text
stringlengths
101
471k
கொய்யா இலை பயன்கள் | Koyya Ilai Benefits in Tamil கொய்யா மரத்தின் இலை, பழம், வேர், பட்டை என அனைத்து பகுதிகளும் மருத்துவ குணங்கள் […] Read More Search for: Categories Categories Select Category Daily Foods (66) Fruits Medical Benifits (15) Uncategorized (29) Vegetables (6) காய்கறிகள் / பழவகைகள் (80) எண்ணெய் வகைகள் (7) காய்கறிகள் (33) கீரைகள் (14) பழங்கள் (22) பூக்கள் (3) மருத்துவ குறிப்புகள் (5) மூலிகை மருத்துவம் (70)
தமிழ் எம் ரீ வி இயக்குனர் என்.வி.சிவநேசனும் அவர் மகன்கள் பாரத் ,டிலஸ்சன் „ஸ்சலோன் உயர் கல்வி,கலை கலாச்சார அமைப்பினரால் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது இன்று சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 94 வது பிறந்த நாள் (07.01.2019) ஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டு கழகம் Archives November 2019 June 2019 January 2019 December 2018 November 2018 September 2018 August 2018 May 2018 April 2018 March 2018 February 2018 January 2018 December 2017 October 2017 September 2017 June 2017 May 2017 April 2017 March 2017 February 2017 January 2017 October 2016 August 2016 July 2016 June 2016 May 2016 April 2016 March 2016 February 2016 January 2016 December 2015 November 2015 October 2015 July 2015 June 2015 May 2015 April 2015 March 2015 February 2015 January 2015 July 2014 June 2014 May 2014 April 2014 March 2014 February 2014 January 2014 December 2013 November 2013 October 2013 September 2013 August 2013 July 2013 June 2013 May 2013 April 2013 March 2013 February 2013 January 2013 December 2012 November 2012 October 2012 September 2012 August 2012 July 2012 June 2012 May 2012 April 2012 March 2012 February 2012 Meta Log in Entries RSS Comments RSS WordPress.org your ads Categories அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு போலி வைத்தியர்கள் Posted by admin on October 29th, 2012 07:14 AM. Under தாயகச்செய்திகள் நாட்டில் 30 ஆயிரம் போலி வைத்தியர்கள் இருப்பதாக இணங்காணப்பட்டுள்ளனர். இது வைத்தியத் துறைக்கு பாரிய சிக்கலான நிலைமையாகும் எனத் தெரிவித்த மத்திய மாகாண சுகாதார அமைச்சர் சுனில் அமரதுங்க, சுதேச துறையில் வைத்தியராக இருப்போர் மேலைத்தேய மருத்துகளையே வழங்கி வருவதாகவும் குற்றம் சாட்டினார். கண்டியில் இடம் பெற்ற செயலமர்வொன்றின்போதே மாகாண அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறுகையில், சிறுநீரகத்தில் ஏற்பட்ட ஒரு நோய்க்கு ஆயுர்வேத மருந்து வகைகளை சிறிது காலம் பாவித்தேன். சில வாரங்களில் எனது நுரையீரல் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் நான் இந்தியாவிற்குச் சென்று எனது நோயை குணப்படுத்திக் கொண்டேன். பின்னர் திரும்பி வந்து எனக்கு தரப்பட்ட மருந்தை ஆய்விற்கு உட்படுத்தியபோது 90 சதவீதம் கஞ்சா போதை அதில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதேபோல் மத்திய மாகாணசபை அங்கத்தவரான அங்கம்மன தொடர்ந்து நீண்டகாலம் “அரிஸ்டை’ வகைகளைப் பாவித்து வந்ததன் காரணமாக அவரது சிறுநீரகம், ஈரல் போன்றவை பாதிக்கப்பட்டு இறுதியில் அவர் மரணமடைய வேண்டி வந்தது. அதே நேரம் நாட்டில் 30,000 போலி வைத்தியர்கள் இருக்கிறார்கள். இதைவிட இன்னொரு ஆபத்தும் உள்ளது.அதாவது சுதேச வைத்தியத் துறையில் தமது படிப்பபை மேற்கொண்டு வைத்தியராக இருப்பவர்களில் அநேகர் மேலைத்தேய மருந்துகளையே வழங்குகின்றனர். இங்கு ஆயுர்வேதத்துறைக்கான ஒழுங்கு விதி முறைகள், பாரம்பரியம் போன்ற அனைத்துமே மீறப்பட்டு வர்த்தக ரீதியில் முதன்மைப்படுத்தப்படுகிறது. அதேபோல் சிலர் போலி விளம்பரங்களை வழங்கி பணம் பறிக்கின்றார்கள். இப்படியான எமது பாரம்பரிய வைத்திய முறை வீழ்ச்சிக்கு உள்ளாகின்றது. இலங்கை முஸ்லிம்களில் பாரம்பரிய வைத்திய முறையை கைவிட்டு விட்டனர். சிங்கள மன்னர் காலம் முதல் அதே வைத்தியத் துறையில் பரம்பரை வைத்தியர்களாக இருந்த முஸ்லிம்கள் அத்துறையை கைவிட்டதாகவும் எமது சுதேச வைத்தியத் துறை அருகிவரக் காரணமாகி உள்ளது என்றார். இவ் வைபவத்தில் உறையாற்றிய மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பே கடுவ தெரிவித்ததாவது, 1815 ஆம் ஆண்டுவரை இலங்கையில் சுதேச வைத்தியத்துறை பாதுகாக்கப்பட்டு வந்தது. இலங்கை வாழ் முஸ்லிம்களைப் பொருத்தவரை வைத்தியரத்ன முதியான்ஸேலா என்றும், உடையார் பரம்பரை என்றும் பல்வேறுபட்டவர்கள் உடுநுவரை பகுதியில் வைத்தியர்களாக இருந்து சாதனை படைத்தனர். அவ்வாறான வைத்திய ரத்ன முதியான்ஸலாகே உடையார் என்ற பரம்பரை இன்று பாரம்பரிய வைத்தியத்தை கை விட்டுள்ளனர். 1956 ஆண்டு எஸ். டப்ள்யூ ஆர்.டி. பண்டார நாயகா சுதேச வைத்தியர்களை கௌரவித்து புத்துயிர் அளித்தார். அதன் பின்னர் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ “தேசியம்’ என்ற கொள்கையை பின்பற்றுவதன் காரணமாக ஆயுர்வேதத்துறை படிப்படியாக எழுச்சி பெற ஆரம்பித்துள்ளது என்றார். Comments Leave a Reply Click here to cancel reply. You must be logged in to post a comment. « மணமகள் காதலனுடன் ஓட்டம்! ஹெரோயின் வைத்திருந்தவர் கைது! » TamilMTV Live இணையத்தொலைக்காட்சி Categories Categories Select Category அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்ப்பு பாதயாத்திரை இன்று களுத்துறையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ‘அரசாங்கமே உடனே வெளியேறு’ எனும் தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணியின் பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டுள்ளது. களுத்துறையிலிருந்து இன்று காலை ஆரம்பமான பாதயாத்திரை, இன்று மாலை மொரட்டுவையை வந்தடையவுள்ளது. அதனைத்தொடர்ந்து, குறித்த பாதயாத்திரை நாளை பிற்பகல் 3 மணியளவில் நுகேகொடையை வந்தடைந்ததன் பின்னர், அங்கு பொதுக் கூட்டம் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. (நி)
அதன்படி , நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட இங்கிலாந்து அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி ஒரு விக்கட் இழப்பிற்கு 6 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது. இந்த இரண்டு அணிகளுமே இதுவரையில் உலகக்கிண்ணத்தை வெல்லவில்லை என்பதோடு, இந்தமுறை உலகக்கிண்ணத்தை வெல்லக்கூடிய அணிகளாக இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் பார்க்கப்படுகின்றன. ஒருநாள் போட்டிகளின் தரவரிசையில் இங்கிலாந்து 1ம் இடத்திலும், தென்னாப்பிரிக்கா 3ம் இடத்திலும் உள்ளன. இரண்டு அணிகளும் இறுதியாக விளையாடிய ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றி பலத்தை நிரூபித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
காணாமற் போனோர் தொடர்பான முறைபாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் யாழ்ப்பாணத்தில் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளன. ஜனாதிபதி ஆணைக்குழுவின் இன்றைய சாட்சி விசாரணைகள் தென்மராட்சி பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெறவுள்ளன. இதேவேளை, காணாமற்போனோர் தொடர்பான முறைபாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் வலி கிழக்கு, கோப்பாய் பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்றன. இதன்போது கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 49 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன், காணாமல் போனோர் தொடர்பில் மேலும் 93 முறைபாடுகளும் பதிவுசெய்யப்பட்டடிருந்தன. யாழ்ப்பாணத்தில் காணாமற்போனோர் தொடர்பில் முறைபாடு செய்துள்ள சுமார் 200 பேருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியளிப்பதற்கு சமூகமளிக்குமாறு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளன. இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் 16 ஆம், 17 ஆம் திகதிகளில் யாழ். மாவட்ட செயலகத்தில் குறிப்பிடத்தக்கது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் வைகோ என்றழைக்கப்படும் வை. கோபாலசாமி தேச துரோக வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனையும் 10,000 ரூபா அபராதமும் விதித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவிட்டுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு எழும்பூரில் இடம்பெற்ற நூல் வௌியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய வைகோ, இலங்கை போரில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராகவும் கருத்து வௌியிட்டிருந்தார். இதன் காரணமாக இந்திய இறையாண்மைக்கு எதிராக வைகோ கருத்து வௌியிட்டதாக தெரிவித்து அவர் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டது. பகிர்தல்: தொடர்புடைய செய்திகள் MTV நிறுவனத்திற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு 02 Jul, 2021 | 02:07 PM ரஞ்சன் ராமநாயக்கவின் மனு மீதான தீர்ப்பு 5 ஆம் திகதி கிண்ணியாவில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை வில்பத்து காடழிப்பு சட்டவிரோதமானது என தீர்ப்பு 16 Nov, 2020 | 01:44 PM 20 ஆவது திருத்தம்: உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும் – சபாநாயகர்
"https://www.noolaham.org/wiki/index.php/பகுப்பு:கிளிநொச்சித்_தமிழ்ச்சங்கம்" இருந்து மீள்விக்கப்பட்டது
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும். Description Specifications Reviews பாசிஸ்ட் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து சோவியத் மக்கள் நடத்திய மாபேரும் தேச பக்தப்போர் இந்தக் கதைக்குப் பின்னணியாகும். ஒரு தாய் இந்தப் போரில் தன்னுடைய மூன்று குழந்தைகளையும் இழந்துவிட்டாள். ஆனால் நன்மையின் மீதும் மனித குலத்தின் மீதும் கொண்டிருந்த நம்பிக்கையை ஆவள் இழக்கவில்லை. அந்த எளிமை யான தாயின் சோகக் கதையை ஆசிரியர் உருக்கத்துடன் விவரிக்கிறார். உலகத்தில் மிகச் சிறந்தது, மிகவும் அழகானது ஒரு அன்னையின் தூய நல்லிதயமே, அத்தகைய அன்னையைப் பற்றிய அழியாச் சித்திரம் இக்குறுநாவல். Book Details Book Title அன்னை வயல் (Annai Vayal) Author சிங்கிஸ் ஐத்மாத்தவ் (Singis Ithmathav) Translator பூ. சோமசுந்தரம் (P. Somasundaram) ISBN 9788123417918 Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) Pages 280 Year 2011 Write a review Your Name Your Review Note: HTML is not translated! Rating Bad Good Captcha Please complete the captcha validation below Continue By the same Author சோவியத் இனமொழிச் சிறுகதைகள் சோவியத் இனமொழிச் சிறுகதைகள்சோவியத் படைப்புகளில் இடம்பெறும் கதை நிகழ்வுகள், கதாபாத்திரங்களின் உளவியல் படிமம், கதைகள் வலியுறுத்தும் அறம் ஆகியவை அகிலப் பொதுத் தன்மை உடையவை.’சோவியத் இனமொழிச் சிறுகதைகள்’ என்னும் இந்தத் தொகுப்பில் இடம்பெறும் கதைகளை எழுதியவர்கள், அதிக பிரபலமல்லாதவர்கள். ஆனபோதிலும், இவர்களத.. ₹152 ₹160 Add to Cart Add to Wish List லாரி டிரைவரின் கதை லாரி டிரைவரின் கதைசோவியத் எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மாத்தவ் உலகப் புகழ் பெற்றவராவார். இவரது பல நூல்கள் உலகின் பல மொழிகளில் வெளிவந்துள்ளன. “மலைகளிலும் ஸ்டெப்பிகளிலும் தோன்றும் கதைகள்” என்ற இவருடைய நூலைப் பாராட்டி 1963-இல் இவருக்கு லெனின் பரிசும் வழங்கப்பட்டது. கிர்கீஸிய இனத்தைச் சேர்ந்த இந்த எழுத்தாளரின.. ₹76 ₹100 Add to Cart Add to Wish List ஜமீலா ஜமீலாமுதன்முதலாக 1958ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நாவலில் சாதாரண உழைக்கும் மக்களே கதாநாயகர்கள். மேலும் இந்நூலில், கூட்டுப் பண்ணையின் விவசாய வாழ்க்கை, அவர்களுடைய சுதந்திரம், காதல் என்று மனிதர்களின் பல்வேறு பரிமாணங்களை பேசுகிறது. அன்றும், இன்றும் அனைவராலும் இதை படிக்கும் போது அதற்கான சூட்சுமம் தெரிகிற.. ₹67 ₹70 Add to Cart Add to Wish List அதிகாலையின் அமைதியில் 'இயற்கை', 'ஈ' போன்ற திரைப்படங்களை இயக்கிய ஜனநாதனின் ‘பேராண்மை’ திரைப்படத்தின் மூலவடிவாமாக அமைந்த நாவல் இது. ஐந்து பெண்கள் ஒரு ராணுவ தளபதிஜெர்மன் பாசிஸ்டுகளை எதிர்த்து அவர்களின் திட்டத்தை சீர்குலைத்தார்கள். சோவித் மக்கள் நடத்திய போர்க்களத்தில் இளைஞர்களின் வீரத்தை சொல்கிறது. ஆசிரியருக்கு பெரும் புகழை.. ₹152 ₹160 Add to Cart Add to Wish List People Also Bought -5 % சொட்டாங்கல் சொட்டாங்கல்.. ₹209 ₹220 Add to Cart Add to Wish List Buy Now -5 % ஏழரைப் பங்காளி வகையறா ஏழரைப் பங்காளி வகையறாஅர்ஷியாவின் முதல் நாவலான இந்த ‘ஏழரைப் பங்காளி வகையறா’ தமிழ் - உருது முஸ்லீம்கள் பற்றிய தமிழின் முதல் நாவல். முழுவதும் ஓர் உணர்ச்.. ₹190 ₹200 Add to Cart Add to Wish List Buy Now -5 % மூன்றாம் பிறை: வாழ்வனுபவங்கள் தான் பார்த்த காட்சிகள் சந்தித்த மனிதர்கள் நிகழ்வுகள் என எல்லாவற்றையும் சம்பவங்கள் என்று ஒதுக்கி தள்ளாமல் அவற்றின் மீதான சமூகப்பார்வையை மம்முட்டி இந்.. ₹95 ₹100 Add to Cart Add to Wish List Buy Now You may also like -5 % பாட்டிசைக்கும் பையன்கள் .. ₹238 ₹250 Add to Cart Add to Wish List Buy Now -5 % India Positive Does it make any difference to the ordinary citizen which party is in power? Whether it’s a majority or a coalition? What can we do to better job pros.. ₹214 ₹225 Add to Cart Add to Wish List Buy Now Like The Flowing River In this riveting collection of thoughts and stories, Paulo Coelho, the author of ‘The Alchemist’, offers his personal reflections on a wide range of s.. ₹350 Add to Cart Add to Wish List Buy Now Manual Of The Warrior Of Light Manual of the Warrior of Light is an invitation to each of us to live our dream, to embrace the uncertainty of life, and to rise to meet our own uniqu.. ₹350 Add to Cart Add to Wish List Buy Now இக்கதை தொடங்காமலே முடிகிறது .. ₹100 Add to Cart Add to Wish List Buy Now By the same brand -5 % Available 1000 விடுகதைகள் (முல்லை முத்தையா) .. ₹90 ₹95 Add to Cart Add to Wish List Buy Now Notify Me When Book is Available -5 % 1001 இரவு அரபுக் கதைகள் 1001 இரவு அரபுக் கதைகள்ஒவ்வொரு கதையிலும் மக்களின் வாழ்வை நெறிப்படுத்துகிற், மேன்மையுறச் செய்கிற ஏதாவது செய்தி இருந்தால் அதற்குப் பயனும் வரவேற்பும் என்.. ₹219 ₹230 Add to Cart Add to Wish List Buy Now -5 % 38 தமிழக மாவட்டங்கள்: வரலாறும் வளர்ச்சியும் தமிழ் நாட்டைப் பற்றி முழுச் செய்திகளையும், மாவட்டங்கள் வாரியாகத் தொகுக்கப் பெற்றுள்ள இந்நூல் ஆயிரம் நூல்களை உள்ளடக்கிய ஒரு நூல்நிலையத்தைப் போன்ற ஒரு த..
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது." "Some Articles Copy From Another Website" Thanks To All. லேபிள்கள் CHILD CARE (144) COMEDY (51) COMPUTER (135) GENERAL (18) INFORMATION (468) ISLAM (403) MEDICAL (684) MY ALBUM (5) STORY (11) வியாழன், 19 செப்டம்பர், 2019 வரிச் சேமிப்பு... கூடுதல் வழிகள்! வருமான வரியைச் செலுத்தி முடிக்கும் நேரம் இது. வருமான வரிச் சட்டம் 80சி பிரிவின், ரூ.1.5 லட்சம் வரையிலான வரிச் சலுகைகள் முழுவதையும் நீங்கள் பயன்படுத்திவிட்டீர்களா? 'யெஸ்' எனில், உங்களுக்கான அடுத்த கேள்வி, 80டி பிரிவின்படி மெடிக்கல் இன்ஷூரன்ஸ், மருத்துவச் செலவுகளுக்கான வரிச் சலுகையும் பயன்படுத்தி முடித்துவிட்டீர்களா என்பதுதான். வரிச் சலுகை பெறும் விஷயத்தில், பெரும்பாலான நபர்கள் தங்களுக்கு நன்கு தெரிந்த வரிச் சலுகைப் பிரிவுகளின் வரம்புகள் அனைத்தையும் பயன்படுத்தி விடுகிறார்கள். ஆனால், வருமான வரிச் சேமிப்புக்காக, சட்டத்துக்கு உட்பட்டு மேலும் சில வழிமுறைகள் உள்ளன என்பது பலருக்கும் தெரிவதில்லை. அந்த வழிமுறைகளை இனி உங்களுக்கு விளக்குகிறேன். மூலதன இழப்பை ஈடுகட்டுதல் நீங்கள் வாங்கிய ஒரு மூலதனச் சொத்தை, வாங்கிய விலையைவிட குறைந்த விலைக்கு விற்கும்போது அதில் பண இழப்பு ஏற்படுகிறது. நீங்கள் வாங்கிய விலையைவிட அதிக விலைக்கு விற்றிருந் தால் அதில் கிடைக்கும் லாபத்துக்கு வரிச் செலுத்த வேண்டும். அந்த மூலதனச் சொத்தின் வகை, அது நீண்ட கால மூலதனமா அல்லது குறுகிய கால மூலதனமா, இண்டெக்ஸேஷன் சலுகைகள் மற்றும் வருமானவரி வரம்பு போன்றவற்றின் அடிப்படையில் நீங்கள் கட்ட வேண்டிய வரி கணக்கிடப்படும். மூலதன இழப்பை ஈடுகட்ட மூலதன ஆதாயத்தைப் பயன்படுத்தலாம். அப்படிச் செய்வதன்மூலம் நீங்கள் கட்ட வேண்டிய வரியைக் குறைக்க முடியும். குறுகியகால மூலதன இழப்புகளை, நீண்ட கால மற்றும் குறுகியகால மூலதன ஆதாயத்தில் ஈடு கட்டலாம். நீண்டகால மூலதன இழப்பை, நீண்டகால மூலதன ஆதாயத்துடன் மட்டுமே ஈடுகட்ட முடியும். இதர வருமானத்துடன் ஈடுகட்ட முடியாது. பெற்றோருக்கு வீட்டு வாடகை சொந்த ஊரிலேயே அலுவலகம் அல்லது பெற்றோரின் வீட்டருகே இருக்கும்பட்சத்தில் பலர் தங்களுடைய பெற்றோருடன் சேர்ந்து வசிக்கிறார்கள். அந்த வீடு, உங்களுடைய பெற்றோருக்குச் சொந்தமானதாக அல்லது பெற்றோர் இணை உரிமையாளர்களாக இருந்தால், அந்த வீட்டுக்காக உங்களுடைய பெற்றோருக்கு வாடகை செலுத்தியதை வரிச் சலுகைக்குக் காட்டலாம். அந்த வீட்டு வாடகை, உங்களுடைய வரிக் கட்டும் வருமானத்திலிருந்து கழிக்கப்படும். இதில், உங்களுடைய பெற்றோர், தங்களுடைய வருமான வரிக் கணக்கில் இந்த வாடகையை வருமானமாகக் காட்ட வேண்டும். பெற்றோர், அவர்களுடைய வருமான வரி வரம்புக்கேற்ப அதற்கு வரி செலுத்தவேண்டும். நன்கொடை வழங்குதல் பலர், தங்களது வருமானத்தில் ஒரு பகுதி யையோ அல்லது ஒருநாள் சம்பளத்தையோ நற்காரியங்களுக்காக நன்கொடையாகத் தருகிறார்கள். ஆனால், அவற்றை தங்களது வருமானவரிக் கழிவுக்குக் காட்டுவதில்லை. நீங்கள் நற்காரியத்துக்காக அளிக்கும் தொகைக்கு வரிக்கழிவு உண்டு. குறிப்பிட்ட சில தொண்டு நிறுவனங்கள் அல்லது அமைப்புகளுக்கு அளிக்கும் தொகைக்கு 50 - 100% வரை வரிக்கழிவு அளிக்கப்படும். எடுத்துக்காட்டாக, தேசியப் பாதுகாப்பு நிதியத்துக்கு அளிக்கும் தொகைக்கு 100% முழுமையான வரிவிலக்கு உண்டு. அப்படிச் செலுத்தும் தொகையை வருமானவரிக் கழிவுக்குப் பயன்படுத்துவதற்கு, மறக்காமல் ரசீது பெற்றுக்கொள்ளவும். கூட்டுக் குடும்ப வரிச் சேமிப்பு கூட்டுக் குடும்பம் என்பது, தனக்கென தனித்த பான் கார்டு கொண்டிருக்கும். இப்படிக் கூட்டுக் குடும்பத்தை உருவாக்குவது, அதில் உள்ள தனிநபர்களின் வரிச் சேமிப்புக்கு உதவும். ஒரு தனிநபர் பெறக்கூடிய அனைத்து வரிச் சலுகைகளையும் இவர்களால் பெற இயலும். கூட்டுக் குடும்ப முறையில் இருப்பவர்களின் வருமானம், அனைத்து உறுப்பினர்களாலும் பகிரப்படுவதால், வரிச்சுமை குறைய வாய்ப்புண்டு. பெற்றோரின்மூலம் முதலீடு செய்தல் மூத்த குடிமக்களாக இருக்கும் உங்கள் பெற்றோரின் ஆண்டு வருமானத்துக்கு ரூ.3 லட்சம் வரை வரிச் சலுகை உண்டு. எனவே, உங்களுடைய பெற்றோருக்கு முதலீடு அல்லது சொத்தை அன்பளிப்பாகத் தருவதன்மூலம் வரிச் சலுகை பெறலாம். இந்தச் சொத்து அல்லது முதலீட்டின்மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு ரூ.3 லட்சம் வரை வரி ஏதும் கட்ட தேவையில்லை. உங்களுடைய பெற்றோருக்கு ரூ.37.5 லட்சம் அன்பளிப்பாகத் தரும்பட்சத்தில், அதை அவர்கள் ஆண்டுக்கு 8% வருமானம் தரும் ஏதாவது ஒரு திட்டத்தில் முதலீடு செய்தால், இதன்மூலம் வட்டி / வருமானம் அல்லது லாபமாக ரூ.3 லட்சம் கிடைத்தால் அவர்கள் வரி கட்டத் தேவையில்லை. இதை உங்களுடைய தாய், தந்தை என இருவரின் வங்கிக் கணக்கிலும் செய்யலாம் என்பதால், மொத்தம் ரூ.75 லட்சம் வரை அவர்களுக்குக் கொடுத்து வரியை மிச்சப்படுத்தலாம். பங்கு முதலீட்டில் லாபம் நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்து, நிதியாண்டில் உங்களுடைய நீண்ட கால மூலதன ஆதாயம் ரூ.1 லட்சத்துக்கு மேற்பட்டால் 10.4% வரி செலுத்த வேண்டும். அதனால் நீங்கள் ஓராண்டு காலம் வரை முதலீடு செய்து, அதைத் திரும்ப எடுத்து மீண்டும் முதலீடு செய்வதன்மூலம் வரிச் சேமிப்பு செய்யலாம். உதாரணமாக, ஓராண்டுக்குமுன் பங்குச் சந்தையில் ரூ.2 லட்சம் முதலீடு செய்திருந்து, அதன் மதிப்பு தற்போது ரூ.2.8 லட்சமாக இருக்கும்பட்சத்தில், அந்தப் பங்குகளை விற்பனை செய்தால், அதன்மூலம் கிடைக்கும் ஆதாயத்துக்கு வரி கட்ட வேண்டி இருக்காது. இந்த ரூ.2.8 லட்சத்தை மீண்டும் முதலீடு செய்து, ஓராண்டுக்குப்பிறகு, அதன் மதிப்பு ரூ.3.5 லட்சமாக உயர்கிறது என வைத்துக்கொள்வோம். இந்தப் பங்குகளை விற்பனை செய்து, மீண்டும் வாங்க வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்வதன் மூலம் பங்கு முதலீட்டில் நீண்டகால ஆதாய வரியைச் சேமிக்கலாம். இதைச் செயல்படுத்தும்போது பங்குத் தரகுக் கட்டணத்தைக் கணக்கில்கொள்ளவும். http://pettagum.blogspot.com/2019/03/blog-post_21.html -- இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com By sahabudeen at செப்டம்பர் 19, 2019 இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் கருத்துகள் இல்லை: கருத்துரையிடுக புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom) காலையில் தாமதமாக விழிப்பவரா நீங்கள்? நமது முன்னோர்கள் இரவில் முன்னதாகவே தூங்கி , பகலில் விடியற்காலையில் எழும் பழக்கத்தினை வைத்திருந்தனர் . ஆனால் தற்போது பெர... Popular Posts மருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை உங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ... உங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா? இன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த... கார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள் வேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...
இலங்கையில் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய 5G ஸ்மார்ட்போன் ஆன Huawei Nova 7 SE ஆனது பல்வேறு விசேட உள்ளக அம்சங்களுடனும் மாறுபட்ட வடிவமைப்பையும் கொண்டுள்ளது. Nova 7 SE மூலம், Huawei நிறுவனம் நடுத்தர வகை 5G ஸ்மார்ட்போனை சந்தைகள் எங்கும் கிடைக்கும் வகையிலான புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ப்ரீமியம் வகை 5G திறனை, நடுத்தர வகை கையடக்கத் தொலைபேசிகளின் விலையில் கொண்டுவந்துள்ளதோடு, அதிலுள்ள அம்சங்களோ, அதன் புகழ்பெற்ற வடிவமைப்பு அமைப்புகளிலோ எவ்வித குறைகளையும் அது மேற்கொள்ளவில்லை Huawei நிறுவனம், தனது பிரபலமான Nova தொடரில் மேற்கொண்டு வரும், புதிய அம்சங்களை புகுத்தும் விடயம், Nova 7 SE இலும் தொடர்கிறது. 7 SE இன் மிக முக்கியமான விடயமாக காணப்படுவது 5G அம்சமாகும். ஆயினும் அந்த அம்சத்துடன் நின்று விடாது, அதில் மேம்படுத்தப்பட்ட Quad AI கெமரா மற்றும் அதே போன்ற சக்தி வாய்ந்த புரொசசர் ஆகியவற்றை அது கொண்டமைந்துள்ளது. இதன் மூலம் Huawei தனது பயனர்களுக்கு 8GB RAM + 128 GB ROM மற்றும் 40w Huawei SuperCharge தொழில்நுட்பத்துடன் முற்று முழுதான ஸ்மார்ட் லைபை வழங்குகிறது. Nova 7 SE யின் நேர்த்தியான வடிவமைப்பானது, வருடாந்த ஸ்மார்ட்போன் மதிப்பீடுகளின் அடிப்படையில், Nova தொடர் தொடர்ந்தும் முதலிடத்தில் இருப்பதற்கான காரணத்தை பறைசாற்றுகிறது. Huawei இன் தொழில்நுட்ப வலிமையின் உச்சத்தை காண்பிக்கும் Nova 7 SE ஆனது, முதலாவது நடுத்தர வகை 5G ஸ்மார்ட்போனாக தன்னை நிலைநிறுத்தவுள்ளது. இது 7nm Kirin 820 5G chipset உடன் வருவதோடு, அடுத்த கட்ட செயல்திறன் கொண்ட AI திறனை கொண்டுள்ளதோடு, வேகமான 5G இணையத்தை வழங்குகிறது. இவை அனைத்தும் ஸ்மார்ட்போன்களின் எதிர்காலமாக கருதப்படுபவையாகும். அதிக செயற்றிறன் கொண்ட விளையாட்டுகளை விளையாடுதல், ​​உயர்தர வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்தல், ​​இணையத்தில் திரைப்படங்களைப் பார்த்தல், ​​வேகமான பதிவிறக்க மற்றும் பதிவேற்றும் வேகத்தை வழங்குதல் ஆகிய அனைத்து செயற்பாடுகளின்போதும், Nova 7 SE ஆனது எவ்வித பின்வாங்கலும் இன்றி செயற்படுகிறது.. Nova தொடரானது எப்போதும் அதன் மேம்பட்ட கெமரா அம்சங்களுடன் ஒத்ததாகவே உள்ளது. அந்த வகையில் Nova 7 SE ஆனது, 64MB உயர் தெளிவுத்திறன் கொண்ட பிரதான கெமரா, 8MB அல்ட்ரா வைட் ஆங்கிள் கெமரா, 2MB பொக்கே லென்ஸ் மற்றும் புகைப்படத்தில் அதிக விபரங்களை வழங்கும் 2MB மெக்ரோ லென்ஸ், உள்ளிட்ட குவாட் AI கெமரா அமைப்பைக் கொண்டுள்ளது. ஒரு நீண்ட தூரத்திலுள்ள பொருள், இயற்கைக்காட்சி அல்லது மிக நெருக்கமான பொருளாக இருந்தாலும், AI கெமரா அதை தற்போதுள்ள வெளிச்சம் மற்றும் பொருளின் தெரியும் அளவு ஆகியவற்றை, சிறப்பான லென்ஸ் சரிப்படுத்தல் மூலம் அடையாளம் கண்டுகொள்கிறது. 4K high definition வீடியோ, DUAL-VIEW வீடியோ, மெதுவான சலனம் மற்றும் time-lapse (நேர இடையீட்டு) போன்ற எந்தவொரு தெரிவின் மூலமும், படைப்பாற்றல் கொண்ட வீடியோக்களை பதிவு செய்யும்போது எந்தவொரு மாறுபாட்டையம் அது வெளிப்படுத்தாது. படப்பிடிப்பு மற்றும் படப்பிடிப்புக்குப் பிறகு, Nova 7 SE இலுள்ள ‘Editing Function’ (எடிட்டிங் செயல்பாடு) மூலம் உங்கள் புகைப்படங்களையும் வீடியோக்களையும் நீங்கள் விரும்பும் வகையில் உடனடியாக மாற்றியமைக்க அதிலுள்ள AI அம்சம் உதவுகிறது! Nova 7 SE காரணமாக, உங்கள் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யப்படும் வரை நீங்கள் மணிக் கணக்கில் காத்திருந்த காலமெல்லாம் மலையேறிப் போயுள்ளது. Nova 7 SE ஆனது, 40W Huawei SuperCharge செயல்பாட்டை தன்னகத்தே கொண்டுள்ளதோடு, அது மின்கலத்தின் 70% ஐ 30 நிமிடங்களில் சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. 30 நிமிடங்களில் 70% மின்கலம் சார்ஜ் செய்யப்படுவதானது, இன்றைய வாழ்க்கை முறைக்கு ஒத்திசையும் மிகப் பொருத்தமான அம்சமாக அமைகிறது. தொடர்ச்சியான பயன்பாட்டிற்கான, நீண்ட நேர மின்கலத்தை எதிர்பார்க்கும் பயனர்களுக்கும் Nova 7 SE பொருத்தமாக அமைகிறது. 4,000mAh மின்கலத்தை கொண்டுள்ள Nova 7 SE ஆனது, குறைந்தபட்ச மின்கல நுகர்வுடன் நாளாந்த பணிகளை எளிதாக்குகின்றது. நிறுவப்படும் அதிகமான செயலிகள் நினைவகத்திற்கு போட்டி போடும் நிலையில், Nova 7 SE ஆனது, மிகப் பெரும் RAM மற்றும் சேமிப்பகத்துடன் பொழுதுபோக்குக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொண்டுவருகிறது. Nova 7 SE இன் 8GB RAM + 128GB ROM கலவையானது, உயர் தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஏனைய கோப்புகளுக்கு பாரிய சேமிப்பு பரப்பை வழங்குவதன் மூலம், வேலைகளை தங்கு தடையற்ற வகையில் மேற்கொள்ள வழிவகுக்கிறது. 8GB RAM மற்றும் 128GB சேமிப்பகம் என்பன Multi-tasking (ஒரே நேரத்தில் பல பணிகளை கையாளுதல்) என்பதை ஒரு தென்றலாக மாற்றுகின்றது என்றே கூறலாம். Nova 7 SE யின் தனித்துவமான வடிவமைப்பு தொலைபேசியின் சக்தியுடன் ஒன்றறக் கலக்கின்றது. அதன் அழகிய இழைநயம் கொண்ட முப்பரிமாண (3D) கண்ணாடி மேற்பரப்பு, கண்களுக்கு விருந்தாக அமைவதோடு, அதன் ஒவ்வொரு வண்ண மாறுபாடுகளும் மறக்க முடியாதவையாக அமைகின்றது. Nova 7 SE ஆனது, வெள்ளி (Space Silver), பச்சை (Crush Green), ஊதா (Midsummer Purple) ஆகிய தெரிவுகளை கொண்ட, வித்தியாசமான மூன்று வண்ணங்களில் வருகின்றது. ஒவ்வொரு வண்ணமும் ஆசையைத் தூண்டும் தனித்துவமானதாக அமைந்துள்ளது. Nova 7 SE இன் திரையானது, சிறுதுளையுடனான (Punch) முழுத் திரை கொண்ட, 90.3% திரைக்கு உடல் விகிதத்தை கொண்ட எல்லையற்ற காட்சிகளை வழங்குவதோடு, வியக்க வைக்கும் அனுபவத்தை அளிக்கிறது. கைரேகை உணரியாக செயல்படும் அதன் பக்க வாட்டில் அமைந்துள்ள ஆளி (power button) பொத்தான், உள்ளங்கையில் கையடக்கத் தொலைபேசி இருக்கும் போது எவ்வித தொந்தரவு இல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நடுத்தர வகை சாதனம் என்ற வகையில், ஒட்டுமொத்த அனைத்து விதமான செயல்திறன், வடிவமைப்பு, உள்ளார்ந்த அம்சங்களைக் கருத்தில் கொள்ளும்போது, Huawei Nova 7 SE ஆனது, 2020ஆம் ஆண்டில் விலையின் அடிப்படையில் வெளிவந்துள்ள ஸ்மார்ட்போன்களின் அடிப்படையில், சிறந்த மதிப்பை பெறும் கையடக்க தொலைபேசிகளில் ஒன்றாகும். தகவல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் (ICT) உட்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சாதனங்களின் முன்னணி உலகளாவிய வழங்குநரான Huawei நிறுவனம், முழுமையாக இணைக்கப்பட்ட, புத்திசாலித்தனமான உலகிற்காக, ஒவ்வொரு நபருக்கும், வீட்டுக்கும், நிறுவனத்திற்கும் டிஜிற்றல் தொழில்நுட்பங்களை கொண்டு சேர்ப்பதில் உறுதியாக உள்ளது. உலகளாவிய மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனமான Huawei, புகழ்பெற்ற விருது விழாக்களில் முறையாக கௌரவிக்கப்பட்டு, உலகளாவிய தரக்குறியீடுகளின் தரவரிசையில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. மிகவும் மதிப்புமிக்க உலகளாவிய தரக்குறியீடுகள் தொடர்பான, BrandZ Top 100 பட்டியலில் Huawei 45ஆவது இடத்தையும், Forbes உலகின் மிக மதிப்புமிக்க தரக்குறியீடகள் பட்டியலில் 79ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. அத்துடன் சமீபத்திய Brand Finance Global 500 மிகவும் மதிப்புமிக்க தரக்குறியீடுகள் பட்டியலில் முதல் 10 மதிப்புமிக்க தரக்குறியீடுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. Interbrand இனது, சிறந்த உலகளாவிய தரக்குறியீடுகள் பட்டியலில் Huawei 68ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. மேலும் Fortune உலகளாவிய 500 பட்டியலிலும் அது இடம்பிடித்துள்ளது. தொடர்பான செய்திகள்: Daraz வழங்கும் 11.11 உலகின் பிரம்மாண்ட Online விற்பனை 5G உடனான முதலாவது நடுத்தர வகை ஸ்மார்ட்போன் Huawei Nova 7 SE 5G ஸ்மார்ட்போனான Huawei Nova 7 SE தற்போது இலங்கையில் Share Tags: Huawei Nova 7 SE 5G ThinakaranBiz Add new comment Your name Subject கருத்து * Leave this field blank Or log in with... Login with Facebook Related Articles <div class="views-lazy-load">Loading...</div> Latest News அமலோற்பவ அன்னை திருவிழா நாளை கொண்டாடப்படுகிறதுகத்தோலிக்க திருச்சபையானது டிசம்பர் 8ஆம்... இலங்கையரின் கொலையை நியாயப்படுத்திய அமைச்சர் பாக். பாதுகாப்பு அமைச்சரின் உரையால் சர்ச்சைபாகிஸ்தான் - சியால்கோட்டில்... கெசல்வத்த பவாஸ் கொலை; சம்பவம் தொடர்பில் பொலிஸார் வெளிப்படுத்திய தகவல்கள்! கொழும்பு, வாழைத்தோட்டம் – பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பீர்சாஹிபு... காரை மோதவிட்டதாக 16 வயது பலஸ்தீன சிறுவன் சுட்டுக்கொலை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் இராணுவ சோதனைச்சாவடி ஒன்றில் காரை... கட்டுப்படுத்த முடியாத மகிழ்வு கிறிஸ்தவர்களின் தனிப்பட்ட அடையாளம் இயேசு அங்கிருந்து சென்றபோது பார்வையற்றோர் இருவர், “தாவீதின் மகனே,... சர்வமத தூதுக்குழுவினர் பாக். உயர்ஸ்தானிகருடன் சந்திப்பு கொலை தொடர்பில் கண்டனமும் தெரிவிப்பு சர்வமதத் தலைவர்கள்... பெற்ற பிள்ளைகளை தவிக்க விட்டு தப்பியோடிய தாய்! தென்னந்தோட்டத்தில் ஐந்து பிள்ளைகள் தவிப்புதான் பெற்ற ஐந்து பிள்ளைகளை... பிரியந்த குமாரவின் கொடூர கொலை; தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர் கைது இலங்கையரான பிரியந்த குமாரவின் கொடூர கொலையுடன் தொடர்புடைய, தேடப்பட்டு வந்த... Prayer Time இன்றைய தொழுகை நேரங்கள்... Astrology இன்றைய பலாபலன்கள்... அண்மைய கருத்துகள் Commerce 3 months 1 week ago Good ஒருபுறம் அமெரிக்கா, மறுபுறம் சீனா; இரு வல்லரசுகளுக்குமே நட்புமுக 3 months 1 week ago Indian biased article. nothing 4 months 3 weeks ago not in jaffna / nallur. Free Education 4 months 3 weeks ago 100 % of the country’s population are not poor. 100 % free education affects the poor. Students also can work and pay for their education. Do not try to Spoon Feed Everyone !!! mano gamesan 5 months 2 weeks ago "பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொதுக் காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்" என வண எல்லே குணவன்ச தேரர், கூறுகிறார். இது நல்ல யோசனை. ஆனால் அதற்கு முன், இந்நாட்டை மாறி மாறி ஆட்சி... மேலதிக உள்நாடு அரசியல் வர்த்தகம் வௌிநாடு குற்றம் கட்டுரைகள் விளையாட்டு ஆசிரியர் சினிமா தொழில்நுட்பம் மதம் Contact (Web) Email : [email protected] Call us: (+94) 112 429 640 (Web) WhatsAppNews: +94765112715 Telegram வர்த்தமானி On Air எங்களை பற்றி திகதி வாரியான செய்திகள் கதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம் கதிர்காமம் பஸ் சேவை Contact Newspaper Email : [email protected] Tel : (+94) 11 2 429 429 (Editorial) Web Advertising : (+94) 112 429 315 Anuradhi Hathurusinghe - +94 77 333 7022 Randinu Pathirana - +94 71 438 4072
Ananda Vikatan - 12 June 2019 - கரையும் காங்கிரஸ்... காரணம் என்ன? | Discuss about Congress defeat in Parliament Election - Ananda Vikatan - Vikatan Save the vikatan web app to Home Screen tap on Add to home screen. X READ IN APP Login செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் விளையாட்டு கிரிக்கெட் கால்பந்து ஐ.பி.எல் ஆன்லைன் தொடர்கள் New My News ராசி காலண்டர் மேலும் மெனுவில் Search ஆனந்த விகடன் சினிமா “வியர்வையும் ரத்தமும் உரமான விவசாய சினிமா!” N G K - சினிமா விமர்சனம் இழுபறியில் ‘இம்சை அரசன்’, ‘இந்தியன்-2’ தேவி 2 - சினிமா விமர்சனம் ரோலிங் சார் பிட்ஸ் பிரேக் அரசியல் கரையும் காங்கிரஸ்... காரணம் என்ன? “ஊழல்வாதிகளுக்கு மன்னிப்பே கிடையாது!” - ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பேட்டி - கட்டுரைகள் “இந்திக்காரர்கள்தாம் எங்களிடமிருந்து கற்றார்கள்!” இந்‘தீ’ பரவும் சர்ச்சை... பற்றும் தமிழகம்! கைகோப்போம்... தாகம் தீர்ப்போம்! ஒரு பந்து... 542 ஃபீல்டர்கள்... கட்டுக்கதைகளை விட்டுத்தள்ளுங்கள்! தொடர்கள் இன்னா நாற்பது இனியவை நாற்பது இறையுதிர் காடு - 27 ஆன் லைன்... ஆஃப் லைன் - 4 சோறு முக்கியம் பாஸ் - 64 அன்பே தவம் - 32 பரிந்துரை: இந்த வாரம்... அரசியலில் பெண்கள் இன்பாக்ஸ் வாசகர் மேடை - குனிவே துணை வலைபாயுதே கதைகள் ஜெஸ்ஸி கவிதைகள் சொல்வனம் ஹ்யூமர் ப்ரே பண்ணுவோம்! ரீமேக் ஜோக்ஸ் - 1 ஜோக்ஸ் - 2 ஜோக்ஸ் - 3 அறிவுஜீவி ஆவது எப்படி? திருப்பதிக்கே அல்வா! Published: 06 Jun 2019 5 AM Updated: 06 Jun 2019 5 AM கரையும் காங்கிரஸ்... காரணம் என்ன? சக்திவேல் ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் Use App கரையும் காங்கிரஸ்... காரணம் என்ன? ஓவியம்: பாரதிராஜா உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் பிரீமியம் ஸ்டோரி கசங்காத கதர்ச்சட்டை போட்ட காங்கிரஸ் தலைவர்கள் வேண்டுமானால் இப்படியொரு தோல்வியை எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், கட்சியே கதியென்று கிடந்த அடிமட்ட காங்கிரஸ் தொண்டன், நொறுங்கிப்போயிருக்கிறான். ‘ராகுல் நம்மைக் காப்பார். நாட்டை மீட்பார்’ என்று அவன் கொண்ட நம்பிக்கை, அடியோடு தகர்ந்து போயிருக்கிறது. மூவிலக்கத்தைத் தொட்டிருந்தால்கூட, நிம்மதி மூச்சு விட்டிருப்பான், பாவம். அதற்கும்கூட வழியில்லை. இன்னும் மூன்று இடங்களைப் பெற்றிருந்தால், எதிர்க்கட்சி அந்தஸ்தேனும் கிடைத்திருக்கும். அதுவும் போச்சு. தார்மிகப்படி பார்த்தால், ராகுல் ராஜினாமா செய்ய வேண்டியவர்தான். செய்துமிருக்கிறார். இறுதியில், `இருவர் அணி’ இலக்கடைந்துவிட்டது! காங்கிரஸுக்கு இம்முறை ‘Something went wrong’ அல்ல, `Everything went wrong!’ காங்கிரஸ் தலைமையகம் அமைந்திருக்கும் டெல்லியின் அக்பர் சாலை, எப்போதும் கலகலவென்று இருக்கும். இப்போதோ, எங்கும் விரக்தி முகங்கள், தேம்பல் குரல்கள். அறுபது ஆண்டுகள் இந்தியாவின் அதிகாரமையமாக இருந்த இடத்துக்கு, இப்படியோர் அவலநிலை ஏற்பட்டிருக்க வேண்டியதில்லை. கஷ்டமாகத்தான் இருக்கிறது. காந்தி மேல் சத்தியம்! காங்கிரஸின் தோல்விக்கான காரணங்களை எல்லா திசையிலும் அலசி ஆராய்கிறார்கள் அரசியலாளர்கள். `காங்கிரஸ் இன்னும்கூட இறங்கிச்சென்று வலுவான கூட்டணி அமைத்திருக்கலாம்’ என்கிறார்கள் சிலர். ‘ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கத் தவறிவிட்டார்கள்’ என்கிறார்கள் பலர். வாஸ்தவம்தான். ஆனால், காங்கிரஸ் தோல்விக்கு இவை மட்டுமே காரணங்களில்லை. காங்கிரஸ் இன்னும் வலுவான கூட்டணி அமைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்குமா...இல்லவே இல்லை. மாயாவதி - அகிலேஷை அழைத்து, மம்தா மனதைக் கரைத்து, நாயுடுவிடம் கொஞ்சம் இடங்களைப் பெற்று, காங்கிரஸ் இன்னும் வலுவான அணி கட்டியிருந்தாலும் பா.ஜ.க-வை வீழ்த்தியிருக்க முடியாது. மிஞ்சிப்போனால் 20, 25 தொகுதிகள் அவர்களுக்குக் குறைந்திருக்கும். பா.ஜ.க வாங்கியிருக்கும் வாக்குகள் 40 சதவிகிதம். காங்கிரஸுக்குக் கிடைத்திருப்பது வெறும் 18 சதவிகிதம். 22 சதவிகிதத்தை ஈடுகட்டும் அளவுக்கா மம்தாவும் மாயாவதியும் நாயுடுவும் வாக்குகளை மடைமாற்றியிருக்கப் போகிறார்கள்? ராகுலைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்திருந்தால், காங்கிரஸ் தப்பித்திருக்கும் என்பது இன்னொரு வாதம். அனுபவ அரசியல்வாதி லாலுவேகூட, ‘காங்கிரஸ் கல்யாணத்துக்குத் தயாரான வரை சரி ஆனால், மாப்பிள்ளையை அறிவிக்க மறந்துவிட்டார்கள்’ என்று அங்கலாய்த்தார். ஆனால், இது ஓர் அவசரப் பார்வை. இந்தியா ஒன்றும் அமெரிக்கா அல்ல. முகங்களை மட்டுமே முன்னிறுத்தும் தேர்தல் முறையும் இந்திய ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல. காங்கிரஸ் இதே நிலையில் நிற்பதே சரி. இழப்புகள் பெரிதென்றாலும். பா.ஜ.க தேர்தல் அறிக்கை...அட்டைப்படத்தில் மட்டுமல்ல, உள்ளேயும் ஆங்காங்கே சிரித்துக்கொண்டிருந்தது மோடி மட்டுமே. காங்கிரஸின் தேர்தல் அறிக்கையின் முதல் பக்கத்தில் மக்கள் திரள். இறுதிப்பக்கத்திலும் அதே மக்கள் திரள்தான். ஓரிடத்தில்கூட ராகுல்காந்தியின் தனிப்படம் ஏதுமில்லை. ராகுல்காந்தி மக்களுடன் நிற்கும் படங்களே இருந்தன. இரு கட்சிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை இதைவிட எப்படி அழகாகக் கணிக்க முடியும். காங்கிரஸ் வேறு, பா.ஜ.க வேறு. பா.ஜ.க-வின் சித்தாந்தத்தை வென்றெடுக்காமல் அவர்களைத் தோற்கடிக்க முடியாது. சரியாகச் சொன்னார், சுப்பிரமணியன் சுவாமி, ‘இது மோடி அலை அல்ல, இந்துத்துவ அலை’ என்று. வெற்றி உறுதியானதும், மம்தாவுக்குக் கர்நாடக பா.ஜ.க தரப்பில் சொல்லப்பட்ட பதில்... ‘தீதி... ஜெய் ராம்.’ இதில் அடங்கிவிட்டது அனைத்தும். ஆனால் பா.ஜ.க-வை சித்தாந்த ரீதியாக பலவீனப்படுத்த வேண்டுமென்பதை ராகுல் கவனிக்கத் தவறினார். காங்கிரஸுக்கு அப்போதே சறுக்கல் தொடங்கிவிட்டது. பா.ஜ.க வெற்றியைத் தீர்மானித்தவை இரண்டே காரணிகள்தான்... மதம் மற்றும் தேசியவாதம்! அதாவது, `மூன்று மாதத்துக்கு முன்பு வரை தேர்தல்களம் இவ்வாறு இல்லை’ என்று அடித்துச் சொல்கிறார்கள், அரசியல் ஆய்வாளர்கள். புல்வாமா தாக்குதல், பாலகோட் பதிலடிக்குப் பிறகு, தேர்தல் களம் வேறு மாதிரி மாறியது. வறுமை, வேலையின்மை, பணமதிப்பிழப்பு என எல்லாமே மக்களின் மனதிலிருந்து மறைந்து, `தேசியவாதம்’ மையத்திற்கு வந்தது. அதை இன்னும் வலுவாக உள்ளிறக்க உதவியது, மதம்! இப்போது வட இந்தியாவில் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? ‘மோடிதான் பாகிஸ்தானிடமிருந்து நாட்டைக் காத்தார்’ என்கிறார்களாம். காங்கிரஸின் மதச்சார்பின்மையைப் போலி மதச்சார்பின்மை என்று சித்திரிப்பதிலும் பெருவெற்றி பெற்றது பா.ஜ.க. அதேபோல பா.ஜ.க-வின் தேசியவாதத்தைப் போலி தேசியவாதம் என்று காட்டியிருக்க முடியும் காங்கிரஸால். ஆனால் தவற விட்டார்கள். `வேலைவாய்ப்புப் பிரச்னை’ மட்டுமே வெற்றியைத் தேடித்தந்துவிடும் என்று தப்புக்கணக்கு போட்டார்கள். முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ‘வேலைவாய்ப்புதான் எங்களின் துருப்புச்சீட்டு’ என்று முன்மொழிந்தார். ராகுல் அதை வழிமொழிந்தார். பிரியங்கா அதைப் பின்தொடர்ந்தார். ஆனால், ‘இது சித்தாந்த யுத்தம்’ என்று அவர்களுக்குக் கடைசிவரை புரியவே இல்லை. மதவாதமும் தேசியவெறியும் ஊட்டப்பட்ட மக்களிடம், `வேலைவாய்ப்பு உறுதியும் எழுபதாயிரம் ரூபாய் மானிய வாக்குறுதியும் என்ன பெரிதாக மாற்றத்தை ஏற்படுத்திவிடும்? காந்தியையும் நேருவையும் இரு கைகளில் ஏந்திவந்து, எதிராளிகளின் போலி தேசியவாதத்தை அடித்து நொறுக்கியிருக்கலாம் காங்கிரஸ். `இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி’ என்ற மிகப்பெரிய தேசியவாத ஆயுதத்துக்கு, எதிரணியிடம் என்ன எதிராயுதம் இருக்கிறது? ஆட்சியின் இடைக்காலத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைக் குறிவைக்க ஆரம்பித்தார் ராகுல் காந்தி. இடையிலேயே விட்டுவிட்டார். அல்பேஷ் தாகூர் குஜராத்காரர். இளம் அரசியல்வாதி. காங்கிரஸிலிருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கியவர். அவரிடம் ‘காங்கிரஸ் ஏன் தோற்றது’ என்று கேட்டதற்கு ‘காங்கிரஸ் எப்போதோ ‘தலைவர்களின் கட்சி ஆகிவிட்டது’ என்று, ஒரே வரியில் பதில் சொன்னார். ஆம், காங்கிரஸ் இப்போது வெறும் ‘தலைவர்களின் கட்சி’ மட்டுமே. குலாம்நபி ஆசாத், சசி தரூர், வேணுகோபால்... இன்னும் பலர் இருக்கிறார்கள். யாருக்கும் தொண்டர்களுடன் தொடர்புகளில்லை. அப்புறம் எப்படி கட்சி ஜீவனுடன் இருக்கும்? காந்தி வருகைக்கு முந்தைய காங்கிரஸ் இப்படித்தான் இருந்தது. மாதம் ஒருமுறை, டெல்லியிலோ கல்கத்தாவிலோ கூட்டம் போடுவார்கள். ஏதோ போனால் போகிறதென்று, ஆங்கிலேயனின் ஆட்சியில் எப்படிப் பங்கு கேட்பது எனச் சில நிமிடம் பேசுவார்கள். அடிப்படையில், அது ஓர் இயக்கமே அல்ல. ஒரு கிளப். அவ்வளவு தான். காந்தி வந்தார்... ‘தலைவன் என்பவன் ஒரு போராளியாக இருக்க வேண்டும்’ என்றார். எல்லோரையும் போராளியாக மாற்றினார். அப்படியொரு போராளியாக ராகுல் மாறவேண்டிய நேரம் இது. போகியை முடித்தே பொங்கல் கொண்டாட முடியும்... மூத்த தலைவர்களின் ஆதிக்கத்துக்கு சங்கோஜமே படாமல் முடிவுரை எழுத வேண்டும். ப.சிதம்பரம் பெரிய பொருளாதார மேதைதான். ஆனால், அவர் மக்கள் தலைவரா...சிவகங்கையைக் கடந்து சிதம்பரத்துக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது? தனயனுக்கு சீட்டு கொடுத்தே ஆக வேண்டுமென்று சண்டை போட்டார். இப்போது ராகுல் ராஜினாமாவிற்குத் தற்கொலை எச்சரிக்கை விடுக்கிறார்கள் தமிழக காங்கிரஸார் சிலர். இங்கே சிதம்பரம் பார்க்கும் வேலையை, ராஜஸ்தானில் கெலாட் பார்க்கிறார், மத்தியப்பிரதேசத்தில் கமல்நாத் பார்க்கிறார். அப்புறம் எப்படி உருப்படும் காங்கிரஸ்? ராகுல் காந்தி எளிமையான வாழ்க்கை வாழ்பவர்தான். மற்றவர்கள்? ப.சிதம்பரத்தின் சொத்து விவகாரத்தை அமலாக்கத்துறை பந்தி விரித்துக்கொண்டிருக்கிறது. கெலாட், கமல்நாத்தின் சொத்துகளைச் சேர்த்து வைக்க, அலிபாபா குகையே பத்தாதுபோல. இப்படியிருந்தால், `காங்கிரஸ்காரர்கள் ஊழல் பெருச்சாளிகள்’ என்று, மோடி விமர்சிக்கத்தான் செய்வார். இப்போதேனும் அறிக... மோடியை உருவாக்கியது பா.ஜ.க அல்ல. இனிமேல் காங்கிரஸ் என்னவாகும்? கர்நாடகாவில் காங்கிரஸ் அமைத்திருக்கும் கூட்டணி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்ற நிலை. குலாம் நபி ஆசாத்தும், வேணுகோபாலும் அங்கே விரைந்திருக்கிறார்கள். மத்தியப்பிரதேசமும் ஊசலாட்டத்தில்தான் இருக்கிறது. கமல்நாத் கற்ற வித்தைகள் பலன் கொடுப்பதாகத் தெரியவில்லை. ராஜஸ்தானும் தப்பிப்பது கடினமே. அங்கே, சுயேச்சை வேட்பாளர்கள் அணி மாறிக் கொண்டிருக்கிறார்கள். சச்சின் பைலட் வேறு ஆர்வமில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கிறார். உழைத்தவனுக்கு உரிய இடம் தரப்படவில்லை என்றால், ஆர்வம் இழக்கத்தான் செய்வான். ஜோதிராதித்யா சிந்தியாவும் விரக்தி மனநிலையிலேயே வீட்டில் விட்டத்தைப் பார்த்து அமர்ந்திருக்கிறார். அதுவும், குணா தொகுதியில் அவர் அடைந்த தோல்வி, அவ்வளவு எளிதில் மறக்கக் கூடியது அல்ல. இப்படி, காங்கிரஸின் இரண்டு முக்கிய இளம் தலைவர்களும் மனதளவில் சோர்ந்து போயிருப்பது, கட்சியின் எதிர்காலத்துக்குத் துளியும் நல்லதல்ல. அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும். காங்கிரஸுக்குப் பஞ்சாப் மட்டுமே நம்பிக்கை அளிக்கிறது. அதுவும், அமரீந்தர் சிங் எனும் அதிரடித் தலைவன் காப்பரணாகக் காத்துக் கொண்டிருக்கிறார். அமித் ஷா என்ன, அமித் ஷாவைப் போல ஆயிரம் பேர் வந்தாலும் ஒரு கை பார்ப்பார் அமரீந்தர். ராணுவ ரத்தம் அல்லவா? அப்படித்தான் இருக்கும்! ராகுலுக்கு அடுத்து யார் கட்சித்தலைவர் என்ற போட்டியில் முதலிடத்தில் இருப்பவர், அமரீந்தர்தான். காங்கிரஸ் தலைவரானால், நிச்சயம் பா.ஜ.க-வுக்கு சிம்மசொப்பனமாக இருப்பார். புல்வாமா தாக்குதலின் போது, ‘பாகிஸ்தானை நீங்கள் அடக்குகிறீர்களா, அல்லது நானே அடக்கட்டுமா’ என்று கொந்தளித்தவர் அவர். ஆனால், அமரீந்தருக்கு வயது 77. இதுமட்டுமே சிக்கல். இன்னொரு பெயரும் அடிபடுகிறது. அவர் சசிதரூர். ஆனால், சசி மக்கள் தலைவர் அல்லர். இன்னொரு புறம், கட்சியின் மாநிலத் தலைவர்களை அவமதிக்கும் போக்கை காங்கிரஸ் என்று கைவிடுமோ தெரியவில்லை. ஜெகஜீவன்ராமில் ஆரம்பித்தது, ஜெகன்மோகன் வரை தொடர்கிறது. எத்தனை மாநிலத் தலைவர்கள் எப்படியெல்லாம் கதறியிருப்பார்கள்? எவருக்கேனும் மரியாதை தந்ததா அந்த சோகால்ட் ‘ஹை கமென்ட்?’ இந்தியாவில் 29 மாநிலங்கள் இருக்கின்றன. அனைத்து மாநிலங்களிலுமே காங்கிரஸைப் பின்னொட்டாகவோ, முன்னொட்டாகவோ கொண்ட ஒரு கட்சி இருக்கும். தமிழ்நாட்டில், தமிழ்மாநில காங்கிரஸ், புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ், கேரளாவில் மணி காங்கிரஸ், ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ். இப்படி, அடுக்கிக்கொண்டே போகலாம். இவை அத்தனையும் வெறுமனே கருத்து வேறுபாட்டால் கழன்று வந்த கட்சிகள் அல்ல. அத்தனையும் காங்கிரஸ் தலைமையின் அவமதிப்பால் உதித்தவை. `இது காந்தி காங்கிரஸ் அல்ல, இந்திரா காங்கிரஸ்’ என்று அடிக்கடி சொல்வார்கள், அரசியல் அறிஞர்கள். `அப்படி இருக்காது’ என்று ஏதோ கொஞ்சம் காங்கிரஸ் தொண்டர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் இழந்துவிடாதீர்கள். அவ்வளவுதான் சொல்ல முடியும்!
3rdEyeReports | ThirdEyeReports creates Brands & Branding of Celebrities, Products, Services in different fields Stay tuned for latest blogs & video updates on latest happenings... Sunday, 24 October 2021 காவல்துறை வீரர்களின் நினைவேந்தல் நாளையொட்டி, காவல்துறை வீரர்களின் நினைவேந்தல் நாளையொட்டி, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட, “வீரவணக்கம்” ஆல்பம் பாடல் ! காக்கும் காக்கிக்கு வீரவணக்கம், காக்கிற காக்கிக்கு வீர்வணக்கம் ! ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21 ஆம் நாள், இந்திய இறையாண்மையை காக்க உறுதிமொழி ஏற்று, மக்களுக்காக உயிர் நீத்த காவல்துறை விரர்களின் நினைவை போற்றும் வகையில், வீரவணக்க நாள் கொண்டாடப்படுகிறது. நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தி, வெள்ளம், சுனாமி, கொரோனா என எந்த பேரிடரிலும், களத்தில் முன் நின்று பணியாற்றிய காவல்துறைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இவ்விழாவை இன்னும் சிறப்பிக்கும் பொருட்டு, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், தலைமை காவல் அலுவலர் சசிகலா மறறும் வெஸ்லி எழுத்தில், சசிகலாவும், பார்வையற்ற கலைஞரான திருமூர்த்தியும் இணைந்து பாடிய, “வீரவணக்கம்” ஆல்பம் பாடல் இன்று 21.102021 வெளியாகியுள்ளது. இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறியதாவது… “வீரவணக்கம்” பாடல் உருவானதே ஒரு இனிமையான அனுபவம். கொரோனோ தொற்று காலத்திற்கு பிறகு, முன்கள பணியாளர்களாக பணியாற்றிய, காவல்துறை நண்பர்களை வாழ்த்தும் வகையில், கமிஷ்னருடன் இணைந்து ஒரு பாடல் செய்தேன். அப்போதே அவர்களின் பணிச்சூழலையும், தியாகங்களையும் கண்டபோது மனம் அதிர்ந்தது. ஒருவர் பணிக்கு திரும்பும்போது மற்ரோருவர் கொரோனாவில் மருத்துவமனைக்கு சென்றார். கொரோனாவில் மரணித்தவர்கள் பற்றி நமக்கு தெரியும், ஆனால் காவல்துறை பணியில் இருந்த போதே இறந்தவர்களை பற்றி நமக்கு எதுவுமே தெரியாது. அவர்களை பற்றி கேட்ட, ஒவ்வொரு கதையும் என்னை வெகுவாக பாதித்தது. அந்த நேரத்தில் அவர்களுடன் நெருங்கி பழகும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது திருவள்ளூர் காவல்துறை நண்பர் Dr. வருண் குமார் IPS, வீரவணக்க நாளையொட்டி ஒரு பாடல் செய்ய முடியுமா ? என எனைக்கேட்டார். நம்மால் முடிந்த ஒன்றை இவர்களுக்காக செய்ய வேண்டும் என்று உடனே ஒப்புக்க்கொண்டேன். இசை வலிகளை மறக்கடிக்கும் அவர்களின் வலிகளுக்கு, தியாகத்திற்க்கு எனது சிறு அர்ப்பணிப்பு இந்த பாடல். மிக குறைவான காலம் இருந்தாலும், மிகச்சிறப்பாக செய்துள்ளோம். பாடல் வரிகளை தலைமை காவல் அலுவலர் சசிகலா, வெஸ்லி இணைந்து எழுதியுள்ளனர். சில வரிகளை சந்தத்திற்கு ஏற்றவாறு நாங்களே மாற்றி அமைத்தோம். பார்வையற்ற கலைஞரான திருமூர்த்தியும், சசிகலாவும் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். திருவள்ளூர் காவல்துறை அதிகாரி Dr. வருண் குமார் IPS அவர்களின் ஈடுபாடு தான், இப்பாடல் சிறப்பாக உருவாக காரணம் அவருக்கு நன்றி. இன்று இப்பாடல் வெளியாகிறது. பாடலை கேட்டு மகிழுங்கள், நம் உயிருக்காவும் பாதுகாப்புக்காவும் அளப்பரிய பணிகள் செய்யும் காவல்துறையினரை இந்நன்நாளில் போற்றுவோம் நன்றி. இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், தலைமை காவல் அலுவலர் சசிகலா வெஸ்லி இணைந்து எழுத, சசிகலா அவர்களும் பார்வையற்ற கலைஞரான திருமூர்த்தியும் இணைந்து பாடிய “வீரவணக்கம்” ஆல்பம் பாடலை, இன்று 21.10.2021 காலை மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.
ஒரு நாட்டின் இருப்பும் பாதுகாப்பும் அதன் படை பலத்திலும், ஆயுதவளத்திலுமே முற்று முழுதாக தங்கியிருந்த காலத்தில் சோவியத்து ஒன்றியத்தை தனது அறிவு ஆற்றலால் தலைநிமிரவைத்த மிக்கையில் கலாஸ்னிகோவ் நேற்று முன்தினம் (23) காலமாகிவிட்டார். எனினும் கடந்த 56 வருடங்களுக்கு மேலாக உலகம் எங்கும் உச்சரிக்கப்பட்ட கலாஸ்னிகோவ் என்ற நாமம் இன்னும் பல தசாப்தங்களுக்கு மேலாக நீடிக்கும் என்பதில் ஐயமில்லை. தனது நாட்டின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட கலாஸ்னிகோவ் தன்னியங்கி துப்பாக்கி (AK-47 rifle) என்ற துப்பாக்கி பல நாடுகளின் விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்ததுடன், பல நாடுகளின் இனஅழிப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கையிலும் முக்கிய பங்கு வகித்திருந்ததது மற்றும் பங்குவகித்தும் வருகின்றது. ரஸ்யாவின் பெரும்பகுதியை ஜேர்மனியப் படைகள் கைப்பற்றிய நிலையில் ரஸ்யாவின் செம்படை என்னும் இராணுவம் தாக்கிவிட்டு ஓடும் அல்லது சிறு சிறு குழுக்களாக சென்று தாக்கி அழிக்கும் நிலைக்கு மாறியிருந்தது. ஏறத்தான கெரில்லா தாக்குதல் போன்ற தாக்குதலை மேற்கொள்ளும் படையினருக்கான தாக்குதல் ஆயுதம் ஒன்றை தேடி ரஸ்யா அலைந்தவேளையில் ரஸ்ய இராணுவத்தின் டாங்கி படைப்பிரிவின் பொறியியலாளராக பாணியாற்றிய காலாஸ்னிகோவ் உபஇயந்திரத் துப்பாக்கி ஒன்றின் வடிவமைப்பை 1944 ஆம் ஆண்டு ரஸ்யாவின் ஆயுதக் கண்காட்சிக்கு அனுப்பியிருந்தார். சமர்க்களத்தில் ஜேர்மன் படையினரின் துப்பாக்கிக் குண்டை தோள்பட்டையில் வாங்கிய நிலையில் வைத்தியசாலையில் இருந்தே தனது பணியை அவர் மேற்கொண்டிருந்தார். முன்னைய உபஇயந்திரத் துப்பாக்கியின் இயங்கு முறையில் இருந்து இந்த துப்பாக்கி வேறுபட்டதாக இருந்தது. அதாவது மிகவும் பாதுகாப்பானது. ஏனெனில் முன்னைய தூப்பாக்கிகள் முதலாவது வெடிப்பு அதிர்வின் மூலம் கிடைக்கும் பின்உதைப்பைக் கொண்டே அடுத்த சூட்டுக்காக துப்பாக்கி தன்னை தயார் படுத்திக்கொள்ளும், ஆனால் இந்த துப்பாக்கி படை நடவடிக்கையின் போது பல விபத்துக்களை தோற்றுவிக்கக் கூடியது. அதற்கு மாற்றீடாகவே முதலாவது வெடிப்பின்போது உருவாக்கும் வாயுவைக் கொண்டு உருவாகும் அமுக்கத்தின் மூலம் (Gas-driven rifle) இயங்கும் துப்பாக்கியை கலாஸ்னிகோவ் கண்டுபிடித்திருந்தார். அதன் பயன்பாடு மிகவும் பாதுகாப்பானது. எனினும் 1944 ஆம் ஆண்டு அவரின் துப்பாக்கி வடிவத்தை எஸ்கேஎஸ் துப்பாக்கி வடிவம் பின்தள்ளியிருந்தது. அதன் பின்னர் 1946 ஆம் ஆண்டு கலாஸ்னிகோவினால் சமர்ப்பிக்கப்பட்ட வடிவம் தான் தற்போதைய ஏகே-47 ரகத் துப்பாக்கி. அதன் வடிவமைப்பையும், பயன்பாட்டையும், தகமையையும் அதன் பின்னர் வந்த எந்த துப்பாக்கியாலும் பின்தள்ள முடியவில்லை. மடித்துவிடக்கூடிய பின்உதைப்பு தாங்கி அதனை இலகுவாக் மறைத்து வைக்கும் மற்றும் காவிச்செல்லும் தகமைகளை வழங்கியிருந்தது. 32 சன்னங்களை நிரப்பும் ரவைச்சட்டம் அதிக சுடுவலுவையும், 7.62மி.மீ ரவையானது அதிக தூர தாக்குதல் வலு மற்றும் அதிக சேதாரங்களை ஏற்படுத்தும் தகமையையும் அதற்கு வழங்கியிருந்தது. எந்தக் காலநிலையிலும் இயங்கும் வடிவமைப்பு அதன் பயன்பாட்டை உலகம் எங்கும் பரவ வழிவகுத்திருந்தது. 1960களில் இடம்பெற்ற வியட்னாம் போரின் போது அமெரிக்க படையினரின் பிரதான ஆயுதமாக எம்-16 துப்பாக்கியும், கெரில்லாக்களின் பிரதான ஆயுதமாக ஏகே-47 ரகத் துப்பாக்கியுமே இருந்தன. காடுகளில் இடம்பெற்ற சமரின்போது, அமெரிக்கப்படையினரின் இழப்புக்கள் அதிகமாகக் காணப்பட்டதால் இரு தரப்பினரினதும், ஆயுதங்களை அமெரிக்க படை பொறியியலாளர்கள் பரிசோதித்திருந்தனர். கொங்கிறீற் கற்களை கவசமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த பரிசோதனையில் அமெரிக்கப்படையினரின் எம்-16 துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட 5.56 மி.மீ துப்பாக்கிச் சன்னம் கொங்கிறீற் கற்களை துல்லியமாக தாக்கியபோதும் அதனை கடந்து செல்லவில்லை. ஆனால் ஏகே-47 துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட சன்னம் கொங்கிறீற் கற்கனை இரண்டாகப் பிளந்து ஊடறுத்துச் சென்றிருந்தன. பல சோதனைகளின் முடிவாக அமெரிக்க படை அதிகாரிகள் பின்வரும் முடிவைத் தெரிவித்திருந்தனர். அதாவது காடுகளில் இடம்பெறும் சமர்களில் சிறிய மரங்களில் பின்னால் நிலையெடுக்கும் அமெரிக்கப்படையினரை மரங்களை ஊடறுத்துச் செல்லும் ஏகே-47 ரகத் துப்பாக்கிகளின் சன்னங்கள் கொன்று குவிக்கின்றன. அதன் பின்னர் தான் அமெரிக்க 50 கலிபர் துப்பாக்கியின் தேவையை உணர்ந்திருந்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் ஏகே-47 துப்பாக்கியின் பங்களிப்பு முக்கியமானது. 1982 ஆம் ஆண்டு கந்தர்மடத்தில் அமைந்திருந்த சிறீலங்காப் படையினரின் வாக்குச்சாவடி காவல்நிலையம் மீதான தாக்குதலின் போது லெப். செல்லக்கிளியினால் சிறீலங்கா படையினரிடம் இருந்து முதன்முiறாயக ஏகே-47 ரகத் துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. அந்த தாக்குதலுக்கு விடுதலைப்புலிகளின் முதலாவது தாக்குதல் தளபதி லெப். சீலன் தலைமைதாங்கியிருந்தார். 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தமிழ்இனஅழிப்பு நடவடிக்கையிலும் சிறீலங்கா படையினர் ஏகே-47 ரகத் துப்பாக்கிகளை அதிகம் பயன்படுத்தியிருந்தது இன்றும் எனது நினைவில் உள்ளது. பேரூந்தில் சென்ற தமிழ் பொதுமக்களை மானிப்பாய் சந்தியில் வழிமறித்து அவர்களை பேரூந்தில் இருந்து இறக்கி வரிசையாக நிற்கவைத்த பின்னர் அவர்களின் உயிர்களை சிறீலங்கா படையினரின் ஏகே-47 துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட சன்னங்களே பறித்திருந்தன. அந்த படுகொலையின் பின்னர் அங்கு சிதறிக்கிடந்த 7.62 மி.மீ துப்பாக்கிச் சன்னங்கள் அதனை உறுதிப்படுத்தியிருந்தன. அதன் பின்னர் விடுதலைப்புலிகளும், சிறீலங்கா படையினரும் ஏகே-47 ரகத் துப்பாக்கிகளையும், அதன் சீனத் தயாரிப்பான ரி-56 ரகத் துப்பாக்கிகளையும் பெருமளவில் பயன்படுத்தியிருந்தனர். தமிழ் மக்களுக்கும் கலாஸ்னிகோவின் ஆயுதம் மிகவும் பரீட்சயமாக மாறியிருந்தது. ரி-56 துப்பாக்கிக்கான தயாரிப்பு உபகரணங்களையும் ரஸ்யாவே சீனாவுக்கு வழங்கியிருந்தது. கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்துவரும் ஏகே-47 துப்பாக்கி மற்றும் அதன் பிரதிவடிவ துப்பாக்கிகள் என்பன ஏறத்தாள 100 மில்லியன் வரையிலும் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், உலகம் எங்கும் பயன்பாட்டிலும் உள்ளன. ரஸ்யாவின் ஆயுதவிற்பனையிலும் அது அதிக முக்கியத்துவத்தை வழங்கியிருந்தது. தனது நாட்டின் பாதுகாப்புக்காக காலாஸ்னிகோவினால் உருவாக்கப்பட்ட ஏகே-47 ரகத் துப்பாக்கியின் வரவினால் பல நன்மைகளும், தீமைகளும் விளைந்தபோதும், அதன் கண்டுபிடிப்பானது தொழில்நுட்பத்துறையிலும், படைத்துறையிலும் மிகப்பெரும் மாற்றத்திற்கு காரணமாக அமைந்திருந்தது என்பதை நாம் மறுக்க முடியாது. ஈழம்ஈநியூஸ் இற்காக வேல்ஸ் இல் இருந்து அருஷ் Facebook Twitter Google+ Pinterest WhatsApp Previous articleமட்டக்களப்பில் மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் நினைவுப்பேருரை நிகழ்வு ! Next articleதிருக்கேதீஸ்வரம் மனிதப்புதைகுழி பற்றி சர்வதேச விசாரணை தேவை: மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் eelamenews RELATED ARTICLESMORE FROM AUTHOR செய்திகள் தனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் நீதியரசர் விக்னேஸ்வரன் செய்திகள் ஈழத்தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்புள்ளவர்கள் தேவை – அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம் செய்திகள் கொழும்பு அரசுடன் நெருக்கம் காட்டவே இந்தியா முனைகின்றது ஆசிரியர் தலையங்கம் உலகமக்களாலும் உலக அமைப்புக்களாலும் உலகநாடுகளாலும் உடன் பாதுகாக்கப்பட வேண்டிய மக்களாக ஈழத்தமிழர்கள் ஆசிரியர் தலையங்கம் eelamenews - June 12, 2020 0 தமிழ் இனத்தின் வரலாற்று சான்றுகளை பாதுகாக்க நாம் முன்வரவேண்டும் ஆசிரியர் தலையங்கம் eelamenews - June 8, 2020 0 முன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள் ஆசிரியர் தலையங்கம் eelamenews - April 30, 2019 0 EDITOR PICKS ஈழப்போராட்ட முன்னோடி வாசுதேவர் நேரு அவர்களுக்கு புகழ் வணக்கம் January 12, 2021 தனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் நீதியரசர் விக்னேஸ்வரன் July 31, 2020 ஈழத்தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்புள்ளவர்கள் தேவை – அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம் July 31, 2020 POPULAR POSTS ஈழப்போராட்ட முன்னோடி வாசுதேவர் நேரு அவர்களுக்கு புகழ் வணக்கம் January 12, 2021 ஈழத்தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்புள்ளவர்கள் தேவை – அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம் July 31, 2020 தமிழ் இனத்தின் வரலாற்று சான்றுகளை பாதுகாக்க நாம் முன்வரவேண்டும் June 8, 2020 POPULAR CATEGORY செய்திகள்3831 பன்னாட்டு செய்திகள்472 ஆய்வுகள்388 உலகம்203 கேள்வி பதில்கள்155 ஆசிரியர் தலையங்கம்124 நேர்காணல்கள்39 அறிக்கைகள்7 எம்மைப் பற்றி ஈழம்ஈநியூஸ் ஊடகம் ஒரு சுயாதீன ஊடகமாகும், தமிழ் மக்களின் ஆதரவுடன் இயங்கிவரும் இந்த ஊடகம் 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையின் பின்னர் தமிழ் மக்களிடம் தோற்றம் பெற்ற ஊடக மற்றும் அரசியல் வெற்றிடத்தை நிரப்பி தமிழ் இனத்தை சரியான பாதையில் நகர்த்துவதற்குரிய ஒரு தமிழ்த்தேசிய சிந்தனபை் பள்ளியாகும். தொடர்புகளுக்கு: info@eelamenews.com சமூக வலைத் தளங்கள் © Copyright © 2019 ஈழம் செய்திகள் '); var formated_str = arr_splits[i].replace(/\surl\(\'(?!data\:)/gi, function regex_function(str) { return ' url(\'' + dir_path + '/' + str.replace(/url\(\'/gi, '').replace(/^\s+|\s+$/gm,''); }); splited_css += ""; } var td_theme_css = jQuery('link#td-theme-css'); if (td_theme_css.length) { td_theme_css.after(splited_css); } } }); } })();
யூலை 15ம் திகதி ஆரம்பமான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை நடவடிக்கைகள் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த சூழலில், சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னால் உருவாக்கப்பட்ட, போர்க்காலப் பகுதியில் காணமற்போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் சனாதிபதி ஆணைக்குழுவுக்கு, சர்வதேச ரீதியில் அங்கீகாரமும் பிரபல்யமுமுடைய மூன்று நிபுணர்களை ஆலோசகர்களாக நியமித்துள்ளார். இந்த நடவடிக்கை சர்வதேச சமூகத்தின் பணிகளை அதிகரித்துள்ளதோடு, அதிர்ச்சியடைய வைத்திருப்பதாகவும் அறிய வருகிறது. இது, சர்வதேச சமூகத்துக்கும், சிறீலங்கா அரசாங்கத்துக்குமிடையில் நிலவிய மென்போக்கு அணுமுறை மென்தீவிர நிலையை தாண்டிச் செல்லவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. சிறீலங்கா அரசாங்கத்தின் இந்த நகர்வை, நீண்டகாலத்திற்குப் பின்னர் மகிந்த அரசாங்கம் எடுத்த சமார்த்தியமான நடவடிக்கையென சர்வதேச நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இதற்குப் பின்னணயில், சிறீலங்காவால் அண்மையில் வாடகைக்கு அமர்த்தப்பட்ட பொதுசன உறவாடலுக்கான முகவர் அமைப்போ அல்லது ஓரு சக்திமிக்க நடோ இருக்கக்கூடும் என சர்வதேச மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். சர்வதேச ரீதியான தலையீட்டையும், சர்சதேச நிபுணர்களின் ஈடுபாட்டையும் கடுமையான எதிர்த்து வந்த சிறீலங்கா அரசாங்கம், வரலாற்றில் முதல்தடவையாக, வெளிநாட்டு நிபுணர்கள் மூவரை, காணமல் போனோர் தொடர்பாக விசாரணைசெய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக வெளிப்படையாக நியமித்துள்ளது. இந்த ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பிரித்தானிய சட்டவாளரும், சியராலியோனில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த வழக்கில் ஐ.நாவின் தலைமை சட்டவாளராக பணியாற்றியவருமான, சேர் டெஸ்மன்ட் டி சில்வாவின் (Sir Desmond de Silva) திறமையான செயப்பாட்டால், அன்றைய ஐ.நா செயலாளர் நாயகமாக இருந்த கோபி அனான் அவர்களால் பிரதி சட்டவாளர் நிலையிலிருந்து தலைமைச் சட்டவாளராக 2005ல் பதவியுயர்த்தப்பட்டார். 2011 ஆம் ஆண்டு சர்வதே குற்றவியல் நீதிமன்றத்தில் போர்க்குற்றங்கள் புரிந்ததாக நிரூபிக்கப்பட்ட லைபீரியாவின் முன்னால் சனாதிபதி சாள்ஸ் ரெயிலர் கைது செய்யப்படுவதற்கு பின்னணியில் இருந்த இவர், பொல்கன்ஸ் (Balkans) போரின் போது, போர்க்குற்றம் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களை சரணடையச் செய்யும் நடவடிக்கைக்கான, ஐ.நாவின் சிறப்பு தூதுவராக சேர்பியாவுக்கு அனுப்பப்பட்டிருந்தார். அதேவேளை, காஸாவுக்கு மனிதாபிமான உதவிப்பொருட்களோடு சென்ற கப்பல் தொடரை இஸ்ரேல் வழிமறித்த சம்பவத்தில் கொல்லப்பட்ட ஒன்பது பேர் தொடர்பான விசாரணைக்களை முன்னெடுப்பதற்காக ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் இவர் நியமிக்கப்பட்டிருந்தார். சிறீலங்காவின் சனாதிபதி ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர், சிரியாவில் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டவர்கள் சித்திரவதை மற்றும் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணை செய்யும் குழுவின் தலைவராக இந்த ஆண்டு சேர் டெஸ்மன்ட் டி சில்வா நியமிக்கப்பட்டிருந்தார். முன்னால் யூகோஸ்லாவியாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் இடம்பெற்ற வழக்கில் பிரதி சட்டவாளராக பணியாற்றியவரும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தற்போதும் செயற்பாட்டு தளமுடையவராகவும் திகழ்கின்ற சட்ட பேராசிரியரனா, சேர் ஜெப்ரி நைஸ் (Sir Geoffrey Nice) இந்த ஆலோசனைக் குழுவில் உள்ளா மற்றைய நபர். மூன்றாவது நிபுணராக, அமெரிக்க சட்ட பேராசிரியரான, டேவிட் கிறேன் (Prof. David Crane) நியமிக்கப்பட்டுள்ளார். சேர் டெஸ்மன்ட் டி சில்வாவுக்கு முன்னர் சியரலியோனுக்கான சிறப்பு நீதிமன்றத்தின் தலைமை சட்டவாளராக இவர் விளங்கினார். இவரும் லைபீரியாவின் முன்னால் சனாதிபதி சாள்ஸ் ரெயிலருக்கு தண்டனை வழங்குவதில் முன்னணியல் செயற்பட்டவர். இத்தகைய பின்புலத்தை கொண்டவர்களை மகிந்த ராஜபக்ச, சனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசர்கர்களாக நியமித்துள்ளமையே மேற்குலகை மையமாகக் கொண்ட சர்வதேச சமூகத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள் குழுவின் முதன்மை இணைப்பாளர் சன்ரா பைய்டஸ் )Sandra Beidas) அவர்கள் ஆற்றல் உடையவர் என்றாலும், சனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நிபுணர்கள் மூவரையும் கொண்ட சிறீலங்கா தரப்பை கையாளக்கூடிய சக்திமிக்கவரா என்ற கேள்வி இருப்பதோடு, அவர்களின் ஆளுமையை எதிர்கொள்ளவது அவருக்கு இலகுவாக இருக்கப் போவதில்லை என தெரியவருகிறது. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக் குழுவுக்கு ஆலோசகர்களாகவும், ஆதரவு வழங்குபவர்களாகவும் பின்லாந்தின் முன்னால் சனாதிபதியும், சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றவருமான மார்ட்ரி அஹ்ரிசாறி (Martti Ahtisaari), நியுசிலாந்தின் ஆளுநர் நாயகமாகவும், கம்போடியாவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரித்து வரும் தீர்ப்பாயத்தின் நீதிபதியாகவும் பணியாற்றிய சில்வியா கார்ட்ரைட் (Silvia Cartwright) மற்றும் பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னால் தலைவரும், பலஸ்தீனத்தில் இஸ்ரேலியர்கள் மேற்கொண்டுவரும் குடியேற்றங்கள் தொடர்பான உண்மைகளை கண்டறிவதற்கான குழுவின் உறுப்பினருமான அஸ்மா ஜஹான்கீர் (Asma Jahangir) ஆகியோர் நியமிக்கப்பட்டுளனர். இந்த இரு ஆணைக்குழுக்களினதும் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் ஆளுமை பல்வேறு வகைகளில் வேறுபட்டாலும், ஆரம்பத்தில் எதிர்பார்த்ததையம் விட, சிறீலங்கா தரப்பால் எழக்கூடிய சாவால்கள் அதிகமாகவே இருக்கப்போகிறது. இதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த ஆணையாளராக வரவுள்ள ஜோர்டன் நாட்டின் இளவரசர் சையிட் ராட் சையிட் அல் ஹொசைன் (Prince Zeid Ra’ad al-Hussein) அவர்கள் சிறீலங்கா தொடர்பாக இறுக்கமான நகர்வையே கடைபிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர், போர்க்குற்றம் சாட்டப்பட்ட சவேந்திர சில்வா, சமாதானத்தை நிலைநாட்டுவதற்கான ஐ.நா படை தொடர்பான, ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீன் மூனின் மூத்த ஆலோசகர் குழாமில் அங்கம் வகிப்பதை கேள்விக்குட்படுத்தியவர். குறைந்தது 14 வருடங்கள் அமெரிக்காவிலிருந்தே தனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய இவருக்கும் அமெரிக்காவும் நல்லுறவு இருப்பதாகவே அறியமுடிகிறது. மத்திய கிழக்கில் தொடரும் நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டே இவரது நியமனத்துக்கு பெரும் அங்கீகாரம் கிடைத்ததென்றாலும், இவருடைய நிகழ்ச்சி நிரலில் இலங்கைத் தீவுக்கான முக்கியத்துவம் இருக்கும் எனலாம். ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணியக விசாரணை எதிர்காலத்தில் பெரும் பாதிப்பை தமது ஆட்சிக்கு ஏற்படுத்தலாம் என்று சிறீலங்கா அஞ்சுகிறது. ஆதலால், தன்னிடமுள்ள அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டிப், குறித்த விசாரணையை மூர்கமாக எதிர்ப்பதற்கு மகிந்த ராஜபக்ச ஆட்சிபீடம் முடிவுசெய்துள்ளது. அதன் ஒரு அங்கமாகவே மேற்குறிப்பிட்ட மூன்று வெளிநாட்டு நிபுணர்களை ஆலோசகர்களாக பணிக்கமர்த்தியுள்ளது. இதனூடாக, உள்ளக பொறிமுறையே போதுமானதென சர்வதேசத்துக்கு கூறி, தனக்கான ஆதரவு தளத்தை விரிவாக்கப்போகிறது. சிறீலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டது போல, ஆலோசகர்களால் வழங்கப்படும் ஆலோசனைகளை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்ற இறுதி முடிவை சிறீலங்கா அரசாங்கமே எடுக்கும். ஆயினும், சிறீலங்கா அரசாங்கத்தின் ஏமாற்று வித்தைகளுக்கு வெளிநாட்டு நிபுணர்கள் மூவரையும் சிறீலங்கா அரசாங்கம் பெரும் கவசமாக பயன்படுத்த முயற்சிக்கும். அதற்கு அவர்கள் இணங்கா விட்டால், அவர்களை ஆலோசகர்கள் பதவியிலிருந்து வெளியேற்றும். தவிர்க முடியாத சர்வதேச அழுத்தங்கள் காரணமாக, ஒகஸ்ட் முதலாம் திகதி 2005 தொடக்கம் இடம்பெற்ற மிக மோசமான 16 மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக விசாரிப்பதற்கான விசாரணை ஆணைக்குழுவை நவம்பர் 2006ல் மகிந்த ராஜபக்ச நியமித்தார். இந்த விசாரணையை கண்காணிப்பதற்காக, சர்வதேச ரீதியாக பிரபல்யமான 11 வெளிநாட்டு நிபுணர்களை அழைத்திருந்தார். கீர்த்தி மிக்கவர்களின் சர்வதேச சுயாதீன ஆணைக்குழுவின் (The International Independent Group of Eminent Persons – IIGEP) பதினோராவது நபருக்கான அனுமதி பெப்ரவரி 2007 சிறீலங்கா அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. ஆயினும், சிறீலங்கா அரசாங்கத்தின் ஒத்துழையாத தன்மை மற்றும் நெருக்கடிகளால், சிறீலங்காவின் சனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை சர்வதேச தராதரங்களுக்கு அமையவில்லை என்பதை தெரியப்படுத்திவிட்டு, குறித்த நிபுணர்கள் மார்ச் மாதம் 2008 சிறீலங்காவை விட்டு வெளியேறினார்கள். அதன்பிற்பாடு, தம்மை சிக்கலுக்குள் தள்ளும் என எதிர்பார்க்கும் எத்தகையை சர்வதேச தலையீட்டுக்கும் சிறீலங்கா அனுமதி வழங்குவதில்லை. அதற்கான வாதமாக, விசாரணைகளை மேற்கொண்டு நீதி வழங்கக்கூடிய உள்நாட்டு பொறிமுறை தம்மிடம்முள்ளதாக கூறி சர்வதேச தலையீட்டை தவிர்த்துவருகிறது. இதன் அங்கமாகவே, கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவையும், அதனோடு இணைந்ததான ஏனைய ஐந்து குழுக்களையும் சிறீலங்கா அமைத்துள்ளது. தீர்வு முயற்சி என்னும் போது, அனைத்து கட்சி பிரதிநிதிகளின் மாநாடு (All Party Parliamentary Conference – APRC), நாடாளுமன்ற தெரிவுக்குழு (Parliamentary Select Committee) என ஏமாற்று வித்தகைள் காட்டும் சிறீலங்கா அரசாங்கம், நீதிசார் விடயங்களுக்கு கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு (The Lessons Learnt and Reconciliation Commission) தொடக்கம் பல்வேறு குழுக்களை அமைத்து காலத்தை இழுத்தடித்து நீதியை மறுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகிறது. மறுபக்கத்தில், 2010 மார்ச்சில் ஐ.நா நிபுணர் குழு அறிக்கை (Report of the Secretary-General’s Panel of Experts) , 2012 நவம்பரில் இலங்கை தீவில் ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பான இடைக்கால மதிப்பீட்டு அறிக்கை (Report of the Secretary-General’s Internal Review Panel on United Nations Action in Sri Lanka), அடுத்து 2015 மார்ச்சில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணியக விசாரணைக் குழு அறிக்கை வரவிருக்கிறது. இதற்கிடையில், 2012, 2013 மற்றும் 2014 மார்ச் மாதங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோடு, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைகளும் குறித்த காலங்களில் வெளிவந்துள்ளது. அறிக்கைகளின் போர்களாகவும், ஆணைக்குழுக்களின் போர்களாகவும் மேற்குலகை மையமாகக் கொண்ட சர்வதேச சமூகத்துக்கும், சிறீலங்காவுக்குமிடையிலான கையிழுத்தல் போட்டி எதிர்வரும் மாதங்களில் தீவிரமடையப் போகிறது. பூகோள அரசியலால் உருவான மென்தீவிர நிலையை தாண்டக்கூடிய முரண்பாடுகளை, தமிழர் தேசத்துக்கு சார்பான முறையில் மாற்றக்கூடிய ஆக்கபூர்வமான பொறிமுறைகளை வகுத்திருக்க வேண்டிய பொறுப்பு, தாயகத்திலும், புலத்திலும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துவர்களுக்கு உண்டு. ஆனால், இதுவரை வகுக்கப்படவில்லை. ஆதலால், அத்தகைய நடவடிக்கைகளை விரைந்தெடுக்கவேண்டும். இல்லாவிட்டால், மற்றுமொரு சந்தர்ப்பத்தை நழுவவிட்டவர்கள் என்று மட்டுமல்ல தமிழர்களுக்கான நீதி மறுப்புக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற வரலாற்று பழிக்கும் ஆளாக நேரிடும். நன்றி : தினக்குரல். Facebook Twitter Google+ Pinterest WhatsApp Previous articleநெதர்லாந்தில் கருப்பு ஜூலை தினம் அனுஷ்டிக்கப்பட்டது Next articleசெய்தியாளர்கள் இலங்கை ராணுவத்தால் தடுத்து வைப்பு – யாழ். ஊடக அமையம் கண்டன அறிக்கை eelamenews RELATED ARTICLESMORE FROM AUTHOR செய்திகள் தனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் நீதியரசர் விக்னேஸ்வரன் செய்திகள் ஈழத்தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்புள்ளவர்கள் தேவை – அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம் செய்திகள் கொழும்பு அரசுடன் நெருக்கம் காட்டவே இந்தியா முனைகின்றது ஆசிரியர் தலையங்கம் உலகமக்களாலும் உலக அமைப்புக்களாலும் உலகநாடுகளாலும் உடன் பாதுகாக்கப்பட வேண்டிய மக்களாக ஈழத்தமிழர்கள் ஆசிரியர் தலையங்கம் eelamenews - June 12, 2020 0 தமிழ் இனத்தின் வரலாற்று சான்றுகளை பாதுகாக்க நாம் முன்வரவேண்டும் ஆசிரியர் தலையங்கம் eelamenews - June 8, 2020 0 முன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள் ஆசிரியர் தலையங்கம் eelamenews - April 30, 2019 0 EDITOR PICKS ஈழப்போராட்ட முன்னோடி வாசுதேவர் நேரு அவர்களுக்கு புகழ் வணக்கம் January 12, 2021 தனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் நீதியரசர் விக்னேஸ்வரன் July 31, 2020 ஈழத்தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்புள்ளவர்கள் தேவை – அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம் July 31, 2020 POPULAR POSTS ஈழப்போராட்ட முன்னோடி வாசுதேவர் நேரு அவர்களுக்கு புகழ் வணக்கம் January 12, 2021 ஈழத்தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்புள்ளவர்கள் தேவை – அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம் July 31, 2020 தமிழ் இனத்தின் வரலாற்று சான்றுகளை பாதுகாக்க நாம் முன்வரவேண்டும் June 8, 2020 POPULAR CATEGORY செய்திகள்3831 பன்னாட்டு செய்திகள்472 ஆய்வுகள்388 உலகம்203 கேள்வி பதில்கள்155 ஆசிரியர் தலையங்கம்124 நேர்காணல்கள்39 அறிக்கைகள்7 எம்மைப் பற்றி ஈழம்ஈநியூஸ் ஊடகம் ஒரு சுயாதீன ஊடகமாகும், தமிழ் மக்களின் ஆதரவுடன் இயங்கிவரும் இந்த ஊடகம் 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையின் பின்னர் தமிழ் மக்களிடம் தோற்றம் பெற்ற ஊடக மற்றும் அரசியல் வெற்றிடத்தை நிரப்பி தமிழ் இனத்தை சரியான பாதையில் நகர்த்துவதற்குரிய ஒரு தமிழ்த்தேசிய சிந்தனபை் பள்ளியாகும். தொடர்புகளுக்கு: info@eelamenews.com சமூக வலைத் தளங்கள் © Copyright © 2019 ஈழம் செய்திகள் '); var formated_str = arr_splits[i].replace(/\surl\(\'(?!data\:)/gi, function regex_function(str) { return ' url(\'' + dir_path + '/' + str.replace(/url\(\'/gi, '').replace(/^\s+|\s+$/gm,''); }); splited_css += ""; } var td_theme_css = jQuery('link#td-theme-css'); if (td_theme_css.length) { td_theme_css.after(splited_css); } } }); } })();
