|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
tirumantiram of tirumUlar -part IIIa (1704- 2121) (in tamil script, Unicode format) |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
tirumantiram of tirumUlar - part IIIa |
|
|
|
(in Tamil Script, Unicode/UTF-8 format) |
|
|
|
திருமந்திரம்- (திருமூலர்) |
|
|
|
ஏழாம் தந்திரம் (1704- 2121) |
|
|
|
|
|
|
|
|
|
|
|
This webpage with Tamil Text is based on Unicode encoding. |
|
|
|
To view the Tamil text correctly you need to set up the following: |
|
|
|
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha, |
|
|
|
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer |
|
|
|
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP). |
|
|
|
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages |
|
|
|
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font |
|
|
|
chosen as the default font for the UTF-8 char-set/encoding view. |
|
. |
|
|
|
In case of difficulties send an email request to |
|
|
|
kalyan@geocities.com |
|
or |
|
|
|
kumar@vt.edu |
|
|
|
|
|
|
|
C - Project Madurai 2002 |
|
|
|
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of |
|
|
|
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. |
|
|
|
Details of Project Madurai are available at the website |
|
|
|
|
|
|
|
http://www.projectmadurai.org/ |
|
|
|
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. |
|
|
|
|
|
|
|
|
|
|
|
திருமந்திரம் |
|
|
|
|
|
|
|
ஏழாம் தந்திரம் |
|
|
|
|
|
|
|
1. ஆறு ஆதாரம் |
|
|
|
|
|
|
|
1704 |
|
|
|
நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும் |
|
|
|
கோவிமேல் நின்ற குறிகள் பதினாறும் |
|
|
|
மூலம் கண்டு ஆங்கே முடிந்து முதல் இரண்டும் |
|
|
|
காலங்கண் டான்அடி காணலும் ஆமே. 1 |
|
|
|
|
|
|
|
1705 |
|
|
|
ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின் |
|
|
|
மேதாதி நாதாந்த மீதாம் பாராசக்தி |
|
|
|
போதா லயத்துஅ விகாரந்தனிற்போத |
|
|
|
மேதாதி ஆதார மீதான உண்மையே. 2 |
|
|
|
|
|
|
|
1706 |
|
|
|
மேல்என்றும் கீழ்என்று இரண்டற் காணுங்கால் |
|
|
|
தான்என்றும் நான்என்றும் தன்மைகள் ஓராறும் |
|
|
|
பார்எங்கும் ஆகிப் பரந்த பராபரம் |
|
|
|
கார்ஒன்று கற்பகம் ஆகிநின்றானே. 3 |
|
|
|
|
|
|
|
1707 |
|
|
|
ஆதார சோதனை யால்நாடி சுத்திகள் |
|
|
|
மேதாதி ஈரெண் காலந்தத்து விண்ணொளி |
|
|
|
போதா லயத்துப் புலன்கர ணம் புத்தி |
|
|
|
சாதா ரணங்கெட்டான் தான்சக மார்க்கமே. 4 |
|
|
|
|
|
|
|
1708 |
|
|
|
மேதாதி யாலே விடாதுஓம் எனத்தூண்டி |
|
|
|
ஆதார சோதனை அத்துவ சோதனை |
|
|
|
தாதுஆர மாசுவே தானெழச் சாதித்தால் |
|
|
|
ஆதாரஞ் செய்போக மாவது காயமே. 5 |
|
|
|
|
|
|
|
1709 |
|
|
|
ஆறந்த மும்கூடி யாரும் உடம்பினில் |
|
|
|
கூறிய ஆதார மற்றும் குறிக்கொண்மின் |
|
|
|
ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலே |
|
|
|
ஊறிய ஆதாரத்து ஓரெழுத்து ஆமே. 6 |
|
|
|
|
|
|
|
1710 |
|
|
|
ஆகும் உடம்பும் அழிகின்ற அவ்வுடல் |
|
|
|
போகும் உடம்பும் பொருந்திய வாறுதான் |
|
|
|
ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம் |
|
|
|
ஆகும் உடம்புக்கும் ஆறந்த மாமே. 7 |
|
|
|
|
|
|
|
1711 |
|
|
|
ஆயு மலரின் அணிமலர் மேலது |
|
|
|
ஆய இதழும் பதினாறும் அங்குள |
|
|
|
தூய அறிவு சிவானந்த மாகிப்போய் |
|
|
|
மேய அறிவாய் விளைந்தது தானே. 8 |
|
|
|
|
|
|
|
2. அண்டலிங்கம் (உலக சிவம்) |
|
|
|
|
|
|
|
1712 |
|
|
|
இலிங்கம தாவது யாரும் அறியார் |
|
|
|
இலிங்கம தாவது எண்டிசை எல்லாம் |
|
|
|
இலிங்கம் தாவது எண்ணெண் கலையும் |
|
|
|
இலிங்கம தாக எடுத்தது உலகே. 1 |
|
|
|
|
|
|
|
1713 |
|
|
|
உலகில் எடுத்தது சத்தி முதலா |
|
|
|
உலகில் எடுத்தது சத்தி வடிவாய் |
|
|
|
உலகில் எடுத்தது சத்தி குணமாய் |
|
|
|
உலகில் எடுத்த சதாசிவன் தானே. 2 |
|
|
|
|
|
|
|
1714 |
|
|
|
போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும் |
|
|
|
ஆகமும் ஆறாறு தத்துவத்து அப்பாலாம் |
|
|
|
ஏகமும் நல்கி இருக்கும் சதாசிவம் |
|
|
|
ஆகம அத்துவா ஆறும் சிவமே. 3 |
|
|
|
|
|
|
|
1715 |
|
|
|
ஏத்தினர் எண்ணிலி தேவர்எம் ஈசனை |
|
|
|
வாழ்த்தினர் வாசப் பசுந்தென்றல் வள்ளலென்று |
|
|
|
ஆர்த்தினர் அண்டங் கடந்து அப் புறநின்று |
|
|
|
காத்தனன் என்னும் கருத்தறி யாரே. 4 |
|
|
|
|
|
|
|
1716 |
|
|
|
ஒண்சுட ரோன் அயன் மால்பிர சாபதி |
|
|
|
ஒண்சுட ரான இரவியோடு இந்திரன் |
|
|
|
கண்சுட ராகிக் கலந்தெங்கும் தேவர்கள் |
|
|
|
தண்சுட ராய்எங்கும் தற்பரம் ஆமே. 5 |
|
|
|
|
|
|
|
1717 |
|
|
|
தாபரத் துள்நின்று அருளவல் லான்சிவன் |
|
|
|
மாபரத் துண்மை வழிபடு வாரில்லை |
|
|
|
மாபரத் துண்மை வழிபடு வாளர்க்கும் |
|
|
|
பூவகத்து உள்நின்ற பொற்கொடி யாகுமே. 6 |
|
|
|
|
|
|
|
1718 |
|
|
|
தூவிய விமானமும் தூலமது ஆகுமால் |
|
|
|
ஆய சதாசிவம் ஆகுநற் சூக்குமம் |
|
|
|
ஆய பலிபீடம் பத்திர லிங்கமாம் |
|
|
|
ஆய அரன்நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே. 7 |
|
|
|
|
|
|
|
1719 |
|
|
|
முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும் |
|
|
|
கொத்தும்அக்கொம்பு சிலைநீறு கோமளம் |
|
|
|
அத்தன்தன் ஆகமம் அன்னம் அரிசியாம் |
|
|
|
உய்த்த்தின் சாதனம் பூமண லிங்கமே. 8 |
|
|
|
|
|
|
|
1720 |
|
|
|
துன்றும் தயிர்நெய் பால்துய்ய மெழுகுடன் |
|
|
|
கன்றிய செம்பு கனல்இர தம்சலம் |
|
|
|
வன்திறல் செங்கல் வடிவுடை வில்வம்பொன் |
|
|
|
தென்தியங்கு ஒன்றை தெளிசிவ லிங்கமே. 9 |
|
|
|
|
|
|
|
1721 |
|
|
|
மறையவர் அர்ச்சனை வண்படி கந்தான் |
|
|
|
இறையவர் அர்ச்சனை யேயபொன் னாகும் |
|
|
|
குறைவிலா வசியர்க்குக் கோமள மாகும் |
|
|
|
துறையடைச் சூத்திரர் தொல்வாண லிங்கமே. 10 |
|
|
|
|
|
|
|
1722 |
|
|
|
அது வுணர்ந் தோன்ஒரு தன்மையை நாடி |
|
|
|
எதுஉண ராவகை நின்றனன் ஈசன் |
|
|
|
புதுஉணர் வான புவனங்கள் எட்டும் |
|
|
|
இது உணர்ந்து என்னுடல் கோயில்கொண்டானே. 11 |
|
|
|
|
|
|
|
1723 |
|
|
|
அகலிட மாய்அறி யாமல் அடங்கும் |
|
|
|
உகலிட மாய்நின்ற ஊனதன் உள்ளே |
|
|
|
பகலிட மாம்முனம் பாவ வினாசன் |
|
|
|
புகலிட மாய்நின்ற புண்ணியன் தானே. 12 |
|
|
|
|
|
|
|
1724 |
|
|
|
போது புனைசூழல் பூமிய தாவது |
|
|
|
மாது புனைமுடி வானக மாவது |
|
|
|
நீதியுள் ஈசன் உடல்விசும் பாய்நிற்கும் |
|
|
|
ஆதியுற நின்றது அப்பரி சாமே. 13 |
|
|
|
|
|
|
|
1725 |
|
|
|
தரையுற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாம் |
|
|
|
திரைபொரு நீரது மஞ்சன சாலை |
|
|
|
வரைதவழ் மஞ்சுநீர் வானுடு மாலை |
|
|
|
கரையற்ற நந்திக் கலையும்திக்காமே. 14 |
|
|
|
|
|
|
|
3. பிண்டலிங்கம் (உடற் சிவம்) |
|
|
|
|
|
|
|
1726 |
|
|
|
மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம் |
|
|
|
மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம் |
|
|
|
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம் |
|
|
|
மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே. 1 |
|
|
|
|
|
|
|
1727 |
|
|
|
உலந்திலர் பின்னும் உளரென நிற்பர் |
|
|
|
நிலந்திரு நீர்தெளி யூனவை செய்யப் |
|
|
|
புலந்திரு பூதங்கள் ஐந்தும் ஒன்றாக |
|
|
|
வலந்தரு தேவரை வந்திசெய் யீரே. 2 |
|
|
|
|
|
|
|
1728 |
|
|
|
கோயில்கொண் டன்றே குடிகொண்ட ஐவரும் |
|
|
|
வாயில்கொண் டாங்கே வழிநின் றருளுவர் |
|
|
|
தாயில்கொண் டாற்போல் தலைவன்என் உட்புக |
|
|
|
வாயில்கொண் டு ஈசனும் ஆளவந் தானே. 3 |
|
|
|
|
|
|
|
1729 |
|
|
|
கோயில்கொண் டான்அடி கொல்லைப் பெருமறை |
|
|
|
வாயில்கொண் டான்அடி நாடிகள் பத்துள |
|
|
|
பூசைகொண் டான்புலன் ஐந்தும் பிறகிட்டு |
|
|
|
வாயில்கொண் டான் எங்கள் மாநந்தி தானே. 4 |
|
|
|
|
|
|
|
4. சதாசிவ லிங்கம் (உலக முதற் சிவம்) |
|
|
|
|
|
|
|
1730 |
|
|
|
கூடிய பாதம் இரண்டும் படிமிசை |
|
|
|
பாடிய கையிரண்டு எட்டுப் பரந்தெழும் |
|
|
|
தேடு முகம்ஐந்து செங்கையின் மூவைந்து |
|
|
|
நாடும் சதாசிவம் நல்லொளி முத்தே. 1 |
|
|
|
|
|
|
|
1731 |
|
|
|
வேதா நெடுமால் உருத்திரன் மேலீசன் |
|
|
|
மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும் |
|
|
|
ஆதார சத்தியும் அந்தச் சிவனொடும் |
|
|
|
சாதா ரணமாம் சதாசிவந் தானே. 2 |
|
|
|
|
|
|
|
1732 |
|
|
|
ஆகின்ற சத்தியின் உள்ளே கலைநிலை |
|
|
|
ஆகின்ற சத்தியின் உள்ளே கதிரெழ |
|
|
|
ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்தபின் |
|
|
|
ஆகின்ற சத்தியுள் அத்திசை பத்தே. 3 |
|
|
|
|
|
|
|
1733 |
|
|
|
அத்திசைக் குள்ளே அமர்ந்தன ஆறங்கம் |
|
|
|
அத்திசைக் குள்ளே அமர்ந்தன நால்வேதம் |
|
|
|
அத்திசைக் குள்ளே அமர்ந்த சரியையோடு |
|
|
|
அத்திசைக் குள்ளே அமர்ந்த சமயமே. 4 |
|
|
|
|
|
|
|
1734 |
|
|
|
சமயத்து எழுந்த அவத்தையீர் ஐந்துள |
|
|
|
சமயத்து எழுந்த இராசி ஈராறுள |
|
|
|
சமயத்து எழுந்த சரீரம்ஆ றெட்டுள |
|
|
|
சமயத்து எழுந்த சதாசிவந் தானே. 5 |
|
|
|
|
|
|
|
1735 |
|
|
|
நடுவு கிழக்குத் தெற்குஉத் தரமேற்கு |
|
|
|
நடுவு படிகநற் குங்குமவன்னம் |
|
|
|
அடைவுள அஞ்சனம் செவ்வரத் தம்பால் |
|
|
|
அடியேற்கு அருளிய முகம்இவை அஞ்சே. 6 |
|
|
|
|
|
|
|
1736 |
|
|
|
அஞ்சு முகமுள ஐம்மூன்று கண்ணுள |
|
|
|
அஞ்சினொ டுஅஞ்சு கரதலம் தானுள |
|
|
|
அஞ்சுடன் அஞ்சா யுதமுள நம்பியென் |
|
|
|
நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றானே. 7 |
|
|
|
|
|
|
|
1737 |
|
|
|
சத்தி தராதலம் அண்டம் சதாசிவம் |
|
|
|
சத்தி சிவமிக்க தாபர சங்கமம் |
|
|
|
சத்தி உருவம் அருவம் சதாசிவம் |
|
|
|
சத்தி சிவதத்துவ முப்பத் தாறே. 8 |
|
|
|
|
|
|
|
1738 |
|
|
|
தத்துவ மாவது அருவம் சராசரம் |
|
|
|
தத்துவ மாவது உருவம் சுகோதயம் |
|
|
|
தத்துவம் எல்லாம் சகலமு மாய்நிற்கும் |
|
|
|
தத்துவம் ஆகும் சதாசிவம் தானே. 9 |
|
|
|
|
|
|
|
1739 |
|
|
|
கூறுமின் ஊறு சதாசிவன் எம்இறை |
|
|
|
வேறோர் உரைசெய்து மிகைப்பொரு ளாய்நிற்கும் |
|
|
|
ஏறுரை செய்தொழில் வானவர் தம்மொடு |
|
|
|
மாறுசெய் வான் என் மனம்புகுந் தானே. 10 |
|
|
|
|
|
|
|
1740 |
|
|
|
இருளார்ந்த கண்டமும் ஏந்து மழுவும் |
|
|
|
சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையும் |
|
|
|
அருளார்ந்த சிந்தையெம் ஆதிப் பிரானைத் |
|
|
|
தெருளார்ந்தென் உள்ளே தெளிந்திருந் தேனே. 11 |
|
|
|
|
|
|
|
1741 |
|
|
|
சத்திதான் நிற்கின்ற ஐம்முகம் காற்றிடில் |
|
|
|
உத்தமம் வாமம் உரையத்து இருந்திடும் |
|
|
|
தத்துவம் பூருவம் தற்புரு டன்சிரம் |
|
|
|
அத்தரு கோரம் மருடத்துஈ சானனே. 12 |
|
|
|
|
|
|
|
1742 |
|
|
|
நாணுநல் ஈசானன் நடுவுச்சி தானாகும் |
|
|
|
தாணுவின் தன்முகம் தற்புருட மாகும் |
|
|
|
காணும் அகோரம் இருதயம் குய்யமாம் |
|
|
|
மாணுற வாமம்ஆம் சத்திநற் பாதமே. 13 |
|
|
|
|
|
|
|
1743 |
|
|
|
நெஞ்சு சிரம்சிகை நீள்கவ சம்கண்ணாம் |
|
|
|
வஞ்சமில் விந்து வளர்நிறம் பச்சையாம் |
|
|
|
செஞ்சுறு செஞ்சுடர் சேகரி மின்னாகும் |
|
|
|
செஞ்சுடர் போலும் தெசாயுதம் தானே. 14 |
|
|
|
|
|
|
|
1744 |
|
|
|
எண்ணில் இதயம் இறைஞான சத்தியாம் |
|
|
|
விண்ணிற் பரைசிரம் மிக்க சிகையாதி |
|
|
|
வண்ணங் கவசம் வனப்புடை இச்சையாம் |
|
|
|
பண்ணுங் கிரியை பரநேந் திரத்திலே. 15 |
|
|
|
|
|
|
|
1745 |
|
|
|
சத்திநாற் கோணம் சலமுற்று நின்றிடும் |
|
|
|
சத்திஅறு கோண சயனத்தை உற்றிடும் |
|
|
|
சத்தி வட்டம் சலமுற்று இருந்திடும் |
|
|
|
சத்தி உருவாம் சதாசிவன் தானே. 16 |
|
|
|
|
|
|
|
1746 |
|
|
|
மான் நந்தி எத்தனை காலம் அழைக்கினும் |
|
|
|
தான் நந்தி அஞ்கின் தனிச்சுடை ராய்நிற்கும் |
|
|
|
கால் நந்தி உந்தி கடந்து கமலத்தில் |
|
|
|
மேல் நந்தி ஒன்பதின் மேவிநின் றானே. 17 |
|
|
|
|
|
|
|
1747 |
|
|
|
ஒன்றிய வாறும் உடலின் உடன்கிடந்து |
|
|
|
என்றும்எம் ஈசன் நடக்கும் இயல்பது |
|
|
|
தென்தலைக்கு ஏறத் திருந்து சிவனடி |
|
|
|
நின்று தொழுதேன் என் நெஞ்சத்தின் உள்ளே. 18 |
|
|
|
|
|
|
|
1748 |
|
|
|
உணர்ந்தேன் உலகினில் ஒண்பொரு ளானைக் |
|
|
|
கொணர்ந்தேன் குவலயம் கோயிலென் நெஞ்சம் |
|
|
|
புணர்ந்தேன் புனிதனும் பொய்யல்ல மெய்யே |
|
|
|
பணிந்தேன் பகலவன் பாட்டும் ஒலியே. 19 |
|
|
|
|
|
|
|
1749 |
|
|
|
ஆங்கவை Yமூன்றினும் ஆரழல் வீசிடத் |
|
|
|
தாங்கிடும் ஈரேழு தான்நடு வானதில் |
|
|
|
ஓங்கிய ஆதியும் அந்தமும் ஆமென |
|
|
|
ஈங்கிவை தம்முடல் இந்துவும் ஆமே. 20 |
|
|
|
|
|
|
|
1750 |
|
|
|
தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடும் |
|
|
|
தன்மேனி தானும் சதாசிவ மாய்நிற்கும் |
|
|
|
தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாய் |
|
|
|
தன்மேனி தானாகும் தற்பரம் தானே. 21 |
|
|
|
|
|
|
|
1751 |
|
|
|
ஆரும் அறியார் அகாரம் அவனென்று |
|
|
|
பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி |
|
|
|
தாரம் இரண்டும் தரணி முழுதுமாய் |
|
|
|
மாறி எழுந்திடும் ஓசையதாமே. 22 |
|
|
|
|
|
|
|
1752 |
|
|
|
இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரம் |
|
|
|
இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம் |
|
|
|
இலிங்கத்து உள் வட்டம் நிறையும் உகாரம் |
|
|
|
இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே. 23 |
|
|
|
|
|
|
|
5. ஆத்மலிங்கம் (உயிர்ச்சிவம் ) |
|
|
|
|
|
|
|
1753 |
|
|
|
அகார முதலா அனைத்துமாய் நிற்கும் |
|
|
|
உகார முதலா உயிர்ப்பெய்து நிற்கும் |
|
|
|
அகார உகாரம் இரண்டும் அறியில் |
|
|
|
அகார உகாரம் இலிங்கம் தாமே. 1 |
|
|
|
|
|
|
|
1754 |
|
|
|
ஆதாரம் ஆதேயம் ஆகின்ற விந்துவும் |
|
|
|
மேதாதி நாதமும் மீதே விரிந்தன |
|
|
|
ஆதார விந்து ஆதிபீட நாமே |
|
|
|
போதாஇ லிங்கப் புணர்ச்சிய தாமே. 2 |
|
|
|
|
|
|
|
1755 |
|
|
|
சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம் |
|
|
|
சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம் |
|
|
|
சத்தி சிவமாம் இலிங்கம் சதாசிவம் |
|
|
|
சத்தி சிவமாகும் தாபரம் தானே. 3 |
|
|
|
|
|
|
|
1756 |
|
|
|
தானேர் எழுகின்ற சோதியைக் காணலாம் |
|
|
|
வானேர் எழுகின்ற ஐம்பது அமர்ந்திடம் |
|
|
|
பூரேர் எழுகின்ற பொற்கொடி தன்னுடன் |
|
|
|
தானேர் எழுகின்ற அகாரமது ஆமே. 4 |
|
|
|
|
|
|
|
1757 |
|
|
|
விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம் |
|
|
|
விந்துவ தேபீட நாதம் இலிங்கமாம் |
|
|
|
அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய் |
|
|
|
வந்து கருஐந்தம் செய்யும் அவைஐந்தே. 5 |
|
|
|
|
|
|
|
1758 |
|
|
|
சத்திநற் பீடம் தகுநல்ல ஆன்மா |
|
|
|
சத்திநற் கண்டம் தகுவித்தை தானாகும் |
|
|
|
சத்திநல் லிங்கம் தகும்சிவ தத்துவம் |
|
|
|
சத்திநல் ஆன்மாச் சதாசிவம் தானே. 6 |
|
|
|
|
|
|
|
1759 |
|
|
|
மனம்புகுந்து என்னுயிர் மன்னிய வாழ்க்கை |
|
|
|
மனம்புகுந்து இன்பம் பொழிகின்ற போது |
|
|
|
நலம்புகுந்து என்னொடு நாதனை நாடும் |
|
|
|
இனம்புகுந்து ஆதியும் மேற்கொண்டவாறே. 7 |
|
|
|
|
|
|
|
1760 |
|
|
|
பராபரன் எந்தை பனிமதி சூடி |
|
|
|
தராபரன் தன்னடி யார்மனக் கோயில் |
|
|
|
சிராபரன் தேவர்கள் சென்னியின் மன்னும் |
|
|
|
அராபரன் மன்னி மனத்துஉறைந் தானே. 8 |
|
|
|
|
|
|
|
1761 |
|
|
|
பிரான்அல்ல நாம்எனில் பேதை உலகம் |
|
|
|
குரால்என்னும் என்மனம் கோயில்கொள் ஈசன் |
|
|
|
அராநின்ற செஞ்சடை அங்கியும் நீரும் |
|
|
|
பொராநின் றவர்செய்அப் புண்ணியன் தானே. 9 |
|
|
|
|
|
|
|
1762 |
|
|
|
அன்று நின் றான்கிடந் தான்அவன் என்று |
|
|
|
சென்றுநின்று எண்டிசை ஏத்துவர் தேவர்கள் |
|
|
|
என்றுநின்று ஏத்துவன் எம்பெரு மான்தன்னை |
|
|
|
ஒன்றியென் உள்ளத்தின் உள்ளிருந் தானே. 10 |
|
|
|
|
|
|
|
6. ஞான லிங்கம் (உணர்வுச் சிவம் ) |
|
|
|
|
|
|
|
1763 |
|
|
|
உருவும் அருவும் உருவோடு அருவும் |
|
|
|
மருவு பரசிவன் மன்பல் உயிர்க்கும் |
|
|
|
குருவு மெனநிற்கும் கொள்கையன் ஆகும் |
|
|
|
தருவென நல்கும் சதாசிவன் தானே. 1 |
|
|
|
|
|
|
|
1764 |
|
|
|
நாலான கீழது உருவம் நடுநிற்க |
|
|
|
மேலான நான்கும் அருவம் மிகுநாப்பண் |
|
|
|
நாலான ஒன்றும் அருவுரு நண்ணலால் |
|
|
|
பாலாம் இவையாம் பரசிவன் தானே. 2 |
|
|
|
|
|
|
|
1765 |
|
|
|
தேவர் பிரானைத் திசைமுக நாதனை |
|
|
|
நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை |
|
|
|
ஏவர் பிரான்என்று இறைஞ்சுவர் அவ்வழி |
|
|
|
யாவர் பிரானடி அண்ணலும் ஆமே. 3 |
|
|
|
|
|
|
|
1766 |
|
|
|
வேண்டிநின் றேதொழு தேன்வினை போயற |
|
|
|
ஆண்டொரு திங்களும் நாளும் அளக்கின்ற |
|
|
|
காண்டகை யானொடும் கன்னி உணரினும் |
|
|
|
மூண்டகை மாறினும் ஒன்றது வாமே. 4 |
|
|
|
|
|
|
|
1767 |
|
|
|
ஆதி பரந்தெய்வம் அண்டத்து நல்தெய்வம் |
|
|
|
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம் |
|
|
|
நீதியுள் மாதெய்வம் நின்மலர் எம்இறை |
|
|
|
பாதியுள் மன்னும் பராசத்தி யாமே. 5 |
|
|
|
|
|
|
|
1768 |
|
|
|
சத்திக்கு மேலே பராசத்தி தன்னுள்ளே |
|
|
|
சுத்த சிவபதம் தோயாத தூவொளி |
|
|
|
அத்தன் திருவடிக்கு அப்பாலைக்கு அப்பாலாம் |
|
|
|
ஒத்தவும் ஆம்ஈசன் தானான உண்மையே. 6 |
|
|
|
|
|
|
|
1769 |
|
|
|
கொழுந்தினைக் காணில் குவலயம் தோன்றும் |
|
|
|
எழுந்திடம் காணில் இருக்கலும் ஆகும் |
|
|
|
பரந்திடம் காணில் பார்ப்பதி மேலே |
|
|
|
திரண்டெழக் கண்டவன் சிந்தையு ளானே. 7 |
|
|
|
|
|
|
|
1770 |
|
|
|
எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும் |
|
|
|
முந்த உரைத்து முறைசொல்லின் ஞானமாம் |
|
|
|
சந்தித்து இருந்த இடம்பெருங் கண்ணியை |
|
|
|
உந்தியின் மேல்வைத்து உகந்து இருந்தானே. 8 |
|
|
|
|
|
|
|
1771 |
|
|
|
சத்தி சிவன்விளை யாட்டாம் உயிராகி |
|
|
|
ஒத்த இருமாயா கூட்டத்து இடையூட்டிச் |
|
|
|
சுத்தம தாகும் துரியம் பிறிவித்துச் |
|
|
|
சித்தம் புகுந்து சிவம்அகம் ஆக்குமே. 9 |
|
|
|
|
|
|
|
1772 |
|
|
|
சத்தி சிவன்தன் விளையாட்டுத் தாரணி |
|
|
|
சத்தி சிவமுமாம் சிவன்சத் தியுமாகும் |
|
|
|
சத்தி சிவமன்றித் தாபரம் வேறில்லை |
|
|
|
சத்திதான் என்றும் சமைந்துரு வாகுமே. 10 |
|
|
|
|
|
|
|
7. சிவலிங்கம் ( சிவகுரு ) |
|
|
|
|
|
|
|
1773 |
|
|
|
குரைக்கின்ற வாரிக் குவலய நீரும் |
|
|
|
பரக்கின்ற காற்றுப் பயில்கின்ற தீயும் |
|
|
|
நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானை |
|
|
|
வரைத்து வலம்செயு மாறுஅறி யேனே. 1 |
|
|
|
|
|
|
|
1774 |
|
|
|
வரைத்து வலஞ்செய்யு மாறுஇங்குஒன்று உண்டு |
|
|
|
நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி |
|
|
|
உரைத்து அவன் நாமம் உணரவல் லார்க்குப் |
|
|
|
புரைத்துஎங்கும் போகான் புரிசடை யோனே. 2 |
|
|
|
|
|
|
|
1775 |
|
|
|
ஒன்றெனக் கண்டோ ம் ஈசன் ஒருவனை |
|
|
|
நன்றென்று அடியிணை நான்அவனைத்தொழ |
|
|
|
வென்றுஐம் புலமும் மிகக்கிடந்து இன்புற |
|
|
|
அன்றுஎன்று அருள்செய்யும் ஆதிப் பிரானே. 3 |
|
|
|
|
|
|
|
1776 |
|
|
|
மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன் |
|
|
|
பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம் |
|
|
|
நலந்தரும் சத்தி சிவன்வடி வாகிப் |
|
|
|
பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே. 4 |
|
|
|
|
|
|
|
1777 |
|
|
|
மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்று |
|
|
|
ஆவி எழும்அள வன்றே உடலுற |
|
|
|
மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும் |
|
|
|
பாவித்து அடக்கிற் பரகதி தானே. 5 |
|
|
|
|
|
|
|
8. சம்பிரதாயம் ( பண்டை முறை ) |
|
|
|
|
|
|
|
1778 |
|
|
|
உடல்பொருள் ஆவி உதகத்தாற் கொண்டு |
|
|
|
படர்வினை பற்றறப் பார்த்துக்கை வைத்து |
|
|
|
நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாக்கி |
|
|
|
கடியப் பிறப்பறக் காட்டினன் நந்தியே. 1 |
|
|
|
|
|
|
|
1779 |
|
|
|
உயிரும் சரீரமும் ஒண்பொரு ளான |
|
|
|
வியவார் பரமும்பின் மேவும் பிராணன் |
|
|
|
செயலார் சிவமும் சிற்சத்தி ஆதிக்கே |
|
|
|
உயலார் குருபரன் உய்யக் கொண்டானே. 2 |
|
|
|
|
|
|
|
1780 |
|
|
|
பச்சிம திக்கலே வைத்தஆ சாரியன் |
|
|
|
நிச்சலும் என்னை நினையென்ற அப்பொருள் |
|
|
|
உச்சிக்கும் கீழது உள்நாக்கு மேலது |
|
|
|
வைச்ச பதமிது வாய்திற வாதே. 3 |
|
|
|
|
|
|
|
1781 |
|
|
|
பிட்டடித்து எங்கும் பிதற்றித் திரிவோனை |
|
|
|
ஒட்டடித்து உள்ளமர் மாசெலாம் வாங்கித் |
|
|
|
தட்டொக்க மாறினன் தன்னையும் என்னையும் |
|
|
|
வட்டமது ஒத்தது வாணிபம் வாய்த்ததே. 4 |
|
|
|
|
|
|
|
1782 |
|
|
|
தரிக்கின்ற பல்லுயிர்க்கு எல்லாம் தலைவன் |
|
|
|
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார் |
|
|
|
பிரிக்கின்ற விந்து பிணக்கறுத்து எல்லாம் |
|
|
|
கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண்டேனே. 5 |
|
|
|
|
|
|
|
1783 |
|
|
|
கூடும் உடல்பொருள் ஆவி குறிக்கொண்டு |
|
|
|
நாடி அடிவைத்து அருள்ஞான சத்தியால் |
|
|
|
பாடல் உடலினில் பற்றற நீக்கியே |
|
|
|
கூடிய தானவ னாம்குளிக் கொண்டே. 6 |
|
|
|
|
|
|
|
1784 |
|
|
|
கொண்டான் அடியேன் அடிமை குறிக்கொள்ளக் |
|
|
|
கொண்டான் உயிர்பொருள் காயக் குழாத்தினைக் |
|
|
|
கொண்டான் பலமுற்றும் தந்தவன் கோடலால் |
|
|
|
கொண்டான் எனஒன்றும் கூறகி லானே. 7 |
|
|
|
|
|
|
|
1785 |
|
|
|
குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடி |
|
|
|
நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன் |
|
|
|
பறிக்கின்ற காயத்தைப் பற்றியநேர்மை |
|
|
|
பிறக்க அறியாதார் பேயுடன் ஒப்பரே. 8 |
|
|
|
|
|
|
|
1786 |
|
|
|
உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும் |
|
|
|
உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை |
|
|
|
உணர்வுடை யார்கள் உணர்ந்தஅக் காலம் |
|
|
|
உணர்வுடை யார்கண் உணர்ந்துகண் டாரே. 9 |
|
|
|
|
|
|
|
1787 |
|
|
|
காயப் பரப்பில் அலைந்து துரியத்துச் |
|
|
|
சால விரிந்து குவிந்து சகலத்தில் |
|
|
|
ஆயஅவ் ஆறாறு அடைந்து திரிந்தோர்க்குத் |
|
|
|
தூய அருள்தந்த நந்திக்கு என் சொல்வதே. 10 |
|
|
|
|
|
|
|
1788 |
|
|
|
நானென நீயென வேறில்லை நண்ணுதல் |
|
|
|
ஊனென ஊனுயிர் என்ன உடனின்று |
|
|
|
வானென வானவர் நின்று மனிதர்கள் |
|
|
|
தேனென இன்பம் திளைக்கின்ற வாறே. 11 |
|
|
|
|
|
|
|
1789 |
|
|
|
அவனும் அவனும் அவனை அறியார் |
|
|
|
அவனை அறியில் அறிவானும் இல்லை |
|
|
|
அவனும் அவனும் அவனை அறியில் |
|
|
|
அவனும் அவனும் அவனிவன் ஆமே. 12 |
|
|
|
|
|
|
|
1790 |
|
|
|
நானிது தானென நின்றவன் நாடோ றும் |
|
|
|
ஊனிது தானுயிர் போலுணர் வானுளன் |
|
|
|
வானிரு மாமுகில் போற்பொழி வானுளன் |
|
|
|
நானிது அம்பர நாதனும் ஆமே. 13 |
|
|
|
|
|
|
|
1791 |
|
|
|
பெருந்தன்மை தானென யானென வேறாய் |
|
|
|
இருந்ததும் இல்லைஅது ஈசன் அறியும் |
|
|
|
பொருந்தும் உடல்உயிர் போல்உமை மெய்யே |
|
|
|
திருந்தமுன் செய்கின்ற தேவர் பிரானே. 14 |
|
|
|
|
|
|
|
9. திருவருள் வைப்பு |
|
|
|
|
|
|
|
1792 |
|
|
|
இருபத மாவது இரவும் பகலும் |
|
|
|
உருவது ஆவது உயிரும் உடலும் |
|
|
|
அருளது ஆவது அறமும் தவமும் |
|
|
|
பொருவது உள்நின்ற போகமது ஆமே. 1 |
|
|
|
|
|
|
|
1793 |
|
|
|
காண்டற்கு அரியன் கருத்திலன் நந்தியும் |
|
|
|
தீண்டற்கும் சார்தற்கும் சேயனாத் தோன்றிடும் |
|
|
|
வேண்டிக் கிடந்து விளக்கொளி யான்நெஞ்சம் |
|
|
|
ஈண்டிக் கிடந்தங்கு இருளறும் ஆமே. 2 |
|
|
|
|
|
|
|
1794 |
|
|
|
குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும் |
|
|
|
வெறுப்பிருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும் |
|
|
|
செறிப்புறு சிந்தையைக் சிக்கென நாடில் |
|
|
|
அறிப்புறு காட்சி அமரரும் ஆமே. 3 |
|
|
|
|
|
|
|
1795 |
|
|
|
தேர்ந்தறி யாமையின் சென்றன காலங்கள் |
|
|
|
பேர்ந்தறி வான் எங்கள் பிஞ்ஞகன் எம்இறை |
|
|
|
ஆர்ந்தறி வார்அறி வேதுணை யாமெனச் |
|
|
|
சார்ந்தறி வான்பெருந் தன்மைவல் லானே. 4 |
|
|
|
|
|
|
|
1796 |
|
|
|
தானே அறியும் வினைகள் அழிந்தபின் |
|
|
|
நானே அறிகிலன் நந்தி அறியுங்கொல் |
|
|
|
ஊனே உருகி உணர்வை உணர்ந்தபின் |
|
|
|
தேனே யனையன் நம் தேவர் பிரானே. 5 |
|
|
|
|
|
|
|
1797 |
|
|
|
நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை |
|
|
|
வான்அறிந் தார் அறி யாது மயங்கினர் |
|
|
|
ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர் |
|
|
|
தான்அறி யான்பின்னை யார்அறி வாரே? 6 |
|
|
|
|
|
|
|
1798 |
|
|
|
அருள்எங்கு மான அளவை அறியார் |
|
|
|
அருளை நுகர்அமு தானதும் தேரார் |
|
|
|
அருள்ஐங் கருமத்து அதிசூக்கம் உன்னார் |
|
|
|
அருள்எங்கும் கண்ணானது ஆர்அறி வாரே. 7 |
|
|
|
|
|
|
|
1799 |
|
|
|
அறிவில் அணுக அறிவது நல்கிப் |
|
|
|
பொறிவழி யாசை புகுத்திப் புணர்ந்திட்டு |
|
|
|
அறிவது ஆக்கி அடியருள் நல்கும் |
|
|
|
செறிவொடு நின்றார் சிவம்ஆயி னாரே. 8 |
|
|
|
|
|
|
|
1800 |
|
|
|
அருளில் பிறந்திட்டு அருளில் வளர்ந்திட்டு |
|
|
|
அருளில் அழிந்துஇளைப் பாறி மறைந்திட்டு |
|
|
|
அருளான ஆனந்தத்து ஆரமுது ஊட்டி |
|
|
|
அருளால் என்நந்தி அகம்புகுந் தானே. 9 |
|
|
|
|
|
|
|
1801 |
|
|
|
அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டி |
|
|
|
அருளால் அடிபுணைந்து ஆர்வமும் தந்திட்டு |
|
|
|
அருளானஆனந்தந்து ஆரமுது ஊட்டி |
|
|
|
அருளால் என்நந்தி அதும்புகுந் தானே. 10 |
|
|
|
|
|
|
|
|
|
1802 |
|
|
|
பாசத்தில் இட்டது அருள்அந்தப் பாசத்தின் |
|
|
|
நேசத்தை விட்டது அருள்அந்தநேசத்தில் |
|
|
|
கூசற்ற முத்தி அருள்அந்தக் கூட்டத்தின் |
|
|
|
நேசத்துத் தோன்றா நிலையரு ளாமே. 11 |
|
|
|
|
|
|
|
1803 |
|
|
|
பிறவா நெறிதந்த பேரரு ளாளன் |
|
|
|
மறவா அருள் தந்த மாதவன் நந்தி |
|
|
|
அறவாழி அந்தணன் ஆதிப்பராபரன் |
|
|
|
உறவாகி வந்துஎன் உளம்புகுந் தானே. 12 |
|
|
|
|
|
|
|
1804 |
