text
stringlengths
101
471k
இந்தக் கருத்தரங்கில் பல கல்விமான்கள் கலந்து கொண்டுள்ளனர். கல்வி குறித்த அவர்களின் கருத்துக்கள் இரு தன்மைகளைக் கொண்டவையாக இருக்கும் வாய்ப்பினைக் கொண்டுள்ளன. ஒன்று கல்வி என்றால் என்ன என்பது குறித்த சித்தாந்தபூர்வக் கருத்தோட்டம். மற்றொன்று தற்போது நடைமுறையில் வழங்கப்படும் கல்வி எவ்வாறு முன்பிருந்ததைக் காட்டிலும் சீரழிந்து போய்க் கொண்டிருக்கிறது; அதனைக் குறைந்த பட்சம் முன்பிருந்த அளவிற்காவது காப்பாற்ற வேண்டும் என்ற கண்ணோட்டம். இவ்விரண்டில் முன்னதை கல்வியாளர்களின் கருத்துக்கே முழுமையாக விட்டுவிட்டுப் பின்னதை மட்டும் எடுத்துப் பேசுவது எனக்குச் சுலபமாக இருக்கும் என்று கருதுகிறேன். கல்வி அன்றும் இன்றும் நாங்கள் பெற்ற பள்ளிக் கல்வியும் சரி கல்லூரிக் கல்வியும் சரி ஏழை, எளியவர் என்ற வேறுபாடின்றி அனைவரும் ஒரே வகையான பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெற்ற கல்வி. மாணவர்களுடைய பொருளாதார வேற்றுமை கடந்து நாம் அனைவரும் ஒரு நிறுவனத்தில் கல்வி பயின்றவர்கள் என்ற அடிப்படையில் ஒரு உயர்வகை நட்புணர்வு நிலவிய காலமது. பல்வேறு காரணங்களினால் இடையில் பள்ளிக் கல்வியை விட்டுவிட்டவர்களும் கூட தங்களைப் போலன்றி பின்னர் கல்வியைக் கல்லூரி மட்டத்தில் தொடர்ந்து பல உயர் பொறுப்புகளில் அமர்ந்த பள்ளியில் தங்களோடு உடன் பயின்றவர்கள் குறித்து ஒருவிதப் பெருமித உணர்வுடன் வலம் வந்த காலமது. இன்று இந்த மாவட்ட ஆட்சியாளராக இருப்பவர் என் பள்ளித் தோழர்; இன்றைய இந்த புகழ் பெற்ற மருத்துவர் எனது பள்ளித் தோழர் என்று உவகை பொங்க நினைவு கூர்ந்து அந்த நினைவினைச் சக மனிதர்களோடு அவர்கள் பகிர்ந்து கொண்ட காலம் அது. வெளிப்படையாகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் நாமனைவரும் உடன் பயின்ற மாணவர் என்ற மாய வலையில் மனதார சிக்குண்டு ஒருவித ஆனந்த மயக்கத்தினை அனைவரும் கொண்டிருந்த காலமது. ஆரம்பக் கல்வி உயர்கல்வி அனைத்திலும் தனியார்மயம் ஆனால் இன்று அக்காலம் மலையேறிவிட்டது. கல்விப் பொறுப்பிலிருந்து அரசு கொஞ்சம் கொஞ்சமாகக் கைகழுவுவதன் விளைவாக பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வியில் தனியார்மயம் கோலோச்சத் தொடங்கி விட்டது. வசதி படைத்தவர் வேலைக்கான கல்வியைத் தனியார் பள்ளிகளிலும் வசதி இல்லாதவர் எழுதப் படிக்கத் தெரிந்தவரை உருவாக்கும் கல்வியை அரசு பள்ளிகளிலும் பெறும் காலமாகக் காலம் மாறிவிட்டது. இது தனியார் பள்ளிகளில் பயிலும் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில்பவர்களைக் குறைவாக மதிப்பிட்டு மாணவர்களுக்கிடையே அவர்களை முன்பு ஒன்று சேர்த்த மாய வலைகளுக்குப் பதிலாக ஒரு நிரந்தரத் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டுள்ள காலம். பெயரளவிற்கு மாணவர் என்ற அடிப்படையில் நிலவிய மேலோட்டமான சமத்துவக் கண்ணோட்டமும் இன்று மறைந்து போய்க் கொண்டுள்ளது. பள்ளிக் கல்வியில் தொடங்கி கல்லூரிக் கல்வி வரை எங்கும் எதிலும் தனியார் மயம்; பணமிருந்தால் வேலை வாய்ப்பைப் பெற்றுத்தரும் கல்வியின் பக்கம் நெருங்கு இல்லாவிடில் பள்ளிப்படிப்போடு நிறுத்திக் கொண்டு காவலாளி போன்ற வேலைகளில் திருப்தியடைய உன்னைத் தயார் படுத்திக்கொள் என்ற நிலை நம் கண் முன்னரே நம்மையும் அறியாமல் தடம் பதித்து வேரூன்றி நிலையும் பெற்றுவிட்டது. அறிவைக் கண்டு அஞ்சும் அரசுகள் அரசுகள் அறிவைக் கண்டு அஞ்சுகின்றன அதனால்தான் சமூக விஞ்ஞானக் கல்விப் பாடங்களை அகற்றுவதில் மும்முரமாக இருக்கின்றன. வரலாறு அசோகர் நட்ட மரங்கள் எத்தனை என்பதோடு அதைப் பயிலும் மாணவனது மனவோட்டத்தை நிறுத்தி விடுவதில்லை. எத்தனை அநீதியான அரசமைப்புகள் வரலாற்றில் தோன்றியுள்ளன அவற்றின் அழிவு எவ்வாறு நிகழ்ந்துள்ளது என்பதையும் அதில் படிக்கலாம். நமது அநீதியான ஆட்சியாளர்கள், வரலாறு படிக்கும் மாணவர்களை இத்தகைய பாடம் புகட்டும் கல்வி நமக்கு எதிராகத் திரண்டெழச் செய்யும் என்று அஞ்சுகின்றனர். சமூகவியல் படிக்கும் மாணவர்கள் சமூகத்தில் இதற்கு முன்பிருந்த விஞ்ஞானப்பூர்வமாக வகைப்படுத்தப்பட்ட சமூக அமைப்புகளான அடிமை , நிலவுடமை அமைப்புகள் எவ்வாறு மாறி இன்றைய முதலாளித்துவ அமைப்பு தோன்றியுள்ளது என்பதைப் படிக்கின்றனர். அவர்கள் இன்றுள்ள முதலாளித்துவ அமைப்புகள் உட்பட அனைத்துமே மாறக்கூடியவை முதலாளித்துவம் மனித சமூக வளர்ச்சியின் கடைசி வார்த்தையல்ல என்பதைப் பயில்கின்றனர். ஆனால் முதலாளித்துவமே கடைசி வார்த்தை என்பதை அனைவரின் மனதிலும் அகலவியலாது பதிக்க விரும்பும் ஆட்சியாளர்களுக்கு அப்பாடப்பிரிவு பிடிப்பதில்லை. பொருளாதாரம் படிப்பவர்கள் எவ்வளவு தூரம் கடிவாளம் போட்டுத் தங்களது கருத்தோட்டத்தைச் செயற்கையாக ஒருமுகப் படுத்தினாலும் அவர்களின் பார்வை வாங்கும் சக்திக் குறைவினை உருவாக்கிச் சந்தை நெருக்கடியைத் தோற்றுவிக்கும் முதலாளித்துவத்தின் அடிப்படைக் குணாம்சத்தை அறியாமல் போகாது. அங்கே முதலாளித்துவ ஆட்சியாளர்கள் பொருளாதாரக் கல்வி தோற்றுவிக்கவல்ல தங்களுக்கெதிரான அபாயத்தைக் கண்ணுறுகின்றனர். அதனால் அக்கல்வி போதிக்கப்படாமல் இருப்பதற்குத் தேவையான திரைமறைவு ஏற்பாடுகளைச் செய்கின்றனர். வரலாற்றுக் கல்வியை ஒழித்துக் கட்டிய வரலாறு இல்லாத மனிதராக ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு இருக்கலாம். ஆனால் வரலாறும், பாரம்பரியமும் இல்லாதவர்களாக நாம் இருக்க முடியாது. சந்தைத் தேவையை மட்டும் அடிப்படையாகக் கொண்ட கல்வி புதிய கல்விக் கொள்கை தொடங்கி அரசு அறிவிக்கும் கொள்கைகள் அனைத்தும் ஒரே இலக்கைக் கொண்டவைகளாக உள்ளன. முதலாளித்துவச் சந்தைத் தேவையினை நிறைவேற்றிக் குறைந்த செலவில் முதலாளிகள் அதிக இலாபம் ஈட்ட வழிவகை செய்பவைகளாகவே அவை உள்ளன. அதற்காக அரசு செலவு செய்து கல்வி நிலையங்களை உருவாக்கி ஒரு காலத்தில் அவர்களுக்கு வழங்கியது. தற்போது மக்கள் தொகை முழுவதும் பாட்டாளி மயமாகிக் கல்வி கற்று அதன் மூலம் பணியமர்ந்து வாழ்க்கை நடத்துவதைத் தவிர வேறுவழியில்லை என்ற நிலைக்கு பெரும் பகுதி மக்கள் வந்துவிட்டனர். அந்நிலையில் அதனை விற்றுக் காசாக்க பள்ளி முதல் கல்லூரி வரையிலான கல்வி முழுவதையும் உனக்குத் தாரை வார்க்கிறேன்; அதனை இலாபகரமான தொழிலாக்கி அதிகபட்ச இலாபம் ஈட்டிக்கொள் என்று தனியாருக்கு அரசு வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறது. கல் ஒன்று மாங்காய் இரண்டு இந்நிலையில் ஏழை மக்கள் அதனை எட்டிப்பிடிக்க முடியாதவர்களாகி தங்களுக்கென ஒரு கெளரவமான எதிர் காலத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியாதவர்களாகி வருகின்றனர். அவர்களது கெளரவத்தையும் தார்மீக முதுகெலும்பையும் முறிக்கும் வண்ணம் இலவசத் திட்டங்களை அறிவித்து ஒரு இரந்து உயிர் வாழ்வோர் மனநிலைக்கு மக்களை ஆட்சியாளர்கள் இட்டுச் செல்கின்றனர். அதன்மூலம் அவர்களது போர்க்குணத்தை ஒழிப்பதோடு தங்களது வாக்கு வங்கி அரசியலையும் வலுப்படுத்தும் விதத்தில் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கின்றனர். அரசுகள் எத்தனை கேவலமான நிலையில் இன்றுள்ளன என்றால் அவை அவற்றின் ஊழியர்கள் பெயரளவிற்கு இதுவரை செய்து வந்த கடமைகளைச் செய்யுமாறு கூட அவர்களை வற்புறுத்துவனவாக இல்லை, மாறாக தேர்தல் அரசியலில் எங்கள் கட்சிக்கு உதவி புரிந்தால் போதும் என்று எண்ணக்கூடிய நிலையில் உள்ளன. வருந்தத்தக்க விதத்தில் கல்வியின் பால் தங்களுக்கு உள்ள கடப்பாட்டினைக் காட்டிலும் ஆட்சியிலுள்ள கட்சியினரின் அரசியல் மேம்பாட்டின் பால் தங்களுக்குள்ள கடப்பாடே அதிகம் என்ற வகையில் ஆசிரியர்கள் செயல்படும் நிலையும் உருவாகியுள்ளது. ஆசிரியர் அமைப்புகள் கல்வியின் பால் வந்துள்ள தாக்குதலுக்கெதிராகவும் கல்வி மேம்பாட்டினை வலியுறுத்தியும் எடுக்கும் இயக்கங்களைப் போல் பல மடங்கு இயக்கங்களைத் தங்களது பொருளாதாரக் கோரிக்கையை வலியுறுத்தி எடுக்கின்றனர். ஒரு நல்ல ஆசிரியர் அவரது ஊதியத்தில் பத்து விழுக்காட்டிற்காவது நூல்கள் வாங்க வேண்டும் அதைக்காட்டிலும் கூடக் கூடுதலாக நூல்கள் வாங்கிப் படித்து ஒரு ஆசிரியர் என்ற ரீதியில் தாங்கள் மாணவர்களுக்குக் குறைவின்றி அறிவை வழங்க வேண்டும் என்ற விதத்தில் தங்களை வளர்த்துக் கொண்ட ஆசிரியர்கள் முன்பிருந்தனர். இன்று அத்தகைய ஆசிரியர்கள் அவ்வளவாக இல்லை. இன்று இந்தக் கருத்தரங்கில் கலந்திருக்கக் கூடிய ஆசிரியர்கள் சராசரித் தன்மையோடும் துறை மனநிலையோடும் தங்கள் துறையினர் மற்றும் தங்கள் அமைப்புகளின் கண் கூடான குறைகளைப் பூசி மெழுகக்கூடாது. கல்வியின் பாலான தங்களது அக்கறையைக் காட்டும் முகமாக இங்கு வந்து கலந்து கொண்டவர்கள் என்ற ரீதியல் துறை மனநிலை கடந்தவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். உழைக்கும் வர்க்க இயக்கத்துக்காரன் என்று கூறிக் கொண்டு ஆசிரியர்களைக் குறை கூறுகிறானே என்ற எண்ணம் பலருக்கு ஏற்படலாம். கடமையைச் சரிவரச் செய்யாதவர்கள் எந்த அமைப்பிற்கும் இடையூறாகவே இருப்பர். மேலும் அநீதியை எதிர்க்கும் தார்மீக உரிமை அற்றவர்களாகவும் அவர்கள் ஆகிவிடுவர். அதனால் தான் ஆசிரியரின் குறைகளை உரிமையுடன் சாட வேண்டியுள்ளது. இன்றுள்ள சமூக அமைப்பு மாறும் போதே சரியான அனைவருக்குமான கல்வி என்ற நம் கனவு நிறைவேறும் என்பது உண்மையாக இருந்தாலும் அதையே கிளிப் பிள்ளைகள் போல் கூறிக் கொண்டிருப்பதும் சரியானதல்ல. முடிந்த விதத்திலெல்லாம் ஏழை மாணவர் பல தகவல்களை, பல்வேறு துறைகள் சார்ந்த அறிவினை அடைய வழி வகுக்கும் கணிணிக் கல்வியை நம்மால் முடிந்த அனைத்து முறைசாரா வழிகளிலும் நம் தரப்பிலிருந்தும் அவர்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். பெற்றோர், மாணவர் அமைப்புகளை முடிந்த அளவு கல்வி மேம்பாட்டிற்காகவும், கற்பித்தலின் குறைகளைச் சுட்டிக் காட்டவும் பயன்படுத்த வேண்டும். சம்பாதித்துக் குவிக்கும் பணத்தின் ஒரு சிறு பகுதியைக் கூட புத்தகம் வாங்கப் பயன்படுத்தாத கல்விப் புரவலர்கள் இக்கருத்தரங்கிற்காக ஒரு நன்கு கற்ற பேராசிரியரை அணுகியபோது அவர் தனது அனுபவத்தை எங்களிடம் எடுத்துரைத்தார். “ஒரு தனியார் கல்லூரியில் அதிகபட்ச மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்ச்சி பெறும் அளவிற்கு எம்.பி.ஏ. பாடப்பிரிவில் அவர்களைத் தயார் செய்தேன். அதன் பின்னர் அந்த கல்லூரி நிறுவனரிடம் நான் கேட்டேன் நூலகத்திற்கு புது நூல்கள் வாங்க நிதி ஒதுக்குங்கள் என்று. அவர் ஏளனமாக என்னிடம் கூறினார் நிறையப்பேர் தேர்வுபெற ஏற்பாடு செய்த அளவிற்கு நல்லது; அத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். புத்தகம் நூலகம் என்றெல்லாம் பேசாதீர்கள்”என்று. அதற்கு மேல் அங்கு பணியாற்ற எனக்கு மனமில்லை; நான் அவரிடம் பார்த்த வேலையை விட்டுவிட்டேன் என்றார். இதுதான் இன்று தனியார் கல்வி நிலையங்கள் நடத்துபவர்களின் மனநிலை. இவர்களைப் பற்றித்தான் நமது நீதிமன்றங்கள் கல்விக்காகத் தங்களது பொருளினைச் செலவழித்து கல்வியினை வளர்ப்பவர்கள் என்றும் அவர்களது சுயாதிகாரத்தில் அரசு தலையிடக் கூடாது என்றும் கூறுகின்றன. இந்த கருத்தரங்கிற்காகப் பல பேராசிரியர்களை நாங்கள் அணுகிய போது அவர்களில் பலர் கூறியது கல்வியைச் சூழ்ந்துள்ள சீரழிவுகளாக நீங்கள் கூறுவதெல்லாம் உண்மைதான். ஆனால் அந்தச் சீரழிவுகளை நீங்கள் என்ன செய்தாலும் போக்க முடியாது என்பதாகும். அப்படியானால் ஒன்றும் செய்யாது இருந்தால் அவை போய் விடுமா அல்லது இதைவிட மோசமாக ஆகாமல் இருக்குமா கூறுங்கள் என்று அவர்களை நான் கேட்டேன். எதிர்பார்த்த படியே சஞ்சலத்துடன் கூடிய ஒரு புன்முறுவலே அவர்களிடம் இருந்து இதற்குப் பதிலாக வந்தது. Tweet Whatsapp முந்தைய அடுத்த கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன. Comments 0 #1 rameshv 2010-08-13 11:33 இது போன்ற நாட்டிற்க்கு அவசியமான கல்வி சம்பத பட்ட கருத்தரங்குகள் தொடக்கி நடத்தி நாம் தொடர்ந்து மக்களுக்கு கல்வி பிரச்னையை வலியுறுத்த வேண்டும் என்பது நமது கடமை ஆகும்
Bhaaratham Online Media: மானியத்தை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாதீர்; ஆலய நிர்வாகங்களுக்கு கணபதிராவ் அறிவுறுத்து Saturday, 9 May 2020 மானியத்தை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாதீர்; ஆலய நிர்வாகங்களுக்கு கணபதிராவ் அறிவுறுத்து ரா.தங்கமணி ஷா ஆலம்- நாட்டிலுள்ள ஆலயங்கள் வெறும் மானியத்தை பெறுவதில் மட்டும் குறிக்கோளாக இல்லாமல் மக்கள் சேவையிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதில் முனைப்பு காட்ட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தினார். இந்துக்களிடையே சமய நன்னெறியை போதிக்கவே ஆலயங்கள் செயல்படுகின்றன. ஆனால் சமயத்தை தாண்டியும் சமூகம் என்ற ஒரு கடப்பாட்டை ஆலயங்கள் மறந்து விடக்கூடாது. நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட்-19 வைரஸ் தொற்றால் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டு பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். இதில் பி40 பிரிவைச் சேர்ந்த வர்க்கத்தினர் தங்களின் வருமானத்தை இழந்துள்ளனர். இத்தகைய மக்களுக்கு உதவிடும் வகையில் பள்ளிவாசல்களும் தேவாலயங்களும் பெளத்த ஆலயங்களும் பல்வேறு உதவிப் பொருட்களை வழங்கி வருகின்றன. இதுபோன்று நாட்டிலுள்ள பல ஆலயங்களும் தங்களது வட்டாரத்திலுள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருவது மகிழ்ச்சிகரமானதாகும். அத்தகைய ஆலய நிர்வாகத்தினருக்கு எனது பாராட்டுகள். ஆனால், இதில் சில ஆலயங்கள் வெறும் மானியத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது வேதனையளிக்கிறது. மக்கள் சேவையில் முனைப்பு காட்டாமல் மானியத்திற்காக மட்டுமே அவ்வாலயங்கள் செயல்படுவது வேதனைக்குரியதாகும். ஒரு பேரிடர் சம்பவமாக கருதப்படுகின்ற இத்தகைய சூழலில் கூட பொதுநலத்தை கருதாமல் சுயநலமாக செயல்படும் ஆலயங்களின் போக்கு கண்டிக்கத்தக்கதாகும் என்று செக்‌ஷன் 18இல் அமைந்துள்ள ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பி40 பிரிவினருக்கு மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையில் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான கணபதிராவ் கூறினார். இந்நிகழ்வில் பத்து தீகா சட்டமன்ற உறுப்பினரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான ரோட்சியா, ஷா ஆலம் மாவட்ட மன்ற உறுப்பினர்கள் யுகராஜா, சுந்தரம், இந்திய சமூகத் தலைவர்கள் முரு, கோபி, பத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். By myBhaaratham - May 09, 2020 Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels General No comments: Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) 'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை பினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங... மரணத்திலும் பிரியாத தம்பதியர் பூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச... சோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்!!! சேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...
நவராத்திரி முதல் மூன்று நாட்கள் மலைமகளின் அம்சமான துர்கை அம்மனுக்கு உரியது. அதிலும் முதலாம் நாளில் வணங்கப்படும் நவதுர்காவின் முதல் அவதார வடிவமே “சைலபுத்ரி”. இவர், சதி, பவானி, பார்வதி அல்லது ஹேமாவதி என்றும் அழைக்கப்படுகிறார். முதல் நாள் வழிபாட்டை நிறைவாகச் செய்து முடித்தால், வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கும். வறுமை இல்லாத, செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ்வதற்கு வழி பிறக்கும். நமக்கு எதிரி, கடன் போன்ற தொல்லைகள் ஏற்படாமல் இருப்பதுடன் ஆயுள் விருத்தியும் செல்வ விருத்தியும் ஏற்படும் என்பது நம்பிக்கை! நவராத்திரியின் முதல் 3 நாட்கள் மலைமகளின் அம்சமான துர்கை அம்மனுக்கு உரியது. அதிலும் மூன்றாம் நாளில் வணங்கப்படும் நவதுர்காவின் அவதார வடிவமே “சந்திரகாண்டா”. இவருடைய கிருபையால் பக்தர்களின் அனைத்து பாவங்களும், துன்பங்களும், உடல், மன உபத்திரவங்களும், பேய் தடைகளும் ஒழிக்கப்படுகின்றன என்று கருதப்படுகிறது. இவளை வணங்குவதால் நம் மனது சாந்தி அடைந்து எதிர்மறை எண்ணங்கள் விலகி வாழ்க்கையில் முன்னேறலாம். நடுவில் உள்ள (இவ்வருடம்) இரண்டு நாட்கள் ஞானசக்தியின் தோற்றமான இலட்சுமியின் ஆட்சிக்காலம். இன்றும் நாளையும் (4 மற்றும் 5ஆம் நாள்) இலட்சுமிக்கு உரியது. அதிலும் நாலாம் நாளில் வணங்கப்படும் நவதுர்காவின் அவதார வடிவமே “ஸ்கந்தமாதா”. தன் பக்தர்களுக்கு சக்தி மற்றும் செல்வத்துடன் ஆசீர்வதிக்கக்கூடிய தெய்வம். வணங்குவோரை கைவிட மாட்டாள். மோட்சத்திற்கு இட்டுச் செல்வார் என நம்பப்படுகின்றார். மற்ற தேவிகளுக்கு இல்லாத சிறப்புகள் இவருக்கு உண்டு. இவரை வழிபடும் போது நாம் முருகனையும் சேர்த்து வணங்குகின்றோம். இதனால் இருவரின் ஆசி நமக்கு கிட்டுகின்றது. திடமான நம்பிக்கையுடன் நம் குறைகளைக் களைந்து இந்த பாடலை தினமும் பக்தியுடன் பாடிவந்தால் இல்லத்தில் சுபீட்சம் பொங்கும், திருமகள் கண் திறப்பாள். செல்வம் பெருகவும், கடன்தொல்லை தீரவும் உதவும். நேற்றும் இன்றும் (4 மற்றும் 5ஆம் நாள்) ஞானசக்தியின் அம்சமான துர்கை அம்மனுக்கு உரியது. அதிலும் ஐந்தாம் நாளான இன்று வணங்கப்படும் நவதுர்காவின் அவதார வடிவமே “காத்யாயனி”. கன்னியர் மனம் விரும்பும் படி, மணாளனை கொடுத்து கல்யாணப் பேறு அளிப்பாள் இவள் என்று கூறுவார்கள். காத்யாயனி தேவியை வழிபடுவதால், திருமணம் தொடர்பான எல்லா பிரச்சனைகளும் தீருவதாக நம்பப்படுகிறது. மாங்கல்ய தோஷம் போன்ற கடுமையான தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் சக்தி தேவி காத்யாயனிக்கு உள்ளது. தேவி காத்யாயனியை வழிபடுபவர் இல்லத்தில் அமைதியும் செல்வமும் தழைத்து வளரும். நவராத்திரி வழிபாட்டில் இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். ஆறாம் நாளான இன்று வணங்கப்படும் நவதுர்காவின் அவதார வடிவமே “காளராத்திரி”. அம்மனின் இந்த வடிவம் தீய சக்திகள், பேய்கள், பிசாசுகள் மற்றும் எதிர்மறை ஆற்றல்களை அழிக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த வடிவத்தில் உள்ள துர்கை அம்மனை தைரியம் அதிகரிக்கவும், அச்சத்தைப் போக்கவும் மக்கள் வணங்குகின்றனர். காளராத்திரி தேவியின் வாகனம் கழுதை. இவரது பார்வை பட்டாலே பாவம் நீங்குவதுடன், கெட்ட சக்திகள் அஞ்சி ஓடும் என்று மக்கள் நம்புகின்றனர் சரசுவதி அந்தாதியை தினமும் அல்லது சரஸ்வதி பூஜை அன்றோ பாராயணம் செய்பவர் வாழ்வில் சகல விதமான ஞானங்களும், செல்வமும் நிறையும். அண்மைய செய்திகள் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலகமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழா -2021 கல்முனை டூகே போய்ஸ் விளையாட்டுக் கழகத்தின் புதிய சீருடை அறிமுக போட்டி ! அக்கரைப்பற்று அபிவிருத்தி தொடர்பில் அதாஉல்லா எம்.பியின் பங்கேற்புடன் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் ! கந்தளாய் புகையிரத கடவையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயணித்த கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பொலிஸ் அதிகாரியொருவர் மரணம் காரின் சாரதி படுகாயங்களுடன் கந்தளாய் வைத்தியசாலையில் மாத்தளை மாவட்டத்தில் 670 வீதிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது – ஆளும் தரப்பு பிரதம கொறடா , நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ. தமிழ் இளைஞர்களை சயனைட் குப்பிகளையும், துப்பாக்கிகளையும் ஏந்த வைத்தவர்கள் பௌத்த சிங்கள பேரினவாதிகளே! – இராஜாங்க அமைச்சரின் கருத்துக்கு சிறீதரன் எம்.பி பதில் மு.கா. தலைமைத்துவத்தை மாற்ற கிழக்கில் முயற்சியா..? ஹக்கீமை விடத் தகுதியானவர் இல்லை என்கிறார் கல்முனை மேயர் றகீப்..! திருகோணமலை நகரிலுள்ள விடுதியொன்றின் அறையிலிருந்து நஞ்சருந்திய நிலையில் இரு யுவதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்து குழந்தையொன்றும் மீட்பு. இடி தாங்கி விற்பனை செய்ய மோசடியாக பணம் சேகரித்த பொலிஸ் அதிகாரி உட்பட 9 பேர் கைது அருவி பெண்கள் வலையமைப்பினால் பாடசாலைகள் துப்பரவுப் பணியுடன், சுகாதாரப் பாதுகாப்புப் பொருட்கள் வழங்கி வைப்பு… கருத்துக்களேதுமில்லை உங்கள் கருத்தை சொல்லுங்கள் Click here to cancel reply. Tue, Oct 12 Mon, Oct 11 Sun, Oct 10 Fri, Oct 8 Thu, Oct 7 Wed, Oct 6 Tue, Oct 5 சிறப்புச் செய்திகள் சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டோருக்கு காத்திருக்கும் பேராபத்து! உலகின் முதல் 10 கோடீஸ்வர்களின் பட்டியலில் ;அமேசான் நிறுவனர் ஜெப் பெகாஸ் முதலிடம் அம்பாரை மாவட்டதில் பூரண கர்த்தாலுக்கு அழைப்பு – தவராசா கலையரசன் (பா.உ) தூபியை உடைப்பதானது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு விழுந்திருக்கிற அடியாகும்-காரைதீவு பிரதேச சபை தவிசாளர்
சினிமா பின்புலம் ஏதும் இல்லாமல் ஒருவர் திரைக் கடலில் எதிர் நீச்சல் போட்டு முன்னேற முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அவர் அறிமுகமாகும் முதல் காட்சிக்கு விழும் கைதட்டல்களே அதற்கு சாட்சி. விஜய், தனுஷ், விஷால் எல்லாம் அதிரடிக்கு போய்விட கொஞ்சம் கருப்பா களையா, தமிழ்நாட்டு லவ்வர் பாய் கேரக்டர் இடம் காலியாயிருக்க, அங்கே கால்மேல் கால் போட்டு அமர்கிறார் இவர். குஞ்சிதபாதம் என்ற தன் பெயரை நண்பர்கள், ஆசிரியர் மற்றும் எதிர் வீட்டு குட்டிப்பையன் வரை எல்லோரும் சுருக்கமாக கூப்பிடுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகும் சிவா பின் தான் நேசித்த பெண் தன்னை நேசித்த போதும் இந்த பெயருக்காகவே இவரை விட்டு செல்லும் போது அவர் பெயரை மாற்றுகிறார். பெயரை மாற்றியதும் சுக்கிரன் ப்ரியா ஆனந்த் வடிவில் எதிரில் வந்து நிற்கிறான். அரும்பாடுபட்டு பள்ளி ஆசிரியரான ப்ரியாவை கரெக்ட் செய்த பின்பு இவருடைய பழைய பெயர் மீண்டும் வில்லத்தனம் செய்கிறது. அந்த பெயரால் ஏற்பட்ட களங்கத்தை (???) எப்படி துடைத்து நல்ல பெயர் (?!) வாங்குகிறார் என்பதே கதை. படத்தின் முக்கிய பலம் இசை. "மூணு" படத்திற்கு பின் அனிருத் இளைஞர்களின் நாடித்துடிப்பை சரியாக கணித்து சிறப்பாக இசை அமைத்திருக்கிறார். "Poetu" தனுஷ் தேர்ந்திருக்கிறார். இடைவேளைக்கு முன்னரே நான்கு பாடல்கள் வந்த போதும் ரசித்து பார்க்க முடிந்தது. சிவகார்த்திகேயன் தனக்கென ஒரு தனி பாணியில் ஒன் லைன் டைமிங் நக்கலோடு கலக்கல் நடிப்பு. இன்னும் கொஞ்சம் மெருகேற்றிக் கொண்டால் தமிழ் சினிமாவில் நல்ல இடத்திற்கு செல்லலாம். ப்ரியா ஆனந்த் கீதா மிஸ் கேரக்டரில் என்னுடைய பள்ளிக் கால மிஸ்ஸை நினைவு படுத்தினார். பெரிதாய் நடிப்பதற்கு இடமில்லாவிட்டாலும் கொடுத்த பாத்திரத்தை நன்றாய் கழுவியிருக்கிறார்.. சாரி நடித்திருக்கிறார். படத்தின் இரண்டாம் பாதியில் வந்த போதும் எல்லோரின் நடிப்பையும் ஓவர்டேக் செய்வது "அட்டகத்தி" நந்திதா தான். இவர் மூலம் இயக்குனர் ஒரு நல்ல மெசேஜ் சொல்கிறார். விளையாட்டு துறையில் நடக்கும் வியாபாரங்களை துகிலுரித்துக் காட்டுகிறார். இவருடைய அப்பாவாக வருபவரும் கனகச்சிதமான தேர்வு. இவர்கள் மட்டுமல்லாமல் படம் முழுவதும் சிவாவின் நண்பனாய் பயணிக்கும் சதீஷ் கலக்கல். ஆனால் சந்தானத்தை காப்பி அடிப்பது போன்ற உணர்வு. மேலும் ஜெயப்ரகாஷ், நந்திதாவின் பாட்டி, சிவாவின் ஹவுஸ் ஓனர், மதன் பாப், ஆர்த்தி என ஒவ்வொருவரும் நம்மை சிரிக்க வைக்கிறார்கள். தனுஷ் மற்றும் நயன்தாராவின் நடனம் படத்திற்கு தேவையில்லை என்றாலும் சி கிளாஸ் ரசிகர்களை குஷிப்படுத்த உதவுகிறது. கடைசியில் அட்டகத்தி தினேஷை பயன்படுத்தியிருப்பது இயக்குனரின் சாதுர்யம். மாரத்தான் நம்ம ஊருக்கு புதுசு என்றாலும் மக்கள் ஏற்றுக் கொள்ளும்படி சொல்லியிருப்பதால் ஒகே. அஞ்சு முதல் அறுபத்தியஞ்சு வரை எல்லாரும் ரசித்து பார்க்கலாம் இந்த எதிர் நீச்சலை! 78 / 100 பயணித்தவர் : aavee , நேரம் : 8:18 AM Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest 12 comments: பால கணேஷ் May 3, 2013 at 8:21 AM தைரியமா எதிர்நீ்ச்சல் போடலாம் (பாக்கலாம்)னு சொல்றீங்க ஆவி. ரைட்டு! சிவகார்த்திகேயன் இன்னிக்கு தேதிக்கு நீங்க சொல்ற மாதிரி இயல்பா, கைத்தட்டலை அள்ளறார்தான்! (விஜய்கூட இப்படி வந்தவர்தானே) என்னிக்கு அவருக்கு ஆக்ஷன் ஹீரோவாகி 40 பேரை உதைச்சு ஒண்ரை கிலோமீட்டர் தூரம் பறக்க வெக்கலாம் தோணி சனி பிடிக்கப் போவுதோ? ReplyDelete Replies aavee May 4, 2013 at 6:41 AM விஜய்க்கு இருந்த பின்புலம் இவருக்கு இல்லையே.. நல்ல கதைகளை தேர்வு செய்தால் நன்றாக வரலாம்.. Delete Replies Reply Reply கோவை நேரம் May 3, 2013 at 8:26 AM ம்ம்.படம் பார்க்கணும். ReplyDelete Replies aavee May 4, 2013 at 6:41 AM நீ எப்போ மச்சி ஊருக்கு வர்றே? Delete Replies Reply Reply சீனு May 3, 2013 at 9:11 AM சற்றே சீரியல் தனமான படமாக எனக்குப் பட்டது சார்.. அதிலும் அந்த பிளாஷ்பேக்கில் என்னால் உக்கார முடியவில்லை அத இன்னும் சுருக்கமா சொல்லி இருக்கலாம்... படத்துல எதுவுமே வித்தியாசமா இல்ல.. ஒரு ஹீரோ/யின்/நண்பன் இவங்களுக்குள்ள நடக்குற அலப்பறை.. இன்னும் எவ்ளோ நாள் தான் நம்மள கொலையா கொள்ளுவாய்ங்களோ... மற்றபடி சிவா கார்த்திகேயனை ரசித்தேன்... படம் பார்த்தது அவருக்காக மட்டும் தான். ReplyDelete Replies aavee May 4, 2013 at 6:44 AM சீனு, எனக்கு நந்திதாவை பிடித்த காரணத்தால் இரண்டாம் பகுதி அவ்வளவு இழுவையாக தெரியவில்லை.. நிறைய பேர் அப்படிதான் சொன்னார்கள். அப்புறம் சீனு சார் எல்லாம் வேண்டாம், ஆவின்னு கூப்பிடுங்க போதும்.. :-) Delete Replies Reply Reply திண்டுக்கல் தனபாலன் May 3, 2013 at 9:27 AM 78 மார்க்...! சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற தலைவர் ஆன மாதிரி தெரிகிறதே.... வாழ்த்துக்கள்... நல்ல விமர்சனம்... நன்றி... ReplyDelete Replies aavee May 4, 2013 at 6:46 AM ஹி.ஹி.. இல்ல DD.. நாங்க புதுசா நஸ்ரியா ரசிகர் மன்றம் ஆரம்பிக்க போறோம்.. ;-) Delete Replies Reply Reply ezhil May 3, 2013 at 6:21 PM பாத்துடலாம்.... ReplyDelete Replies aavee May 4, 2013 at 6:46 AM பாருங்க.. Delete Replies Reply Reply Rahul Ramfort May 3, 2013 at 11:17 PM இப்பத்தா படம் பார்த்த.. படம் கண்டிப்பா ஒரு டைம் பார்க்கலாம்.. கீழ விழுந்துட்டு அப்பவு Win பண்றாரே, அதுதா கொஞ்சம் ஓவர்..
