயன்படுத்திக் கொள்ளலாம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செல்வந்தனுக்கு ஸகாத்தைப் பெறுவது ஹலாலாகாது. ஐந்து நபர்களைத் தவிர. 1. அதனை வசூல் செய்யக் கூடியவர்கள். 2. தன்னுடைய செல்வத்தைக் கொண்டு ஸகாத் பொருளை விலைக்கு வாங்கியவர் 3. கடன் பட்டவர்கள் 4. அல்லாஹ்வின் பாதையில் போரிடக் கூடியவர்கள் 5. ஸகாத்திலிருந்து ஒரு ஏழைக்கு தர்மமாக வழங்கப்படுகிறது; அவன் அதிலிருந்து ஒரு செல்வந்தருக்கு அன்பளிப்பாக வழங்குவது. அறிவிப்பவர்: அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) நூல்: அஹ்மத் (11555) மேற்கண்ட ஹதீஸிலிருந்து செல்வந்தர்களாக உள்ளவர்கள் ஸகாத்தை வசூல் செய்கின்ற பொறுப்பில் இருந்தால் அவர்களுக்கு அதிலிருந்து வழங்கலாம் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது. மேலும் ஸகாத்தாக உள்ள ஒரு பொருளை ஒரு செல்வந்தர் விலைக்கு வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். செல்வந்தராக உள்ள நிலையில் கடன்பட்டவர்கள் யார் என்பதை பற்றிய விபரம் பின்னால் வருகிறது. மேலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடக் கூடியவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் அவர்களுக்கு ஸகாத்திலிருந்து வழங்குவது கூடும். 9:60 வசனத்தில் ஸகாத்தை அல்லாஹ்வுடைய பாதையில் செலவிட வேண்டும் என்று வந்துள்ளது. அல்லாஹ்வுடைய பாதை என்பது இறைவனுடைய பாதையில் சத்தியக் கொள்கையை நிலைநாட்டுவதற்காகப் போரிடக் கூடியவர்கள் என்பது தான் விளக்கமாகும். சிலர் 9:60 வசனத்தில் கூறப்பட்டுள்ள அல்லாஹ்வுடைய பாதை எது என்பதைச் சரியாக விளங்காமல் அனைத்து நல்ல காரியங்களுக்குச் செலவிடுவதும் அல்லாஹ்வுடைய பாதை தான்;. எனவே நம்முடைய ஸகாத்தை பள்ளிவாசல் கட்டுவதற்கும், பணக்கார மாணவர்களும் சேர்ந்து பயிலும் மதரஸாக்களுக்கும், எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் பயன்படுத்தலாம் எனக் கூறுகின்றனர். இது அறியாமையாகும். 9:60 வசனத்தில் அல்லாஹ் 8 வகையினரைக் குறிப்பிடுகின்றான். இதில் 7 சாராருக்குக் கொடுத்தாலும் அல்லாஹ்வுடைய பாதையில் செலவிடுவது தான். இதில் இறைவன் அல்லாஹ்வுடைய பாதை என்று ஏன் தனியாகக் கூற வேண்டும். அல்லது அல்லாஹ்வுடைய பாதையில் ஸகாத்தைச் செலவிடுங்கள் என்று இறைவன் பொதுவாகக் கூறியிருக்கலாம். ஏன் 8 வகையாகப் பிரிக்க வேண்டும். இதிலிருந்தே மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்ட அல்லாஹ்வுடைய பாதை என்பது இறைவனுடைய பாதையில் சத்தியக் கொள்கையை நிலைநாட்டுவதற்காகப் போரிடுபவர்களை மட்டுமே குறிக்கும். அதைத் தான் மேற்கண்ட நபிமொழியும் தெளிவுபடுத்துகிறது. மேலும் மதரஸாக்களில் படிக்கின்ற ஏழை மாணவர்களுக்காக மட்டும் செலவிட வேண்டும் என்று குறிப்பிட்டு ஸகாத்தை வழங்குவதில் தவறில்லை. ஏழை ஒருவர் தனக்கு ஸகாத்திலிருந்து வழங்கப்பட்ட பொருளை செல்வந்தருக்கு அன்பளிப்பாக வழங்கினால் அந்த செல்வந்தர் அதனை பெற்றுக் கொள்ளலாம். நபியவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தர்மப் பொருள்களைப் பெறுவது ஹராமாகும். ஆனால் பரீரா (ரலி) அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட தர்மப் பொருளை நபியவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய போது நபியவர்கள் அதனைச் சாப்பிட்டுள்ளார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு இறைச்சி ùச்காண்டு வரப்பட்டது. அப்போது நான் “இது பரீராவுக்கு தர்மம் செய்யப்பட்ட பொருள்” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இது பரீராவுக்கு தர்மமாகும்; நமக்கு அன்பளிப்பாகும்” என்றார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி (1493) கடன் பட்டவர்கள் ஒருவர் தன்னுடைய வறுமையின் காரணமாக கடன் வாங்கியிருந்தால் அவர் ஏழை என்பதில் வந்து விடுவார். அவருக்கு ஸகாத்திலிருந்து வழங்கி அவருடைய கடனை அடைப்பதற்கு உதவி செய்ய வேண்டும். மேலும் செல்வந்தர்கள் கடன்பட்டிருந்தாலும் அவர்களுடைய கடனை அடைப்பதற்காக ஸகாத்திலிருந்து வழங்கலாம் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். செல்வந்தர்கள் கடன் பட்டால் அவர்களுடைய செல்வத்திலிருந்து அடைக்க வேண்டியது தானே, எதற்காக அவர்களுக்கு ஸகாத்திலிருந்து வழங்க வேண்டும்? என்ற சந்தேகம் ஏற்படலாம். செல்வந்தர்கள் கடன்பட்டால் அவர்களுக்கு ஸகாத்திலிருந்து வழங்கலாம் என்பது செல்வந்தர்கள் தம்முடைய சுய தேவைக்காகப் பெற்ற கடன் அல்ல. மாறாகப் பொது விஷயத்திற்காக ஒன்றைப் பொறுப்பேற்கும் போது அதில் கடன் ஏற்பட்டால் அதைப் பொறுப்பேற்றவர் தன்னுடைய செல்வத்திலிருந்து தான் அடைக்க வேண்டும் என்பது கிடையாது. ஸகாத் பொருளைப் பெற்றும் அவர் அந்தக் கடனை அடைக்கலாம். இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். கபீஸா பின் முகாரிக் அல்ஹிலாலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் (மற்றொருவர் செலுத்த வேண்டிய) ஓர் இழப்பீட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஏதேனும் கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தர்மப் பொருட்கள் நம்மிடம் வரும் வரை இங்கேயே இருங்கள். அதில் ஏதேனும் உங்களுக்குத் தரச் சொல்கிறோம்” என்று கூறினார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: கபீஸா! மூன்று பேருக்கு மட்டுமே யாசிக்க அனுமதி உண்டு. ஒருவர் மற்றவரது ஈட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டவர். அவர் அத்தொகையை (உரியவரிடம் ஒப்படைப்பதற்காக அதைப்) பெறுகின்ற வரை யாசிக்கலாம். பிறகு (யாசிப்பதை) நிறுத்திக் கொள்ள வேண்டும். மற்றொருவர் (இயற்கைச்) சேதம் ஏற்பட்டு செல்வங்களை இழந்தவர். அவர் “வாழ்க்கையின் அடிப்படையை‘ அல்லது “வாழ்க்கையின் அவசியத் தேவையை’ அடைந்து கொள்ளும் வரை யாசிக்கலாம். இன்னொருவர் வறுமைக்கு ஆட்பட்டவர். அவருடைய கூட்டத்தாரில் (அவரைப் பற்றி) விவரம் தெரிந்த மூவர் முன் வந்து, “இன்ன மனிதர் வறுமைக்கு ஆட்பட்டுள்ளார்” என்று (சாட்சியம்) கூறுகின்றனர் என்றால், அவர் “வாழ்க்கையின் அடிப்படையை’ அல்லது “வாழ்க்கையின் அவசியத் தேவையை’ அடைகின்ற வரை யாசிப்பது அவருக்குச் செல்லும். கபீஸா! இவையன்றி மற்ற யாசகங்கள் யாவும் தடை செய்யப்பட்டவையே (ஹராம்) ஆகும். (இம்மூன்று காரணங்களின்றி ஒருவர் யாசித்துச் சாப்பிட்டால்) அவர் தடை செய்யப்பட்டதையே (ஹராம்) சாப்பிடுகிறார். நூல்: முஸ்லிம் 1730 (தமிழாக்கம் எண்: 1887) மற்றவருக்காகப் பொறுப்பேற்ற ஒரு செல்வந்தர் அதனை நிறைவேற்றுவதற்காக தர்மப் பொருளை பெற்றுக் கொள்ளலாம் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம். ஸகாத்தை வசூலிப்பவர்கள் உரியவர்களிடமிருந்து ஸகாத்தைப் பெற்று, அதைப் பாதுகாத்து, உரியவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகப் பணியாற்றுகின்ற அனைவரும் ஸகாத்தை வசூலிப்பவர்களில் அடங்குவர். இவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் இவர்களுக்கு ஸகாத்திலிருந்து வழங்க வேண்டும். இதன் அடிப்படையில் தான் நற்காரியங்களுக்காக வசூல் செய்பவர்களுக்கு கமிஷன் வழங்கப்படுகிறது. சில சகோதரர்கள் கமிஷன் பெறுபவர்களை ஏதோ அநியாயமாகப் பறித்துச் சாப்பிடுபவர்களைப் போல் கருதுகின்றனர். இது தவறாகும். நற்காரியங்களுக்காகத் தன்னுடைய நேரங்களையும், காலங்களையும் செலவிட்டு அரும்பாடுபட்டு வசூல் செய்பவர்களுக்கு வழங்கினால் தான் நற்பணிகள் தொடர்ந்து நடைபெறும். அல்லாஹ்வே வழங்குமாறு கூறியிருப்பதினால் அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது நாம் விளங்கிக் கொள்ளலாம். ஸகாத்தை வசூல் செய்பவர்கள் எவ்வளவு வசதி படைத்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு வழங்கப்பட்டால் பெற்றுக் கொள்ளலாம். அப்துல்லாஹ் பின் சஅதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் உமர் (ரலி) அவர்களிடம் அவர்களது ஆட்சிக் காலத்தின் போது சென்றேன். அப்போது அவர்கள் என்னிடம், “நீங்கள் மக்கள் (நலப்) பணிகள் சிலவற்றுக்குப் பொறுப்பேற்றிருப்பதாகவும், அதற்காக ஊதியம் தரப்பட்டால் அதை நீங்கள் வெறுப்பதாகவும் எனக்குத் தகவல் வந்ததே! (உண்மைதானா?)” என்று கேட்டார்கள். அதற்கு நான் “ஆம்’ என்றேன். உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் எந்த நோக்கத்தில் இப்படிச் செய்கிறீர்கள்?” என்று கேட்க, நான், “என்னிடம் பல குதிரைகளும் பல அடிமைகளும் உள்ளனர். நான் நல்ல நிலையில் தான் இருக்கிறேன். ஆகவே, என் ஊதியம் முஸ்லிம்களுக்கு தர்மமாக இருக்கட்டும் என்று நான் விரும்புகின்றேன்” என்று பதிலளித்தேன். உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அப்படிச் செய்யாதீர்கள். ஏனென்றால், நீங்கள் விரும்பியபடியே நானும் விரும்பி வந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு (மக்கள் நல நிதியிலிருந்து) நன்கொடை வழங்குவார்கள். நான், “என்னைவிட அதிகத் தேவை உடையோருக்கு இதைக் கொடுங்கள்” என்று சொல்லி வந்தேன். இறுதியில் ஒரு முறை நபி (ஸல்) அவர்கள், (நன்கொடைப்) பொருள் ஒன்றை எனக்கு அளித்த போது, நான், “என்னை விட அதிகத் தேவை உடையோருக்கு இதை வழங்குங்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “(முதலில்) இதை வாங்கி உங்களுக்கு உடைமையாக்கிக் கொள்ளுங்கள். பிறகு, (தேவைப்படவில்லை யென்றால்,) தர்மம் செய்து விடுங்கள். இந்தச் செல்வத்திலிருந்து எது நீங்கள் எதிர்பார்க்காமலும் நீங்களாகக் கேட்காமலும் உங்களுக்கு வந்ததோ அதை (மறுக்காமல்) வாங்கிக் கொள்ளுங்கள். அப்படி எதுவும் வரவில்லை யென்றால் நீங்களாக அதைத் தேடிச் செல்லாதீர்கள்” என்று சொன்னார்கள். நூல்: புகாரி (7163) வசூல் செய்பவர்கள் தம்மை வசூல் செய்வதற்கு யார் நியமித்தார்களோ அவர்களிடமிருந்து தான் பெற்றுக் கொள்ள வேண்டும். எவ்வித மோசடியும் செய்து விடக் கூடாது. ஸகாத் பொருளை உரியவர்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதற்காகப் பணியாற்றுபவர் அதனை முறையாகச் செய்தால் அவருக்கும் தர்மம் செய்த கூலி கிடைக்கும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிமான, நம்பிக்கைக்குரிய பாதுகாவலன், தான் ஏவப்பட்ட முறையில் முழுமையாக – நிறைவாக, நல்ல முறையில் மனப்பூர்வமாகத் தான் ஏவப்பட்டபடி, ஏவப்பட்டவருக்குத் தர்மம் செய்தால் அவனும் தர்மம் செய்தவர்களில் ஒருவனாவான். அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி) நூல்: புகாரி (1438) மேலும் வசூல் செய்பவர் தமக்கு முறையாக வழங்கப்பட்ட கூலிக்கு மேல் அதிலிருந்து எடுத்தால் அவர் மோசடியாளராவார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாம் ஒருவரை ஒரு பணியைச் செய்வதற்காக நியமிக்கின்றோம். அவருக்கு அழகிய முறையில் கூலியும் வழங்கி விடுகின்றோம். அதற்கு பிறகு அவர் (அதிலிருந்து) எடுத்துக் கொள்வது மோசடியாகும். அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்: அபூதாவூத் (2554) அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (“அஸ்த்‘ எனும் குலத்தைச் சேர்ந்த) ஒருவரை (“ஸகாத்’ வசூலிக்கும்) அதிகாரியாக நியமித்தார்கள். அந்த அதிகாரி தமது பணியை முடித்துக்கொண்டு நபியவர்களிடம் திரும்பி வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், “உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உமக்கு அன்பளிப்பு வழங்கப் படுகிறதா இல்லையா என்று பாரும்!” என்று கூறினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாலை தொழுகைக்குப் பிறகு எழுந்து நின்று, ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனை அவனுக்குரிய பண்புகளைக் கூறி போற்றிப் புகழ்ந்த பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: பின்னர், அந்த அதிகாரிக்கு என்ன ஆயிற்று? அவரை நாம் (ஸகாத் வசூலிக்க) அதிகாரியாக நியமித்தோம். அவரோ நம்மிடம் வந்து “இது உங்கள் அதிகாரத்திற்குட்பட்டது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று கூறுகிறார். அவர் தம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்துகொண்டு, தமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே! (இந்த) முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் அந்த(ப் பொதுச்) சொத்திலிருந்து முறை கேடாக எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தமது பிடரியில் சுமந்து கொண்டு நிச்சயம் வருவார். அது ஒட்டகமாக இருந்தால் அது கனைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்; அது பசுவாக இருந்தால் அது கத்திக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்; அது ஆடாக இருந்தால் அது கத்திக்கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்” என்று கூறிவிட்டு “(இறைவா! உனது செய்தியை மக்களிடம்) நான் சேர்த்துவிட்டேன்” என்று கூறினார்கள். நூல்: புகாரி (6636) உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்கள் ஸகாத்தைப் பெற தகுதியானவர்களில் உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்கள் என்ற பிரிவினரும் அடங்குவார்கள். உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்கள் என்ற பிரிவினரில் முஸ்லிம் அல்லாதவர்களும், புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களும் அடங்குவர். உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்கள் என்று அல்லாஹ் கூறியதிலிருந்தே இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட வேண்டிய முஸ்லிம் அல்லாதவர்களும் அடங்குவார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு ஸகாத் நிதியிலிருந்து வழங்கும் போது அவர்களின் உள்ளம் மேலும் இஸ்லாத்தின் பால் ஈர்ப்பு கொள்வதற்கு அது காரணமாக அமையும். அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பொருள் அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவர்கள் (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) நான்கு பேருக்கிடையே பங்கிட்டார்கள். மேலும் “இவர்களுடைய உள்ளங்களை நான் இணக்கமாக்குகிறேன்” என்று சொன்னார்கள். நூல்: புகாரி (4667) அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து) இரு மலைகளுக்கிடையே இருக்கும் (அளவுக்கு அதிகமான) ஆடுகளை (நன்கொடையாகக்) கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அவற்றைக் கொடுத்தார்கள். அவர் தம் சமுதாயத்தாரிடம் சென்று, “என் மக்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மத் அவர்கள் வறுமையை அஞ்சாமல் தாராளமாக நன்கொடைகள் வழங்குகிறார்” என்று கூறினார். நூல்: முஸ்லிம் 4275 (தமிழாக்கம் எண்: 4630) நாடோடிகள் நாடோடிகள் என்று தமிழாக்கம் செய்த இடத்தில் இப்னுஸ் ஸபீல் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல்லின் நேரடிப் பொருள் “பாதையின் மகன்’ என்பதாகும். ஒருவனிடம் ஒரு செயல் அதிக அளவில் காணப்படும் போது அச்செயலுடன் மகன் என்பதைச் சேர்த்துக் கூறுவது அரபுகளின் வழக்கம். எப்போது பார்த்தாலும் போரில் பங்கெடுப்பவன் “போரின் மகன்’ என்று குறிப்பிடப்படுவது வழக்கம். எப்போது பார்த்தாலும் ஊர் ஊராகச் சென்று கொண்டிருப்பவன் “பாதையின் மகன்’ என்று குறிப்பிடப்படுவான். சாதாரணமாகப் பயணம் செய்பவர்கள் இச்சொல்லால் குறிக்கப்பட மாட்டார்கள். பயணமே வாழ்க்கையாக மாறியவர்கள் தான் இச்சொல்லால் குறிப்பிடப்படுவர். எனவே நாடோடிகள் என்பது இச்சொல்லுக்கு நெருக்கமான சொல் எனலாம். வீடு வாசல் ஏதுமில்லாமல் ஊர் ஊராகச் சுற்றக் கூடியவர்களுக்கு ஸகாத் நிதியை வழங்கி அவர்களை நிலையாக இருக்கச் செய்வதற்கு ஸகாத் நிதியைச் செலவிடலாம். இச் சொல்லுக்கு பிரயாணி, வழிப்போக்கன் என்று பலரும் பொருள் கொண்டுள்ளனர். பயணம் செய்வதே ஸகாத் பெறுவதற்கான தகுதியா எனக் கேட்டால் பயணத்தில் சென்று அனைத்தையும் இழந்து விட்டு சொந்த ஊருக்குச் செல்ல முடியாதவன் என்று இதற்கு விளக்கம் தருகிறார்கள். இவர்கள் வாதப் படி பயணிகள் என்ற அர்த்தம் மட்டுமே இச்சொல்லுக்கு உண்டு. அனைத்தையும் இழந்து சொந்த ஊர் செல்ல இயலாதவன் என்பது இச்சொல்லில் இல்லாத – கற்பனை செய்யப்பட்ட விளக்கமாகும். மேலும் சாதாரணப் பயணியைக் குறிக்க வேறு சொல் உள்ளது. பாதையின் மகன் என்பது எப்போது பார்த்தாலும் பயணத்தில் இருக்கும் நாடோடியையே குறிக்கும். நாடோடி என்று பொருள் கொண்டால் நாடோடியாக இருப்பதே ஸகாத் பெறுவதற்கான தகுதியாகும் என்பது ஏற்கத் தக்கதாகவும் உள்ளது. பயணத்தில் சென்று அனைத்தையும் இழந்தவன் என்பவன் ஃபகீர் – தேவையுள்ளவன் என்ற வகையில் தானாக அடங்கி விடுவான். இத்தகையோரை உள்ளடக்கவே ஏழை என்றும் தேவையுள்ளவன் என்றும் இரண்டு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அடிமைகளை விடுதலை செய்வதற்கும் ஸகாத்திலிருந்து செலவிடலாம். ஆனால் தற்போது உலக நாடுகள் எதிலும் அடிமை முறை கிடையாது. இஸ்லாம் கூறும் போதனைகள் அனைத்தும் அடிமைத் தளைகளை கட்டவிழ்க்கும் வண்ணமே அமைந்துள்ளன.
இயற்கையாகவே ஆசியாவில் காணப்படும் ஒரு பெரிய பசுமையான மரத்தின் கட்டைகளில் கற்பூரம் (Camphor) லாரல் என்று அழைக்கப்படும் இது டர்பெண்டைன் எண்ணெயிலிருந்து செயற்கையாக தயாரிக்கப்படலாம் இது தோல் வெடிப்பு மற்றும் சருமத்தின் சிவத்தல் ஆகியவற்றை விரைவாக சிகிச்சையளிக்கும் குழந்தைகள்,பெரியவர்களில் அரிக்கும் தோலழற்சிக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது எண்ணெயின் மணம் மூளையில் ஒரு சாந்தம் ஏற்படுத்தும் விளைவைக் கொண்டிருக்கிறது,தூக்கத்தைத் தூண்டுவதற்குப் பயன்படுத்தலாம் எண்ணெய் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்,தலையில் இருக்கும் பேன்களுக்கான சிகிச்சையிலும் இதைப் பயன்படுத்தலாம் கற்பூரம் (Camphor) தயாரிப்புகளை மருந்து இருமல் அல்லது நெரிசலைப் போக்க உள்ளிழுக்கலாம் நகங்கள், மருக்கள், சளி புண்கள், கீல்வாதம், சிறு தீக்காயங்கள் ,மூல நோய் ஆகியவற்றின் பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தலாம் இது எரிச்சலை ஏற்படுத்துவதன் மூலமும், பாதிக்கப்பட்ட பகுதியின் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலமும் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது
உம்பர்கட்கரசே, உம்பர்கட்கு அரசே, கீழமணக்குடி, தரும்புரம் சுவாமிநாதன், திருச்சாழல், திருப்பள்ளியெழுச்சி, திருவாசகம், பரமன் பச்சைமுத்து, மணக்குடி, மு பச்சைமுத்து, மு பச்சைமுத்து அறக்கட்டளை ‘உம்பர்கட்கரசே ஒழிவற நிறைந்த யோகமே ஊற்றையேன் தனக்கு…’ சில வரிகளைப் படிக்கும் போதே அவை, அது தொடர்பாக நாம் பதிந்து வைத்திருக்கும் சிலரை அல்லது சிலதை உள்ளத்தின் அடியாழத்திலிருந்து மேலெழுப்பிக் கொண்டு வந்து விட்டு விடுகின்றன. அப்படியொன்றானது மேலுள்ள வரிகள். நியாயமாக இவ்வரிகளைப் பார்க்கையில் தலைக்குள் சிவன் வரவேண்டும் அல்லது இந்தத் திருவாசக வரிகளை இயற்றிய மணிவாசகர் வரவேண்டும். நான் கவனச்சிதறல் கொண்ட கோணங்கி. இன்று மயிலை கோவிலின் சுவரில் இவ்வரிகளைப் பார்க்கையில் எனக்கு தருமபுரம் சுவாமிநாதனும் என் தந்தையும் வந்து போனார்கள் மண்டைக்குள். ‘உம்பர்கட்கரசே ஒழிவற நிறைந்த யோகமே ஊற்றையேன் தனக்கு…’ நேஷனல் டேப் ரெக்கார்டரில் டிடிகே 90 கேசட்டில் பெங்களூர் ரமணியம்மாள், வாரியார், புலவர் கீரன் ஆகியோரோடு என் தந்தை அதிகம் ஒலிக்கவிட்டது தருமபுரம் சுவாமிநாதனைத்தான். ‘பிடித்த பத்து…. திருச்சிற்றம்பலம்…’ என சொல்லிவிட்டு ‘உம்பர்கட்கரசே…. ஒழிவற நிறைந்த….’ என்று கணீர்க்குரலில் அவர் தொடங்கையில் உடல் சிலிர்க்கும் அவ்வயதில். தெருவில், பாப்பாக்குளத்து கரையில் எந்த விளையாட்டில் இருந்தாலும் எது செய்தாலும் நிறுத்தி நின்று வீடு நோக்கி கவனம் குவியும். தொலைக்காட்சிப் பெட்டி நுழையா அக்கால மணக்குடியில் எங்கள் வீட்டு டேர் ரெக்கார்டர்தான் உரத்து ஒலிக்கும். அதுதான் என் பெரும்பொழுதுகளை அவ்வயதுகளில் எடுத்துக் கொண்டதும் கூட. ‘உம்பர்கட்கு…. அரசே…. ஒழிவற… நிறைந்த… ஆ…. ஆ….ஆ….’ என்று பிரித்து மேய்வார். அடுத்து ஒரே மூச்சில் ‘உம்பர்கட் கரசே ஒழிவற நிறைந்த யோகமே ஊற்றையேன் தனக்கு…’ என்று அடித்துப் பாய்வார். திருச்சாழலையும், திருப்பள்ளியெழுச்சியையும், சிவபுராணத்தையும் இன்று நான் சிலாகித்து நிற்பதற்குக் காரணம் இருவர். கிட்டிப் புல், கோலி குண்டு, டயர் வண்டி என்று ஓடிக்கொண்டிருந்தவனை இழுத்து (தடுத்தாட்கொளல்!!?) ‘இதைப் படி இது நல்லது!’ என்று அவற்றை என் கையில் தந்த என் தந்தை ஒருவர், அவர் ஒலிக்க விட்ட கேசட்டுகளில் பெருங்குரலெடுத்து பாடி அவற்றை எளிதாக என்னுள் இறக்கி வைத்த தரும்புரம் சுவாமிநாதன் இரண்டாமவர். ‘பூசுவதும் வெண்ணீரு பூண்பதுவும் பொங்கரவம் பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடி..’ அடேயப்பா! பாடும் விதத்தால் பதிகங்களை செய்யுளை அவற்றின் வார்த்தைகளை எப்படிப் பிரித்துப் படிக்க வேண்டுமென பாடல் வழியே போதித்தார் தருமபுரம் சுவாமிநாதன் அவ்வயதில் எனக்கு. ஏழாம் வகுப்பின் தமிழாசிரியர் ஜெயராமன் ஐயா போதித்த ‘மோந்தால் குழையுமனிச்சம்பூ’ செய்யுளை அவ்வயதிலேயே ‘மோந்தால் குழையும் அனிச்சம்பூ’ என எழுதிப் படிக்கக் காரணம் தருமபுரம் சுவாமிநாதனே. ‘போன்றியென் வாழ்முதலாகிய பொருளே… புலர்ந்தது பூங்கழற்கிணை துணை மலரடி…!’ அடேயெப்பா, என்ன வரிகள் இவை. திருப்பள்ளியெழுச்சிக்கு ஈடு எதுவுமில்லை என்பது என் தனி அபிப்பிராயம். ஆங்கிலேய ஜியு போப் கூட இதில்தான் கரைந்திருப்பாரோ என்னவோ. என் தந்தையுடன் இன்னும் நெருக்கமாக ஆவதற்கு, அவர் எப்போதும் படிக்கும் ஆராயும் திருவாசகத்தை படிப்போம், அவரிடம் அது குறித்து உரையாட முடியும், அவரை இன்னும் நம்மை நோக்கி ஈர்க்க முடியுமென அவ்வயதில் முடிவெடுத்து அந்தப் பதிகங்களை படித்து மனனம் செய்தேன் என்றாலும் ‘திருப்பள்ளியெழுச்சி’யை முதலில் எனக்கு அறிமுகப்படுத்தியது டேப்ரெக்கார்டரிலிருந்து இறங்கிய தருமபுரம் சுவாமிநாதனின் குரல்தான். மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் படித்த போது மயிலாடுதுறையிலிருந்து தருமபுரத்தைக் கடந்துதான் பயணிக்கவேண்டும். ‘தருமபுரம் ஆதீனம்’ என்ற அந்த வளைவை பார்த்துக் கொண்டே பயணித்திருக்கிறேன். உள்ளே சென்று அவரை பார்த்ததில்லை. பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை ஃபங்க் தலையும் பேகி பேண்ட்டும் கோவாடிஸ் செருப்பும் கொண்ட அவ்வயதில். ஆனால், தரும்புரம் சுவாமிநாதனின் குரல்மட்டும் ஒலித்துக் கொண்டேயிருக்கும் என் தலைக்குள்ளே. என் வகுப்புகளில் சிலதிலும் தரும்புரம் சுவாமிநாதனின் ‘வேலுண்டு வினையில்லை…’ பாடலை ஒலிக்க விடுவதுண்டு எப்போதாவது. குன்றக்குடி அடிகளாரோடு அவரது ஆதீனத்தில் கொண்ட சந்திப்பின் தருணங்களில், பல்வேறு இடங்களில் பதிகங்களை இசைக்கும் ஓதுவார்களை காண நேரிடுகையில் தருமபுரம் சுவாமிநாதன் தோன்றி மறைவார் தலைக்குள்ளே, ஒரு முறை கூட நேரில் பார்த்தில்லை அவரை என்ற போதும். ‘உம்பர்கட்கரசே ஒழிவற நிறைந்த யோகமே ஊற்றையேன் தனக்கு வம்பெனப் பழுத்து….’ ‘சீர் உடைக் கழலே…’ ‘செல்வமே… சிவபெருமானே!’ எனும் போது குரல் உயர்ந்து ஆனால் கனிந்து நிற்கும். அடுத்து, ‘எம்பொருட்டு உனை சிக்பெனப் பிடித்தேன்!’ எனும் போதுசிக்கெனப் பிடித்தேவிடுவார். அடுத்த வரியான ‘எங்கெழுந்தருளுவது இனியே!’வை விட்டுவிடுவேன் வேண்டாமென. ‘சிக்கெனப் பிடித்தேன்’ போதும் என்று நிற்பேன். தரும்புரம் சுவாதிநாதனின் குரல் வழியே பாடல்கள் கேட்டது ஓர் அனுபவம். அப்படியொரு சூழலை வீட்டில் உருவாக்கிய என் தந்தைக்கு என்றும் கடமைப்பட்டவன் நான். இன்று இந்த வரிகளைப் பார்க்கையில் என் தந்தையும், தருமபுரம் சுவாமிநாதனும் வந்து போகிறார்கள் என்னுள்ளே. உடலை விட்டுவிட்டு உயிராக சிவபுரத்திற்குப் போன அவரது குரல் என் மண்டைக்குள் ஒலிக்கிறது இன்னும்….
நூற்றுக்கணக்கான புதிய மக்கள் உள்ளன பதிவு, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நகரங்களில் இருந்து மற்றும் உலகம் முழுவதும் உள்ள நாடுகளில்முற்றிலும் வேறுபட்ட கிரிஸ்துவர், மொழிகள், மற்றும் தூரம் ஒருவருக்கொருவர் இருந்து மேலேறி ஆதாரமாக இந்த ஆசிரியர் மற்றும் ஒருங்கிணைக்க தங்கள் கிறித்துவம் கொண்டு இடங்களில் இணைப்பு. அது கட்டுப்பாடான, பிராட்டஸ்டன்ட், பெந்தேகோஸ்தே, பாப்டிஸ்ட், அல்லது செவன்த்-டே அட்வெண்டிஸ்ட். நான் எழுதியது அது அது நேரம், பழக சந்திக்க கிரிஸ்துவர் - இந்த தளம் பற்றி ஆக ஒரு வலை டெவலப்பர் என் பெயர் பால், மற்றும் இந்த தளம் ஒரு கிரிஸ்துவர் ஆகிறது. நான் ஒரு பக்கம் என் வலைப்பதிவில் - அழகான, வசதியான மற்றும் ஸ்டைலான ஆன்லைன் கிரிஸ்துவர் சேவைகள் அனைத்து திட்டங்கள் இலவச இல்லாமல் தேவையற்ற விளம்பரங்கள். முதல் பைலட் திட்டம் கிறிஸ்துமஸ் துணை வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது மற்றும் க்கும் மேற்பட்ட புதிய பயனர் ஒவ்வொரு நாளும். இந்த வளர்ச்சி வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் வாரியாக தீர்வுகள், சமூக நெட்வொர்க்குகள், அல்லது மற்ற தளங்கள். நீங்கள் வெளியே செல்ல முடியும் இப்போது. महिलाओं और पुरुषों के लिए नि: शुल्क அரட்டை சில்லி பெண்கள் சந்திக்க எப்படி ஒரு பெண் அரட்டை சில்லி இருந்து உங்கள் தொலைபேசி இல்லாமல் பதிவு வயது டேட்டிங் தளங்கள் வீடியோ அரட்டை பதிவு இல்லாமல் ஆன்லைன் அரட்டை சில்லி கேர்ள் இலவச எந்த பதிவு அரட்டை சில்லி இல்லாமல் ஆன்லைன் அரட்டை சில்லி ஆண்டுகள் ஆன்லைன் அரட்டை சில்லி டேட்டிங்
கலை நேயர்களின் கருத்து கடிதங்கள் பல எங்களை வந்தடைகின்றன. பலர் தொடர்ச்சியாக எழுதுவதில்லை. சீன வானொலி நிகழ்ச்சிகள் பற்றி கருத்து கடிதங்கள் எழுதுவதை உங்கள் அன்றாட பணியில் ஒன்றாக சேர்த்து செயல்பட கேட்டு கொள்கின்றோம். தமிழன்பன் குறைந்தது நாளுக்கொரு கருத்து கடிதம் எழுதி, நேயர் நேரம் நிகழ்ச்சிக்கு தரும் ஆதரவை அதிகரிக்க கேட்டுக் கொள்கின்றோம். கலை இன்றைய நிகழ்ச்சியில் முதலாவதாக, சீன வரலாற்று சுவடுகள் நிகழ்ச்சி பற்றி இலங்கை புதிய காத்தான்குடி எம்.எப்.எப்.சிஃப்னா எழுதிய கடிதம். ஐநா பேரவையில் தனக்குரிய இடத்தை சீனா மீட்ட விபரங்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்டேன். சீனாவின் வளர்ச்சிப் பாதையை அறிவிக்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ள சீன வரலாற்று சுவடுகள் நிகழ்ச்சியே எனக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சியாக தொடர்கிறது. தமிழன்பன் அடுத்து, இராமபாளையம் க.பச்சையம்மாள் செய்தி தொகுப்பு பற்றி அனுப்பிய கடிதம். சீன அரசுத் தலைவர் ஜெர்மனி அரசுத்தலைவருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் சுருக்கம் இதில் இடம்பெற்றது. இருநாட்டு நட்புறவை ஆழமாக்க விரும்பும் வகையில் கருத்துக்கள் இடம்பெற்றன. சீனாவும், ஜெர்மனியும் பல்வேறு துறைகளில் எதிர்காலத்தில் ஒத்துழைக்க இருப்பது இருநாடுகளின் வளர்ச்சிக்கு துணைபுரியும். கலை தொடர்வது, சென்னை மறைமலைநகர் மல்லிகாதேவி தமிழ்ப் பாடல் பற்றி எழுதிய கடிதம். நிகழ்ச்சிகளின் நடுவில் வானொலியை கேட்போரின் காதுகளை குளிரச் செய்யும் வகையில் ஒலிபரப்பாகும் தமிழ்ப் பாடலில் இன்று சின்னக்குயில் சித்திராவின் குரலில் "விண்ணுக்கு ஓர்" என்ற பாடல் விருந்ததளித்தது. மேலும், ரஷியாவில் தற்காப்புப் போர் வெற்றியடைந்தன் 65 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற விழாக் கொண்டாட்டத்தில் விருந்தினராக சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவ் கலந்துகொண்டதை செய்திகளின் வாயிலாக அறிந்தேன். தமிழன்பன் இனி, நீலகிரி கீழ்குந்தா கே.கே.போஜன் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். சீனப் பண்பாட்டை விளக்குகின்ற இனிய நிகழ்ச்சியை தமிழ்ப் பிரிவின் தலைவர் கலையரசி அவர்களும், திரு செல்வம் அவர்களும் இணைந்து வழங்கினர். இந்தியாவும், சீனாவும், பாரம்பரியம் மிக்க நாடுகள் என்பதையும், இருநாடுகளின் திருமண நடைமுறைகள் பற்றியும் பல தகவல்களை தள்ளி தருவதாய் இந்நிகழ்ச்சி அமைந்தது. பொதுவாக இளைஞர்கள் எதிர்கால வாழ்க்கைக்கு நல்ல அடித்தளம் அமைத்த பிறகு தான் திருமண வாழ்வை பற்றி சிந்திக்கின்றனர் என்பதை அறிந்து கொண்டோம். கலை அடுத்ததாக, ஈரோடு எம்.சி.பூபதி செய்திகள் பற்றி அனுப்பிய கடிதம். பாகிஸ்தானில் அடிக்கடி நிகழும் குண்டுவெடிப்புகள் ஆசியாவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாய் உள்ளன. ஆயுதங்களால் அழிவுகளை ஏற்படுத்தும் நிலைமை முற்றிலும் ஒழிக்கப்பட்டால் தான் பிரதேச அமைதி வளரும். மேலும், சீன தமிழொலி இதழ் பல்வண்ண கலவையுடையதாய் மிகவும் நேர்த்தியாக உள்ளது. நான் படித்துவிட்டு பிறருக்கு கொடுத்து படிக்க சொல்கிறேன். இவ்வாறு செய்வது நமது வானொலி பற்றிய சிறு பரப்புரையாக அமைந்து விடுகிறது. தமிழன்பன் தொடர்வது, சோமனூர் எம். சோமசுந்தரம், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றி அனுப்பிய கடிதம். சீனாவில் கடந்த ஆண்டு அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட நிதித்தொகை உள்ளிட்ட பல விபரங்களை இந்நிகழ்ச்சி அறிவித்தது. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி சீனாவில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களும் விளக்கப்பட்டன. உலகிலுள்ள அனைவரும் எல்லா வசதிகளையும் வெளிக்காட்டி அனைவரும் தொழில்நுட்ப சாதனைகள அறிந்து வளர வேண்டும் என்ற உலகப் பொருட்காட்சியின் கருத்து, உலக வளர்ச்சிக்கு முத்தாய்ப்பாய் அமைகிறது. கலை இனி, ஆந்திரா அசுவபுரத்திலிருந்து எழுதும் மும்பை சுகுமார் சீனப் பண்பாடு நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். இந்நிகழ்ச்சியில் தற்போது இடம்பெற்று வரும் தாவ் மதம் பற்றிய தகவல்கள் சுவாரசியமாக இருக்கினறன. பல தகவல்கள் இந்தியாவின் பண்டைகால மற்றும் இக்காலத் வழக்கங்களில் தொடர்பை வெளிப்படுத்தகின்றன. ஆழமான ஆராய்ச்சிகள் மேற்கொண்டால் வியப்பூட்டும் உண்மைகள் வெளிப்படும் என்று நம்புகிறேன். தமிழன்பன் அடுத்து, இலங்கை வாகரை மகேஸ்வரம் காந்தீபன் சீன வானொலி தமிழ்ப் பிரிவு நிகழ்ச்சிகள் பற்றி அனுப்பிய கடிதம். சீனாவிலிருந்து தமிழ் செய்தித் தொடர்பு சேவையாற்றி வரும் சீன வானொலி தமிழ்ப் பிரிவின் நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்டு வருகின்றேன். நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளன. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அறிவிப்பாளரின் அயராத உழைப்பை உணர முடிகிறது. சீனத் தமிழொலி இதழ் தித்திக்கும் சுவையொலி. கலை தொடர்வது, அறிவியல் உலகம் நிகழ்ச்சி பற்றி சென்னை ரேணுகாதேவி எழுதிய கடிதம். பக்கவாதத்தால் ஆற்றலிழந்தோரை இசை சிகிச்சை மூலம் செயல்பட வைப்பது, எரிமலை பேரழிவு, இந்திர மனிதன் மூலம் மீட்புதவி பணிகள், இதய பாதுகாப்பு, உயிரின டிஎன்ஏ ஆய்வு ஆகியவற்றை அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் தொடர்ந்து கேட்டு மகிழ்ந்தோம். வாழ்வோடு மிக நெருக்கமான அறிவியல் தகவல்களை வழங்கி வரும் சீன வானொலி தமிழ்ப் பிரிவுக்கு நன்றிகள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமறைவாக இயங்கிய 1948-50களில் நெல்லை சதி வழக்கு போடப்பட்டது. எனது பால்ய கால நண்பரும், எழுத்தாளருமான ஜேக்கப் வாத்தியார் அவர்களின் திடீர் மறைவு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. நெல்லை சதி வழக்கில் இப்போது இருப்பவர்கள் நானும் அவரும் தான். ஒரு கிராமப்புற பள்ளிக்கூடத்தின் உறுதிமிக்க கிறிஸ்துவ ஆன்மீகவாதியாக, ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய ஆர்.எஸ்.ஜேக்கப் அவர்கள் மீதும் சதி வழக்கு பாய்ந்தது. கடுமையான சித்திரவதை கொடுமையிலும், கம்யூனிஸ்ட்டுகளை காட்டிக் கொடுக்க மறுத்து விட்டதோடு, அவர் கைது செய்யப்பட்டு மூன்றாண்டு காலம் சிறையில் வாடினார். காவல்துறையினர் கடுமையாக அவரை தாக்கிவிட்டு "கட்சிக்காரர்கள் கொள்கைப் பிடிப்போடு இருந்து காட்டிக் கொடுக்க மறுப்பார்கள், நீ ஏன் காட்டிக் கொடுக்க மறுக்கிறாய்" என்று கேட்ட போது, ஜேக்கப் வாத்தியார் அவர்கள், "நான் ஜூலியஸ் பூசிக் எழுதிய தூக்குமேடை குறிப்புகள் நூல் படித்தேன். அதனால்தான் இந்த உறுதியைப் பெற்றேன்" என்று மறுமொழி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தாயாரும், மனைவியும் எப்போதும் கட்சிக்கு ஆதரவாகவே இருந்து வந்தனர். நாங்கள் அடிக்கடி அவரது இல்லத்திற்குச் செல்கிறபோது, இன்முகத்தோடு அவர்கள் பழகி இருக்கிறார்கள். வாத்தியார் உபதேசியாகவும் ஆன்மீகவாதியாகவும் நல்ல சமூக சிந்தனை உள்ளவராகவும் சமத்துவவாதியாகவும் வாழ்ந்தார். மரண தண்டனையையே சந்திக்க நேர்ந்த போதிலும் சிறிதும் மனம் கலங்காமல் தன்னுடைய நிலையில் உறுதியாக நின்று ஒரு கிறிஸ்துவ கம்யூனிஸ்டாக இறுதி வரை வாழ்ந்தவர் ஆசிரியர் ஆர்.எஸ்.ஜேக்கப்.
அதன் படி, இன்று மற்றும் நாளை ( தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே போல் வருகின்ற 21 ஆம் தேதி விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இதனையடுத்து 22 ஆம் தேதி விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்த வரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது, மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
பயிற்சி பயணச் செலவுக்கு வசதியில்லாமல் சிரமப்பட்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார். Vignesh Selvaraj Updated on : 2 October 2019, 01:39 PM பயிற்சி பயணச் செலவுக்கு பணம் இல்லாமல் சிரமப்பட்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார். தாய்லாந்தில் நடைபெற உள்ள தேசிய வீல் சேர் கூடைப்பந்தாட்ட போட்டிக்காக இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரமேஷ், அருள் அகஸ்டஸ் மற்றும் ஜெகன்நாத் ஆகியோர்கள் தேர்வாகியுள்ளனர். மேலும் போட்டிக்குத் தேர்வான மூன்று பேரும் பஞ்சாப் மாநிலத்தில் பயிற்சி பெற உள்ளனர். வறுமையின் காரணமாகவும் பணப்பற்றாக்குறை காரணமாகவும் தேர்வான மூன்று பேரும் பயிற்சிக்குச் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இதனை அறிந்த தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தேசிய வீல் சேர் கூடைப்பந்தாட்ட போட்டிகளில் தேர்ச்சி பெற்ற ரமேஷ், அருள் அகஸ்டஸ் மற்றும் ஜெகன்நாதன் ஆகியோர் பஞ்சாப் சென்று பயிற்சி மேற்கொள்வதற்கான பயணச் செலவுக்காக நிதி உதவி வழங்கினார். பயணத்துக்கான நிதியை ஹெட் வே பவுண்டேஷன் சார்பில் ராகவி செந்தில் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வின்போது ஹெட் வே பவுண்டேஷனை சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் சின்னத்திரை நடிகர் நவீந்தரன் ஆகியோர் உடனிருந்தனர். Sports உதயநிதி ஸ்டாலின் udhayanidhi stalin dmk youth wing திமுக இளைஞரணி fund நிதி உதவி விளையாட்டு வீரர்கள் Trending மும்பை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பிளேடால் அறுத்து கொன்ற சிறுவன் -காரணத்தை கேட்டு அதிர்ந்த போலிஸ் கச்சா எண்ணெய் விலை 25% குறைந்தும் பெட்ரோல் விலை ஏன் குறையவில்லை ? மோடிக்கு ராகுல் காந்தி சரமாரி கேள்வி ! இடைத்தேர்தலில் ரிஷி சுனக் கட்சி படுதோல்வி.. புதிய பிரதமரை நிராகரித்துள்ள பிரிட்டன் பொதுமக்கள் ! வெற்றிமாறனின் 'விடுதலை' படப்பிடிப்பில் ரோப் கயிறு அறுந்து விபத்து.. படுகாயமடைந்த சண்டை பயிற்சியாளர் பலி ! Latest Stories "இப்படி செய்தால் இந்தியா அல்ல, உலகமே நம்மை கேலிதான் செய்யும்" - பாக். அணியை விமர்சித்த முன்னாள் வீரர் ! வெற்றிமாறனின் 'விடுதலை' படப்பிடிப்பில் ரோப் கயிறு அறுந்து விபத்து.. படுகாயமடைந்த சண்டை பயிற்சியாளர் பலி ! மனித மூளைக்குள் சிப்.. எலான் மஸ்க்-ன் அடுத்த அதிரடி.. விலங்குகளுக்கு பொருத்தி சாதனை படைத்ததாக அறிவிப்பு ! கச்சா எண்ணெய் விலை 25% குறைந்தும் பெட்ரோல் விலை ஏன் குறையவில்லை ? மோடிக்கு ராகுல் காந்தி சரமாரி கேள்வி !
கடந்த பிப்ரவரி 7ம் தேதி இந்திய பங்குச்சந்தையின் நிப்டி குறியீடு 11,069 புள்ளிகளிலும், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 36,971 புள்ளிகளிலும் முடிவடைந்திருந்தது. உலக பொருளாதார மந்த நிலை, அமெரிக்க-சீன வர்த்தக போர், நாட்டில் உள்ள நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் என பல காரணிகள் சந்தையை கடந்த சில நாட்களாக பதம் பார்த்தன. //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தொடர்ச்சியாக பத்து நாட்களுக்கும் மேலாக சந்தை இறங்குமுகத்தில் பயணிக்க தொடங்கியது. பிப்ரவரி 19ம் தேதியன்று நிப்டி குறியீடு(Nifty50) 10,604 புள்ளிகளிலும், சென்செக்ஸ் குறியீடு(BSE Sensex) 35,352 புள்ளிகளிலும் அன்றைய வர்த்தகத்தை முடித்து கொண்டது. பத்து நாட்களில் தேசிய பங்குச்சந்தை(NSE) குறியீடு கிட்டத்தட்ட 500 புள்ளிகளையும், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1600 புள்ளிகளையும் இழந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி 14ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில்(2019 Pulwama Attack) நடந்த அதிபயங்கர தற்கொலை படை தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் பரிதாபமாக இறந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் தனது விமானப்படை மூலம் பாகிஸ்தானின் பாலக்கோட்(Balakot) பகுதியில் தாக்குதலை நடத்தியது. இவற்றில் அங்கு தங்கியிருந்த 300 தீவிரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்தது. பத்து நாட்களுக்கு மேலாக இறக்கத்தில் இருந்த சந்தை அடுத்த மூன்று நாட்களில் சிறிது ஏற துவங்கியது. இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் பங்குச்சந்தையிலும் தடுமாற்றத்தை ஏற்படுத்தின. கடந்த இரண்டு நாட்களில் நிப்டி மற்றும் சென்செக்ஸ் முறையே 80 புள்ளிகள் மற்றும் 240 புள்ளிகளும் இறங்கியுள்ளன. பாகிஸ்தானின் கராச்சி சந்தை குறியீடு(KSE) புதன் கிழமை அன்று (27-02-2019) எல்லையில் பதற்றம் என்ற செய்தி வந்த நிலையில், 1500 புள்ளிகள் அல்லது 4 சதவீதம் என்ற வீழ்ச்சியை கண்டது. பொதுவாக இரு நாடுகளிடையே ஏற்படும் போர் சூழல்(Terror attack and War), உலக பொருளாதார காரணிகள் ஆகியவை சந்தையை வெகுவாக பாதிக்க கூடியவை. தற்போது இது போன்ற சூழ்நிலை தான் இந்திய பங்குச்சந்தையில் நிலவி கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் நாட்டில் தேர்தல் வரவிருக்கும் நிலையில், நடப்பில் ஏற்பட்டு கொண்டிருக்கும் எல்லையில் பதற்றமும்(India-Pakistan) முக்கியத்துவம் பெறுகின்றன. புதன் கிழமை அன்று(27-02-2019) இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் நடைபெற்று கொண்டிருக்கும் போது, சென்செக்ஸ் 600 புள்ளிகளும், நிப்டி 180 புள்ளிகளும் ஏற்றத்தில் இருந்து இறக்கம் கண்டன. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த இந்திய விமான படையின் பைலட் திரு. அபி நந்தன் அவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார் என்ற செய்தி வெளியானது. இதனை உறுதி செய்த மத்திய அரசு, அவரை மீட்பதற்கான முயற்சியில் துரிதமடைந்துள்ளது. பங்குச்சந்தையில் பங்குகள் மலிவாக தற்போது கிடைப்பது நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இருப்பினும், குறுகிய கால மற்றும் தின வர்த்தகர்கள் தங்களது ரிஸ்க் தன்மையை குறைத்து கொள்ள வேண்டிய தருணம் இது.
اَللهُمَّ اَفْتَحْ عَلَيْنَا فُتُوْحَ الْعَارِفِيْنَ وَنَوِّرْ قُلُوْبَنَا بِاَنْوَارِ مَعْرِفَتِكَ ٭ اَشْغِلْنَا بِكَ وَلاَ تُشْغِلْنَا بِاَحَدِ غَيْرِكَ وَاَفْنِنَا بِكَ وَاَرْزُقْنَا مَحَبَّتَكَ الْعُظْمَا بِجَاهِ سَيِّدِنَا مُحَمَّدٍ صَلَّ اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَطِّفْ قَلْبَ شَيْخِنَا عَلَيْنَا ٭ وَاجْعَلْهُ رَاضِيًا عَلَيْنَا وَمُقْبِلاً اِلَيْنَا ٭ وَمُتَوَجِّهًالَنَا اَنَاءَ لَّليْلِ وَاطْرَفَ اَنَّهَارِ٭ وَمَتِّعْنَا بِجَاهِ سَيِّدِنَا وَاَمِدَّنَا بِاَمْدَادَتِهِ ٭ وَانْفَعْنَا بِبَرَكَابِهِ ٭ وَبَرَكَاتِ اَوْلِيَآءِ الله مَشَارِقِاالْاَرْضِا اِلٰى مَغَارِبِهَا وَكُنْ لَنَا وَلَا تَكُنْ عَلَيْنَا بِحُرْمَهِ الْفَاتِحٰة ٭ பொருள்: இறைவா! உன் அந்தரங்கத்தை உனது இறை பக்தர்களுக்கு திறந்து காண்பித்தது போல் எங்களுக்கும் திறந்து காட்டியருள்! உன் அந்தரங்க ஒளியினால் எங்களின் இதயங்களை ஒளிவாக்கு! உனது ஞாபகமில்லாமல் வேறு வழியில் பராக்காக்கி கொண்டிருக்கிறார்களே அவர்களோடு எங்களை சேர்த்து விடாமல் உன்பக்கம் ஞாபகம் செலுத்தக் கூடிய மக்களாக எங்களை ஆக்கியருள்! மேலும் உன்னைக் கொண்டு எங்களை பனாவாக்கு. மேலும் ஈருலக இரட்சகர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டால் கண்ணியமான உன் விருப்பத்தைக் கொண்டு எங்களுக்கு உணவளி! எங்களின் இதயத்தை எங்களின் குருநாதர் அவர்களின் இதயத்தோடு இணைத்து விடு. மேலும் எங்கள் குருநாதருக்கு எங்கள் மீதுள்ள பொருத்தத்தையும், எங்களின் மீது அவர்களின் முன்னோக்குதலையும் ஆக்கியருள். மேலும் எங்களின் மீது அவர்களின் எண்ணங்களை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகிமையைக் கொண்டு எங்களை சாட்டிவிடு. மேலும் இரவும் பகலும் அவர்கள் எங்களின் பக்கம் முகம் திருப்புவதையும் எங்களுக்கு ஆக்கியருள். மேலும் அவர்களின் பரக்கத்தைக் கொண்டு எங்களுக்கு பிரயோஜனத்தைத் தந்தருள். மேலும் உதயகரையிலிருந்து அஸ்தகரை வரையிலுள்ள மேலான வலிமார்களின் பரக்கத்தைக் கொண்டும் எங்களுக்கு பிரயோஜனத்தைத் தந்தருள். ஸூரத் பாத்திஹா உடைய சங்கையைக் கொண்டு எங்களின் பேரில் உதவி செய்யக் கூடியவனாக ஆகிவிடு. எங்களின் பேரில் கேடான உதவி செய்பவனாக ஆகிவிடாதே!
இங்கிலாந்தின் பல பகுதிகளில் அதி உச்ச வெப்பம் பதிவாகி உள்ள நிலையில், பல வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளன. சில வீடுகளில் தீப்பிழம்புகள் பரவின, மேலும் கோடை மாதங்களில் புதிய யதார்த்தம் என்னவாக இருக்கும் என்பதை நாடு பார்த்தது. லண்டன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர் மற்றும் பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஒரு தீயணைப்பு வீரர் இந்த நாளை, காலநிலை மாற்றத்தின் விளைவுகளின் முன்னோட்டம் என்று அழைத்தார். இங்கிலாந்து முழுவதும் உள்ள 34 கண்காணிப்பு தளங்கள், மேற்கு யார்க்ஷயரில் உள்ள பிராம்ஹாம் முதல் சர்ரேயில் உள்ள சார்ல்வுட் வரையிலான முந்தைய வெப்ப சாதனையையும் முறியடித்ததாக வானிலை அலுவலகம் கூறியது. புதன்கிழமை சில பகுதிகளில் வெப்பநிலை 10C வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், இது உள்ளூர் வெள்ளத்தை ஏற்படுத்தக்கூடும் என்றது.
பொழிப்பு (மு வரதராசன்): செல்வர்முன் வறியவர் நிற்பதுபோல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்வி கற்றவரே உயர்ந்தவர்; கல்லாதவர் இழிந்தவர். மணக்குடவர் உரை: பொருளுடையார் முன்பு பொருளில்லாதார் நிற்குமாறு போல, அதனைக் காதலித்து நிற்றலுமன்றிக் கற்றாரிடத்தாவர் கல்லாதார். இது கற்றார் எல்லாரினுந் தலையாவாரென்றது. பரிமேலழகர் உரை: உடையார்முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார் - 'பிற்றை நிலைமுனியாது கற்றல் நன்று' (புறநா.183) ஆதலான் , செல்வர்முன் நல்கூர்ந்தார் நிற்குமாறு போலத் தாமும் ஆசிரியர்முன் ஏக்கற்று நின்றும் கற்றார் தலையாயினார். கல்லாதவர் கடையரே - அந்நிலைக்கு நாணிக் கல்லாதவர் எஞ்ஞான்றும் இழிந்தாரேயாவர். (உடையார், இல்லார் என்பன உலகவழக்கு. ஏக்கறுதல் ஆசையால் தாழ்தல். கடையர் என்றதனான், அதன் மறுதலைப் பெயர் வருவிக்கப்பட்டது. பொய்யாய மானம் நோக்க மெய்யாய கல்வி இழந்தார் பின் ஒரு ஞான்றும் அறிவுடைய ராகாமையின், 'கடையரே' என்றார். இதனால் கற்றாரது உயர்வும் கல்லாதாரது இழிவும் கூறப்பட்டன.) வ சுப மாணிக்கம் உரை: செல்வர் முன் வறியர்போல ஏக்கத்தோடு படித்தவரே மேல்; படியாதவர் கீழ். பொருள்கோள் வரிஅமைப்பு: உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் [தலையாயினார்] கல்லாதவர் கடையரே. பதவுரை: உடையார்-உடையவர். இங்கு செல்வம் உடையவர் எனக் கொள்வர்; முன்-எதிரில்; இல்லார்போல்-இல்லாதவர் போல. இங்கு செல்வம் இல்லாதவர் அதாவது வறியர் எனக் கொள்ளப்படும்; ஏக்கற்றும்-ஆசையால் தாழ்ந்தும்; கற்றார்-கல்வி பெற்றவர்; கடையரே-இழிந்தவரே என்றும் இடத்தவரே என்றும் இருவிதமாகப் பொருள் காண்பர்; கல்லாதவர்-கல்வி பெறாதவர். உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: பொருளுடையார் முன்பு பொருளில்லாதார் நிற்குமாறு போல அதனைக் காதலித்து நிற்றலுமன்றிக் கற்றார்; பரிப்பெருமாள்: பொருளுடையார் முன்பு பொருளில்லாதார் நிற்குமாறு போலத் தாழ்ந்தும் கற்றார் ; பரிதி: செல்வர் முன்னே செல்வமில்லாதார் நிற்பது ஒக்கும் கல்வியுடையார் முன் கல்வியில்லாதார் நிற்பது; காலிங்கர்: கற்றார்முன் சென்று கல்லாதார் கற்குமிடத்துச் செல்வம் உடையார் முன்சென்று வறியவர் ஏக்கற்று ஒடுங்கி ஒரு பொருளை விரும்புமாப்போல், விரும்பிக் கற்றவர் கற்றார் ஆவர்; பரிமேலழகர்: 'பிற்றை நிலைமுனியாது கற்றல் நன்று' (புறநா.183) ஆதலான், செல்வர்முன் நல்கூர்ந்தார் நிற்குமாறு போலத் தாமும் ஆசிரியர்முன் ஏக்கற்று நின்றும் கற்றார் தலையாயினார்; பரிமேலழகர் குறிப்புரை: உடையார், இல்லார் என்பன உலகவழக்கு. ஏக்கறுதல் ஆசையால் தாழ்தல். கடையர் என்றதனான், அதன் மறுதலைப் பெயர் வருவிக்கப்பட்டது. இப்பகுதியிலுள்ள 'உடையார்முன் இல்லார்போல்' என்றதற்கு அனைத்து பழம் ஆசிரியர்களும் செல்வர் முன்னே வறியர் நிற்பது போல என்று உரை செய்தனர். கற்றார் என்பதற்கு அனைவரும் கற்றவர் அல்லது கல்விபெற்றவர் என்று ஒரே பொருளே கூறினர். ஏக்கற்றும் என்றதற்கு மணக்குடவர் 'காதலித்து நிற்றல்' என்று சொல்லி, 'அன்றி' என ஒரு சொல்லையும் கூட்டி, உரைக்கிறார். பரிப்பெருமாள் ஏக்கற்றும் என்றதற்குத் 'தாழ்ந்தும்' எனப் பொருள் கண்டார். காலிங்கர் ஏக்கற்றும் என்பதற்கு 'ஏக்கற்று ஒடுங்கி ஒரு பொருளை விரும்புமாப்போல்' என்றபடி உரை கண்டார். பரிமேலழகர் இதற்கு 'ஏக்கற்று நின்றும்' என்கிறார். இன்றைய ஆசிரியர்கள் 'செல்வர்முன் ஏழைபோல, ஆசிரியர் முன் ஏங்கித் தாழ்ந்து நின்று கற்றவரே உயர்ந்தவர்', 'எந்தவிதமான குறைச்சலும் இல்லாவிட்டாலும் பணக்கரர்களுடைய வாசலில் ஏழைகள் குறையிரந்து நிற்பதைப்போல் கற்றவர்கள்', 'செல்வரிடம் வறியவர்போலக் கற்றவரிடம் விருப்புடன் தாழ்மையாக நடந்து அறிய வேண்டுவற்றைக் கற்றவர்களே உயர்ந்தோர்', 'பொருளில்லாதார் வருந்தி ஈட்டுதல் போல ஆர்வமுற்று வருந்தியும் கற்றவர்களே எல்லாம் உடையவர்களாவார்கள்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர். செல்வம் உடையவர் முன்பு வறியவர்போல ஏக்கத்தோடு நின்றும் கல்வி பெற்றவர் (உயர்ந்தோர்) என்பது இப்பகுதியின் பொருள். கடையரே கல்லா தவர்: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: இடத்தாவர் கல்லாதார். மணக்குடவர் குறிப்புரை: இது கற்றார் எல்லாரினுந் தலையாவாரென்றது. பரிப்பெருமாள்: இடத்தர் ஆவர் கல்லாதார். பரிப்பெருமாள் குறிப்புரை: இது எல்லாரினுந் தலைவனாம் என்றது. காலிங்கர்: மற்றுக் கடையர் என்பது புலைமக்கள் உயர்ந்தோர்முன் ஒன்றினைச் சொல்லக் கூசுமாப்போலக் கல்லாதார் ஆகிய கடுவினையாளரும் கற்றார் முன் சொல்லத் தாமே கூசுவர் என்றவாறு. பரிமேலழகர்: அந்நிலைக்கு நாணிக் கல்லாதவர் எஞ்ஞான்றும் இழிந்தாரேயாவர். பரிமேலழகர் குறிப்புரை: பொய்யாய மானம் நோக்க மெய்யாய கல்வி இழந்தார் பின் ஒரு ஞான்றும் அறிவுடைய ராகாமையின், 'கடையரே' என்றார். இதனால் கற்றாரது உயர்வும் கல்லாதாரது இழிவும் கூறப்பட்டன. மணக்குடவர்/பரிப்பெருமாள் இருவரும் 'கடை' என்றதற்கு இடப்பொருள் கண்டனர். அதாவது 'கடை'யர் என்பதை (கற்றார்)'இடத்து' என்று கொள்கின்றனர். கல்லாதாரும் கற்றாரிடத்துக் கொள்ளப்படுவர் என்பது இவர்கள் தரும் விளக்கம். காலிங்கரும் பரிமேலழகரும் கடையர் என்றதற்கு இழிந்தவர் என்று பொருள் கூறி கல்லாதவர் இழிந்தோர் ஆவர் என்கின்றனர். இன்றைய ஆசிரியர்கள் 'அம்முறைப்படி கல்லாதவர் இழிந்தவரே', 'வாசலில் நிற்க வேண்டியவர்களே கல்லாதவர்கள்', 'கல்லாதவர்கள் இழிந்தவரே ஆவர்', 'அங்ஙனம் கல்லாதவர்கள் யாவும் அற்று யாவரினும் தாழ்ந்தவர் ஆவார்கள் ' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர். கல்லாதவர்கள் இழிந்தவரே என்பது இப்பகுதியின் பொருள். நிறையுரை: செல்வம் உடையவர் முன்பு வறியவர்போல ஏக்கத்தோடு நின்றும் கல்வி பெற்றவர் உயர்ந்தோர்; கல்லாதவர்கள் இழிந்தவரே என்பது பாடலின் பொருள். 'ஏக்கற்றும்' என்ற சொல் குறிப்பது என்ன? கல்வியைக் காதலித்துக் கற்கவேண்டும்; கல்விச் செல்வம் பெற்றவர் தலைநிமிர்ந்து நிற்பர். வறியவனொருவன் செல்வரிடம் பொருளுதவி பெறுவதற்காக, பொருளின் இன்றியமையாமையை அறிந்து, ஏக்கத்துடன், தன் குறையை நீக்கிக் கொள்ள முயல்வதுபோலக் கற்பவனும் ஆசிரியரிடத்தே விரும்பி நின்று கல்வியின் தேவையை உணர்ந்து அதன் மேலே காதல்கொண்டு கற்கவேண்டும். அவ்விதம் கல்வி பெற்றவர் உயர்ந்தவராகிறார்; கல்லாதவன் மெய்யாய கல்வி இழந்து இழிந்தவன் ஆகிறான். இப்பாடல் மாணவர் கல்வி கற்கும் முறையைச் சொல்கிறது. கற்றவர் உயர்ந்தவர் கல்லாதவர் இழிந்தவர் என்பதுவும் கூறப்பட்டது. கற்பவனுக்குக் கல்வியில் இருக்கும் விருப்பத்தையும் கல்வியின் இன்றியமையாமையையும், வற்புறுத்த வேண்டி ஆசிரியர் முன் ஏங்கி நின்று யாசித்தல் போலக் கல்வி கற்கவேண்டும்; அந்நிலைக்கு நாணிக் கல்லாதவர் எஞ்ஞான்றும் அறிவுடையராகாமல் இழிந்தார் ஆவர் என்றும் இக்குறளுக்குப் பொருள் கூறினர். இதனால் இக்குறள் கல்வியைக் காதலித்துக் கற்கவேண்டும் என்கிறதா அல்லது மாணாக்கன் ஆசிரியரிடம் பணிவுடன் கற்க வேண்டும் என்கிறதா? என்ற கருத்தாடல் எழுந்தது. பணிவைத்தான் இப்பாடல் குறிக்கிறது என்றால் 'கூனிக் குறுகிக் கல்லாதவனுக்கு கல்வி புகட்ட முடியாது; அது பயன் தராது' என்றல்லவா குறள் படைத்திருக்கப்படவேண்டும்? கல்வி கற்கும்போது மாணாக்கனுக்கு செறுக்கற்ற நிலை வேண்டும்தான். ஆனால் தாழ்ந்து நின்றுதான் கற்கவேண்டும் என்பதற்காக ஒருபாடலை வள்ளுவர் யாத்திருப்பாரா? இருக்காது. மாணவரை இழிவாகக் காட்ட வள்ளுவர் விரும்பி இருக்கமாட்டார். அப்பொருள் கற்றுக் கொடுக்கும் ஆசிரியருக்கும் பெருமை சேர்க்காது. தாழ்ந்து நின்று பணிவுடன் கற்கவேண்டும் என்பதைவிட கல்வியைக் காதலித்துக் கற்கவேண்டும் என்ற கருத்து சிறந்தது. தெ பொ மீனாட்சிசுந்தரம் இப்பாடல் பற்றிச் சொல்வதாவது: 'முன்னரே அறிந்திருந்தாலும் அறிதொறும் அறியாமை காணும் நிலையில் ஒன்றும் கல்லாதவன் போலவே மிகத் தாழ்ந்து நின்று பேராசையோடு கற்கவே கற்கின்றவர்கள் முயல்கின்றார்கள்; செருக்குடன் கற்றவர்கள் கல்வியை உடைமையாகக் கொள்வதில்லை; கற்பதற்குத் தக்கதொரு முயற்சி வேண்டும்; இக்குறள் இக்காலத்தார் வற்புறுத்தும் ஒரு சிறந்த உண்மையை அதாவது அக்கறை, இன்றியமையாமை, ஈடுபாடு என்று இதுவொன்று இல்லாவிடின் கல்வி மலராது என்பதை விளக்குகிறது. இக்குறளில் இரண்டு வாக்கியங்கள் இருக்கின்றன. அவற்றுள் முதலில் உள்ளது குறைவாக்கியமாக அமைந்துள்ளதால், வாக்கியக் குறையை நிரப்பிக் கொள்ளும் நோக்கில் கடையர் என்றதன் மறுதலைப் பெயரை அதாவது தலையாயினார் என்ற ஒரு சொல்லை வருவித்து உரை செய்கிறார் பரிமேலழகர். இவர் உரைப்படி 'உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் தலையர்; கடையரே கல்லாதவர்' என்று வாசித்தால் முற்றான ஒரு கருத்து கிடைக்கிறது. (இக்குறள் நடை பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார் (10) என்பதன் நடை போல உள்ளது. அதில் வரும் நீந்துவர் என்பதற்குச் சேர்ந்தார் என ஒரு சொல் வருவித்து முடிப்பது போல் இங்கு வரும் ‘கற்றார்’ என்பதற்குத் தலையாயினார் என ஒரு சொல் வருவித்து முடிக்கப்பட்டது). இக்குறளுக்கான பலரது உரைகளிலிருந்து வேறுவேறான விளக்கங்கள் கிடைத்தன. அவற்றுள் சில: பொருளுடையார் முன்பு பொருள் இல்லாதார் நிற்குமாறு போல, அதனைக் காதலித்து நின்று கற்றால் கல்லாதார் கற்றார் இடத்தாவார். செல்வர்முன் இல்லாதார் நிற்குமாறு போலத் தாமும் ஆசிரியர்முன் ஏக்கற்று நின்றும் கற்றார் தலையாயினார். அந்நிலைக்கு நாணிக் கல்லாதவர் இழிந்தாரேயாவர். எந்தவிதமான குறைச்சலும் இல்லாவிட்டாலும், பணக்காரர்களுக்கு முன்னால் இரந்து நிற்பது போல கற்றவர்கள் வாசலில் நிற்க வேண்டியவர்களே கல்லாதவர்கள். இப்பொழுது கல்வியுடைவராயிருப்பவர் தாம் கல்வியுடையவராதற்குமுன் வறுமைப்பட்டவர் எவ்வாறு பல துன்பங்களுக் குள்ளாவார்களோ அவ்வாறு வருத்தப்பட்டுக் கற்றவரே யாவர். பொருளில்லாதார் வருந்தி ஈட்டுதல் போல ஆர்வமுற்று வருந்தியும் கற்றவர்களே எல்லாம் உடையவர்களாவார்கள். அங்ஙனம் கல்லாதவர்கள் யாவும் அற்று யாவரினும் தாழ்ந்தவர் ஆவார்கள். கல்வியும் செல்வமும் ஆகிய இரண்டையுமே செல்வம் என வள்ளுவர் வழங்கலின் பூரியார் கண்ணும் உள பொருட்செல்வத்திற்கு ஏக்கற்று நிற்றலை, சிறந்தார் மாட்டேயுளதாகிய கல்விச் செல்வத்திற்காக நிற்க. கல்வியையும் செல்வமாக எண்ணித் தம்பாலுள்ள கல்வியின்மையை வறுமையாக எண்ணிக் கற்கவேண்டும் என்பதும் கல்விச்செல்வம் பெற்றவர் பொருட்செல்வம் உடையார் போல் உயர்வாகக் கருதப்படுவர் என்பதும் இப்பாடல் தரும் செய்திகளாம். 'ஏக்கற்றும்' என்ற சொல் குறிப்பது என்ன? 'ஏக்கற்றும்' என்பதற்கு காதலித்து நிற்றலும், தாழ்ந்தும், ஏக்கற்று ஒடுங்கி ஒரு பொருளை விரும்புமாப்போலும், ஏக்கற்று நின்றும், ஏங்கித் தாழ்ந்து நின்றும், ஆசையால் தாழ்ந்து நிற்றல், ஏக்கத்தோடு தாழ்ந்து நின்றும், ஏக்கத்தோடு, ஏங்கித் தாழ்ந்து நின்றும், பணிவுடன், விருப்புடன் தாழ்மையாக நடந்து, ஆர்வமுற்று வருந்தியும், ஏங்கி நின்று பணிவுடன், ஆசையால் தாழ்ந்துநின்றும், நாணித் தலையிறங்கியும், இரங்கி நின்று யாசிப்பது போலவும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர். ஏக்கற்று என்பதற்குச் செருக்கு அற்று எனப் பொருள் கூறி ஏக்கழுத்தம் அல்லது ஏக்கு என்ற செருக்கு உண்மையாகக் கற்றவனிடம் இருப்பதற்கில்லை எனக் குறிப்பார் தெ பொ மீனாட்சிசுந்தரம். நாமக்கல் இராமலிங்கம் ஏக்கற்று என்பதை ஏக்கு+அற்று எனப்பிரித்து ஏக்கம் இல்லாவிடினும் என்று பொருள் கண்டார். இவர் ஏக்கு என்பது 'ஒரு பொருள் இல்லையென்ற ஏக்கம் (கவலை) எனவும் கூறுகிறார். ந சி கந்தையா பிள்ளையின் உரை இச்சொல்லுக்கு 'வருத்தப்பட்டுக் கற்று' என்கிறது. கம்பரும் 'ஒருத்தி முலைக் கிடந்த ஏக்கறவால்' (கம்ப இராமாயணம், யுத்த காண்டம், மாயா சனகப் படலம்) என எக்கறவு என்ற சொல்லை 'ஆசையால்' என்ற பொருளில் ஆண்டுள்ளார். ஏக்கற்று என்ற சொல்லுக்குப் பல்லெல்லாம் தெரியக்காட்டிப் பருவரல் முகத்தில் தேக்கி நிற்றலைக் குறிப்பதாகப் பொருள் கூறினர். ஏக்கற்றும் என்ற சொல் முன்பு வழக்கிலிருந்தது; இப்போது இல்லை என்பது ஆய்வாளர் முடிவு. மணக்குடவரின் காதலித்து நின்றும் என்ற பொருள் சிறந்தது. 'ஏக்கற்றும்' என்ற சொல் 'விரும்பி ஏங்கிநின்றும்' என்ற பொருள் தரும். செல்வம் உடையவர் முன்பு வறியவர்போல ஏக்கத்தோடு நின்றும் கல்வி பெற்றவர் உயர்ந்தோர்; கல்லாதவர்கள் இழிந்தவரே என்பது இக்குறட்கருத்து.
சர்வதேச அளவில் அதிசயங்கள் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு இடத்தில் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. ஆன்மிக ரீதியாக இல்லாமல் அறிவியல் பூர்வமாக அலசி ஆராய்ந்து மருத்துவ விஞ்ஞானிகள் அதன் உண்மை தன்மையை உலகுக்கு அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் மனித முகத்தோற்றத்துடன் ஒரு ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது . இது அப்பகுதியில் வசித்து வருபவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், சிரோஞ்ச் தாலுகாவிற்குட்பட்ட செமால் கெடி கிராமத்தில் வசித்து வருபவர் நவாப் கான். मध्यप्रदेश के सिरोंज का हैरतअंगैज मामला, एक बकरी ने दिया इंसान जैसी शक्ल वाले बच्चे को जन्म😱😱#madhyapradesh #mpnews #sironj #goat #human #reelvideo #reelsinstagram #trendingreelsvideo #birth #animal #viralvideo #madhya_pradesh #india #videoclip #shortvideoreels #Reels pic.twitter.com/HGDL0OHT5A — News Track (@newstracklive) November 12, 2022 இவர் ஒரு எருமை மாடு மற்றும் ஏழு ஆடுகளை வளர்த்து வந்தார். அதில் ஒரு ஆடு குட்டியை ஈன்றுள்ளது. அந்த ஆட்டுக் குட்டிதான் மனித முகத்துடன் பிறந்துள்ளது. இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.பிறந்த அந்த ஆட்டுக்குட்டி மனிதனைப் போலவே கண்கள், வாய், மூக்கு இவைகளை பெற்றுள்ளது. கண்களைச் சுற்றி மனிதர்கள் கண்ணாடி அணிவது போன்று பெரிய கருவளையமும் உள்ளது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. கண்களுக்கு அருகே அடர்த்தியாக இருக்கும் முடிக்கற்றைகள் மனிதர்களுக்கு இருக்கும் தாடியைப் போல இருக்கிறது. இந்த அதிசய பிறப்பு குறித்து கால்நடை மருத்துவர்கள் விடுத்த செய்திக்குறிப்பில் "இப்படிப் பிறக்கும் ஆட்டுக்குட்டிகளுக்குத் தலை டிஸ்ஸ்பெசியா வகையை சேர்ந்திருக்கும். 50000 விலங்கினங்களில் ஏதாவது ஒன்று இப்படி பிறப்பது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. இது வழக்கமான நிகழ்வு தான். மனிதர்கைல் சிலர் குரங்கு, ஓநாய் , போன்ற முக அமைப்பை உடையவர்கள் உண்டு . அது போல இதுவும் சாதாரணமான ஒன்று தான். மேலும் ஆடு கர்ப்பமாக இருக்கும் போது வைட்டமின் ஏ குறைபாடு ஏற்பட்டிருக்கலாம். அதற்கு சரியான மருத்துவம் செய்யாமல் தவறான மருந்துகளை கொடுத்திருக்கலாம். அதன் விளைவே மனித முகத்தை ஒத்த ஆட்டுக்குட்டி எனத் தெரிவித்துள்ளார். மருத்துவர் என்ன காரணம் கூறினாலும் இந்த ஆடு பிறந்த சில மணி நேரங்களிலேயே பிரபலமாகி விட்டது .சுற்று வட்டாரத்தில் வசிப்பவர்கள் இந்த ஆட்டுக்குட்டியை வியப்புடன் நேரில் வந்து பார்த்து செல்பி எடுத்து செல்கின்றனர்.
