text
stringlengths
101
471k
கடந்த 7 ஆண்டுகளில் செம்மரக்கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் 31 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஆந்திர மாநில செம்மர கடத்தல் சிறப்பு தடுப்பு பிரிவு ஐஜி காந்தாராவ் கூறி உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பாலகுறி கிராமத்தில் செம்மரம் கடத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் செம்மரக் கடத்தலுக்கு துணை புரியாமல் இருக்க வேண்டும் என்று கிராம மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆந்திர மாநிலத்தின் செம்மரக் கடத்தல் சிறப்பு தடுப்பு பிரிவு ஐஜி காந்தாராவ், செம்மரக்கடத்தல் முயற்சியின் போது போலீசார் நடத்தும் என்கவுண்டரில் 7 ஆண்டுகளில் இதுவரை 31 பேர் கொல்லப்பட்டு உள்ளதாகவும், அதில் 2 பேர் அடையாளம் தற்போது வரை தெரியவில்லை என்றும் கூறினார். Tags: தமிழகம் About Unknown தமிழகம் கருத்துகள் இல்லை இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom ) Author Details Post Bottom Ad ஆன்மிகம் 5/ஆன்மீகம்/post-per-tag ஃபேஸ்புக் டெலிகிராம் புகைப்படங்கள் 5/புகைப்படங்கள்/feat-slider பிரபலமான செய்திகள் உடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு. அமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்... மத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா? பாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்... சீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம். உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ... தைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து. கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத... புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள். வார விடுமுறையையொட்டி புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். புதுச்சேரியி... இந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை? எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க... கல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு? தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில... முகிலன் 'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார... புதிய மத்திய அமைச்சர்கள் யார்? உத்தேசப் பட்டியல். உள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி... தலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம். நாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...
தமிழகத்தில் அனைவரும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள தயாராக உள்ளனர். ஆனால் தடுப்பூசி தட்டுபாடாக உள்ளது என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அமைச்சர் மா சுப்பிரமணியன் Advertising Advertising சென்னை: தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு நெஞ்ச நோய் மருத்துவமனையில் காசநோய் கிருமியை கட்டுப்படுத்தும் ஆய்வகத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தாம்பரம் காச நோய் மருத்துவமனையில் தாம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.90 லட்சம் செலவில் காசநோய் கண்டுபிடிப்பு எக்ஸ்ரே வாகனம் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி மற்றும் ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்ட காசநோய் ஆய்வகத்தை திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து காசநோயை அகற்ற அரசு முயற்சி எடுத்து வருகிறது. இந்தியாவில் காசநோயால் பாதிக்கப்படவர்கள் 25 சதவீதம் பேர் உள்ளனர். 2025-ல் நோய் இல்லா தமிழ்நாடு உருவாக்கப்பட்ட மருத்துவர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ரோட்டரி மாவட்டம் 3231 மற்றும் ரோட்டரி உலக பங்களிப்பு மற்றும் ரோட்டரி தாம்பரம் மத்திய சங்கத்தின் மூலமாக நடமாடும் எக்ஸ்ரே காசநோய் கண்டுபிடிப்பு வாகனம் ரூ.90 லட்சம் செலவில் அதிநவீன காசநோய் கண்டுபிடிப்பு வசதியுடன் தயாரிக்கப்பட்டு இன்று மக்கள் பயன்பெறும் வகையில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மிகவும் திறனுள்ள டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய எக்ஸ்ரே கருவி இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு ஊடுகதிர் எக்ஸ்ரே படம் எடுத்தவுடன் அந்த ஊடுகதிர் படம் வாகனத்தில் உள்ள டிஜிட்டல் திரையில் தோன்றும். அதை அங்கேயே பார்த்து நோயை கண்டறியலாம். மருத்துவர்கள் இல்லாத சூழ்நிலையில் இந்த பிம்பம் மின்னஞ்சல் மூலமாக தொலைதூரத்தில் இருக்கும் மருத்துவர்களுக்கு அனுப்பி அதை ஆய்ந்தறியும் வசதியும் இந்த வாகனத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தடுப்பூசி இல்லை. கையிருப்பில் 88 ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே உள்ளது. தடுப்பூசி தொடர்ச்சியாக தமிழகத்திற்கு வேண்டும் என்ற கோரிக்கை முதல்-அமைச்சர் மத்திய அரசுக்கு வைத்துள்ளார். 90 சதவீதம் தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் தமிழகத்தில் அனைவரும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள தயாராக உள்ளனர். ஆனால் தடுப்பூசி தட்டுபாடாக உள்ளது. மத்திய அரசு கிடங்கில் இருந்து 2 லட்சம் தடுப்பூசிகளை தற்போது வழங்குவதாக மத்திய சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. தடுப்பூசி வேண்டும் என தமிழக மக்கள் போராட வேண்டாம். அவர்களுக்கான தடுப்பூசி தமிழக அரசு உறுதி செய்யும். தமிழகத்தில் டெல்டா வைரஸ் சோதனை ஆய்வு கூடம் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் எம்.எல். ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவ கண்காணிப்பாளர் ஸ்ரீதர் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர். Related Tags : Minister M Subramaniam | CoronaVaccine | அமைச்சர் மா சுப்பிரமணியன் | கொரோனா தடுப்பூசி மேலும் மாவட்டச்செய்திகள் அதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது 142 அடியை எட்டிய முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்: 152 அடி உயர்த்த நடவடிக்கை- அமைச்சர் துரைமுருகன் டிசம்பர் 15-ந்தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்கக் கூடாது: அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தூர் பிலிம் இண்டெர்நேஷனல் சார்பாக டி.டி ராஜா தயாரித்துள்ள படம் ராஜவம்சம். சசிகுமார், நிக்கி கல்ராணி நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் கதிர்வேலு எழுதி இயக்கியுள்ளார். இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் பேசியதாவது, "இயக்குநர் கதை சொன்னதும் படம் பண்ண ஹீரோவிடம் டேட் கேட்டோம். அவரும் உடனே டேட் கொடுத்தார். அடுத்து இவ்வளவு நடிகர்களை வைத்து எப்படி படம் எடுப்பது என்று யோசித்தேன். ஆனால் இயக்குநர் "சார் எடுத்துவிடலாம் சார்" என்று நம்பிக்கையாகச் சொன்னார். இந்தப்படத்தில் ஹீரோவாக சசிகுமார் நடிக்கிறார் என்றவுடன் மற்ற அனைத்து நடிகர்களும் யோசிக்காமல் டேட் கொடுத்தார்கள். இப்படத்தில் ஒத்துழைத்து கொடுத்து நடித்தவர்களுக்கும், பணியாற்றியவர்களுக்கு என் நன்றி" என்றார் நடிகர் விஜயகுமார் பேசியதாவது, "ராஜ வம்சம்..இந்தப்படம் ஒரு ராஜவம்சம். சசிகுமார் சிறந்த நடிகர் சிறந்த பண்பாளர், சிறந்த தம்பி. அவரைப்போல ஒருவரை நான் பார்த்ததே இல்லை. நிக்கி கல்ராணி நல்ல நடிகை. சிறப்பா நடிச்சிருக்காங்க. இத்தனை கலைஞர்களை வைத்து வேலை வாங்கும் திறமை கதிர்வேலு அவர்களுக்கு இருக்கிறது. இந்தப்படம் பெரிய குடும்பப் படம். தமிழ்நாட்டில் எல்லாக் குடும்பங்களும் பார்க்க கூடியப்படமாக இருக்கும். இந்தப்படத்தில் பங்குபெற்ற அனைத்து கலைஞர்களும் பாராட்டுக்குரியவர்கள்" என்றார் ஆர்.கே செல்வமணி பேசியதாவது, "இந்தப்படத்தின் இயக்குநர் கதிர்வேலுக்கு என் பெரிய வாழ்த்துகள். ஏன்னா இவ்வளவு நடிகர்ளை ஒன்றாக வைத்து என்னால் ஒரு போட்டோ கூட எடுக்க முடியாது. கதிர்வேலு நல்ல திறமையாளர். ஒரு படத்தில் ஹீரோ அஸ்ஜெஸ்ட் பண்ணிப் போகலன்னா படமே எடுக்க முடியாது. அதற்கு சசிகுமாருக்கு நன்றி. தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் சார்பாக இங்கு வந்து நல்ல விசயங்களைப் பகிர்ந்துகொண்டார் அவருக்கும் நன்றி. இங்கு இந்தத் தயாரிப்பாளரை நான் இப்போது தான் பார்த்தேன் என்று விஜயகுமார் சார் சொன்னார். அந்த வகையில் இயக்குநர் கதிர்வேலு கொடுத்து வைத்தவர். இந்தப்படம் செண்டிமெண்டாக நிச்சயம் ஓடும் என்று தோன்றுகிறது. திட்டமிட்டு படத்தை முடித்திருக்கிறார் கதிர். இவ்வளவு பிரம்மாண்டமான படத்தை 50 நாளில் முடித்துள்ளது பெரிய விசயம். படப்பிடிப்பில் உயிரிழப்புகளை இனி தவிர்க்க வேண்டும். அதற்கு தயாரிப்பாளர்கள் மருத்துவப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" என்றார் நடிகர் ராதாரவி பேசியது , "விழாவில் இருக்கும் அத்தனை பேருக்கும் என் வணக்கம். ராதாரவி பேசினால் சர்ச்சை என்கிறார்கள். என் பேச்சு புரியாதவர்களுக்குத் தான் சர்ச்சை. இந்தச் சகோதரர் கதிர்வேலு ரொம்பப் போராடி வந்திருக்கிறார். தயாரிப்பாளரை நான் இன்று தான் பார்க்கிறேன். சசிகுமார் தான் இந்தப்படத்தின் தயாரிப்பாளர். ரொம்ப தங்கமான பிள்ளை. இப்ப நிறைய நடிகர்கள் பாடிகாடோடு வருகிறார்கள். சசிகுமார் ரொம்ப எளிமையாக இருக்கிறார். கேமராமேன் எங்களை போகஸ் பண்ணவே இல்லை. கேமராவுக்கு முன் யார் வருகிறார்களோ அவர்களை எடுத்துக் கொண்டார். இந்தக் கூட்டத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு நடித்தேன். ஆனால் சந்தோஷமாக நடித்தேன். சசிகுமாருக்கு இது செகண்ட் லைப் என்றார்கள். அவருக்கு இப்போது இருப்பதே நயிஷ் லைப் தான். நிக்கி கல்ராணி நல்லா நடிச்சிருக்கு. அவருக்கு எல்லாக் கேரக்டருக்கும் பொருத்தமான நடிகை. அவருக்கு எல்லா மொழியும் தெரியும் என்றார்கள். அது நல்ல விசயம். நானும் இந்தி கற்றிருந்தால் இன்னைக்கு அங்கே எனக்குப் பெரிய இடம் கிடைத்திருக்கும். இந்தப்படத்தை குடும்பத்தோடு வந்து பாருங்கள்" என்றார் சாம் சி எஸ் பேசியதாவது, "வில்லேஜ் படங்கள் எல்லாம் எனக்கு வருவதே இல்லை.கூட்டுக் குடும்பத்தின் வேல்யூ எல்லாம் எனக்குத் தெரியும். எனக்கு கம்பம் அருகே தான் சொந்த ஊர். அதனால் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை படமாக்கும் படத்தில் வேலை செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்கு இயக்குநர் கதிர்வேலுக்கு நன்றி" என்றார் நிக்கி கல்ராணி, நான் முழுக்க முழுக்க சிட்டில வளர்ந்த பொண்ணு. அதனால் கிராம கல்ச்சர் எனக்குப் புது அனுபவமாக இருந்தது. நல்ல அனுபவத்தைத் தந்த கதிர்வேலு சாருக்கு நன்றி. சூட்டிங்ல நல்ல எக்ஸ்பீரியன்ஸ். இந்த ராஜவம்சம் இவ்வளவு க்ராண்டியரா இருக்குன்னா மூன்று பேர்தான் காரணம். நடிகர் சசிகுமார் சார், தயாரிப்பாளர் ராஜா சார், இயக்குநர் கதிர்வேலு இவர்கள் மூன்றுபேரும் தான். படத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி"என்றார் இயக்குநர் கதிர்வேலு பேசியதாவது, "சசிகுமார் சார் கதையைக் கேட்டுட்டு ரொம்ப நல்லாருக்குடா என்றார். தயாரிப்பாளரும் கதை கேட்ட உடனே என்னை கமிட் செய்தார். இந்தப்படம் இன்னைக்கு இப்படியொரு ஸ்டேஜ்ல இருக்கான்னா அதுக்கு முழு முதல் காரணம் ராஜா சார். நான் யோசிச்ச விசயத்தை ஸ்கிரீன்ல கொண்டு வர ராஜா சார் ரொம்ப சப்போர்ட் பண்ணார். என்னோட ஆர்டிஸ்ட் எல்லாரும் நன்றாக உதவி செய்தார்கள். யாரும் என்னிடம் கதையே கேட்கவில்லை. சசிகுமார் நிக்கி கல்ராணி இருவரிடம் மட்டும் தான் முழுக்கதையையும் சொன்னேன். கேமராமேன் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணார். அப்படியே தான் எடிட்டரும். சாம் சி எஸ் என் டார்லிங். அடங்கமறு இயக்குநர் கார்த்திக் தான் சாம் சி எஸ்ஸை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் பக்காவாக பி.ஜி எம் போட்டிருக்கார். இந்தப்படம் ரொம்ப ரொம்ப நல்ல படம். அனைவரும் சப்போர்ட் பண்ணுங்க" என்றார் நடிகர் சசிகுமார் பேசியதாவது, "வந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றி. ராஜவம்சம் கூட்டுக் குடும்பத்தைப் பற்றிச் சொல்ற படம். அதைக் குடும்பமாகப் பார்க்கும் போது நம்ம எல்லாருக்கும் பிடிக்கும். நாற்பது நடிகர்கள் இருக்கிற படம்னா பட்ஜெட் ஜாஸ்தியாக இருக்குமே என்று நினைத்தோம். ஆனால் தயாரிப்பாளர் ராஜா சார் ரொம்ப நம்பிக்கையாக இருந்தார். இந்தப்படம் ஒரு நல்ல பீல் குட் படமாக இருக்கும். பெரியபெரிய சீனியர் நடிகர்களோடு நடித்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இவ்ளோ பேரையும் கேண்டில் பண்ணிய கதிரும் கேமராமேனும் பாராட்டுக்குரியவர்கள். பர்ஸ்ட் இந்த டீம் பார்ம் ஆகுறதுக்குள் கொஞ்சம் சிரமமாக இருந்தது. பின் போகப்போக சரியாகிவிட்டது. இந்தப்படத்தில் எல்லாருமே அழகாக இருக்கிறார்கள். சினிமாவிலும் நாம் ஒரு குடும்பமாகத் தான் இருக்க வேண்டும்" என்றார் Share on Facebook Bookmark on Delicious Tweet it! Digg it! Share this on Technorati Share it on Reddit Share on FriendFeed Post on Google Reader Share to MySpace Share it on StumbleUpon 0 comments: Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) Pageviews Search Recent Updates Recent Posts Widget Your browser does not support JavaScript! Contact Us Name Email * Message * Copyright 2020 © Search Tamil Movie and Blogger About We are a young and passionate kollywood news and gallery development team from Chennai. We take pride in our work. Every features was display here to viewers easy and worth the time spent on our portal.
அசல் படம் பரவாயில்லை. அஜீத் கம்பீரம்; பாவ்னா அழகு. வசன‌ங்களில் மீண்டும் பழைய சரண் மீண்டிருக்கிறார். பிரபு, யூகி சேது, சுரேஷ், சமீரா ரெட்டி பரிதாபம். செல்வேந்திரன் இப்படத்திற்கு "டொட்டடொய்ங்ங்...!" என்று ஒன்றை வார்த்தை விமர்சனம் எழுதியிருந்ததை மிக ரசித்தேன் (படத்தில் வரும் ஒரு பாடலின் துவக்கம்). அந்த சத்தம் காதுகளுக்குக்கு பிடித்தமானதாய் இருப்பதைப் போல் இப்படமும் கண்களுக்கு பிடித்தமானதாய் இருக்கும் (ந‌ல்ல விஷுவல்ஸ் + ஸ்டைலிஷ் மேக்கிங்); மற்றபடி அதைப் போலவே படத்திலும் உள்ளே அர்த்தம் (அதாவது திரைக்கதை) என்று ஒன்றும் பெரிதாய் இல்லை என்பதாக சொல்ல வருகிறார் (என நினைக்கிறேன்). ******* ராம் கோபால் வர்மாவின் Rann (ரணபூமி என்பதாக அர்த்தம் வருகிற‌து) படம் நன்றாக இருக்கிற‌து. தொலைக்காட்சி ஊடகங்கள் பரபரப்பான செய்திகளைத் தந்து அதிக டி.ஆர்.பி. ரேட்டிங் பெறுவதற்க்காக செய்யும் கேப்மாரித் தனங்களைப் படம் புட்டுப் புட்டு வைக்கிறது. திருப்பங்களோ, முடிச்சுகளோ இல்லாத சாதாரண ஆனால் நேர்த்தியாய்ப் பின்னப்பட்ட திரைக்கதை. RGV படங்களின் ஒளிப்பதிவு தான் பொதுவாய் மிகவும் பேசப்படும் (Of course, in the good sense). ஆனால் இப்படத்தின் ஒளிப்பதிவைப் பொறுத்தவரை வித்தியாசமான கேமெரா ஆங்கிள்களைத் தவிர்த்துப் பார்த்தால், ஒரு தொலைக்காட்சி நெடுந்தொடர் பார்க்கும் உணர்வே ஏற்படுகிறது. ரிதேஷ், சுதீப் இருவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். இந்தியாவின் சிறந்த பத்து நடிகர்கள் பட்டியலைத் தயாரித்து வருகிறேன் - படம் பார்த்த பின், அதில் அமிதாப் இடம் பெற வேண்டியதன் அவசியத்தை மீண்டுமொரு முறை உறுதி செய்து கொண்டேன். ******* சில காட்சிகளைத் தவிர, கோவா படம் மிகச்சுமார் தான். "வர வர மாமியா" கதை தான். ஆனால் குறிப்பிடத்தக்க விஷயம் என்றால், இதில் காட்சி படுத்தப் பட்டிருக்கும் Gay Relationshipஐச் சொல்லலாம். அதிலும் சம்பத்தின் நடிப்பு அபாரம். "இளைய இசை ஞானி" என்று டைட்டில் கார்ட் போட்டுக் கொண்டால் மட்டும் போதாது. தீம் ம்யூசிக் மட்டும் பரவாயில்லை. இதில் பியா அழகாய் இருந்ததை குறிப்பிடாமல் விட்டால் எனக்கு நான்கு நாட்களுக்கு சோறு கிடைகாது. மூவரில் ஜெய் மட்டும் ஸ்கோர் பண்ணுகிறார். மற்ற‌படி, இந்த ஃபிப்ரவரி இறுதியில், நாங்கள் நண்பர்கள் நால்வர் கோவா போகிறோம். அதற்காக மட்டும் வெங்கட் பிரபுவுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ******* AVATAR படம் வெளிவந்த இரண்டாம் நாளே பார்த்தாயிற்று. ஆனால் விரிவாய் விமர்சனம் எழுத இன்னும் நேரம் கிடைத்த பாடில்லை. நிச்சயம் விரைவில் எழுத முயற்சிக்கிறேன். இப்போதைக்கு சுருக்கமான ரெவ்யூ. கதை அடாசு தான். திரைக்கதையும் சுமார் தான். ஆனால் அதையெல்லாம் யார் கவனித்தார்கள். அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸில் இப்படம் செட் பண்ணியிருக்கும் பெஞ்ச்மார்க்கை இன்னும் பத்து வருடங்களுக்கு எந்த ஹாலிவுட் படமும் நெருங்குவதை நினைக்கக் கூட‌ முடியாது எனத் தோன்றுகிறது (2000ம் ஆண்டு வெளியான‌ அலைபாயுதே படத்தில் இடம் பெற்ற "பச்சை நிறமே" பாடலின் விஷுவல் தொட்டிருக்கும் அழகியலின் உச்சத்தை வேறு எந்தப் பாடலும் இந்த பத்தாண்டுகளில் எட்ட முடியவில்லை. அதே போல் தான்). ராம் கோபால் வர்மா சொன்னது போல் ஜேம்ஸ் கேமரூன் கடவுள் தான். ******* கே.எஸ்.ரவிக்குமாரின் ஜக்குபாய் அவருடைய வழக்கமான ஆதிகால அரைத்துப் புளித்த மசாலா ஃபார்முலா. எத்தனை முறை தோற்றாலும் நம் ஆட்களுக்கு புத்தியே வராது போலிருக்கிறது. ஃபாரின் லொக்கேஷன்களில் எடுத்தால் படம் ஓடி விடும் என்று எந்த மாக்கான் சொன்னது? ஒரு காலத்தில் சுவாரசியமான எண்டர்டெய்னர்களைக் கொடுத்த இயக்குநரா இவர் என சந்தேகம் எழுகிறது. படத்தில், சரத்குமாரின் அனுபவமான நடிப்பும் ராஜசேகரின் சுமாரான ஒளிப்பதிவும் மட்டும் தேறுகிறது. மற்றபடி, கவுண்டமணி, ஸ்ரேயா, கிரண் எல்லோரையும் கூப்பிட்டு வைத்து அவமானப் படுத்தியிருக்கிறார்கள். ரஜினி, கமல் தவிர வேறு ஆட்களுடன் ரவிக்குமார் சேரும் படங்களை இனிப் பார்ப்பதில்லை என சங்கல்பம் செய்திருக்கிறேன். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. ******* Get link Facebook Twitter Pinterest Email Other Apps Comments Dinesh said… Hi CSK, I wanted to say few things regarding all the 5 movies: Asal --> not watched yet & will not watch it in future also. "yeven intha ajith padatha theatrela poi paarpan... aiyo saamy!!!!" . so, no point in commenting this movie. Rann --> looks like it is creating a huge buzz in bollywood. yet to watch. Goa --> not at all bad, i would say. of-course, its a different genre (not like chennai-28/saroja), but still, an 100% romantic-comedy film. Yuvan's music is not bad at all. He has tried all kinds of musics in this film. especially, the complete re-recording scores in GOA related scenes are awesome . Avatar --> really a mind-blowing film. i agree with what you said. at least for another 10 years, we cannot expect a animation movie like this even in Hollywood, until unless, Cameroon himself releases his sequel of Avatar. Jaggubhai --> please don't give much impotence to these kinds of movies in ur blog. because, we (visitors of ur blog) have a decent faith on your movie selection & we believe that you have a wonderful movie reviewing skills. so, just cut these kinds of "SHIT"s out of your blog in future :) Tuesday, February 23, 2010 at 11:11:00 AM GMT+5:30 சுப. முத்துக்குமார் said… கோவா படத்தின் சிறு விமர்சனம் பியா மாதிரி இருக்கிறது Friday, March 5, 2010 at 11:01:00 PM GMT+5:30 Kumar said… அசல்: அஜித் படங்களை நான் பெரிதாய் வயுர்ம்பி பார்பதில்லை. இதுவரை நான் அசல் பார்கவில்லை அதனால் நான் அசல் படம் பற்றி பேச ஒன்றுமில்லை. ராம் கோபால் வர்மாவின் ரன்: இப்படத்தின் பெயர்குட எனக்கு தெரியாது. மன்னிக்கவும். கோவா: தற்கால குப்பை படங்களில் கோவா மிகவும் நன்று. நான் கோவா சென்று 13 வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் கோவா படம் பார்த்த பின்பு மீண்டும் எனக்கு பழைய ஞாபகங்கள் வருகிறது. எனது கல்லூரி காலத்தை ஞாபகபடுத்திய வெங்கட் பிரபுவிற்கு எனது நன்றி. இப்படத்தில் நடித்த பியா எனது மனதை கொல்லை கொண்டுவிட்டார். படம் ஆரம்பம் முதல் கடைசி வரை நன்றாக உள்ளது. சினேகாவிற்கு ஒரு வேலையும் இல்லை. இசையை தவிர இப்படத்தில் வேறு ஒரு பெரிய குறையும் இல்லை. அவதார்: நான் இன்னும் பார்கவில்லை. ஜக்குபாய்: இன்னுமா நீங்கள் சரத்குமார் படங்களை பார்த்துகொண்டு இருக்கீங்க? Wednesday, March 24, 2010 at 8:12:00 PM GMT+5:30 Post a Comment Popular posts from this blog தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள் January 08, 2009 தமிழில், நான் படித்தவற்றில், மிக முக்கியமான நூறு புத்தகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். அதாவது - என் பார்வையில், தமிழில் வாசிக்கும் பழக்கமுடையோர் அனைவரும் கட்டாயமாய் படித்தே ஆக வேண்டிய புத்தகங்கள் இவை. புத்தகக் கண்காட்சிக்கு செல்பவர்களுக்கும், புத்தகம் படிக்கத் தொடங்குபவர்களுக்கும் இது பயன்படலாம். திருக்குறள் - மு.வ. உரை பட்டினத்தார் பாடல்கள் பாரதியார் கவிதைகள் பாரதிதாசன் கவிதைகள் கண்ணதாசன் கவிதைகள் வைரமுத்து கவிதைகள் சுந்தர ராமசாமி கவிதைகள் கலாப்ரியா கவிதைகள் கல்யாண்ஜி கவிதைகள் அசோகமித்திரன் கட்டுரைகள் புதுமைப்பித்தன் சிறுகதைகள் லா.ச.ரா. சிறுகதைகள் சுந்தர ராமசாமி சிறுகதைகள் ஜி.நாகராஜன் ஆக்கங்கள் அ.முத்துலிங்கம் கதைகள் ஜெயமோகன் சிறுகதைகள் அம்பை சிறுகதைகள் ஆதவன் சிறுகதைகள் யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதைகள் ஜெயமோகன் குறுநாவல்கள் சுஜாதாவின் நாடகங்கள் சுஜாதாவின் மர்மக்கதைகள் நாட்டுப்புறக்கதைகள் - கி.ராஜநாராயணன் விஞ்ஞான சிறுகதைகள் - சுஜாதா ஸ்ரீரங்கத்துக்கதைகள் - சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - சுஜாதா பீக்கதைகள் - பெருமாள்முருகன் விசும்பு - ஜெயமோகன் என் வீட மேலும் வாசிக்க‌ » CSK Diet October 03, 2020 இவை உணவுக் கட்டுப்பாட்டுக்கான என் ஏழு கட்டளைகள். இது எந்தக் குறிப்பிட்ட டயட்டின் பிரதியும் அல்ல. நான் இத்தனை நாள் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கொண்ட பல விஷயங்களின் அடிப்படையில் நான் வந்தடைந்திருக்கும் ஒரு பட்டியல். (இதில் நான் பால், தயிர், டீ, காஃபி, மது போன்றவற்றைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. ஏனெனில் அவற்றை நான் எடுப்பதில்லை. அதனால் அவை தேவையா, இல்லையா, தேவையெனில் என்ன அளவில் எடுக்கலாம் என்பது பற்றிய அனுபவ அறிவு ஏதும் எனக்குக் கிடையாது. அதனால் அதைப் பேசுவது சரியல்ல.) Disclaimer: இந்த‌ diet எல்லோருக்கும் பொருத்தமானது எனச் சொல்வதற்கில்லை. ஒவ்வொரு மனித‌ உடலும் தனித்துவமானது. ஆக, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி உணவு முறையே பொருந்தும். இது என் வழிமுறை மட்டுமே. (நானுமே தொடர்ந்தோ, முழுமையாகவோ, தீவிரமாகவோ இதைப் பின்பற்றியதில்லை. அவ்வப்போது, இவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தி இருக்கிறேன்.) ஆக, அதிகபட்சம் இதை ஒரு வழிகாட்டுதலாகக் கொள்ளலாம். இதைப் பின்பற்றிப் பார்ப்பது பற்றி அவரவர் சுயபுத்தியின் அடிப்படையில் தான் தீர்மானிக்க வேண்டும். எதிர்மறை விளைவுகளுக்கு நான் எவ்வகையிலும் பொறுப்பல்ல. நோய் மேலும் வாசிக்க‌ » மீயழகி August 21, 2020 கே: உலகின் அழகான பெண்ணைச் சந்தித்திருக்கிறீர்களா? ப: ஆம். 1984ம் ஆண்டு. ஒரு நகைக் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். என்னைத் தவிர வேறு யாரும் கடையில் இல்லை. நல்ல உயரமும் திடகாத்திரமான உடல்வாகும் கொண்ட ஓர் இந்துப் பெண் கடைக்குள் நுழைந்தார். அவரிடம் இலத்தீன் அமெரிக்க சாயல் கொஞ்சம் இருந்தது. ஓர் இளவரசிக்கான தோரணையுடன் நடந்துகொண்டார். யார் கண்டது? உண்மையிலேயே இளவரசியாக இருக்கக்கூடும். அவரது தோலில் ஒருவித மினுமினுப்பு இருந்தது. செம்பு நிறம், நீண்ட கூந்தல், மற்ற அங்கங்கள் அத்தனையும் கச்சிதமாக இருந்தன. எல்லா பருவங்களிலும் அழகாக இருக்கக்கூடிய பெண் என நினைத்தேன். ஏதோவொரு அட்டிகையை வாங்கியதாக நினைவு. அதற்கு பில் போடுவதற்கே எனக்கு கூச்சமாக இருந்தது. இளவரசியிடம் பணம் பெறுவதா? அதைப் புரிந்துகொண்டவர் போல புன்னகைத்தார். எனக்குக் கிறக்கமாக இருந்தது. அவரைப் போன்றதொரு அழகியை பிறகெப்போதும் நான் சந்திக்கவில்லை. இப்போது நினைவுகூர்கையில் அவரை மகா காளியின் வடிவுடன் பொருத்திக்கொள்ள முடிகிறது. ஆனால், உக்கிரம் தணிந்தவர். இனிமையானவர். நளினமானவர். (பொலான்யோ Playboy-க்கு அளித்த பேட்டியிலிருந்து. மொழிபெயர்ப்பு:
The ethos of Tamil’s culture i.e. hospitality, customs, manners, worship, traditional medicine, art, agriculture are lost their glorious identities due to the advent and impact of western culture. This is our push factor for creating Pandiyanadu Cultural Foundation to feed our cultural phenomenon to the young generations.Our prime duties are a comprehensive research on pristine culture and safeguard its amplitude for future generations. In addition, we understand that, we have to move in the society with utmost solidarity and harmony while unearthing the historicity of ancient relics. We believe our Pandiyanadu Cultural Foundation would be instrumental in framing novel ideas to safeguard our living cultural monuments and prepare a conceptual framework for creating awareness among the people to preserve our old age cultural identities. ஏன் பாண்டிய நாடு பண்பாட்டு மையம்? தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்திருந்த விருந்தோம்பல், பழக்க வழக்கம், கடவுள் வழிபாடு, பாரம்பரிய மருந்துவம், விவசாயம் உள்ளிட்ட மாண்புகள் மேற்கத்திய கலாச்சார தாக்கத்தின் காரணமாக இன்று மதிப்பிழந்து நிற்கிறது. மறந்து போன பாரம்பரிய வாழ்க்கை முறைகளை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளச் செய்வதற்கான செயல்பாடுகள் நம்மிடையே போதுமான அளவு மேற்கொள்ளப்படவில்லை. "உலகின் முதல் நகர நாகரீக சமூகமாக தமிழ்மக்கள் வாழ்ந்தார்கள்" என வரலாற்றாளர்களும் பண்பாட்டு ஆய்வாளர்களும் குறிப்பிடும் இவ்வேளையில் அவர்களின் பாரம்பரிய வாழ்வியல் விழுமியங்கள் குறித்த ஒருங்கிணைந்த ஆய்வுகள் மேற்கொண்டு, ஆவணப்படுத்தி அவற்றை இன்றைய வருங்கால தலைமுறைகள் பயனுற வழங்குவது என்ற உயரிய இலக்கு கொண்டு பாண்டிய பண்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ் நிலத்தின் அறிவுப் புதையலாக விளங்கும் பழங்கால கோவில்,சிற்பங்கள்,சமண,பெளத்த எச்சங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து அவற்றைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளையும் விழிப்புணா்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டு தமிழகத்தின் வரலாற்று பாரம்பரிய பெருமையை மேலோங்கச் செய்ய சமூக நல்லிணக்கத்துடன் அனைவருடன் இணைந்து பணியாற்றிடவும் பாண்டிய நாடு பண்பாட்டு மையம் உறுதியேற்றுள்ளது. Administration The Managing Board, the members in the Advisory Board and coordinators are functioning with purely service motive. There is no any remunerative position in the organization. News & Events Instructions for Memberships 03-12-2020 PDCF Membership Form 03-12-2020 தொல்லியல் பயணம் - 2 03-02-2021 பாண்டியநாடு பண்பாட்டு மையம் வழங்கும் கி. சின்னராஜ்-சுப்புலட்சுமி நினைவு நாட்டுபுறக் கலைஞர் விருது-2021 15-02-2021 பாண்டியநாடு பண்பாட்டு மையம் இளம் தொல்லியல் பண்பாட்டு ஆய்வாளர் விருது. 15-02-2021 பாண்டியநாடு பண்பாட்டு மையம் வழங்கும் தமிழ்த்தேனீ பேராசிரியர்- இரா.மோகன் நினைவு விருது. 15-02-2021 பாண்டியநாடு பண்பாட்டு மையம் வழங்கும் கா.பு.தர்மபாண்டியன் நினைவு பாரம்பரிய விவசாயி விருது. 15-02-2021 பாண்டியநாடு பண்பாட்டு மையம் வழங்கும் P.S.மலைப்பாண்டி நினைவு சுற்றுச்சூழல் ஆர்வலர் விருது. 15-02-2021 விருதுகள் -2021 வழி முறைகள் 15-02-2021 சு. அழகர்சாமி நினைவு பாரம்பரிய மருத்துவர் விருது 20-02-2021 VIRUDHU SELECTED MEMBERS 18-03-2021 VIRUDHU 2021 SELECTED LISTS 20-06-2021 PANDIYANADU CULTURAL FOUNDATION is a non-profitable organization registered under Trust Act on 2015. READ MORE..,
செங்கோட்டையில் விநாயர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கடந்த 13-ந் தேதி இரவு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பிரனிடையே மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக மாறியது. இதையடுத்து செங்கோட்டையில் ஒருநாள் 144 தடை உத்தரவு போடப்பட்டு விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துவரபட்டது. அப்போது மீண்டும் மோதல் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கும்பலை விரட்டியடித்தையடுத்து ஊர்வலம் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை அனைத்தும் குண்டாற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது. இந்நிலையில் மறுநாள் இருதரப்பினரிடமும் கலெக்டர் ஷில்பா தலைமையில், தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் மற்றும் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் கருத்துகேட்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் மீண்டும் தென்காசி, செங்கோட்டையில் ஏற்பட்ட சம்பவங்களை தொடர்ந்து செங்கோட்டை, தென்காசி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த 15-ந் தேதி மாலை 8 மணி முதல் இன்று 22-ந் தேதி காலை 6 மணி வரை தொடரும் என கலெக்டர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து செங்கோட்டை நகரை சுற்றி 9 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பிற்கு பின்னர் அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்பட்டு வந்தது. மேலும் தென்மண்டல போலீஸ் ஜ.ஜி சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு-பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர். இந்நிலையில் இன்று காலையுடன் முடிவடையும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது செங்கோட்டை நகராட்சி, புதூர், பண்பொழி, வல்லம், பிரானூர் பார்டர், பெரிய பிள்ளை வலசை, கற்குடி, புளியரை, சுமை தீர்த்தபுரம், தெற்கு மேடு, தேன் பொத்தை, கணக்குபிள்ளை வலசை ஆகிய பஞ்சாயத்துகளில் இன்று காலை 6 மணி முதல் வருகிற 30-ந் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இக்காலங்களில் பொதுக்கூட்டம் – போராட்டம் நடத்துவதற்கும் வேறு எந்தவிதமான ஆர்பாட்டம் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் எந்தவொரு இடத்திலும் மேற்குறிய நோக்கத்திற்காக 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்றாக கூடுவதற்கும் வன்முறை தூண்டுவதற்காக ஆயுதங்களோ பிற பொருட்களையோ வைத்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து ஏ.டி.எஸ்.பி.க்கள் தனபாலன், முகமது அஸ்லாம் ஆகியோர் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மணிகண்டன், வெற்றி செல்வன், பழனிகுமார் மற்றும் 8 இன்ஸ்பெக்டர்கள், 16 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 540 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே 9 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் ரெயில்வே கேட் அருகே கூடுதலாக ஒரு சோதனை சாவடி அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். DINASUVADU Tags nellai SECTION 144 sengottai tamilnews Share Facebook Twitter Pinterest WhatsApp Previous articleகள்ள உறவால் பிறந்தவர் கனிமொழி ..!ஹெச்.ராஜா அவதூறு கருத்து …!போலீசார் வழக்கு பதிவு …! Next articleவங்கிகளின் ரூ.2.35 லட்சம் கோடி வராக்கடன் ..!கார்ப்பரேட் நிறுவனங்களே முக்கிய காரணம்..!அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பாலாஜி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். அருணாசலம், ச. (1864.10.31 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த கல்வியியலாளர். ஆறுமுகநாவலரின் மறைவின் பின் நாவலரின் பணியைத் தொடரப் புறப்பட்ட ஒளியே திரு. ச. அருணாசலம். இவர் தனது ஆரம்பக் கல்வியை களபூமி கிறிஸ்தவ பாடசாலையில் கற்றார். 5 ஆம் வகுப்பிலிருந்து 8 ஆம் வகுப்பு வரை வண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கல்வி கற்ற அருணாசலம் தாமொரு பயிற்றப்பட்ட ஆசிரியராய் வரவேண்டும் என்ற ஆர்வத்தினால் தெல்லிப்பளையில் அமெரிக்க மிஷனரியால் நடாத்தப்பட்ட ஆசிரியப் பயிற்சிப் பாடசாலையில் பிரவேச வகுப்பில் சேர்ந்து கற்றுச் சித்திபெற்றார். யாழ்ப்பாணத்தில் ஆறுமுகநாவலர் எவ்வாறு சைவத்தையும், தமிழையும் பாதுகாக்கப் போரிட்டாரோ அதே போல காரைநகரில் சைவத்தையும், தமிழையும் பாதுகாத்தவர் திரு அருணாசலம் அவர்களே. இவரின் முயற்சியினால் சுப்பிரமணிய வித்தியாசாலை, திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் வித்தியாசாலை, வியாவில் பாடசாலை என்பன ஆரம்பிக்கப்பட்டன. Resources நூலக எண்: 3769 பக்கங்கள் 274-280 Books [11,879] Magazines [13,498] Newspapers [53,802] pamphlet [1,193] நினைவு மலர்கள் [1,526] சிறப்பு மலர்கள் [5,638] Authors [4,921] Publishers [4,233] Year of Publication [187] Key Words [91] Portals [25] Manuscripts [24] Organizations [1,707] Biographies [3,164]
பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு முன்னிரவில் அன்டன் செகோவின் ஆறாவது வார்ட் நாவலை படித்து முடித்தபோது என் மனதின் சமநிலை குலைந்துபோனதை உணர்ந்தேன். நாவல் முன்வைத்தக் கேள்விகளால் துளைக்கப்பட்டு இரவு முழுதும் உறக்கமின்றி போக பொழுது புலர்ந்தது. உறக்கமின்றிப் போன இரவு பல இரவுகள் தொடர்ந்தது அது ஒரு காலம். அது போன்ற ஓர் இரவை நீண்டகாலத்திற்குப் பிறகு உருவாக்கியது மெட்ராஸ் – திரைப்படம். இரவு முழுதும் சிந்தனை அலைவுகளால் உறக்கமின்றிப் போனது. மெட்ராஸ் என்றாலே திரைத்துறையினருக்கு எப்போதும் ஒரு ஏளனம் உண்டு. மெட்ராசினால் அவர்கள் பிழைத்தாலும் கூட. அவர்களுக்கு மெட்ராசைப் பற்றி எதுவும் தெரியாது என்ற உணர்வுகூட எப்போதும் அவர்களுக்கு கிடையாது. குறிப்பாக, தெற்கத்திப் பக்கமிருந்து வந்து மெட்ராசில் படமெடுக்கும் பலருக்கு மதுரை பாசை, நெல்லை பாசை, கோவை பாசை, குமரி பாசை, ஈழ பாசை பற்றியெல்லாம் விலாவாரியாகத் தெரியும். ஆனால், திரையில் அவர்கள் ஏதோ பேசுவார்கள் அது மெட்ராஸ் மொழி என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். எம்ஜியார், சிவாஜி உள்ளிட்ட பழைய நடிகர்கள்கூட இதற்கு விதிவிலக்கல்ல. எல்.ஆர்.ஈசுவரி பாடிய எலந்தப்பழம் பாட்டைக்கேட்டால் எனக்கு உருவாகும் அருவெறுப்பை கட்டுப்படுத்தவே முடியாது, அந்த அளவிற்கு மெட்ராசை மொழியை கொக்சைப்படுத்தும் பாட்டு அது. அதற்குப் பிறகு மெட்ராஸ் பாசையில் நிபுணராக பத்மசிறி கமல்ஹாசன் தோன்றினார். அந்த ஆசையில் பாரதிராசா ஒரு படம்கூட எடுத்து தோற்றார். பலபேர் மெட்ராஸ் மொழியைப் தமது திரைப்படங்களில் பேசுகிறார்கள். மெட்ராசில் பிறந்து வளர்ந்த எனக்கு அவர்கள் பேசும் மெட்ராஸ் மொழி எந்தப் பகுதியில் பேசுகிறார்கள் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவேயில்லை. கடைசியில் பார்த்தால் அந்தத் திரைமேதைகள் உருவாக்கிய திரைமொழி அது. அதைதான் மெட்ராஸ் பாஷை என நம்பச் சொல்கிறார்களே அது மிகப்பெரிய வேடிக்கை. இந்த அறியாமையிருந்து தமிழ் சினிமா எப்போது விடுபடும் என்று எனக்குள் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. மெட்ராசைப் பற்றித் தெரிந்துக் கொண்டு எப்போது படம் எடுப்பார்கள் என்று எதிர்பார்த்த போதுதான் புதுப்பேட்டை உள்ளிட்ட சில படங்கள் வந்தன. அந்தப் படங்கள் பார்த்த போது வெறுத்துப் போய்விட்டது. இவர்கள் திருந்த மாட்டார்கள் என்பதுடன் இவர்களிடம் எதிர்பார்ப்பது தவறு என்பதும் புரிந்தது. ஏனென்றால் இவர்கள் கலைஞர்கள் அல்ல, வெள்ளைத் துணியில் வண்ணங்களைக் காட்டும் வியாபாரிகள். ரத்தமும் சதையும் உள்ள உயிர்ப்பான மெட்ராஸ் இவர்களுக்குத் தெரியாது. நிச்சயம் தெரியாது. சினிமா உதாரணத்தோடு சொல்வதென்றால் டைட்டானிக் படத்தில் மேல் தளத்தில் பயணிக்கும் நாயகியின் சூழல் இவர்களின் சூழல். நாயகன் பயணிக்கும் அடித்தட்டின் சூழல்தான் மெட்ராஸ். அங்கு வாழ்க்கை எப்போதும் கொண்டாட்டம்தான். ஆமாம், மெட்ராஸ் வாழ்க்கை என்பது கொண்டாட்டம். சாகசக்கங்கள் நிறைந்தக் கொண்டாட்டம். எல்லா வகையான கொண்டாட்டம் கொண்டது மெட்ராஸ் வாழ்க்கை. போலித்தனத்திற்கு இடமேயில்லை. போலியாக மாறினால் அங்கு வாழமுடியாது.. அது விரட்டிவிடும். மெட்ராஸ் என்பது இப்போது உள்ளதல்ல. அசலான மெட்ராஸ் வடசென்னையில் இருக்கிறது. தற்போதைய எல்லைபடி பார்த்தால் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்டது. உண்மையான மெட்ராஸ் இங்கிருந்து வளர்ந்து முதலில் மையசென்னை சேர்க்கப்பட்டது, பின் தென்சென்னை சேர்க்கப்பட்டது. மையசென்னை ஏறக்குறை மெட்ராஸ்தான். தென்சென்னையை கணக்கில் சேர்க்கவே முடியாது. அது குடியேறியவர்களால் உருவான போலி சென்னை. மெட்ராஸ் – பன்முகத் தன்மைக்கொண்ட வடசென்னை மக்களின் ஒர் அலகான குடிசை மாற்று வாரியக் குடியிறுப்பில் வாழும் மக்களிடையே மட்டும் நடக்கிறது. ஆனால் அது மட்டுமே உண்மையான மெட்ராஸ் அல்ல. இன்னும் பல சூழல்கள் வடசென்னையில் இருக்கிறது. அவை விரைவில் கவனப்படுத்தப்படும் என நினைக்கிறேன். அதற்கு இந்த மெட்ராஸ் ஒரு தொடக்கம். இந்த பின்னணியில் தான் பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் திரைப்படத்தை அணுகவேண்டும். மெட்ராஸ் திரைப்படத்தில் காட்டப்படும் கதைக்களம் மிகச்சிறியது. இரண்டு அரசியல் கட்சிகளுக்கு இடையில் தமது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் போட்டியில்; ஒரு குடிசை மாற்று வாரியக் குடியிறுப்பில் உள்ள மக்களை எப்படி பகடைக்காய்களாக மாற்றிக் கொல்கிறார்கள், அதற்கு விளம்பர சுவர் எப்படி பயன்படுகிறது என்பதுதான் கதைக்களம். இந்தக் கதைக்களத்தை தேர்வு செய்வதற்கு மிகுந்த துணிச்சல் வேண்டும், அதற்காகவே ரஞ்சித்தையும் நடித்த கார்த்தியையும் பாராட்ட வேண்டும். ஏனனெனில் வட சென்னை சூழலை படமாக்குவது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் கொண்டாட்டமும் எளிமையும் நிறைந்த மக்களிடையே படம் பிடிப்பது அவர்களுக்கு மேலும் கொண்டாட்டத்தை தூண்டிவிடும் என்பது மட்டுமின்றி; கதை களத்தை கருவை படமாக்கும் போதே அவர்கள் எளிதில் புரிந்துக்கொள்வார்கள், எனலே, அதனால் பாதிக்கப்படக்கூடியவர்களின் எதிர்ப்பையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனினும் அதையெல்லாம் தாண்டி மெட்ராஸ் வந்திருக்கிறது. படத்தினை முழுவதுமாக அலச வேண்டியதில்லை என்று கட்டுப்படுத்திக் கொண்டு சிலற்றை மட்டும் கூறவேண்டும் என நினைக்கிறேன். மெட்ராஸ் இடைவேளைக்குப் பிறகு உருவாகும் நாயகன் முன்னிலையைத் தவிர்த்துப் பார்த்தால் அச்சு அசலான, ரத்தமும் சதையுமான மெட்ராஸ் படம்தான். பாத்திரங்களின் தேர்வு கச்சிதம். ஒரு மெட்ராஸ்காரனாக படத்தின் யாதார்த்தத்திலிருந்து என்னால் தப்பிக்க முடியாமல் போனாலும், மெட்ராஸ்காரர் தவிர்த்த மற்றவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்பது எனது எதிர்பார்ப்பாக இருந்தது. எனவே அந்த கோணத்திலேயே படத்தினை பார்க்க முனைந்தேன். அப்படி பார்க்கும்போது மற்றத் தமிழ்ப்படங்களை தவிர்த்து உலகின் மற்றப் படங்களோடு ஒப்பிட்டுக் கொள்ள மனம் முனைந்தது. லத்தின் அமெர்க்க, ஈரானிய, சில ஆப்பிரிக்க படங்களை இணைவைத்துப் பார்த்துக் கொள்ள முடியும், அவ்வளவு செவ்வியல் தன்மைக் கொண்டது மெட்ராஸ். நாயகன் கார்த்தியின் பாத்திரம் மெட்ராசில் தற்போது வாழும் ஏராளமான பாத்திரங்களில் ஒன்றுதான். படம் முழுதும் கார்த்தியை தேடினால் காளி மட்டுமே சிக்கனான் என்பது காளியின் வெற்றி. கச்சிதமான உடல்மொழி. பருத்திவீரனுக்குப் பிறகு கார்த்தி நடித்த ஒரே படம் இதுதான். நாயகி தெரசாவைப் போல யார் இருக்கிறார்கள் என்று பலர்கூறக் கேள்விப்பட்டேன். அது மோசமான பொது புத்தியின் குரல். வடசென்னையில் தெரசாவை போல மட்டுமல்ல, அவரைவிட அழகான பெண்கள் ஏராளமானபேர் இருக்கிறார்கள், நடையில் அவரை விஞ்சக்கூடியர்கள் அதிகம் இருக்கிறார்கள். போய் பாருங்கள் தெரியும். மற்ற பாத்திரங்கள் தனித்தனியாக பிரித்துப் பார்ப்பது கடினம். ஆனால் தனியாகத் தெரியும் மனநிலை பாதித்த ஜானி பாத்திரம் எல்லோர் மனத்தையும் கொள்ளையடிக்கும் பாத்திரம். அது உலகப்புகழ் பெற்ற புதினமான மிக்கேல் ஷலகோவ் எழுதிய கன்னிநிலம் புதினத்தில் வரும் ஷ்சுக்கார் தாத்தாவின் பாத்திரத்திற்கு இணையான பாத்திரம். ஆனால் வடசென்னையின் ஒவ்வொரு பகுதியிலும் பகுதிக்கு இரண்டுபேரை பார்க்க முடியும். அவர்களோடு உரையாடுவது அவ்வளவு சுவாரஸ்மாக இருக்கும். மேலும், படத்தினை ஒரு தலித் படமாக எல்லோரும் கொண்டாடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் மெட்ராஸ் தலித்துகள், மீனவர்கள், வன்னியர்கள், முதலியார்கள், இசுலாமியர்கள் ஆகியோருக்கு சொந்தமான படம். ஏனெனில் இவர்கள்தான் மெட்ராஸ் மண்ணின் மூலக்குடிகள். மற்றவர்களெல்லாம் வந்து குடியேறியவர்கள். எனினும் மெட்ராஸ் உறக்கத்தைக் குலைக்கக்கூடிய அளவில் உருவாக்கிய கேள்விகள் என்ன? அது பயணம் செய்த களம் எதை உருவாக்கும் என்பதைப் பற்றி பின்னொரு தருணத்தில் விரிவாக விவாதிக்க முயல்கிறேன். அன்புடன் சன்னா 30.09.2014 Tagskarthimadrasranjith directorஇயக்குநர் ரஞ்சித்நடிகர் கார்த்திமெட்ராஸ் Share on Facebook Share on Twitter Share on Google+ Share on Reddit Share on Pinterest Share on Linkedin Share on Tumblr Previous article விரைவில் பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி… Next article ஓவியர் சந்துரு admin want to be a light and promote the justice Related Articles More By admin More In விமர்சனங்கள் Load More Related Articles அரக்கோணம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் முனைவர் திருமா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை! தோழர். கௌதம சன்னா ஐந்தாண்டுகாலம் இந்த தொகுதிக்கு என்னென்ன புதுமையான பணிகளை செய்ய முடியுமோ … March 28, 2021 0 second read காங்கிரஸ் பேரியக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேரணியில் அரக்கோணம் நகரில் நேற்று காங்கிரஸ் பேரியக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேரணியில் அரக்கோணம் … March 27, 2021 0 second read அரக்கோணம் காந்தி ரோட்டில் அமைந்துள்ள மசூதியில் தொழுகையில் பங்கெடுத்துக் கொண்ட போது அரக்கோணம் காந்தி ரோட்டில் அமைந்துள்ள மசூதியில் மதச்சார்பற்ற கூட்டணியின் அரக்கோணம் தொகுதி வ… March 27, 2021 0 second read Load More By admin சாதி, தீண்டாமையின் மூல வரலாறு – part 1 இந்தியா எனும் நாடு விடுதலை அடைந்து 67 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் புரட்சியாளர் அம்பேத்கர் ப… April 11, 2015 0 second read இடதுசாரிகளுக்கு மீண்டும் எழும் பழைய மோகம் – கௌதம சன்னா எத்தனையோ ஆண்டுகள் ஓடிவிட்டன.. ஆனால் சிந்தனையில் இன்னமும் மாற்றம் ஏற்படா… May 11, 2013 20 second read காஞ்சீவரமா? காஞ்சிபுரமா? பார்ப்பனியக் கொடுங்கோன்மைக்கு முடிவு கட்டிய புத்தர், பார்ப்பனர்களின் தலையாய கொள்கையான சுயந… July 24, 2012 0 second read Load More In விமர்சனங்கள் 2 Comments 2 Comments Issac January 11, 2015 at 3:31 pm Anna…!! Miga Azhakana Pathivu…!! Kadhai, Thiraikathai, Nadippu… endru pothuvaaga ezhutha padum tamizh cinema vimarsanathil irunthu vithiyaasapattu, samooga thalathil irunthu neengal koduthu irukkum Paarvai iga mukkiyamaana thondraaga padukirathu…!!
நியூயார்க் நகரில் அமைந்திருந்த உலக வர்த்தக மையக் கோபுரங்கள் சாய்க்கப்பட்ட 9ஆம் ஆண்டு நெருங்கிவரும் வேளையில் (செப்டம்பர் 11, 2010) திருக்குர்-ஆன் நூல் எரிக்கப்படும் என்று அமெரிக்க கிறித்தவ குழுவொன்று அச்சுறுத்தியுள்ளது. இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, ஆப்கானிசுதான் தலைநகராகிய காபூலிலும் மற்றும் இந்தோனேசியாவிலும் எதிர்ப்புப் போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. நேற்று காபூலில் நிகழ்ந்த எதிர்ப்புப் போராட்டத்தின்போது சுமார் 500 பேர், "இசுலாம் வாழ்க, அமெரிக்கா வீழ்க" என்று குரல் எழுப்பியதோடு, டெரி ஜோன்சு என்பவரின் உருவத்தையும் தீக்கிரையாக்கினர். இவர் பாதிரியாராகப் பணிபுரியும் "டவ் உலக நற்பணி மையம்" (Dove World Outreach Center) என்னும் கிறித்தவ குழுதான் குர்-ஆன் எரிப்பு நிகழ்த்தப் போவதாக அச்சுறுத்தியது. அமெரிக்காவின் தென்பகுதியிலுள்ள புளோரிடா மாநிலத்தில் கெயின்சுவில் (Gainsville) நகரில் 50 பேர்களை மட்டுமே உறுப்பினராகக் கொண்ட இக்குழுவின் தீவிரப் போக்கைக் கண்டனம் செய்து, காபூலில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை விடுத்துள்ளது. அதுபோலவே, ஆப்கானிசுதானில் அமெரிக்க தலைமைத் தளபதியாகச் செயல்படும் டேவிட் பெட்ரேயசும் அறிக்கை விடுத்துள்ளார். அதில், "குர்-ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டால் அமெரிக்க போர்வீரர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும். தலிபான் அமைப்பு இச்செயலைப் பயன்படுத்திக்கொண்டு காபூலில் மட்டுமன்றி உலகின் வேறு பகுதிகளிலும் பிரச்சினை கிளப்பக்கூடும்" என்று கூறியுள்ளார். வடக்கு அத்திலாந்திக் ஒப்பந்த அமைப்பு (NATO) துணைத்தலைவர் வில்லியம் கால்ட்வெல் விடுத்த அறிக்கையில் பின்வருமாறு கூறுகிறார்: "குர்-ஆன் முசுலிம்களின் மிகப் புனித நூல். அதற்குச் சேதம் விளைவித்து அதன் புனிதத்தைக் கெடுக்கப்போவதாக யாராவது கூறினால் அதன் விளைவுகள் மிக மோசமாக மாறிவிடும்." மசூதி சர்ச்சை இந்தச் சர்ச்சை எழுவதற்கு முன் நியூயார்க் நகரில் மசூதி கட்டுவது பற்றி விவாதம் எழுந்தது தெரிந்ததே. அங்கே, முன்னாள் உலக வர்த்தக மையக் கோபுரங்கள் நின்றிருந்த தளத்திலிருந்து (Ground Zero) இரு தெருக்கள் தாண்டி ஒரு மசூதியை உள்ளடக்கிய இசுலாமிய கலைக் கூடம் கட்டும் திட்டத்தை எதிர்த்து பலர் குரலெழுப்பினர். இப்பின்னணியில் கெயின்சுவில் கிறித்தவக் குழுவின் குர்-ஆன் எரிப்புத் திட்டம் தீய விளைவுகளுக்குத் தூண்டுதலாக அமைந்துவிடும் ஆபத்து எழுந்துள்ளது. ஆப்கானிசுதானிலும் ஈராக்கிலும் அமெரிக்க போர்வீரர்கள் திருக்குர்-ஆனை இழிவுபடுத்தினர் என்னும் வதந்தி பரவியபோது சில இடங்களில் கலவரம் வெடித்தது நினைவிருக்கலாம். ஈராக்குக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க போர்வீரர் ஒருவர் குர்-ஆன் நூலில் குண்டுகளைப் பாய்ச்சியதைத் தொடர்ந்து ஆப்கானிசுதானில் 2008இல் நிகழ்ந்த எதிர்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்தோரும் உண்டு. அதுபோலவே, குவான்டானமோ வளைகுடாவில் அமெரிக்க விசாரணை அதிகாரிகள் குர்-ஆன் பிரதியைக் கழிவறைத் தொட்டியில் வீசி இழிவுபடுத்தினர் என்று குற்றம் சாட்டி நியூசுவீக் வார இதழ் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்தும் 2005இல் கடும் எதிர்ப்பு எழுந்தது. இச்செய்தி உண்மையல்ல என்று தெரியவந்ததும் நியூசுவீக் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. மூலம்[தொகு] Petraeus: Koran burning plan will endanger US troops, பிபிசி, செப்டம்பர் 7, 2010 Petraeus condemns Fla. church's plan to burn Korans Washington Post, வாசிங்டன் போஸ்ட், செப்டம்பர் 6, 2010 இச்செய்தியைப் பகிர்க: "https://ta.wikinews.org/w/index.php?title=செப்டம்பர்_11இல்_குர்-ஆன்_எரிப்பு:_அமெரிக்க_கிறித்தவ_குழுவின்_அச்சுறுத்தல்&oldid=9109" இருந்து மீள்விக்கப்பட்டது
بِسْــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم முதல் பாகம் http://hafsa13.blogspot.com/2015/08/20.html இரண்டாம் வசனம்: உர்ஜூனில் கதீம் ஸூறா 36 யாஸீன் 39வது வசனம் وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّىٰ عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்zில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம். ஜான் டிரஸ்ட் 36:39 இந்த வசனத்திலும் மன்zில் என்ற வார்த்தையே வந்துள்ளது. மன்zில்கள் என்ற வார்த்தைக்கு “படித்தரங்கள்” அல்லது “வளர்ந்து தேயும் நிலைகள்” என்று பொருள் கொள்வது பொருத்தமல்ல என்பதை ஏற்கனவே தேவையான அளவு அலசிவிட்டோம். இங்கேயும் மன்zில்களுக்கு அதே பொருள்தான். சந்திரனின் ராசிகளை கூறுகிறது. ஆனால் இங்கே முக்கியமாக நாம் பார்க்கவேண்டியது பழைய பேரீத்தங்குலையின் மட்டை எனும் வார்த்தையாகும். உர்ஜூனில் கதீம் என்று மூலத்தில் இருக்கும் இந்த வார்த்தைக்கு மாதத்தின் கடைசிநாளில் (28, 29) தெரியும் தேய்பிறைதான் என்று பொருள் செய்கின்றனர். இவர்கள் நாட்காட்டியிலும் கடைசி பிறையை உர்ஜூனில் கதீம் என்றே குறிப்பிட்டிருப்பர். இதற்கு கடைசி தேய் பிறை என்பதுதான் பொருளா? பார்ப்போம் “மீண்டும் பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்zில்களை ஏற்படுத்தியிருக்கின்றோம்”. என்பது அழகான விளக்கத்தை தருகிறது. முதல் பிறையும் கடைசி பிறையும் பார்ப்பதற்கு ஒரே மாதிரித்தான் இருக்கும். இரண்டுமே பழைய பேரீச்சங்குலை பாளை போல்தான் இருக்கும். இங்கே தான் நாம் மீண்டும் அது பேரீச்சங்குலை பாளை போல் ஆகிவிடுகிறது என்ற வார்த்தை அமைப்பை ஆழமாக சிந்திக்க வேண்டும். மீண்டும் என்ற வார்த்தை இந்த மொழிப்பெயர்ப்பில் விடுபட்டுள்ளது. ஏற்கனவே ஒரு பொருள் அப்படி இருந்ததால்தான் மீண்டும் அப்படி ஆகிவிட்டது என்று கூற இயலும். எனில் ஏற்கனவே சந்திரன் ஒரு முறை பழைய பேரீச்சங்குலை பாளை போல் இருந்துள்ளது அது பல மன்ஸில்களை கடந்து மீண்டும் பழைய பேரீச்சங்குலைபாளை போன்ற நிலையை அடைகிறதென்றால் பழைய பேரீச்சங்குலைபாளை போல் என்பதற்கு என்ன பொருள். ஆம்! முதல் பிறைதான். அல்லாஹ் பழைய பேரிச்சம் குலை பாளை போல் என்று கூறும் உவமை முதல் பிறைக்குரியது. கடைசி பிறைக்கல்ல. அல்லாஹ் சந்திரனின் மன்ஸில்களை பற்றி பேசுகிறான். படித்தரங்கள் பற்றி பேசவில்லை. ஒரு சுற்று முடிய வேண்டுமேனில் அது தொடங்கிய இடத்திற்கு வரவேண்டும். அப்போது தான் மீண்டும் என்ற வார்த்தை முழுமை பெறும். சந்திரன் முதல் பிறையில் உருஜூணில் கதீம் போல் ஆரம்பிக்கிறது. பல மன்ஸில்களை கடந்து மீண்டும் அதே நிலையை அடைகிறது. அது கடைசி பிறை எனில் கடைசி பிறைக்கும் முதல் பிறைக்கும் இடையே இருக்கும் 2 ராசிகளை அல்லாஹ் விட்டதுபோலாகும். இந்த வசனத்தில்தான் பலரும் குழம்பி விடுகின்றனர். மன்சில், வடிவம் என இரண்டையும் அல்லாஹ் இதில் இணைத்துப் பேசியுள்ளான். எனவே மன்சில் என்றால் வடிவம்தான் என்ற வாதத்தை வைக்கின்றனர். பல படித்தரங்களை கடந்து சந்திரன் உர்ஜூணில் கதீம் போல் ஆகிறது என்றுதான் பொருள் என்கின்றனர். சந்திரன் வளர்ந்து தேய்வதற்கு காரணம் அது பூமியை சுற்றுவது. சந்திரனுக்கு மன்சில்கள் (ராசிகள்) ஏற்படக் காரணமும் அது பூமியை சுற்றுவதுதான். இவை இரண்டிற்கும் மூல காரணம் சந்திரன் பூமியை சுற்றுவதுதான் என்றாலும் இவை இரண்டும் தொடர்பற்றவை. முதல் பிறையில் சந்திரன் ஒரு மன்ஸிலில் (ராசிநட்சத்திரத்தில்) இருக்கும் (உதா அல் ஹக்ஆ). இரண்டாம் பிறையில் சந்திரன் அடுத்த மன்ஸிலில் (ராசிநட்சத்திரத்தில்) இருக்கும் (உதா அல் ஹன்ஆ). மூன்றாம் பிறையில் சந்திரன் வேறொரு மன்ஸிலில் (ராசிநட்சத்திரத்தில்) இருக்கும் (அல் திரா). இப்படி ஓவொரு இரவிலும் சந்திரன் ஒவ்வொரு ராசி நாட்சதிரத்தில் இருக்கும். முதல் பிறையில் இருந்து அடுத்த முதல் பிறைவரையிலான சுழற்சியில் சந்திரன் பல ராசிகளை கடந்து செல்கிறது என்று விளங்குவதில் இவர்களுக்கு என்ன குழப்பம் என்று தெரியவில்லை. "நான் சென்னை சென்றடையும் வரை ரயில் பல நிலையங்களில் நின்று சென்றது" இதில் நிலையம் என்றால் சென்னை என்று அர்த்தமா? முடிவில் நான் சென்று சேருமிடம் சென்னை. இடையிடையே ரயில் நிற்குமிடம் நிலையங்கள். இரண்டையும் குழப்பிக்கலாமா?. "நான் நாலு வீடு சாப்பாடு சாப்பிட்டு குண்டாயிட்டேன்" இங்கே வீடு என்றால் குண்டாவது என்று அர்த்தமா? சென்னை என்பது நான் சென்றடையும் ஊர். ரயில் நிலையம் என்பது ரயில் நிற்குமிடம் நான் குண்டனேன் என்பது எனது உருவம் 4 வீடுகள் என்பது நான் சென்று சாப்பிட்ட இடங்கள் சந்திரன் அதன் ராசி சுழற்சியை சராசரியாக 27.32166 நாட்களில் முடித்துவிடும் ஆனால் பிறைச் சுழற்சியை முடிக்க சராசரி 29.53059 நாட்கள் ஆகும். இதனால் இம்மாதம் முதல் பிறையை நீங்கள் ஷரதானில் பார்த்தல் அடுத்த மாதம் நீங்கள் மீண்டும் ஷரதானில் பார்க்க மாட்டீர்கள். பதன் அல் ஹூத்-இல் பார்ப்பீர்கள். “மீண்டும் பழைய பேரீத்த மட்டையைப் (முதல் பிறை) போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்zில்களை (ராசிகளை) ஏற்படுத்தியிருக்கின்றோம்” என்பதே சரியான மொழியாக்கம் சந்திரனின் பிறைகளுக்கும் ராசிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குகிறது இந்த வசனம். மேலும் சந்திரன் பூமியை சுற்றி வருகிறதெனும் விஞ்ஞான உண்மையையயும் வெளிப்படுத்துவதே இவ்வசனம். இந்த வசனத்தில் கணக்கீட்டுக்கு ஆதாரமோ. பிறைகள் தேதிகளை காட்டும் என்பதோ இல்லை. ‏الشرطان‎ - aš-šaraṭān (or) ‏النطح‎ - an-naṭḥ ‏الغفر‎ - al-ġafr ‏البطين‎ - al-buṭayn ‏الزبانان‎ - az-zubānān ‏الثريا‎ - aṯ-ṯurayyā ‏الإكليل‎ - al-iklīl ‏الدبران‎ - al-dabarān ‏القلب‎ - al-qalb ‏الهقعة‎ - al-haqʿa ‏الشولة‎ - aš-šawla ‏الهنعة‎ - al-hanʿa ‏النعائم الواردة‎ - an-naʿāʾim al-wārida (or) ‏النعائم الصادرة‎ - an-naʿāʾim aṣ-ṣādira ‏الذراع‎ - aḏ-ḏirāʿ ‏البلدة‎ - al-balda ‏النثرة‎ - an-naṯra ‏سعد الذابح‎ - saʿd aḏ-ḏābiḥ ‏الطرف‎ - aṭ-ṭarf ‏سعد بلع‎ - saʿd bulaʿ ‏الجبهة‎ - al-ǧabha ‏سعد السعود‎ - saʿd as-suʿūd ‏الزبرة‎ - az-zubra ‏سعد الأخبية‎ - saʿd al-aḫbīya ‏الصرفة‎ - aṣ-ṣarfa ‏الفرع المقدم‎ - al-farʿ al-muqaddam ‏العواء‎ - al-ʿawwāʾ ‏الفرع المؤجر‎ - al-farʿ al-muʾaḫḫar ‏السماك‎ - as-simāk ‏بطن الحوت‎ - baṭn al-ḥūt மன்சில் என்ற அறபி வார்த்தை நபிகளாருக்கு முன்பே வழக்கத்தில் இருந்தது. நாம் சொல்லும் ராசி நட்சத்திரம் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டது. மக்கள் காலத்தை அளக்க அதை பயன்படுத்தினர். சூரியனுக்கும் சந்திரனுக்கும் மன்சில்கள் இருந்தன. இந்த வசனங்கள் இறங்கிய பின் மன்சில் என்றால் என்னவென்று மக்கள் கேட்டதாக தெரியவில்லை. "இத்தனை நாள் நாங்கள் நட்சத்திர கூட்டம் என்றுதானே நம்பி வந்தோம் இப்போது நீங்கள் படித்தரம் என்று சொல்கிறீர்களே " என்று மக்கள் மாநபியிடம் கேட்கவில்லை. இவர்கள் எல்லா பிறையையும் பாருங்கள் குறிப்பாக உர்ஜூனில் கதீமை (கடைசி பிறையை) பாருங்கள் என்று சொல்வதெல்லாம் இஸ்லாத்தில் இல்லாத விஷயங்கள். மேலே உள்ள வசனத்திற்கு “ஒரு முதல் பிறையிலிருந்து அடுத்த முதல் பிறை வரை சந்திரன்கள் பல மன்zில்களை (ராசி நட்சத்திரங்களை) கடந்து செல்கிறது” என்பதே பொருள். இதிலிருந்து கடைசிப்பிறையைப் பார்க்கவேண்டும் என்பதும் அதன் அடுத்தநாள் சங்கம நாள், அதற்கும் அடுத்த நாள் மாதத்தின் முதல் நாள் என்பதும் இவர்களின் கற்பனை வாதங்களே! கணக்கிட்டு இபாதத் செய்யலாம் எனும் வாதத்திற்கும் இந்த வசனத்தில் எந்த அடிப்படையும் இல்லை. மூன்றாம் வசனம்: அஹில்லதி அல்குர்ஆன் : 2:189 يَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ، قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّ، وَلَيْسَ الْبِرُّ بِأَن تَأْتُوا الْبُيُوتَ مِن ظُهُورِهَا وَلَـٰكِنَّ الْبِرَّ مَنِ اتَّقَىٰ، وَأْتُوا الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا، وَاتَّقُوا اللَّـهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. (முஃமின்களே! ஹஜ்ஜை நிறைவேற்றிய பிறகு உங்கள்) வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் (எதுவும் வந்து விடுவது) இல்லை; ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியமுடையயோராவர்; எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்; நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள். டாக்டர். முஹம்மது ஜான் இதில் வரும் பிறைகள் எனும் சொல்லை ‘முதல் பிறை’ ‘இரண்டாம் பிறை’ ‘மூன்றாம் பிறை’ எனும் மாதத்தின் உள்பகுதியாக இருக்கும் பிறைநாட்களை குறிப்பதாக பலரும் மொழிபெயர்த்து அப்படியே விளங்கியும் விளக்கியும் வருகின்றனர். ஆனால் ஆங்கில மொழிப்பெயர்ப்பளர்கள் அனைவரும் இதை “தலைப்பிறைகள்” என்றே மொழிப்பெயர்துள்ளத்தைக் காணலாம். இங்கேயும் வார்த்தையை அப்படியே மொழிபெயர்த்து விட்டு மொழிபெயர்ப்பை வைத்து வியாக்கியானம் கொடுக்கிறது இந்தக்கூட்டம். ஒரு வார்த்தை அந்த மொழியில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்று பார்க்க வேண்டும். இங்கே அஹில்லா எனும் வார்த்தை அக்காலத்தில் எப்படி பயன்படுத்தப்பட்டது என்று பார்க்க வேண்டும். حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ يَزِيدَ بْنِ، رُومَانَ عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا كَانَتْ تَقُولُ وَاللَّهِ يَا ابْنَ أُخْتِي إِنْ كُنَّا لَنَنْظُرُ إِلَى الْهِلاَلِ ثُمَّ الْهِلاَلِ ثُمَّ الْهِلاَلِ ثَلاَثَةَ أَهِلَّةٍ فِي شَهْرَيْنِ وَمَا أُوقِدَ فِي أَبْيَاتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم نَارٌ - قَالَ - قُلْتُ يَا خَالَةُ فَمَا كَانَ يُعَيِّشُكُمْ قَالَتِ الأَسْوَدَانِ التَّمْرُ وَالْمَاءُ إِلاَّ أَنَّهُ قَدْ كَانَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم جِيرَانٌ مِنَ الأَنْصَارِ وَكَانَتْ لَهُمْ مَنَائِحُ فَكَانُوا يُرْسِلُونَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ أَلْبَانِهَا فَيَسْقِينَاهُ ‏.‏ صحيح مسلم ٢٩٧٢/٣ உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என்னிடம்) ஆயிஷா (ரலி) அவர்கள், "என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் பிறை பார்ப்போம். அடுத்த பிறையும் பார்ப்போம். அதற்கடுத்த பிறையும் பார்ப்போம். இரண்டு மாதங்களில் மூன்று பிறைகளைப் பார்த்துவிட்டிருப்போம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (துணைவியர்) இல்லங்களில் (சமைப்பதற்காக அடுப்பில்) நெருப்பு பற்றவைக்கப்பட்டிராது" என்று கூறினார்கள். முஸ்லிம் : 5690, புகாரீ 2567 & புகாரீ 6459 இதில் அன்னை ஆயிஷா அஹில்லா எனும் அதே வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் அஹில்லா என்பதை தலைப்பிறைகள் எனும் பொருளில் பயன்படுத்துகிறார்கள். “மனாசிலுல் கமர்” மற்றும் “அஹில்லா” இவற்றிக்கு பிறையின் படித்தரங்கள் என்ற பொருள் இல்லவே இல்லை. இங்கு பிறைகள் எனப்படுவது முதல் பிறைகளை மட்டுமே குறிக்கும். முதல் பிறைகளை மட்டுமே அல்லாஹ் காலம் காட்டிகள் என்று கூறுகின்றான். முதல் பிறை மட்டுமே மாதத்துவக்கதை காட்டி அதன் மூலம் மாதங்களின் கணக்கை காட்டும். ஒரு பிறையை பார்த்துவிட்டு இது இரண்டாம் நாள் பிறை இது மூன்றாம் நாள் பிறை என்று யாராலும் கூற இயலாது. அப்படி கூற வேண்டுமெனில் எல்லா முதல் பிறைகளும் அளவில் ஒன்றாக இருக்கவேண்டும். எல்லா இரண்டாம் பிறைகளும் அளவில் ஒன்றாக இருக்கவேண்டும். எல்லா மாதமும் பௌர்ணமி 15ஆம் நாளில் வரவேண்டும். இது நடப்பதில்லை. இதற்கான நடைமுறை விளக்கத்தை பார்ப்போம். வளர்ந்து தேயும் பிறைகளும் இவர்கள் கூறுவதைப்போல் சர்வதேச தேதியை காட்டுவதில்லை என்பதை இங்கே நிறுவியுள்ளோம்.. பார்க்க http://hafsa13.blogspot.com/2016/02/11.html பிறையின் அளவை அதன் வீதியை வைத்து arc second எனும் அளவையில் விஞ்ஞானிகள் அளக்கிறார்கள். ஆனால் மக்களிடம் அதிகமாக பிரபலம் ஆனது அது எத்தனை சதவிகிதம் ஒளியூட்டப்பட்டுள்ளது அன்ற அளவீடுதான். அதையே நாமும் இங்கே தந்துள்ளோம். கீழே நாட்களும் நேரமும் ஹிஜ்ரி கமிட்டி காரர்களுக்கு பிடித்த சர்வதேச நேரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அமாவாசை அன்றிலிருந்து இரவு ஏழுமணிக்கு ஒருவர் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பிறை பார்க்கிறார் என்று வைத்துகொள்வோம் அவர் 2015 ஆம் ஆண்டில் ஒவ்வொரு சந்திர மாதமும் பின்வரும் அளவிலுள்ள பிறைகளை பார்த்திருப்பார். அமாவாசை ஏற்படும் நாள், அதன் அடுத்த நாள் முதல் பிறை, அதன் அடுத்த நாள் இரண்டாம் பிறை எனும் ஹிஜ்ரி கமிட்டி கோட்பாட்டிற்கு இணங்கவே இதை உருவாக்கியுள்ளேன். ஜமாதில் அவ்வல் மாதத்தின் முதல் பிறை 1.04% அளவு உள்ளது ஜமாதில் ஆகிர் மாதத்தின் முதல் பிறை 2.93% அளவு உள்ளது ஷஅஂபான் மாதத்தின் முதல் பிறை 3.49% அளவு உள்ளது இவை எல்லாமே முதல் பிறைதான் ஆனால் வெவ்வேறு அளவுகளில் உள்ளன. அல்லாஹ் பிறையின் படித்தரங்களை இப்படி மாற்றுகையில் அதை வைத்துகொண்டு பிறையின் படித்தரத்தை வைத்து பிறைநாளை எப்படி தெரிந்துகொள்ள முடியும். ஷஅஂபான் மாதத்தின் இரண்டாம் பிறை 8.49% அளவு உள்ளது தில் கஅதா மாதத்தின் இரண்டாம் பிறையோ 4.33%; கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அளவில் வித்தியாசம். ஒரு மாதத்தின் இரண்டாம் பிறையை விட வேறொரு மாதத்தின் இரண்டாம் பிறை இரண்டு மடங்கு அளவில் பெரிதாக உள்ளது. இப்படி இருக்கையில் பிறையின் அளவை வைத்து அது இந்த நாளை குறிக்கிறது என்று எப்படி சொல்ல இயலும். மாதம் பிறை நாள் வருடம் மாதம் நாள் மணி நிமி பிறையின் அளவு அமாவாசை 2015 1 20 19 0 0.25% 4. ரபி உல் ஆகிர் முதல் பிறை 2015 1 21 19 0 2.39% இரண்டாம் பிறை 2015 1 22 19 0 7.35% மூன்றாம் பிறை 2015 1 23 19 0 14.77% அமாவாசை 2015 2 18 19 0 0.16% 5. ஜமாதில் அவ்வல் முதல் பிறை 2015 2 19 19 0 1.04% இரண்டாம் பிறை 2015 2 20 19 0 4.90% மூன்றாம் பிறை 2015 2 21 19 0 11.38% அமாவாசை 2015 3 20 19 0 0.25% 6. ஜமாதில் ஆகிர் முதல் பிறை 2015 3 21 19 0 2.93% இரண்டாம் பிறை 2015 3 22 19 0 8.28% மூன்றாம் பிறை 2015 3 23 19 0 15.78% அமாவாசை 2015 4 18 19 0 0.02% 7. றஜப் முதல் பிறை 2015 4 19 19 0 1.52% இரண்டாம் பிறை 2015 4 20 19 0 5.64% மூன்றாம் பிறை 2015 4 21 19 0 11.93% அமாவாசை 2015 5 18 19 0 0.64% 8. ஷஅஂபான் முதல் பிறை 2015 5 19 19 0 3.49% இரண்டாம் பிறை 2015 5 20 19 0 8.49% மூன்றாம் பிறை 2015 5 21 19 0 15.21% அமாவாசை 2015 6 16 19 0 0.23% 9. றமதான் முதல் பிறை 2015 6 17 19 0 1.84% இரண்டாம் பிறை 2015 6 18 19 0 5.53% மூன்றாம் பிறை 2015 6 19 19 0 11.00% அமாவாசை 2015 7 16 19 0 0.69% 10. ஷவ்வால் முதல் பிறை 2015 7 17 19 0 3.11% இரண்டாம் பிறை 2015 7 18 19 0 7.34% மூன்றாம் பிறை 2015 7 19 19 0 13.11% அமாவாசை 2015 8 14 19 0 0.10% 11. தில் கஅதா முதல் பிறை 2015 8 15 19 0 1.31% இரண்டாம் பிறை 2015 8 16 19 0 4.33% மூன்றாம் பிறை 2015 8 17 19 0 8.99% அமாவாசை 2015 9 13 19 0 0.24% 12. தில் ஹிஜ்ஜா முதல் பிறை 2015 9 14 19 0 2.06% இரண்டாம் பிறை 2015 9 15 19 0 5.62% மூன்றாம் பிறை 2015 9 16 19 0 10.78% அமாவாசை 2015 10 13 19 0 0.62% 1. முஹர்ரம் முதல் பிறை 2015 10 14 19 0 3.03% இரண்டாம் பிறை 2015 10 15 19 0 7.20% மூன்றாம் பிறை 2015 10 16 19 0 13.06% அமாவாசை 2015 11 11 19 0 0.12% 2. சஃபர் முதல் பிறை 2015 11 12 19 0 1.25% இரண்டாம் பிறை 2015 11 13 19 0 4.35% மூன்றாம் பிறை 2015 11 14 19 0 9.35% அமாவாசை 2015 12 11 19 0 0.33% 3. ரபி உல் அவ்வல் முதல் பிறை 2015 12 12 19 0 2.20% இரண்டாம் பிறை 2015 12 13 19 0 6.24% மூன்றாம் பிறை 2015 12 14 19 0 12.38% இவர்கள் சொல்லும் மற்றொரு வாதம் “நாங்கள் பிறையை பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை. எல்லா பிறையையும் பாருங்கள் என்று தான் சொல்கிறோம். குறிப்பாக கால்பிறை பௌர்ணமி முக்கால் பிறை மற்றும் உர்ஜூனில் கதீம் ஆகியவற்றை பாருங்கள். அவைகள் சரியாக மாதத்தின் நாட்களை காட்டும்”. இதில் உர்ஜூனில் கதீமின் நிலையை ஏற்கனவே விளக்கிவிட்டோம். இனி கால், முழு மற்றும் முக்கால் பிறைகள் நாட்களை காட்டுகின்றனவா என்று பார்ப்போம். இவர்களின் குவாட்டர் கணக்குகளையும் துல்லியமான பிறை வடிவங்களுடன் இங்கே விளக்கி இருக்கிறோம்.. பார்க்க http://hafsa13.blogspot.com/2016/02/11.html கீழேயுள்ள அட்டவணையில் 2016ம் ஆண்டில் பிறையின் படித்தரங்களையும் அவை எந்த பிறை நாளில் ஏற்படுகிறது எந்த தகவலையும் பட்டியலிட்டுள்ளோம். ஒரு மாதம் கால்பிறை 6 வது நாளில் ஏற்பட்டால் மற்றொரு மாதம் 7ம் நாளிலும் பிறிதொரு மாதம் 8ம் நாளிலும் ஏற்படுகிறது. முழுநிலவு 14, 15 & 16 ஆகிய நாட்களில் ஏற்படுகின்றன. முக்கால் பிறையோ 21, 22 & 23 ஆகிய நாட்களில் ஏற்படுகின்றன. மாதம் அமாவாசை கால்பிறை ஏற்படும் நாள் முழுநிலவு ஏற்படும் நாள் முக்கால்பிறை ஏற்படும் நாள் 4. ரபி உல் ஆகிர் 10-Jan 16-Jan 6 24-Jan 14 01-Feb 22 5. ஜமாதில் அவ்வல் 08-Feb 15-Feb 7 22-Feb 14 01-Mar 21 6. ஜமாதில் ஆகிர் 09-Mar 15-Mar 6 23-Mar 14 31-Mar 22 7. றஜப் 07-Apr 14-Apr 7 22-Apr 15 30-Apr 23 8. ஷஅஂபான் 06-May 13-May 7 21-May 15 29-May 23 9. றமதான் 05-Jun 12-Jun 7 20-Jun 15 27-Jun 22 10. ஷவ்வால் 04-Jul 12-Jul 8 19-Jul 15 26-Jul 22 11. தில் கஅதா 02-Aug 10-Aug 8 18-Aug 16 25-Aug 23 12. தில் ஹிஜ்ஜா 01-Sep 09-Sep 8 16-Sep 15 23-Sep 22 1. முஹர்ரம் 01-Oct 09-Oct 8 16-Oct 15 22-Oct 21 2. சஃபர் 30-Oct 07-Nov 8 14-Nov 15 21-Nov 22 3. ரபி உல் அவ்வல் 29-Nov 07-Dec 8 14-Dec 15 21-Dec 22 பிறையின் எந்த படித்தரத்தை பார்த்தும் அது இந்த நாளுக்குரிய பிறை என்று சொல்லவே இயலாது. பிறையின் படித்தரத்தை பார்த்து நாட்களை அறிந்தார்கள் என்பதற்கு நபிகள் நாயகம் கால வரலாற்றில் எந்த சான்றும் இல்லை. மாறாக அவர்களால் பிறைகளை பார்த்து நாட்களை அறிய முடியவில்லை என்பதற்கு முஸ்லிம் 1984 வது ஹதீஸ் சான்றாக உள்ளது. பார்க்க (http://hafsa13.blogspot.com/2015/07/19-1.html). பிறையின் படித்தரத்தை பார்த்து நபி ஸல் கணக்கிட்டார்கள் என்பது நபிகளார் மீது இட்டுக்கட்டிய பாவமாகும். குறிப்பாக உர்ஜூனில் கதீம் என்றால் கடைசி தேய்பிறை என்பதும் அதை பார்த்துவிட்டு அதன் அடுத்த நாள் கும்ம-வின் நாள் என முடிவுசெய்தார்கள் என்பது ஆதாரமற்றது. பிறையின் படித்தரங்கள் நாட்களை காட்டும் என்பதை குர்ஆன் சொல்லவுமில்லை. பிறையின் படித்தரங்கள் நாட்களை காட்டவுமில்லை. முதல் பிறை மாத துவக்கத்தை காட்டும். ஒரு நாள் என்பதை காட்டுவது சூரியனே. முதல் பிறையிலிருந்து ஒவ்வொருநாளாக சூரிய மறைவைக்கொண்டு எண்ணிவரவேண்டும் 29வது பகல் முடிந்து வரும் இரவில் மீண்டும் பிறையை தேடவேண்டும். பிறை தெரிந்தால் அடுத்த நாள் அடுத்த மாதத்தின் முதல் நாள். இப்படிதான் சூரியனும் சந்திரனும் காலத்தை காட்டுகின்றன. ஒரு நாளையும் அதன் உட்பகுதிகளையும் காட்டுவது சூரியன். மாதத்தை காட்டுவது சந்திரன். 12மாதங்கள் ஒரு வருடம். இதுவே இஸ்லாமிய நாட்காட்டி. இப்படித்தான் நபி ஸல் செய்தார்கள் என்பதற்கான ஆதாரம் கீழே: நபி (ஸல்) அவர்கள் ஏனைய மாத(தலைப்பிறை)ங்களுக்கு வழங்காத முக்கியத்துவத்தை ஷஅபான் தலைப்பிறைக்கு வழங்குபவர்களாக இருந்தார்கள். பிறகு ரமலானின் பிறையை கண்ணால் கண்டு நோன்பு நோற்பார்கள். அவர்களுக்கு மறைக்கப்பட்டால் முப்பதாக கணக்கிட்டு பிறகு நோன்பு நோற்பார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : அஹ்மத் (25202) மேலும் இவர்கள் பின்வரும் வசனங்களையும் ஆதாரமாக காட்டுகின்றனர். 17:12ஆம் வசனத்திற்கு விளக்கமாக 10:5 வசனம் உள்ளதையும் ஏற்கனவே அலசிவிட்டோம். பின்வரும் வசனங்களில் சூரியனும் சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன என்ற ஒரு கருத்தைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அவை கணக்கின்படி இயங்குவதால் நாம் கணக்கிட்டு இபாதத் செய்யலாம் என்பது அறிவுடைமையல்ல. கணக்கின் படி இயங்குகின்றன என்பது இறைவன் தன் ஆளுமையையும் தன் அதிகாரத்தையும் பறைசாற்றுவதற்குரிய வசனமாகும். தன் அத்தாட்சிகள் எக்காலத்திற்கும் நிலைத்து நிற்கவேண்டும் என்பதற்கும் சான்றுகள் ஆகும். அந்த கணக்கை நாம் படிக்க இயலுமா என்றால்! இயலும்! அந்த கணக்கை நாம் படித்தால், உண்மையை அறியும் நோக்குடன் நடுநிலைமையோடு படித்தால், கணக்கிட்டு பின்பற்றினால் ஏற்படும் விளைவுகளை இவர்கள் அறிந்துகொள்வார்கள். அல்லாஹ் இட்ட சந்திரனின் கணக்குகள் பூமிக்கு இரு வேறு சந்திர மாதங்களை வழங்குகின்றன. பூமியின் ஒரு பகுதிக்கு அது 29நாட்கள் கொண்ட மாதத்தையும் மறு பகுதிக்கு 30நாள் கொண்ட மாதத்தையும் அது வழங்குகிறது. இதுவே இறைவன் கூறும் கணக்கு. மேலும் இக்கணக்கு சந்திர மாதத்தில் ஒரு கிழமைக்கு இரண்டு தேதிகள் இருக்கும் எனும் சத்தியத்தையும் வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது. அந்த கணக்கை பின்வரும் கட்டுரைகளில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள் 1) பிறையின் விஞ்ஞானம்: பாகம்-1 >> http://hafsa13.blogspot.com/2015/03/astronomyofnewmoon2.html 2) பிறையின் விஞ்ஞானம்: பாகம்-2 >> http://hafsa13.blogspot.com/2015/02/astronomyofnewmoon.html 3) சர்வதேச பிறை - ஒரு விஞ்ஞான ஆய்வு >> http://hafsa13.blogspot.com/2014/12/Universal-Hilail-An-Astronomical-Analysis.html அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான்; அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான்; இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்; சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது; (நபியே!) அறிந்து கொள்வீராக! அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (அல்குர்ஆன் : 39:5) இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும்; அதிலிருந்து பகலை கழற்றி விடுகிறோம்; அதனால் இவர்கள் ஆழ்ந்த இருளிலாகிவிடுகிறார்கள். (அல்குர்ஆன் : 36:37) இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும். (அல்குர்ஆன் : 36:38) சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. (அல்குர்ஆன் : 36:40) அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள் களைப்பாறி) அமைதிபெற அவனே இரவையும் காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான் - இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும். (அல்குர்ஆன் : 6:96) சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. (அல்குர்ஆன் : 55:5) இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாக ஆக்கினோம்; பின்னர் இரவின் அத்தாட்சி மங்கி (இருளாகி)டச் செய்தோம்; உங்கள் இறைவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடிக்கொள்வதற்காகவும் - ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும், பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம் - மேலும் நாம் ஒவ்வொரு பொருளையும் தெளிவாக விவரித்திருக்கிறோம். (அல்குர்ஆன் : 17:12) (இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்; பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான்; இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் - நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான். (அல்குர்ஆன் : 13:2) நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 9:36) (போர் செய்யக்கூடாது என்று தடுக்கப்பட்ட இம்மாதங்களை அவர்கள் தங்கள் விருப்பப்படி) முன்னும் பின்னும் ஆக்குவதெல்லாம் குஃப்ரை (நிராகரிப்பை)யே அதிகப்படுத்துகிறது; இதனால் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப் படுகின்றனர். ஏனெனில் ஒரு வருடத்தில் அ(ம்மாதங்களில் போர் புரிவ)தை அனுமதிக்கப் பட்டதாகக் கொள்கிறார்கள்;) மற்றொரு வருடத்தில் அதைத் தடுத்து விடுகின்றனர். இதற்கு காரணம் (தாங்கள் தடுத்துள்ள மாதங்களின் எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களை தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்காகத்தான். அவர்களின் (இத்)தீச்செயல்கள் அவர்களுக்கு (ஷைத்தானால்) அழகாக்கப்பட்டுவிட்டன; அல்லாஹ், காஃபிர்கள் கூட்டத்தை நேர் வழியில் செலுத்த மாட்டான். (அல்குர்ஆன் : 9:37) குறிப்பு: ஜான் டிரஸ்ட் மொழிபெயர்ப்பையும் வேறு எந்த மொழிபெயர்ப்பையும் நான் இங்கு குறை கூறவோ விமர்சனம் செய்யவோ இல்லை. குர்ஆனில் அறிவியலின் பல பிரிவுகளை பற்றி அல்லாஹ் பேசுகிறான். விண்ஞானம், புவியியல், உடலியல், கருவியல்.... மற்றும் பல.... இவை அனைத்தையும் அறிந்திருந்தால் மட்டுமே அந்த அந்த வசனத்திற்கு தக்க விளக்கம் அளிக்க முடியும். மார்க்கத்தில் நல்ல ஞானமுள்ளவர்கள் அறிவியலில் அதே அளவு ஞானம் உடையவர்களாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எனவே இவற்றை அவர்களது மொழிபெயர்ப்புகளில் இருக்கும் குறையாக காணாமல் அவர்களது சிறந்த பணிக்குரிய நன்மையை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கவேண்டும் என்று பிரார்த்தித்துவிட்டு சரியான ஞானத்தை தேடுபவர்களாக பயணிப்போம்......
இரவில் சாப்பிட வேண்டிய, சாப்பிடக் கூடாத உணவுகள்! #NightFoods | Best and Worst Foods To Eat for Sleep - Vikatan Save the vikatan web app to Home Screen tap on Add to home screen. X READ IN APP Login செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் விளையாட்டு கிரிக்கெட் கால்பந்து ஐ.பி.எல் ஆன்லைன் தொடர்கள் New My News ராசி காலண்டர் மேலும் மெனுவில் Search Published: 03 Oct 2018 2 PM Updated: 03 Oct 2018 2 PM இரவில் சாப்பிட வேண்டிய, சாப்பிடக் கூடாத உணவுகள்! #NightFoods Dr.வி.விக்ரம்குமார்.,MD(S) ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் Use App இரவில் சாப்பிட வேண்டிய, சாப்பிடக் கூடாத உணவுகள்! #NightFoods இரவில் சாப்பிட வேண்டிய, சாப்பிடக் கூடாத உணவுகள்! #NightFoods உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் நிலவைக் காட்டி குழந்தைகளுக்குச் சோறூட்டிய காலம் மலையேறிப் போய்விட்டது. இன்றைக்கு செல்போனைக் காட்டி, சோறூட்டும் காலமாகிவிட்டது. குழந்தைகளின் நிலைமை இதுவென்றால், செல்போன்களின் துணையோடும் தொலைக்காட்சிகளின் அரவணைப்போடும்தான் பெரும்பாலானோர் இரவு உணவைச் சாப்பிடுகிறார்கள். காலை உணவைத் தவிர்க்காமல் சாப்பிடுவது எவ்வளவு முக்கியமோ, அதைப்போல இரவு உணவை அளவோடு முறையாகச் சாப்பிடுவதும் மிகவும் முக்கியம். `ஒருநாளில் எந்த வேளை உணவைச் சாப்பிடப் பிடிக்கும்’ என்ற கருத்துக்கணிப்பை மேற்கொண்டால், பெரும்பாலானோரின் பதில் `இரவு உணவு’ என்பதாகத்தான் இருக்கும். `இரவு நேரங்களில் ஓரளவு நேரம் கிடைக்கிறது. எனவே, மற்ற வேலைகளைவிட இரவில் அதிகமாகச் சாப்பிட முடியும்…’ என்று பலர் சொல்வதைக் கேட்கலாம். ஆனால், முப்பொழுதுகளில் குறைவாகச் சாப்பிட வேண்டிய பொழுது இரவுதான்! காலையில் அரசரைப் போலவும், மதிய வேளையில் இளவரசரைப் போலவும், இரவில் யாசகனைப் போலவும் உணவின் அளவை அமைத்துக் கொள்ள அறிவுறுத்திய சமூகம் நம்முடையது. ஆனால், இன்றைய நிலையோ தலைகீழ். நேரமின்மை காரணமாக காலை உணவைக் குறைவாகவும், இரவு நேரத்தில் அதிக உணவுகளையும் எடுத்துக்கொள்ளும் சமூகமாக மாறிவிட்டோம். இரவு உணவை எட்டிலிருந்து ஒன்பது மணிக்குள் முடித்துக்கொள்வது நல்லது. சாப்பிட்டுவிட்டு, சிறிது தூரம் மெதுவான நடை மேற்கொண்டபிறகு உறங்கச் செல்வது நலம். இரவு 11 அல்லது 12 மணிக்கு இரவு உணவைச் சாப்பிட்டுவிட்டு, தட்டிலேயே கை கழுவிவிட்டு, படுக்கையில் சாய்ந்து உறங்குவது போன்ற மிகப்பெரிய உணவியல் தவறு வேறு எதுவும் இருக்க முடியாது. சாப்பிட்டவுடன் உறங்குபவர்களுக்கு இரைப்பையில் சுரக்கும் அமிலம் இரைப்பைக் குடலை நோக்கி மேலேறி புண்களை உருவாக்கும். நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்களுள் இதுவும் ஒன்று. தொடர்ந்து இப்படிச் செய்வதால், இரைக்குழல் பகுதியில் ஏற்பட்ட புண், புற்றுநோயாகக்கூட மாற்றம் பெறலாம். நன்றாக உறங்கி இளைப்பாற வேண்டிய இரவு நேரத்தில், உணவுகளைச் சாப்பிட்டு செரிமான உறுப்புகளுக்கு பணிச்சுமையை அதிகரிக்கக் கூடாது. இந்தத் தவற்றைச் செய்பவர்களுக்கு செரிமானக் கோளாறுகள் ஏற்பட்டு, பாதிப்பு ஏற்படுவது உறுதி. `நான் என்ன செய்ய, எனது வேலை முடியவே 10 மணி ஆகிவிடுகிறது’ என்பவர்களுக்கான ஒரே வழி… எப்படி மதிய உணவை வீட்டிலிருந்தே பார்சல் செய்கிறோமோ, அதைப் போல இரவு உணவையும் சூழலுக்கேற்றபடி அமைத்துக்கொண்டு, 9 மணிக்குள் முடித்துவிடுவது நல்லது. ஆவியில் வெந்த உணவுகளையும் செரிமானத்துக்குப் பிரச்னை தராத மென்மையான உணவுகளையும் இரவுநேரத்தில் சாப்பிடுவது நல்லது. இட்லி, இடியாப்பம், தோசை போன்ற உணவுகளைச் சாப்பிடலாம். எண்ணெய் சூழ்ந்த பரோட்டாக்களும் காரமான குழம்பு வகைகளும், துரித உணவு ரகங்களும் இரவு உணவில் வேண்டாம். துரித உணவுகள் செரிமானத்துக்குப் பிரச்னை உண்டாக்குவதுடன் ஆழ்ந்த உறக்கத்தையும் கெடுத்துவிடும். ஆனால், இன்றைக்குப் பெரும்பாலான இரவுநேர பார்ட்டிகளில், செரிமானக் கடினமான உணவு ரகங்கள்தாம் பரிமாறப்படுகின்றன. அதனால், இரவுநேர பார்ட்டி உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கலாம். குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளை இரவில் சாப்பிட்டால் விஷ உணவுக் குறிகுணங்கள் உண்டாவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். சுரைக்காய், புடலங்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளையும் இரவில் ஒதுக்கலாம். இரவில் நன்றாக உறங்கிக்கொண்டிருக்கும்போது, செரிமானமாகாத உணவுகள் வயிற்றுக்குள் எழுப்பும் `கடமுடா' ஓசைகளும், `தடதட' அசைவுகளும் நம்மை தட்டி எழுப்பிவிடக் கூடாது. எண்ணெய் அதிகம் நிறைந்த, பொரித்த, வறுத்த உணவுகள், நெஞ்செரிச்சல், உப்பிசம் போன்றவற்றை உருவாக்கும். குறிப்பாக அசைவ உணவுகளுக்கு இரவு உணவில் இடம் தர வேண்டாம். அசைவ உணவுகள் செரிமானமடைய கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால், மறுநாள் மலக்கட்டு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ‘அவரைப்பிஞ்சு அத்திக்காய்… எனத் தொடங்கும் சித்த மருத்துவப் பாடல், இரவில் சாப்பிடத் தகுந்த பதார்த்தங்களைப் பட்டியலிடுகிறது. அவரைப் பிஞ்சு, அத்திக்காய், பால், துவரம் பருப்பு, முருங்கைப் பிஞ்சு, தூதுவளை போன்றவை இதில் அடங்கும். குறிப்பிடப்பட்டுள்ள பொருள்களில் நார்ச்சத்துக்குக் குறைவில்லை. உடலுக்குத் தேவையான வெப்பத்தைக் கொடுக்க தூதுவளை உதவும். பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள உணவுப் பதார்த்தங்கள் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. உணவியல் தத்துவப்படி, உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்தால் இரவு உணவைச் சிறப்பாகக் கட்டமைக்கலாம். கீரை வகைகள், தயிர் ரகங்களுக்கு இரவு மெனுவில் தடை விதிப்பது கட்டாயம். கீரை மற்றும் தயிர் உணவுகளால் தலைபாரம், சளி, இருமல் தொந்தரவுகளுடன் ஒவ்வாமை சார்ந்த குறிகுணங்களும் கைகோத்துக் கொள்ளும். குளிர்ச்சித் தன்மையுடைய இவற்றைக் காலத்துக்கேற்ற வகையில் எடுப்பதுதான் அறிவுடைமை. இரவு நேரத்தில் காய்கள் அடங்கிய சூப் வகைகள், மிளகு மஞ்சள் சேர்த்த பால் போன்றவை உகந்ததாக இருக்கும். பன்னாட்டுக் குளிர்பானங்கள்... இரவில் மட்டுமல்ல எப்போதுமே வேண்டாம். நேரம் கிடைப்பது இரவில் மட்டும்தான் என்பதால் வயிறுமுட்டுமளவும் தொண்டைக்கு எட்டும் வகையிலும் இரவு உணவை அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இரவில் உணவுகளை அளவாக எடுத்துக்கொண்டால் பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கவும் முடியும். நீண்ட நாள்களாக செரிமானப் பிரச்னை உள்ளவர்கள், இரவில் அளவாகவும் குறிப்பிட்ட நேரத்தில் மெல்லிய உணவுகளை எடுக்கும் உணவு முறையையும் கடைப்பிடித்துப் பாருங்கள். சில நாள்களில் நீங்கள் எதிர்பார்க்கும் தடங்கலில்லாத செரிமானம் பரிசாகக் கிடைக்கும். துரித வாழ்வில் வார நாள்களில் முடியவில்லையா, வரும் ஞாயிறு முதல் இரவு உணவை முறைப்படுத்திப் பாருங்கள். ஞாயிறு கொடுக்கும் பலனைப் பார்த்து, வாரத்தின் அனைத்து நாள்களிலும் முறையான இரவு உணவுப் பழக்கத்தை உங்கள் மனம் தேடும். துளிர்விட்டிருக்கும் நிலா வெளிச்சம்… மணம் கமழும் கிராமத்து வாசல்… வட்டமாக உட்கார்ந்திருக்கும் அன்பு உறவுகள்… நேசத்துடன் உணவுப் பரிமாற்றம்… பிறகு குடும்பத்துடன் குறுநடை… ஆழ்ந்த உறக்கம்!... இப்படியான இரவு உணவுச் சூழல் மீண்டும் கிடைக்குமா!... நகரங்களில் வாய்ப்பில்லை. இருப்பினும் மொட்டைமாடி நிலா வெளிச்சத்தில் இப்படிப்பட்ட இரவு உணவுச் சூழலை தாராளமாக அமைக்கலாம். நோயில்லாமல் வாழ இதுவும் ஒரு வழி!...