ஈ-ரிக்ஷாக்களில் கழிவு பிரித்து சேகரிக்க தனி தொட்டிகள் இருந்தாலும், மக்கள் கழிவை பிரித்து போடுவதில்லை. படம்: அவந்திகா கிருஷ்ணா Translated by Sandhya Raju “உலர் கழிவு மேலாண்மை பணியில் நீண்ட காலமாக உள்ளோம் ஆனால் எங்களுக்கு ஊதியமோ மரியாதையோ இல்லை” என்கிறார் வேளாச்சேரியில் கழிவுகளை சேகரிக்கும் நயன் முஹமத். அந்தந்த பகுதிகளில் கழிவு அப்புறப்படுத்தலில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இவர்கள் நீண்ட காலமாக புறக்கணிக்கப்படுகிறார்கள். எந்தவொரு பாதுகாப்புமின்றி அவர்கள் பணி முறைபடுத்த வாய்ப்புகளின்றி தொடர்ந்து பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தோ-ஸ்பானிஷ் கூட்டு முயற்சியில் “அர்பேசர்-சுமீத்” நிறுவனம் கழிவு மேலாண்மை ஒப்பந்தத்தை பெற்றதையடுத்து, இந்த முறையும், நகரத்தின் பல பகுதிகளில் உள்ள கழிவு சேகரிப்பவர்கள் நிராகரிப்பை எதிர்கொள்கின்றனர். புதிய கழிவு மேலாண்மை ஒப்பந்தம் பரவலாக்கப்பட்ட கழிவு மேலாண்மை என்ற அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஏழு மண்டலங்களில் கழிவு மேலாண்மையை இந்த நிறுவனம் பெற்றது. மக்கும் கழிவுகள் (காய்கள், மீந்த உணவு போன்றவை), மக்காத கழிவுகள் (பிளாஸ்டிக், பால் கவர், பேனா போன்றவை) மற்றும் அபாயகரமான வீட்டு கழிவுகள் (மருந்து, ரேசர், ஸ்பிரே பாட்டில்) ஆகியவை சேகரிக்கும் போதே பிரிக்கப்பட வேண்டும். இது தவிர, சாலைகளை துப்புறவு செய்யும் பணியையும் மேற்கொள்ள வேண்டும். வீடு வீடாக சென்று கழிவுகளை சேகரிக்க தூய்மை பணியாளர்களுக்கு ஈ-ரிக்ஷாக்கள் வழங்கப்பட்டுள்ளன. Read more: Where does the waste generated in your home go? ஒப்பந்தப்படி முதன்மை கழிவு சேகரித்தலின் போது மூன்று பிரிவுகளாக பிரித்து தனி தொட்டிகளில் சேகரிக்க வேண்டும் மற்றும் இரண்டாம் நிலை பிரித்தல் முறைக்கு மக்கும், மக்காத, தெரு குப்பைகள் ஆகியவற்றிற்கு மூன்று வண்ணங்களில் ஆர் சி தொட்டிகள் ஒவ்வொரு இடத்திலும் வைத்திருக்க வேண்டும். பிரித்து சேகரித்தல் குறித்த விழிப்புணர்வு தூய்மை பணியாளர்காளுக்கு இல்லை. படம்: அவந்திகா கிருஷ்ணா எனினும், பெரும்பாலும் கழிவுகள் சேகரிக்கப்படும் போது கலந்து விடுகின்றன, இவை பின்னர் ஈ-ரிஷ்காக்களில் தான் பிரிக்கப்படுகின்றன. “பிரிப்பதற்கு சவாலாக இருந்தால், அவற்றை தெருவில் உள்ள குப்பை தொட்டியில் சேர்த்து விடுவோம், இவை நிலப்பரப்பில் கொட்டப்படும் போது பிரிக்கப்படும்.” என்கிறார் அர்பேசர்-சுமீத் நிறுவனத்தில் வேளாச்சேரியில் பணி புரியும் தூய்மை பணியாளர் துரை. ஒப்பந்தப்படி, சாலைகளில் உள்ள குப்பைத்தொட்டியில் உள்ள கழிவுகளை பிரித்தல் குறித்து கேட்ட போது, “இங்கு குப்பைகள் பிரிக்கப்படுவதில்லை, நாங்கள் சாலைகளில் அள்ளும் குப்பைகள் அனைத்து குப்பைகளுடன் ஒன்றாக தான் கொட்டப்படுகின்றன. பெரிய நில பரப்பில் தான் அவை பிரிக்கப்படுகின்றன” என்கிறார் அர்பேசர்-சுமீத் நிறுவனத்தின் தூய்மை பணியாணர் ஆர். கற்பகம். Read more: How the coronavirus pandemic has slowed down Chennai’s waste management efforts குப்பைகளை மூல பிரித்தல் செய்ய வேண்டும் என மாநகராட்சி தெரிவித்தாலும், வீடுகளில் அது செயல்படுத்தப்படுவதில்லை. “இது குறித்து குடியிருப்புவாசிகளுடன் அதிகாரிகள் இன்னும் பேசவில்லை. இது செயல்படுத்தப்பட்டால் தான், எங்கள் வேலையை நாங்கள் சரிவர செய்ய முடியும்.” என்கிறார் துரை. உள்ளூர் கழிவு சேகரிப்பாளர்கள் இதற்கான தீர்வை அளிக்க முடியுமா? மூலப் பிரித்தலை வழக்கத்தில் கொண்டு வர, “குப்பைகளை வகை பிரித்தல்” என்பதற்கு பதிலாக “குப்பைகளை எவ்வாறு பிரிக்க வேண்டும்” என வீடு வீடாக பிரச்சாரம் செய்ய வேண்டும். “விழிப்புணர்வு அளிப்பதில் அரசு சாரா அமைப்புகளும், அதிகாரிகளும் பெரும் பங்கு வகிக்க முடியாது. மக்காத கழிவுகள் என்றால் மறுசுழற்சி மட்டும் தான் என மக்கள் நினைக்கிறார்கள். இது குறித்து விழிப்புணர்வு தர உள்ளூர் கழிவு சேகரிப்பாளர்கள் தான் பொருத்தமானவர்கள். ஆனால் நாங்கள் கழிவு மேலாண்மையில் சேர்க்கப்படுவதில்லை,” என்கிறார் முஹமத். நயன் முஹமத்தின் கடை படம்: அவந்திகா கிருஷ்ணா. மூலப் பிரித்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை திணறி வரும் நிலையில், இது குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி, அடுத்த கட்டத்திற்கும் புனே நகரம் சென்று விட்டது. சுவச் (SWaCH Pune Seva Sahakari Sanstha) மற்றும் ககட் கச் கஷ்டகாரி பஞ்சாயத் (KKPKP) ஆகியவற்றை உள்ளூர் சேகரிப்பாளர்களுக்கான கூட்டுறுவை 1993 ஆம் ஆண்டு தொடங்கி, இதில் உள்ளவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் மாநகராட்சியுடன் இணைந்து செயல்படுகின்றனர். Read more: How Swacchata ‘didis’, ward committees and local volunteers in small towns are showing the way to waste management during COVID-19 இவர்கள் வீடு வீடாகவோ அல்லது குடியிருப்பில் உள்ள சங்கத்துடன் உரையாடி, உலர்ந்த மற்றும் மறுசுழற்சி கழிவுகள் குறித்து விழிப்புண்ர்வு ஏற்படுத்துவதோடு அவை பல்வேறு நிலைகளில் எவ்வாறு சுத்திகரிக்கப்படுகின்றன என்றும் விளக்குகின்றனர். “நாங்கள் வசிக்கும் இது போன்ற பெரிய அடுக்கு மாடி குடியிருப்பு பகுதிகளில், ஒவ்வொரு தளத்திற்கும் கழிவுகளை சேகரிக்க, மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வருகின்றனர். நாங்கள் அளிக்கும் கழிவுகள் சரியாக பிரிக்கப்படவில்லை, என்றால் இவற்றை வாங்க மறுக்கின்றனர். இது போல் பெரும்பாலானோர் செய்தால், எங்கள் குடியுருப்பில் உள்ள பெரிய தொட்டியை மாநகராட்சி அகற்றி விடும். பின் எங்கள் வீட்டு கழிவுகளை அப்புறப்படுத்த சரியான வசதி இருக்காது.” என்கிறார் பூனேவின் லோகேகான் பகுதியில் வசிக்கும் சினேகா உப்பல். பூனேவைப் போல் சென்னையும் முறைசாரா கழிவு சேகரிப்பவர்களை ஒன்றிணைத்து, இவரகள் மூலம் கழிவு மூலப்பிரித்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். “கழிவு பிரிக்கப்பட வேண்டும் என மக்கள் அறிந்திருந்தாலும், அவை எவ்வாறு செய்ய வஏண்டும் என அறிந்திருக்கவில்லை. இது மிக அவசியம் என்றாலும், புதிய ஒப்பந்தப்படி இது வரை சென்னை மாநகராட்சி இந்த முயற்சியை மேற்கொள்ளவில்லை. இதனால் எங்கள் பணி மேலும் கடினமாகிறது.” என்கிறார் துரை. குடிமக்கள் நுகர்வோர் மற்றும் சிவிக் நடவடிக்கை மற்றும் குழு (சிஏஜி) அமைப்பின் வம்சி ஷங்கர் இது குறித்து வலியுறுத்துகையில் “பருவ நிலை மாற்றம், நிலையான வளர்ச்சி ஆகியவை குறித்து நாம் அதிகம் பேசி வரும் இந்த தருணத்தில், கழிவுகளை மூலப்பிரித்தல் என்பதை கடந்து வள நிர்வாகமாக மக்கள் பார்க்க வேண்டும். கழிவுகளின் மிக சிறிய பகுதியே ஆற்றலாக மாற்ற இயலாது. இதை மக்கள் புரிந்து கொண்டால், மூலப்பிரித்தல் சிரமமின்றி நிறைவேறும்.” என்றார். முறையற்ற மக்கள் ஈடுபாடு வேளாச்சேரி போன்ற மண்டலத்தில் முழுவதுமாக புதிய ஒப்பந்தப்படி கழிவு மேலாண்மை அமலில் உள்ள பகுதிகளில், கழிவுகளை எவ்வாறு பிரிக்க வேண்டும் என கூறப்படவில்லை. “சில மாதங்கள் முன், தங்கள் புதிய வெள்ளை வாகனங்களில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கழிவுகளை சேகரிப்பதை கண்டேன். புதிய வாகனம், புதிய உடை, அவ்வளவு தான். இது வரையில் மூலப்பிரித்தல் குறித்து எதுவும் கூறவில்லை,” என்கிறார் வேளாச்சேரி ஏஜிஎஸ் காலனியில் வசிக்கும் எஸ். ரத்தினம். ஈ-ரிக்ஷா புழக்கத்தில் உள்ள ஆதம்பாக்கம் பகுதியில் மருந்து கடை நடத்தும் கே. மணி கூறுகையில் “ஊசிகள், காலாவதியான மருந்துகள் போன்ற ஆபத்தான கழிவுகளை முறையே அகற்றுவது குறித்து நாங்களே முன்வந்து மக்களிடம் விழிப்புணர்வை ஊட்டுகிறோம். 99% மக்கள் ஆபத்தான கழிவுகள் குறித்து அறிந்திருக்கவில்லை. மறுசுழற்சி கழிவுகள் பற்றி கூறாவிட்டாலும் அபாய கழிவுகள் குறித்து புதிய பணியாளர்கள் நிச்சயம் எடுத்துரைக்க வேண்டும்” என்கிறார். புழுதிவாக்கத்திலும் இதே நிலை தான். இங்கு வணிக நிறுவனங்களிடமிருந்து கழிவுகளை இன்னும் பெற தொடங்கவில்லை. “எங்கள் உணவகத்தில் தினமும் நிறைய கழிவுகள் உள்ளன. அருகாமையில் உள்ள வீடுகளில் கழிவுகள் சேகரிக்கப்பட்டாலும், எங்களிடம் பெறப்படுவதில்லை, நாங்கள் தினமும் இவற்றை முறையாக அருகில் உள்ள தொட்டியில் போடுகிறோம்.” என்கிறார் ஒரியன் உணவகத்தின் உரிமையாளர் சர்தக் நாயர். ஆனால், அர்பேசர்-சுமித் ஒப்பந்தப்படி, “ஈ-ரிக்ஷாக்கள் வீடுகள்/வணிக நிறுவனங்களிடம் மட்டும் கழிவுகளை பெற வேண்டும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மூலப் பிரித்தலில் குடியிருப்பு சங்கங்களின் அணுகுமுறை குறித்து கேட்கையில் “வேளாச்சேரி உள்பட நகரின் பல பகுதிகளில் குடியிருப்பு சங்கங்கள் பேருக்கு தான் உள்ளது. நகரின் பல பகுதிகளில் தனி அல்லது சிறு குடியிருப்புகள் தான் பெரும்பாலும் உள்ளன. பெரிய அடுக்கு மாடி குடியிருப்புகள் மிக குறைவே. ஆகையால், வீடு வீடாக சென்று மூலப் பிரித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த என் போன்ற சிறு சேகரிப்பாளர்களை ஈடுபடுத்தலாம்.” என்கிறார் முஹமத். Read more: What will it take to make Chennai’s new waste management system a success? நகரின் பல்வேறு பகுதிகளில் அரசு சார அமைப்புகளுடன் இணைந்து மூலப் பிரித்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை மாநகராட்சி சிறு முயற்சிகளை தொடங்கியுள்ளது. திருவெல்லிக்கேணி போன்ற பகுதிகளில் சில குடியிருப்பு சங்கங்களின் உதவியையும் மாநகராட்சி நாடியுள்ளது. “ஒவ்வொரு தெருவிலிருந்தும் குறைந்தது ஒருவர் மாநகராட்சி நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்வர். இதில் கழிவு பிரித்தல் குறித்து விளக்கப்பட்டதோடு, துப்புரவு திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தெருவுக்கு ஒருவர் என ஒவ்வொரு தெருவிலும் தூய்மை பணிகளை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டனர்” என்கிறார், திருவெல்லிக்கேணி அசாரி முட்டு தெருவில் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜே. ரமா. திட்டத்தை இறுதி படுத்தாத மாநகராட்சி இது வரை, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை மாநகராட்சி இறுதிபடுத்தவில்லை. “ஆம், நாங்கள் இன்னும் மக்களிடம் இது குறித்து பேச தொடங்கவில்லை. தற்போது திட்ட வடிவ நிலையில் உள்ளது, புதிய ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிக்கான திட்டம் குறித்து மாநகராட்சி வலைதளத்தில் விரைவில் பகிரப்படும்.” என்றார் ஆதம்பாக்கம் அலுவலகத்தை சேர்ந்த அருள் மணி. உள்ளூர் சேகரிப்பாளர்கள் குறித்து கேட்ட போது “கழிவு பிரித்தல் குறித்து அவர்கள் நன்கு அறிவர், ஆனால் அவர்களை ஈடுபடுத்துவது குறித்து மாநகராட்சி இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை. ஒப்பந்தம் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது, இன்னும் சில மாற்றங்களை அதில் கொண்டு வருவோம். இது மாதிரி ஓட்டம் தான், சரி செய்ய வேண்டியவை குறித்து பொறுத்திருந்து முடிவு எடுக்கப்படும். இதற்கிடையே, பொதுமக்களிடமிருந்து பரிந்துரைகள் பெறப்பட்டு அவற்றைச் சேர்க்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது” என கூறினார் அருள் மணி. Also read: Here is how a Chennai apartment is segregating waste, even during COVID-19 How this Navi Mumbai residential complex turned ‘zero-waste’ How RWAs in Gurugram are showing the way out of urban India’s waste crisis [Read the original article in English here.] EDITORS' PICK GENRE: In Focus TAMIL About Avantika Krishna 2 Articles Avantika Krishna is an aspiring journalist with an abiding interest in civic, environment and defence related stories. Previous A book fair post pandemic: What book lovers in Chennai were treated to Next 6000 booths, strict COVID protocol, 80-plus to vote at home: District officer shares election plans Related Articles Civic அங்கீகரிக்கப்படாத பதாகைகளை ஏன் தவிர்க்க முடிவதில்லை October 13, 2021 Korah Abraham சென்னையில் அனுமதியற்ற பதாகைகளை அகற்ற ஏன் முடியவில்லை? Infrastructure Explained: Metro Water’s new plans for using treated water from TTRO plants August 26, 2021 Laasya Shekhar CMWSSB plans to sell the treated water to the construction industry at a minimal cost. What could be the larger implications? Civic How a pond becomes a sewage dump: The Vannankuttai tale April 6, 2018 Raghukumar Choodamani Toilets by the shore, illegal sewage pipes draining into stormwater drains, debris dumped secretly — A citizen journalist’s trip to the Vannankuttai in GKM Colony reveals the sordid tale of how Chennai is losing its precious waterbodies. 1 Comment sriram says: March 11, 2021 at 1:05 pm In Sanfracisco, I saw, systematic, most efficient and cost effective way of 100% source segragation and removal with a simple and easily implementable system: PROCEDURE FOR SEGREGATON AND COLLECTION FROM INDEPENDENT HOUSES 1. In individual houses 3 big syntax like litter bins with lids are kept. 1.a. Black color bin is for garbage or trash 1.b. Green color bin is for kitchen and garden waste 1.c. Blue color bin is for recyclables. 2. In all three bins what items to be thrown are written with pictures in stickers 3. Households segregate and keep waste in above black, green, blue bins 4. Once a week, on prescribed day for the street, these bins are kept on road kerb, early morning or on previous day night. Nobody steals these bins as they are big. 5.a. Blue color Compactor lorry with Hydraulics fork lifts on sides come and lift the blue bin above truck, inverts bin and dumps waste in lorry then compacts inside. 5.b. Similarly green color compactor lorry comes and clears green bin 5.c. Similarly black color compactor lorry comes and clears black bin. 6. The driver then keeps back the emptied bin on same sideway. 7. Only one driver does driving as well as lifting, dumping in lorry, keeping back bin. 7.a. No extra staff accompanies compactor to lift bins 8. Next day, the lorries collect from some other areas in the city. 13. There is huge cost savings with following: 13.a. Since source segragation is done at homes in 3 bins, no much staff required to again sort items in the municipal yard. Savings in yard staff wages 50% 13.b. Since only driver does the work of driving, picking bins, dumping waste, keeping back bins on street kerb, cost of using 4 extra staff with compactor to lift bins is avoided. Savings on lorry staff cost 75% 13.c. Since only once a week comactor comes and picks and empties bins, savings on cost of compactor lorries 85% 13.d. Since no street bins are required, savings on street bins 100% 13.e. Since no mini battery vans are used, savings on garbage carts 100% SEE SAMPLE YOUTUBE VIDEO ONLY COMPACTOR LORRY USES ONLY ONE DRIVER AND NO EXTRA STAFF TO LIFT BINS ONE COLOR COMPACTOR CLEAR ALL SAME COLOR BINS FROM SAME STREET/AREA IN NO TIME. NO SPILLAGE OF WASTE IN STREETS. NO STREET BINS. ALL GARBAGE FROM HOME CLEARED ONCE A WEEK SAVING HUGE MONEY ON LORRIES, STAFF, STREET BINS, CARTS. https://www.youtube.com/watch?v=KrNAF6aP0qY&ab_channel=ValGerardo Independent houses also keep compost bins in garden, to compost kitchen waste and fallen dry leaves from garden PROCEDURE FOR COLLECTION IN APARTMENTS: 1. Each flat keeps 3x2x1 feet small green, blue, green inside flats. 1.a. degradable plastic bags are first kept fitted in above bins 1.b. waste is segregated and kept in above bins 1.c when bin bag is full, they are taken out, tied with tapes in bags, and thrown down through separate chutes with small doors for garbage and recyclables in upper floors 1.d. in ground floor, bags for garbage dropped down are grouped together and handed over to municipal truck. Same way bags with recyclables are collected and handed over.
அல்லாவை மகிழ்விக்கவே பலி கொடுத்தேன் – ரம்ஜான் போது, நான்கு வயது பெண் குழந்தையை கழுத்தறுத்து பலி கொடுத்த 26 வயது தந்தை! ஜூன் 12, 2018 அல்லாவை மகிழ்விக்கவே பலி கொடுத்தேன் – ரம்ஜான் போது, நான்கு வயது பெண் குழந்தையை கழுத்தறுத்து பலி கொடுத்த 26 வயது தந்தை! செக்யூலரிஸ இந்தியாவில், மதபண்டிகைக்களுக்கு விடுமுறைகளும், அரசியலும்: முன்பெல்லாம், இந்தியர்களுக்கு, முகமதிய மற்றும் கிருத்துவப் பண்டிகைகளைப் பற்றியெல்லாம் அதிகமாக தெரியாது. ஏதோ விடுமுறைக் கொடுக்கிறார்கள், வீட்டில், விடுமுறையை அமைதியாக, சுகமாகக் கழிக்கலாம் என்று இருப்பர். பிறகு தான் அவர்களுக்கு, கொண்டாட்டம் மற்றும் துக்கம் அனுஷ்டிக்கும் நாட்கள் பற்றி தெரிய வந்தது. முன்பெல்லாம் சிலர், “குட் பிரைடே”விற்கு வாழ்த்து சொல்வார்கள், கிருத்துவர்களும் “தேங்க் யூ” என்பார்கள். ஆனால், பிறகு தான் தெரிந்தது, “குட் பிரைடே,” “நல்ல வெள்ளி” அல்ல, ஆனால், கெட்ட வெள்ளி, அதாவது, அன்று தான், ஏசு சிலுவையில் அறைப்பட்டு, இறந்த நாள்.. பிறகு, அது வேறுவிதமாகியது. இப்பொழுது 12% முகமதிய மற்றும் 2% கிருத்துவப் பண்டிகைகள், மற்ற 88% / 86% மக்கள் மீது திணிக்கப்பட்டுகின்றன. விளம்பரங்கள் வேறு, தொந்தரவு கொடுக்கும் முறையில் உள்ளன. ரம்ஜானுக்காக, காஷ்மீரத்தில் “சண்டை நிறுத்தம்” அறிவித்தாலும், ஜிஜாதிகள் சுட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதாவது, அவர்கள் ரம்ஜான் கொண்டாடவில்லை போலும். அதாவது, இது அரசியலாகத்தான் இருக்கிறது அதேபோலத்தான், ஒரு தந்தை, தனது நான்கு வயது குழந்தையை, அல்லாவுக்கு பலி கொடுத்தான் என்ற செய்தி வந்துள்ளது. காணாமல் போன நான்ஹ்கு வயது குழந்தை கழுத்தறுப் பட்டு இறந்து கிடந்தது: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்தவர் நவாப் அலி. இவருக்கு மனைவி ஷபானா, மகள்கள் ரிஸ்வானா (4) உட்பட மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்[1]. வியாழக்கிழமை 07-06-2018 அன்று எல்லோரும் தூங்கினர். 08-06-2018, வெள்ளிக்கிழமை காலை எழுந்து பார்த்தபோது, ரிஸ்வானாவைக் காணவில்லை. இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) காலை வேளையில் குழந்தையை காணவில்லை என அலியின் மனைவி ஷபானா தேடியுள்ளார், இன்னொரு இணைதள செய்தி [புதியதலைமுறை] கூறுகிறது. அப்போது தனது மகள் வேறொரு அறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தேடிபார்த்த போது, வீட்டின் தரை தளத்தில் கழுத்தறுப்பட்ட நிலையில் சிறுமி கண்டெடுக்கப்பட்டாள்[2]. சிறுமியை பூனை கடித்து இருக்கலாம் என்று அலி குடும்பத்தினரிடம் சொல்லியிருக்கிறார் என்று கூறியதாக குறிப்பிடுகிறது[3]. சந்தேகப் பட்டதால், போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் பலி கொடுக்கப்பட்ட குழந்தையின் தந்தை நவாப் அலியை மீது சந்தேகம் எழ, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். நரபலி கொடுத்த முகமதியன், தன்னை சாத்தான் / பேய் பிடித்துக் கொண்டது என்றது: குரேஷி சாத்தான் / பேய் தன்னுடலில் புகுந்து கொண்டது என்றான்[4]. இந்தியா டுடே குறிப்பிடுவதாவது[5], “சாத்தான் தான் என்னுடல் புகுந்து அவ்வாறு செய்ய வைத்துள்ளது. இதனை நம்புவதனால், அவன் செய்யவில்லை, சாத்ட்தான் செய்தது என்று சொல்வது போலுள்ளது…….”. மேலும், இது பக்ரீதின் போது, ஆட்டை பலி கொடுப்பது போலுள்ளது, ஆனால், இவனோ தனது மகளையே பலி கொடுத்துள்ளான்.[6] “நான் ஒரு நம்பிக்கைக் கொண்ட முஸ்லிம். என்னுடைய வாழ்வில், நான் என் மகளை உயிரைவிட மேலாக பிரியம் கொண்டிருந்தேன். இஸ்லாத்தில், தனக்குப் பிரியமானதை அல்லாவுக்குக் கொடுக்க வேண்டும் என்றுள்ளது. அதன்படியே, நான் செய்தேன். பலநாட்கள் பாட்டியின் வீட்டில் இருந்து வியாழக்கிழமை தான் வந்தாள். அவளை சந்தைக்குக்கூட்டிச் சென்று, அவளுக்கு இனிப்புகள், பழங்கள் எல்லாம் வாங்கிக் கொடுத்தேன். பிறகு, கீழே கூட்டிச் சென்று, கலிமா சொல்லி, அவளது கழுத்தை அறுத்துக் கொன்றேன். மாடிக்கு வந்து படுத்துத் தூங்கினேன்,” என்று போலீஸாரிடன் சொன்னான்[7]. வெள்ளிக்கிழமை, 08-06-2018 அன்று போஸ்ட்மார்டம் செய்யப்பட்டுபுதைக்கப் பட்டாள்:[8] இது “பிடிஐ” செய்தியானதால், ஆங்கிலத்தில் ஒர்ரே மாதிரியாக செய்த் வெளியிடப்பட்டது[9]. அல்லாவைத் திருப்தி படுத்தவே பலி கொடுத்ததை ஒப்புக் கொண்ட நம்பிக்கையான தந்தை: முதலில், சிறுமியை பூனை கடித்து இருக்கலாம் என்று அலி குடும்பத்தினரிடம் சொல்லியிருக்கிறார். பிறகு முன்னுக்கு முறணாக பேசியதால், மனோதத்துவ முறையிலும், விசாரணை செய்துள்ளனர். விசாரணை நடைபெறும் வரை ஏதும் தெரியாதவராக இருந்த குரேஷி, சற்று அழுத்தமாக கேட்டதும் வித்தியாசமாக நடந்துகொள்ள ஆரம்பித்தார்[10]. தனக்கு பேய் பிடித்துள்ளதாகவும், கடவுளிடம் சொல்லி என்னை காப்பாற்றுங்கள் என்றும் கூறியுள்ளார்[11]. முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் குரேஷியிடம் விசாரணையை தீவிரப்படுத்தியதில், தன் மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். கடவுள்தான் எனக்கு பிடித்தமான ஒன்றை பலியிட வேண்டும், அப்போதுதான் நன்மை செய்வேன் என்று கூறினாராம்… அதனால், கடவுளை மகிழ்ச்சிப்படுத்தவே தன் மகளின் கழுத்தை அறுத்து கொன்று பலியிட்டதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து குரேஷியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி கொலை செய்யப்பட்டதால் அந்த பகுதி மக்கள் சோகத்தில் உள்ளனர். ரிஸ்வானா பலி பிறகு தமிழ் ஊடகங்கள் இவ்வாறு குறிப்பிட்டன: ரம்ஜான் மாதத்தில் அல்லாஹுவின் ஆசி தனக்கு கூடுதலாக கிடைக்க வேண்டும் என பிரார்தனை செய்து தனது நான்கு வயது குழந்தையை கழுத்தறுத்து பலி கொடுத்துள்ளார் நவாப் அலி[12]. சம்பவ தினத்தன்று இரவு தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த குழந்தை ரிஸ்வானாவை அவரது தந்தை அலி தூக்கிக் கொண்டுசென்று வேறொரு அறையில் வைத்து பிரார்த்தனை செய்துள்ளார். இதையடுத்து, கூர்மையான கத்தி கொண்டு தனது குழந்தையை கழுத்தறுத்து பலி கொடுத்துள்ளார். குழந்தை உயிரிழந்ததை உறுதி செய்த பின்னர் அலி தனது மனைவியுடன் சென்று உறங்கியுள்ளார். விசாரணையில், தனது குழந்தையை தானே கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அல்லாவின் ஆசி பெறுவதற்காக தன்னுடைய சொந்த மகளை கத்தியால் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் ஜோத்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 2016ல் இதேபோல, ஒரு பெண் நான்கு வயது குழந்தையைக் கொன்று, “அல்லாஹ் தான் அந்த குழந்தையை கொலை செய்யுமாறு உத்தரவிட்டார் ,” என்று நீதிமன்றத்தில் சொன்னது ஞாபகத்தில் வருகிறது.. 2016ல் இதேபோல, நான்கு வயது குழந்தை பலியிட்டது: நான்கு வயது குழந்தையை அல்லாஹ் கொலை செய்யுமாறு உத்தரவிட்டதாக மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலையத்தில் துண்டிக்கப்பட்ட குழந்தையின் தலையுடன் நடமாடிய ஆயா தெரிவித்துள்ளார்[13]. உஸ்பெகிஸ்தானை சேர்ந்த கியுல்செஹ்ரா போபோகுலோவா (39) ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஒரு வீட்டில் 4 வயது பெண் குழந்தையை கவனித்துக் கொள்ளும் ஆயாவாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவர் குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொலை செய்து தலையை கத்தியால் துண்டாக வெட்டி அதை எடுத்துக் கொண்டு மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்றார். மெட்ரோ நிலையத்தில் குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையுடன் நின்று கொண்டு நான் ஒரு தீவிரவாதி என்று அவர் கத்தினார். இது குறித்து அறிந்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். குழந்தையை கொலை செய்தீர்களா என்று நீதிபதி கேட்டதற்கு கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் சிரித்துக் கொண்டே ஆமாம் என்றார்[14]. முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் சிரித்துக் கொண்டே கூறுகையில், அல்லாஹ் தான் அந்த குழந்தையை கொலை செய்யுமாறு உத்தரவிட்டார் என்றார். போபோகுலோவா தனக்கு மனநல பாதிப்பு இருப்பதை மறைத்து அந்த வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார். © வேதபிரகாஷ் 12-06-2018 [1] ஈநாடு.தமிழ், அல்லாவின் ஆசிவேண்டி 4 வயது மகளை பலி கொடுத்த தந்தை கைது, Published 10-Jun-2018 15:32 IST [2] புதியதலைமுறை, கடவுளை மகிழ்விக்க குழந்தையை கொன்ற தந்தை!, puthiyathalaimurai.com ராம் பிரசாத், Published : 10 Jun, 2018 01:24 pm [3] http://www.puthiyathalaimurai.com/news/india/46666-rajasthan-man-arrested-for-sacrificing-daughter.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner [4] Siasat.com, Jodhpur: Father sacrifice 4-year-old daughter to ‘appease Allah during Ramzan’, arrested, June 10, 2018, 11:21 AM IST. [5] India Today, Man slits 4-year-old daughter’s throat as sacrifice to Allah, Rohit Parihar, Jaipur, June 10, 2018UPDATED: June 10, 2018 03:59 IST [6] https://www.indiatoday.in/crime/story/jodhpur-rajasthan-father-slits-daughter-throat-ramzan-human-sacrifice-1256365-2018-06-10 [7] https://www.siasat.com/news/jodhpur-father-sacrifice-4-year-old-daughter-appease-allah-during-ramzan-arrested-1367122/ [8] NDTV, Rajasthan Man Allegedly Kills Daughter To “Appease Allah”, Goes Off To Sleep, All India | Press Trust of India | Updated: June 10, 2018 10:34 IST. [9] https://www.ndtv.com/india-news/rajasthan-man-arrested-for-sacrificing-daughter-for-ramzan-police-1865056 [10] நியூஸ்.டிஎம், கடவுளுக்காக மகளை பலியிட்டேன்– கொடூர தந்தையின் பகீர் வாக்குமூலம், Ishwarya | Last Modified : 11 Jun, 2018 04:42 pm [11] http://www.newstm.in/news/national/38823-rajasthan-jodhpur-man-killed-4-year-old-daughter.html [12] http://tamil.eenaduindia.com/Crime/CrimeNational/2018/06/10153211/man-arrested-for-sacrificing-daughter-to-appease-allah.vpf [13] தமிழ்.ஒன்.