ட்ரெயின் சென்று கொண்டிருந்த போது நிற்பதற்காக போடப்பட்ட திடீர் ப்ரேக்கினால் அவன் முன்னால் வந்து என் மேல் இடிக்காமல் இருக்க என் முகத்தின் மேல் படாமல் இரு பக்கத்திலும் கை வைத்து நின்றான். அப்போது எங்கள் இருவரின் கண்களும் மிக அருகில் சந்தித்துக் கொண்டன. உதடுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டி உறவாடி விடுமோ என்ற பயத்தில் நடுங்கி துடித்துக் கொண்டிருந்தன. எங்கள் இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டன. எனக்கு மிக நெருக்கத்தில் அவன் வந்து இருப்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் அதே சமயம் ஒருவித பயமும் எனக்குள் இருந்தது. இப்போதும் அவன் தான் பேச்சை ஆரம்பித்தான்.. “நா கேட்ட கேள்விக்கு நீங்க பதிலே சொல்லல” எனக்கு மிக நெருக்கத்தில் அப்படியே நின்று கேட்க அவனின் மூச்சுக்காற்றால் என் உடல் உஷ்ணம் ஏறி காம சூட்டில் கொதிக்க ஆரம்பித்தது. அவன் மிக நெருக்கத்தில் இருந்ததால் என் வாயில் இருந்து பேச்சு விட்டு விட்டு தான் வந்தது. “என்ன கேட்டீங்க?” பயத்துடன் திக்கி திணறி சொன்னேன்.. “என்ன பத்தி உங்களுக்கு தெரியுமா?” கேட்டேன்.. “ம்ம்.. இல்ல.. ம்கூம்..” குழப்பமாக சொல்ல.. “ம்ம் தெரியுமா? இல்ல ம்கூம் தெரியாதா?”ஏதாவது ஒன்னு சொல்லுங்க..” நெருக்கத்தில் சிரித்துக் கொண்டே கேட்டான். “ம்ம். தெரியும்.. ஆனா உன்ன.. உங்கள பத்தி முழுசா எல்லாம் தெரியாது..” “ம்ம். ஓகே.. பாத்த மனுசனா இருந்த கூட முழுசா தெரியாம டிராவல் பண்ணமாட்டேன் சொன்னீங்க.. இப்ப பண்ணிட்டு இருக்கீங்க” “இல்ல.. உன்ன.. உங்கள பாத்த வரை நல்லவரா தெரிஞ்சிங்க.. அதுமட்டுமில்ல நா போற ஏரியாக்கு உங்கள தவிர வேற யாரும் வரக்கூடிய ஆளும் இல்ல.. அதான்..” சொல்லிவிட்டு அவனின் கையின் கீழ் குனிந்து அவனுக்கு எதிர்திசையில் வந்து நின்று ஒரு பெருமூச்சுவிட்டேன். இருவருக்குமிடைய சில பல வினாடிகள் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. எங்களின் கண்கள், உதடுகள், மனம் இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று பேசி உறவாடிக் கொண்டிருந்தன. எங்களின் இருவரின் எண்ணங்களும் என்னவென்று எங்களின் கண்களிலும் முகத்திலும் அப்பட்டமாக தெரிந்தது. இருவரும் என்ன நினைக்கிறோம் என்பதை எங்கள் இருவராலும் புரிந்துக் கொள்ள முடிந்தது. ஆனால் யார் முதலில் ஆரம்பிப்பது என்ற தயக்கம் எங்களுக்குள் நாங்கள் பார்த்து இந்த பயணத்தில் சந்தித்த அந்த தருணத்தில் இருந்து இருந்துக் கொண்டே இருக்கிறது. அந்த தயக்கம் இந்த நொடி வரை தொடர்கிறது. நாங்கள் இருவரும் அதன் பின் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. இருவருமே வெளியில் தூரிக் கொண்டிருக்கும் மழையையும், இயற்கையும், வானத்தில் தெரிந்த வானவில்லையும், சாலையும் செல்லும் வாகனங்கள் என கண்ணில் பட்டதை எல்லாம் பார்த்தும், ரசிக்க வேண்டியதை ரசித்துக் கொண்டும் அந்த பயணத்தை தொடர்ந்தோம். இடையிடையே இருவரின் கண்களும் பார்த்து சந்தித்துக் கொண்டன. ஆனாலும் எனக்கு திரும்பி பேச சிறு தயக்கம் இருந்தது. அவனும் ஏன் பேசாமலே இருக்கிறான் என தெரியவில்லை. ஒருவேளை என் மனநிலை மாதிரி அவனுக்கும் இருந்து அவனும் தயக்கத்தில் பேசாமல் இருக்கிறானோ என்ற எண்ணங்கள் தான் மனதின் ஓட்டங்களாக இருந்தன. இந்த ஸ்டேஷனில் இருந்து அடுத்த ஸ்டேஷன் வரை சில நிமிடங்கள் பயம் கலந்த தயக்கத்துடன் பேச்சு, பல நிமிடங்கள் அமைதி என இது மாதிரி தான் எங்கள் இருவரின் மன ஓட்டங்கள் இருந்தன. அடுத்த ஸ்டேஷனில் ட்ரெயின் நிற்பதற்காக ப்ரேக் போட இந்த முறை நான் நிலைதடுமாறி அவன் மீது மோத அவனின் கை என் பரிசத்தை தொட்டு பிடித்திருந்தது. இது முதல்முறை இல்லை. இரண்டாவது முறை. ஆம் இதற்கு முன் இதே மாதிரி சம்பவம் அபார்மெண்டிலும் இதே போல் எதிர்பாராத விதமாக ஒருமுறை நடந்தது. அந்த நினைவு தான் என் மூளைக்கு சட்டென்று எட்டியது. துணியை அலசி மாடியில் துணி காய போடுவதற்காக ஈர நைட்டியுடன் துவைத்த துணிகளை எல்லாம் வாளியில் எடுத்துக் கொண்டு மாடிப்படியில் ஏறி அங்கிருந்த கதவை திறக்க எதிர்திசையில் இருந்து. அவனும் கதவை தள்ள ஒரு வினாடி நிலைதடுமாறி படியில் விழ போக அவனின் கையால் என் கையை பிடித்து முன்னால் இழுக்க அவனின் பரந்து விரிந்த மார்பினில் மோதி நின்றேன். அந்த சமயத்தில் எங்களின் இருவரின் மார்ப்பும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. நைட்டியின் உள்ளே உள்ளாடை இல்லாத என் மாங்கனிகள்(முலைகள்) அவனின் மார்ப்பின் பட்டு அவனும் அந்த பரிசத்தின் மென்மையை உணர்ந்திருக்காமல் இருக்க வாய்ப்பில்லை. இந்த முறையும் அப்படி தான். என் நிலைதடுமாற்றத்தினால் ஏற்கெனவே மழை மற்றும் அவனின் சில செய்கையால் காம எண்ணங்கள் மனதில் வந்து காம உணர்ச்சிகளை கிளப்பிவிட்டு முலைக்காம்பை விறைக்க செய்து போட்டியிருந்த உள்ளாடை, சுடிதாரை மீறி வெளியே துருத்திக் கொண்டிருந்தது. இப்போது போட்ட ப்ரேக்கினால் அவன் மீது போய் மோத என் மாங்கனியின் மென்மையை கண்டிப்பாக இந்த முறையும் உணர்ந்திருப்பான். அதை நினைக்கவே மழையினால் ஈரமாகி என் பெண்மை(புண்டை) மதனநீர் துளி கசிய செய்து இன்னும் ஈரமாக்கியது. எங்கள் இருவருக்கும் இடையில் ஒரு நூல் செல்லும் அளவுக்கு தான் இடைவெளி இருந்தது. பின்னால் இருந்து யாரேனும் பார்த்தால் அதுக்கூட தெரியாது. அந்தளவுக்கு மிக நெருக்கமாக அவனுடன் ஓட்டி இருந்தேன். அவனுடைய கை அன்று பிடித்தது போலவே ஒரு இறுக்கத்துடன் என் கையை பற்றியிருந்தது. என் கையை பிடித்ததிலிருந்தே அவனின் ஆண்மை தன்மை என்னவென்று தெரிந்தது. அது ஒருபக்கம் அவன் மீதிருந்த மயக்க்தினால் சுகமாக இருந்ததால் தயக்கத்தை உடைத்து அவனை அப்படி கட்டியணைக்க தான் தோன்றியது.. ஆனால் இந்த முறையும் என்னால் முடியவில்லை. ஒருவித தயக்கத்தினால் அவனை விட்டு விலகி நின்றேன். அவனை விட்டு விலகி நின்றாலும் அவனின் கை இன்னும் என் கையை இறுக்கமாக பிடித்திருப்பது போலவே உணர்ந்தேன். அது ஒரு மாதிரி நல்உணர்வை தந்தது. அவனின் முரட்டுதனமான ஆண்மை தனத்தில் அடங்கி ஒடுங்கி இருக்கவே ஆசைப்பட்டேன். அது எப்படி எப்போது நடக்கும் என்று தான் தெரியவில்லை. இதை எல்லாம் நினைத்துக் கொண்டிருக்க அடுத்த ஸ்டேஷன் வந்தடைந்தது.. அவன் தான் என் நினைவை கலைத்தான். “தாம்பரம் ஸ்டேஷன் வர போகுது.. நா போய் என் பேக் எடுத்துட்டு வரேன்” சொல்லவிட்டு என் பதிலுக்கு காத்திருக்காமல் நகர்ந்து சென்றான். சில வினாடிகளில் அவன் தோளில் கருப்பு நிற காலேஜ் பேக்கை மாட்டிக் கொண்டு வந்தான். அவனையும் அவன் செய்யும் செய்கையையும் ரசித்துக் கொண்டே இருந்தேன். இதோ அதற்குள் அடுத்த ஸ்டேஷன் வந்துவிட்டது. “அடுத்த ஸ்டேஷன்ல நாம இறங்கனும் பக்கத்துல வந்துட்டோம்.. உங்க லக்கேஜ் கைல எடுத்து வச்சுக்கோங்க..” சொன்னவுடன் தான் இந்த உலகத்திற்கு வந்து நான் கொண்டு வந்த இரண்டு டிராவல் பேக்கையும் தேடி பிடித்து எடுத்து பக்கத்தில் வைத்துக் கொண்டேன். “உங்க லக்கேஜ் கைல பிடிச்சுட்டு நில்லுங்க. அப்ப தான் சீக்கிரம் இறங்க முடியும்..” சொல்ல இரண்டு கையில் இரண்டு பையை தூக்கி கொண்டு தள்ளாடி நின்றேன். நான் பையை தூக்க முடியாமல் தள்ளாடியதை பார்த்து என் வலதுகை மேல் அவனின் கைவிரல் பட மின்சாரம் தாக்கியது போல் இருந்தவுடன் பையை பிடித்திருந்த விரலை ஒன்றொன்றாக நழுவ விட வலதுகையில் இருந்த பை கீழே விழுந்தது. “நீங்க பேக் பிடிச்சு பேலேன்ஸ் பண்ணி நிக்க முடியாம இருந்தீங்க அதான் வாங்கலாம் கையை பிடிச்சேன்” தயங்கிட்டே சொல்ல “பரவாயில்ல.. கேட்டு இருந்தா நானே குடுத்திருப்பேன்..” சொல்ல அவன் உடனே “எத குடுத்திருப்பீங்க..?” கேட்க.. “பைய தான் குடுத்திருப்பேன். வேற எதையும் இல்ல” நமுட்டு சிரிப்புடன் சொல்ல அதே சமயம் தாம்பரத்தில் ட்ரெயின் நிற்க அந்த நமுட்டு சிரிப்புடனே தலையை குனிந்து ட்ரெயினை விட்டு இறங்கினேன்.. அங்கும் மழை சின்ன சின்ன தூரலாக பெய்துக் கொண்டு தான் இருந்தது. ஏற்கெனவே பெரிய மழையாக பெய்திருக்கும் போல ப்ளாட்பாரத்திலே சில இடங்களில் தண்ணி அதிகமாக இருந்தது. நான் கீழே இறங்கியதும் அவன் குடுத்த ரெயின்கோட் கலட்டி குடுக்க, “பரவாயில்ல மழை தான் பெஞ்சிட்டு இருக்குல போட்டுக்கோங்க..” “இல்ல உனக்கு?” (முதல்தடவை அவனை ஒருமையில் அழைத்து பேசுகிறேன்.. இனி இப்படியே தான் தொடரும்.) “எனக்கு இல்லைனா பரவாயில்ல.. நோ ப்ராப்ளம்..” “இப்படியே மழைல நனைஞ்சிட்டே வா நடந்து வருவ..” “கொஞ்சம் கஷ்டம் தான் இருந்தாலும் நடந்திடலாம் வாங்க.. முதல்ல வெளில போய் ரோடு என்ன கண்டிஷன்ல இருக்கு பாக்கலாம். தென் டிசைடு வாட் நெக்ஸ்ட்..” “ம்ம். சரி வா போய் பார்க்கலாம்..” இருவரும் வெளியில் வந்து பார்க்கும் போது பெய்த மழையில் ரோட்டில் மழைநீர் ஆறு மாதிரி ஓடிக் கொண்டிருந்தது. அதை பார்த்ததும் “தண்ணீ ரோடு ஃபுல்லா ஓடிட்டே இருக்கு.. இதுல எப்படி நடந்து போறது. மழை வேற இன்னும் நிக்காம பெய்திட்டு தான் இருக்கு. ஒரு ஆட்டோ வேணா கேளு. அதுல போய்டலாம்..” “ஆட்டோனா இந்த டைம்ல அதிகமா கேப்பான்.. என்கிட்ட அவ்வளவு பணம் இல்ல..” அவன் தயங்கிட்டே சொல்ல.. “அட இதெல்லாம் ஒரு ப்ராப்ளமா? நீ ஆட்டோ வருமா மட்டும் கேளு.. எவ்வளவு கேட்டாலும் நானே குடுத்துக்கிறேன்.. ஒரு பிரச்சனையும் இல்ல.. எனக்கு வீடு போய் சேர்ந்தா போதும்..” “சரி இருங்க.. ஸ்டாண்டுல போய் கேட்டு வரேன்..” அவன் கொஞ்ச தூரம் சென்று ஆட்டோகாரனிடம் கைவிரல் ஒன்று இரண்டு என காட்டி ஏதோ பேசிக் கொண்டிருந்தான். கடைசியில் அவர்கள் இருவரும் பேசி முடித்து ஆட்டோ நானிருக்கும் இடத்தை நோக்கி வந்தது. அந்த ஆட்டோவில் முதலில் நான் ஏறி உட்கார்ந்து ஒரு பையை என் மடியில் வைத்துக் கொண்டேன். அவன் தோளில் மாட்டியிருந்த பையை கலட்டி என்னை சீட்டுக்கு பின்பக்கம் வைக்க சொல்லிவிட்டான். என்னுடைய மற்றொரு பையை எடுத்து அவனின் மடியில் வைத்துக் கொண்டு என்னை ஒட்டி உட்கார்ந்தான். எங்கள் இருவரின் உடலும் ஒன்றோடு ஒன்று உரசியபடி தான் இருந்தது. ஆட்டோ கிழம்பயதும் அவனின் கையை எங்கே வைப்பதென்று தெரியாமல் மடியில் இருந்த பையின் மேல் வைக்க அந்த சமயம் ஆட்டோ ஒரு குழியில் இறங்கி ஏற. அவன் கையினுடைய முட்டிப் பகுதி(கை மடங்கும் இடத்தில் இருக்கும் பகுதி) சரியாக என் முலையை நச்சென்று அழுத்தியது. இந்த மயக்கம் இனியும் தொடரும்.. இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் samarsaran94@gmail.comல் சொல்லுங்கள்.. Tags:auntytamil kamakathaitamil kamapasitamilkamaveriகாமக்கதைகள்காமவெறிதமிழ் ஹாட் செக்ஸ் ஸ்டோரீஸ்மனைவி செக்ஸ்
Thennakam Admin 21st June 2019 Current Affairs – 21 June 20192019-06-21T07:44:47+05:30 நடப்பு நிகழ்வுகள் தமிழகம் 1.தமிழக சட்டப் பேரவை வரும் 28-ஆம் தேதி கூடுகிறது. இதற்கு ஒப்புதல் அளித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தார். 2.சிவகங்கை அருகே 17 -ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல்லை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். இந்தியா 1.சர்வதேச யோகாதினத்தையொட்டி, ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் யோகா தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். 2.மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் குறைகளுக்கு தீர்வு காண்பதற்கு தொலைபேசி சேவை மையம் (கால் சென்டர்) அமைக்கப்பட்டுள்ளது. 3.மக்களவையில் முத்தலாக் நடைமுறை தடை மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. வர்த்தகம் 1.வங்கிகளின் கடன் வழங்கல் மற்றும் டெபாசிட் திரட்டல் ஆகிய இரண்டு நடவடிக்கைகளிலுமே தொய்வு ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது. 2.முத்ரா திட்­டத்­தின் கீழ், தற்­போது வழங்­கப்­பட்டு வரும், 10 லட்­சம் ரூபாய் கடனை, இரு மடங்கு அதி­க­ரித்து, 20 லட்­சம் ரூபா­யாக வழங்­க­லாம் என, ரிசர்வ் வங்­கி­யின், நிபு­ணர்­கள் குழு தெரி­வித்­துள்­ளது. உலகம் 1.சீன அதிபர் ஷி ஜின்பிங் வட கொரியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். 2.இமய மலையிலிருந்து பனி உருகுவது கடந்த 2000-ஆம் ஆண்டைப் போல் இரண்டு மடங்காகியுள்ளதாக அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. விளையாட்டு 1.ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. 2.ஸ்பெயினில் நடைபெற்று வரும் மல்லோர்கா மகளிர் டென்னிஸ் போட்டியில் லாத்வியாவின் அனஸ்தாஸிஜா செவஸ்டோவா காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். 3.சீனியர் ஆசிய ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிருக்கான வால்ட் பிரிவில் இந்தியாவின் பிரணதி நாயக் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
அவ‌ன் ப‌ழைய‌ கிங்ஸ்ட‌ன் தெரு, 401 நெடுஞ்சாலையோடு இணைகின்ற‌ ப‌குதியில் ந‌ட‌ந்து கொண்டிருந்தான். மெல்லிய‌தாக‌ப் பெய்த ப‌னி, அணிந்திருந்த‌ க‌றுப்ப‌ங்கியின் மேல் ம‌ல்லிகைப் பூவைப் போல‌ விழுந்து க‌ரைந்து போய்க்கொண்டிருந்த‌து. வான‌த்தை மூடியிருந்த‌ க‌ருஞ்சாம்ப‌ல் போர்வை ஒருவ‌கையான‌ நெகிழ்வை மாலை நேர‌த்துக்குக் கொடுக்க‌, இலைக‌ளை உதிர்த்த‌ ம‌ர‌ங்க‌ள் த‌லைவிரிகோலமாய் வானை நோக்கி எதையோ யாசிப்ப‌து போல‌வும் தோன்றிய‌து. தானும் எல்லா இழைகளும் அறுந்து தனித்துவிடப்பட்ட தனியன்தானோ என்கிற வெறுமை இவ‌னுக்குள் ப‌ர‌வ‌த் தொட‌ங்கிய‌து. தலைவிரிக்கோல ம‌ர‌ங்க‌ளைப் போன்று, பனித்திடலில் இரு கால்கள் புதைய ந‌ட‌மாடும் ம‌ர‌ந்தானோ தானும் என உருவ‌கித்துக் கொண்டான். இன்ன‌ கார‌ண‌ம் என்றில்லாது க‌ண்க‌ளிலிருந்து நீர் க‌சிய‌த்தொட‌ங்கும‌ள‌வுக்கு மிகவும் நெகிழ்ந்திருந்தான். க‌ண்ணீரைக் கையால் துடைக்காது, அது விழுகின்ற‌ ப‌னியோடு சேர்ந்து க‌ரைந்து போய்க்கொண்டிருந்ததை அச‌ட்டை செய்து ந‌ட‌ந்த‌ப‌டியிருந்தான். மெல்லிய‌ தூற‌லாய் விழும் ப‌னியை நாவை நீட்டி ருசிப்ப‌து அவ‌னுக்கு எப்போதும் பிடித்த‌மான‌ செய‌லென்ப‌தால் இன்றும் ப‌னியைச் சுவைத்துப் பார்த்தான். உவ‌ர்ப்ப‌து போல‌ப்ப‌ட்ட‌து. இது ப‌னியில் இய‌ல்ப‌ல்ல‌வே, த‌ன் நினைவுதான் அதைக் க‌ச‌ப்பாக்கிற‌து போலும் என‌ எண்ணிக்கொண்டான். இப்ப‌டியே நெகிழ்ந்த‌ நிலையில் தொட‌ர்ந்தும் ந‌ட‌ந்துபோனால், வாக‌ன‌ங்க‌ள் நூறு கிலோமீற்ற‌ருக்கு மேலாய் விரையும் நெடுஞ்சாலையில் குதித்துவிட‌க்கூடுமென‌ அஞ்சி இட‌துப‌க்க‌ வீதியிற்குள் இற‌ங்கினான். 86ம் இல‌க்க‌ ப‌ஸ் வ‌ந்துகொண்டிருந்த‌து, ச‌ட்டென்று ஏறி அத‌னுள் அம‌ர்ந்து கொண்டான். அவ‌ன் க‌ன‌டாவிற்கு வ‌ந்து இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளாகி விட்ட‌ன‌. இல‌ங்கையில் இருந்து வெளிநாடுக‌ளுக்கு ஒழுங்கான‌ விஸா இல்லாது வ‌ரும் அனைவ‌ரைப் போல‌வே அவ‌னும் வ‌ந்து சேர்ந்திருந்தான். வ‌ருகின்ற‌ வ‌ழியில் க‌ள்ள‌ங்க‌ள் செய்த‌த‌ற்கு ப‌ய‌ப்பிட்ட‌தை விட‌, க‌ன‌டாவிற்கு வ‌ந்த‌பின் ப‌ய‌ண‌த்திற்காய் ப‌ல‌ரிட‌ம் வாங்கிய‌ க‌ட‌ன் காசுதான் இன்னும் அச்சுறுத்திய‌து. அது போதாதென்று இவ‌னின் தாயார், 'வெளிநாட்டுக்குப் போய் மாறிவிடாதை, உன‌க்குப் பின் இர‌ண்டு த‌ங்க‌ச்சிமார் இருக்கின‌ம் என்ப‌தை ம‌ற‌ந்துவிடாதே' என‌ அடிக்க‌டி நினைவுப‌டுத்தியுமிருந்தார். அம்மாவின் இந்த‌ ந‌ச்ச‌ரிப்புத் தாங்காம‌லே, 'அங்கை போன‌வுட‌னையே ஒவ்வொரு காலையும் ஒரு த‌ங்க‌ச்சிக்கென‌ தாரை வார்த்து, உழைத்துக் காசு அனுப்புகிறேன் க‌வ‌லைப்ப‌டாதைய‌னை' என‌ எரிச்ச‌லுட‌ன் இவ‌ன் சொன்னான். மொன்றிய‌ல் விமான‌ நிலைய‌த்தில்தான் முத‌லில் வ‌ந்திற‌ங்கினான். 'எங்கே பாஸ்போர்ட்?' என‌க் கேட்க‌, இல‌ங்கையில் உள்நாட்டுப் போர் தீவிர‌மாக‌ ந‌ட‌க்கின்ற‌தென‌ச் சொல்லி க‌ன‌டா இமிக்கிரேச‌னில் இர‌ண்டு கைக‌ளையும் உய‌ர்த்தினான். கிரேஹ‌வுண்ட் ப‌ஸ் எடுத்து ரொறொண்டோவிற்கு அடுத்த நாள் வ‌ந்து சேர்ந்திருந்தான். இவ‌னுக்குத் தெரிந்த‌ உற‌வினொருவ‌ர் ரொறொண்டோவில் இருந்த‌து ந‌ல்ல‌தாய்ப் போய்விட்ட‌து. ஓர் அறையுள்ள‌ அபார்ட்மெண்டில் ஏற்க‌ன‌வே இருந்த‌ மூன்று பேருட‌ன் நான்காவ‌து ஆளாக‌ இணைந்தான். ரொறொண்டோ போயிற‌ங்கிய‌ இர‌ண்டாம் நாளே, த‌ன் தாய் கூறிய‌தை ம‌ற‌ந்துவிடாது, 'அண்ணை என‌க்கொரு வேலை எடுத்துத் தாங்கோ' என‌ உறவுக்காரரிடம் கேட்டான். 'உன்ர‌ வ‌ய‌சுக்கு ஸ்கூலுக்குப் போற‌தை முத‌லில் பார். இல்லாட்டி பிற‌கு எங்க‌ளைப் போல‌ கிச்ச‌னுக்குள்ளேதான் முட‌ங்கிக் கிட‌க்க‌ வேண்டும்' என‌ச் சிவா அண்ணா இவ‌னுக்குக் கூறினார். இவ‌னுக்கு ப‌தினேழு வ‌ய‌து அப்போதுதான் முடிந்திருந்த‌து. வெஸ்ட் ஹில் உய‌ர்க‌ல்லூரிக்குப் ப‌டிப்ப‌த‌ற்காய் செப்ரெம்ப‌ரிலிருந்து போக‌த் தொட‌ங்கியிருந்தான். பாட‌சாலை முடிந்த மாலை நேர‌த்தில் ஒரு வேலையும் கிடைத்திருந்த‌து. 'கைக‌ளைத் தூக்கிய‌ கேஸ்' இன்னும் முடியாத‌தால் சிவா அண்ணாவின் ந‌ம்ப‌ரில்தான் வேலை செய்ய‌த் தொட‌ங்கினான். போக‌த் தொட‌ங்கியிருந்த‌ வேலைத்த‌ள‌த்தில் ஆடைக‌ள் தோய்ப்ப‌த‌ற்கான‌ இர‌சாய‌ன‌க்க‌ல‌வையைத் த‌யாரிப்பது நிகழ்ந்து கொண்டிருந்தது. இவ‌ன‌து தொழில், அந்தக் கெமிக்க‌லை நான்கு 2லீற்ற‌ர் க‌ல‌ன்க‌ளில் நிர‌ப்புவ‌தும், அதை எடுத்து ஒழுங்காய் பெட்டிக்குள் அடுக்கி வைப்ப‌தும் என்பதாய் இருந்தது. வேலை பார்க்க‌ எளிதாக‌ இருந்தாலும் ஒவ்வொரு 30செக்க‌ன்க‌ளில் நான்கு க‌ல‌ன்க‌ள் நிர‌ம்ப‌ நிர‌ம்ப‌ எடுத்து, முதுகு வலிக்க வலிக்க அடுக்க‌வேண்டும். கொஞ்ச‌ம் நேர‌ம் பிந்தினாலும் க‌ல‌ன்க‌ள் நிர‌ம்பி வ‌ழிய‌த் தொட‌ங்கிவிடும். இது போதாதென்று கண்க‌ளுக்கு பாதுகாப்புக் க‌ண்ணாடி எப்போதும் அணிந்து கொண்டும் இருக்க‌வேண்டும். த‌ப்பித் த‌வ‌றி கெமிக்க‌ல் சிந்தி க‌ண்க‌ளைப் பாதித்து விட‌க்கூடாதென்ப‌த‌ற்கான‌ முற்பாதுகாப்பு இது. வேலைக்குப் போன‌ முத‌ல்நாள், வேலை முடியும்போது துடைப்ப‌த்தைத் த‌ந்து இட‌த்தைக் கூட்டிச் சுத்த‌மாக்கச் சொன்னார்கள். இல‌ங்கையில் இருந்த‌போது தும்புக்க‌ட்டை இருந்த திசைக்கே போகாத‌வ‌னுக்கு இது ஒரு மான‌ப் பிர‌ச்சினையாக‌ப் போய்விட்ட‌து. வீட்டில் அம்மாதான் இதையெல்லாம் செய்வார். அவ‌ருக்கும் ஏலாதென்றால் த‌ங்க‌ச்சிமார்தான் வீட்டைக் கூட்டுவ‌து பெருக்குவ‌து. க‌ன‌டாவில் இப்படியாயிற்றே தன் விதியென நொந்துகொண்டான். ஊரில் பெடிய‌ங்க‌ளுக்கு இருக்கும் எழுத‌ப்ப‌டாத‌ சொகுசான‌ வாழ்க்கையைக் க‌ண்டு, பொம்பிளைப்பிள்ளைக‌ள் மனமெரிந்து சாப‌ம் போட்டுத்தான் த‌ன்னைப் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு இந்த‌ நிலை இப்போது வ‌ந்திருக்கின்ற‌தோ என‌ நினைத்துக் கொண்டான். பாட‌சாலைக்குப் போக‌ ஆறு ம‌ணித்தியால‌ம், வேலைக்கு எட்டு ம‌ணித்தியால‌ம், ப‌ஸ்சில் போய்வ‌ர‌ இர‌ண்டு ம‌ணித்தியால‌ம் என ஒருநாளில் ப‌தினாறு ம‌ணித்தியால‌ங்கள் இப்படியாகப் போய்விடும். ச‌னி ஞாயிறுக‌ளிலும் சும்மா இருக்காது வீடு வீடாக‌ப் போய் ஃபிளைய‌ர்ஸ் போட‌வும் தொட‌ங்கியிருந்தான். இவ‌ன் க‌ன‌டா வ‌ந்து ஒரு வ‌ருட‌ம் ஆன‌போதுதான் சிவா அண்ணா ஒரு யோச‌னை கூறினார். 'இப்ப‌டி நாங்க‌ள் நான்கு பேரும் வீணாய் வாட‌கைக்கு ப‌ண‌த்தைச் செல‌விடுவ‌தை விட‌, ஒரு வீட்டை நான்கு பேருமாய்ச் சேர்ந்து வாங்கி மோட்கேஜ் க‌ட்டுவோம்' என்றார். இவ‌ன் உட்ப‌ட‌ எல்லோரும் த‌லா 3000 டொல‌ர்க‌ள் ட‌வுன் பேமேண்ட் போட்டு வீடொன்றை மோர்னிங்சைட் ப‌க்க‌மாய் வாங்கினார்க‌ள். யாரேனும் ஒருவ‌ர் முத‌லில் திருமணம் செய்யும்போது, வீட்டை விற்றுவிட்டு எல்லோரும் ச‌ம‌னாக‌க் காசைப் பிரித்துக் கொள்வோம் என‌வும் தீர்மானித்திருந்த‌ன‌ர். ஒருநாள் பாட‌சாலைக்கு ந‌ட‌ந்து போய்க்கொண்டிருந்த‌போது பிலிப்பைன்கார‌ப் பெட்டை ஒருத்தி த‌ன் கையுறையைத் த‌வ‌றவிட்டு ஹெட்போனில் பாட்டுக் கேட்டபடி போய்க்கொண்டிருப்ப‌தைக் க‌ண்டான். இவ‌ன் ஓடிப்போய் நில‌த்தில் வீழ்ந்திருந்த‌ கையுறையை எடுத்து, முன்னே போய்க்கொண்டிருந்த‌ அவ‌ளின் தோளைத் த‌ட்டிக் கொடுத்தான். 'மிக்க‌ ந‌ன்றி. இது என் அம்ம‌ம்மா மூன்று வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் கிறிஸ்ம‌ஸ் ப‌ரிசாக‌த் த‌ந்த‌து. இப்போது அம்ம‌ம்மா உயிரோடு இல்லை. அவ‌ரின் நினைவாக‌ இதை வைத்திருக்கின்றேன். தொலைத்திருந்தால் அம்ம‌ம்மாவைக் கைவிட்ட‌து போல‌ வ‌ருந்தியிருப்பேன். மீண்டும் ந‌ன்றி' என்றாள். 'நீங்க‌ள் அதிஷ்ட‌ம் செய்த‌வ‌ர்க‌ள். உங்க‌ளின் நெருங்கிய‌ உற‌வுக்கார‌ர்க‌ள் எல்லோரும் இங்கிருக்கின்றார்க‌ள். என‌க்கென்றுதான் எவ‌ரும் இங்கு இல்லை' என‌ இவ‌ன் சொன்னான். 'Aaah..I am really sorry to hear it' என உண்மையிலே இவன் நிலை கண்டு வருந்தினாள் அவ‌ள். பிற‌கு ஒருநாள் ஹ‌லோவீனுக்கு த‌ன் த‌ம்பியோடு 'Trick or Treat' கேட்க‌, இவ‌ன் இருந்த‌ வீட்டுக் க‌தவைத் த‌ட்டினாள். 'நீ எங்க‌ளுக்கு அருகில்தான் வ‌சிக்கின்றாய் என்ப‌து என‌க்குத் தெரியாதே' என‌ இவன் கதவைத் திறந்ததைப் பார்த்து அவள் சொன்னாள். 'பேய்க‌ள் அருகில் வ‌சித்தால் தான் என்ன‌, தொலைவில் வ‌சித்தால் தான் என்ன‌? பேய்க‌ள் எப்போதும் பேய்க‌ள் தானில்லையா?' என‌ச் சிரித்தபடி இவ‌ன் கூறினான். அவ்வ‌ப்போது பாட‌சாலையில் இருவரும் ச‌ந்தித்துக் க‌தைத்துக் கொண்டார்க‌ள். அவ‌ளுக்காக‌வே இவ‌ன் பாட‌சாலை தொடங்குவதற்கு அரை ம‌ணித்தியால‌ம் முன்பாகப் க‌ல்லூரிக்குப் போக‌த் தொட‌ங்கினான். பாடசாலை முடிந்து மாலையில் நின்றும் அவ‌ளோடு ஆறுத‌லாக‌ப் பேச‌லாம் என்றாலும், மாலை நேர‌ வேலை அத‌ற்கு இட‌ங்கொடுப்ப‌தில்லை. ஒருநாள் அவ‌ள் Thanks Giving டின்ன‌ருக்கு அழைத்தாள். இவ‌ன் தனிமையில் இருக்கின்றான் என்றெண்ணியோ என்ன‌வோ தெரியாது, க‌ட்டாய‌ம் வ‌ர‌வேண்டுமென கைகளைப் பிடித்தபடி சொன்னாள். இவ‌ன் த‌ன்னை அவ‌ளின் குடும்ப‌த்துக்கு கலாதியாக அறிமுக‌ம் செய்ய‌வேண்டும் என்ப‌த‌ற்காய் Levi's ஜீன்ஸும், CK ஷேர்ட்டும் அணிந்து கொண்டு போயிருந்தான். க‌ன‌டா வ‌ந்து ரீவியை அவ்வ‌ப்போது பார்த்த‌தில் Thanks Giving டின்னருக்கு விருந்தாளிக‌ளாக‌ப் போகின்றவ‌ர்க‌ள் அநேக‌மாய் வைன் போத்த‌ல்களைக் கொண்டு போவ‌தை அவதானித்திருந்தான். அவ‌ள் வீட்டுக்குப் போக‌முன்ன‌ர் லிக்க‌ர் ஸ்ரோரிற்கு போய் கொஞ்ச‌ம் விலைகூடிய‌ வைனையும் வாங்கினான். தான் வைன் வாங்கும்போது தெரிந்த‌ முக‌ங்க‌ள் எதுவும் கடையில் தெரிகிற‌தா என‌ச் சுற்றுமுற்றும் நோட்ட‌மும் விட்டான். தெரிந்த‌ ச‌னம் தான் வைன் வாங்குவதைக் க‌ண்டு, இந்த‌க் க‌தை இல‌ங்கைக்குப் போனால், இவ‌ன் முழுநேர‌க் குடிகார‌ன் ஆகிவிட்டான் என‌ப் புல‌ம்பி புல‌ம்பி த‌ன்ரை தாய் ம‌னுசி கோயில் கோயிலாக‌ ஏறக்கூடுமென‌கிற‌ ப‌ய‌ம் தான் இத‌ற்குக் கார‌ண‌ம். தாய்க்காரி அங்கையிருக்கின்ற கோயில்க‌ளில் வைக்கின்ற‌ நேத்திக்கும், அபிசேசங்க‌ளுக்கும் இவ‌ன் தானே மாய்ந்து மாய்ந்து உழைத்து, அத‌ற்கும் ப‌ண‌ம் அனுப்ப‌ வேண்டியிருக்கும். அவ‌ளின் வீட்டுக்குள் போன‌போது ஒரே அல்லோலகல்லோலமாய் இருந்தது. ஏதோ பிலிப்பையின்சையே அப்ப‌டியே க‌ன‌டாவிற்குத் தூக்கிக் கொண்டுவ‌ந்த‌மாதிரி வீடு முழுக்க‌ச் ச‌ன‌மாய் இருந்த‌து. அவ‌ளின் அம்மா, 'நீ சோறு சாப்பிடும் பழக்கமுடையவனா?' என்றொரு முக்கியமான கேள்வியைக் கேட்டார். 'ஓம். ஒருநாளைக்கு ஒருமுறை...' என்றான் இவ‌ன். 'நாங்க‌ள் மூன்று நேர‌மும் சாப்பிடுகின்ற‌வ‌ர்க‌ள். அத‌னால்தான் திட‌காத்திர‌மாய் இருக்கின்றோம்' என்றார். இவ‌னுக்கு அவ‌ரின் உட‌லின் அள‌வைப் பார்த்த‌போது சூமோ வீர‌ர்க‌ள்தான் நினைவுக்கு வந்தார்கள். இதைத்தான் திட‌காத்திர‌ம் என்று இவா கூறுகின்ற‌வோ என‌ நினைத்து இவ‌னுக்குச் சிரிப்பு வ‌ந்த‌து. 'எங்க‌ளின் குடும்ப‌த்தின் அள‌வைப் பார்த்து, இதைவிட‌ த‌னியே இருப்ப‌து ந‌ல்ல‌தென‌ யோசிக்கின்றாயோ' என‌க் கேட்டப‌டி இவனை அவள் விருந்திற்குக் கூட்டிச் சென்றாள். 'அப்ப‌டி என்றில்லை, எப்போதும் இல்லாத‌ ஒன்றுக்காய்தானே ம‌ன‌ம் ஆலாய்ப் ப‌ற‌க்கும்' என்றான் இவ‌ன். பிற‌கான நாட்களில், இவன் ஆட்க‌ள் குறைவாக‌ இருக்கும் ஷோக்க‌ளுக்கு அவ‌ளோடு ப‌ட‌ம் பார்க்க‌ச் சென்றான். ஆட்க‌ள் நிறைய‌க் கூடும் கிள‌ப்புக்க‌ளுக்கும் நில‌வு ஒளிந்த‌ இர‌வுக‌ளில் அவளை கூட்டிப் போக‌த் தொட‌ங்கினான். இலங்கையில் இருக்கும் தன் குடும்ப‌த்திற்கு ஆறு நாள், இவ‌ளுக்கு ஒரு நாளென‌ ச‌னிக்கிழ‌மைக‌ளில் வேலை செய்வ‌தையும் த‌விர்த்தான். செஞ்சோற்றுக் கட‌ன் போல‌, இர‌ண்டு த‌ங்க‌ச்சிமாருக்குச் செய்ய‌வேண்டிய‌ க‌டமைக‌ள் முன்னே இருக்க‌, அதுவ‌ரை அவ‌ள் காத்திருப்பாளா என்ப‌து குறித்த நிச்சய‌மின்மைக‌ளும் தெரிந்த‌ன. இத‌ற்கிடையில் இவ‌னுடைய‌ ப‌ள்ளிக்கூட‌ ந‌ண்ப‌ர்க‌ள், 'எந்த‌ப் பெட்டைக‌ளோடு என்றாலும் திரிய‌டா, ஆனால் பிலிப்பீனோ பெட்டைக‌ளோடு ம‌ட்டும் ச‌க‌வாச‌ம் வைத்துக்கொள்ளாதே. செல்ல‌ம் கொஞ்சிக் கொஞ்சியே க‌ற‌க்க‌ வேண்டிய‌தை க‌ற‌ந்துவிட்டு வெறுங்கையோடுதான் அனுப்புவார்க‌ள்' என‌வும் எச்சரித்தார்க‌ள். தான் வேலை செய்கிற‌ ப‌க்ர‌றியில் இருக்கிற‌ சூப்ப‌ர்வைச‌ர் திட்டிக்கொண்டும் சுர‌ண்டிக்கொண்டும் தானிருக்கிறார். அதையே ச‌கித்துக் கொண்டுதானே இருக்கிறேன். இவ‌ள் என்னிட‌ம் இருந்து எதைச் சுர‌ண்டிக் கொண்டு போனாலும் செல்ல‌ம் கொஞ்சித்தானே கொண்டு போக‌ப்போகிறாள்; போனால் போக‌ட்டும் என‌ எண்ணிக் கொண்டான். ந‌ண்ப‌ர்க‌ள் கூறிய‌துபோல‌ அவ‌ள் எதையும் இவ‌னிட‌மிருந்து சுர‌ண்ட‌வும் இல்லை, தானாகக் க‌ழ‌ற்றிக் கொள்ள‌வும் இல்லை. இவ‌ன் தான் அவ‌ள் உற‌வை வெட்ட வேண்டியதாகப் போயிற்று. சிவா அண்ண‌ன் திரும‌ண‌ம் செய்ய‌ப் போகின்றேன் என்றார். அவ‌ர் இந்த வீட்டில் மூன்று இள‌ந்தாரிப் பெடிய‌ங்க‌ளோடு மனைவியைக் கூட்டிக்கொண்டு வந்து இருக்க‌ அவ்வ‌ள‌வாய் விரும்ப‌வில்லை. வ‌சிக்கும் வீட்டை விற்ப‌தென‌த் தீர்மானிக்க‌ப்ப‌ட்ட‌து. இவ‌ன் மோர்னிங்சைட்டிலிருந்து 50 கிலோமீற்ற‌ருக்கு அப்பாலிருந்த‌ மிஸிசாக்கா ப‌க்க‌மாய் இட‌ம்பெய‌ர்ந்தான். அவ‌ளோடு உற‌வைத் தொட‌ர‌ முடியாம‌ற் போன‌த‌ற்கு தூர‌ம் ம‌ட்டும் ஒரு கார‌ணமில்லை; நீண்ட‌கால‌ உற‌வாய் அது இருக்க‌முடியாது என்று ய‌தார்த்த‌மே இவ‌னை இன்னும் ப‌ய‌முறுத்திய‌து. த‌ங்கைக‌ள் இருவ‌ருக்கும் திரும‌ண‌ஞ் செய்துவைத்த‌ பின்னே எதையும் த‌ன‌க்காய்ச் செய்ய‌லாம் என்கிற‌ ச‌ம்பிர‌தாய‌ம் ஒருப‌க்க‌ம் துன்புறுத்தியது. க‌லாச்சார‌மும், த‌ன் ச‌மூக‌மும் த‌ன்னை எல்லாத் திசைக‌ளிலும் இறுக்குகின்ற‌து என்ப‌தை எல்லாம் விரிவாக‌ விள‌க்கிச் சொல்லாது, தான் மிஸிசாக்காவிற்கு இட‌ம்பெய‌ர்கிறேன் என்ப‌தை ம‌ட்டும் இவ‌ன் அவ‌ளுக்குச் சொன்னாள். அவ‌ளுக்கும் இனி என்ன‌ நிக‌ழும் என்ப‌து விள‌ங்கியிருக்க‌க் கூடும். 'உட‌லின் மூலைகளுக்குள் ஒடுங்கியிருந்த காமத்தின் அரும்புகளை கிளர்த்தி, என்னுடன் த‌ன் உட‌லைப் ப‌கிர்ந்த‌வ‌ள் அவள்' என்கின்ற‌ நினைவை இவ‌ன் த‌ன‌க்குள் என்றைக்குமாய்ப் ப‌த்திர‌ப்ப‌டுத்திக் கொண்டான். மீண்டும் ச‌னிக்கிழ‌மைக‌ளிலும் வேலைக்குப் போக‌த் தொட‌ங்கினான். ப‌குதி நேர‌மாய் ஹ‌ம்ப‌ர் கொலீஜுக்கு ப‌டிக்க‌ப் போனான். ஒரு த‌ங்க‌ச்சிக்கு பிரான்சில் இருந்து பொருத்த‌ம் ஒன்று பொருந்தி வ‌ர‌ பாரிஸூக்கு நிறைய‌ச் சீத‌ன‌க்காசு கொடுத்து தங்கச்சியை அனுப்பி வைத்தான். பிரான்ஸ் போன‌ த‌ங்க‌ச்சி சிலவருடங்களின் பின், த‌ன் ம‌னுச‌னின் உற‌வுக‌ள் யாரோ சுவிசிலாந்திலிருக்கும் ஒருவ‌ருக்குப் பெண் தேடுகின்ற‌ன‌ர் என்று அறிந்து இவ‌னுக்குச் சொன்னாள். ஆனால் அவ‌ர் ஏதோ இய‌க்க‌த்திலிருந்தவ‌ர் என்றாள். 'முன்னாள் இய‌க்க‌மோ இன்னாள் இய‌க்க‌மோ, ஆள் ஒழுங்கான‌வ‌ராய் இருந்தால் போதும்' என்று அவரைப் பற்றி விசாரித்து அறிந்து, தன் ம‌ற்ற‌த் த‌ங்க‌ச்சியை சுவிசிலாந்திற்கு அனுப்பி வைத்தான். 'இய‌க்க‌த்திலிருந்தார்க‌ளோ அல்லது இல்லையோ, ஆனால் சீத‌னம் வாங்குகின்ற‌ க‌லாச்சார‌த்தை ம‌ட்டும் ம‌ற‌க்காம‌ல் இருக்கின்றார்க‌ள்' என்று இவ‌ன் சீதனமாய் அனுப்பக் கேட்ட‌ காசின் அளவைப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டான். த‌ங்க‌ச்சிமார் இர‌ண்டு பேரும் வெளிநாட்டுக்குப் போன‌பிற‌கு இல‌ங்கையில் தாயும் த‌க‌ப்ப‌னும் ம‌ட்டும் த‌னியே இருந்தார்க‌ள். இவ‌ன் ஹ‌ம்ப‌ர் கொலீஜில் இர‌ண்டு வ‌ருட‌ங்களில் ப‌டித்து முடிக்க வேண்டிய பாடங்களை ஐந்து வருடங்களாய் எடுத்து, டிப்ளோமா பெற்றான். ப‌ட்ட‌ம‌ளிப்பு விழாவிற்கென‌ த‌ன் தாயையும் த‌க‌ப்ப‌னையும் இல‌ங்கையிலிருந்து எடுப்பித்தான். வ‌ந்த‌ அவ‌ர்க‌ளை 'இனி அங்கே போய் என்ன‌ செய்ய‌ப்போகின்றீர்க‌ள்' என‌க் சொல்லிவிட்டு அவ‌ர்க‌ளைத் தானே கன‌டாவிற்குள் வைத்து ஸ்பொன்ச‌ரும் செய்தான். வீட்டுக்கு வருகின்ற‌ ச‌ன‌ம் எல்லாம் 'இவ‌னுக்கு எப்போது திரும‌ண‌ம்?' என்ப‌தை ம‌ட்டும் ம‌ற‌க்காம‌ல் கேட்டு விட்டுச் செல்வார்க‌ள். இந்த‌ ந‌ச்ச‌ரிப்புத் தாங்காமலே உற‌வின‌ர்க‌ள் வீட்டுக்கு வ‌ருகின்றார்க‌ள் என்றால் வீட்டை விட்டு வெளியே போகின்ற‌வ‌னாய் இவன் மாறிப்போனான். தாய் ம‌னுசியும்,'த‌ம்பி நான் க‌ண்ணை மூடுகிற‌துக்குள்ளை பேர‌ப்பிள்ளைக‌ளை பார்த்துவிட்டு க‌ண்ணை மூட‌னோனும‌டா' என‌ த‌மிழ்ப்ப‌ட‌ சென்டிமென்ட‌லில் அடிக்க‌டி சொல்ல‌த் தொட‌ங்கிவிட்டார். பிலிப்பைன்காரியைத் திரும‌ண‌ம் செய்வோமோ என்றுகூட‌ இவ‌ன் ஒருக‌ண‌ம் நினைத்தான். ஆனால் அவ‌ளைத் திரும‌ண‌ஞ்செய்தால் த‌மிழ் ஆண்க‌ளுக்குக் கிடைக்கக்கூடிய‌ செளக‌ரிய‌ங்க‌ள் ஒன்றும் கிடைக்காது என்று ஆழ‌மாய் யோசித்து அந்த‌ எண்ண‌த்தைக் கைவிட்டான். ஊரிலையே பெண் பார்ப்ப‌தே எல்லா வ‌ழிக‌ளிலும் மிக‌ச் சிற‌ந்த‌தென‌ முடிவெடுத்து, அப்போது அதிக‌ ப‌ட‌ங்க‌ளில் ந‌டித்துக்கொண்டிருந்த‌ சிநேகா மாதிரி ஒரு பெண் பார்க்க‌ச் சொன்னான். 'சிநேகா மாதிரி என்றால் என்ன‌மாதிரி?' என‌ அங்கே இவ‌னுக்காய்ப் பெண் பார்த்துக்கொண்டிருந்த‌ சித்த‌ப்பா ரெலிபோனில் கேட்டார். அப்போதுதான், சினிமாவே பார்க்காத‌ சித்த‌ப்பாவை பெண் பார்க்க‌ புரோக்க‌ராய் வைத்திருப்ப‌து எவ்வ‌ள‌வு ஆப‌த்து என்று விள‌ங்கிய‌து. அவ‌ர் அப்ப‌டிக் கேட்ட‌தால் வ‌ந்த‌ எரிச்ச‌லில், 'பார்த்திப‌ன் க‌ன‌வில் வ‌ந்த‌ சிநேகா மாதிரி' என்றான். 'ச‌ரி த‌ம்பி, நான் உந்த‌ச் சினிமாப் ப‌ட‌ம் ஒன்றும் பார்ப்ப‌தில்லைத்தானே, சித்தி தான் ஒன்றுவிடாம‌ல் எல்லாம் பார்க்கிற‌வா. அவாவிட‌ம் கேட்டு சிநேகாவைத் தெரிஞ்சு கொள்கிறேன்' என்றார் சித்த‌ப்பா. இவ‌ன் இதைச் சொன்ன‌த‌ன் பிற‌குதான் அந்த‌ப் ப‌ட‌த்தில் வ‌ருகிற‌ சிநேகாவிற்கு இடுப்பைத் தொடும் வ‌ரை இருந்த‌ த‌லைம‌யிர் உண்மையான‌தா அல்ல‌து போலியான‌தா என்ற‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்த‌து. இர‌ண்டு வ‌ருட‌ டிப்ளோமா கோர்ஸை ஹ‌ம்ப‌ர் கொலிஜீல் செய்த‌தை, நான்கு வ‌ருட‌ம் யூனிவ‌சிற்றியில் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு டிகிரி வாங்கிய‌ அள‌வுக்கு க‌தையை மாற்றினான். மெஷின் ஒப்பிரேட்ட‌ராய் வேலை செய்வ‌தை 'மெஷின் எஞ்சினிய‌ர்' என்று புதுப்பெய‌ரும் கொடுத்தான். த‌குதிக‌ளைப் பொலிஷ் ஆக்க‌ ஆக்க‌ த‌ரப்ப‌டும் சீத‌ன‌த்தின் அள‌வையும் கூட்ட‌லாம் என்ப‌தே இத‌ற்குக் கார‌ண‌ம். த‌ங்க‌ச்சிமாருக்குச் சீத‌ன‌ம் கொடுத்த‌போது ம‌ன‌மெரிஞ்சு எரிஞ்சு கொடுத்த‌ த‌ன் க‌ட‌ந்த‌ கால‌த்தை ஒருமுறை நினைத்துப் பார்த்தான். 'கொடுத்த‌ காசை எப்ப‌டியேனும் திருப்பி எடுக்க‌த்தானே வேண்டும்' என‌ பிற‌கு த‌ன‌க்குத்தானே ச‌மாதான‌மும் செய்து கொண்டான். சுக‌ந்தியின் பொருத்த‌த்தோடு இவ‌னின் ஜாத‌க‌ம் பொருந்தியிருந்த‌து. சுக‌ந்தியின் புகைப்ப‌ட‌த்தைப் பார்த்த‌போது சிநேகாவின் எந்த‌ச் சாய‌லும் இல்லாம‌லிருந்த‌து. சில‌வேளைக‌ளில் நேரில் பார்க்கும்போது சிநேகா போல‌ இருக்க‌க்கூடுமென‌த் த‌ன்னைத் தேற்றிக் கொண்டான். சுக‌ந்தியை இல‌ங்கையில் போய் க‌லியாண‌ங்க‌ட்ட‌ வேலையில் இர‌ண்டு வார‌ங்க‌ள்தான் விடுமுறை கொடுத்திருந்தார்க‌ள். புது மெஷின் ஒன்றை ப‌க்ர‌றியில் இற‌க்கியிருந்ததால், அத‌ற்கு மேல் லீவு த‌ர‌மாட்டோம் என‌ உறுதியாய்க் கூறியிருந்தார்க‌ள். இல‌ங்கைக்குப் போகமுன்ன‌ர், சுக‌ந்தியை பிற‌கு கனடாவிற்கு ஸ்பொன்ச‌ர் செய்யும்போது, ஒரு பிர‌ச்சினையும் வ‌ர‌க்கூடாதென்ப‌த‌ற்காய் லோய‌ரைப் பார்க்க‌ச் சென்றான். லோய‌ர் 'திரும‌ண‌த்திற்கு இலங்கை போக‌முன்ன‌ரே க‌டித‌ங்க‌ளை மாறி மாறி உங்களுக்குள் அனுப்பிக் கொள்ளுங்கள்' என்றார். தொலைபேசியில் சுகந்தியோடு க‌தைப்ப‌தை பேப்ப‌ர் ஸ்டேட்ன்மென்டில் சான்றாதார‌ங்க‌ளாய் வைத்திருங்க‌ள் என்றும் சொன்னார். திரும‌ண‌ம் ந‌ட‌க்கும்போது இன்ன‌ இன‌ன‌ கோண‌த்தில் ப‌ட‌ங்க‌ள் எடுக்க எடுக்க‌வேண்டுமென‌க் கூறிவிட்டு, க‌ட்டாய‌மாய் ஒரு புகைப்ப‌ட‌ம் தாலியை போக‌ஸ் ப‌ண்ணி நல்ல தெளிவாய் எடுக்க‌வேண்டும், ம‌ற‌ந்துவிடாதீர்க‌ள் என‌வும் ப‌ய‌முறுத்தினார். இதைவிட‌ ஹ‌னிமூன் போகும்போது நிற்கும் ஹொட்ட‌லுக்குக் கட்டும் பில், இரண்டு பேரும் இயற்கைக் காட்சிகளின் பின்னணியில், சற்று நெருக்க‌மாய் நின்று கொஞ்ச‌ப் ப‌ட‌ங்க‌ள்... என‌ ஒரு நீண்ட‌ ப‌ட்டிய‌லைய‌க் கொடுத்தார். இவ‌னுக்கு இதையெல்லாம் பார்த்து, இன்னும் கொஞ்ச‌க் கால‌ம் போனால் 'ஹ‌னிமூனில் க‌ட்டிலில் என்ன‌ ந‌ட‌ந்த‌து?' என்பதற்கும் புகைப்ப‌ட‌ச் சான்று இமிக்கிரேசன்காரன் கேட்பான் போல‌க் கிட‌க்கிற‌து என நினைத்துக் கொண்டான். இவ‌ன் இல‌ங்கைக்குப் போய் தன் விருப்புக்கேற்றமாதிரி இல்லாது, க‌ன‌டா இமிக்கிரேச‌னின் 'யாப்புக்கு' ஏற்ற‌மாதிரி திரும‌ண‌த்தைச் செய்துகொண்டான். நுவ‌ரெலியாவிற்கு இவனும் சுகந்தியும் ஹ‌னிமூனுக்குப் போனார்க‌ள். 'இந்த‌ ஹொட்ட‌லுக்குத்தான் சிறிமா ப‌ண்டார‌நாய‌க்காவின் குடும்ப‌ம் விடுமுறைக்கு வ‌ருகின்ற‌வ‌ர்க‌ள்' என‌க் ஹொட்ட‌ல் மானேஜ‌ர் சொன்னார். 'ப‌ர‌வாயில்லை, மாமா ந‌ல்ல‌ வசதியான இட‌மாய்ப் பார்த்துத்தான் புக் செய்திருக்கின்றார்' என‌ இவன் சிரித்த‌ப‌டி சுக‌ந்திக்குச் சொன்னான். இர‌வு சுக‌ந்தியோடு முதன்முதலாக முய‌ங்கிய‌போது, இவ‌னுக்கு வேலை செய்யுமிட‌த்தின் மெஷின் ச‌த்த‌ம்தான் மூளைக்குள் ஓடிய‌து. க‌ன‌டாவில் வேலை, காசு என ஓடியோடி த‌ன் மென்னுண‌ர்வுக‌ளைத் தொலைத்துவிட்டேன் என‌ச் ச‌லித்துக்கொண்டான். இனி க‌ன‌டா போய் நிறைய‌த் த‌மிழ் ப‌ட‌ங்க‌ள் பார்த்துத் த‌ன் காத‌ல் உண‌ர்வை மீட்டெடுக்க‌வேண்டுமென‌ அந்தவேளையிலும் த‌ன‌க்குள் ச‌ப‌த‌மும் எடுத்தான். சுக‌ந்தி க‌ன‌டா வ‌ந்த‌போது, க‌ன‌டாவிலிருப்ப‌வ‌ர்க‌ளுக்கென‌ ஒரு ரிஷ‌ப்சன் வைத்தான். சுக‌ந்திதான் எதையோ ப‌றிகொடுத்த‌வ‌ள் போல‌ சோகமாய் இருந்தாள். இப்போது எல்லாம் புதிதாக‌ இருக்கும் போக‌ப் போக‌ எல்லாம் ச‌ரியாகிவிடுமென‌ இவ‌ன் நினைத்தான். நிறைய‌த் த‌மிழ்ப்ப‌ட‌ங்க‌ளைப் பார்த்து 'காத‌ல்' உண‌ர்வை வ‌ள‌ர்த்த‌போதும் சுக‌ந்திக்கு பெரிதாய் அந்த‌ விட‌ய‌த்தில் ஆர்வ‌மிருக்க‌வில்லை. க‌லியாண‌ஞ்செய்வ‌தே முக்கியமாய் அத‌ற்கென‌ நினைத்துக் கொண்ட‌வ‌னுக்கு இப்ப‌டி சுக‌ந்தி இருப்ப‌தைக் க‌ண்டு எரிச்ச‌ல் வ‌ந்த‌து. ஒருநாள் நேரே கேட்டும் விட்டான். 'நீங்க‌ள் இப்ப‌டி ஹ‌வேயில் போகின்ற‌ வேக‌த்தில், எல்லாம் வேண்டும் என்றால் என்னாலை எப்ப‌டி ச‌மாளிக்க‌ முடியும்' என‌ அவள் ஒரு சாட்டுச் சொன்னாள். ஓ...அதுதான் சிக்க‌லா என்று ரெசிடென்சிய‌ல் ஏரியாவில் போகின்ற‌மாதிரி 40 கிலோமீற்ற‌ர் ஆமை வேக‌த்தில் கட்டிலில் திருவிளையாடலைக் காட்டினான். அப்போதும் சுக‌ந்தி முன்னர் மாதிரியே அதே துல‌ங்க‌லைக் காட்டினாள். அதுவும் சில‌நாட்க‌ளில் இவ‌னின் ஆக்கினை தாங்காம‌ல், 'உங்க‌ளுக்கு என்ரை உட‌ம்புதானே வேண்டும்' என்று சொல்லிவிட்டு ஆடைக‌ளை எல்லாம் கடகடவென்று க‌ளைந்துவிட்டு நிர்வாண‌மாய்க் கிடப்பாள். என்ன செய்தாலும், த‌ன் கண்ணை மூடாது, விழிக‌ளால் வெறித்த‌ப‌டி இவ‌னின் அசைவுகளை அவதானித்தபடியே இருப்பாள். இவ‌னுக்கு கோயில்க‌ளில் நாக்கை நீட்டிய‌ப‌டி கையில் சூலாயுத‌ங்க‌ளோடு நிற்கும் அம்ம‌ன் சிலைதான் அந்த‌ நேர‌த்தில் சுகந்தியைப் பார்க்கும்போது நினைவுக்கு வ‌ரும். சுக‌ந்தி க‌ன‌டாவிற்கு வ‌ந்து ஆறேழு மாத‌ங்க‌ள் இருக்கும். ஒருநாள், இவ‌ன் வேலை செய்துகொண்டிருந்த‌போது இவனது செல்லுக்குச் சுக‌ந்தியிட‌மிருந்து ஓர் அழைப்பு வ‌ந்த‌து. 'உங்க‌ளோடு கொஞ்ச‌ம் க‌தைக்க‌வேண்டும்' என்று சொல்லிவிட்டு, 'என‌க்கு டிவோர்ஸ் வேண்டும். என‌க்குக் க‌ன‌டா பிடிக்கவில்லை. நான் திரும்பிப் போக‌ப் போகின்றேன்' என்றாள். இவ‌னுக்கு மேல்த‌ள‌த்தில் ஓடிக்கொண்டிருந்த‌ மெஷின் த‌ன் த‌லையில் விழுந்த‌மாதிரி இருந்த‌து. அரைநாள் லீவு எடுத்துக்கொண்டு வீட்டை அர‌க்க‌ப் ப‌ர‌க்க‌ ஓடிவ‌ந்தான். சுக‌ந்தி, தான் ஒருவ‌ரை இல‌ங்கையில் காத‌லித்த‌தாக‌வும், வீட்டில் ஒருவ‌ருக்கும் அந்த‌ப் பெடிய‌னைப் பிடிக்காத‌தால்தான் இவ‌னைத் திரும‌ண‌ம் செய்ய‌ச் ச‌ம்ம‌தித்தாக‌வும் கூறினாள். 'அப்ப‌டியெனில் ஏன் என்னை விருப்பமில்லாமல் கலியாணஞ் செய்த‌னீர்?' என‌ இவ‌ன் திரும்பிக் கேட்டான். 'உங்க‌ளைத் திரும‌ண‌ம் செய்யும்போது எல்லாவ‌ற்றையும் ம‌ற‌ந்துவிட‌லாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் என்னால் முடிய‌வில்லை. எப்போதும் அவ‌ன் நினைப்பே இருக்கிற‌து. அவ‌ன் அள‌வுக்கு என்னை ஒருவராலும் நேசிக்க‌ முடியாது' என்றாள் உறுதியாய். 'உங்க‌ளின் நாசமாய்ப்போன காதலுக்கு, நானா ப‌லிக்கடா ஆனேன்' என‌ இவ‌ன் கோப‌த்தில் சுகந்தியைப் பார்த்துக் க‌த்தினான். அந்த நேர‌த்திலும் இவ‌னுக்குள் ஓர் எண்ண‌ம் ஓடிய‌து. 'அப்ப‌டியெனில் நீர் என்னைக் க‌லியாண‌ங்க‌ட்டும்போது வேர்ஜின் இல்லையா?' எனக் கேட்டான். 'இப்போது தானே எங்க‌ளுக்குள் எல்லாமே முடிந்துவிட்ட‌து. அதைய‌றிந்து நீங்கள் என்ன‌ செய்ய‌ப் போகின்றீர்க‌ள்?' என்றாள் சுகந்தி. இதெல்லாம் ந‌ட‌ந்து ஒரு வார‌த்தில் சுக‌ந்தி க‌ன‌டாவிலிருந்த‌ த‌ன் பெரிய‌ம்மா வீட்டுக்குப் போய்விட்டாள். சுக‌ந்தி போகும்போது த‌ன் வாழ்வையும் எடுத்துக்கொண்டு போய்விட்டாள் என்ற‌வாறு இவ‌ன் க‌வ‌லைப்ப‌ட்டான். உற‌வுக‌ள் ம‌ட்டுமில்லை ந‌ண்ப‌ர்க‌ளும் கூட‌, 'ஒரு பொம்பிளைப் பிள்ளை இல‌ங்கையில் இருந்து வ‌ந்து ஆறேழு மாத‌ங்க‌ளில் விட்டு விட்டுப் போகின்றாள் என்றால் இவ‌னில்தான் ஏதோ பிழையிருக்கிற‌து' என‌ இவ‌ன் காதுப‌ட‌வே க‌தைக்க‌த் தொட‌ங்கினார்க‌ள். இவ‌னுக்கு இதையெல்லாம் கேட்க‌ அவ‌மான‌ம் அவ‌மான‌மாய் இருந்த‌து. ம‌ன‌ம் ஆறுத‌ல‌டைவ‌த‌ற்காக‌வேனும் சுக‌ந்தியைப் பார்த்து நான்கு வார்த்தை தூச‌ண‌த்தோடு திட்ட‌லாம் என்றாலும் அத‌ற்கும் ம‌ன‌ம் விட‌வில்லை. சுக‌ந்தி இவ‌னுக்கு என்ன‌ த‌வ‌றைச் செய்தாள்? அவ‌ள் ஒருவ‌னை ம‌ன‌தார‌ விரும்பியிருக்கிறாள் என்ப‌தை விட‌ வேறெதுவும் செய்ய‌வில்லையே. 'நானுந்தானே ஒருகால‌த்தில் பிலிப்பைன்காரியைக் காத‌லித்திருக்கின்றேன். என்னால் பிலிப்பைன்காரியைப் பிரிந்து வ‌ர‌முடிந்த‌ மாதிரி சுக‌ந்தியால் அவ‌ள் காத‌லித்த‌வ‌னை விட்டு வ‌ர‌முடிய‌வில்லை அவ்வ‌ள‌வு தான் வித்தியாச‌ம்' என‌ நினைத்துக்கொண்டான். ஆனால் இவ‌னால் சுக‌ந்தியை அவ்வ‌ள‌வு எளிதாய் ம‌ற‌க்க‌ முடிய‌வில்லை. ம‌னைவி எங்கே என‌க் கேட்டு ம‌ற்ற‌வ‌ர்க‌ள் நினைவுப‌டுத்திய‌து ஒருபுற‌மிருந்தாலும் இவ‌ன‌ள‌வில் கூட‌ சுக‌ந்தியின் நினைவுக‌ளைத் தூக்கியெறிய‌ முடியாதிருந்த‌து. 'எல்லோருடைய‌ வாழ்விலும் ஒரு பெண் ம‌ற‌க்க‌முடியாத‌வ‌ள் ஆகிவிடுகின்றாள்' என‌ எங்கையோ ப‌டித்த‌து இவனுக்குள் நினைவில் இருந்த‌து. 'அவ்வாறு த‌ன் வாழ்வில் ம‌ற‌க்க‌ முடியாத‌ பெண் சுக‌ந்தி' என‌ எண்ணிக்கொண்டான். அவ‌ளுடைய‌ செல்ல‌ம் கொஞ்சும் ம‌ழ‌லைக்குர‌ல் மெஷின் ச‌த்த‌த்தை விட‌வும் இவ‌னுள் அதிக‌ம் ஒலிக்க‌த் தொட‌ங்கிய‌து. க‌ன‌டா வ‌ந்த‌ தொட‌க்க‌ நாளில் காலில் கொலுசு போட்டுக்கொண்டு சுக‌ந்தி திரிந்த‌ பொழுதுக‌ள், இருட்டிலும் ஒரு மின்மினியாய் ஒளிர்ந்து கொண்டிருந்த‌ அவ‌ள‌து மூக்குத்தி, இடுப்பில் ஒரு பொட்டைப்போல‌ இருந்த‌ ம‌ச்ச‌மென‌ எல்லாமே இவ‌னை விடாது துர‌த்த‌த் தொட‌ங்கின‌. அவ்வ‌ப்போது மூளை விறைக்க‌த் தொட‌ங்கிய‌வ‌னாக‌ மாறிப் போக‌த் தொட‌ங்கினான். இர‌வில் நித்திரை ஒழுங்காய் வ‌ராது ப‌க‌லில் வேலை செய்ய‌வும் க‌ஷ்ட‌ப்ப‌ட‌த் தொட‌ங்கினான். இவ‌னின் த‌டுமாற்ற‌ங்க‌ளைக் க‌ண்டு வேலைத்த‌ள‌த்தில் நின்ற‌ ஒருத்த‌ன் தான் கொஞ்ச‌ம் ம‌ரிஜூவ‌னா பாவித்துப்பார் என‌ அறிமுக‌ப்ப‌டுத்தினான். முத‌லில் த‌ன் நினைவு த‌றிகெட்டும் அலைவ‌தை ஒழுங்காக்க‌ வேண்டும் என்று போதையைப் பாவித்த‌வ‌னுக்கு பிறகு அது இல்லாம‌ல் இருக்க‌முடியாது போல‌த் தோன்றியது. வேலைக்குப் போவ‌து ஒழுங்கில்லாது போக‌, கையில் காசும் இல்லாது கஷ்டப்படத் தொடங்கினான். நாலைந்து மாத‌ங்க‌ளில் சுக‌ந்தி விவாக‌ர‌த்துப் பெற்று திரும்ப‌வும் இல‌ங்கைக்கும் போய்விட்டாள். சுக‌ந்தி இனி அருகில் என்றும் இருக்க‌மாட்டாள் என்ற‌ நினைப்பு இவ‌னை இன்னும் அதிக‌ம் அலைக்க‌ழிக்க‌த் தொட‌ங்கிய‌து. நான் அப்போதுதான் வின்ச‌ரில் நான்காண்டுக‌ள் ப‌டிப்ப‌தாய்ப் பாவ‌னை செய்துவிட்டு ரொறொண்டோவிற்குத் திரும்பி வ‌ந்திருந்தேன். வேலை எதுவும் கிடைக்காம‌ல் எல்லாத் திசைகளிலும் மனம் நொந்து அலைந்துகொண்டிருந்தேன். ஒரு பெப்ர‌வ‌ரி மாத‌த்திலிருந்து நான் காத‌லித்துக் கொண்டிருந்த‌வ‌ளும் என்னைப் பார்ப்ப‌தைத் த‌விர்த்துக் கொண்டிருந்தாள். என்ன‌ கார‌ண‌மென‌க் கேட்டு அவ‌ளுக்கு ஆக்கினை மேல் ஆக்கினை கொடுத்த‌போதுதான், ஒருநாள் அவ‌ளின் தோழி தொலைபேசியில் அழைத்து, '....... இன்னொருவ‌ரைக் காத‌லிக்க‌த் தொட‌ங்கியிருக்கிறாள். அவ‌ளை இனியும் தொட‌ர்புகொண்டு தயவு செய்து தொல்லை கொடுக்க‌வேண்டாம்' என்றாள். ஒழுங்கான‌ வேலை இல்லை, குளிர்க் கால‌நிலை என‌ எல்லாமே ம‌ன‌திற்கு இனம்புரியாத அழுத்த‌ம் கொடுத்துக்கொண்டிருக்க‌, இப்போது எல்லாமுமாய் இருந்த‌ அவ‌ளும் இல்லையென்ற‌போது எதையும் சிந்திக்க‌ முடியாத‌ள‌வுக்கு எனக்கு மூளை இறுக‌த் தொட‌ங்கிய‌து. '.... யாரையோ காதலிக்கத் தொடங்கிவிட்டாள்' என்ற செய்தியை அறிந்த மூன்றாம் நாள், வேலை தேட‌ப் போகின்றேன் என‌ வீட்டில் கூறிவிட்டு ட‌வுன்ர‌வுணுக்குப் போனேன். காலையிலிருந்து வெளியே குளிருக்குள் அலைந்து, ச‌ட்டென்று ஒருக‌ண‌த்தில் இனி வீட்டுக்கு என்றைக்குமாய்த் திரும்புவ‌தில்லையென‌ முடிவு செய்தேன். யூனிய‌ன் ஸ்ரேசினில் 'கோ' ப‌ஸ்ஸை எடுத்து த‌மிழாக்க‌ள் அவ்வளவு திரியாத‌ ஒரு ந‌க‌ருக்குப் போனேன். அங்கே போய்ச் சேரும்போது இர‌வு ஒன்ப‌து ம‌ணியாகியிருக்கும். ஒவ்வொரு க‌டைக‌ளுக்கும் இடையில் இருந்த‌ இடைவெளியில் வீடுக‌ளைத் தொலைத்த ஒரு சில‌ர் ப‌டுத்திருப்ப‌து தெரிந்த‌து. ஒன்றிர‌ண்டு பேர் குளிரைப் புறக்கணித்துப் பாடிக் கொண்டுமிருந்தார்க‌ள். என்னால் குளிர் தாங்க‌ முடியாதிருந்த‌து. கதவுகள் சாத்தியிருந்த மூட‌ப்ப‌ட்ட‌ மொன்றிய‌ல் பாங்கிற்குள் ப‌டுப்ப‌த‌ற்காக‌ப் போனேன். முக‌ம் முழுதும் தாடி வள‌ர்ந்து நீண்ட‌ த‌லைமுடியுட‌ன் ஒருவ‌ர் காசு எடுக்கும் மெஷினடியில் ப‌டுத்திருந்தார். நான் வ‌ந்த‌ ச‌த்த‌ம் கேட்டு என்னை நிமிர்ந்து பார்த்தார். ச‌ட்டென்று எனக்கு க‌ட‌ந்த‌கால‌ம் மின்ன‌லாய் வெட்டிப் போன‌து. இது ச‌ட‌கோப‌ன் அண்ணா. நான் வெஸ்ட் ஹில்லில் ப‌த்தாம் வ‌குப்பு ப‌டிக்கும்போது இவ‌ர் ப‌தின்மூன்றாம் த‌ர‌ம் ப‌டித்துக் கொண்டிருந்த‌வ‌ர். அவ‌ரின் க‌தை கூட‌ என‌க்குத் தெரியும். பின்னாளில் சுகந்தியோ யாரையோ க‌லியாண‌ங்க‌ட்டி அந்த‌ப் பெண் அவ‌ரை விட்டு இல‌ங்கைக்குப் போன‌துவ‌ரை அறிந்து வைத்திருந்தேன். ஆனால் ச‌ட‌கோப‌ன் அண்ணாவை இப்ப‌டியான‌ நிலையில் ச‌ந்திப்பேன் என‌ நினைத்தும் பார்க்க‌வில்லை. அவ‌ரின் க‌தையை அறிந்த‌போது கூட, 'ஒரு பெட்டைக்காய் இப்ப‌டி யாரும் த‌ம் வாழ்வைத் தொலைப்பார்களா?' என‌ என் நண்ப‌ன் ந‌க்க‌ல‌டித்த‌தும் நினைவுக்கு வ‌ந்த‌து. ஆனால் ச‌ட‌கோப‌ன் அண்ணாவிற்கு என்னை நினைவில் இல்லை. அவ‌ர் யாரோ பாங் மெஷினில் காசு எடுக்க‌ வ‌ந்திருக்கின்றார் என‌ நினைத்திருக்கின்றார். 'Can you buy a coffee for me?' என‌க் கேட்டார். அவரின் கோலமே அவர் வீட்டை விட்டு எப்பவோ ஓடிவந்து விட்டார் என்பதைச் சொல்லியது. என‌க்கு என்ன‌ செய்வ‌தென்று தெரிய‌வில்லை. இனி வீட்டை என்றுமே திரும்பிப் போவ‌தில்லை என‌ முடிவு செய்த‌வ‌னுக்கு அடுத்து என்ன‌ செய்வ‌தென்று ஒரே குழ‌ப்பாய் இருந்த‌து. முத‌லில் ச‌ட‌கோப‌ன் அண்ணாவிற்கு கோப்பி வாங்கிக்கொடுப்போம் என‌ செக‌ண்ட் க‌ப்பில் கோப்பி ஒன்றை வாங்கிக் கொடுத்துவிட்டு, அவரைத் திரும்பிப் பார்க்காது ந‌ட‌க்க‌த் தொட‌ங்கினேன். வெளியே இப்போது ப‌னி கொட்ட‌த் தொட‌ங்கியிருந்த‌து. இலைக‌ளில்லாத‌ ம‌ர‌ங்க‌ள் அங்கும் இங்குமாய்த் தெரிந்த‌ன. நான் அணிந்திருந்த‌ க‌றுப்புக் குளிர‌ங்கியின் மேல் ப‌னி விழுந்து க‌ரைந்து கொண்டிருந்த‌து. அட‌க்க‌ப்ப‌ட்ட‌ எல்லா உண‌ர்வுக‌ளும் ம‌டைதிற‌ந்தாற் போல‌ எனக்கு க‌ண்ணீர் வ‌ர‌த்தொட‌ங்கியிருந்த‌து. எதற்காய் அழுதுகொண்டிருக்கின்றேன் எனவும் தெரியவில்லை. நான் கண்ணீரைக் க‌வ‌னிக்காம‌ல் ந‌ட‌ந்து போய்க் கொண்டிருந்தேன். உத‌டுக‌ளில் விழுந்த‌ ப‌னி கண்ணீரோடு சேர்ந்து உவ‌ர்ப்ப‌து போல‌த் தோன்றிய‌து. மனம் விட்டு அழ‌ அழ‌ எல்லாம் வெளிப்ப‌து போல‌த் தோன்றிய‌து. ப‌தினாறு வ‌ய‌தில் ஒருவ‌ரைக் காத‌லித்து அது தொலைந்துபோன‌போது சாவ‌த‌ற்கு மாடியில் இருந்து குதிக்க‌ முய‌ற்சித்த‌து நினைவில் வ‌ந்த‌து. அடுத்த‌ முறை க‌ச்சித‌மாய் த‌ற்கொலையைச் செய்ய‌வேண்டும் என‌ நினைத்துக்கொண்டிருந்த‌ போது, என் ந‌ண்ப‌ன் ஒருவன் என்ன காரணத்திற்காகவோ, நான் முயற்சித்த நான்காம் நாள் த‌ற்கொலை செய்திருந்தான். இப்போது இன்னொரு காத‌லில் தோற்று வீடே வேண்டாம் என‌ தீர்மானித்து வீதிக்கு வ‌ந்த‌போது ச‌ட‌கோப‌ன் அண்ணாவை இந்த‌ நிலையில் சந்திக்க வேண்டியிருந்தது. என் ஒவ்வொரு காத‌ல் தோல்வியின் பொருட்டும், நான் ப‌லியாவ‌த‌ற்கு முன் யாரோ என‌க்காய்த் த‌ம் வாழ்வைப் ப‌லி கொடுக்கின்றார்க‌ளோ என்ற‌ யோச‌னை எனக்குள் ஓடிய‌து. ச‌ட‌கோப‌ன் அண்ணாவையும், என் ந‌ண்ப‌னையும் நினைத்து நெஞ்சு ஒருக‌ண‌ம் ந‌டுங்கி விதிர்விதிர்த்த‌து. நான் அப்போது பால‌மொன்றைக் க‌ட‌க்க‌ வேண்டியிருந்த‌து. கீழே ந‌தி உறைந்தும் உறையாத‌மாதிரி ஓடிக்கொண்டிருந்த‌து. அதற்குள் குதித்துவிடுவேனோ என்று என‌க்கே என்னில் நம்பிக்கை இல்லாது இருந்த‌து. ப‌ஸ்சொன்று எதிர்த்திசையில் வ‌ந்து கொண்டிருந்த‌து. உட‌னேயே ஓடிப்போய் அதற்குள் ஏறிக்கொண்டேன். வீட்டை திரும்பிப் போய்ச் சேர‌ ந‌ள்ளிர‌வு ப‌ன்னிர‌ண்ட‌ரை ம‌ணியாகிவிட்ட‌து. அம்மா நித்திரை கொள்ளாது என‌க்காய்க் காத்துக்கொண்டிருந்தார். 'இவ்வ‌ள‌வு நேர‌மும் எங்கே போயிருந்தாய்?' எனக் கேட்டார். 'ச‌ட‌கோப‌ன் அண்ணை வீட்டை போயிருந்தேன்' என்றேன். 'ச‌ட‌கோப‌னா, அவ‌ன் யார்?' என்று அம்மா என்னிடம் திரும்பிக் கேட்க‌வில்லை. ........................................... 0 comments Read More ஓர் அநாம‌தேய‌த் தீவு by Yi Mun-Yol Thursday, October 06, 2011 -வாசிப்பு- கொரிய‌ எழுத்தாள‌ரான‌ ஜி முன்-யோல் (Yi Mun-Yol) எழுதிய‌ 'ஓர் அநாம‌தேய‌த் தீவு' (An Anonymous Island) சிறுக‌தை அண்மையில் நியூயோர்க்க‌ர் இத‌ழில் வெளிவ‌ந்திருக்கின்ற‌து. இதுவே நியூயோர்க்க‌ரில் வெளிவ‌ந்த‌ முத‌லாவ‌து கொரிய‌க் க‌தை என்கிறார்க‌ள். ஜி முன்-யோல் 1948ம் ஆண்டு சியோலில் பிற‌ந்த‌வ‌ர். 'ஓர் அநாம‌தேய‌த் தீவு' க‌தை, ஆணொருவ‌ர் தொலைக்காட்சியைப் பார்த்து இன்றைய‌ இளைஞ‌ர்க‌ள் எல்லாம் கெட்டுப் போய்விட்டார்க‌ள் என்று அங்க‌லாய்ப்ப‌துட‌ன் தொட‌ங்குகின்ற‌து. கிள‌ப்பில் ந‌ட‌ன‌மாடும் இளைஞ‌ர்க‌ளைக் கூட‌, 'ந‌ட‌ன‌மாடுப‌வ‌ர்க‌ள்' என்று கூறாது தொலைக்காட்சி 'உட‌ல்க‌ள் உர‌சுப‌வ‌ர்க‌ள்' என‌ப் புதுப்பெய‌ர் சூட்டி விம‌ர்சிக்கின்ற‌து. ஆணும்((க‌ண‌வ‌ர்), தொலைக்காட்சியும் இப்பெண்ணுக்கு ப‌ழைய‌ நினைவுக‌ள் சில‌வ‌ற்றைக் கிள‌றிவிடுகின்ற‌ன‌. சில‌ கால‌த்திற்கு முன், இப்பெண் ஆசிரிய‌த்தொழில் பார்ப்ப‌த‌ற்காய் ந‌க‌ர‌த்தை விட்டொதுங்கிய‌ ஒரு தொலைதூர‌ ம‌லைக்கிராம‌த்திற்குச் செல்கின்றார். அக்கிராம‌த்திற்குச் சென்றிற‌ங்கும்போது ஒரு க‌டைக்கார‌ர், அழுக்கான‌ ஆடையுட‌னும் தாறுமாறான‌ த‌லைம‌யிருட‌னும் இருக்கும் ஒருவ‌னைத் திட்டிக் கொண்டேயிருக்கின்றார். அவ‌ன் அதைப் ப‌ற்றிக் க‌வ‌லைப்ப‌டாது எதுவும் பேசாது த‌ன்பாட்டில் இருக்கின்றான். இப்பெண், தான் இங்குள்ள‌ பாட‌சாலைக்கு புதிய‌ ஆசிரிய‌ராக‌ வ‌ந்திருக்கின்றேன் என்கின்றார். கிராம‌ம் ஓர் ஒதுக்குப்புற‌த்தில் இருக்கின்ற‌தென்றால் ம‌றுப‌க்க‌ம் பாட‌சாலையும் இன்னும் மோச‌மான‌ நிலையில் இருக்கிற‌து. ஆசிரிய‌த் தொழிலில் ஒன்றிப்போகும் இப்பெண், அந்த‌த் த‌றுத‌லை இளைஞ‌ன் எவ்வித‌ வேலையும் செய்யாம‌ல், த‌ங்குவ‌த‌ற்கு ஓர் ஒழுங்கான‌ வீடும் இல்லாம‌லும் வாழ்ந்து கொண்டிருப்ப‌தைக் காண்கிறார். ஆனால் அவ‌னுக்கு மூன்று நேர‌மும் சாப்பாடும், த‌ங்கிப் ப‌டுப்ப‌த‌ற்கு இட‌ங்க‌ளும் அந்த‌ ஊரில் கிடைத்துக்கொண்டிருப்ப‌துதான் இவ‌ருக்கு இன்னும் ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கின்ற‌து. எந்த‌ வீட்டுக்குச் சாப்பாடு வேண்டும் என்று போனாலும் அங்கிருக்கும் பெண்க‌ள் அவ‌னுக்கு ம‌ன‌முவ‌ந்து உண‌வு ப‌ரிமாறுகின்றார்க‌ள். த‌டை எதுவும் கூறாம‌ல் ஆண்க‌ளும் அவ‌னைத் த‌ங்க‌ள் வீட்டுக்குள் அனும‌திக்கின்ற‌ன‌ர். நாட்க‌ள் செல்ல‌ச் செல்ல‌ ஓர் உண்மையை இந்த‌ ஆசிரிய‌ர் க‌ண்டுகொள்கின்றார். இக்கிராம‌ம் முழுதும் ஒரேயொரு இன‌க்குழு (Clan) ம‌ட்டுமே இருக்கின்ற‌து. ஆக‌ எல்லோருக்கும் எல்லோருமே உற‌வின‌ர்க‌ளாக‌வோ, தெரிந்த‌வ‌ர்க‌ளாக‌வோ இருக்கின்றார்க‌ள். இந்த‌ இளைஞ‌ன் ம‌ட்டுமே வெளியில் இருந்து வ‌ந்த‌வ‌னாக‌ இருக்கின்றான். அப்ப‌டியெனில் எப்ப‌டி இவனை இவ‌ர்க‌ள் ஏற்றுக்கொண்டார்க‌ள்? எத‌ற்காய் ம‌ன‌ங்கோணாம‌ல் மூன்று வேளையும் உண‌வு ப‌ரிமாறுகின்றார்க‌ள்? இந்த‌ இளைஞ‌னுக்கும் அந்த‌ ஊரில் இருக்கும் அநேக‌ பெண்க‌ளுக்கும் இடையில் இர‌க‌சிய‌(?) உற‌வு இருக்கின்ற‌து. சில‌ பெண்க‌ளுக்குப் பிற‌க்கும் குழ‌ந்தைக‌ள் கூட‌ அவ‌னின் சாய‌லுட‌ன் இருப்ப‌தாய் ஊர்ப்பெண்க‌ள் த‌ங்க‌ளுக்குள் கிசுகிசுத்தும் கொள்கின்றார்க‌ள். அவ‌னிட‌ம் எழுத‌ப்ப‌டாத‌ ஒரு கொள்கை இருக்கின்ற‌து. அநேக‌மாய் ம‌த்திய‌ வ‌ய‌தில் இருக்கும் பெண்க‌ளோடே உற‌வு கொள்கின்ற‌வ‌னாக‌வும், ஒரு முறை உற‌வு கொண்ட‌ பெண்க‌ளிட‌ம் மீண்டும் சென்று அவ‌ர்க‌ளை சிக்க‌லில் மாட்டிவிடாம‌லும் இருக்கின்றான். இப்போது இந்த‌ ஆசிரிய‌ருக்கு அவ‌ன் இங்கே இருப்ப‌த‌ற்கான‌ அரைவாசிக்கார‌ண‌ம் புரிந்துவிடுகின்ற‌து; பெண்க‌ள் எத‌ற்காக‌ அவ‌னைத் த‌ங்க‌ளுக்கு அருகாமையில் வைத்துக் கொள்ள‌ விரும்புகிறார்க‌ள் என்ப‌தை. ஆனால் அவ‌ன் இவ்வாறு த‌ம் பெண்க‌ளுட‌ன் உற‌வு கொள்கின்றான் என்று தெரிந்தும் ஆண்க‌ள் ஏன் அவ‌னை அடித்துத் துர‌த்தாம‌ல் த‌ங்க‌ள் கிராம‌த்திற்குள் வைத்திருக்கின்றார்க‌ள் என்ப‌தைத்தான் இந்த‌ ஆசிரிய‌ரால் புரிந்துகொள்ள‌ முடியாதிருக்கின்ற‌து. இந்த‌ ஆசிரிய‌ர் ப‌டிக்கும் கால‌த்திலேயே ஒருவ‌ரைக் காத‌லிக்கின்றார். திரும‌ண‌ நிச்ச‌யார்த்த‌ம் முடிந்திருக்கும் பொழுதில் காத‌ல‌னுக்கு விய‌ட்னாமில் யுத்த‌ம் செய்வ‌த‌ற்கான‌ அழைப்பு வ‌ருகின்ற‌து. ஒருமுறை இவ‌ரின் காத‌லன் விடுமுறையில் இவ‌ரைப் பார்க்க‌ இந்த‌ ம‌லைக்கிராம‌த்திற்கு வ‌ருவ‌தாய்க் க‌டித‌ம் எழுதுகின்றார். காத‌ல‌ன் வ‌ந்திற‌ங்க‌வேண்டிய‌ அந்த‌க் கிராம‌த்திற்கான‌ க‌டைசிப் பேரூந்தும் வ‌ந்து போய்விட்ட‌து. இந்த‌ப் பெண் ப‌ஸ் நிலைய‌த்தில் காத்திருந்துவிட்டு ஏமாற்றத்துட‌ன் த‌ன் வீட்டுக்குத் திரும்புகின்றார். ம‌ழை பொழிய‌த்தொட‌ங்குகின்ற‌து. கிடைக்காத‌ தாப‌ம் ம‌ன‌திற்குள் பெருக‌த் தொட‌ங்குகிற‌து. ஓரிட‌த்தில் ம‌ழைக்காய் ஒதுங்கும்போது ஓருட‌ல் த‌ன்னை இழுத்து அணைப்ப‌தைக் காண்கிறார். ஆசிரிய‌ர் த‌ன் எதிர்ப்பைக் காட்டுகின்றார். யாரென‌ முக‌த்தைப் பார்க்கும்போது அது அந்த‌ த‌றுத‌லை இளைஞனாக‌ இருப்ப‌தைக் காண்கின்றார். 'நீ என்னைத் துர‌த்தாதே, உன‌து உட‌ல் இன்னும் கொதித்துக் கொண்டிருப்ப‌தை என்னால் உண‌ர‌முடிகின்ற‌து. நீ யாரையோ எதிர்ப்பார்த்து அவ‌ர் வ‌ர‌வில்லையென்ற‌ ஏமாற்ற‌த்துட‌ன் இருப்ப‌தையும் நான் அறிவேன்' என்கின்றான். இவ‌ர்க‌ள் இருவ‌ருக்கும் இடையில் உட‌லுற‌வு நிக‌ழ்கிற‌து. இப்போது நினைத்துப் பார்த்தால், 'அந்த‌ முய‌க்க‌ம் நினைவில் நிற்க‌க்கூடிய‌ ம‌கிழ்ச்சி த‌ரும் விட‌ய‌மாக‌ இல்லாவிட்டாலும், அவ‌ன் என்னை வ‌ற்புறுத்திப் புண‌ர‌வில்லை; அந்த‌ நேர‌த்தில் அது என‌க்கும் தேவையாக‌ இருந்த‌து' என‌ இப்பெண் நினைத்துக் கொள்கின்றார். இந்த‌ உற‌வு நிக‌ழ்ந்து முடிந்த‌பின் இப்பெண் இவன் த‌ன் உற‌வைப் ப‌ற்றிக் கிராம‌த்த‌வ‌ர்க‌ளிட‌ம் கூறிவிடுவானோ என்று அஞ்சுகின்றார். அவ‌ன் வேறு எவ‌ருக்கும் இவ‌ர்களின் உற‌வைச் சொல்லாத‌தைப் போல‌, பிற‌கு ஒருமுறை கூட‌ இந்த‌ ஆசிரிய‌ரைத் தேடி மீண்டும் உற‌வுக்காய் வ‌ர‌வும் இல்லை. இப்போது இந்த‌ ஆசிரிய‌ருக்கு, யார் எது கேட்டாலும் அவ‌ன் வாய் திற‌ந்து பேசாது ம‌வுன‌மாய் இருப்ப‌த‌ன் கார‌ண‌ம் விள‌ங்குகின்ற‌து. அவ‌ன் த‌ன‌து இர‌க‌சிய‌ங்க‌ளை யாருக்கும் சொல்ல‌ விரும்புப‌வ‌னும் இல்லை, யாரையும் காட்டிக் கொடுப்ப‌வ‌னும் இல்லை. இறுதியில் இந்த‌ இளைஞ‌னை அந்த‌ ஊர் ஆண்க‌ள் ஏன் ச‌கித்துக் கொள்கின்றார்க‌ள் என்ப‌தற்கான‌ கார‌ண‌மும் தெரிகிற‌து. இந்த‌க் கிராம‌ம் முழுதும் ஒரேயொரு இன‌க்குழு ம‌ட்டும் இருப்ப‌தால், ஒரு பெண் வேறு ஆணைத் தேடிப் போனால் அது உட‌னே கிராம‌த்திற்குத் தெரிந்துவிடும்; தேவையில்லாத‌ சிக்க‌ல்க‌ள் உற‌வுக‌ளுக்குள் ஏற்ப‌ட்டுவிடும். ம‌ற்ற‌க் கார‌ண‌ம், இவ்வ‌ள‌வு அல‌ங்கோல‌மான‌ ஒருவ‌னைத் தேடி ஒரு பெண் போகின்றாள் என்றால், அப்பெண்ணின் க‌ண‌வ‌ன் பாலிய‌ல் விட‌ய‌த்தில் எவ்வ‌ள‌வு செய‌ல‌ற்ற‌வ‌னாக‌ இருக்கின்றான் என்ப‌து விள‌ங்கும். ஆக‌ இந்த‌ விட‌ய‌த்தை பொதுவில் வெளிப்ப‌டுத்த‌ ஆண்க‌ள் ஒருபோதும் விரும்புவ‌தில்லை; எனெனில் பிற‌கு அவ‌ர்க‌ளின் ம‌திப்புச் ச‌மூக‌த்தில் இல்லாம‌ற் போய்விடும் (அதாவ‌து இந்த‌ த‌றுத‌லையிட‌மே உன‌து ம‌னைவி போகின்றாள் என்றால் உன‌து பெறும‌தி தான் என்ன‌?' என‌ பிற‌ர் கேள்விக‌ளால் துளைத்துவிடுவார்க‌ள்). ஆக‌ இந்த‌க்காரண‌ங்க‌ள்தான் ஆண்க‌ளும் அந்த‌ இளைஞ‌னை விரும்பியோ விரும்பாம‌லோ ஏற்றுக்கொள்கின்றார்க‌ள். இறுதியில் இந்த‌ ஆசிரிய‌ர் த‌ன் காத‌ல‌னை ம‌ண‌முடிப்ப‌த‌ற்காய் இக்கிராம‌த்தை விட்டு ந‌க‌ர‌த்திற்குத் திரும்புகின்றார். இவ‌ர் போகும்போது, புதிய‌ ஓர் ஆசிரியை ஊருக்குள் வ‌ருகின்றார். இவ‌ர் கிராம‌த்திற்கு முத‌ற்த‌ட‌வை வ‌ந்த‌போது எப்ப‌டி அந்த‌ இளைஞ‌னைக் க‌ண்டு முக‌ஞ்சுழித்தாரோ அப்ப‌டியே இந்த‌ப் புதிய‌ ஆசிரியையும் அவ‌னின் த‌றுத‌லைக் கோல‌ங்க‌ண்டு முக‌ஞ்சுழிக்கின்றார். அவ‌னைப் ப‌ற்றி தான் அறிந்த‌ எல்லா விட‌ய‌ங்க‌ளையும் இவ‌ருக்குக் கூறிவிடுவோமா என‌ இந்த‌ ஆசிரிய‌ர் நினைக்கின்றார். இறுதியில் அவ‌ராக‌வே அவ‌ருக்குரிய‌ தேர்வைப் பொறுத்து அவ‌னை அறிந்துகொள்ள‌ட்டுமென‌ நினைத்து ஒன்றும் கூறாம‌ல் இந்த‌ ஆசிரிய‌ர் கிராம‌த்தை விட்டுப் போகின்றார். அவ‌ன் ஓர் அர‌ச‌னைப் போல‌ புன்ன‌கைத்து ஆசிரிய‌ருக்கு விடைகொடுக்கின்றான். அந்த ஊரில் அவ‌ன் ஓர் 'அநாம‌தேய‌த் தீவாக‌' என்றும் இருப்பான் என்ப‌தாய்க் க‌தை முடியும்.