|
|
|
அகம்புகுந் தான்அடி யேற்குஅரு ளாலே |
|
|
|
அகம்புகுந் தும்தெரி யான்அருள் இல்லோர்க்கு |
|
|
|
அகம்புகுந்து ஆனந்த மாக்கிச் சிவமாய் |
|
|
|
அகம்புகுந் தான்நந்தி ஆனந்தி யாமே. 13 |
|
|
|
|
|
|
|
1805 |
|
|
|
ஆயும் அறிவோடு அறியாத மாமாயை |
|
|
|
ஆய கரணம் படைக்கும் ஐம்பூதமும் |
|
|
|
ஆய பலஇந் திரியம் அவற்றுடன் |
|
|
|
ஆய அருள்ஐந்து மாம் அருட் செய்கையே. 14 |
|
|
|
|
|
|
|
1806 |
|
|
|
அருளே சகலமும் ஆய பவுதிகம் |
|
|
|
அருளே சராசர மாய அமலமே |
|
|
|
இருளே வெளியே யெனும்எங்கும் ஈசன் |
|
|
|
அருளே சகளத்தின் அன்றிஇன் றாமே. 15 |
|
|
|
|
|
|
|
1807 |
|
|
|
சிவமொடு சத்தி திகழ்நாதம் விந்து |
|
|
|
தவமான ஐம்முகன் ஈசன் அரனும் |
|
|
|
பவமுறும் மாலும் பதுமத்தோன் ஈறா |
|
|
|
நவம்அவை யாகி நடிப்பவன் தானே. 16 |
|
|
|
|
|
|
|
1808 |
|
|
|
அருட்கண்இ லாதார்க்கு அரும்பொருள் தோன்றா |
|
|
|
அருட்கண்உ ளோர்க்குஎதிர் தோன்றும் அரனே |
|
|
|
இருட்கண்ணி னோர்க்குஅங்கு இரவியும் தோன்றாத் |
|
|
|
தெருட்கண்ணி னோர்க்குஎங்கும் சீரொளி யாமே. 17 |
|
|
|
|
|
|
|
1809 |
|
|
|
தானே படைத்திடும் தானே அளித்திடும் |
|
|
|
தானே துடைத்திடும் தானே மறைத்திடும் |
|
|
|
தானே இவைசெய்து தான்முத்தி தந்திடும் |
|
|
|
தானே வியாபித் தலைவனும் ஆமே. 18 |
|
|
|
|
|
|
|
1810 |
|
|
|
தலையான நான்கும் தனதுஅரு வாகும் |
|
|
|
அலையா அருவுரு வாகும் சதாசிவம் |
|
|
|
நிலையான கீழ்நான்கு நீடுரு வாகும் |
|
|
|
துலையா இறைமுற்று மாய் அல்லது ஒன்றே. 19 |
|
|
|
|
|
|
|
1811 |
|
|
|
ஒன்றது வாலே உலப்பிலி தானாகி |
|
|
|
நின்றது தான்போல் உயிர்க்குயி ராய்நிலை |
|
|
|
துன்றி அவைஅல்ல வாகும் துணையென்ன |
|
|
|
நின்றது தான்விளை யாட்டென்னுள் நேயமே. 20 |
|
|
|
|
|
|
|
1812 |
|
|
|
நேயத்தே நின்றிடும் நின்மலன் சத்தியோடு |
|
|
|
ஆயக் குடிலைகள் நாதம் அடைந்திட்டுப் |
|
|
|
போயக் கலைபல வாகப் புணர்ந்திட்டு |
|
|
|
வீயத் தகாவிந்து வாக விளையுமே. 21 |
|
|
|
|
|
|
|
1813 |
|
|
|
விளையும் பரவிந்து தானே வியாபி |
|
|
|
விளையும் தனிமாயை மிக்கமா மாயை |
|
|
|
கிளையொன்று தேவர் கிளர்மனு வேதம் |
|
|
|
அளவொன் றிலாஅண்ட கோடிக ளாமே. 22 |
|
|
|
|
|
|
|
|
|
|
|
10. அருள் ஒளி |
|
|
|
|
|
|
|
1814 |
|
|
|
அருளில் தலைநின்று அறிந்துஅழுந் தாதார் |
|
|
|
அருளில் தலைநில்லார் ஐம்பாசம் நீங்கார் |
|
|
|
அருளின் பெருமை அறியார் செறியார் |
|
|
|
அருளில் பிறந்திட்டு அறிந்துஅறி வாரே. 1 |
|
|
|
|
|
|
|
1815 |
|
|
|
வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தி |
|
|
|
ஆரா அமுதளித்து ஆனந்தி பேர்நந்தி |
|
|
|
பேரா யிரமுடைப் பெம்மான்பேர் ஒன்றினில் |
|
|
|
ஆரா அருட்கடல் ஆடுகென் றானே. 2 |
|
|
|
|
|
|
|
1816 |
|
|
|
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும் |
|
|
|
தேடியும் கண்டேன் சிவன்பெரும் தன்மையைக் |
|
|
|
கூடிய வாறே குறியாக் குறிதந்தென் |
|
|
|
ஊடுநின் றான்அவன் தன்னருள் உற்றே. 3 |
|
|
|
|
|
|
|
1817 |
|
|
|
உற்ற பிறப்பும் உறுமலம் ஆனதும் |
|
|
|
பற்றிய மாயாப் படலம் எனப் பண்ணி |
|
|
|
அத்தனை நீயென்று அடிவைத்தேன் பேர்நந்தி |
|
|
|
கற்றன விட்டேன் கழல்பணிந் தேனே. 4 |
|
|
|
|
|
|
|
1818 |
|
|
|
விளக்கினை யேற்றி வெளியை அறிமின் |
|
|
|
விளக்கினை முன்னே வேதனை மாறும் |
|
|
|
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள் |
|
|
|
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே. 5 |
|
|
|
|
|
|
|
1819 |
|
|
|
ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா |
|
|
|
ஒளியு ளோர்க்குஅன்றோ ஒழியாது ஒளியும் |
|
|
|
ஒளியுருள் கண்டகண் போலவே றாயுள |
|
|
|
ஒளியிருள் நீங்க உயிர்சிவம் ஆமே. 6 |
|
|
|
|
|
|
|
1820 |
|
|
|
புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டி |
|
|
|
நிறமே புகுந்தென்னை நின்மலன் ஆக்கி |
|
|
|
அறமே புகுந்தெனக்கு ஆரமுது ஈந்த |
|
|
|
திறம்ஏதென்று எண்ணித் திகைத்திருந் தேனே. 7 |
|
|
|
|
|
|
|
1821 |
|
|
|
அருளது என்ற அகலிடம் ஒன்றும் |
|
|
|
பொருளது என்ற புகலிடம் ஒன்றும் |
|
|
|
மருளது நீங்க மனம்புகுந் தானைத் |
|
|
|
தெருளுறும் பின்னைச் சிவகதி தாமே. 8 |
|
|
|
|
|
|
|
1822 |
|
|
|
கூறுமின் நீர்முன் பிறந்திங்கு இறந்தமை |
|
|
|
வேறொரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீக்கிடும் |
|
|
|
பாறணி யும்உடல் வீழலிட்டு ஆருயிர் |
|
|
|
தேறுஅணிவோம்இது செப்பவல் லீரே. 9 |
|
|
|
|
|
|
|
11. சிவபூசை |
|
|
|
|
|
|
|
1823 |
|
|
|
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் |
|
|
|
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் |
|
|
|
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் |
|
|
|
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே. 1 |
|
|
|
|
|
|
|
1824 |
|
|
|
வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக் |
|
|
|
காட்டவும் நாம்இலம் காலையும் மாலையும் |
|
|
|
ஊட்டவி யாவன உள்ளம் குளிர்விக்கும் |
|
|
|
பாட்டவி காட்டுதும் பால்அவி யாமே. 2 |
|
|
|
|
|
|
|
1825 |
|
|
|
பான்மொழி பாகன் பராபரன் தானாகும் |
|
|
|
ஆன சதாசிவன் தன்னைஆ வாகித்து |
|
|
|
மேன்முகம் ஈசான மாகவே கைக்கொண்டு |
|
|
|
சீன்முகம் செய்யச் சிவனவன் ஆகுமே. 3 |
|
|
|
|
|
|
|
1826 |
|
|
|
நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால் |
|
|
|
கனைகழல் ஈசனைக் காண அரிதாம் |
|
|
|
கனைகழல் ஈசனைக் காண்குற வல்லார் |
|
|
|
புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே. 4 |
|
|
|
|
|
|
|
1827 |
|
|
|
மஞ்சன மாலை நிலாவிய வானவர் |
|
|
|
நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம் |
|
|
|
அஞ்சமு தாம்உப சாரம்எட்டு எட்டோ டும் |
|
|
|
அஞ்சலி யோடும் கலந்துஅர்ச்சித் தார்களே. 5 |
|
|
|
|
|
|
|
1828 |
|
|
|
புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு |
|
|
|
அண்ணல் அதுகண்டு அருள்புரி யாநிற்கும் |
|
|
|
எண்ணிலி பாவிகள் எம்இறை ஈசனை |
|
|
|
நண்ணறி யாமல் நழுவுகின் றாரே. 6 |
|
|
|
|
|
|
|
1829 |
|
|
|
அத்தன் நவதீர்த்தம் ஆடும் பரிசுகேள் |
|
|
|
ஒத்தமெய்ஞ் ஞானத்து உயர்ந்தார் பதத்தைச் |
|
|
|
சுத்தம தாக விளக்கித் தெளிக்கவே |
|
|
|
முத்தியாம் என்று நம்மூலன் மொழிந்ததே. 7 |
|
|
|
|
|
|
|
1830 |
|
|
|
மறப்புற்று இவ்வழி மன்னிநின் றாலும் |
|
|
|
சிறப்பொடு பூநீர் திருந்தமுன் ஏந்தி |
|
|
|
மறப்பின்றி யுன்னை வழிபடும் வண்ணம் |
|
|
|
அறப்பெற வேண்டும் அமரர் பிரானே. 8 |
|
|
|
|
|
|
|
1831 |
|
|
|
ஆரா தனையும் அமரர் குழாங்களும் |
|
|
|
தீராக் கடலும் நிலத்துஉம தாய்நிற்கும் |
|
|
|
பேரா யிரமும் பிரான்திரு நாமமும் |
|
|
|
ஆரா வழியெங்கள் ஆதிப் பிரானே. 9 |
|
|
|
|
|
|
|
1832 |
|
|
|
ஆன்ஐந்தும் ஆட்டி அமரர் கணம்தொழத் |
|
|
|
தான்அந்த மில்லாத் தலைவன் அருளது |
|
|
|
தேன்உந்து மாமலர் உள்ளே தெளிந்ததோர் |
|
|
|
பார்ஐங் குணமும் படைத்துநின் றானே. 10 |
|
|
|
|
|
|
|
1833 |
|
|
|
உழைக்கொண்ட பூநீர் ஒருங்குடன் ஏந்தி |
|
|
|
மழைக்கொண்ட மாமுகில் மேற்சென்று வானோர் |
|
|
|
தழைக்கொண்ட பாசம் தயங்கிநின்று ஏத்தப் |
|
|
|
பிழைப்பின்றி எம்பெரு மான்அரு ளாமே. 11 |
|
|
|
|
|
|
|
1834 |
|
|
|
வெள்ளக் கடலுள் விரிசடை நந்திக்கு |
|
|
|
உள்ளக் கடற்புக்கு வார்சுமை பூக்கொண்டு |
|
|
|
கள்ளக் கடல்விட்டுக்கைதொழ மாட்டாதார் |
|
|
|
அள்ளக் கடலுள் அழுந்துகின் றாரே. 12 |
|
|
|
|
|
|
|
1835 |
|
|
|
கழிப்படுந் தண்கடற் கௌவை யுடைத்து |
|
|
|
வழிப்படு வார்மலர் மொட்டுஅறி யார்கள் |
|
|
|
பழிப்படு வார்பல ரும்பழி வீழ |
|
|
|
வெளிப்படு வோர்உச்சி மேவிநின் றானே. 13 |
|
|
|
|
|
|
|
1836 |
|
|
|
பயனறிவு ஒன்றுண்டு பன்மலர் தூவிப் |
|
|
|
பயனறி வார்க்குஅரன் தானே பயிலும் |
|
|
|
நயனங்கள் மூன்றுடை யான்அடி சேர |
|
|
|
வயனங்க ளால்என்றும் வந்துநின் றானே. 14 |
|
|
|
|
|
|
|
1837 |
|
|
|
ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின்று |
|
|
|
ஆர்த்தெமது ஈசன் அருட்சே வடியென்றன் |
|
|
|
மூர்த்தியை மூவா முதலுறு வாய்நின்ற |
|
|
|
தீர்த்தனை யாரும் துதித்துஉண ராரே. 15 |
|
|
|
|
|
|
|
1838 |
|
|
|
தேவர்க ளோடுஇசை வந்துமண் ணோடுறும் |
|
|
|
பூவொடு நீர்சுமந்து ஏத்திப் புனிதனை |
|
|
|
மூவரிற் பன்மை முதல்வனாய் நின்றருள் |
|
|
|
நீர்மையை யாவர் நினைக்கவல் லாரே. 16 |
|
|
|
|
|
|
|
1839 |
|
|
|
உழைக்கவல் லோர்நடு நீர்மலர் ஏந்திப் |
|
|
|
பிழைப்பின்றி ஈசன் பெருந்தவம் பேணி |
|
|
|
இழைக்கொண்ட பாதத்து இனமலர் தூவி |
|
|
|
மழைக்கொண்டல் போலவே மன்னிநில் லீரே. 17 |
|
|
|
|
|
|
|
1840 |
|
|
|
வென்று விரைந்து விரைப்பணி என்றனர் |
|
|
|
நின்று பொருந்த இறைபணி நேர்படத் |
|
|
|
துன்று சலமலர் தூவித் தொழுதிடில் |
|
|
|
கொண்டிடும் நித்தலும் கூறியஅன்றே. 18 |
|
|
|
|
|
|
|
1841 |
|
|
|
சாத்தியும் வைத்தும் சயம்புஎன்று ஏத்தியும் |
|
|
|
ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார் |
|
|
|
ஆத்தி மலக்கிட்டு அகத்துஇழுக்கு அற்றக்கான் |
|
|
|
மாத்திக்கே செல்லும் வழியது வாமே. 19 |
|
|
|
|
|
|
|
1842 |
|
|
|
ஆவிக் கமலத்தில் அப்புறத்து இன்புற |
|
|
|
மேவித் திரியும் விரிசடை நந்தியைக் |
|
|
|
கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடைத் |
|
|
|
தாவிக்கு மந்திரம் தாமறி யாரே. 20 |
|
|
|
|
|
|
|
1843 |
|
|
|
காண்ஆகத் துள்ளேஅழுந்திய மாணிக்கம் |
|
|
|
காணும் அளவும் கருத்தறி வாரில்லை |
|
|
|
பேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவோர்க்கு |
|
|
|
மாணிக்க மாலை மனம்புகுந் தானே. 21 |
|
|
|
|
|
|
|
1844 |
|
|
|
பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமி |
|
|
|
இருந்தன்மை யாலும் என் நெஞ்சுஇடங் கொள்ள |
|
|
|
வருந்தன்மை யாளனை வானவர் தேவர் |
|
|
|
தருந்தன்மை யாளனைத் தாங்கிநின் றாரே. 22 |
|
|
|
|
|
|
|
1845 |
|
|
|
சமைய மலசுத்தி தன்செயல் அற்றிடும் |
|
|
|
அமையும் விசேடமும் ஆனமந் திரசுத்தி |
|
|
|
சமையநிர் வாணம் கலாசுத்தி யாகும் |
|
|
|
அமைமன்று ஞானம் ஆனார்க்கு அபிடேகமே. 23 |
|
|
|
|
|
|
|
1846 |
|
|
|
ஊழிதோ றூழி உணர்ந்தவர்க்கு அல்லது |
|
|
|
ஊழில் உயிரை உணரவும் தான்ஒட்டா |
|
|
|
ஆழி அமரும் அரிஅயன் என்றுளோர் |
|
|
|
ஊழி கடந்தும் ஓர்உச்சியு ளானே. 24 |
|
|
|
|
|
|
|
12. குருபூசை |
|
|
|
|
|
|
|
1847 |
|
|
|
ஆகின்ற நந்தி அடித்தா மரைபற்றிப் |
|
|
|
போகின்றுபதேசம் பூசிக்கும் பூசையும் |
|
|
|
ஆகின்ற ஆதாரம் ஆறாறு அதனின்மேல் |
|
|
|
போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே. 1 |
|
|
|
|
|
|
|
1848 |
|
|
|
கானுறு கோடி கடிகமழ் சந்தனம் |
|
|
|
வானுற மாமலர் இட்டு வணங்கினும் |
|
|
|
ஊனினை நீக்கி உணர்பவர்க்கு அல்லது |
|
|
|
தேனமர் புங்குழல் சேரஒண் ணாதே. 2 |
|
|
|
|
|
|
|
1849 |
|
|
|
மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன் |
|
|
|
ஆவயின் ஞான நெறிநிற்றல் அர்ச்சனை |
|
|
|
ஓவற உட்பூ சனைசெய்யில் உத்தமம் |
|
|
|
சேவடி சேரல் செயலறல் தானே. 3 |
|
|
|
|
|
|
|
1850 |
|
|
|
உச்சியும் காலையும் மாலையும் ஈசனை |
|
|
|
நச்சுமின் நச்சி நமவென்று நாமத்தை |
|
|
|
விச்சிமின் விச்சு விரிசுடர் மூன்றினும் |
|
|
|
நச்சுமின் பேர்நந்தி நாயகன் ஆகுமே. 4 |
|
|
|
|
|
|
|
1851 |
|
|
|
புண்ணிய மண்டலம் பூசைநா றாகுமாம் |
|
|
|
பண்ணிய மேனியும் பத்துநூ றாகுமாம் |
|
|
|
எண்ணிலிக்கு ஐயம் இடில்கோடி யாகுமால் |
|
|
|
பண்ணிடில் ஞானிஊண் பார்க்கில் விசேடமே. 5 |
|
|
|
|
|
|
|
1852 |
|
|
|
இந்துவும் பானுவும் இலங்கும் தலத்திடை |
|
|
|
வந்தித்த தெல்லாம் அசுரர்க்கு வாரியாம் |
|
|
|
இந்துவும் பானுவும் இலங்காத் தலத்திடை |
|
|
|
வந்தித்தல் நந்திக்கு மாபூசை யாமே. 6 |
|
|
|
|
|
|
|
1853 |
|
|
|
இந்துவும் பானுவும் என்றெழு கின்றதோர் |
|
|
|
விந்துவும் நாதமும் ஆகிமீ தானத்தே |
|
|
|
சிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டு |
|
|
|
நந்தியைப் பூசிக்க நற்பூசை யாமே. 7 |
|
|
|
|
|
|
|
1854 |
|
|
|
மனபவ னங்களை மூலத்தான் மாற்றி |
|
|
|
அனித உடல்பூத மாக்கி அகற்றிப் |
|
|
|
புனிதன் அருள்தனில் புக்கிருந்து இன்பத் |
|
|
|
தனியுறு பூசை சதாசிவற்கு ஆமே. 8 |
|
|
|
|
|
|
|
1855 |
|
|
|
பகலும் இரவும் பயில்கின்ற பூசை |
|
|
|
இயல்புடை ஈசர்க்கு இணைமல ராகப் |
|
|
|
பகலும் இரவும் பயிலாத பூசை |
|
|
|
சகலமும் தான்கொள்வன் தாழ்சடை யோனே. 9 |
|
|
|
|
|
|
|
1856 |
|
|
|
இராப்பகல் அற்ற இடத்தே இருந்து |
|
|
|
பராக்குஅற ஆனந்தத் தேறல் பருகி |
|
|
|
இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து |
|
|
|
இராப்பகல் மாயை இரண்டுஇடத் தேனே. 10 |
|
|
|
|
|
|
|
13. மகேசுவர பூசை |
|
|
|
|
|
|
|
1857 |
|
|
|
படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில் |
|
|
|
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா |
|
|
|
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் |