இந்தியா, ரஷ்ய குழந்தையை அல்லாஹ் கொலை செய்ய உத்தரவிட்டார்: ஆயா பேட்டி, Posted By: Siva Published: Thursday, March 3, 2016, 14:47 IST. [14] https://tamil.oneindia.com/news/international/allah-ordered-kill-the-child-says-babysitter-248198.html பிரிவுகள்: அகிம்சை, அமைதி, அறுப்பு, அலி, அலி குரேஷி, அல்லா, அல்லா பெயர், அல்லா பெயர் உபயோகம், அல்லாஹ், குழந்தை பலி, கொலை சடங்கு, ஜோத்பூர், நவாப் அலி, ரத்த சடங்கு, ரம்ஜான், ரம்ஜான் நோன்பு, ரிஸ்வானா, Uncategorized Tags: அலி, அல்லாவுக்கு பலி, கலிமா, கழுத்தறு, கழுத்தறுப்பு, குரான், குழந்தை கொலை, குழந்தை பலி, கொலை, கொலை செய், ஜிஹாதி, ஜிஹாத், ஜோத்பூர், நரபலி, நவாப் அலி, நவாப் அலி குரேஷி, நவால் அலி, பலி, ரம்ஜான் பலி, ரிஸ்வானா Comments: Be the first to comment விமான விபத்திற்கு கருப்பு ஆடு பலிகொடுத்த பாகிஸ்தானிய விமானத்துறையும், ஒரு பைத்தியம் செய்த 20 நிர்வாணக் கொலையும் (2) ஏப்ரல் 3, 2017 விமான விபத்திற்கு கருப்பு ஆடு பலிகொடுத்த பாகிஸ்தானிய விமானத்துறையும், ஒரு பைத்தியம் செய்த 20 நிர்வாணக் கொலையும் (2) ஆண், பெண்களின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி அவர்களை தடிகளால் அடித்து, பேய் விரட்டப்படுகிறது: பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சர்கோதா மாவட்டத்தில் லாஹூர் நலரில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமத்தில் முஹம்மது அலி குஜ்ஜார் தர்கா உள்ளது. அந்த தர்காவின் காப்பாளரான அப்துல் வஹீத் என்பவர் அந்நாட்டு அரசு பணியாளர், தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் வேலைசெய்தார், என்பது தெரியவந்து உள்ளது. மனநிலை பாதிப்புடன் இங்கு வரும் பக்தர்களுக்கு பேய் ஓட்டுவதாகவும், பாவ மன்னிப்பு அளிப்பதாகவும் மிக கொடூரமான முறையில் சிகிச்சை அளிப்பது வழக்கம். ஆண், பெண்களின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி அவர்களை தடிகளால் அடித்து, பேய் விரட்டப்படுகிறது. இதற்காக வருபவர்கள் தங்குவதற்கு தர்கா வளாகத்தில் காப்பகம் ஒன்றும் உள்ளது. இங்கு சிலநாட்கள் தங்கி ‘சிகிச்சை’ பெற்றால் தங்களது பிரச்சனை நீங்கிவிடும் என்பது இங்கு வருபவர்களின் (மூட) நம்பிக்கையாக உள்ளது. தர்காவின் நிர்வாகத்திற்காக போட்டி, சண்டை: இந்நிலையில், இந்த தர்காவின் நிர்வாகத்தை யார் கவனிப்பது? என்பது தொடர்பாக பரம்பரை வாரிசுகளுக்கு இடையில் சமீபகாலமாக போட்டியும் மோதலும் இருந்து வந்துள்ளது[1]. தலைமை பேயோட்டுகிறவன் தான் திறமையான பேயோட்டுகிறவன் என்றால், அவனை வைத்து தான் அந்த தொழில் நடத்தியாக வேண்டும். ஆகவே அவனைக் கொலைசெய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவனையே தீர்த்துக் கட்ட வேண்டும் என்றால், அவனை விட பெரிய எத்தனாக, அவனது மகன் அல்லது வேறொருவன் இருந்திருக்க வேண்டும். இந்த போட்டியின் விளைவாக ஞாயிற்றுக்கிழமை அன்று பின்னிரவு [02-04-2017] நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் மூன்று பெண்கள் உள்பட 20 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்[2]. அந்த தர்காவின் காப்பாளரான அப்துல் வஹீத் என்பவர் சமீபகாலமாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார்[3]. என்று தமிழ் ஊடகங்கள் வர்ணிக்கின்றன. தொலைபேசியில் வரச்சொல்லி, மயக்க மருந்து கொடுத்து கொலை செய்த மனநோயாளி: தர்காவிற்கு வருபவர்கள் ஒவ்வொருவருக்காக இரவு தொலை பேசியில் அழைப்பு விடுத்து உள்ளார். முக்கியமான பணி இருப்பதாக கூறி தன்னுடைய அறைக்கு அளைத்து அவர்களுக்கு மயக்க மருந்தை கொடுத்து உள்ளார்[4]. அதாவது,, ஒரு மனநோயாளி / பைத்தியம் இந்த அளவுக்கு வேலை செய்யுமா என்று தெரியவில்லை. இல்லை, அந்த பைத்தியம் அந்த அலவுக்கு விசயம் தெரிந்து வைத்துள்ளது. அவரது ஆலோசனையின் பேரில் உதவியாளர்கள் சிலர் அங்கு வசித்துவந்த எதிர் தரப்பினருக்கு மயக்க மருந்து கலந்த உணவு வகைகளை கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்டவர்கள் மயங்கி சாய்ந்தபோது அவர்களின் ஆடைகளை களைந்து கத்தி மற்றும் வீச்சரிவாள்களால் வெட்டியும், கனத்த தடிகம்புகளால் தாக்கியும் அப்துல் வஹீதின் ஆதரவாளர்கள் துடிதுடிக்க கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் சிகிச்சைக்காக அந்த தர்காவுக்கு வந்திருந்த மூன்று / நான்கு பெண்கள் உள்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்[5]. இந்த கோரச் சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை கைது செய்யுள்ள போலீசார் மேலும் பலரை தேடி வருகின்றனர்[6]. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படுகொலையை தொடர்ந்து, சம்பவம் நடந்த தர்கா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஷியாக்களுக்கு எதிரான பிரச்சாரமா?: பாகிஸ்தானில், சுன்னிகளைத் தவிர மற்ற முஸ்லிம்கள், முஸ்லிம்களாகக் கருதப் படுவதில்லை. கடந்த 50 ஆண்டுகளில் காதியான் – அஹமதியா முஸ்லிம்கள் வேடையாடப் பட்டு, விரட்டியடிக்கப் பட்டனர். பஹாய் முஸ்லிம்களின் கதியும் அவ்வாறே முடிந்தது. ஷியாக்கள் அதிகமாக இருப்பதால். தலிபான் இயக்கம் வளர்ந்த பிறகு, அவர்களைத் தாக்கி வேட்டையாடி வருகின்றனர். ஐசிஸ் வந்த பிறகு கேட்கவே வேண்டாம், ஜிஹாதி தீவிரவாதம் எல்லைகளக் கடந்தது. தொடர்ந்து ஷியாக்கள் பலவிதங்களில் தாக்கப் பட்டு வருகின்றனர். தர்காக்களை ஒழிக்கிறோம் என்ற போர்வையில், குண்டுவெடிப்புகளுடன் வேலைசெய்து வருகிறார்கள். சுன்னிகள் தவிரவீதர முஸ்லிம்களின் மசூதிகள், மடாலயங்கள், சூபிகானா போன்ற இடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. குண்டுவெடிப்புகளும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. பாகிஸ்தானை விட்டு, ஓடி வந்த பஹாய் முஸ்லிம்கள், தில்லியில், தாமரை கோவிலைக் கட்டிக் கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. கர்நாடகத்தில், அஹமதியா முஸ்லிம்கள் கனிசமாக உள்ளனர். ஆனால், இவர்கள் எல்லோருமே அடங்கிக் கிடக்கின்றனர். எதைப் பற்றியும் எந்த கருத்தையும் சொல்வதில்லை. பிப்ரவரியில் நடந்த குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கானோர் சாவு, காயம் முதலியன: பாகிஸ்தானில் உள்ள தர்கா ஒன்றின் மீது நடைபெற்ற தாக்குதலில் குறைந்தது 80 பேர் பலியானதை தொடர்ந்து நடத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை ஒன்றில் டஜன்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது[7]. சுமார் 18 தீவிரவாதிகள் தெற்கு சிந்து மாகாணத்தில் கொல்லப்பட்டுள்ளனர். அங்குத்தான் அந்த தர்கா அமைந்திருந்தது. மேலும் 13 பேர் வட-மேற்கு பகுதியில் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேவான் நகரில் இருந்த சூஃபி தர்காவில் தற்கொலை குண்டுத்தாரி ஒருவர் வழிப்பட வந்திருந்தோர் மத்தியில் தன்னைத்தானே வெடிக்க வைத்துள்ளார். இஸ்லாமிய அரசு என அழைத்துக்கொள்ளும் அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. ஜிஹாதி குழுக்கள் நடத்திவரும் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களில் இது சமீபத்தியதாகும். தாக்குதலில் பலியானவர்களுக்கு 17-02-2017 அன்று (வெள்ளிக்கிழமை) இறுதிச் சடங்கு நடைபெறுகிறது, என்று பிபிசி வெளியிட்டது[8]. ஆனால், அத்தகைய “குண்டுதாரிகள்” ஏன் ஷியா மசூதிகளில் மட்டும், தங்களை வெடித்துக் கொள்கிறார்கள் என்று சொல்லவில்லை. ஷியாக்களின் பலியை “சகிப்புத் தன்மையோடு” அனுசரித்து வரும் செக்யூலரிஸ சித்தாந்திகள்: ராணுவம் மற்றும் போலீஸ் சுன்னிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதனால், ஷியாக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். ஆகவே, சுன்னிகளும் பேயோட்டுதல், மந்திரம் வைத்தல், பில்லி-சூன்யம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டிருந்தாலும், இதனை சாக்காக வைத்துக் கொண்டு, அவர்களை ஒழிப்பதை நியாயப் படுத்துவது போன்ற, இந்நிகழ்சிகள் தெரிகின்றன. மனித உரிமைகள் எல்லாம் இதில் யாரும் கவலைப்படவில்லை. இங்குள்ள செக்யூலரிஸ்டுகளும் கண்டுகொள்வதில்லை. இங்குள்ள ஷியா முஸ்லிம்கள், ஆச்சரியப் படும் அளவுக்கு ஊமைகளாக இருக்கின்றனர். இங்கு ஒரு பாரூக் நாத்திகன் என்பதனால் கொலை செய்யப்பட்டான் என்றால், அங்கு சுன்னிகள் தவிர மற்ற எல்லோருமே “காபிர்கள்” என்று முத்திரைக்குத்தப்பட்டு தீர்த்துக் கட்டப் படுகிறார்கள். ஆனால், “சகிப்புத் தன்மையோடு” அமைதி காக்கிறார்கள். இப்பொழுதும், பைத்தியம் கொலை செய்தது என்று கதையை முடித்து விடுவார்கள். © வேதபிரகாஷ் 03-04-2017 [1] மாலைமலர், மயக்க மருந்து தந்து 20 பேரை வெட்டிக் கொன்ற மனநோயாளி: பாகிஸ்தான் தர்காவில் கொடூரம், பதிவு: ஏப்ரல் 02, 2017 10:57 [2] http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/02105709/1077548/20-people-killed-by-mentally-ill-custodian-of-dargah.vpf [3] தினத்தந்தி, பாகிஸ்தானில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு தர்கா நிர்வாகியால் 20 பேர் கொடூரக் கொலை, ஏப்ரல் 02, 12:00 PM [4] http://www.dailythanthi.com/News/World/2017/04/02120016/20-killed-by-shrine-custodian-in-Sargodha-police.vpf [5] தினமலர், தர்காவுக்கு சென்ற 20 பேர் நிர்வாணமாக்கி படுகொலை, பதிவு செய்த நாள். ஏப்ரல்.3, 2017, 00.05. [6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1743594 [7] பிபிசி, தர்கா மீது நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி: 31 தீவிரவாதிகள் கொலை, பிப்ரவரி 17, 2017. [8] http://www.bbc.com/tamil/global-39005133 பிரிவுகள்: அடி வைத்திய்ம், அவமதிக்கும் இஸ்லாம், அஹமதியா, அஹம்மதியா, அஹ்மதியா, அஹ்மதியாக்கள், கருப்பு ஆடு, சர்கோதா, சூடு, சூடு வைத்தியம், சூனியம், தர்கா, பலி, பலி ஆடு, பில்லி, பைத்தியம், மாந்திரீகம், வெடிகுண்டு, வைத்தியம், ஷியா, ஷியா-சுன்னி, ஷிர்க், Uncategorized Tags: இஸ்லாம், கருப்பு, கருப்பு ஆடு, கொலை, சர்கோதா, சூனியம், சூபி, சூபி-ஜிஹாத், சூபித்துவம், சூபியா, தர்கா, தர்கா கூத்துகள், நரபலி, நிர்வாண கொலை, பலி, பாகிஸ்தான், பிசாசு, பில்லி, பேயோட்டுதல், பேய், மந்திரம், மாந்திரீக நரபலிகள், முஸ்லீம் மாந்திரீக நரபலிகள், லாகூர், லாஹூர் Comments: Be the first to comment முஸ்லிம் நாத்திகனாக இருக்க முடியாது, நியாயவானான முஸ்லிம் நாத்திக-பகுத்தறிவு-கம்யூனிஸ கடவுள் மறுப்பு கட்சிகளில், இயக்கங்களில் இருக்க முடியாது – இருந்து விமர்சித்தால் கொலை தான் (3)! மார்ச் 19, 2017 முஸ்லிம் நாத்திகனாக இருக்க முடியாது, நியாயவானான முஸ்லிம் நாத்திக–பகுத்தறிவு–கம்யூனிஸ கடவுள் மறுப்பு கட்சிகளில், இயக்கங்களில் இருக்க முடியாது – இருந்து விமர்சித்தால் கொலை தான் (3)! பகுத்தறிவு–முஸ்லிம்கள், பெரியார் நாத்திகம்–இஸ்லாம் போன்ற கூட்டுகள் போலித்தனமானது: பெரியாரை அவரது வாழ்நாள் காலத்திலேயே அடக்கி வைத்து, பிறகு அடிமை போல ஆக்கிக் கொண்டனர் முஸ்லிம்கள். பெரியார் முஸ்லிம்கள் பின்னால் அலைந்து-அலைந்து திரிந்தாரே தவிர, எந்த முஸ்லிமும் அவரைக் கண்டு கொள்ளவில்லை. ஜின்னா கழட்டி விட்டது பற்றி மேலே குறிப்பிடப் பட்டது. அண்ணா-கருணாநிதிகளும் அதே மாதிரி அடிவருடிகளாக முஸ்லிம்களை பாராட்டி பேசி தான் ஆதரவு பெற்றார்கள், பதிலுக்கு எம்.பி, எம்.எல்.ஏ பதவிகளை அள்ளிக் கொடுத்தார்கள். சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸரீன் முதலியோர்களின் நிலையை கவனித்துப் பார்க்கலாம். மதுரை ஆதீனம் முன்னர் கருத்து சொன்னதற்கு முஸ்லிம்கள் அவரை மிரட்டி பின் வாங்க வைத்தனர். இஸ்லாத்தைப் பொறுத்த வரையில், மோமினாக இருப்பவன், காபிருடன் எந்த பேச்சையும், சம்பந்தத்தையும், உறவையும், வைத்துக் கொள்ள முடியாது. ஏனெனில், அது குரானுக்கு எதிரானது. மொஹம்மது நபி “அல்-காபிரும்” என்ற அயத்தில் சொன்னதிற்கும் விரோதமானது. ஆகவே, இக்கூட்டு “ஷிர்க்” தான். தாங்கள் ஆண்டால், காபிர்களை, “திம்மிகளாக” அடிமைகளாக, ஜெஸியா வரி கட்ட வைத்து ஆளாலாமே தவிர, காபிர்கள் கூட சேர்ந்து ஆளமுடியாது, சல்லாபிக்க முடியாது. அதெல்லாமே, இஸ்லாத்திற்கு எதிரானது தான். பேஸ்புக், வாட்ஸ்–அப், டுவிட்டர்– சமூகவளைதளங்களில் முஸ்லிம்கள், கிருத்துவர்கள் கண்டபடி விமர்சிப்பது: சமூகவளைத்தளங்களில் முஸ்லிம், கிருத்துவர்கள் தங்களது உண்மை பெயர், புனைப்பெயர் ஏன் இந்து பெயர்களை வைத்துக் கொண்டு, கேவலமாக, மோசமாக, ஆபாசமாக, அருவருப்பாக, கொச்சையாக…..பலவிதங்களில் இந்துமதம், கடவுள், சித்தாந்தம் முதலியவற்றை தாக்கி வருகின்றனர். பகுத்தறிவு, நுண்ணறிவு, நாத்திகம், செக்யூலரிஸம், கருத்துரிமை, கருத்து சுதந்திரம் என்ற பலபோர்வைகளில் அத்தகைய தாக்குதல்கள் நடந்து வருகின்றன. அவற்றைத் தட்டிக் கேட்பது ஒரு சிலரே. மேலும், அந்த ஒருசிலருக்கும், மற்ற இந்துக்கள் உதவுவது இல்லை. அதாவது, முட்டாள் இந்துக்களுக்கு ஒற்றுமை இல்லை. இதைத்தான், இவர்கள் தமக்கு சாதகமாக எடுத்துக் கொள்கிறார்கள். “இந்துத்துவம்” என்று ஆர்பாட்டம் செய்து கொண்டு, குறுகிய வட்டத்திற்குள் கிடக்கின்றனர். இந்துமதத்திற்கு எதிராக, எத்தனை ஆட்கள், கூட்டங்கள், இயக்கங்கள் எப்படி வேலை செய்து வருகின்றன என்பது கூட அவர்களுக்குத் தெரியாமல் இருக்கிறார்கள். தங்களுக்குள் பாராட்டிக் கொண்டு காலம் கழிப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். பரந்த அளவில் சிந்திப்பது, சமூக விளைவுகளைக் கவனிப்பது, செயல்பாடுகளின் நோக்கத்தை கண்டறிவது, அந்நோக்கம் ஆபத்தாக இருந்தால் தடுப்பது-குறைப்பது-ஒழிப்பது போன்ற முறைகளைப் பற்றியும் சிந்திப்பதில்லை. சட்டமீறல்களுடன் குறங்களை செய்து, சட்டரீதியில் குழப்பங்களை உண்டாக்குவது: இதற்குள் அன்சர்ந்த் பயத்தினால் சரண் அடைந்துள்ளார் என்றும், இக்கொலைக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவரது வழக்கறிஞர் அறிவிப்பது நோக்கத் தக்கது. யாரோ, அவரது சிம்மை உபயோகித்து, பேசியதால் தான், அவர் மீது சந்தேகம் கொண்டது போலீஸ், அதனால் தேடி வந்தது அறிந்து தான் சரணடைந்தார் என்கிறார் அவர். அப்படியென்றால், அவர் தன்னுடைய சிம்மை அந்த அளவுக்கு ஜாக்கிரதையாக வைத்திருக்கிறார் என்று தெரிகிறது[1]. போலீஸார் விசாரிக்கும் போது உண்மை தெரிய வரும். தேசிய முஸ்லிம் லீக் சார்பில்[2], “இதை மதரீதியில் சமூக வளைதளங்களில் விமர்சிப்பதை நாங்கள் கண்டிக்கிறோம். வியாபாரரீதியில் கூட விரோதம் இருந்திருக்கலாம்”, என்று வெளியிட்டுள்ளதும் கவனிக்கத் தக்கது. விசயத்தை திசைத் திருப்ப அல்லது விளம்பரம் அடையாமல் இவ்வாறு செய்கிறார்கள் போன்றுள்ளது. ஆங்கில ஊடகங்கள் நிலைமையை ஓரளவிற்கு எடுத்துக் காட்டியுள்ளது: “இந்தியா டுடே” இதனை அப்பட்டமாக எடுத்துக் காட்டியுள்ளது வியப்பாகவே உள்ளது[3]. “நாத்திகன் கொலை செய்யப்பட்டான்” என்று தலைப்பிட்டு, என்ன நடந்தது என்று வரிசையாக தெரிவித்துள்ளது[4]. HERE’S WHAT YOU NEED TO KNOW Farooq was murdered after he had left his Bilal Estate house in South Ukkadam at around 11 pm after receiving a phone call. He was on his scooter and was nearing Ukkadam Bypass Road when four people on motorcycles intercepted him. He tried to flee but couldn’t escape. Hearing the commotion, residents of the area rushed out of their homes after which the assailants fled. Locals found Farooq’s body lying on the road. His body bore multiple stabs and cuts inflicted by the assailants. Coimbatore Deputy Commissioner of Police S Sravanan reached the spot with police and began investigations. According to DCP Saravanan, Farooq was the admin of a WhatsApp group of people with rationalistic views who regularly debunk religion and religious claims. That vocal opposition to religion might be a possible motive for murder, DCP was quoted as saying. Atheist Farooq had posted rationalistic messages on his Facebook page which attracted criticism by members of the Muslim community, who called him an apostate. Police collected grabs from CCTV cameras installed at various commercial outlets on the stretch to identify Farooq’s killers. The last call on his mobile was traced to a SIM that was obtained on fake Vellore address. A large number of DVK cadre gathered at the hospital and demanded a high-level inquiry. Ansath’s surrender has been linked to the pressure put on the police by DVK. A police official told a newspaper that the religious offence could be just one motive. “We are looking into multiple angles and it is yet to be known if he was executed by communal groups, business rivalry or for personal reasons. One of his controversial religious posts shared in FB attracted criticisms.” இதைவிட, சுருக்கமாக ஆனால் அதே நேர்த்தில் முழுமையாக மற்றவர்கள் வெளியிடவில்லை என்றே தெரிகிறது. கோவையில் தி.வி.க பிரமுகர் படுகொலை: சிபிஎம் கண்டனம் (19-03-2017)[5]: கோயம்புத்தூர், மார்ச் 18, 2017- திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாவட்ட நிர்வாகியான பாரூக், மத அடிப்படைவாதிகளால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் வி. இராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “கோவை உக்கடம், பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் பாரூக். திராவிடர் விடுதலைக் கழகம் அமைப்பில் செயல்பட்டு வந்த பாரூக், பகுத்தறிவு கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதன் காரணமாக மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார் என்பது சிறுபான்மை மதவெறியின் கோரமுகத்தை காட்டுகிறது. சமீபகாலமாக பகுத்தறிவுக் கருத்துகளை முழங்கிய நரேந்திர தபோல்கர், கல்புர்க்கி, கோவிந்த பன்சாரே போன்றோரை படுகொலை செய்த பெரும்பான்மை மதவெறிசக்திகளின் செயலையும், கோவை பாரூக் படுகொலையில் ஈடுபட்டுள்ள சிறுபான்மை மதவெறி சக்திகளின் செயலையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது, இது, கருத்தை கருத்தால் விவாதிக்க முடியதாவர்களின் – ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களின் – மதவெறியர்களின் கோழைத்தனமான செயலாகும்.இந்திய நாட்டில் தன் கருத்துக்களை பேசுவதற்கும், எழுதுவதற்கும், பிரச்சாரம் செய்வதற்கும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையின் மீதான தாக்குதலாக இச்சம்பவத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. பாரூக் படு கொலையை அனைத்துத் தரப்பு ஜனநாயக சக்திகளும், மதநல்லிணக்கத்தை விரும்பு கிறவர்களும், சமூக நல்லிணக்கத்தில் அக்கறை உள்ளவர்களும் கண்டிக்க முன்வரவேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மேலும் கோவை மாநகர காவல்துறை மெத்தனம் காட்டாமல் விரைந்து செயல்பட்டு, இந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நட வடிக்கை எடுக்கவும், இச்சம்பவத்திற்கு பின்னணியில் உள்ள சக்திகளை கண்ட றிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு அவர் கூறியுள்ளார். © வேதபிரகாஷ் 19-03-2017 [1] செல்போன், உதிரிகள் முதலிய வியாபாரங்களிலும் முஸ்லிம்கள் ஈடுபட்டிருப்பதால், இவற்றை மாற்ற, குளறுபடி செய்ய அவர்களால் முடியும் என்று தெரிகிறது. [2] https://www.youtube.com/watch?v=9wUyZ35k2X4 [3] IndiaToday.in , Coimbatore: Vocal atheist hacked to death, realtor surrenders, Posted by Sonalee Borgohain; New Delhi, March 18, 2017 | UPDATED 12:17 IST [4] http://indiatoday.intoday.in/story/coimbatore-vocal-atheist-hacked-to-death-realtor-surrenders/1/906973.html [5] தீக்கதிர், கோவை பதிப்பு, பக்கம். 6, 19-03-2017; http://epaper.theekkathir.org/ பிரிவுகள்: அருவம், அல்-உம்மா, அல்லா, அழிப்பு, அழிவு, ஆத்திகம், இஸ்லாம், உக்கடம், எச்சரிக்கை, எதிர்ப்பு, கடவுள், கடை, கம்யூனிசம், கருத்து, கருத்துச் சுதந்திரம், கருத்துரிமை, கழுத்தறுப்பு, காஃபிர், காஃபிர்கள், கொலை, கொலை செய்வது, கொலை மிரட்டல், கொலை வழக்கு, கொலை வெறி, கொலைகாரர்கள், கொலைவெறி, கொளத்தூர் மணி, சகிப்பு, சகிப்புத் தனம், சகிப்புத் தன்மை, சகிப்புத்தனம், சகிப்புத்தன்மை, சிம், சிம் கார்ட், செக்யூலரிஸ ஜீவி, செல்போன், நாத்திகம், பாரூக் Tags: அடிப்படைவாத சித்தாந்தம், அடிப்படைவாதம், அடிப்படைவாதிகள், ஆத்திகம், இரும்பு, இரும்பு கழிவு, இரும்பு ஸ்கிராப், காபிர், கொலை, கொளத்தூர் மணி, கோயம்புத்தூர், கோவை, திக, திராவிடர், திராவிடர் கழகம், நாத்திகம், பாரூக், பெதிக, பெரியார், மதவெறி, மோமின், மோமொன் Comments: Be the first to comment மறுபடியும் பாகிஸ்தானில் இன்னொரு ஷியா வழிபாட்டு ஸ்தலத்தின் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் – 52 பேர் சாவு, 150 படுகாயம், ஐசிஸ் பொறுப்பேற்றுள்ளது! நவம்பர் 13, 2016 மறுபடியும் பாகிஸ்தானில் இன்னொரு ஷியா வழிபாட்டு ஸ்தலத்தின் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் – 52 பேர் சாவு, 150 படுகாயம், ஐசிஸ் பொறுப்பேற்றுள்ளது! பல்லாண்டுகளாக ஷியாக்களின் மீது சுன்னிகள் நடத்தி வரும் தாக்குதல்கள்: பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்களின் மீதான தாக்குதல் பல்லாண்டுகளாக நடந்து வருகின்றன. ஷியாக்களின் மக்கட்தொகை 10-25% சதவீதங்களில் உள்ளது என்று பாகிஸ்தான் கூறுக் கொள்கிறது. 2015 மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி சுமார் 40 மில்லியன் / நான்கு கோடி ஷியாக்கள் உள்ளதாக சொல்லிக் கொள்கிறது. ஆனால், அவர்கள் இரண்டாந்தர குடிமக்களைப் போலத்தான் நடத்தப் படுகிறார்கள். சுன்னி முஸ்லிம்கள் அவர்களை காபிர்கள் என்றே பிரகடனப் படுத்தி ஜிஹாத் என்ற “புனித போரை” அவர்கள் மீது தொடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும். ஷியாக்களின் புனித வழிபாட்டு தினங்களில் அவர்களின் வழிபாட்டு ஸ்தலங்களில் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். முதியவர், பெண்கள், குழந்தைகள் என்று கூடியிருந்தாலும், இரக்கமில்லாமல், குண்டுவெடிப்புகள் மூலம் கொன்று வருகின்றனர். உலகம் முழுவதிலும் ஷியாக்களின் தாக்குதல் அதிகமாகி வருகின்றது: தலிபான்கள், முஜாஹித்தீன்கள், ஐசிஸ் தீவிரவாதிகள் என்று பல குழுக்கள் வளர்ந்து விட்ட நிலையில், அவர்கள் எல்லோருமே சுன்னிகளாக இருக்கும் பட்சத்தில், ஷியாக்களின் மீதான தாக்குதல்கள் மிகவும் கோரமாக, குரூரமாக, மிருகத்தன்மையுடன் நடத்தப் பட்டு வருகின்றன. இஸ்லாத்தில் இந்த சுன்னி-ஷியா பிளவு சண்டைகள் மொஹம்மது காலத்திலேயே ஆரம்பித்து, தொடர்ந்து நடந்து வருகிறது. முந்தைய இரான்–இராக் சண்டையும் அதனால் தான் நடந்தது. இரானுக்கும், சவுதி அரேபியாவுக்கும் மெக்கா-மெதினா நிர்வகிப்பு விவகாரங்களிலும், இப்பிரச்சினை தலைத் தூக்குவதுண்டு. அதனால், சவுதி அரேபியா இரானைக் கட்டுப் படுத்தி வைக்க எல்லா முறைகளையும் கையாண்டு வருகின்றது. சனிக்கிழமை 12-11-2016 அன்று மாலை நடத்தப் பட்ட குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை என்றாலே மசுதிகளில் அல்லது மற்ற இலக்குகளின் மீது குண்டுவெடிக்கும் தாக்குதல் நடக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. பலோசிஸ்தான் குஜ்தார் மாகாணத்தில் லாஸ்பெல்லாவில் பிரபல தர்கா ஷா நூரனி சூபி வழிபாட்டுத் தலம் உள்ளது[1]. கராச்சியிலிருந்து 150 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு ஷியாக்கள் அதிகமாக வாழ்கின்றனர் என்பது தெரிந்த விசயமே. பிரதி வெள்ளிக்கிழமை தமால் என்ற சூபி சடங்கை பார்ப்பதற்கு இங்கு ஷியாக்கள் அதிகக் கணக்கில் கூடுவதுண்டு[2]. தமால் என்பது சூபி-நடனமாகும். சூபி பக்தர்கள் சுழன்று கொண்டே ஆடிப் பாடுவர். ஏ. ஆர். ரஹ்மான் சூபி மெட்டுகள் பலவற்றை சினிமா பாடல்களில் உபயோகப்படுத்தியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், ஷியாக்கள் தாக்குவதை அவர் கண்டிப்பதாகத் தெரியவில்லை. இங்கு சனிக்கிழமை 12-11-2016 அன்று மாலை சுமார் 500 பேர் தரிசனம் செய்வதற்காக திரண்டிருந்தனர்[3]. அப்போது கோவில் வளாகத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது[4]. இதில், ஏராளமான பக்தர்கள் தூக்கி வீசப்பட்டனர். இரவின் இருள், மருத்துவமனை அருகில் இல்லாதது இறப்புகள் அதிகமாக காரணமாகின்றன: சம்பவ இடத்திற்கு போலீசாரும், மீட்புக்குழுவினரும் ஆம்புலன்சுகளுடன் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர். பலர் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் உயிருக்குப் போராடினர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்[5]. அருகில் மருத்துவமனைகள் இல்லாத காரணத்தால் காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஷியாக்கள் மாகாணம் என்பதால், பாகிஸ்தான் அரசு பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறதா என்ற சந்தேகமும் எழுகின்றது. இருள் சூழ்ந்த காரணத்தால் மீட்புப் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது[6]. இந்த குண்டு வெடிப்பிற்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது[7]. ஐ.எஸ் உலகம் முழுவது உள்ள ஷியாக்களை ஒழிப்பதற்கு தயாராக உள்ளது[8]. சிரியாவில் ஷியாக்களைக் கொன்று குவித்து வருகின்றது[9]. 52 பேர் சாவு, 150ற்கும் மேற்பட்டவர் படுகாயம்: 12-11-2016 சனிக்கிழமை அன்று 14 வயது சிறுவன், மசூதியில் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் குழந்தைகள் உட்பட சுமார் 43 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. நூறுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். நேரமாக-நேரமாக இந்த எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது. தாக்குதல் நடந்தபோது சுமார் 600 பக்தர்கள் அங்கே இருந்தார்களாம். பாகிஸ்தான் பலுசிஸ்தான் பகுதியில் குண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது[10]. வழக்கம் போல பாக்., அதிபர் நவாஸ் ஷெரிஃப், இம்ரான் கான் போன்றோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்[11]. ஆனால், இதனால், ஷியாக்கள் மீதான தாக்குதல்கள் குறையப் போவதில்லை. இந்தியாவின் மீது, தமிழகத்தின் மீதான தாக்கம், விளைவு: இந்தியாவில் ஷியாக்கள், சுன்னிகளால் அடக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்றே தெரிகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில், “ஷிர்க்” என்ற போர்வையில், சுன்னிகள், ஷியாக்களை மிரட்டி வைத்துள்ளனர் எனலாம். ஷியாக்கள் என்று தங்களை அடையாளப் படுத்திக் கொண்டு, யாரும் தங்களது உரிமைகளைக் கேட்பதில்லை. ஆஜ்மீர், நாகூர் போன்ற தர்காக்களில் மொட்டைப் போட்டுக் கொண்டு சென்றலும், அவர்களும், இத்தீவிரவாத-ஜிஹாதி வகையறாக்களைக் கண்டிப்பதில்லை. ஏ. ஆர். ரஹ்மான் போன்றோரும், சுப்பித்துவம், சூபி இசை என்றெல்லாம் பேசி, தனது வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டாலும், ஷியாக்கள் தாக்கப்படும் போது, கொல்லப்படும் போது, கண்டு கொள்வதில்லை. கிலாபத் இயக்கத்தை [1919-1922] ஆதரித்ததின் மூலம் காந்தி இந்திய முஸ்லிம்களைப் பிரித்தார். இன்றும் கிலாபத்தை மறுபடியும் நிறுவியதாக கூறிக்கொள்ளும் ஐசிஸ் ஷியாக்களை வேட்டையாடி வருகின்றது. கிலாபத்தை காந்தியும், ஐசிஸும் ஆதரித்தது-ஆதரிப்பது வினோதமே, ஆனால், உண்மை. © வேதபிரகாஷ் 13-11-2016 [1] தினத்தந்தி, பாகிஸ்தானில் பயங்கரம்:பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடிப்பு 30 பேர் பலி, பதிவு செய்த நாள்: சனி, நவம்பர் 12,2016, 7:57 PM IST; மாற்றம் செய்த நாள்: சனி, நவம்பர் 12,2016, 7:57 PM IST. [2] The Dawn, Tragic scenes at Shah Noorani shrine after bombing, 13th November 2016 | DAWN.COM http://www.dawn.com/news/1295998/tragic-scenes-at-shah-noorani-shrine-after-bombing [3] http://www.dailythanthi.com/News/World/2016/11/12195714/Several-feared-dead-in-a-blast-near-Shah-Nooranis.vpf [4] மாலைமலர், பாகிஸ்தான் வழிபாட்டு தலத்தில் குண்டுவெடிப்பு: 30 பேர் பலி, பதிவு: நவம்பர் 12, 2016 19:58. [5] http://www.maalaimalar.com/News/World/2016/11/12195838/1050492/At-least-30-killed-in-huge-blast-in-Lasbellas-Shah.vpf [6] தினமலர், பலுசிஸ்தானில் குண்டுவெடிப்பு: 43 பேர் பலி; பலர் படுகாயம், பதிவு செய்த நாள்: நவம்பர்.12, 2016. 