அடுத்த வருடம் தொடக்கம், அரச ஊழியர்கள் பத்திக் அல்லது கைத்தறி நெசவுத் துணிகளால் தைக்கப்பட்ட ஆடையை அணிய வேண்டும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நேற்று (10) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். $ads={2} இதற்குரிய வேலைத்திட்டம் பொது நிர்வாக அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் எனவும் இலங்கையின் புடவை உற்பத்திக் கைத்தொழிலில் நிலவும் பிரச்சனைகளக்குத் தீர்வு கண்டு, நாடெங்கிலும் உள்ள ஆடை வடிவமைப்புக் கலைஞர்களின் துணையுடன் புதிய வடிவங்களை அறிமுகம் செய்யப் போவதாக அமைச்சர் கூறினார். எதிர்காலத்தில், பத்திக் ஆடை வடிவமைப்பாளர்களை பயிற்றுவித்து, அவர்களுக்கு என்-வி-கியூ சான்றிதழ்களை வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். துறை சார்ந்தவர்களுக்கு சலுகைக் கடன்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார். Share Previous News Next News யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads By Category: எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம் சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும் February 2016 Issue தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | வாசகர் கடிதம் அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | ஜோக்ஸ் எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடித்தது Tamil Unicode / English Search அன்புள்ள சிநேகிதியே < Prev | Index | Next > உள்ளே புதைந்திருக்கும் பாசம்... - சித்ரா வைத்தீஸ்வரன் | பிப்ரவரி 2016 | | (3 Comments) Share: அன்புள்ள சிநேகிதியே மிகவும் மனம்நொந்து எழுதுகிறேன். எனக்கு நான்கு குழந்தைகள். வீட்டோடு வளர்த்து எங்களுடனேயே ஒட்டிக்கொண்ட சின்னப்பையனையும் சேர்த்தால் ஐந்து. எல்லோருக்கும் படிப்பு, திருமணம் என்று செலவு செய்து, பணவிஷயத்தில் கண்டிப்பாக இருந்து எல்லாக் கடமைகளையும் முடித்தார் என் வீட்டுக்காரர். இப்போது என் பேரன் பேத்திகள் காலேஜ், திருமணம், நல்ல வேலை என்று மிகவும் வசதியாக இருக்கிறார்கள். எனக்கு இரண்டு பெண்கள்; இரண்டு பிள்ளைகள். ஒருபெண் உள்ளூரில். மூன்று பேர் அமெரிக்காவில். என் கணவர் 17 வருடங்களுக்கு முன்பு திடீரென்று என்னைவிட்டுப் பிரிந்தபோது எனக்கு 52 வயது. அவருக்கு இன்னும் மூன்று வருடம் சர்வீஸ் இருந்தது. ஆனால் குடும்பப்பொறுப்பை எல்லாம் முடித்து விட்டிருந்தார். எனக்கும் உடம்பில் அப்போது தெம்பு இருந்தது. யாரும் பக்கத்தில் இல்லை. பறவைகள் ஒவ்வொரு திசையிலும் பறந்துவிட்டிருந்தன. நான் அக்கம்பக்கத்துக் குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக்கொடுத்து சிறு குழந்தைகள் காப்பகம்போல நான்கைந்து குழந்தைகளை வைத்துக்கொண்டு மிரட்டிப் பொழுதுபோக்கிக் கொண்டிருந்தேன். யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. மைத்துனர் பையன் வயதில் சிறியவன். என்னுடன் சில வருடங்கள் தங்கி சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவனும் வெளிதேசத்துக்குப் பறந்து போய்விட்டான். என் கணவர் வாழ்க்கையை அழகாகத் திட்டமிட்டு, தன் கடமைகளை முடித்து எனக்கும் சிறிது சேர்த்து வைத்துவிட்டுத்தான் போனார். ஆனால், எத்தனை வருஷம் தாங்கும்? குழந்தைகளை எதற்குமே கேட்டுப் பழக்கமில்லை. அவர்களும் தங்கள் குடும்பம், குழந்தைகள், பணம் சேர்ப்பது என்பதில் குறியாக இருந்துவிட்டனர். எட்டு வருடங்களுக்கு முன்னால் இரண்டு பையன்களும் சேர்ந்து, ஒரு டிக்கெட் வாங்கி அமெரிக்காவிற்கு அழைத்து வந்தார்கள். எல்லாம் சுற்றிக் காட்டினார்கள். அதற்குப் பிறகு இப்போது பேத்தி கல்யாணத்தை ஒட்டி அழைத்தார்கள். வந்திருக்கிறேன். எல்லாம் நல்லபடியாக முடிந்து இந்தியாவிற்குத் திரும்பும் சமயத்தில் தவறிவிழுந்து, கால் எலும்பு முறிந்து பெரிய கலாட்டா ஆகிவிட்டது. இரண்டு மாதமாகப் படுக்கையில் இருக்கிறேன். இவர்களுக்கு ஏகப்பட்ட செலவு. கூடத் துணையில்லாமல் இந்தியாவுக்குத் திரும்பமுடியாது. அப்படிப் போனாலும் நானே என்னைப் பார்த்துக்கொள்வது சிரமம். நான் ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பிவந்து படுக்கையில் இருந்தபோது, என்னைப்பற்றி இவர்கள் பேசியதை எல்லாம் ஒரு மாதிரியாகக் குறித்து வைத்திருக்கிறேன். பெரிய பையனுடன் தங்கியிருக்கிறேன். ஏற்கனவே பெண் திருமணச் செலவு, என் கால் முறிந்த செலவு.. அவனால் இதற்குமேல் எந்தச் செலவும் ஏற்றுக்கொள்ள முடியாது. பெண் இருக்குமிடம் இங்கிருந்து ஏழு மணிநேர டிரைவ். ஒருமுறை வந்து பார்த்துவிட்டுப் போனாள். ஆனால் அவளால் என்னுடன் இந்தியாவிற்கு துணைக்கு வரமுடியாது. அவளுக்கு லீவ் இல்லை. பையன் காலேஜ் போகப்போகிறான். பெண்ணுக்கு ஸ்கூல். அவளால் முடியாது. இன்னொரு பையன் பிசினஸ். எக்கச்சக்க டென்ஷன். "பணம் வேண்டுமானாலும் கொஞ்சம் அனுப்புகிறேன்; ஆனால் நேரமில்லை" அவனுக்கு. இந்தியாவில் இருக்கும் பெண், "பண உதவி செய்யமுடியாது; ஏதோ கொஞ்சநாள் வந்து இருக்கிறேன்." துபாயில் மைத்துனர் பையன். அவனுடைய காண்ட்ராக்ட் வேலை முடிந்துவிட்டது. கனடாவிற்குப் போக முயற்சி செய்து கொண்டிருக்கிறான். மனைவிக்கு உடம்பு சரியில்லை. அவனே என்ன செய்வது என்று தத்தளித்துக் கொண்டிருக்கிறான். ஒவ்வொருவரும் என்னைக் கவனிக்க முடியவில்லை என்பதற்குக் காரணங்களைச் சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டு என் உடல்நிலையை அவ்வப்போது விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தாய்க்கு ஐந்து குழந்தைகள் பாரமாகத் தெரியவில்லை. ஆனால் அந்த ஐந்து குழந்தைகளுக்கு ஒரு தாய் பாரமாகத் தெரிகிறாள். எனக்கு இந்த நிலையில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதுவரை யாரையும் அண்டி இருந்ததில்லை. என் கணவர், "நமக்கு என்ன வசதி இருக்கிறதோ அதற்குள் அடக்கமாக வாழவேண்டும். யாரிடமும், எதையும் வேண்டக்கூடாது" என்ற கொள்கையில் இருந்தவர். என் குழந்தைகள் என்னை வைத்து ஒருவருக்கொருவர் பேரம் பேசுவது அப்படியே என் மனதை ரணகளம் ஆக்கிவிட்டது. நொந்து எழுதுகிறேன். வழி தெரியவில்லை. இப்படிக்கு ................... அன்புள்ள சிநேகிதியே யாரையும் அண்டாமல் இருப்பதை வைத்துக்கொண்டு நெறியோடும் பொறுப்போடும் வாழ்ந்தவர் உங்களுக்குக் கணவராக அமைந்தது உங்கள் பாக்கியம். அதை நினைத்து மகிழ்ச்சி அடையுங்கள். அந்தப் பாதையில் நீங்களும் 17 வருடம் சென்றிருக்கிறீர்கள். அதை நினைத்துப் பெருமைப்படுங்கள். உங்கள் குழந்தைகள் அனைவரும் படித்து நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். சந்தோஷப்படுங்கள். வயதான காலத்தில் பிறரை அண்டி வாழாமல் ஆண்டவன் நொடியில் நம்மை அழைத்துக் கொள்ளவேண்டும் என்றுதான் எல்லாருமே ஆசைப்படுகிறோம். என்னதான் அழகாகத் திட்டம் போட்டாலும் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் - the unknown, the unforeseen, the unexpected - ஆச்சரியமோ, அதிர்ச்சியோ ஏற்பட்டுக்கொண்டேதான் இருக்கும். உங்கள் குழந்தைகள் உங்களை பாரமாக நினைத்தால் நினைத்துக் கொள்ளட்டுமே! நீங்கள் உங்கள் பொறுப்பை கடமையாக நிறைவேற்றியிருக்கிறீர்கள். அவர்கள், தங்கள் பொறுப்பை பாரமாக நினைத்தாலும் எப்படியாவது நிறைவேற்றி விடுவார்கள். அவர்களுக்குள் வாக்குவாதம், அபிப்பிராய பேதம் எல்லாம் வரத்தான் செய்யும். அதற்காக முதிர்ச்சியுள்ள உங்கள் மனம் குன்றலாமா? இன்னும் சிறிதுநாளில் வாக்கர் வைத்து நடப்பீர்கள். அப்புறம் தானாகவே நடக்க முயற்சி செய்வீர்கள். அப்படியும் முடியாவிட்டால் இருக்கவே இருக்கிறது எல்லாருக்கும் சீனியர் சிட்டிசன்ஸ் ஹோம். நீங்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையில் நெறி தெரிகிறது. விவேகம் தெரிகிறது. மன உறுதி தெரிகிறது. அவையெல்லாம் தொடரட்டும். எல்லோரும் எதையோ நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறோம். இந்தப் பரபரப்பு வாழ்க்கையில் பாசம் உள்ளே புதைந்துகொண்டு, கடமையை பாரமாக வெளியே தள்ளுகிறது. அவ்வளவுதான். அறவே பாசமில்லாமல் போய்விடாது. கவலைப்படாதீர்கள். வாழ்த்துக்கள், டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன், கனெக்டிகட் Share: 3 Comments By: Chinnaswamy (India) Feb 07, 2016 - My other reviews << Return to Article I too pray for her speedy recovery from her illness and return to India. I too suggest that she can join in a senior citizens home for the rest of her life and peacefully stay there. There are many such homes offering free lodging & boarding to my knowledge. VCS By: vedavalli sunda (India) Feb 07, 2016 - My other reviews << Return to Article excelent answer.pray to god for speedy recovery.God is great.Do't worry.Children will realise and take care of you.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வீட்டில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு; 4 பேர் படுகாயம். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டி எஸ்வின் தெருவில் முத்தையா என்பவரது வீட்டில் சட்ட விதவிதமாக பட்டாசு தயாரிப்பில்…
இந்த 4 காரியங்களைப் புரிந்துகொள்வதன் மூலம், நாம் தேவனுக்கு நெருக்கமாவோம் | சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை தேவன் தோன்றுவதைக் காண ஏங்கும் அனைவரையும் வரவேற்கிறோம்! சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை மொபைல் செயலிகள் தமிழ் முகப்பு புத்தகங்கள் தேவனின் வெளிப்பாடுகள் காணொளிகள் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளின் வாசிப்புகள் தேவனுடைய அனுதின வார்த்தைகள் சுவிசேஷத் திரைப்படங்கள் உபதேசத் தொடர்: மெய்யான விசுவாசத்தைத் தேடுதல் திருச்சபை ஜீவிதம் குறித்த சாட்சிகள் குழுப்பாடல் காணொளிகளின் தொடர் வரிசை திருச்சபை ஜீவிதம்—பன்முக நிகழ்ச்சி தொடர்கள் இசை காணொளிகள் சத்தியத்தை வெளிப்படுத்துதல் திரைப்படத்திலிருந்து பிரத்யேகமாக எடுக்கப்பட்ட பகுதி பாமாலைகள் சாட்சிகள் ஜீவிய அனுபவங்களின் சாட்சிகள் கர்த்தருடைய வருகைக்கான சாட்சிகள் கர்த்தருடைய வருகையை வரவேற்றல் ஆவிக்குரிய யுத்தம் உபதேசக் கட்டுரைகள் விசுவாசமும் ஜீவியமும் ஆவிக்குரிய குழப்பத்தைத் தீர்த்தல் புகழும் பணமும் எங்களை பற்றி ஃபில்டர் தேடுக மொபைல் செயலிகள் திரும்பிச் செல்க மொழி 全能神教會 全能神教会 كنيسة الله القدير Die Kirche des Allmächtigen Gottes Εκκλησία του Παντοδύναμου Θεού The Church of Almighty God Iglesia de Dios Todopoderoso L'Église de Dieu Tout-Puissant כנסיית האל הכול יכול सर्वशक्तिमान परमेश्वर की कलीसिया Pawg Ntseeg Ntawm Vajtswv Tus Uas Muaj Hwj Chim Loj Kawg Nkaus Gereja Tuhan Yang Mahakuasa La Chiesa di Dio Onnipotente 全能神教会 ពួកជំនុំនៃព្រះដ៏មានគ្រប់ព្រះចេស្ដា 전능하신 하나님 교회 ຄຣິສຕະຈັກຂອງພຣະເຈົ້າອົງຊົງລິດທານຸພາບສູງສຸດ സര്‍വശക്തനായ ദൈവത്തിന്റെ സഭ Төгс Хүчит Бурханы Чуулган အနန္တတန်ခိုးရှင် ဘုရားသခင်၏အသင်းတော် सर्वशक्तिमान्‌ परमेश्‍वरको मण्डली De Kerk van Almachtige God ਸਰਬਸ਼ਕਤੀਮਾਨ ਪਰਮੇਸ਼ੁਰ ਦੀ ਕਲੀਸਿਯਾ Kościół Boga Wszechmogącego Igreja de Deus Todo-Poderoso Biserica lui Dumnezeu Atotputernic Церковь Всемогущего Бога Allsmäktige Guds Kyrka Kanisa la Mwenyezi Mungu சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை คริสตจักรแห่งพระเจ้าผู้ทรงมหิทธิฤทธิ์ Ang Iglesia ng /Makapangyarihang Diyos Hội Thánh Đức Chúa Trời Toàn Năng IBandla LikaNkulunkulu USomandla தேவனின் வெளிப்பாடுகள் மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை கடைசிக்கால கிறிஸ்துவின் வெளிப்பாடுகள் (தேர்ந்தெடுக்கப்பட்டவை) சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளின் தொகுப்புகள் ரீசெட் தேடுக முகப்பு சாட்சிகள் ஆவிக்குரிய குழப்பத்தைத் தீர்த்தல் இந்த 4 காரியங்களைப் புரிந்துகொள்வதன் மூலம், நாம் தேவனுக்கு நெருக்கமாவோம் ஆகஸ்ட் 20, 2021 நமது அன்றாட ஜீவியத்தில், தேவனுக்கு நெருக்கமாகி, தேவனுடன் உண்மையான தொடர்பு வைத்திருப்பதன் மூலம் மட்டுமே, நாம் தேவனுடன் ஒரு சரியான உறவைப் பராமரிக்கவும், பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெறவும், சத்தியத்தைப் புரிந்துகொள்ளவும், யதார்த்தத்திற்குள் பிரவேசிக்கவும் முடியும். ஆகையால், நம்மால் எப்படி சரியாக தேவனுக்கு நெருக்கமாக முடியும்? கீழேயுள்ள நான்கு காரியங்களை மட்டுமே நாம் புரிந்துகொள்ள வேண்டும், தேவனுடனான நமது உறவு நிச்சயமாக நெருக்கமாகிவிடும். உள்ளடக்கங்கள் 1. நேர்மையான இருதயத்துடன் தேவனிடம் ஜெபம் செய்து பரிசுத்த ஆவியானவரால் ஏவப்படுங்கள் 2. தேவனுடைய வார்த்தைகளை வாசிக்கும்போது, அவற்றை உங்கள் இருதயத்தில் தியானிக்கும்போது, அவற்றின் உண்மையான அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் 3. சத்தியத்தை நாடுங்கள் மற்றும் சகலத்திலும் தேவனுடைய வார்த்தையைக் கடைபிடியுங்கள் 4. தேவனுக்கு முன்பாக வந்து ஒவ்வொரு நாளும் உங்களையே பிரதிபலியுங்கள், மேலும் தேவனுடான உங்கள் சரியான உறவைப் பராமரியுங்கள் 1. நேர்மையான இருதயத்துடன் தேவனிடம் ஜெபம் செய்து பரிசுத்த ஆவியானவரால் ஏவப்படுங்கள் ஜெபம் என்பது நாம் தேவனுடன் தொடர்புகொள்ளும் ஒரு வழிமுறையாகும். ஜெபத்தின் மூலம், நமது இருதயங்கள் தேவனுக்கு முன்பாக அமைதியாக இருக்கவும், தேவனுடைய வார்த்தையை தியானிக்கவும், தேவனுடைய சித்தத்தை நாடவும், தேவனுடன் ஒரு சரியான உறவை ஏற்படுத்தவும் முடியும். ஆனால் நாம் வாழ்க்கையில் வேலையிலோ அல்லது வீட்டு வேலைகளில் மும்முரமாக இருப்பதால், நாம் அடிக்கடி ஜெபத்தில் ஏவுதல்களைச் செய்ய முடியும், மேலும் நாம் சில கவனக்குறைவான வார்த்தைகளைச் சொல்வதன் மூலம் தேவனை அக்கறையின்றி நடத்துகிறோம். நாம் காலையில் முதல் காரியத்தில் மும்முரமாக இருக்கும்போது, உதாரணமாக, வேலைக்குச் செல்லும்போது அல்லது வேறு எதிலாவது மும்முரமாக இருக்கும்போது, நாம் அவசர அவசரமாக ஜெபம் செய்கிறோம்: “ஓ தேவனே! இன்றைய வேலையை உமது கரங்களில் ஒப்படைக்கிறேன், என் குழந்தைகளையும் என் பெற்றோர்களையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். நான் சகலத்தையும் உமது கரங்களில் ஒப்படைக்கிறேன், என்னை ஆசீர்வதித்து என்னை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆமென்!” சில தொடர்பில்லாத வார்த்தைகளைச் சொல்வதன் மூலம் நாம் தேவனை அக்கறையின்றி நடத்துகிறோம். நமது இருதயங்கள் அமைதியாகவும் இருப்பதில்லை, நாம் தேவனுடன் உண்மையான தொடர்பும் கொண்டிருப்பதில்லை. சில வேளைகளில், நாம் இனிமையாக ஒலிக்கும் சில வார்த்தைகளையும், சில வெறுமையான, பெருமையான வார்த்தைகளையும் தேவனிடம் ஜெபிக்கிறோம், மேலும் நமது இருதயங்களில் இருப்பதை நாம் தேவனிடம் சொல்வதில்லை. அல்லது சில நேரங்களில், நாம் ஜெபிக்கும்போது, சில வார்த்தைகளை மனப்பாடமாக ஒப்புவிக்கிறோம், அதே போல ஒவ்வொரு முறையும் பழைய வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் சொல்கிறோம், மேலும் இது முற்றிலும் ஒரு மதச் சடங்கு ஜெபமாகிறது. இது போன்ற பல ஜெபங்கள் நமது ஜீவியங்களில் சொல்லப்படுகின்றன, அதாவது விதிகளைப் பற்றிக்கொண்டிருக்கும் ஜெபங்கள் மற்றும் தேவனுக்காக நமது இருதயங்களைத் திறக்காத அல்லது தேவனுடைய சித்தத்தை நாடாத ஜெபங்கள். நாம் எந்த அர்த்தமும் இல்லாமல் ஜெபங்களைச் சொல்லும்போது தேவன் அதை வெறுக்கிறார், ஏனென்றால் இவ்வகையான ஜெபமானது வெளிப்புற தோற்றம் மற்றும் மதச் சடங்குகளுடன் மட்டுமே தொடர்புடையதாக இருக்கிறது, மேலும் நமது ஆவியில் தேவனுடன் உண்மையான தொடர்பு இல்லை. இதுபோல ஜெபம் செய்யும் ஜனங்கள் தேவனை அக்கறையின்றி நடத்துகின்றனர் மற்றும் தேவனை வஞ்சிக்கின்றனர். ஆகையால், இது போன்ற ஜெபங்கள் தேவனால் கேட்கப்படுவதில்லை, மேலும் இவ்விதமாக ஜெபிக்கும் ஜனங்கள் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்படுவதற்கு மிகவும் கடினமாகிவிடுகிறது. அவர்கள் இது போல ஜெபிக்கும்போது, அவர்களால் தேவனுடைய பிரசன்னத்தை உணர முடிவதில்லை, அவர்களுடைய ஆவிகள் இருளாகவும் பலவீனமாகவும் இருக்கின்றன, மேலும் தேவனுடனான அவர்களுடைய உறவு மேலும் மேலும் தொலைவாகிவிடுகிறது. கர்த்தராகிய இயேசு சொன்னார்: “தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்” (யோவான் 4:24). தேவனே வானத்தையும் பூமியையும் நிரப்புகிற சிருஷ்டிகர். அவர் எல்லா நேரங்களிலும் நமது அருகில் இருந்து, நமது ஒவ்வொரு வார்த்தையையும் செயலையும், ஒவ்வொரு எண்ணத்தையும் கருத்தையும் கண்காணிக்கிறார். நாம் தேவனிடம் ஜெபிக்கும்போது, நாம் தேவனை ஆராதிக்கிறோம், மேலும் நாம் ஒரு நேர்மையான இருதயத்துடன் தேவனுக்கு முன்பாக வர வேண்டும். ஆகையால், நாம் தேவனிடம் ஜெபிக்கும்போது, நாம் தேவனுக்குப் பயப்படும் இதயத்தைக் கொண்டிருக்க வேண்டும், தேவனிடம் நேர்மையாகவும் உண்மையாகவும் பேச வேண்டும், நமது நிஜ நிலைகளையும், நமது சிரமங்களையும், நமது கஷ்டங்களையும் தேவனுக்கு முன்பாகக் கொண்டுவந்து அவற்றைப் பற்றி அவரிடம் சொல்ல வேண்டும், நாம் தேவனுடைய சித்தத்தை நாட வேண்டும் மற்றும் நடைமுறைப் பாதையை நாட வேண்டும், ஏனென்றால் இவ்விதமாக மட்டுமே நமது ஜெபங்கள் தேவனுடைய சித்தத்திற்கு ஒத்திருக்கும். உதாரணமாக, நாம் வாழ்க்கையில் சில சிரமங்களை எதிர்கொள்கிறோம், அல்லது நாம் தொடர்ந்து பாவம் செய்து பாவத்தை அறிக்கை செய்யும் சூழ்நிலையில் நாம் வாழ்வதைப் பார்க்கிறோம், மேலும் நாம் சித்தரவதைப்படுவதாக உணர்கிறோம். ஆகையால், நாம் தேவனிடம் நமது இருதயங்களைத் திறந்து, இப்பிரச்சனைகளைப் பற்றி தேவனிடம் சொல்லி தேவனுடைய சித்தத்தை நாடுகிறோம், தேவன் நமது நேர்மையைக் கண்டு அவர் நம்மை ஏவுவார். அவர் நமக்கு விசுவாசத்தைக் கொடுப்பார் அல்லது அவருடைய சித்தத்தைப் புரிந்துகொள்ள அவர் நமக்கு அறிவூட்டுவார். இவ்வாறு, நாம் சத்தியத்தைப் புரிந்துகொண்டு முன்னோக்கிச் செல்ல ஒரு வழியைக் கொண்டிருக்கிறோம். உதாரணமாக, நமது ஜெபங்கள் விதிகளை மட்டுமே பற்றிக்கொண்டு வெறும் சம்பிரதாயமாக பேசும்போது, அல்லது நாம் பெருமிதமாகவோ அல்லது வெறுமையாகவோ பேசும்போது, மற்றும் தேவனுடன் உண்மையான தொடர்பு கொண்டிருக்காத போது, நாம் இவ்விதமாக ஜெபிக்கலாம்: “ஓ தேவனே! நான் முன்பு ஜெபித்தபோது, நான் உம்மை அக்கறையின்றி நடத்திக் கொண்டிருந்தேன். நான் சொன்ன அனைத்தும் உம்மை வஞ்சிப்பதற்காக சொன்னவை, மேலும் நான் உம்மிடம் உண்மையாகவே பேசவில்லை; நான் உமக்கு மிகவும் கடன்ப்பட்டவனாக உணர்கிறேன். இந்நாள் முதல், நான் என் இருதயத்தில் ஜெபம் செய்ய விரும்புகிறேன். நான் என் இருதயத்தில் என்ன நினைக்கிறேனோ அதையே நான் உம்மிடம் சொல்வேன், மேலும் நான் உம்மை நேர்மையான இருதயத்துடன் ஆராதிப்பேன், உமது வழிகாட்டுதலைக் கேட்பேன். நமது இருதயத்தின் ஆழத்திலிருந்து நாம் தேவனிடம் இதைத் திறக்கும்போது, நமது இருதயங்கள் அசைக்கப்படுகின்றன. பின்னர் நாம் தேவனுக்கு எதிராக எவ்வளவு கலகம் செய்திருக்கிறோம் என்பதைப் பார்க்கிறோம், மேலும் தேவனிடம் உண்மையாக மனந்திரும்பவும் மற்றும் அவரிடம் உண்மையாக பேசவும் விரும்புகிறோம். இந்த நேரத்தில், நாம் அவருடன் முகமுகமாகப் பேசுவது போல, தேவனுடனான நமது உறவு மிகவும் நெருக்கமாக இருப்பதை நாம் உணர்வோம். இதுதான் தேவனிடம் நம் இருதயங்களைத் திறப்பதனால் கிடைக்கும் பலனாகும். தேவனிடம் நமது இருதயங்களைத் திறப்பதற்கும், நாம் அவரிடம் எவ்வளவு சொல்கிறோம் என்பதற்கும் அல்லது நாம் கவர்ச்சியான வார்த்தைகளையோ அல்லது கவர்ந்திழுக்கும் மொழியையோ நாம் பயன்படுத்துகிறோம் என்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. நாம் தேவனிடம் நமது இருதயங்களைத் திறந்து, நமது உண்மையான நிலையைப் பற்றி அவரிடம் சொல்லி, அவருடைய வழிகாட்டுதலையும் அறிவூட்டுதலையும் நாடும் வரை, நாம் சில எளிய வார்த்தைகளைச் சொன்னாலும் தேவன் நமக்குச் செவிமடுப்ப்பார். நாம் இவ்விதமாக தேவனிடம் அடிக்கடி நெருங்கும்போது, அது கூடுகைகளிலும் அல்லது ஆவிக்குரிய ஆராதனைகளிலும் அல்லது தெருவில் நடக்கும்போதும் அல்லது பேருந்தில் அல்லது வேலையில் உட்கார்ந்திருக்கும்போதும், நமது இருதயங்கள் எப்போதும் ஜெபத்தில் அமைதியாக தேவனிடத்தில் திறக்கும். அதை அறியாமலேயே, நமது இருதயங்கள் தேவனுக்கு முன்பாக இன்னும் அதிகமாக அமைதியாகிவிடும், தேவனுடைய சித்தத்தை நாம் அதிகமாக புரிந்துகொள்வோம், மேலும் நாம் பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது, தேவனை திருப்திப்படுத்த சத்தியத்தை எப்படி கடைப்பிடிப்பது என்பதை நாம் அறிந்துகொள்வோம். இவ்வாறு, தேவனுடனான நமது உறவு மிகவும் இயல்பாகிவிடும். 2. தேவனுடைய வார்த்தைகளை வாசிக்கும்போது, அவற்றை உங்கள் இருதயத்தில் தியானிக்கும்போது, அவற்றின் உண்மையான அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் நாம் ஆவிக்குரிய ஆராதனைகளை நடத்துகிறோம், ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தைகளை வாசிக்கிறோம். இரண்டும் நல்ல முடிவுகளை அடையும் விதத்திலும், தேவனுடனான நமது உறவை நெருக்கமாக்கும் விதத்திலும் தேவனுடைய வார்த்தைகளை நாம் எவ்வாறு வாசிக்கலாம்? தேவனின் வார்த்தை கூறுகிறது: “மக்கள் தங்கள் இருதயத்தால் தேவனுடைய ஆவியைத் தொடுவதே அவர்கள் தேவனில் விசுவாசம் வைப்பதற்கும், அவரை நேசிப்பதற்கும், அவரைத் திருப்திப்படுத்துவதற்குமான வழியாகும். தேவனுடைய திருப்தியைப் பெற்று, தங்கள் இருதயத்தை தேவனுடைய வார்த்தைகளோடு ஐக்கியப்படுத்தி தேவனுடைய ஆவியின் ஏவுதலை பெறுவார்கள்” (“தேவனோடு ஓர் முறையான உறவை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம்”). நாம் தேவனுடைய வார்த்தைகளை வாசிக்கும்போது, நாம் அவற்றை தியானித்து, நமது இருதயத்தில் தேட வேண்டும், நாம் பரிசுத்த ஆவியானவரின் அறிவூட்டுதலையும் வெளிச்சத்தையும் பெற வேண்டும், மேலும் தேவனுடைய சித்தத்தையும் அவர் நம்மிடம் கோருவதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று தேவனுடைய வார்த்தைகள் நமக்குச் சொல்கின்றன. இவ்விதமாக தேவனுடைய வார்த்தைகளை வாசிப்பதன் மூலம் மட்டுமே, நமது முயற்சிகள் பலனளிக்கும், மேலும் நாம் தேவனை நெருங்குவோம். நாம் தேவனுடைய வார்த்தைகளை வாசிக்கும்போது, நாம் உண்மையில் கவனம் செலுத்தாமல் அவற்றின் மீது ஒரு மேலோட்டமான பார்வையை மட்டுமே செலுத்தியிருந்தால், நம்மை பகட்டாக காட்டிக்கொள்ள சில எழுத்துக்களையும் கோட்பாடுகளையும் புரிந்துகொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தி, தேவனுடைய வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில் நாம் கவனம் செலுத்தவில்லை என்றால், நாம் அவருடைய வார்த்தைகளை எவ்வளவு வாசித்தாலும், நாம் அவருடைய சித்தத்திற்கு இணங்கவும் மாட்டோம், தேவனுடன் ஒரு சரியான உறவை ஏற்படுத்தவும் திறனற்றவர்களாக இருப்போம். ஆகையால், நாம் தேவனுடைய வார்த்தைகளை வாசிக்கும்போது, நாம் நமது இதயங்களை அமைதிப்படுத்தி, தேவன் ஏன் இதுபோன்ற காரியங்களைச் சொல்கிறார், தேவனுடைய சித்தம் என்ன மற்றும் இதுபோன்ற காரியங்களைச் சொல்வதன் மூலம் தேவன் என்ன முடிவுகளை அடைய விரும்புகிறார் என்று சிந்திக்க நமது இருதயங்களைப் பயன்படுத்த வேண்டும். இவ்விதமாக அவருடைய வார்த்தைகளை ஆழமாக சிந்திப்பதன் மூலம் மட்டுமே நாம் தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளவும், அவருடைய இருதயத்திற்கு அதிகப் பிரியமுள்ளவர்களாவும் இருக்க முடியும், மேலும் தேவனுடனான நமது உறவு பெருகிய முறையில் இயல்பாகிவிடும். உதாரணமாக, கர்த்தராகிய இயேசு சொல்வதை நாம் பார்ப்போம்: “நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்தேயு 18:3). இந்த வசனத்தின் மேலோட்டமான அர்த்தத்தை நம் எல்லோராலும் புரிந்துகொள்ள முடியும், நாம் நேர்மையானவர்களாக வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். ஆனால் ஒரு நேர்மையான நபராக இருப்பதன் முக்கியத்துவம், தேவன் ஏன் நேர்மையானவர்களை நேசிக்கிறார் மற்றும் ஒரு நேர்மையான நபராக மாறுவது எப்படி போன்ற பிரச்சினைகள் நாம் இன்னும் ஆழமாக சிந்திக்க வேண்டிய பிரச்சினைகளாகும். ஜெபம்-வாசித்தல் மற்றும் தேவனுடைய வார்த்தைகளை தியானிப்பதன் மூலம், தேவனுடைய சாராம்சம் உண்மையுள்ளது என்பதையும், தேவன் சொல்வதோ அல்லது செய்வதோ பொய்யல்ல அல்லது வஞ்சனையல்ல என்பதையும் நாம் புரிந்துகொள்வோம், ஆகையால் தேவன் நேர்மையான ஜனங்களை நேசிக்கிறார் மற்றும் வஞ்சகமான ஜனங்களை வெறுக்கிறார். நாம் நேர்மையான ஜனங்களாக வேண்டும் என்பதையே தேவன் கோருகிறார், ஏனென்றால் தேவனுடைய கோரிக்கைகளுக்கு ஏற்ப நேர்மையான ஜனங்களாவதன் மூலம் மட்டுமே நாம் தேவனால் அவருடைய ராஜ்யத்திற்குள் வழிநடத்தப்பட முடியும். நாம் எப்படி சரியாக நேர்மையானவர்களாக முடியும்? முதலாவதாக, நாம் பொய்கள் சொல்லக்கூடாது, ஆனால் நாம் தூய்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும் மற்றும் நமது இருதயங்களில் உள்ளதைச் சொல்ல வேண்டும்; இரண்டாவதாக, நாம் வஞ்சகமாக செயல்படக்கூடாது, நமது சொந்த நலன்களைக் கைவிட வேண்டும், தேவனையோ அல்லது மனுஷனையோ வஞ்சிக்கக்கூடாது; மூன்றாவதாக, நமது இருதயங்களில் எந்த வஞ்சகமும் இருக்கக்கூடாது, நமது செயல்களில் தனிப்பட்ட உட்கருத்தோ அல்லது நோக்கமோ இருக்கக்கூடாது, மாறாக நாம் சத்தியத்தை கடைப்பிடிப்பதற்காகவும் தேவனைத் திருப்திப்படுத்துவதற்காகவும் மட்டுமே செயல்பட வேண்டும். தியானிப்பதன் மூலம் இந்த வெளிச்சத்தை அடைந்த பிறகு, நாம் அதை நமது செயல்களிலும் நடத்தையிலும் பிரதிபலிக்கிறோம், பின்னர் நாம் இன்னும் பல வஞ்சக வெளிப்பாடுகளைக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்: நாம் மற்றவர்களைக் கையாளும் போது, நம்மால் பெரும்பாலும் நமது சொந்த நலன்களையும், நற்பெயரையும் மற்றும் அந்தஸ்தையும் பாதுகாப்பதற்காக பொய் சொல்வதிலிருந்தோ அல்லது ஏமாற்றுவதிலிருந்தோ நம்மைத் தடுக்க முடிவதில்லை. நாம் தேவனுக்காக நம்மை செலவழிக்கும் போது, நாம் தேவனை நேசிக்கவும் தேவனை திருப்திப்படுத்தவும் விரும்புவதாக ஜெபத்தில் கூறலாம், ஆனால் நமது குழந்தை நோய்வாய்ப்பட்டால், அல்லது நாமோ அல்லது ஒரு குடும்ப உறுப்பினரோ வேலை இழந்தால், நாம் தேவனிடம் புகார் செய்ய ஆரம்பிக்கிறோம். அதேபோல நாம் கர்த்தருக்காக வேலை செய்வதையும் செலவழிப்பதையும் விட்டுவிட விரும்புகிறோம்; இதில், நாம் கறைபடிந்த ஒரு விதத்திலும் நாம் தேவனோடு ஒப்பந்தம் செய்யும் விதத்திலும் தேவனுக்காக நம்மை செலவிடுவதை நாம் பார்க்கலாம். தேவனை திருப்திப்படுத்த அல்ல, தேவனிடமிருந்து ஆதாயம் பெறுவதற்காகவே நாம் தேவனுக்காக நம்மை செலவிடுகிறோம். இவை நமது வஞ்சக வெளிப்பாடுகளுக்கான வெறும் சில உதாரணங்கள்தான். இந்த வெளிப்பாடுகளிலிருந்து, நாம் உண்மையிலேயே நேர்மையானவர்கள் அல்ல என்பதை நாம் பார்க்கலாம். நமது சொந்த தவறுகளையும் குறைபாடுகளையும் நாம் தெளிவாகப் பார்த்ததும், சத்தியத்திற்கான தாகத்துக்கு நமக்குள் தீர்மானம் எழுகிறது, மேலும் நம் வாழ்வில் தேவனுடைய வார்த்தைகளை அதிகமாகப் பின்பற்ற முற்படுகிறோம். தேவனுடைய வார்த்தைகளைத் தியானிப்பதன் மூலம் பெறப்படும் பலன் இதுதான். நிச்சயமாகவே, தேவனுடைய வார்த்தைகளை ஒருமுறை தியானிப்பதன் மூலம் இந்த பலனை அடைய முடியாது, மாறாக அவருடைய வார்த்தைகளை பலமுறை தியானிப்பதன் மூலமே அடைய முடியும். மேலும், நாம் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போதெல்லாம் நாம் தேவனுடைய வார்த்தைகளை மனதார கடைப்பிடிக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால், நாம் இவ்விதமாக தேவனுடைய வார்த்தைகளை நமது இருதயங்களில் இடைவிடாமல் தியானிக்கும் வரை, நாம் பரிசுத்த ஆவியானவரின் அறிவூட்டுதலையும் வெளிச்சத்தையும் பெற முடியும். ஒரு நாள், நாம் சில புதிய வெளிச்சத்தைப் பெறுவோம், அடுத்த நாள் நாம் இன்னும் கொஞ்சம் புதிய வெளிச்சத்தைப் பெறுவோம், காலப்போக்கில், தேவனுடைய வார்த்தைகளில் உள்ள சத்தியத்தைப் பற்றி நாம் அதிகமாகப் புரிந்துகொள்ள முடியும், நடைமுறைப் பாதை மிகவும் தெளிவாகிவிடும், நமது வாழ்க்கை படிப்படியாக முன்னேறும், மேலும் தேவனுடனான நமது உறவு மேன்மேலும் நெருக்கமாகும். 3. சத்தியத்தை நாடுங்கள் மற்றும் சகலத்திலும் தேவனுடைய வார்த்தையைக் கடைபிடியுங்கள் தேவனுடன் ஒரு சரியான உறவைப் பராமரிப்பதற்கு நமக்குத் தேவையான மிகவும் முக்கியமான காரியம் என்னவென்றால் நாம் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது சத்தியத்தை நாடுவதும் அவருடைய வார்த்தைக்கு ஏற்ப செயல்படுவதுமே ஆகும். ஆனால் வாழ்க்கையில், நாம் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது, நாம் பெரும்பாலும் நமது சொந்த அனுபவங்களையே நம்பியிருக்கிறோம் அல்லது அவற்றைக் கையாள மனித வழிமுறைகளையே பயன்படுத்துகிறோம், அல்லது நம் விருப்பங்களுக்கு ஏற்ப அவற்றைக் கையாள்கிறோம். நாம் மிகவும் அரிதாகவே தேவனுக்கு முன்பாக அமைதியாகி சத்தியத்தைத் தேடுகிறோம் அல்லது தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ப பிரச்சினையைக் கையாளுகிறோம். இது சத்தியத்தைக் கடைப்பிடிப்பதற்கான பல வாய்ப்புகளை இழக்கச் செய்கிறது, மேலும் நாம் தேவனிடமிருந்து மேலும் மேலும் விலகிச் செல்கிறோம். தேவனின் வார்த்தை கூறுகிறது: “நீ என்ன செய்கிறாய், ஒரு விஷயம் எவ்வளவு பெரியது அல்லது சிறியது, தேவனுடைய குடும்பத்தில் உன் கடமையை நிறைவேற்றுவதற்காக இதைச் செய்கிறாயா அல்லது உன் சொந்த தனிப்பட்ட காரணங்களுக்காகவா என்பதைப் பொருட்படுத்தாமல், நீ செய்வது தேவனுடைய சித்தத்திற்கு இணங்குவதாகவும், அதோடுகூட மனிதத் தன்மையுள்ள ஒரு நபர் செய்கிற செயலாகவும் இருக்கிறதா என்பதை நீ கருத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறு, நீ செய்கிற எல்லாவற்றிலும் சத்தியத்தை நாடுவாயானால், அப்பொழுது, நீ உண்மையிலேயே தேவனை விசுவாசிக்கிற ஒரு நபராக இருப்பாய்” (“தேவனுடைய சித்தத்தைத் தேடுதல் சத்தியத்தை செயல்படுத்துவதற்கேயாகும்”). “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்” (யோவான் 8:31). தேவனுடைய வார்த்தைகள் நமக்கு ஒரு தெளிவான பாதையைக் காண்பிக்கின்றன. நாம் திருச்சபையில் வேலை செய்தாலும் அல்லது நமது வாழ்வில் எதிர்கொண்ட பிரச்சினைகளைக் கையாண்டாலும், நாம் எப்போதும் சத்தியத்தையே நாடி தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், தேவனுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும் விதத்தில் காரியங்களை எவ்வாறு கையாள்வது என்று பார்க்க வேண்டும், நாம் எதிர்கொள்ளும் சகல பிரச்சனைகளுக்கும் தீர்வு காண சத்தியத்தைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் தேவனோடு நமது சரியான உறவைப் பராமரிக்க வேண்டும். உதாரணமாக, நமது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும்போது நாம் சத்தியத்தை எவ்வாறு நாட வேண்டும் என்பதை எடுத்துக்கொள்ளுங்கள். நாம் ஒரு துணையைத் தேடும் போது, நாம் எப்போதும் நமது சொந்த விருப்பங்களுக்கே சென்று, அந்த நபரின் வெளிப்புறத் தோற்றத்திலும் சுபாவத்திலும் கவனம் செலுத்துகிறோம், மேலும் ஒரு உயரமான, பணக்கார, அழகான ஆளையோ அல்லது அழகான சருமமுள்ள, பணக்கார, அழகானப் பெண்ணையோ நாம் தேடுகிறோம், அப்படிப்பட்ட ஒருவரை நாம் திருமணம் செய்துகொண்டால் மட்டுமே நாம் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை வாழ்வோம் என்றும், மேலும் நாம் உடல் சுகம், வசதி மற்றும் இன்பமாக வாழ்வோம் என்றும், மற்றவர்கள் நம்மைப் பார்த்து பொறாமைப்படுவார்கள் என்றும் நம்புகிறோம். இருப்பினும், அது போன்ற ஒரு துணையைக் கண்டுபிடிப்பது தேவன் மீதான நமது நம்பிக்கை மற்றும் நமது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நன்மை பயக்குமா என்று நாம் எப்போதாவது யோசிக்கிறோமா? நமது துணை தேவனை நம்பவில்லை என்றால், நாம் தேவனை நம்புவதிலிருந்து நம்மைத் தடுக்க முயற்சி செய்தால், விளைவு என்னவாக இருக்கும்? வேதம் சொல்கிறது, “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக” (2 கொரிந்தியர் 6:14). விசுவாசிகள் மற்றும் அவிசுவாசிகள் ஆகியோரின் விருப்பங்கள் ஒன்றாக இருக்காது மற்றும் ஒருவருக்கொருவர் பொருந்த மாட்டார்கள் என்பதை இதன் மூலம் நாம் பார்க்கலாம். விசுவாசம் மற்றும் சமூகப் போக்குகளுக்கான அணுகுமுறைகளில், அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சொந்தக் கருத்துக்களைக் கொண்டிருப்பார்கள் மற்றும் வெவ்வேறு காரியங்களைப் பின்பற்றுவார்கள்: ஒரு விசுவாசி தேவனுக்குப் பயந்து தீமையை விட்டு விலக விரும்புவார், அதே நேரத்தில் ஒரு அவிசுவாசி உலகின் தீய போக்குகளைப் பின்பற்ற விரும்புவார். நாம் ஒரு அவிசுவாசியுடன் ஐக்கியமாக இருக்கும் போது, நாம் கட்டாயம் அவர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுவோம், மேலும் நமது வாழ்வின் முன்னேற்றம் தடுக்கப்படும். ஆகையால், ஒரு துணையைத் தேர்ந்தெடுக்கும் போது, நாம் இருவரும் ஒரே அலைநீளத்தில் இருந்தாலும் சரி, நமது விருப்பங்கள் இணக்கமாக இருந்தாலும், அந்த நபரின் மனிதாபிமானத்தையும் குணத்தையும் கருத்தில்கொள்ள வேண்டும், அவர்களுடன் ஐக்கியம் கொள்வது தேவன் மீதான நமது நம்பிக்கைக்கு பயனளிக்குமா என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். நாம் இந்த காரியங்களை கருத்தில் கொள்ளாமல், அந்த நபரின் வெளிப்புறத் தோற்றம் மற்றும் அவர்களுடைய குடும்ப சூழ்நிலை ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்தினால், நாம் திருமணம் செய்த பிறகு, வேதனை வரும், ஏனென்றால் நாம் ஒரே அலைநீளத்தில் இல்லை. நமது வாழ்க்கைத் துணை நம்மை வற்புறுத்தி தேவனை நம்புவதிலிருந்து நம்மைத் தடுக்க முயற்சி செய்தால், இது நமது ஆவிக்குரிய வாழ்க்கையை இன்னும் அதிகமாக அழிக்கும். ஆகையால், நமது வாழ்வில் நாம் எந்தப் பிரச்சினையை எதிர்கொண்டாலும், சத்தியத்தைத் தேடுவதன் மூலமும், தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்வதன் மூலமும், தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ப செயல்படுவதன் மூலமும் மட்டுமே, நாம் தேவனுடைய பராமரிப்பிலும் பாதுகாப்பிலும் வாழ முடியும், இவ்விதமாக மட்டுமே நாம் தேவனுடனான நமது சரியான உறவைப் பராமரிக்க முடியும். 4. தேவனுக்கு முன்பாக வந்து ஒவ்வொரு நாளும் உங்களையே பிரதிபலியுங்கள், மேலும் தேவனுடான உங்கள் சரியான உறவைப் பராமரியுங்கள் யேகோவா தேவன் சொன்னார்: “உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்” (ஆகாய் 1:7). நமது வாழ்க்கைப் பிரவேசத்திற்கு நம்மையே பிரதிபலிப்பது மிகவும் அவசியம் என்பதை நாம் தேவனுடைய வார்த்தைகளின் மூலம் காணலாம்! பிரதிபலிப்பதன் மூலம், நாம் பல குறைபாடுகளைக் கொண்டிருப்பதையும், தேவன் கோரும் அளவுகோல்களிலிருந்து நாம் மிகவும் பின்தங்கியிருப்பதையும் நாம் காணலாம். ஆகையால், சத்தியத்தைப் பின்தொடர்வதற்கான உந்துதல் நமக்குள் எழுகிறது, நமது மாம்சத்தை கைவிட நாம் தீர்மானிக்கிறோம், மேலும் தேவனுடைய வார்த்தையின்படி நடக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். இவ்விதமாக, நமது நடைமுறை அனுபவங்களில் தேவனுடைய தேவைகளுக்கு ஏற்ப செயல்பட நாம் கவனம் செலுத்துகிறோம், நாம் தேவனுடைய வார்த்தையைக் கடைப்பிடிக்கிறோம், மேலும் தேவனுடனான நமது உறவு பெருகிய முறையில் இயல்பானதாகிறது. உதாரணமாக, நம்மில் போதகர்களாக ஊழியம் செய்பவர்கள் வேதாகமத்தில் அது சொல்வதைப் பார்க்கிறார்கள்: “உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும். அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும். சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்பு செய்யுங்கள்” (1 பேதுரு 5:2-3). ஆகையால், நாம் சுய பிரதிபலிப்பில் ஈடுபட்டு நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்: தேவனுடைய வார்த்தைகளுக்கும் அவருடைய சித்தத்திற்கும் சாட்சி கொடுக்க நாம் கவனம் செலுத்துகிறோமா, மற்றவர்களை தேவனுக்கு முன்பாக வழிநடத்துகிறோமா அல்லது நம்மை பகட்டாக காண்பிப்பதற்கு நாம் பிரசங்கிக்கும் போது உரத்த குரலில் அர்த்தமில்லாத காரியங்களைச் சொல்கிறோமா, மற்றவர்களை நம்மை வழிபட வைப்பதற்காகவும் நம்மைப் பார்க்க வைப்பதற்காகவும் எழுத்துக்களையும் கோட்பாடுகளையும் பிரசங்கிக்கிறோமா? மற்றவர்கள் நமக்கு நியாயமான பரிந்துரைகளைச் செய்யும் போது, நாம் நமது சொந்த பிரச்சினைகளைப் பிரதிபலிக்கிறோமா அல்லது அவர்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோமா, நாம் சாக்குபோக்குகளைச் சொல்லி நம்மை நியாயப்படுத்த முயற்சி செய்கிறோமா? சுய பிரதிபலிப்பின் மூலம், தேவனுக்கு நாம் செய்யும் ஊழியத்தில் இன்னும் பல பகுதிகள் உள்ளன, அதில் நாம் கலகம் செய்கிறோம் என்பதையும், நாம் இன்னும் பல சீர்கேடான மனநிலைகளைக் கொண்டிருக்கிறோம், அவை தீர்க்கப்படுவதற்கு நாம் தொடர்ந்து சத்தியத்தைத் தேட வேண்டும் என்பதையும் நாம் காணலாம். இவ்வாறு, நாம் நம்மைத் தாழ்மையுடன் நடத்தலாம், நமது கிரியையில் தேவனுடைய சித்தத்தை அதிகமாக நாடலாம், மேலும் தேவனுடைய கோரிக்கைகளுக்கு ஏற்ப மற்றவர்களை வழிநடத்தலாம். தேவனுக்கு முன்பாக நம்மால் அடிக்கடி வர முடியாவிட்டால், நமது சொந்த சீர்கேடுகளையும் குறைபாடுகளையும் நாம் உணரத் தவறிவிடுவோம் மற்றும் சத்தியத்தைப் பின்தொடர்வதில் நம்மை நாமே நம்புவோம். ஆகையால் நாம் அசையால் நிற்பதில் திருப்தி அடைவோம் மற்றும் எந்த முன்னேற்றத்தையும் செய்ய மறுப்போம், மேலும் நாம் மேலும் மேலும் கர்வமும் சுய-நீதியும் கொண்டவர்களாவோம், தேவனுடைய இருதயத்திற்குப் பிரியமானவர்களாக இருப்பதாக நம்புவோம். ஆனாலும், உண்மையில், நமது செயல்களும் நடத்தையும் தேவனால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும், மேலும் தேவன் நம்மை வெறுப்பார். ஆகையால், அடிக்கடி சுய-பிரதிபலிப்பில் ஈடுபடுவது மிகவும் முக்கியமானது என்பதையும், ஒருவர் சத்தியத்தைக் கடைப்பிடிப்பது ஒருவரை அறிந்துகொள்வதற்கான அடித்தளத்தின் மீது கட்டப்பட்டுள்ளது என்பதையும் காணலாம். ஒருவருடைய சொந்த சீர்கேடுகள் மற்றும் குறைபாடுகளைப் பற்றிய உண்மையான அறிவைக் கொண்டிருப்பதன் மூலம் மட்டுமே மனம்வருந்தி, பின்னர் எழும்ப முடியும், மேலும் ஒருவர் சத்தியத்தைப் பின்தொடரவும் தேவனுடைய வார்த்தைகளைப் பின்பற்றவும் விருப்பமுள்ளவராவார். சுய-பிரதிபலிப்பு நமது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு மிகவும் நன்மைபயப்பதாக இருக்கிறது, மேலும் இது தேவனை நெருங்குவதற்கு தவிர்க்க இயலாத திறவுகோலாகவும் இருக்கிறது. நம்மைப் பிரதிபலிப்பதற்கு பல வழிகள் உள்ளன: தேவனுடைய வார்த்தைகளின் வெளிச்சத்தில் நாம் நம்மைப் பிரதிபலிக்க முடியும்; நமது அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும் தவறுகளில் நம்மை நாமே பிரதிபலிக்க முடியும்; மற்றவர்கள் நமது குறைபாடுகளையும் சீர்கேடுகளையும் சுட்டிக்காட்டுவது நம்மைப் பிரதிபலிக்க ஒரு சிறந்த வாய்ப்பாகும்; மேலும், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் செய்யும் தவறுகளை நாம் பார்க்கும் போது, நாம் நம்மைப் பிரதிபலிக்கலாம், அவர்களுடைய தவறுகளை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு, பாடங்களைக் கற்றுக்கொண்டு அவற்றால் பயனடையலாம், மற்றும் பல உள்ளன. சுய பிரதிபலிப்பு என்பது பகலுக்கு அல்லது இரவுக்கு என்று மட்டுப்படுத்தப்படவில்லை. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், நமது இருதயங்களில் தேவனிடத்தில் ஜெபிக்கலாம், நமது சீர்கேடுகளைப் பிரதிபலித்து அறிந்து கொள்ளலாம், மேலும் தேவனுடைய வார்த்தைகளுக்குள் அவருடைய சித்தத்தையும் கோரிக்கைகளையும் நாடி, சரியான நேரத்தில் மனந்திரும்பலாம். இருப்பினும், ஒவ்வொரு இரவும் படுக்கைக்குச் செல்வதற்கு முன், அந்த நாளில் நாம் செய்த அனைத்தையும் பிரதிபலிக்கவும் சுருக்கமாகப் பார்க்கவும் வேண்டும், அப்போதுதான் நம் நிலைகளைப் பற்றிய தெளிவான புரிதலைப் பெற முடியும் மற்றும் எந்த காரியங்களில் நாம் இன்னும் சரியாகப் இல்லை என்பதை அறிந்துகொள்ள முடியும். நாம் இதைச் செய்ய ஆரம்பித்ததும், நமது நாட்டம் அதிக நோக்கமுள்ளதாக இருக்கும் மற்றும் தேவனோடு ஒரு சரியான உறவை ஏற்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலேயுள்ள நான்கு காரியங்களும் நாம் தேவனை நெருங்குவதற்கான நடைமுறைப் பாதையாகும். இந்த காரியங்களை நாம் நடைமுறைப்படுத்தும் வரை, தேவனுடனான நமது உறவு நெருக்கமாகிவிடும், நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுடன் ஒரு நடைமுறைப் பாதையைக் கொண்டிருப்போம், மேலும் தேவன் நமக்கு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் அருளிச் செய்து, அவருடைய ஆசீர்வாதத்தில் வாழ நமக்கு உதவுவார். ஆகையால், நாம் ஏன் இப்போதே ஆரம்பிக்கக்கூடாது? மேலும் படிக்க Tamil Christian Daily Devotion முந்தைய: மனந்திரும்புதல் என்றால் என்ன? பேரழிவுகளுக்கு நடுவே கிறிஸ்தவர்கள் எவ்வாறு மனந்திரும்ப வேண்டும்? அடுத்த: அதிக பரபரப்பான மற்றும் வேகமான நவீன வாழ்க்கை முறையால் ஏற்படும் வெறுமை மற்றும் வலிகளிருந்து நாம் விடுபடுவது எப்படி? நீங்கள் பிரார்த்தனையில் நகர்த்தபடவில்லை என்றால், பிஸியான வேலையின் காரணமாக தேவனை நெருங்க உங்களுக்கு நேரமில்லை என்றால் என்ன செய்வது? எங்கள் ஆன்லைன் கூட்டுறவில் சேருங்கள். WhatsApp மூலம் எங்களை அணுகுங்கள் Messenger மூலம் எங்களை அணுகுங்கள் தொடர்புடைய உள்ளடக்கம் ஜெபம் செய்யும் முறை: கர்த்தரால் கேட்கப்படும்படிக்கு எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதற்கான 3 கோட்பாடுகள் கர்த்தருடைய அங்கீகாரத்தைப் பெற ஜெபிப்பது எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த 3 கொள்கைகளும் உங்கள் ஜெபங்களை தேவனின் விருப்பத்திற்கு இணங்கச் செய்யலாம். நோய் வரும்போது தேவனை நம்புவதற்கு கிறிஸ்தவர்கள் பின்பற்றக்கூடிய 4 முக்கியமான பாதைகள் கிறிஸ்தவர்கள் நோயை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அதை எவ்வாறு அனுபவிக்க வேண்டும்? நடைமுறையின் வழியைக் கண்டுபிடிக்க இந்த கட்டுரையைப் படியுங்கள். அதிக பரபரப்பான மற்றும் வேகமான நவீன வாழ்க்கை முறையால் ஏற்படும் வெறுமை மற்றும் வலிகளிருந்து நாம் விடுபடுவது எப்படி? இப்போதெல்லாம், மக்கள் பணம், புகழ் மற்றும் இலாபத்திற்காக பரபரப்பாக இருக்கிறார்கள், மேலும் வாழ்க்கையின் வேகம் விரைவாகவும் இருக்கிறது, அதனுடன், ஜனங்கள் மென்மேலும் இன்னும் அதிக பரப்பரப்பாகி அவர்களது வாழ்க்கை வெறுமையாகவும் வேதனையாகவும் மாறி வருகின்றன. எனவே நமது ஆவிகளின் வெறுமையிலிருந்தும் வலியிலிருந்தும் நாம் எவ்வாறு விடுபட முடியும்? இந்த கட்டுரை படியுங்கள் பதிலை கண்டறியுங்கள். கிறிஸ்தவர்கள் துன்பப்படுவதற்கு தேவன் ஏன் அனுமதிக்கிறார்? பல கிறிஸ்தவர்கள் குழப்பமடைகிறார்கள்: தேவன் அன்பாயிருக்கிறார், அவர் சர்வ வல்லவர், அப்படியிருக்க அவர் ஏன் நம்மை துன்பப்படுவதற்கு அனுமதிக்கிறார்? இந்த கட்டுரையைப் படியுங்கள், அதற்கான பதிலை நீங்கள் காண்பீர்கள். சமீபத்திய கட்டுரைகள் கிறிஸ்தவ செய்தி: இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகையின் 6 தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியுள்ளன கர்த்தர் கதவைத் தட்டும்போது நாம் அவரை எப்படி வரவேற்க வேண்டும்? கிறிஸ்தவர்கள் துன்பப்படுவதற்கு தேவன் ஏன் அனுமதிக்கிறார்? புத்தியுள்ள கன்னிகைகள் எப்படிக் கர்த்தரை வரவேற்றார்கள் தமிழ் பிரசங்க குறிப்புகள்: ஒன்றான மெய் தேவன் யார்? உயர்தர உள்ளடக்கம் விசுவாசம் பிரசங்கம்: விசுவாசம் என்றால் என்ன? தேவனிடத்தில் மெய்யான விசுவாசத்தை நாம் எப்படிக் கட்டி எழுப்புவது? 3 தியானங்களில் நல்ல பலன்களை அடைவதற்கு கிறிஸ்தவர்களுக்கான கோட்பாடுகள் கிறிஸ்தவ பிரசங்கங்கள்: வேதாகமத்தின் கடைசிக் கால அடையாளங்கள் தோன்றியுள்ளன—இயேசுவின் வருகையை எவ்வாறு வரவேற்பது கிறிஸ்தவர்கள் கூடுகைகளில் தவறாமல் கலந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும் நோய் வரும்போது தேவனை நம்புவதற்கு கிறிஸ்தவர்கள் பின்பற்றக்கூடிய 4 முக்கியமான பாதைகள் பட்டியல் முகப்பு புத்தகங்கள் காணொளிகள் பாமாலைகள் சாட்சிகள் எங்களை பற்றி சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் எங்களை பின்தொடர எங்களை தொடர்புக்கொள்ள contact.ta@godfootsteps.org பயன்பாட்டு விதிமுறைகளை தனியுரிமைக் கொள்கை பாராட்டுகள் குக்கீகளுக்கான கொள்கை பதிப்புரிமை © 2021 சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை. அனைத்து உரிமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. A portion of the Bible verses on this website are from TAMIL OV and the copyright to the Bible verses from TAMIL OV belongs to Bible Society India. With due legal permission, they are used on this website.
Category: கட்டுரைகள் Tags: இசை, இசைபட வாழ்தல், இளையராஜா, எப்பவுமே ராஜா, டாக்டர் ஜி. ராமானுஜம், திரைப்படப் பாடல்கள் Description Additional information Reviews (0) Description 1. இசைபட வாழ்தல் திரைப்படப் பாடல்கள் நமது வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சங்க காலத்திலிருந்து நீண்ட நெடிய இசை மரபும் மிகச்சிறந்த இசை ரசனையையும் திறமைகளையும் உடைய நம் மண்ணில் அதன் நீட்சியாக அமைந்துள்ளன திரைப்பாடல்கள். பல்லாயிரக்கணக்கான பாடல்களை ரசிக்கின்றோம். ஆயினும் அந்த திரைப்பாடல்களில் இருக்கும் இசை நுட்பங்களைப் பலர் அறிந்து கொள்வதில்லை. குறிப்பாக நமது செவ்வியல் இசையின் கூறுகளான ராகம் தாளம் போன்றவை எப்படியெல்லாம் திரைப்பாடல்களில் அமைந்திருக்கின்றன என்பதை அலசுகின்றன இந்த நூல் . எளிய இசை ரசிகனுக்கும் இசை பற்றிய நுணுக்கங்களைப் பற்றிய ஒரு அறிமுகத்தை அளித்துத் திரைப்பாடல்களை மேலும் ரசிக்க உதவ வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம். நாளிதழில் தொடராக வரும்போதே கவனத்தை வெகுவாக ஈர்த்தன இக்கட்டுரைகள். 2. எப்பவுமே ராஜா இசையால் நமக்கு இதமளிப்பவர் இளையராஜா. பொழுதுபோக்காக மட்டுமன்றி காதல், ஆறுதல், மன அமைதி, விரக்தி, சோகம், ஆன்மீக அனுபவம்,பரவசம் , கொண்டாட்டம்,கோபம் ,ஆவேசம் எனப் பல்வேறு உணர்வுகளுக்கும் மன நிலைகளுக்கும் காரணமாகவும் வடிகாலாகவும் அமைபவை அவரது பாடல்கள். அவரும் அவரது பாடல்களும் அவை நமக்குத் தந்தவைகளுக்காகவே பெரிதும் கொண்டாடப்படுகின்றன. அதையும் தாண்டி பிரமிக்க வைக்கும் இசை நுணுக்கங்களாலும் பல்வேறு இசைக் கூறுகளின் பிரமாதமான கலவைகளாலும் நிறைந்தவை அவரது பாடல்கள். மேற்கத்திய மற்றும் நம் நாட்டுச் செவ்வியல் இசை, நாட்டார் மரபிசை எனப் பல்வேறு இசைக் கூறுகளின் ஆகச்சிறந்த கலவை அவரது இசை. ஏன் அவர் இசைஞானி என்பதை அவரது புகழ்பெற்ற சில பாடல்களின் உதவியோடு விளக்கும் முயற்சி இது. அவரது பாடல்களின் நுட்பங்களைப் புரிந்து மேலும் ரசிக்கவும் கொண்டாடவும் உதவுவதே இந்நூலின் நோக்கம். Additional information Weight 0.20 kg Dimensions 100 × 140 × 210 cm Reviews There are no reviews yet. Be the first to review “டாக்டர் ஜி. ராமானுஜத்தின் இரு புதிய நூல்கள்” Cancel reply Your email address will not be published. Required fields are marked * Your rating Rate… Perfect Good Average Not that bad Very poor Your review * Name * Email * Save my name, email, and website in this browser for the next time I comment. Related products நாட்டைவிட்டு போகமாட்டேன் Sale! ₹210.00 ₹189.00 Add to cart ஜென்சி ஏன் குறைவாகப் பாடினார்? Sale! ₹100.00 ₹90.00 Add to cart பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் Sale! ₹700.00 ₹630.00 Add to cart ஒரு மனிதன் ஒரு Like ஒரு உலகம் Sale! ₹70.00 ₹63.00 Add to cart டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன Sale! ₹140.00 ₹126.00 Add to cart அவரும் நானும் Sale! ₹1,000.00 ₹900.00 Add to cart Product categories உயிர்மை சந்தா உரை கடிதங்கள் கட்டுரைகள் கவிதைகள் குறுநாவல் கேள்வி - பதில் சிறுகதைகள் நாடகம் நாவல் நுண்கதைகள் நேர்காணல்கள் பிற மற்றவை மொழிபெயர்ப்புகள் Quick Links 044 – 48586727 My account uyirmmai.com Location New No.5, Parameshwari Nagar, 1st street, Adyar, Chennai-600020, (Valampuri Sithi Vinayagar Kovil Near) Tamil Nadu India
அவளே கொஞ்சம் அவளை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். சற்று நிதானித்து என்னைப் பார்த்தாள். கலங்கிய விழிகளில் கோபத்தை கடந்து உடைத்துக் கொண்டு வழிந்தது கண்ணீர் அவளுக்கு. எனக்கு அவளைப் பார்க்கையில் மனம் எனையறியாது கலங்கித்தான் போனது. எத்தனை வலியிருக்கும் அவளுக்கு!! ஒரு நாள் குழந்தையை காணாவிட்டால் எப்படி துடித்துப் போகிறோம் நாம்? கடைக்குப் போன அம்மா திரும்பி வர தாமதமானால் வீடு எப்படி விரிச்சோடிப் போகிறது? வேலைக்குப் போன அப்பா நேரத்தில் வராவிட்டால் எப்படித் தவிக்கிறோம், பள்ளிக்குப் போன பிள்ளை எங்கோ அடிப்பட்டு ரத்தசகதியாய் வீழ்ந்துக் கிடக்கிறது என்றால் எத்தனை துடி துடித்துப் போவோம் நாமெல்லோரும்??? இவர்களெல்லாம் பின் எந்த மனநிலைக்கு உட்படுபவர்களாவர்? பள்ளிக்குப் போனக் குழந்தைகளை கொத்தாக குண்டு போட்டு சிதறடித்துவிட்டான் ஆர்மி காரன், என்று கேட்ட தாய் எந்த சுவற்றில் முட்டி அழது தன் உயிரை விடுவாள்? இருந்த ஒற்றை மகன் ஒற்றை மகள் கைசிதறி கால் சிதறி வாசலில் போடப் பட்டு வைத்தியம் பார்க்கக் கூட சூழலில்லாத தேசத்தில் அந்த தாய் எப்படி மார்பில் அடித்துக் கதறி இருப்பாள்? கணவன் இறந்த சேதி மட்டும் கேட்டு ஓடிப் போய் ‘ஐயோ என் ஐயா என்று கட்டிப் பிடித்தழ’ உடலின் ஒரு பாகம் கூட கிடைக்கப் பெறாமல் மண்ணில் சிதைந்து ரத்தமாக கலந்துப் போன ஒரு மாவீரனின் மனைவி எந்தக் கடவுளிடம் சொல்லியழத் துணிந்திருப்பாள்? வீடு விட்டு ஒரு நாள் பிரியலாம், ஒரு மாதம் பிரியலாம், ஒரு வருடம் கூட பிரியலாம்; அல்லது என்றேனும் திரும்பப் போய்விடுவோம் என்று எண்ணி வாழலாம், ஆனால், இனி அந்த மண்ணே எனக்கு சொந்தமில்லை எனில், நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண்ணை விட்டேப் பிரிவதெனில் அதைவிட உலகில் கொடுமையும் வேறுண்டா? தேள் கடிக்குமோ, பாம்பு கொத்துமோ, பேய் அண்டுமோ, பிசாசு தின்னுமோ என்ற பயமெல்லாம் அற்று; ஐயோ ஆர்மி வருவானோ!! என்னைக் கொள்வானோ!! என் பிள்ளைகள் முன்னமே வைத்து எனை சித்தரவதை செய்வானோ? மானபங்கப் படுத்துவானோ, படுக்கச் சொல்லி அடிப்பானோ? கெடுப்பானோ!! இல்லை ஒருவேளை என்னை விட்டு என் மகளையோ தங்கையையோ…………………. ???? ஐயோ இறைவா!!!!’ என்று நொடிக்கு நொடி தவித்து வளர்த்த மகள் முண்டச்சியாய் நிற்கவும், முண்டமாய் கிடக்கவும்; காண எத்தனைப் பெரிய வலி வலித்திருக்கும் உயிர்வரை??? அப்படி ஒரு வலிதான் அவளுக்குள்ளும் வலித்து கண்ணீராய் வழிந்தோடியது. விருட்டென அவள் கண்களை துடைத்து அழாதே என்று சொல்ல என்னால் இயலவில்லை. அழுவதற்கென்றே பிறந்த இழி பிறப்புக்கள் நாங்கள் என்பதுபோல் துச்சமாக எனைப் பார்த்தாள் அவள். கண்களில் நீர் மேலும் கலங்கியது. அவளின் மன நிலை என்னையும் உடைத்துப் போட, என் கரிசனம் அவளுக்கும் புரிந்திருக்கும் போல். “என் அண்ணனென்டு எண்ணி உங்களிடமொன்று சொல்லுறன்…” ஏதோ சொல்ல வாயெடுத்து, முடியாதவளாய் மீண்டும் அழுதாள். என்னால் அவள் தலை சாய்த்து கண்ணீரை துடைக்க துணிந்துவிட முடியாமல் போனது. வேறு பக்கம் திரும்பி என் கண்களைத் துடைத்துக் கொண்டேன். அவளுக்கு என் சிவந்த கண்களின் உண்மை புரிய, சற்று அருகில் வந்து அமர்ந்துக் கொண்டாள். “எண்ட அண்ணை போல இருக்கியள். கொஞ்சநஞ்ச அவதியல்ல நாங்கப் பட்டது. எங்கட கஷ்டம் எல்லாம் சொன்னாலும் உலகிற்கு வெறும் வார்த்தையில் புரியாது. இதலாம் ஒரு கொடூர வலி, என்ன பாவம் செய்தோமோ……….” விசும்பினாள்.. “எங்கடப் போல கஷ்டம் ஒரு மனுசனுக்கும் வரக்கூடாது. அன்றைக்கும் இன்றைக்கும் ஒரு மாற்றமும் இல்லாமல் கண்ணீருக்கு மட்டுமே அடிமையான இனமாகிப் போனோம்” எனக்கு வேறு வழி தெரியவில்லை விருட்டென அங்கிருந்து எழுந்தேன், இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு கழிவறை நோக்கி நடந்தேன், வாய் விட்டு கத்தி கதறியழ வேண்டும் போல் இருந்தது. இம்மக்களுக்காய் என்ன செய்யப் போகிறோம்???? எதைக் கொண்டு துடைக்கப் போகிறோம் இந்தக் கண்ணீரை? யார் யார் பொருப்பிந்தக் கண்ணீருக்கெல்லாம்???? கேள்விக் கணைகள் இதயத்தை துளைத்தெடுத்தன.., கண்ணாடியில் தலை முட்டி அழவேண்டும் போலிருந்தது. எல்லாம் உணர்வுகளையும் மொத்தமாகச் சேர்த்து ‘அழுதுவிடக் கூடாதெனும் வீம்பின் உச்சத்தில்’ வெறும் கோபமாக அடக்கிக் கொண்டேன். இந்தக் கோபம் எனக்குள் ஒரு ஆயுதமாக பிறப்பெடுக்கும் என்றொரு நம்பிக்கை இருந்தது. இப்பொழுதே இந்த விமானத்தை கைகொண்டு உடைத்து தகர்த்து விட்டு நேரே இலங்கை சென்று என் மக்களுக்கான நீதி கேட்டு; என் மண்ணை என் மக்களிடம் பிடுங்கிக் கொடுக்கவேண்டும் எனும் அசூர துணிச்சல் உள்ளெழுந்தது. ஒருவேளை அவர்களுக்கு எம் நியாயம் இனியும் புரியாதெனில் உலக கண்களில் கைவிட்டு இமைகிழித்து பாரென்று ‘எம் ஒட்டுமொத்த இழப்பையும் காட்டிவிடத் துடிக்கும் ஓர் உணர்வினை உள்ளடக்கி வைத்துக் கொண்டு தண்ணீரெடுத்து முகத்தில் அடித்து அடித்துக் கழுவினேன். அதற்குள் யாரோ ஒருவர் வந்து கழிவறை கதவு தட்ட – கதவை திறந்தேன் அவள் கதவிற்கு வெளியே நின்றிருந்தாள்!! கண்கள் தீயென சிவந்திருந்தது!! ————————————————————————————————————- தொடரும்.. 0.000000 0.000000 Rate this: பதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி! Click to email this to a friend (Opens in new window) Click to share on Facebook (Opens in new window) Click to share on Twitter (Opens in new window) Click to print (Opens in new window) Click to share on LinkedIn (Opens in new window) Click to share on Reddit (Opens in new window) Like this: Like ஏற்றப்படுகின்றது... Related About வித்யாசாகர் நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே! View all posts by வித்யாசாகர் → This entry was posted in கொழும்பு வழியே ஒரு பயணம் and tagged இங்கிலாந்து, இனம், இலங்கை, ஈழம், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், கொழும்பு, சிறுகதை, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், பயணக் கட்டுரை, பிணம், பெருங்கதை, போராளி, மாவீரர்கள், யுத்தம், லண்டன், விடுதலை கதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வீரர்கள், vidhyasagar, vithyasagar. Bookmark the permalink. ← கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 10) கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 12) → 8 Responses to கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 11) rathnavel natarajan சொல்கிறார்: 6:20 பிப இல் மே 3, 2011 பதிவைப் படித்தேன். வேதனையாக இருக்கிறது. LikeLike மறுமொழி வித்யாசாகர் சொல்கிறார்: 11:41 முப இல் மே 4, 2011 மிக்க நன்றி தங்களின் தொடர் கருத்தளிப்பிற்கு. வேதனைக்குரிய செயல்கள் தான் நடத்தி முடிக்கப் பட்டுள்ளன.. அதன் ஒரு பதிவாகவேனும் இப்படைப்பு இருக்கட்டும் என்பது என் எண்ணம் தோழமை. இதனால் எழும் உணர்வுகளில் துடிந்தெழுந்தாவது மக்கள் நம் அவர்களின் நலத்திற்கென போராடத் துணியட்டும் என்றொரு எதிர்பார்ப்பு!! LikeLike மறுமொழி Thenmoli Anantham சொல்கிறார்: 10:15 பிப இல் மே 3, 2011 படித்தேன்….என் கண்களில் நீர் ஓடுகின்றது…அந்த துன்பத்தை அனுபவித்து வந்தவள்தானே…..உங்கள் உணர்வுகளை அப்படியே வார்த்தையில் வடித்திருக்கிறீர்கள்……உங்கள் எழுத்துக்களால் தமிழின மக்களை விழித்தெழ வையுங்கள்…. LikeLike மறுமொழி வித்யாசாகர் சொல்கிறார்: 11:49 முப இல் மே 4, 2011 மிக்க நன்றி தேன்மொழி.. என்றோ அழும் கண்களை பார்த்து பார்த்து ரத்தத்தால் உறைந்துப போன சிவந்த விழியன் உலகிற்குத் தெரியாத ஈரங்களே இங்கு எழுத்தாக வடிக்கப் பட்டுள்ளது!! LikeLike மறுமொழி Pingback: கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 12) | வித்யாசாகரின் எழுத்து பயணம் Coral Shree சொல்கிறார்: 2:14 முப இல் மே 5, 2011 //நெற்கட்டு சுமந்துப் போனாலும் பிரித்துப் பார்க்கையில் நான்கு புற்களின் துண்டுகள் இல்லாமல் இல்லையே; அதுபோல் எண்ணி அக்கறை இல்லா மனிதர் ஓரிருவரை விடுத்து லட்சியத்தோடு கைகோர்க்கும் நிறைய பேரைக் கொண்டு நம் கனவினை வெல்வோம் சகோதரி”// அருமையான, தெளிவான முற்போக்கு சிந்த்னைகள். ஒரு நல்ல தமிழ் சமுதாயப் பிரதிநிதியாக தங்கள் வாதங்கள்! இவையெல்லாம் ஒரு நாள் சாத்தியமாகக் கூடும் என்று நம்பிக்கையூட்டும், சக்தி வாய்ந்த எழுத்து அம்புகள்! நல்ல நோக்கம் கருதி பயணிக்கும் தங்கள் பயணம் இனிதே தொடரட்டும்! வாழ்த்துக்கள் ஐயா. LikeLike மறுமொழி nalayini thiyaglingam சொல்கிறார்: 1:16 பிப இல் ஜூன் 13, 2011 உங்கள் எழுது கோலால் உங்கள் உணர்வுகளுக்கு உயிர் ஊட்டியுள்ளீர்கள். என்று தீருமோ எம்மவர் வேதனை ……..? LikeLike மறுமொழி வித்யாசாகர். (Copyright © வித்யாசாகர்.காம் - All rights reserved) சொல்கிறார்: 1:22 பிப இல் ஜூன் 13, 2011 நம்பிக்கையோடு நாட்களை கடப்போம், கண்ணுள்ளவர்களுக்கு ஓர்தினம் இரக்கமும் சுரக்கும், தமிழர் ரத்தம் ஊறிய மண்ணிலோர் நாள் தமிழர் விடுதலைக் கொடியும் பறக்கும்!! LikeLike மறுமொழி வித்யாசாகர். (Copyright © வித்யாசாகர்.காம் - All rights reserved) க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி Enter your comment here... Fill in your details below or click an icon to log in: மின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public) பெயர் (கட்டாயமானது) இணையத்தளம் You are commenting using your WordPress.com account. ( Log Out / மாற்று ) You are commenting using your Google account. ( Log Out / மாற்று ) You are commenting using your Twitter account. ( Log Out / மாற்று ) You are commenting using your Facebook account. ( Log Out / மாற்று ) நிராகரி Connecting to %s Notify me of new comments via email. புதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து Δ வணக்கம் வருக வருக.. இதற்காகத் தேடு: தமிழில் பிறந்தநாள் பாடல்.. இதுவரை வந்தவர்கள் 819,041 இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி தமிழில் தட்டச்ச திருக்குறள் படிக்க முகில் பதிப்பகம் பார்க்க அறிவிப்பு!! மறுமொழி அச்சிடப்படலாம் படைப்பு வகைகள் அணிந்துரை (18) அது வேறு காலம்.. (3) அறிவிப்பு (68) ஆய்வுகள் (19) உன்மீது மட்டும் பெய்யும் மழை (25) என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23) ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3) கட்டுரைகள் (8) வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3) கவிதைகள் (887) அம்மாயெனும் தூரிகையே.. (71) அரைகுடத்தின் நீரலைகள்.. (67) உடைந்த கடவுள் (105) உயிர்க் காற்று (4) எத்தனையோ பொய்கள் (92) ஒரு கண்ணாடி இரவில் (20) கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27) கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44) கல்லும் கடவுளும்.. (32) காதல் கவிதைகள் (66) சின்ன சின்ன கவிதைகள் (19) சிலல்றை சப்தங்கள் (3) ஞானமடா நீயெனக்கு (70) தமிழீழக் கவிதைகள் (87) நீயே முதலெழுத்து.. (30) பறக்க ஒரு சிறகை கொடு.. (51) பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35) பிஞ்சுப்பூ கண்ணழகே (7) பிரிவுக்குப் பின்! (83) கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33) காற்றாடி விட்ட காலம்.. (32) காற்றின் ஓசை – நாவல் (18) குறும்படம் (1) சிறுகதை (78) சிறுவர் பாடல்கள் (9) சில்லறை சப்தங்கள் (1) சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41) சொற்களின் போர் (2) திரை மொழி (27) நம் காணொளி (5) நாவல் (17) கொழும்பு வழியே ஒரு பயணம் (16) நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34) நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9) நேர்காணல் (6) பட்டிமன்றம் (4) பாடல்கள் (26) மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8) முதல் பதிவு (1) வசந்தம் தொலைக்காட்சி (1) வானொலி நிகழ்ச்சிகள் (5) வாழ்த்துக்கள்! (29) வாழ்வியல் கட்டுரைகள்! (46) வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8) விடுதலையின் சப்தம் (57) விருது விழாக்கள் (3) English Poems (1) GTV – இல் நம் படைப்புகள் (10) சமூகக் கதைகள்.. மே 2011 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 « ஏப் ஜூன் » ஆன்மிகக் கதைகள்.. படைப்பாக்கப் பொதுமங்கள் This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License. Blogroll அக்கினிக்குஞ்சு ஈகரை தமிழ் களஞ்சியம் உலகத் தமிழ் இணையம் காற்றுவெளி இதழ் செய்தி. காம் தமிழர்களின் சிந்தனை களம் தமிழீழ அரசு பத்திரிகை தமிழ் எழுத்தாளர்கள் தமிழ் மனம் தமிழ் மீடியா செய்தி இணையம்! தமிழ்த்தோட்டம் தமிழ்வெளி திரட்டி மீனகம் செய்தி நாளிதழ்! யாழ்தேவி வார்ப்பு WordPress.com சிறுகதைகள்.. வாழ்வியல் கட்டுரைகள் 25 திரைப்படங்கள் அம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின்! வாழ்த்துக்கள்! வாழ்வியல் கட்டுரைகள்! விடுதலையின் சப்தம்
புலனாய்வு ஊடகவியல் என்பது முறைமைகள் எவ்வாறு பணியாற்றுகின்றன மற்றும் அவை எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பன பற்றிய புரிதல்களை அடிப்படையாகக் கொண்டது – இந்த புரிதலின் அடிப்படையிலேயே நீங்கள் உங்களது செய்தியைக் கண்டுபிடித்து இது வரை உங்களது புலனாய்வை திட்டமிட்டிருக்கக் கூடும். விடைகளைப் பெறும் நோக்கில் உங்களது கேள்விகளை பின்வரும் வகைகளில் வடிவமையுங்கள்: இந்த தொடர் செயன்முறை அல்லது முறைமை எவ்வாறு பணியாற்ற வேண்டும்? யார், எவற்றை, எப்படி மற்றும் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும்? இந்த தொடர் செயன்முறை எவ்வாறு பதியப்பட்டு ஆவணப்படுத்தப்படுகின்றது? என்ன நியமங்கள் அல்லது மட்டக் குறிகள் (Bench Mark) பயன்பாட்டில் உள்ளன, அவை எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளன மற்றும் யார் அதை அமுல்படுத்துவார்? இவற்றுக்கான விடைகளின் விபரத் தன்மை மற்றும் முழுமை என்பன எங்கே மற்றும் எப்பொழுது தவறுகள் இடம்பெற்றுள்ளன என்பதை துல்லியமாக நிர்ணயிக்க உதவும். மேலதிகமாக, உங்களது புலனாய்வின் அகர வரிசை ஒழுங்கை பதிவு செய்து வைத்திருப்பது முக்கியமானதாகும். இதன் பொருள் உங்களது செய்தியை அகர வரிசைப்படி சமர்ப்பிக்க வேண்டும் என்பதல்ல, நிகழ்வுகளின் கால அட்டவணையில் நேர ஒழுங்குக்கு ஏற்ப யதார்த்தங்களை ஊசிகள் மூலம் சுட்டிக்காட்ட முடியும். இந்த செயன்முறை மூலம் எந்த நிகழ்வின் பின்னர் எது நடந்தது, என்ன விடயங்கள் ஒரே நேரத்தில் நிகழ்ந்தன போன்ற விடயங்களின் தெளிவான விம்பம் ஒன்றை உங்களால் உருவாக்க முடியும். நீங்கள் அளவுசார் மற்றும் பண்புசார் அறிவுகளை வித்தியாசப் படுத்தி அறிய இயலுமானவராக இருக்க வேண்டும். அளவுசார் என்பது வரைபடத்தில் இலக்கங்களை இடுவது பற்றியது. உதாரணமாக குறித்த மருந்து ஒன்று எத்தனை முறை தரச் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்? நீர்நிலை ஒன்றின் மாசு மட்டம் என்ன? கடந்த ஐந்து வருடங்களில் நகரக் குற்றங்களின் போக்குகள் என்ன? அநேகமான சந்தர்ப்பங்களில் இலக்கம் ஒன்று உறுதியான சான்றை வழங்குவதன் காரணமாக சிறிய உள்ளூர்ச் செய்தி ஒன்றினை பாரிய தேசிய புலனாய்வாக மாற்றியமைக்கும் திறன் வாய்ந்தது. உதாரணமாக, உங்களது சமூகத்தில் காணப்படும் பாடசாலை இடை விலகல் எண்ணிக்கை ஒட்டுமொத்த நாட்டினது இடை விலகலுக்கு ஒத்ததாக இருக்கக் கூடும். இதற்கு எதிர்மாறாக பண்புசார் வரைபடமாக்கல் மக்கள், நிகழ்வுகள், காரணங்கள், ஊக்குவிப்புகள், உணர்வுகள் மற்றும் வாக்குவாதங்கள் பற்றியவை. உலகின் பல பகுதிகளில் அளவு சார் அல்லது எழுத்து வடிவ பதிவுகளை அணுகுவது சாத்தியம் மிகவும் குறைந்தது ஆகும், ஏனெனில் அவ்வாறான பதிவுகள் எவையும் காணப்படுவதில்லை. அவ்வாறான கடினமான ஆவணங்கள் குறைவான சூழலில் பிரச்சனைகளை புலனாய்வு செய்ய இரு வழிகள் காணப்படுகின்றன: உங்களது சொந்த அவதானிப்புகளைப் பாவித்தல் மற்றும் தொடர்புடைய நபர்களை கட்டமைக்கப்பட்ட நேர்காணல்களுக்கு உட்படுத்துதல் மூலமாக அது மேற்கொள்ளப்படலாம். இவ்வாறு உங்களது சொந்த தகவல் தளம் உருவாக்கப்படலாம். பிரச்சனை ஒன்றுடன் ஆரம்பம் செய்வது உங்களை ஒரு நபரை அல்லது மக்கள் குழு ஒன்றை நோக்கி நரக்த்தும், எனினும் தகவல் தளத்தை விபரம் பிரித்தல் (Profiling) இதற்கு எதிர்மாறான வழியில் தொழிற்படுகின்றது: ஒரு சிறிய நிலத்துண்டு அல்லது ஒரு வீதி விலாசம் அதை உரிமையாளரை நோக்கி உங்களை அழைத்துச் செல்லும். இந்த அனைத்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட தகவல்களையும் ஒழுங்குபடுத்த இலத்திரனியல் திட்ட முகாமைத்துவக் கருவிகள் காணப்படுகின்றன. இவை அறிவு பூர்வம் மிக்க தொடர்பு நபர்களுடனான நேர்காணல்கள், தகவல் தருபவர்கள் மற்றும் அவர்களின் துறைசார் இயலுமைகள் என்பவற்றை சேமிக்கும் தகவல் தளம் ஒன்றை உருவாக்க உதவும். அத்துடன் குறித்த தகவல் தளத்தில் கேள்விகளின் பட்டியல், உருவாக்கப்பட்ட யதார்த்தங்களை சேமிக்கும் யதார்த்தங்களின் பக்கங்கள் அத்துடன் இன்னும் உறுதிப்படுத்தப்பட வேண்டி உள்ள கருதுகோள்கள் என்பவற்றை உள்ளடக்கியிருக்க வேண்டும். அத்துடன் தொடர்புடைய ஆவணங்களின் இணைப்புகள் (Hyperlinks), யதார்த்தங்கள், புள்ளிவிபரங்கள், தகவல் வங்கிகள், நிகழ்வுகளின் குறிப்புகள் மற்றும் நேர்காணல்கள் என்பவற்றை உள்ளடக்கியிருக்க வேண்டும். நுஎநசழெவந என்ற தகவல் தளம் ஊடகவியலாளர்கள் இடையே மிகப் பிரபல்யம் வாய்ந்ததாக இருக்கும் அதே வேளை குறித்த தகவல் தளம் இரகசியமான தகவல்களை சேமிக்க தேவையான பாதுகாப்பு வசதிகளை போதியளவில் கொண்டிருப்பதில்லை. முகாமைத்துவக் கருவிகளை தேர்வு செய்யும் போது பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும். other projects by KAS © 2021 Konrad-Adenauer-Stiftung. All rights reserved Legal Notice GDPR This website uses cookies, which are necessary for the operation and security of the site. In addition, the website collects anonymous user data for statistical analysis and to display embedded content from external sites. You can change the cookie settings at any time. Read More Cookie settings ACCEPT Privacy & Cookies Policy Close Privacy Overview This website uses cookies to improve your experience while you navigate through the website. Out of these cookies, the cookies that are categorized as necessary are stored on your browser as they are essential for the working of basic functionalities of the website. We also use third-party cookies that help us analyze and understand how you use this website. These cookies will be stored in your browser only with your consent. You also have the option to opt-out of these cookies. But opting out of some of these cookies may have an effect on your browsing experience.
நிலக்கோட்டை, வத்தலகுண்டு திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக செடியிலேயே மல்லிகை பூக்கள் கருகுகிறது, பூக்கள் அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.அதிகாரிகள் ஆய்வு செய்து மல்லிகை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். செடிகளில் ஏற்படும் கருகல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த தோட்டக்கலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை வரத்து குறைந்து முகூர்த்த தினமான நேற்று ஒரு கிலோ ரூ.2500-க்கு விற்பனையானது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படம் தீபாவளிக்கே திரைக்கு வர வேண்டியது. நவம்பர் 25ஆம் தேதி இன்று அதிகாலை 8 மணி முதல் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் தியேட்டரிகல் உரிமை மட்டும் சுமார் 11 கோடிக்கு விற்பனையாகி இருந்ததால் தியேட்டர் அதிபர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் வாதிக்குடி என்னும் பகுதியை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி தன்னுடன் படிக்கும் மாணவர் ஒருவருடன் ஏற்பட்ட காதலில் அவருடன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமடைந்த நிலையில் அதை யாருக்கும் தெரியாமல் மறைத்துவந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவி தனது வீட்டின் குளியலறையில் யாருக்கும் தெரியம் குழந்தை பெற்றெடுத்துள்ளார். குழந்தையை யாருக்கும் தெரியாமல் மறைப்பதற்காக பாலிதீன் பையில் சுற்றி தனது புத்தக பையில் வைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனை அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தனது உறவினர் ஒருவருக்கு தகவல் கொடுத்துள்ளார். மாணவி கூறியதை நம்பாத உறவினர் புகைப்படம் எடுத்து அனுப்புமாறு கூறியுள்ளார். குழந்தையை மாணவி புகைப்படம் எடுத்து வாட்ஸப்பில் அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை அடுத்து மாணவியின் பையை சோதித்ததில் குழந்தை இறந்த நிலையில் இருந்துள்ளது. தனக்கு 6 மாதத்திலையே குழந்தை பிறந்துவிட்டதாகவும், குழந்தை பிறக்கும்போதே இறந்தே பிறந்ததாகவும் மாணவி கூறியுள்ளார். மேலும், அந்த மாணவியின் காதலர் பற்றி விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த பெண்ணின் காதலருக்கு சில மாதங்களுக்கு முன்னர் வேறொரு பெண்ணுடன் திருமணம் முடிந்ததாகவும், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, குழந்தை இறந்த நிலையில் இருந்ததால் மாணவி கொலை செய்தாரா அல்லது குழந்தை இறந்தே பிறந்ததா என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், மாணவி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் கண்காணிப்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Advertisement Tags: #Crime #Crime news Advertisement Popular News நொடிப்பொழுதில் பிரபல நடிகையை தாக்கி செல்போன் திருட்டு! அடக்கொடுமையே.. எப்படி நடந்துருக்கு பார்த்தீங்களா! 12/3/2021 9:13:20 AM அட.. இது பிரபாஸ் பட தலைப்பாச்சே! ஜிவி பிரகாஷின் அடுத்த பட டைட்டில் என்னனு தெரியுமா? ஆரம்பமான படப்பிடிப்பு!! ஆரம்பத்தில் நானும் தப்பு பண்ணிருக்கேன்! ஆனா இப்போ.. தன் சினிமா அனுபவத்தை ஓப்பனாக பகிர்ந்த நடிகை பூர்ணா! ருசியோ ருசி...சுவையான கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி...அருமையான டிப்ஸ் இதோ... கருப்பு உடையில் கண்ணை கவரும் சாக்ஷி அகர்வால்!! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.. மாடர்ன் உடையிலும் மங்களகரமாய் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!! அழகிய புகைப்படம்.. வாவ்.. சேலையில் சிலை போல் இருக்கும் ஐஸ்வர்யா மேனன்.. லைக்ஸ் குவியும் வைரல் புகைப்படம்.. அட.. ட்ரைலரே சும்மா அதிரவிடுதே! எதிர்பார்ப்பை எகிற வைத்த ஜிவி பிரகாஷின் செல்பி ட்ரெய்லர்! வீடியோ இதோ!!
மூன்று நாள் அரசுமுறை பயணமாக தாயலாந்திற்கு சென்றுள்ள கந்திய பிரதமர் நரேந்திர மோடி பாங்காங்கில் நடைபெற்ற விழாவில் தாய்லாந்தில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளின் முதல் பதிப்பை வெளியிட்டார். திருவள்ளுவரால் தமிழ் மொழியில் எழுதப்பட்ட திருக்குறள் உலகம் முழுவதும் தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்து வருகிறது. பல நாட்டினர் திருக்குறளை தங்கள் தாய் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர். இதற்கு காரணம் சாதி மத பாகுபாடின்றி உலகில் வாழும் அத்தனை மனிதர்களுக்கும் வாழிக்கு நெறிகளை சுருக்கமாக எடுத்துரைக்கும் சிறப்பம்சம் திருக்குறளுக்கு இருப்பதால் தான். திருக்குறளின் சிறப்பம்சத்தை தமிழர்களாகிய நாம் நிச்சயம் உலகெங்கும் பறைசாற்ற வேண்டும். இதனையே கருத்தில் கொண்டு தாய்லாந்து வாழ் தமிழ் சமூகத்தினரால் திருக்குறள் தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்படுள்ளது. அதன் முதல் பதிப்பை பிரதமர் மோடி இன்று தாய்லாந்தில் அறிமுகம் செய்தார். Advertisement Tags: #Thirukural #narendra modi #thailand Advertisement Popular News அமெரிக்காவிலும் பரவிய ஒமிக்ரான்.! நடுங்கும் உலக நாடுகள்.! 12/3/2021 9:43:41 AM அம்மாடியோவ்.. ஒரு வாரத்தில் மட்டும் இவ்வளவு வசூலா.! கெத்து காட்டும் சிம்புவின் மாநாடு!! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகியை 11 முறை கத்தியால் குத்தி கொடூரக்கொலை.! நடுரோட்டில் நடந்த பயங்கரம்.! நொடிப்பொழுதில் பிரபல நடிகையை தாக்கி செல்போன் திருட்டு! அடக்கொடுமையே.. எப்படி நடந்துருக்கு பார்த்தீங்களா! அட.. இது பிரபாஸ் பட தலைப்பாச்சே! ஜிவி பிரகாஷின் அடுத்த பட டைட்டில் என்னனு தெரியுமா? ஆரம்பமான படப்பிடிப்பு!! ஆரம்பத்தில் நானும் தப்பு பண்ணிருக்கேன்! ஆனா இப்போ.. தன் சினிமா அனுபவத்தை ஓப்பனாக பகிர்ந்த நடிகை பூர்ணா!
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான ஜொப்ரா ஆர்ச்சர் நடப்பு இந்தியன் ப்ரீமியர் (IPL) தொடரில் இருந்து முழுமையாக விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. முழங்கை காயத்தால் அவதிப்பட்ட 26 வயதான ஜொப்ரா ஆர்ச்சர், இந்தியாவுடனான ஒருநாள் தொடர் நிறைவடைந்த பிறகு நாடு திரும்பியதுடன், கையில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். IPL தொடரில் இருந்து விலகும் பென் ஸ்டோக்ஸ் இதனையடுத்து சமீபத்தில் பயிற்சியைத்… Continue Reading Subscribe to get unlimited access to ThePapare.com Content Login/Register ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான ஜொப்ரா ஆர்ச்சர் நடப்பு இந்தியன் ப்ரீமியர் (IPL) தொடரில் இருந்து முழுமையாக விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. முழங்கை காயத்தால் அவதிப்பட்ட 26 வயதான ஜொப்ரா ஆர்ச்சர், இந்தியாவுடனான ஒருநாள் தொடர் நிறைவடைந்த பிறகு நாடு திரும்பியதுடன், கையில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். IPL தொடரில் இருந்து விலகும் பென் ஸ்டோக்ஸ் இதனையடுத்து சமீபத்தில் பயிற்சியைத்… TAGS Cricket ECB Rajasthan royals England and Wales cricket board Jofra archer RR IPL 2021 SHARE Facebook Twitter tweet Mohammed Rishad Related Articles திமுத்தின் கன்னி இரட்டைச்சதத்துடன் இமாலய ஓட்டங்களை எட்டிய இலங்கை கொழும்பு அணியை வீழ்த்தி முதல் வெற்றியை சுவைத்த புளூ ஸ்டார் திமுத், திரிமான்னவின் அரைச்சதங்களுடன் முன்னேறும் இலங்கை IPL இல் புதிய வரலாறு படைத்தார் விராத் கோஹ்லி அதிகமாக வாசிக்கப்பட்டது WATCH – இலங்கை வீரர்களுக்கு வாய்ப்பளித்த LPL அணிகள்!|Sports RoundUp – Epi 186 01/12/2021 இரண்டாம் நாள் ஆட்டத்தில் துடுப்பாட்டத்தில் தடுமாறிய இலங்கை! 30/11/2021 இலங்கை அணியை தடுமாற்றத்திலிருந்து மீட்ட தனன்ஜய, எம்புல்தெனிய 02/12/2021 Avatars by Sterling Adventures ThePapare.com is a comprehensive and interactive hub for news on Sri Lankan national, club and school sports. Speak to the editor: [email protected] Contact us: [email protected] ThePapare.com Subscription Service Terms of useFAQ User Guide Help Center About Contact Services Careers Terms and Conditions Help © Copyright 2021 - ThePapare.com Powered by Dialog ' );( document.contains ) || document.write( '' );( window.DOMRect ) || document.write( '' );( window.URL && window.URL.prototype && window.URLSearchParams ) || document.write( '' );( window.FormData && window.FormData.prototype.keys ) || document.write( '' );( Element.prototype.matches && Element.prototype.closest ) || document.write( '' ); '); var formated_str = arr_splits[i].replace(/\surl\(\'(?!data\:)/gi, function regex_function(str) { return ' url(\'' + dir_path + '/' + str.replace(/url\(\'/gi, '').replace(/^\s+|\s+$/gm,''); }); splited_css += ""; } var td_theme_css = jQuery('link#td-theme-css'); if (td_theme_css.length) { td_theme_css.after(splited_css); } } }); } })();
இந்த மனசுக்கு தான் உங்களை இத்தனை கோடி மக்கள் ஆதரிக்கிறார்கள் என்கிறார்கள் நெட்டிசன்கள். ஜெய்பீம் விவகாரத்தில் நெட்டிசன்கள் இப்படி போற்ற என்ன காரணம்? நீட் உள்ளிட்ட கல்வி விவகாரங்களில் அடிக்கடி நடிகர் சூர்யா தலையிட்டு அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார் என்றாத அதற்கு காரணம் கல்விக்காக அவர் கொடுத்து வரும் முக்கியத்துவம் தான். கல்வியால் மட்டுமே சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்ற எண்ணம்தான். அந்த கல்விக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றுதான் அவர் நீட் உள்ளிட்ட கல்வி விவகாரங்களில் தலையிடுகிறார். குரல் கொடுப்பதோடு அல்லாமல் அவர் கரம் கொடுத்தும் வருகிறார். அகரம் அறக்கட்டளை தொடங்கி பல்லாயிரக்கணக்கானோருக்கு கல்வி உதவி அளித்து வருகிறார். கடந்த 2006ஆம் ஆண்டு முதல் அகரம் அறக்கட்டளை தொடங்கி நடத்தி வருகிறார் சூர்யா. அதிக மதிப்பெண்கள் எடுத்து மேற்கொண்டு படிக்க முடியாத மாணவ மாணவிகளுக்கும், தாய் தந்தையரை இழந்து படிக்க வசதி இல்லாத, ஏழ்மை நிலையிலிருந்து படிக்க வசதி இல்லாதவர்களுக்கு கல்வி உதவி அளித்து வருகிறார். பல்லாயிரம் பேருக்கு அவர் கல்வி கண் திறந்து இருப்பதால்தான் இன்றைக்கு ஜெய்பீம் பட விவகாரத்தில் அவருக்கு இத்தனை ஆதரவு கரங்கள் நீள்கின்றன என்று சொல்லிவருகிறார்கள் நெட்டிசன்கள். அகரம் அறக்கட்டளையால் கல்வி உதவி பெற்றவர்கள் பல்வேறு துறைகளில் வெளிச்சம் பெற்றிருக்கிறார்கள். சூர்யாவால் கல்வி உதவி பெற்ற ஆதரவற்ற மாணவி கிருஷ்ணவேணி மருத்துவராகி இன்றைக்கு ராணுவத்தில் மேஜர் அந்தஸ்தில் உச்சம் தொட்டிருக்கிறார். தாய், தந்தையை இழந்த ஏழாம் வகுப்பு மாணவி கிருஷ்ணவேணி அதற்குமேல் படிக்க வசதி இல்லாமல் இருந்தவர் பலரின் உதவியால் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைகிறார். அறிவியல் கணிதம் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற அவருக்கு ஆசிரியர் ஒருவரின் உதவியால் மேல்நிலை படிப்பு சாத்தியமாகிறது. 2011 ஆம் ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வின் அடிப்படையில் மருத்துவத்திற்கான கட்-ஆப் மதிப்பெண் 196 .75. நூலிழையில் அரசு மருத்துவ கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை இழந்தார் கிருஷ்ணவேணி. தனது மருத்துவ கனவு தகர்ந்த நிலையில் வேறு படிப்புக்கு ஆயத்தமாகி விட்டார். அப்போதுதான் நண்பர்களின் அறிவுறுத்தலின் பேரில் அகரம் அறக்கட்டளையை அவர் நாடுகிறார். திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் படிப்பு ஆகும் செலவை அகரம் அறக்கட்டளை ஏற்றது. தமிழ்வழியில் படித்ததால் நிறைய சிக்கல்களை சந்தித்துதான் தேர்ச்சியும் பெற்றார். 2017ஆம் ஆண்டில் ராணுவத்திலும் அவருக்கு பதவி கிடைத்தது. தனது அசாத்தியமான திறமையால் உயரே உயரே சென்று இன்றைக்கு மேஜஸ் அந்தஸ்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். சிறுவயதிலேயே நான் மருத்துவராகி ஏழை எளியோருக்கு உதவி செய்வேன் என்று சொல்லி வந்திருக்கிறார். அதை நிறைவேற்றியும் வருகிறார். இராணுவத்தில் அவர் பணிபுரிந்தாலும் அவ்வப்போது கிராமங்களுக்கும் தனது நண்பர்களுடன் சென்று மருத்துவ விழிப்புணர்வு பணியையும் மேற்கொண்டு வருகிறார். ஜெய்பீம் பட விவகாரத்தில் பாமகவினரும், வன்னியர் சமூகத்தினரும் சூர்யாவை மன்னிப்பு கேட்கச் சொல்லி மாவட்டம் தோறும் வழக்கு தொடுத்து நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் சூர்யாவுக்கு உலகமெங்கும் ஆதரவுக்கரம் நீள்கிறது என்றால் இது மாதிரியான விதைகளை அவர் விதைத்து வருவதால்தான். அது இன்று வளர்ந்து மரமாகி நிற்கிறது என்பதை உணர்ந்து தான் சூர்யாவுக்கு இத்தனை ஆதரவுக்கரம் நிகழ்கிறது. கிருஷ்ணவேணி பற்றிய தகவல் தற்போது இணையங்களில் வைரலாகி வருவதால், ‘’ இந்த மனசுக்கு தான் உங்களை இத்தனை கோடி மக்கள் ஆதரிக்கிறார்கள்’’ என்கிறார்கள் நெட்டிசன்கள்.
UPSC தேர்வுக்கு தமிழில் எழுதுபவர்களின் வழிகாட்டியாக செயல்படுவதே இந்த UPSC TAMIL தளத்தின் நோக்கமாகும்.கீழ்கண்ட தலைப்புகள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும். ———————————————————————- ESSAY GENERAL SSTUDIES PAPER 1 GENERAL STUDIES PAPER 2 GENERAL STUDIES PAPER 3 GENERAL STUDIES PAPER 4 TNPSC தேர்வை எழுதுவோர் கீழ்கண்ட லிங்குகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள் TNPSC GROUP 1 MAINS ANSWER WRITING TNPSC SELF STUDY EXAM MACHINE UPSC MAINS TAMIL – TOPIC WISE ECONOMY CURRENT AFFAIRS ENVIRONMENT AND ECOLOGY GROUP 1 MAINS (NEW PATTERN UPDATED IN www.exammachine.com ) POLITY SCIENCE AND TECHNOLOGY SOCIAL ISSUES CENTRAL GOVERNMENT SCHEMES PREVIOUS YEAR UPSC MAINS QUESTION PAPER WORLD HISTORY TAMILNADU GOVERNMENT SCHEMES (TNPSC) ——————————— JOIN UPSC TAMILNADU STUDENTS TELEGRAM GROUP Search for: Search Recent Updates இந்திய அரசமைப்பின் சிறப்பு அம்சங்களை விரிவாக கூறு / Elucidate the salient features of Indian Constitution. August 14, 2021 ஒரு பொருளாதாரத்தில் பணவீக்கத்திற்கான காரணங்கள் மற்றும் விளைகள் யாவை? / What are the causes and effects of inflation on the economy? August 8, 2021 இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகள் யாவை? அணிசேரா இயக்கத்தில் ஆப்பிரிக்க ஆசிய நாடுகளை இணைத்ததில் பிரதமர் நேரு அவர்களின் பங்கினை விளக்குக. / What were the basic principles of India’s foreign policy? What role did Prime minister Nehru in organizing the Afro-Asian countries into a non-aligned movement? August 7, 2021 பெகாசஸ் (Pegasus) என்றால் என்ன? / What is Pegasus Software? August 2, 2021 ஆட்கடத்தல் மசோதா 2021 பற்றி எழுதுக / Write about the Trafficking in Persons (Prevention, Care and Rehabilitation) Bill, 2021 August 1, 2021 இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து விவாதி. / Discuss the principles of Indian Foreign Policy. August 1, 2021 1975-77 ல் தேசிய அவசரநிலை ஏன் கொண்டுவரப்பட்டது? அதன் தாக்கங்களை விவரி. / Why 1975 – 1977 National Emergency Imposed? Explain the Impacts. July 30, 2021 பெரியார் அவர்கள் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பங்கினை விவரி / Explain the role Played by Periyar to Tamil Society July 30, 2021 Write about Chief Election Commissioner and Election Commissioner / இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை பற்றி எழுதுக July 27, 2021 இந்தியக் குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்குக. / Explain the powers and functions of the President of India. July 21, 2021
நெடுநேரம் அவளோடு இருந்த நாளாக நேற்று இருந்தது. பருவத்தின் வசந்த நடை காற்றில் இருந்து கழன்று, எம் இருவரிலும் விழித்துக்கொண்டதாகக் கதைத்துக் கொண்டிருந்தோம். தான்தோன்றியாகவே மழைத்தூறலில் நனைவதைப்போல அவளது கண்கள் அசைந்தன. அவளின் ஜீவ ஆற்றல்மிக்க விரல்களை அளந்து கொண்டிருந்தேன். அந்தக் கணங்கள், என்னை இப்போதும் திகைக்கச் செய்கின்றன. அலங்கோலமான வாழ்வில் அசையும் ஆகாயத்தில் எழுந்து பறக்கும் சாம்பல் நிறப் புறாக்களைப்போல் அல்லவா இருந்திருக்கிறோம். கடைசிச் சந்திப்பின் இறுதியில், நிலமதி தந்த பொதிக்குள் பலகாரங்களும் இரண்டு ஷேர்ட்களும் இருந்தன. இருவரின் பிரிவுக் களைப்பு, அந்தப் பொதியில் அரூபமாகக் கனத்துக் கிடக்கிறது. நான் களத்தில் இருந்து விடுமுறையில் செல்கிறபோது எல்லாம் அவளைச் சந்திப்பேன். இந்தச் சந்திப்பு சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. அவளின் கண்களில் வெளிச்சமிட்ட கண்ணீர், என்னை வதைக்கிறது. நாம் பிரிந்திருக்க வேண்டும் என்பது காலத்தின் வதை. அது அவளுக்கு விளங்காமல் இல்லை. `எனது இறவாமை பற்றி எல்லாம் கடவுளிடம் கண்ணீர்விட்டுக் கேட்காதே' என எத்தனையோ முறை சொல்லிவிட்டேன். நாம் வாழும் நிலத்தில் இறப்பதற்கு அஞ்சுவது... வாழ்வதற்கு சலிப்பதுபோல. ``நிலமதி, நான் சண்டைக் களத்தில் நிற்கிறேன். நீ என்னை நினைத்து யோசியாதே. நான் களத்தில் வீரச்சாவு அடைந்துவிடுவேனோ என எண்ணும் நீ களைப்படைந்திருப்பது எனக்குக் கவலையாகவும் அவமதிப்பாகவும் இருக்கிறது. நான் இயக்கத்தில்தான் இருக்கிறேன். நீ போராளியை நேசிப்பவள். சாவையும் காயங்களையும் நினைத்து அழாதே'' எனச் சொன்னேன். ``இப்பிடிக் கதைக்க வேண்டாம்'' என்று வாயில் அடித்தாள். நான் அவளின் கன்னங்களை முத்தமிட்டேன். கண்ணீர் நெரிந்தது. அது மோசமான வானிலைக் காலத்தில் மொட்டவிழும் பூவைப் போலானது. வெட்கத்தில் அவள் தலைமுடி கலைந்திருந்த சமயம் கடலின் அலை என்னை இழுத்ததுபோல இருந்தது. நாம் முத்தங்களை கன்னங்களில் பரிமாறிக்கொண்டிருக்கையில், போர் விமானங்கள் காற்றைக் கிழித்து இரைந்தன. சாவுக்கு எனத் தனியாக விடப்பட்ட போர் விமானங்கள், ஆளுயரக் குண்டுகளைக் காவிக்கொண்டு ஆகாயவெளியில் பட்சிகளைப்போலத் திரிந்தன. நிலமதி, சிதைவுற்ற உயிரியின் பிசுபிசுப்பைப்போல நடுங்கி என் கைகளைப் பற்றினாள். ``முகிலன், எங்களுக்கு என்றொரு நிம்மதி இந்தப் பூமியில் இல்லையா? நாம் இப்படித்தான் எல்லாவற்றுக்கும் இடையில் வாழவேண்டுமா?'' நிலமதியின் அழுகை தோய்ந்த இந்தக் கேள்விகள், சபித்த வாழ்வின் மீதே கரைந்தன. அவளை அரவணைத்தேன். பதில்கள் இல்லாத கேள்விகளுக்கு, அனுதாபம் நெருக்கமாகிவிடுகிறது. எனக்கும் நிலமதிக்கும் மேல் அந்தியில் அசைந்தபடி காலம் ஓட்டிய நிழல்கள் தீர்ந்துபோயின. என்னை வழியனுப்பும் நேரம் நிலமதியின் முன்னே காத்திருந்தது. இருளத் தொடங்கிய பூமியில் இன்னும் இருவரும் இருந்து கதைக்க வேண்டும் என்று அவள் விரும்பினாள். ``வெளிக்கிடுவம், நல்லாய் நேரம் போய்விட்டது.'' ``இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம் முகிலன்.'' இருட்டிய வானத்தில் சிறுசிறு காயங்களைப்போல நட்சத்திரங்கள் முந்திக்கொண்டு மின்னின. நாம் இருந்த மரத்தின் கிளைகளில் பறவைகள் கூடின. பூமியின் படுமோசமான அமைதிச் சூழலை அச்சுறுத்துகிறது. இரவின் நெடுமூச்சு, விசித்திரமான சத்தத்தோடு காற்றில் கலக்கிறது. நிலமதியின் மூச்சுச் சுடரைப்போல என்னில் படர இந்த இரவை மேன்மைப்படுத்தும்விதமாக நான் அவளை முத்தமிட்டேன். கண்ணீர் ததும்பித் ததும்பி முத்தமிடும் நிலமதியை, இந்தப் பூமியின் இருட்டு உகுத்துக் கொண்டது. நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தின் இருளுக்குள் நிலமதி என்னைச் சேமித்து வைக்கிறாள். ஒற்றையடிப் பாதையில் பாவாடையின் மணலைத் தட்டிவிட்டு என்னைச் சேர்த்து அணைத்தபடி நடந்தாள். இந்தச் சந்திப்பின் பின்னால் நிலமதியின் பாதங்களின் ஈரம் ஈச்சமரங்கள் நிறைந்து கிடந்த மணல்களில் பசலையாகப் பூத்திருக்கும். அவளின் கொஞ்சல் வழியும் கதைகளின் அசைவுகளும் என் அடிவயிற்றில் குளிர்ந்தன. அவளின் கன்னங்கள் மஞ்சள் பட்டைபோல மின்னியது. விழிகளை பெருமூச்சு பெருகிப் பரவி நிறைத்தது. ``நான் சின்னப்பிள்ளைபோல அடம்பிடிச்சுட்டேன் முகிலன். மன்னிச்சுக்கோங்க.'' ``நிலமதி, உனக்கு எல்லாவற்றுக்கும் இடம் இருக்கிறது. இப்படி என்னை நீ ஆராதிக்கும் நினைவுகள், இனிய தோற்றத்தோடு என்னில் நிலைபெற்றிருக்கின்றன. நாம் இருந்து கதைத்த இடத்தில் காயாகிக்கிடக்கும் ஈச்சைகள் கனியாகிறபோது அதில் உனது முத்தங்கள் தேன்களாகக் கிடக்கும்.'' ``முகிலன், அடுத்த விடுமுறை எப்ப வரும்?'' ``என்ன கேள்வி இது. சண்டைக்களத்தில் இருந்து கிடைக்கும் விடுமுறையை திகதி குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா? நான் வருகிறபொழுது சந்திக்கிறேன். என்னைப் பற்றி யோசியாதையும். நான் செத்தால் வீரச்சாவு!'' பிரியும் வேளையில் இருவர் கண்களிலும் இலையுதிர்காலம் காட்சியளித்தது. பெருமூச்செறிந்து ஒரு கானத்தை இசைக்கும் காட்டுக்குருவியின் சிறகைப்போல என் உள்ளத்தில் வேதனை. அவளின் பார்வை, துயரத்தின் திரளின் இடையே ஒரு கனவைக் காணும் குழந்தையைப்போல் இருந்தது. அது தனது கனவின் திடுக்கிடச் செய்யும் நிமிடங்களை என்னிடம் இருந்து மறைக்கிறது. நாம் சன்னங்களும் குண்டுகளும் வெடிக்கும் முற்றங்களில் பூக்களைப் பரிமாறும் காதலர்களானது கொடூரத்தின் நிழல் பதித்த விதி. நிலமதி நாம் புயல் காற்றின் வெளியில் தென்றலைத் தேடிக்கொள்கிறோம். வாழ்வின் அகமும் புறமும் ரத்தமும் காயமும் ஒளிர்கின்றன. எமது நித்தியத்தில் சாவு பூக்களைப்போல வள்ளலாகவே விளங்குகிறது. ``கோடைக்காலத்தின் சருகுகளைப்போல நான் போர்க்களத்தின் புகைக்குள் சுழண்டுகொண்டிருக்கிறேன். உனது சகல சஞ்சலங்களின் ஆழ்ந்த அச்சத்தை என்னால் உணர முடிகிறது. நான் இப்போது உன்னிடம் இருந்து வானத்தின் கீழே பிரிகிறேன். நாம் எல்லாவற்றுக்குமாக சாவோடு வாழவேண்டியவர்கள். நாளை விடியலின் வானத்தின் கீழே நான் போர்க்களத்தில் துவக்கோடு நிற்பேன்'' எனச் சொல்லிப் பிரிந்தேன். மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. போர்க்களத்தின் அமைதியை ஒரு போராளி விரும்பாததைப்போலவே அவள் எனது பிரிவை விரும்ப மாட்டாள். தொடர்ந்து நான்கு தினங்களாக நடந்த சண்டையில், என்னோடு ஒரே காவலர் அணியில் நின்ற இரண்டு பேர் வீரச்சாவு. பூமியின் நித்திரைக்கு எமது மரணங்கள் கனவு. எனது கையைப் பற்றியிருந்த அவள் விரல்களில் கசிந்த அன்பின் சங்கதிகள், விரியன்பாம்பைப் போல என்னைக் கொத்துகின்றன. எனது விரல்கள், ஐந்தடி பதுங்குகுழிக்குள் துவக்கின் டிரிகரில் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. சன்னங்கள் வழியே நம் மானத்தையும் நிலத்தையும் தக்கவைத்துக்கொண்டிருக்கும் என்னை, அவள் நினைத்துக்கொண்டிருக்கிறாள். நான் சாவுக்கு ஆயத்தம் பண்ணப்பட்ட உயிரைச் சுமக்கும் உடலைக் கொண்டவன். அவள் உயிரும் என்னிடமே இருக்கிறது. இவற்றை எல்லாம் சரிபார்க்கும் வகையில் ஒவ்வொரு விடியலிலும் வெடிகுண்டின் பேரோசை தன்னை நிலைப்படுத்துகிறது. நேற்றைக்கு நள்ளிரவு கடுமையான மோதல். எமது தடுப்பணைகளை சுக்குநூறாக்கி, ராணுவம் ஒரு முன்நகர்வை மேற்கொண்டிருந்தது. போராளிகள் முன்னரங்கில் நின்று கடுமையாகச் சண்டை செய்தார்கள். நிலத்தின் வெளி முழுவதும் குண்டுகள் மின்மினிப்பூச்சி களாகப் பறந்துதிரிந்தன. நம்மைக் காப்பாற்றிய மரங்கள் முறிந்து வீழ்ந்தன. துவக்குகளைப்போல நள்ளிரவும் யுத்தத்துக்கானதே. ஆயுதத்தின் சத்தம் வெறித்தனமான அத்தியாயங்களைக்கொண்டது. நிலமதியின் நினைவுகள் என்னைச் சுற்றிவளைப்பதைப்போல நள்ளிரவு எங்கும் குண்டுகள் சுற்றிவளைத்திருந்தன. சோவெனப் பெய்யும் மழையாய் எறிகணைகள். போராளிகளின் குருதிகள் வெள்ளம். பின்வாங்கத் தொடங்கினோம். நான், எனது பதுங்குகுழிக்குள் நிலமதி வாங்கித் தந்த ஆடைகளையும் சுட்டுத் தந்த பலகாரங்களையும் கைவிட்டு பின்வாங்கினேன். இது என்றென்றைக்கும் நான் வேதனைப்படப் போகிற இழப்பு. குருதி இழத்தல், உயிர் துறத்தல் எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டிருக்கிறேன். ஆனால், இதைக் கைவிட்டிருக்கக் கூடாது. நாட்டைக் காப்பதைப்போல காதலின் பரிசுகளையும் போராளி காக்கவேண்டும். என்னிடம் இப்போது அசாத்தியமான கவலை குடிகொண்டுவிட்டது. நிலமதியின் கைகளைப் பற்றி முத்தமிட்டு, `நீ வாங்கித் தந்த ஆடைகளை நான் அணிந்துகொள்ளாமல் களத்தில் கைவிட்டுவிட்டேன்' எனச் சொல்லவேண்டும். முதலில் காய்ந்த தென்னம்பாளையைப்போல செல்லக் கோபத்தில் எரிந்து சிவப்புச் செம்பருத்தியாக விரிந்து என்னை முத்தமிடுகிற தருணத்தில்தான் பூமியின் எல்லா இழப்புகளும் ஈடுசெய்யப்படும். நான் விடுமுறையில் செல்ல வாய்ப்பு கிடைக்கும் எனில், அவளிடம் சொல்லிவிடலாம். சிலவேளைகளில் நான் வீரச்சாவு அடைந்துவிட்டால்? என்னை என்னால் உணர முடியவில்லை. சிதிலங்களின் சொற்றொடரைப்போல என் பெயரே எனக்குக் கேட்கிறது. நான் மரணத்தின் கடல் நடுவே நீச்சலற்ற உயிர். அடங்கிய யுத்தச் சத்தங்கள் தற்காலிகமானவை. மெளனத்துக்கு மகிமை உண்டு என நான் நம்புவதற்கு இல்லை. எனக்குள் எந்த மெளனங்களும் இல்லை. முறிந்து வீழ்ந்த மரங்களுக்குள் நசிபட்டுக் கீச்சிடும் குருவிக்குஞ்சுகளைப் போல என்னை எது இவ்வாறு நசிக்கிறது. என்னை நினைத்து அழுது வடியும் அவளின் திடுக்கிடும் கணங்கள் என்னை உலுக்குகின்றன. அவளின் பிம்பம் ஸ்னைப்பர் ஒளியைப்போல என் மீது படர்கிறது. வானத்தில் சூரியன் சிவப்பாகச் சரிகிறான். நான் கிடைத்திருக்கும் ஓய்வில் எதையாவது உண்டு பசியாற வேண்டும். நாம் பின்வாங்கிவிட்டோம். இன்றைய இரவு மீண்டும் களத்தில் தணல் பறக்கும். இருளத் தொடங்குவது பூமிதானே தவிர, நம் வாழ்வு அல்ல. எதிரிகள் களத்தில் அணி மாறுகிறார்கள். உலங்குவானூர்தியின் சத்தம் அதைக் காட்டித் தருகிறது. யுத்தப் பேரிகையின் முன்னணி இசை இது. என்னோடு மூன்று போராளிகள் இணைந்திருக்கிறார்கள். அவர்கள் கண்களில் அவ்வளவும் வெளிச்சம் நிரம்பிக்கிடக்கிறது. இது துணிச்சலின் மினுமினுப்பு. ``என்னோட பேர் முகிலன்.'' ``உங்கட பேர் என்ன?'' ``கருமுகிலன்.'' ``வானரசன்.'' ``கனல்மாறன்.'' ``வேற சண்டையில நிண்டு இருக்கிறீங்களோ?'' ``நான் மட்டும்தான் அண்ணா புதுசு. இவங்கள் இரண்டு பேரும் மன்னாரில் இருந்து சண்டையில்தான் நிக்கிறாங்கள்'' என்றான் கனல்மாறன். ``நான் சும்மாதான் கேட்டனான். தெரிஞ்சு வெச்சிருக்கிறது நல்லம்தானே. கருமுகிலன், நீங்கள் இறுக்கமாக நிண்டு சண்டை செய்விங்கள் எனக் கேள்விப்பட்டனான். ஆர்மி முன் நகர்வான் என்று தெரியுது. ஒரு சின்னச் சண்டையை இரவுக்கு செய்வான் என நினைக்கிறம். வேவுத் தகவல் அப்படித்தான் கிடைச்சிருக்குது. ஒரு அடி பின்னுக்குப் போகக் கூடாது. நிண்டு சண்டை செய்வம்'' எனச் சொன்னேன். அது அப்படித்தான் நிகழ்ந்தது. ஆனால் போர் விமானங்களில் இருந்து தொடங்கியது. முன்னணி அரங்கில் எம்மை இலக்குவைத்து நான்கு போர்விமானங்கள், ஆளுயரக் குண்டுகளால் தாக்குதல் நிகழ்த்தின. இரவு ஆயுதத்தின் அராஜகத்தில் பிளவுண்டு பிளவுண்டு பக்கங்களாகப் பறந்து சிதைந்தன. நிலத்தின் ஜீவிதம் விறைத்து இறக்கும்படியாய் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. பதுங்குகுழிக்குள் துவக்குகளை நெஞ்சோடு அணைத்தபடி நானும் எனது அணியினரும் பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். போர் விமானங்களின் தாக்குதலில் இருந்து நாம் மீள்வதற்கும் நிலைகொள்வதற்கும் முன்னரே எதிரியின் துப்பாக்கிகள் இயங்கத்தொடங்கின. நேற்றைக்கு எமது பின்வாங்கல், எதிரிக்கு ஒரு வலிமையைத் தந்திருப்பதாக நான் உணர்ந்தேன். சன்னங்கள், காற்றின் வெளியில் மோதத் தொடங்கின. எமது துவக்குகள் ஒரு லயத்தோடு எப்போதும் இயங்கக்கூடியவை. பயத்தில் கண்களை மூடியபடி இரவில் நடந்து போகும் சிறுவனைப்போல துவக்கினை இயக்க முடியாது. தாக்குதல் வரும் திசை நோக்கி எமது ஒட்டுமொத்த சூடுகளும் செல்லும். எறிகணைகள் எரிந்தபடி நிலத்தில் வீழ்ந்தன. போராளிகள் காயமடைவது களத்தின் கிழக்கில் சூரிய உதயம். மோதல், தன் அகண்ட வாயைத் திறக்கத் தொடங்கியது. இருளின் எந்தத் தடயமும் பூமியில் இல்லாததைப்போல வெளிச்சம் குண்டுகளின் வெடிப்பில் இருந்து தெறித்தது. போராளிகள், குருதி வழிய வழிய சண்டையிட்டபடியிருக்கிறார்கள். குருதியை மிதித்தபடி காயமடையாத போராளிகள் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். நான் கட்டளைகளை இடுகிறேன். முன் நகர்கிறேன். மொட்டைக் கத்தியால் வெட்டப்பட்ட வாழைமரத்தைப்போல வானரசன் கழுத்தறுந்து களம் வீழ்ந்தான். அவனை, சாப்பாட்டுக் கோப்பை அளவிலான குண்டுச்சிதறல் கொன்றது. அவன் வீழவும் நான் நிமிர்ந்து பார்க்கவும் நடுவில் நிலமதியின் நடுக்கம் என்னைத் தொற்றியது. அவ்விடம் விட்டு முன் நகர்ந்தேன். இப்படித்தான் நம் வாழ்க்கை உடலங்களைக் கடக்கிறது. காயங்கள் நிரம்பிவிட்டன. எதிரிகள் ஒரு பக்கம் பின்வாங்கிக் கொண்டிருக்கின்றனர். போராளிகள் களம் வீழ்ந்தபடியும் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். `இழத்தலின் வலி களத்தில் தெரியும். அடி அடி விடாதே!' என்ற கட்டளைகள் சன்னங்களைப் போல வந்துகொண்டிருக்கின்றன. யுத்தத்தின் பெருத்த கால்கள் தூக்கி நடக்கும் பாவனையோடு எதிரியின் டாங்கிகள் நகர்கின்றன. ஓயாத குண்டுமழை. மழை, இந்தப் பூமியை நனைக்கும் சொல்; எம்மைக் கொல்லும் சொல். எரியும் நிலத்தை தீயாகக் கடக்கிறோம். முன் நகர்கிறோம். கைவிடப்பட்டுப் பின்வாங்கிய இடத்தை அடைகிறோம். சொற்ப நேரத்தில் அதையும் தாண்டி இடங்களை மீட்கிறோம். `இதோ இதோ பின்வாங்கும் டாங்கிகளின் சத்தத்தைக் கேளுங்கள்' என, காற்று இதமாய் காதுக்குள் செல்கிறது. நான் களத்தில் முன்னேறுகிறேன். ஒரு மரத்தின் காப்போடு நின்று சண்டையிடுகிறேன். `கருமுகிலன், களம் வீழ்ந்தான்' என்கிற தகவல் கிடைக்கிறது. வாழ்வும் சாவும் தகவலால் நிரம்பியது. கைவிடப்பட்ட பதுங்குகுழியை நோக்கி முன்னேறுகிறேன். அதற்குள்தான் நிலமதியின் கனத்துப்போன பிரிவு பலகாரமுமாய் சட்டையுமாய் கிடக்கிறது? அது எதிரிகளால் கைப்பற்றப்பட்டிருக்கும். என்னை இந்த நிலை அவமதிக்கிறது. நான் எனது காதலின் பரிசை எதிரியிடம் இழந்துவிட்டேன். யுத்தத்தின் தகிப்பு ஒன்றாய்க் கூடுகிறது. போர்விமானங்கள் திசை மீறி தாக்குதலைத் தொடுக்கின்றன. போராளிகளின் துவக்குகள், உதிரத்தின் பேரண்டத்தில் இயங்கிக் கொண்டேயிருந்தன. எதிரியின் சடலங்கள் கருகிக் கிடக்கின்றன. முன்னேறிக்கொண்டிருக்கும் எம் கால்கள் ரத்தத்துள் புதைகின்றன. ஒரு மரத்தின் அருகே காப்பெடுத்து துவக்கை இயக்கியபடி இருக்கிறேன். என் வலது கண்ணின் பக்கவாட்டில் சிறு கல்லுப் பட்டதைப்போல உணர்ச்சி. மண் துகள்கள் பட்டிருக்கும். விறுவிறுத்தது. ரத்தமா... கண்ணீரா? கண்ணீர் சிவக்காது, ரத்தம்தான். பூமி, குண்டுகளால் பிரகாசித்து எரியும்போது இருட்டியது. என் கண்கள் மட்டும் இருள் குவித்தது. துவக்கை நெஞ்சோடு உயிராய் அணைத்தேன். என் கைகள் சோர்ந்து மூச்சு சிதையும் பொழுதில் ரத்தத்தில் தத்தளித்தேன். என்னை நிலமதியாய் மணல்கள் ஒட்டிக்கொண்டன. அவள் வாங்கித் தந்த ஆடைகளையும் சுட்டுத் தந்த பலகாரங்களையும் கைவிட்டதுபோலவே என்னையும் களத்தில் கைவிட்டேன். நிலமதியின் உருவம் பிறழ்ந்து அக்கினியாய் என் வித்துடலில் படர யுத்தம் உடைந்து பெருத்தது.
Motor Vikatan - 01 June 2016 - இந்தியாவின் பவர்ஃபுல் ஹேட்ச்பேக்! | Fiat Abarth Punto - Readers review - Motor Vikatan - Vikatan Save the vikatan web app to Home Screen tap on Add to home screen. X Subscribe to vikatan Login செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் கனமழை: அப்டேட்ஸ் New ஆன்லைன் தொடர்கள் New My News ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் ராசி காலண்டர் மேலும் மெனுவில் Search மோட்டார் விகடன் ஆசிரியர் பக்கம் ஹலோ வாசகர்களே... அன்பு வணக்கம் ! தொடர்கள் நெடுஞ்சாலை வாழ்க்கை - 37 எந்திரன் - 18 கார்ஸ் சின்ன எஸ்யுவி அதிக மைலேஜ்! SPY PHOTO - ரகசிய கேமரா ஆல்ரவுண்டர் டிகுவான்! சின்ன இனோவா! கார் மேளா ஹோண்டாவின் பிரீமியம் கார்கள்! நானும் எஸ்யுவிதான்! பெட்ரோல் காரில் டீசல்.... டீசல் காரில் பெட்ரோல்... எல்லாமே ஸ்ட்ராங்! சொகுசு, ஸ்போர்ட்டி ஓகே... ஆனால் பெட்ரோல்? பக்கா பட்ஜெட் கார்! ஒரே இன்ஜின், ஒரே பவர் எது பெஸ்ட்? பைக்ஸ் 2 புல்லட்... 16 மாநிலங்கள்... 25 நாட்கள்! பைக் பஜார் கஸ்டம் கையாள சுலபம்! ராயல் என்ஃபீல்டை விரட்டும் மோஜோ! 43 லட்ச ரூபாய் பைக்! பெண்களுக்கான டாப்-7 ஸ்கூட்டர்ஸ்! ரேஸ் ரேஸுக்கு நாங்க ரெடி! மோட்டார் நியூஸ் மோட்டார் நியூஸ் மோட்டார் கிளினிக் - கேள்வி-பதில் வாசகர் அனுபவம் பச்சை சொர்க்கம் பரம்பிக்குளம்! - விருத்தாசலம் to பரம்பிக்குளம் அழகுக் குட்டிச் செல்லம்! V15 - எப்படி இருக்கிறது? - ஸ்டூடன்ட்ஸ் ரிப்போர்ட் இந்தியாவின் பவர்ஃபுல் ஹேட்ச்பேக்! Published: 01 Jun 2016 5 AM Updated: 01 Jun 2016 5 AM இந்தியாவின் பவர்ஃபுல் ஹேட்ச்பேக்! Vikatan Correspondent ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் Use App இந்தியாவின் பவர்ஃபுல் ஹேட்ச்பேக்! ரீடர்ஸ் ரெவ்யூ / ஃபியட் அபார்த் புன்ட்டோ ஈவோராகுல் சிவகுரு, படங்கள்: பா.காளிமுத்து உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் பிரீமியம் ஸ்டோரி என் வீட்டில் நான் முதன்முதலாகப் பார்த்த கார், மாருதி ஆம்னி. பின்பு எனது அப்பா டாடா சியராவுக்கு மாறினார். அந்த காரின் டிஸைன் எனக்கு மிகவும் பிடிக்கும். நகருக்குள் பயணிக்க சின்ன கார் ஒன்று தேவைப்பட்டதால், கட்டுமானத் தரத்துக்குப் பெயர்பெற்ற ஃபியட் பேலியோவை வாங்கினோம். எனக்கு கார் ஓட்டுவதில் ஆர்வம் அதிகம். கல்லூரி படிக்கும்போது, எனது சொந்தப் பயன்பாட்டுக்காக ஸ்கோடா ஆக்டேவியா VRS வாங்கினேன். இப்போதும் அந்த கார் என்னிடம்தான் இருக்கிறது. இன்றும்கூட அதன் நிலையான பெர்ஃபாமென்ஸ் மற்றும் பாடியின் உறுதித்தன்மை வியக்க வைக்கும். குடும்பப் பயன்பாட்டுக்காக, ஓட்டுதல் அனுபவத்துக்கும் தரத்துக்கும் புகழ்பெற்ற ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோவை வாங்கினேன். ஏன் அபார்த் புன்ட்டோ ஈவோ? தொழில் தொடர்பாக, அடிக்கடி காரில் பயணிக்க வேண்டியிருக்கும். எனவே, நெரிசல் மிக்க சாலைகளில் சுலபமாகச் செல்ல, ஒரு சின்ன கார் வாங்கலாம் என எண்ணினேன். தொடர்ச்சியாக பவர்ஃபுல் கார்களையே பயன்படுத்திவந்ததால், நல்ல பெர்ஃபாமென்ஸை வழங்கும் ஹேட்ச்பேக்கைத் தேடிக்கொண்டிருந்த போது, ஃபோக்ஸ்வாகன் போலோ GT மட்டுமே இருந்தது. போலோவுக்கும், வென்ட்டோவுக்கும் பெரிய அளவில் வித்தியாசங்கள் இல்லை என்பதால், அந்த கார் என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. மேலும், அதில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே இருந்தது. அப்போதுதான் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஃபியட் நிறுவனம், சக்தி வாய்ந்த அபார்த் புன்ட்டோ ஈவோ காரைக் களமிறக்கியது. அதில், போலோ GT மாடலைவிட பவர்ஃபுல் இன்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் இருந்ததால், என் மனதை அபார்த் புன்ட்டோ ஈவோ முழுவதுமாக ஆக்ரமித்துக்கொண்டது. ஷோரும் மற்றும் சர்வீஸ் அனுபவம் கார் அறிமுகமானதுடன், சென்னை அண்ணா நகரில் இருக்கும் ஆர்டிசி ஃபியட் ஷோரூமுக்கு விரைந்தேன். டெஸ்ட் டிரைவ் செய்த பிறகு, உடனடியாக காரை புக் செய்தேன். இரண்டு நாட்களில் சொன்னபடியே காரை டெலிவரி செய்தார்கள். 5,000 கி.மீ கடந்தவுடன் காரை சர்வீஸ் சென்டருக்குக் கொண்டுசென்றேன். ஆண்டுக்கு ஒருமுறை அல்லது 15,000 கி.மீ.க்கு ஒருமுறை சர்வீஸ் செய்தால் போதும் என்று அவர்கள் தெரிவித்தனர். இருந்தாலும், காரை முழுவதுமாக செக் செய்து, 2 மணி நேரத்தில் என்னிடம் காரை ஒப்படைத்தனர். பிடித்தது ஸ்மூத்தான இன்ஜின்தான் இந்த காரின் மிகப் பெரிய பலம். 143bhp பவர், இந்தியாவிலேயே இதுதான் பவர்ஃபுல் ஹேட்ச்பேக். சஸ்பென்ஷன் செட் செய்யப்பட்ட விதம், பாடி ரோல் சுத்தமாக இல்லை. நான்கு வீல்களுக்கும் டிஸ்க் பிரேக் இருப்பதால், அதிக வேகத்தில் சென்று பிரேக் அடித்தால்கூட, உடனடியாகக் காரை நிறுத்த முடிகிறது. ஹைட்ராலிக் பவர் ஸ்டீயரிங், அற்புதமான கையாளுமையை வழங்குகிறது. சம்மரில் காருக்குள் நுழைந்தவுடன் ஆட்டோமேட்டிக் ஏ.சி உடனடியாக காரின் கேபினை கூல் செய்து விடுகின்றது. போலோவுடன் ஒப்பிடும்போது, புன்ட்டோவில் இடவசதி அதிகம். காரின் கட்டுமானத் தரம், ராணுவ டேங்க்போல உறுதியாக இருக்கிறது. திறன்மிக்க ஹெட்லைட்ஸ் இருப்பது, இரவு நேர நெடுஞ்சாலைப் பயணங்களின்போது உதவியாக இருக்கிறது. காரின் ஸ்டெபிலிட்டி, கார் முழுமையாக நமது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. நகரப் பயன்பாட்டைத் தாண்டி, நெடுஞ்சாலையிலும் இந்த காரின் செயல்பாடு பிரமிக்கவைக்கிறது. நகரத்தில் 10-11 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 16-17 கி.மீ-யும் எனக்கு மைலேஜ் கிடைக்கிறது. காரின் ஆடியோ சிஸ்டம் நன்றாக இருக்கிறது. ஆனால், ஸ்பீக்கர்கள் மன நிறைவைத் தராததால், அவற்றை மாற்றிவிட்டேன். பிடிக்காதது முன் பக்க இருக்கைகள் பொசிஷன் செய்யப்பட்ட விதத்தினால், ஸ்டீயரிங் வீல் ஓட்டுநருக்கு மிக அருகே அமைந்திருக்கிறது. வென்ட்டோவுடன் ஒப்பிடும்போது, புன்ட்டோவின் கிளட்ச் பெடல் டிராவல் அதிகம். 12 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரில், ரிவர்ஸ் கேமரா, டச் ஸ்க்ரீன் சிஸ்டம், புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், பார்க்கிங் சென்ஸார், புஷ் பட்டன் ஸ்டார்ட் போன்ற வசதிகள் இல்லை. 2,000 ஆர்பிஎம் வரை டர்போ லேக் இருக்கிறது. ஆனால், அதைத் தாண்டிய பிறகு, காரின் செயல்பாடு வேற லெவல்தான். வழக்கமான புன்ட்டோவுடன் ஒப்பிடும்போது, அபார்த் மாடலில் ஃபியட் பேட்ஜுக்குப் பதிலாக அபார்த் ஸ்டிக்கர்கள் மற்றும் லோகோ, புதிய அலாய் வீல் டிஸைன், சைடு ஸ்கர்ட்ஸ், பின் பக்க ஸ்பாய்லர் ஆகியவை மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. எனவே, பெரிய அளவில் அபார்த் புன்ட்டோ ஈவோ தனித்துத் தெரியவில்லை. காரின் கேபினில் இடம் பெற்றுள்ள பிளாஸ்டிக்கின் தரம் மற்றும் ஃபிட் அண்டு ஃபினிஷ், காரின் விலையை நியாயப்படுத்தும் விதத்தில் இல்லை. போதுமான பூட் ஸ்பேஸ் இருந்தாலும், பின் பக்க இடவசதி குறைவாகவே இருக்கிறது. புன்ட்டோவின் பலமான கிரவுண்ட் கிளியரன்ஸ், இதில் காணாமல் போய்விட்டது. வென்ட்டோவின் ஸ்மூத்தான கியர்பாக்ஸ் உடன் ஒப்பிடும்போது, அபார்த் புன்ட்டோ ஈவோ காரின் கியர்பாக்ஸில் கியர் மாற்ற, சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டியிருக்கிறது. பவர்ஃபுல் காரின் எக்ஸாஸ்ட் சத்தம், அதற்கேற்ப இல்லாதது நெருடல். என் தீர்ப்பு என்னதான் குறைகள் இருந்தாலும், ஓட்டுநருக்கு நம்பிக்கையளிக்கக்கூடிய கையாளுமை மற்றும் ஸ்டெபிலிட்டி, பவர்ஃபுல்லான இன்ஜின், மேனுவல் கியர்பாக்ஸ், உறுதியான கட்டுமானத் தரம் போன்றவற்றை விரும்புவர்களையும், உண்மையான கார் ஆர்வலர்களையும் ஃபியட் அபார்த் புன்ட்டோ ஈவோ நிச்சயம் ஏமாற்றாது!
முழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு பிரிட்டிஷால் உருவாக்கப்பட்ட கங்காணி பதவியே ஆளுநர் பதவி ! விவசாயிகள் போராட்டம் வெற்றி : சாதனையும் கற்றுக்கொள்ள வேண்டியவையும்! பருவநிலை மாற்றமும் – முதலாளித்துவ அரசுகளின் மாநாடும் ! மூழ்கியது சென்னை : அதிமுக கொள்ளைக் கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய் ! கருத்தாடல் முழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர் பெண்கள் முழுக் கால்ச்சட்டை (பேண்ட்) அணிந்த போராட்ட வரலாறு | சிந்துஜா பெண்ணின் உடல் அதிகாரம் செலுத்துவதற்கானதல்ல ! ஆடை அவமதிப்பதற்கானதல்ல ! பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறையும் நிறப் பாகுபாடும் ! ரோந்து போலீசு கையில் துப்பாக்கி வழங்கலாமா ? கருத்துக் கணிப்பு சமூகம் முழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு Money Heist : நம் எதிர்ப்புணர்வை மடைமாற்றும் வடிகால் ! கிராம தெய்வங்களைப் பற்றிய கதைப்பாடல்கள் || நா. வானமாமலை ஆங்கிலேயர் காலத்திய நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் || நா. வானமாமலை காந்தியைக் கொன்ற துப்பாக்கி யாருடையது? வீடியோ உழவர் படை ஒன்று நீ கட்டிடு ! || தருமபுரி மக்கள் அதிகாரம் பாடல்… கலை என்பது கலைக்காக அல்ல, மக்களுக்காக… | தோழர் கதிரவன் | வீடியோ என் வீட்டில் உப்பு இப்போது சிவப்பு நிறமாக தெரிகிறது … | தோழர் ஸ்ரீரசா… பறிபோகும் கூலித் தொழிலாளர்களின் உரிமைகள் | லஜபதிராய் | வீடியோ உப்பிட்டவரை ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி || பாகம் 1 || வீடியோ களம் முழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம் எழுவர் விடுதலை – இஸ்லாமிய கைதிகள் விடுதலைக்கு அநீதி இழைக்கும் திமுக அரசு ||… நவம்பர் 26 : விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் மக்கள் அதிகாரம் பங்கேற்பு! விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு பணிந்தது பாசிச மோடி அரசு || மக்கள் அதிகாரம் ஜம்புக்கல் மலையை மணல் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்போம் ! புதிய ஜனநாயகம் முழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார் இல்லம் தேடிவரும் கல்வி : கல்வியில் நடத்தப்படும் ‘கரசேவை’ ! உ.பி. லக்கிம்பூர் கேரி படுகொலை : காவி பாசிஸ்டுகளின் சதி ! வரியில்லா புகலிடங்கள் : முதலாளித்துவத்தின் கள்ளக் குழந்தை ! இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாகும் அசாம் ! இதர முழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா அமெரிக்கா ஜனநாயகத்தை தூக்கிப் பிடித்த போது … || கேலிச் சித்திரங்கள் விவசாயிகள் மீதான மோடியின் ஒடுக்குமுறையை உலகம் மறக்காது || கருத்துப்படங்கள் ! மாட்டுக்கு ஆம்புலன்ஸ் – மனிதனுக்கு குப்பை வண்டி : அரங்கேறும் இந்துராஷ்டிரம் || கருத்துப்படம் மோடி விவசாயிகளுக்கு புரியவைக்க முயற்சித்த போது… || கருத்துப்படம் சந்தா முகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் தசரத் மான்ஜி : மலையை அகற்றிய வீரக்கிழவன் ! மறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்புதிய ஜனநாயகம்புதிய கலாச்சாரம்முன்னோடிகள்சமூகம்வாழ்க்கைவிவசாயிகள் தசரத் மான்ஜி : மலையை அகற்றிய வீரக்கிழவன் ! By புதிய கலாச்சாரம் - December 16, 2008 19 Facebook Twitter WhatsApp முன்னொரு காலத்தில் சீனத்தில் ஒரு கிழவன் இருந்தானாம். வடக்கு மலையின் மூடக்கிழவன் என்று அவனுக்குப் பெயர். அவனுடைய வீட்டின் வாசலை மறைத்து நின்ற இரு பெரும் மலைகளை உடைத்து அகற்றுகிறேன் என்று கோடரியை வைத்துக் கொண்டு உடைக்கத் தொடங்கினானாம் அந்தக் கிழவன். “அட முட்டாளே ஒண்டி ஆளாய் மலையை யாராவது உடைக்க முடியுமா?” என்று அவனைக் கேலி செய்தானாம் அந்த ஊரிலிருந்த ஒரு புத்திசாலிக் கிழவன். முட்டாள் கிழவன் சொன்னானாம், “நான் உடைப்பேன், நான் செத்த பிறகு என் பிள்ளைகள் உடைப்பார்கள், பிறகு பேரப்பிள்ளைகள், கொள்ளுப்பேரன்கள் என்று உடைத்துக் கொண்டே இருப்போம். என் சந்ததி வளரும், ஆனால் இந்த மலை வளராது. எனவே நாங்கள் வெற்றி பெறுவோம்” என்று கூறி உடைக்கத் தொடங்கினானாம். அவனுடைய விடாமுயற்சியைக் கண்டு மனமிரங்கிய இரண்டு தேவதைகள் வானத்திலிருந்து இறங்கி வந்து அந்த மலைகளைத் தம் முதுகில் தூக்கிக் கொண்டு பறந்து விட்டார்களாம். இந்த நீதிக்கதையை சீனக் கம்யூனிஸ்டுகளுக்குக் கூறிய மாவோ, “ஏகாதிபத்தியமும் நிலப்பிரபுத்துவமும்தான் நம் நாட்டை அழுத்திக் கொண்டிருக்கும் மலைகள். சீன மக்கள்தான் நம் தேவதைகள். கம்யூனிஸ்டுகளாகிய நாம் விடாப்பிடியாக உழைத்தால் மக்கள் எனும் தேவதைகளின் மனதைத் தொடுவோம். மக்கள் நம்முடன் இணைந்தால் அடுத்த கணமே இந்த மலைகளை நாம் தூக்கி எறிந்துவிட முடியும்” என்றார். அந்தச் சீனத்துப் புனைகதையை நிஜமாக்கியிருக்கிறான் ஒரு வீரக்கிழவன். 22 ஆண்டுகள் ஒற்றை மனிதனாக நின்று ஒரு மலைக்குன்றையே உடைத்து 60 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்குப் பாதை அமைத்துக் கொடுத்த தசரத் மான்ஜி என்ற மாவீரர் சென்ற ஆகஸ்டு மாதம் மறைந்து விட்டார். வாழ்ந்த காலம் வரை அந்த 74 வயதுக் கிழவனின் உழைப்புக்கு மதிப்பளிக்காத அரசாங்கம், அவருடைய உடலை மட்டும் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்திருக்கிறது. இது ஒரு மாமனிதனின் கதை. ஒரு மலையையும், அதனைக் கண்டு மலைத்து நின்ற மக்களின் மனத்தையும் தன்னந்தனியனாக நின்று வென்று காட்டிய ஒரு மாவீரனின் கதை. பீகாரின் கயா மாவட்டத்தின் கெலார் என்ற கிராமத்தைச் சேர்ந்த தசரத் மான்ஜி ஒரு நிலமில்லாத விவசாயக் கூலி. தாழ்த்தப்பட்ட சாதிகளில் ஆகக் கடைநிலைச் சாதியான முசாகர் சாதியில் பிறந்தவர். அறுவடைக்குப் பின் நிலத்தில் உள்ள எலி வளைகளைத் தோண்டி அதில் மிச்சமிருக்கும் தானியங்களைத் துழாவி எடுத்து வயிறு கழுவுவது அந்தச் சாதிக்கு விதிக்கப்பட்ட தொழில். அந்தத் தானியமும் கிடைக்காத காலங்களில் எலியும் பெருச்சாளியும்தான் அவர்களுடைய உணவு. 1959ஆம் ஆண்டில் ஒரு நாள். அப்போது தசரத்திற்கு வயது 24. கூலி வேலை செய்து கொண்டிருந்த அவருக்கு மலையின் மறுபுறத்திலிருந்து குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்த அவர் மனைவி பாகுனி தேவி மலையிலிருந்து இடறி விழுந்து படுகாயமடைந்தாள். மலையைச் சுற்றிக் கொண்டு மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்வதற்குள் உயிர் பிரிந்தாள். ஒரு பாதை மட்டும் இருந்திருந்தால்….? கோடிக்கணக்கான இந்தியக் கிராம மக்கள் நாள்தோறும் அனுபவித்து வரும் இந்தத் துயரம் தசரத் மான்ஜியின் நெஞ்சில் ஒரு தீக்கனலாய் உருமாறியது. அந்த மலைக்குன்றைப் பிளந்து, 25 அடி உயரம், 30 அடி அகலம், 360 அடி நீளத்திற்கு ஒரு பாதையை உருவாக்கும் வரை அந்தக் கனல் அவியவில்லை. தனி ஒருவனாக நின்று இத்தகைய சாதனையை நிகழ்த்திய வீரனை மனித குல வரலாறு இதுவரை கண்டதில்லை. “மலையை உடைக்கப் போகிறேன்” என்று கையில் உளியையும் சுத்தியலையும் எடுத்த தசரத்தை ‘வரலாறு படைக்க வந்த மாவீரன்’ என்று மக்கள் கொண்டாடவில்லை. ‘பைத்தியம்’ என்று அவரை அலட்சியப்படுத்தினார்கள் கிராமத்து மக்கள். கேலி செய்தார்கள் விடலைகள். அந்த மக்களுடைய கண்களைப் பாறை மறைத்தது. தசரத்தின் கண்ணிலோ பாறை தெரியவில்லை. அவர் உருவாக்க விரும்பிய பாதை மட்டும்தான் தெரிந்திருக்கிறது. மலை கரையத் தொடங்குவதைப் பார்க்கப் பார்க்க மக்களின் மனமும் மெல்லக் கரையத் தொடங்கியது. மக்கள் சோறு கொடுத்தார்கள், உளியும் சுத்தியலும் செய்து கொடுத்தார்கள். அந்தக் கிராமத்தின் பெண்களோ, மனைவி மீது கொண்ட காதலுக்காக மலையுடன் மோதத்துணிந்த இந்த ஆண்மகன் மீது மரியாதை கொண்டார்கள். 22 ஆண்டுகள் தவமிருந்து செதுக்கி, அந்தப் பாறைக்குள் இருந்து பாதையை வடித்தான் தசரத் என்ற அந்த மாபெரும் சிற்பி. இது ஒரு மன்னன் தன் காதலுக்காக ஆள் வைத்துக் கட்டி எழுப்பிய தாஜ்மகால் அல்ல. ஒரு அடிமை தன் சொந்தக் கரத்தால் வடித்த காதல் சின்னம். ஆனால் “இது என் மனைவிக்கான காதல் சின்னமில்லை” என்று மறுக்கிறார் மான்ஜி. “அன்று அவள் மீது கொண்ட காதல்தான் இந்தப் பணியில் என்னை இறக்கியது. இருப்பினும், ஆயிரக்கணக்கான என் மக்கள் கவலையின்றி இந்த மலையைக் கடந்து செல்வதைக் காணவேண்டும் என்ற ஆசை தான் அந்த 22 ஆண்டு காலமும் என்னை இயக்கியது” என்கிறார் மான்ஜி. அன்று 50 கி.மீ தூரம் சுற்றிக் கொண்டு நகரத்துக்குச் சென்று கொண்டிருந்த 60 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்று பத்தே கிலோமீட்டரில் நகரத்தை அடைகிறார்கள். அன்றாடம் 8 கி.மீ தூரம் பள்ளிக்கு நடந்த அக்கிராமத்தின் குழந்தைகள் மூன்றே கிலோ மீட்டரில் இன்று பள்ளியை அடைகிறார்கள். தேவதைகளின் கருணையையோ அரசின் தயவையோ எதிர்பார்க்காத அந்த மூடக்கிழவன் 1981 இலேயே மலையைக் குடைந்து பாதையை அமைத்துவிட்டான். எனினும் இப்படி ஒரு அதிசயத்தை அறிந்த பின்னரும், அந்தப் பாதை அமைக்கப்பட்டு 26 ஆண்டுகள் கடந்த பின்னரும் அதன்மீது ஒரு சாலை போடுவதற்கு இந்த அரசால் முடியவில்லை. தங்களிடம் அனுமதி பெறாமல் மலையைப் பிளந்திருப்பதால் அதில் சாலை அமைக்கக் கூடாதென்று அனுமதி மறுத்திருக்கிறது வனத்துறை. தசரத் மான்ஜியின் பெயர் பத்ம பூஷண் விருதுக்குச் சிபாரிசு செய்யப்பட்ட போது, “அவர் தனி ஆளாகத்தான் அந்த மலையைப் பிளந்தார் என்பதற்கு ஆதாரமில்லை” என்று கூறி முட்டுக்கட்டை போட்டிருக்கிறது பீகாரின் அதிகார வர்க்கம். 1981இல் இத்தகையதொரு மாபெரும் சாதனையை நிகழ்த்திய பின்னரும் கடந்த 26 ஆண்டுகளாகக் கூலி வேலை செய்துதான் வயிற்றைக் கழுவியிருக்கிறார் மான்ஜி. “இரவு பகலாக சாமி வந்தவரைப் போல அவர் இந்த மலையைக் கொத்திக் கொண்டிருப்பதைக் குழந்தைப் பருவத்திலிருந்தே பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள். 22 ஆண்டுகளாக எங்கே போயிருந்தது இந்த வனத்துறை?” என்று குமுறி வெடிக்கிறார்கள் கிராமத்து இளைஞர்கள். தசரத் மான்ஜியோ இவையெதையும் பொருட்படுத்தவில்லை. “நான் என்ன செய்தேன் என்பது மக்களுக்குத் தெரியும்.. இந்த அரசாங்கம் என்னை தண்டிக்க நினைத்தால் அதற்கு நான் அஞ்சவும் இல்லை. அவர்கள் விருது கொடுப்பார்கள் என்று நான் ஏங்கவும் இல்லை. என் உயிர் இருக்கும் வரை இந்தக் கிராமத்தின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவேன். அவ்வளவுதான்” அவரது உளியில் பட்டுத்தெறித்த பாறைத் துகள்களைப் போலவே, மிகவும் அலட்சியமாகத் தெறித்து விழுகின்றன சொற்கள். மான்ஜியின் உளி பட்டுத் தெறித்துப் பிளந்து கிடக்கும் அந்தக் கற்பாறை ஒரு நினைவுச்சின்னம். மரணத்துக்குப் பின்னும் அந்த மாவீரனை மதிக்கத் தவறிய இந்த அரசின் இரக்கமற்ற இதயத்துக்கு இது நினைவுச்சின்னம் அதில் எந்த ஐயமும் இல்லை. அதே நேரத்தில் 22 ஆண்டுகள் ஒரு மலையோடு தன்னந்தனியனாக ஒரு மனிதன் மோதிக்கொண்டிருக்க, அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இந்தச் சமூகத்தின் பாறையை விஞ்சும் ‘மன உறுதி’க்கும் இதுதான் நினைவுச்சின்னம். உணவும் தண்ணீரும், உளியும் சுத்தியலும் வழங்கினார்கள் மக்கள். உண்மைதான். ஆனால் அவற்றைத் தவிர வேறு எதையும் அந்தப் பாதையால் பயனடையப்போகும் மக்கள் அவருக்கு வழங்கியிருக்க முடியாதா? தசரத் மான்ஜியுடன் கைகோர்த்திருக்க முடியாதா? மலையைப் பிளந்து பாதையைத் திறந்து காட்டிய அந்தத் தருணம் வரை “இவன் மூடனல்ல வீரன்” என்னும் உண்மையை அந்த மக்களால் புரிந்து கொள்ள இயலவில்லையா? இந்தக் கேள்விகளுக்கு விடை காண எண்ணும்போது நெஞ்சம் நடுங்குகிறது. நூற்றாண்டுகளாய்ப் புதுப்பிக்கப்படும் அடிமைப் புத்தியும், சாதுரியமான விதிவாதமும், கபடம் கலந்த கருணையும் செயலின்மையில் பிறந்த இரக்கமும், அம்மணமான காரியவாதமும் சேர்ந்த கலவையால் உருவாக்கப்பட்டிருக்கிறது மக்களின் ‘புறக்கணிப்பு’ என்னும் பாறை. இந்தப் பாறையை உளியும் சுத்தியலும் கொண்டு பிளக்க முடியாது. கரைக்க மட்டுமே முடியும் என்ற உண்மையை உணர்ந்து வைத்திருந்த அந்த எளிய மனிதனின் அறிவை எண்ணும் போது வெட்கம் வருகிறது. மக்களின் புறக்கணிப்பு எனும் அந்தப் பாறையை நெஞ்சில் சுமந்தபடி, தன்னுடைய உளிச் சத்தத்திற்கு அந்த மலைத்தொடர் வழங்கிய எதிரொலியை மட்டுமே தன் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாய்ப் பருகி, உத்வேகம் பெற்று, 22 ஆண்டுகள் இயங்கியிருக்கிறார் தசரத் மான்ஜி. இந்த வீரத்தின் பரிமாணம் நம்மைப் பிரமிக்கச் செய்கிறது. சேர்ந்து ஒரு கை கொடுக்க தன் மக்கள் வரவில்லையே என்ற ஏக்கமின்றி, கசப்பு உணர்ச்சியின் சாயல் கடுகளவுமின்றி, நிபந்தனைகள் ஏதுமின்றி சாகும்வரை தன் மக்களை நேசித்திருக்கிறானே, அந்தக் காதல் நம்மைக் கண் கலங்கச் செய்கிறது. சீனத்துக் கிழவனைப் போல ‘என்றோ ஒரு நாள் இந்த மலை அகன்றே தீரும்’ என்று தன் நம்பிக்கையைக் கனவில் பிணைத்து வைக்கவில்லை தசரத் மான்ஜி. தான் வாழும் காலத்திலேயே கனவை நனவாக்கும் உறுதியோடுதான் உளியைப் பற்றியிருக்கிறது அவனுடைய கரம். உளியின் மீது இறங்கிய சுத்தியலின் ஒவ்வொரு அடியும் ‘இன்றே.. இன்றே’ என்று அந்த மலையின் மரணத்திற்கு நாள் குறித்திருக்கிறது. உணவுக்கும் ஓய்வுக்கும் உறக்கத்துக்கும் நேரம் ஒதுக்கி, ‘இத்தனை ஆண்டில் இந்தப் பணி முடிப்போம்’ என்று திட்டம் போட்டுச் செயலாற்றும் ‘திறமை’யெல்லாம் எலி பிடிக்கும் சாதியில் பிறந்த அந்த ஏழை மனிதனுக்கு இல்லை. “என்று வருமோ புரட்சி … இன்று எதற்கு இழக்கவேண்டும், இயன்றதைச் செய்வோம்” என்று சிந்திக்கும் படித்த வர்க்கத்தின் புத்திசாலித்தனத்தை எள்ளி நகையாடுகிறது எழுத்தறிவற்ற அந்தக் கிழவனின் மடமை. ‘இயலாததை’ச் செய்யத் துணிந்த அந்தக் கிழவனின் வீரம், இயன்றதைச் செய்ய எண்ணும் நம் சிந்தனைக்குள் பாசியாய்ப் படர்ந்திருக்கும் கோழைத்தனத்தைப் பிதுக்கி வெளிக்காட்டுகிறது. விவரக்கணைகளால் துளைக்க முடியாமல் நம்மில் இறுகியிருக்கும் எதிரிகளின் வலிமை குறித்த மலைப்பை, அந்தக் கிழவனின் கை உளி எழுப்பிய இசை, அநாயாசமாகத் துளைத்துச் செல்கிறது. மக்கள் மீது கொண்ட காதலில் தோய்ந்து தன் இளமையைக் கொண்டாடிய அந்தக் கிழவனின் வாழ்க்கை, நம் இளைஞர்களுக்குக் காதலைப் புதிதாய்க் கற்றுக் கொடுக்கிறது. ஒரு பாறை, ஒரு உளி, ஒரு சுத்தியல், ஒரு கிழவன் ஒரு வாழ்க்கை. பீகாரின் சுட்டெரிக்கும் வெயில், எலும்பைத் துளைக்கும் நள்ளிரவின் குளிர். அந்த உளியின் ஓசை, தொலைவில் ஒலிக்கும் அவலக் குரலாய் நம்மை ஈர்க்கிறது. நெருங்க நெருங்க கனத்துக் கவியும் சோக இசையாய் அழுத்துகிறது. அந்தக் கணமே ஒரு அறைகூவலாய் மாறி நம்மைச் செயலுக்கு இழுக்கிறது. தேவதைகளின் இதயத்தை இளக்கி, கருணையைப் பிழிந்தெடுத்த அந்தக் கிழவனின் ஆவி மெல்ல நம்மை ஆட்கொள்ளத் தொடங்குகிறது. – புதிய கலாச்சாரம், செப்டம்பர் – 2007 Facebook Twitter WhatsApp Load Comments Facebook Instagram Twitter Youtube முகப்பு அறிமுகம் மின் நூல்கள் (e-books) தொகுப்புகள் தொடர்புக்கு (contact us) வினவை ஆதரியுங்கள்! (Subscription) © This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License
முழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு பிரிட்டிஷால் உருவாக்கப்பட்ட கங்காணி பதவியே ஆளுநர் பதவி ! விவசாயிகள் போராட்டம் வெற்றி : சாதனையும் கற்றுக்கொள்ள வேண்டியவையும்! பருவநிலை மாற்றமும் – முதலாளித்துவ அரசுகளின் மாநாடும் ! மூழ்கியது சென்னை : அதிமுக கொள்ளைக் கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய் ! கருத்தாடல் முழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர் பெண்கள் முழுக் கால்ச்சட்டை (பேண்ட்) அணிந்த போராட்ட வரலாறு | சிந்துஜா பெண்ணின் உடல் அதிகாரம் செலுத்துவதற்கானதல்ல ! ஆடை அவமதிப்பதற்கானதல்ல ! பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறையும் நிறப் பாகுபாடும் ! ரோந்து போலீசு கையில் துப்பாக்கி வழங்கலாமா ? கருத்துக் கணிப்பு சமூகம் முழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு Money Heist : நம் எதிர்ப்புணர்வை மடைமாற்றும் வடிகால் ! கிராம தெய்வங்களைப் பற்றிய கதைப்பாடல்கள் || நா. வானமாமலை ஆங்கிலேயர் காலத்திய நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் || நா. வானமாமலை காந்தியைக் கொன்ற துப்பாக்கி யாருடையது? வீடியோ உழவர் படை ஒன்று நீ கட்டிடு ! || தருமபுரி மக்கள் அதிகாரம் பாடல்… கலை என்பது கலைக்காக அல்ல, மக்களுக்காக… | தோழர் கதிரவன் | வீடியோ என் வீட்டில் உப்பு இப்போது சிவப்பு நிறமாக தெரிகிறது … | தோழர் ஸ்ரீரசா… பறிபோகும் கூலித் தொழிலாளர்களின் உரிமைகள் | லஜபதிராய் | வீடியோ உப்பிட்டவரை ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி || பாகம் 1 || வீடியோ களம் முழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம் எழுவர் விடுதலை – இஸ்லாமிய கைதிகள் விடுதலைக்கு அநீதி இழைக்கும் திமுக அரசு ||… நவம்பர் 26 : விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் மக்கள் அதிகாரம் பங்கேற்பு! விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு பணிந்தது பாசிச மோடி அரசு || மக்கள் அதிகாரம் ஜம்புக்கல் மலையை மணல் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்போம் ! புதிய ஜனநாயகம் முழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார் இல்லம் தேடிவரும் கல்வி : கல்வியில் நடத்தப்படும் ‘கரசேவை’ ! உ.பி. லக்கிம்பூர் கேரி படுகொலை : காவி பாசிஸ்டுகளின் சதி ! வரியில்லா புகலிடங்கள் : முதலாளித்துவத்தின் கள்ளக் குழந்தை ! இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாகும் அசாம் ! இதர முழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா அமெரிக்கா ஜனநாயகத்தை தூக்கிப் பிடித்த போது … || கேலிச் சித்திரங்கள் விவசாயிகள் மீதான மோடியின் ஒடுக்குமுறையை உலகம் மறக்காது || கருத்துப்படங்கள் ! மாட்டுக்கு ஆம்புலன்ஸ் – மனிதனுக்கு குப்பை வண்டி : அரங்கேறும் இந்துராஷ்டிரம் || கருத்துப்படம் மோடி விவசாயிகளுக்கு புரியவைக்க முயற்சித்த போது… || கருத்துப்படம் சந்தா முகப்பு இது மாவோயிஸ்ட் புரட்சியல்ல;ஒடுக்கப்பட்ட மக்களின், ஏழைகளின் புரட்சி. Array இது மாவோயிஸ்ட் புரட்சியல்ல;ஒடுக்கப்பட்ட மக்களின், ஏழைகளின் புரட்சி. By vinavu - February 16, 2010 28 Facebook Twitter WhatsApp ஹிமான்ஷு குமார், இவர் ஒரு காந்தியவாதி. ஒரு சுதந்திரப் போராளியின் மகன். சட்டீஷ்கர் மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய தண்டிவாடா மாவட்டத்தில் ஆதிவாசி மக்களிடையே பணியாற்றிவருபவர். 17 ஆண்டுகளாக அயராத உழைப்பால் கட்டப்பட்டுவந்த வனவாசி சேத்னா ஆசிரம் என்ற அவரது அறநிலையம் ஜனநாயகக் கடமையின் [தேர்தல்] முடிவுகள் வெளியான மறுநாள் முடிவுக்கு வந்தது. 17.5.2009 அன்று 500 போலீசார் அரைமணி நேரத்தில் அதை இடித்துத் தரைமட்டமாக்கினர். இந்தப் பயங்கரப் புழுதிகளை எல்லாம் அலட்சியமாய் உதரிவிட்டு, தங்களுக்காகப் பேச வக்கில்லாத அந்த ஆதிவாசி மக்களுக்காகப் பேசுகிறார் ஹிமான்ஷு குமார். அந்த ஆதிவாசிகளின் கல்வி அறிவின்மைக்கும், அவர்களுக்கு உள்ள உரிமை பற்றிய அவர்களின் அறியாமைக்கும் எதிராக இதுநாள்வரை சலியாது போராடிய அவர், இன்று அரசு தம் மக்கள் மீதே தொடுத்திருக்கும் இன அழிப்புப் போருக்கு எதிராகக் களத்தில் நிற்கிறார். அக்டோபர் 31 அன்று மும்பையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் ஆற்றிய உரை இதோ… .. .. இன்றைய சடீஷ்கர் மாநிலத்தின் அடர்ந்த அந்த காடுகளில், மலைகளில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவர்கள் அந்த ஆதிவாசிகள். அவர்கள் சமூகத்தில் குற்றம் என்று ஏதுமில்லை. எனவே அவர்களுக்கு போலீசின் துணை என்றும் தேவைப்பட்டதில்லை. ஆனால் இன்று அவர்களைக் காப்பதற்காக என்று அரசு ஆயுதம் தாங்கிய படைகளை ஆயிரக்கணக்கில் அனுப்புகிறது. யாரிடமிருந்து காப்பதற்கு? தனது சொந்த பூமியிலேயே இராணுவத்தையும் வான்படையையும் அணிவகுக்கச் செய்யவேண்டியதன் அவசியம் அப்படி என்ன வந்தது? ஆனால் இது ஒன்றும் புதிய கதையல்ல. ஏற்கனவே [டாடா ஸ்டீல் கம்பெனியுடன் பஸ்தாரில் பத்தாயிரம் கோடி ரூபாய் சுரங்க நிறுவனம் அமைக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான மறுநாள் – ஜூன் 2005ல்] அந்த ஆதிவாசிகளை ஒழித்துக்கட்ட அரசு சல்வா ஜுடூம் என்ற கூலிப்படையை களமிறக்கியது. அவர்கள் அதற்கு ஒரு வழி கண்டார்கள். ஆதிவாசிகளை அவர்கள் கிராமங்களில் இருந்து அப்புறப்படுத்தி தெருவோரங்களில் காவல் நிலையத்தின் அருகே குடியமர்த்தினார்கள். காடுகளில் இருந்தால் இவர்கள் நக்சலைட்டுகளை ஆதரிப்பார்கள், அதனால்தான் காவல் நிலையத்தின் அருகே இந்த குடியமர்த்தம் என்று அதற்கொரு விளக்கமும் அளித்தார்கள். இந்த நடவடிக்கையைக் கண்டு ஆதிவாசிகள் அஞ்சினார்கள். தமது காடுகளையும், நிலங்களையும், ஆறுகளையும் விட்டுவிட்டு இந்தக் காவல் நிலையத்தின் அருகே ஏன் வரவேண்டும் என விழித்தார்கள். அதனால் மறுத்தார்கள். ஆதிவாசியினர் தம் கிராமங்களை விட்டு ஓடச் செய்வதற்காக மத்திய சேமக்காவல் படை, துணைராணுவத் துருப்புகள், போலீசு இவற்றுடன் சில தீய சக்திகளும் சேர்ந்துகொண்டு எல்லோருமாக அக்கிராமங்களைத் தாக்கினார்கள். பிடிபட்டவர்களை முகாமுக்கு ஓட்டிவந்தார்கள். குப்பைமேட்டை ஒத்த பகுதியில் அமைந்த முகாம்களில் 50000 ஆதிவாசிகளை பலாத்காரமாய்த் திணித்தார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாய் இயற்கைச் சூழலில் குடிலமைத்து வாழ்ந்த ஆதிவாசிகளை அரசு தகரக் கொட்டகையில் கறிக்கோழிகளைப்போல் அடைத்தது. இக்கொடுமையை விடாப்பிடியாக எதிர்த்து நின்ற ஆதிவாசிகளோ சுட்டுக் கொல்லப்பட்டனர், பெண்கள் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டனர், சிறுபிள்ளைகளும் கொலை செய்யப்பட்டனர். இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். நக்சலிசம் பரவாமல் தடுப்பது என்ற பெயரில் பலர் ஒட்டுமொத்தமாகக் கொன்றொழிக்கப்பட்டனர். அடைக்கப்பட்ட 50000 ஆதிவாசிகளும் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமை சகியாது அண்டை மாநிலங்களான ஆந்திரா, ஒரிசா, மகாராட்டிரத்துக்குத் தப்பி ஓடினர். அரசுக்கு ஆதரவாய் இருப்பவர்கள் சல்வா ஜுடூம் முகாம்களில் உள்ளனர்; ஏனையோர் எல்லாம் நக்சலைட்டுகளின் பக்கமிருப்பவர்கள்; அவர்கள் காடுகளில் ஒளிந்திருக்கிறார்கள் என தொலைக்காட்சி, வானொலி மூலம் அறிவித்தார் அம் மாநில முதல்வர். ஒரு மாநில முதல்வர், காடுகளில் தங்கள் சொந்த நிலத்தில் வாழ்பவர்களை எல்லாம் நக்சலைட்டுகள் என முத்திரை குத்துவது வியப்பாக இருக்கிறது. அவர்களை எல்லாம் ஒட்டுமொத்தமாய்க் கொன்றொழிக்கும் முடிவையும் அறிவித்துவிடுவீரோ என்று அவரைக் கேட்டேன். அஞ்சியபடி அவர் அவ்வாறே செய்துவிட்டார். சிந்திக்க முடியாத அட்டூழியங்கள் எல்லாம் அரங்கேறின. ஒரே கிராமம் 20 முறை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. வேட்டை முடிந்தது என்று கருதி காடுகளில் பதுங்கிய மக்கள் கிராமம் திரும்புவர், வீடுகளை சீர்செய்து நிலங்களைப் பண்படுத்தி பயிர் செய்யத் தொடங்குவர். மீண்டும் பாதுகாப்புப் படை வரும், பயிர்நிலங்களை எரிக்கும். இப்படி இது ஒரு முடிவிலா சுழற்சியாகிவிட்டது. தொடரும் இந்த கொள்ளை, கற்பழிப்பு, கொலைகளால் வெருப்புற்ற ஆதிவாசிகள் தங்கள் பிள்ளைகளைக் காவலிருக்கப் பணித்தனர். அப்பிள்ளைகளும் தங்கள் தடிக்கம்பு, வில், அம்புகளுடன் கிராமத்தைக் காவல் காத்தனர். படைகள் தாக்க வருவதை முன்னறிந்து பெண்கள், முதியோரைப் பாதுகாப்பாய்க் காட்டுக்குள் பதுங்க வழிசெய்வதே அவர்களின் நோக்கமாய் இருந்தது. அவர்கள் தங்கள் தானியங்களை காடுகளில், பாறைகளுக்கு அடியில் பத்திரப்படுத்த வேண்டியிருந்தது. ஏனெனில் படைகள் வந்தால் அவற்றை எரித்து அழித்துவிடுவது வழக்கம். தங்கள் குக்கிராமங்களைக் காவல்காக்கும் இந்த சிறுவர் சிறுமியரைத்தான் அரசுக்கு எதிராய் ஆயுதம் தாங்கியிருக்கும் மாவோயிஸ்டுகள் என்கிறார் சிதம்பரம். ஆகவே, இந்த மாவோயிஸ்டுகளைக் கொன்றொழிக்கத்தான் இந்திய ராணுவத்தை ஏவுகிறார்கள் அவர்கள். உங்களோடு சண்டையிட இந்த ’நக்சலைட்டுகள்’ உங்கள் தில்லிக்கு வரவில்லை, உங்களைப்பற்றி அவர்களுக்கு ஒரு பொருட்டும் இல்லை என்று இந்த அரசியல்வாதிகளுக்கு நாங்கள் சொல்கிறோம். அவர்கள் ஆதிவாசிகள், காடுகளில் வாழ்பவர்கள். நக்சலைட்டுகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றச் சொல்லி அவர்கள் உங்களை என்றைக்குமே கேட்டதில்லை. ஆக, நீங்கள் அனுப்பும் இந்தப் படைகள் யாரைப் பாதுகாப்பதற்காக? உண்மையில், அரசு ஏன் இந்தப் படைகளை ஆதிவாசிகள் மேல் ஏவுகிறது? கனிவளம் நிறைந்த அந்தக் காடுகளைக் காலிசெய்து கொழுத்த தொழிலதிபர்களிடம் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே. அதற்காகத்தான் இந்த ஆயுதப் படைகள் அங்கே ஏராளமாய் குவிக்கப்படுகின்றன. இப்போது இந்த அரசாங்கம் சொல்கிறது, அதற்கு அமைதி வேண்டுமாம். நித்தமும் அந்த ஆதிவாசிகளை உங்கள் படை வதைக்கிறது, நீங்கள் அமைதியைப் பற்றிப் பேசுகிறீர்கள். நீங்கள் அமைதி வேண்டுவது உண்மையானால், உங்கள் படைகளை ஏன் திரும்பப் பெறக் கூடாது? அரசாங்கம் பேசத் தயாராய் இருக்கிறதாம், இன்று காலை அறிவிப்பு வருகிறது. நக்சலைட்டுகளிடம் எனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி வன்முறையைக் கைவிடும்படி நான் அவர்களைக் கோரவேண்டுமாம். ஆனால் நீங்கள் அல்லவா அம்மக்களின் வாழ்விடங்களைத் தொடர்ச்சியாய்த் தாக்குகிறீர்கள். நீங்கள் அல்லவா வன்முறையைக் கையாள்கிறீர்கள். எனவே உங்கள் வன்முறைப் பாதையைக் கைவிடுங்கள் என்று நான் உங்களை வலியுறுத்துகிறேன். நீங்கள் அங்கு பிரயோகிக்கும் படைக்கு தினமும் மதுவும் மாமிசமும் பெண்களும் தேவைப்படுகிறது. அதற்காக அவர்கள் தினந்தோறும் அந்தக் கிராமங்களைத் தாக்குகிறார்கள். மக்கள் அதைத் தடுத்தால் அவர்களை நக்சலைட்டுகள் என்கிறீர்கள். வன்முறையிலிருந்து அந்த ஆதிவாசிகளைக் காப்பாற்றுங்கள் என்று என்னிடமும் கூறுகிறீர்கள். ஆனால், இந்த அரசுதான் வன்முறையாளனாய் இருக்கிறது. 700 கிராமங்கள் தாக்கப்பட்டு எரித்து சாம்பலாக்கப்பட்டன. ஆதிவாசிகளை மீள்குடியமர்த்தவும், எரிக்கப்பட்ட வீடுகளின் உடைமையாளருக்கு நட்டஈடு தரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அரசு அவர்களை மீள் குடியமர்த்தவோ, ஒரு நபருக்குக் கூட நட்டஈடு தரவோ இல்லை. ஆகவே, நாங்கள் ஒரு சிறு முயற்சியில் இறங்கினோம். நாங்கள் அவர்களை மீள் குடியமர்த்தம் செய்கிறோம் என்று சொன்னோம், செய்தோம். ஆதிவாசிகள் திரும்ப வந்தனர், வாழ்வை, விவசாயத்தைத் தொடங்கினர். அங்கே வன்முறை இல்லை. போலீசு அந்த கிராமங்களை வளைய வந்தது, இருந்தும் அசம்பாவிதம் ஏதுமில்லை. ஆனால் இன்றோ, அந்த அமைதியான கிராமங்களை போலீசு மீண்டும் தாக்கத் தொடங்கியிருக்கிறது. உண்மை என்னவென்றால் அந்த ஆதிவாசிகள் அவர்கள் கிராமங்களில் நிலைகொள்வதை அரசு விரும்பவில்லை. அவர்களை அங்கிருந்து பிடுங்கி எரிய விரும்புகிறது. மக்கள் தங்கள் இடத்தையும் இல்லத்தையும் விட்டுத் தலைதெரிக்க ஓடச்செய்ய விரும்புகிறது. காலிசெய்த நிலத்தைத் தொழிலதிபர்களுக்குக் கையளிக்க விரும்புகிறது. உண்மையில் நீங்கள் அமைதியை விரும்புகிறீர்களா? அப்படி என்றால் அது ஒரே ஒருவாரத்திய முயற்சியில் அடையக் கூடியதே. வன்முறையை நம்பும் நக்சலைட்டுகளுடன் எப்படிப் பேசுவது என்று அவர்கள் கேட்டார்கள். நக்சலைட்டுகளுடன் பேசவேண்டாம், உங்கள் மக்களுடன் பேசுங்கள். தண்டிவாடாவுக்கு வாருங்கள். அவர்கள் மேல் இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றி அவர்களிடம் கேளுங்கள் என்று நாங்கள் பதிலளித்தோம். நீங்கள் சல்வா ஜுடூம் நடவடிக்கையைத் தொடங்கியது முதல் 700 கிராமங்கள் சுடுகாடாக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் நீங்கள் ஒருவரும் வந்து அதுபற்றி விசாரித்து அறியவில்லை. குழந்தைகள் தாக்கப்பட்டார்கள், இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள் .. கேட்க நாதியில்லை. நீங்கள் அங்கு போக வேண்டியதுதானே, உங்களை யார் தடுத்தது? இந்த நாட்டின் பிரதமர் அங்கு போகட்டும். நக்சலைட்டுகளுடன் அவர் பேசவேண்டாம். அவரது சொந்த குடிமக்களிடம் பேசட்டுமே.. முடியாதா? ஏன் அவர்கள் அதைச் செய்யவில்லை? ஏனென்றால் இந்த பிரச்சினை தீர்க்கப்படுவதை அரசு விரும்பவில்லை. ஏனென்றால், அவர்கள் அம்மக்களின் நிலங்களைத் திருட விரும்புகிறார்கள். மேலும், தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ள மறுக்கும் அளவுக்குத் தலைக்கனம் ஏறியிருக்கிறது அவர்களுக்கு. கற்பழிப்பா.. கொலையா, எதையும் ஒப்புக்கொள்ள அவர்கள் தயாரில்லை. ஆனால், அவர்கள் அங்கு செல்ல நேர்ந்தால், அவர்கள் செயல் இன்னதென்று மக்கள் சொல்லுவார்கள். அவர்கள் படைகளல்லவா இதைச் செய்திருக்கிறார்கள்.. ஏற்க மனம் வராது, அவர்களுக்கு. கொலைகள், கற்பழிப்புகள், எரிப்புகள், ஆள் கடத்தல்கள் என ஆயிரம் புகார்களுக்கு மேல் நாங்கள் அளித்திருக்கிறோம். ஆனால் ஒற்றை முதல் தகவல் அறிக்கைகூடப் பதியப்படவில்லை. கிராம மக்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தும் புளுகுமூட்டைகளாக இருப்பதால் மு.த.அ பதியவில்லை என போலீசு உச்ச நீதிமன்றத்துக்கு எழுதுகிறது. மு.த.அ. சரியா, தவறா என்று போலீசு முடிவு செய்ய முடியாது, பதிவதும், ஆய்வதும் அவர்கள் கடமை என்கிறது இந்த நாட்டின் சட்டம். ஆனாலும் சட்டத்தின் காவலர்கள் முதல் தகவல் அறிக்கையைப் பதியவும் மறுக்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம் நடந்த சம்பவத்தில் 19 ஆதிவாசிகள் சுற்றிவளைக்கப்பட்டனர். அவர்களில் நான்கு பெண்களும் அடங்குவர். அப்பெண்கள் கற்பழிக்கப்பட்டு கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டனர். ஏனையோர் சுட்டுத் தள்ளப்பட்டனர். நாங்கள் அவ்வழக்கை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றோம். விசாரிக்க அவர்களுக்குத் தேதி கிடைக்கவில்லை. வாய்தா மேல் வாய்தா, அடுத்தடுத்து நீதிபதிகள் மாற்றம். அந்த ஏழை மக்கள் நியாயம் பெறுவதற்கான வழிகள் அனைத்தையும் அடைத்துவிட்டீர்கள். நீதிமன்றத்துக்குப் போனால் உங்கள் நீதி அவர்களை ஏரெடுத்தும் பாராது; போலீசிடம் போனால் அவர்கள் மீது குண்டாந்தடிகள் பேசும். கங்கிரஸ், பி.ஜே.பி. என்ற பேதமில்லாது எல்லா அரசியல் கட்சித் தலைமைகளும் போக்கிடமற்ற அம்மக்கள் மீது அமைதிப் படையை – சல்வா ஜுடூம்- ஏற்றிச் செல்கிறார்கள். நக்சலைட்டுகளிடம் செல்வது தவிர்த்த வேறு எந்த வழியை அவர்களுக்கு விட்டுவைத்திருக்கிறீர்கள்? இன்றைய தண்டிவாடாவின் நிலை என்ன? போலீசு அம்மக்களைத் தாக்குகிறது, நக்சலைட்டுகள் காப்பாற்றுகிறார்கள். இந்நிலையில், நீங்கள் அரசாங்கம் அல்லவா, மக்களைக் காப்பது உங்கள் வேலையல்லவா, தயவுசெய்து இவ்வாறு செய்யாதீர்கள், மக்களைத் தாக்காதீர்கள் என்று நாங்கள் சொல்கிறோம். நக்சலைட்டுகள் மோசமானவர்கள் என்று, நீங்கள் சொல்கிறீர்கள். இருக்கட்டுமே, அவர்களல்லவா ஆதிவாசிகளைக் காப்பாற்றுகிறார்கள். மூன்று தினங்களுக்கு முன் நான் ஒரு பெரிய அரசியல்வாதியை சந்தித்தேன். நக்சலைட்டுகள் என்றால் அவருக்கு பயம். ஏன் பயப்படுகிறீர்கள், நீங்கள் ஒரு ஜனநாயக நாட்டின் தலைவர் அல்லவா, என்று கேட்டேன். ஒரு ஜனநாயக நாட்டின் அரிச்சுவடியே நீங்கள் மக்களை நேசியுங்கள், அவர்கள் உங்கள் மீது நேசமாய் இருப்பர் என்பதுதானே. ஏன் பயப்படுகிறீர்கள். ஏனென்றால் மக்கள் இனியும் உங்களை நேசிக்கப் போவதில்லை, மாறாக, அவர்கள் நக்சலைட்டுகளை நேசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஏனிந்த தலைகீழ் மாற்றம்? உங்கள் மீதான அவர்களது வெறுப்பின் காரணத்தைக் களையுங்கள், அவர்களிடம் செல்லுங்கள், அவர்களை நேசியுங்கள். அவர்களும் உங்களை நேசிப்பர். ஆனால், நீங்களோ படைகளை அனுப்புகிறீர்கள். வர்க்கப் போராட்டம் பற்றி நெடுநாட்களாகவே நக்சலைட்டுகள் மக்களிடம் கூறிவருகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒருநாள், ஒரு கிராமத்தைக் கடந்து நான் சென்றுகொண்டிருந்தேன். அப்போது மரத்தடியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த ஒரு முதியவர் என்னை அழைத்தார். ”ஒரு பெரிய சண்டை நடக்கப்போகுதுல்ல.., நடக்கும்தானே?” என்று கேட்டார். அவர் அந்தப் போருக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறார். எனவேதான் இந்த அரசாங்கத்திடம் போர்தொடுக்காதீர்கள் என்று சொன்னேன். ஒரு போர் தொடங்கப்படுவதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். நீங்கள் ஒரு போரில் இறங்கினீர்களாயின், ஒரு 50 ஆண்டுகளுக்கு நீங்கள் அதிலிருந்து மீள முடியாது. அவர்கள் ஆதிவாசிகள். நாங்கள் அவர்களை அறிவோம். பார்ப்பதற்கு அவர்கள் சாமானியர்கள் தான். ஆனால், ஆயுதங்களை இறுகப்பற்றி மாமலையாய் வெகுண்டெழுந்து நிற்பார்கள். இந்த ஆதிவாசிகளைப் பற்றி உங்களுக்குத் தெரியாது, அவர்கள் [என்னைப்போல] உ.பி. காரர்கள் அல்ல. வேட்டைக்காரர்கள், கட்டிவைத்து உரித்துவிடுவார்கள். படுகுழியில் சிக்கிவிடுவீர்கள், உங்கள் படைகள் பெருத்த இழப்பை சந்திக்க நேரும். கடந்த ஐந்தாண்டுகளில் சட்டீஷ்கரில் உங்கள் ஆயுதப்படைகளின் இழப்பு பாரதூரமானது. எனவே இந்த ராணுவத் தலையீட்டை செய்யாதீர்கள் என்று சொல்கிறேன். காட்டு வேட்டைக்கு சென்ற உங்கள் கோப்ராக்கள் ஒரு நக்சலைட்டைக்கூட வேட்டையாட முடியவில்லை. கணப்பொழுதில் ஆறு கோப்ராக்களை இழந்ததுதான் மிச்சம். இரண்டு நாட்களுக்கு அவர்களது பிரேதங்களைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், வெருப்புற்றுத் திரும்பியவர்கள் வெறித்தனமாய்க் கொன்றதோ, கிழவர், கிழவிகளையும், குழந்தைகளையும் தான். நாம் ஒரு சமூக அமைப்பின் அங்கம் என்ற முறையில் அதனையும் அதன் உட்கிடையான வன்முறையையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். உலகெங்கும் காணப்படும் வளங்கள் அனைத்தும் யாருக்குச் சொந்தம்? நல்லது, இது நம் அனைவருக்கும் பொதுவானது. உண்மையில் ஈ, எறும்பென இப்புவியில் வாழும் எல்லா ஜீவராசிகளுக்கும் கூட அது சொந்தமானது. அவற்றுக்கும் இதில் உரிமை இருக்கிறது, இல்லையா? ஆனால், மனிதர்களாய் இருக்கும் நாமோ, நாம் தான் தலைசிறந்தவர்கள் எனக் கருதுகிறோம். நமக்கே இப்புவியில் வளங்கள் அனைத்தும் சொந்தமென நினைக்கிறோம். இது எல்லோருக்கும் பொது என்கிறது இயற்கையின் விதி. ஆனால் நடப்பில் அது அவ்வாறு இல்லை. யாருக்கு எந்த அளவுக்கு இது உடைமை என்பதை எவ்வாறு தீர்மானிப்பது? ஆனால், நாம் தீர்மானித்துவிட்டோம்.. நாம் வாழும் இந்த சமூகம் ஏற்கனவே இதைத் தீர்மானித்துவிட்டது. அதற்கான முன்னுரிமைச் சட்டங்களும் எழுதப்பட்டுவிட்டன. நாங்கள் படித்தவர்கள் அதனால் எங்களுக்குக் கூடுதல் பங்கு; நீ கைநாட்டு அதனால் உனக்குக் குறைவான பங்கு. நான் மேல் சாதிக் காரன். எனவே எனக்குக் கூடுதல் பங்கு; கீழ்சாதிப் பயல்களுக்குக் குறைவான பங்கு. நான் நகரவாசி. எனவே எனக்குக் கூடுதல் பங்கு, நீ ஒரு கிராமத்தான், உனக்குக் குறைவான பங்கு. இப்படி இந்த அசமத்துவம் நமது அங்கீகாரத்தைப் பெற்று நமது சமூக மதிப்பீடுகளிலும் இடம்பிடித்துவிட்டது. இவ்வாறு ஆனபின், அரசியல் அமைப்பும் கூட இதைச் சார்ந்தே செயல்படத் தொடங்கியது. இந்த அசமத்துவத்தைக் கெட்டிக்க வேண்டியே சட்டங்களும் இயற்றப்பட்டன. இவ்வாறாக, முதலில் சமூக அமைப்பு, தொடர்ந்து அதற்கான அரசியல் அமைப்பு, பின் அதற்குத் துணைசெய்ய ஒரு பொருளியல் அமைப்பு. இம்மூன்றும் சேர்ந்து ஒரு சமூகக் கட்டமைவாய் உருப்பெற, பணக்காரனை பணக்காரனாகவும், ஏழையை என்றும் ஏழையாகவும் பராமரிக்கும் இந்த சமூக அமைப்பில் நாமும் ஓர் அங்கமானோம். நமக்கு இந்த சமூக அமைப்பில் பிரச்சினை ஏதுமில்லை. ஏனென்றால் நமக்கு வயிறுமுட்ட உணவும், உடைகளும், வீடும், வண்டி வாகனங்களும், நம் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பும் தடையின்றிக் கிடைக்கிறது. எனவே நாம் இந்த சமூக அமைப்பில் நிறைவுகொள்கிறோம். இதை உடைக்கவோ, மாற்றவோ நமக்கு மனமில்லை. ஆனால், இந்த சமூகக் கட்டமைவால் ஒடுக்கப்பட்ட மக்கள், நமது கொழுத்த வாழ்க்கையால் அழுத்தப்பட்ட மக்கள், அன்றாடம் தாக்கப்படும் ஆதிவாசிகள், நித்தம் பட்டினியால் செத்துப் பிழைப்பவர்கள்.. இவர்கள் இந்த சமூகக் கட்டமைவை எதிர்க்கிறார்கள். இதைத் தகர்த்தெறிய விரும்புகிறார்கள். அதற்கான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். ஆகவே, நினைவில் கொள்ளுங்கள், இது மாவோயிஸ்டு புரட்சியல்ல, இவ்வமைப்பால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஏழைகளின், ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சி. சற்று யோசியுங்கள், ஒருக்கால் நீங்கள் அந்தக் கடைகோடி மக்களில் ஒருவராய் இருந்தீர்களானால், கொலை, கற்பழிப்பு, ஒடுக்குமுறைகள் உங்கள் மீது ஏவப்பட்ட வண்ணம் இருக்குமானால் நீங்களும் இத்தகையதொரு புரட்சியை செய்யமாட்டீர்களா? இச்சூழலில் மாவோயிஸ்டுகள் அல்லது நக்சலைட்டுகள் எனப்படுவோரின் இருத்தல் ஒரு தற்செயல் நிகழ்வு மட்டுமே. நக்சலைட் என்ற பெயரில் இல்லையானால் அவன் இன்னொரு பெயரின் கீழ்ப் போராடியிருப்பான். இவ்வுலகில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும்வரை போராட்டம் தவிர்க்க முடியாதது. திரு. மாவோ அவர்கள் ஒருக்கால் பிறக்கவில்லை என்றால் அந்த ஏழை மக்கள் தமது ஏழ்மை நிலைக்கு எதிராகப் போராடியிருக்க மாட்டார்களா? தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருக்க மாட்டார்களா? அதுபோல் காந்தி இல்லையென்றால் அவர்கள் போராடியிருக்க மாட்டார்களா? இல்லை, போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். அந்த ஏழைகளுக்கு ஒரு தலைமையோ, ஒரு அமைப்போ, அல்லது வேறு எதுவோ, எதுவும் முக்கியமில்லை. அவன் போராடுவான், போராடிக்கொண்டிருக்கிறான். சில நேரங்களில் அவனை ஆதரிப்பவர் காந்தியாக இருக்கிறார், சில நேரங்களில் வினோபாவாக சில நேரங்களில் மாவோயிஸ்டுகளாக இருக்கிறார்கள். தன்னை ஆதரிப்பவர்களை அந்த ஏழை ஏற்றுக்கொள்கிறான். இதுகாரும் வீழ்த்தப்பட்டதுபோலவே, சிலநேரங்களில் அவன் வீழ்த்தப்படுகிறான். ஆனால், இந்த மூர்க்கமான சமூகக் கட்டமைவை எதிர்த்த அவனது போராட்டம் மட்டும் ஓய்வதில்லை. இந்த ஏழைகளின் போராட்டத்தை போலீசையும் இராணுவத்தையும் வைத்து ஒடுக்கிவிடலாம் எனத் தவறாக நினைக்கிறார் திரு. சிதம்பரம். மாறாக, ஒடுக்குமுறை போராடுவோரின் உளத் திண்மையை வலுப்படுத்தவும், போராட்டத்தை நீட்டிக்கவும் மட்டுமே செய்யும். எனவே பலாத்காரத்தால் இதை ஒழித்துவிடலாம் என நீங்கள் நினைப்பது மாபெரும் தவறு. அங்கு அமைதி நிலவவேண்டும் என நீங்கள் விரும்பினால், இந்த போர் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என நீங்கள் விரும்பினால், அங்கே செல்லுங்கள், அந்த பழங்குடியினரின் மகிழ்ச்சியைக் கூட்ட ஏதாவது செய்யுங்கள். அவர்களது பள்ளியை இழுத்து மூடினீர்கள், அங்கன்வாடியை, சுகாதார நிலையத்தை, ரேஷன் கடையை, இன்னும் அவர்கள் சந்தைகளை எல்லாம் தடைசெய்தீர்கள்.. போய் எல்லாவற்றையும் திறவுங்கள். போர் சற்று ஓயும், என்று நாங்கள் அவர்களிடம் கூறினோம். இதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அம்மக்களை வதைப்போம், கொலை செய்வோம். அதன்மூலம் இந்தப் போரை முடிப்போம் என்று அவர்கள் நம்புகிறார்கள். தீயைக் கம்பளத்தால் மூடினால், கம்பளம்தான் எரிந்து பாழாகும். காட்டுவேட்டை என்ற பெயரில், பாதுகாப்புப்படை ஒரு வீட்டில் நுழைந்து ஒரு முதியவரையும் அவர் மனைவியையும், மகனையும், 15 வயது மகளையும் குத்திக் கொன்றது. அங்கு ஒரு சண்டை இல்லை, யாரும் ஓடவும் இல்லை. ஆனாலும் போலீசும், கோப்ராக்களும் அவர்களைக் கொன்றனர். இரண்டு வயது குழந்தையைக் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. துப்பாக்கியின் அடிக்கட்டையால் இடித்து அதன் பல்லை உடைத்தார்கள், நாக்கை அறுத்தார்கள், பின் அதன் பிஞ்சு விரல்களை வெட்டி எரிந்தார்கள். கொல்லப்படுவதற்கு முன் அந்த மூதாட்டியின் மார்பகங்கள் அவர்களால் அறுத்தெரியப்பட்டன. அவர்கள் மாவோயிஸ்டுகளுடன் போராடிக்கொண்டிருக்கிறார்களாம், அரசு சொல்கிறது. உங்களுக்கு வெறி தலைக்கேறிவிட்டதா? இதைத்தான் மாவோயிஸ்டுகள் உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் இதை எந்த அளவுக்கு செய்கிறீர்களோ அந்த அளவுக்கு அவர்கள் பலம் பெருகும். நீங்கள் இங்கு இருப்பது அவர்கள் பலத்தை அதிகரிக்கவா? அரசு மிருகத்தனமாக நடப்பதாக அங்குள்ள மக்கள் சொல்கிறார்கள். நீங்கள் அவர்களை நேசியுங்கள், அவர்கள் உங்கள் பக்கம் வருவார்கள். ஆனால், நீங்கள் செயல்படும் விதம் அவர்களை மாவோயிஸ்டுகள் பக்கம் செல்ல வைக்கிறது. அவர்கள் பலத்தை நீங்கள் கூட்டுகிறீர்கள். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக நிலத்தை காலிசெய்து கொடுக்கும் நடவடிக்கை இங்கு, சட்டீஷ்கரில் மட்டும் நடக்கவில்லை, உலகெங்கும் இதே கதைதான் என்று உணர்கிறேன். இந்த பூமியின் வளங்கள் எல்லாம் வேண்டாத இந்த ஏழை மக்களால் விரயமாகிறது; எனவே பொருளாதாரத்துக்கு சுமையாய் இருக்கும் இவர்களை ஒழிக்க வேண்டியதுதான் என்று உலகத்து பணக்காரர்கள் முடிவு செய்துவிட்டதாய்த் தெரிகிறது. ஆகவே, ஆகப்பலவீனமான ஆதிவாசிகள் முதலில் துடைத்தெறியவேண்டியவர்கள் ஆகியிருக்கிறார்கள். இது ஒரு இனப்படுகொலை. மொத்த சமூகமும் கொன்றொழிக்கப்பட இருக்கிறது. அடுத்த இடி தலித்துகளின் தலையில் விழும், அடுத்தது சிறுபான்மையினர் மீது. இந்த நவநாகரீக உலகம் பலகீனமானவர்களை அழித்தொழிக்கும், சக்திவாய்ந்த சிலரே இறுதியில் எஞ்சுவார்கள், அவர்கள் மொத்த உலகையும் தின்று தீர்ப்பார்கள். இந்த இலக்கை நோக்கித்தான் அவர்கள் பயணப்பட்டிருக்கிறார்கள். வலுத்தவன் எளியோரைக் கொன்றொழிக்கும் இச்செயலை, இதுதான் “சமூக டார்வினிசம்” என்று அவர்கள் இயல்பாய்க் கூறக்கூடும். இதுதான் நாம் வாழுகின்ற உலகம், நாம் காண்கின்ற கொடுமை. இப்போது சொல்லுங்கள் இச்செயலை நீங்கள் ஆதரிக்கப் போகிறீர்களா? இந்த மிருகத்தனமான முயற்சியைத்தான் இவர்கள் பஸ்தாரில் தொடங்கியிருக்கிறார்கள். நீங்கள் இதைத் தடுக்க விரும்பினால், வாருங்கள் என்னுடன். கண்ணெடுத்துப் பாருங்கள் பஸ்தாரின் கொடுமையை. எழுப்புங்கள் உங்கள் எதிர்ப்புக் குரலை. நீங்கள் அந்த ஆதிவாசிகளின் பக்கம் நில்லுங்கள். இங்கும் சரி, வேறு எங்கும் சரி, அந்த ஏழை மக்களைக் கொல்ல விடமாட்டோம் என்று அரசை நோக்கி முழங்குங்கள். வெளியார் அனைவரையுமே ஆதிவாசிகள் தங்கள் எதிரியாய்க் கருதும் அளவுக்கு பஸ்தாரின் நிலை இன்று படுமோசமாகி இருக்கிறது. சொந்த நாட்டின் சக மனிதனையே பகையாய்க் காணும் அளவுக்கு என்ன பயங்கரமான நிலைமை இது. இந்த நிலை நமது ஜனநாயகத்துக்கு மிகப்பெரும் அபாயமாக உங்களுக்குத் தோன்றவில்லையா? அந்த லட்சக்கணக்கான மக்களை கொன்றொழித்துவிட முடியும் என இந்த அரசு நினைகிறதே .. முடியுமா? நீங்கள் அவர்களைக் கொல்ல முயற்சிப்பீர்கள். பின்னர் அவர்கள் உங்களுக்குப் பதிலடி கொடுக்கத் தொடங்குவார்கள். இவ்வுலகில் மூன்று வகையான ஏழைமக்கள் இருப்பது பற்றி முன்னர் நான் பேசிக்கொண்டிருந்தேன். சிறு வர்த்தகர்கள், தெருக்கூட்டுபவர்கள், உங்கள் வீட்டு வேலைக்காரர்கள் போன்று உங்களுக்கு சேவை செய்பவர்கள் ஒரு வகை. இவர்கள் உங்கள் தாராள மனத்தால் சற்று ஆதாயம் அடைபவர்கள். உங்களின் முன் கைகட்டி வாழ்கிறார்கள். ஏனெனில், பணக்காரர்கள் கிள்ளி இறைக்கும் தர்மங்களில் தாங்களும் காலம் தள்ளிவிட முடியும் என நினைக்கிறார்கள். எனவே, இவர்கள் உங்களுடன் சண்டை செய்வதில்லை. தாங்கள் பணக்காரர்கள் ஆகத் தகுதியற்றவர்கள் என்று நம்புகிறவர்கள் இரண்டாவது வகையினர். இவர்கள் படிப்பறிவற்றவர்கள், விவசாயிகள். தமது ஏழ்மையோடு சமரசம் செய்துகொண்டு வாழப் பழகிவிட்டதால் இவர்கள் உங்களைத் தீண்டமாட்டார்கள். மூன்றாவது வகையினர் காடுகளில் வாழும் ஏழை ஆதிவாசி மக்கள். உங்களிடம் அவர்கள் எதையும் எதிர்பார்த்ததில்லை, உங்களைப் பொருட்படுத்தியதும் இல்லை. இருப்பினும் பணத்தாசையால் உந்தப்பட்டு வலிந்து சென்று அவர்களைத் தாக்குகிறீர்கள். அதனால், சில இளைஞர்கள் அவர்களுடன் இணைந்து உங்களைத் திருப்பித் தாக்குகிறார்கள். இன்று அவர்கள் ஆயுதங்களைக் கையிலெடுத்துப் பீடுநடை போட்டு வருகிறார்கள். ஏனைய இருவகை ஏழைகளும் அவர்களோடு இணைந்தார்களாயின் இந்த சமூக அமைப்பையே அவர்கள் புரட்டிப் போடுவார்கள். எனவே, இந்த சமூகத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பது உங்கள் விருப்பமானால், உங்கள் இராணுவம்தான் பஸ்தாரில் வன்முறை வித்துக்களை விதைக்கிறார்கள் என்பதை முதலில் உணருங்கள். அவர்கள் சல்வா ஜுடூமைத் தொடங்குகையில் மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை ஐயாயிரமாக இருந்ததாகப் போலீசுப் புள்ளிவிவரம் கூறுகிறது. அது தொடங்கப்பட்ட பின்னால், அதன் கொடுஞ் செயல்கள் தொடர்ந்த பின்னால், மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 22 மடங்கு உயர்ந்து 1,10,000 பேராக அதிகரித்து இருக்கிறது. நீங்கள் செய்துகொண்டிருப்பது என்னவென்று தெரிகிறதா என்று இந்த அரசைக் கேட்கிறோம். நீங்கள் மீண்டும் தாக்குதலில் இறங்குவீர்களானால், மிச்சம் இருப்போரும் மாவோயிஸ்டுகள் ஆவார்கள். முழுநேரப் போராளிகள் ஆவார்கள். அவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் செயல்பரப்பும் விரிவடையும். அதன் தொடர்ச்சியான விரிவு மும்பையையும், தில்லியையும் தொடக்கூடும். அவர்களை அழித்துவிடலாம் என மனப்பால் குடிக்கிறீர்கள். ஆனால் அவர்களை விரிந்து பரவச் செய்வீர்கள், அவ்வளவே. ************ ஆங்கில மூலம் www.nowpublic.com/satyen – தமிழாக்கம்: அனாமதேயன் வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற… பேஸ்புக்கில் வினவு வினவை டிவிட்டரில் தொடர்க வினவை ஆதரியுங்கள் தொடர்புடைய பதிவுகள் மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!! பிப்-20 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்!! லண்டனில் இந்திய மேலாதிக்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் : ஈழப் போராட்டத்தின் புதிய திசை இந்தியாவின் இதயத்தின் மீதான போர் ! – அருந்ததி ராய் தில்லிச் சிதம்பரமும் தில்லைச் சிதம்பரமும் – மூலதனத்தின் இராமயணம்! போரை நிறுத்து !! பழங்குடிகள்-மீனவர்கள் விவசாயிகள் மீது இந்திய அரசு தொடுத்துள்ள போர்! பினாயக்சென் விடுதலை: அரசை எதிர்த்ததால் இரண்டாண்டு சிறைவாசம்!! இங்கே கடல், நிலம், மலை….மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்கப்படும் !! மீனவர்களை சுனாமியாக அழிக்கவரும் மேலாண்மைச் சட்டம் !! குடிக்க தண்ணியில்ல, கொப்பளிக்க பன்னீரு – பாடல் கஞ்சி ஊத்த வக்கில்ல என்னடா கெவர்மெண்டு – பாடல் தண்ணி வந்தது தஞ்சாவூரு….பாடல் மெரினா – விட்டுவிடாதே வினையாக்கு! கிரிக்கெட்டை அரசியலாக்கு!! கச்சத்தீவு: அனாதைகளாய் தமிழக மீனவர்கள்!-சிறப்புக் கட்டுரை! ஈழம்: விவசாயத்தை ஆக்கிரமிக்கும் இந்தியாவின் நரித்தனம்! குறிஞ்சிப்பண்: நீலகிரியின் மலையரசி கதறுகிறாள்! Facebook Twitter WhatsApp இது மாவோயிஸ்ட் புரட்சியல்ல;ஒடுக்கப்பட்ட மக்களின், ஏழைகளின் புரட்சி. « தமிழ் நிருபர் February 16, 2010 At 4:41 am […] மேலும் 0 கருத்து | பிப்ரவரி 16th, 2010 at 4:39 am under Blog திரட்டி […] பதில் karthi February 17, 2010 At 2:51 pm அருமையான பதிவு பதில் yogan February 16, 2010 At 7:17 am பொருளாதார நிபுணர்களும் ,மனிதாபிமானிகளும் ,மென்மையான் கலையுனர்வுள்ள எழுத்தாளர்களும் ,தலித்திய வாதிகளும்,ஸ்டாலினிய ,மாவோயிச எதிர்ப்பாளர்களும் என்ன சொல்ல போகிறார்கள்? பதில் மதி.இண்டியா February 16, 2010 At 7:32 am காந்தியவாதிகளோ . உங்களால் போலி கம்யீனிஸ்களாக்கப்பட்டவர்களோ இந்த பிரச்சனையை முன்னெடுத்திருந்தால் என்றாவது அந்த மக்கள் மீண்டெழ வாய்ப்புண்டு , கூடா சேர்க்கையால் மனம் பிறழ்ந்த மார்க்ஸிட்டுகளிடம் சென்று சேர்ந்ததுதான் பிரட்சனை . பதில் குருத்து February 16, 2010 At 11:15 am காந்திய தேசத்தில் காந்திய வழி போராட்டங்கள் கூட செய்ய வழி இல்லை என்பதை ஹுமான்சு குமார் தன் நடைமுறையில் உணர்ந்திருக்கிறார். தன்னுடைய எளிய கேள்விகள் மூலம்… பலருக்கு உண்மை நிலவரத்தை உணர்த்தி இருக்கிறார். அமைதி. பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தரகு முதலாளிகளுக்கும் பல நூறு புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் காடுகளையும், மலைகளையும், ஜீவனுள்ள நதிகளையும் கூட அடிமாட்டு விலையில் விற்றுவிட்டார்கள். இப்பொழுது எடுக்க போகும் பொழுது, அங்கு வசிக்கும் பழங்குடி மக்கள் எதிர்க்கிறார்கள். ஈழத்தில் புலிகள் என அப்பாவி மக்களை கொன்றார்களோ, அதே போல பழங்குடி மக்களை மாவோயிஸ்டுகள் முத்திரை குத்தி இந்திய அரசின் ராணுவமும், போலீசும் நாளும் கொல்கிறார்கள். இந்திய அரசு விரும்பும் அமைதி சுடுகாட்டு அமைதி. இந்த உண்மை பரந்து பட்டு எல்லா மக்களுக்கும் சென்று சேர வேண்டும். தமிழகத்தில் மக்கள் கலை இலக்கிய கழகமும், அதன் தோழமை அமைப்புகளும் முன்கை எடுத்திருக்கின்றன. காட்டு வேட்டைக்கான எதிர்ப்பியக்கம் பற்றி படர வேண்டும். இந்த பிரச்சாரத்தின் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த அனுபவத்தை தொகுத்து வினவு ஒரு பதிவிட்டால் நல்லது. பதில் டி.அருள் எழிலன். February 16, 2010 At 11:25 am இன்றைய இந்தியச் சூழலில் மிகவும் தேவையானதும். போர் வெறிக்கு பின்னால் உள்ள நோக்கங்களையும், மக்களின் விடுதலை வேட்கையையும் உறுதிப்படுத்துகிற வாக்குமூலம் இது வாழ்த்துக்கள். பதில் கலை February 16, 2010 At 11:26 am அரசின் மாவோயிஸ்ட் பூச்சாண்டியை எளிய முறையில் உண்மை நிலவரத்தை விளக்கியிருக்கிறார் ஹீமான்சு குமார். ”ஜென்டில் மான்” கள் என்ன சொல்லப் போகிறார்கள். பதில் Krishna February 16, 2010 At 11:45 am Dear Vinavu, Good translation and the article by iteslf is simple yet powerful in its contend and outlook. the words are straight un complicated and telling us the real truth.Regards Krishna. பதில் வீரபாண்டியன் February 16, 2010 At 12:04 pm அய்யோ என்ன கொடுமை இது?முதன் முதலில் நாட்டில் புரட்சியை கொண்டு வரப் போவது தோழர்கள் மருதையன் வினவு போன்ற் நக்சல் தீவிரவாதிக்ள் தான் என்ற என் நம்பிக்கையில் மண்ணைப் போட்டுவிட்டாரே குமார். பதில் கலை February 16, 2010 At 1:02 pm அய்யோ என்ன கொடுமை இது? எல்லாவற்றிற்கும் நக்கல்தானா? மக்களின் துன்பங்களை புரிந்துகொள்வார் யாரும் இல்லையா வலைத் தளங்களில்? பதில் Anonymous February 16, 2010 At 2:25 pm மிகச் சரியான நேரத்தில் வந்துள்ள பதிவு. இது மக்களைச் சென்று அடைய வேண்டும். சிதம்பர ஓநாய். அரசு தொலைகாட்சியில், “இப்போது நடைபெற்று வருகின்ற “ஆபரேசன் கீரீண் ஹண்ட்” திருப்தி அளிப்பதாகச் சொன்னதை” கண்டு வயிறு எரிகிறது. அரச பயங்கரவாதம் வெகுஜன ஊடகங்களை வெகு சாமார்த்தியமாக தமக்கு ஒத்தூதச் செய்கிறது. ஈழப்பிரச்சனையில் கருணாநிதி அரசு எப்படி கிளர்ச்சி செய்பவர்களை சிறையில் தள்ளி பத்திரிக்கைகளை விலைக்கு வாங்கி வெகுஜன எதிர்ப்பு பரவாமல் தடுத்ததோ, அதே போன்று இப்போதும் பத்திரிக்கைகளை விலைக்கு வாங்கி மக்கள் இவர்களின் கொலைகளை அறியாமல் தடுக்கின்றனர். உழைக்கும் மக்களை அணிதிரட்டி, ஜாதி இன மொழி மாநில வேறுபாடுகளைக் கடந்து மக்கள் போராடினால் மட்டுமே இந்த அயோக்கியர்களை ஒழிக்க முடியும். பதில் மிஸ்டர்மிஸ்டேக் February 17, 2010 At 10:39 am //உழைக்கும் மக்களை அணிதிரட்டி, ஜாதி இன மொழி மாநில வேறுபாடுகளைக் கடந்து மக்கள் போராடினால் மட்டுமே இந்த அயோக்கியர்களை ஒழிக்க முடியும்.// அதெப்படி முடியும்? ஜெயராமன் வீட்டுல கல்லெடுத்து அடிப்பதையே இப்போதான் ‘க்ற்று’க் கொண்டு வருகிறோம்…. அதுக்குள்ள எல்லாரும் ஒத்துமையா போராடனும்னு பிரிவினைவாதம் பேசுறீங்களே? பதில் puli February 16, 2010 At 3:50 pm அந்த மண்ணின் மைந்தர்களிடம், இந்திய அரச பயங்கரவதத்தை மட்டுமல்ல, உலக பயங்கரவாதத்தையும் எதிர்கொள்ளும் துணிவு உண்டு. பதில் ஆழியூரான் February 16, 2010 At 9:02 pm பசுமை வேட்டை என்ற பெயரில் சொந்த மக்களை கொன்று ஒழிக்கும் ப.சிதம்பரம் என்ற பன்னாடையை எப்படியாவது அந்த ஆதிவாசி மக்களின் கைகளில் ஒப்படைத்துவிட வேண்டும். மற்றதை அம்மக்கள் பார்த்துக்கொள்வார்கள். பதில் Anonymous February 17, 2010 At 3:17 am Already they got big amounts from Tata and other group so they have to do something to satisfy those group. One day Sonia can leave India and go to Italy with kids and robbed wealth but what about these guys like Sithamparam. They are responsible to answer the public. Sathi. பதில் இவன் February 17, 2010 At 10:25 am இவர்கள் சல்வா ஜுடூமை ஏவி விட்டு மக்களை அடித்து விரட்டி கொன்றது போதாதென்று இப்போது கிரீன் ஹுண்டாம்.மேதா பட்கர் கூறியது போல் ஏற்கெனவே சில மலைப்பகுதிகள் வேதாந்தாவிற்கும் ஜிண்டாலிற்கும் ஆதிவாசி மக்களிடம் இருந்து பிடுங்கி பட்டா போட்டு கொடுக்க பட்டுவிட்டது.அடுத்தது அம்பானிக்கு கொடுப்பார்கள் போல? மேலும் அன்று காந்தி உண்ணாவிரதம் இருந்தார் என்றால் இரண்டு நாட்கள் பார்த்து விட்டு மேலும் தொடரந்தால் வெள்ளை காரன் உண்ணாநிலை இருப்பவர் செத்து விடக்கூடாதே என்று பதறி அடித்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பான்.அந்த இறக்கம் கூட இன்று இந்த செல்வா சீமான்கள் நிறைந்த காங்கிரஸ் கட்சிக்கோ அல்லது பொதுவாகவே தேசத்திற்கே கூட இல்லை என்பது வெட்க கேடு.உண்ணா நிலை இருக்கிறானா?அடித்து நொறுக்கு அவனை,தீவிரவாதி முத்திரை குத்தி உள்ளே தள்ளு.இதுதான் இரண்டாவது பெரிய சனநாயகம்,அடுத்த வல்லரசு என இவர்கள் பீற்றிகொள்ளும் இந்தியாவின் வெட்ககேடான நிலை,. பெரியார் கூறியது போல் வெள்ளைகாரனே மேல்.. பதில் இவன் February 17, 2010 At 10:31 am மேலும் இந்த மீடியா பன்னாடைகள் தொடர்ந்து ஆ புலி வருது!..கதையாக ஆ! இந்தியா வல்லசராவதை தடுக்கிறான்!..ஆ! டாடாவிற்கு இடுப்பு சுளுக்கிவிட்டது என்ற கதையாக தொடர்ந்து பெரு முதலாளிக்கும் அந்த முதாளிகளின் கைக்கூலி ப சிதம்பரத்திற்கும் ஆதரவாக நாய் போல் குறைத்து வருவது மானங்கெட்ட செயல்.இப்படிதான் சம்பாதிக்க வேண்டுமா இந்த அற்ப பதர்கள்?இதற்கு பிச்சை எடுக்கலாம். பதில் சிந்தன் February 17, 2010 At 7:08 pm இந்த போலி ஜனநாயக அரசு யாருக்கு பாதுகாப்பாக இருக்கிறது,யாருக்கு ஆதரவாக அதிகாரத்தை செலுத்துகிறது என்று ஒரு காந்தியவாதியே சாட்சி சொல்லும்போது புரட்சியை நெருங்குவதுபோலவே தெரிகிறது தோழர்களே. பதில் Anonymous February 17, 2010 At 7:32 pm ///கொலைகள், கற்பழிப்புகள், எரிப்புகள், ஆள் கடத்தல்கள் என ஆயிரம் புகார்களுக்கு மேல் நாங்கள் அளித்திருக்கிறோம். ஆனால் ஒற்றை முதல் தகவல் அறிக்கைகூடப் பதியப்படவில்லை. கிராம மக்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தும் புளுகுமூட்டைகளாக இருப்பதால் மு.த.அ பதியவில்லை என போலீசு உச்ச நீதிமன்றத்துக்கு எழுதுகிறது. மு.த.அ. சரியா, தவறா என்று போலீசு முடிவு செய்ய முடியாது, பதிவதும், ஆய்வதும் அவர்கள் கடமை என்கிறது இந்த நாட்டின் சட்டம். ஆனாலும் சட்டத்தின் காவலர்கள் முதல் தகவல் அறிக்கையைப் பதியவும் மறுக்கிறார்கள்/// … ” போலீஸ் இல்ல பொருக்கி” பதில் playboy February 17, 2010 At 7:36 pm ////கொலைகள், கற்பழிப்புகள், எரிப்புகள், ஆள் கடத்தல்கள் என ஆயிரம் புகார்களுக்கு மேல் நாங்கள் அளித்திருக்கிறோம். ஆனால் ஒற்றை முதல் தகவல் அறிக்கைகூடப் பதியப்படவில்லை. கிராம மக்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தும் புளுகுமூட்டைகளாக இருப்பதால் மு.த.அ பதியவில்லை என போலீசு உச்ச நீதிமன்றத்துக்கு எழுதுகிறது. மு.த.அ. சரியா, தவறா என்று போலீசு முடிவு செய்ய முடியாது, பதிவதும், ஆய்வதும் அவர்கள் கடமை என்கிறது இந்த நாட்டின் சட்டம். ஆனாலும் சட்டத்தின் காவலர்கள் முதல் தகவல் அறிக்கையைப் பதியவும் மறுக்கிறார்கள்////// …..போலீஸ் இல்ல பொருக்கி…… பதில் ராஜ நடராஜன் February 17, 2010 At 8:31 pm ஸ்டாலின் குருவின் இடுகையில் கூறிய பின்னூட்டத்தை இங்கே மீண்டும் மறுபதிவு செய்ய விரும்புகிறேன். //அடக்கப்படும் ஒரு குழு அதன் குரலை உரக்கச் சொன்னால் அதற்கு மாவோயிசம் என்ற பெயர் சூட்டலால் மனித அவலங்கள் கொச்சைப் படுத்தப் படுகிறது.// பதில் Narasi February 18, 2010 At 8:33 am திரைப்படம் என்பது மக்களுக்கானது அல்ல ஆனாலும் பேசுகின்ற செய்திகளை உரக்க வைப்பது கூட இன்றையக்கடமை போராண்மை படம் பேசுகின்ற சமூக உறவைப் புரிந்து கொள்ள முயற்சித்தல் பழங்குடி மக்களுக்கும் அதிகாரிகளுக்குமான உறவு (பாதணியை சுத்தம் செய்தல்> துருவன் குற்றவாளியாக்கும் முத்திரைகுத்தல் அல்லது சமூகத்தின் மீதான வடுவை ஆழப்படுத்துவது பற்றிய பார்வை ) பழங்குடி மக்களுக்கும் சமூகத்தின் உயர்வர்க்கத்திற்குமான உறவு (மாணவிகளுக்கும் துருவனுக்குமான உறவு) உபரிப் பெறுமானத்தின் பெறுமதி ( மக்கள் கொடுக்கும் அன்பளிப்பு) கட்டமைக்கப்படும் வலிந்தெடுக்கப்படும் போலித் தேசியம் பழங்குடிமக்களை குற்றவாளிகளாக ஆக்குவது ( துருவனைத்தேடி அலைகின்ற போது அந்த மக்களின் வாழ்விடங்களை துவம்சம் பண்ணுவது) இவைகள் தான் அந்தப் படத்தின் வெற்றி நேர்மையாக முடிந்தவை அந்தமக்களை உலகிற்கு கொண்டுவருகின்றது. இதுதான் இன்றைய நிலை என்பதை உங்களின் எழுத்துக்களைவிட படக்காட்சியாக கொண்டுவந்து விடுகின்றது. இந்தப்படத்தைப் பார்த்தாலே போது பழங்குடி மக்களின் வாழ்நிலை எவ்வாறு இருக்கும் என்பது. ஆனாலும் முன்னர் குறிப்பிட்டது போன்று திரைப்படங்கள் மக்களுக்கானது அல்ல. அது வியாபார நோக்கில் அமைந்தது தான் இவை சமூகத்தை எவ்வகையிலும் மாற்றத்திற்கான உந்து சக்தியாக இருக்கப்போவதில்லை. ஆக இங்கு அரைநிலபிரபுத்துவ சமூக அமைப்பில் இருந்து வரும் அதிகார வர்க்கத்தின் வக்கிரமான எதிர்விழைவு நடவடிக்கைகளை புரிந்து கொள்ள முடிகின்றது. பழங்குடி மக்களின் வாழ்வியலை அவர்களின் வாழ்வின் தத்துவத்தில் இருந்து புரிந்து கொள்வது அவசியமாகின்றது. மேற்கு நாட்டு க ஆக இங்கு அரைநிலபிரபுத்துவ சமூக அமைப்பில் இருந்து வரும் அதிகார வர்க்கத்தின் வக்கிரமான எதிர்விழைவு நடவடிக்கைகளை புரிந்து கொள்ள முடிகின்றது. பழங்குடி மக்களின் வாழ்வியலை அவர்களின் வாழ்வின் தத்துவத்தில் இருந்து புரிந்து கொள்வது அவசியமாகின்றது. மேற்கு நாட்டு கலாசாலை என்பது ஒரு சனரஞ்சக ஆய்வுகூடமாகப் பாதுகாத்து அவர்களின் வாழ்வைப் பாதுகாக்க முற்படுகின்றது. ஆனால் அரைநிலபிரபுத்துவ எச்சத்தின் வெளியில் இருக்கின்ற சமூகம் அவர்களி;டம் இருந்து எவ்வாறு உபரி உழைப்பை பெறமுடியும் என்றே நோக்கிச் செயற்படும் பொறிமுறைக்குள் இருக்கின்றுது. மானிடவியல் பாடத்திட்டத்திற்கு அல்லது மானிடவியல்பார்வைக்கு எழுத்துக்களுக்கு முதன்மையாக இருப்பது அரசு>குடும்பம் தனித்சொத்து ஆகியவற்றின் தோற்றம் இது தோழர் ஏங்கொல்ஸ்சால் எழுதப்பட்டதாகும். இதனைப் படித்தறிவதன் மூலம் பழங்குடிமக்கள் பற்றிய சரியான கோட்பாட்டு முடிவிற்கு வரமுடியும். பதில் Jambu February 18, 2010 At 6:27 pm அரசாங்கத்தின் அட்டூழியங்களை எல்லாம் பார்க்கும்பொது, விவேக சிந்தாமணியின் கீழ்காணும் வரிகள் தான் ஞாபகத்துக்கு வருகிறது: முடவனை மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை முனிதான் கொல்லும் மடவனை வலியான் கொன்றால் மறலிதான் அவனைக் கொல்லும் தடவரை முலைமாதே இத் தரணியில் உள்ளோர்க்கு எல்லாம் மடவனை அடித்த கொலும் வலியினை அடிக்கும் கண்டாய். பதில் Narasi February 19, 2010 At 11:26 am இந்திய தேசத்தைப் பொறுத்தவரை பழங்குடியினதை ஒரு இனக்குழுவாக (ethnic groups ) கருதுகின்றார்களா? ஒரு சாதி என்று வரையறுக்கின்றார்களா? சாதியாக வரையறுத்தார்கள் ஆயின் அது முதலில் தவறானதாகும். சாதி என்று வரையறை செய்வதே வர்ணாசிமத்தின் எச்சமாகாதா? இனக்குழுக்களுக்கான அதிகார அலகை நோக்கிய விழிப்புணர்வு இன்றைக்கு முக்கியமான செயற்திட்டமாக உள்வாங்கப்பட வேண்டிய அவசியம் இருக்கின்றது. முதலாளிய சமூக உறவிற்குள் அவர்களுக்கான ஜனநாயக உரிமைகளை படிமுறை வளர்ச்சியின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை இருக்கின்றது. அவர்களுக்கான அதிகார அலகை அவர்களின் உயிர்பாதுகாப்பு என்ற மைய நிலையில் இருந்து தொடங்கவேண்டிய கட்டாய வரலாற்றுக்கடமை இருக்கின்றது. பதில் சிகப்பி February 26, 2010 At 5:48 pm ஒரு மரபின இனக்குழு என்பது சரியானது, அது சாதியில்லை என்ற உங்கள் விளக்கம் சரியானது. ஆனால் ஒன்றை மாற்றிக் கொள்ளுங்கள். இந்தியா என்பது தேசம் அல்ல, நாடு என்ற வரையரை சரியானது. வடகிழக்கு மாநிலத்தின் பிரச்சனையை இப்பொழுது அனைத்து மாநிலத்தின் காடுகள் உள்ளடக்கிய மாநிலத்திலேயும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள், எல்லாவற்றையும் விட ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம் – லெனின், என்ற நூலினை படிக்கவும். எப்படி ஏகாதிபத்தியங்கள் மூலாதரங்களை கொள்ளையடிப்பதற்காக கடைகோடி நிலம் வரை தனதாக்கிக் கொள்வதற்கு சண்டையிட்டுக் கொள்கிறது, என்பதை அறிந்துகொள்ளவும். இதுதான் இன்றைய அடிப்படை ஆதரா நூல். நூறு ஆண்டுகளுக்கு முன் முன்னறிந்து வழிக்காட்டிய நூல். மூலப் பொருட்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் ஆக்டோபஸ் கால்களை விரித்து அபகரிக்கும், சண்டையிடும் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ளலாம். இதற்கு எடுபிடியாக பணியாற்றுவதுதான் இங்குள்ள அரசும் நிறுவனங்களும். இனி இதை போன்றதை புரிந்து கொள்ள உங்களுக்கு சிரமிருக்காது. ஆனால் சாதி, மரபினம் போன்றவற்றை புரிந்துகொள்ள அரசு குடும்பம் சொத்து ஆகியவற்றின் தோற்றம் உண்மையில் அவசியம். பிரச்சனையிலிருந்து திசை திரும்பாமல் இருக்கவேண்டிய அவசியம் கருதி ஒரு விசயத்தை மட்டும் கூறி முடிக்கிறேன். சாதியின் உருவாக்கம் உற்பத்தியின் மூலம் தொழிற்பிரிவு ஏற்பட்ட போதுமட்டுமே. கருத்தியலால் பொருளியலை படைக்க முடியாது, ஒழுங்கபடுத்தவும், இல்லையென்றால் தாக்கத்தை எதிர்மறையாகக் கூட உருவாக்கலாம். ஆனால் உருவாகாது. இந்த அடிப்படையைமட்டும் உள்வாங்குங்கள். அவ்வளவே. மக்கள் போராட்டம் வெல்லட்டம். பதில் Narasi February 26, 2010 At 7:56 pm சிகப்பி அவர்கட்டு தங்களின் கருத்துக்கு நன்றி. இந்திய அரசியலமைப்பு எவ்வாறு வரையறுக்கின்றது என்பதை அறியும் பொருட்டே கேள்வி எழுப்பியிருந்தேன். பதில் இது மாவோயிஸ்ட் புரட்சியல்ல;ஒடுக்கப்பட்ட மக்களின், ஏழைகளின் புரட்சி. « தமிழன் April 22, 2010 At 8:17 am […] https://www.vinavu.com/2010/02/16/revolution-of-the-poor/ […] பதில் deepa June 13, 2016 At 2:35 pm ஒரு சாதாரண பெண்ணாக படிக்கும் போது என் கண்களில் கண்ணீர் வருகிறது. கண்ணீர் மட்டும் ஒன்றும் செய்து விட போவதில்லை. இது நடந்து பல நாட்கள் கடந்து விட்டன இன்று இது இன்னும் மோசமடைந்துள்ளது. அரசின் அடுக்குமுறை என்பது இப்போது மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. பதில் Leave a Reply to Narasi பதிலை ரத்து செய்க உங்கள் மறுமொழியை பதிவு செய்க உங்கள் பெயரைப் பதிவு செய்க நீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க Save my name, email, and website in this browser for the next time I comment. Facebook Instagram Twitter Youtube முகப்பு அறிமுகம் மின் நூல்கள் (e-books) தொகுப்புகள் தொடர்புக்கு (contact us) வினவை ஆதரியுங்கள்! (Subscription) © This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License
பிரிவுகள் மணப்பந்தல் lease-வாடகைக்கு/குத்தகைக்கு வீடு/காணி விற்றபனைக்கு கல்வி கல்வி ஜோதிடம் வைத்தியம் பொது SEARCH தையல் / அழகுக்கலை Ad-id 000006012 கொட்டாஞ்சேனை கொழும்பு –- 13 விக்னேஸ்வரி தையல்பயிற்சி தினசரி நடைபெறும் . பெண்களுக்கான அனைத்து ஆடைகள் ப்ளொக் முறையிலும் உடம்பு அளவெடுத்து தைப்பதற்கும் கற்பிக்கப்படும் . சிங்கர் மெஷின் , Juki மெஷின் மற்றும் Over Lock மெஷினில் தைப்பதற்கும் பயிற்சி அளிக்கப்படும் .
வடக்கராலியில், இதைப் போல நாலு ஐந்து குறிச்சிகள் இருக்கின்றன. செட்டியார்மடம், மையிலியப்புலம், பள்ளிக்கூடத்தடி, சந்தையடி. இங்கே மட்டும் தான் 'பைப்புகள் இருக்கின்றன‌.மற்றையவற்றில் இல்லை. சிலவேளை, சந்திரா இருக்கிற வீட்டுக்குப் பக்கத்திலிருக்கிற‌...வயல்ப் பக்கமிருந்த குடவைக் கிணற்றுக்கு நகுலன் சைக்கிளிலே போய் குடத்திலே நீர் பிடித்து வாரவன்.அது தூரம்.இரண்டொரு வீட்டிலே இடைப்பட்ட தர நிலையில் கிணற்று நீர் பரவாய்யில்லையாகவும் இருந்தன.அங்கே இருந்தும் எடுத்துக் கொண்டார்கள்.நகுலன் வீட்டிற்குப் பின் வீட்டிலும் பரவாய்யில்லையான நீர்.அங்கே இருந்தும் சிலவேளை எடுத்தார்கள். நகுலன் வீட்டு கிணற்று நீரை பாத்திரங்கள்,கழுவ..மற்றைய தேவைகளிற்கு.. மாத்திரமே .பாவித்தார்கள்.சமைக்க குடிக்கவெல்லாம் மற்றைய நீர் தான். "எங்க வீட்டுத் தண்ணீர் பாசி மணம்..!"என்றான். "பரவாய்யில்லை"என அவன் வீட்டிலேயே தண்ணீர் எடுக்க வந்தார்கள். ஆபத்திற்கு தோசமில்லை என்றாலும் பாசி மணம் போய் விடாது. 'சரி அப்ப வாருங்கள்"என கூட்டிச் சென்று துலாகிணறி லிருந்து நீர் அள்ளி விட்டான்.இரண்டு குடத்தில் பிடித்துச் சென்றார்கள். விடியிறப் பொழுதிலே, பிரஜைகள் குழுவைச் சேர்ந்தவர்கள் வந்து விட்டார்கள் யாழ்ப்பாணத்தில் எல்லாப் பகுதிகளிலும் இத்தகையக் குழுக்கள் கட்டப்பட்டி ருக்கின்ற‌ன."என்ன வேண்டும்"என கேட்டவர்கள், சமைக்கிறதுக்கு விறகு, தேயிலை, சீனி, அரிசி, மற்றும் காய்கறிகள்... சரக்குச் சாமான்கள் எல்லாவற்றையும் கொஞ்ச நேரத்திலேயே சூழவுள்ள வீடுகளிலிருந்து சேகரித்து வந்து "சமைத்துச் சாப்பிடுங்கள் "என கொடுத்தும் விட்டார்கள். கிராமங்களில் இயங்கிய பிரஜைகள் குழுவினரின் சேவைகளை பாராட்டவே வேண்டும். இவை, யாழ்ப்பாணப் பகுதிகளில் இந்தியனாமி வந்த பிறகு எழுந்த புதிய‌ அமைப்புகள் .எல்லாச் சாதிகளிலிருந்தும் இரண்டுபிரதிநிதிகள் ஒரளவு படித்தவர்கள்,இளைப்பாரியர்கள்,இளைஞர்க‌ள்.... அவர்களைச் சுற்றிக் கொண்டு திரிந்த முற்போக்குத் தனமும் கொண்டவர்களையும் கொண்ட கலவையாக கட்டப்பட்ட அமைப்பு.இந்தியனாமி வந்த போது..மக்கள் நிறைய பாதிப்புகளில் இருந்தார்கள்.அச்சமயம் இவர்களே ராணவமுகாம்களிற்குச் சென்று தலைவர் தரத்திலிருந்தவர்களிடம் கதைத்து நிவாரண உதவிகளை மக்களிற்குப் பெற்றுக் கொடுத்தவர்கள். ‘ சண்டை’ ஏற்பட்ட பிறகு இவர்களை கழுகுக்குப் பிடிக்கவில்லை."இயங்க வேண்டாம்"என தடை செய்ய முடியவில்லை.ஆனால், "இந்தியனாமியின் முகாமிற்கு மேற்கொண்டு போக வேண்டாம்" என இவர்களிற்கு கடுமையாக கட்டளை இட்டிருந்தது. இவை கழுகின் பேச்சை செவிமடுக்கவே இல்லை.அது கழுகுக்கு சீற்றத்தைக் ஏற்படுத்தியதுஅவர்களை நோக்கியும் துவக்கை திருப்பி வைத்திருக்கிறார்கள். கழுகு, இவர்களையும் இன்னொரு இயக்கமாகவே பார்த்தார்கள்.'துப்பாக்கியின் முனையிலிருந்தே அதிகாரங்கள் பிறக்கின்றன'என்பது எவ்வளவு உண்மை. தற்போது, சிறிலங்காவின் துப்பாக்கிகள் தற்காலிகமாக செயலற்றுப் போக, கழுகும் நீட்ட, ,இந்தியனாமியும்,கழுகை ஒடுக்கி,தனது நடமாட்டத்தை அதிகரிக்க துப்பாக்கியை நீட்டிக் கொண்டே வெளியில் இருப்பவரிற்குத் தெரியாமலே ... ஒபரேசனை லிபரேசன் 2ஐ எடுக்கிறது. பிரஜைகள் குழு, 2,3 நாட்களிற்கான உணவுத் தேவையை நிறைவு செய்திருந்தாலும்,குளிக்க,முகம் கழுவ,காலைக்கடன் கழிக்க ...எல்லாம் ஒழுங்கு செய்ய வேண்டியிருந்தது.நகுலனிற்கு முன்னால்,பக்கத்தில் இருந்த வீடுகளிற்கும் இவ்வளவு பேர்கள் செல்வதற்கு என கேட்டு அதையும் ஒழுங்கு செய்தது.கூடிய சீக்கிரம் இவர்களை ஏற்கக் கூடியவர்கள் இருந்தால் ஏற்றுக் கொள்ளும்படியும் வேண்டுகோள்ளை இரங்கலாக‌ விட்டிருந்தது. எம்.ஜி.ஆரண்ணையும் பகலில் ஒரிரண்டு தடவை வந்திருந்து கதைப்பார்.அவரும் மனைவி மூலமாக முயற்சித்துக் கொண்டிருந்தார். எல்லாமே ஆமை நகர்வுகள் தாம். அம்மியும் நகரும் என்பார்கள்.இங்கே ஒன்றுமே நகர்வதாய் இல்லையே.அவருக்கும் சலிப்பேற்படவே செய்தது.. "அங்கே, வீடு என்ன கதியோ?"என அரற்றுற மனைவியின் கவனத்தை திருப்ப,குஞ்சனிடம் "பாட்டுக் கச்சேரியை தொடங்கடா"என்று இரகசியமாக கூறினார். குஞ்சனும், தனி வீடு பார்க்கவில்லை.அதே வீட்டிலே தான் இவர்களும் தங்கியிருந்தார்கள்.அவனும் இருளத் தொடங்க வீட்டிலே எம்.ஜி.ஆரண்ணை குஞ்சனுக்கு வெறும் வயிற்றில் பானையை கவ்வ வைத்து கடம் வாசிப்பதற்கு கற்றுக் கொடுத்தார் "மாமி,பாலும் பழமும் பாட்டு பாடுங்க"எனக் கேட்டான்.அவர் "ஆலையமணியின் ஒசையை நான் கேட்டேன்..."என்று பாட ... குஞ்சனின் மாமி,அவருடைய மஞ்சு அக்கா வெகுவாய் ஆச்சரியப்பட்டாள். "எங்கடி பாடக் கற்றுக் கொண்டாய்,நல்லாப் பாடு றாய்யடி,வேற பாட்டுகளும் தெரியுமா?"என்று கேட்க."அண்ணரும் பாட்டுக்காரர்" என குஞ்சன் தெரிவிக்க ,பாடல்களை அவரும் பாடினார்.குஞ்சன் சுமாராக பாடக் கூடியவனாக இருந்ததால் தான் இந்த விசயங்களில் எல்லாம் ஆர்வமாக இருந்தான். அவனும் ஒரு பாட் டை சுமாராய் பாடினான்.விமல், பாடிய போது "என்ர குஞ்சு "என்று மஞ்சு அக்கா அவனை இறுக கட்டிக் கொண்டாள் .புதுப் பாட்டுகளாக‌ பாடா விட்டாலும் பாடிய பாடல்களிற்கு பின்னணி இசையில் அவன் வெளுத்து கட்டினான்.ஒவ்வொரு நாளும் பாட்டுக்கச்சேரி நடைபெற ஆரம்பித்தன.இசை கவலைகளையும் கூட மறக்கடிக்க வல்லது. இரண்டொரு நாள் வாப்பாவும்,நகுலனும் அவர்களோடு இருந்து ரசித்துக் கேட்டார்கள். இப்ப, இவர்கள் வந்த பிறகு தேர்முட்டியில் சந்திக்கிறது நின்று விட்டது.குஞ்சன் நகுலன்ர வருவான்.அன்று மூன்று பேரும் நகுலன் வீட்டில் முன்னறையில் இருந்து அலம்பிக் கொண்டிருந்தார்கள். எம் ஜி.ஆரண்ணையின் தங்கச்சியும் அவருடைய சிறிய மகளும் நகுலன் வீட்ட தண்ணீர் எடுக்க குடத்துடன் வந்தார்கள்.வெளிய வந்த குஞ்சன்"ஏய்க் குட்டி, நீ இந்த பெரிய குடத்தை தூக்குவாயா?"என ஆச்சரியத்துடன் கேட்டான்."தூக்குவேன்"என அது பதில் அளித்தது."என்ன அக்கா,இவளை தூக்க விடுறீங்கள்?"என்றவன்,"தாடி குடத்தை நான் கொண்டு வாரன்"என வாங்கிக் கொண்டான்.'அவனுக்கு,வேற வழி இல்லாமல் இந்த தண்ணிரை எடுத்து குடிக்கிறார்கள்'என்றது சுருக்கென குத்தியது. குஞ்சனிடம் சைக்கிள் கிடையாது.குடவைக்குப் போய் நல்ல தண்ணீர் அள்ளி கொடுக்க முடியவில்லையே என வருந்தினான்.இவனுடைய வருத்தத்தை புரிந்து கொண்ட வாப்பா,"டேய் இவர்களுடைய பின் வீட்டிலே தண்ணீர் பரவாய்யில்லையடா,அங்கே இருந்து அள்ளிக் கொடு.இங்கே தான் எல்லா வேலிகளிலும் பொட்டுக்கள் இருக்கிறதே"என்று வழியைக் காட்ட,அங்கே இருந்த வேற இரண்டு குடங்களில் அந்த தண்ணீரை அள்ளிக் கொண்டு போய்க் கொடுத்தார்கள். அவர்கள் மூன்று பேருக்கும் அந்த தண்ணீரில் தேத்தண்ணீர் போட்டுக் கொடுத்தார்கள்.சேலையை மறைப்பாகக் கட்டி ஒருபுறம் அண்ணர் குடும்பம்,மற்றது இவருடையது என இருப்பது பரிதாபமாக இருந்தது. "முறைக்கு உங்களுக்கு நாங்கள் உதவ வேண்டும்.நாங்கள் உங்களிட்ட இருந்து வாங்கி குடிக்கிறோம்"என்று வாப்பா வருத்தமாகச் சிரித்தான். அவர் ஆதரவாக "நாம் தாம் பெரிய அமைப்பாக இல்லையே,ஒரு எல்லை வரைக்குமே ஒவ்வொருவராலும் உதவ முடியும் த‌ம்பி.உதவோனும் என்ற மனம் உங்களிடம் இருக்கிறதே,அது பெரிய விசயம் "என்றார்.அவர் ‘பெரிய அமைப்பு’ என்று குறிப்பிட்டது மாகாணவரசாக இருக்க வேண்டும். அ தையே, சரியாக வழங்கப்படாமல் நிறைய கொத்து வெட்டுக்களுடன் கிடக்கிறது. ‘இயக்கங்கள்’ மக்களுடன் நன்கு கலந்து தான் விட்டிருக்கின்றன.‌ ‌.அதை, கழுகு போய் புத்திகெட்டு அடித்து குழப்பி விட்டதே,ஆயாசமாகவும் இருந்தது. அல்லது, அவர் குறிப்பிட்டது தமிழிழ அரசோ? அது பெரிய விசயம்! எதற்கும், முதலில் கனவு காண்பது அவசியம் தான். பிறகு தான் அதனை அடைய முடியும். சமஸ்டி கிடையாது,கூட்டாட்சி யாக இருந்தால் தாம் எமக்கும் பலம்! எம் பொருளாதாரமும் வளரும்.பிரச்சனை என்றால்,ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி விட்டு பிரிந்து விடக் கூடிய தன்மையும் வேண்டும்.இதுவரையில் இந்த அரசு, கலவரங்களில் தமிழர்களிற்கு நிறைய பாதிப்புக்களை ஏற்படுத்தி விட்டிருக்கிறார்கள்.அதற்கு அவர்கள் இதுவரையில் நிவாரணம் என்று எதுவுமே வழங்கவில்லை.எனவே உறவு கறாராக இருக்க வேண்டியது அவசியம் தான். பிறகு, அந்த குடும்பத்தினரை சித்திராவக்காவின் சொந்தக்காரர்கள் சிலர் பங்கிட்டு ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.ஆண்கள் தரப்பினர்,அங்கிருந்து மேசன் வேலைகளிற்கு போறவர்களுடன் மெல்ல மெல்ல போய் வாரது ஏற்பட்டிருந்தது.அந்த வி.சி. கட்டிடம் வெறுமையாக ...நகுலன் செட்டுக்கு நிம்மதி ஏற்பட்டது.அந்த கட்டிடக் கட்டில் இருந்து சிலவேளை கதைத்துக் கொண்டிருப்பார்கள். இவர்கள் போய் 2ம் நாள், நகுலனின் தங்கச்சி வாசுகி,தின்னவேலியில் ஒரு வீட்டில் அறை ஒன்றை வாடகைக்கெடுத்து , தங்கி இருந்து கம்பஸுக்கு போய் வந்து கொண்டிருந்தவ‌ள்,அந்த வீட்டுக்காரரான சுமதியம்மாவையும்,அவர் மகள் ரேவ‌தியையும் கூட்டிக் கொண்டு கிராமத்து வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.யாழ்க்கோட்டையிலிருந்து அடிக்கிற செல்கள், அவர்கள் அயலில் வந்து விழ,"இனி இருக்கேலாது"என வெளிக்கிட்டு வருகிறார்கள்.இவர்களிற்கு அயலிலே கழுகின் சிறு முகாம் ஒன்றும் இருக்கிறது.அதற்கு அடிக்கிறார்களோ?அல்லது மயிலிட்டி போல அடிக்கிறார்களோ? தெரியவில்லை,பயத்தில் வருகிறார்கள். “மக்கள் பேசுறது உண்மையா?'இந்தியனாமி எல்லா முகாங்களிலிருந்தும் வெளிக்கிட்டு யாழ்க்கோட்டைக்குப் போய்ச் சேரப் போகிறார்களாம்' என்று வதந்தி” வாசுகி அளக்கிறாள்.தொடர்ந்து "நாளை என்ரதோழி ஜமுனாவும், அவள் அம்மாவும் இங்கே வரப் போகினம்"என்று தெரிவித்தாள்.அவர்கள் நல்லூர் கோவிலுக்கு கிட்ட இருந்தார்கள்.மோட்டரில் போட்டு அடிக்கிற செல் ,கோயில்,குளம்,குட்டை,வயல்..எனப் பார்த்தா விழப் போகிறது.எங்கையும் விழலாம்.இந்த செல் விழுகையுடன் கம்பஸ் மூடப்பட்டு விட்டது. வாப்பா அர்த்தபுஸ்டியுடன் நகுலனைப் பார்த்தான்."டேய்,நிச்சியமாய் இது ‘ஒபரேசன் லிபரேசன் 2’ தான்ரா!"என்றான். பூமாலை பாம்பாக மாறி விட்டது. நகுலனால் பதில் சொல்ல முடியவில்லை.வழக்கத்திற்கு மாறாக புதிய அகதிகள் வருகிறார்கள். ஜமுனாவின் அப்பா,தான் வீட்டிலே இருப்பதாக நின்று விட்டிருந்தார். மினிபஸ்ஸில் வந்து இறங்கினார்கள். இது கிராமம்."ரீச்சர்ர வீடு"என்றால் கூட்டிக் கொண்டே வந்து விடும்.இவர்கள் வீடும் பிரதான வீதிக்கு அதிக தூரமுமில்லை. வழியில் கேட்க, சிறுமி ஒருத்தி கூட்டி வந்து வந்திருந்தாள்.நகுலனுக்கு தெரிஞ்ச முகம் தான். அவளின் பெயர் தெரிந்திருக்கவில்லை அம்மா,ஆசிரியர் பயிற்சி வகுப்பு எடுக்கிற போதே மனவியல் வகுப்பும் எடுத்தவர், எனவே அவருடன் அவர்கள் இலகுவாக ஒட்டிக் கொண்டு விட்டார்கள். 'கம்பஸ் பெட்டைகள்' என்கிறார்கள். ரேவதியும்,ஜமுனாவும் பாவாடையும்,சட்டையும் போடுற ஸ்கூல் பிள்ளைகள் போலவே இருந்தார்கள். இருவரிற்கும் 2ம் நாளே 'போர்' அடிக்கத் தொடங்கி விட்டது. வீட்டிலே,வயரிங் எல்லாம் செய்யப் பட்டேயிருக்கிறது.ஆனால் மின்சாரம் கிடையாது.இந்தியனாமி வந்த பிறகு ஜெனரேற்றர்களை டீசலில் இயக்கி கிராபுறங்களிற்கும் மின்சாரம் கிடைக்கச் செய்தார்கள் தான். ஆனால்,கழுகுவோட சண்டை தொடங்கிய பிறகு மின்சாரம் துப்பரவாக‌ கிடைக்கவில்லை. இந்தியவரசும்,சிறிலங்காவரசு,தமிழருக்கு தடை செய்யப்பட்டவையை கிடைக்க வழி செய்ய‌வில்லை.கிராமப்புறங்களிலிருந்த வானொலிகளில் கிடக்கிற பற்றரிகள் மெல்ல மெல்ல உயிரை விட ... அவையும் ஓரேயடியாய் செய்திகளை கூறாமலு செய்திகளை கூறாமலும், பாடாதும் ஒய்ந்து விட்டன. அப்ப, தொலைக்காட்சிப் பெட்டிகள் எல்லார் வீட்டிற்கும் வந்திருக்கவில்லை. ஒரு சிலர் வீடுகளைத் தவிர,பெரும்பான வர்கள் வாடகைக்கு எடுத்தே வீடியோக் கொப்பிகளிலிருந்து சினிமாப்படங்கள் வரை பார்தார்கள். 'ஒமர்முக்தர்,லோரன்ஸ் ஒவ் அரேபியா,பச்சைப் புலிகள்,தமிழன் சிந்திய ரத்தம்...எல்லாமே வாடகை ரி.வியிலேயே பார்க்கப்பட்டவையே. .பூப்புனித விழா,மற்றும் ஏதும் விசேசம் என்றால், வாடகைக்கு பிடித்து ...இலவசமாக இரவிரவாக ‌ 2,3 சினிமாப் படங்க ளை ஒரேயடியாய் க் காட்டுவார்கள்; அவற்றைப் பார்த்தார்கள். இயக்க எழுச்சிற்கு முதல் சிறிலங்கா ராணுவம் ஆட்சி செய்த வேளையில் வட மாகாணப்பகுதியில், மாணவர்களை எல்லாம் பூசாவிற்கு அள்ளிக் கொண்டு செல்றது இருந்தது.அப்பொழுது நகுலனின் அம்மாவின் தம்பி குலத்தின் இரு மகன்மாரையும் பூசா முகாமிற்கு கொண்டு போய் விட்டார்கள்.அவர்களை திணறி யே மீட்ட மாமா , பிறகு குடும்பமாகவே கனடா போய் விட்டிருந்தார்.போற போது தம்மிடமிருந்த கறுப்பு வெள்ளை ரி.வி.யை நகுலன் வீட்டாரிடம் கொடுத்து விட்டுச் சென்றிருந்தார். மின்சாரம் இல்லாதபடியால் அந்த ரி.வி ஒரு மூலையி லே கிடக்கிறது. ‘செய்திகளை’ கேட்க முடியவில்லை. கேட்டால் மாத்திரம் லங்காபுவத்தில் வார செய்தி என்ன உண்மையானவையா இருக்கப் போகிறது?. ‘எப்படித் தான் ஒரு அரசாங்கம் பொதுமக்களை கொன்று விட்டு வாய் கூசாமல் "பயங்கரவாதியை சுட்டுக் கொன்று விட்டதாக பொய் கூறுகி றதோ தெரியவில்லை.’ இவர்களிற்கு ரூபவாகினியின் பொய்ச்செய்திகளை கேட்கவே வெறுப்பாக இருக்கின்றன‌. அந்த நேரம்,'உண்மைச் செய்திகளை தருகிற'என்ற லத்தின் சொல்லைக் கொண்ட‌ ‘தமிழ் வெறித்தாஸ் வானொலியே’ ... உண்மையான செய்திகளையே தந்து‌. கொண்டிருந்தன‌ . சிலசமயம் பி.பி.சி தமிழோசையை யே அது பீட் பண்ணியது. .கத்தோலிக்க ஆயர்மார்களிற்கு சிங்களவர்கள்,தமிழர் மத்தியில் நிறைய‌ மரியாதைகள் இருந்தன.அந்த வாய்ப்பை பயன்படுத்திய ஆயர்கள் சேகரித்த செய்திகளில் உண்மைத் தன்மை... அதிகமாக இருந்தன. இந்த சேவையுடன், இன்னொரு விசயத்தாலும் இவர்கள் மறக்க முடியாதவர்கள். யாழ்ப்பாணப்பகுதியில் திறமான கால்பந்தாட்டக்குழுக்களை வளர்த்து விட்ட பெருமையும் இந்த ஆயர்மார்களிற்கும் இவர்களுடைய சேர்ச்சுகளிற்கும் இருக்கின்றன. பல இடங்களில் சேர்ச் வளவுகளில் கால்பந்து விளையாட நிலத்தை ஒதுக்கிஇருக்கிறார்கள்.நாவாந்துறையில்,குருநகரில்...இவர்களின் நெறியாளுகையினாலே ,விளையாட்டு வீரர்களை அழைப்பித்து பயிற்சி அளிக்கப்பட்ட‌ விளையாட்டுக் குழுக்கள், யாழ்ப்பாணத்தையே ஒரு ‌ கலக்கு’ கலக்கின்றன. இவர்களைப் பார்த்து மற்றவர்களிடமும் சில கோயில் வளவுகளை குத்தகைக்கோ,கோயில்க் குழுக்களின் அனுமதியுடனோ மைதானங்களாகி ...கால்பந்தாட்டக் குழுக்களும் எழுந்திருக்கின்றன. இந்த ஆயர்களிடமிருந்து தொலைபேசிகள் மூலம் செய்திகளைப் பெற் ற பிலிப்பைன்ஸிலிருந்து வெறித்தாஸ் வானொலி செய்திகளை உடனுக்குடன் ஒலிப்பரப்பிக் கொண்டிருந்தது. ‘மின்சாரம்’ இல்லாத போது இந்த வானொலியும் செயலிழக்க அந்தகாரத்தில் அகப்பட்டது போல எல்லாருக்கும் இருந்தது.கேட்கிற செய்திகளில் துப்பரவாவே உண்மை,,பொய் தெரியவில்லை. தமிழர்கள், ஒன்றும் ,வ‌தந்திகளிலிருந்து செய்திகளை பிரித்தறியிற அன்ன பட்சிகள் கிடையாதே. ."கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய்..." என்ற இந்தக் குறளை வள்ளுவர் ஏன் எழுதினார் என்பதை நன்கு புரிய முடிகிறது. அந்த நேரம் பத்திரிகையும் வேற‌ இருந்ததாக தெரியவில்லை. எந்த சூழலிலும் வெளிவந்து கொண்டிருந்த “ஈழநாடு” பத்திரிகையை நம்புத்திரர்களே அடித்து வெளிவர விடாமல் சாதனை புரிந்திருந்தார்கள் . கழுகிற்கு... துப்பரவாக விவேகமே இருக்கவில்லைஅதன் சண்டித்தனம் தான் வளர்ந்து போவதாக இருந்தது. பார்த்தீர்களா!, பக்கத்து ஊர்களில் நடக்கிற செய்திக ளைக் கூட‌ பிலிப்பைன்ஸ் போய் வந்து தான் அறிய முடிகின்றன‌. மின்சாரம் இல்லை என்றால் அதுவும் இல்லை. இப்படி செய்திகளை குழப்பிக் கொண்டு ஆட்சியாளர் எந்த பெரிய குற்றச் செயலையும் செய்யலாமே. பக்கத்தில் இருப்பவரிற்கே தெரியாமல் படுகொலைகளை கொடூரமாக நடத்தினார்கள். ‘லங்காபுவத்’ ராணுவத்தினர் ஒழுக்கத்திற்கு பேர் போனவர்கள் என்று பொய்களைக் கூறிக் கொண்டிருந்தது. நம்மவர்களிற்கே, பல அவலங்கள் நடைப்பெற்ற தா ?இல்லையா?என்ற மயக்கம் இருக்கின்றன‌. இந்தியனாமி தனக்கென‌ “அன்பின்கரங்கள்'”என்ற வானொலியை ஒலிப்பரப்ப,இலங்கை ஆமி தனது வானொலியில் கழுகை கொச்சைப்படுத்தி செய்திகளை,வரலாறுகளை ஒலிபரப்பாக்கிக் கொண்டிருந்தது.பற்றரிகள் கிடப்பவரூடாக கசியும் அந்தச் செய்திகளிற்கு கூட செட்டைகள் முளைத்திருந்தன‌. நண்பர்களான சிங்களவர்கள் சிலர் கொழும்பில் இருக்கிறவர்களிடம் "இப்படி நடந்தது உண்மையா?"என நம்ப முடியாமல் கேட்பதைப் போல ,"மெய்யே"என நாமும் கேட்கிறோம். இவர்களிற்கே இப்படி என்றால் புலம் பெயர்ந்த ,மற்றவர்களிற்கு...?, [தொடரும் ] < Prev Next > Last Updated on Wednesday, 15 March 2017 23:56 ' பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு! பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி. பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள் பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி. வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக.. நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் - மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8 நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு! ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2 வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு! https://www.amazon.ca/dp/B08TBD7QH3 எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: 1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!' 2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்! 3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா? 4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை! 5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்! 6. அ.ந.க.வின் 'மனக்கண்' 7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு 8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி.... 9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்! 10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு! 11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா? 12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி' 13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது! 14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு! நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு! 1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு https://www.amazon.ca/dp/B08TCF63XW தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம். Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7 America : https://www.amazon.ca/dp/B08T6186TJ An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே. books_amazon © காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems பதிவுகள் முகப்பு அரசியல் இலக்கியம் சிறுகதை கவிதை அறிவியல் உலக இலக்கியம் சுற்றுச் சூழல் நிகழ்வுகள் கலை நேர்காணல் இ(அ)க்கரையில்... நலந்தானா? நலந்தானா? இணையத்தள அறிமுகம் மதிப்புரை பிற இணைய இணைப்புகள் சினிமா பதிவுகள் (2000 - 2011) வெங்கட் சாமிநாதன் K.S.Sivakumaran Column அறிஞர் அ.ந.கந்தசாமி கட்டடக்கலை / நகர அமைப்பு வாசகர் கடிதங்கள் பதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல் நலந்தானா? நலந்தானா? வ.ந.கிரிதரன் கணித்தமிழ் பதிவுகளில் அன்று சமூகம் கிடைக்கப் பெற்றோம்! விளையாட்டு நூல் அறிமுகம் நாவல் மின்னூல்கள் முகநூற் குறிப்புகள் எழுத்தாளர் முருகபூபதி சுப்ரபாரதிமணியன் சு.குணேஸ்வரன் யமுனா ராஜேந்திரன் நுணாவிலூர் கா. விசயரத்தினம் தேவகாந்தன் பக்கம் முனைவர் ர. தாரணி பயணங்கள் 'கனடிய' இலக்கியம் நாகரத்தினம் கிருஷ்ணா பிச்சினிக்காடு இளங்கோ கலாநிதி நா.சுப்பிரமணியன் ஆய்வு த.சிவபாலு பக்கம் லதா ராமகிருஷ்ணன் குரு அரவிந்தன் சத்யானந்தன் வரி விளம்பரங்கள் 'பதிவுகள்' விளம்பரம் மரண அறிவித்தல்கள் பதிப்பங்கள் அறிமுகம் சிறுவர் இலக்கியம் பதிவுகளில் தேடுக! அண்மையில் வெளியானவை ஆய்வு: நீலகிரி படகர்களும் வெள்ளியும் ஒரு குறியீட்டியல் நோக்கு “பெள்ளிய கம்புக ஒரெயலி” விரைவில் 'பதிவுகள்' இணைய இதழ் புதிய வடிவமைப்பில்...... கருத்துக்கள் சங்கமித்த மல்லிகை ஜீவா நினைவேந்தல்! முரண்அறுத்து முன்னோக்கிச்செல்லும் இயக்கம்! எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி! சிறுகதை: அம்மாவின் எண்பதாவது பிறந்ததின உரை ஆய்வு: புறநானூற்றில் வானவியல் செய்திகள் நவீன வாழ்வின் உறவுகளும், உறவுச்சிக்கல்களும்: வி.சபேசனின் ‘துணை’ குறும்படம் தொடர்பாக ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்! கவிதை: எமக்கும் கீழே தட்டையர் கோடி! (நூல் அறிமுகம்) தொன்மத்தின் மீதான காமம் : தேவகாந்தனின் “மேகலை கதா” வை முன்வைத்து சில குறிப்புகள்! பதிப்பாய்வுகள் - பேசுபவர்: பேராசிரியர் முனைவர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் இணையவழி நினைவரங்கு பத்திரிக்கைச் செய்தி: திருப்பூரில் புத்தகக் கண்காட்சி Yes We Can அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்! கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது. சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன. மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க... நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW' வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்' தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH விளம்பரம் செய்யுங்கள் வீடு வாங்க / விற்க 'பதிவுகள்' இணைய இதழின் மின்னஞ்சல் முகவரி ngiri2704@rogers.com பதிவுகள் (2000 - 2011) பதிவுகளின் அமைப்பு மாறுகிறது.. வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள் வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக.. நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் - மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8 நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2 வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு! எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3 நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு! 1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T பதிவுகள் - ISSN # 1481 - 2991 எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி! பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு! 'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி. பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள் பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி. பதிவுகள் (Pathivukal- Online Tamil Magazine) 'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்! | ISSN 1481 - 2991 ஆசிரியர்: வ.ந.கிரிதரன் Editor-in - Chief: V.N.Giritharan "அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்" "Sharing Knowledge With Every One" ஆசிரியர்: வ.ந.கிரிதரன் மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com 'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com 'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com 'பதிவுகள்' ஆலோசகர் குழு: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் (கனடா) பேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு) பேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்) எழுத்தாளர் லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா) அடையாளச் சின்ன வடிவமைப்பு: தமயந்தி கிரிதரன் 'Pathivukal' Advisory Board: Professor N.Subramaniyan (Canada) Professor Durai Manikandan (TamilNadu) Professor Kopan Mahadeva (United Kingdom) Writer L. Murugapoopathy (Australia) Logo Design: Thamayanthi Girittharan பதிவுகள்.காம் மின்னூல்கள் பதிவுகள்.காம் மின்னூல்கள் Yes We Can books_amazon வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க https://www.amazon.ca/dp/B08TGKY855 வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க... நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW' ' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/ வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்' தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்! கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது. சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன. மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்... அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. https://www.amazon.ca/dp/B08V1V7BYS/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%85.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&qid=1611674116&sr=8-1 'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி) 'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TZV3QTQ An Immigrant Kindle Edition by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. https://www.amazon.ca/dp/B08T6QJ2DK America Kindle Edition by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. https://www.amazon.ca/dp/B08T6186TJ No Fear Shakespeare சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு: No Fear Shakespeare நூலகம் வ.ந.கிரிதரன் பக்கம்! 'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/ ஜெயபாரதனின் அறிவியற் தளம் எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே Wikileaks நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை https://www.amazon.ca/dp/B08T8K2H3Z நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2 வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு! எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3 நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு! 1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்! கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது. சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன. மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு! வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக: நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் - மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8 நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள்? அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை? ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும் புது கட்டளை விதியை இணை மற்றும் அல்லது அல்ல Limit results to: சேமகம்? OISE Library Thomas Fisher Rare Book Library, University of Toronto Trinity College Archives University of St Michael's College Archives University of St. Michael's College, John M. Kelly Library, Special Collections University of Toronto Archives and Records Management Services University of Toronto Media Commons Archives University of Toronto Mississauga Library, Archives & Special Collections University of Toronto Music Library University of Toronto Scarborough Library, Archives & Special Collections Victoria University Archives Victoria University Library - Special Collections உயர்மட்ட விவரணம் முடிவுகளை [இதன்] படி வடிகட்டுக: விவரிப்பு மட்டம் சேர்வு Collection File Fonds உருப்படி Manuscript Collection Series Sous-fonds Subseries Digital object available ஆம் இல்லை உதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது உயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும் திகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக ஆரம்பம் முடிவு மேற்படிவான துல்லியமான Use these options to specify how the date range returns results. "Exact" means that the start and end dates of descriptions returned must fall entirely within the date range entered. "Overlapping" means that any description whose start or end dates touch or overlap the target date range will be returned. அச்சு முன்காட்சி View: ஆல் வகைப்படுத்துக: ஆரம்பத் திகதி திகதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது தலைப்பு பொருத்தம்/இயைபு? அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி முடிவு திகதி திசை/ நோக்கம்/ ஏவுரை?: ஏறுமுகமான/ ஏறுநிரை? இறங்குமுகமான Robert Laird Borden Papers நகல்நினைவி இணை CA OTUTF MS COLL 00184 2B Annex Manuscript Collection 1886-1937 The collection consists of correspondence of a political and personal nature, diaries, and miscellaneous documents.
அபுதாபி: உலக கோப்பை டி.20 தொடருக்கான பயிற்சி போட்டி ஒன்றில் நேற்று தென்ஆப்ரிக்கா-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன் குவித்தது. அதிகபட்சமாக பகார் ஜமான் 52 ரன் (28 பந்து) எடுத்தார். பின்னர் களம் இறங்கிய தென்ஆப்ரிக்கா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் வான் டெர் டுசன் ஆட்டம் இழக்காமல் 51 பந்தில் 101 ரன் விளாசினார். பாகிஸ்தான் முதல் போட்டியில் வரும் 24ம் தேதி இந்தியாவுடன் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது. துபாயில் நேற்று நடந்த மற்றொரு பயிற்சி போட்டியில் ஆப்கானிஸ்தான்-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆப்கன் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய வெஸ்ட்இண்டீஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களே எடுத்தது. இதனால் 56 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றது. Related Stories: மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இந்தியா-நியூசிலாந்து மோதும் 2வது டெஸ்ட் நாளை தொடக்கம்: கோஹ்லி வருகையால் கல்தா யாருக்கு? டோக்கியோ ஒலிம்பிக்சால் மதிப்பு ஓய்வு பெற்றார் கோன்டா சிந்து, ஸ்ரீகாந்த் வெற்றி கால்பந்தில் இருந்து கிரிக்கெட் சில்லி பாயின்ட்... ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா புரோ கபடி அட்டவணை அறிவிப்பு ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்திய அணி ஐபிஎல் பொது ஏலத்திற்கு அதிகபட்சமாக 72 கோடியை தக்க வைத்துள்ள பஞ்சாப்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் வசம் 68 கோடி வங்கதேசத்துடன் முதல் டெஸ்ட் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி 204 ரன்னில் சுருண்டது இலங்கை துபாய் ஜிம்னாஸ்டிக் சென்னை மாணவிக்கு வெண்கலம் உலகின் சிறந்த கால்பந்து வீரர் 7வது முறையாக மெஸ்ஸிக்கு பலோன் டி’ஆர் விருது டெஸ்ட் விக்கெட் வேட்டை: அஷ்வின் 3வது இடம் மனாமா சேலஞ்சர் டென்னிஸ்: ராம்குமார் சாம்பியன் நூலிழையில் தப்பிய நியூசிலாந்து: முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது: இந்தியா ஏமாற்றம் கான்பூர் டெஸ்ட் : ஸ்போர்ட்டிங் ஆடுகளம் தயாரித்த மைதான குழுவுக்கு ரூ.35,000 பரிசளித்தார் ராகுல் டிராவிட்
வகை அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள் கச்சாய் அ.த.க பாடசாலை http://www.kachgtms.sch.lk/web இணையம் Post Views: 114 1942 வரையில் கச்சாய் பாலாவிக் கிராமங்களிடையே ஓர் அமெரிக்க மிஷன் சிறிய பாடசாலை மட்டுமே இயங்கி வந்தது. இங்குள்ள மக்களில் பெரும்பான்மையோர் சைவசமயத்தவர். மிஷன் பாடசாலையில் கல்வி புகட்டும் இருஆசிரியர்களும் மிஷனைச் சேர்ந்தவர்களாதலால் இங்கு கற்கும் மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். ஆதலால் இங்குள்ள பெற்றோர்கள் சிலர் முன்னின்று சைவப்பாடசாலை திறப்பதற்கு ஆலோசித்தனர். இந்து மகாசபையில் அக்காலத்திலிருந்த தலைவர் திரு. இராசரத்தினம் என்பவரின் ஆலோசனையைப் பெற்று பாடசாலை ஒன்றை அமைப்பதற்கான நிர்வாகசபை ஒன்றை உருவாக்கினர். இதில் தலைவர் – க.கணபதிப்பிள்ளை செயலாளர் – செ.பரராஜசேகரம் பொருளாளர் – சு.கந்தையா நிர்வாகசபை உறுப்பினர் – சின்னையா, கந்தையா, புண்ணியர், குமாரவேலு, சிதம்பரப்பிள்ளை, வேலு(ஐயா), முருகேசு நிர்வாகசபை செயலாளர் செ.பரராஜசேகரம் கச்சாய் வீதியில் தற்போது பாடசாலை அமைந்துள்ள இடத்துக்காக 12 பரப்பு நிலத்தினை நன்கொடையாக வழங்கினார். ஊரிலுள்ள வசதி படைத்தவரின் நிதி உதவிகள் பெறப்பட்டு 1943ம் ஆண்டில் 20’ x 20’ கொண்ட அறையும் 80’ x 20’ கொண்ட மண்டபமும் கட்டப்பட்டு கிடுகினால் வேயப்பட்டது. பின்னர் இந்து மகாசபையின் உதவியோடு கிணறும், மலசலகூடமும் கட்டப்பட்டன. மாணவர்களும் வந்து கல்வி கற்கத் தொடங்கினர். கச்சாய் வடக்கைச் சேர்ந்த க. கணபதிப்பிள்ளை எனும் பயிற்றப்பட்ட ஆசிரியரும் க. நடராசா, ஆ. இராசையா ஆகியோரும் கற்பித்தலில் ஈடுபட்டனர். இக்காலத்தில் இந்துமாசபையின் உதவி நன்கொடை பெறுவதற்காக அரசில் பதிவு செய்யப்பட்டது. 75% மாணவர்கள் இப்பாடசாலையிலும் 25% மாணவர்கள் மிஷன் பாடசாலையிலும் கற்றனர். பயிற்றப்படாத வேறு ஆசிரியர்களும் காலத்திற்கு காலம் கற்பிக்க வந்து போயினர். 01.09.1947 இல் மிஷன் பாடசாலையை அரசாங்கம் பொறுப்பேற்றது. 01.05.1949 இல் வித்தியாதரிசியின் ஆலோசனையின் படி இந்துப்பாடசாலையும் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்பே இருபாடசாலைகளும் ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்கத்தொடங்கியது. பாலர் வகுப்புக்கள் மிஷன் பாடசாலையிலும் மேல்வகுப்புக்கள் தற்போதைய பாடசாலை இருக்கும் இடத்திலும் இயங்கி வந்தன. அப்போது மிஷன் பாடசாலையில் பொறுப்பாக இருந்த P. வேதநாயகம் என்பவரே இணைந்த பாடசாலையின் அதிபராகக் கடமையேற்றார். மாணவர் தொகை அதிகரித்த போதும் 4 ஆசிரியர்கள் மாத்திரமே கற்பித்தனர். பாடசாலையின் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படவில்லை. 01.01.1957 இல் ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்று வரத்தொடங்கினர். 03.06.1957 இல் P. வேதநாயகம் இளைப்பாறிச்செல்ல உதவி ஆசிரியரான மு. வேதவனம் என்பவர் பாடசாலையைப் பொறுப்பேற்றார். 04.09.1957 இல் திரு.மு.சி. பதஞ்சலி அவர்கள் அதிபராகக் கடமையேற்றார். அதன் பின்னர் பாடசாலை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெறத்தொடங்கியது. மாணவர் தொகையும் அதிகரிக்க மேல்வகுப்புக்களும் நடாத்தப்பட்டன. 1985 இல் முதன்முதலாக அரச பொதுப்பரீட்சையில் மாணவர்கள் தோற்றினர். இக்காலப்பகுதியிலேயே அதிபர் சி. பதஞ்சலி அவர்களால் பாடசாலைக் கீதம் ஆக்கப்பட்டது. 1985 இல் 100’ x 20’ மண்டபம் அரசாங்கத்தால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. இக்காலப்பகுதியிலேயே வர்த்தகரான கச்சாயைச்சேர்ந்த முருகேசு அவர்களால் 20’ x 20’ கொண்ட அதிபர் நிர்வாக அறையும் பெரிய வெளிக்கேற்றும் போடப்பட்டது. 1960 இல் தெற்கு மண்டபம் விஞ்ஞான அறையாக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கிழக்குப்பக்கமாக 20 x 80’ மண்டபமும் 20’ x 10’ களஞ்சிய அறையும் அமைக்கப்பட்டது. 1966 ஆம் ஆண்டளவில் மாணவர் தொகை 400 வரை அதிகரித்தது. 06.01.1966 இல் திரு.சி. பதஞ்சலி அவர்கள் மாற்றலாகி தம்பிராசா அவர்கள் அதிபராக வந்தார். இக்காலத்தில் சங்கீத ஆசிரியரான க. குமாரசாமி அவர்களின் ஊக்குவிப்பாலும் ஏனையோரின் முயற்சியாலும் 27’ x 15’ கொண்ட முத்தமிழ்க் கலையரங்கு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 07.07.1968 இல் சி. பதஞ்சலி அவர்கள் மறுபடியும் அதிபராக கடமையேற்றார். இதுவரையில் பாடசாலைக்கான விளையாட்டிடம் இல்லாமை பெருங்குறையாக இருந்தது. 1968 இல் பாடசாலைக்கு தெற்குப்புறத்திலுள்ள கனகரத்தினம் என்பவரின் 12 பரப்புக்காணி விலைகொடுத்து வாங்கப்பட்டு செப்பனிடப்பட்டது. 1970 இல் குறித்த விளையாட்டிடத்தின் கிழக்குப்பக்கமாக சின்னப்பொடி வேலு(ஐயா) என்பவரின் முயற்சியால் 4 பரப்புக்காணி நன்கொடையாக (சாம்பசிவம் பெண் ஞானம்பிகை) பெறப்பட்டது. இதற்குப்பின்னர் ஆண்டுதோறும் பெரியளவில் விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றது. மற்றும் கச்சாய் அ.த.க பாடசாலை, வருடந்தோறும் கலைவிழாக்கள், சமயவிழாக்கள், பரிசில்விழா என்பனவும் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
Lunar Eclipse | சந்திர கிரகணம் ஏன் ஏற்படுகிறது? ஜோதிடம் ரீதியான காரணங்கள் என்னென்ன? | Why does a lunar eclipse occur? What are the astrological reasons? – News18 Tamil ஆன்மிகம் CHANGE LANGUAGE தமிழ் ENGLISHहिन्दी मराठीગુજરાતીঅসমীয়া ಕನ್ನಡ বাংলা മലയാളം తెలుగు ਪੰਜਾਬੀ اردو ଓଡ଼ିଆ WATCH LIVE TV DOWNLOAD APP FOLLOW US ON Trending Topics :#மழை#பிக்பாஸ்#கிரைம்#பெண்குயின் கார்னர் தமிழ்நாடு சினிமா ராசிபலன் லைஃப்ஸ்டைல் விளையாட்டு இந்தியா உலகம் வணிகம் ஆன்மிகம் Live TV தமிழ்நாடு சினிமா ராசிபலன் லைஃப்ஸ்டைல் விளையாட்டு இந்தியா உலகம் வணிகம் ஆன்மிகம் Live TV Latest News மீம்ஸ் டெக் ஆட்டோ வேலை கல்வி ஆல்பம் வீடியோ Explainers Trending Games Win 1 Lakh – MC PRO Contest #CryptoKiSamajh Latest News மீம்ஸ் டெக் ஆட்டோ வேலை கல்வி ஆல்பம் வீடியோ Explainers Trending Games Win 1 Lakh – MC PRO Contest #CryptoKiSamajh Choose your district உங்கள் மாவட்டத்தைத் தேர்வுசெய்க கோயம்புத்தூர் மதுரை திருச்சி தேனி ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் கன்னியாகுமரி நாமக்கல் தஞ்சாவூர் புதுக்கோட்டை HOME » NEWS » spiritual » Lunar Eclipse | சந்திர கிரகணம் ஏன் ஏற்படுகிறது? ஜோதிடம் ரீதியான காரணங்கள் என்னென்ன? Lunar Eclipse | சந்திர கிரகணம் ஏன் ஏற்படுகிறது? ஜோதிடம் ரீதியான காரணங்கள் என்னென்ன? 19ஆம் தேதி வெள்ளிக்கிழமயான இன்று திருக்கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சந்திர கிரகணம் நிகழ்ந்தாலும் இந்தியாவில் பாதிப்பு இல்லை என்பதால் கோவில்களில் நடை அடைக்கப்படாது. ( பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) News18 Tamil Last Updated : November 19, 2021, 10:09 IST Share this: நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ ப்லவ வருஷம் - தக்ஷிணாயனம் - சரத் ரிது - கார்த்திகை மாதம் 03ம் நாள் - வெள்ளிக்கிழமை - பௌர்ணமி திதி - க்ருத்திகை நக்ஷத்ரத்தில் - சந்திர கிரகணம் நிகழ்கிறது. பௌர்ணமி தினமான நவம்பர் 19ஆம் தேதியான இன்று இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் நிகழப்போகிறது. பகுதி கிரகணமாக 3 மணி நேரம், 28 நிமிடங்கள் மற்றும் 24 வினாடிகள் நீடிக்கும். முழு கிரகணமாக 6 மணி நேரம் 1 நிமிடம் நீடிக்கும். சுமார் 580 ஆண்டுகளில் இது போன்ற நீண்ட கிரகணம் வந்ததில்லை என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். சந்திர கிரகணம் பௌர்ணமி நாளிலும் சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும் நிகழும். பொதுவாக ஆண்டுக்கு இரண்டு சந்திர கிரகணமும் இரண்டு சூரிய கிரகணமும் நிகழும். பொதுவாக இரவு நேரத்தில் வரும் சந்திர கிரகணமும் - பகல் நேரத்தில் வரும் சூரிய கிரகணமும்தான் இந்தியாவில் தெரியும். வெள்ளிக்கிழமையான இன்று நிகழவிருக்கும் சந்திர கிரகணம் தமிழ் பஞ்சாங்கப்படி பகல் நேரத்தில் இந்திய நேரப்படி பகல் 11.30 மணிக்கு தொடங்கி மாலை 5.32 மணி வரை நீடிக்கிறது. 6 மணி நேரம் மிகநீண்ட சந்திர கிரகணம் நிகழப்போகிறது. கிரகணம் ஏன் ஏற்படுகிறது? வானவியலில் சூரியன் அல்லது சந்திரன் மீது ஏற்படும் நிழல்தான் கிரகணம் என கூறுகிறது அறிவியல். சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் பௌர்ணமி நாளிலும் உண்டாகிறது. எல்லா அமாவாசை நாளிலும் சூரிய கிரகணம் ஏற்படாது. எல்லா பௌர்ணமி நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை. சூரியன், பூமி, சந்திரன் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். நவம்பர் 19ஆம் தேதியான இன்று சந்திர கிரகணம் நிகழ உள்ளது. பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால், சந்திரன் பிரகாசம் குறைந்து கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும். ஜோதிட ரீதியாக கிரகணம் என்ன? ஏன் ஏற்படுகிறது? சந்திர கிரகணம் சூர்யனுக்கு நேர் எதிராக 180 டிகிரியில் சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ சேரும் போது ஏற்படும். இந்த வருடம் நிகழும் சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியாததால் யாருக்கும் கிரகண தோஷம் இல்லை. எனவே கிரகண பரிகாரம் தேவையில்லை. இருப்பினும் ரிஷபம் - விருச்சிக ராசிக்காரர்கள் தங்களால் முடிந்த தானங்கள் செய்யலாம். கிரகண உச்சம் எப்போது? இந்த வருடம் நிகழும் சந்திர கிரகணம் மிக நீண்டதாக உள்ளது. சந்திர கிரகணம் வெள்ளிக்கிழமையான இன்று 19ம் தேதி இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம் மாலை 5.32 மணி வரை மிகவும் நீண்டு நிகழ்கிறது. அதாவது 6 மணி நேரம் 2 நிமிடங்கள் என நீடிக்கின்றது. இந்த கிரகணத்தின் உச்சம் மதியம் 2மணி 32 நிமிடத்தில் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திர கிரகணம் எந்த நாட்டில் தெரியும்? இந்த சந்திர கிரகணத்தை அலாஸ்கா மற்றும் ஹவாய் போன்ற பகுதிகளில் நவம்பர் 18ம் தேதி வியாழக்கிழமை (இந்திய தேதி 19ம் தேதி நவம்பர் - வெள்ளிக்கிழமை) பார்க்க முடியும். மேற்கு ஆப்ரிக்கா, மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பகுதிகளை உள்ளடக்கிய சில பகுதிகளிலும் கிரகணம் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் வட மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் பகுதி சந்திர கிரகணம் நன்றாகத் தெரியும் எனவும் வட கிழக்கு ஐரோப்பா, ரஷ்யா போன்ற பகுதிகளில் மிகவும் தெளிவாக இந்த பகுதி சந்திர கிரகணம் பார்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது? இந்தியாவைப் பொறுத்தவரை, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாமின் வடகிழக்குப் பகுதிகளில் கிரகணம் மிகக் குறுகிய நேரத்திற்குத் தெரியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 6 மணி நேரம் நிகழப்போகும் மிகநீண்ட சந்திர கிரகணம் கடந்த 1440ம் ஆண்டில் நிகழ்ந்தது. இது போன்ற நீண்ட கிரகணம் அடுத்து 2669ம் ஆண்டில் தான் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க... இன்று திருகார்த்திகை தீபத்திருவிழா... விரதம் அனுஷ்டிப்பது எப்படி? கோவிலுக்குச் செல்லலாமா? 19ஆம் தேதி வெள்ளிக்கிழமயான இன்று திருக்கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சந்திர கிரகணம் நிகழ்ந்தாலும் இந்தியாவில் பாதிப்பு இல்லை என்பதால் கோவில்களில் நடை அடைக்கப்படாது. அனைத்து கோவில்களிலும் மகா தீபத்திருவிழா நடைபெற உள்ளது. வீடுகளிலும் விளக்கேற்றி வழிபடுவார்கள். கிரகண தோஷம் ஏற்பட வாய்ப்பு இல்லை. அடுத்த கிரகணம் சூர்ய கிரகணம்? டிசம்பர் 04ஆம் தேதி கார்த்திகை 18ஆம் தேதியன்று இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நிகழப்போகிறது. சனிக்கிழமையன்று காலையில் 10.59 மணி முதல் பிற்பகல் 03.07 மணிவரை கேட்டை நட்சத்திரத்தில் நிகழும் இந்த கேது கிரகஸ்த முழு சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. இதற்கு அடுத்த சந்திர கிரகணம் 2022 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அன்று தெரியும். இது முழு சந்திர கிரகணமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க... திருவண்ணாமலையில் மகா தீபம் எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்களும் Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube Published by:Vaijayanthi S First published: November 19, 2021, 10:09 IST Astrologylunar eclipse புகைப்படம் ... ... ... Lunar Eclipse | சந்திர கிரகணம் ஏன் ஏற்படுகிறது? ஜோதிடம் ரீதியான காரணங்கள் என்னென்ன? கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவ நாம் பூஜை அறையில் எந்த மாதிரியான சுவாமி படங்களை வைக்கலாம்? சிவராத்திரியில் சிவனை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்! பிரதோஷத்தின் வகைகளும்... அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் பலன்களும்... இன்று கார்த்திகை மாத பிரதோஷம்... சிவனை வணங்கினால் கஷ்டங்கள் தீரும்... Panchangam : இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (டிசம்பர் 02, 2021) சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்... தேவஸ்தானம் சூப்பர் அறிவிப்பு ஏழுமலையான் தரிசனத்தை பக்தர்கள் தள்ளி வைக்கவும் - தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு Tirupati | திருச்சானூர் பிரமோற்சவம் 2ஆம் நாள்... காலை பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளிய பத்மாவதி தாயார்... சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி அறிவிப்பு... Tirupati | திருப்பதி மலைப்பாதையில் இன்று ஏற்படவிருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு... திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீப கொப்பரை இறக்கப்பட்டது... Latest Story Links Trending Tag Latest Story covid-19PuducherryVijay tvActor VikramLoveTechnologyBigg Boss Tamil 5zee tamilViral VideocoronaCoronaVirusCaptain Virat KohliHusband WifeLoveADMK
இஸ்ரேலிய ராணுவத்தினருக்கும் பாலத்தீன போராளிகளுக்கும் இடையே காசா பகுதியில் கடுமையாக தாக்குதல் நடைபெற்று வருகிறது. பல தசாப்தங்களாக இஸ்ரேல் மற்றும் பாலத்தீனியத்திற்கு இடையே மோதல்கள் நடந்து கொண்டிருந்தாலும், இந்த சமீபத்திய வன்முறை ஒரு மாதகால பதற்றத்தின் ஒரு பகுதி. இது எவ்வாறு தொடங்கியது? பாலத்தீனம் என்னும் மத்திய கிழக்கின் அந்த பகுதியை ஆண்டுவந்த ஓட்டோமான் அரசாட்சியை முதலாம் உலகப் போரில் வீழ்த்திய பின், அந்த பகுதி பிரிட்டனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அந்த பகுதியில் யூத சிறுபான்மையினரும், அரபு பெரும்பான்மையினரும் குடிபுகுந்தனர். பாலத்தீனத்தில் உள்ள யூதர்களுக்கு, "தேசியப் பகுதி" ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற பொறுப்பை உலக நாடுகள் பிரிட்டனுக்கு வழங்கின. இதில்தான் பதற்றம் தொடங்கியது. யூதர்களைப் பொறுத்தவரை அது அவர்கள் பூர்வீகம். ஆனால் பாலத்தீனிய அரபு மக்களும் அந்தப் பகுதிக்கு சொந்தம் கொண்டாடினர், இந்த நடவடிக்கைக்கு பெரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். 1948ஆம் ஆண்டு மார்ச் மாதம் அரபு லேஜியன் படைகள், யூத தற்காப்பு படையான ஹகானா மீது தாக்குதல் நடத்திய காட்சி. 1948ஆம் ஆண்டு மார்ச் மாதம் அரபு லேஜியன் படைகள், யூத தற்காப்பு படையான ஹகானா மீது தாக்குதல் நடத்திய காட்சி. ஐரோப்பாவில் துன்புறுத்தலில் இருந்து தப்பி, இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியில் நடந்த ஹாலோகாஸ்ட் படுகொலைகளில் இருந்து தப்பி, தாயகம் வேண்டி 1920 - 40 கால கட்டத்தில் அங்கு யூதர்களின் வருகை அதிகரித்தது. யூத அரபு மக்களுக்கு இடையேயும், பிரிட்டனுக்கு எதிராகவும் வன்முறைகள் வெடித்தன. 1947ஆம் ஆண்டு பாலத்தீனம் யூதர் மற்றும் அரபு பகுதி என இரண்டாக மாற ஐநா வாக்களித்தது. ஜெருசலேம் சர்வதேச நகரமானது. இந்த திட்டம் யூதத் தலைவர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் அரபு தரப்பில் இது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதை அமல்படுத்தவும் இல்லை. இஸ்ரேல் மற்றும் `பேரழிவின்` தொடக்கம் 1948ஆம் ஆண்டு இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட இயலாத பிரிட்டன் ஆட்சியாளர்கள் அந்த பகுதியைவிட்டு வெளியேறினர். யூத தலைவர்கள் இஸ்ரேல் உருவானதாக அறிவித்தனர். அதை பாலத்தீனத்தில் பல்வேறு மக்கள் எதிர்த்தனர். அண்டை நாடுகளை சேர்ந்த படைகள் படையெடுத்து வந்தன. இஸ்ரேல் - காசா: தீவிரமாகும் மோதலால் போர் மூளும் அச்சத்தில் மக்கள் ரமலான் சமயத்தில் இஸ்ரேல் - பாலத்தீன தரப்பு 3வது இரவாக மோதல்: என்ன நடக்கிறது? ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் அந்த பகுதியை விட்டு தப்பித்து சென்றனர். பலர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அல் நக்பமா அல்லது பேரழிவு என்று அவர்களால் இது அழைக்கப்படுகிறது. போர் நின்ற ஒரு வருடத்திற்கு பிறகு அந்த பகுதியை பெரும்பான்மையாக இஸ்ரேல் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. ஜோர்டான் மேற்கு கரை என்னும் இடத்தை ஆக்கிரமித்தது. எகிப்து காசாவை ஆக்கிரமித்தது. ஜெருசலேத்தின் மேற்கில் இஸ்ரேலிய படைகள் கிழக்கில் ஜோர்டானிய படைகள் என பிரிக்கப்பட்டது. ஏனென்றால் அங்கு அமைதி ஒப்பந்தம் ஒன்று ஏற்படவே இல்லை. ஒவ்வொரு தரப்பும் பிற தரப்பின் மீது குற்றம் சுமத்தியது. அடுத்த பல ஆண்டுகளுக்கு அங்கு போர்களும் சண்டைகளும் தொடர்ந்தன. 1967ஆம் ஆண்டு நடைபெற்ற மற்றொரு போரில், கிழக்கு ஜெருசலேத்தையும், மேற்கு கரையையும், சிரிய கோலன் ஹைட்சின் பெரும்பான்மை பகுதியையும், காசா மற்றும் எகிப்திய சினாய் தீபகற்பத்தையும் இஸ்ரேல் ஆக்கிரமித்தது. பெரும்பாலான பாலத்தீனிய அகதிகள், அவர்களின் சந்ததியினர் காசா மற்றும் மேற்கு கரையிலும், அண்டை நாடுகளான ஜோர்டான், சிரியா மற்றும் லெபனானிலும் வசிக்கின்றனர். இஸ்ரேல் - பாலத்தீனம்: புதிய சண்டைகளுக்கு வித்திடும் பழைய சிக்கல்கள் ரமலான் நோன்பு: கொரோனாவுக்கு மத்தியில் இஸ்லாமியர்கள் கடைப்பிடிப்பது எப்படி? ஆனால் இந்த அகதிகளோ அல்லது அவர்களின் குடும்பத்தினரோ அவர்களின் வீடுகளுக்குத் திரும்ப இஸ்ரேல் அனுமதிக்கவில்லை. இது நாடு யூத நாடாக இருப்பதற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என இஸ்ரேல் தெரிவிக்கிறது. இஸ்ரேல் காசாவிலிருந்து வெளியேற்றப்பட்டாலும் மேற்குக் கரையை இன்றும் ஆக்கிரமித்துள்ளது. மேற்குக் கரையை ஐநா ஓர் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியமாகவே இன்றும் பார்க்கிறது. 1967ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறு நாள் போருக்கு பிறகு இஸ்ரேலிய படைகள் கிழக்கு ஜெருசலேமை கைப்பற்றிய பிறகு வருகை தரும் இஸ்ரேலிய ராணுவ 1967ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறு நாள் போருக்கு பிறகு இஸ்ரேலிய படைகள் கிழக்கு ஜெருசலேமை கைப்பற்றிய பிறகு வருகை தரும் இஸ்ரேலிய ராணுவ கமாண்டர்கள். இஸ்ரேல் ஜெருசலேம் முழுவதையும் தனது தலைநகர் என்று கூறுகிறது. பாலத்தீனம் கிழக்கு ஜெருசலேத்தை தனது எதிர்கால பாலத்தீனிய நாட்டின் தலைநகராக கருதுகிறது. இஸ்ரேல் முழு நகரையும் உரிமை கொண்டாடுவதை அங்கீகரித்துள்ள வெகுசில நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. கடந்த 50 ஆண்டுகளில் இந்த பகுதிகளில் இஸ்ரேல் குடியிருப்புகளை நிறுவியது. தற்போது அங்கு 6 லட்சத்துக்கும் அதிகமான யூதர்கள் வசிக்கின்றனர். இது சர்வதேச சட்டங்களின்படி தவறு என்றும் அமைதிக்கு தடையாக உள்ளது என்றும் பாலத்தீனம் கூறுகிறது. ஆனால் இஸ்ரேல் அதை மறுக்கிறது. தற்போது என்ன நடக்கிறது? கிழக்கு ஜெருசலேம், காசா மற்றும் மேற்கு கரையில் வசிக்கும் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனியர்களுக்கு இடையே அவ்வப்போது பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பாலத்தீன தீவிரவாத குழுவான ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ளது காசா. இந்த குழு இஸ்ரேலுடன் பலமுறை சண்டையிட்டுள்ளது. ஹமாஸ் குழுவினருக்கு ஆயுதம் செல்வதை தடுக்க இஸ்ரேல் மற்றும் எகிப்து காசா எல்லைகளை தீவிரமாக கட்டுப்படுத்தி வருகின்றன. காசா மற்றும் மேற்கு கரையில் உள்ள பாலத்தீனர்கள், இஸ்ரேலின் நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளால் தங்களுக்கு துயரங்கள் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். ஆனால் இஸ்ரேல் பாலத்தீனத்தின் வன்முறையிலிருந்து தங்கள் நாட்டை காத்துக் கொள்ளவே நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் முஸ்லிம்களின் புனித மாதமான ரமலானின் தொடக்கத்திலிருந்து அங்கு பதற்றம் அதிகரித்தது. இரவு நேரங்களில் போலீசாருக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. கிழக்கு ஜெருசலேமில் சில பாலத்தீனிய குடும்பங்கள் வெளியேற அச்சுறுத்தப்படுவதும் பதற்றத்தை அதிகரித்தது. முக்கிய பிரச்னைகள் என்ன? இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் என இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்படாத பல விஷயங்கள் உள்ளன. பாலத்தீன அகதிகள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், மேற்கு கரையில் உள்ள யூதக் குடியிருப்புகள் அகற்றப்பட வேண்டுமா, இருதரப்பும் ஜெருசலேத்தை பகிர்ந்து கொள்ள வேண்டுமா? இது எல்லாவற்றையும்விட சிக்கலான ஒன்று உள்ளது. இஸ்ரேலுக்கு பக்கத்தில் பாலத்தீன நகரம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பது போன்ற பல பிரச்னைகள் இருதரப்பிலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அமைதி பேச்சுவார்த்தைகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்றன. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும்? சுருக்கமாக சொல்லப்போனால் இந்த பிரச்னைக்கு அவ்வளவு சீக்கிரத்தில் முடிவு எட்டப்போவதில்லை. டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்த சமயத்தில் அமைதி திட்டம் ஒன்று தயார் செய்யப்பட்டது. இது `நூற்றாண்டுக்கான ஒப்பந்தம்` என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு வர்ணித்திருந்தார். ஆனால் அது ஒருதலைப் பட்சமாக இருப்பதாக பாலத்தீனர்களால் நிராகரிப்பட்டது. இந்த கடினமான பிரச்னையை தீர்க்க இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளும் ஒரு அமைதி ஒப்பந்தம் ஏற்பட வேண்டும். அதுவரை இந்த சண்டை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
Colombo (News 1st) பொலன்னறுவை பகுதியில், எலிக் காய்ச்சலினால் கடந்த 3 வாரங்களுக்குள் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள், எலிக் காய்ச்சலினால் 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. எலிக்காய்ச்சலினால் பீடிக்கப்பட்டவர்கள், உரிய வகையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளாமையினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலன்னறுவை சுகாதார சே​வை பணிப்பாளர், டொக்டர் சரத் ஜயசிங்க தெரிவித்துள்ளார். இந்தநிலையில், எலிக்காய்ச்சல் தொடர்பில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் டொக்டர் சரத் ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு வடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை தமிழ் அலை 2004.01.01 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது: (முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார். நூலகம்:277 ‎ (← இணைப்புக்கள்) (முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார். "https://www.noolaham.org/wiki/index.php/சிறப்பு:WhatLinksHere/தமிழ்_அலை_2004.01.01" இருந்து மீள்விக்கப்பட்டது
பிளஸ்-2 முடிச்சாச்சு. நேற்று சிறப்பாக இயங்கிய துறை இன்று வரவேற்பு குறைந்திருக்கும். ஆனால் சில துறைகளுக்கு எப்போதும் சந்தையில் மவுசு குறைவதில்லை. அப்படியான துறைகளில் ஒன்றுதான், தணிக்கைத்துறையும். முந்தைய பகுதியில் சிஏ (CA) படிப்பின் முக்கியத்துவம் குறித்து பார்த்தோம். இப்போது அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் சி.எம்.ஏ. (CMA) படிப்பின் முக்கியவத்துவம், சந்தையில் அத்துறைக்கான தேவை குறித்து பார்க்கலாம். சிஎம்ஏ என்றொரு படிப்பும் இருக்கிறதா? இதுவும் தொழில் படிப்புதானா? இரண்டு வினாக்களுக்கும் ஒரே பதில், ஆம் என்பதுதான். பட்டய கணக்காளர் (சிஏ) படிப்பு எந்தளவுக்கு மிகவும் தனித்துவம் வாய்ந்த தொழில்படிப்போ அதற்கு சற்றும் குறைவில்லாதது சிஎம்ஏ எனப்படும் செலவு மற்றும் மேலாண்மைக் கணக்காயர் படிப்பு ஆகும். இதை ஆங்கிலத்தில், Cost and Management Accountant' (காஸ்ட் அன்டு மேனேஜ்மென்ட் அக்கவுண்டண்ட்) எனலாம். இந்தியாவில் மிக உயரிய பாடப்பிரிவுகளுள் சிஎம்ஏ தொழிற்படிப்பும் ஒன்றாகும். இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்ட் அண்டு மேனேஜ்மென்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா என்பது ஒரு தன்னாட்சி பெற்ற, சட்ட ரீதியான நிறுவனம். சுருக்கமாக ஐசிஎம்ஏஐ. இந்நிறுவனம், 1959ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி, இந்திய பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றி உருவாக்கப்பட்டது. அப்போது முதல் இந்த ஐசிஎம்ஏஐ நிறுவனம் நாட்டின் முன்னேற்றத்திற்கும், தொழில்துறை வளர்ச்சிக்கும் அளப்பரிய சேவைகளை வழங்கி வருகிறது. இதுவரை 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிஎம்ஏக்களை உருவாக்கியுள்ளது. 3 லட்சத்திற்கும் மேற்பட்ட சிஎம்ஏ மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்து வருகிறது. சி.எம்.ஏ.,க்களுக்கு இப்போதும் எதிர்காலம் இருக்கிறதா? இப்படியொரு வினாவே தேவை இல்லாதது. ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால், நம் நாட்டின் தொழில்துறைகளுக்கும், அரசுத்துறை பணிகளுக்கும் இன்றைய நிலையில்கூட இன்னும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட சி.எம்.ஏ.,க்கள் தேவைப்படுகின்றனர். உலகம் முழுவதும் சுமார் இரண்டரை கோடி சிஎம்ஏ., வல்லுநர்களுக்கு உடனடி தேவை இருக்கிறது. இதன்மூலம், இந்த பாடப்பிரிவுக்கு உள்ள முக்கியத்துவம் மற்றும் தேவையை நீங்கள் (மாணவர்கள்) புரிந்து கொள்ள முடியும். பிளஸ்-2 முடித்துவிட்டு நேரடியாக சிஎம்ஏ படிப்பில் சேர முடியுமா? கல்வித்தகுதிகள் என்னென்ன? தாராளமாக படிக்கலாம். ஏற்கனவே சிஏ படிப்பு பற்றி இத்தொடரில் பார்த்துள்ளோம். அதற்கு என்னென்ன கல்வித்தகுதியோ அதேதான் சிஎம்ஏ படிப்புக்கும் அடிப்படைத் தகுதிகள். அதாவது, பிளஸ்2வில் தேர்ச்சி பெற்ற யார் வேண்டுமானாலும் சிஎம்ஏ படிப்பை தேர்வு செய்து படிக்கலாம். சொல்லப்போனால், பிளஸ்-2வில் எந்த பாடப்பிரிவை எடுத்துப் படித்து இருந்தாலும் இப்படிப்பில் சேரலாம். பிளஸ்2 மட்டும் தேர்ச்சி பெற்றவர்கள் சிஎம்ஏ படிப்பில் முதலில் அடிப்படை நிலை எனப்படும் பவுண்டேஷன் தேர்வு எழுத வேண்டியது அவசியம். பட்டப்படிப்பு முடித்தவர்கள் சிஎம்ஏ தொழில்படிப்பில் நேரடியாக இண்டர்மீடியேட் பிரிவில் சேர்ந்து பயில முடியும். சிஏ படிப்பை போல இதிலும் பவுண்டேஷன் கோர்ஸ் இருக்கிறதாக புரிந்து கொள்ளலாமா? ரொம்ப சரியாக சொன்னீர்கள். ஆனால் எல்லோருமே பவுண்டேஷன் கோர்ஸில் சேர்ந்து பயில தேவையில்லை. நாம் மேலே சொன்னது போல, பிளஸ்-2 முடித்தவர்கள் சிஎம்ஏ படிப்பில் சேர்வதற்கு முன்பு, சிஎம்ஏ பவுண்டேஷன் கோர்ஸில்தான் சேர முடியும். சிஎம்ஏ பவுண்டேஷன் என்பதுதான் இப்படிப்பின் அடிப்படை நிலை. இவற்றில் மொத்தம் நான்கு தாள்கள் உள்ளன. தலா 100 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால்தான் தேர்ச்சி பெற முடியும். நான்கு பாடங்களையும் சேர்த்து சராசரியாக 50 சதவீத மதிப்பெண்கள் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். பவுண்டேஷனுக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும்? பவுண்டேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்ததாக இண்டர்மீடியேட் பிரிவில் சேரலாம். ஒரு பி.எஸ்சி., மாணவரால் சிஎம்ஏ படிப்பில் சேர முடியுமா? நிறைய மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இப்படியொரு சந்தேகம் இருக்கிறது. பி.காம்., எம்.காம்., போன்ற வணிகவியல் பட்டப்படிப்புகள் மட்டுமின்றி எந்த ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்களும் சிஎம்ஏ தொழில்படிப்பில் நேரடியாக இண்டர்மீடியட் பயிற்சியில் சேர்ந்து படிக்கலாம். சிஎம்ஏ - இடைநிலை (இண்டர்மீடியேட்): இடைநிலைப் பிரிவில் மொத்தம் 8 பாடங்கள் உள்ளன. அவை குரூப்1, குரூப்2 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் தலா நான்கு பாடங்கள் உள்ளன. இறுதிநிலை தேர்வுகள் எப்போது எழுதலாம்? இண்டர்மீடியட்டில் தேர்ச்சி பெற்றவர்கள், குறைந்தபட்சம் 6 மாதங்கள் பயிற்சி (மொத்த பயிற்சிகாலம் 3 ஆண்டுகள்) முடித்தபின், இறுதிநிலைத் தேர்வை எழுதலாம். இறுதிநிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மீதமிருக்கும் இரண்டரை ஆண்டுகால பயிற்சியைத் தொடரலாம். இறுதிநிலைத் தேர்வுகள்: இவற்றிலும் மொத்தம் 8 தாள்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 100 மதிப்பெண்கள் கொண்டது. இந்த 8 பாடங்களும், தலா 4 பாடங்கள் வீதம் குரூப்1 மற்றும் குரூப்2 என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேவை. ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு பகுதியிலும் சராசரியாக 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருத்தல் அவசியம். இதர பயிற்சிகள் என்னென்ன? 3 ஆண்டுகள் களப்பயிற்சி மட்டுமின்றி, வேறு கட்டாய பயிற்சிகளும் சிஎம்ஏ பயிலும் மாணவர்களுக்கு உண்டு. அவை... * 3 நாட்கள் கொண்ட கம்யூனிகேசன் மற்றும் மென்திறன் பயிற்சி * 100 மணி நேரம் கொண்ட கட்டாய கணினி பயிற்சி * 7 நாள்கள் கொண்ட இண்டஸ்ட்ரி ஓரியண்ட் பயிற்சி * 15 நாள்கள் கொண்ட மாடுலர் டிரெயினிங் பயிற்சி வேலைவாய்ப்புகள் பற்றி சொல்லுங்களேன்? சிஎம்ஏ தேர்ச்சி பெற்றவர்கள், நேரடியாக அமெரிக்காவில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அக்கவுன்டண்ட்ஸ் அமைப்பில் உறுப்பினராக சேரலாம். உலகின் எந்த மூலையிலும் பணியாற்றலாம். அல்லது பட்டய கணக்காளர், மருத்துவர், வழக்கறிஞர் போல சுயமாகவும் பயிற்சி செய்யலாம். அரசு மற்றும் தனியார் வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் தலைவர், நிர்வாக இயக்குநர், தலைமை நிதி அதிகாரி, தலைமைச் செயல் அதிகாரி, நிதிகட்டுப்பாட்டு அலுவலர், நிதி ஆலோசகர், தலைமை உள்தணிக்கை அதிகாரி, பங்கு தணிக்கையாளர், தடயவியல் தணிக்கையாளர், சமகால தணிக்கையாளர், விலை நிர்ணய ஆலோசகர் என பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றும் வாய்ப்புகள் உள்ளன. தொழில்துறையிலும், மறைமுக வரி விதிப்புகளிலும் சிஎம்ஏக்களின் பங்கு இன்றியமையாதது ஆகும். மேலும் கலால் மற்றும் சுங்கத்துறை, நிதி அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், மத்திய போக்குவரத்து அமைச்சகம், நபார்டு வங்கி, டிராய், டிஏவிபி, ஐஆர்டிஏ, ரிசர்வ் வங்கி, ஜவுளித்துறை, பத்திரப்பதிவுத்துறை, மருந்து விலை நிர்ணய ஆணையம் உள்ளிட்ட துறைகளிலும் சிஎம்ஏக்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. சிஎம்ஏ முடித்தவர்களுக்கு ஐசிஎம்ஏஐ நிறுவனமே வளாகத்தேர்வு மூலம் வேலைவாய்ப்புகளையும் பெற்றுத்தருகிறது. இதற்காக தனியாக ஒரு வலைதளம் (www.icmai.in) இயங்குகிறது. குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, அதில் சிஎம்ஏக்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு சார்ந்த அனைத்து தகவல்களும் இத்தளத்தில் வெளியிடப்படுகின்றன. Related Tags student Guide courses accounts மிஸ் பண்ணிடாதீங்க மாணவிக்கு பாலியல் தொல்லை: பள்ளியின் சிலம்பம் பயிற்சியாளர், தாளாளர் கைது! மாவட்ட ஆட்சியரை டேக் செய்து விடுமுறை கேட்ட மாணவர்! மாணவி தற்கொலை: ஆசிரியரை இரண்டு நாட்கள் விசாரிக்க அனுமதி! கரூர் பள்ளி மாணவி தற்கொலை- காவல்துறை கண்காணிப்பாளரிடம் பேசிய ஜோதிமணி எம்.பி.! சார்ந்த செய்திகள் துணை மருத்துவ படிப்புகளுக்கு சேர்க்கை அறிவிப்பு; ஆன்லைனில் அக்.17 வரை விண்ணப்பிக்கலாம்!! மாணவர் வழிகாட்டி: பி.ஏ. பொருளாதாரம் படிச்சாலும் உயரலாம்! #13 மாணவர் வழிகாட்டி: உடனடி வேலைவாய்ப்பை அள்ளித்தரும் டிப்ளமோ நர்சிங் படிப்புகள்! #12 மாணவர் வழிகாட்டி: இன்ஜினியரிங் படிப்பில் இத்தனை பாடப்பிரிவுகளா? வாங்க தெரிஞ்சுக்கலாம்... #11 Trending பாட்டு பாடிக்கொண்டே படகோட்டிய நடிகர் மன்சூர் அலிகான்! ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மனைவியும் மாணவியும் பேசும் ஆடியோ! போலீஸ் விசாரிக்க முடிவு! "பென்சிலை தரமாட்டேங்குறான்" - புகாரளிக்க காவல் நிலையம் வந்த 1ஆம் வகுப்பு மாணவர்கள்! (வீடியோ) அதிகம் படித்தவை நடன இயக்குனர் சிவசங்கர் காலமானார்! 24X7 ‎செய்திகள் ''பூமிக்கு என்னவோ ஆக போகுதோ..?''- பீதியை கிளப்பிய விநோத மேகக்கூட்டம்! 24X7 ‎செய்திகள் தோழியுடன் நெருக்கமாக இருந்த கணவர்... நேரில் கண்ட மனைவி எடுத்த விபரீத முடிவு 24X7 ‎செய்திகள் ஐந்து மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை! 24X7 ‎செய்திகள் நக்கீரன் பரிந்துரைகள் "திருவாசகத்தை படித்துவிட்டு எண்ணத்தை மாற்றிய ஜி.யு.போப்" - தமிழ் வரலாறு பகிரும் நாஞ்சில் சம்பத்! 360° ‎செய்திகள் "சசிகலா சூரியனை பார்த்துதானே குரைத்தார்கள்... இரட்டை இலையை பார்த்து இல்லையே..." - எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொதிக்கும் மின்னல் ரவி! சிறப்பு செய்திகள் "உங்க வேலையை மட்டும் பாருங்க" - ‘ஜெய் பீம்’ சர்ச்சை குறித்து எழுத்தாளர் சுரா பேச்சு! “முதல்வர் வரை சென்றும் பலனில்லை... மீடியா வெளி உலகிற்கு தெரியவைத்தது”-முடிவுக்கு வந்த தாயின் பாசப்போராட்டம்!