|
|
|
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே. 1 |
|
|
|
|
|
|
|
1858 |
|
|
|
தண்டுஅறு சிந்தை தபோதனார் தாம்மகிழ்ந்து |
|
|
|
உண்டது மூன்று புவனமும் உண்டது |
|
|
|
கொண்டது மூன்று புவனமும் கொண்டதுஎன்று |
|
|
|
எண்திசை நந்தி எடுத்துரைத் தானே. 2 |
|
|
|
|
|
|
|
1859 |
|
|
|
மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்துறை |
|
|
|
ஆத்தனுக்கு ஈந்த அரும்பொரு ளானது |
|
|
|
மூர்த்திகள் மூவர்க்கும் மூவேழ் குரவர்க்கும் |
|
|
|
தீர்த்தம தாம்அது தேர்ந்துகொள் வீரே. 3 |
|
|
|
|
|
|
|
1860 |
|
|
|
அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என் |
|
|
|
சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில்என் |
|
|
|
பகரு ஞானி பகல்ஊண் பலத்துக்கு |
|
|
|
நிகரில்லை என்பது நிச்சயம் தானே. 4 |
|
|
|
|
|
|
|
1861 |
|
|
|
ஆறிடும் வேள்வி அருமறை நூலவர் |
|
|
|
கூறிடும் அந்தணர் கோடிபேர் உண்பதில் |
|
|
|
நீறிடும் தொண்டர் நினைவின் பயனிலை |
|
|
|
பேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே. 5 |
|
|
|
|
|
|
|
1862 |
|
|
|
ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்று |
|
|
|
நீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள் |
|
|
|
ஆறணி செஞ்சடை அண்ணல் இவர்என்று |
|
|
|
வேறுஅணி வார்க்கு வினையில்லை தானே. 6 |
|
|
|
|
|
|
|
1863 |
|
|
|
சீர்நந்தி கொண்டு திருமுக மாய்விட்ட |
|
|
|
பேர்நந்தி என்னும் பிறங்கு சடையனை |
|
|
|
நான்நொந்து நொந்து வருமளவுஞ் சொல்லப் |
|
|
|
பேர்நந்தி என்னும் பிதற்குஒழி யேனே. 7 |
|
|
|
|
|
|
|
1864 |
|
|
|
அழிதகவு இல்லா அரன்அடி யாரைத் |
|
|
|
தொழுகை ஞாலத்துத் தூfங்கிருள் நீங்கும் |
|
|
|
பழுது படாவண்ணம் பண்பனை நாடித் |
|
|
|
தொழுதெழ வையகத்து ஓர்இன்பம் ஆமே. 8 |
|
|
|
|
|
|
|
1865 |
|
|
|
பகவற்குஏதா கிலும் பண்பில ராகிப் |
|
|
|
புகுமத்த ராய்நின்று பூசனை செய்யும் |
|
|
|
முகமத்தோடு ஒத்துநின்று ஊழிதோ றூழி |
|
|
|
அகமத்த ராகிநின்று ஆய்ந்தொழிந் தா ரே 9 |
|
|
|
|
|
|
|
1866 |
|
|
|
வித்தக மாகிய வேடத்தர் உண்டஊன் |
|
|
|
அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம் |
|
|
|
சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடின் |
|
|
|
முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே. 10 |
|
|
|
|
|
|
|
1867 |
|
|
|
தாழ்விலர் பின்னும் முயல்வர் அருந்தவம் |
|
|
|
ஆழ்வினை ஆழ அவர்க்கே அறஞ்செய்யும் |
|
|
|
ஆழ்வினை நீக்கி அருவினை தன்னொடும் |
|
|
|
போழ்வினை தீர்க்கும் அப் பொன்னுலகு ஆமே. 11 |
|
|
|
|
|
|
|
14. அடியார் பெருமை |
|
|
|
|
|
|
|
1868 |
|
|
|
திகைக்குரி யானொரு தேவனை நாடும் |
|
|
|
வகைக்குரி யானொரு வாது இருக்கில் |
|
|
|
பகைக்குரி யாரில்லைப் பார்மழை பெய்யும் |
|
|
|
அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே. 1 |
|
|
|
|
|
|
|
1869 |
|
|
|
அவ்வுல கத்தே பிறந்துஅவ் உடலோணடும் |
|
|
|
அவ்வுல கத்தே அருந்தவம் நாடுவர் |
|
|
|
அவ்வுல கத்தே அரனடி கூடுவர் |
|
|
|
அவ்வுல கத்தே அருள்பெறு வாரே. 2 |
|
|
|
|
|
|
|
1870 |
|
|
|
கொண்ட குறியும் குலவரை உச்சியும் |
|
|
|
அண்டரும் அண்டத்து அமரரும் ஆதியும் |
|
|
|
எண்டிசை யோரும்வந்து என்கைத் தலத்தினுள் |
|
|
|
உண்டெனில் நாம்இனி உய்ந்தொழிந் தோமே. 3 |
|
|
|
|
|
|
|
1871 |
|
|
|
அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும் |
|
|
|
கொண்ட சராசரம் முற்றும் குணங்களும் |
|
|
|
பண்டை மறையும் படைப்பளிப்பு ஆதியும் |
|
|
|
கண்டசிவனும்என் கண்ணன்றி இல்லையே. 4 |
|
|
|
|
|
|
|
1872 |
|
|
|
பெண்ணல்ல ஆணல்ல பேடல்ல மூடத்துள் |
|
|
|
உள்நின்ற சோதி ஒருவர்க்கு அறியொணாக் |
|
|
|
கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிரும் |
|
|
|
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே. 5 |
|
|
|
|
|
|
|
1873 |
|
|
|
இயங்கும் உலகினில் ஈசன் அடியார் |
|
|
|
மயங்கா வழிசெல்வர் வானுலகு ஆள்வர் |
|
|
|
புயங்களும் எண்டிசை போதுபா தாள |
|
|
|
மயங்காப் பகிரண்ட மாமுடி தானே. 6 |
|
|
|
|
|
|
|
1874 |
|
|
|
அகம்படி கின்றநம் ஐயனை ஒரும் |
|
|
|
அகம்படி கண்டவர் அல்லலில் சேரார் |
|
|
|
அகம்படி உட்புக்கு அறிகின்ற நெஞ்சம் |
|
|
|
அகம்படி கண்டுஆம் அழிக்கலும் எட்டே. 7 |
|
|
|
|
|
|
|
1875 |
|
|
|
கழிவும் முதலும் காதல் துணையும் |
|
|
|
அழிவும் தாய்நின்ற ஆதிப் பிரானைப் |
|
|
|
பழியும் புகழும் படுபொருள் முற்றும் |
|
|
|
ஒழியும்என் ஆவி உழவுகொண் டானே 8 |
|
|
|
|
|
|
|
1876 |
|
|
|
என்தாயோடு என்அப்பன் ஏழ்ஏழ் பிறவியும் |
|
|
|
அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம் |
|
|
|
ஒன்றாய் உலகம் படைத்தான் எழுதினான் |
|
|
|
நின்றான் முகில்வண்ணன் நேர்எழுத் தாமே. 9 |
|
|
|
|
|
|
|
1877 |
|
|
|
துணிந்தார் அகம்படி துன்னி உறையும் |
|
|
|
பணிந்தார் அகம்படி பால்பட்டு ஒழுகும் |
|
|
|
அணிந்தார் அகம்படி ஆதிப் பிரானைக் |
|
|
|
கணிந்தார் ஒருவர்க்கு கைவிடலாமே. 10 |
|
|
|
|
|
|
|
1878 |
|
|
|
தலைமிசை வானவர் தாழ்சடை நந்தி |
|
|
|
மிலைமிசை வைத்தனன் மெய்ப்பணி செய்யப் |
|
|
|
புலைமிசை நீங்கிய பொன்னுலகு ஆளும் |
|
|
|
பலமிசை செய்யும் படர்சடை யோனே. 11 |
|
|
|
|
|
|
|
1879 |
|
|
|
அறியாப் பருவத்து அரன்அடி யாரைக் |
|
|
|
குறியால் அறிந்தின்பம் கொண்டது அடிமை |
|
|
|
குறியார் சடைமுடி கட்டி நடப்பார் |
|
|
|
மறியார் புனல்மூழ்க மாதவம் ஆமே. 12 |
|
|
|
|
|
|
|
1880 |
|
|
|
அவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள் |
|
|
|
சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லன் |
|
|
|
அவன்பால் அணுகியே நாடும் அடியார் |
|
|
|
இவன்பால் பெருமை இலயமது ஆமே. 13 |
|
|
|
|
|
|
|
1881 |
|
|
|
முன்னிருந் தார்முழுது எண்கணத் தேவர்கள் |
|
|
|
எண்ணிறந்து அன்பால் வருவர் இருநிலத்து |
|
|
|
எண்இரு நாலு திசைஅந் தரம் ஒக்கப் |
|
|
|
பன்னிரு காதம் பதஞ்செய்யும் பாரே. 14 |
|
|
|
|
|
|
|
1882 |
|
|
|
சிவயோகி ஞானி செறிந்தஅத் தேசம் |
|
|
|
அவயோகம் இன்றி அறிவோர் உண்டாகும் |
|
|
|
நவயோகம் கைகூடும் நல்லியல் காணும் |
|
|
|
பவயோகம் இன்றிப் பரலோகம் ஆமே. 15 |
|
|
|
|
|
|
|
1883 |
|
|
|
மேலுணர் வான்மிகு ஞாலம் படைத்தவன் |
|
|
|
மேலுணர் வான்மிகு ஞாலம் கடந்தவன் |
|
|
|
மேலுணர் வார்மிகு ஞாலத்து அமரர்கள் |
|
|
|
மேலுணுர் வார்சிவன் மெய்யடி யார்களே. 16 |
|
|
|
|
|
|
|
15. போசன விதி |
|
|
|
|
|
|
|
1884 |
|
|
|
எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு |
|
|
|
கட்ட அடிசில் அழுதென்று எதிர்கொள்வர் |
|
|
|
ஒட்டி ஒருநிலம் ஆள்பவர் அந்நிலம் |
|
|
|
விட்டுக் கிடக்கில் விருப்பறி யாரே. 1 |
|
|
|
|
|
|
|
1885 |
|
|
|
அச்சிவன் உள்நின்ற அருளை அறிந்தவர் |
|
|
|
உச்சியம் போதாக உள்ளமர் கோவிற்குப் |
|
|
|
பிச்சை பிடித்துண்டு பேதம் அறநினைந்து |
|
|
|
இச்சைவிட்டு ஏகாந்தத்து ஏறி இருப்பரே. 2 |
|
|
|
|
|
|
|
16. பிட்சா விதி |
|
|
|
|
|
|
|
1886 |
|
|
|
விச்சுக் கலம் உண்டு வேலிச்செய் ஒன்றுண்டு |
|
|
|
உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது |
|
|
|
அச்சம்கெட்டு அச்செயல் அறுத்துண்ண மாட்டாதார் |
|
|
|
இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே. 1 |
|
|
|
|
|
|
|
1887 |
|
|
|
பிச்சையது ஏற்றான் பிரமன் தலைதன்னில் |
|
|
|
பிச்சையது ஏற்றான் பிரியா அறஞ்செய்யப் |
|
|
|
பிச்சையது ஏற்றான் பிரமன் சிரங்காட்டிப் |
|
|
|
பிச்சையது ஏற்றான் பிரமன் பரமாகவே. 2 |
|
|
|
|
|
|
|
1888 |
|
|
|
பரந்துலகு ஏழும் படைத்த பிரானை |
|
|
|
இரந்துணி என்பர்கள் எற்றுக்கு இரக்கும் |
|
|
|
நிரந்தக மாக நினையும் அடியார் |
|
|
|
இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே. 3 |
|
|
|
|
|
|
|
1889 |
|
|
|
வரஇருந் தான்வழி நின்றிடும் ஈசன் |
|
|
|
தரஇருந் தான்தன்னை நல்லவர்க்கு இன்பம் |
|
|
|
பொரஇருந் தான்புக லேபுக லாக |
|
|
|
வரஇருந் தால்அறி யான்என்ப தாமே. 4 |
|
|
|
|
|
|
|
1890 |
|
|
|
அங்கார் பசியும் அவாவும் வெகுளியும் |
|
|
|
தங்கார் சிவனடி யார்சரீரத்திடைப் |
|
|
|
பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்தும் |
|
|
|
தங்கார் சிவனைத் தலைப்படு வாரே. 5 |
|
|
|
|
|
|
|
1891 |
|
|
|
மெய்யக ஞானம் மிகத்தெளிந் தார்களும் |
|
|
|
கையதும் நீண்டார் கடைத்தலைக் கேசெல்வர் |
|
|
|
ஐயம் புகாமல் இருந்த தவசியார் |
|
|
|
வையகம் எல்லாம் வரஇருந்தாரே. 6 |
|
|
|
|
|
|
|
17. முத்திரை பேதம் |
|
|
|
|
|
|
|
நாலேழு மாறவே நண்ணிய முத்திரை |
|
|
|
பாலான மோன மொழியில் பதிவித்து |
|
|
|
மேலான நந்தி திருவடி மீதுய்யக் |
|
|
|
கோலா கலங்கெட்டுக் கூடுநன் முத்தியே. 1 |
|
|
|
|
|
|
|
1893 |
|
|
|
துரியங்கள் மூன்று சொருகுஇட னாகி |
|
|
|
அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி |
|
|
|
மருவிய சாம்பவி கேசரி உண்மை |
|
|
|
பெருகிய ஞானம் பிறழ்முத் திரையே. 2 |
|
|
|
|
|
|
|
1894 |
|
|
|
சாம்பவி நந்தி தன்னருள் பார்வையாம் |
|
|
|
ஆம்பவம் இல்லா அருட்பாணி முத்திரை |
|
|
|
ஓம்பயில் ஒங்கிய உண்மைய கேசரி |
|
|
|
நாம்பயில் நாதன்மெய்ஞ் ஞானமுத் திரையே. 3 |
|
|
|
|
|
|
|
1895 |
|
|
|
தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும் |
|
|
|
ஞானத்தின் உள்ளே நற்சிவம் ஆதலால் |
|
|
|
ஏனைச் சிவமாம் சொரூபம் மறைந்திட்ட |
|
|
|
மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே. 4 |
|
|
|
|
|
|
|
1896 |
|
|
|
வாக்கு மனமும் இரண்டும் மவுனமாம் |
|
|
|
வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம் |
|
|
|
வாக்கு மனமும் மவுனமாம் சுத்தரே |
|
|
|
ஆக்கும் அச் சுத்த்ததை யார்அறி வார்களே. 5 |
|
|
|
|
|
|
|
1897 |
|
|
|
யோகத்தின் முத்திரை ஓர்அட்ட சித்தியாம் |
|
|
|
ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணுங்கால் |
|
|
|
ஆகத் தகும்வேத கேசரி சாம்பவி |
|
|
|
யோகத்துக் கேசரி யோகமுத் திரையே. 6 |
|
|
|
|
|
|
|
1898 |
|
|
|
யோகிஎண் சித்தி அருளொலி வாதனை |
|
|
|
போகி தன் புத்தி புருடார்த்த நன்னெறி |
|
|
|
ஆகும்நன் சத்தியும் ஆதார சோதனை |
|
|
|
ஏகமும் கண்டொன்றில் எய்திநின் றானே. 7 |
|
|
|
|
|
|
|
1899 |
|
|
|
துவாதச மார்க்கமென் கோடச மார்க்கமாம் |
|
|
|
அவாஅறும் ஈர்ஐ வகைஅங்கம் ஆறும் |
|
|
|
தவாஅறு வேதாந்த சித்தாந்தத் தன்மை |
|
|
|
நவாஅக மோடுஉன்னல் நற்சுத்த சைவமே. 8 |
|
|
|
|
|
|
|
1900 |
|
|
|
மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை |
|
|
|
ஞானத்து முத்திரை நாதர்க்கு முத்திரை |
|
|
|
தேனிக்கும் முத்திரை சித்தாந்த முத்திரை |
|
|
|
கானிக்கும் முத்திரை கண்ட சமயமே. 9 |
|
|
|
|
|
|
|
1901 |
|
|
|
தூநெறி கண்ட சுவடு நடுவுஎழும் |
|
|
|
பூநெறி கண்டுஅது பொன்னக மாய்நிற்கும் |
|
|
|
மேல்நெறி கண்டது வெண்மதி மேதினி |
|
|
|
நீல்நெறி கண்டுள நின்மலன் ஆமே. 10 |
|
|
|
|
|
|
|
18. பூரணக் குகை நெறிச் சமாதி |
|
|
|
|
|
|
|
1902 |
|
|
|
வளர்பிறை யில்தேவர் தம்பாலின் முன்னி |
|
|
|
உளரொளி பானுவின் உள்ளே ஒடுங்கித் |
|
|
|
தளர்வில் பிதிர்பதம் தங்கிச் சசியுள் |
|
|
|
உளதுறும் யோகி உடல்விட்டால் தானே. 1 |
|
|
|
|
|
|
|
1903 |
|
|
|
தான்இவை ஒக்கும் சமாதிaக கூடாது |
|
|
|
போன வியோகி புகலிடம் போந்துபின் |
|
|
|
ஆனவை தீர நிரந்தர மாயோகம் |
|
|
|
ஆனவை சேர்வார் அருளின் சார் வாகியே. 2 |
|
|
|
|
|
|
|
1904 |
|
|
|
தான்இவ் வகையே புவியோர் நெறிதங்கி |
|
|
|
ஆன சிவயோகத்து ஆமாறுஆம் அவ்விந்து |
|
|
|
தானதில் அந்தச் சிவயோகி ஆகுமுன் |
|
|
|
ஊனத்தோர் சித்திவந்து ஓர்காயம் ஆகுமே. 3 |
|
|
|
|
|
|
|
1905 |
|
|
|
சிவயோகி ஞானி சிதைந்துடல் விட்டால் |
|
|
|
தவலோகம் சேர்ந்துபின் தான்வந்து கூடிச் |
|
|
|
சிவயோக ஞானத்தால் சேர்ந்தவர் நிற்பர் |
|
|
|
புவலோகம் போற்றும்நற் புண்ணியத்தோரே. 4 |
|
|
|
|
|
|
|
1906 |
|
|
|
ஊனமில் ஞானிநல் யோகி உடல்விட்டால் |
|
|
|
தானற மோனச் சமாதியுள் தங்கியே |
|
|
|
தானவன் ஆகும் பரகாயம் சாராதே |
|
|
|
ஊனமில் முத்தராய் மீளார் உணர்வுற்றே. 5 |
|
|
|
|
|
|
|
1907 |
|
|
|
செத்தார் பெறும் பயன் ஆவது ஏதெனில் |
|
|
|
செத்துநீர் சேர்வது சித்தினைக் கூடிடில் |
|
|
|
செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம் |
|
|
|
செத்தார் சிவமாகி யேசித்தர் தாமே. 6 |
|
|
|
|
|
|
|
1908 |
|
|
|
உன்னக் கருவிட்டு உரவோன் அரன்அருள் |
|
|
|
பன்னப் பரமே அருட்குலம் பாலிப்பன் |
|
|
|
என்னப் புதல்வர்க்கும் வேண்டி யிடுஞானி |
|
|
|
தன்இச்சைக்கு ஈசன் உருச்செய்யும் தானே. 7 |
|
|
|
|
|
|
|
1909 |
|
|
|
எங்கும் சிவமாய் அருளாம் இதயத்துத் |
|
|
|
தங்கும் சிவஞானிக்கு எங்குமாம் தற்பரம் |
|
|
|
அங்காங்கு எனநின்று சகமுண்ட வான்தோய்தல் |
|
|
|
இங்கே இறந்துஎங்கு மாய்நிற்கும் ஈசனே. 8 |
|
|
|
|
|
|
|
19. சமாதிக் கிரியை |
|
|
|
|
|
|
|
1910 |
|
|
|
அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில் |