யூலை 2021ம் ஆண்டு, கனடாவின் வடகிழக்கு ஸ்காபரோவில் தமிழ் சமூக மையத்தைக் (Tamil Community Centre -TCC)ற்கொள் கட்டி எழுப்ப கனேடிய அரசாங்கம் நிதியுதவி வழங்கியுள்ளது. இந்த நிதி உதவி சமூக மையத்தின் கட்டடப் பணியை தொடங்குவதற்குத் தேவையான $26.3 மில்லியனில் 73% ஆகும். 2016ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கனடாவில் மிகப்பெரிய புலம்பெயர் தமிழ் சமூகம் உள்ள நாடு கனடாவாகும். இது இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளைச்Continue reading “மிகப்பெரிய கனவுகளில் ஒன்று: அடையாளத்தின் நினைவுச்சின்னம்” Posted byDiasporA Tamil Archives 27 Oct 2021 3 Dec 2021 Posted inArchival awareness, Archive awarenessTags:Archive, Canada, Library, Museum, Tamil Community CentreLeave a comment on மிகப்பெரிய கனவுகளில் ஒன்று: அடையாளத்தின் நினைவுச்சின்னம் One of the biggest dreams: monument of identity In July 2021, the Canadian government granted funding for a Tamil Community Centre (TCC) in northeast Scarborough in Canada. The funding covered 73% of the $26.3 million to launch the community centre. According to the census in 2016, Canada is the host to the largest diasporic Tamil community. It hosts Tamils from South and EastContinue reading “One of the biggest dreams: monument of identity” Posted byDiasporA Tamil Archives 27 Oct 2021 3 Dec 2021 Posted inArchival awareness, Archive awarenessTags:Archive, Canada, Library, Museum, Tamil Community CentreLeave a comment on One of the biggest dreams: monument of identity Search for: Except where otherwise noted, content on this site is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. DiasporA Tamil Archives. Org.no: 930095877. The organisation is registered in the Enhetsregisteret and Frivillighetsregisteret.
நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 9 ஆசனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்று வெற்றி ஈட்டியதைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் இரா.சம்பந்தன் தலைமையில் விசேட பூசை இடம்பெற்றது. குறித்த வழிபாட்டில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பொன்று அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன், “இம்முறை இடம்பெற்ற தேர்தலை ஒரு ஜனநாயக தேர்தலாக நான் கருதவில்லை. மக்களுக்கு பணம் வழங்கி நன்கொடை கொடுத்து மதுபானம் வழங்கி ஆளும் கட்சியினர் ஆசனங்களைப் பெற்றுப்கொண்டுள்ளனர். சிறிய சிறிய தமிழ் கட்சிகள் போட்டியிட்டு தமிழ் வாக்குகளைப் பிரித்துள்ளனர். இதனால் 20 ஆசனங்கள் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கூட்டமைப்பிற்கு ஒன்பது ஆசனங்களே கிடைத்துள்ளது. இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. மேலும், நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த நீதியும் மற்றும் கெளரவமான பிரஜையாக வாழ தீர்வு வழங்கப்பட வேண்டும். அதில் நாம் உறுதியாக உள்ளோம். ஆனால், ஆட்சி அமைக்கும் அரசாங்கத்தின் நிலைபாட்டைக் கொண்டு எமது இலட்சியத்தை அடைவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார். Facebook Twitter Pinterest WhatsApp Email Print Previous articleஅம்பாறையில் 4 முஸ்லிம் 3 சிங்கள உறுப்பினர்கள் தெரிவு : தமிழர் மீண்டும் அரசியல் அநாதைகளாக
கோவில்களில் கலை, இலக்கிய சேவை செய்தவர்கள். தெய்வத்திற்கு இணையாக அக்காலத்தில் மதிக்கப்பட்டவர்கள் என்பது பல தேவதாசிகள் பற்றிய புத்தகங்களிலும், செய்திகள் வழியாகவும் தெரிகிறது. இதை எழுதியவர்கள் யார்? வைணவர்களாகவும், பார்ப்பனவழிப் பெண்களாகவும் இருந்தனர். ஆய்வுகள் ஒரு சார்பாகத் தோன்றின. எங்கிருந்து திடீரென்று இப்பெண்கள் இறைவனை கணவனாக நினைத்து வாழ ஆரம்பித்தனர்? மரத்தடி கோவில் வரலாறில் ஏன் இந்த பக்தைகள் இல்லை? இவர்கள் தொடக்க காலம் ஆறாம் நூற்றாண்டுக்குப் பின், பல்லவர் காலத்தில் கோவில்கள் கட்டப்பட்டவுடன் தொடங்குகிறது. புத்த, சமண வீழ்ச்சிக்குப்பின் ஆண்களை கழுவேற்றிக் கொலை செய்த சைவ –வைணவர்கள் பெண்களை என்ன செய்தார்கள்? கொலை செய்ததாக எங்கும் பதிவில்லை. பார்ப்பனப் பெண்கள் தேவதாசிகளாக இருந்த வரலாற்றுக்குறிப்புகளே இல்லை. பார்ப்பன இனப் பெண்கள் இந்த சேவைகளுக்கு பயன்படுத்தப்படவில்லை என்பதால் பிற பெண்களையே தேவதாசிப் பெண்களாக கோவில்களில் வைத்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோரை கோவிலுக்குள் விடாத கால கட்டம் என்பதால் சூத்திரர்களாகவே இருக்க முடியும். கலை, இலக்கியம் வளர்த்த பெண்கள் என்று சொல்லப்படுவது உண்மையானால் ஏன் அது கெட்ட வார்த்தையாகத் திரிந்தது? மனுதர்மம், மூடத்தனங்கள் திராவிட மண்ணில் வேரூன்றிய கால கட்டம் இது என்பதால் பெண்கள் கடவுள் பெயரால், பக்தியின் பெயரால் உள்ளிழுக்கப்பட்டு நடனக்கலை, இசை, ஓவியம் என்று கலை வளர்க்கும் பணியை செய்தார்கள் என்கிறார்களா? என்பது நமக்குள் எழும் கேள்வி. பல்லவர் கால சிற்பங்களில் தேவதாசிப் பெண்களின் சிற்பம் இடம் பெற்றிருப்பதே இதற்கு சான்று. இந்த சிற்பங்கள் கலை ஓவியம் வளர்த்ததை மட்டும் சொல்வதில்லை. இன்று கோவிலில் செல்லும் பெண்ணோ, ஆணோ காமத்தைப்பற்றி பேசுவது தவறு என்கிறோம். ஆனால் சிற்பங்களோ காமத்தை வெளிப்படையாக பிரதிபலிக்கும் ரீதியில் அமைந்துள்ளது. இதை வரவேற்றவர்கள் தான் மன்னர்கள், புலவர்கள் என்பது உண்மைதானே. அப்போது தேவதாசிகள் என்பவர்களை மட்டும் புனித வாழ்க்கையை நடத்த மன்னர்களும், நிலபிரபுக்களும் விட்டார்கள் என்பது ஏற்கத்தக்கதாக இல்லை. அப்படி நாகரீகமாக நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களும் இல்லை. ராஜதாசி என மன்னருக்கு வேண்டிய தாசிகளும், சமூக தாசி எனும் பெயரில் ஊரில் பணக்காரர்களுக்கும் பெண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். ஆக தேவ தாசி முதலில் கெட்ட வார்த்தையாக இல்லை. கெட்டவை பின்பு நடந்ததால் அது கெட்ட வார்த்தையானது. கோவிலில் பெண் இல்லாக் குறை தீர்க்கவே இப்பெண்களை பயன்படுத்தியிருக்க வேண்டும். இதற்கிடையே கலைகளும் வளர்ந்தன எனலாம். ஆம். அப்பெண்கள் இன்னல்களுக்கு நடுவே கலை வளர்த்தனர். அவர்கள் குழந்தைகள் கோவில்களில் நாதஸ்வரம், மேளம் அடிக்கும் பணி செய்திருக்க வேண்டும். தலை நிமிர்ந்து வரும் தருவாயில் மீண்டும் வீழ்த்தப்பட்டனர். சோழர்கள் படையெடுத்து ஆக்ரமித்ததும் பெண்களை விற்கவும், போகப்பொருளாக மட்டுமே பார்க்கும் நிலையும் இருந்தது. பார்ப்பனர்கள் நிலம் பெற பெண்களை சோழர்களிடம் விற்ற வரலாறும் இருக்கிறது. 1848 முதல் எதிர்ப்புகள் தொடங்கப்பட்டாலும், 1925 வரை இங்கே இந்தக் கொடுமை நடைமுறையில் பொட்டுக்கட்டுதல் எனும் பெயரில் இருந்தது. வீட்டில் மூத்த பெண்ணை இந்த வழி வந்த பெண்கள் கோவிலுக்கு நேர்தல் எனும் பெயரில் சடங்குகள் செய்து கோவிலில் விட்டனர். டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி, ராமாமிர்தம் போன்றோர் முயற்சியாலும், பெரியாரின் விமர்சன நடவடிக்கைகளாலும் சீர்திருத்தத்தை நோக்கி நகர்த்தப்பட்டது தேவதாசிகள் வாழ்க்கை. சீர்திருத்தங்கள் வரும்போது அதை எதிர்த்தவர்களும், அவர்கள் சொன்ன காரணங்களும் கவனிக்கப்பட வேண்டியவை. சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த ராகவய்யர், ஷேசகிரி அய்யர், மு. வ. ராமநாத அய்யர் எனும் பார்ப்பன அணியே இதை எதிர்த்தனர். பெண்விடுதலைச் சட்டம் அனைத்தையும் எதிர்த்தவர்கள் இவர்களே என்பதும், எதிர்ப்புக்கான காரணம் இந்து மனுதர்மம் என்றும், பெரியாரின் 'பெண்விடுதலைச் சட்டங்களும், பார்ப்பனர்களும்' புத்தகம் மூலம் அறிய முடிகிறது. இவர்களுடன் போராடி 1925 இல் தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றினார் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. பால்ய விவாகத் தடுப்புச் சட்டம், இருதாரமுறை ஒழிப்பு, பெண்களுக்கு சொத்துரிமை அனைத்தும் உருவாக்கிய இவரே இந்தியப் பெண்களுக்கான பெண் தெய்வம் என்றால் அது மிகையல்ல. இவருடன், இந்த சட்டங்களைக் கொண்டு வரும் முன்பே அதைப் பரிந்துரை செய்து குடிஅரசில் எழுதியும், அரசை வற்புறுத்தியும் பெண் விடுதலையை முன்னெடுத்த பெரியாருமே போற்றுவதற்குரியவர்கள். 2003, 2012 வரை கூட இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் சிறுமிகள் இந்துத்துவ நம்பிக்கைகளாலும் வறுமையாலும் பொட்டுக்கட்டும் வழக்கத்தில் இருந்துள்ளனர் என்பது ஆராய்ச்சியாளர்களின் இணையப்பதிவுகள் மூலம் அறிய முடிகிறது. நெஞ்சை உலுக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு இந்த நூற்றாண்டிலும் ஆளாவதன் காரணம் சட்டங்கள் வந்தாலும், அதை நடைமுறைப்படுத்த இந்துத்துவ மூடநம்பிக்கைகளை வைத்து தடை போடும் மூடர்கள் தான் என்பதை உணர்ந்து விழித்தெழுவோம். பக்தியை குறைக்க வாதாடவில்லை. மூடத்தனங்களை ஒழிப்பதும் பக்தியின் கடமை தான். நம் இனத்தின் மீதுள்ள பக்தியின் கடமை.
உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டும் கதாநாயகர்களில் அருண் விஜய்யும் ஒருவர். இதற்காக அவர் `ஜிம்’முக்கு போய் தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறார். ஒரு அதிரடி கதாநாயகனுக்கே உரிய கம்பீர தோற்றம் கொண்ட இவர், நல்ல கதையம்சம் கொண்ட படங்களையே தேர்வு செய்து நடித்தும் வருகிறார். சமீபத்தில் திரைக்கு வந்த ”தடம்” இந்தப் படம் அருண் விஜய்க்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. படமும் வெற்றி பெற்று அமோக வசூலை பெற்று கொடுத்தது. இதையடுத்து அருண் விஜய், `பாக்ஸர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் குத்து சண்டை வீரராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரித்திகாசிங் நடிக்கிறார். #ArunVijay #cinesamugam Related Posts tamil cinema news Post a Comment Popular Posts `` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்... விமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா அண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக... புத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி சட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா... கமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே கமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ... சற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும... ரஜினியா? கமலா? மக்கள் யாரை தேர்வு செய்வார்கள் இம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்... கமலை அசிங்கப்படுத்திய பாஜக! கமலின் பதில் என்ன? கமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B... சிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப... ஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...
கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப் பட்ட குழு பரிந்துரைக்கும் தேசியக் கல்விக் கொள்கை 2019 வரைவு ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்காலக் கல்வியைச் சீர்குலைத்து, நாட்டின் பல்வேறு மொழி வழித் தேசிய இனங்களின் மொழிகளைச் சிதைத்து, பண்பாட்டைக் குலைத்து, சமூக வாழ்வியல் நிலைப் பாட்டில் இந்திய மக்களை 2000 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி அழைத்துச் செல்கிற மிக மோசமான கூறுகளைக் கொண்டிருக்கிறது. என்றாலும், தமிழ் நாட்டைப் போலப் பிற மாநிலங்களில் மிகப் பெரிய எதிர்ப்புகள் இல்லை. தமிழ்நாட்டுக்கு ஏற்படுவதைப் போன்ற தனிப்பட்ட கேடுகள் பிற மாநிலங்களுக்கு ஏற்படாது. மேலும், இந்த வரைவு இந்து மயமாதல் தன்மையை முதன்மையாகக் கொண்டுள்ளதால் ஏற்படக்கூடிய பிற்போக்கான விளைவுகள் கடுமை யானவை. அடித்தட்டு மக்களுக்கான உயர் கல்வி மறுக்கப்பட்டு, கடந்த ஐம்பது ஆண்டுகளில் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் பெற்றுள்ள உயர்வினை முற்றிலுமாகத் தகர்த்து மீண்டும் எல்லாத்துறைகளிலும் பார்ப்பனிய ஆதிக்கத்தை ஏற்படுத்தும். தமிழ்நாட்டைத் தவிர பிற மாநிலங் கள் பெரிய அளவில் இவற்றைப் புரிந்து கொண்டு இந்த வரை வினை எதிர்க்க முனையப் போவதில்லை. தமிழர்கள்தாம் முழுமூச்சோடு எதிர்த்து இதனை முறியடிக்கவேண்டும். எனவே, தமிழ்நாட்டுச் சூழலுக்கு இக்கல்விக் கொள்கை எவ்வாறு பொருந்தாது என்பதை முதலில் காணலாம். பாரதிய சனதா அரசு பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவே எல்லாவகையிலும் முயலும் என்பதற்கு, முழுமையான சான்று கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு பரிந்துரைத்திருக்கும் தேசியக் கல்விக் கொள்கை என்பதை இந்த வரைவை மேலோட்ட மாகப் படிப்பவர்கள் உணர்வார்கள். எனினும், வரைவு முழுவதையும் ஆழ்ந்து படித்தால் பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதோடு நின்று விடுவதை மட்டும் இந்த வரைவு நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை; தமிழ்நாடு போன்று கல்வித்துறையில் இந்தியாவில் வளர்ந்து நிற்கிற மாநிலங்களின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தவும் முனைகிறது. மேலும், பெருமுதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்களிடம் உயர்கல்வியை ஒப்படைப்பது.. ஒப்படைக்கப்பட்டு அவர்கள் பயன் அடைந்தால் இன்றைய ஆட்சியாளர்களின் எதிர்கால அரசியல் நிலைப்பாட்டுக்கு உதவும்... என்கிற அடிப்படையிலேயே இந்தக் கொள்கை வரைவு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த வரைவில் ஒன்பதாவது இயலிலிருந்து பதினெட்டாவது இயல்வரை தந்திருக்கக் கூடிய உயர்கல்வி குறித்த கொள்கை முழக்கங்களையும் அம் முழக்கங்களிலிருந்து ஏற்படும் அச்சுறுத்தல்கள் சிலவற்றை மட்டும் இங்குக் காணலாம். அதற்கு முன்பாக, உயர்கல்வியில் இந்திய அரசு கல்விச் சீர்திருத்தம் என்ற பெயரில் இதுவரை கொண்டுவந்துள்ள மாற்றங்களின் விளைவுகளையும் காணவேண்டும். கடந்த நாற்பது ஆண்டுகளில் நமது உயர் கல்விமுறையில் மூன்று பெரிய கல்வி மாற்றங்களைச் சந்தித்து இருக்கிறோம். 1. அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி கள் என்று மட்டுமே இருந்த நிலை மாறி, கல்வியைப் பரவலாக்குகிறோம் என்ற பெயரில் தன்னிதிக் கல்லூரிகள் தொடங்க அனுமதிக்கப்பட்டமை. 2. 1989 வரை இளநிலை பட்டப் படிப்புகளில் இருந்த ஆண்டுக்கு ஒரு முறை தேர்வு எழுதுவது என்ற நிலையை மாற்றி ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு எழுதுகிற பருவ முறையைக் கொண்டுவந்தது. 1989 வரை இளநிலை பட்டப்படிப்பில் மூன்றாண்டுகளுக்கும் 1800 மதிப்பெண்களுக்கு பதினெட்டு தாள்களை எழுதினோம். இன்று மாணவர்கள் அதே மூன்றாண்டுகளுக்கு 4000 மதிப்பெண்களுக்கு 40 தாள்களை எழுதுகிற நிலைக்கு கொண்டு சேர்த்துள்ளது. இவை அல்லாமல் விழுக்காட்டு அளவில் பார்த்தால் நான்கு நாள்களுக்கு ஒரு அகமதிப்பீட்டுத் தேர்வு அல்லது அகமதிப்பீட்டுக் கட்டுரை எழுதுகிற அவலத் தையும் இன்றைய மாணவர்கள் சந்திக்கிறார்கள். இதனால், அறிவு வளர்ச்சிக்கும் திறன் மேம்பாட்டுக்கும் படிப்பது என்பது மறைந்துபோய் தேர்வுக்காக மட்டுமே படிக்கும் நிலை மிகுந்துவிட்டது. 3. எல்லாக் கல்விநிலையங்களும் பல் கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரியாக இருந்த நிலையை மாற்றி, தன்னாட்சி அதிகாரம் கொண்ட தன்னிதிப் பல்கலை க்கழகங்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் என்னும் பெயரில் உருவாக வழிவகுத்தது. 4. எல்லாக் கல்லூரிகளும் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தைப் பின்பற்றி, பல்கலைக் கழகத் தேர்வு எழுதிப் பட்டம் பெறுகிற முறையை மாற்றி, தன்னாட்சிக் கல்லூரிகளை உருவாக்கி, அந்தந்தக் கல்லூரிகள் தாங்களே பாடத்திட்டத்தை உருவாக்கி, தாங்களே தேர்வு நடத்திப் பட்டத்தை மட்டும் பல்கலைக்கழகத்தை வழங்கச் செய்வது. குறிப்பிடத்தக்க இந்த மாற்றங்கள் எல்லாம் பெரும்பான் மையும் கல்வி வளர்ச்சி என்ற பெயரிலேயே செய்யப்பட்டன. விளைவுகளைப் பார்த்தால், ஆண்டு முழுவதும் தெளி வாகவும் செறிவாகவும் பயின்று ஆண்டுக்கு ஒரு முறை தேர்வு எழுதிய அன்றைய மாணவர்கள் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்ததும் விரிவுரையாளர் தகுதித் தேர்வு உடனடியாக எழுதி, சொல்லப்போனால், முதுகலை இரண்டாம் ஆண்டின் கடைசிப் பருவமாகிய நான்காம் பருவத்திலேயே விரிவுரை யாளர் தகுதித் தேர்வையும் எழுதி, எளிதில் தேர்ச்சி பெற்றனர். இன்று ராஜீவ் காந்தி கல்வித் திட்டம், அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்தபோது இந்தியாவின் மிகச் சிறந்த கல்வியாளர்கள் என்று பிரதமர் வாஜ்பாய் அவரால் கருதப் பெற்ற முகேஷ் அம்பானி, குமாரமங்கலம் பிர்லா ஆகிய இரு பெரும் கார்ப்பரேட் முதலாளிகளை மட்டுமே கொண்டு அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையாகிய அம்பானி- பிர்லா அறிக்கை 2000 முதலான 'வளர்ச்சிக்கான' மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட பிறகு முதுகலைப் பட்டப்படிப்பு முடித்த பின்னரும் பல ஆண்டுகளுக்கு விரிவுரையாளர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத அவலத்தில் பலர் இருக் கிறார்கள். இன்றைய பள்ளி ஆசிரியர் பணித் தேர்வில் ஒரு விழுக்காட்டுக்குக் கீழே போய்விட்ட தேர்ச்சி எண்ணிக்கையும் இவர்களின் 'வளர்ச்சிக் கொள்கை'களுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மாற்றமாகும். உயர்கல்வி குறித்துப் பேசத்தொடங்குகிற தேசியக் கல்விக் கொள்கை 2019 வரைவின் ஒன்பதாவது இயல் உயர்கல்வி யை மறு சீரமைத்து நாடு முழுவதும் உலகத் தரம் வாய்ந்த பன்முகத்தன்மையை உருவாக்குதல் என்ற நோக்கத்தை முதன்மையாகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடுகிறது. இன்றைய நிலையில் உயர்கல்வி பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வ தாகவும் பட்டியலிடுகிறது. இந்தியாவில் 800-க்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் மற்றும் சுமார் 40 ஆயிரம் கல்லூரிகளில் உள்ளன என்று குறிப்பிடுகிற இந்த வரைவு குறிப்பிடத்தக்க வகையில் நமது நாட்டிலுள்ள 40 விழுக்காட்டிற்கும் மேலான கல்லூரிகள் 21-ஆம் நூற்றாண்டிற்குத் தேவையான பன்முக முறையான உயர்கல்வியில் இருந்து வெகு தொலைவில் நின்று, இன்னும் ஒற்றைப் பாடத் திட்டங்களை நடத்தி வருகின்றன என்கிறது. உண்மையில் 20 விழுக்காட்டிற்கு மேலான கல்லூரிகளில் அதாவது 8000க்கும் மேலான கல்லூரிகளில் 100க்கும் குறை வான மாணவர் எண்ணிக்கை இருப்பதாகத் தெரிவிக்கிறது. இத்தகைய கல்லூரிகளில் 0.5 விழுக்காடு எண்ணிக்கை யிலான அதாவது 40 கல்லூரிகள் கூடத் தமிழ்நாட்டில் இருக்காது என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் நாலு விழுக்காடு கல்லூரிகள் (1600 கல்லூரிகள்) மட்டுமே மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர் சேர்க்கை கொண்டிருக்கிறது என்கிறது வரைவு. இத்தகைய கல்லூரிகளில் சற்றேறக்குறைய 25 விழுக்காட்டுக்கும் அதிகமான கல்லூரிகள் தமிழ்நாட்டிலேயே இருக்கின்றன. மேலும், இதில் இன்னும் மோசமாக ஆயிரக்கணக்கான சிறு கல்லூரிகளில் கற்பிக்கப் பேராசிரியர்கள் கூட இல்லை. மேலும், கல்விப்பணி சிறிதளவுகூட அங்கு நடைபெறுவதில்லை. இதனால், நாட்டின் உயர் கல்வி முறையில் நேர்மைத் தன்மை கடுமையாகப் பாதிக்கிறது என்கிறது வரைவு. இத்தகைய கல்லூரிகள் தமிழ்நாட்டில் ஒன்றுகூட இருக்க வாய்ப்பில்லை. இங்கு நிறைய போலியான கல்லூரிகள் எவ்விதத் தடையுமின்றி நடைபெற்று வருகின்றன என்கிறது வரைவு. கல்லூரி என்ற பெயரில் முறையான அலுவலகம் கூட இல்லாமல் போலிப் பட்டங்களை வழங்குகிற சில திருட்டு நிறுவனங்களை மனதில் கொண்டே வரைவு இவ்வாறு தெரிவிக்கிறது என்பதை நாம் தெளிவாக உணர முடியும். இத்தகைய கல்லூரிகளும் பெரும்பாலும் தமிழ்நாட்டில் இல்லை. இவ்வகையில் பார்த்தால் பெரும்பாலும் சமூக, பொருளாதார, வாழ்வியல் நிலைகளில் மிகவும் பின்தங்கிய வட இந்தியாவின் மாநிலங்களையே கருத்தில் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு இருப்பதால் இது முற்றிலும் தமிழ்நாட்டுக்கு பொருத்தமுடையது ஆகாது. இந்த நிலையில் அடுத்தகட்டமாக உயர்கல்வியை மூன்று பேரும் பிரிவுகளுக்குள் கொண்டுவரப் பரிந்துரைக்கிறது. அவ்வறிக்கையில் குறிப்பிடப்படும் மூவகை உயர் கல்வி நிறுவனங்கள் முதல்வகை வகை ஆராய்ச்சிப் பல்கலைக் கழகங்கள். முதுகலைப் பட்டப்படிப்போடு இளநிலை பட்டப் படிப்புக் கல்வியையும் வழங்குகிற இந்தப் பல்கலைக் கழகங்கள் ஆராய்ச்சிக்கும் இணையான முன்னுரிமை வழங்கும். இரண்டாம் வகை கற்பிக்கும் பல்கலைக்கழகங்கள். இளநிலை முதுநிலை முனைவர் பட்ட ஆய்வு, தொழில்முறை, தொழில் சார் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளை வழங்கும். மூன்றாம் வகைக் கல்லூரிகள். இவை முழுவதும் இளநிலைப் பட்டபடிப்புக் கல்வியை வழங்குவதோடு தொழில் சார் தொழில்முறைசார் கல்விகள் உட்பட சான்றிதழ் பட்டப் படிப்புகளை வழங்கும். எதிர்கால உயர்கல்வி இந்த மூன்று வகைக் கல்வி நிறுவனங்களையும் உள்ளடக்கியதாகவே இருக்கும் என்கிறது வரைவு. நீண்டகாலத்தில், கல்வி நிலையங்களின் எண்ணிக்கை குறைவாகவும் கல்வி நிலையங்களில் மாணவர்களுடைய எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கும் என்கிறது. இந்தக் கூறுபாடுகள் தான் தமிழ்நாட்டுக்குப் பொருத்தமில்லாதது என்ற முடிவுக்கு வரவைக்கிறது. முதல் வகை ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை அவை 150 முதல் 300 வரை எண்ணிக்கை கொண்டிருக்கும். மாணவர் சேர்க்கை 5000 முதல் 25000 வரை அதற்கு மேற்பட்ட மாணவர் களைக் கொண்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இன்றைய பல்கலைக்கழகங்களில் தேசியக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கை சொல்கிற தகுதியைப் பெறுகிற பல்கலைக்கழகங்களில் குறைந்த அளவாக 20 அரசு பல்கலைக்கழகங்களும் 20 நிகர்நிலைப் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் இவை அல்லாமல் தன்னாட்சி அதிகாரம் கொண்டிருக்கிற முதல்தர பல்கலைக் கழகமாகத் தகுதி ஏற்கத்தக்க கல்லூரிகள் மிகக் குறைந்த அளவாக 30 கல்லூரிகளும் இருக்கும் என்று கணக்கெடுத்துக் கொண்டால் நாடு முழுவதற்கும் வைத்திருக்கிற குறைந்தபட்ச எண்ணிக்கையில் இரண்டில் ஒரு பங்கு அதிகபட்ச எண்ணிக்கையான நான்கில் ஒரு பங்கும் தமிழ் நாட்டில் மட்டுமே நடைபெற முடியும். இரண்டாம் நிலை கற்பிக்கும் பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை 5000 முதல் 25000 வரை மாணவர் எண்ணிக்கை இருக்கும். இருபது ஆண்டுகளில் இவ்வகைப் பல்கலைக்கழகங்களில் எண்ணிக்கை ஆயிரத்தில் இருந்து 2000 வரை இருக்கும். இன்றைக்குத் தன்னாட்சி கல்லூரிகளாகச் செயல்படக்கூடிய கல்லூரிகள் இதற்கான தகுதியைப் பெறுவதற்கு முனைந்தால் சற்றேறக்குறைய 100 கல்லூரிகள் அத்தகுதிகளைப் பெறு வதற்கு முயற்சி செய்யும் எனில் 20 ஆண்டுகளில் நாட்டின் மொத்த இலக்கு என்று வரைவு குறிப்பிடுகிற எண்ணிக் கையில் குறைந்த அளவாக பத்தில் ஒரு பங்கை இன்றைக்கே தமிழ்நாடு மட்டுமே பெற்றிருக்கிறது. மூன்றாம்வகையில் குறிப்பிடப்படும் இளநிலைப் பட்டப்படிப்பு கற்பிக்கக் கூடிய கல்லூரிகளைப் பொறுத்தவரையில் குறைந்த மாணவர் எண்ணிக்கை 2000 ஆகவும் அதிக அளவில் 5000 அல்லது அதற்கும் மேற்பட்டும் இருக்க வேண்டும். இந்தக் கல்லூரிகளின் எண்ணிக்கை 20 ஆண்டுகளில் 5000 முதல் 10000 வரை நிறுவப்பட வேண்டும் என்கிறது வரைவு. தமிழ்நாட்டில் இன்றைய கலை அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கையை மட்டும் பொதுவாகப் பார்த்தால் 98 அரசு கல்லூரிகள், 162 அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் 1356 தன் நிதிக் கல்லூரிகள், ஆக, 1616 கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பான்மையானவை கலை அறிவியல் கல்லூரிகளே. மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி உள்ளிட்ட பிற கல்லூரிகள் இடம்பெறும். இந்த எண்ணிக் கையைப் பொறுத்த அளவில் 12லிருந்து 20 ஆண்டுகளுக்குள் நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவில் குறைந்த அளவில் 50 விழுக்காட்டையும் அதிக அளவில் 20 விழுக் காட்டையும் ஒற்றை மாநிலம் ஆகிய தமிழ்நாடு இன்றே பெற்றுள்ளது. மருத்துவம், பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையைச் சேர்த்துப் பார்த்தால் இந்த அளவு மேலும் மிகுதியாகும். ஆனால், வரைவு என்பது ஒட்டுமொத்த இந்தியா வுக்கும் கூறியது. இங்கே ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். கடினமாக உழைத்து ஈட்டுகிற பொருளின் பெரும்பகுதியைக் கல்விக்காக மட்டுமே செலவழித்துத் தங்கள் பிள்ளைகள் கல்வி கற்று வாழ்வில் மேம்படுவது ஒன்றையே நோக்கமாகக் கொண்டி ருப்பவர்கள் தமிழ்நாட்டினர். இயற்கையான வளக் குறைவு மட்டுமல்லாது, சோம்பேறிகளாகவும், பொருளீட்டும் திறன் அற்றவர்களாகவும், ஈட்டிய பொருளை எல்லாம் மனமகிழ் விற்கே செலவழிக்கிற குணம் கொண்டவர்களாகவும் திகழ் கிறார்கள் வட இந்தியாவின் குறிக்கத்தக்க மாநிலத்தவர் என்பது வட மாநிலங்களுக்கு சென்று வந்தவர்களுக்குத் தெரியும். "எதிர்காலத்தில் ஆடவர்கள் படித்த பெண்களையே திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று முடிவெடுத்திருக் கிறார்களாம். எனவே பெண் பிள்ளைகளே படித்துக் கொள் ளுங்கள். இல்லை என்றால் உங்களுக்கு நல்ல மணமகன் கிடைக்க மாட்டான். திருமணம் ஆகாமல் போய்விடலாம்" என்றெல் லாம் திருமண வீடுகளில், பெண்கள் கூடுகிற இடங்களில் பேசி, பெண்கல்வியின் இன்றியமையாமையை உணர்த்திய தந்தை பெரியார், "உங்கள் ஊரில் கோயில் கட்டுகிற காசில் சிறிதளவை ஒதுக்கி பள்ளிக்கூடம் ஒன்று கட்டுங்கள்" நான் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வரும்போது பள்ளிக்கூடத்தையும் திறந்து வைக்கிறேன்" என்று நிபந்தனை விதித்தும் பள்ளிக் கூடத்தில் உணவு வழங்கியாவது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று கருதிய காமராசர் உள்ளிட்ட கல்விச் சிந்தனை மிகுந்த தலைவர்கள் ஆற்றிய பணிகளால் கல்வியில் இன்று குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றி ருக்கிற தமிழ் நாட்டுக்கும் தமிழ் நாட்டோடு ஒப்பிட்டால் பத்தில் ஒரு பங்கு கூடக் கல்வி வளர்ச்சி பெறாத மாநிலங்களுக்கும் பொதுவான தேசியக் கல்விக் கொள்கை எதற்காக வேண்டும்? எனவே, மிகக்குறைந்த எண்ணிக்கைளில் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் இருக்கிற மாநிலங்களைத் தேர்ந் தெடுத்து அந்த மாநில அரசுகளுக்கு உதவிபுரிந்து செய்ய வேண்டிய வேலைகளை ஒட்டுமொத்தமாகத் தேசியக் கல்விக் கொள்கையாக அறிவித்திருக்கிறார்கள். இது அறியாமல் செய்ய பட்டதல்ல, திட்டமிட்டே செய்யப்பட்டது. மேலும், இதில் சிக்கல் என்னவெனில், நீண்டகால நோக்கில் பார்க்கும்போது இந்திய உயர் கல்வியானது மூவகைப்பட்ட கல்வி நிறுவனங்களுக்குள் அடங்கும். அதனால் அவற்றின் எண்ணிக்கை அளவில் சிறியதாக இருக்கும். ஆனால், ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனம் தற்போது இருக்கும் அளவைக் காட்டிலும் மிகப் பெரியதாக இருக்கும் என்கிறது வரைவு. அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. இந்த மூவகைக் கல்வி நிறுவனங்களும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் மண்டலங்களிலும் சமமான முறையில் நிறுவப்பட வேண்டும் என்கிறது. இங்கேதான் சிக்கல் எழுகிறது. இவ்வாறு சமமான முறையில் நிறுவப்பட்டால் தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் ஐந்திலிருந்து பத்து வரையிலான ஆராய்ச்சிப் பல்கலைக் கழகங்கள் மட்டுமே இருக்கும். அவ்வாறெனில் இன்றைக்கு இயங்குகிற அரசு பல்கலைக்கழகங்களில் சற்றேறக்குறைய 15 முதன்மையான பல்கலைக்கழகங்கள் முதல் நிலைப் பல்கலைக் கழகங்கள் ஆகத் திகழ்வதற்குத் தகுதியற்றதாக நிராகரிக்கப் படும். இதே நிலையே மற்ற இருவகைக் கல்வி நிலையங் களுக்கும் ஏற்படும். வருங்காலங்களில் புதிய கல்லூரிகள் தொடங்கிட வட மாநிலங்களுக்கே முதன்மை அளிக்கப்படும். தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் வட இந்தியர்கள் வளம்பெற்றுக் கொழுக்க, ஏற்கனவே வளர்ந்துவிட்டதாகக் கூறி, தமிழ்நாடு புறக்கணிக்கப்படும். ஒரே நாடு என்று கூறப்பட்டு விட்டதால் வடக்கு, தெற்கு என்றெல்லாம் பிரித்துப் பார்க்கக் கூடாது என்ற வஞ்சக முழக்கம் முன் வைக்கப்படும். இன் றைக்கு இந்த வரைவு வருவதற்கு அடிப்படையானவர்களுள் துணைவேந்தர் தேர்வு தொடங்கி பள்ளி ஆசிரியர்கள் பணியமர்த்தல் வரை தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி, ஊழலை விதைத்துவிட்டுக் கல்விச் சீர்திருத்தம் குறித்துப் பேசுகிற பெருங்கொள்ளையர்களாகிய அரசியல்வாதிகள், கொஞ்சம் கூடக் கூச்சமில்லாமல் தங்களைக் கல்வி வள்ளல்கள் என்று அழைத்துக் கொள்கிற வணிக நோக்கில் கல்வி நிலையங்களை நடத்துகிறவர்கள், தங்கள் பொறுப்பை மறந்து ஆசிரியத்தன்மைக்கு மாறாக அரசு உழியர்கள் என்ற மனப்பான்மைக்கு வந்துவிட்ட பெரும்பான்மையான பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், ஆகிய இவர்களே முதன்மையான வர்கள். மேற்கூற்றில் விதிவிலக்கானவர்கள் மிகக்குறை வானவர்களே. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இது நாடு முழுவதும் இருக்கிற பொது நிலைமையாகும். இவர்களின் தன்னலவெறி கல்விச் சீரழிவுக்குக் காரணமானது. அதுவே சீர்திருத்தம் என்கிற பெயரில் இத்தகைய மோசடிகளுக்கு அடிப்படையாகிவிட்டது. வயல்களில் தவறான விதைகளை விதைத்து, பயிர்களைவிட களைகள் மிகுதியாக இருக்கும் நிலையில் முற்றிலுமாகக் களைகளை நீக்கி, பயிர்களைச் செழிக்கச் செய்து இனியாவது சரியான விதைகளை விதைத்து நல் விளைச்சலை பெற வேண்டிய வேளாளன், எல்லாம் கெட்டுப் போய்விட்டது என்று சொல்லி, சீமைக்கருவேல விதைகளை விதைத்தால் விறகுக் காவது ஆகும் என்று முடிவு எடுப்பதைப் போல, கல்வி நிலை யங்களை முறைப்படுத்திட, தகுதியானவர்களைத் துணை வேந்தர்களாக நியமித்து, தகுதியற்றவர்கள் முதல்வர்களாக பேராசிரியர்களாக, ஆசிரியர்களாக வந்துவிடாமல் தடுத்து, கல்வியை வளர்த்தெடுப்பதற்கான வேலையைச் செய்ய வேண்டிய அரசு அதற்கு மாறாக, முற்றிலுமாகக் கல்வி வளர்ச்சி யைச் சீர்குலைத்து உயர்கல்வியை உருக்குலைக்கும் பணியினைச் செய்வதற்கே இந்த தேசியக் கல்விக் கொள்கை 2019 உதவும். மேலும், கல்வித்துறையில் தொண்டுள்ளத்தோடு ஈடுபடு கிற தனியாரை ஊக்குவிக்க வேண்டும், உலகின் 200 தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் இருந்து குறிப்பிட்ட பல்கலைக் கழகங்களைத் தேர்ந்தெடுத்து அவை இந்தியாவில் கல்வி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்பன போன்ற வரைவின் பரிந்துரைகள் இந்தியக் கல்வித் துறையைத் தனியார் கைகளிலேயும், பன்னாட்டு நிறுவனங்களின் கைகளிலேயும் ஒப்படைப்பதற்குத் திட்டமிட்டுகிறதோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. இது மிக விரிவாக, தனித்து ஆய்வு செய்வதற்கு உரியதாகும். இதுவரை உயர்கல்வி குறித்துக் கொள்கை முடிவுகள் எடுக்க, நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க, நிதி உதவிகளை அளிப்பதற்கு எனத் தன்னாட்சியாக இயங்கி வந்த பல்கலைக் கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் கலைக்கப்பட்டு 'ராச்ட்ரிய சிக்சா ஆயோக்' என்கிற தேசியக் கல்வி ஆணையம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும். இது இந்தியக் கல்விக்கான உச்ச அதிகாரம் கொண்ட குழுவாகும். இந்த அமைப்பு கல்விக்கான பார்வை / இலக்கை உருவாக்குவதும் வெளிப்படுத்துவதும், செயல்படுத்துவதும், மதிப்பீடு செய்வதும் மற்றும் மறுசீரமைப்பு ஆகிய பொறுப்பையும் கொண்டிருக்கும். இந்த நோக்கத்தை அடைய உதவும் நிறுவனக் கட்டமைப்பை உருவாக்கி மேற்பார்வை செய்யும். இதன் தலைவராக நாட்டின் பிரதமர் இருப்பார். (இன்றைய நிலையில் மாண்புமிகு நரேந்திர மோடி இருப்பார்). இதன் துணைத் தலைவராக மத்திய கல்வி அமைச்சர் இருப்பார். உறுப்பினர்களாக மத்திய அமைச்சர்கள், சுழற்சி முறையில் மாநில முதலமைச்சர்கள் இருப் பார்கள். பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட துறைச் செயலாளர் களும் இதன் உறுப்பினர்களாக இருப்பார்கள். 50 விழுக்காடு அளவிற்குப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களும் இருப்பார்கள்; கடைசியாகக் கல்வியாளர்களும் அல்லது கல்வியாளர்கள் என்று அழைக்கப்படுபவர்களும் இருப்பார்கள். 100 விழுக்காடு கல்வியாளர்களையே கொண்டு இயங்கிய உயர்கல்வித்துறையின் அமைப்புகளைக் கலைத்துவிட்டு 50 விழுக்காட்டுக்கு மேல் அரசியல்வாதிகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஓர் அமைப்பை உருவாக்கி இந்த அரசியல்வாதிகளின் துணையோடு கல்வித்துறையைச் சீர்படுத்தப் பரிந்துரைக்கிறது வரைவு. பெயரளவிலாவது கட்சி சார்பற்றவர் என்று கருதப் படுகிற ஆளுநர் துணைவேந்தர் நியமன நிலையை நாம் அறிவோம். அரசியல் ஆதிக்கம் இல்லாத நிலையில் அவர்களின் மறைமுக அழுத்தங்களைச் சில நேரங்களில் நிறைவேற்றி னாலும் பல நேரங்களில் நிறைவேற்ற மறுக்கிற பல்கலைக் கழக மானியக் குழு முதலான அமைப்புகளையும் கலைத்து விட்டு நேரடியாக அரசியல்வாதிகளின் கைக்குக் கல்வித்துறையைக் கொண்டு சேர்ப்பது எவ்வளவு கேடாய் முடியும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படும் அமைச்சர்களும், மாநில முதலமைச்சர்களும் உறுதியாகப் பிரதமரின் எண்ணத்தை நிறைவேற்ற முயல்வார்கள் எனில், 50 விழுக்காடு அளவுக்கு இவர்கள் இடம் பெற்றிருக்கிறபொழுது ஒட்டுமொத்த கல்வி குறித்த முடிவு களையும் ஒற்றை மனிதராகப் பிரதமர் எடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிற ஒரு சர்வாதிகார முறையை இந்த வரைவு பரிந்துரைக்கிறது என்று சொன்னால் அது பிழை ஆகாது. ஒரே இந்தியா, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கட்சி என்ற நிலையை நோக்கி நகர்கிற பாரதிய சனதாக் கட்சியின் ஆட்சி எல்லாத்துறைகளிலும் ஒற்றைத் தலைமையை நோக்கியும் நகர முற்படுகிறது என்பதை வரைவு தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது. மக்களாட்சி தத்துவத்தைச் சிறிது சிறிதாகச் சிதைக்காமல் ஒட்டுமொத்தமாகக் குழி தோண்டிப் புதைத்து விடுகிற நிலைக்கே நம் ஆட்சியாளர்கள் வந்து இருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமான உண்மையாகிறது. மாநில அளவில் பெரிய வளர்ச்சி பெற்றிருக்கும் தமிழ் நாட்டின் கல்வி வளர்ச்சியைத் தடுத்து, உலகின் ஈடுஇணை யற்ற மொழியாகிய தமிழை அழித்தொழித்து, சாதிய வேறுபாடுகளும் மத வெறியும் மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு நோக்க. அவை மிகக் குறைவாக இருக்கிற தமிழ்நாட்டில் மத வெறியைத் திணித்து, வேறுபாடுகளை நிலை நிறுத்துகின்ற பணியை இந்த அறிக்கை செய்யும். இந்துத்துவா திணிப்பு, மொழிச்சிக்கல், பண்பாட்டுச்சிதைவு, கல்வித் துறையை இந்தியப்பெரு நிறுவனங்களிடம் பன்னாட்டு நிறுவனங்களிடமும் ஒப்படைத்தல் மற்றும் கல்வித்துறையின் நிருவாகத் தலைமை உள்ளிட்ட தனித்தனியாகப் பார்க்கப்பட வேண்டிய கூறுகள் நிறைய உள்ளன. அவை குறித்து எதிர்வரும் இதழ்களில் அல்லது தனி நூலில் விரிவாக விளக்க வேண்டும். வேதங்கள் சொன்னால் போதும்; அந்தணர் சொன்னால் போதும்; அரசர் சொன்னால் போதும்; அவைதாம் இறுதி; அவற்றை எவரும் எதிர்க்கக் கூடாது என்ற ஆதிக்கக் கொள்கை இந்தத் துணைக்கண்டம் முழுவதும் உச்சத்தில் இருந்தபோது, எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு எனவும் எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே பகுத்தறிவுப் பாதை காட்டிய திருவள்ளுவரும், மண்டிக்கிடந்த மூடப்பழக்க வழக்கங்களின் கேடுகளை உணர்த்தி, அறிவார்ந்த சமூகமாகத் தமிழ்ச் சமூகத்தை உருவாக்குவதையே தான் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டிருந்த தந்தை பெரியாரும் வாழ்ந்த தமிழ் மண்ணில் மூடக் கொள்கைகளை மூர்க்கமாகத் திணிக்கிற பெரும் முயற்சியைச் செய்கிறவர்களின் கொடுஞ் செயலை எல்லா நிலையிலும் எதிர்த்து, தமிழ்நாட்டைக் காக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை ஆகும்.
பார் போற்றும் பகலவன் பாபா சாகேப் பயணப் பாதை, எம்.ஏ. பாலசுப்பிரமணியன், சித்தார்த்த பதிப்பகம், பக். 655, விலை 450ரூ. 14.4.1891 முதல் 6.12.1956 வரையிலான சட்டமேதை அம்பேத்கரின் வாழ்க்கைப் பயணத்தை தேதி வாரியாக தொகுத்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர். நூலின் ஒவ்வொரு பக்கங்களும் அம்பேத்கர் எத்தகைய இடர்பாடுகளையெல்லாம் கடந்து தாழ்த்தப்பட்டவர்களை மிளிரச் செய்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. 1905-ஆம் ஆண்டு மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் அம்பேத்கர் 5-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது ஆசிரியர் ஒருவர், “அவரிடம் தாழ்ந்த மஹர் இனத்தில் பிறந்த நீ படிப்பதனால் என்ன பயன்?” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அம்பேத்கர்,”நான் கல்வி கற்பதனால் என்ன பயன் என்று கேட்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. நாவடக்குங்கள். மீண்டும் ஒரு முறை இந்தக் கேள்வியைக் கேட்டீர்களென்றால் விளைவு மோசமாக இருக்கும்” என்று கூறினார். இத்தகைய பதிவைப் படிக்கும்போது அந்தக் காலத்தில் அதுவும் மிக இளம் வயதிலேயே அம்பேத்கருக்கு சுயமரியாதையும், துணிவும் எந்த அளவுக்கு இருந்திருக்கிறது என்பதை உணர முடிகிறது. 14.4.1929-இல் இரத்தினகிரி மாவட்டம் உழவர் மாநாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தான் உழைக்க வேண்டிய தேவை பற்றியும், குலம், கோத்திரம் ஆகியவற்றை ஒழிப்பதற்கான மசோதா கொண்டு வருவது குறித்தும் அம்பேத்கர் பேசியது போன்று அவரது வாழ்வின் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சிகள் பல தகுந்த ஆவணங்களுடன் இடம்பெற்றுள்ளன. அரிய பல தகவல்கள் அடங்கிய கருவூலம் இந்நூல். நன்றி:தினமணி, 21-11-2016. அரசியல், சரிதை எம்.ஏ. பாலசுப்பிரமணியன், சித்தார்த்த பதிப்பகம், தினமணி, பார் போற்றும் பகலவன் பாபாசாகேப் பயணப்பாதை
வணக்கம் நண்பர்களே இது என்னுடைய அடுத்த புதிய கதை கதையை படிச்சு விட்டு உங்கள் ஆதரவுகளை வழங்குமாறு கேட்டு கொள்கிறேன். நான் ஹாரிஸ் வயது 24 மதுரை பக்கம் எங்கள் ஊர்…!!!! இது என்னுடைய சிறு வயதில் என்னுடைய சொந்தகார பெண் ஒருத்தி இருந்தால். அவளுக்கு எனக்கும் இடையில் ஒரு அக்கா தம்பி இது மாதிரி உறவு தான் பர்ஸ்ட் இருந்தது ஆனா அதுவே போக அது காமத்தில் போய் முடிந்தது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க. செக்ஸில் ஆர்வம் உள்ள பெண்கள் & ரியல் & செக்ஸ் சேட் செய்ய விருப்பம் உள்ளவர்கள் இமெயில் முகவரிக்கு வாங்க. E-mail ID :~ [email protected] நான் ஹாரிஸ் என்னுடைய சிறுவயதில் என் வாழ்க்கை யில் நடந்தது அதை கதையை எழுதி இருக்கேன் . இந்த கதையின் நாயகி தாமரை செல்வி பெயருக்கு ஏற்றாற்போல் கும்முன்னு இருப்பா பார்க்க. மாநிறத்தில் இருப்பா முலைகள் இரண்டும் சரியான அளவில் இருக்கும் ரொம்ப பெரிசா இல்லமா ரொம்ப சிறுசா இல்லமா 36 இருக்கும். அழகு னா அழகு அப்படி ஒரு அழகு அவ நடிகை இந்துஜா மாதிரி இருப்பா கொஞ்சம் அதே கலர் ஆனா அவளுக்கு குண்டாக இருக்க மாட்டா அவள் எங்கள் வீட்டில் அருகில் தான் இருப்பாள் எந்த பசங்க கிட்டயும் பேச மாட்டா அவங்க வீடு இல்லனா எங்க வீடு அவ்வளவு. டெய்லி எங்கள் வீட்டுக்கு வருவாள். அவளுக்கு எங்க அம்மா னா ரொம்ப பிடிக்கும். அதானல நானும் அவளும் சகஜமாக பேசி தொட்டு எல்லாம் பேசுவேன். அப்போது நானும் அவங்க வீட்டுக்கு போவேன். அவ கூட பேசுவேன் அவங்க வீட்லையும் எதுவும் சொல்ல மாட்டாங்க. இப்படி நல்லா போயிட்டு இருந்தது. அவ ஒரு நாள் வாடா கடைக்கு போகனும் சொன்னா. நான் சரி வாங்க போவோம் னு சொன்னேன். அப்போது பாவாடை தாவணி யில் வந்தால். எனக்கு அப்படி வந்தா ரொம்ப பிடிக்கும் மா அவ நான் அவகிட்ட அக்கா சூப்பரா இருக்கு உனக்கு இந்த டிரஸ் னு சொல்லிட்டு பேசிட்டு நடந்து போனோம். அவளும் என்னுடன் பேசிட்டு வந்திட்டு இருந்தால் அப்போது காலில் ஒரு கண்ணாடி பீஸ் குத்தியது போல அவ ஸ்ஸ்ஸ் ஆஆ என கத்தினாள். நான் என்னாச்சு அக்கா னு கேட்க அவ என்ன னு தெரியலை டா ஏதாவது குத்தி இருக்கும் போல காலை காட்டினாள். அவ காலில் கண்ணாடி பீஸ் ஒன்று இருந்தது. நான் அக்கா ஏதே கண்ணாடி பீஸ் மாதிரி இருக்கு அக்கா னு சொன்னேன். அவ வலிக்கு டா சிக்கிரமா எடுத்து விடு டா வலியால் கத்திய படி சொல்ல. அது தெருவாக நான் யோசிக்க. அவ சிக்கிரமா எடுத்து விடு டா ரொம்ப வலிக்குது சொல்ல. நான் கீழே அமர்ந்து கொண்டு காலை தூக்க சொன்னேன். அவ லேசாக தூக்கினாள். அப்போது முதல் தடவை அவ கால்களை நான் தொட்டு பார்க்க போறேன். அவ என்னால ரொம்ப நேரம் இப்படி நிக்க முடியாது டக்குன்னு எடுத்து விடு டா சொல்ல. நான் அப்போ என்னை பிடிச்சு நில்லு னு சொல்ல. அவ என்னுடைய தோள்பட்டை யில் கையை வைத்து கொண்டு நின்றாள். நான்.அதை எடுத்து விட்டேன். அவ காலில் இருந்தது இரத்தம் வர ஆரம்பிக்க . நான் அக்கா ரத்தம் வருது னு சொல்ல. அவ வலியால் ஆ முடியலை என்னால சொன்னாள். நான் உடனே ஒரு நிமிஷம் அப்படி நில்லு னு சொல்லிட்டு பக்கத்தில் இருந்த வீட்டில் வெளியே துணியை கிழித்து கொண்டு காலில் கட்டி விட்டேன். அப்புறம் அக்கா டெய்லி செருப்பு போட்டு தானே வருவ இன்னைக்கு சும்மா நடந்து வந்து இருக்க இப்ப பாரு என்னாச்சு சரி வாங்க வீட்டுக்கு போவோம் சொல்ல. அவங்க என்னுடைய கையை பிடித்து கொண்டு மெதுவா நடந்து வந்து கொண்டு இருந்தாள். நான் மெதுவா நடந்து அவங்க வீட்டை அடைந்தேன். அப்போது அவங்க அம்மா என்ன டி ஆச்சு னு கேட்க. நான் இல்ல முள் குத்திருச்சு அதானல தான் சொல்ல. அதுக்கு காலு ல கட்டு எல்லாம் போட்டு இருக்கு னு சொல்ல அதெல்லாம் ஒன்னும் இல்ல மா சொல்ல அவ சொல்ல. அவளை சேரில் உட்கார வைத்து விட்டு தண்ணீர் கொண்டு வந்து குடுத்தேன் குடிக்க. அதை குடித்தால். அவங்க அம்மா சரி நீ இரு நானும் அப்பாவும் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்ரோம் எப்படியும் வர 3 மணி நேரம் ஆகும் சொல்லிட்டு போக. நானும் அக்காவும் வீட்ல தனியா இருந்தோம். அவங்க என்னிடம் பார்த்து இருங்க போயிட்டு வர்ரேன் னு சொல்லிட்டு போக. நான் சரிக்கா நீ ரெஸ்ட் எடு நான் வீட்டுக்கு போயிட்டு வர்ரேன் சொல்ல அவ என் கையை பிடித்து ரொம்ப வலிக்கு டா சொல்ல. நான் என்ன பண்ண னு கேட்க அந்த துணியை கழட்டி இப்ப எப்படி இருக்கு பாரு சொன்னா. நான் அதை மாதிரி செய்ய ரத்தம் வடிதல் கொஞ்சம் நின்றது. நான் ஒரு துணியில் நனைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தி விட்டு மருந்து போட்டேன். அவ அப்படி யே எழுந்து இருக்க நான் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். அவ எனக்கும் தூக்கம் வருது சொன்னா நான் சரி இரு சொல்லிட்டு அவ கையை பிடித்து எழுந்திருக்க உதவி செய்ய அப்போது அவளால் எழுந்திருக்க முடியலை நான் இன்று கொஞ்சம் பலமாக இழுத்தேன். அப்போது தான் முதல் முதல் அவ உடம்பு என்னுடைய உடலில் லேசாக உரியது நேருக்குநேரா. அப்போது எனக்கு ஏதோ ஒரு மாற்றம் வர அவளுடைய பருவ முலைகள் ஒன்னு கொண்டிருந்த போது நான் என்னை மறந்து இருக்க . அவள் என்னை தோளில் கையை போட்டு கொண்டு நடந்து வந்தால் அவளை கட்டில் பக்கம் போய் படுக்க வைத்தேன். சரி டா நீ வீட்டுக்கு போ நான் தூங்க போறேன் சொன்னா. நான் கதவை பூட்டிட்டு அம்மா வர சொல்லுறேன் உனக்கு துணையா இருக்க சொல்லிட்டு வீட்டுக்கு போய் அம்மாவிடம் சொல்ல அவங்க அக்கா வீட்டுக்கு போக. நான் அதுக்கு அப்புறம் அவங்களை பார்க்க வில்லை. நான் மறுநாள் காலையில் ஞாயிற்றுக்கிழமை வேற எங்க வீட்ல காலையில் சிக்கிரமா கல்யாண வீட்டுக்கு போயிட்டாங்க . வீட்டில் யாரும் இல்ல அப்போது எனக்கு 14 தான் வயசு இருக்கும் வெறும் துண்டு மட்டும் கட்டி கொண்டு இருந்தேன். அப்போது உள்ள எதுவும் போடலை . நான் குளிச்சுட்டு வந்து இருந்தேன். துண்டு மட்டுமே கட்டி கொண்டு இருந்தேன். வாசலில் கதவை பூட்ட மறந்து விட்டேன். வாசலில் செல்வி அக்கா நின்னுட்டு இருந்தா. எனக்கு அவளை பார்த்த வுடன் அன்னைக்கு ரொம்ப கூச்சமா இருந்தது. நான் மற்றொரு துண்டை எடுத்து தோளில் போட்டு வா அக்கா சொன்னேன். அவ இப்படி கதவை திறந்து போட்டு இருக்க வீட்ல யாரும் இல்லையா னு கேட்க நான் ஆமா கல்யாண வீட்டுக்கு போயிருக்காங்க னு சொல்ல. அவ ஓ அப்படி யா சரி னு கதவை பூட்டி விட்டு வர நான் அக்கா இப்ப எப்படி வலி னு கேட்க. அவ பரவயில்ல டா சொல்லிட்டு அவ என்னுடைய பக்கத்தில் நெருங்கி வர நான் பின்னால் நடந்து அவ ஏன் டா என்னை பார்த்து அவ்வளவு கூச்ச படுற னு கேட்க னு அவ கேட்க. நான் அதெல்லாம் இல்லையே யாரு சொன்னா எனக்கு கூச்சம் மா எதையாவது பேசிட்டு போ அக்கா நீ வேற பேசிட்டு இருக்கும் போது ஒரு கரப்பான் பூச்சி அவ மீது விழுந்தது. அவ ஆ ஆ ஆ கரப்பான் பூச்சி கரப்பான் பூச்சி னு கத்தி கொண்டே என்னை சுற்றி ஓடிட்டு இருந்தால். என்னை சுற்றி விட்டு விட்டு இருக்க ஒரு வழியா கரப்பான் பூச்சி வேற பக்கம் பறந்து போக . நான் இவ்வளவு பேசுற ஒரு கரப்பான் பூச்சி போயி இப்படி பயந்து போய் ஓடிட்டு இருக்க னு கேட்க. அவ ஆமாடா இதுக்கு மட்டும் ரொம்ப பயமா இருக்கு சின்ன வயசுல இருந்து சொல்லிட்டு கீழே குனிந்து ஒரு நிமிஷம் பேசமா இருந்தால். நான் ஏன் பேசமா இருக்க னு கீழே குனிந்து பார்க்க துண்டு கழன்டு கீழே விழுந்திருக்கும் போல அது தெரியாம நானும் பேசிட்டு இருக்க. அவ கண்களை மூடி கொண்டு இருக்க . நான் டக்குன்னு துண்டை எடுத்து கொண்டு ரூம்க்கு ஓடினேன். கதையை படிக்கும் புதிய பெண் வாசகர்கள் Master id ah click panni en story ah padichu parunga pudichu iruntha email id ku vanga….!!!! ரியல் செக்ஸில் ஆர்வம் உள்ள பெண்கள் வாங்க வயசு முக்கியம் இல்ல…!!!! Categories Akka Sex Stories In Tamil - அக்கா செக்ஸ் கதைகள் தமிழ், Tamil kama kathaikal - తమిళ్ కామ కథైకల్, Tamil kamaveri - తమిళ్ కామావెరి