20.00; மாற்றம் செய்த நாள். நவம்பர்.12, 2016.00.34. [7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1647324 [8] Express (UK), ISIS bomb at Muslim shrine kills at least 25 people in huge explosion in Pakistan, By KATIE MANSFIELD, 14:17, Sat, Nov 12, 2016 | UPDATED: 20:12, Sat, Nov 12, 2016 [9] http://www.express.co.uk/news/world/731590/explosion-pakistan-shah-noorani-shrine-death-toll-injured [10] விகடன், பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு – 43 பேர் பலி, Posted Date : 23:16 (12/11/2016); Last updated : 23:15 (12/11/2016). [11] http://www.vikatan.com/news/world/72258-huge-bomb-blast-in-dargah-shah-noorani-shrine-at-pakistan—43-feared-dead.art பிரிவுகள்: அடையாளம், அமைதி, அலி சகோதரர்கள், அழிப்பு, அழிவு, அஹ்மதியா, அஹ்மதியாக்கள், ஆதரவு, ஆதாரம், இஸ்லாமிய நாடு, இஸ்லாமிய பிரச்சினை, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாம், ஈரான், ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசில், ஐசிஸ், ஐஸில், கராச்சி, காதியான், குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டுவெடிப்பு, குவைத், ஷியா, ஷியா சட்டம், ஷியா-சுன்னி, ஷிர்க், Uncategorized Tags: இராக், இரான், இஸ்லாம், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐசில், ஐசிஸ், கிலாபத், கிலாபத் இயக்கம், குண்டு வெடிப்பு, கொலை, சுன்னி, சூபி, சூபி நடனம், சூபி-ஜிஹாத், சூபித்துவம், பலூச்சிஸ்தான், பாகிஸ்தான், ஷியா Comments: Be the first to comment 8–சிமி குற்றவாளிகள் கொலை – ஸ்டீல் டம்பளர், தட்டு கத்திகளாக மாறியது எப்படி? என்கவுன்டர் வீடியோக்களை எடுத்தது யார் – எப்படி? நவம்பர் 1, 2016 8–சிமி குற்றவாளிகள் கொலை – ஸ்டீல் டம்பளர், தட்டு கத்திகளாக மாறியது எப்படி? என்கவுன்டர் வீடியோக்களை எடுத்தது யார் – எப்படி? ஊடகக்காரர்களின் பொறுப்பு முதலியனவெல்லாம் கூட தீவிரவாதிகளின் உரிமைகளைத் தான் ஆதரிக்கின்றன: இது தொடர்பாக மத்திய பிரதேச மாநில போலீஸ் ஐ.ஜி. யோகேஷ் சவுத்ரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சுட்டுக்கொல்லப்பட்ட 8 பயங்கராவதிகளிடமிருந்து துப்பாக்கிகள், மூன்று கூர்மையான கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்றார்[1]. பயங்கரவாதிகள் எந்தஒரு ஆயுதமும் வைத்திருக்கவில்லை என்று வெளியான தகவல்கள் வெளியாகியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஜெயில் காவலர் கொல்லப்பட்டது கூட அவருக்குத் தெரியவில்லை / கவலையில்லை, ஆனால், இதுபோல கேள்வி கேட்க தயாராக உள்ளார். யோகேஷ் சவுதாரி, “இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது,” என்றார். இதற்கிடையே என்கவுண்டர் நடத்தப்பட்ட வீடியோ என ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அப்படியென்றால், இவற்றையெல்லாம் யாரோ கவனித்துக் கொண்டிருக்கின்றனர் என்றாகிறது. அந்த அளவுக்கு யார் கவனிப்பது, வீடியோ எடுத்தது, தங்களது அடையாளங்களை மறைப்பது – இவற்றைச் செய்வது யார்? என்கவுன்டர் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் – ஐ.ஜி. யோகேஷ் சவுத்ரி: என்கவுட்னர் வீடியோக்கள் குறித்தளவை உண்மையா-இல்லையா என்பது பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்[2]. இந்த என்கவுன்டரில் 3 போலீசார் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக அவர்களை உயிருடன் பிடிக்க முயன்ற போலீசாரை பயங்கரவாதிகள் தான் துப்பாக்கியால் சுட்டனர். இதில் நடந்த என்கவுன்டரில் 8 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இல்லை அவர்களே தங்களை சுட்டுக் கொண்டனர் என்று கூட ஊடகக்காரர்கள் வாதிப்பார்கள் போலும். இது திட்டமிட்டு நடத்தப்படவில்லை. அந்த இடத்தில் நடந்த சூழ்நிலையை பொறுத்து எடுக்கப்பட்ட முடிவு. இருப்பினும் என்கவுன்டர் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும். என்றார். இந்த சிமி பயங்கரவாதிகள் தொடர்ச்சியான குற்றங்களில் ஈடுபட்டு உள்ளனர், அவர்கள் 2008, 2011-ல் போலீஸ் கான்ஸ்டபிளை கொலை செய்து உள்ளனர்[3]. பயங்கரவாதிகள் எப்படி சிறையில் இருந்து தப்பினர்கள், தப்பிய பின்னர் அவர்கள் எங்கு சென்றனர் என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் குறிப்பிட்டு உள்ளார்[4]. என்கவுன்டர் வீடியோ வெளிவ்ந்தது எப்படி? யார் எடுத்தது?: என்கவுன்டர் வீடியோ பற்றி தான் இப்பொழுது ஊடக ஆராய்ச்சி அதிகமாகியுள்ளது[5]. திங்கட்கிழமை காலை 10.30 – 11.30 இடையில் இந்த சிமி-தீவிரவாதிகள் மற்றும் போலீஸார் மோதல் நடந்துள்ளது[6]. போலீஸார் எடுத்துள்ள வீடியோ தவிர மற்றவர்களும் வீடியோ எடுத்துள்ளதாக தெரிகிறது. Ø அப்படியென்றால், யார் எடுத்தது? Ø தீவிரவாதிகள் அங்குதான் இருக்கின்றனர் அல்லது போலீஸார் அங்கு வருவார்கள், இவ்வாறேல்லாம் நடக்கும், அப்பொழுது வீடியோ எடுக்க வேண்டும் என்று அவர்களுக்கு எப்படி தெரியும்? Ø அப்படியென்றால், “என்கவுன்டர்” பெயரில், இவர்களை சிறையிலிருந்து வெளியேற்றி, போலீஸாரை வைத்தே தீர்த்துக் கட்ட திட்டம் போட்ரது யார்? Ø அது யார் சார்பாக எடுக்கப்பட்டது? Ø போலீஸாருக்குத் தெரிந்து அல்லது தெரியாமல் எடுக்கப்பட்டதா? Ø அது ஊடகங்களுக்கு எப்படி கிடைத்தது? ஊடகங்கள் எப்படி அவற்றை ஒலி-ஒளிபரப்பி விவதாங்களை உடனடியாக ஆரம்பி வைக்கலாம். உடனே தீவிரவாதிகளின் வழக்கறிஞர் அப்பிரச்சினையை எடுத்துக் கொண்டு அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கலாம்? ஸ்டில் டம்பளர், தட்டு கத்தியாக மாறியது, தலைமை கான்ஸ்டெபிள் கொல்லப்பட்டது எப்படி?: சிறையில் சிமி கைதிகளுக்குக் கொடுக்கப் பட்ட ஸ்டீல் டம்பளர், தட்டு முதலியன கூர்மையாக கத்திகளாக மாறியது எப்படி என்பதை யாரும் விள்ளக்குவதாக இல்லை. சிமிக்காரர்கள் அத்தகைய தொழிற்நுட்பங்களை சிறையிலேயே ஏற்படுத்டிக் கொண்டார்களா அல்லது வெள்ளியியிலிருந்து, அத்தகைய தொழிற்நுட்பங்கள் வரவழைக்கப்பட்டனவா என்றும் விவாதிக்கப்படவில்லை. சிறையிலேயே அவற்றை வளைத்து, வெட்டி, ராவி கூராக மாற்றியுள்ளனர் என்றால், எப்படி சாத்தியமாகும். பிறகு, சிறையிலேயே அவர்களுக்கு உதவ யாரோ இருக்கின்றனர் என்றாகிறது? அவர்கள் யார்? ராம்சங்கர் யாதவ் என்ற தலைமை கான்ஸ்டெபிள் தனது மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்திருந்தார்[7]. டிசம்பர் 9, 2016 அன்று திருமணம் நடக்கும் என்றும் மிகவும் சந்தோசமாக இருந்தார், ஆனால், கொலைகாரர்கள் அவரைக் கொண்டு விட்டார்கள்[8]. இவரது உரிமைகள் பற்றி யார் பேசுவார்கள், விவாதம் நடத்துவார்கள்? பொறுப்புள்ள முஸ்லிம்கள் கேள்விகளைத் தவிர்ப்பது: குண்டுவெடிப்புகள் நடந்திருப்பது, கொள்ளைகள் நடந்தது, ஜெயிலிருந்து ஆயுதங்களுடன் தப்பியோடியது, போலீஸார் கொல்லப்பட்டது, சாதாரண அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது இவையெல்லாம் பொய்யா? இவர்களது உரிமைகளைப் பற்றி யாரும் பேசமாட்டார்களா? உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரது உரிமைகள் என்னாவது? ஐசிஸில் சேரத்துடிக்கும் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளார்களே? அதேபோலத் தானே, இந்திய முஜாஹித்தீன் வேலை செய்து கொண்டு வருகிறது. பிறகு ஏன், எப்படி இந்திய முஸ்லிம்கள் அதனை ஆதரித்து வருகிறார்கள்? உள்ளூர் தீவிரவாதம் அதிகமாகி, பெருகிவருவது அவர்களுக்கு மகிழ்ச்சியாகவா இருக்கிறது? இன்னும் எத்தனை ஆண்டுகள் இத்தகைய குண்டுவெடுப்புகளை ஆதரித்துக் கொண்டிருப்பர்? தொடர்ந்து நடந்து வரும் இத்தகைய காரியங்களை ஏன் அவர்களது பெற்றோர்ருறவினர், மற்றோர் தடுப்பதில்லை? இவற்றையெல்லாம் விடுத்து, “சர்வதேச பயங்கரவாத அமைப்புகளால் கவரப்படாமல், இந்திய இளைஞர்கள் தங்களை தற்காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், பயங்கரவாத அமைப்புகளில் சேரும் அளவுக்கு முஸ்லிம் இளைஞர்களுக்கு அரசின் பாதுகாப்புப் படைகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. ” என்று வாதிடுவது, அத்தகையவரை ஊக்குவிப்பதாகத்தான் அமையுமே தவிர, அமைதியை உண்டாக்காது. © வேதபிரகாஷ் 01-11-2016 [1] தினமலர், என்கவுன்டர் குறித்து முழுமையான விசாரணை: ம.பி. ஐ.ஜி.பேட்டி, பதிவு செய்த நாள்: திங்கள், அக்டோபர் 31,2016, 19:43 PM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 20:36 PM IST. [2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1638739 [3] தினத்தந்தி, சிமி பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது போலி என்கவுண்டர் என்ற விமர்சனத்தை நிராகரித்தது போலீஸ் , பதிவு செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 9:05 PM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 9:05 PM IST. [4] http://www.dailythanthi.com/News/India/2016/10/31210512/Police-rejects-criticism-of-fake-encounter-of-SIMI.vpf [5] Indian Express, SIMI activists’ jailbreak: Video shows cop shooting at inmate on ground; in another, a talk of talks, Written by Milind Ghatwai | Bhopal | Updated: November 1, 2016 5:49 am [6] http://indianexpress.com/article/india/india-news-india/bhopal-simi-activist-dead-video-jailbreak-undertrials-3731611/ [7] DNA, Bhopal jailbreak: Constable killed by SIMI activists was preparing for daughter’s wedding, Mon, 31 Oct 2016-09:45pm , PTI [8] http://www.dnaindia.com/india/report-bhopal-jailbreak-constable-killed-by-simi-activists-was-preparing-for-daughter-s-wedding-2269076 பிரிவுகள்: என்கவுன்டர், குண்டு, குண்டு தயாரிப்பு, குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, கொடூரம், கொலை, கொலை செய்வது, கொலை வெறி, சாட்சி, சாவு, சிமி, போபால், வீடியோ, Uncategorized Tags: இஸ்லாம், என்கவுன்டர், கொலை, கொலை வழக்கு, கொலை வெறியாட்டம், கொலைகாரர்கள், கொலைவெறி, சிமி, சென்ட்ரல், சென்னை, தடை செய்யப்பட்டுள்ள சிமி, போபால், மதம் Comments: Be the first to comment காதலிக்க மறுத்த இளம்பெண்களை கொலை செய்தால், நோக்கம் காதல் இல்லை – “ஜில்டெட் லவ்” என்று கேவலப்படுத்த வேண்டாம், ஜிஹாதி கொலையை செக்யூலரிஸமாக்க வேண்டாம்! செப்ரெம்பர் 15, 2016 காதலிக்க மறுத்த இளம்பெண்களை கொலை செய்தால், நோக்கம் காதல் இல்லை – “ஜில்டெட் லவ்” என்று கேவலப்படுத்த வேண்டாம், ஜிஹாதி கொலையை செக்யூலரிஸமாக்க வேண்டாம்! ஜில்டெட் ஆளா, கொலைகரனா? ஆங்கில ஊடகங்களின் உணர்ச்சியற்றத் தன்மை: காதல் எப்படி என்று ஆங்கில ஊடகங்கள் கிண்டலாக விமர்சித்திருப்பது திகைப்பாக இருக்கிறது. இது தமிழகத்தில் நடந்துள்ள நான்காவது “ஜில்டெட்”[1], அதாவது காதலில் விடப்பட்ட கொலையாகும், “This is the fourth such brutal killing by jilted lovers in Tamil Nadu in the last four months” – என்று மலையாள மனோரமா குறிப்பிட்டுள்ளது[2]. இதையே மற்ற ஆங்கில ஊடகங்களும் பின்பற்றியுள்ளன[3]. “இந்தியா டுடே” போன்ற பத்திரிக்கைக் கூட அவ்வாறு வெளியிட்டுருப்பது[4], லவ்-ஜிஹாதை மறைக்கும் போக்காகவே தெர்கிறது. இது காதலே இல்லை, பிறகு எங்கு காதலி திடீரென்று, காதலை உதறப் போகிறாள்? ஒருதலைகாதல் என்பது முதலில் காதல் என்று வர்ணிப்பதே கொடூரமாகும். அதனை காதலி விட்டுவிட்டாள், உதறிவிட்டாள் [to reject or cast aside (a lover or sweetheart), especially abruptly or unfeelingly] என்றெல்லாம் குறிப்பிடுவது கேவலமாகும்[5]. நாஜுக்காக அப்படி சொன்னாலும், இது வவ்-ஜிஹாதில் உருவாக்கப்பட்ட ஜிஹாதி கொலைதான். ஒருதலை காதல் எல்லாம் “ஜில்டெட்” ஆகிவிடாது[6], ஏனெனில், இது திட்டமிட்டு செய்த கொலை. உண்மையில் “ஜிஹாதி கொலை” ஆகும். கொலை செய்யப்பட்டிருப்பதைக் கூட கண்டிக்காமல், உணர்ச்சியற்றத் தன்மையில், இவ்வாறு செய்தியை வெளியிட்டிருப்பதை என்னவென்று சொல்வது என்றே தெரியவில்லை. லவ்-ஜிஹாத் கொலைகளை செக்யூலரிஸமாக்கக் கூடாது: குரூர காதல் கொலைகளில் கூட செக்யூலரிஸத்தை ஊடகங்கள் நுழைக்க முயற்சிக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. கிருத்துவப் பெண்கள் “லவ்-ஜிஹாதில்” சிக்கிக் கொண்டபோது, மலையாள மனோரமா வக்காலத்து வாங்கியது. ஆனால், இப்பொழுது, ஒரு இந்து இளம்பெண் கொலைசெய்யப் பட்டிருந்தாலும் “ஜில்டெட்” என்று நக்கல் அடிக்கிறது. காதலிக்க மறுத்ததற்காக பெண்களை கயவர்கள் கொலை செய்கிறார்கள் என்றால், அவர்களின் நோக்கம் காதல் இல்லை என்று மெத்தப் படித்த இந்த ஊடகக் காரர்களுக்குத் தெரியாதா என்ன? பிறகு ஏன் இத்தகைய போக்கை கடைப் பிடுஇக்கின்றன. ஜிஹாதி கொலைகளை செக்யூலரிஸமாக்க முயல்வது, கொலைக்காரர்களுக்கு ஒத்துழைப்பது மற்றும் கொலை செய்வதற்கு சமானம் என்றே சொல்லலாம். பாமக ராம்தாஸின் அறிக்கை பொறுப்புள்ளதாக இருக்கிறது: மனித நேயத்திற்கு எதிரான இந்த மிருகச் செயல் கண்டிக்கத்தக்கது. தன்யாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருதலைக் காதல் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது[7]: “கோவை மாவட்டம் அன்னூர் தென்னம்பாளையத்தைச் சேர்ந்த தன்யா என்ற இளம் பெண் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு பக்கத்து வீட்டில் வாழ்ந்து வந்த ஜாகீர் என்ற இளைஞர் காதல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்து வந்த நிலையில், ஜாகீரை தன்யாவின் பெற்றோர் பலமுறை கண்டித்துள்ளனர். அத்துடன் தன்யாவுக்கு திருமண ஏற்பாடுகளையும் செய்தனர். கடந்த 10 நாட்களுக்கு தன்யாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் விரைவில் திருமணம் நடைபெறவிருந்தது. இந்த நிலையில் நேற்று தன்யா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ஜாகீர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தன்யாவை சரமாரியாக கத்தியால் படுகொலை செய்திருக்கிறான். ஒருதலைக் காதல் தறுதலைகளின் வெறிச் செயல்களால் ஏற்படும் பாதிப்புகளை உணர வேண்டும்: தன்யாவுக்கு நடந்த கொடுமையை என்ன தான் வார்த்தைகளில் வர்ணித்தாலும் அதன் முழுமையான தீவிரத்தை உணர வைக்க முடியாது. பெற்றெடுத்து ஆசை ஆசையாய் வளர்த்து, படிக்க வைத்து, பணிக்கு அனுப்பி, திருமணம் நிச்சயித்து மகளின் எதிர்காலம் குறித்த கனவுகளுடன் திருமண ஏற்பாடுகளில் ஈடுபட்டு வந்த தன்யாவின் பெற்றோருக்கு இந்த கொலை எத்தகைய அதிர்ச்சியையும், வலியையும் தந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பார்ப்பதன் மூலம் தான், ஒருதலைக் காதல் தறுதலைகளின் வெறிச் செயல்களால் ஏற்படும் பாதிப்புகளின் முழுமையான பரிமாணத்தை நாம் உணர்ந்து கொள்ள முடியும். காதலிக்க மறுத்ததற்காக பெண்களை கயவர்கள் கொலை செய்கிறார்கள் என்றால், அவர்களின் நோக்கம் காதல் இல்லை: தமிழ்நாட்டில் கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும் சென்னை சூளைமேடு பொறியாளர் சுவாதி, விழுப்புரம் வ. பாளையம் மாணவி நவீனா, கரூர் பொறியியல் கல்லூரி மாணவி சோனாலி, தூத்துக்குடி ஆசிரியை பிரான்சினா, விருத்தாசலம் பூதாமூர் செவிலியர் புஷ்பலதா கடைசியாக தன்யா என இளம் பெண்கள் ஒருதலைக் காதல் தறுதலைகளின் வெறிக்கு இரையாகி தங்கள் உயிரை இழந்திருக்கின்றனர். எந்த தாய்க்கும் பிள்ளைகளை கொல்ல மனம் வராது என்பது எப்படி உண்மையோ, அதேபோல் மனப்பூர்வமாகவும், உண்மையாகவும் காதலிக்கும் யாருக்கும் அன்பு வைத்தவரை கொலை செய்ய மனம் வராது என்பதும் உண்மை. ஆனால், காதலிக்க மறுத்ததற்காக பெண்களை கயவர்கள் கொலை செய்கிறார்கள் என்றால், அவர்களின் நோக்கம் காதல் இல்லை என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர். அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை: இத்தகைய மோசமான கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும், இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக உள்ளது. ஆனால், ஒருதலைக் காதல் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது கவலையளிக்கிறது. ஒருதலைக் காதல் தறுதலைகளால் உயிரிழந்த 6 பேரில், விருத்தாசலம் புஷ்பலதா என்பவர் மட்டும் தனசேகர் என்ற மிருகத்தால் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பாலியல் சீண்டலுக்குள்ளாக்கப்பட்டதால் ஏற்பட்ட அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். மீதமுள்ள 5 பேரும் மிகவும் கொடூரமான முறையில் வெட்டியும், உயிருடன் எரித்தும் படுகொலை செய்யப்பட்டனர். இக்கொலைகள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தின. ஆனால், அரசோ தமிழகத்தில் இத்தகைய கொடுமைகள் நடந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. அதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் பாலியல் சீண்டல் கொலைகள் தொடர்கின்றன. புற்றுநோயைப் போல பரவி வரும் பாலியல் சீண்டல் கொலைகள் தடுக்கப்பட வேண்டும்: தமிழகத்தில் புற்றுநோயைப் போல பரவி வரும் பாலியல் சீண்டல் கொலைகள் தடுக்கப்பட வேண்டும். பெண்களை பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை மற்றும் சீண்டல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை அளிப்பதன் மூலம் தான் இதை சாதிக்க முடியும். பெண்களின் பாதுகாப்புக்காக 2013 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்த 13 அம்சத் திட்டத்தின் நான்காவது அம்சமாக பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. பெண்களை பின்தொடர்ந்து சென்று தொல்லை தருபவர்களையும் இச்சட்டப்படி தண்டிக்க வேண்டும்”, என குறிப்பிட்டுள்ளார்[8]. © வேதபிரகாஷ் 15-09-2016 [1] Malayala Manorama online, Spurned youth hacks Keralite woman to death in Coimbatore, attempts suicide, Thursday 15 September 2016 05:49 PM IST, By Onmanorama Staff [2] http://english.manoramaonline.com/news/just-in/spurned-youth-hacks-kerala-woman-death-coimbatore-murder.html [3] India Today, Tamil Nadu: Jilted lover kills girl, attempts suicide later Pramod Madhav , Posted by Shruti Singh, Coimbatore, September 15, 2016 | UPDATED 10:28 IST. [4] http://indiatoday.intoday.in/story/tamil-nadu-coimbatore-jilted-lover-kills-girl-attempts-suicide/1/764735.html [5] The Hindusthan times, 23-year-old woman hacked to death by jilted man in Coimbatore, HT Correspondent, Hindustan Times, Chennai, Updated: Sep 15, 2016 17:42 IST. [6] http://www.hindustantimes.com/india-news/23-year-old-woman-hacked-to-death-by-jilted-man-in-coimbatore/story-gwtfpzIcPxRtO8CAXSMYyI.html [7] தினமணி, ஒருதலைக் காதல் என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகளை அரசு கட்டுப்படுத்த வேண்டும்: ராமதாஸ், By DIN | Last Updated on : 15th September 2016 12:24 PM [8] http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2016/sep/15/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE-2565102.html?pm=home பிரிவுகள்: காதல், காதல் ஜிஹாத், காதல் புனித போர்!, குரூரம், கொலை, சட்டமீறல், ஜாகீர், ஜிஹாதி, ஜிஹாத், Uncategorized Tags: அழகிய இளம் பெண்கள், இந்துக்கள், இஸ்லாம், ஒருதலை காதல், கொலை, செக்யூலரிஸம், ஜாகிர், ஜாகீர், ஜில்டெட், ஜிஹாத், தன்யா, பாலக்காடு, புனிதப்போர், முஸ்லீம்கள், லவ் ஜிஹாத், ஷகிர் Comments: Be the first to comment திருவோணத்தன்று லவ்-ஜிஹாதி கொலை செய்த ஜாகீர்! காதலிக்க மறுத்த இளம்பெண்களை கொலை செய்தால், நோக்கம் காதல் இல்லை!! செப்ரெம்பர் 15, 2016 திருவோணத்தன்று லவ்-ஜிஹாதி கொலை செய்த ஜாகீர்! காதலிக்க மறுத்த இளம்பெண்களை கொலை செய்தால், நோக்கம் காதல் இல்லை!! கடவுளின் சொந்த தேசத்திலிருந்து வந்தவன் கொலை செய்தது: திருவோணத்தைப் பற்றி சர்ச்சைகளைக் கிளப்பி விட்டு, குழப்பத்தை உண்டாக இக்கால நாரதர்கள், எட்டப்பன்கள், முதலியோர் தயாராக இருக்கும் போது, அந்நாளில், ஒரு முகமதியன் திட்டமிட்டே, ஒரு கேரள இளம்பெண்ணை குரூரமாக கொலை செய்துள்ளான். “கேரளா கடவுளுடைய தேசம்” [Kerala- Gods own country] என்று பெருமையாக சொல்லிக் கொள்வர், ஆனால், எந்த கடவுள் என்பதை சொல்லாதலால், கேரளாவில் ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன போலும். ஏகப்பட்ட இளம் பெண்களை காதல் என்ற பெயரில் ஏமாற்றி, திருமணம் செய்து ஐசிஸுக்கு கூட்டிச் சென்றதாக செய்திகளை வெளியிட்டனர். அரசு மாறியதும், அவை குறைந்து விட்டதால், பிரச்சினை குறைந்து விட்டதா, அல்லது கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திக-கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்து விட்டதால், அவ்வாறாகி விட்டதா? கேரளாவிலிருந்து வந்து, தமிழகத்தில் குடியேறி வாந்துவந்த குடும்பம்: கோவை மாவட்டம் அன்னூர் தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் சோமு / சோமசுந்தரம் (50) டெய்லர், இவரது மனைவி சாரதா (48) பட்டுநூல் ஊழியர். இவரது மகள் தன்யா (23) பி.எஸ்.சி. தகவல் தொழில்நுட்பம் படிப்பு படித்து முடித்து விட்டு பொங்கலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். தையல்காரராக இருந்து மகளைப் படிக்க வைத்து, பட்டம் பெற செய்து வேலைக்கும் அனுப்பியுள்ளதை பாராட்ட வேண்டும். இவர்கள், கேரள மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் அன்னூர் பகுதியில் குடியேறி வசித்து வந்தனர்[1]. ஜாகிர் என்பவன் வந்து சேர்ந்தது: அந்நிலையில் தான் ஜாகிர் என்பவன் வந்து சேர்ந்தான். சோமுவின் பக்கத்து வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்து, அன்னூர் ரோட்டில் உள்ள தனது சித்தப்பா பேக்கரியில் வேலை செய்து வந்தார்[2]. அப்போது தன்யா பள்ளியில் படித்து வந்தார். அப்போது தன்யாவிடம், சகீர் அடிக்கடி பேசுவது வழக்கம். பக்கத்து வீட்டை சேர்ந்தவர் என்பதால், சோமுவின் குடும்பத்தினரும் இதனை கண்டு கொள்ளவில்லை. இந்த பேச்சும், பழக்கமும், சகீரின் மனதில் ஒருதலைக் காதலாக உருவெடுத்தது. இந்த காதல் எண்ணங்களை அறிந்து கொள்ளாமல், தன்யாவும் அவருடன் பேசுவது உண்டு. ஆனால் இந்த பேச்சும், பழக்கமும் விபரீதம் ஆகிவிடக்கூடாது என்று, தன்யாவின் பெற்றோர், மகளிடம் அறிவுரை கூறினர். இதனால் தன்யாவும், பெற்றோர் சொல்லை கேட்டு, சகீரிடம் பேசுவதை நிறுத்தி கொண்டார்[3]. அதாவது, ஜாகிரின் போக்கை அறிந்து தான், தன்யா பெற்றோர் அறிவுருத்தியுள்ளனர். ஜாகிரைக் கண்டிக்காத பெற்றோரும், திரும்பிவந்த நிலையும்: ஜாகிரின் மாமா, அம்மா அல்லது வேறொருவரும் அவனைக் கண்டித்தாகத் தெரியவில்லை. ஒரு வேளை ஊக்குவித்தார்கள் போலும். இதனால், சந்தர்ப்பம் பார்த்து ஒருநாள், தன்யாவை வழிமறித்து தனது காதலை சொல்லி உள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத தன்யா, “தயவு செய்து என்னை மறந்து விடு. உன்னை பற்றிய எண்ணம் என்னிடம் துளிகூட இல்லை. நீ நினைத்தாலும், எனது பெற்றோர் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள். ஏனெனில் நீ வேறு மதம், நாங்கள் வேறு மதம்”, என்று கூறி விட்டு சென்று விட்டார். மாலைமலர், இப்படி சொல்ல, தமிழ்.இந்து, இப்படி கூறுகிறது, அதேபகுதியில் 3 ஆண்டுகளுக்கு முன்பு வசித்து வந்த திருப்பூரை சேர்ந்த ஜாகீர் (27) என்பவர் தன்யாவை ஒரு தலையாக காதலித்து வந்தார். ஜாகிரும் தன்யா வீட்டருகே உள்ள காம்பவுண்டில்தான் வசித்து வருகிறார். தன்யா, ஜாகிர் நட்புடன் பழகி வந்துள்ளனர். ஆனால் தன்யா ஜாகீரின் காதலை ஏற்க மறுத்து விட்டார். இது தொடர்பாக தன்யாவின் பெற்றோர் ஜாகிரின் தாயாரிடமும் பேசியுள்ளனர். இரு வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஜாகிரின் தாயார் கேரளா சென்றுவிட்டார்[4]. மார்ச்சில் திரும்ப வந்த ஜாகீர்: “இதனால் மனமுடைந்த ஜாகீர் 6 மாதங்களுக்கு முன்பு திருப்பூருக்கு பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்றார்” என்று ஊடகம் குறிப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது. இவன் ஒருதலையாக காதலித்தால், அதற்காக அடுத்தவர் எப்படி பாதிக்க முடியும்? எனினும் ஜாகீரால் தன்யாவை மறக்க முடியவில்லை. அவர் அடிக்கடி தன்யாவை பின் தொடர்ந்து சென்று தொந்தரவு கொடுத்தார். இதையறிந்த தன்யாவின் பெற்றோர் ஜாகீரை கண்டித்தனர். ஆனால், போலீஸாரிடம் ஏன் புகார் கொடுக்கவில்லை, மற்றும் ஜாகீரின் மாமா, அம்மா, உறவினர்கள், மற்றவர்கள் ஏன் கண்டிக்கவில்லை என்று தெரியவில்லை. நிச்சயதார்த்தமும், ஜாகீரின் கொலைத் திட்டமும்: தன்யாவுக்கு அன்னூரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் தினேஷ் என்பவரை திருமணம் பேசி கடந்த 10 நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்தனர். அடுத்த மாதம் இவர்களது திருமணம் நடக்க இருந்தது. இது ஜாகீருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தனக்கு கிடைக்காத தன்யாவை தீர்த்துக் கட்ட அவர் முடிவு செய்தார்[5]. 14-09-2016 அற்று ஓணம் விடுமுறை நாள் என்பதால் தன்யா வேலைக்கு செல்லவில்லை. அவர் தனது வருங்கால கணவர் தினேசுடன் வெளியே சென்று விட்டு மாலை 5 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது தன்யாவின் தந்தை சோமுவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்ததால் மனைவி சாரதாவுடன் ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டார். தன்யா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ஜாகீர் வீட்டின் பின்பக்க சுவர் ஏறிக் குதித்து[6] வீட்டிற்குள் நுழைந்ததோடு பின்புற கதவை உடைத்து உள்ளே சென்றார். அவரைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த தன்யா சத்தம் போட்டார்[7]. உடனே ஜாகீர் கத்தியால் அவரை குத்தினார்[8]. இதில் தன்யாவின் தலை, கழுத்து, வயிறு, கைகளில் கத்திக்குத்து பட்டு ரத்த வெள்ளத்தில் பலியானார்[9]. உடனே ஜாகீர் தப்பி ஓடினார்[10]. நியூஸ்7 இப்படி மரியாதையோடு செய்தி வெளியிட்டுள்ளது. தப்பி ஓடிய ஜாகிர் பாலக்காட்டில் பிடிபட்டது: ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பிய தன்யாவின் பெற்றோர் வீட்டில் மகள் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு கதறினர். போலீசார் விசாரணை நடத்திய போது வீட்டில் சாணிப்பவுடர் சிதறிக் கிடந்ததை கண்டனர். இதனால் தன்யாவை கொலை செய்த ஜாகீர் தற்கொலைக்கு முயற்சி செய்யலாம் என கருதிய போலீசார் அவரை கண்டுபிடிக்க தீவிரம் காட்டினர். சாணிப்பவுடருக்கும், தற்கொலைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. ஜாகீரின் சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு என்பதால் கேரள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்தநிலையில் 14-09-2016 அன்று இரவு 11 மணி அளவில் ஜாகீர் பாலக்காட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையறிந்த அன்னூர் போலீசார் பாலக்காட்டுக்கு விரைந்து சென்று ஜாகீரை கைது செய்தனர். அங்கு ஜாகீர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் போலீசார் ஆஸ்பத்திரியில் பாதுகாப்புபணி மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே, ஜாகீரை கைது செய்யும் வரை தன்யாவின் உடலை எடுத்து செல்ல விட மாட்டோம் என கூறி அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தன்யாவின் உடல் பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டது. © வேதபிரகாஷ் 15-09-2016 [1] திஇந்து, கோவையில் ஒருதலைக் காதலால் விபரீதம்: இளம் பெண் குத்திக் கொலை; இளைஞர் தற்கொலை முயற்சி, Published: September 15, 2016 14:46 ISTUpdated: September 15, 2016 14:46 IST. [2] மாலைமலர், வீடு புகுந்து பெண் குத்திக்கொலை: ஒரு தலை காதலால் வாலிபர் வெறிச்செயல், பதிவு: செப்டம்பர் 15, 2016 05:13. [3] http://www.maalaimalar.com/News/TopNews/2016/09/15051338/1038943/woman-murder-near-Coimbatore.vpf [4]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/article9110654.ece [5] மாலைமலர், ஒருதலைக்காதலில் புதுப்பெண்ணை கொன்ற வாலிபர் கேரளாவில் கைது, பதிவு: செப்டம்பர் 15, 2016 14:06. [6] தினகரன், கோவை அருகே ஒருதலைகாதலில் வாலிபர் வெறிச்செயல் காதலிக்க மறுத்த பட்டதாரி பெண் படுகொலை, Date: 2016-09-15@ 00:18:01. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=245675 [7] நியூஸ்7, ஒரு தலைக் காதலால் இளம்பெண்ணைக் கொலை செய்தவர் தற்கொலை முயற்சி!, September 15, 2016. http://ns7.tv/ta/killer-attempted-committ-suicide-kerala.html [8] http://www.maalaimalar.com/News/TopNews/2016/09/15140602/1039042/woman-killed-young-man-arrested-in-Kerala.vpf [9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=245675 [10] http://ns7.tv/ta/killer-attempted-committ-suicide-kerala.html பிரிவுகள்: அடிப்படைவாதம், அமைதி, அழிவு, இச்சை, இஸ்லாம், உயிர், உயிர் பலி, ஐஎஸ், ஐசிஸ், ஒருதலை காதல், காதலன், காதலி, காதல், காதல் ஜிஹாத், காதல் புனித போர்!, ஜகிர், ஜாகீர், தன்யா, ஷகிர், Uncategorized Tags: இந்துக்கள், இஸ்லாம், ஒருதலை காதல், ஓணம், கொலை, செக்யூலரிஸம், ஜாகிர், ஜாகீர், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாத், தன்யா, திருவோணம், பாலக்காடு, முஸ்லீம்கள், லவ் ஜிஹாத் Comments: Be the first to comment கணவன் அக்பரை மனைவி பாத்திமுத்து கொலை செய்தது – கள்ளக்காதல் சீர்கேடா, பெண்ணியப் பிரச்சினையா, சமூக சீர்கேடா, இஸ்லாம் தாம்பத்திய மதப்பிரச்சினையா? ஓகஸ்ட் 17, 2016 கணவன் அக்பரை மனைவி பாத்திமுத்து கொலை செய்தது – கள்ளக்காதல் சீர்கேடா, பெண்ணியப் பிரச்சினையா, சமூக சீர்கேடா, இஸ்லாம் தாம்பத்திய மதப்பிரச்சினையா? மைத்துனர் சையது தானாகவே வந்தாரா, பாத்திமுத்து தகவல் கொடுத்து வந்தாரா?: 16-08-2016 காலை அதே பகுதியில் வசிக்கும் அக்பரின் மைத்துனர் சையது, அக்பரின் வீட்டுக்கு வந்தார். பாத்திமுத்து தகவல் சொல்ல வந்தார் என்றும் உல்ளது. அவர் கதவு தட்டும் சத்தம் கேட்டு, பாத்திமுத்து எழுந்து சென்று கதவை திறந்தார். அவரிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே, அக்பர் தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு சையது சென்றார். அங்கு வாயில் துணி திணிக்கப்பட்டு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அக்பர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து சையது சத்தம் போட்டார்[1]. பாத்திமுத்து மற்றும் பிள்ளைகளும் ஓடி வந்தனர். அக்பரின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.காலையில் எழுந்த உடன் கணவனை யாரோ கொலை செய்து விட்டார்கள் என நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது[2]. அக்பருக்கு பாத்திமா என்ற பெண்ணுடன் தொடர்பு, கள்ளக்காதல், உல்லாசம்: வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் பாத்திமா (35). கணவனை விட்டுப் பிரிந்தவர். இவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது கடையில் கணக்கு வழக்குகளை கவனித்துக்கொள்வதற்காக அக்பர் வேலைக்கு வைத்துக் கொண்டார். ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது[3]. பிறகு மண்ணடியிலேயே வாடகை வீடு எடுத்து பாத்திமாவை அக்பர் தங்கவைத்துள்ளார். பிறகு இருவரும் அவ்வப்போது நெருக்கமாக இருந்துள்ளனர். வெளி இடங்களிலும் சுற்றித் திரிந்துள்ளனர். நாளடைவில் இந்த கள்ளத்தொடர்பு பாத்திமுத்துவுக்கு தெரிய வர அக்பரை கண்டித்துள்ளார். ஆனால் அக்பரோ அப்படி ஏதும் இல்லையென்று மறைத்துள்ளார். ஆனாலும் சந்தேகம் தீராத பாத்திமுத்து தனது கணவரை பின் தொடர்ந்து வேவு பார்த்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாத்திமாவின் வீட்டில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். Akbar murder, Mannady 16-08-2016, Dinakaran பாத்திமுத்து கையும் களவுமாக கணவன் கள்ளக்காதலியைப் பிடித்தது: தனது உறவினர்களுடன் அங்கே சென்று கையும் களவுமாகப் பிடித்த பாத்திமுத்து, பாத்திமாவை அடித்து உதைத்துள்ளார். பிறகு அங்கிருந்த பாட்டிலால் அக்பரின் தலையில் அடித்துள்ளார். இதில் அக்பருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாத்திமுத்துவுடன் கோபித்துக்கொண்டு அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அக்பருக்கு பாத்திமாதான் உதவியாக இருந்துள்ளார். பிறகு உறவினர்கள் சமாதானப்படுத்தியதை அடுத்து பாத்திமுத்துவுடன் வீட்டுக்கு வந்துள்ளார். பாத்திமாவையும் வேலையை விட்டு நிறுத்தி விட்டார். ஆனால், சில நாட்களிலேயே மீண்டும் இருவரும் பழகத் தொடங்கியுள்ளனர். இதை பாத்திமுத்து கண்டிக்க, ‘நான் பாத்திமாவை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். உன்னால் என்ன செய்ய முடியும். பாத்திமாவும் நானும் திருமணம் செய்துகொண்டு இந்த ஊரை விட்டே செல்லப் போகிறோம். பிறகு நீயும் உனது குழந்தைகளும் பிச்சைதான் எடுக்க வேண்டும். நான் உனக்காக நிறைய செலவு செய்தேன். ஆனால் நீ எனது சந்தோஷத்தை கெடுக்கிறாய்’ என்று கூறியுள்ளார். இதுதான், அவளை கொலைச் செய்யத் தூண்டியது. Akbar murder, Mannady 16-08-2016, The Hindu போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்ட பாத்திமுத்து: தகவலறிந்த போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்[4]. இந்நிலையில் அக்பர் வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா இயங்கவில்லை என தெரிகிறது[5]. இந்த கொலை தொடர்பாக அக்பர் குடும்பத்தினர் உள்ளிட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[6]. அக்பர் கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பாத்திமுத்து முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். இதனால் அவரிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டனர். அப்போது கணவரை கொலை செய்ததை பாத்திமுத்து ஒப்புக்கொண்டார். கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபரை அவருடைய மனைவியே கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். இதையடுத்து பாத்திமுத்து மீது போலீசார் வழக்குப்பதிந்து அவர் கைது செய்யப்பட்டார்[7]. கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவனை, மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அக்பரின் மகள் பூஜா(12) சற்றே மனநலம் பாதித்தவர். அவர் நள்ளிரவில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அக்பரை பார்த்துவிட்டு பாத்திமுத்துவிடம் கேட்டுள்ளார். ஒன்றுமில்லை. அப்பா தூங்குகிறார். காலையில் எழுந்துவிடுவார் என்று அவரை பாத்திமுத்து தூங்க வைத்துள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. Akbar murder, Mannady 16-08-2016, TOI எல்லோருக்கும் தெரிந்த கள்ளக்க்காதல்-தொடர்புகளை உறவினர்கள்-நண்பர்கள் ஏன் கண்டிக்கவில்லை, எதிர்க்கவில்லை?: பாத்திமுத்து உறவினருக்கு அக்பரின் கள்ளக்காதல் தொடர்புகள் தெரிந்திருக்கின்றன. அதேபோல, அவர்கள் அக்பரை கையும் களவுமாகப் பிடித்து அடித்த போதும், மற்றவர்களுக்கு, குறிப்பாக சுற்றிலும் உள்ளவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அக்பருன் உறவினர்களுக்கும் தெரிந்திருக்கக் கூடும். ஆனால், யாரும் அக்பரைக் கண்டிக்கவில்லை அல்லது அத்தகைய கள்ளக்காதல், உறவு தப்பு, தவறு, குற்றம் என்றெல்லாம் எடுத்துக் காட்டவில்லை என்பது வியப்பாக உள்ளது. மனைவி பாத்திமுத்து மட்டும் எதிர்க்க வேண்டும், கண்டிக்க வேண்டும் என்பது ஆச்சரியமாக உள்ளது. அதாவது, முஸ்லிம்கள் ஒன்றிற்கும் மேலான பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கலாம் மற்றும் திருமணம் செய்து கொண்டு மனைவியரை வைத்துக் கொள்ளலாம், இதெல்லாம் சகஜம் தான் என்று அமைதியாக இருந்தார்கள் போலும். இருப்பினும், மனைவி எதிர்த்திருக்கிறாள். ஆக, இதை பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்லது இஸ்லாமிய பெண்ணின் பிரச்சினை என்றே ஒதுக்கப்பட்டு விட்டதா என்று தெரியவில்லை. குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது-குழப்பம் கொலை செய்யத் தூண்டியது என்ன?: பாத்திமுத்து கண்டித்தபோது, “நான் பாத்திமாவை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். உன்னால் என்ன செய்ய முடியும். பாத்திமாவும் நானும் திருமணம் செய்துகொண்டு இந்த ஊரை விட்டே செல்லப் போகிறோம். பிறகு நீயும் உனது குழந்தைகளும் பிச்சைதான் எடுக்க வேண்டும். நான் உனக்காக நிறைய செலவு செய்தேன். ஆனால் நீ எனது சந்தோஷத்தை கெடுக்கிறாய்”, என்று கூறியுள்ளது நோக்கத்தக்கது. இங்கு ஒருவேளை தனது இஸ்லாமிய உரிமையை எடுத்துக் காட்டியுள்ளது தெரிகிறது. “நான் உனக்காக நிறைய செலவு செய்தேன்”, என்பது, அந்த மனைவிக்கு செய்த கடமையை குறிப்பதாக உள்ளது. “ஆனால் நீ எனது சந்தோஷத்தை கெடுக்கிறாய்”, அதாவது, இன்னொரு திருமணத்தை செய்து கொள்ள ஆட்சேபிக்கிறாய் என்கிறார் போலும். “பிறகு நீயும் உனது குழந்தைகளும் பிச்சைதான் எடுக்க வேண்டும்”, என்றது, விவாக ரத்து செய்துவிடுவேன் என்பதைக் குறிக்கிறது. பணம் நிறைய இருப்பதால், “மஹர்” கொடுத்து “தலாக்” செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், பாத்திமுத்து தனது முழந்தைகளை வைத்துக் கொண்டு வாழ்வது எப்படி? “அக்பரின் மகள் பூஜா (12) சற்றே மனநலம் பாதித்தவர்”, என்றும் உள்ளது. அதாவது, அவளுக்கு மருத்துவ செலவு, வளர்த்து பெரியவள் ஆக்குவது, திருமணம் செய்து வைப்பது போன்ற கடமைகளிலிருந்தும் அக்பர் தப்பிப்பது தெரிகிறது. இதனால், ஒரு பெண் எல்லாவிதங்களிலும் நெருக்கித் தள்ளப்பட்டபோது, அத்தகைய கொடுமையான முடிவுக்கு வந்து, தனது கணவனையே கழுத்தறுத்துக் கொன்றிருக்கிறாள். குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது பெண்கள் பிரச்சினைகள் உணரப்பட வேண்டும்: பொதுவாக, இப்பிரச்சினையை பெண்கள் பிரச்சினை என்றெ எடுத்துக் கொள்ளலாம். கணவன் ஒரு மனைவியை / பெண்ணை விவாகரத்து செய்தால், மனைவி-மக்கள் / குழந்தைகள் வாழ, ஜீவனாம்சம் கொடுக்கப்படவேண்டும். ஆனால், ஆண் ஏதோ பணத்தைக் கொடுத்து கழட்டி விடுவது, மற்றும் பெற்ற குழந்தைகளைப் பற்றி கவலைப் படாமல் இருப்பது, கடமைகளைத் தட்டிக் கழிப்பது மற்றும் சட்டப்படி மனைவிக்கு தொல்லைக் கொடுப்பது போன்ற நிலைகளில் ஈடுபட்டால், மனைவி-குழந்தைகள் கதி அதோகதிதான். தனியாக ஒரு பெண் குழந்தைகளுடன் வாழ்வது என்பது பெரிய சோதனை ஆகும். ஆனால், இஸ்லாம் என்று பார்த்தால் பிரச்சினை வருகிறது. அதனால் தான் இதனை விமர்சிக்காமல் ஒதுங்கி விடுகிறார்கள் என்று தெரிகிறது. பொது சிவில் சட்டம் என்று பேசுபவர்களும், பேச பயப்படுபவர்களும், செக்யூலரிஸப் பழங்களும் கூட மௌனிகளாகி விடுகின்றனர். ஆனால், பெண்கள் படும்பாட்டை மற்றவர்கள் உணர, அறிய, புரிய வேண்டும். இப்பிச்சினை பொதுப்பிரச்சினையாக கருதப்படவேண்ட்ம். அப்பொழுதுதான், இந்திய சமூகம் சிறப்பாக இருக்கும். © வேதபிரகாஷ் 17-08-2016 [1] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=239296 [2] தினகரன், கள்ளக்காதலியுடன் ஓட முயன்ற கணவனை அரிவாளால் வெட்டிக் கொன்றார் மனைவி, Date: 2016-08-17@ 00:38:58 [3] http://news.lankasri.com/india/03/107579 [4] நியூஸ்.7.டிவி, இரும்பு வியாபாரி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்!, August 16, 2016 [5] http://ns7.tv/ta/death-husband-and-police-arrested-wife.html [6] http://ns7.tv/ta/while-iron-dealer-kaluttarukkappatta-mysterious-death.html [7] http://www.dailythanthi.com/News/State/2016/08/17010831/Wife-killed-their-throats-cut.vpf பிரிவுகள்: அக்பர், அடி உதை, இன்பம், இஸ்லாம், உதவி, உதவியாள், எதிர்ப்பு, கல்யாணம், கள்ள உறவு, கள்ளக் காதல், கள்ளக்காதல், காமம், குற்றம், கூடல், கௌரவம், சட்டமீறல், சட்டம், சட்டம் மீறல், சண்டை, சண்டை போடுவது, சந்தேகம், செக்ஸ், பாத்திமா, பாத்திமுத்து, மண்ணடி, Uncategorized Tags: அக்பர், இரும்பு, இஸ்லாம், கலவரம், கொலை, செக்யூலரிஸம், சென்னை, சையது, பாத்திமா, மண்ணடி, முகமதியர், முஸ்லிம்கள், முஸ்லீம்கள் Comments: Be the first to comment கணவன் அக்பரை மனைவி பாத்திமுத்து கொலை செய்தது – கணவன்-மனைவி சண்டையா, கள்ளக்காதல் சீர்கேடா, பெண்ணியப் பிரச்சினையா, சமூக சீர்கேடா? ஓகஸ்ட் 17, 2016 கணவன் அக்பரை மனைவி பாத்திமுத்து கொலை செய்தது – கணவன்-மனைவி சண்டையா, கள்ளக்காதல் சீர்கேடா, பெண்ணியப் பிரச்சினையா, சமூக சீர்கேடா? மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டுக் கிடந்த மண்ணடி இரும்பு வியாபாரி அக்பர்: சென்னை மண்ணடி என்றாலே, இரும்புப் பொருட்கள், கழிவுகள் போன்றவைதான் ஞாபகம் வரும். வண்ண்டிகளால் அடைந்து கிடக்கும் தெரு, மக்கள் இப்படியும், அப்படியும் சென்று கொண்டிருக்கும் நிலை. இங்கு பெரும்பாலான வியாபாரிகள் முஸ்லிம்கள் தாம். சென்னை பிராட்வே மண்ணடி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் அக்பர் (வயது 54). இரும்பு வியாபாரி. இவருடைய மனைவி பாத்திமுத்து (48). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 16-08-2016 அன்று காலை வீட்டின் படுக்கையறையில் தொழில் அதிபர் அக்பர் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார்[1]. உடனே, பாத்திமுத்து சத்தம் போட்டு, பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் மைத்துனர் சையதிடம் விசயத்தைக் குறினார். சையது போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இது பற்றி தகவல் அறிந்த வடக்கு கடற்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்பர் பிணமாக இருந்த அறையில் சோதனை மேற்கொண்டனர். தொழில் அதிபர் அக்பர் வசித்து வந்த வீடு 3 மாடிகளை கொண்டது. இந்நிலையில், 3-வது மாடியில் வசித்து வந்த அக்பர் வீட்டிலேயே படுக்கை அறையில் கொலை செய்யப்பட்டிருப்பது மர்மமாக உள்ளது[2]. அக்பரை கொலை செய்த மனிதன் வெளியே இருந்து வரவில்லை: இரவு மர்ம நபர்கள் வீட்டிற்கு வந்து அவரை கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர் என்று முதலில் சொல்லப்பட்டது. அக்பர் கொலையுண்ட படுக்கையில் ரத்த கறை படிந்துள்ளது. அதனையும் போலீசார் சேகரித்துள்ளனர்[3]. படுக்கையில் இருந்த கைரேகைகளையும் பதிவு செய்தனர்[4]. கொலையாளிகள் யார் என்பது தெரியவில்லை. அக்பரின் வீட்டில் கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் யாரேனும் புகுந்து அவரை கொன்று விட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது[5]. ஆனால், பிறகு வீட்டில் எதுவும் திருடப்படவில்லை என்று தெரிந்தது. வியாபார போட்டியும் இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது[6]. பெண் தகராறில் அக்பர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[7]. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். வீட்டில் கொள்ளை அடிக்க வந்த மர்ம நபர்கள் கொலை செய்தார்களா? அல்லது அக்பருக்கு தெரிந்த நபர்கள் அவரை கொலை செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது[8]. வீடு உள்ளே பூட்டப்பட்டிருந்தது என்றும் தெரிந்தது. மேலும், மோப்ப நாய் சோனா வரவழைக்கப்பட்டது. அது வீட்டிலிருந்து தெரு வரை ஓடி சென்று நின்றுவிட்டது[9]. இதனால், கொலையாளி வெளியே இருந்து வரவில்லை அல்லது உள்ளேயிருந்தவர் உதவியுடன் வெளியாள் கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் தீர்மானித்தனர். “சென்னையில் தொழில் அதிபர் கொலை நகை–பணம் கொள்ளை” என்று ஆரம்பித்து “கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபர் கொலை கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி கைது” என்று முடிந்துள்ள செய்திகள்: நேற்று, “சென்னையில் தொழில் அதிபர் கொலை நகை-பணம் கொள்ளை” என்று தான் செய்திகள் வந்தன. பிறகு, “கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபர் கொலை கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி கைது” என்று செய்திகள் முடிந்துள்ளன. அதாவது, தாம்பத்திய உறசு முறைக்கு அப்பாற்பட்ட கள்ளக்காதல்-தொடர்பு தான் கொலைக்குக் காரணம் என்பது தெரிந்திருக்கிறது, இருப்பினும், “முஸ்லிம்கள் சமாச்சாரம்” என்று செய்தியாளர்கள் ஜாக்கிரதையாக இருந்து, “நகை-பணம் கொள்ளை” என்று கதையினை ஆரம்பித்து வைத்தார்கள். பெண் தகராறில் அக்பர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[10] என்று முன்னரே கூறப்பட்டது. பிறகு, அதனை ஏன் இன்னும் விளக்கவில்லை என்று தெரியவில்லை. கள்ளக்காதலால், மனைவி கணவனை கொலை செய்தாள், கணவன் மனைவியைக் கொலை செய்தான், ஏன் ஆட்களை வைத்தே கொலை செய்தாள் / செய்தான் என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன, வந்துக் கொண்டிருக்கின்றன. அந்நிலையிலும், சமூக ஆர்வலர்கள், பெண்ணிய வீராங்கனைகள், மனநல வல்லுனர்கள் என்று யாரும் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. வழக்கம் போல ஊறுகாய் ;போடுவது எப்படி, எந்த கடையில் எந்த புடவை வாங்கலாம், லிங்கின்ஸைப் போடுவது எப்படி என்று தான் வாத-விவாதங்களை செய்து கொண்டிருந்தனர். பெண்ணிய அரசியல்வாதிகளும் கண்டுகொள்ளவில்லை. போலீசார் விசாரணையில் கிடைத்த தகவல் வருமாறு: தூத்துக்குடி காயல்பட்டினத்தை சேர்ந்தவர் அக்பர் (50). இவர் சென்னை மண்ணடி கிருஷ்ணன் கோயில் தெருவில் உள்ள வீட்டின் 3வது மாடியில் வாடகைக்கு வசித்தார். தொழிலதிபரான இவர், மண்ணடி பகுதியிலேயே இரும்பு கடை நடத்தி வந்தார். இவரது மனைவி பாத்திமுத்து (45). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். அக்பருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது[11]. கள்ளக்காதலை கைவிடக்கோரி பாத்திமுத்து பலமுறை கெஞ்சியும் அக்பர் மறுத்து விட்டார். சில வாரங்களுக்கு முன்பு கள்ளக்காதலியுடன் இருந்த அக்பரை, பாத்திமுத்து கையும், களவுமாக பிடித்து எச்சரித்தார். அடித்து உதைத்தனர் என்றும் இன்னொரு ஊடகம் குறிப்பிட்டது. 15-08-2016 இரவு அன்று 12.30 மணியளவில் குடிபோதையில் வந்த அக்பரிடம், பாத்திமுத்து கள்ளக்காதலை கைவிட கூறியபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது[12]. ‘‘ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்னையும் குழந்தைகளையும் நினைத்துப் பாருங்கள். நீங்கள் செய்வது நியாயமா’’ என்று பாத்திமுத்து அழுது புலம்பினார். ஆனால் அவரோ பாத்திமுத்துவை எட்டி உதைத்தார். பிறகு போதையில் தனது அறையில் படுத்துள்ளார். அவரைப் பார்க்கக் பார்க்க ஆத்திரமுற்ற பாத்திமுத்து வீட்டிலிருந்த இளநீர் வெட்டும் அரிவாளை எடுத்து அவரது கழுத்தில் சராமாரியாக 3 முறை வெட்டியுள்ளார்[13]. மேலும் ரத்தம் கொட்டியதை பார்த்ததும் பாத்திமுத்துக்கு மயக்கம் வந்துவிட்டது. அரிவாளை துணியில் சுற்றி பீரோவுக்கு அடியில் தள்ளிவிட்டு அவர் இறந்ததை உறுதி செய்த பிறகு தன்னுடைய அறைக்கு சென்று தூங்கினார். © வேதபிரகாஷ் 17-08-2016 [1] தினத்தந்தி, கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபர் கொலை கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி கைது, பதிவு செய்த நாள்: புதன், ஆகஸ்ட் 17,2016, 1:08 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், ஆகஸ்ட் 17,2016, 2:45 AM IST. [2] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னையில் தொழிலதிபர் கொலை.. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கொடூரம்!, By: Ganesh Raj, Published: Tuesday, August 16, 2016, 17:48 [IST] [3] தினத்தந்தி, சென்னையில் தொழில் அதிபர் கொலை நகை–பணம் கொள்ளை, பதிவு செய்த நாள்: செவ்வாய், ஆகஸ்ட் 16,2016, 3:19 PM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், ஆகஸ்ட் 16,2016, 3:19 PM IST [4] மாலைமலர், சென்னை மண்ணடியில் தொழில் அதிபர் படுகொலை: நகை–பணம் கொள்ளை?, பதிவு: ஆகஸ்ட் 16, 2016 12:03. [5] http://www.dailythanthi.com/News/State/2016/08/16151929/Kill-the-industry-leaders-in-Chennai-5-kg-jewel-robbery.vpf [6] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=96671 [7] http://www.maalaimalar.com/News/TopNews/2016/08/16120317/1032870/industrialist-murder-Mannady-Chennai-police-investigation.vpf [8] http://tamil.oneindia.com/news/tamilnadu/businessman-murdered-chennai-260381.html [9] தமிழ்முரசு, மண்ணடியில் பயங்கரம் – கழுத்து அறுத்து தொழிலதிபர் படுகொலை; மனைவி, கள்ளக்காதலியிடம் போலீசார் தீவிர விசாரணை, 8/16/2016 . 3:33:44 PM [10] http://www.maalaimalar.com/News/TopNews/2016/08/16120317/1032870/industrialist-murder-Mannady-Chennai-police-investigation.vpf [11] The Times of India, Woman kills sleeping hubby, tells children to wake him up, TNN, Chennai edition, Aug 17, 2016, 04.17 AM IST. [12] http://timesofindia.indiatimes.com/city/chennai/Woman-kills-sleeping-hubby-tells-children-to-wake-him-up/articleshow/53731735.cms [13] தினகரன், கள்ளக்காதலியுடன் ஓட முயன்ற கணவனை அரிவாளால் வெட்டிக் கொன்றார் மனைவி, Date: 2016-08-17@ 00:38:58 பிரிவுகள்: அக்பர், அடி உதை, இச்சை, இரண்டாம்மனைவி, இஸ்லாமிய திருமணச் சட்டம், இஸ்லாம், உடலுறவு, உரிமை, உல்லாசம், கள்ள உறவு, கள்ளக் காதல், கள்ளக்காதல், காதல், பாத்திமா, பாத்திமுத்து, மண்ணடி, Uncategorized Tags: அக்பர், இரும்பு, இஸ்லாம், உறவு, கணவன், கள்ள உறவு, கள்ளக் காதல், கள்ளக்காதல், கழுத்தறுப்பு, கொலை, பணம், பாத்திமுத்து, பூஜா, மண்ணடி, மனைவி, முஸ்லீம்கள், வியாபாரம் Comments: Be the first to comment ஜாகிர் நாயக் – கேரளா- ஐசிஸ் விவகாரங்களில் 23-07-2016 வரை மும்பையில் மூன்று பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்! ஜூலை 24, 2016 ஜாகிர் நாயக் – கேரளா- ஐசிஸ் விவகாரங்களில் 23-07-2016 வரை மும்பையில் மூன்று பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்! ஜாகிர் நாயக்கிற்கு ரஹீல் செயிக்கைத் தெரியும்: ரஹீல் செயிக் தன்னுடய நிறுவனங்களில் நிகழ்ச்சிகளுக்காக வேலைசெய்துள்ளதை ஜாகிர் நாயக் ஒப்புக்கொண்டுள்ளார். “ஆயிரக்ககணக்கில் உள்ள தொண்டர்களில் அவனும் ஒருவன். ஊடகங்களின் மூலம் தான், அவக் சந்தேகிக்கப்படும் தீவிரவாதி என்று எனக்கு தெரிய வந்தது. அதனால், அவன் தோன்றும் காட்சிகளை எங்களுடைய வீடியோக்களிலிருந்து எடுத்துவிட சொன்னேன். ஏனென்றால், அதனை பார்ப்பவர்கள், அவனும் ஐ.ஆர்.எப்புடன் தொடர்புடைவன் என்ற நினைக்கக்கூடும் என்பதால், அவை நீக்கப்பட்டன”, என்று விளக்கினார்[1]. அதாவது, ஜாகிர் நாயக்கே தனக்கு சாதகமாக இல்லை என்றால், எடுத்த வீடியோக்களில் சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன என்று தெரிகிறது. பிறகு, தான் பேசிய பேச்சுகளே “எடிட் / டாக்டர்டு” (மாற்றம் செய்யப்பட்ட) செய்யப்பட்டுள்ளன என்று இப்பொழுது சாக்கு சொல்வதேன்? அதற்கு திக்விஜய் சிங்கும் ஒத்து ஊதியதை கவனிக்கத் தக்கது. இவ்வாறு ஆதாரங்கள் மாற்றப்பட்டிருப்பது, திக்விஜயுக்கு முன்பே தெரியுமோ? தற்கொலை தாக்குதல் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படுகிறது– ஜாகிர் நாயக்கின் வாதம்[2]:. பங்காளதேச தற்கொலை தாக்குதல் விசயத்தில், தற்கொலை தாக்குதலை நியாயப்படுத்தியதோடு, இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் எப்படி குண்டு போட்டதோ அது போல என்று விளக்கமும் அளித்தார். ஆனால், ஜப்பானியர்களுக்கு குரானும் இல்லை, ஜிஹாத் போன்றா வெறித்தனங்களும் இல்லை. தற்கொலை தாக்குதல் இஸ்லாத்தில் ஒரு யுத்த யுக்தியாக கையாளப்பட்டு வருவதால், அது அனுமதிக்கப்படுகிறது. ஆனால், அதில் அப்பாவிகள் கொல்லப்பட்டால் அது ஹராம் ஆகும், என்று ஜாகிர் நாயக் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்[3]. அதுமட்டுமல்லாது, செயிக் அப்த்-அ- இபின் பாஜ், என்ற சலாபி இஸ்லாமிய மதத்தலைவர் ஆதரிப்பதாக எடுத்துக் காட்டினார்[4]. இவர் சவுதி அரேபியாவின் தலைமை முப்தி ஆவார். அப்துல்-முஸ்ஹின் அல்-அப்பாத் என்ற இன்னொரு இஸ்லாமிய சலாபி வல்லுனர் பெயரையும் குறிப்பிட்டார்[5]. இப்படி மற்ற சலாபி வல்லுனர்கள் ஆதரித்து, ஒப்புதல் அளித்துள்ள விவரங்களை இங்கு படிக்கலாம்[6]. இஸ்லாம் தற்கொலை தாக்குதலை ஆதரிப்பது ஏன்?: இஸ்லாத்தைப் பொறுத்த வரையில், உலகத்தில் உள்ள குப்ரு (இஸ்லாத்திற்கு விரோதமாக உள்ளவை என்று தீர்மானப்படுத்தப்பட்டுள்ளவை) தன்மை ஒழியும் வரை, ஜிஹாத் என்கின்ற சண்டையை ஒவ்வொரு முஸ்லிமும் செய்து கொண்டே இருக்க வேண்டும். “உலகத்தில் காபிர்கள் இருக்குவரை, அல்லாவின் வழியில் சண்டையிட்டுக் கொண்டே இரு”, என்கிறது குரான். அதாவது, காபிர்கள் முழுவதுமாக நீக்கப்பட்டால் தான், கொலை செய்யப்பட்டால் தான், அந்த ஜிஹாத் நிறுத்தப்படும். உலகத்தில், முஸ்லிம்கள் தவிர மற்றவர்கள் எல்லோருமே அழிய வேண்டும் என்றால், இந்து ஜிஹாதி-தீவிரவாதிகள் காலத்திற்கு ஏற்ப எந்த முறைகளையும் கையாளுவார்கள். கத்தி போய், துப்பாக்கி வந்து, அத்துப்பாக்கியும் ஏ.கெ-47 என்று மாறி, பிறகு ராக்கெட் லாஞ்சர், குண்டுவெடுப்பு கொலை என்று வளர்ந்து வருவதால், இத்தகைய தற்கொலை ஜிஹாதையும் ஆதரிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இதனால் தன் இஸ்லாமிய மதகுருக்கள் அதனை பறிந்துரைக்கின்றனர்[7]. ஜாகிர் நாயக் எங்குள்ளார்?: ஜாகிர் நாயக் இந்தியாவுக்கு வராதது வியப்பாக உள்ளது. வீடியோ / ஸ்கைப் மூலம் பதில் சொன்னதால், அவர் சவுதி அரேபியாவில், துபாயில் அல்லது ஏதோ ஒரு ஆப்பிரிக்க நாட்டில் உள்ளார் என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன. மேலும், உள்துறை அமைச்சகம் ஐ.ஆர்.எப்பிற்கு, யார்-யாரிடமிருந்து பணம் வந்துள்ளது என்பதையும் ஆராய ஆரம்பித்து விட்டது. இதனால், அந்த தொடர்புகள் மற்ற விவகாரங்கள் அறியப்படும். அந்நிலையில், ஜாகிர் நாயக்கிடம் வேலை செய்த ஒருவர், அவர் அயல்நாடுகளிலிருந்து வரும் பணத்தை தவறாகப் பயன்ப்டுத்துகிறார் என்று ஜி-டிவிக்கு பேட்டி கொடுத்துள்ளார். ஏழை முஸ்லிம்களுக்கு என்று கொடுக்கும் பணத்தை இவர், தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதற்கு செலவழிக்கிறார். மேலும், “மணி லான்டரிங்” முறையற்ற பண-பரிவர்த்தனையிலும் ஈடுபட்டுள்ளார் என்று குற்றஞ்சாட்டுகிறார்[8]. நாயக் உச்சநீதி மன்றத்தில் பல மாநிலங்களில் பலதரப்பட்ட அரசு துறைகளால், பல வழக்குகளாக விசாரிக்கப்பட்டு இதை, ஒரே புலனாய்வு ஏஜென்சியை அமைத்து விசாரிக்கக் கோரி, ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார், அது நிலுவையில் உள்ளது[9]. 