டிரான்வெல் கிரக கியர்பாக்ஸ் ஹைட்ராலிக் மோட்டார் மற்றும் நிவாரண வால்வு தொகுதிடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது சிறிய வடிவமைப்பு, குறைந்த எடை, அதிக வேலை அழுத்தம், நல்ல நிலைத்தன்மை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. புதிய கியர் தொழில்நுட்பம் மற்றும் ஹைட்ராலிக் நீண்ட ஆயுளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. வெளியீட்டு முறுக்கு: 7.5-620KNm ஹைட்ராலிக் டிரான்ஸ்மிஷன் டிரைவ்கள் Y தொடர்கள் கட்டுமான பொறியியல், ரயில் இயந்திரங்கள், சாலை இயந்திரங்கள், கப்பல் இயந்திரங்கள், பெட்ரோலிய இயந்திரங்கள், நிலக்கரி சுரங்க இயந்திரங்கள் மற்றும் உலோகவியல் இயந்திரங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒய் 4 சீரிஸ் ஹைட்ராலிக் டிரான்ஸ்மிஷன்களின் வெளியீட்டு வடிவம் ... எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் தயாரிப்பு விவரம் தயாரிப்பு குறிச்சொற்கள் டிரான்வெல் கிரக கியர்பாக்ஸ் ஹைட்ராலிக் மோட்டார் மற்றும் நிவாரண வால்வு தொகுதிடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது சிறிய வடிவமைப்பு, குறைந்த எடை, அதிக வேலை அழுத்தம், நல்ல நிலைத்தன்மை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. புதிய கியர் தொழில்நுட்பம் மற்றும் ஹைட்ராலிக் நீண்ட ஆயுளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. வெளியீட்டு முறுக்கு: 7.5-620KNm கட்டுமான பொறியியல், ரயில்வே இயந்திரங்கள், சாலை இயந்திரங்கள், கப்பல் இயந்திரங்கள், பெட்ரோலிய இயந்திரங்கள், நிலக்கரி சுரங்க இயந்திரங்கள் மற்றும் உலோகவியல் இயந்திரங்களில் ஹைட்ராலிக் டிரான்ஸ்மிஷன் டிரைவ்கள் ஒய் தொடர் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒய் சீரிஸ் ஹைட்ராலிக் டிரான்ஸ்மிஷன்களின் வெளியீட்டு தண்டு பெரிய வெளிப்புற ரேடியல் மற்றும் அச்சு சுமைகளைத் தாங்கும். அவை உயர் அழுத்தத்தில் இயங்கக்கூடும், மேலும் தொடர்ச்சியான வேலை நிலைமைகளின் கீழ் அனுமதிக்கக்கூடிய முதுகுவலி 10MPa வரை இருக்கும். அவற்றின் உறைகளின் அதிகபட்ச அனுமதிக்கக்கூடிய அழுத்தம் 0.1MPa ஆகும். இயந்திர கட்டமைப்பு ஹைட்ராலிக் டிரான்ஸ்மிஷன் ஹைட்ராலிக் மோட்டார், கிரக கியர்பாக்ஸ், டிஸ்க் பிரேக் (அல்லது பிரேக் அல்லாத) மற்றும் பல செயல்பாட்டு விநியோகஸ்தர்களைக் கொண்டுள்ளது. உங்கள் விருப்பங்களுக்கு மூன்று வகையான வெளியீட்டு தண்டு. உங்கள் திட்டங்களுக்கான தனிப்பயனாக்கப்பட்ட மாற்றங்கள் எந்த நேரத்திலும் கிடைக்கும் ஹைட்ராலிக் ட்ராக் டிரைவ்கள் 18000 அதிக வேலை திறன், ஆயுள், சிறந்த நம்பகத்தன்மை, சிறிய வடிவமைப்பு, அதிக வேலை அழுத்தம் மற்றும் ஹை-லோ ஸ்பீடு சுவிட்ச் கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கேஸ்-சுழற்சி வகை டிராவல் டிரைவ்களை கிராலர் அல்லது சக்கரத்திற்குள் நேரடியாக நிறுவ முடியும் என்பது மட்டுமல்லாமல், சாலை தலைப்பு அல்லது அரைக்கும் இயந்திரத்திலும் பவர் டர்னிங் டிரைவ்களுக்கு பயன்படுத்தலாம். கூடுதலாக, எங்கள் இயக்ககங்களின் பரிமாணங்கள் மற்றும் தொழில்நுட்ப செயல்திறன் நெப்டெஸ்கோ, கே.ஒய்.பி, நாச்சி மற்றும் டோங்மியுங் ஆகியவற்றுடன் ஒத்துப்போகின்றன. எனவே, எங்கள் பிராண்டுகள் அந்த பிராண்டுகளின் தயாரிப்புகளுக்கு நல்ல மாற்றாக இருக்கும். இயந்திர கட்டமைப்பு இந்த டிராவல் மோட்டார் உள்ளமைக்கப்பட்ட மாறி இடப்பெயர்வு பிஸ்டன் மோட்டார், மல்டி டிஸ்க் பிரேக், கிரக கியர்பாக்ஸ் மற்றும் செயல்பாட்டு வால்வு தொகுதி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. உங்கள் திட்டங்களுக்கான தனிப்பயனாக்கப்பட்ட மாற்றங்கள் எந்த நேரத்திலும் கிடைக்கும். ஹைட்ராலிக் டிரான்ஸ்மிஷன் இயக்கிகளின் முக்கிய அளவுருக்கள்: மாதிரி மொத்த இடப்பெயர்வு (மிலி / ஆர்) மதிப்பிடப்பட்ட முறுக்கு (என்எம்) வேகம் (ஆர்.பி.எம்) மோட்டார் மாடல் கியர்பாக்ஸ் மாதிரி பிரேக் மாதிரி 16 எம்.பி.ஏ. 20 எம்.பி.ஏ. 55000 55286 110867 142544 0.2-10 எம் 6-2500 சி 79 (i = 22) இசட் 45 67000 66902 134162 172494 0.2-8 எம் 6-3000 80000 77660 155735 200231 0.2-5 எம் 31-350 முந்தைய: ஹைட்ராலிக் ஸ்விங் கிரக கியர்பாக்ஸ் அடுத்தது: ஹைட்ராலிக் வின்ச் ஹைட்ராலிக் டிராவல் மோட்டார் ரிடூசர் ஹைட்ராலிக் டிராவலிங் மோட்டார் தொடர்புடைய தயாரிப்புகள் சீனா மொத்த சீனா உயர் தர சுரங்க பந்து மி ... OEM தனிப்பயனாக்கப்பட்ட சீனாவில் தயாரிக்கப்பட்டது பெக்வெல் 30 எல் பிளாஸ்டி ... ஹைட்ராலிக் வின்ச் ODM சப்ளையர் சீனா Bekwell20-220L PE பிளாஸ்டிக் ஒப் ... சீனாவின் உயர் திறன் ஏசி ஒற்றை பி இல் சிறந்த விலை ... சூடான புதிய தயாரிப்புகள் சீனா தனிப்பயன் பில்ட் ரப்பர் கிரா ...  எதிர்கால வளர்ச்சியின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அதிக செலவு குறைந்த தயாரிப்புகளை தொடர்ந்து உருவாக்குவதற்கும், வாடிக்கையாளர்களுக்கு உயர் தரமான, குறைந்த விலை தயாரிப்புகளை விரைவாக வழங்குவதற்கும் புதுமை மூலம், இலக்கை நாம் இடைவிடாமல் பின்தொடர்வது. சமீபத்திய செய்தி கியர் என்னைனரிங் வேலை பயனுள்ளதாக இருக்கும் 24,06,21 கியர்மோட்டர்ஸ் தொழிற்சாலை மற்றும் சு ... 16,06,21 உலகளாவிய இணைப்பு என்றால் என்ன 16,06,21 கியர்பாக்ஸின் பங்கு 16,06,21 பதிவு எங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.
மகள் வியாட் மற்றும் மிலா குனிஸுக்கு ரகசிய திருமணத்தைப் பற்றி ஆஷ்டன் குட்சர் வெட்கப்படுகிறார் - எல்லன் டிஜெனெரஸ் நிகழ்ச்சி Close எங்களை பற்றி பொழுதுபோக்குத் துறையில் Kraten மேலாண்மை இருந்து சமீபத்திய செய்தி; ஹாலிவுட்டில் சமீபத்திய செய்தி, பிரபல செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் தினசரி மூல. வகைகள் டிவி இசை மற்றவை ஷானியா ட்வைன் Foo, போராளிகள் நாதன் ஆண்டர்சன் இட்ஸ் ஆல் கம்மிங் பேக் டு மீ நவ் குழந்தைகள் ஜானி டெப் சந்தேகம் இல்லை பிரபல பதிவுகள் பாம் ஆண்டர்சன் இந்திய ஆடை ஜெனிபர் லோபஸ் உண்மையான தொலைபேசி எண் ஜேமி டோர்னன் மொட்டையடித்த தலை அன்டோனியோ பண்டேராஸ் மடிக்கணினி gif ஜஸ்டின் பீபர் ஆடம் சாண்ட்லர் நட்சத்திரங்களின் அவசரத்துடன் நடனம் முக்கிய எல்லன் டிஜெனெரஸ் நிகழ்ச்சி மகள் வியாட் மற்றும் மிலா குனிஸுக்கு ரகசிய திருமணத்தைப் பற்றி ஆஷ்டன் குட்சர் வெட்கப்படுகிறார் ஆஷ்டன் குட்சர் புதன்கிழமை தி எலன் டிஜெனெரஸ் ஷோவில் தனது அபிமான 1 மற்றும் ஒன்றரை வயது மகள் வியாட் இசபெல் குட்சர் மற்றும் கடந்த ஜூலை மாதம் மிலா குனிஸுடனான அவரது ரகசிய குறைந்த முக்கிய திருமணத்தைப் பற்றி விவாதித்தார். தொடர்புடைய: ஆஷ்டன் குட்சர் மற்றும்மிலா குனிஸ்ரகசிய விழாவில் புதன்! ஒரு நடனத்துடனான தனது நேர்காணலைத் தொடங்கி, புதிய தொடரின் நட்சத்திரமான தி ராஞ்ச் தனது மகள் நடனமாட எவ்வளவு விரும்புகிறார் என்பதைப் பற்றி பேசுகிறார், குறிப்பாக அவர் தி வீல்ஸ் ஆன் தி பஸ்ஸைப் பாடும்போது மற்றும் விப் நா நாவைக் கேட்கும்போது, ​​அவரது தாயார் அவளுக்குக் கற்பித்ததாகத் தெரிகிறது நகர்கிறது. குட்சர் நகைச்சுவையாக, நான் தி வீல்ஸ் ஆன் தி பஸ் கோ ரவுண்ட் அண்ட் ரவுண்டில் பாடும்போது, ​​அவள் அதை இழக்கிறாள். அதாவது, அது அவளுடைய விஷயம். சக்கரங்கள் சுற்றும்போது அவள் நேசிக்கிறாள். டிஜெனெரஸ் பின்னர் குட்சரிடம் தனது ஸ்னீக்கி திருமணத்தைப் பற்றி தனது தட் ’70 ஷோவுக்கு ஜூலை நான்காம் வார இறுதியில் இணைந்து நடித்தார். இது ஒரு நிஞ்ஜா முயற்சி, குட்சர் புன்னகைக்கிறார். எங்கள் திருமணத்தில் ஹெலிகாப்டர்களை நாங்கள் உண்மையில் விரும்பவில்லை - இது ஒரு நியாயமான கவலை. நான் சமூக ஊடகங்களில் வெவ்வேறு விஷயங்களை இடுகையிட்டுக் கொண்டிருந்தேன், ஏனென்றால் நாங்கள் எங்கள் சபதங்களை ஒருவருக்கொருவர் கத்திக் கொள்ள விரும்பவில்லை, எப்போதும் என்றென்றும் இருக்க வேண்டும்! ’நீங்கள் ஒருபோதும் சொல்லவில்லையா? ' குட்சர் தொடர்கிறார், நாங்கள் அதனுடன் ரேடரின் கீழ் சென்றோம். மற்றவை கிறிஸ்டோபர் சீன் ‘நம் வாழ்வின் நாட்கள்’ வெளியேறுகிறார் கெல்லி ரோலண்ட் கெல்லி ரோலண்ட் பியோனஸ் மற்றும் மைக்கேல் வில்லியம்ஸ் தனது பிறந்த மகன் நோவாவை சந்திக்கிறார் இசை டெய்லர் ஸ்விஃப்ட்டின் புதிய பாடல் குறிப்புகள் ‘சராசரி பெண்கள்’ மற்றும் அவரது ரெஜினா ஜார்ஜ் ஒப்பீடுகள் டான் மான்சினி புதிய ‘சக்கி’ டிவி தொடருக்கான தவழும் டீஸரைப் பாருங்கள் திருமணம் டோனி வால்ல்பெர்க், ஜென்னி மெக்கார்த்தி ஏன் திருமணம் இரண்டாவது முறையாக சிறந்தது டிவி ‘அவுட்லேண்டர்’ நட்சத்திரங்கள் சாம் ஹியூகன் & கைட்ரியோனா பால்ஃப் ‘சீர்குலைக்கும்’ சீசன் 5 இறுதிப் போட்டி: ‘மக்கள் அதிர்ச்சியடையப் போகிறார்கள்’ மைக்கேல்ஸ் டிரம்ப் மெழுகுவர்த்தி காட்சியைப் பற்றி ட்விட்டரில் இருந்து அவதூறாக ஸ்காட் பயோ ஜனாதிபதியிடமிருந்து கத்தினார் மற்றவை ஜேசன் டெருலோ மற்றும் காதலி ஜெனா ஃப்ரூம்ஸ் முதல் குழந்தையை ஒன்றாக எதிர்பார்க்கிறார்கள் மற்றவை ‘உயர்நிலைப்பள்ளி இசை 4 the படைப்புகளில் - அறியப்படாத அனைத்து புதிய நடிகர்களையும் தேடும் தயாரிப்பாளர்கள் இசை ஈவான் மெக்ரிகெரின் மகள் எஸ்தர் தனது இசை அறிமுகத்தை புதிய ஈ.பி. ஜிம்மி ஃபாலன் நடித்த தி டுநைட் ஷோ அலெசியா காரா கோல்ட் பிளேயில் அவர் நடித்த காவிய நகைச்சுவையை நினைவு கூர்ந்தார், ‘இன்றிரவு நிகழ்ச்சியில்’ ‘வளரும் வலிகளை’ செய்கிறார் எஸ்.என்.எல் ‘எஸ்.என்.எல்’: காவியம் ‘ஸ்டார் வார்ஸ்’ ஸ்பூப்பில் ஆடம் டிரைவர் கைலோ ரெனில் மீண்டும் ஒரு முறை வேடிக்கை பார்க்கிறார்
கிழக்கு பதிப்பகத்திலிருந்து இலக்கியப் புத்தகங்கள் வெளியாவது குறைவுதான். இந்த ஆண்டு வெளியான புத்தகங்கள் இவை: இந்திரா பார்த்தசாரதியின் முழுச் சிறுகதைகளின் தொகுப்பு, இரு பாகங்களாக வெளியானது. ஒவ்வொன்றும் விலை ரூ. 300/- வெளியானவுடன் டாக் செண்டரில் வைத்த நிகழ்ச்சியில், இரு தொகுதிகளும் சேர்ந்து ரூ. 150/-க்கு அதிரடி விலையில் வழங்கப்பட்டது! கிட்டத்தட்ட 300 பிரதிகள் (இரு தொகுதிகளும் சேர்ந்து) அன்று விற்றது என்று நினைக்கிறேன். பின்னர் சிங்கப்பூரிலிருந்து ஒரு நண்பர் 50 பிரதிகள் வாங்கிச் சென்றார். முழுத் தொகுதிகளுக்கு எப்போதுமே தனி மதிப்பு உண்டு. ஒட்டுமொத்தமாக ஓர் எழுத்தாளரின் முழுப் பங்களிப்பை, அவரது எழுத்தில் உள்ள மாற்றத்தைக் காண முழுத்தொகுதி அவசியம். விலை எப்போதுமே சிக்கலானது. (கடந்த ஓராண்டில் காகித விலை 20%-க்கும் மேல் ஏறியுள்ளது என்பது இந்தத் தொழிலில் இருப்போருக்குத் தெரிந்த ஒன்று.) இந்தக் காரணத்தால்தான் இரு தொகுதிகளாக அச்சிட்டோம். சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்த இரு தொகுதிகளுக்கும் முக்கியமான இடம் இருக்கும். ஜெயமோகனின் மூன்று புத்தகங்களை இந்த ஆண்டு கொண்டுவருகிறோம். இரண்டு மீள்பதிப்புகள். ஏழாம் உலகம் (நான் கடவுள் சினிமாவுக்கான ஒரு இன்ஸ்பிரேஷன்) தமிழினி வெளியீடாக வந்து அச்சில் இல்லாமல் போனது. அதை ஆண்டின் இடையில் கொண்டுவந்திருந்தோம். விசும்பு என்ற அறிவியல் சிறுகதைகளின் தொகுப்பு எனி இந்தியன் பதிப்பக வெளியிடாக வந்திருந்தது. அதுவும் இப்போது கிழக்கு மீள்பதிப்பாக வெளியாகிறது. இறுதியாக உலோகம், ஜெயமோகனின் இணையத்தளத்தில் வெளியாகி, பரபரப்புடன் பேசப்பட்டது. அதனை பல்ப் ஃபிக்‌ஷன் வெளியீடுபோல, கிரவுன் 1/8 அளவில், அட்டையில் தங்க முலாம் எல்லாம் பூசிக் கொண்டுவருகிறோம். விறுவிறுவெனச் செல்லும் சாகசக் கதை. வெகு நாள்களாகக் கையில் இருந்த மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மருந்து என்ற புதினம் இந்த ஆண்டின் இடையில் வெளியானது. தமிழாக்கியவர், மலையாள மனோரமாவில் வேலை செய்யும் ராமன். பா. ராகவனின் இரு புதினங்கள் வெளியாகின்றன இம்முறை. இலக்கியப்பீடம் பரிசு பெற்ற அலகிலா விளையாட்டு ஒன்று, கல்கியில் தொடர்கதையாக வெளியான கொசு. கதையாக அன்றி, அனுபவக் கட்டுரைகளாக, ஆனால் சிறுகதைக்கு உரிய சுவாரசியத்தை இழக்காமல் இருப்பது அ. முத்துலிங்கத்தின் கட்டுரைகள். அவரது இணையத்தளம், பல பத்திரிகைகளில் அவர் எழுதிய கட்டுரைகள் என அனைத்தையும் தொகுத்து நாங்கள் கொண்டுவரும் புத்தகம் அமெரிக்க உளவாளி. ஜே.எஸ். ராகவன் மாம்பலம் டைம்ஸில் தொடர்ந்து எழுதிவரும் தமாஷா வரிகளின் இந்த ஆண்டுத் தொகுப்பு, அன்புள்ள சண்டைக்கோழியே... என்று வெளியாகிறது. இதற்கு முந்தைய தமாஷா வரிகளின் தொகுப்புகள் இங்கே கிடைக்கின்றன. சுஜாதா புத்தகங்கள் பற்றித் தனியாக எழுதிவிட்டேன். மேலும் இரு பதிவுகள் சுஜாதா புத்தகங்கள் தொடர்பில் வரும். வேறு சில இலக்கியப் புத்தகங்களை இந்த ஆண்டு கொண்டுவர முயற்சித்து, முடியாத நிலையில் உள்ளன. இவை வரும் மாதங்களில் வெளியாகும். Posted by Badri Seshadri at 16:12 4 பின்னூட்டங்கள் Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Saturday, December 25, 2010 எந்திரன் நேற்று எந்திரன் படம் ஒருவழியாகப் பார்த்தாயிற்று. எல்லோரும் மன்மதன் அம்பைக் குத்திக் கிழிக்கும்போது (நடுவில் ஏதோ நந்தலாலா என்று படம் வந்ததாமே?) விடாது எந்திரனைப் பற்றி எழுதியே தீருவது என்று முடிவெடுத்துவிட்டேன். முதலில் ஐஸ்வர்யா ராய்தான் ரோபாட் என்று நினைத்துவிட்டேன். ஆரம்பக் காட்சி முதல், முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாது ஏதோ தேசத்து பொம்மை மாதிரி வந்தார். அவரைப் பார்த்தால் இந்தியர் மாதிரியே தெரியவில்லை. முகத்தில் என்னென்னவோ செய்திருக்கிறார்கள் போல. ஆடல் பாடல் காட்சிகளில்கூட ரசிக்கமுடியவில்லை. சிட்டி கட்டிய கோட்டைக்குள் வசீகரன் நுழைந்துவிட்டான் என்று தெரிந்துகொள்ளும்போதும், பின்னர் மின்சாரம் இன்றி சிட்டியும் பிற ரோபாட்களும் விழுந்து தடுமாறும்போதும் ஒரு தேர்ந்த நடிகையாயிருந்தால் பின்னியிருப்பார். ஐஸ்வர்யா ராயின் நடிப்பைப் பார்த்தால் அழுகைதான் வருகிறது. அம்மணி ரிட்டயர் ஆகிவிடலாம். திரைக்கதை சொதப்பல்கள் நிறைய. ரோபாட்களைச் செய்ய வசீகரனுக்கு இரண்டே இரண்டு குப்பைப் பசங்கள்தான் உதவியாளர் என்றால் சிரிப்புதான் வருகிறது. அதிலும் ஒருத்தன் வெறும் நட் போல்ட் முடுக்குவானாம், இன்னொருத்தன் உடை மாற்றுவானாம். இதில் எல்லாம் கவனம் வேண்டியதில்லை, நாலு டான்ஸ் போட்டு கொஞ்சம் கிராபிக்ஸ் காட்டினால் மக்கள் வழிந்துகொண்டே பார்த்துவிடுவார்கள் என்ற அலட்சியம்தான் தெரிகிறது. கொஞ்சம் ஒரு நடை நடந்துபோய் ஒரு கார் ஃபேக்டரியில் பார்த்தாலே தெரியும் எத்தனை எஞ்சினியர்கள், சயண்டிஸ்டுகள் தேவை என்று. மருந்துக்கு பக்கத்து அறைகளில் நாற்பது, ஐம்பது பேர் எதையாவது செய்துகொண்டிருப்பதாகக் காட்டக்கூடாதா? அதைவிடக் கொடுமை டாக்டர் போராவின் ஆராய்ச்சிச் சாலை. அங்கே அந்த ஆளைத் தவிர வேறு ஒருவர்கூடக் கிடையாது. வெளிநாட்டு (ஜெர்மன் மொழி பேசும்) குண்டர்களுடன் உறவாடும்போது மட்டும் சில டஃப் ஆசாமிகள் தென்படுகிறார்கள். ஆனால் மற்ற நேரங்களில் அவர்களும் மிஸ்ஸிங். வசீகரன் - சனா உறவு புரியவேயில்லை. சொல்லப்போனால் அது காதல் மாதிரியே இல்லை. இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம் இடிக்கிறது. சரி, விட்டுவிடுவோம். வசீகரன் தாடி ஏதோ ஜடாமுனிவர் மாதிரி சகிக்கவில்லை. எத்தனை ஆண்டுகள் முடி வளர்த்தால் அந்த அளவுக்கு தாடி வளரவேண்டும்? மெர்சிடிஸ் பென்ஸ் கார்மீது ஏகப்பட்ட புல்லட்டுகள் அடித்தாலும் காருக்கு ஒன்றுமே ஆகமாட்டேன் என்கிறது. (சிட்டி முதலில் கார் ஓட்டும்போது டிராஃபிக் நெரிசலில் டிவைடரில் மோதி காரின் வலது முன்பக்கம் கொஞ்சம் நசுங்குகிறது - நிச்சயமாக எந்த காரும் நசுங்கும். ஆனால் அதன் தொடர் காட்சியிலேயே காரில் எந்த நசுங்கலும் காண்பதில்லை. இதுபோன்ற பல சொதப்பல்களும் உள்ளன.) போலீஸ்காரர்கள், மிலிட்டரி என்று எல்லாமே முட்டாளதனமாக நடந்துகொள்கிறார்கள். அரசியல்வாதிகள், அமைச்சர்கள், ஆட்சியாளர்கள் என்று யாருமே சினிமாவில் காணக்கிடைப்பதில்லை. நாலு போலீஸ் அதிகாரிகள் மாதிரி இருப்பவர்கள், வசீகரன் சொல்கிறான் பேர்வழி என்று ஏகப்பட்ட ஆயுதங்களுடன் நடு ரோட்டில் குண்டுவெடித்து தூள் கிளப்புகிறார்கள். ஹெலிகாப்டர் வருகிறது. மக்களை எவாகுவேட் செய்வது பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் குண்டு வீசுகிறது. சொல்லப்போனால், இந்தப் படத்தில், ஒரு நகரம், அதில் மக்கள் வசிக்கின்றனர் என்றெல்லாம் எந்த உணர்வும் வருவதில்லை. ஊர் சென்னை என்று ஒருமாதிரி ஊகிக்கமுடிகிறது ஆனால், சிந்த்தெடிக்காக வேறு என்னவெல்லாமோ காட்டிக் குழப்பி, முகமற்ற ஒரு நகரமாகச் செய்துவிடுகிறார்கள். சிட்டியால் தீயிலிருந்து காப்பாற்றப்படும் உடையில்லாத சின்னப் பெண்ணைத் தொலைக்காட்சிகள் அசிங்கமாக லைவ் ரிலே செய்வதாகவும், அதனால் அந்தப் பெண் ஓடிச் சென்று லாரியில் மோதி இறப்பதாகவும் காட்டி தமிழ்க் கற்பு சீன் ஒன்று வைத்து டைரக்டர் புளகாங்கிதம் அடையலாம். தியேட்டரில் என் பெண் உட்பட பல குழந்தைகள் கண்களை மூடிக்கொண்டனர். இதுபோன்ற காட்சிகள் எப்படி சென்சார் தாண்டி வருகிறது என்று புரியவில்லை. (இந்தியத் தொலைக்காட்சிகள் அந்த அளவுக்கு மோசமும் அல்ல!) கடைசி கோர்ட் சீன் நல்ல காமெடி. அதாவது எந்தவித ஆதெண்டிசிடியும் தேவை இல்லை தமிழ் சினிமாப் படம் எடுக்க என்பதை அட்டகாசமாக நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள். *** ஆனால் இதையெல்லாம் தாண்டி, அரங்கில் சிறு குழந்தைகள் குதித்துக் குதூகலித்தனர். சிட்டி அந்த இரண்டு அஸிஸ்டெண்டுகளையும் பலான இடங்களில் அடித்துத் தொகைப்பது, பின்னர் நெருப்பால் அடிப்பது, அந்த யூஸ்லெஸ் ஆசாமிகள் பேசும் அருவருப்பான வசனங்கள் போன்ற ஸ்லாப்ஸ்டிக் காமெடி எல்லோருக்கும் பிடிக்கிறது. சில இடங்களில் வசனம் நன்றாக இருந்தது. (சனா பிட் அடிக்க உதவ, பிரெக்னன்சி பற்றி ஆடியோ ரிலே முடித்து, உண்மை சொல்லி மாட்டியபிறகு, வெளியேறும்போது சிட்டி, இன்னும் மென்ஸ்ட்ருவேஷன், ஃபெர்டிலைசேஷன் எல்லாம் முடிக்கலையே எனச் சொல்ல, ‘அதெல்லாம் அவங்க பாத்துப்பாங்க’ என்று டாக்டர்கள் போகிற போக்கில் சொல்வது.) படத்தில் காட்சிக்குக் காட்சி ஏதோ ஒன்று உறுத்திக்கொண்டே இருந்தாலும் பல விஷயங்கள் மிக நன்றாக இருந்தன. உதாரணமாக, சிட்டி வடிவத்தில் ரஜினியின் கலக்கல் நடிப்பு. சிட்டி சனாவுக்கு உதவியாகச் செய்வதெல்லாம் (சமையல் உட்பட) பார்க்க ஜாலியாக இருக்கிறது. ரயிலில் நடக்கும் சண்டை கொஞ்சம் ஜவ்வு. மற்றபடி சுவாரசியம். சிட்டி-வசீகரன் சீண்டல்கள், முரண்பாடுகள்-கோபங்கள் நன்றாக வந்துள்ளன. ஓர் இயந்திரம் மனிதனாக முயலும்போது ஏற்படும் அறச்சிக்கல்களை நிஜமாகவே ஒரு நாவலாகச் செய்தால் உலக இலக்கியங்களில் உன்னதமான இடத்தை அடையமுடியும். (ஒருவேளை அப்படிச் சில முயற்சிகள் இருக்கக்கூடும். நான் படித்ததில்லை.) சினிமாவிலும் இருக்கலாம்; நான் பார்த்ததில்லை. டெர்மினேட்டர் பார்த்துள்ளேன். ஐ, ரோபாட் படம் நான் பார்க்கவில்லை. வால்-ஈ ஓரளவுக்கு இதைத் தொடுகிறது. ஆனால் அனிமேஷன் வடிவில் இருந்ததாலும், மனித-இயந்திர உறவு இல்லை என்பதாலும் உயர்ந்த இடத்துக்குப் போகமுடியவில்லை. கொஞ்சம் மெனக்கெட்டு உழைத்திருந்தால், மிக நல்ல கதையாக, உலகத் தரமான, அதே நேரம் இந்தியர்களையும் கவரக்கூடிய படமாக இருந்திருக்கலாம். ஆனால் அது தேவையில்லாமலேயே பெருமளவு தமிழர்களைக் கவர்ந்துள்ளது இந்தப் படம். Posted by Badri Seshadri at 11:19 18 பின்னூட்டங்கள் Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Friday, December 24, 2010 மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குப் புத்தகங்களை மொழிபெயர்ப்பது எளிதல்ல. அவை இலக்கியப் புத்தகங்களாகட்டும், சமகால அரசியல், பொருளாதாரப் புத்தகங்களாகட்டும், ஏன், சாதாரண சுய முன்னேற்றப் புத்தகங்களாகட்டும். ஆங்கில வாக்கிய அமைப்புக்கும் தமிழ் வாக்கிய அமைப்புக்கும் தொடர்பே கிடையாது. எளிதான வாக்கியங்கள் என்றால் பரவாயில்லை. ஆனால் வளைத்து, மடித்து எழுதப்படும் வாக்கியங்கள், எண்ணற்ற மேற்கோள்கள், கலாசாரம் சார்ந்த idioms, துறை சார்ந்த குழூஉக்குறிகள் என்று தமிழாக்கம் செய்ய ரொம்பவே கஷ்டப்படுத்தும். இரு மொழிகளிலும் நல்ல ஞானம் தேவை. நிறையப் பொறுமை தேவை. ஆங்கிலப் புத்தகங்கள் பெரும்பாலும் 400-500 பக்கங்கள் தாண்டி இருக்கும். குறைந்தபட்சம் 300 பக்கங்கள். தமிழாக்கம் செய்யும்போது, தமிழின் நீள நீளமான வார்த்தைகளும் inflexional முறையும் சேர்ந்து, ஒன்றரை மடங்கு விரிவாகும். சரியாக மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லை என்றால், ஒரு வரியைப் படித்தவுடனேயே தெரிந்துவிடும். மிகவும் அந்நியமாகத் தோன்றும். சென்ற ஆண்டு நாங்கள் கொண்டுவந்த சில புத்தகங்கள் மொழிபெயர்ப்பை சிறப்பாகச் செய்தன. முதலாவது ராமன் ராஜா மொழிபெயர்த்த, பல்லவி அய்யரின் சீனா பற்றிய புத்தகம்: சீனா: விலகும் திரை. இதைப் படித்த அனைவரும், ஏதோ தமிழில் எழுதப்பட்ட புத்தகத்தைப் படித்ததுபோலவே இருந்தது என்றார்கள். இரண்டாவது புத்தகம்: இலங்கை இறுதி யுத்தம். இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 1, இதில் பெருமளவு வெற்றி கண்டது என்றாலும் இன்னும் சில இடங்களில் கொஞ்சம் தட்டிச் சரி செய்யவேண்டிய வேலைகள் உள்ளன. இந்த ஆண்டு வெளியாகும் பாகம் 2, இந்தப் பிரச்னைகளைக் கடந்துவிட்டது என்றே நினைக்கிறேன். சென்ற ஆண்டு வெளியான சென்னை மறுகண்டுபிடிப்பு புத்தகமும் திருப்தி தரக்கூடியதே. இந்த ஆண்டு இன்னும் கொஞ்சம் அகலக்கால் வைத்துள்ளோம். முதலில் கொண்டுவந்தது அப்துல் கலாம், ஆசார்ய மஹாபிரக்ஞாவின் குடும்பமும் தேசமும், சுதா சேஷய்யன் மொழிபெயர்ப்பில் (ஆங்கில மூலம் The Family and the Nation, HarperCollins). இது மிகவும் கடினமான ஒரு துறை பற்றியது. இந்திய ஆன்மிகம் பற்றியது. எனவே அதற்கான மொழி தேவைப்பட்டது. அடுத்தது ராமன் ராஜா மொழிபெயர்ப்பில் வந்துள்ள இரண்டாவது புத்தகம். முதல் புத்தகம் போன்றே இதிலும் ராமன் ராஜா வெளுத்துக்கட்டியுள்ளார். போரஸ் முன்ஷி, 11 நிறுவனங்கள் பற்றி, எப்படி அவை புதுமை படைத்துள்ளன என்பது பற்றி எழுதிய புத்தகம் Making Breakthrough Innovations Happen (HarperCollins). தமிழில் திருப்புமுனை என்ற பெயரில் கொண்டுவந்துள்ளோம். பர்மிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த ஒருசில போராளிகளை இந்திய ராணுவ உளவுத்துறையின் ஒரு மோசக்கார மேஜர் எப்படி ஏமாற்றினார்; அதன் விளைவாக அந்தப் போராளிகள் இந்திய ஜெயிலில் எப்படி வாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி அந்தப் போராளிகளின் வக்கீலான நந்திதா ஹக்சர் எழுதிய புத்தகம் Rogue Agent (Penguin). இதனை வஞ்சக உளவாளி என்ற புத்தகமாக குமரேசன் மொழிபெயர்த்துள்ளார். மணிப்பூரின் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்படும் ஐரோம் ஷர்மிளா, இந்திய அரசின் Armed Forces Special Powers Act-ஐ எதிர்த்து, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்துவருகிறார். அவரைப் பற்றி தீப்தி பிரியா மெஹரோத்ரா எழுதிய Burning Bright (Penguin) என்ற புத்தகத்தை ராம்கி மொழிபெயர்த்துள்ளார் - ஐரோம் ஷர்மிளா - மணிப்பூரின் இரும்புப் பெண்மணி என்று கொண்டுவருகிறோம். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மூன்று புத்தகங்கள் இந்த வரிசையில் முக்கிய இடம் பெறுகின்றன. ஒன்று அவர் அதிபராவதற்குப் பல வருடங்கள் முன்பு எழுதப்பட்ட Dreams From My Father. இதற்கான மொழிமாற்ற உரிமை அவரிடமே இருந்தது. அவரது ஏஜெண்ட் மூலம் இதனைப் பெற்றோம். அடுத்த இரண்டு புத்தகங்களின் ஒன்று அவர் தன்னை அதிபர் பதவிக்கான பிரைமரி வேட்பாளராக முன்வைத்தபோது பேசிய பேச்சுகளின் தொகுப்பு (Audacity of Hope). மற்றொன்று அவரது பிரெசிடென்ஷியல் கேம்பெய்ன்போது பேசிய பேச்சுகளின் தொகுப்பு (Change We can Believe in). இந்த இரண்டு புத்தகங்களும் Random House வெளியீடு. கடைசி இரண்டு புத்தகங்களையும் தமிழாக்கி வெளியிடுவதன் பயன், அவற்றை யார் வாங்கப்போகிறார்கள் என்ற சந்தேகம் இருந்தது. இருந்தும் செய்துதான் பார்ப்போமே என்று முடிவெடுத்தோம். அவை மிகவும் கடினமான மொழிபெயர்ப்புகள்கூட. அக்களூர் ரவி, நாகூர் ரூமி, அருண் மகாதேவன் ஆகியோர் மொழிபெயர்ப்பில் அவை முறையே என் கதை, நம்மால் முடியும், மாற்றம் என்றொரு மந்திரம் என்று வெளியாகியுள்ளன. பல ஆண்டுகளுக்குமுன் Penguin வெளியீடாக வந்த A Wasted Death என்ற புத்தகம் பிரிட்டானியா நிறுவனத்தை ஒரு காலத்தில் நிர்வகித்த ராஜன் பிள்ளையின் வாழ்க்கை. ராஜன் பிள்ளையின் தம்பி ராஜ்மோகன் பிள்ளையால் எழுதப்பட்டது. அதன் ஆங்கில மறுபதிப்பை நாங்கள் பதிப்பித்தபோது கூடவே தமிழாக்கத்தையும் - நீதியின் கொலை - வெளியிட்டுள்ளோம். படு சுவாரசியமான, மிக வேகமாக நகரும் கதை இது. நிஜ வாழ்க்கையும்கூட. ஜெயிலில் மரணம் அடைந்த ராஜன் பிள்ளை ஒரு கட்டத்தில் இரு நாட்டுக் காவல் துறையால் தேடப்பட்டார். அவர் செய்த குற்றம்தான் என்ன? இன்று பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள பிரிட்டானியா என்ற நிறுவனம் எப்படி ஆரம்பித்தது? இன்ஃபோசிஸ் நிறுவனத்தை ஆரம்பித்த மூத்தவரான நாராயண மூர்த்தி, பல பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்களிலும் இன்னபிற இடங்களிலும் அளித்த சொற்பொழிவுகளின் தொகுப்பை பெங்குவின் A Better India, A Better World என்ற பெயரில் நூலாக வெளியிட்டது. அதன் தமிழாக்கத்தை அக்களூர் ரவி செய்ய, அதனை புதிய கனவுகள், புதிய இந்தியா என்ற பெயரில் வெளியிடுகிறோம். உங்களில் பலர் இந்தப் புத்தகத்தை சீரியலாக புதிய தலைமுறை இதழில் படித்து வரக்கூடும். அந்தப் புத்தகமும் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். கடைசி இரண்டு புத்தகங்களில் ஒன்று இந்தியா-சீனா ஒப்பீடு. சி.என்.என் - ஐ.பி.என் முதல் பல ஆங்கில, இந்தி சானல்களை நடத்தும் தொழில்முனைவர் மற்றும் மூத்த பத்திரிகையாளரான ராகவ் பஹல் எழுதிய Superpower? (Penguin) புத்தகம் சில மாதங்களுக்குமுன் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் ஒரே நேரத்தில் வெளியானது. அந்தப் புத்தகத்தின் தமிழாக்கம் (சரவணன், மகாதேவன்) நீயா நானா? இந்திய சீன வல்லரசுப் போட்டி என்று வெளியாகிறது. இரு நாடுகளையும் நெருக்கமாக ஆராய்ந்து அலசி எழுதப்பட்டுள்ளது இந்தப் புத்தகம். மற்றொன்று, குழந்தை வளர்ப்பு தொடர்பானது. உங்கள் குழந்தை சரியாகச் சாப்பிடுவதில்லையா? எப்போதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே இருக்கிறார்களா? பெற்றோர்கள் சொன்னதைக் கேட்பதில்லையா? படிப்பில் ஆர்வம் செலுத்துவதில்லையா? ராண்டம் ஹவுஸ் இந்தியா, ஸ்டீவன் ருடால்ப் என்பவரைக் கொண்டு இந்தியக் குழந்தைகள், இந்தியப் பெற்றோர்கள் கண்ணோட்டத்தில் எழுதவைத்த புத்தகம் இது. 10 Laws of Learning என்பது. இது குழந்தை வளர்ப்பு அறிவியல் என்ற பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது (அருண் மகாதேவன்). பெற்றோருக்கு மிகவும் உபயோகமான புத்தகம் இது. ஆக, இந்த ஆண்டு, பியர்சன் அல்லாமல், 12 புத்தகங்கள், கிழக்கு வெளியீடாக தமிழ் மொழிபெயர்ப்பில் வருகின்றன. இவற்றின் மொழிபெயர்ப்புத் தரத்தில் பல வேறுபாடுகள் இருக்கலாம். அவற்றைச் சரிசெய்து, ஒரே தரமான, உயர் தரமான மொழிபெயர்ப்பைக் கொண்டுவருவதில் முனைந்துள்ளோம். நிச்சயமாக வரும் ஆண்டுகளில் எங்கள் வேலைத்திறன் மேலும் முன்னேற்றமடையும் என்றே நம்புகிறோம். இந்தக் கட்டத்தில் மேலும் 20 புத்தகங்களுக்கான தமிழாக்க வேலைகள் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு அவை வெளியாகும். Posted by Badri Seshadri at 17:41 2 பின்னூட்டங்கள் Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest இரு போர்கள், ஒரு கண்டம், பல நாடுகள் யோசித்துப் பார்த்தால் இரு உலகப்போர்களும் நடந்திருக்கவே கூடாது என்றுதான் தோன்றும். இன்றெல்லாம் எந்த நாடும் சில்லறை விஷயத்துக்கெல்லாம் முணுக் என்று கோபித்துக்கொள்வதில்லை. போர் என்றால் எக்கச்சக்க உயிரிழப்பு என்பது சாதாரண மக்களுக்கும் தெரிந்துள்ளது. முடியாட்சிகளும் சர்வாதிகார ஆட்சிகளும் வெகுவாகக் குறைந்துள்ள காரணத்தால் ஓர் ஆசாமி முடிவெடுத்தால் உடனே போர் என்பதெல்லாம் சாத்தியமல்ல. அமெரிக்க மட்டும்தான் விதிவிலக்கு. கடந்த இரு பத்தாண்டுகளில் வலிந்து பிற நாடுகள்மீது போர் தொடுத்த ஒரே நாடு அமெரிக்காதான் (உள்நாட்டுப் போர்கள் தவிர்த்து). அதுவும் இந்தப் பத்தாண்டில் ஈராக், ஆஃப்கனிஸ்தான் மீதான போர்கள் முற்றிலுமாகத் தவிர்த்திருக்கவேண்டியவை. அமெரிக்க நாடாளுமன்றங்களும் தேசப்பற்று என்பதை மட்டுமே முன்வைத்து அதிபருக்கு போர் தொடுக்கத் தேவையான சகல உரிமைகளையும் கொடுத்துவிடுகின்றன. முதல் உலகப்போர் தொடங்க தீவிரமான காரணங்கள் ஏதும் தேவை இருக்கவில்லை. அதற்கு முன்பாகவே ஏகப்பட்ட நெப்போலியன் போர்கள், அதற்கு முன் ஐரோப்பியக் கண்டம் முழுமையிலும் ஒரு ஆயிரம் ஆண்டுகளாக நடந்த போர்கள் ஆகியவற்றை விளக்க இது சரியான இடமல்ல. இரண்டாம் உலகப்போரை ஹிட்லர் என்ற சர்வாதிகாரியின் ஒற்றைப் பரிமாண அணுகுமுறை, அதற்கான பிரிட்டனின் (பின்னர் ரஷ்யாவின்) எதிர்ப்பு என்பதாகக் கட்டம் கட்டலாம். ஆனால் முதலாம் உலகப்போரை ஒற்றை மனிதனின் வெறியாக மட்டும் சித்திரிக்கமுடியுமா என்பது சந்தேகமே. முதல் உலகப்போரிலும்கூட ஜெர்மனியின் கைசர் (பேரரசர்) மீதுதான் குற்றம் சாட்டவேண்டியிருக்கும். தன்னைச் சுற்றியுள்ள பிரிட்டனும் பிரான்ஸும் ஏகப்பட்ட காலனி நாடுகளைக் கைப்பற்றிக்கொண்டே இருக்க, தனக்கு ஐரோப்பிய அளவில் மரியாதை இல்லையே என்பது அவருடைய குறையாக இருந்தது. ஒருவித தாழ்வு மனப்பான்மையில் இருந்த அவருக்குத் தன் படைகள்மீது அபார நம்பிக்கை இருந்தது. பிரிட்டனின் கடல்படை மிக மிக வலுவானதாக இருந்தது. அந்த அளவுக்குத் தன் கடல்படையை உருவாக்க விரும்பியிருந்தார் கைசர். ஆனால் அதைச் செய்துமுடிப்பதற்குள்ளாக போர் ஆரம்பித்திருந்தது. பிரிட்டனின் கடல்படையோ சண்டைகளில் தன்னை ஏற்கெனவே நிரூபித்திருந்தது. ஜெர்மனியின் கடல்படை அப்படிப்பட்டதல்ல. போரின் காரணமாக ஆஸ்திரிய-ஹங்கேரியப் பேரரசின் இளவரசர் ஆர்ச்டியூக் ஃபெர்டினாண்ட் ஒரு செர்பியனால் கொலை செய்யப்பட்டதைச் சொல்வார்கள். வரலாறு படித்த காலத்தில் இது எனக்குப் புதுமையாகவே இருந்தது. யாரோ ஒரு நாட்டின் ஓர் இளவரசனை ஒருவன் கொல்வதால் எப்படி இந்தப் பக்கம் 5 நாடுகள், அந்தப் பக்கம் 5 நாடுகள் சண்டைக்குக் கிளம்பின? அந்தக் காலத்தில் நாடுகளுக்கு இடையே அபத்தமான ஒப்பந்தங்கள் இருந்தன. அதன்படி, யார் ஒருவர்மீது பகை நாடு போர் தொடுத்தாலும், மற்றவரும் தோழமை நாட்டுக்காகப் போரில் இறங்குவார். ஆஸ்திரியா-ஹங்கேரியப் பேரரசு, ஜெர்மனி இரண்டும் அப்படிப்பட்ட ஓர் ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருந்தன. செர்பியாவும் ரஷ்யாவும் அதேபோன்ற ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருந்தன. ரஷ்யாவும் பிரான்ஸும் அதேபோல. அட, பிரிட்டனும் பிரான்ஸும் அதேபோல மற்றொரு ஒப்பந்தத்தில். ஜெர்மனி, துருக்கியுடன் கிட்டத்தட்ட அதேமாதிரியான ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தது. ஆஸ்திரியா செர்பியாவை மிரட்ட, செர்பியா கொலைகாரனை ஒப்படைக்க மறுக்க, ஒரு நாள் காலை முகூர்த்தத்தில் ஆஸ்திரியா செர்பியாமீது போரை அறிவிக்க, உடனே ரஷ்யா ஆஸ்திரியாமீது போரை அறிவிக்க, உடனே ஜெர்மனி ரஷ்யாமீது போர் தொடுக்க, பிரான்ஸ் ஜெர்மனிமீது போர் தொடுக்க... அதகளம் ஆரம்பம். எல்லாம் ஆரம்பித்தது ஒரு ஆகஸ்ட் மாதத்தில். ஜெர்மனி ரஷ்யப் படைகளைப் புறமுதுகிட்டு ஓட வைத்து, பிரான்ஸைக் கதறவைத்து ஆட்டத்தையே முடித்துவிடும் என்றால், அதுதான் இல்லை. கொஞ்சம் தாமதித்து பிரிட்டன் களத்தில் குதித்தது. இதற்குள் பிரான்ஸில் வெகுதூரம் நுழைந்திருந்த ஜெர்மனியால் சப்ளை, லாஜிஸ்டிக்ஸ் விஷயங்களைச் சரியாகக் கவனிக்கமுடியவில்லை. இரண்டு மாதங்களுக்குள் பிரான்ஸில் அதிரடியாக வெகுதூரம் புகுந்திருந்த ஜெர்மானியப் படைவீரர்கள் அடுத்த பல மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்த இடத்தைப் பாதுகாக்கவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் சிக்கி, கடைசியாக ஜெர்மனி தோற்றது. இதனால் ஐரோப்பாவின் முகமே மாறியது. மீண்டும் சில ஆண்டுகளிலேயே இரண்டாம் உலகப்போர் ஆரம்பம் ஆவதற்குமான அடி அப்போதுதான் போடப்பட்டது. *** மருதன் எழுதிய இரண்டாம் உலகப்போர் நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு நூல். கம்யூனிஸ்ட் வாசம் அதில் கொஞ்சம் ஜாஸ்தி என்பது என் கருத்து. ஆனால் அந்தச் சிக்கல் இருந்திருக்காது மருதனின் முதல் உலகப்போர் புத்தகத்துக்கு. வாசகர்கள் இந்தப் புத்தகம் எப்போது வரும் என்று வெகு நாள்களாகக் கேட்டுவந்தனர். இப்போது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அறிமுகமாகும் இந்தப் புத்தகம். Posted by Badri Seshadri at 16:36 1 பின்னூட்டங்கள் Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest எழுத்துலக சூப்பர் ஸ்டார் சுஜாதா - 1 சென்ற புத்தகக் கண்காட்சியில்தான் முதன்முதலாக சுஜாதாவின் சில புத்தகங்களைப் பதிப்பித்து விற்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. ஐந்து புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தோம். ஆஸ்டின் இல்லம், தீண்டும் இன்பம், மீண்டும் ஜீனோ, நில்லுங்கள் ராஜாவே, நிறமற்ற வானவில். புத்தகக் கண்காட்சியின்போதுதான் இந்தப் புத்தகங்களில் சில பிரதிகள் அச்சாகி வந்திருந்தன. அவை அடுக்கப்படும் முன்னரேயே விற்பனையும் ஆகிக்கொண்டிருந்தன. நில்லுங்கள் ராஜாவே, மீண்டும் ஜீனோ தவிர மற்றவை அதிகம் கேள்விப்படாத புத்தகங்கள். அதன்பின் தொடர்ந்து 60-க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்டுவந்துவிட்டோம். இவை அனைத்தும் பிரம்மாண்டமாக இந்தப் புத்தகக் கண்காட்சியில் காண, வாங்கக் கிடைக்கும். கடந்த சில மாதங்களிலேயே சுஜாதாவின் ஈர்ப்பு சக்தி எத்தகையது என்பதை அறிந்துகொண்டுள்ளோம். சுஜாதா இன்னும் தமிழக மக்களுக்கு ஒழுங்காகப் போய்ச்சேரவே இல்லை. புத்தகக் கடைகள் தாண்டி தெருவோரக் கடைகளில், டிபார்ட்மெண்டல் கடைகளில் எல்லாம் வைக்கப்படும்போது அங்கு வரும் மக்கள் ஆர்வத்தோடு வாங்குகிறார்கள். இந்த ஆண்டில் நான் வேலை செய்த பல புத்தகங்களுக்கிடையே சுஜாதா புத்தகங்கள் அனைத்தும் என்னைப் பொருத்தவரையில் திருப்தி தரக்கூடியவை. கடுமையான மொழி கொண்ட மொழிமாற்றல் புத்தகம் ஒன்றுடன்தான் என் காலை வேளை தினமும் ஆரம்பிக்கும். இரண்டு மணி நேரத்துக்குப்பின் மண்டைக் குடைச்சல். அப்போது சுஜாதா புத்தகத்தைக் கையில் எடுத்து மெய்ப்பு பார்க்கத் தொடங்கினால், வேலைக்கு வேலையும் ஆயிற்று, ரிலாக்சேஷனும் ஆயிற்று. அப்படித்தான் நான் படித்தே இராத பல கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். சுஜாதாவின் பலமே உரையாடல்கள் மூலம் படு வேகமாகக் கதையைக் கொண்டு செல்வது. எப்போதே படித்திருந்தாலும் இப்போது கையில் எடுக்கும்போதும் மீண்டும் மீண்டும் படிக்கவைக்கும் கதைகள். முடிவுகள் பெரும்பாலுமே திருப்தியற்றவையே. ஆனால் தொடர்கதைகளை எழுதும்போது வேறு வழி இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். பெரும்பாலான கதைகள் தொடர்கதைகள் என்றால், சில மாத நாவல்களும் உண்டு. சுஜாதா என்றாலே கணேஷ் - வஸந்த் என்றுதான் பெரும்பாலானோர் நம்பிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அவற்றையும் தாண்டி பல மர்மக் கதைகள் முதல் மனித மனங்கள் பற்றிய கதைகள் உண்டு. மீண்டும் ஜீனோ கொண்டுவந்தபோது ‘என் இனிய இயந்திரா’ இல்லையா என்றார்கள் (திருமகள் நிலையம் வெளியீடு). விரைவில் வந்துவிடும் என்றோம். இப்போது அதுவும் வந்துவிட்டது. என் கணக்கின்படி, சுஜாதா புத்தகங்கள் மொத்தம் 76 இந்தப் புத்தகக் கண்காட்சியில் கிழக்கு வெளியீடாகக் கிடைக்கவேண்டும். சில அச்சாகி வருமா என்பதில் சந்தேகம் உண்டு. கண்காட்சியில் கிடைக்கக்கூடிய முக்கியமான சில: நில்லுங்கள் ராஜாவே நைலான் கயிறு என் இனிய இயந்திரா மீண்டும் ஜீனோ நில், கவனி, தாக்கு! பிரிவோம் சந்திப்போம் (இரு பாகங்களும் சேர்த்து ஒன்றாக) கனவுத் தொழிற்சாலை கரையெல்லாம் செண்பகப்பூ காயத்ரி ப்ரியா திசை கண்டேன் வான் கண்டேன் சொர்கத்தீவு வைரங்கள் இருள் வரும் நேரம் உள்ளம் துறந்தவன் ஆ...! ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் பின்வரும் நாள்களில் ஒரு பதிவில் 76 நூல்களையும் பட்டியலிடுகிறேன். Posted by Badri Seshadri at 16:11 4 பின்னூட்டங்கள் Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Thursday, December 23, 2010 பியர்சனுடன் சில புத்தகங்கள் சுமார் 18 மாதங்களுக்குமுன் ஆரம்பித்த உறவு இது. பியர்சன் என்ற உலகின் நம்பர் ஒன் பதிப்பக நிறுவனம், கல்வித்துறைப் புத்தகங்களில் முன்னணியில் உள்ளது. தி எகானமிஸ்ட், ஃபினான்ஷியல் டைம்ஸ் போன்ற பத்திரிகைகள் இந்தக் குழுமத்துடையதே. பெங்குவின் என்ற பதிப்பக நிறுவனமும் இவர்களுடையதே. பியர்சனிடம் உள்ள ஒரு குறிப்பிட்ட தொடர் புத்தகங்களைத்தான் முதலில் மொழிமாற்றத் தொடங்கினோம். The Rules of Work (வேலை விதிகள்), The Rules of Management (நிர்வாக விதிகள்), The Rules of Wealth (செல்வம் சேர்க்கும் விதிகள்), The Rules of Life (வாழ்க்கை விதிகள்) என்ற நான்கு புத்தகங்கள் அவை. ஆசிரியர் ரிச்சர்ட் டெம்ப்ளர். இவை பார்க்க சுவாரசியமான சுய முன்னேற்ற வகைப் புத்தகங்கள். சுருக்கமான சூத்திரங்கள், ஒவ்வொன்றும் இரண்டு பக்கம் வரக்கூடிய அளவில் விவரித்து எழுதப்பட்டிருக்கும். ஆசிரியரின் சொந்த அனுபவங்கள் பல இருக்கும். ஆசிரியர் வென்ற இடங்கள் மட்டுமல்ல, தோற்ற இடங்களும் இருக்கும். உங்களுக்கு அருகில் நெருங்கி வரக்கூடிய புத்தகங்கள் இவை. இதை எழுதியவர் தன் சொந்தப் பெயரில் எழுதவில்லை. கணவன், மனைவி ஜோடி சேர்ந்து எழுதிய புத்தகங்கள் இவை. பின்னர் கணவர் இறந்தபின்னும் மனைவியின் எழுத்தில் ஆனால் ரிச்சர்ட் டெம்ப்ளர் என்ற பெயரில் மேலும் நான்கு புத்தகங்கள் வந்துள்ளன: The Rules of Parenting (பெற்றோருக்கான விதிகள்), The Rules of Love (காதல் விதிகள்), How to Spend Less without Being Miserable (செலவைக் குறைப்பது எப்படி), How to Get Things Done without Trying Too Hard (நினைப்பதை செய்துமுடிப்பது எப்படி). இவற்றையும் தமிழில் கொண்டுவந்துள்ளோம். ஆரம்பத்தில் இவை எப்படி விற்கும் என்பதில் சந்தேகம் இருந்தது. ஆனால் ரூல்ஸ் புத்தகங்கள் முதலில் அச்சான 2,000 விற்று, அடுத்து அச்சான 3,000 விற்று, அடுத்து அச்சான 5,000 கிட்டத்தட்ட விற்று முடிந்துவிட்டது. அடுத்த அச்சுக்கும் போய்விட்டது என்றுதான் ஞாபகம். ஆங்கிலத்தில்கூட இந்தப் புத்தகங்கள் கடந்த ஒரு வருடத்தில் இந்தியாவில் இவ்வளவு விற்றிருக்குமா என்பது சந்தேகமே. ஹிந்தியில் ஒரு பதிப்பில் 5,000 போட்டது அவ்வளவுதான். அதற்குமேல் அச்சிடப்படவில்லை என்பது எனக்குத் தெரியும். தொடர்ந்து, பியர்சனின் இதேபோன்ற சில புத்தகங்களை வெளியிட ஆரம்பித்தோம். பொதுவான சுய முன்னேற்றப் புத்தகங்களிலிருந்து சற்றே விலகி, கொஞ்சமாவது நவீன மேனேஜ்மெண்ட் கருத்துகள் இருக்கக்கூடிய புத்தகங்களாக மொழிபெயர்த்துக் கொண்டுவர ஆரம்பித்தோம். அப்படிக் கொண்டுவந்துள்ள சில புத்தகங்கள் இவை: The Truth about Managing your Career (வேலையில் முன்னேற சக்சஸ் ஃபார்முலா) The Truth about Being a Leader (தலைமை தாங்க சக்சஸ் ஃபார்முலா) The Truth about Managing People (மனிதர்களை நிர்வகிக்க சக்சஸ் ஃபார்முலா) The Truth about Making Smart Decisions (சரியாக முடிவெடுக்க சக்சஸ் ஃபார்முலா) The Truth about Confident Presenting (சிறந்த பேச்சாளராக சக்சஸ் ஃபார்முலா) The Truth about Getting your Point across (எண்ணங்களைத் தெளிவாக வெளிப்படுத்த சக்சஸ் ஃபார்முலா) The Truth about Hiring the Best (சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்க சக்சஸ் ஃபார்முலா) The Truth about Getting the Best from People (பணியாளர் திறனை முழுதாகப் பெற சக்சஸ் ஃபார்முலா) The Truth about Negotiations (பேச்சு வார்த்தைகளில் வெற்றிபெற சக்சஸ் ஃபார்முலா) இந்தப் புத்தகங்கள் எல்லாமே co-publishing என்ற முறையில் கொண்டுவரப்படுபவை. பியர்சன், கிழக்கு என இரு பிராண்ட்களும் இணைந்து பதிப்பிக்கும் புத்தகங்கள் இவை. இந்தியாவின் எந்த மொழியுடன் ஒப்பிட்டாலும், தமிழில் மட்டும்தான் இந்த அளவுக்கு பியர்சனால் புத்தகங்களைக் கொண்டுவர முடிந்துள்ளது. இதே உறவின் அடிப்படையில் மேலும் சில புத்தகங்களைக் கொண்டுவந்துள்ளோம். அதில் மிக முக்கியமானது டோனி பூஸானின் புத்தகங்கள். மன வரைபடம் (Mindmap) என்ற கருத்தாக்கத்தை முன்வைத்த பூஸான், ஒவ்வொரு மனிதனும் தன் மூளையை மேலும் சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்கிறார். பள்ளிக்கூடத்தில் படிக்கும் பையனாக இருக்கட்டும், வேலையில் ஈடுபடும் பெரியவராக இருக்கட்டும், ஞாபக சக்தியைக் கட்டவிழ்த்துவிட, பலதரப்பட்ட விஷயங்களுக்கு இடையேயான தொடர்புகளை வேகமாகப் புரிந்துகொண்டு நினைவகத்தில் சேமித்துவைக்க மன வரைபடம் என்ற உத்தியைக் கையாளலாம் என்கிறார் இவர். அதன் அடிப்படையில் அவர் எழுதியுள்ள இரு புத்தகங்களைத் தமிழாக்கம் செய்துள்ளோம்: Use Your Head (மூளையை முழுதாகப் பயன்படுத்து), The Mind Map Book (மன வரைபடம்). இவை இரண்டுமே பள்ளிக்கூட ஆசிரியர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகங்கள் என்பேன் நான். ஐ.ஏ.எஸ் பரீட்சைக்குத் தயாராகுபவர்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு புத்தகம் பியர்சன் வெளியிட்டுள்ள Concise GK. இதனைத் தமிழாக்கி ‘பொது அறிவு தகவல் களஞ்சியம்’ என்று வெளியிட்டுள்ளோம். UPSC மட்டுமின்றி, TNPSC முதலான பல நுழைவுத் தேர்வுகளுக்கு இந்தப் புத்தகத்தை பயன்படுத்தலாம். பியர்சன் இன்னபிற புத்தகங்கள் இதுவரை அச்சுக்குப் போயிருப்பவை: Winning at Interviews (நேர்முகத் தேர்வுகளில் வெற்றிபெற) Winners Never Cheat (வெற்றியாளர்கள் ஏமாற்றுவதில்லை) Body Language (உடல் மொழி) Smart Retail - Turn Your Store into Sales Phenomenon (வெற்றிகரமான சில்லறை வியாபாரம்) Change your Life with NLP (வெற்றிக்கு ஒரு வரைபடம் - NLP) Brilliant Start-up (ஈஸியாத் தொடங்கலாம் பிசினஸ்) மேலும் சில புத்தகங்கள் மொழிமாற்றத்தில் உள்ளன. கடந்த ஓராண்டில் இத்தனை புத்தகங்கள் இந்தத் துறையில் வரிசையாகக் கொண்டுவந்ததே ஒரு பெரும் சாதனை என நினைக்கிறேன். இவற்றுக்கு உங்கள் ஆதரவு பெரிதும் தேவை. Posted by Badri Seshadri at 16:05 4 பின்னூட்டங்கள் Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest இரு பெரும் பிரச்னைகள்? இரு முக்கியமான புத்தகங்கள் இன்றைய இந்தியா எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன? யாரிடம் கேட்கிறீர்கள் என்பதைப் பொருத்து ஏகப்பட்ட பதில்கள் கிடைக்கும். ஊழல்? இந்து மதவாதம்? இஸ்லாமிய தீவிரவாதம்? மாவோயிச பயங்கரவாதம்? உலகமயத்தாலும் தாராளமயத்தாலும் ஏற்படும் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், பழங்குடியினர் வாழ்வாதாரப் பிரச்னை? காஷ்மீர் பிரச்னை, அதன் விளைவாக ஏற்படும் இந்தியா-பாகிஸ்தான் போர் அபாயம்? அஸ்ஸாம், பிற வட கிழக்கு இந்தியப் பிரச்னைகள்? இன்னும் பலவற்றையும் பலர் சொல்வீர்கள். அவற்றில் இரண்டை மட்டும் பார்ப்போம். காஷ்மீர் பிரச்னையை நாம் முழுவதுமாகப் புரிந்துகொண்டிருக்கிறோமா என்று தெரியவில்லை. காஷ்மீர் (அல்லது ஜம்மு காஷ்மீர்) என்பது இந்தியாவின் பிரிக்கமுடியாத ஒரு பகுதி, இதில் மறு பேச்சுக்கே இடமில்லை என்பது ஒரு தரப்பு. இந்தியாவில் பெரும்பான்மையினரின் தரப்பும் இதுதான். ஆனால் இது நியாயமான ஒரு வாதமா? மறுபக்கம் அருந்ததி ராய் போன்றோரின் தரப்பு. எந்தப் பகுதி மக்களுக்கும் நியாயமான சுய நிர்ணய உரிமை இருக்கவேண்டும்; அப்படி அவர்களுக்கு அந்த உரிமையைத் தராமல் ராணுவத்தை அனுப்பி அவர்களை நசுக்குவது மனித உரிமை மீறல் என்னும் வாதம். உலகின் எந்த ‘ஆக்ரமிப்பு’ ராணுவமுமே கற்களுக்கு பதில் புல்லட்டையும் நியாயமான எதிர்ப்புக்கு பதில் சித்திரவதையையுமே கொடுத்துள்ளனர். இந்திய ராணுவம் இதற்கு விதிவிலக்கல்ல. மணிப்பூர் முதல் காஷ்மீர் வரை நாம் இதைத்தான் பார்த்துள்ளோம். காஷ்மீரிகள் நியாயமாக எதனை விரும்பினர்? ஹரிசிங் யார்? அவரது ‘லெகசி’ என்ன? 1947-ல் காஷ்மீருக்குள் ஊடுருவிய பதான்கள் ஏன் அங்கு வந்தனர், என்ன செய்தனர்? அதன் பின்விளைவுகள் என்ன? நேரு, சாஸ்திரி, இந்திரா முத;ல் இன்றுவரை இந்திய ஆட்சியாளர்கள் காஷ்மீர் பற்றி எந்தக் கொள்கைகளைக் கொண்டிருந்தனர்? நேருவுக்குப் பின் அது எப்படி மாற்றம் அடைந்தது? காஷ்மீர் இஸ்லாமியத் தீவிரவாத அலைக்குள் எப்படிச் சிக்கிக்கொண்டது? ஜம்மு பகுதியில் தீவிரமாக உள்ள ஆர்.எஸ்.எஸ் காஷ்மீர் பிரச்னையில் எடுத்துள்ள நிலை என்ன? ஷ்யாமா பிரசாத் முகர்ஜி என்பவர் யார்? அவருக்கு காஷ்மீரில் என்ன ஆனது? இதற்கெல்லாம் முன்னதாக ஜம்மு காஷ்மீர் என்று நாம் அழைக்கும் பகுதியின் புவியியல் அமைப்பு என்ன? காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு, லடாக், வடக்குப் பகுதிகள், பாக் ஆக்ரமிப்பு காஷ்மீர் அல்லது ஆஸாத் காஷ்மீர், சீனாவிடம் போன துண்டு துணுக்குப் பகுதிகள், இவை பற்றிய புரிதல். ஷேக் அப்துல்லா, காஷ்மீரின் சிங்கம் எனப்படுபவர். அவர் நேரு காலத்திலிருந்து ஏன் சிறையில் அடைக்கப்பட்டபடி இருந்தார்? காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும்தான் அவருக்கு செல்வாக்கு உண்டு என்பது தெரியுமா? அவரிலிருந்து தொடங்கி இன்று அவர் பேரன்வரை காஷ்மீர் பிரச்னையில் என்ன சொல்கிறார்கள்? போராட்டம் அல்ல நாங்கள் செய்வது, விடுதலை அல்ல எங்கள் இலக்கு, எங்கள் இலக்கெல்லாம் ஜிஹாத் ஜிஹாத் ஜிஹாத் என்று காஷ்மீர் போராட்டத்தின் திசையையே மாற்றிய ஆஃப்கனிலிருந்து இந்தியா வந்த இஸ்லாமிய கூலிப்படை பற்றி நாம் என்ன தெரிந்துகொள்ளவேண்டும்? சரி, இனி அடுத்து என்ன ஆகப்போகிறது? தீர்வுதான் என்ன? பா.ராகவனின் காஷ்மீர் பற்றிய புத்தகம் உங்களுக்கு இந்தப் பிரச்னை பற்றிய நல்ல ஒரு புரிதலைத் தரும் என்று நம்புகிறேன். --- சமீபத்தில் ராகுல் காந்தி - விக்கிலீக்ஸ் ஒரு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ராகுல் காந்தி அமெரிக்கத் தூதரிடம் பேசியதை அவர் ஓர் அறிக்கையாக அமெரிக்கா அனுப்ப, அங்கிருந்து அது ஜூலியன் அஸாஞ்ச் மார்க்கமாக இணையவெளியில் பரவ, இந்தியப் பத்திரிகைகள் அதைக் கைமா செய்துவிட்டன. ராகுல் காந்தி என்னவோ இந்துக்கள்தான் இந்தியாவில் தீவிரவாதச் செயலைச் செய்கின்றனர், லஷ்கர்-ஈ-தோய்பாவை விட மோசமானவர்கள் அவர்கள்தான் என்று சொன்னதுபோலச் செய்திகள் பரவின. ராகுல் காந்தி சொன்னது இவ்வளவுதான்: Responding to the Ambassador's query about Lashkar-e-Taiba's activities in the region and immediate threat to India, Gandhi said there was evidence of some support for the group among certain elements in India's indigenous Muslim community. However, Gandhi warned, the bigger threat may be the growth of radicalized Hindu groups, which create religious tensions and political confrontations with the Muslim community. லஷ்கர்-ஈ-தோய்பா, இந்தியாவுக்குப் பிரச்னைதான். அதனால் உந்தப்பட்டு சில இந்திய முஸ்லிம்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவது பிரச்னைதான். ஆனால்... அதையெல்லாம் விடப் பெரிய பிரச்னை தீவிரவாதச் சிந்தனை கொண்ட இந்துக் குழுக்கள் உருவாகி, முஸ்லிம் சமூகத்துடன் அவை அரசியல்ரீதியாக மோதி, அதன் விளைவாக மதக் கலவரங்கள் ஏற்படுவதுதான். இது மிகச் சரியான சிந்தனை. இவ்வாறு பேசியதற்காக நாம் ராகுல் காந்தியைப் பாராட்டவேண்டும். மதரீதியாக இந்தியாவில் பிரச்னைகள் ஏற்பட்டு, இந்தியாவின் இதயத்தைக் கிழித்து ரத்தம் சிந்தவைத்துள்ளன. தேசப் பிரிவினைக்கு முன்பிருந்து தொடங்கி, பின் பிரிவினையில் அதன் உச்சத்தைத் தொட்டு, பின் கொஞ்சம் கொஞ்சமாக ஆறிய ரணம், அயோத்திப் பிரச்னையில் கொழுந்துவிட்டு எரிந்தது. அங்கிருந்து தொடங்கி, மும்பையில் ஏற்பட்ட தாவூத் கோஷ்டி குண்டுவெடிப்புகள், மும்பைக் கலவரங்கள், பின் கோத்ரா ரயில் எரிப்பு, தொடர்ந்து குஜராத்தில் நடந்த திட்டமிட்ட படுகொலைகள், இந்தியாவின் பல பெரு நகரங்களில் வைக்கப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகள், பாகிஸ்தான் தீவிரவாதிகளால் மும்பையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்... என்று இது இன்றும் தொடர்கிறது. இந்த போலரைசேஷனுக்கு யார் காரணம்? தீவிரச் சிந்தனைகள்தான் தீவிரச் செயல்களுக்கு இட்டுச் செல்கிறது. இந்தியா என்பது இந்து தேசமா? இங்கு இந்துக்களுக்கு மட்டும்தான் இடமா? தேசப் பிரிவினையின்போது பாகிஸ்தானுக்குச் சென்றிருக்கவேண்டியவர்கள் என்று முஸ்லிம்களை இன்றும் தொடர்ந்து ஊசிபோலக் குத்துவது யார்? முஸ்லிம்களை அவர்களுக்குரிய இடத்தில் வைக்கவேண்டும் என்ற எண்ணம் யாரிடமெல்லாம் இருக்கிறது? ஆர்.எஸ்.எஸ் என்ற ஓர் அமைப்பு எதற்காகத் தொடங்கப்பட்டது? அதன் குறிக்கோள் என்ன? தேசம் என்பதற்கான அதன் வரையறைகள் என்ன? அதன் குறிக்கோளுக்கும் காந்தியின் கருத்துகளுக்கும் என்ன தொடர்பு அல்லது விலகல்? நவீன இந்திய தேசத்தின் வலுமிக்க அமைப்புகளை (அரசியல் அமைப்புச் சட்டம், நாடாளுமன்றக் குடியாட்சி முறை) உருவாக்கிய அம்பேத்கர், நேரு கருத்துகள் பற்றி ஆர்.எஸ்.எஸ் என்ன சொல்கிறது? இன்று ஆர்.எஸ்.எஸ் எனப்படும் ராஷ்டிரிய சுவயம்சேவக் சங்கம் இந்தியாவில் அசைக்கமுடியாத ஓர் அமைப்பு. அதன் கருத்துகள் பழமைவாதம் பேசுபவையா? அல்லது வலுவான இந்திய தேசத்தை அமைக்க உதவுபவையா? இந்து-முஸ்லிம் பிரச்னைகள் அனைத்துக்கும் அடிப்படையில் இருப்பது ஆர்.எஸ்.எஸ்ஸா? ஆர்.எஸ்.எஸ் இருக்கும்வரை இந்த நாட்டில் அனைவரும் அமைதியாக இருக்கமுடியுமா? கேள்விகள் என்னுடையவை. பா.ராகவனின் புத்தகத்தில் பதில்கள் இருக்கும். கட்டாயமாக வாங்கிப் படித்துவிடுங்கள். * இரு புத்தகங்களும் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியாகும். ஜனவரி 4 முதல் ஜனவரி 17 வரை. Posted by Badri Seshadri at 13:22 10 பின்னூட்டங்கள் Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Wednesday, December 22, 2010 ஒரு புத்தகம் எப்படி பாப்புலர் ஆகிறது? ஒரு புத்தகப் பதிப்பாளனுக்குத் தெரியாத ஒரு விஷயம் இது. எந்த அறிவியலுக்கும் கட்டுப்படாத விஷயம் இது. பொதுப்புத்தி எப்படி இயங்குகிறது என்பதை முன்கூட்டியே கண்டுபிடிப்பது கடினம். அந்தச் செயல் நடந்துமுடிந்ததும் பிறகுதான் இது இப்படித்தான் நடந்திருக்கவேண்டும் என்று சொல்லமுடிகிறது. இந்த சூட்சுமம் ஒருசிலருக்கு மட்டும் எப்படியோ தெரிந்துவிடுகிறது. ரஜினி படம் என்றால் ஊரில் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும் அல்லவா? அதைப் பற்றி ஊரில் எல்லோரும் பேச ஆரம்பிப்பார்கள். பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதும். இணையத்தில் விமரிசனம் தூள் பறக்கும். தொலைக்காட்சியில் பேட்டிகள். புத்தகங்களுக்கு அப்படி எல்லாம் ஆவதில்லை. ஏதோ 100, 200 பிரதிகள் சடசடவென விற்றாலேயே பதிப்பாளர்கள் அகம் குளிர்ந்துவிடுவார்கள். புத்தகத்துக்கு விளம்பரம் தரும் அளவுக்கு எந்தப் பதிப்பகமும் காசு பார்ப்பதில்லை. விகடன் பிரசுரம் போன்றவர்கள் தங்களிடம் உள்ள சொந்த மீடியாவில் நன்றாக விளம்பரம் செய்யமுடிகிறது. கிழக்கு உட்பட, வேறு யாருக்கும் இந்த அற்புதமான வாய்ப்பு கிடையாது. புத்தகங்களுக்கு தமிழில் ரிவ்யூவே ஒழுங்காக வருவதில்லை. இதில் ஒரு புதிய புத்தகம் வந்துள்ளது என்பது எப்படி மக்களுக்குத் தெரியவரும்? அப்புறம் எப்படி ஒரு புத்தகம் சூப்பர் செல்லர் ஆவது? ஆனால் அபூர்வமாக அப்படி ஒரு புத்தகம் வந்துவிடுகிறது. சில மாதங்களுக்குமுன் பாலசுப்ரமணியம் என்ற சிரியஸ் ரஜினி ரசிகர், ரஜினி பற்றி ஒரு புத்தகம் எழுதுவதாக சில பக்கங்களை அனுப்பினார். ரஜினி சினிமாக்களின் பஞ்ச் வசனங்களைக் கொண்டு எழுதப்பட்ட ஒரு மேனேஜ்மெண்ட் வாசனை கொண்ட புத்தகம். ஆங்கிலத்தில் இருந்தது. தமிழ் சினிமாக்கள் பலவற்றில் நடித்திருகும் கிட்டு என்ற ராஜா கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து புத்தகத்தை எழுதியிருந்தார். அதை நாங்கள் பதிப்பிக்க முடிவு செய்தோம். அப்படியே தமிழிலும் செய்துவிடலாம் என்று முடிவு செய்தோம். அதன் விற்பனை எப்படியிருக்கும் என்பது பற்றி அதிகமாக யோசிக்கவில்லை. சினிமா வாசனை கொண்ட புத்தகங்கள் பலவற்றை நாங்கள் பதிப்பித்துள்ளோம். ஆனால் அவை அதிகம் விற்றதில்லை. அதிகம் என்றால் பல ஆயிரங்கள். இவை அதிகபட்சம் 2,000 - 3,000-க்குள் முடிந்துவிடும். ரஜினியின் பன்ச் தந்திரம், Rajini's Punch Tantra என்ற இந்தப் புத்தகம் ரிலீஸ் ஆனது ஒரு ஞாயிற்றுக்கிழமையில். 12 டிசம்பர் 2010, ரஜினியின் பிறந்தநாள் அன்று. முதலில் இந்தப் புத்தகத்துக்கு என்று ரிலீஸ் நிகழ்ச்சி எதுவும் வைப்பதாக இல்லை. கடைசி நேரத்தில்தான் முடிவானது. ஒடிஸி புத்தகக் கடையில் சிறு நிகழ்ச்சி. கே.பாலசந்தரும் ராதிகா சரத்குமாரும் வந்திருந்தனர். ரஜினியின் மகள் வந்திருந்தார். நானும் சத்யாவும் ஊரிலேயே இல்லை. வேறு நிகழ்ச்சிக்கு முன்னதாகவே ஒப்புக்கொண்டிருந்ததால் சென்னையில் அன்று இருக்கமுடியவில்லை. இதற்கிடையில் ஏகப்பட்ட செய்தி நிறுவனங்களுக்கு புத்தகம் ஒரு பிரதியும் ஒரு செய்திக்குறிப்பும் அனுப்பியிருந்தோம். ரேடியோ ஒன் எஃப்.எம் சானல் ஒரே சந்தோஷத்தில் ஏகப்பட்ட புரமோஷன் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். (எல்லாம் ஃப்ரீ!). அடுத்து குங்குமம் பத்திரிகையில் ஐந்து பக்கத்துக்கு ஒரு பேட்டி! அத்தோடு விட்டார்களா! இந்த வாரக் குங்குமம் வாங்கிவிட்டீர்களா என்று சன் குழும சானல்கள் அனைத்திலும் செய்யும் விளம்பரத்தில் ‘ரஜினியின் பன்ச் வசனங்கள் நிர்வாக வழிகாட்டி’ (அல்லது இப்படி ஏதோ) என்று நொடிக்கு நூறு தரம் வரத்தொடங்கியது. லாண்ட்மார்க் அவர்களது கஸ்டமர்களுக்கு அனுப்பும் மின்னஞ்சலில் இந்தப் புத்தகத்தை முதலில் வைத்து, ஸ்பெஷல் ஆஃபர் அனுப்பியுள்ளனர். ரஜினிகாந்த் தானே பல புத்தகங்கள் வாங்கி சினி இண்டஸ்ட்ரியில் பலருக்குக் கொடுத்துள்ளார். விஷயம் கேள்விப்பட்டு பல சினிமாத்துறையினர் 50, 100 என்று புத்தகங்களை வாங்கி மேலும் பலருக்குக் கொடுக்கின்றனர். ஜப்பானிலிருந்து எங்கள் இணையத்தளத்துக்கு இந்தப் புத்தகத்துக்கு சில ஆர்டர்கள் வந்துள்ளன. (நிஜமாவேங்க!) அப்படி என்ன இந்தப் புத்தகத்தில் இருக்கிறது, இதனை வாங்கலாமா, கூடாதா என்பது பற்றி நான் ஒன்றுமே சொல்லப்போவதில்லை. நீங்களே வாங்கி முடிவு செய்துகொள்ளுங்கள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். சில புத்தகங்களுக்குத் தானாகவே இறக்கைகள் முளைக்கும். அவை அப்படியே பறந்து செல்லும். எந்த மார்க்கெட்டருக்கும் இதற்கான காரணங்கள் புரியப்போவதில்லை. நானும் அதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யப்போவதில்லை. Posted by Badri Seshadri at 14:03 8 பின்னூட்டங்கள் Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest உலகத் தலைவர்கள் என்ன சொன்னார்கள்? மிண்ட் பத்திரிகையிலிருந்து கடந்த ஆறு மாதங்களின் உலகின் முக்கிய தலைவர்கள், ஐ.நா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்கள், வீட்டோ அதிகாரம் கொண்டவர்கள் அனைவரும் இந்தியா வந்தனர். அப்போது அவர்கள் சொன்னவை, செய்தவை. பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரான், 27-29 ஜூலை 2010 இந்திய-பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தங்கள்: $1.1 பில்லியன் ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: தரப்படவேண்டும். “பாகிஸ்தான் இந்தியாவுக்கும் பிற நாடுகளுக்கும் எதிராக பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதை பொறுத்துக்கொண்டிருக்க முடியாது.” அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, 6-9 நவம்பர் 2010 இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தங்கள்: $10 பில்லியன் ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: தரப்படவேண்டும். “பயங்கரவாத வலைப்பின்னல்கள், முக்கியமாக லஷ்கர்-ஈ-தோய்பா, தோற்கடிக்கப்படவேண்டும். மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை பாகிஸ்தான் தண்டிக்கவேண்டும்.” பிரான்ஸ் அதிபர் நிகோலாஸ் சார்கோஸி, 4-7 டிசம்பர் 2010 இந்திய-பிரான்ஸ் வர்த்தக ஒப்பந்தங்கள்: யூரோ 7 பில்லியன் ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: தரப்படவேண்டும். “அண்டை நாட்டில் இருந்து செயல்படும் பயங்கரவாதக் குழுக்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பது அனுமதிக்கமுடியாதது. பயங்கரவாதத்தை முறியடிக்க பாகிஸ்தான் தன் முயற்சிகளை அதிகப்படுத்தவேண்டும்.” சீனப் பிரதமர் வென் ஜியாபோ, 15-17 டிசம்பர் 2010 இந்திய-சீன வர்த்தக ஒப்பந்தங்கள்: $16 பில்லியன் ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: பேச்சு ஏதுமில்லை பாகிஸ்தான் பற்றி: பேச்சு ஏதுமில்லை. இரு நாடுகளும் தீவிரவாதத்தை எதிர்க்கின்றன என்று கூட்டு அறிக்கை மட்டுமே. ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வெதேவ், 21-22 டிசம்பர் 2010 இந்திய-ரஷ்ய வர்த்தக ஒப்பந்தங்கள்: $30 பில்லியன் ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: தரப்படவேண்டும். “பயங்கரவாதத்துக்கு உதவும், தூண்டிவிடும், பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் தரும் நாடுகள், பயங்கரவாதச் செயல்களைப் புரிவோர் அளவுக்கே குற்றம் செய்தவர்கள் ஆகிறார்கள். மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டோருக்கு பாகிஸ்தான் தண்டனை அளிக்கவேண்டும்.” Posted by Badri Seshadri at 09:25 3 பின்னூட்டங்கள் Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Tuesday, December 21, 2010 அமரத்துவம் பெற்ற சித்திரக் கதைகள் சென்னை புத்தகக் கண்காட்சி 2011-ல் நாங்கள் பெருமையுடன் வழங்க உள்ள புத்தகங்கள் இவை. சென்ற ஆண்டு இவை இருக்கவில்லை. இந்த முயற்சி ஆரம்பித்தது மார்ச் 2010-ல்தான். அமர சித்திரக் கதைகள் (அமர் சித்ர கதா), ஆனந்த் பாய் என்பவர் வழிகாட்டுதலில் இந்தியா புக் ஹவுஸ் நிறுவனத்தால் கொண்டுவரப்பட்ட வரலாறு, புராண, இதிகாச, காப்பிய படக்கதைகள் மட்டுமல்ல, நிஜ மனிதர்களைப் பற்றியும் உருவாக்கப்பட்ட படக்கதைகள். பஞ்ச தந்திரம், தெனாலி ராமன், பீர்பால் படக்கதைகளும் உண்டு. பின்னர் இந்தியா புக் ஹவுஸ் நிறுவனத்திடமிருந்து ஒரு பிரைவேட் ஈக்விடி குழுமம், அமர சித்திரக் கதைகளை மட்டும் தனியாக வாங்கிக்கொண்டது. இந்தியாவில் மிக அதிகமாகப் படிக்கப்பட்ட புத்தக பிராண்ட் என்றால் கண்ணை மூடிக்கொண்டு அமர சித்திரக் கதைகள் என்று சொல்லிவிடலாம். பெரும்பாலும் ஆங்கிலத்திலும், சில புத்தகங்கள் மட்டும் பிற மொழிகளிலுமாக இவை கிடைக்கின்றன. காமிக்ஸ் விரும்பிகள், இரு வண்ணத்தில் தமிழில் சுமார் 70-80 வெளியானதாகச் சொல்கிறார்கள். ஆங்காங்கு தேடினால் எங்கேனும் கிடைக்கலாம். முழு வண்ணத்திலேயே 15 புத்தகங்கள் வரை தமிழில் அமர சித்திரக் கதைகள் நிறுவனத்தாலேயே வெளியாகியிருந்தன. அவையும் இப்போது அச்சில் இல்லை. அதில் எழுத்துகள் கையாலேயே எழுதப்பட்டிருக்கும். கணினியுகத்துக்கு முந்தைய காலகட்டம் அது. மார்ச் 2010 முதல், அமர சித்திரக் கதைகள் நிறுவனத்துடன் நியூ ஹொரைஸன் மீடியா நிறுவனம் போட்டிருக்கும் ஒப்பந்தப்படி, அவர்கள் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள அனைத்து புத்தகங்களையும் தமிழில் இணைந்து கொண்டுவரப்போகிறோம். அவை அமர சித்திரக் கதைகள் பிராண்டிலேயே வெளியாகும். இதுவரையில் 24 புத்தகங்களைக் கொண்டுவந்துள்ளோம். அனைத்தும் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். மேலும் சில புத்தகங்களில் வேலை நடந்துகொண்டிருக்கிறது. அடுத்த சென்னை புத்தகக் கண்காட்சி 2012-ன்போது நிச்சயம் 100 புத்தகங்களாவது இருக்கும் என்பது எங்கள் நம்பிக்கை. இந்தப் புத்தகங்களில் நாங்கள் வெளியிட்ட முதல் எட்டை நான்தான் தமிழாக்கம் செய்தேன்! அதில் எனக்கு மிகுந்த திருப்தி. அடுத்தவற்றை எல்லாம் ப்ராடிஜி எடிட்டர் சுஜாதா மொழியாக்கம் செய்ய, அவற்றை நான்தான் எடிட் செய்கிறேன். என் பிற அனைத்து வேலைகளையும்விட எனக்கு மிகுந்த சந்தோஷம் தருபது இந்த வேலைதான். நான் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்ததே காமிக்ஸ் வழியாகத்தான். முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் என்று தொடங்கி, பின்னர் அம்புலிமாமா, ரத்னபாலா வந்து, பெரிய எழுத்து மந்திரவாதக் கதைகளைப் படித்து அங்கிருந்து விகடன், குமுதம் படிக்க ஆரம்பித்தேன் நான். அதேபோல இன்று என் மகளுக்குப் புத்தகம் படிக்கப் பழக்கிவைப்பதில் மிகுந்த சிரமப்பட்டு, ஆங்கில அமர சித்திரக் கதைகளிடம் தஞ்சம் புகுந்தேன். இப்போது அவள் அமர சித்திரக் கதைகள் தாண்டி, ஆஸ்டெரிக்ஸ் காமிக்ஸ்களைப் படிக்க ஆரம்பித்திருக்கிறாள். புத்தக வாசிப்பு குறைந்துவருகிறது என்று குறைப்படுவோர் பலர். தொலைக்காட்சியின் ஆதிக்கம்தான் எங்கும் என்று முறையிடுவோர் பலர். வாசிப்பு எவ்வளவு அவசியம் என்பதைத் தெரிந்துவைத்துள்ள பலரும் எப்படித் தங்கள் குழந்தைகளுக்குப் படிப்பின் சுவையை ஊட்டுவது என்று தெரியாமல் இருக்கிறார்கள். அதனால் பதற்றமும் அடைகிறார்கள். என் சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன். இதற்கான ஒரு விடை: அமர சித்திரக் கதைகள். கண்ணை மூடிக்கொண்டு இந்தப் புத்தகங்களை வாங்கிக்கொடுங்கள். உங்கள் பிள்ளைகள் புத்தகம் படிக்க ஆரம்பித்துவிடுவார்கள். விலையும் மலிவுதான். 32 பக்கங்கள் கொண்ட (கிரவுன் 1/4) ஒவ்வொரு முழுவண்ணப் புத்தகமும் வெறும் ரூ. 35 மட்டுமே! இதுவரை வந்துள்ள அனைத்து அமர சித்திரக் கதைகள் (தமிழ்) புத்தகங்களை வாங்க இதற்குமுன் நான் அமர சித்திரக் கதைகள் பற்றி எழுதிய பதிவுகள் ஒன்று | இரண்டு Posted by Badri Seshadri at 16:18 13 பின்னூட்டங்கள் Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest சாகித்ய அகாதெமி விருது 2010: நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடனுக்கு 2010-ன் தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது கிடைத்துள்ளது. மகிழ்ச்சியான செய்தி. ஒரு வாரம் முன்புதான் தில்லி தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாள் கருத்தரங்கில் கலந்துகொள்ள அவர் வந்திருந்தார். நானும் சென்றிருந்தேன். நாவல் இலக்கியம் பற்றிய கட்டுரை ஒன்றை நாஞ்சில் நாடன் வாசித்தார். (இந்த நிகழ்வில் வெளியான கட்டுரைகள் அனைத்தும் அடங்கிய தொகுப்பு ஒன்றை தில்லி தமிழ்ச்சங்கம் வெளியிட்டுள்ளது. இந்தத் தொகுப்பு சென்னை புத்தகக் கண்காட்சியின்போது கிழக்கு பதிப்பகம் அரங்கில் விற்பனைக்குக் கிடைக்கும்.) நாஞ்சிலுக்கே உரித்தான் கிண்டல், கேலி அதில் இருந்தது. அப்போது பேசும்போது தான் மீண்டும் தில்லி வருவது பற்றிச் சொன்னார். உடனே அரங்கிலிருந்து ‘பத்மஸ்ரீ விருது பெறவா?’ என்று கேட்டார்கள் என்று ஞாபகம். ‘ஏன்? பாரத ரத்னா விருது வாங்கக்கூடாதோ?’ என்று நாஞ்சில் எதிர்க்கேள்வி கேட்டதாக ஞாபகம். (கிட்டத்தட்ட இந்த ரீதியில்தான் இருந்தது. ஞாபகமறதி அதிகமாகிவிட்டது!) அப்போது சாகித்ய அகாதெமி விருதுபற்றி நாஞ்சில் நாடனுக்கு தகவல் தெரிந்திருக்காது என்றுதான் நினைக்கிறேன். இந்த விருது தொடர்பாக வெளியான அவரது கருத்துகளில் ஓர் ஏக்கம் வெளிப்படுகிறது. அது அவரைப் பற்றிய ஏக்கமல்ல. தமிழ் இலக்கியத் துறை பற்றியும் தமிழுக்குக் கிடைக்கும் சாகித்ய அகாதெமி விருதுகள் பற்றியுமான ஏக்கம். ஒரு கலைஞன் அவன் வாழ்நாள் சாதனையின் உச்சத்தில் இருக்கும்போது விருது கொடுக்கப்படவேண்டுமா அல்லது ரிடயர் ஆகிப் போகும்போது பென்ஷன்போலக் கொடுக்கப்படவேண்டுமா? மிகச் சரியான கேள்வி. (அப்படிப் பார்த்தால் பெரும்பாலும் சரியாகக் கிடைக்கும் கேரள எழுத்தாளருக்கான விருதில் இம்முறை நாஞ்சிலைவிட வயது அதிகமான வீரேந்திர குமாருக்குக் கிடைத்துள்ளதே?) நான் வலைப்பதிவு எழுத ஆரம்பித்தபின் தமிழுக்குக் கிடைத்துள்ள சாகித்ய அகாதெமி விருதுகளை இந்தச் சுட்டியில் காணலாம். அதிலிருந்து எப்படிப்பட்ட ஏற்ற இறக்கங்களை நாம் பார்த்துவந்துள்ளோம் என்று தெரியும். நாஞ்சில் நாடனின் ஒரு நாவலை - எட்டுத் திக்கும் மதயானை - ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நாங்கள் வெளியிட்டுள்ளோம். Against All Odds நாஞ்சில் நாடனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். சூடிய பூ சூடற்க - சாகித்ய அகாதெமி 2010 விருது பெற்ற நாஞ்சில் நாடன் புத்தகத்தை வாங்க நாஞ்சில் நாடனின் பிற புத்தகங்களை வாங்க பா.ராகவனின் பதிவு தி ஹிந்து செய்தி தினமணி செய்தி Posted by Badri Seshadri at 10:56 1 பின்னூட்டங்கள் Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Monday, December 20, 2010 காந்திக்குப் பிறகான இந்தியா ஒருமாதிரியாக இன்றோடு முடிந்தது. ராமச்சந்திர குஹாவின் India After Gandhi புத்தகத்தின் தமிழாக்கத்தை நாங்கள் ஆரம்பித்தது கிட்டத்தட்ட 30 மாதங்களுக்கு முன்பு. இது முடிவதற்கு இவ்வளவு காலம் ஆகும் என்று அப்போது நினைத்தும் பார்த்திருக்கவில்லை. முதலில் புத்தகத்தை இரண்டு பாகங்களாக உடைத்துக்கொள்வது என்று முடிவெடுத்தோம். முதல் பாகத்தின் மொழிபெயர்ப்பு கைக்கு வந்துசேர்ந்து அதில் நிறைய வேலை செய்யவேண்டியிருந்தது. ஆகஸ்ட் 2009-ல் புத்தகத்தை வெளியிட நாள் குறித்தாயிற்று. ராமச்சந்திர குஹா சென்னைக்கு வரும் தேதி நிச்சயம் ஆயிற்று. லாண்ட்மார்க்கில் நேரத்தை நிச்சயம் செய்தாயிற்று. அதனால் கடைசி சில நாள்களில் கடுமையான வேலைப்பளுவில் புத்தகத்தை முடிக்க வேண்டியதாயிற்று. புத்தகத்தில் சில குறைபாடுகள் நிச்சயம் உள்ளன. சரிசெய்யவேண்டும். இரண்டாம் பாகத்தை விரைவில் கொண்டுவந்துவிடலாம் என்றுதான் அப்போதைய கற்பனை இருந்தது. முடிந்தால் 2010 சென்னை புத்தகக் கண்காட்சியின்போதே என்றுதான் நினைத்தோம். சான்ஸே இல்லை என்று தோன்றியதும், சரி விட்டுவிட்டு அடுத்த ஆகஸ்டில் - ஆகஸ்ட் 2010-ல் வெளியிடலாம் என்று நினைத்தோம். மொழிபெயர்ப்பு கைக்கு அதற்குள்ளாக வந்துவிட்டது. ஆனால் அதில் செய்யவேண்டிய வேலைகள் மலைப்பைத் தந்தன. அப்படியே காலம் நழுவி நழுவி, ஆகஸ்டும் வந்தது, போனது. சென்னை புத்தகக் கண்காட்சி 2011-ல் கொண்டுவந்தே ஆகவேண்டும் என்று மீண்டும் வேலைகளை ஆரம்பித்தோம். இன்று புத்தகம் அச்சுக்குப் போகத் தயார். அடுத்த சில நாள்களில் அச்சாகி, சுடச்சுட புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்போது வந்துள்ளது. நிச்சயம் இந்தத் தொகுதி திருப்திகரமாகவே வந்துள்ளது. அடுத்த சில மாதங்களில் ஒரு ஸ்பெஷல் எடிஷன் கொண்டுவருவோம் - இரண்டு தொகுதிகளையும் ஒன்றுசேர்த்து, ஒரு லெதர் பவுண்ட் ஸ்பெஷல் வால்யூமாக. *** இந்தியாவின் கதை என்ன அற்புதமான கதை! இந்தியா என்றொரு தேசம் சாத்தியமே இல்லை என்று அனைவரும் ஆரூடம் கூறியபின், எப்படி அத்தனை எதிர்மறைக் கருத்துகளையும் தாண்டி இந்தியா என்ற தேசம் சாத்தியமாகியுள்ளது என்பதைக் காட்டுகிறது குஹாவின் எழுத்து. சிக்கல்கள் இல்லாமல் இல்லை. ஏழைமை, சுகாதார வசதிகள் போதாமை, கல்வியின்மை, பிரிவினைவாதம், ஊழல், மதவாதம், விரைவான உலகமயமாதலால் பாதிக்கப்படும் பழங்குடியினர் என்று எண்ணற்ற பிரச்னைகள். ஆனால் இவற்றுக்கு ஏதோ ஒரு வழியில் விடைகள் கண்டுபிடிக்கப்படும் என்ற நம்பிக்கை இப்போதுதான் வந்துள்ளது. இதனைச் சாதிக்க இந்தியா என்ன விலை கொடுக்கவேண்டியிருந்தது என்பதைக் கதையாக விளக்குகிறார் குஹா. அடுத்த சில தினங்களில் குஹா புத்தகத்திலிருந்து சில சில (சிறு) பகுதிகளைக் கொடுக்க உள்ளேன். ஒவ்வொருவர் வீட்டிலும் கட்டாயம் இருக்கவேண்டிய இரு தொகுதிகள் இவை. புத்தகத்தை மொழிபெயர்த்த ஆர்.பி.சாரதி பாராட்டுக்குரியவர். நிறையப் பொறுமை அவருக்கு. முதல் பாகம் மொழிபெயர்த்ததற்காக திசை எட்டும் விருது பெற்றுள்ளார். இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு: பாகம் 1, பாகம் 2 முதல் பாகத்தை இப்போதே வாங்க பாகம் 2, சென்னை 2011 புத்தகக் கண்காட்சியில் வெளியாகும். சென்னை 2011 புத்தகக் கண்காட்சி விவரங்கள் Posted by Badri Seshadri at 21:59 8 பின்னூட்டங்கள் Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Monday, December 13, 2010 மாடு வளர்ப்பு ஒரு பசு மாட்டின் சராசரி வயது எவ்வளவு? 15 ஆண்டுகள்தானாம். அதாவது நம்மூரில் இருக்கும் கலப்பினப் பசுக்கள். மாடு வளர்ப்பவர்கள் கவனிக்கவேண்டிய விஷயங்கள் பல உள்ளன. மாடு கன்றுக்குட்டி ஈனும்போது கூடவே சீம்பால் என்ற ஊட்டச்சத்து மிகுந்த பாலைச் சுரக்கும். இந்தப் பால் முழுவதையும் கன்றுக்குட்டி குடிக்கக் கொடுக்கவேண்டுமாம். ஆனால் பெரும்பாலானோர் இதைச் செய்வதில்லை. சிலர் அதைத் தாங்கள் உண்டிட எடுத்துச் செல்கின்றனர். வேறு சிலர் ஏதோ மூட நம்பிக்கைகளை மனத்தில்கொண்டு குளத்தில் கொட்டிவிடுகின்றனராம். இதன் விளைவாக, அந்தக் கன்றுக்குட்டி ஆரம்பத்திலேயே வளர்ச்சி குன்றிப் போய்விடுகிறது. எனவே சீம்பாலை முழுமையாகக் கன்றுக்குட்டிக்குக் கொடுக்கவேண்டும். அடுத்து அதன் தொப்புள்கொடியை வெட்டுவது; மருந்துபோட்டுக் காப்பது. எப்படி மனிதக் குழந்தைகளுக்கு கவனமாக தொப்புள்கொடியை அரிந்துவிட்டு பிளாஸ்திரி போட்டுக் கட்டிவைக்கிறோமோ, அப்படிப் பெரும்பாலும் மாடுகளுக்குச் செய்வதில்லை. கன்று மண்ணில் புரண்டு அங்கு இன்ஃபெக்‌ஷன் வர நேரிடுகிறது. எட்டு நாள் தாண்டிய உடனேயே கன்று வயிற்றில் (ஜீரண மண்டலத்தில்) பூச்சி வராமல் இருக்க மருந்து கொடுக்க ஆரம்பித்துவிடவேண்டுமாம். அதன்பின் 15 நாள்களுக்கு ஒருமுறை இதனை முறையாகச் செய்துவரவேண்டும். சுமார் 2.5 ஆண்டுகளில் ஒரு கன்று வயதுக்கு வந்து, சினை பிடிக்கத் தயாராக உள்ளது. உடனடியாகவே அதற்குச் சினையூட்டலாம். கன்றை ஈன்றதும், கவனமாக முன் சொன்னதுபோல, அதன் குட்டிக்கு சீம்பாலை கொடுக்கவேண்டும். அடுத்த சுமார் 10 மாதங்களுக்கு மாடு பால் தரும். அதன் பால் வற்றிப்போகும் காலத்தைக் கணித்து அதற்கு ஏற்றவாறு அதனை மறுபடியும் சினையூட்ட வைக்கவேண்டும். அதன் வாழ்நாளில் அதனை 10 முறை சினையூட்டி, கன்றுகளை ஈன வைத்து, அதன் பால் தரும் காலத்தை அதிகப் படுத்தமுடியும். மாடுகளுக்கு உணவு அளிப்பதை அக்கறையுடன் செய்யவேண்டும். பசுந்தழை (புல்), காய்ந்த தழை (வைக்கோல் முதலியன) ஆகியவற்றுடன் சரியான அளவு probiotic நுண்ணுயிரிகள் கலந்த கலவையைக் கொடுக்கவேண்டும். (மனிதர்கள் சாப்பிடும் தயிர் probiotic வகையைச் சேர்ந்தது.) அப்போதுதான் மாடுகள் உட்கொள்ளும் உணவை முழுமையாக உள்வாங்கி, செரித்து, அதன் சத்து முழுவதும் பாலாக ஆகும் நிலை ஏற்படும். எந்த மாதிரியான உணவைத் தரவேண்டும் என்பதை ஒரு கால்நடை மருத்துவரிடம் முறையாகக் கேட்டு அதனைப் பின்பற்றவேண்டும். கன்றுகள் பால் சாப்பிடும் காலம் வரையிலும், கன்றின் எடையில் பத்தில் ஒரு பாகம் அளவுக்கு அதற்குப் பால் தரவேண்டும். பலரும் இதனைச் செய்வதில்லை. இதெல்லாம் கன்றின் வளர்ச்சியைப் பாதிக்கும். இதனால் அந்தக் கன்று பின்னர் வளர்ந்ததும் அதன் பால் தரும் அளவு நிச்சயமாக பாதிக்கப்படும். மாடுகள் வசிக்கும் இடத்தைப் பராமரிப்பது, மாடுகளுக்கு நோய் வராமல் பார்த்துக்கொள்வது, அவற்றின் உடலில் ஈக்கள், உண்ணிகள், பிற மொய்க்காமல், தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்வது, இவை அனைத்தும் முக்கியம். அவற்றுக்கும் நோய்கள் வரும்போது உடனடியாக மருத்துவர்களைப் பார்ப்பதும் முக்கியம். பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டால் மனிதனுக்கு எந்த அளவுக்கு தொந்தரவோ, அதே அளவுக்கு மாட்டுக்கும் தொந்தரவுதான். வருமானமும் பாதிக்கப்படும் என்பது முக்கியம். இந்தியாவைப் பொருத்தவரை வெளிநாட்டுப் பசுக்களை வளர்ப்பது சரியல்ல. கலப்பினப் பசுக்கள், அதில் சுமார் 62-63% வெளிநாட்டு (ஜெர்ஸி?) பசுவின் மரபணு இருந்தால் போதும். *** சென்ற வாரம் சென்னையிலிருந்து காரில் ஊர் சுற்றும் பயணத்தின்போது மாறி மாறி எஃப்.எம் வானொலிகளைக் கேட்டு, பின் கவரேஜ் இல்லாத இடத்தில் ஆல் இந்தியா ரேடியோ கேட்டபோது கிடைத்த தகவல்கள் இவை. இந்த அதிமுக்கியமான விஷயத்தை உடனடியாகப் பதிவு செய்ய விரும்பினேன். ஆனால் அதற்குள் தில்லி செல்லவேண்டிய வேலை வந்துவிட்டது. பிறகு மறக்கவும் ஆரம்பித்துவிட்டது. எனவே ஞாபகம் இருக்கும்வரை இங்கே! இனி, தொடர்ச்சியாக ஏ.எம் - ஆல் இந்தியா ரேடியோ வானொலி கேட்கப்போவதாக முடிவு செய்துள்ளேன். Posted by Badri Seshadri at 18:55 13 பின்னூட்டங்கள் Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Tuesday, December 07, 2010 புகளூர் கல்வெட்டுகள் நேற்று கரூர்/புகளூர் செல்லவேண்டியிருந்தது. அலுவலக வேலைகளை முடித்ததும் அங்குதான் சரித்திரப் பிரசித்தி பெற்ற சில கல்வெட்டுகள் உள்ளன என்ற எண்ணம் மனத்தில் தோன்ற அதைத் தேடிச் சென்றேன். புகளூரில் முதலில் கேட்டுப் பார்த்ததில் யாருக்கும் அப்படி ஒன்று இருப்பதாகத் தெரியவே இல்லை. இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஒரு சிலர் மலைமீதிருக்கும் முருகன் கோயிலைக் காட்டினர். ஏதோ ஓர் எண்ணத்தில், கோயிலில் நான் தேடும் கல்வெட்டு இருக்காது என்று தெனாவெட்டாக வேறு இடங்களைத் தேடிச் சென்றுவிட்டு, கடைசியில், அங்கிருந்து மீண்டும் சென்னை கிளம்ப நினைத்தபோது, வேலாயுதம்பாளையம் அருகே பைபாஸ் சாலையில் ஏற முற்படும்போது ஒரு தட்டி தென்பட்டது. அதில் இரண்டாயிரம் ஆண்டுப் பழைமை வாய்ந்த கல்வெட்டு பற்றிய குறிப்பு இருந்தது. முருகன் இருக்கும் மலையில்தான். ஒரு சிறு மலை. அந்த மலையுச்சியில் முருகனுக்குக் கோயில் ஒன்று உள்ளது. வாசலிலேயே தொல்லியல் துறையின் அறிவிப்பு காணப்படுகிறது. ஆனால் அருகில் கண்ணுக்குத் தெரிந்த யாருக்கும் அந்தக் கல்வெட்டுகள் எங்கே உள்ளன என்று தெரியவில்லை. சந்நிதியில் இருக்கும் ஐயரிடம் கேட்கச் சொன்னார்கள். உச்சிகால பூஜை முடிந்து கோயில் சார்த்தும் நேரம் என்பதால் அவசர அவசரமாக மேலே செல்லச் சொன்னார்கள். செங்குத்தான 315 படிகள். மூச்சு இரைக்க இரைக்க மேலே சென்று முருகன் சந்நிதியில் இருந்த ஐயரிடம் கேட்டேன். அவருக்குத் தெரிந்திருந்தது. மலைக்கு வெளிப்புறத்தில்தான் அந்தக் குறிப்பிட்ட கல்வெட்டுகள் உள்ளன. ஆனால் ஓராண்டுக்கு முன், அங்கு செல்லும் வழியை மூடி மறைத்து, வேலி எழுப்பி, பூட்டு பூட்டியுள்ளனர் என்றார். அதற்கான சாவி கீழே கீழே இருக்கும் கோயில் காவலர் சந்திரசேகரன் என்பவரிடம் உள்ளது என்றார். அந்தப் பகுதியில் இருக்கும் இளைஞர்கள் புராதனப் பழைமை வாய்ந்த சமணர் படுகைகளை சீட்டாட, மது குடிக்க, பெண்டிரை அழைத்து வந்து, கிடத்தி (யார் அறிவர்! சமணர் படுகைமீதே கூடக் கிடத்தி?) கொண்டாட என்று பயன்படுத்தினராம். இதனால் தில்லியிலிருந்து வந்து பார்த்த உயரதிகாரிகள், உடனடியாக பூட்டு/சாவி போட்டுவிட்டனராம். ஆ! மீண்டும் 315 படிகள் கீழே இறங்கி மேலே ஏறவேண்டுமா என்று தயக்கம். ஆனாலும் இந்த வாய்ப்பை விடமுடியுமா? கீழே இறங்கி வந்தால் சந்திரசேகர் இருந்தார். ஐயப்பன் மலைக்கு மாலை போட்டிருந்தார். காலில் செருப்பு இல்லை. மேலே வந்து கல்வெட்டுகளைக் காட்ட முடியுமா என்று கேட்டேன். ஒப்புக்கொண்டார். அவ்வப்போது ஆராய்ச்சி மாணவர்கள் வருவதாகவும், அவர்களும் அங்கே உள்ள கல்வெட்டுகள் என்ன சொல்கின்றன, அவற்றின் பொருள் என்ன என்று கேட்பதாகவும், அதற்கான தகவல் கையேடுகள் ஏதும் இல்லாததால் அவற்றைக் கொடுக்க முடிவதில்லை என்றும் சொன்னார். மீண்டும் மூச்சிரைக்க மூச்சிரைக்க ஏறினோம். சந்நிதிக் குருக்கள் பூஜையை முடித்துவிட்டு, உணவுடன் கீழே வந்துகொண்டிருந்தார். எனக்கு இடத்தைக் காண்பித்தபின் பூட்டுமாறு சொல்லிவிட்டுச் சென்றார். இடும்பன் சந்நிதி அருகே கதவு பூட்டியிருந்தது. அங்கே ஒரு யுவதியும் இரு இளைஞர்களும் உட்கார்ந்திருந்தனர். அந்தப் பெண் சற்று சத்தமாகவே ‘நீ என்ன லவ் பண்றியா இல்ல வேற யாரையாவது லவ் பண்றியான்னே தெரியலையேடா’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் மேலே வரும்போதே ஓர் இளைஞர் சற்றே ஜகா வாங்கி, ‘சாமி கும்புடப் போறேன்’ என்று சந்திரசேகரனிடம் சொன்னார். ‘கோயில் கதவு மூடியாயிற்று, அதனால் கிளம்பிச் செல்லுங்கள்’ என்று அவர்களைத் துரத்திவிட்டு, கதவைத் திறந்துகொண்டு என்னை அழைத்துக்கொண்டு கல்வெட்டுகளைக் காண்பிக்கச் சென்றார். கிபி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் இவை. அங்கே சமணப் படுகைகள் சில உள்ளன. படுகைகளை ஒட்டி சில தமிழ் பிரமி எழுத்துகள் உள்ளன. மலை முகப்பில் சில இடங்களில் எழுத்துகள் வெட்டப்பட்டுள்ளன. அவற்றின்மேல் சாக்கட்டியால் அழுத்தி எழுதியுள்ளனர். பார்த்தவுடன் படிக்கமுடியுமாறு. இதில் ஒரு கல்வெட்டில்தான், ‘ஆதன் செல் இரும்பொறையின் மகனான பெருங்கடுங்கோனின் மகனான கடுங்கோன் இளங்கடுங்கோ வெட்டுவித்த படுகை, யாற்று செங்காயபன் என்ற சமண முனிவருடையது’ என்ற தகவல் வருகிறது. இதில் குறிப்பிடப்படும் அரசர்கள் எல்லோருமே சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் சேர மன்னர்கள். இவர்களில் இரும்பொறை (கல்வெட்டில் இரும்புறை என்று எழுதப்பட்டுள்ளது) அடித்த காசுகள் கரூர் பகுதியில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன. அருகில், வேறு பல படுகைகளை வெட்டுவித்தவர்களின் பெயர்களும் அங்கு படுத்திருந்த சமண முனிவர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பார்த்தபின், மறுபக்கம் சென்று அங்கே சித்தர்கள் வாழ்ந்த இடத்தைக் காண்பிக்கிறேன் என்றார் சந்திரசேகரன். மலையில் பின்புறத்தை நோக்கிச் செல்லும்போது சந்திரசேகரன் திடீரென்று நின்றார். பாறைக்கு அடியில் சரசரவென சத்தம். ‘ஏய், போ, போ, சூ’ என்று விரட்டினார். ‘சாரைப்பாம்புங்க, அதான் சரசரன்னு போகுது. நாகம்னா அப்படியே நிக்கும்’ என்றார். எனக்கு நடுங்க ஆரம்பித்துவிட்டது. கல்வெட்டைத் தேடி வந்து, பாம்பைச் சீண்டி, வம்பெதற்கு என்று ‘வேண்டாங்க, போதும் கிளம்பிடலாம்’ என்றேன். திரும்பி வரும்போது, ‘இங்க எல்லாமே பாம்புங்க இருக்குங்க’ என்று பீதியைக் கிளப்பினார். வழியில் ஏதேனும் தென்படுகிறதா என்று கவனமாகப் பார்த்தபடி, அங்கிருந்து வெளியே வந்துவிட்டேன். ஒரே ஒரு கல்வெட்டை (மேலே உள்ளது), தமிழ் பிரமி எழுத்துகளைப் பார்த்துப் பார்த்து நானே எழுதிப் பார்த்தேன். முதல் வரி: ந லி பி ஊ ர அ பி ட ன கு ற ம ம க ள என்று வந்தது. ஐராவதம் மகாதேவனின் புத்தகத்தில் ‘பி’ என்பதை (3-ம் எழுத்து) ‘ய’ என்பதாகப் படிக்கவேண்டும் என்று குறிப்பு உள்ளது. நான் ‘அ’ என்று படித்ததை (6-வது எழுத்து) அவர் ‘ஆ’ என்கிறார். நான் ‘ற’ என்று படித்ததை (11-வது எழுத்து) அவர் ‘று’ என்று படிக்கிறார். இரு வரிகளையும் சேர்த்தால், வருவது: ‘நலியூர் ஆ பிடன் குறும்மகள் கீரன் கொறி செயிபித பளி’. அதாவது, ‘நல்லியூர் பிட்டனின் இளைய பெண் கீரன் கொற்றி செய்வித்த பள்ளி’. ‘ல்லி’ என்பதற்கு ‘லி’ மட்டும், ‘ட்ட’ என்பதற்கு ‘ட’ மட்டும், ‘ற்றி’ என்பதற்கு ‘றி’ மட்டும்தான் உள்ளன. மெய் எழுத்துக்கும் அகர உயிர்மெய்க்கும் வித்தியாசம் இல்லை. ஆனாலும்... 1800 ஆண்டுகளுக்கு முன் யாரோ ஒருவர் எழுதியதை நாமே படிக்கமுடியும், ஒரு மாதிரி பொருளும் புரிந்துகொள்ள முடியும் என்பது கிளர்ச்சி தருவதாக உள்ளதல்லவா! வியாழக்கிழமை, 9 டிசம்பர் 2010 அன்று, கிழக்கு மொட்டைமாடியில், மாலை 6.30 மணிக்கு, பேரா. சுவாமிநாதன், ஐராவதம் மகாதேவனின் 'Early Tamil Epigraphy: From the earliest times to the sixth century AD' என்ற புத்தகத்தின் பொருள் பற்றிப் பேசுகிறார். (இது உலக எழுத்துகள் என்ற தொடரில் பேரா. சுவாமிநாதன் நிகழ்த்திவரும் பேச்சுகளில் இந்த மாதத்துக்கானது...) *** நீங்கள் இந்தக் கல்வெட்டுகளைக் காண விரும்பினால், (பாம்புகளைக் கண்டு பயப்படாதவர் என்றால்,) செல்லவேண்டிய இடம்: கரூர்/புகளூர் அருகில் உள்ள வேலாயுதம்பாளையம், மலைமீதுள்ள முருகன் கோயில். கோயில் காவலர் சந்திரசேகரனின் செல்பேசி எண்: 98650-13050. முன்னதாகவே பேசி, கீழிருந்தே அவரைப் பிடித்து மேலே அழைத்துச் செல்லச் சொல்லுங்கள். கரூரிலிருந்து நேராக பஸ் ஸ்டாப் கோயில் அருகிலேயே உள்ளது.
நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை உருவாக்கித் தரவேண்டியதும் பள்ளியின் கடமைதான். நான் அடிக்கடி மேற்கோளிடும் ஒன்றை இங்கும் பதிவது அவசியம் என்று படுகிறது. யுனெஸ்கோவின் ஓர் அறிக்கை ‘the purpose of education is to include the excluded’ என்று சொல்கிறது. ‘கல்வி மறுக்கப்பட்ட ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட குழந்தைகளைப் பள்ளிக்குள் கொண்டு வருவதே கல்வியின் நோக்கம்’ – நூலிலிருந்து email facebook twitter Next அரங்கியல் அரங்கியல் கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே – மாவோ ! “உண்மையான கலைப்படைப்பு மக்களிடம் உள்ள கலைஞனைத் தட்டி எழுப்புகிறது; அவர்களது உலகக் கண்ணோட்டத்தை மட்டுமல்லாமல், அழகியல் – கலையியல் ரசனைகளையும் அவர்கள் உருவாக்கிக் கொள்ள வழி செய்கிறது“. அரங்கியல் பறை - தமிழர் இசைக் கருவி: ஓர் அறிமுகம் தமிழகத்தில் பன்னெடுங்காலமாக இருந்து வரும் முக்கிய இசைக்கருவி பறை. அதன் மற்றொரு பெயர் தப்பு. இது தோல் இசைக்கருவி. எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் தற்போதும் நாட்டுப்புற... அரங்கியல் வாழ்வியல் கூறுகளுடன் பறை பறை ஒரு தமிழிசைக் கருவியாகும். இது தோலால் ஆன மேளமாகும். ‘பறை‘ என்ற சொல் பேச்சைக் குறிப்பதாகும். ‘பேசு‘ எனப்பொருள்படும் ‘அறை‘ என்ற சொல்லினின்று ‘பறை‘ தோன்றியது. (நன்னூல் : 458). பேசுவதை இசைக்கவல்ல... விளம்பரம் BOOK LAB அனைத்து விதமான இலங்கை , இந்திய புத்தகங்கள் ஆசிரியம் கலைத்திட்ட அமுலாக்கத்தில் அதிபர் ஆசிரியர் மற்றும் கல்வித் திணைக்களங்களின் வகிபங்கு சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும். கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட... இலங்கையின் கல்விக் கொள்கை மற்றும் திட்டமிடலில் சர்வதேச கல்விஇலக்குகளின் செல்வாக்கு சண்முகலிங்கம் தேவமுகுந்தன் ஆசிரியர் "பனிப்போர் காலம் முடிவடைந்தது உலகம் ஒரு ஒழுங்கில் அமெரிக்கா தலைமையில் பயணிக்க ஆரம்பிக்கின்றது. இந்த ஏகாதிபத்தியம் தனக்கு விசுவாசம் உள்ள கல்விமுறையினை... கல்வி தொடர்பான பல்வேறு வரைவிலக்கணங்களின் துணையுடன் கல்வியின் தன்மை கல்வி தொடர்பான பல்வேறு வரைவிலக்கணங்களின் துணையுடன் கல்வியின் தன்மை* இயக்கத்தன்மை (dynamic)* வாழ்நாள் நீடித்த செயன்முறை * தொடர்ச்சியான செயன்முறை * வெவ்வேறு முறைகளில் பெறப்படுவது* காலத்துக்கு ஏற்ப /... கவிதை சுதந்திரம் நாடி போரிடும் உயிர்கள் - மாவோ சேதுங் - தனியே நிற்கிறேன் வீழ்கால குளிர் உறைக்க.ஷியாங் ஆறு வடதிசை ஏகுமிடத்தின்செம்மஞ்சள் தீவு முனையில்;செவ்வழலாய் நிறம்பற்றியெரியும் மரங்கள் சுமைதாங்கி பாலமதுஜா ஆறுமுகநாதன் (யா/மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை) தங்கத் தாரகையாய் தரணி தன்னிலே ஒளி வீசிடச் செய்யும் ஒரே ஒரு ஜீவன் அப்பா காண்பியம் You Tube Videos சிறப்பு கட்டுரை காந்தியின் ஆடை அரசியல் ஆடை என்பது பெரும்பாலானோருக்கு உடலை மறைப்பதற்கும், குளிர், வெப்பம் போன்றவற்றிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்கும், தங்களை மேலும் அழகாகக் காட்டிக்கொள்வதற்குமான விஷயமாகத்தான் இருக்கிறது. ஆனால்,... கைவிடப்பட்ட பாலஸ்தீனம்! தமிழில்: ஆசை இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே முழு வெளியுறவுத் தொடர்புகளை நிறுவுவதற்கான உடன்படிக்கை சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டது. இதில் மத்தியஸ்தராக இருந்தது அமெரிக்கா. இது... கட்டுரைகள் இயல்பூக்கம் இருந்தால் மட்டுமே கல்வி சுலபமாக இருக்கும் கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,... உலகெங்கும் பாராட்டப்படும் ஜப்பானிய கல்வி ஏற்பாடுகள் ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை... யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு:ஓர் இலக்கிய வரலாற்றுக் கண்ணோட்டம்-கா. சிவத்தம்பி. "வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்... கலைத்திட்ட அமுலாக்கத்தில் அதிபர் ஆசிரியர் மற்றும் கல்வித் திணைக்களங்களின் வகிபங்கு சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும். கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட... கல்வியில் தொழில் நுட்பத்தின் செல்வாக்கு சண்முகலிங்கம் தேவமுகுந்தன் ஆசிரியர் அறிமுகம் 21 ஆம் நூற்றாண்டின் சகாப்தம் பெரும்பாலும் ஒரு தொழில்நுட்ப சகாப்தமாககருதப்படுகிறது. தொழில்நுட்பம், இன்று மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது.எங்கள்... இலங்கையின் கல்விக் கொள்கை மற்றும் திட்டமிடலில் சர்வதேச கல்விஇலக்குகளின் செல்வாக்கு சண்முகலிங்கம் தேவமுகுந்தன் ஆசிரியர் "பனிப்போர் காலம் முடிவடைந்தது உலகம் ஒரு ஒழுங்கில் அமெரிக்கா தலைமையில் பயணிக்க ஆரம்பிக்கின்றது. இந்த ஏகாதிபத்தியம் தனக்கு விசுவாசம் உள்ள கல்விமுறையினை... புதிய கற்றல் பண்பாட்டைத் தான் இந்த சமூகம் வேண்டி நிற்கிறது {youTube}/FifHcafpxp0{/youtube} கல்வி தொடர்பான பல்வேறு வரைவிலக்கணங்களின் துணையுடன் கல்வியின் தன்மை கல்வி தொடர்பான பல்வேறு வரைவிலக்கணங்களின் துணையுடன் கல்வியின் தன்மை* இயக்கத்தன்மை (dynamic)* வாழ்நாள் நீடித்த செயன்முறை * தொடர்ச்சியான செயன்முறை * வெவ்வேறு முறைகளில் பெறப்படுவது* காலத்துக்கு ஏற்ப /... வாழ்க்கைமுறை பதட்டத்தை வெல்லப் சில வழிகள் பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே... வெற்றியின் குறுக்கே கோபம் – அனைவரும் படிக்க வேண்டிய தகவல் கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !” ‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ. ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர்... தொழில்நுட்பங்கள் குழந்தைகளின் வளர்ச்சியை எப்படியெல்லாம் பாதிக்கிறது தெரியுமா? இப்போதெல்லாம், தொழில்நுட்பம் குழந்தைகளின் வளர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? ஆம், உண்மையில், தொழில்நுட்பம் இப்போதெல்லாம் எல்லா இடங்களிலும் ஆதிக்கம்... குழந்தைகள் எப்படி ஊரடங்குகளை எதிர்கொள்கிறார்கள்? சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் கல்வி மட்டுமல்ல; ஊட்டச்சத்துக் குறைபாட்டினாலும்கூடக் குழந்தைகள் இந்தக் காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இரண்டையும் கணக்கில்கொள்ளும்போது இந்தப்... தடங்கள் முல்லை மண்ணின் ஆளுமையும், தனித்துவம்மிகு அதிபர்களுள் ஒருவரான திரு செ. அல்பிரட் அவர்கள் ஓய்வு பெறுகிறார் வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்... செஞ்சொற் சொல்வருக்கு மணிவிழா. ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்... மே தினம் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்.... சி. வை. தாமோதரம்பிள்ள - மதுசூதனன் தெ. - பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்.... சினிமா சினிமா OH MANAPENNE (ஓ மணப்பெண்ணே) பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்.... சினிமா 2021 ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படம் நோமட்லண்ட் (Nomadland) இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்... சினிமா 93 டேஸ் - எபோலா வைரஸ் தொற்றுப் பற்றிய படம் சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்... சினிமா முஸ்டாங்க்: (Mustang) பெண்ணியத் திரைப்படங்களில் முக்கியமானது தங்கள் அடையாளத்தைத் தொலைக்க விரும்பாத ஐந்து இளம் சகோதரிகளின் இயலாமை நிறைந்த போராட்ட வாழ்வே ‘முஸ்டாங்க்’ (Mustang). 2015-ல் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்ட இந்த துருக்கிய திரைப்படம் பெண்ணியத்... ஆன்மீகம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ரதிகலா புவனேந்திரன்நுண்கலைத்துறைகிழக்குப் பல்கலைகழகம். வந்தாரை வாழ வைக்கும் வன்னி மண்ணின் தலை சிறந்த ஊர்களில் முல்லைத்தீவும் ஆகும். இங்கு பழமையும், தொன்மையும் வாய்ந்த ஆலயங்களுள்... குருந்தூர் மலையில் கிடைத்திருப்பது எண் பட்டைகளைக் கொண்ட அஷ்டதாரா லிங்கம் ஆகும் குருந்தூர் மலையில் கிடைத்திருப்பதுஎண் பட்டைகளைக் கொண்ட அஷ்டதாராலிங்கம் ஆகும். காஞ்சி கைலாசநாதர்கோவிலிலும், திருவதிகை கோவிலிலும் கும்பகோணம் கூந்தூர் முருகன் கோவிலிலும் காணப்படுகிறது. இதன்... More Articles திருமுருகப் பெருமான் மஹோற்ஸவம் Friday, 22 January 2021 21:19 உளவியல் தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் தான் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும்... கட்டிளமைப் பருவத்தினரும் சட்டச் சிக்கல்களும் - கி.புண்ணியமூர்த்தி- பிள்ளைப்பருவத்துக்கும் முதிர்ச்சிப் பருவத்துக்கும் இடைப்பட்ட பருவமே கட்டிளமைப்பருவமாகும். இப்பருவத்தில் ஒருவர் பிள்ளையுமல்ல முதிர்ந்தவருமல்ல இப் பருவம். ஆண், பெண் இரு... More Articles ஆட்டிசத்தை வென்ற அன்புFriday, 28 May 2021 19:23 புத்தகங்கள் எது கல்வி நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை... மா.சிவசோதி அவர்களின் சிறுகதைத்தொகுப்பு - அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி... பேராசிரியர் சி.மௌனகுருவின் அரங்கியல் நூல் அறிமுகம் குழந்தை ம.சண்முகலிங்கம் அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்... தமிழ்த்தத்துவங்கள் போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர் 1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை... ஹிட்லர் சிந்தனை வரிகள் {youTube}/vQNdBDuis98{/youtube}1. இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே - 02. எதிர்பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது...
ரஜினிக்கு டூப்பாக நடித்த ரோபோவின் கால் நட்டு கழன்றதால் ரஜினி ஆஸ்பத்திரியில் அனுமதி – 2.0 படப்பிடிப்பு நிறுத்தம் | Tamil Spoof News | Tamil Satire News | Tamil Political News | Tamil Cinema News | Tamil Breaking News | Tamil Nadu News | Latest Tamil News | India News | Tamil News Paper - Ungal News அரசியல் சினிமா தமிழகம் இந்தியா பிசினஸ் வீடியோ டெக்னாலஜி கார்ட்டூன்ஸ் தேடல் 26 C Chennai Monday, November 29, 2021 Tamil Spoof News | Tamil Satire News | Tamil Political News | Tamil Cinema News | Tamil Breaking News | Tamil Nadu News | Latest Tamil News | India News | Tamil News Paper – Ungal News அரசியல் ஆயிரம் நிர்மலா தேவிகள் வரலாம், ஒரு பத்மசேஷாத்ரி ராஜகோபாலன் உருவாகக் கூடாது –… கொரோனாவால் ஆதரவிழந்த குழந்தைகளுக்கு காப்பீடு..ஜெயலலிதாவின் ‘தொட்டில் குழந்தை’ திட்டத்தை காப்பியடிக்கிறார் ஸ்டாலின் – முந்திரிக்கொட்டை… ஊரடங்கெல்லாம் ஊருக்குத்தான்.. வரலாறு பழி சொல்லும்.. ஜூன் 3 கலைஞர் பிறந்தநாளுக்காக பொது முடக்கத்தை… “என்னை தர்மயுத்தம்னு நினைச்சீங்களா? நான்தான் உண்மையான திமுக ஸ்லீப்பர்செல்” ஓபிஎஸ்-ன் ‘விஸ்வரூபம்!’ கொரோனா எண்ணிக்கை மற்றும் ஊரடங்கு கொடூரத்தை திசை திருப்ப ‘பள்ளி’ பாலியல் செய்திகளை… சினிமா ‘அண்ணாத்த’ படத்தை ‘ஓடிடி’யிலாவது வெளியிட விடுங்க.. ‘அம்பது’ லட்சம் கொரோனா நிதி கொடுத்து ஸ்டாலினிடம்… ‘கர்ணன்’ படம் பார்த்து இன்னும் ஏன் மு.க. ஸ்டாலின் ரிவியூ கொடுக்கவில்லை? பஞ்சமிநிலமீட்புகுழு கிடுக்கிப்பிடி… சின்னம்மா போல் அரசியலை விட்டு ஒதுங்கும்வரை சித்தி ராதிகாவுக்கு சிறை நீடிக்கும் மோடி கறார் ஆ. ராசா ‘கள்ள குழந்தை’ வசனம் போல் உதயநிதி நயன்தாரா ‘உறவு’ வசனம் –… மண்சோறு ரசிகனை ஏமாற்றி நடுத்தெருவில் விட்ட ரஜினிக்கு ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்தில் பால்கே… தமிழகம் ஆயிரம் நிர்மலா தேவிகள் வரலாம், ஒரு பத்மசேஷாத்ரி ராஜகோபாலன் உருவாகக் கூடாது –… கொரோனாவால் ஆதரவிழந்த குழந்தைகளுக்கு காப்பீடு..ஜெயலலிதாவின் ‘தொட்டில் குழந்தை’ திட்டத்தை காப்பியடிக்கிறார் ஸ்டாலின் – முந்திரிக்கொட்டை… ஊரடங்கெல்லாம் ஊருக்குத்தான்.. வரலாறு பழி சொல்லும்.. ஜூன் 3 கலைஞர் பிறந்தநாளுக்காக பொது முடக்கத்தை… “என்னை தர்மயுத்தம்னு நினைச்சீங்களா? நான்தான் உண்மையான திமுக ஸ்லீப்பர்செல்” ஓபிஎஸ்-ன் ‘விஸ்வரூபம்!’ கொரோனா எண்ணிக்கை மற்றும் ஊரடங்கு கொடூரத்தை திசை திருப்ப ‘பள்ளி’ பாலியல் செய்திகளை… இந்தியா “பிரதமர் அடிக்கடி தொலைக்காட்சியில் பேசினால் கொரோனா ஓடிவிடும்”- பஞ்சாங்கத்தில் போட்டிருப்பதாக மோடி தகவல் நூறுரூபாய் உச்சம் தொட்ட பெட்ரோல் விலை – தேர்தல் நேரத்தில் முப்பது ரூபாயாகக் குறைத்து… ‘பிஎம் கேர்ஸ்’ நிதியில் இருந்து கங்கனா ரனாவத் ஒய் பிளஸ் பாதுகாப்புக்கு செலவு செய்யப்படும்… சுமமரியாதையை சோதிக்கவும், தங்களால் இப்படியும் அவமானப்படுத்தமுடியும் என்ற திமிருமே இந்த தீர்ப்பு – ஒரு… ரிபப்ளிக் டிவி போன்ற மீடியாக்களை பாஜக வளர்ப்பது போல், இந்திய வகை நாய்களை மட்டுமே… பிசினஸ் ‘பதினைஞ்சு நாள் வசூல் போச்சா!’ ஊரடங்கில் டாஸ்மாக் மூடல் குறித்து ஓபிஎஸ் சர்ச்சைக் கருத்து! நைட்ரஜனை சிலிண்டர்களில் அடைத்து ‘ஆக்சிஜன்’ என பெயிண்டால் எழுதி மருத்துவமனைகளுக்கு தர ஸ்டாலின் திட்டம் கொரோனா மருந்தைக் கடைகளில் தடைசெய்து, பிளாக்-மார்க்கெட்டில் ‘பதாஞ்சலி’ மருந்தை விற்க பாபா ராமதேவுக்கு மோடி… ஹேண்ட் சானிடைசர் தயாரித்து ‘குடி’மக்களுக்கு இலவசமாக கொடுக்க கொண்டுவந்த ஆல்கஹாலை பிடிக்கிறீங்களே – ராஜமாதா… ஊரடங்கு நீடித்தாலும் கொரோனாவை ஒழிக்க டாஸ்மாக் ஆன்டிசெப்டிக் ஆல்கஹால் தேவை – செல்லூர் ராஜு… வீடியோ ரஜினியை ‘கண்டக்டர் பயல்’ என திட்டும் தமிழருவி மணியன் – வீடியோவை பாருங்க பாம்பும்-கீரியும், பச்சோந்தி ‘சங்கி’ ரஜினியும் கட்சியைவிட சோறுதான் முக்கியம் – வைரலாகும் எடப்பாடி டப்ஸ்மேஷ்! ஓசிபிரியாணி முதல் ஒன்றையணா டீ வரை 2018ல் திமுக பாய்ஸ் அடிதடி காட்சிகள் –… தூத்துக்குடியை மலடாக்கிய ஸ்டெர்லைட் ஆலை.. நிரந்தர மூடுவிழாவிற்கு பின்னரும் மக்களை தொடரும் அவலங்கள் –… டெக்னாலஜி கரோனா வைரசைக் கட்டுப்படுத்த அன்டிவைரஸ் – ஐடி நிறுவனங்களுடன் வில்லேஜ் விஞ்ஞானி ‘தெர்மாகோல்’ ராஜூ… அப்பல்லோ இட்லி கணக்கு போல் நடுக்கட்டுப்பட்டி மீட்புக்கு 11 கோடி ‘பில்’… ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை குத்தகைக்கு எடுத்து நாடு முழுவதும் ரூ.35-40க்கு பெட்ரோல் வழங்க… மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை வைத்தே கர்நாடகாவில் காய் நகர்த்திய காங்கிரஸ் – எடியூரப்பா… ஜீன்ஸ் பட பாணியில் அப்பல்லோவில் இருந்து ஹாலோபோர்டேஷன் விர்ச்சுவல் 3-D முறையில் தோன்றி இடைத்தேர்தல்… கார்ட்டூன்ஸ் ஓட்டுக்கு மாடு, O2-க்கு சுடுகாடு! மோடி மந்திரம் இதற்குத் தானே ஆசைப்பட்டாய் குணசேகரா… நெருப்பில் விட்ட நெய்யும், ‘பிஎம்கேர்’ நிதியில் சேர்ந்த பணமும் – ஸ்வாஹா ஸ்வாஹா! மூளையில்லா சேட்டன்களின் சேட்டையால் கேரள அரசு இலச்சினையில் உள்ள யானையே வெட்கித் தலைகுனிவு! ‘WHO’ is guilty? தமிழகம் ரஜினிக்கு டூப்பாக நடித்த ரோபோவின் கால் நட்டு கழன்றதால் ரஜினி ஆஸ்பத்திரியில் அனுமதி – 2.0 படப்பிடிப்பு நிறுத்தம் செய்தியாளர்: சித்ரன் - December 4, 2016 1243 பேஸ்புக்கில் பகிரவும் ட்விட்டரில் பகிரவும் புகைப்படம் நன்றி: இந்தியா டுடே சென்னை: கபாலி திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கரின் 2.0 படப்பிடிப்பில் பிஸி ஆனார் ரஜினி. இந்தப்படத்திற்கான படப்பிடிப்பு மேலக்கொட்டையூரின் உள்ள தனியார் இஞ்சினியரிங் கல்லூரியில் நடந்து கொண்டிருந்தபோது காலில் அடிபட்டதாகவும், ரஜினி தனக்கு மயக்கமாக உள்ளதாக கூறியதாகவும், கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு செல்ல விரும்புவதாகவும் ஷங்கரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு சம்மதிக்காத ஷங்கர் உடனடியாக கேளம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார் என கூறப்படுகிறது. ரஜினி சில நாட்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியதாகவும், பரிசோதனை முடிந்த உடன் ரஜினி வீடு திரும்பியதாகவும் செய்திகள் உலா வருகின்றன. இந்த செய்தியின் உண்மைத் தன்மையை உலகுக்கு எடுத்துக் கூற மிகுந்த பாதுகாப்புடன் வெளி ஆட்கள் அனுமதிக்கப்படாமல் நடைபெறும் ஷங்கர் பட ஷூட்டிங்கில் ‘லைட் மேன்’ வேடத்தில் பதுங்கி இருந்த நமது கப்ஸா நிருபர் சேகரித்த செய்தி: சமீபத்தில் செல்லாது அறிவிப்பின் போது ‘புதிய இந்தியா பிறந்துள்ளது’ என்று ரஜினி சொன்னது நினைவிருக்கலாம். அப்போது ரஜினி முன்னதாக நடித்த கபாலி திரைப்படத்தின் வசூல் எவ்வளவு என்று வெளியிட ரஜினி தாயாரா இயக்குனர் அமீர் கேள்வி எழுப்பினார். மேலும் படம் வந்த போது ஆயிரக்கணக்கில் டிக்கட் விலையற்றி விற்கப்பட்டதால் வயதில் மூத்த ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து பேனர்களை கிழித்து சென்ற நாடகமும் நடந்தேறியது. மேலும் ஒரு ரசிகர் வயதில் பெரியவரான ரஜினியை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் துன்புறுத்துவதாகவும் அவரை பத்திரமாக மீட்டு முதியோர் இல்லத்தில் சேர்க்க வேண்டும் என்றும் காவல் துறையிடம் புகார் கொடுத்தார். இதையறிந்த ஷங்கர் ரஜினியின் நிலையை புரிந்து கொண்டு, மாற்று ஏற்பாடு செய்திருந்தார். ரஜினிக்கு வயது 65 ஆகிறது. முன்னைப்போல் ஓடி ஆடி நடிக்க முடியவில்லை என்பதால் 2.0 படப்பிடிப்பில் பழைய 1000, 500 நோட்டுக்களை கொடுத்து சீனாவில் இருந்து வாங்கிய ரோபோ நடித்துக் கொண்டிருந்தது. ஷங்கர் புளூடூத் வசதியுடன் கட்டளையிட்டு ரஜினி ரோபோவை இயக்கிக் கொண்டிருந்தார் காலை 7 மணி முதல் 8 மணி வரை இடைவிடாது நடித்துக் கொண்டிருந்ததால் சார்ஜ் இறங்கியதை படக்குழு கவனிக்க மறந்து விட்டார்கள். மேலும் ரோபோவின் முழங்காலில் இருந்த நட்டு 2.0 அங்குலம் நகர்ந்ததால் ‘களுக்’ என்ற சத்ததுடன் நிலை தடுமாறி விழுந்தது. அப்போது 2.0 மீட்டர் தள்ளி அமர்ந்து கதாபாத்திரத்துடன் ஒன்றி ரோபோவுக்கு ‘ப்ராக்சி’ கொடுத்து நடித்துக் கொண்டிருந்த ரஜினிக்கு காலில் வலி ஏற்பட்டது போல் தெரிந்ததாம். உடனடியாக் சீனாவில் இருந்து வாங்கிய ரோபோவுக்கு ஜாயிண்டுகளில் போட வைத்திருந்த ‘கோடாலி’ தைலம் தேய்த்து விடப்பட்டது. பின்னர் ஷங்கருக்கும் ரோபோவுக்கும் டாடா சொல்லிவிட்டி, நோட்டு மாற்ற ‘கால’க்கெடு நெருங்குவதால் ரஜினி தனது பண்ணை வீட்டுக்கு சென்று பழைய பணத்தை மீண்டும் மீண்டும் எண்ணி அன்றைய பொழுதை கழித்ததாக கோடம்பாக்கம் பட்சி ஒன்று கூறுகிறது. குறிகள் 2.0. cinema rajini robo shankar பகிர் tweet சித்ரன் தொடர்புடைய செய்திகள் இந்த செய்தியாளரிடமிருந்து ஆயிரம் நிர்மலா தேவிகள் வரலாம், ஒரு பத்மசேஷாத்ரி ராஜகோபாலன் உருவாகக் கூடாது – அன்பில்(லாத) மகேஷ் கருத்தால் சர்ச்சை கொரோனாவால் ஆதரவிழந்த குழந்தைகளுக்கு காப்பீடு..ஜெயலலிதாவின் ‘தொட்டில் குழந்தை’ திட்டத்தை காப்பியடிக்கிறார் ஸ்டாலின் – முந்திரிக்கொட்டை ஜெயக்குமார் ஊரடங்கெல்லாம் ஊருக்குத்தான்.. வரலாறு பழி சொல்லும்.. ஜூன் 3 கலைஞர் பிறந்தநாளுக்காக பொது முடக்கத்தை மூட்டை கட்டிய ஸ்டாலின்.. “என்னை தர்மயுத்தம்னு நினைச்சீங்களா? நான்தான் உண்மையான திமுக ஸ்லீப்பர்செல்” ஓபிஎஸ்-ன் ‘விஸ்வரூபம்!’ கொரோனா எண்ணிக்கை மற்றும் ஊரடங்கு கொடூரத்தை திசை திருப்ப ‘பள்ளி’ பாலியல் செய்திகளை ஊடகங்களில் அலறவிட ஆணையிட்ட ஸ்டாலின் தமிழ்நாட்டிலேயே சமூக இடைவெளியை சரியாகக் கடைப்பிடிக்கும் கூட்டமில்லாத இடம் மநீம அலுவலகம்- மருத்துவக்கழகம் பாராட்டு ‘அண்ணாத்த’ படத்தை ‘ஓடிடி’யிலாவது வெளியிட விடுங்க.. ‘அம்பது’ லட்சம் கொரோனா நிதி கொடுத்து ஸ்டாலினிடம் கெஞ்சிய ரஜினி.. நிர்வாகிகள் ராஜினாமா – காலியாகும் கமல் கூடாரம் – லெட்டர்பேடு கட்சியானது ‘மக்கள் மீதி மய்யம்’ அதிமுக அலுவகத்தை பூட்டிக்கொண்டு நடந்த குடுமிபிடி சண்டைக்குப் பிறகு ‘எதிரி’க்கட்சி தலைவராக எடப்பாடி ஒருமனதாக தேர்வு There are no comments yet 0 Best Oldest Newest Hello, guest Logout Login Remember Me Or use one of these social networks Disclaimer எங்களை பற்றி… Privacy Contact Us © Ungal News லேட்டஸ்ட் நையாண்டி..! ஆயிரம் நிர்மலா தேவிகள் வரலாம், ஒரு பத்மசேஷாத்ரி ராஜகோபாலன் உருவாகக் கூடாது –... கொரோனாவால் ஆதரவிழந்த குழந்தைகளுக்கு காப்பீடு..ஜெயலலிதாவின் ‘தொட்டில் குழந்தை’ திட்டத்தை காப்பியடிக்கிறார் ஸ்டாலின் – முந்திரிக்கொட்டை... ஊரடங்கெல்லாம் ஊருக்குத்தான்.. வரலாறு பழி சொல்லும்.. ஜூன் 3 கலைஞர் பிறந்தநாளுக்காக பொது முடக்கத்தை... '); var formated_str = arr_splits[i].replace(/\surl\(\'(?!data\:)/gi, function regex_function(str) { return ' url(\'' + dir_path + '/' + str.replace(/url\(\'/gi, '').replace(/^\s+|\s+$/gm,''); }); splited_css += ""; } var td_theme_css = jQuery('link#td-theme-css'); if (td_theme_css.length) { td_theme_css.after(splited_css); } } }); } })();
Junior Vikatan - 13 October 2021 - தமிழக அரசுக்கு ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளோம்! - சமாளிக்கிறார் தோழர் கே.பாலகிருஷ்ணன்... | CPM K balakrishnan interview - Vikatan Save the vikatan web app to Home Screen tap on Add to home screen. X Subscribe to vikatan Login செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் குருப்பெயர்ச்சி பலன்கள் கனமழை: அப்டேட்ஸ் New சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் ஆன்லைன் தொடர்கள் New My News ராசி காலண்டர் மேலும் மெனுவில் Search ஜூனியர் விகடன் அரசியல் மாறும் அமைச்சரவை... மார்க் போடும் ஸ்டாலின்! “ஆவணங்களை கொள்ளையடிக்க சொன்னது எடப்பாடியாத்தான் இருக்கும்!” தமிழக அரசுக்கு ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளோம்! - சமாளிக்கிறார் தோழர் கே.பாலகிருஷ்ணன்... ஒன் பை டூ: நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற சீமானின் கருத்து சரியா? கிசுகிசு போட்டோ தாக்கு உள்ளாட்சி உய்யலாலா! கழுகார் மிஸ்டர் கழுகு: கண்சிவந்த ஸ்டாலின்... நான் யாரென்று காட்டுகிறேன்! கழுகார் பதில்கள் சமூகம் இண்டு இடுக்குலதான் வாழுறோம்! - மலையுச்சியிலிருந்து ஓர் அவலக்குரல்... நியூஸ் எம்பஸி அலசல் ஜூனியர் வாக்கி டாக்கி போதை நெட்வொர்க்கில் ஆர்யான் சிக்கியது எப்படி? - பதறவைக்கும் பாலிவுட் பார்ட்டிகள்... ‘ரூட்டு தல’ மோதல்கள்! - வேட்டு வைக்குமா காவல்துறை? விற்கப்படாத 4,006 அடுக்குமாடி குடியிருப்புகள்... தேங்கிக்கிடக்கும் 1,000 கோடி ரூபாய்... தொடர்கள் கடவுள்... பிசாசு... நிலம்! -12 இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 48 - அல்பெரூனியின் பார்வையில் இந்துக்கள் கலை மிஸ்டர் மியாவ் Published: 09 Oct 2021 5 AM Updated: 09 Oct 2021 5 AM தமிழக அரசுக்கு ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளோம்! - சமாளிக்கிறார் தோழர் கே.பாலகிருஷ்ணன்... த.கதிரவன்நரேஷ் குமார்.வெ ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் Use App கே.பாலகிருஷ்ணன் ஜனநாயக நாட்டில், ‘ஓர் அரசியல் கட்சியின் கொடியை ஏற்றக் கூடாது’ என்று சொல்பவர்கள் மீதுதான் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர.... ‘கொடியே ஏற்றக் கூடாது’ என்று சொல்லக் கூடாது உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் பிரீமியம் ஸ்டோரி ‘புதிய வேளாண் சட்டம்’, ‘நீட் தேர்வு’, ‘பெட்ரோல், டீசல் விலை உயர்வு...’ என மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக தி.மு.க-வுடன் கைகோத்துப் போராடிவருகின்றனர் கம்யூனிஸ்ட் தோழர்கள். மறுபுறம் தி.மு.க அரசுமீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன எதிர்க்கட்சிகள். இவற்றில் தேவையான விஷயத்தில்கூட தி.மு.க அரசை கம்யூனிஸ்ட்டுகள் கேள்வி கேட்பதில்லை என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இப்படியான அரசியல் சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் பேசினோம்... “பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவந்தால் விலை குறைந்துவிடும் என்று கம்யூனிஸ்ட்டுகள்தான் ஆலோசனை கூறிவந்தார்கள்... ஆனால், அவற்றை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவரக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் தி.மு.க அரசை மட்டும் எதிர்த்து கேள்வி கேட்பதில்லையே... ஏன்? “பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதித்திருக்கும் பல்வேறு வகையிலான வரி விதிப்புகளால்தான் அவற்றின் விலை உச்சத்தைத் தொட்டுவருகிறது. அதனால்தான், ‘பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வந்துவிட்டால், அதிகபட்சமாக 28 சதவிகிதம் மட்டுமே வரி விதிக்க முடியும்’ என்று கடந்த காலங்களில் ஆலோசனை சொன்னோம். ஆனால், எந்தக் காரணத்தைக்கொண்டும் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க மத்திய அரசு தயாராக இல்லை. எனவேதான், ‘வரியைக் குறைக்காத வரை பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவரத் தேவையில்லை’ என்கிறது தி.மு.க அரசு.’’ “ஆனால், ‘பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவருவதற்கு தி.மு.க-தான் எதிர்ப்பு தெரிவிக்கிறது’ என்று பா.ஜ.க-வினர் குற்றம்சாட்டுகிறார்களே?’’ “இந்த விஷயத்தில் பா.ஜ.க அரசியல் செய்கிறது. பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவந்தால், அதிலிருந்து வரி வருவாயாகக் கிடைக்கக்கூடிய மொத்தத் தொகையில் 40 சதவிகிதம் மத்திய அரசுக்கும், அதில் சுமார் பாதியளவான 21 சதவிகிதம் மட்டுமே மாநில அரசுக்கும் கிடைக்கும். எனவேதான், மாநில அரசுகள் இதை எதிர்க்கின்றன. அதிலும்கூட தற்போது தமிழக அரசு, ஜி.எஸ்.டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் வர வேண்டுமானால், இரண்டு நிபந்தனைகளை விதிக்கிறது. அதாவது, ‘ஜி.எஸ்.டி-யில் பெட்ரோலுக்கு அதிகபட்சமாக 28 சதவிகிதம் மட்டுமே மத்திய அரசு வரி விதிக்க வேண்டும். தற்போது பெட்ரோல் மீது மத்திய அரசு விதித்துவரும் செஸ், சர்சார்ஜ் வரி விதிப்புகளை ரத்து செய்ய வேண்டும்’ என்பதுதான் அந்த நிபந்தனைகள். இதற்கு மத்திய பா.ஜ.க அரசு ஒப்புதல் அளிக்கத் தயாரா?’’ “சேலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடிக்கம்பம் நடுவதில் ஏற்பட்ட பிரச்னையை அடுத்து, தமிழக காவல்துறைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய திருமாவளவனுக்கு கம்யூனிஸ்ட்டுகள் குரல் கொடுக்கவில்லையே ஏன்?’’ “ஜனநாயக நாட்டில், ‘ஓர் அரசியல் கட்சியின் கொடியை ஏற்றக் கூடாது’ என்று சொல்பவர்கள் மீதுதான் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர.... ‘கொடியே ஏற்றக் கூடாது’ என்று சொல்லக் கூடாது. அந்தவகையில், இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறையின் நடவடிக்கையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். பொதுவாக, நாங்கள் நடத்துகிற எல்லாப் போராட்டங்களிலும் வி.சி.க கலந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அதேபோல், வி.சி.க நடத்துகிற போராட்டங்களிலும் கம்யூனிஸ்ட்டுகள் கலந்துகொள்ள வேண்டும் என்று அவர்களும் எதிர்பார்க்க முடியாது. இந்த விவகாரத்தில், ஏற்கெனவே விடுதலைச் சிறுத்தைகள் தனியாகப் போராட்டம் நடத்திவருகிறார்கள். சேர்ந்து போராடுவதற்கு எங்களையும் அழைத்தால், நாங்களும் போராடத் தயாராகவே இருக்கிறோம்.’’ “கூவம் கரையோர குடிசைவாசிகளை அப்புறப்படுத்தும் விவகாரத்திலும்கூட, அ.தி.மு.க அரசுக்கு எதிராகக் காத்திரமான போராட்டங்களைச் செய்துவந்த கம்யூனிஸ்ட்டுகள், தற்போதைய தி.மு.க அரசுக்கு எதிராக அப்படிப் போராடுவதில்லையே?’’ “சமீபத்தில் அரும்பாக்கம் பகுதியில் குடிசைகள் அகற்றப்பட்டபோதும்கூட அந்த மக்களுக்கு மாற்று இடம் கொடுப்பதற்காக குடிசை மாற்று வாரிய உயரதிகாரிகளை நானே நேரில் சந்தித்து இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறேன். குடிசைவாழ் மக்கள், எந்த ஆட்சியில் பாதிக்கப்பட்டாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பக்கபலமாக நாங்கள் நிற்போம். அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தரச்சொல்லி ஆட்சியாளர்களிடம் வலியுறுத்துவோம். முதல்வர் தொகுதியிலேயேகூட இது போன்று குடிசைகள் அகற்றப்பட்டபோதும் எங்கள் கட்சி சார்பில், போராட்டம் நடத்தினோம். ஆனால், எங்கள் தரப்பு செய்திகளை வெளியிடுகிற ஊடக பலம் குறைவாக இருப்பதையே இந்தக் கேள்வி உணர்த்துகிறது.’’ “ஸ்வாதி படுகொலையில் கைதான ராம்குமார், ‘மின்சார வயரைக் கடித்து இறக்கவில்லை’ என்ற உண்மை தெரியவந்த பிறகும்கூட, தமிழக காவல்துறைக்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகள் கண்டன அறிக்கைகூட வெளியிடவில்லையே?’’ “தற்போது வெளியாகியுள்ள ராம்குமார் பிரதே பரிசோதனை அறிக்கை முடிவுகள், ஸ்வாதி படுகொலையில் ராம்குமாருக்குத் தொடர்பு இருக்கிறதா என்கிற சந்தேகத்தில் ஆரம்பித்து, ராம்குமார் மரணம் வரை பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. எனவே, இது குறித்த ‘உண்மைகளைக் கண்டறியும்விதமாக உயர்மட்டக்குழு ஒன்றை தமிழக அரசு உடனடியாக அமைத்து, மக்களின் சந்தேகங்களைத் தீர்க்க வேண்டும்’ என்று ட்விட்டர் வழியே ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருக்கிறோம். ஆனால், தமிழக அரசு இது குறித்து இன்னும் எந்தவித பதிலும் கொடுக்கவில்லை. எனவே, விரைவில் இது குறித்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுப்போம்.’’ தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism k balakrishnan DMK communist த.கதிரவன் இதழியல் துறையில் 27 ஆண்டுகள். அரசியல் ஆளுமைகளை நேர்காணல் செய்வதில் ஆர்வம். தேர்தல் அரசியலைவிடவும் சமூகத்தினூடாகப் பரந்து விரியும் நுண் அரசியலை, எளிமையான வார்த்தைகளில் வலிமையாக சொல்ல முனைவதில் பேரார்வம்!
மே 18 “மறக்க முடியாது, மன்னிக்கவும் முடியாது “– யாழ் பல்கலை சிங்கள மாணவன் - THAMILKINGDOM மே 18 “மறக்க முடியாது, மன்னிக்கவும் முடியாது “– யாழ் பல்கலை சிங்கள மாணவன் - THAMILKINGDOM முகப்பு எம்மைப்பற்றி தொடர்புகளுக்கு இலங்கை,இந்திய மற்றும் உலக செய்திகளை தமிழ் வாசகர்களுக்கு கொண்டுசேர்க்கும் முகமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது முகப்பு செய்திகள் இலங்கை இந்தியா உலகம் கட்டுரைகள் தினக்குரல் நிலாந்தன் ஏனையவை வலம்புரி உதயன் வீரகேசரி சிறிதரன் திருமலைநவம் றொபட் அன்ரனி அறிவியல் தொழில்நுட்பம் கணனி புதியவை ஜோதிடம் எண் ஜோதிடம் சனிமாற்றம் குருமாற்றம் இன்றைய நாள் ஈழம் காணொளி தலைவர் நிகழ்வுகள் களங்கள் திரைப்படங்கள் புகைப்படங்கள் தலைவர் படையணிகள் தளபதிகள் வரலாறு ஈழவரலாறு படுகொலைகள் வெற்றி சமர்கள் துரோகம் ஆவணங்கள் பதிவுகள் நூல்கள் சினிமா காணொளி ரெயிலர் திரைவிமர்சனம் குறும் படங்கள் திரைப்படங்கள் புகைப்படங்கள் புதுவரவு சந்திப்புகள் சிறப்பு நிகழ்வுகள் சாதனையாளர்கள் விருதுகள் ஏனையவை சாதித்தவர்கள் காணொளிகள் குறும்படம் எண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள் குரு மாற்றம் எப்படி? பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி) இன்றைய நாள் எப்படி எம்மைப்பற்றி Latest News Home > News > மே 18 “மறக்க முடியாது, மன்னிக்கவும் முடியாது “– யாழ் பல்கலை சிங்கள மாணவன் அரசியல் இலங்கை செய்திகள் A News மே 18 “மறக்க முடியாது, மன்னிக்கவும் முடியாது “– யாழ் பல்கலை சிங்கள மாணவன் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட மாணவரான இந்திரஜித் குமார Indrajith Kumara வினால் மே 18 நினைவுநாளை ஒட்டி எழுதப்பட்ட சிங்கள பதிவு ஒன்றின் தமிழாக்கம் “மறக்க முடியாது, மன்னிக்கவும் முடியாது, தமிழ் இன அழிப்பு நாள் மே 18″ இவ்வாறே தமிழ் எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ளது. அதில் மலர் ஒன்று இருக்கிறதே, அதுதான் ஈழ இராச்சியத்தின் தேசிய மலர், அந்த சிகப்பு, மஞ்சள் நிறமே அவர்களி்ன் கொடியின் வர்ணம். இதைப் பார்க்கும் போது கோபமும் வெறுப்பும் வருகிறதா? மீண்டும் யுத்தம் புரிய தோன்றுகிறதா? ஆனால் யாழ்ப்பாணத்தில் இருக்கும் எங்களுக்கு அவ்வாறு தோன்றவில்லை. பெரிய ஏமாற்றமே ஏற்படுகிறது. இவர்களை நினைத்து அல்ல, எம்மவர்களை (சிங்களவர்களை) நினைத்து. நாங்கள் கண்ணியமற்ற முறையில் நடந்துகொள்கிறோம். ஒரு சிங்களவராக நான் இதை கூறுவதில் வெ்கமடைகிறேன். எங்களுக்குள் எந்த வித ஒற்றுமையும் இல்லை. இந்த யாழ் பல்கலையினுள்ளே நாம் அடித்துக் கொள்கிறோம். ஒருவரை ஒருவர் குறைக்கூறிக் கொள்கிறோம். இப்படி எமக்குள்ளே ஆயிரம் பிரச்சனைகள். ஆனால் இங்குள்ளவர்கள் அவ்வாறில்லை. அவர்களுக்கு அன்றும் இன்றும்(நாளையும்) ஒரே பிரச்சனை. அது அவர்களின் இன உரிமையை பாதுகாக்கும் பிரச்சனை. இதுவே இங்கு நாம் தெரிந்து கொண்டோம். இவர்கள் எப்போதும் இவர்களுக்காக இறந்தவர்களை மறக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் அவர்களை நினைவு கூருகின்றனர். இங்குள்ள அரசியல்வாதிகள் பணமோகம் பிடித்தவர்களில்லை. அவர்கள் எங்கும் எப்போதும் கதைப்பது அவர்களின் உரிமையை பற்றி மட்டும் தான்.ஸ எமது நாட்டில் மூன்றோ நான்கோ தமிழ் பத்திரிகைகள் மட்டுமே உள்ளது. ஆனால் அவையும் அவர்களின் உரிமைப்பிரச்சனையை பற்றிக் கதைப்பதில் பின்னிற்பதில்லை. தென்னிலங்கையில் இதுவரை எத்தனையோ பாலியல் துஷ்பிரயோகம் நிகழ்ந்துள்ளது. அவை எல்லாம் எமக்கு இன்று நினைவில் இல்லை.ஆனால் வித்தியா படுகொலையை இவர்கள் இன்றும் மறக்கவில்லை. வித்தியா படுகொலைக்காக பெரிய போராட்டம் நடந்தது. ஒரு இனம் என்ற ரீதியில் அனைவரும் முன்னின்றனர். ஆனால் நீங்கள் இதையெல்லாம் ஒரு பக்கம் வைத்துவிட்டு நான் தமிழர்களுக்கு சார்பானவன் என்று திட்ட ஆரம்பிப்பீர்கள். இதோ அவர்களுக்கும் பதிலளிக்கிறேன். நான் இதை சிங்கள மொழியில் பதிவிட்டுள்ளேன். தமிழர்களுக்கு புரியப்போவதில்லை. நான் தமிழர்களுக்கு எதிரான கருத்தை பதிவிட்டுள்ளேன் என்றே எண்ணுவார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்துகொண்டு இவ்வாறு பதிவிடும் ஒரே சிங்களவர் நான் மட்டுமே. நான் உங்களுக்கு( சிங்களவர்களுக்கு) புரிய வைக்கவே இவ்வாறு பதிவிடுகிறேன். ஒரு இனத்தவர்களாக நம்மால் முடியாத பல விடயங்களை அவர்கள் ஓர் இனமாக ஒற்றுமையுடன் சாசித்துள்ளனர். தமிழர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. அவர்கள் இன்று முடியாவிட்டாலும் நாளை முடியாவிட்டாலும் நூறு வருடங்களானாலும் அவர்களின் உரிமையை வென்றெடுப்பர். நாம் இதே போல் என்றும் குறை கூறிக்கொண்டிரிப்போமேயானால் நாம் முன்னேறுவது கடினம். අමතකද කළ නොහැකියි..සමාවද දිය නොහැකියි. දමිළ ජාතිය වැනසූ දිනය මැයි 18. දෙමළ අකුරින් ගහලා තියෙන්නේ ඒක. එතකොට ඔය මලක් වගේ එකක් තියෙන්නේ..ඒක තමයි නියඟලා මල ඊළාම් රාජ්‍යයේ ජාතික පුෂ්පය. ඔය රතු කහ කොඩි තමයි කොටි සංවිධානය භාවිතා කළ වර්ණ. දැන් මේක දකිද්දි ලොකු තරහක් වෛරයක් එනවද? යුද්ධ කරන්න හිතෙනවද? මේ යාපනේ ඉන්න අපිට නම් එහෙම නෑ. අපිට එන්නේ ලොකු කලකිරීමක්. මෙයාලා ගැන නෙවෙයි..මේ අපි ගැනමයි. අපි මහ කුහක ජාතියක්. සිංහලයෙක් විදියට මෙහෙම කියන්න වීම තමයි ලොකුම ලැජ්ජාව. වදාපු අම්මා තාත්තා පවා අමතක කරන මහ නින්දිත ජාතියක් අපි. අපේ කිසිම එකමුතුවක් නෑ. එකෙකුට එකෙක් නෑ.යාපනේ කැම්පස් ඇවිල්ලත් අපි අපි ගහ මරා ගන්නවා. අපිට කතා කරන්න දහසකුත් එකක් ප්‍ර‍ශ්ණ. සයිටම් ප්‍ර‍ශ්ණ කුණු ප්‍ර‍ශ්ණ ටොයියො බයියෝ ප්‍ර‍ශ්ණ කෙනෙක් ඇඟ හැදුවාලු කෙනෙක් ඇඟ පෙන්නුවාලු, සිඟිති පාතාලේ, එක එක්කෙනාට මඩ ගහන වැඩ, සිංහලෙන් රැප් කරන වැඩ, කාගේ හරි නමක් දාලා බෝඩ් එකක් උස්සලා ඒකට විහිළු කරන වැඩ, ෆේස්බුක් එකේ විහිළු පිටු හද හදා මාක් සකර්බර්ගෙ ඉඳන් ගමේ ගුණපාලයා දක්වා ඇණුම් පද කියන වැඩ, අරයාගේ මෙයාගේ ඕප දූප හොය හොයා පිටු වලට ලයික් වැඩි කරගන්න වැඩ, ඔය විදියට කෙළවරක් නැති ප්‍ර‍ශ්ණ අපිට. ඒත් මේ මිනිස්සුන්ට එහෙම නෑ. එයාලට එදත් අදත් (හෙටත්) තියෙන්නේ එකම ප්‍ර‍ශ්ණයක්. ඒ තමයි තමුන්ගේ ජාතියේ උරුමය ආරක්ෂා කරගැනීම. ඒක යාපනේ ඉන්න අපි හොඳාකාරවම දැනගත්තු දෙයක්. මෙයාලා කවදාවත් තමුන්ගේ මියගිය කෙනෙක්ව අමතක කළේ නැහැ. දිලීපන් ගේ ඉඳන් ප්‍ර‍භාකරන් දක්වා මිය ගිය සෑම අයෙක්වම මෙයාලා අවුරුද්දක් පාසා සිහි කරනවා. මෙයාලගේ දේශපාලඥයොත් මුදල් තණ්හාවේ කාර් වලට කෙල හළ හළ ඉන්න අය නෙවෙයි. ඒ අයත් කට ඇරියොත් කතා කරන්නේ එයාලගේ උරුමය ගැන. ලංකාවේ කීයක් නම් සිංහල පත්තර, සිංහල මාධ්‍ය තියනවද? දමිළ මාධ්‍යය තියෙන්නේ තුනයි හෝ හතරයි. ඒ හැම “දමිළ“ මාධ්‍යයක්ම තම ජාතියට උදවු කරන්න පසුබට වෙන්නේ නැහැ. දකුණු ලංකාවේ මේ වන විට කීයක් නම් ස්ත්‍රී දූෂණ සිදුවුණාද? ඒවා දැන් මතකද? හැබැයි මෙහේ විද්‍යාව දූෂණය කරපු එක මෙයාලා අදටත් අමතක කරලා නෑ. පසුගිය දිනෙකත් ඒ වෙනුවෙන් පොඩි අරගලයක් තිබ්බා. ජාතියක් හැටියට ඉස්සරහට යන්නේ එහෙමයි. අපේ මිනිස්සු කොච්චර කුහකද කියනවා නම් දැන් මේ සේරම පැත්තකට දාලා මේක ලියන මට බණියි කොටියාට කඩේ යනවා දෙමළාට කඩේ යනවා කියලා. ඕක තමයි අපේ මිනිස්සුන්ට පුළුවන් උපරිමේ. එහෙවු අයටත් පිළිතුරක් දෙන්නම්. මං මේ සිංහලෙන් දාන පෝස්ටුව දමිළ අයට තේරෙන්නෙ නෑ. එයාලා හිතන්නේ මම එයාලට විරුද්ධව කතා කරනවා කියලා. යාපනේ ඉඳගෙන මේ වගේ පෝස්ටුවක් දාන එකම සිංහලයා තමයි මම. කාටවත් කඩේ යනවා නෙවෙයි, මේවා දැකලා දැකලා දැකලා අවසාන මොහොතේ තමයි මගේ ජාතියට මේ විදියට ආමන්ත්‍ර‍ණය කරන්න හිතුවේ. ලැජ්ජයි ! ජාතියක් හැටියට අපිට කරගන්න බැරිවුණ දේ මේ මිනිස්සු එකාවන්ව ඉඳලා අද සෑහෙන දුරකට ඉෂ්ට කරගෙන තියනවා. අතට ගත්තු දේ කටට දාගන්න බැරි අපේ සිංහල ජාතියට මේ මිනිස්සුන්ගෙන් ඉගෙන ගත යුතු දේවල් හුඟක් තියනවා. මේ මිනිස්සුන්ගේ එකමුතු කම තියන තාක් කල් කවදාවත් වරදින්නෑ. අද බැරි නම් හෙට බැරි නම් අවුරුදු 100 ක් ගියත් තමන්ගේ උරුමය ලබාගෙන තමයි මෙයාලා නවතින්නේ. අපේ දීනකම් උදාසීනකම් කුහකකම් කෙළෙහි ගුණ නොදන්න කම් තියනකල් කවදාවත් අපිට ජාතියක් හැටියට ඉදිරියට යන්න බෑ ඒකයි ඇත්ත. දමිළ මිනිස්සුන්ට බැනලා දොස් කියලා වැඩක් නෑ. කොහෙත්ම වැඩක් නෑ. යුද්ධ කරලා වැඩකුත් නෑ. මෙච්චර ලොකු යුද්ධයක් කරලා අවුරුදු 8 න් අමතක කළා නම් ආයේ කොච්චර යුද්ධ කළත් ඔච්චර තමයි. දැන් ඉතින් ජාතියක් හැටියට අපි බලාගෙන ඉමු මොකද වෙන්නේ කියලා..උත්සාහවන්තයින් ජයගනියි. முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள் 5/25/2017 அரசியல் இலங்கை செய்திகள் A News Share Article: Facebook Twitter Google+ StumbleUpon Digg Pinterest LinkedIn புதிய இடுகை பழைய இடுகைகள் Web site Comments Facebook Comments Item Reviewed: மே 18 “மறக்க முடியாது, மன்னிக்கவும் முடியாது “– யாழ் பல்கலை சிங்கள மாணவன் Rating: 5 Reviewed By: Bagalavan Popular Archive Category Popular Posts கார்த்திகை தீப நாளில் பழைய விளக்குகளை ஏற்றலாமா? கார்த்திகை தீபம் அன்று ஏற்றக் கூடிய விளக்குகளில் நிறைய சந்தேகங்கள் உள்ளன. பழைய விளக்குகளை ஏற்றலாமா? கூடாதா? அப்படி புதிய விளக்குகள் வாங்கி... மாவீரர் வாரத்தில் யாழில் குயர் விழா! - அம்பலமாகும் அரச அடிவருடிகள்(படங்கள்) எதிர்வரும் மாவீரர் வாரத்தில் அந்த நிகழ்வை கொச்சைப்படுத்தும் முகமாக அதே நாட்களில் யாழ்ப்பாணத்தில் குயர் விழா என பெயரிட்டு பாலினம் மாறும் நப... இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? 28.11.2021! மேஷம் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படு... இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் உடனே வைத்தியசாலையை நாடுங்கள் - மக்களுக்கு வேண்டுகோள்! காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால், சுய சிகிச்சை பெற்றுக் கொள்வதை தவிர்த்து உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று பரிசோதித்துக் கொள்ளுமாறு மன்னார... பாடசாலைகளுக்கு கிறிஸ்ம்ஸ விசேட விடுமுறை தினங்கள் அறிவிப்பு! நத்தார் பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேய... 5 மாவட்டங்களில் கொவிட் கொத்தணி அபாயம்! 5மாவட்டங்களில் மீண்டும் கொவிட் கொத்தணி உருவாகும் அபாயம் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். எனவே,...
இயக்குனர் இமயம் என தமிழ் ரசிகர்களாலும், தமிழ் சினிமா துறையினராலும் செல்லமாக அழைக்கப்படும் இயக்குனர் பாரதிராஜா பல வெற்றி படங்களில் எதார்த்த்தை புகுத்தி நமக்கு அளித்திருக்கிறார். பின்...
சீத்தலை ஊராட்சி (Siththalai Gram Panchayat), தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 682 ஆகும். இவர்களில் பெண்கள் 331 பேரும் ஆண்கள் 351 பேரும் உள்ளனர். பொருளடக்கம் 1 அடிப்படை வசதிகள் 2 சிற்றூர்கள் 3 இதனையும் காண்க 4 சான்றுகள் அடிப்படை வசதிகள்[தொகு] தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6] அடிப்படை வசதிகள் எண்ணிக்கை குடிநீர் இணைப்புகள் 26 சிறு மின்விசைக் குழாய்கள் கைக்குழாய்கள் 4 மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 2 தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் உள்ளாட்சிக் கட்டடங்கள் 5 உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் ஊரணிகள் அல்லது குளங்கள் 1 விளையாட்டு மையங்கள் 1 சந்தைகள் ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 21 ஊராட்சிச் சாலைகள் 1 பேருந்து நிலையங்கள் சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2 சிற்றூர்கள்[தொகு] இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]: குருவனந்தபுரம் சித்தாலை இதனையும் காண்க[தொகு] திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் திருமங்கலம் சான்றுகள்[தொகு] ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015. ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015. ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015. ↑ "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015. ↑ "திருமங்கலம் வட்டார வரைபடம்". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015. ↑ 6.0 6.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015. ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015. பா உ தொ மதுரை மாவட்ட ஊராட்சிகள் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் வெள்ளையம்பட்டி · வாவிடமருதூர் · வலையபட்டி · வடுகப்பட்டி ஊராட்சி · தெத்தூர் ஊராட்சி · தனிச்சியம் · தண்டலை ஊராட்சி · டி. மேட்டுபட்டி · சேந்தமங்கலம் ஊராட்சி · இராஜாக்கள்பட்டி · பெரியஇலந்தைகுளம் · பாரைப்பட்டி · பண்ணைகுடி · ஊர்சேரி · முடுவார்பட்டி · மேலச்சின்னனம்பட்டி · மணியஞ்சி · மாணிக்கம்பட்டி · குட்டிமேய்க்கிபட்டி · கோட்டைமேடு · கொண்டையம்பட்டி · கோடாங்கிபட்டி ஊராட்சி · கீழச்சின்னனம்பட்டி · கள்வேலிபட்டி · கல்லணை · எர்ரம்பட்டி · தேவசேரி · சின்னஇலந்தைக்குளம் · சத்திரவெள்ளாளபட்டி · பி. மேட்டுபட்டி · அய்யூர் ஊராட்சி · அய்யன்கோட்டை ஊராட்சி · ஆதனூர் ஊராட்சி உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் வகுரணி · வடுகப்பட்டி ஊராட்சி · உத்தப்பநாய்க்கனூர் · திம்மநத்தம் · சீமானூத்து · இராஜக்காப்பட்டி · போத்தம்பட்டி · நல்லுத்தேவன்பட்டி · நக்கலப்பட்டி · நடுப்பட்டி ஊராட்சி · மேக்கிழார்பட்டி · மானூத்து · கீரிப்பட்டி · கல்லூத்து · ஜோதிநாய்க்கனூர் · எருமார்பட்டி ஊராட்சி · தொட்டப்பநாய்க்கனூர் · அல்லிகுண்டம் கள்ளிகுடி ஊராட்சி ஒன்றியம் வில்லூர் · வேப்பங்குளம் ஊராட்சி · வீரபெருமாள்புரம் · வளையங்குளம் · உன்னிபட்டி · உலகாணி · தூம்பக்குளம் · திருமால் · தென்னமநல்லூர் ஊராட்சி · டி. அரசப்பட்டி · டி. கொக்குளம் · சிவரக்கோட்டை · சென்னம்பட்டி ஊராட்சி · செங்கபடை · எஸ். பி. நத்தம் · எஸ். வெள்ளாகுளம் · பேய்குளம் · ஓடைபட்டி · நேசனேரி · நெடுங்குளம் ஊராட்சி · நல்லமநாய்க்கன்பட்டி · மேலஉப்பிலிகுண்டு · மருதங்குடி ஊராட்சி · மரவப்பட்டி · மையிட்டான்பட்டி · எம். போத்தநதி · எம். புலியன்குளம் · எம். புதுப்பட்டி ஊராட்சி · குராயூர் · கூடக்கோவில் · கரிசல்களாம்பட்டி · கள்ளிக்குடி ஊராட்சி · கல்லணை ஊராட்சி · கே. வெள்ளாகுளம் · சித்தூர் ஊராட்சி · ஆவல்சூரன்பட்டி கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் வஞ்சிநகரம் · வலைச்சேரிபட்டி · தும்பைப்பட்டி · தொந்திலிங்கபுரம் · சூரப்பட்டி · சென்னகரம்பட்டி · சேக்கிபட்டி · பொட்டப்பட்டி · பட்டூர் ஊராட்சி · பாண்டாங்குடி · பள்ளபட்டி ஊராட்சி · மேலவளவு · மணப்பச்சேரி · குன்னாரம்பட்டி · கொட்டாம்பட்டி · கொடுக்கம்பட்டி · கேசம்பட்டி · கச்சிராயன்பட்டி · கருங்காலகுடி · கம்பூர் · எட்டிமங்கலம் · சொக்கலிங்கபுரம் · சொக்கம்பட்டி ஊராட்சி · பூதமங்கலம் ஊராட்சி · அய்யாபட்டி · அட்டப்பட்டி · 18. சுக்காம்பட்டி செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் விக்கிரமங்கலம் · வேப்பனூத்து · வாலாந்தூர் · தும்மகுண்டு · திடியன் · சிந்துபட்டி · செம்பட்டி · சக்கரப்பநாய்க்கனூர் · சடச்சிபட்டி · புள்ளநேரி · பொட்டுலுப்பட்டி · பொறுப்புமேட்டுப்பட்டி · பூதிபுரம் · போடுவார்பட்டி ஊராட்சி · பாப்பாபட்டி ஊராட்சி · பன்னியான் · பாணாமூப்பன்பட்டி · நாட்டார்மங்கலம் ஊராட்சி · முதலைகுளம் · குறவகுடி · கோவிலாங்குளம் · கொடிக்குளம் · கட்டகருப்பன்பட்டி · கருமாத்தூர் · கண்ணனூர் ஊராட்சி · ஏரவார்பட்டி · அய்யனார்குளம் · ஆரியபட்டி · ஏ. புதுப்பட்டி ஊராட்சி சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் வேப்பம்பட்டி ஊராட்சி · வண்டாரி · வண்டபுலி · உத்தபுரம் · துள்ளுகுட்டிநாய்க்கனூர் · திருமாணிக்கம் · தாடையம்பட்டி · சூலபுரம் · செம்பரணி · சீல்நாயக்கன்பட்டி · சேடபட்டி · சாப்டூர் · பூசலபுரம் · பெருங்காமநல்லூர் · பெரியகட்டளை · பேரையம்பட்டி · பாப்பிநாயக்கன்பட்டி · பழையூர் ஊராட்சி · முத்துநாகையாபுரம் ஊராட்சி · மேலதிருமாணிக்கம் · மள்ளபுரம் · குப்பல்நத்தம் · குடிபட்டி · குடிசேரி · கேத்துவார்பட்டி · காளப்பன்பட்டி · இ. கோட்டைபட்டி · சின்னக்கட்டளை · அத்திபட்டி · அதிகாரிப்பட்டி ஊராட்சி · ஆத்தாங்கரைபட்டி தே. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம் வேளாம்பூர் · வன்னிவேலம்பட்டி · வையூர் ஊராட்சி · வி. அம்மாபட்டி · தும்மநாய்க்கன்பட்டி · டி. குண்ணத்தூர் · சிலார்பட்டி · சிலைமலைப்பட்டி · சந்தையூர் ஊராட்சி · சாலிசந்தை · எஸ். பாறைபட்டி · எஸ். மேலப்பட்டி · எஸ். கீழப்பட்டி · எஸ். அரசப்பட்டி · ரெங்கபாளையம் · ராவுத்தன்பட்டி · புல்கட்டை · புளியம்பட்டி ஊராட்சி · பாப்புரெட்டிபட்டி · பாப்பையாபுரம் · பி. சுப்புலாபுரம் · பி. முத்துலிங்காபுரம் · பி. அம்மாபட்டி · நல்லமரம் · மோதகம் · மத்தக்கரை · எம். செங்குளம் · லட்சுமிபுரம் ஊராட்சி · எல். கொட்டாணிபட்டி · குமராபுரம் · கூவலப்புரம் · கிளாங்குளம் · கெஞ்சம்பட்டி · காரைக்கேணி · காடனேரி ஊராட்சி · கவுண்டன்பட்டி ஊராட்சி · சிட்டுலொட்டி · சின்னாரெட்டிபட்டி · சின்னபூலாம்பட்டி · சின்னமுத்துலிங்காபுரம் · அப்பக்கரை · ஏ. தொட்டியபட்டி திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் விராதனூர் • விரகனூர் • விளாச்சேரி • வேடர்புளியங்குளம் • வலையபட்டி ஊராட்சி • வலையங்குளம் • வடிவேல்கரை • வடபழஞ்சி • துவரிமான் • தோப்பூர் • தனக்கன்குளம் • சூரக்குளம் • சிலைமான் • சோளங்குருணி • சாமநத்தம் • சக்கிலிபட்டி • சி. புளியங்குளம் ஊராட்சி • புதுக்குளம் 1 பிட் • பெருங்குடி ஊராட்சி • பெரிய ஆலங்குளம் • பாரபத்தி • பனையூர் ஊராட்சி • ஒத்தை ஆலங்குளம் • நிலையூர் 2 பிட் • நிலையூர் 1 பிட் • நெடுமதுரை • நல்லூர் ஊராட்சி • நாகமலைப்புதுக்கோட்டை • மேலமாத்தூர் ஊராட்சி • மேலக்குயில்குடி • குசவன்குண்டு • கொம்பாடி • கொடிமங்கலம் • கீழமாத்தூர் ஊராட்சி • கீழக்குயில்குடி • கரடிபட்டி • எலியார்பத்தி • அச்சம்பத்து ஏற்குடி ஊராட்சி திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் விருசங்குளம் · விடாத்தகுளம் · வாகைகுளம் ஊராட்சி · வடகரை ஊராட்சி · உரப்பனூர் · உச்சப்பட்டி · திரளி · தங்களாச்சேரி · டி. புதுப்பட்டி ஊராட்சி · சௌடார்பட்டி · சொரிக்காம்பட்டி · சீத்தலை · சாத்தங்குடி · இராயபாளையம் · புங்கன்குளம் · பொன்னமங்கலம் ஊராட்சி · பொக்காம்பட்டி · பன்னிகுண்டு · நடுவக்கோட்டை · நடுக்கோட்டை · என். காமாட்சிபுரம் · மைக்குடி · மேலக்கோட்டை ஊராட்சி · மதிப்பனூர் · மறவன்குளம் · கிண்ணிமங்கலம் · கிழவனேரி · கீழக்கோட்டை ஊராட்சி · கரிசல்பட்டி ஊராட்சி · கரடிக்கல் · கப்பலூர் · காங்கேயநத்தம் · காண்டை · கே. புளியன்குளம் · அம்மாபட்டி ஊராட்சி · அலப்பலச்சேரி · ஆலம்பட்டி ஊராட்சி · ஏ. கொக்குளம் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் வெள்ளியங்குன்றம் · வரிச்சியூர் · திருமோகூர் · திண்டியூர் · தாமரைப்பட்டி · சக்குடி · சக்கிமங்கலம் · இராஜாக்கூர் · புதுதாமரைப்பட்டி · புதுப்பட்டி ஊராட்சி · பொய்யாக்கரைபட்டி · பொருசுபட்டி · பூலாம்பட்டி · பனைக்குளம் · ஒத்தக்கடை · நரசிங்கம் · மீனாட்சிபுரம் ஊராட்சி · மாத்தூர் ஊராட்சி · மாங்குளம் ஊராட்சி · குருத்தூர் · குன்னத்தூர் ஊராட்சி · கொடிக்குளம் ஊராட்சி · கருப்பாயூரணி · கார்சேரி · கள்ளந்திரி · களிமங்கலம் · காதக்கிணறு · இசலானி · இலங்கியேந்தல் · இளமனூர் ஊராட்சி · இடையபட்டி · சின்னமாங்குளம் · அயிலாங்குடி · அரும்பனூர் · அங்காடிமங்கலம் · ஆண்டார்கொட்டாரம் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் வெளிச்சநத்தம் · வீரபாண்டி ஊராட்சி · வயலூர் ஊராட்சி · வைரவநத்தம் · வாகைகுளம் ஊராட்சி · உசிலம்பட்டி ஊராட்சி · தோடனேரி · தேனூர் ஊராட்சி · சிறுவாலை · சமயநல்லூர் · பொதும்பு · பேச்சிகுளம் · பெரியபட்டி ஊராட்சி · மஞ்சம்பட்டி · மலைப்பட்டி ஊராட்சி · குலமங்குலம் · கோவில்பாப்பாகுடி · கொடிமங்கலம் ஊராட்சி · காவனூர் ஊராட்சி · கருவனூர் · இரணியம் · சின்னப்பட்டி · செட்டிகுளம் ஊராட்சி · சத்திரப்பட்டி ஊராட்சி · பூதகுடி ஊராட்சி · அரியூர் ஊராட்சி · அம்பலத்தாடி · ஆலத்தூர் ஊராட்சி · அதலை மேலூர் ஊராட்சி ஒன்றியம் வேப்படப்பு · வெள்ளரிபட்டி · வெள்ளலூர் · வண்ணாம்பாறைபட்டி · உறங்கான்பட்டி · திருவாதவூர் · தெற்குதெரு · தனியாமங்கலம் · டி. வெள்ளாளபட்டி · சூரக்குண்டு · செம்மினிபட்டி · சாத்தமங்கலம் ஊராட்சி · சருகுவலையப்பட்டி · புலிப்பட்டி · புதுசுக்காம்பட்டி · பூஞ்சுத்தி · பதினெட்டாங்குடி · பனங்காடி ஊராட்சி · நாவினிபட்டி · நரசிங்கம்பட்டி · குறிச்சிபட்டி · கோட்டநத்தம்பட்டி · கொட்டகுடி ஊராட்சி · கொங்கம்பட்டி · கிடாரிபட்டி · கீரனூர் ஊராட்சி · கீழையூர் ஊராட்சி · கீழவளவு · கல்லம்பட்டி ஊராட்சி · இ. மலம்பட்டி · ஆட்டுக்குளம் ஊராட்சி · அரிட்டாபட்டி · அரசப்பன்பட்டி · ஆமூர் ஊராட்சி · அம்பலகாரன்பட்டி · ஏ. வலைப்பட்டி வாடிபட்டி ஊராட்சி ஒன்றியம் விராலிபட்டி · திருவேடகம் · திருவாலவாயநல்லுர் · தென்கரை ஊராட்சி · சித்தாலங்குடி · செம்மினிபட்டி ஊராட்சி · ரிஷபம் · இராமையன்பட்டி · பூச்சம்பட்டி · நெடுங்குளம் ஊராட்சி · நாச்சிகுளம் · முள்ளிப்பள்ளம் · மேலக்கால் · மன்னாடிமங்களம் · குட்லாடம்பட்டி · குருவித்துறை · கட்டக்குளம் · கச்சைகட்டி · கருப்பட்டி · காடுபட்டி · இரும்பாடி · சி. புதூர் · ஆண்டிபட்டி ஊராட்சி "https://ta.wikipedia.org/w/index.php?title=சீத்தலை_ஊராட்சி&oldid=3138546" இருந்து மீள்விக்கப்பட்டது பகுப்பு: மதுரை மாவட்ட ஊராட்சிகள் மறைக்கப்பட்ட பகுப்பு: த. இ. க. ஊராட்சித் திட்டம் வழிசெலுத்தல் பட்டி சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள் புகுபதிகை செய்யப்படவில்லை இந்த ஐபி க்கான பேச்சு பங்களிப்புக்கள் புதிய கணக்கை உருவாக்கு புகுபதிகை பெயர்வெளிகள் கட்டுரை உரையாடல் மாறிகள் expanded collapsed பார்வைகள் படிக்கவும் தொகு வரலாற்றைக் காட்டவும் மேலும் expanded collapsed தேடுக வழிசெலுத்தல் முதற் பக்கம் அண்மைய மாற்றங்கள் உதவி கோருக புதிய கட்டுரை எழுதுக தேர்ந்தெடுத்த கட்டுரைகள் ஏதாவது ஒரு கட்டுரை தமிழில் எழுத ஆலமரத்தடி Embassy சென்ற மாதப் புள்ளிவிவரம் Traffic stats உதவி உதவி ஆவணங்கள் Font help புதுப்பயனர் உதவி தமிழ் விக்கிமீடியத் திட்டங்கள் விக்சனரி விக்கிசெய்திகள் விக்கிமூலம் விக்கிநூல்கள் விக்கிமேற்கோள் பொதுவகம் விக்கித்தரவு பிற விக்கிப்பீடியர் வலைவாசல் நன்கொடைகள் நடப்பு நிகழ்வுகள் கருவிப் பெட்டி இப்பக்கத்தை இணைத்தவை தொடர்பான மாற்றங்கள் கோப்பைப் பதிவேற்று சிறப்புப் பக்கங்கள் நிலையான இணைப்பு இப்பக்கத்தின் தகவல் குறுந்தொடுப்பு இக்கட்டுரையை மேற்கோள் காட்டு விக்கித்தரவுஉருப்படி அச்சு/ஏற்றுமதி ஒரு புத்தகம் உருவாக்கு PDF என தகவலிறக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிப்பு மற்ற மொழிகளில் Add links இப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2021, 05:33 மணிக்குத் திருத்தினோம். அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.
சிரஞ்சீவி சார்ஜாவை மகாராணியாக மாறி வரையும் மேக்னா ராஜ்..! கணவர் பிறந்தநாளில் வைரலாகும் ஸ்பெஷல் போட்டோ ஷூட்.! | actress meghana raj new photoshoot in maharani look viral photos Malayalam English Kannada Telugu Tamil Bangla Hindi Live TV Languages Live TV Politics Coronavirus Tamil Nadu Cinema Video Gallery India World Sports Life Style Business Crime Technology live TV Tamil News cinema சிரஞ்சீவி சார்ஜாவை மகாராணியாக மாறி வரையும் மேக்னா ராஜ்..! கணவர் பிறந்தநாளில் வைரலாகும் ஸ்பெஷல் போட்டோ ஷூட்.! First Published Oct 17, 2021, 1:40 PM IST பிரபல நடிகை மேகனா ராஜ் (Meghana Raj), தன்னுடைய கணவர் சிரஞ்சீவி சார்ஜாவின் (Chiranjeevi Sarja) பிறந்தநாளான இன்று, அவருடைய நினைவாக.... எடுத்து வெளியிட்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் சில வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ராயன் ராஜ் சர்ஜா (Raayan Raj Sarja) பிறந்த பிறகு, மேக்னா எந்தவிதமான போட்டோஷூட் அல்லது திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தாமல், தன்னுடைய குழந்தையை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார். எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தன்னுடைய குழந்தையுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிடுவது வழக்கமான ஒன்று தான். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின், மஹாராணி போல சிவப்பு நிற சேலை மற்றும் பச்சை நிற ஜாக்கெட் அணிந்து கணவர் சிரஞ்சீவி சர்ஜா முகத்தை ஓவியமாக தீட்டுவது போல், எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மகாராணியாக மாறி சிம்மாசனத்தில் மேக்னா ராஜ் அமர்ந்து, சிரிப்பது போன்றும் சில புகைப்படங்கள் உள்ளது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்களது லைக்குகளை குவித்து வருகிறார்கள். அதே போல் பேபி பிங்க் நிற புடவையில், கழுத்தில் முத்தால் ஆன நெக்லஸ் அணிந்து மிகவும் எலைட்டான அழகில் போஸ் கொடுத்து பிரமிக்க வைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் மாடர்ன் லுக்கிலும், மகாராணி தோற்றத்திலும், இவர் எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. Follow Us: Download App: RELATED STORIES Malavika Mohanan | முன்னழகை காட்டி வசீகரம் செய்யும் விஜய் பட நாயகி ; பார்வையில் என்ன ஒரு கிக்கு !! Ramyanambessan | தலை குனிந்து வெட்கத்தில் ஆழ்த்தும் ரம்யா நம்பீசன்..க்ரீன் அவுட்பிட்டில் ஜொலிக்கும் நாயகி! MirnaliniRavi | ஆரஞ்சு நிற ஜொலிக்கும் உடையில் மின்னும் மிருணாளினி ரவி !! Tirupati | கன மழையால் சின்னாபின்னமான திருப்பதி கோவில் இரட்டை நடைபாதை !! Aathmika | சட்டையை கழட்டி கிக் ஏற்றும் மீசையை முறுக்கு ஆத்மீகா !! Top Stories டபுள் டபுளா பேசி.. அங்காங்கே தொட்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியரை போக்சோவில் தூக்கிய போலீஸ்.! வேகமெடுக்கும் கோவை பள்ளி மாணவி 'தற்கொலை' விவகாரம்... விசாரணை அறிக்கை தமிழக அரசிடம் "விரைவில்" தாக்கல் அவனுங்களுக்கு மரண தண்டனை தாருங்கள்... வயிறிரியும் வைகோ..! Vijaysethupathy | 'வாத்தி கம்மிங் 'பாடலுக்கு மாஸ் குத்து குத்திய விஜய் சேதுபதி; ரசிகர்களால் வைரலாகும் வீடியோ!!
நான் பெரிதும் மதிக்கும “பன்மொழிக்கலைஞர்“ பிரகாஷ்ராஜ். வயதை மீறிய கலைஞர். அவரது தயாரிப்பில், மொழி, அபியும் நானும், தோனி போலும் அழகியலும் சமூக உணர்வும் மிக்க திரைப்படங்களைப் பார்த்து நெகிழ்ந்ததும் உண்டு. ஆனந்த விகடனில் அவர் எழுதிய தொடர் கூட அவர்மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்தியிருந்தது... ஆனால்.... அண்மைக்காலமாகத் தொலைக்காட்சி நகைக்கடை விளம்பரம் ஒன்றில் அவர் நடித்திருப்பது, அவரது சமூகப்பொறுப்பு இமேஜை உடைத்து சுக்கு நூறாக்கிவிட்டது. இதுபற்றி விரிவாக எழுதவேண்டும் என்று நினைத்திருந்த போது, தீக்கதிர் நாளிதழில் வெளிவந்த கட்டுரை ஒன்று மிகச்சரியாக வந்திருப்பதால் நன்றியோடு அந்தக் கட்டுரையை நம் வாசகர் பார்வைக்கு வைக்கிறேன். இதோ அந்தக் கட்டுரை. - நா.மு. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ஒரு நகைக் கடை விளம்பரத்தில் பெற்றோர் பெண் பிள்ளைகளை மூத்த டென்ஷன், அடுத்த டென்ஷன் என்று அறிமுகப்படுத்துவது போல சித்தரிக்கப்படுகிறது. பெண் குழந்தைகளை பெற்றவர்கள் நகைகளை வாங்கி சேர்க்க வேண்டும். அப்போதுதான் வரதட்சணை கொடுக்க முடியும் என்பதாக அந்த விளம்பரம் சொல்கிறது. இதற்கு எதிர்வினையாக வந்த முகநூல் பதிவு இது. அன்புள்ள பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு.... தமிழகத்தில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான மகள்களின் சார்பாக நான் எழுதுகின்ற கடிதம் இது.அபியும், நானும் என்கின்ற பெண் குழந்தைக்கும், அப்பாவிற்கும் இடையிலான அழகான உறவினை எடுத்துரைக்கும் அற்புதமான படத்தில் நடித்தவர் நீங்கள். உங்களின் அந்த இயல்பான தந்தையின் துடிப்பினை கண்டுநான் பலமுறை கண்ணீர் சிந்தியிருக்கின்றேன். கண்டிப்பான தந்தையாக இருந்தாலும், கடைசியாக மகனுக்காக எல்லாவற்றையும் உதறித் தள்ளும் “சந்தோஷ்சுப்ரமணியம்“ தந்தை கதாப்பாத்திரத்தில் வாழ்ந்து காட்டியவர் நீங்கள். ஆனால், இன்று நீங்கள் நடித்து வெளியாகி இருக்கின்ற ஒரு விளம்பரம் என்னைப் போன்ற எத்தனையோ இளம் பெண்களின் மனதினை நோகடித்து உள்ளது என்பது உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லைதான். “இது என் முதலாவது டென்ஷன், இது என்இரண்டாவது டென்ஷன்“ என்று மகள்களை அறிமுகப்படுத்தும் பெற்றோருக்கு “வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தாலே டென்ஷன் தானே?” என்று நீங்கள் சொல்வது எங்கள் மனதினை அறுத்துக் கூறு போடுகின்றது. ஒரு காலத்தில் பெண்களுக்கு படிப்பறிவு அதிகம் கிடையாது. அவர்களைப் பொறுத்த வரையில் வீடும், தாய், தந்தையும் தான் உலகம். அப்படிப்பட்ட பெண்களை தங்களுக்கு பிறகு பத்திரமாக பேணிப் பாதுகாக்கவே திருமணம் என்ற பந்தத்தினை பெற்றோரும்,முன்னோரும் உருவாக்கி வைத்திருந்தார்கள். அதனால்தான் அதற்கு பெயரே “கன்னிகாதானம்“. நான் வளர்த்த என் அன்பு மகளை என்னுடைய இடத்தில் இருந்து நீ பார்த்துக் கொள்ள வேண்டும் என்றுதான் திருமணமே செய்து கொடுத்தனர் தந்தையர். ஆனால், இன்றைய நிலை அப்படிக்கிடையாது. படிப்பும், குடும்பப் பொறுப்பும், அலுவலகப் பொறுப்பும் என்று பெண்களான நாங்கள் ஆண்களுக்கு நிகராக, ஏன் அவர்களை விட அதிகமாகவே சுழன்று சாதிக்கின்றோம். உண்மையில் அப்பா, அண்ணன், தங்கை,அம்மா என்று குடும்பப் பொறுப்புகளை தலையில் சுமந்து இந்தக் காலத்தில் டென்ஷனின் பிடியில் மாட்டித்தவிப்பது நாங்கள்தான். எங்களையே டென்ஷன் என்று கூறும் விளம்பரத்திற்கு நீங்கள் எப்படித் துணை போகலாம்? தந்தையில்லாத குடும்பத்திற்காகவும், ஆண் பிள்ளை இல்லாத பெற்றோருக்காகவும் எங்கள் ஆசைகளைக் கூட துறந்து சென்னை போன்ற பெருநகரங்களில் தனிமையின் பிடியில், நாங்களே சமைத்து சாப்பிட்டு, ஒரு உடல்நலக் குறைவு என்றால் ரசம் வைத்து கொடுக்கக் கூட ஆளில்லாமல் எத்தனைப் பெண்கள் மாதச் சம்பளத்திற்காக அல்லாடுகின்றோம் தெரியுமா? திருமணம் முடிந்த பத்து மாதத்தில் குழந்தை... அப்படி குழந்தை பிறக்காவிட்டாலும் பெண் தான் காரணம்... ஒரு சிறிய தவறு என்றாலும் அது பெண்கள் மீது இல்லாவிட்டாலும், எளிதாக பெண்களை தூக்கி வீச ஆண்கள் தவறுவதே இல்லை. என்றைக்கும் ஆண்களின் சூழ்நிலைகளை நாங்கள் புரிந்துகொண்டு செல்ல வேண்டும். ஆனால், ஆண்களுக்கோ அதெல்லாம் தேவையில்லை. அவர்கள் பிடித்த முயலுக்குமூன்று கால் என்பதே வேதவாக்கு.. எனினும், நல்ல ஆண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஆனால்,அவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு. பந்தம், பாசம், திருமணம் போன்ற இந்தஉடைக்கமுடியாத வலைகளில் இன்னும் எத்தனை நாட்கள் எங்களைக் கட்டிப் போட உத்தேசம்? திருமணம் என்பது ஆண்களைப் போலவே எங்களுக்கும் தனிப்பட்ட விருப்பம். இலக்கைநோக்கி பயணிப்பதே முக்கியமே தவிரஅந்தப் பயணம் துணையுடனா, தனியாகவா என்பதை நாங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதில் முடிவெடுக்க பெற்றோருக்கு கூட அதிகாரம் கிடையாது. ஒட்டுமொத்தமாக பெண்களைக் கேவலப்படுத்தும் விதமாக உருவாகியுள்ள இந்த விளம்பரத்தில் இருந்து, ஒரு நல்ல அப்பாவாக, பெண்களைப் புரிந்து கொண்ட ஒரு நல்லஆண்மகனாக நீங்கள் விலகி விடுவீர்கள் என்பதை உங்கள் மகள் போன்ற அனைத்து இளம்பெண்களும் நம்புகின்றோம்... எங்கள் உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடுங்கள் பிளீஸ்! நன்றி: தமிழ் ஒன் இந்தியா டாட் காம் நன்றி – தீக்கதிர் நாளிதழ்-18-08-2015 பக்-8. ----------------------------------------- நா.முத்துநிலவன் வளரும்கவிதை / valarumkavithai at ஆகஸ்ட் 24, 2015 இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் வளரும்கவிதை / valarumkavithai https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன் https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan 16 கருத்துகள்: ராஜ நடராஜன் திங்கள், ஆகஸ்ட் 24, 2015 விமர்சனத்துக்கு மட்டும் வந்திடுங்க! அவருக்கான பொருளாதார நெருக்கடியை யாரும் கண்டுக்காதீங்க. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி தனிமரம் திங்கள், ஆகஸ்ட் 24, 2015 இன்னும் இப்படி ஒரு விளம்பரத்தை பார்க்கவில்லை ஆனால் நிச்சயம் பிரகாச்ராஜ் இதுக்கு விளக்கம் தருவார் என்று நம்புவோம்! பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி கரந்தை ஜெயக்குமார் திங்கள், ஆகஸ்ட் 24, 2015 விளம்பரத்தினை இன்னும்பார்க்கவில்லை யார் நடித்திருந்தாலும் இவ்விளம்பரம் தவறே. தம +1 பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி Kasthuri Rengan திங்கள், ஆகஸ்ட் 24, 2015 மிகச்சரியான பார்வை பிரகாஷ் உடன் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி Kasthuri Rengan திங்கள், ஆகஸ்ட் 24, 2015 அப்புறம் வேறு என்ன தம + பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University திங்கள், ஆகஸ்ட் 24, 2015 பிரகாஷ்ராஜ் இதனைத் தவிர்த்திருக்கலாம். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி Thulasidharan V Thillaiakathu திங்கள், ஆகஸ்ட் 24, 2015 ஐயா இது அவரது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் விமர்சனம் நன்று. ஆனால், இது ஒரு விளம்பரம்தானே. அதன் இயக்குனர் என்ன சொல்லுகின்றாரோ அதைத்தானே அவர் செய்ய வேண்டும். இந்த விளம்பரம் என்பது பிரகாஷ்ராஜிற்கு ஒரு வருமானம். அவ்வளவே. இங்கு பின்னூட்டம் பெரிதாகிவிடும் அதனால் இதைக் குறித்து எங்கள் தளத்தில் இரு பதிவு போடுவதாக இருக்கின்றோம் ஐயா... பதிலளிநீக்கு பதில்கள் Thulasidharan V Thillaiakathu புதன், ஆகஸ்ட் 26, 2015 விளம்பரம்தான் கண்டிக்கத்தக்கது....பிரகாஷ் ராஜ் ஒரு கருவியே...விளம்பரம் தடை செய்யப்பட்டுள்ளது என்பது மிகவும் மகிழ்வான செய்தி..... நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி மணிச்சுடர் திங்கள், ஆகஸ்ட் 24, 2015 கசாப்புக் கடைக்காரரிடம் கருணையை எதிர்பார்க்க முடியுமா?கனவுத் தொழிற்ச்சாலை மூலம் காசு பண்ணும் வணிக மனங்களின் சமூகப் பார்வையெல்லாம் கைநிரப்பும் காசைப் பொறுத்ததே. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி S.P.SENTHIL KUMAR திங்கள், ஆகஸ்ட் 24, 2015 பெண்கள் இன்றைக்கு இரட்டைக் குதிரையில் சவாரி செய்கிறார்கள். பல குடும்பங்களை தாங்கிப்பிடிப்பவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் இன்னமும் பெண்ணை டென்ஷன் என்று சொல்லும் இந்த விளம்பரம் கண்டிக்கத்தக்கதுதான். பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா! த ம 5 பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி ”தளிர் சுரேஷ்” திங்கள், ஆகஸ்ட் 24, 2015 நானும் விளம்பரம் பார்க்கவில்லை! சர்ச்சைக்குரிய விளம்பரத்தை அவர் தவிர்த்து இருக்கலாம். ஆனால் இதை உணர்ச்சிப்பூர்வமாக பார்க்காமல் உளவியல் ரீதியாக அணுகினால் நடுத்தர குடும்பத்து தலைவர்கள் மன நிலையை சித்தரித்து உள்ளதை உணர முடியும். பெண்களை பெற்றவர்கள் டென்ஷன் இல்லாமல் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. பதிலளிநீக்கு பதில்கள் இமா க்றிஸ் சனி, ஆகஸ்ட் 04, 2018 என் மனதில் இருந்ததை, நான் தட்டலாம் என்று வந்ததை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். பொருளாதாரத்தை விடுங்கள் பெண்களின் பாதுகாப்பு அதை விடப் பெரிய யோசனையாக இருக்கிறதே! நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி Unknown திங்கள், ஆகஸ்ட் 24, 2015 அண்ணாஅந்தவிளம்பரம் பார்க்கும்பொழுதுநானும்டென்ஷனாயிட்டேன் இப்பல்லாம்பெண் கிடைக்காம டென்ஷனாயிட்டு இருக்காங்கஇவருக்கு பைசா கிடைத்தால் பெண்களையேடென்ஷனென்பாராம்வலியோடு சொன்னாலும்நறுக்குன்னு சொல்லிட்டாங்க பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று புதன், ஆகஸ்ட் 26, 2015 கட்டுரையாளர் அவர் மீது கொண்ட தனிப்பட்ட மதிப்பின் காரணமாக இந்த ஆதங்கத்தை வெளிப் படுத்தியுள்ளார்கள். கலைஞர்களின் படைப்புகளை வைத்து அவர்கள் மீது ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொள்வது நம் தவறு. எல்லாம் வியாபாரம்தான் . சமூகத்தின் மீதான அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்வதை நாம் அப்படியே நம்பி விடக் கூடாது. படைப்புகள் அன்றி வேறு செயல்பாடுகள் மூலம் நிருபித்திருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். அவர் ஒரு நல்ல நடிகர் அவ்வளவே பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி KILLERGEE Devakottai வியாழன், ஆகஸ்ட் 27, 2015 வணக்கம் கவிஞரே... அருமையான விடயத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு முதற்கண் நன்றி யாரிடம் போய் விளக்கம் கொடுப்பது கூத்தாடியிடமா ? இவன் தாலி கட்டிய மனைவியை விட்டு விட்டு அடுத்தவளோடு வாழ்ந்து கொண்டு இருக்கின்றான் இவனுக்கு என்ன தெரியும் பந்த பாசம் ? சொல்லும் நாம்தான் குற்றவாளி இவன் சினிமாவுக்கு வரும் முன்பு கேவலமான படங்களில் நடித்துக்கொண்டு இருந்தவன் அதிலிருந்தே இந்த தொழிலுக்கு வந்தவன் பணம் கிடைத்தால் பெண்ணை அன்னை என்றும் பிறகு அதே பெண்ணை காதலி என்றும் சொல்லும் சினிமாக்கார கூத்தாடிகளைப்பற்றி மேலும் பேச எனக்கு மனமில்லை ஆகவே நிறுத்துகிறேன் நானும் பதிவு எழுத என்னை உசுப்பேற்றி விட்டமைக்கு நன்றி தமிழ் மணம் 7 பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி வேகநரி திங்கள், ஆகஸ்ட் 31, 2015 மிக மட்டமான ஒரு விளம்பரம். அதற்கெதிரான சரியான பதிவு. நடிகர்கள் நல்ல பாத்திரங்களில் நடிக்கும் போது அவர்கள் நல்லவர்கள் என்று நெகிழ்ந்து மதிப்பு வைப்பதும் ,கொண்டாடுவதும் ஆபத்தானது. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி கருத்துரையைச் சேர் மேலும் ஏற்றுக... புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom) என்னைப்பற்றி வளரும்கவிதை / valarumkavithai புதுக்கோட்டை, தமிழ்நாடு, India https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன் https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan எனது முழு சுயவிவரத்தைக் காண்க சுயவிவரத்திற்குச் செல் விக்கிப்பீடியா/முத்துநிலவன் Wikipedia/Muthu Nilavan இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்ட படைப்புகள் ஒற்றுமை பாடும் தமிழ்க் கவிதைகள்! “ என்சாமி பெரியசாமி உன்சாமி சின்னச்சாமி ” என்று சாமியின் பெயராலும் சாதியின் பெயராலும் மக்களைப் பிரித்து வரும் சுயநல வாதிகளுக்க... கமல் எழுதிய கவிதைகள்! புதியதலைமுறை இதழ் ஆசிரியர் எழுத்தாளர் மாலன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு “திசைகள்“ இணையஇதழ் வெளிவந்தபோது -10ஆண்டுகள் இருக்கும்- அதில் ஒ... மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை படிக்காதவர்க்கும் நல்ல தமிழைக் கற்றுத்தந்த நடிகர்திலகம் சிவாஜி கணேசன். கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம்... முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே! - நா.முத்துநிலவன் - (கடிதஇலக்கியம்) என் அன்பு மகளுக்கு , உன் அப்பா எழுதுவது. நானும் உன் அம்மாவும் இங்கு நலம். அங்கு உன்னோடு... பணி ஓய்வு பெற்றேன், நன்றி வணக்கம். மற்றவை நேரில்… 18-12-1980 அன்று பணியில் சேர்ந்த நான் , 31-5-2014 இன்று, நினைவலைகளில் மனம் தளும்ப ஓய்வு பெறுகிறேன், 34ஆண்டுகள்! பதவிஉயர்வில் ச... அறிவொளி இயக்கப் பாடல்கள், நாடகங்கள்! 1991-92 ஆம் ஆண்டுகளி ல் புதுக்கோட்டை மாவட்டத்தி ல் நடந்த “அறிவொளி இயக்கம்” மாபெரும் மக்கள் இயக்கமாக நடந்தது . மாவட்டம் முழ... தந்தை பெரியார் என்பவர் யார்.? இன்று செப்-17, தந்தை பெரியார் பிறந்த நாள்! “அறிவைத் தடுப்பாரை, மானம் கெடுப்பாரை வேரோடு பெயர்க்க ... கரிசல் திருவுடையான் -தனித்த குரலும், தாளமிடும் விரலும்! கரிசல் திருவுடையான் “ஆத்தா ஒன் சேலை” என்னும் தாய்ப்பாசப் பாடலைக் கேட்காத தமிழர்கள் இருக்க முடியாது. பாசத்தையும் பண... சமயச் சார்பற்ற தமிழ் மரபு தழைக்கட்டும். இன்றைய புதுமை எல்லாவற்றுக்கும் சிறிதளவேனும் ஒரு மூலம் இருக்கும். சிந்தனையோ செயலோ, பொருளோ அடுத்தடுத்துத் தொடர்வதுதான் பரிணாமம்! இன்றைய பழமை... எனக்குப் பிடித்த கவிதைகள் - 1/100 (2015-சர்வதேசப் பெண்கள் தினத்திற்காக என் துணைவியார் மல்லிகா தயாரித்தது) ------------------------------------------------------------------... பதிவுகள் காப்பகம் ► 2021 (16) ► அக்டோபர் 2021 (1) ► செப்டம்பர் 2021 (2) ► ஜூலை 2021 (1) ► ஜூன் 2021 (1) ► மே 2021 (6) ► மார்ச் 2021 (4) ► ஜனவரி 2021 (1) ► 2020 (40) ► டிசம்பர் 2020 (2) ► நவம்பர் 2020 (5) ► செப்டம்பர் 2020 (2) ► ஆகஸ்ட் 2020 (5) ► ஜூலை 2020 (6) ► ஜூன் 2020 (8) ► மே 2020 (3) ► ஏப்ரல் 2020 (4) ► மார்ச் 2020 (4) ► பிப்ரவரி 2020 (1) ► 2019 (37) ► டிசம்பர் 2019 (1) ► நவம்பர் 2019 (6) ► அக்டோபர் 2019 (2) ► செப்டம்பர் 2019 (4) ► ஜூலை 2019 (3) ► ஜூன் 2019 (4) ► மே 2019 (3) ► ஏப்ரல் 2019 (10) ► மார்ச் 2019 (2) ► ஜனவரி 2019 (2) ► 2018 (41) ► டிசம்பர் 2018 (1) ► அக்டோபர் 2018 (5) ► செப்டம்பர் 2018 (2) ► ஆகஸ்ட் 2018 (5) ► ஜூலை 2018 (4) ► ஜூன் 2018 (5) ► மே 2018 (4) ► ஏப்ரல் 2018 (4) ► மார்ச் 2018 (8) ► பிப்ரவரி 2018 (2) ► ஜனவரி 2018 (1) ► 2017 (55) ► நவம்பர் 2017 (3) ► அக்டோபர் 2017 (4) ► செப்டம்பர் 2017 (5) ► ஜூலை 2017 (5) ► ஜூன் 2017 (2) ► மே 2017 (5) ► ஏப்ரல் 2017 (8) ► மார்ச் 2017 (3) ► பிப்ரவரி 2017 (12) ► ஜனவரி 2017 (8) ► 2016 (141) ► டிசம்பர் 2016 (3) ► நவம்பர் 2016 (7) ► அக்டோபர் 2016 (9) ► செப்டம்பர் 2016 (8) ► ஆகஸ்ட் 2016 (9) ► ஜூலை 2016 (13) ► ஜூன் 2016 (9) ► மே 2016 (12) ► ஏப்ரல் 2016 (17) ► மார்ச் 2016 (20) ► பிப்ரவரி 2016 (19) ► ஜனவரி 2016 (15) ▼ 2015 (182) ► டிசம்பர் 2015 (25) ► நவம்பர் 2015 (15) ► அக்டோபர் 2015 (26) ► செப்டம்பர் 2015 (13) ▼ ஆகஸ்ட் 2015 (12) வெளிநாடுவாழ் வலைப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்... வலைப்பதிவர் விழாவுக்கென்று ஒரு தனி வலைப்பக்கம்! பா... இணையத்தில் தமிழ் கற்க... பிரகாஷ் ராஜ் இப்படிப் பண்ணலாமா? வலைப்பதிவர் திருவிழா நடப்பது பற்றிய எனது நேர்காணல்... சுதந்திர தினக் குறும்படம் –“நெய்ப்பந்தம்“ “வலைப்பதிவர் திருவிழா-2015“ விழா, விருதுகள் விவரம் “வலைப்பதிவர் திருவிழா-2015“ “வலைப்பதிவர் திருவிழா -2015“ புதுக்கோட்டை வருக! “ஞானாலயா“ பவளவிழா அழைப்பிதழ், வருக! அவசியம் பார்க்க வேண்டிய குறும்படம் “அகல்யா” “திண்ணை“ இணைய இதழில் நமது நூல் விமர்சனம் மற்றும் ... ► ஜூலை 2015 (6) ► ஜூன் 2015 (11) ► மே 2015 (14) ► ஏப்ரல் 2015 (17) ► மார்ச் 2015 (15) ► பிப்ரவரி 2015 (13) ► ஜனவரி 2015 (15) ► 2014 (171) ► டிசம்பர் 2014 (10) ► நவம்பர் 2014 (20) ► அக்டோபர் 2014 (11) ► செப்டம்பர் 2014 (11) ► ஆகஸ்ட் 2014 (9) ► ஜூலை 2014 (10) ► ஜூன் 2014 (7) ► மே 2014 (12) ► ஏப்ரல் 2014 (25) ► மார்ச் 2014 (19) ► பிப்ரவரி 2014 (17) ► ஜனவரி 2014 (20) ► 2013 (119) ► டிசம்பர் 2013 (15) ► நவம்பர் 2013 (14) ► அக்டோபர் 2013 (17) ► செப்டம்பர் 2013 (15) ► ஆகஸ்ட் 2013 (13) ► ஜூலை 2013 (8) ► ஜூன் 2013 (7) ► மே 2013 (8) ► ஏப்ரல் 2013 (4) ► மார்ச் 2013 (5) ► பிப்ரவரி 2013 (6) ► ஜனவரி 2013 (7) ► 2012 (46) ► டிசம்பர் 2012 (10) ► நவம்பர் 2012 (5) ► அக்டோபர் 2012 (2) ► செப்டம்பர் 2012 (2) ► ஏப்ரல் 2012 (3) ► மார்ச் 2012 (10) ► பிப்ரவரி 2012 (10) ► ஜனவரி 2012 (4) ► 2011 (39) ► டிசம்பர் 2011 (11) ► செப்டம்பர் 2011 (1) ► ஆகஸ்ட் 2011 (2) ► ஜூலை 2011 (1) ► ஜூன் 2011 (2) ► மே 2011 (2) ► ஏப்ரல் 2011 (5) ► மார்ச் 2011 (12) ► பிப்ரவரி 2011 (3) இந்த வலைப்பதிவில் தேடு பக்கம் வந்த நண்பர்கள் தொடரும் நண்பர்கள் (நீங்கள் இணைந்துவிட்டீர்களா?) வலைப்பதிவு காப்பகம் வலைப்பதிவு காப்பகம் அக்டோபர் (1) செப்டம்பர் (2) ஜூலை (1) ஜூன் (1) மே (6) மார்ச் (4) ஜனவரி (1) டிசம்பர் (2) நவம்பர் (5) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (6) ஜூன் (8) மே (3) ஏப்ரல் (4) மார்ச் (4) பிப்ரவரி (1) டிசம்பர் (1) நவம்பர் (6) அக்டோபர் (2) செப்டம்பர் (4) ஜூலை (3) ஜூன் (4) மே (3) ஏப்ரல் (10) மார்ச் (2) ஜனவரி (2) டிசம்பர் (1) அக்டோபர் (5) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (4) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (2) ஜனவரி (1) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (5) ஜூலை (5) ஜூன் (2) மே (5) ஏப்ரல் (8) மார்ச் (3) பிப்ரவரி (12) ஜனவரி (8) டிசம்பர் (3) நவம்பர் (7) அக்டோபர் (9) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (9) ஜூலை (13) ஜூன் (9) மே (12) ஏப்ரல் (17) மார்ச் (20) பிப்ரவரி (19) ஜனவரி (15) டிசம்பர் (25) நவம்பர் (15) அக்டோபர் (26) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (12) ஜூலை (6) ஜூன் (11) மே (14) ஏப்ரல் (17) மார்ச் (15) பிப்ரவரி (13) ஜனவரி (15) டிசம்பர் (10) நவம்பர் (20) அக்டோபர் (11) செப்டம்பர் (11) ஆகஸ்ட் (9) ஜூலை (10) ஜூன் (7) மே (12) ஏப்ரல் (25) மார்ச் (19) பிப்ரவரி (17) ஜனவரி (20) டிசம்பர் (15) நவம்பர் (14) அக்டோபர் (17) செப்டம்பர் (15) ஆகஸ்ட் (13) ஜூலை (8) ஜூன் (7) மே (8) ஏப்ரல் (4) மார்ச் (5) பிப்ரவரி (6) ஜனவரி (7) டிசம்பர் (10) நவம்பர் (5) அக்டோபர் (2) செப்டம்பர் (2) ஏப்ரல் (3) மார்ச் (10) பிப்ரவரி (10) ஜனவரி (4) டிசம்பர் (11) செப்டம்பர் (1) ஆகஸ்ட் (2) ஜூலை (1) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (5) மார்ச் (12) பிப்ரவரி (3) பிரபலமான இடுகைகள் பணி ஓய்வு பெற்றேன், நன்றி வணக்கம். மற்றவை நேரில்… 18-12-1980 அன்று பணியில் சேர்ந்த நான் , 31-5-2014 இன்று, நினைவலைகளில் மனம் தளும்ப ஓய்வு பெறுகிறேன், 34ஆண்டுகள்! பதவிஉயர்வில் ச... ஒற்றுமை பாடும் தமிழ்க் கவிதைகள்! “ என்சாமி பெரியசாமி உன்சாமி சின்னச்சாமி ” என்று சாமியின் பெயராலும் சாதியின் பெயராலும் மக்களைப் பிரித்து வரும் சுயநல வாதிகளுக்க... மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை படிக்காதவர்க்கும் நல்ல தமிழைக் கற்றுத்தந்த நடிகர்திலகம் சிவாஜி கணேசன். கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம்... கமல் எழுதிய கவிதைகள்! புதியதலைமுறை இதழ் ஆசிரியர் எழுத்தாளர் மாலன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு “திசைகள்“ இணையஇதழ் வெளிவந்தபோது -10ஆண்டுகள் இருக்கும்- அதில் ஒ... தந்தை பெரியார் என்பவர் யார்.? இன்று செப்-17, தந்தை பெரியார் பிறந்த நாள்! “அறிவைத் தடுப்பாரை, மானம் கெடுப்பாரை வேரோடு பெயர்க்க ... எளிய தமிழ் இலக்கண வகுப்பு - காணொலி இணைப்பு காணொலிப் பதிவு! காண வருக! ------- TNPSC, TNUSRB, TRB, UPSC உள்ளிட்ட, தமிழ்நாடு அரசின் அரசு... குடியரசுநாள், சுதந்திரநாள் - என்ன வித்தியாசம்? இன்று 26-01-2014 குடியரசு நாள். ஆமா... நம்ம சுதந்திரநாளுக்கும், குடியரசு நாளுக்கும் என்ன வித்தியாசம்? இன்றைய செய்தித்தாள் ஒன்றின் மு... குறள் அறமும் மனு (அ)தர்மமும் - (ஆய்வுக் கட்டுரை) எங்கள் குறளும் உங்கள் மனுவும் எப்படிச் சமமாகும் ? (ஆய்வுக் கட்டுரை) -- நா . முத்துநிலவன் — -- வெளியீட்டுக்கு நன்றி -- “திராவிடப்... புதுக்கோட்டையில் ஒரு கீழடி – பொற்பனைக் கோட்டை - இந்து தமிழ் நாளிதழில் வந்த எனது கட்டுரை ( இக்கட்டுரையை 03-9-2021 அன்று இந்து - தமிழ் திசை நாளிதழில் வெளியிட்ட ஆசிரியர் குழுவிற்கு எனது நன்றி வெளிவந்த கட்டுரையில... காதல் - நட்பு - காமம் கோவை பூ.சா.கோ. பொறியியற் கல்லூரியில் (PSG Engineering College Coimbatore) என்னைப் பேச அழைத்திருந்தார்கள். அது, தமிழகத்தின் 7 பொறியி... படைப்புகளைப் பயன்படுத்த விரும்புவோர் ஆசிரியரிடம் முன்அனுமதி பெறவேண்டும். நீர்வரி தீம். Blogger இயக்குவது.
சி.பி.செந்தில்குமார் 7:30:00 PM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments 1 ஏழை மக்களின் சேமிப்பு பணத்திற்கு வேட்டு வைத்துள்ளது மத்திய அரசு: மு.க. ஸ்டாலின் # 1 3/4 லட்சம் கோடி சேமிச்சா வேட்டுதான் ============== 2 காலம் கடந்த பின்பு விஜயகாந்துக்கு ஞானம் பிறந்துள்ளது".. - பொன். ராதா# இல்லையே.மேரேஜ் ஆன உடனே சம்முவப்பாண்டி பிறந்தாச்சே? ============= 3 நேரில் மக்களை.சந்திக்க முடியவில்லை என்றாலும் என் எண்ணமும் ,இதயமும் மக்களிடம் -ஜெ#,அந்த 500ரூ ,1000 ரூ எல்லாம் எங்கே இருக்குங்கோ? =============== 4 வட மாநிலங்களில் உப்புக்கு பற்றாக்குறை கிடையாது; உப்பு அதிக விலைக்கு விற்கப்படவில்லை-நிர்மலா சீதாராமன் # உப்பு பற்றி வதந்தி கிளப்புவது தப்பு ============= 5 1978ல், அரசு, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் முயற்சி தோல்வியில் முடிந்தது.-ப.சிதம்பரம்: # இப்பவும் அப்டி ஆகாது, இது மோடி மேஜிக் ================ 6 விவசாயிகளை பாதுகாப்பதில் தமிழகம், 20வது இடத்தில், தொழில் துவங்குவதில், 18வது இடத்தில் -தமிழிசை # ஆனா கொலை,கொள்ளை, பதுக்கல் இதிலெல்லாம் நல்ல முன்னேற்றம்,அதை எல்லாம் சொல்ல மாட்டீங்க? ================ 7 கறுப்புப் பணத்தை ஒழிக்க, ஏன் புதிதாக, 500, 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கின்றனர்- ஜவாஹிருல்லா # ஒரு எல்கேஜி க்கு தெரிஞ்சதுகூட கட்சித்தலைவர்க்கு தெரியலை =============== 8 கவலை வேண்டாம்! வங்கிகளில் போதிய பணம் உள்ளது - ரிசர்வ் வங்கி # உங்க கிட்டே இருக்கு, எங்க கிட்டே இருக்க க்யூல நிக்கனுமில்ல?அந்த ஐ”க்யூ: வை வளர்த்திக்குங்க ==================== 9 முலாயம் - அகிலேஷ் மீண்டும் மோதல் # கலைஞர் -அழகிரி , அக்னி நட்சத்திரம் படம் போல் ஆகிடுச்சு =================== 10 கறுப்பை வெள்ளையாக்குவது எப்படி? கூகுள் தேடலில் முதலிடத்தில் குஜராத் # அடுத்த இடம் அறிவாலயமும், போயஸ் தோட்டமுமா? ===================== 11 மக்களை பற்றி சிந்திக்காமல் வாக்குகளை பற்றி சிந்திக்கிறார் ஜெ- ஸ்டாலின் குற்றச்சாட்டு # அப்போ திமுக வாக்கு சேகரிக்க பிரச்சாரம் பண்றதில்லையா? ================ 12 புதிய ரூ500 நோட்டு இனி வங்கிகளில் கிடைக்கும்! டெல்லி,-இன்றே விநியோகம்!! # கைல இருப்பதே ஒரு 500 தான்.இதை மாத்த டெல்லி போகனுமா? =================== 13 கபாலி பட வருமானம் குறித்து ரஜினி கணக்கு காட்ட முடியுமா? இயக்குநர் அமீர் கேள்வி # அவர் டக்னு பருத்தி வீரன் கணக்கு கேட்டுடப்போறாரு =================== 14 கர்நாடக அமைச்சர் ஆபாச படம் பார்த்தாரா, இல்லையா? செல்போனை நோண்டப்போகிறது சிபிஐ # இதை சாக்கா வெச்சு அவகளும் பிட் படம் பார்க்கப்போறாக ==================== 15 ரூ.6000 கோடி கருப்புப் பணம்.. சூரத் வைர வியாபாரி அபராதம் கட்டினார்.# மாட்டிய முதல் திமிங்கலம் மங்களம்.மோடி யின் வெற்றி ================ 16 ரூ. 2000 கிடைக்கவில்லை.. ரிசர்வ் வங்கிக்கு எதிரான ஐகோர்ட்டில் வழக்கு.. நவ. 16ல் தீர்ப்பு # போர் எனில் சேதம் இருக்கும்.போர்க்கால நடவடிக்கை ================= 17 ஜெ.பதவிக்கு எந்த ஆபத்தும் வராமல் பாதுகாத்த மோடிக்கு நன்றி: சசிகலா புஷ்பா # கலைஞரை விட பெரிய சாணக்கியரா இருப்பார் போல ============== 18 500, 1000 ரூபாய் நோட்டுகளை கங்கை நதியில் போட்டுவிட்டால் மட்டும் பாவம் நீங்கி விடாது: மோடி.# அட்லீஸ்ட் பேங்க் வாசல்லயாவது போட்டுட்டுப்போகவும் ================== 19 ஆண்டுக்கு ஒரு டாலர் சம்பளம் போதும்- டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு # மாசம் 1,ரூ சம்பளம் வாங்குனவரே.66கோடி சம்பாதிச்சாருனு கணக்கு போட்டிருப்பாரோ ================== 20 ரூபாய் நோட்டுகளை ஒழித்ததை மறுபரிசீலனை செய்ய முடியாது- மோடி # கருப்புப்பணம் வெச்சிருக்கறவங்கதான் இனி தங்கள் நிலையை மறுபரிசீலனை செய்யனும் =============== Tweet Newer Post Older Post Home 0 comments: Post a Comment Follow @writer_cps Followers Featured Post மின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள் வே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...
சுவிஸில் சுமார் 12% இறப்பு எண்ணிக்கை பதிவான நிலையிலும், மக்கள் தொகையில் உயர்வு பதிவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. 2020 முடிய சுவிட்சர்லாந்தின் மொத்த மக்கள் தொகை 8,667,100 என பதிவாகியுள்ள நிலையில், 2019ம் ஆண்டை விட மக்கள் தொகையில் 61,100 அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் 0.7% உயர்வாகும். சுவிட்சர்லாந்தில் அதிகரித்த மக்கள் தொகை : வெளியான காரணம் ஆனால் கடந்த ஓராண்டில் மட்டும் 8,200 பேர் இறந்துள்ளதுடன், பிறப்பு விகிதமும் சரிவடைந்துள்ளது. இருப்பினும் மக்கள் தொகை அதிகரிக்க காரணம் குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததே காரணம் என கூறப்படுகிறது. பெண்கள் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் – சுவிற்சர்லாந்துக்கு ஏற்பட்ட நிலமை.! இன்னும் துல்லியமாக, சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கையில் கணிசமான குறைவு காணப்பட்டதும் முதன்மை காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறியவர்களை விட 56,000 பேர் சுவிட்சர்லாந்திற்கு குடியேறியுள்ளனர், ஆனால் 2019 உடன் ஒப்பிடும்போது குடியேறியவர்கள் மற்றும் வெளியேறியவர்கள் இரண்டும் முறையே 3.9% மற்றும் 15.6% குறைந்துள்ளது. மேலும் கொரோனாவால் இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது. ஆண்களின் இறப்பு பெண்களை விட முறையே 14.6% மற்றும் 9.9% ஆக அதிகரித்துள்ளது. Tags : swiss tamil news Share: Previous Post Next Post Related Post சுவிட்சர்லாந்துக்கு ஒரு எச்சரிக்கை.!! – ஏற்படப்போகும் இயற்கை அனர்த்தம் Posted by admin - March 18, 2021 0 சுவிட்சர்லாந்துக்கு ஒரு எச்சரிக்கை.!! – ஏற்படப்போகும் இயற்கை அனர்த்தம்- பருவநிலை மாற்றங்களால் சுவிட்சர்லாத்துக்கு பெரும் ஆபத்து நேரிட இருப்பதாக அரசு ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பருவநிலை பாதுகாப்பு… சுவிற்சர்லாந்தில் நடைமுறைக்கு வரும் புதிய தளர்வுகள்! – அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு Posted by admin - April 15, 2021 0 சுவிற்சர்லாந்தில் நடைமுறைக்கு வரும் புதிய தளர்வுகள்! – அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு சுவிற்சர்லாந்து அரசு தனது புதிய மகுடநுண்ணி தளர்வினை அறிவித்துள்ளது. இதன்படி 19.04.2021 முதல் இப்புதுத்… கொரோனாவால் 3 மில்லியன் மக்கள் பாதிப்பு : உறுதிப்படுத்திய சுவிஸ் அரசாங்கம் Posted by admin - April 27, 2021 0 சுவிட்சர்லாந்தில் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் மூன்றில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் பெரும்பாலானோருக்கு அது… சுவிட்சர்லாந்தில் விசா இல்லாமல் நுழைய அனுமதி! எந்த நாட்டினருக்கு தெரியுமா? Posted by admin - November 17, 2021 0 ஜனவரி 2022 முதல் அவுஸ்திரேலியர்கள் விசா இல்லாமல் சுவிட்சர்லாந்திற்கு நுழையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் ஃபெடரல் கவுன்சில், அவுஸ்திரேலியப் பிரஜைகள் இங்கு வேலை செய்ய மற்றும் நீண்ட… நிர்வாண புகைப்படங்களை விற்கும் சுவிஸ் செவிலியர் – காரணம் என்ன தெரியுமா.? Posted by admin - April 10, 2021 0 நிர்வாண புகைப்படங்களை விற்கும் சுவிஸ் செவிலியர் – காரணம் என்ன தெரியுமா.? முதியோர் இல்லம் ஒன்றில் பணியாற்றும் சுவிஸ் செவிலியர் ஒருவர் தமது நிர்வாண புகைப்படங்களை குறிப்பிட்ட…
Nanayam Vikatan - 17 October 2021 - சிபில் ஸ்கோர் அதிகம் இருந்தும் கடன் மறுக்கப்பட என்ன காரணம்..? | doubts for investment questions - Vikatan Save the vikatan web app to Home Screen tap on Add to home screen. X Subscribe to vikatan Login செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் குருப்பெயர்ச்சி பலன்கள் கனமழை: அப்டேட்ஸ் New சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் ஆன்லைன் தொடர்கள் New My News ராசி காலண்டர் மேலும் மெனுவில் Search நாணயம் விகடன் ஆசிரியர் பக்கம் மீண்டும் சுறுசுறுப்பாகச் செயல்படத் தொடங்குவோம்! பங்குச் சந்தை குரோத் ஸ்டாக்ஸ் Vs வேல்யூ ஸ்டாக்ஸ் பங்குகளைத் தேர்ந்தெடுக்க உதவும் பளிச் டெக்னிக்! டிஜிட்டல் மூலம் சிகிச்சை... புதிய காப்பீடு அறிமுகம்! ரெடிங்டன் (இந்தியா) லிமிடெட்! அர்த்தம் உள்ள முதலீடு... எப்படிச் செய்ய வேண்டும்? "டெக்னாலஜி நிறுவனத்தின் சந்தை இந்தியாவுக்கு வெளியேதான் இருக்கிறது!" கார்ப்பரேட் பாண்ட் ஃபண்டுகள்... யாருக்கு ஏற்றவை..? பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! ஷேர்லக்: எல்.ஐ.சி புதிய பங்கு வெளியீடு... வெளிநாட்டு முதலீடு அனுமதிக்கப்படுமா? எந்த வயதில் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆரம்பித்தீர்கள்? நடப்பு உங்கள் கனவு இல்லத்தை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 3 முக்கிய விஷயங்கள்..! மாத சந்தா முறையில் வாகனங்கள்... வாடிக்கையாளர்களுக்கு வரப்பிரசாதமா? எந்த ரிஸ்க்கையும் எடுக்காமலே வெற்றிக்கனியை சுவைக்க முடியுமா? 20 லட்சம் முதலீடு... 500 கோடி வர்த்தகம்... கலக்கும் பெங்களூரு தொழிலதிபர்! ஜவுளித் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துமா பி.எல்.ஐ திட்டம்..? பண்டிகைக் காலத்தில் ரூ.100-க்கும் வாங்கலாம் தங்கம்! எது உங்கள் சாய்ஸ்? அனில்... சச்சின்... சர்ச்சையில் 300 பேர்... பண்டோரா பேப்பர்ஸ் சொல்வது என்ன..? ‘‘5 ஃபண்டுகளில் ரூ.25,000 முதலீடு செய்துவருகிறேன்..!’’ மியூச்சுவல் ஃபண்ட் மியூச்சுவல் ஃபண்ட்... தவறான நம்பிக்கை, சரியான விளக்கம்! இன்ஷூரன்ஸ் தீவிர நோய் பாதிப்பு பாலிசியை ஏன் எடுக்க வேண்டும்? தொடர்கள் ‘‘15 ஆண்டு முதலீடு செய்தேன்... 45 வயதில் ஓய்வு பெற்றேன்..!’’ ஆயுள் காப்பீடு... ஏன் அவசியம் தேவை? “ஒரு லட்சத்தை முழுசா பார்த்தது `மன்மத ராசா’ பாட்டுலதான்!” கேள்வி-பதில் சிபில் ஸ்கோர் அதிகம் இருந்தும் கடன் மறுக்கப்பட என்ன காரணம்..? Published: 09 Oct 2021 6 AM Updated: 09 Oct 2021 6 AM சிபில் ஸ்கோர் அதிகம் இருந்தும் கடன் மறுக்கப்பட என்ன காரணம்..? சி.சரவணன் ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் Use App கேள்வி - பதில் கேள்வி - பதில் உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் பிரீமியம் ஸ்டோரி ஜெயந்தி கண்ணன், மும்பை. என் கிரெடிட் ஸ்கோர் 835. அண்மையில் கார் வாங்குவதற்காக, கடனுக்கு விண்ணப்பம் செய்திருந்தேன். எனக்குக் கடன் மறுக்கப் பட்டிருக்கிறது. என்ன காரணமாக இருக்கும்? சுரேஷ் பார்த்தசாரதி, நிதி ஆலோசகர், Myassetsconsolidation.com “உங்களுக்குக் கடன் நிராகரிக்கப்பட்டதற்கு பல காரணங்கள் இருக்கலாம். உங்களுக்கு பலதரப்பட்ட கடன் இருப்பதால் நிராகரிக்கப் பட்டு இருக்கலாம். உங்கள் வருமானம் போதிய அளவுக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். நீங்கள் தற்போது வேலைபார்க்கும் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து சில மாதங்களே ஆகியிருந் திருக்கலாம். சமீபத்தில் அதாவது, 3 - 6 மாதங்களுக்கு முன் ஏதாவது கடன் வாங்கி இருக்கலாம். அதாவது, அடிக்கடி கடன் வாங்குகிறார் என்ற வகையில் நிராகரிக்கப்பட்டிருக்கலாம். சமீபத்தில் உங்கள் கிரெடிட் கார்டு பேமென்டை சரியாகக் கட்டாமல் இருந்திருக்கலாம் அல்லது மாதாந்தர பேமென்ட்டைப் பிரித்து செலுத்தி யிருக்கலாம். இது மாதிரி ஏதாவது நீங்கள் செய்திருக்கிறீர்களா என்று ஆராய்ந்து பார்த்தால், அதற்கான காரணத்தை நீங்களே கண்டுபிடிக்க வாய்ப்பு உண்டு.’’ ஜே.ரூபன், திசையன்விளை. நான் ஒரு சிறிய வியாபாரி. மூன்று சக்கர வண்டி மூலம் பொருள்களை டெலிவரி செய்கிறேன். இதற்கு பொருள்களுடன் மின் வழி பில் (இ-வே பில்) உருவாக்கி அனுப்ப வேண்டியது அவசியமா, இ-வே பில் உருவாக்க மதிப்பு ஏதேனும் சட்டத்தில் உள்ளதா? சு.செந்தமிழ்ச் செல்வன், ஜி.எஸ்.டி ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர் “சி.ஜி.எஸ்.டி மற்றும் எஸ்.ஜி.எஸ்.டி விதி எண் 138 (14) (b)-படி, மோட்டார் அல்லாத போக்குவரத்து மூலம் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டால் இ-வே பில் உருவாக்கத் தேவையில்லை. தமிழ்நாடு மாநில அரசால் 02/06/2018-ல் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மாநிலங்களுக்கு இடையேயான நடவடிக்கைகளுக்கு இ-வே பில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும்,நீங்கள் விற்பனை செய்யும் பொருளின் மதிப்பு ரூ.1 லட்சத்துக்குக் கீழ் இருந்தால் இ-வே பில் உருவாக்க வேண்டியது இல்லை.” மு.சிபி, மதுரை. என் பணத்தை தபால்துறை எஃப்.டி., பி.பி.எஃப், அஞ்சலக ஆயுள் காப்பீட்டு நிதி போன்றவற்றில் முதலீடு செய்துள்ளேன். இந்தத் திட்டங்களால் எனக்கு லாபம் கிடைக்குமா? வங்கிகள் திவால் ஆவது போல் தபால்துறை திவால் ஆகிவிடுமோ என்று பயமாக உள்ளது. நான் என்ன செய்ய வேண்டும்? சுரேஷ் பார்த்தசாரதி, சு.செந்தமிழ்ச் செல்வன், பி.ராமசாமி, சு.கஸ்தூரி, ஆர்.ஜெகதீஷ், வி.தியாகராஜன் பி.ராமசாமி, நிறுவனர், Easyinvest.co.in “தபால் அலுவலகத்தின் ஃபிக்ஸட் டெபாசிட், பி.பி.எஃப், ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் போன்றவை மத்திய அரசின் உத்தரவாதம் பெற்ற திட்டங்கள் ஆகும். ஆகையால், உங்கள் முதலீட்டுக்கு மோசமில்லை. இதில் வரும் வட்டி வருமானம் குறைவாக இருந்தாலும் நிலை யானது மற்றும் பாதுகாப்பானது என்பதால், நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்.” கார்த்திகேயன், இ-மெயில் மூலம். என் அம்மாவின் பெயரில் உள்ள நிலத்தின் தாய்ப் பத்திரத்தை என் அண்ணன் வைத்திருக்கிறார். எனக்கு உள்ள பங்கையும் என் அண்ணனுக்கு உள்ள பங்கையும் பிரித்துக் கொடுக்க என் தாய் தயாராக இருக்கிறார். ஆனால், என் அண்ணன் சொத்தை முழுமையாக தானே எடுத்துக்கொள்ளப் பார்க்கிறார். தாய்ப் பத்திரம் இல்லாமல் என் பங்குக்கு உரிய சொத்தை என் அம்மா எனக்கு பத்திரப் பதிவு செய்து தர முடியுமா? சு.கஸ்தூரி, வழக்கறிஞர், ஆவண எழுத்தர், ஆல்மைட்டி அசோசியேட்ஸ். “தாய்ப் பத்திரம் இல்லாமல் பத்திரப் பதிவு செய்ய வாய்ப்பு இல்லை. உங்கள் அம்மா பெயரில் சொத்து இருக்கும் பட்சத்தில், அதை யாருக்கும் எழுதித் தராத நிலையில், வாரிசுகள் எல்லோருக்கும் பாகம் உண்டு. அம்மாவின் விருப்பப்படி, அந்தச் சொத்தைப் பிள்ளைகளுக்கு எழுதித் தர விரும்பினால், முறையாகப் பத்திரப் பதிவு செய்ய வேண்டும். அதற்கு தாய்ப் பத்திரம் அவசியம். பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்யும்போது அதைச் சரி பார்த்த பின்பே பதிவுக்கு சப்-ரிஜிஸ்டர் அனுமதி அளிப்பார். ஒரு வேளை, உங்கள் அண்ணனிடம் தாய்ப் பத்திரம் உண்மையில் இல்லை எனில், பத்திரம் காணவில்லை என வழக்கறிஞர் மூலம் முறைப்படி தமிழ் மற்றும் ஆங்கிலம் செய்தித் தாள்களில் விளம்பரம் செய்து, அதைக் கொண்டு உங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத் தில் புகார் செய்து குறிப்பிட்ட நாள் இடைவெளியில் காவல் நிலையத்தில் தரும் சான்றைக் கொண்டு பத்திரப் பதிவு செய்யலாம்.” அருண் குமார், இ-மெயில் மூலம். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் நான், கடந்த ஆண்டு புதிய வரி முறைப்படி, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தேன். இந்த ஆண்டு வீட்டுக் கடன் வாங்கி இருப்பதால், அசலில் ரூ.1.5 லட்சம், வட்டியில் ரூ.2 லட்சம் வரிச் சலுகை கிடைக்கும். நான் புதிய வரி முறை யிலிருந்து பழைய வரி முறைக்கு மாற என்ன செய்ய வேண்டும்? ஆர்.ஜெகதீஷ்,ஆடிட்டர், தேனி. “தாராளமாக மாற்றிக்கொள்ளலாம். வருமான வரிச் சட்டத்தின்படி, சம்பளதாரர் ஒரு வரி முறையிலிருந்து மற்றொரு வரி முறைக்கு மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படு கிறது. எனவே, நீங்கள் புதிய வரி முறையிலிருந்து பழைய வரி முறைக்குத் தாராளமாக மாறிக்கொள்ளலாம். வருமான வரித் துறையின் இணையதளத்தில் வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது பழைய வரி முறைதான் முதலில் வந்து நிற்கும். நீங்கள் அதிலேயே வரிக் கணக்கு தாக்கல் செய்து வரிச் சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.” ராஜேஷ் குமார், மணலி, சென்னை. நான் ரிஸ்க் எடுக்க விரும்பாதவன். அதிக வட்டி கிடைக்கும் ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்ய திட்டமிட்டு நண்பரிடம் விசாரித்தேன். அவர் நான்-வித்ட்ரால் ஃபிக்ஸட் டெபாசிட்டில் பணம் போட்டால் அதிக வட்டி கிடைக்கும் என்றார். அப்படிச் செய்யலாமா? வி.தியாகராஜன், ஆடிட்டர், www.bizlane.in “இடையில் எடுக்க முடியாத வைப்பு நிதி (Non-Withdrawable FD) வைப்பு நிதியில் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.15 லட்சத்திலிருந்து தொடங்கும். இதில் சாதாரண வைப்பு நிதியைவிட 0.10% - 0.50% வரை அதிக வட்டி கிடைக்கும். குறைந்தது இரண்டிலிருந்து மூன்று வருடங்கள் வரை தேவைப்படாத பணத்தை இந்த வைப்பு நிதியில் போட்டு வைக்கலாம். ஏற்கெனவே சொன்னபடி, முதிர்வுக் காலம் முடியும் வரை இந்தப் பணத்தை எடுக்க முடியாது. சில வங்கிகள், டெபாசிட்தாரரின் இறப்பு மற்றும் திவால் நிலை (Insolvency) போன்ற காரணங்களுக்காக மட்டும் இடையில் எடுத்துக்கொள்ள அனுமதிக்கின்றன.” தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism gst loan mutual fund Stock market CIBIL Investement Cibil Score சி.சரவணன் தனிநபர் நிதி மேலாண்மை எழுத்தாளர், நாணயம் விகடன் நிர்வாக ஆசிரியர், Author, Personal Finance Books in Tamil https://bit.ly/2UIvUHD பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட், இன்ஷூரன்ஸ் நிபுணர். விகடன் பிரசுரத்தில் சேமிப்பு முதலீடு தகவல் களஞ்சியம், முதலீட்டு மந்திரம் 108, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - முழுமையான கையேடு, தங்கத்தில் முதலீடு, கடன் A to Z , மணி மேனேஜ்மென்ட் உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். நிதி சார்ந்த பத்திரிகை பணியில் 20 ஆண்டுகள் (தினகரன் இதழின் வணிக உலகம், தினத்தந்தி-ன் இக்கனாமிக்ஸ் டைம்ஸ் பக்கம், நாணயம் விகடன்) மற்றும் தினசரி (கதிரவன்) பத்திரிக்கையில் 8 ஆண்டுகள் அனுபவம். முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிதி மேலாளர்கள், பங்கு தரகு நிறுவனங்களின் தலைவர்கள், காப்பீடு நிறுவனங்களின் தலைவர்களை கண்ட அனுபவம் மிக அதிகம். NSE Certified Capital Market Professional, Advanced Financial Goal Planner by AAFMÂ நிறைவு செய்திருக்கிறார். தமிழ் மக்களை நவீன முதலீடுகளான மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச் சந்தையில் ஈடுபட வைப்பது மற்றும் நிதி பாதுகாப்புகளை (ஆயுள் மற்றும் ஆரோக்கிய காப்பீடு) செய்ய வைப்பது மிக நீண்ட கால இலக்கு.