Tamil Kamakathaikal – அது ஒரு இதமான காலைபொழுது. கண் விழிக்கும் போது மணி எட்டாகி விட்டிருந்தது. வீட்டில் யாரும் இருக்கவில்லை. வெள்ளிக்கிழமை ஆகையால் அம்மா கோயிலுக்கு போயிருப்பாள் என நினைத்து கொண்டு கட்டிலை விட்டு வெளியே வந்தேன். சாப்பாட்டறையில் காலை உணவும் டீயும் ரெடியாக இருந்தது காலேஜுக்கு நேரமாகிவிட்டதை உணர்ந்த நான் டீயை குடித்து விட்டு உடனடியாக ரெடியாகினேன். சாப்பிட்டு முடிக்கும் போது கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்க கையை கழுவி விட்டு சென்று பார்த்தேன். எங்கள் ஹவுஸ் ஓனர் வாடகைக்காக வந்திருந்தார். வழமையாக வாடகையை சரியாக கொடுத்து விடும் அம்மா இந்த முறை கொஞ்சம் பிந்தியிருந்தாள். நேற்று கதைக்கும் போது இன்று வங்கியிலிருந்து பணத்தை எடுத்து கொடுக்கபோவதாகவும் சொல்லியிருந்தாள். நான் ஹவுஸ் ஓனரிடம் விஷயத்தை சொல்ல அவரும் சரி என்று தான் எத்தனை மணிக்கு வர வேண்டும் என கேட்டார். நான் அம்மாவின் செல்லுக்கு போன் செய்து கேட்க தான் பூஜையை முடித்து விட்டதாகவும் இன்னும் கொஞ்ச நேரத்தில் வங்கிக்கு சென்று பணத்தை எடுத்துக்கொண்டு 10 .30 மணி போல் வீட்டுக்கு வருவதாகவும் சொன்னாள். நானும் சரி என்று நான் காலேஜுக்கு கிளம்பி கொண்டிருப்பதாக சொல்ல வீட்டை பூட்டி விட்டு ஒரு சாவியை வழமையாக பூச்சாடியில் வைக்குமாறு சொன்னாள் . நானும் சரி என்று போனை வைத்து விட்டு ஹவுஸ் ஓனரை பிறகு வர சொன்னேன் . அவரும் சரி என்று தான் 11 மணி போல் வருவதாக சொல்லிவிட்டு சென்றார். நான் கதவை முடிவிட்டு உள்ளே செல்ல எத்தனிக்கும் போது ஹவுஸ் ஓனர் கொஞ்சம் தயங்குவது போல தெரிந்தது. நான் என்னடா என்று கதவை திறக்க போகும் போது அவர் திடிரென வீட்டுக்கு பக்கமாக செல்ல தொடங்கினார் . வழமையாக அவர் வீட்டுக்கு வந்தால் சுற்றுபுறம் எல்லாம் பார்ப்பது உண்டுதான் அனால் அப்படி பற்பதேன்றால் சொல்லிவிட்டு தான் போவது வழக்கம். இன்று திடிரென போகும் போது எனக்கு இது வழமைக்கு மாறாக தெரிந்தது கதவை திறப்பதா என யோசிக்கும் முன்னேயே அவரது தலை ஜன்னல் ஊடாக தெரிந்தது. அந்த பகுதியில் தான் இருக்கிறார் என தெரிந்து விட நான் ஜன்னல் வழியாகவே அங்கே என்ன செய்கிறார் என பார்க்க தொடங்கினேன். வழமையாக அந்த பகுதியில் துவைத்த உடுப்புகளை காய போடுவது வழக்கம் பெரிதாக காற்று வாராத பகுதியென்பதால் அம்மா தனது பிரா ஜட்டிகளை தான் அங்கு காயபோடுவதுதான் வழக்கம். அதனால் இவர் என்னடா அங்கே செய்கிறார் என்று பார்த்துகொண்டு இருக்கும் போதே உடுப்பு காய போடும் கோடி அசைவது தெரிந்தது . சில வினாடிகளில் அவர் அங்கிருந்து வெளியே நடக்க தொடங்கினார் எதையோ பாக்கெட்டில் போட்டு கொண்டு நடப்பது போல சென்றார். நான் கொஞ்ச நேரம் இருந்து விட்டு அவர் சென்று முடிந்ததும் அந்த இடத்துக்கு சென்று பார்த்தேன். அங்கே கொடி அசைந்ததில் அம்மாவின் பிரா ஒன்று கீழே விழுந்து கிடந்தது மற்றும் கொடியில் அம்மாவின் இன்னுமொரு பிராவும் ஜட்டியும் கிடந்தது . வழமையாக அம்மா தனது பிரா ஜட்டி இரண்டையும் ஒன்றாக துவைத்து காய போடுவது தான் வழக்கம் இப்போது அம்மாவின் ஒரு ஜட்டி மற்றும் மிஸ்ஸிங். ஹவுஸ் ஓனர் தான் அதை எடுத்து கொண்டு போயிருக்க வேண்டும் என்று எனக்கு உறுதியாக தெரிந்தது . இவன் ரொம்ப ஆபத்தானவனாக இருப்பன் போல என நினைத்து கொண்டு இதை எப்படி அம்மாவிடம் சொல்லுவது என யோசித்து கொண்டு உள்ளே வந்தேன். வந்து பார்க்கும் போது மணி 9 ஐ தாண்டியிருந்தது எனக்கு காலேஜ் க்கு பிந்தி விடும் என்பதால் நான் வீட்டை பூட்டி விட்டு அம்மா சொல்லியபடி ஒரு சாவியை பூச்சாடியில் வைத்து விட்டு சென்றேன். காலேஜுக்கு சென்றதும் இன்றைக்கு காலையில் பாடங்கள் இல்லை என தெரிந்தது மதியம் 3 மணிக்கு தான் முக்கியமான பாடம் இருந்தது. நண்பன் ஒருத்தனுடன் சேர்ந்து என்ன செய்யலாம் என பேசிக்கொண்டும் இருக்கும் போது அவன் தன்னிடம் புதிதாக இரண்டு செக்ஸ் படங்கள் இருப்பதாகவும் வேண்டுமென்றால் எங்கேயாவது நெட் கபே க்கு சென்று பார்போம் என்றும் சொன்னான். எனக்கு செக்ஸ் படங்களை தனியாக அதுவும் கை போட்டுக்கொண்டே பார்க்க தான் பிடிக்கும். அதனால் நான் மெல்ல அவனிடம் எனக்கு ரொம்ப தூக்கம் வருகிறது என்றும் நான் வீட்டுக்கு சென்று விட்டு மதியம் வருவதாகவும் சொன்னேன் அவனும் ஒரு படத்தை என்னிடம் கொடுத்து விட்டு மதியம் மற்ற படத்தை தருவதாக சொன்னான். நானும் சரி என்று அம்மா வருவதற்குள் போய் பார்த்து விட வேண்டும் என்று விரைவாக வீட்டுக்கு சென்றேன். செல்லும் போது மணி பத்தரை ஆகிவிட்டிருந்தது நல்லவேளை அம்மா வந்து இருக்கவில்லை நான் உடனே வீட்டை திறந்து உள்பக்கமாக சாவியை போட்டு முடிவிட்டு என் ரூமுக்குள் சென்று போட்டிருந்ததை கூட கழட்டாமல் கம்பியுட்டரை ஒன் பண்ணி பார்க்க தொடங்கினேன். அது ஒரு இன்செஸ்ட் படம் அதாவது அம்மா தனது வளர்ப்பு மகனோடு உறவு கொள்ளும் படம். அந்த படத்தை பார்க்கும் போது ஏனோ எனக்கு இன்று அதிகமாக கிளர்ச்சி ஏற்பட தொடங்கியது இன்று காலையில் நடந்த சம்பவமோ தெரியவில்லை. அம்மா மேல் ஆசை அதிகமாக தொடங்கியது. திடிரென 11 மணி அடிக்க யாரோ வீட்டுக்கு வரும் சத்தமும் கேட்டது கதவை தட்டட்டும் பார்போம் என நினைத்துக்கொண்டு தொடர்ந்து பார்க்க தொடங்கினேன் . அப்போது கதவை சாவி போட்டு திறக்கும் சத்தம் கேட்க அம்மா தான் வந்து விட்டால் என தெரிந்து கொண்டு அவசரமாக கம்ப்யூட்டர் ஐ ஆப் செய்து விட்டு கட்டிலில் படுத்து கொண்டேன் கேட்டால் தலை வலி என சொல்லாம் என நினைத்து கொண்டும் இருக்கும் போது. அம்மா எந்திரன் பட பாடலை முணுமுணுத்து கொண்டே உள்ளே வந்தாள். நான் மெல்ல எழும்பி கதவிடுக்கில் தெரிவதை பார்க்க தொடங்கினேன் அம்மாவும் வீட்டில் யாரும் இல்லை என நினைத்து கொண்டு முந்தானையை கழட்டி கொண்டே அவளது ரூமுக்கு செல்ல தொடங்கினாள். அப்போது தான் அம்மாவை பிளவுசுடன் பார்த்தேன் . செம்ம கட்டை தான். ஏனோ எனக்கு பார்த்து கொண்டிருந்த செக்ஸ் படத்தின் அம்மாவை நினைவூட்டினாள். அவள் ரூமுக்கு சென்றதும் எனக்கு திடிரென ஒரு விபரீத எண்ணம் தோன்றியது மெல்ல சென்று அம்மா உடை மாற்றுவதை பார்த்தல் என்ன என்று. அந்த சமயத்தில் வேறு எதவும் யோசிக்காமல் உடனே சத்தம் கேட்காமல் அம்மாவின் ரூமை நோக்கி சென்றேன் . அம்மா வீட்டில் யாரும் இல்லாத படியால் கதவை திறந்து கொண்டே சாரியை கழட்ட தொடங்கியிருந்தாள் எனக்கு திரைச்சீலையில் தெரிந்த இடைவெளியில் அம்மாவை பார்த்து கொண்டிருந்தேன். அம்மா தனது சாரியை முழுவதுமாக கழட்டி ( www.indiansexstories.mobi ) கொசுவத்தை உருவ போதும் போது வீட்டின் காலிங் பெல் பலமாக அடித்தது அம்மா உடனே தனது சாரியை கழட்டி கட்டிலில் போட்டு விட்டு தனது போட்டுக்கொள்ள எதாவது ஹவுஸ் கோட் ஐ தேட எதுவும் அப்போது அருகில் இருக்கவில்லை உடனே கழட்டி கிடந்த சாரியை எடுத்து தோளோடு போர்த்திக்கொண்டு கதவை திறக்க ஆயத்தமானாள். நான் உடனே எனது அறைக்கு சென்று கதவை மெல்ல பூட்டி கொண்டு என்ன நடக்கிறது என்பதை கவனிக்க தொடங்கினேன். ஹவுஸ் ஓனர் தான் சொன்ன மாதிரி சரியாக 11 மணிக்கு வந்திருந்தார் அம்மா போய் கதவை லேசாக திறந்து கொண்டு பார்க்க அவர் கதவை தள்ளி கொண்டு உள்ளே வந்து வந்தார். அம்மாவுக்கு ஒரே தர்ம சங்கடமாக போய்விட்டது அவள் முகத்திலேயே தெரிந்தது. ஹவுஸ் ஓனர் அங்கிள் அம்மாவை பார்த்த பார்வை இருக்கிறதே அப்பப்பா அப்பிடியே தின்று விடும் பார்வை ஒன்று பார்த்தார் அப்போது தான் நானும் கவனித்தேன் அம்மா ஒரு மெல்லிய துணியாலான பாவடையே போட்டிருந்தாள் அவளது வெள்ளை கலர் பேண்டீஸ் நன்றாக வெளியே தெரிந்து கொண்டிருந்தது . அங்கிளின் கண்கள் கொஞ்ச நேரம் அங்கே இளைப்பாறிவிட்டு வந்தன. அம்மாவுக்கும் அங்கிளின் பார்வை புரிய அவள் உடனே அண்ணா கொஞ்சம் இருங்க வாடகை பணத்தை தாரேன் என கொஞ்சம் நகர்ந்தாள். அதற்கு அங்கிள் அவசரமில்ல நீங்க மெதுவாகவே தாங்க என்று சொல்லிவிட்டு சோபாவில் உட்கார்ந்தார். அவர் உட்கார்ந்ததும் அம்மாவுக்கு அவர் உடனே போக போவதில்லை என புரிந்து போய்விட்டது. அதுவும் இந்த மனிதன் தன்னை உற்று உற்று பார்ப்பது அம்மாவுக்கு ஏதோ செய்திருக்க வேண்டும் . பணத்தை எடுத்து வந்து அங்கிள் அருகில் நின்று கொண்டு கொடுத்தால் . அம்மாவின் தொப்புள் அங்கிளின் கண்களுக்கு நேராக இருந்து விருந்தளித்து கொண்டிருந்தது அத்தோடு அம்மா பாவாடை நாடா கட்டும் இடத்தில் உள்ள open அம்மாவின் பேண்டீசை காட்டிக்கொண்டிருந்தது. கருப்பு பாவாடை வெள்ளை பேண்டீஸ் என்பதால் அது நன்றாக விளங்கியது. அங்கிள் பணத்தை வாங்கி சோபாவில் வைத்து விட்டு மற்ற கையில் இருந்து ஏதோ ஒரு துணி போன்ற ஒன்றை எடுத்து அம்மாவிடம் நீட்டினார் முதலில் எனக்கு அது என்ன என்று விளங்கவில்லை பின்புதான் அது அவர் காலையில் எடுத்து சென்ற அம்மாவின் பேண்டீஸ் என்று விளங்கியது. அவர் அம்மாவிடம் , இது உங்களோடதா கிழே விழுந்து கிடந்தது காற்றுக்கு விழுந்து இருக்கும்னு நினைக்கிறேன் என கொடுத்தார் அம்மாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை அதை வாங்கி தேங்க்ஸ் என அருகில் வைத்தாள்.அங்கிள் மெதுவாக அம்மாவிடம் பேச்சு கொடுக்க தொடங்கினார். பணத்துக்கு அவசரம் இல்லை நீங்க என் பேங்க் க்கு எல்லாம் போய் எடுக்கிறிங்க பணம் வரும் போது கொடத்து இருக்கலாமே என்று பேச தொடங்கினார். அம்மா, அதற்கு இல்ல எப்படியும் கொடுக்க வேணும் தானே அதான் என சொல்லிவிட்டு கொஞ்சம் இருங்க நான் change பண்ணிட்டு வந்திடுறேன் என உள்ளே செல்ல தொடங்கினாள். அப்போது அங்கிள் இல்ல நான் கிளம்புறேன் எனக்கு கொஞ்சம் தண்ணி மட்டும் தாங்கன்னு சொல்ல அம்மா தண்ணி எடுப்பதற்காக கிச்சனுக்கு சென்றாள். அங்கிள் அம்மா கிச்சனுக்கு செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தார். அம்மா பாவாடையுடன் நடக்கும் போது அவளின் அழகாக உருண்டு திரண்ட தொடைகள் அசைவதை பார்க்க எனக்கே என்னவோ போலிருந்தது கண்டிப்பாக அங்கிளின் கம்பு படையெடுத்து ஆடிக்கொண்டிருக்கும் என நினைத்து கொண்டு அங்கிளை பார்த்தேன் நினைத்ததை போல அங்கிள் தன் கம்பை தனது பாண்ட்டுக்கு மேலாக தடவி கொண்டிருந்தார். அம்மா கிச்சனிலிருந்து தண்ணீர் எடுத்துகொண்டு திரும்பும் போது அங்கிள் சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு காரியம் செய்தார் அம்மா அருகில் வைத்துவிட்டு போன அவளது பாண்டீஸ் ஐ எடுத்து தனது ட்ரவுசருக்கு மேலாக வைத்து தேய்க்க தொடங்கினார் . தண்ணீர் எடுத்து வந்த அம்மா இதை பார்த்ததும் அப்படியே அதிர்ச்சியாகி உறைந்து நின்றாள். அங்கிளும் தேய்ப்பதை நிறுத்தாமல் தடர்ந்து கண்களை மூடி தேய்த்து கொண்டிருக்க அம்மா அருகில் வந்து அண்ணா என்ன பண்ணிட்டு இருக்கீங்க அதை இங்க தாங்க என்று பாண்டீஸ் ஐ இழுத்தாள் அங்கிளும் பாண்டீஸ் ஐ விடாமல் இருக்க அம்மா அங்கிளின் கையை பற்றி பாண்டீஸ் ஐ பறிக்க முற்பட்டாள். அனால் அங்கிளோ விடாமல் அம்மாவின் கையையும் பேண்டீசுடன் சேர்த்து பிடித்து தன் கம்பை தேய்க்க தொடங்கினார். அம்மா மேலும் அதிர்ச்சியாகி, என்ன பண்றீங்க ? என்னோட ஹஸ்பண்டுக்கு தெரிஞ்சா என்ன நடக்கும் தெரியுமா? விடுங்க என்னை என்று கொஞ்சம் பெரிதாகவே கத்த தொடங்கினாள். அங்கிள், அவருக்கு தெரிஞ்சா தானே தெரியாம பண்ணினா ஒண்ணும் நடக்காதே என்று சொல்லிக்கொண்டே அம்மாவின் இடுப்பை பிடித்து தடவ ஆரம்பித்தார். அம்மாவுக்கு லேசாக சிலிர்த்திருக்க வேண்டும், லேசாக கண்களை மூடி அந்த தடவலை அனுபவிப்பது அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது ஆனால் உடனே சுதாரித்து கொண்டு , ச்சீ ..விடுங்க நீங்க நினைக்கிற மாதிரி ஆளில்லை நான் என்று அங்கிருந்து விலக முற்பட்டாள். ஆனால் அங்கிளுக்கு அம்மாவின் சிலிர்ப்பு தெரிந்திருக்க வேண்டும் போல மெல்ல அம்மாவின் பாவாடை நாட கட்டும் இடத்தில் இருக்கும் open ஊடாக தன் கையை உள்ளே செலுத்தி மெதுவாக அம்மாவை தன் பக்கமாக தள்ளினார். அம்மாவின் எதிர்ப்பு இப்போது கொஞ்சம் குறைய அங்கிள் மெல்ல அம்மாவின் தொப்புளுக்கு அருகில் தன் முகத்தை கொண்டு சென்று உதட்டை லேசாக தேய்த்து முத்தமிட முயன்றார். அம்மா லேசாக குனிந்தபடி அவரது மற்ற கையையும் அவளின் பேண்டீசையும் பற்றிக்கொண்டு இருந்ததால் அவளின் முலைகள் அங்கிளின் தலைய வருடின. அங்கிள் அம்மாவின் எதிர்ப்பு குறைவதை கண்டுகொண்டு அவளை மேலும் இறுக்கமாக அணைத்து வயிற்றில் அழுத்தமாக முத்தமிட்டார். உடனே அம்மா இப்போதுதான் சுயநினைவுக்கு வந்த மாதிரி, ஐயோ வேண்டாம் .. யாரவது பார்த்துட்டா பிரச்சினை ஆகிரும் என கதவுப்பக்கம் திரும்பினாள். அங்கிளும் அம்மாவின் எண்ணத்தை புரிந்து கொண்டு , யாரும் பார்த்தா தானே பிரச்சினை கதவை அடைச்சிருவோம் என சொல்லிக்கொண்டு அம்மாவே எதிர்ப்பாக்காதபடி அம்மாவை தள்ளிக்கொண்டு கதவை நோக்கி சென்றார். அம்மாவை ஒரு கையால் அணைத்தபடி கதவை சாத்திவிட்டு அம்மாவை அப்படியே கதவோடு வைத்து அம்மாவின் கழுத்தில் முத்தமிட்டார். அம்மாவிடமிருந்து ஸ்ஸ்ஸ்ஹா ….என லேசான முனகல் வெளிப்பட்டது. அம்மாவின் முனகலை தனக்கான சிக்னலாக எடுத்து கொண்ட அங்கிளின் கைகள் அம்மாவின் இடுப்பை தடவ தொடங்கின. அம்மாவும் அந்த முரட்டு கைகளின் அழுத்தத்தால் தனது உடம்பில் மெல்லிய அசைவுகளை வெளிப்படுத்தினாள். அங்கிள் மெல்ல தன் கைகளை மேலே கொண்டு சென்று அம்மாவின் இரு அக்குள் பகுதியையும் தன் இரு கைகளால் பிடித்து பெரு விரல்களால் அம்மாவின் முலைகளின் நுனிபகுதியை உரச தொடங்க அம்மா ஹ்ஹ்ஹா…..என்ற முனகலோடு தான் போர்த்தியிருந்த சாரியை பின்புறமாக நழுவ விட்டாள். அங்கிள் அப்படியே அம்மாவை வளைத்து தாடையில் முத்தம் பதிக்க அம்மா அவரை காமம் சொட்டும் பார்வையோடு பார்த்துகொண்டு அவரின் கழுத்தை தன் கைகளால் வளைத்து கட்டிக்கொண்டு அவர் உதட்டை நெருங்க அங்கிளும் அதை புரிந்து கொண்டு அம்மாவை அனைத்து அவள் உதட்டில் முத்தமிட்டார். சும்மா சொல்லக்கூடாது இங்க்லீஷ் படத்தில் கூட அப்படி ஒரு காட்சி வராது அப்படி ஒரு முத்தம். கிட்டத்தட்ட 2 நிமிஷத்துக்கு முத்தமிட்டு கொண்டு இருந்தார்கள் இரண்டு பேரும். அங்கிள் உட்கார்ந்தபடியே அம்மாவின் இடுப்பில் கைகளைக் கோர்த்து பின் பக்கமாக அம்மாவின் தூக்கிய குண்டிகளை பிணைந்தார்.பிணைந்து கொண்டே அம்மாவின் குழி தொப்புளில் தன் கறுப்பு உதட்டால் எச்சில் அபிஷேகம் செய்தார். ‘ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…காகாகா…’ என் சுன்னி விறைத்து சுவரை முட்டியது. அம்மாவின் இடுப்பு மடிப்பிலும் அங்கிளின் கறுப்பு கைகள் விளையாட ஆரம்பித்தன.அங்கும் அங்கிளின் எச்சில் அபிஷேகம் தொடர்ந்தது.அங்கிளின் எச்சில் பட்ட என் அம்மாவின் இடுப்பு வெளிச்சத்தில் சிவந்து அழகாக மின்னியது.என் அம்மாவோ முனகிக் கொண்டு அங்கிளின் வழுக்கைத் தலை மேல் தன் மாங்கனிகளை தூக்கி வைத்து அழுத்தினார்கள்.உடனே அங்கிளின் கவனம் அங்கு சென்றது.ஒரு கையை அப்படியே மேலுயர்த்தி அம்மாவின் வலது மார்பை கசக்கினார்.அம்மாவின் கண்கள் இன்பத்தில் மூடியது. ‘அடக் கடவுளே..இவ்வளவு பெரிய காய்ங்களா…என் பொண்டாட்டியோடதுதான் பெருசுன்னு நினச்சேன்..அப்பாஆஆ..அகல்யா..உங்களோடது..அய்யோ அளவையே கெஸ் பண்ண முடியலையே..இவ்வளவு பெருசா இருந்தாலும் முலை ரெண்டும் நேரா நிமிர்ந்து நிக்குது பருங்க…என்றபடி அம்மாவின் முலையை ஒரு கடி கடித்தார். ‘ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…சார்..ப்ளீஸ்..மெதுவா..மெ துவா..வலிக்குது…’ ‘ஓ.கே….ஓ.கே…சாரி..அகல்யா…உணர்ச்சிவசப்பட்டுட் டேன். என்று அங்கிள் அம்மாவின் பிளவுஸ் ஹூக்குகளை மெதுவாக கழற்ற தொடங்கினார். அம்மாவின் கைகள் அங்கிளின் முதுகை வருடியபடியே இருக்க அங்கிள் அம்மாவின் ஹூக்குகளை எல்லாம் கழற்றி முலைகளை பிராவோடு சேர்த்து பிசைய தொடங்கினார். அம்மாவோ ஹாவ்வ்ம்மா ..ம்ம்மெல்ல….செய்ய்ங்க..ம்ம்ம்ஹா என தன கைகள் இரண்டையும் தூக்கி கதவில் வைத்துகொண்டு அனத்தினாள்.அம்மாவின் அனத்தல்களால் மேலும் சூடான அங்கிள் வெறி கொண்டமாதிரி முத்தமிட தொடங்கினார் அம்மாவும் அங்கிளின் செய்கைகளால் உந்தப்பட்டு தனது இடுப்பை அங்கிளின் இடுப்போடு சேர்த்து தேய்த்தாள். அங்கிளும் அம்மாவின் அவசரத்தை புரிந்து கொண்டு அவள் உதடுகளை கவ்வியபடியே தான் போட்டிருந்த ஷர்ட்டை கழற்றினார் அதேநேரம் அம்மாவும் தன பிளவுசை பின்புறமாக கழற்றி போட்டாள் பிளவுசை கழற்றியதும் தான் அம்மாவின் முலைகளை பிராவுடன் முதல்முதலாக பார்த்தேன் சும்மா கிண்ணென்று தூக்கிக்கொண்டு நின்றது ரெண்டும் அங்கிளும் அதைப் பார்த்து கொஞ்சம் அசந்துவிட்டார் எனதான் தெரிந்தது. அங்கிள் தன இரண்டு கைகளாலும் அம்மாவின் முலைகளை அப்படியே அள்ளி ஒன்றாக சேர்த்து முலை பிளவில் முத்தமிட்டு கொஞ்ச நேரம் அந்த இடத்தை நாக்கால் நக்கினார். அவர் அப்படி செய்யும் பொது அம்மாவின் கைகள் அங்கிளின் தலையை கோத இடுப்பு அங்கிளின் இடுப்பை அழுத்தியது. அம்மாவின் நோக்கத்தை புரிந்துகொண்ட அங்கிள் அம்மாவின் முன் மண்டியிட்டு உட்கார்ந்து அம்மாவின் தொப்புளை தன் நாக்கை நீட்டி தொட்டார் அம்மாவோ கம்பியாக வளைய அங்கிள் அம்மாவின் குண்டியை இருகைகளாலும் பிடித்து தன் பக்கமாக இழுக்க அம்மாவின் புண்டை சரியாக அங்கிளின் வாய்க்கு நேராக வந்தது. அங்கிள் அம்மாவை தன் இரு கைகளால் ஏந்தியவாறே அம்மாவின் புண்டையில் பாவாடைக்கு மேலாக தன் மூக்கை லேசாக தேய்க்க அம்மா, ஸ்ஸ்ஸ்சார் ம்ம்மாஆவ்வ் அங்க என்ன பண்ணுரிங்க?? என எனக்கு என்னமோ மாதிரி இருக்கு ஹ்ஹ்ஹ்ஹஹம்மா அஆஆவ்வ் என அனத்தி கொண்டு அடிவயிற்றை தன் கையால் தேய்த்தாள் அங்கிள் அம்மாவின் பின்புற கோளங்களை அம்மாவுக்கு வலிக்கும் மட்டும் பிசைந்து கொண்டு அம்மாவை பார்த்து ஏன்? அகல்யா உங்க புருஷன் இப்படியெல்லாம் செய்ய மாட்டாரா என்று கேட்க அம்மா அங்கிளை பார்த்து லேசாக சிரித்தாள் அது காம சிரிப்பா இல்லை கள்ள சிரிப்பா என எனக்கு புரியவில்லை ஆனால் அங்கிளுக்கு அம்மாவின் சிரிப்பு அவளது ஆசையை உணர்த்தியிருக்க வேண்டும் போல அவரும் லேசாக சிரித்து கொண்டு அம்மாவின் புண்டையை அழுத்தி முத்தமிட்டார் அம்மாவின் உதடுகள் குவிந்து ஓஒஹ்ஹ் என்ற முனகலுடன் கைகள் அங்கிளின் கழுத்த இறுக்கின. அங்கிளும் அம்மாவை சீண்ட நினைத்தாரோ என்னவோ தன நாக்கை கூர்மையாக நீட்டிக்கொண்டு அம்மாவின் புண்டையை நாக்கால் தொட்டார் அம்மாவின் உடல் ஹஹ்ஹ என்ற சத்தத்துடன் ஒருதடவை சிலிர்த்தது அங்கிள் மறுபடியும் அதேபோல் நாக்கால் தொடுவதும் எடுப்பதுமாக செய்ய அம்மா ஹ ஹ ஹ என விட்டு விட்டு முனகிகொண்டிருந்தாள் கொஞ்ச நேர விளையாட்டுக்கு பின் அம்மா பொறுக்க முடியாமல் அங்கிளை மேலே இழுத்து அவர் உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டு சார் உள்ளே போயிரலாம் என அங்கிளின் சுண்ணியை வருடியபடியே சொன்னாள். அங்கிளும் சரி என்று அங்கேயே தனது பாண்ட்டை கழற்றி போட்டார் அங்கிளின் சுண்ணியின் சைஸ் அவரின் ஜட்டிக்கு மேலாகவே தெரிந்தது. நன்றாக தினவெடுத்த பாம்பாக ஜட்டியில் முட்டிக்கொண்டு இருந்த அதை பார்த்தால் எந்த பெண்ணுக்குமே ஆசை வரும் அம்மா மட்டும் விதிவிலக்கா என்ன. அங்கிளின் சுன்னியை ஆசையை தடவிக்கொண்டே மீண்டும் அங்கிளிடம் ஏதோ சொல்ல அங்கிள் உடனே அம்மாவை அலேக்காக தூக்கினார், அம்மாவோ ஓவ்வ்….பார்த்து என்று அங்கிளின் கழுத்தை கட்டிகொண்டாள் என்னால் என் கண்ணையே நம்ப முடியவில்லை , என் அழகு தாய், பத்தினி என்று நான் நினைத்துகொண்டிருந்த என் அம்மா வெறும் பிரா பெட்டிகோட்டுடன் இன்னொரு ஆணின் கழுத்தை கட்டிக்கொண்டு தன்னை பெட் ரூமுக்கு கூட்டி சென்று ஓக்குமாறு சொல்லி அவனுடன் ரூமுக்கு சென்று கொண்டிருக்கிறாள். அங்கிள் அம்மாவை தூக்கிக்கொண்டு ரூமுக்குள் சென்றதும் என்னால் உடனே அந்த ரூமுக்கு சென்று பார்க்க முடியவில்லை. மெல்ல சில செகண்ட்ஸ் வெயிட் பண்ணி மெல்ல எட்டி பார்க்க தொடங்கினேன். வீட்டில் யாரும் இல்லை என்ற நினைப்பில் அறை கதவை கூட முடாமல் அம்மா காரியத்தில் ஈடுபட்டிருந்தாள். நான் மெல்ல பார்க்கும் போது அம்மா கட்டில் விளிம்பிற்கு அருகில் நின்று கொண்டு அங்கிளின் மார்புக்கு தன் உதடுகளால் ஒத்தடம் கொடுத்து கொண்டு இருந்தாள். அங்கிள் உடனே தன் ஜட்டியை அப்படி இருந்தவாறே கழற்றி போட அங்கிளின் சுன்னியைக் கண்டு நானும் அம்மாவும் பிரமித்துப் போனோம்.9” நீளத்தில் கறுப்பாக உலக்கைபோல தடித்து கிடத்தட்ட குதிரையின் பூலு போல் காணப்பட்டது.விறைத்து நின்ற சுன்னியுடன் அம்மாவை கட்டிலில் தள்ளி அப்படியே அம்மா மேல் படர்ந்தார். அங்கிளின் தடித்த சுன்னி சரியாக அம்மாவின் புண்டையை பாவாடைக்கு மேலாக அழுத்தியது. அங்கிளும் சும்மா இருக்காமல் தன சுன்னியை அம்மாவின் புண்டையில் பாவாடைக்கு மேலாக வைத்தி தேய்க்க தொடங்க அம்மா புழு போல நெளிய தொடங்கினாள் அங்கிளின் சுன்னி அம்மாவின் புண்டையை அழுத்த அழுத்த அம்மாவின் தொடை இரண்டும் நன்றாக விரிந்து அங்கிளை உள்ளே இழுத்தன. அங்கிளும் வாய்ப்பை பயன்படுத்தி நன்றாக அம்மாவின் புண்டையில் தன் சுன்னியை தேய்க்க தொடங்கினார். அம்மாவின் முனகல்களும் அதிகரிக்க மெல்ல தன் கால்களை விரித்து மேலே தூக்கினாள். அப்போது அவளின் பெட்டிகோட் முழங்கால் வரை ஏறி அழகிய வெள்ளை கால்களை அங்கிளுக்கு காட்டியது. அங்கிளும் அம்மாவின் தொடைகளை தடவிக்கொண்டு அம்மாவின் முலைகளை பிராவுடனேயே சுவைத்து கொண்டிருந்தார். கொஞ்ச நேர முலை சப்பலுக்கு பின் அங்கிள் எழுந்து அம்மாவை அவளின் கால்களை பிடித்து கட்டிலின் விளிம்புக்கு இழுத்தார். அம்மாவும் தடையேதும் இல்லாமல் வழுக்கிக்கொண்டு வருவது போல விளிம்பிற்கு வந்தாள். அப்படி வந்ததில் அம்மாவின் பாவாடை அவளின் இடுப்புக்கே ஏறிவிட அவள் வெள்ளை நிற பேண்டீஸ் அப்படியே தெரிந்தது . அங்கிள் தன் கையை அம்மாவின் புண்டையில் வைத்து பெருவிரலால் அவள் புண்டை துளையை தேய்த்தார். அம்மாவோ கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் தன் தொடைகளை இன்னும் விரித்து அங்கிள் தன் புண்டையை நோண்ட வழி செய்து கொடுத்தாள். அங்கிள் நன்றாக தேய்த்து கொண்டே என்ன அகல்யா இவ்வளவு ஈரமா இருக்கு என கேட்க அம்மா, எல்லாம் நீங்க செய்த வேலைதான் என்று அங்கிளின் கைவேலையை ரசிக்க தொடங்கினாள். அங்கிளும் இன்னும் வேகமாக அம்மாவின் பேண்டீஸை ஒரு பக்கமாக ஒதுக்கிவிட்டு தன் விரலால் நன்றாக தேய்க்க தொடங்கினார். அம்மாவோ, ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பா அஆவ் ஐயோ ம்ம்ம் அஆவ் அம்மா நல்லா அப்படிதான் ம்ம்மா ஸ்ஸ்ஸ் ஐயோ என முனகி கொண்டிருந்தாள். நான் கை விரலுக்கே இப்படி என்றால் அங்கிள் அங்கே வாக்கை போட்டால் என்னவாகும் என யோசித்து கொண்டிருக்கும் போதே அங்கிள் அம்மாவை இழுத்து அவள் புண்டையில் வை வைத்தார். அம்மாவிடம் இருந்து ஓஒஹ்ஹ என பெரிய முனகல் ஒன்று வெளிப்பட்டது. அங்கிள் நன்றாக தனது நாக்கை போட்டு அம்மாவின் புண்டையை நக்க தொடங்கினார் . அம்மாவின் தலை அங்கும் இங்கும் இன்பத்தால் ஆடியது. அவர் அதைபற்றி எல்லாம் கவலை படாமல் மேலும் மேலும் நாக்கால் அம்மாவின் புண்டையை துழாவ தொடங்கினார்.அம்மாவும் தன இடுப்பை தூக்கி தூக்கி அங்கிளின் துழாவாலுக்கு ஏற்ற விதத்தில் அசைத்தாள். அங்கிள் கொஞ்ச நேரத்தில் அம்மாவின் பேண்டீஸை கழற்ற தொடங்க அம்மாவும் தன குண்டியை தூக்கி கழற்ற உதவினாள். கழற்றி விசியதில் அம்மாவின் பேண்டீஸ் எனக்கு அருகே வந்து விழுந்தது என் கைக்கு எட்டும் தூரத்தில் விழுந்தாலும் என்னால் எடுக்க முடியவில்லை ஆனால் அம்மாவின் காம வெறியை அவளது பேண்டீஸை பார்க்கும் போதே தெரிந்தது நன்றாக நனைந்து சொத சொத என அவளின் புண்டை படும் இடத்தில் லேசான வெள்ளை பசை போன்ற ஒன்றுடன் இருந்தது. அங்கிள் அம்மாவின் கால்களை நன்றாக விரித்து தனது விரலை அவள் புண்டையில் நுழைத்து கொண்டு நக்க தொடங்கினார். நல்ல ருசியான ஐஸ் கிரீமை நக்குவதை போல நக்க தொடங்க அம்மா, ஐயோ, ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பா ஆவ நல்லா அப்படித்தான் ம்ம்ம்ம்மா ஐயோ என்னமோ பண்ணுதே ஐயோ சார் என்னெல்லாமோ பண்ணுது ஆவ் அம்மா நல்லா செய்யுங்க வேகமா இன்னும் வேகமா செய்ங்க என பிதற்றினாள் அங்கிள் அவளின் பிதற்றல்களை கேட்டு இன்னும் வெறி பிடித்தவர் போல செய்ய ஆரம்பித்தார் . இப்படியே ஒரு பத்து நிமிடம் செய்தபின் அங்கிள் அம்மாவின் பெட்டிகோட்டை கழற்றி போட்டார். என் அழகிய தாய் இப்போது இன்னொரு ஆண் முன்பாக வெறும் பிராவுடன் கால்களை விரித்து கொண்டு படுத்து கிடந்தாள். அங்கிள் இப்போது அம்மாவின் கால்களை விரித்தவண்ணம் அப்படியே தூக்கி அவளின் புண்டையை நன்றாக விரிந்து இருக்குமாறு செய்தார் அம்மாவும் மறுப்பேதும் சொல்லாமல் நன்றாக ஒத்துழைத்தாள். அப்போதுதான் அவளது புண்டையை நேரடியாக நன்றாக பார்த்தேன் லேசான மயிருடன், ஒரு கிழமைக்கு முன்னாள் தன ஷேவிங் பண்ணியிருப்பாள் போல , புண்டை ரசத்தாலும் அங்கிளின் எச்சிலாலும் நனைந்து பள பள என இருந்தது அங்கிள் அம்மாவின் கால்களை விரித்து இன்னும் ஆசையாக நக்க தொடங்கினார் அம்மாவுக்கு புண்டையில் மேலும் ஒழுகத் தொடங்கியது. இப்படி ஒரு பதினைந்து நிமிடம் செய்த பின் அங்கிள் அம்மாவின் பிராவை பற்றி முன்னால் இழுக்க அம்மா தன பிராவை கழற்றி விட்டு எழுந்தாள். அங்கிள் தனது சுன்னியை கைகளால் நீவி விட்டு கொண்டு தயாராக இருந்தார். அம்மா அருகில் வந்ததும் , அகல்யா எனக்கு உங்க வாயில இத சப்ப கொடுக்கணும்னு ரொம்ப ஆசை இப்போ சப்புங்க என்றார், அம்மா, ஐயோ சார் எனக்கு இதெல்லாம் பழக்கமில்ல, என் ஹஸ்பெண்டுக்கு கூட செஞ்சதில்ல என்றாள். அங்கிள், புருஷன் கூட எல்லாத்தையும் செய்ய முடியாது அதுக்குதான் கள்ளபுருஷன் வேணும்னு சொல்லறது. நான் உங்க புண்டைய நக்கலையா உங்க புருஷன் உங்க புண்டைய நக்குவாரா அப்படியே நக்கினாலும் என்ன மாதிரி நக்குவாரா என்ன, பேசாம என்ன மூட கெடுக்காம சப்புங்க என்றார், அம்மா என்ன நினைத்தாலோ தெரியவில்லை அங்கிளின் சுன்னியை தன கைகளால் எடுத்து மொட்டில் ஒரு முத்தம் கொடுத்து சூப்ப தொடங்கினாள். நன்றாக ப்ளக் ப்ளக் என சத்தம் வர ஒரு செக்ஸ் பட நடிகை போல சூப்ப ஆரம்பித்தால். அங்கிள், என்ன அகல்யா சூப்ப தெரியாதுன்னு சொன்னிங்க இப்படி சூப்புரிங்க எனக்கு யாருமே இப்படி சூப்புனதில்ல தெரியுமா என கேட்டு கொண்டே அம்மாவின் வாயில் ஓக்கலானார். அம்மாவும் ஊம் ஊம் என தன கையால் அங்கிளின் சுன்னியை கையடிப்பது போல் செய்துகொண்டு ஆர்வமாக ஊம்பினாள். கொஞ்ச நேர ஊம்பலுக்கு பின் அங்கிள் தன சுன்னியை வெளியே எடுத்து அம்மாவை கட்டிலில் சாய்த்து அவளது புண்டை பிளவில் சுன்னியை தேய்த்தார். அம்மா உடனே சிரித்துக் கொண்டே..அண்ணா …மெதுவா பண்ணணும் ..சரியா..இப்போவே சொலிடுறேன்.இவ்வளவு பெருசெல்லாம் நான் இதுவரை உள்ளே எடுத்துகிட்டதில்லை…ப்ளீஸ் ..மெதுவா உள்ளே அழுத்துங்க …’ அங்கிள், ம்ம்ம்ம்ம்ம்ம்….சரி…பாப்போம்….’என்றார் அம்மா தன் தொடைகளை விரித்துக் கொடுக்கவே அங்கிள் தன் கறுப்பு குதிரைப் பூலை அம்மாவின் கூதியில் மெதுவாக வைத்து அழுத்தினார்.அங்கிள் அதை அம்மாவின் கூதியின் உள்நோக்கி குத்த அம்மாவும் தன் இடுப்பை ஆட்டி ஆட்டி கஷ்டப்பட்டு முனகிக் கொண்டே அதை உள்வாங்கினர்கள்.2 நிமிடத்தில் அங்கிளின் குதிரைப் பூலைக் காணவில்லை.எங்கு போனது????அதை என் அம்மாவிடம் தான் கேட்க வேண்டும்.அதைத் தான் அவரும் அம்மாவிடம் கேட்டார்.அம்மாவோ சிரித்துக் கொண்டே அங்கிளின் காதில் ஏதோ சொல்ல அங்கிளோ இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் ‘இல்லை அகல்யா..இதுவரை என் பூல் யார் கூதியிலயும் முழுசா உள்ளே போனதில்லை..ஆனா உங்க கூதிக்குள்ள மட்டும் எப்படி ????அவ்வளவு ஆழமா!!!’என்று வியந்து போனார். சொருகுதல் முடிந்தபின் ஓத்தல் ஆரம்பித்தது. அம்மாவின் இரண்டு சிவந்த கால்களையும் தன் கறுப்பு தோளின் மேல் போட்டுக் கொண்டு என் அம்மாவை என் கண்களுக்கு முன்பாக மெதுவாக ஓக்க ஆரம்பித்தார்.ஓத்தார் ஓத்தார் ஓத்துக் கொண்டே இருந்தார்.20 நிமிடம் விடாமல் ஓக்கவே இப்போது பயங்கர வேகமாக ஓக்கலானார்.என் அம்மாவின் கூதிப்பிளவில் அங்கிளின் கறுப்பு பூல் சென்று வருவதென்னவோ எனக்கு புற்றுக்குள் புகுந்து போகும் கரு நாகத்தை நினைவூட்டியது. ங்க்க்க்க்க்க்க்க்க்க்க்காஆஅ..ங்ங்ங்க்க்க்க்க்காஆ ஆஆ’என்று முனகினார்கள் அம்மா. அங்கிளின் கொட்டைகள் என் அம்மாவின் குண்டியை அடிக்கும் ஓசை ‘ச்ச்சப்..ச்சப்…ச்ச்சப்..ச்சப்… ச்ச்சப்..ச்சப்… ‘என்று அதிகரித்துக் கொண்டே இருந்தது.அப்படியே குனிந்து அம்மாவின் உதட்டையும் முலைகளையும் மாறி மாறி சப்புவதுமாய் இருந்தார். ‘அகல்யா….’அம்மாவின் காய்களிக் கடித்துக் கொண்டே ‘ம்ம்ம்ம்ம்ம்…..ங்க்க்க்க்க்க்க்க்க்க்க்காஆஅ..ங் ங்ங்க்க்க்க்க்காஆஆஆ..சொல்லுங்க அண்ணா ‘உங்களுக்கு உச்சநிலை அடைந்து “அது” வெளியே வரும்போது சொல்லுங்க ..அப்போ பாத்து நானும் எந்தை ஆழத்தில் விடுறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்..அப்போதான் சரியா மிக்ஸிங் ஆகி பிரகாஷுக்கு ஒரு தம்பி பாப்பாவை நாம உருவாக்க முடியும்!!’என்று ஓத்துக் கொண்டே சொல்ல அம்மா வெட்கத்தில் ‘ச்சீ..நீங்க பெரிய ஆளுதான்..என் புருஷனால செய்யமுடியாததையெல்லாம் நீங்க செய்யுறீங்க…நீங்ங்ங்ங்க குத்துற குத்த்த்துல இப்போவே வர்ற மாதிரி இருக்க்க்க்க்கு!!!!’என்றார்கள் அம்மா அடப்பாவி என் அம்மாவை செணை பிடிக்க வைக்காமல் விட மாட்டன் போலிருக்கே..இடையில் என்னையுமல்லவா இழுக்கிறான்..என்று என் மனம் கோபத்தில் கொப்பளித்தது.ஆனால் என் அம்மாவோ…. __________________ஆனால் என் அம்மாவோ ‘ம்ம்ம்ம்ம்ம்….. ங்க்க்க்க்க்க்க்க்க்க்க்காஆ அ..ங்ங்ங்க்க்க்க்க்காஆஆஆ…’என்று முனகிக்கொண்டே அங்கிளை அணைத்துத் தடவிக் கொண்டே இருந்தார்கள். 5 நிமிடம் பிறகு ஓத்தலுக்கு நடுவில் திடீரென்று என் அம்மா ‘வெங்கட் அண்ணா..ம்ம்ம்ம்ம்ம்ம்….இப்போஓஓஓஓஓஓஒ இப்போஓஓஓஓ….எனக்கு வருதூ..’ என்று சொல்ல அங்கிளும் படு வேகமாக அம்மாவை புணர்ந்து முழு பூலையும் உள்ளே அழுத்தி அப்படியே 3 நிமிடம் ஓத்தலை நிறுத்தி கண்களை மூடிகொண்டார்.அந்த 3 நிமிடமும் என் அம்மாவின் முழு உடலும் கிடு கிடு வென சிலிர்த்துக் கொண்டே இருக்க அம்மாவோ அடக்க முடியாமல் ‘ஆஆஆஆஆஆஆஆஆஅ..அய்யோஓஓஓஓஓஒ…ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்…ம் ம்ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்….ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..ம்ம்ம் ம்’ என்று கத்திக் கொண்டே அப்படியே கண்களை மூடியபடி அமைதலானார்கள்.அந்த 3 நிமிடத்தில் அங்கிள் என் சொந்த அம்மாவின் பெண்மையை அபகரித்துக் கொண்டார் என்பது புரிந்தது.அங்கிள் அம்மாவின் முலையின் மேல் வாய் வைத்தபடி அப்படியே அம்மாவின் மேல் படுக்க என் அம்மா சந்தோஷத்தோடு அங்கிளை அணைத்துக் கொண்டார்…வெண்ணையின் மேல் படர்ந்து கிடக்கும் கருப்பட்டி போல்.சற்று நேர உதட்டு முத்தத்துக்குப் பிறகு அங்கிள் தன்பூலை அம்மாவிடம் இருந்து பிடுங்கி எடுக்க ஒரு துளி விந்துகூட வெளியே தெரியாதவாறு அம்மா அனைத்தையும் உள்ளே அடைத்துக் கொண்டது கண்டு அங்கிளும் நானும் திகைத்தே போனோம். பிறகு நேராக அம்மாவின் வாய்க்கு தன் போலை எடுத்துச் சென்றார். ‘அய்யோஒ..இதெல்லாம் வேணாம் வெங்கட் அண்ணா ..ப்ளீஸ்……ப்ளீஸ் இப்போ விடுங்க …மணி 2 ஆகுது பாருங்க…இதுக்கே என் இடுப்பு உடஞ்சிடுச்சி…’ ‘தயிர் சாப்பிடாம விருந்தை முடிக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க…அகல்யா..கட கடன்னு இதை சப்பி தயிர் குடிச்சி என் பூலை சுத்தம் செய்ய்ங்க பார்ப்போம்!!’என்று பச்சையாக அங்கிள் அம்மாவிடல் கூற ‘அய்யோ..சார்ர்.இதெல்லாம் நான் குடிக்கறதில்லை..ப்ளீஸ்..எனக்கு ரொம்ப ஒரு மாதிரியா இருக்கு..நீங்க வேகமா குத்தியதால அந்த இடத்தில வேற பயங்கர வலி…கிழிஞ்சிருச்சீன்னு நினைகுறேன்..ப்ளீஸ் இப்போ முடிச்சிக்கலாம்’ என்று சொல்லி அங்கிளுக்கு செல்லமாக உதட்டில் ஒரு முத்தம் கொடுக்க ‘முடியவே..முடியாது…நீங்க குடிச்சாத்தான் உங்களை போக விடுவேன்’ என்று செல்லமாய் அம்மாவிடம் அடம் பிடிக்க…அம்மா எவ்வளவோ சொல்லியும் அங்கிள் கேட்பதாக இல்லை… ‘சரி ….சர்..தாங்க…சீக்கிரம்.. நீங்க ரொம்ப பிடிவாதக்காரர்தான் போங்க’என்றார்கள் சிரித்துக் கொண்டே.. அங்கிள் மறுபடியும் விறைத்து நின்ற தன் பூலை அம்மாவிந் வாயில் சொருகி ஓக்கலானார்.அம்மாவின் தொண்டையில் முட்டி முட்டி எடுக்க எடுக்க சிறிது நேரத்திலேயே குபுக்னென்று அடுத்த லோடை அம்மாவின் வாயில் கொட்ட என் தேவிடியா அம்மா தன் கண்களை மூடியபடி அப்படியே அதை விழுங்கிக் கொண்டார்கள்.அம்மாவின் வாயிலிருந்து தன் பூலை எடுத்த அங்கிள் உடனே அங்கேயே கையடித்து அம்மா சற்றும் எதிர்பார்க்காத சமயத்தில் (அவரின் இரண்டாவது லோடை அம்மா விழுங்கிக் கொண்டிருக்கும் அந்த சமயத்திலேயே) அம்மாவின் உடல் முழுக்க தன் மூன்றாவது லோடை பீய்ச்சியடித்தார்.அம்மாவின் முகம்,காய்கள்,கைகள்,கழுத்து,தொப்புள்,இடுப்பு வயிறு,தொடை,புண்டை,கால்கள் என்று எல்லா பகுதியிலும் அங்கிளின் கெட்டியான வழிந்தோட Tags: kamaveri kathaigal, new kamakathaikal, tamil amma kamakathaikal, tamil aunty stories, Tamil Kamakathaikal, tamil kamakathaikal in tamil, tamil kamakathaikal new, tamil kamaveri, tamil ool kathaigal, tamil pundai kathai, Tamil Sex Stories, tamil x stories, tamilsex, tamilsex kathai
கேரட் மிகவும் மலிவாக எளிதில் கிடைக்கும் காய்களில் ஒன்றாகும். அதிக நன்மைகள் நிறைந்த கேரட் அனைவராலும் விரும்பி உண்ணும் சுவை நிறைந்த காயாகும். நாம் அனுதினமும் பயன்படுத்தும் … Read more நெல்லி பொடி நெல்லி பொடி பயன்கள் நெல்லியில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது இரத்த சோகைக்கு நல்ல மருந்தாகும். நெல்லியில் அறுசுவையில் உப்பு … Read more முடக்கத்தான் பொடி முடக்கத்தான் பொடி பயன்கள் முடக்கத்தான் முடக்கு அறுத்தான் என்பது நாளடைவில் முடக்கற்றான் என்றானது. கசப்புத் தன்மையுடைய முடக்கத்தான் முடக்கு வாத நோய்களை குணமாக்குவதால் முடக்கத்தான் என்று பெயர் … Read more கரிசலாங்கண்ணி பொடி கரிசலாங்கண்ணி பொடி பயன்கள் கரிசலாங்கண்ணி அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையாகும். இதில் எக்லிப்டால், டெஸ்மீத்தைல், அக்கோண்டனால், ஹென்ட்ரை, ஸ்டிக்மாஸ்டீரால், தங்கச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் … Read more ஆவாரம் பூ பொடி ஆவாரம்பூ பொடி பயன்கள் ஆவாரம்பூ துவர்ப்புத் தன்மை உடையது. இதில் தங்கச்சத்து நிறைந்துள்ளது. ஆவாரம் பூ பொடியை தினமும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர சர்க்கரை … Read more கஸ்தூரி மஞ்சள் பொடி கஸ்தூரி மஞ்சள் பொடி பயன்கள் கஸ்தூரி மஞ்சள் முக அழகு சாதன பொருட்களில் ஒன்றாகும். இது அனைத்து வகை சருமத்திற்கும் கேடு விளைவிக்காத அலர்ஜி எதிர்ப்பு தன்மை … Read more எலுமிச்சை தோல் பொடி பயன்கள் எலுமிச்சை தோல் பொடியினைக் கொண்டு ஃபேஸ் பேக் முதல் பாதத்திற்கு அழகு தரும் பெடிக்யூர் வரை பயன்படுத்தலாம். எலுமிச்சை தோலில் அதிக அளவு கலோரிகள், கார்ப்ஸ், நார்ச்சத்து, … Read more ஆரஞ்சு தோல் பொடி ஆரஞ்சு தோல் பொடியின் பயன்கள் ஆரஞ்சு தோலில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளது. இது இயற்கை அழகை விரும்பும் பெண்களுக்கு மிகச் சிறந்த அழகு சாதன பொருளாகும். … Read more முருங்கை இலை பொடி முருங்கை இலை பொடி பயன்கள் முருங்கையில் விட்டமின்கள், மினரல், அமீனோ ஆசிட்கள், வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. 10 கிராம் … Read more மருதாணி பொடி மருதாணி பொடி பயன்கள் மருதாணி பொடியானது இளநரையை தடுக்க அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனுடன் அவுரி பொடியை சேர்த்து பயன்படுத்தும் போது நம் கூந்தலுக்கு ஏராளமான நன்மைகள் … Read more ரோஸ் பொடி ரோஸ் பொடியின் பயன்கள் ரோஜாவிற்கு இயற்கையாகவே சருமத்தின் நிறத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ரோஜாவில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். ரோஜா … Read more மண் சிகிச்சை மண்ணின் மகத்துவத்தை அறிந்து அதில் உள்ள மருத்துவ குணங்களை கொண்டு மண் சிகிச்சை முறைகளை சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். பழங்காலங்களில் அனைத்து கிராமங்களிலும் மண் சிகிச்சை முறைகளை … Read more முகத்தில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? முக அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும். அதிலும் பெண்கள் முகத்தில் ஏதேனும் ஒரு சிறு பரு வந்தாலும் மிகவும் வேதனைப்படுவர். அநேக பெண்கள் வெள்ளை நிறத்தில் … Read more சர்க்கரை நோயில் இருந்து ஆரம்பத்திலேயே தப்பித்துக்கொள்ள… சர்க்கரைக்கேற்ற முருங்கை சர்க்கரை நோய் சர்க்கரை நோய் இன்றைய காலத்தில் அதிகளவில் காணப்படும் நோயாகும். நம் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ … Read more உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் புழுக்கமான சீதோஷ்ண நிலை பெரும்பாலும் மே, ஜுனில் காணப்படுகிறது. வறட்சியான ஈரப்பதம் ஃபுளூ காய்ச்சலுக்கு ஈடான உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மூக்கடைப்பு, டான்சில், குரல் வளை … Read more
பாகிஸ்தானில் நடந்த பிரம்மாண்ட பேரணி : இம்ரான் கான் மீது பாய்ந்த துப்பாக்கிக்குண்டு - திட்டமிட்ட சதியா? பாகிஸ்தானின் வஜிராபாத் நகரில் பி.டி.ஐ கட்சி சார்பில் நடைபெற்ற பேரணியின் போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட பலர் காயம் அடைந்துள்ளனர். Prem Kumar Updated on : 3 November 2022, 12:50 PM பாகிஸ்தான் இதுவரை கண்டிருக்கும் பிரதமர்களில் யாருமே 5 ஆண்டு பதவிகாலத்தை நிறைவு செய்ததில்லை. முதல் பிரதமரில் ஆரம்பித்த இந்தச் சோகம் இன்று வரை தொடர்கிறது. பாகிஸ்தானில் எந்தப் பிரதமரும் முழுமையாக பதவி வகித்ததில்லை. பாதியிலேயே ஆட்சியைக் கவிழ்த்து விடுவார்கள். அல்லது ராணுவப் புரட்சி நடந்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி விடும். 1947ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்தபோது, மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற லியாகத் அலிகான் பிரதமராக பதவி ஏற்றார். இந்தியா மீது போர் தொடுக்க மறுத்ததால் ராவல்பிண்டியில், 1951 அக்டோபர் 16ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். அவருக்குப் பின்னர் பாகிஸ்தான் 7 ஆண்டுகளில் கவாஜா நசிமுதீன், முகமது அலி போக்ரா, சவுத்ரி முகமது அலி, ஹுசைன் சஹீத் சுரதி, இப்ராகிம் இஸ்மாயில் சந்திரிகர், பெரோஷ் கான் நூன் என 6 பிரதமர்களைக் கண்டது. பின்னர் 1958 முதல் 1971 வரை நாடு ராணுவ ஆட்சிக்கு சென்றது. 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானின் 8வது பிரதமராக பதவியேற்ற நூருல் அமின் 13 நாட்களே அந்த பதவியில் இருந்தார். பாகிஸ்தானில் குறைந்த நாட்கள் பிரதமராக இருந்தவர் இவர்தான். பின்னர் 1973 ஆகஸ்ட் மாதம் பிரதமரான ஜூல்பிகர் அலி பூட்டோ, பிரதமராக 4 வருடங்களை நிறைவு செய்யவிருந்த நிலையில் மீண்டும் ஆட்சி ராணுவத்தின் வசமானது. 1977 முதல் 1988 வரையில் ராணுவ ஆட்சியிலிருந்த பாகிஸ்தானில், மீண்டும் ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய 1999 வரையில் 5 பிரதமர்கள் பதவியேற்றனர். பதவியேற்ற முகமது கான், பெனாசிர் பூட்டோ, நவாஸ் ஷெரீப் என யாரும் 5 ஆண்டுகளை நிறைவு செய்யவில்லை. பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமைக்குரியவர் பெனாசிர் பூட்டோ. பிரதமராக இவர் பதவிவகித்த 2 முறையும் முழுமையாக தனது பதவிக்காலத்தை முடிக்க முடியவில்லை. பெனாசிர் பூட்டோ தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது படுகொலை செய்யப்பட்டார். ராணுவ ஆட்சியிலிருந்த பாகிஸ்தானில், 2012 ஆண்டு முதல் 2018 நாடாளுமன்ற தேர்தல் வரையில் 7 பேர் பிரதமர் பொறுப்பேற்றனர். ஜபருல்லா கான் ஜமாலி, சவுத்ரி ஹுசைன், சௌகாட் அஜிஜ், யூசுப் ராசா கிலானி, பர்வேஸ் அஸ்ரப், நவாஸ் செரீப், ஷாஹித் ககன் அப்பாசி பிரதமரான நிலையில், யூசுப் ராசா கிலானி மட்டும் 4 ஆண்டுகள் 86 நாட்கள் பிரதமராக பதவியிலிருந்தார். கடைசியாக 2018ஆம் ஆண்டு பிரதமர் பதவிக்கு வந்த இம்ரான் கானின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தற்போது அந்நாட்டு அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார். இந்த சூழலில் குஜ்ரன்வாலா என்ற இடத்தில் இம்ரான் கானின் தலைமையில் பேரணி நடத்தப்பட்டும் என பி.டி.ஐ கட்சி அறிவித்திருந்தது. அதன்படி பாகிஸ்தானில் உள்ள வாசிராபாதில் இன்று பேரணி துவங்கியது. இந்த பேரணியில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கலந்துக்கொண்டு பேரணியாக மக்களை சந்தித்து வந்ததார். அப்போது பேரணியில் மர்ம நபர்கள் இம்ரான் கானை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் இம்ரான் கானின் வலது காலில் குண்டு பாய்ந்து காயம் அடைந்துள்ளார். மேலும் அவருடன் இருந்த கட்சி நிர்வாகிகள் மீதும் குண்டு பாய்ந்ததில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் காயம் அடைந்த இம்ரான் கான் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான போலிஸார் பாதுகாப்பில் இருந்தபோதும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Also Read “பாகிஸ்தான் ராணுவம் கொடுத்த 3 ஆப்ஷன்கள்.. எனது உயிருக்கு ஆபத்து” : உண்மையை போட்டு உடைத்த இம்ரான் கான்! pakistan Imran Khan Trending "இணைப்பு எண்ணை ஆதாரோடு இணைப்பதால் இலவச மின்சாரத்துக்கு பாதிப்பில்லை" -அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு! 3 மாத Plan.. 3 நிமிடம் வேடிக்கை பார்த்ததால் மாட்டிய திருடர்கள்: சென்னை நகை கடை கொள்ளை சம்பவத்தில் திடுக்! குடும்ப கஷ்டத்துக்காக வேலைக்கு சென்ற மாணவி.. தகவலறிந்து கல்விச்செலவை ஏற்றுக்கொண்ட தி.மு.க நிர்வாகி ! 360 டிகிரி சூர்யகுமாரே உங்களிடம் கத்துக்கணும்.. தமிழக வீரரை புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள் ! Latest Stories இந்திய வீரர்களுக்கு பணிச்சுமை என்றால் IPL தொடரில் ஏன் விளையாடவேண்டும்? -கொதித்தெழுந்த பயிற்சியாளர் ! எரிபொருள் இல்லாமல் பாதி வழியில் நின்ற ஆம்புலன்ஸ்.. நோயாளி உயிரிழப்பு.. ராஜஸ்தானில் பரபரப்பு ! "இணைப்பு எண்ணை ஆதாரோடு இணைப்பதால் இலவச மின்சாரத்துக்கு பாதிப்பில்லை" -அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு! எல்லாம் அவளுக்காக.. ShowRoom-ல் இருந்து சொகுசுகாரை நூதனமாக திருடி சென்ற காதலன்.. இறுதியில் நேர்ந்த சோகம்!
Tamil Kudumba Kamakathaikal – அவள் என்னிடம் இருந்து விலகி செல்ல முயன்றதும் நான் ஈட்டி அவள் கையை பிடித்து என் பக்கமாக இழுத்தேன். அதற்கு அவள் டேய் ஒழுங்கு மரியாதையா என் கையை விடு டா, நான் உனக்கு அக்கா நாம இப்படி எல்லாம் பண்ண கூடாது என்றல். நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன். அனல் அவளின் கையை மட்டும் விட வில்லை. அவள் என்னிடம் இருந்து விலகி செல்ல முயற்சி செய்து கொண்டு இருந்தால். அப்போது நான் இது எல்லாம் நமக்குள்ளேயே இருந்தால் ஒரு தப்பும் இல்லை என்றேன். நான் சொன்னதை கேட்டு வாயடைத்து போய் அமைதியாக நின்கின்றல். அவள் அதிர்ச்சியில் இருந்து மீன்று வருவதற்கும் நான் என் சுண்ணியை வெளியே எடுத்து விட்டு அவள் கையை பிடித்து என் சுண்ணியின் மீது வைத்து அழுத்தமாக பிடித்து கொன்டேன். அவள் என்னிடம் இருந்து விலகி செல்ல முயற்சித்து கொண்டு இருந்தாலும் என் சுண்ணியை விட வில்லை. பின்பு நான் அவளை இறுக்கி அணைத்து கொண்டு அவள் காதில் சென்று நீ எனக்கு முழுசா வேணும் அதுவும் உன்னோட முழு சம்மதத்தோட உன்னை கட்டாய படுத்தி நான் ஏதும் செய்ய மாட்டேன் என்றேன். அப்படி சொன்னதும் நான் அவளை முழுமையாக விட்டு விட்டான். நான் விட்ட பின்பும் சில வினாடிகள் அவள் என் மீது ட்படுத்து கொண்டு என் சுண்ணியை பிடித்து கொண்டு தான் இருந்தால். அதன் பின்பு அவள் சுதாரித்து கொண்டு என் மீது இருந்து எழுந்து என் பக்கத்தில் மின்று கொண்டால். அவள் என்னிடம் கூட பொறந்தவ கிட்ட நீ இப்டியாடா நடந்துப என்றல், பின்பு அதை எடுத்து உள்ள போடு அதை பார்க்கவே எனக்கு ஒரு மாதிரி இருக்கு என்று சொன்னால். அதற்கு நான் எண்ணப்படி இருக்குது அக்கா என்றேன். ச்சீய் வாய மூடு ட என்றல். பின்பு நான் அவளிடம் அக்கா என் பக்கத்துல கொஞ்சம் வா என்றேன். அவள் ஏதற்கு என்று கேட்டுக்கொன்டே என் பக்கத்தில் வந்து நெருக்கமாக நிண்டு கொண்டால். உன்னோட கையை கொஞ்சம் குடு என்று சொல்லி அவள் கையை பிடித்து என் சுண்ணியின் மீது வைத்தேன். முதலில் அவள் மறுப்பு தெரிவித்தாலும் நான் அவளிடம் உன்ன force பண்ணி நான் உன்னை எனது வேணும்னாலும் என்னால செய்ய முடியும் அக்கா ஆனால் எனக்கு அப்படி பட்ட ஒரு சுகம் வேண்டாம். ஆனால் நீ இதை மட்டும் புடிச்சு குலுக்கு க்கா ப்ளீஸ் என்று கெஞ்சினேன். நீ இதை மட்டும் எனக்கு பானு நான் உன்னை தொட கூட மாட்டேன் என்று சொல்லி அவளிடம் கெஞ்சி கொண்டு இருந்தேன். ஒரு கட்டத்தில் அவளே ஒத்து கொண்டால். இது மட்டும் தான் பண்ணுவேன் ஆனா நீ என்னை தொட கூடாது என்று சொல்லி விட்டு என் சுண்ணியை பிடித்து குலுக்க தொடங்கினாள். அவள் குலுக்க தொடங்கியதும் நான் அந்த சுகத்தில் கண்களை மூடி என் அக்காவை ஓப்பது போல கனவு கண்டு கொண்டு இருந்தேன். பின்பு அக்கா கால் வலிக்குது என்று சொல்லி என் பக்கத்தில் அமர்ந்து கொண்டு என் சுண்ணியை குலுக்கி விட்டு கொண்டு இருந்தால். நேரம் செல்ல செல்ல அக்காவுக்கே மூடு ஏறுவதை என்னால் நன்கு உணர முடிந்தது. அப்போது நான் அவளிடம் உனக்கு இது மாதிரி ஹெல்ப் ஏதாவது வேணுமலும் தயங்காம எப்போ வேணும்னாலும் கேளு க்கா உனக்கு பண்ணி விடுறதுக்கு உன்னோட தம்பி நான் இருக்கேன் என்று சொன்னேன். அவள் செல்லமாக என் கன்னத்தில் கிள்ளி விட்டு விட்டு வேகமாக குலுக்கி விட்டு கொண்டு இருந்தால். அவள் இரு கைகளையும் மாரி மாரி குலுக்கி கொண்டு இருந்தால். அப்போது எனக்கு விந்து வருவதை போல இருந்ததால் நான் கண்களை மூடி கொண்டு அக்கக்கா எனக்கு வருது என்று சொல்லி கொன்டே சுன்னியில் இருந்து என் விந்தை பீய்ச்சி அடித்தேன். முதல் முறையாக வேறு ஒரு பெண் எனக்கு கை அடித்து விட்டதால் அதுவும் என் அக்கா கை அடித்து விட்டதால் ஈன்றும் இல்லாத அளவுக்கு அதிகமாக என் சுன்னியில் இருந்து விந்து வந்தது. அந்த விந்து அவள் முகம் கை தலை என்று எல்லா இடத்திலும் பீய்ச்சி அடித்தது. உடனே அக்கா அதை எல்லாம் முகம் சுளிக்காமல் பக்கத்தில் இருந்த துணியை கொண்டு சுத்தம் செய்து கொண்டால். அப்படியே என் சுன்னியையும் அந்த துணியை கொண்டு சுத்தம் செய்து விட்டு விட்டு எழுந்து என் முன்பாக குனிந்து என் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு பெரிய மனுஷன் ஆகிட்டா டா என்று சொல்லி என் தலையை கோதி விட்டு விட்டு என் அறையை விட்டு வெளியே சென்றால். பின்பு நான் அவளை கூப்பிட்டான். அவள் என் பக்கத்தில் வந்து இன்னும் என்ன டா வேணும் உனக்கு எண்டு சொல்ல நான் லேசாக எழுந்து அவள் மார்பு பிளவில் இருந்த என் விந்தை என் விரலால் துடைத்தேன். அவள் வெட்கப்பட்டு கொண்டு என் அறையை விட்டு சென்று விட்டால். நடந்தது எல்லாம் நிஜமா அல்லது கனவா என்று முழித்து கொண்டு இருந்தேன். பின்பு நான் எழுந்து என் பக்கத்தில் இருந்த அக்காவின் ப்ராவை எடுத்து கொண்டு என் அறையை விட்டு வெளியே வந்தேன். அப்போது அக்கா கலீல் அமர்ந்து கொண்டு போன் நொண்டி கொண்டு இருந்தால். நான் அந்த ப்ராவை எடுத்து கொண்டு சென்று அவள் தொடையின் மீது வைத்து விட்டு அவள் பக்கத்தில் அமர்ந்து கொன்டேன். பின்பு அவளை பார்த்து தேங்க்ஸ் அக்கா என்றேன். அவள் பாசமாக என் தலையை கோதி விட்டால். இதுக்கு மேல எனக்கு ஈப்போ மூடு வந்தாலும் உங்க கிட்ட சொல்ரேன் நீங்க எனக்கு இது மாதிரி பண்ணி விடுங்க, உங்க விருப்பம் இல்லாம நான் உங்கள தொட மாட்டேன் என்றேன். அவள் அதற்கு லேசாக சிறிது விட்டு அமைதியாக இருந்தால். பின்பு அவள் மதியம் சாப்பிட பரிமாறி கொண்டு இருந்தால். அவள் குனிந்து பறி மாரி கொண்டு இருக்கும் போட்டது ப்ரா போடாத அவள் முலை என் கண்களுக்கு நன்றாக விருந்து அளித்தது. அதை பார்த்த உடன் எனக்கு சுன்னி தூக்கி கொள்ள அக்கா அதை பார்த்து சிரித்தாள். ஒழுங்கா சாப்பிடு அதுக்கு அப்பறம் பார்த்து கொள்ளலாம் என்று சொல்லி விட்டு அவளும் என் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தால். நான் வேகமாக சாப்பிட்டு முடித்து விட்டு எழுந்து வந்து டிவி பார்த்து கொண்டு இருந்தேன். கொஞ்ச நேரத்திற்கு எல்லாம் அக்கா வந்து என் பக்கத்தில் அமர்ந்து கொண்டால். பின்பு அவள் மெதுவாக கையை எடுத்து என் தொடையின் மீது வைத்தால். நான் அமைதியாக என்ன தான் செய்கிறாள் என்று பார்க்கலாம் என்று இருந்தேன். என் தொடை மீது இருந்த அந்த காய் கொஞ்சம்கொஞ்சமாக நகர்ந்து என் சுன்னி மீது வந்தது. அவள் கை பட்டதும் தூங்கி கொண்டு இருந்த என் சுன்னி விழித்து கொன்டு தலை தூக்கி அவளை பார்த்தது. அவள் என் சுண்ணியை வெளியே எடுத்து அதை பிடித்து குலுக்கி கொண்டு இருந்தால். அப்போது அவள் மெதுவாக குனிந்து என் சுன்னி மொட்டுக்கு ஒரு முத்தம் கொடுத்தால். அவள் குனிந்த உடன் நான் அவள் தலையை பிடித்து அப்படியே அழுத்தி விட்டேன். என் சுன்னி அவள் வைக்கும் முழுமையாக சென்று விட்டது. அவள் தலையை அப்படியே பிடித்து கொண்டு அவளை வையில் ஓப்பது போல செய்து கொண்டு இருந்தேன். ஒரு நிமிடம் கூட அப்படி செய்யவில்லை அவள் என்னை விலகி விட்டு விட்டு எழுந்து கொண்டு என்னை பார்த்து பொறுக்கி நாயே என்னை வற்புறுத்தி எதையும் செய்ய சொல்ல மாட்டேன்னு தான சொன்னேனா. இப்போ எனக்கு டா இப்படி பண்ணினா என்றல், இல்ல அக்கா என்று இழுத்தேன், என் சிலுவையை பார்த்து முறைத்து கொன்டே பொறுக்கி என்று சொல்லி கொண்டு குனிந்து என் சுண்ணியை பொறுமையாக ஊம்ப தொடங்கினாள். தொடரும்…… Tags:akka thambi sexkudumba sextamil family sex storiestamil kudumba kamakathaikalஅக்கா தம்பிகாமவெறிகுடும்ப காம கதைகள்தமிழ் குடும்பம்
பொழிப்பு (மு வரதராசன்): தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும். மணக்குடவர் உரை: தந்தை மகனுக்குச் செய்யும் உபகாரம் அவையத்தின் கண்ணே முந்தியிருக்குமாறு கல்வி யுண்டாக்குதல். பரிமேலழகர் உரை: தந்தை மகற்கு ஆற்றும் நன்றி - தந்தை புதல்வனுக்குச் செய்யும் நன்மையாவது; அவையத்து முந்தி இருப்பச் செயல் - கற்றார் அவையின்கண் அவரினும் மிக்கு இருக்குமாறு கல்வியுடையன் ஆக்குதல். (பொருளுடையான் ஆக்குதல் முதலாயின துன்பம் பயத்தலின் நன்மை ஆகா என்பது கருத்து. இதனான் தந்தை கடன் கூறப்பட்டது.) இரா சாரங்கபாணி உரை: தந்தை மகனுக்குச் செய்யும் நன்மையாவது, அவனைக் கற்றோர் கூடி இருக்கும் அவையில் முந்தியிருக்குமாறு கல்வியில் வல்லனாக்குதல். பொருள்கோள் வரிஅமைப்பு: தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல். பதவுரை: தந்தை-தந்தை; மகற்கு-மகனுக்கு; ஆற்றும்-செய்யும்; நன்றி-நன்மை; அவையத்து-அவையில்; முந்திஇருப்ப-முந்தியிருக்குமாறு; செயல்-செய்தல். தந்தை மகற்குஆற்றும் நன்றி: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: தந்தை மகனுக்குச் செய்யும் உபகாரம்; பரிப்பெருமாள்: தந்தை மகனுக்குச் செய்யும் உபகாரம்; பரிதி: புதல்வருக்குத் தந்தை செய்யும் உதவி; காலிங்கர்: மற்று ஆங்ஙனம் இனிமை நுகர்ந்து இன்புறூஉம் தந்தையானவன் புதல்வருக்குச் செய்யும் நன்மை யாதோ எனின்; பரிமேலழகர்: தந்தை புதல்வனுக்குச் செய்யும் நன்மையாவது; 'தந்தை மகனுக்குச் செய்யும் உபகாரம்/உதவி' என்று மணக்குடவரும் பரிதியும் கூற 'தந்தை புதல்வனுக்குச் செய்யும் நன்மை' என்று காலிங்கரும் பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை நல்கினர். இன்றைய ஆசிரியர்கள் 'தந்தை மகனுக்குச் செய்யும் கடமை', 'தந்தை மகனுக்குச் செய்யும் நன்மையாவது', 'தகப்பன் தன் குழந்தைக்குச் செய்யும் நன்மையாவது', 'தகப்பன் மகனுக்குச் செய்ய வேண்டிய நன்மை எதுவென்றால்' என்ற பொருளில் உரை தந்தனர். தந்தை மகனுக்குச் செய்யும் நன்மை என்பது இப்பகுதியின் பொருள். அவையத்து முந்தியிருப்பச் செயல்: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: அவையத்தின் கண்ணே முந்தியிருக்குமாறு கல்வி யுண்டாக்குதல். பரிப்பெருமாள்: அவைக்களத்தின் கண்ணே முந்துற்றிருக்குமாறு கல்வி யுண்டாக்குதல். பரிப்பெருமாள் குறிப்புரை: இது புதல்வர்க்குக் கல்வி உண்டாக்குக என்றது. பரிதி: ஐந்து வயதில் வாசிப்பிவித்து சமர்த்தனான பின்பு ஆஸ்தானத்தில் அழைத்து இருத்திக் கொள்ளும்படியாக அறிவு உண்டாக்குதல் என்றவாறு. காலிங்கர்: பெரிய நன்ஞானக் கேள்வி உடையனாகச் செய்து சான்றோர் அவையின்கண் சென்று மற்றவரால் முதன்மை பெற்றிருப்பதாகச் செய்கை என்றவாறு. பரிமேலழகர்: கற்றார் அவையின்கண் அவரினும் மிக்கு இருக்குமாறு கல்வியுடையன் ஆக்குதல். பரிமேலழகர் குறிப்புரை: பொருளுடையான் ஆக்குதல் முதலாயின துன்பம் பயத்தலின் நன்மை ஆகா என்பது கருத்து. இதனான் தந்தை கடன் கூறப்பட்டது. 'அவையின்கண் முந்தியிருக்குமாறு கல்வியுடையன் ஆக்குதல்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதியின் உரை கல்வி பயிற்றத் தொடங்குவதற்குரிய ஆண்டு ஐந்தாவது என வரையறுத்திருப்பது நோக்கத்தக்கது. இன்றைய ஆசிரியர்கள் 'அவையில் முந்தியிருக்கும்படி அறிவளிப்பதே', 'கற்றாரது அவையின்கண் முதன்மையாயிருக்கும்படி அவனுக்குக் கல்வி பயிற்றுவித்தல்', 'கற்றோர் அவையில் எல்லோர்க்கும் முற்பட்ட நிலையில் இருக்குமாறு செய்தல். அஃதாவது மிகுந்த கல்வி கேள்விகளை அளித்துப் பெரியோராக்குதல்', 'மகன் கற்றிந்தார் சபையில் சிறப்புடையவனாக விளங்கும்படி (நல்ல கல்வி கேள்வி அறிவுடையவனாகச்) செய்து வைப்பதுதான்' என்றபடி பொருள் உரைத்தனர். அவையின்கண் முதன்மை பெற்றிருக்கச் செய்தல் என்பது இப்பகுதியின் பொருள். நிறையுரை: தந்தை மகற்குச் செய்யும் நன்மையாவது, அவையின்கண் முதன்மை பெற்றிருக்கச் செய்தல் என்பது பாடலின் பொருள். 'அவையத்து முந்தி யிருப்பச் செயல்' குறிப்பது என்ன? ஒரு தந்தை தன் மக்களைச் சமூக அரங்கில் முதன்மைப்படுத்துவதற்குப் பெரிதும் உதவுவான். தந்தை தன் மகனுக்குச் செய்யும் நன்மை அவையிலே தன் மகன் மேம்பட்டிருக்கும்படி அவனைக் கல்வியறிவுடையனாக்குதல். இவ்வதிகாரத்து முந்தைய பாடல்களில் பெற்றோர் தம் குழந்தைகளின் மூலம் நுகர்ந்த இன்பங்கள் கூறப்பட்டன. பிள்ளைகளுக்குப் பெற்றவர் செய்யவேண்டிய கடமை பற்றி இங்கு சொல்லப்படுகிறது. இக்கடமையைத் தந்தை மகற்குச் செய்யும் நன்றி என்று குறிக்கிறார் வள்ளுவர். 'நன்றி' என்பதற்கு நன்மை என்பது நேரிய பொருள். தந்தை மகனைப் பெற்றதனால் வளர்த்தலும் கடமையாகிறது. கடமைகளில் மிக்க பயனைத் தருவது நன்றி. கைம்மாறு எதிரபாராமல்-கடமை என்று கூடக் கருதாமல் அவன் சிறந்தவன் ஆக வேண்டும் என்ற பெருநோக்குடன் செய்வது நன்றி. மகனை அவையில் முந்தி இருக்கும்படி செய்தல் தந்தை அவனுக்கு ஆற்றும் நன்மை என்கிறது பாடல். 'தந்தை' 'மகற்கு' என்பன ஆண்பாலை மட்டும் குறிப்பனவா? திருக்குறளில் பெண்களுக்கு மட்டும் என்று சொல்லப்பட்டிருக்கிற பகுதியைத் தவிர மற்ற இடங்களில் சொல்லுவதெல்லாம் இருபாலருக்கும் பொதுவேயாகும் என்பார் நாமக்கல் இராமலிங்கம். தந்தை எனக் குறிப்பாகச் சொல்லப்பட்டாலும் இங்கே அது பொதுவாகப் பெற்றோரைக் குறித்து நிற்பது. எனவே இப்பாடலில் சொல்லப்பட்ட நன்றி என்பது பெற்றோர் அதாவது தாய் தந்தையர் இருவரும் செய்யும் நன்மைகளையேயாம், தம்மக்களைப் போற்றி முந்தியிருக்கச் செய்யும் தாயார் பலரை என்றும் எங்கும் காணலாம். 'மகற்கு' என ஒருமையில் கூறியிருப்பதால் இது 'மகனுக்கு' என்று ஆண்பாலாற் சொல்லப்பட்டது என்பதல்ல. இப்படிக் கூறப்பட்டாலும் இதில் மகளும் அடங்குவாள்; இப்பாடல் இரு பாலருக்கும் பொருந்தும். 'தந்தை தன் குழந்தைக்குச் செய்யும் உதவியாவது' எனத் தகப்பன் கடமையை மக்கட்கு எனப்பொருள் கண்டு இருபாற் பொதுமையாகவே கொள்ளவேண்டும். எனவே மகற்கு என்றது மகன் - மகள் இருபாலரையும் குறிப்பதாகக் கொள்வர். தந்தை, மகற்கு என இப்பாடலில் சொல்லப்பட்டது இருபாலரையும் குறித்தது. 'அவையத்து முந்தி யிருப்பச் செயல்' குறிப்பது என்ன? 'அவையத்து முந்தியிருப்பச் செயல்' என்ற தொடர் அவையத்து முந்தியிருக்க அவாவுதற்குரிய முறையில் மகனைத் தந்தை வளர்த்தல் எனப் பொருள்படும். அவை என்ற சொல்லுக்கு கற்றோர் அல்லது சான்றோர் கூடிய அவை என்றும் தந்தை மகனுக்கு ஆற்ற வேண்டிய நற் கடமை, அவர்களை அந்த அவையில் முந்தி இருக்கும்படி செய்தல் அதாவது முற்பட்டு இருக்குமாறு செய்தல் என்றும் அன்றைய, இன்றைய அனைத்து உரைகாரர்களும் பொருள் கூறினர். அவையத்தில் முந்தி இருக்கும் தகுதி அதாவது முதன்மைத் தகுதி- முன் வரிசைத் தகுதியானது- கல்வி கேள்விகளில் சிறந்து இருப்போருக்கே வாய்க்கும் என்பது குறிப்பால் அறியப்படுகிறது என்றும் எழுதினர். 'தந்தை மகனுக்குச் செய்யக் கூடிய நன்மை என்னவென்றால், தமது பிள்ளைகளைக் கல்வித் தகுதி உடையவர்களாக ஆக்கிக் கற்றோரின் நன்மதிப்பை அடையச் செய்து, அவனைக் கற்றவர் கூடிய அவையத்து முந்தியிருப்பச் செய்வது' என்ற கருத்துப்பட பெரும்பான்மையாரால் இக்குறள் விளக்கப்பட்டது. இப்பொருள் தெளிவுடையது போல் தோன்றினாலும் சில ஐயங்கள் எழுகின்றன: 'அவை' என்ற சொல்லுக்கு உரையாசிரியர்கள் குறிப்பிடும் 'கற்றோர்/சான்றோர் நிறைந்த அவை' என்பதுதான் சரியான பொருளா? தம் மக்கள் கற்றோர் அவையில் முன் வரிசையில் அமரும் தகுதி பெறத்தான் எல்லாத் தந்தையரும் முயலவேண்டுமா? மக்களுக்கு கல்வி பெறச்செய்தல் தந்தையின் கடன் என்பது சரி. அவர்கள் ஏன் அவையில் அதுவும் கற்றவர் அவையில் முதன்மைத் தகுதி பெறவேண்டும்? ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே (புறநானூறு, 312: பொருள்: மகனைப் பெற்று வளர்த்துவிடுதல் எனது கடமையாகும்; அவனை நற்பண்புகளால் நிறைந்தவனாக்குவது தந்தையது கடமையாகும்) என்ற சங்கப் பாடலை மனத்தில் கொண்டு உரையாசிரியர்கள் கற்றோர்/சான்றோர் நிறைந்த அவை எனப் பொருள் கொண்டனர் எனத் தெரிகிறது. வள்ளுவர் நடைமுறை சார்ந்த பார்வையிலேயே கருத்துக் கூறுபவர் ஆதலால் தம் மக்கள் கற்றோர் அவையில் முந்தியிருக்க வேண்டும் என்பதற்காக தந்தையர் அனைவரும் பாடுபடவேண்டும் என்பது அவர் சொல்ல வந்த செய்தி என்பதாகத் தோன்றவில்லை. கல்விஅறிவு, ஒழுக்கமுடைய நல்லோர் சேருங் கூட்டமே அவை என்று வழங்கப்பட்டு வருகிறது என்பது பொதுவான கருத்து. கற்றோர் அவை என்று இங்கு விதந்து சொல்லப்படவில்லை. எனவே பொதுவாக அவை என்பதாகக் கொள்வதில் இழுக்கில்லை. மு கோவிந்தசாமி 'முந்தியிருப்பச் செயல் –முந்தும் இயல்புடன் இருக்கச் செய்தல். அவ்வையத்தும் எனப்பிரித்து, பிறநாடுகளிலும் எனக் கூறுக; அன்றி அவன் காலத்து உலகில் எனலுமாம்' என்று இக்குறளுக்கு உரை வழங்கினார். இவ்வுரையில் காணப்படும் 'மகன் காலத்து உலகில்', 'முந்தும் இயல்புடன் இருக்கச் செய்தல் (Competitive Spirit)' என்ற விளக்கங்கள் புதுமையானவை. பிள்ளைகளை அவர்கள் காலத்து உலகில் முந்தும் இயல்புடன் இருக்கச் செய்தல் என்ற பொருள் ஏற்புடைத்தே. நாம் வாழ்வது போட்டிமனப்பான்மை கொண்ட உலகம். இதில் தகுதியுள்ளோரே வெல்வர். எனவே, எந்தத் துறையில் பிள்ளைகள் விருப்புடன் இருக்கிறார்களோ அதில் ஈடுபாடு உண்டாகச் செய்து, அவர்களிடம் மறைந்துள்ள பெரும் ஆற்றல்களை வளர்த்து, வெளிக்கொணர்ந்து, எழும் சவால்களை எதிர்கொண்டு, வெல்லும் திறன் வளர தந்தை உதவி செய்தல் என்பது 'முந்தியிருப்பச் செயல்' என்ற தொடர் குறிப்பதாகக் கொள்வது பொருத்தமாகலாம். தம் குழந்தைகளுக்குச் சிறந்த கல்வி தந்து, அவர்கள் வாழ்க்கையில் வெற்றி காண்பதற்கு உகந்த சூழலை உருவாக்கிக் கொடுத்து, பரந்த உலக அரங்கில், அவர்கள் திறமைக்கான முதலிடத்தில் இருக்கச் செய்ய தந்தையர் துணையாக இருக்க வேண்டும் என்ற கருத்து சிறப்பாக அமையும். தந்தை மகனுக்குச் செய்யும் நன்மையாவது, அவையின்கண் முதன்மை பெற்றிருக்கச் செய்தல் என்பது இக்குறட்கருத்து.