22-07-2016 வியாழக்கிழமை ஜாகிர் நாயக் கம்பெனியின் மானேஜர் கைது செய்யப்பட்டது: எபின் ஜேக்கப் என்பவர் கணவனுடன் மும்பைக்குச் சென்ற தன்னுடைய சகோதரி மெரின் ஜேக்கப்பை, காணவில்லை என்றும், மும்பையில் உள்ள அர்ஸி குரேசி / அர்ஷி குரேஷி என்பவர் வல்லுக்கட்டாயமாக மதம் மாற்றியுள்ளார் என்றும் கொச்சி போலீஸில் புகார் கொடுத்தார்[10]. மெரின் ஜேக்கப், பெஸ்டின் வின்சென்ட் என்பவன் கூட பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டாள். பிறகு, இருவரும் ஶ்ரீலங்கா சென்று அங்கிருந்து, சிரியாவுக்குச் சென்று ஐசிஸில் சேர்ந்து விட்டனர் என்று புகார் கொடுத்தார்[11]. அதனால், கேரள போலீஸார் மற்றும் ஏடிஎஸ் போலீஸார் விசாரிக்க ஆரம்பித்தனர். இங்கு “லவ் ஜிஹாத்” வேறு முறையில் வேலை செய்துள்ளது. அதாவது, இந்து பெண்ணிற்குப் பதிலாக, ஒரு கிறிஸ்தா பெண் இலகாகியுள்ளார். இதனால், கேரளாவில் ஆதிக்கத்தில் உள்ள கிருத்துவர்களும் இதை விடுவதாக இல்லை போலும்! அர்ஸி குரேசி, ஐ.ஆர்.பியின் உறுப்பினர், 21-07-2016 அன்று நவி மும்பையில் கேரளா மற்றும் ஏடிஎஸ் போலீஸாரால் கைது செய்யப்பட்டான்[12]. அர்ஷி குரேஷி ஜாகிர் நாயக் கம்பனியின் மானேஜர்: இவன் ஐ.ஆர்.பியில் விருந்தினர் நலன் மேலாளர் [Guest Relations Manager] என்று வேலைசெய்து கொண்டு, ஐ.ஆர்.பிக்கு வரும் நபர்களுடன் உரையாடி வந்துள்ளான். மெரின் ஜேக்கப் என்ற கேரள பெண் மும்பையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, பெஸ்டின் வின்சென்ட் என்ற தனது கணவனோடு வேலை செய்து கொண்டிருந்தாள். 2009ல் ஜாகிர் நாயக் கூட்டத்தில் இவர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. பிறகு இவர்கள் ஜாகிர் நாயக்கால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் படியான போதனை செய்யப்பட்டது[13]. முதலில் பெஸ்டின் வின்சென்ட் முஸ்லிமாகி யாஹ்யா என்ற பெயரை வைத்துக் கொண்டான். பிறகு தனது மனைவியையும் மதம் மாற னற்புறுத்தினான். ஆனால், அவள் மறுத்ததால், 2015ல் ஐ.ஆர்.பி நடத்தும் வகுப்புகளில் கலந்து கொள்ள செய்தான். பிறகு அவளும் மதம் மாறினாள். மேலும் இஸ்லாம் பற்றி படிக்க வேண்டும் என்ற போர்வையில், அவர்கள் ஶ்ரீலங்கா மூலம், சிரியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது[14]. ஆனால், நவிமும்பை, செக்டார்.20, சீயுட்ஸ் ஏரியா பகுதியில் உள்ல அடுக்குமாடி வீட்டில் முதல் மாடியில் வசிக்கும் அர்ஸி குரேசியின் மனைவி தனது கணவன் 1000% அப்பாவி என்றும் அவருக்கு ஒன்றுமே தெரியாது என்றும் சாதித்தாள்[15]. இது வழக்கமாக, மாட்டிக் கொள்ளும் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் மற்ற ஜிஹாதிகளின் பெற்றோர், உறவினர், மற்றோர் கூறுவது போலவே இருக்கிறது. குரேசி அங்கிருந்துதான் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டான்[16]. 22-07-2016 அன்று இஸ்வான் கான் என்பவன் மும்பையில் கைது செய்யப்பட்டு, 23-07-2016 அன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டான்[17]. © வேதபிரகாஷ் 24-07-2016 [1] Naik accepted that Raheel Shaikh, a terror suspect, had worked as a volunteer in some of his programmes. “I did not know him personally and he was not part of our organisation. We have thousands of volunteers and he was one of them. When I came to know from media about him being a terror suspect I enquired my staff about him and when they said he was our volunteer, I asked them to remove his visuals from the videos so that people do not think he is part of IRF (Islamic Research Foundation, his organisation),” he added. Mr Naik, however, said he does not know about Abu Jundal. http://www.asianage.com/kolkata/zakir-naik-denounces-terror-wrong-366 [2] India.today, Zakir Naik justifies suicide bombing as legal in tactic of war, Mail Today Bureau, Posted by Arpan Rai, New Delhi, July 16, 2016 | UPDATED 09:14 IST [3] Controversial Islamic preacher Zakir Naik who is under fire for inspiring terrorists, including those who attacked a Dhaka café said on Friday that suicide bombings are permitted in Islam if it used as a tactic in war but if innocents are getting killed it is haram. Justifying suicide bombings as a tactical move in wars, he gave the example of Japan in World War II. http://indiatoday.intoday.in/story/zakir-naik-suicide-bombing-islamic-preacher/1/716209.html [4] Who are, then, those many scholars who have permitted the suicide bombing as war tactic? Naik has honestly named a few of them like Shaikh Abd al-Aziz ibn Baz, a Saudi Arabian Islamic scholar and a leading proponent of the Salafi sect. Notably, Ibn Baz has served as Grand Mufti of Saudi Arabia from 1993 until his death in 1999. firstpost.com, Only Salafists like Zakir Naik view suicide bombing as war tactic; it’s haraam in Islam, Ghulam Rasool Dehlvi, Jul 17, 2016 17:27 IST [5] Naik also cited another Salafist Shaikh Abdul-Muhsin al-Abbaad who wrote a complete paper entitled, “With Which Religion and Intellect are Suicide Bombings and Destruction Considered Jihaad?” http://www.salafipublications.com/sps/sp.cfm?subsecID=MNJ14&articleID=MNJ140006&articlePages=1 [6] http://www.firstpost.com/india/suicide-bombing-is-haram-in-islam-only-salafist-ideologues-like-zakir-naik-view-it-as-a-war-tactic-2898840.html [7] http://www.thenational.ae/thenationalconversation/comment/hatred-violence-and-the-sad-demise-of-yusuf-al-qaradawi [8] https://www.youtube.com/watch?v=4WQKY11ON9w [9] Naik had filed a writ petition in the Supreme Court (SC), asking for one agency to be appointed for investigating all the cases spread in different states. The petition is pending before the apex court. http://indianexpress.com/article/cities/mumbai/man-held-for-radicalising-kerala-woman-my-husband-1000-innocent-claims-arshi-qureshis-wife-2930483/ [10] India.today, Employee of Zakir Naik’s IRF arrested for allegedly brainwashing youths to join ISIS, Mustafa Shaikh | Posted by Ashna Kumar Mumbai, July 22, 2016 | UPDATED 02:50 IST [11] http://indiatoday.intoday.in/story/zakir-naik-irf-islamic-research-foundation-mumbai-kerala-isis-islam-nia/1/721036.html [12] According to an eyewitness, the police took Qureshi into custody from his first-floor apartment in Sector 50 of Navi Mumbai’s Seawoods area. [13] Hindusthantimes, Employee from Zakir Naik’s foundation arrested for influencing youth to join IS, HT Correspondent, Hindustan Times, Mumbai, Updated: Jul 22, 2016 10:30 IST [14] Jacob alleged that his sister had been influenced to convert to Islam by Yahya and Ashi. Hailing from a Christian family, Mariyam née Merin had met her husband while working in Mumbai in 2015. Though she initially resisted Islam, she was taken to several classes, following which, she had been converted, police sources said. Ebin said that at one point his sister wished to come back to Kerala, where her family is, but was eventually forced into joining the IS. His brother-in-law also tried to convert him, Ebin added.His parents alleged that Yahya and Mariyam were radicalised though Dr Naik, who they had met while in Mumbai. According to police sources, Arshi was the public relation manager responsible when Dr Naik had held a massive public conference in 2009. http://www.hindustantimes.com/mumbai-news/irf-employee-arrested-in-mumbai-for-influencing-youth-to-join-is/story-M0bty3pRiV8KAnxXrlvhDL.html [15] Express News Service, Man held for ‘radicalising’ Kerala woman: ‘My husband 1000% innocent’, claims Arshi Qureshi’s wife, Mumbai, Published:July 23, 2016 1:36 am. [16] http://indianexpress.com/article/cities/mumbai/man-held-for-radicalising-kerala-woman-my-husband-1000-innocent-claims-arshi-qureshis-wife-2930483/ [17] The special team, probing the mass disappearance of Keralite youths and their suspected links with Islamic State, arrested a man named Rizwan Khan from Mumbai on Saturday – 23-07-2016. http://english.manoramaonline.com/in-depth/is-kerala-terrorism/islamic-state-kerala-youth-mumbai-arrest-story-in-points.html பிரிவுகள்: ஃபத்வா, ஃபிதாயீன், அமைதி, அமைதி டிவி, அரேபியா, அர்ஷி குரேஷி, அல் - கொய்தா, அல்-முஜாஹித்தீன், இந்திய முஜாஹத்தீன், இந்திய முஜாஹித்தீன், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய நாடு, இஸ்லாம், ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசில், ஐசிஸ், திக்விஜய் சிங், ரஹீல் செயிக், Uncategorized Tags: ஃபத்வா, அர்ஷி குரேஷி, இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காஷ்மீர், குண்டு வெடிப்பு, கொலை, ஜிஹாத், திக்விஜய் சிங், புனிதப்போர், முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள், முகமதியர், முஸ்லிம்கள், முஸ்லீம்கள், ரஹீல் செயிக், லவ் ஜிஹாத் Comments: Be the first to comment « பழையவை அண்மைய பின்னூட்டங்கள் முகமது இஸ்மாயில் இறந்த போது, உ… இல் பெரியாரும், இஸ்லாமும… திருக்குறள் விற்று ரூ.65 கோடி… இல் vedaprakash திருக்குறள் விற்று ரூ.65 கோடி… இல் vedaprakash திருக்குறள் விற்று ரூ.65 கோடி… இல் vedaprakash திருக்குறள் விற்று ரூ.65 கோடி… இல் vedaprakash அண்மைய பதிவுகள் ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமா-கம்யூனலிஸமா, ஹலாலா-ஹரமா, ஷிர்க்கா-இல்லையா? திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி: மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம், ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரை! தமிழக அரசு வேலை வாங்கித் தருவதாக, பயிற்சி, அரசு ஆணை சகிதம் கொடுத்து, நூதன மோசடி! தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் உட்பட மூன்று பேர் கைது! முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில் பாலியல் தொல்லை – ஆசிரியர் ஹபீப் கைது! வண்ணாரம்பூண்டி களத்தூர் – முஸ்லிம்கள் அங்கு இந்து மக்களின் நம்பிக்கைகளில் தலையிடுவது, தடுப்பது, கலவரத்தில் இறங்குவது ஏன்? காப்பகம் காப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2021 (1) ஓகஸ்ட் 2021 (1) ஜூலை 2021 (1) ஜூன் 2021 (1) மே 2021 (1) பிப்ரவரி 2021 (2) ஓகஸ்ட் 2020 (3) ஜூலை 2020 (1) ஜூன் 2020 (1) மே 2020 (1) ஏப்ரல் 2020 (6) மார்ச் 2020 (6) பிப்ரவரி 2020 (2) நவம்பர் 2019 (2) ஒக்ரோபர் 2019 (1) ஜூலை 2019 (1) ஜூன் 2019 (3) மே 2019 (2) ஜூலை 2018 (2) ஜூன் 2018 (1) மே 2018 (8) பிப்ரவரி 2018 (1) திசெம்பர் 2017 (12) நவம்பர் 2017 (6) செப்ரெம்பர் 2017 (1) ஓகஸ்ட் 2017 (3) ஜூலை 2017 (3) ஜூன் 2017 (3) மே 2017 (2) ஏப்ரல் 2017 (12) மார்ச் 2017 (5) பிப்ரவரி 2017 (5) ஜனவரி 2017 (5) திசெம்பர் 2016 (5) நவம்பர் 2016 (7) ஒக்ரோபர் 2016 (7) செப்ரெம்பர் 2016 (4) ஓகஸ்ட் 2016 (9) ஜூலை 2016 (18) ஜூன் 2016 (1) ஏப்ரல் 2016 (7) மார்ச் 2016 (3) பிப்ரவரி 2016 (8) ஜனவரி 2016 (8) திசெம்பர் 2015 (3) நவம்பர் 2015 (18) ஒக்ரோபர் 2015 (6) செப்ரெம்பர் 2015 (7) ஓகஸ்ட் 2015 (10) ஜூலை 2015 (3) மே 2015 (6) ஏப்ரல் 2015 (2) மார்ச் 2015 (4) பிப்ரவரி 2015 (1) ஜனவரி 2015 (4) திசெம்பர் 2014 (3) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (7) செப்ரெம்பர் 2014 (1) ஜூன் 2014 (1) மே 2014 (3) ஏப்ரல் 2014 (6) மார்ச் 2014 (8) பிப்ரவரி 2014 (7) ஜனவரி 2014 (5) திசெம்பர் 2013 (9) நவம்பர் 2013 (4) ஒக்ரோபர் 2013 (8) செப்ரெம்பர் 2013 (8) ஓகஸ்ட் 2013 (6) ஜூலை 2013 (7) ஜூன் 2013 (3) மே 2013 (8) ஏப்ரல் 2013 (6) மார்ச் 2013 (20) பிப்ரவரி 2013 (6) நவம்பர் 2012 (1) ஒக்ரோபர் 2012 (1) ஓகஸ்ட் 2012 (10) ஜூன் 2012 (2) ஏப்ரல் 2012 (2) பிப்ரவரி 2012 (1) ஜனவரி 2012 (7) திசெம்பர் 2011 (7) நவம்பர் 2011 (5) ஒக்ரோபர் 2011 (6) செப்ரெம்பர் 2011 (2) ஜூலை 2011 (2) மே 2011 (6) ஏப்ரல் 2011 (1) மார்ச் 2011 (7) பிப்ரவரி 2011 (4) ஜனவரி 2011 (7) திசெம்பர் 2010 (4) நவம்பர் 2010 (8) ஒக்ரோபர் 2010 (11) செப்ரெம்பர் 2010 (12) ஓகஸ்ட் 2010 (15) ஜூலை 2010 (30) ஜூன் 2010 (6) மே 2010 (21) ஏப்ரல் 2010 (25) மார்ச் 2010 (22) பிப்ரவரி 2010 (16) ஜனவரி 2010 (22) திசெம்பர் 2009 (20) நவம்பர் 2009 (29) ஒக்ரோபர் 2009 (6) ஃபத்வா அல்லா அழகிய இளம் பெண்கள் அவமதிக்கும் இஸ்லாம் ஆப்கானிஸ்தான் ஆம்பூர் இந்திய முஜாஹித்தீன் இந்துக்கள் இமாம் இஸ்லாமிய தீவிரவாதம் இஸ்லாமியத் தீவிரவாதம் இஸ்லாம் உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம் ஊடகத் தீவிரவாதிகள் ஐ.எஸ் ஐ.எஸ்.ஐ ஐ.எஸ். தீவிரவாதிகள் ஐஎஸ் ஐஎஸ்ஐஎஸ் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஐசில் ஐசிஸ் ஐதராபாத் கருணாநிதி கற்பழிப்பு கலவரம் காபிர் காஷ்மீரம் காஷ்மீர் குண்டு குண்டு வெடிப்பு குரான் கைது கொலை கொலைவெறி சிரியா சிறுபான்மையினர் சுன்னி செக்யூலரிஸம் செக்ஸ் சென்னை ஜவாஹிருல்லா ஜிஜாதி தீவிரவாதம் ஜிஹாதி ஜிஹாதிகள் ஜிஹாதி தீவிரவாதம் ஜிஹாத் தர்கா தலாக் தாலிபான் தீவிரவாதம் துருக்கி துலுக்கர் நிக்கா நிக்காஹ் பங்களாதேசம் பரவும் தீவிரவாதம் பலி பாகிஸ்தான் புனிதப்போர் மசூதி மதுரை மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம் மிதிக்கும் இஸ்லாம் முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள் முகமதியர் முஜாஹித்தீன் மும்பை முஸ்லிம் முஸ்லிம்கள் முஸ்லீம்கள் லவ் ஜிஹாத் ஷரீயத் ஷியா ஹிஜாப் பிரிவுகள் பிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் 1528ம் வருடத்தைய தஸ்ஜாவேஜ் (4) 1909 (2) 1971 (3) 1993 (1) 2008 குண்டு வெடிப்பு (14) 2014 (3) 24 பர்கானாஸ் (1) 786 (23) Ansar Ghazwat-ul-Hind (1) ஃபத்வா (84) ஃபாத்திமா முஸப்பர் (1) ஃபாத்திமா ரோஸ் (3) ஃபிதாயீன் (45) ஃபேஷன் ஷோ (1) ஃபேஸ்புக் (24) ஃபைஜா அவுதல்ஹா (2) ஃப்ரோனொகிராஃபி (1) அ‌ப்து‌ல் அஜி‌த் (2) அஃறிணை (1) அகழ்வாய்வு (1) அகிம்சை (6) அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் (6) அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனி சட்ட வாரியம் (1) அகிலேஷ் (4) அகிலேஷ் யாதவ் (1) அக்பர் (2) அக்பர் பாஷா (3) அசன் (1) அசன் அலி (1) அசாதுதீன் (6) அசாதுதீன் ஒவைஸி (4) அசாம் (8) அசிங்கப்படுத்திய முகமதியர் (17) அசிடோன் (1) அசோக் மிட்டல் (1) அச்சம் (30) அஜதாரி (1) அஜித்தோவல் (1) அஜிராபானு (3) அஜீஜா அல்-யூசுப் (1) அஜ்மத் அலி (1) அடி (4) அடி உதை (24) அடி வைத்தியம் (2) அடி வைத்திய்ம் (2) அடித்து சித்ரவதை (13) அடிப்படைவாதம் (100) அடிப்பது (2) அடிமை (15) அடிமைத்தனம் (7) அடையாளம் (84) அணைக்கட்டு (1) அண்ணல் நபி (1) அண்ணாதுரை (1) அதிக வட்டி (1) அதிமுக (17) அதிரா பானு (2) அதிலா பானு (2) அது (1) அத்தாட்சி (26) அத்வானி (8) அந்நியசெலாவணி (2) அனீஸ் இப்ராஹிம் (3) அனுமதி (3) அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் (2) அன்சர்-உல்-தவ்ஹீத் (1) அன்சாரி (7) அன்சார் (9) அன்சார் மீரான் (1) அன்பழகன் (3) அன்வருல் ஹக் (1) அன்வர் கஸ்மன் (1) அன்வர் பிஸ்மி (1) அன்ஸார் கஜ்வத்-உல்-ஹிந்த் (1) அபக் உசேன் (1) அபக் ஹுசைன் (1) அபக் ஹுஸைன் (1) அபதல்ஹமீது அபௌத் (1) அபவர்கானந்தர் (1) அபின் (1) அபு சலீம் (8) அபு ஜிண்டால் (14) அபு பகர் அல்-பாக்தாதி (2) அபுசாத்கர் (1) அபூபக்கர் முசலியார் (1) அப்சல் (5) அப்சல் குரு (19) அப்துர் ரஹ்மான் (1) அப்துல் அஜீஸ் (2) அப்துல் ஆஜீஸ் (1) அப்துல் கனில் லோன் (6) அப்துல் கபூர் (1) அப்துல் கயூம் (2) அப்துல் கய்யூம் சேய்க் (4) அப்துல் கரீம் அப்துல் முஹ்சீன் அல்ஜமீன் (1) அப்துல் கரீம் துண்டா (1) அப்துல் காதர் (5) அப்துல் காதர் சுலைமான் (1) அப்துல் குட்டூஸ் (1) அப்துல் நாஸர் மதானி (6) அப்துல் பசித் (2) அப்துல் பாசித் (2) அப்துல் ரகுமான் (2) அப்துல் ரஷீத் (2) அப்துல் வஹீத் கிஸ்தி (1) அப்துல் ஷகில் பாஷா (1) அப்துல் ஹட்வானி (1) அப்துல்லா (10) அப்துல்லா அப்துல் காதர் சுலைமான் (1) அப்துல்லா புகாரி (1) அப்பீல் (3) அப்ரஹாம் (1) அப்ஸல் (3) அமர் சிங் (3) அமர்நாத் யாத்திரை (7) அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்? (25) அமாவாசையும் அப்துல்காருக்கும் (18) அமிர் குஷ்ரு (3) அமிர் குஸ்ரு (3) அமிலம் (1) அமீது சுல்தான் (1) அமீனுத்தீன் (2) அமீன் (3) அமீர் குஷ்ரு (3) அமீல் (1) அமெரிக்க இஸ்லாம் (4) அமெரிக்க இஸ்லாம் ஜிஹாத் (3) அமெரிக்க ஜிஹாதி (10) அமெரிக்க ஜிஹாதி கூட்டுசதி (5) அமெரிக்க ஜிஹாத் (7) அமெரிக்க-ஜிஹாத் கூட்டு (2) அமைதி (58) அமைதி என்றால் இஸ்லாமா (14) அமைதி டிவி (9) அமைதி தூதுவர் (4) அமைத்-உல்-அன்ஸார் (3) அமோனியம் (3) அம்பத்தூர் (4) அம்பேத்கர் (8) அம்மணம் (4) அம்மா அரிசி (1) அம்மாவுக்குத் தெரியாதா முஜாஹித்தீன்கள் (2) அம்மோனியம் (3) அயோத்தியா (2) அயோத்யா (2) அரக்கான் (1) அரசாங்கத்தை மிரட்டல் (8) அரசியல் விபச்சாரம் (8) அரசியல்வாதிகள் (8) அரசு நிதி (11) அரசு முத்திரை (1) அரிசி (2) அரிசி அரசியல் (2) அரிப்பு (1) அருவம் (3) அரேபிய ஷேக்கு (9) அரேபியா (39) அர்ஷி குரேஷி (1) அறுப்பு (4) அலங்காநல்லூர் (1) அலர்ஜி (2) அலஹாபாத் தீர்ப்பு (4) அலாவுத்தீன் கில்ஜி (2) அலி (13) அலி அக்பர் (2) அலி குரேஷி (1) அலி சகோதரர்கள் (5) அலி ஷா கிலானி (3) அலி ஷா ஜிலானி (4) அலிகர் (3) அலீத் அப்தல் ரஸாக் (1) அல் (1) அல் – உம்மா (81) அல் – காய்தா (74) அல் – கொய்தா (76) அல் அர்பி (34) அல் முஹம்மதியா (45) அல் ஹதீஸ் (30) அல்- பதர் (14) அல்-இமாம் அலி அல்-அரிதி (3) அல்-உஜ்ஜா (1) அல்-உம்மா (16) அல்-ஜரௌனி (1) அல்-திர்ஹம் (1) அல்-பர்மவியாஹ் (3) அல்-மனத் (2) அல்-மம் அலி பின் அல்-தாலிப் (2) அல்-முஜாஹித்தீன் (10) அல்-முஹாஜிரோன் (3) அல்-லத் (2) அல்ஜமீன் (6) அல்டேப் உசேன் (2) அல்மாஸ் எலெக்ட்ரானிக்ஸ் (1) அல்லா (99) அல்லா என்ற வார்த்தை உபயோகம் (14) அல்லா சொன்னதால் சுட்டேன் (3) அல்லா பெயர் (25) அல்லா பெயர் உபயோகம் (8) அல்லாஹூ அக்பர் (3) அல்லாஹ் (9) அல்வலீது பின் தலால் (1) அழகிய இளம் பெண்கள் (35) அழிப்பு (31) அழிவு (37) அழுகிய நிலையில் (5) அழுகை (6) அழுக்கு (31) அவதூறு (26) அவன் (1) அவமதிக்கும் இஸ்லாம் (73) அவள் (3) அவுட் லுக் (2) அவூலியா (3) அஷ்ரப் அலி (1) அஷ்ரப் அலி கான் (1) அஸதுல்லா அக்தர் (5) அஸ்ரப் அலி (4) அஸ்லாம் பாஷா (2) அஸ்ஸாம் (6) அஹமதியா (18) அஹமது ஷா புகாரி (4) அஹம்மதியா (5) அஹிம்சை (5) அஹ்மதியா (8) அஹ்மதியாக்கள் (8) அஹ்மது ஒமர் சையீது செயிக் (2) அஹ்மது ஒமர் சையீது செயிது (1) ஆகா சைது ஹஸான் (1) ஆக்சிஜன் (1) ஆக்ரா (1) ஆசம் கான் (2) ஆசாத் ராவுப் (1) ஆசிக் (1) ஆசிக் மீரா (2) ஆஜாதிதான் ஒரே வழி (1) ஆஜாத் ரௌப் (1) ஆஜிரா பேகம் (1) ஆஜ்மீர் (4) ஆடி (1) ஆடித் திருவிழா (1) ஆடித்திருவிழா (2) ஆடியோ (1) ஆடு (3) ஆட்கொல்லி (2) ஆட்டம் (4) ஆணல்ல (1) ஆணவக் கொலை (1) ஆணை (1) ஆண் உறுப்பு (2) ஆண்குறி (2) ஆண்குறி சதை (1) ஆண்குறி சதை அறுப்பு (1) ஆண்டவனின் எச்சரிக்கை (7) ஆண்பால் (2) ஆண்மை (3) ஆதரவு (9) ஆதாரம் (5) ஆதி திராவிடர் (1) ஆதி திராவிடர் துறை (1) ஆதிரா பானு (2) ஆதிலா பானு (2) ஆத்திகம் (2) ஆந்திரா (3) ஆபக் உசேன் (1) ஆபாசமான வார்த்தை (2) ஆபாசம் (7) ஆபு சலீம் (1) ஆப்கன் (2) ஆப்கானிஸ்தான் (21) ஆமென் (2) ஆம் ஆத்மி கட்சி (1) ஆம்பூர் (10) ஆயிஷா (3) ஆயிஷா இந்திரா பீ (1) ஆயிஷா சித்திக் (7) ஆயிஸா தகியா (1) ஆயுதச் சட்டம் மற்றும் வெடிமருந்து சட்டம் (4) ஆயுதப்படை (8) ஆராய்ச்சி செய்யும் போலீஸார் (3) ஆர்.எஸ். சம்சுதீன் பள்ளிவாசல் (1) ஆர்.எஸ்.எஸ் (7) ஆர்.எஸ்.சர்மா (3) ஆர்குட் (2) ஆர்த்தி சாப்ரா (2) ஆர்பாட்டம் (10) ஆறு மனைகள் (1) ஆற்காடு (4) ஆலி ஷா கிலானி (1) ஆலிஃப்-லம்-மிம் (4) ஆளுமை (1) ஆவி (3) ஆஸம் கான் (7) ஆஸ்கார் (1) ஆஸ்கார் பிலிம்ஸ் (1) இ.அகமது (2) இக்பால் (2) இசை (5) இச்சை (13) இட ஒதுக்கீடு (7) இடிப்பு (3) இடுப்பு (3) இணைதள ஜிஹாத் (38) இத்தத் (2) இந்தி ஜிஹாதி (4) இந்திய ஊடகங்கள் (3) இந்திய கொடி (2) இந்திய முஜாஹத்தீன் (63) இந்திய முஜாஹித்தீன் (69) இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் (7) இந்திய யுனீயன் முஸ்லீம் லீக் (29) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி (2) இந்திய யூனீயன் முஸ்லீம் லீக் (32) இந்திய விரோதத் தன்மை (63) இந்திய விரோதம் (38) இந்திய விரோதி ஜிலானி (15) இந்தியத் தன்மை (55) இந்தியத்தனம் (55) இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (2) இந்தியப் பிரச்சினை (3) இந்தியர்களை ஏமாற்றுதல் (69) இந்தியா (108) இந்தியாவின் மேப் (40) இந்தியாவின் வரைப்படம் (33) இந்திரா (2) இந்து எழுச்சி முன்னணி (1) இந்து காதலனும் முகமதிய காதலியும் (8) இந்து காதலியும் முகமதிய காதலனும்! (9) இந்து கோவில்கள் தாக்கப்படுவது (20) இந்து தமிழன் (2) இந்து-முஸ்லிம் (7) இந்து-முஸ்லிம் உரையாடல் (47) இந்து-முஸ்லிம் ஒற்றுமை (43) இந்து-முஸ்லிம் சந்திப்பு-உரையாடல்கள் (36) இந்துக்களின் உரிமைகள் (35) இந்துக்களைக் கொல்வது (35) இந்துக்கள் (72) இந்துக்கள் கொடுமைப் படுத்தப்படல் (26) இந்துக்கள் கொல்லப்படுதல் (28) இந்துக்கள் சித்திரவதை (17) இந்தோனேசியா (3) இன்பம் (4) இன்ஸிமாம்-உல்-ஹக் (2) இன்ஸ்பெக்டர் (2) இபின் பதூதா (1) இப்தார் (3) இப்ராஹிம் (2) இப்ராஹிம் அப்சலம் (1) இப்ராஹிம் மௌல்வி (1) இமயமலை (1) இமயம் (1) இமாம் (51) இமாம் அலி (11) இமாம் கவுன்சில் (5) இமாம் செக்ஸ் (3) இமாம் ஹுஸாஇன் (1) இமாம்கள் (8) இம்தியாஜ் பஜாஜ் (1) இம்ரான் கான் (1) இம்ரான் ஹஸன் (1) இரட்டை இலை (3) இரட்டை வேடம் (26) இரண்டாம் பெண்டாட்டி (5) இரண்டாம்மனைவி (6) இரவு தொழுகை (1) இரவு விடுதி (1) இராக் (9) இரான் (5) இராம கோபாலன் (2) இருக்கின்ற நிலை (8) இருக்கின்றது என்ற நிலை (5) இருக்கும் தெய்வங்கள் (2) இருட்டு (1) இர்ஃபான் ஹபீப் (2) இறப்பு (3) இறுதி ஊர்வலம் (1) இறை தூதர் (6) இறைதூதர் (7) இறைத்தூதர் (7) இறைவன் (2) இலக்கியம் (2) இலங்கை (2) இலங்கை குண்டுவெடிப்பு (2) இலவச அரிசி (1) இலா (1) இலாஹி (2) இல் (1) இல்லாத தெய்வங்கள் (2) இல்லாத நிலை (7) இல்லாதது என்ற நிலை (4) இளைய ராஜா (1) இஸ்மாயில் (3) இஸ்ரத் ஜஹான் (2) இஸ்லாமாபாத் (3) இஸ்லாமி தெரிக் பாகிஸ்தானி (2) இஸ்லாமிக் சேவக் சங் (2) இஸ்லாமிக் ஸ்டூடன்ஸ் மூவ்மென்ட் (2) இஸ்லாமிக் ஸ்டேட் (2) இஸ்லாமிய இறையியல் (46) இஸ்லாமிய சாதி (15) இஸ்லாமிய ஜாதி (14) இஸ்லாமிய திருமணச் சட்டம் (2) இஸ்லாமிய தீவிரவாதம் (26) இஸ்லாமிய நாடு (45) இஸ்லாமிய பிரச்சினை (5) இஸ்லாமிய மாநாடு (1) இஸ்லாமிய வங்கி (13) இஸ்லாமியத் தமிழன் (13) இஸ்லாமியத் தீவிரவாதம் (110) இஸ்லாமியத் தீவிரவாதி (97) இஸ்லாமியர்களை கொல்லும் முறை (6) இஸ்லாமிஸ்ட் (3) இஸ்லாமும் இந்தியாவும் (81) இஸ்லாம் (104) இஸ்லாம் செக்ஸ் (4) இஸ்லாம் நகர் (2) இஸ்லாய மாநாடு (1) ஈ. வே. ரா (6) ஈட்டிக்காரன் (1) ஈத் (2) ஈத் இ மீலாதுன் நபி (1) ஈத் இ மீலாத்-உந் நபவி (1) ஈரான் (2) ஈரோடு (4) ஈழ குண்டுவெடிப்பு (3) ஈழம் (3) உக்கடம் (8) உக்கா (1) உடலின்பம் (6) உடலுறவு (9) உடலுறவுக் காட்சிகள் (5) உடல் (6) உடைப்பு (3) உதய சூரியன் (4) உதவி (2) உதவியாள் (2) உதை (1) உபவாசம் (1) உபி (3) உமர் ஃபரூக் (5) உமர் அப்துல்லா (1) உமர் மாடீன் (1) உமையாத் (1) உயித்தெழுதல் (5) உயிர் (3) உயிர் பலி (14) உயிர்கொல்லி (3) உரிமை (3) உருது ஜிஹாதி (2) உருது மொழி (18) உருவ வழிபாடு (13) உருவம் (2) உரூஸ் (5) உறவினர் (6) உறுப்பினர் நியமனம் (1) உலமா வாரியம் (9) உலமாக்கள் (17) உல்லாசம் (5) உளவாளி (6) உளவு (3) உள் ஒதுக்கீடு (8) உள்துறை அமைச்சகம் (19) உள்துறை சூழ்ச்சிகள் (55) உள்ளாடை (1) உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம் (79) உள்ளூர் தீவிரவாத கும்பல் (35) உள்ளே நுழைவது (28) ஊடக வித்தைகள் (8) ஊடல் (4) ஊடுருவல் (2) ஊரடங்கு உத்தரவு (10) ஊர்வலம் (7) எச்சரிக்கை (9) எதிர்ப்பு (6) என்.ஐ.ஏ (2) என்கவுன்டர் (4) என்டிடிவி (2) எபிடிரின் (1) எம். எஃப். ஹுஸைன் (6) எம்ஜிஆர் (1) எரித்தல் (1) எரிப்பு (12) எரியூட்டல் (4) எரியூட்டு (3) எலோஹிம் (1) எல் (1) எல். முருகன் (1) எல்லை (7) எழுப்பும் நோக்கம் (1) எஸ். தமிழ்வாணன் (1) எஸ். ஹைதர் அலி (2) எஸ்.எம்.எஸ் (5) எஸ்.எம்.எஸ்கள் (1) எஸ்.எஸ். முஹம்மது இப்ராஹிம் (1) எஸ்.ஐ சூபி (1) எஸ்.சி (1) எஸ்.டி.பி.ஐ (5) எஸ்.வி. பட்டனம் (1) எஸ்.ஸி (1) எஸ்சி (2) எஸ்டிபிஐ (5) ஏ. கே. கான் (8) ஏ.ஆர்.ரஹ்மான் (1) ஏ.கே.அந்தோணி (1) ஏமாற்று வேலை (1) ஏர் இந்தியா (1) ஏர்வாடி (5) ஏர்வாடி காசிம் (4) ஏர்வாடி தர்கா (1) ஐ.எஸ் (38) ஐ.எஸ். தீவிரவாதிகள் (37) ஐ.எஸ்.ஐ (32) ஐ.டி.