விந்து முந்துதல் பிரச்னை: `A, B, C, D, E, F' முறையில் இருக்கு தீர்வு! - காமத்துக்கு மரியாதை - 12 | doctor explains about premature ejaculation - Vikatan Save the vikatan web app to Home Screen tap on Add to home screen. X Subscribe to vikatan Login செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் குருப்பெயர்ச்சி பலன்கள் கனமழை: அப்டேட்ஸ் New சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் ஆன்லைன் தொடர்கள் New My News ராசி காலண்டர் மேலும் மெனுவில் Search Published: 24 Oct 2021 7 PM Updated: 24 Oct 2021 7 PM விந்து முந்துதல் பிரச்னை: `A, B, C, D, E, F' முறையில் இருக்கு தீர்வு! - காமத்துக்கு மரியாதை - 12 ஆ.சாந்தி கணேஷ் விந்து முந்துதல் பிரச்னை: `A, B, C, D, E, F' முறையில் இருக்கு தீர்வு! - காமத்துக்கு மரியாதை - 12 `வயதும் நேரமும் அல்ல; காமத்துக்கு இதுதான் ரொம்ப முக்கியம்!' - காமத்துக்கு மரியாதை - 17 `ஆர்கஸத்திற்கு ஃபோர்ப்ளே மட்டுமல்ல, இதுவும் அவசியம்; ஏன் தெரியுமா?' - காமத்துக்கு மரியாதை - 16 கணவர்கள் அதிகம் விரும்புவதும் மனைவியர் வெறுப்பதும் இந்த ஒன்றைத்தான்! - காமத்துக்கு மரியாதை - 15 `இது புரிந்தால் செக்ஸுவல் ஃபேன்டஸியும் இன்பமே!' - காமத்துக்கு மரியாதை - 14 தாம்பத்ய உறவு தொய்வடைகிறதா? நீங்கள் செய்யவேண்டியது இதுதான்! - காமத்துக்கு மரியாதை 13 விந்து முந்துதல் பிரச்னை: `A, B, C, D, E, F' முறையில் இருக்கு தீர்வு! - காமத்துக்கு மரியாதை - 12 தாம்பத்யம் போரடிக்கிறதா? இவற்றையும் நீங்கள் முயன்று பார்க்கலாம்! - காமத்துக்கு மரியாதை - 11 எனக்கு 48, உனக்கு 50; நடுத்தர வயதிலும் தாம்பத்யம் இனிக்க இதைச் செய்யுங்கள்! - காமத்துக்கு மரியாதை 10 காமசூத்ரா சொல்லும் `யோனிப்பொருத்தம்'; தாம்பத்திய உறவுக்கு ஏன் முக்கியம்? - காமத்துக்கு மரியாதை - 9 ஆடையில்லாமல் படுங்கள்; படுக்கையறையின் பவர்ஃபுல் டெக்னிக்! - காமத்துக்கு மரியாதை - 8 ஆர்கஸம் தெரியும்; எக்ஸ்ட்ரா வஜைனல் ஆர்கஸம் தெரியுமா? - காமத்துக்கு மரியாதை - 7 `டீனேஜ் காதல்'னு ஒண்ணு கிடையவே கிடையாது; ஏன் தெரியுமா? - காமத்துக்கு மரியாதை - 6 ஆணுறுப்பு சின்னதா இருக்குனு நினைக்கிறீங்களா? அதை இப்படி அளவிடுங்க! - காமத்துக்கு மரியாதை - 5 கணவனிடமே நிர்வாணத்துக்கு மனைவி `நோ' சொல்வது ஏன்? - காமத்துக்கு மரியாதை - 4 `முதலிரவுக்குப் பிறகும் இருக்கு ஆயிரம் இரவுகள்!' - இதெல்லாம் நினைச்சு கவலைப்படாதீங்க - 3 செக்ஸூக்கு குளிச்சிட்டு ரெடியான மட்டும் பத்தாது பாஸ்; இதுவும் முக்கியம்! - காமத்துக்கு மரியாதை - 2 `காதல் தோல்வியை இரக்கத்துடன் பார்க்கும் சமூகம், காமத்தில் தோற்றால்..?' - காமத்துக்கு மரியாதை! - 1 ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் Use App Couple (Representational Image) ( Photo by Andrea Piacquadio from Pexels ) ``செக்ஸ் ஆரம்பித்த 2 நிமிடங்களில் இவர்களுக்கு விந்து வெளியேறிவிடுகிறது. ஆனால், அந்த 2 நிமிடங்களுக்குள் ஆண் உச்சக்கட்டம் அடைந்துவிடுவான். அப்படியென்றால், ஏன் ஆண்கள் இதுபற்றி கவலைப்பட வேண்டும் என்று சிலருக்குத் தோன்றலாம். அதற்கான பதில்...'' உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் இது தகவல்களின் காலம். ஜஸ்ட் `கறிவேப்பிலை' என்று டைப் செய்து கூகுளில் தேடினால், கறிவேப்பிலை தொடர்பாக எக்கச்சக்க தகவல்கள் வந்து விழும். ஆனால், அவற்றில் எந்தத் தகவல் சரி, எது தவறு என்பதை எல்லோராலும் கண்டுபிடித்துவிட முடியாது. கண்டுபிடிக்கத் தெரிந்தவர்களோ கூகுளில் கறிவேப்பிலை பற்றித் தேடப் போவதில்லை. கறிவேப்பிலையைப் பற்றி எதுவும் அறியாமல் தேடுபவர்கள் அதுபற்றிய தவறான தகவல்களை நம்பிவிட்டால், கறிவேப்பிலையால் கிடைக்கிற நல்ல பலன்களை அனுபவிக்காமல் போய்விடலாம் இல்லையா? இப்போது `கறிவேப்பிலை' இடத்தில் காமத்தை வைத்துப் பாருங்கள். அந்த உணர்வை விரும்பாத மனிதர்கள் இல்லை. இன்றைக்குக் காமம் தொடர்பான தகவல்களும் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அளவுக்கு அதிகமான விருப்பமும் எக்கச்சக்க தகவல்களும் உள்ளங்கைக்குள் இருக்கும்போது, அவையே சிலரைத் தவறாக வழிநடத்தி விடலாம். `இது சரியில்லையோ' என்று ஐயுறுபவர்கள்கூட, அதற்கான சரியான தீர்வு கிடைக்காமல் தடுமாறவே செய்வார்கள். காமத்தில் `இது சரியா', `இது தவறா' என்று தடுமாற வைக்கின்ற பல ஐயங்கள் இருக்கின்றன. அவற்றில் இரண்டை பற்றித்தான் இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ள இருக்கிறோம். ஒன்று செக்ஸ் நிலைகள் எனப்படுகிற பொசிஷன்ஸ், இரண்டாவது விந்து முந்துதல்... இதற்காக பாலியல் மருத்துவர் காமராஜிடம் பேசினோம். Couple (Representational Image) Photo by Thomas AE on Unsplash Also Read கணவனிடமே நிர்வாணத்துக்கு மனைவி `நோ' சொல்வது ஏன்? - காமத்துக்கு மரியாதை - 4 ``தாம்பத்திய உறவில் பொசிஷனைப் பொறுத்து குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போடலாம், அல்லது சீக்கிரம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம், ஆர்கஸம் அதிகம் கிடைக்கும் என்பது போன்ற பல்வேறு நம்பிக்கைகள் இன்றைய தம்பதிகளிடம் இருக்கின்றன. பொசிஷனைப் பொறுத்து குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போட முடியும் என்று சொல்லிவிட முடியாது. உறவின் முடிவில் பிறப்புறுப்புகள் இணைந்து, உயிரணுவும் கருமுட்டையும் இணைந்தால், அது கருவாகத்தான் செய்யும். அப்படியென்றால், பொசிஷனைப் பொறுத்து சீக்கிரம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா என்றால், ஒரேயொரு நிலையில் மட்டும் அது உதவும்'' என்றவர், அதுபற்றி விவரிக்க ஆரம்பித்தார். சிறுநீர்ப்பைக்கும் ஆசன வழிக்கும் இடையில்தான் கர்ப்பப்பை இருக்கும். பெரும்பாலான பெண்களுக்குக் கர்ப்பப்பையானது லேசாக முன்னோக்கி சிறுநீர்ப்பை மீது சாய்ந்திருக்கும். சில பெண்களுக்கு மட்டும் கர்ப்பப்பை பின்னோக்கி சாய்ந்திருக்கும். இதை `retroverted uterus' என்போம். திருப்தியான தாம்பத்திய உறவு இருந்து, கூடவே உடலிலும் எந்தப் பிரச்னையும் இல்லாத சில தம்பதிகளுக்கும் குழந்தை பிறக்காது. அந்தப் பெண்களுக்கு இப்படி கர்ப்பப்பை சற்று பின்னோக்கி சாய்ந்திருக்கலாம். அப்படிப்பட்டவர்கள், மிருகங்கள்போல பின்புறமாக இருந்து உறவுகொண்டால் கரு தங்க வாய்ப்பிருப்பதாக சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மற்றபடி, அவரவர் விருப்பப்படி முன்புறமோ, பின்புறமோ, ஒருக்களித்து அணைத்தவாறோ, ஒருவர் மடியில் ஒருவர் அமர்ந்தபடியோ என தம்பதியர்க்கு எதெல்லாம் விருப்பமான பொசிஷனாக இருக்கிறதோ அப்படியெல்லாம் தாம்பத்திய உறவு கொள்ளலாம். பொசிஷன்கள் இருவருக்கும் செளகர்யமாக இருக்க வேண்டும், அவ்வளவுதான்'' என்றவர் பொசிஷன்களுக்கும் உச்சக்கட்டத்துக்குமான தொடர்பு பற்றியும் பேசினார். Couple (Representational Image) Photo by Loc Dang from Pexels ``ஆண் மேற்புறமாக இருக்கையில், பெரும்பாலான பெண்கள் உச்சக்கட்டம் அடைவதில்லை. இதுவே பெண் மேற்புறமாக இருந்தால் இருவருக்குமே உச்சக்கட்டம் கிடைக்கும். பொசிஷன்களில் இதுதான் பெஸ்ட். ஏனென்றால், இதன்மூலம்தான் பெண்ணின் முழு பெண்ணுறுப்பையும் தூண்டி இருவரும் உச்சக்கட்டத்தை அனுபவிக்க முடியும். செக்ஸில் ஆண் - பெண் சமநிலை இந்த பொசிஷனில்தான் இருக்கிறது. இதை ஆண்கள் அனைவரும் புரிந்து, ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்கிறார் டாக்டர் காமராஜ். Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். வாசகர்கள் கேள்வி: `விந்து முந்துதல்' என்கிற ஒரு பிரச்னையைப் பற்றி `uravugal@vikatan.com' மெயில் ஐ.டி-க்கு பல ஆண்கள் தங்கள் கேள்வியை அனுப்பி வைத்திருந்தார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் தீர்வு சொல்கிறார் டாக்டர் காமராஜ். பாலியல் மருத்துவர் காமராஜ் டாக்டர் பதில்: சொன்னால் நம்ப மாட்டீர்கள். `விந்து முந்துதல்' பிரச்னை உலகத்திலிருக்கிற 70 சதவிகித ஆண்களுக்கு இருக்கிறது. செக்ஸ் ஆரம்பித்த 2 நிமிடங்களில் இவர்களுக்கு விந்து வெளியேறிவிடுகிறது. ஆனால், அந்த 2 நிமிடங்களுக்குள் ஆண் உச்சக்கட்டம் அடைந்துவிடுவான். அப்படியென்றால், ஏன் ஆண்கள் இதுபற்றிக் கவலைப்பட வேண்டும் என்று சிலருக்குத் தோன்றலாம். அதற்கான பதில், ஆண் விந்து முந்தும்போதே உச்சக்கட்டத்தை அடைந்துவிடுவான். ஆனால், அவன் மனைவிக்கோ தொடர்ந்து 14 நிமிடங்கள் தாம்பத்திய உறவுகொண்டால்தான் உச்சக்கட்டம் அடைய முடியும் என்கின்றன பல ஆராய்ச்சி முடிவுகள். இன்னொரு விஷயத்தையும் தெரிந்துகொள்ளுங்கள். தொடர்ந்து 14 நிமிடங்கள் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு மனைவியை உச்சக்கட்டம் அடைய வைப்பதற்கான சாத்தியம் மிக மிகக் குறைவு. பெரும்பான்மை ஆண்களால் இது முடியாது. இந்த இடத்தில்தான், `விந்து முந்துதல்' என்கிற ஆண்களின் பிரச்னை தம்பதியரின் பிரச்னையாகிறது. `தன்னுடைய மனைவியைத் திருப்தி செய்ய முடியவில்லை' என்கிற எண்ணம் ஆணுக்கு வந்துவிடும். சில நாள்கள், சில வாரங்கள், சில மாதங்கள் என்று பொறுத்துக்கொள்கிற மனைவி, ஒருகட்டத்தில் தாம்பத்திய உறவைச் சலிப்புடன் தவிர்க்கப் பார்ப்பார் அல்லது தலையெழுத்தே என்று உடன்படுவார். ஒருசிலர் வார்த்தைகளால் தங்கள் உணர்வை வெளிப்படுத்திவிடலாம். சரி, இந்தப் பிரச்னைக்கு தீர்விருக்கிறதா என்றால், இருக்கிறது. `விந்து முந்துதல்' பிரச்னைக்கு மருத்துவரைச் சந்தித்து அதற்கான மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்ளுங்கள். கூடவே A, B, C, D, E, F என்ற முறையையும் கையாளுங்கள். A என்பது பெண்ணுறுப்பின் உள்ளேயுள்ள மேல் பகுதி. இந்த இடத்தைத் தூண்டலாம். B என்பது மார்பகம். இதைத் தூண்டினாலும் 2 முதல் 3 சதவிகிதப் பெண்கள் உச்சக்கட்டத்தை அடைந்துவிடுவதாக ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. C என்பது கிளிட்டோரிஸ். ஆணுறுப்புக்கு இணையானது. பெண்ணுறுப்புக்குள் மேல் பகுதியில் இருக்கும். D என்பதும் பெண்ணுறுப்பின் மேல் பகுதியினுள்ளே இருப்பதுதான். இந்தப் பகுதியைத் தூண்டுவதன் மூலம் உங்கள் இணையர் உச்சக்கட்டம் அடைந்தால் அந்தப் பகுதி லேசாக வீக்கமடையும் என்று ஆராய்ச்சிகள் கண்டுபிடித்திருக்கின்றன. அடுத்து E. இந்த ஸ்டெப்பில் தம்பதியர் பிறப்புறுப்புகள் இணைய வேண்டும். கடைசியாக F. இது, இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் நான் சொல்லியிருக்கிற மனைவி கணவனுக்கு மேலிருக்கும் நிலை. விந்து முந்துதல் நிகழ்ந்தாலும் நான் மேலே சொன்னவற்றில் E-யைத் தவிர்த்து மற்ற ஐந்து முறைகளின் மூலம் உங்கள் வாழ்க்கைத்துணைக்கு உச்சக்கட்டம் வரவழைத்து திருப்திப்படுத்திவிடலாம். உங்களுக்கு `விந்து முந்துதல்' காரணமாக வருகிற குற்றவுணர்ச்சியும் சரியாகிவிடும். காமத்துக்கு மரியாதை Also Read ஆர்கஸம் தெரியும்; எக்ஸ்ட்ரா வஜைனல் ஆர்கஸம் தெரியுமா? - காமத்துக்கு மரியாதை - 7 காமத்தின் உள்ளும் புறமும் பற்றித்தான் இந்தத் தொடரில் பேசப் போகிறோம்; தெரிந்துகொள்ளப் போகிறோம்; காமத்துக்கும் வக்கிரத்துக்கும் இடையேயான வித்தியாசத்தைத் தெரிந்துகொள்ளப் போகிறோம்; கூடவே தாம்பத்திய உறவில் காமம் சார்ந்து சந்திக்கிற சிக்கல்களுக்கு நிபுணர்களுடன் இணைந்து தீர்வுகளையும் தேடவிருக்கிறோம். உங்கள் துணையிடம்கூட பகிரத் தயங்குகிற பிரச்னைகளுக்கான பதில்கள் நிச்சயம் இருக்கும். இந்தத் தொடரின் வழி உங்கள் அந்தரங்க கேள்விகளை அனுப்ப விரும்புகிறவர்கள் uravugal@vikatan.com என்ற மின்னஞ்லுக்கு அனுப்பலாம். மரியாதை செய்வோம்! தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism relationship couple sex lifestyle ஆ.சாந்தி கணேஷ்Follow 15 வருடங்களாக வாழ்வியல் பத்திரிகையாளர். படித்தது முதுகலை வரலாறு. குடிமைப்பணி கனவு கலைந்தவுடன் மக்களுடன் இணைந்து இயங்க பத்திரிகைத்துறையைத் தேர்ந்தெடுத்தேன். ஆரோக்கியத்தில் ஆர்வம் அதிகமென்பதால், அதில் ஆதி, அந்தக் கட்டுரைகள் இங்கு நிறைந்து காணப்படும். கூடவே குழந்தைகளுக்கான கதைகளில் மான்குட்டியும் புலிக்குட்டியும் நட்பு பாராட்டும். ஆண்-பெண் உறவுச்சிக்கல்களுக்கும் இங்கு தீர்வு கிடைக்கும். அரசியல் பெண்களில் ஆரம்பித்து சாமான்யப்பெண்கள் வரை பலருடைய போராட்டங்களும் வெற்றிக்கதைகளும் உத்வேகம் அளிக்கும். அந்த உத்வேகத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறேன்.
Aval Vikatan - 05 January 2021 - பார்வை இல்லை... பசுமை உண்டு! செல்வராணியின் சாதனைத் தோட்டம்|Selvarani shares about her home gardening - Vikatan Save the vikatan web app to Home Screen tap on Add to home screen. X Subscribe to vikatan Login செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் குருப்பெயர்ச்சி பலன்கள் கனமழை: அப்டேட்ஸ் New சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் ஆன்லைன் தொடர்கள் New My News ராசி காலண்டர் மேலும் மெனுவில் Search அவள் விகடன் தலையங்கம் நமக்குள்ளே... லைஃப்ஸ்டைல் சித்ராக்கள் தொடர்கதையாகக் கூடாது! ‘பிகில்’ வளையல், ‘மூக்குத்தி அம்மன்’ ஜிமிக்கி... கலகல ஷாப்பிங் அனுபவம்! அது ஒரு கல்ச்சுரல்ஸ் காலம்! ஓ... பாப்பா லாலி! - #HowToPrepare iஅக்கா... “பன்னுக்குள்ள கோழிய வெச்சிருக்காய்ங்க!” - பாட்டியின் ஃபுட் ரெவ்யூ சருமம், கேசம்... இதையெல்லாம் செய்யாதீங்க கேர்ள்ஸ்! 90ஸ் கிட்ஸ் Vs 2கே கிட்ஸ் சேலை கட்டும் பெண்ணுக்கொரு மீம்ஸ் உண்டு! ரீடிசைன், ஆல்டரேஷன், இஸ்திரி, வார்ட்ரோப் அரேஞ்மென்ட்... ஆடைகள் பராமரிப்புக்கு அசத்தல் ஆலோசனைகள்! வினு விமல் வித்யா: பெண்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு! பூவே பூச்சூடவா... கலக்குது கஜ்ரா ஸ்டைல் பட்டுச்சேலை, பிரியாணி பிளேட், மண் குவாரி... டிசைன் டிசைனா கேக் - தூள்கிளப்பும் திவ்யா ஓ... பாப்பா லாலி! எழுத்தாளர்களுக்கு வாரிசுகள் இருக்க வேண்டும் என்பது விதியில்லையே! - தி.ஜானகிராமன் மகள் உமா சங்கரி கண்களால் கைது செய்யுங்கள்! - ஐ மேக்கப் டிப்ஸ் அள்ள அள்ள வருமானம்... கறுப்புத் தங்கத்தில் அட்டகாசமான லாபம்! வீட்டை க்யூட்டாக்க... வாசகிகளின் ஐடியாக்கள்! #Avaludan ஓ... பாப்பா லாலி! #HowToPrepare என்டர்டெயின்மென்ட் சேனல் சைட் டிஷ் சிறிய வீடு... பெரிய மகிழ்ச்சி... அள்ள அள்ள ஆச்சர்யங்கள்... இயற்கை எனும் இனிய கொடை ! ஜிங்கிள் பெல்ஸ்... கிறிஸ்துமஸ் ட்ரீ அலங்காரம் “சிசிடிவி தவிர எல்லா டி.விலயும் பேசியிருக்கேன்!” - திருச்சி அன்னலெட்சுமி! ஹெல்த் மார்கழிக்கான மூச்சுப் பயிற்சி! இப்பவோ... எப்பவோ... இரண்டாவது குழந்தைக்குத் திட்டமிடுவோர் கவனத்துக்கு... தொடர்கள் மெய்ப்பொருள் காண்பது அறிவு... 3: மதங்கள் கொண்டாடும் மார்கழி குளிர்! 2K Kids அவள் பதில்கள் - 3 ராசி பலன்கள் - டிசம்பர் 22 முதல் ஜனவரி 4 வரை பெண்களுக்கான அரசுத் திட்டங்கள் - 3: முதலமைச்சரின் ‘பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்!’ கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 3: மொபைல் ஜாக்கிரதை! புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 3 சேவைப் பெண்கள்! - எத்தனை தடைகள் வந்தாலும் என் குரல் ஒலிக்கும்! சமையல் சந்தேகங்கள்: மைசூர் ரசம், சாஃப்ட் சப்பாத்தி, ஹோம் மேடு சுக்குமல்லி காபி... ஆண்களைப் புரிந்துகொள்வோம் - 3: அணைத்தாலும் வேண்டாம், அடிக்கிற கை! தன்னம்பிக்கை பார்வை இல்லை... பசுமை உண்டு! செல்வராணியின் சாதனைத் தோட்டம் பொண்ணுங்க தவில் வாசிக்கிறது தப்பா..? - தவில் கலைஞர் சரோஜினி இனிக்கட்டும் புத்தாண்டு! சினிமாவிலிருந்து பிசினஸுக்கு... ஷிப்பிங் துறையில் தெறிக்கவிடும் தம்பதி ”அஞ்சும் பொம்பளப்புள்ளைனு விட்டுப்போயிட்டாரு வீட்டுக்காரரு!” Published: 22 Dec 2020 6 AM Updated: 22 Dec 2020 6 AM பார்வை இல்லை... பசுமை உண்டு! செல்வராணியின் சாதனைத் தோட்டம் குருபிரசாத்தி.விஜய் ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் Use App செல்வராணியின் சாதனைத் தோட்டம் #Motivation உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் பிரீமியம் ஸ்டோரி ``ரெண்டு கண்ணும் தெரியாது. ஆனாலும் என் மாடித் தோட்டத்தின் பச்சையை என்னால உணர முடியுது. அதுதான் இயற்கையின் கருணை’’ - ரசித்துப் பேசுகிறார் செல்வராணி. இரண்டு கண்களிலும் பார்வையை இழந்த 59 வயது மாற்றுத்திறனாளி. கோவை தீத்திப்பாளையத்தில் உள்ள தன் வீட்டில் இயற்கை விவசாய முறைப்படி மாடித் தோட்டம் அமைத்துப் பராமரித்து வருகிறார். “நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் திருநெல்வேலி. கல்யாணத்துக்கு அப்புறம் மும்பையில இருந்தோம். என் ரெண்டாவது குழந்தை டெலிவரி நேரத்துல, எனக்கு டைபாய்டு வந்ததுல நரம்பு பாதிப்பு ஏற்பட்டு, ரெண்டு கண்லேயும் பார்வை போயிடுச்சு’’ என்ற செல்வராணியிடம் அதைத் தாண்டி அதில் சொல்ல சுய இரக்க வார்த்தைகள் எதுவும் இல்லை. வாழ்க்கையையும் அவ்வாறே எதிர்கொண்டிருக்கிறார். ‘‘ஏர் இந்தியாவில் வேலைபார்த்த என் வீட்டுக்காரர் ஓய்வுபெற்றதும் ரெண்டு பிள்ளைகளுடன் கோவைக்கு வந்துட்டோம். சின்ன வயசுலயிருந்தே எனக்குச் செடி, கொடிகள் மேல ஆர்வம் அதிகம். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளை ரேடியோல தொடர்ந்து கேட்பேன். வேளாண் பல்கலைக்கழகத்துக்கும் அப்பப்போ போவேன். அதில் கிடைச்ச ஆர்வம், அனுபவங்கள் மூலம் நண்பர் ஒருவரின் உதவியோட மாடித்தோட்டம் அமைச்சேன். ஒன்பது வருஷமாச்சு. தக்காளி, வெண்டைக்காய், கத்திரிக்காய், காலிஃபிளவர், முள்ளங்கி, பச்சை மிளகாய், அவரைக்காய்னு 20 வகையான காய்கள், கீரைகள், கொடிகள் இங்க இருக்கு. மாட்டுச்சாணம், ஆட்டுச்சாணம், வேப்பம் பிண்ணாக்குனு இயற்கை உரங்கள்தான் பயன்படுத்துறேன். நானே பஞ்சகவ்யா தயாரிச்சு அதைப் பயன்படுத்துவேன். அதுக்கான பயிற்சியும் எடுத்திருக்கேன். இயற்கை உரங்களப் பயன்படுத்துறதால எங்க சமையலறையில சுவையும் ஆரோக்கியமும் அதிகமாகுது. அக்கம், பக்கத்துல காய் கேட்கிறவங்களுக்கும் கொடுப்பேன். கொரோனா காலகட்டத்துல செல்வபுரம், மாதம்பட்டினு நிறைய இடங்கள்ல இருந்து எங்க வீட்டுக்கு வந்து காய், கீரை வாங்கிட்டுப் போனாங்க. ஆரோக்கியத்துக்காக அவங்க நம்மளை தேடிவந்தப்போ, நல்லவேளையா இங்க விளைச்சலும் அதிகமா இருந்துச்சு. குறைஞ்ச விலைக்கு நிறையவும் நிறைவாவும் வாங்கிட்டுப் போனாங்க. தவிர, விதைகள், பூச்செடிகளையும் லாபம் இல்லாம உற்பத்தி விலைக்கே கொடுப்பேன். இதுல பணம் சம்பாதிக்கிற எண்ணம் எனக்கு இல்ல. மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் அமைக்க பலரையும் உற்சாகப்படுத்தணும். வருங்கால சந்ததிகள் ஆரோக்கியமா இருக்க, எல்லார் வீட்லயும் தோட்டம் அமைக்கணும்’’ என்றவர், இதில் செலவும் குறைவு என்கிறார். ‘`சின்ன இடம் இருந்தாலும் போதும். நான் 12,000 ரூபாய்தான் மாடித்தோட்டத்துக்குச் செலவு பண்ணினேன். தினமும் ரெண்டு வேளை தண்ணியும், ஒருநாள் விட்டு ஒருநாள் பஞ்சகவ்யமும் செடிகளுக்கு விடுவேன். அப்பப்ப உரத்துக்குச் செலவு பண்ணினா போதும். கற்பூரவள்ளி போன்ற மருத்துவ குணங்கள் இருக்குற செடிகளையும் வெச்சுருக்கேன். அதுங்க புண்ணியத்துல நானும் வீட்டுக்காரரும் சளி, தும்மல், வயிற்றுப் பிரச்னைக்கு எல்லாம் ஆஸ்பத்திரிக்கே போனதில்ல’’ என்றவர், இதுவரை பல பெண்களுக்கு மாடித்தோட்டம் அமைக்கப் பயிற்சியும் கொடுத் திருக்கிறார். ‘‘பார்வையற்ற மாற்றுத் திறனாளி பெண்கள்கிட்ட, மாடித்தோட்டம் போடுங்கனு சொன்னா, ‘இதெல்லாம் நடக்குற காரியமா?’னு கேட்பாங்க. ஆனா, அவங்களைப் போலவே பார்வையிழந்த நான், ‘என்னை மாதிரி நீங்களும் மாடித்தோட்டம் போடலாமே...’னு சொல்லும்போது, அவங்களுக்குப் பெரிய நம்பிக்கை கிடைக்குது. அந்த வகையில, இதுவரை நான் 15 விழிச்சவால் பெண்களுக்கு மாடித்தோட்டம் அமைக்கப் பயிற்சி கொடுத்திருக்கேன். அவங்களோட மாடித்தோட்டங்கள் எல்லாம் இப்போது பச்சையா வளர்ந்து நிக்குது’’ என்ற செல்வராணி, தோட்டத்தில் செடிகளைத் தொட்டுப்பார்த்தே அவற்றின் நோய்த்தாக்கம் பற்றி கண்டறிகிறார். செடிகளிடம் பேசுகிறார். கத்திரிக்குத் தண்ணீர் அடித்துவிட்டு, அதில் காய்த்திருந்த கத்திரிப் பிஞ்சை தொட்டுப்பார்த்து உற்சாகமாகிறார். இவற்றையெல்லாம் பார்க்கும் நமக்கும் அந்த உற்சாகம் தொற்றிக்கொள்வதுடன், ஆச்சர் யமும் பரவுகிறது. ‘‘உங்களுக்கு ஆச்சர்யமா இருக் குறது, எனக்கு தினசரி. என் வீட்ல எல்லா வேலைகளையும் நான்தான் செய்யுறேன். வீட்டுலகூட, வேலைக்கு ஆள் வெச்சுக்கலாம்னு சொல்லுவாங்க. நான்தான் மறுத்துட்டேன். என் தோட்டத்து காய்களை என் கையால சமைச்சாதானே எனக்கு நிறைவா இருக்கும்? வழக்கமானதையே செய்யாம, வெண்டைக்காய் பஜ்ஜி, கத்திரிக்காய் பஜ்ஜினு புதுசா செஞ்சு பார்ப்பேன். பலரும், கண்ணு தெரியாம எப்படிச் சமைக்கறீங்கனு கேட்பாங்க. பதில் சிம்ப்பிள்... எனக்குப் பழகிடுச்சு. ஒவ்வொரு உணவையும் தாளிக்கும்போது, வேகும்போது, வறுக்கும்போது வரும் வாசனைய வெச்சே அது எந்தளவுக்கு வெந்திருக்கு, வேகலைன்னு தெரிஞ்சுக்குவேன். தொலைக்காட்சிகள்ல சமையல் நிகழ்ச்சிகள்கூட பண்ணியிருக்கேன்’’ என்றார் மேலும் ஆச்சர்யம் கொடுத்து. ‘‘கண்ணு தெரியலைன்னா ரூம்ல அடைஞ்சு கிடக்கணும்னு எதுவும் இல்ல. என்னால என்னவெல்லாம் முடியுமோ அதெல்லாம் செய் யணும்னு நினைப்பேன். வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள் பார்க்கிறதோட, மதியம் நேரம் கிடைச்சாலும் தூங்க மாட்டேன். கூடை பின்னுவேன். என்னால எவ்வளவு தூரம் ஓட முடியுதோ அவ்ளோ தூரம் ஓடிக்கிட்டே இருக்கணும் கடைசிவரை’’ என்பவரிடம் அடுத்த பிளானும் ரெடி. ‘‘இப்ப மாடியில ரூம் எடுக்க முடிவு பண்ணிருக்கோம். அதனால, மாடித்தோட்டத்தை வேற இடத்துக்கு மாற்றப்போறேன். விளைச்சல், ஆடு, மாடு, கோழி வளர்ப்புனு சீக்கிரமே நான் முழு நேர விவசாயி ஆகப்போறேன். இடம் பார்த்துட்டு இருக்கோம்” என்றார் ஆர்வமும் நம்பிக்கையுமாக.
சைனிக் பள்ளிகளில் உங்கள் பிள்ளைகளைச் சேர்க்க விருப்பமா? நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? | How to enroll your kids for the Sainik Schools all around the country? - Vikatan Save the vikatan web app to Home Screen tap on Add to home screen. X Subscribe to vikatan Login செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் குருப்பெயர்ச்சி பலன்கள் கனமழை: அப்டேட்ஸ் New சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் ஆன்லைன் தொடர்கள் New My News ராசி காலண்டர் மேலும் மெனுவில் Search Published: 16 Oct 2021 3 PM Updated: 16 Oct 2021 3 PM சைனிக் பள்ளிகளில் உங்கள் பிள்ளைகளைச் சேர்க்க விருப்பமா? நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேனி மு.சுப்பிரமணி ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் Use App சைனிக் பள்ளி அகில இந்திய சைனிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு 2022 - விண்ணப்பிப்பது எப்படி? ஒரு முழுமையான வழிகாட்டல்! உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் தேசியப் பாதுகாப்புக் கல்வி நிறுவனத்தில் (National Defence Academy) சேர்க்கை பெறுவதற்கான கல்வி, உடல்நிலை மற்றும் மனநிலை போன்றவைகளை உருவாக்கும் நோக்கத்துடன் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி நகரில் அமைந்திருக்கும் சைனிக் பள்ளி உட்பட இந்தியா முழுவதும் 33 இடங்களில் சைனிக் பள்ளிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இப்பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய சைனிக் பள்ளிகளுக்கான நுழைவுத்தேர்வு - 2022 (All India Sainik Schools Entrance Examination 2022) அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இடங்கள் இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டிருக்கும் 33 சைனிக் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பிற்கான சேர்க்கையில் மாணவர்கள் - 2318 இடங்கள், மாணவிகள் – 350 இடங்கள் என்று மொத்தம் 2668 இடங்கள் இருக்கின்றன. இப்பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் மாணவியர் சேர்க்கை நடைபெறவிருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதேபோன்று, இந்தியா முழுவதும் சைனிக் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பில் காலியாக இருக்கும் 238 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது. சைனிக் பள்ளி - உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி நகர் மேற்காணும் இடங்களில், தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி நகரில் அமைந்திருக்கும் சைனிக் பள்ளியில் 6 ஆம் வகுப்பில் மாணவர்கள் – 84 இடங்கள், மாணவிகள் – 10 இடங்கள் என்று மொத்தம் 90 இடங்கள் இருக்கின்றன. இப்பள்ளியில் 9 ஆம் வகுப்பில் 18 இடங்கள் காலியாக இருக்கின்றன. தகுதி சைனிக் பள்ளியில் 6 ஆம் வகுப்பில் சேர்க்கை பெற விரும்புபவர்களுக்கு 31-3-2022 அன்று வயது 10 முதல் 12 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். அதாவது, 1-4-2010 முதல் 31-3-2012 ஆம் நாளுக்குள் பிறந்திருக்க வேண்டும். 9 ஆம் வகுப்பில் சேர்க்கை பெற விரும்புபவர்கள் 31-3-2022 அன்று வயது 13 முதல் 15 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். அதாவது, 1-4-2007 முதல் 31-3-2009 ஆம் நாளுக்குள் பிறந்திருக்க வேண்டும் மற்றும் அங்கீகாரம் பெற்ற பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும். ஒன்பதாம் வகுப்பில் மாணவியர் சேர்க்கை இல்லை. இட ஒதுக்கீடு சைனிக் பள்ளியில் இருக்கும் மொத்த இடங்களில், பள்ளி அமைந்திருக்கும் மாநிலம் / ஒன்றியப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு 67% இடங்களும், பிற மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு 33% இடங்களும் என்று பொதுவான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு ஒதுக்கீட்டிலும் எஸ்சி பிரிவினர் 15%, எஸ்டி பிரிவினர் 7.5%, ஓபிசி பிரிவினர் 27% என்று மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறை பின்பற்றப்படும். மேற்காணும் அனைத்து இட ஒதுக்கீட்டிலும் பாதுகாப்புத்துறைப் பணியிலிருப்பவர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் குழந்தைகளுக்கு என்று 25% இடங்கள் வழங்கப்படும். நுழைவுத்தேர்வு சைனிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான தகுதித் தேர்வாக நடத்தப்பெறும், அகில இந்திய சைனிக் பள்ளிகளுக்கான நுழைவுத்தேர்வு - 2022 (All India Sainik Schools Entrance Examination – AISSEE 2022) இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் தேசியத் தேர்வு முகமையால் (National Testing Agency) நடத்தப்படுகிறது. மாணவர்களின் தேர்வு Representational Image தேசியத் தேர்வு முகமை, விண்ணப்பங்களைப் பெறுதல், தேர்வினை நடத்துதல், தேர்வு முடிவுகளை வெளியிடுதல் மற்றும் தரப்பட்டியலை சைனிக் பள்ளிகள் கழகத்திற்கு வழங்கும் பணிகளை மட்டும் மேற்கொள்ளும். தேசியத் தேர்வு முகமை வழங்கிய தரப்பட்டியலைக் கொண்டு, சைனிக் பள்ளிகளே மாணவர் சேர்க்கையினை மேற்கொள்ளும். தேர்வு முறை இந்த நுழைவுத் தேர்வானது பன்முகத் தெரிவு வினாக்கள் (Multiple Choice Questions) எனும் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கும். 6 ஆம் வகுப்பிற்கான கேள்வித்தாளில் கணிதம் தலைப்பில் சரியான விடைக்கு 3 மதிப்பெண்கள் வீதம் 150 மதிப்பெண்களுக்கான 50 கேள்விகளும், நுண்ணறிவு தலைப்பில் சரியான விடைக்கு 2 மதிப்பெண்கள் வீதம் 50 மதிப்பெண்களுக்கான 25 கேள்விகளும், மொழி தலைப்பில் சரியான விடைக்கு 2 மதிப்பெண்கள் வீதம் 50 மதிப்பெண்களுக்கான 25 கேள்விகளும், பொது அறிவு தலைப்பில் சரியான விடைக்கு 2 மதிப்பெண்கள் வீதம் 50 மதிப்பெண்களுக்கான 25 கேள்விகளும் என்று மொத்தம் 300 மதிப்பெண்களுக்கான 125 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். 9 ஆம் வகுப்பிற்கான கேள்வித்தாளில் கணிதம் தலைப்பில் சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் வீதம் 200 மதிப்பெண்களுக்கான 50 கேள்விகளும், நுண்ணறிவு தலைப்பில் சரியான விடைக்கு 2 மதிப்பெண்கள் வீதம் 50 மதிப்பெண்களுக்கான 25 கேள்விகளும், ஆங்கிலம் தலைப்பில் சரியான விடைக்கு 2 மதிப்பெண்கள் வீதம் 50 மதிப்பெண்களுக்கான 25 கேள்விகளும், பொது அறிவியல் தலைப்பில் சரியான விடைக்கு 2 மதிப்பெண்கள் வீதம் 50 மதிப்பெண்களுக்கான 25 கேள்விகளும், சமூக அறிவியல் தலைப்பில் சரியான விடைக்கு 2 மதிப்பெண்கள் வீதம் 50 மதிப்பெண்களுக்கான 25 கேள்விகளும் என்று மொத்தம் 400 மதிப்பெண்களுக்கான 150 கேள்விகள் இடம் பெற்றிருக்கும். இத்தேர்வில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைப்பு எதுவும் செய்யப்படாது. விண்ணப்பம் | Application Form விண்ணப்பம் அகில இந்திய சைனிக் பள்ளிகளுக்கான நுழைவுத்தேர்வு - 2022 (All India Sainik Schools Entrance Examination – AISSEE 2022) எழுத விரும்புபவர்கள், தேசியத் தேர்வு முகமையின் https://aissee.nta.nic.in எனும் இணைய முகவரிக்குச் சென்று, அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் குறிப்பேட்டை முழுமையாகப் படித்துப் பார்த்துவிட்டு, அதன் பிறகு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் சேர்க்கை பெற விரும்பும் ஏதாவதொரு சைனிக் பள்ளி ஒன்றை மட்டும் தேர்வு செய்து குறிப்பிட வேண்டும். இதேபோன்று, தகவல் குறிப்பேட்டில் தரப்பட்டிருக்கும் தேர்வு மையங்களிலிருந்து நான்கு மையங்களை வரிசைப்படி குறிப்பிட வேண்டும். பொதுப்பிரிவினர் ரூ.550/- எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.400/- என்று விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இணைய வழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 26-10-2021, மாலை 5.00 மணி. விண்ணப்பக் கட்டணத்தை 26-10-2021, இரவு 11.50 மணிக்குள் செலுத்திட வேண்டும். இணைய வழியில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில் பிழைகள் ஏதாவது இருப்பின், 28-10-2021 முதல் 2-11-2021 வரையிலான நாள்களில் திருத்தம் செய்து கொள்ள முடியும். Also Read பள்ளி மாணவர்களுக்கான இந்திய தேசிய ஒலிம்பியாட் தகுதியாளர் தேர்வுகள்... விண்ணப்பிப்பது எப்படி? தேர்வு மையம் மற்றும் தேர்வு நாள் இந்த நுழைவுத்தேர்வுக்கான அனுமதி அட்டை https://aissee.nta.nic.in எனும் இணையதளத்தில் தேர்வு நாளுக்கு 15 நாள்களுக்கு முன்பாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுவிடும். தேர்வுக்கு முன்பாக இந்த அனுமதி அட்டையினைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழ்நாட்டில் அமராவதி நகர், சென்னை, கோயம்புத்தூர், தஞ்சாவூர், உடுமலைப்பேட்டை என்று 5 தேர்வு மையங்கள் உட்பட இந்தியா முழுவதும் இத்தேர்வுக்கு 176 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. நுழைவுத் தேர்வுக்கான அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேர்வு மையத்தில் தேர்வினை எழுதலாம். தேர்வு மையம் இந்தியா முழுவதும் 9-1-2022, ஞாயிற்றுக் கிழமையன்று நடைபெறவிருக்கும் இந்த நுழைவுத் தேர்வானது, 6 ஆம் வகுப்புக்குப் பிற்பகல் 2.00 மணி முதல் 4.30 மணி வரை 150 நிமிடங்கள் எனும் கால அளவிலும், 9 ஆம் வகுப்புக்குப் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை 180 நிமிடங்கள் எனும் கால அளவிலும் நடைபெறும். தேர்வு முடிவுகள் இத்தேர்வுக்கான முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தகவல் குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வினை நடத்தும் தேசியத் தேர்வு முகமை, சைனிக் பள்ளிகள் கழகத்திற்குத் தேர்வு முடிவுகளை அனுப்பி வைத்துவிடும். 6 ஆம் வகுப்பு சேர்க்கைக்கு மாணவர், மாணவிகள் எனத் தனித்தனியாகவும், பள்ளிகள் வாரியாகவும், இட ஒதுக்கீடு வாரியாகவும் தரப்பட்டியல் தயாரித்து அனுப்பி வைத்துவிடும். 9 ஆம் வகுப்பு சேர்க்கைக்கு மாணவர்களுக்குப் பள்ளிகள் வாரியாகவும், இட ஒதுக்கீடு வாரியாகவும் தரப்பட்டியல் தயாரித்து அனுப்பி வைத்துவிடும். மாணவர் சேர்க்கை தேசியத் தேர்வு முகமை வழங்கிய தரப்பட்டியலின் அடிப்படையில் ஒவ்வொரு சைனிக் பள்ளியின் இணையதளத்திலும் மாணவர் சேர்க்கைக்கு அழைக்கப்படும் மாணவர்கள் பட்டியல் வெளியிடப்படும். இப்பட்டியலில் இடம்பெற்றவர்களுக்குப் பள்ளியில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன் பிறகு, மருத்துவப் பரிசோதனையில் தகுதி பெற்றவர்களைக் கொண்டு மாணவர் சேர்க்கைக்கான இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். சைனிக் பள்ளி இறுதிப்பட்டியலில் மாணவர் சேர்க்கை கிடைக்கப் பெற்றவர்கள் 2022-2023 ஆம் கல்வியாண்டில் குறிப்பிட்ட சைனிக் பள்ளிகளில் சேர்ந்து தங்களது படிப்பைத் தொடரலாம். சைனிக் பள்ளிகளுக்கும், தனியார் பயிற்சி மையங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். கூடுதல் தகவல்கள் இத்தேர்வுக்கான கூடுதல் தகவல்களை அறிய விரும்புபவர்கள் www.nta.ac.in அல்லது https://aissee.nta.nic.in எனும் இணையதளங்களில் ஒன்றைப் பார்வையிடலாம் அல்லது 011 - 40759000, 69227700 எனும் தொலைபேசி எண்களிலோ அல்லது aissee@nta.ac.in எனும் மின்னஞ்சலிலோ தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads By Category: எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம் சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும் June 2019 Issue தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில் எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku | Tamil Unicode / English Search இளந்தென்றல் < Prev | Index | Next > ஆப்பிள் படுத்தும் பாடு (அத்தியாயம் 7) - ராஜேஷ் | ஜூன் 2019 | Share: பாலா அத்தை உதவுவதாகச் சொன்னவுடன் அருண் மிகுந்த உற்சாகம் அடைந்தான். காலைக் கடன்களை முடித்துவிட்டு, அனுவையும் அரவிந்தையும் எழுப்பி, அவர்களை எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, கீழே காலைச் சிற்றுண்டி சாப்பிட வருமாறு சொன்னான். தான் பக்கரூவோடு இறங்கினான். அவன் கையில் ஐபேடு இருந்தது. அதில் கூகுள் பண்ணி படித்துக்கொண்டே கீழே இறங்கினான். பாலா அவனைப் பார்த்ததுமே, "என்ன அருண், அனுவும் அரவிந்தும் எழுந்திட்டாங்களா? அவங்களுக்கும் உன்னுடைய சுறுசுறுப்பைக் கொஞ்சம் குடுத்துடேன்," என்றார். "நீ பெரிய தலைவனா வரப்போற எதிர்காலத்தில்" என்றார். "அத்தை, நானா? பார்க்கலாம்" என்று சொல்லிக் கண் சிமிட்டிச் சிரித்தான். "அம்மா, எனக்கு ஹனி பன்ச்சஸ், ஓட்ஸ்" என்றான். "வேற?" கீதா கேட்டார். "ஆரஞ்சு ஜூஸ்." கீதா குளிர்பதனப் பெட்டியைத் திறந்து அதிலிருந்து ஆரஞ்சுச் சாறு புட்டியை எடுத்தார். அருண் உற்சாகத்துடன் முக்காலியில் அமர்ந்து, கிண்ணம் நிறைய தானிய உணவைப் போட்டு அதில் பாலை ஊற்றிக்கொண்டான். கீதா அவனுக்கு ஒரு கோப்பையில் பழச்சாறு கொடுத்தார். அவனே எல்லாம் செய்துகொள்வதைப் பார்த்து பாலா ஆச்சரியப்பட்டார். "பரவாயில்லையே அருண்" என்று புகழ்ந்தார். "அண்ணி, இன்னைக்கு அவனுக்கு உங்ககிட்ட வேலை ஆகணும். அதுக்குதான் இந்த நடிப்பு. மத்த நாள்ல எல்லாம் இருந்த இடத்திலிருந்து ஒரே ஏவல்தான், பெரிய ராஜா மாதிரி" என்றார் கீதா. "ரொம்பதான் மெச்சாதீங்க உங்க மருமகன!" அருண் தானிய உணவை மென்றுகொண்டே ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தான். அவன் கண்களில் ஒரு சிறுவனுக்கே உள்ள விஷமம் இருந்தது. அந்தக் கள்ளச் சிரிப்பைப் பார்த்து பாலாவிற்கு அடக்கமுடியாமல் சிரிப்பு வந்தது. "சாரி கீதா, அவனது கள்ளத்தனமான சிரிப்பைப் பார்த்ததும் என்னால் அடக்க முடியவில்லை சிரிப்பை." "குழந்தைங்க எல்லாம் அப்படித்தானே அண்ணி." ஆமாம் என்று தலையாட்டிய பாலா, மாடிப்பக்கம் பார்த்து, மெல்லக் குரல் கொடுத்தார்' "அனு, அரவிந்த்! கீழே இறங்கி வாங்க. ரொம்ப நேரமாச்சுப்பா" கீதாவும் பாலாவும் தம் கணவன்மார்கள் இன்னும் நித்திரையில் இருப்பதைப் பெரிது படுத்தவில்லை. அவர்கள் இன்னும் சிறிது நேரம் தூங்கட்டும் என்று விட்டுவிட்டார்கள். அருண் தனது ஐபேடை ஆன் செய்தான். அதில் ஆப்பிள் பழங்களின் மெழுகுபற்றித் தேடினான். வந்த வலைப் பக்கங்களை ஒவ்வொன்றாகப் படித்தான். "பாருங்க, பாலா அத்தை" என்று அவன் காட்ட, அதை பாலாவும் அவனும் படிக்க ஆரம்பித்தார்கள். "நல்லா எழுதிருக்காங்க இல்லே? நீங்க சந்தேகப்பட்ட மாதிரியே?" அருணும் பாலாவும் படித்துக் கொண்டிருந்த போது கீதா, "அண்ணி, உங்களுக்கு டீயா காபியா?" என்று கேட்டார். "டீ" என்று பாலாவிடம் இருந்து பதில் வந்தது. "நான் ஏதாவது உதவி பண்ணட்டுமா?" "இல்லை அண்ணி, நீங்க அருணுக்கு உதவுங்க. நான் மத்த இரண்டு குட்டிகளையும் எழுப்பி கவனிச்சுக்கறேன்." "கீதா, என்னை ஒரு வேலையும் செய்ய விடமாட்டேங்கறயே? எனக்கு கூச்சமா இருக்கு இப்படிச் சும்மா உட்கார." "ஐயய்ய, என்ன அண்ணி இது, நம்ம வீடு இது. அதுவுமில்லாம, நீங்க என்ன சும்மாவா இருக்கீங்க. அருணுக்கு பெரிய உதவி இல்ல பண்ணிகிட்டு இருக்கீங்க" என்றார் கீதா. அதற்குள் அருண், "அத்தை, இதைப் பாருங்க. இதுல கேள்வி-பதில் போட்டிருக்காங்க. நல்ல விலாவாரியா இருக்கு, எனக்குக்கூட புரியறமாதிரி" என்று பாலா அருண் காட்டியைதைப் படித்தார். அதில் பழங்களின் மெழுகுபற்றி, அதிலும் ஆப்பிள் மெழுகுபற்றிப் பெரிய நிபுணர்கள் பதில் கொடுத்திருந்தார்கள். ஏன் பழங்கள் மெழுகை உண்டு பண்ணுகின்றன, அது இல்லாவிட்டால் என்ன தீங்கு போன்ற கேள்விகளுக்கு பதில்கள் இருந்தன. எப்படிப் பேராசை கொண்ட நிறுவனங்கள் இயற்கையாக உருவாகும் மெழுகை அழிக்கிறார்கள் என்பதற்கும் பதில் இருந்தது. பாலாவும் அருணும் ஒன்று விடாமல் படித்தார்கள். கீதாவும் அவ்வப்போது வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டு படித்தார். ஒரு விவசாய விஞ்ஞானியான கீதாவிற்கே அதில் பல விஷயங்கள் புதிதாக இருந்தன. "நல்லா சொல்லி இருங்காங்களே!" கீதா ஆச்சரியப்பட்டார். முணுமுணுத்தபடி, "ஆப்பிள் பழங்கள், தம்மிடம் உள்ள தண்ணீரைத் தக்கவைத்துக் கொள்ள மெழுகைத் தயாரிக்கின்றன. மெழுகு இல்லை என்றால் பழங்கள் நீரில்லாமல் சுருங்கிப் போய்விடும்" என்று எழுதி இருந்தது. அம்மாவின் தோள்மீது தன் முகத்தை வைத்துக்கொண்டு அருணும் படித்தான். கீதா மேலும் படித்தார்: 'சில நிறுவனங்கள், பழங்களின் மேல் கனமாக மெழுகைப் பூசுவதற்காக, இயற்கையான மெழுகை அகற்றி விடுகிறாரகள். பின்னர் செயற்கையான மெழுகைப் பளபளப்பாகப் பழத்தின்மேல் பூசுகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. இயற்கையான மெழுகில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இப்படி, பழங்களின் மூலம் கிடைக்கும் நல்ல விளைவுகளைக் கிடைக்காமல் செய்து விடுகிறார்கள்.' "நெனச்சேன் அம்மா, நான் நெனச்சேன்" என்று அருண் துள்ளினான். "இதை விடக்கூடாதம்மா." "கொஞ்சம் பொறு, கண்ணா" கீதா அருணை நிதானப்படுத்தினார். "நிறைய விஷயங்களை மெதுவா புரிஞ்சு படிக்கணும். படக்குன்னு தாவிடக் கூடாது." பாலா அருணின் தலையைச் செல்லமாக வருடினார். 'Atta boy,' என்று புளகாங்கிதம் அடைந்தார். "கீதா, இதைப் பார்" என்று பாலா எதையோ காட்டினார். அருண் அவர் காட்டியதைப் படிக்க, அவன் கண்களில் ஒரு திடீர் பிரகாசம் வந்தது. அப்போது அனுவும் அரவிந்தும் கீழே இறங்கி வந்தார்கள். பதுங்கிப் பதுங்கி பக்கரூவும் அவர்கள் பின்னால் மெதுவாக வந்தது. "அனு, அரவிந்த் இப்பத்தான் உங்களுக்குப் பொழுது விடிஞ்சிச்சா?" என்று பாலா கேட்டார். "வாங்க, உட்காருங்க. நம்ம அருண் உங்களுக்காக நிறைய விஷயம் படிச்சு வெச்சிருக்கான். கவனமா கேட்டுக்கோங்க." அனுவும் அரவிந்தும் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். "பக்கரூ குட்டி, நீயும்தான்" என்று கீதா சொன்னவுடன் பக்கரூ உற்சாகத்தில் ஏதோ தனக்கு எல்லாம் புரிந்தமாதிரி துள்ளிக் குதித்தது.
தமிழ்த் திரைப்பட உலகின் முதல் பின்னணிப் பாடகர் என்றப் பெருமையை ஈன்றிருக்கும் பழம்பெரு பாடகர் திருச்சி எஸ்.லோகநாதனின் மூத்தப் புதல்வரான டி.எல்.மகராஜன்’, தனது தந்தை வழியில் இசைஞானம் பெற்ற பின்னணிப் பாடகராவார். இவர் அக்கால நகைச்சுவை நடிகை சி.டி.ராஜகாந்தம் என்பவரின் பேரன் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1954 ஆம் ஆண்டில் மார்ச் திங்கள் 9 ஆம் நாள் திருச்சி லோகநாதன் – ராஜலக்‌ஷ்மி* தம்பதியருக்கு மூத்தப் புதல்வராகப் பிறந்த மகராஜன், தனது 10 வது வயதிலேயே ‘வள்ளலார்’ என்ற நாடகத்தில் முதன் முதலாகப் பாடி நடித்து பின்னர் தனது 12வதுவயதில் பிரபல இயக்குநர் ஏ.பி.நாகராஜனின் ‘திருவருட் செல்வர்’ (1967) படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் டி.எம்.சௌந்திரராஜனுடன் இணைந்து, “காதலாகிக் கசிந்து” என்னும் பாடலைப் பாடி பிரபலமானார். டி.எல்.மகராஜன் திரைப் பாடல்களைக் காட்டிலும் ஏராளமான பக்திப் பாடல்களைப் பாடியிருக்கிறார். இவரின் பக்திப் பாடல்கள் அடங்கிய ஒலி நாடாக்களும் குறு வட்டுகளும் நிறைய வெளி வந்திருக்கின்றன. திரைப் படப் பாடல்களைப் பொறுத்த மட்டிலும், 1980 ஆம் ஆண்டில் கவிஞர் புரட்சிதாசன் கதை வசனம் பாடல்களை இயற்றி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்திருந்த ‘நான் போட்ட சவால்’* (1980) படத்தில் இளையராஜா இசையில், இவர் பாடிய “நெஞ்சே உன் ஆசை என்ன” என்றப் பாடல் சிறந்ததொரு எழுச்சிப் பாடலாகப் புகழ் பெற்றது. இதனைத் தவிர்த்து, இவர் பாடிய மேலும் சிலப் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன. “உன்னை கேளாய்” (தேசம்) *”முன்னேறுதான்”* (இந்திரா), “காதல் யோகி” (தாளம்), “நீ கட்டும் சேலை” (புதிய மன்னர்கள்), “கொட்டி” (அண்ணன் என்னடா தம்பி என்னடா), “அயே சம்பா” (பாண்டவர் பூமி), “மச்சினிக்கு” (பூவே உனக்காக), “ஆலமர” மற்றும் “பூந்தேரில்” (பெரிய மருது), *”வந்தவனெல்லாம்”* (கருமையில் ஓர் அழகு), *”கார்த்திகை மாதம்”(இருமுடி), “பக் பக் பக்” (பார்த்திபன் கனவு), “மேரே பியாரி” (இன்று போய் நாளை வா), “வாடி வாடி முயலே” ( அந்த நாள் ஞாபகம்), *”ரெட்ட ஜடை ராக்கம்மா”*(அன்பே அன்பே), “பூவாட்டம்”* (அரவிந்தன்), “செவ்வானமே”* (நல்லதொரு குடும்பம்), “நினைத்தால்”*(உன் கையில் குரோதம்), “அவன் பாதி”*(அவன் இவன்), “மார்கழிப் பூக்களே” ( அவன் அவள் அது), “அந்தி மழை மேகம்”* (நாயகன்) போன்ற நினைவில் நிற்கும் பாடல்களையும் டி.எல்.மகராஜன் தனது ரசிகர்களுக்கு விருந்தாகப் படைத்திருக்கிறார். டி.எல்.மகாராஜனுக்கு திருமணமாகி நிர்மலாதேவி என்ற மனைவியும், ஆதிலட்சுமி என்ற மகளும் உள்ளனர். திரைப்படங்களில் பாடுகின்ற வாய்ப்புகள் படிப் படியாக இவருக்கு குறைந்து விட்ட போதிலும், அவ்வப்போது மேடை இசை நிகழ்ச்சிகளிலும் கச்சேரிகளிலும் இவர் பங்கேற்று தனது இசையாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். இடையிடையே தொலைக்காட்சிகளின் இசை நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இவர் பங்கேற்று வருவதை இன்றும் காண முடியும். டி.எல்.மகராஜனின் இளைய சகோதரர் தீபன் சக்கரவர்த்தி இசைத் துறையில் இவரைக் காட்டிலும் சற்று பிரபலமானவர். இவர் ஒரு நடிகராகவும், புகழ் பெற்ற பலப் பாடல்களைப் பாடியிருக்கும் பின்னணிப் பாடகராகவும் தன்னை நிலை நாட்டிக் கொண்டவர். இவரின் மற்றொரு சகோதரரான் டி.எல்.தியாகராஜன் இவ்விருவரைப் போன்று புகழ் பெற இயலாவிட்டாலும் இவர் *‘பொம்பள மனசு’* என்ற படத்தில், ரத்தின சூரியன் என்பவர் இசையில்*”அமுத மழை பொழியும் முழு நிலவிலே”* என்றப் பாடலைப் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. 48 total views, 2 views today Post navigation சிறந்த படத்துக்கான ஆஸ்கார் இறுதி படடியலில் சூரரைப் போற்று. நடிகா் ரஜினி அண்ணாத்தே படப்பிக்கு ஹைதராபாத் பயணம். By ஆர்.தசரதன் Related Post சினிமா தமிழக செய்திகள் பாடலாசிரியர் புலவர் புலமைப்பித்தன் காலமானார். Sep 8, 2021 ஆர்.தசரதன் சினிமா தமிழக செய்திகள் தமிழ்த் திரையுலகம் கண்ட மாபெரும் நடிகர் சிவாஜி கணேசன்!நினைவு நாள் கட்டுரை. Jul 21, 2021 ஆர்.தசரதன் சினிமா பிரிமாஸ் மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கம். Jun 19, 2021 ஆர்.தசரதன் Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Recent Posts முன்னாள் அமைச்சர் கோவிட் 19 தொற்றினால் மரணம் ஹன்னா இயோ கடமையுள்ள ஒரு எம்பி சிறார்களுக்கான ஓட்டப் பந்தய போட்டியில் 229 மாணவர்கள் பங்கேற்பு ஒரு மிதமான மலேசியா,நான் தொடர்ந்து செலண்டாங் அணிவேன். கந்தசாமி ஆலயத்திற்கு வெ 1000 நன்கொடை Recent Comments ஜே. எம். புருசோத்தமன் on இந்துக்களின் ஆலயங்களுக்கும் இந்திய மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக விளங்கும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் சேவை போற்றத்தக்கது Purushotham on கல்வித் துறையில் இனப்பாகுபாடு மோசமடைந்து வருகிறது JM Purushotham on அந்நிய தொழிலாளர்களை கொண்டு வருவதை தடை செய்க JM Purushothaman on பிணை தொகையைச் செலுத்தியும் இரவு முழுவதும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார் தனித்து வாழும் தாய்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய காணொளி ஒன்றின் மூலம் தோன்றியுள்ள இஸ்லாமிய தேசம் எனப்படும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்- பக்டாடி, சிரியாவின் கடைசிக் கோட்டையை இழந்ததற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே சிறிலங்காவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளார். நேற்று ஐஎஸ் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அந்தக் காணொளியில், ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்- பக்டாடி, தனது மூன்று முக்கிய தலைவர்களுடன் பேசுகின்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. சிரியாவின் ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரமான பக்கூஸ் கடந்த மாதம், சிரியப் படைகளிடம் வீழ்ச்சியடைந்திருந்தது. இதுகுறித்து இந்தக் காணொளியில் பேசியுள்ள, ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்- பக்டாடி, ”பக்கூஸ் நகரத்துக்கான சமர் முடிந்து விட்டது, ஜிகாத் செய்யும்படி கடவுள் கட்டளையிட்டுள்ளார். வெற்றி பெறுமாறு அவர் கட்டளையிடவில்லை. பக்கூஸ் நகரத்திலுள்ள எமது சகோதரர்களுக்கு பழிவாங்கும் வகையிலேயே சிறிலங்காவில் தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்லாமிய அரசின் பதிலடியின் சிறிய பகுதி தான் இது” என்றும் அவர் கூறியுள்ளார். ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்- பக்டாடி, கடைசியாக ஈராக்கின் மொசூல் நகரில் 2014ஆம் ஆண்டு பொதுவெளியில் காணப்பட்டிருந்தார். அதற்குப் பின்னர், 47 வயதான அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டார். 5 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் காணொளி மூலம் மீண்டும் தோன்றி சிறிலங்கா தாக்குதல்களுக்கு உரிமை கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள்? அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை? ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும் புது கட்டளை விதியை இணை மற்றும் அல்லது அல்ல Limit results to: சேமகம்? OISE Library Thomas Fisher Rare Book Library, University of Toronto Trinity College Archives University of St Michael's College Archives University of St. Michael's College, John M. Kelly Library, Special Collections University of Toronto Archives and Records Management Services University of Toronto Media Commons Archives University of Toronto Mississauga Library, Archives & Special Collections University of Toronto Music Library University of Toronto Scarborough Library, Archives & Special Collections Victoria University Archives Victoria University Library - Special Collections உயர்மட்ட விவரணம் முடிவுகளை [இதன்] படி வடிகட்டுக: விவரிப்பு மட்டம் சேர்வு Collection File Fonds உருப்படி Manuscript Collection Series Sous-fonds Subseries Digital object available ஆம் இல்லை உதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது உயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும் திகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக ஆரம்பம் முடிவு மேற்படிவான துல்லியமான Use these options to specify how the date range returns results. "Exact" means that the start and end dates of descriptions returned must fall entirely within the date range entered. "Overlapping" means that any description whose start or end dates touch or overlap the target date range will be returned. அச்சு முன்காட்சி View: ஆல் வகைப்படுத்துக: ஆரம்பத் திகதி திகதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது தலைப்பு பொருத்தம்/இயைபு? அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி முடிவு திகதி திசை/ நோக்கம்/ ஏவுரை?: ஏறுமுகமான/ ஏறுநிரை? இறங்குமுகமான Alexander Neil Bethune Collection நகல்நினைவி இணை CA OTTCA F2022 Collection 1835 - 1866 The collection consists primarily of correspondence between John Strachan and Bethune. Also included are published inserts, memoranda, sermons and copies of letters.
பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள் Enter your email address: Serch Statistics Online Users Site Friend இணைப்பு கொடுக்க Code : <a target="_blank" href='http://itamilworld.com'> <img src='http://itamilworld.com/banner/itamilsmal.gif' width="190" ></a> இணையத் தமிழ் உலகம் - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும். <a target="_blank" href='http://linotechinfo.com'> <img src='http://www.linotechinfo.com/images/icon.png' alt='linotechinfo.com' ></a> LinoTechinfo - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும். <a target="_blank" href='http://linotech.info'> <img src='//linoj.do.am/200x54.png' alt='linotech.info' ></a> LinoTech.info - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.
Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript! Monday, December 6, 2021 Home ஆன்மிகம் சுய முன்னேற்றம் ஆலய தரிசனம் நீதிக்கதைகள் பக்திக் கதைகள் உடல் நலம் உழவாரப்பணி மன வளம் மகா பெரியவா மாமனிதர்கள் பிரார்த்தனை கிளப் ரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு முக்கிய நிகழ்ச்சிகள் About me… Donate us Search for: Please specify the group Home > Featured > தீதும் நன்றும் பிறர் தர வாரா! Rightmantra Prayer Club தீதும் நன்றும் பிறர் தர வாரா! Rightmantra Prayer Club Right Mantra Sundar September 9, 2016 September 12, 2016 Featured, பிரார்த்தனை 3 print சென்ற பிரார்த்தனை கிளப்பில் கோரிக்கை சமர்பித்த அனைவருக்காகவும் பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவிலுக்கு நேரில் சென்று அர்ச்சனை செய்தோம். தொடர்ந்து மறுநாள் திருநாவலூர் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் சென்றோம். அங்கும் சுவாமி சன்னதியில் பிரார்த்தனையை வைத்து அனைவருக்காகவும் அர்ச்சனை செய்தோம். இரண்டு ஆலயங்களிலும் உண்மையில் அப்படி ஒரு அற்புதமான தரிசனம். எனவே கோரிக்கைகள் நிறைவேறினால் சோளீஸ்வரருக்கு மட்டும் அல்ல, திருநாவலூர் பக்தஜனேஸ்வரருக்கும், திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரருக்கும் கூட உங்கள் நன்றியை தெரிவிக்கவேண்டும். சென்ற வார பிரார்த்தனைப் பதிவை பார்த்துவிட்டு மேலும் பல வாசகர்கள் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்காக கோரிக்கையும் பிரார்த்தனைகளும் அனுப்பியிருந்தனர். எனவே அவர்கள் பெயரையும் கோரிக்கைகளையும் தனியாக ஒரு பதிவில் வெளியிட விரும்பி இந்த பதிவை அளிக்கிறோம். இவர்களுக்கும் சரி முந்தைய பிரார்த்தனை பதிவில் (நரம்பு தொடர்பான பிரச்சனைகள்) கோரிக்கை அனுப்பியிருக்கும் அன்பர்களுக்கும் சரி அனைவருக்கும் இந்த வார இறுதியில் நாம் மேற்கொள்ளவிருக்கும் திருச்சி பயணத்தின்போது செல்லகூடிய அனைத்து ஆலயங்களிலும் பிரார்த்தனையும் அர்ச்சனையும் செய்யப்படும். நாம் கேட்டுகொள்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான். பிரார்த்தனை சமர்பித்ததோடு உங்கள் வேலை முடிந்தது என்று நினைக்காமல் இந்த வாராந்திர கூட்டுப் பிரார்த்தனையில் தொடர்ந்து பங்கேற்று அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்து வாருங்கள். அப்புறம் பாருங்கள்…! இந்த பிரார்த்தனை இரண்டு வாரங்களுக்கு இருக்கும். அடுத்த பிரார்த்தனைப் பதிவு 23/09/2016 வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்படும். இன்றைய பிரார்த்தனைப் பதிவில் பகவான் ரமணர் தொடர்புடைய மூன்று அற்புதங்களை பார்ப்போம். குருவைப் பற்றி படிப்பதே பாப விமோசனம் தான். பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்… ஒரு முறை ராமசாமிப்பிள்ளை தென்னை மரங்களில் இருந்து இரும்பு துரட்டி போட்டு காய்களைப் பறித்துக் கொண்டிருந்தார். பகவான் மலைக்கு செல்வதற்கு கிளம்பியவர் நின்று அதைப் பார்த்துவிட்டு, ”மூங்கில் குச்சியை கட்டி இரும்பு துரட்டிக்கு பதிலா போடப்படாதா! மரத்தைக் காயப்படுத்தறது பாரு இரும்பு துரட்டி! பாவமய்யா நீங்க கேக்காமயே அது இளநீர் தர்றது, அதப்போய் இப்படியா பண்றது!” என்று கூறினார். ஆனால் ராமசாமிப்பிள்ளை, ‘பகவானுக்கு ஆத்மீக விஷயம் தான் நல்லா தெரியும். இதெல்லாம் அவருக்கு அவ்வளவா தெரியாது. மூங்கில் கட்டி துரட்டி போட்டா மூங்கில் ஒடஞ்சுரும். நிறைய காய் பறிக்க வேண்டியதிருக்கு. இரும்பு துரட்டி தான் நடைமுறைக்கு சரி’ என்ற எண்ணம் கொண்டவராய் இரும்புத் துரட்டியாலேயே காய்களைப் பறிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்தார். பகவான் மலைக்குச் சென்று விட்டு, சிறிது நேரம் கழித்து திரும்பிய போதும் ராமசாமிப்பிள்ளை பறித்துக் கொண்டிருந்தார். பகவான் அருகில் வந்தபோது ஒரு காய் நேராக ராமசாமிப் பிள்ளையின் மூக்கில் விழுந்து ரத்தம் கொட்டியது. பகவான், ”நான் சொன்னதை கேக்கலை. இப்போ தெரியறதா? நாம செய்ற பாவம் நமக்கு திரும்ப வரும்னு புரியறதா?” என்றார். (*மகா பெரியவாளும் இதையேத் தான் வலியுறுத்துவார். வில்வ தளங்களை பறிக்கும்போது ஒவ்வொன்றாக மரத்திற்கு நோகாமல் பறிக்கவேண்டும் என்பார். ஞானிகளை பொறுத்தவரை ஒரே சிந்தனை தான்!) **************************** சர்வமும் நானே! பக்தர் ஒருவர் பஞ்சாபில் இருந்து வரவழைக்கப் பெற்ற சயவனப்ராஸ் லேகியத்தை பகவானுக்கு சமர்ப்பித்து அதைத் தினம் சிறிது சாப்பிடும்படி பிரார்த்தித்தார். பகவான் புன்முறுவல் புரிந்தார். அடுத்த நாள் காலை உணவின்போது எல்லோரது இலையிலும் அது சிறிது பரிமாறப்பட்டு ஒரே நாளில் காலி செய்யப்பட்டது. அந்த பக்தர் உணவு முடிந்ததும் பகவானிடம் வந்து, ‘பகவானே! நீங்க சாப்பிடணும்னுதான் கொண்டு வந்தேன். ஒரே நாள்லேயே காலி பண்ணிட்டீங்களே!’ என்றார். ”நான் இந்த ஒரு வாயாலேதான் சாப்பிடறேன்னு நினைக்கிறியா? எல்லா வாயும் பகவானோட வாய்தான்” என்று கூறிப் புன்னகைத்தார். **************************** குரு விபூதி! காவ்ய கண்ட கணபதி முனியின் மனைவி விசாலாட்சிக்கு விபூதி சாப்பிடும் பழக்கம் இருந்தது. நிறைய சாப்பிடுவாள். அவளால் நிறுத்த முடியவில்லை. ஒருமுறை பகவானிடம் தயங்கியவாறே இந்த விபூதி பழக்கத்தை பற்றிக் கூறினாள். இதை எவ்வாறு விடுவது என வினவினாள். பகவான் ”இதை ஏன் முன்னாடியே என்கிட்டே சொல்லல?” என்று சொன்னவர், சிறிது விபூதியை விசாலாட்சிக்கு கொடுத்து ”இதை சாப்பிடு! சரியாயிடும்!” என்றார். அன்றிலிருந்து அவளுக்கு அப்பழக்கம் நீங்கி விட்டது. கருடன் உருவம் கருதும் அளவில் பருவிடம் தீர்ந்து பயம் கெடுமா போல் குருவின் உருவம் குறித்த அப்பொழுதே திரிமலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே! – திருமந்திரம் விளக்கம் : கருடனின் உருவம் எண்ணத்தில் தோன்றிய உடனே பாதுகாப்பான இடத்தை அடைந்து பயத்தை அழிக்கும் அதுபோல் குருவின் உருவத்தை மனதில் நினைக்க மூன்று குற்றங்கள் அழிந்து சிவனாக ஆகலாம். பின்குறிப்பு – நல்ல குருவின் வடிவம் எண்ணங்களை அழித்து சிவனைக் காட்டும். ================================================ நமது பிரார்த்தனை பதிவின் கட்டமைப்பு பிரார்த்தனை பதிவுகள் ஒரு வகையில் THERAPEUTIC MYTH போல. இவற்றை படிப்பதே சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து படிப்பவர்களுக்கு விடுதலை அளிக்கக்கூடும். அந்த வகையில் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவும் கவனமாக தயாரிக்கப்படுகிறது. 1) முதலில் இறைவனின் பெருமையை கூறும் கதை அல்லது புராணச் சம்பவம். 2) கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கு ஏற்ப, ஒரு கோவிலின் கோபுரத்தின் படம். 3) நம் திருமுறையிலிருந்து ஒரு பாடல்! 4) அடுத்து பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் அருளாளரைப் பற்றிய குறிப்பு. 5) அதற்கு அடுத்து சமர்பிக்கப்படும் பிரார்த்தனைகள். 6) அதற்கு பிறகு, பொதுப் பிரார்த்தனை. நமது கூட்டுப் பிரார்த்தனையை வலிமையுள்ளதாக ஆக்கும் அம்சங்களில் இது முக்கியமான ஒன்று. காரணம், நமது பிரச்னைகளுக்காக மட்டுமல்லாது பொதுப் பிரச்சனைகள் மற்றும் தேசத்தின் நலன் குறித்தும் பிரார்த்தனை செய்வதால் கூட்டுப் பிரார்த்தனைக்கு உண்மையான அர்த்தம் கிடைத்துவிடும். 7) அதற்கு பிறகு CONFESSION. இதுவரை நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு, இனி அதை செய்யாதிருக்கும் வண்ணம் இறைவனின் திருவருளை வேண்டுவது. ஆக, இத்தனை மகத்துவமான விஷயங்களை ஒருவர் படித்தாலே அவருக்கு பாதிப் பிரச்சனைகள் தீர்ந்தது போல. மேற்கூறிய பிரார்த்தனையை சமர்பித்துள்ள வாசகர்கள் தவிர, பிறர் இதை படிக்கும்போதும் அவர்கள் பிரார்த்தனை செய்யும்போதும் அவர்களுக்கும் நன்மை விளையும் என்று சொல்லவேண்டுமா என்ன? நீங்களும் இந்த பிரார்த்தனையில் பங்கேற்று, உங்கள் சுற்றம் மற்றும் நட்பு வட்டங்களிலும் இதை கொண்டு சென்று அரிய சிவதொண்டில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். ========================================================== ஒரு முக்கியமான விஷயம்! பிரார்த்தனை கோரிக்கை அனுப்பும் வாசகர்கள் அவசியம் தங்கள் கோரிக்கையை ஓரிரு வரிகளில் அனுப்பாமல் சற்று விரிவாக அனுப்பவும். அவசியம் பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் இவற்றை குறிப்பிடவும். (ராசி, நட்சத்திர விபரங்கள் தளத்தில் பிரசுரிக்கப்படமாட்டாது. கோவிலில் அர்ச்சனை செய்யவே இந்த விபரங்கள் கேட்கப்படுகிறது!) கோரிக்கை குறித்த சந்தேகங்கள் எழும்போது பதிவை தயாரிக்க சிரமமாக உள்ளது. எனவே அலைபேசி எண்ணை அவசியம் குறிப்படவேண்டும். அலைபேசி எண் இன்றி வரும் எந்த பிரார்த்தனை கோரிக்கையும் / மின்னஞ்சலும் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. நன்றி! – ‘ரைட்மந்த்ரா’ சுந்தர், ஆசிரியர், Rightmantra.com M : 9840169215 | E : editor@rightmantra.com ========================================================== நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று பிரார்த்தனை நிறைவேறிய சம்பவங்களுக்கு… முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்! ‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்! ========================================================== இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவில் அர்ச்சகர் திரு.ராஜா குருக்கள் அவர்கள். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேல் சோளீஸ்வரருக்கு தொண்டு செய்து வரும் திரு.ராஜா குருக்கள் சோளீஸ்வரரின் சக்தி பற்றி சிலாகித்து பேசுகிறார். இவரது குடும்பமே வைதேகத்தில் தோய்ந்த ஒரு குடும்பம் தான். சோளீஸ்வரர் தனக்கு எந்தக் குறையும் வைக்காமல் நன்றாக பார்த்துக்கொள்வதாகவும் இவருக்கு பூஜை செய்ய ஆரம்பித்த முதல் வாழ்க்கைத் தரம் உயர்ந்து தற்போது எந்தக் குறையுமில்லாமல் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார். இவருக்கு திருமணமாகி சோளீஸ்வரர் அருளால் குழந்தை உண்டு. ஜூன் மாத மத்தியில் சோளீஸ்வரரை தரிசிக்க சென்றபோது இவரை சந்தித்து பேசி நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்காக நமது வாசகர்கள் நலன் வேண்டி அளிக்கும் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம். நிச்சயம் செய்வதாக சொல்லியிருந்தார். ஏற்கனவே முதலில் வெளியிடப்பட்ட பிரார்த்தனை விபரங்களை அவரிடம் அளித்து அவரும் சோளீஸ்வரர் திருப்பாதத்தில் வைத்தார். அனைவருக்கும் அர்ச்சனையும் செய்தார். கூடுதலாக சமர்பித்துள்ள வாசகர்களின் விபரங்களை எடுத்துக்கொண்டு நாளை (10/09/2016) மீண்டும் பேரம்பாக்கம் செல்லவிருக்கிறோம். இதற்கிடையே வாசகர்கள் நேரில் சென்று ஒரு முறை சோளீஸ்வரரை தரிசித்து தங்கள் நன்றியை தெரிவிக்கவேண்டும். திங்கட்கிழமை விஷேஷம். ஆனால், அன்றைக்கு ராஜா குருக்கள் பரபரப்பாக இருப்பார். சாதாரண நாளன்று சென்று தரிசித்துவிட்டு விபரங்களை கேட்டுக்கொண்டு, அதற்கு பிறகு ஒரு முறை போய்வாருங்கள். நீங்கள் நேரில் போகமுடியாவிட்டாலும் வருந்தவேண்டாம். ஏனெனில் பிரார்த்தனை நடைபெறுவதே நேரில் செல்ல இயலாதவர்களுக்காகத் தானே? ஆனால் பிரார்த்தனை நிறைவேறும் பட்சத்தில் நேரில் சென்று சோளீஸ்வரரை தரிசித்து விட்டு வாருங்கள். சிவாய நம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருகாலும் இல்லை! இது தொடர்பான ஆலய தரிசன பதிவுக்கு : சித்தர்கள் பாடிய, நரம்பு கோளாறுகளை நீக்கும், பேரம்பாக்கம் சோளீஸ்வரர்! ========================================================== இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருப்பவர்கள் பற்றிய சிறு அறிமுகம்: இந்த வாரம் பிரார்த்தனை சமர்பித்திருக்கும் கோரிக்கையாளர்கள் பலர் புதியவர்கள். பிரார்த்தனைகள் ஆங்கிலத்தில் இருந்தாலும் உங்களுக்கு புரியும் என்று நம்புகிறோம். நரம்பு தொடர்பான பிரார்த்தனை என்பதால் தங்கள் அன்புக்குரியவர்களின் நலன் வேண்டி பலர் பிரார்த்தனை அனுப்பியிருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை. சிலர் படும் துன்பத்தை பார்த்தால் “உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு” என்கிற கவரியரசரின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வரும். இறைவன் இவர்களுக்கு ஆரோக்கியத்தையும் மனநிம்மதியையும் மகிழ்ச்சியையும் தரட்டும். நிச்சயம் தருவான். இங்கே பிரார்த்தனை சமர்பித்துள்ள பிரார்த்தனையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் பிரார்த்தனை இடம் பெற்ற இந்த பிரார்த்தனையோடு நிறுத்திவிடாமல் ஒவ்வொரு வாரமும் நீங்கள் இந்த கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்று ஒரு பத்து நிமிடம் (பிரதி ஞாயிறு 5.30 PM – 6.௦௦ PM வரை உங்களுக்கு எந்த பத்து நிமிடம் சௌகரியமோ அந்தப் பத்து நிமிடம்) மற்றவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்து வரவேண்டும். உங்கள கோரிக்கைகள் தானே நிறைவேறும். பொதுப் பிரார்த்தனை… உள்ளம் உருக்கும் ஒன்று. அந்த சிறுமிக்காக நாம் அவசியம் பிரார்த்திக்கவேண்டும். ========================================================== இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா? 1) Wife to become alright and debts to be cleared! Dear Sir, I request you to do prayer for my wife Lavanniya, she has arthritis problem for last 5 years, I have tried various medicines to cure, but no use so far, because of this I have huge debts, borrowed for interest, suffering with lot of problems in home because of health issues and debts Kindly do pray for my family health and to clear my debts. Thanks & Regards K. Vishwanath Bharathi 2) Son shows improvement and my friend should be happy! Dear Sir, I wish to tell you that my son seems a little better for the past two days. He is cheerful and not complaining of the headache his head hitting because of the pain in his head has reduced considerably. I too feel as if a big weight has been lifted off my shoulders. I told my family about this. In fact I had totally forgotten about my letter to you and the prayers you were doing on my behalf. I also totally forgot to pray with the group on Sunday. Suddenly today it occurred to me that my son is better because you had organized prayers on his behalf. I request you to please continue your prayers for him so that he is free of the pain. No news regarding any alliance for my daughter. Please pray that her marriage should be fixed soon to a good person from a good family. Thank you . I will continue to report the progress. I have a friend and his wife who are having severe problems in their marriage. Please also pray for them. They do not believe in all this so I do not want to tell them. However, I would like u to pray for them. Regards, Maithreyi, Vadapalani 3) மகன் நலம் பெறவேண்டும்! நன்றாக நடக்கவேண்டும்!! எனது மகன் ஆர்.நாராயணன் (வயது 28) கடந்த 19.05.2015 இரவு மதுரையில் எங்களது குடும்பம் வசித்துவந்த நிலையில் நடைபெற்ற நிகழ்வினால் தலையில் அடிப்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டு, மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஓரளவு உடல் நிலை முன்னேற்றம்கண்டு மருத்துமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு இடது முழங்கால் மற்றும் இடுப்பின் இரு புறங்களிலும் (hetrotropic ossification) எனும் தசை இறுகி எலும்பாக மாறி அசைவுகளுக்கு இடையூறாக இருந்ததை தொடர்ந்து வேலூரில் உள்ள C.M.C. மருத்துவமனையில் கடந்த 09.09.2015 முதல் சிகிச்சை பெற்று அறுவைசிகிச்சை மேற்கொண்டு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார். மேலும், ஒரு அறுவை சிகிச்சையும் செய்யபட வேண்டியுள்ளது. தற்சமயம் அவர் C.M.C. மருத்துமனையை சார்ந்த மறுவாழ்வு மையத்தில் (Rehabilitation Insitute) Phsyiotheraphy முதலான சிகிச்சைகள் பெற்று வருகிறார். அவர் முழுமையாக நலம் பெற வேண்டி பிரார்த்திக்க வேண்டுகிறேன். இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள கரு. இராமகிருஷ்ணன், வேலூர் 4) மனைவி நலம் பெறவேண்டும் ! என் மனைவி சுஜாதா (45) அவர்களுக்கு கால் மூட்டில் பிரச்னை ஏற்பட்டு நடப்பதில் சிரமம் உள்ளது. அவர் ஏற்கனவே ஒரு கால் போலியோவால் பாதிக்கப்பட்டவர். தற்போது நெல்லை அருகே ஒரு ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சேர்த்து தினசரி ட்ரீட்மென்ட் கொடுத்து வருகிறோம். கொஞ்சம் கொஞ்சமாக தேறிவருகிறார். ஒரு பக்கம் மருத்துவமனை அலைச்சல், மறுப்பக்கம் செலவு என நான் சொல்லொண்ணா மன வேதனையில் இருக்கிறேன். அவர் முற்றிலும் நலம் பெற்று, பரிபூரண குணமடைந்து முன்னைப் போல தன் பணிகளை தானே செய்யவேண்டும். எந்தவித துன்பமும் இல்லாமல் குடும்பப் பணிகளை கவனிக்கவேண்டும். நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். – எஹ்.எஸ்.ஐயர், நெல்லை 5) குடும்பத்தில் அனைவருக்கும் நரம்பு பிரச்சனை தீரவேண்டும்! என் வீட்டில் எனக்கு, என் கணவருக்கு (கால் நரம்பு COMPRESSION), மகனுக்கு என அனைவருக்கும் நரம்பு தொடர்பான பிரச்சனைகள் உள்ளன. எனக்கு கால்களில் வெரிகோஸ் வெயின்ஸ் எனப்படும் பாதிப்பு உள்ளது. இதனால் அனைவரும் ஒருவித இறுக்கத்தில் இருக்கிறோம். இறைவனே எங்களுக்கு உற்ற துணை. எங்களுக்கு ஏற்பட்டுள்ள நரம்பு தொடர்பான பாதிப்புக்கள் அனைத்தும் நீங்கி, ஆரோக்கியமாக சந்தோஷமாக நாங்கள் வாழவேண்டும். எங்கள் அனைவரின் பெயர், ராசி, நட்சத்திர, விபரங்களை தனியாக அனுப்பியிருக்கிறேன். – சுபா பாஸ்கர், வில்லிவாக்கம் 6) Suffering from neuropathetic pain! Dear Sundar and RM friends and visitors, I have neuropathic pain with the symptoms such as numbness under the right rib cage, stomach cramps and severe pain in the back and left foot. Doctors are saying that it is a neuropathic pain and prescribed few tablets. I have these symptoms for the past 10 months and no medicines cured the illness. I am not able to concentrate on my regular activities and office work due to the pain and the numbness. I fully believe in our Gurus and the almighty. They will have to cure and relieve me from the aforesaid illness. Request you to include my name as well in Rightmantra prayer club and pray to Soleewarar. Thank You. Regards, Venkat Subramaniam KS, Mugalivakkam 7) My child should get cured from brain nerve problems! Dear Sir, I request you to do prayer for our child Hari Pranav who has fits (seizure disorder) problem which was diagnosed just a month ago because of excess brain current spike at times and currently under medication and advised for two long years medicines to cure. Afraid it might impact his mental growth which is crucial for 2 yr old baby where 90 percentage of growth depends on brain nerves development. Kindly do pray for all kids who cannot express the pain or discomfort they undergo and helpless parents who are longing for god’s miracle to cure. Thanks & Regards, K. Sundareswaran Chennai. * தாங்கள் கோரிக்கை அனுப்பி அது இன்னும் நம் மன்றத்தில் வெளியாகவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வாசக அன்பர்கள் மீண்டும் அந்த கோரிக்கையை – அதே மின்னஞ்சலை – அனுப்பவும். அல்லது நம்மை தொடர்புகொள்ளவும். நன்றி. ** அலைபேசி எண் இன்றி வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது. ========================================================== பொதுப் பிரார்த்தனை! இரு மாநிலங்களுக்கிடையே நிலவும் பதட்டம் தணிந்து அமைதி ஏற்படவேண்டும்! காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் கடும் பதட்டம் நிலவி வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று கர்நாடக அரசு நீரை திறந்துவிட்டிருக்கும் நிலையில், அதை அங்கிருக்கும் சிலர் அரசியல் செய்ய முனைகின்றனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் விதமாக பந்த், மறியல், என பலவற்றை அறிவித்து மக்களை அவதிக்குள்ளாக்குகின்றனர். வன்முறை சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்கின்றன. இதையடுத்து கர்நாடகத்திலும் பெங்களூரில் வசிக்கும் தமிழர்கள் சற்று அச்சத்தோடு உள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் மக்களிடையே பிராந்திய மற்றும் இன ரீதியிலான உணர்வுகளை சிலர் தூண்டிவருகின்றனர். தமிழக அரசு இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் மூலமாக எடுத்து வரும் நிலையில் நாம் அனைவரும் அமைதியாக இருப்பதே நலம். எரியும் தீயில் எண்ணை ஊற்றும்விதமான எந்த செயலையும் செய்யக்கூடாது. இதனால் ஒரு போதும் பிரச்னை தீராது. மேலும் மேலும் சிக்கலாகிக் கொண்டு தான் போகும். நீருக்காக அண்டை மாநிலங்களை எதிர்பாத்துக்கொண்டிருக்காமல் தமிழக அரசு நமது நீராதாரங்களை வலுப்படுத்தி பல தடுப்பணைகளை ஆற்றின் குறுக்கே கட்டவேண்டும். டிசம்பரில் பெய்த பெருமைழை நீர் அனைத்தும் வீணே கடலில் கலந்துவிட்டது குறிப்பிடத்தக்கது! இந்நிலையில் நாம் செய்யக்கூடியது சில உண்டு… * நம் வீட்டில் மழை நீர் சேகரிப்பு முறையை சரியாக பராமரிக்கலாம். * பிளாஸ்டிக் கவர்களை பிளாஸ்டிக் குப்பைகளை சாக்கடை மற்றும் நீர்வழித் தடங்களில் கொட்டாமல் இருக்கலாம். * வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்கலாம். * ஏரி, குளம் இவற்றை ஆக்கிரமிப்பு செய்து போடப்படும் லே-அவுட்களில் மனை வாங்குவதோ வீடு கட்டுவதோ தவிர்க்கலாம். * தஞ்சை மற்றும் டெல்டா விவசாயி யாரேனும் ஒருவரை ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்து (கூட்டாகவோ நண்பர்களுடன் சேர்ந்தோ) அவர் வாழ்வாதாரத்துக்கு தேவையான உதவிகளை செய்யலாம். * காவிரி போன்ற நதிநீர் பிரச்சனைகளின் போது பிராந்திய உணர்வுகளை தூண்டிவிடாமல் தத்தங்கள் வேலையை பார்த்தபடி இருக்கலாம். (தூண்டிவிடுவதால் பிரச்னை தான் பெரிதாகுமே தவிர ஒரு சொட்டு நீரும் வாங்க முடியாது!) \ இரு மாநிலங்களுக்கு இடையேயும் ஏற்பட்டுள்ள பதட்டம் தணிந்து சகோதரத்துவம் மேலோங்கவும், நாமெல்லாம் இந்தியர் ஒருவரையொருவர் அரவணைத்து செல்லவேண்டும் என்கிற உணர்வு மேலோங்கவும், நம் விவசாயிகளின் பிரச்சனை தீரவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம். இதுவே இந்த வார பொது பிரார்த்தனை! ========================================================== நரம்பு மற்றும் எலும்பு மற்றும் இதர உடற்பிணி தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இங்கு பிரார்த்தனை சமர்பித்திருப்பவர்கள் அனைவருக்காகவும் இறைவனை வேண்டுவோம். காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகம் மாநிலங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள பதட்டம் தணிந்து அமைதி ஏற்படவேண்டும். நமக்கு நியாயமாக வரவேண்டிய நீர் எந்த தடையுமில்லாமல் வரவேண்டும். இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.ராஜா குருக்கள் அவர்களின் தொண்டு சிறக்கவும் அவரும் அவர் குடும்பத்தாரும் எல்லா வளமும் நலனும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம். கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம். நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!! பிரார்த்தனை நாள் : செப்டம்பர் 11 & 18, 2016 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 6.00 pm இடம் : அவரவர் இருப்பிடங்கள் ========================================================== ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை…. Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally. Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056. IFSC Code : UTIB0001182 ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here! Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215 | E-mail : editor@rightmantra.com ========================================================== பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு: உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று. ========================================================== பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும். அதே போன்று முடிக்கும்போது ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும். (பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.) ========================================================== உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற… உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை! உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும். E : editor@rightmantra.com | M : 9840169215 | W:www.rightmantra.com ========================================================== பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131 ========================================================== சென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : வயலூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் பிரதான அர்ச்சகர்களுள் ஒருவரான திரு.கார்த்திகேயன் குருக்கள் அவர்கள். சென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது? சென்ற பிரார்த்தனைக்கு தலைமை ஏற்ற, திரு.கார்த்திகேயன் குருக்கள். மிகச் சிறப்பான முறையில் பிரார்த்தனையாளர்களின் பெயர்களில் வயலூர் அக்நீஸ்வரருக்கும் ஆதினாயகிக்கும் அர்ச்சனை செய்து அம்பாள் திரிசதி ஓதி பிரார்த்தனை செய்தார். அதற்கு அடுத்த வாரம் வயலூர் முருகனுக்கும் பொய்யா கணபதிக்கும் அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தார். இது பற்றி முகநூளில் கூட பதிவளித்திருந்தார் திரு.கார்த்திகேயன் குருக்கள். அவருடைய சிரத்தைக்கு மிக்க நன்றி. சென்ற வாரம் பிரார்த்தனை பதிவு அளிக்கப்படவில்லை. அதே பிரார்த்தனையை ரிப்பீட் செய்யுமாறு கேட்டுக்கொண்டோம். மூன்றாவது வாரமும் சிரத்தை எடுத்து அனைவருக்கும் பிரார்த்தனை செய்து உதவினார். அவருடைய முகநூல் செய்தி : ஸ்ரீ ஆதிநாயகிபதியின் அருளால் கூட்டு ப்ரார்த்தணை நடந்தது. ஆதி நாயகன் ஆதிரை நாயகனின் அருள் பெறுபவர்களாகிய அண்ணா ப்ருஹ்மஸ்ரீ Rightmantra Sundar அவர்களும் பாரத தேச வாசிகளும் எல்லா வளமும் பெற்று வாழ பரார்த்த பூஜையில் ப்ரதோஷ புண்ய வேளையில் ப்ரார்த்தித்து கொண்டோம். மேலும் இவரின் அத்யத்புதமாந சேவை சிறக்கவும் வேண்டினோம்.நல்லார் ஒருவரிருக்க அவரால் எல்லோரும் மழை பெறுவர். இன்று பலர் ஸ்ரீ அக்நீஸ்வர ஸ்வாமியின் அருள் மழை பெற்றோம். சந்தோஷகரம் ஏது பிழை செய்தாலும் தீது புரியாதெய்வத்தின் அருளால் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஓம் முருகா வயலூர் முருகா ========================================================== [END] Share on Facebook Share Share on TwitterTweet Share on Google Plus Share Share on Pinterest Share Share on LinkedIn Share Share on Digg Share Post navigation திருவிடைமருதூரில் உ.வே.சா அவர்கள் கொடுத்த வரம்! யாருக்கு, ஏன்? நேர்மைக்கு ஒரு விலை! Right Mantra Sundar http://www.rightmantra.com Related Articles அகத்தியர் தேவாரத் திரட்டு! ஒரு பென்சில் போல நம்மால் இருக்க முடியுமா? – Monday Morning Spl 18 “என் தேசம் விடுதலை பெற்று பலனை யார் அனுபவிக்கிறார்கள்?” MUST READ 3 thoughts on “தீதும் நன்றும் பிறர் தர வாரா! Rightmantra Prayer Club” nagarajan ekambaram says: September 10, 2016 at 12:55 ஜி, மேலே எழுதியிருக்கும் திருமந்திரத்திற்கு பொருள் எழுதினால் நன்றாக இருக்கும். அன்பன் நாகராஜன் ஏகாம்பரம் Reply Right Mantra Sundar says: September 12, 2016 at 11:32 கருடனின் உருவம் எண்ணத்தில் தோன்றிய உடனே பாதுகாப்பான இடத்தை அடைந்து பயத்தை அழிக்கும் அதுபோல் குருவின் உருவத்தை மனதில் நினைக்க மூன்று குற்றங்கள் அழிந்து சிவனாக ஆகலாம். பின்குறிப்பு – நல்ல குருவின் வடிவம் எண்ணங்களை அழித்து சிவனைக் காட்டும்.
அமைச்சர் தங்கமணி Archives - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com Skip to content Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com Tamil No 1 Digital News Platform. providing All kinds of news in Tamil Corona Update தேர்தல் செய்திகள் அரசியல் சினிமா செய்திகள் விளையாட்டு செய்திகள் வணிகம் உலக செய்திகள் அமைச்சர் தங்கமணி பொது மின்சார வாரியம் தனியார் மயமாகாது – அமைச்சர் தங்கமணி December 21, 2020 December 21, 2020 Meera Krishnamurthy 204 Views 0 Comments Tamil Flash News, TNEB, அமைச்சர் தங்கமணி, மின்சார வாரியம் Read more பொது தமிழக மின்வாரியம் எந்த சூழ்நிலையிலும் தனியார் மயமாகாது..!! December 17, 2020 December 17, 2020 Meera Krishnamurthy 191 Views 0 Comments Tamil Flash News, TNEB, அமைச்சர் தங்கமணி, தமிழக மின்வாரியம் தனியார் மயமாகாது Read more அரசியல் புயலை விட வேகமாக தமிழக அரசு செயல்பட்டது – அமைச்சர் தங்கமணி November 27, 2020 November 27, 2020 Meera Krishnamurthy 173 Views 0 Comments Cyclone Nivar, Tamil Flash News, அமைச்சர் தங்கமணி, நிவர் புயல் Read more முக்கியச் செய்திகள் கடலூர், விழுப்புரத்தில் இரவு 8 மணிக்குள் மின்விநியோகம் வழங்கப்படும் – மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி November 26, 2020 November 26, 2020 Meera Krishnamurthy 191 Views 0 Comments Tamil Breaking News, அமைச்சர் தங்கமணி, இரவு 8 மணிக்குள் மின்விநியோகம், கடலூர், நிவர் புயல் முன்னெச்சரிக்கை Read more சென்னை முக்கியச் செய்திகள் சென்னையில் மழைநீர் வடிய வடிய படிப்படியாக மின் இணைப்பு வழங்கப்படும்..!! November 26, 2020 November 26, 2020 Meera Krishnamurthy 196 Views 0 Comments Tamil Breaking News, அமைச்சர் தங்கமணி, சென்னையில் மழைநீர், மின் இணைப்பு Read more முக்கியச் செய்திகள் வானிலை புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும் – அமைச்சர் தங்கமணி November 23, 2020 November 23, 2020 Meera Krishnamurthy 244 Views 0 Comments Tamil Flash News, அமைச்சர் தங்கமணி, நிவா் புயல் Read more அரசியல் விவசாயம் விவசாயிகளுக்கு எந்த சூழலிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் வேளாண் திட்டங்கள் செயல்படுத்தப்படும் – அமைச்சர் தங்கமணி September 20, 2020 September 20, 2020 Anitha S 218 Views 0 Comments Minister Thangamani, அமைச்சர் தங்கமணி, மத்திய அரசு, வேளாண் மசோதாக்கள்
கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1561 ஆக உயர்வு - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News Home உள்ளூர் உலகம் விளையாட்டு வணிகம் சினிமா editors-pick Local-News கொரோனா வைரஸ் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1561 ஆக உயர்வு May 30, 2020 Read இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1561 ஆக அதிகரித்துள்ளது. இன்று (30) இதுவரையான காலப்பகுதியில் 03 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் 27 பேர் இன்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் இதுவரை 781 பேர் பூரண குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1561 ஆக உயர்வு Reviewed by EDITOR on May 30, 2020 Rating: 5
ரோஜா இதழ்களை சுத்தம் செய்து , எத்தனை அளவு எடுத்திருக்கிறீர்களோ அதைவிட இருமடங்கு கற்கண்டையும் மிக்சியில் போட்டு நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். (தண்ணீர் ஊற்றக் கூடாது) ஜாம் போல் ஆகும் வரை அடிக்க வேண்டும். பின்னர் அதனை கண்ணாடி ஜாரில் போட்டு மூடி வைத்தபின் 4 நாட்கள் வெயிலில் வையுங்கள். அதன் பின் அதில் தேன் 300 கிராம் , ஏலக்காய்ப் பொடி 1ஸ்பூன் எடுத்து ரோஜா கலவையுடன் கலந்து நன்றாக கிளறி வைக்க வேண்டும். இந்தக் கலவையை மீண்டும் மீண்டும் ஒரு வாரத்திற்கு வெய்யிலில் வைத்து எடுத்தால் நீண்ட நாட்களுக்கு நன்றாக கெட்டுப் போகாமல் இருக்கும். இப்போது குல்கந்து சாப்பிடுவதற்கு ரெடி அளவு சிறுவர்கள் 1/2 ஸ்பூன் பெரியவர்கள் 1 ஸ்பூன் அளவு தினமும் காலை மாலை என இருவேளை உணவுக்கு பின் சாப்பிட்டு வரலாம். இப்படி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம் ஆண்மை பெருக்கி: குல்கந்து ஒரு ஆண்மை பெருக்கி. உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணெய் ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. எனவே தான் காதலர்கள் ரோஜாவை காதல் சின்னம் ஆக வைத்திருக்கிறார்கள். அஜீரணக் கோளாறுகளுக்கு : உடலின் அதிக பித்த அளவை குறைத்து சீராக்குகிறது. வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்லது. ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும். அல்சர்களுக்கு மருந்தாகும் மாதவிடாய் கோளாறை போக்கும் : வலியுடன் கூடிய மாதவிடாய் கோளாறுகளை குறைக்கும். கருப்பை தொற்றைப் போக்கும். வெள்ளைப் படுதல் அடிக்கடி உண்டானால் அதனை நிவர்த்தி செய்யும் இதய நோய்களை குணப்படுத்தும் : பொதுவாகவே ரோஜா இதயத்திற்கு நல்லது. எனவே குல்கந்து இதய நோயுள்ளவர்களுக்கு நல்ல இதமான டானிக் - மருந்து. ஒரு மாதத்திற்கு மேல் தொடர்ச்சியாகச் சாப்பிட்டுவர இதயம், கல்லீரல், நுரையீரல், குடல் போன்றவை உறுதியடையும். வியர்வை நாற்றம் போக சிலருக்கு அதிகமாக வியர்க்கும். அவர்களுக்கு இது அருமருந்தாகும். அவர்கள் தினமும் குல்கந்து சாப்பிட்டு வந்தால் வியர்வை நாற்றம், வியர்வையினால் உண்டாகும் விஷ தன்மையை உங்கள் உடலில் இருந்து நீக்கி உங்கள் உடலை குளிர வைக்கிறது. குறிப்பாக இதை வெயில் காலங்களில் அதிகம் சாப்பிடுவது நல்லது வாய்ப்புண் : வாய்ப் புண் மன அழுத்தத்தால் அல்லது குடலில் உண்டாகும் அல்சரால் சிலருக்கு உருவாகும். குல்கந்து உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது வாய் புண் உருவாவதை குறைகிறது, மற்றும் வாய் புண்கள் காரணமாக வாயில் வரும் எரிச்சல் உணர்வு மற்றும் வலி குறைக்க உதவுகிறது. தூக்கமின்மை : தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் தினமும் இரவில் பாலில் 1 ஸ்பூன் குல்கந்து கலந்து குடித்து வந்தால் நிம்மதியான தூக்கம் பெறுவார்கள்.
உள்ளாட்சித் தேர்தல் துளிகள்: காஞ்சிபுரம் உள்ளாவூர் ஊராட்சியில் வாக்குப்பதிவு நிறுத்தம்; ராணிப்பேட்டையில் திமுக - - Metro People Sign in செய்திகள் அரசியல் வணிகம் சினிமா விளையாட்டு டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆட்டோமொபைல் ஆன்மிகம் தொழில்நுட்பம் Sign in Welcome!Log into your account your username your password Forgot your password? Password recovery Recover your password your email Search Sign in / Join About Contact Sign in Welcome! Log into your account your username your password Forgot your password? Get help Password recovery Recover your password your email A password will be e-mailed to you. Metro People செய்திகள் அரசியல் வணிகம் சினிமா விளையாட்டு டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆட்டோமொபைல் ஆன்மிகம் தொழில்நுட்பம் Home உள்ளாட்சித் தேர்தல் துளிகள்: காஞ்சிபுரம் உள்ளாவூர் ஊராட்சியில் வாக்குப்பதிவு நிறுத்தம்; ராணிப்பேட்டையில் திமுக – அதிமுகவினர் வாக்குவாதம் உள்ளாட்சித் தேர்தல் துளிகள்: காஞ்சிபுரம் உள்ளாவூர் ஊராட்சியில் வாக்குப்பதிவு நிறுத்தம்; ராணிப்பேட்டையில் திமுக – அதிமுகவினர் வாக்குவாதம் தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று காலை சரியாக 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஒருசில இடங்களில் சில பிரச்சினைகள் எழுந்தன. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உள்ளாவூர் ஊராட்சியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சீட்டில் ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட வேட்பாளரின் பெயர் லட்சுமி என்பதற்கு பதிலாக தனலட்சுமி என அச்சிடப்பட்டிருந்ததால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. அச்சுப்பிழையால்தான் இந்தக் குளறுபடி ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது. பெயர் தவறாக இருந்தால் தனது வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என வேட்பாளர் கூறினார். அவரது முகவர்களும் அதனையே தெரிவித்தனர். உடனே தேர்தல் நடத்தும் அலுவலர், வாக்குச்சீட்டில் பெயரில் உள்ள தவறு மை கொண்டு அழிக்கப்படும் என்று கூறினார். ஆனால், அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அங்கு வாக்குப்பதிவு தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் ஏமாற்றமடைந்தனர். இதேபோல் ராணிப்பேட்டை அரசுப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், திமுக அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியில் திமுக வேட்பாளர்கள் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டதாகக் கூறி வாக்குவாதம் ஏற்பட்டது. விழுப்புரம் பொன்னங்குப்பம் ஊராட்சியில் மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வாக்களிக்க வரவில்லை. பொன்னங்குப்பம் ஊராட்சியைத் தனியாகப் பிரித்துக் கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தலைவர் பதவியை ஏலம் விட்டதற்குக் கண்டனம் தெரிவித்தும் இதுவரை தங்கள் ஊராட்சியில் எவ்வித அடிப்படைத் தேவைகளுமே இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை எனக் கூறியும் மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதேபோல், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியம் மாதுடையார்குளம் கிராமத்தில் திறக்கப்பட்ட ரேஷன் கடை செயல்பட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை அங்கு ஒரே ஒருவர் மட்டுமே வாக்களித்துள்ளார். நெல்லை மாவட்டம் மேலப்புத்தனேரி வாக்குச்சாவடி அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த 6 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். நெல்லை வாக்குப்பதிவு நிலவரம்: நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 9.75 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. பாப்பாகுடியில் காலை 9 மணி நிலவரப்படி 8% வாக்குப் பதிவாகியுள்ளது. அம்பாசமுத்திரத்தில் காலை 9 மணி நிலவரப்படி 7.7% வாக்குப் பதிவாகியுள்ளது. சேரன்மகாதேவியில் காலை 9 மணி நிலவரப்படி 13 % வாக்குப் பதிவாகியுள்ளது. மாணூரில்ர் காலை 9 மணி நிலவரப்படி 9% வாக்குப் பதிவாகியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் ஊராட்சியில் 12.02%, கடயம் ஊராட்சியில் 10.08%, கீழப்பாவூரில் 10.65%, மேலநீதிநல்லூரில் 11.24%, வாசுதேவநல்லூரில் 9.22% வாக்குகள் பதிவாகியுள்ளன. மாவட்டம் முழுவதும் உள்ள 5 ஊராட்சிகளில் காலை 9 மணி நிலவரப்படி மொத்தம் 10.78% வாக்குப்பதிவாகியுள்ளது. 9 மாவட்டங்களில் தேர்தல்: தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு 2 கட்டங்களாக இன்று அக்.6ஆம் தேதி மற்றும் வரும் 9-ம் தேதிகளில் நடைபெற உள்ளன. மற்றும் இதர 28 மாவட்டங்களில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது. Follow us on Instagram @ Metro People is the fortnightly Magazine Newspaper. It was Started on 2019. Mrs. Sudha Sukumar is the Publisher of Newspaper. Metro People is the best selling general interest English-Tamil news magazine. The magazine covers politics, entertainment, social issues, trends, technology, lifestyle and everything else you should be knowing. Over 20 lakhs Copies Sold per Edition. Mainly its covered like metro cities Chennai, Coimbatore, Trichy, Madurai, Etc..