|
|
|
வெந்திடின் நாடெலாம் வெப்புத் தீயினில் |
|
|
|
நொந்து நாய்நரி நுகரின் நுண்செரு |
|
|
|
வந்துநாய் நரிக்கு உணவாகும் வையகமே. 1 |
|
|
|
|
|
|
|
1911 |
|
|
|
எண்ணிலா ஞானி உடல்எரி தாவிடில் |
|
|
|
அண்ணல்தம் கோயில் அழல்இட்டது ஆங்கு ஒக்கும் |
|
|
|
மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம் |
|
|
|
எண்ணரு மன்னர் இழப்பார் அரசே. 2 |
|
|
|
|
|
|
|
1912 |
|
|
|
புண்ணிய மாம்அவர் தம்மைப் புதைப்பது |
|
|
|
நண்ணி அனல்கோக்கில் நாட்டில் அழிவாகும் |
|
|
|
மண்ணில் அழியில் அலங்கார பங்கமாம் |
|
|
|
மண்ணுலகு எல்லாம் மயங்கும் அனல்மண்டியே. 3 |
|
|
|
|
|
|
|
1913 |
|
|
|
அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால் |
|
|
|
அந்த உடல்தான் குகைசெய்து இருந்திடில் |
|
|
|
சுந்தர மன்னரும் தொல்புவி உள்ளோரும் |
|
|
|
அந்தமில் இன்ப அருள்பெறு வாரே. 4 |
|
|
|
|
|
|
|
1914 |
|
|
|
நவமிகு சாணாலே நல்லாழம் செய்து |
|
|
|
குவைமிகு சூழஐஞ் சாணாகக் கோட்டித் |
|
|
|
தவமிகு குகைமுக் கோணமுச் சாணாக்கிப் |
|
|
|
பவமறு நற்குகை பத்மா சனமே. 5 |
|
|
|
|
|
|
|
1915 |
|
|
|
தன்மனை சாலை குளங்கரை ஆற்றிடை |
|
|
|
நன்மலர்ச் சோலை நகரின்நற் பூமி |
|
|
|
உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல் |
|
|
|
இந்நிலம் தான்குகைக்கு எய்தும் இடங்களே. 6 |
|
|
|
|
|
|
|
1916 |
|
|
|
நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய் |
|
|
|
நிற்கின்ற பாதம் நவபாதம் நேர்விழப் |
|
|
|
பொற்பமா ஓசமும் மூன்றுக்கு மூன்றுஅணி |
|
|
|
நிற்பவர் தாம் செய்யும் நேர்மைய தாமே. 7 |
|
|
|
|
|
|
|
1917 |
|
|
|
பஞ்ச லோகங்கள் நவமணி பாரித்து |
|
|
|
விஞ்சப் படுத்துஅதன் மேல்ஆ சனம்இட்டு |
|
|
|
முஞ்சிப் படுத்துவெண் ணீறு இட்ட தன்மேலே |
|
|
|
பொன்செய் நற்சுண்ணம் பொதியலும் ஆமே. 8 |
|
|
|
|
|
|
|
1918 |
|
|
|
நள்குகை நால்வட்டம் படுத்துஅதன் மேல்சாரக் |
|
|
|
கள்ளவிழ தாமம் களபம்கத் தூரியும் |
|
|
|
தெள்ளிய சாந்து புழுகுபன் னீர்சேர்த்து |
|
|
|
ஒள்ளிய தூபம் உவந்திடு வீரே. 9 |
|
|
|
|
|
|
|
1919 |
|
|
|
ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாயம் |
|
|
|
மீதினில் இட்டுஆ சனத்தினின் மேல் வைத்துப் |
|
|
|
போதறு கண்ணமும் நறும் பொலிவித்து |
|
|
|
மீதில் இருத்தி விரித்திடு வீரே. 10 |
|
|
|
|
|
|
|
1920 |
|
|
|
விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்து |
|
|
|
பொரித்த கறிபோ னகம் இள நீரும் |
|
|
|
குருத்தலம் வைத்துஓர் குழைமுகம் பார்வை |
|
|
|
தரித்தபின் மேல்வட்டம் சாத்திடு வீரே. 11 |
|
|
|
|
|
|
|
1921 |
|
|
|
மீது சொரிந்திடும் வெண்ணீறும் கண்ணமும் |
|
|
|
போது பலகொண்டு தர்ப்பைப்புல் வில்வமும் |
|
|
|
பாத உதகத்தான் மஞ்சனம் செய்துபார் |
|
|
|
மீதுமூன் றுக்குமூன்று அணிநிலம் செய்யுமே. 12 |
|
|
|
|
|
|
|
1922 |
|
|
|
ஆதன மீதில் அரசு சிவலிங்கம் |
|
|
|
போதும் இரண்டினில் ஒன்றைத் தாபித்து |
|
|
|
மேதரு சந்நிதி மேவுத் தரம்பூர்வம் |
|
|
|
காதலில் சோடசம் காண்உப சாரமே. 13 |
|
|
|
|
|
|
|
20. விந்துற்பனம் |
|
|
|
|
|
|
|
1923 |
|
|
|
உதயத்தில் விந்துவில் ஓங்குகுண் டலியும் |
|
|
|
உதயக் குடிலில் வயிந்தவம் ஒன்பான் |
|
|
|
விதியில் பிரமாதி கள்மிகு சத்தி |
|
|
|
கதியில் கரணம் கலைவை கரியே. 1 |
|
|
|
|
|
|
|
1924 |
|
|
|
செய்திடும் விந்துபே தத்திறன் ஐ ஐந்தும் |
|
|
|
செய்திடும் நாதபேதத்திற னால் ஆறும் |
|
|
|
செய்திடும் மற்றவை ஈர்இரண்டில்திறம் |
|
|
|
செய்திடும் ஆறுஆறு சேர்தத் துவங்களே. 2 |
|
|
|
|
|
|
|
1925 |
|
|
|
வந்திடு பேத மெலாம்பர விந்துமேல் |
|
|
|
தந்திடு மாமாயை வாகேசி தற்பரை |
|
|
|
உந்து குடிலையோடு ஏமுறு குண்டலி |
|
|
|
விந்துவில் இந்நான்கும் மேவா விளங்குமே. 3 |
|
|
|
|
|
|
|
1926 |
|
|
|
விளங்கு நிவர்த்தாதி மேலக ராதி |
|
|
|
வளங்கொள் உகாரம் மகாரத் துள்விந்து |
|
|
|
களங்கமில் நாதாந்தம் கண்ணினுள் நண்ணி |
|
|
|
உளங்கொள் மனாதியுள் அந்தமும் ஆமே. 4 |
|
|
|
|
|
|
|
1927 |
|
|
|
அந்தமும் ஆதியும் ஆகிப் பராபரன் |
|
|
|
வந்த வியாபி எனலாய அந்நெறி |
|
|
|
கந்தம தாகிய காரண காரியம் |
|
|
|
தந்துஐங் கருமமும் தான்செய்யும் வீயமே. 5 |
|
|
|
|
|
|
|
1928 |
|
|
|
வீயம தாகிய விந்துவின் சத்தியால் |
|
|
|
ஆய அகண்டமும் அண்டமும் பாரிப்பக் |
|
|
|
காயஐம் பூதமும் காரிய மாயையில் |
|
|
|
ஆயிட விந்து அகம்புறம் ஆகுமே. 6 |
|
|
|
|
|
|
|
1929 |
|
|
|
புறம்அகம் எங்கும் புகுந்துஒளிர் விந்து |
|
|
|
நிறமது வெண்மை நிகழ்நாதம் செம்மை |
|
|
|
உறமகிழ் சத்தி சிவபாதம் ஆயுள் |
|
|
|
திறனொடு வீடுஅளிக் கும்செயல் கொண்டே. 7 |
|
|
|
|
|
|
|
1930 |
|
|
|
கொண்டஇவ் விந்து பரமம்போல் கோதற |
|
|
|
நின்ற படம்கட மாய்நிலை நிற்றலின் |
|
|
|
கண்டக லாதியின் காரண காரியத்து |
|
|
|
அண்டம் அனைத்துமாய் மாமாயை ஆகுமே. 8 |
|
|
|
|
|
|
|
1931 |
|
|
|
அதுவித்தி லேநின்று அங்கு அண்ணிக்கும் நந்தி |
|
|
|
இதுவித்தி லேஉள வாற்றை உணரார் |
|
|
|
மதுவித்தி லேமலர் அன்னம தாகிப் |
|
|
|
பொதுவித்திலே நின்ற புண்ணியன் தானே. 9 |
|
|
|
|
|
|
|
1932 |
|
|
|
வித்தினில் அன்றி முளையில்லை அம்முளை |
|
|
|
வித்தினில் அன்றி வெளிப்படு மாறில்லை |
|
|
|
வித்தும் முளையும் உடனன்றி வேறில்லை |
|
|
|
அத்தன்மை யாரும் அரன்நெறி காணுமே. 10 |
|
|
|
|
|
|
|
1933 |
|
|
|
அருந்திய அன்னம் அவைமூன்று கூறாம் |
|
|
|
பொருந்தும் உடல்மனம் போம்மலம் என்னத் |
|
|
|
திருந்தும் உடன்மன மாம் கூறு சேர்ந்திட்டு |
|
|
|
இருந்தன முன்னாள் இரதமது ஆகுமே. 11 |
|
|
|
|
|
|
|
1934 |
|
|
|
இரதம் முதலான ஏழ்தாது மூன்றில் |
|
|
|
உரிய தினத்தில் ஒருபுல் பனிபோல் |
|
|
|
அரிய துளிவிந்து வாகும்ஏழ் மூன்றின் |
|
|
|
மருவிய விந்து வளரும்கா யத்திலே. 12 |
|
|
|
|
|
|
|
1935 |
|
|
|
காயத்தி லேமூன்று நாளில் கலந்திட்டுக் |
|
|
|
காயத்துள் தன்மனம் ஆகும் கலாவிந்து |
|
|
|
நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின் |
|
|
|
மாயத்தே செல்வோர் மனத்தோடு அழியுமே. 13 |
|
|
|
|
|
|
|
1936 |
|
|
|
அழிகின்ற விந்து அளவை அறியார் |
|
|
|
கழிகின்ற தன்னையுட் காக்கலும் தேரார் |
|
|
|
|
|
|
|
அழிகின்ற காயத்து அழிந்துஅயர் உற்றோர் |
|
|
|
அழிகின்ற தன்மை அறிந்தொழி யாரே. 14 |
|
|
|
|
|
|
|
21. விந்து ஜயம் - போக சரவோட்டம் |
|
|
|
|
|
|
|
1937 |
|
|
|
பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்றுபோய் |
|
|
|
ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல்மூட்டிப் |
|
|
|
பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே |
|
|
|
சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே. 1 |
|
|
|
|
|
|
|
1938 |
|
|
|
தானே அருளால் சிவயோகம் தங்காது |
|
|
|
தானேஅக் காமாதி தங்குவோ னும் உட்கும் |
|
|
|
தானே அதிகாரம் தங்கில் சடங்கெடும் |
|
|
|
ஊனே அவற்றுள் உயிர்ஒம்பா மாயுமே. 2 |
|
|
|
|
|
|
|
1939 |
|
|
|
மாயாள் வசத்தே சென்றிவர் வேண்டில் |
|
|
|
ஓயா இருபக்கத்து உள்வளர் பக்கத்துள் |
|
|
|
ஏயாஎண் நாள்இன்ப மேல்பனி மூன்றிரண்டு |
|
|
|
ஆயா அபரத்துள் ஆதிநாள் ஆறாமே. 3 |
|
|
|
|
|
|
|
1940 |
|
|
|
ஆறுஐந்து பன்னொன்றும் அன்றிச் சகமார்க்கம் |
|
|
|
வேறுஅன்பு வேண்டுவோர் பூவரில் பின்னம்தோடு |
|
|
|
ஏறும் இருபத் தொருநாள் இடைத்தோங்கும் |
|
|
|
ஆறின் மிகுந்தோங்கும் அக்காலம் செய்யவே. 4 |
|
|
|
|
|
|
|
1941 |
|
|
|
செய்யும் அளவில் திருநான் முகூர்த்தமே |
|
|
|
எய்யும் கலைகாலம் இந்து பருதிகால் |
|
|
|
நையுமிடத்து ஓடி நன்கா நூல்நெறி |
|
|
|
செய்க வலம் இடம் தீர்ந்து விடுக்கவே. 5 |
|
|
|
|
|
|
|
1942 |
|
|
|
விடுங்காண் முனைந்துஇந் திரியங்க ளைப் போல் |
|
|
|
நடுங்காது இருப்பானும் ஐஐந்தும் நண்ணப் |
|
|
|
படுங்காதல் மாதின்பால் பற்றற விட்டுக் |
|
|
|
கடுங்காற் கரணம் கருத்துறக் கொண்டே. 6 |
|
|
|
|
|
|
|
1943 |
|
|
|
கொண்ட குணனே நலமேநற் கோமளம் |
|
|
|
பண்டை உருவே பகர்வாய் பவளமே |
|
|
|
மிண்டு தனமே மிடைய விடும் போதில் |
|
|
|
கண்ட கரணம் உட் செல்லக்கண் டேவிடே. 7 |
|
|
|
|
|
|
|
1944 |
|
|
|
விட்டபின் கர்ப்பஉற் பத்தி விதியிலே |
|
|
|
தொட்டுறுங் காலங்கள் தோன்றக் கருதிய |
|
|
|
கட்டிய வாழ்நாள் சாம்நாள் குணம் கீழ்மைசீர்ப் |
|
|
|
பட்ட நெறியிதுஎன்று எண்ணியும் பார்க்கவே. 8 |
|
|
|
|
|
|
|
1945 |
|
|
|
பார்த்திட்டு வையத்துப் பரப்பற்று உருப்பெற்று |
|
|
|
வார்ச்செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே |
|
|
|
சேர்த்துற்று இருதிங்கள் சேராது அகலினும் |
|
|
|
மூப்புற்றே பின்னாளில் ஆம்எல்லாம் உள்ளவே. 9 |
|
|
|
|
|
|
|
1946 |
|
|
|
வித்திடு வோர்க்கு அன்றி மேலோர் விளைவில்லை |
|
|
|
வித்திடு வோர்க்கு அன்றி மிக்கோர் அறிவில்லை |
|
|
|
வித்தினில் வித்தை விதற உணர்வரேல் |
|
|
|
மத்தில் இருந்ததோர் மாங்கனி யாமே. 10 |
|
|
|
|
|
|
|
1947 |
|
|
|
கருத்தினில் அக்கரம் ஆயுவும் யாவும் |
|
|
|
கருத்துளன் ஈசன் கருஉயிரோடும் |
|
|
|
கருத்தது வித்தாய்க் காரண காரியம் |
|
|
|
கருத்தறு மாறுஇவை கற்பனை தானே. 11 |
|
|
|
|
|
|
|
1948 |
|
|
|
ஒழியாத விந்து வுடன்நிற்க நிற்கும் |
|
|
|
அழியாப் பிராணன் அதிபலஞ் சத்தி |
|
|
|
ஒழியாத புத்தி தபஞ்செப மோனம் |
|
|
|
அழியாத சித்தியுண் டாம்விந்து வற்றிலே. 12 |
|
|
|
|
|
|
|
1949 |
|
|
|
வற்ற அனலைக் கொளுவி மறித்தேற்றித் |
|
|
|
துற்ற சுழியனல் சொருகிக் சுடருற்று |
|
|
|
முற்று மதியத்து அமுதை முறைமுறை |
|
|
|
செற்றுண் பவரே சிவயோகி யாரே. 13 |
|
|
|
|
|
|
|
1950 |
|
|
|
யோகியும் ஞானியும் உத்தம சித்தனும் |
|
|
|
யோகியும் ஞான புரந்தரன் ஆவோனும் |
|
|
|
மோகம் உறினும் முறைஅமிர்து உண்போனும் |
|
|
|
ஆகிய விந்து அழியாத அண்ணலே. 14 |
|
|
|
|
|
|
|
1951 |
|
|
|
அண்ணல் உடலாகி அவ்வனல் விந்துவும் |
|
|
|
மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும் |
|
|
|
கண்ணும் கனலிடைக் கட்டிக் கலந்தெரித்து |
|
|
|
உண்ணில் அமிர்தாகி யோகிக்கு அறிவாமே. 15 |
|
|
|
|
|
|
|
1952 |
|
|
|
அறியாது அழிகின்ற ஆதலால் நாளும் |
|
|
|
பொறியால் அழிந்து புலம்புகின் றார்கள் |
|
|
|
அறிவாய் நனவில் அதீதம் புரியச் |
|
|
|
செறிவாய் இருந்து சேரவே வாயுமே. 16 |
|
|
|
|
|
|
|
1953 |
|
|
|
மாதரை மாய வரும் கூற்றம் என்றுன்னக் |
|
|
|
காதலது ஆகிய காமம் கழிந்திடும் |
|
|
|
சாதலும் இல்லை சதகோடி ஆண்டினும் |
|
|
|
சோதியின் உள்ளே துரிசறும் காலமே. 17 |
|
|
|
|
|
|
|
1954 |
|
|
|
காலம் கடந்தவன் காண்விந்து செற்றவன் |
|
|
|
காலம் கடந்தழிந் தான்விந்து செற்றவன் |
|
|
|
காலங் களின்விந்து செற்றுற்ற காரிகை |
|
|
|
காலின்கண் வந்த கலப்பறி யாரே. 18 |
|
|
|
|
|
|
|
1955 |
|
|
|
கலக்கு நாள் முன்னாள் தன்னிடைக் காதல் |
|
|
|
நலத்தக வேண்டில் அந் நாரி யுதரக் |
|
|
|
கலத்தின் மலத்தைத்தண் சீதத்தைப் பித்தை |
|
|
|
விலக்கு வனசெய்து மேலணை வீரே. 19 |
|
|
|
|
|
|
|
1956 |
|
|
|
மேலா நிலத்தெழு விந்துவும் நாதமும் |
|
|
|
கோலால் நடத்திக் குறிவழி யேசென்று |
|
|
|
பாலாம் அமிர்துண்டு பற்றறப் பற்றினால் |
|
|
|
மாலா னதுமான மாளும் அவ்விந்துவே. 20 |
|
|
|
|
|
|
|
1957 |
|
|
|
விந்து விளைவும் விளைவின் பயன்முற்றும் |
|
|
|
அந்த அழிவும் அடக்கத்தில் ஆக்கமும் |
|
|
|
நந்திய நாசமும் நாதத்தால் பேதமும் |
|
|
|
தந்துணர் வோர்க்குச் சயமாகும் விந்துவே. 21 |
|
|
|
|
|
|
|
1958 |
|
|
|
விந்துஎன் வீசத்தை மேவிய மூலத்து |
|
|
|
நந்திய அங்கிய னாலே நயந்தெரிந்து |
|
|
|
அந்தமில் பானுஅதிகண்ட மேலேற்றிச் |
|
|
|
சந்திரன் சார்புறத் தண்ணமு தாமே. 22 |
|
|
|
|
|
|
|
1959 |
|
|
|
அமுதச் சசிவிந்து வாம்விந்து மாள |
|
|
|
அமுதப் புனலோடி அங்கியின் மான |
|
|
|
அமுதச் சிவயோகம் ஆதலால் சித்தி |
|
|
|
அமுதப் பலாவனம் ஆங்குறும் யோகிக்கே. 23 |
|
|
|
|
|
|
|
1960 |
|
|
|
யோகம் அவ் விந்து ஒழியா வகையுணர்ந்து |
|
|
|
ஆகம்இரண்டும் கலந்தாலும் ஆங்குறாப் |
|
|
|
போகம் சிவபோகம் போகிநற் போகமா |
|
|
|
மோகங் கெடமுயங் கார்மூடர் மாதர்க்கே. 24 |
|
|
|
|
|
|
|
1961 |
|
|
|
மாதர் இடத்தே செலுத்தினும் அவ்விந்து |
|
|
|
காதலி னால்விடார் யோகம் கலந்தவர் |
|
|
|
மாதர் உயிராசை கைக்கொண்ட வாடுவர் |
|
|
|
காதலர் போன்றங்ஙன் காதலாம் சாற்றிலே. 25 |
|
|
|
|
|
|
|
1962 |
|
|
|
சாற்றிய விந்து சயமாகும் சத்தியால் |
|
|
|
ஏற்றிய மூலத் தழலை எழமூட்டி |
|
|
|
நாற்றிசை ஓடா நடுநாடி நாதத்தோடு |
|
|
|
ஆற்றி அமுதம்அருந்தவித் தாமே. 26 |
|
|
|
|
|
|
|
1963 |
|
|
|
விந்துவும் நாதமும் மேலக் கனல்மூல |
|
|
|
வந்த அனல் மயிர்க் கால்தோறும் மன்னிடச் |
|
|
|
சிந்தனை மாறச் சிவம்அக மாகவே |
|
|
|
விந்துவும் மாளும்மெய்க் காயத்தில் வித்திலே. 27 |
|
|
|
|
|
|
|
1964 |
|
|
|
வித்துக்குற் றுண்பான் விளைவுஅறி யாதவன் |
|
|
|
வித்துக்குற் றுண்ணாமல் வித்துச் சுட்டு உண்பான் |
|
|
|
வித்துகுற் றுண்பானில் வேறலன் ஈற்றவன் |