கனடாவில் நல்ல படைப்பாளிகள் இருக்கின்ற அளவுக்கு இலக்கிய அமைப்புகளோ, இலக்கிய இதழ்களோ வெளிவருவதில்லை என்றிருக்கின்ற பொதுக் கருத்தை அவ்வப்போது வெளிவந்தாலும் “காலம்” தழ் அடிக்கடி தகர்த்து வருவது வழக்கம். இந்த வகையில் ஜூன் – ஆகஸ்ட் 2009 ற்கான 32வது காலம் இதழ் இதுவரை வெளிவந்த காலம் இதழ்களில் என்னளவில் அதிக நிறைவை தந்ததாக இருக்கின்றது. கடந்த காலம் இதழ்களுடன் ஒப்பிடுகையில் அதிகளவு சிறு கதைகளையும், கவிதைகளையும் தன்னகத்தே கொண்டிருந்தாலும் அகோரமான யுத்தத்தில் அகப்பட்டிருக்கின்ற ஒரு காலத்தின் சாட்சியாக போர்க் கொடுமைகள் பற்றிய ஆக்கங்களே அதிகளவில் இடம்பெற்றிருக்கின்றன. பதினேழாம் நூற்றாண்டில் இரண்டாவது சார்ள்ஸ் மன்னனின் காலத்தில் இங்கிலாந்தில் பிளேக் நோய் பரவியபோது மக்கள் நூற்றுக்கணக்கில் செத்துவிழுந்தார்களாம். இந்த நாட்களில் அரச சேவகர்கள் “பிணங்களை வெளியில் கொண்டுவாருங்கள்” என்றூ கூவியபடி கை வண்டியுடன் தெருத் தெருவாக வருவார்களாம். இந்த நிகழ்வை தற்போதைய வன்னிக் கொடுமைகளுடன் ஒப்பிட்டு அ. முத்துலிங்கம் “பிணங்களை வெளியே கொண்டுவாருங்கள்” என்ற அருமையான ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அவர் கூறிய படி முற்றான இன அழிப்பு முடிவடைந்த பின்னர் “இலங்கை அரசு ஆறுதலான ஒரு பெரிய பெரு மூச்சை விடலாம். என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக வேடிக்கை பார்த்து வந்த உலக நாடுகளும் பெரு மூச்சு விடும். இந்தியாவின் பெரு முச்சு மிக நீண்டதாக இருக்கும்” போலத்தான் இருக்கின்றது. எனக்குத் தெரிந்து இது இலங்கைப் பிரச்சனை பற்றி இவர் எழுதிய மிகச் சொற்பமான ஆக்கங்களுல் (கிட்டுமாமாவின் குரங்கு ?????, பொற்கொடியும் பார்ப்பாள், மற்றும் 83 கலவரம் பற்றி ஆனந்த விகடனில் வெளிவந்த ஒரு கதை) இதுவே சிறப்பானதாக இருக்கின்றது. இதே இதழில் பத்து நாட்கள் என்ற இவர் எழுதிய இன்னுமொரு சிறு கதையும் இருக்கின்றது. அண்மையில் இவர் எழுதிய “உண்மை கலந்த நாட் குறிப்புகள்” என்ற நாவலில் (?) எந்த ஒரு அத்தியாயத்துக்கு இடையிலும் இதை தூக்கிப் போட்டுவிடலாம். அ. முத்துலிங்கத்தைப் பொறுத்தவரை அவரது எழுத்துக்களின் உச்சத்தில் இருக்கின்றார். அண்மைக்காலமாக அவர் எழுதுபவை எல்லாம் நல்ல “மகிழ்வூட்டும் பிரதிகளாக” இருக்கின்றன. ஒரு கவிஞராகவும், புனைவு எழுத்தாளாராகவும் பரவலாக அறியப்பட்ட டிசே தமிழனின் “ஹேமாக்கா” என்ற சிறு கதை இந்த இதழில் வெளிவந்திருக்கின்றது. அண்மையில் நான் வாசித்த ஆகச் சிறந்த கதை என்று இன்னும் சில காலத்துக்கு நான் சொல்லிக் கொண்டிருக்கப்போகும் கதை இது. போர்க்கால வன் முறைகளால் பாதிக்கப்பட்ட ஒருவன் அந்த அந்த வயதுக்குரிய ஆச்சரியங்களுடன் கதை சொல்வதாக அமைகின்றது. யுத்தம் நடந்த பிரதேசங்களில் வாழ்ந்தவர்கள் பலர் அந்தந்த இடங்களை நீங்கி பலகாலம் பிற தேசங்களில் வாழ்ந்தாலும் வன்முறையின் தாக்கம் அவர்கள் மனதில் பலத்த தாக்கமாக தங்கியிருப்பதை பல தடவைகள் அவதானித்து இருக்கின்றேன். தொடர்ச்சியான கசப்புகளும், ஏமாற்றங்களும் வடுக்களுமே நிலையாகிப்போன எம் மனதில் ஹேமாக்காவும் நெடுங்காலம் வாழ்வார் என்பதற்குரிய எல்லா சாத்தியங்களும் கதையில் தெரிகின்றன. இந்தக் கதையை வாசிப்பவர்கள் முடிவில் ஒரு சொல்ல முடியாத பாரத்தை மனதில் உணர்வார்கள். ஹேமாக்காவின் கண்ணீரை எல்லார் மனதிலும் ஏற்றி வைத்துவிட்டார்போலும். ஈழப்போராட்டத்தின் ஆரம்ப கட்டங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மையமாக வைத்து செழியன் எழுதிய “தோற்றோடிப்போன குதிரை வீரன்” என்ற கதை ராணுவ ரோந்துகள் என்ற அட்டூழியங்களை கண் முன்னர் நிறுத்துகின்றது. அதே நேரம் உரையாடல்களில் அடிக்கடி பாவிக்கப்படும் “தோழர்” என்ற சொல் வலிந்து திணிக்கப்பட்டதாகவே தோன்றுகின்றது. இக்கதையில் பாவிக்கப்படும் அளவுக்கு தோழர் என்ற சொல் ஈழத்தில் விடுதலை இயக்கங்களிடையே பாவனையில் இருந்ததா என்று அக்காலத்தில் இருந்த யாராவதுதான் தெளிவு படுத்த வேண்டும். அதேநேரம் யுத்த காலக் கொடுமைகளை உக்கிரமாகப் பதிவு செய்யும் இன்னொரு சிறுகதையாக பா. அ. ஜயகரன் எழுதிய அடேலின் கைக்குட்டை என்ற சிறு கதை சிறப்பாகவே அமைந்திருக்கின்றது. யுத்த காலக்கொடுமைகள் பற்றி சொல்லும்போது எந்தவிதமான பிரச்சாரத் தொனியும் விழுந்துவிடாமல் கதைசொல்லி சொல்லிச் செல்ல எல்லா உணர்ச்சிகளும் படிப்பவர் மனதில் ஆழமாகப் பதியும் வண்ணம் “ஹேமாக்கா”, மற்றும் “அடேலின் கைக்குட்டை” என்ற இரண்டு கதைகளும் அமைந்திருப்பது வெகு சிறப்பு. எப்போதும் கனவுகள் பற்றியே ரசனையாக பேசும் மெலிஞ்சி முத்தன் இந்த இதழில் எழுதியுள்ள கதைகூட கனவுடன் தான் ஆரம்பிக்கின்றது. தனக்கேயுரிய கவிதைத் தன்மை வாய்ந்த நடையில் அவர் கதையும் அமைந்துள்ளது. பெரியதொரு இலக்கிய முயற்சியில் ஈடுபடிருக்கும் மெலிஞ்சி முத்தன் அதன் பின்னர் மிகப்பரவலான கவனத்தை பெறவேண்டும் என்பது என் விருப்பம். யுத்தகால அவலம் பேசும் இன்னுமொரு கதையாக சிங்களத்தில் தயாசேன குணசிங்ஹ எழுதி தமிழில் மொஹம்மட் ராசூக் மொழி மாற்றம் செய்த பிசாசுகளின் இரவு, 83 கலவரத்தின் இன்னுமொரு கோணமாக அமைகின்றது. இந்த இதழில் “உறவுகள் ஊமையானால்” என்ற ரஞ்சனி எழுதிய கதையில் பெண்களின் பிரச்சனைகள் பற்றி பேசப்படுகின்றது. பெண்களின் எழுத்துக்களும், பெண்ணியம் சார்ந்த செயல்களும் பெரு வீச்சுடன் வளர்ந்துவரும் இந்நாட்களில் இக்கதை சொல்லும் கருத்துகள் யாவும் மிக ஆரம்பத்தில் எழுப்பப்பட்ட பெண்களுக்கான பிரச்சனைகளாகும். அந்த பிரச்சனை இன்னும் தீரவில்லை என்ற போதிலும், அந்த பிரச்சனைகளுக்கான தீர்வுகளாக கதை சொல்லி கதையின் கடைசிப் பகுதியை கொண்டு செல்லும் பாங்கு நாடகத் தன்மையானதாக இருக்கின்றது. அது மட்டுமல்ல கதையில் அதிகளவு ஆங்கிலச் சொற்கள் Englishலேயே வருகின்றன. அதிலும் நடைமுறை வாழ்வில் கூட நாம் தமிழுடன் கலந்து பேச்சுவாக்கில் அதிகம் பாவிக்காத Perhaps என்ற சொல் கூட கதையின் கடைசிப் பகுதியில் வருகின்றது. இவற்றைத் தவிர்த்திருக்கலாம். இந்த முறை இதழை எடுத்தவுடனேயே நான் முதலில் படித்தது பொ. கருணாகரமூர்த்தி எழுதிய “நல்லாய்க் கேட்டுதான் என்ன செய்யப் போகின்றேன்” என்ற சிறுகதையை. அண்மையில் அவரது சில சிறு கதைகளையும், பெர்லின் இரவுகளையும் படித்து அவரது எழுத்தில் ஒரு ஈர்ப்பு உருவாகியிருந்தது. இந்த கதையை பொறுத்தவரை, இதைவிட சிறந்த கதைகளை மிக இலகுவாகவே எழுதும் வல்லமை பொ. கருணாகரமூர்த்திக்கு உள்ளது என்பது எனது கருத்து. இது தவிர திருமாவளாவன், நிவேதா, உமா வரதராஜன், மலரா, விமலா போன்றோர் எழுதிய கவிதைகளும் புத்தக விமர்சனங்களும் வந்திருக்கின்றன. கவிதைகள் ஆழ்ந்த வாசிப்புக்கும், விமர்சனத்துக்கும் உரியவை. இயன்றவரை எல்லாரும் இந்தக் கவிதைகளை வாசிக்கவேண்டும். புலம்பெயர்ந்த நாடொன்றில், அதிலும் கனடா போன்ற இலவச பத்திரிகைகளையும், தென்னிந்திய சின்னத்திரை நாடகங்களையுமே பொழுது போக்கு முயற்சிகளாக கொண்ட பெரும்பான்மை தமிழ் சமுக்கத்தின் மத்தியில் இருந்து, வணிக ரீதியில் எழும் கடுமையான சிக்கல்களையும் தாண்டி இதழை வெளியிடும் காலம் செல்வமும் மற்றும் காலம் குழுவினரும் படைப்பாளிகளும் மரியாதைக்குரியவர்கள் Share this: Facebook WhatsApp Twitter Print Email Pinterest Tumblr LinkedIn Pocket Reddit Like this: Like Loading... Related இலக்கியம் விமர்சனம் அருண்மொழிவர்மன் May 27, 2009 September 9, 2015 அ. முத்துலிங்கம் காலம் டிசே தமிழன் Post navigation கடல்புரத்தில் நாவலும் கரையோர நினைவுகளும் சில எண்ணங்களும் ”சுடருள் இருள்” 27 thoughts on “காலம் – 2009: சில எண்ணங்கள்” பாரதி.சு says: May 27, 2009 at 9:59 pm சுதன் அண்ணா,என் போன்ற வாசகர்களின் தேடல்களின் வறட்சியோ…அல்லது கனடிய தமிழ் எழுத்தாளர்களின் ஒன்றுகூடல் நிகழ்வுகள் மற்றும் அவர்கள் வெளியிடும் இதழ்கள் போன்றவற்றுக்கான மார்கெட்டிங் குறைபாடோ….எதுவாகவிருந்தாலும்,”காலம்” என்ற பெயரில் ஒரு இதழ் வெளிவருவதையே நான் அறியேன்.ஏதோ உங்கள் பதிவு மூலமாகவாவது அறிந்தேன்.நன்றி.வாசிக்கும் ஆவலை தூண்டுகிறது.எங்கே இப்புத்தகத்தை பெறலாம்.?பி.கு:- நீங்கள் குறிப்பிட்ட புத்தக வெளியீடு இதுவா??e-mail பண்ணுவதாக கூறியிருந்தீர்கள். மறந்துவிட்டீர்கள் போலும். LikeLike Reply வாசுகி says: May 27, 2009 at 10:47 pm வாசிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியிருக்கிறீர்கள்.ஆனால் புத்தகம் வாசிக்கும் மன நிலை தான் இப்போது இல்லை.//அண்மைக்காலமாக அவர் எழுதுபவை எல்லாம் நல்ல “மகிழ்வூட்டும் பிரதிகளாக” இருக்கின்றன.//நிச்சயமாக, அவரது எழுத்துக்கள் எல்லோரையும் கவரக்கூடியவை.அவரது திகட சக்கரம், வம்ச விருத்தி, வடக்கு வீதி போன்ற சிறுகதைத்தொகுதிகள் வாசித்துஇருக்கிறேன். வாசிக்கும் போது ஒரு சந்தோசம், அதை எப்படி எழுதுவது என்று தெரியவில்லை.எனக்கு மிக மிக மிக பிடித்த எழுத்தாளர். “உண்மை கலந்த நாட்குறிப்பு, மகா ராஜாவின் ரயில் வண்டி,பூமியின் பாதி வயது ” எல்லாம் வாசிக்க வேண்டும் என்ற ஆசை தான்.கடைகளில் ரமணிச்சந்திரன் புத்தகம் தவிர வேறு புத்தகம் எடுப்பது கஸ்டம்.தமிழ்ச்சங்கத்தில் தேடி “அங்கே இப்ப என்ன நேரம் ” மட்டும் கிடைத்தது.மின் நூலாக சில புத்தகம் கிடைக்கிறது.உங்களுக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.noolaham.orgஆனால் அவரது எழுத்தை புத்தகத்தில் ஆற அமர இருந்து வாசிக்கவே விருப்பம் . LikeLike Reply வாசுகி says: May 27, 2009 at 10:53 pm டி.சே தமிழனின் ஹேமா அக்கா பற்றிய கதை மனதுக்கு பாரமாக இருந்தது.ஆரம்பத்தில் ஒரு நகைச்சுவைக்கதை என்று நினைத்தே வாசித்தேன்.அந்த மொழி நடை பிடித்து இருந்தது.காலம் இதழ் இது வரை நான் வாசிக்கவில்லை. நல்ல அறிமுகம் தந்ததுக்கு நன்றி.ஈழப்பிரச்சினை பற்றி அ.மு பெரிதாக எழுதுவதில்லைத் தான்.ஆனால் அவரது கதையில் எமது ஊரை பார்க்கும் போது சந்தோசமாக இருக்கும்.சாரு, ஜெ.மோ போல் அறிவுஜீவித்தனம் என்ற பெயரில் கட்டுரை எழுதுவதற்குஅ.மு பரவாயில்லை என்பது என் கருத்து. LikeLike Reply தமிழ்நதி says: May 27, 2009 at 11:00 pm தகவலுக்கு நன்றி சுதன். (அருண்மொழிவர்மன் என்று பெயர் பார்த்தேன்) இசையோடு தொடர்புடைய அந்த அருண்மொழிவர்மனா நீங்கள்?இங்கு சென்னையில் நியூ புக் லான்ட்ஸ் இல் ‘காலம்’கிடைத்தது. தீவிர இலக்கியப் பத்திரிகை என்று சொல்லத்தக்கதாக அங்கு ஒன்று வெளிவருகிறதென்றால் அது காலந்தானே… முன்பு ‘ழகரம்’என்று ஒன்று வந்ததாக நினைவு. பிறகு அற்பாயுளில் நின்றுபோயிற்று. பிறகு ‘வைகறை’வருவதாகச் சொன்னார்கள். இங்கு இருப்பதால் கண்ணால் காணக்கிடைக்கவில்லை. LikeLike Reply தமிழ்நதி says: May 27, 2009 at 11:05 pm வாசுகி,”சாரு, ஜெ.மோ போல் அறிவுஜீவித்தனம் என்ற பெயரில் கட்டுரை எழுதுவதற்குஅ.மு பரவாயில்லை என்பது என் கருத்து.”அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களில் இடையிடை வந்துபோகும் அங்கதச்சுவைக்கு இணையாக எங்கும் படித்ததில்லை. அவர் எடுத்த நேர்காணல்கள் (வேற்றுமொழி எழுத்தாளர்களை)தொகுப்பு ஒன்று இருக்கிறது. பெயர் மறந்துபோயிற்று. அவசியம் படியுங்கள். எழுத்தைப் பற்றி நிறையத் தெரிந்துகொள்வீர்கள். நீங்கள் தர்சினியின் சகோதரி வாசுகிதானே…? LikeLike Reply ஷண்முகப்ரியன் says: May 28, 2009 at 2:47 am இந்தப் பதிவுகளின் மூலம்தான் எனக்கு அறிமுகமான இந்த எழுத்துக்களைத் தேடிப் படிக்க வேண்டுமெனும் ஆவல் கிளர்கிறது.நன்றி,சுதன். LikeLike Reply கதியால் says: May 28, 2009 at 11:55 am உங்கள் பதிவு நிறைய விடயங்களை வெளிக்கொணர்கிறது. அன்னப்பட்சி போல் நீரை விலக்கி சுத்தமான பாலை பருகுமாம். நீங்களும் தெரிந்தெடுத்து தரும் கதைகளை படிக்க ஆவலாக உள்ளோம். தொடரட்டும். ‘காலம்’ கடக்கட்டும் பல படிகள்.தோழர் என்ற பதம் நீண்டகாலமாகவே விடுதலைப்போராட்ட அமைப்புகளில் இருந்து வருகின்ற ஒன்று. இப்பொழுதும் சனநாயக நீரோட்டத்தில்(?) கலந்து இருக்கும் கட்சியாகிய ஈபிடிபி தன்னுடைய உறுப்பினர்களை ‘அன்பாக’ தோழர் என்றே அழைக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் யாரும் நண்பர் ஒருவரை ‘தோழர்’ வாறார் என்றால் ஒருமாதிரியாகத்தான் பார்ப்பார்கள். LikeLike Reply thurka says: May 28, 2009 at 8:22 pm காலம் பற்றிய உங்கள் கருத்தாடல் நன்றாக இருக்கிறது. சமகாலத்தில் வெளிவருகின்ற இவ்வாறான முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியதும் மக்கள் தளத்துக்கு எடுத்துச் செல்லவேண்டியதுமாகும். அதன் ஒரு அங்கமாக உங்கள் சமூக கடமையை சரியாகவே செய்துள்ளீர்கள். உங்கள் அவதானிப்பின் பின்புலம் அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்! LikeLike Reply அருண்மொழிவர்மன் says: May 28, 2009 at 8:34 pm வணக்கம் பாரதி//….எதுவாகவிருந்தாலும்,”காலம்” என்ற பெயரில் ஒரு இதழ் வெளிவருவதையே நான் அறியேன்.//காலம் சஞ்சிகை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் வெளிவருகின்றது. கனடாவில் வெளிவரும் ஒரெ இலக்கிய இதழ் என்று இதனை தயக்கமின்றி சொல்லலாம்.இந்த புத்தகம் வேண்டுமென்றால் பெற்றுத் தருகின்றேன். கடைகளில் அனேகமாக முருகன் புத்தக கடையில் கிடைக்கலாம்.நான் குறிப்பிட்ட புத்தக வெளியீடு அ. முத்துலிங்கத்தின் புத்தக வெளியீடு. சனிக்கிழமை என்று சொன்னேன். ஆனால் உறுதிப்படுத்த தவறி விட்டேன். மன்னிக்கவும் LikeLike Reply அருண்மொழிவர்மன் says: May 28, 2009 at 8:41 pm வணக்கம் வாசுகி//எல்லாம் வாசிக்க வேண்டும் என்ற ஆசை தான்.கடைகளில் ரமணிச்சந்திரன் புத்தகம் தவிர வேறு புத்தகம் எடுப்பது கஸ்டம்.தமிழ்ச்சங்கத்தில் தேடி “அங்கே இப்ப என்ன நேரம் ” மட்டும் கிடைத்தது.மின் நூலாக சில புத்தகம் கிடைக்கிறது.உங்களுக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.noolaham.org//அவரது கதை சொல்லும் பாங்கு தனித்துவமானது. அதற்கு அவரே நிகர்.நூலகம் என்பது எம்மிலும் இளையோர் சேர்ந்து செய்யும் மிகப்பெரிய முயற்சி. சேவை. அது எனது தேடல்களுக்கு பெரும் துணாஇ தருகின்றது. அச்சிலே இப்போது இல்லாத (செல்வி, சிவரமணி, சேரன் போன்ற ) பலரது புத்தகங்கள் அங்கே நிறைந்து கிடக்கின்றன.டிசேயின் ஹேமா அக்கா அண்மையில் நான் வாசித்த மிகச் சிறந்த சிறுகதை. தொடர்ச்சியாக அவரது எழுத்துக்கள் இணையத்தில் வந்து கொண்டுள்ளன. வாசிப்பது அதிகம் ஈட்டம் தரும்.அ.மு இலங்கை பிரச்சனை பற்றி எழுதாதது பற்றி கடந்த மாதம் நான் அவரது உண்மை கலந்த நாட்குறிப்புகள் பற்றி எழுதியபோது இதே கருத்தை சொல்லியிருந்தேன்.நன்றி. LikeLike Reply அருண்மொழிவர்மன் says: May 28, 2009 at 8:46 pm வணக்கம் தமிழ்நதி.// இசையோடு தொடர்புடைய அந்த அருண்மொழிவர்மனா நீங்கள்?//இசையோடு எனக்கிருக்கும் தொடர்பு ரசனை சம்பந்தமானது. அதுவும் பெரிது தமிழ் திரை இசையுடன்…..இந்தியாவிலும் காலம் கிடைத்து வாசிப்பது மகிழ்ச்சி. ழகரம் , பறை போன்ற இலக்கிய இதழ்கள் இப்போது நின்றுபோய்விட்டன. வைகறை வார இதழாக வெளியானது. தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதில் டிசே, சக்கரவர்த்தி, சுமதி ரூபன் போன்ற பலரது ஆக்கங்கள் தொடர்ந்து வெளியாகின…. LikeLike Reply thurka says: May 28, 2009 at 8:47 pm //”சாரு, ஜெ.மோ போல் அறிவுஜீவித்தனம் என்ற பெயரில் கட்டுரை எழுதுவதற்குஅ.மு பரவாயில்லை என்பது என் கருத்து.”//அறிவுஜீவித்தனமோ பைத்தியக்காரத்தனமோ அவர்கள் ஒரு கருத்தை தன்னும் மக்கள் முன் வாதப் பிரதிவாதங்களுக்கு முன்வைக்கின்றனர் என்பது என் கருத்து. “நாங்கள் கவிதை எழுதுவதற்குள் வியட்நாம் யுத்தம் நின்று விட்டது..” என்கின்ற ஒரு போர்க்கால கவிதையை போல இங்கே மேற்குலகுக்கும் வட அமெரிக்கனுக்கும் வாழ்க்கைப்பட்ட சிலர் வாய் திறப்பதற்குள் எல்லா பிணங்களும் கைவண்டியில் கூட எடுப்பாரின்றி மண்மூடிபோனது தான் கண்ட நிஜம். நாங்கள் பேச வேண்டிய சபையில் சோரம் போனோம் அவர்கள் எமக்கான குரலிலுமாய் பேசினார்கள். முடிந்தது கதை இனி மகிழ்வூட்டும் பிரதிகளை தொடரலாம். LikeLike Reply அருண்மொழிவர்மன் says: May 28, 2009 at 8:57 pm மீண்டும் வணக்கம் தமிழ் நதி….//சாரு, ஜெ.மோ போல் அறிவுஜீவித்தனம் என்ற பெயரில் கட்டுரை எழுதுவதற்குஅ.மு பரவாயில்லை என்பது என் கருத்து//சாரு எழுதிய உன்னத சங்கீதம் என்றா கதை பற்றி எனக்கு கருத்து ரீதியான விமர்சனம் ஒன்று உண்டு. ஆனால் அவர்கள், அதிலும் அண்மைக்காலமாய் சாரு ஈழப்பிரச்சனை பற்றி எழுதும் பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு. அவர் சொல்லும் நிஜத்தின் கசப்பை எம்மால் ஏற்க முடியவில்லை என்பதற்காக அவரை நாம் திட்டிப் பலனென்ன?நாம் பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருந்ததால் / இருக்க வேண்டி வந்ததால் இன்று அழ வேண்டிய இடத்தில் கூட அழாமல் / அழ முடியாம வெட்டியாய் பேசிக்கொண்டிருக்கின்றோம்.எமக்குரிய குரல்கள் எல்லாம் ஒரே ஆழியினூடாக ஒலிக்கவேண்டிய கட்டாயம் எம்மீது சுமத்தப்பட்டது. இன்று அந்த ஆழி செயலிழந்தவுடன், எமக்கான குரல்களே இல்லாமல் போய்விட்டது.அ. மு தான் ஈழப்பிரச்சனை பற்றி எழுதாதற்கு தான் மிக ஆரம்பத்திலேயே இலங்கையை விட்டு புறப்பட்டதே கரணம் என்று ஒரு முறை சொன்னார். அந்த காரணாத்தை ஏற்கின்ற அதே வேளை; அவர் தனது குரல் மாற்றுக் குரலாக ஒலித்து விமர்சனமாகுமே என்றா தயக்கத்தில் எழுதாமல் விட்டிருப்பாராரேயானால் அது மிகுந்த முட்டாள்தனத்துக்குரியது.இறுதியாக ஒன்று;பக்கிங்ஹாம் அரண்மனையில், பிரிட்டிஷ் மகாராணி செவிலியாக இருக்க நான் பிறந்தேன் என்று வரலாறூ எழுத எல்லாருக்கும் விருப்பம் தான். ஆனால் நிஜம் அது இல்லையே???/இனியாவது நிஜம் பேசுவோம் LikeLike Reply அருண்மொழிவர்மன் says: May 28, 2009 at 9:00 pm வணக்கம் ஷண்முகப்பிரியன்.டிசேயின் எழுத்துக்களாஇ நான் தந்த தொடுப்பூடாகவே படிக்கலாம் LikeLike Reply பாரதி.சு says: May 29, 2009 at 2:27 pm வணக்கம் அண்ணா,//”ஆனால் அவர்கள், அதிலும் அண்மைக்காலமாய் சாரு ஈழப்பிரச்சனை பற்றி எழுதும் பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு. அவர் சொல்லும் நிஜத்தின் கசப்பை எம்மால் ஏற்க முடியவில்லை என்பதற்காக அவரை நாம் திட்டிப் பலனென்ன?//நீங்கள் குறிப்பிடுவது போன்ற மாற்றுக்கருத்துகளின் முரண்விவாதங்கள் வரவேற்கப்படவேண்டியவையே. அவர் சொல்லும் நிஜங்கள் கசப்பதால் மட்டும் நான்(ம்) அவரை திட்டவில்லை, அவர் நிஜங்களை “எல்லாவேளையிலும்” உரத்துக்கூற தவறியமையாலேயே…அத்துடன் அவரின் ஜனநாயகவாதம் புலியெதிர்ப்புடன் மட்டும் அமிழ்ந்துபோவதாலுமே. சாரு “சார்ந்திருக்கும்” தளத்தில் (“இந்திய தேசியவாதம்”)நின்று கொடுக்கும் குரலின் “தூய்மை” குறித்தான சந்தேகம் எனக்கு எப்போதுமே உண்டு.மற்றபடி…நீங்கள் குறிப்பிட்டது போலவே நாங்கள் மாலுமி இல்லாத கப்பலில் பயணம் போகின்றோம் என்பதும்..இது எவ்வளவு ஆபத்தானதென்பதும்..காலம் நிச்சயம் பதிவு செய்யும். LikeLike Reply அருண்மொழிவர்மன் says: May 29, 2009 at 11:34 pm வணாக்கம் கதியால்//தொடரட்டும். ‘காலம்’ கடக்கட்டும் பல படிகள்//காலம் வெற்றிகரமாக இயங்கவேண்டும் என்பதில் எனக்கும் பெரு விருப்பம் உள்ளது.//தோழர் என்ற பதம் நீண்டகாலமாகவே விடுதலைப்போராட்ட அமைப்புகளில் இருந்து வருகின்ற ஒன்று. //போராட்ட இயக்கங்கள் ஆரம்ப காலத்தில் தோழர் என்ற பெயரை உபயோகித்ததாக அறிந்திருக்கின்றேன். ஆரம்ப காலத்தில் இடது சாரிக் கொள்கை சார்பானவையாக இயக்கங்கள் இயங்கியபோது தோழர் என்ற பதம் பயன்பட்டிருக்கலாம். ஆனால் கண்ணன் வருகிறார் என்பதைக் கூட “கண்ணன் தோழர் வருகிறார்” என்றூ சொல்லும் அளாவு நடை முறையில் அந்த பதங்கள் பயன்பட்டனவா என்பது எனக்கு சரிவர தெரியவில்லை.எனினும் விளக்கத்துக்கு நன்றிகள் LikeLike Reply அருண்மொழிவர்மன் says: May 29, 2009 at 11:40 pm வணக்கம் துர்க்கா//உங்கள் சமூக கடமையை சரியாகவே செய்துள்ளீர்கள். உங்கள் அவதானிப்பின் பின்புலம் அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!//நன்றிகள். அண்மையில் ஈழத்தவர்களால் கொண்டாடப்படவேண்டிய ஒரு அற்புதமான எழுத்தாளரிடம் பேசிக் கொண்டிருந்தேன். கனடாவில் இருக்கின்ற ஒரு தமிழ் புத்தக கடையில் தனது புத்தகங்களை விற்பனைக்கு வைத்தபோது ஏதோ ஒரு மூலையில் எவருக்கும் தெரியாத ஒரு இடத்தில் தனது புத்தகங்கள் தொடர்ந்து இருந்ததாக குறிப்பிட்டார். என்ன வேடிக்கை என்றால் அதே கடையில் நான் பல தடவைகள் அவரது புத்தகங்களை தேடி இருக்கின்றேன். ஆனால் எனக்கு கிடைக்கவில்லை. மண்வாசம் என்ற ஒரு இதழை அதை வெளியிடுபவரே விற்கப்படாத பிரதிகளை இலவசமாக விநியோகிப்பதை நான் கவனித்து இருக்கின்றேன்……..//நாங்கள் கவிதை எழுதுவதற்குள் வியட்நாம் யுத்தம் நின்று விட்டது..” என்கின்ற ஒரு போர்க்கால கவிதையை போல இங்கே மேற்குலகுக்கும் வட அமெரிக்கனுக்கும் வாழ்க்கைப்பட்ட சிலர் வாய் திறப்பதற்குள் எல்லா பிணங்களும் கைவண்டியில் கூட எடுப்பாரின்றி மண்மூடிபோனது தான் கண்ட நிஜம்//கற்றதும் பெற்றதுமில் அறிமுகம் பெற்ற வியட்னாமிய கவிதை வரிகள். உங்களுடைய இந்தக் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. LikeLike Reply அருண்மொழிவர்மன் says: May 29, 2009 at 11:43 pm வணக்கம் பாரதி,//சாரு “சார்ந்திருக்கும்”தளத்தில் (“இந்திய தேசியவாதம்”)நின்று கொடுக்கும் குரலின் “தூய்மை” குறித்தான சந்தேகம் எனக்கு எப்போதுமே உண்டு.//ஈழப்பிரச்சனை பற்றிய சாருவின் நிலைப்பாடில் எனக்கு முழுமையான் உடன் பாடு கிடையாது. ஆனால் அவர் அண்மையில் எழுதிய பல கட்டுரைகளில் நிறைய நிஜங்கள் இருந்தன. மேலும், சாரு ஒரு போது இந்திய தேசிய வாதத்தை தூக்கிப் பிடித்தவர் கிடையாது. அவரது அஸாதி அஸாதி கட்டுரையை படித்துப் பாருங்கள். LikeLike Reply DJ says: June 2, 2009 at 11:55 pm நன்றி அருண். காலம் குறித்த பகிர்வுக்கும், எனது கதை குறித்த கருத்துக்கும்….இன்னமும் முழுதாய் 'காலம்' வாசிக்கவில்லை. எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும் செல்வம் காலத்தைக் கொண்டு வருவதையிட்டு நாம் அவரை உற்சாகப்படுத்தத்தான் வேண்டும். LikeLike Reply தமிழன்-கறுப்பி... says: June 3, 2009 at 10:33 am சுதனா அருண்மொழியா அதை சொல்லுங்கோ முதல்ல கனடாக்கு ஒருக்காலெண்டாலும் வரோணும் எண்டு ஒரு கனவுல இருக்கிறன் பாக்கலாம் சந்தர்ப்பம் கிடைக்கட்டும்,டிசேயின் கதையை முன்பும் வாசித்து, பின் அவர் இப்பொழுது பதிவிட்டபொழுதும் வாசித்திருக்கிறேன் இப்போதைக்கு நானும் அதே… அடுத்த கதை வரும் வரையும்.பகிர்வுக்கு நன்றி.. LikeLike Reply தமிழன்-கறுப்பி... says: June 3, 2009 at 10:34 am காலம் குழுவினருக்கு வாழ்த்துக்கள்… LikeLike Reply pratheeb says: June 5, 2009 at 10:39 am puthiya vadivil ungkal thalam azakaaka ullathu. vaalththukkal. thodarnthu ezuthungkal LikeLike Reply அருண்மொழிவர்மன் says: June 5, 2009 at 10:59 pm வணக்கம் டிசே//இன்னமும் முழுதாய் 'காலம்' வாசிக்கவில்லை. எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும் செல்வம் காலத்தைக் கொண்டு வருவதையிட்டு நாம் அவரை உற்சாகப்படுத்தத்தான் வேண்டும்//அதிலும் அவர் மீது பலமாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பலவற்றை இம்முறை தாண்டியுள்ளார் என்றே தோன்றுகின்றது. அது பற்றிய வாய்வழி விளம்பரங்கள் செய்யவேண்டிய பொறுப்பும் எமக்குள்ளது LikeLike Reply அருண்மொழிவர்மன் says: June 5, 2009 at 11:01 pm வணக்கம் தமிழன் கறுப்பி//சுதனா அருண்மொழியா அதை சொல்லுங்கோ முதல்ல//என்னை சுதன் என்று தெரிந்தவர்கள் அழைப்பர். அருண்மொழிவர்மன் என்ப்து முன்பு, ராஜ ராஜன் மீது பெரும் காதல் கொண்டிருந்தகாலத்தில் நான் புனைவாக பாவிக்க தொடங்கிய பெயர் LikeLike Reply அருண்மொழிவர்மன் says: June 5, 2009 at 11:01 pm நன்றி பிரதீப் LikeLike Reply தமிழ்நதி says: June 7, 2009 at 12:59 pm Arulmozhivarman,"சாரு ஈழப்பிரச்சனை பற்றி எழுதும் பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு."I don't agree with this statement. If we start to discuss about this issue, we won't come to a conclusion but an argument. So i don't want to discuss. (Sorry i am away from home. could not type in tamil) LikeLike Reply கண்டும் காணான் says: June 8, 2009 at 8:14 pm ஆம் தமிழ் நதி, ஈழப் பிரச்சனையில் சாருவின் கருத்துக்கள் , அவர் கண்ட இந்திய நக்சல் குழுக்கள் மற்றும் வீரப்பன் ஆகியவற்றால் அவர் உருவகித்துக் கொண்டவை. அத்துடன் , மாற்றுக் கருத்தாளர்கள் எனச் கூறிக் கொள்பவர்களின் அழைப்பின் பேரில் அடிகடி பாரிஸ் போய், அதனால் அவர்களின் கருத்துச் செல்வாக்குக்கு அடிமையாகிப் போனவர். அதுதான் அவரை வாழ வைக்கும் தின மலர் பற்றி அனைவருக்கும் தெரியும். உலகத்தில் எல்லா விடயங்களிலும் ஒவொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும். அதே கருத்தானது அவர்களினது சுற்று வட்டாரத்தில் ஏற்கப்பட்ட , பின்னர் அதுவே ஒருவரின் அசைக்க முடியா கருத்தாக மாறுகின்றது. நக்சல்களை பார்த்து வளர்ந்த சாரு, அவ்வாறே ஈழ பிரச்னையை முடிவுகட்ட அவரது பாரிஸ் நண்பர்களும் தின மலர் காரர்களும் ஒத்து ஊதிவிட்டனர்.காந்தியால் தான் சுதந்திரம் கிடைத்தது என்னும் போதே அவரது பார்வை புரிந்து விடுகின்றது. அந்த ௨௨ போலீஸ் காரர்களுக்காக உண்ணாவிரதத்தை முடித்த காந்தி தூக்கிடப்பட்ட ௧௯ இந்தியர்களுக்காக ஒரு குரல் குடுத்தாரா ? அவர்தான் பகத் சிங்கை தூக்கில் போட்ட பின்தான் லண்டன் பேச்சு வார்த்தைக்கு வருவேன் என்ற சத்தியவான் ஆச்சே . LikeLike Reply Leave a Reply Cancel reply Enter your comment here... Fill in your details below or click an icon to log in: Email (Address never made public) Name Website You are commenting using your WordPress.com account. ( Log Out / Change ) You are commenting using your Google account. ( Log Out / Change ) You are commenting using your Twitter account. ( Log Out / Change ) You are commenting using your Facebook account. ( Log Out / Change ) Cancel Connecting to %s Notify me of new comments via email. Notify me of new posts via email. Δ இந்தத் தளத்தில் தேட Search for: Follow Us Facebook Recent Posts எங்கள் குமாரதேவன் ஐயா December 1, 2021 மூளாய் இராவணேசுவரர் குறித்து சில வார்த்தைகள் November 4, 2021 ஈழத்தில் பரவும் இந்திய ஆதிக்கம் October 26, 2021 ஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு October 19, 2021 நந்திக்கடல் பேசுகிறது தொகுப்பை முன்வைத்து… September 12, 2021 எச்சமும் சொச்சமும் June 22, 2021 நதியைக் கடந்த பாட்டியரும் பேத்தியரும் May 27, 2021 செல்வினின் உரைகளும் அவற்றின் தேவைகளும் May 23, 2021 எங்கட புத்தகங்கள் இதழ் குறித்து… February 3, 2021 கல்வியும் மதமும் குறித்து பெரியார்… July 30, 2020 எனது பார்வையில் கொலை நிலம் – புத்தக அறிமுக விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை UN LOCK குறும்படம் திரையிடல் அறமுற்றுகை குறும்படமும் ஏமாற்றத்தின் சுவடுகளும் உரையாடற்குறிப்பு: புரூஸ் மக் ஆர்தரினால் கொலைசெய்யப்பட்ட 8 பேருக்கான நினைவு நிகழ்வினை முன்வைத்து அத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம் Subscribe to Blog via Email Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email. Join 427 other followers Email Address: Subscribe எழுதியவை எழுதியவை Select Month December 2021 (1) November 2021 (1) October 2021 (2) September 2021 (1) June 2021 (1) May 2021 (2) February 2021 (1) July 2020 (1) June 2020 (1) May 2020 (2) January 2020 (1) November 2019 (1) September 2019 (1) August 2019 (1) June 2019 (2) May 2019 (1) April 2019 (1) March 2019 (3) February 2019 (2) January 2019 (1) December 2018 (1) November 2018 (1) August 2018 (3) July 2018 (2) June 2018 (2) May 2018 (1) April 2018 (2) March 2018 (1) February 2018 (1) January 2018 (2) December 2017 (3) November 2017 (1) October 2017 (3) September 2017 (1) August 2017 (3) July 2017 (4) June 2017 (2) May 2017 (3) March 2017 (3) February 2017 (2) January 2017 (1) December 2016 (1) November 2016 (2) October 2016 (1) August 2016 (3) July 2016 (3) June 2016 (1) May 2016 (1) April 2016 (2) March 2016 (2) February 2016 (2) January 2016 (2) December 2015 (4) November 2015 (2) October 2015 (3) September 2015 (3) August 2015 (5) July 2015 (5) June 2015 (4) May 2015 (3) April 2015 (3) January 2015 (2) December 2014 (3) November 2014 (3) October 2014 (2) August 2014 (1) June 2014 (1) May 2014 (2) April 2014 (1) March 2014 (2) February 2014 (2) June 2012 (1) May 2012 (1) March 2012 (1) February 2012 (2) November 2011 (3) October 2011 (1) September 2011 (1) July 2011 (1) June 2011 (2) May 2011 (4) April 2011 (2) February 2011 (1) January 2011 (2) December 2010 (4) November 2010 (4) October 2010 (1) September 2010 (1) August 2010 (1) July 2010 (5) June 2010 (3) May 2010 (1) April 2010 (6) March 2010 (4) December 2009 (6) October 2009 (2) September 2009 (1) August 2009 (3) July 2009 (4) June 2009 (5) May 2009 (1) April 2009 (3) March 2009 (5) February 2009 (4) January 2009 (2) December 2008 (3) November 2008 (4) October 2008 (2) September 2008 (2) August 2008 (1) May 2008 (1) February 2007 (1) December 2006 (2) October 2006 (1) August 2006 (2) Twitter Updates எங்கள் குமாரதேவன் ஐயா arunmozhivarman.com/2021/12/01/%e0… 5 days ago மூளாய் இராவணேசுவரர் குறித்து சில வார்த்தைகள் arunmozhivarman.com/2021/11/04/202… 1 month ago ஈழத்தில் பரவும் இந்திய ஆதிக்கம் arunmozhivarman.com/2021/10/26/%e0… 1 month ago ஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு arunmozhivarman.com/2021/10/19/202… 1 month ago RT @tovithaikulumam: அறிதலும் பகிர்தலும் 08 அரசும் அதிகாரமும் இணைப்பு - us02web.zoom.us/j/82785207411 Meeting ID: 827 8520 7411 https://t.co/D2… 1 month ago பெரியாரியலின் தேவை https://www.youtube.com/watch?v=XCEIuB47znY&t=2929s The Castless Collection https://www.youtube.com/watch?v=8A7Z67lU9pY&t=2294s பகுப்பு அனுபவம் அரசியல் அறிக்கை அறிவிப்பு ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணம் இலக்கியம் ஈழத்து இலக்கிய வரலாறு ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து திரைப்படம் ஈழப்போராட்டம் ஈழம் உரையாடல் உறவுகள் ஊடகங்கள் எண்ணங்கள் எதிர்வினை எழுத்தாளர்கள் கனேடிய அரசியல் கலை காலம் காலம் செல்வம் கிரிக்கெட் குறும்படம் சமூகநீதி சமூகம் சாதீயம் திரை விமர்சனம் திரைப்படம் தேசியம் நாவல் நிகழ்வுகள் நினைவுப் பதிவு நினைவுப்பதிவு நேர்காணல் பண்பாட்டு அரசியல் பதிகை பத்தி புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு பெண்ணியம் மரபுரிமை யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் வரலாறு வாசிப்பு வாசிப்புக் குறிப்புகள் விசாகன் விமர்சனம் விளையாட்டு Documentary Home Sexuality Uncategorized Goodreads Tags .ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப் போராட்டம் ஈழப்போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த் தோழன் என்னுயிர்த்தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே காணாமல் ஆக்கப்பட்டோர் கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பண்பாட்டுப் படையெடுப்பு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர்வாழ்வு புலம்பெயர் வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதச்சார்பின்மை மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன் Website Powered by WordPress.com. Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
“மக்களுக்குப் புரியும்படியாக எங்களுக்குப் பேசத் தெரியாது. அவர்களைப் போலக் கடவுள் துதி பாடி அல்லது தலைவர் துதி பாடி ஏமாற்றத் தெரியாது. பதுக்கி வைக்கத் தெரியாது; அதை மறைப்பதற்குப் பஜனை பாடவும் தெரியாது. எங்களுக்கு அரசியலும் தெரியாது; மதவெறியும் கிடையாது. பசி எடுக்கும்போது வசதிப்பட்டால் நாங்களாகவே தின்போம்; வசதியில்லாவிட்டால் மனிதர்கள் போடுவதைத் தின்போம். சென்னையிலுள்ள நாங்கள் பசிக் கொடுமை காரணமாகக் குப்பைக் கடுதாசியைக்கூடத் தின்பதுண்டு! இது மட்டுமன்று. சென்னையிலுள்ள பால்கார பக்தர்களில் பலர் எங்கள் குழந்தைகள் குடிக்க வேண்டிய பாலைக்கூட எங்களிடமிருந்து கறந்து (முதலாளிகள் தொழிலாளிகளிடம் கறப்பது போல!) அவைகளை அற்பாயுளில் சாகடித்து, அவற்றின் வயிற்றைக் குடைந்து எடுத்துவிட்டு உள்ளே வைக்கோலைத் திணித்து நான்கு குச்சிகளைக் கால்களாக நட்டு வைத்து எங்களை ஏமாற்றுவதாக நினைத்துக் கொண்டு, பால் கறப்பதற்கு முன்பு எங்கள் கண் முன்பு வைத்து விட்டுக் கறந்து கொண்டிருக்கிறார்கள்! எங்களது உண்மைப் பிள்ளைக்கும் இந்த வைக்கோல் பிள்ளைக்கும் உள்ள வேற்றுமை கூடவா எங்களுக்குத் தெரியாது? கஞ்சிக்குப் பதிலாக சுண்ணாம்பு நீரை வைத்தால் கடித்து விடுவோமா, என்ன? இவர்கள் அறிவு இவ்வளவுதான்! ஆனால் பக்தியிலோ இவர்களுக்கு ஈடு–இணை கிடையாது. கடந்த மாட்டுப் பொங்கல் அன்றுகூட இதே "வைக்கோல் கன்று' பக்தர்கள் எங்களைக் குளிப்பாட்டி, குங்குமம் வைத்து, சூடம் கொளுத்தி, மாலை போட்டுக் கும்பிட்டார்கள்! கும்பிடுக்கும் கொலைக்காரத் தன்மைக்கும் எவ்வளவு நெருங்கிய உறவு "பார்த்தீர்களா'? “இனி, இன்னொரு அவசர சங்கதி! எங்களுக்கு அடிக்கடி "கோமாரி'' என்ற தொத்து நோய் வருகிறது! திடீர் திடீரென்று செத்து மடிகிறோம்! சென்னை – மாதவரம் பால் பண்ணையிலுள்ள எங்கள் இனத்தாரில்கூடப் பலர் இப்படிச் செத்து விட்டனர். இதற்காக இப்போது சில நாட்களாக விலங்கு மருத்துவ நிபுணர் எங்கள் உடனிருந்து கவனித்துக் கொள்கிறார். அவர் உதவி இல்லாவிடில் அத்தனை பேரும் ஒரே நாளில் இடுகாட்டுக்கு (அதாவது மனிதன் வயிற்றுக்கு)ப் போயிருப்போம்! “கடவுளே! (குறிப்பாக, இடைவிடாமல் பாலாபிஷேகம் செய்து கொள்ளும் பழனி ஆண்டவனே!) மடையர்கள் உங்கள் தலை மீது ஊற்றுகின்ற பாலை ஏற்றுக் கொள்கிறீரோ, என்னவோ, எங்களுக்குத் தெரியாது. இருந்தாலும் எங்களை வருத்திப் பிழிந்து எடுக்கின்ற பால்தானே அது? அதற்காகவாவது எங்களிடம் நீர் கருணை காட்டக் கூடாதா? மனிதர்களாவது பல பாவங்களைக் (கேடுகளை) செய்கிறார்கள்? நாங்கள் யாருக்கு, என்ன கேடு, செய்கிறோம்? மனிதர்களுக்குப் பலவிதங்களிலும் நன்மை செய்து வருகின்ற எங்களுக்கு, நினைப்பு – பேச்சு – செய்கை எதனாலும் எவருக்குமே கேடு செய்யாத எங்களுக்கு, ஏன் பயங்கரமான இந்தக் கோமாரி நோயை உண்டாக்குகிறீர்? இதன் காரணமாக நாங்கள் செத்து மடிவது மட்டுமன்று; உமது படைப்புக்களாகிய ஆறறிவு படைத்த மக்களுக்குக்கூடப் பால் கிடைக்காமல் போகிறதே! இதோ, சென்னை நகரில் இந்த வாரம் முதல் பால் கொடுப்பதில் "வெட்டு' உத்தரவு போட்டு விட்டார்களே! "இந்நிலையில் கருணாமூர்த்தி என்று உங்களை அழைப்பது பொருந்துமா? இந்த மாதிரியான ஒரு தொத்து நோயை ஈ, கொசு, மூட்டைப் பூச்சி, கரப்பான், நச்சுக்கிருமி போன்றவைகளுக்கு உண்டாக்கி அவற்றைப் பூண்டோடு அழிக்கக்கூடாதா? இவற்றை யெல்லாம் அழிப்பதற்காக உலக மக்கள் நாள்தோறும் எத்தனை கோடி ரூபாய் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? ஓ, கடவுளே! அழிக்க வேண்டியவற்றை வளர விட்டுக் கொண்டு, வாழ வேண்டியவற்றை அழித்துக் கொண்டிருப்பதுதான் “எல்லாம் அறிந்த'' கடவுள் தன்மையா? “எனவே, மனிதர்கள் உங்களைக் “கருணாகரன்'' என்று போற்றிப் புகழ்கின்றபோது உங்களைக் கிண்டல் செய்கிறார்களா என்றுகூட நாங்கள் அய்யப்படுகிறோம். அன்று எங்கள் முன்னோரில் சிலர் மழையால் நனைந்ததற்காக கிருஷ்ண பரமாத்மா மலையையே கிள்ளி எடுத்து குடையாகப் பிடித்தாராமே! இன்று கொடிய கோமாரி நோய் வந்து பாரத புண்ய பூமியின் மாட்டு இனத்தைத் திடீர் திடீரென்று அழித்துக் கொண்டிருக்கின்ற கோரக் காட்சியைக் கண்டும்கூட கிருஷ்ண பரமாத்மா எங்கள் உதவிக்கு வரவில்லையே! அவர் இருக்கிறாரா அல்லது இற்நத போய்விட்டாரா என்றுகூட எங்களுக்குத் தெரியவில்லையே! “கடவுளே! நாங்கள் செய்து வருகின்ற அரும்பெரும் தொண்டுக்கு இதுதானா நீங்கள் செய்யும் கைம்மாறு? நாங்களும் மனிதர்களைப் போல எந்நேரமும் உங்கள் முன்பு மண்டியிட்டுப் புகழ்ந்து துதி பாடவில்லை என்று கோபமா? நாங்களே கடவுள் என்று கருதுகின்ற இந்துக்களைக் கொண்ட நாடல்லவா, இது? எங்கள் மலம்கூட உங்களுக்குச் சமமாக (பிள்ளையாராக) வணங்கப்படும்போது எங்களை ஏன் இப்படி கோமாரி நோயினால் வாட்டி வதைக்கின்றீர்? இது அடுக்காது! அடுக்காது!'' இப்படிக்கு, அப்பாவி மாடுகள் ("அறிவுப்பாதை' – 22.1.1965) Tweet Whatsapp முந்தைய அடுத்த கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன. Comments 0 #1 ConcernedAnon 2011-07-14 21:54 இயற்கையாக வளரும் மந்தையான கால்நடைகளில் இருந்து அல்லது இயற்கையான முறையில் வளர்க்கப் படும் கால்நடைகளில் இருந்து நம் அத்தியாவசிய தேவைகளுக்காக (குழந்தைகளுக்கா க மற்றும் மருந்துக்காக) பால் பெறுவது ஏற்றுக் கொள்ளலாம். அது தாய்ப்பால் அற்ற குழந்தைகளுக்காக மட்டுமே உணவாக இருக்க முடியும். ஆனால், நமது பேராசை (தேனீர், காப்பி, தயிர், வெண்ணெய், சீஸ், மில்க் ஸ்வீட்ஸ்) தேவைகளுக்காக, கால்நடைகளிடமிரு ந்து அதன் குட்டிகளுக்குக் கூட போதிய பால் விடாமல் கரந்துகொள்வது மிகவும் கொடூரம். நம் பேராசையை பூர்த்தி செய்து கொள்ள, கால்நடைகளுக்கு மூக்கணாங்கயிறு போன்ற கொடுமைகளை செய்வது, அவைகளை செயற்கை முறையில் கருத்தரிக்க செய்வது, குட்டிகளுக்குக் கூட போதிய பால் விடாமல் கரந்துகொள்வது, போன்ற கொடூரங்கள் செய்யப்படுவதால் தான் அது தொடர்ந்து கிடைக்கக் கூடியதும், மிகவும் மலிவானதும் ஆகிறது. மேலை நாடுகளில் தொழிற்சாலை முறையில் வளர்க்கப்படும் (வதைக்கப்படும்) கால்நடைகளுக்கு செய்யப்படும் கொடூரங்கள் ஏராளம். (all-creatures.org/.../...). இது போன்ற கொடூரங்கள் தவிர்க்கப் படும் போது நாம் நமது பேராசை தேவைகளுக்காக பால் பெற முடியாது. அவசியமும் இல்லை. அனைத்து உயிர்களின் நலனே மனித இனத்தின் நலனுமாகும். நாம் பால் பொருள்களை தவிர்க்க வேண்டும். நம்மில் ஜீவா காருண்யம் வளர வேண்டும்.
திருக்குறளில் "ஊழ்" என்னும் ஓர் அதிகாரம். அறத்துப்பாலின் முப்பத்துமூன்று அதிகாரங்களில், இல்லறம், துறவறம் ஆகிய இரு இயல்களின் வழி, இம்மை, மறுமை, வீடு என்னும் மூன்றையும் தரும் சிறப்பினை உடைய அறத்தை விரித்து அருளிய நாயனார், அறத்தின் வழிப் பொருள் செய்து, இன்பத்தை நுகரும் முறை கூறத் தொடங்கி, பொருள் இன்பங்களின் முதற்காரணமாய் நிற்கும் ஊழின் வலியை அருளிச் செய்கின்றார். நல்வினை, தீவினை என்னும் இருவினைகளின் பயனானது, அவற்றைச் செய்தவனையே சென்று அடைவதற்குக் காரணமான நியதியை ஊழ் என்றார். ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி என்பன ஒரு பொருளைக் குறித்தனவே. "ஊழ்த்தல்" என்னும் சொல்லுக்கு, பதன் அழிதல், கெடுதல், மலர்தல், விரிதல், மூடுதல், பருவம் என்று பொருள்கள் உண்டு. நாம் முற்பிறவிகளில் செய்த வினைகளின் பயன், இப் பிறவியில் ஊழாக வந்து மூடுகின்றது, மலர்கின்றது என்று பொருள். இந்த ஊழ், பொருள் இன்பம் இரண்டினுக்கும் பொதுவாக நிற்பதாலும், இம்மை, மறுமை, வீடு என்னும் மூன்றினையும் உண்டாக்கும் அறத்தோடு தொடர்பு உடையது என்பதாலும், அறத்துப்பாலின் இறுதியில் வைத்துக் கூறினார். இந்த அதிகாரத்தில் வரும் மூன்றாம் திருக்குறளில், "அறியாமையை உண்டாக்குவதாகிய ஊழினை (தீவினையின் பயனை அனுபவித்தற்கு) உடைய ஒருவன், நுட்பமான பொருள்களை அறிவிக்கும் நூல்கள் பலவற்றையும் கற்றானாயினும், அவனுக்குத் தனது ஊழின் அளவாகிய பேதைமை அறிவே மேம்பட்டு விளங்கும்" என்கின்றார் நாயனார். பேதைமை என்னும் அறியாமை மேம்படுதல், அறிவு மேம்படுதல் என்னும் இரண்டிற்கும் ஊழ் முதற்காரணம். ஆதலால், நுண்ணிய நூல்கள் பலவற்றை ஒருவன் கற்றவன் ஆயினும், அவனுக்கு உள்ள செயற்கை அறிவினையும் ஊழானது மாற்றி, தனது வலியையே அது நாட்டும். செயற்கை அறிவினையும் ஊழ் கெடுக்க வல்லது என்பதைக் காட்ட, நுண்ணிய நூல்பல கற்பினும், மற்றும் தன் உண்மை அறிவே மிகும். என்னும் திருக்குறளை அருளிச் செந்தார் நாயனார். இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்... பற்றின் கருத்தின்படி நுண்ணிய நூல் பலகற்பினும் மற்றும் தன் உண்மை அறிவே மிகும் எனின், மாந்தரெல்லாம் கற்றுஇங்கு இருக்கினும் உண்மைஅறிவு உனைக்காண்பது அன்றி முற்றும் பொருள் இனி உண்டோ? புல்லாணி முகில்வண்ணனே. இதன் பொருள் --- திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி இருக்கும் மேவண்ணன் ஆகிய திருமாலே! அறியாமையை உண்டாக்குவதாகிய ஊழினை உடைய ஒருவன், அவன் கொண்ட கருத்தின்படி, நுட்பமான பொருள்களை அறிவிக்கும் நூல்கள் பலவற்றையும் கற்றானாயினும், அவனுக்குத் தனது ஊழின் அளவாகிய பேதைமை அறிவே மேம்பட்டு விளங்கும் என்றால், மனிதர்கள் யாவரும் நூல்களைக் கற்று இவ்வுலகத்தில் இருந்தாலும், அவர்களிடத்தில் விளங்கவேண்டிய உண்மையான அறிவானது உன்னைக் காண்பதாகிய அறிவை அல்லாது முடிவான பொருள் ஒன்று உள்ளதோ? கற்று இங்கு இருக்கினும் --- நூல்களைக் கற்று இவ்வுலகத்தில் இருந்தாலும். உண்மையறிவு --- மெய்யறிவு. முற்றும்பொருள் --- முடிவான பொருள். முகில்வண்ணன் --- கார்நிறத்தினன். பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க... கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும் குப்பை கிளைப்போவாக் கோழிபோல், - மிக்க கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன் மனம்புரிந்த வாறே மிகும். --- நாலடியார். இதன் பொருள் --- நொய்யரிசியைத் தவிடு போகத் தெழித்து, வேளை தவறாமல் கொடுத்து வந்தாலும், கோழியானது குப்பையைக் கிளறித் தின்னத்தான் போகும். அதுபோலவே, என்னதான் உயர்ந்த அறிவு நூல்களை எடுத்துக் கூறினாலும், கீழ்மக்கள் காதில் அது ஏறாது. அவர்கள் தங்களுக்கே இயல்பான இழிசெயல்களைச் செய்துகொண்டுதான் இருப்பர். பல் ஆவுள் உய்த்து விடினும், குழக்கன்று வல்லதாம் தாய்நாடிக் கோடலை, - தொல்லைப் பழவினையும் அன்ன தகைத்தே, தற்செய்த கிழவனை நாடிக் கொளற்கு. --- நாலடியார். இதன் பொருள் --- பல பசுக்களின் இடையில் ஒரு இளைய பசுக்கன்றினைச் செலுத்திவிட்டாலும், அது தனது தாய்ப் பசுவைத் தேடிக் கண்டுகொள்ளும். அதுபோலவே, ஒருவன் முன் செய்த செயல்களின் பயன், அதைச் செய்த அவனிடமே சென்று சேரும். சுட்டிச் சொலப்படும் பேரறிவி னார்கண்ணும் பட்ட விருத்தம் பலவானால், - பட்ட பொறியின் வகைய கருமம் அதனால் அறிவினை ஊழே அடும். --- பழமொழி நானூறு. இதன் பொருள் --- குறிப்பிட்டுச் சொல்லப்படும் மிகுந்த அறிவு உடையாரிடத்தும், உண்டாகிய குற்றங்கள் பலவானால், அதற்குக் காரணம், பொருந்தியிருக்கின்ற பழவினையின் வழிப்பட்டனவாய் இருக்கும் செயல்கள் என்பது அறியப்படும். ஆகையால், முன் செய்த ஊழே ஒருவனது நல்லறிவினை விளங்கவொட்டாமல் தடுத்து, அவனை அறிவிலியாக்கும். மிகுந்த அறிவுடையாரிடத்தும் குற்றங் காணப்படுதல் ஊழினால் வருவது. மிகச் சிறந்தார் என்று குறித்துக் கூறப்படும் பெரியோரிடத்துக் குற்றம் காணப்படின், அது அவர் இப்பொழுது செய்ததால் வந்தது அல்ல. பழவினையால் பிறந்த செயல்களால் ஆனது. செயல் மாறுபடின், அதற்குக் காரணமாகிய அறிவும் மாறுபடும். ஆகவே நல்ல அறிவினைப் பேதைப்படுத்து நிற்பது ஊழேயாம். at February 22, 2021 Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: வாழ்வியல் சிந்தனைகள் No comments: Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) பேதையின் நட்பே இனிமை தருவது பேதையின் நட்பே இனிமை தருவது ----- திருக்குறளில் "பேதைமை" என்னும் ஓர் அதிகாரம். பேதைமை என்பது அறிய வேண்டுவது ஏதும் அறியாம... சிறுவாபுரி - 0736. அண்டர்பதி குடியேற அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் அண்டர்பதி குடியேற (சிறுவை-சிறுவாபுரி) முருகா! எல்லோரும் கண்டு இன்புறுமா... திருச்செந்தூர் - 0102. விறல்மாரன் அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் விறல்மாரன் ஐந்து (திருச்செந்தூர்) ஆன்மாவின் துன்பம் தீ ர , முருகன் திருமார்பில் உள்ள மலர்மால... சுவாமி மலை - 0218. செகமாயை உற்று அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் செகமாயை உற்று (சுவாமிமலை) சுவாமிநாதா! அடியேனுக்கு மகவாக வந்து, முத்தம் தந்து அருள் தனத...
கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும்... ரசத்தை எடுத்து குழம்புல ஊத்து கதையாக எப்போதும் யார் காதலையாவது நோட்டமிட்டுக் கொண்டேயிருக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்தி அவலாக இருக்குமோ, அனலாக தகிக்குமோ? எதுவாக இருந்தாலும் இருபெரும் நட்சத்திரங்களை பற்றிய…
தமிழீழ நடைமுறை அரசினை நிர்வகித்த நம்மவர்கள் ஊருக்கு ஊர் “படிப்பகங்களை” அமைத்திருந்தனர்! “#படிப்பகங்கள்” வடக்கு கிழக்கில் நடைமுறையரசின் கட்டுப்பாட்டிலிருந்த அனேக இடங்களில் அமைக்கப்பட்டிருந்தன. “மாவீரர் படிப்பகம்”எனும் பெயரினை அறியாதவர்கள் என அந்தக் காலத்தில் யாரும் இருக்க முடியாது. கிளிநொச்சி மாநகரின் திருவையாறு கிராமத்தில் “சங்கர் படிப்பகம்” அமைந்திருந்தது கா.பொ.த சாதாரண தரம் மற்றும் கா.பொ.த உயர் தரப் பரீட்சைக்கு மாணவர்கள் தங்களைத் தயார்ப்படுத்தும் நோக்கங்களையும் இந்தப் “படிப்பகங்கள்” நிறைவு செய்திருந்தன. கடந்த கால வினாத்தாள்கள் அடங்கிய பொத்தகங்களை யாழ் நகரிலும் கொழும்பிலும் வாங்கி வந்து கிராமப்புற படிப்பகங்களிலும் நூலகங்களிலும் வைக்கப்பட்டிருந்தன. நடைமுறையரசினை நிர்வகித்த நம்மவர்கள் “அறிவியல் கழகங்களை”உருவாக்கி மாணவர்கள் கற்றல்,கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட வழிசமைத்தனர். யாழ் இணுவில் கிராமத்தில் “#அறிவியல்_கழகம்” அமைக்கப்பட்டிருந்தமை அனைவரும் அறிந்ததே. இலங்கை அரசினால் ,எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருட்களுக்கான தடைகள்(Severe economic embargo) மேற்கொள்ளப்பட்டுருந்த இக்கட்டான சூழல் மத்தியிலும் இயன்றளவு வசதிகளுடன் அந்த அறிவியல் கழகம் அமைக்கப்பட்டிருந்தது. மண்ணெண்ணெய்த் தட்டுப்பாடு காரணமாக குப்பி விளக்கையோ அல்லது #பஞ்சகால_பஞ்சு விளக்கைக் கூட வீட்டில் பாவிக்க முடியாத அந்த இருள் சூழ்ந்த காலத்தில் மாணவர்களுக்கு அருகே அருமருந்தாய் தமிழீழ நடைமுறையரசு இருந்தது. மின்பிறபாக்கி(Generator)மூலம் அந்த அறிவியல் கழகங்களில் ஒளியேற்றப்பட்டு மின்னொளியில் மாணவர்களை படிக்க ஊக்கப்படுத்திய சம்பவங்கள் நடைபெற்றிருந்தன சின்னச் சின்ன பரிசோதனைகள் கூடச் செய்யக் கூடியதாக சில ஆய்வுகூட வசதிகளும் அங்கே அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தன. “கல்வி வளர்ச்சிக் கழகம்” என்பது இன்னுமோர் இன்னோரன்ன கல்வி நிலையங்களாக வடதமிழீழத்தில் அனேக இடங்களில் அன்று அமைக்கப்பட்டிருந்தது. எனக்கு தெரிந்த வகையில் யாழ் அச்சுவேலியில் 1986 ஆம் ஆண்டு கல்வி வளர்ச்சிக்கழகம் தனது பணியினை திறம்பட ஆற்றியது. இடையில் இமய நாட்டுப் படைகளின் வருகையுடன் இயங்கமுடியாமல் போனதாயினும் 90களில் மீண்டும் மிடுக்குடன் அனேகமாக எல்லா இடங் களிலும் ஆரம்பிக்கப்ப்ட்டது. நகர்ப்புறங்களின் பிரபல பாடசாலை மற்றும் பிரபல ரீயூட்டரிகளில் கல்வி போதிக்கும் நல்லாசான்களை குக்கிராமங்களுக்கு அழைத்துவந்து மாலை நேர இலவசக் கல்வியூட்டல் நடைபெற்றது. எரிபொருளுக்கும் சவர்க்காரத்துக்கும் கற்பூரத்துக்கும் சொக்கலேட்ட்டுக்கும் (கன்ரோஷ்) மட்டுமல்ல கட்டடப் பொருட்களுக்கும் தடையிருந்தது. அக்காலப்பகுதியில் சீமெந்துக்கும் கடுமையான தடையை இலங்கை அரசு விதித்திருந்த நேரத்தில் வடகிழக்கில் புதிதாய் ஒரு சிறுகட்டடம் கூட எம்மண்ணில் எழுந்திட முடியாதிருந்தது. ஆனாலும் நல்லூரில் அன்று #இளங்கலைஞர் மன்றம் அமைக்கப்பட்ட போது அதற்கு கப்பல்கள் மூலம் வெளிநாட்டிலிருந்து இறக்கிய சீமெந்தை நடைமுறையரசு வழங்கியிருந்தது. இஷ்ரேல் போன்ற வல்லரசு நாடுகளில் இருந்து ஶ்ரீலங்கா அரசு பெற்றுக் கொண்ட அதிவேக,அதிக தாக்கம் கொண்ட குண்டுவீச்சு விமானங்களின் குண்டுவீச்சிலிருந்து பாதுகாப்புத் தேடவேண்டியிருந்தது. அந்தக்காலத்தில் நிலக்கீழ் வைத்தியசாலைகளை அமைப்பதற்கு பயன்படவிருந்த சீமைந்தினை இளங்கலைஞர் மன்றம் அமைப்பதற்காக தமிழீழ அரசினால் கொடுக்கப்பட்டிருந்தது. எமது மண்ணில் மலரும் மொட்டுக்கள் கலையாத ஞானம் கொண்டு விளங்க வேண்டும் என்ற தீராத ஆசை தமிழீழத் தேசியத் தலைவருக்கு இருந்தது. ஆனால் இன்று அறிவுஜீவிகள் என தமை அடையாளப்படுத்தும் சிலர் அவை அனைத்தையும் மறந்துவிட்டனர். புலிகளால்தான் வடகிழக்கின் கல்வி வீழ்ச்சி அடைந்ததாய் புலம்புகின்றனர். அவர்களுக்கு ஶ்ரீலங்கா அரசாங்கத்தின் ஆசியும் அடுத்த கட்ட பதவியுயர்வும் தேவைதான் அதற்காய் அனைத்தையும் மறந்ததாய் நாடகம் ஆடக்கூடாது. “வரலாறு என்றைக்கும் சாகாது வழிநடத்தும்” நன்றி மருத்துவர் தணிகை Facebook Twitter Google+ Pinterest WhatsApp Previous articleஉலகத்திற்கு வெள்ளையர்கள் கற்றுக் கொடுக்கும் பாடம்..! Next articleநந்திக்கடல் பேசுகிறது” ஆவண நூல்மீது திட்டமிட்டுச் சேறுபூசி, விசமப்பிரச்சாரங்களை மேற்கொள்ளும் க(ல்)லாநிதிகள்… eelamenews RELATED ARTICLESMORE FROM AUTHOR செய்திகள் தனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் நீதியரசர் விக்னேஸ்வரன் செய்திகள் ஈழத்தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்புள்ளவர்கள் தேவை – அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம் செய்திகள் கொழும்பு அரசுடன் நெருக்கம் காட்டவே இந்தியா முனைகின்றது LEAVE A REPLY Cancel reply Please enter your comment! Please enter your name here You have entered an incorrect email address! Please enter your email address here Save my name, email, and website in this browser for the next time I comment. ஆசிரியர் தலையங்கம் உலகமக்களாலும் உலக அமைப்புக்களாலும் உலகநாடுகளாலும் உடன் பாதுகாக்கப்பட வேண்டிய மக்களாக ஈழத்தமிழர்கள் ஆசிரியர் தலையங்கம் eelamenews - June 12, 2020 0 தமிழ் இனத்தின் வரலாற்று சான்றுகளை பாதுகாக்க நாம் முன்வரவேண்டும் ஆசிரியர் தலையங்கம் eelamenews - June 8, 2020 0 முன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள் ஆசிரியர் தலையங்கம் eelamenews - April 30, 2019 0 EDITOR PICKS ஈழப்போராட்ட முன்னோடி வாசுதேவர் நேரு அவர்களுக்கு புகழ் வணக்கம் January 12, 2021 தனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் நீதியரசர் விக்னேஸ்வரன் July 31, 2020 ஈழத்தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்புள்ளவர்கள் தேவை – அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம் July 31, 2020 POPULAR POSTS ஈழப்போராட்ட முன்னோடி வாசுதேவர் நேரு அவர்களுக்கு புகழ் வணக்கம் January 12, 2021 ஈழத்தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்புள்ளவர்கள் தேவை – அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம் July 31, 2020 தமிழ் இனத்தின் வரலாற்று சான்றுகளை பாதுகாக்க நாம் முன்வரவேண்டும் June 8, 2020 POPULAR CATEGORY செய்திகள்3831 பன்னாட்டு செய்திகள்472 ஆய்வுகள்388 உலகம்203 கேள்வி பதில்கள்155 ஆசிரியர் தலையங்கம்124 நேர்காணல்கள்39 அறிக்கைகள்7 எம்மைப் பற்றி ஈழம்ஈநியூஸ் ஊடகம் ஒரு சுயாதீன ஊடகமாகும், தமிழ் மக்களின் ஆதரவுடன் இயங்கிவரும் இந்த ஊடகம் 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையின் பின்னர் தமிழ் மக்களிடம் தோற்றம் பெற்ற ஊடக மற்றும் அரசியல் வெற்றிடத்தை நிரப்பி தமிழ் இனத்தை சரியான பாதையில் நகர்த்துவதற்குரிய ஒரு தமிழ்த்தேசிய சிந்தனபை் பள்ளியாகும். தொடர்புகளுக்கு: info@eelamenews.com சமூக வலைத் தளங்கள் © Copyright © 2019 ஈழம் செய்திகள் '); var formated_str = arr_splits[i].replace(/\surl\(\'(?!data\:)/gi, function regex_function(str) { return ' url(\'' + dir_path + '/' + str.replace(/url\(\'/gi, '').replace(/^\s+|\s+$/gm,''); }); splited_css += ""; } var td_theme_css = jQuery('link#td-theme-css'); if (td_theme_css.length) { td_theme_css.after(splited_css); } } }); } })();
தமிழ் மக்களுக்கு விரோதமான எந்த விடயத்தினையும் ஜனாதிபதி செய்யமாட்டார். தமிழ் மக்கள் அவர் மீது முதலில் நம்பிக்கை வைக்கவேண்டும் என்று மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் அமைச்சர் மேர்வின் சில்வா யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளார். நேற்று மாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணம் வருகை தந்த அமைச்சர் யாழ் கொடிகாமம் பகுதியில் சுதந்திரக்கட்சியின் வேட்பாளர்களால் மக்களின் பலத்த ஆதரவுடன் வரவேற்று அழைத்து வரப்பாட்டார். சாவகச்சேரிக்கு நகருக்கு வருகை தந்த அமைச்சர் பேரூந்து நிலையம், வர்த்க நிலையம் என்பவற்றிக்குச் சென்று மக்களுடன் கலந்துரையாடியுள்ளதுடன் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக சாவகச்சேரியில் அமைக்கப்பட்ட சுதந்திரக்கட்சியின் அலுவலகத்தினையும் திறந்து வைத்தார். சாவகச்சேரி பிரதேச வைத்தியசாலைக்குச் சென்ற அமைச்சர் அங்கு ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்ட விடுதிகளைப் பார்வையிட்டதோடு அங்கிருந்த சிறுவர்களை தூக்கி ´வாங்க மச்சான் வாங்க´ என்ற பாடலைப்பாடி மகிழ்வித்தார். யாழ்ப்பாணம் வருகை தந்த அமைச்சர் மேர்வின் சில்வாவை சாவகச்சேரியில் உள்ள சுதந்திரக்கட்சியின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடும்போதே இதனை அவர் தெரிவித்தார். வருகை தொடர்பில் கேட்டபோது… நான் மக்கள் தொடர்பாடல் அமைச்சர். நான் இங்கு வருவது பிழையில்லை. முப்பது வருடகாலமாக இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்றுள்ளது. இதனால் மக்கள் பிரபாகரனுக்கு பயந்து வெளியில் வரமுடியாத நிலை காணப்பட்டது. அந்தக் காலத்திலும் நான் யாழ்ப்பாணம் வந்து சென்றிருக்கின்றேன். கடந்த 9 மாதங்களுக்கு முன்னமும் இங்கு வந்து சென்றிருக்கின்றேன். யுத்தம் முடிந்து அபிவிருத்தி நடைபெறும் காலத்தில் தமிழர்களிற்கான தீர்வு தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன என வினவியபோது… முப்பது வருடகாமாக நடைபெற்ற யுத்தத்தினை முடிவுக்குகொண்டு வந்து நாடு அபிவிருத்தியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. யுத்தத்திற்குப் பிந்திய காலத்தில் வடக்கில் தெற்கை விட பாரிய அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீதிகள், புகையிரதப் பாதைகள், வைத்தியசாலைகள் என்று பல்வேறு அவிபிருத்திப் பணிகள் நடைபெற்றுள்ளது. இதைவிட வேறு என்ன தேவை, அபிவிருத்தியே தீர்வு. விரும்பத்தகாத சத்திகளிடம் உள்ளுராட்சி சபைகளை ஒப்படைத்து இன்று அபிவிருத்திப் பணிகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். இனிவரும் காலத்தில் அவ்வாறான நிலை ஏற்படாத வகையில் தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீதும் பாதுகாப்பு படையினர் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றார். 13ஆவது திருத்தம் தொடர்பில் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு, பிள்ளை பிறப்பதற்கு முன்னர் பெயர் வைப்பதென்பது சாத்தியப்பாடானது அல்ல. அதேபோன்று 13 தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் அது பற்றி ஜனாதிபதி எந்த முடிவும் எடுக்காதவரை கருத்துக்கள் கூறமுடியாது. இருந்தாலும் தமிழ் மக்களுக்கு விரோதமான எந்த விடயத்தினையும் ஜனாதிபதி செய்யமாட்டார். தமிழ் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் என்று அவர் பதிலளித்தார்.
தூக்கத்தில் மனிதர்கள் தன்னை அறியாமலேயே ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினைதான் குறட்டை. குறட்டை பிரச்சினையால் இரவு, பகல் என்று பாராமல் எந்த நேரத்தில் தூங்கினாலும் பக்கத்தில் படுத்திருப்பவர்(கள்) பாடு படுதிண்டாட்டம்தான். ஆக, குறட்டை பிரச்னைப்பற்றி இத்தொகுப்பில் பார்ப்போம். பொதுவாகக் குறட்டை வயதானவர்களுக்கு மட்டும்தான் வரும் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்கிறது. இது தவறு, வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் குறட்டை வரும். அதாவது, சுவாசிக்கும் போது வெளியேறும் சப்தத்தைத்தான் குறட்டை என்கிறோம். குரல்வளை சுருங்கும் போது வெளியேறும் மூச்சுக் காற்றின் இயல்பான அளவு குறைந்த சத்தத்தை உண்டாக்குகிறது. தொண்டையின் சுவர்களில் இருக்கும் அண்ணங்களிலிருந்தும் சப்தம் உற்பத்தியாகும். குழந்தைகளிடமும் குறட்டைப் பிரச்னை உண்டு, இதற்கு முக்கியக் காரணம் அடிநாய்டுகள் தான். குழந்தைகளது தொண்டையின் மேல் பகுதியில் அடிநாய்டுகள் மிகப் பெரிய அளவில் இருக்கும். இதனால் குறட்டை வரும். இரண்டு டான்சில்களும் சந்திக்கும் இடத்திலிருந்தும் குறட்டைச் சப்தம் வர வாய்ப்பு உண்டு. அதிக உடல் எடை குறட்டைக்கு முக்கியக் காரணம், இதனால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்ந்துவிடும். முறையான உணவுப் பழக்கம் இல்லாதவர்கள் இந்த குறட்டைப் பிரச்னையால் பாதிக்கப்படுவதுண்டு. குறட்டையில் மூன்று வகை உண்டு. முதலாவது மூளையின் மத்தியப் பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக உண்டாவது, இரண்டாவது அப்ஸ்ட்ரக்டிவ் டைப், இது கொஞ்சம் கடுமையானது. இந்த வகையில் இயல்பான மூச்சிவிடுவதில் சிரமம் ஏற்படும், மூன்றாவது வகை மிகிஸ்ட் டைப், இது முதலிரண்டு வகையின் கூட்டணி Positive airway pressure காரணமாகவும் குறட்டை வரும். முழு தூக்கம் இருக்காது: யாராவது குறட்டை விட்டு தூங்கினால் அவனுக்கென்ன நிம்மதியாக தூங்குகிறான் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் அது தவறு. குறட்டை விடுபவர் நன்றாக தூங்க முடியாது என்பதுடன் பல பாதிப்பு நிலைக்கும் தள்ளப்படும் நிலையும் வரலாம். குறட்டை விடுபவர் மனம் தெளிவாக இருக்காது. உடல் மிகவும் களைப்பாக இருக்கும் உடலில் சக்தி குறைவாக இருக்கும். தெளிவற்ற சிந்தனை வரும். அதிகமாக கோபம் வரும். இதுமட்டுமின்றி உடலுக்கு போதிய அளவு பிராணவாயு கிடைக்காது. இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் பக்கவாதம் போன்ற நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அத்தோடு மிக தீவிரமாக குறட்டை விடுபவர்கள் உறக்கத்திலேயே இறந்து விடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அதனால் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர்க்க வேண்டியவை: சுவாசப் பாதையில் தேவையின்றி சதை வளர்ந்தால் சீராக காற்று போக வழியின்றி குறட்டை ஏற்படலாம். எனவே சதை வளராமல் இருக்க உடல் எடையில் கவனம் வேண்டும். பக்க வாட்டில் படுக்க வேண்டும். 4 அங்குல உயரத்திற்கு மேல் தலையணை வைத்து தூங்க கூடாது. சாப்பிட்ட உடன் படுக்க போக கூடாது. புகை பிடிக்க கூடாது. அளவுக்கு அதிகமான மருந்துகள் சாப்பிடக் கூடாது. மருந்து அருந்த கூடாது. அத்தோடு இதனால் பாதிக்கப்படுபவர்கள் தொண்டை மூக்கு, காது நிபுணரை அணுகி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். 3 வகை நோயாளிகள்: குறட்டையின் தீவிரத்தன்மையைப் பொறுத்து நோயாளிகளை 3 குழுக்களாக வகைப்படுத்தலாம். 1. மெல்லிய குறட்டை- அடுத்திருக்கும் அறையில் ஒலியைக் கேட்க முடியும். மூச்செடுப்பதில் சிரமம் இல்லை. 2. உயரமான குறட்டை- கதவு மூடி இருந்தாலும் கூட அடுத்துள்ள அறையில் ஒலியைக் கேட்கலாம். 3. உறங்கும் போது மூச்சுத் திணறுதல், நேரத்துக்கு நேரம், மூச்சு 10 வினாடிகளுக்கு மேலாக நிறுத்தப்படும். மாரடைப்பு அபாயம்: 7 மணி நேர நித்திரையின் போது 30 முறை மூச்சு திணறல் ஏற்பட்டால் இது ஆபத்தானதாக இருக்கலாம். பெருமூச்செடுத்த வண்ணம், நேரத்துக்கு நேரம் நோயாளி தூக்கம் கலையலாம். ரத்தத்தில் காணப்படும் குறைவான செறிவுடைய ஆக்சிஜன் இதயம், சுவாசப்பை மற்றும் மூளையை பாதிக்கலாம். ரத்த அழுத்தம் உயர்வடைவதால், மாரடைப்பு ஏற்படும். கட்டிலில் மரணம் கூட ஏற்படலாம். இந்த நோயாளிகள் பகலில் கூட நித்திரைத் தன்மையை, சோம்பேறித்தனத்தை உணர்வார்கள். டாக்டர் தூக்க வரலாற்றை சோதிக்கும் போது, இந்த பிரச்சினை பற்றி கூடுதலாக அறிந்த நோயாள ரின் துணையும் இருக்க வேண்டும். ஆபத்தான நோய்: டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்சினைகள் ஏற்படும் போதோ சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்சினைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும். அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது. கழுத்தைச் சுற்றி அளவுக்கு அதிகமான தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது. ஆபத்தான மருத்துவக் கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான, தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது கருதப் படுகிறது. ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது கண்கள் வேகமாக அசையும், அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளியேறும். இதற்கு `அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே’ என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு நேரத்திற்கு 18-க்கும் மேற்பட்ட முறை நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளிவருகிறது. குறட்டை விடும் போது திடீரென நின்று திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால் நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து இதய அடைப்பு திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம். இந்தியாவில் அதிகம் பேர் பாதிப்பு: இந்தியர்களில் பெரும்பாலோர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் வாழ்க்கை முறை மாறி விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது. குறட்டை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து `ஸ்லீப் அப்னியே’ நோய் உருவாகி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க தமிழகத்தின் பெரிய நகரங்களில் மருத்துவமனைகள் உள்ளன. உங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதாப என்பதை அவர்கள் கண்டறிந்து விடுவர். காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர் நோயைக் குணப்படுத் திக்கொள்ளலாம். டான்சில் அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற பிரச்னைகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம். குறட்டையை குறைக்க: குறட்டையை தவிர்க்க உடல் பருமனாகாமல் தவிர்த்து விடுவது அவசியம். அதுபோல் நாள்பட்ட அலர்ஜி இருப்பவர்கள் உடனடியாகச் சிகிச்சை எடுப்பது நல்லது. கழுத்து தொண்டையின் மேல் பகுதியில் கொழுப்புச் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முறையான மூச்சுப் பயிற்சி எடுப்பதாலும் குறட்டையை தவிர்க்க முடியும். அது மட்டுமில்லாமல் மது அருந்தும் பழக்கம் இருக்கவே கூடாது, போதை மாத்திரைகள் மற்றும் மயக்கம் தரும் மருந்துக்கள் உட்கொள்ளவே கூடாது. ஆக்சிஜனை உடலில் தேவையான இடத்திற்கு எடுத்து செல்லும் வகையில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்து நம் மூக்கின் வழியே உடலுக்குச் செலுத்தும் இவற்றை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம். குறட்டையைக் குறைக்க மேலும் சில கருவிகள் விளம்பரப் படுத்தப்படுகின்றன. விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என பல வகைகள் உள்ளன. குறட்டை விடுபவரை, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு திருப்பி படுக்க வைத்தாலே குறட்டை ஒலி குறையும். ஸ்பைரோ மீட்டர் கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மை. யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தினமும் 45 நிமிடம் யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடை பயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால் இளவயது பருமனைக் குறைக்கலாம். திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம். சிகிச்சை முறை: குறட்டை பிரச்சினையை அறுவை சிகிச்சை மூலம் குணப் படுத்தலாம். எல்.ஏ.யு.பி. என்னும் லேசர் சிகிச்சை மூலம் குறட்டையைக் குறைக்க முடியும். குறட்டைக்கு முதல் சிகிச்சை உடல் எடையை குறைப்பதுதான். அடுத்து காற்றுச் செல்லும் பாதையிலுள்ள அடைப்பு அதிகமாக இருந்தால் மூக்கு, உள்நாக்கு, தொண்டை போன்ற பகுதிகளை பரிசோதித்து அடைப்புள்ள இடத்தைக் கண்டறிந்து லேசர் கிச்சையின் மூலம் அடைப்பை சரி செய்யலாம். முற்றிய நிலையிலிருக்கும் நோயாளிக்கு ஆபரேஷன் செய்தாலும் சரியான தீர்வளிக்காது என்பதால் சிறிகிறி என்கிற மாஸ்க்கை ஒவ்வொரு நாளும் தூக்கத்தின்போதும் அணிந்துகொள்ளத் தருகிறோம். அதை அவர்கள் அணிவதால், அந்த மாஸ்க்கிலுள்ள ஆக்சிஜன் அடைப்புள்ள இடத்தில் வேகமாக அழுத்தம் கொடுத்து அடைப்பை விலக்கி, காற்று நன்கு செல்ல உதவுகிறது. இதனால் அவர்கள் குறட்டை பிரச்சினையில்லாமல் ஆழமான தூக்கத்தை அனுபவிக்க முடிகிறது. காற்றடைப்பை கண்டறிய மருத்துவ மனையில் நவீனமான சிலிப்லேப் என்கிற முழுதும் கம்ப்ïட்டர் மயமாக்கப்பட்ட தூங்கும் அறையுள்ளது. நோயாளியை அந்த அறைக்குள்ளே ஒரு இரவு முழுவதும் தூங்க விடவேண்டும். அவரது உடலில் ஒன்பது இடங்களில் கம்ப்யூட்டரோடு இணைக்கப்பட்ட கேபிள்கள் பொருத்தப்படும். அது அன்று இரவு முழுவதும் அவர் தூங்குவது, குறட்டை விடுவது எத்தனை முறை விழிப்பு வந்து புரண்டு படுத்தார், எந்தப் பக்கமாக படுக்கும்போது குறட்டைகளின் தன்மை எப்படியிருந்தது. ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, மூளைக்கும், மார்புக்கும் காற்று சென்று வந்த நிலை, அடைப்பு எங்கேயிருக்கிறது என்பதை துல்லியமாகக் கண்டறிந்து விடலாம் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர்.காதுமூக்கு தொண்டை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரவிராமலிங்கம். குறட்டையும் குழியும் தில்லியில், எங்கள் நண்பர்களில் ஒருவர் மிகவும் அதிகமாகக் குறட்டை விட்டுக் கொண்டிருந்தார். அவர் விட்ட குறட்டையின் அளவு மிகவும் அதிகம். ஒருமுறை நாங்கள் ரயிலில் பயணம் செய்த பொழுது, இரவில் பக்கத்து கூபேயில் இருந்து. பொதுவாக வார இறுதியில் என் வாசம் அந்த நண்பர்களின் அறையில் தான் இருக்கும். அப்பொழுது, நான் படுப்பது (கவனிக்கவும் தூங்குவது இல்லை) அவர் அருகில் தான் (மற்றவர்கள் தப்பித்து விடுவார்கள்). எங்களால் அதிக கேலி செய்யப்பட்ட நபர் என்றால் அது அவராகத் தான் இருக்கும். எவ்வளவு கேலி செய்தாலும் அதைப் பெரும்பாலும் சிரித்துக் கொண்டே சமாளித்து விடுவார் என்பது வேறு விஷயம். நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு நாள் அவருடைய தந்தையார் தில்லி வந்திருந்த பொழுது அவரைத் திட்டி உடனே மருத்துவரைப் பார்க்கச் சொன்னார். பின்னர் தான் தெரிந்த்து அவருக்கு sinusitis கோளாறு இருப்பது தெரிந்தது. அதற்கு மருந்துகள் எடுத்துக் கொண்டார். ஆனாலும், குறட்டை மட்டும் நிற்கவில்லை. சற்று மாதங்களுக்கு முன் தில்லி வந்திருந்த அந்த நண்பர் இரவு என் வீட்டில் தங்கிய பொழுது அவரிடமிருந்து குறட்டை சத்தமே இல்லை. விசாரித்ததில், அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும் அதன் பின்னர் குறட்டை நின்றுவிட்ட்தாகவும் கூறினார். சில தினங்களுக்கு முன் ஒரு செய்தியில் இந்தியாவில் சுமார் 13 கோடி மக்களுக்கு – அதாவது எட்டு பேரில் ஒருவருக்கு – sinusitis குறைபாடு இருப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இது ஜப்பானிய மொத்த மக்கள் தொகையை விட அதிகம். இது சர்கரை நேய், இதய நோய், ஆஸ்துமா ஆகியவற்றை விட அதிகம். இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு இந்த குறைபாடுகள் தொடர்ந்தால், அது பரம்பரை நோயாகும் அபாயமும் இருக்கிறதாம். மூக்கு, கன்னம், தொண்டைக்குழாய் ஆகிய பகுதிகளின் எலும்புகளில் ஒன்றுக்கொன்றுத் தொடர்புடைய 5 ஜோடி குழிகள் இருக்கின்றன; இவை மூக்குக் குழாயில் இணைக்கப்பட்டுள்ளன. நாம் சுவாசிக்கும் பொழுது sinus என்று அழைக்கப்படும் இக்குழிகளில் பிராணவாயு நிரம்பி வழுவழுப்பான பொருள் உருவாகிறது. இது க்ரீஸ் போல காற்றில் உள்ள தூசிகளை வழுக்கி வெளியேற்ற உதவுகிறது. குளிர்காலத்தில் இது அதிக அளவில் சளியாக மாறி வெளியேறும். சில நேரங்களில் அந்த சளி கெட்டியாகி குழியை அடைத்து விடும். அந்த சளி மேலும் மேலும் சேர்ந்து கெட்டியாகி முகம், கண் ஆகியவற்றில் வீக்கத்தை ஏற்படுத்தும். தூங்கும் போது மூக்கில் அடைப்பு உண்டாகி வாய் வழியாக மூச்சு விடுவதால் குறட்டைச் சத்தம் உண்டாகிறது. இந்தியாவிலேயே பம்பாய் பகுதியில் தான் இந்த குறைபாடு உள்ளவர்கள் அதிகமாம். அந்த நகரின் ஈரப்பத்துடன் சேர்ந்த சுற்றுச்சூழல் மாசு தான் இதற்குக் காரணம் என்று சந்தேகிக்கிறார்கள். சுய மருத்துவம் செய்து சளியை மூக்கிலேயே தங்கவிடாமலிருந்தால் இதை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். உதட்டில் பிளாஸ்திரி ஒட்டினால் குறட்டையை தடுக்க முடியும்; ஆய்வில் தகவல் மனிதர்கள் விடும் குறட்டை குறித்தும், அதை தடுப்பது பற்றியும் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர். சாதாரண மனிதர்களிடமும், நோயாளிகளிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மூச்சு விடுதலில் ஏற்படும் சிரமங்கள் தான் குறட்டையாக வெளி வருகிறது. இந்த பிரச்சினை உள்ளவர் ஒரு இரவில் அதிகபட்சமாக 100 தடவை குறட்டை விட வாய்ப்பு உள்ளது என்றும், ஒவ்வொரு குறட்டையும் 10 வினாடிகள் வரை நீடிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நோயாளிகளை தான் குறட்டை அதிகமாக பாதிக்கிறது என்றும், அவர்களது ஆழ்ந்த தூக்கத்தை இது கெடுக்கிறது என்றும் தெரிய வந்துள்ளது. ஆராய்ச்சியை தொடர்ந்து குறட்டையை தடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். அதன் விளைவாக பிளாஸ்திரி போன்ற புதிய உபகரணம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பிளாஸ்திரியை உதட்டில் ஒட்டிக்கொண்டால் மூச்சு விடுவது சீராகி, குறட்டை விடுவது தடுக்கப்படுகிறது. தூங்கப்போகும் முன்பு, மேல் உதட்டில் இந்த பிளாஸ்திரியை ஒட்டிக்கொள்ள வேண்டும். இடையில் பேசிக்கொண்ட இருந்தாலும், பிளாஸ்திரியால் சிரமம் இருக்காது. இந்த பிளாஸ்திரி இன்னும் சில சோதனைக்கு பிறகு சந்தைக்கு வரவிருக்கிறது. தற்போது இந்த புதிய பிளாஸ்திரி உபகரணம், அமெரிக்காவில் உள்ள மயோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் 125 பேருக்கு பொருத்தி சோதித்து பார்க்கப்பட்டு வருகிறது. ஆரம்ப கட்ட சோதனையிலேயே இந்த பிளாஸ்திரி உபகரணம் நல்ல பலனை அளித்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். முழுமையான பரிசோதனைக்கு பிறகே இந்த உபகரணம் வெளிச் சந்தைக்கு அனுப்பப்பட உள்ளது. Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Math Captcha 82 − 74 = Categories Categories Select Category English (319) Convert to Islam (13) Education (14) Essays (85) Family (11) Hadith (8) Haj (5) History (20) India News (20) Muslim World (34) News (9) Politics (4) QnA (19) Quran (3) Ramadhan (15) Science (7) Society (16) World News (36) Multimedia (6) Audio (2) Video (4) Uncategorized (11) இஸ்லாம் (3,748) ஆய்வுக்கட்டுரைகள் (200) இமாம் கஸ்ஸாலி (ரஹ்) (9) இம்மை மறுமை (110) இஸ்லாத்தை தழுவியோர் (90) கட்டுரைகள் (1,703) குர்ஆனும் விஞ்ஞானமும் (29) குர்ஆன் (190) கேள்வி பதில் (201) சொற்பொழிவுகள் (17) ஜகாத் (44) தொழுகை (150) நூல்கள் (40) நோன்பு (135) வரலாறு (378) ஹஜ் (57) ஹதீஸ் (215) ஹஸீனா அம்மா பக்கங்கள் (19) ‘துஆ’க்கள் (43) ‘ஷிர்க்’ – இணை வைப்பு (118) கட்டுரைகள் (3,082) Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) (154) அப்துர் ரஹ்மான் உமரி (53) அரசியல் (311) உடல் நலம் (446) எச்சரிக்கை! (103) கதைகள் (63) கதையல்ல நிஜம் (108) கல்வி (84) கவிதைகள் (161) குண நலன்கள் (303) சட்டங்கள் (55) சமூக அக்கரை (675) நாட்டு நடப்பு (82) பொது (352) பொருளாதாரம் (27) விஞ்ஞானம் (105) குடும்பம் (1,523) M.A. முஹம்மது அலீ (48) ஆண்-பெண் பாலியல் (83) ஆண்கள் (73) இல்லறம் (485) குழந்தைகள் (183) செய்திகள் (1) பெண்கள் (585) பெற்றோர்-உறவினர் (65) செய்திகள் (328) இந்தியா (142) உலகம் (130) ஒரு வரி (10) கல்வி (32) தமிழ் நாடு (1) முக்கிய நிகழ்வுகள் (13) Archives Archives Select Month December 2021 (2) November 2021 (14) October 2021 (17) September 2021 (8) May 2021 (2) April 2021 (15) March 2021 (17) February 2021 (17) January 2021 (17) December 2020 (20) November 2020 (17) October 2020 (18) September 2020 (20) August 2020 (31) July 2020 (30) June 2020 (21) May 2020 (27) April 2020 (22) March 2020 (30) February 2020 (19) January 2020 (22) December 2019 (25) November 2019 (14) October 2019 (15) September 2019 (16) August 2019 (18) July 2019 (16) June 2019 (15) May 2019 (12) April 2019 (12) March 2019 (17) February 2019 (17) January 2019 (27) December 2018 (35) November 2018 (18) October 2018 (22) September 2018 (31) August 2018 (27) July 2018 (16) June 2018 (12) May 2018 (14) April 2018 (22) March 2018 (29) February 2018 (30) January 2018 (35) December 2017 (23) November 2017 (30) October 2017 (33) September 2017 (28) August 2017 (30) July 2017 (30) June 2017 (19) May 2017 (34) April 2017 (31) March 2017 (35) February 2017 (36) January 2017 (27) December 2016 (59) November 2016 (48) October 2016 (44) September 2016 (41) August 2016 (27) July 2016 (33) June 2016 (42) May 2016 (52) April 2016 (53) March 2016 (37) February 2016 (42) January 2016 (64) December 2015 (47) November 2015 (40) October 2015 (36) September 2015 (65) August 2015 (56) July 2015 (35) June 2015 (42) May 2015 (58) April 2015 (79) March 2015 (40) February 2015 (29) January 2015 (54) December 2014 (79) November 2014 (66) October 2014 (78) September 2014 (67) August 2014 (62) July 2014 (84) June 2014 (82) May 2014 (100) April 2014 (84) March 2014 (92) February 2014 (80) January 2014 (85) December 2013 (69) November 2013 (91) October 2013 (89) September 2013 (68) August 2013 (76) July 2013 (101) June 2013 (84) May 2013 (94) April 2013 (13) March 2013 (84) February 2013 (64) January 2013 (85) December 2012 (93) November 2012 (106) October 2012 (82) September 2012 (92) June 2012 (50) May 2012 (103) April 2012 (145) March 2012 (103) February 2012 (168) January 2012 (44) December 2011 (125) November 2011 (99) October 2011 (112) September 2011 (90) August 2011 (130) July 2011 (150) June 2011 (86) May 2011 (138) April 2011 (30) March 2011 (148) February 2011 (97) January 2011 (61) December 2010 (103) November 2010 (87) October 2010 (129) September 2010 (145) August 2010 (114) July 2010 (70) June 2010 (130) May 2010 (131) April 2010 (116) March 2010 (134) February 2010 (99) January 2010 (154) December 2009 (136) November 2009 (106) October 2009 (61) September 2009 (66) August 2009 (61) July 2009 (55) June 2009 (53) May 2009 (81) April 2009 (43) March 2009 (70) February 2009 (43) January 2009 (64) December 2008 (29) November 2008 (35) October 2008 (31) September 2008 (63) August 2008 (114)
“இந்தியாவில் தலையிடாதே” - பாகிஸ்தான் பிரதமரிடம் காயிதே மில்லத் கண்டிப்பு - Quaid E Millat Mohammad Ismail 126th Birthday Anniversary - Vikatan Save the vikatan web app to Home Screen tap on Add to home screen. X READ IN APP Login செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் விளையாட்டு கிரிக்கெட் கால்பந்து ஐ.பி.எல் ஆன்லைன் தொடர்கள் New My News ராசி காலண்டர் மேலும் மெனுவில் Search Published: 05 Jun 2021 11 AM Updated: 05 Jun 2021 11 AM “இந்தியாவில் தலையிடாதீர்” - பாகிஸ்தான் பிரதமரை ஏன் கண்டித்தார் காயிதே மில்லத்?! BASHEER AHAMED ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் Use App காயிதே மில்லத் - sirQuaid E Millat காயிதே மில்லத் அவர்களின் 126-வது பிறந்தநாள் இன்று... அவரைப்பற்றிய சில முக்கியமான நினைவுகள் இங்கே! உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை என்பது இருதேச எல்லைகளோடு மட்டும் முடிந்து விடவில்லை; உறவுகள், தொடர்புகள் என எல்லாமே பிரிவினையாகிப் போனது. பிரிவினையான இந்த விடுதலைக்குப் பின், அகில இந்திய முஸ்லிம் லீக் பற்றி முடிவு செய்ய அதன் கடைசி கவுன்சில் கூட்டம் 1947 டிசம்பர் 13, 14 தேதிகளில் பாகிஸ்தானின் கராச்சி நகரில் முஹம்மது அலி ஜின்னா (Muhammad Ali Jinnah) தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக காயிதே மில்லத் எம்.முஹம்மது இஸ்மாயில் (Quaid-E-Millath) தமது குழுவோடு அங்கு சென்றார். எதிர்காலத்தில் முஸ்லிம் லீக் குறித்து முடிவு செய்ய இருநாடுகளிலும் உள்ள அதன் தேசிய கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்துகொள்ள வேண்டும் என முடிவெடுத்து அதன் இந்திய கன்வீனராக காயிதே மில்லத் தேர்வு செய்யப்பட்டார். இந்தச் செய்தி இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தாமல் இல்லை. இந்தியா திரும்பியதும் அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால், அந்தக் கோரிக்கை வலுவிழந்து போனதற்கு ஒரு தேசப்பற்று நிகழ்வே காரணம். Quaid E Millath - Liaquat Ali Khan கராச்சியில் இருந்து இந்தியா திரும்பும் காயிதே மில்லத் குழுவிற்கு ஆகஸ்ட் 25, 1947 வியாழன் பகல் விருந்தளித்தார் பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான். விருந்து முடிந்து விடைபெறும் போது பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் காயிதே மில்லத்திடம், ”மிஸ்டர் இஸ்மாயில் சாகிப், நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள்; இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் எங்களுக்கு தகவல் தாருங்கள்; உங்களுக்கு பாகிஸ்தான் பக்க பலமாக வந்து நிற்கும்” என்றார். இந்த வார்த்தையை கேட்டதும், காயிதே மில்லத் கோபமானார். “நவாப் ஜாதா சாகிப் (லியாகத் அலி கானை அப்படித்தான் அழைப்பார்கள்), என்ன வார்த்தையை உச்சரிக்கிறீர்கள்? இப்போது, நீங்கள் வேறு நாட்டவர்கள்... நாங்கள் வேறு நாட்டவர்கள். எங்களுக்கு எதுவென்றாலும் நாங்கள் பார்த்துக் கொள்வோம்; அதில், நீங்கள் ஒருபோதும் தலையிட முயற்சிக்கக் கூடாது. இந்திய முஸ்லிம்களுக்கு நீங்கள் நன்மை செய்ய விரும்பினால் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை இந்துக்களை கண்ணியமாக நடத்துங்கள் அது ஒன்றே போதும்... காயிதே மில்லத் காயிதே மில்லத்தின் இந்தப் பேச்சைக் கேட்டதும், பாகிஸ்தான் பிரதமர் அதிர்ந்து போனார். இந்தியா திரும்பிய காயிதே மில்லத், மார்ச் 10, 1948 அன்று சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் கவுன்சில் கூட்டத்தை நடத்தி அகில இந்திய முஸ்லிம் லீக்கை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்காக நடத்துவது என்று முடிவெடுத்து அறிவித்தார். அதே சமயம் அகில இந்திய முஸ்லிம் லீக் சொத்துக்கள், அதன் அதிகாரப்பூர்வ நாளிதழான 'டான்' (இன்றும் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ நாளிதழ்) ஆகியவற்றின் இந்தியப் பங்காக அறிவித்த தொகையில் ஒரு பைசா கூட பெற்றுக் கொள்வதற்கு மறுத்துவிட்டார். "அது உங்கள் பங்கு நாங்கள் பெற்றுத் தருகிறோம்" என்று அரசின் சார்பில் சொன்னபோது கூட, ”அது அந்நிய நாட்டுப் பணம்; எங்களுக்குத் தேவையில்லை” எனக் கூறி தன் தேசப்பற்றை நிரூபித்தார் காயிதே மில்லத் எம். முஹம்மது இஸ்மாயில். தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism indian union muslim league india history pakistan BASHEER AHAMEDFollow Basheer Ahamed is a Journalist and Social Media Manager who writes Global Affairs and handling the Vikatan Social Platforms. Basheer holds Bachelor in Visual Communication. prior to joining Vikatan, he was working with Thanthi TV.