அந்த இரவில் அவர்கள் வந்து சேர இன்னும் பதினான்கு மணி நேரம் இருந்தும் ஒரு பரபரப்பு ஆரம்பித்திருந்தது. அது பயம் அல்ல, அக்கறை. எல்லாமும் சரியாய் இருக்க வேண்டும் யாருக்கும் எந்த விதமான பாதிப்போ சிக்கலோ இருக்கக் கூடாது எனும் அக்கறை. நேரம் ஆக ஆக அந்த அக்கறை பரபரப்பிலிருந்து பதட்டமாய் மாறிக் கொண்டிருந்தது. தேவையான சில பொருட்கள் மாலை தான் வரும் என்று தெரிந்தும் அடிக்கடி கடியாரம் பார்ப்பது அனிச்சையாய் ஆகியிருந்தது. ஒருவழியாக தேவையான எல்லாமும் சேகரித்து முடித்தபின், புதிய செய்தி ஏதேனும் வந்ததா என்று பார்த்துப் பார்த்து, ஒருவழியாக அந்தப் பின்னிரவில் அவர்களை அழைத்துவரக் கிளம்பினோம். அப்போதும்கூட அவர்கள் வெளியே வரும்வரை ஒரு பதட்டம் இருக்கத்தான் செய்தது. அவர்கள் வெளியே வந்து, நிற்க, வழக்கமாய்க் கட்டியணைத்து வரவேற்காமல், கிருமிநாசினி எடுத்து அவர்களின் பெட்டிகளில் தெளித்துவிட்டு, வண்டியில் ஏற்றி வழியெங்கும் பேசியதெல்லாமே ஒரே விஷயம் பற்றித்தான் - ‘கரோனா வைரஸ்’. ஒரு வேளை அவர்களுக்குத் தொற்று இருந்தால் எனும் கேள்வி அச்சத்தையும் அக்கறையையும் அதிகப் படுத்த, அப்படி வரும்போதோ வந்த உடனேயோ காய்ச்சல் இருமல் வந்தால் தேவையான மருந்துகள் தயார் நிலையில் இருந்தன. தொற்று வராமல் தடுக்க முகவுறைகள், கையுறைகள், கிருமிநாசினி தெளிக்கத் தேவையானவைகள் எல்லாமும் என்னிடம் இருந்தன. நான் ஒரு மருத்துவன் என்பதால் நோயின் ஆரம்பக் கட்டத்தில் அதைச் சமாளிக்குமளவு என்னிடம் தேவையானவை இருந்தன. அவர்கள் வந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது. வீட்டின் ஒரு பகுதி அவர்களுக்காகவே ஒதுக்கப்பட்டு விட்டது. என் க்ளினிக் பணியாளர்கள் அவர்களிடமிருந்து பாதுகாப்பாய் ஒத்தி, ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். அவர்களுக்குத் தேவையான எல்லாமும் வீட்டின் அப்பகுதியிலேயே இருந்தாலும் நான் அவர்களை அவ்வப்போது பார்த்து எதுவும் ஆகிவிடவில்லை என்று உறுதி செய்து கொள்ளும் போதெல்லாம் தொற்று ஏற்படாமல் தகுந்த பாதுகாப்போடு தான் நடந்து கொண்டோம். இணையவழியாக வரும் செய்திகள் அவ்வளவு நிம்மதியூட்டுபவையாக இல்லை என்பதோடு நம் மாநிலத்திலும் சென்னையிலும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கை இருக்கிறதா என்பதும் ஓர் உறுத்தலான கேள்வியாகவே இருந்து வருகிறது. இவர்கள் ஜெர்மனியிலிருந்து விமான நிலையத்தில் வந்திறங்கியபின் காய்ச்சல் இருக்கிறதா என்று பார்த்து விட்டு இவர்கள் தரும் தகவல்களைத் திரட்டிக்கொண்டு வெளியே அனுப்பிவிட்டார்கள். இவர்கள் வந்து சேர்ந்த 24 மணி நேரத்தில் அந்த ஊரிலிருந்து வருபவர்களுக்கு பதினான்கு நாட்கள் தனிமைப் பாதுகாப்பு என்று அரசு அறிவித்திருந்தது- அப்படி எதுவும் அடுத்து வந்தவர்களுக்கு நடக்கவில்லை. தவிரவும் முகநூலில் காய்ச்சல் என்று போனால் கூட என்னைப் பரிசோதனைக்கு அனுப்பவில்லை எனும் குமுறல்கள் தென்பட்டன. எல்லா காய்ச்சல்- இருமலையும் சோதிக்கும் கட்டமைப்பும், காலமும் இப்போது கிடையாது. அதிகப்படியான அறிகுறிகள் வரும்போது தான் இப்போதைக்குப் பரிசோதனை செய்து என்ன தொற்று என்பதை உறுதி செய்ய முடியும். ஆகவே அவரவர் தொற்று தவிர்க்கவும் வெளித்தெரியாத தொற்று இருந்தால் மற்றவர்க்குப் பரவாமல் எச்சரிக்கையாக இருக்கவும் மட்டுமே இப்போதைக்கு முடியும். நான் மருத்துவன் என்பதால் என் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள முடியும், நோய் என்ன என்று பார்த்து மருந்து தர முடியும், எப்போது பரிசோதனை அவசியம் என்று பார்த்து அதற்கு ஆவன செய்ய முடியும்- மற்றவர்களுக்கு? விழிப்புணர்வு மெல்ல வந்து கொண்டிருக்கிறது என்றாலும், அரசு இன்னும் தீவிரமாய் திரையரங்குகள், பள்ளிகள் (10ம் வகுப்பு வரையிலாவது), ‘ஷாப்பிங் மால்கள்’ ஆகியவற்றையாவது மூட வேண்டும். ரயிலில், பஸ்ஸில் வந்து இறங்குவோரையெல்லாம் சோதிப்பது சாத்தியமில்லை என்பதால் மக்கள் அதிகமாய்க் கூடுமிடங்களையாவது மூட வேண்டும். இட்டலி போல், இப்போது அமெரிக்கா போல் வீம்புக்கு ஒன்றும் ஆகாது என்று மெத்தனம் கூடாது. இதையெல்லாம் ஒருவனோ, சிலரோ சொன்னால் போதாது- எல்லாரும் இதனை அமல்படுத்த அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். தொற்று பரவாமல் தடுக்க அரசு அத்தனையும் செய்ய வேண்டும் என்பதோடு, நம் எல்லாருக்கும் அதே பொறுப்பும் கடமையும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். என் வீட்டில் முழுதாய் நிம்மதிப் பெருமூச்சு விட இன்னும் பத்து நாட்கள்தான். தமிழ்நாடுக்கு? இந்தியாவுக்கு? at 3/15/2020 09:06:00 PM 0 comments Thursday, November 28, 2019 பாலா பாலாசிங் என்னில் ஒரு பகுதியாகவே இருந்தான். ஞாநி வீட்டில்தான் அவனை முதலில் பார்த்தேன். 1983க்குப் பின், என் வீட்டில்தான் பல நாட்கள் இருப்பான். இரவுகள் பேச்சில் கழியும். பேச்சுகள் பலவற்றைப் பற்றியும் இருக்கும். வேறு நண்பர்கள் வந்து போவார்கள் ஆனால் இவன் தான் அந்த நாட்களில் நிரந்தரமானவன். வருபவர்கள் என் சக மருத்துவ நண்பர்கள், நாடக/திரைப்பட கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், தோழர்கள், அப்போது ஈழ விடுதலைக்குப் போராடிக்கொண்டிருந்த EROS தோழர்கள், என்னிடம் படம் வேண்டுமென்று கேட்டு வருபவர்கள்.. என்று பல்வேறு வகைப்பட்டவர்கள் கூடுமிடமாக என் வீடு இருந்ததால், பேச எப்போதும் ஏதாவது புதிது புதிதாக இருந்து வந்தது. 1984 பவித்ரா நாடகம் ஆரம்பித்தோம்.அதன் பிறகு ஔரங்கஸீப். நாசர் வந்தது அப்போது தான். அந்த நாடகம் முடிந்த இரவு, கோடம்பாக்கம் மேம்பாலத்தில் நடந்து வந்த போது, நாசர் தான், ’ நம்மில் யார் சினிமாவில் நுழைந்தாலும் மற்றவர்களையும் அழைத்துக் கொள்ள வேண்டும்’ என்ற ஒரு தீர்மானத்தை முன்வைத்தான்.இது நடந்தது 1984 அக்டோபர். தன் வாக்கைக் காப்பாற்றி நாசர் பாலாவை தன் படத்திற்கு அழைத்து வந்தது 1994. நான் மனநல மருத்துவம் பயிலும் போதும், பின் ஒரு தொண்டு நிறுவனத்தில் பணியில் இருந்த போதும், பாலா தான் என்னை குறும்படம் எடுக்கத் தூண்டினான். நாங்கள் இருவரும் சேர்ந்து மனநலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த எடுத்த குறும்படங்கள்/ ஆவணப்படங்கள் மொத்தம் ஏழு. என் எல்லா முயற்சிகளிலும் அவன் தான் நடிகன். நடிப்பதோடு நிற்காமல் தயாரிப்பையும் நிர்வகித்தவன். கையில் கொஞ்சம் காசு சேர்ந்தவுடன் அடுத்து என்ன செய்யலாம் என்று ஆரம்பித்த காலம் அது. யார் பார்ப்பார்கள், என்ன பெயர் வரும், ஏதாவது காசு கிடைக்குமா என்று எவ்வித யோசனையும் இன்றி தொடர்ந்து செயல்பட்ட காலம் அது. அதன் பின் நான் மருத்துவமனை ஆரம்பித்தேன், அவன் திருமணம் செய்து கொண்டு ஊருக்கே போய்விட்டான்.. நாசர் அவனை மீண்டும் ஊரிலிருந்து கூட்டி வந்து திரைத்துறையில் நுழைக்கும் வரை சில ஆண்டுகள் நாங்கள் சந்திக்கவில்லை. அவதாரம் வந்தபின் முன் போல் அடிக்கடி சந்திப்பு இருந்தது. ஆனால் நாங்கள் இருவரும் அவ்வப்போது முன்போல் இரவுகளில் செய்யலாமா என்று யோசித்தோமே தவிர எதுவும் செய்யவில்லை. சென்னை தொலைக்காட்சிக்காக ஆவணப்படம் ஒன்று 96ல் செய்தோம் அதன்பின் பேசிய எல்லாமும் பேச்சாகவே நின்று விட்டன. அவன் திருமண நிச்சயதார்த்தம், திருமணம், கட்டிய வீட்டின் புதுமனை புகுவிழா, ஒரு மாதத்திற்கு முன் அவன் மகளின் மணவிழா என்று அவன் ஊருக்கும் வீட்டுக்கும் நான்கு முறை போன நான், இன்று 5வது முறை கலியக்காவிளை செல்லவில்லை. அந்த மண்ணில் அவனை இறக்குவதைப் பார்க்குமளவு எனக்கு மனத்தில் தெம்பு இல்லை. என் எல்லா சிக்கல்களும் , பிரச்சினைகளும், கோபங்களும் அவன் தலையீட்டால் தான் தீர்ந்திருந்தன. என் சின்னச்சின்ன வெற்றிகளும் கொண்டாட்டங்களும் அவன் பங்கேற்பில்லாமல் நடந்ததில்லை. இனி என் எதிலும் அவன் இருக்கப்போவதில்லை. நினைவை விட்டும் போகப்போவதில்லை. என்னில் ஒரு பகுதி இன்றோடு தொலைந்து விட்டது. at 11/28/2019 12:01:00 PM 0 comments Thursday, August 22, 2019 சகுந்தலை சகுந்தலை என்று தமிழிலும் நன்கு அறியப்பட்ட அழகிக்கு ஒரே கதை என்பதே நம்மிடம் பரவியுள்ள கதை. அவளுக்கு குறைந்தபட்சம் இரண்டு கதைகள் உண்டு. ஒன்று மகாபாரதத்தில் வியாசர் எழுதியது, இரண்டாவது பிரபலமாகி உண்மை என்றே அங்கீகாரம் பெற்ற காளிதாசன் எழுதியது. அடிப்படை கதை ஒன்றுதான். அவள் காதலிக்கப்பட்டாள், கர்ப்பமுற்றாள், அவன் ஓடிவிட்டான், குழந்தையுடன் அவள் அவனை எதிர்கொள்ள அவன் மறுக்கிறான், இவளது நியாயம் வெல்கிறது. இவ்வளவுதான் சகுந்தலையின் கதை. இது மகாபாரத காலமான பொ.யு.மு 400லிருந்து காளிதாசன் காலமான பொ.யு 400ல் வேறு வடிவாய், வேறு விதமாய் மாறியது, காலநீட்சியில் ஏற்பட்ட கலாச்சார மாற்றங்களால் என்பது Romila Thappar எழுதிய நூலின் சாரம். மகாபாரத சகுந்தலை, துஷ்யந்தனிடம் ஏமாறவில்லை. தெளிவாகவே தன்னைப் பற்றி விவரித்து, தன் காதலை நிச்சயம் தன் வளர்ப்பு தந்தை ஏற்பார் என்று சொல்லி, மணமுறைகளில் ஒன்றான கந்தர்வ விவாகத்துக்கு மனப்பூர்வமாய் ஒப்புக்கொள்கிறாள்- ஒரு நிபந்தனையுடன். தனக்கு மகன் பிறந்தால் அவன் அரசனாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதே அவளது ஒரே நிபந்தனை. துஷ்யந்தன் வருகிறேன் என்று சொல்லி காணாது போனபின், குழந்தை பெற்று வளர்த்து, மக்கள் முன் காட்டலாம் எனும் காலகட்டம் வந்தபின் தான் அரசவை செல்கிறாள். அவன் அவளைத் தெரியாது என்று ஏய்த்ததும் நிதானமாய் தன் சினத்தை வெளிப்படுத்தி விவாதிக்கிறாள். அசரீரி அவளுக்கு சாட்சி சொல்லி துஷ்யந்தன் தன் மகனை ஏற்றபின் வெளியேறுகிறாள். கண்ணீரை விடவும் தெளிவான தார்மிகச் சினம், வஞ்சிக்கப்பட்ட வருத்தத்தைவிட தனக்களிக்கப்பட்ட வாக்கு நிறைவேற்றப்பட வேண்டும் எனும் தீர்மான தைரியம்- இதுவே மகாபாரத சகுந்தலை. காளிதாசன் சகுந்தலை அழகிய பேதை, வஞ்சிக்கப்பட்ட பரிதாபத்துக்குரிய பெண், கண்ணீரும் கவலையுமாய் கணவனை நாடும் அபலை. மகாகவியின் துஷ்யந்தனும் நாடகக்காவியத்தில் கெட்டவன் அல்ல, அவளை ஏமாற்ற நினைக்கவும் இல்லை. விதியின் சாபத்தால் மறதி பீடிக்க அவளுடன் இருந்ததை மறந்திருக்கிறான். மோதிரம், மீன் வயிறு எல்லாம் காளிதாசனின் கவிதா அத்துமீறல் நியாயம். கவியின் காலத்தில் பெண் அவ்வளவு வீரமாய் தன் நியாயத்தைப் பேச முடியாது. ராஜாவையும் வில்லனாகக் காட்ட முடியாது எனும் நிலை. ஆரம்பகாலத்தில் இருந்த பெண்ணின் வீர்யம், சுயமதிப்பீடு கலப்போக்கில் ஆணாதிக்கப் பாதிப்பினால் கற்பு, அச்சம், மடம், நாணம், அவையடக்கம், பெண்மைக்க்கேயுரிய பொறுமை, சகிப்புத்தன்மை என்றெல்லாம் மாறியது/ மாற்றிக் காட்டப்பட்டது. டாகூர் கூட இதை முன்னிறுத்தி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ரொமிலா தாப்பர் இன்னும் ஆழ ஆய்ந்து இதை எழுதிய நூல்- Sakuntala:Texts,Readings,Histories இரண்டாம் சகுந்தலை கதை காலத்திற்கேற்ப பெண் நிலையை வடிவமைத்ததால் மட்டுமே பிரபலமாகிவிடவில்லை. காளிதாசனின் கவிநேர்த்தி, கதைக்கோப்பு, நாடகமாக்கலின் நுட்பம் தான் அவனது நாடகத்தை உலகெங்கும் கொண்டாட வைத்தது. at 8/22/2019 09:32:00 PM 0 comments Thursday, August 9, 2018 கலைஞர் அற்பர்களின் அரசு தன் இயல்பான கீழ்மையை வெளிக்காட்டாதிருந்தால், எத்தனையோ கட்டங்களில் முகம் சுளித்து கவனித்த அந்த மனிதனின் மேல் இத்தனை கரிசனமும் அன்பும் பொங்கியிருக்காது. மூப்பின் தவிர்க்க முடியாத இறுதி கட்ட நோயின் வழி தான் ஏற்பட்டது அந்த மரணம். சதி செய்து யாரும் கொலை செய்து விடவில்லை. பரிதாபப்படும் நிலையிலும் இருக்கவில்லை அவர் வாழ்க்கை. அரசியல் சாதுர்யம் என்று போற்றப்படும் சமரசங்களில்லாமல் இல்லை அவரது பொதுவாழ்வு. சிலரை அவசியமில்லாமல் ஏற்றிவைத்தும், சிலரை காழ்ப்புடன் ஒதுக்கி வைத்தும் தான் நடந்து கொண்டது அவரது மனம். எத்தனையோ திட்டங்கள் சிறப்பாகத் தீட்டினார்; அதில் பயனடைந்தது மக்கள் மட்டுமல்ல அவரைச் சார்ந்தவர்களும் எனும் கறையும் படிந்தது தான் அவரது ஆட்சி. நாவன்மையால் எதிர்கேள்விகளை திசைதிருப்பி மௌனிக்க வைக்கும் ஆற்றலால் பல கேள்விகளை மறக்கடிக்கும் சிறப்பு உண்டென்றாலும், கேள்விகளெழுப்ப அவசியமில்லாத பொது வாழ்வு அவர் வாழவில்லை. இவ்வளவு நெடிய வாழ்பயணத்தில் அவர் எளிதாய் அடைந்த சிகரங்கள் அதிகம், ஆனால் சறுக்கல்களும் நினைவை விட்டுப் போய் விடவில்லை. ஆனாலும், மரணச்செய்தி கேட்டவுடன் மனத்துள் ஓர் அசாதாரண திகைப்பும் தவிப்பு ஏற்படத்தான் செய்தது. மரணித்தவரின் மாண்புகளை மட்டுமே பேசும் மரபினால் வரவில்லை அவர் மீது மரியாதை. உழைப்பு, அறிவுத்திறன் ஆகியவற்றின் முன்னணி உதாரணம் அவர். காழ்ப்புணர்ச்சியில் அவர் செய்ததையெல்லம் விட்டு விட்டு தவறிய தருணங்களைப் பட்டியலிடும் வன்மம் நிறை மனிதர்களால் வரவில்லை ஒரு திடீர் பாசம். மத-இன வெறியுடன் அவரை விமர்சிக்கும் கீழ் குணம் படைத்தோரால் உருவாகவில்லை மனத்துள் அவர் குறித்த அன்பு. குறைகளையும் குற்றங்களையும் அறிந்தே அவர் மீது மரியாதை வந்து நின்றது. நெடிய வாழ்வின் அரிய சாதனைகளுக்காக வரவில்லை இந்த மரியாதை. ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் தன் பால் கவனம் கொள்ளச்செய்த அவரது மரணத்தினால் வந்தது இந்த மாசற்ற மரியாதை. எல்லாரையும் போலத்தான் மதியம் ஸ்டாலின் முதலமைச்சரை சந்தித்தவுடனேயே மறுநாள் குறித்த கவலையுடன் அவசியமான பொருட்களை வாங்கிக்கொண்டேன். மாலை வந்த மரணச் செய்தியும் எதிர்பார்த்த ஒன்றென்பதால் அதிர்ச்சியோ அழுகையோ வரவழைக்கவில்லை. ஊடகங்களில் பெருமைகள் ஒளிபரப்பானபோதும் பெரிதாய் மனத்துள் பாதிப்பு வரவில்லை. எல்லாருமே பிடித்தோ பிடிக்காமலோ தீர்மானித்து வைத்திருந்த அந்த மனிதரின் இறுதி இடம் குறித்த சர்ச்சை எழுந்த போது தான் உள்ளே எரிச்சல் ஆரம்பித்தது. சமூகவலைத்தளங்களில் கேவலமானவர்களில் கொக்கரிப்பும் எரிச்சலை கோபமாக்கியது. அந்தக் கோபம் அவரைப் பற்றி இன்னும் சிந்திக்க வைத்தது, அதனால் கோபம் அதிகமாகியது. மறுநாள் புதையிடம் வேண்டி தொடுக்கப்பட்ட வழக்கு குறித்த செய்திகளைப் பார்க்கையில் கோபம் ஆத்திரமாகவே மாறியது. அந்த ஆத்திரம் அவர்மீது அன்பு கூட்டவே வைத்தது. சட்டச்சிக்கல் என்ற காரணத்தால் மறுக்கப்பட்ட இடம் எனும் சாக்கு உடைபட்டதும், வெவ்வேறு காரணங்களை உற்பத்தி செய்து வாதிட்ட அரசின் அற்பத்தனம் அவர்மீது மரியாதையும் அன்பும் அதிகரிக்க வைத்தது. எத்தனை பெரிய கூட்டம் முகத்தைக் கூட பார்க்க முடியாது என்று தெரிந்து அவர் உடல் இருந்த இடம் தேடி வந்தது என்பதைப் பார்க்கப் பார்க்க மரியாதையோடு உள்ளுக்குள் ஏற்பட்ட பற்றினால் பெருமிதமும் உருவாகியது. நண்பர்கள், தொண்டர்கள், அவரால் பயனடைந்தவர்கள்- அடையப்போகிறவர்கள் மட்டுமல்லாமல் எந்த லாபமும் எதிர்பாராமல் திரண்ட கூட்டம் அவரது இறுதி வெற்றி. இவ்வளவு வன்மத்துடன் வஞ்சக எதிரிகளை உருவாக்கியதும் அவரது வெற்றிதான். வீரனுக்கும் அறிவாளிக்கும்தான் எதிரிகள் அதிகம். அப்படி ஒரு கூட்டத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல் அந்த அற்பர்களை வெளிப்படுத்தியதும் அவரது வெற்றிதான். ஒரு சாதனையாளனை கடந்த கசப்புகளை மீறி கரிசனத்தோடு வழியனுப்பி வைக்கும் மனநிலை தான் அவர் ஒரு வசனத்தில் கேட்ட கேள்விக்கு பதில்- அந்த இறுதி நேரங்களில், அம்பாள் பேசினாள், அவரை மனத்தில் உயர்த்தி. at 8/09/2018 07:37:00 AM 0 comments Sunday, July 22, 2018 அவள் கோவில் பற்றி… முன்பொருமுறை நான் எழுதியது- ‘கூத்தனூர் கோயிலில் மாத்திரம் இருப்பளோ வாக்திறம் நல்கும் என் தாய்” இதில் சில கேள்விகள் எனக்கு இப்போது, சமீபமாய் வெடித்திருக்கும் ஒரு சர்ச்சையை நோக்கும் போது ( இதை முகநூலில்தான் நோக்க முடிகிறது, பல சர்ச்சைகளைப்போல். தெருவில் நடக்கையில், பல்விதங்களில் பயணிக்கையில் எந்த சர்ச்சையும் தெரிவதுமில்லை, செவிபடுவதுமில்லை. மக்களுக்கு இதற்கெல்லாம் அவகாசம் இல்லை). எனக்குத் தோன்றிய கேள்விகள்- வாக்திறம் அவள் தருகிறாளா? அவள் தாயா? அவள் கோவில் என்பது அவள் உறைவிடமா?... இன்னும் கூட கேள்விகள் எழுகின்றன. முதலில் அவள் வாக்திறம் தருகிறாளா என்றால் தெரியவில்லை. எனக்குத் தந்தது போல் இன்னொருவர்க்கும், ஒரு மேதைக்குத் தந்தது போல் எனக்கும் வாக்திறம் வாய்ப்பதில்லை. அவள் தருகிறாள் என்றால் எல்லார்க்கும் ஒரே விதமாய் அல்லவா தந்திருக்க வேண்டும்? அவள் தாயெனில் எல்லா பிள்ளைகளையும் ஒன்றாயல்லவா பாவிக்க வேண்டும்? அழுத பிள்ளைக்கே அமுது என்பது போல் பூஜிப்பவனுக்கே வரமெனில் அவள் எப்படி தாய்? அவள் கடவுள் எனில் கோவிலில் மாத்திரம் இருப்பது எப்படி சாத்தியம்? அவளை ஒரு கற்சிலையாய் கண்டிருந்தால்தான் எனக்கு இப்படி கேள்விகள் தோன்றலாம். என்னைப் பொருத்தவரை அவள் அழகுச்சிலை மீறிய அகண்டம். என் சௌகரியத்துக்காகவே அந்த எழிற்சிலை. என் கண்பார்த்த கண்ணிரண்டும் கண்ணிமைக்க மறுப்பதனால் நான் கண்ணுறங்கும் வேளையிலும் அவள் கண் கனவில் வருகிறது. அது அவள் கண் தானா? அவளுக்கு இருப்பது கண் எனும் உறுப்பா? பார்வையில் படுவதை கண்ணில் படுவதாய் சொல்லிப் பழகிவிட்டது போல், அவள் பார்வை எனும் ப்ரக்ஞையை கண் எனும் உறுப்பாய் மனோவசதி மாற்றி நினைத்துக்கொள்கிறது. கோவிலில் அவள் இருப்பதாய் உருவாக்கிவைத்துள்ள பிரமை எனக்குப் பிடித்திருக்கிறது என்பதால் அதை மனம் சந்தேகங்களைப் புறந்தள்ளி ஏற்றுக்கொள்ளவே விரும்புகிறது. கோவில் ஒரு பயனுள்ள இடம். வேலையில்லா மத்யானத்தில் ஓய்வாய் அரட்டை அடிக்க, பழகியவர்களை சந்திக்க, புதியவர்களை அறிமுகப்படுத்திக்கொள்ள, அமைதியாய் உட்கார்ந்து யோசிக்க, இல்லத்து இறுக்கத்திலிருந்து தற்காலிகமாய் தப்பிக்க, நடை பயில, இளைப்பாற, சிற்ப நுணுக்கங்கள் ரசிக்க, கல்வெட்டுகளில் சரித்திரம் தேட, நாணமின்றி வேதனையை கண்ணீராய் வெளிப்படுத்த, பயத்துடன் வேண்டிக்கொள்ள, ப்ராத்தனை செய்து கொண்டதால் தெம்பு பெற என்று கோவில் பலவிதங்களில் பலருக்குப் பயன்படுகிறது, இதில் பக்தி என்பது உபரி மட்டுமே. இதே பயன்களை வெவ்வேறு இடங்களிலும் பெற முடியுமெனில் அவையும் கோவில்களா? கோவில் என்பது தெய்வநம்பிக்கை சார்ந்தது. தெய்வம் என்பதன் புரிதலைப் பொருத்தே கோவில் என்பதன் புரிதல் அமையும். கடவுளை ஒரு கற்சிலைக்குள் அடைத்து, குறுக்கிப் பார்த்தால் கோவில் கடவுளின் வீடு மட்டுமே. அந்த வீடு கடவுளுக்குச் சொந்தம் என்பதால் நாம் அங்கே அந்நியர்கள் தான். ஆகவே இன்னொருவர் வீட்டுக்குத் தர வேண்டிய நாகரிகம் சார்ந்த மரியாதையை நாம் அங்கே தரத்தான் வேண்டும். பிடிக்காதவர் வீட்டுக்குப் போகாமல் இருப்பது போல கோவிலையும் கடவுள் வீடென்று நினைத்தால் தவிர்க்கலாம். கடவுளுக்கு எதற்கு வீடு என்று கோவிலை நகைப்புடன் வினவுவது நாத்திகம் என்பதைவிடவும் ஆழமான ஆன்மிகமாகும். கடவுள் எனும் யாதுமாகியதற்கு ஒரு நிலம் ஒரு கட்டிடம் மட்டுமே சொந்தம் என்பது நிச்சயம் சரியில்லைதான். ஆனால், அந்த இடம் ஒரு சாராரின் சொந்தம். அதில் அவர்கள் தங்களுக்குப் பிடித்த ஒரு கட்டிடம் எழுப்பி, தங்களுக்கு விருப்பமான ஒரு பொம்மையை வைத்து மகிழ்வதை சரியில்லை என்று சொல்ல முடியாது. உடனே சிலருக்கு மட்டும் சில சலுகைகள், சிலருக்கு மட்டும் சில தடைகள் ஏன் எனும் கேள்வி வருகிறது. அது அவர்கள் வீடு, ஆகவே அங்கே அவர்கள் தங்கள் சட்டங்களை அமல்படுத்தலாம். அவர்களது செயல்பாடுகள் சமூகத்தின் நியாயங்களை மீறும்போது யாரும் எதிர்க்கலாம். எந்த வீட்டில் ஒரு கொலை/ அடிதடி நடந்தாலும் யாரும் உள்ளே சென்று எதிர்க்கலாம் எனும் நியாயம் இதில் பொருந்தும். நீ நாத்திகன் என் கோவில் விஷயத்தில் நீ நுழையாதே என்று ஒரு சமூக அநீதி ஒரு கோவிலில் நடக்கும் போது யாரும் தடுக்க முடியாது. எது சமூக நீதி? அனைவரும் சமம் என்பதே என்னைப்பொருத்த சமூக நீதி. சில கட்டங்களில் இதில் விலக்குகள் இருக்கலாம்- கற்கும் போது மாணவனும் ஆசிரியரும் சமமில்லதான்; ஆனால் பாடம் முடிந்த பின் சமம் தான். என்றோ எவரோ எவர் வசதிக்காகவோ சுயலாபத்திற்காகவோ எழுதி வைத்தவற்றை இன்னும் மாற்றம் அடைய முடியாத அடிப்படை அறிவியல் சூத்திரம் போல் பயன்படுத்தி, சிலரை பாகுபடுத்தி, பிற்படுத்தி, சில நேரங்களில் அவமானப்படுத்தி நடப்பது தவறு. அது கோவிலுக்குள்ளானாலும் சுடுகாட்டில் என்றாலு தவறுதான். எழுத எழுத என்னென்னவோ வந்து கொண்டிருக்கிறது. இதை எழுத ஆரம்பித்தது, கோவிலுக்குள் மாதவிலக்குடன் பெண்கள் வரலாமா எனும் சமீபத்திய சர்ச்சையும் அது தொடர்பாய் நடக்கும் வாதங்களையும் விதண்டாவாதங்களையும் படித்ததால் தான். சில விஷயங்களை பலர் புரிந்து கொள்ளாமல் பின்பற்றுவதன் கோளாறு இதில் அப்பட்டமாய்த் தெரிகிறது. மாதவிலக்கு என்பது பெண்களுக்கு ஒரு பருவத்தில் ஏற்படும் இயற்கையான உடலியக்கம். இதில் ‘தோஷம்’, ‘தீட்டு’ என்றெல்லாம் சொல்வதும் அந்நேரம் அவர்களை ஒதுக்குவதும் புரிதலில்லாத பழமை சார்ந்த மூட நம்பிக்கைதான். மலம் கழித்த பின் பின்னங்கால கழுவிவிட்டு வரவேண்டும் என்பது நம் பழங்கலாச்சார விதி. அப்போது உட்கார்ந்து மலம் கழித்தல் மலச்சிதறல் காலில் படுமே என்று உருவாக்கப்பட்ட விதி. இப்போதும் ‘வெஸ்டர்ன்’ கழிப்பறையில் அதைப் பின்பற்றுவது வேடிக்கையான வழக்கம். அதிலும் ஈரமான/ஈரமில்லாத இடங்களாக கழிப்பறையும் குளியலறையும் இருக்கும் இடங்களிலும் இதைப் பின்பற்றுவது மடத்தனம் தான். மாதவிலக்கின் போது கோவில் வரக்கூடாது என்பதும் இப்படித்தான். அக்ரகாரத்திலிருந்து அனைத்தையும் கடைபிடித்தவன் அமெரிக்கா போனதும் ( அப்படி போவதே அனாச்சாரம்) கழிப்பறையில் காகிதம் பயன்படுத்துவதில் காட்டாத ஆச்சாரத்தை மனைவி மாதவிலக்கின் போது சமையலறைக்குள் போகக்கூடாது என்று சொல்வது போலத்தான் மாதவிலக்கின் போது பெண்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்பதும். கோவிலில் மின்விளக்குகள், மைக், எக்ஸ்ஹாஸ்ட்,குளிர்சாதனம் எல்லாம் நுழைந்தால் வராத தீட்டு, மாதவிலக்கினால் பெண்ணுக்கு எப்படி வந்து விடும்? இங்கே சர்ச்சை இன்னொரு கோணத்தில் விதண்டாவாதமாகி விட்டது. ஒரு ‘கவிதை’ கோவிலில் பெண் தெய்வங்களுக்கு மாதவிலக்கு இல்லையா, தீட்டு இல்லையா எனும் பொருளில் எழுதப்பட, அதை ஒரு தொலைகாட்சியில் ‘நெறியாளர்’ சொல்லிவிட, ஆஹா என எழுந்தது முகநூலில் கோஷ- பூசல்! கவிதை என்பதைப் பற்றி இப்பொதைக்கு விட்டு விட்டு இந்த விஷயத்தைப் பற்றி யோசிப்போம். சிந்திப்போம் என்றல்லாமல் யோசிப்போம் என்றேதான் எழுதுகிறேன், அறிந்தவர் அறிவாராக. கோவில் புனிதம் என்பதை மறுத்து, கோவிலிலினுள்ள கடவுள் சிலைகளை சிற்பமாகவோ பொம்மையாகவோ பாவித்து, இறை நம்பிக்கை இல்லாத போது, இப்படி எழுதுவதென்பது ஒரு நகைச்சுவைக்கு உதவுமே தவிர துல்லியமான வாதத்திற்கோ விவாதத்திற்கோ பயன்படாது. இப்படி எழுதுவதை அப்படியே வாதமாக எழுத்துக்கொண்டால் எழுதியவருக்கு கடவுள் உண்டு, அது பெண் வடிவில் உண்டு, அது கோவிலில் இருக்கிறது எனும் கருத்தில் உடன்பாடு இருப்பதாகவே படும். ஒரு விஷயத்தை எதிர்க்க கேலியும் கிண்டலும் ஒருவித ஆயுதம் என்றாலும், அதிலும் உள்ளார்ந்த சமரசம் செய்துகொள்ளும் தொனி வந்து விடும். ஜெயிக்க வேண்டுமென்றால், சண்டையில் கோபமும் வேண்டும், அதைவிட நேர்மையும் வேண்டும். அவள் கோவிலுறை தெய்வம், அதுவும் அந்த கற்சிலை உறையும் கடவுள் என்று ஏற்றால் தான் இந்த விதண்டாவாதம். பேச வேண்டியதும் மாற்ற வேண்டியதும் மூட நம்பிக்கைகளைத்தான். அது சீரிய சமூக அறிவியல் அடிப்படையிலான வாதங்களினால் தான் சாத்தியம். நான் முதலில் எழுத ஆரம்பித்ததைப் போல்- கூத்தனூர் கோவிலில் மாத்திரம் இருப்பளோ வாக்திறம் நல்கும் என் தாய். அந்த என்றல்லாமல் எந்த ஒரு தேவி சிலை பார்த்தாலும், என் அறிவில் சிலை தான் அது. உணர்வில் என் தேவியாய் அவள். உள்ளதிர் ப்ரக்ஞையில் காதலுடன் வெடிக்கும் பெருஞ்சக்தி. at 7/22/2018 01:47:00 PM 0 comments Saturday, July 14, 2018 ஜூலை 14, 2018 உளமார நேசிக்கும் என் மருத்துவப்பணி இன்றுடன் நாற்பதாவது ஆண்டில் அடியெடுக்கிறது. ஆரம்பத்தில், பொது மருத்துவம் பார்த்திருந்த அந்த காலகட்டத்தில் நிறைய நிறைவான மகிழ்ச்சி மிகுந்த தருணங்கள். சின்ன க்ளினிக்கில் என்னைப் பார்க்க மழையில் குடை பிடித்து வெளியே காத்திருந்த மக்களைப் பார்த்த போது, காசு இல்லை என்று கவலைப்படாமல் நான் பார்த்துக்கொள்வேன் என்று தைரியமாக ஏழைகள் என்னை அணுகியபோது, , என் சின்ன க்ளினிக்கில் பிரசவம் பார்த்து, பிறந்த குழந்தையை கையிலெடுத்து அதன் முதல் குரல் கேட்ட போது, சிக்கலான மருத்துவ சிகிச்சைக்குப் பின் நோயுற்றவர் நலம் பெற்று புன்னகைத்த போது, ஏழை எளிய மக்கள் வாழும் அப்பகுதியில் கல்யாணம், காது குத்தல், குழந்தைகளின் பிறந்த நாள் என்று அவர்கள் கொண்டாட்டங்களில் என்னை அழைத்து மகிழ்ந்த போது, தினமும் நாடி வருவோர் எண்ணிக்கை கூடி வந்த போது, என்று பல மகிழ் தருணங்கள். காசு நிறைய சம்பாதிக்காத போதும் சந்தோஷம் நிறைய இருந்தது. மனநலம் படித்து, இனி மனநல மருத்துவப் பணி மட்டுமே என்று நான் முடிவெடுத்த பின்னும் அவ்வப்போது தங்கள் மருத்துவப் பிரச்சினைகளுக்காக மக்கள் என்னை இன்னமும் ஆலோசனை கேட்டு வந்தாலும், மனநல மருத்துவப் பணியே என் வாழ்வின் ஆதார சுருதியாக மட்டுமல்ல, வாழ்வில் தினமும் விளக்கமுடியாத சுகநிலையாக அமைந்து விட்டது. ஒரு மருத்துவமனை உருவாக்கி, அதிலும் ஏழைகள் அதிகமாக வந்ததால், சம்பாதிக்க இயலாமல் அந்த மருத்துவமனையை மூட வேண்டி வந்தபோதும், பெருமளவில் வருத்தம் கொள்ளவில்லை. காசு சம்பாதிப்பதென்றால் மருத்துவப் பணியில் சுலபம், அதுவும் நிறைய பேர் நம்பிக்கையோடு நாடி வந்தால் இன்னும் சீக்கிரமாகவே சம்பாதிக்கலாம். எக்காரணம் கொண்டும் ஏழைகளிடம் இரக்கமில்லாமல் பணம் கறக்கப்போவதில்லை எனும் தீர்மானமும், சுயநெறி பிறழ்ந்து தேவையில்லாமல் சலுகைகளுக்காக மருத்துகள் எழுதுவதும், அவசியமின்றி பரிசோதனைகளுக்காக ( அதில் வரும் தரகுத்தொகைக்காக) மக்களை அலைக்கழித்து செலவு செய்ய வைப்பதில்லை எனும் என் மாற்றம் காணாத உறுதியும், பொருளாதார தோல்வியை புறம்தள்ளி தினமும் மகிழ்ச்சியோடு காணவரும் மக்களை அன்புடனும் ஆர்வத்துடனும் சந்திக்க வைக்கிறது. என் மனநல மருத்துவப் பணியிலும் ஒவ்வொரு பாதிக்கப்பட்டவரிடமும் “ எல்லாம் சரியாயிடுச்சு, இனி வர வேண்டாம்” என்று சொல்லும் போது வரும் நிறைவுக்கு நிகர் எதுவுமே இல்லை., ஐம்பது பேர் தினம் வந்தாலும் சோர்வும் தளர்வும் இல்லாமல் பார்க்க முடிவது என் பணியின் மேல் எனக்கிருக்கும் காதலினால்தான், அது எனக்குள் ஏற்படுத்தும் பெருமிதத்தினால்தான். சென்ற மாதம் தொடர் இருமலுக்குப் பின் குரல் கம்மி பேசுவதே முடியாமல் போனது. ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் என்று நினைத்த விஷயம் ஒரு வாரம் ஆனபின்னும் தொடர்ந்தது. என் உதவியாளரை பக்கத்தில் வைத்துக் கொண்டு வந்தவர்களை பார்த்து மருந்து எழுதித் தந்தேன். ஆனால் அது எனக்கு திருப்தியாக இல்லை. அப்போது ஒரு மைக்+ஸ்பீக்கர் வாங்கி அதன் மூலம் கிசுகிசுத்த குரலில் வந்தவர்களுடன் பேச ஆரம்பித்தேன். நான் கஷ்டப்படுவதைப் பார்த்து கஷ்டத்துடன் வந்தவர்கள் எல்லாரும், ரொம்ப பேசாதீங்க சார், நாங்களே சொல்லிடறோம் என்று என்னை கேள்வி கேட்கவிடாமல் காட்டிய அன்பு என் மனநல மருத்துவப் பணி எனக்குத் தந்த விலையில்லா வெகுமதி. இப்பணி எனக்கொரு தியானம். க்ளினிக்கில் இருக்கும் நேரம் கவனம் சிதறுவதில்லை, தனிப்பட்ட வருத்தங்கள் நினவுக்கு வருவதில்லை, எந்த சிக்கலின் தாக்கமும் அந்நேரம் ஏற்படுவதில்லை. முழுமையாய் கவனக்குவிப்புடன், சொல்லப்படும் விஷயங்களினாலும் பாதிப்பு வரவிடுவதில்லை. எந்தவித பிரச்சினையை எதிர் இருப்பவர் சொன்னாலும் அது அவிழ்க்க வேண்டிய புதிர் மட்டுமே வருந்தவோ கோபப்படவோ அதில் எனக்கு ஏதுமில்லை எனும் மனநிலையே மனநல மருத்துவப் பணியின் வெற்றி. இதிலும் எல்லாமே வெற்றிகரமாகவே செய்து வருகிறேன் என்று இல்லை. நோய் நாடி, நோய்முதல் நாடி அது தணிக்கு செயல்பாட்டில் பிசிறோ பிழையோ ஏற்பட்டதில்லை, என் தோல்விகள் எல்லாமே என் நப்பாசைகளாலும் பேராசைகளாலும் தான். யாரிடமும் ஒரு பைசா கூட வாங்காமல் மருத்துவம் பார்க்கவேண்டும் எனும் தீராத தாகத்தின் தாக்கத்தில், என்னை நாடி வரும் வசதி படைத்தவர்களைப் பார்க்க தனியாய் ஓரிடத்தில் என் இன்னொரு க்ளினிக் ஆரம்பித்தேன். அதில் வரும் காசினை வைத்துக்கொண்டு இங்கே என் க்ளிக்கில் காலை ஐந்து மணிக்கெல்லாம் வந்து பெயர் பதிவு செய்து எனக்காகக் காத்திருக்கும் எளிய மக்களுக்கு பணம் வாங்காமல் பணி செய்யலாம் என்பதே திட்டம். எல்லா திட்டங்களும் வெற்றி பெற சரியான வியூகங்கள் தேவை. புதிதாய் ஆரம்பித்த இடத்தை விளம்பரப்படுத்தாமல் நிச்சயம் வருவார்கள் என்ற நம்பிக்கையோடு அல்லது திமிரோடு இருந்தேன். அது நடக்கவில்லை. நடக்கவில்லை என்று தெரிகிறது, நடக்காது என்று இன்னமும் தோன்றவில்லை. இது ஒரு தோல்வி என்று சொல்லும் மனம், தனக்கே சமாதானப் படுத்த ‘இப்போதைக்கு’ எனும் வார்த்தையையும் சேர்த்துக்கொள்கிறது. எந்தவித பணபலமோ பின்புலமோ இல்லாமல், ஏழ்மையின் அதிதீவிரத்தையும் பார்த்து கடந்து வந்த என்னை, இன்று இந்நிலையில் வைத்திருப்பது என் தேவிதான். நாளை நாற்பதாவது ஆண்டு. இன்னும் இருக்கும் ஆண்டுகளும் இப்பணியிலேயே இன்புற்றிருக்க மயர்வற மதிநலம் அருளி, அவள் உடன் இருக்கிறாள். at 7/14/2018 06:32:00 AM 0 comments Tuesday, September 6, 2016 விளம்பரத்தால் உயர்ந்த பிம்பம் ஜக்கி பற்றி.. ம்ருத்திகா எனும் தோழி சுட்டியும் தந்த போதும் பார்க்கவில்லை. பின் பலரும் சொன்னார்கள்.. ஆகவே அந்த தொலைகாட்சி ஒளிபரப்பைப்பார்த்தேன். ஹா.. முதலில் ஒரு தன்னிலை விளக்கம்.- பாண்டே சொன்னது போல் நான் ரஜ்னீஷ்/ஓஷோவை இந்த போலி imitate செய்வதாய்ச் சொல்லவில்லை, இது அவரிடமிருந்து திருடி பேசுவதாய்த் தான் சொன்னேன். IMITATION CAN BE PARDONED AS A POOR ART, BUT PLAGIARISM IS DEFINITE THEFT- CONDEMNABLE AND PUNISHABLE. அப்புறம், இதை நான் சந்தித்த கதை! 1990களின் மையத்தில் நான் ஓரளவு தொலைகாட்சி வழியாய் பிரபலம். அப்போதெல்லாம் என் தினசரி மதிய உணவு சென்னை பாண்டி பஜார் பாலாஜி பவனில் தான். தொடர்வாடிக்கையாளர் எனும் முறையில் உரிமையாளரிடம் புன்னகைப் பழக்கம். ஒரு சாப்பிடும் நேரம் அவர் வந்து ஒரு மகான், யோகி..என்றெல்லாம் ஒருவரைக் குறிப்பிட்டுப் பேசினார். அப்போதெல்லாம் என்னிடமும் ஒரு குரு தேடல் இருந்ததும் கடன் தொல்லையும் இருந்தது. எதனால் என்று இன்று நிச்சயமாய் சொல்ல முடியவில்லை, போய்த்தான் பார்ப்போமே என முடிவெடுத்தேன். ‘ முதல்லெ நாரத கான சபா வாங்க.. ஸ்பெஷல் ப்ரோக்ராம், ஸீட் புக் பண்ணி வெக்கறேன்’ என்றவர் பேச்சுக்கிணங்கி போனேன். well designed opening..packing was glittering more than the content..உமாவிடம் இது ரொம்ப உடான்ஸா இருக்கே என்றதற்கு..dont be a cynic என்றாள். நாகரிகம் கருதி (சமயங்களில் நாகரிகம் என்பது பரிதாபத்தின் இன்னொரு பெயர்). கடைசிவரை இருந்து வெளிவந்து கார் தேடும் போது அந்த உணவகத்தின் இளைஞன் ‘ சார் வாங்க இண்ட்ரொட்யூஸ் பண்றேன்’ எனவும், அந்த மனிதனை பார்த்தேன் கை குலுக்கினேன். பேசாமல் வந்து விட்டேன். அடுத்த சில நாட்களின் ஒன்றில், அந்த இளைஞன் அவரை நீங்க பாக்கணும் பேசனும் என்ற போதும் என் இயல்பான MAN WATCHING CURIOSITY யுடன் தான் போனேன், உமாவுடன். சென்னை லாய்ட்ஸ் சாலையில் ஒரு ஸ்பெஷல் எஃபெட்ஸ் ஸ்டுடியோ, மாடியில் உமாவும் நானும் அந்த இளைஞனும் இருக்க ஒரு dramatic delayed entry. அறிமுகம் செய்யப்பட்டும் நான் சும்மா இருக்க தானே பேசிய அந்த alleged மகான்.. தான் பிறந்து வளர்ந்து ஒரு கட்டிடம் கட்டுமிடம் வேலை செய்த்து..பிடிக்காமல் பைக்கில் ஊரெல்லாம் சுற்றி ஒரு மலையிடம் படுத்து யோசித்தது எல்லாமும் சொல்லும் வரை எனக்குப் பிடித்திருந்த்து..தேடல் வலி எனக்கும் தெரியுமென்பதால். அப்புறம் தான்..... திடேரென தன் கழுத்திலிருந்த் ருத்ராட்ச மாலை கழற்றி என் கையில் கொடுத்து கண் மூடச்சொன்னபோது.. ‘சரி பார்ப்போமே’ என்றே ஒத்துழைத்தேன். சில நிமிடங்களில் what happened எனும் கேள்விக்கு என் சத்தியமான விடையான nothing என்றவுடன் ..You are not peaceful meditate more என அந்த “திரு” வாய் சொன்னபோதும்.. சும்மாயிருந்தேன். அதெல்லாம் வயதுக்கெல்லாம் நான் மரியாதை தந்திருந்த காலம். Why don’t you come for the seven day program..எனும் அழைப்பிற்கு மையமாய் சிரித்து விட்டு வெளிவந்தால், கூடவே அந்த இளைஞன்..”ட்ரை பண்ணிப் பாருங்க” என, ‘ உனக்கேம்ப்பா என் ஆத்மா உயரணும்னு ஆசை. என்றதும் அவன் சொன்ன பதில்== சார் நீங்க இதை experience பண்ணிட்டு உங்க ஷோவுல சொன்னா நிறைய பேருக்கு பலன் இருக்குமில்லே.. பாண்டே நிகழ்ச்சியில் என்னைத் தெரியாது என்று சொன்னது ஒருவேளை மறதியாகவும் இருக்கலாம்.. நான் கூட நிறைய போலிகளைப் பார்த்திருக்கிறேன் அதில் பலர் பெயர் நினைவில் இல்லை. இவன் போல் பெரிய அளவில் பொய்மை பரப்புவோர்தான் நினைவில் உள்ளது- கோபத்துடன், திருடியே பேசுபவன் மட்டுமல்ல, தீமையானவன் என்பதாலேயே இவன் மீது என் கோபம். https://www.youtube.com/watch?v=V3SHyl8piQc&feature=share at 9/06/2016 07:17:00 PM 1 comments Older Posts Home View My Stats ஆங்கிலப் பதிவு Dr.Rudhran's blog a recent interview 3 years ago நான், ருத்ரன் Dr.Rudhran நான் சென்னையின் தமிழன். விரும்பி ஈடுபடுவதும், வருமானம் ஈட்டுவதுமான‌ துறைகள்‍ மனநல மருத்துவம் மற்றும் ஓவியம். எழுத்தும் பேச்சும் என்னை எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றன பகிர்ந்துகொள்ள முகவரி- dr.rudhran@gmail.com View my complete profile இதையும் படித்துப்பாருங்கள் அழியாச் சுடர்கள் வினவு இதுவரை ▼ 2020 (1) ▼ March (1) காத்திருத்தலில் பதினான்கு நாட்கள் ► 2019 (2) ► November (1) ► August (1) ► 2018 (3) ► August (1) ► July (2) ► 2016 (3) ► September (1) ► July (1) ► May (1) ► 2015 (2) ► April (1) ► January (1) ► 2014 (9) ► October (2) ► September (3) ► July (2) ► February (2) ► 2013 (2) ► December (1) ► August (1) ► 2012 (3) ► October (1) ► March (1) ► January (1) ► 2011 (14) ► November (1) ► October (1) ► September (1) ► August (2) ► June (1) ► May (4) ► April (1) ► February (1) ► January (2) ► 2010 (71) ► December (5) ► November (1) ► October (5) ► September (3) ► July (3) ► June (3) ► May (7) ► April (11) ► March (12) ► February (7) ► January (14) ► 2009 (60) ► December (31) ► November (9) ► July (3) ► June (3) ► May (5) ► April (2) ► March (6) ► February (1) உரைகள் ஒலிப்பதிவு பதிவு அறிவிக்க Posts Atom Posts All Comments Atom All Comments தொடர்ந்து பார்ப்பவர்கள் நம்முடன் பின்னோட்டங்களுக்கு உதவ உலகின் மீதியில் <!- start counter code --> visitor counter <!- end counter code --> (c) Copyright ருத்ரனின் பார்வை. Blogger Templates created by Deluxe Templates. Wordpress designed by New WordPress Themes. Powered by Blogger.
வில்லியம் பிரைடன் (William Brydon; 10 அக்டோபர் 1811 – 20 மார்ச் 1873) முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போரின் போது பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் இராணுவத்தில் பணியாற்றிய ஓர் ஆங்கிலேய உதவி மருத்துவர் ஆவார். 1842 ஆம் ஆண்டில் காபூலில் நடந்த போரின் போது போரில் பங்கேற்ற 4,500 இராணுவ வீரர்களில் இவர் மட்டுமே தப்பி ஜலாலாபாத் நகரை தனியனாக வந்தடைந்தவர் என்பதற்காக இவர் அறியப்படுகிறார். வில்லியம் பிரைடன் William Brydon பிறப்பு அக்டோபர் 10, 1811(1811-10-10) இறப்பு 20 மார்ச்சு 1873(1873-03-20) (அகவை 61) பிறந்த இடம் இலண்டன், இங்கிலாந்து இறந்த இடம் நிக், இசுக்கொட்லாந்து சார்பு ஐக்கிய இராச்சியம் தரம் உதவி மருத்துவர் அலகு வங்காள இராணுவம் சமர்/போர்கள் முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போர், இரண்டாம் ஆங்கிலேய-பர்மியப் போர், சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 விருதுகள் Companion of the Order of the Bath பொருளடக்கம் 1 ஆரம்ப வாழ்க்கை 2 தாக்குதல் 3 தாக்குதலுக்குப் பின்னர் 4 உசாத்துணைகள் 5 மேற்கோள்கள் 6 வெளி இணைப்புகள் ஆரம்ப வாழ்க்கைதொகு பிரைடன் இசுக்காட்டியக் குடும்பம் ஒன்றில் இங்கிலாந்தில் பிறந்தார். இவர் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி, எடின்பரோ பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மருத்துவப் படிப்பில் பட்டம் பெற்றார். தாக்குதல்தொகு முதன்மைக் கட்டுரை: முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போர் காபூலில் இரண்டு பிரித்தானிய இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பிரித்தானிய இராணுவம் அங்கிருந்து 1842 சனவரியில் பின்வாங்கத் தொடங்கியது. அருகிலுள்ள பிரித்தானியப் படைப்பிரிவு 90 மைல் (140 கிமீ) தொலைவில் உள்ள ஜலாலாபாத்தில் இருந்தது, இராணுவம் மலைப்பாதைகள் வழியாகப் பின்வாங்க வேண்டும். இதற்கு சனவரி மாதப் பனி அவர்களுக்கு இடையூறாக இருந்தது. மேஜர்-ஜெனரல் வில்லியம் ஜார்ஜ் கீத் எல்பின்சுட்டனின் தலைமையின் கீழ் 4,500 பிரித்தானிய, இந்திய வீரர்களுடன் 12,000 பொதுமக்களும் (இராணுவத்திற்கு சேவை செய்பவர்கள், அவர்களின் குடும்பத்தினர்) அவர்களுக்கு பாதுகாப்பான பாதை வழங்கப்பட்டது என்ற புரிதலின் பேரில் 1842 சனவரி 6 ஆம் நாள் ஜலாலாபாத்திற்கு புறப்பட்டனர். ஆப்கானிய பழங்குடியினர் அவர்களைத் தடுத்து அடுத்த ஏழு நாட்களில் அவர்களைத் தாக்கத் தொடங்கினர். காண்டமாக் இறுதிச் சமர், ஓவியம்: வில்லியம் பார்ன்சு உவோலன் இறுதிச் சமர் 1842 சனவரி 13 காலை காண்டமாக் என்ற ஊரில் பனியில் இடம்பெற்றது. இருபது அதிகாரிகளும் நாற்பத்தைந்து பிரித்தானிய வீரரும், தாங்களை ஒரு மலையடிவாரத்தில் சூழப்பட்டிருப்பதைக் கண்டனர். கேப்டன் சோட்டர், மேலும் எட்டுப் பேர் ஆப்கானியர்களால் சிறைப்பிடிக்கப்பட்டனர். மீதமுள்ளவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் அல்லது வெட்டப்பட்டனர். காண்டமாக் இறுதிச் சமருக்கு முன்னர் முக்கிய படைப்பிரிவிலில் இருந்து பன்னிரண்டு அதிகாரிகளில் மருத்துவர் பிரைடனும் ஒருவர். இந்த சிறிய குழு புத்தேகாபாதிற்கு சென்றது, ஆனால் ஆறு பேர் தப்பித்தபோது பாதி பேர் அங்கேயே கொல்லப்பட்டனர். இவர்கள் கொன்டு வந்திருந்த குதிரைகளும் கொல்லப்பட்டதால், பிரைடனைத் தவிர மற்ற அனைவரும் ஒவ்வொருவராக சாலையில் கொல்லப்பட்டனர்.[1] 1842 சனவரி 13 பிற்பகலில், ஜலாலாபாதில் உள்ள பிரித்தானியப் படையினர் நகர எல்லையில் ஒரு உருவம் குதிரையில் வருவதைக் கண்டனர். மருத்துவர் பிரைடனின் மண்டை ஓட்டின் ஒரு பகுதி வாளால் வெட்டப்பட்டிருந்தது, மேலும் அவர் கடுமையான குளிர்ந்த காலநிலையை எதிர்த்துப் போராடுவதற்காக "பிளாக்வுட் இதழின்" பக்கங்களை தனது தொப்பியில் அடைத்து வந்திருந்ததால் உயிர் தப்பினார்.[2] மரு. பிரைடன் தனியனாக ஜலாலாபாத் அடைந்தார். இச்சமரில் பிரைடன் மட்டுமே உயிர் தப்பியதாக நம்பப்பட்டாலும்,[3] உண்மையில், 115 பேர் (படைகள், மற்றும் குடும்பத்தினர்) கைது செய்யப்பட்டௌ போர்க்கைதிகளாக வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.[4] இவர்களில் சர் ராபர்ட் சேல் என்பவரின் மனைவி "லேடி சேல்" என்பவரும் ஒருவர். பிரைடனின் அறிக்கையின் படி, பேனசு என்ற கிரேக்க வணிகரும் உயிர் தப்பி இவருடன் சென்றிருக்கிறார், ஆனால் அவர் இரன்டு நாட்களின் பின்னரே ஜலாலாபாத் அடைந்து அடுத்த நாள் இறந்து விட்டார். இவர்களை விட சில இந்திய சிப்பாய்கள் கால்நடையாக அடுத்தடுத்த வாரங்களில் சலாலாபாத் சென்ரடைந்தார்கள். அவிதார் சீதாராம் என்ற சிப்பாய் 21 மாதங்கள் ஆப்கானியருக்கு அடிமையாக இருந்து அங்கிருந்து தப்பி தில்லி வந்து சேர்ந்தார்.[5] காபூல் பின்னர் சர் ஜார்ஜ் பொலொக் என்பவரின் இராணுவத்தினரால் கைப்பற்ரப்பட்ட போது ஏறத்தாழ 2,000 சிப்பாய்களும் மேலும் சில பொதுமக்களும் காபூலில் கண்டுபிடிக்கப்பட்டு, அழைத்து வரப்பட்டனர்.[6] தாக்குதலுக்குப் பின்னர்தொகு 1852 இல் பிரைடன் இரண்டாம் ஆங்கிலேய-பர்மியப் போரில் பங்குபற்றினார். இதன் போது ரங்கூன் நகரம் கைப்பற்றப்பட்டது.[7] 1857 சிப்பாய்க் கிளர்ச்சியின் போது, பிரைடன் இலக்னோவில் வங்கால இராணுவத்தின் மருத்துவராகப் பணியாற்றினார். இவரது மனைவி, பிள்ளைகளுடன் இலக்னோ முற்றுகையின் போது (சூன் - நவம்பர் 1957) பெருத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.[8] இவரது அனுபவங்களை இவரது மனைவி கொலீனா மாக்சுவெல் பிரைடன் நூலாக எழுதி வெளியிட்டார். பிரைடன் 1873 மார்ச் 20 இல் இசுக்காட்லாந்து, நிக் என்ர ஊரில் காலமானார்.[7][9] உசாத்துணைகள்தொகு Claire E. J. Herrick, "Brydon, William (1811–1873)", Oxford Dictionary of National Biography, Oxford University Press, September 2004; online edn, May 2006. மேற்கோள்கள்தொகு ↑ Robert Wilkinson-Latham, page 11 "North-West Frontier 1837–1947" ISBN 0-85045-275-9 ↑ "Article in theaustralian.news.com". மூல முகவரியிலிருந்து 14 July 2006 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 24 August 2006. ↑ "Transcripts from CNN". 7 February 2001. http://transcripts.cnn.com/TRANSCRIPTS/0109/27/se.50.html. பார்த்த நாள்: 24 August 2006. ↑ Linda Colley, page 350 "Captives – Britain, Empire and the World 1600–1850" ISBN 0-7126-6528-5 ↑ Sita Ram pages 119–128 "From Sepoy to Subedar", ISBN 0-333-45672-6 ↑ Dalrymple, William. Return of a King. The Battle for Afghanistan. பக். 387. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4088-1830-5. ↑ 7.0 7.1 Obituary, 14 May (1932). "Brydon's daughter, Mrs Walter Scott". Irish Times. ↑ "No. 22201". இலண்டன் கசெட். 16 November 1858. p. 4855. ↑ Heroes ... and Others, Eric H Malcolm, Cromarty History Society, 2003, ISBN 978-1-898416-74-6 வெளி இணைப்புகள்தொகு An article about William Brydon's report of the massacre "The first Anglo-Afghan War : Dr Brydon's report of the British defeat". மூல முகவரியிலிருந்து 11 August 2014 அன்று பரணிடப்பட்டது. Elizabeth Butler (Lady Butler) The Remnants of an Army 1879, Henry Tate Collection Peter McLoughlin. "William Brydon – A Lecture to the History Group". மூல முகவரியிலிருந்து 26 July 2011 அன்று பரணிடப்பட்டது. "https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_பிரைடன்&oldid=2912176" இருந்து மீள்விக்கப்பட்டது
CLICK HERE... Must Watch - Motivational Words - Inspirational Quotes *வாழ்வின் தன்னம்பிக்கைகான மந்திர வரிகள் Tamil Showing posts with label 14 loga. Show all posts Showing posts with label 14 loga. Show all posts Friday, 13 April 2018 What is the current age of brahma ? Hindus Should know it right? What is the current age of brahma ? Param (paramaathma / Narayan) created brahma. Brahma has crossed 50yrs. He is on his 1st day of his 51st year. Each day time of brahma, allows 14 manu kings to rule the worlds. Each Manu king rules 71 chatur yuga. (One chatur yuga extends to the period of 43 lakh 20 thousand years). Hence, each Manu king rules 30 crore 67 lakh 20 thousand years. After each manu completes his rule for 71 Chatur Yuga period, Lord Brahma immerse the Earth (bhu Loga) for a period 17 lakh 28 thousand years to regenerate before Next Manu takes over his rule from Previous Manu King Since the Human Community got created by Manu, in English they say Human as "Man", in Tamil they say "Manidhan", and in Hindi they say "Manushya". All Sounds same. So much Similarity. So Accepting the Humans are comes from Naked Idiot called Adam is foolish and shameful. Its shame to say our ancestor is Adam who is Naked and Idiot. We are Proud Hindu and everyone in this world came from "Manu" who are extremely powerful to rule the entire world and create a great Human community. On brahma's 1st day in his 51st year: So far, out of 14 Manu king, 6 Manu king have already completed their rule. Now, 7th Manu king is ruling his tenure. His name is : Vaivasvathan. 7th Manu king have already completed 27 out of 71 chatur yuga so far. Currently, 7th Manu is ruling his 28th chatur yuga. Chatur yuga includes sathya yuga, thredha yuga, dwaapara yuga, kali yuga. Currently, 7th Manu has completed sathya, thredha, dwaapara yuga in his 28th chatur yuga. Currently, he is ruling kali yuga in his 28th chatur yuga. As per modern english calendar, kali yuga started by 3102 BC. Around 3300 BC, paramathmaa (Narayan) himself did vibhava avatar as Lord Sri Krishna in Mathura. Archeological research found that 3300 BC till 1700 BC held the best indus civilization around sindhu river. If highest civil conduct is found just around sindhu river itself, imagine the wealth, power and hindu civilization thru'out india. By 2018 AD, kali yuga so far completed 5119 years. Considering kali yuga period of 4 lakh 32 thousand years, we still have 4 lakh 26 thousand 8 hundred and 81 years left in KaliYuga. So, if you felt kali yuga at its peak, answer is "It has just started". 😊 One year in this world, completes 1 day in swarga loga. All Devas who were appointed by Lord Brahma resides in Swarga Loga and administers the Nature under the rule book of Veda, by making planets moved in specific direction, to stay in border for ocean, raining on correct seasons, etc., Above our earth, is bhuva loga (stars and sun). Above bhuva loga is swarga Loga. Hence it takes time to complete a day, when earth completes an year. Devas in swarga loga ends their tenure after 100 years of their life time. They do have finite life. Based on good deeds, any soul can reach makara loga, jana loga or thapo loga which are above swarga loga. Based on bad deeds or mistakes, any soul in these earth (Bhu Loga), makara loga, jana loga or thapo loga, devas may come back and born in this lower world called earth (bhu Loga). For devas, it is a shame to reborn in earth. Above thapo loga, is sathya loga. In sathya loga, lord brahma resides. When all 14 Manu kings completes their ruling, brahma complete his day time. Brahma goes to sleep during night, which is as long as the day time. When Brahma goes to sleep, he destroys bhu (earth), bhuva, swarga loga. Also he destroys all 7 loga below bhu loga. But, He don't destroy his own sathya loga, and also makara loga, jana loga or thapo loga. During this time when Brahma Sleeps, Millions of soul (jeevaathma) which is yet to attain moksha (vaikundam) and lived materialistic life again and again after birth and rebirth, reaches paramaathmaa's heart to reside. When we sleep, we don't know what we are doing in sleep? With same state(condition), the millions of soul, stays in paramaathmaa but with ignorance of their presence or paramaathma presence. Once brahma wakes up, he regenerates bhu (earth), bhuva, swarga loga and also regenerates all 7 loga below bhu loga. Since millions of jeevaathma stays in paramaathma due to ignorance, this allows brahma to let them born again in this world either as plant, insect, bird, animal or Human etc., He won't leave, until a soul think about paramaathma (narayan) and devote his life to reach him thru bhakti (love to god). Otherwise, rebirth continues ever. Birth and Death keeps cycling till attaining moksha. If we are reading this, it means, we have not attained moksha yet. It also tell, how many birth so far we would have taken considering brahma himself has crossed 50yrs of his tenure. 😊 Brahma is also not ready to give up his task as it is his Duty given by Lord Narayana. We are also giving best fight to achieve rebirth again and again than attaining moksha. Interested to Read More? Click Here -> Why Country Name should be INDIA. TIME to Change Country Name to BHARAT.. Lets understand.. Posted by Premkumar M at 10:04 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: 14 loga, 14 loka, 14 lokha, age, brahma, current manu, english, hindu, manu Older Posts Home Subscribe to: Posts (Atom) CLICK HERE To Revive Yourself with - Magical Thoughts Magical Thoughts Search here... Read in your Language TOPICS ▼ 2021 (61) ▼ November (9) திருக்கோவிலூர் த்ரிவிக்ரம பெருமாளை தரிசிக்கலாம்...... What is Sanathana? Do we have an example for Sanat... இரவு தூங்கும் முன் என்ன செய்ய வேண்டும், என்ன சொல்... த்ரிவிக்ரம அவதாரம் நமக்கு நேராக நடப்பது போலவே, நமக... மனிதனாக பிறந்த நாம் செய்ய வேண்டியது என்ன? என்று உப... மயிலாடுதுறையின் பெருமை. கோவில் சன்னதி மூடி இருந்தத... பல ரூபத்தில், பல வண்ணத்தில் பகவான் வந்தாலும், அவரை... 8 Interesting Question and Answer - One must know,... ஒரே பரமாத்மா தான், உலகமாகவும், பல தேவதைகள், பல சம... ► October (8) ► September (9) ► August (2) ► July (5) ► June (4) ► May (9) ► April (2) ► March (2) ► February (4) ► January (7) ► 2020 (154) ► December (19) ► November (7) ► October (8) ► September (9) ► August (10) ► July (8) ► June (15) ► May (16) ► April (18) ► March (20) ► February (12) ► January (12) ► 2019 (95) ► December (5) ► November (7) ► October (6) ► September (10) ► August (9) ► July (12) ► June (13) ► May (7) ► April (6) ► March (8) ► February (6) ► January (6) ► 2018 (90) ► December (7) ► November (6) ► October (7) ► September (5) ► August (4) ► July (3) ► June (14) ► May (8) ► April (19) ► March (3) ► February (10) ► January (4) ► 2017 (67) ► December (27) ► November (10) ► October (15) ► September (3) ► April (6) ► March (3) ► February (1) ► January (2) About Me Premkumar M View my complete profile Total Pageviews Labels தமிழன் (60) english (57) பாசுரம் (44) வால்மீகி (35) அர்த்தம் (34) ராமாயணம் (29) ஹிந்துக்கள் (21) Mahabharata (19) என்ன (16) மஹாபாரத (16) Hindus (15) hindu (14) ஏன் (14) சந்தியா (14) ரிஷி (13) meaning (12) சிந்தனைக்கு (12) வேதம் (12) பெரியாழ்வார் (11) ராமபிரான் (11) வந்தனம் (11) பகவான் (10) சீதை (8) ஹிந்து (8) Why (7) dharma (7) krishna (7) எப்படி (7) பரமாத்மா (7) பெருமாள் (7) மதுரை (7) யார் (7) ராமானுஜர் (7) ஹனுமான் (7) Who (6) god (6) story (6) valmiki (6) கடவுள் (6) கோபம் (6) தமிழ் (6) தர்மம் (6) நம்மாழ்வார் (6) பரம்பரை (6) பெருமை (6) Rishi (5) Sita (5) sandhya vandanam (5) ஆழ்வார் (5) காரணம் (5) கிருஷ்ணர் (5) கேள்வி (5) சமயத்தில் (5) சோகம் (5) ஜாதி (5) ஞானி (5) திருமங்கையாழ்வார் (5) நாராயணன் (5) பக்தி (5) மந்திரம் (5) மனிதன் (5) ராவணன் (5) ஸ்லோகம் (5) Ramayan (4) difference (4) அன்பு (4) என்றால் என்ன (4) ஏசு (4) கர்ம யோகம் (4) கோத்திரம் (4) சரித்திரம் (4) திருமங்கை ஆழ்வார் (4) திருமலை (4) தெய்வம் (4) பொருள் (4) ப்ரம்மா (4) மொழி (4) மோக்ஷம் (4) ரங்கநாதர் (4) ராம (4) ராமர் (4) விளக்கம் (4) India (3) Lord (3) Period (3) indians (3) muslim (3) saranagati (3) understand (3) what (3) அக்னி பிரவேசம் (3) அத்வைதம் (3) அர்த்தத்துடன் (3) அறம் (3) அலசல் (3) அவதாரம் (3) இன்பம் (3) என்றால் (3) ஓம் (3) காயத்ரி (3) கிருஷ்ண (3) கூடலழகர் (3) கோவில் (3) சத்தியம் (3) சந்தியா வந்தனம் (3) சரணாகதி (3) தூக்கம் (3) த்வைதம் (3) நீர் (3) பற்றி (3) பாபம் (3) பிராணாயாமம் (3) பிராம்மணர்கள் (3) பூஜை (3) பொறுமை (3) ப்ருகு (3) மனைவி (3) ராமன் (3) வேண்டும் (3) BHARAT (2) Bangladesh (2) Boundary (2) JesusChrist (2) Luke (2) Matthew (2) Nepal (2) age (2) brahmam (2) brahmin (2) brammam (2) creation (2) explain (2) hanuman (2) history (2) jesus (2) madra (2) maya (2) means (2) narayana (2) pakistan (2) person (2) qualities (2) shri (2) sindhu (2) tamil (2) varna (2) veg (2) woman (2) அடிமை (2) அனந்தாழ்வார் (2) ஆண் (2) ஆதி சங்கரர் (2) ஆத்மா (2) ஆன்மீக பூமி (2) ஆயுள் (2) ஆழ்வார்கள் (2) இந்தியா (2) இருக்கிறார் (2) இறைவன் (2) இல்லை (2) உடல் (2) உண்டா (2) உபதேசம் (2) உறவு (2) எச்சில் (2) எதற்கு (2) எளிதான (2) ஏற்பட (2) கடவுளை (2) கணவன் (2) கண்ணன் (2) கதை (2) கர்மா (2) காலம் (2) கிருஷ்ணன் (2) குணங்கள் (2) குருவின் (2) குலதெய்வம் (2) குழந்தை (2) குழந்தைகள் (2) குழந்தையும் (2) கூடாது (2) கூரத்தாழ்வார் (2) கௌசல்யா (2) சந்தஸ் (2) சனாதன (2) சமஸ்கரித (2) சம்பவம் (2) சாஸ்திரம் (2) சிலை (2) செய்ய வேண்டும் (2) சேர்க்கை (2) சொல் (2) சொல்கிறது (2) ஞான யோகம் (2) தலை (2) தவறு (2) தியானம் (2) திருக்கண்ணமங்கை (2) திருப்பதி (2) திருமொழி (2) திருவாய்மொழி (2) திலகம் (2) துக்கம் (2) தெய்வ (2) தெய்வ சாந்நித்யம் (2) தெய்வத்திடம் (2) தெய்வபக்தி (2) நமோ (2) நாரதர் (2) நாராயணா (2) நிலம் (2) நெற்றியில் (2) பக்தி யோகம் (2) பரதன் (2) பரம் (2) பரிக்ஷித் (2) பல்லாண்டு (2) பாசம் (2) பாரத (2) பார்கவ (2) பிராம்மணன் (2) பீஷ்மர் (2) பூணூல் (2) பெண்ணுக்கு (2) பேயாழ்வார் (2) பொய் (2) மந்திரங்கள் (2) மனித (2) மனிதர்கள் (2) மரண (2) மரணம் (2) மரியாதை (2) மஹாலக்ஷ்மி (2) முன்னேற்றம் (2) முருகன் (2) யோகம் (2) லக்ஷ்மணன் (2) வயது (2) வள்ளுவர் (2) வழி (2) விரதம் (2) வீடு (2) வைகுண்டம் (2) ஸ்ரீ கிருஷ்ணர் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்ரீவத்ஸ கோத்திரம் (2) 100 (1) 100 years (1) 12 நாள் (1) 12 மாதங்கள் (1) 14 loga (1) 14 loka (1) 14 lokha (1) 14 மனு (1) 16 கலை (1) 1857 (1) 1947 (1) 4 kind (1) 4000 திவ்ய பிரபந்தத்தில் (1) 5 (1) 6 (1) 6 meaning (1) 64 கலைகள் (1) Abraham (1) AdiSesha (1) Aditi (1) Afghanistan (1) Assam (1) Bengal (1) Bhutan (1) Bible (1) Bihar (1) Bilva (1) CHANGE (1) Christ (1) Death (1) Gothra (1) Haryana (1) Homo-erectus (1) Indus Valley Civilization (1) Jambhavan (1) Jammu (1) Jamshedpur (1) Karnataka (1) Muruga (1) NAME (1) Namaskar (1) Nonveg (1) North (1) Pariseshanam (1) Portuguese (1) Rajasthan (1) Samyag (1) Seseshadri (1) Srivathsa (1) Srivatsa (1) TWISTED (1) Taimur (1) Take (1) Tatanagar (1) Tirumala (1) Tirupati (1) Tulasi (1) Uttar Pradesh (1) Vamsa (1) Vasco da gama (1) West Bengal (1) Which (1) Zamorin (1) anga (1) apaupa (1) association (1) bad (1) behaviour (1) best (1) bhaja govindam (1) bhargavi (1) bhava (1) bhrigu (1) brahma (1) brahman (1) brahmana (1) brahmins (1) caste (1) chalisa (1) chris (1) christian (1) christians (1) community (1) cruel (1) culture (1) current manu (1) decision (1) dependency (1) dependent (1) devo (1) dhandaka (1) dhivya (1) dithi (1) diti (1) doing (1) during (1) dynasty (1) earth (1) exclusive nature (1) exist (1) fake (1) ganga (1) gods (1) good (1) great (1) greece (1) greek (1) gujarat (1) gyani (1) himalaya (1) hindu gods (1) hospitality (1) inclusive nature (1) indian culture (1) indos (1) iran (1) islam (1) jews (1) jillika (1) joint family (1) joseph (1) kashmir (1) kekeya (1) kerala (1) king (1) kisina (1) know (1) krish (1) leader (1) length (1) luz church (1) madhya pradesh (1) maharastra (1) mahatma (1) man (1) manu (1) milk (1) mokka (1) namaskaram (1) neanderthal (1) new (1) no meat (1) non veg (1) outsider (1) outsiders (1) parampara (1) paundra (1) people (1) pisasa (1) pithru (1) pleasant (1) pooja (1) pralaya (1) prayer (1) pretha (1) proud (1) punjab (1) purascharana (1) purusha (1) ramayana (1) rare (1) real (1) right (1) rithagum (1) river (1) sanathana (1) sapiens (1) sarangapani (1) sastra (1) sathyam (1) seetha (1) self introduction (1) shudra (1) south (1) sprushya (1) sri (1) srimushnam (1) sudra (1) suhma (1) sukta (1) swamy (1) teacher (1) temple (1) thirupathi (1) to live (1) vahlika (1) vanga (1) varaha (1) view (1) vilva (1) vishnu (1) wasting (1) who is guru (1) wrong (1) yadav (1) yadava (1) yehudi (1) जाम्बवंत (1) जाम्बवन्त (1) भज गोविन्दं (1) शरणागति (1) அ உ ம (1) அகத்திய (1) அகலகில்லேன் (1) அங்க தேசம் (1) அசாம் (1) அடிப்படை (1) அடியேன் (1) அடைய வழி (1) அணிகிறார்கள் (1) அணிய (1) அணியாமல் (1) அணுகிரஹம் (1) அணையா விளக்கு (1) அதமன் (1) அதமாதமன் (1) அதர்ம (1) அதர்மமா (1) அதிதி (1) அத்தி (1) அத்தியூரான் (1) அத்திவரதர் (1) அத்வைத (1) அத்வைத உபதேசம் (1) அந்தர்யாமி (1) அன்னதானம் (1) அன்பே சிவம் (1) அப உப ஸ்புருஷ்ய (1) அபய ஹஸ்தம் (1) அபர காரியம் (1) அபானன் (1) அபிவாதயே (1) அபேதமாக (1) அமர்ந்து (1) அமைய (1) அயோக்கியன் (1) அரச மர இலை (1) அரசர்கள் (1) அருள் (1) அருள் இல்லார்க்கு (1) அர்க்கியம் (1) அர்க்யம் (1) அர்ச்ச (1) அர்ச்ச அவதாரத்தில் (1) அர்ச்சகர் (1) அர்ச்சனை (1) அர்த்தங்கள் (1) அர்த்தம் என்ன (1) அறநிலைய (1) அறிவியலில் (1) அறிவுரை (1) அறிவுரையும் (1) அறிவே சிவம் (1) அற்புதமான பிரார்த்தனை (1) அலகனந்தா (1) அலங்கெழு (1) அலர்மேல் மங்கை (1) அலாவுதீன் கில்ஜி (1) அல்லது (1) அளவிடமுடியாதவர் (1) அழகர் கோவில் (1) அழிந்தே (1) அழிவு (1) அவசியம் (1) அவதாரங்கள் (1) அவமானம் (1) அவிட்டம் (1) அஷ்டபுஜ (1) அஷ்டாங்க (1) அஸ்ரத்தை (1) ஆகாதேனினும் முயற்சி (1) ஆகாமி (1) ஆகாயம் (1) ஆங்கிலம் (1) ஆசைக்கு (1) ஆசைப்பட்டார் (1) ஆஞ்சநேயர் (1) ஆஞ்சனேயர் (1) ஆதிசேஷன் (1) ஆத்ம ஜோதி (1) ஆனந்தம் (1) ஆன்மீக (1) ஆபாசம் (1) ஆபிரகாம் (1) ஆப்கானிஸ்தான் (1) ஆய கலைகள் (1) ஆயன் (1) ஆயுளும் (1) ஆரோக்கியம் (1) ஆர்வம் (1) ஆறு (1) ஆழ்வார் நிலை (1) ஆவணி (1) ஆவி (1) ஆஸ்திக்கு (1) இசைந்த அரவமும் (1) இடத்திலே (1) இதயம் (1) இத்தாலி (1) இந்திய (1) இன்பத்தை (1) இன்றும் (1) இயங்க (1) இரு (1) இருப்பார் (1) இறந்தவர்கள் (1) இறை (1) இறை உணர்வு (1) இல்லற தர்மம் (1) இல்லையா (1) இழந்தது.என்ன (1) இஷ்டதெய்வம் (1) இஸ்லாம் (1) உடம்பில் (1) உணவில் (1) உண்மை என்ன (1) உண்மையான (1) உதானன் (1) உத்தமன் (1) உத்தமமான (1) உத்தமர்கள் (1) உத்தராயணம் (1) உத்திர பிரதேசம் (1) உபநிஷத் (1) உபாகர்மா (1) உயர்ந்தது (1) உருக்கம் (1) உருவம் (1) உருவான (1) உரையாடல் (1) உலக விஷய (1) உலகம் (1) உலகம் உண்ட பெருவாயா (1) உலகம் எப்படி இருக்கிறது (1) உலகம் எப்படி உருவானது (1) உலகளந்த (1) உலகில் (1) ஊர் (1) எதற்காக (1) எது (1) என்ன வழி? எளிதான (1) என்ன? (1) எம்மனா (1) எல்லா (1) எல்லாம்.ஈசன்.செயல் (1) எல்லை (1) எவ்வுள் (1) ஏகம் (1) ஏகலைவனும் (1) ஏகாதேசி (1) ஏன் மதம் (1) ஏறும் (1) ஏற்பாடு (1) ஏற்றினை (1) ஏழை (1) ஒட்டிய (1) ஒப்பந்தம் (1) ஒப்பில்லாத (1) ஒப்பு நோக்குதல் (1) ஒரு (1) ஒரே கடவுள் (1) ஒளவை (1) ஒழிய வேண்டும் (1) ஒழுக்க கேடுகள் (1) ஓங்காரம் (1) கங்கே (1) கங்கை (1) கஜினி முகம்மது (1) கடமையை (1) கடலும் (1) கடவுளின் பெயரால் (1) கடவுளுக்கு (1) கடவுளுக்கும் (1) கடவுள் எங்கும் உள்ளார் (1) கடைபிடிக்க (1) கட்டாய கல்வி (1) கட்டுப்படுகிறான் (1) கட்டுப்படுகிறாரா (1) கட்டுப்பாடு (1) கட்டுவது (1) கண்டு (1) கதியேல் (1) கனவு (1) கபாலீஸ்வரர் (1) கயாது (1) கர்த்தா (1) கர்நாடகா (1) கர்மமே (1) கற்பு (1) கலாச்சாரம் (1) கலியுகத்தில் (1) கலியுகம் (1) கல் (1) கல்மாரி (1) கல்லெடுத்து (1) கல்லை (1) களங்கம் (1) காக்கிறது (1) காஞ்சி (1) காஞ்சியில் (1) காணாமல் (1) காதல் (1) காபி (1) காப்பாற்றுவார் (1) காம (1) காமதேனு (1) காமத்தை (1) காமம் (1) காரியம் (1) காற்று (1) காலத்துக்கு (1) காலத்தை (1) காலை (1) காளை (1) கிடக்கும் (1) கிருஹிணி (1) குஜராத் (1) குணத்தில் (1) குணம் (1) குபேரன் (1) கும்பகோணம் (1) குரு பக்தி (1) குருவின் கருணை (1) குறிப்புகள் (1) குளத்தில் (1) குளிக்கும் போது (1) குழந்தைகளுக்கு (1) கூடி வாழ்ந்தால் (1) கூட்டு குடும்பம் (1) கேட்க (1) கேட்காத (1) கேட்ட (1) கை பிடித்து (1) கைகேயி (1) கொடு (1) கொண்டாடும் (1) கொலம்பஸ் (1) கொள்கைகள் (1) கொள்ள (1) கோடி நன்மை (1) கோணாமல் (1) கோதாவரி (1) கோபமும் (1) கோபுரங்களில் (1) கோலத்தில் (1) கோழிக்கோடு (1) கோவிலில் (1) கோவிலுக்கு (1) கோவிலுக்கும் செல் (1) க்ரோத (1) க்ஷத்ரியர்கள் (1) சக்கரப்பொறி (1) சக்தி (1) சஞ்சயன் (1) சட்டை (1) சதிரா (1) சத்யம் (1) சத்யவ்ரதன் (1) சத்யஸ்ய (1) சன்னத (1) சமாதி (1) சமானன் (1) சம்பந்தம் (1) சம்யக் (1) சம்ஸ்க்ரித (1) சயன (1) சரணம் (1) சரியாக (1) சரீரம் (1) சாத்வீகம் (1) சாப்பிட கூடாது (1) சாம (1) சாரங்கபாணி (1) சாலிசா (1) சாஸ்திர ஞானம் (1) சிந்திப்போமே (1) சிரார்த்தம் (1) சிறந்தது (1) சிறு (1) சிலைகள் (1) சிவ (1) சிவ புராணம் (1) சிவன் (1) சீமானுக்கும் (1) சீமான் (1) சுக துக்கங்கள் (1) சுகத்தை (1) சுகம் (1) சுதந்திர (1) சுய பலம் (1) சுயநலம் (1) சுவாரஸ்ய (1) சூத்திரன் (1) சூத்திரர் (1) சூத்திரர்கள் (1) சூரியன் (1) செதுக்க (1) சென்னியோங்கு (1) செய்தாலும் (1) செய்யக்கூடாத (1) செல்ல வேண்டும் (1) செல்லப்பிள்ளை (1) செல்வம் (1) சேவையே (1) சேவையை (1) சொன்ன (1) சொன்ன வண்ணம் (1) சொர்க்கத்தில் (1) சொர்க்கம் (1) சொற்கள் (1) சொற்பொழிவாளர்கள் (1) சொற்பொழிவு (1) சொல்ல வேண்டிய (1) சொல்வதின் (1) சோம்பேறித்தனம் (1) ஜடாயு (1) ஜராசந்தன் (1) ஜாம்பவான் (1) ஜீவ காருண்யம் (1) ஜீவகாருண்யம் (1) ஜீவன் (1) ஜீவாத்மா (1) ஜென்மம் (1) ஜோசப் (1) ஞானம் (1) தகுதி (1) தங்குவாள் (1) தசரதனின் பிள்ளை (1) தசரதர் (1) தடக்கை (1) தட்டில் (1) தண் (1) தண்ட (1) தண்டகாரண்யம் (1) தண்டனை (1) தன்வந்திரி (1) தமிழர்கள் (1) தமிழில் அர்ச்சனை (1) தமிழ் மறை (1) தயங்குகிறார்கள் (1) தரிசனம் (1) தரும் (1) தர்ப்பயாமி (1) தர்மத்தின் (1) தர்மத்தை (1) தர்மமா (1) தற்காப்பு (1) தவறான முடிவு (1) தஷிணாயனம் (1) தாங்கள் (1) தாடை (1) தான (1) தாமஸம் (1) தாயே தந்தை என்றும் (1) தாய் மொழி (1) தாலி (1) தாஸ (1) தாஸோகம் (1) திட்டினால் (1) திதி (1) தினம் (1) திராவிட (1) திரு அஷ்டாக்ஷர (1) திருகுடந்தை (1) திருச்சி (1) திருடிய கதை (1) திருட்டு (1) திருநின்றவூர் (1) திருபுட்குழி (1) திருமண (1) திருமாங்கல்யம் (1) திருவரங்கம் (1) திருவள்ளூர் (1) திருவிடந்தை (1) திருவுக்கும் திருவாகிய (1) திருவேங்கடம் (1) தீ (1) தீய குணம் கொண்ட (1) தீயவர்களிடம் (1) தீருவான் (1) தீர்க்கதரிசி (1) தீர்த்தம் (1) துன்பங்களுக்கும் (1) துன்பங்கள் (1) துன்பத்தை (1) துன்பப்படுகிறார்கள். ஏன்? (1) துரோணரும் (1) துறை (1) துளசி (1) துழாயின் (1) தூக்கத்தில் என்ன நடக்கிறது? ஏன்? (1) தூண்டும் (1) தூது (1) தெய்வ அருள் (1) தெய்வ பலம் (1) தெய்வங்களின் (1) தெய்வங்கள் (1) தெய்வத்தால் (1) தெய்வத்தில் (1) தெய்வமும் (1) தெரிந்து கொள்வோமே (1) தேடுகிறோம் (1) தேரழுந்தூர் (1) தேவி (1) தேவையா (1) தைமூர் (1) தொடர்பை (1) தொண்டே (1) த்ருதராஷ்டிரன் (1) த்விஜன் (1) த்வேஷம் (1) த்வைத (1) நதி (1) நந்தா விளக்கே (1) நன்மைகள் (1) நமக்கும் (1) நமஸ்காரம் (1) நம்பிக்கை (1) நம்புகிறான் (1) நரகத்திற்கு (1) நல்ல (1) நல்லவர்களுக்கு (1) நாடிகள் (1) நாட்டவர்கள் (1) நான்கு (1) நான்கு வர்ணங்கள் (1) நாம் (1) நாரணனே (1) நிச்ருத் (1) நிதானம் (1) நின் (1) நிம்மதி (1) நியமம் (1) நிலைக்கிறது (1) நீ (1) நீங்கள் (1) நீதி (1) நீதிகள் (1) நீளம் (1) நோக்கம் (1) நோய் (1) பகவத்கீதை (1) பக்தன் (1) பக்தியின் (1) பசு (1) பசுவின் (1) பசுவை (1) பச்சைக் கற்பூரம் (1) பஜ கோவிந்தம் (1) பஜகோவிந்தம் (1) பஞ்ச (1) படுக்கையில் (1) படைக்கிறான் (1) பணக்காரன் (1) பதட்டம் (1) பதிவ்ரதை (1) பரத (1) பரப்ரம்மம் (1) பரம (1) பரவாசுதேவனே (1) பரிகாரம் (1) பரிக்ஷித்து (1) பரிசேஷனம் (1) பறவை (1) பல (1) பாகிஸ்தான் (1) பாகீரதி (1) பாசுரங்கள் (1) பாணிக்கிரஹணம் (1) பாணிக்ரஹனம் (1) பாதரேணு (1) பாத்யம் (1) பாரத நாடு (1) பாரத மக்கள் (1) பாரம்பரிய உடை (1) பார்க்க முடியுமா (1) பார்க்கிறார்கள் (1) பால கனக (1) பால் (1) பாவ மன்னிப்பு (1) பிங்களம் (1) பிசாசுகள் (1) பித்ருக்கள் (1) பிரச்சனை (1) பிரம்மா (1) பிரம்மாவின் (1) பிரம்மாவின் வயது (1) பிரவேசிக்க (1) பிராணன் (1) பிராம்மண (1) பிரார்த்தனை (1) பிரார்த்திக்கிறான் (1) பிரேதங்கள் (1) பிரேதம் (1) பிற மதங்கள் (1) பிறக்க (1) பிறந்த (1) பிறப்பது (1) பீஹார் (1) புகுந்தேனே (1) புத்தி (1) புனிதன் (1) புரஸ்சரணம் (1) புராணங்கள் (1) புராணம் (1) புரிந்து (1) புரியுமா (1) புருஷ சூக்தம் (1) புருஷன் (1) புருஷா (1) புலஸ்திய (1) புலஹர் (1) புள்ளையூர்வான் (1) புஷ்கரணி (1) பூடான் (1) பூணல் (1) பூதத்தாழ்வார் (1) பூமி பிராட்டி (1) பூர்வ (1) பெண் குழந்தை (1) பெயர் (1) பெயர் காரணம் (1) பெயர்கள் (1) பெரிய திருமொழி (1) பெரியோர்கள் (1) பெருமாளின் (1) பெருமாளே கதி (1) பெற்றுக் கொள்ள (1) பேச (1) பேத (1) பேதமாக (1) பொய் பேசுவது (1) பொருளாதார (1) பொருள் என்ன (1) போது (1) போதுமா (1) போலிகள் (1) ப்ரக்ருதி (1) ப்ரணவத்தின் (1) ப்ரத்யாஹாரம் (1) ப்ரம்ம முடிச்சு (1) ப்ரம்ம ரிஷி (1) ப்ரம்மத்தை (1) ப்ரம்மம் (1) ப்ரளயங்கள் (1) ப்ராம்மணன் (1) ப்ராம்மணர் (1) ப்ராரப்தம் (1) மகத தேசம் (1) மகாத்மாக்கள் (1) மகான் (1) மகாபாரதம் (1) மகாலட்சுமி (1) மக்களின் (1) மணமகன் (1) மண்ணவர் விதியே (1) மண்ணில் (1) மத (1) மதம்.மாறுவது (1) மத்யபிரதேச (1) மத்யமன் (1) மந்திர ஸித்தி (1) மந்திரம் ஸித்தி (1) மன கவலை (1) மனம் தளர்ச்சி. குழப்பும் (1) மனு சாஸ்திரம் (1) மன்வந்தரம் (1) மறக்க முடியாத (1) மறைக்கப்பட்டு (1) மஹ ரிஷி (1) மஹா பாரத (1) மஹாபாரதத்தில் (1) மாடு (1) மாட்டு இறைச்சி (1) மாத்ஸர்யம் (1) மாயை (1) மாற்றலாமா (1) மாலை (1) மீண்டும் (1) முகம்மது கோரி (1) முகிலை (1) முசுகுந்த சக்கரவர்த்தி (1) முடியாது (1) முண்டகோ (1) முதல்.ஸ்லோகம் (1) முனி (1) முனிவர் (1) முன்னோர் (1) முயற்சிகள் (1) முயல் (1) முளைக்கதிரைக் (1) முழுசி (1) மூக்கு (1) மூன்று (1) மேய்க்க (1) மேற்கு (1) மேல்கோட்டை (1) மோக (1) மௌன (1) ம்லேச்சர்கள் (1) யமுனே (1) யாதவர்கள் (1) யாருக்கு (1) யாரை (1) யோகீ (1) ரசம் (1) ரமணரிடம் (1) ராக்ஷஸன் (1) ராக்ஷஸர்கள் (1) ராஜசம் (1) ராஜஸ்தான் (1) ராஜ்ஜியம் (1) ராம நாமம் (1) ரிதகும் (1) ரிஷி பரம்பரை (1) ரீ ராமர் (1) ருத்ர (1) லக்ஷணங்கள் (1) லக்ஷணம் (1) லீலை (1) லோப (1) லோபம் (1) வங்காள தேசம் (1) வண்டாடிய (1) வர (1) வரதராஜன் (1) வரதரை (1) வரம் (1) வராஹ புராணம் (1) வராஹ பெருமாள் (1) வருவது (1) வர்ண (1) வர்ணம் (1) வளர (1) வளர்ச்சி (1) வழி என்ன (1) வாசுதேவன் (1) வானரத்தின் (1) வானரர்கள் (1) வாலிகர்கள் (1) வாழ (1) வாழ்க்கையில் (1) வாழ்வில் (1) விக்ரக (1) விசிஷ்ட (1) விசிஷ்டாத்வைதம் (1) விடுதலை (1) விட்டு (1) விதத்தில் (1) விதிகளை (1) வித்தியாசம் (1) வித்யாசம் (1) விநாயகர் (1) விபவம் (1) விபூதி (1) விப்ரன் (1) வியானன் (1) விரக்தி (1) விலகுவாள் (1) வில்வ (1) விளக்குகிறார் (1) விளைவிக்கும் (1) விஷ (1) விஷிஷ்ட அத்வைதம் (1) விஷிஷ்டாத்வைத (1) விஷிஷ்டாத்வைதம் (1) விஷ்ணு (1) விஷ்ணு பதி (1) வீணடிக்கப்படுகிறது (1) வெங்கடேச பெருமாள் (1) வெண்ணெய் (1) வெற்பும் (1) வெளி (1) வேங்கடாத்ரி (1) வேதனை (1) வைகுண்டம் புகுவது (1) வைக்காமல் (1) வைராக்கியம் (1) வைவஸ்வத மனு (1) வைஷ்ணவ (1) வைஷ்ணவன் (1) வைஷ்ணவம் (1) வைஸ்யர்கள் (1) வ்யாசரிடம் (1) வ்யுகம் (1) ஸஞ்சிதம் (1) ஸத் சங்கம் (1) ஸனாதன தர்மம் (1) ஸம்தி காலம் (1) ஸூக்ஷ்ம சரீரம் (1) ஸோகம் (1) ஸ்தூல சரீரம் (1) ஸ்ரயதே (1) ஸ்ராவயதி (1) ஸ்ரீ (1) ஸ்ரீ முஷ்ணம் (1) ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை (1) ஸ்ரீ ராமரை (1) ஸ்ரீகிருஷ்ணர் (1) ஸ்ரீநாதி (1) ஸ்ரீமான் (1) ஸ்ரீயதே (1) ஸ்ருதி (1) ஸ்ருனாதி (1) ஸ்ருனோதி (1) ஸ்ருஷ்டி (1) ஹந்தி (1) ஹரிபக்தி (1) ஹரியானா (1) ஹித உபதேசம் (1) ஹிந்தி (1) ஹிந்து மதம் (1) ஹிந்துக்களுக்கு (1) Search Here... Read in your language Featured post Who was Jesus Christ? Who was Joseph? Look at what Matthew and Luke say...!! An Analysis... தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும். Hindus can also read patiently. This analysis is based on historical period and Quotations fro... Popular Posts பூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன?...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும்?. பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது? .....புரிந்து கொள்வோமே பூணூல் ஏன் இடது தோளில் அணிகிறோம்? பூணூல் இடது தோளில் அணிவதை " உபவீதம் " என்று அழைக்கிறோம். தேவர்களுக்கு செய்யும் காரியங்... தெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது ? காரணம் என்ன? தெரிந்து கொள்வோமே ஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள்? ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்... 100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை... அற்புதமான பிரார்த்தனை... 100 வயது வாழ ஒரு சிறு பிரார்த்தனை. மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு? அர்த்தம் தெரிந்து... Hanuman Chalisa with meaning (ஹனுமான் சாலிசா அர்த்தத்துடன்) - Tulasi Das (துளசி தாசர்) தெரிந்து கொள்வோம்... ShreeGuru charana saroja-raja Nija manu mukuru sudhaari | Baranau ragubhara bimala jasu Jo dhaayaku phala chari || श्रीगुरु चरन सरोज... "ஸ்ரீ" என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன? இதன் 6 அர்த்தங்களை அறிந்து கொள்வோம். "புத்தி" உள்ளவனை " புத்திமான் " என்று சொல்கிறோம். "கல்வி" உடையவனை "கல்விமான்" என்று சொல்கிறோம்... திதி, அதிதி என்றால் உண்மையான அர்த்தம் என்ன? தெரிந்து கொள்வோமே ஒரு sanskrit வார்த்தையின் அர்த்தம். அதிதி (Aditi) - "திதி" என்றால் நேரம், தேதியை குறிக்கிறது. "அதிதி" என்றால் கா... ஸ்கந்தம் 6: அத்யாயம் 8 - நாராயண கவசம் (தமிழ் அர்த்தத்துடன்) - ஸ்ரீமத் பாகவதம் (ஸ்ரீ சுக ப்ரம்மம் - பரீக்ஷித் மகாராஜனுக்கு சொன்ன நாராயண கவசம்) நாராயண கவசம் ஸ்கந்தம் 6: அத்யாயம் 8 ப்ருஹஸ்பதி தேவர்களுக்கு குரு. ஒரு சமயம் இந்திரதேவனை பார்க்க சென்ற போது, இந்திரன் தன் சபையில... ஏசு கிறிஸ்து யார்? ஜோசப் யார்? Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... ஏசு ஜோசப் யார்? பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் ... கோவில்கள் எதற்கு? கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது? ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.. "தியானம் செய்வது, ஜபம் செய்வது" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் "ஜபம்&... தூக்கத்தில் என்ன நடக்கிறது? கனவை பற்றி ... ஒரு அலசல் கனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது? என்று சாஸ்திரத்தை அற...
இந்த அவசர உலகில் அன்றாட அலுவல்களுக்கு இடையில் சில அப்பட்டமான உண்மைகளின் பக்கம் நாம் கவனம் செலுத்தாமலே நம்மில் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை விட கண்ணை மூடிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறோம் என்று கூறுவதே பொருத்தமானது. மறுப்புக்கு இடமில்லாத இந்த அடிப்படை உண்மைகளை மறந்து வாழ்வோரும் இவற்றைப்பற்றி சிந்திக்க மறுப்போரும் மன அமைதியை இழப்பதோடு எதிர்காலத்தில் பல பேரிழப்புக்களையும் சந்திக்க உள்ளார்கள். மாறாக இந்த அவசர வாழ்வின் இடையே சற்று நிதானித்து அந்த உண்மைகளுக்கு ஏற்ப சில மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு வாழ்பவர்கள் மன அமைதியைப் பெறுவதோடு எதிர்காலத்தில் மாபெரும் பாக்கியங்களையும் அடைய உள்ளார்கள். இது ஒரு பரீட்சைக்கூடம்! இப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் அதன் குறையில்லா இயக்கமும் அதற்குப் பின் உள்ள பலவும் படைத்தவனைப் பற்றியும் அவனது மாபெரும் திட்டங்களைப் பற்றியும் பறைசாற்றுவதாக உள்ளதை நாம் காண்கிறோம். திருமறையில் இறைவன் கூறுகிறான்: 2:164 .நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்;, மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும், அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன. (அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள். மாறாக முஸ்லிம்களின் கடவுள் என்றோ அல்லது அரபுநாட்டு கடவுள் என்றோ கருதிவிடாதீர்கள்) இவ்வாறு இப்பிரபஞ்சம் முழுவதுமே நமக்காக இயங்கிக்கொண்டிருக்கும் போது நாம் வீணுக்காகப் படைக்கப் பட்டிருப்போமா? இறைவன் கேட்கிறான் பாருங்கள்: 23:115. ''நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?'' இறைவனின் கேள்விக்கான பதிலை சிந்திக்கும்போது இறைத்தூதர்களும் இறைவேதங்களும் நமக்கு எடுத்துச் சொல்வது உண்மை என்று புலப்படும். அந்த உண்மை என்னவெனில் இவ்வுலகை இறைவன் ஒரு பரீட்சைக் கூடமாகப் படைத்துள்ளான் என்பது. இந்தப் பரீட்சைக் கூடத்திற்குள் நாம் அனைவரும் அவரவருக்கு விதிக்கப்பட்ட தவணையில் வந்து போகிறோம். இங்கு இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து செய்யப்படும் செயல்கள் நன்மைகளாகவும் கீழ்படியாமல் மாறாகச் செய்யப்படும் செயல்கள் தீமைகளாகவும் பதிவாகின்றன. இவ்வாறு ஒவ்வொருவருக்கும் நன்மைகள் அல்லது தீமைகள் செய்வதற்கு சுதந்திரமும் வாய்ப்பும் அளிக்கப்படும் இடமே இந்த தற்காலிகப் பரீட்சைக் கூடம்! 67:2. உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். ஒருநாள் இந்த பரீட்சைக்கூடம் இழுத்து மூடப்படும். அதாவது இறைவனின் கட்டளை வந்ததும் இவ்வுலகம் முற்றாக அழிக்கப் படும். அதன் பிறகு மீண்டும் இறைவனிடம் இருந்து கட்டளை வரும்போது விசாரணைக்காக அனைத்து மனிதர்களும் உயிர் கொடுத்து எழுப்பப் படுவார்கள். அதுவே இறுதித்தீர்ப்பு நாள் என்று அறியப்படுகிறது. அன்று புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் பாவிகளுக்கு நரகமும் விதிக்கப்பட உள்ளது. சொர்க்கம் என்பது எப்படி இருக்கும்? அது ஓர் சாந்தியும் சமாதனமுமான இருப்பிடம். அங்கு கவலை, தீமை, பகை, சோர்வு, நோய், முதுமை, பஞ்சம், போன்ற எதற்குமே இடம் இல்லை. திகட்டாத இன்பங்களில் ஊறித் திளைக்கும் இடம் அது.. தோட்டங்களும் பூங்காவனங்களும் மாசற்ற நீரூற்றுகளும் உயர் மாளிகைகளும் சுவைமிக்க கனிகளும் உணவுகளும் பானங்களும் அளவின்றி அனுபவிக்க இறைவன் ஏற்பாடு செய்த இடம்! என்றும் இளமையோடு இருக்கும் இடம்! காரணம் மரணம் என்பது இனி இல்லையல்லவா? 10:9 நிச்சயமாக எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் இறைநம்பிக்கை கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான் இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும். 43:71 பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும் இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன. இன்னும், 'நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!' (என அவர்களிடம் சொல்லப்படும்.) நரகமும் காத்திருக்கிறது சொர்க்கத்தைப் போலவே நரகமும் மறுபுறம் காத்திருக்கிறது. அது இறைவனின் அருட்கொடைகளுக்கு நன்றி மறந்து தான்தோன்றித்தனமாக வாழ்ந்த கொடியோருக்காகவும் இறைவனையும் அவன் தூதர்களையும் வேதங்களையும் நிராகரித்தோருக்காகவும் காத்திருக்கிறது. கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் நடுவே மரணமற்ற வாழ்வும் அகோர பசியும் தாகமும் அதைத்தீர்க்க உணவாக முட்செடிகளும் கொதிநிலை அடைந்த பானங்களும் என்று தொடர் வேதனைகளின் இருப்பிடமாக இருக்கும். நரக வேதனைகள் பற்றி திருக்குர்ஆன் எச்சரிக்கிறது: 78:21 நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக! அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்!...... கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.! 7:41 அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும் அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம். ஆக, நரக வேதனை என்பது தாங்க முடியாதது. அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் நாம் மரணத்திற்கு முன்பாக இறைவனிடம் மன்னிப்பு கோரி திருந்திய வாழ்க்கை வாழவேண்டும். ஆக, இவை இரண்டும்தான் நம்மை எதிர்நோக்கியுள்ள உண்மைகள். எதுவேண்டுமோ அதை தேர்ந்தெடுக்கவும் அதன்படி வாழ்வை அமைத்துக்கொள்ளவும் நமக்கு வாய்ப்புள்ளது ........ மரணம் நம்மை வந்து அடையும் வரை! வாழ்க்கைப் பரீட்சையில் சோதனைகள் சகஜம் அடுத்ததாக நாம் உணரவேண்டியது., இவ்வாழ்க்கை என்பது ஓர் பரீட்சை என்பதால் இதில் நோய் உட்பட பல சோதனைகளும் சகஜமாக வந்து செல்லும் என்பதே! இதை இறைவனே எடுத்துக் கூறுகிறான்: 2:155 'நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!” அவ்வாறு சோதனைகள் வரும்போது நாம் பதறாமல் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். மேற்கூறப்பட்டவாறு வாழ்க்கையின் உண்மை நிலையை மனதில் இருத்தி நம்மை நாமே நிதானப் படுத்திக் கொள்ள வேண்டும். இதோ இறைவனே வழிகாட்டுகிறான்: 2:156-157 '(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.' மேற்படி வசனத்தில் காணப்படும் 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' (அரபியில் இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிஊன்) என்பதுதான் வாழ்வின் மிகப்பெரும் உண்மை. இந்த மந்திரம்தான் அதனை மனமார உச்சரிப்போருக்கு மன அமைதியை தேடித்தரும் மாமருந்து! இந்த மந்திரம் பயன்பட வேண்டுமானால் அது உள்ளடக்கியுள்ள இரண்டு உண்மைகளை நாம் புரிந்து கொண்டு அதில் உறுதி கொள்ளவேண்டும்: 1. கலப்படமற்ற தூய்மையான இறைநம்பிக்கை: இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவன் எவனோ அவனே என் உண்மையான இறைவன். அவன் மட்டுமே நம் வணக்கத்திற்கும் நம் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கவும் நாம் முழுமையாக சார்ந்திருக்கவும் தகுதியானவன். அவனால்லாத எதையும் கடவுள் என்று அழைப்பதோ வணங்குவதோ பெரும் பாவமும் வீணும் ஆகும். 2. மறுமை நம்பிக்கை: வாழ்க்கையின் நோக்கத்தையும் மறுமை வாழ்வையும் மேற்கூறப்பட்டவாறு உறுதியாக நம்புதல். நீங்கள் ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள். வாழ்வில் ஏதாவது விபத்து, பொருள் இழப்பு, உயிருக்குயிரான சொந்த பந்தங்களின் இழப்பு, வியாபாரத்தில் நஷ்டம், அக்கிரமத்துக்கு இரையாகுதல், ..... இப்படி எந்த ஒன்றையும் மனிதன் சந்திப்பது இயல்பு. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மேற்படி உண்மைகளை உணராதவர்கள் நிதானத்தை இழந்து மூர்ச்சையாகி விழுதல், மதுவருந்துதல், தற்கொலை போன்றவற்றுக்கு ஆளாகிறார்கள். ஆனால் இறைநம்பிக்கையாளர்களோ மேற்படி வாசகத்தை பொருளுணர்ந்து ஓதி மறுகணமே சமாதானம் அடைகிறார்கள்! ஆம், இந்தத் தற்காலிக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சையே, இவ்வுலகம் அதற்கான பரீட்சைக் கூடமே இதில் எனக்கு நேர்ந்துள்ள இந்த இழப்பு அதன் ஒரு பாகமே என்று உணரும்போது இழப்பினால் உண்டாகும் விரக்தி உணர்வு நீடிப்பதில்லை. எல்லாம் வல்ல இறைவனே என்னோடு துணை இருக்கிறான் தன்னம்பிக்கை உணர்வும் நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்க வாழ்வு மறுமையில் எனக்குக் காத்திருக்கிறது என்ற எதிர்பார்ப்பும் இறை விசுவாசிகளை சகஜநிலைக்குக் கொண்டுவந்து விடுகிறது. மேலும் நமக்கு ஏற்படும் சோதனையை சாதைனையாக மாற்றும் வழியையும் இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுப்பதைப் பாருங்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “சோதனைக்கு உள்ளான ஒருவர் இறைவன் இட்ட கட்டளைப்படி இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நிச்சயமாக நாம் இறைவனுக்கு உரியவர்கள், அவனிடமே திரும்பிச்செல்ல உள்ளவர்கள்) என்று கூறியபின் இறைவா, நான் படும் துன்பத்திற்கு கூலி வழங்குவாயாக, நான் இழந்ததை விட மேலானதைக் கொண்டு இதற்குப் பகரம் வழங்குவாயாக!” என்று பிரார்த்தித்தால் அவருக்கு இறைவன் மேலானதை வழங்குவான்” (நூல்: முஸ்லிம்) http://quranmalar.blogspot.com/2012/09/blog-post_5347.html இறைவன் அல்லாதவற்றை ஏன் வணங்கக் கூடாது? இடுகையிட்டது Mohamed Kasim நேரம் முற்பகல் 7:40 இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் கருத்துகள் இல்லை: கருத்துரையிடுக புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom) பின்பற்றுபவர்கள் வாடா மலர்கள் திரையுலக தீமைகளில் இருந்து தமிழகத்தைக் காப்போம்! தீண்டத்தகாதவர்கள் திரை ஏறியபோது... மற்ற எல்லா மாநிலங்களை விடவும் நம் தமிழகம் ஒரு விடயத்தில் மிகவும் மிஞ்சி நிற்கிறது. ஆனால் அது பெருமைப... பாலியல் சட்டங்களை மனிதனே இயற்ற முடியுமா? பாலியல் வன்கொடுமைகள் நாட்டில் கொந்தளிப்பை உண்டாகும்போது மக்கள் குற்றவாளிகளை தயவு தாட்சண்யம் பாராமல் பொது இடங்களில் தூக்கில் இடவேண்டும் , க... நாம் ஏன் பிறந்தோம்? நமது வாழ்வு.... நோக்கம் கொண்டதா? நோக்கமற்றதா? இன்று நாம் உயிருடன் இருப்பது எந்த அளவிற்கு உண்மையோ அது போலவே என்றேனும் ஒரு நாள் மரணிப்... திருக்குர்ஆன் நற்செய்தி மலர் நவம்பர் 2021 இதழ் PDF திருக்குர்ஆன் நற்செய்தி மலர் நவம்பர் 2021 பொருளடக்கம்: பெண்ணினத்திற்கு எதிரான ஊடக வஞ்சகம்! -2 நபிகளாருக்கு நிகரான சாதனையாளர் யாருளர் ? - 5 ... இஸ்லாமிய வளர்ச்சி கண்டு பயமேன்? உலக மக்கள் தொகையின் கால் வாசி மக்களால் பின்பற்றப்படும் ஒரு வாழ்வியல் கொள்கை இஸ்லாம். இது இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்... பெண்ணினத்திற்கு எதிரான ஊடக வஞ்சகம்! இஸ்லாம் என்றவுடனேயே அது பெண்களை அடிமைப்படுத்தும் மார்க்கம் என்கின்ற தவறான சித்தரிப்பை ஊடகங்கள் இன்றுவரை இலகுவாகவும் தீவிரமாகவும் செய்து வருக... அவரது சாதனைகளுக்கு நிகராகுமா எதுவும்? அநியாயங்களுக்கு விருதுகள் வழங்குவோரும் ஒத்து ஊதும் ஊடகங்களும்: ஆண்டு தோறும் நாடுகள் தோறும் அற்பமான சாதனைகளை நிகழ்த்தியவர்களுக்குக் கூட அரசு... பிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும் இங்கு எடுத்தோதப் படும் திருக்குர்ஆன் வசனங்களைப் பொறுத்தவரையில் நாம் சில விடயங்களை மனதில் கொள்ளவேண்டும். இறைவேதம் திருக்குர்ஆன் பதினா... இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது? #இஸ்லாம்_என்றால்_என்ன? இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும் . இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும்... காமுகனே கொஞ்சம் நில்! பலவந்தமாக நடத்தப்படுவதோ அல்லது சூழல் காரணமாக நடப்பதோ எந்த வகை கற்பழிப்பாகவோ இருக்கட்டும். ஒரு பெண்ணை முழுமையாக அடையும் வாய்ப்பு உங்களுக்கு... நேற்று மலர்ந்த மலர்கள் ► 2012 (120) ► செப்டம்பர் (27) ► அக்டோபர் (22) ► நவம்பர் (53) ► டிசம்பர் (18) ▼ 2013 (52) ► ஜனவரி (10) ► பிப்ரவரி (10) ► ஏப்ரல் (7) ► மே (2) ► ஜூன் (2) ► ஜூலை (6) ► ஆகஸ்ட் (7) ▼ செப்டம்பர் (2) அன்னை மரியாளை மகிமைப் படுத்தும் திருக்குர்ஆன்! மன அமைதிக்கு ஓர் மகத்தான மந்திரம்! ► அக்டோபர் (3) ► நவம்பர் (1) ► டிசம்பர் (2) ► 2014 (98) ► ஜனவரி (6) ► பிப்ரவரி (9) ► மார்ச் (17) ► ஏப்ரல் (12) ► மே (9) ► ஜூன் (5) ► ஜூலை (4) ► ஆகஸ்ட் (5) ► செப்டம்பர் (8) ► அக்டோபர் (7) ► நவம்பர் (3) ► டிசம்பர் (13) ► 2015 (64) ► ஜனவரி (8) ► பிப்ரவரி (5) ► மார்ச் (4) ► ஏப்ரல் (9) ► மே (9) ► ஜூன் (4) ► ஜூலை (9) ► ஆகஸ்ட் (5) ► செப்டம்பர் (2) ► அக்டோபர் (3) ► நவம்பர் (4) ► டிசம்பர் (2) ► 2016 (78) ► ஜனவரி (4) ► பிப்ரவரி (2) ► மார்ச் (6) ► ஏப்ரல் (12) ► மே (9) ► ஜூன் (11) ► ஜூலை (2) ► ஆகஸ்ட் (2) ► செப்டம்பர் (9) ► அக்டோபர் (4) ► நவம்பர் (8) ► டிசம்பர் (9) ► 2017 (72) ► ஜனவரி (7) ► பிப்ரவரி (9) ► மார்ச் (8) ► ஏப்ரல் (4) ► மே (5) ► ஜூன் (9) ► ஜூலை (4) ► ஆகஸ்ட் (8) ► செப்டம்பர் (3) ► அக்டோபர் (4) ► நவம்பர் (3) ► டிசம்பர் (8) ► 2018 (43) ► ஜனவரி (1) ► பிப்ரவரி (7) ► மார்ச் (3) ► ஏப்ரல் (2) ► மே (3) ► ஜூன் (1) ► ஜூலை (7) ► ஆகஸ்ட் (5) ► செப்டம்பர் (3) ► அக்டோபர் (4) ► நவம்பர் (4) ► டிசம்பர் (3) ► 2019 (48) ► ஜனவரி (5) ► பிப்ரவரி (4) ► மார்ச் (4) ► ஏப்ரல் (5) ► மே (3) ► ஜூன் (2) ► ஜூலை (6) ► ஆகஸ்ட் (4) ► செப்டம்பர் (3) ► அக்டோபர் (5) ► நவம்பர் (2) ► டிசம்பர் (5) ► 2020 (46) ► ஜனவரி (4) ► பிப்ரவரி (3) ► மார்ச் (9) ► ஏப்ரல் (2) ► மே (1) ► ஜூன் (6) ► ஜூலை (4) ► ஆகஸ்ட் (4) ► அக்டோபர் (3) ► நவம்பர் (3) ► டிசம்பர் (7) ► 2021 (28) ► ஜனவரி (1) ► பிப்ரவரி (5) ► மார்ச் (4) ► ஏப்ரல் (2) ► ஜூலை (1) ► ஆகஸ்ட் (1) ► செப்டம்பர் (7) ► அக்டோபர் (1) ► நவம்பர் (6) மலர்களை நுகர்வோர் hit counter மணமிக்க மலர்கள் கருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை = நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும... வருகை தந்தவர்கள் வலைப்பதிவு காப்பகம் வலைப்பதிவு காப்பகம் நவம்பர் (6) அக்டோபர் (1) செப்டம்பர் (7) ஆகஸ்ட் (1) ஜூலை (1) ஏப்ரல் (2) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (1) டிசம்பர் (7) நவம்பர் (3) அக்டோபர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (4) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)
வவுனியா மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் மே 20 ஆம் திகத வரையான காலப்பகுதியில் 655 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோர் இளவயதினை சேர்ந்தவர்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வவுனியா சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவில் 544 பேரும், வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரிபிரிவில் 54 பேரும், வவுனியா தெற்கில் 23 பேரும், செட்டிகுளம் பிரிவில் 34 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த நபர்களில் 19 வயதிற்குட்பட்ட 50 தொற்றாளர்களும், 19 தொடக்கம் 30 வயதிற்கிடைப்பட்ட வயதுடைய 273 தொற்றாளர்களும், 31 தொடக்கம் 40 வயதிற்குட்பட்ட 131 தொற்றாளர்களும், 41 வயதிற்குமேற்ப்பட்ட 197 தொற்றாளர்களும் இனம்காணப்பட்டுள்ளனர். இதேவேளை வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த வருடம் ஒருவரும், இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் 6 பேர் என மொத்தம் 7 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது 🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷 👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
கடும் குளிரிலும் கொட்டொலி முழங்க ஓங்கி ஒலித்த உரிமைக்குரல் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற “நீதியின் எழுச்சி” மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு முள்ளிவாய்க்கால் மண்ணினை மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களால் மண் சமர்ப்பிப்பு!! இப்போராட்டமானது அரசியல் கட்சிகள் சார்ந்ததோ அல்லது தனிநபர் சார்ந்தோ அல்ல!! பொலிகண்டிக்கும் தடையாம்? மாந்தை கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டன எதிர்ப்பு நடவடிக்கையில்! கண்ணீரில் கலந்த முள்ளிவாய்க்கால் மண்! Uncategorized மே 18, 2018 இலக்கியன் மக்களின் உணர்வுகளில் கலந்த முள்ளிவாய்க்கால் மண்! தமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்காலில் படுகொயை செய்யப்பட்ட குடும்பங்களில் ஒருவருக்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் பொதுச் சுடரினைக் கொடுக்க படுகொலை செய்யப்பட்ட 150,000 மக்களுக்கான பொதுச் சுடர் ஏற்பட்டது. குறித்த நினைவேந்தல் நிகழ்வுக்கு தமிழர் தாயகப் பகுதியில் இருந்து பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆட்கொல்லி புலி சுட்டு கொல்லப்படுமா? வனத்துறை வெளியிட்ட தகவல்.! | Will The Tiger Be Shot ? Information Released by The Forest Department. Home கதிர் தொகுப்பு சர்வதேச தமிழர்கள் ஊடக பொய்கள் சிறப்பு கட்டுரைகள் அரசியல் தர்பார் புதுச்சேரி More கருத்து அறிவியல் பொருளாதாரம் சமூக ஊடகம் செய்திகள் தமிழ் நாடு இந்தியா சினிமா விளையாட்டு Home கதிர் தொகுப்பு சர்வதேச தமிழர்கள் ஊடக பொய்கள் சிறப்பு கட்டுரைகள் அரசியல் தர்பார் புதுச்சேரி More கருத்து அறிவியல் பொருளாதாரம் சமூக ஊடகம் செய்திகள் தமிழ் நாடு இந்தியா சினிமா விளையாட்டு Home கதிர் தொகுப்பு சர்வதேச தமிழர்கள் ஊடக பொய்கள் சிறப்பு கட்டுரைகள் அரசியல் தர்பார் புதுச்சேரி More கருத்துஅறிவியல்பொருளாதாரம்சமூக ஊடகம்செய்திகள்தமிழ் நாடுஇந்தியாசினிமாவிளையாட்டு Home கதிர் தொகுப்பு சர்வதேச தமிழர்கள் ஊடக பொய்கள் சிறப்பு கட்டுரைகள் அரசியல் தர்பார் புதுச்சேரி More கருத்து அறிவியல் பொருளாதாரம் சமூக ஊடகம் செய்திகள் தமிழ் நாடு இந்தியா சினிமா விளையாட்டு Home கதிர் தொகுப்பு சர்வதேச தமிழர்கள் ஊடக பொய்கள் சிறப்பு கட்டுரைகள் அரசியல் தர்பார் புதுச்சேரி More கருத்துஅறிவியல்பொருளாதாரம்சமூக ஊடகம்செய்திகள்தமிழ் நாடுஇந்தியாசினிமாவிளையாட்டு x Begin typing your search above and press return to search. Home தமிழ் நாடு ஆட்கொல்லி புலி சுட்டு... ஆட்கொல்லி புலி சுட்டு கொல்லப்படுமா? வனத்துறை வெளியிட்ட தகவல்.! நீலகிரி மாவட்டம், மசினகுடி, சிங்காரா பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் புலிகளை பிடிப்பதற்காக வனத்துறையினர் கடந்த 9 நாட்களாக ஈடுபட்டுளள்ளனர். புலியை பிடிப்பதற்காக சிறப்பு வீரர்கள் நீலகிரிக்கு வரவழைக்குப்பட்டுள்ளனர். By : Thangavelu | 3 Oct 2021 6:58 AM GMT நீலகிரி மாவட்டம், மசினகுடி, சிங்காரா பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் புலிகளை பிடிப்பதற்காக வனத்துறையினர் கடந்த 9 நாட்களாக ஈடுபட்டுளள்ளனர். புலியை பிடிப்பதற்காக சிறப்பு வீரர்கள் நீலகிரிக்கு வரவழைக்குப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் போஸ்பரா வனப்பகுதியில் உலா வந்த, டி23 என்று பெயரிடப்பட்டுள்ள புலிக்கு சுமார் 13வயதாகும் ஆண் புலி, வயது முதிர்வால் தன்னுடைய வேட்டையாடும் திறனையும் முற்றிலும் இழந்துள்ளது. இதனால் தனது வாழ்விடத்தை விட்டு வெளியேறி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து கால்நடைகளையும், மனிதர்களையும் கொன்று வருகிறது. இதுவரை 35க்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும் 4 மனிதர்களை புலி கொன்றுள்ளது. இதனால் புலியை சுட்டாவது பிடிக்க வேண்டும் என்று வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதில் மருத்துவ குழுவினரும் கடந்த 9 நாட்களாக வனத்துறையினர் சேர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதனிடையே மசினகுடியை அடுத்துள்ள சிங்காரா வனப்பகுதியில் ஆட்கொல்லி புலி இருப்பதை கண்டறிந்த வனத்துறையினர், அது பதுங்கியுள்ள இடத்தை பார்த்து மோப்ப நாய் ஒன்றையும் களமிறக்கியுள்ளனர். அது மட்டுமின்றி மூன்று இடங்களில் மரத்தின் மேல் பரணம் அமைக்கப்பட்டு, கால்நடைகளை அப்பகுதியில் கட்டிவைத்தும் புலி நடமாட்டத்தை கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணியில் சுமார் 90க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்லும் எண்ணம் வனத்துறைக்கு இல்லை என்று தமிழ்நாடு முதன்மை உயிரின வனபாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் கூறியுள்ளார். Source, Image Courtesy: Polimer Tags: #Tiger #T23 #Forest #Kathirnews #Tamilnadu Categories: தமிழ் நாடு Thangavelu Next Story மாவட்ட-செய்திகள் Trending News Similar Posts © 2019-20. All rights reserved Powered By Hocalwire We use cookies for analytics, advertising and to improve our site. You agree to our use of cookies by continuing to use our site. To know more, see our Cookie Policy and Cookie Settings.Ok
சிறுவயது முதலே விடுதலை போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர் குமரன்.....கள்ளுக்கடை மறியல், உப்பு சத்தியாகிரகம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டார் குமரன்..... வட்டமேஜை மாநாடு முடிந்த பிறகு காங்கிரஸ் கட்சியை தடை செய்து காந்தி அடிகளை கைது செய்தது ஆங்கிலயே அரசு .....ஆங்கிலயே அரசின் அடக்குமுறையை எதிர்த்து பொதுமக்கள் கொதித்து எழுந்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்..... தமிழகத்தில் குமரனும் தேசிய கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்....போலீஸ் அவரை தடியால் தாக்கி மண்டையை பிளந்தனர்.....என்றாலும் குமரன் தனது கையிலிருந்து கொடியை விடாமல் வந்தே மாதரம் என்று முழங்கியபடி மண்ணில் சாய்ந்தார்..... படுகாயம் அடைந்த குமரனை மருத்துவமனையில் சேர்த்தனர்....கொடியை பிடிங்கினால் உயிர் பிரிந்துவிடும் இறுதி கட்டத்தில் குமரன் இருந்தார் அப்போது...அருகில் இருந்த போலீஸ் கொடியை அவரிடம் இருந்து பறித்தனர்..குமரனின் உயிரும் பிரிந்தது... இறுதிவரை உறுதி குறையாமல் தேசிய கொடியை பிடித்தபடி உயிர் துறந்த அந்த கொடி காத்த குமரனை இன்று நினைவு கூர்வதன் மூலம் அவருக்கு மரியாதை செலுத்துவோம்.... Tweet Posted by NKS.ஹாஜா மைதீன் at செவ்வாய், ஜனவரி 11, 2011 இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் 7 கருத்துகள்: Speed Master 7:46 பிற்பகல், ஜனவரி 11, 2011 அருமை பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி THOPPITHOPPI 9:13 பிற்பகல், ஜனவரி 11, 2011 //இறுதிவரை உறுதி குறையாமல் தேசிய கொடியை பிடித்தபடி உயிர் துறந்த அந்த கொடி காத்த குமரனை இன்று நினைவு கூர்வதன் மூலம் அவருக்கு மரியாதை செலுத்துவோம்....//
இருண்டமேகச் சுழல்கள் உன் கூந்தல் என்றான் வெண் சங்கை மிஞ்சும் அழகு உன்கழுத்து என்றான் பொன்னொளி வீசும் பிறைநிலா உன் நெற்றி என்றான் வானவில்லும் ஏங்கும் வடிவம் உன் புருவம் என்றான் கண்பறிக்கும் கயல்... Read More கவிப்பேரரசு வைரமுத்து கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். / 03 Jun 2021 / admin முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 98வது பிறந்தநாள் இன்று (03.06.2021) கொண்டாடப்படுகிறது. கரோனா தொற்று காரணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலைஞரின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்ட நிலையில், பிரபலங்கள்... Read More தமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – இரா. இராஜாராம் கவிதைகள் / 03 Mar 2021 / admin வேலேற்று வீதியெங்கும் போவோர்க்குக்கூடா -ஆன நூலேற்றும் கோவிற் கருவாயில்- பாரில் தமிழ்க்கடவுளே யானாலும் கூடுமோ அவனுக்கு தமிழால் ஓதும் துதி. -இரா.இராஜாராம், கல்பாக்கம் மனுசெய்த நூல்! – இரா.இராஜாராம் கவிதைகள் / 02 Mar 2021 / admin தேன்என்றே சுவைத்தலாகுமோ குவளை விடந்தனிற் தேன்ஓர் துளிமட்டும் கலப்பினாங்கே – மாதரை இன்னாபலவும் இனிதாய்சிலவும் விளிப்பதால் – நடந்திட இனிதென்றாகுமோ மநுசெய்த நூல். -இரா.இராஜாராம் கல்பாக்கம்
Robots.txt ஐப் புரிந்துகொள்வது, பிளாகர் மற்றும் வேர்ட்பிரஸ் ஆகியவற்றில் ரோபோக்கள் கோப்பை மேம்படுத்துதல் ஆசிரியர் தேர்வு அண்ட்ராய்டு கேஜெட்கள் ஆப்ஸ் ட்ரெண்ட்ஸ் சமூக மீடியா தொடர்பு பிப்ரவரி 12, 2015 Robots.txt ஐப் புரிந்துகொள்வது, பிளாகர் மற்றும் வேர்ட்பிரஸ் ஆகியவற்றில் ரோபோக்கள் கோப்பை மேம்படுத்துதல் பிளாக்கிங், GOOGLE-SEO இந்த0 கீச்சொலி0 இந்த0 இந்த0 கீச்சொலி0 இந்த0 பிளாக்கிங்கில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. எந்தவொரு துறையிலும் நீங்கள் ஒருபோதும் முழுமையாய் இருக்க முடியாது, ஏனெனில் பல பெரிய மற்றும் சிறந்த விஷயங்கள் உங்களுக்குத் தெரியும். உங்கள் வலைத்தளத்திலுள்ள மிகச் சிறிய விஷயங்கள் மற்றும் கோப்புகள் கூட கூகிள் தரவரிசை அடிப்படையில் மிகவும் முக்கியம் எஸ்சிஓ ஒட்டுமொத்தமாக. அத்தகைய ஒரு விஷயம் “robots.txt என்ற" கோப்பு. ஆரம்பத்தில், நான் வலைப்பதிவைத் தொடங்கியபோது, ​​இந்த கோப்பு என்ன, இந்த கோப்பின் முக்கியத்துவம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. எனவே, நான் பல்வேறு மூலங்களிலிருந்து நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன், அதன் சரியான பயன்பாடு மற்றும் எஸ்சிஓவில் அது எவ்வளவு முக்கியமானது என்பதைப் புரிந்துகொண்டேன். பல புதிய பதிவர்களுக்கு robots.txt என்றால் என்ன, அதன் பயன்பாடு என்னவென்று தெரியாது, எனவே இது குறித்து ஒரு சரியான விளக்கக் கட்டுரையை எழுத நினைத்தேன். Robots.txt கோப்பு என்றால் என்ன? Robots.txt கோப்பை எங்கே காணலாம்? Robots.txt கோப்பின் அடிப்படை அமைப்பு தொடரியல்: எடுத்துக்காட்டுகளுடன் விலக்கின் முழுமையான புரிதல் அடைவு அல்லது கோப்புறை விலக்கு: கோப்பு விலக்கு: முழு தளத்தையும் விலக்கு: முழு தளத்தையும் சேர்த்தல்: ஒற்றை கிராலரை விலக்கு: தள வரைபடத்தைச் சேர்க்கவும்: Robots.txt கோப்பை உருவாக்குவது எப்படி? Robots.txt கோப்பை சோதிக்கிறது. Robots.txt கோப்பின் வரம்புகள்: Robots.txt ஐ மேம்படுத்துவதில் மாட் கட்ஸ் எதை எடுத்துக்கொள்கிறார் என்பதைச் சரிபார்க்கவும் தனிப்பயன் ரோபோக்களைச் சேர்ப்பது. பிளாகருக்கு உரை பின்பற்ற வேண்டிய படிகள்: வேர்ட்பிரஸுக்கு Robots.txt ஐ எவ்வாறு மேம்படுத்துவது: Robots.txt கோப்பு என்றால் என்ன? Robots.txt என்பது உங்கள் தளத்தின் மூலத்தில் இருக்கும் மிகச் சிறிய உரை கோப்பு. உங்களில் பெரும்பாலோருக்கு தெரியும், முழு வலை வலையமைப்பின் வளர்ச்சிக்கு வலை கிராலர்கள் மற்றும் சிலந்திகள் பொறுப்பு. வெறுமனே, இந்த கிராலர்கள் எந்தவொரு பக்கத்திலும் அல்லது வலையில் இருக்கும் எந்த URL க்கும் வலம் வரலாம், அவை தனிப்பட்டவை மற்றும் அணுகக்கூடாது. இது உங்கள் உள்ளடக்கத்தை அணுகுவதிலிருந்து மக்களைத் தடுக்காது. கிராலர்களை அணுகவும் கட்டுப்படுத்தவும் நீங்கள் விரும்பும் கோப்புகளை கட்டுப்படுத்த, நீங்கள் robots.txt கோப்பைப் பயன்படுத்தி அவற்றை இயக்கலாம். Robots.txt ஒரு HTML கோப்பு அல்ல, ஆனால் சிலந்திகள் இந்த கோப்பு என்ன சொல்கின்றன என்பதைக் கடைப்பிடிக்கின்றன. இந்த கோப்பு உங்கள் தளத்தை வெளிப்புற அச்சுறுத்தல்களிலிருந்து நேரடியாகப் பாதுகாக்கும் ஒன்றல்ல, ஆனால் உங்கள் தளத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் நுழைய வேண்டாம் என்று கிராலர் போட்களைக் கோருகிறது. Robots.txt கோப்பை எங்கே காணலாம்? இந்த கோப்பின் இருப்பிடம் கிராலர்கள் அதை அடையாளம் காண மிகவும் முக்கியமானது. எனவே, இது உங்கள் வலைத்தளத்தின் முக்கிய கோப்பகத்தில் இருக்க வேண்டும். http://youdomain.com/robots.txt போட்ஸ் மற்றும் எந்த வலைத்தளத்தின் கோப்பையும் நீங்கள் காணலாம். முக்கிய கோப்பகத்தில் கிராலர்கள் கோப்பைக் கண்டுபிடிக்கவில்லை எனில், வலைத்தளத்திற்கான ரோபோக்கள் கோப்பு எதுவும் இல்லை என்று அவர்கள் கருதுகிறார்கள், மேலும் தளத்தின் அனைத்து பக்கங்களையும் குறியீட்டு மூலம். Robots.txt கோப்பின் அடிப்படை அமைப்பு கோப்பின் அமைப்பு மிகவும் எளிமையானது மற்றும் எவரும் அதை எளிதாக புரிந்து கொள்ள முடியும். இது முக்கியமாக 2 கூறுகளைக் கொண்டுள்ளது, அதாவது பயனர் முகவர் மற்றும் அனுமதிக்காதது. தொடரியல்: பயனர் முகவர்: அனுமதி: எடுத்துக்காட்டுகளுடன் விலக்கின் முழுமையான புரிதல் முதலாவதாக, கூறுகள் சரியாக எதைக் குறிக்கின்றன, அவற்றின் செயல்பாடு என்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். “பயனர் முகவர்” கூகிள், யாகூ அல்லது எந்த தேடுபொறியாக இருந்தாலும் தேடுபொறி கிராலர்களை தீர்மானிக்க பயன்படுத்தப்படும் சொல். “அனுமதி” கோப்புகள் அல்லது கோப்பகங்களை பட்டியலிடுவதற்கும் அவற்றை கிராலர் பட்டியல்களிலிருந்து விலக்குவதற்கும் பயன்படுத்தப்படும் சொல். அடைவு அல்லது கோப்புறை விலக்கு: பெரும்பாலான தளங்களால் பயன்படுத்தப்படும் அடிப்படை விலக்கு, பயனர்-ஏஜென்ட்: * அனுமதி: / சோதனை / இங்கே, * அனைத்து தேடுபொறி கிராலர்களையும் குறிக்கிறது. 'சோதனை' என்ற பெயரைக் கொண்ட கோப்புறை வலம் வருவதிலிருந்து விலக்கப்பட வேண்டும் என்பதை அனுமதிக்க / சோதனை / சுட்டிக்காட்டியது. கோப்பு விலக்கு: பயனர்-ஏஜென்ட்: * அனுமதி: /test.html அனைத்து தேடுபொறி கிராலர்களும் 'test.html' என்ற கோப்பை வலம் வரக்கூடாது என்பதை இது குறிக்கிறது. முழு தளத்தையும் விலக்கு: பயனர்-ஏஜென்ட்: * அனுமதி: / முழு தளத்தையும் சேர்த்தல்: பயனர்-ஏஜென்ட்: * அனுமதி: OR பயனர்-ஏஜென்ட்: * அனுமதி: / ஒற்றை கிராலரை விலக்கு: பயனர் முகவர்: googlebot அனுமதி: / சோதனை / தள வரைபடத்தைச் சேர்க்கவும்: பயனர்-ஏஜென்ட்: * அனுமதி: / சோதனை / தள வரைபடம்: http://www.yourdomain.com/sitemap.xml Robots.txt கோப்பை உருவாக்குவது எப்படி? ஒரு சிறப்பு மொழி அல்லது தொழில்நுட்ப சிக்கல்கள் இல்லாததால் ஒரு robots.txt கோப்பை உருவாக்குவது மிகவும் எளிது. நீங்கள் இதை இரண்டு வழிகளில் செய்யலாம், ஒன்று கையேடு உருவாக்கம், மற்றொன்று கருவிகளைப் பயன்படுத்தி கோப்பை உருவாக்குவது. கோப்பின் கையேடு உருவாக்கம் மேற்கண்ட பகுதியில் விவாதிக்கப்படுகிறது, எனவே கருவிகளின் பயன்பாட்டிற்கு செல்வோம், இது இன்னும் எளிமையானது. நீங்கள் robots.txt கோப்பு ஜெனரேட்டர் கருவிகளைப் பயன்படுத்தலாம் எஸ்சி புக், மெக்கானெரின், முதலியன. Robots.txt கோப்பை சோதிக்கிறது. நீங்கள் உருவாக்கிய கோப்பு சரியாக வேலை செய்யக்கூடும் அல்லது இல்லாமலும் இருக்கலாம். அதைச் சோதிக்க, நீங்கள் பயன்படுத்தலாம் robots.txt சோதனைக் கருவி. சோதனையாளர் கருவிக்கு நீங்கள் ஒரு URL ஐ சமர்ப்பிக்கலாம், கருவி உங்கள் சரிபார்க்க Googlebot செயல்படும் robots.txt கோப்பு மற்றும் உங்கள் URL சரியாக தடுக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கிறது. கூகிள் வெப்மாஸ்டர்களுக்காக பட்டியலிடப்பட்ட சில படிகள் இங்கே உள்ளன, இது நீங்கள் உருவாக்கிய robots.txt கோப்பை சோதிக்க உதவும்: Robots.txt கோப்பின் வரம்புகள்: கிராலர்களை இயக்கும் போது robots.txt நம்பகமான ஒரு அங்கமாக இருந்தாலும், நடைமுறையில் கையாளும் போது அதற்கு இன்னும் சில வரம்புகள் அல்லது தீமைகள் உள்ளன. 1. கிராலர்களை கட்டாயப்படுத்த முடியாது, அவற்றை மட்டுமே இயக்க முடியும்: ஒரு குறிப்பிட்ட பாதை அல்லது URL ஐ அனுமதிக்க நாங்கள் robots.txt கோப்பைப் பயன்படுத்தும்போது, ​​அந்த குறிப்பிட்ட URL அல்லது கோப்பகத்தை குறியிட வேண்டாம் என்று வலை கிராலர்களைக் கேட்டுக்கொள்கிறோம், ஆனால் போட்களைத் திசைதிருப்ப கட்டாயப்படுத்தவில்லை. இந்த வலை கோப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளுக்கு அனைத்து வலை கிராலர்களும் கீழ்ப்படியக்கூடாது. எனவே ஒரு குறிப்பிட்ட URL ஐத் தடுக்க, கடவுச்சொல் பாதுகாப்பு அல்லது மெட்டா குறிச்சொற்களைப் பயன்படுத்துவது போன்ற பிற முறைகள் செயல்படுத்தப்படலாம், அவை மிகவும் பயனுள்ள மற்றும் திறமையானவை. 2. ஒவ்வொரு கிராலருக்கும் தொடரியல் விளக்கம் வேறுபடலாம்: மேலே குறிப்பிட்டுள்ள தொடரியல் வலை கிராலர்களின் அதிகபட்ச சதவீதத்திற்கு நல்லது. ஆனால் சில கிராலர்கள் தொடரியல் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம் அல்லது அதை முற்றிலும் வேறுபட்ட முறையில் விளக்குவார்கள், இது உங்களை சிக்கலில் இழுக்கக்கூடும். 3. பிற தளங்களிலிருந்து உங்கள் URL இன் குறிப்புகளை robots.txt ஆல் தடுக்க முடியாது: இது நடைமுறையில் robots.txt கோப்பின் முக்கிய குறைபாடுகளில் ஒன்றாகும். கூகிள் கிராலர்கள் எந்தவொரு குறிப்பிட்ட URL ஐ நேரடியாக தளத்திற்குள் வரும்போது கோப்பு அனுமதிக்காது. ஆனால் இதற்கு மாறாக, நீங்கள் தடுக்க விரும்பும் குறிப்பிட்ட URL ஐ வேறு ஏதேனும் வலைத்தளத்திலிருந்து குறிப்பிடும்போது, ​​கிராலர்கள் தங்களை இணைப்பிற்குள் தடுத்து நிறுத்த மாட்டார்கள், இதனால் தடுக்கப்பட்ட URL ஐ பட்டியலிடுகிறது. எனவே, இவை நடக்காமல் தடுக்க, நீங்கள் போன்ற பிற பாதுகாப்பு முறைகளுடன் செல்ல வேண்டும் கடவுச்சொல் சேவையகத்திலிருந்து கோப்புகளைப் பாதுகாக்கும் or மெட்டா குறிச்சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம் (noindex, follow) robots.txt கோப்போடு. Robots.txt ஐ மேம்படுத்துவதில் மாட் கட்ஸ் எதை எடுத்துக்கொள்கிறார் என்பதைச் சரிபார்க்கவும் தனிப்பயன் ரோபோக்களைச் சேர்ப்பது. பிளாகருக்கு உரை நான் ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதியுள்ளேன் மேம்பட்ட தேடுபொறி விருப்பத்தேர்வுகள் தனிப்பயன் robots.txt கோப்பைப் பற்றி நான் பேசினேன் பிளாக்கருக்கான மேம்பட்ட எஸ்சிஓ வழிகாட்டி. பொதுவாக, பிளாக்கருக்கு robots.txt கோப்பு இதுபோன்றது: பயனர் முகவர்: மீடியாபார்ட்னர்கள்-கூகிள் அனுமதி: பயனர்-ஏஜென்ட்: * அனுமதி: / தேடல் அனுமதி: / தள வரைபடம்: https://www.alltechbuzz.net/feeds/posts/default?orderby=UPDATED பின்பற்ற வேண்டிய படிகள்: உங்கள் பதிவர் டாஷ்போர்டைத் திறக்கவும். செல்லவும் அமைப்புகள் > தேடல் விருப்பத்தேர்வுகள் > கிராலர்கள் மற்றும் அட்டவணைப்படுத்தல் > தனிப்பயன் robots.txt > திருத்து> ஆம். உங்கள் robots.txt குறியீட்டை அதில் ஒட்டவும். மாற்றங்களைச் சேமி பொத்தானைக் கிளிக் செய்க. வேர்ட்பிரஸுக்கு Robots.txt ஐ எவ்வாறு மேம்படுத்துவது: வேர்ட்பிரஸைப் பொறுத்தவரை, இதைச் செய்வதற்கு எங்களிடம் பல செருகுநிரல்கள் உள்ளன. நீங்கள் மேலே செல்ல நான் பரிந்துரைக்கிறேன் Yoast செருகுநிரல் தேடல் விருப்பங்களை நிர்வகிக்க. எங்கள் கட்டுரையைப் பாருங்கள் Yoast எஸ்சிஓ அமைப்புகள் முழுமையான அமைப்புகளுக்கு. வேர்ட்பிரஸ் இல் ஹோஸ்ட் செய்யப்பட்ட எந்த டொமைனுக்கும் நீங்கள் பயன்படுத்தக்கூடிய robots.txt கோப்பின் எடுத்துக்காட்டு கீழே: தள வரைபடம்: http://www.yourdomain.com/sitemap.xml பயனர் முகவர்: * # இந்த கோப்பகங்களில் உள்ள எல்லா கோப்புகளையும் அனுமதிக்க வேண்டாம்: / cgi-bin / அனுமதி: / wp-admin / அனுமதி: / wp-include / Disallow: / wp-content / Disallow: / archives / disallow: / *? * அனுமதி: *? replytocom அனுமதி: / wp- * அனுமதி: / கருத்துகள் / ஊட்டம் / பயனர் முகவர்: மீடியாபார்ட்னர்கள்-கூகிள் * அனுமதி: / பயனர் முகவர்: கூகிள் போட் -பட அனுமதி: / wp-content / uploads / பயனர் முகவர்: Adsbot-Google அனுமதி: / பயனர் முகவர்: Googlebot-Mobile அனுமதி: / உங்கள் robots.txt கோப்பை நீங்கள் மேம்படுத்தியவுடன், முதலில் உங்கள் கோப்பை சோதிக்க பரிந்துரைக்கிறேன் Google வெப்மாஸ்டர் கருவிகளில் robots.txt சோதனையாளர். எனவே, அது உதவியது என்று நம்புகிறேன். உங்கள் கருத்துக்களில் robots.txt தேர்வுமுறை குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் எனக்குத் தெரியப்படுத்துங்கள். ஆசிரியர் பற்றி இம்ரான் உடின் இம்ரான் உடின் இந்தியாவிலிருந்து ஒரு தொழில்முறை பதிவர் மற்றும் ஆல் டெக் பஸ்ஸில், பிளாக்கிங், டிப்ஸ் எப்படி, ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது போன்றவற்றைப் பற்றி எழுதுகிறார். இந்த அமேசான் பிரைம் ஹேக்ஸ் உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் முன்பு செய்த அதே வழியில் அமேசான் பிரைமை நீங்கள் பார்க்க மாட்டீர்கள் பல கடைகளுக்கு குவிக்புக்ஸில் புள்ளி விற்பனையை எவ்வாறு பயன்படுத்துவது? சலுகை விமர்சனம்: இது பாதுகாப்பானதா? எப்படி செய்தி குவிக்புக்ஸில் தொழில்நுட்பம் பொது விமர்சனம் வணிக cryptocurrency சைபர் பொழுதுபோக்கு பேஸ்புக் ஈஆர்பி திருத்தங்கள் நிதி கேமிங் ஜிமெயில் உடல்நலம் / அழகு வீடு / சமையலறை / தோட்டம் எப்படி மார்க்கெட்டிங் குவிக்புக்ஸில் விமர்சனம் எஸ்சிஓ சமூக மீடியா தொழில்நுட்பம் தொழில்நுட்ப புதுப்பிப்புகள் பயண TurboTax என்று ட்விட்டர் , Whatsapp YOUTUBE- இன் தனியுரிமை கொள்கை தேடல் email "மின்னஞ்சல்": "மின்னஞ்சல் முகவரி தவறானது", "url": "வலைத்தள முகவரி தவறானது", "தேவை": "தேவையான புலம் இல்லை"} Amazon அசோசியேட்டாக Alltechbuzz.net தகுதிபெறும் கொள்முதல் மூலம் கமிஷனைப் பெறுகிறது. மின்னஞ்சல் admin@alltechbuzz.net {({tcb_post_title css='tve-u-175244275a4' link='1' rel='0' target='0' inline='1' static-link='{"className":"tve-froala"," href":"https://www.alltechbuzz.net/free-youtube-to-mp4-converter-for-pc/","title":"இலவச YouTube to MP4 Converter for PC","data-css": "tve-u-175244275a4","class":"tve-froala","data-wpel-link":"internal"}' link-css-attr="tve-u-175244275a4"})}
கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு பக்க வரிசைப்படுத்தல் | மறுப்பு பதிப்புரிமை © 2012-2021 | கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
கோவிட்-19 வைரஸ் காரணமாக உலக அளவில்1,030,633 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 54,229 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 220,003 பேர் அதிலிருந்து மீண்டுள்ளனர். இது இன்றைய இரவு 7.45 மணி வரைக்குமான நிலவரம் ஆகும். மலேசியா * கோவிட்-19 வைரஸ் தொற்றால் மலேசியாவில் மொத்தம் 3,333 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 53 பேர் மரணமடைந்துள்ளனர். நேற்று வரை 50ஆக இருந்த இவ்வெண்ணிக்கை இன்று 3 பேர் உயிரிழந்ததால் 53ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 217 பேர் இந்நோயால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா * உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் கோவிட்-19 வைரஸ் தொற்றால் 245,442 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 6,098 பேர் மரணமடைந்த நிலையில் 10,411 பேர் அதிலிருந்து மீண்டுள்ளனர். இத்தாலி * கோவிட்-19 வைரஸ் தொற்றால் அதிகம் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நாடாக இத்தாலி திகழ்கிறது. அங்கு இதுவரை 115,242 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,915 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ள நிலையில் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடாகவும் இத்தாலி திகழ்கிறது. 60 வயதுக்கும் மேற்பட்டவர்களை அதிகம் கொண்ட நாடாக இத்தாலி திகழ்வதால் அங்கு மரண எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சிங்கப்பூர் * உலகில் சிறிய நாடாக கருதப்படும் சிங்கப்பூரில் இதுவரை 1,114 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5 பேர் மரணமடைந்துள்ளனர். கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று தொடங்கி ஒரு மாத காலத்திற்கு பள்ளிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மூடப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார். By myBhaaratham - April 04, 2020 Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels General No comments: Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) 'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை பினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங... மரணத்திலும் பிரியாத தம்பதியர் பூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச... சோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்!!! சேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...
கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நவராத்திரி விழா அலரி மாளிகையில் நேற்று (12) இரவு இடம்பெற்றது. நவராத்திரி விழாவில் இந்திய மத்திய அரசின் மாநிலங்களவை உறுப்பினர் கௌரவ சுப்பிரமணியம் சுவாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டமை விசேடம்சமாகும். கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் சுகாதார வழிகாட்டல்களுக்கமைய மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்ற நவராத்திரி பூஜை வழிபாடு பிரதமரின் இந்து சமய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் ராமசந்திர குருக்கள் பாபு சர்மா, மயூரபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலயத்தின் பிரதான குருக்கள் துரைசாமி உதயராகவ குருக்கள் மற்றும் அருண் பிரசாந்தன் சர்மா குருக்கள் ஆகியோரினால் நடத்தப்பட்டது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கடந்த ஆண்டை போன்றே இவ்வாண்டும் நவராத்திரி விழாவினை அலரி மாளிகையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்துக்கள் அனைவரும் தாயாகப் போற்றுகின்ற சக்தியைப் போற்றி வழிபடும் நிகழ்வே நவராத்திரி விழாவாக ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விரதம் பார்ப்பதற்கு ஒரு கொண்டாட்டம் போல இருந்தாலும் ஒரு விரதமாகவே அனுட்டிக்கப்படுகிறது. அழிவு இல்லாத சிறந்த கல்விச் செல்வத்தை வழங்குகின்ற கலைமகளையும் மனத்திடத்தோடு துணிவைத்தரும் மலைமகளையும் செல்வங்களை அள்ளித்தரும் திருமகளையும் போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் சிறப்பு. ஒன்பது தினங்களின் பின்னர் பத்தாவது நாளான விஜயதசமி இந்து மக்களுக்கு மிகவும் விசேடமான தினமாகும். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அலரி மாளிகையில் நடைபெற்ற நவராத்திரி விழாவை மேலும் வர்ணமயமாக்கியது. குறித்த நிகழ்வில் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ, கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கௌரவ இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி சுரேன் ராகவன், மருதபாண்டி ரமேஷ்வரன், பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், முன்னாள் பிரதம நீதியரசர் கனகசபாபதி ஸ்ரீபவன், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, பிரதமர் அலுவலகத்தின் பணிக்குழாம் பிரதானி திரு.யோஷித ராஜபக்ஷ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அண்மைய செய்திகள் கௌரவ பிரதமரின் தலைமையில் ‘சயுர ரக்கின ரெல்ல’ மற்றும் MEPA அக்கடமி ஆரம்பம் உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு கௌரவ பிரதமரின் தலைமையில் முத்திரை வெளியீடு அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும்! மத்திய கலாசார நிதியத்தை மறுசீரமைப்பதற்கான ஐவரடங்கிய குழு அறிக்கை கௌரவ பிரதமரிடம் கையளிப்பு உங்கள் கள்ளத்தனமான அரசியலை நீங்கள் நிறுத்த வேண்டும்… (த.கலையரசன் எம்பி ஹரிஸ் எம்.பிக்கு பதிலடி) யாழ்ப்பாணத்தின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையிலான திட்டங்கள் கௌரவ பிரதமர் தலைமையில் ஆரம்பம் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் சந்திப்பு. ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு கோரி மொட்டு கட்சி கடிதம். ஓய்வூதியம் வழங்க கூட அரசிடம் பணம் இல்லை ரணில் வெளியிட்ட அதிர்ச்சி தகவல். புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியாகின… கருத்துக்களேதுமில்லை உங்கள் கருத்தை சொல்லுங்கள் Click here to cancel reply. Thu, Oct 14 Wed, Oct 13 Tue, Oct 12 Mon, Oct 11 Sun, Oct 10 Fri, Oct 8 Thu, Oct 7 இணைய வானொலியை இங்கே கேட்கலாம் அதிகம் பார்க்கப்பட்டவை அமைச்சர் ஹெகலிய அவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் சந்திப்பையடுத்து அதிரடிநடவடிக்கை! ஆலையடிவேம்பு மக்கள் விசேட நன்றி தெரிவிப்பு. இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலகமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழா -2021 கந்தளாய் புகையிரத கடவையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயணித்த கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பொலிஸ் அதிகாரியொருவர் மரணம் காரின் சாரதி படுகாயங்களுடன் கந்தளாய் வைத்தியசாலையில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலகமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழா -2021 13ஆவது திருத்தத்தை முழுதாக நிறைவேற்றியே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் - ரெலோ வலியுறுத்தல்: தமிழ் தேசியக் கட்சிகள் ஒருமித்து கோருவது அவசியம். கிழக்கு ஆசிரியர் இடமாற்ற விடயத்தில் ஆளுநர் தலையிட வேண்டும்..! மருதமுனை வீட்டுத்திட்டத்தில் உள்ள வீடுகளை மக்களுக்கு உடன் வழங்குமாறு நாமல் ராஜபக்ச உத்தரவு ஹரீஸ் எம்பி வெளியிட்ட பகிரங்க அறிவிப்புக்கு மாற்றுத் தீர்வு என்ன ? ராஜினாமா செய்தால் அடுத்த எம்பி யாருக்கு ?