|
|
|
வித்துக்குற் றுண்ணாமல் வித்துவித்தான் அன்றே. 28 |
|
|
|
|
|
|
|
1965 |
|
|
|
அன்னத்தில் விந்து அடங்கும் படிகண்டு |
|
|
|
மன்னப் பிராணனாம் விந்து மறித்திட்டு |
|
|
|
மின்னொத்த விந்துநா தாந்தத்து விட்டிட |
|
|
|
வன்னத் திருவிந்து மாயும் கா யத்திலே. 29 |
|
|
|
|
|
|
|
1966 |
|
|
|
அன்னம் பிராணன்என் றார்க்கும் இருவிந்து |
|
|
|
தன்னை அறிந்துண்டு சாதிக்க வல்லார்க்குச் |
|
|
|
சொன்ன மாம்உருத் தோன்றும்எண் சித்தியாம் |
|
|
|
அன்னவர் எல்லாம் அழிவற நின்றதே. 30 |
|
|
|
|
|
|
|
1967 |
|
|
|
நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய் |
|
|
|
ஒன்றும் மகாரம் ஒருமூன்றோடு ஒன்றவை |
|
|
|
சென்று பராசக்தி விந்து சயந்தன்னை |
|
|
|
ஒன்ற உரைக்க உபதேசம் தானே. 31 |
|
|
|
|
|
|
|
1968 |
|
|
|
தானே உபதேசம் தானல்லாது ஒன்றில்லை |
|
|
|
வானே உயர்விந்து வந்த பதினான்கு |
|
|
|
மானேர் அடங்க அதன்பின்பு புத்தியும் |
|
|
|
தானே சிவகதி தன்மையும் ஆமே. 32 |
|
|
|
|
|
|
|
1969 |
|
|
|
விந்துவும் நாதமும் விளைய விளைந்தது |
|
|
|
வந்தஇப் பல்லுயிர் மன்னுயி ருக்கெலாம் |
|
|
|
அந்தமும் ஆதியும் ஆம்மந் திரங்களும் |
|
|
|
விந்து அடங்க விளையும் சிவோகமே. 33 |
|
|
|
|
|
|
|
1970 |
|
|
|
வறுக்கின்ற வாறும் மனத்துலா வெற்றி |
|
|
|
நிறுக்கின்ற வாறும் அந் நீள்வரை ஒட்டிப் |
|
|
|
பொறிக்கின்ற வாறும்அப் பொல்லா வினையை |
|
|
|
அறுக்கின்ற வாறும்அப் பொல்லா வினையை |
|
|
|
அறுக்கின்ற நாள்வரும் அத்திப் பழமே. 34 |
|
|
|
|
|
|
|
1971 |
|
|
|
விந்துவும் நாதமும் மேவியுடன் கூடிப் |
|
|
|
சந்திர னோடே தலைப்படு மாயிடில் |
|
|
|
சுந்தர வானத்து அமுதம்வந்து ஊறிடும் |
|
|
|
அங்குஉதி மந்திரம் ஆகுதி யாகுமே. 35 |
|
|
|
|
|
|
|
1972 |
|
|
|
மனத்தொடு சத்து மனஞ்செவி யென்ன |
|
|
|
இனத்தெழு வார்கள் இசைந்தன நாடி |
|
|
|
மனத்தில் எழுகின்ற வாக்கு வசனம் |
|
|
|
கனத்த இரதம் அக் காமத்தை நாடிலே. 36 |
|
|
|
|
|
|
|
1973 |
|
|
|
சத்தமும் சத்த மனமும் மனக்கருத்து |
|
|
|
ஒத்துஅறி கின்ற இடமும் அறிகிலர் |
|
|
|
மெய்த்து அறிகின்ற இடம்அறி வாளர்க்கு |
|
|
|
அத்தன் இருப்பிடம் அவ்விடம் தானே. 37 |
|
|
|
|
|
|
|
1974 |
|
|
|
உரம்அடி மேதினி உந்தியில் அப்பாம் |
|
|
|
விரவிய தன்முலை மேவிய கீழ்அங்கி |
|
|
|
கருமலை மீமிசை கைக்கீழிற் காலாம் |
|
|
|
விரவிய சுந்தரம் மேல்வெளி யாமே. 38 |
|
|
|
|
|
|
|
22. ஆதித்த நிலை - அண்டாதித்தன் |
|
|
|
|
|
|
|
1975 |
|
|
|
செஞ்சுட ரோன்முத லாகிய தேவர்கள் |
|
|
|
மஞ்சுடை மேரு வலம்வரு காரணம் |
|
|
|
எஞ்சுடர் ஈசன் இறைவன் இணையடி |
|
|
|
தஞ்சுட ராக வணங்கும் தவமே. 1 |
|
|
|
|
|
|
|
1976 |
|
|
|
பகலவன் மாலவன் பல்லுயிர்க்கு எல்லாம் |
|
|
|
புகலவ னாய்நின்ற புண்ணிய நாதன் |
|
|
|
இகலற ஏழுல கும்உற வோங்கும் |
|
|
|
பகலவன் பல்லுயிர்க்கு ஆதியும் ஆமே. 2 |
|
|
|
|
|
|
|
1977 |
|
|
|
ஆதித்தன் அன்பினோடு ஆயிர நாமமும் |
|
|
|
சோதியின் உள்ளே சுடரொளி யாய்நிற்கும் |
|
|
|
வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும் |
|
|
|
ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே. 3 |
|
|
|
|
|
|
|
1978 |
|
|
|
தானே உலகுக்குத் தத்துவனாய் நிற்கும் |
|
|
|
தானே உலகுக்குத் தையலு மாய்நிற்கும் |
|
|
|
தானே உலகுக்குச் சம்புவு மாய்நிற்கும் |
|
|
|
தானே உலகுக்குத் தண்சுட ராகுமே. 4 |
|
|
|
|
|
|
|
1979 |
|
|
|
வவையமுக் கோணம் வட்டம் அறுகோணம் |
|
|
|
துலையிரு வட்டம் துய்ய விதம்எட்டில் |
|
|
|
அலையுற்ற வட்டத்தில் ஈர்எட்டு இதழாம் |
|
|
|
மலைவுற்று உதித்தனன் ஆதித்தன் ஆமே. 5 |
|
|
|
|
|
|
|
1980 |
|
|
|
ஆதித்தன் உள்ளி லானமுக் கோணத்தில் |
|
|
|
சோதித்து இலங்கும்நற் சூரியன் நாலாம் |
|
|
|
கேத முறுங்கேணி சூரியன் எட்டில் |
|
|
|
சோதிதன் நீட்டில் சோடசம் தானே. 6 |
|
|
|
|
|
|
|
1981 |
|
|
|
ஆதித்த னோடே அவனி இருண்டது |
|
|
|
பேதித்த நாலும் பிதற்றிக் கழிந்தது |
|
|
|
சோதிக்குள் நின்று துடியிடை செய்கின்ற |
|
|
|
வேதப் பொருளை விளங்குகி லீரே. 7 |
|
|
|
|
|
|
|
1982 |
|
|
|
பாருக்குக் கீழே பகலோன் வரும்வழி |
|
|
|
யாருக்கும் காணஒண் ணாத அரும்பொருள் |
|
|
|
நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன் |
|
|
|
ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே. 8 |
|
|
|
|
|
|
|
1983 |
|
|
|
மண்ணை இடந்துஅதின் கீழொடும் |
|
|
|
விண்ணை இடந்து வெளிசெய்து நின்றிடும் |
|
|
|
கண்ணை இடந்து களிதந்த ஆனந்தம் |
|
|
|
எண்ணும் கிழமைக்கு இசைந்து நின்றானே. 9 |
|
|
|
|
|
|
|
1984 |
|
|
|
பாரை இடந்து பகலோன் வரும்வழி |
|
|
|
யாரும் அறியார் அருங்கடை நூலவர் |
|
|
|
தீரன் இருந்த திருமலை சூழ்என்பர் |
|
|
|
ஊரை உணர்ந்தார் உணர்ந்திருந் தாரே. 10 |
|
|
|
|
|
|
|
23. பிண்டாதித்தன் |
|
|
|
|
|
|
|
1985 |
|
|
|
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் |
|
|
|
கன்றாய நந்திக் கருத்துள் இருந்தனன் |
|
|
|
கொன்று மலங்கன் குழல்வழி ஓடிட |
|
|
|
வென்று விளங்கும் விரிசுடர் காணுமே. 1 |
|
|
|
|
|
|
|
1986 |
|
|
|
ஆதித்தன் ஓடி அடங்கும் இடங்கண்டு |
|
|
|
சாதிக்க வல்லவர் தம்மை யுணர்ந்தவர் |
|
|
|
பேதித்து உலகம் பிதற்றும் பிதற்றெல்லாம் ஆதித்த |
|
|
|
னோடே அடங்குகின் றாரே. 2 |
|
|
|
|
|
|
|
1987 |
|
|
|
உருவிப் புறப்பட்டு உலகை வலம்வந்து |
|
|
|
சொருகிக் கிடக்கும் துறையறி வார்இல்லை |
|
|
|
சொருகிக் கிடக்கும் துறையறி வாளர்க்கு |
|
|
|
உருகிக் கிடக்கும்என் உள்ளன்பு தானே. 3 |
|
|
|
|
|
|
|
24. மன ஆதித்தன் |
|
|
|
|
|
|
|
1988 |
|
|
|
எறிகதிர் ஞாயிறு மின்பனி சோரும் |
|
|
|
எறிகதிர் சோமன் எதிர்நின்று எறிப்ப |
|
|
|
விரிகதிர் உள்ளே இயங்கும் என் ஆவி |
|
|
|
ஒருகதிர் ஆகில் உலாஅது ஆமே. 1 |
|
|
|
|
|
|
|
1989 |
|
|
|
சந்திரன் சூரியன் தான்வரின் பூசனை |
|
|
|
முந்திய பானுவில் இந்துவந்து ஏய்முறை |
|
|
|
அந்த இரண்டும் உபய நிலத்தில் |
|
|
|
சிந்தை தெளிந்தார் சிவமாயி னரே. 2 |
|
|
|
|
|
|
|
1990 |
|
|
|
ஆகும் கலையோடு அருக்கன் அனல்மதி |
|
|
|
ஆகும் கலையிடை நான்குஎன லாம்என்பர் |
|
|
|
ஆகும் அருக்கன் அனல்மதி யோடுஒன்ற |
|
|
|
ஆகும்அப் பூரணை யாம்என்று அறியுமே. 3 |
|
|
|
|
|
|
|
1991 |
|
|
|
ஈர் அண்டத்து அப்பால் இயங்கிய அவ்வொளி |
|
|
|
ஓர் அண்டத் தார்க்கும் உணரா உணர்வது |
|
|
|
பேர்அண்டத்து ஊடே பிறங்கொளி யாய்நின்று |
|
|
|
ஆர் அண்டத் தக்கார் அறியத்தக் காரே. 4 |
|
|
|
|
|
|
|
1992 |
|
|
|
ஒன்பதின் மேவி உலகம் வலம்வரும் |
|
|
|
ஒன்பதும் ஈசன் இயல்அறி வார்இல்லை |
|
|
|
முன்புஅதின் மேவி முதல்வன் அருளிலார் |
|
|
|
இன்பம் இலார்இருள் சூழநின் றாரே. 5 |
|
|
|
|
|
|
|
25. ஞானாதித்தன் |
|
|
|
|
|
|
|
1993 |
|
|
|
விந்து அபரம் பரம்இரண் டாய்விரிந்து |
|
|
|
அந்த அபரம் பரநாத மாகியே |
|
|
|
வந்தன தம்மில் பரங்கலை யாதிவைத்து |
|
|
|
உந்தும் அருணோ தயமென்ன உள்ளத்தே. 1 |
|
|
|
|
|
|
|
1994 |
|
|
|
உள்ள அருணோ தயத்தெழும் ஓசைதான் |
|
|
|
தெள்ளும் பரநாதத் தின்செயல் என்பதால் |
|
|
|
வள்ளல் பரவிந்து வைகரி யாதிவாக்கு |
|
|
|
உள்ளன ஐங்கலைக்கு ஒன்றாம் உதயமே. 2 |
|
|
|
|
|
|
|
1995 |
|
|
|
தேவர் பிரான்திசை பத்துஉத யஞ்செய்யும் |
|
|
|
மூவர் பிரான்என முன்னொரு காலத்து |
|
|
|
நால்வர் பிரான்நடு வாயுரை யாநிற்கும் |
|
|
|
மேவு பிரான்என்பர் விண்ணவர் தாமே. 3 |
|
|
|
|
|
|
|
1996 |
|
|
|
பொய்யிலன் மெய்யன் புவனா பதிஎந்தை |
|
|
|
மையிருள் நீக்கும் மதிஅங்கி ஞாயிறு |
|
|
|
செய்யிருள் நீக்கும் திருவுடை நந்திஎன் |
|
|
|
கையிருள் நீங்கக் கலந்தெழுந் தானே. 4 |
|
|
|
|
|
|
|
1997 |
|
|
|
தனிச்சுடர் ஏற்றித் தயங்கிருள் நீங்க |
|
|
|
அனித்திடும் மேலை அருங்கனி ஊறல் |
|
|
|
கனிச்சுட ராய்நின்ற கயிலையில் ஈசன் |
|
|
|
நனிச்சுடர் மேல்கொண்ட வண்ணமும் ஆமே. 5 |
|
|
|
|
|
|
|
1998 |
|
|
|
நேரறி வாக நிரம்பிய பேரொளி |
|
|
|
போரறி யாது புவனங்கள் போய்வரும் |
|
|
|
தேரறி யாத திசையொளி யாயிடும் |
|
|
|
ஆரறி வாரிது நாயக மாமே. 6 |
|
|
|
|
|
|
|
1999 |
|
|
|
மண்டலத் துள்ளே மலர்ந்தெழும் ஆதித்தன் |
|
|
|
கண்டிதத் துள்ளே கதிரொளி ஆயிடும் |
|
|
|
சென்றிடத்து எட்டுத் திசையெங்கும் போய்வரும் |
|
|
|
நின்றிடத் தேநிலை நேரறி வார்க்கே. 7 |
|
|
|
|
|
|
|
2000 |
|
|
|
நாபிக்கண் நாசிநயன நடுவினும் |
|
|
|
தூபியோடு ஐந்தும் சுடர்விடு சோதியைத் |
|
|
|
தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும் |
|
|
|
மூவரு மாக உணர்ந்திருந் தாரே. 8 |
|
|
|
|
|
|
|
26. சிவாதித்தன் |
|
|
|
|
|
|
|
2001 |
|
|
|
அன்றிய பாச இருளும்அஞ் ஞானமும் |
|
|
|
சென்றிடு ஞானச் சிவப்பர காசத்தால் |
|
|
|
ஒன்றும் இருசட ராம்அரு ணோதயம் |
|
|
|
துன்றிருள் நீங்குதல் போலத் தொலைந்ததே. 1 |
|
|
|
|
|
|
|
2002 |
|
|
|
கடம் கடம் தோறும் கதிரவன் தோன்றில் |
|
|
|
அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான் |
|
|
|
விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத்து |
|
|
|
அடங்கிட நின்றதும் அப்பரி சாமே. 2 |
|
|
|
|
|
|
|
2003 |
|
|
|
தானே விரிசுடர் மூன்றும்ஒன்றாய் நிற்கும் |
|
|
|
தானே அயன்மால் எனநின்று தாபிக்கும் |
|
|
|
தானே உடலுயிர் வேறன்றி நின்றுளன் |
|
|
|
தானே வெளியொளி தானிருட் டாமே. 3 |
|
|
|
|
|
|
|
2004 |
|
|
|
தெய்வச் சுடர்அங்கி ஞாயிறும் திங்களும் |
|
|
|
வையம் புனல்அனல் மாருதம் வானகம் |
|
|
|
சைவப் பெரும்பதி தாங்கிய பல்லுயிர் |
|
|
|
ஐவர்க்கு இடம்இடை ஆறங்கம் ஆமே. 4 |
|
|
|
|
|
|
|
27. பசு இலக்கணம் |
|
|
|
|
|
|
|
2005 |
|
|
|
உன்னும் அளவில் உணரும் ஒருவனைப் |
|
|
|
பன்னு மறைகள் பயிலும் பரமனை |
|
|
|
என்னுள் இருக்கும் இளையா விளக்கினை |
|
|
|
அன்ன மயமென்று அறிந்துகொண் டேனே. 1 |
|
|
|
|
|
|
|
2006 |
|
|
|
அன்னம் இரண்டுள ஆற்றம் கரையினில் |
|
|
|
துன்னி இரண்டும் துணைப்பிரி யாதுஅன்னம் |
|
|
|
தன்னிலை அன்னம் தனியொன்றது என்றக்கால் |
|
|
|
பின்ன மடஅன்னம் பேறணு காதே. 2 |
|
|
|
|
|
|
|
28. புருடன் |
|
|
|
|
|
|
|
2007 |
|
|
|
வைகரி யாதியும் மாயா மலாதியும் |
|
|
|
பொய்கரி யான புருடாதி பேதமும் |
|
|
|
மெய்கரி ஞானம் கிரியா விசேடத்துச் |
|
|
|
செய்கரி ஈசன் அனாதியே செய்ததே. 1 |
|
|
|
|
|
|
|
2008 |
|
|
|
அணுவில் அணுவினை ஆதிப் பிரானை |
|
|
|
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு |
|
|
|
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு |
|
|
|
அணுவில் அணுவை அணுகலும் ஆமே. 2 |
|
|
|
|
|
|
|
2009 |
|
|
|
படர்கொண்ட ஆலதின் வித்தது போலச் |
|
|
|
சுடர்கொண்டு அணுவினைத் தூவழி செய்ய |
|
|
|
இடர்கொண்ட பாச இருளற ஒட்டி |
|
|
|
நடர்கொண்ட நல்வழி நாடலும் ஆமே. 3 |
|
|
|
|
|
|
|
2010 |
|
|
|
அணுவுள் அவனும் அவனுள் அணுவும் |
|
|
|
கணுஅற நின்ற கலப்பது உணரார் |
|
|
|
இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித் |
|
|
|
தணிவற நின்றான் சராசரம் தானே. 4 |
|
|
|
|
|
|
|
29. சீவன் |
|
|
|
|
|
|
|
2011 |
|
|
|
மேவிய சீவன் வடிவது சொல்லிடில் |
|
|
|
கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு |
|
|
|
மேவிய கூறது ஆயிரம் ஆயினால் |
|
|
|
ஆவியின் கூறுநா றாயிரத்து ஒன்றே. 1 |
|
|
|
|
|
|
|
2012 |
|
|
|
ஏனோர் பெருமையின் ஆயினும் எம்மிறை |
|
|
|
ஊனே சிறுமையின் உட்கலந்து அங்குளன் |
|
|
|
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன் |
|
|
|
தானே அறியும் தவத்தின் அளவே. 2 |
|
|
|
|
|
|
|
2013 |
|
|
|
உண்டு தெளிவன் உரைக்க வியோகமே |
|
|
|
கொண்டு பயிலும் குணமில்லை யாயினும் |
|
|
|
பண்டு பயிலும் பயில்சீவ னார்பின்னைக் |
|
|
|
கண்டு சிவனுருக் கொள்வர் கருத்துளே. 3 |
|
|
|
|
|
|
|
2014 |
|
|
|
மாயா உபாதி வசத்ததாகும் சேதனத்து |
|
|
|
ஆய குருஅரு ளாலே அதில்தூண்ட |
|
|
|
ஓயும் உபாதியோடு ஒன்றின் ஒன் றாது உயிர் |
|
|
|
ஆய துரியம் புகுந்தறி வாகவே. 4 |
|
|
|
|
|
|
|
30. பசு |
|
|
|
|
|
|
|
2015 |
|
|
|
கற்ற பசுக்கள் கதறித் திரியினும் |
|
|
|
கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும் |
|
|
|
முற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போலும் |
|
|
|
மற்றைப் பசுக்கள் வறள்பசு தானே. 1 |
|
|
|
|
|
|
|
2016 |
|
|
|
கொல்லையின் மேயும் பசுக்களைச் செய்வதென் |
|
|
|
எல்லைக் கடப்பித்து இறைவன் அடிகூட்டி |
|
|
|
வல்லசெய்து ஆற்ற மதித்தபின் அல்லது |
|
|
|
கொல்லை செய் நெஞ்சம் குறிப்பறி யாதே. 2 |
|
|
|
|
|
|
|
31. போதன் (அறிஞன்) |
|
|
|
|
|
|
|
2017 |
|
|
|
சீவன் எனச்சிவன் என்னவே றில்லை |
|
|
|
சீவ னார்சிவ னாரை அறிகிலர் |
|
|
|
சீவ னார்சிவ னாரை அறிந்தபின் |
|
|
|
சீவ னார்சிவ னாயிட்டு இருப்பரே. 1 |
|
|
|
|
|
|
|
2018 |
|
|
|
குணவிளக் காகிய கூத்தப் பிரானும் |
|
|
|
மனவிளக் காகிய மன்னுயிர்க் கெல்லாம் |
|
|
|
பணவிளக் காகிய பல்தலை நாகம் |
|
|
|
கணவிளக் காகிய கண்காணி யாகுமே. 2 |
|
|
|
|
|
|
|
2019 |
|
|
|