சிக்கல் மாண்ட்ரீஸர் கையெழுத்துத் தமிழ் பற்றி முக்கியமான கேள்விகளையும் கருத்துக்களையும் எழுப்பி இருக்கிறார். ஆங்கில ஒலியியல் வழியாய்த் தமிழில் தட்டச்சு செய்வது (புதிதாகத் தமிழ் கற்றுக் கொள்பவர்களது) மொழிவளத்தைக் குறைக்குமா? கையெழுத்துத் தமிழே கற்றுக் கொள்வது அவசியந்தானா? தமிழ்நாட்டிலேயே வளரும் இந்தத் தலைமுறையினர் கணினி வழியாகவேனும் தமிழ் கற்றுக் கொள்ளவேண்டும் என்று நினைப்பதா? புதிதாய் எழுதப் பழகுபவர்கள் ஆங்கில ஒலிவடிவத்தின்படி எ-கலப்பை மூலம் எழுதுவது குறையாகவே இருக்கும் என்று தான் எனக்கும் தோன்றுகிறது. அப்படிப் பழகும் போது ஒலிவடிவிலேயே அமைந்திருக்கிற தமிழ் எழுத்துக்களைப் பற்றியும் அவற்றின் சிறப்புப் பற்றியும் அறிவின்றி, மனதில் ஆங்கில எழுத்து வடிவம் மூலமே தமிழைக் காண்கிற முறை பதிந்து போய் மொழிக் கல்விக்கும் மொழி வளத்திற்கும் அது ஊறாகத் தடையாக அமைந்து போகும் என்பது என் கருத்து. எ-கலப்பை கொண்டு அந்த ஆங்கில ஒலியியல் முறையிலேயே நானும் தட்டச்சினாலும், முறையாய் ஆங்கிலத் தட்டச்சுக் கற்றிருப்பதால் திரையில் தமிழ் எழுத்துக்களைப் பார்த்துக் கொண்டே தட்டச்ச முடிகிறது. அதனால் விரல்கள் ஆங்கில விசைப்பலகையைத் தட்டுகின்றன என்று கவனம் சிதறுவதில்லை. கவனத்திலும் பார்வையிலும் தமிழ் எழுத்துக்கள் தான் இருக்கின்றன. (உயர்நிலைப்பள்ளி ஆண்டிறுதியில் ஒருமுறை தட்டச்சு வகுப்பிற்குப் பல மாதங்கள் சென்று வந்ததில் இதுவும் ஒரு பெரும் பயன். வேறு என்ன பயன் என்று கேட்காதீர்கள் 🙂 ). TamilNet99 என்ற விசைப்பலகையை (அதுவும் எ-கலப்பை மூலம் தான்) கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ஓரிரு முறைகள் முயன்று விட்டுப் பிறகு மறந்துவிட்டேன். தொடர்ந்து பயின்றிருந்தால் கற்றுக் கொண்டிருக்க முடியும் என்று தோன்றுகிறது. வேறு யாரேனும் இரு முறைகளும் (அஞ்சல், தமிழ்நெட்99) தெரிந்தவர்கள் இருந்தால் அதன் நிறை குறைகளை அலசினால் பயனுள்ளதாய் இருக்கும். Soc.Culture.Tamil நாட்களில் இருந்தே மதுரை போன்ற அஞ்சலுக்கு முன்னிருந்த முறைகளில் இருந்து ஆங்கில வழியாகவே தட்டச்சிப் பழகியதால் இப்போது மாறப் பெரும் உள்ளெதிர்ப்பு உண்டாகிறது. அதோடு அன்று ஆங்கில எழுத்துக்களிலேயே பார்த்த கண்களுக்கு இப்போது தட்டச்சுகிற நேரத்திலேயே கண் முன் தமிழில் எழுத்துக்கள் வந்து விழுவது பெரிய சுகமாய் இருக்கிறது. * * * * ஒரு காட்டாகக் கணித அறிவை எடுத்துக் கொள்வோம். சிறு வயது முதலே கற்றுக் கொள்வதால் பெரும்பாலான இந்தியர்களுக்குச் சாதாரணக் கூட்டல், கழித்தல் முதலிய கணக்குகள் மிகவும் எளிமையானவை. ஆனால், அதையே அதிகமாகக் கைக்கணினிகள், கணனிகள் கொண்டு கற்றுக் கொள்ளும் மேலை நாட்டவர்கள், சிறு கணக்குகளைச் செய்யவும் தடுமாறுவதைக் காணலாம். சிறு வயதில் தாத்தாவிடம் பெருக்கல் வாய்ப்பாடு ஒப்பிக்க நேர்ந்தது இன்றும் பல முறை கை கொடுக்கிறது. அதே சமயம் இங்கே கடைகளில் வேலை செய்பவர்களுக்குச் சில்லறை எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது கூட அவர்களுடைய கணியியந்திரத்தைப் பார்த்தால் தான் தெரியும். பழக்கப் படுத்தப் படாத மூளை மழுங்கிப் போகும் என்பது போல. இதுபோலவே சரியாகத் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ள ஒரு ஆரம்ப நிலையாளர் கணினி வழியாக இன்றித் தானே எழுதிப் பழக வேண்டும் என்று நினைக்கிறேன். கையெழுத்துத் தமிழே வேண்டுமா என்ற கேள்விக்கும் ‘நிச்சயமாய் வேண்டும்’ என்பது தான் என் பதில். எந்த அறிவும் ஒலி வடிவில் இருப்பது மட்டுமல்லாமல் காட்சி வடிவில் இருப்பதும் அவசியம் என்று தோன்றுகிறது. காட்சி வடிவம் வேறு ஏதோ புலன்களுக்குத் தீனி போடக் கூடும். ஆயிரம் வார்த்தைகளுக்கு ஒரு ஓவியம் சமம் என்று அதனால் தானே சொல்கிறார்கள். கணிதப் பாடங்களையே சும்மா படித்துவிட்டுச் செல்வதை விட ஒரு வெற்றுத் தாளில் கிறுக்கிப் படித்துச் செல்வது நினைவிலிருத்திக் கொள்வதற்குப் பெரிதும் உதவியிருக்கிறது. பிற பாடங்கள் கூட முக்கியமான குறிப்புக்களை எழுதிக் குறித்து வைத்துக் கொள்வது எனக்கு உதவியிருக்கிறது. ஒரு முறை எனது அலுவலக நூலகத்தில் அமர்ந்து சில குறிப்புக்கள் எழுதிக் கொண்டிருந்ததைப் பார்த்த நூலகர், “இங்கே இலவசமாகவே பிரதி எடுத்துக் கொள்ளலாமே” என்று கூறியும், “பரவாயில்லை. நான் கொஞ்சம் எழுதிக் கொள்கிறேன்” என்று நான் குறிப்புக்களை எழுதிக் கொண்டிருந்ததைச் சற்று விநோதமாகப் பார்த்துச் சென்றிருப்பார். ஆனால், எழுதிக் காட்சி வடிவில் பார்க்கின்ற ஒன்றிற்கும், வெறும் ஒலி வடிவில் மட்டுமே கேட்டுக் கொள்வதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. அதனால், கையால் எழுதியும் கற்றுக் கொள்ளப் படும் தமிழ் அதிக மொழிவளத்தையும் புலமையையும் தரும் என்று நான் நம்புகிறேன். அந்த நம்பிக்கையின் காரணமாகவே அமெரிக்கச் சூழலில் வளரும் எனது குழந்தைகளும் தமிழை எழுதவும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ( “அ” -வைத் திருப்பிப் போட்டிருப்பது கூட அழகாகத் தான் இருக்கிறது – எந்த எ-கலப்பையால் இந்த எழுத்தைக் கொண்டு வர முடியும்?) மற்றபடி தமிழகத்திலேயே வளர்கிற இந்தத் தலைமுறையினர் தமிழ் கற்றுக் கொள்வது பற்றி என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. எந்த ஒரு சாக்கும் நியாயமில்லாத ஓன்று என்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது. பகிர்க: Click to share on Facebook (Opens in new window) Click to share on Twitter (Opens in new window) Click to share on WhatsApp (Opens in new window) Click to email this to a friend (Opens in new window) Posted in தமிழ் 9 Responses to “கையெழுத்துத் தமிழ்” on 15 Jan 2005 at 1:01 am1 Kannan //( “அ” -வைத் திருப்பிப் போட்டிருப்பது கூட அழகாகத் தான் இருக்கிறது – எந்த எ-கலப்பையால் இந்த எழுத்தைக் கொண்டு வர முடியும்?)// உள்ளது. “அ” – அருமை! on 15 Jan 2005 at 9:01 pm2 காசி கைப்பட எழுதிப்பழகாமல் மொழி கற்பதா? நினைத்தே பார்க்கமுடியவில்லை. கையால் எழுதும்போது கிடைக்கும் ஞாபகப் பதிவு என்றும் அழியாமல் நமக்குள் இருக்கும். அது இல்லாமல் எப்படி மொழி மனதில் தங்கும் என்று கேள்வியாக இருக்கிறது. on 16 Jan 2005 at 6:01 pm3 செல்வராஜ் காசி உங்களுக்கு எழுந்த கேள்வியே எனக்கும் எழுந்ததன் விளைவு தான் இந்தப் பதிவு. மாண்ட்ரீஸர் சொல்வது போல் எழுத்துக்கு முன் பேச்சு வந்திருக்கும் சாத்தியம் அதிகம் என்றாலும் அது ஆதி கால நிகழ்வு என்று எடுத்துக் கொள்ளலாம். வளர்ந்து விட்ட மொழியில் எழுத்துக்கும் இன்றியமையாத பங்குண்டு. இன்று நிலைத்து நிற்காத மொழிகள் எல்லாம் தமக்கென்று ஒரு எழுத்து வடிவம் இல்லாததாலோ, இருப்பதை ஆங்கிலப் படுத்தியமையாலோ (romanized) தான் அழிவைச் சந்தித்திருக்கின்றன (அ) நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. தமிழர்களும் இதனை மனதில் கொள்ள வேண்டும். மீனா, கண்ணன், உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி. வாய்ப்பாடு ஒப்பித்தது அழியாத ஒரு நினைவு. இதைப் பற்றியே பல இடங்களில் எழுதிவிட்டேன் என்று எண்ணுகிறேன் (உ-ம்: சுனந்தா). நிறைய ஸ- தெரிவது எதாவது எழுத்துருப் பிரச்சினை என்று நினைக்கிறேன். நான் வெளியிடங்களில் பார்வையிடும்போதும் சில சமயம் அப்படித் தெரியும். இயங்குதளத்தில் தமிழ் யூனிகோடு முறையைச் சரியாகச் செய்தால் சரியாகிவிடும் என்று எண்ணுகிறேன். on 15 Jan 2005 at 10:01 am4 Montresor //கணிதப் பாடங்களையே சும்மா படித்துவிட்டுச் செல்வதை விட ஒரு வெற்றுத் தாளில் கிறுக்கிப் படித்துச் செல்வது நினைவிலிருத்திக் கொள்வதற்குப் பெரிதும் உதவியிருக்கிறது.// உண்மை; பள்ளிக் காலங்களில், எழுதிப் பார்ப்பது என்பது நினைவிலிருத்திக்கொள்ள மிகவும் உதவியாயிருந்த ஒரு யுக்தி. முதலில், கையெழுத்து கற்றுக்கொள்ளாமல் வார்த்தைகளே நினைவில் தங்குமா என்று தெரியவில்லை (அப்படியானால் எனக்குத் தெரிந்த வார்த்தைகளனைத்தையும் ஒருமுறையாவது எழுதிப்பார்த்திருக்கிறேனா என்றும் கேட்கத் தோன்றுகிறது). எழுத்துக்குமுன் பேச்சு வந்ததா பேச்சுக்குமுன் எழுத்து வந்ததா என்ற கேள்வி இன்றும் தெளிவுபடுத்தப்படவில்லை. முன்னதற்கே ஆதரவுக்குரல்கள் அதிகமிருப்பினும்,பின்னதும் உண்மையாக இருக்கச் சாத்தியமுள்ளது. on 15 Jan 2005 at 11:01 am5 meena //சிறு வயதில் தாத்தாவிடம் பெருக்கல் வாய்ப்பாடு ஒப்பிக்க நேர்ந்தது இன்றும் பல முறை கை கொடுக்கிறது// நீட்டி முழக்கி ஓ…ரோனொண்ணு….,ஓ…ரெண்டு ரெண்..டு…. இரெண்டு நா…லு மூவிரெண்டா….று கையைக் கட்டிக்கொண்டு.. ராகமெடுத்து ஒப்பிப்பது! on 15 Jan 2005 at 12:01 pm6 meena என்னது புள்ளிகளெல்லாம் ‘ஸ’ வாக மாறி உள்ளது?! ‘அ’ கத்துக் கொள்ளும் எல்லா குழந்தைகளுமே முதன் முதல்ல ‘அ’ எழுதும் போது இப்படித்தான் அழகாக கச்சிதமா தலைகீழா! ‘அ’எழுதுவார்கள் போல்! ‘அ’வைப் பார்க்கும் போது நிவேதிதாவையே பார்ப்பது போல்! க்யூட்டாக! on 16 Jun 2010 at 11:50 am7 ரவி //எ-கலப்பை கொண்டு அந்த ஆங்கில ஒலியியல் முறையிலேயே நானும் தட்டச்சினாலும், முறையாய் ஆங்கிலத் தட்டச்சுக் கற்றிருப்பதால் திரையில் தமிழ் எழுத்துக்களைப் பார்த்துக் கொண்டே தட்டச்ச முடிகிறது. அதனால் விரல்கள் ஆங்கில விசைப்பலகையைத் தட்டுகின்றன என்று கவனம் சிதறுவதில்லை. கவனத்திலும் பார்வையிலும் தமிழ் எழுத்துக்கள் தான் இருக்கின்றன. // ஒரு முறை கண்ணை மூடி வெற்றுத் தாளில் கையால் தமிழில் எழுதுவது போல் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் தட்டச்சும் வரிசை ஆங்கில எழுத்துகள் மனதில் ஓடுகின்றனவா? இல்லை, தமிழ் வடிவ எழுத்துகளா? எனக்கு ஆங்கில எழுத்துகளே வந்தன. உண்மையிலேயே கையால் எழுதும் போது கூட தடையாக இருந்தது. அதன் பிறகே தமிழ்99 க்கு மாறினேன். on 16 Jun 2010 at 10:56 pm8 இரா. செல்வராசு இரவி, நீங்கள் சொல்வது புரிகிறது. சிலருக்கு அவ்வாறு அமையலாம். ஆனால், எனக்கு இந்தச் சிக்கல் சிறிதும் இல்லை. இதோ இப்போது தட்டச்சும் போது கூட, எந்த விசையை அழுத்துகிறோம் என்று கவனிக்க முனைந்தால், தப்பும் தவறுமாக வருகிறது. ஆனால், திரையைப் பார்த்துக் கொண்டே தட்டும்போது தமிழே நினைவிலும் மனதிலும் கரத்திலும் எழுகிறது. அதனால் தான் இந்தப் புள்ளியில் நமது கருத்துக்கள் எதிரெதிராய் அமைந்திருக்கிறது. on 17 Jun 2010 at 12:14 am9 ரவி ஓ.. சரி. எல்லாருக்கும் இந்தச் சிக்கல் வருவதில்லை என்பது செய்தி. எனினும் , கூடுதல் திறன், வேகம், அயர்வின்மை கருதி நேரம் கிடைக்கும் போது தமிழ்99 முயன்று பாருங்கள். முழு வேகம் வர 2 வாரமாவது ஆகும். உங்களைப் போல் நிறைய தமிழில் எழுதுவோருக்குப் பயன்படும். About இரா. செல்வராசு விரிவெளித் தடங்கள் There are 292 Posts and 2,400 Comments so far. அண்மைய இடுகைகள் பூமணியின் வெக்கை வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும் வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis) பொரிம்புப்பெயரும் புறப்பெயரும் குந்தவை நூற்றாண்டுத் தலைவன் அலுக்கம் பின்னூட்டங்கள் அ.பசுபதி on வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis) இலக்குமணன் on குந்தவை ராஜகோபால் அ on குந்தவை இரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை RAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை Ramasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை இரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும் THIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும் கட்டுக்கூறுகள் இணையம் (22) இலக்கியம் (16) கடிதங்கள் (11) கணிநுட்பம் (18) கண்மணிகள் (28) கவிதைகள் (6) கொங்கு (11) சமூகம் (30) சிறுகதை (8) தமிழ் (26) திரைப்படம் (8) பயணங்கள் (54) பொது (61) பொருட்பால் (3) யூனிகோடு (6) வாழ்க்கை (107) வேதிப்பொறியியல் (7) அட்டாலி (பரண்) அட்டாலி (பரண்) Select Month March 2021 (1) September 2020 (1) August 2020 (1) July 2020 (3) August 2019 (1) May 2019 (1) April 2019 (1) March 2019 (1) January 2019 (1) May 2018 (1) January 2018 (2) January 2017 (1) August 2016 (1) July 2016 (1) December 2015 (1) October 2014 (1) October 2013 (1) September 2013 (1) August 2013 (1) January 2013 (4) May 2012 (1) April 2012 (1) January 2012 (8) September 2011 (1) August 2010 (1) June 2010 (2) April 2010 (1) September 2009 (1) August 2009 (3) July 2009 (3) June 2009 (1) January 2009 (2) November 2008 (1) October 2008 (4) September 2008 (2) July 2008 (1) June 2008 (2) April 2008 (2) February 2008 (2) January 2008 (4) December 2007 (1) November 2007 (1) October 2007 (1) September 2007 (1) August 2007 (1) July 2007 (2) June 2007 (3) April 2007 (2) March 2007 (2) February 2007 (2) December 2006 (1) October 2006 (1) September 2006 (3) August 2006 (4) July 2006 (3) June 2006 (6) May 2006 (6) April 2006 (2) March 2006 (3) February 2006 (7) January 2006 (4) December 2005 (6) November 2005 (1) October 2005 (8) September 2005 (4) August 2005 (7) July 2005 (7) June 2005 (14) May 2005 (8) April 2005 (5) March 2005 (5) February 2005 (4) January 2005 (7) December 2004 (7) November 2004 (5) October 2004 (2) September 2004 (1) July 2004 (3) June 2004 (7) May 2004 (8) April 2004 (11) March 2004 (14) February 2004 (9) January 2004 (2) December 2003 (1) November 2003 (12) October 2003 (2) July 1993 (1) June 1993 (6)
ஜெர்மன் ஜனநாயக குடியரசில்(Deutsche Demokratische Republik, சுருக்கமாக: DDR), மேற்கு பெர்லினை சுற்றிக்கட்டப்பட்ட மதில்களுக்கு அப்பால், நாற்பதாண்டுகள் சோஷலிசத்தை கட்டியமைக்கும் பரிசோதனை நடந்து கொண்டிருந்தது. முன்னாள் கம்யூனிச கிழக்கு ஜெர்மனியின் பிரசைகள் சிலர், கடந்த காலம் பற்றி என்ன நினைக்கிறார்கள்? இதனை அறிந்து கொள்ள நெதர்லாந்து நாட்டின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரிக்கும் குழுவொன்று(VPRO), நேரடி சாட்சியங்களை கேட்டு ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளது. பெர்லின் மதில் பற்றிய கேள்விகளுடன் ஆரம்பிக்கும், இந்த விவரண சித்திரத்தில் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கும் பதில்கள் (கம்யூனிச சர்வாதிகார கொடுங்கோன்மை) கிடைக்காதது, அவர்களுக்கு ஏமாற்றத்தை தருகின்றது. இந்தப் படத்தில் மூன்று முக்கிய பிரமுகர்கள் நேர் காணப்பட்டுள்ளனர். 1. முன்னாள் உளவுத்துறை நிறுவனமான "ஸ்டாசி", Ministerium für Staatssicherheit("தேசப்பாதுகாப்பிற்கான அமைச்சு" சுருக்கமாக: Stasi), அதிகாரி Hagen Koch, பெர்லின் மதில் கட்டுவதற்கு திட்டமிடும் பணியை மேற்கொண்டவர். ஜெர்மனி ஒன்றான போது, சோஷலிசத்தை நிராகரித்தவர். 2. "புதிய சோஷலிச மனிதனை" உருவாக்கும் சலனப்படம் ஒன்றை தயாரிக்கும் பணியில் இருந்த திரைப்பட இயக்குனர் Winfried Junge . உலகிலேயே மிகவும் நீளமான ஆவணப்படமான "The Children of Golzow" தயாரித்தவர். இன்றும் சோஷலிச நம்பிக்கை கொண்டவர். 3. Gudrun Klitzke , அந்த ஆவணப்படம் தயாரிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட Golzow நகர பாடசாலையின் முதன்மை மாணவி. நெதர்லாந்து படப்பிடிப்புக் குழுவின் நோக்கம், மனிதாபிமானமற்ற பெர்லின் மதிலின் (மேற்குலகில் "வெட்கத்தின் சின்னம்" என அழைக்கப்பட்டது.) இருண்டபக்கத்தை வெளிக்கொணர்வது என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இரண்டாம் உலகப்போர் முடிந்து, ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு உருவாகி, சுமார் பத்தாண்டுகளுக்கு பின்னர் 1961 ல் தான் பெர்லின் மதில் கட்டப்பட்டது. அதுவரை மேற்கு,கிழக்கு பெர்லின்களுக்கு இடையில் சுதந்திரமான போக்குவரத்து இருந்தது. அதனை, இந்த ஆவணப்படத்தில் குறிப்பிடும் இயக்குனர் Junge, தானே மேற்கு பெர்லின் சென்று வந்ததாகவும், ஆனால் கொள்கைரீதியாக கிழக்கு ஜெர்மனியுடன் ஒத்துப் போனதால் அங்கேயே தங்கி விட்டதாக தெரிவிக்கிறார். மேலும் அமெரிக்க-ஆங்கிலேய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த மேற்கு பெர்லினை, கிழக்கு ஜெர்மனி உரிமை கோரியதாலும், அது நிறைவேறாததால் மதில் சுவர் கட்டும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த வரலாற்று உண்மையை பலர் வசதியாக மறந்து விடுகின்றனர். "கிழக்கு பெர்லினில் பொருட்களின் விலை மலிவாக இருந்ததால், மேற்கு பெர்லின் மக்கள் பெருமளவு வந்து வாங்கிச் சென்றதாகவும், கிழக்கு பெர்லின் பொருளாதாரத்தை காப்பாற்றவே மதில் கட்டப்பட்டதாக", அங்கிருந்த மக்கள் நினைத்துக் கொண்டிருந்ததை பிரதிபலிக்கிறார், இந்த ஆவணப்படத்தில் சாட்சியமளிக்கும் Gudrun. மேற்கு பெர்லின் வழியாக உளவாளிகள் ஊடுருவதை தடுப்பதற்கே மதில் கட்டியதாக, கிழக்கு ஜெர்மன் அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்தது. ஆனால் இது போன்ற மாற்றுக் கருத்துக்களுக்கு, "சுதந்திர மேற்கு ஐரோப்பாவில்" ஒரு போதும் இடம் இருந்ததில்லை. இப்போதும் சரித்திர பாட நூல்களில் இடம்பெற்ற வாசகங்கள்: "கிழக்கு ஜெர்மனியில் மக்களை கொடுமைப்படுத்தும் சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டது. திறந்தவெளிச் சிறைக்குள் அகப்பட்ட மக்கள், சுதந்திரக்காற்றை சுவாசிப்பதற்காக மேற்கு ஜெர்மனி நோக்கி பெருமளவில் வெளியேறினர். அதனை தடுத்து நிறுத்தும் பொருட்டு, பெர்லின் மதில் கட்டப்பட்டது. மீறிச் சென்ற அகதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்." மதிலை கட்டும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட Hagen Koch சாட்சியத்தின் படி, கிழக்கு பெர்லின் நகர மக்கள் வெளியேற மேற்கு-பெர்லின் தீயணைப்புப் படை உதவியுள்ளது. மதில் கட்டப்பட்ட போது, மேற்கு பெர்லின் பகுதிகளில் இடையூறு இருந்தது. காவல் கடமையில் இருந்த கிழக்கு-பெர்லின் வீரர்களை, தப்பியோடும் அகதிகளும், மேற்கு-பெர்லின் காவலர்களும் சுட்டதில், 25 பேரளவில் கொல்லப்பட்டனர். பெர்லின் மதில் நான்கு கட்டங்களாக, பல அடுக்கு பாதுகாப்பு அரண்களுடன் கட்டப்பட்டிருந்தாலும், நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்படவில்லை. அதற்கு காரணம் நெருக்கமான நகரப்பகுதி என்பதால். ஆனால் மேற்கு பெர்லின் நிர்வாகம் தனது பக்கத்தில் கண்ணி வெடிகள் புதைத்து வைத்திருந்தது. இவற்றை சொன்ன அந்த ஸ்டாசி அதிகாரி, தற்போது கம்யூனிசத்தை தவறென்று வாதிடுபவர். அதற்கு அவர் கூறும் காரணம்: "மனிதர்க்கிடையே ஏற்றத்தாழ்வற்ற, வறுமையற்ற, யுத்தமற்ற சமுதாயத்தை உருவாக்குவதென்ற கொள்கை வெறும் கனவு மட்டுமே. நடைமுறையில் சாத்தியமற்றது. பல்வேறு வேறுபாடுகளை இயற்கையாக கொண்ட மனித குலத்தை எப்படி ஒன்றுபடுத்தலாம்?" அதேநேரம், நெதர்லாந்து படப்பிடிப்பாளர்கள் அறிய முயன்ற, "கொடுமைக்கார ஸ்டாசி" பற்றி அந்த முன்னாள் அதிகாரி கருத்து எதுவும் கூற மறுக்கிறார். "அப்போது சர்வாதிகாரம் இருந்தது தான். ஆனால் ஹிட்லரினதைப் போல மோசமாக இருக்கவில்லை. வெளியே தெரியாத அளவிற்கு மிக நுணுக்கமானது. (மேற்குலக நாடுகளிலும் அப்படித்தான், ஐயா) ஸ்டாசியில் வேலை பார்த்தவர்கள், அவரவருக்கு ஒப்படைக்கப்பட்ட பணியை மட்டுமே செய்தனர். மற்றவர் என்ன செய்கிறார் என்று எனக்குத் தெரியாது. அதனால் தான் அந்த அமைப்பு கட்டுக் குலையாமல் இருந்தது." கம்யூனிச கிழக்கு ஜெர்மனியில், போலந்து எல்லைக்கு அருகே அமைந்துள்ளது Golzow என்ற சிறிய நகரம். ஒரு காலத்தில், அயலில் உள்ள கிராமங்களின் விவசாய நிலங்களை எல்லாம் இணைத்து, ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய கூட்டுறவுப்பண்ணை உருவாகியது. செழிப்பான தரை, சிறந்த விவசாய செயல்முறை, இவற்றின் காரணமாக அதிக விளைச்சலையும், லாபத்தையும் கொடுத்த கூட்டுறவுப்பண்ணை, Golzow மக்களை வாழ்க்கை வசதிகை மேம்படுத்தியது. இன்று? அது ஒரு கைவிடப்பட்ட நகரம், பெரும்பாலும் முதியோர்கள் மட்டும் அங்கே தங்கிவிட, இளைஞர்கள் வேலை தேடி வெளியேறுகின்றனர். Golzow மக்கள் ஒரு காலத்தில் தம்மை சீரும் சிறப்புமாக வாழவைத்த சோஷலிச பொருளாதாரம், மீண்டும் வரவேண்டும் என ஆவலோடு காத்திருக்கின்றனர். இங்கேயாவது, எவராவது கம்யூனிச சர்வாதிகாரம் பேச மாட்டார்களா? என எதிர்பார்த்த நெதர்லாந்தின் ஆவணப்பட தயாரிப்பாளருக்கு ஏமாற்றம். என்ன காரணம்? என்ற கேள்விக்கு எதோ ஒரு திருப்தியான பதிலை பெற்றுக் கொள்கிறார். "பலரை அங்கவீனர்களாக்கிய,போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைதியான வாழ்க்கையை தெரிவு செய்தனர்." ஆனால், பேட்டி கொடுக்கும் அந்த சாதாரண விவசாயியே விளக்கமளிக்கிறார்: "எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது. அதிருப்தியாளர்கள் எங்கேயும் இருப்பார்கள்." திரைப்பட தயாரிப்பாளர் Winfried Junge அதனை பிரதிபலிக்கிறார்: "கிழக்கு ஜெர்மனியில் நடந்தது ஒரு சோஷலிச பரிசோதனை என்று வேண்டுமானால் வைத்துக்கொள்வோமே. ஆரம்ப முதலே மேற்கு ஜெர்மனி, சோஷலிச கட்டுமானத்தை உடைப்பதிலேயே குறியாக இருந்தது." Golzow நகர ஆரம்ப பாடசாலையில் ஆறு வயதில் சேரும் குழந்தைகள், அவர்களது மாணவப்பருவம், வகுப்பில் வெளிப்படும் திறமைகள், பிற்காலத்தில் அந்த மாணவர்கள் எந்தெந்த தொழில்களை செய்கின்றனர், இன்னபிறவற்றை பொறுமையாக சுமார் முப்பது ஆண்டு காலம் கடுமையாக உழைத்து, "The Children of Golzow" என்ற சலனப் படமாக தயாரித்திருக்கிறார் Winfred Junge. இந்த ஆவணப்படத்தில் வரும் திறமையான மாணவியான Gudrun இறுதியில் நகரசபை மேயராக தெரிவாகிறார். ஆவணப்படத்தில் முதன்மை பாததிரமான Gudrun னின் கால் நூற்றாண்டு வரலாறு, சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளது. உலகின் நீளமான வரலாற்றை ஆவணப்படுத்திய ஜெர்மன் மொழி பேசும் குறுந்தகடுகளை(DVD) , நீங்கள் இங்கே: Die Kinder von Golzow பெற்றுக் கொள்ளலாம். அன்றைய கிழக்கு ஜெர்மனியின் சாதாரண பிரசைகளின் வாழ்க்கை முறையையும், அவர்களை சுற்றியிருந்த அரசியல் சூழலையும் புரிந்து கொள்ள இந்த ஆவணப்படம் உதவும். "1961-DDR" என்ற பெர்லின் மதில் பற்றிய, (டச்சு மொழி) ஆவணப்படத்தை இங்கேயுள்ள தொடுப்பில் பார்வையிடலாம். பதிந்தவர் : Kalaiyarasan at Tuesday, February 10, 2009 Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: கிழக்கு ஜெர்மனி, பெர்லின், பெர்லின் மதில், ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு Kalaiyarasan DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம். கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை. No comments: Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) Kalaiyagam அதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்: அவுஸ்திரேலிய துன்பத் தமிழ் வானொலியில் சாதிய வன்மம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, ஈழத்து சாதிய வன்கொடுமைகள் பற்றிய தகவல்கள் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் அவுஸ்திரேலியாவில் ப... வலதுசாரி (தமிழ்த்) தேசியவாத அறிவுஜீவிகளின் வர்க்கத் துவேஷம் கிளப் ஹவுசில், ஐரோப்பிய நேரம் கிளப்பில், "JVP பேசும் அரசியல்" என்ற தலைப்பில் கூட்டம் போட்டார்கள். ஐரோப்பிய நேரம் கிளப்பை நடத்துவோர... யார் இந்த ஆரியர்கள்? நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா! - 16 (பதினாறாம் பாகம் ) திராவிட அர... யாழ் வட்டுக்கோட்டையில் சாதிவெறித் தாக்குதல்! செப்டம்பர் 19, இரவு, யாழ். வட்டுக்கோட்டையில் 20 - 30 பேர்களைக் கொண்ட ஒரு வன்முறைக் கும்பல் அப்பாவித் தமிழ் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல... ஈழத்தமிழரை கேவலப்படுத்தும் மே 17 இயக்க அயோக்கியர்கள் மே 17 இயக்கத்தினர், தங்களை எப்போதும் நாம் தமிழர் கட்சியிடம் இருந்து பிரித்துப் பார்ப்பார்கள். தங்களை "நாலும் தெரிந்த அறிவுஜீவிகள்"... யார் இந்த யூதர்கள்? - ஒரு வரலாறு “யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ... துருக்கியில் ஒரு கம்யூனிஸ்ட் மேயர்! துருக்கியில் ஒரு கம்யூனிஸ்ட் மேயர்! துருக்கி கம்யூனிஸ்ட் கட்சியை(TKP) சேர்ந்த Fatih Mehmet Maçoğlu கிழக்கு துருக்கியில் உள்ள துன்செலி (Tun... ஈழ தேச மாயையும் முஸ்லிம் தேசிய இனப் பிரச்சினையும் திருப்பூர் குணா எழுதிய‌ "இஸ்லாமிய‌ தேசிய‌ மாயைக‌ளும் ஈழச் சிக்க‌லும்" நூலில் ப‌ல‌ த‌வ‌றான‌ த‌க‌வ‌ல்க‌ள் உள்ள‌ன‌. சில‌ இட‌ங்க‌ளில் ... சோழர்கள் தமிழர்களா? அல்லது தெலுங்கர்களா? (இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக... கொடுமைக்கார கன்னியாஸ்திரிகளின் துர்நடத்தைகள் தற்போது அறுபது வயதை எட்டியிருக்கும் மூதாட்டியானான பெட்ரா யோரிசன், கத்தோலிக்க திருக்கன்னியர் மடத்தில் கழிந்த தனது இளமைக்கால நினைவுகளை இரைமீட்... கலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு : புதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு: Enter your Email Preview | Powered by FeedBlitz ஆவணக் காப்பகம் ► 2021 (34) ► December (1) ► November (4) ► October (1) ► August (1) ► July (6) ► June (5) ► May (2) ► April (2) ► March (7) ► February (2) ► January (3) ► 2020 (88) ► December (8) ► November (6) ► October (5) ► September (4) ► August (6) ► July (6) ► June (9) ► May (8) ► April (14) ► March (8) ► February (7) ► January (7) ► 2019 (44) ► December (3) ► November (1) ► October (4) ► September (3) ► August (5) ► July (3) ► June (10) ► May (1) ► April (1) ► March (2) ► February (10) ► January (1) ► 2018 (43) ► December (4) ► October (1) ► September (2) ► August (4) ► July (2) ► June (3) ► May (3) ► April (8) ► March (5) ► February (8) ► January (3) ► 2017 (93) ► December (7) ► November (5) ► October (4) ► September (4) ► August (6) ► July (11) ► June (7) ► May (12) ► April (7) ► March (10) ► February (6) ► January (14) ► 2016 (100) ► December (12) ► November (9) ► October (4) ► September (12) ► August (11) ► July (9) ► June (7) ► May (8) ► April (6) ► March (13) ► February (6) ► January (3) ► 2015 (113) ► November (8) ► October (4) ► September (8) ► August (10) ► July (10) ► June (8) ► May (11) ► April (18) ► March (12) ► February (10) ► January (14) ► 2014 (166) ► December (19) ► November (12) ► October (16) ► September (12) ► August (13) ► July (15) ► June (14) ► May (17) ► April (11) ► March (14) ► February (11) ► January (12) ► 2013 (102) ► December (9) ► November (8) ► October (12) ► September (4) ► August (5) ► July (7) ► June (7) ► May (9) ► April (10) ► March (9) ► February (13) ► January (9) ► 2012 (82) ► December (3) ► November (6) ► October (3) ► September (7) ► August (14) ► July (2) ► June (2) ► May (9) ► April (5) ► March (6) ► February (11) ► January (14) ► 2011 (142) ► December (14) ► November (10) ► October (8) ► September (8) ► August (10) ► July (12) ► June (13) ► May (16) ► April (18) ► March (13) ► February (9) ► January (11) ► 2010 (202) ► December (17) ► November (18) ► October (13) ► September (17) ► August (17) ► July (8) ► June (19) ► May (24) ► April (20) ► March (6) ► February (18) ► January (25) ▼ 2009 (275) ► December (36) ► November (37) ► October (33) ► September (21) ► August (5) ► July (12) ► June (15) ► May (12) ► April (21) ► March (27) ▼ February (30) கொலம்பியா: தென் அமெரிக்காவின் வியட்நாம் பாகிஸ்தான்: உலகமயமாக்கப்பட்ட ஜிகாதிகள் தென் அமெரிக்க ஏழைகளின் விடுதலை போராளிகள் FARC FBI யின் உள்ளக இரகசியங்கள் (Video Documentary) ஒரே பார்வையில் நாஸிஸம் & சியோனிஸம் இலங்கையில் சமாதானத்திற்காக ஒரு பாடல் (வீடியோ) இலங்கை அரச பயங்கரவாதம் பற்றிய ஆவணப்படம் மீண்டும் லெனினிடம்? துபாய் என்ற கனவுலகம் கானல்நீராகின்றது அமெரிக்காவின் ஜனநாயக அழிப்புப் போர்கள் இஸ்லாமியத் தாயகக் கனவுகள் குண்டுகள் வைப்பது, காவல்துறை நண்பன் புகலிடத்தில் அகதிகளை வேவு பார்க்கும் அரசுகள் நிலவுக்கு ஒளித்தாலும் பரதேசத்திலும் பயங்கரவாதி உங்களது பெயர் "பயங்கரவாதிகள் பட்டியலில்" இடம்பெற்ற... "நலன்புரி முகாம்": தமிழ் மக்களை தனிமைப்படுத்தும் க... பெல்ஜியம்: ஐரோப்பியச் சிறுபான்மையினர் பிரச்சினை 7/7 லண்டன் குண்டுவெடிப்பு ஒரு உள்வீட்டு சதியா? பயங்கரவாதிகளிடமிருந்து மீட்பதற்கு பரதேசி தேவன் வரு... பொய்களின் மேல் கட்டப்பட்ட பெர்லின் மதில் இஸ்ரேலை நிராகரிக்கும் யூதர்கள் (வீடியோ) ஜிகாதிகளுக்கு ஆதரவளித்த அமெரிக்க அமைச்சர் (வீடியோ ... ஹமாஸ் ஏவுகணை ஏவும் செயல்முறை வீடியோ (Inside Story) சவூதி அரேபியா: வறுமையின் நிறம் பச்சை சுவீடனில் இஸ்ரேலிய தூதுவர் மீது செருப்பு வீச்சு (வ... சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும் சர்வதேசம் காலை வாரிய தமிழீழ தேசியம் ஸ்டாலினால் வாக்களிக்கப்பட்ட யூத தாயகம் மனிதாபிமான நெருக்கடிக்குள் மக்களும் ஊடகங்களும் ஈரானை தாக்குவதற்கு இஸ்ரேல் திட்டம்? ► January (26) ► 2008 (111) ► December (14) ► November (21) ► October (21) ► September (15) ► August (13) ► July (1) ► June (2) ► May (7) ► April (9) ► March (6) ► February (2) Facebook Badge Kalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx Create your badge முகநூல் நட்பு வட்டத்தில் Kalaiyarasan Kalai Create Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன். Follow me in Twitter Follow @kalaiy வாசகர் வட்டம் செயலகம் Kalaiyarasan DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம். கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை. View my complete profile படைப்புகளின் பட்டியல் இதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு Translate வருகைப் பதிவேடு online stats Total Pageviews காணாத காட்சிகளும் கேளாத செய்திகளும் அதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள் எங்கிருந்தோ வருகிறார்கள் Feedjit Live Blog Stats எனது நூல் அறிமுகம்: "வட கொரியா தெரியாத மறுபக்கம்" வெளியீடு: கீழடி, 562, முகாம்பிகை நகர், கன்னட பாளையம், திருநின்றவூர் - 602 024 தொலைபேசி: 9176250075 எனது நூல் அறிமுகம்: நாம் கருப்பர் நமது மொழி தமிழ் நம் தாயகம் ஆப்பிரிக்கா கிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 இந்தியா தொலைபேசி: (+91)44 28412367 எனது நூல் அறிமுகம்: "காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்" Karuppu Pradhigal, B55, Pappu Mastan Darga, Loyds Road, Chennai - 600005, INDIA Tel.: 9444272500 e-mail: karuppupradhigal@gmail.com எனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா? Address: Vadaly, 35 Long Meadow Rd, Brampton, ONL6P 2B1, கனடா (CANADA) Telephone: +1 – 416 726 5239 இணையத்தில் வாங்கலாம்: வடலி பதிப்பகம் எனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா கிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 இந்தியா தொலைபேசி: (+91)44 28412367 எனது நூல் அறிமுகம்: "அகதி வாழ்க்கை" https://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும். எனது நூல் அறிமுகம்: "ஈராக் - வரலாறும் அரசியலும்" கிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367
Sorry, you have Javascript Disabled! To see this page as it is meant to appear, please enable your Javascript! See instructions here Saturday, Dec 4, 2021 முகப்பு படைப்புகள் கவிதைகள் சிறுகதைகள் கட்டுரைகள் குறுங்கதைகள் குறுநாவல்கள் நாவல் பகுதி தொடர்கள் மொழிபெயர்ப்புகள் கவிதைகள் சிறுகதைகள் கட்டுரைகள் குறுங்கதைகள் நேர்காணல்கள் சிறப்பிதழ்கள் ஜப்பானியச் சிறப்பிதழ் தி.ஜா சிறப்பிதழ் சிறப்பிதழ் 1 சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ் அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழ் நகுலன் நூற்றாண்டுச் சிறப்பிதழ் மேலும் சிறார் இலக்கியம் கதைகள் கலைகள் புகைப்படங்கள் ஓவியங்கள் நூல் விமர்சனம் கடித இலக்கியம் பெட்டகம் கடந்த இதழ்கள் ஆசிரியர் பக்கம் சமகால இலக்கிய முகங்கள் முகப்பு படைப்புகள் கவிதைகள் சிறுகதைகள் கட்டுரைகள் குறுங்கதைகள் குறுநாவல்கள் நாவல் பகுதி தொடர்கள் மொழிபெயர்ப்புகள் கவிதைகள் சிறுகதைகள் கட்டுரைகள் குறுங்கதைகள் நேர்காணல்கள் சிறப்பிதழ்கள் ஜப்பானியச் சிறப்பிதழ் தி.ஜா சிறப்பிதழ் சிறப்பிதழ் 1 சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ் அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழ் நகுலன் நூற்றாண்டுச் சிறப்பிதழ் மேலும் சிறார் இலக்கியம் கதைகள் கலைகள் புகைப்படங்கள் ஓவியங்கள் நூல் விமர்சனம் கடித இலக்கியம் பெட்டகம் கடந்த இதழ்கள் ஆசிரியர் பக்கம் சமகால இலக்கிய முகங்கள் முகப்பு படைப்புகள் கவிதைகள் சிறுகதைகள் கட்டுரைகள் குறுங்கதைகள் குறுநாவல்கள் நாவல் பகுதி தொடர்கள் மொழிபெயர்ப்புகள் கவிதைகள் சிறுகதைகள் கட்டுரைகள் குறுங்கதைகள் நேர்காணல்கள் சிறப்பிதழ்கள் ஜப்பானியச் சிறப்பிதழ் தி.ஜா சிறப்பிதழ் சிறப்பிதழ் 1 சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ் அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழ் நகுலன் நூற்றாண்டுச் சிறப்பிதழ் மேலும் சிறார் இலக்கியம் கதைகள் கலைகள் புகைப்படங்கள் ஓவியங்கள் நூல் விமர்சனம் கடித இலக்கியம் பெட்டகம் கடந்த இதழ்கள் ஆசிரியர் பக்கம் சமகால இலக்கிய முகங்கள் HomePosts Tagged "கவிதைகள்" கவிதைகள், படைப்புகள் எலுமிச்சங்கனியின் சுயசரிதையிலிருந்து சில குறிப்புகள். 1. சதுர வடிவப் பானையாய் மெல்ல அசைந்துகொண்டிருந்தது வீடு. கையறு பாடல்களின் புளிப்பு ஊறிப் பெருகி பழங்கஞ்சியாயிருந்தது. சோற்றுப் பருக்கைகளைப்போல குழந்தைகள் நீந்திக் களித்தனர். வெளுத்தத் துணிகளின்மேல் எச்சமிடும் காகங்கள் மீன் செவுள்களையும் கோழிக் குடலையும் பானையின் தூரில் மறைத்துச் சென்றன. மரத்தடி தெய்வங்கள் கனிந்தனுப்பிய எலுமிச்சம் by ராஜன் ஆத்தியப்பன் November 08 1 கவிதைகள், படைப்புகள் ந.பெரியசாமி கவிதைகள் பூனை விந்தி நடக்கிறது பூனை தவறுதலாக கால் ஒன்றை குறைச்சலாக்கி வரைந்துவிட்டேன். எங்களுக்குள் இயல்பாகியது அது முறைப்பதும் நான் மன்னிப்பு கேட்பதும். விரையும் வேறு பூனை பார்க்க அதன் கண்கள் நெருப்பாகிடும் அப்பொழுது கிண்ணத்தில் பாலை நிரப்பி அமைதி காத்திடுவேன். இன்று மறக்காமல் வரைபடத் தாள்களையும் எழுது by ந.பெரியசாமி November 08 1 கவிதைகள், படைப்புகள் நிலாகண்ணன் கவிதைகள் அவளொரு வயலினிஸ்ட் பெண்மையின் பொருள்படும் நிழலும் அன்பு திரண்ட கனியுமாக தன்னை மூடிக்கொள்ளாத அம்மரம் எப்போதும் திறந்திருந்தது கன்னி மரியாவைப் போல அவளுடைய கண்களின் ஆழத்தில் எப்போதும் இரக்கத்தின் சொல் by நிலாகண்ணன் November 08 3 கவிதைகள், படைப்புகள் தூய வெண்மையின் பொருளின்மை இலைகளற்றக் கிளைகளில் விளையாட யாருமற்ற கிரணங்கள், நிறங்களைத் துறந்து தியானித்து உக்கிர வெண்மையை ஓலமிடுகின்றன நிறங்களின் வெறுமையில் நிறையும் வெண்மையில் திசையெங்கும் பிரதிபலித்து மீண்டு வந்து சேரும் மேலும் சிறிதளவு வெண்மை. தனிமையின் விடமேறி நீலம்பாரித்து நிற்கும் வானம் மேகங்கள் அற்று மேலும் வெறுமை கூட நீலம் அடர்கிறது.. பனி பூத்து பனி by காஸ்மிக் தூசி November 08 0 கவிதைகள், படைப்புகள் தினகரன் கவிதைகள் 1. பரபரப்பு மிகுந்த இந்த வாழ்வில் ஏதோவொரு சாலையின் ஓரத்தில் காத்திருக்கிறான் கல்யாணசுந்தரம் சிக்னலின்/ வாழ்வின் பச்சை விளக்கிற்காக. அது விழுவதாயில்லை மாறாக, சட்டைப் பாக்கெட்டிற்கு சற்று மேலே விழுகிறது ஒரு பறவையின் எச்சம் எப்படியோ, பறவைக்குத் தெரிந்திருக்கிறது விரிசலடைந்த இடங்களை! 2. தற்கொலைக்குத் துணிந்தவனின் ஒரு சாயங்காலப் பொழுது: வெகுநேரமாக் கவிழ்ந்து படுத்தபடியே இருக்கிறேன் உடலுக்குள் by தினகரன் November 08 1 கவிதைகள், படைப்புகள் தேவதேவன் கவிதைகள். அமைதியான அந்தக் காலைநடையில் அவர் சென்றுகொண்டிருந்தார் எல்லாம் முடிந்துவிட்டது. இனி செய்வதற்கு ஏதுமில்லை என்பதுபோல்! இதுதான் இதுதான் அந்தச்செயல் என்பதுபோல்! மிகச்சரியான பாதை ஒன்றைத் தேர்ந்தெடுத்துவிட்டவர்போல்! அந்தக் காலையையும் அந்தப் பாதையையுமே தாண்டி அந்த நடைமட்டுமே ஆகிவிட்டவர்போல்! இவைபோலும் எந்தச் சொற்களாலுமே தீண்ட முடியாதவர்போல்! எங்கிருந்து வருகின்றன எங்கிருந்து by தேவதேவன் June 22 2 கவிதைகள் வாராணசி கவிதைகள் காலம் இங்கே காலம் மூன்றல்ல; ஒன்றே ஒன்று காலங்களுக்கு அப்பாலான காலம் இங்கே இன்று பிறந்த இன்றும் நாளை பிறக்கும் நாளையும் பிறந்ததுமே இறந்த காலத்துக்குள் ஒடுங்குகின்றன இங்கே அன்றாடம் உதிக்கும் சூரியன் முதன்முதல் உதித்ததுபோலவே உதிக்கிறது முதன்முதல் மறைந்ததுபோலவே மறைகிறது இங்கே காற்றில் எம்பும் புழுதிச்சுழலில் யுகங்களுக்கு by சுகுமாரன் July 15 2 கவிதைகள் கம்மா > மடைகள் > வாமடை கம்மா காய்ந்த தென்னம்பாளைப் பிளவுக்குள் தனித்தனி மழைகள் சேர்ந்து தேங்கியது படகினுள் மிதக்கும் சமுத்திரமென தெரிந்தது. தளும்பும் சமுத்திரக் குட்டியென்று எனது கையின் பதினோறாவது குறுவிரல் வியப்பானது. பாளையை மாதிரியாக வைத்து சந்ததித் தொடர்ச்சியாய் வெட்டாத நகங்களால் சமுத்திரத்தின் குட்டியான கம்மாவைத் தோண்டினேன். கருவாச்சி மடை கொடியறுக்காத by முத்துராசா குமார் July 15 1 கவிதைகள் வே.நி.சூர்யா கவிதைகள் 1.மாபெரும் அஸ்தமனம் அந்திவானில் மகத்தான ரத்தத்துளி அதன் ஒளிப்பரிவாரங்களோடு அஸ்தமனமாகிக் கொண்டிருக்கிறது அனிச்சையாக என்னை நான் தொட்டுப்பார்க்கிறேன் ஆ! காற்றை தீண்டுவது போல அல்லவா உள்ளது தொடுகையுமில்லை தொடப்படுவதுமில்லை வேறெதுவோ நான்.. ஒரு வீட்டில் வசிப்பவனை மாதிரி எனக்குள் by வே.நி.சூர்யா January 27 3 மொழிபெயர்ப்புக் கவிதை தினா நாத் நதிம் கவிதைகள் 1. உடைந்த கண்ணாடி ஒன்று உதவாப் பொருளாய் வீசப்பட்டது ஒரு மாடு அதை உற்றுப் பார்த்தது நாய் ஒன்று வந்து அதன் மீது மூச்சுவிட்டது மனநிலை பிறழ்ந்த ஒருத்தி அக்கண்ணாடியை எடுத்து அவளின் கந்தலாடையில் சுற்றிக்கொண்டாள் அதற்குப் பிறகு யாருக்கும் தெரியாது அந்தக் கண்ணாடிக்கு என்ன நேர்ந்ததென்று 2. ஒரு by கனலி January 27 3 Posts navigation 1 2 Next 1 2 “கனலி” ஒரு கலை இலக்கிய இணையதளமாகும். மாதாந்திர இணைய இதழாக கலை இலக்கியப் படைப்புகளை வெளியிடும். மொழிபெயர்ப்புகளின் முக்கியத்துவம் கருதி தொடர்ந்து நல்ல மொழிபெயர்ப்பு படைப்புகளும் வெளியிடப்படும். படைப்புகளைத் தேட கனலியை பின்தொடர.. கனலி வெப் டிவி https://www.youtube.com/watch?v=6eYAAfBr6cM சமீபத்திய கருத்துக்கள் Selvam kumar on நிலாகண்ணன் கவிதைகள் விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன் | எழுத்தாளர் ஜெயமோகன் on நித்தியமானவன் Selvam kumar on எலுமிச்சங்கனியின் சுயசரிதையிலிருந்து சில குறிப்புகள். குறிப்புகள் பொறுப்பாகாமை தொடர்புக்கு கனலி குறித்து படைப்புகள் அனுப்ப தங்களின் படைப்புகளையும் விமர்சனங்களையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். படைப்புகள் சொந்தப் படைப்பாகவும் புதிய படைப்பாகவும் இருத்தல் அவசியம். ஏற்கனவே வேறு இணையத்தளத்தில், அச்சு இதழ்களில், நூல்களில் பிரசுரமான படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
[[படிமம்:Cross2.svg|thumb|150px|A ''கிரேக்க சிலுவை'' (எல்ல பாதங்களும் சமனாகும்) , கீழ் 45°ஆல் திருப்பபட்ட கிரேக்க சிலுவை]]
ஷாம்லாஜியிலிருந்து புறப்பட்ட நாங்கள் அடுத்ததாக நிறுத்திய இடம் நெடுஞ்சாலையில் இருந்த [G]கிரிராஜ் உணவகத்தில் தான். நல்ல பசி என்பதால் உள்ளே நுழைந்து கேட்ட முதல் கேள்வியே உடனடியாக சாப்பிட என்ன கிடைக்கும் என்பது தான். அதற்கு கிடைத்த பதில் – எல்லாமே கிடைக்கும் – ஆனால் பதினைந்து இருபது நிமிடம் ஆகும்! நல்ல பதில்! வேறு வழியில்லை காத்திருக்கத் தான் வேண்டும்..... உணவகத்தினை நிர்வகிப்பது ஒரு கணவன் – மனைவி. இருவரும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது உணவகத்தினை அழகு படுத்தியிருக்கிறார்கள். சுவர் எங்கும் துவாரகாநாதனின் படங்கள், இயற்கைக் காட்சிகள் என பல ஓவியங்கள் அழகழகாய் மாட்டி வைத்திருந்தார்கள். அவர்களிடம் அனுமதி கேட்டு படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைத்தபடியே ஓவியங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எங்களைப் போலவே வேறு ஒரு குடும்பத்தினரும் அங்கே காத்துக்கொண்டிருந்தார்கள். ஒரு இளைஞர், அவர் மனைவி, சிறு குழந்தை மற்றும் இளைஞரின் அப்பா-அம்மா ஆகியோர் தான். அவர்கள் எங்களுக்கு முன்னரே வந்துவிட்ட படியால் அவர்கள் கேட்டிருந்த உணவு சுடச்சுட வந்து சேர்ந்தது. பெரியவர் ஒவ்வொன்றையும் ரசித்து ருசித்து சாப்பிட்டு அதற்கான கருத்துகளையும் சொல்லிக் கொண்டிருந்தார். பிடிக்காத சிலவற்றை ஒதுக்கி, பிடித்தவற்றை சாப்பிட்டு அதுவும் மீதமாக, உணவகம் வைத்திருந்த பெண்மணியை அழைத்து அதை வீட்டுக்கு எடுத்துப் போக தனியாக கட்டிக் கொடுக்கவும் சொன்னார். பெரியவரின் மனைவி, “அதெல்லாம் வேண்டாங்க!” என்று சொல்ல, பெரியவரோ விடாப்பிடியாக “அவ கிடக்கா! நீ கட்டிக் கொண்டாம்மா!” என்று அடுத்த உணவை ருசிக்க ஆரம்பித்தார். அதற்குள் எங்களுக்கான உணவும் வந்து சேர்ந்தது. நாங்கள் கேட்டிருந்த சப்பாத்தி, பராந்தா, ஆலு-சிம்லா மிர்ச் சப்ஜி, சற்றே இனிப்பான [dh]தால், ராய்த்தா, குஜராத்தி பாப்பட்[d] [அப்பளம்], ஊறுகாய் என அனைத்தும் மிகவும் ருசியாக இருந்தது. வீட்டு உணவு சாப்பிடும் உணர்வு தான் எங்களுக்கு! ஓட்டல் நடத்தும் தம்பதியே முன்னின்று சமையல் வேலைகளைப் பார்வையிட்டு தயாரிக்கிறார்கள் என்பதால் தரத்திலும் குறைவில்லை. இருந்த பசிக்கு, ருசியும் கைகொடுக்கவே கிடுகிடுவென சப்பாத்திகள், பராந்தாக்களும் உள்ளே விரைவாக இறங்கிக் கொண்டிருந்தன. நாங்கள் இங்கே வாய்க்கும் கைக்கும் சண்டை போட்டுக் கொண்டிருக்க, பெரியவர் அங்கே தனது விளையாட்டுகளை தொடர்ந்து கொண்டிருந்தார். சாப்பிட்டு முடித்ததும் ஐஸ்க்ரீம் சாப்பிட்டே ஆக வேண்டும் என குழந்தை போல அவர் அடம் பிடிக்க, ”பயணத்தின் போது வேண்டாம், ஒத்துக்காது” என அவரது மனைவி, மகன், மருமகள் என அனைவரும் எடுத்துச் சொல்ல, ”வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் – உடம்புக்கு ஒத்துக்காது என எல்லாத்தையும் தள்ளிக் கொண்டே இருந்து என்ன செய்யப் போகிறேன்! – நீங்க என்ன சொல்றீங்க?” என உணவகத்தின் உரிமையாளரையும் தனது கட்சிக்கு இழுத்துக் கொண்டிருந்தார். ஜெயித்தது பெரியவர் தான்! உணவினை ரசித்து ருசித்து நாங்கள் சாப்பிட்ட பிறகு, எங்களுக்கான உணவிற்கு ரசீது கொண்டு வந்தார் அந்தப் பெண்மணி. “சாப்பாடு பிடித்திருந்ததா? ஏதேனும் குறை உண்டா?” என்று அன்பான விசாரிப்பு அவரிடமிருந்து. வீட்டில் சாப்பிட்ட உணர்வு எங்களுக்கு என்று அவரைப் பாராட்டினோம். கணவன் – மனைவி இருவருமே தங்கள் வேலைகளை விட்டு, இப்படி உணவகம் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்களாம். அவர்கள் மேலும் சிறந்த நிலைக்கு வர வாழ்த்தினோம். அப்படியே ஓவியங்களையும் படம் எடுத்துக் கொள்ள அனுமதி கேட்டேன் [பதிவுக்கு புகைப்படம் தேவையாயிற்றே! வலைப்பதிவர் காரியத்தில் கண்ணா இருக்கணும்!] நானகு பேர் சாப்பிட்டதற்கான செலவும் அதிகமில்லை. ஆளுக்கு நூறு ரூபாய்க்குள் தான்! பல சமயங்களில் உணவுக்காகவே செலவு அதிகம் செய்ய வேண்டியிருக்கும். அத்தனை செலவு செய்தும் நன்கு சாப்பிட்ட திருப்தி இருக்காது. ஏதோ தானோ எனச் சமைத்து பரிமாறிய உணவும் ஏனோ தானோ என்று தானே இருக்கும்! இந்த உணவகத்தில் வீட்டில் சாப்பிட்ட உணர்வு – கூடவே அவ்வப்போது நம்மிடம் வந்து இன்னும் ஏதேனும் வேண்டுமா என்று பாசத்தோடு கேட்கக் கூடியவரும் இருந்துவிட்டால் நன்றாகத் தானே இருக்கும்! நண்பர் வீட்டில் இருந்த கார்வண்ணன்.... நாங்களும் சாப்பிட்டு ஓட்டுனர் [ch]சிராக்-உம் சாப்பிட்டு முடித்த பிறகு எங்கள் பயணம் தொடர்ந்தது. சாலைகள் நன்றாக இருந்தால் பயணம் இனிக்கும் என்றாலும், பயணம் இலக்கை அடையத்தானே வேண்டும். அஹமதாபாத் நகருக்கு வந்து சேர்ந்து நேராக நண்பரின் வீட்டுக்கு போய்ச் சேர்ந்தோம். நண்பர் அலுவகத்திலிருந்து வந்து சேர்ந்த பிறகு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அதன் பிறகு அவருடன் நகர் வலம் செல்ல வேண்டும். நகரில் என்ன பார்த்தோம், வேறு என்ன செய்தோம் என்ற விவரங்களை அடுத்த பகுதியில் சொல்லட்டா! நாளை வேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை.... நட்புடன் வெங்கட் புது தில்லி. Posted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 46 கருத்துக்கள் Labels: அனுபவம், சமையல், பஞ்ச் துவாரகா, பயணம், புகைப்படங்கள், பொது ஞாயிறு, 29 நவம்பர், 2015 மாலினி அவஸ்தி – கிராமியப் பாடலும் நடனமும் சமீபத்தில் திருமதி மாலினி அவஸ்தி அவர்களின் நாட்டுப்புற பாடல்கள் நிகழ்ச்சியை நேரடியாகக் கேட்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உத்திரப் பிரதேசத்தின் தலைநகர் லக்னோவைச் சேர்ந்தவர் மாலினி. அவத்[dh] எனும் மொழியில் பல பாடல்களை பாடிக்கொண்டே ஆடுவார். அவத்[dh] மொழியும் ஹிந்தி மொழி போலவே இருந்தாலும், சற்றே வித்தியாசங்கள் உண்டு. போலவே [b]புண்டேல்கண்ட், [b]போஜ்புரி போன்ற மொழிகளிலும் பாடக்கூடியவர். தும்ரி, கஜ்ரி என விதம் விதமான பாடல்களால் கேட்பவர்கள் அனைவரையும் மகிழச் செய்யும் வித்தை தெரிந்தவர். பாடுவது மட்டுமன்றி பாடியபடியே சின்னச்சின்னதாய் சில நடன நடைகளும் உண்டு. நமது கிராமியப் பாடல்களைப் போலவே வடக்கில் பல கிராமியப் பாடல்கள் அழிந்து வருகிறது. கிராமியப் பாடல்கள் பலவற்றில் ஆங்காங்கே விரசம் இருந்தாலும், கேட்பவர்கள் வெட்கப்படும் அளவிற்கு இருக்காது. இன்றைக்கும் வட இந்தியாவின் சில கிராமங்களில் பாடப்பட்டு வந்தாலும், பலர் அதற்கு வேறு ஒரு வண்ணம் கொடுத்து மிட்நைட் மசாலாவைப் போல ஆக்கிவிட்டார்கள். கஜ்ரி எனும் வகைப்பாடல்கள் மழைக்காலங்களில் பாடப்படும் பாடல். கருமேகம் சூழ்ந்து வரும்போதே கிராமங்களில் இருக்கும் ஆண்களும் பெண்களும் மாஞ்சோலைகளுக்கு ஓடுவார்களாம். மழை பெய்ய ஆரம்பிக்கும் போது ஆடலும் பாடலும் என சந்தோஷமாக இருப்பார்களாம். இன்றைக்கு கிராமிய வாழ்க்கையை விட்டு நகரங்களின் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வாழும் நாமும் மழை வந்தால் ஓடுகிறோம், பலகணியில் உலர்த்தியிருக்கும் துணிகளை எடுப்பதற்கும், கதவுகளையும் ஜன்னல்களையும் மூடுவதற்கும்! ஒரு கஜ்ரி பாடலைக் கேட்கலாமா? பணி நிமித்தம் வெளியூருக்கோ, வெளி நாட்டுக்கோ சென்று விட்ட தனது கணவனைப் பற்றி பாடும் பாடல், அவர் எப்படி ரயில் [g]காடியில் ஏறிப் புறப்பட்டார் என்றெல்லாம் சொல்லி, ரயில் [g]காடி என்று திரும்பி வரும், தனது ஆசைக்கணவனை மீண்டும் அதில் அழைத்து வரும் என்றெல்லாம் ஏக்கத்துடன் படும் பாடல் பற்றி பாடும் போது அங்கு வந்திருக்கும் குழந்தைகளை அழைத்து ரயில் வண்டியைப் போலவே அங்கு ஓடிக்கொண்டே பாட்டு பாடி அனைவரையும் மகிழ்விக்கும் திறமை அவருக்கு இருக்கிறது. ரயிலில் புறப்பட்டுப் போன ஆசைக் கணவனைப் பற்றிய பாடல் கேட்கலாம் வாங்க! தசரத மஹாராஜாவின் அரண்மனை – ராமர் ஜனனம் நடக்கிறது. அந்த சமயத்தில் பிரசவத்திற்கு உதவி செய்ய வந்த தாதி தனக்கு என்ன வேண்டும் எனக் கேட்பதாக ஒரு பாடல் பாடினார் – மன்னனிடம் தைரியமாக தனக்கு என்ன வேண்டும் என்று கேட்க அந்தக் காலத்தில் உரிமை இருந்திருக்கிறது – இந்தக் காலத்தில் எப்படி இருக்கிறது என்பதை நான் சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன! ராமரின் ஜனனம் பற்றிய பாடல் கேட்கலாம் வாருங்கள்! [ch]ச்சட் பூஜா சமயத்தில் பாடப்படும் பாடல்கள் பல உண்டு. அதிலிருந்தும் ஒரு பாடல் பாடினார். இப்படி பல பாடல்களைக் கேட்டு ரசிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு மணி நேரத்திற்கு மேல் பல கிராமிய பாடல்களின் இசை மழையில் நனைந்து வந்தோம். அந்த நேரத்தில் எடுத்த சில படங்களை இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். பாடல் காட்சிகளும் யூட்யூபிலிருந்து உங்களுக்காகவே சேர்த்திருக்கிறேன். ச்சட் பூஜா பாடல் ஒன்று இதோ உங்களுக்காக! பாடலின் மொழி உங்களுக்குப் புரியவில்லை என்றாலும், கேட்டு ரசிக்க முடியும். ஹிந்தி மொழி தெரிந்திருந்தால் இன்னும் அதிகமாய் ரசிக்க முடியும்! இன்றைக்கு பகிர்ந்து கொண்டிருக்கும் படங்களையும் பாடல்களையும் ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். மீண்டும் நாளை வேறு ஒரு பதிவுடன் சந்திக்கும் வரை.... நட்புடன் வெங்கட். புது தில்லி. Posted by வெங்கட் நாகராஜ் at 8:45:00 முற்பகல் 36 கருத்துக்கள் Labels: அனுபவம், இசை, தில்லி, நடனம், புகைப்படங்கள், பொது சனி, 28 நவம்பர், 2015 நடுத் தெருவில் ஒரு ஃபோட்டோ ஷூட்! சாலைக்காட்சிகள் என்ற தலைப்புடன் சில பதிவுகள் எழுதி இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்! இத்தலைப்பில் பதிவுகள் எழுதி சில நாட்கள் ஆகிவிட்டன. கடைசியாக எழுதியது - ஓஹோ ஹோ கிக்கு ஏறுதே! எனும் பதிவு தான். இந்த இடைவெளியில் எத்தனையோ காட்சிகளைப் பார்த்திருந்தாலும், பகிர நினைத்தாலும் எழுதும் சந்தர்ப்பம் அமையவில்லை. இப்போது சில காட்சிகளைத் தொகுத்து உங்களுடன் பகிர்ந்து கொளும் வாய்ப்பு! காட்சி-1: நேற்று இரவு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியபோது மணி 08.30. உள்ளே நுழைந்து முதல் வேலையாக சமையல் – சிம்லா மிர்ச் சாதம் தான் மெனு! செய்து, சுடச்சுட சாப்பிட்டு ஒரு நடை நடக்க, கீழே இறங்கினேன். வீட்டின் அருகே ஒரு கல்யாணம் – [B]பராத் எனும் மாப்பிள்ளை ஊர்வலம் அப்போது தான் புறப்பட்டு போயிருந்தது. பின்னால் சிலர் வாகனங்களில் செல்ல தயாராகிக் கொண்டிருந்தார்கள். இங்கே ஒரு விஷயமும் சொல்லி ஆக வேண்டும் – தில்லியில் குளிர் ஆரம்பித்து விட்டது. கடும் குளிராக இருந்தாலும், திருமணத்திற்கு வரும் அனைத்து பெண்களும் ஜிகு ஜிகு ஜிகினா உடைகள் அணிந்து சால்வையை பெயருக்கு தொங்க விட்டுக் கொண்டு வருவார்கள் – ஆண்கள் கோட்-சூட்-பூட் என இருக்க, இப்பெண்களுக்கு குளிரே தெரியாது போலும். கூடவே ஆண் பெண் வித்தியாசம் இல்லாது நாத்த மருந்தை [Scent] நன்றாக அடித்துக் கொண்டிருப்பார்கள் – 10 மீட்டர் தொலைவு வரை அந்த வாசம் வரும்! ஜனவரி மாதம் வரை தினம் தினமும் கல்யாணம் தான்! எனக்கு கூட இரண்டு கல்யாண விழாவிற்கு அழைப்பிதழ் வந்திருக்கு – ராத்திரி ஒன்பது மணிக்கு [b]பராத்! போனா, வீடு திரும்ப இரவு பன்னிரெண்டு அல்லது ஒரு மணி ஆகலாம்.... போகணுமா வேண்டாமான்னு யோசனை! படம்: இணையத்திலிருந்து..... அந்தக் குடும்பத்தினருக்கு வருவோம்! – கும்மிருட்டான ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். வாகனத்திற்கு அருகில், மாறி மாறி நிற்க, ஒருவர் மட்டும் விதம் விதமாய் அவருடைய அலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். வெளிச்சமே இல்லாது, Flash-உம் இல்லாது புகைப்படம் எடுக்க, அந்தப் புகைப்படம் எப்படி வந்திருக்கும் என்பது அவருக்கே வெளிச்சம்! புகைப்படம் எடுத்துக் கொண்டவர்கள் அனைவரும் செய்த இன்னுமொரு விஷயம் – இருந்த ஒரே ஒரு கறுப்பு Cooling Glass-ஐ ஒவ்வொருவாக அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டது தான்! கும்மிருட்டில் கூலிங் கிளாஸ்! காட்சி-2: தில்லியின் ஒரு முக்கியமான சாலைச் சந்திப்பு. அதன் அருகே மூன்று காவலர்கள் – ஒருவர் அதிகாரி. அதிகாரி காவலாளிகளிடம் சொல்லிக் கொண்டிருந்ததை சாலையைக் கடக்க நின்று கொண்டிருந்த நான் கேட்க நேர்ந்தது. ”ஏதோ ஒரு கொலை, இரண்டு கொலை நடந்தா உடனேயே அதை பெரிய விஷயமா எல்லா டிவிலயும், பேப்பர்லயும் போட்டு நம்மளை கிழி கிழின்னு கிழிச்சுடறானுங்க! வெளிநாட்டுல இப்படியெல்லாம் நடக்காதுன்னு ஒரு உதாரணம் வேற சொல்றாங்க! ஏய்யா, நம்ம தில்லியோட மக்கள் தொகையை விட அந்த நாட்டோட மக்கள் தொகை குறைவு. அப்படி இருக்கற நாட்டுல நடக்கலன்னு சொன்னா எப்படி.... இங்கே இருக்கற மக்கள் தொகைக்கு இப்படி சில நிகழ்வுகள் நடக்கறது சாதாரணமான விஷயம்! இதைப் போய் பெரிசா பேசறாங்க! அப்படியே ஒண்ணு ரெண்டு கொலையோ, கற்பழிப்போ நடந்தா இருக்கற கொஞ்சம் காவலர்களை வைத்துக் கொண்டு எப்படி தடுக்கறது?... நாறப் பொழப்பா இருக்கு!” அவர் சொல்றதுலயும் கொஞ்சம் நியாயம் இருக்கு! காவல் துறையில் நிறைய பேர் அரசியல்வாதிகளோட பாதுகாப்புக்கு போயிட்டா, மீதி இருக்க கோடானு கோடி மக்களுக்கு எப்படி பாதுகாப்பு தர முடியும்! :( காட்சி-3: இப்போதெல்லாம் சாலைகளில் நிறைய பேர் தனியாக பேசிக்கொண்டு வருவதைப் பார்க்க முடியும். கொஞ்சம் நெருங்கி வரும்போது காதில் ஒரு ஒயர் மாட்டி இருக்கும் – பாக்கெட்டில் அலைபேசி இருக்கும் – அலைபேசி அழைப்பில் இருக்கும் யாருடனோ பேசிக் கொண்டிருப்பார்கள்! ஒயர் இல்லாவிடில் காதில் நீலப்பல் [Blue Tooth] மாட்டி இருக்கும்! தனியே பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து “பாவம் யார் பெத்த புள்ளையோ, பிராந்து பிடிச்சுடுச்சுன்னு” நினைக்கத் தோணும்...... இரண்டு நாள் முன்னாடி, சாலையில் நடந்து கொண்டிருந்தேன். எதிரே ஒரு பெரியவர் – ஃப்ரென்ச் தாடி, கோட்-சூட்-பூட் என டிப்-டாப்-ஆக தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார். சற்று தொலைவில் பார்க்கும்போதே பேசிக்கொண்டு வருவது தெரிந்தது. கைகளை ஆட்டி ஆட்டி பேசுவதைப் பார்த்தபோது சரி அலைபேசியில் தான் பேசுகிறார் போல என நினைத்தேன். அருகில் வந்தபோது தான் தெரிந்தது காதில் ஒயரோ, நீலப்பல்லோ இல்லை! பாவம் தனக்குத் தானே பேசிக்கொண்டு வருகிறார்! என்ன பிரச்சனையோ! நேற்று மீண்டும் அந்த பெரியவரைப் பார்த்தேன். இன்றைக்கும் தனியே பேசிக்கொண்டு நடக்கிறார்! வீட்டில் இவருடன் பேச ஆளில்லை போலும்! இல்லையெனில் மனைவி பேசிக்கொண்டே இருக்க, இவர் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டிய சூழலோ! அவருக்கே வெளிச்சம்! என்ன நண்பர்களே, இன்றைய பதிவினை ரசித்தீர்களா? சாலைக்காட்சிகள் அவ்வப்போது தொடரும்! நாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை..... நட்புடன் வெங்கட். புது தில்லி. Posted by வெங்கட் நாகராஜ் at 8:01:00 முற்பகல் 34 கருத்துக்கள் Labels: அனுபவம், சாலைக் காட்சிகள், பொது புதன், 25 நவம்பர், 2015 பெய்யென பெய்யும் மழை.... மனச்சுரங்கத்திலிருந்து.... தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையும் அதன் மூலம் ஏற்பட்ட சங்கடங்களும் பழைய நினைவுகளை மீட்டெடுத்தது. நெய்வேலி நகர் திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம் என்பதால் சிறந்த வடிகால் வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. எத்தனை மழை பெய்தாலும், மழை நின்ற சில மணி நேரங்களில் அத்தனை தண்ணீரும் வடிந்து விடும். ஒவ்வொரு சாலையின் ஓரங்களிலும் வாய்க்கால்கள், அவை சென்று சேரும் சற்றே பெரிய வாய்க்கால், அந்த வாய்க்கால் சென்று செரும் அதைவிட பெரிய வாய்க்கால் என மழைத்தண்ணீர் முழுவதும் வடிந்து ஊரின் ஓரத்தில் இருந்த பெரிய நீர்நிலைக்குச் [சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் நீர் சேமிக்கும் இடத்திற்கு] சென்று சேர்ந்து விடும். நான் அங்கே இருந்த 20 வருடங்களில் எத்தனையோ முறை கனத்த மழையும், புயலுடன் கூடிய மழையும் பெய்திருக்கிறது. என்றாலும் ஒரு முறை கூட வீட்டிற்குள் தண்ணீர் வந்து பார்த்ததில்லை. வாய்க்கால்களில் மட்டும் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். சில சமயங்களில் சற்றே அதிகமாக இருந்தாலும், வீட்டினுள் தண்ணீர் வந்ததில்லை. ஆனால் இந்த முறை சற்று அதிகமாகவே மழை பெய்து வீட்டிற்குள் தண்ணீர் வந்துவிட்டதாக அங்கிருக்கும் நண்பர்கள் சொன்னதன் மூலமும், அவர்கள் அனுப்பிய படங்கள் மூலமும் தெரிந்து கொண்டேன். மழை நின்ற உடனேயே எங்கள் வேலையே ஓடும் தண்ணீரை வேடிக்கை பார்ப்பது தான். வீட்டு வாசலில் நின்று கொண்டு காய்வாலில் சுழித்து ஓடும் தண்ணீரைப் பார்ப்பது பிடித்தமான விஷயம். கூடவே நோட்டுப் புத்தகங்களிலிருந்தோ, அல்லது வேண்டாத காகிதங்களிலோ காகிதக் கப்பல் செய்து அத்தண்ணீரில் விட்டு மிதப்பதைப் பார்த்து ரசிப்பதோ எங்கள் பொழுதுபோக்குகளில் ஒன்று. சுழன்று செல்லும் தண்ணீரில் சில நிமிடங்களுக்குள் அந்தக்கப்பல் கவிழ்ந்து விடும் என்றாலும் தொடர்ந்து கப்பல்கள் விட்டுக்கொண்டே இருப்போம். எங்களுக்கெல்லாம் காகிதக் கப்பல் செய்து தராத அப்பா, இன்றைக்கு தனது பேரன்களுக்கும் பேத்திகளுக்கும் காகிதக் கப்பல் செய்து தருகிறார் – மழை இல்லாத போது கூட! மழையில் நனைவதற்காகவே வெளியே சென்று வந்ததும் உண்டு. பள்ளியிலிருந்து வீடு வரும் போது, மழையில் நனைந்தபடியே வருவேன் – மழையில் நனைவது பிடிக்கும் என்பதால்! மழையில் ”நனைஞ்சு வந்திருக்கியே, கொஞ்சம் நேரம் நின்னு மழை விட்டதும் வரக்கூடாதாடா, கடங்காரா” என்று பாசத்தோடு திட்டியபடியே தனது புடவைத் தலைப்பால் தலை துவட்டி விடுவார் அம்மா.... அம்மாக்கள் இப்படித்தான்.... படித்த கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது! நானும் மழையும் அம்மாவும் நானும் ”மழை வரும்போல குடை எடுத்துட்டு போடா இது அம்மாவின் குரல்... ஒவ்வொரு முறையும் வீட்டை விட்டு வெளியேறும் போதும் அம்மாவின் குரல் உள்ளிருந்து ஒலிக்கும்… மழையில் நனையத்தான் வெளியே செல்கிறேன் என்பதனை அம்மா அறிவாள் இருந்தும் அவள் குரல்தான் அன்பு… நனைந்து பின் வீடு சேரும்போது நான்தான் அப்பவே சொன்னேனே இந்த வார்த்தைகளோடு புடவை தலைப்பில் தலை துவட்டிவிடும்போது இன்னும் அதிகமாகிறது வாழ்வதற்கான ஆசைகள்…” மழையில் நனைந்தபடி சைக்கிளில் பல இடங்களுக்கும் சென்று இருக்கிறேன். ஒரு கையில் குடை பிடித்தபடி, மற்றொரு கையில் மட்டும் பிடித்துக் கொண்டோ, அல்லது அதையும் விட்டு, கொட்டும் மழையில் சைக்கிள் செலுத்தி இருக்கிறேன். அப்போதெல்லாம் ஒன்றும் நடந்ததில்லை. ஒரு முறை தவிர! அப்பாவுக்கு கடிதம் எழுதுவது ரொம்பவும் பிடித்த விஷயம். யாருக்காவது கடிதம் எழுதிக்கொண்டே இருப்பார். தினமும் ஒரு கடிதமாவது எழுதாவிட்டால் அவருக்கு அந்த நாள் முடியாது. அதுமட்டுமல்ல, எழுதிய உடனேயே அதை தபால் பெட்டியில் சேர்த்துவிட்டு தான் மறு வேலை! அவரே சென்று தபால் பெட்டியில் சேர்த்துவிட்டு வருவார் என்றாலும், அந்த மழை நாளில் எனை அழைத்து தபால் பெட்டியில் சேர்த்து வரச் சொன்னார். கனமழை பெய்து கொண்டிருந்தது. வீட்டின் வெகு அருகிலே இருக்கும் சேலம் ஸ்டோர் பக்கத்தில் தான் தபால் பெட்டி. நடந்தால் இரண்டு மூன்று நிமிடங்களில் சென்றுவிடலாம் என்றாலும் சைக்கிளில் தான் செல்வேன். ஒரு கையில் குடை பிடித்து சென்று கொண்டிருந்தபோது அடித்த காற்றில் குடை அலைக்கழித்து கண்களை மறைக்க, எதிரே வந்த ஏதோவொரு வண்டியில் முட்டிக் கொண்டேன்! தவறு அவருடையதோ, என்னுடையதோ தெரியாத நிலை. குடைக் கம்பி உடைந்து போனது மட்டுமல்லாது, எனது வலது மோதிரவிரலில் நன்கு கிழித்தும் விட்டது போலும்..... கட்டியிருந்த நாலு முழ வேட்டி முழுவதும் ரத்தம். மழையில் நனைந்து கொண்டிருந்தாலும், ரத்தம் நிற்காது கொட்டிக் கொண்டிருக்க, அப்படியே வீட்டுக்கு வந்தேன். ரத்தம் நிற்கவில்லை என்பதால் நெய்வேலியின் மருத்துவமனைக்குச் சென்றால், ஆழமாக வெட்டுப்பட்டிருப்பதால் தையல் போட வேண்டும் என்று சொல்லி Local Anesthesia மட்டும் கொடுத்து நான்கு தையல் போட்டார்கள்.... ஒவ்வொரு முறை தையல் போடும் போதும் வலித்தது! இன்றைக்கும் அந்த விரலில் தையலின் அடையாளம் உண்டு! மழையில் நனைவது பிடிக்கும், மழை பற்றிய கவிதைகள் படிப்பது பிடிக்கும், என மழை பற்றிய நினைவுகள் இருந்தாலும், சமீபத்திய மழையில் மக்கள் படும் அவதிகளை நினைக்கும்போது மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. இயற்கை நமக்கு நன்மைகள் செய்தாலும், ஏரிகளையும், குளங்களையும், அதற்கு மழை நீரைக் கொண்டு சேர்க்கும் வாய்க்கால்களையும் ஆக்கிரமித்து வீடுகளையும், அலுவலங்களையும் கட்டி, ஊர் முழுவதும் குப்பையாக்கி, இப்போது தொடர்ந்து பெய்யும் மழையை வெறுக்கிறோம். மழை வேண்டி கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைப்பார்கள் நம் கிராமங்களில். அப்படி கல்யாணம் செய்து வைக்கப்பட்ட கழுதைகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்..... மழை பெய்தது போதும், நிறுத்த வேண்டும் என்பதால் அக்கழுதைகளைத் தேடிக் கண்டுபிடித்து விவாகரத்து செய்து வைக்க வேண்டுமென்று! [முகப்புத்தகத்தில் வேடிக்கையாக இப்படி எழுதி இருந்தார் மூவார் முத்து [ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி]. இனிமேலாவது விளைநிலங்களையும் ஆற்றுப்படுகைகளையும் வீடுகளாகக் கட்டுவதைத் தவிர்ப்போமா..... தவிர்த்தால் நல்லது. தவறெல்லாம் நம் மீதும், அரசாங்கத்தின் மீதும் இருக்கையில், மழையையும், இயற்கையையும் பழித்து என்ன பயன்! மழையினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் அனைவருக்கும் விரைவில் பிரச்சனைகள் விலகட்டும்.... நாளை வேறு பதிவில் சந்திக்கும் வரை..... நட்புடன் வெங்கட். புது தில்லி. டிஸ்கி: படங்கள் நெய்வேலியிலிருந்து.... பகிர்ந்து கொண்ட கல்லூரித் தோழிக்கு நன்றி. Posted by வெங்கட் நாகராஜ் at 7:58:00 முற்பகல் 56 கருத்துக்கள் Labels: அனுபவம், பொது, மனச் சுரங்கத்திலிருந்து.... செவ்வாய், 24 நவம்பர், 2015 சாப்பிட வாங்க: டேகுவா படம்: இணையத்திலிருந்து... டேகுவா – பெயரைப் பார்த்தவுடன் ஏதோ சைனீஸ் உணவு வகை போல என நினைக்க வேண்டாம் நண்பர்களே.... இதுவும் ஒரு இந்திய உணவு வகை தான். சென்ற வாரத்தில் பீஹார் மாநிலத்தவர்களின் முக்கிய பண்டிகையான ச்சட் பூஜா சமயத்தில் செய்யப்படும் ஒரு ஸ்பெஷல் உணவு வகையான லிட்டி [ch]சோக்கா பற்றிய குறிப்புகளைப் பார்த்தோம். இந்த வாரமும் அதே சமயத்தில் அவர்கள் செய்யும் ஒரு இனிப்பு வகையைத் தான் பார்க்கப் போகிறோம். அந்த இனிப்பிற்கு டேகுவா [Thekua] என்று பெயர். லிட்டி [ch]சோக்கா போல இதைச் செய்வது கடினமான விஷயம் அல்ல! சுலபமாகச் செய்து விடலாம். தேவையான பொருட்கள்: கோதுமை மாவு [300 கிராம்], வெல்லம் [150 கிராம்], துருவிய தேங்காய் [50 கிராம்], நெய் [2 ஸ்பூன்], ஏலக்காய் [5] மற்றும் பொரிப்பதற்கு எண்ணெய். எப்படிச் செய்யணும் மாமு: படம்: இணையத்திலிருந்து..... ஒரு கப் தண்ணீல் வெல்லம் சேர்த்து அதைச் சூடாக்கவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டிக்கொள்ளவும். சூடாக இருக்கும் அதில் ஏலக்காய் [தோல் நீக்கியது] பொடி செய்து போடவும். அதன் மேல் இரண்டு ஸ்பூன் நெய் சேர்க்கவும். கரைசல் சூடாக இருப்பதால் நெய் சுலபமாகக் கரைந்து விடும். கரைசலை கொஞ்சம் ஆறவிடவும். கோதுமை மாவில் துருவிய தேங்காயைச் சேர்க்கவும். கொஞ்சம் கொஞ்சமாக வெல்லக் கரைசலைச் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். சப்பாத்திக்கு மாவு பிசைவது போலவே தான். அதிகமான வெல்லக் கரைசல் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். மிதமான தீயில் வைத்துவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக மாவு எடுத்துக் கொண்டு கொஞ்சம் தட்டையாக தட்டிக் கொள்ளவும். பீஹார் மாநிலத்தில் இதற்கு சாஞ்சா எனும் மர அச்சு கிடைக்கிறது. மாவு உருண்டையை சாஞ்சாவில் அமுக்கி எடுத்தால் ஒரு வித design/pattern அதில் கிடைக்கிறது. இது இல்லாவிட்டால், எதாவது ஒரு பிளாஸ்டிக் மூடி வைத்தும் அழுத்தி, செய்து கொள்ளலாம்! சாஞ்சா எனும் மர அச்சு - படம் இணையத்திலிருந்து.... இதைச் செய்து முடிப்பதற்குள் எண்ணெயும் மிதமான சூடாகி இருக்கும். செய்து வைத்த டேகுவா-க்களை ஒவ்வொன்றாக எண்ணையில் பொரிக்க வேண்டும். பொன்னிறமாக ஆகும் வரை பொரித்து எடுத்து ஒரு தட்டில் வைத்து சூடாறியதும், சாப்பிடலாம்! ஒரு மாதம் வரை இந்த டேகுவா கெட்டுப் போகாது. இந்த செய்முறை மட்டும் போதாது, காணொளியாகவும் பார்க்கணும்னு நினைக்கிறவங்க இணையத்தில் Thekua Recipe என்று தேடிப்பார்த்து தெரிந்து கொள்ளலாம்! அலுவலகத்தில் நான்கு-ஐந்து பீஹார் மாநிலத்தவர்கள் உண்டு. அதனால் ச்சட் பூஜா சமயத்தில், வாரம் முழுவதும் யார் வீட்டிலிருந்தாவது இந்த டேகுவா கொண்டு வந்துவிடுவார்கள் என்பதால் வருடா வருடம் இதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். கொஞ்சம் கடிப்பதற்கு கஷ்டமாக இருக்கும் என்பதையும் இங்கே சொல்லி விடுகிறேன் – பல் ஆட்டம் இருந்தால் பார்த்து பொறுமையாக சாப்பிடுவது நல்லது! மேலே கூறியது தவிர மாவுடன் முந்திரிப்பருப்பு, பாதாம் அல்லது பிஸ்தா போன்ற பருப்புகளையும் சிறிய துண்டுகளாக்கி சேர்த்தும் செய்து கொள்வது உங்கள் விருப்பம். இவை எதுவும் சேர்க்காத டேகுவா கூட நன்றாகவே இருக்கும்! நாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை..... நட்புடன் வெங்கட். புது தில்லி. Posted by வெங்கட் நாகராஜ் at 6:21:00 முற்பகல் 34 கருத்துக்கள் Labels: அனுபவம், சமையல், தில்லி, பொது திங்கள், 23 நவம்பர், 2015 கேசரியா ஜி! மற்றும் ஷாம்லா ஜி! பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 24 முந்தைய பகுதிகள் – 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 பயணத்தின் போது வழியில் மலை மேல் தெரிந்த கோட்டை..... நாத்துவாராவிலிருந்து புறப்பட்டு, தொடர்ந்து அஹமதாபாத் நகரை நோக்கி பயணித்தோம். அந்த வழியில் இருப்பது ஷாம்லாஜி என அழைக்கப்படும் ஒரு விஷ்ணு கோவில். ஷாம்லாஜியில் கோவில் கொண்டிருக்கும் சதுர்புஜ விஷ்ணுவின் தரிசனம் பார்த்த பிறகு அஹமதாபாத் செல்வதாகத் திட்டம். வழியிலேயே கேசரியா ஜி என்ற கோவிலும் உண்டு. கேசரியா ஜி கோவில் பற்றி முதலில் பார்க்கலாம்.... கேசரியாஜி கோவில் - படம் இணையத்திலிருந்து... உதைப்பூர் நகரிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கேசரியாஜி ஒரு ஜெயின் வழிபாட்டுத் தலம். ரிஷப்தியோ என அழைக்கப்படும் தீர்த்தங்கரரின் மிகப்பெரிய சிலை இங்கே இருக்கிறது. முதலாம் தீர்த்தங்கருக்கு அமைக்கப்பட்ட கோவில் எனவும் சொல்கிறார்கள். இங்குள்ள மக்கள் நிறைய கேசர், அதாவது குங்குமப்பூ கொண்டு வந்து சமர்ப்பணம் செய்கிறார்கள். அதனை ரிஷப்தியோ சிலையில் பூசிப் பூசி சிவப்பு வண்ணம் வர, இங்குள்ள சிலைக்கும், ஊருக்கும், கேசரியாஜி என்ற பெயரே வந்துவிட்டது! கேசரியாஜி - படம் இணையத்திலிருந்து... அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்களும் உண்டு. கோவிலில் இருக்கும் முக்கியச் சிலையான ரிஷப்தியோ [ரிஷப் தேவ்] சுமார் 3 ½ அடி உயரம். பத்மாசனத்தில் அமர்ந்திருந்த நிலையில் இருக்கும் இச்சிலை கருப்புக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. அழகிய வேலைப்பாடுகள் பலவும் கொண்ட இவ்விடத்திற்குச் சென்று தரிசனம் செய்யலாம் என்பதால் இங்கே குறிப்புகள் தந்திருக்கிறேன். நாங்கள் நேராக ஷாம்லிஜி சென்று விட்டோம். ஷாம்லாஜி கோவில் ஷாம்லிஜி கோவில்: பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவில் மேஷ்வோ நதிக்கருகில் அமைந்துள்ள மிகவும் பழமையான கோவில். கோவிலின் அருகில் பல இடிபாடுகள், அங்கே பழங்காலத்தின் இன்னும் பல சுற்றுக் கோவில்களும் இருந்திருப்பதைக் காண்பிக்கிறது. சுற்றுக் கோவில்கள் பலவும் அழிந்து விட்டாலும், ஷாம்லிஜி கோவில் மட்டும் இன்னும் சிறப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது பராமரிப்பும் செய்து வருகிறார்கள் என்பதால் காப்பாற்றப்பட்டிருக்கிறது. ஷாம்லாஜி கோவில் - மற்றுமொரு கோணத்தில்... கோவிலின் வெளியே இருக்கும் அலங்கார நுழைவு வாயில், கோவில், என எல்லா இடங்களிலும் இருக்கும் சிற்பங்கள் மனதைக் கவர்கின்றன. கோவிலின் சுவர்களில் நிறைய இடங்களில் யானைகளின்சிற்பங்கள் உண்டு. அதைத் தவிர மற்ற சிற்பங்களும், கற்களில் செதுக்கப்பட்ட தோரணங்களும் பூக்களும் உண்டு. ஒவ்வொன்றையும் பொறுமையாக பார்த்து ரசிக்கலாம். கோவிலின் பின்னே ஷ்யாம் சரோவர் என்ற ஏரியும், மலைகளும் இருப்பதால் இயற்கை அழகையும் நீங்கள் ரசிக்க முடியும். ஷாம்லாஜி கோவில் சுற்றுச் சுவர் சிற்பங்கள் கோவிலில் குடி கொண்டிருப்பது விஷ்ணுவின் த்ரிவிக்ரம ரூபம். நாங்கள் கோவிலின் உள்ளே நுழைந்த சமயம் மதிய வேளை நடக்கும் உச்சிகால பூஜை முடிந்து கோவில் மூடப்படும் சமயம். உள்ளே நுழையும் போதே கோவில் மூடப்போகிறது, விரைந்து உள்ளே வர வேண்டும் என அழைப்பு. விரைந்து உள்ளே சென்று ஷாம்லாஜியின் முன்னே வசதியாக நின்று எப்போதும் போல ஒரு ”ஹாய்” சொல்லி, எல்லோருக்கும் நல்லதே நடக்க வேண்டுதல். சிறிது நேரம் வரை அங்கே நின்றபடியே மனதை ஒருநிலைப்படுத்தி தியானம். சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்தோம். ஷாம்லாஜி கோவில் சுற்றுச் சுவர் சிற்பங்கள் கோவிலின் சுற்றுச் சுவர்களில் எத்தனை சிற்பங்கள், யானைகள் பதித்த தோரணங்கள், என ஒவ்வொன்றும் பழங்கால சிற்பக்கலையின் சிறப்பை பறைசாற்றுகின்றன. ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து செதுக்கியிருப்பார்கள் போலும்! அவர்களது கைவண்ணம் நூற்றாண்டுகளைக் கடந்து இன்னமும் பொலிவுடன் இருப்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியும், அவற்றை தொடர்ந்து பராமரிக்க வேண்டுமே என்ற கவலையும் ஒரு சேர வருகிறது. ஷாம்லாஜி கோவில் சுற்றுச் சுவர் சிற்பங்கள் சில சிற்பங்களை படம் எடுத்துக் கொண்டு எங்கள் வாகனம் நிறுத்தி இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். காலையில் நாத்துவாராவில் வாங்கி வைத்திருந்த குடிநீர் அனைத்தும் தீர்ந்திருக்க, கோவில் வாசலிலிருந்து கொஞ்சம் தண்ணீர் வாங்கிக் கொண்டோம். வழியில் வேண்டியிருக்குமே! மதியம் ஆகிவிட்டாலும் பசி இல்லை... மேலும் ஷாம்லாஜி கோவில் அருகே நல்ல உணவகங்களும் இல்லை என்பதால் நெடுஞ்சாலையில் எங்காவது நிறுத்தி உணவு சாப்பிடலாம் என முடிவு செய்தோம். ஷாம்லாஜி கோவில் சுற்றுச் சுவர் சிற்பங்கள் ஷாம்லாஜி கோவில் சிற்பங்களை மனதில் நினைத்தபடியே எங்கள் பயணம் தொடர்ந்தது. வழியெங்கும் காட்சிகளைப் பார்த்தபடியே முன் இருக்கையில் அமர்ந்து வருவது எனக்குப் பிடித்தமான ஒன்று. சாலைகளில் வாகனங்களுக்குள் நடக்கும் போட்டி – ஓட்டுனர்கள் நடத்தும் போட்டி நடந்தபடியே இருக்கிறது. எங்கள் ஓட்டுனர் [ch]சிராக்-உம் வாகனத்தினை நல்ல வேகத்தில் செலுத்திக் கொண்டு வந்தார். சாலையில் செல்லும் மற்ற வாகனங்களின் பின்னே எழுதி இருக்கும் வாசகங்களையும் கடந்து செல்லும் ஊர்களின் பெயர்களையும் படித்துக் கொண்டே வருவது நேரம் கடத்த உதவியாக இருக்கும்! அப்படிப் பார்த்த ஒரு ஊரின் பெயர் ”அட போட்றா!” வித்தியாசமான பெயர் தான்! வாகனங்களுக்குள் போட்டி.... சற்று தூரம்/நேரம் பயணித்த பிறகு வயிறு “தினமும் என்னைக் கவனி” என்று லாரிகளின் பேட்டரியில் எழுதி இருப்பதைப் போல, தன்னைக் கவனிக்கச் சொல்லி கூப்பாடு போட, ஓட்டுனர் [ch]சிராக்-இடம் நல்ல உணவகமாகப் பார்த்து வண்டியை நிறுத்தச் சொன்னோம். அவர் நிறுத்திய உணவகம் எது?, அங்கே என்ன சாப்பிட்டோம், அங்கே பார்த்த காட்சிகள் என அனைத்தும் அடுத்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்! சரியா! நாளை வேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை.... நட்புடன் வெங்கட் புது தில்லி. Posted by வெங்கட் நாகராஜ் at 8:49:00 முற்பகல் 26 கருத்துக்கள் Labels: அனுபவம், கோவில்கள், பஞ்ச் துவாரகா, பயணம், பொது புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு தொகுப்புகள் மின்புத்தகங்கள்... Amazon-இல் எனது மின்னூல்கள் அமேசான் தளத்தில் எனது மின்னூல்கள் இந்த வலைப்பதிவில் தேட தொடரும் நட்புகள் பதிவுப் பெட்டகம் ► 2021 (336) ► டிசம்பர் (4) ► நவம்பர் (28) ► அக்டோபர் (31) ► செப்டம்பர் (30) ► ஆகஸ்ட் (31) ► ஜூலை (32) ► ஜூன் (33) ► மே (29) ► ஏப்ரல் (28) ► மார்ச் (31) ► பிப்ரவரி (28) ► ஜனவரி (31) ► 2020 (287) ► டிசம்பர் (14) ► நவம்பர் (2) ► அக்டோபர் (28) ► செப்டம்பர் (26) ► ஆகஸ்ட் (26) ► ஜூலை (32) ► ஜூன் (30) ► மே (31) ► ஏப்ரல் (31) ► மார்ச் (31) ► பிப்ரவரி (24) ► ஜனவரி (12) ► 2019 (262) ► டிசம்பர் (14) ► அக்டோபர் (10) ► செப்டம்பர் (30) ► ஆகஸ்ட் (31) ► ஜூலை (20) ► ஜூன் (12) ► மே (24) ► ஏப்ரல் (31) ► மார்ச் (31) ► பிப்ரவரி (28) ► ஜனவரி (31) ► 2018 (297) ► டிசம்பர் (28) ► நவம்பர் (20) ► அக்டோபர் (21) ► செப்டம்பர் (30) ► ஆகஸ்ட் (31) ► ஜூலை (30) ► ஜூன் (17) ► மே (31) ► ஏப்ரல் (33) ► மார்ச் (19) ► பிப்ரவரி (25) ► ஜனவரி (12) ► 2017 (258) ► டிசம்பர் (32) ► நவம்பர் (31) ► அக்டோபர் (4) ► செப்டம்பர் (16) ► ஆகஸ்ட் (30) ► ஜூலை (29) ► ஜூன் (3) ► மே (7) ► ஏப்ரல் (30) ► மார்ச் (31) ► பிப்ரவரி (15) ► ஜனவரி (30) ► 2016 (260) ► டிசம்பர் (25) ► நவம்பர் (21) ► அக்டோபர் (22) ► செப்டம்பர் (28) ► ஆகஸ்ட் (31) ► ஜூலை (27) ► ஜூன் (29) ► மே (21) ► ஏப்ரல் (4) ► மார்ச் (18) ► பிப்ரவரி (14) ► ஜனவரி (20) ▼ 2015 (185) ► டிசம்பர் (8) ▼ நவம்பர் (28) ஐஸ்க்ரீம் வேணும் – அடம் பிடித்த பெரியவர் – வீட்டு ... மாலினி அவஸ்தி – கிராமியப் பாடலும் நடனமும் நடுத் தெருவில் ஒரு ஃபோட்டோ ஷூட்! பெய்யென பெய்யும் மழை.... சாப்பிட வாங்க: டேகுவா கேசரியா ஜி! மற்றும் ஷாம்லா ஜி! மயூர் நிருத்ய – மயில் நடனம் – மதுராவிலிருந்து படமும் ‘ப”வில் வரும் பெயர்களும்! ஃப்ரூட் சாலட் – 153 – கோபம் – எதையும் தாங்கும்! – ... நாத்துவாரா மேலும் சில இடங்கள் – பிச்ச்வாய் ஓவியங்க... சாப்பிட வாங்க: லிட்டி [ch]சோக்கா ஸ்ரீநாத்ஜி தரிசனம் - நாத்துவாரா கடவுளைக் கண்டேன்..... ராஜஸ்தானி நடனம் ப்பா..... ஃப்ரூட் சாலட் – 152 – நடுத்தெரு மின்சாரம் – எலியும... இடர் எனும் கிராமம் – 18 ரூபாய்க்கு தேநீர் – ராஜஸ்த... சாப்பிட வாங்க: பஞ்சீரி லட்டு..... [DH]தன்தேரஸ் மாத்ரு கயா - பிரச்சனையில்லா சிலை – புளி போட்ட பாயசம் தேரா தாலி நடனம் கரடிக்கு காதல் பிடிக்காது! ஃப்ரூட் சாலட் – 151 – திருநங்கை ப்ரித்திகா யாஷினி ... மிக்சட் ஜெய்ப்பூரி சப்ஜி மகன் மட்டும் என்ன ஸ்பெஷல்? நண்பேன்டா... ருக்கு ருக்கு ருக்கு...... ருக்மிணி கல்யாணம்.... ஆஹாஹா கல்யாணம்.... ► அக்டோபர் (30) ► செப்டம்பர் (18) ► ஆகஸ்ட் (9) ► ஜூலை (12) ► ஜூன் (7) ► மே (9) ► ஏப்ரல் (20) ► மார்ச் (13) ► பிப்ரவரி (14) ► ஜனவரி (17) ► 2014 (193) ► டிசம்பர் (12) ► நவம்பர் (18) ► அக்டோபர் (13) ► செப்டம்பர் (12) ► ஆகஸ்ட் (7) ► ஜூலை (9) ► ஜூன் (11) ► மே (11) ► ஏப்ரல் (21) ► மார்ச் (31) ► பிப்ரவரி (18) ► ஜனவரி (30) ► 2013 (246) ► டிசம்பர் (32) ► நவம்பர் (30) ► அக்டோபர் (16) ► செப்டம்பர் (24) ► ஆகஸ்ட் (18) ► ஜூலை (19) ► ஜூன் (13) ► மே (11) ► ஏப்ரல் (26) ► மார்ச் (23) ► பிப்ரவரி (18) ► ஜனவரி (16) ► 2012 (161) ► டிசம்பர் (20) ► நவம்பர் (19) ► அக்டோபர் (20) ► செப்டம்பர் (17) ► ஆகஸ்ட் (10) ► ஜூலை (16) ► ஜூன் (11) ► மே (6) ► ஏப்ரல் (14) ► மார்ச் (12) ► பிப்ரவரி (8) ► ஜனவரி (8) ► 2011 (101) ► டிசம்பர் (8) ► நவம்பர் (8) ► அக்டோபர் (19) ► செப்டம்பர் (9) ► ஆகஸ்ட் (9) ► ஜூலை (6) ► ஜூன் (9) ► மே (4) ► ஏப்ரல் (9) ► மார்ச் (7) ► பிப்ரவரி (6) ► ஜனவரி (7) ► 2010 (83) ► டிசம்பர் (8) ► நவம்பர் (12) ► அக்டோபர் (3) ► செப்டம்பர் (5) ► ஆகஸ்ட் (6) ► ஜூலை (7) ► ஜூன் (6) ► மே (8) ► ஏப்ரல் (6) ► மார்ச் (8) ► பிப்ரவரி (7) ► ஜனவரி (7) ► 2009 (25) ► டிசம்பர் (10) ► நவம்பர் (7) ► அக்டோபர் (7) ► செப்டம்பர் (1) பிரிவுகள் அச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (38) அனுபவம் (1559) ஆசை (4) ஆதி வெங்கட் (255) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (201) இயற்கை (13) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (16) இரா அரவிந்த் (21) இருமாநில பயணம் (49) உணவகம் (28) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (5) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (77) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (138) கதை மாந்தர்கள் (85) கர்நாடகா (1) கலை (8) கவிதை (87) காஃபி வித் கிட்டு (136) காசி - அலஹாபாத் (16) காணொளி (128) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (88) குஜராத் (53) கேரளா (1) கோலம் (16) கோவில்கள் (111) சபரிமலை (13) சமையல் (201) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (21) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (29) சுஜாதா (7) தகவல்கள் (2) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (96) தலை நகரிலிருந்து... (38) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (57) தில்லி (332) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (4) நகைச்சுவை (17) நட்பிற்காக... (55) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (286) நிர்மலா ரங்கராஜன் (9) நினைவுகள் (150) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (29) படித்ததில் பிடித்தது (166) பத்மநாபன் (26) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (62) பயணக் காதலன் (2) பயணம் (784) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (689) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (30) பொது (1780) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (112) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (24) முரளி (2) மேகாலயா (18) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (5) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (31) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (38) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (28) வாழ்த்துகள் (21) விருது (3) விளம்பரம் (68) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (91) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (40) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (7) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (12) Tamil Nadu (6) Tripura (11) Venkat's Travelogue (1) West Bengal (8) You Tube (5)
தமிழ் எம் ரீ வி இயக்குனர் என்.வி.சிவநேசனும் அவர் மகன்கள் பாரத் ,டிலஸ்சன் „ஸ்சலோன் உயர் கல்வி,கலை கலாச்சார அமைப்பினரால் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது இன்று சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 94 வது பிறந்த நாள் (07.01.2019) ஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டு கழகம் Archives November 2019 June 2019 January 2019 December 2018 November 2018 September 2018 August 2018 May 2018 April 2018 March 2018 February 2018 January 2018 December 2017 October 2017 September 2017 June 2017 May 2017 April 2017 March 2017 February 2017 January 2017 October 2016 August 2016 July 2016 June 2016 May 2016 April 2016 March 2016 February 2016 January 2016 December 2015 November 2015 October 2015 July 2015 June 2015 May 2015 April 2015 March 2015 February 2015 January 2015 July 2014 June 2014 May 2014 April 2014 March 2014 February 2014 January 2014 December 2013 November 2013 October 2013 September 2013 August 2013 July 2013 June 2013 May 2013 April 2013 March 2013 February 2013 January 2013 December 2012 November 2012 October 2012 September 2012 August 2012 July 2012 June 2012 May 2012 April 2012 March 2012 February 2012 Meta Log in Entries RSS Comments RSS WordPress.org your ads Categories அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு ஆபாச படம் வைத்திருந்தவருக்கு அபராதம் Posted by admin on April 26th, 2013 02:59 PM | Comments Off on ஆபாச படம் வைத்திருந்தவருக்கு அபராதம் யாழ்.சுன்னாகம் பகுதியில் கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படம் வைத்திருந்த இளைஞர் ஒருவருக்கு மல்லாகம் நீதிமன்றம் மூவாயிரம் ரூபா தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படம் வைத்திருந்த குறித்த இளைஞர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுன்னாகம் பொலிசாரால் கடந்த திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்தே குறித்த இளைஞருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் ... மரண அறிவித்தல் திருமதி செல்வரத்தினம் மனோன்மணி Posted by admin on April 24th, 2013 04:03 PM | Comments Off on மரண அறிவித்தல் திருமதி செல்வரத்தினம் மனோன்மணி திருமதி செல்வரத்தினம் மனோன்மணி மலர்வு : 18 ஏப்ரல் 1948 — உதிர்வு : 21 ஏப்ரல் 2013 யாழ். காரைநகர் மணற்பிட்டியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் தங்கோடையை வதிவிடமாகவும், மானிப்பாயை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் மனோன்மணி அவர்கள் 21-04-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம், செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற நாகேந்திரம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற செல்வரத்தினம் ... இலங்கையின் கடன் தொகை உயர்வு Posted by admin on April 24th, 2013 03:53 PM | Comments Off on இலங்கையின் கடன் தொகை உயர்வு ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் இலங்கையின் மொத்தக் கடன் தொகை உயர்வடைந்துள்ளது. முக்கியமாக வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பீடு செய்யும் போது ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. ரூபாவின் பெறுமதி வீழச்சி காரணமாக 2012ம் ஆண்டில் மொத்தக் கடன் 20700 கோடி ரூபாவினால் உயர்வடைந்துள்ளது. 2011ம் ஆண்டில் நாட்டின் மொத்தக் கடன் 513300கோடி ரூபாவாகக் காணப்பட்டதாகவும், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் இந்தத் தொகை ... திரு. முல்லைமோகன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து(22/04/13) Posted by admin on April 21st, 2013 08:25 PM | Comments Off on திரு. முல்லைமோகன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து(22/04/13) 22-04-20013 பிறந்தநாளைக்கொண்டாடும் திரு. முல்லைமோகன் அவர்களுக்கு ஊடக நன்பர்களின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஊடகக் கலைஞனாய் உள்ளத்தைக் கவர்ந்தவரே. உள்ளன்பு கொண்டு உறவாடி மகிழ்பவரே. உமக்கு நாம் வாழ்த்துக் கூற இது வல்ல நேரம் என்பது எமக்கும் தெரியும.; ஆனாலும் கலைஞனை கலைஞன் எப்படி வாழ்த்தாமல் இருக்கமுடியும் அதனால் வருடம் ஓரு நாள் வரும் வாழ்த்தை நாம் வாழ்த்துகிறோம். வாழ்த்துபவர்கள் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ். தேவராசா குடும்பத்தினர். லண்டன் கவிஞர் கந்தசாமி குடும்பத்தினர். காந்தக்குரலோன் கானமணி ... 20க்கும் அதிகமானோர் படுகாயம் Posted by admin on April 21st, 2013 04:49 PM | Comments Off on 20க்கும் அதிகமானோர் படுகாயம் கடலோர புகையிரத மார்க்கத்தின் மக்கொனைக்கும் பேருவளைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் உள்ள மாகல்கந்த எனும் இடத்தில் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்தும் ரயிலும் நேருக்கு நேர் மோதியதில் 20க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த ரயிலில், கண்டியிலிருந்து இறுதிக்கிரிகை ஒன்றுக்காக பேருந்தில் பயணித்தவர்களே ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிய வந்துள்ளது. இன்று மாலை இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவத்தில் ... நில நடுக்கத்தால் 100 பேர் வரை பலி Posted by admin on April 20th, 2013 05:52 PM | Comments Off on நில நடுக்கத்தால் 100 பேர் வரை பலி சீனாவின் தென்மேற்குப் பகுதியான சிச்சுவான் மாகாணத்தில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தால் 100 பேர் வரை பலியானார்கள். 400 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக சீன அரச ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது. கட்டட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. சீனாவின் தென் மேற்கு சிசுவான் மாகாணத்தில் இருந்து ... ஞாபகத் திறன் Posted by admin on April 19th, 2013 06:35 AM | Comments Off on ஞாபகத் திறன் மனிதனுக்கு உள்ள சிறப்பம்சங்களில் ஒன்று அவனது நீளமான, ஆழமான ஞாபகத் திறன். ஆனால் ஓர் உண்மை தெரியுமா? மனித மூளையின் செல்களில் 96 சதவிகிதம், ஞாபக சக்திதொடர்பான பணிகளில் ஈடுபடுவதில்லை. மனிதன் தனக்குள்ள மொத்த நினைவாற்றல் திறனில் 4 சதவிகிதத்தைத்தான் பயன்படுத்துகிறான். உலக மக்களில் ஒரு சதவிகிதத்தினரே தங்களின் ஞாபகசக்தியைத் திறமையுடன் பயன்படுத்துகின்றனர் என்று தெரியவந்திருக்கிறது. அபார ... மரண அறிவித்தல்! பூபதி.சுப்பிரமணியம் மேலதிக தகவல்…. Posted by admin on April 19th, 2013 06:10 AM | Comments Off on மரண அறிவித்தல்! பூபதி.சுப்பிரமணியம் மேலதிக தகவல்…. தாயின் மடியில் 15.06.1939 மண்ணின் மடியில் 17.04.2013 தமிழீழம் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்மூண்ட்டில் வதிவிடமாகவும் கொண்டிருந்த பூபதி.சுப்பிரமணியம் அவர்கள் 17.04.2013 புதன்கிழமை காலை 2.மணியளவில் காலமானார். இவர் காலம் சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்புமனைவியும் காலம்சென்ற அப்பாக்குட்டி.சோதிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வியும். பரமேஸ்வரியின் அன்புச்சகோதரியும். காலம்சென்ற கந்தசாமியின் மைத்துனியும் இராஜேஸ்வரி.குமாரசாமி .தேவராஜா ஜெயகுமார் தவராஜா.தவேஸ்வரியின் அன்பு தாயாரும். கந்தசாமி.காலம்சென்ற தர்மசீலன் .பேற்றா. ... Page 2 of 6:« 1 2 3 4 5 » Last » TamilMTV Live இணையத்தொலைக்காட்சி Categories Categories Select Category அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு
ஆரூடப் பாடல் 40 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், சக்கரம், பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடச், உண்டாகும், நேரும், horary, தடங்கலாகும் முகப்பு விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து Search form சனி, டிசம்பர் 04, 2021 FOLLOW US உலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை ஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம் உங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள் தமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி ஜோதிடம் ஆரூடங்கள் ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் ஆரூடப் பாடல் 40 ஆரூடப் பாடல் 40 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் ௪o. (40) வந்தால்.. சளியவன் வக்கரித்ததால் சண்டைநேரும் சகலவித காரியமும் தடங்கலாகும் பணிவான மனிதர்களும் பகையேயாவார் பலபொருளும்சேதமுண்டு காகும்பேளவரே துணிவான காரியத்தை செய்ய நேரும் துன்பமிக நேருமப்பா வியாதிகாணும் கனிவான கடனாலே மனஞ்சஞ்சலிக்கும் கழித்திடுவாய் நாற்பத்தி ஏழுநாளே. ஆரூடத்தில் நாற்பது வந்திருப்பது, சனி வக்கரித்திருப்பதைக் குறிக்கும். இதனால் சகல காரியஙக்ளும் தடங்கலாகும். சொந்த பந்தங்களும் உன்னை தூற்றுவார்கள். பலவிதத்திலும் பொருட்சேதம் உண்டாகும். முன்பின் யோசியாமல் காரியங்களைச் செய்து துன்பமடைய நேரும். நோய் நொடி ஏற்படும். கடன்காரர்களின் தொல்லையால் மன வெறுப்பு உண்டாகும். இவையெல்லாம் இன்னும் நாற்பத்தியேழு நாளில் தீரும் என்கிறார் அகத்தியர். ‹‹ முன்புறம் | தொடர்ச்சி ›› தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்: ஆரூடப் பாடல் 40 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், சக்கரம், பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடச், உண்டாகும், நேரும், horary, தடங்கலாகும்
ஈரோடு: ஊரடங்கு உத்தரவு விதி மீறிய வழக்கில், அமைச்சர் முத்துசாமி, ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரானார். கொரோனா பரவல் தாக்கம் உச்சத்தில் இருந்த, 2020 டிச.,?ம் தேதி, ஸ்டாலின் குரல் என்ற பிரசார பயணம், தி.மு.க., சார்பில் ஈரோட்டில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது ப.செ.பார்க்கில் உள்ள கருணாநிதி சிலைக்கு, ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். ஊரடங்கு அமலில் முழு செய்தியை படிக்க Login செய்யவும் ஈரோடு: ஊரடங்கு உத்தரவு விதி மீறிய வழக்கில், அமைச்சர் முத்துசாமி, ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரானார். கொரோனா பரவல் தாக்கம் உச்சத்தில் இருந்த, 2020 டிச.,?ம் தேதி, ஸ்டாலின் குரல் என்ற பிரசார பயணம், தி.மு.க., சார்பில் ஈரோட்டில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது ப.செ.பார்க்கில் உள்ள கருணாநிதி சிலைக்கு, ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். ஊரடங்கு அமலில் உள்ள போது, சமூக இடைவெளியின்றி பொது இடத்தில் கூடியதாக, முத்துசாமி உள்ளிட்ட, 10 பேர் மீது டவுன் போலீசில் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணைக்காக, ஈரோடு குற்றவியல் நீதிமன்றம் எண்.1ல், வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி நேற்று காலை ஆஜரானார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வடிவேல், அக்.,12ல் மீண்டும் ஆஜராக உத்தரவிட்டார். அமைச்சர் வருகையால், நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஈரோடு: ஊரடங்கு உத்தரவு விதி மீறிய வழக்கில், அமைச்சர் முத்துசாமி, ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரானார். கொரோனா பரவல் தாக்கம் உச்சத்தில் இருந்த, 2020 டிச.,?ம் தேதி, ஸ்டாலின் குரல் என்ற பிரசார பயணம், ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...! சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் For technical contact : webmaster@dinamalar.in இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள். Allow ads on Dinamalar Back AdBlock Adblock Plus uBlock Origin Other 1. Click the AdBlock icon in the browser extension area on the upper right corner. 2. Select Don't run on pages on this site. 3. In the "Don’t run AdBlock on..." dialog box, select Exclude. The AdBlock icon changes to a “thumbs up” image. 1.Click the Adblock Plus icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button so that it slides left. 3. Click the Refresh button. 1. Click the uBlock Origin icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button. It turns gray, indicating that ads on that site are no longer being blocked. 3. Click the “Refresh” button 1. Click the icon of the ad blocker extension installed on your browser. You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed. 2. Follow the instructions for disabling the ad blocker on the site you’re viewing. You may have to select a menu option or click a button. 3. Refresh the page, either by following prompts or clicking your browser’s “Refresh” or “Reload” button. Refresh page உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join Telegram Channel for FREE Advertisement பருவமழை நோய் கண்காணிப்பு; தடுப்பு நடவடிக்கை தீவிரம் முந்தய மக்களை அலைக்கழிக்காமல் செயல்படுங்கள்: அதிகாரிகளுக்கு அமைச்சர் முத்துசாமி அறிவுரை அடுத்து » பொது முதல் பக்கம் » தினமலர் முதல் பக்கம் Close X சினிமா → கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் → கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு → கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் → தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் → தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
உடல் பருமன் என்பது உலகெங்கிலும் உள்ள முக்கிய ஆரோக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகும். அதிக உடல் எடை அல்லது பருமனாக இருப்பது நமது உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, நமது பாலியல் வாழ்க்கையையும் பாதிக்கும் என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளது சமீபத்திய ஆய்வு ஒன்று. பாலியல் உறவு என்பது ஆண் - பெண் இருபாலருக்கும் இடையேயான அன்பின் வெளிப்பாடு ஆகும். அன்பை உருவாக்குவது மிகவும் தீவிரமான உடல் செயல்பாடாகும். பாலியல் உறவு இருபாலருக்கும் இன்பமான அனுபவமாக இருத்தல் அவசியம். ஒருவேளை ஒருவர் அதனைப் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், அதை உண்மையான மகிழ்ச்சியோடு அனுபவிக்க இயலாது. இப்படியான மன பாதுகாப்பின்மைக்கு ஒருவகை காரணமாக உடல் எடையும் அமைந்துள்ளது என்பது அனைவராலும் மறுக்கமுடியாத உண்மை. உங்கள் உடல் பருமன் பாலியல் வாழ்க்கையை (sexual life) எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றி முதலில் அறிந்துகொள்வோம். உடல் பருமன் ஆண்களில் விறைப்புத்தன்மை மற்றும் பெண்களில் பாலியல் செயலிழப்பு உள்ளிட்ட அபாயங்களை அதிகரிக்கிறது. இது முக்கியமாக, உடலில் அதிக கொழுப்பு மற்றும் உடல் பருமனால் ஏற்படும் இன்சுலின் எதிர்ப்பு காரணமாக ஏற்படுகிறது. உடல் பருமனான சில ஆண்கள், ஆண்குறி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் பாதிப்படைகின்றனர். பெண்களின் அதிக உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ), பாலியல் பிரச்சனைகளுடன் தொடர்புடையது என்பதைக் காட்டுகிறது. சில ஆய்வாளர்கள் இவை பிறப்புறுப்பு பகுதியில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள். உடலுறவில் சிரமம், அதிருப்தி ஆகியவற்றுக்கு உடல் பருமன் முக்கிய காரணமாக அமைகிறது. ஆண்களைப் போலவே, அதிக அளவு கொலஸ்ட்ரால் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு பெண்களின் கிளிட்டோரிஸில் அடைப்பை உருவாக்கும். இது பெண்ணுறுப்புக்குச் (vagina) செல்லும் இரத்த ஓட்டத்தைக் குறைக்கலாம். இதனால் நெருக்கமான பாலியல் உறவின்போது அதிக இன்பம் மற்றும் உச்சத்தை அடைவது மிகவும் கடினமாக மாறலாம். நெருக்கமான உடலுறவு உங்கள் துணையுடன் இணைந்திருப்பதை உணர உதவுகிறது மற்றும் உங்களுக்குத் திருப்திகரமான அனுபவத்தை அளிக்கிறது. இருப்பினும், உடல் எடை அதிகம் உள்ளவர்கள் உடலுறவின்போது தங்கள் துணைக்கு ஏற்றார் போல் அவ்வளவு வளைந்து கொடுக்க முடியாதபோது, படுக்கையறையில் ஏமாற்றம் ஏற்பட்டுவிடுகிற அபாயம் உள்ளது. குறிப்பாக, பாலியல் ஹார்மோன்களான டி.எச்.இ.ஏ, ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்ற சில ஹார்மோன்கள் உடல் எடை அதிகரிப்போடு தொடர்புடையன. மேலும், PCOS போன்ற ஹார்மோன் பிரச்சனைகளின் தற்செயலான தொடக்கமாகவும் கூட பெண்களின் உடல் எடை அதிகரிக்கும். ஆண், பெண் இருவரது உடலிலும் சேமித்துவைக்கப்படும் அதிக கொழுப்பு குறைந்த பாலியல் உந்துதலுக்குப் பங்களிக்கக்கூடும். அதிக எடை மற்றும் உடல் பருமன் உங்கள் பாலியல் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பல ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. இருப்பினும், இது எல்லோருக்கும் பொருந்தாது. ஒருவேளை, உடல்பருமன் நேரடியாக ஒருவரின் பாலியல் வாழ்க்கையைப் பாதிக்கும்போது, அதற்கான சரியான மருத்துவரை அணுகுதல் சிறந்தது. அதே சமயம், உங்கள் துணையுடன் நீங்கள் பாலியல் செயல்பாடுகளில் நெருக்கமாக இருக்கும்போது உங்கள் உடல் எடையைப் பற்றி நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதைப் பொருத்தும் அமையும். ஒருவேளை உங்களைப் பற்றி நீங்கள் அதிக நம்பிக்கையுடனும், கவர்ச்சியுடனும் உணரும்போது, உங்கள் பாலியல் வாழ்க்கை மிகவும் சந்தோசமானதாக அமையும். Related Tags lifestyle health மிஸ் பண்ணிடாதீங்க தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு... முதல்வர் அறிவிப்பு! 'ஓமிக்ரான்' கரோனா கட்டுப்பாடுகள் அறிவிப்பு! எத்தனை ரெட் அலர்ட் கொடுத்தாலும் இது தான் எங்க வீடு... கண்ணீர் வர வைக்கும் கிராமத்து வாழ்க்கை! கரோனா கட்டுப்பாடுகளை நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு! சார்ந்த செய்திகள் "செல்போன் உலகத்திற்குள் தொலைந்து போகும் குழந்தைப் பருவமும்; பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவையும்"..! வோல்டாஸ் அட்ஜஸ்டபிள் ஏ.சி... செம சூப்பர் ஆஃபருடன் அறிமுகம்! டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: அரையிறுதியில் இந்திய வீரர் தோல்வி! தமிழகத்தின் இழந்த பெருமையை மீட்க இயற்கை விவசாயம்; ஆச்சி மசாலாவின் புதிய முன்னெடுப்பு! Trending முதல் கரோனா பாதிப்பை உறுதிசெய்த நாடு ! இந்திய அணிக்கு எதிராக வரலாறு படைத்த நியூசிலாந்து பந்துவீச்சாளர்! ‘எல்லாரும் ஓரமா போங்க’... சற்றும் யோசிக்காமல் தடாலடி சிகிச்சை... செவிலியரின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்! அதிகம் படித்தவை உருவாகியது தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி! 24X7 ‎செய்திகள் ‘எல்லாரும் ஓரமா போங்க’... சற்றும் யோசிக்காமல் தடாலடி சிகிச்சை... செவிலியரின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்! 24X7 ‎செய்திகள் அடேங்கப்பா இப்படியும் கொள்ளையா... திருமணத்தை வியாபாரமாக்கிய கும்பல்... கூட்டுக்களவாணிகளான செட்டப் மாப்பிள்ளையும் புரோக்கரும்! 24X7 ‎செய்திகள் பா.ஜ.க. மாவட்டத் தலைவர் கைது 24X7 ‎செய்திகள் நக்கீரன் பரிந்துரைகள் "‘மாநாடு’ படம் ‘அண்ணாத்த’ படத்தோடு வெளியாகியிருந்தால்..." - கேபிள் சங்கர் பேட்டி! ‘கூழாங்கல்’ மட்டுமில்லை, இவற்றையும் உங்க வாட்ச்லிஸ்ட்டில் சேர்த்துக்கோங்க... சினிமா ரசிகனுக்கான சில சிறந்த சர்வதேச படைப்புகள்!