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தா.பாண்டியனின் உடல்நிலை கவலைகிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. வெண்டிலேட்டர் உதவியுடன் இந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறுநீரக பாதிப்பு, ரத்த அழுத்தம் காரணமாக தா.பாண்டியன் அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். ********************************* பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது போதாது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார், ********************************** உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் சென்னையில் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததால் தாம்பரம் - கடற்கரை புறநகர் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1 மற்றும் 2-வது லைனுக்கு பதில் 3, 4-வது லைனில் விரைவு ரயில்கள் பாதையில் புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ****************************** புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி நகர்பகுதி முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகையையொட்டி புதுச்சேரி நகர் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ***************************** பிப்ரவரியில் 3ம் முறையாக ரூ.25 விலை உயர்ந்து ஒரு சிலிண்டரின் விலை ரூ.785லிருந்து ரூ.810ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த மாதத்திற்குள் 3-வது முறையாக சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. **************************** தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில், வஉசி சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் கலந்து கொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த ஒரு பிரிவினர், ஓபிஎஸ்-க்கு எதிராக முழக்கமிட்டனர். அதாவது, ஒரு சமூகத்திற்கு அதாவது, 6 பிரிவுகளை உட்படுத்தி, தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பெயரில் அந்த சமூகத்தினருக்கு அங்கீகாரம் கொடுக்க தமிழக அரசு பரிந்துரை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த குறிப்பிட்ட சமூகத்தை சேர்த்தவர்கள் துணை முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கண்டன குரலையம், கோஷங்களையும் எழுப்பியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 7 வயது சிறுவனுக்கு பேய் பிடித்து இருப்பதாக கூறி தாய் உட்பட 3 பெண்கள் அந்த சிறுவனை அடித்து கொன்றதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த மூன்று பெண்களையும் கண்ணமங்களம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்களம் பேரூராட்சியில் உள்ள ஒரு வளாகத்தில் சிறுவனை 3 பெண்கள் அடித்து துன்புறுத்துவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. அதனடிப்படையில் காவல் துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தச் சென்றனர். ஆனால், அதற்குள் அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து சிறுவனின் சடலத்தை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வு செய்ய காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். பிறகு அந்த சிறுவன் அருகே இருந்த மூன்று பெண்களிடம் கண்ணமங்களம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. என்ன நடந்தது? ஊர் பெயர் தன்னுடைய மகனுக்கு பேய் பிடித்து இருப்பதாகவும் அதை வந்தவாசியில் உள்ள முஸ்லிம் தர்காவில் இருப்பவர் விரட்டுவார் என்ற நம்பிக்கையுடன் தனது சகோதரிகளுடன் அந்த சிறுவனை அழைத்துக் கொண்டு தாயார் திலகவதி வந்துள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவனுக்கு பேய் பிடித்து விட்டதாகக் கூறி தாய் உட்பட மூன்று பெண்கள் அவரை அடித்துத் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரிவாக அறிய கண்ணமங்களம் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் விஜயகுமாரை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது. “சிறுவனின் தாய் திலகவதி, பாக்யலட்சுமி, கவிதா ஆகிய மூன்று பெண்களும் சகோதரிகள். இந்த மூன்று பெண்களுடைய‌ தாயார் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இவர்களின் மூத்த சகோதரி செம்பகவள்ளி என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும், இவர்களுடைய தந்தை சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளனர். மேலும் சிறுவன் ஆறு மாத கருவில் இருந்த போதே அவனது தந்தையும் இறந்து விட்டார். முன்பு திலகவரிக்கு உடல்நிலை சரியில்லாதபோது, வந்தவாசியில் உள்ள தர்காவில் இருக்கும் சாமியாரை பார்த்ததால் அவருக்கு உடல்நிலை சரியானதாக விசாரணையில் மூன்று பேரும் கூறியுள்ளனர். தன்னைப்போலவே மகனுக்கும் உடல்நலை முடியாமல் போகவே, அவரை வந்தவாசியில் உள்ள சாமியாரிடம் அழைத்து செல்ல பேருந்தில் வந்ததாகவும், வழியில் சிறுவனுக்கு பேய் பிடித்து விட்டதாகக் கருதி முஸ்லிம் தர்கா செல்லாமல் கண்ணமங்களம் பகுதியிலேயே அவர்கள் இறங்கியுள்ளனர். அங்குதான் இந்த சம்பவம் நடந்துள்ளது,” என்று விஜயகுமார் கூறினார். உயிரிழந்த சிறுவன் தொடர்ந்து விவரித்த அவர், “பேருந்து நிறுத்தத்திற்கு அருகே உள்ள பகுதியில் அந்த சிறுவனுக்கு பேய் வந்ததாக கூறி மூன்று பெண்களும் பிடித்துள்ளனர். அதில் தாயார் சிறுவனின் நாக்கை இழுத்தவாறு வாயைப் பிடித்திருந்தார். மற்றொரு பெண் சிறுவனின் மேல் அமர்ந்திருந்தார். மூன்றாவது பெண் சிறுவனின் கழுத்தின் மீது காலை வைத்து மிதித்தபடி இருந்துள்ளார். இதனால் சிறுவன் அழுத்தம் அதிகமாகி சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்தது என தெரிய வந்துள்ளது,” என்று கூறினார். “பின்னர் இரண்டு சகோதரிகளும் சேர்ந்து, மூன்றாவது சகோதரியை தாக்க முற்பட்டபோது காவல்துறையினர் சம்பவ பகுதிக்குச் சென்று அந்த பெண்ணை மீட்டனர். அந்த மூன்று பெண்களும் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பது போல தோன்றுகிறது,” என்று காவல் அதிகாரி தெரிவித்தார். “இந்த மூன்று பெண்களுடைய குடும்பத்தில் நெருங்கிய உறவினர்கள் அனைவரும் இறந்துள்ளனர். தற்சமயம் இவர்களுக்கு ஆதரவு யாருமில்லாத நிலையில், சிறுவனை பார்த்துக்கொண்டு தனியாகவே இருந்துள்ளனர். கொஞ்சம் கொஞ்சமாக மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றியுள்ளதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் சிறுவனுக்கு பேய் வந்ததாக கூறி அவனை கொலை செய்துள்ளனர் என தெரிய வந்துள்ளது,” என உதவி காவல் ஆய்வாளர் விஜயகுமார் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Post Views: 121 Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email admin Related Posts மகாராஷ்டிராவில் ஆணவக்கொலை: இரண்டு மாத கர்ப்பிணியை கொன்ற தாயும் சகோதரரும் December 7, 2021 உணவில் போதை மருந்து கலந்து கொடுத்து 17 பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரம் December 7, 2021 வரவேற்பு முடிந்ததும் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் December 7, 2021 Leave A Reply Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment. June 2021 M T W T F S S 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 « May Jul » Advertisement Latest News மகாராஷ்டிராவில் ஆணவக்கொலை: இரண்டு மாத கர்ப்பிணியை கொன்ற தாயும் சகோதரரும் December 7, 2021 உணவில் போதை மருந்து கலந்து கொடுத்து 17 பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரம் December 7, 2021 கொரோனா வைரஸ்: ஒமிக்ரான் திரிபு நோயெதிர்ப்பு மண்டலத்திடம் இருந்து தப்பித்தாலும் லேசான பாதிப்புகளையே ஏற்படுத்துகிறதா? December 7, 2021 பாம்பை விரட்ட வீட்டைக் கொளுத்திய நபர் December 7, 2021 வரவேற்பு முடிந்ததும் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் December 7, 2021 சுவிஸ் நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்து செல்லும் கொரனா தொற்று: 24 மணி நேரத்தில் 8,585 பேருக்கு கொரோனா தொற்று!!!! ஆப்கானிஸ்தானில் தாலிபனின் தேன் நிலவு முடிந்தது – இனி அதன் முன்னுள்ள சவால்கள் என்ன? ‘செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன? முகப்பு செய்திகள் வீடியோ நாட்காட்டி Facebook 41.6K Twitter 795 YouTube Recent Posts மகாராஷ்டிராவில் ஆணவக்கொலை: இரண்டு மாத கர்ப்பிணியை கொன்ற தாயும் சகோதரரும் உணவில் போதை மருந்து கலந்து கொடுத்து 17 பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரம் கொரோனா வைரஸ்: ஒமிக்ரான் திரிபு நோயெதிர்ப்பு மண்டலத்திடம் இருந்து தப்பித்தாலும் லேசான பாதிப்புகளையே ஏற்படுத்துகிறதா? பாம்பை விரட்ட வீட்டைக் கொளுத்திய நபர் Recent Comments Arya on “பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பற்ற செயல்” arya on அரசியல் தீர்வு : மஹிந்த கருத்துக்கு சம்பந்தர் பதிலடி david bill on “பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பற்ற செயல்” Quick Links முகப்பு இந்தியா உலகம் வெளிநாட்டு சினிமா விளையாட்டு ஆரோக்கியம் சுற்றுலா வினோதம் அரசியல் Quick Links கட்டுரைகள் தொடர் கட்டுரைகள் கவிதைகள் கலைகள் வீடியோ புகைப்பட தொகுப்பு தொழில்நுட்பம் வேலைவாய்ப்பு கல்வி Quick Links ஆரோக்கியம் அந்தரங்கம் ஆன்மீகம் சுற்றுலா சிறப்பு செய்திகள் வினோதம் BRAKING NEWS சுவிஸ் நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்து செல்லும் கொரனா தொற்று: 24 மணி நேரத்தில் 8,585 பேருக்கு கொரோனா தொற்று!!!!
ஆசிரியர் குறிப்பு: செகந்தராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். இருபத்தொன்பதாம் வயதில் இருந்து சென்னையில் வசித்தவர். A writer's writer. அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அதிகபட்சமாக சாகித்ய அகாதமி விருதைப் பெற்றிருக்கிறார். ஞானபீட விருதை எப்போதோ பெற்றிருக்க வேண்டியவர். தமிழில் மட்டும் தான் இது போல் அநீதிகள் நடக்கும். இந்த நூல் வெளியான போது படித்தது. அதற்குள் முப்பத்து நான்கு வருடங்கள் முடிந்து விட்டன. வாழ்க்கை, பள்ளத்தை நோக்கி ஓடும் பந்தைப்போல் வேகமெடுத்துஓடுகிறது. 1987க்குப்பிறகு இரண்டாம் பதிப்பு வந்ததா … Continue reading சில ஆசிரியர்கள் சில நூல்கள் – அசோகமித்திரன்: November 10, 2021 சரவணன் மாணிக்கவாசகம் கட்டுரைத் தொகுப்பு மதுரை போற்றுதும் -. ச.சுப்பாராவ்: ஆசிரியர் குறிப்பு: மதுரையில் பிறந்து, வளர்ந்து, கடந்த முப்பத்தைந்து வருடங்களாக அங்கேயே வேலை பார்ப்பவர். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். சிறந்த வாசகர். இது சமீபத்தில் வெளியாகிய இவரது மதுரை நினைவுகள் குறித்த நூல். ஒரே ஊரில் வாழ்ந்து முடிப்பவர்களைக் கண்டால் எனக்கு சற்றே பொறாமை வரும். அலுவல் நிமித்தம் ஒவ்வொரு மூன்று வருடங்களிலும் புதிய ஊருக்குச் சென்றது, அனுபவச்சேர்க்கைக்கு உதவினாலும் கூட,பழகிய தெருக்களில், பழைய நினைவுகளில் வலம் வருவது கொடுப்பினை, முப்பது வருடங்களுக்குப் பிறகு போனால், மதுரையே எனக்கு … Continue reading மதுரை போற்றுதும் -. ச.சுப்பாராவ்: August 31, 2021 சரவணன் மாணிக்கவாசகம் கட்டுரைத் தொகுப்பு ஊர்சுற்றிப் பறவை – ராம் தங்கம்: ஆசிரியர் குறிப்பு: நாகர்கோவிலில் பிறந்தவர். ஊடகத்துறையில் பணியாற்றியவர். திருக்கார்த்தியல் என்ற சிறுகதைத் தொகுப்பின் மூலம் பரவலாகத் தெரிய ஆரம்பித்தவர். 2015ல் அச்சுநூலாக வந்த இந்தப்புத்தகம் இப்போது கிண்டிலில் வெளியாகியிருக்கிறது. வரலாற்று நூல் போன்றோ பயணநூல் போன்றோ இல்லாமல் ஒரு அரட்டை அடிக்கும் தொனியில் பலவிசயங்களும் பேசப்படுகின்றன. குமரிமாவட்டத்தில் பிறந்த எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்கையில் அவர்களது சிறந்த படைப்புகளும் சொல்லப்படுவது புதியவாசகர்களுக்கு உதவியாக இருக்கும். கிருஷ்ணன் நம்பியின் நீலக்கடல் மிகமுக்கியமான தொகுப்பு. குழந்தைகள் உலகத்தைத் தத்ரூபமாகச் சித்தரித்து இருப்பார். … Continue reading ஊர்சுற்றிப் பறவை – ராம் தங்கம்: August 31, 2021 சரவணன் மாணிக்கவாசகம் கட்டுரைத் தொகுப்பு உயிர்த்த ஞாயிறு – ஸர்மிளா ஸெய்யித்: ஆசிரியர் குறிப்பு: இலங்கை ஏறாவூரில் பிறந்தவர். சமூகப்பணித்துறையில் பட்டப்படிப்பையும், இதழியல், கல்வி முகாமைத்துவம், உளவியல் துறைகளையும் பயின்றவர். பத்திரிகைத்துறையில் பணியாற்றியவர். இதுவரை சிறகு முளைத்த பெண், உம்மத், ஒவ்வா, பணிக்கர் பேத்தி ஆகிய படைப்புகள் வெளிவந்துள்ளன. இது சமீபத்தில் வந்த அனுபவப்பதிவு நூல். மதங்களின் பெயரால் நடக்கும் எந்த போர்களுக்கும் நிரந்தரத்தீர்வு கிடைத்ததாக சரித்திரமே இல்லை. சிலுவைப்போர்கள் அப்படி நிரந்தரத்தீர்வைக் கொண்டு வந்திருந்தால் உலகமே கிருத்துவமதத்தை ஏற்றுக்கொண்டிருந்திருக்கக்கூடும். மதங்களே இல்லாத உலகத்தை நோக்கி மனிதம் எப்போது நகருமோ … Continue reading உயிர்த்த ஞாயிறு – ஸர்மிளா ஸெய்யித்: August 31, 2021 சரவணன் மாணிக்கவாசகம் கட்டுரைத் தொகுப்பு எச்சரிக்கை – மிக நீண்ட பதிவு: இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம்- தொகுப்பு பா.பிரபாகரன் & யமுனா ராஜேந்திரன்: ஒரு எழுத்தாளரை விமர்சித்து இவ்வளவு பெரியநூலா? ஜெயமோகனின் மேன்மையைப் புரியாதவர்கள் என்னவோ சொல்லிப் போகட்டும், நீங்கள் தொடமுடியாத தூரத்தில் ஜெயமோகன் இருக்கிறார் என்பது போல் பல எதிர்வினைகள் பக்தர்களிடமிருந்து. நடுநிலையாளர்கள் கூடஉள்ளபடியே, நல்ல நோக்கத்துடன் இந்த நூலின் தேவை குறித்து சந்தேகப்பட்டனர். இந்தக் காரணங்களினாலேயே நூல் பற்றிப் பேசுமுன் மற்றவர்கள் பற்றி இவர் பேசியதைப் பார்க்க வேண்டியதாகிறது. நடுநிலையாளர்கள், உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் … Continue reading எச்சரிக்கை – மிக நீண்ட பதிவு: August 31, 2021 சரவணன் மாணிக்கவாசகம் கட்டுரைத் தொகுப்பு மாயவலை – பா.ராகவன்: ஆசிரியர் குறிப்பு: சென்னையில் பிறந்து, வளர்ந்து, வாழ்பவர்.கல்கி, அமுதசுரபி, குமுதம் பத்திரிகையிலும் பணியாற்றியவர். புதினங்கள், சிறுகதைகள், சிறார் நூல்கள் என்று புனைவின் எல்லாத் தளங்களிலும் நூல்களை எழுதியவர். அல்புனைவில் கிட்டத்தட்ட இருபத்தைந்து அரசியல் வரலாறு நூல்களை எழுதியவர். இந்த நூல் குமுதம் ரிப்போர்டரில் தொடராக வந்தது. மரம் சும்மாயிருந்தாலும் ……… என்பது வாசிப்பதற்கும் சொன்னது என்று எனக்கு இதற்குமுன் தெரிந்திருக்கவில்லை. மாயவலையைப் படியுங்கள் முதலில் என்று நண்பரின் விடாத வற்புறுத்தல். எழுத்தாளர் ஆறுவருடம் உழைத்திருக்கிறார் என்று அவர் … Continue reading மாயவலை – பா.ராகவன்: August 31, 2021 சரவணன் மாணிக்கவாசகம் கட்டுரைத் தொகுப்பு எழுதித்தீராப் பக்கங்கள் – செல்வம் அருளானந்தம்: ஆசிரியர் குறிப்பு: இலங்கை யாழ்ப்பாணம் அருகிலுள்ள சில்லாலை என்னும் கிராமத்தில் பிறந்தவர். தற்போது கனடாவில் வசிப்பவர். முப்பதாண்டுகளுக்கு மேலாக இலக்கிய சந்திப்புகளையும், கருத்தரங்கங்களையும், 1990ல் இருந்து புத்தகக்கண்காட்சிகளையும் நடத்தி வருகிறார். ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு அனுபவப்பதிவுகள் நூல் ஏற்கனவே வெளியாகி உள்ளன. இது அனுபவப் பதிவுகள் நூல். ஈழத்தில் இருந்து பெல்ஜியம் சென்று அங்கிருந்து கள்ளத்தனமாகக் கார்வழியாக பாரிஸ் போய்ச் சேர்வதில் இந்த நூல் ஆரம்பிக்கிறது. இலங்கை எழுத்தாளர் பலரிடம் நாம் காணும், வலியக்கட்டி இழுத்துவராத … Continue reading எழுதித்தீராப் பக்கங்கள் – செல்வம் அருளானந்தம்: August 31, 2021 சரவணன் மாணிக்கவாசகம் கட்டுரைத் தொகுப்பு தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைகள், நேர்காணல்கள்- தொகுப்பாசிரியர் மங்கையர்க்கரசி ப்ரகாஷ்: பல இலக்கிவாதிகளைத் தேடிச்சென்று சந்தித்து, இலக்கியக்கூட்டங்களை நடத்தி, கள்ளம், கரமுண்டார்வீடு போன்ற நாவல்களும், சிறுகதைகளும் தமிழுக்கு அளித்து, பொருளாதாரச் சிக்கலினூடே பல நல்ல நூல்களை பதிப்பித்த தஞ்சை ப்ரகாஷ் மீது அவர் மறைந்த பின்னரே இருந்த பொழுதைவிட அதிக வெளிச்சம் விழுந்தது. கையெழுத்துப் பிரதியாய் இருந்த இந்த நூலை அவர் துணைவியாரும், நண்பர்களும் சமீபத்தில் நூலாக வெளிக் கொணர்ந்துள்ளார்கள். பதினாறாம் நூற்றாண்டில் தஞ்சாவூருக்குப் புலம்பெயர்ந்து பின் கலவைக்கலாச்சாரமாக மாறிப்போன மராத்தி மக்கள் பின்னர் சிதறிப்போனார்கள். பழக்கங்கள் மற்றும் … Continue reading தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைகள், நேர்காணல்கள்- தொகுப்பாசிரியர் மங்கையர்க்கரசி ப்ரகாஷ்: July 24, 2021 சரவணன் மாணிக்கவாசகம் கட்டுரைத் தொகுப்பு கதையும் புனைவும் – பா.வெங்கடேசன் -நேர்காணல் – த.ராஜன்: பா.வெங்கடேசன் மதுரையில் பிறந்து வளர்ந்தவர். ஓசூரில் வசிப்பவர். புனைவின் எல்லா வடிவங்களிலும் எழுதிய பா.வெங்கடேசன் அவரது நாவல்கள் மூலம் தனித்துத் தெரிகிறார். தாண்டவராயன் கதை, ராஜன் மகள் (குறுநாவல்கள்), பாகீரதியின் மதியம், வாராணசி முதலியன இவரது நாவல்கள். இந்த நூல் சமீபத்தில் வெளிவந்த புனைவைக் குறித்த உரையாடல். த.ராஜன் திருநெல்வேலியைச் சேர்ந்த விக்கிரமசிங்கபுரத்தில் பிறந்தவர். சென்னையில் வசிக்கிறார். தற்போது இந்து தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிகிறார். ராஜன் முன்னுரையில் வெகுளி வாசிப்பு, விமர்சனபூர்வ வாசிப்பு என்று இருவகைப் … Continue reading கதையும் புனைவும் – பா.வெங்கடேசன் -நேர்காணல் – த.ராஜன்: June 29, 2021 சரவணன் மாணிக்கவாசகம் கட்டுரைத் தொகுப்பு தேசம் சாதி சமயம் – பெருந்தேவி ஆசிரியர் குறிப்பு: கவிஞர். அமெரிக்காவிலுள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் தெற்காசிய மதங்கள், பண்பாட்டு மானுடவியல், இந்திய மருத்துவ வரலாறு, பெண்ணியம் ஆகிய துறைகளூடே ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது அமெரிக்காவில் சியனா கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். தன் துறைகள் சார்ந்து கட்டுரைகளை ஆய்வு இதழ்களில் வெளியிட்டிருக்கிறார். காலச்சுவடு, கல்குதிரை, மணல்வீடு, கூடு ஆய்விதழ் முதலிய தமிழ் இதழ்களிலும் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. கவிதை தவிர மொழிபெயர்ப்பு, இலக்கியத் திறனாய்வு, புனைகதை ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டிருப்பவர். மாதொருபாகன் … Continue reading தேசம் சாதி சமயம் – பெருந்தேவி
Uddhav Thackeray slams BJP || அரசை கவிழ்க்க அமலாக்கத்துறையை பயன்படுத்த வேண்டாம்முடிந்தால் நேரடியாக மோதி பாருங்கள்பா.ஜனதாவுக்கு உத்தவ் தாக்கரே சவால் Sections செய்திகள் இந்தியா vs நியூசிலாந்து விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888 செய்திகள் தேசிய செய்திகள் உலக செய்திகள் மாநில செய்திகள் சிறப்புக் கட்டுரைகள் இந்தியா vs நியூசிலாந்து சாதனையாளர் கைவினை கலை உணவு ஆளுமை வளர்ச்சி வாழ்க்கை முறை ஆரோக்கியம் அழகு பொழுதுபோக்கு மற்றவை மாவட்ட செய்திகள் விளையாட்டு கிரிக்கெட் கால்பந்து டென்னிஸ் ஹாக்கி பிற விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா சினிமா செய்திகள் சினிமா துளிகள் முன்னோட்டம் விமர்சனம் சினி கேலரி சிறப்பு பேட்டி ஜோதிடம் ராசிபலன் ஸ்பெஷல்ஸ் டி20 உலகக் கோப்பை தேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இங்கிலாந்து தமிழ்நாடு பிரிமீயர் லீக் ஐபிஎல் 2021 இந்தியா vs நியூசிலாந்து ஆன்மிகம் தலையங்கம் உங்கள் முகவரி மணப்பந்தல் DT Apps E-Paper DTNext Thanthi Ascend Thanthi TV DT Apps செய்திகள் தேசிய செய்திகள் உலக செய்திகள் மாநில செய்திகள் சிறப்புக் கட்டுரைகள் இந்தியா vs நியூசிலாந்து சாதனையாளர் கைவினை கலை உணவு ஆளுமை வளர்ச்சி வாழ்க்கை முறை ஆரோக்கியம் அழகு பொழுதுபோக்கு மற்றவை மாவட்ட செய்திகள் விளையாட்டு கிரிக்கெட் கால்பந்து டென்னிஸ் ஹாக்கி பிற விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா சினிமா செய்திகள் சினிமா துளிகள் முன்னோட்டம் விமர்சனம் சினி கேலரி சிறப்பு பேட்டி ஜோதிடம் ராசிபலன் ஸ்பெஷல்ஸ் டி20 உலகக் கோப்பை தேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இங்கிலாந்து தமிழ்நாடு பிரிமீயர் லீக் ஐபிஎல் 2021 இந்தியா vs நியூசிலாந்து ஆன்மிகம் தலையங்கம் உங்கள் முகவரி மணப்பந்தல் DT Apps breaking news: ஆஷஸ் தொடரின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. தேசிய செய்திகள் அரசை கவிழ்க்க அமலாக்கத்துறையை பயன்படுத்த வேண்டாம்முடிந்தால் நேரடியாக மோதி பாருங்கள்பா.ஜனதாவுக்கு உத்தவ் தாக்கரே சவால் + "||" + Uddhav Thackeray slams BJP அரசை கவிழ்க்க அமலாக்கத்துறையை பயன்படுத்த வேண்டாம்முடிந்தால் நேரடியாக மோதி பாருங்கள்பா.ஜனதாவுக்கு உத்தவ் தாக்கரே சவால் கோப்பு படம் Facebook Twitter Mail Text Size Print எனது அரசை கவிழ்க்க அமலாக்கத் துறையை பயன்படுத்தாமல் நேருக்கு நேர் மோதி பாருங்கள் என்று பா.ஜனதாவுக்கு உத்தவ் தாக்கரே சவால் விடுத்தார். பதிவு: அக்டோபர் 16, 2021 11:09 AM மும்பை, சிவசேனாவின் ஆண்டு விழா பொதுக்கூட்டம் வருடந்தோறும் தசரா பண்டிகை அன்று தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் நடத்தப்படும். அரங்கில் நடந்த விழா இந்த பொதுக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள், கட்சியினர் கலந்து கொள்வார்கள். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சிவசேனா தசரா பொதுக்கூட்டம் சிவாஜி பார்க்கில் நடைபெறவில்லை. இந்தநிலையில் இந்த ஆண்டும் தொற்று பரவல் காரணமாக சிவசேனா தசரா பொதுக்கூட்டம் சிவாஜி பார்க்கில் நடத்தப்படவில்லை. மாறாக சயான் சண்முகனந்தா அரங்கில் நடந்தது. முக்கிய நிர்வாகிகள் மட்டும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஆன்லைனில் ஒளிபரப்பப்பட்டது. இதில் முதல்-மந்திரியும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பா.ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்தார். முடிந்தால் ஆட்சியை கவிழ்த்து பாருங்கள் அவர் பேசியதாவது:- போதைக்கு அடிமையானால் நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் சிதைப்பீர்கள். ஆனால் ஆட்சி அதிகாரத்திற்கான பசி மற்றவர்களின் குடும்பங்களை அழிக்கும். ஆர்.எஸ்.எஸ். மற்றும் சிவசேனாவின் கொள்கைகள் ஒன்று தான். ஆனால் பாதை வேறு. கூட்டணியில் இருந்து பிரிந்த பிறகு சிவசேனாவை ஊழல்கட்சி என பா.ஜனதா குற்றம் சாட்டுகிறது. உங்கள் பின்னால் வந்த போது நாங்கள் நல்லவர்களாக இருந்தோம். அமலாக்கத்துறையை பயன்படுத்த வேண்டாம். முன்னால் நின்று நேருக்கு நேராக மோதுங்கள். பல முறை கவிழ்க்க முயற்சி செய்தும் எங்களது அரசு அடுத்த மாதம் 2 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. முடிந்தால் ஆட்சியை கவிழ்த்து பாருங்கள். மத்திய முகமைகளை பயன்படுத்தி எங்கள் கூட்டணி கட்சிகளுடன் பா.ஜனதா சவால் விடக்கூடாது. மத்திய, மாநில உறவு பா.ஜனதாவுக்கு எதிராக நின்றதற்காக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கும், அம்மாநில மக்களுக்கு வாழ்த்துகளை கூறி கொள்ள விரும்புகிறேன். அதேபோல சிவசேனாவினரும், மராட்டிய அரசுடன் நிற்க வேண்டும். நாட்டில் உள்ள இந்துக்கள் தற்போது தான் உண்மையில் அபாய நிலையில் உள்ளனர். இந்துத்வாவை பயன்படுத்தி ஆட்சி அதிகார ஏணியில் ஏறியவர்கள் தற்போது பிரிட்டிஷ் பிரிவினைவாத கொள்கைக்கு மாறி உள்ளனர். பா.ஜனதா விடுதலை போராட்டத்தில் எதையும் செய்யவில்லை. பாரத் மாதாகி ஜெய், வந்தே மாதரம் என முழங்குவதால் மட்டும் நீங்கள் எல்லை காக்கும் போர் வீரனைவிட தேசப்பற்று மிக்கவராக மாறிவிட முடியாது. நீங்கள் காந்தி, வீரசாவர்க்கர் என யாரையும் புரிந்து கொள்ளவில்லை. விடுதலை போராட்டத்தில் நீங்கள் எதுவும் செய்யாத போது காந்தி, சாவர்க்கரை பற்றி பேச உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் மத்திய, மாநில உறவுகள், கூட்டாட்சி அமைப்பு மற்றும் நாட்டில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பொது மேடையில் விவாதம் நடத்த வேண்டும். மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுவது பற்றி விவாதிக்கப்பட வேண்டும். வேட்பாளர்கள் இறக்குமதி நான் ஒரு இந்துத்வா வாதி. அதில் எனக்கு அவமானம் இல்லை. ஆனால் ஒரு முதல்-மந்திரியாக நான் எல்லோரையும் சமமாக நடத்துகிறேன். எங்கள் இந்துத்வா எங்களுக்கு சமதர்மத்தை போதித்து உள்ளது. பா.ஜனதா ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் தோல்வி அடைந்ததால், மராட்டியத்தை களங்கப்படுத்தி வருகிறது. உலகின் மிகப்பெரிய கட்சிக்கு சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிட கூட பிற கட்சியில் இருந்து ஆட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது (மராட்டியத்தில் நடைபெற உள்ள தெக்லூர் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் சிவசேனா முன்னாள் எம்.எல்.ஏ. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்). இதேபோல நான் ஒரு முதல்-மந்திரி என உணரக்கூடாது என கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் சகோதரன் அல்லது வீட்டில் ஒருவனாகவே இருக்க விரும்புகிறேன் (சமீபத்தில் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னவில் தற்போதும் முதல்-மந்திரி போலவே உணருவதாக கூறியிருந்தார்). மராட்டியத்தில் மட்டும் தான் போதை பொருள் உள்ளதா?. மாநில போலீசார் இதுவரை ரூ.150 கோடி மதிப்பிலான போதை பொருளை பறிமுதல் செய்து உள்ளனர். நீங்கள் ஏன் பிரபலங்களில் கைதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறீர்கள். முந்த்ரா துறைமுகம் எங்குள்ளது, அங்கு பறிமுதல் செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் எங்கே?.
Colombo (News 1st) உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் இரண்டு தீர்மானங்களை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (07) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவித்தார். உள்நாட்டு பசும்பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பது முதலாவது திட்டமாகும். அதற்காக தற்போது கால்நடை வளர்ப்பு அதிகார சபைக்கு சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகளை கையக்கப்படுத்தி கால்நடை வளர்ப்பு பண்ணைகளாக அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
Tagged அதிகமாக வெளியேறி, ஏற்பட்டால், நீர்க்கடுப்பு, வியர்வை, வெயிலில் வியர்வை அதிகமாக வெளியேறி நீர்க்கடுப்பு ஏற்பட்டால், வெயில் Prevதுணியை அயர்ன் (இஸ்திரி) செய்வது எப்ப‍டி? Nextஉங்கள் மகனுக்கோ அல்ல‍து மகளுக்கோ 'உள்நாக்கு வளர்ச்சி' அதிகமாக இருக்கிறதா? – ப‌தறாதீங்க‌! Leave a Reply Cancel reply சங்கு – அரிய தகவல் Search for: Advertisement Categories Categories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (164) அழகு குறிப்பு (707) ஆசிரியர் பக்க‍ம் (292) “ஆவிகள் இல்லையடி பாப்பா!” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே!” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .!” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா? (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்! (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா? (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா!!! (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (292) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,166) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,916) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,455) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,673) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,420) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (586) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97) Recent Comments Karan on தலைப்புச் செய்திகள் Elakya Kayah on மச்சம் – பல அரிய தகவல்கள் Malathy on நாட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால்… Prabhakaran S on விபரீதத்தின் உச்ச‍ம் – மரணம் அனுப்பிய தூதுவன் க‌பம் – ஓரலசல் Rithika on அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (10/12) – இக்கடிதமும், இதற்கான பதிலும் பெற்றோருக்கான எச்சரிக்கை மணி த. பாக்கியராஜ் on புல எண் (Survey Number) என்றால் என்ன? p praveen kumar on ரெட்டை ஜடை போடுவது எப்ப‍டி?- செய்முறை காட்சி – வீடியோ Prasanth on பஜாஜ் டிஸ்கவரி நவீன டெக்னாலஜி பைக் Ramesh on எண்களின் தமிழ் வடிவ ஓலிகளை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள . . . V2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள் Archives Archives Select Month June 2021 (2) May 2021 (2) April 2021 (1) March 2021 (2) February 2021 (4) January 2021 (3) December 2020 (12) November 2020 (9) October 2020 (4) September 2020 (6) August 2020 (19) July 2020 (17) June 2020 (29) May 2020 (31) April 2020 (50) March 2020 (43) February 2020 (44) January 2020 (27) December 2019 (40) November 2019 (23) October 2019 (53) September 2019 (49) August 2019 (61) July 2019 (56) June 2019 (79) May 2019 (148) April 2019 (109) March 2019 (71) February 2019 (71) January 2019 (77) December 2018 (72) November 2018 (56) October 2018 (43) September 2018 (30) August 2018 (23) July 2018 (27) June 2018 (47) May 2018 (41) April 2018 (90) March 2018 (73) February 2018 (64) January 2018 (101) December 2017 (101) November 2017 (81) October 2017 (82) September 2017 (78) August 2017 (50) July 2017 (37) June 2017 (24) May 2017 (28) April 2017 (27) March 2017 (50) February 2017 (33) January 2017 (33) December 2016 (45) November 2016 (72) October 2016 (52) September 2016 (46) August 2016 (44) July 2016 (66) June 2016 (40) May 2016 (47) April 2016 (54) March 2016 (51) February 2016 (48) January 2016 (62) December 2015 (82) November 2015 (56) October 2015 (70) September 2015 (60) August 2015 (62) July 2015 (70) June 2015 (100) May 2015 (131) April 2015 (99) March 2015 (63) February 2015 (90) January 2015 (95) December 2014 (114) November 2014 (125) October 2014 (90) September 2014 (116) August 2014 (112) July 2014 (96) June 2014 (90) May 2014 (106) April 2014 (100) March 2014 (95) February 2014 (146) January 2014 (220) December 2013 (157) November 2013 (179) October 2013 (247) September 2013 (277) August 2013 (260) July 2013 (238) June 2013 (127) May 2013 (177) April 2013 (161) March 2013 (155) February 2013 (90) January 2013 (98) December 2012 (145) November 2012 (146) October 2012 (130) September 2012 (143) August 2012 (163) July 2012 (205) June 2012 (192) May 2012 (217) April 2012 (257) March 2012 (292) February 2012 (203) January 2012 (181) December 2011 (179) November 2011 (177) October 2011 (151) September 2011 (145) August 2011 (232) July 2011 (220) June 2011 (250) May 2011 (281) April 2011 (182) March 2011 (297) February 2011 (200) January 2011 (305) December 2010 (213) November 2010 (54) October 2010 (253) September 2010 (180) August 2010 (58)
`தூய்மைப் பணியாளரின் தங்கமயமான உள்ளம்!’ - நேர்மையைப் பாராட்டிய தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்! | chief secretary praises a scavenger - Vikatan Save the vikatan web app to Home Screen tap on Add to home screen. X READ IN APP Login செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் விளையாட்டு கிரிக்கெட் கால்பந்து ஐ.பி.எல் ஆன்லைன் தொடர்கள் New My News ராசி காலண்டர் மேலும் மெனுவில் Search Published: 22 Oct 2021 4 PM Updated: 22 Oct 2021 4 PM `தூய்மைப் பணியாளரின் தங்கமயமான உள்ளம்!’ - நேர்மையைப் பாராட்டிய தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்! ஆ.பழனியப்பன் ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் Use App இறையன்பு ஐ.ஏ.எஸ்! குப்பையில் கிடந்த ரூ.5 லட்சம் மதிப்புகொண்ட 100 கிராம் தங்க நாணயத்தை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் பாராட்டுக் கடிதம் எழுதியிருக்கிறார். உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்த கணேஷ் ராமன் என்பவர் ஒரு தனியார் நிறுவன ஊழியர். அவர், கடந்த மார்ச் மாதம் 100 கிராம் எடைகொண்ட தங்க நாணயத்தை வாங்கியிருக்கிறார். அதன் மதிப்பு சுமார் ரூ. 5 லட்சம். அதை, ஒரு கவரில் போட்டு கட்டிலுக்கு அடியில் வைத்திருக்கிறார். ஐந்து நாள்களுக்கு முன்பாக வீட்டைச் சுத்தம் செய்தபோது, தங்க நாணயம் இருப்பது தெரியாமல் அந்த கவரை எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டார் கணேஷ் ராமனின் மனைவி. மாலையில் பணி முடிந்து வீட்டுக்கு வந்த கணேஷ் ராமன், தங்க நாணயம் இருந்த கவர் காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். நாணயம் இருந்தது தெரியாமல் தன் மனைவி குப்பைத்தொட்டியில் கவரைப் போட்டுவிட்ட விவரம் தெரியவந்தது. உடனே அவர், சாத்தாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தங்க நாணயத்தை ஒப்படைக்கும் மேரி அது குறித்து, அந்தப் பகுதியில் தூய்மைப் பணி மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தின் நிர்வாகிகளிடம் போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். அதற்குள், குப்பையைத் தரம்பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மேரி என்ற துப்புரவுப் பணியாளரின் கையில் அந்தத் தங்க நாணயம் கிடைத்திருக்கிறது. அதை அவர் தன் மேற்பார்வையாளரிடம் ஒப்படைத்திருக்கிறார். பின்னர், சாத்தாங்காடு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜேஷ்வரியிடம் தங்க நாணயம் ஒப்படைக்கப்பட்டது. உடனே கணேஷ் ராமனை வரவழைத்து அவரிடம் தங்க நாணயத்தைக் கொடுத்திருக்கிறார்கள் போலீஸார். தூய்மைப் பணியாளர் மேரியே தன் கையால் கணேஷ் ராமனிடம் அந்தத் தங்க நாணயத்தை ஒப்படைத்தார். Also Read பீரங்கிகள், ஏவுகணைகள்... இந்தியா - சீனா எல்லையில் படைகள் தயார்நிலையில் இருப்பது ஏன்?! தூய்மைப் பணியாளர் மேரியின் நேர்மையை காவல்துறை அதிகாரிகள் உட்பட பலரும் பாராட்டினர். இந்த நிலையில், இந்தச் செய்தியை அறிந்த தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் தன் கைப்பட தூய்மைப் பணியாளர் மேரிக்கு பாராட்டுக் கடிதம் எழுதியிருக்கிறார். இறையன்புவின் பாராட்டுக் கடிதம் அந்தக் கடிதத்தில், ``அன்புள்ள மேரி அவர்களுக்கு, வணக்கம். தேவையிருக்கும் இடத்தில் காணப்படும் தூய்மையே மகத்தானது. குப்பையில் கிடந்த தங்கத்தைக் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த உங்கள் நேர்மையின் காரணமாக, உங்களிடம் இருக்கும் தங்கமயமான உள்ளத்தை நாங்கள் கண்டுபிடிக்க முடிந்தது. நீங்கள் தூய்மைப் பணியாளர் மட்டுமல்ல, தூய்மையான பணியாளர். உங்கள் நேர்மைக்கு மனமார்ந்த பாராட்டுகள். குறுக்குவழிகளெல்லாம் நேர்வழிகளைக் காட்டிலும் நீளமானவை என்பதற்கு நீங்கள் சான்று. வாழ்த்துகள்” என்று வெ.இறையன்பு பாராட்டியிருக்கிறார். தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism chennai police gold coin letter Iraianbu I.A.S. ஆ.பழனியப்பன்Follow Write: Politics / Social Issues / Economy / International Affairs Interests: Politics / Books / Music இதழியல் பணியில் 24 ஆண்டுகளாக இருந்துவருகிறார். அரசியல், சமூகம், பொருளாதாரம் தொடர்பாக கட்டுரைகள் எழுதிவருவதுடன், முக்கிய அரசியல் ஆளுமைகளை நேர்காணல் செய்திருக்கிறார். The Krishnaswamy Memorial Award for Journalism of Change - 2013 விருது மற்றும் Justice V.R. Krishna Iyer Centeneray Award - 2015 for Social Justice and Human Rights Crusade விருது பெற்றுள்ளார்.
தமிழில், நான் படித்தவற்றில், மிக முக்கியமான நூறு புத்தகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். அதாவது - என் பார்வையில், தமிழில் வாசிக்கும் பழக்கமுடையோர் அனைவரும் கட்டாயமாய் படித்தே ஆக வேண்டிய புத்தகங்கள் இவை. புத்தகக் கண்காட்சிக்கு செல்பவர்களுக்கும், புத்தகம் படிக்கத் தொடங்குபவர்களுக்கும் இது பயன்படலாம். திருக்குறள் - மு.வ. உரை பட்டினத்தார் பாடல்கள் பாரதியார் கவிதைகள் பாரதிதாசன் கவிதைகள் கண்ணதாசன் கவிதைகள் வைரமுத்து கவிதைகள் சுந்தர ராமசாமி கவிதைகள் கலாப்ரியா கவிதைகள் கல்யாண்ஜி கவிதைகள் அசோகமித்திரன் கட்டுரைகள் புதுமைப்பித்தன் சிறுகதைகள் லா.ச.ரா. சிறுகதைகள் சுந்தர ராமசாமி சிறுகதைகள் ஜி.நாகராஜன் ஆக்கங்கள் அ.முத்துலிங்கம் கதைகள் ஜெயமோகன் சிறுகதைகள் அம்பை சிறுகதைகள் ஆதவன் சிறுகதைகள் யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதைகள் ஜெயமோகன் குறுநாவல்கள் சுஜாதாவின் நாடகங்கள் சுஜாதாவின் மர்மக்கதைகள் நாட்டுப்புறக்கதைகள் - கி.ராஜநாராயணன் விஞ்ஞான சிறுகதைகள் - சுஜாதா ஸ்ரீரங்கத்துக்கதைகள் - சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - சுஜாதா பீக்கதைகள் - பெருமாள்முருகன் விசும்பு - ஜெயமோகன் என் வீட மேலும் வாசிக்க‌ » மீயழகி August 21, 2020 கே: உலகின் அழகான பெண்ணைச் சந்தித்திருக்கிறீர்களா? ப: ஆம். 1984ம் ஆண்டு. ஒரு நகைக் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். என்னைத் தவிர வேறு யாரும் கடையில் இல்லை. நல்ல உயரமும் திடகாத்திரமான உடல்வாகும் கொண்ட ஓர் இந்துப் பெண் கடைக்குள் நுழைந்தார். அவரிடம் இலத்தீன் அமெரிக்க சாயல் கொஞ்சம் இருந்தது. ஓர் இளவரசிக்கான தோரணையுடன் நடந்துகொண்டார். யார் கண்டது? உண்மையிலேயே இளவரசியாக இருக்கக்கூடும். அவரது தோலில் ஒருவித மினுமினுப்பு இருந்தது. செம்பு நிறம், நீண்ட கூந்தல், மற்ற அங்கங்கள் அத்தனையும் கச்சிதமாக இருந்தன. எல்லா பருவங்களிலும் அழகாக இருக்கக்கூடிய பெண் என நினைத்தேன். ஏதோவொரு அட்டிகையை வாங்கியதாக நினைவு. அதற்கு பில் போடுவதற்கே எனக்கு கூச்சமாக இருந்தது. இளவரசியிடம் பணம் பெறுவதா? அதைப் புரிந்துகொண்டவர் போல புன்னகைத்தார். எனக்குக் கிறக்கமாக இருந்தது. அவரைப் போன்றதொரு அழகியை பிறகெப்போதும் நான் சந்திக்கவில்லை. இப்போது நினைவுகூர்கையில் அவரை மகா காளியின் வடிவுடன் பொருத்திக்கொள்ள முடிகிறது. ஆனால், உக்கிரம் தணிந்தவர். இனிமையானவர். நளினமானவர். (பொலான்யோ Playboy-க்கு அளித்த பேட்டியிலிருந்து. மொழிபெயர்ப்பு: மேலும் வாசிக்க‌ » CSK Diet October 03, 2020 இவை உணவுக் கட்டுப்பாட்டுக்கான என் ஏழு கட்டளைகள். இது எந்தக் குறிப்பிட்ட டயட்டின் பிரதியும் அல்ல. நான் இத்தனை நாள் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கொண்ட பல விஷயங்களின் அடிப்படையில் நான் வந்தடைந்திருக்கும் ஒரு பட்டியல். (இதில் நான் பால், தயிர், டீ, காஃபி, மது போன்றவற்றைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. ஏனெனில் அவற்றை நான் எடுப்பதில்லை. அதனால் அவை தேவையா, இல்லையா, தேவையெனில் என்ன அளவில் எடுக்கலாம் என்பது பற்றிய அனுபவ அறிவு ஏதும் எனக்குக் கிடையாது. அதனால் அதைப் பேசுவது சரியல்ல.) Disclaimer: இந்த‌ diet எல்லோருக்கும் பொருத்தமானது எனச் சொல்வதற்கில்லை. ஒவ்வொரு மனித‌ உடலும் தனித்துவமானது. ஆக, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி உணவு முறையே பொருந்தும். இது என் வழிமுறை மட்டுமே. (நானுமே தொடர்ந்தோ, முழுமையாகவோ, தீவிரமாகவோ இதைப் பின்பற்றியதில்லை. அவ்வப்போது, இவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தி இருக்கிறேன்.) ஆக, அதிகபட்சம் இதை ஒரு வழிகாட்டுதலாகக் கொள்ளலாம். இதைப் பின்பற்றிப் பார்ப்பது பற்றி அவரவர் சுயபுத்தியின் அடிப்படையில் தான் தீர்மானிக்க வேண்டும். எதிர்மறை விளைவுகளுக்கு நான் எவ்வகையிலும் பொறுப்பல்ல. நோய்
கல்யாண்குமார் 'புதிய தலைமுறை' வார இதழின் உதவி ஆசிரியர். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரின் திரைக்கதை விவாதக்குழுவில் பணியாற்றுகிறார். 'பரத்தை கூற்று' தொகுப்பு குறித்து அவர் எழுதியிருந்த மின்னஞ்சல் இங்கே: ******* அன்பான சரவண கார்த்திகேயன், இனிய வணக்கம். நான் கல்யாண்குமார். புதிய தலைமுறையில் உதவி ஆசிரியராக உள்ளேன். நண்பர் அதிஷா மூலமாக உங்களின் பரத்தை கூற்று படிக்கக் கிடைத்தது.ஆழமான அழுத்தமான விஷயங்களை உங்களின் எளிய சொல்லாடல் மூலம் அற்புதமாக பதிவு செய்து, பரத்தையரின் உலகிற்காக ஓங்கிக் குரல் கொடுத்திருக்கிறீர்கள். அவர்களுக்குக் குரல் கொடுக்க எழுத்தாளர்களாகிய நம்மைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள் பாவம். இது அவர்களுக்கான ஒரு சிறப்பிதழ் என்றே சொல்லலாம். நகைச்சுவையையும், சிந்தனையையும், அவர்களின்பால் பரிதாபத்தையும் அந்தக் கவிதைகளை படிக்கிற தருணத்தில் தூண்டி விடுகின்றன, உங்களின் வீரியமிக்க வரிகள். உங்களுக்கு எழுத்துத் துறையில் வெளிச்சம் நிறைந்த எதிர்காலம் இருப்பதை உணர்கிறேன். வாழ்த்துகள், அன்புடன் கல்யாண் Get link Facebook Twitter Pinterest Email Other Apps Comments Anonymous said… http://writerviki.blogspot.com/2011/08/2.html ************************************ படிக்க தவற வேண்டாம்!!திமுக அல்லைகையான கவிஞர் பாகம் இரண்டு! Tuesday, August 9, 2011 at 11:00:00 AM GMT+5:30 ராஜன் said… @Writer CSK சார் வணக்கம்.பின்நவீனத்துவம் குறித்து அறிமுகம் பெற்று கொள்ள ஒரு நல்ல தமிழ் புத்தகம் ஒன்றை பரிந்துரைக்குமாரு கேட்டு கொள்கிறேன்.நன்றி Saturday, August 20, 2011 at 6:32:00 PM GMT+5:30 ராஜன் said… நேத்து கேட்ட கேள்விக்கு பதில் தெரியல!!பாருங்க மக்களே இவுருதான் Writer ஆம்!!யாரை நம்ப சொல்லுற?வெறும் csk என்று மாத்திக்க!! Monday, August 22, 2011 at 6:35:00 PM GMT+5:30 Post a Comment Popular posts from this blog தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள் January 08, 2009 தமிழில், நான் படித்தவற்றில், மிக முக்கியமான நூறு புத்தகங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். அதாவது - என் பார்வையில், தமிழில் வாசிக்கும் பழக்கமுடையோர் அனைவரும் கட்டாயமாய் படித்தே ஆக வேண்டிய புத்தகங்கள் இவை. புத்தகக் கண்காட்சிக்கு செல்பவர்களுக்கும், புத்தகம் படிக்கத் தொடங்குபவர்களுக்கும் இது பயன்படலாம். திருக்குறள் - மு.வ. உரை பட்டினத்தார் பாடல்கள் பாரதியார் கவிதைகள் பாரதிதாசன் கவிதைகள் கண்ணதாசன் கவிதைகள் வைரமுத்து கவிதைகள் சுந்தர ராமசாமி கவிதைகள் கலாப்ரியா கவிதைகள் கல்யாண்ஜி கவிதைகள் அசோகமித்திரன் கட்டுரைகள் புதுமைப்பித்தன் சிறுகதைகள் லா.ச.ரா. சிறுகதைகள் சுந்தர ராமசாமி சிறுகதைகள் ஜி.நாகராஜன் ஆக்கங்கள் அ.முத்துலிங்கம் கதைகள் ஜெயமோகன் சிறுகதைகள் அம்பை சிறுகதைகள் ஆதவன் சிறுகதைகள் யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதைகள் ஜெயமோகன் குறுநாவல்கள் சுஜாதாவின் நாடகங்கள் சுஜாதாவின் மர்மக்கதைகள் நாட்டுப்புறக்கதைகள் - கி.ராஜநாராயணன் விஞ்ஞான சிறுகதைகள் - சுஜாதா ஸ்ரீரங்கத்துக்கதைகள் - சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - சுஜாதா பீக்கதைகள் - பெருமாள்முருகன் விசும்பு - ஜெயமோகன் என் வீட மேலும் வாசிக்க‌ » மீயழகி August 21, 2020 கே: உலகின் அழகான பெண்ணைச் சந்தித்திருக்கிறீர்களா? ப: ஆம். 1984ம் ஆண்டு. ஒரு நகைக் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். என்னைத் தவிர வேறு யாரும் கடையில் இல்லை. நல்ல உயரமும் திடகாத்திரமான உடல்வாகும் கொண்ட ஓர் இந்துப் பெண் கடைக்குள் நுழைந்தார். அவரிடம் இலத்தீன் அமெரிக்க சாயல் கொஞ்சம் இருந்தது. ஓர் இளவரசிக்கான தோரணையுடன் நடந்துகொண்டார். யார் கண்டது? உண்மையிலேயே இளவரசியாக இருக்கக்கூடும். அவரது தோலில் ஒருவித மினுமினுப்பு இருந்தது. செம்பு நிறம், நீண்ட கூந்தல், மற்ற அங்கங்கள் அத்தனையும் கச்சிதமாக இருந்தன. எல்லா பருவங்களிலும் அழகாக இருக்கக்கூடிய பெண் என நினைத்தேன். ஏதோவொரு அட்டிகையை வாங்கியதாக நினைவு. அதற்கு பில் போடுவதற்கே எனக்கு கூச்சமாக இருந்தது. இளவரசியிடம் பணம் பெறுவதா? அதைப் புரிந்துகொண்டவர் போல புன்னகைத்தார். எனக்குக் கிறக்கமாக இருந்தது. அவரைப் போன்றதொரு அழகியை பிறகெப்போதும் நான் சந்திக்கவில்லை. இப்போது நினைவுகூர்கையில் அவரை மகா காளியின் வடிவுடன் பொருத்திக்கொள்ள முடிகிறது. ஆனால், உக்கிரம் தணிந்தவர். இனிமையானவர். நளினமானவர். (பொலான்யோ Playboy-க்கு அளித்த பேட்டியிலிருந்து. மொழிபெயர்ப்பு: மேலும் வாசிக்க‌ » CSK Diet October 03, 2020 இவை உணவுக் கட்டுப்பாட்டுக்கான என் ஏழு கட்டளைகள். இது எந்தக் குறிப்பிட்ட டயட்டின் பிரதியும் அல்ல. நான் இத்தனை நாள் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கொண்ட பல விஷயங்களின் அடிப்படையில் நான் வந்தடைந்திருக்கும் ஒரு பட்டியல். (இதில் நான் பால், தயிர், டீ, காஃபி, மது போன்றவற்றைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. ஏனெனில் அவற்றை நான் எடுப்பதில்லை. அதனால் அவை தேவையா, இல்லையா, தேவையெனில் என்ன அளவில் எடுக்கலாம் என்பது பற்றிய அனுபவ அறிவு ஏதும் எனக்குக் கிடையாது. அதனால் அதைப் பேசுவது சரியல்ல.) Disclaimer: இந்த‌ diet எல்லோருக்கும் பொருத்தமானது எனச் சொல்வதற்கில்லை. ஒவ்வொரு மனித‌ உடலும் தனித்துவமானது. ஆக, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி உணவு முறையே பொருந்தும். இது என் வழிமுறை மட்டுமே. (நானுமே தொடர்ந்தோ, முழுமையாகவோ, தீவிரமாகவோ இதைப் பின்பற்றியதில்லை. அவ்வப்போது, இவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தி இருக்கிறேன்.) ஆக, அதிகபட்சம் இதை ஒரு வழிகாட்டுதலாகக் கொள்ளலாம். இதைப் பின்பற்றிப் பார்ப்பது பற்றி அவரவர் சுயபுத்தியின் அடிப்படையில் தான் தீர்மானிக்க வேண்டும். எதிர்மறை விளைவுகளுக்கு நான் எவ்வகையிலும் பொறுப்பல்ல. நோய்
வணக்கம் நண்பர்களே, மீண்டும் ஒரு கவர்ச்சியான ஹோமோசெக்ஸ் கதையில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்த கொரோனா விடுமுறையில் நண்பனுடன் செய்த ஆண் ஓரின ஹோமோ செக்ஸை பற்றி முழுமையாக பகிர்ந்து கொள்கிறேன். கதையை படித்து உங்களின் கருத்துகளை கீழே பகிர்ந்து கொள்ளுங்கள்! வாருங்கள் கதைக்கு போகலாம்! என் பெயர் சிவா, வயது 22. என் சொந்த ஊர், தேனி மாவட்டத்தின் அருகில் உள்ள சின்ன கிராமம். தற்பொழுது சென்னையில் ஆண்கள் விடுதியில் தாங்கி மூன்றாம் ஆண்டு கல்லுரி படித்து இருக்கிறேன். ஆரம்பத்தில் ஒன்றும் தெரியாத பையனாக கிராமத்தில் இருந்து வந்து இருந்தேன். பின்பு சென்னை பசங்களுடன் நண்பர்கள் ஆகி நன்றாக ஊர் சுற்ற ஆரம்பித்து விட்டேன். கொஞ்ச கொஞ்சமாக சரக்கு போன்ற விஷயங்களையும் அடிக்க காற்று கொண்டேன். “இந்த இளமை பருவத்தில் அனைத்து விதமான சுகத்தையும் அனுபவித்து பார்த்து விட வேண்டும் டா” என்று என் நெருங்கிய நண்பன் அடிக்கடி கூறிக்கொண்டு இருப்பான். சென்னையிலே சந்தோஷமாக இருந்ததால், விடுமுறையில் கூட வீட்டுக்கு போகாமல் இங்கே ஜாலியாக இருந்தேன். எந்த பழக்கம் வளர்த்து கொண்டாலும், படிப்பில் கோட்டை விடாமல் அதிக மதிப்பெண்கள் எடுத்து வீட்டுக்கு நல்ல பையன் போன்று தெரிந்து வந்தேன். நீண்ட விடுமுறையில் மட்டும் சென்னையில் உள்ள சித்தப்பா வீட்டுக்கு சென்று வருவேன். தேனிக்கு சென்று 3 வருடங்கள் மேல் ஆகிறது. கல்லுரியில் மிகவும் ஜாலியாக இருந்து வந்தேன். என் நண்பர்கள் அனைவரும் பணக்கார பசங்கள் என்பதால் பணத்துக்கு குறை எப்பொழுதும் இருந்ததது இல்லை. ஒரு முறை என்னை ஒரு பெண்ணை மேட்டர் அடிக்க அனுப்பி வைத்தார்கள் ஆனால் நான் பயந்து கொண்டு செய்யாமல் வந்து விட்டேன். “டேய்! மச்சான்! உனக்கு செக்ஸ் ஆசை தெளிய வேண்டும் என்பதால் தான் செய்ய சொன்னோம். எதுவுமே செய்யாமல் வந்து இருக்க?” என்று தலையில் அடித்து கொண்டான். “டேய் ! எனக்கு பயமாக இருக்கு டா!” என்று ஆரம்பித்தில் கூறினேன். ஒரு நாள் என்னை ஒரு ரூமுக்கு அழைத்து சென்று என் கண் எதிரே ஒரு அழகான பெண்ணை நிர்வாணமாக செக்ஸ் செய்ய ஆரம்பித்தான். அதை பார்த்தவுடன் எனக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த இடத்திலே சுன்னியை வெளியில் எடுத்து சுய இன்பம் செய்ய ஆரம்பித்து விட்டேன். அதன்பின் செக்ஸ் மேல் இருந்த பயம் போனது, நானும் பெண்களை உஷார் செய்து மேட்டர் அடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்கு அடித்தளமாக முதல் முறையே கல்லுரி பெண் டீச்சரை மொட்டை மாடிக்கு அழைத்து சென்று முலையை பிசைந்து காமம் செய்து விட்டேன். அதன்பின் மிகவும் பழகிய விஷயமாக மாறிவிட்டது. வார இறுதியில் சரக்கு அடித்து விட்டு பெண்களுடன் கும்பலாக எல்லாம் செக்ஸ் செய்ய ஆரம்பித்தோம். ஒரு நாள் நண்பர்கள் அனைவரும் குடித்து விட்டு, ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தோம். “டேய்! இதுவரை பல்வேறு பெண்களை செக்ஸ் செய்துவிட்டோம், மேலும் பல்வேறு இன்பங்களை செய்து விட்டோம் ஆனால் ஒரு முறை கூட ஹோமோ செக்ஸ் செய்தது இல்லை” என்று ஒரு நண்பன் கூற ஆரம்பித்தான். மற்ற நண்பர்களும், “அனைத்து விதமான செக்ஸையும் செய்து விட்டோம். இதையும் நாளை செய்து விடலாம்” என்று கூறினான். அதை கேட்டதில் இருந்து எனக்கும் அதிகமாக ஆசை பிறந்தது. அன்று அனைவரும் அதிகமாக சரக்கு அடித்து இருந்ததால், உறங்கி விட்டோம். மறுநாள் நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க போவதாக கூறினார்கள். வேறு வழியின்றி சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டேன். நண்பர்களுடன் ஹோமோ செக்ஸ் செய்ய முடியவில்லை என்று மிகவும் வருத்தத்தில் இருந்தேன். மற்ற நண்பர்கள் சென்னை என்பதால் அடுத்த சில நாட்களில் அந்த சுகத்தை அனுபவித்து கொள்வார்கள் என்று தெரியும். பல வருடங்களுக்கு பிறகு என் சொந்த ஊருக்கு சென்றேன். முன்பு போன்று இல்லாமல் பச்சை பசேல் என்று இயற்கை கொஞ்சும் அழகில் அருமையாக இருந்தது. நான் பள்ளியில் கொண்டு இருந்த வேளையில், சந்தோஷ் என்ற நெருங்கிய நண்பன் ஒருவன் இருந்தான். நான் ஊருக்கு வந்தவுடனே, “டேய்! மச்சான் எப்படி டா இருக்க? ” என்று இறுக்கமாக கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தான். எனக்கு உடம்பு முழுவதும் மின்சாரம் பாய்வது போன்று இருந்தது. பின்பு சந்தோஷுடன் பேசி கொண்டு வீட்டுக்கு சென்றேன். முதல் ஒரு மாதம் ஜாலியாக சென்று கொண்டு இருந்தது. அந்த இடைப்பட்ட நேரத்தில் இரண்டு மாமா பெண்களை செக்ஸ் செய்து விட்டேன் ஆனால் என் ஆசை முழுவதும் ஹோமோ செக்ஸ் செய்வதில் மட்டுமே அதிகமாக இருந்தது. நண்பர்களும் சென்னையில் இருந்து போன் செய்து, “மச்சான்! நாங்க எல்லாம் கும்பலாக ஒரு முறை ஹோமோ செக்ஸ் செய்தோம். மிகவும் ஜாலியாக இருந்துச்சு டா! ” என்று வெறுப்பு ஏற்றினார்கள். நான் அதன் பின் பெண்களை பார்ப்பதை நிறுத்தி விட்டு அதிகமாக நண்பன் சந்தோஷுடன் தனிமையில் இருக்க ஆரம்பித்தேன். “மச்சான்! இந்த ஊரில் உள்ள அழகான பல பெண்களையும் மேட்டர் செய்து பார்த்து விட்டேன். ஜாலியாக இருந்துச்சு! தற்பொழுது பெண்களுடன் மேட்டர் அடிப்பது போர் அடித்து விட்டது” என்று சலிப்பாக கூறினான். அவனுக்கு இந்த ஹோமோ செக்ஸ் ஆசையை காண்பித்தால் சுலபமாக வந்து விடுவான் என்று தோன்றியது. கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டை விட்டு வெளியில் யாருமே வரவில்லை. ஒரு நாள் இருவர் மட்டும் யாருக்கும் தெரியாமல் அருகில் உள்ள ஒரு மலை அருவிக்கு சென்றோம். இருவர் மட்டும் தனிமையில் இருந்தோம், சுற்றி யாருமே இல்லை. பச்சை பசேல் என்று தண்ணீர் மட்டும் ஊற்றிக்கொண்டு இருந்தது. இருவரும் ஜட்டியோடு ஒன்றாக அருவில் குளித்து கொண்டு இருந்தோம். குளிக்கும்போது வேண்டும் என்றே ஆபாச கதைகள் மற்றும் செய்த செக்ஸ் கதையை எல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தேன். நண்பனுக்கு சுன்னி ஜட்டியின் உள்ளே புடைத்து கொண்டு இருந்தது. சந்தோஷ் பார்ப்பதற்கு வெள்ளையாக, 5.5 அடி உயரத்தில் கவர்ச்சியாக இருந்தான். குளித்துக்கொண்டே அருகில் சென்று சூத்தின் மீது சுன்னியை வைத்து தேய்த்தேன். அவன் பெரியதாக கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்தான். பின்னால் இருந்து கட்டிப்பிடித்து கழுத்தில் முத்தம் கொடுத்தேன். “டேய்! என்ன டா பண்ற? எனக்கு கூச்சமாக இருக்கிறது” என்று கூறினான். “மச்சான்! இந்த ஹோமோ செக்ஸ் சுகம் அருமையாக இருக்கும் டா! அமைதியாக என்ஜோய் செய்து கொள் !” என்று கூறினேன். “வேண்டாம் டா வேண்டாம் ! ” என்று கூறிக்கொண்டு இருந்தான். அவனின் கீழே முட்டி போட்டு கொண்டு ஜட்டியை கழட்டினேன். நண்பனின் சுன்னி 90 டிகிரி கோணத்தில் தூக்கி கொண்டு இருந்தது. இருவர் மேலே அருவி தொடர்ந்து கொட்டி கொண்டு இருந்தது. சுன்னியை கையால் பிடித்து வேகமாக ஆட்ட ஆரம்பித்தேன். “வேண்டாம் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு இருந்த குரல், ஹ்ம்ம் ஆஹா ஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ம்ம் ம நல்ல பண்ணு டா!” என்று மாறியது. சந்தோஷுக்கு நான்ஸ் செய்து விடுவது பிடித்து விட்டது, கண்களை மூடிக்கொண்டான். நண்பனின் சுன்னியை இரண்டு கையாளும் இறுக்கமாக பிடித்தபடி வேகமாக ஆட்டினேன். என்னை விட பெரிய சுன்னி வைத்து கொண்டு இருந்தான். சுன்னியின் மேல்புற தோல் கீழே இறங்கியது, பிங்க் நிறத்தில் மொட்டு போன்று அழகாக மாறியது. நண்பன் பூலை தூக்கி வாயில் வைத்து கொண்டு வேகமாக ஊம்ப ஆரம்பித்து விட்டேன். என் தலையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு சுன்னியை தொண்டையின் உள்ளே ஆழமாக இறக்கி எடுத்து கொண்டு இருந்தான். இதற்கு முன்பு பல பெண்களின் புண்டையை நாக்கி பார்த்து இருக்கிறேன் ஆனால் முதல் முறையாக ஒரு ஆணின் சுன்னியை ஊம்புவது நன்றாக இருந்தது. சுமார் 45 நிமிடங்கள் மேலாக முட்டி போட்டு கொண்டு அருவில் நண்பனின் சுன்னியை ஊம்பிக்கொண்டு இருந்தேன். ஒரு கட்டத்தில் சுன்னி முறுக்கு ஏறி கொண்டு உதட்டில் முழு வெள்ளை நிற விந்தையும் வேகமாக பீச்சி அடித்தது. நண்பனின் கஞ்சியை ஒரு சொட்டு விடாமல் குடித்து விட்டேன். “டேய்! எனக்கு உன் சுன்னியால் சூத்தில் ஓலு வாங்கவேண்டும் டா!” என்று சந்தோஷ் கூறினான். எனக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது, கீழே படுக்க வைத்து இறுக்கமாக கட்டிப்பிடித்து உதட்டில் முத்தமாக கொடுத்தேன். இருவரும் நாக்கை உதட்டின் உள்ளே விட்டு சப்பி கொண்டு இருந்தோம். பின்பு காம்பின் மார்பகத்தை நக்கிக்கொண்டு இருந்தேன். பொறுமையாக நண்பனின் ஜட்டியை கழட்டினேன், மிகவும் பெரிய சூத்து வைத்து இருந்தான். அவளின் அந்த வெள்ளை நிற சூத்தில் பளார் பளார் என்று இரண்டு முறை கையால் அறைந்தேன். நன்பனின் சூத்து பிங்க் நிறத்தில் சிவந்தது, பின்பு என் பூலை தூக்கி சூத்தின் மீது வைத்தேன். இதுபோன்று ஒரு இயற்கை அழகில் ஒரு அருவியின் கீழே படுத்து கொண்டு ஹோமோ செக்ஸ் செய்வது மிகவும் சந்தோஷமாக இருந்தது. நண்பனின் கால்களை விரித்து வைத்து சூத்து ஓட்டையில் நாக்கை வைத்து சற்று நேரம் சப்பினேன். பின்பு மெதுவாக தடிமலான சுன்னியை தூக்கி நண்பன் சூத்து ஓட்டையில் வைத்து அழுத்தினேன். மிகவும் இறுக்கமாக இருந்தது, சுன்னியை முழு ஆற்றலை செலுத்தி வேகமாக அடித்தேன். இறுதியாக சுன்னி சூத்துக்கு உள்ளே சென்று மறைந்து கொண்டது. சுன்னியை வெளியில் எடுக்காமல் தொடர்ந்து சூத்து ஓட்டையில் விட்டு வேகமாக அடிக்க ஆரம்பித்தேன். ஒரு பெண்ணின் கூதியில் ஓத்த சுகத்தை விட மிகவும் அருமையாக இருந்தது. “ஆஹா ஆஹா ஆஹா சிவா! ஆஹா சூப்பர் டா இன்னும் வேகமாக டா! ஆஹா ஆஹா ஹ்ம்ம் ஸ் ஸ் ஸ் ஸ்ஸ் ஸ் ஓ யா ஆஹா ஆஹா ஆஹா ஹ்ம்ம் ஆஹா ஸ்ஸ் ஸ் ஸ்ஸ் ஸ் ஸ் ஸ் ஸ்ஸ் ” என்று கத்தினான். சுமார் இரண்டு மணி நேரமாக நண்பன் சூத்தை ஆழம் எடுத்து கொண்டு இருந்தேன். இறுதியாக கஞ்சியை சூத்தின் ஓட்டையில் இறக்கி விட்டேன். அதன்பின் இருவரும் 69 கோணத்தில் ஒரே நேரத்தில் பூளை ஊம்பி கொண்டோம். அன்று முழுவதும் அருவின் கீழே ஹோமோ செக்ஸ் செய்து விட்டு சென்னை நண்பர்களிடம் செய்தியை பகிர்ந்து கொண்டேன்.
வணக்கம் தோழர்களே தோழிகளே, என் சொந்த தம்பி மனைவியை ஒத்து முடித்த சம்பவத்தைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். கண்டிப்பாக இதைப் படித்து முடித்தவுடன் சுன்னியைக் கிளப்பிக் கொண்டு அரிப்பு எடுத்த கூதியை ஒக்கச் சென்று விடுவீர்கள். தனிமையில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் சுய இன்பம் செய்து சந்தோஷமாக இருந்து கொள்ளுங்கள் ! என் பெயர் ஷண்முக ராஜ், வயது 31. என் அழகான பச்சை பசேல் என்று போர்த்திய கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறேன். எனக்கு 28 வயதில் ஒரு தம்பி இருக்கிறான். நான் அதிகமாக வேலை செய்வதால் உடம்பு இறுக்கமாகக் கட்டுமஸ்தாக இருக்கும் ஆனால் என் தம்பி வெளியில் ஊரில் படித்து விட்டு ஹோட்டல் சாப்பாடு சாப்பிடுவதால் உடம்பு நன்றாக இருக்காது. இரண்டு மாதத்துக்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வான். அப்பொழுது அவனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது, என் ஜாதகத்தில் தம்பிக்கு முதலில் திருமணம் முடித்த பிறகு எனக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். ஆகையால் கிராமத்தில் காதலித்து வந்த ரம்யா என்ற பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தோம். வெளிநாட்டில் மாதம் இரண்டு லட்சம் சம்பாதிக்கும் வேலை கிடைத்தது, ஆகையால் திருமணம் முடிந்த அடுத்த இரண்டு மாதத்தில் வெளிநாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றான். மனைவியை இரண்டு வருடத்துக்குப் பிறகு தான் அழைத்துச் செல்லமுடியும் என்று இருந்தது. அதன்பின் எனக்குப் பல இடத்தில் பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். சரியான பெண் கிடைக்காமல் தவித்துக் கொண்டு இருந்தேன், இளமையான வயதில் இளம் ரத்தமாக மேட்டர் அடிக்க வேண்டும் என்று மனதில் ஆசையாக இருந்தது. ஆனால் திருமணத்துக்குப் பெண் கிடைக்காமலிருந்ததால் மனவேதனையிலிருந்தேன். ஆகையால் அடுத்த இரண்டு மாதங்களுக்குப் பெண் பார்க்க வேண்டாம் என்று வீட்டில் கூறிவிட்டேன். தினமும் வயலில் வேலை செய்து கொண்டு இருக்கும்போது ரம்யா சாப்பாடு எடுத்துக் கொண்டு வருவாள். ஆரம்பத்தில் அவளின் மீது அதிகமான அன்பும், அக்கறையும் இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல அவளுக்கு என்மேல் ஆசை இருப்பது போன்று தெரிந்தது, சாப்பாடு கொடுக்கும் நேரத்தில் மாராப்பை விலகி முலையைக் கட்டுவது மேலும் இடுப்பைக் கட்டுவது என்று செய்து கொண்டு இருந்தாள். நான் பார்க்காமலிருந்தேன் ஆனால் அவளின் அந்தரங்க உடம்பு என்னைப் பார்க்க வைத்தது. சில இரவுகள் ரம்யாவை நினைத்துக் கையடிக்க ஆரம்பித்தேன். ஒரு நாள் வயலில் தண்ணீர் பசிக்கொண்டு இருந்தேன், அப்பொழுது முலை வரை பாவாடையைத் தூக்கிக் கட்டிக்கொண்டு தண்ணீர் தொட்டி பம்ப் குளித்துக் கொண்டு இருந்தாள். முதலில் தூரமாகப் பார்த்தேன் சரியாகத் தெரியவில்லை என்று அருகில் சென்று தண்ணீர் குடிப்பது போன்று பார்த்தேன். அவளின் அழகான கவர்ச்சி நிறைந்த உடம்பை பார்த்து மயங்கினேன். இரண்டு முலைகளும் பாவாடை வழியாகக் கூர்மையாகத் தெரிந்தது, அவள் அதற்கு முன்பே ப்ரா மற்றும் ஜட்டியை வெளியில் கழட்டி வைத்து விட்டு வெறும் பாவாடையை மட்டும் கட்டி குளித்து காம அரிப்பை ஏற்றிக்கொண்டு இருந்தாள். பின்பு அந்த ஈரத்தில் சூத்தில் துணி ஒட்டிக்கொண்டது ஆகையால் சூத்தில் பிளவு அழகாகத் தெரிந்தது இரண்டு பகுதிகளும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. இடுப்பு அழகாக வளைந்து நெளிந்து கவர்ச்சியாக இருந்தது, தொட்டியில் இரங்கித் தூக்கி வைத்து மேட்டர் அடிக்கலாம் என்று எண்ணம் வந்து விட்டது. தம்பியின் மனைவியை அதுபோன்று செய்யக்கூடாது என்று மனது கூறியது, ஆனால் ரம்யா தொடர்ந்து அந்தரங்க பகுதிகளைக் கட்டிக்கொண்டு மூடு ஏற்றிக்கொண்டு இருந்தாள். ரம்யாவின் இரண்டு தொடைகளும் மழ மழ வென்று இருந்தது, பார்ப்பதற்கு வாழைத் தண்டு போன்று கூதியை மறைத்துக் கொண்டு இருந்தது. முன்புறமாகப் பார்க்கும்போது சில சமயங்களில் துணி புண்டையுடன் ஒட்டிக்கொண்டு நடுக்கோடு அழகாகத் தெரிந்தது. அவள் வேண்டும் என்றே என்முன் கூதியில் ஒட்டிக்கொண்டு இருந்த துணியை எடுத்து விட்டுக் கொண்டு இருந்தால், எனக்கு உணர்ச்சி தாங்கமுடியாமல் சுன்னி 90 கோணத்தில் தூக்கிக்கொண்டு நின்றது. அன்று இரவு அதை நினைத்து இரண்டு முறை கையடித்துக் கொண்டு இருந்தேன். ரம்யாவுக்கு சின்ன வயது என்பதால் கூதியில் அரிப்பு அதிகமாக இருந்தது. என் தம்பி திருமணம் முடிந்து கொஞ்ச நாட்கள் மட்டும் செக்ஸ் செய்து கூதியை அரிப்பை ஏற்றிவிட்டுச் சென்றதால் தற்பொழுது அந்த அரிப்பை என்முலம் தீர்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறாள். நானும் நீண்ட நாட்கள் பெண் கிடைக்காமல் விரக்தியிலிருந்து பின்னர் தம்பி மனைவியைப் பார்க்க ஆரம்பித்து விட்டேன். ஒரு மனது தவறான செயல் என்று கூறினாலும், காம அரிப்பு ரம்யாவின் திசையில் திருப்பியது. நாட்கள் வேகமாகச் சென்று கொண்டு இருந்தது, ஒரு நாள் ரம்யாவை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அப்பொழுது பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவள் நெருக்கமாக முலையை என் நெஞ்சோடு வைத்து அழுத்திக் கொண்டு வந்தாள். எனக்குச் சற்று மூடாக இருந்தது, சுன்னி தூக்கிக்கொண்டு எழுந்து நின்றது. அவளின் புண்டை நேராகச் சுன்னி சொருகிக் கொண்டு வந்தது, இருவரும் ஒருவருக்கு ஒருவாறு கண்களை பார்த்து காமமாக வந்தோம். பேருந்தில் மட்டும் ஆட்கள் இல்லையென்றால் கண்டிப்பாக இருவரும் காமத்தில் மேட்டர் செய்து முடித்து இருப்போம். பின்னர் அன்று மாலை வீட்டுக்கு வந்தோம், அவளுக்கு அதிகமாகக் கச்சல் அடித்துக் கொண்டு இருந்தது. வீட்டில் பெற்றோர்கள் வெளியூருக்குத் திருமணத்துக்குச் சென்று இருந்தார்கள். வீட்டில் நானும், ரம்யாவும் மட்டும் தனியாக இருந்தோம். அவளை நன்றாகக் கவனித்துக் கொண்டு வந்தேன், இரவு 10 மணிக்குக் குளிரில் நடுங்குவது போன்று தெரிந்தது. ஆகையால் என் இரண்டு கைகளையும் நன்றாகச் சூடு பறக்கத் தேய்த்து ரம்யாவின் கன்னத்தில் வைத்தேன். அவளுக்கு இதமாக இருந்தது, பின்பு என்னை இழுத்து இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். இருவருக்கும் மூடு அதிகமாக மாறியது. ஒருவருக்கு ஒருவரைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தோம். “எனக்குக் கச்சல் நின்று விட்டது ஆனால் உங்களின் மேல் இருக்கும் காம அரிப்பு மட்டும் நிற்பதாகத் தெரியவில்லை ” என்று கூறினாள். “இன்று இரவு என் கூதி அரிப்பைச் சரி செய்த விடுங்கள் !” என்று கேட்டுக்கொண்டாள். சற்று நேரம் இருவரும் இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக் கொண்டு இருந்தோம் பின்னர் அவளின் உதட்டைப் பிளந்து நாக்கை உள்ளே விட்டு லிப்லாக் கிஸ் அடிக்க ஆரம்பித்தேன். பின்னர் அவளின் கழுத்தில் எச்சுகளை விட்டு முத்தம் கொடுத்துக் கொண்டு இருந்தேன், அவளுக்கு மூடு ஏறிக்கொண்டு சென்றது. பின்னர் உதட்டோடு உதடாக வைத்து அழுத்தமாகத் தொடர்ந்து சுமார் 15 நிமிடம் கிஸ் அடித்துக் கொண்டு இருந்தேன். பிறகு பொறுமையாகச் சேலையை உருவினேன், உள்ளே சிவப்பு நிற ப்ளௌஸ் அணிந்து கொண்டு இருந்தாள். அவளின் ப்ளௌஸ் ஹூக்கை கழட்டி உள்ளே பார்த்தேன், இரண்டு பெரிய காம்புகள் விறைத்த முலைகளை இறுக்கமாக ப்ரா இழுத்துப் பிடித்துக் கொண்டு இருந்தது. பின்பு ப்ராவின் ஹூக்கை கடித்துக் கழட்டினேன், இரண்டு ஹிமாலய முலைகளும் தளதள வென்று ஆடிக்கொண்டு வெளியில் வந்தது. அவளும் பதிலுக்கு என் ஷர்ட் மற்றும் லுங்கியைப் பொறுமையாகக் கழட்டிக் கொண்டு இருந்தாள். தற்பொழுது சுன்னி வெளியில் ஆடிக்கொண்டு இருந்தது, நான் தினமும் சுன்னியை எண்ணெய் தேய்த்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதால் 8இன்ச் அளவுக்கு பெரியதாக இருந்தது. சுன்னியை கையால் பிடித்துப் பார்த்து விட்டு, ” இதுபோன்ற சுன்னியை உலகத்தில் பார்த்தது இல்லை” என்று கூறிவிட்டு மேலும் கீழுமாக ஆட்டிக்கொண்டு இருந்தாள். இரண்டு முலைகளையும் நன்றாகப் பிசைந்து விட்டு சுன்னியை எடுத்து முலைகளின் மேல் சற்று நேரம் வைத்துத் தடவினேன். பின்பு கீழே நகர்ந்து கொண்டு வந்தேன், தொப்புள் ஓட்டையில் நாக்கை வைத்து உறிந்தேன். பின்னர் கீழே பாவாடையைக் கழட்டினேன், உள்ளே கருப்பு நிற ஜட்டி அணிந்து கொண்டு இருந்தாள். அந்த ஜட்டியைப் பற்களால் கடித்து கீழே உருவினேன், புண்டை சுற்றி முடிகள் இல்லாமல் சுத்தமாக இருக்கும். பின்னர் இரண்டு கால்களையும் நன்றாக விரித்து வைத்து விரலை விட்டு ஆட்டினேன். அவளுக்கு மேலும் சுகத்தைக் கொடுப்பதற்குக் கூதியில் விரலை விட்டு ஆட்டிக்கொண்டு இருந்த நேரத்தில் உதட்டை வைத்து உறிந்தேன். அவள் என் தலையைப் புண்டையுடன் அழுத்திக் கொண்டால், விடாமல் தொடர்ந்து நுனி நாக்கை வைத்து புண்டை பருப்பை நொண்டிக் கொண்டு இருந்தேன். அவளுக்குச் சுகம் தாங்கமுடியாமல் ,” ஆஹா ஆஹா ஹா ஆஹா ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் அப்படி தான் நல்ல பண்ணு ஹா ” என்று முனறினாள். சுமார் 30 நிமிடம் புண்டையை ஊம்பிவிட்டுக் கொண்டு இருந்தேன், பின்னர் சுன்னியை வாயில் வைத்து ஊம்ப ஆரம்பித்து விட்டாள். அவளின் தொண்டை வரை சென்று வந்தது, சுமார் 1 மணி நேரம் சுன்னியின் மேல் தோல் கீழே இறங்கும் அளவுக்கு ஊம்பி விட்டாள். இறுதியில் சுன்னியிலிருந்து விந்து வேகமாக வந்து ரம்யாவின் வாயில் இறங்கியது. அவள் குடித்து விட்டு பின்னர் கால்களை விரித்து புண்டையைக் காட்டினாள். விறைத்த சுன்னியை மெதுவாக எடுத்து ரம்யாவின் மேற்புறத்தில் தேய்த்துக் கொண்டு இருந்தேன், அவளுக்குச் சுகமாக இருந்தது. பின்னர் முலையைப் பிடித்துக்கொண்டு சுன்னியைப் பொறுமையாகக் கூதி ஓட்டையில் அழுத்தமாக வைத்து இறக்கினேன். தொடக்கத்தில் சற்று இறுக்கமாக இருந்தது பின்பு எச்சு விட்டு இறக்கியதால் சுலபமாகச் சென்றது. பின்பு முலையை உதவிக்கு பிடித்துக்கொண்டு சுன்னியை வேகமாகப் புண்டையில் இறக்கி எடுத்துக் கொண்டு இருந்தேன். சுமார் இரண்டு மணி நேரமாக ஆசை தீரப் புண்டையை ஒத்துக்கொண்டு இருந்தேன். அவளின் கூதியில் ஈரம் கசிந்து கொண்டு இருந்தது, பின்னர் அவளைக் குப்புறப் படுக்க வைத்து சூத்தை நன்றாக விரித்து சூத்தின் ஓட்டையில் சுன்னியை அழுத்தமாக வைத்து இறக்கினேன். என் முழு சுன்னியும் ரம்யாவின் சூத்தில் இறங்கியது, ” ஆஹா ஆஹா ஆஹா வலிக்கிறது ஆஹா ஹ்ம்ம் ம் ம் ம் ம் ம் ம்ம் ம் ம் ம் ம் அம்மா அம்மா அம்மா ம்ம் ம் ம் ம் ம்ம் ம் ம் ம் ” என்று சுகத்தில் துடித்தாள். அவளை விடாமல் சுமார் 1 மணி நேரம் இறுக்கமான சூத்தில் ஒத்து கொண்டு இருந்தேன். அவளின் இன்பம் கலந்த சுகத்தில் கதறிக்கொண்டு இருந்தால், இறுதியாகச் சுன்னியிலிருந்து விந்து வெளி வந்து சூத்தின் ஓட்டையில் இறங்கியது. சூத்தில் விந்து குளம் போன்று வழிந்து ஓடியது. அன்று இரவு முழுவதும் மேட்டர் அடித்து விட்டு பிறகு இருவருக்கும் மேட்டர் அரிப்பு எடுக்கும்போது எல்லாம் சந்தோஷமாக செக்ஸ் செய்து கொண்டோம்.
வணக்கம் தோழர்களே தோழிகளே, உங்களுக்கு அனுதினமும் புதிதாக காமக்கதை பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்த செக்ஸ் ஸ்டோரியில் இளம் ஜோடிகள் செய்யக்கூடாத நேரத்தில் சரியாக செய்த செக்ஸ் மேட்டர் ஷேர் செய்கிறேன். உங்களின் ஆதரவை தொடர்ந்து தமிழ் காமப்பசி இணையதளத்துக்கு கொடுங்கள் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்! வாருங்கள் கதைக்கு போகலாம்! இந்த சம்பவம் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்தது. பறந்து விரிந்த இந்த பெரிய சென்னை மாநரகத்தில் திவ்யா என்ற பெண்ணை ஒருதலையாக காதலித்தேன். ஆமாம் நண்பர்களே! கல்லுரியில் ஆரம்பித்து வேறு திசையில் சென்று இறுதியில் கிளைமாக்ஸ் உங்களுக்கு பிடித்த மாதிரி முடிந்துருக்கும். என் பெயர் ராஜ், வயது 23. என் சொந்த ஊர் கும்பகோணம். சென்னையில் உள்ள மிக பெரிய கல்லுரியில் இறுதி ஆண்டு படித்து வந்தேன். எனக்கு சின்ன வயதில் இருந்து ஒரு கொள்கை இருந்தது. ஒரு அழகான விர்ஜின் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ளவேண்டும். மேலும் மற்ற பெண்களை பார்த்து சைட் அடித்து கொள்ளலாம் ஆனால் மேட்டர் அடிக்க கூடாது என்று இருந்தேன். நான் பார்க்க மிகவும் அழகான ஆண் மகன் போன்று இருப்பேன். கல்லுரி விடுதியில் தங்கி படித்து வந்தேன். தினமும் ஜிம் சென்று உடம்பை சிக்ஸ் பேக் வைத்திருந்தேன். ஹேர் ஸ்டைல் நடிகர்கள் வைத்திருப்பது போன்று இருக்கும். என் வருங்கால மனைவியை மட்டுமே மேட்டர் அடிக்க வேண்டும் என்று இருந்ததால், மூடு ஏறும்போது எல்லாம் அதிகமாக சுயஇன்பம் செய்வேன். ஆகையால் பூல் தடிமலாக ஒரு பெண்ணின் வாய்க்குள் கனகச்சிதமாக பொருந்தும் அளவுக்கு அருமையாக வைத்திருப்பேன். நான் விளையாட்டு வீரன் என்பதால் கல்லுரியில் தனியாக தெரிவேன். பல பெண்கள் என்னை முயற்சி செய்தார்கள் ஆனால் யாருக்கும் மடங்காமல் கொள்கையில் குறிக்கோளாக இருந்தேன். கல்லுரியில் சில அழகான டீச்சர் கூட என்னை செக்ஸ் ஆசை காண்பித்து மறைமுகமாக அழைத்தார்கள். ஓத்தால் விர்ஜின் காதலி அல்லது மனைவியை மட்டுமே ஓத்து முடிப்பேன் என்று இருந்தேன். நாட்கள் வேகமாக ஓடிக்கொண்டு இருந்தது, அப்பொழுது தான் திவ்யா மாவட்ட அளவிலான நடனப்போட்டிக்கு என் கல்லுரிக்கு வந்தாள். திவ்யாவின் நடையுடை பாவனை வைத்து சுத்தமான விர்ஜின் பெண் என்று கண்டு பிடித்தேன். பின்பு ஒருதலையாக காதலிக்க ஆரம்பித்தேன், அன்று முழுவதும் கல்லுரியில் திவ்யா பின்னாலே தொடர்ந்து வந்தேன். என் காலேஜ்ல இருந்த தோழர்கள் தோழிகள் என்னை ஆச்சரியமாக பார்த்தார்கள். நான் திவ்யாவை காதலிப்பது கல்லுரிக்கே தெரிந்தது. திவ்யா நடனம் ஆடி முடித்தவுடன் அருகில் சென்று பேசி கையை கொடுத்தேன். அவள் கொஞ்ச தயக்கத்துடன் பேசி விட்டு சென்றாள். அடுத்த இரண்டு வாரம் கழித்து விளையாட்டு போட்டிக்கு திவ்யா காலேஜ் சென்றேன். அனைத்து போட்டிகளிலும் முதலிடம் வந்து அசைத்தேன். என் தோழன் திவ்யாவிடம் சென்று நான் காதலிப்பதாக கூறிவிட்டான். “ஹாய்! வெற்றிபெற்றதுக்கு வாழ்த்துகள்! உங்களை பற்றி நண்பர்கள் முழுசா சொன்னாங்க!” என்று திவ்யா பேச ஆரம்பித்தாள். உங்களை போன்ற ஒரு தோழன் கிடைப்பதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று போன் நம்பர் கொடுத்தாள். முதலில் இருவரும் நண்பர்களாக பேசுவோம். பின்பு காதல் மற்றும் கல்யாணத்தை பற்றி எல்லாம் பார்த்து கொள்ளலாம் என்று கூறினாள். தினமும் போனில் நீண்ட நேரம் பேசி வந்தேன். இருவரும் அடிக்கடி வெளியில் சந்திக்க ஆரம்பித்தோம். ஒரு கட்டத்தில் திவ்யாவுக்கு என்னை பிடித்து காதலை கூறினாள். ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லை என்று அழைத்தால், ஜாலியாக பேசிவிட்டு வரலாம் என்று சென்றேன். அது மாதிரியான ஒரு செக்சி கோலத்தில் இதற்கு முன்பு திவ்யாவை பார்த்தது இல்லை. “ஓ மை கடவுளே! கவர்ச்சியின் உச்சத்தில் கண்களுக்கு பரிசு அளித்தால்”. பச்சையாக உடம்பை காண்பிக்காமல், கருப்பு நிற ப்ளௌஸ் மற்றும் புடவை அணிந்து வந்தாள். திவ்யா சுண்டி விட்டால் ரத்தம் வரும் அளவுக்கு வெள்ளையாக இருப்பாள். ஆகையால் கருப்பு சேலை அருமையாக உடம்பின் கவர்ச்சியை உறித்து காட்டியது. உதடுகள் இரண்டும் வில், அம்பு போன்று வளைந்து அருமையாக இருந்தது. லிப்ஸ் பிங்க் நிறத்தில் செக்சியாகவும், கூந்தல் இடுப்பு வரை நீண்டதாகவும், இடுப்பு வளைந்து நெளிந்து மடிப்பாகவும் இருந்தது. நடந்து வரும்போது இரண்டு முலைகளும் ப்ளௌஸ் உள்ளே மிடுக்காக தூக்கிக்கொண்டு இருந்தது. நடையை பார்க்கும்போது சூத்தை ஆட்டிக்கொண்டு வந்தாள். என்னை விட்டால் நேராக தூக்கி சென்று மேட்டர் அடிக்க ஆரம்பித்திருப்பேன். ஆனால் என் கொள்கையை விட்டு விலக கூடாது என்று கட்டுப்பாடாக இருந்தேன். கையில் காபி போட்டுகொண்டு அருகில் வந்து நெருக்கமாக அமர்ந்தாள். திவ்யா இவளோ நெருக்கமாக அமர்ந்தால் நான் சூடாக ஆகிவிடுவேன் என்று கூறினேன். “டேய்! நான் உனக்கானவள் உனக்கு இல்லாத உரிமையை! முழுமையாக சுவைத்து கொள் ” என்று மேலே சாய்ந்து செக்சியாக கூறினாள். எனக்கும் உன்னை ஓலு ஓக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது ஆனால் சிறுவயதில் இருந்தே திருமணத்துக்கு பிறகு தான் மனைவியை ஓக்க வேண்டும் என்று கொள்கையில் வாழ்ந்து வருகிறேன் என்று கூறினேன். “கண்டிப்பாக நான் உன்னை தான் திருமணம் செய்வேன் ஆகையால் கொஞ்ச காலம் காத்துகொண்டு இரு!” என்று ஞானி போன்று பேசினேன். “இந்த காலத்தில் இதுபோன்ற ஒரு பையனா?” என்று வாயை பிளந்தாள். “சரி டா செல்லம்! உன் ஆசைப்படியே நடந்து கொள்ளலாம். ஆனால் எனக்கு ஒரே ஒரு கிஸ் மட்டும் கொடு” என்று கூறியவுடன் தயங்காமல் அருகில் சென்று உதட்டின் மேல் அழுத்தமாக கிஸ் அடித்தேன். நான் கொடுத்த முத்தத்தில் திவ்யா லிப்ஸ்டிக் என் உதட்டில் ஒட்டிக்கொண்டது. உன்னை போன்ற தூய்மையான காதலன் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கூறி நிறைய முத்தம் கொடுத்தாள். அதன்பின் இருவரின் காதலும் மேலும் அதிகமாகியது. இருவரும் ஒரே நேரத்தில் கல்லுரியை முடித்தோம். நான் சென்னையில் வேலை தேடிக்கொண்டு இருந்தேன் ஆனால் சரியான வேலை கிடைக்கவில்லை. அப்பொழுது தான் மிக பெரிய பிரச்சனை வந்தது. திவ்யா தந்தை தனது அந்தஸ்துக்கு ஏற்ற மாதிரி ஒரு பணக்கார பையனுடன் திருமணம் நிச்சயம் செய்தார். திவ்யா வேண்டாம் என்று மறுத்தும் வேகா வேகமாக ஒரு வாரத்தில் திருமணம் நிச்சயம் செய்தார். என்னாலும் ஒன்றும் செய்யமுடியவில்லை ஆகையால் மிகவும் சோர்வாக இருந்தேன். ஒரு நாள் காலை புதுநம்பரில் இருந்து போன் வந்தது, செல்லம்! நான் தான் திவ்யா பேசறேன். எனக்கு நாளைக்கு காலையில் திருமண மண்டபத்தில் கல்யாணம்.உன்னுடன் வாழ தான் முடியவில்லை செக்ஸ் ஆச்சி செய்து விட வேண்டும் ஆகையால் இன்று இரவு திருமணம் மண்டபத்துக்கு வந்து இந்த நம்பருக்கு போன் செய்! என்று கூறி வைத்து விட்டாள். நானும் வேறு வழியின்றி இரவு மண்டபத்துக்கு சென்று போன் செய்தேன். யாரும் பார்க்காத மாதிரி மொட்டை மாடிக்கு வரும்படி அழைத்தாள். இரவு சரியாக 10 மணி, பட்டுப்புடைவையுடன் தேவதை போன்று இருட்டில் நடந்து வந்தாள். கொஞ்சம் நேரத்தில் அழுதுகொண்டே என்னை இறுக்கமாக கட்டிப்பிடித்து கொண்டாள். உன்னிடம் நான் ஓலு வாங்கவேண்டும், உனக்கு பிடிச்ச செய்துகொள் ப்ளீஸ் என்று கெஞ்சினாள். இருவரும் தனிமையில் இருந்ததால், காமத்தீ வேகமாக பற்றிக்கொண்டது. மொட்டை மாடியில் இருந்த ஒரு இருட்டு அறைக்கு அழைத்து சென்றேன். என் கொள்கையை விலகி, காதலியின் முந்தானையை கழட்டினேன். முலைகள் இரண்டும் ஹிமாலய மலை போன்று பெரியதாக இருந்தது. மெதுவாக கன்னத்தில் முத்தம் கொடுத்து கொண்டு கழுத்தில் சூடாக முகம் பதித்தேன். அவளும் கொஞ்சம் நேரத்தில் மூடாக சுன்னியை பிடித்தால், மெதுவாக கீழே படுக்க வைத்து ப்ளௌஸ் ஹூக்கை கழட்டினேன். காலையில் திருமணம் செய்து கொள்ளும் காதலியை முந்தைய நாள் இரவு ஓலு எடுத்தேன். ப்ளௌஸ் கழட்டியவுடன் இரண்டு முலைகளும் ப்ராவின் உள்ளே அடைந்து இருப்பதை பார்க்க முடிந்தது. ப்ராவை அவசரமாக கழட்டி முலையை பிடித்து மாவு போன்று பிசைந்து சப்பினேன். ஒரு முலை காம்பை உதட்டிலும், மாற்று ஒரு முலை காம்பை கையாளும் பிடித்து உருட்டினேன். திவ்யாவும் ஆர்வத்தில் என் பேண்ட் கழட்டி சுன்னியை வெளியில் எடுத்தாள். அனகோண்டா பாம்பு போன்று வெளியில் தூக்கி வந்தது. சுன்னியை எடுத்து முலையின் நடுவில் விட்டு வேகமாக சூடு பறக்க தேய்த்தேன். பின்பு மெதுவாக உதட்டின் அருகில் எடுத்து சென்றேன். அவள் கையில் எச்சி தடவி சுன்னியை மேலும் கீழுமாக ஆட்டி சுன்னியின் மேல்புற தோலை கீழே இறக்கி பிதிக்கினாள். பிறகு பூலை வாய்க்குள் வைத்து மெதுவாக ஊம்ப ஆரம்பித்தால், முதல் முறை ஒரு கன்னி பெண்ணுடன் மேட்டர் அடிப்பதால் ஆர்வமாக இருந்தது. சுமார் 30 நிமிடம் பிறகு வேகமாக கூந்தலை பிடித்து அடித்தேன். இறுதியாக கஞ்சி பீறிக்கொண்டு காதலியின் உதட்டில் இறங்கியது. ஒரு சொட்டை கூட வெளியில் விடாமல் முழு விந்தையும் குடித்து முடித்தாள். அதன்பின் புடவையை முழுமையாக கழட்டி இரண்டு தொடை பகுதிகளிலும் முத்தம் கொடுத்து புண்டை நுழை பகுதியில் நாக்கை வைத்து தேய்த்தேன். “ஆஹா ஹ்ம்ம் ஸ் ஸ் ஆஹா ஸ் அப்படி தான் இன்னும் நல்ல சப்பு!” என்று துடித்தாள். கொஞ்ச நேரத்தில் என் முகத்தில் விந்தை அடித்தால், சுவையாக நக்கி குடித்தேன். பின்பு இரண்டு கால்களையும் நன்றாக விரித்து விட்டு தடிமலான பூலை கூதியில் இறக்கினேன். கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, முழு ஆற்றலையும் செலுத்தி உள்ளே அடித்தேன். திவ்யா புண்டை சீல் கிழிந்து கொஞ்சம் ரத்தம் வந்தது. பின்பு துணியால் துடைத்து விட்டு அதிவேகமாக புண்டையை அடித்தேன். அதன்பின் டாகி முறையில் முட்டி போடா விட்டு பின்னால் இருந்து கொஞ்சம் நேரம் அடித்தேன். பிறகு என்னை கீழே படுக்க வைத்து மேலே ஏறி அடிக்கும்போது திவ்யாவின் இரண்டு முலைகளும் துள்ளியது. அதுபோன்று எல்லா விதமான கோணத்திலும் செக்ஸ் செய்து சந்தோஷமாக இருந்தோம். “டேய்! இந்த முறை உன் கஞ்சியை என் கூதியில் இறக்கி விடு” என்று ஆசையாக கேட்டாள். இறுதியாக மேட்டர் முடிக்கும் முன்பு விந்தை விர்ஜின் கல்யாண பெண் புண்டையில் இறக்கி விட்டேன். அதிகாலை 4மணி வரை செக்ஸ் செய்தோம். அதன்பின் ஆடைகளை அணிந்துகொண்டு காலை முகூர்த்தம் சென்றால், கொஞ்சம் தூக்கக்காலத்தில் இருப்பது தெரிந்தது. இருவருக்கும் செக்ஸ் செய்தது மிகவும் சந்தோஷமாக இருந்துச்சி! அதன்பின் அடுத்த ஒரு வருடம் கழித்து என்னை போன்று ஒரு அழகான ஆண் பிள்ளை பெற்ற எடுத்தாள். பிறகு திவ்யா கணவனுக்கு தெரியாமல் பலமுறை கள்ளஉறவில் ஈடுபட்டு சந்தோஷமாக இருந்தோம்.
யாழ் தீவகத்தில் அமைந்துள்ள,அனலைதீவு என்னும் கிராமத்தில், விவசாயிகள் பலர் ஆர்வத்தோடு விவசாயத்தில் ஈடுபட்டு விளைபொருட்களை அறுவடை செய்வதனை கீழே இணைக்கப்பட்டுள்ள ... Read More » மண்டைதீவு,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, வேலுப்பிள்ளை வியாகரத்தினம் அவர்களின் இறுதியாத்திரையின் முழுமையான வீடியோ இணைப்பு! 01/04/2016 Leave a comment யாழ் மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை,வசிப்பிடமாகவும்-பிரான்சை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட-பெரியவர் திரு வேலுப்பிள்ளை வியாகரத்தினம் அவர்கள் 24.03.2016 வியாழக்கிழமை மாலை பரிஸில் இறைவனடி ... Read More » வேலணையைச் சேர்ந்த,அமரர் தம்பிப்பிள்ளை சோமசுந்தரம் அவர்களின் நினைவாக நடைபெற்ற- சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு! 31/03/2016 Leave a comment தீவகம் வேலணை மேற்கைச் சேர்ந்த,அமரர் தம்பிப்பிள்ளை சோமசுந்தரம் அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு-31.03.2016 வியாழக்கிழமை அன்று -மகாதேவா ... Read More » மண்டைதீவு,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, வேலுப்பிள்ளை வியாகரத்தினம் அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு -பகுதி01! 30/03/2016 Leave a comment யாழ் மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை,வசிப்பிடமாகவும்-பிரான்சை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட-பெரியவர் திரு வேலுப்பிள்ளை வியாகரத்தினம் அவர்கள் 24.03.2016 வியாழக்கிழமை மாலை பரிஸில் இறைவனடி ... Read More » மகாதேவா சிறுவர்களை,மண்கும்பான் பிள்ளையாரின் இராஜகோபுர கும்பாபிஷேகத்திற்கு அழைத்து மகிழ்ந்த திருப்பணிச் செம்மல்-வீடியோ இணைப்பு! 28/03/2016 Leave a comment யாழ் தீவகம் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப்பெருமானுக்கு அமைக்கப்பட்டு வந்த ஏழுதள இராஜகோபுரத் திருப்பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து-கடந்த 23.03.2016 ... Read More » புங்குடுதீவைச் சேர்ந்த, நடராசா நகுலன் அவர்களின் திருமணத்தினை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு! 26/03/2016 Leave a comment பரிஸில் வசிக்கும்-யாழ் தீவகம் புங்குடுதீவைச் சேர்ந்த,செல்வன் நடராசா நகுலன் அவர்களுக்கும்,யாழ் மானிப்பாயைச் சேர்ந்த,செல்வி தேவதாஸ் கிருஸ்ணலதா அவர்களுக்கும்,கடந்த 24.03.2016 வியாழக்கிழமை ... Read More » தீவகம் மண்கும்பான் பிள்ளையாரின் ஏழுதள இராஜகோபுர கும்பாபிஷேக விழாவின் முழுமையான நிழற்படத் தொகுப்பு! 24/03/2016 Leave a comment யாழ் தீவகம் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் திருவருள் துணை கொண்டு-பிரான்ஸில் வசிக்கும்,விநாயகப் பெருமானின் பக்தர் திரு ... Read More » அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-கவிவித்தகர் ச. சேவியர் வில்பிரட் (பாலசிங்கம்)அவர்களின் இறுதியாத்திரையின் முழுமையான வீடியோப் பதிவு! 23/03/2016 Leave a comment யாழ் தீவகம் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்-வசிப்பிடமாகவும் கொண்ட-சந்தியாப்பிள்ளை சேவியர் வில்பிரட் (பாலசிங்கம்-கவி வித்தகர்-கவிஞர் பாலன் சேவியர் )அவர்கள் 20.03.2016 ... Read More » மரண அறிவித்தல்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,சந்தியாப்பிள்ளை சேவியர் வில்பிரட் (பாலசிங்கம்) அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு! 20/03/2016 Leave a comment யாழ் தீவகம் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்-வசிப்பிடமாகவும் கொண்ட-சந்தியாப்பிள்ளை சேவியர் வில்பிரட் (பாலசிங்கம்-கவி வித்தகர்-கவிஞர் பாலன் சேவியர் )அவர்கள் 20.03.2016 ... Read More » கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரம சர்வசக்தி அம்மன் பிரதிட்டை விழாவின் நிழற்படத் தொகுப்பு! 19/03/2016 Leave a comment கிளிநொச்சி ஜெயந்திநகர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல வளாகத்திற்குள் புதிதாக அமைக்கப்பட்ட-சர்வசக்தி அம்மனின் பிரதிட்டை செய்யும் நிகழ்வு கடந்த 15.03.2016 ... Read More » மரண அறிவித்தல்-சுப்பிரமணியம் சண்முகானந்தன் அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு! 17/03/2016 Leave a comment மண்கும்பான் பிள்ளையார் கோவிலடியில் நீண்டகாலம் அமைந்திருந்த-குணம் தேனீர்ச்சாலையின் உரிமையாளர் அமரர் ஆறுமுகம் குணரத்தினம் அவர்களின் மூத்த மருமகன் -ஊர்காவற்றுறையைச் ... Read More » மண்கும்பானைச் சேர்ந்த,செல்வி இராசலிங்கம் காத்யாயனி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு! 16/03/2016 Leave a comment பிரான்ஸில் வசிக்கும்-மண்கும்பானைச் சேர்ந்த,செல்வி இராசலிங்கம் காத்யாயனி அவர்களின் 27வது பிறந்த நாளினை( 15.03.2016) முன்னிட்டு-ன்அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-திரு இராசலிங்கம் அவர்களின் ... Read More » அன்னை தெரசா செப்.4-ல் புனிதராக அறிவிக்கப்படுவார்: போப் ஆண்டவர் அறிவிப்பு ! 15/03/2016 Leave a comment அன்னை தெரசாவை வரும் செப்டம்பர் 4-ந் தேதி புனிதராக அறிவிக்க போப் இரண்டாம் பிரான்சிஸ் ஒப்புதல் தெரிவித்துள்ளார். அல்பேனியா நாட்டில் ... Read More » வல்வெட்டித்துறை மாணவி கடத்தல், பாலியல் வல்லுறவு வழக்கு: 15 ஆண்டுகள் கடூழியச் சிறை விதித்தார் நீதிபதி இளஞ்செழியன்! 09/03/2016 Leave a comment வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குடும்பஸ்தருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி ... Read More » யாழ் தீவகம் குருசடித்தீவு புனித அந்தோனியாரின் வருடாந்த பெருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்கள் இணைப்பு! 07/03/2016 Leave a comment யாழ் தீவகம் குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா கடந்த 03.03.2016 வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,06.03.2016 ஞாயிற்றுக்கிழமை ... Read More » புங்குடுதீவு மாணவி வித்தியா கொடூரக் கொலை வழக்கு புதிய திருப்பங்களுடன் நீதியை நோக்கி நகர்வு… 05/03/2016 Leave a comment புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் கொடூரக் கொலைக்கு சுவிஸ்குமார் உட்பட ஆறு பேர் பிரதான காரணம் என குற்றப் புலனாய்வுதுறையினர் ... Read More » பல்லாயிரக்கணக்கான மக்கள் பக்தியோடு கலந்து கொண்ட-பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்கள் இணைப்பு! 04/03/2016 Leave a comment இலங்கையில் பிரசித்திபெற்ற-பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருநாள் திருவிழா-கடந்த 27-02-2016 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நற்கருணை திருவிழாவினைத் தொடர்ந்து ... Read More » ஜெர்மனியில் வசிக்கும்,இரத்தினேஸ்வரன் விதுஷனின் 19வது பிறந்த நாளினை முன்னிட்டு நடந்த அறப்பணி நிகழ்வு! 02/03/2016 Leave a comment ஜெர்மனியில் வசிக்கும்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,செல்வன் இரத்தினேஸ்வரன் விதுஷன் அவர்களின் 19வது பிறந்த நாளினை (02.03.2016)முன்னிட்டு -அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் அமைந்துள்ள ... Read More » ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் காவிய புருஷர் செங்கை ஆழியான்-சிறப்புக் கட்டுரை இணைப்பு! 02/03/2016 Leave a comment நூல்களுக்கு முன்னுரை எழுதுவதையோ அல்லது படைப்புகளுக்கு முன்னால் என் நிஜமுகத்தை நீட்டுவதையோ நான் பொதுவாகவே தவிர்த்து விடுவதுண்டு. கூடிய வரை ... Read More » அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் I.R.J.அலெக்சாண்டர் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு நடைபெற்ற அறப்பணி நிகழ்வு! 01/03/2016 Leave a comment அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் I.R.J.அலெக்சாண்டர் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-கிளிநொச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப மகளிர் சிறுவர் ... Read More » மண்கும்பானைச் சேர்ந்த,செல்வி குகதாஸ் அஸ்வினி அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவின் நிழற்படத் தொகுப்பு! 29/02/2016 Leave a comment மண்கும்பானைச் சேர்ந்த,திரு சின்னத்தம்பி(குட்டி) அவர்களின் அன்புப் பேத்தி செல்வி குகதாஸ் அஸ்வினி அவர்களின் பூப்புனித நீராட்டு விழா-28.02.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ... Read More » கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருநாள் விழாவின் நிழற்படத் தொகுப்பின் இரண்டாம் இணைப்பு! 28/02/2016 Leave a comment கச்சத்தீவு புனித அந்தோனியாரின் வருடாந்த பெருவிழா கடந்த சனிக்கிழமை 20.02.2016 அன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை ... Read More » புங்குடுதீவு றோமன் க.த.க.வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் போட்டியின் நிழற்படத் தொகுப்பு! 27/02/2016 Leave a comment யா/புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி 26.02.2016 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் ... Read More » வேலணை மத்திய கல்லூரியில் நடைபெற்ற-மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களின் அமர்வு-படங்கள் இணைப்பு! 26/02/2016 Leave a comment யாழ் தீவகம் வேலணை மத்திய கல்லூரியில்-கடந்த 09.02.2016 செவ்வாய்க்கிழமை அன்று மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களின் இரண்டாவது அமர்வு- கல்லூரியின் அதிபர் ... Read More »
ஆப்கானிஸ்தானில் 700க்கும் மேற்பட்ட சர்வதேச ஒலிம்பிக் குழுவின் உறுப்பினர்கள் ஆபத்தில் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka , Home (current) Local (current) World (current) Entertainment (current) Business (current) Sports(current) Contact Us(current) Subscribe Watch Hiru TV Home (current) Local (current) World (current) Entertainment (current) Business (current) Sports(current) Contact Us(current) Subscribe English(current) සිංහල Sooriyan Gossip ஆப்கானிஸ்தானில் 700க்கும் மேற்பட்ட சர்வதேச ஒலிம்பிக் குழுவின் உறுப்பினர்கள் ஆபத்தில் Wednesday, 27 October 2021 - 15:43 ஆப்கானிஸ்தானில் 700க்கும் மேற்பட்ட சர்வதேச ஒலிம்பிக் குழுவின் உறுப்பினர்கள் ஆபத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் குழு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. அத்துடன் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற சகல போட்டியாளர்களும் 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தெரிவாகுவார்கள் என எதிர்பார்க்கப்படும் இரண்டு பேரும் அந்நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தலிபான் அரசாங்கம் கடந்த ஓகஸ்ட் 15 ஆம் திகதி அமெரிக்க தரப்பினரை நாட்டிலிருந்து வெளியேற்றியிருந்தது. இந்தநிலையில் தங்களது குழுவில் அங்கத்துவம் பெற்றுள்ள 700 பேர் ஆபத்தில் உள்ளதாகவும் அவர்களில் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபடும் பெண்களும் அவர்களுக்கு ஆதரவு வழங்குபவர்களும் அடங்குவதாகவும் சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது. அவர்களுக்கு இரண்டு வகையில் உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது.
எல்&டி நிறுவனமானது, பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. இந்திய ராணுவத்திற்கான தளவாடங்களை உள்நாட்டில் தயாரிக்க முடிவு செய்த மத்திய அரசு, இதற்காக டாடா, ரிலையன்ஸ், எல்&டி உள்ளிட்ட சில முக்கிய நிறுவனங்களுடன் ஆலோசனை செய்து வந்தது. இதன் முதற்கட்டமாக 100 தானியங்கி பீரங்கி வாகனங்களை தயாரித்துக் கொடுப்பதற்கான 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை பாதுகாப்பு அமைச்சகம் எல்.&டி நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. கே9 வஜ்ரா-டி என்ற பீரங்கி வாகனங்களை அடுத்த 42 மாதங்களுக்குள் இந்திய ராணுவத்திடம் தயாரித்து ஒப்படைக்க எல்.&டி முடிவு செய்துள்ளது. Tags: வர்த்தகம் About Unknown வர்த்தகம் கருத்துகள் இல்லை இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom ) Author Details Post Bottom Ad ஆன்மிகம் 5/ஆன்மீகம்/post-per-tag ஃபேஸ்புக் டெலிகிராம் புகைப்படங்கள் 5/புகைப்படங்கள்/feat-slider பிரபலமான செய்திகள் புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள். வார விடுமுறையையொட்டி புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். புதுச்சேரியி... உடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு. அமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்... புதிய மத்திய அமைச்சர்கள் யார்? உத்தேசப் பட்டியல். உள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி... முகிலன் 'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார... சீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம். உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ... மத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா? பாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்... கல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு? தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில... இந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை? எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க... தைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து. கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத... தலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம். நாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...
நட்சத்திரம் குறிப்பிடவில்லைAsupathiபரணிகிருத்திகைரோகிணிமிருக சீரீடம்திருவாதிரைபுனர்பூசம்பூசம்ஆயில்யம்மகம்பூரம்உத்திரம்அஸ்தம்சித்திரைசுவாதிவிசாகம்அனுசம்கேட்டைமூலம்பூராடம்உத்திராடம்திருவோணம்அவிட்டம்சதயம்பூரட்டாதிஉத்திரட்டாதி ரேவதிஅஸ்வினி
தமிழகத்தில் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் அனைத்து திரையரங்கங்களிலும் 100 சதவீத இருக்கைக்கு அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்குத் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றியைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதன் தலைவர் என்.ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு, திரையரங்கங்களில் 100 சதவீத இருக்கைகளில் மக்கள் அமர்ந்து படம் பார்க்க ஆணை பிறப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தோம். அந்த வேண்டுகோளை ஏற்று தமிழக முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இருகரம் குவித்து நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். என்று கூறியுள்ளார்.
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply Enter your comment here... Fill in your details below or click an icon to log in: Email (Address never made public) Name Website You are commenting using your WordPress.com account. ( Log Out / Change ) You are commenting using your Google account. ( Log Out / Change ) You are commenting using your Twitter account. ( Log Out / Change ) You are commenting using your Facebook account. ( Log Out / Change ) Cancel Connecting to %s Notify me of new comments via email. Notify me of new posts via email. Δ Like and connect with us Like and connect with us அண்மைய பதிவுகள் கோட்டக்குப்பம் அருகே – தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீனவர்கள் சாலை மறியல் ஆரோவில் காடுகள அழிக்கப்படுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: ராமதாஸ் தொலைதூர கல்வியில் சேர விண்ணப்பிக்கலாம் – புதுவைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு அரசு, மக்களின் கூட்டு அலட்சியம்: புதிதாக உருவான புதுச்சேரி கடற்கரை மணல் பரப்பெங்கும் பரவிக் கிடக்கும் குப்பை அரசு வழங்கிய பல்லாயிரம் கோடி சலுகை – அதையும் மீறி கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல் புதுச்சேரி மழை சேதத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.300 கோடி தேவை; மஞ்சள் ரேஷன் அட்டைகளுக்கும் ரூ.5000 வெள்ள நிவாரணம்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு Photo Gallery இந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள் இந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள் Select Month December 2021 (2) November 2021 (15) October 2021 (13) September 2021 (9) August 2021 (3) July 2021 (13) June 2021 (4) May 2021 (13) April 2021 (8) March 2021 (10) February 2021 (10) January 2021 (5) December 2020 (7) November 2020 (4) October 2020 (1) September 2020 (4) August 2020 (10) July 2020 (22) June 2020 (17) May 2020 (37) April 2020 (3) March 2020 (3) February 2020 (2) January 2020 (2) December 2019 (3) November 2019 (12) October 2019 (2) September 2019 (5) August 2019 (19) July 2019 (8) June 2019 (24) May 2019 (20) April 2019 (23) March 2019 (15) February 2019 (8) January 2019 (13) December 2018 (2) November 2018 (6) September 2018 (3) August 2018 (11) July 2018 (7) June 2018 (24) May 2018 (6) April 2018 (10) March 2018 (5) February 2018 (5) January 2018 (14) December 2017 (7) November 2017 (2) October 2017 (1) September 2017 (7) August 2017 (7) July 2017 (3) June 2017 (20) May 2017 (13) April 2017 (12) March 2017 (7) February 2017 (6) January 2017 (8) December 2016 (10) November 2016 (4) October 2016 (4) September 2016 (9) August 2016 (6) July 2016 (22) June 2016 (12) May 2016 (18) April 2016 (3) March 2016 (7) February 2016 (10) January 2016 (6) December 2015 (18) November 2015 (29) October 2015 (5) September 2015 (10) August 2015 (2) July 2015 (21) June 2015 (12) May 2015 (8) April 2015 (3) March 2015 (7) February 2015 (5) January 2015 (5) December 2014 (7) November 2014 (14) October 2014 (19) September 2014 (7) August 2014 (5) July 2014 (25) June 2014 (6) May 2014 (12) April 2014 (12) March 2014 (11) February 2014 (18) January 2014 (6) December 2013 (9) November 2013 (22) October 2013 (18) September 2013 (16) August 2013 (20) July 2013 (11) June 2013 (8) May 2013 (11) April 2013 (18) March 2013 (17) February 2013 (12) January 2013 (15) December 2012 (21) November 2012 (29) October 2012 (24) September 2012 (16) August 2012 (34) July 2012 (10) June 2012 (9) May 2012 (27) April 2012 (5) March 2012 (22) February 2012 (19) January 2012 (28) December 2011 (24) November 2011 (20) October 2011 (32) September 2011 (15) August 2011 (19) July 2011 (21) June 2011 (10) May 2011 (14) April 2011 (23) March 2011 (8) February 2011 (10) January 2011 (10) December 2010 (7) November 2010 (20) October 2010 (16) September 2010 (14) August 2010 (9) July 2010 (3) June 2010 (2) May 2010 (3) March 2010 (3) February 2010 (8) January 2010 (8) December 2009 (7) November 2009 (11) October 2009 (19) September 2009 (13) January 2009 (1) July 2008 (3) பயனுள்ள தகவல்கள் KOTTAKUPPAM WEB TV RECORDED VIDEO USEFUL INFORMATION Train Time COLLEGES IN PONDICHERRY Schools in Pondicherry HOTELS IN PONDICHERRY Money Exchange in Pondicherry Marriage Halls in Pondicherry Accommodation in pondicherry About Pondicherry kottakuppam All Exam results Tamil Nadu Puducherry pondicherry PRTC, SETC, bus timings to chennai BILL PAY ONLINE AADHAAR Hajj India இரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக Search For Blood Donors in pondicherry Translate Flickr Photos More Photos Pondicherry Emergency CALLS உங்கள் பகுதி: உங்கள் கருத்து Arulkumar on மின்துறை சார்ந்த குறைகளைத் தெர… Subha on சாட்சி கையெழுத்து: நில்…… C Francis Gaspar on நீண்டநாள் கோரிக்கைகள்: வேட்பாள… Anonymous on வாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ் போட்டு ப… Kamar on ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ்… நம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக… தினம் ஒரு குர்ஆன் வசனம் இறைவேத அறிவிப்பில் பர்ழான நோன்பும், பரிகார நோன்பும். Top Posts ஆரோவில் காடுகள அழிக்கப்படுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: ராமதாஸ் கோட்டக்குப்பம் அருகே - தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீனவர்கள் சாலை மறியல் வக்ஃபு சட்டங்கள்- ஒரு பார்வை மகப்பேறுகால நிதி உதவித்திட்டம்… பெறுவதற்கான ஏ டு இசட் வழிமுறைகள்! உலகம் அழியும் அடையாளங்கள் என்ன சத்து எந்த கீரையில் ? எங்களுடன் இணைத்திருக்க kottakuppam@sfr.fr Join 11,622 other followers Email Address: Follow YouTube Channel https://www.youtube.com/watch?v=txccHSjhhPU&t=30s Google Tamil News அதிமுக நிர்வாகிகள் பதவியை அங்கீகரிக்கத் தடை கோரிய வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு - Hindu Tamil Vegetable Price Hike : முருங்கைக்காய் கிலோ 320 ரூபாய் !! கிடுகிடுவென உயரும் காய்கறி விலை.. - Asianet News Tamil
ஐரோப்பிய லீக், லா லிகா, சீரி ஏ லீக், பிரிமீயர் லீக், பண்டஸ்லிகா என்று வெளிநாடுகளில் நடக்கும் பிரபலமான கிளப் கால்பந்து போட்டிகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பரவலால் பாதியிலேயே நிற்கின்றன. எஞ்சிய போட்டிகளை மீண்டும் தொடங்க ஒரு சில கால்பந்து சம்மேளனங்கள் முயற்சித்து வருகின்றன. இது குறித்து சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) மருத்துவ கமிட்டி தலைவர் மைக்கேல் டி ஹூகே கூறுகையில், ‘சாத்தியம் இருந்தால் வரும் நாட்களில் கால்பந்து போட்டிகளை நடத்தாமல் தவிர்க்க வேண்டும் என்பதே எனது பரிந்துரை. இப்போது கால்பந்து போட்டிகளை தொடங்கினால் அது மிகப்பெரிய ‘ரிஸ்க்’ ஆகி விடும். இந்த சீசனில் மீதமுள்ள ஆட்டங்களை இத்துடன் தவிர்த்து விட்டு, புதிய சீசனுக்கான போட்டிகளை சிறந்த முறையில் தொடங்க தயார்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். மீண்டும் விளையாட முடிவு எடுக்கும் முன்பு ஒவ்வொருவரும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்றார். Share Facebook Twitter WhatsApp Linkedin Previous article‘கிம் உயிருடன் இருக்கிறார்’ நிற்கவோ, நடக்கவோ முடியாது – வடகொரியா முன்னாள் தூதரக அதிகாரி பேட்டி
மகள் திருமணத்திற்கு பணத்தை சேமிப்பதற்கு பதில் இதற்க்கு செலவிடுங்கள்..! கவனத்தை ஈர்த்த சமந்தா..! | Actress samantha ruth prabhu shares message for people preparing daughters for marriage Malayalam English Kannada Telugu Tamil Bangla Hindi Live TV Languages Live TV Politics Coronavirus Tamil Nadu Cinema Video Gallery India World Sports Life Style Business Crime Technology live TV Tamil News cinema மகள் திருமணத்திற்கு பணத்தை சேமிப்பதற்கு பதில் இதற்க்கு செலவிடுங்கள்..! கவனத்தை ஈர்த்த சமந்தா..! First Published Oct 28, 2021, 3:35 PM IST நடிகை சமந்தா (Samantha), தற்போது சமூக சிந்தனையோடு, பெண்கள் கல்வி மற்றும் திருமணம் குறித்து ஷேர் செய்துள்ள பதிவுக்கு பலர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) ஸ்டோரியில் பெற்றோர்களால் திருமணத்திற்கு தயார் படுத்தப்படும் பெண்கள் குறித்து, ஆக்கபூர்வமான கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். பெற்றோர் பலர் தங்களுடைய பெண்களை என்னதான் படிக்க வைத்தாலும், அவர்களுடைய திருமணத்திற்கு என்று பெரும் தொகையை சேர்த்து வைப்பது இயல்பாகவே மாறிவிட்டது. சிலர் பெண்கள் அவர்களது மகள் உயர் கல்வி படிக்க ஆசை பட்டாலும், திருமண செலவை கருத்தில் கொண்டு படிக்க வைக்க மறுத்து விடுவதும் உண்டு. இந்நிலையில் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தலைவரான ராணி ராம்பால் பெண் குழந்தைகள் கல்வி, அவர்களின் பொருளாதார ரீதியான சுதந்திரம் போன்றவை அவர்களை அதிக நம்பிக்கையை மாற்றும் என்பது குறித்த தகவலை பகிர்ந்திருந்தார். இதில் உங்கள் மகள்களை மிகவும் திறமையானவர்களாக ஆக்குங்கள், அவளை யார் திருமணம் செய்வது என்று நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அவளுடைய திருமண நாளுக்காக பணத்தைச் சேமிப்பதற்குப் பதிலாக, அவளுடைய கல்விக்காகச் செலவிடுங்கள். மிக முக்கியமாக, அவளை ஒரு திருமணத்திற்கு தயார்படுத்துவதற்கு பதிலாக, அவளை வளர்த்து தயார்படுத்துங்கள். தன்னம்பிக்கையுடன் இருக்க அவளுக்குக் கற்றுக் கொடுங்கள் என எழுச்சியூட்டும் பதிவை போட்டுள்ளார். சமந்தாவின் இந்த ஸ்டோரி பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கணவர் நாக சைதன்யாவை பிரிந்த பின்னர், தற்போது சமூக அக்கறை கொண்ட விஷயங்களில் இவர் கவனத்தை திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Follow Us: Download App: RELATED STORIES Tamannaah: ஸ்ட்ராப் லெஸ் மேலாடை... அந்த இடத்தை ஹைலைட் செய்து காட்டி... இளம் நெஞ்சங்களை பக் பக் ஆக்கிய தமன்னா! பாம்பு டாட்டூ குத்தி பதற வைத்த ஓவியா..! வேற இடமே கிடைக்கல போல... வைரலாகும் வீடியோ!! BiggBoss Isaivani: திருமணம் குறித்து பேசாதத்துக்கு இது தான் காரணம்! உண்மையை போட்டுடைத்த இசைவாணி.! Ileana D'Cruz: முன்னழகை கேப்பால் மறைத்து உச்சகட்ட கவர்ச்சியில் எல்லை மீறிய இலியானா! சூடான சோசியல் மீடியா! Sneha: சொட்ட சொட்ட நனைந்த நடு ரோட்டில் நின்றபடி... மாடர்ன் உடையில் சூடேற்றும் சினேகா! வேற லெவல் அழகு போட்டோஸ்! Top Stories Tamannaah: ஸ்ட்ராப் லெஸ் மேலாடை... அந்த இடத்தை ஹைலைட் செய்து காட்டி... இளம் நெஞ்சங்களை பக் பக் ஆக்கிய தமன்னா! Omicron: பயப்படாதீங்க.. தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்றா? அமைச்சர் மா.சு. சொன்ன முக்கிய தகவல்..! ரயிலுக்கும் ப்ளாட்பாரத்திற்கு இடையில் சிக்கிய பெண்... நூலிழையில் உயிரை காப்பாற்றிய போலீசார்..! Saravana Store Raid:அண்ணாச்சிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. 72 மணிநேரமாக நீடிக்கும் சோதனையில் சிக்கியது என்ன? Gold Rate Today : தங்கத்தின் விலை ரூ.400 இறங்கியது.. நகை வாங்க இதுதான் சரியான சான்ஸ் மக்களே….! மிஸ் பண்ணாதீங்க
ஒரு முஸ்லீம் பழ வியாபாரி ஒருவர் தன் தள்ளுவண்டியில் பழங்களை அடிக்கி வைக்கும் வீடியோவில் தன் விரல்களில் எச்சில் செய்து பழங்களை எடுத்து அடுக்கி வைக்க்கும் காட்சி பதிவாகி இருக்கிறது அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது அந்த செய்தி பொய்யானது யாரும் நம்ப வேண்டாம் அப்படியானால் உண்மை என்ன அந்த வீடியோ சம்பவம் தற்போது நடந்தது இல்லை அந்த வீடியோ சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்தது அந்த வீடியோ பிப்ரவரி 16 ம் தேதி எடுக்கபட்டது அந்த பழ வியாபாரி கைது செய்யபட்டுவிட்டார் இந்த சம்பவம் குறித்து அம் மாவட்ட எஸ்பி மோனிகா சுக்லா அவர்கள் தெரிவித்தது என்ன வென்றால் அந்த வீடியோ பிப்ரவரி 16-ம் தேதி எடுக்கப்பட்டு தற்போதும் வைரலாகி வருகிறது. வீடியோவை பதிவேற்றம் செய்த நபரை கண்டறிந்து, பின்னர் வைரல் வீடியோவில் இருக்கும் நபரை பிடித்துள்ளோம். ஐபிசி 269, 279 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது, அவர் ஏன் அப்படி செய்தார் என்பதை கண்டறிந்து வருகிறோம் என கூறினார். அவர் ஒரு சாதாரண தள்ளுவண்டி பழ வியாபாரி நாம் பணத்தை எண்ணும் போது எச்சில் வைத்து எப்படி எண்ணுவோம் அதேபோன்று அவர் பழங்களை எடுத்து விட்டார் அவ்வளவு தான் இதை சமூகத்தில் குழப்பம் விளைவிப்பவர்களால் தவறான கருத்துடன் பரப்பப்படுகிறது மேலும் பொய் கருத்தை பரப்புபவர்களே சிந்திக்கமாட்டீர்களா ஏன் இவர் மட்டும்தான் இவ்வாறு செய்தாரா இவரைவிட மோசமான பல செயல்கள் செய்யக்கூடிய வியாபாரிகள் இருக்கிறார்கள் உதாரணத்திற்கு ஒரு பானிபூரி விற்பவர் அவருக்கு சிறுநீர் வருகிறது ஆனால் அவர் கழிவறைக்குச் சென்று சிறுநீர் கழிக்காமல் அவர் கடையில் என்கின்ற ஒரு செம்பை எடுத்து அதில் சிறுநீர் கழித்து வெளியே தெளித்து விட்டு அதை மீண்டும் உபயோகிப்பார். link இது எவ்வளவு மோசமான செயல் ஆனால் இதை பரப்ப மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் முஸ்லிம்கள் இல்லை அவர்கள் தொப்பி போடவில்லை மத துவேஷத்தை பரப்பும் வகையில் யாரும் இதுபோன்ற வீடியோக்களை பரப்ப வேண்டாம் இது போன்று பல வீடியோக்கள் YouTube ல் இருக்கிறது. எனவே இதுபோன்ற வீடியோக்களை பரப்பி மக்களிடையே குழப்பத்தை விளைவிக்க வேண்டாம். அட்மின் மீடியா ஆதாரம் https://thecognate.com/old-video-of-fruit-vendor-falsely-shared-as-muslim-man-spitting-spreading-coronavirus/ எங்கோ எப்போதோ நடந்த ஒரு சம்பவத்தை த்ற்போது நடந்தது போல் செய்யாதீர்கள் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள் Tags: மறுப்பு செய்தி Share this மறக்காம இதையும் படிங்க பர்த் டே பார்ட்டியில் உயிரிழந்த நபர்... வாட்ஸ்அப்பில் வீடியோ - உண்மை என்ன? Dec 03, 2021 0 விபத்தில் சிக்கிய மாணவன் போன உயிரை முதலுதவி செய்து காப்பாற்றிய செவிலியர்! Dec 04, 2021 0 உங்கள் நிலத்தின் பட்டா, சிட்டா, புல வரைபடம் டவுன்லோட் செய்வது எப்படி Sept 27, 2020 0 FACT CHECK வட நாட்டில் அழியாமல் கிடைத்த 300 ஆண்டுகள் பழமையான ஜனாசா என்று பகிரப்படும் வதந்தி… Dec 03, 2021 0 இந்து மததிற்கு மாறினார் முன்னாள் மத்திய வக்பு வாரிய தலைவர் வாசீம் ரிஸ்வி Dec 07, 2021 0 மாநிலம் முழுவதும் உள்ள துணை சுகாதார நிலையங்களில் பணியாற்ற வாய்ப்பு. தகுதிவாய்ந்தோர் விண்ணப்பிக்கலாம் Dec 01, 2021 0 மத்திய அரசில் வேலை பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் Dec 06, 2021 0 செளதி அரேபியாவுக்கும் பரவியது ஒமைக்ரான் வைரஸ் Dec 01, 2021 0 கனமழை காரணமாக இன்று 04:12:2021 பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்ட மாவட்டங்கள் முழு விவரம்....