அதிசயம் (24) அரசியல் (21) இஸ்லாம் (80) உடல் நலம் (49) எச்சரிக்கை (16) சமூக பார்வை (84) சொதப்பல் (14) பயனுள்ள-தகவல் (12) பெண்கள் (49) மருத்துவம் (6) வரலாறு (9) Comedy (14) Job opportunities (13) Technology (8) செவ்வாய், ஜூலை 31, 2012 கதீஜா (ரலி) அவர்களின் சிறப்பு எவ்விதச் சலனமுமின்றி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முதல் மனிதராகிய கதீஜா (ரலி) அவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக நபி (ஸல்) அவர்களோடு தோளோடு தோள் நின்று உழைத்தார்கள். அவர்களின் தஃவாக் களத்தில் தன்னையும் பங்காளியாக இணைத்துக் கொண்டார்கள். தமது செல்வத்தையெல்லாம் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காகவும் பிரச்சாரப் பணிக்காகவும் தியாகம் செய்தார்கள். இவ்வாறு இஸ்லாத்திற்காக உடலாலும் பொருளாளும் உள்ளத்தாலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்கள். கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புப் பற்றி ஏராளமான நபி மொழிகள் காணப்படுகின்றன. அவற்றிற் சில வருமாறு: உலகிற் சிறந்த பெண்மணி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “இவ்வுலகிற் சிறந்த பெண் மர்யம் (அலை) ஆவார். இவ்வுலகிற் சிறந்த மற்றொரு பெண் கதீஜா (ரலி) ஆவார்” [அறிவிப்பவர்: அலி (ரலி), ஆதாரம்: புகாரி 3432, முஸ்லிம் 4815]. கதீஜா (ரலி) அவர்களின் குடும்பத்தினரை நபி (ஸல்) அவர்கள் மதித்து நடந்தார்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “கதீஜா (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பின் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களிடம் வருவதற்கு கதீஜா (ரலி) அவர்களின் சகோதரி ஹாலா பின்த் குவைலித் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். அவருடைய குரல் கதீஜா (ரலி) அவர்களின் குரலைப் போன்று இருந்ததால் கதீஜா (ரலி) அவர்கள் அனுமதி கோருகிறார்கள் என்று எண்ணி நபி (ஸல்) அவர்கள் மகிழ்ச்சியுற்றார்கள். பிறகு அவருடைய சகோதரி என்று தெரிந்த போது ‘என் இறைவனே! இவர் ஹாலா’ என்று கூறினார்கள். இதனைக் கேட்ட நான் பொறாமைப்பட்டேன். ‘காலத்தால் அழிக்கப்பட்ட பல் விழுந்த குறைஷிக் கிழவிகளில் ஒருவரையா இவ்வளவு நினைவு கூருகிறீர்கள். நிச்சயமாக அவர்களை விடச் சிறந்த ஒருவரை அல்லாஹ் உங்களுக்குத் தந்துள்ளான்’ என்று கூறினேன்” [நூல்: புகாரி 382, முஸ்லிம் 4824]. மற்றுமொரு அறிவிப்பில், “‘அல்லாஹ் உங்களுக்கு வயது முதிர்ந்தவர்களையும் சிறிய வயதினரையும் கொடுத்துள்ளான்’ என்று நான் கூறியபோது நபி (ஸல்) அவர்கள் கோபமுற்றார்கள். அப்போது நான், ‘உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பியவன் மீது ஆணையாக! இதன் பிறகு அவர்களைப் பற்றி நல்லதைத் தவிர வேறு எதையும் கூற மாட்டேன்’ என்று கூறினேன்” என்றுள்ளது. [அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: அஹ்மத், தபரானி] கதீஜா (ரலி) அவர்களின் நேசர்களை நபி (ஸல்) அவர்கள் மதித்தல் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் கதீஜா (ரலி) அவர்கள் மீது பொறாமைப்பட்டதுபோல எவர்மீதும் நான் பொறாமைப்பட்டதில்லை. நானோ அவர்களைப் பார்த்ததுகூடக் கிடையாது. எனினும் நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களை அதிகமதிகம் நினைவுகூருவார்கள். ஒரு ஆட்டை அறுத்தால் அதைப் பங்கிட்டு கதீஜா (ரலி) அவர்களின் தோழிகளுக்கும் அனுப்பி வைப்பார்கள். சில நேரங்களில் நான் எரிச்சல் பட்டு “உங்களுக்கு உலகத்தில் கதீஜாவை விட்டால் வேறு பெண்களே இல்லையா” என்று கேட்பேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அந்தப் பெண்மணி இன்னின்னவாறு இருந்தார்” என்று அவர்களின் நற் பண்புகளைக் கூறுவார்கள். மேலும், “அப்பெண்மணியின் மூலம்தான் எனக்குக் குழந்தைகளும் கிடைத்தன” என்றும் கூறுவார்கள். [புகாரி: 3818] கதீஜா (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் ஸலாம் கூறல் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! இதோ கதீஜா. அவர் தன்னுடன் குழம்பு, உணவு, பானம் ஆகியவை நிறைந்த பாத்திரத்தை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அவருக்கு என் சார்பாகவும் அவரின் இறைவன் சார்பாகவும் ஸலாமை எடுத்துச் சொல்லுங்கள். சொர்க்கத்தில் அவருக்கு சச்சரவு, துன்பங்கள் இல்லாத, முத்தாலான மாளிகையுண்டு என்ற நற்செய்தியையும் சொல்லுங்கள்” என்று கூறினார். [அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி 3820, 7497, முஸ்லிம் 4817] சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களைப் பற்றி அதிகம் நினைவு கூர்ந்தால் நபி (ஸல்) அவர்களின் வேறு எந்த மனைவியின் மீதும் பொறாமைப்படாதளவு நான் கதீஜா (ரலி) அவர்கள் மீது பொறாமைப்படுவேன். அவர்கள் இறந்து மூன்று ஆண்டுகள் கழிந்து என்னை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்தார்கள். அல்லாஹ்வும் ஜிப்ரீல் (அலை) அவர்களும் கதீஜா (ரலி) அவர்களுக்குச் சுவர்க்கத்தில் முத்து மாளிகை யுண்டு என்ற நற்செய்தியை அவருக்குத் தெரிவியுங்கள் என்று கட்டளையிட்டார்கள். [அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 3817, முஸ்லிம் 4820] மரணம் நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்க்கையில் 10 வருடங்கள் வாழ்ந்து தமது 65 ஆம் வயதில் கி.பி. 621 இல் மரணித்தார்கள். அதே ஆண்டில்தான் இஸ்லாத்தை ஏற்காவிட்டாலும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கைக்குப் பெரும் துணையாக இருந்த அவரது சிறிய தந்தை அபூ தாலிப் அவர்களும் மரணித்தார்கள். சிறிய தந்தையினதும் ஆருயிர் மனைவி கதீஜா (ரலி) அவர்களினதும் மரணத்தால் நபி (ஸல்) அவர்கள் சொல்லொணாத் துயரத்திற்காளானார்கள். நபி (ஸல்) அவர்கள் மட்டுமன்றி இஸ்லாமிய உலகமே சோகத்தில் மூழ்கியது. இடுகையிட்டது PMsyed நேரம் 7/31/2012 04:37:00 முற்பகல் கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் ஞாயிறு, ஜூலை 29, 2012 மாப்பிள்ளை வேட்டை! ( பெண் வீட்டார், பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும்போது தாங்களாகவே எந்த முடிவையும் எடுக்க வருவதில்லை. அடுத்தவர்களைப் பார்த்துத்தான் தீர்மானிக்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்த யாரோ ஒருவரின் மகள், வெளிநாட்டுப் பையனை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்கிறாள் என்றும், அவர் சம்பளம் இவ்வளவு வாங்குகிறார் என்றும் அறிந்தால், உடனடியாக தங்கள் மகளுக்கும் வெளிநாட்டு மாப்பிளையைத் தேடுவார்கள். அதுவே பக்கத்து வீட்டுக்காரரின் மகளுக்கு ஒரு சாஃப்ட்வேர் இஞ்சிநியருடன் திருமணம் நடந்து, அவரும் கை நிறைய சம்பளம் வாங்கி மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்றால், அப்படிப்பட்ட. மாப்பிள்ளையைத் தேடத் தொடங்குவார்கள். இது தான் இன்றைய யதாத்த நிலை. மணமகனை அளவிட, பெண்ணின் பெற்றோர் உபயோகிக்கும் அளவுகோல் சரியானதா? உத்தியோகத்தையும், வருமானத்தையும், குடும்பப் பின்னணியையும் மட்டும் வைத்து சரியான மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்துவிட முடியுமா? வேறு என்ன வேண்டுமென கேட்கிறீர்களா? கட்டுரைக்குள் நுழையுங்கள்!] முன்னணி நாளிதழ் ஒன்றின், இலவச இணைப்பு புத்தகத்தில் வெளிவந்த, வாசகர் கடிதமொன்று, என் கவனத்தை ஈர்த்தது. நெருங்கிய நண்பரின் மகளுக்கு வரன் தேடுவதாகவும், அவர்கள் சுய தொழில் செய்யும் மணமகன்களை நிராகரிப்பதாகவும் எழுதியிருந்தார். இது பற்றி சிந்தித்தபோது, மேலும் பல விஷயங்களை உணர முடிந்தது. அவர் கூறியிருந்தது போல் திருமணங்களில் இப்படியொரு நிலை இருப்பதே யதார்த்தமான உண்மை. ஆனால், இந்த நிலையும், யதார்த்தமும் காலத்திற்கு ஏற்ப மாறுபடுவதாக எனக்குத் தோன்றுகிறது. சொந்தத் தொழில் செய்வோரை பெண் வீட்டார் தவிர்க்கும் காரணம் என்ன? நிச்சயமில்லாதது, வருமானமும் நிலையில்லாதது, என்பவையே முக்கிய காரணங்கள். சரி இவர்கள் வரன் தேடும்போது அப்படி எதைத்தான் பார்க்கிறார்கள்? சில வருடங்களுக்கு முன்பு, பெண்ணுக்கு வரன் தேடுவோர், அரசு உத்தயோகத்தில் இருக்கும் மணமகனாக இருக்க வேண்டுமென்று விரும்பினர்.இன்றும் கிராமப் புறங்களில் இந்த நிலை தொடர்கிறது. பின்னர், டாக்டருக்கும் இன்ஜினியருக்கும் மதிப்பு கொடுத்தார்கள். இன்றும் இந்த நிலையில் இருப்பவர்களுக்கு, எவ்வளவு செலவு செய்தும் திருமணம் செய்துவைக்க, பெண் வீட்டார் தயாராக இருக்கிறார்கள். பின் தொண்ணூறுகளின் இடைப்பகுதியில், வெளிநாட்டு, குறிப்பாக அமெரிக்கா மாப்பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளித்தனர். இறுதியாக, கணினி மென்பொருள் துறை வல்லுனர்களைத் தேடினர். இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும், பெண் வீட்டாரின் தேடல் மாறியிருக்கிறது. இந்த மாற்றங்களுக்கான காரணங்களைப் பார்க்கும்போதுதான், வேடிக்கையாக இருக்கிறது. முதலில், அரசு உத்தியோகம்தான் நிரந்தரமானது, பாதுகாப்பானது என்ற எண்ணம் மக்களிடம் இருந்தது. "காலணா காசா இருந்தாலும், கவர்மென்ட் காசாக இருக்கணும்" என்று விரும்பினர். இதனால் பெண்களைப் பெற்றவர்கள், தங்கள் மகளின் வாழ்க்கை சிறப்பாக இருக்க அரசுப் பணியாளர்களுக்கே மணமுடித்தனர். பிறகு, டாக்டருக்கும், என்ஜினியருக்கும் சமுதாயத்தில் இருக்கும் மதிப்பையும் வருமானத்தையும் பார்த்து, அவர்களை விரும்பினர். இந்த வரன்களுக்காக எவ்வளவு கடன் வாங்கியும் திருமணம் செய்து வைக்கவும் தயாராக இருக்கிறார்கள். வெளிநாட்டு வேலையால் கிடைக்கும் பெருமையும், கௌரவமும், அதற்கேற்ற சம்பளமும், பெண்ணைப் பெற்றவர்களை, இவர்கள் பின்னால் அலையவைத்தது. அடுத்ததாக, இன்றைய நிலையில் மென்பொருள் வல்லுனர்களுக்கு அதிக மவுசு இருக்கிறது. இவர்கள் வாங்கும் சம்பளம், பெண் வீட்டாரை கவர்ந்து இழுக்கிறது. இது தான், மாப்பிளையைத் தீர்மானிக்கும் அம்சங்கள். இவற்றை வைத்துத்தான், பெண் வீட்டார் மணமகனைத் தேர்வு செய்கின்றனர். மேற்ச்சொன்ன காரணங்களை நீங்களே நன்றாக யோசித்துப் பாருங்கள். இவை அனைத்தும் சரியானதா? ஆசையாக வளர்த்த மகளுக்கு சிறப்பான வாழ்க்கை அமைத்துக் கொடுக்க, பெற்றோர் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் உங்களுக்குத் திருப்தியளிக்கிறதா? தங்கள் ஆசை மகளுக்கு, பெற்றோர் மிகுந்த சிரமப்பட்டு செய்து வைக்கும் திருமணங்களின் (அதாவது மணமகன்களின்), மறுபக்கத்தையும் பார்த்த பிறகு ஒரு முடிவுக்கு வருவது நல்லது. அரசு உத்த்யோகம். நிலையனதுதான்.பாதுகாப்பும், சலுகைளும் நிறைந்தது தான். வருமானமும் அதிகம்தான். ஆனால், சில அரசாங்க ஊழியர்கள், கடமை உணர்சசியற்றவர்களாகவும், லஞ்சம் வாங்குவதால், பலரின் வருத்தத்திற்கு ஆளாகிறார் என்றும், இவர்களைத் தவிர்க்கும் பெற்றோரும் இருக்கிறார்கள். அனைத்து அரசு அலுவலர்களும் இப்படி இல்லையென்றாலும், சிலர் செய்யும் தவறுகளால், பொதுவான அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது. டாக்டரும் என்ஜினியர்களும் நல்ல வரண்கள்தான் என்றாலும், மாப்பிள்ளை வீட்டாரின் அதிகப்படியான எதிர்பார்ப்புகளாலும், ஒருவித கர்வத்தோடு திகழ்வதாலும், பெண் வீட்டார் இவர்களை விரும்புவதில்லை.வெளிநாட்டு மாப்பிள்ளைகளில் நடக்கும் ஏமாற்று வேலைகளால், இவர்களையும் ஒதுக்கி விடுகின்றனர். இறுதியாக இன்றைய நிலையில், சாப்ட்வேர் எஞ்சினியர். தொடக்கத்திலேயே கொடுக்கப்படும் அதிகப்படியான சம்பளம்,பெண் வீட்டாரைக் கவரும் அம்சம்.இதனால், தங்கள் மகளின் வாழ்வு செழிப்பாக இருக்குமென்று இந்த வரன்களை அதிகம் விரும்புகின்றனர். இப்படி முதல் நிலைத் தேர்வுகளை முடித்துவிட்டு, அடுத்த நிலையாக, மணமகனின் குடும்பத்தைப் பற்றியும், அவரது குணாதிசயங்கள், பண்புகள் பற்றியும் விசாரிக்கின்றனர். அதன் பிறகே திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இதிலும் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தப் பெண் வீட்டார், இந்த முடிவுகளுக்கு தாங்களாக வருவதில்லை. அடுத்தவர்களைப் பார்த்துத்தான் தீர்மானிக்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்த யாரோ ஒருவரின் மகள், வெளிநாட்டுப் பையனை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்கிறாள் என்றும், அவர் சம்பளம் இவ்வளவு வாங்குகிறார் என்றும் அறிந்தால், உடனடியாக தங்கள் மகளுக்கும் வெளிநாட்டு மாப்பிளையைத் தேடுவார்கள். அதுவே பக்கத்து வீட்டுக்காரரின் மகளுக்கு ஒரு சாப்ட்வேர் இஞ்சிநியருடன் திருமணம் நடந்து, அவரும் கை நிறைய சம்பளம் வாங்கி மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்றால், அப்படிப்பட்ட. மாப்பிள்ளையைத் தேடத் தொடங்குவார்கள். இது தான் இன்றைய யதாத்த நிலை. இவற்றைப் படித்த பிறகு உங்களுக்கு என்ன தோன்றுகிறது? மணமகனை அளவிட, பெண்ணின் பெற்றோர் உபயோகிக்கும் அளவுகோல் சரியானதா? உத்தியோகத்தையும், வருமானத்தையும், குடும்பப் பின்னணியையும் மட்டும் வைத்து சரியான மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்துவிட முடியுமா? வேறு என்ன வேண்டுமென கேட்கிறீர்களா? இப்படி பெண் வீட்டார் பார்த்து செய்து வைத்த அத்தனைத் திருமணங்களும் வெற்றிகரமாக தொடர்கின்றனவா? வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்து வைத்துவிட்டு, பின் அவரது நடவடிக்கைகளில் திருப்தியில்லாமல் பிரிந்த பெண்கள் எத்தனை பேர்? இந்த மாப்பிளைகள் மோசடிப் பேர்வழிகள் என்று உணர்ந்து தங்கள் மகளின் வாழ்க்கை பலியானதை கண்டு வருந்தும் பெற்றோர் எத்தனைப் பேர்? அத்தனைத் திருமணங்களும் தோற்றுவிடுவதில்லை என்றாலும், பல இடங்களிலும், பிரச்னைகளும், மனக் கசப்புகளும் இருப்பதை மறுக்க முடியாது. தங்கள் மகள் சந்தோஷமாக வாழ்கிறாள் என்று ஊருக்கு சொன்னாலும், ஒவ்வொரு தாய் தந்தையின் மனசாட்சிக்குத் தெரியும், தங்கள் வாரிசுகள் எப்படிப் பட்ட வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று. ஒரு மனிதனை அறிந்துகொள்ள அவனது உத்தியோகமும், வருமானமும், பண்புகளும் மட்டும் போதாது. எந்த உத்தியோகமும் நிலையில்லாததுதான். பண்புகளும், குணங்களும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். அவனிடம் எப்பொழுதும் மாறாத ஒன்று இருக்கிறது. அவனது திறமை. ஒவொரு மனிதனுக்கும் தனிப்பட்ட திறமை உண்டு. அதுவே அவனை வாழ்க்கையில் முன்னேற வைக்கும். திறமையிருந்தால் வருமானம் எந்த வகையிலும் வரும். திறமையிருந்தல்தான், அவன் செய்யும் வேலையே நிலைக்கும். வாழ்வின் எந்தச் சூழ்நிலையிலும் கை கொடுப்பது இந்தத் திறமைதான். எந்தக் கஷ்டம் வந்தாலும் தங்கள் மகளைக் காப்பாற்றும் திறமை உள்ளவனா, வாழ்க்கையின் சவால்களை நம்பிக்கையோடு எதிர்கொல்பவனா என்பதையே பெற்றவர்கள் பார்க்க வேண்டும். அடுத்த நிமிடம் என்ன நடக்குமென்று நிச்சயமில்லாத வாழ்க்கையிது. அப்படி எந்தச் சந்தர்ப்பத்தையும் எதிர்கொள்ள உதவுவது இந்தத் திறமையும் நம்பிக்கையும்தான். குணாதிசயங்களும், பண்புகளும் மனிதனோடு பிறந்தவை என்றாலும், அவை மாறக் கூடியவை. ஒரு பெண் நினைத்தால், கோழையை வீரனாக்க முடியும், குடிகாரனைத் திருத்த முடியும், சோர்ந்திருப்பவனுக்கு நம்பிக்கை ஊட்டி சாதிக்கவைக்க முடியும். இவை எல்லாத்துக்கும் திறமையே அடிப்படை.கணவனின் திறமையை உணர்ந்து அவனை வழிநடத்துவதே மனைவியின் திறமை. மணமகன் என்ன உத்தியோகம் பார்க்கிறான், எவ்வளவு சம்பாதிக்கிறான் என்று பார்க்காமல், பெண்ணின் பெற்றோர்கள், எந்த கஷ்டத்தையும் சமாளிக்கக் கூடிய திறமை உள்ளவனா என்று அறிந்து தேர்வு செய்ய வேண்டும். அதுவே அவர்கள் ஆசையாக வளர்த்த மகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் சிறப்பான வாழ்க்கையாக அமையும். இடுகையிட்டது PMsyed நேரம் 7/29/2012 03:52:00 முற்பகல் 3 கருத்துகள்: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் சனி, ஜூலை 28, 2012 தொழுகையில் தேவையற்ற பிற எண்ணங்கள் தோன்றுகின்றனவே என்ன செய்ய? தொழுகை என்பது அல்லாஹ்வுடன் உரையாடுவதற்கான சந்தர்ப்பமாகும். முடிந்தவரை ஆபாச, கெட்ட அல்லது தொழுகை அன்றி வேறு பிற எண்ணங்களைத் தவிர்த்து இறைவனை நாம் பார்ப்பது போன்ற உணர்வுடனும், படைத்த இறைவன் நம்மை பார்க்கின்றான் என்ற அச்சத்துடனும் தொழுகையில் ஈடுபட வேண்டும். “இறைவனை நீ பார்ப்பதைப் போன்று வணங்கு! நீ அவனை பார்க்காவிட்டாலும் அவன் உன்னை பார்க்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் உமர்(ரலி) நூல் புகாரி நமது கட்டுப்பாட்டை மீறி நமது உள்ளத்தில் மோசமான எண்ணங்கள் ஏற்படுமானால் அதைத் தவிர்க்கப் பின் வரும் ஹதீஸ் வழிகாட்டுகின்றது “ஷைத்தான் எனக்கு என் தொழுகையையும் ஓதுவதையும் குழப்பி விடுகின்றான் என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன் அதற்கு நபியவர்கள் அவன் கின்ஸப் என்ற ஷைத்தான் ஆவான் அந்த நிலையை நீ உணர்ந்தால் அவனை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடி உனது இடது புறம் மூன்று முறை துப்பு” என்றார்கள். நான் அவ்வாறு செய்தேன். உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நூல் :முஸ்லிம் நமது கட்டுப்பாட்டை மீறி உமது உள்ளத்தில் ஏற்படுகின்ற மோசமான எண்ணங்களை அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். நிச்சயமாக அல்லாஹ் எனது சமுதாயத்தினரின் உள்ளங்களில் ஏற்படும் எல்லா எண்ணங்களையும் மன்னித்து விடுவான் என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) நூல் புகாரி. அலுவலகத்திலோ அல்லது பணிபுரியும் இடத்திலோ நமது உயரதிகாரி நம்மைப் பார்க்கும் போது நாம் சிரத்தையுடனும் அக்கறையுடனும் பணிபுரிய முனைவோம். பிரபஞ்சத்திற்கே அதிபதியான நம்மைப் படைத்த இறைவன் முன் நிற்கிறோம் என்கிற எண்ணத்தை நாம் நமது மனதில் தொடர்ந்து இருத்திக் கொண்டால், இவ்வகைத் தொல்லைகளில் இருந்து விரைவில் இன்ஷா அல்லாஹ் விடுதலை பெறலாம். இறைவன் மிக அறிந்தவன் இடுகையிட்டது PMsyed நேரம் 7/28/2012 04:50:00 பிற்பகல் கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் புதன், ஜூலை 25, 2012 "ஸகாத்தின் முக்கியத்துவம்" ஸகாத்தின் பொருள் இதன் பொருள் தூய்மையுறச்செய்தல் என்பதாகும். ஒருவன் தன் உடைமைகளிலிருந்து நாற்பதில் ஒருபகுதியை எடுத்து ஏழைகளுக்கு அறம் செய்வதன் மூலம் அவனிடம் எஞ்சியுள்ளவை தூய்மை பெறுவதாலும், அவனுடைய உள்ளமும் உலோபித்தனத்திலிருந்து தூய்மை பெறுவதாலும் இதற்கு இப்பெயர்ஏற்பட்டது. ஸகாத்தின் நோக்கம் என்ன ? செல்வம் செல்வந்தர்களை மட்டுமே சுற்றி வரக்கூடாது. அது சமுதாயத்தின் எல்லா நிலை மக்களையும்சென்றடைந்து எல்லோரும் வளமாக வாழ வேண்டும் என்ற உயரிய நெறிபை; போதிப்பதாகும். இதுவேபொருளாதாரத்தின் ஏற்றத்தாழ்வை போக்குவதற்கு சிறந்த வழி என்று இஸ்லாம் உலகிற்கு பிரகடனம்செய்கிறது. இதைத்தான் அருள்மறை அல்-குர்ஆன் பின் வருமாறு இயம்புகிறது. كي لا يكون دولة بين الاغنياء منكم ( الحشر 59:7) உங்களுடைய செல்வம் நாட்டிலுள்ள செல்வந்தர்களுக்கிடையே சுற்றிக்கொண்டிருக்கக்கூடாது (59:7) ஸகாத்தின் விதிகள் என்னென்ன? 1) ஸகாத் பொருள் தனக்கு உரியதாக இருக்க வேண்டும். 2) அளவு (நிஸாப்) முழுமை பெறவேண்டும். 3) ஓராண்டு காலம் நிறைவு பெறவேண்டும். 4) (கடன்கள் இல்லாமலிருக்க வேண்டும். 5) சொந்த தேவைகள் போக மீதயிருக்க வேண்டும்.) ஸகாத் கொடுப்பதற்கு கடமைப்பட்டோர் யார் ? ஸகாத் வரி குறிப்பிட்ட அளவு (நிஸாப்), பொருள் படைத்த ஒவ்வொரு முஸ்லிமின்மீதும் இஸ்லாம்விதியாக்கியுள்ளது. தொழுகை நோன்பு, ஹஜ்ஜு போன்ற வணக்கங்களில் சிறுவர்களுக்கும், புத்தி சுவாதீனம் இல்லாதோருக்கும் விதிவிலக்கு அளிக்கப்படுவது போல் ஸகாத்தில் விதிவிலக்கு வழங்கப்படவில்லை.அவர்களிடம்குறிப்பிட்ட தொகை இருந்தால் அவர்களின் பொறுப்பாளர்கள்,அவர்களிடமிருந்து ஸகாத்தைப் பெற்று வழங்கியாகவேண்டும். ஏனெனில் இது ஏழைகளுக்கு போய் சேர வேண்டிய உரிமையாகும். ஸகாத் விதியானோர் ஐந்து பேர் 1. முஸ்லிமாக இருத்தல் 2. சுதந்திரமானராக இருத்தல் 3. நிஸாபை அடைதல் (85 கிராம் தங்க மதிப்புடைய பொருளைப் பெறுதல்) 4. பொருளுக்கு உரியவராக ( Owner) இருத்தல். 5. விளை பொருளைத்தவிர அனைத்தும் ஓராண்டு பூர்த்தியாகுதல் இத்தகுதிகளைப்பெற்ற அனைவரும் ஸகாத் கொடுக்க வேண்டும். யார் யாருக்குக் கொடுக்க வேண்டும் ? 8 பிரிவினர்) انما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم ( التوبة 9:60) 1)யாசிப்போர் (ஃபக்கீர்) 2) ஏழைகள் (மிஸ்கீன்) 3) ஸகாத் வசூலிப்போர். 4) இஸ்லாத்தை தழுவ விரும்புவோர். 5) அடிமைகளை விடுதலை செய்வதற்காக! 6) கடன்பட்டோர். 7) இறைவழியில் அறப்போர் செய்வோர். 8) பயணிகள் (வழிப்போக்கர்) ( அல்-குர்ஆன் 9:60 ) யார் யாருக்கு கொடுககக்கூடாது ? 1) வசதியுள்ளோர். 2) உடல் வலிமை பெற்றோர். 3) தனது பெற்றோர்.பிள்ளைகள் ( அல்-அஸ்லு வல்ஃபர்உ) 4) நபியின் குடும்பத்தினர். 5) முஸ்லிமல்லாதோர். 6) தீயவர்கள். எப்போது வழங்க வேண்டும் ? இது ரமளானில் தான் வழங்கவேண்டுமென பலரும் எண்ணிக்கொண்டு அம்மாதத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். இஸ்லாம் அவ்வாறு குறிப்பிடவே இல்லை. பின் எப்போது கொடுக்க வேண்டும் ? ஒருவருக்கு உணவு,உடை, வீடு, வாகனம், தொழிலுக்குத் தேவையான பொருட்கள் (கருவிகள்) போன்றஅவசியத் தேவைகள் போக ஒருகுறிப்பிட்ட அளவு அல்லது அதற்கு மேல் செல்வமிருந்தால் கணக்கிட்டு நூற்றுக்கு இரண்டரை சதவிகிதம் கொடுக்கவேண்டும். அதுவும் குறிப்பிட்ட அளவை (நிஸாபை) பெற்றவுடன் அல்ல. அந்த தொகை ஒர் ஆண்டு முழுவதும் அவனிடம் இருந்து, ஆண்டு இறுதியில் கொடுத்தால் போதுமானது. எந்த அளவுக்கு ஸகாத் வழங்கவேண்டும் ? 20 தீனாருக்கு குறைவானவற்றில் ஸகாத் கடமையில்லை.20தீனார்கள் ஓராண்டு முழுவதும் உம்மிடமிருந்;தால் அதற்கு நீர் ஸகாத் கொடுக்க வேண்டும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம் : அஹ்மது, அபூ தாவூது, பைஹகீ) மேற் கண்ட நபி மொழியில் 20 தீனார் அளவு அல்லது அதற்கு மேற்பட்ட அளவு வைத்திருப்போர்தான் ஸகாத் கொடுக்க கடமைப்பட்டுள்ளனர். என்பது தெரிய வருகிறது. நபிகள் நாயகம் காலத்தில் செல்வம் என்பது தங்க வெள்ளி நாணயங்களாகவோ, கால்நடைகளாகவோ சொத்தாகவோ இருந்தது. இப்போதுள்ளது போல் விலையுயர்ந்த வைரங்கள், பிளாட்டினங்கள் இருந்ததில்லை. கரன்ஸி நோட்டுகள் இருந்ததில்லை. தங்கத்தின் மதிப்பை வைத்தே நோட்டுகள் அச்சடிக்கப் படுவதால் தங்கத்தின் விலையையும் வைத்தே இன்று அனைத்தையும் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஸகாத் கடமையான பொருட்கள்: ஸகாத் ஐந்து வகை பொருட்கள் மீது கடமையாகிறது: 1) தங்கம், வெள்ளி, 2) வியாபாரப் பொருட்கள் 3) கால் நடைகள் 4) விவசாய விளைச்சல்கள் 5) புதையல்கள் ஸகாத்தின் சதவிகித அளவுகள் 1. 2.5 (இரண்டரை)சதவிகிதம் 2. 5 சதவிகிதம் 3. 10 சதவிகிதம் 4. 20 சதவிகிதம் என பொருளின் இனம் மாறுபடும் போது சதவிகிதமும் மாறு படுகிறது.இனி இவற்றை விரிவாகாப் பார்ப்போம். 1. இரண்டரை சதவிகிதம் ஸகாத் 1. தங்கம்நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் வழக்கிலிருந்த ஒரு தீனார் தங்க நாணயத்தின் மதிப்பு இன்றைய மெட்ரிக் அளவில், 4..25 கிராமாகும். 20 தீனாருக்கு 85 கிராம் தங்கத்தின் அளவாகும். பெருமானார் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு 20 மித்கால் (தீனார்) தங்கத்துக்கும் அரை மித்கால் தங்கத்தை( அதாவது 40ல் ஒரு பாகத்தை) ஸகாத்தாக எடுப்பார்கள். ( இப்னு மாஜா) யாரிடமேனும் தமது அத்தியாவசியப் பொருட்களான உணவு,உடை, உறையுள்,தொழிற் கருவிகள்போக 85 கிராம் தங்க நகைகளோ, தங்கமோ, அல்லது அதற்கு மேற்பட்டோ ஓராண்டு முழுவதுமிருந்தால்அதற்கு நாற்பதில் ஒரு சதவிகிதம்-அதாவது இரண்டரை சதவிகிதம்- ஸகாத் கொடுத்தாக வேண்டும். உதாணமாக ஒருவரிடம் 100 கிராம் தங்கம் ஓராண்டு முழுவதும் இருந்தால் அதில் இரண்டரை கிராம்(இரண்டரை சதவிகிதம்) -தங்கத்தை அல்லது அதற்கு இணையான விலையை ஸகாத்தாக கொடுக்க வேண்டும். வருடத்துவக்கத்தில் 100 கிராமிருந்து பின்னர் தன் தேவைக்கு ஒரு 10 கிராமை எடுத்துச் செலவு செய்து விட்டால் வருட இறுதியில் எஞ்சிய 90 கிராமுக்குரிய ஸகாத்தை வழங்க வேண்டும். 2. வெள்ளிவெள்ளி நகைகள், வெள்ளிப் பாத்திங்கள், வெள்ளிக் காசுகள் போன்றவற்றிற்கும் ஸகாத் வழங்கப்பட வேணடும்.200 திர்ஹமோ அதைவிடக்கூடுதலோ வெள்ளிக்காசுகள் வைத்திருப்போர் மீது ஸகாத் கடமையாகும்.ஐந்து ஊக்கியா (ஒரு ஊக்கியாh 40திர்ஹம்.40ஓ5ஸ்ரீ200 திர்ஹம்) அளவை விடக்குறைந்த வெள்ளிக்காசுகளுக்கு ஸகாத் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸயீதுல் குத்ரிய்யி (ரலி), புகாரி : 1447) 200 திர்ஹம் (வெள்ளி) இருக்கும் போது அதில் ஐந்து திர்ஹம் ஸகாத் கொடுக்க வேண்டும்.. மேற்கூறிய ஹதீஸிலிருந்து 200 திர்ஹத்திற்கு குறைவான எடைக்கு ஸகாத் கிடையாது எனத் தெரிகிறது.இன்றைய மெட்ரிக் எடையில் ஒரு திர்ஹத்திற்கு 595 கிராம் ஆகும். 200 திர்ஹத்திற்கு(200ஒ2.975) 595 கிராம் ஆகிறது. தனது அவசியத்தேவை போக ஒருவரிடம் ஓராண்டிற்கு 595 கிராம் அல்லது மேற்பட்டுவெள்ளியிருந்தால் (40 ல் ஒரு விகிதம்) இரண்டரை சதவீதம் (அதாவது 14.875 கிராம்) ஸகாத் வழங்க வேண்டும். 3. நகைகள்; தங்க வெள்ளி நகைகளில் அணிந்திருக்கும் நகைகளுக்கு ஸகாத் உண்டா என அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் காணப்;பட்டாலும் பெரும்பாலான அறிஞர்கள் ஸகாத் கொடுக்க வேண்டுமெனகீழுள்ள ஆதாரங்களை முன் வைக்கின்றனர். இருபெண்கள் தங்கக் காப்புகள் அணிந்து பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது உங்களிருவருக்கும் மறுமை நாளில் நெருப்புக் காப்புகள் அணிவிக்கப்படுவதை விரும்புவீர்களா ? என அவர்ளிடம் கேட்டபோது விரும்பமாட்டோம் என பதிற் கூறினர். அவ்வாறாயின் உங்கள் கைகளில் அணிந்திருப்பவைகளுக்குரிய ஸகாத்தை கொடுத்து விடுங்கள்; என நபி (ஸல்) எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அம்ருப்னு சுகைபு (ரலி), ஆதாரம்: இப்னு ஹஸம்நானும் எனது சிறியதாயாரும் தங்கக்காப்புகள் அணிந்து கொண்டு நபிபெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்றோம்.அப்போது இதற்கு ஸகாத் கொடுத்து விட்டீர்களா ? எனக்கேட்hர்கள். இல்லை என்றோம்.நரக நெருப்பை உங்கள் கரங்களில் அல்லாஹ் அணிவிப்பதைப்பற்றி உங்களுக்கு அச்சமாக இல்லையா? இதற்கான ஸகாத்தைச் செலுத்திவிடுங்கள். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அஸ்மா பின்த் யஸீது (ரலி), ஆதாரம்: அஹ்மத் நான் வெள்ளி மோதிரங்கள் அணிந்திருப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டனர். இதற்குரிய ஸகாததைச்செலுத்திவிட்டாயா? ஏன்று கேட்டனர். இல்லையென்றேன்.அவ்வாறாயின் இதுவே உன்னை நரகிற்சேர்க்கப்போதுமானதாகும். என்று ஏந்தல் நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அஸ்மா பின்த் யஸீது (ரலி), ஆதாரம்: அபூதாவூது, தாரகுத்னீ, பைஹகீ மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து தங்க வெள்ளி நகைகளுக்கும் ஸகாத் உண்டு என்பதை நபி(ஸல்)அவர்கள் வலியுறுத்துவதைக் காணலாம்.(தங்கம், வெள்ளிக்குரிய மதிப்பீட்டை அன்றைய மார்கெட் நிலவரப்படி கணித்துக்கொள்ளவேண்டும்) ஆண்டுதோறும் கொடுக்கவேண்டுமா?ஒரு பொருளுக்கு ஒரு தடவை ஸகாத் கொடுத்தால் போதுமானது. ஆண்டு தோறும் கொடுக்க வேண்டியதில்லை என்ற வாதத்தை பரவலாகக் காணமுடிகிறது. இவர்கள் முன்வைக்கும் வாதத்தையும் ஆதாரஙடகளையும் பின்னர்காண்போம். எனினும் ஆண்டு தோறும் ஸகாத் கொடுக்கவேண்டுமென்றே பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலும் அவர்களின் பின்னர் வந்த கலீபாக்கள்காலத்திலும் ஆண்டு தோறும் வசூலித்து வந்துள்ளதைக் காணமுடிகிறது. நபிகளாரின் காலத்திலும் குலபேயே ராசிதீன்கள் காலத்திலும் ஸகாத் வசூலிப்பதற்காக வருடந் தோறும் அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டனர். எந்த நாயகத் தோழரும் அவ்வாறு கொடுப்பதற்கு மறுப்பு தெரிவிக்க வுமில்லை. இதை வைத்தே உலகின்பெரும்பாலான அறிஞர்கள் ஆண்டுதோறும் ஸகாத் கொடுக்கவேண்டுமெனத் தீர்;ப்பு வழங்கியுள்ளனர். ஸவூதி அரேபியாவின் மிகப்பெரும் மார்க்க மேதைகளான அஷ்ஷைகு பின் பாஸ் (ரஹ்) அவர்களும், ஸாலிஹ்அல்-உதைமீன் (ரஹ்) போன்றவர்களும் இக்கருத்தையே வலியுறுத்துகின்றனர். (மேற்கோண்டு விளக்கத்திற்கு தொடர்-2 கட்டுரையைப்பார்க்க) 4. ரூபாய்கள் 85 கிராம் தங்கத்திற்கு நிகரான வகையில் கரன்ஸிநோட்டுகள் குறிப்பிட்ட காலஅளவு நம்மிடமிருந்தாலும்வங்கியிலிருந்தாலும் அதற்கான ஸகாத்தையும் நாம் கணக்கிட்டு கொடுத்து வரவேண்டும். 5. வியாபாரப் பொருட்கள் வியாபாரத்திற்கு வைத்திருக்கும் எந்தப் பொருளாக இருப்பினும் அதற்கு கட்டாயம் ஸகாத் வழங்கியேஆக வேண்டும்.ஸமுரா இப்னு ஜுன்துப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:-நாங்கள் வியாபாரத்திற்கென வைத்திருக்கும் பொருட்களுக்கு ஸகாத் வழங்க வேண்டுமென நபி ( ஸல் )அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஆதாரம் : அபூ தாவூது, பைஹகீ மூலதனத்திற்கும் மட்டும் ஸகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது மூலதனத்திற்கும் இலாபத்திற்கும் சேர்த்தே கொடுக்க வேண்டுமா? என்று பலரும் கேட்கின்றனர். மூலதனத்திற்கும் இலாபத்திற்கும் சேர்த்தே கொடுக்கவேண்டும் என்பதே அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும்.ஆதாரம்: உமர் (ரலி) அவர்கள் ஆடுகளைப் பெற்றிருந்த ஒருவரிடம் அதற்குரிய ஸகாத்தை கேட்டபோதுஅவை ஈன்ற குட்டிகளை விட்டு விட்டு ஸகாத் கொடுக்க முன் வந்தார். அப்போது அதற்குரிய குட்டிகளையும்கணக்கில் சேர்ப்பீராக! என அவர்கள் கூறிய செய்தி இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் முவத்தாவில் இடம் பெற்றிருக்கிறது. இதை ஆதாரமாகக் கொண்டு வியாபாரத்தில் இலாபமாகப்பெற்ற தொகைக்கும் சேர்;த்தே ஸகாத்தை கணக்கிடவேண்டும் என்பதை அர்ரவ்லுல் முரப்பஃ ஸரஹ் ஸாதுல் முஸ்தக்னஃ பாகம்4,பக்கம்17ல் குறிப்பிடப்பட்டுள்ளது.) 1) ஒருவர் பத்து இலட்ச ரூபாய் முதலீடு செய்து ஜனவரிமாதம் ஒரு வியாபாரத்தைத் தொடங்குகிறார் என்றுவைத்துக்கொள்வோம்.ஓராண்டு முடிந்து அடுத்த ஜனவரியில் கணக்குப்பார்க்கும்போது வியாபாரம் வளர்ந்து செலவு சம்பளம் போக 5 இலட்ச ரூபாய் அதிகமிருக்கிறது. இப்போது மூலதனமாகிய ரூ10இலட்சத்துக்கும் ஓராண்டுக்குப்பிறகு இலாபமாகக் கிடைத்த 5 இலட்சத்துக்கும் சேர்த்து 15இலட்சத்துக்கு இரண்டரைசதவீதம்(அதாவது 37,500 ரூபாய் ) ஸகாத் கொடுக்க வேண்டும். மூலதனமாகிய 10 இலட்ச ரூபாய்க்கு மட்டும் கொடுத்தால் போதுமானது என்பதற்கு ஆதாரமில்லை. 2)அடுத்து பத்து இலட்ச ரூபாய் முதலீடு செய்து வியாபாரம் செய்கிறோம். வினியோக வியாபாரிகளிடமிருந்து கடனாகப் பெற்ற ஐந்து இலட்சத்திற்குரிய வியாபாரப் பொருட்களும் கடையில் உள்ளன.வரவேண்டிய பாக்கிக்கடன் தொகை மூன்று இலட்சம் உள்ளது. ஆண்டு இறுதியில் கணக்குப் பார்க்கும் போது 7 இலட்ச ரூபாய் இலாபமாக கிடைத்துள்ளன. இப்போது கடையில் ஆண்டு இறுதியில் 1010 5107 ரூ 22 இலட்சம் உள்ளன. இவற்றில் கடனாகப் பெற்ற தொகையையும் வரவேண்டிய தொகையையும் கழித்து 14 இலட்சத்திற்கு ஸகாத்கொடுக்க வேண்டுமா ? அல்லது இருப்புக்கு மட்டும் கொடுக்க வேண்டுமா என்ற ஐயங்கள் எழுகின்றன..ஆண்டு இறுதியில இருப்பில் உள்ள மொத்த தொகைக்கும் (அதாவது 1010510710 ரூ 22 இலட்சத்துக்கு இரண்டரை சதவிகிதம் (ரூபாய் 55000.00) ஸகாத் கொடுக்க வேண்டும். 3) பிறருடைய பொருள் நம் பொறுப்பில் இருந்தாலும் அது ஸகாத்துடைய அளவை அடைந்து ஓராண்டு முழுமையாகநம்மிடம் இருந்து விட்டால் ஓரராண்டுக்குரிய ஸகாத்தை கொடுத்து விடவேண்டும். அந்தப் பொருளை ஸகாத்துடைய காலவரையை அடைவதற்கு முன் திருப்பிக் கொடுத்து விட்டால் அதற்கு ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை. 4) அது போல நாம் திருப்பிச்செலுத்த வேண்டிய கடன் தொகை நம்மிடம் ஒருவருடம் இருந்துவிட்டாலும் அதற்குரிய ஸகாத்தை கணக்கிட்டுக் கொடுத்து விடவேண்டும். ஸகாத் காலவரைக்கு முன்னர் திருப்பிச் செலுத்திவிடடால் ஸகாத் செலுத்த வேண்டியதில்லை. கடன் தொகை 5)சதாரணக் கடனாகட்டும். வியாபாரக் கடனாகட்டும். கடன் கொடுத்த தொகை கண்டிப்பாக வரும் தொகையும் உண்டு. வராதவையும் உண்டு. கண்டிப்பாக வரும் தொகைக்கு அந்த ஆண்டே கணக்கிட்டு ஸகாத் கொடுத்து விடவேண்டும். வராத தொகைக்கு கையில் கிடைத்ததும் அதற்குரிய ஸகாத்தை கணக்கிட்டு கொடுத்து விடவேண்டும். பலஆண்டுகள் சென்று இந்த கடன் தொகை கிடைப்பதாக இருப்பின் அவற்றிற்கு அண்டு தோறும் என்ற கணக்கில்லாமல் ஒரேஒரு தடவை மொத்தத் தொகைக்கும் கொடுத்தால் போதுமானது. 6. வங்கியில் போடும் வைப்பு நிதி,, குறித்த கால வைப்பு நிதியும் சேமிப்புப் பத்திரம் நிறுவனப்பங்குகள் அவை கைவசமிருக்கும் பணமாகக் கருதி ஒரு வருடம் பூர்த்தியானதும் ஆண்டுதோறும் ஸகாத் கொடுத்து வரவேண்டும். 7. சொந்த வீடுகள், வாடகை வீடுகள்நாம் குடியிருக்கும் வீட்டிற்கு ஸகாத் கிடையாது. ஆயினும் வாடகைக்கு விடப்படும் வீடுகளில் வரும் வருமானத்திற்கு இரண்டரை சதவீதம் ஸகாத் கொடுக்க வேண்டும். 8. கடைகள், விடுதிகள் (லாட்ஜுகள்) வாடகைக்கு விடப்படும் கடைகள்,கட்டடங்கள்,விடுதிகள்(லாட்ஜுகள்) ஆகியவற்றிற்கும் ஸகாத் கிடையாது.அதில் வரும் வாடகைக்கு இரண்டரை சதவீதம் ஸகாத் கொடுக்க வேண்டும். 9. நிலங்கள், வீட்டு மனைகள்விவசாய நிலங்கள், வீட்டு மனைகள் ஆகியவற்றுக்கும் ஸகாத் இல்லை. ஆனால் அவற்றிலிருந்து வரும் வருவாய்க்கும், விற்பனை செய்வதாக இருந்தால் அதன் மதிப்புத் தொகைக்கும் இரண்டரை சதவீதம் ஸகாத் கடமையாகும். இவை வியாபாரச் சரக்குகளைப்; போன்றவையாகும். 10. வாகனங்கள், கனரக பளுதூக்கும் இயந்திரங்கள்வாகனங்கள், கனரக பளுதூக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றின் மதிப்பீட்டிற்கு ஸகாத் இல்லை. ஆனால், அவற்றின் வருமானத்திற்கும் வாடகைக்கும் ஸகாத் உண்டு. பொதுவாகவே மேற்கூறிய அனைத்திற்கும் அவற்றின் மொத்த மதிப்பீட்டிற்கு-அஸலுக்கு-( ஏயடரந ழக pசழிநசவல) ஸகாத் கிடையாது. அவற்றின் வருமானத்திற்கும், அவற்றை விற்கும் போதும் தான் ஸகாத் கொடுக்க வேண்டும் என்பதை நினைவிற் கொள்ளவேண்டும். 11. கால் நடைகள் கால் நடைகளில் ஆடு, மாடு, ஒட்டகை மனித வாழ்வுக்கும் ஒரு நாட்டின் வளத்திற்கும் வருவாய்க்கும் மிகவும் முக்கியமானவையாக உள்ளன. அவற்றின் பாலும் மாமிசமும் மனிதனுக்கு மிகவும் இன்றியமையாதவை. அதன்தோல், உரோமம், கொம்பு ஆகியவை பெருமளவில் அந்நியச்செலாவணியைப் பெற்றுத்தருகிறது. பயணம் செய்வதற்கும் பயன்படுகின்றன. இவ்வாறாக மனிதத் தேவைகளுக்கும் பொருளாதார வளத்திற்கும் பயன்தரும் இந்த கால் நடைகளை சிறப்பித்து திருமறையில் வரும் 43:12, 16:5,7 வசனங்கள் சிந்தனைக்குரியதாகும், எனவே இறைவன் வழங்கிய இந்த அருட்கொடைகளுக்கு ஸகாத் வழங்குவது கடமையாகும். நம் நாட்டைப் பொறுத்தவரை ஸகாத் கொடுக்குமளவுக்கு யாரும் கால்நடைகள் வைத்திருப்பதில்லை. எனினும் அதன் விபரத்தை சுருக்கமாகக் காண்போம். ஸகாத் விகிதங்கள் கால்நடைகள் எண்ணிக்கை ஸகாத் இல்லை ஸகாத் கொடுக்க வேண்டும். 1. ஆடுகள் 1 முதல் 39 வரை ஸகாத் இல்லை 40 முதல் 120 வரை ஓராண்டு நிறைவு பெற்ற ஓர் ஆடு 121 முதல் 200 வரை ‘ ‘ இரண்டு ஆடுகள் 201 முதல் 399 வரை ‘ ‘ மூன்று ஆடுகள் 400, அதற்கு அதிகமுள்ளதற்கு ஒவ்வொரு 100 க்கும் ஒரு ஆடு அதிகம் வழங்கவேண்டும். (புகாரி ஹதீஸ் எண:;1454)) (வெள்ளாடு,செம்மரியாடு,ஆண்-பெண் ஆடுகள் யாவும் சமமாகும்) 2. மாடுகள் 1 முதல் 29 வரை ஸகாத் இல்லை (எருமைகள); 30 முதல் 39 வரை ——- ஓராண்டு நிறைவு பெற்ற ஒரு கன்று 40 முதல் 59 வரை ——- 2 வருடம் ‘ ‘ ஒரு கன்று 60 அல்லது அதற்குமேற்பட்டதற்கு ஓவ்வொரு 30 மாடுகளுக்கு ஓராண்டு நிறைவு பெற்ற ஒரு கன்றும் ஓவ்வொரு 40 மாடுகளுக்கு இரண்டு ஆண்டு நிறைவு பெற்ற ஒரு கன்றும் 3. ஒட்டகைகள் 1 முதல் 4 வரை ஸகாத் இல்லை 5 முதல் 9 வரை ஓராண்டு நிறைவு பெற்ற ஓர் ஆடு 10 முதல் 14 வரை ஓராண்டு நிறைவு பெற்ற இரண்டு ஆடுகள் 15 முதல் 19 வரை ஓராண்டு நிறைவு பெற்ற மூன்று ஆடுகள் 20 முதல் 24 வரை ஓராண்டு நிறைவு பெற்ற நான்கு ஆடுகள் 25 முதல் 35 வரை ஓராண்டுநிறைவுபெற்ற ஓர் பெண் ஒட்டகம்; 36 முதல் 45 வரை இரு வருடம் நிறைவு பெற்ற பெண் ஒட்டகம் 46 முதல் 60 வரை 3 வருடம் நிறைவு பெற்ற பெண் ஒட்டகம் 61 முதல் 75 வரை 4 வருடம் நிறைவு பெற்ற பெண் ஒட்டகம 76 முதல் 90 வரை 2வருடம்நிறைவுபெற்ற 2 பெண் ஒட்டகங்கள் 91 முதல் 120 வரை 3 வருடம்நிறைவுபெற்ற2 பெண் ஒட்டகங்கள ஒவ்வொரு 40 க்கும்ஒவ்வொரு 50 க்கும் 2 வருடம் நிறைவுபெற்ற 1 பெண் ஒட்டகம் 3 வருடம்நிறைவுபெற்ற 1 பெண்xட்டகம் குதிரைக்குரிய ஸகாத் வியாபாரப்பொருளைப்போன்றதாகும். சொநத உபயோகத்திற்கு ஸகாத் கிடையாது. வியாபாரத்திற்கு இரண்டரை சதவிகிதம் ஸகாத் கொடுக்க வேண்டும். 2) 5 சதவிகிதம் ஸகாத் 12. தானியங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் தானியங்களில் கோதுமை மட்டுமே விவசாயம் செய்யப்பட்டுவந்தன. வேறு தானியங்களும் அப்பகுதிகளில் உற்பத்தியாகவுமில்லை. ஆயினும் நெல், சோளம், ரவை, ராகி கிழங்கு போன்ற உணவு வகை எதுவாயினும் கோதுமையைப் போன்று கணக்கிட்டு ஸகாத் கொடுக்க வேண்டும்.எனினும் முன்னர் நாம் குறிப்பிட்ட பொருள்களின் ஸகாத்திலிருந்து இவை மாறுபடுகின்றன. தங்கம் வெள்ளி வியாபாரப் பொருட்களுக்கு ஆண்டு தோறும் ஸகாத் கொடுத்து வரவேண்டும். ஆனால் தானியங்களைப் பொறுத்தவரை அவ்வாறன்று. விவசாயம் செய்து விளைந்து அறுவடை செய்யும் காலங்களில் அதற்குரியஸகாத்தை கணக்கி;ட்டுக் கொடுக்க வேண்டும். 3) 10 சதவிகிதம் ஸகாத் (உற்பத்தியில் 5 சதவிகிதம்) நீர் பாய்ச்சுவதற்காக செலவு செய்து விவசாயம் செய்திருந்தால் உற்பத்தியில் 5 சதவிகிதம் ஸகாத்கொடுக்க வேண்டும். (அதாவது 20ல் ஒருபங்கு (1ஃ20) கொடுக்க வேண்டும்.) உற்பத்தியில் 10 சதவிகிதம் நீர் பாய்ச்சுவதற்காக செலவு செய்யப்படாமல் விவசாயம் செய்திருந்தால் உற்பத்தியில் 10 சதவிகிதம் ஸகாத் கொடுக்க வேண்டும். (அதாவது 20ல் இரு பங்கு (2/20) கொடுக்க வேண்டும்.) அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம்: புகாரி ஓராண்டு முடிவடைய வேண்டும் என்பதில்லை.அறுவடையான உடனேயே கொடுத்து விடவேண்டும் இங்கேகவனிக்கத்தக்கதாகும். அதற்குரிய உரிமையை அறுவடை நாளிலேயே கொடுத்;து விடவேண்டும் என அல் குர்ஆன் (6:141) அறிவுரை பகர்கிறது. தானியங்களுக்குரிய அளவு (நிஸாப்) கோதுமைதானியங்களுக்கும் ஒரு வரையறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்;துள்ளார்கள்;.’ ஐந்து வஸக்’ அளவுக்குக் குறைவான உற்பத்திக்கு ஸகாத் கிடையாது என நபி ( ஸல் )அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம், அபூ தாவூது, தீhமிதி,நஸயீ, இப்னு மாஜா,தாரமீ, முஅத்தா, அஹ்மத். எனவே, ஒரு வஸக் என்பது 60 ஸாவு ஆகும் ஒரு ஸாவு 2.5 மப (இரண்டரை கிலோ) ஃ 5 வஸக் 5ஒ60ஸ்ரீ 300 ஸாவு 300 ஸாவு (300ஓ2.5 மப ஸ்ரீ) 750 கிலோவாகும் . 750 கிலோ கோதுமை உற்பத்திக்கே ஸகாத் வழங்கப்படவேண்டும். அதற்கு குறைந்த அளவுக்கு ஸகாத்வேண்டியதில்லை. ஒரு வருடத்தில் பல முறை உற்பத்திச் செய்தாலும் ஒவ்வொரு முறையும் இந்த அளவுவிளைச்சலுக்கு ஸகாத் கொடுக்க வேண்டும். நெல் கோதுமையைப் பொறுத்த வரை அப்படியே அரைத்து மாவாக்கி உணவாக உட்கொள்ள முடியும்..ஆனால் நெல்லைப் பொறுத்தவரை அதன் மேல் தோலான உமியை நீக்கிய பிறகே உண்ணுவதற்கு ஏற்றதாகும். ஆகவே. நெல்லுக்கு ’10 வஸக்’ ( 1500 மப) உற்பத்தியானால் தான் அதற்கு ஸகாத் உண்டு என மார்க்கஅறிஞர்கள் நிர்ணயம் செய்துள்ளனர். தண்ணீர் பாய்ச்சுவதற்காக செலவு செய்யப்பட்டிருந்தால் உற்பத்தியில் 5 சதவிகிதமும் தண்ணீர் பாய்ச்சுவதற்காகசெலவு செய்யப்படாமலிருந்தால் உற்பத்தியில் 10 சதவிகிதமும் ஸகாத் கொடுக்க வேண்டும். நிலத்திலிருந்து உற்பத்தி யாகும் பொருட்களுக்கு மட்டுமே ஸகாத் கடமையாகும். நிலம் எவ்வளவு இருந்தாலும்நிலத்திற்கு ஸகாத் கிடையாது. 13. பேரீத்தம் பழம் , உலர்ந்த திராட்சை இந்த இரண்டும் அறுவடை செய்த உடனேயே ஸகாத் கொடுக்க வேண்டும். இவை தவிர எந்த பழவகைகளுக்கும் ஸகாத் கிடையாது. 14. காய்கறிகள்காய்கறிகளுக்கும் ஸகாத் கிடையாது. அவை வியாபாரத்திற்கு பயன்படுத்தப்படுமேயாhனால் அவற்றின் ஸகாத்காலமும் அளவும் நிறைவு பெற்றால் ஆண்டுதோறும் ஸகாத் கொடுக்கவேண்டும். 4) 20 சதவிகிதம் ஸகாத் 15. கனிமப் பொருள், சுரங்கப்பொருள்சுரங்கங்களிலிருந்து எடுக்கப்படும் உலோகங்கள், கனிமப் பொருட்கள், பூமியிலிருந்து கிடைக்கும் பெட்ரோல், கச்சா எண்ணெய், நிலக்கரி போன்ற புதையல்கள், போரில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றும் (கனீமத்) பொருட்கள் ஆகியவற்றிற்கு 20 சதவிகிதம் ஸகாத் வழங்ப்படவேண்டும். முக்கியக் குறிப்பு : 1. வைரக்கல், பிளாட்டினம் பல நர்டுக்கரன்சிகள், வலையுயர்ந்த சேமிப்புப் பொருட்கள் ஆகிய ற்றிற்கு ஸகாத்கிடையாது. அவை வியாபாபாரத்திற்கெனில் ஓராண்டு நிறைவு பெற்றதும் அதன் விலைக்கு இரண்டரை சதவிகிதம் ஸகாத் கொடுக்க வேண்டும். 2. ஆடு, மாடு, ஒட்டகை அல்லாத மிருகங்களுக்கும் ,பறவைகளுக்கும் ஸகாத் கிடையாது. விற்பனைக்கென்றால் ஓராண்டுநிறைவு பெற்றதும் வியாபாரப் பொருளைப்போல் இரண்டரை சதவிகிதம் ஸகாத் கொடுக்க வேண்டும். 3. பழவகைகள், காய் கறிகளுக்கும் ஸகாத் கிடையாது. அவை வியாபாபாரத்திற்கெனில் ஓராண்டு நிறைவு பெற்றதும அதன்விலைக்கு இரண்டரை சதவிகிதம் ஸகாத் கொடுக்க வேண்டும். 4. மேலே குறிப்பிடப்படாத எதுவாயினும் சொந்த உபயோகத்திற்கோ, பாது காத்து வரும் எண்ணத்திலோஉள்ளவையாயின் ஸகாத் கிடையாது. அவை வியாபாபாரத்திற்கெனில் ஓராண்டு நிறைவு பெற்றதும் அதன் விலைக்கு இரண்டரைசதவிகிதம் ஸகாத் கொடுக்க வேண்டும். 16. சில்லரையாக வினியோகித்தல்; சில்லரையாக வினியோகிப்பது ஸகாத் முறையாகாது. கடமையும் நிறை வேறாது. 17. பைத்துல் மால் பொது நிதிபைத்துல் மால் பொது நிதி ஒன்றை உருவாக்கி பணத்தை உரியவரிடமிருந்து திரட்டி ஒரு அமைப்பு முறையாக ஏழைகளுக்கு வாழ்வாதாரத்திற்குப்பயன் படும் வகையில் அவர்களும் அடுத்தடுத்த ஆண்டுகளில் மற்றவர்களுக்கு கொடுக்கும் வகையில் வினியோகிப்பதையே இஸ்லாம் விரும்புகிறது. இதன் மூலமே உலகளாவிய அளவில் வறுமையை ஒழித்து ஏழைகள் ஏற்றம் பெறச் செய்து சமுதாயத்தில் வாழ்வையும் வளத்தையும் காணமுடியும். இதுவே இஸ்லாம் விழையும் ஸகாத் முழறயாகும். வல்ல நாயன் ஸகாத்தின் முக்கியத்தை உணர்ந்து அதை உரிய முறையில் வினியோகிப்பதற்கு நல்லருள் புரிவானாக. நன்றி:இஸ்லாம் கல்வி இடுகையிட்டது PMsyed நேரம் 7/25/2012 09:07:00 முற்பகல் கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் பிள்ளைகளிடம் தாய் எப்படி நடந்து கொள்ளவேண்டும் !!! உலகிலேயே தனது அம்மாவைப் போல சிறந்தவர் இருக்க முடியாது. சிறந்த அறிவாளி யாரும் இருக்க முடியாது என்றுதான் ஒவ்வொரு குழந்தையும் நினைக்கும். தனது குழந்தையிடம் அதிக நெருக்கமாகவும், பாசமாகவும் இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு அம்மாவும் விரும்புவார். குழந்தைக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டிய தாய், அந்தக் குழந்தையுடன் நெருக்கமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே, தனது குழந்தையிடம் நெருக்கமாக இருக்க பல்வேறு வல்லுநர்களும், புத்தக ஆசிரியர்களும் வழிகளை பட்டியலிட்டு உள்ளனர். குழந்தை, தங்களிடம் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக, பெரும்பாலான பெற்றோர், அவர்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிடுகின்றனர். இது, குழந்தையின் வாழ்க்கையில் மற்றவர்கள் தலையிட வழி ஏற்படுத்திவிடும். எனவே, குழந்தைகளுக்கு கட்டுப்பாடுகள் அவசியம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளுடன் மனக்கசப்பு ஏற்பட்டால், அந்த குறிப்பிட்ட விஷயம் குறித்து குழந்தையின் தலையைக் கோதியபடி, இரவு நேரங்களில் படுக்கையில் இருக்கும்போது மெதுவாக அறிவுரை கூறுங்கள், இது உறவை வலுப்படுத்த உதவும். தனது அம்மாவுக்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கும் என்று குழந்தைகள் நினைப்பார்கள்., பணிக்குச் செல்லும் தாய்மார்கள், தனது பணியிடத்தில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை குழந்தைகளிடம் எடுத்துக் கூறலாம். தன்னார்வலராக இருந்தால், மற்றவர்களுக்கு எவ்வாறு உதவி செய்ய முடியும் என்று விவரிக்கலாம். இது குழந்தைகளிடம் அம்மாவின் மதிப்பை உயர்த்தும். மாலை நேரங்களில் நண்பர்களுடன் ரிலாக்ஸாக வெளியில் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அன்றாடப் பணிகளில் உங்களுக்கு என்று தனித்துவமிக்க வழிமுறையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதன்படியே செயல்படுங்கள். எனது முன்னோர் இப்படித்தான் இருந்தார்கள், நானும் அப்படித்தான் இருப்பேன் என்று செயல்படுவதை தவிருங்கள் குழந்தைகள் ஒவ்வொருவரும் தங்களுக்கு உள்ள கிரகிக்கும் திறனைக் கொண்டு கற்றுக் கொள்கின்றனர். அவர்களை இப்படித்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்தாதீர்கள். அவர்களின் நிலையை அறிந்து, அதனை மேம்படுத்த ஆலோசனைகளை மட்டும் வழங்குங்கள். தோல்விதான் பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது. குழந்தைகளின் எல்லா முயற்சிகளையும் ஆதரியுங்கள். சைக்கிளிலிருந்து கீழே விழுந்தால் பதறாதீர்கள். சைக்கிளை தொடக்கூடாது என்று கண்டிக்காதீர்கள். முயற்சி போதாது என்பதை குழந்தைகளிடம் எடுத்துக் கூறுங்கள். குழந்தைகள் அடுத்தடுத்து வெற்றி பெறும் வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதை முடிந்தவரை தவிருங்கள். பெற்றோருடன் இணைந்து விளையாடும் குழந்தைகள், தனியாக விளையாட விருப்பமின்றி, ஒவ்வொரு முறையும் பெற்றோரையே எதிர்பார்க்கும் நிலை ஏற்படும். எனவே, பெரிய அளவிலான விளையாட்டுக்களைத் தவிர்த்து மற்ற விளையாட்டுக்களில் குழந்தைகளை தனியாக விளையாட அனுமதிப்பது அவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்க உதவும். உங்களுக்கு கிடைத்த வேலை சரியாக இல்லை. வாழ்க்கை சீராக அமையவில்லை. இப்படியாக புலம்பாதீர்கள். கிடைத்த வேலையை எவ்வளவு சிறப்பாக செய்ய முடியும் என்று பாருங்கள். இது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். குழந்தைகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றிவிடக் கூடாது. அப்போதுதான், ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்வது எப்படி என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ளும். நாம் எதிர்பார்க்கும் அனைத்தும் கிடைத்துவிடாது என்பதை அவர்கள் உணர்வதற்கு சந்தர்ப்பத்தை உருவாக்குங்கள். குழந்தைகளின் எதிர்காலத்துக்கு இது பயனுள்ளதாக அமையும். ஒவ்வொரு நாளும் எப்படி இருந்தது என்று குழந்தைகள் சொல்லும்போது, அதனை பொறுமையாகவும், கவனமாகவும் கேளுங்கள். இது குழந்தைகளின் செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படுத்தும். அவர்கள் சொல்ல வரும் விஷயத்தை கேட்கத் தவறினால், அல்லது மட்டம் தட்டி மறுதலித்தால் அவர்களுக்கு வருத்தம் ஏற்படும். முன்னேற்றத்துக்கு தடையாக அமையும். குழந்தைகள் தங்களுடைய வேதனைகள் அனைத்தையும் பெற்றோரிடம் வெளிப்படையாக பேச மாட்டார்கள். அப்படிப் பட்ட நேரத்தில், குழந்தைகளிடம் உள்ள சோகத்தைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். அவர்களைக் கட்டாயப்படுத்தாமல் பொறுமையாக பேசி வேதனைக்கான காரணங்களை உணர்ந்து அதைப் போக்க உதவ வேண்டும். குழந்தைகளைச் சுற்றிலும் அதிக அளவில் உறவினர்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இது குழந்தைக ளுக்கு ஊக்கம் அளிக்கும். குழந்தைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்காதீர்கள். அவர்களுடைய திறமையையும் விருப்பத் தையும் அறிந்து அதில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முயற்சியுங்கள். குழந்தைகளை வளர்க்கும் விதம் பற்றி மற்றவர்கள் குறைகூறக்கூடும். அவர்கள் கூறுவதைக் கேளுங்கள். அவர்களு டைய கூற்று தவறாக இருந்தால் அதை ஏற்காதீர்கள். அதேசமயம், அவர்கள்மீது, கோபப்படாமல் மென்மையாக பதில் அளியுங்கள். இன்று நான் நிறைய தவறுகளை செய்துவிட்டேன் என்று குழந்தைகள் கூறக்கூடும். அப்படிப்பட்ட சமயத்தில், நானும் நிறைய தவறுகளை செய்திருக்கிறேன் என்று கூறுங்கள். உங்கள் தவறுகளை எப்படி திருத்தினீர்கள் என்று விளக்குங்கள். அவர்களுடைய தவறுகளையும் திருத்திக் கொள்ள அறிவுரை வழங்குங்கள். பெரிய மனிதர்களும் தவறு செய்கிறார்கள் என்பதை உணர்ந்து, தம்மிடம் உள்ள வேதனைகளை மறந்துவிடுவார்கள். குழந்தையிடம் கோபமாக பேசினால், அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள். கோபப்படக் கூடாது என்பதை குழந்தைகள் உணரும் வாய்ப்பை ஏற்படுத்துங்கள். சில விளையாட்டுக்களில் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுங்கள். குழந்தைகளை வெளியே அழைத்துச் சென்று, அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றுங்கள். உங்களுக்கும், குழந்தைக்கும் உள்ள உறவை இது வலுப்படுத்தும். தினந்தோறும் காலையில் எழுந்தவுடன், குறைந்தது 5 வேளை கடவுளை வணங்கவேண்டும் மற்றும் 5 பேருக்கு அல்லது செயல்களுக்கு நன்றி தெரிவிக்குமாறு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். இந்த முயற்சி, குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை வளர்க்கும்.எல்லாமே நல்ல வழிகள்தானே. இவற்றை செயல்படுத்திப் பாருங்கள். எனது அம்மா ரொம்ப நல்லவங்க என்று நிஜமாகவே குழந்தைகள் ஒப்புக்கொள்ளும். உங்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் கொடுக்கும் இடுகையிட்டது PMsyed நேரம் 7/25/2012 09:02:00 முற்பகல் கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் திங்கள், ஜூலை 23, 2012 பர்மா முஸ்லிம் இனப்படுகொலை: முஸ்லிம்களுக்கு ஓர் வேண்டுகோள்! முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் ஆவர். அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் “நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் சகோதரர்களே!” (சூரா ஹுஜ்ராத்) என குறிப்பிடுகிறான். முஸ்லிம்கள் ஓர் உடலைப் போன்றவர்கள் என்று இஸ்லாத்தின் இறுதித்தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்கள் உபதேசித்ததுடன் அதனை நடைமுறைப்படுத்தியும் காட்டினார்கள். நமது சகோதரர்களான ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மரில் அர்கான் மாநிலத்தில் இன அழித்தொழிப்பிற்கு பலியாகி வருகின்றார்கள். முஸ்லிம்களை படுகொலைச் செய்யும் பெளத்த பயங்கரவாதிகளுக்கு அரசாங்கத்தின் உதவியும், ஒத்துழைப்பும் கிடைத்துவருகிறது. மியான்மரில் முஸ்லிம்கள் கொடூரமாக இனப்படுகொலைச் செய்யப்பட்டு வரும் வேளையில் உலக ஊடகங்கள் அங்கிருந்து வரும் செய்திகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காதது மிகக்கொடுமையாகும். மியான்மரில் முஸ்லிம்களின் உண்மையான பிரச்சனை ஏழ்மையோ, பட்டினியோ அல்ல. மாறாக அவர்கள் ஏக இறைவனான அல்லாஹ்வை வணங்குகிறார்கள் என்பதுதான் இந்த படுகொலைகளின் பின்னணியில் அமைந்துள்ளது. அவர்களுக்கு உதவுவது உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்கள் மீதான கடமையாகும். உலகியல் ரீதியாகவும், சிந்தனை ரீதியாகவும் அவர்களுக்கு நாம் அனைத்து விதமான உதவிகளையும் செய்ய கடமைப்பட்டுள்ளோம். உலக நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்கள் தங்கள் வாழும் நாடுகளின் அரசுகளிடம் பர்மா முஸ்லிம் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தவும், பர்மா முஸ்லிம்களுக்கு உதவவும் தொடர்ந்து போராடவேண்டும். ஆக்கப்பூர்வமான உதவிகளை அம்மக்களுக்கு அளிக்க முன்வரவேண்டும். தான தர்மங்கள், பிரார்த்தனை, பர்மா முஸ்லிம்களின் துயரத்தை நமது துயரமாக கருதுதல் போன்ற வழிகளிலும் முஸ்லிம்கள் தங்களது கடமையை நிறைவேற்றவேண்டும். முஸ்லிம் நாடுகளில் வாழும் மக்கள் அந்நாடுகளின் அரசுகளிடம் தீவிரமாக வலியுறுத்துதல் அவசியம். சோசியல் மீடியாக்கள் ஒரு சில இதழ்கள் மூலமாக மட்டுமே பர்மா முஸ்லிம்களை குறித்த செய்திகள் பரவுகின்றன. ஜும்ஆ மேடைகளிலும், சாதாரண முஸ்லிம்களிடமும் இச்செய்திகள் கொண்டுச் செல்லப்பட வேண்டும். உலக முஸ்லிம் நாடுகளின் கண்பார்வையில் இந்த கூட்டுப் படுகொலைகள் நிகழ என்ன காரணம்? பெளத்தர்கள் ஏன் இவ்வளவு துணிச்சலாக முஸ்லிம்களை கொலைச் செய்கிறார்கள்? காரணம் வேறொன்றுமில்லை. முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கவும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவும் தகுதியுடைய முஸ்லிம் ஆட்சியாளர் உலகில் இல்லை என்பதுதான். முஸ்லிம் உலகில் தற்பொழுது நடந்துவரும் மாற்றங்கள் அதற்கு வழிவகுக்கட்டும். ‘முஸ்லிம்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்காக யார் கவலைப்படவில்லையோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்’ (திர்மிதி) என்ற நபி(ஸல்) அவர்களின் பொன்மொழியை உணர்ந்து நாம் செயல்படுவோம்! இச்செய்தியை அனைத்து மக்களிடமும் பரவச் செய்யுங்கள்! இடுகையிட்டது PMsyed நேரம் 7/23/2012 04:26:00 பிற்பகல் கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் ஞாயிறு, ஜூலை 22, 2012 வரலாறு முக்கியம் அமைச்சரே superrsyed555ம் அவருக்கு பின்னாடி துர‌த்தும் சீட்டிங் கம்பெனியும் சிந்திக்க வேன்டி ஒரு படைப்பு ஏன் வரலாறு... அதுவும் அசுர வேகத்தில் அறிவியல் வளர்ந்து கொண்டு இருக்கும் இந்த காலத்தில் நாளை என்ன நடக்கும் என்பதை குறித்து ஆய்வு செய்யாமல் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் என்ன நடந்தது, என்ன நடந்து இருக்கும் என்பதைக் குறித்த ஆய்வு ஏன்... இதனால் என்ன பயன்? போன்ற கேள்விகள் பொதுவாக 'வரலாறு' என்று கூறினாலே மக்களின் மனதில் எழுவது இயல்பே. இந்நிலையில் 'வரலாறு முக்கியம் அமைச்சரே' என்று கூறுவோர் மக்களின் இக்கேள்விகளுக்கு விடையினை கூற கடமைப்பட்டு உள்ளனர். அதன் விளைவாகவே இந்தப் பதிவு. ஒரு மனிதன் இரவிலே ஒரு மின்விளக்கின் கீழ் எதையோ நீண்ட நேரம் தேடிக் கொண்டு இருந்தான். அதனை கண்டுக் கொண்டு இருந்த விவசாயி ஒருவர் 'ஐயோ பாவம் எதையோ தொலைத்து விட்டு தேடிக் கொண்டு இருக்கின்றார் போல் இருக்கின்றதே. நாமும் போய் சற்று உதவுவோம்' என்று எண்ணியவாறே தேடிக் கொண்டு இருக்கும் அந்த மனிதனின் அருகில் சென்றார். விசாரித்துப் பார்த்த பொழுது அந்த மனிதன் தான் வாங்கிய சம்பளத்தை தனது பையில் வைத்து இருந்ததாகவும் அதனை தற்போது காணவில்லை என்றும் எனவே வழியில் எங்காவது தவறவிட்டு இருக்கலாமோ என்றுத் தேடிக் கொண்டு இருப்பதாகக் கூறினான். அதனைக் கேட்ட விவசாயியோ "சரி ஐயா...ஆனால் நீண்ட நேரமாக ஒரே இடத்திலேயே தேடிக் கொண்டு இருக்கின்றீர்களே. இங்கே தான் தொலைத்தீர்கள் என்று நிச்சயமாக தெரியுமா?" என்றார். அதற்கு அந்த மனிதன் "இல்லை இல்லை... நான் இங்கே தொலைக்கவில்லை... அதோ அங்கே இருள் சூழ்ந்து இருக்கின்றதே அந்தப் பாதையில் தான் தொலைத்து இருக்க வேண்டும். ஆனால் இங்கே வெளிச்சம் இருப்பதால் இங்கேயே தேடிக் கொண்டு இருக்கின்றேன்" என்று பதில் கூற அந்த விவசாயியோ தனது தலையில் அடித்துக் கொண்டார். "ஐயோ அப்பனே..தொலைத்து ஒரு இடம்..தேடுவது மற்றொரு இடம்...பின் எவ்வாறு ஐயா உனது பொருள் உனக்குக் கிட்டும். ஒன்று இருளில் சென்று தேடு. அல்லது தொலைத்த பொருளை மீண்டும் ஈட்டிக் கொள். அதுவன்றி நீ இங்கேயே தேடிக் கொண்டு இருப்பது கால விரயமே அன்றி வேறில்லை" என்றுக் கூறிக் கொண்டு அவ்விடம் விட்டு அகன்றார். அந்த மனிதனும் சற்று சிந்தித்து சரி சென்ற பொருள் செல்லட்டும் நாம் மீண்டும் பொருள் ஈட்டிக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டு நகர்கின்றான். சில நாட்கள் நகர்கின்றன. மீண்டும் அதே விளக்கின் அடியில் அந்த மனிதன் எதையோ தேடிக் கொண்டு இருப்பதை விவசாயி காணுகின்றார். "அட என்னப்பா இது...இன்றும் இம்மனிதன் எதையோ தேடிக் கொண்டு இருக்கின்றானே" என்று அவன் அருகே சென்று விசாரிக்க மீண்டும் அவன் பணத்தினை தொலைத்து இருப்பது அவருக்கு தெரிய வருகின்றது. அட என்னடா இது... ஒவ்வொரு முறையும் இவன் தொலைத்துக் கொண்டு இருக்கின்றானே என்று சற்றே அந்த விவசாயி ஆராய, அம்மனிதனின் பையில் சிறு துளை ஒன்று இருப்பது அவருக்கு தெரிய வருகின்றது. அதன் மூலமாகவே அவன் ஈட்டிய பொருள் அனைத்தும் கீழே விழுந்து இருக்க வேண்டும் என்றும் அறிந்த அவர் முதலில் அவனை அவன் பையில் இருந்த துளையை சரி பார்க்க சொல்லிவிட்டு கிளம்ப அவனும் அவனிடம் இருந்த தவறினை திருத்திக் கொள்ள ஆரம்பிக்கின்றான். நிற்க. சற்றே பிரபலமான கதைதான் அல்லவா. முல்லாவின் கதை என்றே எண்ணுகின்றேன். இதை நாம் இங்கே பார்த்ததற்கு ஒரு காரணம் இருக்கின்றது. முதலில் அந்த மனிதன் அவனுடைய பொருளினை இழக்கின்றான். ஆனால் ஏன் அந்தப் பொருளினை அவன் இழந்தான் என்பதனைப் பற்றி அவன் சிந்திக்கவில்லை. அதன் விளைவாகவே அவன் மீண்டும் அவனுடைய பொருளினை இழக்க வேண்டிய நிலை வந்தது. ஒரு வேளை அவன் இரண்டாம் முறையும் அவனின் இழப்பிற்குரிய காரணத்தைப் பற்றி ஆராயவில்லை என்றால் மீண்டும் மீண்டும் அவனுடைய பொருளினை அவன் இழந்துக் கொண்டே இருப்பான். அவன் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் சரி, எவ்வளவு முயன்றாலும் சரி அவனுடைய இந்த நிலை மாறாது. வெறுமையே அவனிடம் சேர்ந்து இருக்கும். காரணம் அவனின் துயருக்குரிய காரணியை அவன் அறியவில்லை. அறிந்தால் தானே அதற்குரிய பதிலினை அவனால் தேட முடியும். இங்கு தான் வரலாற்றின் தேவை வருகின்றது. வரலாறு என்பவை நமக்கு முந்தைய காலத்தில் நடந்த சம்பவங்களே அன்றி வேறல்ல என்பதனை நாம் அனைவரும் அறிவோம். இப்பொழுது ஒரு செயல் நிகழ்ந்து இருக்கின்றது. அதனால் நமக்குத் தீங்கும் வந்து இருக்கின்றது. இந்நிலையில் ஏன் அந்த செயல் நிகழ்ந்தது அதனால் நமக்கு ஏன் தீங்கு வந்தது என்று ஆராய்ந்தால் தானே பிற்காலத்தில் மீண்டும் அதே துயர் நமக்கு வாராது நம்மை நாமே காத்துக் கொள்ள முடியும். அவ்வாறு அல்லாது 'சரி வந்தது வந்துடுச்சி...இனி நடப்பதைக் காண்போம்' என்றே நாம் இருந்து விட்டால் மீண்டும் அந்தத் துயர் நம்மிடம் வாராது போய்விடுமா என்ன? அவ்வாறு அத்துயர் மீண்டும் நம்மிடம் வந்தால் அதனை சமாளிக்க நமக்கு அவ்வேளையில் வழிகளும் தான் கிட்டிடுமா என்ன? இல்லை தானே. ஒருவன் முதல் முறையாக சாலையில் உள்ள பள்ளத்தில் அறியாது விழுகின்றான். இது ஒரு செயல். சரி தெரியாது விழுந்து விட்டான். மன்னித்து விடலாம். ஆனால் மீண்டும் மீண்டும் அதே பாதையில் அதே பள்ளத்தில் அவன் விழுந்தான் என்றால் அச் செயலினை நாம் என்ன என்று சொல்வது. 'அந்த சாலையில் பள்ளம் இருக்கின்றது அதில் நாம் ஏற்கனவே விழுந்து இருக்கின்றோம் எனவே பார்த்துச் செல்ல வேண்டும் என்று அவனின் அனுபவத்தில் இருந்து அவன் அறிந்துக் கொள்ளாததை எவ்வாறு கூறுவது, அவனின் அறியாமை என்றா...அல்லது மடத்தனம் என்றா?. வரலாற்றில் இருந்து அவன் கற்றுக் கொள்ளவில்லை என்றே நாம் கருத வேண்டி இருக்கின்றது. இன்று நம் நிலையும் அவ்வாறு தான் இருக்கின்றது. முன்னர் வணிகத்துக்காக வந்தவர்கள் நம்மை அடிமையாக்கி ஆண்டார்கள். இன்றும் வணிகம் மூலமாக நம்மை மறைமுகமாக அடிமையாக்கி ஆண்டுக் கொண்டு இருக்கின்றனர். மேலும் என்றோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக நம்மில் பெரும்பான்மையினரான மக்களை தாழ்த்தப்பட்டோர் என்று சமயங்களைக் கொண்டு சிலர் அடக்க இன்றும் அந்த நிலை தொடருகின்றது. அந்த நிலையும் மாற வேண்டும் என்றால் அந்த நிலை எவ்வாறு தோன்றியது, ஏன் தோன்றியது என்பதையும் நாம் காண வேண்டும். அவற்றைக் காணாதுவிடின் பிற்காலத்தில் மீண்டும் அந்த நிலைகள் தலைத் தூக்கலாம். அந்த வேளையில் நமக்கு பிந்தைய சந்ததியினர் ஏன் அவர்கள் அந்தப் பிரச்சனைகளை சந்திக்கின்றனர் என்பதனை அறியாமலே மீண்டும் இன்னல் பட ஆரம்பிப்பர். அவற்றைத் தவிர்க்கத் தான் நாம் வரலாற்றினைப் பார்க்க வேண்டி இருக்கின்றது. வரலாற்றிடம் இருந்து கற்று அதனை கற்பிக்கவும் வேண்டி இருக்கின்றது. "வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ளாமல் அனைத்து பிரச்சனைகளுக்கும் மீண்டும் மீண்டும் புதிதாய் விடையினைத் தேடும் பயணத்தை நாம் மேற்கொள்ள நம்முடைய வாழ்நாளில் நேரம் இல்லை. நம்முடைய பிரச்சனைகள் பெரும்பாலானவை பழமையானவை. எனவே அவற்றுக்கான விடையினை வரலாற்றின் உதவியோடு தேடுவதே பலன் தரும் செயலாக அமையும்." எனவே வரலாறு என்பது நாம் அனைவரும் கண்டிப்பாக அறிந்துக் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது. இடுகையிட்டது PMsyed நேரம் 7/22/2012 09:01:00 முற்பகல் 2 கருத்துகள்: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் சனி, ஜூலை 21, 2012 மன திருப்தி எவர் தம்மிடம் இருக்கும் ஒரு நாளைக்குப் போதுமான சாதத்தைக் கொண்டு தம் மனத்துக்கு நிம்மதியையும் தம் உடலுக்குத் தெம்பையும் கொடுத்துக் கொள்கிறாரோ அவர் உலகிலுள்ள அனைத்தும் அளிக்கப்பட்டவர் போலாவார் என்று அண்ணல் நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் இப்னு மிஹ்ஸனில் கதமீ (ரலி) நூல்: திர்மிதி எவர் இஸ்லாமிய நேர்வழியை அடைந்து அவரால் இயன்றதைக் கொண்டு வாழ்க்கை நடத்தி போதுமாக்கிக் கொள்கிறாரோ அவருக்கு நல்வாழ்வு உண்டாகட்டும் என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: புலாளதுப்னு உபைது (ரலி) நூல்:திர்மிதி நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளும் அளவிற்கு நம்பிக்கை கொண்டிருப்பின் நிச்சயமாக அவன் உங்களுக்கு உணவளிப்பான், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று. அவை காலையில் வெறும் வயிற்றோடு சென்று மாலையில் வயிறு நிரம்ப உண்டு திரும்புகின்றன என்று நபி அவர்கள் கூறினர்: அறிவிப்பவர்: உமர் (ரலி) திர்மிதி செல்வம் என்பது உலகப் பொருள்களின் அதிகரிப்பில் இல்லை. எனினும் செல்வம் என்பது மனத்தின் செல்வமேயாகும். போதுமென்ற மனமேயாகும் என்று நபி அவர்கள் கூறினர்: அறிவிப்பவர்: நூல்கள்: புகாரி, முஸ்லிம் உங்களில் எவரேனும் தம்மைவிட அதிகப் பொருளுடையவரையும் தோற்றத்தில் தம்மைவிட மேலாக உள்ளவரையும் காண நேரிட்டால் அப்பொழுது அவர் தம்மைவிட இவ்விஷயங்களில் கீழாக உள்ளவரை நோக்கவும், ஏனெனில் இவ்விதம் செய்வது நீங்கள் அல்லாஹ்வுடைய அருளை, அல்லாஹ் உங்கள் மீது புரிந்திருக்கும் அருளை குறைவாகக் கருதாமலிருக்க மிகவும் உதவியாயிருக்கும் என்று நபி அவர்கள் கூறினர்: அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) புகாரி, முஸ்லிம், திர்மிதி மனிதனுக்குரிய நன்மை அல்லாஹ்வுடைய விதியின் மீது திருப்தியுறுவதாகும். மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்விடம் நன்மையைக் கோருவதைக் கைவிடுவதாகும். மேலும் மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்வுடைய விதியைக் கொண்டு அதிருப்தியுறுவதாகும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃதுப்னு அபீவக்காஸ் (ரலி) நூல்: திர்மிதி இடுகையிட்டது PMsyed நேரம் 7/21/2012 04:02:00 பிற்பகல் 1 கருத்து: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் தூய எண்ணம் அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகின்றானோ, அதற்குரிய பலன்தான் அவனுக்குக் கிட்டும். (உதாரணமாக) ஒருவரின் ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும், ரஸூலுக்காகவும் அமையுமாயின் அந்த ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும், ரஸூலுக்காகவும் செய்யப்பட்டதாகும். ஒருவரின் ஹிஜ்ரத் ஏதாவது உலகாயத நன்மையைப் பெறுவதற்காகவோ, ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காகவோ அமையுமாயின் இவற்றில் எதற்காக வேண்டி அவன் ஹிஜ்ரத் செய்தானோ, அதற்கானதாகவே அவனது ஹிஜ்ரத் கணிக்கப்படும். அறிவிப்பாளர்: உமர் பின் கத்தாப் رَضِيَ اللَّهُ عَنْهُ (புகாரி, முஸ்லிம்) நபியவர்கள் கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ (முஸ்லிம்) அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறக் கேட்டிருக்கின்றேன். மறுமைநாளில் அனைவர்க்கும் முதலில் இறைவனின் பாதையில் வீரமரணம் அடைந்தவனுக்கு எதிராகாத் தீர்ப்பளிக்கப்படும். அம்மனிதன் இறைவனின் நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்படுவான். பிறகு, இறைவன் அவனுக்குத் தான் அளித்த அருட்கொடைகள் அனைத்தையும் நினைவவூட்டுவான் அப்போது அவனுக்கு தான் பெற்றிருந்த அருட்கொடைகள் அனைத்தும் நினைவுக்கு வரும். இறைவன் அம்மனிதனிடம் வினவுவான்: நீ என் அருட்கொடைகளைப் பெற்று என்னென்ன பணியாற்றினாய்? அம்மனிதன் கூறுவான்: நான் உன் உவப்புக்காக (உன் மார்க்கத்தை எதிர்த்துப் போரிடுவோருக்கு எதிராக) போரிட்டேன். இறுதியாக என் உயிரையும் கொடுத்து விட்டேன். இதை கேட்ட இறைவன் அவனிடம் கூறுவான்: நீ பொய்யுரைக்கின்றாய். மக்கள் உன்னை வீரன், துணிவு மிக்கவன் எனப் புகழ வேண்டும் என்பதற்காகத்தான் நீ போரிட்டாய்! (வீரத்தை வெளிக்காட்டினாய்!) அதற்கான புகழுரையும் உலகிலேயே உனக்குக் கிடைத்துவிட்டது! என்பான். பின்னர், இறைவன் அந்த உயிர்த் தியாகியைத் தலைகீழாக இழுத்துச்சென்று நரகத்தில் எறியும்படி கட்டளையிடுவான். அந்த மனிதன் நரகத்தில் எறியப்படுவான். பிறகு, மார்க்க அறிஞராயும், போதகராயும் இருந்த இன்னொரு மனிதன் இறை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவான். அவன் குர்ஆனைக் கற்றுத் தெளிந்த காரியாகவும் இருப்பான். அவனுக்கு இறைவன் தான் அளித்த அருட்கொடைகளை நினைவூட்டுவான். அவனுக்கு அருள் நலங்கள் அனைத்தும் நினைவுக்கு வரும். அப்போது இறைவன் அவனிடம் கேட்பான்: இந்த அருட்கொடைகளைப் பெற்ற நீ என்ன நற்செயல் புரிந்தாய்? இறைவா! நான் உனக்காக உனது தீனைக் கற்றேன். உனக்காகவே அதனைப் பிறர்க்கு கற்பித்தேன். உனக்காகத்தான் குர்ஆனை ஓதினேன் என்று அம்மனிதன் கூறுவான். இதைக் கேட்ட இறைவன் பின்வருமாறு கூறுவான்: நீ பொய்யுரைக்கின்றாய்! மக்கள் உன்னை அறிஞர் எனக் கூறவேண்டும் என்பதற்காக கல்வி கற்றாய்! குர்ஆனை நன்கறிந்தவர் என மக்கள் உன்னை புகழ வேண்டும் என்பதற்காகத்தான் குர்ஆனை ஓதினாய்! அதற்கான வெகுமதி உலகிலேயே உனக்குக் கிடைத்துவிட்டது. பிறகு, அவனை முகம் குப்புற இழுத்துச் சென்று நரகில் எறியுங்கள் எனக் கட்டளையிடப்படும். அவ்வாறே அவன் நரகில் எறியப்படுவான். உலகில் வசதி வாய்ப்புக்கள் பலவும் அளிக்கப்பட்டிருந்த மூன்றாவது மனிதன் இறைவனின் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவான். அவனுக்கு எல்லாவகைச் செல்வங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இறைவன் அம்மனிதனிடம் தான் அளித்த அருட்கொடைகள் அனைத்தையும் எடுத்துக் கூறுவான். அப்போது அவன், ஆம்! இந்த அருட்கொடைகள் அனைத்தும் எனக்கு அளிக்கப்பட்டிருந்+தன என ஒப்புக்கொள்வான். அப்போது இறைவன் அவனிடம் கேட்பான்: என் அருட்கொடைகளைப் பெற்று நீ என்ன நல்வினை புரிந்தாய்? அம்மனிதன் சொல்வான்: உன் உவப்பைப் பெற எந்தெந்த வழிகளில் செலவழிப்பது உனக்கு விருப்பமானதோ, அவ்வழிகளில் எல்லாம் நான் செலவு செய்தேன் இறைவன் கூறுவான்: நீ பொய்யுரைக்கின்றாய். நீ இந்தச் செல்வங்கள் அனைத்தையும் மக்கள் உன்னை வள்ளல் எனப்புகழ்ந்து போற்ற வேண்டும் என்பதற்காகத்தான் வாரி இறைத்தாய்! அந்த வள்ளல் பட்டம் உலகிலேயே உனக்குக் கிடைத்துவிட்டது. பிறகு, இவனை முகம் குப்புற இழத்துச் சென்று நரகில் வீசி விடுங்கள் எனக் ஆனையிடப்படும். அவ்வாறே அவன் இழுத்துச் செல்லப்பட்டு நரகில் எறியப்படுவான். அறிவிப்பாளர்: அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ முஸ்லிம் — இடுகையிட்டது PMsyed நேரம் 7/21/2012 03:55:00 பிற்பகல் கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் வியாழன், ஜூலை 19, 2012 மைக்ரோ வேவ் சமையல உஷார் ! மைக்ரோவேவ் இல்லத வீடு தற்போது தேடி பார்த்தால் குறைவு தான். அந்த அளவுக்கு இந்த அவன் அத்தியாவசியம் ஆகிவிட்டது. மைக்ரோவேவ் அவனில் சமைக்கப்படும் உணவுப் பொருட்கள் கடுமையான மூலக்கூறு சிதைவுக்கு உட்படுகின்றன. அத்தகைய உணவுகளை உண்பது இரத்தத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துவதோடு உடலின் நோயெதிர்ப்பு தன்மையையும் பாதிப்பதை புதிய ஆராய்ச்சி முடிவுகள் காட்டுவதாக Dr. மெர்கோலா தெரிவிக்கிறார். அனேக மக்கள் இது பற்றிய விழிப்புணர்வின்றி அலட்சியமாக இருக்கிறார்கள். புரொக்கொலி (broccoli) எனும் உணவுப் பொருளில் உள்ள மூன்று முக்கிய புற்று நோய்த் தடுப்பு ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் (antioxidant)கள் ஆவியில் வேக வைப்பதை விட மைக்ரோ வேவ் அவனில் வேக வைக்கும் போது மிக அதிக அளவில் நஷ்டப்படுவதாக Dr Cristina Garcia-Viguera சோதித்து அறிவிக்கிறார். ஆன்டியாக்ஸிடென்டும் அதன் நஷ்ட விகிதமும். ஆவியில் --- மைக்ரோவேவ் அவனில் flavonoids -----------------------11% --- 97% sinapics ---------------------------0% --- 74% caffeoyl-quinic derivatives-----8% --- 87% உணவில் ஏற்படும் பாதிப்புக்கள் : 1. மைக்ரோவேவ் அவனில் சூடாக்கப்படும் பால் பாதிப்படைகிறது. குறிப்பாக அதில் உள்ள lysozyme என்ற பொருள். இது பாக்டீரியா தொற்றிலிருந்து பாதுகாப்பது. 