மெல்லிய, தடிமனான, சொப்பு என உதடுகளின் அமைப்பு, நிறம் ஆகியவற்றை பொருத்து லிப்ஸ்டிக் பூசி மேலும் அழகாக்குங்கள். முகத்துக்கு ஏற்ற மாதிரி இல்லாமல் சிறிதாக சொப்பு போன்ற வாய் உள்ளவர்கள் லிப்ஸ்டிக்கை உதடுகளின் இரு முனைகளிலும் சற்று அதிகப்படியாக பூசுங்கள். வாய் சற்று பெரிதாகத் தெரியும். தடித்த உதடுகள் உள்ளவர்கள் உதட்டுக்கு உட்புறமாக லிப்ஸ்டிக் போடுங்கள். இயற்கை நிற லிப்ஸ்டிக்கை லேசாகத் தடவினால் போதும். மெல்லிய உதடு உள்ளவர்கள் கீழ் உதட்டில் டார்க் நிறமும் லைட் நிறத்தை மேல் உதட்டிலும் பூசுங்கள். பிறகு உதட்டுக்கு வெளியில் பென்சிலால் கோடு போடுங்கள். தடித்த உதடு என்றால் உட்புறமாக போடுங்கள். மாநிற பெண்கள் லைட் ஆரஞ்ச் கலர், கருப்பு நிற பெண்கள் லைட் சிவப்பு, சிவப்பு பெண்கள் லைட் ரோஸ் (பிங்க்) லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம். உதடுகளின் ஈரப்பசையை நீக்கிவிட்டு லிப்ஸ்டிக் போட்டால் சீக்கிரம் அழியாது. காலையில் லைட் கலர் லிப்ஸ்டிக்கும், மாலையில் பளிச் நிறத்திலும் போடுங்கள். ஆடைக்கு ஏற்ற நிறத்தைத் தேர்ந்தெடுத்து போடலாம். டார்க் கலர் போட்டால் வயது அதிகமாக காட்டும். லைட் கலர் கவர்ச்சியாக இருக்கும். வீட்டில் இருக்கும்போது லிப்ஸ்டிக் வேண்டாம்.
மத்திய மலை நாட்டின் பல இடங்களிலும் பெய்து வரும் கடும் மழை கரணமாக நாவலப்பிட்டி நகரின் ஒரு பகுதியானது வௌ்ளத்தில் மூழ்கியுள்ளது. பிரதான வீதிகளில் வௌ்ளமானது இரண்டு அடி வரை உயர்ந்துள்ளதால் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், பல வர்த்தக நிலையங்களும் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. SHARES Share Pin it Tweet Share Share Share Buffer Print About சாதனா RELATED POSTS கடும் மழை! நாவலப்பிட்டி நகர் வெள்ளத்தில் Reviewed by சாதனா on April 29, 2018 Rating: 5 0 கருத்துகள்: Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments ( Atom ) இணைப்புகள் இந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு எங்களுடன் இணைந்திட எம்மவர் நிகழ்வுகள் எம்மவர் நிகழ்வுகள் மேலும்... வலைப்பதிவுகள் தமிழ்நாடு கட்டுரை முன்னிலைச் செய்திகள் தம்பி என்றும் எனக்கு தம்பியே! சி.வி பிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்... ஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு'' ஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ... அனந்தி சசிதரன் அவர்களினால் வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு! வாதரவத்தை அக்காச்சி எழுச்சி கிராமத்தில் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் வடமாகாண சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் வாழ்வ... கொழும்பு துறைமுக நகருக்கான சுரங்க வீதி – 800 மில்லியன் டொலரை முதலீடு செய்கிறது சீனா 1.4 பில்லியன் டொலர் செலவில் அமைக்கப்படும் கொழும்பு துறைமுக நகரை, கொழும்புடன் இணைக்கும் நிலத்தடி சுரங்க வீதி வலையமைப்பில் 800 மில்லியன் டொலரை... ஈழப் பெண்ணுக்கு நஷ்ட ஈடு வழங்கும் இங்கிலாந் வைத்தியசாலை இங்கிலாந்தின் எசெக்ஸ் பிராந்தியத்தில், ஈழக் குடும்பம் ஒன்று, பிரித்தானிய தேசிய வைத்தியசாலைகள் சேவைக்கு எதிராக தாக்கல் செய்திருந்த வழக்கில் வ... மஹிந்தவுக்கு எதிர்க் கட்சித் தலைமைப் பதவியை வழங்குக- ஜி.எல். கோரிக்கை பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியினுடைய பொறுப்பை ஆர். சம்பந்தன் உரிய முறையில் நிறைவேற்றாமையினால், அப்பதவியை கூட்டு எதிரணியின் தலைவர் மஹிந்த ரா... விரக்தியில் கேப்பாபிலவு மக்கள்! சொந்த நிலத்­தில் வாழும் உரிமை மறுக்­க­பட்­டுள்­ளது. நாம் எதற்­குப் பிறந்­தோமோ அவை அனைத்­தும் இல்­லா­மல் ஆக்­கப்­பட்­டுள்­ளன எனவே இனி­யும் போ... முள்ளிவாய்க்காலும் நினைவுச்சின்னமும்! கபில் ஜன­நா­யக வெளியை எதிர்­கொள்­வதில் தமிழர் தரப்பு எந்­த­ள­வுக்குப் பல­வீ­ன­மான நிலையில் உள்­ளது என்­பதை, மீண்டும் ஒரு முறை நினை­வு­ப­டுத... தமிழ் மண்ணிலிருந்து ஹற்றன் நஷனல் வங்கி வெளியேறுகின்ற நிலையை உருவாக்காதீர்! - சிவாஜிலிங்கம் அனுமதி பெறாமல் நிகழ்வை நடத்தியமைக்காக வங்கி அதிகாரிகள் வருத்தம் தெரிவிக்கும் பட்சத்தில், அதனை ஏற்று அவர்களை சேவையில் தொடர அனுமதிக்க வேண்டும்... கண்ணீருடன் விடைப்பெற்றார் கண்டாவளை பிரதேச செயலர் நாகேஸ்வரன்! கடந்த திங்கள் கிழமை கடமை நேரத்தில் மாரடைப்பால் மரணமடைந்த கண்டாவளை பிரதேச செயலர் அமரர் கோபாலபிள்ளை நாகேஸ்வரன் பெரும்பாலகவர்களின் கண்ணீருடன் வ...
ரைகளின் ராஜா என்று அனைவரும் அழைக்கும் கீரை பொன்னா ங்காணி. அந்த அளவிற்கு மருத்துவ குணங்களை கொண்டது இக்கீரை … சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளர க்கூடிய கீரை இது. இதில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்பு ச்சத்து, மினரல் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் அடங்கிய கீரை. பொன்னாங்காணியைதொடர்ந்து 27நாட்களுக்குசாப்பிட்டால் பகலிலு ம் நிலவைப்பார்க்கலாம் என்று ஒரு பழ மொழி உண்டு. அந்த அளவிற்கு கண் பார்வைக்கு மிக துல்லியமாக தெரிய உதவும் கீரை. பொன்னாங்காணியில் சீமை பொன் னாங்காணி என்றும், நாட்டுப் பொன் னாங்காணி எனவும் இருவகை உண் டு. இதில் சீமை பொன்னா ங்கண்ணி பெரும்பாலும் அழகுக்கு வளர்க்கப்படு கிறது. மருத்துவ குணம் குறைவு. பச் சையாக கிடைக்கும் நாட்டு பொன்னா ங்கண்ணி தான் பல அருங்குணங்கள் கொண்டது. உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. பொன்னாங்காணியின் பயன்கள் : இக்கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்ந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும். கீழா நெல்லிச்சாற்றைக் கலந்து நல்லெ ண்ணெய் இட்டுக் காய்ச்சி தலை க்குத் தேய்த்து குளித்து வந்தால் கண் நோய்கள் விலகும். சொறி, சிரங்குகளுக்கு சிறந்த மருந்து. உடலை, தோலைப் பளபள என்று மாற்றுவதில் பெரும்பங்குண்டு. மூல நோய், மண்ணீரல் நோய்களை குணப்படுத்த ஏற்றது. இன்று நாம் உண்ணும் உணவிலும் சுவாசிக்கும் காற்றிலும் இரசாயன ம் கலந்திருப்பதால் அவை இரத்தத்தில் நேரடியாக கலந்துவிடுகின்றன. இதனால் இரத்தம் அசுத்தமடைகின்றது. பொன்னாங்காணிக் கீரையை நன்றாக அலசி சிறி தாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங் காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேக வைத்து மசியல் செய்து சாப்பிட்டுவந்தால் அசுத்த இரத்தம் சுத்த மாகும். உடலுக்கு புத்துணர்ச்சி யைத் தரும். அதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும். கண்க ளில் எரிச்சல் இருந்துகொண் டே இருக்கும். இவர்கள் பொன்னாங்கண்ணிக் கீரை யை பொரியல் செய்து சாப்பிட்டு வந் தால் இப்பிரச்சி னை நீங்கும். கூந்தல் வளர தினமும் பொன்னாங்காணி தைலம் தயாரிக்கும் முறை பொன்னாங்காணி இலையை நிழலில் உலர்த்தி காயவைத்து – 20 கிராம், அருகம்புல் காய்ந்தது – 10 கிராம், செம் பருத்தி பூ காய்ந்தது–10 கிராம் எடுத்து 1/2 லிட்ட ர் தேங்காய் எண்ணெயில் நன்கு காய்ச்சி பாட்டி லில் அடைத்து தினமும் உபயோகிக்கலாம். பொன்னாங்காணிக் கீரை, வாய் துர்நாற் றத்தை நீக்கும். இதயத்திற்கும் மூளைக் கும் புத்துணர்வு ஊட்டும் .மேனியை பளபளக்கச் செய்யும். நோய் காரணமாக பலவீனமடைந்தவர்கள் டானிக் போன்று இக்கீரையை உண்டு வர உடலில் ரத்த உற்பத்தி பெருகி நல்ல பலம் சேரும். பொன்னாங்காணி இலைச்சாறு, நல்லெண்ணெய் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து அத்துடன் அதிமதுரம், கோசுடம், செங்கழு நீர்க்கிழங்கு, கருஞ்சீ ர கம் வகைக்கு 20 கிராம் எடுத்து பாலில் அரைத்துப் போட்டு சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி 4 நாளுக்கு ஒருமுறை தலைக்குக்குளித்துவர உட்காய்ச்சல், உடல் சூடு, கைகால் உடல் எரிச்சல், மண் டைக் கொதிப்பு, கண் எரிச்சல், உடம்புவலி, வயிற் றுவலி குணமாகும். பொன்னாங்காணி வேர் ஒரு எலுமிச்சைப் பழம் அளவு எடுத்து அரைத் து எருமைப்பால் 2 படியில் கலக்கிக் காய்ச்சி தயிராக்கிக் கடைந்து எடு த்த வெண்ணெயை 3 நாள் காலையில் சாப்பிட்டு மோரையும் தாகத்து க்குக் குடித்துவர இரத்தம் கலந்து சிறுநீர் போகுதல் குணமாகும். உடலில் உண்டாகும் வெப்பத்தின் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்த மூர்ச்சை இவற்றை நீக்கவல்ல கீரை, குறிப்பாக ஆண்களுக்கு விந்தி னைப் பெருக்கிக்கொடுக்க வல்லவீரியம் நிறையவே இக்கீரைக்கு உண்டு. எனவே தான் தமிழ் மூலிகை மருத்துவம் இக் கீரையை விந்து கட்டி எனப் பேசுகிறது. இந்தக் கீரை வயல் வரப்புகளிலும், கிண ற்று மேடுகளிலும், குளம் குட்டைகளில் கரைகளிலும், வாய்க்கால் கரைகளிலும் இயற்கையாக வளர்ந்து கிடப் பதைக் காணலாம். பலன்கள் கிடைக்க தொடர்ந்து உபயோகிக்க வேண் டும். ஒருநாள், இரண்டு நாள் சாப்பிட்டுவிட்டு நிறுத்தினால் முழுப்பலன் கிடை க்காது. குறைந்தது 12 மாதம்முதல் 213 மாத காலம் எந்த மூலிகைக்கும் தேவை. இது விதை2விருட்ச‌ம் இணையத்தின் பதிவுஅல்ல‍! 13.06285280.274186 Post Views: 1,059 Share this: Tweet WhatsApp Print Share Chat Telegram Pocket Share on Tumblr instagram Like this: Like Loading... Related Posted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, மரு‌த்துவ‌ம், விழிப்புணர்வு Tagged அரிய, அரியத் தகவல்கள், கீரைகளின் ராஜா, கீரைகளின் ராஜா பொன்னாங்காணி கீரை - அரியத் தகவல்கள், தகவல்கள், பொன்னாங்காணி கீரை Prevஉலகம் முழுவதும் அதிவேகமாக பரவிவரும் வைரஸ், நடிகை த்ரிஷா – அதிர வைக்கும் செய்தி Next“யார்சொன்ன‍து எனக்கு வயது 26-ன்னு. . . எனக்கு 19 தான் ஆகுது!” – ஆவேசமான‌ நடிகை ஸ்ரீதிவ்யா Leave a Reply Cancel reply சங்கு – அரிய தகவல் Search for: Advertisement Categories Categories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (164) அழகு குறிப்பு (707) ஆசிரியர் பக்க‍ம் (292) “ஆவிகள் இல்லையடி பாப்பா!” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே!” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .!” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா? (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்! (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா? (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா!!! (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (292) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,166) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,916) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,455) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,673) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,420) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (586) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97) Recent Comments Karan on தலைப்புச் செய்திகள் Elakya Kayah on மச்சம் – பல அரிய தகவல்கள் Malathy on நாட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால்… Prabhakaran S on விபரீதத்தின் உச்ச‍ம் – மரணம் அனுப்பிய தூதுவன் க‌பம் – ஓரலசல் Rithika on அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (10/12) – இக்கடிதமும், இதற்கான பதிலும் பெற்றோருக்கான எச்சரிக்கை மணி த. பாக்கியராஜ் on புல எண் (Survey Number) என்றால் என்ன? p praveen kumar on ரெட்டை ஜடை போடுவது எப்ப‍டி?- செய்முறை காட்சி – வீடியோ Prasanth on பஜாஜ் டிஸ்கவரி நவீன டெக்னாலஜி பைக் Ramesh on எண்களின் தமிழ் வடிவ ஓலிகளை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள . . . V2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள் Archives Archives Select Month June 2021 (2) May 2021 (2) April 2021 (1) March 2021 (2) February 2021 (4) January 2021 (3) December 2020 (12) November 2020 (9) October 2020 (4) September 2020 (6) August 2020 (19) July 2020 (17) June 2020 (29) May 2020 (31) April 2020 (50) March 2020 (43) February 2020 (44) January 2020 (27) December 2019 (40) November 2019 (23) October 2019 (53) September 2019 (49) August 2019 (61) July 2019 (56) June 2019 (79) May 2019 (148) April 2019 (109) March 2019 (71) February 2019 (71) January 2019 (77) December 2018 (72) November 2018 (56) October 2018 (43) September 2018 (30) August 2018 (23) July 2018 (27) June 2018 (47) May 2018 (41) April 2018 (90) March 2018 (73) February 2018 (64) January 2018 (101) December 2017 (101) November 2017 (81) October 2017 (82) September 2017 (78) August 2017 (50) July 2017 (37) June 2017 (24) May 2017 (28) April 2017 (27) March 2017 (50) February 2017 (33) January 2017 (33) December 2016 (45) November 2016 (72) October 2016 (52) September 2016 (46) August 2016 (44) July 2016 (66) June 2016 (40) May 2016 (47) April 2016 (54) March 2016 (51) February 2016 (48) January 2016 (62) December 2015 (82) November 2015 (56) October 2015 (70) September 2015 (60) August 2015 (62) July 2015 (70) June 2015 (100) May 2015 (131) April 2015 (99) March 2015 (63) February 2015 (90) January 2015 (95) December 2014 (114) November 2014 (125) October 2014 (90) September 2014 (116) August 2014 (112) July 2014 (96) June 2014 (90) May 2014 (106) April 2014 (100) March 2014 (95) February 2014 (146) January 2014 (220) December 2013 (157) November 2013 (179) October 2013 (247) September 2013 (277) August 2013 (260) July 2013 (238) June 2013 (127) May 2013 (177) April 2013 (161) March 2013 (155) February 2013 (90) January 2013 (98) December 2012 (145) November 2012 (146) October 2012 (130) September 2012 (143) August 2012 (163) July 2012 (205) June 2012 (192) May 2012 (217) April 2012 (257) March 2012 (292) February 2012 (203) January 2012 (181) December 2011 (179) November 2011 (177) October 2011 (151) September 2011 (145) August 2011 (232) July 2011 (220) June 2011 (250) May 2011 (281) April 2011 (182) March 2011 (297) February 2011 (200) January 2011 (305) December 2010 (213) November 2010 (54) October 2010 (253) September 2010 (180) August 2010 (58)
`சங்கி’, `பி டீம்’, ஆவேசம்... சூரப்பா விவகாரத்தில் அறத்தின் பக்கம்தான் நிற்கிறாரா கமல்? |kamalhasan supporting surappa is criticized - Vikatan Save the vikatan web app to Home Screen tap on Add to home screen. X READ IN APP Login செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் விளையாட்டு கிரிக்கெட் கால்பந்து ஐ.பி.எல் ஆன்லைன் தொடர்கள் New My News ராசி காலண்டர் மேலும் மெனுவில் Search Published: 09 Dec 2020 2 PM Updated: 09 Dec 2020 2 PM `சங்கி’, `பி டீம்’, ஆவேசம்... சூரப்பா விவகாரத்தில் அறத்தின் பக்கம்தான் நிற்கிறாரா கமல்? ஆ.பழனியப்பன் ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் Use App கமல் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை 2018-ம் ஆண்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்தார். அப்போது, தமிழர் அல்லாத ஒருவர் துணைவேந்தராக நியமிக்கப்படுவது ஏன் என்ற கேள்வியைப் பலர் எழுப்பினர். உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை 2018-ம் ஆண்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்தார். அப்போது, தமிழர் அல்லாத ஒருவர் துணைவேந்தராக நியமிக்கப்படுவது ஏன் என்ற கேள்வியைப் பலர் எழுப்பினர். சூரப்பாவின் நியமனத்துக்குப் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்கலைக்கழகம் உயர் சிறப்பு அந்தஸ்தை அடைவது குறித்து மத்திய அரசுக்குத் தன்னிச்சையாக சூரப்பா கடிதம் எழுதினார். அதுவும் சர்ச்சையைக் கிளப்பியது. தற்போது அவர் மீது ஊழல் புகார் எழுந்திருக்கிறது. பணி நியமனங்களில் பணம் பெற்றது, கல்லூரிகளுக்கான பொருள்கள் வாங்கியதில் முறைகேடு செய்தது என அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீது பல்வேறு முறைகேடுகள் இருக்கின்றன. அந்தப் புகார்களை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக்குழுவை தமிழக அரசு நியமித்திருக்கிறது. இந்த விசாரணைக்குழு மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்க வேண்டுமென்பது தமிழக அரசின் உத்தரவு. நீதிபதி கலையரசன்குழு தனது விசாரணையை மேற்கொண்டுவருகிறது. கமல் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான சூரப்பாவை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. இந்தநிலையில், சூரப்பாமீது விசாரணை நடத்தக் கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடிதம் எழுதியிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. அதில், சூரப்பா குறித்து விசாரிப்பதற்கு குழு அமைத்தது நியாயமற்றது என்றும், தனக்குத் தெரியாமல் அரசு குழு அமைந்தது வருத்தமளிக்கிறது என்றும் ஆளுநர் கூறியிருக்கிறார். இந்தநிலையில், சூரப்பாவுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், `சூரப்பா என்ன இன்னொரு நம்பி நாராயணனா?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், `நேர்மையாக இருந்தால் இதுதான் நிலையா... நேர்மையாக இருப்பவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நான் கேள்வி கேட்பேன்’ என்று அவர் ஆவேசமாகப் பேசியிருந்தார். அத்துடன், தமிழக அரசுமீது அவர் கடும் விமர்சனங்களை எழுப்பியதுடன், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்ழகன் மீதும் குற்றம்சாட்டினார். `வளைந்து கொடுக்காதவர், அதிகாரத்துக்கு முன் நெளிந்து குழையாதவர், தமிழகப் பொறியியல் கல்வியை உலகத்தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்று முனைந்தவர். பொறுப்பார்களா நம் ஊழல் திலகங்கள்... வளைந்து கொடுக்கவில்லையென்றால் ஒடிப்பதுதானே இவர்கள் வழக்கம்... எவனோ அடையாளத்தை மறைத்துக்கொண்டு ஒரு பேடி எழுதிய மொட்டைக்கடிதத்தின் அடிப்படையில் விசாரணைக்குழு அமைத்திருக்கிறார்கள். மொட்டையில் முடி வளராததால் மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் கொடுத்து ஏதேனும் வில்லங்கம் சிக்குமா என்று கடை போட்டுக் காத்திருக்கிறார்கள். முறைகேடாக அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்தவர்களையும், பல்கலைக்கழக வாகனங்களைப் பயன்படுத்தியவர்களையும் விசாரித்துவிட்டீர்களா? கமல் உயர் கல்வி அமைச்சர் 60 லட்சம் வாங்கிக்கொண்டுதான் பேராசிரியர்களை பணி நியமனம் செய்கிறார் என பாலகுருசாமி ஜூனியர் விகடன் இதழில் குற்றம் சாட்டினாரே... விசாரித்துவிட்டீர்களா? உள்ளாட்சித்துறை, பால்வளத்துறை, கால்நடைத்துறை, சுகாதாரத்துறை என அத்தனை துறை அமைச்சர்களும் ஊழலில் திளைக்கிறார்கள் எனச் சமூகச் செயற்பாட்டாளர்களும், எதிர்க்கட்சியினரும், ஊடகங்களும் அன்றாடம் குரல் எழுப்புகிறார்களே... அதை விசாரித்துவிட்டீர்களா? Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். தேர்வு நடத்துவதும், தேர்ச்சி அறிவிப்பதும் கல்வியாளர்களின் கடமை. கரைவேட்டிகள் இங்கும் மூக்கை நுழைப்பது ஏன்?இதுவரை காசு கொடுத்து ஓட்டு வாங்கியவர்கள் இப்போது மதிப்பெண்களைக் கொடுத்து மாணவர்களை வளைக்கப் பார்க்கிறார்களா... சூரப்பாவின் கொள்கை நிலைப்பாடு, அரசியல் செயல்பாடு குறித்து நமக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். ஆனால், ஒருவன் தன் நேர்மைக்காக வேட்டையாடப்பட்டால், கமல்ஹாசன் ஆன நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன். சகாயம் தொடங்கி சந்தோஷ்பாபு வரை இவர்களால் வேட்டையாடப்பட்டவர்களின் பட்டியல் பெரிது. பேரதிகாரிகள் இவர்களுடன் போராடிக் களைத்து விருப்ப ஓய்வு பெறுகிறார்கள் என்றால், சாமானியனின் கதி என்ன... இதை இனிமேலும் தொடரவிடக் கூடாது. இன்னொரு நம்பி நாராயணன் இங்கு உருவாகவிடக் கூடாது. சூரப்பா நேர்மைக்கும் ஊழலுக்குமான மோதலில், அறத்தின் பக்கம் நிற்பவர்கள் தங்கள் மௌனம் கலைத்துப் பேசியே ஆக வேண்டும். குரலற்றவர்களின் குரலாக நாம்தான் மாற வேண்டும். நேர்மைதான் நமது சொத்து. அதையும் விற்று வாயில் போட்டுவிடத் துடிக்கும் இந்த ஊழல் திலகங்களை ஓட ஓட விரட்ட வேண்டும். வாய்மையே வெல்லும்” என்று பேசியிருந்தார் கமல்ஹாசன். தமக்கு ஆதரவாகப் பேசிய கமல்ஹாசனுக்கு சூரப்பா நன்றி தெரிவித்தார். `என் நேர்மை, அர்ப்பணிப்பு, கல்வித்துறைக்கான எனது சேவை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு ஆதரவளிப்பது என்பது எனக்கான ஆதரவு அல்ல, இந்த நாட்டின் எதிர்காலத்துக்கான ஆதரவு அது. பஞ்சாப் ஐஐடி இயக்குநராக நான் பணியாற்றியபோது, ஐஐடி-யில் பஞ்சாப் மாணவர்கள் இடம்பெற என்னென்ன கல்வி சார்ந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அப்போதைய முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் என்னிடம் ஆலோசனை கேட்பார். ஆனால், தமிழகத்தில் அது போன்று எதுவும் நடக்கவில்லை. நான் பணியாற்றிய அனைத்து இடங்களிலும் எனக்கு நற்பெயரே இருக்கிறது’ என்றார். ``சூரப்பா விவகாரத்தில் உண்மை நிலை தெரியாமல் நடிகர் கமல்ஹாசன் பேசிக்கொண்டிருக்கிறார். கட்சியை ஆரம்பித்து தேர்தலைச் சந்திக்கபோகிறோம் என்பதற்காக எதை எதையோ அவர் பேசிக்கொண்டிருக்கிறார்’’ என்றும் தமிழக உயர் கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் பதிலடி கொடுத்தார். மேலும், ``அவரது மடியில் கனமில்லை என்றால், வழியில் அவர் பயப்படத் தேவையில்லை. பேராசிரியர்கள் நியமனத்தில் அரசுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. அதேபோல் துணைவேந்தர் நியமனத்துக்கும் அரசுக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை’’ என்றார். கமல் சூரப்பாவுக்கு ஆதரவாகக் கமல் களமிறங்கியதையும் ஆக்ரோஷத்துடன் பேசியதையும் சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்தனர். அதையடுத்து கமல் தன் ட்விட்டர் பக்கத்தில், ``அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து 'சங்கி', 'பி' டீம்' என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது. வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்துகொள்வதில் ஆச்சர்யமில்லை. திஹாரையும், பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா?" என்று கூறியிருக்கிறார். மேலும், ``தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம். ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன்’’ என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யாவிடம் பேசினோம். ``சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அது குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர்குழுவை அமைத்திருக்கிறது. அதற்கு எதிராகக் கமல் கடுமையாகக் கொந்தளிக்கிறார். கமல் குரலும் ஆளுநர் குரலும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. சூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்த பிறகு, சூரப்பாவை ஆதரித்துப் பேசுகிற எல்லோருமே நேரடியாக பி.ஜே.பி-யாக இருக்கிறார்கள். அல்லது பி.ஜே.பி-யின் கருத்துகளை ஆதரிப்பவர்களாக இருக்கிறார்கள். அறம் என்பதற்கு கமல்ஹாசனின் வரையறை என்னவென்பது தெரியவில்லை. அறம் என்பது வெறுமனே சூரப்பாவிடமிருந்து தொடங்குவது அல்ல. அறம் என்பது ஒருவர் தன் வாழ்க்கையில் தொடர்ச்சியாகக் கடைப்பிடிக்கக்கூடிய மதிப்பீடுகள் சார்ந்த விஷயம். ஜெயலலிதா காலத்திலும் ஏராளமான ஊழல்கள் நடந்தன. அப்போது அதற்கு எதிராக கமல் பேசினாரா... கட்சி ஆரம்பித்த பிறகுதான் அறம் வர வேண்டுமா? ஆதவன் தீட்சண்யா பீமா கோரேகான் வழக்கு குறித்து கமல் பேசியிருக்கிறாரா? ஆட்சியாளர்களை விமர்சிக்கும் வழக்கறிஞர்களும், எழுத்தாளர்களும் கடுமையான ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கிறார்களே... அது குறித்து ஏன் கமல் பேசவில்லை? சூரப்பாவுக்காக இவ்வளவு தூரம் கொந்தளிக்க வேண்டிய அவசியம் என்ன... சூரப்பா மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதால் விசாரணை நடத்துகிறார்கள். விசாரணைக்கு முன்பாகவே ஏன் இவர் பதறுகிறார்... சூரப்பா என்ன விசாரணைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவரா? `சங்கி‘ என்று தம்மை விமர்சிக்கிறார்கள் என்று கமல் குறிப்பிடுகிறார். எந்தக் கருத்துடன் கமல் இணைகிறார் என்பதைவைத்துத்தான் அப்படிச் சொல்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டபோதே எதிர்ப்பு எழுந்தது. அப்போது, சூரப்பாவுக்கு ஆதரவாகப் பேசிய அனைவரும் பா.ஜ.க-வினரும் பா.ஜ.க-வின் கருத்துகளுக்கு உடன்படுபவர்கள்தான். இப்போது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தபோதும் சூரப்பாவுக்கு ஆதரவாக அவர்கள்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். கமலும் அதே குரலில் பேசுகிறார். எனவே, அந்த விமர்சனம் வருகிறது. கமல் தான் ஒரு பெரியாரியவாதி என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டு, பா.ஜ.க உட்பட எந்தக் கட்சியுடனும் சேருவேன் என்று கமல் சொல்கிறார். அதில் என்ன அறம் இருக்கிறது... தமிழகத்தில் சாதிய ஒடுக்குமுறைகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. அங்கு போய் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதும், அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதும்தானே அறம்... நடுநிலை என்பது அறம் கிடையாது. அது கண்டும் காணாமல் இருப்பது” என்றார் ஆதவன் தீட்சண்யா. Also Read ரஜினி வருகை: `அ.தி.மு.க கூட்டணி உடைய வாய்ப்பு... தி.மு.க கூட்டணியில் பேர வலிமை கூடும்!‘ இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளரான முரளி அப்பாஸிடம் பேசினோம். ``மக்கள் நீதி மய்யத்துக்கும், எங்கள் தலைவர் கமல்ஹாசனுக்கும் எதிராக அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் ஓரணியில் நிற்கின்றன. இருவருமே எங்கள் மீது பாய்கிறார்கள். எங்களை பலவீனப்படுத்த முயல்கிறார்கள். துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டபோது, அதற்கு எங்கள் தலைவர் எதிர்ப்பு தெரிவித்தார். அதன் பிறகு பகவத்கீதை விவகாரம், மகனுக்கு பதவி கொடுத்த விவகாரம் போன்றவற்றில் நிர்வாகரீதியில் அரசு நடவடிக்கை எடுக்கட்டும். அதை யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை. இப்போது சூரப்பாவுக்கு எதிராக விசாரணை கமிஷன் அமைத்திருப்பது ஊழல் குற்றச்சாட்டுக்காக. நேரடியாக ஒருவர் ஊழல் குற்றச்சாட்டை எழுப்பியிருந்தால், அதை விசாரிக்க ஆணையம் அமைத்திருந்தால் யாருக்கும், எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், மொட்டைக்கடிதாசிபோல யாரென்றே தெரியாமல் ஒருவர் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு விசாரணை ஆணையம் அமைப்பது நியாயமா... அதைத்தான் எங்கள் தலைவர் கேட்கிறார். நேர்மையான அதிகாரிகள்மீது இப்படியான ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால், நேர்மையான பல அதிகாரிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, இந்த மாதிரியான பிரச்னையில் விட்டுக்கொடுக்க முடியாது என்ற ஆத்திரத்தில் எழுந்த குரல்தான் இது. முரளி அப்பாஸ் `சங்கி’ என்றும் `பி டீம்’ என்றும் சொல்கிறார்கள். கடந்த இரண்டரை ஆண்டுகளில் எங்கள் அளவுக்கு பா.ஜ.க-வை விமர்சித்தவர்கள் யாரும் கிடையாது. மோடிக்கு எதிராக கமல் பேசுகிறார் என்பது இந்தியா முழுவதுக்கும் தெரிந்த விஷயம். அதற்கு மோடியே பதில் சொல்ல வேண்டிய கட்டாயம்கூட எழுந்திருக்கிறது. மேலும், எங்களை அதிகப்படியாக எதிர்ப்பவர்களும் பா.ஜ.க-வினராகத்தான் இருப்பார்கள். `சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து’ என்று தேர்தலுக்கு நான்கு நாள்களுக்கு முன்பு எங்கள் தலைவர் பேசினார். அந்த நேரத்தில் உடனடியாகப் பதற்றப்பட்டது பா.ஜ.க-தான். இப்படிப்பட்ட வார்த்தையை, எங்களைப் பார்த்து `சங்கி’ என்று சொல்பவர்கள் என்றைக்காவது சொல்லியிருக்கிறார்களா? அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் எங்களை முடக்குவதற்கு இது போன்ற அவதூறுகளைச் செய்துவருகின்றன. மாறி மாறி அதிகாரத்துக்கு வந்த இருவரும், இனி அதிகாரம் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் எங்கள்மீது பாய்கிறார்கள். இதை நாங்கள் அரசியல்ரீதியாக எதிர்கொள்வோம்” என்றார் முரளி அப்பாஸ். தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Makkal Needhi Maiam m.k. surappa Kamal Haasan ADMK corruption ஆ.பழனியப்பன்Follow Write: Politics / Social Issues / Economy / International Affairs Interests: Politics / Books / Music இதழியல் பணியில் 24 ஆண்டுகளாக இருந்துவருகிறார். அரசியல், சமூகம், பொருளாதாரம் தொடர்பாக கட்டுரைகள் எழுதிவருவதுடன், முக்கிய அரசியல் ஆளுமைகளை நேர்காணல் செய்திருக்கிறார். The Krishnaswamy Memorial Award for Journalism of Change - 2013 விருது மற்றும் Justice V.R. Krishna Iyer Centeneray Award - 2015 for Social Justice and Human Rights Crusade விருது பெற்றுள்ளார்.
முகப்பு / குளியலறை குழாய்கள் / சென்டர்செட் குளியலறை குழாய்கள் / பாப்-அப் வடிகால் சட்டசபையுடன் வாவ் சென்டர்செட் குளியலறை குழாய் பாப்-அப் வடிகால் சட்டசபையுடன் வாவ் சென்டர்செட் குளியலறை குழாய் அமெரிக்க டாலர்46.99 விற்கப்பட்டது: 49 விமர்சனங்கள்: 26 என்ன யூரோ அமேசான் யு. எஸ் அமேசான் சி.ஏ. சென்ட்ரெசெட் குளியலறை குழாய் விவரங்கள்: 4-இன் மைய இடம் அடைப்புக்குறி மெட்டல் வடிகால் சட்டசபை ADA இணக்க நெம்புகோல் பயன்பாட்டை எளிதாக்குகிறது எஃகு கட்டப்பட்டது லிஃப்ட் கம்பம் சேர்க்கப்பட்டுள்ளது 2321400 நிறுவல் வழிமுறைகள் வழங்க ஒரு நாட்டைத் தேர்ந்தெடுக்கவும்ஆப்கானிஸ்தான்ஆலந்து தீவுகள்அல்பேனியாஅல்ஜீரியாஅமெரிக்க சமோவாஅன்டோராஅங்கோலாஅங்கியுலாஅண்டார்டிகாஆன்டிகுவா மற்றும் பார்புடாஅர்ஜென்டீனாஆர்மீனியாஅரூபஆஸ்திரேலியாஆஸ்திரியாஅஜர்பைஜான்பஹாமாஸ்பஹ்ரைன்வங்காளம்பார்படாஸ்பெலாரஸ்Belauபெல்ஜியம்பெலிஸ்பெனின்பெர்முடாபூட்டான்பொலிவியாபொன்னேர், செயிண்ட் யூஸ்டடியஸ் மற்றும் சபாபோஸ்னியா ஹெர்ஸிகோவினாபோட்ஸ்வானாபொவேட் தீவுபிரேசில்பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்புரூணைபல்கேரியாபுர்கினா பாசோபுருண்டிகம்போடியாகமரூன்கனடாகேப் வேர்ட்கேமன் தீவுகள்மத்திய ஆப்பிரிக்க குடியரசுசாட்சிலிசீனாகிறிஸ்துமஸ் தீவுகோகோஸ் (கீலிங்) தீவுகள்கொலம்பியாகொமொரோசுகாங்கோ (ப்ரஜாவில்)காங்கோ (கின்ஷாசா)குக் தீவுகள்கோஸ்டா ரிகாகுரோஷியாகியூபாகுராசோசைப்ரஸ்செ குடியரசுடென்மார்க்ஜிபூட்டிடொமினிக்காடொமினிக்கன் குடியரசுஎக்குவடோர்எகிப்துஎல் சல்வடோர்எக்குவடோரியல் கினிஎரித்திரியாஎஸ்டோனியாஎத்தியோப்பியாபோக்லாந்து தீவுகள்பரோயே தீவுகள்பிஜிபின்லாந்துபிரான்ஸ்பிரஞ்சு கயானாபிரஞ்சு பொலினீசியாபிரஞ்சு தென் பகுதிகள்காபோன்காம்பியாஜோர்ஜியாஜெர்மனிகானாஜிப்ரால்டர்கிரீஸ்கிரீன்லாந்துகிரெனடாகுவாதலூப்பேகுவாம்குவாத்தமாலாகர்ந்ஸீகினிகினியா-பிசாவுகயானாஹெய்டிஹேர்ட் மற்றும் மெக்டொனால்டுஹோண்டுராஸ்ஹாங்காங்ஹங்கேரிஐஸ்லாந்துஇந்தியாஇந்தோனேஷியாஈரான்ஈராக்அயர்லாந்துஐல் ஆஃப் மேன்இஸ்ரேல்இத்தாலிஐவரி கோஸ்ட்ஜமைக்காஜப்பான்ஜெர்சிஜோர்டான்கஜகஸ்தான்கென்யாகிரிபட்டிகுவைத்கிர்கிஸ்தான்லாவோஸ்லாட்வியாலெபனான்லெசோதோலைபீரியாலிபியாலீக்டன்ஸ்டைன்லிதுவேனியாலக்சம்பர்க்மக்காவுமடகாஸ்கர்மலாவிமலேஷியாமாலத்தீவுமாலிமால்டாமார்சல் தீவுகள்மார்டீனிக்மவுரித்தேனியாமொரிஷியஸ்மயோட்டேமெக்ஸிக்கோமைக்குரேனேசியமால்டோவாமொனாகோமங்கோலியாமொண்டெனேகுரோமொன்செராட்மொரோக்கோமொசாம்பிக்மியான்மார்நமீபியாநவ்ரூநேபால்நெதர்லாந்துபுதிய கலிடோனியாநியூசீலாந்துநிகரகுவாநைஜர்நைஜீரியாநியுவேநோர்போக் தீவுவட கொரியாவடக்கு மாசிடோனியாவட மரியானா தீவுகள்நோர்வேஓமான்பாக்கிஸ்தான்பாலஸ்தீன பிரதேசம்பனாமாபப்புவா நியூ கினிபராகுவேபெருபிலிப்பைன்ஸ்பிட்கன்போலந்துபோர்ச்சுகல்புவேர்ட்டோ ரிக்கோகத்தார்ரீயூனியன்ருமேனியாரஷ்யாருவாண்டாசான் டோம் மற்றும் பிரின்சிப்பிசெயிண்ட் பார்தேலெமிசெயிண்ட் எலனாசெயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்செயிண்ட் லூசியாசெயிண்ட் மார்ட்டின் (டச்சு பகுதி)செயிண்ட் மார்டின் (பிரஞ்சு பகுதி)செயின்ட் பியரி மற்றும் மிக்குயிலான்செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனடைன்ஸ்சமோவாசான் மரினோசவூதி அரேபியாசெனிகல்செர்பியாசீசெல்சுசியரா லியோன்சிங்கப்பூர்ஸ்லோவாகியாஸ்லோவேனியாசாலமன் தீவுகள்சோமாலியாதென் ஆப்பிரிக்காதென் ஜோர்ஜியா / சான்ட்விச் தீவுகள்தென் கொரியாதெற்கு சூடான்ஸ்பெயின்இலங்கைசூடான்சுரினாம்ஸ்வால்பர்டு மற்றும் ஜான் மாயன்சுவாசிலாந்துஸ்வீடன்சுவிச்சர்லாந்துசிரியாதைவான்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துகிழக்கு திமோர்டோகோடோக்கெலாவ்டோங்காடிரினிடாட் மற்றும் டொபாகோதுனிசியாதுருக்கிதுர்க்மெனிஸ்தான்டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள்துவாலுஉகாண்டாஉக்ரைன்ஐக்கிய அரபு நாடுகள்யுனைட்டட் கிங்டம் (யுகே)ஐக்கிய அமெரிக்கா (யு.எஸ்)யுனைடெட் ஸ்டேட்ஸ் (யுனைடெட் ஸ்டேட்ஸ்) மைனர் தூர தீவுகள்உருகுவேஉஸ்பெகிஸ்தான்Vanuatuவத்திக்கான்வெனிசுலாவியட்நாம்விர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்)வர்ஜின் தீவுகள் (யு.எஸ்)வலிசும் புட்டூனாவும்மேற்கு சகாராஏமன்சாம்பியாஜிம்பாப்வே அளவு - + மீண்டும் வண்டியை பெட்டகத்தில் சேர் விளக்கம் விளக்கம் அம்சங்கள் பொருட்களை வாங்கவும் கப்பல் மடு 2320400 க்கான குளியலறை குழாய் ஒருபோதும் நிலையான சிக்கல்களை உருவாக்காது. ஒரு பூச்சுடன் மின்மயமாக்கப்பட்ட, கப்பல் மூழ்குவதற்கான குளியலறை குழாய் ஒருபோதும் ஆக்ஸிஜனேற்றத்தைப் பெறாது. மேம்படுத்தப்பட்ட புஷ் & சீல் பாப்-அப் வடிகால் சேகரிப்பு மற்றும் சி.யூ.பி.சி உரிமம் பெற்ற குழாய் விநியோக குழல்களை உள்ளடக்கியது. உயர் வில் முளை அதிக அனுமதி மற்றும் மடுவுக்கு அதிக அணுகலை வழங்குகிறது. எளிய நிறுவலுக்கான 3-அங்குல சென்டர்செட் தளவமைப்புடன் 4-துளை அடைப்புக்குறி. துளை அளவு: 30-36 மிமீ; மேக்ஸ் டெக் தடிமன்: 30 மி.மீ. எளிய ஓட்டம் மற்றும் வெப்பநிலை கட்டுப்படுத்திக்கு இரண்டு நெம்புகோல் கையாளுகிறது. பிரீமியம் பொருள் கட்டுமானம் நீடித்த மற்றும் நம்பகமான நிக்கல் பூச்சு. விவரக்குறிப்புகள் எஸ்.கே.யூ: 2321400 வகைகள் சென்டர்செட் குளியலறை குழாய்கள், குளியலறை குழாய்கள் குறிச்சொற்கள்: 2 கையாளுங்கள், 4 அங்குல, பிரஷ்டு நிக்கல் விவரக்குறிப்பு பூச்சு பிரஷ்டு நிக்கல் எடை 2.51 பவுண்டுகள் தொகுப்பு பரிமாணங்கள் 12.17 x 8.78 x 3.07 அங்குலங்கள் பொருள் துத்தநாக கலவை / எஃகு / பித்தளை முறை 2 கைப்பிடிகள் நிறுவல் முறை டெக் மவுண்ட் ஸ்பவுட் உயரம் 20 அங்குலங்கள் ஸ்பவுட் ரீச் 20 அங்குலங்கள் பொருள் கையாள துத்தநாக கலவை செயல்திறன் விளக்கம் குளிர்ந்த / சூடான நீர் சேர்க்கப்பட்ட கூறுகள் குளியலறை குழாய் / பாப் அப் வடிகால் நீயும் விரும்புவாய் கண்ணோட்டம் பெட்டகத்தில் சேர் வாவ் குளியலறை மூழ்கி குழாய் பிரஷ்டு நிக்கல் அகலங்கள் ... அமெரிக்க டாலர்58.99 விற்பவர்: 62 கண்ணோட்டம் பெட்டகத்தில் சேர் வெள்ளை சதுர பேசின் மிக்சர் குழாய்கள் அமெரிக்க டாலர்79.99 விற்பவர்: 12 கண்ணோட்டம் பெட்டகத்தில் சேர் வாவ் வெசெல் மடு குழாய்கள் மேட் பிளாக் அமெரிக்க டாலர்83.99 விற்பவர்: 17 கண்ணோட்டம் பெட்டகத்தில் சேர் வாவ் குளியலறை கப்பல் குழாய்கள் பிரஷ்டு நிக்கல் அமெரிக்க டாலர்81.99 விற்பவர்: 49 எல்லா தயாரிப்புகளும் சமையலறை குழாய்கள் சமையலறை குழாய்களை இழுக்கவும் சமையலறை குழாய்களை வெளியே இழுக்கவும் பாட் ஃபில்லர் சமையலறை குழாய்கள் பார் மடு சமையலறை குழாய்கள் குளியலறை குழாய்கள் ஒற்றை கைப்பிடி குளியலறை குழாய்கள் குளியலறை குழாய்களை வெளியே இழுக்கவும் சென்சார் குளியலறை குழாய்கள் மறைக்கப்பட்ட சுவர்-மவுண்ட் சிங்க் குழாய்கள் நீர் வீழ்ச்சி குளியலறை குழாய்கள் சென்டர்செட் குளியலறை குழாய்கள் பரவலான குளியலறை குழாய்கள் சமையலறை மூழ்கும் மழை குழாய்கள் கருவிகள் குழாய் பாகங்கள் குளியலறை பாகங்கள் ஒரு செய்தி அனுப்பவும் உள்ளடக்கம்: ஏற்றுதல் ... தொடர்பு சேர்: 8 தி கிரீன் ஸ்டீ ஏ, கென்ட், டோவர் சிட்டி, டிஇ, 19901. அமெரிக்கா தொலைபேசி: (213) 290-1093 மின்னஞ்சல்: sales@wowowfaucet.com வாடிக்கையாளர் சேவை தனியுரிமை கொள்கை கப்பல் கொள்கை திரும்பப்பெறும் கொள்கை பணம் செலுத்தும் முறைகள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் நிறுவும் வழிமுறைகள் கூடுதல் 6 மாத உத்தரவாதம் நிறுவன தகவல் எங்களை பற்றி தொடர்பு இணைப்புத் திட்டம் வரைபடம் சமூக Youtube, பேஸ்புக் instagram இடுகைகள் ட்விட்டர் லின்க்டு இன் கட்டணத்தை பதிப்புரிமை © 2020-2025 WOWOW FAUCET INC. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. X என் கணக்கு வண்டியை அட்டவணை WOWOW FAUCET அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு வருக ஒரு செய்தியை விடுங்கள் ஏற்றுதல் ... English Afrikaans Shqip አማርኛ العربية Հայերեն Azərbaycan dili Euskara Беларуская мова বাংলা Bosanski Български Català Cebuano Chichewa 简体中文 繁體中文 Corsu Hrvatski Čeština‎ Dansk Nederlands English Esperanto Eesti Filipino Suomi Français Frysk Galego ქართული Deutsch Ελληνικά ગુજરાતી Kreyol ayisyen Harshen Hausa Ōlelo Hawaiʻi עִבְרִית हिन्दी Hmong Magyar Íslenska Igbo Bahasa Indonesia Gaelige Italiano 日本語 Basa Jawa ಕನ್ನಡ Қазақ тілі ភាសាខ្មែរ 한국어 كوردی‎ Кыргызча ພາສາລາວ Latin Latviešu valoda Lietuvių kalba Lëtzebuergesch Македонски јазик Malagasy Bahasa Melayu മലയാളം Maltese Te Reo Māori मराठी Монгол ဗမာစာ नेपाली Norsk bokmål پښتو فارسی Polski Português ਪੰਜਾਬੀ Română Русский Samoan Gàidhlig Српски језик Sesotho Shona سنڌي සිංහල Slovenčina Slovenščina Afsoomaali Español Basa Sunda Kiswahili Svenska Тоҷикӣ தமிழ் తెలుగు ไทย Türkçe Українська اردو O‘zbekcha Tiếng Việt Cymraeg isiXhosa יידיש Yorùbá Zulu
The ethos of Tamil’s culture i.e. hospitality, customs, manners, worship, traditional medicine, art, agriculture are lost their glorious identities due to the advent and impact of western culture. This is our push factor for creating Pandiyanadu Cultural Foundation to feed our cultural phenomenon to the young generations.Our prime duties are a comprehensive research on pristine culture and safeguard its amplitude for future generations. In addition, we understand that, we have to move in the society with utmost solidarity and harmony while unearthing the historicity of ancient relics. We believe our Pandiyanadu Cultural Foundation would be instrumental in framing novel ideas to safeguard our living cultural monuments and prepare a conceptual framework for creating awareness among the people to preserve our old age cultural identities. ஏன் பாண்டிய நாடு பண்பாட்டு மையம்? தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்திருந்த விருந்தோம்பல், பழக்க வழக்கம், கடவுள் வழிபாடு, பாரம்பரிய மருந்துவம், விவசாயம் உள்ளிட்ட மாண்புகள் மேற்கத்திய கலாச்சார தாக்கத்தின் காரணமாக இன்று மதிப்பிழந்து நிற்கிறது. மறந்து போன பாரம்பரிய வாழ்க்கை முறைகளை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளச் செய்வதற்கான செயல்பாடுகள் நம்மிடையே போதுமான அளவு மேற்கொள்ளப்படவில்லை. "உலகின் முதல் நகர நாகரீக சமூகமாக தமிழ்மக்கள் வாழ்ந்தார்கள்" என வரலாற்றாளர்களும் பண்பாட்டு ஆய்வாளர்களும் குறிப்பிடும் இவ்வேளையில் அவர்களின் பாரம்பரிய வாழ்வியல் விழுமியங்கள் குறித்த ஒருங்கிணைந்த ஆய்வுகள் மேற்கொண்டு, ஆவணப்படுத்தி அவற்றை இன்றைய வருங்கால தலைமுறைகள் பயனுற வழங்குவது என்ற உயரிய இலக்கு கொண்டு பாண்டிய பண்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ் நிலத்தின் அறிவுப் புதையலாக விளங்கும் பழங்கால கோவில்,சிற்பங்கள்,சமண,பெளத்த எச்சங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து அவற்றைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளையும் விழிப்புணா்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டு தமிழகத்தின் வரலாற்று பாரம்பரிய பெருமையை மேலோங்கச் செய்ய சமூக நல்லிணக்கத்துடன் அனைவருடன் இணைந்து பணியாற்றிடவும் பாண்டிய நாடு பண்பாட்டு மையம் உறுதியேற்றுள்ளது. Administration The Managing Board, the members in the Advisory Board and coordinators are functioning with purely service motive. There is no any remunerative position in the organization. News & Events Instructions for Memberships 03-12-2020 PDCF Membership Form 03-12-2020 தொல்லியல் பயணம் - 2 03-02-2021 பாண்டியநாடு பண்பாட்டு மையம் வழங்கும் கி. சின்னராஜ்-சுப்புலட்சுமி நினைவு நாட்டுபுறக் கலைஞர் விருது-2021 15-02-2021 பாண்டியநாடு பண்பாட்டு மையம் இளம் தொல்லியல் பண்பாட்டு ஆய்வாளர் விருது. 15-02-2021 பாண்டியநாடு பண்பாட்டு மையம் வழங்கும் தமிழ்த்தேனீ பேராசிரியர்- இரா.மோகன் நினைவு விருது. 15-02-2021 பாண்டியநாடு பண்பாட்டு மையம் வழங்கும் கா.பு.தர்மபாண்டியன் நினைவு பாரம்பரிய விவசாயி விருது. 15-02-2021 பாண்டியநாடு பண்பாட்டு மையம் வழங்கும் P.S.மலைப்பாண்டி நினைவு சுற்றுச்சூழல் ஆர்வலர் விருது. 15-02-2021 விருதுகள் -2021 வழி முறைகள் 15-02-2021 சு. அழகர்சாமி நினைவு பாரம்பரிய மருத்துவர் விருது 20-02-2021 VIRUDHU SELECTED MEMBERS 18-03-2021 VIRUDHU 2021 SELECTED LISTS 20-06-2021 PANDIYANADU CULTURAL FOUNDATION is a non-profitable organization registered under Trust Act on 2015. READ MORE..,
சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சகோதரியர்களுக்கான இரண்டாம் பரிசை வென்ற கட்டுரை. – சத்தியமார்க்கம் நடுவர் குழு உலகத்தைப் படைத்து, பரிபாலித்துக் கொண்டிருக்கின்ற வல்ல இறைவன், தன் உயர்ந்த படைப்பாகிய மனித இனம், எண்ணற்ற புழு– பூச்சியினங்கள், தாவரயினங்கள், பறவையினங்கள், விலங்கினங்கள் ஆகியவற்றை இவ்வுலகில் படைத்திருக்கின்றான். அனைத்துப் படைப்பினங்களும் இவ்வுலகில் குடும்பம் குடும்பமாக வாழ்ந்து அழிந்தாலும் ஆறறிவு கொண்ட மனித இனத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற சிறப்பும், உயர்வும் மற்ற இனங்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். மனித இனத்தை எடுத்துக் கொண்டால் இவ்வுலகில் எண்ணற்றப் பிரிவுகளாகவும் மதங்களை உடையவராகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் முஸ்லிம்கள், யூதர்கள், கிறிஸ்துவர்கள், சிலைவணங்கிகள் மற்றும் நாத்திகர்கள் எனப் பல்வேறு கூட்டங்களாக வாழ்ந்து வந்தாலும் மற்ற மதங்களை, பிரிவுகளை ஒத்தக் குடும்பச் சூழலை ஏற்படுத்திக் கொள்ள இஸ்லாமிய மார்க்கம் அனுமதி மறுக்கின்றது. ஒருசில வரையறைகளை, கட்டளைகளை இஸ்லாம் கற்றுத்தந்து அதனடிப்படையில்தான் ஒரு முஸ்லிம், தம் குடும்பச் சூழலை அமைத்துக் கொள்ள வேண்டும்; அவ்வாறு அமைத்துக் கொண்டால்தான் ஈருலகிலும் நன்மைகளைப் பெற முடியும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதனடிப்படையில் இஸ்லாமியக் குடும்பம் எவ்வாறு இருக்க வேண்டும்? எவ்வாறு இருக்கக் கூடாது? மற்றும் தற்பொழுது இஸ்லாமியக் குடும்பம் எவ்வாறெல்லாம் இருக்கின்றது என்பதைப் பற்றிப் பார்ப்போம். அல்லாஹ் குறிப்பிடுகின்றான்: அவன்தான் தன் அருளான மழையைப் பொழிவிப்பதற்கு முன்னர் குளிரும் காற்றை நற்செய்தியாக அனுப்புகிறான். அதைச் சூல்கொண்ட மேகங்களைச் சுமந்ததாக இறந்துபோன (வரண்ட) பூமிக்கு ஓட்டிச் சென்று அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கிறோம். அதிலிருந்தே காய்–கனிகளை வெளிப் படுத்துகிறோம். இவ்வாறே (எளிதாக) இறந்தோரையும் வெளிப் படுத்துவோம். இதன் மூலம் நீங்கள் படிப்பினை பெறலாம். வளமான பூமி, தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிபடுத்துகிறது. கெட்ட களர் நிலமோ அற்பமானவற்றையே வெளிப்படுத்துகிறது (அல்குர்ஆன் 7: 57-58) மேற்கண்ட குர்ஆன் வசனத்தில் வளமான பூமியானது பயிர் பச்சைகளை வெளிப்படுத்துவதுபோல் நல்ல கணவன்– மனைவி சேர்ந்து அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல் படுத்துவதன் மூலம் வளமான குடும்பத்தை உருவாக்க முடியும். இவ்விருவரில் ஒருவரோ அல்லது இருவரோ அல்லாஹ்வின் கட்டளைகளுக்கும் நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளுக்கும் மாற்றமாக நடப்பார்களேயானால் அதனால் வளம் குறைந்த குடும்பமே உருவாகும் என்பது எதார்த்தம். மக்கட்செல்வம் அல்லாஹ் உங்களுக்கு உங்களிலிருந்தே மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான், உங்களுக்கு உங்கள் மனைவியரிலிருந்து பிள்ளைகளையும், பேரக்குழந்தைகளையும் ஏற்படுத்தி உங்களுக்கு நல்ல பொருள்களிலிருந்து ஆகாரமும் அளிக்கின்றான் (அல்குர்ஆன் 16: 72) திருமணமானதும் கணவன் மனைவியின் அடுத்த எதிர்பார்ப்பு மக்கட்பேறு ஆகும். கணவனும், மனைவியும் ஒருவொருக்கொருவர் அன்பு செலுத்தி வாழும் பொழுது அதன் பயனாக அந்த அன்பின் விளைவாகக் குழந்தை பிறக்கிறது. குழந்தைகளை ஓர் அருள் பேறாக, ரஹ்மத்தாக இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளான். குழந்தைகளைப் பேணி இஸ்லாம் சொல்லும் முறையில் வளர்த்திட வேண்டியது பெற்றோர் தம் தலையாய கடமையாகும். மேலும் குழந்தைகளுக்கு நல்லொழுக்கம் ஊட்டி உருவாக்குவதற்குப் பெற்றோர் முயற்சி செய்ய வேண்டும். நல்லொழுக்கமுள்ள குழந்தைகளாக உருவாக்குதல் அவசியம் குழந்தைகளை இப்படித்தான் வளர்க்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்லுகிறது. அதன்படி குழந்தைகளை வளர்த்தால் ஒழுக்கமுள்ள பிள்ளைகளாக வளரும். சிறுவயது முதலே அவர்களுக்கு அல்லாஹ் பற்றிய இறைநம்பிக்கை, நபிமார்கள், நபித்தோழர்கள், நபித்தோழியர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றைச் சிறு சிறு சம்பவங்களாக அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதுபோன்று உன்னத வாழ்க்கைக்கு ஆசைப்படும்படி அறிவுறுத்த வேண்டும். அந்த ஆசைக்கு அடித்தளங்களாக இறைதூதர் (ஸல்) அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலி (ரலி) மற்றும் நேர்வழிப் பெற்ற நபிதோழர்கள் பற்றிய சம்பவங்கள் குழந்தைகளின் உள்ளத்தைப் பண்படுத்த வல்லன. இதை வாசித்தீர்களா? : வளைகுடா வாழ்க்கை – வரமா? சாபமா? குழந்தைகள் கேட்கக்கூடிய அறிவுப்பூர்வமான கேள்விகளாகட்டும் மற்றும் ஆன்மீக சம்பந்தப்பட்ட கேள்விகளாகட்டும் அவர்களுக்குத் தகுந்த விளக்கம் கொடுத்து விளங்கப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களை ஊக்குவிக்கவும் வேண்டும். பெற்றோருக்கு நன்றி உடையவராகவும், பெரியோர்களுக்கு மரியாதை செலுத்தக்கூடியவர்களாவும் சிறுவர்களுக்கு அன்பு பாராட்டக்கூடியவர்களாகவும் மற்றும் ஒழுக்ககேடான செயல்களைத் தவிர்ந்து இருக்கவும் வலியுறுத்த வேண்டும். வெளியில் சென்று கல்வி கற்றுவிட்டு வீடு திரும்பக்கூடிய நம் பிள்ளைகளை அடிக்கடிக் கண்கானித்துக் கொண்டிருக்க வேண்டும். பிள்ளைகளின் பழக்க வழக்கங்கள் மற்றும் பிள்ளைகளுடன் படிக்கக்கூடிய, பழகக்கூடியவர்களின் நிலையையும் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். தொழுகை விஷயத்தில் கண்டிப்போடு நடந்து கொள்ள வேண்டும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “உங்கள் குழந்தைகள் ஏழு வயதை அடையும்பொழுது தொழுகையைத் தொழுமாறு அவர்களுக்கு ஏவுங்கள். அவர்கள் 10 வயதை அடையும் பொழுது (தொழுகையை விட்டுவிட்டால்) அவர்களை (லேசாக) அடியுங்கள்! (அப்பருவத்தில்) அவர்களுக்கு மத்தியில் படுக்கைகளைப் பிரித்து விடுங்கள்“ (நூல்: அபூதாவுது.) லுக்மான்(அலை) தன் மகனுக்கு, “மகனே தொழுகையை நிலை நாட்டுவாயாக“ (அல்குர்ஆன் 31: 17) என்று அறிவுறுத்துவதை அல்லாஹ் குர்ஆனில் நமக்கு உணர்த்தியிருக்கிறான். நீங்கள் தொழும்பொழுது குழந்தைகளை உங்கள் பக்கத்தில் நிறுத்திக் கற்றுத் தர வேண்டும். மேலும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு குர்ஆனுடைய சின்னஞ் சிறு சூராக்களையும் அன்றாடம் ஓதக்கூடிய துஆக்களையும் காலை–மாலை தஸ்பீஹ்கள் முதலியவற்றையும் சிறுகச் சிறுகச் சொல்லிக் கொடுத்து, அதனை அவர்கள்தம் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்த வேண்டும். குழந்தைகளுக்கு மத்தியில் பெற்றோரின் கவனம் குழந்தைகளுக்கு மத்தியில் பெற்றோர்கள் பேசும்போது நல்ல வார்த்தைகளைக் கொண்டே பேச வேண்டும். வீணான சண்டை சச்சரவுகள் இருக்க கூடாது. குழந்தைகள் கண் முன்னால் பெற்றோர் சண்டையில் ஈடுபடுவது, மோசமான வார்த்தைகளால் ஒருவரை யொருவர் திட்டிக் கொள்வது உள்ளிட்ட செயல்கள் குழந்தைகளின் மனநிலையை வெகுவாகப் பாதிக்கும். அதன் எதிரொலியாக அவர்களின் நடத்தையிலும் பெரிய மாற்றங்கள் உண்டாகும். அவ்வாறு ஏற்படும் எதிர்மறை மாற்றங்களால் குழந்தைகளுக்கு நிம்மதி பறிபோகும். விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம் நீங்கும். பள்ளிப் பாடங்களில் நாட்டம் குறைந்து, தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்களை எடுக்க ஆரம்பிப்பார்கள். பெற்றோரின் தவறான முன்னுதாரணத்தினாலும் அணுகு முறையாலும் மனம் வெறுத்து, நல்லவற்றில் ஈடுபாடு குறையும் சூழ்நிலையில் அவர்களுக்குக் கெட்ட சகவாசங்கள் கிடைக்கும் வாய்ப்பு அதிகம். அதனைக் கொண்டு கெட்டப் பழக்க வழக்கங்கள் இவர்களுக்கும் தொற்றிவிடும் அபாயம் உண்டு. கலாச்சார நிகழ்ச்சி என்ற பெயரில் ஒரு கலாச்சாரச் சீரழிவு தற்பொழுதுள்ள சூழ்நிலையில் பள்ளி ஆண்டுவிழா என்ற பெயரில் சினிமாப் பாடல்களுக்கு ஏற்ப ஆடிப்பாடக்கூடிய கலாச்சாரத்தை பள்ளி நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுக்கின்றார்கள். பள்ளி நிர்வாகத்தினரை ஊக்குவிக்கும் விதமாகப் பிள்ளைகளின் பெற்றோர்களும் அதற்கு உடந்தையாகச் செயல்படுகிறார்கள் என்பது நிசர்சனமான வேதனையளிக்கும் உண்மை. இதனை யாரும் மறுக்க முடியாது. இருசாராரும் சேர்ந்தே சினிமாவில் கதாநாயகனும் நாயகியும் கட்டிப் பிடித்து ஆடிப்பாடும் அசிங்கமான அங்க அசைவுகளைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்து இவ்வாறான கலாச்சார (?) விழாக்களில் ஆட வைத்து, பள்ளிக்கூட நிர்வாகமும் பெற்றவர்களும் மற்றவர்களும் ரசிக்கிறார்கள். இது கலாச்சாரமல்ல; மாறாக, கலாச்சாரச் சீரழிவு என்ற விழிப்புணர்வு நம்மிடையே வர வேண்டும். இந்தப் புதுவரவான கலாச்சாரச் சீரழிவைத் தடுத்து நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப் படவேண்டும். மேலும் இன்றைய பல குடும்பங்களில் சினிமாப் பாடல்களும் இஸ்லாமிய சமூகக் கலாசாரத்தைக் குழி தோண்டிப் புதைக்கக்கூடிய தொலைக்காட்சித் தொடர்களும் ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றன. மேலும் வீணான பேச்சுகளும் ஒருவர் மற்றவரைப் பற்றிப் புறம் பேசுவதும் கேலி பேசி சிரிப்பதும், இன்னும் எத்தனையோ தீமைகள் நம் சமுதாய மக்களிடையே சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன. இதை வாசித்தீர்களா? : திருக்குர்ஆன் உருவாக்கிய சமுதாயம்! “தொலைக்காட்சித் தொடரை பார்த்து கொண்டிருந்ததின் விளைவாக சுன்னத் செய்து போடப்பட்டிருந்த குழந்தையின் மர்ம உறுப்பை பூனை கடித்துக் குதறியது, அதனால் குழந்தையின் மரணம் ஏற்பட்டுவிட்டதின் விளைவாக கணவன்–மனைவி விவாகாரத்தில் போய் நிற்கின்றது” என்பது அண்மைச் செய்தி. இது போன்ற சம்பவங்களைத் தவிர்க்க இஸ்லாமியக் குடும்பசூழல் அவசியம். மார்க்கம் கூறாதவற்றை மார்க்கமாக நினைத்துச் செய்யக்கூடிய செயல்களில் சில மார்க்கம் அனுமதிக்காத மற்றும் மார்க்கத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட பல புதிய செயல்கள் இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாமிய குடும்பங்களில் அரங்கேறி வருவதை அன்றாடம் கண்கூடாகக் கண்டு கொண்டிருக்கின்றோம். அவற்றில் நம் குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்தால் நடத்தப் படும் அனாச்சாரச் சடங்குகளும் அடக்கம். இஸ்லாமியக் குடும்பத்தில் ஓர் ஆண் குழந்தை பிறந்தால் 7ஆம்நாள் இரண்டு ஆடுகளும், பெண் குழந்தையாக இருந்தால் ஓர் ஆடும் அகீகா கொடுத்து அன்று பெயர் வைக்கச் சொல்லி நபியவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். ஆனால் நம் சமூகத்தவர்கள் “40ஆம் நாள் பெயர் சூட்டுவிழா” என்று பத்தரிகைகள் அச்சடித்து, பெரிய விருந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, பெருவாரியான முறையில் வீண் விரயம் செய்து பெருமை பாராட்டுகிறார்கள். வசதியுள்ளவர்கள் செய்யக்கூடிய இந்த அனாச்சாரமான செயல்களால், “இதனைச் செய்யத் தவறினால் இஸ்லாத்தின் ஒரு கடமையை நிறைவேற்றாத குற்றத்துக்குள்ளாவோம்; நம்மைச் சமூகத்தவர்கள் மதிக்க மாட்டார்கள்” என்ற தவறான முடிவுடன், ஏழை எளியவர்களும் தம்மால் சுமக்கமுடியாத அளவிற்குக் கடன்களை வாங்கி விருந்து நடத்தி விட்டு, கடனை அடைக்க முடியாமல் திண்டாடும் அவல நிலைக்கு ஆளாக்கப் படுகின்றனர். இயற்கையின் நியதியாகிய பெண் மக்களின் பூப்பெய்தலையும் “ஒரு மாபெரும் விருந்து போட்டுக் கொண்டாட வேண்டும்” என்று அடம்பிடிக்கக் கூடியவர்களும் இல்லாமலில்லை. ஆண் குழந்தைகளாக இருந்தால் சுன்னத், மலர் மாலை சூட்டுதல், ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் 3, 7, 10, 40ஆம் நாள் ஃபாத்திஹாக்கள் மட்டுமின்றி, ஒரு தொடர்கதையைப் போன்று, “ஃபாத்திஹாக்கள் ஓதி விருந்துண்டால் தான் திருப்தி” என்றும் “இறந்தவருக்கு ஃபாத்திஹா ஓதி, மய்யித்துக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்து விட்டோம்; மார்க்கத்தை முழுமையாகக் கடைப் பிடித்து விட்டோம்” என்று வீணாக மார்தட்டிக் கொள்ளக்கூடிய நம் சமுதாயச் சொந்தங்கள் இல்லாமலில்லை. நூலகம் அமைத்தல் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வை நினைவு கூரக்கூடிய இல்லங்கள்தாம் விரும்பத் தகுந்த இல்லங்கள். அல்லாஹ்வை நினைவு கூராத இல்லங்கள் (இருளடைந்த) மண்ணறைக்குச் சமமானவை“. அனைத்து வழிகளிலும் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய குடும்பங்களை அல்லாஹ்வின் விருப்பத்திற்குரிய குடும்பமாக, அவனை நினைவு கூரக்கூடிய இடமாக மாற்ற வேண்டும். மேலும் உள்ளத்தாலும் சொல்லாலும் தொழுகைகளின் மூலமாகவும் திருமறை குர்ஆன் ஓதுவதன் மூலமாகவும் இன்னும் இஸ்லாத்தைப் பற்றிக் கலந்தாலோசனை செய்யக்கூடிய தளமாகவும் அல்லது இன்னும் பல வகைகளாக இஸ்லாமிய நூல்களைப் புரட்டி வாசிக்ககூடிய தளமாகவும் நமது இல்லங்கள் திகழவேண்டும். இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றியும் அதன் சட்டங்கள் பற்றியும் எளிதாக அறிந்து கொள்வதற்கு உங்கள் குடும்பத்து உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் உங்களது வீட்டில் அமைக்கப்படும் நூலகம் பெரிதும் உதவிகரமாக இருக்கும். அது மிகப் பெரிதாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. இல்ல நூலகத்துக்காக நல்ல புத்தகங்களைத் தேர்தெடுப்பது, அவற்றை மிக எளிதாகக் கையாளக்கூடிய வகையில் அமைப்பது இன்னும் குடும்பத்தவர்களை அதிகம் படிப்பதற்கு ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகள், நம் குடும்பத்தில் இஸ்லாமியச் சூழல் உருவாகப் பெரிதும் உதவும். படுக்கை அறை மற்றும் விருந்தினர் அறை என்று வீட்டில் அமைப்பது போன்று நூலகத்திற்கென ஒரு பகுதியை ஒதுக்கி வைப்பதன் மூலம் மிக எளிதாக அவற்றை எடுத்து குடும்பத்தவர்கள் பயன்படுத்த வசதியாக இருக்கும். மேலும் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துப் பரிசளிப்பதன் மூலம் புத்தகங்கள் படிக்கும் நல்ல பழக்கத்தின்பால் அவர்களை ஈடுபடுத்த முடியும். இதை வாசித்தீர்களா? : கட்டுரைப் போட்டிக்கான அறிவிப்பு! தொழுமிடம் உங்கள் இல்லங்களில் தொழுகைக்கான கிப்லாவை அமையுங்கள். இறைவன் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்: “ஆகவே மூஸாவுக்கும் அவருடைய சகோதரருக்கும் நீங்கள் இருவரும் உங்கள் சமூகத்தாருக்காக பட்டிணத்தில் வீடுகளை அமைத்து கொடுங்கள். உங்களுடைய அவ்வீடுகளையே பள்ளிகளாக (ஃகிப்லாவாக) ஆக்கி அவற்றில் தவறாமல் தொழுகையை நிலைநிறுத்துங்கள். மேலும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்திகளும் கூறுவீராக என்று வஹீ அறிவித்தோம்“ (அல்குர்ஆன் 10: 87). ஆண்கள் தங்களது ஐவேளைக் கடமையான தொழுகைகளை முடித்துவிட்டு வீட்டிற்குள் நுழையும்போது வீட்டில் உள்ளவர்களுக்கு “தொழுகையை முடித்துவிட்டு வருகின்றேன்” என்பதை உணர்த்தும் விதமாக நடந்துக் கொண்டால் அதனால் வீட்டிலுள்ளவர்களும் தொழுகைக்காகத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்கு வழிவகுக்கும். மட்டுமின்றி, தொழுகைப் பயிற்சியில் உள்ள பிள்ளைகளுக்கும் அது ஆர்வமூட்டும். ஆன்மீகப் பயிற்சி குடும்பத்துப் பெண்களை தான–தர்மம் செய்யத் தூண்டுங்கள். அது அவர்களுக்கு இறைநம்பிக்கையை அதிகரிக்கும். இறைதூதர்(ஸல்) அவர்கள் அதிகம் ஆர்வயுமூட்டியிருக்கிறார்கள்: “ஓ பெண்களே! தான–தர்மம் வழங்குங்கள். நரகத்தில் உள்ளவர்களில் நீங்கள்தான் அதிகமாக எனக்குக் காட்டப் பட்டீர்கள்“. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:புகாரி) மேலும் வெள்ளை நாட்கள் என்றழைக்ககூடிய (அய்யாமுல் அப்யத்) நாட்களில் அதாவது எல்லா மாதத்தின் பிறை 13, 14 மற்றும் 15 ஆகிய நாட்களிலும் வாரத்தின் திங்கள், வியாழன் ஆகிய நாட்களிலும் ஆஷுரா (முஹர்ரம் பிறை 9, 10 அல்லது 10,11) மற்றும் அரபா நாள் மற்றும் முஹர்ரம், ஷஃபான் மாதங்களில் முடிந்தளவு சுன்னத்தான மற்றும் நபிலான நோன்புகளை நோற்பதற்கு உங்கள் குடும்பத்தினரை ஆர்வமூட்டுங்கள். மேலும் திக்ர் மற்றும் துஆக்களை ஓத ஆர்வமூட்டுங்கள். இஸ்லாமியக் குடும்பச் சூழல் உருவாவதற்கு இவை பெரிதும் உறுதுணையாக அமையும். குடும்பத்தை இறைநம்பிக்கை கொண்டு அலங்கரியுங்கள்: திருமணம் முடிக்கத் தகுந்த உறவுமுறை உள்ள (மஹ்ரமல்லாத), வயதுக்கு வந்த ஆண்–பெண்கள், தம் உறவினர்/நண்பர்களது வீடுகளுக்குச் செல்லும்போது இஸ்லாமிய வரையறைகளை அலட்சியமாகப் புறக்கணிப்பதும் தாங்கள் விரும்பிய வீட்டிற்குள் ஹிஜாப் முறையைப் பேணாது பெண்கள் நுழைவதும் தங்களது மறைக்க வேண்டிய பாகங்களை வெளிக்காட்டிக் கொள்வதும் இன்னும் இது போன்ற இஸ்லாம் தடுக்கின்ற நடைமுறைகளைச் செய்வதுமான இல்லமாக நம்முடைய இல்லங்கள் இருக்கலாகாது. உருவப்படங்கள் மற்றும் நாய்கள் அற்றவையாக நம் வீடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். உருவப் படங்களும் நாய்களும் உள்ள வீடுகளில் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்ற நபிமொழியை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நமது இல்லங்களை அல்லாஹ்வை நினைவு கூரக்கூடிய இல்லங்களாக மாற்றி அமைக்க முயற்சி செய்ய வேண்டும்.அல்லாஹ் உங்கள் மீது அருள் பொழிவான். இஸ்லாமியக் குடும்பச்சூழலை ஏற்படுத்தி வெற்றி பெற்ற மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்குவானாக! ஆமீன். ஆக்கம்: சகோதரி. உம்மு ரம்லா சகோதரி உம்மு ரம்லா அவர்கள் ஜித்தா செனாயியா பகுதியில் இயங்கிவரும் இஸ்லாமிய சென்டரில் பெண்களுக்காக நடைபெறும் வாரவகுப்புகளில் கலந்து கொண்டு மார்க்க அறிவினை பெற்றுக் கொள்ளும் மாணவி ஆவார். 2007ஆம் ஆண்டுக்கான சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப் போட்டியில் பெண்களுக்கான இரண்டாம் பரிசை வென்ற சகோதரரி உம்மு ரம்லா அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்! – சத்தியமார்க்கம்.காம் 2007-ஆம் ஆண்டு சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப்போட்டி முடிவுகளை அறியவும் பரிசுகளை வென்ற அனைத்துக் கட்டுரைகளையும் படிக்கவும் இங்கு சொடுக்குங்கள். முந்தைய ஆக்கம்பாலஸ்தீனர்கள் படுகொலை: மத்தியகிழக்கில் அமைதிக்கு நடனமாடும் புஷ்? அடுத்த ஆக்கம்அமெரிக்கப் பொருளாதாரமும் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளும்! சத்தியமார்க்கம் இதையும் வாசிக்கலாமே?கட்டுரையாளரின் பிற ஆக்கங்கள் வருடம் 2007 கல்வியில் உயர்நிலை மேம்பாடு அடைய… வருடம் 2007 வளைகுடா வாழ்க்கை – வரமா? சாபமா? வருடம் 2007 இஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை! வருடம் 2007 மனித உடல் – இறைவனின் அற்புதம்! வருடம் 2007 மனித உடல் – இறைவனின் அற்புதம்! வருடம் 2007 திருக்குர்ஆன் உருவாக்கிய சமுதாயம்! ஐயமும்-தெளிவும் பிற மதத்தினருக்காக குர்ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-4) சத்தியமார்க்கம் - 24/07/2013 0 ஐயம்: இணை வைப்பதை இறைவன் மன்னிக்க மாட்டானா? மன்னிப்பானா? எது சரி? •மன்னிக்க மாட்டான் (4:48, 4:116)•மன்னிப்பான் (4:153, 25:68-71) முந்தைய பகுதிகள்: 1 | 2 | 3 ... குர்ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-5) 28/07/2013 முஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்? 02/07/2006 இஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்? 24/07/2006 குர்ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-2) 03/11/2012 மேலும் காண்பி சமீப பதிவுகள்! நன்றி ஜீவா! சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 45 சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 44 சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 43 சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 42 இதையும் வாசிங்க! கவிதை 90. மாநகர் ! சபீர் - 04/10/2021 0 மொத்தமாய் மதி கெட்டோர் உத்தம நபிக் கெதிராய் நித்தமே சதி செய்த மக்க நகர் மீதாணை! சதிகாரர்க் கெதிராக விதியான போர் இருந்தும் பொறுமையுடன் நீர் வசிக்கும் பெரு நகரின் மீதாணை ! பெற்றெடுத்த தந்தை மீதும் பிறந்துவிட்ட பிள்ளை மீதும் முற்றும் அறிந்த இறை முதல்வன் இடும்...
ஊருக் கண்ணு, ஒறவுக் கண்ணு, ஓரக் கண்ணு, சாரக் கண்ணு எல்லா கண்ணும் இப்போது விக்னேஷ்சிவன் மீதுதான். நயன்தாராவை ரகசியக் கல்யாணம் செய்து கொண்டார்…. இந்துவாக இருந்தவர் அவருக்காக கிறிஸ்துவராக மதம் மாறிவிட்டார்… என்று இந்த புது இயக்குனரை சுற்றி சுற்றி ராட்டினம் விட்டுக் கொண்டிருக்கிறது ஊர். அவருக்கு படம் கொடுத்து காதலிக்க ஒரு வழியையும் ஏற்படுத்திய தனுஷ் மட்டும், நடு ஹாலில் உட்கார்ந்து கொண்டு ‘நாசமாப் போக’ என்று சாபம் விட்டுக் கொண்டிருக்கிறார். காரணம், ‘நானும் ரவுடிதான்’ படத்தின் பட்ஜெட்டை சொன்னதைவிட ஐந்து கோடி ரூபாய் அதிகப்படுத்தியதுதான். இது ஒருபுறமிருக்க, தனுஷ் சாபம் சும்மாவிடுமா? என்பதை போல அடுத்தடுத்த அவஸ்தைகளை சந்திக்க ஆரம்பித்திருக்கிறார் விக்னேஷ்சிவன். அதில் ஒன்றுதான் இது. முதன் முறையாக த்ரிஷாவும் நயன்தாராவும் ஒரு படத்தில் இணைகிறார்கள். அது விக்னேஷ்சிவனின் அடுத்தப்படம் என்று புதுசு புதுசாக செய்திகள் கிளம்பின. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பதாகவும், அப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிப்பதாகவும் ஏற்பாடு. நயன்தாராவே விக்னேஷ் சிவனுக்காக தன் ஈகோவை விட்டுக் கொடுத்து த்ரிஷாவுடன் பேசினார். அதற்கப்புறம்தான் அவரும் நடிப்பதாக கூறினாராம். எல்லாம் சரி. சம்பள விஷயத்தில்தான் த்ரிஷாவை நோகடித்துவிட்டார்களாம். தன்னை நடிக்க சொல்லி அழைத்த நயன்தாராவும் சரி, விக்னேஷ்சிவனும் சரி. த்ரிஷாவுக்கு சம்பளம் பேசும்போது மட்டும் நைசாக கழன்று கொண்டதில் ஏக அப்செட் ஆகியிருக்கிறார் த்ரிஷா. அப்படியென்ன அவரை அவமானப்படுத்துகிற சம்பளத்தை பேசினார் ஏ.எம்.ரத்னம்? வேறொன்றுமில்லை. என்னை அறிந்தால் படத்தில் நடித்த போது த்ரிஷாவுக்கு வெறும் 25 லட்சம் சம்பளம் தரப்பட்டதாம். அதைதான் இப்போதும் தருவேன் என்று இவர் அடம் பிடிக்க, அதில் அஜீத், கவுதம் மேனன் என்ற ஈர்ப்பு இருந்தது. அதனால் அந்த சம்பளத்திற்கு நடிக்க ஒப்புக் கொண்டேன். இதில் என்ன இருக்கிறது… நயன்தாரா விக்னேஷ்சிவன் ஆஃப் லைனில் போடப் போகும் கடலையை தவிர…? என்று கடுப்பாகிவிட்டாராம் த்ரிஷா. இதையடுத்து உங்க படத்தில் நடிக்கப் போவதில்லை என்று கட் அன்ட் ரைட்டாக அவர் கூறிவிட்டதால் விக்னேஷ்சிவன் கடும் ஷாக்கில் இருக்கிறாராம். இது குறித்து விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்க பலமுறை அவரை தொடர்பு கொண்டோம். அழைப்பை அவர் எடுக்கவே இல்லை. ஒருவேளை நயன்தாராவுடன் கதை டிஸ்கஷனில் இருக்கிறாரோ என்னவோ?
இப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு வடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை ஈழநாடு 1987.07.15 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது: (முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார். நூலகம்:313 ‎ (← இணைப்புக்கள்) (முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார். "https://noolaham.org/wiki/index.php/சிறப்பு:WhatLinksHere/ஈழநாடு_1987.07.15" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு வடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை Children: Zones of peace பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது: (முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார். நூலகம்:816 ‎ (← இணைப்புக்கள்) (முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார். "https://noolaham.org/wiki/index.php/சிறப்பு:WhatLinksHere/Children:_Zones_of_peace" இருந்து மீள்விக்கப்பட்டது
கொரோனா கொடையாகத் தந்த இயற்கை வழி கர்ப்பத்தரிப்பு சென்னையைச் சேர்ந்த ஐடி தம்பதியினர், திருமணமாகி மூன்று நான்கு வருடங்களாகியும் குழந்தை இல்லாத காரணத்தினால் குழந்தை பேறு மருத்துவரை அணுகிய போது இன்னும் சில காலம் காத்திருக்க...