அறிவாய் அறியாமை நீங்கி யவனே |
|
|
|
பொறிவாய் ஒழிந்தெங்கும் தானான போதன் |
|
|
|
அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவன் |
|
|
|
செறிவாகி நின்றஅச் சீவனும் ஆகுமே. 3 |
|
|
|
|
|
|
|
2020 |
|
|
|
ஆறாறின் தன்மை அறியாது இருந்தேனுக்கு |
|
|
|
ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர்நந்தி |
|
|
|
ஆறாறின் தன்மை அருளால் அறிந்த பின் |
|
|
|
ஆறாறுக்கு அப்புறம் ஆகி நின் றானே. 4 |
|
|
|
|
|
|
|
2021 |
|
|
|
சிவமா கியஅருள் நின்றுஅறிந்து ஓரார் |
|
|
|
அவமாம் மலம்ஐந்தும் ஆவது அறியார் |
|
|
|
தவமான செய்து தலைப்பறி கின்றார் |
|
|
|
நவமான தத்துவம் நாடாகி லாரே. 5 |
|
|
|
|
|
|
|
2022 |
|
|
|
நாடோ றும் ஈசன் நடத்தும் தொழில்உள்ளார் |
|
|
|
நாடோ றும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார் |
|
|
|
நாடோ றும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கலால் |
|
|
|
நாடோ றும் நாடார்கள் நாள்வினை யாளரே. 6 |
|
|
|
|
|
|
|
32. ஐந்து இந்திரியம் அடக்கும் அருமை |
|
|
|
|
|
|
|
2023 |
|
|
|
ஆக மதத்தன ஐந்து களிறுள |
|
|
|
ஆக மதத்தறி யோடுஅணை கின்றில |
|
|
|
பாகனும் எய்த்துஅவை தாமும் இளைத்தபின் |
|
|
|
யோகு திருந்துதல் ஒன்றிஅறி யோமே. 1 |
|
|
|
|
|
|
|
2024 |
|
|
|
கருத்தின்நன் னூல்கற்று கால்கொத்திப் பாகன் |
|
|
|
திருத்தலும் பாய்மாத் திகைத்தன்றிப் பாயா |
|
|
|
எருத்துற ஏறி இருக்கிலும் ஆங்கே |
|
|
|
வருத்தினும் அம்மா வழிநட வாதே. 2 |
|
|
|
|
|
|
|
2025 |
|
|
|
புலம் ஐந்து புள்ஐந்து புள்சென்று மேயும் |
|
|
|
நிலம்ஐந்து நீர்ஐந்து நீர்மையும் ஐந்து |
|
|
|
குலம் ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன் |
|
|
|
உலம்வந்து போம்வழி ஒன்பது தானே. 3 |
|
|
|
|
|
|
|
2026 |
|
|
|
அஞ்சுள சிங்கம் அடவியல் வாழ்வன |
|
|
|
அஞ்சும்போய் மேய்ந்துதம் அஞ்சுஅக மேபுகும் |
|
|
|
அஞ்சின் உகிரும் எயிரும் அறுத்திட்டால் |
|
|
|
எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே. 4 |
|
|
|
|
|
|
|
2027 |
|
|
|
ஐவர் அமைச்சருள் தொண்ணூற்று அறுவர்கள் |
|
|
|
ஐவரும் மைந்தரும் ஆளக் கருதுவர் |
|
|
|
ஐவரும் ஐந்த சினத்தொட நின்றிடில் |
|
|
|
ஐவர்க்கு சிறைஇறுத்து ஆற்றகி லோமே. 5 |
|
|
|
|
|
|
|
2028 |
|
|
|
சொல்லகில் லேன்சுடர்ச் சோதியை நாடொறும் |
|
|
|
சொல்லகில் லேன்திரு மங்கையும் அங்குள |
|
|
|
வெல்லகில் லேன்புலன் ஐந்துடன் தன்னையும் |
|
|
|
கொல்லநின் றோடும் குதிரைஒத் தேனே. 6 |
|
|
|
|
|
|
|
2029 |
|
|
|
எண்ணிலி இல்லி அடைத்துஅவ் இருட்டறை |
|
|
|
எண்ணிலி இல்லியோடு ஏகில் பிழைதரும் |
|
|
|
எண்ணிலி இல்லியோடு ஏகாமை காக்குமேல் |
|
|
|
எண்ணிலி இல்லதோடு இன்பமது ஆமே. 7 |
|
|
|
|
|
|
|
2030 |
|
|
|
விதியின் பெருவலி வேலைசூழ் வையம் |
|
|
|
துதியின் பெருவலி தொல்வான் உலகம் |
|
|
|
மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை |
|
|
|
நிதியின் பெருவலி நீர்வலி தானே. 8 |
|
|
|
|
|
|
|
33. ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை |
|
|
|
|
|
|
|
2031 |
|
|
|
குட்டம் ஒருமுழம் உள்ளது அரைமுழம் |
|
|
|
வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன |
|
|
|
பட்டன மீன்பல பரவன் வகைகொணர்ந்து |
|
|
|
இட்டனன் யாம்இனி ஏதம்இ லோமே. 1 |
|
|
|
|
|
|
|
2032 |
|
|
|
கிடக்கும் உடலின் கிளர்இந் திரியம் |
|
|
|
அடக்க லுறும் அவன்தானே அமரன் |
|
|
|
விடக்கிண்டு இன்புற மேவுறு சிந்தை |
|
|
|
நடக்கின் நடக்கும் நடக்கும் அளவே. 2 |
|
|
|
|
|
|
|
2033 |
|
|
|
அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார் |
|
|
|
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை |
|
|
|
அஞ்சும் அடக்கிய அசேதன மாம்என்றிட்டு |
|
|
|
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே. 3 |
|
|
|
|
|
|
|
2034 |
|
|
|
முழக்கி எழுவன மும்மத வேழம் |
|
|
|
அடக்க அறிவென்றும் கோட்டையை வைத்தேன் |
|
|
|
பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக் |
|
|
|
கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே. 4 |
|
|
|
|
|
|
|
2035 |
|
|
|
ஐந்தில் ஒடுங்கில் அகலிடம் ஆவது |
|
|
|
ஐந்தில் ஒடுங்கில் அருந்தவம் ஆவது |
|
|
|
ஐந்தில் ஒடுங்கில் அரன்பதம் ஆவது |
|
|
|
ஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே. 5 |
|
|
|
|
|
|
|
2036 |
|
|
|
பெருக்கப் பிதற்றிலென் பேய்த்தேர் நினைந்தென் |
|
|
|
விரித்த பொருட்கெல்லாம் வித்தாவது உள்ளம் |
|
|
|
பெருக்கிற் பெருக்கம் சுருக்கிற் சுருக்கம் |
|
|
|
அருத்தமும் அத்தனை ஆராய்ந்துகொள் வார்க்கே. 6 |
|
|
|
|
|
|
|
2037 |
|
|
|
இளைக்கின்ற வாறுஅறிந்து இன்னுயிர் வைத்த |
|
|
|
கிளைக்குஒன்றும் ஈசனைக் கேடில் புகழோன் |
|
|
|
தளைக்கொன்ற நாகம்அஞ் சாடல் ஒடுக்கத் |
|
|
|
துளைக்கொண்டது அவ்வழி தூங்கும் படைத்தே. 7 |
|
|
|
|
|
|
|
2038 |
|
|
|
பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளி |
|
|
|
சார்ந்திடும் ஞானத் தறியினில் பூட்டிட்டு |
|
|
|
வாய்ந்துகொள் ஆனந்தம் என்னும் அருள் செய்யில் |
|
|
|
வேய்ந்துகொள் மேலை விதியது தானே. 8 |
|
|
|
|
|
|
|
2039 |
|
|
|
நடக்கின்ற நந்தியை நாடோ றும் உன்னில் |
|
|
|
படர்க்கின்ற சிந்தையப் பைய ஒடுக்கிக் |
|
|
|
குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில் |
|
|
|
வடக்கொடு தெற்கு மனக்கோயி லாமே. 9 |
|
|
|
|
|
|
|
2040 |
|
|
|
சென்றன நாழிகை நாள்கள் சிலபல |
|
|
|
நின்றது நீள்பொருள் நீர்மேல் எழுத்துஒத்து |
|
|
|
வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள் |
|
|
|
குன்று விழவதில் தாங்கலும் ஆமே. 10 |
|
|
|
|
|
|
|
2041 |
|
|
|
போற்றிசைத் துப்புனி தன்திரு மேனியைப் |
|
|
|
போற்றிசெய் மீட்டே புலன்ஐந்தும் புத்தியால் |
|
|
|
நாற்றிசைக் கும்பின்னை யாருக்கும் நாதனை |
|
|
|
ஊற்றுக உள்ளத்து ஒருங்கலும் ஆமே. 11 |
|
|
|
|
|
|
|
2042 |
|
|
|
தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தின் உள்ளே |
|
|
|
அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார் |
|
|
|
சிரிக்கின்ற வாறு சிலபல பேசில் |
|
|
|
வரிக்கின்ற மைசூழ் வரையது வாமே. 12 |
|
|
|
|
|
|
|
2043 |
|
|
|
கைவிட லாவது ஒன்று இல்லை கருத்தினுள் |
|
|
|
எய்தி அவனை இசையினால் ஏத்துமின் |
|
|
|
ஐவருடைய அவாவினில் தோன்றிய |
|
|
|
பொய்வ ருடைய புலன்களும் ஐந்தே. 13 |
|
|
|
|
|
|
|
34. அசற்குரு நெறி |
|
|
|
|
|
|
|
2044 |
|
|
|
உணர்வுஒன்று இலாமூடன் உண்மைஒ ராதோன் |
|
|
|
கணுவின்றி வேதா கமநெறி காணான் |
|
|
|
பணிஒன்று இலாதோன் பரநிந்தை செய்வோன் |
|
|
|
அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே. 1 |
|
|
|
|
|
|
|
2045 |
|
|
|
மந்திர தந்திர மாயோக ஞானமும் |
|
|
|
பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர் |
|
|
|
சிந்தனை செய்யாத் தெளிவியாது ஊண்பொருட்டு |
|
|
|
அந்தகர் ஆவோர் அசற்குரு வாமே. 2 |
|
|
|
|
|
|
|
2046 |
|
|
|
ஆமாது அறியாதோன் மூடன் அதிமூடன் |
|
|
|
காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு |
|
|
|
ஆமாறு அசத்துஅறி விப்போன் அறிவிலோன் |
|
|
|
கோமான் அலன்அசத் தாகும் குரவனே. 3 |
|
|
|
|
|
|
|
2047 |
|
|
|
கற்பாய கற்பங்கள் நீக்காமற் கற்பித்தால் |
|
|
|
தற்பாவங் குன்றும் தனக்கே பகையாகும் |
|
|
|
நற்பால் அரசுக்கும் நாட்டுக்கும் கேடென்றே |
|
|
|
முற்பால நந்தி மொழிந்துவைத் தானே. 4 |
|
|
|
|
|
|
|
2048 |
|
|
|
குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லும் குருடர் |
|
|
|
முரணும் பழங்குழி வீழ்வர்கள் முன்பின் |
|
|
|
குருடனும் வீழ்வர்கள் முன்பின் அறவே |
|
|
|
குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே. 5 |
|
|
|
|
|
|
|
35. சற்குரு நெறி |
|
|
|
|
|
|
|
2049 |
|
|
|
தாள்தந்து அளிக்கும் தலைவனே சற்குரு |
|
|
|
தாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன் |
|
|
|
தாள்தந்து தத்துவா தீதத்துச் சார்சீவன் |
|
|
|
தாள்தந்து பாசம் தணிக்கும் அவன்சத்தே. 1 |
|
|
|
|
|
|
|
2050 |
|
|
|
தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள் |
|
|
|
தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதம் |
|
|
|
தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டம் |
|
|
|
தவிரவைத் தான் பிற வித்துயர் தானே. 2 |
|
|
|
|
|
|
|
2051 |
|
|
|
கறுத்த இரும்பே கனகமது ஆனால் |
|
|
|
மறித்துஇரும் பாகா வகையது போலக் |
|
|
|
குறித்தஅப் போதே குருவருள் பெற்றான் |
|
|
|
மறித்துப் பிறவியல் வந்தணு கானே. 3 |
|
|
|
|
|
|
|
2052 |
|
|
|
பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும் |
|
|
|
நேசத்து நாடி மலமற நீக்குவோர் |
|
|
|
ஆசற்ற சற்குரு வாவோர் அறிவற்றுப் |
|
|
|
பூசற்கு இரங்குவோர் போதக் குருவன்றே. 4 |
|
|
|
|
|
|
|
2053 |
|
|
|
நேயத்தே நிற்கும் நிமலன் மலமற்ற |
|
|
|
நேயத்தை நல்கவல் லோன்நித்தன் சுத்தனே |
|
|
|
ஆயத்த வர்தத் துவம் உணர்ந் தாங்குஅற்ற |
|
|
|
நேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே. 5 |
|
|
|
|
|
|
|
2054 |
|
|
|
பரிசன வேதி பரிசித்தது எல்லாம் |
|
|
|
வரிசை தரும்பொன் வகையாகு மாபோல் |
|
|
|
குருபரி சித்த குவலயம் எல்லாம் |
|
|
|
திரிமலம் தீர்ந்து சிவகதி யாமே. 6 |
|
|
|
|
|
|
|
2055 |
|
|
|
தானே எனநின்ற சற்குரு சந்நிதி |
|
|
|
தானே எனநின்ற தன்மை வெளிப்படில் |
|
|
|
தானே தனைப்பெற வேண்டும் சதுர்பெற |
|
|
|
ஊனே எனநினைந்து ஓர்ந்துகொள் உன்னிலே. 7 |
|
|
|
|
|
|
|
2056 |
|
|
|
வரும்வழி போம்வழி மாயா வழியைக் |
|
|
|
கருவழி கண்டவர் காணா வழியைக் |
|
|
|
பெரும்வழி யாநந்தி பேசும் வழியைக் |
|
|
|
குருவழியே சென்று கூடலும் ஆமே. 8 |
|
|
|
|
|
|
|
2057 |
|
|
|
குருஎன் பவனே வேதாக மங்கூறும் |
|
|
|
பரஇன்ப னாகிச் சிவயோகம் பாவித்து |
|
|
|
ஒருசிந்தை யின்றி உயிர்பாசம் நீக்கி |
|
|
|
வருநல் குரவன்பால் வைக்கலும் ஆமே. 9 |
|
|
|
|
|
|
|
2058 |
|
|
|
சத்தும் அசத்தும் சதசத்தும் தான்காட்டிச் |
|
|
|
சித்தும் அசித்தும் சிவபரத் தேசேர்த்துச் |
|
|
|
சுத்தம் அசுத்தம் அறச்சுக மானசொல் |
|
|
|
அத்தன் அருட்குரு வாம்அவன் கூறிலே. 10 |
|
|
|
|
|
|
|
2059 |
|
|
|
ஊற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினை |
|
|
|
பற்றறு நாதன் அடியில் பணிதலால் |
|
|
|
சுற்றிய பேதம் துரியம் மூன் றால்வாட்டித் |
|
|
|
தற்பரம் மேவுவோர் சாதகர் ஆமே. 11 |
|
|
|
|
|
|
|
2060 |
|
|
|
எல்லாம் இறைவன் இறைவி யுடன்இன்பம் |
|
|
|
வலலார் புலனும் வருங்கால் உயிர்தோன்றிச் |
|
|
|
சொல்லா மலம்ஐந்து அடங்கிட்டு ஓங்கியே |
|
|
|
செலலாச் சிவகதி சேர்தல்விளை யாட்டே. 12 |
|
|
|
|
|
|
|
2061 |
|
|
|
ஈனப் பிறவியில் இட்டது மீட்டுட்டித் |
|
|
|
தானத்துள் இட்டுத் தனையூட்டித் தாழ்த்தலும் |
|
|
|
ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று |
|
|
|
மோனத்துள் வைத்தலும் முத்தன்தன் செய்கையே. 13 |
|
|
|
|
|
|
|
2062 |
|
|
|
அத்தன் அருளின் விளையாட் டிடம்சடம் |
|
|
|
சித்தொடு அசித்துஅறத் தெளிவித்த சீவனைச் |
|
|
|
சுத்தனும் ஆக்கித் துடைத்து மலத்தினைச் |
|
|
|
சத்துடன் ஐங்கரு மத்திடும் தன்மையே. 14 |
|
|
|
|
|
|
|
2063 |
|
|
|
ஈசத்து வங்கடந்து இல்லையென்று அப்புறம் |
|
|
|
பாசத்து ளேயென்றும் பாவியும் அண்ணலை |
|
|
|
நேசத்து ளேநின்ற நின்மலன் எம்மிறை |
|
|
|
தேசத்தை எல்லாம் தெளியவைத் தானே. 15 |
|
|
|
|
|
|
|
2064 |
|
|
|
மாணிக்க மாலை மலர்ந்தெழு மண்டலம் |
|
|
|
ஆணிப்பொன் நின்றங்கு அமுதம் விளைந்தது |
|
|
|
பேணிக்கொண்டு உண்டார் பிறப்பற்று இருந்த |
|
|
|
ஊனுக்கு இருந்தார் உணராத மாக்களே. 16 |
|
|
|
|
|
|
|
2065 |
|
|
|
அசத்தொடு சத்தும் அசத்சத்து நீங்க |
|
|
|
இசைத்திடு பாசப்பற்று ஈங்குஅறு மாறே |
|
|
|
அசைத்துஇரு மாயை அனுத்தானும் ஆங்கே |
|
|
|
இசைத்தானும் ஒன்றறி விப்போன் இறையே. 17 |
|
|
|
|
|
|
|
2066 |
|
|
|
ஏறு நெறியே மலத்தை எரித்தலால் |
|
|
|
ஈறில் உரையால் இருளை அறுத்தலான் |
|
|
|
மாறில் பசுபாசம் வாட்டலால் வீடுக |
|
|
|
கூறு பரனே குருவாம் இயம்பிலே. 18 |
|
|
|
|
|
|
|
36. கூடா ஒழுக்கம் |
|
|
|
|
|
|
|
2067 |
|
|
|
கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார் |
|
|
|
கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால் |
|
|
|
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக் |
|
|
|
கண்காணி கண்டார் களஒழிந் தாரே. 1 |
|
|
|
|
|
|
|
2068 |
|
|
|
செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் |
|
|
|
பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் |
|
|
|
மெய்தான் உரைக்கில்விண் ணோர் தொழச் செய்வான் |
|
|
|
மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே. 2 |
|
|
|
|
|
|
|
2069 |
|
|
|
பத்துவிற் றுண்டு பகலைக் கழிவிடும் |
|
|
|
மத்தகர்க்கு அன்றோ மறுபிறப்பு உள்ளது |
|
|
|
வித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும் |