தீவிரவாதி (4) ஐஎஸ் (26) ஐஎஸ்ஐஎஸ் (41) ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் (37) ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் (9) ஐசில் (21) ஐசிஸ் (34) ஐதராபாத் (14) ஐபிஎல் கொச்சி அணி (1) ஐமுமுக (4) ஐஸில் (17) ஒசாமா பின் லேடன் (14) ஒசாமா பின்லேடன் (9) ஒட்டக பால் (2) ஒட்டகம் (1) ஒபாமாவின் யுத்தம் (2) ஒப்பாரி (1) ஒப்பியம் (1) ஒமர் இஸ்மயில் மொஸ்தபி. (1) ஒமர் மாடீன் (2) ஒருதலை காதல் (1) ஒருவழி இந்து-முஸ்லீம் காதல் கதை! (6) ஒருவழி இந்து-முஸ்லீம் திருமணங்கள்! (8) ஒற்றன் (2) ஒழிப்பு (1) ஒழுங்கு (1) ஒவைஸி (5) ஒஸாமா பின் லேடன் (12) ஓட்டு (25) ஓட்டுவங்கி (28) ஓம் (2) ஓரின சேர்க்கை (1) ஔரங்கசீப் (12) கங்கணா (2) கங்கையம்மன் கோவில் (1) கசாப் (9) கசாப்புக்காரத்தனம் (5) கஜல் (1) கஜினி (2) கஞ்சா (2) கஞ்சி (8) கஞ்சி அரிசி (1) கஞ்சி குல்லா (5) கடத்தல் (1) கடத்தல் மிரட்டல் (3) கடலூர் (1) கடவுள் (3) கடார் (1) கடை (3) கடையநல்லூர் (3) கட்சிமாறி (1) கட்ட சாகுல் (1) கட்டப் பஞ்சாயத்து (2) கட்டப்பஞ்சாயத்து (2) கட்டி வைத்தல் (1) கட்டுக்கதை (3) கட்டுப்பாடு (3) கட்டை அவிழ்த்தல் (2) கணிப்பு (1) கண்ணூர் (1) கதறல் (1) கத்தி (8) கந்தசாமி தெரு (4) கந்தூரி (1) கனிமொழி (2) கன்னட ஜிஹாதி (2) கன்னட பிரபா (1) கன்னட ரக்ஸன வேதிகே (1) கன்னி (2) கன்னிக்கழிப்பு (3) கன்னித்தன்மை (3) கன்ன்ட ஜிஹாதி (1) கமல் செனாய் (1) கமால் ஃபரூக் (1) கம்பி (1) கம்பீர் (1) கம்யூனிசம் (4) கம்யூனிஸ-காங்கிரஸின் “செக்யூலரிஸக் கூட்டுத் விளையாடல்கள் (9) கம்யூனிஸம் (3) கராச்சி (3) கராச்சி திட்டம் (34) கரீம் காம்பவுண்ட் (1) கரு (2) கரு தரித்தல் (1) கருணா ஃபௌண்டேஷன் (1) கருணாநிதி (21) கருணை (3) கருணை மனு (1) கருணைக் கொலை (1) கருதரிப்பு (1) கருத்து (4) கருத்துச் சுதந்திரம் (8) கருத்துரிமை (3) கருப்பு ஆடு (1) கரேழி (1) கரோனா (6) கரோனா ஜிஹாத் (3) கரோனா தொற்று (6) கர் வாபசி (1) கர் வாபஸி (1) கர்நாடகா (1) கர்பலா (9) கர்பலா உயிர்த் தியாகம் (4) கர்ப்ப தானம் (1) கர்ப்பமாக்கல் (1) கர்ப்பம் (3) கறை (1) கற்களை வீசி தாக்குவது (10) கற்பழிக்கும் பாபா ஷேக் (1) கற்பழிக்கும் ஷேக் (2) கற்பழிப்பாளி (2) கற்பழிப்பு (29) கற்பழிப்பு ஜிஹாத் (14) கற்பு (25) கற்ப்பழிப்பாளி (1) கலவரங்கள் (44) கலவரம் (62) கலவி-சரச வீடியோ (4) கலாட்டா (11) கலிமா (5) கலை (2) கல் (6) கல் வீச்சு (8) கல்யாண அகதிகள் (2) கல்யாணம் (4) கல்லடி ஜிஹாத் (24) கல்லறை (1) கல்லூரி தகர்ப்பு (4) கல்லெரிந்து கலவரம் (28) கல்லெறி வெறிக்கூட்டம் (28) கல்வத் (9) கல்வீச்சு (40) கல்வெட்டு (2) களஞ்சியம் (1) கள்ள உறவு (4) கள்ள நோட்டுகள் (16) கள்ளக் காதல் (4) கள்ளக்காதல் (3) கள்ளக்குடியேறி (1) கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான் (14) கள்ளநோட்டுகள் (5) கழுத்தறுப்பு (4) கழுத்து (1) கவுனி (2) கவுன்சிலர்-ஜெனரல் (1) கவுரவக் கொலை (1) கவுஸ் பாஷா (1) கவ்வாலி (1) கஸ்தூரி (1) காஃபிர் (151) காஃபிர் இந்தியர்கள் (109) காஃபிர்-மோமின் கூட்டணி (46) காஃபிர்கள் (117) காக்ரகார் (1) காங்கிரசுக்கு எச்சரிக்கை (13) காங்கிரஸ் (19) காசர்கோடு (2) காசிம் அன்சாரி (1) காஜா (1) காஜா மொஹிதீன் (1) காஜா ரோடு (2) காஜா ரோட் (2) காஜி (2) காஜி சட்டம் (1) காஜியா நாஷிகா (1) காட்யம் (1) காதர் பாட்சா (1) காதர் மொகிதீன் (4) காதர் மொய்தின் (4) காதர் மொஹ்தீன் (3) காதர்பாஷா (1) காதர்மொய்தின் (5) காதலன் (3) காதலி (4) காதலிப்பது போல் நடித்து ஏமாற்றி மதம் மாற்றூவது! (6) காதலில் போரா காதலன்-காதலி போரா? (8) காதல் (15) காதல் ஜிஹாத் (43) காதல் புனித போர்! (25) காதல் மந்திரக் கட்டு (4) காதல் மந்திரக் கட்டை அவிழ்த்தல் (3) காதிம் (1) காதியா (1) காதியான் (2) காதியான்கள் (4) காந்தஹார் (14) காந்தாரம் (14) காந்தி (2) கானா (1) கான் (2) காபத்துல்லாஹ் (3) காபா (13) காபிர் (17) காமம் (9) காமரூன் (2) காயல்பட்டினம் (3) காயிதே மில்லத் (7) காரைக்கால் (3) கார் (1) கார்டூன் (5) கார்த்திகாயினி (2) காலனி (1) காலிப் (2) காலிஸ்தான் (1) கால் (1) கால்பேடா (1) காளியம்மன் கோவில் (1) காவடி (1) காவலர் (3) காவி (1) காஷ்மீர் (53) காஷ்மீர் கலாட்டா (31) காஷ்மீர் சட்டசபை கலாட்டா (14) காஸா ரோடு (2) காஸா ரோட் (2) கிக் மெஸஞ்சர் (1) கிச்சன் (2) கிச்சன் புகாரி (1) கிச்சன் புஹாரி (1) கிச்சான் (3) கிச்சிப் பாளையம் (2) கிச்சிப்பாளையம் (2) கிடார் (1) கிண்டி மசூதி (1) கினியா (2) கிரக்கம் (2) கிரிக்கெட் விளையாட்டு (3) கிரிஷ் கானார்ட் (1) கிரிஸ் கானார்ட் (2) கிரிஸ் கார்னாட் (1) கிரிஸ்டினா (1) கிரிஸ்தவர் (2) கிருத்துவர் (3) கிருஷ்ணகிரி மலை (1) கிருஸ்துவர் (3) கிரேஸி (1) கிறிஸ்தவ மருத்துவமனை (1) கிலானி (5) கிலாபத் (13) கிலாபத் இயக்கம் (11) கிலாபஹ்.இ.எப்.எக்ஸ் (1) கில்கிட் (1) கிளினிக் (2) கிளைடோரிடெக்டோமி (1) கிளைடோரிஸ் (1) கிழக்கு பாகிஸ்தான் (10) கிழக்கு மித்னாப்பூர் (2) கிஸ்த்வார் (2) கீ-போர்ட் (1) கீழக்கரை (4) கீழுள்ளாடை (1) குக்கர் குண்டு (1) குக்கர் வெடிகுண்டு (2) குஜராத் (11) குஞ்சி (1) குடகு (1) குடல் (1) குடி (1) குடிசைத் தொழிலான கல்வீச்சு (2) குடிப்பிரிவு (2) குடிமகன் (3) குடிமகன்கள் (3) குடியுரிமை (1) குடியுரிமை சட்டம் (1) குடியேறுதல் (2) குடும்ப திவிரவாதம் (2) குடும்பம் (2) குடை (2) குட்டப்பா (1) குட்டு (1) குண்டா (3) குண்டி (5) குண்டு (25) குண்டு தயாரிப்பு (48) குண்டு நேயம் (13) குண்டு வெடிப்பது (60) குண்டு வெடிப்பு (10) குண்டு வெடிப்பு வழக்கு (41) குண்டுவெடிப்பாளி ஜஹ்ரன் ஹாஷிம் (2) குண்டுவெடிப்பு (28) குதா (1) குதாமுல் இஸ்லாம் (2) குதிரை (1) குத்து வைத்தியம் (1) குந்தலீன் பலோச் (2) குன்டலீன் பலூச் (2) குன்னங்குளம் (1) குன்னம்குளம் (1) குன்னின்புரா (1) குன்றம் (1) குன்ஹாலங்குட்டி (1) குப்ரு (1) குமார் விஸ்வாஸ் (1) கும்ப மேளா (1) கும்பமேளா (2) கும்பல் (2) கும்மாளம் (2) குரானா-குறளா (2) குரானில் அரசமரம் (1) குரான் (39) குரான் எரிப்பு (3) குரு (2) குருமா (1) குரூரம் (17) குரோதம் (6) குர்பானி (2) குர்ரம் (1) குறளா-குரானா (2) குறள் (2) குறிச்சி (1) குற்ற மனப்பாங்கு (1) குற்றச்சாட்டு (1) குற்றஞ்சாட்டப்படக்குடிய ஏற்புடையதாக பல ஆவணங்கள் (1) குற்றப் பழக்கம் (1) குற்றம் (4) குலாம் அப்துல் ரஹ்மான் காதரியா (1) குலாம் நபி ஆசாத் (1) குலாம் நபி பய் (1) குலாம் ரசூல் மாலிக் (1) குலுக்கல் (2) குல்லா (11) குல்லா கஞ்சி (3) குல்ஷன்குமார் (2) குளத்துப்புழா (1) குளம் (1) குழந்தை இல்லாததால் பல திருமணம் (1) குழந்தை கற்பழிப்பாளி (1) குழந்தை கற்ப்பழிப்பாளி (1) குழந்தை நரபலி (3) குழந்தை பலி (1) குழந்தை பாலியல் (3) குவைத் (7) குவைத்தில் விபசார கும்பல் (1) குவைத்தில் வீட்டு வேலை (1) குஷித் ஆலம் கான் (5) கூடல் (2) கூடாரம் (1) கூட்டணி (11) கூட்டணி சித்தாந்தம் (7) கூட்டணி தர்மம் (7) கூட்டம் (2) கூட்டுக் குடும்பம் (1) கூர்க் (1) கூழ் (1) கூழ் அரிசி (1) கெம்ப கௌடா (1) கேக் (1) கேச்சேரி (1) கேணிக்கரை (1) கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன் – குற்றங்கள் அதிகம் பதிவு (1) கேன்ஸர் (1) கேப் (1) கேரள ஜிஹாதி (21) கேரள ஜிஹாதிகள் (22) கேரள தீவிரவாதம் (26) கேரள பயங்கரவாதம் (25) கேரள போலீஸார் (8) கேரள முஸ்லீம் சேவை சங்கம் (6) கேரளா (7) கேல் (1) கேவலப்படுத்திய முஸ்லீம்கள் (2) கை (1) கை-உன்–நாஸ் இன்டர்நேஷனல் டிரஸ்ட் (1) கைதி (4) கைது (26) கைபேசி (3) கையெறி குண்டுகள் (12) கொக்கி (1) கொக்கோகப் பேச்சு (1) கொக்கோகம் (5) கொங்கலம்மன் கோவில் (5) கொடகு (1) கொடி (10) கொடி எரிப்பு (7) கொடிய நோய் (1) கொடியேறி பாலகிருஷ்ணன் (1) கொடியேற்றம் (6) கொடியை அவமத்தித்த கிலானி (1) கொடுக்கு வைத்தியம் (1) கொடுங்கலூர் (1) கொடுங்கல்லூர் (1) கொடூரம் (6) கொடை (1) கொண்டாட்டங்கள் (1) கொண்டாட்டம் (5) கொரியர் (1) கொரியர் கம்பனி (1) கொரோனா (4) கொரோனா ஜிஹாத் (1) கொரோனா பாதிப்பு (1) கொரோனா வைரஸ் (1) கொற்கை (1) கொலை (31) கொலை குண்டுவெடிப்பாளி ஜஹ்ரன் ஹாஷிம் (1) கொலை சடங்கு (1) கொலை செய்வது (6) கொலை மிரட்டல் (3) கொலை வழக்கு (12) கொலை வெறி (9) கொலைகாரர்கள் (5) கொலைவெறி (11) கொல் (1) கொல்கொத்தா (1) கொல்லம்பாளையம் (3) கொளத்தூர் மணி (1) கொள்ளை (1) கொள்ளையடி (1) கொழுக்கொட்டை (1) கோகர்ணம் (1) கோக்கைன் (1) கோஜா (1) கோட்டக்குப்பம் (1) கோபுரம் (1) கோரிப்பாளையம் (1) கோலீன் ல ரோஸ் (1) கோழி (1) கோழை (1) கோவிட்-19 (1) கோவில் (1) கோவில் இடிப்பு (1) கோவை (4) கௌதம் கம்பீர் (1) கௌதம் நவல்கா (1) கௌதாரி (2) கௌரவக் கொலை (1) கௌரவம் (2) கௌஹாத்தி (2) க்ஃப் வாரிய சிறப்பு நிர்வாக அதிகாரி (1) சகஜமாக இருந்து வரும் நிலை (1) சகிப்பு (2) சகிப்புத் தனம் (3) சகிப்புத் தன்மை (5) சகிப்புத்தனம் (4) சகிப்புத்தன்மை (5) சகேதன் விழா (1) சகோதரர் (2) சகோதரி (1) சங்கப் பரிவார் (2) சங்கம் (2) சங்கராச்சாரி (2) சசி தரூர் (1) சச்சிதானந்த பாரதி (1) சஜித் (1) சஜ்ஜத் லோன் (2) சஞ்சய் (1) சஞ்சய்தத் (2) சடங்குகள் (1) சட் (3) சட்கா (1) சட்ட வாரியம் (1) சட்டசபை (3) சட்டத்துறையினர் (1) சட்டத்தை வளைப்பது! (6) சட்டமீறல் (17) சட்டம் (17) சட்டம் மீறல் (16) சட்டவிரோதம் (1) சண்டை (4) சண்டை போடுவது (3) சதி (2) சதை (2) சத்திய சரணி (1) சத்திய சரனி (1) சத்தியாகிரகம் (1) சந்தனகூடு (1) சந்தனம் பூசும் உரூஸ் வைபவம் (1) சந்தனம் பூசும் நிகழ்ச்சி (2) சந்தேகம் (7) சனிக்கிழமை (1) சன்னி (8) சன்னி ஜமைதுல் உல்மா (3) சபி அர்மார் (1) சமத்துவ ஞானிகள் (1) சமத்துவம் (3) சமரசப்பேச்சு (9) சமரசம் (3) சமஸ்கிருதம் (3) சமாதி (2) சமில் பஸேவ் (1) சமீம் (1) சமீரா பானு (1) சமீராபானு (1) சம்சுதின் (1) சம்சுதீன் (5) சம்பள உயர்வு (1) சம்பளம் (2) சம்ஸ்கார வேதி (2) சயீத் நூரி (1) சரசமான பேச்சு (1) சரசம் (1) சரவணன் (1) சரஸ் (1) சரித்திர ஆதாரம் (2) சரித்திரம் (2) சரீயத் (73) சரீயத் சட்டம் (58) சர்கோதா (1) சலஹ் அப்துல் ரஸாக் (1) சலாபிசம் (8) சலாபிஸம் (8) சலாமியா பானு (2) சலாவுத்தீன் (3) சல் (1) சல்மான் குர்ஷித் (1) சவ ஊர்வலம் (1) சவிகுர் ரஹ்மான் பர்க் (1) சவுதி (17) சவுதி அரேபியா (12) சவுதி மந்திரவாதி (2) சவூ‌தி அரே‌பியா (11) சஹாபுத்தீன் (4) சாகுல் (2) சாகுல் அமீத் (3) சாகுல் ஹமீது (1) சாட்சி (3) சாதர் (4) சாத்தான் (2) சாத்தான்குளத்தினர் (1) சாத்தான்குளம் (1) சானவாஸ் (2) சானியா மிர்சா (9) சான்றிதழ் (2) சான்ஹோ (1) சாப்பாடு (3) சாயிரா பேகம் (1) சாயோப்ரயா பாதை (1) சாய்ஜி (1) சாரதா (1) சாராயம் காய்ச்சுபவர்கள் (1) சார்லி ஹெப்தோ (1) சாலைகளில் தடைகளை ஏற்படுத்துவது (1) சாவு (4) சாஸ்தாம்கோட்டா (3) சிகரம் (1) சிகிச்சை (1) சிகை (2) சிகை அறுப்பு (2) சிகையறுப்பு (2) சிங் (1) சிட்டகாங் (7) சிதம்பர ரகசியங்கள் (18) சிதம்பரம் (2) சிதம்பரம் கோவில் உழைவு போராட்டம் (1) சிதைப்பு (3) சித்தராமய்யா (2) சித்தராமையா (3) சித்தராமைய்யா (2) சித்திக் அலி (2) சித்திரவதை (4) சித்தூர் (5) சிந்து (4) சிந்த்-ஹிந்த் ஹிந்த்-சிந்த் (11) சினிமா (1) சின்ன பசங்க (1) சின்னம் (7) சிபிசிஐடி (2) சிமி (24) சிமுலியா (1) சிம் (7) சிம் கார்ட் (9) சியாசத் (7) சிரச்சேதம் (2) சிரியா (7) சிருங்கேரி (2) சிறுபான்மையினர் (34) சிறுபான்மையினர் நலத்துறை (7) சிறுமி (2) சிறுமிகளின் திருமணத் தடுப்புச் சட்டம் (1) சிறுவரை முன் நிறுத்துவது (1) சிறுவர் கற்பழிப்பு (2) சிறுவர் பாலியல் (4) சிறை (5) சிறை காவலர் (2) சிறைச்சாலை (2) சிறையில் அடைப்பு (6) சிற்பம் (2) சிற்றின்பம் (1) சிலந்தி (1) சிலை (1) சிலை வழிபாடு (6) சில்மிசம் (1) சில்மிஷம் (2) சிவன் கோவில் தாக்கப்பட்டது (3) சீக்கியர் (1) சீட்டாட்டம் (1) சீட்டு (1) சீதக்காதி (1) சீனிக்கட்டி (1) சீரிய குணங்கள் மற்றும் பாவத் தடுப்பு கமிஷன் (1) சுஜயா (1) சுஜயா சந்திரன் (1) சுதந்திரதினம் (1) சுதந்திரம் (3) சுத்தம் (4) சுத்தம் செய்தல் (1) சுத்தி (2) சுந்தர பாண்டியன் (3) சுந்தரி (3) சுனாமி (1) சுனாமி வருவது (1) சுனில் தத் (1) சுன்னத் (19) சுன்னத் ஜமாஅத் (2) சுன்னத் ஜமாத் (2) சுன்னி (31) சுன்னி – இகே மற்றும் ஏபி குழுக்கள் (3) சுன்னி சட்ட போர்ட் (6) சுன்னி சட்டம் (11) சுன்னி முஸ்லீம் சட்டம் (8) சுன்னி வக்ஃப் போர்ட் (8) சுன்னி வாரியம் (6) சுன்னி-ஷியா (16) சுபஹனி மொய்தீன் (2) சுபஹனி மொஹித்தீன் (2) சுபைதத் (1) சுபைதா சொர்னேவ் (1) சுபையா (1) சுமதி (1) சுமோ (1) சுயமரியாதை (3) சுரணை (2) சுரேந்திரன் (1) சுற்றல் (1) சுலைமான் (6) சுலைமான் சேட் (1) சுல்தான் (6) சுல்தான்பேட்டை (5) சுல்பிகர் அலி (2) சுவாமி விவேகானந்தர் (1) சுஷ்மிதா (1) சுஷ்மிதா பானர்ஜி (1) சுஹானி சாந்த் (1) சூஃபி (9) சூஃபி நம்பிக்கையாளர் (4) சூஃபித்துவம் (4) சூடான் (1) சூடு (2) சூடு வைத்தியம் (1) சூடு வைப்பது (1) சூதாட்டம் (1) சூது (2) சூனியம் (3) சூபி (7) சூபித்துவம் (8) சூரத்கல் கடற்கரை (1) சூரையாடு (1) சூளைமேடு (2) சூழ்ச்சி (4) செக்யூலரிஸ கம்பனி (2) செக்யூலரிஸ ஜீவி (14) செக்யூலரிஸ வித்வான்கள் (2) செக்யூலார் அரசாங்கம் (15) செக்ஸ் (9) செக்ஸ் அடிமை (1) செக்ஸ் தொல்லை (4) செக்ஸ்-உறுப்புகளின் படங்கள் (1) செக்ஸ்-ஜிஹாத் (5) செங்கன்னூர் (1) செட்டிப் பல்லக்கு (2) சென்ட்ரல் (2) சென்னை (8) செம்மொழி மாநாடு (1) செயிக் மொஹம்மது ஹஸன் (1) செயிக் ஷமீம் (1) செல் (5) செல்போன் (13) செல்வ காளியம்மன் (1) செல்வ காளியம்மன் கோவில் (1) சேக் தாஹாசத் (1) சேதம் (2) சேர்ந்து வாழும் (1) சேலம் (2) சைக்கிள் குண்டு (1) சைனா மொபைல் (1) சைபர்வெளி ராணுவம் (2) சைப்புன்னிஸா காஜி (1) சைப்புன்னிஸா காத்ரி (1) சையது (2) சையது அப்துல்லா புகாரி (1) சையது இக்பால் (1) சையது சஹாபுத்தீன் (1) சையது பானர்ஜி (1) சையது மன்சூர் (2) சையது முகமது அலி (1) சைரா பேகம் (1) சைவம் (2) சொத்துக்கள் (1) சொந்த வீட்டில் வளர்க்கப்பட்ட தீவிரவாதம் (5) சொந்தமண்ணின் ஜிஹாதி (7) சொரணை (1) சொர்க்கம் (3) சொர்னேவா (1) சோட்டானிக்கரா பகவதி அம்மன் கோவில் (1) சோதனை (2) சோதிடம் (1) சோயப் மாலிக் (9) சோர்வுடன் காணப்பட்ட வீரர்கள் (1) சோறு (1) சோவியத் யூனியன் (1) சோஹைப் இக்பால் (1) சௌகான் (1) சௌத்ரி (2) ஜகன்மோகன் (1) ஜகிர் (2) ஜஞ்சீர் (1) ஜட்டி (1) ஜனநாயகம் (3) ஜமா அத் (10) ஜமா மஸ்ஜித் (2) ஜமாஅத் (14) ஜமாஅத்தார் (4) ஜமாதே-இ-முஸ்தபா (8) ஜமாத் (55) ஜமாத் உலிமா-இ-ஹிந்த் (2) ஜமாத்-உத்-தாவா (30) ஜமாத்-உல்-தாவா (2) ஜமாயத்-உல்-உலமா (29) ஜமிலாபாத் (5) ஜமைத் உல் முஜாஹித்தீன் (1) ஜமைத்-உக்-ஃபர்கன் (7) ஜமைத்-உல்-முஜாஹித்தீன் (6) ஜம்மு-காஷ்மீர் (32) ஜல்ஸா (2) ஜவாஹிருல்லா (16) ஜஹல்லியா (15) ஜஹித் ஹமீது (1) ஜஹ்ரன் ஹாஷிம் (1) ஜாகியா சொமன் (1) ஜாகிர் உசேன் (1) ஜாகிர் நாயக் (19) ஜாகிர் ஹுஸைன் (1) ஜாகீர் (5) ஜாதகம் (1) ஜான்பாஸ் கான் (1) ஜாமியத்-இ-அஹ்லெ ஹடித் (1) ஜாமியா நிஜாமியா (1) ஜாமீன் மறுப்பு (2) ஜார்கெண்ட் (1) ஜார்கென்ட் (1) ஜார்ஜ் வூலின்ஸ்கி (1) ஜாலி (1) ஜாவத் மியான்டட் (1) ஜி-டிவி (2) ஜி. எம். ஷேக் (1) ஜின்னா (12) ஜிப்ராயில் (1) ஜியோஃப் லாவ்சன் (1) ஜிலானி (1) ஜிஷான் ஜோஹர் அப்துல் கனி (2) ஜிஹாதி (43) ஜிஹாதி அமெரிக்கக் கூட்டு (3) ஜிஹாதி அமெரிக்கர் (3) ஜிஹாதி அமெரிக்கர்கள் (3) ஜிஹாதி குருரக் குணம் (18) ஜிஹாதி கொலைக்காரர்கள் (36) ஜிஹாதி ஜேன் (5) ஜிஹாதி நேயம் (30) ஜிஹாதி வெறியாட்டம் (48) ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு (56) ஜிஹாதிகளுக்கு சம்பளம் (55) ஜிஹாதிகளுக்கு பணம் (61) ஜிஹாதித்தனம் (84) ஜிஹாதித்துவம் (85) ஜிஹாத் (162) ஜிஹாத் கையேடு (63) ஜிஹாத் தன்மை (62) ஜீனத் சவுகத் அலி (2) ஜீன் காபு (1) ஜீப் (2) ஜீவானாம்சம் (6) ஜீஹாதிகள் (2) ஜும்மா மசூதி (1) ஜெகத் கஸ்பர் ராஜ் (1) ஜெட் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜெத்தா (1) ஜெயக்குமார் (2) ஜெயந்தி (3) ஜெயபிரதா (2) ஜெயலலிதா (8) ஜெயா மேனன் (1) ஜெயித் ஹமீத் (1) ஜெயினுல் ஆபிதீன் (2) ஜெயிலர் (5) ஜெயில் (8) ஜெயில் உடைப்பு (1) ஜெயில் பூட்டு (1) ஜெய்பூர் (2) ஜெய்ப்பூர் (3) ஜெய்ஸ்-இ-மொஹம்மது (2) ஜெலட்டின் குச்சிகள் (6) ஜெலேட்டின் குச்சி (1) ஜேம்ஸ் லெஸ்லி லூயிஸ் (1) ஜேவித் ஷேய்க் (2) ஜைனபா (2) ஜைனம் (2) ஜைனுல் ஆபிதீன் (3) ஜைப்புன்னிஸா காஜி (1) ஜைப்புன்னிஸா காத்ரி (1) ஜைஸ்-உல்-மொஹம்மது (1) ஜோதிடம் (2) ஜோத்பூர் (1) ஞானம் (1) டாக்கா (3) டாக்கா தாக்குதல் (3) டிடோனேடர் (3) டிரம் (1) டிரை-அசிடோன் டிரை-பெராக்ஸைட் (1) டிவிட்டர் (3) டீசல் (1) டீனா (1) டுனிசியா (2) டுனிஸியா (1) டுவென்டி-20 (2) டூனிஸ் (1) டெட்டனேட்டர் (10) டெட்டனேட்டர்கள் (13) டெட்டா ஷூ (1) டெரிக்கிங் (1) டெலிகிராம் (1) டெலேவார் சையிதீ (1) டெலேவார் ஹொஸைன் (1) டெலேவார் ஹொஸைன் சையிதீ (1) டெல்டா ஷூ (1) டெஹ்ரான் (1) டேட்டிங் (2) டேவிட் ஹெட்மேன் கோல்மென் (3) டைகர் மேமன் (2) டைகர் மேமம் (1) டைமர் (2) டைம் (5) டொமினிகா (1) டோகு உம்ரோவ் (1) த.மு.மு.க (10) தகவல் தொழில்நுட்பம் (1) தகியா (1) தக்காண முஜாஹித்தீன் (23) தக்தீர் (1) தங்கக் கட்டி (2) தங்கக்கட்டி (2) தங்கம் (2) தசை (1) தச்சநல்லூர் (1) தஞ்சாவூர் (1) தடியடி (2) தடியன்டவிடே நசீர் (4) தடுக்கப்பட்டது (3) தடுப்பது (2) தடை (10) தடை செய்யப்பட்ட துப்பாக்கி (2) தடை செய்யப்பட்ட ரகம் (3) தண்டனை குறைப்பு (1) தண்ணீர் குடித்தால் அடி (2) தண்ணீர் குடித்தால் உதை (2) தந்தம் (1) தந்தை மதம் (1) தனி நாடு (1) தனிமைப் படுத்துதல் (1) தனிமைப்படுத்துதல் (1) தனியாக ஆணுடன் இருப்பது (2) தன்னாட்சி (4) தன்யா (1) தப்பான ஆட்டம் (1) தப்பான தீர்ப்பு (1) தப்பித்தல் (2) தப்லீக் (2) தப்லீக் ஜமாஅத் (2) தமாம் (1) தமிமும் அன்சாரி (1) தமிமுல் அன்சாரி (2) தமிழக அரசு (1) தமிழக அரசு வேலை (1) தமிழக அரசு வேலை ஆணை (1) தமிழகத்து ஜிஹாதி (10) தமிழகத்து தீவிரவாதி (8) தமிழ் இந்து (4) தமிழ் ஜிஹாதி (10) தமிழ் நாத்திகன் (5) தமிழ் முஸ்லிம் (5) தமிழ் முஸ்லீம் (19) தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் (1) தமிழ்நாடு சுன்னத் ஜமாத் (3) தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை (1) தமிழ்நாடு தவ்ஹீத் (4) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (4) தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் (8) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (1) தமிழ்நாடு வக்பு வாரியம் (1) தமிழ்நாடு ஹஜ் கமிட்டி (4) தமீமுன் அன்சாரி (2) தமுமுக (18) தயாநிதி மாறன் (1) தருமம் (1) தரை வாடகை (1) தர்கா (14) தர்ஜி (1) தர்பங்கா (1) தர்மம் (2) தற்காலிக மனைவி (1) தற்கொலை (3) தற்கொலை குண்டு வெடிப்பு (5) தலாக் (24) தலாக்-தலாக்-தலாக் (7) தலித் (4) தலித் போர்வை (2) தலித் முஸ்லீம் (7) தலித் முஸ்லீம்கள் (6) தலிபான் (23) தலிபான் அமைப்பினர் தண்டனைகள் (17) தலை (4) தலையோலபரம்பு (1) தலைவெட்டி (4) தவ்ஹீத் (1) தவ்ஹீத் ஜமாஅத் (1) தஸ்லிமா (7) தஸ்லிமா நஸ்.ரீன் (5) தஸ்லிமா நஸ்ரின் (1) தஹவ்வூர் ஹுஸைன் ரானா (11) தஹவ்வூர் ஹுஸ்ஸைன் ரானா (5) தானியல் (3) தானியா தாஷிபா (1) தாய் (2) தாய் புகார் (1) தாய் மதம் (1) தாய்மதம் (1) தாய்லாந்து (3) தாய்வான் (1) தாருல்-இஸ்லாம் (2) தாருல்-ஹராப் (2) தார்-உல்-இஸ்லாம் (1) தாலி (1) தாலிபன் நீதிமன்றங்கள் (16) தாலிபான் (26) தாளம் (1) தாவுத் இப்ராஹிம் (12) தாவூதின் காதலி (5) தாவூத் இப்ராஹிம் (14) தாவூத் சையது ஜிலானி (4) தாவூத் ஜிலானி (19) தாவூத் ஜிலானியின் மனைவிகள் (3) தாவூத் மியான் கான் (1) தாஹிர் ஷைஜாத் (2) தி இந்து (2) திக்விஜய் சிங் (2) தினமணி (1) தினமலர் (1) திப்பு (8) திப்பு சமாதி (1) திப்பு சுல்தான் (8) திப்பு ஜெயந்தி (3) திப்புவின் கத்தி (1) திமுக (4) தியாகப் பலி (10) தியாகம் (10) தியாகி (1) திராவிட நாத்திகர்கள் (5) திரி (1) திரிணமூல் (1) திரிணமூல் காங்கிரஸ் (1) திரிபு (1) திரிபுரா (1) திருக்குறள் (2) திருடு (1) திருட்டு (2) திருட்டு சிடி பதுக்கல் (1) திருநங்கை (1) திருப்பதி (2) திருப்பரக்குன்றம் (3) திருப்பரங்குன்றம் (3) திருமணத் தடுப்புச் சட்டம் (1) திருமணத்திற்கு முன்பாக சேர்ந்து வாழ்வது (4) திருமணம் (12) திருமா (5) திருமா வளவன் (5) திருமாவளவன் (5) திருவிடைச்சேரி (1) திருவிழா (2) திறக்க (1) திறனாய்வு (1) திறப்பு (1) திலீப் பட்கோங்கர் (1) தில்லி இமாம் (1) தில்ஷுக் (1) தில்ஷுக் நகர் (2) தீ வைப்பு (2) தீக்குழி (2) தீட்டு (2) தீண்டாமை (3) தீநுண்மி (1) தீனா (1) தீய சக்திகளை விரட்டுவது (4) தீவிரவாத திட்டம் (6) தீவிரவாத நிதியுதவி (3) தீவிரவாதத்திற்கு துணை போவது (7) தீவிரவாதம் (18) தீவிரவாதி (18) தீவிரவாதிகளுக்கு பணம் (17) தீவிரவாதிகள் (10) தீவைப்பு (2) துக்கம் (2) துக்தரன்-இ-மில்லத் (1) துணை மேயர் (1) துண்டா (1) துண்டு (1) துன்புருத்தல் (1) துபாய் (15) துப்பாக்கி (15) துப்பாக்கிச் சூடு (8) துப்ரோவ்கா (1) தும்மநாயக்கன்பட்டி (1) துருக்க (6) துருக்கன் (9) துருக்கர் (12) துருக்கி (9) துருஷ்க (4) துருஷ்கா (6) துரோகம் (7) துர்கேஸ்வரி (1) துர்க்கம் (3) துறக்க (1) துலாகர் (5) துலுக்க (10) துலுக்கன் (13) துலுக்கப்பட்டி (2) துலுக்கர் (11) துலுக்கி (5) துல் கிஃபில் (1) தூக்கு (1) தூண்டிவிடும் எழுத்துகள் (2) தூண்டு (5) தூது-அஞ்சல் (1) தூய்மை (3) தூய்மையான கற்பு (3) தூஷணம் (2) தென் கொரியா (2) தெய்வம் (1) தெரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (3) தெரிந்தோ அல்லது தெரியாமலோ (4) தெலிங்கானா (3) தெலுங்கானா (3) தெலுங்கு ஜிஹாதி (1) தெஹ்ரீக் –இ-லபைக் யா ரஸூல் அல்லா (1) தெஹ்ரீக்-இ-கடம்-இ-நபுவத் (1) தேங்காய் (1) தேச கொடி (9) தேச விரோதம் (18) தேசவிரோத செயல்கள் (2) தேசவிரோதம் (9) தேசிய ஜிஹாதி தீவிரவாதம் (25) தேசிய புலனாய்வு இயக்குனர் (7) தேசிய புலனாய்வு துறை (9) தேசிய மனித உரிமைகள் ஆணையம் (2) தேசியக் கொடி (7) தேசியவாதி (3) தேனி (1) தேர்தல் (10) தேவிபட்டினம் (1) தேவேந்திரன் (1) தைவான் (2) தொகை (1) தொடாதே (1) தொடு (1) தொடுதல் (1) தொடை (4) தொத்து வியாதி (5) தொந்தரவு (3) தொப்பி (3) தொறக்க (1) தொற்று (1) தொற்று மருந்து (1) தொலைபேசி (2) தொல்துறை (1) தொழிற்சாலை (1) தொழுகை (13) தோபி (1) தோல் (4) தோள் (4) தௌகீர் ராஸா கான் (1) தௌவீத் ஜமாத் (6) தௌஹித் ஜமாத் (5) தௌஹீத் (5) தௌஹீத் ஜமாத் (5) நக்மா (2) நங்க பர்வதம் (1) நடனம் (2) நடவடிக்கை (1) நட்பு (2) நதிராபானு (1) நதீம் சைஃபீ (3) நத்தர்ஷா பள்ளிவாசலில் (1) நநஸ்ரியா (1) நந்தினி (1) நன்னடத்தை நிபந்தனை (3) நபி (2) நபீக் (1) நம்பர் (1) நம்பிக்கை (1) நம்பிக்கையில்லாதோர் மீதான போர் (12) நரகம் (3) நரபலி (4) நரம்பு (1) நரேந்திர மோடி (2) நர்கீஸ் தத் (1) நல்ல மொஹம்மது களஞ்சியம் (1) நல்லிணக்க நாயகர் (1) நவபாஷாணம் (1) நவாப் அலி (1) நவாப்வாலாஜா (1) நவாஸ் (2) நஷீர் (1) நஸ்ரியா (1) நாகராஜன் (1) நாகூர் (2) நாகூர் தர்கா (4) நாகூர் ஹூசைன் (1) நாகை நாகராஜன் (1) நாசம் (2) நாடகம் (2) நாட்டுப் பற்று (6) நாணம் (4) நாத்திக இந்து (4) நாத்திக காஃபிர் (7) நாத்திக முஸ்லீம்! (9) நாத்திகத் தமிழன் (8) நாத்திகம் (2) நான் தான் கடவுள் (1) நான்காம் பெண்டாட்டி (5) நான்காம் மனைவி (6) நான்கு பெண்டாட்டிகள் (5) நாயுடு அரிசி (1) நாளம் (1) நிகாப் (15) நிக்கா (19) நிக்கா நாமா (4) நிக்கா ஹலால (1) நிக்கா ஹலாலா (1) நிக்காஹ் (10) நிக்காஹ் நாமா (1) நிஜ தெய்வங்கள் (1) நிஜாமுத்தீன் (2) நிஜாமுத்தீன் ஜமாத் (1) நிஜாமுத்தீன் ஜமாத் மர்கஸ் (1) நிதி (1) நிதிநிறுவனம் (1) நிதியுதவி (2) நிதிஷ்குமார் (1) நிந்தனை (1) நியூ காலேஜ் (1) நியூயார்க் (1) நிர்மலகேரி (1) நிர்மலா (1) நிர்வாகம் (1) நிர்வாண ஓவியர் (4) நிர்வாண வைத்தியம் (1) நிர்வாணம் (4) நிஸார் அஹமது (1) நிஸ்ஸார் அஹமது (1) நீக்ரோ (1) நீதி (2) நீதி மன்றம் (3) நீதிமன்றம் (3) நீலாங்கரை (1) நூதன முறை (1) நூருல் ஹூடா (3) நூரூல் ஹமீது (1) நூர் ஜியபுத்தீன் (1) நூர் ஹுஸைன் (1) நெருப்பு (3) நெல்பேட்டை (1) நெல்லூர் (3) நெல்லை (2) நேபாளம் (5) நேயம் (1) நேரம் (1) நேரு (2) நேர்த்திக் கடன் (2) நைஜர் (2) நைஜீரியா (4) நைட் கிளப் (1) நைட்ரேட் (2) நோக்கம் (1) நோன்பு (2) நோன்பு அரிசி (1) நோய்கொள்ளி (4) பகீர் (1) பகுத்தறிவற்ற மதம் (1) பகுபா (1) பகுப்பு (1) பகை (1) பக்ஃப் வாரிய சிறப்பு நிர்வாக அதிகாரி (1) பக்கிரியம்மாள் (1) பக்ரீத் (1) பக்ருதீன் (2) பங்க பந்து (4) பங்களா ஹுஜி (2) பங்களாதேச தீவிரவாதம் (2) பங்களூரு வெடிகுண்டு (4) பங்காள தேசம் (4) பங்காளதேசம் (3) பங்காஸ் குடியினர் (1) பசு (1) பசு இறைச்சி (1) பசு மாமிசம் (1) பசு வதை (1) பச்சோந்தி (2) பஜரங் தள் (1) பஜார் (1) பஞ்சாயத்து (2) பஞ்யாத்து (1) படகு கவிழ்ந்தது (1) படம் (1) படுக்க வா (1) பட்கல் (7) பட்டகல் (6) பட்டக்கல் (5) பட்டி (1) பட்டினி (1) பணப்பரிமாற்றம் (1) பணமும் பரிசு பொருட்களும் கிடைக்கும் (1) பணம் (1) பணி (1) பண்டிகைகள் (1) பண்ணா (1) பத்தான் (1) பத்வா (3) பந்து (2) பன்னா (2) பன்னா இஸ்மாயில் (1) பன்றி (1) பயங்கரவாத செயல்களை தேசிய விசாரணை ஆணையம் (2) பயங்கரவாத செயல்பாடுகள் குறித்த விசாரணை குழு (3) பயம் (2) பயிர்ப்பு (2) பயிற்சி (1) பய்ஹான் அல் கம்தி (1) பரங்கிப்பேட்டை (2) பரமக்குடி (1) பரிசோதனை (1) பர்கா (29) பர்கா போராட்டம் (2) பர்தா (40) பர்தா அணிவது (25) பர்தா காக்கும் உடையா? (9) பர்தா மத-அடையாளமா? (11) பர்துவான் (4) பர்த்வான் (9) பர்மா (11) பர்மா பஜார் (2) பர்வானா (2) பர்வீன் (4) பர்ஹான் வனி (1) பறவை பாட்சா (1) பற்ற வைக்கும் திரிகள் (1) பல திருமணம் ஏன்? (13) பலமணம் (7) பலி (9) பலி ஆடு (2) பலிக்கடா (6) பலிஸ்தான் (1) பலுச்சிஸ்தானம் (6) பலுச்சிஸ்தான் (6) பலூச்சிஸ்தான் லிபரேஷன் ஆர்மி (2) பல்லாவரம் (1) பள்ளி கொண்டா (1) பள்ளி தகர்ப்பு (1) பள்ளி வாசல் (13) பள்ளிகள் (2) பள்ளிகொண்டா (3) பள்ளிவாசல் (15) பழனி (5) பழமைவாத கோட்பாடு் (35) பழமைவாதம் (48) பவித்ரா (6) பவுல் (1) பஷீர் (1) பஸ்மந்தா (1) பஹாய் (1) பஹாய்க்கள் (2) பாகிஸ்தானின் சைபர்வெளி ராணுவம் (1) பாகிஸ்தானின் தாலிபான் (5) பாகிஸ்தானியப் பெண்கள் (4) பாகிஸ்தான் (30) பாகிஸ்தான் கொடி (1) பாகிஸ்தான் சுன்னி தெஹ்ரீக் (1) பாகிஸ்தான் தீவிரவாதம் (34) பாகிஸ்தான் மக்கள் கட்சி (2) பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (1) பாக்தாத் (1) பாஜக (4) பாடி (1) பாட்டம் (2) பாட்டி (2) பாட்னா (1) பாட்ரிக் மாத்யூஸ் (1) பாண்டியன் (4) பாதியாக உடைக்கப்பட்ட மசூதி (1) பாத்திமா (4) பாத்திமா முசாபர் (1) பாத்திமா முஸப்பர் (1) பாத்திமுத்து (2) பாத்தியா (1) பானர்ஜி (2) பானு (2) பாபர் (2) பாபுலர் பிரென்ட் ஆப் இந்தியா (3) பாப் வுட்வார்ட் (1) பாப்புலர் ஃபரென்ட் ஆஃப் இன்டியா (9) பாப்புலர் பரென்ட் ஆப் இந்தியா (12) பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (5) பாப்புலர் பிரென்ட் (5) பாப்புலர் பிரென்ட் ஆப் இந்தியா (5) பாப்புலர் பிரென்ட் ஆப் இன்டியா (4) பாமிய புத்தர் சிலை (1) பாம்பே (1) பாரத் மாதா கி ஜெய் (1) பாரபட்சம் (1) பாரா ரபியுல் அவ்வல் (1) பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் (1) பாராளுமன்றம் (2) பாரிஸ் (2) பாரூக் (3) பார்த்தோ அல்லது பார்க்காமலோ (2) பார்பேடா (1) பாலம் (1) பாலியல் (2) பாலியல் அடிமை (2) பாலியல் குற்றம் (10) பாலியல் தொல்லை (5) பாலியல் வன்முறை (9) பால் காவடி (1) பாவத் தடுப்பு (2) பாவத் தடுப்பு கமிஷன் (1) பாவப் பணம் (2) பாவப்பணம் (2) பாவம் (1) பாவி (1) பாஷா (2) பாஷாவின் மகன் (1) பாஷிர் (1) பாஸ் வார்டுகளைத் திருடுவது (1) பி. அப்துர் காதர் (1) பி.என்.பாண்டே (1) பி.எப்.ஐ (3) பிக்ரிக் (1) பிக்ரிக் அமிலம் (1) பிசாசு (1) பிச்சை (1) பிஜேபி (9) பிஜேபி-முஸ்லிம் (1) பிஜ்நோர் (2) பிஜ்னோர் (2) பிஞ்சு குழந்தைகள் (1) பிடி (1) பிடோபைல் (2) பிண ஊர்வலம் (3) பிணை-விடுதலை (1) பிணைத்து வைத்தல் (1) பிண்டம் (1) பிதாயீன் (3) பின்தங்கிய முஸ்லீம்கள் (1) பின்லேடனின் குடும்பம் (2) பின்லேடனின் மனைவி (2) பியூஸ் ஒயர் (1) பிரசர் குக்கர் (2) பிரசாரம் (4) பிரச்சாரம் (4) பிரஜை (2) பிரன்னாய் ராய் (1) பிரபல சரித்திர ஆசிரியர்கள் (1) பிரபாகரன் (1) பிரஸர் குக்கர் (2) பிராணேஷ் பிள்ளை (1) பிரான்ஸ் (1) பிராயசித்தக் கொலை (1) பிராயசித்தம் (1) பிரார்த்தனை (1) பிரிப்யூஸ் (1) பிரியாணி (2) பிரிவினை (2) பிரிவினைவாதம் (3) பிரிவினைவாதி ஜிலானி (1) பிருந்தா காரத் (1) பிரேம் (1) பிரேம் ராஜ் (2) பிரேம்ராஜ் (1) பிர்பும் (1) பிறந்த நாள் (3) பிறப்பு (1) பிலால் (1) பில்லி (4) பிளேட் (1) பிள்ளை (1) பிள்ளைக்கறி (1) பீ.ஜே.