பிஹார்: பாஜகவின் மூத்த தலைவரும் பிஹாரின் வேளாண்துறை அமைச்சருமான பிரேம்குமார், வாக்களிக்கும் போது தாமரை மலர் அச்சிடப்பட்ட முக கவசத்தை அணிந்து வாக்குச்சாவடிக்கு சென்றதைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். கயா நகரத்தை சேர்ந்த பாஜக வேட்பாளராக... இந்தியா வானில் இருந்து மலர் தூவுவதை விட்டு விட்டு புலம்பெயர்ந்தவர்களுக்கு ராணுவத்தினர் உதவி செய்ய வேண்டும் : முன்னாள் ராணுவ தளபதி ரேவ்ஸ்ரீ - May 8, 2020 புது டெல்லி: ராணுவம் வானில் இருந்து மலர் தூவுவதை விட்டு விட்டு புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று முன்னாள் கடற்படைத் தலைவர் அட்மிரல் அருண் பிரகாஷ், பத்திரிகையாளர் கரண் தாப்பருடனான சந்திப்பின்... ஆன்மிகம் கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: ஊர்மிளா: துரை. நாகராஜன் tvssomu - November 14, 2016 மலர்: ஒன்று அரச குடும்பத்து முதலிரவு என்றால், ஆர்ப்பாட்டத்துக்கும், அலங்காரத்துக்கும் கேட்கவா வேண்டும்? மலராலேயே படுக்கை அமைத்து, மணிகளால் தோரணம் கட்டி, முத்தும், பவளமும் வாரி இறைத்து, வாசனைப் பொடிகள் புகைத்து, அந்த அறையைச் சொர்க்கமாக மாற்ற முயற்சித்திருக்கிறார்கள் அயோத்தி நகரத்து அந்தப்புர சேடிப் பெண்கள். அதில் அவர்கள் வெற்றிபெற்றதாகவே சொல்ல வேண்டும். சோபன அறையிலே லட்சுமணன் வரவுக்காக காத்திருக்கிறாள் ஊர்மிளா. அழகான தோற்றமுள்ளஅவளை சேடிப்பெண்கள் தாங்கள் கற்ற வித்தையைப் பயன்படுத்தி தேவதையாக மாற்றிவிட்டார்கள். "இளவரசியாரை இந்தக் கோலத்தில் நம் இலட்சுமணர் பார்த்தால் இன்னும் ஒரு மாதத்திற்கு...
Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript! Monday, December 6, 2021 Home ஆன்மிகம் சுய முன்னேற்றம் ஆலய தரிசனம் நீதிக்கதைகள் பக்திக் கதைகள் உடல் நலம் உழவாரப்பணி மன வளம் மகா பெரியவா மாமனிதர்கள் பிரார்த்தனை கிளப் ரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு முக்கிய நிகழ்ச்சிகள் About me… Donate us Search for: Please specify the group Home > Featured > திறமையை வறுமை முடக்கிவிட முடியாது என்று உலகிற்கு உணத்திய மேதை – MUST READ திறமையை வறுமை முடக்கிவிட முடியாது என்று உலகிற்கு உணத்திய மேதை – MUST READ Right Mantra Sundar December 22, 2013 December 23, 2013 Featured, மாமனிதர்கள் 6 print விளம்பர வெளிச்சங்களில், ஊழல் பணத்தில் மின்னும் திரைத்துறை மற்றும் அரசியல் பிரபலங்களை அறிந்துள்ள நம் சமூகம் நம்மில் பிறந்து வளர்ந்த அறிஞர்களை, அறிவியலாளர்களை உணர்ந்ததும் இல்லை போற்றியதும் இல்லை. அப்படி மறந்துபோன மனிதர்களில் ஒருவர்தான் கணிதமேதை ராமானுஜன். டிசம்பர் 22. இன்று அவரது பிறந்தநாள். நாம் இதுவரை வெளியிட்ட பதிவுகளில் அதிகம் பகிரப்பட்டது நமது தளத்தில் நாம் இதுவரை வெளியிட்ட பதிவுகளில் அதிகம் பகிரப்பட்டது சென்ற ஆண்டு ராமானுஜனின் பிறந்தநாளின் போது நாம் அளித்த பதிவு தான் என்பது நமக்கு மிகப் பெரிய ஆறுதல். (http://rightmantra.com/?p=1772) ரைட்மந்த்ராவை தொடர்ந்து நடத்துவதன் மூலம் நாம் எதிர்பார்க்கும் ஒரு சமூக மாற்றம் எம்மை சுற்றி ஒரு அணுவளவாவது ஏற்படுத்த முடியும் என்கிற நம்பிக்கையை எங்களுக்குள் விதைத்தது அப்பதிவிற்கு கிடைத்த வரவேற்பு என்றால் மிகையாகாது!! ரைட்மந்த்ரா வாசகர்கள் மற்றவர்களை போல அல்ல என்று மனதில் ஆழ்ந்த நம்பிக்கை ஏற்பட்டது!!! “எல்லாம் அவன் செயல்; இதில் உனக்கு எதற்கு ஆணவம்?” என்பதைப் போல, என்ன தான் இறை நம்பிக்கை நம் மனம் முழுக்க நிரம்பிவழிந்தாலும், அந்த நம்பிக்கையில் அடிக்கடி சில விஷயங்கள் பொத்தல்களை போட்டுவிடும். அவற்றில் ஒன்று பாரதி மற்றும் ராமானுஜன் ஆகியோர் வாழ்ந்து மறைந்த விதம். உலகமே கொண்டாடி மகிழ்ந்திருக்க வேண்டிய இரு பெரும் மேதைகள் வறுமையிலேயே தங்கள் காலத்தை கழித்ததும் இறுதியில் நோய்வாய்ப்பட்டு – சிறு வயதிலேயே – மறைந்ததையும் நினைக்கும்போது இறைவன் மீதும் அவனது கணக்குகள் மீதும் அவ்வப்போது நமக்கு கோபம் ஏற்படுவதுண்டு. இருப்பினும் அவன் போடும் கணக்குகளின் சூட்சுமங்களை அவன் ஒருவனைத் தவிர வேறு யாரால் அறிய முடியும்? மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது அழுது லாபம் என்ன அவன் ஆட்சி நடக்கின்றது என்கின்ற கவியரசரின் வரிகள் தான் இங்கே நினைவுக்கு வருகிறது. ஞானராஜேசேகரன் இயக்கத்தில் வெளிவரவுள்ள ‘ராமானுஜன்’ திரைப்படத்தில் ஒரு காட்சி வறுமை திறமைக்கு தடையாக இருக்க முடியுமா? உலக சரித்திரத்தில் ஆர்யபட்டாவுக்கு எப்படி ஓர் இடமுண்டோ அதேபோலத் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ள இன்னொரு மாமேதை ராமானுஜன். சிலர் தங்களது படிப்பாலும் உழைப்பாலும் மேதைகளாகிறார்கள். ஆனால் ‘கணித மேதை’ ராமானுஜன் பிறவியிலேயே மேதை. வறுமை ஒருவருடைய திறமையை முடக்கிப் போட்டுவிட முடியாது என்பதற்கு ‘கணித மேதை’ ராமானுஜன் ஓர் உதாரணம். இவர் விட்டுவிட்டுச் சென்றிருப்பது இரண்டு நோட்டுப் புத்தகங்கள் மட்டுமே. அதில் இருக்கும் கணித மேதைமை உலகளாவிய அளவில் தன்னிகரற்றது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. சிலர் வாழ்ந்து மறைகிறார்கள். ராமானுஜன் போன்ற ஒரு சிலர் மறைந்தும் வாழ்கிறார்கள். ஞானராஜேசேகரன் இயக்கத்தில் வெளிவரவுள்ள ‘ராமானுஜன்’ திரைப்படத்தில் ஒரு காட்சி நூற்றாண்டு விழா, 125-வது பிறந்த நாள் விழா என்று கொண்டாடப்படும்போதுதான் ராமானுஜன்கள் நினைக்கப்படுகிறார்கள். ”என் கணவரைப்பற்றி நம் நாட்டில் தெரிந்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். ஆனால், அதைவிட வெளிநாடுகளில் அறிந்தவர்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கிறார்கள்” என்றார் கணித மேதை ராமானுஜன் மனைவி ஜானகி. ஒரு தன்னம்பிக்கையின் வரலாறு ராமானுஜனின் வரலாற்றை தன்னம்பிக்கையின் வரலாறாகத்தான் பார்க்க வேண்டும். கும்பகோணம் போர்டர் டவுன் ஹாலில் நடந்த ஆரம்பப் பள்ளித் தேர்வில் ராமானுஜனின் நண்பன் சாரங்கபாணி கணக்குப் பாடத்தில் 45-க்கு 43 வாங்கினார். ராமானுஜனால் 42-தான் வாங்க முடிந்தது. ‘இதனால் எனக்கு அவமானமாக இருக்கிறது’ என்று, சாரங்கபாணியிடம் பேசாமல் இருந்துள்ளார் ராமானுஜன். அன்று முதல் கணக்குப் பாடத்தை திரும்பத் திரும்பப் போட ஆரம்பித்திருக்கிறார். பாடத்தைத் தாண்டி மற்ற கணக்குகளில் மனது ஈடுபட்டது. நூலகர் உதவியுடன் பல கணித நூல்களைப் படித்தார். எப்போதும் நோட்டு, பெரிய பலகை வைத்துக்கொண்டு கணக்குப் போட்டுக்கொண்டே இருந்தார். பள்ளியில் இருந்து பச்சையப்பன் கல்லூரிக்கு வந்தும் இது தொடர்ந்தது. கணிதப் பேராசிரியர் என்.ராமானுஜாச்சாரியார், இவரது நோட்டை வாங்கிப் பார்த்து ஆச்சர்யப்பட்டார். இந்தத் தகவல் கல்லூரி முதல்வருக்குத் தெரிவிக் கப்பட்டது. இதே கல்லூரியின் முன்னாள் கணிதப் பேராசிரியரான சிங்காரவேலு முதலியார்தான், ‘உனது கணித ஆராய்ச்சிக் குறிப்புகளை இங்கே யாரிடமும் காட்டி நேரத்தை வீணடிக்காதே… கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பு’ என்றனர். ராமானுஜன் திறமை, உலகத்துக்கு பரவியது இப்படித்தான். ‘எனக்குத் தேவை என்பதெல்லாம் ஒரே ஒரு வேளை உணவுதான். எனக்கு அதுவும் கிடைப்பது மிக அரிதாக இருக்கிறது. ஆகவே, தாங்கள் எனது கணித முயற்சிகளைப் பிறர் அறிய எழுதினால் நல்லது. ஏனெனில், என் நிலைமையை அறிந்து பல்கலைக்கழகமோ அல்லது அரசோ ஏதேனும் உதவிசெய்ய முன்வரக் கூடும். இதனால் எனது வறுமை சற்று நீங்குவதுடன், கணித ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்ய உற்சாகம் ஏற்படும்’ என்று, லண்டன் கணித மேதை ஜி.எச்.ஹார்டிக்கு ராமானுஜன் எழுதிய கடிதம் அவரது வறுமை நிலையை உணர்த்துகிறது. வறுமை காரணமாக மதராஸ் போர்ட் டிரஸ்ட்டில் ராமானுஜன் வேலைக்குச் சேர்ந்தபோது உதவிய பிரான்சிஸ் ஸ்பிரிங் முதல், லண்டனுக்கு அவரை வரவழைத்துக்கொண்ட ஜி.எச்.ஹார்டி வரை எத்தனையோ ஆங்கிலேயர்கள் ராமானுஜனின் வாழ்க்கைக்கு உதவியுள்ளனர். இந்த பதிவை தயார் செய்துகொண்டிருந்தபோது அறிந்த ஒரு தகவல், ராமானுஜன் மீது நாம் வைத்திருந்த மதிப்பை பன் மடங்கு உயர்த்திவிட்டது. பிற உயிர்களை கொன்று தன்னுயிரை வளர்க்க விரும்பாத உத்தமர் இராமானுஜன் இலண்டன் சென்ற சில மாதங்களிலேயே முதலாம் உலகப் போர் தொடங்கியது. சைவ உணவு பழக்கமுள்ள இராமானுஜனுக்கு போரின் தொடக்கத்தில் பாலும், காய், கனிகளும் தடையின்றிக் கிடைத்தன. ஆனால் போர் நீடிப்பால் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட, நாட்கள் செல்லச் செல்ல சைவ உணவுப் பொருட்கள் கிடைப்பது குறைந்துபோனது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் உணவு உண்ணும் பழக்கம் ராமானுஜனை விட்டு விலகத் தொடங்கியது. இந்நிலையில் TB எனப்படும் காசநோய் இருப்பது கண்டறியப்பட்டது. காசநோய்க்கான காரணங்களில் விட்டமின் டி சத்துக்குறைவும் முக்கிய காரணம். அப்போதெல்லாம் காசநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விட்டமின் டி சத்து குறைப்பாட்டை தடுக்க முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டுக் கறி, மீன், மீன் எண்ணெய் மாத்திரைகள் போன்றவையே உணவாக உட்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. ஆனால் சைவ உணவை தீவிரமாக பின்பற்றும் பிராமணரான ராமானுஜன், இவ்வகை உணவுகளில் ஒன்றைக்கூட தொட விரும்பவில்லை. மருத்துவர்கள் பலவாறு அறிவுறுத்தியும், மீன் எண்ணெய் மாத்திரைகளைக் கூட உட்கொள்ள அவர் தயாராக இல்லை. சூரிய ஒளியில் உள்ள ULTRA VIOLET RAYS நமது தோளில் படும்போது விட்டமின் டி உற்பத்தியாகி உடலுக்குள் செல்லும். ஆனால் லண்டன் நகருக்குள் நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடந்து எப்போதும் கணக்கு சூத்திரங்களையே பழகிக்கொண்டிருந்ததால் சூரிய ஒளியே ராமானுஜன் மீது விழவில்லை. “உயிரே போனாலும் பரவாயில்லை, அசைவ உணவை தொடமாட்டேன்” என்று வாழ்ந்த ராமானுஜனின் வைராக்கியத்தை பற்றி அறிந்த பிறகு அவர் மீதான் மதிப்பு எமக்கு பன்மடங்கு பெருகிவிட்டது. எனவே காசநோயை முற்றிலும் குணப்படுத்த வழியின்றி போனது. ஏற்கனவே சத்துக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டிருந்த ராமானுஜன் சென்னை வந்து சில மாதங்களிலேயே காலமானார். வறுமையைப் புலமையால் வென்ற ராமானுஜனை காசநோய் காவு வாங்கியது. 32 வயதில் மரணம் அடைந்து விட்டார். அவரது நோட்டுப் புத்தகங்கள் 100 ஆண்டுகள் கழித்தும், கணித மேதைகளால் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது! கணிதம் வாழும் காலம்வரை ராமானுஜன் வாழ்வார் கணிதம் வாழும் காலம்வரை ராமானுஜன் வாழ்வார். ராமானுஜனின் நினைவு வாழும் காலம்வரை இந்தியாவின் பெருமை பேசப்படும். இந்தியாவின் பெருமை பேசப்படும்போதெல்லாம் தமிழகம் ராமானுஜன் போன்றவர்களால் தலைநிமிர்ந்து நிற்கும். ராமானுஜன், தமிழ்த் தாயின் தவப்புதல்வன் என்பதில் நாம் பெருமை கொள்வோம். ………………………………………………………………………………………………………….. “நம்மிடையே வாழும் மேதைகளை எப்படி நடத்தவேண்டும் என்று நமக்கு தெரியவில்லை” பாரதி, பெரியார், முகம் ஆகிய மகத்தான படங்களை இயக்கிய ஞானராஜசேகரன் ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வருகிறார். இதில் ராமானுஜனாக நடிப்பவர் ஜெமினிகணேசன் – சாவித்திரி தம்பதிகளின் பேரன் அபிநய் ஆவார். பைரசியில் அதை பார்க்காமல் திரையரங்கிற்கு நம் பிள்ளைகளை, தம்பி தங்கைகளை அழைத்து சென்று பார்ப்போம். அதுவே நாம் ராமானுஜனுக்கு செய்யும் மிகப் பெரிய மரியாதை தான். ‘ராமானுஜன்’ படப்பிடிப்பில்…. காட்சியை விளக்குகிறார் ஞானராஜசேகரன் ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க காரணம் என்ன? ஞானராஜசேகரன் : “அவர் வாழ்க்கை இன்றளவும் நமக்கு பொருந்தக் கூடிய மிகப் பெரிய மெசேஜ் ஒன்றை சொல்லிவிட்டு போயிருக்கிறது. ஒரு மேதை நம் சமூகத்தால் எப்படி நடத்தப்படுகிறார் என்று அவரது வாழ்க்கை அப்பட்டமாக காட்டுகிறது. அவர் ஒரு மேதை என்பதை அவர் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே அவரது அறிந்துகொள்கிறார்.” “ஒரு மேதையை அவர் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள், அரசாங்கம், அதிகார வர்க்கத்தினர், முதலாளிகள் ஆகியோர் அடங்கிய நம் சமூகம் எப்படி நடத்தியது என்பதின் ஆவணமே இந்த திரைப்படம். இன்றைக்கும் நம்மிடையே வாழும் மேதைகளை எப்படி நடத்தவேண்டும், கொண்டாடவேண்டும் என்று நமக்கு தெரியவில்லை என்பது தான் சோகம். எனவே இந்த் திரைப்படம் தற்காலத்துக்கும் மிகவும் பொருந்தும்.” ………………………………………………………………………………………………………….. (ஆக்கத்தில் உதவி : விகடன் நூலகம், தினமணி | ராமானுஜன் புகைப்படங்கள் உதவி : REDIFF.COM) Share on Facebook Share Share on TwitterTweet Share on Google Plus Share Share on Pinterest Share Share on LinkedIn Share Share on Digg Share Post navigation எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம் – Rightmantra Prayer Club அனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் ? MONDAY MORNING SPL 25 Right Mantra Sundar http://www.rightmantra.com Related Articles எறும்பீஸ்வரர் சன்னதியில் இனிதே நடைபெற்ற வேலைவாய்ப்பு சிறப்பு பிரார்த்தனை ! ஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள் – அதிதி தேவோ பவ – (2) கந்தசஷ்டி கவசம் மொபைல் ரிங்டோன் நிகழ்த்திய அதிசயம் – உண்மை சம்பவம் ! 6 thoughts on “திறமையை வறுமை முடக்கிவிட முடியாது என்று உலகிற்கு உணத்திய மேதை – MUST READ” valli says: December 22, 2013 at 23:10 SUPERB ARTICLE . Reply J.sampath kumar says: December 23, 2013 at 06:53 காமராஜர் பிறந்த தினம் பள்ளிகளில் கொண்டாடுவது போல், இவரது பிறந்த தினமும் பள்ளிகளில் கொண்டாடப் படவேண்டும். Reply N.CHANDIRASEKARAN says: December 23, 2013 at 10:30 ///கணிதம் வாழும் காலம்வரை ராமானுஜன் வாழ்வார். ராமானுஜனின் நினைவு வாழும் காலம்வரை இந்தியாவின் பெருமை பேசப்படும். இந்தியாவின் பெருமை பேசப்படும்போதெல்லாம் தமிழகம் ராமானுஜன் போன்றவர்களால் தலைநிமிர்ந்து நிற்கும். ராமானுஜன், தமிழ்த் தாயின் தவப்புதல்வன் என்பதில் நாம் பெருமை கொள்வோம். -/// மா மனிதர்களின் பிறந்தநாளோ அல்லது நினைவுனாளோ அவர்களை பற்றி தனி பதிவினை இட்டு அவர்களுக்கு மரியாதை செய்வது தங்களுடைய தளம் சிறந்து விளங்குகிறது…நமது அரசாங்கம் அவர்களுடைய வாரிசுகளை எப்படி கவனிக்கின்றது..அவர்களின் நினைவு இடங்களை எப்படி பராமரிக்கின்றது என்பதை பார்த்துக்கொண்டுதான் வருகிறோம் ..(கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தினை போன்று ) உங்களுடைய இந்த சேவையை மற்றவர்கள் போற்றி புகழ்கிறார்களோ இலையோ. ..அந்த ஆன்றோர்களின் ஆத்மா நிச்சயம் உங்களை போற்றி வாழ்த்தும் … Reply V UMA says: December 23, 2013 at 10:52 டியர் சுந்தர்ஜி பாரதி, பெரியார், முகம் ஆகிய மகத்தான படங்களை இயக்கிய ஞானராஜசேகரன் ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வருவது பற்றி மிக்க மகிழ்ச்சி, இயக்குனர் ஞானராஜசேகரன் அவர்களுக்கு ராயல் salute பாரதியை போல் ராமானுஜரும் சிறு வயதில் காலமாகிவிட்டார் என்பதை படிக்கும் பொழுது மிகவும் கஷ்டமாக உள்ளது. தான் வாழ்ந்த காலத்திற்குள்ளேய மிக பெரிய சாதனை செய்து விட்டார்; i hereby ensure that i will go to theatre and see the film regards உமா Reply Baba Ram says: December 23, 2013 at 11:34 கணித மேதை ராமானுஜன் மஹாகவி பாரதி போன்றோர் உயிருடன் வாழ்ந்த கால கட்டம் மிகவும் குறைவாக இருந்தாலும் அவர்களது வாழ்கையின் தாக்கம் பல நூறு ஆண்டுகளுக்கு உணரப்படும். தீர்க்க ஆயுசுடன் வாழ்ந்து மொழியின் பெயரால் இனத்தின் பெயரால் மதத்தின் பெயரால் மக்களிடையே துவேஷ உணர்வை தூண்டி தலைவர்களாவதைவிட, மஹாகவி மற்றும் ராமானுஜன் போல் மேன்மையான வாழ்கை வாழ்ந்தவர்கள்தான் உண்மையான மக்கள் தலைவர்கள். இதில் என்ன வேதனைஎன்றால் இவர்களையெல்லாம் மக்கள் நல்ல வழிகாட்டிகளாக உதாரண புருஷர்களாக பார்பதேயில்லை. ஏனென்றால் இவர்கள் பெரிதாக பணம் சம்பாதிக்கவில்லை என்பதாலோ என்னவோ? இருந்தாலும் நம்முடைய தளம் இந்த விஷயத்தில் மிகவும் வித்யாசமானது. நன்றி சுந்தர். Reply Viji says: December 23, 2013 at 14:16 அருமையான பதிவு சுந்தர் சார் … சிலர் வாழ்ந்து மறைகிறார்கள். ராமானுஜன் போன்ற ஒரு சிலர் மறைந்தும் வாழ்கிறார்கள். உண்மையின வார்த்தைகள் சார்…
Uber செயலி மூலம் வாகனம் ஓட்டுவதால் சம்பாதிக்கும் தொகையானது, நீங்கள் எப்போது, எங்கே, எத்தனை பயணங்களை மேற்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. உங்களது கட்டணங்கள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ளுங்கள் மற்றும் ஊக்கத்தொகை குறித்துத் தெரிந்து கொள்ளுங்கள், இது உங்கள் சம்பாத்தியத்தை அதிகரிக்க உதவும்.¹ ஓட்டுவதற்குப் பதிவு செய்யவும் சம்பாத்தியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது ஊபருடன் வாகனம் ஓட்டி உங்களால் எவ்வளவு சம்பாதிக்கமுடியும் என்று நீங்கள் யோசிக்கலாம். ஒவ்வொரு பயணத்திலும் நீங்கள் சம்பாதிக்கிற தொகையைத் தீர்மானிக்க, பின்வரும் காரணிகள் உதவுகின்றன. வழக்கமான கட்டணம் பூர்த்தி செய்யப்பட்ட ஒவ்வொரு பயணத்திற்கும் கட்டணம் ஈட்டுகிறீர்கள். See driver dashboard சர்ஜ் பயணத்தின் தேவை எப்போது, எங்கு அதிகமாக உள்ளது என்பதை அறிய, உங்கள் ஆப்பில் உள்ள ஹீட் மேப்பைச் சரிபார்க்கவும், இதன் மூலம் உங்கள் நிலையான கட்டணத்திற்கு மேல் நீங்கள் அதிகம் சம்பாதிக்கலாம். குறைந்தபட்ச பயணச் சம்பாத்தியம் ஒவ்வொரு நகரத்திலும் எந்தவொரு பயணத்திற்கும் நீங்கள் சம்பாதிக்கும் குறைந்தபட்சத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறுகிய தூரப் பயணங்களை மேற்கொண்டால் கூட உங்களது முயற்சிக்கேற்ற சம்பாத்தியம் வழங்கப்படுவதை இது உறுதி செய்கிறது. சேவைக் கட்டணம் செயலி மேம்பாட்டிற்கும் வாடிக்கையாளர் சேவைக்கும் நிதியளிக்க இந்தக் கட்டணம் உதவும். ரத்துசெய்தல்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பயணி ஒருவர் கோரிக்கையை ரத்து செய்தால், ரத்துசெய்தல் கட்டணத்தைப் பெறுவீர்கள். ஊக்கத்தொகை மற்றும் அது எவ்வாறு செயல்படுகிறது உங்களது சம்பாத்தியத்தை அதிகரிக்கும் இலக்குகளை அமைப்பதற்கும், முன்னதாகத் திட்டமிடுவதற்கும், உங்களின் பகுதியில் எங்கு அதிகப் பயணக் கோரிக்கைகளை Uber Driver செயலி எதிர்பார்க்கிறதோ அந்த இடத்தின் அடிப்படையில் செயலியில் ஊக்கத்தொகைகள் இருக்கும். எல்லா ஓட்டுநர்களுக்கும் எல்லா ஊக்கத்தொகைகளும் கிடைக்காது. விதிமுறைகளைக் கீழே காண்க.² ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயணங்களை நிறைவு செய்யுங்கள் சலுகை கிடைக்கும் வேளையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயணங்களை நிறைவு செய்து கூடுதல் பணம் சம்பாதியுங்கள். பிஸியான நேரங்களில் ஓட்டுங்கள் பிஸியான நேரங்களில், சில பகுதிகளில் பயணங்களுக்குக் கூடுதல் பணம் பெறுங்கள். சம்பாதிப்பதற்கான இன்னும் சில வழிகள் செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல் The app has powerful features to help you make the most of your time on the road. From tracking trends to informing you of earning opportunities nearby, the app is your tool on the road. ஆப் எவ்வாறு இயங்குகிறது உங்கள் சேவைக்காக வெகுமானம் பெறுதல் ஒவ்வொரு பயணத்திற்குப் பிறகும், ஆப்பின் மூலம் பயணிகள் எளிதாக வெகுமானத்தை உங்களுக்கு அளிக்க முடியும். உங்களின் வெகுமானத்தை 100% நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். வெகுமானம் பற்றி மேலும் அறிக எப்பொழுது மற்றும் எப்படி நீங்கள் பணம் பெறுகிறீர்கள் கேஷ் அவுட்டை விரைவில் பெறுங்கள் பணம் பெறுவது எளிது. உங்களுக்குத் தேவையானதெல்லாம் ஒரு வங்கிக் கணக்கு மட்டுமே. உங்கள் சம்பாத்தியம் வாரத்திற்கு ஒருமுறை பரிமாற்றப்படும். உங்களின் வாடிக்கையாளர்கள் பணமாகக் கொடுத்தால் பணத்துடன், ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும் நீங்கள் சம்பாதிக்கிறீர்கள். ஆப் உங்கள் வாடிக்கையாளரிடமிருந்து வசூலிக்க வேண்டிய தொகையைக் காண்பிக்கும் மற்றும் ஊபருக்கு நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களைக் கணக்கிடும். ஓட்டுநர் செலவுகளில் சேமிக்கப்படுகிறது உங்களின் சொந்த வியாபாரத்தை நடத்துவது இணக்கத்தன்மையையும், சில மேற்செலவுகளையும் கொண்டுவரும். எரிபொருள், காப்பீடு மற்றும் வாகன பராமரிப்பு ஆகியவற்றிற்கு வரிப்பிடித்தம் செய்யப்படலாம், மேலும் ஊபர் உங்களை ஆதரிக்க, தள்ளுபடியை வழங்க பார்ட்னர்ஷிப்களைக் கொண்டுள்ளது. Uber Pro பற்றி அறிக ட்ரைவர் ஆப் குறித்து விரைவான சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளுங்கள் மேலும் அறிந்துகொள்ள ஆர்வமாக உள்ளீர்களா? Uber உடன் வாகனம் ஓட்டும்போது உங்களுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு, பிற ஓட்டுநர்களின் உதவிக்குறிப்புகள் மற்றும் தகவல்பூர்வமான வீடியோக்கள் அடங்கிய நம்பகமான உதவி வளங்கள் வழங்கப்பட்டுள்ளன. Go to Driver App Basics டெலிவரிக்கான Uber Driver செயலி அடிப்படைகளுக்குச் செல்லவும் ஓட்டுனர்களின் பிரபலமான கேள்விகள் எனது பயணச் சம்பாத்தியத்தை நான் எங்கே காணலாம்? உங்களின் சம்பாத்திய விவரங்களை ஆப்பினில் காணலாம். வரைபடத்தில் உள்ள கட்டண ஐகானை தட்டவும், பிறகு வலது அல்லது இடது புறம் ஸ்வைப் செய்து உங்களின் சம்பாத்தியத்தைக் காணவும் . உங்களது சம்பாத்தியத்தை எங்கு காண்பது வாரயிறுதி நாட்களில் மட்டும் Uber செயலி மூலம் வாகனம் ஓட்ட முடியுமா? ஆம் எப்பொழுது, எப்படி ஓட்ட வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானியுங்கள். நீங்கள் சம்பாதிக்க ஒரு இணக்கமான வழியைத் தேடுகிறீர்களானால், ஊபருடன் வாகனம் ஓட்டுவது உங்களுக்கு சரியானதாக இருக்கும். ஓட்டுனர்கள் சுங்கக் கட்டணங்களைப் செலுத்துகிறார்களா? பயணத்தின் போது, சுங்கக் கட்டணம் பயணிகளுக்கு விதிக்கப்பட்டு, தானாகவே உங்களின் கட்டணத்தில் சேர்க்கப்படும். உங்களின் சம்பாத்தியப் பிரிவிலோ அல்லது ஆப்பினில் உள்ள பயண விவரங்களிலோ சுங்கக் கட்டணம் திருப்பிச் செலுத்துதலைக் காணலாம். சுங்கக் கட்டணங்களைப் பற்றி மேலும் அறிக ஓட்டுவதற்குப் பதிவு செய்யவும் Arrow right Arrow right ¹இந்தப் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள விவரங்கள் தகவல்கள் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளதே தவிர, அவை சம்பாத்தியத்திற்கு உத்தரவாதம் அளிக்காது. சம்பாத்தியக் கட்டமைப்புகள் நகரத்திற்கு ஏற்ப வேறுபடக்கூடும். உங்கள் நகரத்தில் டெலிவரிக் கட்டணங்கள் குறித்த மிகத் துல்லியமான விவரங்களுக்கு, உங்கள் நகரம் சார்ந்த இணையதளத்தைப் பாருங்கள். ²நீங்கள் இந்த ஊக்கத்தொகைக்குத் தகுதிபெறும் போது Uber உங்களுக்குத் தெரிவிக்கும். ஊக்கத்தொகைகளுக்கான கட்டுப்பாடுகள் பொருந்தும். குறிப்பிட்ட ஊக்கத்தொகை அல்லது கருவி சார்ந்த கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் ஏதேனும் இருந்தால் அவை உங்களுடன் பகிரப்படும். அத்தகைய ஊக்கத்தொகையைப் பெறுவதற்குத் தேவையான தகுதிகள் உட்பட, ஆனால் அவை மட்டுமின்றி பிறவும் சேர்த்து எந்தவொரு ஊக்கத்தொகையையும் மாற்றுவதற்கான அல்லது ரத்துசெய்வதற்கான உரிமை Uber நிறுவனத்திற்கு உள்ளது.
மனித உடலில் தலை, இதயம் மற்றும் சிறுநீர்ப் பை போன்ற 107 மர்மங்கள் இருப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது.இப்பகுதியில் ஏற்படும் நோய்கள் மிகுந்த பிரயத்தனத்தின் மூலமே சரி செய்ய இயலும். அதனால் தான் உங்களுக்குத் தலைப் பகுதியிலுள்ள நோயின் சீற்றம் அறுவை சிகிச்சைக்குப் பின்னும் தொடர்கிறது.கட்டி எவ்வாறு உருவாகிறது என்ற ஆராய்ச்சியில் ஆயுர்வேதம் மற்ற வைத்திய முறைகளிலிருந்து முழுவதுமாக மாறுபடுகிறது. வாயு, பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்கள், உடல் எங்கும் பரவியிருந்தாலும் வாயு, முக்கிய இருப்பிடமாகத் தொப்புளுக்குக் கீழ்ப்பகுதியிலிருந்து பாதம் வரையிலும், இதயம் முதல் தொப்புள் பகுதி வரை பித்தத்தின் இருப்பிடமாகவும், இதயத்தின் மேலிருந்து தலையின் உச்சி வரை கபத்தின் இருப்பிடமாகவும் அமைந்துள்ளது. நாம் உண்ணும் உணவு வகைகள் அனைத்தும் பஞ்சமஹா பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகியவற்றின் சேர்க்கையாகும். நிலம் மற்றும் நீர் பகுதிகளை அதிகமாகக் கொண்ட உணவு வகைகளை விரும்பிச் சாப்பிடுபவர்களுக்குக் கபம் அதிகமாகி அதன் குணங்களாகிய நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், வழுவழுப்பு, பிசுபிசுப்பு, நிலைத்தல் ஆகியவற்றின் சீற்றம் உணவுச் சத்தை ஏந்திச் செல்லும் குழாய்களின் ஊடே செல்லும் போது உடலில் எந்தப் பகுதியில் தளர்வும் பலமின்மையும் உள்ளதோ அந்த இடத்தில் நிலைகொண்டு விடுகிறது. தன் சொந்த இருப்பிடமாக கபத்திற்கு தலையிருப்பதால் தங்களுக்கு இந்தக் குணங்களின் வரவு பெருமளவில் இருப்பதால் கட்டியாக உருவாகியுள்ளது.நிலம் மற்றும் நீரின் ஆதிக்கம் கொண்ட இனிப்பு, புளிப்பு, உப்புச்சுவை, நெய், வெண்ணெய், கெட்டித்தயிர், புலால் உணவு, மாவுப் பண்டங்களாகிய இட்லி, தோசை, வடை, முந்திரி, பாதாம், பிஸ்தா, வாழைப்பழம், பால், போன்றவற்றை நீங்கள் நீக்க வேண்டும். காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை, கேழ்வரகு, கம்பு, சோளம், வரகு, கொள்ளு போன்ற புஞ்சை தானியங்கள் அதிக அளவிலும், அரிசி, கோதுமை முதலிய நஞ்சைத் தானியங்கள் குறைந்த அளவிலும் சேர்ப்பது நல்லது. நெருப்பு, காற்று, ஆகாயத்தின் அம்சங்களை அதிக அளவில் கொண்ட இவ்வகை உணவுப் பொருட்களால் கட்டியைக் கரையச் செய்ய இயலும். கட்டியின் அழுத்தத்தால் கண் நரம்பு மண்டலமும் கண் பாதுகாப்புக்குரிய மூளையின் அம்சங்களின் பாதிப்பும் கண் பார்வையை மங்கலாக்கியிருக்கக் கூடும்.கட்டியை ஏற்படுத்திய கபத்தின் குணங்களுக்கு எதிரான ஆயுர்வேத மருந்துகளை நீங்கள் முதல் மூன்று வாரங்களுக்குச் சாப்பிடுவது நல்லது. வரணாதி கஷாயம் 15மிலி,60ம் கொதித்து ஆறிய தண்ணீர் கலந்து கால் ஸ்பூன் தேன் சேர்த்துக் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். லோத்ராஸவம் 20 மிலி, புனர்நவாஸவம் 10 மிலி, ஒரு காஞ்சநார குக்குலு எனும் மாத்திரையுடன் காலை,இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடவும். அதன் பின்னர் மூன்று வாரங்களுக்கு நிம்பா அமிருதாஸவம் 30 மிலி காலை, இரவு உணவிற்குப் பின்னர் சாப்பிடவும். by Swathi on 08 Dec 2012 0 Comments Disclaimer: Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை. தொடர்புடையவை-Related Articles வைத்தியம் சித்தமருத்துவக் குறிப்புகள் சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை தூக்கம் -Healer Baskar சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி டான்சில்ஸ், Healer Baskar கருத்துகள் No Comments found. உங்கள் கருத்துகள் பதிவு செய்ய பெயர் * இமெயில் * கருத்து * (Maximum characters: 1000) You have characters left. Write reCAPTCHA code * இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும். முக்கிய குறிப்பு: வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும். Register? | Login Follows us on மருத்துவக் குறிப்புகள் வைத்தியம் சித்தமருத்துவக் குறிப்புகள் சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை தூக்கம் -Healer Baskar மருத்துவக் குறிப்புகள் தலைமுடி(Hair ), வயிறு(Stomach), கண் பராமரிப்பு(Eye Care), மூக்கு பராமரிப்பு(Nose Care), பல் பராமரிப்பு(Dental Care), வாய் பராமரிப்பு(Mouth Care), கழுத்து பராமரிப்பு(Neck Care), இதயம் பராமரிப்பு(Heart Care), கை பராமரிப்பு (Hands Care), இடுப்பு (Hip), கால் பராமரிப்பு (Foot Care), தோல் பராமரிப்பு (Skin Care), தலை(Head), நுரையீரல் (Lung), இரத்தம், எலும்பு (Bone), நினைவாற்றல் (Memory Power), வாத நோய் (Rheumatic Disease), நரம்பு தளர்ச்சி (Neurasthenia), சிறுநீரகம் (Kidneys), அசதி (Tired), பாட்டி வைத்தியம் (Grandma's Remedies), வீக்கம் (Swelling), புண்கள் (Lesions), முதுகு வலி (Back pain), பசி (Hunger), மூச்சு திணறல் (Suffocation), தீப்புண் (Fire Sore), உடல் குளிர்ச்சி (Body cooling), தூக்கம் (Sleep), நாவறட்சி (Tongue dry), மஞ்சள் காமாலை (Icterus), மூலம் (Piles), பித்தம் (BILE), நோய் எதிர்ப்பு (Immunity), நீரிழிவு (Diabetes), ஒவ்வாமை (Allergy), உடல் மெலிதல் (Wasting), சுளுக்கு (Sprain), மூட்டு வலி (Joint Pain), மார்பு வலி (Chest pain), உதடு (Lip), தும்மல் (Sneezing), முகம் (Face), விக்கல் (Hiccup), இருமல் (Cough), தொண்டை வலி (Throat pain), காது வலி (Otalgia), சளி (Mucus), காய்ச்சல் (Fever), உடல் எடை குறைய (Weightloss), ஆஸ்துமா (Asthma), வியர்வை(Sweating ), ஆயுர்வேதம், மற்றவை(others ), ஆண்மைக் குறைவு (Impotency), குடல் (Intestine), தைராய்டு (Thyroid), கொழுப்பு (Fat), ஞாபக சக்தி குறைபாடு, மலச்சிக்கல் (Constipation), மனஅழுத்தம் (Stress), குழந்தை மருத்துவம் கம்பளிபூச்சி கடி(Wool Pest Bite), விஷம்(Poison), தேள் கடி(Scorpion bite), பூரான் கடி(Centipede Bite), எலி கடி(Rat Bite), தேனீ கொட்டினால்(Bee Bite), நாய் கடி(Dog bite), வயிறு(stomach), சளி(Mucus), மாந்தம்(Maandham), கண் எரிச்சல்(Eye irritation), நோய் எதிர்ப்பு சக்தி(Disease resistance), கரப்பான் நோய்(Cockroach disease), குழந்தை சிவப்பாகப் பிறக்க(Unborn child as red as), கண் வலி(Sore-eyes), சூடு தணிய(Warm closet), இருமல்(Cough), பிறப்பு, வாயு தொல்லை (Gas trouble), காய்கறிகள்-கீரைகள்-பூக்கள் பூக்களின் மருத்துவ குணங்கள் (Medicinal properties of Flowers), மகளிர் மட்டும் வயிற்று வலி குணமடைய (abdominal pain), குழந்தையின்மை-கருப்பை கோளாறுகள் நீங்க(Uterus problems), தாய்பால் (Breastfeeding), கருத்தரித்த பெண்களுக்கு (Pregnant Women), வெள்ளை படுதல் (White Contact), பெரும்பாடு (MENORRHAGIA), மேக நோய்கள் குறைய (Decrease Megha Diseases), மற்றவை, கட்டுரை நலம் காக்கும் சித்தமருத்துவம், மற்றவை, சித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும், படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com நாணய மாற்றம் உலக நேரம் பங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர் சற்று முன் [ Latest Video's ] மாணவர் முன்னேற்ற திட்டம் - நிகழ்வு: 5 பிராணாசயன்ஸ் அமைப்பின் "நூல் வெளியீடு மற்றும் சித்தர் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி" - நேரலை மறைந்து கிடைக்கும் நியதிகளும், இளையோரின் முன்னேற்ற பாதையும் அரசுப் பள்ளி மாணவர் வாசக திட்டம் எனைத்தானும் நல்லவை கேட்க - 26, பகுதி - 2 | திருக்குறள் திருமூலநாதன் | Thirukkural | Thiruvalluvar செய்திகள் தமிழ்நாடு-Tamil Nadu இந்தியா-India உலகம்-World விளையாட்டு-Sports more.. அரசியல் கட்டுரை/நிகழ்வுகள் அரசியல் வரலாறு அரசியல்வாதிகள் தேர்தல் more.. சினிமா சினிமா செய்திகள் திரைவிமர்சனம் சினிமா தொடர்கள் திரைப்படங்களின் விபரம் more.. மொழி-இலக்கியம் கவிதை தமிழ் மொழி - மரபு சிறுகதை கட்டுரை more.. சமையல் அசைவம் சைவம் இனிப்பு காரம் more.. ஆன்மீகம் இராசி பலன்கள் கட்டுரை இந்து மதம் கிறித்துவம் more.. சிறுவர் குழந்தை வளர்ப்பு - Bring up a Child தமிழ்க்கல்வி - Tamil Learning சுட்டிக்கதைகள் - Kids Stories சிறுவர் விளையாட்டு - kids Game more.. உடல்நலம் மருத்துவக் குறிப்புகள் பழங்கள்-தானியங்கள் குழந்தை மருத்துவம் காய்கறிகள்-கீரைகள்-பூக்கள் more.. தற்சார்பு விவசாயச் செய்திகள் தோட்டக்கலை விவசாய கருவிகள் கட்டுரைகள்/சிறப்பு நிகழ்ச்சிகள் more.. மற்றவை அறிவியல் கல்வி/வேலை பொதுசேவை சிறப்புக்கட்டுரை more.. Home | Tamil Calendar | Photo Gallery | Videos | Forum | Events | Birthday Song | Pongal Song | Classifieds
அந்த மாலை நேரத்தில், நீங்கள் வீட்டுக்குச் செல்லும் பரபரப்பில் இருக்கலாம். உங்கள் இணையை, நண்பர்களை, சொந்தங்களைப் பார்ப்பதற்காக வேக வேகமாக என்னைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறீர்கள். எப்படியிருந்தாலும், இம்மாநகரத்தின் முக்கியமான இடங்களில் ஒன்றான இந்த ரயில் நிலையத்தை ஒட்டி இருக்கிற கூவம் பாயும் பாலத்தை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகக் கடக்கவே நீங்கள் விரும்புகிறீர்கள். நான் அங்கே வெகு நேரமாக நின்றுகொண்டிருப்பது உங்களுக்கு ஆச்சர்யத்தை வரவழைக்கவில்லை, சரியா? ஏதோ ஒரு தொழிற்சாலையோ, ஆய்வுக்கூடமோ இந்தக் கூவம் நீரில்... இல்லை இல்லை... சாக்கடையில் கலந்துவிடும் பிங்க் நிறச் சாயம் ஒட்டாமல் சென்றுகொண்டிருந்தது. நான் அதை வெகு நேரமாகக் கவனித்துக்கொண்டிருந்தேன். எனக்கு அவளது முகம் சற்று மங்கலாகத்தான் ஞாபகம் இருந்தது. ஆனால், பெயர் நன்றாக நினைவில் இருக்கிறது. ஆம் நிர்பயா! அத்தனை கொடுமைகளுக்குப் பின்னர், நிர்பயா உயிர் பிழைத்திருந்தால் நிம்மதியாக வாழ்ந்திருப்பாளா? சற்று முன்னர்தான் தற்கொலைக்கான மரண ஓலையை எழுதி முடித்தேன். கையில் பிளேடால் திமிங்கலம் ஒன்றை வரைந்துகொண்டு தற்கொலை செய்துகொள்ளலாமா எனத் தோன்றுகிறது. புளூவேல் கேம் விளையாடியதாக நம்பிவிடுவார்கள். எப்படியும், ஒரு பெண்ணின் தற்கொலைக்கான உண்மைக் காரணத்தை எந்த நியூஸ் சேனலும் அரசியலாக்காமல் காட்டப் போவதில்லை. இறந்தாலும் ஃபேஸ்புக், ட்விட்டர் என இரு நாள்களுக்கு நான்தான் ட்ரெண்ட்! யார் இறந்தாலும் இதைத் தவிர வேறு என்ன செய்துவிடப்போகிறீர்கள்? இடையில், யாரோ ஓர் அரசியல்வாதியின் குற்றங்கள் அம்பலப்படும் செய்திகள் வந்தால் என் கதை இன்னும் ஒரு வாரம் ஓடும் அவ்வளவுதான். இப்போது நான் இந்தப் பாலத்திலிருந்து கூவத்தை நோக்கி நடக்கவே யத்தனிக்கிறேன். யாராவது என்னைக் கவனிக்கிறீர்களா? என் பெயர் என்ன என்று தெரிந்துகொள்ள முற்பட்டால், நாளைய செய்தித்தாளையோ அல்லது அதற்கடுத்த நாள் செய்தித்தாளையோ பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். அப்படியும் உங்களுக்கு என் பெயரைத் தெரிந்துகொள்ள முடியவில்லை என்றால், அது எனக்கு ஓர் ஆறுதலான செய்திதான். நான் அமுதா. நீங்கள் இதைச் செய்தியாக வாசிக்கும் போது என் பெயர் மாற்றப்பட்டிருக்கலாம் அல்லது மாற்றப்பட்டதாகப் பொய் சொல்லியிருக்கலாம். தகப்பன் பெயர் சிவப்பிரகாசம் என்று எப்படியும் செய்தித்தாள்களில் போடலாம். பி.இ. (ஐடி) இதுவே போதுமான ஆர்வத்தை உங்களுக்கு ஊட்டியிருக்கும். இருந்தாலும், மேலும் சில தகவல்கள்... என் சொந்த ஊர் காஞ்சிபுரத்துக்கு அருகில் இருக்கும் கன்னிகாபுரம். ஆம், கவிஞர் முத்துக்குமாரின் சொந்த ஊர்தான். இது எல்லாம் ஐடென்டிட்டி ஆவதற்கு முன்பாகவே என் அரை நிர்வாணப் படம் நெட்டில் வந்து ஐடென்டிட்டி ஆனது. இப்போது டூவீலரில் சென்றால் எல்லோரிடமும் ஒரிஜினல் லைசென்ஸ் கேட்பார்களே? ஒருவேளை என்னிடம் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் கேட்கும்போதோ அல்லது ஆதார் அட்டை கேட்கும்போதோ, சிரித்தபடி, “யோவ்... என்னைப் பார்த்ததில்லையா?” எனக் கேட்குமளவுக்குத் திமிர் இருந்திருந்தால் அல்லது பக்குவம் இருந்திருந்தால் இப்படி இங்கே நின்று கொண்டிருக்க மாட்டேன். பதின்வயது என்றால், பிக் பாஸ் வீட்டில் இருப்பதுபோல எப்போதும் பத்துக் கண்கள் நம்மை உற்று நோக்குவதாக எல்லோருக்குமே தோன்றும். ஆனால், இப்போதும் என்னை எல்லோரும் அப்படிப் பார்ப்பது வெறும் பிரமையா, ஏளனமா அல்லது இதுதான் யதார்த்தமா? என் படங்களை லட்சக்கணக்கில் ஷேர் செய்துகொண்டிருக்கிறார்கள். உலகம் ஒரு வட்டம் என்பதை குளோபலைசேஷனுக்குப் பின்னர் நான் ஒப்புக்கொண்டுவிட்டேன். இப்போது என் படங்கள் சுற்றிச் சுற்றி என்னையும் வந்து சேர்கிறது. ஜஸ்ட் ஷேர் செய்து கடந்து செல்லும் இந்த உடல் அத்தனை அற்பமாகிப் போய்விட்டதா? இதை கலாசாரக் கோளாறு எனச் சொல்லி அரசியல் பேசக்கூட ஆசையாக உள்ளது. இறக்கப் போகிறவளுக்கு இதெல்லாம் எதற்கு? இன்று என் வருத்தமெல்லாம் யாருக்காக நிர்வாணமாக நின்றேனோ, அவனே இதற்கும் காரணமாகிவிட்டான், மன்னிச்சிடு கார்த்திக்! கார்த்திக்! இந்தப் பெயரைக் கேட்டாலே துறுதுறு எனச் சுற்றும் எண்பதுகளின் நாயகன் நினைவுக்கு வரலாம். இவன் கார்த்திக்தான். ஆனால் ‘ராஜபார்வை கமல்! கண் இல்லை எனப் பரிதாபப்பட்டதால் முதல் சந்திப்பிலேயே சப்பென அறைந்தவன்! மோதலில் தொடங்குவதெல்லாம் காதல் என்ற கான்செப்டில் சப்தமிட்டபடி அவனைச் சுற்றிச்சுற்றி வந்திருக்கிறேன். அவனை விரும்ப ஆயிரம் காரணங்கள் இருந்தன. சென்னைக்கு அருகில் உள்ள ஒரு இன்ஜினீயரிங் கல்லூரியில்தான் நாங்கள் இருவரும் அந்தப் பயணத்தை ஆரம்பித்தோம். அவன் கல்லூரியின் சிஸ்டம் இன்ஜினீயர், நான் மூன்றாம் வருடம் படித்துக்கொண்டிருக்கிறேன். ‘கண் இல்லாதவர் எப்படி சிஸ்டம் இன்ஜினீயர் என்று கேட்கிறீர்களா? அது உண்மை. என்னால் அவனைப்போல வாழ்க்கையை ஒரு சேலஞ்சாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் நீங்கள் யாரும் கவனிக்காத ஓர் இடத்தில் இப்படி நின்றுகொண்டிருக்கிறேன். முதலில் கார்த்திக் மீது நான் பரிதாபப்பட்டதாக அவன் நினைத்திருந்தான். அந்த நினைப்பே என் மீது அவனுக்குப் பரிதாபம் கொள்ளச்செய்தது. அதுவே காதலானது. தன் பார்வையின்மையைக் காட்டிக் கொள்ளும் எதையும் அவன் செய்ததில்லை. கூலிங் கிளாஸ்தான் அணிவான். எப்போதும் புளூ டூத் காதில் இருக்கும். செல்போன், கம்ப்யூட்டர் என அனைத்தையும் வாய்ஸ் கமென்ட் மூலமாகவே இயக்கிவிடுவான். வகுப்பறையில் இருக்கும்போதே அடிக்கடி, ‘ஹாய் திஸ் ஈஸ் மெர்சி’ என வாய்ஸ் கால் ஒலி கேட்டபடி இருக்கும், பல சமயம் கட் செய்வான், சில சமயம் முணுமுணுப்பான். அந்த மெர்சி யார் என இன்று வரை தெரியாது. அவன்மீதான நம்பிக்கை இந்த அளவு இருக்க, ஒரு நாள் பீச்சின் கடல் சப்தத்துக்கு இடையே ‘இச்’சென்ற சப்தம் மட்டும் அவனைத் தொந்தரவு செய்திருந்ததை உணர முடிந்தது. சென்னை பீச்! வேறு வழி இல்லை. ஆனால், அவன் அன்றுதான் மௌனம் உடைத்தான். ‘வழக்கமா பாய் ஃபிரெண்டுக்காகத்தான் பொண்ணுங்க நீட்டா டிரஸ் பண்ணி இம்ப்ரஸ் பண்ண ட்ரை பண்ணுவாங்க இல்லை?’ எனக் கேட்டான். என் பதில் கடல் அலைகளின் சப்தத்தில் அவனுக்குள் செல்லவில்லை. எனக்குள்ளேயே சன்னமாக ஒலித்தது அது. ‘பசங்க பொண்ணுங்களை செமையா புகழ்வாங்க அமுதா. நீ ரொம்ப அன்லக்கியா? அப்படி ஃபீல் பண்றியா?’ எனக் கேட்டான். அவன் தோள்களில் சாய்ந்து பதில் பேசாமல் இருந்தேன். மௌனம் எல்லா நேரமும் சம்மதம் அல்ல என்று அவனும் அறிவான். வாய்ஸ் ரெககனிஷன் சாஃப்ட்வேர் போல, தொடுவதால் படத்தின் வடிவத்தை உணர்ந்து கொள்ளும் விதமாக சாதாரணப் படங்களையும், பிரெய்லி வடிவத்துக்கு செல்போனில் மாற்றும் செயலி... இதுதான் அவனுடைய அடுத்த டார்கெட் என்பதைப் பல நிறுவனங்களுக்கு ஏறி, இறங்கி விளக்கிக்கொண்டிருந்தான். அதற்காகப் பல பல படங்களை நாங்கள் தரவிறக்கம் செய்து, முயன்றுகொண்டிருந்தோம். சாலையைக் கடப்பதில் எப்போதும் கவனம் செலுத்தும் அவனிடம் அன்று நான்தான் கடைசியாக உரையாடினேன். கிட்டத்தட்ட புராஜெக்ட்டை வெற்றிகரமாக உருவாக்கிய நிலையில், ஹைதராபாத்தின் ஐடி நிறுவனம் ஒன்று கார்த்திக்கை இந்தச் செயலுக்காக ஒப்பந்த அழைப்பை விடுத்திருந்தது. மகிழ்ச்சியில் பதின்பருவத்தின் காதல் என்னென்ன சாகசங்கள் செய்யத் துணியுமோஅத்தனையும் மனதிற்குள் ராட்டினம் ஆடின. இருந்தும் எப்போதுமே இருவருக்குமான எல்லைகள் நிர்ணயித்திருந்தோம். கார்த்திக் ஹைதராபாத் கிளம்பிக்கொண்டிருந்தான். ‘கார்த்திக், நான் சில படங்கள் அனுப்பறேன். இந்த ஆப் வேலை செய்ய ஆரம்பிச்சதும், முதன் முதலில் இந்தப் படங்களைத்தான் நீ பார்க்கணும்’ என செல்போனில் சொன்னேன். கார்த்திக் எதையோ உணர்ந்தவனாக, ‘எப்படியும் என்னைக் கவுக்கலாம்னு முடிவு பண்ணிட்டே. அனுப்பு!’ என போனை வைத்த விநாடியிலேயே விதவிதமாக பல செல்ஃபிக்களை அனுப்பினேன். அப்படியே வாட்ஸ் அப் செய்துவிட்டு அம்மாவின் அழைப்பு நோக்கி ஓடினேன். மறுநாள் வரை கார்த்திக்கின் போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது ஒரு பதற்றத்தை அன்று காலையிலிருந்து அதிகமாக்கியது. கெட்ட கனவுகள் பொய்யாக வேண்டும் என்கிற பதற்றம் அது. ஆம்புலன்ஸ், ஹாஸ்பிடல் எனக் கெட்ட கெட்ட கனவுகள் என்னை அடிக்கடி துரத்தினாலும், அது உண்மையென்பதுபோல கார்த்திக்கின் மரணம் மிகக் கொடூரமான ரோடு ஆக்ஸிடென்ட் வழி நிகழ்ந்த அன்றே இப்படி முடிவெடுத்திருக்கலாம். வாழ்க்கை குறித்த கார்த்திக்கின் வார்த்தைகள், போராட்டங்கள் குறித்த அவனது தியரிகள் என் இருப்பின் அவசியத்தை உணர்த்தின. எனினும் பித்துப்பிடித்தவள்போல எந்த உணர்வும் இன்றி இரண்டு நாள்கள் இருட்டறையில் கழித்தேன். வீட்டில் இருந்தால் பிரச்னை என, தோழி அறையில் தங்கிக்கொண்டேன். மூன்றாவது நாள் செல்போன் ஃபிளாஷ். அதுதான் கடைசியாக நான் பார்த்த ஒளி. அதோடு உலகம் மட்டும்தான் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. கார்த்திக் போல இல்லாமல் நான் பார்வை தெரிந்தும் அவற்றைக் கண்டுகொள்ளாதவளாக முயன்று பார்த்தேன். கார்த்திக் அசலானவன். அமுதா அப்படியில்லை என்பதே அசல். கார்த்திக்குக்கு நான் அனுப்பிய அரைகுறை படங்கள் அனைத்தும் நெட்டிசன்களால் பதிவேற்றம் ஆகியிருந்ததை வாட்ஸ் அப் வழியாகவே பார்க்க நேர்ந்தது. அண்ணனிடமிருந்து அழைப்பு வந்ததும், கூனிக்குறுகி போனை எடுத்தேன். ‘எங்கே இருக்கே, ஊட்டியா?’ எனக் கேட்டான். இதற்கு மேல் பேச என்ன இருக்கிறது என போனை கட் செய்தேன். தொடர்ந்து அப்பா, அம்மா என என் குடும்பமும் சுற்றமும் என்னைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். நான் இப்போது தோழி அறையிலும் இல்லை. அம்மா நிச்சயம் அழுதிருப்பாள் என நினைத்தேன், வாட்ஸ் அப்பில் வசைபாடி அனுப்பியிருந்தாள். அப்பாவோ என் படங்களைத் தாங்கிய முகநூல் பதிவுகள் அனைத்தையும் அனுப்பி கேவலமாகப் பேசிக்கொண்டிருந்தார். வாட்ஸ் அப்பின் ஒரே வசதி, வருவதை வாங்கிக்கொள்ளலாம். விருப்பப்பட்டால் மட்டும் பேசிக்கொள்ளலாம். யாரைப் பார்க்கவும் அச்சம்... உடலை இரு ஆடைகள் கொண்டு போர்த்தியிருந்தேன். வெயிலுக்கு அணியும் டூவீலர் முகமூடியையும் விட்டுவைக்கவில்லை. ஆனாலும், பார்க்கும் கண்கள் எல்லாம் என்னை ஸ்கேன் செய்வது போல அருவருப்பாகவே இருந்தாலும், உடல் என்பது இத்தனை அருவருக்கத்தக்கதா என உணர்ந்த நொடி! ‘ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் ஸ்லீப்பிங் பில்ஸ் இரண்டு வேளைக்கு மேல் தர மாட்டேன் அல்லது ‘தரவே மாட்டேன்’ என்று சொல்லும் மெடிக்கல்கள் பத்துப் பதினைந்து ஏறி, இதுவரை பன்னிரண்டுதான் சேர்ந்திருக்கிறது. இது போதுமானதா என்று தெரியாமல் சற்று முன்னர்தான் இவ்வழியே நடந்து வந்துகொண்டிருந்தேன். இப்போது இந்தப் பாலத்தில் கூவத்துக்கும் சாலைக்குமான வழியில் காலில் ஏதோ இடறியது. அந்த சப்தத்தைச் சேர்ந்தாற்போல கூவத்தில் ஏதோ பொத்தென விழுந்த சப்தமும் கேட்டது. அது நான்தானா என்று எனக்கே ஒரு சந்தேகம். நான் ஏன் அந்தக் கூவத்தில் விழவில்லை என்பதுபோல், அந்த மாய சப்தம் எனக்குள்ளே என்னைத் தூண்டுகிறதுபோல. இப்போது வரை என்னை நீங்கள் வெகு சுலபமாகக் கடந்துகொண்டிருக்கிறீர்கள். கார்த்திக்குக்கு உலகமே கரிசனம் காட்டும்போது அதை வெறுத்தான். அதே உலகம் எனக்கு ஏன் முற்றிலும் வேறாக இருக்கிறது. ஆனாலும் கூவம் சரியான இடம்தான். இறந்த பின்னும் நான் யார் என என் உடல் தெரியாமல் இருக்கவே இப்போது கூவத்துக்குள் சாக முடிவெடுத்து நிற்கிறேன். வாட்ஸ் அப்பில் என்னைப் பற்றிய நாற்றத்தோடு ஒப்பிட்டால், கூவம் கொஞ்சம் தேவலாம்தான். இன்னும் நான்கடிக்குள் நான் மயங்கிவிழ வாய்ப்பிருக்கலாம் என நகர்ந்து கொண்டிருந்தபோது, காலில் ஏதோ தட்டுப்படுகிறது. கூவத்தில் குப்பைக்கா குறை? ஆனால், அது ஏதோ ஒரு முனகல் சப்தம். சட்டென நகர்ந்து கீழே பார்த்தேன். கை ஒன்று மேலே என்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. அதிர்ச்சியில் ஓட முற்பட்டு பின் நிதானித்துப் பார்த்தேன். ஒரு சிறுவனின் கை. வேகமாக அந்தக் கையை இழுத்து மேலே தூக்கினேன். ஆறு வயது இருக்கலாம். முனகலில் இருந்தான். அருகில் யாரும் இல்லை. என் மீதிருந்த ஒவ்வொரு துணியாக எடுத்து அவன் சேற்றைத் துடைத்த போது அரை உயிராய் அவன் முனகல் அதிகமானது. “அக்கா! அக்கா!” என்றான். கிட்டத்தட்ட எனக்கும் அவனின் நிலைதான். ஆனால், இப்போது என்னால் இறக்க முடியாது! அவனை மடியில் கிடத்தியபடி ``யார் நீ?” எனக் கேட்டேன். அனாதை இல்லத்திலிருந்து கடத்தி வரப்பட்டவன் என்பதையும், ஓரினச் சேர்க்கைக்காக வதைக்கப்பட்டு, கூவத்தில் தூக்கியெறியப்பட்டவன் என்பதையும் சொல்லத் தெரியாத பாஷைகளில் சொல்லிக்கொண்டிருந்தான். உடல் முழுவதும் காயங்களின் மீதான சேற்றின் ஏற்றத்தாழ்வுகள் என்னையும் பற்றிக்கொண்டது. “அக்கா! பசிக்குது” என்றான். அவனைத் தூக்கிச் சுமந்தவாறு இப்போது நடக்கத் தொடங்குகிறேன். இப்போது சேறு துடைத்துப்போட்ட அந்த முகமூடி இல்லை. என் மார்பின் மீதான துப்பட்டாகூட இல்லை. ரோட்டுக்கடை ஒன்றில் நின்றோம், ஏற இறங்கப் பார்த்தாலும், என் கையில் காசில்லை எனத் தெரிந்தும் இரண்டு பரோட்டோக்களைத் தந்தார் காதர் பாய். அந்த ட்யூப்லைட் வெளிச்சத்தில் அவன் நெற்றியின் மீது ஒட்டிக்கொண்டிருந்த பிங்க் நிறச் சாயத்தைத் துடைத்தபடி அவனைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
எப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா... முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லி... கொஞ்சம் நானும்... கொஞ்ச நீயும்.... நானெல்லாம் தொலையவே மாட்டேன் காதலில் என இறுமாந்திருந்தபோதுதான் நீ வந்து தொலைத்தாய் பேசாமலே படுத்துகின்றன உன் இதழ்கள் பேசியே கொல்கின்றன உ... கொஞ்சம் காதலித்துத் தொலையேன்... ஏண்டா இப்படிக் காதலிச்சு என் உயிரை வாங்கற..? என அழகாக நீ அலுத்துக்கொள்ளும்போது என் உயிரை வாங்குவது என்னவோ நீதான்... எப்படி என்னை உன்ன... இன்னும் கொஞ்சம் கொஞ்சவா...? என்னதான் நீயாகக் கொடுத்தாலும் நானாக திருடும் போது கொஞ்சம் தித்திப்பு அதிகமாகத்தான் இருக்கின்றது முத்தங்களுக்கு... நானும் நீயும் பேசிக்கொ... கொஞ்சம் கொஞ்சேன்.... கொஞ்சம் பேசிவிடேன் என்னிடம்.. கோபத்திலும் நீ அழகாக இருக்கிறாய் என்ற பொய்யை எத்தனைமுறைதான் சொல்வது செல்லக் குரங்கே..?? நான் நல்லா இருக்... நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... கையில் மருதாணி இட்டிருக்கும் தைரியத்தில்தான் நான் உன்னிடம் குறும்பு செய்வதாக குற்றம் சொல்கிறாய்.. அப்படியெல்லாம் இல்லையடி கையில் நீ இருக்கு... எனக்கு மதம் பிடிக்கிறது மதம் பிடிக்காத மதம் பிடிக்கும் மதம் இல்லாத மதம் இருக்கிறதா ? அண்டம் காக்கும் கடவுளைப் பார்க்க காத்திருக்கிறேன் தரிசன வரிசையில் ... நட்போடு காதலித்து... அனைவரிடமும் நட்புகொள்ள முடியும் ஆனால் உன்னிடம் மட்டும் தான் காதல் கொள்ளமுடியும் தெரிந்துகொள்ளடி... காதலித்தால் நம் நட்பு சாகும் என்கிற... ஆதலினால் காதல் செய்வீர் ! பேசாமல் இருக்க மாட்டியா? என்கிறாய் விரல்களுக்கு ஏது காதுகள் ? கொஞ்ச நேரம் சும்மா இருக்க சொல்கிறாய் கொஞ்சும் நேரம் கொஞ்சநேரமாய் எப்படி ... இல்லாத பொழுதுகள் நீ இல்லாத பொழுதுகளும் நன்றாகத்தான் இருக்கின்றன இப்போதுதான் உன்னைபற்றி அதிகம் நினைக்கிறேன் நீ ஓடிப்போகலாமா எனக்கேட்டதும் நான் தயாராவ... பிரபலமான இடுகைகள் அப்பா... எப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா... முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லி... கொஞ்சம் நானும்... கொஞ்ச நீயும்.... நானெல்லாம் தொலையவே மாட்டேன் காதலில் என இறுமாந்திருந்தபோதுதான் நீ வந்து தொலைத்தாய் பேசாமலே படுத்துகின்றன உன் இதழ்கள் பேசியே கொல்கின்றன உ... கொஞ்சம் காதலித்துத் தொலையேன்... ஏண்டா இப்படிக் காதலிச்சு என் உயிரை வாங்கற..? என அழகாக நீ அலுத்துக்கொள்ளும்போது என் உயிரை வாங்குவது என்னவோ நீதான்... எப்படி என்னை உன்ன... இன்னும் கொஞ்சம் கொஞ்சவா...? என்னதான் நீயாகக் கொடுத்தாலும் நானாக திருடும் போது கொஞ்சம் தித்திப்பு அதிகமாகத்தான் இருக்கின்றது முத்தங்களுக்கு... நானும் நீயும் பேசிக்கொ... கொஞ்சம் கொஞ்சேன்.... கொஞ்சம் பேசிவிடேன் என்னிடம்.. கோபத்திலும் நீ அழகாக இருக்கிறாய் என்ற பொய்யை எத்தனைமுறைதான் சொல்வது செல்லக் குரங்கே..?? நான் நல்லா இருக்... நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்... கையில் மருதாணி இட்டிருக்கும் தைரியத்தில்தான் நான் உன்னிடம் குறும்பு செய்வதாக குற்றம் சொல்கிறாய்.. அப்படியெல்லாம் இல்லையடி கையில் நீ இருக்கு... எனக்கு மதம் பிடிக்கிறது மதம் பிடிக்காத மதம் பிடிக்கும் மதம் இல்லாத மதம் இருக்கிறதா ? அண்டம் காக்கும் கடவுளைப் பார்க்க காத்திருக்கிறேன் தரிசன வரிசையில் ... நட்போடு காதலித்து... அனைவரிடமும் நட்புகொள்ள முடியும் ஆனால் உன்னிடம் மட்டும் தான் காதல் கொள்ளமுடியும் தெரிந்துகொள்ளடி... காதலித்தால் நம் நட்பு சாகும் என்கிற... ஆதலினால் காதல் செய்வீர் ! பேசாமல் இருக்க மாட்டியா? என்கிறாய் விரல்களுக்கு ஏது காதுகள் ? கொஞ்ச நேரம் சும்மா இருக்க சொல்கிறாய் கொஞ்சும் நேரம் கொஞ்சநேரமாய் எப்படி ... இல்லாத பொழுதுகள் நீ இல்லாத பொழுதுகளும் நன்றாகத்தான் இருக்கின்றன இப்போதுதான் உன்னைபற்றி அதிகம் நினைக்கிறேன் நீ ஓடிப்போகலாமா எனக்கேட்டதும் நான் தயாராவ...
அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.
திருச்சுழி : திருச்சுழி அருகே புரசலுாரில் பள்ளி சுற்றுச்சுவர் கட்ட பள்ளம் தோண்டிய போது 400 ஆண்டுகள் பழமையான சதிக்கல் கண்டெடுக்கப்பட்டது. அந்த ஊரை சேர்ந்த தேவாங்கர் கலை கல்லுாரி வரலாற்று துறை உதவி பேராசிரியர் ரமேஷ், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு தகவல் அறிந்து கள ஆய்வு செய்தபின் ராஜகுரு கூறியதாவது:இந்த சிற்பம் உடன்கட்டை ஏறி இறந்த பெண்ணுக்கு வைத்த சதிக்கல் ஆகும். போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நடுகற்கள் நட்டு வழிபடும் முறை சங்க காலம் முதல் தமிழ்நாட்டில இருந்துள்ளது. போரிலோ, வேறு காரணங்களிலோ கணவன் இறந்த பின் அவனுடனோ, தனியாகவோ உடன்கட்டை ஏறி இறந்த பெண்ணுக்கு நினைவு சின்னங்கள் அமைத்து வழிபடும் வழக்கம் உள்ளது. இவற்றை மாலையடி, தீப்பாஞ்சம்மன், மாலைக்காரி, சீலைக்காரி என்று அழைப்பர். இந்த சதிக்கல் 2 அரை அடி உயரம், ஒன்றரை அடி அகலம் கொண்டது. ஆண் இடது காலை மடக்கி வலது காலை தொங்கவிட்டும், பெண் இடது காலை மடக்கி வலது காலை தொங்க விட்டும் அமர்ந்த நிலையில் உள்ளனர். ஆண் இடது கையில் கட்டாரி எனும் குத்துவாளையும், பெண் வலது கையில் பூச்செண்டையும் ஏந்தியுள்ளனர். தலையில் கொண்டை ஆணுக்கு வலப்புறமும் பெண்ணுக்கு இடப்புறமும் சரிந்துள்ளது. இருவரும் நீண்ட காதுகளுடன், கழுத்திலும், காதிலும் அணிகலன்கள் அணிந்து உள்ளனர். சிற்பத்தின் மேல்பகுதி கபோதம், கண்டம், கலசங்கள் ஆகிய பகுதிகளுடன் கோயிலின் சாலை விமானம் போன்ற அமைப்பில் உள்ளது. சிற்பத்தின் கீழ்பகுதியில் காலை தொங்க விட்டு அமர்ந்த நிலையில் ஊஞ்சலாடும் பெண்ணின் சிறிய சிற்பம் உள்ளது. இந்த சிற்பம் 17ம் நுாற்றாண்டை சேர்ந்தது. இதே ஊரில் ஏற்கனவே 13ம் நுாற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுக்கள் கண்டு பிடிக்கப்பட்டது குறிப்பிடதக்கது, என்றார் உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join Telegram Channel for FREE Advertisement மேலும் விருதுநகர் மாவட்ட செய்திகள் : முக்கிய செய்திகள் 1.பலப்படுத்தலாமே! கரைகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேற்றம் பொது 1. 47,946 பேருக்கு தடுப்பூசி 2. நிறையாத கோயில் தெப்பம்; கண்டு கொள்ளாத நிர்வாகம் 3. மாணவர்களுக்கு அழைப்பு 4. அசோசியேஷன் துவக்கம் 5. கல்லூரிக்குள் வந்தாலே மகிழுது மனம்; சுற்றுச்சூழலை காக்கும் பசுமை வளாகம் மேலும்... பிரச்னைகள் 1. கொசு கேந்திரமான ஊரணி... தவிக்கும் வச்சக்காரபட்டி மக்கள் 2. பள்ளங்களால் விபத்து சம்பவம் 1. காங். ஆர்ப்பாட்டம் » விருதுநகர் மாவட்டம் முதல் பக்கம் » தினமலர் முதல் பக்கம் வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். மேலும் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்! உங்கள் கருத்தைப் பதிவு செய்ய : My Page Login : Log in Forgot password ? New to Dinamalar ? Create an account வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. மேலும் (Press Ctrl+g to toggle between English and Tamil) Submit அன்புள்ள வாசகர்களே!, நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். Close X Prev Next சினிமா → கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் → கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு → கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் → தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் → தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
தேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இங்கிலாந்து தமிழ்நாடு பிரிமீயர் லீக் ஐபிஎல் 2021 இந்தியா vs நியூசிலாந்து டி20 உலகக் கோப்பை நேரலை செய்தித் தொகுப்பு அரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு தற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை இன்று ஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம் இந்தியா vs நியூசிலாந்து ஸ்பெஷல்ஸ் தேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இங்கிலாந்து தமிழ்நாடு பிரிமீயர் லீக் ஐபிஎல் 2021 இந்தியா vs நியூசிலாந்து டி20 உலகக் கோப்பை பயிர் காப்பீடு கால அவகாசம் - மத்திய அரசுக்கு தமிழக அமைச்சர் கடிதம் பதிவு : நவம்பர் 13, 2021, 08:41 AM தமிழகத்தில் 26 மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை நவம்பர் 30 ஆம் தேதி வரையில் நீட்டிக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். WhatsApp Facebook Twitter Mail தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 10 லட்சம் விவசாயிகள் சுமார் 25 லட்சம் ஏக்கர் பயிர் செய்துள்ள நிலையில், 8 லட்சத்து 75 ஆயிரம் விவசாயிகள் மட்டுமே 12 லட்சம் ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திட்டமிட்டப்படி காப்பீடு செய்ய முடியாத விவசாயிகள், கால அவகாசத்தை அதிகரிக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் 26 மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை நவம்பர் 15 ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதியாக நீட்டிக்க வேண்டும் என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு, தமிழக வேளாண் துறை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். அதில் மழை காரணமாக இ சேவை மையங்கள் செயல்படாத நிலையில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,தேனி, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பயிர் காப்பீடுக்கான கடைசி தேதியை நவம்பர் 30 வரை நீட்டிக்க கேட்டுக் கொண்டுள்ளார். கன்னியாகுமரி, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு வரும் டிசம்பர் 15-ம் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்புடைய செய்திகள் (14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே' (14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே' 366 views 6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம் டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார். 83 views நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், 35 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது. 57 views ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர் ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது. 20 views மேலும் >> பிற செய்திகள் "கராத்தே வீரர்களுக்கு இடஒதுக்கீட்டில் வேலை" - கராத்தே நடுவர் காளீசன் இளஞ்செழியன் பேட்டி கராத்தே வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உலக கராத்தே சம்மேளன நடுவர் காளீசன் இளஞ்செழியன் வலியுறுத்தியுள்ளார். 3 views வேளாண் சட்டங்கள் ரத்து மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம் 3 views செல்போன் பறிப்பு - மூவர் கைது மதுரவாயல் அருகே கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த மூவரை போலீசார் கைது செய்தனர். 5 views "அம்மா உணவகத்தை மூடும் முயற்சியில் திமுக அரசு" அம்மா உணவகத்தை முடக்க, திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 11 views வசீம் அக்ரம் கொலை வழக்கு - 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது வாணியம்பாடி அருகே வசீம் அக்ரம் கொலை வழக்கில் தொடர்புடைய11 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். 8 views இளைஞர்களை கட்டிப்போட்டு தாக்குதல் - வீடியோ ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே கல்லூரி மாணவர்களை கட்டிப்போட்டு அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 20 views மேலும் >> பதிவு செய்வது எப்படி? ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும். ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.
(20.10.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - சோமன்டோ மூலம் பொதுப்புத்தியில் இந்தி திணிப்பு தெரிகிறதா? உபியில் 40% பெண்களை நிறுத்துவாரா பிரியங்கா? செய்தித் தொகுப்பு அரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு தற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை இன்று ஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம் இந்தியா vs நியூசிலாந்து ஸ்பெஷல்ஸ் தேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இங்கிலாந்து தமிழ்நாடு பிரிமீயர் லீக் ஐபிஎல் 2021 இந்தியா vs நியூசிலாந்து டி20 உலகக் கோப்பை நேரலை செய்தித் தொகுப்பு அரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு தற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை இன்று ஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம் இந்தியா vs நியூசிலாந்து ஸ்பெஷல்ஸ் தேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இங்கிலாந்து தமிழ்நாடு பிரிமீயர் லீக் ஐபிஎல் 2021 இந்தியா vs நியூசிலாந்து டி20 உலகக் கோப்பை (20.10.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - சோமன்டோ மூலம் பொதுப்புத்தியில் இந்தி திணிப்பு தெரிகிறதா? உபியில் 40% பெண்களை நிறுத்துவாரா பிரியங்கா? பதிவு : அக்டோபர் 20, 2021, 10:00 AM (20.10.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - சோமன்டோ மூலம் பொதுப்புத்தியில் இந்தி திணிப்பு தெரிகிறதா? உபியில் 40% பெண்களை நிறுத்துவாரா பிரியங்கா? WhatsApp Facebook Twitter Mail (20.10.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - சோமன்டோ மூலம் பொதுப்புத்தியில் இந்தி திணிப்பு தெரிகிறதா? உபியில் 40% பெண்களை நிறுத்துவாரா பிரியங்கா? தொடர்புடைய நிகழ்ச்சிகள் (18.10.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - குடிசை மாற்று வாரிய குடியிருப்போருக்கு தமிழ் தானே தெரியும்? அதிமுக பொன்விழாவா?ஒற்றை தலைமை பெண்விழாவா? (18.10.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - குடிசை மாற்று வாரிய குடியிருப்போருக்கு தமிழ் தானே தெரியும்? அதிமுக பொன்விழாவா?ஒற்றை தலைமை பெண்விழாவா? 29 views (23.09.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - நகைக்கடன் ரத்து.வாக்குறுதி வேறு! செயல்பாடு வேறா? இந்திய தடுப்பூசி ஒ.கே! இந்திய பயணிகளுக்கு தடுப்பா ? (23.09.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - நகைக்கடன் ரத்து.வாக்குறுதி வேறு! செயல்பாடு வேறா? இந்திய தடுப்பூசி ஒ.கே! இந்திய பயணிகளுக்கு தடுப்பா ? 27 views (27.10.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போது கேமராக்களை நிறுத்தியது அரசு ? - அப்போலோ (27.10.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போது கேமராக்களை நிறுத்தியது அரசு ? - அப்போலோ 20 views (16.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு -கபாலீஸ்வரர் கோவிலில் அறங்காவலர் நியமிக்காமல் கல்லூரி திறக்கலாமா?பிர்சாமுண்டா பழங்குடி விடுதலை போராளி! (16.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு -கபாலீஸ்வரர் கோவிலில் அறங்காவலர் நியமிக்காமல் கல்லூரி திறக்கலாமா?பிர்சாமுண்டா பழங்குடி விடுதலை போராளி! 12 views (23.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - 24மணிநேர மும்முனை மின்சாரம் - விவசாயத்திற்கு நேர அளவை மூலம் பகிர்மான கழகம் தீர்மானிக்கலாமா? (23.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - 24மணிநேர மும்முனை மின்சாரம் - விவசாயத்திற்கு நேர அளவை மூலம் பகிர்மான கழகம் தீர்மானிக்கலாமா? 5 views (29.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - பாஜக கூட்டணி கட்சி,C.A.A சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்துகிறதே!எம்ஆர்கே தருமபுரியில் இறங்குகிறாரே? (29.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - பாஜக கூட்டணி கட்சி,C.A.A சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்துகிறதே!எம்ஆர்கே தருமபுரியில் இறங்குகிறாரே? 0 views மேலும் >> பிற நிகழ்ச்சிகள் (29.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - பாஜக கூட்டணி கட்சி,C.A.A சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்துகிறதே!எம்ஆர்கே தருமபுரியில் இறங்குகிறாரே? (29.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - பாஜக கூட்டணி கட்சி,C.A.A சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்துகிறதே!எம்ஆர்கே தருமபுரியில் இறங்குகிறாரே? 0 views மெய்ப்பொருள் காண்பது அறிவு - உ.பி-யில் அகிலேஷ் கூட்டணி, ஆப் கட்சியுடன் சேருகிறதா? பெடரல் அம்சம் சிதறடிக்காதீர் - மோடியிடம் மம்தா! (25.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - உ.பி-யில் அகிலேஷ் கூட்டணி, ஆப் கட்சியுடன் சேருகிறதா? பெடரல் அம்சம் சிதறடிக்காதீர் - மோடியிடம் மம்தா! 9 views மெய்ப்பொருள் காண்பது அறிவு - கோவை முதலீட்டாளர்கள் ஒப்பந்தங்கள் மாநில சுய வளர்ச்சிக்கு உதவுமா? ஒன்றிய அரசின் ஆலைகளை அதிகரிக்குமா? (24.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - கோவை முதலீட்டாளர்கள் ஒப்பந்தங்கள் மாநில சுய வளர்ச்சிக்கு உதவுமா? ஒன்றிய அரசின் ஆலைகளை அதிகரிக்குமா? 10 views (23.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - 24மணிநேர மும்முனை மின்சாரம் - விவசாயத்திற்கு நேர அளவை மூலம் பகிர்மான கழகம் தீர்மானிக்கலாமா? (23.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - 24மணிநேர மும்முனை மின்சாரம் - விவசாயத்திற்கு நேர அளவை மூலம் பகிர்மான கழகம் தீர்மானிக்கலாமா? 5 views மெய்ப்பொருள் காண்பது அறிவு - இல்லம் தேடி கல்வி தொண்டர் பயிற்றுவிக்க திட்டம் உண்டா? ராஜஸ்தான் காங். ஒரு வழியாக காப்பாற்ற பட்டதா? (22.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - இல்லம் தேடி கல்வி தொண்டர் பயிற்றுவிக்க திட்டம் உண்டா? ராஜஸ்தான் காங். ஒரு வழியாக காப்பாற்ற பட்டதா? 16 views (19/11/2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - ஆடைமேல் தொட்டாலும் பாலியல் குற்றமே! சிலம்பு வீரருக்கு ஒதுக்கீடு.மயான ஊழியர் இனி முன்கள பணியாளர்கள்! (19/11/2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - ஆடைமேல் தொட்டாலும் பாலியல் குற்றமே! சிலம்பு வீரருக்கு ஒதுக்கீடு.மயான ஊழியர் இனி முன்கள பணியாளர்கள்! 12 views மேலும் >> பதிவு செய்வது எப்படி? ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும். ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.
இது வழங்கும் வசதி, வகை மற்றும் மதிப்பு காரணமாக அதிகமான மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு மாறுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. நெரிசலான ஆன்லைன் இடத்தில் பொருத்தமாக இருக்க, இணையவழி நிறுவனங்கள் ஆன்லைன் கடைக்காரர்களை ஈர்க்க ஆக்கபூர்வமான வழிகளைக் கொண்டு வர வேண்டும். அது போலவே, மின்வணிக நிறுவனங்களின் சந்தைப்படுத்தல் வியூகத்தில் எஸ்சிஓ இன்னும் முக்கிய பங்கு வகிக்கிறது. செமால்ட் டிஜிட்டல் சேவைகளின் முன்னணி நிபுணர் ஜேசன் அட்லர் உங்கள் இணையவழி வணிகத்தை செழிக்க வைக்கும் 8 உதவிக்குறிப்புகளை வழங்குகிறார். # 1: ஈர்க்கக்கூடிய இணையவழி வலைத்தளத்தை வடிவமைக்கவும் இது உண்மையில் அடிப்படை படி. இது தொடர்ந்து வரும் எல்லாவற்றிற்கும் அடித்தளத்தை அமைக்கிறது. உங்கள் இணையவழி வலைத்தளம் செல்லவும், ஈடுபடவும், பதிலளிக்கவும் எளிதானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த வழியில் உங்கள் வாடிக்கையாளர்கள் உங்களுடன் கடைக்கு வருவார்கள். இணையவழி வலைத்தளத்தை அமைப்பதற்கான திறமை உங்களிடம் இல்லையென்றால் உங்கள் தலையை சொறிந்து கொள்ளாதீர்கள். செமால்ட் போன்ற நிறுவனங்கள் உகந்த சில்லறை வலைத்தளத்தை உருவாக்க உங்களுக்கு உதவும். இதற்கு மேல், அவர்கள் ஒரு பாதுகாப்பான சோதனை முறை, ஒரு சரக்கு கண்காணிப்பு மற்றும் மேலாண்மை அமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, வாடிக்கையாளர்களை உங்களிடம் ஈர்க்கும் உள்ளடக்கத்தை உருவாக்குவார்கள். இணையவழி வலைத்தளத்தின் செயல்திறனை அறிய வலை போக்குவரத்து மற்றும் மாற்றங்களை கண்காணிக்க ஒரு கருவி கூட உள்ளது. # 2: இணையவழி வலைத்தளத்தின் மொபைல் அம்சத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் 2015 ஆம் ஆண்டில், இணைய சில்லறை விற்பனையாளர் மொபைல் மின்வணிக விற்பனைக்கு 104.5 பில்லியன் டாலர் செலவிட்டதாகக் கணக்கிட்டுள்ளார். புள்ளிவிவரங்கள் மேல்நோக்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, எனவே இதைப் பயன்படுத்திக் கொள்வது உங்களுடையது. இவை அனைத்தும் உங்கள் சில்லறை வலைத்தளத்தை வடிவமைப்பதன் மூலம் தொடங்குகிறது: மொபைல் கேஜெட்களில் இயங்க உகந்ததாக இருப்பதை உறுதிசெய்க. ஃபிளாஷ் விளம்பரங்கள் மற்றும் பாப் அப்களை நிறுத்துங்கள். # 3: ஆராய்ச்சி, ஆராய்ச்சி, ஆராய்ச்சி நீங்கள் எந்த வகையான உள்ளடக்கத்தை வைக்க வேண்டும் மற்றும் உங்கள் இலக்கு சந்தை விரும்பும் குறிப்பிட்ட சொற்கள் / சொற்றொடர்களைப் பற்றிய ஆராய்ச்சி. உங்கள் வாடிக்கையாளர்கள் எதைக் கிளிக் செய்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்து அதை சிறப்பாகச் செய்ய முயற்சிக்கவும். இறங்கும் பக்கங்கள், முகப்பு பக்கம் மற்றும் தயாரிப்பு பக்கம் ஆகியவற்றில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள், அவை Google வழிமுறையால் எவ்வாறு தரவரிசைப்படுத்தப்படுகின்றன என்பதை தீர்மானிக்கிறது. உங்கள் போட்டி என்ன என்பதைப் பார்க்க இது வலிக்காது. # 4: தொடர்புடைய இணைப்புகளை உருவாக்கவும் உங்கள் இணையவழி வலைத்தளத்தை சந்தைப்படுத்துவதில் உள்வரும் இணைப்புகள் இன்னும் முக்கிய பங்கு வகிக்கின்றன. உங்கள் தயாரிப்புகள் அல்லது வலைத்தளத்துடன் இணைக்க விரும்பும் பிளாக்கர்களைத் தேடுங்கள், அவர்களுடன் இணைந்து கொள்ளுங்கள். சமூக ஊடகங்களில் உங்கள் தயாரிப்புகளின் மதிப்புரைகளையும் நீங்கள் காணலாம் மற்றும் உங்கள் இணையவழி வலைத்தளத்திற்கு உள்வரும் இணைப்புகளைச் சேர்க்கலாம். இந்த தந்திரோபாயத்தை மேம்படுத்துவதற்கு 60 க்கும் மேற்பட்ட கருவிகளைப் பயன்படுத்தலாம். # 5: புதிய உள்ளடக்கத்தை உருவாக்கவும் உங்கள் மின்வணிக வலைத்தளம் நிலையான விளக்கங்களைக் கொண்ட தயாரிப்புகளின் பட்டியலை விட அதிகமாக இருக்க வேண்டும். எங்கள் சொந்த வலைப்பதிவின் மூலம் உருவாக்கும் ஒரு புள்ளியை உருவாக்கி, புதிய, நுண்ணறிவுள்ள உள்ளடக்கத்தை இடுகையிடவும். சில்லறை விற்பனையில் உங்களிடம் உள்ள தயாரிப்புகளை பரிந்துரைக்கும் வெவ்வேறு விடுமுறை நாட்களில் பரிசு வழிகாட்டியை நீங்கள் முயற்சி செய்யலாம். # 6: வாடிக்கையாளர் மதிப்புரைகளைக் கேளுங்கள் வாடிக்கையாளர் மதிப்புரைகள் நம்பகத்தன்மையை உருவாக்குவது மட்டுமல்லாமல், உங்கள் எஸ்சிஓவை அதிகரிக்கும். இந்த வழியில் சிந்தியுங்கள்: நீங்கள் பெறும் மதிப்புரைகள், அதிகமான உள்ளடக்கம் (புதியது) கிடைக்கும். # 7: வழக்கமான வலை சோதனைகளை மேற்கொள்ளுங்கள் தவறு செய்வது இயல்பு. அதிகமான உள்ளடக்கம் மற்றும் வலைப்பக்கங்கள் சேர்க்கப்படுவதால், நீங்கள் பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. காணாமல் போன குறிச்சொற்கள், ஸ்கிரிப்டுகள், வழிமாற்றுகள், நகல் பக்கங்கள், இறந்த இணைப்புகள், காணாமல் போன படங்கள் மற்றும் வேறு ஏதேனும் பிழைகள் ஆகியவற்றை இணையவழி இணையதளத்தில் காலாண்டு சோதனை நடத்துவதன் மூலம் பாருங்கள். ஏற்றுதல் வேகம், வலைத்தள பாதுகாப்பு மற்றும் பலவற்றை சரிபார்க்க இலவச கருவிகளைப் பயன்படுத்தவும். # 8: செல்வாக்கு செலுத்துபவர்களின் பட்டாலியனை உருவாக்குங்கள் பதிவர்களுடன் இணைந்து உங்கள் இணையவழி வலைத்தளம், தயாரிப்புகள் மற்றும் மதிப்பாய்வு பற்றி எழுதுங்கள். உங்கள் எஸ்சிஓ மற்றும் வலை போக்குவரத்தை அதிகரிக்க ஒரு சமூக ஊடக பிரச்சாரத்தைத் தொடங்கவும். இந்த உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்தி, நீங்கள் ஒரு வலுவான ஆன்லைன் இருப்பை உருவாக்கலாம். உங்கள் போட்டியாளர்கள் அதிர்ச்சியிலிருந்து தள்ளப்படுவார்கள்.
மிக்க நன்றி தியா...விருதுகள் ஊக்கத்திற்காக கொடுக்கப் படுபவை..என்னுடன் இவ்விருதினை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி அன்புடன் மலிக்கா 2 டிசம்பர், 2009 அன்று பிற்பகல் 10:54 விருதுபெற்ற அனைத்து உள்ளங்களுக்கும் அதனை பகிர்ந்தளித்த தாங்களுக்கும் வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி சுசி 3 டிசம்பர், 2009 அன்று முற்பகல் 2:33 ரொம்ப நன்றி தியா. விருது பெற்ற அனைவருக்கும், வழங்கிய உங்களுக்கும் வாழ்த்துக்கள். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி ஸ்ரீதர்ரங்கராஜ் 3 டிசம்பர், 2009 அன்று முற்பகல் 6:01 மிக்க நன்றி நண்பா.விருது பெற்ற மற்றவர்க்கும் வாழ்த்துகள். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி thiyaa 3 டிசம்பர், 2009 அன்று முற்பகல் 9:07 // புலவன் புலிகேசி கூறியது... மிக்க நன்றி தியா...விருதுகள் ஊக்கத்திற்காக கொடுக்கப் படுபவை..என்னுடன் இவ்விருதினை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. December 3, 2009 9:37 AM // அன்புடன் மலிக்கா கூறியது... விருதுபெற்ற அனைத்து உள்ளங்களுக்கும் அதனை பகிர்ந்தளித்த தாங்களுக்கும் வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. December 3, 2009 12:24 PM \\ சுசி கூறியது... ரொம்ப நன்றி தியா. விருது பெற்ற அனைவருக்கும், வழங்கிய உங்களுக்கும் வாழ்த்துக்கள். December 3, 2009 4:03 PM \\ ஸ்ரீ கூறியது... மிக்க நன்றி நண்பா.விருது பெற்ற மற்றவர்க்கும் வாழ்த்துகள். December 3, 2009 7:31 PM // என்னுடன் விருதைப் பகிர்ந்து கொண்டமைக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி நசரேயன் 3 டிசம்பர், 2009 அன்று பிற்பகல் 12:11 வாழ்த்துக்கள் அனைவருக்கும் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி thiyaa 3 டிசம்பர், 2009 அன்று பிற்பகல் 6:56 // நசரேயன் கூறியது... வாழ்த்துக்கள் அனைவருக்கும் December 4, 2009 1:41 AM // நன்றி நசரேயன் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி சிங்கக்குட்டி 4 டிசம்பர், 2009 அன்று பிற்பகல் 9:51 விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள் :-) பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி thiyaa 5 டிசம்பர், 2009 அன்று பிற்பகல் 7:14 சிங்கக்குட்டி கூறியது... விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள் :-) December 5, 2009 11:21 AM // நன்றி சிங்கக்குட்டி பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி கருத்துரையைச் சேர் மேலும் ஏற்றுக... கருத்துரையிடுக இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் ..... அன்புடன் -தியா- இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் - செப்டம்பர் 22, 2010 இங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையில் தனது 31 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். காண்டீபன் அ க் ஷி கா 01-10-2010 அன்று சென்னையில் தனது 3 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இன்று என் வீட்டுக்குள் மூன்றாம் பிறையும் முழு நிலவும் ஒன்றாகக் குடி கொண்டு வாழ்த்த வந்த நன்நாள்.... வருடத்தில் வருகின்ற நாட்களில் எல்லாம் வசந்தத்தைத் தருகின்ற பொன் நாள் இது..... செப்ரெம்பர் இறுதி நாளின் இரவு மட்டும் நீள்வது ஏனோ? ஒக்டோபர் ஒன்று வந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி என் வீட்டில்... என் காதல் தேசத்து புன்னகையே எங்கள் வீட்டின் முழு நிலவே உனக்கு இன்று பிறந்தநாள் என்று காலையில் இருந்தே பூப் பறிக்கிறேன் அர்ச்சிப்பதற்காக.... உன் பிறந்தநாள் பரிசாக கடவுள் தந்த எங்கள் அன்புச் செல்வத்துக்கும் உனக்கும் ஒரே நாளில் விழா எடுக்கப் பிறந்த அதிஷ்டக்காரன் நான் என்பதால் ஒரு கர்வம் எனக்குள்... என்ன ஒரு வித்தியாசம் உனக்கு முப்பத்தொன்ற மேலும் படிக்கவும் 2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்) - ஆகஸ்ட் 09, 2009 யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு போன்ற இலக்கிய வடிவங்களும் பெரும் செல்வாக்குடன் காணப்பட்டன. கி.பி.17ஆம் நூற்றாண்டு வரை இலங்கையில் எழுந்த இலக்கியங்கள் எல்லாம் ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்துக்கு உரியனவாகவே கொள்ளப்படுகின்றன. கி.பி.1310இல் தம்பதெனியாவில் அரங்கேற்றப்பட்ட ‘சரசோதிமாலை’ என்னும் நூலே ஈழத்துக்குரியதென இனங்காணப்பட்ட முதல் நூல் ஆகும். சோதிடக்கலை பற்றிய பல்வேறு நம்பிக்கைகளினை இந்நூல் தருகின்றது. பின்னர் எழுந்த செகராசசேகர மாலையும் சாஸ்திர, நாள், கோள், நற்பயன் உரைக்கும் பண்புடன் திகழ்கின்றது. வைத்தியம் தொடர்பான நூல்களும் இக்காலத்துக்குரியனவாக இனங்காணப்பட்டன. செகராசசேகரம், பரராசசேகரம் என்பன சிறந்த வைத்திய நூல்களாக இருப்பினும் ‘விசகடி’ வைத்தியம் பற்றிய குறிப்பெதனையும் அவற்றிலிருந்து பெறமுடியாமை ஓர் குறைபாடே எனலாம். ‘தாயைக் கொன்றான் சாறெடுத்துத் தடவிக்கொண்டால் தீர்ந்திடுமே’ என நெருப்புச் சுட்ட புண்ணுக்கான மருந்து கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சிலருக்கு மட்டுமே விளங்கக்கூடிய (தாயைக் கொ மேலும் படிக்கவும் நானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும் - டிசம்பர் 15, 2009 இந்தக் கவிதையை, உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடாத்தும் கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன். ஆராரோ ஆரிவரோ ஆரடிச்சு நீயழுதாய் அடித்தாரை சொல்லியளு ஆய்கினைகள் பண்ணி வைப்பேன் காத்து நுழையாத வீட்டினுள்ளே காவாலி அவன் நுழைந்தான் பாத்துப்பாத்து கட்டி வைச்ச செல்வமெல்லாம் கொண்டுபோனான் முகமூடி கொண்டொருவன் படியேறி வருவானென்று அடிபாவி நான் நினைக்க ஆதாரம் ஏதுமுண்டோ கடிகாவல் செய்து வைக்க காவலர்கள் யாருமில்லை கடிநாயும் வளர்க்கவில்லை காவலுக்கு வைக்கவில்லை அந்தாளும் சிவனேன்னு ஆகாயம் போயிட்டார் இந்த உலகமதில் எங்களுக்கு வேறு துணை யாருமில்லை சிறுக்கி செம சிறுக்கி சின்னமகள் இவளிருக்க பொறுக்கி எடுத்த முத்து வேறெதற்கு உலகினிலே பொன்னனான பொன்மணியை பொத்திப் பொத்தி வளர்க்கையிலே கண்ணான கண்மணிகள் கருவிழியும் மங்குதடி கருவிழிகள் மங்கி மங்கி காவல் செய்யும் வேளையிலே இரவுதனில் எவன் வருவான் எதையெடுப்பான் என்று பயம் இரவு வரும் வேளையிலே காடையர்கள் வீடு வந்தால் இரவி வரும் வேளைக்குமுன் பாடையெல்லோ கட்டிடுவார் பொழுதேறிப் போகையிலே வருவதுவோ நித துக்கம் அழுதழுது கண்கள் மங்கும் அனுதினமும் முகஞ்சினுங்கும் கள்ளன்
தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான அஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலைகீழாக தொங்கியபடி யோகாசனம் செய்யும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது ராம் இயக்கிய ’கற்றது தமிழ்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை அஞ்சலி அதன்பின் ’அங்காடித்தெரு’ ’தூங்காநகரம்’ ’மங்காத்தா’ ’எங்கேயும் எப்போதும்’ ’அரவான்’ ’சேட்டை’ ’சிங்கம்-’2 ’இறைவி’ ’தரமணி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர் தெலுங்கில் ஒரு படத்திலும் கன்னடத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை அஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலைகீழாக தொங்கியபடி யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்த்து ஆச்சரியம் அடைந்து அவருக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Source link Tags Actress Anjali Instagram news photos Tamil viral Yoga தமழ Share Facebook Twitter WhatsApp Telegram Previous articleGood News for 12th students: college admission application process starts from tomorrow | College admission: தமிழக கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் Next articleऐपल की आईफोन 13 सीरिज में कंपनी दे सकती है 25W की फास्ट चार्जिंग का सपोर्ट– News18 Hindi Mr.Mario RELATED ARTICLES சினிமா செய்திகள் மீண்டும் கர்ப்பம்…ஆல்யாவால் ராஜா ராணி 2 சீரியலில் வரப் போகும் மாற்றம் இது தானாம் | Due to Alya manasa’s pregnancy, this changes will come in Raja Rani... November 29, 2021 சினிமா செய்திகள் “வடிவேலு சாரோட நடிச்ச அந்த ஒரு சீன்தான் என் கரியருக்கே ஆபத்தா போச்சு!”- `வாம்மா மின்னல்’ தீபா | Comedy Actress Minnal Deepa talks about her acting career November 29, 2021 சினிமா செய்திகள் இது ஆரம்பம்தான்… ஹாலிவுட் படத்தில் கமிட்டான சமந்தாவுக்கு கலக்கலாய் வாழ்த்து கூறிய பிரபல நடிகை! | Actress Lakshmi Manchu wishes Samantha for stepping in to Hollywood November 29, 2021 LEAVE A REPLY Cancel reply Comment: Please enter your comment! Name:* Please enter your name here Email:* You have entered an incorrect email address! Please enter your email address here Website: Save my name, email, and website in this browser for the next time I comment. Today's feeds సినిమా Trivikram Srinivas: Samantha: త్రివిక్రమ్‌కు హాండిచ్చిన హాట్ బ్యూటీ.. సమంతతో మాటల మాంత్రికుడి స్కెచ్! – trivikram... Mr.Mario - November 29, 2021 0 Pooja Hegde: మహేష్ బాబు కోసం బలమైన కథ సిద్ధం చేసిన త్రివిక్రమ్.. హీరోయిన్ కోసం వేట షురూ చేసి పూజాకు ఓటేశారు. అయితే తీరా దగ్గరకొచ్చాక ఆ బ్యూటీ హ్యాండివ్వడంతో...