|
|
|
பித்தர்கட்கு என்றும் பிறப்பில்லை தானே. 3 |
|
|
|
|
|
|
|
2070 |
|
|
|
வடக்கு வடக்கென்பர் வைத்ததுஒன்று இல்லை |
|
|
|
நடக்க உறுவரே ஞானமி ல்லாதார் |
|
|
|
வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம் |
|
|
|
அகத்தில் அடங்கும் அறிவுடை யோர்க்கே. 4 |
|
|
|
|
|
|
|
2071 |
|
|
|
காயக் குழப்பனைக் காயநன் னாடனைக் |
|
|
|
காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத் |
|
|
|
தேயத்து ளேஎங்கும் தேடித் திரிவர்கள் |
|
|
|
காயத்துள் நின்ற கருத்தறி யாரே. 5 |
|
|
|
|
|
|
|
2072 |
|
|
|
கண்காணி யாகவே கையகத் தேயெழும் |
|
|
|
கண்காணி யாகக் கருத்துள் இருந்திடும் |
|
|
|
கண்காணி யாகக் கலந்து வழிசெய்யும் |
|
|
|
கண்காணி யாகிய காதலன் தானே. 6 |
|
|
|
|
|
|
|
2073 |
|
|
|
கன்னி ஒருசிறை கற்றோர் ஒருசிறை |
|
|
|
மன்னிய மாதவம் செய்வோர் ஒருசிறை |
|
|
|
தன்னியல்பு உன்னி உணர்ந்தோர் ஒருசிறை |
|
|
|
என்னிது ஈசன் இயல்புஅறி யாரே. 7 |
|
|
|
|
|
|
|
2074 |
|
|
|
காணாத கண்ணில் படலமே கண்ணொளி |
|
|
|
காணாத வர்கட்கும் காணாதது அவ்வொளி |
|
|
|
காணாத வர்கட்கும் கண்ணாம் பெருங்கண்ணைக் |
|
|
|
காணாது கண்டார் களவொழிந் தாரே. 8 |
|
|
|
|
|
|
|
2075 |
|
|
|
பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி |
|
|
|
உய்த்தொன்று மாபோல் விழியும் தன் கண்ணொளி |
|
|
|
அத்தன்மை யாதல்போல் நந்தி அருள்தரச் |
|
|
|
சித்தம் தெளிந்தோன் செயல் ஒழிந்தேனே. 9 |
|
|
|
|
|
|
|
2076 |
|
|
|
பிரான்பல மாகப் பெயர்ந்தன எட்டும் |
|
|
|
பராமயம் என்றெண்ணிப் பள்ளி யுணரார் |
|
|
|
சுராமயம் முன்னிய சூழ்வினை யாளர் |
|
|
|
நிராமய மாக நினைப் பொழிந் தாரே. 10 |
|
|
|
|
|
|
|
2077 |
|
|
|
ஒன்றுஇரண் டாகிநின்று ஒன்றிஒன் றாயினோர்க்கு |
|
|
|
ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா |
|
|
|
ஒன்றுஇரண்டு என்றே உரைதரு வோர்க்கெலாம் |
|
|
|
ஒன்றுஇரண் டாய் நிற்கும் ஒன்றோடுஒன் றானதே. 11 |
|
|
|
|
|
|
|
2078 |
|
|
|
உயிரது நின்றால் உணர்வுஎங்கு நிற்கும் |
|
|
|
அயர்அறி வில்லையால் ஆருடல் வீழும் |
|
|
|
உயிரும் உணலும் ஒருங்கிக் கிடக்கும் |
|
|
|
பயிரும் கிடந்துள்ளப் பாங்கு அறி யாரே. 12 |
|
|
|
|
|
|
|
2079 |
|
|
|
உயிரது வேறாய் உணர்வுஎங்கும் ஆகும் |
|
|
|
உயிரை அறியில் உணர்வுஅறி வாகும் |
|
|
|
உயிர்அன்று உடலை விழுங்கும் உணர்வை |
|
|
|
அயரும் பெரும்பொருள் ஆங்கறி யாரே. 13 |
|
|
|
|
|
|
|
2080 |
|
|
|
உலகாணி ஒண்சுடர் உத்தம சித்தன் |
|
|
|
நிலவாணி ஐந்தினுள் தேருற நிற்கும் |
|
|
|
சிலவாணி யாகிய தேவர் பிரானைத் |
|
|
|
தலைவாணி செய்வது தன்னை அறிவதே. 14 |
|
|
|
|
|
|
|
2081 |
|
|
|
தான்அந்த மாம்என நின்ற தனிச்சுடர் |
|
|
|
ஊன்அந்த மாய்உல காய்நின்ற ஒண்சுடர் |
|
|
|
தேன்அந்த மாய்நின்று சிற்றின்பம் நீஒழி |
|
|
|
கோன்அந்தம் இல்லாக் குணத்தரு ளாமே. 15 |
|
|
|
|
|
|
|
2082 |
|
|
|
உன்முத லாகிய ஊன்உயிர் உண்டெனும் |
|
|
|
கல்முதல் ஈசன் கருத்தறி வார்இல்லை |
|
|
|
நல்முதல் ஏறிய நாமம் அறநின்றால் |
|
|
|
தன்முதல் ஆகிய தத்துவம் ஆமே. 16 |
|
|
|
|
|
|
|
2083 |
|
|
|
இந்தியம் அந்தக் கரணம் இவைஉயிர் |
|
|
|
வந்தன சூக்க உடலன்று மானது |
|
|
|
தந்திடும் ஐவிதத் தால்தற் புருடனும் |
|
|
|
முந்துளம் மன்னும் ஆறாறு முடிவிலே. 17 |
|
|
|
|
|
|
|
37. கேடு கண்டு இரங்கல் |
|
|
|
|
|
|
|
2084 |
|
|
|
வித்துப் பொதிவார் விரைவிட்டு நாற்றுவார் |
|
|
|
அற்றதம் வாணாள் அறிகிலாப் பாவிகள் |
|
|
|
உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார் |
|
|
|
முற்றொளி தீயின் முனிகின்ற வாறே. 1 |
|
|
|
|
|
|
|
2085 |
|
|
|
போது சடக்கெனப் போகின் றதுகண்டும் |
|
|
|
வாதுசெய் தென்னோ மனிதர் பெறுவது |
|
|
|
நீதியு ளேநின்று நின்மலன் தாள்பணிந்து |
|
|
|
ஆதியை அன்பில் அறியகில் லார்களே. 2 |
|
|
|
|
|
|
|
2086 |
|
|
|
கடன்கொண்டு நெற்குத்துக் கையரை |
|
|
|
உடம்பினை ஓம்பி உயிராத் திரிவார் |
|
|
|
தடங்கொண்ட சாரல் தழல்முரு டேறி |
|
|
|
இடங்கொண்டு உடலார் கிடக்கின்ற வாறே. 3 |
|
|
|
|
|
|
|
2087 |
|
|
|
விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து |
|
|
|
புரந்தகல் லால்நிழல் புண்ணியன் சொன்ன |
|
|
|
பரந்தன்னை ஓராப் பழிமொழி யாளர் |
|
|
|
உரந்தன்மை யாக ஒருங்கிநின் றார்களே. 4 |
|
|
|
|
|
|
|
2088 |
|
|
|
நின்ற புகழும் நிறைதவத்து உண்மையும் |
|
|
|
என்றுஎம் ஈசன் அடியவர்க் கேநல்கும் |
|
|
|
அன்றி உலகம் அதுஇது தேவுஎன்று |
|
|
|
குன்றுகை யாலே குறைப்பட்ட வாறே. 5 |
|
|
|
|
|
|
|
2089 |
|
|
|
இன்பத்து ளேபிறந்து இன்பத்து ளேவளர்ந்து |
|
|
|
இன்பத்து ளேநினைக் கின்றது இதுமறந்து |
|
|
|
துன்பத்து ளேசிலர் சோறொடு கூறையென்று |
|
|
|
துன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே. 6 |
|
|
|
|
|
|
|
2090 |
|
|
|
பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும் |
|
|
|
பெறுதற்கு அரிய பிரானடி பேணார் |
|
|
|
பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம் |
|
|
|
பெறுதற்கு அரியதோர் பேறுஇழந் தாரே. 7 |
|
|
|
|
|
|
|
2091 |
|
|
|
ஆர்வ மனமும் அளவில் இளமையும் |
|
|
|
ஈரமும் நல்லஎன்று இன்புறு காலத்துத் |
|
|
|
தீர வருவதோர் காமத் தொழில்நின்று |
|
|
|
மாதவன் இன்பம் மறந்தொழிந் தார்களே. 8 |
|
|
|
|
|
|
|
2092 |
|
|
|
இப்பரி சேஇள ஞாயிறு போலுரு |
|
|
|
அப்பரிசு அங்கியின் உள்ளுறை அம்மானை |
|
|
|
இப்பரி சேகம லத்துறை ஈசனை |
|
|
|
மெய்ப்பரி சேவினை வாதுஇருந் தோமே. 9 |
|
|
|
|
|
|
|
2093 |
|
|
|
கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு |
|
|
|
நாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள் |
|
|
|
பாடகில் லார்அவன் செய்த பரிசறிந்து |
|
|
|
ஆடவல் லார்அவர் பேறெது வாமே. 10 |
|
|
|
|
|
|
|
2094 |
|
|
|
நெஞ்சு நிறைந்தங்கு இருந்த நெடுஞ்சுடர் |
|
|
|
நம்செம் பிரான்என்று நாதனை நாடொறும் |
|
|
|
துஞ்சும் அளவும் தொழுமின் தொழாவிடில் |
|
|
|
அஞ்சுஅற்று விட்டதோர் ஆனையும் ஆமே. 11 |
|
|
|
|
|
|
|
2095 |
|
|
|
மிருக மனிதர் மிக்கோர் பறவை |
|
|
|
ஒருவர்செய்து அன்புவைத்து உன்னாதது இல்லை |
|
|
|
பருகுவர் ஓடுவர் பார்ப்பயன் கொள்வர் |
|
|
|
திருமருவு மாதவம் சேர்ந்துஉணர்ந் தோரே. 12 |
|
|
|
|
|
|
|
2096 |
|
|
|
நீதியி லோர்பெற்ற பொன்போல் இறைவனைச் |
|
|
|
சோதியி லாரும் தொடர்ந்துஅறி வாரில்லை |
|
|
|
ஆதி பயனென்று அமரர் பிரான்என்ற |
|
|
|
நாதியே வைத்தது நாடுகின் றேனே. 13 |
|
|
|
|
|
|
|
2097 |
|
|
|
இருந்தேன் மலர்அளைந்து இன்புற வண்டு |
|
|
|
பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார் |
|
|
|
வருந்தேன் நுகராது வாய்புகு தேனை |
|
|
|
அருந்தேனை யாரும் அறியகி லாரே. 14 |
|
|
|
|
|
|
|
2098 |
|
|
|
கருத்தறி யாது கழிந்தன காலம் |
|
|
|
அருத்தியுள் ளான்அம ராபதி நாதன் |
|
|
|
ஒருத்தன்உள் ளான் உல கத்துயிர்க்கு எல்லாம் |
|
|
|
வருத்திநில் லாது வழுக்கின் றாரே. 15 |
|
|
|
|
|
|
|
2099 |
|
|
|
குதித்தோடிப் போகின்ற கூற்றமும் சார்வாய் |
|
|
|
விதித்தென நாள்களும் வீழ்ந்து கழிந்த |
|
|
|
விதிர்திருந்து என்செய்தீர் ஆறுதிர் ஆகில் |
|
|
|
கொதிக்கின்ற கூழில் துடுப்பிட லாமே. 16 |
|
|
|
|
|
|
|
2100 |
|
|
|
கரைஅருகு ஆறாக் கழனி வளைந்த |
|
|
|
திரைஅரு காமுன்னம் சேர்ந்தின்பம் எய்தும் |
|
|
|
வரைஅருகு ஊறிய மாதவ நோக்கின் |
|
|
|
நரைஉரு வாச்செல்லும் நாள்கில வாமே. 17 |
|
|
|
|
|
|
|
2101 |
|
|
|
வரவுஅறி வானை மயங்கிருள் ஞாலத்து |
|
|
|
இரவுஅறி வானை எழுஞ்சுடர்ச் சோதியை |
|
|
|
அரவுஅறி வார்முன் ஒருதெய்வம் என்று |
|
|
|
விரவுஅறி யாமலே மேல்வைத்த வாறே. 18 |
|
|
|
|
|
|
|
38. இதோபதேசம் |
|
|
|
|
|
|
|
2102 |
|
|
|
மறந்தொழி மண்மிசை மன்னாப் பிறவி |
|
|
|
இறந்தொழி காலத்தும் ஈசனை உள்கும் |
|
|
|
பறந்துஅல மந்து படுதுயர் தீர்ப்பான் |
|
|
|
சிறந்த சிவநெறி சிந்தைசெய் யீரே. 1 |
|
|
|
|
|
|
|
2103 |
|
|
|
செல்லும் அளவு செலுத்துமின் சிந்தையை |
|
|
|
வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை |
|
|
|
இல்லை யெனினும் பெரிதுளன் எம்மிறை |
|
|
|
நல்ல அரநெறி நாடுமின் நீரே. 2 |
|
|
|
|
|
|
|
2014 |
|
|
|
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் |
|
|
|
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே |
|
|
|
சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து |
|
|
|
நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே. 3 |
|
|
|
|
|
|
|
2105 |
|
|
|
போற்றிசெய் அந்தண் கயிலைப் பொருப்பனை |
|
|
|
நாற்றிசைக் கும்நடு வாய்கின்ற நம்பனைக் |
|
|
|
காற்றிசைக் கும் கமழ்ஆக்கையைக் கைக்கொண்டு |
|
|
|
கூற்றுதைத் தான்தன்மைக் கூறிநின்று உய்ம்மினே. 4 |
|
|
|
|
|
|
|
2106 |
|
|
|
இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில் |
|
|
|
புக்கும் பிறவாமல் போய்வழி நாடுமின் |
|
|
|
எக்காலத்து இவ்வுடல் வந்துஎமக்கு ஆனதென்று |
|
|
|
அக்காலம் உன்ன அருள்பெற லாமே. 5 |
|
|
|
|
|
|
|
2107 |
|
|
|
போகின்ற வாறே புகுகின்ற அப்பொருள் |
|
|
|
ஆகின்ற போதும் அரன்அறிவான்உளன் |
|
|
|
சாகின்ற போதும் தலைவனை நாடுமின் |
|
|
|
ஆகின்ற அப்பொருள் அக்கரை ஆகுமே. 6 |
|
|
|
|
|
|
|
2108 |
|
|
|
பறக்கின்ற ஒன்று பயனுற வேண்டின் |
|
|
|
இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும் |
|
|
|
சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப் |
|
|
|
பிறப்பொன்றும் இலாமையும் பேருல காமே. 7 |
|
|
|
|
|
|
|
2109 |
|
|
|
கூடியும் நின்றும் தொழுதுஎம் இறைவனைப் |
|
|
|
பாடியுளே நின்று பாதம் பணிமின்கள் |
|
|
|
ஆடியு ளேநின்று அறிவுசெய் வார்கட்கு |
|
|
|
நீடிய ஈற்றுப் பசுவது ஆமே. 8 |
|
|
|
|
|
|
|
2110 |
|
|
|
விடுகின்ற சிவனார் மேல்எழும் போது |
|
|
|
நடுநின்று நாடுமின் நாதன்தன் பாதம் |
|
|
|
கெடுகின்ற வல்வினை கேடில் புகழோன் |
|
|
|
இடுகின்றான் உம்மை இமையவ ரோடே. 9 |
|
|
|
|
|
|
|
2111 |
|
|
|
ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்று |
|
|
|
நீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள் |
|
|
|
ஆறணி செஞ்சுடை அண்ணல் திருவடி |
|
|
|
வேறுஅணி வார்க்கு வினையில்லை தானே. 10 |
|
|
|
|
|
|
|
2112 |
|
|
|
இன்புறு வீர்அறிந் தேஎம் இறைவனை |
|
|
|
அன்புறு விர்தவம் செய்யும்மெய்ஞ் ஞானத்து |
|
|
|
பண்புறு வீர்பிற வித்தொழி லேநின்று |
|
|
|
துன்புறு பாசத்து உழைத்துஒழிந் தீரே. 11 |
|
|
|
|
|
|
|
2113 |
|
|
|
மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு |
|
|
|
மேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும் ஒன்றுண்டு |
|
|
|
மேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு |
|
|
|
மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின்றோர்க்கே. 12 |
|
|
|
|
|
|
|
2114 |
|
|
|
சார்ந்தவர்க்கு இன்பம் கொடுக்கும் தழல்வண்ணன் |
|
|
|
பேர்ந்தவர்க்கு இன்னாப் பிறவி கொடுத்திடும் |
|
|
|
கூர்ந்தவர்க்கு அங்கே குரைகழல்காட்டிடும் |
|
|
|
சேர்ந்தவர் தேவரைச் சென்றுணர் வாரே. 13 |
|
|
|
|
|
|
|
2115 |
|
|
|
முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை |
|
|
|
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை |
|
|
|
நெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன் |
|
|
|
அத்தகு சோதி அதுவிரும் பாரே. 14 |
|
|
|
|
|
|
|
2116 |
|
|
|
நியமத்த னாகிய நின்மலன் வைத்த |
|
|
|
உகம்எத் தனையென்று ஒருவரும் தேறார் |
|
|
|
பவமத்தி லேவந்து பாய்கின்றது அல்லால் |
|
|
|
சிவமத்தை ஒன்றும் தெளியகில் லாரே. 15 |
|
|
|
|
|
|
|
2117 |
|
|
|
இங்கித்தை வாழ்வும் எனைத்தோர் அகிதமும் |
|
|
|
துஞ்சொத்த காலத்துத் தூய்மணி வண்ணனை |
|
|
|
விஞ்சத்து உறையும் விகிர்தா எனநின்னை |
|
|
|
நஞ்சுஅற் றவர்க்குஅன்றி நாடஒண் ணாதே. 16 |
|
|
|
|
|
|
|
2118 |
|
|
|
பஞ்சமும் ஆம்புவி சற்குறுபால்முன்னி |
|
|
|
வஞ்சகர் ஆனவர் வைகில் அவர்தம்மை |
|
|
|
அஞ்சுவன் நாதன் அருநர கத்துஇடும் |
|
|
|
செஞ்சநிற் போரைத் தெரிசிக்கச் சித்தியே. 17 |
|
|
|
|
|
|
|
2119 |
|
|
|
சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர் |
|
|
|
அவனை வழிபட்டங்கு ஆமாறுஒன் றில்லை |
|
|
|
அவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும் |
|
|
|
குருவை வழிபடின் கூடலும் ஆமே. 18 |
|
|
|
|
|
|
|
2120 |
|
|
|
நரரும் சுரரும் பசுபாசம்நண்ணிக் |
|
|
|
கருமங்க ளாலே கழிதலில் கண்டு |
|
|
|
குருஎன் பவன்ஞானி கோதிலன் ஆனால் |
|
|
|
பரம்என்றல் அன்றிப் பகர்ஒன்றும் இன்றே. 19 |
|
|
|
|
|
|
|
2121 |
|
|
|
ஆட்கொண் டவர்தனி நாயகன் அன்புற |
|
|
|
மேற்கொண்டவர்வினை போயற நாடொறும் |
|
|
|
நீர்க்கின்ற செஞ்சுடை நீளன் உருவத்தின் |
|
|
|
மேற்கொண்ட வாறுஅல்லை வீவித்து ளானே. 20 |
|
|
|
|
|
|
|
ஏழாம் தந்திரம் முற்றிற்று |
|
|
|
--------- |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|