2. மைக்ரோவேவால் அழிக்கப்படும் மற்றொரு ஊட்டசத்து விட்டமின் B-12 என 1998 ல் ஜப்பானிய அறிவியல் ஆராய்ச்சி செய்திகளில் வெளியான தகவல். 3. குழந்தைகளுக்கான் உணவுகள் மைக்ரோவேவுக்கு உட்படுவதால் அதிலுள்ள சில trans-amino acid கள் trans-fatty acid போன்ற செயற்கைப் பொருளாக மாறுகின்றன. அதிலும் L-proline என்ற ஒரு அமினோ அமிலம் நரம்பு மண்டலத்தையும் சிறுநீரகத்தையும் பாதிக்கும் ஒரு வகை விஷப்பொருளாக மாறுகிறது. 1989 ல் வெளியான Lancet மருத்துவ சஞ்சிகையில் Dr. Lita Lee இவ்வாறு எழுதியிருக்கிறார். 4. ஒரு சின்ன சோதனை செய்து பாருங்கள். இரண்டு பானைகளில் தாவர விதைகளைப்போட்டு ஒன்றில் சாதா தண்ணீரையும், மற்றொன்றில் மைக்ரோவேவில் சூடாக்கியத் தண்ணீரையும் விட்டு விதைகள் முளைக்கிறதா என பாருங்கள். 5. மைக்ரோ வேவ் தண்ணீரில் விதைகள் முளைக்காதாம். செடியானாலும் வாடிப் போய்விடும். மேலும் சில தகவல் : சாதாரண அடுப்பில் எரிபொருள் எரியும் போது அது காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடன் வினை புரிந்து இன்னொரு மூலக்கூறாக மாறும்போது வெப்பம் வெளிவிடப்படுகிறது. இந்த வெப்பம வெப்ப அலைகளாகப் பரவி உணவை அடைந்து சூடாக்குகிறது. சாதாரணமாக அடுப்பில் உணவு சூடாக்கப்படுவதற்கும் மைக்ரோவேவ் உணவை சூடாக்கும் முறைக்கும் முக்கிய வேறுபாடு உள்ளது. மைக்ரோ அலைகள் பாத்திரத்தை சூடாக்காமல் நேரடியாயாக உணவில் உள்ள மூலக்கூறுகளை அதிரச்செய்து சூடாக்குகின்றன். குறிப்பாக நீர் மூலக் கூறுகளை. இந்த அதிரடியில் மூலக்கூறுகளிடையே எலெக்ட்ரான் கொடுக்கல் வாங்கல் ஏற்பட்டு மூலக்கூறுகள் மாற்றமடையலாம், புதிய மூலக்கூறு இணைப்புகள உண்டாகலாம் என்று நம்பத்தான் தோன்றுகிறது. மைக்ரோவேவ் அவனில் மின்சார அலை உண்டாக்கும் அதிர்வுகளால் (சுமார் 2.5 gigahertz) நீர், கொழுப்பு, சர்க்கரை மூலக்கூறுகள் அதிர்வடைந்து உராய்வடைந்து வெப்பம் உண்டாகிறது. பிளாஸ்டிக், கண்ணாடி, பீங்கான் பாத்திரங்களில் இந்த அலை பாதிக்காது. சமையலுக்கு இத்தகைய பாத்திரங்களையே உப்யோகிக்க வேண்டும். மேலும் அறிய : How Microwave Cooking Works? மைக்ரோ வேவும் உலோக பாத்திரமும் : ஆனால் உலோகப் பாத்திரங்கள், அலுமினியம் ஃபாயில்கள் மைக்ரோ வேவ் அவனில் உபயோகப் படுத்தக்கூடாது. உலோகங்களில் மைக்ரோ வேவ் மின்சாரததை தூண்டுகிறது. இது மெல்லிய உலோகங்களில் ஸ்பார்க் (spark) ஐ உருவாக்கி எரியச் செய்கிறது. மைக்ரோவேவில் முட்டை வெடிக்குமா? மைக்ரோவேவ் அவனில் முட்டைகளை உடைக்காமல் அப்படியே வைத்து சமைக்கக் கூடாது. முட்டை வெடித்து விடும். மைக்ரோ வேவில் தண்ணீர் வெடிக்குமா? சுத்தமான தண்ணீரை மைக்ரோவேவ் அவனில் வைத்து அதிகமாக சூடாக்குவதில் ஆபத்து உள்ளது. ஏனெனில் பாத்திரம் சூடாகாமல் தண்ணீர் மட்டும் சூடாவதால் தண்ணீர் அதன் கொதி நிலைக்குமேல் அதிக வெப்பமடைகிறது. வெப்பம் 100°c க்கு மேல் போனால் கூட நீர் குமிழ்களோ நீராவியோ வெளியாகாது. இந்த நிலையில் அந்த தண்ணீர் கோப்பையை அவனிலிருந்து வெளியே எடுக்க முயன்றால் உண்டாகும் சிறு அதிர்வால் தண்ணீர் வெடித்தது போன்று கொதிநிலைக்கு மேல் வெப்பமடைந்த தண்ணீர் கொப்பளித்து சிதறும். இதை தவிர்க்க தண்ணீர் சூடாக்கும்போது ஒரு உலோகமற்ற கரன்டியை அதில் இட்டு வைக்கலாம். பீதி வேண்டாம் அபூர்வமான நிகழ்வு இது என்றாலும் இப்படி நடைபெறும் வாய்ப்பு உள்ளது உண்மை. மேலும் அறிய http://www.snopes.com/science/microwave.asp மைக்ரோவேவில் பட்டர் தடவிய பாப்கார்ன் தயாரிக்கும்போது வெளியாகும் புகையில் Diacetyl என்ற வேதிப்பொருள் நுரைஈரலை மோசமாகப் பாதிக்கிறது. பால் பொருட்கள், வைன் ஆகியவற்றிலும் இது உருவாகிறது. மேல் விபரம் இங்கே Induction cooker : Induction cookerன் செயல்பாடு அடிப்படையில் microwave oven போல இருந்தாலும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. microwave ovenல் பாத்திரம் சூடாவதில்லை. உணவின் நீர் மூலக்கூறுதான் சூடாகிறது. இதில்தான் மேற்கண்ட பாதிப்பு உள்ளது. ஆனால் Induction cookerல் அடுப்பு சூடாவதில்லை. ஆனால் அதன் மீது வைப்பட்ட இரும்பு அல்லது காந்ததால் ஈர்க்கப்படும் உலோக பாத்திரத்தை மின் காந்த அலைகள் வெப்பமடையச் செய்கின்றன. அதனால் சாதாரண அடுப்பில் சமைப்பது போலவே உள்ளே இருக்கும் உணவு சூடாவதால் மேலே சொன்ன மைக்ரோவேவ் அவனுக்குள்ள பிரச்சனை இவனுக்கு இல்லை. ஆனால் இதயத்தில் பேஸ் மேக்கர் பொருத்தியவர்களும், அரிதாக மைக்ரோவேவுக்கு சென்சிட்டி உடையவர்களும் இண்டக்சன் ஸ்டவ் ஆனாலும் மொபைல் போன் ஆனாலும் பார்த்து, கேட்டு உபயோகிக்கவும். தண்ணீரை Microwave Oven னில் சூடாக்காதீர்கள்!! தண்ணீரை Microwave Oven னில் சூடாக்காதீர்கள்!! ஆய்வாளர்கள் எச்சரிக்கை!!! மைக்ரோவேவ் அவன் இல்லாத வீடே தற்போது இல்லை. அதில் உள்ள நன்மை, தீமைகளை பார்த்து செய்வது சாலச் சிறந்தது. தண்ணீரை Microwave Ovenனில் சூடாக்காதீர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இவர்கள் ஏன் இப்படிக்கூறுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, Microwave Oven எனப்படும் நுண்ணலை அடுப்புகளின் அடிப்படையைத் தெரிந்து கொள்ள வேண்டும். சாதாரண அடுப்பில் சமைக்கும்போது, முதலில் வெப்பம் பாத்திரத்தை அடைந்து, பின்னர் அதனுள்ளிருக்கும் பதார்த்தத்தினுள் நுழைகிறது. அதாவது, சாதாரண வெப்பக்கடத்தல்முறை மூலம் அங்கு சமையல் நடைபெறுகிறது. நுண்ணலை அடுப்பின் அமைப்பு முற்றிலும் வேறுமாதிரியானது. சாதாரண Electric Ovenகளில் வெப்பத்தை உண்டாக்க heaterகள் இருக்கும். ஆனால், அப்படியொரு அமைப்பே இல்லாதபோது Microwave Ovenகளில் எவ்வாறு வெப்பம் உண்டாக்கப்படுகிறது? இந்த விந்தையை நுண்ணலைதான் செய்கிறது. மின்சாரத்தின் மூலம் சக்திவாய்ந்த மைக்ரோ அலைகள் Microwave Ovenனினுள் உருவாக்கப்படும். இவ்வாறு உருவாக்கப்படும் மைக்ரோ அலைகள் சாதாரணமாக, செகண்டுக்கு 45 கோடி அதிர்வுகள் என்ற எண்ணிக்கையில் இருக்கும். இந்த நுண்ணலைகள், சூடாக்குவதற்காக உள்ளே வைக்கப்பட்டிருக்கும் பதார்த்தத்தின் மூலக்கூறுகளை அசைத்து - அவற்றை அதிர்வுறச் செய்கின்றன. இவ்வாறு ஏற்படும் அதிர்வில் மூலக்கூறுகள் ஒன்றோடொன்று உராய, வெப்பம் பிறப்பிக்கப்படுகிறது. இந்தச் செயற்பாடு பதார்த்தத்தின் சகல பாகங்களிலும் நிகழ்வதால் பதார்த்தம் முழுவதும் ஒரே நேரத்தில் விரைவாகச் சூடேறிவிடுகிறது. மைக்ரோ அலைகளினால் அசைக்கக்கூடிய மூலக்கூறுகளைக் கொண்ட பொருட்களை மட்டுமே Microwave Oven மூலம் சூடாக்க இயலும். பீங்கான், கண்ணடி போன்றவற்றின் மூலக்கூறுகளை மைக்ரோவேவினால் அசைக்க இயலாது. எனவே இவற்றினால் தயாரிக்கப்பட்ட பாத்திரங்களில் வைத்துச் சமைத்தால் பாத்திரம் சூடேறாது. ஆனால் பதார்த்தம் சமைக்கப்பட்டுவிடும். இதனால் பாத்திரத்தைச் சூடாக்கச் செலவழிக்கப்பட வேண்டிய சக்தி மீதமாகிறது. உலோகப் பாத்திரங்களை Microwave Oven னினுள் உபயோகிப்பதைத் தவிர்க்கவேண்டும். ஏனெனில், உலோகம், மின்காந்த அலைகளை, அதாவது மைக்ரோவேவை தன்னுள் ஊடுருவ அனுமதிக்காது. இதெல்லாம் சரி, தண்ணீரை Microwave Oven ல் சூடேற்றினால் அப்படி என்ன தகாத விளைவு நேரும்? சாதாரண அடுப்பில் தண்ணீரைச் சூடக்கினால், பாத்திரத்தின் அடியில் ஏற்படுத்தப்படும் வெப்பத்தினால் பாத்திரத்தின் உள்ளே வாயுக் குமிழிகள் உருவாகி, அவை மெல்ல மேலெழுந்து,மேற்பரப்பை அடைந்தவுடன் வெடித்து நீராவியையும் வெளியேற்றும். இந்தச் செயற்பாடு, தண்ணீர் அதிகமாக வெப்பமாவதைத் தடுத்து, தண்ணீரின் கொதி நிலையான 100 செல்ஸியஸ் அளவிலேயே தொடர்ந்து பேண உதவுகிறது. இவ்வாறான நிகழ்வு Microwave Oven இல் ஏற்படுவதில்லை. Microwave Oven னினுள் தண்ணீரின் மூலக்கூறுகள் அசைக்கப்பட்டு தண்ணீர் சூடாகும். ஆனால், வெப்பத்தின் சீர்ப் பரம்பலால் வாயுக் குமிழிகள் ஏற்படுவதில்லை. நீராவி வெளியேறாததால் தண்ணீரின் சூடு அதன் கொதி நிலையான 100 செல்ஸியஸ் அளவையும் கடக்கிறது. இந்த நிலை, Super Heat நிலை என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் தூசி போன்ற சிறு பொருள் தண்ணீரில் புகுமானால் அது வாயுக் குமிழிகள் உண்டாகும் வாய்ப்பைத் தோற்றுவித்துவிடும். ஏற்கனவே மைக்ரோ அலைகளின் தூண்டலால் உராய்வுநிலையில் இருக்கும் தண்ணீர் மூலக்கூறுகள் வாயுக் குமிழிகளை உயர் அழுத்தத்துடன் வெளியேற்ற அவை வெடித்துச்சிதறி அடர்த்தியான நீராவியை உருவாக்கும். இந்த நிலையில் மின்கசிவு, சடுதியான வெடிப்பு போன்ற விபத்துக்கள் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம். எனவேதான், Microwave Ovenகளில் தண்ணீரைச் சூடாக்காதீர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்! மைக்ரோவேவ் அவனில் செய்யக் கூடாதவை : 1. மைக்ரோவேவ் அவனின் கதவை திறந்து வைக்கக்கூடாது. உணவு சமைக்கும் போது அடிக்கடி திறந்து மூடக்கூடாது. 2. குறுகிய வாயுள்ள பாத்திரம் உபயோகிக்கக்கூடாது. 3. டின் உணவை டீஃப்ராஸ்ட் செய்யக்கூடாது. 4. முட்டையை ஓட்டுடன் சமைக்கக்கூடாது. 5. ரோஸ்ட் செய்யும் போது உப்பு போடக்கூடாது, வறுத்த பின்பு உப்பு போடவும், இல்லாவிடில் கரிந்து, தீய்ந்து விடும். 6. டீப் ஃப்ரை செய்ய முயற்சிக்கக்கூடாது. 7. ப்ளாஸ்டிக், காகித பொருட்கள் உபயோகிக்ககூடாது, அவை உருகி, எரிந்து போகும். 8. தண்ணீர் உள்ளே சிந்தக்கூடாது, இதனால் வெளிப்புற கண்ணாடி உடைய வாய்ப்புண்டு. 9. உணவு பொருட்கள் இல்லாமல் மைக்ரோவேவ் அவனை (சும்மா ஓடவிடக்கூடாது) உபயோகிக்ககூடாது. இடுகையிட்டது PMsyed நேரம் 7/19/2012 02:01:00 பிற்பகல் 1 கருத்து: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் நோன்பை விட்டுவிடச் சலுகை மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களும் ரமளான் மாதத்தில் நோன்பை விட்டுவிடத் தற்காலிகமாகக் சலுகை வழங்கப்;பட்டுள்ளார்கள். அவர்கள் மாதவிடாய்க் காலங்களில் நோன்பு நோற்கத் தடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேறு நாட்களில் அந்த நோன்புகளை நோற்றுவிட வேண்டும். 'நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும்போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுத் தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பைக் களாச் செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைக் களாச் செய்யுமாறு கட்டளையிட மாட்டார்கள்.' (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி), ஆதார நூல்கள்: புஹாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா) கர்ப்பிணிகள், பாலூட்டும் அன்னையர்: குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்களும், கர்ப்பமாக இருக்கும் பெண்களும், தற்காலிகமாக நோன்பை விட்டுவிடச் சலுகை பெற்றுள்ளனர். 'கர்ப்பிணிகளும், பாலூட்டுவோருக்கும் நோன்பிலிருந்து நபி(ஸல்) அவர்கள் சலுகையளித்து உள்ளார்கள்.' (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா) சலுகை என்றால் அறவே அவர்கள் நோன்பு நோற்கத் தேவையில்லை என்று புரிந்து கொள்ளக்கூடாது. ரமளானில் விட்டுவிட்டு, வேறு நாட்களில் விடுபட்ட நோன்புகளை நோற்று விடவேண்டும். '..எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும்நாட்களில் நோற்க வேண்டும்..' என்று திருமறை கூறுவதைப் புரிந்துகொள்வது போல், மேற்சொன்ன ஹதீஸையும் புரிந்து செயல்படுத்த வேண்டும். நோயாளிகள்: நோன்பு நோற்க இயலாத நோயாளிகளும், நோன்பை விட்டுவிடச் சலுகை வழங்கப்பட்டுள்ளனர். நோய்க்கு ஆளானவர்கள் ரமளானில் நோன்பை விட்டுவிட்டு, நோய் நீங்கிய பிறகு விடுபட்ட நோன்பை நோற்க வேண்டும். மேலே நாம் குறிப்பிட்டுக் காட்டிய வசனத்திலிருந்து இதனை அறிந்து கொள்ளலாம். முதியவர்கள்: முதியவர்களும் நோன்பை விட்டுவிடச் சலுகை பெற்றுள்ளனர். இவர்களின் சலுகை தற்காலிகமானதன்று. நிரந்தரமாகவே இவர்கள் நோன்பை விட்டுவிடலாம். முதமையின் காரணமாக நோன்பை விட்டவர்கள் வருங்காலத்தில் அதை நோற்க முடியாது. ஏனெனில் அதைவிட அதிக முதுமையில் அவர்கள் இருப்பார்கள். இவவாறு நோன்பை விட்டுவிடும் முதியவர்கள் ஒவ்வொரு நோன்புக்காகவும் ஒரு ஏழைக்கு உணவளிப்பது அவசியம் என்ற வசனம் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) கூறும்போது, 'இது (முற்றிலுமாக) மாற்றப்படவில்லை. நோன்பு நோற்கச் சக்தியிழந்த முதிய கிழவரும், கிழவியும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்' என்று விளக்கம் அளித்துள்ளனர். (ஆதார நூல்: புஹாரி) எனவே முதிய வயதுடையவர்கள் ஒவ்வொரு நோன்புக்காகவும் ஒரு ஏழைக்கு உணவளித்து விட்டு நோன்பை விட்டுவிடலாம். 'ஒரு ஏழைக்கு உணவு; என்றுதான் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அதன் அளவு ஏதும் குர்ஆனிலோ, அல்லது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலோ கூறப்படவில்லை. எனவே ஒவ்வொரு பகுதியிலும் ஒரு மனிதனின் உணவு என்று எது கருதப்படுகின்றதோ அதைக் கொடுப்பதே சிறந்ததாகும். இந்த அளவு இடத்திற்கு இடம் மாறக்கூடியதாகும். மேலும் முதியவர்கள் ஒரு நோன்புக்காக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்ற இந்த கட்டளை, அவர்களுக்கு அதற்கான வசதி இருந்தால்தான். எவ்வித வசதியும் இல்லாவிட்டால் நோன்பு வைக்காத தள்ளாத வயதினர் ஏழைக்கு உணவேதும் வழங்கத் தேவையில்லை. 'அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தைக் கொடுப்பதில்லை..' (அத்தியாயம் 2 ஸுரத்துல் பகராவின் 286வசனத்தின் ஒரு பகுதி) என்று அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் கூறுவதைக் கருத்தில் கொண்டு, மேற்படி செயலைச் செய்யலாம். வேண்டுமென்றே நோன்பை முறித்தவர் அதற்கான பரிகாரம் செய்ய வசதி இல்லாதபோது அவருக்கு நபியவர்கள் சலுகை வழங்கியதிலிருந்து இதனை நாம் அறியலாம். (இது பற்றிய ஹதீஸ் மறதியாக உண்பது, பருகுவது என்ற தலைப்பின் கீழ் வருகின்றது) மேலே குறிப்பிடப்பட்ட இவர்களைத் தவிர, மற்ற அனைத்து முஸ்லிம்களும் ரமளான் மாதத்தில் கட்டாயம் நோன்பு நோற்க வேண்டும். ரமளானில் நோன்பை நோற்காமல் - தகுந்த காரணமின்றி - தள்ளிப்போடுவது கூடாது. இடுகையிட்டது PMsyed நேரம் 7/19/2012 03:47:00 முற்பகல் கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் புதன், ஜூலை 18, 2012 பூர்வீக வேதங்களில் இஸ்லாத்தைப் பற்றி.. பூர்வீக வேதங்களில் இஸ்லாத்தைப் பற்றி.. ஒன்றே குலம் ஒருவனே தேவன் -திருமூலர். அல்லோ ஜியேஷ்டம் பரமம் பூர்ணம் பிராமணம் அல்லாம் அல்லா றஸூலா மஹாமத ரக பரஸ்ய ஸ்பஸூரஸம் ஹாரினீ ஹூம் ஹரீம் அல்லோ றஸூல மஹா மதரக பரஸ்ய அல்லோ அல்லா இல்லல்லெதி இல்லல்லா (- அல்லோப நிஸத்.) பொருள் : இறைவன் முதன்மையானவன். அவன் முழுமை பெற்றவன். அகிலம் அனைத்தும் அவனுக்கு உரியதாம். இறைவனின் பதவியில் நிலை பெற்றிருக்கும் முஹம்மது (ஸல்) இறையோனின் திருத்தூதராவார் (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1.2.3.4) இந்து வேதங்களிலும் இஸ்லாமியக் கொள்கையே... நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்சம் சாற்றியே சுற்றி வந்து மொண மொணன்று சொல்லும் மந்திரமேதடா? நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் சுட்ட சட்டி சட்டுவங்கள் கறிச்சுவை அறியுமோ? ஓசை பெற்ற கல்லை உடைத்து உருக்கி நீர் செய்கிறீர் வாசலில் பதித்த கல்லலை மழுங்கவும் மிதிக்கிறீர் பூசை பெற்ற கல்லிலே பூவும் நீரும் சாற்றுகிறீர். ஈசனுக்குகந்த கல்லு இரண்டு கல்லுமல்லவே (- சிவ வாக்கிய சுவாமிகள்) (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1.2.3.4) இடுகையிட்டது PMsyed நேரம் 7/18/2012 04:06:00 முற்பகல் 1 கருத்து: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் கதீஜாவான மதுராணி ஆந்திர மாநில வாரங்கள் நகரத்தில் பிறந்தவர் மதுராணி. ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்தவர். மதுவின் தந்தை தாகூர் பிரஹலாத் சிங். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இரண்டு சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் மதுராணிக்கு உண்டு. மது மூத்தவள். மதுராணி அண்மையில் இஸ்லாத்திற்கு மாறிவிட்டார். அதுதான் தாகூர் குடும்பத்தின் தலையாய பிரச்சனையாக மாறிவிட்டது. பெண்களை கண்ணியப்படுத்துவது இஸ்லாம்தான். தன் 36 வயது மகள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை ஜீரணித்துக் கொள்ள முடியாத தாகூர் பிரஹலாத் சிங், அவளை கொண்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். இந்தச் செய்தி ஆந்திர ஊடகங்களில் கடந்த வாரம் வெளியானது. தந்தை பிரஹலாத் மகள் மதுராணியிடம் பேசுகிறார். 'மகளே...பார்...நீ எடுத்திருக்கும் முடிவு (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருப்பது) மிக மிகத் தவறானது. உன் முடிவை மாற்றிக் கொள்! யாரும் உன்னை ஒன்றும் சொல்ல மாட்டார்கள். உனக்கு உன் தந்தை, தாய் மற்றும் தம்பிகள், தங்கைகளின் பாசம், அரவணைப்பு மீண்டும் கிடைக்கும்...' மதுராணி தந்தையின் கோபத்திற்கோ எச்சரிக்கைக்கோ செவிசாய்க்கவில்லை. தந்தை தாகூர் தொடர்ந்து பேசுகிறார்...'உன் தீர்க்கமான முடிவையும், பிடிவாதத்தையும் காணும் போது நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஓய மாட்டாய் என்று தெரிகிறது. இதோ பார்! நீ உன் (ஹிந்து) மதத்தை மாற்றிக்கொள்ள விரும்பினாள் கிறிஸ்துவத்திற்கோ, புத்த மதத்திற்கோ மாறிக்கொள். அல்லது நீ விரும்பினால் துறவியாக வேண்டுமானாலும் மாறிக்கொள். ஆனால் முஸ்லீமாக மட்டும் மாறி விடாதே! எனக்கு இஸ்லாத்தைப் பற்றியும் மிக நன்றாக தெரியும். பெண்களுக்கு இஸ்லாமிய மதத்தில் எவ்வித மதிப்பும் இல்லை. அவள் அங்கு வீட்டு வேலைக்காரியாகத்தான் கருதப்படுகிறாள். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டபின் நீ வருத்தப்படுவாய். இனியும் இஸ்லாத்தை ஏற்பேன் என அடம்பிடித்தால் உன்னை கொண்றுவிடுவேன்...' தந்தை திட்டி தீர்த்தப்பின் மகள் மதுராணி திடமான நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் பேசத் தொடங்கிறாள். மதுராணியின் பேச்சை ஒட்டுமொத்த குடும்பமும் கண் இமைக்காமல் கவனிக்கிறது. இஸ்லாம் குறித்து தந்தையின் விமர்சனங்களுக்கும், அச்சத்திற்கும் ஆதாரங்களுடன் பதிலளித்து பேசுகிறார் மதுராணி. 'தந்தையே! இந்த உலகத்தில் பெண்களுக்கு கண்ணியத்தை தருகின்ற ஒரே மதம் இருக்கிறதுஎன்றால் அது இஸ்லாம்தான்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'தாயின் காலடியில் தான் சொர்கம் இருக்கிறது' என்று சொல்லியிருப்பதன் மூலம், பெண்களின் மதிப்பை வானளவு உயர்த்தி இருக்கிறார்கள். இஸ்லாத்தோடு வன்முறை தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இஸ்லாம் வன்முறையை போதித்ததில்லை. அது சமாதானம் மற்றும் சகோதரத்துவத்தை சொல்கிறது,பரப்புகிறது. தந்தையே ...இஸ்லாம் தவறான, மோசமான , நன்னடத்தையற்ற மதம் என்று கூறுகிறீர்கள். நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் என்னைக் கொண்று விடுவேன் என்று சொல்லும் நீங்கள், எப்படி உங்களை நாகரிகமுள்ள, மரியாதைக்குரிய நபராக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதே சமயம் எங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்கள் புதைக்கப்படுவதை விட்டும் பாதுகாத்திருக்கிறார்கள். அதுவும் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே...' – பதில் சொல்ல முடியாமல் மௌனமாக நின்றபடி மதுவின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த குடும்பம்... இனி மதுவை கட்டாயப்படுத்த முடியாது. அன்போடும், பாசத்தோடும் அவளை சமாதானப்படுத்த முடியும் என எண்ணி முயற்சித்தனர். ஆனால் இறைவன் யாரை நாடுகிறானோ அவர்களுக்கு வழி காட்டுகிறான். அதனால் மதுராணி இன்று கதீஜாவாக மாறியிருப்பதுடன் தனது பெற்றோரும் இன்னும் சில நாட்களில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பிக்கையோடு இருக்கிறார். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின், தான் அனுபவித்த இன்பம் மற்றும் மன அமைதியை வெளிப்படுத்த வார்த்தைகளில்லை என்று கூறும் கதீஜா, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்கான காரணங்களையும் விவரிக்கிறார். 'ஹிந்துயிசம் குறித்த நூல்களையும் புனித குர்ஆணையும் மிகவும் ஆழ்ந்து படித்தறிந்த பின்னர்தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். நான் முஸ்லீமாக மாறிய பின் (இறைவனால்) ஆசீர்வதிக்கப் பட்ட பெண்ணாக உணகிறேன். நான் பணிபுரிந்த நிறுவனத்தில் சில முஸ்லீம்களும் பணிபுரிந்தனர். அவர்கள் வழிபாடு நடத்துவதை பார்க்கும்போது எனக்கு ஆசையாக இருக்கும். அவர்கள் ஒன்றினைந்து கூட்டமாகத் தொழுவது என்னை மிகவும் ஈர்த்தது. நான் தீவிர ஹிந்து மதக் குடும்பத்தில் பிறந்திருக்கலாம். ஆயினும் ஆரம்பத்திலிருந்தே பல கடவுளர்களுக்கு முன் மன்டியிடுவதை நான் விரும்பியதில்லை...'என்றெல்லாம் தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்கான பின்னணியைச் சொல்கிறார் கதீஜா. பெண்களை கண்ணியப்படுத்துகிறது... 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனைத்து இந்து மதவேதங்களிலும் திரும்பத் திரும்ப குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். அனைத்து வேதங்களும் ஒரே கடவுளைதான் சொல்கின்றன. முதம் தொடர்பான நூல்களை பல ஆண்டுகள் படித்த பின்னர் நான் யார்? ஏன் வாழ்க்கையின் நோக்கம்? என்பது போன்ற பல கேள்விகள் என் சிந்தனையில் உதித்தன. ஆனால் எல்லா கேள்விகளுக்குமான பதில்கள் நான் புனித குர்ஆனை வாசிக்கத் தொடங்கிய பின் எனக்கு கிடைத்தன...' நான் இஸ்லாத்தை கண்மூடித்தனமாக ஏற்காமல் நன்றாக ஆய்வு செய்து மத ஒப்பீடுகளின் அடிப்படையில் ஏற்றுக்கொண்டதாக கூறுகிறார். முன்னதாக, இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் கொள்கைப் பிரகடனமாக 'கலிமா'வை 3 வருடத்திற்கு முன்பே மொழிந்திருக்கிறார். கதீஜா அதோடு, ரகசியமாக தொழுதும் வந்திருக்கிறார். ஆனால் முஸ்லீமாக மாறிய பின் வீட்டிற்குள்ளேயே மத வழிபாடுகளில் ஈடுபட்ட காலத்தில் கடும் சிரமங்களையும், பிரச்சனைகளையும் சந்தித்திருக்கிறார் எனவே இந்த பிரச்சனைகளின் காரணமாக கடந்த மார்ச் 20, 2012 அன்று வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். இஸ்லாத்திற்காக தன் சுய விருப்பத்துடன் வீட்டை துறந்திருக்கிறார் கதீஜா. இறைவன் அவருக்கு போதுமானவன். நன்றி: மக்கள் ரிப்போர்ட் இடுகையிட்டது PMsyed நேரம் 7/18/2012 03:59:00 முற்பகல் கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் செவ்வாய், ஜூலை 17, 2012 மேஜிக் ஷோ இடுகையிட்டது PMsyed நேரம் 7/17/2012 02:24:00 பிற்பகல் கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் திங்கள், ஜூலை 16, 2012 ரமலானுக்கு தயாராவோம்!!! மனித சமுதாயத்தை சீர்திருத்த வந்த திருமறைக் குர்ஆன் இறங்கிய ரமலான் மாதம் நெருங்கி விட்டது. ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்காக இப்பொழுதே நாம் நம்மை தயார் படுத்தி இருப்போம். அதில் நம்மை சீர்திருத்திக் கொள்வதற்கு தயார் படுத்திக் கொண்டோமா ? இல்லை என்றால் இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் நம்மை சீர்திருத்திக் கொள்வதற்கான பயிற்சியை தொடங்குவோமாக ! நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. திருக்குர்ஆன்-2:183 ருசியுடன் உண்டு புசித்துப் பழகிய நாவை ரமலானுடைய நாளின் பாதிப் பகுதியில் உண்ணாமல் இருக்கப் பழக்கி இருப்போம். பொய் பேசாமல் இருக்கப் பழக்கினோமா ? இல்லை என்றால் இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் நாவை ரமலானில் பொய் பேசாமல் இருக்கப் பழக்குவோமாக ! பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 1903. ஸஹர் மற்றும் இஃப்தாருக்கான உணவுகளை வகை வகையாக செய்து உண்டு மகிழ்வதற்கு தேவையான பொருள்களை இப்பொழுதே வாங்கி சேமிக்கத் தொடங்கி இருப்போம். ஆனால் அதில் உறவினர்களில் உள்ள ஏழை எளியோருக்கும்> நமது அருகில் வசிக்கும் ஏழை எளியோருக்கும் சிறிதை கொடுத்து அவர்களும் நம்மைப் போல் ஸஹர் மற்றும் இஃப்தாரில் உண்டு மகிழ்வதற்கும் சேர்த்து வாங்கினோமா ? இல்லை என்றால் இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் அவர்களுக்கும் தாராள மனதுடன் சிறிதை சேர்த்து வாங்குவதற்கு எண்ணம் கொள்வோமாக ! இப்பொழுதே அந்த எண்ணம் வந்தால் தான் ரமலானில் வாரி வழங்கும் எண்ணம் உருவாகும். நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமலான் மாதத்தில் நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி(ஸல்) அவர்கள் அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை) ரமலானின் ஒவ்வொரு இரவும் ரமலான் முடியும்வரை நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலை) தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள் என்று இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 1902. இரவிலும்> பகலிலும் நேரம் தவறாமல் உறங்கிப் பழகிய கண்களை ரமலான் மாதத்தில் மாற்றி உறங்குவதற்கும் குறைத்து உறங்குவதற்கும் இப்பொழுதே பழக்கி இருப்போம். ஆனால் சினிமா பார்க்காமல் இருப்பதற்கு பழக்கினோமா ? இல்லை என்றால் இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் சினிமா பார்க்காமல் இருப்பதற்கு பழக்கிக் கொள்வோமாக! (இஃப்தாரிலிருந்து ஸஹர் வரை பலருடைய வீட்டில் (ரூமில்) சினிமா ஒடவே செய்கிறது சிலருடைய வீட்டில் (ரூமில்) நோன்பு நேரத்திலும் கூட சினிமா ஓடுவதை அறிந்து வருகிறோம்.) நோன்பை நோற்றால் அது விரசமான சிந்தனையை தடுக்கும் என்று சத்திய மார்க்கத்தின் இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் கூறி இருப்பதால் நோன்பு காலங்களிலும் விரசத்தைத் தூண்டும் சினிமாவை பார்க்கலாமா ? உங்களில்> திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்தியற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 1905. ரமலானுக்கு இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் ரமலானில் பொய் பேசாமால், சினிமா பார்க்காமல், இருக்கவும் வாரி வழங்கும் எண்ணத்தை எற்படுத்தும் பயிற்சியை தொடங்குவோமாக ! இடுகையிட்டது PMsyed நேரம் 7/16/2012 01:18:00 பிற்பகல் 1 கருத்து: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் வெள்ளி, ஜூலை 13, 2012 Sollvadhu Yellam Unmai June 26 '12 Part - 2 இடுகையிட்டது PMsyed நேரம் 7/13/2012 05:36:00 முற்பகல் கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் வியாழன், ஜூலை 12, 2012 Sollvadhu Yellam Unmai June 25 '12 Part - 1 இடுகையிட்டது PMsyed நேரம் 7/12/2012 02:35:00 பிற்பகல் கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் செவ்வாய், ஜூலை 10, 2012 கையில் பல கோடி ! ஏமாற ஆர் யூ ரெடி ? சமீபத்துல அண்ணன் ஒருத்தரு போன் பண்ணி சாயங்காலம் வீட்டுக்கு வா, ரொம்ப முக்கியமான விசயம், கண்டிப்பா வந்துடுன்னு போன் பண்ணுனார், சரின்னு நானும் கிளம்பி அவர் வீட்டுக்கு போனேன், என்னை பாத்ததும் டக்குன்னு சிறை நிரப்பும் போராட்டத்திற்கு போய் ஜெயிலுக்கு போகாம எஸ்கேப் ஆன உடன்பிறப்பு கணக்கா வா அந்தபக்கம் போயிடுவோம்னு ரகசியமா கூட்டிட்டு போனாரு, ஓ பயங்கர ரகசியம் போலருக்கேன்னு நானும் சைலண்டா போனேன். தனியா ஒரு இடத்துக்கு போய் நின்னவரு, டேய் உன்கிட்ட ஒரு விசயம் சொல்றேன், யாருகிட்டயும் சொல்லக்கூடாது, நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்னு சொன்னாரு, சரின்னா என்ன விசயம்னு சொல்லுங்க, யாருகிட்டயும் சொல்லமாட்டேன்னு சொன்னேன், இரண்டு மூணுதடவை சத்தியம் மேட்டர ரீபிட் பண்ணி கன்பர்மேசன் பண்ணிகிட்டு விசயத்தை சொன்னாரு மனுசன், ச்சீன்னு போயிடுச்சு. வேற ஒன்னும் இல்லீங்க, இவருக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருக்கு இவரோட நம்பருக்கு ஏழுகோடி ரூபா பரிசு விழுந்திருக்கறதா, அதுக்கு வீட்டு அட்ரஸ், போன் நம்பர், எல்லாம் மெயில் பண்ண சொல்லி எஸ்.எம்.எஸ் பண்ணி இருக்காங்க, அதைத்தான் உண்மைன்னு நம்பி என்ன மெயில் பண்ண சொல்லி கேட்கறதுக்காக கூப்பிட்டு இருந்தாரு, நானும் அண்ணா இது எல்லாம் சும்மா, டுபாகூரு மேட்டரு, இதையெல்லாம் பெருசா நினைக்காம விட்டுடுங்கன்னு சொன்னா ஆளு கேட்கவே இல்லை, டேய் நோக்கியா கம்பெனில இருந்து மெசேஜ் அனுப்பி இருக்காங்கடா? ஒருவேளை நிசமா இருந்தா ஏழு கோடிடா மெயில் அனுப்புடான்னு ஒரே தொல்லை. நானும் எவ்வளவோ சொல்லி பாத்தேன் அண்ணன் கேட்கற மாதிரி இல்லை, சரி அனுப்பித்தான் தொலைவோம் என்ன நடக்குதுன்னு பாக்கலாம்னு எஸ்.எம்.எஸ் வாங்கி பாத்தா MDNOKIA@GMAIL.COM அப்படிங்கற மெயில் ஐடிக்கு அனுப்ப சொல்லி இருந்தது, அடப்பாவி நோக்கியா கம்பெனி எம்,டிக்கு சொந்தமா ஒரு டொமைன் வாங்கக்கூடவா காசிருக்காது, ஜிமெயில் ஐடிய வச்சிருக்கானே? 1100 மாடல்லயே 2ஜி அளவுக்கு சம்பாதிச்சிருப்பானேன்னு இதையும் சொன்னேன், எங்கண்ணந்தான் அடைந்தால் ஏழுகோடி இல்லையேல் தெருக்கோடின்னு உறுதியா நின்னதால வேற வழி இல்லாம இதுக்குன்னே ஒரு மெயில் ஐடிய ஓப்பன் பண்ணி பேரு, அட்ரஸ், போன் நம்பருன்னு எல்லாத்தையும் அனுப்பி வச்சேன். எவண்டா சிக்குவான்னு போர்வைய போத்திட்டு காத்திகிட்டு இருக்கானுகளே கம்முனாட்டி பசங்க மெயில் அனுப்புன ஒருமணி நேரத்துல ரிப்ளை வந்திருச்சு, அது என்னன்னா, இந்தமாதிரி ஏழுகோடியே நாற்பது லட்சம் ரூபா பரிசுத்தொகை உங்களுக்கு விழுந்திருக்கு, அதுக்கு வாழ்த்துக்கள், அப்புறம் இந்த பணம் உங்க கைக்கு கிடைக்கற வரைக்கும் யாருகிட்டயும் சொல்லக்கூடாது, ஏன்னா சட்டசிக்கல் வந்துரும், டேக்ஸ் கட்ட சொல்லுவாங்க, பணத்த நாளைக்கு விமானத்துல அனுப்பி வைக்கிறோம், எங்க ஆபீசரு ஜேக்கப் ஆண்டர்சன் கூடவே வருவாரு, உங்களோட கிப்ட் பாக்ச கஸ்டம்சுல இருந்து ஈசியா வாங்கித்தருவாரு, அப்படி இப்படின்னு, கடைசியா மேட்டருக்கு வந்தானுக அதாவது உங்களோட ஐடி, ப்ரூப் ஒன்னும், கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் சார்ஜ் 15500 ரூபாயும் கொண்டு வாங்கன்னு. நானும் உடனடியா ரிப்ளை எதுவும் பண்ணாம ஒரு ரெண்டுநாள் சும்மா விட்டுட்டேன், அடுத்தடுத்த நாள் மெயில் அனுப்பிட்டே இருந்தானுக, நாளைக்கு ப்ளைட் லேண்டிங் லேண்டிங்னு நான் ரிப்ளையே அனுப்பல, அண்ணன் வீட்டு பக்கமும் போகல, சரின்னு மூணாவது நாள் இதையெல்லாம் பிரிண்ட் அவுட் எடுத்துட்டு அண்ணன் வீட்டுக்கு போனா அவனுங்க அடுத்தநாளே போன் பண்ணி பேசியிருக்கானுக, 15500 ரூபாய் அமவுண்டை நாங்க சொல்ர அக்கவுண்ட் நம்பர்ல போடுங்கன்னு நம்ம அண்ணன் ஏற்கனவே வயித்துக்கு கஞ்சி வாய்க்கு பீடின்னு வாழுற ஆளு, என்கிட்ட முன்னூரு ரூபாதான் இருக்குது, சனிக்கிழமை சம்பளம் வாங்குனா ஆயிரம் கிடைக்கும் மொத்தமா 1300 இப்ப வச்சுக்கங்க, அப்புறம் ஏழுகோடி கிடைச்சதும் மீதிய கொடுத்துடறேன்னு சொல்லி இருக்காரு, அவனுங்க அதெல்லாம் முடியாது மொத்தமா 15500 வேணும் இல்லைன்னா பணம் கிடைக்காதுன்னு சொல்லிட்டானுக இப்படியே அடுத்தநாளும் போன் பண்ணி இருக்கானுக, நம்மண்ணன்னும் லேசுபட்ட ஆளா 15500 க்கு பதினைஞ்சு லட்சமா நீங்களே எடுத்துட்டு மீதிப்பணத்தை எனக்கு கொடுங்கன்னு கேட்டுருக்கார், அவன் கடுப்பாயி நாளைக்குள்ள பணம் கட்டல உனக்கு கிப்ட் கிட்டலன்னு கறாரா சொல்லி இருக்கான், அடுத்தநாள் நம்மாளு சரி உனக்கும் வேணாம் எனக்கு வேணாம் ஏழுகோடியில இரண்டு கோடிய நீயே வச்சுக்க, எனக்கு பேலன்ஸ் அஞ்சு மட்டும் போதும், டீலா? நோ டீலா?ன்னு கேட்க அவன் விவேக்கு ஒருபடத்துல சொல்லுவாரே அந்த ஒத்தவார்த்தை அத சொல்லிட்டு போன கட் பண்ணிட்டானாம். அன்னைக்கு சாயங்காலம் அவரு வீட்டுக்கு போயிருந்தேன், குவாட்டர ஊத்திட்டு பொலம்பிட்டு இருந்தாரு, அய்யோ போச்சே ஏழு கோடி போச்சே, இனி சூர்யாகிட்டத்தான் போயிதான் ஹாட் சீட்டுல உட்காரணுமா அவன் கேணத்தனமா கேள்வியெல்லாம் கேட்பானே, ஈசியா வந்தது மிஸ்ஸாயிடுச்சேன்னு, அட ஏண்ணா நீங்கவேற அவனுகளே பிராடு பசங்க, நாந்தான் அப்பவே சொன்னன்ல பணம் கேட்பானுகன்னு, நீங்கதான் கேட்கலன்னு சொல்லி சமாதானப்படுத்திட்டு வீட்டுக்கு வந்தேன். சாப்பிட்டுட்டு படுத்து தூங்கலாம்னு படுக்கும் போது என்னோட செல்லுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது, உங்களுக்கு ஏழுகோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கு, உங்க அட்ரஸ், போன் நம்பர் இந்த மெயில் ஐடிக்கு அனுப்புங்க MDHONDA@GMAIL.COM அடப்பாவிகளா மறுபடியும் மொதல்ல இருந்தா? அவ்வ்வ்வ்!!!! டிஸ்கி : நிறைய பேருக்கு இந்தமாதிரி எஸ்.எம்.எஸ் வந்திருக்கும், இந்த எஸ்.எம்.எஸ்களுக்கு ரிப்ளை பண்ணுனா என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது, தெரிஞ்சுகட்டுமேன்னுதான் இந்த பதிவு. இடுகையிட்டது PMsyed நேரம் 7/10/2012 04:00:00 முற்பகல் கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் சனி, ஜூலை 07, 2012 மாமல்லபுரத்தில் நடந்தது என்ன? - பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா மாமல்லபுரத்தில் நடந்தது என்ன? - பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா Friday, 06 July 2012 17:12 மாமல்லபுரத்தில் கடந்த ஜுன் மாதம் 28ம் தேதி அங்குள்ள அனைத்து அரசியல் கட்சி மற்றும் சமூக அமைப்புகள் சார்பாக தொடர் முழக்க போராட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாமல்லபுரத்தில் வாழும் மக்களின் வழிப்பாட்டு உரிமை மற்றும் வாழ்வுரிமையை பறிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு இயற்றியுள்ள புராதானச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் இடங்கள் மற்றும் எஞ்சியவை திருத்தச் சட்டம் (இந்திய தொல்லியியல் புராதானச் சின்னங்கள் பாதுகாப்பு திருத்தச் சட்டம்); 2010ஐ எதிர்த்து தொடர்ச்சியாக மாமல்லபுரத்தில் வாழும் அனைத்து மக்களும் ஒருங்கிணைந்து நடத்திவரும் தொடர் போராட்டங்களின் ஒரு பகுதியாக இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு இயற்றியுள்ள இந்த சட்டத்தின்படி புராதானச் சின்னம் அல்லது இடம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியை சுற்றி 100 மீட்டர் அளவிற்கு தடைச் செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு மக்கள் வாழும் பகுதிகளில் எவ்வித கட்டுமானப் பணியோ அல்லது தற்போது உள்ள கட்டங்களில் சீரமைப்பு பணிகளோ நடைபெறக் கூடாது என்று விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த 200 மீட்டர் பகுதி வரையறுக்கப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்டு அங்குள்ள மக்கள் பயன்படுத்தும் கட்டடங்களில் பழுதுபார்த்தல் அல்லது சீரமைத்தல் பணிகள் தேசீய புராதானச் சின்னங்கள் ஆணையத்தின் முன் அனுமதிப் பெற்ற பிறகே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அச்சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக மின்சார உபகரணங்களை மாற்றி அமைப்பதாக இருந்தாலும் முன் அனுமதியின்றி எதுவும் செய்ய இயலாது என்று மத்திய அரசு திருத்திய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் ஏற்கெனவே இந்திய தொல்லியல் துறை (Archeological Survey of India) வழிப்பாடு இல்லாத 32 பழங்கால கோயில்கள் மற்றும் புராதான இடங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் முன்பே கொண்டு வந்தது. தற்போது புதிய சட்டத்தின் கீழ் எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பிறகு 14ம்; நூற்றாண்டில் புணரமைக்கப்பட்டு மக்கள் வழிப்பாட்டில் இருக்கும் தலசயானப் பெருமாள் கோயிலும் புராதானச் சின்னம் என தொல்லியில் துறை அறிவித்தது. இதன் காரணமாக ஹிந்துபெருங்குடி மக்களின் வழிப்பாட்டு உரிமை பறிக்கப்பட்டதுடன் இந்த கோயிலைச் சுற்றி 300 மீட்டர் அளவிற்கு வாழும் அனைத்து சமூக மக்களின் வாழ்வுரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தொல்லியியல் துறை எடுத்துள்ள 32 இடங்கள் மற்றும் கடைசியாக எடுத்த தலசயானப் பெருமாள் கோயிலும் புராதானச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மாமல்லபுரத்தில் எவ்வித கட்டுமானப் பணியோ அல்லது புனரமைப்பு பணியோ அல்லது ஒரு மின்விசிறியை மாற்றி மாட்டும் பணியோ முடங்கிப் போகும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாமல்லபுரத்தில் வாழும் 200க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான முஸ்லிம் வியாபாரிகள் உட்பட அனைத்து சமுதாய மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டுள்ளது. இப்படி தொல்லியில் பாதுகாப்பு என்ற பெயரில் மக்கள் வாழும் மாமல்லபுரத்தை மயான பூமியாக மாற்ற இந்திய தொல்லியியல் துறை திட்டமிட்டத்தை கண்டித்து தான் பல்வேறு போராட்டங்களின் ஒரு பகுதியாக கடந்த ஜுன் 28 அன்று தொடர் முழக்கப் போராட்டத்திற்கு மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன. கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு அருகில் உள்ள குடியிருப்புகளை காலிச் செய்ய வேண்டும் என்ற நிலையில் கடல் மார்க்கத்தில் கல்பாக்கத்திற்கு வெகு அருகில் உள்ள மாமல்லபுரத்தில் குடியிருப்புகள் இருக்க கூடாது என்பதும் மத்திய அரசின் ஒரு மறைமுக திட்டமாகும். மனிதநேய மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற முறையில் எனக்கும் இந்த போராட்டத்தில் அழைப்பு அளிக்கப்பட்டது. உள்ளூர் தமுமுகவினரும், ஜமாஅத்தினரும், வியாபாரிகளும் நான் இந்த போராட்டத்தில் பங்குக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினர். இப்போராட்டத்தில் அரசியலில் இரு துருவங்களாக இருக்கும் திமுக மற்றும் அதிமுக பிரதிநிதிகள் உட்பட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன், மதிமுக சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், நாம் தமிழர் கட்சி சார்பாக சீமான், காங்கிரஸ் கட்சியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன், பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் திருகச்சூர் ஆறுமுகம், பா.ஜ.க. சார்பாக இல. கணேசன் முதலியோர் அழைக்கப்பட்டார்கள். விழா ஏற்பாட்டாளர்கள் இல. கணேசன் பேசி விட்டு சென்ற பிறகு நானும் சகோதரர் திருமாவளவனும் கடைசியாக மேடைக்கு வந்து பேசுவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதன் அடிப்படையில் நாங்கள் மாமல்லபுரத்தில் ஒரு விடுதியில் தங்கியிருந்தோம். போராட்டம் தொடங்கி வெகு நேரம் ஆன பின்பும் இல. கணேசன் வராத சூழலில் நானும் திருமாவளவனும் மேடைக்கு அழைக்கப்பட்டோம். போராட்டம் தொடர்ந்தது. இந்த சூழலில் மாமல்லபுரம் வந்த இல. கணேசனை போராட்ட குழுவினர் முதலில் விடுதிக்குச் சென்று சற்று ஒய்வெடுத்து விட்டு மேடைக்கு வரலாம் என்று வற்புறுத்திய பிறகு அதை மறுத்து நேரடியாக மேடைக்கு வந்து எனக்கு அருகில் தான் உட்காருவேன் என்று அடம் பிடித்து என் அருகில் அமர்ந்துக் கொண்டார். உடனே பத்திரிகையாளர்கள் அனைவரையும் எழுந்து நின்று புகைப்படம் எடுக்க கைகோர்த்து நிற்கச் சொல்ல மேடையில் இருந்த நெருக்கடியின் காரணமாக நான் நகர முடியாமல் மனதில் பெரும் வருத்தத்துடன் இல. கணேசனுடன் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. இதன் பிறகு நான் போராட்டக் குழுவினரிடம் உடனடியாக நான் பேசிவிட்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க உடனடியாக எனக்கு பேச வாய்ப்பளிக்கப்ட்டது. எனது உரையின் தொடக்கத்தில் மேடையில் வீற்றிருந்த பா.ஜ.க.வின் இல. கணேசனுக்கும் அவரது கட்சியினருக்கும் பிற சமய மக்களின் வழிப்பாட்டு உரிமையை எவ்வாறு இஸ்லாம் பாதுகாத்துள்ளது என்பதை பறைச்சாற்றும் வகையில் அமைத்துக் கொண்டேன். தொடக்கமாகவே பிற மக்களின் வழிப்பாட்டு உரிமையை பறிக்கும் மார்க்கம் அல்ல இஸ்லாம் என்பதற்கு சான்றாக கலீபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சியின் கீழ் ஜெருசலம் நகரம் முஸ்லிம்களின் ஆளுகையின் கீழ் வந்த நிலையில் அந்நகரில் கலீபா உமர் (ரலி) அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு அவர்களை அந்நகரின் கிறிஸ்த்தவ தலைமை குரு சோபோர்னிசிஸ் அந்நகரைச் சுற்றிக் காட்டிய நிகழ்ச்சியையும் ஏசு நாதர் பிறந்ததாக சொல்லப்படும் தேவலாயத்திற்கு (Church of Nativity) சென்று அதனை பார்வையிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் பாங்குச் சொல்லப்பட்ட வேளையில் அந்த தேவலாயத்திலேயே தொழுகையை நிறைவேற்றும்படி அந்த பாதிரியார் கேட்டுக் கொள்ள அதனை உமர் ரலி மறுத்ததையும் எடுத்துக் கூறினேன். நான் இங்கு இப்போது தொழுதால் பிற்காலத்தில் முஸ்லிம்கள் இது எங்கள் கலீபா தொழுத இடம் என்று உங்கள் வழிப்பாட்டு உரிமை கோரக்கூடும். அதற்கு நான் வழி வகுக்க விரும்பவில்லை என்று உமர் (ரலி) தொழுவதற்கு மறுப்புத் தெரிவித்ததற்கான காரணத்தை விளக்கி பேசினேன். நான் இந்த கருத்தைத் தெரிவித்தப் போது போராட்டத்தில் பங்குக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்லாத்தின் இந்த அற்புதமான சகிப்புத்தனத்தை அங்கீகரிக்கும் வகையில் பெரிய கரகோஷத்துடன் அதனை வரவேற்றனர். இல. கணேசன் போன்றோருக்கு அது பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியிருக்க கூடும். இதனைத் தொடர்ந்து இந்திய தொல்லியல் துறை மக்களின் உணர்வுகளை மதிக்காமல் எவ்வாறு செயல்பட்டு வருகின்றது என்பதை விவரிக்கும் போது வேலூர் கோட்டையில் உள்ள பள்ளிவாசலில் முஸ்லிம்களின் வழிப்பாட்டு உரிமையை பறித்து இந்திய முஸ்லிம்களுக்கு அரசியல் சாசனச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை பறித்த விபரத்தையும் அதனை மீட்பதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போராடி வரும் வரலாற்றையும் எடுத்துரைத்தேன். இதே போல் மாமல்லபுரத்தில் வழிபாடு இல்லாத கோயில்களை தன்வயப்படுத்தி அவற்றை பாதுகாக்க தவறி வரும் இந்திய தொல்லியியல் நிறுவனம், மக்களால் பாதுகாக்கப்பட்டு வழிபாடு நடந்து வரும் தலசயானப் பெருமாள் கோயிலை தமிழக இந்து அறநலத்துறையிடமிருந்து தன் வயப்படுத்தி வழிப்பாட்டு உரிமையை பறிப்பது அரசியல் சாசனச் சட்டத்திற்கு முரணானது என்பதை சுட்டிக் காட்டினேன். வழிப்பாட்டு உரிமையுடன் வாழ்வுரிமைiயும் பறிக்கும் வகையில் 2010 இயற்றப்பட்ட சட்டம் உள்ளது என்பதை சுட்டிக் காட்டி இச்சட்டத்தின் கீழ் தமிழக அரசின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையும் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே தலைமைச் செயலககத்தில் முதலமைச்சரின் அறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் தொல்லியியல் துறையின் முன் அனுமதிப் பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு இச்சட்டத்தை எதிர்க்க வேண்டும், மத்திய அரசு இச்சட்டததை கைவிட வேண்டும் என்று பேசினேன். நான் பேசிய மேடையில் மாமல்லபுரம் முஸ்லிம் ஜமாஅத்தின் தலைவரும் இருந்தார். பேசி முடித்த பிறகு மக்ரிப் தொழுகைக்காக மாமல்லபுரம் பள்ளிவாசலுக்கு அவருடன் தான் சென்றேன். இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் புதிதாக கட்டப்பட்டுள்ள அந்த பள்ளிவாசலும் பாதிக்கப்படும் நிலை உள்ளதை என்னால் அறிய முடிந்தது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றிப் பெற்று புதிய அரசு ஆட்சியில் அமைச்சரவை பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு குஜராத் கொடியவன் மோடி வருகிறான் என்று தெரிந்த பிறகு நாம் அந்த நிகழ்ச்சியில் பங்குக் கொள்ளவில்லை. இதனால் யாருக்கும் எந்த இழப்பும் இல்லை. பா.ஜ.க. என்ற பாசிச கட்சியின் எதிர்ப்பில் நாம் உறுதியாக இருக்கிறோம். ஆனால் மாமல்லபுரத்தில் நடைபெற்ற அந்த போராட்டத்தில் இல. கணேசன் பங்குக் கொள்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக நாம் அதில் பங்குக் கொள்ளாமல் இருந்திருந்தால் மாமல்லபுரத்தில் வாழும் 800க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தனிமைப்படுத்தப்பட்டு நிற்கும் சூழல் ஏற்பட்டிருக்கும். நான் அந்த நிகழ்ச்சியில் பங்குக் கொண்டதை வைத்து கடும் விமர்சனத்தை சிலர் இப்போது செய்து வருகிறார்கள். ஆனால் அதைப் பற்றி நாம் கவலைப்பட போவதில்லை. ஏனெனில் நாம் பதில் சொல்ல வேண்டியது நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி அல்லாஹ்விடம் தான்.; செயல்கள் அனைத்தும் எண்ணங்களின் அடிப்படையில் தான் அமைந்துள்ளன என்ற அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுதமொழிக்கேற்ப தான் நான் அந்த நிகழ்ச்சியில் பங்குக் கொண்டேன். நான் அந்த நிகழ்ச்சியில் எந்த எண்ணத்துடன் பங்குக் கொண்டேன் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான். நான் அப்போராட்டத்தில் பங்குக் கொண்டு உரிமைக்காக குரல் கொடுத்ததை தம் வாழ்வுரிமையை இழக்கும் நிலையில் உள்ள முஸ்லிம்கள் உட்பட மாமல்லபுரம் மக்கள் நன்றியுடன் நினைவு கூறுகிறார்கள். அம்மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து நாம் குரல் கொடுப்போம். இடுகையிட்டது PMsyed நேரம் 7/07/2012 01:44:00 பிற்பகல் கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் நமது கடவுச்சீட்டின் (பாஸ்போர்ட்) பக்கங்களை கிழித்து எரியும் விமான நிலைய அதிகாரிகள்!.... எச்சரிக்கை!!! அனைவரும் கவனமாக இந்த கட்டுரையை படிக்கவும். நமது கடவுச்சீட்டின் (பாஸ்போர்ட்) பக்கங்களை கிழித்து எரியும் விமான நிலைய அதிகாரிகள்!.... கவனமாக இருக்கவும்!. நீங்கள் பன்னாட்டு விமானத்தில் பயணம் செய்பவராக இருந்தால் பன்னாட்டு விமான நிலைய குடிபுகல்அதிகாரி (IMMIGRATION OFFICER) /சுங்க அதிகாரி (CUSTOMS OFFICER) /காவல்துறை அதிகாரி (POLICE OFFICER) மற்றும் விமான நிலைய ஊழியர் (AIRPORT STAFF) யாரிடம் உங்களது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்டை) கொடுத்தாலும் மிக கவனமாக இருக்கவும் ஏனென்றால் இந்த ஊழியர்கள் உங்களது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்டை) மிகச் சுலபமாக திருத்தி உங்களை இதன் மூலம் அலைக்கழித்து பணம் பறிக்கும் வழியை கையாளுகின்றனர் இது அனைத்து பன்னாட்டு விமான நிலையத்திலும் கூட்டு சதியாக நடைபெற்று கொண்டிருக்கின்றது. விமான நிலையத்தில் பயணிகள் புறப்பாடு (DEPATURE) நேரத்தில், பயணி குடிபுகல் (IMMIGRATION OFFICER) அதிகாரியை கவனிக்காமல் இருக்கும் தருணத்தில் வெளியேற்றம் (EXIT) முத்திரை பதித்து இலாவகமாக உங்களது கடவுச்சீட்டின் ஒரு பக்கத்தை கிழித்து விட்டு அனுப்பிவிடுகின்றார். மேலும் பயணி குடிபுகல்/குடியேற்றல் மேசையைவிட்டு அகன்றதும் தனது கணினிமூலம் பயணியின் முழு விவரத்துடன் புகார் தெரிவித்து விடுகின்றார், இப்பொழுது இந்தியாவின் அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் குடிபுகல்/குடியேற்றல் அலுவலர் கணினியில் பயணிகளின் கடவுச்சீட்டின் என்னை தட்டினால் பயணிகளின் முழு விவரப் பட்டியல் கிடைக்கும் அதில் சிகப்பு கொடி அடையாளமிட்டு மிளிரும். இதுபோன்று பயணிகளிடம் பணம் பறிக்கும் உத்தியை கையாளுகின்றனர். அந்த பயணி மீண்டும் வருகைத் தரும்போது விசாரணைக்கு உட்படுத்தப்படுவார். அந்த பயணி வெளிநாட்டில் எத்தனை ஆண்டு வேலைசெய்தார், அவரது வருமானம், அவர் செய்யும் வேலை போன்றவைகள் விசாரிக்கப்படும், இதில் சட்டம் பேசும் அப்பாவிகள் , இந்தியாவில் உண்மையான நீதி கிடைக்கும் என நம்பும் அப்பாவிகள் நிலைதான் பரிதாபம் அவரின் எதிர்காலம் பாழ்படுத்தப்படும். இதற்காக அவரிடம் குடிபுகல் அதிகாரிகளும், காவலர்களும் பேரம் பேசி பணத்தை கறந்துவிடுவார்கள். தயவு செய்து அனைவருக்கும் அறிவுறுத்துவது என்னவென்றால், நீங்கள் உங்களது கடவுச்சீட்டை விமான நிலைய குடிபுகல்/ சுங்கம் மேசையில் உள்ள அலுவலரிடம் கொடுக்கும்போது மிகவும் விழிப்புடன் இருங்கள், உங்களது பார்வையை திசைத்திருப்பும் நோக்கத்தில் அந்த அலுவலர் நடந்து கொண்டாலும் உங்களது பார்வையை தவறவிடாதீர்கள். மேலும் இந்த தகவலை உங்களுக்கு தெரிந்த நண்பர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகளிடம் தெரிவியுங்கள். இதுபோன்று இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 20 - 30 சம்பவங்கள் அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் நடைபெற்று கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று, சில மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியா ஜித்தா (சவுதி அராம்கோ) வில் வேலைபார்க்கக் கூடிய ஹைதராபாத் சகோ. ஆரிபுதீன் தனது குடும்பம்பத்தினர் ஆறு உறுப்பினர்களுடன் அமெரிக்கா செல்ல விசா கிடைத்து நமது நாட்டின் ஹைதராபாத் வழியாக செல்ல எண்ணி ஹைதராபாத் விமான நிலையம் வந்தடைந்து, ஒருமாத காலம் தங்கிவிட்டு மீண்டும் ஹைதராபாத் விமான நிலையம் வழியாக அமேரிக்கா சென்றிருக்கின்றார். அவர் அமெரிக்காவை அடைந்து குடிபுகல் செய்யும்போது அவர் மனைவியின் கடவுச்சீட்டில் அமெரிக்காவிற்கான விசா பக்கம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அங்கிருந்து அவர்கள் அனைவரும் திருப்பிவிடப்பட்டனர். அவர்கள் மும்பை வந்தடைந்தவுடன் மும்பை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர், கடந்த இரண்டு மாதகாலமாக கோர்ட்டுக்கும், காவல் நிலையத்திற்கும், குடிபுகல் அலுவலகத்திற்கும் அலைந்துகொண்டிருக்கின்றனர். நினைத்துப்பார்க்கவே ஆச்சரியமாக இருக்கின்றது எவ்வாறெல்லாம் குடிபுகல் அதிகாரிகள் பணம் பறிப்பதற்காக தன தாய்நாட்டு மக்களின் வாழ்க்கையில் விளையாடுகின்றார்கள் என்பது. பாம்பே மற்றும் ஹைதராபாத் பன்னாட்டு விமான நிலையத்தின் மூலம் பயணிக்கும் அனைத்து பயணிகளும் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு மாதமும் ௨௦-௩௦ இதுபோன்ற பாஸ்போர்ட்டின் நடு பக்கங்கள் கிழிக்கப்படும் நிகழ்வுகள் மேற்கூறிய விமான நிலையங்களில் நடைபெறுவதாகவும், இதில் சிலருக்கு இந்த சம்பவம் யாரால், எப்பொழுது நடைபெற்றது என்பதே கூட தெரிவதில்லை. இதுபோன்ற அசம்பாவிதங்களில் நாம் இருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்துபாருங்கள், நமது நாட்டின் காவல்நிளையங்களும், வழக்கடுமன்றங்களும் நம்மை அலைகளிப்பர்கள் என்பதை. இதுபோன்ற சம்பவங்கள் இரண்டு மூன்று வருடங்களாகவே அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றது. யார் இதுபோன்ற கடவுச்சீட்டு வைத்திருக்கின்றார்களோ அவர்கள் விமான நிலையத்தை அடைந்தவுடன் அவர்களிடம் விசாரணை என்னும் ரீதியில் அவர்களை அளயவிடுகின்றனர், இதுபோன்ற சம்பவங்களை செய்வது சில குடிபுகல் அதிகாரிகள்தான் என்பதும் தெரியவந்துள்ளது. ஆகையால் நாம் அனைவரும் மிகவும் கவனமாக நமது கடவுச்சீட்டை சரிபார்த்துவிட்டு குடிபுகல் மேசையிலிருந்து அகலவேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு இந்த செய்தியை நாம் அனைவருக்கும் தெரியப்படுத்தவேண்டும். MOHAMED MAGDOOM அவர்களின் ஆங்கிலக் கட்டுரை தமிழாக்கம் இடுகையிட்டது PMsyed நேரம் 7/07/2012 03:51:00 முற்பகல் கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் வியாழன், ஜூலை 05, 2012 பெண்களே! நீங்கள் வெளியே செல்லும்போது ஆண்களின் துணை இல்லாமல் செல்லாதீர்கள் சமுதாய சொந்தங்களே......!! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), சில தினங்களுக்கு முன் ஒரு நாள்........!! நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள மஞ்சக்கொல்லை என்ற கிராமத்தில் இருந்து முஸ்லிம் பெண்கள் இருவர் தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றனர். இருவரும் சுமார் 25 வயது இருக்கும். அவர்களுக்குள் ஒருவர் உடல் சுகவீனமானவர். இன்னொரு பெண்மணி அவரது தோழி. அந்த நோயாளிப் பெண் அவ்வப்பொழுது தஞ்சாவூர் சென்று அங்குள்ள நரம்பியல் மருத்துவ நிபுணரிடம் உடல்பரிசோதனை செய்து கொண்டு, மருந்து மாத்திரைகள் வாங்கி வருவது வழக்கம். அதுபோலத்தான் அன்றும் நடந்தது. இருவரும் தஞ்சாவூர் சென்று மருத்துவரிடம் பரிசோதனைகளை முடித்துக்கொண்டு மருந்து மாத்திரைகள் வாங்கி வருவதற்குள் மக்ரிப் நேரமும் முடிந்து விட்டது. உடனடியாக தஞ்சையில் பேருந்தில் ஏறினால்தான் இரவு 10 மணி வாக்கில் மஞ்சக்கொல்லை போய்ச் சேரமுடியும் என்பதால் மருத்துவமனையில் இருந்து தஞ்சைபழைய பேருந்து நிலயத்திற்குச் செல்ல ஏதாவது ஆட்டோ கிடைக்காதா என்ற பரபரப்பில் இருந்தனர். அப்போதுதான், தேடிச்சென்ற மூலிகை காலடியில் கிடைத்தது போல அவர்கள் முன் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அந்த ஆட்டோவில் ஏற்கனவே ஒரு ஆணும் பெண்ணும் அமர்ந்திருந்தனர். இருவருக்கும் நடுத்தர வயதிருக்கும். கணவன் மனைவி போலத் தோன்றியது. ஒரு வேளை அது ஷேர் ஆட்டோவாக இருக்குமோ என்று அந்த முஸ்லிம் பெண்கள் இருவரும் மனதிற்குள் எண்ணிக்கொண்டிருக்கையில் அந்த ஆட்டோ ஓட்டுனர் முஸ்லிம் பெண்களைப் பார்த்து "நீங்கள் எங்கே செல்ல வேண்டும்" என்று கேட்க, அதற்கு அவர்கள் "பழைய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்" என்று சொன்னவுடன், "சரி ஏறுங்கள்" என்று ஓட்டுனர் சொல்ல, ஏற்கனவே அந்த ஆட்டோவில் உட்கார்ந்திருந்த கண்வன் மனைவி ஜோடி அந்த முஸ்லிம் பெண்களைப் பார்த்து "வாங்க, வாங்க நாங்களும் அங்குதான் செல்கிறோம்" என்று அவர்கள் இருவரும் நெருங்கி அமர்ந்து கொண்டு இவர்களுக்கு இடம் கொடுத்தனர். அடுத்த சில வினாடிகளில் தங்களுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தைச் சிறிதும் முன்கூட்டி உணரச் சக்தியற்ற அந்த அப்பாவி முஸ்லிம் பெண்கள் ஆட்டோ ஓட்டுனரின் கனிவையும் உள்ளே அமர்ந்திருந்த கணவன் மனைவியின் பெருந்தன்மையையும் வெறும் நடிப்பென அறியாது ஆட்டோ உள்ளே சென்று அமர்ந்தனர். ஆட்டோவும் சிட்டெனப் பறந்தது. மருத்துவமனையில் இருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு ஆட்டோவில் செல்ல 5 நிமிடம் கூட ஆகாது. ஆனால், அந்த ஆட்டோவோ கிட்டத்தட்ட 15 நிமிடங்களாகியும் நிற்காமல் போய்க்கொண்டே இருப்பதையும், பேருந்து நிலையம் செல்லாமல் வேறு எங்கோ செல்வதையும் அறிந்த முஸ்லிம் பெண்கள் தாங்கள் ஏதோ ஆபத்தில்சிக்கிக் கொண்டோம் என்பதை உணர்வதற்குள் ஆட்டோ தஞ்சை நகரைத் தாண்டி வெகுதூரம் சென்று ஆள் அரவமற்ற பகுதியை நோக்கி சென்று கொண்டே இருந்தது. என்னசெய்வதென்று அறியாத அந்த அப்பாவிப் பெண்கள் "காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!" என்று கதறியழ ஆரம்பித்தனர். உடனே, உள்ளே அமர்ந்திருந்த கணவன் தன் உடம்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்து அந்த முஸ்லிம் பெண்ணின் கழுத்தில் வைத்து "சத்தம் போட்டால் இங்கேயே உங்கள் இருவரையும் கொன்று விடுவேன்" என்றுமிரட்ட, அவன் கூட வந்த பெண் முஸ்லிம் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த கரிசமணியை பறிக்க ஆரம்பித்தாள். முஸ்லிம் பெண் அதனை எதிர்க்க முயற்ச்சிக்க முகத்தில் சரமாரியாக அடியும் குத்துக்களும் விழவே, முஸ்லிம் பெண் நிலை குலைந்துபோனாள். உடனே அந்த கணவன் மனைவி ஜோடி முஸ்லிம் பெண்கள் இருவரிடமிருந்தும் செய்ன்கள், தோடுகள், வளையள்கள் அனைத்தையும் பிடுங்கிக்கொண்டு, இருவரையும் ஓடும் ஆட்டோவிலிருந்து தள்ளிவிட்டுச்சென்று மாயமாய் மறைந்து விட்டனர். அந்த அதிர்ச்சியை தாங்கச் சக்தியற்ற முஸ்லிம் நோயாளிப்பெண் மூச்சு திணறி கீழே விழ, உடன்சென்ற தோழி முதல் உதவி செய்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றியிருக்கிறாள். அல்ஹம்துலில்லாஹ். பின்பு, இருவரும் ஒருவாறு சுதாரித்துக்கொண்டு நெடுஞ்சாலையை அடைந்து அந்த சாலை வழியே வந்த பேருந்தை கையைக் காட்டி நிறுத்தி தங்களுக்கு ஏற்பட்ட ஆபத்தை எடுத்துச் சொல்ல, அந்த பேருந்தில் இருந்த நல்ல மனிதர் ஒருவர் அவர்கள் இருவரையும் ஆசுவாசப்படுத்தி, தைரியமூட்டி, குளிர்பானம் வாங்கிக் கொடுத்து அவர்களிடம் ரூ. 100ம் கொடுத்து நாகை செல்லும் பேருந்தில் ஏற்றி விட்டிருக்கிறார். மேற்படி சம்பவத்தில் அந்த முஸ்லிம் பெண்ணின் கைப்பையையும் அந்த ஜோடி பறித்துக்கொண்டது. அதில் சில ஆயிரம் ரூபாய்களும், செல்போனும், ஏடிஎம் கார்டும் இருந்தன. நல்ல வேளையாக அந்தத் தோழிப் பெண் கவரிங் நகைகள் அணிந்திருந்தாள். இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன. 1. ஆண் துணையின்றி வெளியூர் செல்வதை இயன்றவரை தவிர்க்க வேண்டும். 2. வேறு வழியின்றி பெண்கள் மட்டும் செல்ல வேண்டியிருந்தால் இரவுப்பயணத்தைத் தவிர்க்க முயற்சியுங்கள். 3. தங்க ஆபரணங்களைத் தவிர்த்து கவரிங் நகைகளை அணிந்து செல்லவும். 4. செல்போன், ஏடிஎம் கார்டு, பணம் இவற்றை கைப்பையில் வைக்காமல் தங்களின் மறைவிடங்களில் வைத்துக் கொள்ளவும். 5. ஆட்டோ அல்லது டாக்ஸி போன்ற வாகனங்களில் ஏறும் முன் அந்த வாகனங்களின் எண்ணை குறித்து வைத்துக் கொள்ள மறவாதீர்கள். 6. அறிமுகமில்லாத எந்த நபரையும் எளிதில் நம்பி ஏமாறாதீர்கள். அவர்களைக்கொஞ்சம் சந்தேகக்கண்கொண்டு பார்ப்பதில் தவறில்லை. 7. தைரியம் உள்ள பெண்கள் கொஞ்சம் மிளகாய்த் தூள் போன்றவற்றைத் தங்கள் கை வசம் வைத்துக் கொள்ளவும். (இது தைரியமான பெண்களுக்கு மட்டும் தான்) நன்றி:- பஷீர் அஹமது, மஞ்சக்கொல்லை. இடுகையிட்டது PMsyed நேரம் 7/05/2012 03:58:00 முற்பகல் கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் லேபிள்கள்: பெண்கள் புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom) மொத்தப் பக்கக்காட்சிகள் PMsyed எனது முழு சுயவிவரத்தைக் காண்க பிரபலமான இடுகைகள் பைய்யத் ரகசியம் தெள்ளத் தெளிவாக குர்ஆனுக்கும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறைக்கும் முரணாக மார்க்கத்தின் பெயரால் முஸ்லிம்களிடையே பிர்- முரீது வியாபாரம் நடந்த... பெர்முடா முக்கோணமும் இஸ்லாமிய சிந்தனையும்.. மதுரையில் வசித்துவரும் இந்த முதியவர் 1953 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு வியாபாரத்திற்கு கப்பலில் அடிக்கடி சென்றுவருவாராம். ... பரீட்சை எழுத இருக்கும் மாணவர நீங்கள் ? கட்டயாம் இதை படியுகள் ? அல்லாஹ்வின் திருப்பெயரால் . . . அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றெ... பிஜேயை கண்மூடித்தனமாகப் பின்பற்றும் முகல்லிதுகள் விழி பிதுங்கிப் போனார்கள். அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு...! 3 shares குடும்பங்களில் பிரிவை ஏற்படுத்துவதில் முக்கியப்பங்கு அவதூறுக்கு உண்டு. கற்பொழுக்கமுள்ள பெண்களைப் பற்றி அவதூறு கூறுவது எந்த அளவ... இப்படியுமா மனிதர்கள்?// முகவை சேக் விட்டால் காலையும் நக்குவான் போல:)) பெண் அடிமைத்தனம் அந்த காலம் ...ஆண் அடிமைத்தனம் இந்த காலம் :)) Abdur Rahman ulagam aliya... இஜ்மா கியாஸ் என்றால் என்ன? அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்' 'ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்'' ''என் இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்றும் கூறுவீராக! திருக்குர்ஆன்.23:97. ... அவசியம் கற்றுகொள்ள வேன்டிய துஆக்கள் தூங்குவதற்கு முன் அல்லாஹும்ம பிஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா இறைவா உன் பெயரால் மரணிக்கிறேன், உன் பெயரால் உயிர் பெறுகிறேன். நூல்: புகாரி... இஸ்லாத்தின் பார்வையில் மன்னிப்பு மன்னிப்பு இஸ்லாத்தின் பார்வையில் மனிதன் என்பவன் தவறிழைப்பவனாகவே இருக்கின்றான். சில நேரங்களில் அவன் யோசிக்காமல் அல்லது எந்த ஒரு உள்நோக்கமும...