புதுப்பிப்பு: 'வாருங்கள் என்னைப் பாருங்கள்' என்பதற்காக புதிய காட்சியில் கைலி ஜென்னருடன் பார்ட்டிநெக்ஸ்டோர் காதல் பெறுகிறார். செக்ஸ் & டேட்டிங் புதுப்பிப்பு: மியாமியில் மேடையில் டிரேக்கை முத்தமிட்ட பிறகு, ரிஹானா அவரை நினைவுகூரும் வகையில் ஒரு பச்சை குத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது ஃபேஷன் ஷகிரா, ஷகிரா: 10 தடங்களில் அவரது 25 ஆண்டு வாழ்க்கை இசை 2019 ஆம் ஆண்டில் யூட்யூப்பை எவ்வளவு ஜெஃப்ரி ஸ்டார் உருவாக்கியது என்பது இங்கே அழகு லூயிஸ் உய்ட்டனில் சோஃபி மூடிய பேஷன் மாதம் 2021 | ஃபேஷன் இது ஃபேஷன் மாதத்தின் இறுதி நாள், மற்றும் லூயிஸ் உய்ட்டன் அதை ஒரு மறக்கமுடியாத, விறுவிறுப்பான சேகரிப்புடன் மூடிவிட்டார், இது கூட்டத்தில் இருந்து நின்று கொண்டிருந்தது. ஆனால் அது ஆச்சரியமான ஒலிப்பதிவு மற்றும் காட்சி சோஃபி இது நிகழ்ச்சிக்கு ஒரு பரவசமான காற்றைக் கொடுத்தது. தயாரிப்பாளர் / பாப் நட்சத்திரத்திற்கு இது ஒரு முக்கியமான தருணம், மற்றும் லூயிஸ் உய்ட்டன் இயங்குதளம், திருநங்கைகளின் தெரிவுநிலைக்கு ஒரு முக்கியமான மைல்கல்லை ஃபேஷன் மேடையில் கொடுத்தது. ஜஸ்டின் டிம்பர்லேக், ஜெசிகா பீல், ஜஸ்டின் தெரூக்ஸ், மற்றும் எம்மா சேம்பர்லெய்ன் போன்ற பிரபலங்கள் அனைவரையும் ஊறவைக்க அங்கு இருந்தனர். தொடர்புடைய | சோபியின் முழு புதிய உலகம் விளக்குகள் முழுமையாக மங்கலாகத் தொடங்கின. உட்புற இடத்தின் ஒரு பக்கத்தில் ஒரு பரந்த சுவரில் ஒரு டிஜிட்டல் எல்.ஈ.டி திரை திட்டமிடப்பட்டது. SOPHIE இன் நெருக்கம் திடீரென திரையில் தோன்றியது. அவர் தனது 2017 தனிப்பாடலான 'இட்ஸ் ஓகே டு க்ரை'வின் நீட்டிக்கப்பட்ட பதிப்பைப் பாடினார், மேலும் ஓடுபாதையில் காட்டப்பட்ட திருத்தம் பிரஞ்சு இசை வீடியோ இயக்குனர் வூட்கிட் பங்கேற்புடன் லூயிஸ் உய்ட்டனுக்காக சிறப்பாக செய்யப்பட்டது. (இவரது மிகவும் குறிப்பிடத்தக்க படைப்புகளில் வீடியோ திசையும் அடங்கும் கேட்டி பெர்ரியின் 'டீனேஜ் ட்ரீம்', டெய்லர் ஸ்விஃப்ட்டின் 'பேக் டு டிசம்பர்' மற்றும் லானா டெல் ரேயின் 'பார்ன் டு டை.') என் காகசியன் வீட்டிலிருந்து வெளியேறு மோசடி செய்பவர் உள்நுழைவு • Instagram பாரிஸ் ஹில்டனுக்கு எத்தனை வாசனை திரவியங்கள் உள்ளன ரீமிக்ஸ் செய்யப்பட்ட வீடியோ, நிகழ்ச்சியின் முழு காலத்திற்கும் மேகமூட்டமான நீல வானத்திற்கு எதிராக சோபி தனது பாடலுக்கான சொற்களைப் பாடுவதைக் காட்டியது, மகளிர் சேகரிப்புகளின் கலை இயக்குனர் நிக்கோலா கெஸ்குவேர் தனது வில்லை எடுக்க வெளியே வரும் வரை. எந்தவொரு பெரிய கண்ணாடிகள் அல்லது விரிவான தொகுப்புகள் இல்லாமல், இது வசந்த 2020 வசூலின் உச்சக்கட்டத்தை குறித்தது மற்றும் பேஷன் மாதத்தை மூடுவதற்கு திருப்திகரமான மற்றும் பொருத்தமான வழியாகும்.
Means இதன் மூலம், 143 வது பிரிவின் விதிகளின்படி அமெரிக்க மாநிலங்களின் அமைப்பின் கடிதத்தை நான் கண்டிக்கிறேன், உடனடியாக நடைமுறைக்கு வருகிறது » அரசியல் மற்றும் சர்வதேச சட்டத்திற்கான ஒரு வகையைத் திறக்க வேண்டியதல்ல, இது பிரச்சினை நீண்ட காலமாக நீடிக்கிறது. நேற்று நான் உங்களிடம் பேசினேன் சாத்தியமான விருப்பங்களில், மற்றும் நான்கில், தேர்தல் இன்சுல்சா பரிந்துரைத்த மூன்றாவது அல்லது மாநில முடிவு. அமெரிக்க மாநிலங்கள் OAS அமைப்பின் கடிதத்தை ஹோண்டுராஸ் கண்டனம் செய்த செய்தி உடனடியாக நடைமுறைக்கு வரும். இது எதைக் குறிக்கிறது என்பதைப் பொறுத்தவரை, நாங்கள் சில பிரதிபலிப்புகளைச் செய்வோம்: 1. ஹோண்டுராஸ் இதை ஏன் இவ்வாறு செய்கிறார்? உறுப்பினர் ஹோண்டுராஸ் மாநிலம், அதன் அதிகாரிகள் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும், எனவே OAS அதிகாரிகளை அங்கீகரிக்கவில்லை என்றாலும், அவர்கள் மாநிலத்தின் சார்பாக செயல்படலாம் மற்றும் கடிதத்தை கண்டிக்கலாம். பின்னர், அரசியலமைப்பு ஒழுங்கின் முறிவு ஏற்படவில்லை என்று அரசாங்கம் வலியுறுத்துகிறது, இது அவர்களின் சட்டத்தின் படி அவர்கள் நியாயப்படுத்தும் ஒரு அம்சமாகும், இருப்பினும் இன்சுல்சாவின் வருகைக்குப் பிறகு, என்ன நடந்தது என்று கேட்க அவர் வரவில்லை, ஆனால் ஜனாதிபதி ஜெலாயாவை மீண்டும் பதவியில் அமர்த்த அவர்கள் தயாராக இருக்கிறார்களா என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். பிரச்சினை சிக்கலாகிறது… மிகவும் சிக்கலானது. ஊடகங்கள் குறிப்பிடுவதைப் பொறுத்தவரை, மறுதேர்தல் செயற்பாட்டில் இருக்கும், இடதுசாரிகளின் போராளியாகவும், ஆல்பா அனுதாப நாடுகளுடன் அழகாக இருக்க விரும்பும் செயலாளர் நாயகத்தின் தரப்பிலும் ஒரு குறிப்பிட்ட முன்கணிப்பு உள்ளது. இதனால்தான், எந்த நேரத்திலும் தலையிட ஹ்யூகோ சாவேஸ் அச்சுறுத்தியதால், எந்த எதிர்வினையும் கேட்கப்படவில்லை. இடைக்கால அரசாங்கம், சர்வதேச மட்டத்தில் தன்னை ஒரு சதி என்று அழைத்திருந்தாலும், அதற்கு ஒரு பெயரைக் கொடுப்பது, அதன் நடவடிக்கைகளை ஜெலாயாவின் நடவடிக்கைகள் சாவிஸ்மோவின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டது, ஜனாதிபதியை கோஸ்டாரிகாவுக்கு ஓட்டுவது போன்ற பெரிய காஃபி ஒரு தொகுப்புக்கு வெளியே எந்த பகுத்தறிவு விளக்கமும் இல்லை, இது முழு உலகமும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத ஒரு செயலாக இருக்கும். அவர் மீது எடையுள்ள செயல்கள் இருந்தால், அது அவரைப் பிடிப்பது, உலகத்துடன் தொடர்புகொள்வது ... குறைந்த பட்சம் அப்படித்தான் ஒத்துப்போகிறது; அடுத்த செயலை உலகுக்கு நியாயப்படுத்துவது மிகவும் எளிதாக இருந்திருக்கும். 2. OAS கடிதத்தை கண்டனம் செய்வதன் அர்த்தம் என்ன? சாசனத்தின் 143 வது பிரிவின்படி, ஒரு உறுப்பு நாடு பொதுச் செயலகத்திற்கு எழுத்துப்பூர்வமாக தொடர்புகொள்வதன் மூலம் அதைக் கண்டிக்க முடியும், அவர் மற்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பார். இருப்பினும், அந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகள் உள்ளன, அந்தக் கடிதம் நிறுத்தப்படும் நேரம், அந்த நேரத்திலிருந்து 3 ஜூலை 2011 வரை, நாடு அமைப்பிலிருந்து பிரிக்கப்படும். "உடனடி விளைவு" வெளிப்படும் உண்மை இரண்டு வருடங்கள் பொருந்துமா இல்லையா என்ற சந்தேகம் திறந்திருக்கும். புதிய வெளியுறவு மந்திரி OAS ஆல் அங்கீகரிக்கப்படவில்லை என்று அவர்கள் தோன்றினால், இந்த விஷயத்தின் பின்னால் ஒரு மூளை உள்ளது, நீங்கள் பார்த்தால், இந்த அறிவிப்பை யார் வழங்கினார்கள் என்று ஜெலாயா அரசாங்கத்தின் உறுப்பினரான துணைவேந்தர் யார்; உச்சநீதிமன்ற தீர்ப்பாயத்தால் அழைக்கப்பட்ட தேர்தல்களுக்கு மீதமுள்ள ஆறு மாதங்களின் புயலைக் கடந்து செல்வது அல்லது அவற்றை எதிர்பார்ப்பது கூட இன்சுல்சா பொதுச்செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படமாட்டாது என்று நம்புகிறார், மீண்டும் திரும்ப முயற்சிக்கிறார். OAS மாநிலங்களில் தலையீட்டைப் பயன்படுத்துவதில்லை என்றும், அதாவது, நீல ஹெல்மெட் நடைமுறையில் ஒரு நல்ல அனுபவம் இல்லாததால் பலத்தால் ஒழுங்கை மீட்டெடுக்கப் போகிறது என்றும் இன்சுல்சா கூறினார். 3. நாம் எதை எதிர்பார்க்கலாம் இந்த நடவடிக்கை பொறுப்பற்றது, குறிப்பாக சர்வதேச உறவுகளுடன், ஏனெனில் ஐ.நா மற்றும் ஓ.ஏ.எஸ் விஷயத்தில், அவை பலதரப்பு உறவுகள் என்றாலும், இவை பொதுவாக இருதரப்பு உறவுகளுக்கான குறிப்பு அல்லது நிபந்தனையின் கட்டமைப்பாகும். கூட்டுறவு ஒப்பந்தங்களைக் கொண்ட பல நாடுகள் உறவுகளை முறித்துக் கொள்ள அல்லது இடைநிறுத்த முடிவு செய்யலாம் மற்றும் சர்வதேச வரவுகள் தடுக்கப்படும் என்பதை இது குறிக்கும். ஆனால் உள்நாட்டில் ஒரு துருவமுனைப்பு நெருக்கடி உள்ளது, ஜெலயாவின் ஆதரவாளர்கள் இந்தச் செயலுக்கு எதிரானவர்கள் மற்றும் அதை ஒரு சதி என்று அழைக்கிறார்கள். இந்த அழுத்தத்தை நிறுத்துவது அவ்வளவு எளிதானது அல்ல, குறிப்பாக, கடந்த முறை நான் கூறியது போல், மூன்று ஆதாரங்களின் ஆதரவு இருந்தால், அதற்கு முன்னர் பொருளாதார ரீதியாக மட்டுப்படுத்தப்பட்ட அரசு நீண்ட காலம் வாழ முடியாது: சாவிஸ்மோ, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள். 4. நம்பிக்கைக்கான மாற்று வழிகள் இதற்கு பக்கச்சார்பற்ற முறையில் ஊடகங்களில் கேட்கப்படுவதை மட்டுமே நான் உங்களுக்குச் சொல்கிறேன், அதிகாரத்திற்காக போராடும் சிறிய செயல்களும், தங்கள் கடமையின் செயல்பாட்டில் அதிக சுறுசுறுப்பான நிறுவனங்களும் இருந்தால் எல்லாவற்றையும் தவிர்க்க முடியும் என்பது எனக்கு அதிர்ச்சியைத் தருகிறது. OAS கடிதத்தை கண்டனம் செய்வது மீளமுடியாதது, இப்போதைக்கு, ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் உள் உரையாடலைத் தேடுவதற்கான குறுங்குழுவாத முயற்சி, தேர்தல்களை முன்னெடுப்பதற்கான மக்களின் முடிவுகளுக்கு வழிவகுக்கும் அல்லது ஆதரவைப் பற்றி வாக்களிக்க மக்களை வழிநடத்தும் அவரை நிராகரிக்கும் மக்கள்தொகையை விட அவரை ஆதரிக்கும் மக்கள் தொகை அதிகமாக இருந்தால், ஒரே நேரத்தில் தெளிவுபடுத்த ஜெலயா. இந்த நவம்பரில் நடந்த தேர்தல்களுக்குப் பிறகு, புதிய அரசாங்கம் ஒரு ஜனநாயகத் தேர்தலில் இருந்து பிறந்தது என்பதை அரசு நியாயப்படுத்த வேண்டும் ... இங்கு என்ன வளங்கள் இருக்கும் என்று யாருக்குத் தெரியும், நாளை நான் பாதாம் மரத்தின் அடியில் இருக்கும் மனிதனிடம் மாகோண்டோவில் மழை பெய்யும் என்று கேட்பேன். "OAS இன் ஒருதலைப்பட்ச முடிவு" போன்ற ஹோண்டுராஸ் கடிதத்தின் வரிகளுக்கு இடையில் சொற்றொடர்களைத் திருத்துவதற்கும், சர்வதேச புள்ளிவிவரங்கள் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள நிலைகளை மறுஆய்வு செய்வதற்கும் பரிந்துரைக்கும் சபை உறுப்பினர்களின் முன்மொழிவின் கீழ் OAS மறுபரிசீலனை செய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஹிலாரி கிளிண்டன் "இதை வேறு ஏதாவது அழைக்கவும், ஆனால் சதி உண்மையில் ஒரு சதி என்பதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார். அப்படியானால், இது வரலாற்றில் முதல் தடவையாக இருக்கும், அதை உலகுக்கு விளக்குவது எளிதல்ல. நாம் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும், நம்மையே வேலைக்கு அர்ப்பணிப்பவர்கள், இந்த கசப்பான பானம் மக்கள் பங்களிப்பு, ஊழலுக்கு எதிரான போராட்டம், அரசியல் ஆதரவுக்கு எதிரான சீர்திருத்தங்கள், சமூக இழப்பீட்டுக் கொள்கைகள் போன்றவற்றில் அவசர மாற்றங்களை உருவாக்குகிறது என்று நம்புகிறோம். இந்த நெருக்கடிகள் ஏற்படவில்லை என்றால், இந்த பிரச்சினையில் இத்தகைய பலவீனமான நிறுவனங்களைக் கொண்ட நாடுகளில் எந்த மாற்றங்களும் இல்லை. தலைப்பு ஒருபோதும் தொடங்கவில்லை என்று நான் விரும்புகிறேன், தொழில்நுட்பங்களைப் பற்றி பேசுவதை நான் இழக்கிறேன். ஜூலை, 2009 அரசியல் மற்றும் ஜனநாயகம் டிக்கெட் வழிசெலுத்தல் முந்தைய இடுகைகள்«முந்தைய ஹோண்டுராஸ்: தவறான அல்லது சாத்தியமான மாற்றீடுகள் அடுத்த படம் ஏறக்குறைய ஐ.நா.அடுத்த » ஒரு பதிலை விடுங்கள் பதிலை ரத்துசெய் உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. பெயர் மின்னஞ்சல் வலைத்தளம் கருத்து Δ இந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும். தேடல்: தேடல் படிப்புகள் அனைத்துபடிப்புகள் - 3 டி மாடலிங்படிப்புகள் - BIM MEPபடிப்புகள் - பிஐஎம் செயல்பாடுபடிப்புகள் - பிஐஎம் அமைப்புபாடநெறிகள் - சிவில்வொர்க்ஸ்பாடநெறிகள் - புவிசார்படிப்புகள் - லேண்ட்வொர்க்ஸ்படிப்புகள் - தயாரிப்பு வாழ்க்கை சுழற்சி விவரம் பார்க்கவும் சிவில் படைப்புகளுக்கான சிவில் 3 டி படிப்பு - நிலை 2 ஜூலை, 2019 கூட்டங்கள், மேற்பரப்புகள், குறுக்கு பிரிவுகள், க்யூபிங். பயன்படுத்தப்படும் ஆட்டோகேட் சிவில் 3 டி மென்பொருளுடன் வடிவமைப்புகள் மற்றும் அடிப்படை நேரியல் படைப்புகளை உருவாக்க கற்றுக்கொள்ளுங்கள் ... மேலும் காண்க ... விவரம் பார்க்கவும் குராவைப் பயன்படுத்தி 3D அச்சிடும் பாடநெறி ஜனவரி, 2021 இது சாலிட்வொர்க்ஸ் கருவிகள் மற்றும் அடிப்படை மாடலிங் நுட்பங்களுக்கான அறிமுக பாடமாகும். இது உங்களுக்கு ஒரு திடமான ... மேலும் காண்க ... விவரம் பார்க்கவும் டிஜிட்டல் இரட்டை பாடநெறி: புதிய டிஜிட்டல் புரட்சிக்கான தத்துவம் ஜனவரி, 2021 ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் அதன் பின்தொடர்பவர்கள் இருந்தனர், அவர்கள் பயன்படுத்தும்போது, ​​வெவ்வேறு தொழில்களை மாற்றினர். பிசி நாம் ஓட்டும் வழியை மாற்றியது ... மேலும் காண்க ... மேலும் காண்க ... இந்த தளத்தின் உண்மையான நேர போக்குவரத்து ஆர்கீக் செய்திகள் பூமியில் பருவங்களுக்கு என்ன காரணம்? சந்திரனின் கட்டங்கள் மண் என்றால் என்ன? QGIS இல் செயற்கைக்கோள் படங்களைச் சேர்க்கவும் QGIS இல் டவுன்ஸ்கேலிங் நுட்பத்தைப் பயன்படுத்தி ராஸ்டரின் தீர்மானத்தை "அதிகரியுங்கள்" புவி பொறியியல் இதழ் பிற மொழிகளில் Select LanguageAfrikaansShqipአማርኛالعربيةՀայերենAzərbaycan diliEuskaraБеларуская моваবাংলাBosanskiБългарскиCatalàCebuanoChichewa简体中文繁體中文CorsuHrvatskiČeština‎DanskNederlandsEnglishEsperantoEestiFilipinoSuomiFrançaisFryskGalegoქართულიDeutschΕλληνικάગુજરાતીKreyol ayisyenHarshen HausaŌlelo Hawaiʻiעִבְרִיתहिन्दीHmongMagyarÍslenskaIgboBahasa IndonesiaGaeligeItaliano日本語Basa Jawaಕನ್ನಡҚазақ тіліភាសាខ្មែរ한국어كوردی‎КыргызчаພາສາລາວLatinLatviešu valodaLietuvių kalbaLëtzebuergeschМакедонски јазикMalagasyBahasa MelayuമലയാളംMalteseTe Reo MāoriमराठीМонголဗမာစာनेपालीNorsk bokmålپښتوفارسیPolskiPortuguêsਪੰਜਾਬੀRomânăРусскийSamoanGàidhligСрпски језикSesothoShonaسنڌيසිංහලSlovenčinaSlovenščinaAfsoomaaliEspañolBasa SundaKiswahiliSvenskaТоҷикӣதமிழ்తెలుగుไทยTürkçeУкраїнськаاردوO‘zbekchaTiếng ViệtCymraegisiXhosaיידישYorùbáZulu
அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.
பதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla!-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.
Home Thirukkural | திருக்குறள் Thirukkural Mannarai Sernthozhudhal Adhikaram-70 திருக்குறள் மன்னரைச் சேர்ந்தொழுதல் அதிகாரம்-70 அமைச்சியல் பொருட்பால் Amaichiyal Porutpal... Thirukkural | திருக்குறள் Thirukkural Mannarai Sernthozhudhal Adhikaram-70 திருக்குறள் மன்னரைச் சேர்ந்தொழுதல் அதிகாரம்-70 அமைச்சியல் பொருட்பால் Amaichiyal Porutpal in Tamil மன்னரைச் சேர்ந்து தொழுதல் 0 1041 Thirukkural Mannarai Sernthozhudhal Adhikaram-70 (Mannarai Sernthu tholuthal) திருக்குறள் மன்னரைச் சேர்ந்தொழுதல் அதிகாரம்-70 அமைச்சியல் பொருட்பால் Thirukkural Mannarai Sernthozhudhal Adhikaram-70 Amaichiyal Porutpal in Tamil. திருக்குறள் பொருள் விளக்கம் (Thirukkural Porul Vilakkam) Adhikaram-70 அமைச்சியல் மன்னரைச் சேர்ந்தொழுதல். மன்னரைச் சேர்ந்து ஒழுகல், மன்னரைச் சேர்ந்து தொழுதல், Mannarai Sernthu Tholuthal Thirukkural by Thiruvalluvar. Thirukkural Mannarai Sernthozhudhal Chapter-70 Mannarai Sernthu Olugal, Mannarai Sernthozhuthal, mannarai serntholuthal. Thirukkural Mannarai Sernthozhudhal Adhikaram-70 திருக்குறள் பா: 691 அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். kural 691: akalaadhu anukaadhu theekkaaivaar polka ikalvendharch cherndhozhuku vaar திரு மு.வரதராசனார் பொருள்: அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர் போல இருக்க வேண்டும். மணக்குடவர் பொருள்: மாறுபாடுடைய வேந்தரைச் சேர்ந்தொழுகும் அமைச்சர் அவரை அகலுவதுஞ் செய்யாது அணுகுவதுஞ் செய்யாது தீக்காய்வார்போல இருக்க. இது சேர்ந்தொழுகுந் திறங்கூறிற்று. கலைஞர் பொருள்: முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலும் இருப்பார்கள். சாலமன் பாப்பையா பொருள்: மனம் மாறுபடும் இயல்புடைய ஆட்சியாளரைச் சார்ந்து பழகுவோர், அவரிடம் கிட்ட நெருங்காமலும் விட்டு விலகாமலும் இடைநிலை நின்று பழகுக. திருக்குறள் பா: 692 மன்னர் விழைப விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கந் தரும். kural 692: mannar vizhaipa vizhaiyaamai mannaraal manniya aakkan tharum திரு மு.வரதராசனார் பொருள்: அரசர் விரும்புகின்றவர்களைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும். மணக்குடவர் பொருள்: எல்லார்க்கும் பொதுவாகக் கருதப்பட்டவையன்றி மன்னரால் விரும்பப்பட்டவற்றை விரும்பாதொழிக; அவ்விரும்ப¬£ம அம்மன்னராலே நிலையுள்ள செல்வத்தைத் தருமாதலான். அவை நுகர்வனவும் ஒப்பனை முதலாயினவுமாம். இஃது அவற்றைத்தவிர்தல் வேண்டு மென்றது. கலைஞர் பொருள்: மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும் விரும்பாமலிருத்தால் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தை அளிக்கும். சாலமன் பாப்பையா பொருள்: ஆட்சியாளருடன் பழகுபவர் ஆட்சியாளர் எவற்றை விரும்புகிறாரோ அவற்றை விரும்பாமல் இருப்பது, அவருக்கு ஆட்சியாளரால் நிலைத்த செல்வத்தைக் கொடுக்கும். திருக்குறள் பா: 693 போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது. kural 693: potrin ariyavai potral katuththapin thetrudhal yaarkkum aridhu திரு மு.வரதராசனார் பொருள்: (அரசரைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால் அரியத் தவறுகள் நேராமல் காத்துக்கொள்ள வேண்டும், ஐயுற்றபின் அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் முடியாது. மணக்குடவர் பொருள்: காப்பின், காத்தற்கு அரியனவற்றைக் காப்பாற்றுக: ஐயப்பட்ட பின்பு தௌ¤வித்தல் யாவர்க்கும் அரிது. இஃது அடுத்தொன்று சொல்லாம லொழுகவேண்டும்மென்றது. கலைஞர் பொருள்: தமக்கு மேலேயுள்ளவர்களிடத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்புகிறவர்கள். பொறுத்துக் கொள்ள முடியாத குற்றங்களைச் செய்யாமல் இருக்கவேண்டும். அப்படி செய்துவிட்டால் அதன் பிறகு தம் மீது ஏற்பட்ட சந்தேகத்தை நீக்குவது எளிதான காரியமல்ல. சாலமன் பாப்பையா பொருள்: ஆட்சியாளருடன் பழகுவோர் தம்மைக் காக்கக் கருதினால் மோசமான பிழைகள் தம் பங்கில் நேர்ந்து விடாமல் காக்க; பிழைகள் நேர்ந்துவிட்டதாக ஆட்சியாளர் சந்தேகப் பட்டுவிட்டால் அவரைத் தெளிவிப்பது எவர்க்கும் கடினம். திருக்குறள் பா: 694 செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் ஆன்ற பெரியா ரகத்து. kural 694: sevichchollum serndha nakaiyum aviththozhukal aandra periyaa rakaththu திரு மு.வரதராசனார் பொருள்: வல்லமை அமைந்த பெரியாரிடத்தில் (மற்றொருவன்) செவியை நெருங்கிச் சொல்லுதல் உடன் சேர்ந்து நகைத்தலும் செய்யாமல் ஒழுகவேண்டும். மணக்குடவர் பொருள்: அமைந்த பெரியாரிடத்து ஒருவன் செவியுட் சொல்லுதலும், ஒருவன் முகம்பார்த்துத் தம்மில் நகுதலும் தவிர்ந்தொழுகல் வேண்டும். இது கூற்றும் நகையும் ஆகாவென்றது. கலைஞர் பொருள்: ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து, அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும். சாலமன் பாப்பையா பொருள்: மேன்மை மிக்க பெரியவர் அருகே இருக்கும்போது, பிறருடன் காதருகே மெல்லப் பேசுவதையும் அடுத்தவர் முகம் பார்த்துக் கண்சிமிட்டிச் சிரிப்பதையும் செய்யாது நடந்துகொள்க. திருக்குறள் பா: 695 எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை விட்டக்கால் கேட்க மறை. kural 695: epporulum oraar thotaraarmar rapporulai vittakkaal ketka marai திரு மு.வரதராசனார் பொருள்: (அரசர் மறைபொருள் பேசும் போது) எப்பொருளையும் உற்றுக் கேட்காமல் தொடர்ந்து வினவாமல் அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும். மணக்குடவர் பொருள்: யாதொரு பொருளையும் செவிகொடுத்து ஓராது, தொடர்ந்து கேளாது, அப்பொருளை மறைத்தல் தவிர்ந்தால், பின்பு கேட்க. இது கேட்டல் விருப்பமும் குற்ற மென்றது. கலைஞர் பொருள்: பிறருடன் மறைவாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதை ஒட்டுக் கேட்கவும் கூடாது; அது என்னவென்று வினவிடவும் கூடாது. அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும். சாலமன் பாப்பையா பொருள்: ஆட்சியாளர் பிறருடன் ரகசியம் பேசம்போது காதுகொடுத்துக் கேட்காதே; என்ன பேச்சு என்று நீயாகக் கேளாதே; அதைப் பற்றி ஆட்சியாளரே சொன்னால் கேட்டுக் கொள்க. திருக்குறள் பா: 696 குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல். kural 696: kuripparindhu kaalang karudhi veruppila ventupa vetpach cholal திரு மு.வரதராசனார் பொருள்: அரசருடையக் குறிப்பை அறிந்து தக்கக் காலத்தை எதிர்நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறுச் சொல்ல வேண்டும். மணக்குடவர் பொருள்: அரசன் குறிப்பறிந்து காலம் பார்த்து வெறுப்பில்லாதனவாய்ச் சொல்ல வேண்டுவனவற்றை விரும்புமாறு சொல்க. இது சொல்லுந் திறம் கூறிற்று. கலைஞர் பொருள்: ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்க காலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக்குரியவைகளை விலக்கி, விரும்பத் தக்கதை மட்டுமே, அவர் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும். சாலமன் பாப்பையா பொருள்: ஆட்சியாளருக்கு எதையேனும் சொல்ல விரும்பினால், ஆட்சியாளரின் அப்போதைய மனநிலையை அறிந்து தான் சொல்லக் கருதிய செய்திக்கு ஏற்ற சமயத்தையும் எண்ணி ஆட்சியாளருக்கு வெறுப்புத் தராததும், வேண்டியதும் ஆகிய காரியத்தை அவர் விரும்புமாறு சொல்லுக. திருக்குறள் பா: 697 வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல். kural 697: vetpana solli vinaiyila egngnaandrum ketpinum sollaa vital திரு மு.வரதராசனார் பொருள்: அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்ட போதிலும் சொல்லாமல் விட வேண்டும். மணக்குடவர் பொருள்: எப்போதும் வேந்தனால் விரும்பப்படுவனவற்றைச் சொல்லித் தமக்குப் பயன்படாதவற்றைக் கேட்டாலும் சொல்லாது விடுக. சொல்லாது விடலாவது தூதனை அரசர்க்குப் படை எவ்வளவு உண்டென்று பகையரசன் வினவினால் நீ அறியாததொன்றோ வென்று அளவு கூறாமை. கலைஞர் பொருள்: விரும்பிக் கேட்டாலும் கூட, பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப் பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும். சாலமன் பாப்பையா பொருள்: ஆட்சியாளருக்குப் பயன்தரும் செய்திகளை அவர் கேட்காத போதும் சொல்லுக; பயன் தராத செய்திகளை எப்போதும் சொல்லாது விடுக. திருக்குறள் பா: 698 இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும். kural 698: ilaiyar inamuraiyar endrikazhaar nindra oliyotu ozhukap patum திரு மு.வரதராசனார் பொருள்: (அரசரை) எமக்கு இளையவர், எமக்கு இன்ன முறை உடையவர் என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும். மணக்குடவர் பொருள்: இவர் நமக்கு இளையரென்றும் இத்தன்மையாகிய முறையரென்றும் இகழாது அவர் பெற்றுநின்ற தலைமையோடே பொருந்த ஒழுக வேண்டும். கலைஞர் பொருள்: எமக்கு இளையவர்தான்; இன்ன முறையில் உறவுடையவர் தான் என்று ஆட்சிப் பொறுப்பில் இருப்போரை இகழ்ந்துரைக்காமல், அவர்கள் அடைந்துள்ள பெருமைக்கேற்பப் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும். சாலமன் பாப்பையா பொருள்: ஆட்சியாளருடன் பழகும்போது இவர் என்னைக் காட்டிலும் வயதில் சிறியவர்; இவர் உறவால் எனக்கு இன்ன முறை வேண்டும் என்று எண்ணாமல், ஆட்சியாளர் இருக்கும் பதவியை எண்ணி அவருடன் பழகுக. திருக்குறள் பா: 699 கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர். kural 699: kolappattem endrennik kollaadha seyyaar thulakkatra kaatchi yavar திரு மு.வரதராசனார் பொருள்: அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர் யாம் அரசரால் விரும்பப்பட்டோம் என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார். மணக்குடவர் பொருள்: யாம் அரசனாலே கைக்கொள்ளப்பட்டோமென்று நினைத்து அவன் நெஞ்சிற் கொள்ளாதன செய்யார், அசைவற்ற தௌ¤வுடையார். இஃது அரசன் நெஞ்சிற்குப் பொருந்தினவை செய்ய வேண்டுமென்றது. கலைஞர் பொருள்: ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில், ஏற்றுகொள்ள முடியாத காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள். சாலமன் பாப்பையா பொருள்: சலனம் அற்ற அறிவை உடையவர்கள், தாம் ஆட்சியாளரால் மிகவும் மரியாதைக்கு உரியவர்கள் என்று எண்ணி, ஆட்சியாளர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார். திருக்குறள் பா: 700 பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும். kural 700: pazhaiyam enakkarudhip panpalla seyyum kezhudhakaimai ketu tharum திரு மு.வரதராசனார் பொருள்: யாம் அரசர்க்கு பழைமையானவராய் உள்ளோம் எனக்கருதித் தகுதி அல்லாதவற்றைச் செய்யும் உரிமை கேட்டைத்தரும். மணக்குடவர் பொருள்: யாம் பழைமையுடையோ மென்று கருதி இயல்பல்லாதனவற்றைச் செய்யும் நட்பின்தகைமை தமக்குக் கேட்டைத்தரும் இது பின் பகையானவற்றைத் தவிரல் வேண்டும்மென்றது. கலைஞர் பொருள்: நெடுங்காலமாக நெருங்கிப் பழகுகிற காரணத்தினாலேயே தகாத செயல்களைச் செய்திட உரிமை எடுத்துக்கொள்வது கேடாகவே முடியும். சாலமன் பாப்பையா பொருள்: ஆட்சியாளருடன் நமக்கு நீண்ட நாள் பழக்கம் உண்டு என்று எண்ணித் தீய செயல்களைச் செய்யும் மனஉரிமை ஒருவருக்குக் கெடுதியையே தரும். Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம். Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam) Adhikaram 69 Adhikaram 71 உங்கள் கருத்துகளை இங்கே பதிக: TAGS அமைச்சியல் திருக்குறள் pdf திருக்குறள் கட்டுரை திருக்குறள் கதைகள் திருக்குறள் கல்வி திருக்குறள் சிறப்புகள் திருக்குறள் பொருள் திருக்குறள் முன்னுரை திருக்குறள் விளக்கம் பொருட்பால் Facebook Twitter WhatsApp Viber Previous articleThirukkural Natpu Adhikaram-79 திருக்குறள் நட்பு அதிகாரம்-79 அங்கவியல் / நட்பியல் பொருட்பால் Angaviyal / Natpiyal Porutpal in Tamil Next articleThirukkural Thoothu Adhikaram-69 திருக்குறள் தூது அதிகாரம்-69 அமைச்சியல் பொருட்பால் Amaichiyal Porutpal in Tamil thats tamil RELATED ARTICLESMORE FROM AUTHOR Thirukkural | திருக்குறள் Thirukkural Pugazh Adhikaram-24 திருக்குறள் புகழ் அதிகாரம்-24 இல்லறவியல் அறத்துப்பால் Illaraviyal Arathupal in Tamil Thirukkural | திருக்குறள் Thirukkural Avaavaruththal Adhikaram-33 திருக்குறள் கொல்லாமை அதிகாரம்-33 துறவறவியல் அறத்துப்பால் Thuraviyal Arathupal in Tamil Thirukkural | திருக்குறள் Thirukkural Nilaiyamai Adhikaram-34 திருக்குறள் நிலையாமை அதிகாரம்-34 துறவறவியல் அறத்துப்பால் Thuraviyal Arathupal in Tamil
ப்ளாக்கர் அமைவுகளில் இறுதியாக இருப்பது "Other" பகுதியாகும். சில முக்கிய அமைவுகள் இந்த பகுதியில் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கு பார்ப்போம். Blog Tools: Export Blog - நமது ப்ளாக்கில் உள்ள பதிவுகள், பின்னூட்டங்களை Backup எடுப்பதற்கு இது பயன்படுகிறது. இதனை க்ளிக் செய்து .xml கோப்பாக பதிவிறக்கிக் கொள்ளலாம். Import Blog - நாம் ஏற்கனவே எடுத்திருந்த Backup கோப்பை பயன்படுத்துவதற்கு இது பயன்படுகிறது. ஒரு ப்ளாக்கில் இருந்து பதிவிறக்கியதை புதிய அல்லது வேறு ப்ளாக்கில் பதிவேற்றிக் கொள்ளலாம். அவ்வாறு Import செய்தபின் Post பகுதிக்கு சென்று, பதிவுகளை தேர்வு செய்து Publish என்பதை க்ளிக் செய்யுங்கள். Delete Blog - உங்கள் ப்ளாக்கை நீக்கிவிடுவதற்கு இது பயன்படுகிறது. அவ்வாறு Delete செய்த ப்ளாக்கை 90 நாட்களுக்குள் திரும்பப் பெறலாம். அதன் பின் முற்றிலுமாக நீக்கப்பட்டுவிடும். மேலும் நீக்கப்பட்ட ப்ளாக் பெயரில் வேறு புதிய ப்ளாக்கை நீங்கள் உருவாக்கலாம். மற்றவர்கள் அந்த பெயரில் உருவாக்க முடியாது. Delete செய்த ப்ளாக்கை திரும்பப் பெற: உங்கள் டாஷ்போர்டில் இடதுபுறம் உள்ள Deleted Blogs என்பதை க்ளிக் செய்தால் நீங்கள் Delete செய்த வலைப்பூக்கள் வரும். அதில் Undelete என்பதை க்ளிக் செய்து வலைப்பூவை திரும்பப் பெறலாம். Adult Content: உங்கள் ப்ளாக் வயதுவந்தவர்களுக்கான தளம் என்றால் Yes என்றும், பொதுவானதாக இருந்தால் "No" என்றும் தேர்வு செய்ய வேண்டும். "Yes" என்பதை தேர்வு செய்தால் உங்கள் பிளாக்கிற்கு வாசகர்கள் வரும் போது பின்வரும் எச்சரிக்கை செய்தி காட்டும். Google Analytics: Google Analytics பற்றி ப்ளாக்கரில் Google Analytics-ஐ நிறுவுவது எப்படி? என்ற பதிவில் ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம். முன்பு அதில் நமக்கு கொடுக்கப்படும் நிரலை நம் ப்ளாக்கில் இணைக்க வேண்டும். தற்போது அதற்கு பதிலாக கூகிள் அனாலிடிக்ஸில் உள்ள ID-ஐ இங்கு கொடுத்தால் போதுமானது.
கரூர்: ''மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் தூர்வாரும் பணிகளை ஒரு வார காலத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும்,'' என கலெக்டர் பிரபுசங்கர் கூறினார். புஞ்சை புகளுர், புஞ்சை தோட்டக்குறிச்சி மற்றும் காகிதபுரம் ஆகிய பேரூராட்சிகளில் பிலிப்நகர், முல்லைநகர், மூலிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார். அலுவலர்களிடம் அவர் கூறியதாவது: மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்வழித்தடங்களை தூர்வாருதல், நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாலங்களின் அடியில் மழைநீர் தேங்கி நிற்காமல் வழிந்தோடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்தல் உள்ளிட்ட பணி நடந்து வருகிறது. மிகப்பெரிய கால்வாய்கள் மட்டுமின்றி தெருக்களில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள், மழைநீர் வடிகால்களும் முழுவீச்சில் தூர்வாரப்படுகின்றன. மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் இப்பணிகளை ஒரு வார காலத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join Telegram Channel for FREE Advertisement மேலும் கரூர் மாவட்ட செய்திகள் : பொது 1.'அ.தி.மு.க.,வினரை இழுத்து தான் கட்சி நடத்தும் நிலையில் தி.மு.க.,' » கரூர் மாவட்டம் முதல் பக்கம் » தினமலர் முதல் பக்கம் வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். மேலும் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்! உங்கள் கருத்தைப் பதிவு செய்ய : My Page Login : Log in Forgot password ? New to Dinamalar ? Create an account வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. மேலும் (Press Ctrl+g to toggle between English and Tamil) Submit அன்புள்ள வாசகர்களே!, நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். Close X Prev Next சினிமா → கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் → கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு → கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் → தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் → தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிவதாக அறிவித்துள்ள நிலையில், நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமந்தா, ஸ்ரீரெட்டி Advertising Advertising காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அண்மையில் அறிவித்தனர். இது தென்னிந்திய திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் பிரிவுக்கு முக்கிய காரணம் சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பிரீதம் ஜுகல்கர் தான் என்று கூறப்பட்டு வந்தது. சமீபத்தில் இதுகுறித்து விளக்கமளித்த பிரீதம் ஜுகல்கர், சமந்தாவை தான் சகோதரியாக பார்ப்பதாகவும், தங்களுக்கு இடையே தவறான உறவு இல்லை என்றும் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஸ்ரீரெட்டி இந்நிலையில், சமந்தா விவாகரத்து விவகாரம் குறித்து நடிகை ஸ்ரீ ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “பிரீதம் ஜுகல்கர் உடனான நட்பு காரணமாக சமந்தா விவகாரத்து செய்ய வாய்ப்பே இல்லை. ஏனெனில், பிரீதம் ஒரு ஓரினச் சேர்க்கையாளர். அதனால் அவர்களுக்கிடையே எந்தவித தவறான உறவும் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. சமீபகாலமாக சமந்தா மிகவும் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். அந்த விஷயத்தில் கூட பிரச்சினை உருவாகி, இருவரின் பிரிவுக்கும் காரணமாகி இருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
www.tamilvu.org பயன்படுத்தி, நீங்கள் உங்கள் சாதனத்தின் குக்கீகளை வைக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். விவரங்களுக்கு எங்கள் தனியுரிமை மற்றும் கொள்கைகள் பார்க்கவும்.
மோனோ ரயில் திட்டம் ரத்து: இயலாமையை ஒத்துக்கொண்ட பினாமி அரசுக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் அண்புமனி இராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் ரூ. 6402 கோடியில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த மோனோ ரயில் திட்டம் கைவிடப்படுவதாக தமிழக அரசு அறி வித்திருக்கிறது. சென்னைக்கு சற்றும் ஒத்துவராத இந்தத் திட்டத்தை செயல்படுத்தியே தீருவது என்பதில் உறுதியாக இருந்த தமிழக அரசு, இத்திட்ட த்தை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை உணர்ந்து கைவிட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். தமிழக சட்டப்பேரவையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்ட மின்துறை அமைச்சர் தங்கமணி,‘‘சென்னையில் குறுகிய சாலைகள் இருந்ததால் மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்தத் திட்டமிட்டோம். அதற்காக டெண்டர் கோரப்பட்ட நிலையில், யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை. சென்னையில் இடநெருக்கடி காரணமாகவும், மெட்ரோ ரயில் வழித் தடங்கள் நீட்டிப்பு பணி காரணமாகவும், ஒரே நேரத்தில் இரண்டு ரயில் திட்டங்களை நடைமுறையில் செயல்படுத்த முடியாது என்பதாலும், தற்போது மோனோ ரயில் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்” என்று தெரி வித்தார். இத்திட்டத்தை நிறுத்தி தான் வைத்துள்ளோம்; கைவிடவில்லை என்று அமைச்சர் கூறுவது கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதற்கு இணையான விளக்கம் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. மோனோ ரயில் திட்டத்தை இனி செயல்படுத்த வாய்ப்பில்லை என்பதே உண்மை. தமிழ்நாட்டில் மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைத் தவிர வேறு யாரும் விரும்ப வில்லை. அதுமட்டுமின்றி இது சாத்தியமில்லாத திட்டமும் ஆகும். 2001-ஆம் ஆண்டிலிருந்தே மோனோரயில் திட்டத்தை செயல்படுத்த அதிமுக அரசு தீவிரமாக முயன்று வருகிறது. அப்போது இத்திட்டத்தை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி போராட்டங்களை நடத்தியது. அதுமட்டுமின்றி, இத்தி ட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ம.க. வழக்கு தொடர்ந்ததால் இத்திட்டத்தை கைவிடுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்தது. ஆனால், 2011- ஆம் ஆண்டில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் மொத்தம் 300 கி.மீ தொலைவுக்கு மோனோரயில் பாதை அமைக்கப்படும் என்றும், முதல்கட்டமாக 111 கி.மீ. தொலைவுக்கு 3 பாதைகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. பின்னர் வண்டலூர் - புழல் இடையிலான 54 கி.மீ பாதையை தமிழக அரசே கைவிட்டு விட்டது. சென்னையில் பூந்தமல்லி - கத்திப்பாரா சந்திப்பு இணைப்புடன் போரூர் முதல் வடபழனி வரை 20.68 கி.மீ தொலைவுக்கு ரூ.3267 கோடியிலும், வேளச்சேரி முதல் வண்டலூர் வரை 20.80 கி.மீ தொலைவுக்கு ரூ. 3135 கோடியிலும் மோனோரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இத்திட்டம் முழு அளவில் செயல்பாட்டுக்கு வந்தால், மோனோரயில்களில் தினமும் 64,000 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இது சென்னையின் போக்குவரத்து நெரிசலை எந்த வகையிலும் குறைக்காது. அதுமட்டுமின்றி, போரூர் - வடபழனி சாலை தான் சென்னையில் மிகவும் குறுகலான நெடுஞ்சாலை ஆகும். அந்த சாலையின் மத்தியில் தூண்கள் அமைக்கப்பட்டால் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்தது. இத்திட்டத்தை செயல்படுத்த கடந்த 2011 ஆம் ஆண்டில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. ஆனால், ஒப்பந்தம் கோர சிலர் மட்டுமே முன்வந்ததால் அரசே அந்த நடைமுறையை ரத்து செய்தது. 2013ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்ட நிலையில், ஒப்பந்தம் எடுக்க எவருமே முன்வரவில்லை. 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சட்டப்பேரவையில் பேசிய அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் சில நாட்களில் மோனோரயில் திட்டத்திற்கு ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்றார். ஆனால், அடுத்த சில நாட்களில் அவரது பதவி பறிபோனதே தவிர ஒப்பந்தம் கோரப்படவில்லை. மோனோரயில் திட்டத்தின் பயணம் அவ்வளவு வெற்றிகரமானது. இப்படிப்பட்ட திட்டத்தை தூசு தட்டி எடுத்தாலும் வெற்றி பெறாது என்ற உண்மையை அரசு மிகவும் தாமதமாகப் புரிந்து கொண்டதால் மோனோரயில் திட்டத்தை கைவிடுவதாக இப்போது அறிவித்துள்ளது. மிகவும் தாமதமாகவாவது உண்மையை புரிந்து கொண்டு திட்டத்தைக் கைவிட்ட அரசுக்கு நன்றிகள். ஒரு திட்டத்தை தொடங்கும் போதே அதன் சாதக, பாதகங்களை நன்றாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். தனிநபர்களின் விருப்பு - வெறுப்புகளின் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டால் இத்தகைய நிலைதான் ஏற்படும். சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைந்த செலவில் கட்டுப்படுத்த ஏராளமான திட்டங்கள் உள்ளன. மோனோரயில் திட்டத்திற்காக செலவிடப்படவிருந்த ரூ.6402 கோடியில் நான்கில் ஒருபங்கு தொகையில், அதாவது ரூ.1500 கோடியில் சென்னையில் 96.70 கி.மீ தொலைவுக்கு அதிவிரைவுப் பேருந்துத் திட்டத்தை (BRTS) செயல்படுத்தி போக்குவரத்து நெரிசலை தீர்க்க முடியும். இதற்கான சாத்தியக் கூறு ஆய்வுகள் கடந்த 2013ஆம் ஆண்டில் போக்குவரத்து மற்றும் மேம்பாட்டு கொள்கை நிறுவனம் என்ற அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்டு விட்டன. இத்திட்டத்தின் மூலம், ஒரு மணி நேரத்திற்கு 1.68 லட்சம் பேர் வீதம் ஒரு நாளைக்கு 25 லட்சம் பேர் எளிதாக பயணிக்க முடியும். எனவே, இனியும் தாமதிக்காமல் அதிவிரைவுப் பேருந்துத்திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். பின்செல் இந்தியச் செய்திகள் தப்ளிக் விழா: டில்லி விமான நிலையத்தில் 8 மலேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்! 960 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்
கான்பூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 2 - ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 129 ரன்கள் சேர்ப்பு : இந்தியா 345 ரன்களுக்கு ஆல் அவுட் இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-27-11-2021 இன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 27-11-2021 12 நாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்க உத்தரவு: சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்: கவர்னரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல் இந்தியா இன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 27-11-2021 இந்தியா உலகின் மிகவும் அபாயகரமான 5 ரயில் தடங்கள் தமிழகம் நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்: கவர்னரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல் ரோபோட்ஸ்களுடன் சண்டை போடும் ஜெய் அ+ அ- Source: provided ராகுல் பிலிம்ஸ் சார்பில் கே.திருக்கடல் உதயம் தயாரிப்பில், ஜெய் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘பிரேக்கிங் நியூஸ்’. ரோபோடிக்ஸ் டெக்னாலஜி மற்றும் அனிமேஷனை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் கதாநாயகியாக பானுஸ்ரீ, சினேகன், பழ.கருப்பையா, அழகிய தமிழ்மணி, தேவ்கில், ராகுல் தேவ், ஆகியோர் நடிக்கின்றனர். அதிக பொருட்செலவில் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் ஜெய் ரோபோட்ஸ்களுடன் சண்டைபோடும் காட்சிகள் எடுக்கப்பட்டு VISUAL EFFECTS வேலைகள் நடந்துக்கொண்டு இருப்பதாக படத்தின் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் தெரிவித்துள்ளார். இப்படத்தில், ஒளிப்பதிவாளர் ஜானிலால்/வில்லியம்ஸ், எடிட்டர் ஆண்டனி, கலை மகேஷ், VFX பிரபாகரன், இசை விஷால் பீட்டர். சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் ஐந்தாயிரம் துணை நடிகர்களோடு, சினேகன் போராட்டக்களத்தில் போராளியாக நடித்து அனைவரின் கைதட்டல்களைப் பெற்றுள்ளார். இதை ஷேர் செய்திடுங்கள்: வீடியோ உலகில் ஆச்சரியமான 5 வகையான உணவுகள்சரியாக சமைக்கவிட்டால் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது...! தானே அடி பைப்பை அடித்துதண்ணீரை குடிக்கும் எருமைஆச்சரிய வீடியோ வைரல் உலகின் மிகவும் அபாயகரமான 5 ரயில் தடங்கள் தூணி காயப் போடும் போது 19 ஆவது மாடியிலிருந்து தவறி 82 வயது மூதாட்டி விறுவிறு வீடியோ வைரல் பனி சறுக்கு பலகையில் சாகசம் 11 மாத குழந்தையின் சாதனை க்யூட் வீடியோ வைரல் 9 கிரகங்கள் 12 ராசிகள் 27 நட்சத்திரங்கள் வட்ட வடிவில் அமைந்துள்ள ஒரே கோவில் Mukthi Nilayam - Part 2 View all comments வாசகர் கருத்து Error Occurred! ✖ Name * Email * Comment * More information about text formats Plain text No HTML tags allowed. Web page addresses and e-mail addresses turn into links automatically. Lines and paragraphs break automatically. Click here to toggle between Tamil and English typing. CAPTCHA This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions. உங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம் அரசியல் ஈழத்தமிழர்களுக்காக அறத்தின் வழியில் நின்று போராடியவர் பிரபாகரன்: சீமான் பொது விநியோக திட்டத்தை மாற்றும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் பா.ம.க. பொதுக்குழுவில் அன்புமணியை தலைவராக்க திட்டம்? - புதிய தகவல்கள் இந்தியா சத்தீஸ்கரில் நக்ஸல் சுட்டுக் கொலை உருமாறிய புதிய கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது : ராகுல் காந்தி டுவிட் பிஹார், உ.பி., ஜார்க்கண்ட் ஏழை மாநிலமாக அறிவிப்பு : நிதி ஆயோக் ஆய்வில் தகவல் சினிமா மழை வெள்ளத்தில் உற்சாகமாக பாட்டுப்பாடி படகு ஓட்டிய நடிகர் மன்சூர் அலிகான் சூர்யாவை பாராட்டிய நல்லக்கண்ணு பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்தின் அசத்தலான நடன வீடியோ..! ஆன்மிகம் தமிழகத்தில் 3 மாதத்திற்கு பின் பயங்கர பிரளயம் ஏற்படும் : திண்டுக்கல் பெண் சாமியார் அதிரடி பேட்டி 9 கிரகங்கள் 12 ராசிகள் 27 நட்சத்திரங்கள் வட்ட வடிவில் அமைந்துள்ள ஒரே கோவில் Mukthi Nilayam - Part 2 மழை நீர் முழுமையாக வடிந்தது: திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் மீண்டும் சுவாமி தரிசனம் தமிழகம் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை பட்டாளம் பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு பெரியகுளம் பகுதியில் தொடர் மழை: கும்பக்கரையில் மீண்டும் கடும் வெள்ளப்பெருக்கு கொடைக்கானல் பகுதியில் கனமழையால் பாறைகள் சரிவு - போக்குவரத்து பாதிப்பு : இரவுப்பயணத்தை தவிர்க்க எச்சரிக்கை உலகம் விமான சேவையை ரத்து செய்த நாடுகள்: தென் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேற முடியாமல் வெளிநாட்டு பயணிகள் அவதி தாய்லாந்தில் விரைவில் கஞ்சா பீட்சா விற்பனை செக் குடியரசில் புதிய உச்சத்தை தொடும் கொரோனா பாதிப்பு விளையாட்டு கான்பூர் டெஸ்ட் கிரிக்கெட்: அக்சர் படேல் சுழற்பந்துவீச்சில் 296 ரன்களுக்கு சுருண்டது நியூசி. நெருக்கடியில் இந்திய வீரர்கள்: இன்சமாம் உல் ஹக் விமர்சனம் ரிஷப் பந்த் உள்ளிட்ட 4 வீரர்களை தக்கவைக்கிறது டெல்லி கேபிடல்ஸ் வர்த்தகம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.144 குறைந்து விற்பனை டிஜிட்டல் கரன்சியான கிரிப்டோகரன்சியை வரைமுறைப்படுத்த வருகிறது புதிய சட்டம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைவு ரிஷப் பந்த் உள்ளிட்ட 4 வீரர்களை தக்கவைக்கிறது டெல்லி கேபிடல்ஸ் 26 Nov 2021 புதுடெல்லி : டெல்லி கேபிடல்ஸ் அணி ரிஷப் பந்த், பிருத்வி ஷா, அக்‌ஷர் படேல் உள்ளிட்ட 4 வீரர்களை மீண்டும் தக்கவைக்கிறது. 15-வது சீசன் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர்: சாம்ஸனை தக்கவைக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 26 Nov 2021 ஜெய்ப்பூர் : ஐ.பி.எல் டி20 தொடரின் 15-வது சீசனுக்கான ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அதன் கேப்டன் சஞ்சு சாம்ஸனைத் தக்கவைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்ற அறிமுக போட்டியிலேயே அசத்தல்: நியூசி.க்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய வீரர் 'ஸ்ரேயாஸ் ஐய்யர்' சதம் 26 Nov 2021 கான்பூர் : கான்பூரில் நடந்துவரும் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐய்யர் அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளார். நெருக்கடியில் இந்திய வீரர்கள்: இன்சமாம் உல் ஹக் விமர்சனம் 26 Nov 2021 டி-20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி அடைந்த தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தனியார் சேனல் ஒன்றுக்கு ப புதிய கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி:இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க பயணம் திட்டமிட்டப்படி நடக்குமா ? 26 Nov 2021 கேப்டவுன் : தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணி அங்கு அடுத்த மாதம் பயணம் செய்வது பெரிய கேள்விக்குறியாக உருவெடுத்துள்ள கான்பூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 2 - ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 129 ரன்கள் சேர்ப்பு : இந்தியா 345 ரன்களுக்கு ஆல் அவுட் 26 Nov 2021 கான்பூர் : கான்பூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி நியூசிலாந்து அணி 129 ரன்கள் எடுத்தது. இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-27-11-2021 27 Nov 2021 இன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 27-11-2021 27 Nov 2021 12 நாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்க உத்தரவு: சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு 27 Nov 2021 சென்னை : சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்: கவர்னரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல் 27 Nov 2021 நீட் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று கவர்னரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலிய மழை வெள்ளத்தில் உற்சாகமாக பாட்டுப்பாடி படகு ஓட்டிய நடிகர் மன்சூர் அலிகான் 27 Nov 2021 சென்னை : மழை வெள்ளத்தில் பாட்டுப்பாடி படகு ஓட்டி மகிழ்ந்த நடிகர் மன்சூர் அலிகானின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை, தூத்துக்குடி, நெல்லை உள்பட பல மவாட்டங்களில் கனமழையால் தமிழகம் முழுவதும் 10,500 பேர் முகாம்களில் தங்கவைப்பு 27 Nov 2021 சென்னை : சென்னை, தூத்துக்குடி, நெல்லை உள்பட பல மாவட்டங்களில் தொடரும் கனமழை காரணமாக தமிழகம் முழுவதும் 10,500 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சென்னை : சென்னையில் பெய்த மழை காரணமாக 63 பகுதிகளில் உள்ள 151 தெருக்களில் அதிகளவு தண்ணீர் தேங்கியிருப்பது கண்டறியப்பட்டது. இந்த தெருக்களில் 47 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. மேலும், இன்று வரை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவி 27 Nov 2021 இன்று வரை அதி கனமழைக்கு வாய்ப்பு: மீண்டும் வெள்ளக்காடானது சென்னை! தமிழகத்தில் 3 மாதத்திற்கு பின் பயங்கர பிரளயம் ஏற்படும் : திண்டுக்கல் பெண் சாமியார் அதிரடி பேட்டி 27 Nov 2021 திருவண்ணாமலை : தமிழகத்தில் 3 மாதத்திற்கு பிறகு பயங்கர பிரளயம் ஏற்படும் என்று திண்டுக்கல் பெண் சாமியார் தெரிவித்தார். ஹோமியோபதி மருத்துவர் இடமாறுதல் கலந்தாய்வு நடத்த ஐகோர்ட் அனுமதி 27 Nov 2021 சென்னை : இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவர்கள் கலந்தாய்வு நடத்தலாம். குழந்தையை ஒப்படைக்கக்கோரி தாய் தொடர்ந்த வழக்கில் தத்துக்கொடுத்த குழந்தையை வளர்ப்பு தாயே வளர்க்க வேண்டும் : சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு 27 Nov 2021 சென்னை : குழந்தையை ஒப்படைக்கக் கோரி தாய் தொடர்ந்த வழக்கில் தத்துக் கொடுத்த குழந்தையை வளர்ப்பு தாயே வளர்க்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது மழையால் விடுமுறை அறிவிக்கப்படும் மாவட்டங்களில் தேர்வு நடத்துவது பற்றி பள்ளியே முடிவு செய்யலாம் : சி.பி.எஸ்.இ நிர்வாகம் அறிவிப்பு 27 Nov 2021 சென்னை : மழையால் விடுமுறை அறிவிக்கப்படும் மாவட்டங்களில் தேர்வு நடத்துவது பற்றி பள்ளியே முடிவு செய்யலாம் என சி.பி.எஸ்.இ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது பிரிட்டன் பாராளுமன்றத்தில் வழங்கப்பட்டது 27 Nov 2021 மருத்துவ துறையில் திறம்பட செயல்பட்டதற்காக அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது பிரிட்டன் பாராளுமன்றத்தில் வழங்கப்பட்டது. சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீர் உடனடியாக அகற்றப்பட்டு வருகிறது: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தகவல் 27 Nov 2021 சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீர் உடனடியாக அகற்றப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தெரிவித்தார். சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக சேர்ப்பவர்களுக்கு ரூ. 5000 பரிசு: தமிழக அரசு அறிவிப்பு 27 Nov 2021 சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கும் நபர்களுக்கு ரூ.5000/- பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்களுக்கு நெதர்லாந்து தடை 27 Nov 2021 தென்னாப்பிரிக்காவில் புதுவகை உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டில் இருந்து வரும் விமானங்களுக்கு நெதர்லாந்து தடை விதித்துள்ளது. இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு: சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் 27 Nov 2021 சென்னை : தமிழகத்தில் இன்று அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களுக்கு மிக அதிக கனமழைக்கான 'ரெ இன்டர்போல் நிர்வாக குழுவுக்கு சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் தேர்வு 27 Nov 2021 இன்டர்போல் எனப்படும் சர்வேதேச போலீஸ் அமைப்பின் நிர்வாகக் குழுவுக்கு இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட சி.பி.ஐ. இன்று வரை அதி கனமழைக்கு வாய்ப்பு: மீண்டும் வெள்ளக்காடானது சென்னை! 27 Nov 2021 சென்னை : சென்னையில் பெய்த மழை காரணமாக 63 பகுதிகளில் உள்ள 151 தெருக்களில் அதிகளவு தண்ணீர் தேங்கியிருப்பது கண்டறியப்பட்டது. செக் குடியரசில் புதிய உச்சத்தை தொடும் கொரோனா பாதிப்பு 27 Nov 2021 செக் குடியரசில் கொரோனா உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டது. இன்றைய நாள் எப்படி வருடம் சனிக்கிழமை, 27 நவம்பர் 2021 கார்த்திகை 11 மஹாதேவ அஷ்டமி. நல்ல நேரம் பகல்: 10:30AM - 11:30AM மாலை: 5:00PM - 6:00PM இராகுகாலம் காலை: 9:00AM - 10:30AM இரவு: 3:00AM - 4:00AM எமகண்டம் பகல்: 1:30PM - 3:00PM இரவு: 7:30PM - 9:00PM மேலும் முதன்மை செய்திகள் புதிதாக உருவெடுத்திருக்கும் கொரோனா வைரஸ்'ஒமைக்ரான்' அச்சுறுத்தல் குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தல் இந்தியா புதுடெல்லி : புதிதாக உருவெடுத்திருக்கும் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் பற்றி பிரதமர் மோடி நேற்று ... இன்டர்போல் நிர்வாக குழுவுக்கு சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் தேர்வு இந்தியா இன்டர்போல் எனப்படும் சர்வேதேச போலீஸ் அமைப்பின் நிர்வாகக் குழுவுக்கு இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட சி.பி.ஐ. ... விவசாயிகள் உடனடியாக வீடு திரும்ப வேண்டுகோள்: வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா பாராளுமன்றத்தில் நாளை தாக்கல் : மத்திய வேளாண்துறை அமைச்சர் தகவல் இந்தியா புதுடெல்லி : விவசாயிகள் தங்கள் போராட்டங்களை கைவிட்டு உடனடியாக வீடு திரும்ப என்று கூறியுள்ள மத்திய வேளாண்துறை ... புதிய வகை கொரோனாவுக்கு ஒமைக்ரான் என பெயர்- கட்டுக்கடங்காமல் பரவக் கூடியதாம்! உலகம் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை வைரசுக்கு ஒமைக்ரான் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.தென் ... உலக நாடுகளை புதிதாக அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா 'ஒமைக்ரான்' இந்தியா புதுடெல்லி : உலகமெங்கும் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ்களில் ‘ஒமைக்ரான்’ மிகவும் மோசமானது என்று மருத்துவ ... வீடியோ உலகில் ஆச்சரியமான 5 வகையான உணவுகள்சரியாக சமைக்கவிட்டால் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது...! 18 hours 9 sec ago தானே அடி பைப்பை அடித்துதண்ணீரை குடிக்கும் எருமைஆச்சரிய வீடியோ வைரல் 18 hours 1 min ago உலகின் மிகவும் அபாயகரமான 5 ரயில் தடங்கள் 18 hours 2 min ago தூணி காயப் போடும் போது 19 ஆவது மாடியிலிருந்து தவறி 82 வயது மூதாட்டி விறுவிறு வீடியோ வைரல் 18 hours 3 min ago பனி சறுக்கு பலகையில் சாகசம் 11 மாத குழந்தையின் சாதனை க்யூட் வீடியோ வைரல் 18 hours 4 min ago வேலை வாய்ப்பு பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு!!! தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவையில் உள்ள Block Coordinator மற்றும் Block Project Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!! யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் உள்ள Foreman பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பி.இ. / பி.டெக். முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!!! எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் உள்ள தொழில்நுட்ப அதிகாரி பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு!!! தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தில் உள்ள எலக்ட்ரீஷியன் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு!!! பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதியில் உள்ள மெஸ் மேனேஜர்-கம்-கேர்டேக்கர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு!!! மாதம் ரூ. 2.25 லட்சம் வரை சம்பளம்!!! பேங்க் ஆப் பரோடா வங்கியில் உள்ள தரவு விஞ்ஞானி மற்றும் தரவு பொறியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ முடித்தவர்களுக்கு எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு!!! எல்லைப் பாதுகாப்புப் படையில் உள்ள தச்சர், பிளம்பர், ஜெனரேட்டர் ஆபரேட்டர், ஜெனரேட்டர் மெக்கானிக் மற்றும் லைன்மேன் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய காற்று ஆற்றல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!! தேசிய காற்று ஆற்றல் நிறுவனத்தில் உள்ள திட்ட உதவியாளர், திட்ட பொறியாளர், திட்ட ஒருங்கிணைப்பாளர், கணக்கு நிர்வாகி மற்றும் கொள்முதல் நிர்வாகி பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமூக சேவகர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு!!! சமூகப் பாதுகாப்புத்துறையின் இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூக நல உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர் சென்னை அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு!!! சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள திட்ட ஊழியர்கள் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் நாள்: Saturday, November 27, 2021 காஞ்சிபுரம் வரதராஜர், திருவள்ளுர் வீரராகவப் பெருமாள், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் இத்தலங்களில் திருமஞ்சன சேவை.
அறிவு ஜீவிகள் என்று தம்மை நினைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கெல்லாம் இருக்கின்ற ஒரு பொதுவான பிரச்சனை தாம் மற்றவர்கலிருந்து வித்தியாசமானவர்கள் என்றும், தம் சிந்தனைகள் வித்தியாசமானவை என்றும் காட்டவேண்டும் என்பதற்காக மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் உணர்ச்சிகளை தமது கடந்த கால வரலாற்று அறிவினாலும், அளாவுக்கு அதிகமான புள்ளி விபரங்களினாலும், தர்க்கங்களினாலும் குழப்பி, மக்களை மட்டம் தட்டி நிற்பதாகும். வரலாற்று அறிவினாலும், புள்ளி விபரங்களாலும் சரியென சொல்லப்படுபவை பிழையாக இருக்க முடியாதே என்று சிலர் கூறலாம், ஆனால் சற்று புத்திசாலித்தனமான ஒருவரால் எந்த விடயத்தையும் நியாயப்படுத்தக்கூடிய புள்ளி விபரங்களை வெகு இலகுவாக தொகுக்கவோ தர்க்கிக்கவோ முடியும். சென்ற வார தினமலரை பார்த்துக்கொன்ண்டிருந்த போது அரசியல் விமர்சகர் ஞாநியும் இந்த வகையோ என்ற என்னுடைய நெடுநாள் சந்தேகம் நிரூபனமாகிவிட்டது. ஆனந்த விகடனில் ஓ பக்கங்களை தொடங்கிய நாள் முதல் விகடனின் வெகுஜன கவர்ச்சியால் மிகப்பெரும் கவனிப்புக்கு உள்ளானவர் ஞாநி. அதற்கு முன்னரே 98ல் விகடனில் அவர் எழுதிய தவிப்பு என்கிற தொடர்கதை கூட விடுதலை போராட்டங்களை பற்றி சரியான முறையில் பதிவு செய்யவில்லை என்பது எனது கருத்து. (அதில் வரும் ஆனந்தி என்கிற பாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது). இந்நாட்களில் அவர் எழுதிய கண்ணகி சிலை பற்றிய கட்டுரை, கலைஞர் ஓய்வு பெற வேண்டும் என்கிற கட்டுரை, ஜெயலலிதா – சசிகலா ஆலயம் ஒன்றில் பூசகர் கொடுத்த மாலைகளை மாற்றி மாற்றி அணிந்த போது தி மு க சார்பான ஏடுகள் “ஜெ – சசி ஆலயத்தில் மாலை மாற்றினர்” என்று கொச்சை படுத்தியபோது இவர் இன்னும் ஒரு படி போய் லெஸ்பியன் உறவில் என்ன தவறு ? என கேள்வியெழுப்பி அவர்கள் ஒரு பாற் சேர்க்கையாளார்கள் என்பது போன்ற ஒரு குழப்பத்தை உண்டாக்கியது, பின்னர் பிரபாகரன் பற்றி கொச்சைப்படுத்தி படம் எடுத்ததாக சிங்கள இயக்குனர் துசாரா பீரிஸ், சீமான், சுபவீ போன்றவர்களால் தாக்கப்பட்ட போது, “இரட்டை குவளை முறையை ஒழிக்க போராடாத சுபவீ ஏன் இலங்கை இனப்பிரச்சனை பற்றிய போராட்டங்களில் ஈடுபடுகிறார்?” என்கிற அபத்தமான கேள்வியை எழுப்பியது, அதனை தொடர்ந்து சுபவீ, அறிவுமதி போன்றவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது என்று இவரது பல கட்டுரைகளும் கருத்துகளும் மிக மோசமான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளன. அக்டோபர் 26ம் திகதி வெளியான தினமலர் இதழில் ஞாநி ஈழப்பிரச்சனை பற்றி எழுப்பியிருக்கும் சில வினாக்கள் மிகுந்த கண்டணத்துக்குரியவை. வெகுஜன இதழ்களில் புகுந்ததனால் மிகப்பெரும் கவனிப்பை பெற்ற, தம்மை மிகப்பெரிய சிந்தனாவாதிகளாக காட்டிக்கொள்ளும் ஞாநி போன்றவர்களின் இக்கருத்துகள் மிகப்பெரும் விஷ வித்துக்களாக உருவெடுக்க கூடியவை. “ஆயுதப் போராட்டம் தொடங்கியபோதும் ஈழத்தமிழர்கள் ஓரணியில் இருக்கவில்லை, அதற்கு காரணம் அவர்களுக்கிருந்த வேறுபட்ட அரசியல் பார்வைகள்தான். அரசியலுக்கு அப்பாற்பட்டு அவர்கள் ஒற்றுமையாக இயங்கியிருந்தால் வெகு சுலபமாக அன்றைக்கே தனி ஈழத்தினை பெற்றிருப்பர்” என்கிற கருத்தை கண்டுபிடித்துள்ளார் ஞாநி. ஊர் கூடி தேரிழுத்தால் வந்து சேரும் என்கிற பழமொழிக்காலத்தில் இருக்கிறீர்கள். நன்றி. இக்கருத்தை இருபதாண்டுகளுக்கு முன்னர் நீங்கள் சொல்லியிருந்தால் கூட சிலவேளை ஏற்றிருக்கலாம். ஆனால் இன்று அங்கு நடைபெறுவது பெருமெடுப்பிலான இனவழிப்பு. அதுமட்டுமல்ல கொழும்பில் இருக்கும் விடுதலைப்புலிகளால் நிராகரிக்கப்பட்ட ஏனைய தமிழ் இயக்கங்கள் இந்த இனவழிப்பின்போது ஏன் மௌனமாக உள்ளன என்ற கேள்விக்கு ஏதாவது பதில் கைவசம் வைத்துள்ளீர்களா? எல்லாம் புரிந்த மிகப்பெரும் மனிதாபிமானியான உங்களுக்கு இது ஏன் புரியவில்லை என்பது தெரியவில்லை. இயக்கங்கள் பிழை விட்டதாக வைத்துக்கொண்டாலும் அதற்காக ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவிப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது. அடுத்ததாக தோல்வியுற்று வரும் புலிகள் சிங்கள அரசின் தாக்குதலை நிறுத்தவும் அந்த நேரத்தில் தம்மை வலுப்படுத்தவும் தான் தமிழகத்தில் உள்ள மனித நேய உணர்வையும், தமிழ் உணர்வையும் பயன்படுத்த முயல்கின்றனர் என்று கூறியுள்ளீர்கள். ஆனால் இந்த முழு கட்டுரையிலும் ஒரு தடவை கூட திரள் திரளாக மக்கள் சாகின்றார்களே என்பதை நீங்கள் ஏன் உணர்த்தவில்லை. கட்டுரை முழுவதும் சிங்கள அரசு என்றே குறிப்பிடுவதால், அது சிங்களவர்களின் அரசு, தமிழர்களிற்கு பங்கில்லாதது என்கின்ற ஒரு கட்டமைப்பும் காணப்படுகிறது. தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் ஒப்புக்கொண்ட இந்த ஒற்றுமைக்கு நன்றிகள். தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாகவேண்டும் என்ற ஒரு உயரிய சிந்தனையை சொல்லிவிட்டு, அப்படி ஒற்றுமையானால்தான் தமிழர்களின் கல்வி மேம்பாட்டை சிங்களவர்களும் சிங்களவர்களிடமிருந்து நல்ல படங்களை எடுப்பது எப்படி என்று தமிழர்களும் அறிந்துகொள்ளமுடியும் என்றும் கூறியிருக்கிறீர்கள். கட்டாய மதுவிலக்கை அமுல் படுத்தவேண்டும் என்று அடிக்கடி எழுதும் ஞநி நீங்கள் தானே என்று எனக்கு குழப்பமாகவுள்ளது. ஞாநி, தென்னிந்திய திரைப்படங்களின் பாணியை விட்டு விலகி உய்ர் ரசனையுடன் படம் எடுப்பதல்ல இப்போதைய பிரச்சனை, இலங்கையில் இருக்கும் தமிழர்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு அங்கே உயிருடன் வாழ்வார்கள் என்பதே பிரச்சனை. பாலியல் பலாத்காரத்தில் கைதுசெய்யப்பட்ட நடிகர் எப்படி ராணுவம் செய்யும் பாலியல் பலாத்காரம் பற்றி பேசுவார் என்கிறீர்கள், திரைப்பட படப்பிடிப்பிற்காக சிம்பு ஏன் கண்டி சென்றார் என்கிறீர்கள் இது ஒரு வறட்டு வாதம். ஒரு சினிமா நன்றாக இல்லை என்று விமர்சகன் சொன்னால் அப்ப நீயே படம் எடு என்று இயக்குநர் சொல்வதற்கொப்பானது. எது பற்றியும் முழுமையாக தெரிந்த ஒருவனே அது பற்றிய தொழிலில் இறங்கவேண்டும் என்று சொன்ன நீங்கள் மருத்துவம், உளவியல், பாலியல் எல்லாம் கற்று முடித்தா அறிந்தும் அறியாமலும் என்று ஆனந்த விகடனில் எழுதினீர்கள்???? முன்பொருமுறை இயக்குநர் துசாரா பீரிஸ் தாக்கபட்டபோது நீங்கள் இரட்டை குவளை முறையை எதிர்க்காத சுபவீ ஏன் இதில் தலையிடுகிறார் என்கிற ஒரு மகா அபத்தமான கேள்வியை எழுப்பியிருந்தீர்கள். இயக்குநர் பீரிஸ் தாக்கப்பட்டதை அணுவளவு கூட ஏற்றுக்கொள்ளாத என் போன்ற ஆயிரக்கணக்கானோர் உள்ளோம். ஆனால் நீங்கள் காட்டும் உதாரணம் மிகத்தவறானது. ஞாநி, ஒரு தவறுக்கு இன்னொரு தவறு ஒருபோதும் நியாயமாகாது. விடுதலைப்புலிகளைப்பற்றி மிகப்பெரிய அளவில் ஊடகங்களினூடாக அவர்கள் பயங்கரவாதிகள் என்ற பிரச்சாரத்தை சில சுயநலவாதிகள் மூலம் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் சிங்கள அரசின் பிரச்சார உத்தி ஒன்றிற்கான எதிர்வினைதான் அது. அசர் தாக்கபட்டது பிழ என்றபோதும் கூட இப்படியான உங்களின் விதண்டாவாதங்களின் சரியான பதிலடி விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கூரிய பதில் என்பது என்கருத்து. (பீரிஸ் தாக்கப்பட்டிருக்க கூடாது, அவரது படத்தை சுதந்திரமாக வெளியிட்டு, பின்னர் தமது தரப்பை நியாயப்படுத்தி விடுதலைப்புலிக்ளா தரப்பும் ஒரு படம் தயாரிக்கலாம் என்று ஞாநி கூற, அதாவது நடு வீட்டில் நரகல் வந்துவிட்டால், அதையும் இருக்க விட்டு விட்டு, ஒரு ஊதுபத்தியையும் ஏற்றி வைக்கலாம் என்கிறீர்களா என்று திருமாவளவன் கேட்டார்.) சின்னக்குத்தூசி, சோலை, ஞாநி, சோ என்று மிகச்சில அரசியல் விமர்சகர்களே தமிழ் மொழியில் இருக்கின்ற் சூழலில், நால்வருமே பக்கச் சார்புடையவர்களாகிப்போனது பெரும் சோகம். அதிலும் ஞாநி வேண்டும் என்றே கட்டமைக்கும் கலகக்காரர் தோற்றம் மிகுந்த விமர்சனத்துகுள்ளாக்கவேண்டியது. மகாபலிபுர புலிக்குகையில் குடுபத்தினருடன் வந்து இளைப்பாறி கலாஷேத்திராவின் நடன நிகழ்ச்சியை கண்டு ரசிக்கும் ஈழத்து முத்லமைச்சராக பிரபாகரன் வரும் நாளையும், ஈழத்து முதலமைச்சராக சிங்கள இயக்குனர் பிரசன்னாவுக்கு சிறந்த இயக்குனர் என்று பிரபாகரன் பரிசளிக்கும் நாளையும் கனவுகாண்கிறேன் என்றெல்லாம் கோமாளித்தனமாக இந்த இக்கட்டான நிலையில் ஒரு நியாயமான போரட்டத்தை மசாலா சினிமா போல காட்டாதீர்கள். பிரபாகரனின் ராணுவ அரசாங்கத்தைவிட, கலைஞரின் ஊழல் அரசாங்கம் மக்களுக்கு அதிகம் உதவியிருக்கிறதென்று விஷன் தோய்ந்த சொற்களை கூறியுள்ளீர்களே, தாயின் கருவில் இருக்கும் பிள்ளை சுகப்பிரசவம் ஆகவேண்டும் என்று நாம் கவலைப்படுகிறோம், பிறக்கும் பிள்ளை வளர்ந்து சிலவேளை கெட்டவன் ஆகிவிட்டால் என்ன செய்வது, எனவே பிள்ளை இறந்தால் கூட கவலைப்படாதீர்கள் என்பது போலிருக்கிறது உங்கள் கருத்து. பிரபாகரன் ஈழத்தின் முதல்வராகவேண்டும் என்ற உங்கள் கனவு நிச்சயம் நிறைவேறும். ஆனால், இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, விகடன், பண்பலை வானொலி, என்று எல்லா இடங்களிலும் துரத்தப்பட்டு ஓடிவந்ததால் உங்களுக்கு ஏற்பட்ட பித்தம் தெளியவேண்டும் என்ற எமது கனவு என்றேனும் நிறைவேறுமா Share this: Facebook WhatsApp Twitter Print Email Pinterest Tumblr LinkedIn Pocket Reddit Like this: Like Loading... Related அரசியல் ஈழம் Home அருண்மொழிவர்மன் November 3, 2008 September 9, 2015 ஞாநி Post navigation தோற்றுப்போன வெற்றி: என் உயிர்த் தோழன் தமிழ் சினிமாவில் தந்தைப்பாசம் 36 thoughts on “ஞாநியை நான் ஏன் நிராகரிக்கிறேன்” கார்க்கி says: November 3, 2008 at 10:49 pm இவ்ளோ பெரிய விளக்கம் அவருக்கு கொடுக்கத் தேவையில்லை என்பேன். ஞாநி… குப்பை…thats all LikeLike Reply அருண்மொழிவர்மன் says: November 3, 2008 at 10:54 pm வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி கார்க்கி இப்படி விட்டு விட்டு தான் அவரது பித்தலாட்டம் கூடிப்போச்சுது LikeLike Reply Anonymous says: November 3, 2008 at 10:55 pm gnani is the biggest nonsence in the media world. he must pay for it at point LikeLike Reply விருபா - Viruba says: November 3, 2008 at 10:56 pm http://arivumathi.blogspot.comநீங்கள் தவறான சுட்டி கோடுத்துள்ளீர்கள், LikeLike Reply அருண்மொழிவர்மன் says: November 3, 2008 at 11:06 pm //gnani is the biggest nonsence in the media world. he must pay for it at point//முற்று முழுதாக ஆமோதிக்கிறேன். இதுபோல இவரது பித்தலாட்டங்கள் நிறைய…. சரியான உதாரணம் பாலகுமாரனுடனான இவரது சந்திப்பு LikeLike Reply அருண்மொழிவர்மன் says: November 3, 2008 at 11:08 pm //நீங்கள் தவறான சுட்டி கோடுத்துள்ளீர்கள்,//நன்றி விருபா….. இப்போது திருத்தி விட்டேன் LikeLike Reply Ariyan says: November 3, 2008 at 11:29 pm i heard he is a gay himself in net…. LikeLike Reply அருண்மொழிவர்மன் says: November 3, 2008 at 11:32 pm ஒரு பால் விளைவு என்பது ஒருவரது வாழ்க்கை முறை பற்றிய தெரிவு. அப்படியே இருந்தாலும் அதில் தவறேதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் ஞாநி போல இதை கொச்சைப்படுத்தி (ஜெ – சசி பற்றி பூதாகரமாக்கியது) ஒரு போதும் பேச மாட்டேன். விஷம் சேரா மனம் என்னுடையது LikeLike Reply ஆட்காட்டி says: November 4, 2008 at 1:01 am சின்னக்குத்தூசி, சோலை, ஞாநி, சோ யாரு இவுங்க? LikeLike Reply அருண்மொழிவர்மன் says: November 4, 2008 at 5:21 am நக்கலாக கேட்கிறீர்கள் என்ற் நினைக்கிறேன். இவர்கள் மூவருமே அரசியல் விவகாரங்களை, செயற்பாடுகளை விமர்சிப்பவர்கள். ஆனால் பக்கச் சார்பான எழுதுக்கி சொந்தக்காரர்கள். அதனால் வரலாற்று பிழைகளை தெரிந்தோ / தெரியாமலோ செய்து கொண்டிருப்பவர்கள் LikeLike Reply ஆட்காட்டி says: November 4, 2008 at 7:02 am அது தான் சொல்லீட்டீங்களே. அப்புறன் என்ன ஆய்வாளர்கள்? விபச்சாரம் செய்பவர்கள். LikeLike Reply ஜோசப் பால்ராஜ் says: November 4, 2008 at 8:08 am ஆனந்த விகடன் இவரை வெளியேற்றியது போல குமுதமும் இவரை வெளியேற்ற வேண்டும். நம்ம ஊர்ல கேட்க நாலு ஆளு இருக்காங்கன்னு தெரிஞ்சா என்னா வேணும்ணாலும் பேசுவாய்ங்க. மைக் கிடைச்சா அமெரிக்க சனாதிபதிக்கு கூட சவால் உடுவாய்ங்கள்ல, அப்டித்தான் இது. LikeLike Reply senthinaathan says: November 4, 2008 at 11:35 am i don’t understand why people are still calling him gnani. he does not seserve that name. he should have been called as sangaran – his real name. second thing he should stop writing and acting in movies in comedy rolls such as mayilsamy LikeLike Reply அருண்மொழிவர்மன் says: November 4, 2008 at 4:53 pm //மைக் கிடைச்சா அமெரிக்க சனாதிபதிக்கு கூட சவால் உடுவாய்ங்கள்ல, அப்டித்தான் இது//இதெ எம்மவர்களிடையே கால காலமாக் இருக்கின்ற ஒரு பழக்கம்….நீங்கள் சொன்னதுபோல வெகுவிரைவில் இவர் குமுதத்தாலும் துரத்தப்படலாம்…. இவர் குடைச்சலை தாங்க அவர்களால்கூட முடியாது…அதன் பின்னர் மீண்டும் அவரது பரீக்‌ஷா குழுவை தொடங்கலாம் LikeLike Reply அருண்மொழிவர்மன் says: November 4, 2008 at 4:55 pm செந்தில்நாதன்..// he should have been called as sangaran – his real name. //ம்ம்… சங்கரன் ஞாநியான கதை என்று ஒரு தொகுப்பை யாராவது வெளியிடவேண்டும்…வருகைக்கு நன்றிகள் LikeLike Reply தமிழ் விரும்பி says: November 4, 2008 at 8:40 pm இப்படித்தான் முன்னுக்க்கு வரவேண்ட்டும் என இல்லாமல் எப்படியும் முன்னுக்கு வரலாம் என ஞாநி நினைக்கிறாரோ? உங்கள் தர்க்க ரீதியான கருத்துகளுக்கு நன்றி. இங்கே ஈழத்தில் நடக்கும் குருதி தோய்ந்த “விடுதலைப்போராட்டம்” அங்கே தமிழகத்தில் பலருக்கு காமடியாக கிடக்கு. அதில் ஞாநியும் அடக்கம். தம்மைப் பக்கச்சார்பற்றவர்கள் என எண்ணுவோர் விடுதலைப்போராட்டத்தையும் அந்த நோக்கில் பார்ப்பதில்லை. விமர்சிப்பது வேறு. விதண்டாவாதம் செய்வது வேறு. ஞாநி….இரண்டாவது (விதண்டாவாதம்/அபத்தம்). LikeLike Reply அருண்மொழிவர்மன் says: November 4, 2008 at 9:23 pm நன்றி தமிழ்விரும்பி…..எல்லாவற்றையும் கடந்து மனிதாபிமானம் என்ற அளவில் பார்ப்போம். அங்கே தினமும் செத்துக்கொண்டிருக்கும் பொதுமக்களை. ஷெல் அடித்து 2பேர் 3 பேர் சாவதெல்லாம் சாதாரணமாகி 10பேர் 20 பேர் செத்தால்தான் அஎய்தி என்றாகிவிட்ட ஒரு பூமியில் வாழ்கிறோம். இந்நேரத்தில் தன்னை அதி மேதாவி என்றெண்ணிக்கொண்டு இவர் செய்வது மிகுந்த கண்டணத்துக்குரியது. அவரது கருத்தை சொல்ல அவ்ருக்கு உரிமையுள்ள அதே நேரம், அதிலுள்ள நச்சு தன்மையை எடுத்துக்காட்ட எமக்கும் உரிமையுண்டு. கலைஞரின் அரசியலில் பல விமர்சனங்கள் இருந்தாலும் அவ்ர் இது தொடர்பாக எடுத்த அண்மைக்கால நடவடிக்கைகள் தாராளமாக ஆதரிக்கப்படவேண்டியவை. இந்நிலையில் இவர் கலைஞரையும் பிரபாகரனையும் இணைத்து ஏதோ கோமாளித்தனம் செய்கிறார் LikeLike Reply Anonymous says: November 4, 2008 at 11:02 pm Gnani always a Bhramin. so there is no wonder he opposes LTTE. He has to obey the orders of Bhramin leader Jayalalitha. Same time he wants to show that he is very progressive. He attacks Hindutva often, just to cheat the people. He always find fault with Karunanidhi. If monsoon fails, for him it is only because of DMK rule, and if Jayalalitha is in power everything will be alright for him.But I wonder one thing how Kumudham publishes his blabberings against Tamil Eelam! If at all Kumudham has some concern for our brtheren at Srilanka, they should immediately push out Gnani. will hey do? LikeLike Reply அருண்மொழிவர்மன் says: November 5, 2008 at 12:08 am //Gnani always a Bhramin. so there is no wonder he opposes LTTE. He has to obey the orders of Bhramin leader Jayalalitha//உண்மைதான். சுவீ கூட ஞாநியை நரம்புகளே பூனூலாய்போனவர் என்று கூறியிருந்தார். இவரது இந்த துவேச போக்கு / வெறி இப்போது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இவர் போடும் நடுநிலைவாதி வேடத்தை சிலர் நம்பி வருவது இன்னும் வேதனைக்குரியது. கருணாநிதியையும் பாலகுமாரனையும் இரண்டு திருமணம் என்று வரிக்கு வரி பழித்த இந்த மேதாவி, தான் பிரிவோம் என்ற உடன்படிக்கையுடனேயே மணாவாழ்வில் ஈடுபட்டதாக கூறி கோமாளித்தனம் செய்தது குறிப்பிடத்தக்கது. // Kumudham has some concern for our brtheren at Srilanka, they should immediately push out Gnani. will hey do?// இது தான் எனது எதிர்பார்ப்பும். மிகப்பெரும் பாராம்பரியம் கொண்ட குமுதத்திற்கு இது அழகல்ல. LikeLike Reply Gunalan G says: November 5, 2008 at 2:25 am “ஏன் நான் கலைஞர் கருணாநிதியை எதிர்க்கிறேன்?”, ஞானியின் தலைப்பிலேயே ஞானியை அடித்தது அருமை; தொடரட்டும். LikeLike Reply வால்பையன் says: November 5, 2008 at 4:26 am //மைக் கிடைச்சா அமெரிக்க சனாதிபதிக்கு கூட சவால் உடுவாய்ங்கள்ல,//அந்த சுதந்திரமே இன்று உங்களையும், என்னையும் இங்கெ விவாதிக்க வைத்திருக்கிறது. ஞாநியின் எழுத்துகளில் நிறைய அபந்தங்கள் இருக்கலாம். சிங்கள இயக்குனரை தாக்கியது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எனக்கு அதில் உடன்பாடில்லை என்பதை கட்டம் கட்டி விட்டு முழுக்க முழுக்க ஆதரித்து எழுதுவது, வன்முறையை ஆதரிப்பதாக காட்டுகிறது. அதிலும் திருமாவின் உதாரணம் அதை விட அபந்தம். இலங்கையின் விடுதலைக்காக வன்முறை தேவைப்படுவதாக கொண்டாலும், அது தமிழகத்தில் எதற்கு? LikeLike Reply அருண்மொழிவர்மன் says: November 5, 2008 at 5:39 am நன்றி குணாளன்…அவரது அபாரமான தர்க்கிக்கும் ஆற்றலை வைத்து அவர் செய்யும் மோசமான கருத்து விதைப்புகளையே எடுத்து சொல்ல விரும்பினேன் LikeLike Reply அருண்மொழிவர்மன் says: November 5, 2008 at 5:43 am //வன்முறையை ஆதரிப்பதாக காட்டுகிறது. அதிலும் திருமாவின் உதாரணம் அதை விட அபந்தம். //ஞாநி வைக்கும் மோசமான் குதர்க்கங்களின் பதிலடியாகவே திருமாவின் எள்வ் அமைந்தது என்பதை முன்னரே தெளிவாக்கினேன்அதுமட்டுமல்ல,//இலங்கையின் விடுதலைக்காக வன்முறை தேவைப்படுவதாக கொண்டாலும், அது தமிழகத்தில் எதற்கு//தமிழகத்தில் வன்முறை வேண்டுமென்ரு நான் சொல்லவில்ல. இது போன்றா வன்முறைகள் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். ஆனால் அதற்காக இவர் செய்யும் கொச்சைப்படுத்திய சில விளக்கங்களை தான் நான் சொல்கிறேன் LikeLike Reply செல்வம் says: November 6, 2008 at 1:21 pm அருண்மொழிவர்மன்……..பாலகுமாரனுடனான ஞாநியின் பேட்டியில் என்ன குற்றம் கண்டீர்கள்? ஞாநியின் பல கேள்விகளுக்கு எழுத்து சித்தர் ஜகா வாங்கினார் என்பதே உண்மை. இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வசனங்கள், இருதாரமணம், போன்ற கேள்விகளுக்கு பாலகுமாரன் திணறித்தான் போனார்.மற்றபடி உங்கள் கருத்துக்களில் இருந்து நிறைய மாறுபடுகிறேன். மாற்றுப்பார்வை என்பதையே யாரும் முன்வைக்கத் தயாரில்லாத இந்த சூழ்நிலையில் மாற்றுக்கருத்துக்களை மிகுந்த வீச்சோடு வெளியிடுபவர்களில் ஞாநியும் ஒருவர் என்பதே என் கருத்து.(ஈழ விடயத்தில் எனக்கும் ஞாநியோடு உடன் பாடு இல்லை. மற்றபடி he is great.):-)) LikeLike Reply அருண்மொழிவர்மன் says: November 6, 2008 at 7:53 pm இந்த பதிவில் நான் முன்வைத்த முக்கியமான விடயமே ஈழப்பிரச்சனை பற்றிய இவரது நிலைப்பாடுதான். இந்த விடயத்தில் இவரது குதர்க்கமான கருத்துக்கள் மிகுந்த கண்டனத்துக்குரியது. இந்த பிரச்சனையால் தினமும் மக்கள் கொல்லப்பட்டுகொண்டிருக்கையில் ஒரு உணர்வுபூர்வமான அலை தமிழகத்தில் ஏற்பட்டிருக்கின்றபோது அப்படி ஒரு அனுதாபம் காட்ட தேவையில்லை என்பது எத்தனை அயோக்கியதனமான கருத்து. அதுவும் தன்னை ஒரு மனிதாபிமானி என்று அடிக்கடி காட்டுகின்ற் ஞாநி எப்படி இதனை செய்வார்?மனிதாபிமானம் மரித்துவிட்டது போன்ற நிலையில் இருந்து இவ்வளவு கேலியும் கிண்டலுமாக பேசுவது எத்தனை மோசமானத்உ?பாலகுமாரன் – ஞாநி சந்திப்பில் அவர்து இருதாரமணத்தை அடிக்கடி கேட்டது , அதாவது பாலகுமாரன் இருதாரத்தை மறைக்காமல் ஒத்துக்கொண்டவர். முதல் தாரத்தை அவர் தனக்கு அந்த மணத்தில் உடன்பாடில்லை என்று சொல்லி விவாகரத்துபெற்று பிரிந்திருந்தால் அவர்து முதல் மனைவியின் நிலை என்ன?, அதுவும் மரபுகளுக்கு கட்டுப்பட்ட அவர் மனைவி இதை எப்படி எதிர்கொண்டிருப்பார்?திருமணம் செய்யும்போதே ஒப்பந்தம் செய்து விவாகரத்து பெற்ற ஞாநி போன்றவர்கள் செய்வது, அவரது மனைவி மரபு ரீதியான பெண்ணாக இருந்திருந்தால் எவ்வாறு இருந்திருக்கும்? இப்படி கேட்பது கூட மாற்று சிந்தனைதான்எதிராளி திணறும்படி கேள்விகேட்பது கெட்டித்தனம். ஆனால் ஞாநி எதிராளியை திணறவைக்கவேண்டுமென்பதற்காக குதர்க்கம் பேசும் வகுப்பை சேர்ந்தவர். LikeLike Reply Sharepoint the Great says: November 9, 2008 at 12:25 am தனக்குப் பிடிக்காதவர்கள் நன்மையைச் செய்தால் ஞாநிக்குப் பிடிக்காது. LikeLike Reply அருண்மொழிவர்மன் says: November 9, 2008 at 9:26 am //தனக்குப் பிடிக்காதவர்கள் நன்மையைச் செய்தால் ஞாநிக்குப் பிடிக்காது.//ஞாநியின் நிலைப்பாடை சரியாக சொல்லி உள்ளீர்கள். எஹ்டை செய்தாலும் அதில் ஒரு குதர்க்கம் பேசுவது இவரது வேலை. பொதுவாக பொருளாதார ரீதியாக வெற்றி பெற்ற எவரையுமே இவர் ஏற்றுக்கொண்டது கிடையாது. LikeLike Reply Arivalagan says: November 11, 2008 at 3:57 pm people should sstop reading him and taking his comments….. a garbage like him should be discarded right away from kumudam and all medias LikeLike Reply அருண்மொழிவர்மன் says: November 12, 2008 at 12:48 am உங்கள் கருத்தில் இருக்கும் வேகம் புரிகின்றது, இந்த உணர்ச்சிவசப்படுதல் தான் எம்மினத்தின் சாபக்கேடு என்று நான் எழுதினாலும். LikeLike Reply Anonymous says: November 15, 2008 at 3:24 am ஞானியை விமர்சிக்கும் நீங்கள் கூட தவறான கருத்துகளை மக்கள் முன் வைப்பது சரியல்ல. இலங்கையில் யுத்தம் நடப்பதும், அந்த யுத்தத்தில் அகப்படும் தமிழ் பொதுமக்கள் கொல்லப்படுவதும் உண்மை தான். ஆனால் திரள் திரளாக மக்கள் சாகிறார்கள் என்று கூறுவதும், அங்கே இன அழிப்பு நடப்பதாக கூறுவதும் மிகைப்படுத்தப்பட்டவை. உலகில் எங்கேயும் யுத்தம் நடந்தால் மக்களும் சாவார்கள் என்பது சிறு பிள்ளைக்கும் தெரிந்த விடயம். காஷ்மீரில் நடக்கும் யுத்தத்தால் இதுவரை ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் செத்து மடிந்துள்ளனர். அதை வைத்துக் கொண்டு இந்தியா காஷ்மீரில் இன அழிப்பை செய்கின்றது என்று உங்களால் கூற முடியுமா? தமிழினவாதிகள் எல்லாவற்றையும் ஒன்றுக்கு பத்தாக சொல்லுவதால் தான் உலகில் யாரும் எங்கள் பக்கம் கவனிப்பதில்லை. LikeLike Reply ஆட்காட்டி says: November 15, 2008 at 3:30 am அது தானே, இந்தியாவில் நடச்க்கிற பாலியல் பலாத்காரங்களின் எண்ணிக்கையை விடக் குறைவு. கொலைகளினை விடக் குறைவு. குண்டு வெடிப்புகளினை விடக் குறைவு. சிறுவர் துஷ்பிரயோகத்தை விடக் குறைவு. சாதிச் சண்டை குறைவு. மதச் சண்டை குறைவு. பட்டினிச சாவு குறைவு. இன்னும் எவ்வளவோ இருக்கு. LikeLike Reply Anonymous says: November 15, 2008 at 3:42 am கடந்த காலத்தை போலன்றி இப்போது நடக்கும் போரில் கொல்லப்பட்டும் மக்களின் எண்ணிக்கை குறைவு. இது இலங்கை அரசின் பிரச்சாரம் அல்ல. புலிகளின் செய்திகளை தொடர்ந்து கேட்டு வந்தாலே தெரியும். உதாரணத்திற்கு தமிழ்நெட் கொடுத்த செய்திகளை பாருங்கள். SLAF bombing raid injures 3 civilians in Vanni[TamilNet, Friday, 18 January 2008, 17:07 GMT]SLAF bombing raids destroy civilian properties in Vaddakkachchi[TamilNet, Tuesday, 08 July 2008, 02:13 GMT]SLAF bombing kills IDP teenager, injures another in Puthukkudiyiruppu, Vanni[TamilNet, Thursday, 30 October 2008, 11:20 GMT]2 civilians wounded, SLAF attacks Puthukkudiyiruppu[TamilNet, Monday, 29 October 2007, 13:13 GMT] LikeLike Reply அருண்மொழிவர்மன் says: November 15, 2008 at 4:43 pm //ஞானியை விமர்சிக்கும் நீங்கள் கூட தவறான கருத்துகளை மக்கள் முன் வைப்பது சரியல்ல.//இதிலிருந்து ஞாநியை விமர்சிப்பவர்கள் சரியானவர்கள் என்கிற கருத்து தொக்கி நிற்பதை அறியமுடிகின்றது. //ஆனால் திரள் திரளாக மக்கள் சாகிறார்கள் என்று கூறுவதும், அங்கே இன அழிப்பு நடப்பதாக கூறுவதும் மிகைப்படுத்தப்பட்டவை//அய்யா, ஒரு உயிர் செத்தால் அது பரவாயில்லை என்கிற கருத்து என்னை புல்லரிக்கவைக்கிறாது. பிரமிப்பூட்டும் ஞானமும் தெளிவும் உங்கள் கொடைவாழ்க உங்கள் தமிழ்ப்பணி LikeLike Reply அருண்மொழிவர்மன் says: November 15, 2008 at 4:47 pm //கடந்த காலத்தை போலன்றி இப்போது நடக்கும் போரில் கொல்லப்பட்டும் மக்களின் எண்ணிக்கை குறைவு//அப்படியானால் ஏன் அங்கு செய்தி தணிக்கை அமுலில் இருக்க வேண்டும்…..செய்தாளார்கள் கைது செய்யப்படவேண்டுய்ம், கொல்லப்படவேண்டும்???? LikeLike Reply நரேஷ் says: December 17, 2008 at 8:05 pm //கடந்த காலத்தை போலன்றி இப்போது நடக்கும் போரில் கொல்லப்பட்டும் மக்களின் எண்ணிக்கை குறைவு. இது இலங்கை அரசின் பிரச்சாரம் அல்ல. புலிகளின் செய்திகளை தொடர்ந்து கேட்டு வந்தாலே தெரியும். உதாரணத்திற்கு தமிழ்நெட் கொடுத்த செய்திகளை பாருங்கள்.//அனானி, நீங்கள் சொன்னதிலேயே கடந்த காலம் போலல்லாமல் அப்படின்னுட்டீங்க. அதாவது, தமிழீழ மக்களுக்கெதிராக காலங்காலமாக (சுமார் 60 ஆண்டு காலமாக) அடக்கு முறைகள் நடந்து வருகின்றன. இப்ப கொலைகளின் எண்ணிக்கை குறைவு, வண்புணர்ச்சி குறைவு என்பதற்காக சிங்கள அரசின் நடவடிக்கையை ஆதரித்து விடலாமா. கோணேஸ்வரி சம்பவம் ஒன்றே போதுமே சிங்கள அரசின் கொடூரத்தை விளக்க..உலகின் எந்த நாடு தன் சொந்த மக்களையே கொன்று குவிக்கிறதோ அது கொடுங்கோல் ஆட்சியே…புள்ளிவிவரத்தை பாருங்கள் சார், இந்தப் போராட்டத்தில் இதுவரை ஏறக்குறைய ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் அழிக்கப் பட்டிருப்பதாக சொல்கின்றனர். இதெல்லாம் கேட்டுகிட்டும், நாம் இன்னும் விவாதத்திலேயே உட்கர்ந்து இருக்கலாம், அங்கே அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டே இருப்பார்கள்…. LikeLike Reply அருண்மொழிவர்மன் says: December 17, 2008 at 9:22 pm வண்புணர்ச்சி குறைவு என்பதற்காக சிங்கள அரசின் நடவடிக்கையை ஆதரித்து விடலாமா. கோணேஸ்வரி சம்பவம் ஒன்றே போதுமே சிங்கள அரசின் கொடூரத்தை விளக்க..//இதனைதான் நானும் கூறினேன். ஏனோ அனானிக்கு அது ப்ரியவில்லை. அவர்கள் ஒருபோதும் இப்படியான சமரசம் தான் தமிழனை காலம் காலமாக அடிமையாகவே வைத்துள்ளது LikeLike Reply Leave a Reply Cancel reply Enter your comment here... Fill in your details below or click an icon to log in: Email (Address never made public) Name Website You are commenting using your WordPress.com account. ( Log Out / Change ) You are commenting using your Google account. ( Log Out / Change ) You are commenting using your Twitter account. ( Log Out / Change ) You are commenting using your Facebook account. ( Log Out / Change ) Cancel Connecting to %s Notify me of new comments via email. Notify me of new posts via email. Δ இந்தத் தளத்தில் தேட Search for: Follow Us Facebook Recent Posts மூளாய் இராவணேசுவரர் குறித்து சில வார்த்தைகள் November 4, 2021 ஈழத்தில் பரவும் இந்திய ஆதிக்கம் October 26, 2021 ஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு October 19, 2021 நந்திக்கடல் பேசுகிறது தொகுப்பை முன்வைத்து… September 12, 2021 எச்சமும் சொச்சமும் June 22, 2021 நதியைக் கடந்த பாட்டியரும் பேத்தியரும் May 27, 2021 செல்வினின் உரைகளும் அவற்றின் தேவைகளும் May 23, 2021 எங்கட புத்தகங்கள் இதழ் குறித்து… February 3, 2021 கல்வியும் மதமும் குறித்து பெரியார்… July 30, 2020 கொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் June 1, 2020 இஸ்லாமிய தமிழ் இலக்கியமும் முஸ்லிம் தேசிய இலக்கியமும் "ராஜீவ் காந்தி படுகொலை - வெளிவராத மர்மங்கள்" புத்தகம். மொழிபெயர்ப்பு : சவால்களும் சில பரிந்துரைகளும் நந்திக்கடல் பேசுகிறது தொகுப்பை முன்வைத்து… மகாபாரதக் கதையின் அரசியல் என்ன? Subscribe to Blog via Email Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email. Join 426 other followers Email Address: Subscribe எழுதியவை எழுதியவை Select Month November 2021 (1) October 2021 (2) September 2021 (1) June 2021 (1) May 2021 (2) February 2021 (1) July 2020 (1) June 2020 (1) May 2020 (2) January 2020 (1) November 2019 (1) September 2019 (1) August 2019 (1) June 2019 (2) May 2019 (1) April 2019 (1) March 2019 (3) February 2019 (2) January 2019 (1) December 2018 (1) November 2018 (1) August 2018 (3) July 2018 (2) June 2018 (2) May 2018 (1) April 2018 (2) March 2018 (1) February 2018 (1) January 2018 (2) December 2017 (3) November 2017 (1) October 2017 (3) September 2017 (1) August 2017 (3) July 2017 (4) June 2017 (2) May 2017 (3) March 2017 (3) February 2017 (2) January 2017 (1) December 2016 (1) November 2016 (2) October 2016 (1) August 2016 (3) July 2016 (3) June 2016 (1) May 2016 (1) April 2016 (2) March 2016 (2) February 2016 (2) January 2016 (2) December 2015 (4) November 2015 (2) October 2015 (3) September 2015 (3) August 2015 (5) July 2015 (5) June 2015 (4) May 2015 (3) April 2015 (3) January 2015 (2) December 2014 (3) November 2014 (3) October 2014 (2) August 2014 (1) June 2014 (1) May 2014 (2) April 2014 (1) March 2014 (2) February 2014 (2) June 2012 (1) May 2012 (1) March 2012 (1) February 2012 (2) November 2011 (3) October 2011 (1) September 2011 (1) July 2011 (1) June 2011 (2) May 2011 (4) April 2011 (2) February 2011 (1) January 2011 (2) December 2010 (4) November 2010 (4) October 2010 (1) September 2010 (1) August 2010 (1) July 2010 (5) June 2010 (3) May 2010 (1) April 2010 (6) March 2010 (4) December 2009 (6) October 2009 (2) September 2009 (1) August 2009 (3) July 2009 (4) June 2009 (5) May 2009 (1) April 2009 (3) March 2009 (5) February 2009 (4) January 2009 (2) December 2008 (3) November 2008 (4) October 2008 (2) September 2008 (2) August 2008 (1) May 2008 (1) February 2007 (1) December 2006 (2) October 2006 (1) August 2006 (2) Twitter Updates மூளாய் இராவணேசுவரர் குறித்து சில வார்த்தைகள் arunmozhivarman.com/2021/11/04/202… 3 weeks ago ஈழத்தில் பரவும் இந்திய ஆதிக்கம் arunmozhivarman.com/2021/10/26/%e0… 1 month ago ஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு arunmozhivarman.com/2021/10/19/202… 1 month ago RT @tovithaikulumam: அறிதலும் பகிர்தலும் 08 அரசும் அதிகாரமும் இணைப்பு - us02web.zoom.us/j/82785207411 Meeting ID: 827 8520 7411 https://t.co/D2… 1 month ago RT @tovithaikulumam: அழைப்பு ‘அரசியலும் அரசியல் விஞ்ஞானமும் சமகால அறிமுகம்’ என்னும் நூல் பேராசிரியர் ஜயதேவ உயன்கொட POLITICS AND POLITICAL… 2 months ago பெரியாரியலின் தேவை https://www.youtube.com/watch?v=XCEIuB47znY&t=2929s The Castless Collection https://www.youtube.com/watch?v=8A7Z67lU9pY&t=2294s பகுப்பு அனுபவம் அரசியல் அறிக்கை அறிவிப்பு ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணம் இலக்கியம் ஈழத்து இலக்கிய வரலாறு ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து திரைப்படம் ஈழப்போராட்டம் ஈழம் உரையாடல் உறவுகள் ஊடகங்கள் எண்ணங்கள் எதிர்வினை எழுத்தாளர்கள் கனேடிய அரசியல் கலை காலம் காலம் செல்வம் கிரிக்கெட் குறும்படம் சமூகநீதி சமூகம் சாதீயம் திரை விமர்சனம் திரைப்படம் தேசியம் நாவல் நிகழ்வுகள் நினைவுப் பதிவு நினைவுப்பதிவு நேர்காணல் பண்பாட்டு அரசியல் பதிகை பத்தி புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு பெண்ணியம் மரபுரிமை யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் வரலாறு வாசிப்பு வாசிப்புக் குறிப்புகள் விசாகன் விமர்சனம் விளையாட்டு Documentary Home Sexuality Uncategorized Goodreads Tags .ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப் போராட்டம் ஈழப்போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த் தோழன் என்னுயிர்த்தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே காணாமல் ஆக்கப்பட்டோர் கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பண்பாட்டுப் படையெடுப்பு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர்வாழ்வு புலம்பெயர் வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதச்சார்பின்மை மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன் Website Powered by WordPress.com. Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
சாரு நிவேதிதா, ஜெயமோகன் மற்றும் ஊடகங்கள் இணைந்து வழங்கும் “நித்திய ஆனந்தம்” – அருண்மொழிவர்மன் பக்கங்கள் Skip to content பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! Search அருண்மொழிவர்மன் பக்கங்கள் Menu சாரு நிவேதிதா, ஜெயமோகன் மற்றும் ஊடகங்கள் இணைந்து வழங்கும் “நித்திய ஆனந்தம்” நித்தியானந்தர் பற்றி எழுதாமல் வலைப்பதிவே எழுத முடியாது என்பது போல எல்லாப் பக்கம் இருந்தும் நித்தியானந்தர் பற்றிய கட்டுரைகளே குவிகின்றன. எரிகிற கொள்ளியில் பிடுங்கினவரை லாபம் என்பது போல சன்னும், நக்கீரனும் தொடக்கி வைத்த இந்த வியாபாரத்தில் இப்போது எல்லாத் தரப்பாருமே குதித்துள்ளனர். ஒரு கள்ளனைக் காட்டிக் கொடுக்கிறோம் என்ற பெயரில் பல கள்ளர்கள் கூட்டுக் கொள்ளையில் ஈடுபடுகின்றனர். நான் இப்படி எழுதுகிறேன் என்றவுடன் நான் ஏதோ நித்தியானந்தருக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று நினைக்கவேண்டாம். நித்தியானந்தர் மட்டுமல்ல எந்த நவீன சாமியார் மீதும் நான் நம்பிக்கை வைப்பது கிடையாது. ஏன் நம்பிக்கை வைக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக சதுர்வேதி, ஜெயேந்திரர், விஜயேந்திரர், பிரேமானந்தா என்ற மிக நீண்ட வரலாறு கண் முன்னே விரிகின்றது. தவிர, இந்த சாமியார்கள் மீண்டும் மீண்டும் நிறுவ முயல்வதெல்லாம் மிக மோசமான ஆணாதிகத்தையும், பெண்ணடிமைத்தனத்தையும், பிற்போக்குத்தனத்தையும் தவிர வேறு எதையுமே அல்ல. விகடன், குமுதம் என்ற என்ற இரண்டு ஊடக வியாபாரிகளும் முன்னெடுத்து விட்டவர்களே சுக போதானந்தாக்களும், ஜக்கிகளும், நித்திகளும். உண்மையில் 80 களில் பி.சி. கணேசன், எம். எஸ். உதயமூர்த்தி என்ற இரண்டு சுய நம்பிக்கை எழுத்தாளர்கள் எழுதியதன் தொடர்ச்சியாகவே இவர்கள் எழுதிய கட்டுரைகள் பார்க்கப் படவேண்டியவை. ஓரளவுக்கு இவர்கள் எழுதிய கட்டுரைகளை மனோ தத்துவக் கட்டுரைகள் என்று பாகுபடுத்திக்கொள்ளலாம். துரதிஸ்ட வசமாக சாரு நிவேதிதா அந்தக் காலப் பகுதிகளில் லத்தீன் இலக்கியங்கள் படிப்பதிலும், உத்தமத் தமிழ் எழுத்தாளர் 1 பற்றிய துண்டுப் பிரசுரங்கள் வெளியிடுவதிலும் பிஸியாக இருந்ததால் அவரால் எம். எஸ் மற்றும் பி.சியின் கட்டுரைகளைப் படிக்க முடியாமல் போய்விட்டது. உத்தம தமிழ் எழுத்தாளர் 1 இறந்து, உத்தம தமிழ் எழுத்தாளர் 2 பற்றி சாரு எழுதாமலே எல்லாருக்கும் தெரிந்து விட்ட காலப்பகுதிகளில், லத்தீன் இலக்கியங்கள் எல்லாம் சாருவால் ஏற்கனவே படித்து முடிக்கப்பட்டதாலும், தொடர்ந்து ஃப்ரான்ஸ் செல்ல ஏதோ காரணங்களால் அழைப்பு வராததாலும் சாரு மெல்ல தமிழில் வாசிக்கத் தொடங்கியபோது அவர் வாசித்த கதவைத்திற காற்று வரட்டும் வகையறாக்கள் அவரை அதிகம் கவர்ந்திருக்கலாம். (கதவைத் திற காற்று வரட்டுமின் எழுத்தாக்கம் வலம்புரி ஜானால் செய்யப்பட்டது என்ற பதிவர் ஒருவர் குறிப்பிட்ட ஞாபகம், பெயர் மறந்து விட்டது). ஆனால் சாரு ஏற்கனவே பாபாவிடம் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தையும் தாண்டி நேரடியாக நித்தியானந்தரின் பிரசாரகராகவே மாறினார். உண்மையில் சாரு இந்தக் காலப் பகுதிகளில் எழுதிய அனேக பத்திகளும் கட்டுரைகளும் வெறும் பித்தலாட்டம் மட்டுமே. நித்தியானந்தர் புற்று நோயைக் கூடு விட்டு கூடு பாய்ந்து குணப்படுத்தினார் என்பது தொடங்கி தனது புத்தகங்களின் விற்பனை நித்தியானந்தரின் சீடராகவோ / பக்தராகவோ மாறிய பின்னர் எவ்வாறு கூடியது என்பது வரை அவர் உளறியதை நினைத்தால் அவரின் எந்த ஒரு தீவிரமான வாசகனுக்கும் கூட வேடிக்கையாகத்தான் இருக்கும். ஆனால் இப்போது நித்தியானந்தரின் வீடியோ சர்சைகளின் பின்னர் திடீரென்று பல்டி அடித்து நித்தியானந் தர் பற்றி தான் முன்னரே அறிந்து தான் மெல்ல மெல்ல அவரை விட்டு விலகியதாகவும், அவர் தனக்கு காய்ச்சல் வந்திருந்தும் கூட தன் மனைவி அவந்திகாவை ஆசிரமத்தை விட்டு விலகாமல் “அய்யாவுக்கு சுகமாகி விடும்” என்று கூறினார் நித்தியானந்தர் என்றும் இப்போதும் கூறும் சாரு, முன்னர் உலகில் உள்ள எல்லாப் பிரச்சனைகளுக்கும் சர்வர்ரோக நிவாரணி போன்று நித்தியானந்தரை முன் மொழிந்ததை இட்டு இது வரை எந்த வருத்தத்தையும் வெளியிடவில்லை. இப்போது, தான் ரிப்போர்ட்டரில் நித்தி பற்றி எழுதவிருப்பதாக அறிவிப்பு விடுகிறார். ஏதோ நித்தியின் அருளால் சாருவுக்கும் குமுதத்துக்கும் இடையில் இருந்த முறுகல் சரியாகிவிட்டது போல தோன்றுகின்றது. (சில வேளை அதற்காகக்த்தான் நித்தி இப்படி வீடியோ வரை போனாரோ தெரியாது). நித்தியானந்தர் பற்றி முன்னர் ஒரு ஒரு வாசகர் தனக்கு மெயில் அனுப்பியதாகவும், அதை ஒரு மகான் மீது செய்யப்படும்அவதூறு என்றெண்ணி அழித்து விட்டதாகவும் இப்போது கூறி, அந்த வாசகரை அதே மெயில்களை மறுபடி அனுப்பச் சொல்லுகிறார். தனது வாசகர்களுக்கு நித்தியானந்தரை முன் மொழியும் முன்னர் ஒருமுறையேனும் இது பற்றி யோசித்துப் பார்த்திருக்கலாம் தானே?. தான் வள்ளலாருடன் பழகினால் வள்ளலார் கூட கத்தியெடுத்து தன்னைக் குத்த வந்து விடுவார் என்று சுய இரக்கம் தோன்ற பேசிகின்ற சாரு, தான் அப்படிக் கொண்டாடி மற்றவர்களுக்கு பிரேரிப்பவர்களை தானே ஒரு குறுகிய காலத்தின் பின்னர் திட்டித் தீர்ப்பதில் இருந்தாவது மனிதர்கள் பற்றி தான் எடுக்கும் தீர்மானங்கள் எவ்வளவு தூரம் நிலை இல்லாதன என்று ஒரு முறை ஏனும் நினைத்துப் பார்க்கக் கூடாதா?. முன்னர் தன் வாரிசு என்று இவரே சொன்ன வா. மு. கோமு முதல், கனிமொழி, நித்தியானந்தர், பாபா, நாகார்ஜூன் என்ற மிக நீண்ட வரிசையில் இருக்கிறது இவரே கொண்டாடி விட்டுப் பின்னர் இவரே திட்டித் தீர்த்த பட்டியல். முன்பு சாரு காளான் கோப்பி பற்றி தொடர்ச்சியாக எழுதித் தள்ளிக்கொண்டிருந்தார். அது பற்றி எனது தம்பி ஒரு முறை அப்பாவிடம் “காளான் கோப்பி பற்றி முன்னெடுப்பவர்களுக்கு (promote பண்ணுபவர்களுக்கு) காளான் கோப்பி விற்பவர்களால் பணம் வழங்கப்படும், அதனால்தான் சாரு இப்படி எழுதுகிறார் என்று சொன்னபோது எந்த அடிப்படையில் இவன் இப்படி சொல்கிறான் என்றே தோன்றியது. ஆனால் அது போன்ற சந்தேகங்கள் உறுதிப்பட சாருவின் செயல்களே காரணமாகிவிடுகின்றன. சாருதான் இப்படி என்றால் சாருவாலேயே புகழபட்ட பின்னவீனத்துவ விமர்சகர் (????!!!!) ஒருவர் “சாருவுக்கு முன்னர் நித்தியானந்தரைப் பிடிக்கும், எனக்கு இப்பவும் சாருவைப் பிடிக்கும்” என்று பதிவிடுகிறார். மேலும், தான் தன் நண்பர்களிடம் நித்தியானந்தர் எதிலாவது மாட்டும்போது சாரு பல்டி அடிப்பார் என்று முன்னரே கூறியதை இன்னொரு நண்பரின் கடிதம் மூலம் உறுதிப்படுத்துகிறார். அனேகமாக இது போன்ற தகுதிகளை முன்வைத்து இவரை சாரு தன் அடுத்த வாரிசு என்று விரைவில் அறிவிக்கலாம். (சாரு தன் வாரிசு என்றோ, அல்லது சிறப்பாகவோ ஒருவரைப் பற்றி எழுதினால் எழுதப் பட்டவருக்கு என்ன நடக்கும் என்பது எல்லாரும் அறிந்ததே!). நித்தியானந்தர் விவகாரத்தில் சாரு நேர்மையாக தன் தவறுகளை ஒப்புக்கொண்டிருக்கலாம். அதை விட்டு ஆங்கிலத்தில் இது பற்றி முதலிலேயே கதை எழுதினேன் அது இதென்று இவர் செய்யும் அழிச்சாட்டியத்தைத் தாங்கவே முடியவில்லை. சாருதான் இப்படி என்றால் ஜெயமோகன் செய்யும் அட்டகாசம் இன்னொரு பக்கத்தில் போகிறது. நித்தியானந்தர் பற்றி தான் முன்பே அறிந்ததாயும் நித்தியானந்தரிடம் பணம் வாங்கியே சில எழுத்தாளர்கள் (சாரு??) நித்தியானந்தர் பற்றி எழுதியதாயும் கூறுகிறார் ஜெமோ. இது பற்றி எழுதாததில் எனக்கு எந்த வியப்பும் இல்லை, அவாள் கட்டிக் காக்க விரும்பும் இந்து ஞான மரபிற்கு இது போன்ற விடயங்களை எழுதுவது கூட ஊறாக அமையலாம். நித்தியானதர் விவகாரத்தின் பின்னர் “ஜாக்ரதை” என்று அவர் எழுதிய ஒரு கட்டுரையே காணும் ஜெமோ எடுக்கின்ற நிலைப்பாட்டைச் சொல்ல. போதாதென்று ஆன்மீகம், போலி ஆன்மீகம் என்ற தொடர் கட்டுரை வேறு எழுத்தாளர்கள் தான் இப்படி என்றால் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று தம்மைத் தாமே கூறிக் கொள்ளும் ஊடகத்துறை செய்யும் பித்தலாட்டம் அடுத்த பக்கம். நக்கீரன் தன் அட்டைப் படத்திலேயே இந்தக் காட்சிகளைப் போட்டு வியாபாரம் தேடுகின்றது. முன்னர் கடந்த மே மாதம் கூட பிரபாகரனும் அன்ரன் பாலசிங்கமும் இருந்த ஒரு படத்தை எடிட் பண்ணி பிரபாகரன் செத்துவிட்டதாக தொலைக்காட்சியில் காட்டப்படுவதை பிரபாகரனே பார்த்துக்கொண்டிருப்பது போல ஒரு படத்தை வெளியிட்டது நக்கீரன். இது போலவே இந்த முறையும். மேலும் இந்த முறை ஒரு படி மேலே போய் தம் இணையத் தளத்தில் இந்த வீடியோவை ட்ரெய்லராய் வெளியிட்டு, பின்னர் முழு வீடியோவையும் பார்க்க சந்தாதாரர் ஆகவேண்டும் என்றும் சொல்லி விற்றுத் தள்ளியது நக்கீரன். சொல்லப் போனால் நக்கீரன் செய்தது “நீலப்பட விற்பனை” என்கிற பிரிவில் நடவடிக்கை எடுக்கவேண்டிய குற்றம் அதையேதான் சன்னும் செய்தது. அப்போ இந்த ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்?. அது தான் சொல்வார்களே குருக்கள் — விட்டால் குற்றம் இல்லை என்று, அதான் ஞாபகம் வருகின்றது. இவ்வளவு காலமும் நித்தியை வைத்து / அல்லது நித்தி பெயரால் கட்டுரை போட்டு (கதவைத் திற காற்று வரட்டும் எழுதிக் கொடுத்தது வலம்புரி ஜான் என்று ஒரு பதிவர் குறிப்பிட்டிருந்தார், சாருவுக்கும் நித்திக்கும் அடுத்த ஒற்றுமை) வியாபாரம் செய்த குமுதம் அது பற்றி எந்த சொரணையும் இல்லாமல் தனது தளத்திலேயே நித்தியின் வீடியோ கிளிப்பிங்கினைப் போட்டு வியாபாரம் செய்கின்றது. நிற்காது நித்தியின் சக “ப்ராண்ட் அம்பாசடரான” சாருவுடன் சேர்ந்து ரிப்போட்டரில் நித்தியின் லீலைகள் பற்றி சாரு எழுதும் தொடர் என்று அறிவித்து அடுத்த சரவெடியைத் தொடக்கிவைத்துள்ளது. இதற்குப் போட்டியாக ஏதேனும் விகடனின் எழுதவேண்டும் என்பதற்காக விகடன் ஜக்கி வாசுதேவ் பற்றி ஏதாவது ஒரு விடயத்தைப் புலனாய்ந்து அதை அம்பலப்படுத்தி சுபாவைக் கொண்டே ஜூனியர் விகடனில் ஒரு தொடரை தொடங்கினால் கூட தொடங்கலாம்….. அந்த மாதிரியான காலத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் (இந்தக் கடைசி வசனம் எழுதியவர் மனுஷ்யபுத்திரன், அண்மையில் அவ்ர் ஏற்படுத்திய அதிர்ச்சி பற்றி விரைவில் எழுதுவேன், என்ன செய்வது இந்த மாதிரியான காலத்தில்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நீங்கள் ஏற்கனவே சொல்லி விட்டீர்களே) Share this: Facebook WhatsApp Twitter Print Email Pinterest Tumblr LinkedIn Pocket Reddit Like this: Like Loading... Related ஊடகங்கள் பத்தி விமர்சனம் அருண்மொழிவர்மன் March 10, 2010 January 13, 2015 சாரு நிவேதிதா ஜெயமோகன் நித்தியானந்தர் Post navigation நம்மை நாமே சிலுவையில் அறைவோம் தாயகக் கனவுகள் 24 thoughts on “சாரு நிவேதிதா, ஜெயமோகன் மற்றும் ஊடகங்கள் இணைந்து வழங்கும் “நித்திய ஆனந்தம்”” கோவி.கண்ணன் says: March 10, 2010 at 2:56 am //ஜக்கி வாசுதேவ் பற்றி ஏதாவது ஒரு விடயத்தைப் புலனாய்ந்து அதை அம்பலப்படுத்தி சுபாவைக் கொண்டே ஜூனியர் விகடனில் ஒரு தொடரை தொடங்கினால் கூட தொடங்கலாம்…//சூப்பர் பஞ்ச் ! LikeLike Reply அருண்மொழிவர்மன் says: March 10, 2010 at 3:06 am நன்றிகள் கோவி. கண்ணன், அண்மைக்காலமாக இந்த வியாபாரிகள் நடந்து கொள்ளும் முறையைப் பார்க்கின்றபோது இதுவும் நடக்கலாம் என்றே தோன்றுகின்றது LikeLike Reply Dr.Rudhran says: March 10, 2010 at 3:14 am well written LikeLike Reply அருண்மொழிவர்மன் says: March 10, 2010 at 3:19 am நன்றிகள் ருத்ரன்,இது பற்றி நீங்களும் ஒரு காத்திரமான பதிவு எழுதினீர்கள் எனூ நினைக்கின்றேன்நன்றி LikeLike Reply ராம்ஜி_யாஹூ says: March 10, 2010 at 3:39 am நன்றாக எழுதி உள்ளீர்கள்.சில ஆண்டுகள் முன்பு வரை தமிழ்ப் பத்திரிக்கைகள் மீது நல்ல மதிப்பு இருந்தன, அவையும் தமது கடமைகளை சரி வர செய்து வந்தன.இப்போது பத்திரிக்கை துறையிலும் நேர்மை , நம்பகத் தன்மை இல்லை.இதை எழுதும் இந்த நிமிடத்தில் கூட நக்கீரன் இணையத்தில் விளம்பரம்- நித்தியின் எண்ணெய் குளியல் பார்க்க நூறு ரூபாய், உச்சி கால பூஜை பார்க்க இருநூறு ரூபாய்.நல்ல வேளை, பிரேமானந்தா, சதுர்வேதி காலங்களில் இணையமும், யூடுபும் இல்லை.ஐம்பது ரூபாய் லஞ்சம் வாங்கிய நிகழ்வுகளை எல்லாம் பெரிதாக எழுதும் விகடனின் கழுகார் அமைதி காக்கிறார் நித்தி விசயத்தில். விகடன் பதிப்பகத்தில் இருக்கும் நித்தியின் புத்தகங்கள் குறித்த கவலையோ.குமுதமும் நக்கீரனுக்கு சளைத்தது அல்ல- நித்தியின் தனி பேட்டி இலவசம்,, ரஞ்சிதாவின் பேட்டி பார்க்க ரூபாய் அறுபது, டவுன் லோட் செய்ய ரூபாய் நூறு, ரஞ்சிதா நித்தி இணைந்த பேட்டி பார்க்க ரூபாய் இருநூறு. LikeLike Reply enRenRum-anbudan.BALA says: March 10, 2010 at 4:02 am நல்ல அலசல், தேவையான இடுகை! பாராட்டுகள், நன்றி. LikeLike Reply டக்கால்டி says: March 10, 2010 at 4:49 am சிந்திக்க முடிகிறது…ஆனால் இவர்களின் வியாபாரத்தை தடுக்க முடியாது… LikeLike Reply புல்லட் says: March 10, 2010 at 5:10 am சிறுவயதில் யாராவது அளாப்பினால் ஒரு கோபம் வருமெ அது போல ஒரு உணர்வு தான் சாரு தன் கூத்தை காட்டியபோது விளங்க முடிந்தது.. சற்றெனும் கேவலமில்லாமல் அவன் அப்பிடியிருந்தா நானென்ன செய்வது என்று சொல்லி நித்தியை படுதூசணத்தால் திட்டிவிட்டு வேட்டியை தட்டிக்கொண்டு எழுந்துவிட்டார்.. கடும்கோபம் வந்தது அவரையும் அவரது வெங்காய அபிமானிகளையும் பார்க்க.. சாமியாரை பிடிக்கமுதல் இப்படி எழுத்து விபச்சாரம் செய்யும் அனைவரையும் பிடித்து எண்ணெய்ச்சட்டியில் முக்கியெடுக்குவேண்டும்.. நானும் உது குறித்து எழுதியிருந்தேன்.. ஆனால் உங்களது பதிவு சுவாரசியமாயும் தகவலடங்கியதாகவும் இருக்கிறது.. நல்ல பதிவு.. LikeLike Reply Anonymous says: March 10, 2010 at 5:31 am CLICK TO READ சுவாமிகளும் தேவடியாள்களும் LikeLike Reply மரா says: March 10, 2010 at 5:42 am This post has been removed by the author. LikeLike Reply மயில்ராவணன் says: March 10, 2010 at 5:47 am நன்றாக எழுதியிருக்கிறீர்கள் இலக்கிய வியாபாரிகள் பற்றி.ஆனால் ஜெமோ பற்றி இன்னும் கொஞ்சம் விசயங்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.ஏனெனில் தகதிமிதா போல் கண்டதையும் எழுதுபவரல்ல ஜெமோ என்பது என் கருத்து.நான் கூட கோமுவின் தொடர்கதை ஒன்றை என் வலைப்பூவில் வெளியிட்டேன் ‘அஞ்சரைக்குள்ள வண்டி’…சிரித்து சந்தோசப்பட, நேரம் கிடைக்கும்போது படிக்கவும்.நன்றி LikeLike Reply Anonymous says: March 10, 2010 at 6:47 am ஜெமோ சாமியார்களிடமிருந்து விடுபடுதல் பற்றியல்லவா சொன்னார் , அவர் நம்பும் ஞானம் பற்றிதானே எழுதினார் ?அவரை இந்த லிஸ்டில் எப்படி சேர்த்தீர்கள் ? LikeLike Reply Anonymous says: March 10, 2010 at 6:59 am புற்று நோயை குணப்படுத்துவதாக கூறும் இன்னும் நம்பிக்கொண்டும் இருக்கும் சாரு, நித்தி படுக்கையிலிருந்து துள்ளி எழுந்து ”மாத்திரையை” ஏன் விழுங்குகிறார் என்பதையும் விளக்க வேண்டும். LikeLike Reply கதியால் says: March 10, 2010 at 8:02 am அருமை….அருமை….! நீண்ட நாட்களின் பின்னர் உங்கள் ‘நையாண்டி’த்தனமான எழுத்துக்களை ரசித்தேன். ஆனால் அத்தணையும் உண்மையும் கூட. நித்தி தவறு/சரி என்பதற்கு அப்பால் அந்த ஊடகங்களின் வியாபார நோக்கம் அருவருக்கத்தக்கது. அதையும் தாண்டி சாரு தான் அழித்து விட்ட அந்தக் கடிதங்களை மீளக் கோருகிறார். அதுவும் குமுதம் அவருக்கு ‘கோடி’யை கொட்டிக் கொடுத்திருக்கலாம். இப்படி மானங்கெட்டு கேட்கிறாரே என்று நினைக்கும் போது என்ன சொல்ல…!! LikeLike Reply Anonymous says: March 10, 2010 at 8:04 am சாருவின் அடுத்த மொள்ளமார்த்தனம்:-இன்றைய ஜூனியர் விகடனில் அடியேனின் பேட்டி வெளிவந்துள்ளது. அவந்திகா சாமியாரின் ஆசிரமத்தில் மாட்டிக் கொண்டிருந்த சமயத்தில் மிகுந்த பதற்றத்தில் இருந்த போது கொடுத்த பேட்டி. அதில் என்னை வுமனைசர் என்று சொல்லியிருக்கிறேன். மன்னிக்கவும். அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றே எனக்குத் தெரியாது. பெண்களை நேசிப்பவன் என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். எழுத்தில் இருக்கும் வசதி பேச்சில் இல்லை. எழுத்தில் தவறான வார்த்தைகள் விழுந்தால் அடித்து மாற்றி விடலாம். ஆனால் பேச்சில் பேசியது பேசியதுதான். அப்படி விழுந்த வார்த்தை அது. LikeLike Reply பதி says: March 10, 2010 at 10:28 am அருமையாக விளாசியுள்ளீர்கள்..//ஜெமோ சாமியார்களிடமிருந்து விடுபடுதல் பற்றியல்லவா சொன்னார் , அவர் நம்பும் ஞானம் பற்றிதானே எழுதினார் ?அவரை இந்த லிஸ்டில் எப்படி சேர்த்தீர்கள் ? //அனானி அன்பரே, ஜெயமோகனைப் பற்றி மானுடன் எழுதியள்ள பதிவு உங்களது வினாவிற்கு பதிலளிக்கும் என நம்புகின்றேன்http://maanitan.blogspot.com/2010/03/blog-post_09.html LikeLike Reply வானேறி says: March 10, 2010 at 12:01 pm கலக்கிடீங்க சூப்பர் LikeLike Reply Anonymous says: March 10, 2010 at 12:23 pm well done arunmozhiyou must keep on writing articles like thisAmal LikeLike Reply Anonymous says: March 10, 2010 at 12:34 pm //அனானி அன்பரே, ஜெயமோகனைப் பற்றி மானுடன் எழுதியள்ள பதிவு உங்களது வினாவிற்கு பதிலளிக்கும் என நம்புகின்றேன்//கொடும , அதெல்லாம் ஒரு விளக்கமாய்யா ? எதோ ருத்ரனை விட்டு எழுதினாலும் கொஞ்சம் ஸ்ராங்கா இருக்கும் ,இந்த மாதிரி வெட்டி பதிவுகளை தந்து ? LikeLike Reply Kiruthikan Kumarasamy says: March 10, 2010 at 5:02 pm கலக்கல்…பேசாம் நானும் சாமியாகலாம் என்றிருக்கிறேன். என்னுடைய போதனைகளை அலங்காரச்சொற்கள் சேர்த்து நீங்கள்தான் எழுதித் தரவேண்டும்…. :)) LikeLike Reply Anonymous says: March 10, 2010 at 5:46 pm அருமையான பதிவு அருண்மொழிவர்மன். தொடர்ந்து எழுதுங்கள். இப்போது இலங்கையில் கல்கியின் அட்டூழியம் நடக்கிறது. இது எப்ப அம்பலமாகுதோ தெரியாதுசிவக்குமார் LikeLike Reply துர்க்கா-தீபன் says: March 10, 2010 at 7:14 pm " கடந்த இருபது ஆண்டுகளாக தமிழ் சிறுபத்திரிகைச் சூழலில், ஒரு தமிழ் எழுத்தாளன் தன் தரப்பினை விட்டுக் கொடுக்காமல் இவ்வளவு நீண்ட போராட்டத்தை நடத்திய சந்தர்ப்பங்கள் மிகவும் அரிது. அதிகாரத்திற்கும் மையப்படுத்தலுக்கும் எதிராக பிடிவாதத்துடன் இயங்கிய நிராகரிக்க முடியாத தரப்பு அது. கலை இலக்கிய சூழலிலும் அதற்கு வெளியேயும் பிற்போக்குவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் இந்தக் கட்டுரைகளில் சாரு நிவேதிதா வன்மையாகத் தாக்குகிறார். வழிபாட்டுக்கான பிம்பங்கள் கட்டி எழுப்பப்படும் இடங்களில் அபத்தங்களின் கேலிச் சித்திரங்களை வரைகிறார். மறுப்பதற்கும் விவாதிப்பதற்குமான சூழலை தொடர்ந்து உயிர்ப்பித்து வந்திருக்கும் சாருவின் இந்தக் கட்டுரைகள் கடந்த கால் நூற்றாண்டு நவீனதமிழ் இலக்கிய வரலாற்றை ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தில் பதிவுசெய்கின்றன" தாந்தேயின் சிறுத்தை என்ற நூல் குறித்த உயிர்மையின் பிரசுரக்குறிப்பு இது. கடந்த ஆண்டுகளில் வெளிவந்த அவர் எழுத்துகளையும் கடந்த இருபது நாளில் அவர் அடிக்கும் பல்டிகளையும் பார்க்கும் போது – இதில் ஏதாவது ஒன்றாவது சரியாக இருக்கிறதா என்று தெரியவில்லை. "பிடிவாதத்துடன் இயங்கிய" என்றுதான் குறிப்பிடுகிறார்கள் இயங்கும் என்றல்ல. மற்றும் மறுப்பதற்கும் விவாதிப்பதற்குமான சூழலை தொடர்ந்து உயிர்ப்பித்து தான் வருகிறார் அவர் எழுத்துகளில் அல்ல அவர் எழுத்துகள் குறித்து. LikeLike Reply கனவுகளின் காதலன் says: March 13, 2010 at 10:38 am நண்பரே,மிகச் சிறப்பான ஆக்கம். சரளமான, வளமான மொழி நடை. தமிழை நன்றாக கையாள்கிறீர்கள். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். LikeLike Reply johan paris says: November 4, 2014 at 4:50 am அருமை! இக்கட்டுரை இவ்வளவு காலம் என் கண்ணில் படவில்லை. சாரு ஒரு உடலுழைப்பின்றி பாடோபமாக வாழத் தெரிந்த “காரியக் கிறுக்கன் “. எங்குமே சந்தர்ப்பவாதம் வெகுவாகத் தலைதூக்கி விட்டது. LikeLike Reply Leave a Reply Cancel reply Enter your comment here... Fill in your details below or click an icon to log in: Email (Address never made public) Name Website You are commenting using your WordPress.com account. ( Log Out / Change ) You are commenting using your Google account. ( Log Out / Change ) You are commenting using your Twitter account. ( Log Out / Change ) You are commenting using your Facebook account. ( Log Out / Change ) Cancel Connecting to %s Notify me of new comments via email. Notify me of new posts via email. Δ இந்தத் தளத்தில் தேட Search for: Follow Us Facebook Recent Posts மூளாய் இராவணேசுவரர் குறித்து சில வார்த்தைகள் November 4, 2021 ஈழத்தில் பரவும் இந்திய ஆதிக்கம் October 26, 2021 ஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு October 19, 2021 நந்திக்கடல் பேசுகிறது தொகுப்பை முன்வைத்து… September 12, 2021 எச்சமும் சொச்சமும் June 22, 2021 நதியைக் கடந்த பாட்டியரும் பேத்தியரும் May 27, 2021 செல்வினின் உரைகளும் அவற்றின் தேவைகளும் May 23, 2021 எங்கட புத்தகங்கள் இதழ் குறித்து… February 3, 2021 கல்வியும் மதமும் குறித்து பெரியார்… July 30, 2020 கொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் June 1, 2020 இஸ்லாமிய தமிழ் இலக்கியமும் முஸ்லிம் தேசிய இலக்கியமும் "ராஜீவ் காந்தி படுகொலை - வெளிவராத மர்மங்கள்" புத்தகம். மொழிபெயர்ப்பு : சவால்களும் சில பரிந்துரைகளும் நந்திக்கடல் பேசுகிறது தொகுப்பை முன்வைத்து… மகாபாரதக் கதையின் அரசியல் என்ன? Subscribe to Blog via Email Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email. Join 426 other followers Email Address: Subscribe எழுதியவை எழுதியவை Select Month November 2021 (1) October 2021 (2) September 2021 (1) June 2021 (1) May 2021 (2) February 2021 (1) July 2020 (1) June 2020 (1) May 2020 (2) January 2020 (1) November 2019 (1) September 2019 (1) August 2019 (1) June 2019 (2) May 2019 (1) April 2019 (1) March 2019 (3) February 2019 (2) January 2019 (1) December 2018 (1) November 2018 (1) August 2018 (3) July 2018 (2) June 2018 (2) May 2018 (1) April 2018 (2) March 2018 (1) February 2018 (1) January 2018 (2) December 2017 (3) November 2017 (1) October 2017 (3) September 2017 (1) August 2017 (3) July 2017 (4) June 2017 (2) May 2017 (3) March 2017 (3) February 2017 (2) January 2017 (1) December 2016 (1) November 2016 (2) October 2016 (1) August 2016 (3) July 2016 (3) June 2016 (1) May 2016 (1) April 2016 (2) March 2016 (2) February 2016 (2) January 2016 (2) December 2015 (4) November 2015 (2) October 2015 (3) September 2015 (3) August 2015 (5) July 2015 (5) June 2015 (4) May 2015 (3) April 2015 (3) January 2015 (2) December 2014 (3) November 2014 (3) October 2014 (2) August 2014 (1) June 2014 (1) May 2014 (2) April 2014 (1) March 2014 (2) February 2014 (2) June 2012 (1) May 2012 (1) March 2012 (1) February 2012 (2) November 2011 (3) October 2011 (1) September 2011 (1) July 2011 (1) June 2011 (2) May 2011 (4) April 2011 (2) February 2011 (1) January 2011 (2) December 2010 (4) November 2010 (4) October 2010 (1) September 2010 (1) August 2010 (1) July 2010 (5) June 2010 (3) May 2010 (1) April 2010 (6) March 2010 (4) December 2009 (6) October 2009 (2) September 2009 (1) August 2009 (3) July 2009 (4) June 2009 (5) May 2009 (1) April 2009 (3) March 2009 (5) February 2009 (4) January 2009 (2) December 2008 (3) November 2008 (4) October 2008 (2) September 2008 (2) August 2008 (1) May 2008 (1) February 2007 (1) December 2006 (2) October 2006 (1) August 2006 (2) Twitter Updates மூளாய் இராவணேசுவரர் குறித்து சில வார்த்தைகள் arunmozhivarman.com/2021/11/04/202… 3 weeks ago ஈழத்தில் பரவும் இந்திய ஆதிக்கம் arunmozhivarman.com/2021/10/26/%e0… 1 month ago ஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு arunmozhivarman.com/2021/10/19/202… 1 month ago RT @tovithaikulumam: அறிதலும் பகிர்தலும் 08 அரசும் அதிகாரமும் இணைப்பு - us02web.zoom.us/j/82785207411 Meeting ID: 827 8520 7411 https://t.co/D2… 1 month ago RT @tovithaikulumam: அழைப்பு ‘அரசியலும் அரசியல் விஞ்ஞானமும் சமகால அறிமுகம்’ என்னும் நூல் பேராசிரியர் ஜயதேவ உயன்கொட POLITICS AND POLITICAL… 2 months ago பெரியாரியலின் தேவை https://www.youtube.com/watch?v=XCEIuB47znY&t=2929s The Castless Collection https://www.youtube.com/watch?v=8A7Z67lU9pY&t=2294s பகுப்பு அனுபவம் அரசியல் அறிக்கை அறிவிப்பு ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணம் இலக்கியம் ஈழத்து இலக்கிய வரலாறு ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து திரைப்படம் ஈழப்போராட்டம் ஈழம் உரையாடல் உறவுகள் ஊடகங்கள் எண்ணங்கள் எதிர்வினை எழுத்தாளர்கள் கனேடிய அரசியல் கலை காலம் காலம் செல்வம் கிரிக்கெட் குறும்படம் சமூகநீதி சமூகம் சாதீயம் திரை விமர்சனம் திரைப்படம் தேசியம் நாவல் நிகழ்வுகள் நினைவுப் பதிவு நினைவுப்பதிவு நேர்காணல் பண்பாட்டு அரசியல் பதிகை பத்தி புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு பெண்ணியம் மரபுரிமை யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் வரலாறு வாசிப்பு வாசிப்புக் குறிப்புகள் விசாகன் விமர்சனம் விளையாட்டு Documentary Home Sexuality Uncategorized Goodreads Tags .ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப் போராட்டம் ஈழப்போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த் தோழன் என்னுயிர்த்தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே காணாமல் ஆக்கப்பட்டோர் கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பண்பாட்டுப் படையெடுப்பு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர்வாழ்வு புலம்பெயர் வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதச்சார்பின்மை மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன் Website Powered by WordPress.com. Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
Sorry, you have Javascript Disabled! To see this page as it is meant to appear, please enable your Javascript! See instructions here latest post கனமழை; எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? நொய்டா சர்வதேச விமான நிலையம் வட இந்தியாவின் நுழைவு வாயில் - பிரதமர் மோடி வேளாண் சட்டங்கள் வாபஸ் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! கொரோனா: ஐரோப்பாவில் மேலும் 7 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்...!! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது- வானிலை ஆய்வு மையம் * புதிய வகை வைரசின் பெயர் ''ஒமிக்ரான்'' : தடுப்பூசிக்கு கட்டுபடாதாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை * முதல்வராக, தந்தையாக பெண் குழந்தைகளை காக்கும் பொறுப்பு இருக்கிறது; முதல்வர் ஸ்டாலின் * விவசாயிகள் போராட்டம்: ஒவைசியை தாக்கும் திகைத், தேர்தலை முன்னிட்டு இயக்கத்தில் பிளவா? * இந்தியா - இலங்கை உடன்படிக்கை ஏற்பட்டால் தாயகம் திரும்ப விரும்பும் அகதிகள் - நிபந்தனை என்ன? முகப்பு கதிரோட்டம் அரசியல் இலங்கை இந்திய அரசியல் உலக அரசியல் கனடா அரசியல் மலேசிய அரசியல் சமூகம் இலங்கை சமூகம் கனடா சமூகம் இந்திய சமூகம் சினிமா விளையாட்டு கிரிக்கெட் புட்பால் அறிவிப்பு விழா மரண அறிவித்தல் விளம்பரம் செய்ய தொடர்பு Posted on January 24, 2017 by netultim2 போராட்டம் வரலாறு ஆனது – ஜிவி பிரகாஷ் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 7 நாட்களாகபோராட்டம் நடந்து வந்த நிலையில், பல ஊர்களுக்குநேரடியாக சென்று போராட்ட களத்தில் போராடியவர் ஜிவி பிரகாஷ் குமார். தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரலும் கொடுத்துவந்தார். இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிஅளிக்கப்பட்டும் சென்னை, மதுரை உள்ளிட்ட சிலஊர்களில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். சிலஇடங்களில் வன்முறை சம்பவம் நடந்தது. இந்நிலையில் இதுப்பற்றி ஜி.வி.பிரகாஷ்குமார் கூறியிருப்பதாவது… “அரசுகள்உங்களாலே அவசர சட்டம் இயற்றி பணிந்தது, போராட்டம் வரலாறு ஆனது. இன்னும்தீர்க்கப்படாத நிறைய பிரச்சனைகள் முன்னெடுத்து செல்ல வேண்டியவர்கள் நீங்களே. தமிழக மக்களின் மிச்சமிருக்கும் ஒரே நம்பிக்கை என் அன்பு சகோதர சகோதரிகளேநீங்கள் மட்டுமே. தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார். அதோடு, வன்முறை சம்பவம் தொடர்பாக அவர் பேசுகையில், காவல்துறைக்குப் பயிற்சியளிக்கும்போது, “கல்” எறிய கற்றுத் தருகிறார்களா..? தலைமையில்லாமல் தானாக முன்வந்துதங்கள் உரிமைக்காக மக்களே போராடும் போது, அதை அரசு எப்படி அணுக வேண்டும்..?” என்று கூறியுள்ளார்.
இமாச்சல் மலையேற்றம்: 3 பேர் பலி; 10 பேர் மீட்பு – Makkal Kural total views <% if ( today_view > 0 ) { %> , views today Skip to content Saturday, November 27, 2021 Home செய்திகள் முழு தகவல் நாடும் நடப்பும் வர்த்தகம் சினிமா வாழ்வியல் சிறுகதை இ-பேப்பர் மக்கள்குரல் டிரினிட்டி மிரர் இ-புத்தகங்கள் Search for: செய்திகள் இமாச்சல் மலையேற்றம்: 3 பேர் பலி; 10 பேர் மீட்பு Posted on October 25, 2021 October 25, 2021 Author Comment(0) more சிம்லா, அக். 25– இமாச்சல் பிரதேச மலையேற்றத்தின் போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, 3 சுற்றுலா பயணிகள் பலியாகி இருக்கிறார்கள். மும்பையைச் சேர்ந்த 13 பேர் கொண்ட குழுவினர் இமாச்சல் பிரதேச மாநிலம் கின்னூர் மாவட்டத்தில் மலையேறத்தில் ஈடுபட்டனர். கடல் மட்டத்திலிருந்து 15,000 அடி உச்சியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும் உடன் சென்ற 10 பேர் மீட்கப்பட்டதாகவும் இந்தோ-திபெத் எல்லைக் காவலர்கள் தெரிவித்திருக்கிறார்கள். பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் தீபக் நாராயண் (வயது 58), ராஜேந்தர் பதக் (வயது 65), அசோக் மதுக்கர் (வயது 64) என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள் என்று கின்னூர் போலீஸ் கமிஷ்னர் அபூர்வா தேவ்கன் தெரிவித்துள்ளார். Related posts: ஆப்கானில் புது ஐடி கார்டு, பாஸ்போர்ட் : தாலிபான்கள் அறிவிப்பு கார் விபத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் உட்பட 7 பேர் பலி பஞ்சாபில் அடுத்த முதல்வர் யார்? காங்கிரஸ் கட்சியில் ‘திடீர்’ குழப்பம் Tagged இமாச்சல், பனிச்சரிவு SUBRIJA makkalkural https://makkalkural.net Related Articles செய்திகள் சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் தடை: கேரள அரசு Posted on November 20, 2021 November 20, 2021 Author more moreபம்பை, நவ. 20– கேரளாவில் உள்ள பம்பை அணைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் பிறந்த நிலையில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறந்தது. ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் கேரளாவில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் இடுக்கி, பம்பா […] செய்திகள் நவம்பர் 1 பள்ளிகள் திறப்பு: மாணவர்களுடன் அமர பெற்றோருக்கு அனுமதி Posted on October 8, 2021 October 8, 2021 Author more moreஅமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் திருச்சி, அக்.8- பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர்களுடன் அமர பெற்றோருக்கு அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி பழையகோட்டையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையின் காரணமாக கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததால் முதல் கட்டமாக 9 முதல் […] செய்திகள் ஒடிசாவை தாக்கும் ‘குலாப்’ புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம் Posted on September 25, 2021 September 25, 2021 Author more moreடெல்லி, செப். 25– ‘வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும்’ என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று நாளை மாலை ஒடிசா- ஆந்திரா இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் கூறி உள்ளது. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. 75 கி.மீ […]
பெண்களை நோய்கள் பல தாக்குகிறது. அப்படிப் பெண்களை தாக்குகின்ற நோய்களில் முதலிடம் வகிப்பது இரத்தச்சோகை. பொதுவாக பெண்களில் அனைத்து வயதினரையும் எளிதாக தாக்கும் இந்த நோய் இளம்பெண்களை பெரிதும் வாட்டி வதைக்கிறது. பெண்கள் இளம் பருவ வயதில் 20% உயரத்தில் 50% எடையிலும் வளர்ச்சியை பெறுகிறார்கள். இந்த அதிவேக வளர்ச்சிக்கு சரியான உணவு முறையை கடைப்பிடிக்க முடியாமல் போவதால் இளம் வயது பெண்கள் இரத்தச்சோகைக்கு ஆளாகிறார்கள் என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சரியான சமவிகித உணவு மற்றும் […]
கஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கஜா புயல் தாக்குதலால் நாகப்பட்டினம் மாவட்டம் முற்றிலும் நிலைகுலைந்து விட்டது. மரங்கள் விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டும், மின்கம்பங்கள் முறிந்து போனதால் மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டு, மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியும் கிடக்கின்றன. பேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவுப் பகலாகப் பாடுபட்டு, நேர இருந்த ஆபத்துக்களை முடிந்தமட்டும் தடுத்து இருக்கின்றனர். தமிழக அரசின் பாராட்டத் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெருமளவு உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டு இருந்தாலும், கஜா புயலால் 51 பேர் உயிர்ப்பலி ஆனது வேதனை அளிக்கின்றது. கஜா புயலால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை இராமநாதபுரம், கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டு பாதிப்புகளைக் கணக்கெடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடிசைகளை இழந்தோர் மற்றும் வீடுகள் சேதமடைந்தோர் பற்றிய விவரங்களை உடனடியாகச் சேகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். பின்செல் இந்தியச் செய்திகள் தப்ளிக் விழா: டில்லி விமான நிலையத்தில் 8 மலேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்! 960 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்
'''வட்டேஸ்வர சித்தாந்தம்''' என்பது இந்தியாவில் இயற்றப்பட்ட கணிதவியல், வானியல் நூலாகும். வட்டேஸ்வரர் என்பவரால் கி.பி 904இல் எழுதப்பட்டது. பயன்பாட்டு கணிதம் மற்றும் வானியல் அம்சங்கைள உள்ளடக்கிய 15 அத்தியாயங்களைக் கொண்டது. மாணவர்களுக்கான கணிதப் பயிற்சிகளையும் கொண்டமைந்தது.
Kuralamudham - A website for reading Thirukkural with its meanings as well as explanations in Tamil & English languages Kuralamudham, Kural Amudham, kuralamudham.com, kuralamutham, Kural, Amudham, Thirukkural, Tirukkural, Tirukkural, Tirukural, Paal, Iyal, Adhigaram, 1330, Thiruvalluvar, Tiruvalluvar Contact Us : support@softcraftsystems.com முகப்பு அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் எங்களைப்பற்றி வினாடி வினா அறத்துப்பால் வான் சிறப்பு இயல் : பாயிரம் 11 வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. மு.வ : மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும் சாலமன் பாப்பையா : உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம் By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia. 12 துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. மு.வ : உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும் சாலமன் பாப்பையா : நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே Rain produces good food, and is itself food. 13 விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி. மு.வ : மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும் சாலமன் பாப்பையா : உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும் If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world 14 ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால். மு.வ : மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார் சாலமன் பாப்பையா : மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார் If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease. 15 கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. மு.வ : பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும் சாலமன் பாப்பையா : பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான் Rain by its absence ruins men; and by its existence restores them to fortune. 16 விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது. மு.வ : வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது சாலமன் பாப்பையா : மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும் If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen. 17 நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின். மு.வ : மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும் சாலமன் பாப்பையா : பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும் Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain). 18 சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. மு.வ : மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது சாலமன் பாப்பையா : மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be ofered in this world, to the celestials. 19 தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின். மு.வ : மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும். சாலமன் பாப்பையா : மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது. If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world. 20 நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. மு.வ : எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும் சாலமன் பாப்பையா : எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது If it be said that the duties of life cannot be discharged by any person without water, so without rain there cannot be the flowing of water. 133 அதிகாரங்கள் கடவுள் வாழ்த்து வான் சிறப்பு நீத்தார் பெருமை அரண் வலியுறுத்தல் இல்வாழ்க்கை வாழ்க்கைத் துணைநலம் மக்கட்பேறு அன்புடைமை விருந்தோம்பல் இனியவை கூறல் செய்ந்நன்றி அறிதல் நடுவு நிலைமை அடக்கமுடைமை ஒழுக்கமுடைமை பிறனில் விழையாமை பொறையுடைமை அழுக்காறாமை வெஃகாமை புறங்கூறாமை பயனில சொல்லாமை தீவினையச்சம் ஒப்புரவறிதல் ஈகை புகழ் அருளுடைமை புலால் மறுத்தல் தவம் கூடா ஒழுக்கம் கள்ளாமை வாய்மை வெகுளாமை இன்னா செய்யாமை கொல்லாமை நிலையாமை துறவு மெய்யுணர்தல் அவா அறுத்தல் ஊழ் இறைமாட்சி கல்வி கல்லாமை கேள்வி அறிவுடைமை குற்றங்கடிதல் பெரியாரைத் துணைக்கோடல் சிற்றினம் சேராமை தெரிந்து செயல்வகை வலியறிதல் காலம் அறிதல் இடன் அறிதல் தெரிந்து தெளிதல் தெரிந்து வினையாடல் சுற்றந் தழால் பொச்சாவாமை செங்கோன்மை கொடுங்கோன்மை வெருவந்த செய்யாமை கண்ணோட்டம் ஒற்றாடல் ஊக்கம் உடைமை மடி இன்மை ஆள்வினை உடைமை இடுக்கண் அழியாமை அமைச்சு சொல்வன்மை வினைத்தூய்மை வினைத்திட்பம் வினைசெயல்வகை தூது மன்னரைச் சேர்ந்தொழுகல் குறிப்பறிதல் அவை அறிதல் அவை அஞ்சாமை நாடு அரண் பொருள் செயல் வகை படைமாட்சி படைச் செருக்கு நட்பு நட்பாராய்தல் பழைமை தீ நட்பு கூடா நட்பு பேதைமை புல்லறிவாண்மை இகல் பகைமாட்சி பகைத்திறம் தெரிதல் உட்பகை பெரியாரைப் பிழையாமை பெண்வழிச் சேரல் வரைவின் மகளிர் கள்ளுண்ணாமை சூது மருந்து குடிமை மானம் பெருமை சான்றாண்மை பண்புடைமை நன்றியில் செல்வம் நாணுடைமை குடிசெயல் வகை உழவு நல்குரவு இரவு இரவச்சம் கயமை தகையணங்குறுத்தல் குறிப்பறிதல் புணர்ச்சி மகிழ்தல் நலம் புனைந்துரைத்தல் காதற் சிறப்புரைத்தல் நாணுத் துறவுரைத்தல் அலர் அறிவுறுத்தல் பிரிவாற்றாமை படர்மெலிந் திரங்கல் கண்விதுப்பழிதல் பசப்புறு பருவரல் தனிப்படர் மிகுதி நினைந்தவர் புலம்பல் கனவுநிலை உரைத்தல் பொழுதுகண்டு இரங்கல் உறுப்புநலன் அழிதல் நெஞ்சோடு கிளத்தல் நிறையழிதல் அவர்வயின் விதும்பல் குறிப்பறிவுறுத்தல் புணர்ச்சி விதும்பல் நெஞ்சோடு புலத்தல் புலவி புலவி நுணுக்கம் ஊடலுவகை
ஆயிரம் மாணவர்களை நோக்கி…பிரான்ஸ் பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம்-படங்கள்,விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam Home செய்திகள் இலங்கைச் செய்திகள் தீவகச் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா ஆன்மீகம் காணொளிகள் அறப்பணிச் செய்திகள் சிறப்புக் கட்டுரைகள் தொடர்புகளுக்கு ஆயிரம் மாணவர்களை நோக்கி…பிரான்ஸ் பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம்-படங்கள்,விபரங்கள் இணைப்பு! பிரான்ஸ் பரிஸில் கடந்த 24.05.2015 அன்று பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது. பல பாடசாலைகளைச் சேர்ந்த பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் இணைந்தே-பிரான்ஸ் பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வொன்றியத்தின் முதலாவது மிகப் பெரிய வேலைத்திட்டமாக-1000 ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவிடும் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும். ''நெருக்கடி வேளையில் உமக்கு ஆண்டவர் பதிலளிப்பாராக! யாக்கோபின் கடவுளது பெயர் உம்மைப் பாதுகாப்பதாக! தூயகத்திலிருந்து அவர் உமக்கு உதவி அனுப்புவாராக! சீயோனிலிருந்து அவர் உமக்குத் துணை செய்வாராக!'' திருப்பாடல்கள் 19: 14, 20: 1-2 நாம் மற்றவர்களுக்கு ஆற்றும் பணிகளே நம் வாழ்விற்கு அர்த்தத்தைக் கொடுக்கின்றன. நம் திறமைகள் நல்ல கனி தரவும், நம் வாழ்வுக்கு அர்த்தம் கொடுக்கவும் உதவுவது, நாம் பிறருக்கு ஆற்றும் பணிகளே. பணிபுரிவதற்காக வாழாதவர்கள், இவ்வுலக வாழ்வை முழுமையாக வாழாதவர்கள். நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம் இறைமகன் இயேசு, நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார் என்ற நம் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்த இத்திருவருகைக்காலம் உதவுவதாக. இக்காலத்தில் நாம் விழிப்புடனும், இறைவேண்டலில் உறுதியுடனும், நற்செய்திமீது ஆர்வத்துடனும் செயல்பட இயேசு அழைப்பு விடுக்கிறார். - திருத்தந்தை பிரான்சிஸ் புனிதர்கள் சீமோன் ~ யூதா ததேயு Print Email Details Super bruker புனிதர்கள் 28 October 2021 Hits: 64 ✠ புனிதர்கள் சீமோன் ~ யூதா ததேயு ✠ ( Saints Simon and Jude ) திருத்தூதர், இரத்த சாட்சி Apostle, Martyr, Preacher பிறப்பு : கானான் இறப்பு : 65 அல்லது 107 முக்கிய திருத்தலங்கள் : துலூஸ்; புனித பேதுரு பேராலயம் திருவிழா : அக்டோபர் 28 (கிழக்கு கிறிஸ்தவம்); சித்தரிக்கப்படும் வகை : படகு; சிலுவை மற்றும் இரம்பம்; மீன் (அல்லது இரண்டு மீன்கள்); ஈட்டி; இரண்டாக அறுக்கப்படும் மனிதன்; படகு துடுப்பு பாதுகாவல் : மரம் வெட்டுவோர், கரியர்கள் புனித சீமோன் என்பவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். இவரை தீவிரவாதியாய் இருந்த சீமோன் என்றும் கூறுவர். இவரைப் பற்றி விவிலியத்தில் லூக்கா நற்செய்தி 6:15 மற்றும் அப்போஸ்தலர் பணி 1:13 இல் காணக்கிடைக்கின்றது. இயேசு கிறிஸ்துவின் திருத்தூதர்களிலேயே மிகவும் குறைவான செய்தி இருப்பது இவரைப்பற்றிதான். இவரின் பெயரைத் தவிற விவிலியத்தில் இவரைப்பற்றி வேறு எதுவும் இல்லை. புனித ஜெரோம் எழுதிய புனிதர்களின் வரலாற்று நூலிலும்கூட இவரைப்பற்றி குறிப்பிடவில்லை. இவர் இரம்பத்தால் இரண்டாக அறுக்கப்பட்டு மறைசாட்சியாய் மரித்தார் என்பர். இவரின் திருப்பண்டங்கள் புனித பேதுரு பேராலயத்தில் இடப்பக்கம் உள்ள புனித யோசேப்பு பீடத்தின் அடியில் புனித யூதா ததேயுவின் கல்லறையினோடு வைக்கப்பட்டிருக்கின்றது. ☆ புனிதர் யூதா ததேயு: பிறப்பு: கிபி 1 (முற்பகுதி) கலிலேயா, பாலஸ்தீனம் இறப்பு : கிபி 67 ஈரான், கோடரியால் வெட்டி கொல்லப்பட்டார் முக்கிய திருத்தலங்கள்: புனித பேதுரு பேராலயம், வத்திக்கான் நகர் சித்தரிக்கப்படும் வகை: படகு, துடுப்பு, கோடரி, தண்டாயுதம், பதக்க உருவப்படம் பாதுகாவல்: ஆர்மீனியா, அவசர தேவை, தொலைந்த பொருட்கள், மருத்துவமனை புனித யூதா ததேயு, முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்களுள்) ஒருவர். கிரேக்க சொல்லான Ιούδας -ஐ யூதா எனவும் அல்லது யுதாசு எனவும் மொழிபெயர்க்கலாம். எனவே இயேசுவை காட்டிக்கொடுத்த யூதாசுவிடமிருந்து வேறுபடுத்த இவரை ததேயு என்றோ லேபெசியுஸ் என்றோ யாக்கோபின் மகன் யூதா என்றோ அழைப்பர். யோவான் நற்செய்தியாளர் இவரை "யூதா - இஸ்காரியோத்து - யூதாசு அல்ல" என்று குறிப்பிடுகிறார். ததேயு என்று அழைக்கப்பெற்ற யூதா, கடைசி இராவுணவின்போது, ஆண்டவர் தம்மை உலகிற்கு வெளிப்படுத்தாது தன் திருத்தூதருக்கு மட்டும் வெளிப்படுத்துவது ஏன் என்று அவரைக் கேட்ட திருத்தூதர் ஆவார் இவருக்கு கிரேக்கமும் அரமேயமும் தெரியும். இவர் உழவு தொழில் செய்துவந்தார். தூய ஆவியின் வருகைக்குப் பிறகு இவர் யூதேயா, சமாரியா, சிரியா, மெசபடோமியா மற்றும் லிபியாவில் மறைபணி புரிந்தார். இவரும் பர்த்தலமேயுவுமே ஆர்மீனியா நாட்டிற்கு கிறிஸ்தவத்தை கொண்டுவந்தனர் என்பர். சுமார் கிபி 67ம் ஆண்டு, லெபனானில் இவர் கோடரியால் வெட்டப்பட்டு இரத்த சாட்சியாய் மரித்தார். இவரது திருப்பண்டங்கள் (அருளிக்கங்கள்) பின்நாளில் வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. "இவருடைய சகோதரர் யாக்கோபு, யோசேப்பு, சீமோன் யூதா அல்லவா?" என்னும் வாசனத்தின் அடிப்படையில் யூதா திருமுக ஆசிரியர் இவராக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். எனினும் அவ்வாறிருக்க மிகுதியான வாய்ப்பு இல்லை. ஏனெனில் அத்திருமுகத்தில் திருத்தூதர்கள் கடந்த காலத்தவராகக் குறிப்பிடப்படுகின்றனர். மேலும் அத்திருமுகம் நம்பிக்கை (விசுவாசம்) உண்மைகளின் தொகுப்பாகக் காட்டப்படுகிறது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டோடு தொடர்புடைய ஞான உணர்வுக் கொள்கைகள் கண்டிக்கப்படுகின்றன; ஆகவே அது முதலாம் நுற்றாண்டில் எழுதப்பட்டதாக ஏற்றுக் கொள்வது கடினம். செபம்: ஆதிமுதல் அந்தம்வரை படைத்து பராமரித்தாளும் பரம பொருளை எம் இறைவா! புனித திருத்தூதர்களின் போதனை வழியாக நாங்கள் உம்மை அறிந்து, ஏற்றுக்கொள்ள செய்தீர். இவர்களின் இறைவேண்டலால் மக்களை உம்மில் நம்பிக்கை கொள்ள செய்தருளும். உம்மீதுள்ள விசுவாசம் நாளுக்கு நாள் வளர்ந்து இதன் வழியாக உம் திருச்சபையை மேன்மேலும் வளரச் செய்யும்.
Tamil Kaama Kathaigal – ஹாய் பிரண்ட்ஸ், எப்படி இருக்கீங்க? உங்களுக்கு ஒரு சூப்பரான தமிழ் காமக்கதை ஹாட் ஸ்டோரி பகிர்ந்து கொள்கிறேன். கதையை முழுசாக படிச்சிட்டு கீழே கமெண்ட் பண்ணுங்க! கத படிக்கலாம் வாங்க! என் பெயர் வருண்ராஜ், வயது 26. பெங்களூரில் உள்ள ஒரு தனியார் IT கம்பெனியில் சொப்ட்வேர் என்ஜினீயர் பணியாற்றி வருகிறேன். மாதம் ஒரு லட்சம் மேல் சம்பாதிப்பான். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சொந்த ஊரான மதுரைக்கு சென்று வருவேன். எனக்கு தமிழ் மீது அளவுக்குக்கடந்த ஆர்வம் மற்றும் பற்று இருந்தது. பெரிய MNC நிறுவனத்தில் ஆங்கிலம் பேசி உயர் அதிகாரியாக இருந்தாலும், தமிழை விட்டு கொடுக்கமாட்டேன். எனக்கு சின்ன வயதிலிருந்து கட்டுரை எழுதும் பழக்கம் அதிகமாக இருந்தது. நான் பார்க்கும் மற்றும் செய்த விஷயங்களை சுவாரசியமாக எழுதுவேன். அது போல நான் ஸ்கூல் முதல் கல்லுரி படிப்பு வரை மதுரையில் படித்து வளர்ந்தேன். அந்த டீனேஜ் பருவத்தில் பல்வேறு பெண்கள் மற்றும் ஆண்டிகளுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்தேன். எனக்கு பிடித்த காமசுஸ்தரா முறையில் ஓல் அடித்து என்ஜோய் செய்வேன். மேலும் தற்பொழுது பெங்களூர் பெண்களுடன் செக்ஸ் செய்வது கொஞ்சம் பிடிக்காமல் போனது. என்னோட வேகம் மற்றும் ஈடுபடுக்கு ஓத்து உழைப்பு கொடுக்க முடியாமல் தவித்தார்கள். ஒரு கட்டத்தில் வேறு உணர்வு அதிகமாக வந்தது. மனதில் என் அளவுக்கு மேட்டர் அடிக்க பெண்கள் இல்லை என்று கர்வம் வந்தது. எனக்கு புதுசாக ஒரு யோசனை வந்தது. இதுவரை நான் பெண்களுடன் செய்த செக்ஸ் விஷயத்தை ஒரு பெரிய தமிழ் காமக்கதை கட்டுரையாக எழுதி தமிழ் காமப்பசி இணையதளத்தில் பதிவிடலாம் என்று நினைத்தேன். தினமும் ஆபீஸ் முடித்து விட்டு செக்ஸ் ஸ்டோரி எழுத ஆரம்பித்தேன். நான் ஈமெயில் அனுப்பிய கொஞ்ச நேரத்தில் கதையை அப்லோட் செய்து விடுவார்கள். கதையின் கீழே என்னோட ஈமெயில் ஐடி கொடுத்தேன். தினமும் என் கதையை ஒரு நாள் விடாமல் பதிவு செய்து வந்தேன். என் ஸ்டோரி பிடித்து பலபேர் ஈமெயில் செய்வார்கள். அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு மீண்டும் கதைகள் சமர்ப்பினேன். நான் செய்த செக்ஸை விடா கொஞ்ச சுவாரசியம் சேர்த்து எழுதுவதால் குறுகிய காலத்தில் பல காமக்கதை நண்பர்கள் கிடைத்தார்கள். கதையில் சுவாரசியம் இருக்கும் தவிர பொய் இருக்காது. நாட்கள் நகர்ந்து சென்றது, ஒரு நாள் சீதா என்ற பெண் ஈமெயில் மெசேஜ் செய்தால், எனக்கு மெசேஜ் செய்வதில் பலபேர் போலியாக பேசுவார்கள். அதுபோல சீதா மெசேஜ் செய்து இருக்கிறாள் என்று நினைத்தேன். தொடர்ந்து ஒரு வாரம் மேல், “நான் உங்க தீவிர ரசிகை! உங்க வாட்ஸாப்ப் நம்பர் கொடுங்க! ப்ளீஸ்! உங்கிட்ட பேசணும்” என்று மெசேஜ் செய்தாள். இவள் உண்மையாக பெண்ணா? அல்லது பொய்யான ஆளா? என்று கண்டுபிடிக்க முடிவு எடுத்து நம்பர் கொடுத்தேன். வாட்ஸாப்ப் நம்பர் கொடுத்த அடுத்த நொடி மெசேஜ் செய்தாள். நான் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தேன். “உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் இரவு 10 மணிக்கு வீடியோ கால் பண்ணுங்க” என்றாள். நானும் ஆபீஸ் முடித்து விட்டு ரூமுக்கு ஆர்வமாக சென்றேன். இரவு 10 மணிக்கு சூப்பராக டிரஸ் போட்டுகொண்டு ஆர்வமாக போன் செய்தேன். எதிர் புறத்தில் வீடியோ கால் ஒரு அழகான நாட்டுக்கட்டை அட்டென்ட் செய்தாள். ஒரு நிமிடம் அதிர்ந்து போனேன், சிவப்பு நிற ப்ளௌஸ் மற்றும் ஜாக்கெட் அணிந்தபடி தலை முழுவதும் மல்லிகா பூ வச்சுக்குட்டு, நெற்றியில் குங்குமம் மற்றும் கழுத்தில் மஞ்சத்தலியுடன் இருந்தாள். ஒன்றும் பேசாமல் அதிர்ந்து போனேன். பார்க்க மாநிறத்தில் செக்சியாக இருந்தாள். “ஹாய் ! உங்க கதை எல்லாம் படிப்பேன்! உங்க தமிழ் வார்த்தை மிகவும் பிடிக்கும். மேலும் உங்கள் ஸ்டோரி மிகவும் செக்சியாக இருக்கும்” என்று பாராட்டினாள். ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கம் மற்றும் கூச்சம் இருந்தாலும் பின்பு சரளமாக பேச ஆரம்பித்தேன். அவளை பற்றிய தகவலை கேட்டேன். அவளின் பெயர் மல்லிகா, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் தமிழ் டீச்சராக இருக்கிறாள் என்று தெரிந்தது. மேலும் ஒரு வருடத்திற்கு முன்பு கணவன் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றதாகவும், இரண்டு வருடத்துக்கு ஒரு முறை வீட்டுக்கு வருவான் என்று அறிந்துகொண்டேன். மல்லிகா டீச்சருடன் எந்த ஒரு தவறான எண்ணத்துடன் பேசாமல் டீசெண்டாக பேசினேன். “நீங்க செக்ஸ் கதை எழுதினாலும், ரொம்ப மென்மையாக ஒழுக்கமாக பேசி நடந்துக்கறீங்க1 உங்கள ரொம்ப புடிச்சிருக்கு” என்றாள். ஒரு கல்யாணம் ஆகி குழந்தை இல்லாத ஆன்டியுடன் தினமும் பேசி வந்தேன். இரவில் போன் பேச ஆரம்பித்தோம். அவள் இரட்டை வசனத்தில் செக்சியாக பேச ஆரம்பித்தாள். இருவரின் மனதிலும் மேட்டர் அடிக்கலாம் என்று ஆசை இருந்தது ஆனால் அதை ஒருநாளும் வெளியில் கட்டிக்கொண்டது இல்லை. நாட்கள் வேகமாக ஓடியது, எனக்கு ஆஃபிஸில் லீவு விட்டார்கள். ஒரு வாரம் மதுரையில் உள்ள வீட்டுக்கு வந்தேன். “இவளோ கிட்ட இருந்தாலும் உங்கள பார்க்க முடில. கொஞ்சம் கஷ்டமாக இருக்கு” என்று மதுரைக்கு வந்து ஆண்டிக்கு மெசேஜ் செய்தேன். “என்னோட பெற்றோர்கள் நாளைக்கு சென்னை வரை போறாங்க! நைட் வீட்ல யாரும் இருக்க மாட்டாங்க! நீங்க வீட்டுக்கு வாங்க! உங்களுக்கு ஸ்பெஷல் டின்னர் செய்கிறேன்” என்று வரவேற்றாள். ஆன்டியுடன் சிறப்பான சம்பவம் இருக்கிறது என்று மனதில் தோன்றியது. மதுரையில் இருந்து திண்டுக்கல் கொஞ்ச நேரத்தில் சென்று விடலாம். மாலை குளித்து விட்டு மேட்டர் போடலாம் என்று முடிவுடன் புது மாப்பிளை போன்று மல்லிகா டீச்சர் வீட்டுக்கு சென்றேன். இரவு 7 மணிக்கு சென்று விட்டேன். வீட்டில் இருவர் மட்டும் தனியாக இருந்தோம். வீடியோ காலில் பார்த்ததை விட நேரில் சூப்பராக இருக்கீங்க என்றேன். அவளின் முகம் வெட்கத்தில் சிவந்தது. நைட் சாப்பாடு சாப்பிட்டு விட்டு ஒன்றாக அமர்ந்து டிவி பார்த்தோம். நான் முதலில் கையை வைக்க கூடாது என்று முடிவாக இருந்தேன். அவளுக்கு காம ஆசையை உசுப்பு ஏற்றி ஓக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். என்னோட சில வெளிவராத கதைகளை எடுத்து கொடுத்து படிக்கச் வைத்தேன். ஆண்டிக்கு காமக்கதைகள் படிக்கும்போது முலைகள் தூக்கிக்கொண்டு எழுந்து நின்றது. ப்ளௌஸ் உள்ளே ப்ரா போடாமல் இருந்ததால், காம்பின் கூர்மையான பகுதி ஜாக்கெட் வழியாக பச்சையாக பார்க்க முடிந்தது. அவளின் கண்களில் காமப்பார்வையை பார்த்து ரசிக முடிந்தது. முலையை அடிக்கடி கையில் உரசி காமத்தை ஏற்றினால், “சரிங்க! நான் வீட்டுக்கு கிளம்பட்டுமா?” என்று கூறினேன். அவள் கோபமான முகத்துடன் பார்த்து, “என்னை உசுப்பு ஏற்றி விட்டு எங்க டா போற?” என்று கையை பிடித்தாள். நான் கண்களை நகர்த்தாமல் நேர்கொண்ட பார்வையுடன் ஆன்டியின் கண்களை பார்த்தேன். மல்லிகா கண்களில் காமப்பசி அருமையாக தெரிந்தது. மெதுவாக கன்னத்தை பிடித்து நெற்றியில் கிஸ் அடித்து நக்கிக்கொண்டு கீழே வந்தேன். உதட்டை பிளந்து நாக்கை உள்ளே விட்டு ஆழமாக எச்சி ஊற கிஸ் அடித்தேன். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை, தூக்கிக்கொண்டு படுக்கையறைக்கு சென்றேன். தூக்கி போட்டேன், இரண்டு முலைகளும் கொழுக்கு மொழுக்கு என்று ஆடியது. மேலே சாய்ந்து படுத்து புடவையை ஒன்றன் பின் ஒன்றாக கழட்டி எறிந்தேன். முதலில் தமிழ் டீச்சர் மல்லிகா முலையை கையால் மாவு பிசைவது போன்று கசக்கி பிழிந்து பால் குடிப்பது போன்று உறிந்தேன். அருகில் வைத்து இருந்த தேன் எடுத்து முலை காம்பின் நுனியில் தெளித்து நக்கல் நக்கி சுவைத்தேன். மேலும் கீழே வந்து தொப்புள் ஓட்டையில் நாக்கை விட்டு கூச்சம் வர செய்தேன். அதன்பின் ஆன்டியின் பாவாடையை கழட்டினேன், இரண்டு தொடைகளும் பழுத்த வாழை தண்டு போன்று இருந்தது. ஜட்டியை பற்களால் கடித்து கழட்டி ஆன்டியின் புண்டை தரிசனத்தை பார்த்தேன். கூதி சிவந்து அருமையாக இருந்தது, மெதுவாக விரல் விட்டு ஆட்டியபடி ஓட்டைக்கு நாக்கு போட்டு சுகம் கொடுத்தேன். “ஆஹா அஸ் ஸ் ஸ் ஆஹா ம் ம் ஆஹா நல்ல சப்பு டா ம் ம் ம் ” என்று முனறினாள். ஆன்டி கூதியில் கஞ்சி வழிந்த நிலையில் படுத்த இருந்தால் அப்பொழுது என்னோட தடிமலான பூலை கொண்டு கூதியில் இறக்கினேன். பெரிய பூப்ஸ் இரண்டத்தையும் கையால் பிடித்து பிசைந்தபடி வேகமாக இடுப்பை ஆட்டி ஓல் அடிக்க ஆரம்பித்தேன். இளம் பெண்களின் கூதியில் விட்டு அடிப்பதை விட ஆன்டி புண்டை சூப்பராக இருந்தது. அந்த நிலையில் நீண்ட நேரமாக செய்து விட்டு ஆன்டியை குப்புற படுக்க வைத்து சூத்தை “பளார் பளார்” என்று இரண்டு முறை அடித்து விட்டு விரித்து பார்த்தேன். சூத்தின் ஓட்டை சின்னதாக இருந்தது, மெதுவாக சுன்னியை உள்ளே இறக்கி அடிக்க ஆரம்பித்தேன். புண்டையில் விடும்போது அமைதியாக இருந்த ஆன்டி, சூத்தில் விடும்போது துடிதுடித்து போனாள். “ஐயோ அம்மா அம்மா ஆஹா ஆஹா ஆஹா ஸ் ஸ் ஸ் ஆஹா ம் ம் ம் ஆஹா ” என்று துடித்தாள். சூத்தில் நீண்ட நேரமாக விட்டு ஆட்டிவிட்டு விந்தை உள்ளே ஆழமாக இறக்கினேன். கஞ்சி குளம் போன்று வழிந்து ஓடியது. “நீ உன்னோட கதையில் வருவது போலவே சூப்பராக பண்ற டா செல்லம்” என்று மார்போடு அணைத்து கொண்டாள். மறுநாள் காலை வரை தூங்காமல் செக்ஸ் செய்து இன்பத்தை அடைந்தோம்.
நற்றிணை - 200. மருதம் - இலக்கியங்கள், பாணன், நற்றிணை, மருதம், செய்த, திருவிழா, கொண்டு, ஆம்பல், சூடி, எட்டுத்தொகை, சங்க, கட்டிய, யாறு, அகல் முகப்பு விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து Search form புதன், டிசம்பர் 01, 2021 FOLLOW US உலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை ஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம் உங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள் தமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி கல்வி சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நற்றிணை 200. மருதம் நற்றிணை - 200. மருதம் கண்ணி கட்டிய கதிர அன்ன ஒண் குரல் நொச்சித் தெரியல் சூடி, யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில், 'சாறு' என நுவலும் முது வாய்க் குயவ! ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ- 5 ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்துப் பொய்கை ஊர்க்குப் போவோய்ஆகி, 'கை கவர் நரம்பின் பனுவற் பாணன் செய்த அல்லல் பல்குவ-வை எயிற்று, ஐது அகல் அல்குல் மகளிர்!-இவன் 10 பொய் பொதி கொடுஞ் சொல் ஓம்புமின்' எனவே. அரும்பு கட்டிய கதிர் போன்ற ஒள்ளிய பூங்கொத்தினையுடைய நொச்சி மாலையைச் சூடி; யாறு கிடந்தாற் போன்ற அகன்ற நெடிய தெருவின்கண்ணே யாவரும் அறிய இற்றை நாளால் இவ்வூரிலே திருவிழா நடவா நின்றது, எல்லீரும் போந்து காணுங்கோள் என்று கூறிச் செல்லுகின்ற; அறிவு வாய்ந்த குயவனே!; ஆம்பல் நெருங்கிய இனிய பெரிய வயலும் பொய்கையுமுடைய ஊரின்கண்ணே நீ செல்வாயாகி; ஆங்குள்ள மகளிரை யழைத்துக் கூரிய எயிற்றினையும் மெல்லிதாயகன்ற அல்குலையுமுடைய மங்கைமீர்!; கை விரும்புதற்குக் காரணமான நரம்பினையுடைய யாழிலே பாடும் இசைப்பாட்டு நுவலவல்ல பாணன் செய்த துன்பங்கள் மிகப் பலவாகி வளர்வன வாயின ஆதலின்; இப் பாணன் உள்ளால் பொய்யை நிரப்பிவைத்து மேலால் மெயம்¢மையைக் கொண்டு மூடி நுவலுகின்ற கொடிய சொல்லிலே கண்ணருள் செய்யாது நும்மைப் பாதுகாத்துக் கொள்ளுங்கோள்!; என்று முதலில் நீ திருவிழா நடப்பதை நுவன்று கொண்டு போவதுடன் இதனையும் கூட்டி அவ்விடத்துள்ளார்க்குக் கூறிப் போவாயாக! தோழி தலைமகளது குறிப்பு அறிந்து, வாயிலாகப் புக்க பாணன் கேட்ப, குயவனைக் கூவி, 'இங்ஙனம் சொல்லாயோ?' என்று குயவற்குச் சொல்லியது. - கூடலூர்ப் பல் கண்ணனார் ‹‹ முன்புறம் | தொடர்ச்சி ›› தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்: நற்றிணை - 200. மருதம், இலக்கியங்கள், பாணன், நற்றிணை, மருதம், செய்த, திருவிழா, கொண்டு, ஆம்பல், சூடி, எட்டுத்தொகை, சங்க, கட்டிய, யாறு, அகல்
தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி தேவை அதிகமாக உள்ளது. எனவே தேவைப்படும் தடுப்பூசிகளை தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும். மத்திய மந்திரிகளுடன் மா.சுப்பிரமணியன் சந்திப்பு Advertising Advertising புதுடெல்லி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் மத்திய மந்திரிகளை சந்திப்பதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெல்லி சென்றார். அவருடன் கொரோனா தடுப்பு திட்ட அதிகாரி செந்தில்குமார், தேசிய சுகாதார குழுமத்தின் திட்ட அதிகாரி தரேஸ் அகமது ஆகியோரும் சென்றனர். நேற்று இரவே டெல்லி சென்ற இந்த குழுவினர் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்தனர். பகலில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசினார்கள். அதன் பிறகு சுதாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டலியாவை சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின்போது கல்வி, சுகாதாரம் தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்படி வலியுறுத்தினார்கள். மொத்தம் 13 கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொண்டு சென்றனர். அந்த மனுக்களை இந்த சந்திப்பின்போது சம்பந்தப்பட்ட மந்திரிகளிடம் வழங்கினார்கள். இந்த சந்திப்பு பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி தமிழகத்துக்கு தேவையான பல்வேறு வி‌ஷயங்களை நேரில் வலியுறுத்தினோம். முக்கியமாக 13 கோரிக்கைகளுடன் இந்த சந்திப்புகள் நடந்தது. * தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி தேவை அதிகமாக உள்ளது. எனவே தேவைப்படும் தடுப்பூசிகளை தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும். * மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். * புதிதாக தொடங்கப்படும் 11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகளை தொடங்க வேண்டும். * தேசிய நல்வாழ்வு திட்ட செயலாக்கத்துக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை விடுவிக்க வேண்டும். கூடுதல் நிதியும் ஒதுக்க வேண்டும். * தமிழகத்தில் 3,900 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த நோய்க்கு கூடுதலாக மருந்துகள் வழங்க வேண்டும். * நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். * கோவையில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும். * அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்பட்டோருக்கான ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும். * செங்கல்பட்டு மற்றும் குன்னூரில் தடுப்பூசிகள் தயாரிப்புக்கு அனுமதி அளிக்க வேண்டும். * கொரோனா 2-வது அலையின்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு மிகப்பெரிய அளவில் ஏற்பட்டது. எனவே வருங்காலங்களில் இந்த தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க ஆக்சிஜன் மேலாண்மை திட்டங்களை உருவாக்க வேண்டும். * தேசிய சுகாதார குழு திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். * மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதம், சுகாதாரத்துறை மந்திரிக்கு எழுதிய 2 கடிதங்கள், கொரோனா தடுப்பூசி தொடர்பாக பிரதமருக்கு எழுதிய கடிதம், நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு பிரதமரை நேரில் சந்தித்து கொடுத்த மனு, எழுதிய கடிதம், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விவரம் ஆகியவற்றின் நகல்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி : ஷமி – பும்ராவின் அதிரடி கடைசி நாளின் சுவாரசியங்கள் !
இப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு வடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை காட்டு பூங்கதிர் 2019 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது: (முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார். நூலகம்:856 ‎ (← இணைப்புக்கள்) (முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார். "https://www.noolaham.org/wiki/index.php/சிறப்பு:WhatLinksHere/பூங்கதிர்_2019" இருந்து மீள்விக்கப்பட்டது
பிரதமர் மோடியின் அமெரிக்க ஆலோசனைகள் : உலக அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவம் கூடுமா? | What to expect from PM Narendra Modi’s US tour | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News NEWS LIVE TV APP MAGAZINE NEWS LIVE TV APP MAGAZINE தமிழ்நாடு இந்தியா கொரோனா வைரஸ் வீடியோ ஸ்டோரி சினிமா சிறப்புக் களம் விளையாட்டு உலகம் வணிகம் டெக்னாலஜி More ... ஹெல்த் கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் வைரல் வீடியோ தமிழ்நாடு இந்தியா கொரோனா வைரஸ் வீடியோ ஸ்டோரி சினிமா சிறப்புக் களம் விளையாட்டு உலகம் வணிகம் டெக்னாலஜி LIVE BLOG : BREAKING NEWS LIVE BLOG : BREAKING NEWS >> இந்தியா [X] Close பிரதமர் மோடியின் அமெரிக்க ஆலோசனைகள் : உலக அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவம் கூடுமா? இந்தியா webteam Published : 24,Sep 2021 09:11 PM அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் மாநாட்டுக்காக உலகத் தலைவர்கள் குழுமியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பல உலகத் தலைவர்களின் பிரதமர் நரேந்திர மோடியுடன் பணி சந்திப்புகள் நிகழ்த்தி வருகிறார்கள். பிரதமர் மோடியின் இந்த தொடர் சந்திப்புகள் மற்றும் ஆலோசனைகள் மூலம் இந்தியாவுக்கு உலக அரங்கில் என்னென்ன நன்மைகள், பலன்கள் கிடைக்குமென்பது குறித்து இங்கு தெரிந்துக்கொள்ளுங்கள். Advertisement அமெரிக்கா - ஜப்பான் - ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடனான இணக்கத்தின்மூலம் நடக்கும் "க்வாட்" அமைப்பில் இந்தியப் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதன் மூலம், உலக அரங்கில் இந்தியாவின் முக்கியத்தவம் மேலும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது. மேலும் இதன் மூலம் சீனா - பாகிஸ்தான் அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் இந்தியாவுக்கு உலக நாடுகளின் ஆதரவு மேலும் அதிகரிக்கும் என்றும் கருதப்படுகிறது. ரஷ்யா மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா தோழமையுடன் இருந்து வந்தாலும், கடந்த சில வருடங்களாகவே அமெரிக்காவுடன்தான் இந்தியாவின் கூட்டுறவு வலுவடைந்து வருகிறது. Advertisement சீனாவின் ஆதிக்க அச்சுறுத்தலுக்கு எதிரான முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக "க்வாட்" கருதப்படுகிறது. சீனாவின் அச்சுறுத்தலுக்கு குறியாக உள்ள தாய்வான், தென் கொரியா வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் இத்தகைய நடவடிக்கைகளுக்கு வரவேற்பு அளிக்கின்றனர். இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இத்தகைய அச்சுறுத்தலை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் "க்வாட்" கூட்டமைப்பு மூலம் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடனும் பாதுகாப்பு ரீதியான உறவுகளை இந்தியா வலுப்படுத்தி உள்ளது. இவையொரு பக்கமிருக்க ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பிரதமர்களை பிரதமர் மோடி "க்வாட்" குழுமத்தில் சந்தித்ததும், ஜோ பைடனை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியதும் இந்தியாவுக்கு உலக அரங்கில் கூடுதல் முக்கியத்துவத்தை காட்டும் வகையாக அமைந்துள்ளது. உலக வல்லரசு நாடாக உருவாகும் நோக்கத்துடன் சீனா தொடர்ந்து வடகொரியா, பாகிஸ்தான், பர்மா, இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் தன்னுடைய ஆதிக்கத்தை வலுப்படுத்தி வருகிறது. இதைத் தவிர தென் அமரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை வியாபாரம் மூலம் அதிகரிக்க முயற்சிகள் செய்து வருகிறது. Advertisement இந்நிலையில், சீனாவுடன் பல்லாண்டுகளாக எல்லை பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் இந்தியா, வலுத்து வரும் சீன ஆதிக்கத்தை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என பல்வேறு நாடுகள் கருதுகின்றன. அந்த எண்ணத்தில் வருங்காலங்களில் பல ஐரோப்பிய நாடுகளும் சீனாவுக்கு எதிரான அணிக்காக இந்தியாவுடன் வலுசேர்க்கும் என கருதப்படுகிறது. சமீபத்தில் பிரிட்டன் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் தொழில்நுட்பத்தை அமெரிக்காவுடன் இணைந்து "க்வாட்" உறுப்பினரான ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்து கொள்ள முன் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பிரதமர் மோடி அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுடன் அமெரிக்காவில் நடத்த உள்ள ஆலோசனைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பாகிஸ்தான் தீவிரவாதத்தை வளர்க்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்புடைய செய்தி: அமெரிக்கா: இந்திய வம்சாவளியினரை சந்தித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி சீனா, பாகிஸ்தானை தன் ஆதிக்கத்தில் வைத்திருப்பதும்; பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்ன நாட்டை தலிபான் மற்றும் ஹக்கானி நெட்வோர்க் போன்ற தீவிரவாத அமைப்புகள் மூலம் தனது கட்டுப்பாட்டில் வைக்க முயற்சி செய்வதும் அமெரிக்கா அறிந்ததே. பாகிஸ்தான் மண்ணில் தீவிரவாத குழுக்கள் செயல்பட அனுமதிக்க கூடாது என கமலா ஹாரிஸ் கடுமையாக கண்டனம் செய்துள்ளார். லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தான் மண்ணில் வளர்ந்து வருகின்றன என்கிற இந்தியாவும் குற்றச்சாட்டு விடுத்துள்ளது. இக்குற்றச்சாட்டின்மூலம், அமெரிக்காவின் ஆமோதிப்பு இந்தியாவுக்கு கிட்டியுள்ளது. பாகிஸ்தான், தீவிரவாதத்தின் ஊற்றுக்கண் போல செயல்படுகிறது என்பதும் அங்கிருந்து தீவிரவாத தாக்குதல்கள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை குறிவைத்து சதித் திட்டம் தீட்டப் படுகின்றன என்பது இந்தியாவின் தொடர் குற்றச்சாட்டாகும். தலிபான் கட்டுப்பாட்டில் வந்திருக்கும் ஆப்கன் நாட்டில், தீவிரவாத அமைப்புகள் அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடங்கலாம் என்று அமெரிக்க உளவுத்துறையை எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில் இந்தியாவுக்கு பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்துக்கு பிறகு கூடுதல் பங்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. - கணபதி சுப்பிரமணியம் Previous ஐபிஎல் கிரிக்கெட்டில் மாஸ் காட்டும் ரஜினி ரசிகர் : மும்பையை மிரட்டிய வெங்கடேஷ் ஐயரின் கதை! Next சென்னை: தலைமைச் செயலர் இறையன்பு காரை வழிமறித்து கோரிக்கை வைத்த பொதுமக்கள் Related Tags : Narendra Modi, America, Joe biden, QUAD, நரேந்திர மோடி, இந்தியா, உலகம், அமெரிக்கா பயணம், க்வாட், Loading More post Advertisement அதிகம் படித்தவை தோனி முதல் ரிஷப் பண்ட் வரை: ஐபிஎல் அணிகளால் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்! முழுவிவரம் அச்சுறுத்தும் ஒமைக்ரான் வைரஸ்; நடவடிக்கைகள் என்ன? - தமிழக சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம் “தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்” - முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீரை நிரப்பிக் காட்டி விட்டோம்: அமைச்சர் துரைமுருகன் ‘1000க்கு ஒரு ஆண்தான்’ கருத்தடை பெண்களுக்கு மட்டும்தானா?-தேசிய குடும்பநல ஆய்வு சொல்வதென்ன? எடிட்டர் சாய்ஸ் கட்சியிலிருந்து கழன்ற முக்கியத் தலைவர்கள்... உ.பி.-யில் தனித்து விடப்படுகிறாரா மாயாவதி?! திரைப் பார்வை: ஃபேமிலி டிராமா - ரத்தம் தெறிக்கும் த்ரில்லர் சினிமா! இருக்கை மேல் திருமாவளவன் நடந்து சென்றது ஏன்? - விசிக வன்னி அரசு விளக்கம் டிராவில் முடிந்த கான்பூர் டெஸ்ட்: இந்திய - நியூசிலாந்து அணிகளில் அலச வேண்டிய 3 அம்சங்கள்! 'பீஸ்ட்' அப்டேட் போட்டோ... நெட்டிசன்கள் தேடிய அபர்ணா தாஸ் யார்?! Advertisement [X] Close GO TO TOP ABOUT US PRIVACY POLICY TERMS & CONDITIONS ADVERTISE CAREERS FEEDBACK SITEMAP CONTACT US COMPLIANTS © Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved × × Thank you for your interest with us. Please submit below details. Our representatives will contact you soon. Press Ctrl+g to switch the language translation between Tamil and English. SEND × செய்தி மடலுக்கு பதிவு செய்க REGISTER × Thank you for your interest with us. Please submit below details. Our representatives will contact you soon.
''அணு மின்சாரத்தின் பாதுகாப்புபற்றிய பொது மக்களின் நம்பிக்கை, மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது!'' - யுகியா அமானோ, ஐ.ஏ.சி.ஏ. இயக்குநர் ##~## சர்வதேச அணு சக்தி சந்தைக்குள் சென்று, நமக்கு வேண்டிய பொருள்களை வாங்கிக்கொள்ள விரும்புகிறது இந்தியா. ஆனால் 'நீ வெடிகுண்டு தயாரிப்பவன், நம்பகத்தன்மை அற்றவன்’ என்று குற்றம் சாட்டி, இந்தியாவை இந்த சந்தைக்குள் நுழையவிடவில்லை கடைக்காரர்கள். கனடா 40 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் சிரஸ் எனும் ஆய்வு அணு உலையை விற்றபோது, அமைதியான உபயோகத்துக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்து வாங்கிவிட்டு, பின்னர் 1974-ம் ஆண்டு அணுகுண்டுப் பரிசோதனைக்கு நாம் எடுத்தாண்ட தால், நம்மை நம்ப மறுக்கிறார்கள். இந்த நிலையில் புதுப் பணக்காரராக மாறிக் கொண்டு இருக்கும் நமது பணப் பையைக் கவனித்த 'அங்கிள் சாம்’, நமது கையைப் பிடித்து இழுத்து அவர் கடைக்குக் கொண்டுபோய் நிறுத்தி இருக்கிறார். 'அணு சக்தி வழங்குவோர் குழுமம்’ எனும் வர்த்தக சங்கத்தின் சிறப்பு அனுமதியை வாங்கித் தந்து, சந்தையின் வாசலில் நிற்கும் ஐ.ஏ.ஈ.ஏ. எனும் 'சர்வதேச அணு சக்தி முகமை’ காவல ரின் கண்காணிப்பு ஒத்துழைப்புக்கும் வழி செய்கிறார் அங்கிள் சாம். இந்தக் காவலரிடம் நமது பைகளைத் திறந்து காட்டி, நாம் வாங்கும் பொருட்களை என்ன செய்கிறோம், எப்படிக் கையாள்கிறோம் என்று விளக்க வேண்டும். அதற்காக கண்காணிப்பு உடன்படிக்கை ஒன்றை அவரோடு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். யார் இந்த முகமை? 1957-ம் ஆண்டு, 'அமைதிக்கான அணுக்கள்’ என்ற கொள்கைக் குரலோடு, ஐக்கிய நாடுகள் சபை அமைப்புக்குள் ஏற்படுத்தப்பட்ட ஒரு நிறுவனம். இது உறுப்பு நாடுகளுடனும், உலகளாவிய பலதரப்பட்ட நிறுவனங்களுடனும் சேர்ந்து, பாதுகாப்பான, அமைதியான அணு சக்தியின் வளர்ச்சிக்கு உழைக்கிறது. யுனெஸ்கோ, யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம் எனப் பல உன்னதமான அங்கங்களைக்கொண்டு உலகின் நல்வாழ்வுக்காக இயங்கும் ஐ.நா. சபைக்கு திருஷ்டிப் பரிகார கொம்புகளாக இருக்கின்றன இந்த முகமையும், உலக வங்கிபோன்ற நிதி நிறுவனங்களும்! சர்வதேசியம், கருத்துப் பரிமாற்றம், பன்முகப் பார்வை, வெளிப்படைத்தன்மை, மனித நேயம் என நேர்மறை இயல்புகளை ஏராளமாகக்கொண்ட ஐ.நா. சபை அலுவலகங்களுக்கும், கூட்டங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் செல்வது ஓர் அலாதியான அனுபவம். ஆனால், ஆஸ்திரியா நாட்டின் அழகான தலைநகரான வியன்னாவில் அமைந்திருக்கும் ஐ.ஏ.ஈ.ஏ. அலுவலகம், விறைப்பாகவும் முறைப்பாக வும் இருக்கிறது. உள்ளே விடுவதற்கே ஓராயிரம் கேள்விகள் கேட்டார்கள். ஒரு வழியாக உள்ளே போய் தகவல்களைக் கேட்டால், 'பட்டுக் கோட்டைக்கு வழி கேட்டவனிடம் கொட்டைப் பாக்குக்கு விலை சொன்னதுபோல’ ஏதேதோ பேசினார்கள். அணு சக்தி என்றாலே இப்படி ஆகி விடுமோ என்னவோ? எகிப்து நாட்டைச் சார்ந்த முகமது எல் பாரடை, இதன் தலைவராகப் பணியாற்றினார். 2009 டிசம்பர் முதல் ஜப்பான் நாட்டைச் சார்ந்த யுகியா அமானோ வழிநடத்துகிறார். 35 நாடு களைச் சார்ந்த பிரதிநிதிகள், ஆளுநர்களாக ஆட்சி பரிபாலனம் செய்கின்றனர். இந்த உயர் மட்டக் குழுவோடு இந்தியா கண்காணிப்பு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டது. இந்திய அணு சக்தித் துறையைச் சார்ந்தவர்கள் சிலர், இதனை எதிர்த்தனர். சர்வதேச அணு சக்தி முகமைப் பரிசோதனைகளுக்கு நாம் அடிபணிந்தால், அது நமது ஆய்வுகளின் போக்கையும் தரத்தையும் கெடுத்துவிடும் என்றனர். ஓர் அணு மின் நிலையத்தில் ஒரு மூலையில் இருந்து எரிபொருளை எடுத்து இன்னொரு மூலைக்குக் கொண்டுபோனாலும், முகமைக்குத் தகவல் கொடுக்க வேண்டும். அவர் களின் பரிசோதகர்கள் வந்து, பார்த்து அனுமதி தந்தால்தான், நாம் இயங்க முடியும் என்று தயங்கி னார்கள். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஓர் உலையில் இருந்து எரிந்துபட்ட எரிபொருளை நம் நாட்டு ஈனுலையில் உபயோகித்தால், அந்த ஈனுலையும் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படும் என வேதனைப்பட்டனர். இந்தியாவும் முகமையும் நீண்ட நெடும் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி சில முடிவுகள் எடுத்தனர். ராணுவத் தொடர்பு கள் ஏதும் இல்லாத 14 அணு உலைகளை முகமையின் கண்காணிப்புக்குள் கொண்டுவர இந்தியா சம்மதித்தது. ஆனாலும் இரண்டு பிரச்னைகளில் தீர்வு ஏற்படவில்லை, ஒன்று, இந்த அணு உலைகளின் மொத்த வாழ்நாளுக்கும் தேவையான எரிபொருளை இந்தியா சேமித்து வைத்துக்கொள்வதை முகமை ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டு, ஏதேனும் காரணங்களால் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்ட அணு மின் நிலையங்களுக்கு சர்வதேச எரிபொருள் நிறுத்தப்பட்டால், அந்த நிலைமையை சரிப்படுத்திக்கொள்ளும் உரிமை மறுக்கப்பட்டது. முகமைக்குள் வேறு குழப்பமான கருத்துகளும் நிலவின. அதிகமான இந்திய உலைகள் கண்காணிப்புக்குள் வருவதால், ஆயுதப் பரவலாக்கம் நிகழாது என்றனர் சிலர். பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவைப்போன்று சலுகைகள் பெற முயற்சிக்கும் என்றனர் பிறர். இப்படியான குழப்பங்களுக்கு மத்தியிலும் மன்மோகன் சிங் அரசு இந்த உடன்படிக்கையை ஏற்படுத்தியே தீர்வது எனக் கங்கணம் கட்டிக் காரியத்தில் ஈடுபட்டது. உடன்படிக்கைபற்றிய எந்தத் தகவலையும், மன்மோகன் அரசு தோழமைக் கட்சிகளுக்கோ, எதிர்க் கட்சிகளுக்கோ, மக்கள் பிரதிநிதிகளுக்கோ, பத்திரிகையாளர்களுக்கோ, அனைவருக்கும் மேலான இந்தியக் குடிமக்களுக்கோ அறியத் தரவில்லை. முகமையின் ஆளுநர் குழுவுக்கு உடன்படிக்கையின் நகல் இன்னும் அனுப்பப்படாததால் வெளியிட இயலவில்லை என்று போக்குக் காட்டியது டெல்லி அரசு. 2008 ஜூன் 17 அன்று பிரணாப் முகர்ஜி, இடதுசாரிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து, இந்த உடன்படிக்கையை மட்டும் நிறைவேற்றிக் கொள்கிறோம் எனக் கெஞ்சிக் கூத்தாடி ஒப்புதல் பெற்றார். ஜனநாயக மரபுகள் முற்றிலுமாகப் புறந்தள்ளப்பட்டன. ஜூலை மாதம் முழுவதும் ஆளும் கட்சியினரும், அவர்களின் அதிகாரிகளும் ஓடியாடி, ஆகஸ்ட் 1 அன்று நடந்த முகமையின் ஆளுநர் குழுக் கூட்டத்தில் உடன்படிக்கையை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளச் செய்தனர். அங்கிள் சாமும் அவர் பங்கைச் செய்தார். 2009 மார்ச் மாதம் முகமையின் கூடுதல் வரைவு எனும் அடுத்த கட்ட ஆமோதிப்பையும் பெற்று, அமெரிக்காவின் கடையில் அடிமையாக அடைக்கலம் புகுந்துவிட்டோம். அணு சக்தி சந்தைக்குள்ளே ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி, ஜப்பான் எனப் பல கடைகள் மூடப்படுகின்றன. ஆனால், இந்திய அரசோ கடந்த ஆறேழு வருடங்களாக அணு சக்தியை 'வாராது வந்து மாமணி’ எனப் போற்றி புகழ்ந்து வருகிறது. ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம்! உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்! இரா.பொன்னம்பலம் தமிழக வேளாண்மை விற்பனைத் துறையில் கண்காணிப்பாளராக 33 ஆண்டுகள் பணிபுரிந்த பொன்னம்பலம், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூட்டணி சந்தையைச் சிந்தித்து வடிவமைத்தார். நுகர்வோர் உரிமைகளுக்காக, குறிப்பாக உணவு உத்தரவாதத்துக்காக, அதிலும் நெல் பயிரின் முக்கியத்துவத்துக்காக உழைக்கும் இந்த செயல் வீரர், அணு மின் நிலையங்கள், நுகர்வோரின் சுற்றுச்சூழல், உணவு உரிமைகளை மீறுவதாகக் குறிப்பிடுகிறார். பரந்துபட்ட தெளிவான இந்தப் பார்வையோடு, கூடங்குளம், கல்பாக்கம் அணு மின் நிலையங்களை கடுமையாக எதிர்த்து வருகிறார்.