நாயகன் நிகில் முருகன் டைரக்டர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்களை தொடர்ந்து பிரபலமான சினிமா மக்கள் தொடர்பாளர் (public relation officer -PRO) ஒருவர் கதாநாயகனாக நடிக்கிறார். நிகில் முருகன் - இந்த பெயரை தமிழ் சினிமா ரசிகர்கள், போஸ்டர்களிலும், டைட்டில்களிலும் பார்த்திருப்பார்கள். தமிழ் சினிமாவில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் என அனைவருக்கும் பிடித்த சினிமா மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன். இவர் சினிமா செய்தியாளர்களுக்கும், சினிமாத் துறையினருக்கும் இடையே ஒரு இணைப்பு பாலமாக செயல் படுகிறார். நாயகன் நிகில் முருகன் சினிமா மக்கள் தொடர்பாளராக கடந்த இருபதைந்து ஆண்டுகளாக பணியாற்றும் இவர் தற்சமயம் பவுடர் என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். காவல் துறை அதிகாரியாக நிகில் நடிக்கும் பவுடர் படத்தின் ட்ரைலர் பார்ப்பதற்கு பரபரப்பாக இருக்கிறது. சஸ்பென்ஸ் மற்றும் ஆக்ஷன் கலந்த படமாக இருக்கிறது. இப்படத்தின் போலீஸ் வேடத்திற்கு நிகில் இயல்பாக பொருந்தி போகிறார். பவுடர் படக்குழுவினர் இந்த படத்தின் கதை ஒரு இரவில் நடக்கிறது. இப்படத்தை பார்க்கும் போது நமது கடந்த கால நினைவுகள் வந்து போவதை தவிர்க்க இயலாது என்கிறார் இயக்குனர் விஜயஸ்ரீஜி. இவர் தாதா 87 படத்தை இயக்கியவர். தற்சமயம் மோகன் இயக்கும் ஹாரா படத்தையும் இயக்கி வருகிறார். ஒரு மக்கள் தொடர்பாளராக பல்வேறு சினிமாகாரர்களின் மனங்களின் இடம் பிடித்த நிகில் ஒரு நடிகராக மக்கள் மனதிலும் இடம் பிடிக்க வாழ்த்துவோம்.
நம்மில் எத்தனையோ பேர் வெளிநாடு சென்று கை நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற கனவுகளோடு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் யாரையாவது பிடித்து எப்படியாவது விசா வாங்கி வெளிநாட்டிற்கு வந்து விடுகிறோம். நம்மில் சிலர் முறையாக கம்பெனி விசாக்களிலும்,பலர் விசிட்விசா அல்லது FREE விசாக்களிலும் பல்வேறு நாடுகளுக்கும் வந்து விடுகிறோம். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவெனில் கம்பெனி விசாவில் வருபவர்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை.விசிட் விசா மற்றும் FREE விசாவில் வருபவர்களுக்குத்தான் சிக்கல்கள் அதிகம். விசிட் விசாவில் வருபவர்கள் தொழிலாளர் விசா கிடைக்காமல் தலைமறைவாக ஒளிந்து கொண்டு வேலை செய்து பிழைப்பதும்,FREE விசாவில் வருபவர்கள் கிடைக்கும் வேலையை விசாவுக்கு சம்பந்தமில்லாத இடங்களில் செய்து பிழைப்பதும் தான் தற்போதைய சவூதிஅரேபியாவின் நிலை. நம்மில் சிலர் நான் சொந்த விசாவில் தான் சவூதிக்கு வந்திருக்கேன் என சொல்வதுண்டு.அவர்களின் அறியாமையால் அப்படி சொல்வதை காலம் கடந்து அவர்கள் தெரிந்து கொள்வார்கள். அது சரி சொந்த விசா என்றால் என்ன?என நாம் விசாரித்தபோது நமக்கு தலையே சுற்றிவிட்டது.இதையா? இவர்கள் இவ்வளவு பெருமையாக சொன்னார்கள் என சொன்னவர்களை பார்த்து நம்மை பரிதாபப்பட வைக்கும்.அந்தளவுக்குFREE விசா ஆபத்தானது, இப்போது விஷயத்திற்கு வருகிறேன்,சவூதிஅரேபியாவை சேர்ந்த ஒருவர் தனது வீட்டிற்கு ஓட்டுனர் விசா வேண்டுமென்றோ,அல்லது தனது கடை மற்றும் கம்பெனிகளுக்கு தொழிலாளர் விசா வேண்டுமென்றோ அரசாங்கத்திடம் முறையாக விண்ணப்பித்து சம்பந்தப்பட்ட விசாவை பெற்றுக்கொண்டு அதை இங்குள்ள சில புரோக்கர்கள் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு இலட்சத்திலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் வரை அந்த விசாவை வெளிநாட்டு மோகம் கொண்ட அப்பாவி மக்களிடம் விற்று விடுவார்கள். அது மாதிரி விசாவில் வருபவர்கள் எங்கே வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம் கை நிறைய சம்பாதிக்கலாம் என்ற ஆசை வலையில் சிக்கியவர்கள் வீட்டை விற்று நகைகளை விற்று ஒரு வழியா சவூதிக்கு வந்ததும் மெடிக்கல் செக்கப்புக்காக இந்திய ரூபாய் மதிப்பில் 3ஆயிரம்,இன்சூரன்ஸ் மற்றும் இகாமா எடுப்பதற்கு 30ஆயிரம் என மொத்தம் 33ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டும். இந்த செலவுகள் அனைத்துமே அவரவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். இகாமா கிடைத்ததும் அவர்களே வேலையும் தேடிக்கொள்ள வேண்டும். 1 திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார் சோழ இளவரசி குந்தவை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பட்டதுக்கான ஆய்வுத் தலைப்பாக எடுத்து மிக விசாலமாக ஆய்வுசெய்து அதை அதிகாரப்பூர்வ வரலாறாக பதிவாக்கிட வேண்டும். 2 இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்! உலகப் புகழ் பெற்ற இஸ்லாமியப் பொருளாதார நிபுணர் டாக்டர் நஜாத்துல்லாஹ் சித்தீகீ அவர்கள் இயற்கை எய்தினார் என்பதே அது! 3 உணரப் படாத தீமை சினிமா தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லக் கூடியவர் வீட்டில் என்ன நடக்கிறது? குழந்தைகளை கூட வைத்துக் கொண்டு, பெற்றோரும், உற்றாரும் குடும்ப சகிதமாக, தொழுகை நேரம் என்றில்லாமல், சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கிற காட்சியை பரவலாக காண முடிகிறது (விதிவிலக்காக இருப்பவர்களைத் தவிர்த்து). கடைசியில் தன் குழந்தை, படத்தில் வருவது போல யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடிய பிறகுதான் பெற்றோர்கள் விழித்துக் கொள்வார்கள். 4 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி! நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான் என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற திரித்துவக் கடவுள் கொள்கைக்கு (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது. 5 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்! செய்தி கேள்விப்பட்ட டாக்டர் அப்துல்லாஹ்வுக்கு கடும் வருத்தம் இருந்தாலும், அனைவருக்காகவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார். அவரே அனைவரையும் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்கிறார்.
29.09.2017, நேற்று, CMD., BSNL ., திரு. அனுபம் ஸ்ரீவத்சவா அவர்களை, டில்லியில், கார்ப்பரேட் அலுவலகத்தில், பிரதான சங்கங்களின் தலைவர்கள் சந்தித்தனர். அதாவது, நமது BSNLEU சங்க பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, NFTEBSNL பொது செயலர் தோழர் சந்தேஷ்வர்சிங், SNEA பொது செயலர் தோழர் செபாஸ்டியன், AIBSNLEA பொது செயலர் தோழர் பிரகலாத்ராய் ஆகியோர் கூட்டாக சந்தித்தனர். கூட்டத்தில், CMD தெரிவித்த கருத்துக்கள் மற்றும் நமது தலைவர்கள் வைத்த கோரிக்கைகளை சுருக்கமாக: 01. BSNL நிறுவனத்தின் இன்றைய வளர்ச்சி, வலைதள விரிவாக்கம், போட்டி சூழல், நமது யுத்திகளை முதலில் விளக்கினார். 02. BSNL நிறுவனம் மொபைல் கருவியுடன் இணைப்புகளை ரூ. 2000/- மதிப்பில் வழங்கவுள்ளதாகவும், மாதம் ரூ. 97/- க்கு அளவில்லா அழைப்புகள் மற்றும் டேட்டா வழங்கப்படும் என தெரிவித்தார். (இதே வசதிகளை ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 1500/- க்கு , வழங்கினாலும், மாதம் ரூ. 150/- கட்டணம் செலுத்தவேண்டும்.) 03. 28.09.2017 அன்று புது டில்லியில் நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் மாநாட்டில், BSNL நிறுவனம் தான் எனது போட்டியாளர் என்று முகேஷ் அம்பானி புலம்பியுள்ளார். நமது CMD அவர்களை கூட்டத்தில் பாராட்டியுள்ளார். (CMD அவர்களை பாராட்டினால், ஒட்டுமொத்த ஊழியர்களையும் பாராட்டியதாக அர்த்தம்) 04. ஊதிய மாற்றம் சம்மந்தமாக நமது தலைவர்கள் கோரியபோது, தாம் எடுத்த முயற்சிகளை விவரித்தார். தொலைத்தொடர்பு செயலரும் நமது CMD அவர்களும் கூட்டாக மத்திய அமைச்சர் அவர்களை விரைவில் இந்த கோரிக்கைக்காக சந்திக்கவுள்தாக மேலும் தெரிவித்தார். 05. ஊழியர்களுக்கு போனஸ் வழங்கவேண்டும் என நமது பொது செயலர் தோழர் அபிமன்யூ கோரியபோது, பண மதிப்பிழப்பு மற்றும் GST பிரச்சனைகளால் வருவாய் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், போனஸ் வழங்குவது சிரமம் என CMD தெரிவித்தார். ஆனால், நமது பொது செயலர் குறுக்கிட்டு, ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக நாம் மாறியுள்ளதற்கு, ஊழியர்களின் செயல் திறன் தான் காரணம், அதை மேலும் ஊக்க படுத்தும் விதமாக போனஸ் வழங்கவேண்டும் என கோரினார். 06. GST நெருக்கடியை திறமையாக கையாண்ட கணக்கியல் அதிகாரிகளை தலைவர்கள் பாராட்டினார்கள். 07. BSNL நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வூதியம், பணிக்கொடை TRUSTகளில் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என நாம் கோரியுள்ளோம். 08. கேரளா மற்றும் ஒடிஸா மாநிலங்களில் 4G சேவையை BSNL துவங்கவுள்ளது. அதற்காக 2100MHz ஸ்பெக்ட்ரத்தை BSNL வாங்க உள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் மாவட்டங்களுக்கு இடையில் பயணங்கள் மேற்கொள்வது தொடர்பில் பல்வேறு சட்டத்திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்க்கை முறை வழமைக்கு திருப்பும் நடவடிக்கைக்கு அமைய இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. தற்போது நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மே மாதம் 11ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது. மே மாதம் 11ஆம் திகதியில் இருந்து மக்கள் வாழ்க்கை மற்றும் நிறுவனங்களின் செயற்பாடுகளை வழமைக்கு திருப்பும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்நிலையில் இது தொடர்பில் விசேட சட்ட திட்டங்கள் அரசாங்கத்தினால் அறிவிக்கப்படவுள்ளது. கடமைக்கு செல்லும் மக்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை விரிவுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை ஏற்கனவே தயாராக உள்ளதென இலங்கை போக்குவரத்து சபை தலைவர் தெரிவித்துள்ளார். மே மாதம் 11ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள புதிய வேலைத்திட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், அத்தியாவசிய சேவைக்காக மாவட்ட எல்லையை கடந் து கொழும்பு செல்வது தொடர்பில் விசேட முறை ஒன்று தற்போது வரையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான தகவல்கள் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார். Prevமுந்தய பதிவுஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னரும் வெளியில் வருவதற்கு வரையறை! அடுத்தப் பதிவுஇலங்கையில் முழுமையாக கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது! சுகாதார துறை அறிவிப்புNext
எப்பவோ முடிவு செஞ்சதுதான்னாலும் கூட இன்னக்கி ஏதோ ஒன்னு கைநழுவி போறாப்புல மனசு மருவி நிக்கிது சின்னசாமி குடும்பம். யாரு போறதுன்னு பேசிக்கிட்டு இருந்தப்பவே, பெரியவனே போயிட்டு வரட்டுமேன்னு அப்பா சின்னசாமி சொல்ல, ‘என்னாலல்லாம் மாட்ட வுட்டுட்டு திரும்பிவர முடியாது. அது என்ன பாத்து ‘ம்மா’ன்னு கத்துச்சின்னா சாமிமாடாவுது ஒன்னாவுது திரும்ப புடிச்சிக்கிட்டு வந்துடுவன்’னு ராமசாமி மறுக்கவும், ‘யப்போ நீயும் அம்மாவுமே போயி மாட்ட வுட்டுட்டு அப்படியே தேரு பாத்துட்டு வந்துடுங்க’ இது நல்லுவன் மேகநாதன். போனா ஒத்தப்படையில போவனுமுன்டானு அப்பா சொல்ல... இந்தா சின்னவன் அருளுக்கு பள்ளிக்கூடந்தான் இல்லையே அவனையும் அழச்சிக்கிட்டு போங்கன்னு பெரியவன் சொல்லவும், மூனுபேரும் போவதா முடிவாச்சி. ஆனா இதுக்கும் நமக்கும் சம்மந்தமே இல்லங்கிற மாதிரி மற்ற மாட்டுவளோட மாடா கவனையில கிடக்கிற வைக்கல தின்னுகிட்டு நிக்கிது கெழப்பசு. சின்னசாமி படையாச்சிக்கு ஏழு புள்ளுவோ. நாலு ஆணு மூனு பொண்ணு. மூத்த பொண்ணு லெட்சுமிய தெக்க அரியலூரு பக்கம் மணக்குடியில கட்டிகொடுத்திருக்கு. பெரியவனுக்கும் நல்லுவனுக்கும் கல்லியாணம் முடிஞ்சி புள்ளையும் இருக்கு. எல்லாமே ஒன்னா பெரிய குடும்பமா இருக்குதுவோ. சின்னவன் அருளு மட்டுந்தான் பள்ளிக்கூடம் போறான். மத்த எல்லாமே ஆட்டுமாட்ட பாத்துக்கிட்டு கொல்லக்காட்டு வேலதான். இந்த குடும்பத்தோடவே காலாகலமா இருக்குற ஒரு கெழப் பசுவதான் கலியப்பெருமா கோயில்ல வுடப்போறாங்க. அரியலூர்லேர்ந்து மூனுமைல் தூரத்துல இருக்குது கல்லங்குறிச்சி. அங்க இருக்கிற கலியப்பெருமா கோயிலுலதான் பங்குனித் திருநா பத்துநா நடக்கும். சுத்துப்பட்டு அப்பது அறுவது ஊர்ல நடக்கிற திருநாள்ல இதுதான் ரொம்ப விமரிசையானது. சனங்கல்லாம் வந்து குமியும். வேண்டுதலா ஆடுமாடு,முந்திரி பலான்னும் தாணியமுன்னு கோயிலுக்கு கொடுத்துட்டு, கூத்து ஆட்டம் பாட்டம் பாத்துட்டு வேண்டிகிட்ட சனங்க மொட்ட போட்டுகிட்டு வூட்டுக்கு வேணுங்கிற சாமான்செட்டு வாங்கிக்கிட்டு வண்டியுலையும் நடந்தும் ஊரு திரும்பும். பின்னேர நிலவு பளிச்சின்னு அடிக்கிது, மொதக்கோழி இன்னும் கூவல. கெழப்பசுவ கட்டுதரியிலேர்ந்து அவுத்துகிட்டு வரும்போதே மத்த மாடுவோ சத்தம் போடுது. வாசல்கிட்ட நிறுத்தி சூடத்த ஏத்தி கும்புட்டு கெளம்பியாச்சி. வெரிக்க பாத்துகிட்டு நிக்கிதுவோ குடும்பத்து சனம். மாட்ட பிடிச்சிக்கிட்டு முன்னாடி போறாரு சின்னசாமி படையாச்சி. மாட்டுக்கு பின்னாடி அருளும் அம்மா பார்வதியும். தெக்குத்தெரு தாண்டி ஊரு எல்லைக்க்கிட்ட வரும்போது முனியப்பா கோயிலு. யப்பா முனியப்பாரேன்னு ஏதோ வேண்டிக்கிட்டு போவுது பார்வதியம்மா. இலைக்கடம்பூர தாண்டி கப்பி ரோட்டுல போவுது மாடும் மனுசாலும். செந்துரை மாட்டாஸ்பத்திரிக்குப் நாலஞ்சி தடவ போன நெனப்புல மாடும் தளாராம நடக்குது. செந்துரையையும் தாண்டி தாரோட்டுல போகும் போதுதான் மாட்டு நடையில ஒரு சொணக்கம், இருந்தாலும் சொந்த ஆளுங்கதானெ பிடிச்சிக்கிட்டு போறாங்கனு மாடு நடக்குது. இப்படியே இராயம்புரத்திலிருந்து தெக்குபக்கமா பிரிஞ்சி சென்னிவனம் மேட்டுப்பளையம் காவேரிப்பாளையம் வழியா போனா கடூரு. அங்கேருந்து மேற்கு பக்கமா திரும்புனா நாலு பல்லாங்குல கோயிலு வந்துரும். இராயம்புரத்திலேருந்து தெக்குபக்கமா பாத பிரிஞ்சி வண்டிமாடு போற காட்டுபாதயில போகும் போதே, இன்னும் வேறஊரு சனங்களும் வண்டியிலயும் நடந்தும் திட்டுதிட்டா பேசிகிட்டு போவுதுவோ. எல்லாருமே கலியபெருமா கோயிலுக்குதான் போவுதுன்னு பேச்சியிலேர்ந்து தெரியிது. நெலாவெளிச்சத்துல நிழல்கோலம் போடுது, பாத ஓரமா இருக்குற காட்டாமணக்கு செடிவோ. மாட்டுக்கு முன்னாடி அப்பா பின்னாடி அம்மாவும் அருளும். அருளு மொதுவா... யம்மோ இன்னும் எவ்ளோ தூரம் நடக்னும்?. பாதிதூரம் வந்தாச்சிடா இன்னும் பாதி தூரந்தான். ஏன்ம்மா நம்ம மாட்ட கோயிலுக்கு வுடனும்? . இந்த மாட்ட கோயிலுக்கு வுடுறதா வேண்டுதல் இருக்கு அதான். என்னா வேண்டுதல்? நம்ம மாட்ட எதுக்கும்மா கோயிலுக்கு கொடுக்கணும். ஒருதடவ அடமழக்காலம் ,அதுக்கு ஒடம்பு சரியில்லாம சாகபொழைக்க கெடந்துது, அப்ப மாடு பொழச்சா உனக்கு வுடுறன் கலியபெருமாளேன்னு வேண்டிகிட்டதுக்கு அப்பறந்தான் மாடுபொழச்சுது. அந்த வேண்டுதல நெறவேத்ததான் இப்ப கொண்டிவிடப்போறம். “இந்த, என்னத்த கதபேசிகிட்டு வெரசா நடங்க, அப்பதான் பளபளன்னு விடிய கடூர தாண்ட முடியும் வெயிலுக்கு முன்னாடி கோயிலுக்கு போயிடணும்” ங்கிறார் அப்பா. அத காதுல வாங்குனதா தெரியல, யம்மோ, இந்த மாடு எப்பேர்ருந்து நம்ம வூட்டுல இருக்கு . பார்வதியம்மாளுக்கு நட முன்னோக்கியும் நெனப்பு பின்னோக்கியும் போவுது. அது களவெட்டு சமயம், பெரியவன் பொறந்து மூனு மாசம் ஆவும். கெணத்து கொல்லயில கல்லை*க்கு பத்துசனம் அரிபிரியா களவெட்டிகிட்டு இருக்குதுவோ,வன்னிமரத்துல ஒரு சீலயால யான*கட்டி புள்ளைய போட்டுட்டு, களவெட்டுற சனத்துக்கு மெனக்கோடு* போட்டுகிட்டு இருக்கு பார்வதியம்மா. அந்தசமயம் பாத்து பேரன பாக்க கெழக்குசீமயிலேர்ந்து வந்த பார்வதியோட அம்மா பூங்காவனம். ஊட்டுல ஆள காணம அக்கம் பக்கத்துல விசாரிச்சி நேர கொல்லைக்கு வந்துடுச்சி. யானயில கெடந்த புள்ளய தூக்கி மடியில வச்சிகிட்டு மொவகிட்ட பேசிகிட்டே பக்கத்தில இருக்குற பால்சீசாவ பாத்துட்டு, ஏண்டி புள்ளக்கி தாய் பால் இல்லையான்னு வெசாரிக்கிது. பசும்பால்தான். பசும்பாலுக்கு என்னப்பன்றவ? கெழக்குத் தெருவுல மாயவன் அம்மாதான், புள்ளைக்கு கொடுடின்னு தெனம் அரபடி பால கொண்டாந்து தந்துட்டு போவுது. ஒருநா மொவவூட்டுல தங்கிட்டு மறுநா ஊருக்கு பயணமாயிடுச்சி பூங்காவனம். போன நாலுநாளுலேயே , தம்பிக்காரன் சின்னதொர ஒரு தலைச்சன் கன்னு போட்ட மாட்டை கன்னுகுட்டியோட ஓட்டியாரான். யக்கோ, இந்த மாட்ட அம்மா உனக்கு கொடுத்துட்டு வரசொல்லிச்சி. இன்னும இந்த மாட்டுபால பீசி புள்ளைக்கி கொடுப்பியாம். இந்த பசுமாடு வந்ததிலேர்ந்தே கட்டுதரியில மாடு இல்லாம இருந்தது இல்ல. அதுபோல பால்மோருக்கும் பஞ்சமில்ல. தாயும் கன்னுமா வந்தது, இங்க வந்தே பதினோரு தடவ கன்னு போட்டுடுச்சி. பொறந்த ஏழு புள்ளுவளுக்கும் தாய்பால் கொடுத்த இன்னோரு தாயா இருந்சுச்சி. இந்த மாட்டுக்கு சொந்த மனுசால் யாருங்கிறதும் சொந்த கொல்ல எதுங்கிறதும் நல்லத்தெரியும். முந்தாணியால கண்ண தொடச்சிகிது பார்வதியம்மா, பொழுது பளப்பளன்னு விடியவும் கடூரூ வந்தாச்சி இன்னும் நாலு பல்லாங்குதான். முன்னையவிட இப்ப நெறைய கூட்டம் வரிசகட்டி போவுது ஆடு மாடு புள்ளகுட்டி வண்டின்னு . கோயில நெருங்கறத்து முன்னால இருக்கிற ஓடதண்ணியில மாட்ட குளுப்பாட்டுராரு. எலே அந்த பையில சந்தனம் பொட்டு இருக்கு எடுடா. சந்தனத்த தண்ணியில நெனச்சி நெத்தி,கொம்புன்னு பூசி, பொட்டு வச்சி கோயிலுக்கு முன்பக்கம் இருக்குற தோப்புக்கு ஓட்டிகிட்டு வந்தாச்சி. மாட்டுக்கு என்னாஏதுன்னு புரியல. மாட்ட பார்வதியம்மா கையில கொடுத்துட்டு , இத புடிச்சிகிட்டு இங்கேயே நில்லுங்க, நா போயி மாட்டுக்கு சீட்டு வாங்கிகிட்டு வந்துடுறன். கோயில் நிர்வாகத்துல ரூவா பதினொன்னு கட்டி வ.சின்னசாமி படையாட்சி, உனா நானா குடிக்காடு ந்னு சீட்டு வாங்கிகிட்டாரு. கோயிலு வாசப்படிக்கு நேரா நின்னு சூடம் ஏத்தி கும்புட்டுட்டு, மாட்ட ஒப்படைக்கிற எடத்துல, கவுத்த மாத்தி ஒப்படைச்சிட்டு திரும்புதுங்க மூனுசனமும். அம்மாவுக்கு மனசு அழுத்துறது பேச்சில தெரியுது. இப்பவும் அந்த கெழப்பசு மத்த மாட்டோட சாதாரணமாதான் நிக்கிது. தன் சனங்க மேல அவ்வளவு நம்பிக்கை. கோயில ஒருசுத்து சுத்தி வர்றதுக்குள்ள உச்சி பொழுதாச்சி. நீங்க ரெண்டுபேரும் மணக்குடியில இருக்குற லெட்சுமி ஊட்டுக்கு போயிட்டு மறுநா தேரும் ஏதாந்தமும் பாத்துட்டு சவுகாசமா* வாங்க, நா இப்படியே அரியலூர் போயி செந்துர பஸ்ஸ புடிச்சி பொசாயக்*குள்ள வூட்டுக்கு போயிடுறன். கோயில சுத்தியிருக்குற கட கண்ணிய சுத்திபாத்துட்டு, முடி எடுக்கும் கொட்டாவை கடந்து செட்டேரி ஓடைய பிடிச்சி வயக்காட்டு வழியா கெழக்க பார்த்து மணக்குடிய நோக்கி நடக்க ஆரம்பிச்சுதுக தாயும் புள்ளையும். அன்னக்கி லெட்சுமி வூட்டுல ராத்தங்கல். அங்கேயும் கெழப்பசுவ கோயிலுக்கு வுட்டத பத்தியே பேசிபேசி மாளல. மொத நா தேரு மறுநா ஏகாந்தமும் பாத்துட்டு, கரண்டி அருவாமனை மத்துன்னு வாங்கிகிட்டு கல்லங்குறிச்சியிலேர்ந்து அரியலூர்க்கு போற குதுரவண்டியில கிளம்பிட்டாங்க. அரியலூர் சித்தேரிக்கர ஓரமா இருக்குற புளியாம்மரத்துகிட்டெ எல்லா ஆளுவளையும் எறக்கிவிடுறான் குதுரவண்டிக்காரன். வாடா இந்த புளியமரத்தோரமா நிப்போம்.இங்கதான்டா செந்துர பஸ்சு நிக்கும். வாங்குன சாமான்செட்டோட புளியமரத்தோரமா நெழல்ல ரெண்டு பேரும் நிக்கிறாங்க.அருளு பெராக்கு பாத்துதுகிட்டிருக்கான். அந்த நேரம் பாத்து ரெண்டுமூனு லாரியில, நெறைய மாட்ட ஏத்திகிட்டு வந்து டீக்கடைக்கு எதுத்தாப்புல நிக்கிது. லாரியிலேர்ந்து எறங்கி வந்த நாலஞ்சி ஆளுவோ டீ குடிச்சிக்கிட்டு இருக்குதுவோ, “யம்மோ அங்க பாருமா லாரியில நம்ம சாமிமாடு” டீக்கடையில நிக்கிறவங்க பேசிக்கிறது காதுலவுழுது. இப்பவே கெளம்புனாதான் நாளக்கி காலையில கேரளாவ தொடமுடியும். வண்டியில இருந்த கெழபசு தன்னோட சொந்த மனுசால் வாசத்து உணர்ந்து திரும்பி திரும்பி பாக்குது. அம்மான்னு கத்தகூட தெம்பில்லாம.
''நல்லா இருக்கேன் டேவிட். ஹாய் நெப்போலியன் எப்படி இருக்கே?'' என்றபடி அந்தக் குதிரையின் முகத்தைத் தடவினார் டீச்சர். டேவிட், இரண்டு இரண்டு பேராக குதிரையில் ஏற்றி, ரவுண்டு அடித்துவிட்டு விடைபெற்றார். ''தெரிஞ்சவரா டீச்சர்?'' எனக் கேட்டான் கதிர். ''ஆமாம். 10 குதிரைகளை வெச்சு சினிமா ஷூட்டிங் வாடகைக்கு விடுவார். சினிமாக்களில் விலங்குகளைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் வந்த பிறகு வித்துட்டார். இப்போ, ரெண்டு குதிரைகள்தான் இருக்கு'' என்று சொல்லிக்கொண்டே, மணலில் நடக்க ஆரம்பித்தார் டீச்சர். ''குதிரைகளை வளர்ப்பது கஷ்டமா டீச்சர்?'' என்று கேட்டாள் கயல். ''வளர்ந்த ஒரு குதிரை 450 கிலோ இருக்கும். ஒரு நாளைக்கு 10 கிலோவுக்கும் அதிகமாக புல், தானியங்களைச் சாப்பிடும். 45 லிட்டர் தண்ணீர் குடிக்கும். தூய்மையான தண்ணீரா இருக்கணும். குதிரையின் குளம்புகளுக்கு லாடம் அடிக்கணும். உடம்பில் முடி அதிகம் இருப்பதால், தொற்றுப்பூச்சிகள் இல்லாமல் பார்த்துக்கணும். தடுப்பூசி போடணும். ஒரே இடத்தில் இருந்தால், மனரீதியா பாதிக்கும். வெளியே ரவுண்டு கூட்டிட்டுப் போகணும்'' என்றார் டீச்சர். ''அட, இவ்வளவு விஷயங்கள் இருக்கா? நான் பெரிய குதிரைகளைப் பார்த்திருக்கேன் குட்டியைப் பார்த்ததே இல்லை'' என்றாள் ஷாலினி. '''நான் இருக்கிறப்ப... இல்லை, கிடையாது, முடியாது’ என்ற வார்த்தைகள் வரலாமோ?'' என்று டீச்சரின் கைப்பையில் இருந்து குரல் வந்தது. ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்குச்சென்று கைப்பையைத் திறக்க, பாய்ந்து வெளியே வந்த மந்திரக் கம்பளம், குதிரையைப் போல கனைத்தது. ''எங்கே போறோம்?'' எனக் கேட்டான் அருண். ''பீச்சில், ரேஸில் குதிரையைப் பார்த்திருப்பீங்க. சுதந்திரமாகச் சுற்றித் திரியும் காட்டுக் குதிரைகளைப் பார்த்திருக்க மாட்டீங்க. அங்கே போகலாம்.'' என்றது கம்பளம். அடுத்த நொடி, புற்கள் அடர்ந்த சமவெளிப் பகுதியில் இருந்தார்கள். அவர்களுக்கு சற்றுத் தள்ளி ஒரு தாய்க் குதிரை, குட்டியை ஈன்றுகொண்டிருந்தது. ''நம்ம மேலே அம்மாவுக்கு வருத்தம் ஏற்பட்டால், 'உன்னை 10 மாசம் சுமந்து பெற்றேனே’ எனச் சொல்வாங்க. இதே டயலாக்கை குதிரையின் அம்மா, ஒரு மாசம் சேர்த்துச் சொல்லும். இவற்றின் கர்ப்பகாலம் 340 நாட்கள். சராசரியாக 30 ஆண்டுகள் உயிர் வாழும். மனிதர்களால் நன்கு பராமரிக்கப்படும் குதிரை, அதிக ஆண்டுகள் வாழ்ந்திருக்கு'' என்றார் டீச்சர். ''வாவ்... குட்டி பிறந்துடுச்சு'' என்று துள்ளினான் கதிர். தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்த குட்டி, புல் தரையில் புரண்டது. தாய்க் குதிரை உசுப்பிவிட, மெள்ள எழுந்துகொண்டது. தாயைச் சுற்றிச் சுற்றி வந்தது. பிறகு, துள்ளல் நடைபோட, அந்தக் குட்டியுடன் சேர்ந்து இவர்களும் நடந்தார்கள். ''இப்பதான் வயிற்றில் இருந்து வந்துச்சு. ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்குப் போகிற மாதிரி நடக்க ஆரம்பிச்சுடுச்சே'' என வியந்தாள் கயல். ''மனிதனைத் தவிர, பெரும்பாலான விலங்குகள் அப்படித்தான். பிறந்த சில நாட்களிலேயே தனது தேவைகளை தானே செய்துக்கும்'' என்றது கம்பளம். ''குதிரைகளுக்கு வயது அடிப்படையில் சிறப்புப் பெயர்கள் இருக்கு. ஒரு வயதுக்குள் இருக்கும் குதிரைகளை, ஃபோல் (foal) எனச் சொல்வாங்க. ஒன்று முதல் இரண்டு வயது வரை, இயர்லிங் (yearling). நான்கு வயதுக்குள் இருக்கும் ஆண் குதிரைக்கு, கோல்ட் (coltt) என்று பெயர். பெண் குதிரையாக இருந்தால், ஃபில்லி (filly) என்று பெயர். பொலிக்குதிரை என்பது நன்கு வளர்ந்த குதிரையைக் குறிக்கும். தமிழில் பெயருக்கான காரணம், குதித்து வருவதால் குதிரை. பரிந்து, அதாவது வேகமாக வருவதால், 'பரி’ என்று பெயர்'' என்றார் டீச்சர். 'பரி என்னும் ஃபாஸ்ட் ஸ்டார்' என்றாள் ஷாலினி. குதிரைகள் கூட்டமாக இருந்த இடத்துக்கு வந்ததும், ''குதிரையின் உயரம் எவ்வளவு?'' என்று கேட்டான் அருண். ''சராசரியாக 152 சென்டிமீட்டர் இருக்கும். அதன் வயதை பற்கள் மூலம் கணக்கிடுவாங்க. வாழ்நாள் முழுவதும் பற்கள் வளரும். ஆடு, மாடு மாதிரி குதிரைகள் அசைபோடாது. இரைப்பை சின்னதா இருக்கும். பெருங்குடல் நீண்டு இருக்கும். இதனால், உடனுக்குடன் செரிமானம் நடந்து, சத்துக்கள் கிடைக்கும். குதிரையின் வலிமைக்கு இதுவும் ஒரு காரணம்'' என்றார் டீச்சர். ''இவற்றுக்கு வாந்தி எடுக்கத் தெரியாது. அதனால், புற்களை மேயும்போது கவனிச்சுச் சாப்பிடும். அதையும் மீறி விஷச்செடி எதையாவது சாப்பிட்டுவிட்டால், வாந்தி எடுக்கத் தெரியாமல் இறந்துடும்'' என்றது கம்பளம். ''அச்சச்சோ'' என்ற அருண், ஒரு குதிரையை அன்புடன் தடவியபடி, ''குதிரைகள் நின்றுகொண்டுதான் தூங்குமா?'' என்று கேட்டான்். ''படுத்தும் தூங்கும். அதன் கால் மூட்டு எலும்புகள், நமது மணிக்கட்டு மூட்டு மாதிரி இருக்கும். இதனால், மூட்டுக்குக் கீழ்ப் பகுதியும் மேல் பகுதியான தொடையும் நன்கு பிடிச்சுக்கும். இதனால், 15 மணி நேரம்கூட ஒரே இடத்தில் நின்று ஓய்வெடுக்க முடியும். நின்றுகொண்டே தூங்க முடியும். நம்மைப் போல தொடர்ச்சியாகத் தூங்காமல், விட்டுவிட்டுத் தூங்கும். சிங்கம், புலி போன்ற விலங்குகள் தாக்கி, இரையாகிவிடுவோமோ என்ற அச்சமும்தான் காரணம். தனியா இருக்கும் குதிரை, அடிக்கடி முழிச்சுக்கும். கூட்டத்தோடு இருக்கும்போது, ஒரு குதிரை கண்காணிக்க, மற்ற குதிரைகள் தூங்கும். ஒரு நாளைக்கு குதிரையின் மொத்தத் தூக்கம் மூன்று மணி நேரம்தான்'' என்றது கம்பளம். ''குதிரைக்கு, கண்களைப் பாதி மறைக்கிற மாதிரி கவசம் போடுறது ஏன் டீச்சர்?'' எனக் கேட்டாள் கயல். ''குதிரையின் கண், 350 டிகிரிக்கு காட்சியைப் பார்க்கும் திறன்கொண்டது. நேராகச் செல்லும்போது, பக்கவாட்டில் உள்ள பொருட்களால் கவரப்பட்டு, திசை மாறிடக் கூடாதுனு கவசம் போடுறாங்க. இரவிலும் நன்கு பார்க்கும். ஆனால், எல்லாமே கறுப்பு, வெள்ளை நிறங்களாகத்தான் தெரியும். இதன் காது மடல்கள் 180 டிகிரிக்குத் திரும்பும். எந்தப் பக்கத்தில் இருந்து சத்தம் வந்தாலும் உடனே உணர முடியும். தொடு திறனும் கூர்மையானது. உடம்பில் சிறு பூச்சி உட்கார்ந்தாலும் உடனே உணர்ந்து, விரட்ட முயற்சிக்கும். எல்லாப் புலன்களும் விழிப்போடு இருக்கும் விலங்கு இது'' என்றார் டீச்சர். ''இவ்வளவு உஷாரான குதிரைகள், மனிதனுக்கு எப்படி அடிமையா மாறுச்சு?'' எனக் கேட்டாள் ஷாலினி. ''அதுதான் மனிதனின் அறிவுத்திறமை. கி.மு.4000ம் ஆண்டிலேயே மனிதன், குதிரைகளைப் பழக்கி, அதன் மேல் சவாரிசெய்தான். போர்களில் பயன்படுத்தினான். நவீன சாலைகள், வாகனங்கள் இல்லாத காலத்தில், பல கிலோமீட்டர்கள் பயணிக்க உபயோகித்தான்'' என்றது கம்பளம். ''இதில் கொடுமை என்ன தெரியுமா? அந்தக் காலத்தில் காடு, மலைகளைக் கடந்து கூட்டமாக குதிரைகளில் பயணம் செய்யும் மனிதர்கள், உணவு தீர்ந்ததும், சுமந்த குதிரையையே கொன்று சாப்பிடுவாங்க'' என்றார் டீச்சர். ''ரேஸ், ஊர்வலம் தவிர வேற எதுக்கெல்லாம் குதிரையைப் பயன்படுத்துறாங்க?'' எனக் கேட்டான் அருண். ''நிறைய இருக்கு அருண். இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்படும் மலைப்பாங்கான இடங்களில்... மீட்பு பணி, ரோந்து போன்ற பாதுகாப்பு விஷயங்களில் பயன்படுத்துறாங்க. பாம்பு கடிக்கு மருந்து தயாரிப்பதில் குதிரையின் பங்களிப்பும் இருக்கு. பாம்பிடம் இருந்து எடுத்த விஷத்தை, குதிரையின் உடம்பில் ஊசி மூலம் செலுத்துவாங்க. அந்த விஷம், குதிரையின் ரத்தத்தில் கலக்கும். அப்போ, அந்த ரத்தத்தில் ஒரு வேதி நீர்மம் உண்டாகும். குதிரையைப் பாதிக்காத வகையில் அதை உடனே பிரித்து எடுத்து, விஷக்கடிக்கு மருந்தாக மாற்றுவாங்க. குதிரையின் சிறுநீரகத்தில் இருந்தும் மருந்து தயாரிக்கப்படுது. இதன் தோலில் கையுறை, காலணி செய்றாங்க. குளம்பு மூலம் பசையும் தயாரிக்கிறாங்க. மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு, குதிரையோடு பழகவும், சவாரி செய்யவும் பயிற்சி தருவாங்க. இதனால், அவங்க மனநிலையில் முன்னேற்றம் ஏற்படும். குதிரை சவாரி உடல்ரீதியாகவும் நல்லது'' என்று அடுக்கியது கம்பளம். ''அடேங்கப்பா... குதிரை என்றதும் வேகம் மட்டும்தான் ஞாபகம் வரும். இத்தனை விதங்களாகப் பயன்படுதா?'' என்றாள் கயல். ''நம்மைச் சுற்றி இருக்கும் பல உயிரினங்கள், இப்படித்தான் கண்களுக்குத் தெரியாமல் மறைமுகமாகப் பல பயன்களைக் கொடுத்துட்டு இருக்கு'' என்றார் டீச்சர்.
இந்த மாயவலையில் இருந்து விடுபட பல முயற்சிகளை எடுத்துக் கொண்டாலும் அது பெரும்பாலும் பலன் அளிப்பதில்லை. பழங்கள் பொதுவாக பசி உணர்வை கட்டுப்படுத்துவதோடு ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் தன்மை கொண்டது, பழங்களில் நார்ச் சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள், மற்றும் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. நீர்ச்சத்து உணவுகள் உடலிலிருந்து நிக்கோட்டின் உள்ளிட்ட நச்சுக்களை வெளியேற்றுவதற்கு உதவும் புகைப்பழக்கத்தை கைவிட முயற்சிக்கும்போது உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்க வேண்டியது மிக அவசியம் அது ஒட்டுமொத்த உடல்நலத்திற்கு நன்மையை சேர்க்கும். தினமும் குறைந்தது 7 முதல் 8 டம்ளர் நீர் எடுத்துக்கொள்ளலாம், அதுமட்டுமின்றி சர்க்கரை சேர்க்காமல், பழச்சாறு, காய்கறி, ஜூஸ், இளநீர், போன்றவற்றையும் எடுக்கலாம். கலோரிகள் அதிகம் நிறைந்துள்ள உணவுகள் புகை பிடிப்பதற்கும் உடல் எடை அதிகரிப்பதற்கும் நிச்சயம் தொடர்பு இருக்கிறது, அதனால் கலோரிகள் அதிகம் கொண்ட உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சிற்றுண்டி உணவுகள் புகைப்பிடிப்பதை விட்டு விட முயற்சிக்கும் போது சிற்றுண்டிகள் மீது ஆர்வம் ஏற்படும் குறிப்பாக அதிக கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் மீது நாட்டம் செல்லும். இவை பேக்கரி உணவுகள், அதிக சூட்டில் வறுக்கப்பட்ட இறைச்சிகள், பாக்கெட் செய்யப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகும். அதேசமயம் சர்க்கரை கலந்த சிற்றுண்டிகளை தவிர்க்க வேண்டும் அதற்கு பதிலாக இயற்கையில் கிடைக்கும். நட்ஸ் வகைகள், பீன்ஸ், வேர்க்கடலை, பழங்கள், வேக வைத்த கொண்டைக்கடலை, மக்காச்சோளம், போன்றவற்றை தேர்ந்தெடுக்கலாம். வீடு கட்டுவதற்கு மத்திய அரசு விரைவில் வழங்குகிறது ரூபாய் 4 லட்சம்..! மன அழுத்தத்தைத் தவிர்க்கலாம் Best 5 food tips quit smoking in tamil புகைப்பிடிப்பவர்கள் அதிக அளவில் மன அழுத்தத்தை தவிர்ப்பதற்காகவே புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி இருப்பார்கள். amazing small business juice ideas 2022 இதனை தவிர்க்க நீங்கள் புகைப்பிடிக தோன்றும் போதெல்லாம் இசை கேட்கலாம் அல்லது சாக்லெட் சாப்பிடலாம் அல்லது நடைபயிற்சி மேற்கொள்ளலாம். அல்லது பழச்சாறு எடுத்துக் கொள்ளலாம் அல்லது உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கான ஒரு செயலை செய்யலாம். benefits of quitting smokingbest way to quit smokingeasy ways to quit smokingfacts about smokingfoods to help you quit smokinghow to quit smoking cigarettesquit smoking motivationwhat happens when you quit smokingபுகை பழக்கத்தை நிறுத்த என்ன செய்ய வேண்டும்புகை பழக்கத்தை விட எளிய வழிகள்புகை பிடிக்கும் பழக்கத்தை விட வேண்டும்புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடபுகையிலை பழக்கத்தை விடுவது எப்படி
மேஷ ராசி: மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும் ! ஷண்முகம் பார்வதீ புத்ரம் க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம் தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத் மஜம் ரிஷப ராசி: ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து கீழ்க் கண்ட சுலோகத்தைத் தினசரி 11முறை கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும். ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யை ஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ மிதுன ராசி: மிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 54முறை தினசரி கூறி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம: கடக ராசி: கடக ராசியில் பிறந்தவர்கள் பவுர்ணமி தோறும் அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து விரதம் இருந்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 21முறை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும். ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம: சிம்ம ராசி: சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும். ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம: கன்னி ராசி: கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் ஏற்படும். ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம: துலா ராசி: துலா ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு முறை பவுர்ணமி நாள் அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும் ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நம: விருச்சிக ராசி: விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும். தரணி கர்ப்ப ஸம்பூதம் வித்யுத் காந்தி ஸமப்ரதம் குமாரம் சக்தி ஹஸ்தம்ச மங்களம் ப்ரணமாம்யஹம். தனுசு ராசி: தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும். ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம: மகர ராசி: மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் சித்தி அடையும். ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம: கும்ப ராசி: கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும். ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம: மீன ராசி: மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும். ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம:
திருவனந்தபுரம்: கொச்சி கப்பல் கட்டும் தளத்தில், முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பங்களுடன் கூடிய ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற போர் கப்பல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த கப்பல் முறைப்படி அடுத்த மாதம் நாட்டுக்கு அர்ப் பணிக்கப்படுகிறது. இந்நிலையில், அந்த கப்பலை மோகன்லால் நேரில் சென்று பார்வையிட்டார். இதற்காக கொச்சி கப்பல் கட்டும் தளத்துக்கு வந்த மோகன்லாலை கடற்படை மற்றும் கொச்சி கப்பல் கட்டும் தள அதிகாரிகள் வரவேற்றனர். பிறகு கடற்படை வீரர்களுடன் சேர்ந்து ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலை மோகன்லால் சுற்றிப் பார்த்தார். அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மாலுமிகள் மற்றும் ஊழியர்களுடன் சில நிமிடங்கள் உரையாடினார். பிறகு அவர் தனது டிவிட்டரில், ‘இந்திய கடற்படையை மேலும் பலப்படுத்தும் நோக்கத்தில் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் வெற்றிபெற வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார். இந்திய ராணுவத்தில் கவுரவ மேஜராக மோகன்லால் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. Tags: ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் மோகன்லால் மேலும் செய்திகள் டிச. 1ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு; குஜராத்தில் நாளை பிரசாரம் ஓய்கிறது.! மோடி, அமித் ஷா, கார்கே பேரணியில் பங்கேற்பு நீர் வளத்துறையில் 5 ஆண்டுகளில் ரூ.210 பில்லியன் டாலர்கள் முதலீடு: ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் தகவல் அதானி துறைமுகத்திற்கு எதிரான போராட்டம் கேரளாவில் காவல் நிலையம் சூறை: உதவி கமிஷனர் உள்பட 30 போலீசார் காயம் காங்கிரசில் இணைந்த குஜராத் முன்னாள் அமைச்சர்: சித்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு..! எனது தோற்றத்தினை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக பாஜக 1000 கோடி பணம் செலவழித்து உள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு திருப்பதி மாநகராட்சி பகுதியில் ஜெகன் அண்ணா வீடு கட்டும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்-ஆணையாளர் உத்தரவு தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்த குரங்கு படையல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..! பாரிசில் கண்கவர் ஒளி கண்காட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணப் பூச்சிகள்..!! தொடங்கிய இடத்தில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!: சீனாவில் ஒரே நாளில் 31,000க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு..!!
திருமுனைப்பாடி நாட்டை வளப்படுத்திய இனிய நீர்ப் பெருக்குடைய நதிகளில் கெடிலம் நதியும் ஒன்று. அப்பர் பெருமானை ஆட்கொண்ட இறைவன் எழுந்தருளியிருந்த திருவதிகை வீரட்டானம் இந்த நதிக் கரையில் இருக்கிறது. சுந்தரமூர்த்தியைத் தடுத்தாட்கொண்ட பெருமான் வாழும் திருநாவலூர் இந்நதியின் அருகிலேதான் இருக்கிறது. இந்த இரண்டு க்ஷேத்திரங்களுக்கும் மத்தியில் தொண்டை நாட்டிலிருந்து நடு நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் செல்லும் இராஜபாட்டை அந்த நாளில் அமைந்திருந்தது. இராஜபாட்டை கெடில நதியைக் கடக்கும் துறை எப்போதும் கலகலவென்று இருக்கும். நதிக் கரையில் உள்ள மரங்களில் பறவைகளின் குரல்களும், அவை இறகை அடித்துக்கொள்ளும் சத்தமும் கேட்டுக் கொண்டிருக்கும். பிரயாணிகள் அங்கே வண்டிகளிலிருந்து மாட்டை அவிழ்த்து விட்டுக் கட்டுச் சாதம் உண்பார்கள். உண்ணும்போது அவர்கள் விளையாட்டாக வானில் எறியும் சோற்றைக் காக்கைகள் வந்து அப்படியே கொத்திக் கொண்டு போகும். இவற்றையெல்லாம் பார்க்கும் இளம் சிறார்கள் கை தட்டி ஆரவாரித்தும், ‘ஆஹு’ என்று வியப்பொலிகள் செய்தும், கலகலவென்று சிரித்தும், தங்கள் குதூகலத்தை வெளியிடுவார்கள். ஐப்பசி மாதம் ஆரம்பத்தில் கெடில நதியில் வழக்கத்தை விட அதிகமாகவே வெள்ளம் போய்க்கொண்டிருந்தது. இதனால் உச்சி வேளையில் அங்கே கட்டுச் சாதம் அருந்துவதற்காகத் தங்கிய பிரயாணிகளின் ஆரவார ஒலிகளும் அதிகமாயிருந்தன. அந்த ஒலிகளெல்லாம் அமுங்கிப் போகும்படியான ஒரு பெரும் ஆரவாரம் திடீரென்று சற்றுத் தூரத்தில் சாலையில் எழுந்தது கேட்டுப் பிரயாணிகள் வியப்புற்றார்கள். அவர்களில் சிலர் கரையேறிப் பார்த்தார்கள். முதலில் புழுதிப் படலம் மட்டுமே தெரிந்தது. பிறகு யானை, குதிரை, பல்லக்கு, பரிவட்டம் ஏந்துவோர் முதலிய இராஜ பரிவாரங்கள் வருவது தெரிந்தது. சிறிது அருகில் அப்பரிவாரங்கள் நெருங்கி வந்ததும் கட்டியக்காரர்களின் முழக்கம் தெளிவாகக் கேட்டது. “பன்னிரண்டாம் பிராயத்தில் போர்க்களம் புகுந்த வீராதி வீரர், வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி, இரட்டை மண்டலத்தார் சொப்பனத்தில் கண்டு அஞ்சும் சிங்கம், தொண்டை மண்டலாதிபதி, வடதிசை மாதண்ட நாயகர், மூன்று உலகமுடைய சுந்தரசோழ சக்கரவர்த்தியின் திருமகனார், ஆதித்த கரிகால சோழ மகாராஜா வருகிறார்! பராக்!” இடி முழக்கக் குரலில் எட்டுத் திசையும் எதிரொலி செய்யும்படி எழுந்த இந்தக் கோஷத்தைக் கேட்டதும் கெடில நதித்துறையில் இருந்தவர் அனைவரும் அவசர அவசரமாகக் கரையேறினார்கள். அத்தகைய வீராதி வீரனைக் காண வேண்டுமென்ற ஆவலுடன் நதித்துறையில் நடுவில் வழி விட்டுவிட்டு இருபுறமும் அவர்கள் ஒதுங்கி நின்றார்கள். கட்டியக்காரர்கள், எக்காளம் ஊதுவோர், பரிச்சின்னம் ஏந்துவோர் ஆகியவர்கள் முதலில் வந்து தண்ணீர்த் துறையை அடைந்தார்கள். பரிவாரங்களுக்குப் பின்னால் மூன்று குதிரைகள் ஒன்றின் பக்கம், ஒன்றாக வந்தன, மூன்று குதிரைகள் மீதும் மூன்று இளம் வீரர்கள் வீற்றிருந்தார்கள். அவர்களைத் தூரத்தில் பார்த்த போதே ஜனங்கள் அவர்களைச் சுட்டிக் காட்டி இன்னார் இன்னவர் என்று பேசத் தொடங்கினார்கள். “நடுவில் உள்ள குதிரை மீது வருகிறவர்தான் ஆதித்த கரிகாலர்! பொற் கிரீடத்தைப் பார்த்தவுடனே தெரியவில்லையா? வெய்யில் படும்போது எப்படி கிரீடம் ஜொலிக்கிறது!” என்றான் ஒருவன். “இந்தக் கிரீடத்தைப் போய்ச் சொல்லப் போகிறாயே? கரிகால்வளவன் அணிந்திருந்த மணி மகுடத்தை இவர் சிரசில் தாங்கும் போதல்லவா பார்க்க வேண்டும்? அது கோடி சூரியப் பிரகாசமாகக் கண்கள் கூசும்படி ஜொலிக்குமாம்!” என்றான் இன்னொருவன். “அது கரிகால்வளவன் கிரீடம் அல்ல தம்பி! அப்படிச் சம்பிரதாயமாகச் சொல்வதுதான். பராந்தக சக்கரவர்த்தியின் காலத்தில் செய்த மணிமகுடத்தைத்தான் இப்போது சுந்தர சோழர் அணிந்திருக்கிறார். இன்னும் எத்தனை நாளைக்கோ, தெரியவில்லை!” என்றான் மற்றொருவன். “சுந்தர சோழரின் வாழ்நாளை இப்படித்தான் சில காலமாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவர் சிரஞ்சீவியாயிருப்பார் என்று தோன்றுகிறது!” என்றான் முதலில் பேசியவன். “நன்றாயிருக்கட்டும். அவர் உயிரோடிருக்கும் வரையில் நாடு நகரமெல்லாம் குழப்பமில்லாமலிருக்கும்!” “அப்படியும் சொல்வதற்கில்லை; பொன்னியின் செல்வனைக் கடல் கொண்டு விட்டதாகச் செய்தி வந்ததிலிருந்து, சோழ நாடெங்கும் ஒரே அல்லோல கல்லோலமாயிருக்கிறதாம். எப்போது சண்டை மூளுமோ என்று அங்கிருந்து வந்தவர்கள் எல்லாம் சொல்லி வருகிறார்கள்.” “யாருக்கும் யாருக்கும் சண்டை? எதற்காகச் சண்டை?” “பழுவேட்டரையர்களுக்கும், கொடும்பாளூர் வேளாளருக்கும் சண்டை மூளும் என்று சொல்கிறார்கள். அப்படியொன்றும் ஏற்படாமல் தடுப்பதற்காகத்தான் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் சிற்றரசர்கள் கூடுகிறார்களாம். ஆதித்த கரிகாலரும் அங்கேதான் போகிறாராம்.” “குதிரைகள் நெருங்கி வந்துவிட்டன; இரைந்து பேசாதீர்கள்!” என்று ஒருவன் எச்சரித்துவிட்டு, “இளவரசர் ஆதித்த கரிகாலரின் முகம் எவ்வளவு வாட்டமடைந்திருக்கிறது பார்த்தாயா?” என்று கேட்டான். “அவர் முகம் வாட்டமடைந்தில்லாமல் எப்படியிருக்கும்? ஆதித்த கரிகாலருக்குத் தம்பியின் பேரில் பிராணன். அப்படிப்பட்ட தம்பியைப் பற்றித் தகவல் தெரியவில்லையென்றால் தமையனுக்கு வருத்தமாயிராதா? தந்தையோ நடமாட்டமில்லாமலிருக்கிறார்!” “இதெல்லாம் உலகத்தில் இயற்கை, தம்பி! இளவரசருடைய முகவாட்டத்துக்குக் காரணம் இவையெல்லாம் அல்ல. இரட்டை மண்டலத்தார் மீது படையெடுத்துப் போக வேண்டும் என்று கரிகாலருக்கு ஆசை; அது கைகூடவில்லையே என்றுதான் கவலை!” “அது ஏன் கைகூடவில்லை? யார் இவரைப் படையெடுத்துப் போக வேண்டாம் என்று தடுக்கிறார்கள்?” “வேறு யார்? பழுவேட்டரையர்கள் தான்! படையெடுப்புக்கு வேண்டிய தளவாட சாமக்கிரியைகள் கொடுக்க மறுக்கிறார்களாம்!” “ஏதேதோ இல்லாத காரணங்களையெல்லாம் கற்பித்துச் சொல்லுகிறார்கள். உண்மைக் காரணம் உங்கள் ஒருவருக்கும் தெரியவில்லை” என்றான் ஒருவன். “எல்லாம் தெரிந்தவனே! உண்மைக் காரணத்தை நீதான் சொல்லேன்!” என்று இன்னொருவன் கேட்டான். “ஆதித்த கரிகாலர் யாரோ ஒரு பாண்டிய நாட்டுப் பெண் மீது காதல் கொண்டிருந்தாராம். இளவரசர் வடபெண்ணைப் போருக்குச் சென்றிருந்த போது, பெரிய பழுவேட்டரையர் அப்பெண்ணை மணந்து கொண்டுவிட்டாராம். அவள்தான் இப்போது பழுவூர் இளையராணியாக விளங்கிச் சோழநாட்டில் சர்வாதிகாரம் செலுத்துகிறாள். அதிலிருந்து ஆதித்த கரிகாலரின் மனமே பேதலித்துப் போய்விட்டதாம்!” “இருக்கலாம்; இருக்கலாம்? உலகத்தில் எல்லாச் சண்டைகளுக்கும் யாராவது ஒரு பெண்தான் காரணமாயிருப்பாள் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் அல்லவா?” “எந்தப் பெரியவர்கள், தம்பி, அப்படிச் சொல்லியிருக்கிறார்கள்? சுத்தப் பைத்தியக்காரத்தனம்! இளவரசர் ஒரு பெண்ணை விரும்பினார் என்றால், அவள் போய் ஒரு அறுபது வயதுக் கிழவனை மணந்து கொள்ளுவாளா? சொல்லுகிறவர்கள் சொன்னால் கேட்பவர்களுக்கு மதி இல்லையா?” “அப்படியானால் ஆதித்த கரிகாலருக்கு இன்னும் கலியாணமாகாமலிப்பானேன்? நீர்தான் சொல்லுமே?” “சும்மா இருங்கள்! இதோ நெருங்கி வந்துவிட்டார்கள். இளவரசருக்கு வலது புறத்தில் வருகின்றவன்தான் பார்த்திபேந்திர பல்லவன் போலிருக்கிறது. இடது புறத்தில் வருகின்றவன் யார்? வாணர் குலத்து வந்தியத்தேவனா?” “இல்லை; இல்லை! கடம்பூர் சம்புவரையர் மகன் கந்தமாறன். ஓலை கொடுத்து அனுப்பினால் இளவரசர் ஒருவேளை வரமாட்டார் என்று சம்புவரையர் தம் மகனையே அவரை அழைத்துவர அனுப்பியிருக்கிறார்.” “இதிலிருந்து ஏதோ விஷயம் மிக முக்கியமானது என்று தெரிகிறது.” “அந்த முக்கியமான விஷயம் இராஜரீக சம்பந்தமானதாகவும் இருக்கலாம். ஆதித்த கரிகாலருக்குத் திருமணம் ஆகாதிருக்கும் வரையில் சிற்றரசர்கள் அவரை வலை போட்டுப் பிடிக்க முயன்று கொண்டுதானிருப்பார்கள். முதன் முதலில் அவரை மணந்து கொள்ளும் பெண் சோழ சாம்ராஜ்யத்தின் சிங்காதனத்தில் அமரும் பாக்கியம் பெறுவாள் அல்லவா?” மேற்கண்டவாறெல்லாம் கெடில நதிக்கரையில் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்த ஜனங்கள் பலவிதமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். மூன்று குதிரைகளும் வந்து தண்ணீர்க் கரையோரம் நின்றன. குதிரைகளுக்குப் பின்னால் வந்த ரதம் சற்று அப்பால், அரச மரத்தடியில் நின்றது. அந்த ரதத்தில் எண்பது பிராயமான வீரக் கிழவர் திருக்கோவலூர் மலையமான் இருந்தார். தண்ணீர்க் கரை ஓரத்தில் குதிரை மேலிருந்த வண்ணம் ஆதித்த கரிகாலன் திரும்பி அவரைப் பார்த்தான்.
நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ச்சியாக 2 முறை காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. இதனால் காங்கிரஸ் கட்சியில் வலுவான தலைமை இல்லை என மூத்த தலைவர்களே குற்றம்சாட்டினர். மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததால் காங்கிரஸ் தலைவராக சோனியா காந்திக்குப் பிறகு பதவியேற்ற ராகுல் காந்தி, தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மீண்டும் தலைவராக தற்போது சோனியா காந்தி இருந்து வருகிறார். இருப்பினும் பா.ஜ.க-வை எதிர்கொள்வதற்கும் அடுத்து நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவும் கட்சிக்கு வலுவான தலைமை தேவை என்ற கோரிக்கை தொடர்ச்சியாக எழுந்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக ராகுல் காந்தி வர வேண்டும் என தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, தலைவர் பதவி குறித்துத் தெளிவான முடிவு எடுத்துள்ளதாகத் தெரிவித்திருந்தார். மேலும் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் தலைவர் பதவிக்கு விருப்பம் தெரிவிக்காமல் இருந்தனர். இதையடுத்து மூத்த தலைவர்கள் அசோக் கெலாட், சசி தரூர், திக்விஜய் சிங், கமல்நாத் போன்ற பலரும் விருப்பம் தெரிவித்து வந்தனர். பின்னர் தலைவர் போட்டியிலிருந்து அசோக் கெலாட் விலகினார். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைந்ததை அடுத்து மல்லிகார்ஜுன் கார்கே, சசி தரூர், கே.என்.திரிபாதி ஆகிய மூன்று பேர் மட்டுமே வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதனால் தலைவர் பதவிக்கு மும்முனை போட்டி ஏற்பட்டது. பின்னர் கே.என்.திரிபாதி அவரின் மனு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் 17-ம் தேதி இந்திய முழுவதும் காங்கிரஸ் கட்சி மாநிலத்தலைமை அலுவலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவுகளின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வாக்குமுடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், மல்லிகார்ஜூன கார்கே 7,897 வாக்குகள் பெற்று அபார வெற்றிப் பெற்றுள்ளார். சசிதரூர் சுமார் 1,000 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவிய நிலையில், 416 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். யார் இந்த மல்லிகார்ஜூன கார்கே? கர்நாடக மாநிலம் பீதரில் உள்ள வரவட்டி கிராமத்தில் 1942-ல் பிறந்தவர். இவர் சிறுவனாக இருக்கும் போது பீதரில் நடந்த மதக்கலவத்தால் வீட்டை இவரின் குடும்பம் இழந்தநிலையில், குல்பர்காவுக்கு புலம்பெயர்ந்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அன்றைய தினம் செயல்பட்டுவந்த அம்பேத்கரின் மப்பண்ணா தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பில் இவரது தந்தை உறுப்பினராக இருந்ததால், சிறுவயதிலே அம்பேத்கரின் கொள்கைகளை ஏற்ற கார்கே,1956-ல் அம்பேத்கர் பவுத்தம் தழுவிய போது இவரும் குடும்பத்தினருடன் பவுத்தம் தழுவினார். பள்ளி கல்லூரி படிப்பை முடிந்த மல்லிகார்ஜூன கார்கே உச்சநீதி மன்றத்தில் உதவி வழக்கறிஞராக பணியாற்றினார். பின்னர் தன்னுடைய வாதாடும் திறனால் தொழிலாளர்கள் மத்தியில் செல்வாக்கு ஏற்பட்டது. மேலும் குல்பர்கா மாவட்ட நீதிமன்றத்தில் தொழிலாளர் நலன் சார்ந்த வழக்குகளை திறம்பட கையாண்டார். 1969-ல் காங்கிரஸில் இணைந்த மல்லிகார்ஜூன கார்கே, அதே ஆண்டில் நடந்த குல்பர்கா நகர பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வென்றார். இதைத் தொடர்ந்து 1972-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கார்கேவை தேடி வந்தது. 1972-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டுவரை நடந்த 9 சட்டப்பேரவை தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்றார். இதனால் ‘தோல்வியை தழுவாத சர்தார்’ என கொண்டாடப்பட்டார். கார்கேவுக்கு 1976-ம் ஆண்டு தேவராஜ் அர்ஸ் தலைமையிலான அமைச்சரவையில் இடம் கிடைத்தது. அரசியலில் 60 ஆண்டுகால அனுபவம் வாய்ந்த மல்லிகார்ஜூன கார்கே மீது பெரிதாக ஊழல் புகாரும், குற்றப் பின்னணி வழக்குகளும் இல்லை. Also Read காங்கிரஸ் தலைவர் தேர்தல்.. வேட்புமனு தாக்கல் செய்த மூத்த தலைவர்கள்: யார் அந்த 3 பேர்? Mallikarjun Kharge National Congress Trending ஆளுநருக்கு இத்தனைகோடி செலவா ? வேலையே செய்யாதவர்களுக்கு இத்தனை செலவு ஏன் என இணையவாசிகள் ஆவேசம் ! #FactCheck: 'Kashmir Files' சர்ச்சை.. நடாவ் மன்னிப்பு கேட்டதாக வதந்தி பரப்பி வரும் கும்பல்.. ஆனால் உண்மை? ”கும்பல் வன்முறையில் ஈடுபட்டால் ஆயுள் சிறை” - ஜார்க்கண்ட் அரசு அதிரடி; சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்! மும்பை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பிளேடால் அறுத்து கொன்ற சிறுவன் -காரணத்தை கேட்டு அதிர்ந்த போலிஸ் Latest Stories "இப்படி செய்தால் இந்தியா அல்ல, உலகமே நம்மை கேலிதான் செய்யும்" - பாக். அணியை விமர்சித்த முன்னாள் வீரர் ! வெற்றிமாறனின் 'விடுதலை' படப்பிடிப்பில் ரோப் கயிறு அறுந்து விபத்து.. படுகாயமடைந்த சண்டை பயிற்சியாளர் பலி ! மனித மூளைக்குள் சிப்.. எலான் மஸ்க்-ன் அடுத்த அதிரடி.. விலங்குகளுக்கு பொருத்தி சாதனை படைத்ததாக அறிவிப்பு ! கச்சா எண்ணெய் விலை 25% குறைந்தும் பெட்ரோல் விலை ஏன் குறையவில்லை ? மோடிக்கு ராகுல் காந்தி சரமாரி கேள்வி !
எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பிடிக்கும் தன் வாழ்நாள் ஆசையை பூர்த்தி செய்து கொண்டார். இப்போது 2010 ம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட்டர் விருதை பெற்றிருக்கிறார். விஸ்டன் விருதுகள் : கிரிக்கெட்டின் நோபல் என்று அழைக்கப்படும் இவ்விருதுகள் 142 ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது, ஆனால் இம்முறை பாகிஸ்தான் அணியில் நடந்த மேட்ச் ஃபிக்சிங் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் ஐந்து விருதுகளுக்கு பதிலாக இம்முறை நான்கு தான் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2010 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரராக சச்சின் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் தான் அறிமுகம் ஆன காலத்தில் இருந்து தொடர்ந்து இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அளவிற்கு கிரிக்கெட்டை நேசிக்கும்,நேர்த்தியாக விளையாடும் வீரர் சச்சினை தவிர்த்து வேறு எவரும் இருக்க முடியாது. (நிச்சயமாக மிகைப்படுத்தி எல்லாம் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்). அப்படிப்பட்ட வீரருக்கு இவ்விருது கிடைப்பது இதுவே கொஞ்சம் தாமதம் தான். ஆனாலும் விஸ்டன் 2007 ஆம் ஆண்டின் போது ஒருவேளை விஸ்டனின் இந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட்டர் விருது 2004 ற்கும் முன்பே இருந்திருக்குமேயானால், சச்சின் 1998 ஆம் ஆண்டே இதற்கு பெயரிடப்பட்டிருப்பார் என்று தெரிவித்து இருந்தது. சச்சின் 2010 ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் ஏழு சதங்களுடன் 1500 ரன்களுக்கும் மேல் குவித்துள்ளார். மேலும் 200, 50வது சதம் என எதையும் அவர் சொத்தை அணிகளுடன் அடிக்கவில்லை, இன்றைய நிலைமையில் மிக திறமையான வேகப்பந்து வீச்சு திறன் கொண்ட தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராகவே அடித்துள்ளார். ஆஷஸ் சாதனை : மேலும் இந்த விஸ்டன் இதழில் இங்கிலாந்து அணியின் கடந்த ஆண்டின் சாதனைகள் வெகுவாக பாரட்டப்பட்டிருக்கின்றன. ஆஷஸ் தொடர் மூலம் இங்கிலாந்து அணி இரண்டு மாத காலத்திற்கு ஆஸ்திரேலிய செய்தி தாள்களின் முதல் பக்கத்தை நிரப்பிக் கொண்டிருந்தது என்றும் முதல் முறையாக ICC நடத்திய கோப்பை ஒன்றை T20 உலக கோப்பை பெற்றதும் பாராட்டுக்கு உள்ளாயின. ஆனாலும் அந்த அணியின் வீரர்கள் ஒவ்வொருவராக ஈக்களை போல உலக கோப்பைக்கு முன்னரும் உலக கோப்பையிலும் விழுந்த விட்டதாக அது வருத்தம் தெரிவிக்கிறது.(காயம் காரணமாக) மைகேல் வான் ஆஷஸ் பற்றி கூறுகையில் ” இங்கிலாந்து வீரர்கள் தங்களின் பேட்டிங்கை நாட்களில் எண்ணிக் கொண்டிருக்க, ஆஸ்திரேலிய அணியினர் நிமிடங்களிலேயே முடித்து விட்டனர்” என சாடி உள்ளார். 2009 ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் அணியும் இதில் அறிவிக்கப்பட்டது. அதில் ஐந்து இந்திய வீரர்கள் இடம் பெற்றனர். பங்களாதேஷின் தமிம் இக்பால், அவர் நாட்டில் இருந்து தெரிந்தெடுக்கப்படும் முதல் வீரராகிறார். சச்சின் தனது பிடித்தமான நான்காவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஒருவரும் இடம் பிடிக்கவில்லை.
நாணயம்,நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் தொடர்ந்து இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ரெடியாகும் ஆர்யா படம் டெடி. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா மற்றும் அவர் மகள் ஆதனா தயாரிக்கின்றனர். வழக்கம் போல டி இமான் இசை அமைக்கிறார். இப்படத்தில் சாயீஷா ஹீரோயின். சதிஷ் மற்றும் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் டெடி படத்திலிருந்து வெளியான என் இனிய தனிமையை மற்றும் நம்பியே ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இந்த படம் ஹாலிவுட் படத்தின் தழுவலா என ரசிகர்களிடம் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. டெடி படத்தின் டீசர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மகாமுனி படத்திற்கு பிறகு நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் ஆர்யா. பொறுத்திருந்து பார்ப்போம். தேறுவாரா என்று! டெடி டீஸர் லின்க் Continue Reading Related Topics:ஆர்யா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சாயீஷா, சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், டெடி, தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள்
எக்ஸ்ரே பரிசோதனையின் பின்னர் நோயாளி ஒருவரின் இடது பக்க சிறுநீரகத்தில் உருவாகியிருந்த சுமார் இரண்டு கிலோ கிராம் எடை கொண்ட பெரிய கல்லொன்றை அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மருத்துவர்கள் சத்திர சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். கடந்த 2ம் திகதி இந்த சத்திர சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. பாம்பு தீண்டிய காரணத்தினால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியை எக்ஸ்ரே பரிசோதனை செய்த போது, அவரது சிறுநீரகத்தில் கல் இருப்பது கண்டறியப்பட்டது. நொச்சியாகம, காலதிவுல்வெவ, 8 கிராமத்தை சேர்ந்த 41 வயதான ஜீ.ஜீ. காமினி ராஜபக்ச என்ற நோயாளிக்கு இந்த சத்திர சிகிக்சை நடத்தப்பட்டுள்ளது. இந்த சத்திர சிகிச்சை குறித்து கருத்து வெளியிட்ட அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர் ரி.அரவிந்தன், “ நோயாளியின் சிறுநீரகம் ஒன்றில் இவ்வளவு பெரிய கல் இருந்ததை நான் தற்போதுதான் முதலில் பார்த்துள்ளேன். சிறிய கல் உருவாகி நோயாளிகளை நாங்கள் பார்த்திருக்கின்றோம். நான் உட்பட மருத்துவ குழுவினர் உடனடியாக நோயாளியை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தினோம். சிறுநீரகத்தில் இருந்த இரண்டு கிலோ கிராம் கல்லை அகற்றுவது சுலமான காரியமல்ல. நாங்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் நோயாளியின் சிறுநீரகத்தில் இருந்த கல்லை துண்டு துண்டாக அகற்றினோம். நோயாளி உடல் நலத்துடன் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சத்திர சிகிச்சைக்கு மூன்று நேரம் சென்றது. அனுராதபுரத்தில் உள்ள குடிநீர் காரணமாகவே இப்படியான கற்கள் உருவாகின்றன. அனுராதபுரம் மக்கள் தண்ணீரை அதிகளவில் பருக வேண்டும். இதன் மூலம் சிறு நீர் குழாய், சிறுநீரகங்களில் கல் உருவாவதை தடுக்க முடியும். சிறுநீரகத்தில் சிறிய கல் உருவாகினாலும் நோயாளிக்கு அதிகமான வலி ஏற்படும். எனினும் இந்த நோயாளிக்கு அப்படியான வலி இருக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
மார்க்சின் வாழ்நாள் நண்பரும் சக போராளியுமான பிரெடரிக் எங்கெல்ஸ் மார்க்சின் இறுதிநிகழ்ச்சியில் இரங்கல் உரையாற்றும்போது அறிவியலில் அவருக்கிருந்த பேரார்வத்தினை அடிப்படையாகக் கொண்டே (சமூகப்) புரட்சி குறித்த அவரது பற்றுறுதியினை விளக்க முற்பட்டது குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும். அப்போது எங்கெல்ஸ் குறிப்பிட்டார்: “மார்க்சைப் பொறுத்தவரையில் அறிவியல் என்பது வரலாற்றுரீதியாக உயிரோட்டமுள்ள, ஒரு புரட்சிகர சக்தியாகும். கோட்பாட்டுரீதியான அறிவியலில் வெளிப்பட்ட புதியதொரு கண்டுபிடிப்பை, அதனை எந்த அளவிற்கு நடைமுறையில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை ஊகிக்கவே முடியாத நிலையிலும் கூட மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர் அதை வரவேற்ற அதே நேரத்தில், தொழில்துறையில் பொதுவான வரலாற்றுரீதியான வளர்ச்சியை, உடனடியான புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய கண்டுபிடிப்பைக் காணும்போது அவர் வேறுவிதமாக மகிழ்ந்தார். உதாரணமாக மின்சக்தித் துறையில் உருவான கண்டுபிடிப்புகளை, அதுவும் அப்போதுதான் வெளிவந்திருந்த மார்செல் டெப்ரசின் கண்டுபிடிப்புகளை, அவர் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வந்தார்.” எனினும் எங்கெல்சின் இரங்கல் உரையின் இந்தப் பகுதியை மட்டுமே சுட்டிக் காட்டுவது அறிவியல் குறித்த மார்க்சின் பார்வையை குறுக்குவதாகவே இருக்கும். உண்மையில் எங்கெல்சின் அந்த சுருக்கமான இரங்கல் உரை சமூகம் குறித்த ஆய்வில் மார்க்சின் பங்களிப்போடுதான் துவங்குகிறது. எனினும் சமூக அறிவியலுக்கு ஒரு பங்களிப்பு என்ற வகையில்தான் மிகுந்த தீர்மானத்தோடு அதை அவர் விளக்குகிறார். மார்க்சின் இறுதிக் கணங்களின் பின்னணியை குறிப்பிட்டுவிட்டு எங்கெல்ஸ் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்: “உயிரியல் உலகத்தின் வளர்ச்சி பற்றிய விதியை டார்வின் கண்டுபிடித்தது போலவே அபரிமிதமான தத்துவ வளர்ச்சிக்குள் இதுவரை மறைந்து கிடந்த மானுட சமூக வரலாற்றின் வளர்ச்சி குறித்த விதியை மார்க்ஸ் கண்டறிந்தார். அதாவது அரசியல், அறிவியல், கலை, மதம் போன்ற விசயங்களை அவர்கள் பின்பற்றுவதற்கு முன்பாக மனிதர்கள் உண்ணவும், அருந்தவும், உடுத்தவும், தங்கவும் தேவையானவற்றைப் பெற வேண்டும். எனவே அவர்களின் உடனடியான பொருள்தேவைகளுக்கான உற்பத்தி, அதைத் தொடர்ந்து குறிப்பிட்டதொரு பகுதியைச் சேர்ந்த மக்களிடையே, அல்லது குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் பொருளாதார வளர்ச்சியே ஒரு அடித்தளத்தை உருவாக்குகிறது. இந்த அடித்தளத்தின் மீதுதான் சம்பந்தப்பட்ட அந்த மக்களுக்கான அரசு நிறுவனங்கள், சட்டம் பற்றிய கருத்துக்கள், கலை, ஏன் மதத்தின் மீதான கருத்துக்களும் கூட உருவாகின்றன. எனவே இதுவரை செய்யப்பட்டு வந்ததைப் போலில்லாமல், இவற்றின் அடிப்படையில்தான் மனிதர்களின் வளர்ச்சியை விளக்க வேண்டும்.” இதுமட்டுமல்ல; இன்றைய முதலாளித்துவ உற்பத்தி முறையை நிர்வகிக்கும் செயல்பாடு குறித்த சிறப்பு விதி, இந்த உற்பத்தி முறை உருவாக்கிய முதலாளித்துவ சமூகம் ஆகியவற்றையும் மார்க்ஸ் கண்டுபிடித்தார். இதற்கு முன்னால் முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள், சோசலிச விமர்சகர்கள் ஆகிய இரு பிரிவினருமே மேற்கொண்ட ஆய்வுகளில் இருளில் தடுமாறிக் கொண்டிருந்த பின்னணியில் மார்க்ஸ் உபரி மதிப்பைக் கண்டறிந்ததானது திடீரென இந்தப் பிரச்சனையின் மீது ஒளியைப் பாய்ச்சியது. எனவே மார்க்ஸும் அறிவியலும் என்பதைப் பற்றிப் பேசும்போது, நாம் நான்கு குறிப்பிட்ட வரம்புகளை கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாவது, அறிவியல் என்பது ‘வரலாற்றுரீதியாக உயிரோட்டமுள்ள, புரட்சிகரமான சக்தி’ என்ற மார்க்ஸ் கொண்டிருந்த கருத்தோட்டம். இந்த முதல் கருத்தோடு தொடர்புடைய இரண்டாவது, குறிப்பாக உற்பத்தியுடனான உறவில் அறிவியலின் பங்கு. மூன்றாவது, இயற்கை மற்றும் சமூக உலகங்கள் இரண்டையும் உள்ளடக்கிய யதார்த்தத்தின் நுண்புலமுறையே அறிவியல் என்ற மார்க்ஸ்- எங்கெல்ஸ் ஆகியோரின் கருத்தோட்டம். நான்காவது, அழகியல், நெறிமுறை உள்ளிட்ட இயற்கை மற்றும் சமூகம் பற்றிப் புரிந்துகொள்வதற்கான அனைத்து முறைகளுக்கும் அறிவியல்தான் அடித்தளமாக விளங்குகிறது என்ற ஆழமான பொருள்முதல்வாதக் கருத்தோட்டம். குறிப்பாக அறிவியல் என்ற வார்த்தையை பெரும்பாலும் இயற்கை உலகத்தோடு மட்டுமே தொடர்புபடுத்தியே பொதுவாக பயன்படுத்தி வரும் நிலையில், இந்த மூன்றாவது அம்சத்தின் முக்கியத்துவம் என்ன? இயற்கை உலகத்தோடு தொடர்புடைய அறிவியலின் மீதான மார்க்சின் கருத்துக்களும், சமூக உலகத்தின் அறிவியல் மீதான அவரது கருத்துக்களும் மிக ஆழமான வகையில் ஒன்றுக்கொன்று உறவு கொண்டதாகும். அவரது காலத்தில் நிலவிய கருத்துக்களை ஒப்பிடும்போது அறிவியல் குறித்த மார்க்சின் ஆழமான புரிதல், அறிவியல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்த அவரது தொலைநோக்கு ஆகியவற்றின் ஆழத்தை, அறிவியல்கள் குறித்த அவரது ஒன்றுபட்ட கருத்தை ஒருவரால் புரிந்து கொள்ள முடியவில்லையெனில், அரசியல் பொருளாதாரம் குறித்த அவரது ஆய்வின் மூலம் மேலும் தெளிவாக வெளிப்பட்ட இந்த அறிவியல் குறித்த தொலைநோக்கை அவ்வளவு எளிதாகப் புரிந்து கொண்டுவிட முடியாது. பொருள்முதல்வாத, இயக்கவியல்வாத பாரம்பரியம் இரண்டின்மீதும் தத்துவார்த்த சிந்தனையின் உள்நோக்கங்களை அவர் மிக விநோதமான வகையில் ஒன்றிணைத்துக் கொண்டுவந்த ஒரு தொலைநோக்குதான் மூலதனம் பற்றிய அவரது ஆய்வாகும். முதல் இரண்டு அம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்த்த பிறகு, பொருளாதாரத்தின் இயக்கவியலுக்கும் அறிவியல் குறித்த மார்க்சின் கண்ணோட்டத்திற்கும் இடையேயான உறவு குறித்த சுருக்கமான குறிப்பின் மூலம் இந்தக் கேள்வியை நாம் மீண்டும் பார்க்கலாம். அறிவியல் வரலாற்று ரீதியாக உயிரோட்டமானதொரு சக்தியாக ஏன் விளங்குகிறது? இதற்கான மார்க்சின் பதில் எளிதான ஒன்றல்ல; மாறாக கவனமாகச் செதுக்கப்பட்ட ஒரு விளக்கமாகவே அது அமைகிறது. முதலாவதாக, அதன் அடிப்படையான பொருளில், இயற்கையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற மனித இனத்தின் ஆவலின் உள்ளார்ந்த அம்சமாக அறிவியல் என்பது ஒரு புரட்சிகரமான சக்தியாகத் திகழ்கிறது. இயற்கையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கான மனித இனத்தின் திறனை அது அதிகரிக்கிறது. இரண்டாவதாக, அறிவியல் முன்னேற்றம் என்பது உற்பத்தியோடு இயக்கவியல் ரீதியான உறவைக் கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக முதலாளித்துவ காலப்பகுதியில் இது வியக்கத்தக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது குறித்து மார்க்ஸ் குறிப்பிடுகையில், ஒரு புறத்தில் 17ஆம் நூற்றாண்டில் இயந்திரங்கள் ஆங்காங்கே தலைகாட்டியபோது, தொழிலுற்பத்திக் காலத்தில் அவை அடிப்படையான பங்கினை வகித்தன என்றபோதிலும், மிகுந்த முக்கியத்துவமுள்ளவையாக இருந்தன. ஏனெனில், அந்த நாட்களில் இருந்த கணிதவியல் நிபுணர்களுக்கு செயல்முறைக்கான அடித்தளத்தை அது வழங்கியதோடு, நவீன இயந்திரவியலை உருவாக்குவதற்கான ஊக்கியாகவும் இருந்தது. (வேலைப் பிரிவினையை ஒப்பிடுகையில், இதற்குக் கீழான பங்கினை வழங்கியதன் மூலம் (அன்றைய பிரபல முதலாளித்துவ பொருளாதார நிபுணரான) ஆடம் ஸ்மித் மிகச் சரியாகவே செயல்பட்டிருக்கிறார் என்றும் மார்க்ஸ் மேலும் குறிப்பிட்டார்.) எனினும் அதைத் தொடர்ந்து உருவாகும் சூழ்நிலைகளில், வளர்ச்சியைத் தீர்மானிக்கும் அம்சங்களில் ஒன்றாக, நீடித்த வகையிலான உற்பத்திச் செயல்முறையில் இயந்திரங்களின் நுழைவு, அதைத் தொடர்ந்து தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் என அறிவியலானது தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. அறிவியல், குறிப்பாக இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த அறிவியல், தொழிலாளர்களின் கைகளுக்கு மாற்று வழியைத் தருகிறது; இயந்திரங்களுடனான அவர்களது உறவை எளிதாக்குகிறது. மார்க்சின் வார்த்தைகளில் கூறுவதெனில், “ இயந்திர உற்பத்தியின் குறிக்கோள், உற்பத்திச் செயல்முறையை அதனோடு உள்ளடங்கிய கட்டங்களாகப் பிரிப்பது; இதிலிருந்து உருவாகும் பிரச்சனைகளின் தீர்வாக, இயந்திரவியல், வேதியியல், முழு அளவிலான இயற்கை அறிவியல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் அது இப்போது எங்கணும் தீர்மானகரமான பங்கினை வகிக்கிறது.” இதைத் தொடர்ந்து உற்பத்தியின் தேவைகள் தான் அறிவியலின் வளர்ச்சியைத் தூண்டுகின்றன. அறிவியல் எனது மனதின் ‘விருப்பமல்லாத’ உழைப்பிலிருந்து வருவதல்ல; மாறாக, தொழில்துறை உற்பத்தியின் விரிவாக்கத்திலிருந்தே அது இயங்குவதற்கான சக்தியைப் பெறுகிறது. ஃபாயர்பாகின் கருத்தோட்டத்தை விமர்சிக்கையில் மார்க்ஸ் குறிப்பிட்டார்: “ இயற்கை அறிவியலின் கருத்தோட்டம் குறித்தே தான் குறிப்பாகப் பேசுவதாகக் கூறிய அவர், இயற்பியல், வேதியியல் ஆய்வாளர்களின் கண்களுக்கு மட்டுமே தெரிகின்ற ரகசியங்களைப் பற்றியும் குறிப்பிட்டார். எனினும் தொழில், வணிகம் என்பவை இல்லாமல் இருந்திருந்தால், இயற்கை விஞ்ஞானம் எங்கே இருந்திருக்கும்? ‘தூய்மையான’ இந்த இயற்கை அறிவியலும் கூட ஒரு நோக்கத்தைக் கொண்டதாகவே இருக்கிறது. அது, தன் பொருட்களோடு வர்த்தகம், தொழில் ஆகியவற்றின் மூலமாக மட்டுமே, மனிதர்களின் உணர்வுபூர்வமான செயல்பாடுகளின் மூலமேம் செயல்படுகிறது. மற்றொரு இடத்தில் இதுபற்றி மார்க்ஸ் இன்னும் அழுத்தமாகவே குறிப்பிடுகிறார்: “தன்னால் தீர்க்க முடிந்த பிரச்சனைகளை மட்டுமே மனித இனம் எப்போதும் கையிலெடுக்கிறது. அந்த விசயத்தை மேலும் நெருக்கமாகப் பார்க்கும்போது, அதன் தீர்வுக்குத் தேவையான பொருளாயத நிலைமைகள் இருந்தால் மட்டுமே, அல்லது குறைந்தபட்சம் அதை (தீர்வை) உருவாக்குவதற்கான செயல்பாடுகள் துவங்கியிருக்கும்போதுதான் அந்தப் பிரச்சனை நம் கண்ணில் தென்படத் துவங்குகிறது. நிச்சயமாக தொழில்புரட்சிக்கு முன்பாகவே செயல்படத் துவங்கியிருக்கக் கூடியஅறிவியல் ரீதியான புரட்சி உண்மையில் அந்தப் புரட்சியின் மீது உறுதியான கருத்தாக்கம் மற்றும் கோட்பாட்டுரீதியான தாக்கத்தை ஏற்படுத்தியதா? அல்லது பெருமளவிற்கு மூலச் சிறப்பான நடைமுறைரீதியான கண்டுபிடிப்புகளும் முன்னேற்றங்களும் நிகழ்வதற்கு முன்பாகவே அறிவியலின் கொள்கை ரீதியான அம்சத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு தொழிற்புரட்சி நிகழ்ந்ததா? என்பது அறிவியல் குறித்த வரலாற்றாசிரியர்களுக்கு ஒரு புதிராக இருந்து வந்தது. எனினும் இந்த இரண்டிற்கும் இடையிலான உறவு குறித்த வரலாற்று ரீதியான விளக்கத்தினைக் கொண்டு இந்த விசயம் போதுமான அளவிற்கு நிறுவப்படவில்லை என்று நாம் நியாயமாகவே கருதலாம். தொடர்ந்து அறிவியல் ரீதியான புரட்சியின் சமூக அம்சங்கள் குறித்து அறிவியல் வரலாற்றாய்வாளரான மார்கரெட் ஜேக்கப் மற்றும் இதர ஆய்வாளர்களின் நுட்பமான பணிகளின் மூலம் இந்த இடைவெளி நிரப்பப்பட்டது. குறிப்பாக இயந்திரங்களின் செயல்பாடுகள் என்ற புதிய அறிவியல் துறை எவ்வாறு பரவலான மக்களுக்கு (அதாவது படித்த மக்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை) மட்டுமின்றி, குறிப்பாக தொழிற்புரட்சியை உந்தித் தள்ளிய தொழில் முனைவர்கள், பொறியாளர்கள் ஆகிய புதிய வர்க்கத்தினருக்கும், தனித்திறன் பெற்ற தொழில்வல்லுநர்களுக்கும் இந்தக் கருத்துக்களை எப்படிப் பரப்பியது என்பது பற்றிய விரிவான, வியப்பளிக்கும் விவரங்களை அவர்கள் வழங்கியுள்ளனர். மூன்றாவதாக, இது ஒற்றைப் பக்கத்தின் கதையுமல்ல. இயற்கையின் புறநிலை விதிகள் கண்டறியப்பட்டு, அவை புரிந்துகொள்ளப்பட வேண்டும். இத்தகைய முன்னேற்றம் என்பதில்லாமல் மனித இனத்திற்கு அவசியம் தேவைப்படுகின்ற கண்டுபிடிப்புகளை வெறும் விருப்பத்தைக் கொண்டு மட்டுமே உருவாக்கிவிட முடியாது. இதற்கு விவசாயம் மிகச் சிறந்த உதாரணமாகும். “தொழில்துறையை விட விவசாயத்திற்கே அடிப்படையாக அமைந்த அறிவியல் துறைகளான” நிலவியல், வேதியியல், உடற்கூறியல் போன்றவற்றில், குறிப்பாக 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் ஏற்பட்ட அவசியமான வளர்ச்சிப் போக்குகள் இல்லாமல், தொழில்துறையில் அதற்கு முன்பு ஏற்பட்டதைப் போல விவசாயத் துறையில் உற்பத்தித் திறன் இவ்வளவு துரிதமாக அதிகரித்திருக்காது. உபரி மதிப்பு குறித்த கொள்கைகள் என்ற தொகுப்பாக வெளிவந்துள்ள அவரது மூலதன நூலுக்கான குறிப்புகளில் இந்தக் கருத்தோட்டத்தை நம்மால் காண முடியும் என்றபோதிலும் அறிவியலின் வளர்ச்சி என்ற இயங்கியல் குறுக்கல் வாதமான, குரூரமான பொருளாதாய நோக்கிலான பொருளாதாரத் தேவைகளுக்கான உடனடி பிரதிபலிப்பாக உருவாகவில்லை என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார் என்பது தெளிவு. அவரது சமகாலத்திய மார்க்சிய எழுத்தாளர்கள் ஒரு சிலர் இத்தகைய இயக்கவியல் ரீதியான நுட்பங்களைக் காணத் தவறிவிட்டனர். அதன் விளைவாக அறிவியல் (மற்றும் தொழில்நுட்பம்) என்பது ஏதோவொருவகையில் ஒரு வர்க்கத்தினால் உருவாக்கப்பட்ட ஒன்று எனவும், இயற்கை உலகத்தின் புறநிலையான தடைகள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் முதலாளித்துவம் தனக்குத் தேவைப்படுகின்ற அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றை வெளியே வரவழைக்கிறது என்று வாதிடும் அளவிற்கு இந்தத் தவறான புரிதல் நீண்டிருந்தது. அறிவியலும் தொழில்நுட்பமும் சமூகத் தன்மையினை தீர்மானிப்பவையாக இருக்கின்றன என்போருக்கு தொழில்நுட்பம் குறித்த மார்க்சின் ஆய்வு எந்தவிதமான உதவியையும் செய்வதாக இருக்கவில்லை. தத்துவத்தின் வறுமை என்ற நூலில் “கைகளினால் இயக்கப்படும் இயந்திரம் நிலப்பிரபுவைக் கொண்ட ஒரு சமூகத்தை உங்களுக்குத் தருகிறது என்றால், நீராவியினால் இயக்கப்படும் இயந்திரம் முதலாளியுடன் கூடிய ஒரு சமூகத்தைத் தருகிறது” என்ற இந்தப் பொன்மொழியை வழங்கியபோது, நீராவி ஆலை என்பது முதலாளித்துவ உற்பத்தி உறவுகளுடன் ஒன்றிணைந்தது என்றோ, நீராவி ஆலையின் வளர்ச்சி என்பது முதலாளித்துவ சமூகத்தின் தன்மையை தீர்மானிக்கிறது என்றோ அவர் கூறவில்லை. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் பல்வேறு மட்டங்கள், பல்வேறு உற்பத்தி உறவுகளின் தனித்தன்மையாக, இன்னும் சொல்லவேண்டுமெனில், புதியதொரு யுகத்திற்கான உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை சுட்டிக் காட்டுவதாக அமைகின்றன. தொழில்நுட்பத்தின் தன்மையே சமூகத்தின் தன்மையை தீர்மானிக்கிறது என்று மார்க்ஸ் குறிப்பிடவில்லை என்பதையும் இங்கே சுட்டிக் காட்டவேண்டும். முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்டு தொழில்நுட்பத்தைப் பயிலும் பல தலைமுறை அறிஞர்களுக்கு மார்க்ஸ் நிச்சயமாக ஊக்கமளித்து வந்தார். எனினும் தொழில்நுட்பத்தோடு உறவு கொள்ளும் தொழிலாளி வர்க்கம் குறித்த மார்க்சின் சித்தரிப்பு முதலாளித்துவ அறிஞர்களுக்கும், மார்க்சின் அணுகுமுறைக்கும் இடையே இருந்த வேறுபாட்டை முற்றிலும் தெளிவாக எடுத்துக் காட்டியது. அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பது எவ்வகையிலும் சாதகமானது மட்டுமேயல்ல என்பதிலும் மார்க்ஸ் தெளிவாக இருந்தார். நேரடியாக அறிவியல் இல்லை எனினும் நிச்சயமாக தொழில்நுட்பமானது தொழிலாளி வர்க்கத்தின் மீதான முதலாளித்துவத்தின் சுரண்டும் தன்மையுள்ள பிடிப்பு மேலும் தீவிரமாவதற்கான வழியாக விளங்குகிறது. இயந்திரங்களை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்தே மூலதனத்தின் பிடிப்பு இறுதியாக நிலைநிறுத்தப்படுகிறது என்று மார்க்ஸ் வாதிட்டார். உற்பத்தியின் குறிப்பிட்ட கட்டம் என்பதற்கு மாறாக “மூலதனத்தால் உழைப்பானது உண்மையிலேயே உள்விழுங்கப்படுவது” என்று மார்க்ஸ் குறிப்பிட்ட “மூலதனம் உழைப்பை முறையாக உள்ளிழுத்துக் கொள்கின்ற” காலம் என அவர் குறிப்பிட்டார். இந்தக் கட்டத்தை எட்டியபிறகு மூலதனமானது உழைப்பினை முழுமையாக தன் பிடிக்குள் கொண்டு வருகிறது. உழைப்பின் சொந்த முயற்சியின் பயனானது ஒரு பௌதீக சக்தியாக மாறி தொழிலாளர்களை எதிர்கொள்கிறது. இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் தொழிலாளர்கள் அந்நியமாகும் போக்கு முழுமையடைகிறது. ஒரு புறத்தில் அறிவியல் அதன் முன்னேற்றத்தின்போது மனித இனத்தின் நலனைத் தீர்மானிப்பதில் தனது உண்மையான திறனை வெளிப்படுத்துகிறது. எனினும் முதலாளித்துவ உற்பத்தி முறைக்குள், அதுவும் ஒரு சக்தியாக, தொழில்நுட்பத்தின் மூலம் ‘மண்ணையும் உழைப்பையும்’ இடையறாது சுரண்டுவதற்கு உதவுகிறது. அது தொழிலாக இருந்தாலும் சரி, விவசாயமாக இருந்தாலும் சரி, அல்லது மனித உடலை பேணுவதாக இருந்தாலும் சரி, உற்பத்தி உறவுகளை முழுமையாக மாற்றுவதன் மூலமே அறிவியலின் உண்மையான திறனை முழுமையாகப் பெற முடியும். எனினும் நாம் முன்பு துவக்கத்தில் குறிப்பிட்ட எங்கெல்ஸ் வெளியிட்ட கருத்தை நினைவு கூரும்போது அறிவியல் என்ற வார்த்தையை மார்க்ஸ் பயன்படுத்தியது சமூக, இயற்கை அறிவியல்களின் செயல்களங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றாகும். “அரசியல் பொருளாதாரத்தின் அறிவியல்” என்ற சொற்றொடரைப் போன்ற இடங்களில் இயற்கை அறிவியல்களை குறிப்பிடும்போது பயண்படுத்தும் ‘அறிவியல்’ என்ற வார்த்தையையே மார்க்ஸ் பயன்படுத்துவதை நாம் தெளிவாகவே காண முடிகிறது. இந்த இரண்டுக்கும் இடையிலான வேற்றுமையை மார்க்ஸ் எங்குமே பல வார்த்தைகளின் மூலம் தெளிவாகத் தெரிவிக்கவில்லை என்ற போதிலும், அவரது சம காலத்திலும் அவரது காலத்திற்கு முன்பும் வாழ்ந்த செறிவுமிக்க அரசியல் பொருளாதார நிபுணர்கள் பற்றிய அவரது தொடர்ச்சியான விமர்சனங்கள் இதிலுள்ள வேறுபாடுகளை பலவகையிலும் சுட்டிக் காட்டுவதாக அமைகின்றன. இவை அனைத்திலும் மிக முக்கியமானதாக நிற்பது சமூகத்தை ஆய்வு செய்வதில் செல்வாக்கு செலுத்துகின்ற, அதன் விளைவாக சமூக அறிவியல்களின் உள்ளடக்கத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற வர்க்க அடிப்படையிலான வேற்றுமை உணர்வாகும். இயற்கை அறிவியல்களைப் பொறுத்தவரையில் அதன் வரலாற்று ரீதியான வளர்ச்சியின் துவக்க கட்டங்களில் மாயையிலிருந்து யதார்த்தத்தை வேறுபடுத்திக் காட்டுவதற்கு மிகவும் அதீதமான முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருந்தது. மார்க்ஸ் மிக அழகாக விவரித்ததைப் போல, அறிவியலின் நோக்கம் என்பது ஒரு பொருளின் தோற்றத்திற்குக் கீழே பொதிந்துள்ள சாரத்தைக் கண்டறிவதே ஆகும். அரசியல் பொருளாதாரத் துறையிலும் கூட மூலதனம் நூலில் அவர் மேற்கொண்ட ஆய்வுகளிலும் இதுவே மிகவும் குறிப்பான இலக்காக இருந்தது. எனினும் அதனினும் முக்கியமான வகையில் இயற்கை அறிவியல்களைப் பொறுத்தவரையில் எதெல்லாம் மாயையாக உள்ளனவோ அவை சமூக அறிவியல் என்று வரும்போது மாயையாக மட்டுமில்லாமல், சித்தாந்தமாகவும் அமைகின்றன என்பதையும் மார்க்ஸ் கண்டறிந்திருந்தார். தவறான கருத்தோட்டங்களைக் கொண்ட கட்டமைப்பையே பெரிதும் நம்புவது அல்லது அதன் அடிப்படையில் சமூக உலகத்தை புரிந்து கொள்வதென்பது சித்தாந்தமாகும்; அல்லது போலியான உணர்வுநிலை என்ற அறிவியலுக்கு நேர் எதிரான நிலையாகும். தனிநபர்களாலும், குழுக்களாலும், வர்க்கங்களாலும் சித்தாந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அறிவியல் ஒதுக்கித் தள்ளப்படுவது ஏன் என்பதற்கான ஆணிவேர் வர்க்கரீதியான சார்பில்தான் அடங்கியுள்ளது. எனவே சமூகம் குறித்த அறிவியலும் கூட, ஏனைய அறிவியல்களில் இருந்து அது ஏன், எப்படி வேறுபடுகிறது; சமூகத்தில் உள்ள பல்வேறுபட்ட வர்க்கங்களின் கண்ணோட்டத்திலிருந்து பல்வேறுபட்ட சித்தாந்தங்கள் உருவாவதற்கு எது வழிவகுக்கிறது என்பதற்கான விளக்கங்களை வழங்குவதற்கும் சித்தாந்தம் குறித்த கோட்பாட்டைக் கொண்டதாகவும் அது அமைய நேர்கிறது. இயற்கை அறிவியல்கள் இத்தகைய பிரச்சனைகள் எதனாலும் பாதிக்கப்படவே இல்லை என்று நாம் இங்கே வாதிடவில்லை. அவர்களது காலத்திலேயே, டார்வினின் உயிரின் தோற்றம் குறித்த கொள்கைக்குக் கிடைத்த வரவேற்பில் மார்க்சும் எங்கெல்சும் இதனை குறிப்பாகக் கண்டறிந்திருந்தனர். மார்க்சும் எங்கெல்சும் தங்களது கடிதப் போக்குவரவுகளில் அவர்களுக்கேயுரிய வகையில் மிகுந்த மகிழ்ச்சியோடு இது குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொண்டபோது, விஞ்ஞானிகள் டார்வினின் படைப்பை விளக்கும்போது எவ்வாறு தங்களது சொந்த வர்க்க சார்பு கண்ணோட்டத்துடனேயே அதைப் படித்திருக்கிறார்கள் என்பது குறித்தும், நேற்றுவரையில் இயற்கையில் ஒத்திசைவு நிலவுவது பற்றியே பேசிக் கொண்டிருந்த விஞ்ஞானிகள் திடீரென போட்டியும் போராட்டமுமே இயற்கையின் செயல்பாட்டின் அடிப்படையாக அமைகின்றன என்று பேசத் துவங்கியதைப் பற்றியும் விரிவாகவே குறிப்பிட்டுள்ளனர். இதற்கு சார்புநிலை குழப்பத்திற்குள் ஆழ்ந்து போவதென்றோ, அறிவியல் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று அறிவிக்கவோ, அல்லது முதலாளித்துவ சமூகத்தில் அறிவியல்கள் அனைத்துமே முதலாளித்துவ சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டவைதான் என்றோ பொருளல்ல. டார்வினோ அல்லது அவரது சக விஞ்ஞானிகளோ அதை விளக்குவதைப் பற்றி குழப்பமடைந்தவர்களாகவே இருந்தாலும் கூட, டார்வினின் உயிரினங்களின் தோற்றம் குறித்த கொள்கை என்பது அறிவியலேதான். இந்த அறிவியல் மேலும் வளர்வதன் மூலமே இத்தகைய குழப்பங்களுக்குத் தீர்வு காண முடியும். எனினும் சமூக அறிவியல்களில் இந்தப் பிரச்சனை வேறுவகையில் எழுப்பப்படுகிறது. சமூகத்தில் உள்ள மேலாதிக்க வர்க்கத்தின் கண்ணோட்டம் அல்லது வர்க்க ரீதியான சார்பு ஆகியவற்றில் இருந்தே சித்தாந்தம் என்பது தோன்றுகின்ற அதே நேரத்தில் தற்போதைய உற்பத்தி முறையை தாண்டிச் செல்லும் வகையில், இப்போது நிலவுகின்ற சமூக, பொருளாதார அமைப்பை எவ்வாறு மாற்ற முடியும் என விழைகின்ற வர்க்கத்தைச் சார்ந்ததாகவே அறிவியல் உள்ளது. மார்க்சைப் பொறுத்தவரையில் ஒரு சித்தாந்தம் என்ற வகையில் முதலாளித்துவ பொருளாதாரக் கோட்பாடு தொடர்ந்து ‘கொச்சையானதாக’ மாறும்வகையில் தரமிறங்கிக் கொண்டே இருக்கிறது. அதாவது, வெளிப்புறத் தோற்றத்தையும் தாண்டி அதன் சாரத்தை தேடுவதை அது கைவிட்டு விடுகிறது என்பதே இதன் பொருளாகும். மாறாக, தற்போது நிலவுகின்ற பொருளாதார, சமூக, அரசியல் அமைப்பினை மாற்றுவதிலேயே தனது ஆழ்ந்த சுயநலத்தைக் கொண்டுள்ள சுரண்டப்படும் வர்க்கத்தினால்தான் அத்தகைய மாற்றத்திற்கான அவசியத்தை தன்னுள்ளே கொண்டுள்ள உண்மையான அறிவியல் போக்கினை மேற்கொள்ள முடியும். மார்க்சிய சிந்தனையின் வரலாறு நெடுகிலுமே, குறிப்பாக 20ஆம் நூற்றாண்டில், சமூக சிந்தனையின் வர்க்க அடிப்படைகள் என்ற கேள்வியும், இத்தகைய சிந்தனையில் ஆளும் வர்க்கத்தின் கண்ணோட்டத்தின் மேலாதிக்கம் ஆகிய விமர்சனமற்ற வகையிலும், தவறான வகையிலும், இயற்கை அறிவியல்கள், சமூக அறிவியல்கள் ஆகியவற்றுக்கிடையே நிலவுகின்ற குறிப்பான வேறுபாடுகள், மார்க்ஸ்-எங்கெல்ஸ் ஆகியோர் நன்றாக உணர்ந்திருந்த வேறுபாடுகள் ஆகியவை குறித்துக் கவலைப்படாமல் அவை இயற்கை அறிவியல்களுக்குப் பொருத்திப் பார்க்கப்பட்டன. எனினும் இயற்கை, சமூகம் ஆகிய இரண்டு உலகுகளிலுமே விரவியிருந்த அறிவியல் குறித்த மார்க்சின் கருத்தோட்டத்தின் உண்மையான திறவுகோல், கடந்த பல ஆண்டுகளாகவே அவரது உலகக் கண்ணோட்டம் என அடையாளப்படுத்தப்பட்ட பொருள்முதல்வாத, இயக்கவியல் தத்துவ நிலைபாடே ஆகும். ஹெகலின் தத்துவத்துடனான அவரது தொடக்க கால பரிச்சியத்தில் இருந்து துவங்கி, பின்னர் அதைத் தீவிரமாக விமர்சிப்பவராக மாறிய போதிலும், ஹெகலின் இயக்கவியலில் இருந்து அவர் பெரும் ஊக்கம் பெற்றார். ஃபாயர் பாக்கினால் அவர் பெரிதும் கவரப்பட்ட போதிலும் , குறிப்பாக மூலதனம் நூலை எழுதுவதற்கான தயாரிப்பு வேலைகளின் போதும், அந்த நூலை எழுதும் காலத்திலும் அவர் திரும்பிச் சென்று, அதை பொருள்முதல்வாத அடிப்படையில் திருத்தியமைக்கத் துவங்கினார். ஃபாயர்பாக்கின் இயந்திரத் தனமான கண்ணோட்டம், அதைப் போன்றே ஹெகல் அடிக்கடி கருத்துமுதல் வாதத்தில் சென்று விழுவது (பொருளுலகம் ஒரு குறிப்பிட்ட வகையில் சிந்தனையோடு இணைந்திருப்பது; அதில் சிந்தனைக்கே முக்கியத்துவம் தரப்படுவது ஆகியவை) ஆகிய இரண்டையுமே மார்க்ஸ் மிகுந்த உறுதியோடு தவிர்த்தார். எனினும் அவரது க்ரண்ட்ரைஸ் நூலின் காலத்திலும், மூலதனம் நூலை எழுதிய காலத்திலும் மார்க்சின் பொருள்முதல்வாத இயக்கவியல் என்பது இவை இரண்டையும் ஒன்றுக்கொன்று எதிரெதிராக நிறுத்துவதாகவோ அல்லது இந்த இரண்டின் ஏதாவதொரு அம்சத்தை மற்றொன்றோடு முறைப்படி இணைப்பது என்பதாகவோ இருக்கவில்லை என்பது தெளிவாகும். அது உள்ளீடாக ஒன்றுபட்ட ஓர் உலகக் கண்ணோட்டமே ஆகும். அதில் இயக்கவியல் என்பது பொருள்முதல் வாதத்தின் இன்றியமையாத அம்சமாகவும், பொருள்முதல்வாதம் என்பது இயக்கவியலின் இன்றியமையாத அம்சமாகவும் விளங்குகின்றன. எனினும் ஒன்றுக்கு மேற்பட்ட தருணங்களில் தன் எழுத்துக்களில் இதனை விளக்குவதாக மார்க்ஸ் உறுதியளித்திருந்த போதிலும், வருந்தத்தக்கவகையில் அவர் இந்தக் கருத்தாக்கத்தை எழுத்துபூர்வமாக எடுத்துரைக்கவில்லை. எனினும் இந்தப் பொருள்முதல்வாத இயக்கவியலானது இயற்கை, சமூகம், அதன் தர்க்கநியதி ஆகியவை குறித்த ஆய்வை உள்ளடக்கியது என்ற கருத்து மூலதனம் நூலில் சிறப்பாகச் செயல்படுவதை நாம் தெளிவாகக் காண முடியும். இந்தப் பின்னணியில்தான் இந்தக் குறிப்பின் துவக்கத்தில் நாம் மேற்கோள் காட்டியிருந்த மார்க்சின் சாதனைகள் டார்வினின் சாதனைகளுக்கு இணையானது என்ற எங்கெல்சின் ஒப்பீட்டின் முக்கியத்துவம் மிகத் தெளிவாக வெளிப்படுகிறது. இந்த இரண்டு கோட்பாடுகளிலுமே முக்கியமான இயக்கவியல் சார்ந்த சொற்றொடர் என்பது மேம்பாடு என்பதாகும். அரசியல் பொருளாதாரத்தை மேற்கோளாக எடுத்துக் கொண்டு, அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கான பங்களிப்பு என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் அரசியல் பொருளாதார வகைமுறை என்ற தலைப்பிலான பிரிவில் மார்க்ஸ் இதை மிகத் தெளிவாக விளக்கியிருந்தார். மேம்பாடு என்ற வார்த்தையானது வளர்ச்சி, சேகரிப்பு, அதிகரித்து வரும் பன்முகத் தன்மை ஆகிய புரிதல்களை வெளிப்படுத்துவதாக அமைகிறது. அரசியல் பொருளாதாரம் மற்றும் உயிரியல் ரீதியான பரிணாமம் ஆகிய இரண்டிலுமே இது உண்மையாகும். எனினும் இன்னும் ஆழமாகச் செல்வோமெனில், இந்த இரண்டு விசயங்களிலும் இந்த மேம்பாடு என்பது மறு உற்பத்தி என்ற செயல்முறையிலிருந்தே, ஒன்றில் உற்பத்தி- விநியோகம் என்ற சுழற்சியின் மூலமும், மற்றொன்றில் மிக எளிமையான உயிரியல் மறு உற்பத்தியின் மூலமும், உருவாகிறது. என்றாலும் இந்த மறு உற்பத்தி என்பது இயக்கவியலின் மிக முக்கியமான ஆழமான புரிதலாக, அதன் சாரம், தோற்றம் ஆகியவற்றின் ஒற்றுமையின் வெளிப்பாடாக அல்லது உருவாக்கமாக அமைகிறது. எனவே முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில், உற்பத்தி, விநியோகம் என்ற எளிதான, விரிவடைந்த மறு உற்பத்தியிலிருந்து மூலதன சேகரிப்பு உருவாகிறது. அதைப் போன்றே உயிரியல் உலகத்தின் பன்முகத்தன்மை மற்றும் வேறுபாட்டுத் தன்மை ஆகியவற்றின் உருவாக்கம் என்பது உயிரியல் ரீதியான மறு உற்பத்தி செயல்முறையின் மீது சுற்றுச் சூழலின் ஊடாடலில் இருந்து எழுவதாகும். இந்த இரண்டு விசயங்களிலுமே இன்றியமையாமை மற்றும் வாய்ப்பு ஆகியவற்றின் இயக்கவியல் ரீதியான இணைப்பு இந்த மறு உற்பத்தி சுழற்சியின் மூலமாகவே பெறப்படுகிறது. முதலாளித்துவ வளர்ச்சி மற்றும் மூலதனக் குவிப்பு ஆகியவை குறித்த மார்க்சின் கண்ணோட்டம், உயிரினங்களின் தோற்றம் குறித்த டார்வினின் விளக்கங்கள் ஆகிய இரண்டிற்குமிடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமைகள் குறித்த நெருக்கமான ஆய்வு “உயிரினங்களின் தோற்றம்” என்ற நூலை படித்தபிறகு மார்க்ஸ் “நமது கண்ணோட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு இயற்கை அறிவியல் குறித்து எழுதப்பட்டுள்ள நூல் இது” என்று எங்கெல்சிற்கு ஏன் எழுதினார் என்பது குறித்த நமது புரிதலை மேலும் ஆழப்படுத்த உதவும். “இன்றைய முதலாளித்துவ உற்பத்தி முறையை கொண்டுசெலுத்தும் இயங்கியல் குறித்த சிறப்பு விதியை மார்க்ஸ் கண்டறிந்தார்” என்ற எங்கெல்சின் கருத்தைப் புரிந்து கொள்வதற்கு மார்க்ஸ் -எங்கெல்ஸ் ஆகியோரின் பொருள்முதல்வாத இயக்கவியல் கண்ணோட்டம் மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இங்கே இயங்கியல் விதி என்பதன் சரியான பொருள் என்ன? முதலாளித்துவ உற்பத்தி முறையை வென்றெடுப்பதன் இன்றியமையாமை குறித்த மார்க்சின் கண்ணோட்டத்தில் முற்கணிப்பு அல்லது தவிர்க்கவியலாதன்மை குறித்த சார்பு தென்படுகிறது பலரும் விளக்கம் அளிக்க முனைந்து வந்துள்ளனர். இங்குள்ள எங்கெல்சின் கூற்று கூட இதன் மற்றொரு வெளிப்பாடுதான் என்று கூட எவரொருவரும் சந்தேகப்படலாம். எனினும் இந்தக் கூற்றின் வெளிப்படையான தோற்றத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, இயக்கவியல் குறித்த இந்த இருவரின் உறுதிப்பாட்டை எவரொருவரும் ஏற்றுக் கொள்வார்களேயானால், இந்த இயங்கியல் விதி என்பது மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையேயுள்ள குறிப்பிட்ட முரண்பாட்டைக் குறிக்கிறது என்பதும் முதலாளித்துவ உற்பத்தி முறையில் ஒன்றுக்கொன்று எதிரான இந்த இரண்டின் ஒற்றுமையையுமே குறிக்கிறது என்பதும் தெளிவாகத் தெரிகிறது. மூலதனம் நூலை மிகுந்த கவனத்தோடு படிப்போமானால் இதை மிக எளிதாக உறுதிப்படுத்திக் கொண்டு விடலாம். பொருள்முதல்வாத இயக்கவியலில் இயக்கம் என்பது முரண்பாடாகும். அது இயந்திர ரீதியான இயக்கமாக (அங்கே இருப்பது, அதே நேரத்தில் அங்கே இல்லாமல் இருப்பது) இருந்தாலும் சரி, அல்லது மேலும் பொதுவான அர்த்தத்திலான இயக்கமாக இருந்தாலும் சரி. எனினும் ஒரு முரண்பாட்டில் உள்ள எதிரெதிர் அம்சங்களின் ஒற்றுமை என்ற குறிப்பிட்ட தன்மை மிகத் திட்டவட்டமாக குறிப்பிடப்படவில்லையெனில் முரண்பாடென்பது தொடர்ந்து சாரமான அரூபமான கருத்தாகவே நீடிக்கிறது. மூலதனம், உழைப்பு ஆகியவற்றைப் போன்ற, எதிரெதிரான அம்சங்கள் தாங்களாகவே சுய சிந்தனையில் செயல்படுவதற்கான திறனைக் கொண்டிருக்கும் நிலையில், முற்கணிப்பு அல்லது தவிர்க்க இயலாதன்மை என்ற எதுவும் இருக்க முடியாது. மூலதனம் நூல் வெளியான 150வது ஆண்டு, போல்செவிக் புரட்சியின் 100வது ஆண்டு, மார்க்சின் 200வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் ஆண்டு என்ற முக்கிய நிகழ்வுகளை நினைவுகூரும் சிறப்பான இத்தருணத்தில் அறிவியல் குறித்த மார்க்சின் கண்ணோட்டத்தை, அதன் ஆழமான இயக்கவியல் பொருளில் புரிந்து கொள்வது என்பது சோசலிசத்திற்கான போராட்டத்தின் தவிர்க்கமுடியாத அம்சமாகவே தொடர்ந்து நீடிக்கிறது.
விழுப்புரம் தொடர்வண்டி நிலையத்திற்கு வடமேற்கில் 6 கி.மீ. தூரத்தில் பம்பையாற்றின் வடகரையிலுள்ளது. விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து சூரப்பட்டு நகரப் பேருந்தில் திருவாமாத்தூர் செல்லலாம். இது நடுநாட்டுத் தலங்களுள் ஒன்று. பசுக்களுக்குத் தாயாக இறைவன் இருந்து அருளும் தலம். இங்கே, பசு என்றது உயிர்த்தொகுதியை. இறைவரின் திருப்பெயர் அழகிய நாதர். இத்திருப்பெயரைத் திருக்குறுந்தொகையில் அப்பர்பெருமான் எடுத்து ஆண்டிருப்பது மகிழ்தற்கு உரியதாகும். இறைவியாரின் திருப்பெயர் முத்தாம்பிகை, முத்தைவென்ற முறுவலாள். முத்தார்நகை அழகுடையார் என்பர் அருணகிரிநாதர். பிருங்கி முனிவர் சிவபெருமானையே வழிபடுபவர். அம்மை யாரை வழிபடாதவர். அம்மையார் ஒருபாகத்தைப் பெற்ற போதும் வண்டு உரு எடுத்துத் துளைத்துச் சிவனையே வழிபட்டார். அதனால் அவரை அம்மையார வன்னிமரம் ஆகுமாறு சபித்தார். பின்னர் முனிவர் அம்மையாரை வழிபட்டு அவர் அருளால் சாபநீக்கம் பெற்றனர். மூவராலும் பாடப்பெற்றது. திருக்கோயில் பாதைக்கு இரு புறமாகக் கட்டப்பெற்றுள்ளது. மேல்புறம் சுவாமி, கீழ்புறம் அம்மன் சந்நிதிகள் அமைந்திருக்கின்றன. ஒன்றை ஒன்று எதிர்நோக்கி இருக்கின்றன. சுவாமியின் முன்கோபுரம் பூர்த்தியாகவில்லை. சுவாமி கோயிலுக்கு நேர் வழியில்லை. தெற்குவாயில் வழியே சென்று பிறகு மேற்கே திரும்பவேண்டும். எதிரில் இராமர்கோயில் இருக்கின்றது. இராமன் வழிபட்டதனால் அபிராமேசர் என்று பெயர்வந்தது. அர்த்தமண்டபத்தில் நிலவறை உண்டு. அச்சுதராயர் உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது. அவர் திருப்பணிசெய்தாராம். அம்மன் கோயில் உயர்த்தப்பட்டிருக்கின்றது. அதற்குத்தான் பிராகாரமும் கோபுரமும் உண்டு. இரட்டைப் புலவர்கள் இவ்வூர் இறைவன் மீது கலம்பகம் பாடியுள்ளனர். புலவர் புராணம் பாடிய தண்டபாணி சுவாமிகள் இவ்வூரினர். அவருடைய சமாதி ஊரின்புறத்தே இருக்கின்றது. இவ்வூருக்கு, சம்பந்தர் பதிகங்கள் இரண்டு. அப்பர் பதிகங்கள் இரண்டு. சுந்தரர் பதிகம் ஒன்று ஆக ஐந்து பதிகங்கள் இருக்கின்றன. கல்வெட்டு: இத்திருக்கோயிலில் கோப்பரகேசரிவர்மன் (முதல் பராந்தகன்) முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜேந்திர சோழன் (கங்கைகொண்ட சோழன்). வீர ராஜேந்திரன், முதற் குலோத்துங்கன். ``பூமேவு வளர்திருப் பொன்மார்வு புணர நாமேவு கலைமகள் நலம்பெரிது சிறப்ப`` என்னும் தொடக்கமுள்ள மெய்க்கீர்த்தியை உடைய இராஜகேசரி திருபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழதேவன் முதலானோர் காலங்களின் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக்கல்வெட்டுக்களில் இறைவர், திருவாமாத்தூர் உடைய பெருமானடிகள், திருவாமாத்தூர் ஆள்வார், திருவாமாத்தூர் ஆளுடையார் அழகியதேவர், திருவாமாத்தூர் உடைய பரமசுவாமி என்னும் பெயர்களால் குறிக்கப் படுகின்றார் (See the Annual Reports on South Indian Epigraphy for the year 1903, No. 402-435; year 1922, No. 1-71. See also the South Indian Inscriptions, Volume VIII, No. 718-751. (South Arcot District, Vilupuram Taluk)). இத்திருக்கோயில், கோப்பரகேசரி வர்மனது ஆட்சியாண்டில் கற்றளியாகக் கட்டப்பட்டது. இத்தளியைச் செய்தவன் அருகூர்த் தச்சன் நாராயணன் வேற்கந்தனாகிய திருவாமாத்தூர் ஆசாரியன் ஆவன், திருச்சுற்று மண்டபத்தைக் கட்டியவன் செம்பியன் காத்திமானடிகள் ஆவன். கோப்பரகேசரி வர்மன் கல்வெட்டில் இவ்வூர், அருவாநாட்டு மீய்வழி வாவலூர் நாட்டுத் தேவதானம் திருவாமாத்தூர் எனவும், கோப்பரகேசரி வன்மரான இராஜேந்திர சோழதேவன் அல்லது கங்கைகொண்ட சோழன் கல்வெட்டில், ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் பனையூர்நாட்டு, வாவலூர் நாட்டுத் தேவதானம் திருவாமாத்தூர் எனவும், முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் கங்கைகொண்ட சோழவளநாட்டுப் பனையூர் நாட்டுத் தேவதானம் திருவாமாத்தூர் எனவும், ``பூமேவுவளர் திருப்பொன் மார்வுபுணர`` என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியை யுடைய இராசகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழ தேவர் காலத்தில் இராஜராஜ வளநாட்டுப் பனையூர்நாட்டு வாவலூர் நாட்டுத் தேவதானம் திருவாமாத்தூர் எனவும், வழங்கப்பட்டிருந்தது. இக்கல்வெட்டுக்களினால் திருநுந்தாவிளக்கு எரிப்பதற்குத் துலைநிறை செம்பொன், ஆடுகள் இவைகளையும் திருச்சந்திக்குத் திருச்சந்தனம், சீதாரி இவைகளுக்குப் பொன்னும், திருப்பதிகம் பாடுவதற்கு நிலநிவந்தமும் அளிக்கப்பெற்ற செய்திகள் புலப் படுகின்றன. இத்திருக்கோயிலில், மூன்று சந்திகளிலும், திருப்பதிகம் பாடி வருவதற்குக் குருடர்கள் பதினாறுபேர்களும், அவர்களுக்குக் கண் காட்டுவார் இருவரும் ஆகப் பதினெண்மர்கள் நியமிக்கப் பட்டிருந்தனர். அவர்களுக்குத் தலைக்கு நெல் பதக்காக நாளொன்றுக்கு முக்கலமாக நாள் 360-க்கு நெல் ஆயிரத்து எண்பதின் கலமும், புடைவை முதலுக்குப் பேரால் காசு ஒன்றாக காசு பதி னெட்டுக்கு, காசு ஒன்றுக்கு நெல் இருபதின் கலமாகவும் வந்த நெல் 1440 கலத்துக்கு, வேலி ஒன்றுக்கு நெல் நூற்று இருபது கலமாக ஆமாத்தூர் இறைவர் தேவதானம் கடுவனூரில் பன்னிரண்டுவேலி நிலம் காணியாகக் கொடுக்கப்பட்டு வந்தது, இந்நிலையில், ``பூமேவு வளர் திருப்பொன் மார்வுபுணர`` என்னும் தொடக்கமுள்ள மெய்க் கீர்த்தியை உடைய இராசகேசரி திருபுவனச் சக்கரவர்த்தி, குலோத்துங்க சோழன், தன் ஆட்சியின் இரண்டாம் ஆண்டில், தன் தேவாரத்துத் திருப்பதியம்பாடிய பொய்யாதசேவடி தேவகண நாதனான இராஜராஜப் பிச்சனையும் அவன் வர்க்கத்தாரையும் இத்திருக்கோயிலில் திருப்பதியம் பாடுவித்துக்கொண்டு, முன்பில் ஆண்டுகள் குருடர்களுக்கு விட்டுவரும் நிவந்தப்படி இவர்களுக்கும் கொடுக்குமாறு கட்டளையிட்டுள்ளான். இக்கல்வெட்டு(குறிப்பு: தென் இந்தியக் கல்வெட்டுத் தொகுதி 8, எண் 749, A. R. No. 433 of 1903), குருடர்களைக் கவலையின்றிக் கடவுள் பக்தியில் செலுத்துவதற்கு ஒரு வழிகாட்டியாகும்.
நாடளாவிய ரீதியில் இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா நோயுடன் ஒப்பிடும் போது, ​​இந்த நோயினால் ஏற்படும் சிக்கல்கள் ஒப்பீட்டளவில் குறைவான பாதிப்பே காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் ஒருவருக்கு இந்நோய் பரவும் அபாயம் உள்ளதால் முறையான சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுவது அவசியம் என நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்களில், இன்புளுவன்சா போன்ற அதே அறிகுறிகளுடன் ஒரு நோய் பரவுகிறது. கொரோனா போலவே, இது இருமல் மற்றும் சளி ஆகியவற்றில் தொடங்கி நிமோனியா வரை செல்லும். எனினும் அந்த நிலைமை மிக அரிதாகவே அதிகரிக்கும்.கொரோனாவுடன் ஒப்பிடும்போது சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றினால் இந்த நோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். முகக் கவசம் அணிவது மற்றும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது போன்ற முறைகள் மூலம் இந்த நோயைக் குறைக்கலாம். நிலைமை மோசமடைந்தால் மாத்திரமே வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இது போன்ற விடயங்களில் மிக முக்கியமானது, மற்றவர்களுக்கு பரவாமல் தடுப்பதுதான். ஏனென்றால் பெரும்பாலானவர்களுக்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை, சுடுநீரை குடித்துவிட்டு பாரம்பரிய விடயங்களை எடுத்துக்கொண்டு ஓய்வெடுத்தால், போதும். வேறு மருந்து எதுவும் தேவையில்லை. காய்ச்சல் உள்ளதென்றல் பாராசிட்டமால் பயன்படுத்தலாம். காய்ச்சல் குறையவே இல்லை என்றால், மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்” என அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ் பேசும் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் ஓரணியில் பயணிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ‘தமிழ்பேசும் கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான கொள்கைகள் இருக்கக்கூடும். ஆனால், தமிழ்பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் அனைத்துத் தமிழ்பேசும் கட்சிகளும் ஓரணியில் பயணிக்க வேண்டும். இது எனது நீண்ட நாள் ஆசை. ஆனால், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தில் தமிழ்பேசும் கட்சிகளுக்கிடையில், அதன் தலைவர்களுக்கிடையில் நான் பெரிது, நீ பெரிது என்ற வேறுபாடு இருக்கக்கூடாது. யார் தலைமை என்ற கேள்வியும் இருக்கக்கூடாது. தமிழ்பேசும் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க வேண்டும். தமிழ்பேசும் கட்சிகளின் தலைவர்களின் கையொப்பங்களுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பப்படவுள்ள ஆவணம் மிகவும் காத்திரமானதாக இருக்கும் என நம்புகின்றேன். தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்கள் என ஒட்டுமொத்த தமிழ்பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையில் புதிய ஆவணம் தயார் செய்யப்பட்டுள்ளது. இது இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. அனைத்துத் தமிழ்பேசும் கட்சிகளின் இணக்கத்துடன் அதன் தலைவர்கள், இறுதிப்படுத்தும் ஆவணத்தில் ஒப்பங்களைக் கைச்சாத்திட்ட பின்னர் அதை இந்தியப் பிரதமருக்கு அனுப்பிவைக்க கொழும்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்பேசும் கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
கார் பல நாட்கள் எடுக்காமல் இருப்பதனால் பிரச்சனைகள் வரக்கூடும் அதனால் கார் நான்கு நாட்களுக்கு ஒரு முறை ஸ்டார்ட் பண்ணி விட வேண்டும். அப்படி ஸ்டார்ட் செய்யும் பொழுது ஏதேனும் ரெட்லைட் இருக்கின்றதா என்பதை கவனிக்க வேண்டும். அப்படி லைட் எரிந்தால் காரில் ஏதேனும் பிரச்சனை உள்ளது என்று காட்டுகின்றது. காரை ஐந்து நிமிடங்கள் ஆன் பண்ணி விட வேண்டும் அல்லது டிரைவிங் பண்ண வேண்டும். ஆயில் செக் பண்ண வேண்டும் கார் வச்சிருந்தும் இது தெரியாம போச்சா.... வண்டியை ஆன் பண்ணி ரன்னிங் கண்டிஷன் இருக்கும்போதே ஏசியை ஆன் செய்ய வேண்டும் நான்கு விண்டோ ஓபன் செய்ய வேண்டும் அப்படி செய்வதன் மூலம் ஏசியின் பழைய காற்று வெளியில் சென்றுவிடும் புதியதாக காற்று உருவாகும். கார் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருந்தாள் ஹேண்ட் பிரேக் யூஸ் பண்ண தேவையில்லை. கார் இரக்கத்தில் நின்றுகொண்டிருந்தாள் முதல் கியரில் வைக்க வேண்டும்.
அவற்றால் உடல்நலத்துக்கு ஆபத்து என்றபோதும் அங்கிருக்கும் மக்களில் பலர் அவற்றை நாடுவதாக நம்பப்படுகிறது. அங்கு விற்கப்படும் அழகுப் பொருட்களில் பல, அறிவியல் ரீதியாகச் சோதிக்கப்படவில்லை என்றும் அவற்றில் அபாயகரமான அளவில் இரசாயனங்கள் கலந்திருக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது. அதுபோன்ற அழகுப் பொருட்கள் உடலில் மெலனின் உற்பத்தியைத் தடுக்கின்றன. உடலில் இயற்கையாக உற்பத்தியாகும் மெலனின் என்ற பொருள் சூரிய ஒளியிலிருந்து உடலுக்குப் பாதுகாப்பு வழங்குகிறது. உடலில் போதிய மெலனின் இல்லை என்றால் சூரிய ஒளியால் தோலுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படலாம். கெமரூனில் விற்கப்படும் தோலை வெளுக்கும் அழகுப்பொருட்கள் சிலவற்றில் மற்ற நாடுகளில் ரத்துச் செய்யப்பட்ட இரசாயனங்களும் கலந்திருக்கின்றன. அவற்றில் ஒன்று ஹைட்ரோக்கினோன். அதனை ஐரோப்பிய ஒன்றியம் 2001ஆம் ஆண்டிலிருந்து ரத்து செய்துள்ளது. ஹைட்ரோக்கினோனால் உடலில் புற்றுநோய் உருவாகலாம், மரபணு ரீதியான மாற்றங்கள் ஏற்படலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தகைய ஆபத்து விளைவிக்கக்கூடிய இரசாயனங்கள் உள்ள அழகுப்பொருட்களைக் கெமரூனிலுள்ள சிலர் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.
எதையும் எளிதில் மறக்கும் விசித்திர வியாதி கொண்ட ரஜினிகாந்த் (ஆர்யா), வந்தனாவின் (சாயேஷா) முதல் பார்வையிலேயே காதலில் விழுகிறான். இவர்கள் திருமணம் செய்யும் முயற்சியில் ரஜினிக்கு பல சிக்கல்கள் எழுகின்றன, பின்னர் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களின் கோர்வையே திரைக்கதை. பலம் … + ஒளிப்பதிவு : படம் முழுவதும் வண்ணங்களை திரையில் அள்ளித்தெளித்து படத்தின் பட்ஜெட்டை நம் நினைவில் கோலாதவண்ணம் இருந்தது ஒளிப்பதிவு. பாடல் காட்சிகளில் கூடுதலாக கவனிக்க வைக்கிறார். + இரண்டாம்பாதி : முதல்பாதி காட்சிகள் ஏனோ நம் மனதில் ஒட்டாமல் பயணிக்க, இரண்டாம் பாதி காட்சிகளும், காமெடிகளும் ஓரளவு ஆறுதல் எனலாம். பலவீனம் … – முதல்பாதி : படத்தின் தலைப்பை கதையோடு இணைக்கும் முதன்மை காட்சிகளைத்தவிர, முதல்பாதியின் மற்ற காட்சிகள் அனைத்தும் படு செயற்கை. இரண்டாம் பாதி காட்சிகள் ஓரளவு நம்மை ஆசுவாச படுத்தினாலும், படத்தின் அடிப்படைகளை நமக்கும் புரியவைக்கும் கடமையை முதல்பாதி காட்சிகள் சரிவர செய்யவில்லை. – இசை : பாடல்கள்,பின்னணி இசை என்று எந்தவிதத்திலும் நம்மை கவராமல் கடந்துசெல்கிறது பாலமுரளி பாலு அவரது இசை. நடிகர்களுள், சம்பத்ராஜ் தவிர மற்ற அணைத்து கதாபாத்திரங்களும் ஏதோ கடமைக்கென வந்துபோவது போலவே ஒரு தோற்றம். பல காட்சிகளில் நடிக்க முயற்சித்திருக்கும் ஆர்யாவுக்கு சில இடங்களிலேயே வெற்றி காண்கிறார். தமிழ்சினிமாவின் சாபமான மற்றுமொரு லூசு ஹீரோயின் கதாபாத்திரத்தில் சாயேஷா, பார்க்க அழகாக இருக்கிறார். சதீஷின் காமெடி ஒரு சில இடங்களில் குபீர. ஆடுகளம் நரேன் பரவாயில்லை. கருணாகரன், காளிவெங்கட் ஆகியோரின் கதாபாத்திரங்கள் வீணடிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் ரசிக்கவைத்த அம்சங்கள் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு, பல பழைய இடியாக்களை ஒரு சேர்த்து, அவசர அடியாக ரொம்பவும் சுமாரான படத்தை நமக்கு கோர்த்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர் சந்தோஷ். மொத்தத்தில் : ஒரு இயல்பான கதையில், இயற்கையாக அமையவேண்டிய பல காட்சிகளில் செயற்கை சாயங்கள் பல கலந்த, சராசரியான படைப்பாக வந்துள்ளது இந்த கஜினிகாந்த்.
நமதூர் அரபி ஒலியுல்லா பள்ளிகளின் 125-வது விளையாட்டு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா கடந்த வியாழக்கிழமை (14/15..10.2014) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விளையாட்டு விழா நமது ஜமாஅத் தலைவர் ஜனாப்.லியாகத் அலிகான் அவர்கள் தலைமையிலும், ஆண்டு விழா கல்விக்குழுவின் கௌரவ தலைவரும், தாசின் அறக்கட்டளை நிறுவனருமான ஜனாப். தாசின் அவர்கள் தலைமையிலும் நடைபெற்றது. விளையாட்டு விழா காலை 8 மணியளவில் தொடங்கி தொடர்ந்து பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஆண்டு விழா மாலை சரியாக 5 மணியளவில் தொடங்கியது. விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவியருக்கும் கட்டுரை போட்டி, பேச்சு போட்டி உள்ளிட்ட திறனாய்வு போட்டிகளில் வென்ற மாணவ-மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், இந்த வருட பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி நிரலில் ஆடல்,பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. விழாவிற்கான ஏற்பாடுகளை நமதூர் ஜமாத், முஸ்லிம் முன்னேற்ற சங்கம், தாசின் அறக்கட்டளை,பள்ளிகளின் தாளாளர்,ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ-மாணவியர் உட்பட அனைவரும் சிறப்பான முறையில் செய்திருந்தனர். மேலும் படிக்க » இடுகையிட்டது appakutty pvs நேரம் பிற்பகல் 10:47 கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014 நமதூர் பள்ளி ஆண்டு விழா சிறப்பாக கொண்டாட்டம்..! நமதூர் அரபி ஒலியுல்லா பள்ளிகளின் 124-வது விளையாட்டு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா கடந்த வியாழக்கிழமை (06.02.2014) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பாலிங்கில் உள்ள கம்போங் இபோய் இன்று மாலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இது ஜூலையில் முதன்முதலில் தாக்கப்பட்டதில் இருந்து நான்காவது முறையாகும். கெடா சிவில் பாதுகாப்புப் படையின் கூற்றுப்படி, இரவு 8.00 மணி நிலவரப்படி கிராமத்தில் உள்ள 10 வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு தற்காலிக தங்குமிடம் திறக்கப்பட்டுள்ளது. ஏபிஎம் கெடாவின் செய்தித் தொடர்பாளர் சைபுதீன் அப்துல்லா கூறுகையில், அதிகாரப்பூர்வமற்ற முறையில், 15 குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை இன்னும் அடையாளம் காணவில்லை. முகிம் குபாங்கில் அமைந்துள்ள கிராமம் ஜூலை, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. ஜூலை வெள்ளத்தில் மூன்று உயிர்கள் இழந்தது மற்றும் சொத்து சேதம் RM28 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது கனமழையின் விளைவாக பள்ளத்தாக்கில் உள்ள ஓடைகள் வழியாக ஒரு பெரிய நீர் எழுச்சியை ஏற்படுத்தியது. காடுகளை அழித்தல், கட்டுமானம், விவசாயம் மற்றும் காடுகளை கட்டப்பட்ட பகுதிகளாக மாற்றுவது போன்ற மனித நடவடிக்கைகளில் நீர் எழுச்சிக்கான காரணம் உள்ளது என்று யுனிவர்சிட்டி செயின்ஸ் மலேசியாவின் நீரியல் நிபுணர் சான் ங்கை வெங் ஆகஸ்ட் மாதம் கூறினார். தரிசு நிலம் மழைநீரைத் தடுத்து நிறுத்த முடியாததால், அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சும் கடற்பாசியாகச் செயல்படுவது ஒருபுறம் இருக்க, காடுகளை அழிப்பது விரைவான நீர் எழுச்சிக்குக் காரணமாக இருக்கலாம். காடுகளை அழிப்பதால் ஒரு நதி ஆழமற்றதாக மாறும் என்றார்.
போதைக்கு அடிமை : 'யாவரும் நலம்' பட பாணியில் குடும்பத்தையே கொடூரமாக கொன்ற இளைஞர்.. டெல்லியில் அதிர்ச்சி ! மறுவாழ்வு மையத்தில் இருந்து வந்த இளைஞர், மீண்டும் போதை மருந்தை உட்கொண்டு தனது ஒட்டுமொத்த குடும்பத்தையே கொடூர முறையில் கொலை செய்துள்ளது டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. KL Reshma Updated on : 24 November 2022, 03:42 PM மறுவாழ்வு மையத்தில் இருந்து வந்த இளைஞர், மீண்டும் போதை மருந்தை உட்கொண்டு தனது ஒட்டுமொத்த குடும்பத்தையே கொடூர முறையில் கொலை செய்துள்ளது டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியை சேர்ந்தவர் கேசவ் என்ற 25 வயது இளைஞர் ஒருவர், தனது பெற்றோர், தங்கை, பாட்டி என குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இவர் போதைக்கு அடிமையாகியுள்ளார். இதனால் இவருக்கும், இவரது குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் தங்கள் மகனை முழுவதுமாக போதை பழக்கத்தில் இருந்து முழுமையாக வெளியே கொண்டு வர குடும்பமே சேர்ந்து அவரை அந்த பகுதியில் உள்ள மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பியுள்ளனர். அங்கே இவர் சரியாகி விட்டதாக கூறி அண்மையில் வெளியே வந்து குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். மேலும் ஒரு வேலைக்கும் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த வேலையில் அவரால் நீடிக்க முடியவில்லை என்பதால் கடந்த மாதம் வேலையையும் விட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் மீண்டும் அவர் போதை பழக்கத்தை தொடங்கினார். எனவே மீண்டும் அவரது குடும்பத்தினர் அவரை கண்டித்துள்ளனர். தொடர்ந்து இவர்களுக்குள் இதனால் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடும் கோபம் கொண்ட கேசவ், சம்பவத்தன்று இரவு போதையில் இருந்தபோது, தனது பெற்றோரிடம் சண்டையிட்டுள்ளார். மேலும் அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார். அதோடு அருகில் இருந்த கத்தியை எடுத்து அவர்களை குத்தி, அவர்களது கழுத்தையும் கொடூரமாக அறுத்து கொன்றுள்ளார். பெற்றோரை கொன்றது மட்டுமல்லாமல் தனது பாட்டி மற்றும் சகோதரியையும் அதே முறையில் கொன்றுள்ளார். வீட்டில் அனைவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், போதையில் கோரமாக இருந்த கேசவை கைது செய்தனர். மேலும் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், "கேசவ் தனது குடும்பத்தை போதையில் கொடூரமாக கொன்றுள்ளார். இந்த கோர நிகழ்வில் அவரது தந்தை தினேஷ் (50), தாய் தர்ஷனா, பாட்டி தீவானா தேவி (75), தங்கை ஊர்வசி (18) ஆகியோர் சம்பவம் இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். குறிப்பாக இளைஞரின் பெற்றோர் குளியல் அறையிலும், பாட்டி மற்றும் சகோதரியின் சடலம் படுக்கை அறையிலும் இருந்து மீட்கப்பட்டது. கொலை செய்துவிட்டு தப்பியோட முயன்ற இளைஞரை அண்டை வீட்டார்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். தற்போது அவர் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தையும் பறிமுதல் செய்துள்ளோம். தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. Also Read சென்னை மாநகராட்சி சார்பில் குறும்படம்: குப்பைகளை பிரித்து கொடுக்கும் தூய்மை பணியாளராக நடிக்கும் யோகி பாபு delhi murder drug addict Trending “பொது சிவில் சட்டம் இசுலாமிய - பழங்குடி மக்களுக்கு எதிரானது..” : பா.ஜ.க அரசை கடுமையாக சாடிய ‘முரசொலி’ ! 8,9ம் வகுப்பு மாணவர்களின் பைகளில் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள்.. பாஜக ஆளும் கர்நாடகாவின் அவலம் ! “பாதுகாப்புத் தேடும் ரவுடிகள் - ‘பாரதிய ரவுடிகள் பார்ட்டி’யாக மாற்றம் பா.ஜ.க” : பின்னணித் திட்டம் என்ன? ”எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரி உருவாக காரணமாக இருந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை! Latest Stories "ரிஷப் பண்ட் வேஸ்ட்.. அவர் இடத்தில் இந்த தமிழக வீரரை கொண்டுவாங்க" - BCCI-யிடம் ரசிகர்கள் கோரிக்கை ! 8,9ம் வகுப்பு மாணவர்களின் பைகளில் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள்.. பாஜக ஆளும் கர்நாடகாவின் அவலம் ! "என் மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்தவர்"- MGR குறித்த நினைவலைகளை பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! ”எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரி உருவாக காரணமாக இருந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள். சாலமன் பாப்பையா உரை: நோய்களுக்கு மருந்து பெரும்பாலும், அந்நோய்களுக்கு மாறான இயல்பை உடையவையே. ஆனால் இவள் தந்த நோய்க்கு இவளே மருந்து. கலைஞர் உரை: நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் பல உள்ளன; ஆனால் காதல் நோயைத் தீர்க்கும் மருந்து அந்தக் காதலியே ஆவாள்.
டுவிட்டர் நமது செய்திகளை நண்பர்களுக்கு உடனுக்குடன் தெரிந்து கொள்ள பயன்படுத்தப் படும் ஒரு சமூக வலைத்தள சேவையாக இருக்கிறது. இதன் கட்டுப்பாடான 140 எழுத்துகளுக்குள் செய்தி இருக்க வேண்டும் என்பது ஒரு சுவாரசியமான விசயம். அத்தனை எழுத்துக்குள் நமது செய்தியை புரிகிற மாதிரியும் பொருளுடைய மாதிரியும் அமைப்பது மேலும் சுவாரசியத்தைத் தரும். சொற்களை மட்டுமே பகிர்வது வலைத்தளத்தின் பலவீனம் என உணர்ந்து தற்போது படங்களையும் பகிரும் வசதியைக் கொண்டு வந்துள்ளார்கள். பல இணையதளங்களில் கருத்தோ அல்லது செய்திகளைச் சேர்க்கும் போது Smileys அல்லது Symbols என்று சொல்லப்படும் குறியீடுகள் மேலும் அழகூட்டும். சில நேரத்தில் நமது உணர்ச்சிகளை பிரதிபலிக்கக் கூடிய வண்ணம் இருக்கும். உதாரணமாக கோபம், சிரிப்பு, அழுகை போன்ற செய்தியின் தன்மைக்கு ஏற்பப் பயன்படுத்தும் போது பொருத்தமாக இருக்கும். ஆனால் இவைகளைச் சேர்க்க டுவிட்டர் அனுமதிப்பதில்லை. இதற்கு Twitter Symbols என்ற இணையதளம் உதவுகிறது. இதில் பல்வேறான தலைப்புகளில் பல குறியீடுகள் கொடுக்கப் பட்டுள்ளன. இதன் மூலம் டுவிட்டரில் பிடித்த குறியீடுகளுடன் சேர்த்து செய்திகளைப் பகிர முடியும். இந்த இணையதளத்திற்கு சென்று Connect with Twitter என்ற பட்டனைக் கிளிக் செய்து உங்கள் டுவிட்டர் பெயர், கடவுச்சொல் கொடுத்து இணைந்து கொள்ளவும். இப்போது செய்தியை அடித்துக் கொண்டே உங்களுக்குப் பிடித்த குறியீடுகளைக் கிளிக் செய்து சேர்த்துக் கொள்ளலாம். எத்தனை குறியீடுகள் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். இறுதியில் Send பட்டனைக் கிளிக் செய்தால் உங்கள் டுவிட்டர் பக்கத்தில் செய்தியானது குறியீடுகளுடன் பகிரப்படும். இணையதளம் : http://www.simbolostwitter.com/p/english.html மற்றொரு முறை : Twitterkeys என்கிற புக்மார்க் சேவையின் மூலமும் டுவிட்டரில் குறியீடுகளைச் சேர்க்கலாம். ஆனால் மேற்குறிப்பிட்ட சேவையை விட இதில் குறியீடுகள் குறைவு தான். சிலருக்கு இந்த முறை கூட எளிதாக இருக்கலாம். கீழே இருக்கும் சுட்டியைக் கிளிக் செய்து உங்கள் வலை உலவியின் புக்மார்க் பாரில் (Bookmark bar) சேர்த்துக் கொள்ளவும். இதனைக் கிளிக் செய்து அப்படியே மவுசால் இழுத்துக் கொண்டு போய் புக்மார்க் பாரில் கொண்டு போய் விட்டால் போதும் இணைந்து விடும். (Drag and drop method) Twitterkeys பின்னர் டுவிட்டரில் இருக்கும் போது இந்த புக்மார்க்கை கிளிக் செய்தால் ஒரு Popup Menu ஆகத் தோன்றும். அதில் தேவைப்பட்ட குறியீடை டபுள் கிளிக் செய்து காப்பி செய்து டுவிட்டர் செய்திப் பெட்டியில் பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பால் விலை , மின்சார கட்டணம் மற்றும் சொத்து வரி ஆகியவற்றை உயர்த்திய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி. கே. வாசன் தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. , இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஜி கே வாசன் மக்களுக்கு கொடுத்த வாக்குறிதிகளை நிறைவேற்றாமல் திமுக அரசு கடந்த 18 மாதங்களாக மக்கள் விரோத அரசாக செயல்பட்டு வருவதாகவும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய ஜிகே வாசன் தமிழகத்தில் ஊயர்த்தயுள்ள பால் விலை . மின் கட்டண உயர்வு மற்றும் சொத்துவரிஉயர்வு ஆகிய வற்றை தமிழக அரசு திரும்ப பெற வேண்டுமென வலியூறுத்தினார். மயிலாடுதுறையில் மாவட்டம் சீர்காழியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகையை ஐந்து ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும் இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் தேர்தலில் பாஜக தலைமையிலான அரசு மீண்டும் அமையும் என்றும் அதேபோல் தமிழகத்தில் திமுகவுக்கு எதிரான அலை அதிகரித்து வருவதால் தமிழகத்திலும் அதிமுக தலைமையிலான அணி மாபெரும் வெற்றி பெறும் என்றும் ஜி கே வாசன் தெரிவித்தார் இந்த ஆர்ப்பாட்டத்தில் பால் விலை மின் கட்டணம் சொத்து வரி கட்டணம் ஆகியவற்றை கண்டித்து திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்
You are printing this article from South Indian Social History Research Institute's web site: www.sishri.org To avoid copyright violations, please get permission from the author(s) before reproducing this article in any form புதிய கண்டுபிடிப்பு: சோழர் காலக் காளாபிடாரி (பத்ரகாளி) சிற்பம் கோ. தில்லை கோவிந்தராஜன் (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்) தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டையை அடுத்துள்ள பசுபதிகோயில் அருகில் கி.பி. 850- 900ஆம் ஆண்டைச் சேர்ந்த சோழர் காலக் காளாபிடாரி (பத்ரகாளி) சிற்பம் ஒன்றைக் கண்டறிந்துள்ளோம். ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் கலாநிதி, வடக்குமாங்குடி தலைமை ஆசிரியர் அ. சுப்பையா, வெண்ணுகுடி ஆசிரியர் பழனிச்சாமி மற்றும் பாலசுப்பிரமணியன், க. பத்மநாபன், ஓவிய ஆசிரியர் சங்கர் ஆகியோரைக் கொண்ட ஆய்வுக் குழுவினர் என் தலைமையில் பசுபதிகோயில் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு எதிரே உள்ள தோப்பில் ஆய்வு செய்து காளாபிடாரி சிற்பத்தைக் கண்டுபிடித்தோம். தஞ்சையை ஒட்டிய பகுதியில் காளாபிடாரி வழிபாடு சிறப்பாக இருந்தது என்பதை நிருபதொங்க பல்லவர் காலத்தைச் சேர்ந்த கண்டியூர் காளாபிடாரி, முத்தரையர் சுவரன் மாறனால் உருவாக்கப்பட்ட நியமத்துக் காளாபிடாரி கோயில்கள் பற்றிக் குறிப்பிடும் கண்டியூர் மற்றும் செந்தலைக் கல்வெட்டுகளால் அறியமுடிகின்றது. இப்பசுபதிகோயில் காளாபிடாரியைப் பற்றிப் புள்ளமங்கை கோயிலில் உள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. உத்தம சோழனின் 2ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டிலும், சுந்தர சோழனின் மூத்த மகனும், முதலாம் இராஜராஜனின் சகோதரனுமாகிய ஆதித்த கரிகாலனின் 5ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டிலும் நடுவிற்சேரி திருமணிமண்டகமுடைய காளாபிடாரி எனக் குறிப்பிடப்படுகின்றது. நடுவிற்சேரி என்ற ஊர் தற்போது நல்லிச்சேரி என வழங்கப்படுகிறது. தற்போது இச்சிற்பம் நல்லிச்சேரிக்கும் புள்ளமங்கைக்கும் இடையில் காணப்படுகிறது. இந்த இடத்தில் கோயில் ஒன்று இருந்து அழிந்திருக்கவேண்டும். இக்கோயிலே மேற்குறித்த கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் ‘நடுவிற்சேரி திருமணிமண்டகமாக’ இருக்க வேண்டும். குடிப்பெயர்வு காரணமாகவோ, ஆட்சி மாற்றங்கள் காரணமாகவோ இக்கோயிலில் வழிபாடு முற்றிலும் நின்றுபோய் இக்கோயிலுக்குரிய நிலங்களின் மேலாண்மையும் கைமாறிப்போய் இக்கோயில் முற்றிலும் கைவிடப்பட்டு அழிந்திருக்கவேண்டும். எப்படியோ இந்த அழகிய சிற்பம் அழிவின் விளிம்புவரை சென்று அதிசயமாகத் தப்பிப் பிழைத்துள்ளது. இச்சிற்பம் நான்கரை அடி உயரத்தில் பத்மபீடத்தில் சுகாசனத்தில் அமர்ந்த நிலையில் உள்ளது. வலது முன்கை உடைந்துள்ளது. இடது முன்கை தொடைமீது வரதஹஸ்தத்தில் உள்ளது. வலது பின்கையில் சூலமும், இடது பின்கையில் கபாலமும் உள்ளன. மார்பினில் குறுக்கே கபாலயக்ஞோபவீதம் (மண்டையோடுகளால் ஆன பூணூல்), ஜடாபாரம், அதில் சர்ப்பமெளலி, காதுகளில் பைதற் பிணக்குழை காட்டப்பட்டுள்ளன. “துளைஎயிற்று உரகக் கச்சுடை முலைச்சி” எனச் சிலப்பதிகாரம் கூறுவதுபோல மார்பினில் பாம்பினைக் கச்சையாக அணிந்துள்ள நிலையில் காளாபிடாரி உள்ளார். சோழர் காலத்தில் காளாபிடாரி வழிபாடு சிறப்பான நிலையில் இருந்தது என்பது இச்சிற்பத்தின் மூலம் தெரியவருகிறது. சோழர்களின் குல தெய்வம் காளியே என்பதும், காளியை ஊர்த்துவ தாண்டவம் ஆடி வென்றதன் மூலம் நடராஜர் (ஆடவல்லான்) என்ற பட்டத்தைச் சிவபெருமான் பெற்றுவிட்டதாலேயே தில்லை சபாபதி (நடராஜர்) சோழர்களின் குல தெய்வமாக ஆகிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கவை ஆகும். thillai@sishri.org (c) Author. To avoid copyright violations, please get permission from the author(s) before reproducing this article in any form.
திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 23 குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து பருவமழையின் நிலையை கண்காணித்து வருவதாக, ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே எண்கண் பகுதியில் உள்ள வெட்டாறு கதவணையில் தற்போது 796 கனஅடிநீர் சென்று கொண்டிருக்கிறது. இதனை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு, பொறியாளரிடம் நீரோட்ட அளவை கேட்டறிந்து, நீரோட்டத்தை தொடர்ந்து கண்காணித்திட உத்தரவிட்டார். பின்னர் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்ததாவது:- வானிலை ஆய்வு மையம் மூலம் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் பெறப்பட்டு அதன்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை ஆட்சியர்கள் நிலையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், சரக அளவிலும், கோட்ட அளவிலும் 13 குழுக்கள் அமைக்கப்பட்டு இக்குழுக்கள் மூலம் தொடர்ந்து வடகிழக்கு பருவமழையின் நிலையினை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், தாழ்வான பகுதிகளுக்கு தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் 1.30 லட்சம் மணல் மூட்டைகளும், 84,500 சாக்குகளும், 500 சவுக்கு மரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், நீர் நிலைகளின் நீரோட்டங்களை நீர்வளத்துறை அலுவலர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 106 மரம் அறுக்கும் இயந்திரம், 116 ஜேசிபி இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. மாவட்ட ஆட்சியரக தரைத்தளத்தில் வடகிழக்கு பருவமழை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு அறையின் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம். புகார்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை காரணமாக எவ்வித இடர்பாடுகளும் ஏற்படாத வகையில் துறைவாரியாக முன்னெச்சரிக்கையுடன் செயல்பட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது, என அவர் தெரிவித்தார்.