கன்னட திரைப்பட முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார் அக்டோபர் 29-ம் தேதி காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.…
புலம்பெயரும் தொழிலாளர்கள் அதிகம் செல்லும் மாநிலம் தமிழ்நாடு.. அதிகம் வெளியேறும் மாநிலம் உ.பி, பீகார் ! இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்பின்மை காரணமாக பிழைப்பிற்காக தங்கள் சொந்த மாநிலங்களில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த…
தெற்கு அந்தமானில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-30-11-2021 மலைப்பாம்பை மகனுடன் சேர்ந்து மீட்ட பெண்...! தமிழகம் தமிழகத்தில் 8075 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன: அமைச்சர் கே.கே.எஸ்.ஆர். ராமசந்திரன் தகவல் தமிழகம் 6 பெண் எம்பிக்களுடன் சசிதரூர் செல்பி...! மீனவர்களுக்கு ஆதரவான போராட்டம் ஒரு நாடகமே! முத்துமணி அ+ அ- சென்னை,பிப்.22 - ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தனது மகள் கனிமொழி சம்பந்தப்பட்ட விஷயத்தை மறைக்கவே மீனவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதாக நாடகமாடியுள்ளார் கருணாநிதி என்று முன்னாள் எம்.பி. முத்துமணி பேசினார். தென் சென்னை மாவட்டம் மயிலை, 144 வது வட்டம் சார்பில் ஸ்பெக்ட்ரம் ஊழல், விலைவாசி உயர்வு, தி.மு.க. வின் அராஜகப் போக்கு ஆகியவற்றை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் தென் சென்னை மாவட்ட முன்னாள் துணை செயலாளர் ராஜன் தலைமையில் நடைபெற்றது. மயிலை பகுதி செயலாளர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். இதில் தென் சென்னை மாவட்ட பொறுப்பாளர் மைத்ரேயன் எம்.பி. அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான முத்துமணி, தென் சென்னை மாவட்ட செயலாளர் செந்தமிழன் எம்.எல்.ஏ. தலைமை கழக பேச்சாளர் எம்.ஜி.ஆர். வெங்கடேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.பி. முத்துமணி பேசியதாவது, 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி அளவிற்கு இழப்பை ஏற்படுத்தி ஊழலுக்கு காரணமான தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் ராசா கடந்த 2 ம் தேதி கைது செய்யப்பட்டு 14 நாள் போலீஸ் கஸ்டடியில் விசாரணை நடைபெற்று அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரோடு அவரது முன்னாள் துறை செயலாளர் மற்றும் சிறப்பு செயலாளர் ஆகிய இருவரும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டவர்கள் உலக பணக்காரர்களில் ஒருவராக இருந்தாலும் ராசாவை காட்டிலும் உயர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது சரியான விசாரணை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் 4 வது நபராக இந்த விவகாரத்தில் ராசா காட்டிய சலுகையால் பெரும் பலனடைந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் நிர்வாகி ஷாகித் பல்வா, கலைஞர் டி.விக்கு ரூ 214 கோடி பணப்பரிமாற்றம் செய்துள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளன. எனவே எந்த நேரமும் கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களில் ஒருவரான கனிமொழி சி.பி.ஐ. விசாரணைக்கு அழைக்கப்படலாம் என பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன. மீனவர்கள் பிரச்சினையில் தி.மு.க. தரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கருணாநிதி அவசர அவசரமாக ஒரு போராட்ட அறிவிப்பை அறிவித்து சென்னையில் கனிமொழி தலைமையில் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டது எல்லாம் ஸ்பெக்ட்ரம் விசாரணையின் எதிரொலியாக சி.பி.ஐ. எந்த நேரமும் விசாரணைக்கு அழைக்கலாம் என்று கருதியதே காரணம். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தனது மகள் சம்பந்தப்பட்ட விஷயத்தை மக்கள் மத்தியில் திசை திருப்பவே உள்நோக்கத்தோடு இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர். மீனவர்களுக்காக தி.மு.க. நடத்தும் இந்த நீலிக்கண்ணீர் நாடக போராட்டம் மக்களிடையே எடுபடாது. கடல் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை போராட்டக்காரர்கள் என்று சமீபத்தில் கருணாநிதி வர்ணித்ததை மீனவ சமுதாயம் அவ்வளவு எளிதில் மறக்காது. கருணாநிதி கச்சத்தீவை தாரை வார்த்த போது அவரை மீனவ சமுதாயமும், தமிழ்நாட்டு மக்களும் எப்படி மன்னிக்க முடியும். இந்த துரோகத்தால் தானே கச்சத்தீவு அருகில் நமது மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்தானே 540 மீனவர்கள் இதுவரை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். அத்தோடு மீனவர்களின் சொத்துக்களை கோடிக்கணக்கில் சிங்கள படை பறிமுதல் செய்தும், சேதப்படுத்தப்பட்டும் உள்ளது என்பதை கருணாநிதியால் மறுக்க முடியுமா? மீனவர்கள் மீது இலங்கை இனிமேல் தாக்குதல் நடத்தாது என்று மத்திய அரசும், கருணாநிதியும் கூறிய உறுதிமொழிகள் என்னவாயிற்று? காற்றில் பறந்து விட்டதா? மீனவர்களின் அவலம் தீர கருணாநிதி ஏதாவது ஒரு உருப்படியான காரியத்தை செய்தது உண்டா? நிராயுதபாணியாக செல்லும் நமது மீனவர்களை சிங்கள கப்பல் ரோந்து படையினரின் தாக்குதலில் இருந்து தம் உயிர் காக்க தற்காப்புக்காக துப்பாக்கி வைத்து கொள்ளும் உரிமையை கருணாநிதி பெற்றுத் தருவாரா? கச்சத்தீவை திரும்பப் பெறுவதுதான் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு என்று பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறிய கருத்தை கருணாநிதி ஏற்கிறாரா? இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததை எதிர்த்து ஜெயலலிதா தொடுத்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் கருணாநிதி மற்றும் மத்திய அரசின் பதில் என்ன? மக்கள் மன்றத்தில் பதில் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமையை மீட்டெடுக்க எம்.ஜி.ஆரின் ஆட்சியை ஜெயலலிதாவின் தலைமையில் அமைப்பது காலத்தின் கட்டாயம். இவ்வாறு அவர் பேசினார். இதை ஷேர் செய்திடுங்கள்: வீடியோ கம்பு 10 மருத்துவ குணங்கள் | Pearl Millet 12 health benefits| ரவிச்சந்திரன் சித்த மருத்துவர் கொய்யாவின் 10 மருத்துவ குணங்கள் |Guava 15 health benefits|K.தம்பிதுரை சித்த மருத்துவர் வெறும் கையால் தேனீக்களை அள்ளும் பெண்...! திருடனை சாமர்த்தியமாக மடக்கிய முதியவர்...! சிங்கத்தை கூட்டமாக சேர்ந்து தெறிக்க விட்ட கழுதைப்புலிகள்...! உலகில் ஆச்சரியமான 5 வகையான உணவுகள்சரியாக சமைக்கவிட்டால் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது...! உங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம் அரசியல் பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சனையை பேசியதற்கு மன்னிப்பு கோர வேண்டுமா? ராகுல் காந்தி கேள்வி ஊராட்சி தலைவர் தேர்தல் விவகாரம்: ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். தி.மு.க.வுக்கு கண்டனம் அம்மா மினி கிளினிக்குகளை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் இந்தியா 'ஒமைக்ரான்' வைரஸ் மூலம் நாட்டில் 3-வது அலை பரவாமல் தடுக்க உஷாராக இருக்க வேண்டும் : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் 551 நாட்களில் முதல் முறையாக கொரோனா தினசரி பாதிப்பு 7 ஆயிரத்திற்கும் கீழ் சரிவு இந்த மாதம் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை சினிமா 300 பேரிடமும் சண்டை போட்ட இயக்குனர் சமுத்திரக்கனி நடிக்கும் சித்திரைச் செவ்வானம் உணர்வுகள் – விமர்சனம் ஆன்மிகம் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா : கொடியேற்றத்துடன் இன்று துவக்கம் தமிழகத்தில் 3 மாதத்திற்கு பின் பயங்கர பிரளயம் ஏற்படும் : திண்டுக்கல் பெண் சாமியார் அதிரடி பேட்டி 9 கிரகங்கள் 12 ராசிகள் 27 நட்சத்திரங்கள் வட்ட வடிவில் அமைந்துள்ள ஒரே கோவில் Mukthi Nilayam - Part 2 தமிழகம் சட்டவிரோத நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: தமிழகத்தில் விதிகளை பின்பற்றாமல் பேனர் வைக்க அனுமதிக்கக்கூடாது : அரசு அதிகாரிகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை : அமைச்சர் துரைமுருகன் தகவல் விதிகளை பின்பற்றாமல் பேனர் வைக்க அனுமதிக்கக்கூடாது : அரசு அதிகாரிகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு உலகம் இதுவரை 'ஒமைக்ரான்' வைரஸ் 17 நாடுகளில் பரவியதாக தகவல் உலகை அச்சுறுத்தும் 'ஒமைக்ரான்' அறிகுறிகள் என்ன? புலம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 22 பேர் பலி விளையாட்டு சி.எஸ்.கே தக்கவைக்கவிருக்கும் 4 வீரர்கள் பட்டியலில் டோனியின் பெயரை குறிப்பிடாத காம்பீர் ! அதிகாரபூர்வமாக இன்று வெளியீடு? - 8 ஐ.பி.எல் அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல் பிரான்ஸின் கால்பந்து இதழான 'பாலன் டி ஓர்' விருதை 7 முறை வென்று மெஸ்ஸி புதிய சாதனை வர்த்தகம் வோடஃபோன், ஏர்டெலை தொடர்ந்து 'ஜியோ' கட்டணமும் உயர்வு: டிசம்பர் 1ம் தேதி முதல் அமல் தங்கம் விலை பவுனுக்கு ரூ.144 குறைந்து விற்பனை டிஜிட்டல் கரன்சியான கிரிப்டோகரன்சியை வரைமுறைப்படுத்த வருகிறது புதிய சட்டம் டி.வி. நேரலைவிவாத நிகழ்ச்சியில் அழையா விருந்தாளியாக வந்த பூனை 30 Nov 2021 டி.வி. நேரலையில் அரசியல் விவாத நிகழ்ச்சியின் போது பூனை குறுக்கிட்ட சுராரசிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. உலகை அச்சுறுத்தும் 'ஒமைக்ரான்' அறிகுறிகள் என்ன? 30 Nov 2021 கேப் டவுன் : உலகை அச்சுறுத்தும் 'ஒமைக்ரான்' அறிகுறிகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவீடன் பிரதமராக மீண்டும் தேர்வான மெக்தலினா தலைமையில் அமைச்சரவை பதவியேற்பு 30 Nov 2021 சுவீடனில் பிரதமராக மெக்தலினா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக ஸ்புட்னிக் -வி தடுப்பூசி: ரஷ்ய சுகாதார துறை தகவல் 30 Nov 2021 ஸ்புட்னிக் தடுப்பூசி ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என ரஷ்ய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. ஒமிக்ரான் வைரஸ் குறித்து மக்கள் பீதியடைய தேவையில்லை: பைடன் 30 Nov 2021 ஒமிக்ரான் வைரஸ் கவலைக்குரியதே தவிர மக்கள் பீதியடைய தேவையில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 8075 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன: அமைச்சர் கே.கே.எஸ்.ஆர். ராமசந்திரன் தகவல் 30 Nov 2021 தமிழகத்தில் 8075 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார். டுவிட்டர் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ.வாக இந்தியர் நியமனம் 30 Nov 2021 டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புலம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 22 பேர் பலி 30 Nov 2021 காங்கோவில் புலம்பெயர்ந்தோர் தங்கி இருந்த முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். தெற்கு அந்தமானில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் 30 Nov 2021 சென்னை : தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-30-11-2021 30 Nov 2021 வங்கக்கடலில் உருவாகும் புதிய புயலால் தமிழகத்துக்கு எச்சரிக்கை ஏதும் இல்லை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் 30 Nov 2021 சென்னை : வங்கக்கடலில் உருவாகும் புயல் காரணமாக தமிழகத்துக்கு எந்த எச்சரிக்கையும் கிடையாது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் பரவல்: ஆப்பிரிக்க நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை அனுப்பும் சீனா 30 Nov 2021 ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸின் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து, அதைத் தடுக்கும் வகையில் அங்குள்ள மக்களுக்காக 100 கோடி தடுப்பூசிகளை சீனா அனுப்புகிறத மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு : அமைச்சர் எ.வ.வேலு தகவல் 30 Nov 2021 சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையால் சேதமடைந்த நெடுஞ்சாலைகளைத் தற்காலிகமாகச் சீரமைக்க ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 29-11-2021 30 Nov 2021 சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 12 மினி பஸ்கள் சேவை: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார் 30 Nov 2021 சென்னை தலைமைச் செயலகத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 12 இணைப்பு சிற்றுந்துகளின் இயக்கத்தினை பொதுமக்கள இந்த மாதம் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை 30 Nov 2021 டிசம்பர் மாதம் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை வருகிறது. வீரமரணமடைந்த தமிழக இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார் 30 Nov 2021 இராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழகத்தை சேர்ந்த மூன்று போர் வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண நிதி மற்றும் கேப்டன் குபேர காந்திராஜூக்கு வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு நிலை: கேரளாவில் வயநாடு, மலப்புரம் உள்பட 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை 30 Nov 2021 திருவனந்தபுரம் : அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 12 எம்.பி.க்கள் மன்னிப்பு கேட்காததால் இடைநீக்கத்தை ரத்து செய்ய முடியாது : மாநிலங்களவை தலைவர் திட்டவட்டம் 30 Nov 2021 புதுடெல்லி : மாநிலங்களவையில் இடைநீக்கம் செய்யப்பட்ட 12 எம்.பி.க்களும் வருத்தம் தெரிவிக்கவில்லை, எனவே இடைநீக்கம் ரத்து செய்யப்படாது என மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாய சபாநாயகரிடமும், சபையிடமும் 12 எம்.பி.க்கள் மன்னிப்பு கேட்டால் இடைநீக்கம் குறித்து மறுபரிசீலனை : பார்லி. விவகாரங்கள் துறை அமைச்சர் டுவிட் 30 Nov 2021 புதுடெல்லி : 12 எம்.பி.க்களும் சபாநாயகரிடமும், சபையிடமும் தங்களின் தவறான நடத்தைக்காக மன்னிப்புக் கேட்டால், அவர்களின் இடைநீக்க உத்தரவை திறந்த மனதுடன் பரிசீலிக்க அரசு தயா தேனி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை: வைகை அணை நீர்மட்டம் 70 அடியை தாண்டியது 30 Nov 2021 தேனி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கன மழையினால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் வைகை அணை நீர்மட்டம் 70 அடியை கடந்துள்ளது. இந்தியாவில் 'ஒமைக்ரான்' ஊடுருவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் 30 Nov 2021 இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிற்குள் ஊடுருவாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு இதுவரை 'ஒமைக்ரான்' வைரஸ் 17 நாடுகளில் பரவியதாக தகவல் 30 Nov 2021 லண்டன் : இதுவரை 'ஒமைக்ரான்' வைரஸ் 17 நாடுகளில் பரவியதாக கண்டறியப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.1 கோடி வரை செலவு செய்ய அனுமதிக்க முடிவு : விரைவில் அறிவிக்கிறது தேர்தல் ஆணையம் 30 Nov 2021 புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.1 கோடி வரை செலவு செய்ய அனுமதிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 551 நாட்களில் முதல் முறையாக கொரோனா தினசரி பாதிப்பு 7 ஆயிரத்திற்கும் கீழ் சரிவு 30 Nov 2021 551 நாட்களில் முதல் முறையாக கொரோனா தினசரி பாதிப்பு 7 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் 190 பேர் இறந்துள்ளனர். இன்றைய நாள் எப்படி வருடம் புதன்கிழமை, 1 டிசம்பர் 2021 கார்த்திகை 15 முகூர்த்தநாள் நல்ல நேரம் காலை: 9:30AM - 10:00AM மாலை: 4:00PM - 5:00PM இராகுகாலம் : 12:00PM - 1:30PM இரவு: 12:00AM - 1:30AM எமகண்டம் காலை: 7:30AM - 9:00AM இரவு: 12:00AM - 1:30AM மேலும் பொது அறிவு கேள்வி தங்க பணமாக்கம் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது? முதன்மை செய்திகள் ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக ஸ்புட்னிக் -வி தடுப்பூசி: ரஷ்ய சுகாதார துறை தகவல் உலகம் ஸ்புட்னிக் தடுப்பூசி ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என ரஷ்ய சுகாதாரத்துறை ... வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு நிலை: கேரளாவில் வயநாடு, மலப்புரம் உள்பட 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை இந்தியா திருவனந்தபுரம் : அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக இந்திய ... 12 எம்.பி.க்கள் மன்னிப்பு கேட்காததால் இடைநீக்கத்தை ரத்து செய்ய முடியாது : மாநிலங்களவை தலைவர் திட்டவட்டம் இந்தியா புதுடெல்லி : மாநிலங்களவையில் இடைநீக்கம் செய்யப்பட்ட 12 எம்.பி.க்களும் வருத்தம் தெரிவிக்கவில்லை, எனவே இடைநீக்கம் ரத்து ... பின்டெக் இன்பினிட்டி அமைப்பை 3-ம் தேதி துவக்கி வைக்கிறார் பிரதமர் இந்தியா புதுடெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, ஃபின்டெக் தொடர்பான இன்பினிட்டி அமைப்பை டிசம்பர் 3-ம் தேதி காணொலி மூலம் தொடங்கி ... பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சனையை பேசியதற்கு மன்னிப்பு கோர வேண்டுமா? ராகுல் காந்தி கேள்வி அரசியல் மக்கள் பிரச்சினையை பாராளுமன்றத்தில் பேசியதற்கு மன்னிப்பு கோர வேண்டுமா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி ... வீடியோ கம்பு 10 மருத்துவ குணங்கள் | Pearl Millet 12 health benefits| ரவிச்சந்திரன் சித்த மருத்துவர் 1 day 6 hours ago கொய்யாவின் 10 மருத்துவ குணங்கள் |Guava 15 health benefits|K.தம்பிதுரை சித்த மருத்துவர் 1 day 6 hours ago வெறும் கையால் தேனீக்களை அள்ளும் பெண்...! 1 day 6 hours ago திருடனை சாமர்த்தியமாக மடக்கிய முதியவர்...! 1 day 6 hours ago சிங்கத்தை கூட்டமாக சேர்ந்து தெறிக்க விட்ட கழுதைப்புலிகள்...! 1 day 6 hours ago வேலை வாய்ப்பு 8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!! தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெடில் உள்ள 'வெல்டர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய விமானப்படை வேலைவாய்ப்புகள்!!! மாதம் ரூ. 1.77 லட்சம் வரை சம்பளம்!!! தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, இந்திய விமானப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதம் ரூ. 80,000 சம்பளத்தில் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!!! வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் உள்ள தலைமை பொறியாளர் அதிகாரி பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு!!! தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவையில் உள்ள Block Coordinator மற்றும் Block Project Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!! யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் உள்ள Foreman பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பி.இ. / பி.டெக். முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!!! எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் உள்ள தொழில்நுட்ப அதிகாரி பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு!!! தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தில் உள்ள எலக்ட்ரீஷியன் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு!!! பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதியில் உள்ள மெஸ் மேனேஜர்-கம்-கேர்டேக்கர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு!!! மாதம் ரூ. 2.25 லட்சம் வரை சம்பளம்!!! பேங்க் ஆப் பரோடா வங்கியில் உள்ள தரவு விஞ்ஞானி மற்றும் தரவு பொறியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ முடித்தவர்களுக்கு எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு!!! எல்லைப் பாதுகாப்புப் படையில் உள்ள தச்சர், பிளம்பர், ஜெனரேட்டர் ஆபரேட்டர், ஜெனரேட்டர் மெக்கானிக் மற்றும் லைன்மேன் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
`); $("#tblSlotStatus tbody").html(tagStatus); } function initAdserving() { if (window.servingInit) return; window.servingInit = true; reservedAds.forEach(function (s, i) { googletag.display(s); }); } googletag.pubads().setTargeting('automation', '1'); googletag.pubads().collapseEmptyDivs(); if (!pm) { googletag.pubads().enableSingleRequest(); googletag.pubads().enableLazyLoad({ fetchMarginPercent: 500, renderMarginPercent: 200, mobileScaling: 2.0 }); } if (status) { googletag.pubads().addEventListener('slotRequested', function (event) { slotId = event.slot.getSlotElementId(); var elem = document.getElementById(slotId + '-fetched'); elem.className = 'activated'; elem.innerText = 'Yes'; }); googletag.pubads().addEventListener('slotOnload', function (event) { slotId = event.slot.getSlotElementId(); var elem = document.getElementById(slotId + '-rendered'); elem.className = 'activated'; elem.innerText = 'Yes'; }); } googletag.enableServices(); if (pm && typeof PWT.requestBids === 'function') { PWT.requestBids( PWT.generateConfForGPT(googletag.pubads().getSlots()), function (adUnitsArray) { PWT.addKeyValuePairsToGPTSlots(adUnitsArray); initAdserving(); } ); } else { initAdserving(); } if (pm) { var FAILSAFE_TIMEOUT = 1000; setTimeout(function () { initAdserving(); }, FAILSAFE_TIMEOUT); setTimeout(function () { function refreshSlots() { if (window.servingInit) return; window.servingInit = true; googletag.pubads().refresh(); console.log("Refreshed..."); } if (typeof PWT.removeKeyValuePairsFromGPTSlots === 'function') { PWT.removeKeyValuePairsFromGPTSlots(googletag.pubads().getSlots()); PWT.requestBids( PWT.generateConfForGPT(googletag.pubads().getSlots()), function (adUnitsArray) { PWT.addKeyValuePairsToGPTSlots(adUnitsArray); refreshSlots(); } ); } else { refreshSlots(); } var FAILSAFE_TIMEOUT = 1000; setTimeout(function () { refreshSlots(); }, FAILSAFE_TIMEOUT); }, 15000); } }); } console.log("GPT Mode"); loadGpt(); configureGpt(); window._taboola = window._taboola || []; _taboola.push({article: 'auto'}); !function (e, f, u, i) { if (!document.getElementById(i)) { e.async = 1; e.src = u; e.id = i; f.parentNode.insertBefore(e, f); } }(document.createElement('script'), document.getElementsByTagName('script')[0], '//cdn.taboola.com/libtrc/lankasri-manithan/loader.js', 'tb_loader_script'); if (window.performance && typeof window.performance.mark == 'function') { window.performance.mark('tbl_ic'); } $("#taboola-below-article-thumbnails").ready(function () { _taboola.push({ mode: 'alternating-thumbnails-a', container: 'taboola-below-article-thumbnails', placement: 'Below Article Thumbnails', target_type: 'mix' }); }); var tbFlush = document.createElement("script"); var inlineTB = document.createTextNode("window._taboola = window._taboola || [];_taboola.push({flush: true});"); tbFlush.appendChild(inlineTB); $("body").append(tbFlush); } } லங்காசிறி சினிமா கிசு கிசு Lankasri FM Home Cinema Lankasri Tamilwin News Notice Radio Web Links லங்காசிறி சினிமா கிசு கிசு Lankasri FM +1 678 389 9934 Open now United States of America 24/7 Customer Service மேலதிக தொடர்புகளுக்கு எமது வலைத்தளங்கள் விளம்பரம் துயர் பகிர்வு நிகழ்வுகள் செய்திகள் தமிழ்வின் மனிதன் லங்காசிறி FM வீடியோ புகைப்படங்கள் சினிமா திரை விமர்சனம் ஜோதிடம் வானொலிகள் பிற தளங்கள் மேலும் லங்காசிறி லங்காசிறி.கொம் மரண அறிவித்தல்கள் லங்காசிறி 24 லங்காசிறி வானொலி இலங்கை செய்திகள் கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் ஆவணங்கள் செய்திகள் இலங்கை இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழிநுட்பம் வாழ்க்கைமுறை கல்வி வர்த்தகம் ஆன்மீகம் சிறப்புச் செய்திகள் ஆவணங்கள் உலகம் பிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி Download our App Stay Connected Copyrights © 2021 Manithan. All rights reserved. About Contact 2 நிமிடத்திலேயே காரசாரமான தக்காளி சட்னி செய்வது எப்படி? 1 month ago #foods #tomatochutney Rooban Report Share 36 Shares விளம்பரம் பொதுவாக தக்காளி சட்னி என்றாலே வெங்காயம் கட்டாயம் சேர்த்து வைப்பார்கள். ஆனால் இந்த சட்னி வெங்காயம் பூண்டு கூட தேவைப்படாமல் சுவையாக வைப்பது எப்படி என்பதை பற்றி பார்ப்போம். தேவையான பொருட்கள் வர மிளகாய் – 10, தக்காளி – 6, உப்பு – தேவையான அளவு, சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன். செய்முறை விளக்கம் முதலில் 10 லிருந்து 12 வர மிளகாய்களை உங்கள் காரத்திற்கு தகுந்தாற் போல் எடுத்துக் கொள்ளுங்கள். குண்டு மிளகாய் எடுக்கக் கூடாது அது அதிகம் காரம் தரும். நீளமாக இருக்கும் காய்ந்த மிளகாயை எடுத்துக் கொள்ளுங்கள். இதனை அப்படியே போட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக நைசாக அரை படாது. எனவே அதில் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதற்குள் தக்காளி பழங்களை நன்கு கழுவி சுத்தம் செய்து அதன் காம்பு பகுதியை மட்டும் நீக்கி நீள நீளமாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். இதில், மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மிளகாய் ஊற வைத்த தண்ணீரை வடிகட்டி விட்டு மிளகாயை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் வெட்டி வைத்த தக்காளி பழங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த சட்னிக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். மேலும், கடுகு பொரிந்து வந்ததும் அதில் கறிவேப்பிலையை உருவி போட்டு தாளியுங்கள். பின்னர் பெருங்காயத் தூள் சேர்த்து ஒரு முறை நன்கு கலந்து விட்டு கொள்ளுங்கள். அதன் பின்னர் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். ஒரு ஐந்து நிமிடம் நன்கு கொதித்து வந்தால் தான் பச்சை வாசம் போகும். எண்ணெய் மேலே தெளிந்து பச்சை வாசனை போன பின்பு அடுப்பை அனைத்து விட வேண்டியது தான். அவ்வளவு தான் ரொம்ப ரொம்ப சுலபமாக கெட்டியான இந்த காரசாரமான தக்காளி சட்னி இட்லி, தோசை, உப்புமாவுக்கு மட்டுமல்லாமல் சப்பாத்தி, பூரிக்கு கூட தொட்டுக் கொள்ள ரொம்பவே சூப்பராக இருக்கும். ${item.title} `; $("#divPYRec").append(markup); }); } else { window.loadRecommendations("2d"); } } }; உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள் தளத்தைப் பார்வையிட சிறப்பு கட்டுரைகள் அதிக எண்ணெய் இல்லாமல் சூப்பரான கேரட் சிப்ஸ் செய்து சாப்பிட்டிருக்கீங்களா..? 2 hours ago சிறப்புச் செய்திகள் போயஸ் கார்டனில் நயன்தாரா வாங்கும் வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா? அப்போது தான் திருமணமாம்! பிரியங்காவின் சூசகமான பேச்சு: வெளுத்து வாங்கிய தாமரை! பரபரப்பான ப்ரொமோ காட்சி வெந்நீரில் இவ்வளவு ஆபத்து உள்ளதா? இந்த நேரத்தில் மட்டும் குடிச்சிடாதீங்க சென்னை மழை! இணையத்தில் வைரலாகும் தெறிக்கவிடும் மீம்ஸ்கள் இதோ... ஏனைய செய்திகள் நாங்கள் ரெடியாக இருந்தோம்! நியூசிலாந்து விளையாடவில்லை: ரஹானே விளக்கம் லங்காசிறி நியூஸ் 18 hours ago பட்டது எல்லாம் போதும்… இனி இவரை எப்போதும் எடுக்காதீங்க - கடுப்பான இந்திய முன்னாள் வீரர் தமிழ்நாடு 5 hours ago ஆட்டுக்கறி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் என்ன ஆகும் தெரியுமா? லங்காசிறி நியூஸ் 11 hours ago மாநாடு வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு அடுத்த அதிரடி சினிஉலகம் 19 hours ago ரொம்ப வலி, எதிரிக்கு கூட வரக்கூடாது, கஷ்டமானது- ஒரு வருடம் கழித்து சோகமான விஷயத்தை கூறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா சினிஉலகம் 16 hours ago வெளிநாட்டில் சறுக்கிய அண்ணாத்த வசூல், இவ்வளவு தானா? சினிஉலகம் 13 hours ago அதிரடி கலெக்ஷன் செய்யும் சிம்புவின் மாநாடு- 5 நாளில் செம வசூல் வேட்டை சினிஉலகம் 14 hours ago தனி ஆளாக பிரான்சில் அழகான கனவு வீட்டை கட்டிய கணவரை பிரிந்து வாழும் இலங்கை பெண்! சுவாரசிய பின்னணி லங்காசிறி நியூஸ் 7 hours ago நீ இன்னும் சாகவில்லையா என கேட்ட ரசிகர் - யாஷிகா கொடுத்த நச் பதில்: பொதுமக்கள் அதிர்ச்சி! தமிழ்நாடு 12 hours ago குழந்தை பெற்ற பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் பரீனாவா இது?- எப்படி ஆகிவிட்டார், போட்டோ பாருங்க சினிஉலகம் 8 hours ago ஹர்திக் பாண்டியா இல்லை - மும்பை இந்தியன்ஸ் அணி இந்த நான்கு வீரர்களை தான் தக்க வைக்கும்: இர்பான் பதான் உறுதி தமிழ்நாடு 10 hours ago சிம்புவை காதலிக்கும் பிரபல நடிகையின் தங்கை - ஆச்சரியத்தில் ரசிகர்கள் தமிழ்நாடு 18 hours ago பிரித்தானியாவில் நாளை முதல் வரும் புதிய கட்டுப்பாடுகள்! மீறினால் 6,400 பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படலாம்
கிழக்கில் தொல்பொருள் செயலணியும், ஜனாதிபதியின் வாக்குறுதியும். முஸ்லிம் தலைவர்களின் மௌனம் கலையுமா ? - Vanni News Home பிரதான செய்திகள் உலகம் கட்டுரை விளையாட்டு தொழில்நுாட்பம் தொடர்பு Home பிரதான செய்திகள் உலகம் கட்டுரை விளையாட்டு தொழில்நுாட்பம் தொடர்பு Search for: கிழக்கில் தொல்பொருள் செயலணியும், ஜனாதிபதியின் வாக்குறுதியும். முஸ்லிம் தலைவர்களின் மௌனம் கலையுமா ? 26 August 2020 முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர்களின் பணிப்புரைக்கமைய கடந்த 14.05.2020 அன்று பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான பாதுகாப்பு சார்ந்த உயர்மட்ட குழுவினர் அம்பாறை மாவட்டத்தின் சர்ச்சைக்குரிய விகாரைகளான தீகவாப்பி, மாணிக்கமடு, பொத்துவில் முகுது போன்ற விகாரைகளுக்கு விஜயம் செய்து அங்குள்ள விகாராதிபதிகளுடன் கலந்துரையாடினார்கள். அதன்பின்பு கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் இடங்களை இனம்கண்டு அவைகளை பாதுகாத்து நிர்வகிப்பதற்காக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனெரல் கமால் குணரத்ன தலைமையில் பன்னிரெண்டு பேர்கள்கொண்ட செயலணி ஒன்று கடந்த 01.06.2020 ஆம் திகதி ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் எவரும் இந்த செயலணியில் நியமிக்கப்படவில்லை. மாறாக பாதுகாப்புத்துறை சார்ந்தவர்களும், பௌத்த மேலாதிக்கவாதிகளுமே இதில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். கடந்த 01.07.2020 திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் இந்த விவகாரம் முன்வைக்கப்பட்டது. அதாவது கிழக்குமாகான தொல்பொருள் செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையினை அமைச்சர் டக்லஸ் அவர்கள் முன்வைத்திருந்தார். அமைச்சர் டக்ளசின் இந்த கோரிக்கையினை ஜனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார். அதாவது இந்த செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதென்று தீர்மானிக்கப்பட்டதுடன் இதனை 01.07.2020 ஆம் திகதி ஜனாதிபதி அவர்கள் தனது முகநூளில் பதிவிட்டிருந்தார். ஆனால் ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்ட உறுதிமொழி நடைமுறைப் படுத்தப்படவில்லை. அதற்குமாறாக அஸ்கிரிய, மல்வத்து ஆகிய பீடங்களைச்சேர்ந்த நான்கு தேரர்கள் மேலதிகமாக கிழக்குமாகான தொல்பொருள் செயலணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள். இது வர்த்தமாணியிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக முஸ்லிம் தலைவர்கள் வாய்மூடி மௌனமாக இருப்பது ஏன் ? நாட்டில் எத்தனையோ தொல்பொருள் பிரதேசங்கள் இருக்கும்போது தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்கின்ற கிழக்கு மாகாணத்தில் அவசர அவசரமாக இந்த செயலணி நியமிக்கப்பட்டதன் நோக்கம் என்ன ? தொல்பொருளை பாதுகாத்தல் என்றபோர்வையில் கிழக்குமாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளை சுவீகரிக்கப்போகின்றார்களா ? எனவே இதுவிடயமாக முஸ்லிம் தலைவர்கள் தங்களது மௌனத்தை கலைத்து இதயசுத்தியுடன் செயல்பட வேண்டும். ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்பதற்காக ஒன்றுபட்டதைப்போன்று அனைத்து முஸ்லிம் தலைமைகளும் ஒன்றுபட்டு ஜனாதிபதியையும், பிரதமரையும் சந்தித்து பேசுவதன்மூலம் இதற்கான தீர்வினை காண்பதற்கு முயற்சிக்க முடியும். பேரினவாதிகளின் திட்டமிடலுக்கு ஏற்ப காரியங்கள் அனைத்தும் முடிவடைந்தபின்பு அறிக்கைகளை மட்டும் விடுவதில் எந்த பிரயோசனமுமில்லை என்பது கிழக்குமாகான முஸ்லிம்களின் நிலைப்பாடாகும். Enter Your Mail Address Facebook 0 Twitter 0 WhatsApp 0Shares Comments comments Previous Post கலரியை பொதுமக்களுக்காக திறக்கப்படுவதை நிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. Next Post வாகனம் கொள்வனவு செய்ய அமைச்சர்களுக்கு தடை மேலும் செய்திகள் மொட்டு கட்சியின் புதிய பாராளுமன்ற உறுப்பினர் பதவி பிரமாணம் இந்தியாவில் Cryptocurrency தடை செய்யப்படுமா? அல்லது அங்கீகரிக்கப்படுமா? நிதியமைச்சர் மோடியினை சந்திக்கவுள்ள நிதி அமைச்சர் பசில் புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியின் ரயில் பாதையை மறைத்து போராட்டம். எரிவாயு சிலிண்டர் வெடிப்பு மற்றும் தீப்பற்றல் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியினால் குழு நியமனம் புற்று நோய் போன்ற நோய்களை குணப்படுத்த காஞ்சா”வை ஏற்றுமதி செய்ய வேண்டும். வன்னி நியூஸ் https://www.youtube.com/watch?v=gp9rCYjHAGI செய்திகள் பார்க்க மொட்டு கட்சியின் புதிய பாராளுமன்ற உறுப்பினர் பதவி பிரமாணம் November 30, 2021 இந்தியாவில் Cryptocurrency தடை செய்யப்படுமா? அல்லது அங்கீகரிக்கப்படுமா? நிதியமைச்சர் November 30, 2021 மோடியினை சந்திக்கவுள்ள நிதி அமைச்சர் பசில் November 30, 2021 புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியின் ரயில் பாதையை மறைத்து போராட்டம். November 30, 2021 எரிவாயு சிலிண்டர் வெடிப்பு மற்றும் தீப்பற்றல் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியினால் குழு நியமனம் November 30, 2021
தயாரிப்பாளர், நடிகர் மற்றும் இயக்குநர் என்று தமிழ் சினிமாவில் பன்முகம் கொண்டவராக வலம் வரும் சுரேஷ் காமாட்சி, தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ‘மாநாடு’ படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் இப்படம், தொடங்கியதில் இருந்தே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ‘மாநாடு’ படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு 60 லட்சம் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதனால், படம் வெளியீட்டுக்காக சிம்புவின் ரசிகர்களும், சினிமா ரசிகர்களும் காத்துக்கொண்டிருக்க, ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விரைவில் அறிவிக்க உள்ளார். இந்த நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இயக்குநர் ராம் இயக்கும் இப்படத்தில் நாயகனாக நிவின் பாலி நடிக்க, நாயகியாக அஞ்சலி நடிக்கிறார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தனுஷ்கோடியில் எளிமையான பூஜையுடன் தொடங்கியது. Related News 7786 உதயநிதி படத்தில் நடிக்கும் வடிவேலு! Tuesday November-30 2021 பல ஆண்டுகள் தடைகளுக்குப் பிறகு வடிவேலு மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்... காலத்திற்கேற்ற அரசியலைப் பேசும் சாலச்சிறந்தப் படைப்பு - ‘மாநாடு’ படத்தை பாராட்டிய சீமான் Tuesday November-30 2021 வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் கடந்த 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது...
புனிதமான துல்-கஃதா மாதத்தில் நாம் இருக்கிறோம். இப்பொழுது, நம்மில் பலரும் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லத் தயாரானவர்களாக இருப்போம். நம்மைச் சார்ந்தவர்கள், உறவினர்கள், அயலில் உள்ளவர்கள், ஊர்வாசிகள் என புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லக் கூடியவர்களை வழியனுப்பி வைக்கக் கூடியவர்களாகவும் இருப்போம். அறிந்தோ, அறியாமலோ தாம் பிறருக்கு இழைத்திருக்கும் குற்றங்களுக்காக, ஏழையோ, தம்மை விடவும் வசதி குறைந்தவர்களோ, தமக்குக் கீழே பணி புரியும் ஊழியர்களோ அவர்களுடனான கோபதாபங்களை மறந்து, அவர்களைத் தேடிப் போய் நேரில் சந்தித்து, அவர்களிடம் தாம் செய்த குற்றங்களை மன்னித்துக் கொள்ளக் கேட்டு, இன்முகத்தோடு விடைபெறச் செய்து மனிதர்களிடையே ஒற்றுமையையும், உறவினையும் பலப்படுத்தும் புனித மாதமிது. இம் மாதத்தில் மேற்கொள்ளப்படும் ஹஜ் கடமையானது பர்ளான ஹஜ், சுன்னத்தான ஹஜ் என இரு வகைப்படுகிறது. உடலாலும் பொருளாலும் சக்தி பெற்றவருக்கு வாழ்நாளில் ஒரு முறையாவது ஹஜ் கடமையை நிறைவேற்றுவது கட்டாயக் கடமையாகும். ஒன்றுக்கு மேலதிகமாகச் செய்யும் ஹஜ் எல்லாம் சுன்னத்தான ஹஜ்ஜுக்குள் வகைப்படுத்தப்படும். இதற்கு இஸ்லாமியச் சட்டத்தில் எந்தத் தடையுமில்லை. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல், எந்தப் பாவமும் செய்யாமல், இந்த ஆலயத்தை ஹஜ் செய்கிறவர் அன்று பிறந்த பாலகனைப் போல் திரும்புகிறார்.” என அபூ ஹுரைராரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (ஸஹீஹ் புஹாரி – 1819, 1820) ஹதீஸ்கள் ஹஜ் செய்வதன் சிறப்பை வலியுருத்திக் கூறுகின்றன. எனவே இக் காலகட்டத்தில் முன்பை விடவும் அதிகமான அளவு மக்கள் ஹஜ் கடமைக்காக ஒன்று கூடுகிறார்கள். ஹஜ்ஜுக்காக மட்டுமல்லாது உம்ராவை நிறைவேற்றுவதற்காகவும் அதிகளவான மக்கள் தமது பிரயாணத்தை மேற்கொள்கிறார்கள். ‘ஒவ்வொரு வருடமும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக ஒன்று கூடும் மக்களில், சரி பாதியிலும் குறைந்த சதவீத அளவு மக்களே தமது முதல் ஹஜ்ஜை நிறைவேற்ற வருபவர்கள்; ஏனையோர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் ஹஜ்ஜை நிறைவேற்ற வருகை தருபவர்கள்’ என ஆய்வு அறிக்கை கூறுகிறது. இது பிழையென்றோ தவறான செயலென்றோ கூற வரவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட ஹஜ்ஜைச் செய்யவெனச் செல்கிறவர் மஹ்ரமாக (ஒரு பெண்ணுக்கு வழித் துணையாக), வழிகாட்டியாக, மருத்துவராக இப்படியான அவசியத் தேவையின் காரணமாகச் செல்லலாம். ஆனால் ‘நான் ஐந்து தடவை ஹஜ் செய்திருக்கிறேன்..நான் பத்துத் தடவை ஹஜ் செய்திருக்கிறேன்’ என்று பெருமை பேசிக் கொள்பவர்களும், அதற்காகவே பல இலட்சங்களைச் செலவழித்து ஹஜ்ஜைப் பல தடவைகள் நிறைவேற்றுபவர்களும் கூட நம் சமூகத்தில் இருக்கிறார்கள் இல்லையா? நமது நாட்டிலிருந்தும், ஊரிலிருந்தும் கூட இவ்வாறு பல தடவைகள் ஹஜ்ஜை நிறைவேற்றப் புறப்பட்டுச் செல்வோர் அனேகர் நம்மில் இருக்கிறோம். நாம் வசிப்பது செல்வந்த நாடொன்றல்ல. நம்மைச் சூழ்ந்திருக்கும் நமது சகோதரர்கள் எல்லோருமே அவர்களது ஹலாலான எல்லாத் தேவைகளும் நிறைவேற்றப்பட்ட சௌபாக்கியங்கள் நிறைந்தவர்களல்லர். நாட்டில் அகதிகளாக்கப்பட்ட, அனாதைகளாக்கப்பட்ட, இடம்பெயர்ந்த அநேக மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களது நிறைவேற்றப்படாத பல தேவைகள் இன்னும் இருக்கின்றன. நம் தேசமானது ஒவ்வொரு வருடமும் வெள்ள அபாயத்தாலும், மண் சரிவுகளாலும், காற்றினாலும், கோடையினாலும் அழிவுக்குள்ளாகிக் கொண்டே வருகிறது. நமது மக்கள் இவற்றால் பெரும் துயரடைகிறார்கள். அவர்களது துயரங்களுக்கு மத்தியிலிருந்து நாம் ஸுன்னத்தான ஹஜ் கடமையைச் செய்யச் செல்கிறோம். நம்மைச் சுற்றிலும் அன்றாட சீவனத்துக்கே வழியற்றுப் போன வறியவர்கள் இருக்கிறார்கள். சொந்த வீடுகளின்றி வாடகை வீடுகளில் வசித்து, வாடகை கொடுக்க இயலாது கஷ்டப்படும் ஏழைகள் இருக்கிறார்கள். ஹலாலான தேவைக்காகக் கடன் வாங்கி, அதை மீளச் செலுத்திக் கொள்ள வழியற்றவர்கள் இருக்கிறார்கள். தமது பிள்ளைகளின் திருமண வயது தாண்டியும் திருமணம் செய்து வைக்க வசதியில்லாத பெற்றோர்கள் இருக்கிறார்கள். நல்ல திறமையிருந்தும், நன்றாகக் கற்கும் ஆர்வமிருந்தும் உதவி செய்ய ஒருவருமின்றி சிறு வயதிலேயே சிறு சிறு கூலிவேலைகளில் இறங்கிவிடும் சிறுவர்களும், இளைஞர்களும் நிறைந்திருக்கிறார்கள். மருத்துவ வசதியற்ற நோயாளிகள், இன்னும் அநாதைகள் இருக்கிறார்கள். நம்மை அண்டிப் பிழைக்கும் எளிய ஊழியர்கள் இருக்கிறார்கள். இவர்களது பெருமூச்சுகளுக்கு மத்தியிலிருந்து நாம் மீண்டும் மீண்டும் ஹஜ்ஜுக்காகச் சென்று கொண்டேயிருக்கிறோம். ஒன்றுக்கு மேற்பட்ட ஹஜ்ஜினை நிறைவேற்ற, ஒருவர் தயாராகிச் செல்லும் வரையிலும், சென்று திரும்பும் வரையிலும் எத்தனை இலட்சங்கள் பணம் செலவு செய்யப்படுகிறது? இந்த வருடமும் ஹஜ் செய்யத் தீர்மானித்ததன் பின்னர் வீட்டுக்கு வந்துசெல்லும் உறவுகளுக்கான விருந்துபசாரங்களாகட்டும், ஹஜ்ஜை முடித்து விட்டுத் திரும்பி வருகையில் குடும்பத்தினர், நண்பர்களுக்காக வாங்கி வரப்படும் அன்பளிப்புப் பொருள்களாகட்டும், கணக்கற்ற பணம் செலவழிக்கப்படுகிறது அல்லவா? இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: (முன்னோரு காலத்தில்) ஒருவர் நான் தர்மம் செய்யப் போகிறேன் எனக் கூறிக் கொண்டு (இரவில்) தர்மத்துடன் வெளியே வந்து (தெரியாமல்), ஒரு திருடனிடம் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், இன்றிரவு திருடனுக்குத் தர்மம் வழங்கப்பட்டுள்ளது எனப் பேசிக் கொண்டனர். (இதைக் கேட்ட) அவர், அல்லாஹ்வே! உனக்கே சகல புகழும். (நாளை) நான் தர்மம் செய்வேன் என்று கூறினார். மறுநாள் அவர் தர்மத்துடன் (இரவில்) வெளி வந்து அதை ஒரு விபச்சாரியிடம் கொடுத்துவிட்டார். மறுநாள் காலை மக்கள், இன்றிரவு விபச்சாரிக்குத் தர்மம் கொடுக்கப்பட்டுள்ளது எனப் பேசினர். (இதைக் கேட்ட) அவர் அல்லாஹ்வே! விபச்சாரிக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே சகலப் புகழும்! (நாளையும்) நான் தர்மம் செய்வேன்! எனக் கூறினார். (மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் வெளிவந்து ஒரு பணக்காரனின் கையில் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், பணக்காரருக்கு ஸதகா கொடுக்கப்பட்டள்ளது எனப் பேசினர். உடனே அவர், அல்லாஹ்வே! திருடனிமும் விபச்சாரியிடமும் செல்வந்தனிடமும் தர்மம் கொடுத்ததற்காக உனக்கே எல்லாப் புகழும் எனக் கூறினார். அப்போது ஒரு(வான)வர் அவரிடம் வந்து, நீர் திருடனுக்குக் கொடுத்த தர்மம் அவன் திருடுவதைவிட்டுத் திருந்தக் காரணமாகலாம். விபச்சாரிக்கு நீ கொடுத்த தர்மம் அவள் விபச்சாரத்திலிருந்து விடுபடக் காரணமாகக் கூடும். செல்வந்தனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மத்தினால் அவன் படிப்பினை பெற்று அதனால் அவன் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து தர்மம் செய்யக் கூடும்” எனக் கூறினார். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஸஹீஹ் புஹாரி 1421) மேலுள்ள ஹதீஸைப் பாருங்கள். எல்லாம் வல்ல இறைவனான அல்லாஹ் தஆலா நமக்கு வழங்கியுள்ளவற்றிலிருந்து நாம் செய்யும் தர்மமானது இன்னுமொரு மனிதனின் நிலையை மாற்றக் கூடியது. அவனைத் துன்பத்திலிருந்தும் விடுவிக்கக் கூடியது. சுன்னத்தான ஹஜ்ஜுக்களுக்காக செலவாகும் இலட்சக்கணக்கிலான பணத்தினைக் கொண்டு எவ்வளவெல்லாம் செய்யலாம் பாருங்கள். வாழ்வில் ஒருமுறையேனும் பர்ழான ஹஜ்ஜைச் செய்யவேண்டுமென்ற ஆசையோடும் நிய்யத்தோடும் செல்ல வழியற்ற நம் உறவினர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு உதவலாம். ஹலாலான தேவைகளுக்காகக் கடன்பட்டு அதை மீளச் செலுத்திக் கொள்ளவியலாமல் தவிப்பவர்களை அதனிலின்றும் மீட்டு விடலாம். திருமணம் செய்ய வசதியில்லாமல் இருப்பவர்களுக்கு அதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுக்கலாம். வசதியின்றி, கல்வியைப் பாதியில் விட்டவர்களுக்கு அவர்களுக்கான எதிர்காலத்துக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கலாம். நம்மை நம்பி நம்முடன், நமக்காக உழைக்கும் ஊழியர்களின் ஊதியத்தைச் சிறிதளவாவது அதிகரித்து விடலாம். ஏழை நோயாளிகளின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். அன்றாட வாழ்க்கை நடத்தவே சிரமப்படுபவர்களின் குடும்பத்துக்கு, அவர்களுக்குத் தெரிந்த கைத்தொழிலொன்றைச் செய்யவோ, வேறு தொழிலுக்கோ பணத்தைக் கொடுத்துதவலாம். கட்டாயக் கடமையான ஸகாத்தை ஒழுங்காகக் கணக்கிட்டுக் கொடுக்காது, சுன்னத்தான ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுச் செல்லும் மனிதர்களும் நம் மத்தியில் இல்லாமலில்லை. இஸ்லாமானது கட்டாயக் கடமைகளை உதாசீனம் செய்துவிட்டு, சுன்னத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை வரவேற்கவில்லை. நமக்குக் கடமையான முதலாவது ஹஜ்ஜை ஒழுங்காக நிறைவேற்றிவிட்டோம். அதற்குப் பிறகும் அடுத்தடுத்த வருடங்களில் ஹஜ்ஜுக்குச் செல்லவும் ஆசை வருகிறது எனில், ஹஜ்ஜுக்குச் செல்லாமல் அதற்குச் செலவாகப் போகும் பணத்தில் தன்னைச் சூழவுள்ள இயலாதவர்களுக்கு உதவுவேன் என மேலதிக ஹஜ் செய்யப் போகும் ஒவ்வொருவரும் சிந்தித்து, அதனைச் செயற்படுத்தினால் நம்மைச் சூழ்ந்திருக்கும் எளியவர்களிடத்தில் எவ்வளவு நல்ல முன்னேற்றகரமான மாற்றங்கள் வரும், சிந்தித்துப் பாருங்கள். நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘ மனிதன் மரணமடைந்து விட்டால் அவனுடைய எல்லா அமல்களும் நின்று விடுகின்றன. மூன்று அமல்களின் பலாபலன்கள் மாத்திரம் இறந்த பின்னரும் நிரந்தரமாக மனிதனுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும். 1. எப்போதும் ஓயாமல் பலன் தரும் தர்மம் (ஸதகதுல் ஜாரியா) 2. பிரயோசனமளிக்கும் கல்வி 3. நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்) ஒரு மனிதன் மரணித்து விடும்போது அவரது செயல்களின் இயக்கமும் நின்று போய்விடுகிறது. அவரால் தொடர்ந்தும் நற்செயல்கள் செய்து நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால் அவர் கப்றாளியாக ஆன பின்பும் அவரது நன்மைகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டிருக்கும்படியான நற்செயல்கள்தான் மேற்குறிப்பிட்டுள்ள ஹதீஸில் உள்ளவை. பல தடவை ஹஜ் செய்யும் வசதி படைத்தவர்களின் பணத்தில் இவ்வாறாகக் கப்றிலும் நிரந்தரமாக நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடிய எத்தனை எத்தனை நல்ல விடயங்களைச் செய்துவிடலாம்? செய்ய முயற்சிப்போம், சிந்திப்போம் சகோதரர்களே ! ”விடிவெள்ளி” வார இதழ் – 51 (21.10.2010) Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Math Captcha + 43 = 52 Categories Categories Select Category English (319) Convert to Islam (13) Education (14) Essays (85) Family (11) Hadith (8) Haj (5) History (20) India News (20) Muslim World (34) News (9) Politics (4) QnA (19) Quran (3) Ramadhan (15) Science (7) Society (16) World News (36) Multimedia (6) Audio (2) Video (4) Uncategorized (10) இஸ்லாம் (3,748) ஆய்வுக்கட்டுரைகள் (200) இமாம் கஸ்ஸாலி (ரஹ்) (9) இம்மை மறுமை (110) இஸ்லாத்தை தழுவியோர் (90) கட்டுரைகள் (1,703) குர்ஆனும் விஞ்ஞானமும் (29) குர்ஆன் (190) கேள்வி பதில் (201) சொற்பொழிவுகள் (17) ஜகாத் (44) தொழுகை (150) நூல்கள் (40) நோன்பு (135) வரலாறு (378) ஹஜ் (57) ஹதீஸ் (215) ஹஸீனா அம்மா பக்கங்கள் (19) ‘துஆ’க்கள் (43) ‘ஷிர்க்’ – இணை வைப்பு (118) கட்டுரைகள் (3,081) Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) (154) அப்துர் ரஹ்மான் உமரி (53) அரசியல் (311) உடல் நலம் (446) எச்சரிக்கை! (103) கதைகள் (63) கதையல்ல நிஜம் (108) கல்வி (84) கவிதைகள் (161) குண நலன்கள் (303) சட்டங்கள் (55) சமூக அக்கரை (675) நாட்டு நடப்பு (82) பொது (352) பொருளாதாரம் (27) விஞ்ஞானம் (104) குடும்பம் (1,522) M.A. முஹம்மது அலீ (48) ஆண்-பெண் பாலியல் (83) ஆண்கள் (73) இல்லறம் (484) குழந்தைகள் (183) செய்திகள் (1) பெண்கள் (585) பெற்றோர்-உறவினர் (65) செய்திகள் (328) இந்தியா (142) உலகம் (130) ஒரு வரி (10) கல்வி (32) தமிழ் நாடு (1) முக்கிய நிகழ்வுகள் (13) Archives Archives Select Month November 2021 (14) October 2021 (17) September 2021 (8) May 2021 (2) April 2021 (15) March 2021 (17) February 2021 (17) January 2021 (17) December 2020 (20) November 2020 (17) October 2020 (18) September 2020 (20) August 2020 (31) July 2020 (30) June 2020 (21) May 2020 (27) April 2020 (22) March 2020 (30) February 2020 (19) January 2020 (22) December 2019 (25) November 2019 (14) October 2019 (15) September 2019 (16) August 2019 (18) July 2019 (16) June 2019 (15) May 2019 (12) April 2019 (12) March 2019 (17) February 2019 (17) January 2019 (27) December 2018 (35) November 2018 (18) October 2018 (22) September 2018 (31) August 2018 (27) July 2018 (16) June 2018 (12) May 2018 (14) April 2018 (22) March 2018 (29) February 2018 (30) January 2018 (35) December 2017 (23) November 2017 (30) October 2017 (33) September 2017 (28) August 2017 (30) July 2017 (30) June 2017 (19) May 2017 (34) April 2017 (31) March 2017 (35) February 2017 (36) January 2017 (27) December 2016 (59) November 2016 (48) October 2016 (44) September 2016 (41) August 2016 (27) July 2016 (33) June 2016 (42) May 2016 (52) April 2016 (53) March 2016 (37) February 2016 (42) January 2016 (64) December 2015 (47) November 2015 (40) October 2015 (36) September 2015 (65) August 2015 (56) July 2015 (35) June 2015 (42) May 2015 (58) April 2015 (79) March 2015 (40) February 2015 (29) January 2015 (54) December 2014 (79) November 2014 (66) October 2014 (78) September 2014 (67) August 2014 (62) July 2014 (84) June 2014 (82) May 2014 (100) April 2014 (84) March 2014 (92) February 2014 (80) January 2014 (85) December 2013 (69) November 2013 (91) October 2013 (89) September 2013 (68) August 2013 (76) July 2013 (101) June 2013 (84) May 2013 (94) April 2013 (13) March 2013 (84) February 2013 (64) January 2013 (85) December 2012 (93) November 2012 (106) October 2012 (82) September 2012 (92) June 2012 (50) May 2012 (103) April 2012 (145) March 2012 (103) February 2012 (168) January 2012 (44) December 2011 (125) November 2011 (99) October 2011 (112) September 2011 (90) August 2011 (130) July 2011 (150) June 2011 (86) May 2011 (138) April 2011 (30) March 2011 (148) February 2011 (97) January 2011 (61) December 2010 (103) November 2010 (87) October 2010 (129) September 2010 (145) August 2010 (114) July 2010 (70) June 2010 (130) May 2010 (131) April 2010 (116) March 2010 (134) February 2010 (99) January 2010 (154) December 2009 (136) November 2009 (106) October 2009 (61) September 2009 (66) August 2009 (61) July 2009 (55) June 2009 (53) May 2009 (81) April 2009 (43) March 2009 (70) February 2009 (43) January 2009 (64) December 2008 (29) November 2008 (35) October 2008 (31) September 2008 (63) August 2008 (114)
BPL மொபைல் என்று அறியப்படுகிற லூப் மொபைல் நிறுவனமானது 1994​ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த BPL மொபைல் இந்தியாவின் முதல் மொபைல் நிறுவனம் ​என்பதும் குறிப்பிடத்தக்கது. இது மார்ச் 2009ல் லூப் மொபைல் என்று மாற்றப்பட்டது. மும்பையை…
Aval Vikatan - 28 November 2017 - கடலோரக் கதைகள் | Our village our stories - Tuticorin - Aval Vikatan - Vikatan Save the vikatan web app to Home Screen tap on Add to home screen. X Subscribe to vikatan Login செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் கனமழை: அப்டேட்ஸ் New ஆன்லைன் தொடர்கள் New My News ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் ராசி காலண்டர் மேலும் மெனுவில் Search அவள் விகடன் தலையங்கம் நமக்குள்ளே! தன்னம்பிக்கை “தோல்வி என்பது ஆப்ஷன் மட்டும்தான்!” தடைகளை உடைத்த டென்னிஸ் தாரகை! ``இந்த மண்ணுக்காக எங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை!’’ “12 வயதில் புரட்சிப்படையில் சேர்ந்தேன்!” ``குண்டுச் சத்தத்துக்கு ஒருநாளும் பயந்ததில்ல!’’ ``துயரமே எனக்குத் தூண்டுகோல்!’’ - பைக் ரைடிங் சாதனையாளர் சைபி பாதிக்குப் பாதி லாபம் தரும் பீடட் கார் சீட்! உலகையே நீங்கள் வலம் வரலாம்! ‘வாழ்க்கை நாற்பதில் தொடங்குகிறது!’ - நிரூபிக்கும் டான்ஸ் குரு மனீஷா மேத்தா “நிச்சயம் ஒருநாள் நீங்க என்னைப் பார்ப்பீங்க!” கண்ணீருக்கோ கவலைகளுக்கோ இடமில்லை! “மகனைவிட ஒரு மணி நேரம் கூடுதலா உயிர் வாழணும்!” தொடர்கள் ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 25 கடலோரக் கதைகள் அனுபவங்கள் பேசுகின்றன! ராசி பலன்கள் என் டைரி 413-ன் சுருக்கம் - ஏற்றுக்கொள்ளவா? லைஃப்ஸ்டைல் “நிராகரிப்பை ஏற்றுக்கொள்கிற தைரியம் வேணும்!’’ தனியே தன்னந்தனியே! “இயற்கையின் கொடையான மழையை வரவேற்கணும்!” - ரமணன் தம்பதி ``எப்போதும் சிரிச்சுக்கிட்டே இருக்கத்தான் பிடிக்கும்!'' செல்ஃபி மொபைல்கள் என்டர்டெயின்மென்ட் அறம் தொடரட்டும்! நயன்தாராவிடம் பேசினால் மனசு லேசாகும்! “நடிகையாக இல்லாவிட்டாலும் நான் இப்படித்தான்!'' ‘கேக்’ கில்லாடி! சமையல் வாசகிகள் கைமணம் - சத்தான சத்தல்லவா! ஹெல்த் ஆவியில் வேகவைத்த ஆரோக்கிய உணவுகள் 30 வகை ‘ஸ்லிம்’ஆக்கும் குடம் புளி! டிப்ஸ் டிப்ஸ்... டிப்ஸ்... அறிவிப்புகள் அவள் விகடன் 20 - அடுத்த இதழ்... ஹலோ வாசகிகளே... Published: 14 Nov 2017 5 AM Updated: 14 Nov 2017 5 AM கடலோரக் கதைகள் நிவேதிதாலூயிஸ் கடலோரக் கதைகள் நம் ஊர் நம் கதைகள் - பல்லவர் பாதையில் ஒரு பயணம் கடலோரக் கதைகள் நம் ஊர் நம் கதைகள் - தென்மேற்கு சென்னை - கொலம்பஸுடன் ஒரு பயணம்! நம் ஊர் நம் கதைகள் - சென்னை-378, நாட் அவுட்! நம் ஊர் நம் கதைகள் - பவளக்காரத் தெரு எனும் பாரம்பர்யச் சின்னம்! நம் ஊர் நம் கதைகள் - வரலாற்றைப் புரட்டிய மரபு நடை! நம் ஊர் நம் கதைகள் - அடையாற்றின் கரையில்... நம் ஊர் நம் கதைகள் - சென்னைக்குச் சொத்து அளித்த வணிகர்! நம் ஊர்... நம் கதைகள் - இடிந்த கோட்டையும் எதிர்வரும் பறவைகளும்! நம் கிராமம்... நம் கதைகள்! - ஊரூர் ஆல்காட் குப்பம் ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் Use App கடலோரக் கதைகள் நம் ஊர் நம் கதைகள்நிவேதிதா லூயிஸ் - படங்கள்: லெய்னா உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் பிரீமியம் ஸ்டோரி அச்சில் வெளிவந்த முதல் தமிழ்ப் புத்தகம் எது? அதை அச்சிட்டவர் யார்? அவருக்கும் பேம்பாறு என்று முன்பு சொல்லப்பட்ட வேம்பாறு என்ற சிற்றூருக்கும் என்ன தொடர்பு? வேம்பாற்றில் `அசனம்' என்று கேள்விப் பட்டதும், பையைக் கட்டிக்கொண்டு கிளம்பியாகிவிட்டது. ஒரு கடை வீதி, நான்கு தேவாலயங்கள், கடற்கரை, நிறைய வேப்பமரங்கள். வேம்பாற்றின் முகத்துவாரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் கடைக்கோடியில், பெரும்பாலும் பரிதாபமான கட்டமைப்பு வசதிகளுடன்கூடிய சிற்றூர்.மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தோமையார் கோயில் அசனத் திருவிழா மிகப் பிரசித்தம். இது முதலில் ஓலைக் கோயிலாக இருந்திருக்க வேண்டும். இந்தக் கோயிலின் கட்டுமானப் பணி, 1891-ல் 30 ஆயிரம் ரூபாய் செலவில் தொடங்கப்பட்டதாக, அவ்வாண்டு கௌசானல் அடிகள் எழுதிய கடிதம் தெரிவிக்கிறது. `1916-ல், எஸ்.எஸ்.பாக்கியம் நேமித்த இந்த நிலை குமாரர் தொம்மை யுவானியால் கட்டிமுடிக்கப்பட்ட'தாக ஆலய நிலையில் உள்ள கல்வெட்டு குறிக்கிறது. `தென்தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் தோமையாரின் காலமான கி.பி 52-ம் ஆண்டு முதலே கிறித்துவம் காணப்பட்டிருக்கிறது என்கிறார் வரலாற்று ஆய்வாளர் டி.கே.ஜோசப். 1604-ம் ஆண்டு, சேசு சபையைச் சார்ந்த தந்தை ரோஸ் எழுதிய `ரெலக்கோ சொப்ரெ அ செர்ரா’ நூலில், தூத்துக்குடியில் இருந்து 6 லீக்குகள் மற்றும் 4 லீக்குகள் தொலைவில் உள்ள பேம்பாறு (வேம்பாறு) மற்றும் வைப்பாறு பகுதிகளில், மலபார் கிறித்துவர்களின் வழித்தோன்றல்கள் என்று தம்மைச் சொல்லிக்கொள்ளும் கிறித்துவர் அல்லாத `தரிசுக்கல் நாயக்கர் (தரிசா)’ என்ற இன மக்கள் வாழ்கிறார்கள்’ என்று குறிப்பிடுகிறார். இந்தத் தரிசா கிறித்துவர்கள், கொல்லத்தின் `தரிசப்பள்ளி’ என்று கி.பி 880-ம் ஆண்டின் தரிசப்பள்ளி செப்பேடுகளில் சொல்லப்படும் தரிசா கிறித்துவப் பிரிவினராக இருக்கக்கூடும். தரிசா என்பதற்குச் சிரிய மொழியில், ‘வைதீகமான’ என்று பொருள். 1644-ல் எல்.பெஸ்ஸி எனும் பாதிரியார் எழுதியுள்ள கடிதத்தில், வைப்பாற்றில் 850 கிறித்துவர்களும், வேம்பாற்றில் 1,300 கிறித்துவர்களும் இருந்ததாகத் தெரிவிக்கிறார். பூஜை முடிந்து பங்குத்தந்தை கையில் கொழுத்த கிடா ஒன்றுடன் முன்செல்ல, கையில் விளக்கு ஒன்றுடன் உபதேசியார் மற்றும் வரிசையாக மாலையும் பூவும் அணிந்த கிடாக்கள், பளபளக்கும் புதிய பாத்திரங்கள், அரிசி மூட்டைகள், வெங்காயம், தக்காளி, ஓலைப் பெட்டிகளில் இன்னும் சில பொருள்கள், வாழை இலைக் கட்டுகள், அகப்பைகளுடன் மக்கள் கூட்டம் விறுவிறுவென நடந்தது, கல்லறைத் தோட்டம் நோக்கி. தென் தமிழகத்துக் கிறித்துவத் தேவாலயங் களில் இந்த அசனங்கள் அடிக்கடி நடப்பதுண்டு. வேண்டுதல்கள் நிறைவேறினால், குடும்பங்களாக அசனம் கொடுப்பதுண்டு. மெய்ஞானபுரம், புளியம்பட்டி, மறவன்குடியிருப்பு தேவாலயங் களில் ‘பொது அசனம்’ நடப்பது வாடிக்கை. ராபர்ட்டோ நொபிலி, கான்ஸ்டன்டைன் பெஸ்கி போன்ற பிற மத/இனத் தமிழக மக்களின் வாழ்வியல் பழக்க வழக்கங்களைக் கிறித்துவத்தோடு இணைத்த ஐரோப்பியரின் தாக்கம் இதுவாக இருக்கலாம். அசனம் என்பது தூய தமிழ்ச்சொல். மாதவர்க்கு எள், எண்ணெய், பருத்தித் துணியை `அசனம்’ கொடுப்பவன் துணையோடு இன்பமாக வாழ்வான் என்கிறது பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான ஏலாதி. `பிங்கள நிகண்டு' நூலிலும் ‘அசனம்’ எனும் சொல் உணவைக் குறிக்கவே பயன்படுகிறது.அசனம்/அயனம் என்பது நெய்தல் பகுதியின் அன்னதானமாகக் கொள்ளலாம். சமுதாய உணவு - ஒன்றாகச் சமைத்து உண்பது சரி, அது ஏன் கல்லறையில்?அதற்கும் ஊர்க்காரர்கள் ஒரு வரலாற்றைச் சொல்கிறார்கள். 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், காலராவின் தாக்கத்தால் இப்பகுதிகளில் கொத்துக் கொத்தாக மக்கள் மரித்தனர்.தொடர் மரணங்களைத் தடுக்க, கல்லறைத் தோட்டத்தில், ஊர் மக்கள் ஒன்றுகூடிப் பொது விருந்து சமைத்து உண்பதாக நேர்ந்து கொண்டபின், காலராவும் அதனால் நிகழ்ந்த மரணங்களும் மட்டுப்பட்டன. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, புரட்டாசி மாதம் முதல் திங்களில் அசன விருந்து தொடர்கிறது. கல்லறைச் சிலுவைகள் அனைத்தும் அகற்றப்பட்டு ஓர் ஓரமாக வைக்கப்பட, பெரும் மைதானமாகக் காட்சியளிக்கிறது கல்லறை. அதன் நடுவில் பொது அடுப்பைப் பெண்கள் சூழ்ந்து ஒருபுறம் மூட்ட, மறுபுறம் ஆண்கள் ஆடுகளை வெட்டி, சுத்தம் செய்யத் தொடங்குகிறார்கள். தேங்காய் அரைக்க மிக்ஸி தேவை என்று மைக்கில் ஒருவர் கேட்டுக்கொண்டிருக்க, நா2ங்கள் மெள்ள ஊரைச் சுற்றிவரக் கிளம்பினோம். முதலில் சென்றது ஊரின் முகப்பில் உள்ள சர்ப்ப மடத்துக்கு. திருச்செந்தூருக்கு நடைப் பயணம் செய்யும் பயணிகளுக்காகப் பிற்காலப் பாண்டியர் அல்லது நாயக்கர் காலத்தில் ஆறு தளங்களாகக் கட்டப்பட்டது இந்தச் சத்திரம் என்கிறார்கள். இப்போது இரண்டு தளங்கள் மட்டுமே தெரிகின்றன. பாம்புகள் புகலிடமாக மாறியதால் சர்ப்ப மடம்/மண்டபம் என்ற பெயர் மாற்றம் வந்திருக்கலாம். அழகிய தூண்கள், அவற்றில் சிவலிங்கம், மயிலுடன் முருகர், பிள்ளையார், தாமரையுடன் அன்னங்கள் என அத்தனையும் மணல் மெள்ள மெள்ள மூழ்கடித்துக்கொண்டிருக்கிறது. அடுத்து சென்றது வேம்பாறு வீரிய பெருமாள் ஐயனார் கோயில். வழக்கமான ஐயனார் போல் இல்லாமல் இந்த ஐயனாருடன், சுமார் 200 ஆண்டுகளுக்குமுன் மணலிலிருந்து எடுத்து பூஜை செய்த மூதாதையர்களின் சிலைகள் துணைநிற்கின்றன. 1850-களில் பஞ்சம் பிழைக்க விருதுநகர் மற்றும் சிவகாசி பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த வேம்பாறு மக்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, மாசி மாத சிவராத்திரியை ஒட்டிய சனி, ஞாயிறு, திங்களில் மாமிச விருந்து படைத்து உண்கிறார்கள். ஐயனாருக்கு முன்பு தளபதியான பெரிய கருப்பசாமி, அவருடைய பரிவார தெய்வங்கள் - சங்கிலிகருப்பன், இருளப்பன், ஐயனாரின் பரிவார தெய்வங்கள் - லாடசன்னாசி, வன்னியராசன், ராக்காச்சி, பேச்சி, பிணந்திண்ணி, பிள்ளைத்தூக்கி என்ற பெண் தெய்வங்களும் வரிசையாக அணிவகுக்கின்றன. கோயிலில் எக்கச்சக்கமான மணிகளும், மாவுத்தன் (தாடி, தலைக்கட்டுடன் ராவுத்தர்/பட்டாணி) அமர்ந்திருக்கும் யானை சிலைகளும் உள்ளன. அத்தனையும் நேர்த்திக்கடன். இந்தக் கோயிலுக்குச் செல்லும் பாதையை 1900-களில் இனாமாக வழங்கியிருக்கிறார் வேம்பாற்றைச் சார்ந்த பெருவணிகர் டி’மெல். மத நல்லிணக்கம் அப்போதே இவர்களுக்குள் அழகாகப் பரிணமித்திருக்கிறது. அருகிலேயே இருக்கிறது வீரியக்காரியம்மன் கோயில். நாட்டார் தெய்வங்களுக்கு உண்டான தனிக்கதை வீரியக்காரிக்கும் உண்டு. கூத்தன் சகோதரர்களின் ஒரே தங்கையான வீரியக்காரி, சிறுவயதிலேயே வெற்றிக்கு மணம் முடிக்கப்பட்டாள். காலரா கண்டு வெற்றி இறந்துவிட, அது தெரியாமலேயே வளர்க்கப்படும் வீரியக்காரி, சில ஆண்டுகளுக்குப் பின் விவரம் தெரிந்ததும், ஒருநாள் உடன்கட்டை ஏறிவிடுகிறாள்.முந்தானையில் எலுமிச்சையும் பூவும் கட்டிக் கொண்டு தீயில் அவள் குதித்துவிட, அவை கருகாமல் அப்படியே இருந்ததாம்.வீரியக்காரிக்கும் வெற்றிக்கும் ஒரே கல்லில் சிலை இருக்கிறது. கருப்பட்டி பணியாரம் படைக்கப்படுகிறது. வரும்வழியில் பிரமாண்டமாக நிற்கிறது வேம்பாறு பரிசுத்த ஆவிக் கோயில். 1536-ம் ஆண்டு வேம்பாற்றில் மீனவ மக்கள் மொத்தமாக மதம் மாறியதாகத் தந்தை ஃபெர்ரோலி எழுதிய `மலபாரின் ஜெசுட்டுகள்’ புத்தகம் தெரிவிக்கிறது. முத்துக் குளித்தலில் இசுலாமியரோடு உள்ள பிரச்னைகள் நீங்க, போர்த்துகீசியர்களுடன் உடன்படிக்கை செய்துகொண்டு மதம் மாறிய இவர்கள், 1544-ம் ஆண்டு மண்ணால் ஆன கோயில் ஒன்றை நிறுவி வழிபட்டு வந்துள்ளனர். 1658-ம் ஆண்டு போர்த்துகீசியர்களை தோற்கடித்த டச்சுப் படைகள், இந்தத் தேவாலயத்தை இடித்து, தங்கள் தளவாடக் கிடங்காக மாற்றிவிட்டனர். 1720-ல் மீண்டும் கட்டப்பட்ட ஆலயம் சேதம் அடைந்து, 1915-ல் புதுப்பிக்கப்பட்டது. மிகப்பெரிய அழகிய தேவாலயமான இதில் இப்போது மராமத்துப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. கோயிலினுள், இலங்கையில் வியாபாரம் செய்துவந்த டி’மெல் என்ற இந்த ஊரைச் சேர்ந்த பெரு வணிகருக்கு 1919-ம் ஆண்டு தேதியிட்ட லத்தீன் மொழிக் கல்வெட்டு ஒன்றுள்ளது. இந்தக் கோயிலைக் கட்டப் பொருளுதவி அளித்த டி’மெல்லைப் புகழ்கிறது இப்படி... `வேம்பாற்றில் தலைசிறந்த கொடையாளரான இவருக்கும், இவர் குடும்பத்தாருக்கும் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த பிஷப் ஆணைப்படி ஒரு பூஜை செய்ய' பணிக்கிறது. இவை தவிர, 1929-ல் கட்டப்பட்ட எஸ்பிஜி மிஷனின் பரி.தோமா தேவாலயமும் இவ்வூரில் உள்ளது. மாலை கல்லறையிலேயே பூஜையைக் கண்டுவிட்டு, பத்தாயிரம் பேர் ஆனந்தமாக இரவு உணவு உண்டுசென்றனர். 1.25 டன் அரிசி, 1.5 டன் ஆட்டுக்கறி. யார், என்ன என்கிற கேள்விகள் இல்லை. வந்தவர் அனைவருக்கும் உணவு. சரி, தமிழில் அச்சிடப்பட்ட முதல் நூலுக்கும் இந்த ஊருக்கும் என்ன சம்பந்தம்? அந்த நூல் தமிழின் அச்சுத் தந்தையான ஹென்றிக் ஹென்றிக்ஸ் என்ற பாதிரியார் கொல்லத்தில் 1578-ல் அச்சிட்ட `தம்பிரான் வணக்கம்’ என்ற சிறு கிறித்துவ ஜெப நூல். ஐரோப்பிய மொழியல்லாத வேற்றுமொழியில் வெளிவந்த முதல் நூலும் இதுவே. போர்த்துகீசியரான ஹென்றிக் ஹென்றிக்ஸ் தமிழ்க் கற்றுத் தேர்ந்தது வேம்பாற்றில் உள்ள மக்களிடம். 1548-ல் ஹென்றிக்ஸ், இவ்வூரில் பணி செய்யும்போது, இங்குள்ள ‘துப்பாசியார்’ (மொழிபெயர்ப்பாளர்)வேறு பணியைப் பார்க்கச் சென்றுவிட்டதால், தாமே மக்களிடம் தமிழ்க் கற்றுத் தேர்ந்துவிட்டதாக இக்னேஷியஸ் லொயோலாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். முதல் தமிழ் அச்சு நூல் படைப்பாளருக்கே தமிழ் புகட்டிய ஊர் வேம்பாறு!
இலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை. தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு- லண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)- பாடல்கள் Nov 19 28 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்தியாவிற்கு விஜயம்- Posted by plotenewseditor on 28 November 2019 Posted in செய்திகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியாவுக்கு பயணமாகியுள்ளார். இந்திய பிரமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி அங்கு செல்வதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தில் அவர் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து கலந்துரையாட எதிர்பார்த்துள்ளார். அத்துடன் இந்திய பிரதமருடன், ஜனாதிபதி இரு தரப்பு பேச்சுவார்தைகளிலும் ஈடுடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more Nov 19 28 பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு அனுமதி- Posted by plotenewseditor on 28 November 2019 Posted in செய்திகள் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு சிகிச்சைகளுக்காக வெளிநாட்டிற்கு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2015 ஆம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. Read more Nov 19 28 ஜனாதிபதி தேர்தல் முறைப்பாடுகளின்மீது விசாரணை- Posted by plotenewseditor on 28 November 2019 Posted in செய்திகள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நிறுவப்பட்ட பிரிவிற்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மனித உரிமைகள் மீறப்படும் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக குறித்த பிரிவு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் குறித்த பிரிவிற்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன. Read more Nov 19 28 சுவிஸ் தூதரக ஊழியர் தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிக்கை- Posted by plotenewseditor on 28 November 2019 Posted in செய்திகள் இம்மாதம் 25 ஆம் திகதி கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் இலங்கை ஊழியர் தொடர்பான குற்றச் சம்பவம் குறித்து இலங்கை அரசாங்கம் தீவிரமாக கவனம் செலுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று தகவல் கிடைத்ததும், இந்த விடயம் தொடர்பாக விசாரணையை ஆரம்பிப்பதற்கு பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணையை சுமுகமாகவும், நிறுவப்பட்ட நடைமுறையின் பிரகாரமும் முன்னெடுப்பதற்காக சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முழுமையான ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது. Read more Nov 19 28 பாசையூர் கடற்கரையில் 2 கிலோ வெடிமருந்து மீட்பு- Posted by plotenewseditor on 28 November 2019 Posted in செய்திகள் யாழ். பாசையூர் அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில் இருந்து 2 கிலோ வெடிமருந்து மீட்கப்பட்டதாக யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை குறித்த வெடிமருந்து மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இராணுவப் புலனாய்வாலருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது Read more Nov 19 28 புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் குற்றப்பத்திரம் வாசிப்பு- Posted by plotenewseditor on 28 November 2019 Posted in செய்திகள் யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சுவிஸ் குமாரை பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் இரண்டாவது பிரதிவாதியின்றி விளக்கத்தை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து நாளை குற்றப்பத்திரம் வாசிக்கப்படவுள்ளது. Read more Nov 19 28 யாசகம் செய்வோருக்கு எதிராக நடவடிக்கை- Posted by plotenewseditor on 28 November 2019 Posted in செய்திகள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் அரசாங்கத்தால் நடத்தப்படும் புதிய பாதுகாப்பு மற்றும் நகர அழகுபடுத்தும் திட்டத்திற்கு அமைய கொழும்பு மற்றும் முக்கிய நகரங்களில் யாசகம் பெறுபவர்களை தடுப்பு நிலையங்களுக்கு அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் இதற்கான ஆலோசனைகளும் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கில் யாசகம் பெறுவோர் உள்ளனர். Read more Nov 19 28 20 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்- Posted by plotenewseditor on 28 November 2019 Posted in செய்திகள் புதிய 20 அமைச்சுக்களின் புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்றுபிற்பகல் ஜனாதிபதி காரியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டது. அதனடிப்படையில் அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு, எஸ்.எம் மொஹமட் – சுற்றாடல் மற்றும் விமான சேவைகள் ஆர்.டபுள்யூ.ஆர் பேமசிறி – வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் ஜே.ஜே ரத்னசிறி – நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்த்திருத்தம் ரவிந்திர ஹேவாவித்தாரண – பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில் Read more Nov 19 28 இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மற்றுமொரு புதிய விமான சேவை- Posted by plotenewseditor on 28 November 2019 Posted in செய்திகள் இந்தியாவின் பிரபல விஸ்தாரா எயார் லயன்ஸ் நிறுவனமானது இலங்கைக்கான புதிய விமான சேவை ஆரம்பித்துள்ளது. இந்தியாவின் மிகச்சிறந்த முழு சேவைகளை காவிச் செல்லும், டாடா சகோதரர்கள் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் கூட்டு முயற்சியுடன் விஸ்தாரா நிறுவனம் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ளது. Read more
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads By Category: எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம் சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும் Current Issue தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | சிறுகதை | அனுபவம் எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே Tamil Unicode / English Search Comments Nirmala Shankar (United States) Comments Home Comments by Nirmala Shankar (3) Article: சேர்ந்திருந்தால் இருவருக்கும் மகிழ்ச்சி Category: அன்புள்ள சிநேகிதியே (Oct 2019) Posted On: Oct 02, 2019 The problem is with your mind set. She seems to be a normal girl. Today's girls are more friendly and have a clear mind on their duties. Get out of you serial mother in law mode, become friendly with her. Your son and also you will be happy. They listen to any thing said with love.
Kollywood Talkies | தமிழ் சினிமா செய்தி காமெடி நடிகர் தவக்களை காலமானார் - Kollywood Talkies காமெடி நடிகர் தவக்களை காலமானார் - Kollywood Talkies முகப்பு திரை செய்திகள் திரைப்படம் திரை விளம்பரம் பாடல் வெளியீடு பிரபலங்கள் சினிமா தேடல் சூடான செய்திகள் அஜித்தின் வலிமை, சிம்புவின் மாநாடு, மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் கொரோனா பீதியில் படப்பிடிப்புகள் நிறுத்தம் நாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த் டப்பிங் பேச மறுப்பு காமெடி நடிகர் யோகி பாபுவின் மேல் தயாரிப்பாளர் தரப்பில் புகார் ! ரியல் மீ மொபைல் போன் விளம்பர தூதராக சல்மாகான் ஒப்பந்தம் ! » செய்தி » விளம்பரங்களுக்கு » தொடர்புகளுக்கு முகப்பு திரை செய்திகள் திரைப்படம் திரை விளம்பரம் பாடல் வெளியீடு பிரபலங்கள் சினிமா தேடல் Cine Events காமெடி நடிகர் தவக்களை காலமானார் தொகுப்பு Ruth Jerry February 26, 2017 169 Views இயக்குனர் பாக்யராஜ் நடித்த முந்தானை முடுச்சு படத்தின் மூலம் காமெடி நடிகனாக அறிமுகமான காமெடி நடிகர் சிட்டிபாபு என்ற தவகளை வயது 42.இவர் நேற்று காலை வடபழனியில் உள்ள தனது இல்லத்தில் மரணமடைந்தார். அவருக்கு போதுமணி என்ற மனைவி இருக்கிறார். குழந்தைகள் கிடையாது. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் ஆகிய 6 மொழிகளில் நடித்துள்ளார் மற்றும் இதுவரை 496 படங்கள் மற்றும் டிவி தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது இறுதிச்சடங்கு இன்று காலை 10 மணிக்கு ஏ.வி.எம் சுடுகாட்டில் நடைபெற உள்ளது. Ruth Jerry சொற்கள் அத்தகைய பெரிய சக்தியைக் கொண்டுள்ளன. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது எழுத்தாளர்களின் கையில் உள்ளது.
விசைஊட்டிய நடைமேடையீலிருந்து பெறப்படும் பின்னூட்டின் மூலம் நிற்பதற்கான உடல்சமன் மேம்படும், ஆனால் தனித்து செயல்படும் அதன் தாக்கம் தெளிவற்று உள்ளது. பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டோர் நிற்கும்போது உடல் சமன்பாடு சார்ந்த பிரச்சனைகளை பெரும்பாலும் சந்திக்கின்றனர். நிற்கும் போது ஏற்படும் உடல்சமன் சார்ந்த பிரச்சனைகளுக்கு சமன் சீர் செய்யும் பயிற்சிகள் இயன்முறை சிகிச்சையாளர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. சில வேளைகளில் விசைஊட்டிய நடைமேடையீலிருந்து பெறப்படும் பின்னூட்டில்அளிக்கப்படும் பயிற்சிகள் ஒருவருடைய நிற்கும் நிலையை உணர்த்துகிறது. ஏழு மருத்துவ ஆராய்ச்சிகளின் முடிவுகள், விசைஊட்டிய நடைமேடையீலிருந்து பெறப்படும் பின்னூட்டின் மூலம் செய்யும் பயிற்சிகள் பாதிக்கப்பட்டோரின் நிற்பதற்கான சமனை மேம்படுத்துகிறதேயன்றி அவர்களின் அன்றாட செயல்களையோ அல்லது தனித்து செயல்படும் திறனையோ அதிகரிக்கவில்லை என்று தெரிவிக்கின்றன. மொழிபெயர்ப்பு குறிப்புகள்: மொழி பெயர்ப்பு: மோகனகிருஷ்ணன் ஜெகதேவன், பானுமதி மோகனகிருஷ்ணன், சலஜா . இரா, ஜெபராஜ் பிளட்சர். அ. ச மற்றும் சி.இ.பி.என்.அர் குழு. Tools Information Share facebook twitter whatsapp email வெளியீடு: 21 ஜனவரி 2009 ஆசிரியர்கள்:: Barclay-Goddard RE, Stevenson TJ, Poluha W, Moffatt M, Taback SP முதன்மை திறனாய்வுக்குழு: Stroke Group முழு திறனாய்வையும் பார்க்க காக்ரேன் நூலகம் ► அச்சிடு சான்று Barclay-Goddard RE, Stevenson TJ, Poluha W, Moffatt M, Taback SP. Force platform feedback for standing balance training after stroke. Cochrane Database of Systematic Reviews 2004, Issue 4. Art. No.: CD004129. DOI: 10.1002/14651858.CD004129.pub2
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை. தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட சின்னாம்பாளையம், கே.நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் தலா, ஒருவர்; வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பூசாரிப்பட்டியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட நல்லட்டிபாளையம், சொக்கனுார், வடசித்துார் ஆரம்ப முழு செய்தியை படிக்க Login செய்யவும் பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை. தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட சின்னாம்பாளையம், கே.நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் தலா, ஒருவர்; வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பூசாரிப்பட்டியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட நல்லட்டிபாளையம், சொக்கனுார், வடசித்துார் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று தொற்று பரவல் இல்லை. வால்பாறை தாலுகாவிலும், நேற்று யாருக்கும் தொற்று பரவல் உறுதி செய்யப்படவில்லை. பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை. தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட சின்னாம்பாளையம், கே.நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...! சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் For technical contact : webmaster@dinamalar.in இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள். Allow ads on Dinamalar Back AdBlock Adblock Plus uBlock Origin Other 1. Click the AdBlock icon in the browser extension area on the upper right corner. 2. Select Don't run on pages on this site. 3. In the "Don’t run AdBlock on..." dialog box, select Exclude. The AdBlock icon changes to a “thumbs up” image. 1.Click the Adblock Plus icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button so that it slides left. 3. Click the Refresh button. 1. Click the uBlock Origin icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button. It turns gray, indicating that ads on that site are no longer being blocked. 3. Click the “Refresh” button 1. Click the icon of the ad blocker extension installed on your browser. You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed. 2. Follow the instructions for disabling the ad blocker on the site you’re viewing. You may have to select a menu option or click a button. 3. Refresh the page, either by following prompts or clicking your browser’s “Refresh” or “Reload” button. Refresh page உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join Telegram Channel for FREE Advertisement ரோடுகளின் மையத்தடுப்புகளில் மின் விளக்கு: குழி தோண்டும் பணிகள் தீவிரம் முந்தய டெல்டா மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்: கிணத்துக்கடவு சங்கத்தினர் வலியுறுத்தல் அடுத்து » பொது முதல் பக்கம் » தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்! உங்கள் கருத்தைப் பதிவு செய்ய (Press Ctrl+g to toggle between English and Tamil) My Page Login : Log in Forgot password ? New to Dinamalar ? Create an account கருத்து விதிமுறை Submit × வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். Close X Prev « முந்தய ரோடுகளின் மையத்தடுப்புகளில் மின் விளக்கு: குழி தோண்டும் பணிகள் தீவிரம் Next அடுத்து » டெல்டா மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்: கிணத்துக்கடவு சங்கத்தினர் வலியுறுத்தல் சினிமா → கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் → கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு → கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் → தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் → தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
திருவொற்றியூர்-சென்னை திருவொற்றியூர் உணவு வழங்கல் துறை உதவி கமிஷனர் நிர்வாகத்தின் கீழ், 130க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள் உள்ளன. இங்கு, ஒரு லட்சத்திற்கும் அதிகமான குடும்ப அட்டைத்தாரர்கள், பொருட்கள் வாங்கி வருகின்றனர்.இந்நிலையில், புதிய ஸ்மார்ட் கார்டு வாங்கித் தருவதாக சிலர், பொதுமக்களிடம் ஆவணங்கள், பணம் வாங்கி மோசடியில் ஈடுபடுவதாக தொடர் புகார்கள் வந்தன.இது முழு செய்தியை படிக்க Login செய்யவும் திருவொற்றியூர்-சென்னை திருவொற்றியூர் உணவு வழங்கல் துறை உதவி கமிஷனர் நிர்வாகத்தின் கீழ், 130க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள் உள்ளன. இங்கு, ஒரு லட்சத்திற்கும் அதிகமான குடும்ப அட்டைத்தாரர்கள், பொருட்கள் வாங்கி வருகின்றனர்.இந்நிலையில், புதிய ஸ்மார்ட் கார்டு வாங்கித் தருவதாக சிலர், பொதுமக்களிடம் ஆவணங்கள், பணம் வாங்கி மோசடியில் ஈடுபடுவதாக தொடர் புகார்கள் வந்தன.இது குறித்து, உணவு வழங்கல் உதவி கமிஷனர் கூறியதாவது:புதிய மின்னணு குடும்ப அட்டை தொடர்பான மனுக்கள் மீது, நுகர்வோரிடம் விசாரணைக்கு வரும் அலுவலர்களிடம், உரிய அடையாள அட்டை கோருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. துறைக்கு தொடர்பில்லாத நபர்கள், விசாரணை என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவதாக தகவல் வருகிறது. அதனால், அடையாள அட்டை இல்லாத நபர்களிடம், எந்த தகவலும் தெரிவிக்க வேண்டாம். சந்தேகம் ஏற்படின், சம்பந்தப்பட்ட நபரை போலீசில் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.மேலும் இது, ஒரு அறிவிப்பாக அச்சடிக்கப்பட்டு, அனைத்து நியாய விலைக் கடைகளிலும், முன்பக்கம் ஒட்டப்பட்டுள்ளது. திருவொற்றியூர்-சென்னை திருவொற்றியூர் உணவு வழங்கல் துறை உதவி கமிஷனர் நிர்வாகத்தின் கீழ், 130க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள் உள்ளன. இங்கு, ஒரு லட்சத்திற்கும் அதிகமான குடும்ப ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...! சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் For technical contact : webmaster@dinamalar.in இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள். Allow ads on Dinamalar Back AdBlock Adblock Plus uBlock Origin Other 1. Click the AdBlock icon in the browser extension area on the upper right corner. 2. Select Don't run on pages on this site. 3. In the "Don’t run AdBlock on..." dialog box, select Exclude. The AdBlock icon changes to a “thumbs up” image. 1.Click the Adblock Plus icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button so that it slides left. 3. Click the Refresh button. 1. Click the uBlock Origin icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button. It turns gray, indicating that ads on that site are no longer being blocked. 3. Click the “Refresh” button 1. Click the icon of the ad blocker extension installed on your browser. You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed. 2. Follow the instructions for disabling the ad blocker on the site you’re viewing. You may have to select a menu option or click a button. 3. Refresh the page, either by following prompts or clicking your browser’s “Refresh” or “Reload” button. Refresh page உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join Telegram Channel for FREE Advertisement மழை நெற்பயிர்கள் நாசம் முந்தய கோவிலுக்குள் சென்று வந்த உணர்வு மணிவேலு ஓவியங்களால் பிரமிப்பு அடுத்து » பொது முதல் பக்கம் » தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்! உங்கள் கருத்தைப் பதிவு செய்ய (Press Ctrl+g to toggle between English and Tamil) My Page Login : Log in Forgot password ? New to Dinamalar ? Create an account கருத்து விதிமுறை Submit × வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். Close X Prev « முந்தய மழை நெற்பயிர்கள் நாசம் Next அடுத்து » கோவிலுக்குள் சென்று வந்த உணர்வு மணிவேலு ஓவியங்களால் பிரமிப்பு சினிமா → கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் → கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு → கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் → தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் → தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
இயற்கையோடு வாழ்ந்திடு – இயற்கை வளங்களையெல்லாம் நேசிக்க தவறிவிட்டோம் STUDIO GREEN & Thirukumaran Entertainment தயாரிப்பில் GV பிரகாஷ் குமார் நடிக்கும் “ரிபெல்” படம் பூஜையுடன் துவங்கியது பெரியவாளும், யோகியும் பேசாமல் பேசியது என்ன? – மகா பெரியவாளும் யோகியாரும் சந்தித்த ஓர் அற்புதத் தருணம் 10 வயதில் டீ கிளாஸ் கழுவிய சிறுவன் இன்று பல ஹோட்டல் கிளைகளுக்கு அதிபதி வெள்ளப்பெருக்கால் வேதனைப்படும் சென்னை ; என்ன செய்யலாம்? யார் பொறுப்பு ? ஆபத்துக்கு உதவ யார் வருவார்கள் Tagged: dc October 7, 2021 by Nandha Kumar · Published October 7, 2021 · Last modified October 8, 2021 இறுதிக் கட்டத்தை நெருங்கிய ஐபிஎல் தொடர் Follow: Popular Posts Recent Posts STUDIO GREEN & Thirukumaran Entertainment தயாரிப்பில் GV பிரகாஷ் குமார் நடிக்கும் “ரிபெல்” படம் பூஜையுடன் துவங்கியது 3 Dec, 2021 பெரியவாளும், யோகியும் பேசாமல் பேசியது என்ன? – மகா பெரியவாளும் யோகியாரும் சந்தித்த ஓர் அற்புதத் தருணம் 2 Dec, 2021 10 வயதில் டீ கிளாஸ் கழுவிய சிறுவன் இன்று பல ஹோட்டல் கிளைகளுக்கு அதிபதி 2 Dec, 2021 வெள்ளப்பெருக்கால் வேதனைப்படும் சென்னை ; என்ன செய்யலாம்? யார் பொறுப்பு ? ஆபத்துக்கு உதவ யார் வருவார்கள் 27 Nov, 2021 நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேசன் மூலம் பயின்ற மலைவாழ் பழங்குடி இளைஞர் பன்னீர் உலக சாதனை 20 Nov, 2021 தமிழக மாணவர்களின் அறிவியல் கண்டு பிடிப்புகளின் காட்சியமைப்பும் கருத்தரங்கும்! 17 Jul, 2019 திருப்பூர் மாவட்ட அளவிலான அறிவியல் பரப்புதல் மற்றும் வளைய சூரிய கிரகண பயிற்சிப் பட்டறை! 6 Oct, 2019 விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது மஸ்கட் தமிழ் சங்கம் விருது கொடுத்துச் சிறப்பித்தது! 4 Nov, 2019 தமிழ்நாடு ஆளில்லா விமானக்கழம் மூலம் ஐம்பதாயிரம் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு – டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை
பட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல் அணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள் Recent முழு மதுவிலக்கு..! ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு? ஜான் பாண்டியன் கே... சசிகலா நடத்திய ருத்ர ஜபம்..! ஸ்படிக லிங்க பூஜை..! அதிகாலையில் அதிர்ந... என் வழி தனி வழி..! ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..! அதிமுகவில் அடுத்தது எ... இல்லை நான் வரமாட்டேன்..! ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி! ... இனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்..! திமுகவில் உருவான நால்வர் அணி.... லைஃப் ஸ்டைல் மல்லிகைப்பூ இட்லி... வாடிப்போகாத காயகறிகள்..! சூப்பர் கிச்சன் டிப்ஸ்! December 25, 2019 | December 25, 2019 | Reported By : Geetha கோதுமையை நன்கு கழுவி, நான்கு மணி நேரம் ஊற வைத்து, உலர்த்தி பின் மிஷினில் அரைத்து சப்பாத்தி செய்தால் மிகவும் மிருதுவான சப்பாத்தி கிடைக்கும். தேங்காயை துண்டுகளாக வெட்டி, ஒரு மணி நேரம் ஃப்ரீஸரில் வைத்து விடுங்கள். பின்னர் மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் விடாமல் சில விநாடிகள் சுற்றினால், துருவியது போலவே பூப்பூவாக வந்துவிடும். வாழைப்பு+, வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கினால் உடனே அவற்றை மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். இதனால் வாழைப்பு+, வாழைத்தண்டின் நிறம் மாறாது, கறை பிடிக்காது, துவர்ப்பு நீங்கும். காய்கறிகள் வாடிவிட்டால் தூக்கி எறியாமல் அதில் சில துளி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்துவிட்டால், சில மணி நேரத்தில் காய்கறிகளின் வாடிய தன்மை மாறி புதியதாக இருக்கும். பாலாடை, தயிராடைகளை பாட்டிலில் போட்டு குலுக்க வெண்ணெய் மற்றும் மோர் ஒரே சமயத்தில் கிடைக்கும். கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை வாங்கியவுடன் வாழைப் பட்டையில் சுற்றி வைக்கும்போது வாடாமல் இருக்கும். வெந்தயக்கீரையை சமைக்கும்போது சிறிது வெல்லம் சேர்த்தால் அதிலுள்ள கசப்பு சுவை நீங்கிவிடும். இட்லிக்கு மாவு அரைக்க, சுடு தண்ணீரில் அரிசியை ஊற வைத்தால் பத்து நிமிடத்தில் அரிசி ஊறிவிடும். அரிசியோடு ஐந்தோ, ஆறோ சோயா பீன்ஸை ஊறவைத்து அரைத்தால் இட்லி மல்லிப்பூப் போல் மிருதுவாக இருக்கும். காபி, டீ கொடுக்கும் பீங்கானில் கறை படிந்தால் ஒரு பெரிய வெங்காயத்தினை வெட்டி நன்கு தேய்ந்தால் கறைகள் போய்விடும். பிளாஸ்கில் உள்ள துர்நாற்றம் போக வினிகர் போட்டு கழுவலாம். வாழைக்காயை நறுக்கும் முன் கைகளில் உப்பு தூளை தடவிக் கொண்டால் கைகளில் பிசுபிசுப்பு ஒட்டாது. கேரட் அல்வா செய்யும்போது கேரட்டை கொதிக்கும் நீரில் போட்டு, பின்பு குளிர்ந்த நீரில் சிறிது நேரம் வைத்துவிட்டு தோலை சீவினால் மிகச் சுலபமாக தோல் நீங்கிவிடும். புதினா, தக்காளி இரண்டையும் நன்கு அரைத்து பஜ்ஜி மாவுடன் கலந்து செய்தால் பஜ்ஜி மணமாகவும், ருசியாகவும் இருக்கும். துவையல் அரைக்கும்போது வழக்கமாக வைத்து அரைக்கும் பொருட்களுடன் வறுத்த பயறு வகைகள் சேர்த்து அரைத்தால் சுவை கூடும். எலுமிச்சை ஊறுகாய் போடும்போது ஓரிரு இஞ்சித் துண்டுகளை வதக்கி அதனுடன் போட்டு வைத்தால் ஊறுகாயின் சுவை கூடும். ஒரு கப் நல்லெண்ணையை சூடாக்கி, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் ஓமம், இரண்டு வெற்றிலை, சிறிய வில்லை அளவு கற்பூரத்தை நசுக்கி சேர்த்து மறுபடியும் சூடு செய்து வைக்கவும். மறுநாள் இந்த எண்ணையை தலைக்கு தேய்த்து 20 நிமிடங்கள் ஊற விட்டு குளித்தால் ஜலதோஷம் பிடிக்காது. புத்துணர்வும் கிடைக்கும். டீ தயாரிக்கும்போது டீ தூளுடன் ஐந்து புதினா இலைகளைப் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் பித்தம் நீங்கும். மாதுளம் பூவை பாலில் போட்டு கொதிக்க வைத்து பூ வெந்ததும் எடுத்துவிட்டு ஆறியதும் பாலில் சிறிது தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தவும். இதுபோல தொடர்ந்து எட்டு நாட்களுக்கு அருந்தினால் வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும். Share Via : Popular முழு மதுவிலக்கு..! ஸ்டாலின் வாக்குறுதி என்ன ஆச்சு? ஜான் பாண்டியன் கே... சசிகலா நடத்திய ருத்ர ஜபம்..! ஸ்படிக லிங்க பூஜை..! அதிகாலையில் அதிர்ந... என் வழி தனி வழி..! ஆட்டத்தை துவங்கிய ஓபிஎஸ்..! அதிமுகவில் அடுத்தது எ... இல்லை நான் வரமாட்டேன்..! ஸ்டாலினை சந்திக்காமல் தவிர்க்கும் கனிமொழி! ... இனி ஸ்டாலினுக்கு எல்லாம் இவங்க தான்..! திமுகவில் உருவான நால்வர் அணி.... Trending Political news Tamil Crime News Tamil Cinema News Tamil Lifestyle news Useful Links Home All News Contact Advertise with us About Us Times Tamil News present you the most latest trending news in tamil across Chennai, tamilnadu, India, Asia and World. Read top tamil seithigal, breaking tamil news, tamil movie gossips, fashion, lifestyle, and Watch hot actress photos, videos and live headlines coverage of all the breaking news, and all latest events on our site. Don't Wait for your morning newspapers! get all tamil crime news, Political news, Tamil Cinema news, Sports news, regional news through Times Tamil News instantly.Stay updated with authentic tamil news portal - Times Tamil News. 2021 © All Rights Reserved @ Times Tamil News | Terms & Condition | Privacy Policy | About Us | Contact Us Advertise with us