மீர் (1) பீகார் (4) பீடி (1) பீடித்தல் (1) பீதி (1) பீபி ஆயிஷா (2) பீரங்கி (2) பீர் (2) பீலா ராஜேஷ் (1) பீவி (3) பீஸ் டிவி (3) புகட் (1) புகழேந்தி (1) புகாரி (8) புகார் (2) புகெட் (1) புகையிலை (1) புது கல்லூரி (1) புதைத்தல் (4) புத்த மதம் (2) புத்தகங்கள் எரிப்பு (3) புத்தகம் (9) புத்ததேவ் பட்டாச்சார்ஜி (1) புத்தர் (2) புத்தாண்டு (1) புத்தூர் (1) புனிதப் போர் (50) புரளி (2) புர்ஹான் வனி (1) புர்ஹான் வானி (1) புலி (1) புலியூர் ஜும்மா பள்ளிவாசல் (1) புலியூர் மசூதி (1) புளூஃப்ளிம் (2) புழக்கத்தில் விடும் ஜிஹாதிகள் (1) புழல் (5) புழல் சிறை (1) புழல் ஜெயில் (1) புஹாரி (1) பூஜை (1) பூமி பூஜை (1) பெங்களூரு (2) பெட்டிங் (1) பெட்ரோல் (2) பெட்ரோல் குண்டு (1) பெண் (5) பெண் உரிமை (6) பெண் உறுப்பு (1) பெண் கடமை (3) பெண் சுன்னத் (1) பெண் தலைவர் (1) பெண்களின் சுன்னத் (6) பெண்களின் பிரச்சினை (1) பெண்களை முன் நிறுத்துவது (1) பெண்கள் சுன்னத் (8) பெண்டாட்டி (1) பெண்ணல்ல (2) பெண்ணியம் (11) பெண்ணுரிமை (8) பெண்ணுறுப்பு (1) பெண்ணுறுப்பு சிதைப்பு (1) பெண்பால் (1) பெண்மை (6) பென்டா எரித்ரிடோல் டிரைநைட்ரேட் (2) பெய்ரூட் (1) பெரியகுளம் (2) பெரியபாளையம் (1) பெரியப் பட்டு (1) பெரியப் பட்டு ஏரி (1) பெரியப்பட்டு (1) பெரியப்பட்டு ஏரி (1) பெரியார் (2) பெரியார்தாசன் (1) பெருந்துறை (5) பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (5) பெருமாள் (2) பெருமாள் கோவில் (2) பெர்னார்ட் டிக்னஸ் வெரியாக் (1) பெர்விஸ் (1) பெல்ஜியம் (1) பெஷாவர் (1) பெஸ்லான் (1) பெஸ்லான் பள்ளி (1) பேகம் (3) பேசுவது (2) பேச்சு வார்த்தை (1) பேச்சுவார்த்தை (1) பேட்டரி (2) பேட்டரி கட்டைகள் (3) பேண்ட் (1) பேத்தி (1) பேன்டி (1) பேன்ட் (1) பேயோட்டு (1) பேயோட்டுதல் (1) பேய் (1) பேரணி (2) பேஷன் ஷோ (2) பேஸ்புக் (3) பைசூல் (3) பைசூல் மன்னார் (1) பைத்தியம் (2) பைபிள் (3) பைப் (3) பைப் குண்டு (2) பைப் வெடிகுண்டு (6) பொகோ ஹராம் (3) பொட்டாசியம் நைட்ரேட் (1) பொது சிவில் சட்டம் (3) பொன்விளைந்த களத்தூர் (1) பொம்மிநாயக்கன்பட்டி (1) பொம்மிநாயக்கம்பட்டி (1) பொய்மை (2) பொய்மைக் கதை (1) போகோ ஹராம் (3) போக்குவரத்து (1) போங்கு (1) போட்டி (1) போதை (6) போதை மருந்து (5) போபால் (2) போபுலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (2) போபையா (1) போரா (2) போராட்டம் (7) போராளி (7) போர் (2) போர் குற்றம் (1) போர்ஹா (5) போலி (2) போலி சிம் கார்டுகள் (2) போலீஸார் (1) போலீஸ் (3) போஸ் (1) போஹ்ரா (3) பௌத்தம் (3) பௌத்தர் (4) பௌத்தர்கள் (3) பௌல் (1) ப்ரேம்ராஜ் (1) மகளிர் கோர்ட் (2) மகள் கற்பழிப்பு (1) மகாலட்சுமி (1) மக்கள் ஜனநாயகக் கட்சி (2) மக்கள் போராட்டக் குழு (2) மக்கா (6) மங்கள வாத்தியங்கள் (3) மங்களூரு (1) மங்களூர் (1) மங்கள் குடியினர் (1) மங்காத்தா (2) மசூதி (30) மசூதி இடிப்பு (8) மசூதி எரிப்பு (3) மசூதி சாவு (7) மசூதி தெரு (4) மசூதி தொழுகை (8) மசூதி நிர்வாகி (1) மசூதி வளாகத்தில் நினைவிடம் (4) மசூதியில் குண்டு தயாரிப்பது (4) மசூதியில் கொலை (3) மசூதியை இடித்தல் (3) மஜீத் மஜீதி (1) மஜ்லிச்துல் முஸ்லிமீன் (2) மஞ்சப்ப ஷெட்டி (1) மடம் (3) மடிகரே (1) மணலி (1) மணிகண்டன் (1) மணிப்பூர் (2) மணிமண்டபம் (3) மண்குழி (1) மண்டபம் யூனியன் (1) மண்டபம் யூனியன் தலைவர் (1) மண்டையோடு (1) மண்ணடி (5) மத தண்டனை (1) மத நல்லிணக்க விருது (1) மத நல்லிணக்க விருது வழங்கும் விழா (1) மத-அடிப்படைவாதம் (39) மத-போலீஸார் (7) மதகலவரம் (25) மததுரோகி (2) மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல் (36) மதனி (2) மதமா மணமா? (8) மதமா மனமா மணமா? (9) மதமாறிய பெண்கள் (7) மதமாற்றம் (3) மதரசா (5) மதரஸா (13) மதரஸா செக்ஸ் (1) மதரஸாக்கள் (9) மதவாதம் (13) மதவிமர்சனம் (5) மதவிரோதி (4) மதவெறி (14) மதானி (4) மதானி குடும்பம் (1) மதினா (2) மதுக்கடைகள் (1) மதுரை (9) மதௌனி (5) மத்ரஸா (6) மந்திரக் கட்டை அவிழ்த்தல் (3) மந்திரத் தொழிலில் (3) மந்திரம் (5) மன நோயாளி (1) மனச்சிதைவு (2) மனநலக் காப்பகம் (1) மனநிலை (5) மனநோய் (3) மனம் (1) மனல் அல்-செரீப் (1) மனித உயிர் (2) மனித உரிமைப் போராளிகள் (1) மனித கொல்லி (5) மனித நீதி பாசறை (2) மனித நேய மக்கள் கட்சி (4) மனித நேயம் (6) மனித வெடிகுண்டு (7) மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் (3) மனிதநேய விற்பன்னர்கள் (1) மனிதர்கள்-மிருகங்கள் புனைவது (1) மனுதாரர் (2) மனைவி (2) மம்தா (5) மம்தா பானர்ஜி (4) மயக்கம் (1) மயன்மார் (2) மரக்காயர் (1) மரண தண்டனை (1) மரியம் (1) மரியம் சாண்டி (1) மரியம் பிச்சை (2) மரியம் பீவி (1) மருத்துவக் கல்லூரி (1) மருந்து (1) மருந்து அடித்தல் (1) மருந்து தெளித்தல் (1) மரைக்காயர் (1) மர்கஸ் (1) மர்மமான வியாபாரம் (1) மறுமணம் (5) மறைப்பு (4) மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம் (15) மலபார் (3) மலப்புரம் (2) மலர் போர்வை வைத்து மரியாதை (1) மலேசிய குடியுரிமை (1) மலேசியன் தூதரகம் (1) மலேசியப் பத்திரிக்கைகள் (1) மலேசியா (4) மலேசியா போலீஸ் (1) மலைமேல் (1) மலைமேல் ஸ்ரீ செல்வ காளியம்மன் கோவில் (1) மலையாள ஜிஹாதி (2) மலையேறுதல் (2) மல்லபுரம் (2) மல்லைய்யா (3) மஸ்ஜித்-உர்-ரஹ்மான் (1) மஸ்ஜித்-ஏ-இப்ராஹிம்-கலீலுல்லாஹ் (1) மஸ்த கேரளா ஜமாயத்-உல்-உலமா (3) மஹர் (2) மஹல்லு கமிட்டி (1) மாடு (2) மாட்டிறைச்சி (3) மாட்யூல் (1) மாந்திரீக நரபலிகள் (1) மாந்திரீகம் (2) மானிய அரிசி (1) மான் வேட்டை (1) மாமிசம் (1) மாயா (1) மாயாவதி (1) மாயை (2) மாரடி (1) மாரடி நோன்பு (1) மாரடித்தல் (1) மாரல் போலிஸிங் (1) மாருதிராஜ் (2) மார்க்கண்டேய கட்ஜு (1) மார்டின் (2) மார்டின் பிரேம்ராஜ் (2) மார்ட்டின் பிரேம்ராஜ் (1) மார்பு (2) மாற்றம் (2) மாற்று வைத்திய முறை (1) மாலிகாபூர் (5) மாலிக் (2) மாவேலிக்கரா (2) மாவோயிஸத் தீவிரவாதி (1) மாஸ்கோ (1) மிதிக்கும் இஸ்லாம் (15) மினாரெட் (4) மினாரெட் விழுதல் (3) மின்சாரம் (1) மின்னணு ஜிஹாதி (3) மின்னணு ஜிஹாத் (4) மியன்மார் (8) மிரட்டல் (7) மிலாடி நபி (4) மில்லத்-இ-இஸ்லாமியா பாகிஸ்தான் (3) மீட்டர் (1) மீனா சதீஷ் (1) மீனாக்ஷி (3) மீனாக்ஷி கோவில் (3) மீனாக்ஷி சுந்தர்ராஜன் (1) மீனாக்ஷி பஜார் (1) மீனாட்சி பஜார் (1) மீனாட்சிபுரம் (1) மீரா (2) மீரான் (1) மீர்வாயிஸ் உமர் பரூக் (2) மீர்வாயிஸ் மௌல்வி (2) மீலாது நபி (3) மீலாதுநபி (6) மீலாதுன் நபி (1) மீலாத் (2) முஃப்டி முஹம்மது சையத் (5) முகமதியரின் இந்தியாவின் மீதான தாக்குதல்கள் (24) முகமது (5) முகமது அலி (5) முகமது அலி ஜின்னா (3) முகமது அஸ்லம் (1) முகமது ஆசிப் (6) முகமது இக்பால் (3) முகமது இஸ்மாயில் (2) முகமது கனி உஸ்மான் (1) முகமது சலீம் (1) முகமது சானு (1) முகமது சோஹ்ராப் மிர்சா (1) முகமது ஜியாஉல்ஹக் (2) முகமது தாசிம் (1) முகமது நபி (9) முகமது ரியாஷ் (2) முகமது ஷானு (1) முகமது ஷேக் தாவூத் (1) முகமது ஹர்ஷத் (1) முகமதுக்கு முந்தைய அரேபியா (1) முகம்மது தாசிம் (1) முகரம் (1) முக்தி வாஹினி (2) முசிரி (1) முஜாஹித்தீன் (41) முஜிபுர் (3) முஜிபுர் ரஹ்மான் (3) முண்டம் (2) முதலீடு (1) முதல் பெண்டாட்டி (3) முதல் மனைவி (3) முதா (1) முதுகு வலி (1) முதுகுளத்தூர் (1) முதுகுளத்தூர் பள்ளி (1) முதுகுளத்தூர் பள்ளிவாசல் பள்ளி (1) முதுகை தடவுதல் (1) முத்தலாக் (1) முத்தாரம் (1) முத்துச்சாமி (1) முத்துப்பேட்டை (1) முனஹம்மது தாரிக் அன்சாரி (1) முனி (2) முனியசாமி (1) முனீஸ்வரன் (1) முனீஸ்வரர் (1) முன்னா (1) முன்னாள் தலைவர் (2) முன்னேறிய முஸ்லீம்கள் (1) முப்தி (5) மும்தாஜ் (3) மும்பை (7) மும்பை குண்டு (1) மும்பை குண்டு வெடிப்பு (5) மும்பை குண்டுவெடிப்பு (1) முருடீஸ்வர் (1) முர்ஸித் (1) முறையீடு (1) முற்றுகை (1) முலாயம் (3) முலை (4) முலைப்பால் (2) முலைப்பால் ஊட்டுவது (2) முலைப்பால் பந்தம் (2) முல்லா (2) முல்லா உமர் (1) முல்லாயம் (4) முஸ்தரி (1) முஸ்திரி (1) முஸ்லிமுக்கு மட்டும் (1) முஸ்லிமுக்கு வீடு (1) முஸ்லிம் (14) முஸ்லிம் அடிப்படைவாதம் (7) முஸ்லிம் கழகம் (2) முஸ்லிம் காலனி (4) முஸ்லிம் சாமி (3) முஸ்லிம் சாமியார் (3) முஸ்லிம் செக்ஸ் (1) முஸ்லிம் தெரு (7) முஸ்லிம் நகர் (1) முஸ்லிம் பிரச்சினை (7) முஸ்லிம் பெண்கள் (35) முஸ்லிம் பெண்கள் உரிமை (19) முஸ்லிம் பெண்கள் மாநாடு (4) முஸ்லிம் மாந்திரீகம் (1) முஸ்லிம் மாந்திரீகர்கள் (1) முஸ்லிம் முன்னேற்ற கழகம் (2) முஸ்லிம்-சோதிடம் (2) முஸ்லிம்-மாந்திரிகம் (2) முஸ்லிம்கள் ஆர்பாட்டம் (6) முஸ்லிம்கள் முற்றுகை (2) முஸ்லீமின் மனப்பாங்கு (3) முஸ்லீம் (30) முஸ்லீம் அல்லாத பெண்கள் (3) முஸ்லீம் இளைஞர்கள் (5) முஸ்லீம் ஓட்டு வங்கி (19) முஸ்லீம் ஓட்டுவங்கி (19) முஸ்லீம் கம்யூனிஸ்ட் (2) முஸ்லீம் கல்வி சங்கம் (2) முஸ்லீம் சட்டம் (22) முஸ்லீம் சாதி (6) முஸ்லீம் ஜாதி (5) முஸ்லீம் தன்மை (14) முஸ்லீம் நரபலிகள் (5) முஸ்லீம் நாத்திகவாதி (1) முஸ்லீம் பெண்கள் தனியாக இருப்பது (4) முஸ்லீம் பெண்கள் வேலை (5) முஸ்லீம் பெண்கள் வேலை செய்வது (6) முஸ்லீம் மந்திரவாதி (1) முஸ்லீம் மாந்திரீக நரபலிகள் (1) முஸ்லீம் மாவோயிஸ்ட் (2) முஸ்லீம் முன்னேற்றக் கழகம் (4) முஸ்லீம் லீக் (12) முஸ்லீம்களிடம் ஊடல் (6) முஸ்லீம்களிடம் கொஞ்சல் (6) முஸ்லீம்களின் அடிப்படைவாதம் (22) முஸ்லீம்களின் தீவிரவாதம் (20) முஸ்லீம்களின் வெறித்தனம் (20) முஸ்லீம்களில் சிறுபான்மையினர் (4) முஸ்லீம்களுக்கு விடிவு காலம் (1) முஸ்லீம்களை தாஜா செய்வது (5) முஸ்லீம்கள் (22) முஸ்லீம்கள் என்றால் தாஜா செய்வது (2) முஸ்லீம்தனம் (8) முஹமது ஆசிப் (1) முஹமது ஆஸிப் (1) முஹமது இக்பால் (2) முஹமது இம்தியாஸ் அன்சாரி (1) முஹமது சலீம் (1) முஹமது நபி மசூதி (1) முஹம்மது (10) முஹம்மது அப்துல் ஆஜீஸ் (3) முஹம்மது அல்-அமீன் பின் கத்தாரி (1) முஹம்மது அஹமது சித்திபாபா (5) முஹம்மது கான் (3) முஹம்மது கார்ட்டூன் (1) முஹம்மது சலீம் (1) முஹம்மது தாரிக் அன்சாரி (1) முஹம்மது தௌபீக் அன்சாரி மற்றும் முஹம்மது நோமன் (1) முஹம்மது நபி வாழ்ந்த வீடு (1) முஹம்மது நோமன் (1) முஹம்மது புஹாரி அப்துல் காதர் (1) முஹம்மது மௌதூத் கான் (3) முஹம்மது யூசுப் முஸ்ரூக் (1) முஹம்மது ஹனிஃப் கான் (2) முஹம்மத் அபூபக்கர் (1) முஹரம் (1) முஹ்சீன் அல்ஜமீன் (1) மூசா (1) மூணாறு (1) மூதா (4) மூத்தா (3) மூத்ஹா (1) மூன்றாம் பெண்டாட்டி (2) மூன்றாம் மனைவி (2) மூன்று முட்டாள்கள் (1) மூரத் (1) மூர்சிதாபாத் (1) மூர்ஷிதாபாத் (1) மூல்தான் (2) மூளை சலவை (9) மூளை சலவை செய்வது (4) மூளைசலவை (9) மூவாட்டுபுழா (2) மூவ்லீத் (1) மெகபூபா முப்தி (1) மெக்-கோனெ (1) மெக்கா (4) மெதினா (1) மெத்தை (2) மெத்தைக் கடை (1) மெஹந்தி (2) மெஹர் (1) மெஹ்பூபா (1) மெஹ்பூபா முஃதி (4) மெஹ்பூபா முஃப்தி (8) மேனகா (1) மேப் (1) மேமன் (3) மேயர் (1) மேற்கு பாகிஸ்தான் (8) மேலப்பாளையம் (2) மேல் உள்ளாடை (1) மேல் முறையீடு (1) மேல்விஷாரம் (1) மேளம் (1) மேவ்லீத் (1) மைக்கேல் விட்செல் (1) மைக்கேல் விட்செல்-முஸ்ஸரஃப் சந்திப்பு (1) மைக்கேல் விட்செல்லும் முஸ்ஸரஃபும் (1) மைசூரு (3) மைசூர் (2) மைனாரிட்டி (4) மைலாப்பூர் (1) மொகரம் (1) மொஜாமெல் ஹக் (1) மொம்பாஸா (1) மொய்தீன் (1) மொரொக்கோ (2) மொரோகோ (1) மொஹமது ஆஸிப் (1) மொஹமது இக்பால் (1) மொஹமது சலீம் (1) மொஹம்மது (4) மொஹம்மது அக்தர் (1) மொஹம்மது அத்தஹுல்லாஹ் செயிக் (1) மொஹம்மது அஸ்கர் (1) மொஹம்மது அஹம்மது கான் (1) மொஹம்மது இக்பால் (1) மொஹம்மது கமருஸ்ஸாமன் (1) மொஹம்மது களஞ்சியம் (1) மொஹம்மது சலீம் (1) மொஹம்மது தாய்யப் ஜியா (1) மொஹம்மது நபி (1) மொஹம்மது மௌதூத் கான் (1) மொஹம்மது ரியாஸ் (1) மொஹம்மது ஷானு (1) மொஹம்மது ஸ்வாலி (2) மொஹரம் (2) மொஹர்ரம் (1) மொஹித்தீன் (1) மோகம் (1) மோசடி (5) மோசம் (4) மோடி (5) மோடி அரிசி (1) மோதல் (3) மோதிரம் (1) மோனிகா (2) மோமின் (3) மௌதனி (7) மௌதானி (6) மௌனிகா (1) மௌலானா அஹமது ஷா புகாரி (1) மௌலானா சௌகத் ஷா (1) மௌலானா புகாரி (3) மௌலானா மதனி (3) மௌலானா மதானி (2) மௌலானாவை பெண்கள் அடித்தது (1) மௌலித் (1) மௌல்வி (2) மௌல்வி அப்பாஸ் அன்சாரி (1) யஜீத் (1) யதீம் கானா (1) யாகுப் (1) யாகுப் மேமன் (4) யாகூப் (3) யாகூப் மேமன் (4) யாசின் பட்கல் (4) யாசின் பட்டகல் (1) யாசிர் அப்துல்லா (1) யாதவ் (2) யாத்திரிகர்கள் (4) யாத்திரை (3) யாத்திரைக்குப் பாதுகாப்பு (3) யானை (1) யுத்த பலிகள் (1) யுத்ததருமம் (1) யுத்ததர்மம் (2) யுத்தம் (4) யுனானி (2) யுனானி மருத்துவர் (1) யுவன்சங்கர் ராஜா (4) யூசஃப் (1) யூசுப் (1) யூசுப் செயிக் (1) யூசுப் ராஜா (1) யோக்கியகர்த்தா (1) யௌம்-இ-அலி (1) ரகசிய சர்வே (3) ரகமத்துல்லா (1) ரக்சால் (1) ரக்ஸால் (1) ரஜபுனிசா (1) ரஜபுனிசா பேகம் (1) ரஜபுனிசாபேகம் (1) ரஜினி (2) ரண்டா அல்-கலீப் (1) ரத்த சடங்கு (1) ரத்தக் காட்டேரி (3) ரத்தக் காட்டேரிகள் (7) ரத்தத்தினால் ஹோலி (7) ரத்தப் பணம் (1) ரத்தப்பணம் (1) ரத்தம் (15) ரத்தம் குடித்தல் (4) ரபி அல்-அவ்வல் (1) ரப் (1) ரப்பர் புல்லட் (1) ரப்பானி (1) ரமதான் (4) ரமலான் (7) ரமழான் (7) ரமஷான் (6) ரமீலா (1) ரமேஷ் தௌரானி (1) ரம்ஜான் (9) ரம்ஜான் அரிசி (2) ரம்ஜான் கஞ்சி (2) ரம்ஜான் கஞ்சி அரிசி (2) ரம்ஜான் தாராவீஹ் (4) ரம்ஜான் நோன்பு (3) ரம்ஜான் நோன்பு அரிசி (2) ரவிச்சந்திரன் (2) ரஹமத்துல்லா (1) ரஹீமா (1) ரஹீல் செயிக் (2) ரஹ்மான் (4) ரஹ்மான் கான் (2) ராகுல் (2) ராக்கெட் (1) ராக்கைன் (1) ராஜ துரோகம் (1) ராஜநீதி-வேசித்தனம் (1) ராஜஸ்தான் (1) ராஜாஜி மருத்துவமனை (1) ராஜிந்தர் சச்சார் (1) ராணிப்பேட்டை (1) ராணுவத்துறை ரகசியங்கள் (1) ராதா (4) ராதிகா ராய் (1) ராமநாதபுரம் (2) ராமேஸ்வரம் (2) ராம் (1) ராவல்பிண்டி (2) ராவுப் (1) ராஸா (1) ராஸா அகடெமி (2) ராஸ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் (1) ரிசானா (1) ரிசானா நபீக் (1) ரிஸ்வானா (1) ரீடா மான்சந்தா (1) ருபையா (1) ருபையா சையது (1) ருபையா சையத் (4) ருஷ்டி (2) ரூபாய் நோட்டுகள் (1) ரெங்கநாத் மிஸ்ரா கமிஷன் (1) ரெஜினா (1) ரெண்டஸ்வஸ் நிறுவனம் (1) ரேகா (2) ரேசன் கார்டு (1) ரேப் (2) ரேப் விடியோ (1) ரேப் வீடியோ (1) ரேஷ்மா தாவூத் (1) ரோமிலா தாபர் (2) ரோஸா (1) ரோஹிங்க (4) ரோஹிங்கர் (3) ரோஹிங்கா (3) ரோஹிங்கிய (4) ரோஹிங்கியா (3) ரோஹிங்ய (3) ரோஹிங்யா (2) ரோஹிஞ்ச (3) ரோஹிஞ்சா (2) ரோஹின்ய (3) ரோஹின்யா (3) ரோஹிப்க்கியா (1) றமலான் (2) றமழான் (2) லண்டன் (2) லலித் மோடி (1) லல்லு பிரச்சாத் யாதவ் (1) லவ் ஜிஹாத் (19) லவ்ஜிஹாத் (3) லஷ்கர்-இ-தொய்பா (12) லஸ்கர்-இ-ஜாங்வி அல்-ஆல்மி (6) லஸ்கர்-இ-டொய்பா (1) லஸ்கர்-இ-தொய்பா (8) லாகூர் (3) லாஹூர் (7) லிங்கம் (1) லிவ்-இன் (1) லீனா (3) லீனா கபூர் (1) லீலைகள் (4) லெபனான் (1) லெப்பை (3) லேபியாபிளாஸ்டி (1) வக்ஃப் போர்ட் (2) வக்ஃப் வாரிய சிறப்பு நிர்வாக அதிகாரி (2) வக்ஃப் வாரியம் (2) வக்கார் யூனிஸ் (1) வக்பு வாரியம் (2) வக்ப் (4) வக்ப் கம்பனி (2) வக்ப் கம்பெனி (2) வக்ப் மேம்பாடு (2) வக்ப் வாரியம் (2) வங்காள தேசம் (19) வங்காள மொழி (8) வங்காளதேசம் (7) வங்காளப் பிரிவினை (6) வங்காளம் (7) வங்கி மோசடி (2) வங்கி மோசடி வழக்கு (1) வசூல் (1) வஞ்சகம் (1) வஞ்சிநாடு எக்ஸ்பிரஸ் (1) வடபழனி (2) வட்டி (1) வட்டிக்குக் கடன் (1) வணிக வளாகம் (1) வண்ணாரப் பேட்டை (1) வண்ணாரப்பேட்டை (2) வண்ணாறப் பேட்டை (1) வதந்தி (2) வதை (1) வத்தலகுண்டு (1) வந்தே மாதரம் (14) வந்தே மாதரம் எதிர்ப்பது (9) வன்புணர்ச்சி (2) வன்முறை (15) வன்முறையில் ஈடுபடுவது (4) வயநாடு (1) வயர் துண்டுகள் (2) வயிற்றில் கடத்தல் (1) வரதராஜ் (1) வரதராஜ் மஞ்சப்ப ஷெட்டி (1) வருத்தம் (1) வருத்து (1) வலிஹுல்லாஹ் (1) வல்லாளன் (2) வளர்த்த கடா (1) வளைகுடா (3) வழக்கு (4) வழிபாடு (6) வாக்குறுதி (3) வாசல் (1) வாசிம் அக்ரம் (3) வாசிம் அக்ரம் மாலிக் (3) வாடகை (1) வாடகை வீடு (1) வாடகைக்கு (1) வாடகைக்கு வீடு (1) வாடியா (1) வாட்ஸ்அப் (3) வாணியம்பாடி (3) வாதிப்பது (1) வாபஸ் (2) வாரங்கல் (1) வாரணசி குண்டுவெடிப்பு (3) வார்டன் (4) வாலாஜா மசூதி (1) வாழ்க்கை (1) வாஹாபி (3) வாஹாபி இயக்கம் (3) வி.எஸ். ரவி (1) விக்கிரகம் (2) விசா விதி (1) விசாரணை (6) விஜய் (1) விஞ்ஞான முன்னேற்றம் (1) விடுதலை (3) விடுதலை சிறுத்தை (3) விடுதி (1) விண்ணப் பங்களின் எண்ணிக்கை (1) விந்து (1) விமர்சனம் (4) விமானம் (2) வியாபாரம் (4) விரதங்கள் (1) விரதம் (1) விருத்த சேதனம் (1) விரோதம் (4) விலக்கிவைத்தல் (2) வில் ஹியூம் (3) விளக்கு (3) விளம்பரம் (1) விழா (1) விழாக்கள் (1) விவாக ரத்து (13) விவாகம் (5) விவேகானந்தர் (1) விஷாரம் (1) விஷ்வ ஹிந்து பரிஷத் (1) விஸ்டெம் அகடெமி (1) விஸ்வ இந்து பரிஷத் (1) வீடியோ (2) வீடு (2) வீடு இல்லை (1) வீடு திரும்புதல் (1) வீட்டு வேலை (1) வீட்டுக்கு வா (1) வீணா (4) வீணா மாலிக் (5) வீர பாண்டியன் (4) வீரகநல்லூர் (1) வீரியம் (2) வெஜினோபிளாஸ்டி (1) வெடி (11) வெடி மருந்து (9) வெடிகுண்டு (19) வெடிகுண்டு பொருட்கள் (17) வெடிகுண்டுகள் (21) வெடிக்கச் செய்யும் கருவிகள் (10) வெடிபொருள் வழக்கு (7) வெடிப்பொருட்களைப் பதுக்கி வைத்தல் (1) வெடியுப்பு (1) வெட்டிக் கொலை (1) வெப்சைட்டுகளை உடைப்பது (1) வெறி (5) வெறிநாய்கள் (1) வெள்ளிக் கிழமை (6) வெள்ளிக்கிழமை (6) வேடம் (2) வேட்டை (1) வேட்பாளர் (1) வேத பஸின் (1) வேலூர் (9) வேலை (4) வேலை மோசடி (1) வேல் காவடி (1) வேவு (1) வைகாசி (1) வைகாசித் திருவிழா (1) வைணவம் (1) வைத்தியம் (2) வைரஸ் (8) வைரஸ் கொரோனா (4) வைரஸ் ஜிஹாத் (1) ஶ்ரீரங்கப்பட்டினம் (1) ஶ்ரீராம் சேனா (1) ஶ்ரீலங்க குண்டுவெடிப்பு (1) ஶ்ரீலங்கா (1) ஶ்ரீலங்கை தற்கொலை குண்டுவெடிப்பாளி ஜஹ்ரன் ஹாஷிம் (1) ஷகிர் (1) ஷபி அர்மார் (1) ஷபிர் ஷா (2) ஷபீர் (1) ஷமில் அஹமது (2) ஷமீரா பானு (1) ஷமீராபானு (1) ஷமீல் (2) ஷரியத் (5) ஷரீயத் (11) ஷலாஷன் (1) ஷலோ தாங்கி (1) ஷஹீதுகள் என்றெல்லாம் யார்- யார் என்று தெரியாதா என்ன? (1) ஷஹீத் (3) ஷா பானு (2) ஷாகுல் ஹமீத் (1) ஷாஜஹான் (2) ஷாபானு (3) ஷாபாஸ் பட்டி (1) ஷார்ஜா ஷரியா கோர்ட் (1) ஷாஹி இமாம் (2) ஷியா (24) ஷியா சட்ட போர்ட் (4) ஷியா சட்டம் (12) ஷியா முஸ்லீம் சட்டம் (9) ஷியா வாரியம் (8) ஷியா-சுன்னி (18) ஷிர்க் (14) ஷெட்டி (1) ஷெரி ரெஹ்மான் (1) ஷேக் (5) ஷேக் அப்துல்லா (1) ஷேக் அஸினா (1) ஷேக் தாவூத் (1) ஷேக் முஜிபுர் ரஹ்மான் (3) ஷேக் மைதீன் (3) ஷேக் ரஹமத்துல்லா (1) ஷேவாக் (1) ஷைஸ்டா அம்பர் (1) ஷ்யாம் (1) ஸஜியா (1) ஸல் (1) ஸ்டாலின் (4) ஸ்டாலின் வாழ்த்து (1) ஸ்டிங் ஆபரேஸன் (1) ஸ்னூப்பிங் (1) ஸ்ரீ ராம நவமி (5) ஸ்ரீ ராமநவமி (6) ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் (1) ஹகிம் (1) ஹக் (1) ஹக்கனி (2) ஹக்கானி (4) ஹக்கிம் (1) ஹஜரத் அலி (3) ஹஜரத் இமாம் அலி (2) ஹஜரத் இமாம் ஹுஸைன் (1) ஹஜ் (9) ஹஜ் கமிட்டி (4) ஹஜ் பயணம் (5) ஹஜ் மானியம் (5) ஹஜ் யாத்திரை (4) ஹட்டி (1) ஹதீஸ் (11) ஹனுமந்த ஜெயந்தி (5) ஹபீப் (1) ஹம்சத்நிஷா (1) ஹம்ஸா (1) ஹம்ஸா தலிபான் (1) ஹராம் (6) ஹரிந்தர் பவேஜா (1) ஹரிஸ் காரே (1) ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி (4) ஹர்கத்-உல்-ஜிஹாத்-அல்-இஸ்லாம் (1) ஹர்கத்-உல்-முஜாஹித்தீன் (3) ஹலால் (6) ஹவாலா (3) ஹஸன் (2) ஹாஜா பக்ருதீன் (1) ஹாஜி அலி தர்கா (1) ஹார்வார்ட் (1) ஹாவிஸ் மொல்லாஹ் (1) ஹாஷிம் அன்ஸாரி (1) ஹிஜாப் (19) ஹிஜ்புல் முஜாஹித்தீன் (4) ஹிஜ்லி ஷரீப் (1) ஹிம்சை (2) ஹீரா பேரி (1) ஹுஜி (4) ஹுஜி பங்களா (3) ஹுஸைன் (4) ஹூஜி (4) ஹெராயின் (1) ஹேரம் (1) ஹைஜேக் (1) ஹைட்ரெஜன் பெராக்ஸைட் (1) ஹைதர் அலி (3) ஹொய்சளர் (1) ஹொஸைன் சையிதீ (1) ஹோலி (1) ஹௌரா (3) bernama (2) clitoridectomy (1) Clitoris (1) haj (2) IED (2) kafir (2) Ken Haywood (1) KhilafahGFX (1) kulalumpur (1) Labia majora) (1) Labia minoria (1) labiaplasty (1) malaysia (1) Masjid-e-Ibrahim-Khaleelullah (1) momin (2) Outlook (1) Prepuce (1) Princeton Survey Research Associates (1) SMS (1) subsidy (2) Taylor Nelson Sofres-India (1) Uncategorized (164) Urethra (1) Vagina (1) vaginoplasty (2) X மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம் (7) மின்னஞ்சல் சந்தாதாரராக‌.... Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email. Join 4,998 other followers மின்னஞ்சல் முகவ‌ரி Sign me up! அண்மைய பதிவுகள் ஸ்டாலினின் மீலாது நபி வாழ்த்துகள் செக்யூலரிஸமா-கம்யூனலிஸமா, ஹலாலா-ஹரமா, ஷிர்க்கா-இல்லையா? திருக்குறள் விற்று ரூ.65 கோடி மோசடி: மதுரை நிறுவன சொத்துக்கள் ஏலம், ஷேக் முகைதீன் கைது முதல் சொத்துக்கள் ஏலம் வரை! தமிழக அரசு வேலை வாங்கித் தருவதாக, பயிற்சி, அரசு ஆணை சகிதம் கொடுத்து, நூதன மோசடி! தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் உட்பட மூன்று பேர் கைது! முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலை பள்ளியில் பாலியல் தொல்லை – ஆசிரியர் ஹபீப் கைது! வண்ணாரம்பூண்டி களத்தூர் – முஸ்லிம்கள் அங்கு இந்து மக்களின் நம்பிக்கைகளில் தலையிடுவது, தடுப்பது, கலவரத்தில் இறங்குவது ஏன்? அதிகளவு சொடுக்குகள் islamindia.files.wordpres… islamindia.files.wordpres… upload.wikimedia.org/wiki… islamindia.files.wordpres… islamindia.files.wordpres… islamindia.files.wordpres… islamindia.files.wordpres… நவம்பர் 2021 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 « அக் Blog Stats 538,434 hits முன்னணி இடுகைகள் இந்து-முஸ்லிம் திருமணங்கள் – முஸ்லிம் பெண் இந்துவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டால் எதிர்ப்பது, குரூரமாகத் தாக்கப்படுவது, கொலை செய்யப்படுவது ஏன்? மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: மாலிகாபூர் படையெடுப்பு 1310-11 CE (1) துருக்கம், துருக்கர், துலுக்கர், துலுக்கி முதலிய சொற்கள் பிரயோகம், அவற்றைப் பற்றிய விளக்கம் (3) மோனிகா என்ற நடிகை முஸ்லிம் 2010ல் ஆகிவிட்டாளாம், ஆனால் 2014ல் அறிவிப்பாம், பிரகடனமாம், உசுப்பிவிடும் ஊடகங்கள்! தமிழக அரசு வேலை வாங்கித் தருவதாக, பயிற்சி, அரசு ஆணை சகிதம் கொடுத்து, நூதன மோசடி! தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் உட்பட மூன்று பேர் கைது! பெண்களுக்கான ‘சுன்னத்’ உகாண்டாவில் தடை! வங்க பந்துவின் கொலையாளிகள் தூக்கிலிடப்பட்டனர்! யார் இந்த அப்துல் நாசர் மதானி? இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறினார் – பிரச்சினை தனிமையா, தாம்பத்ய தோல்வியா, பலதார திருமணமா? செக்ஸ்-ஜிஹாத், முஸ்லிம் இளம்பெண்கள் ஒரே நாளில், பல ஜிஹாதிகளுடன் உடலுறவு கொள்வது மதரீதியில் ஆதரிக்கப்படுவதேன்?
× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾ இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் மாவட்டம் ▾ சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி படங்கள் அறிவியல் ஸ்பெஷல் முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾ இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் மாவட்டம் ▾ சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி படங்கள் அறிவியல் ஸ்பெஷல் சென்னை மதுரை, காரைக்குடி செல்லும் அதிவேக சிறப்பு ரயில்கள் பகுதியாக ரத்து 01:50 am Oct 16, 2021 | dotcom@dinakaran.com(Editor) மதுரை காரைக்குடி சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: மதுரை- சென்னை எழும்பூர் இடையே (02636) அதிவேக சிறப்பு ரயில் மதுரையில் இருந்து காலை 7 மணிக்கு இயக்கப்படும் ரயில் 20 மற்றும் 27ம் தேதி விழுப்புரம்- மதுரை எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. அதைப்போன்று சென்னை எழும்பூர்- காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் (02605) எழும்பூரில் இருந்து 3.45 மணிக்கு புறப்படும் ரயில் 20 மற்றும் 27ம் தேதி சென்னை எழும்பூர்- விழுப்புரம் இடையே ரத்து செய்யப்பட்டு விழுப்புரத்தில் இருந்து 6.10 மணிக்கு புறப்படும். மேலும் புதுச்சேரி- டெல்லி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (04071) புதுச்சேரி சந்திப்பில் இருந்து 9.50 மணிக்கு புறப்படும் ரயில் 20 மற்றும் 27ம் தேதிகளில் மாற்றுப்பாதையான விழுப்புரம், காட்பாடி, பெரம்பூர், கூடூர் வழியாக சென்னை எழும்பூர் வந்தடையும். கூடுதலாக இந்த ரயில் பெரம்பூரில் ர் ரயில் நிலையத்தில் நின்று புறப்படும். Tags : Madurai ,Karaikudi , Madurai, Karaikudi, high speed special train, canceled More சென்னை கனமழை காரணமாக சென்னையில் போக்குவரத்து மாற்றம் 08:38 pm 29 Nov, 2021 கனமழை காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (நவ.30) பள்ளிகளுக்கு விடுமுறை 06:46 pm 29 Nov, 2021 மழை, வெள்ள பாதிப்புகளை மீண்டும் கணக்கிட்டு கூடுதல் இழப்பீடு கூடுதல் இழப்பீடு வழங்க ராமதாஸ் வலியுறுத்தல் 06:01 pm 29 Nov, 2021 நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் 05:57 pm 29 Nov, 2021 தெரு வியாபாரிகள் முறைப்படுத்தும் விதிகளை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி 05:53 pm 29 Nov, 2021 போதிய வருமானம் இல்லாத 12,959 திருக்கோயில்களில் ஒருகால பூஜைக்கு ரூ.129 கோடி நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் 05:43 pm 29 Nov, 2021 நீலகிரியில் குலதெய்வ கோயிலுக்கு பூசாரியாக நியமித்த சிறுவனுக்கு கல்வி வழங்க எடுத்த நடவடிக்கை என்ன? : ஐகோர்ட் கேள்வி 05:29 pm 29 Nov, 2021 சென்னை கொளத்தூரில் மருத்துவ முகாமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 05:18 pm 29 Nov, 2021 நடன இயக்குநர் சிவசங்கரின் மறைவு வேதனை அளிக்கிறது: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் 05:05 pm 29 Nov, 2021 பருத்திக்கு விதிக்கப்படும் 11% இறக்குமதி வரியை ரத்து செய்க: நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சி.பி.செந்தில்குமார் 10:30:00 PM சினிமா, செவன் பவுண்ட்ஸ், தொடர், நிழல், பின்தொடரும் குற்றவுணர்ச்சி, விமர்சனம் No comments நடிகருக்கும் இயக்குநருமான உறவு தாம்பத்திய உறவைப் போன்றதுதான். ஒரு நடிகருக்கு நல்ல பாத்திரம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அந்த நடிகரைக் கதாபாத்திரமாக மாற்ற இயக்குநர் செய்யும் முயற்சிகள். செவன் பவுண்ட்ஸ் திரைப்படத்தைப் பார்த்தவுடன் இது எனக்குத் தோன்றிய எண்ணம். ‘பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ்’ வில் ஸ்மித்தின் ஜீவன் மிக்க நடிப்பைக் கொண்டு வந்த படம். கேப்ரியல் மக்கினோ என்ற இயக்குநரின் பெயர் முதல் சில முறைகள் அந்தப் படத்தைப் பார்த்தபோதுகூட மனதில் பதியவில்லை. பிறகுதான் இவரைப் பற்றித் தெரிந்துகொண்டேன், இவர் வில் ஸ்மித்தால் ஹாலிவுட்டுக்கு அழைத்து வரப்பட்ட இத்தாலிய இயக்குநர் என்று. ஆங்கிலம் சுத்தமாகத் தெரியாதவர் முதலில் தயங்கியிருக்கிறார். பின் வில் ஸ்மித் மேலுள்ள நம்பிக்கையில் சரி என்று சொல்லியிருக்கிறார். பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ் போலவே இந்தப் படத்திலும் வில் ஸ்மித் பல தயாரிப்பாளர்களில் ஒருவரும்கூட. இவ்விரு படங்களையும் பார்த்தபோது இவர்களின் உறவின் தரம் எளிதில் விளங்குகிறது. இந்தப் படத்தின் கதை மிகவும் எளிமையானதுதான். சற்று நாடகத்தனமாகக்கூடத் தோன்றலாம். ஆனால் அதைப் படமாக்கிய விதமும் நல்ல நடிப்பும் இதைச் சிறந்த படமாக மாற்றுகிறது. தவிர, கதைக் கரு தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் முக்கியமாகப் பட்டது. புரட்டிப் போட்ட விபத்து காதலியுடன் உல்லாசமாக காரில் செல்கையில், வேலை விஷயமாகக் கைபேசியில் அவசரமாகக் குறுந்தகவல் அனுப்ப முயற்சி செய்கையில் அந்த விபத்து நடக்கிறது. பல கார்கள் மோதிய விபத்தில் காதலி உட்பட ஏழு பேரின் மரணத்துக்குக் காரணமாகிறான் டிம். குற்ற உணர்ச்சியால் தீவிர மன உளைச்சலுக்கு ஆளான டிம், இரு வருடங்களில் ஒரு முக்கிய முடிவை எடுக்கிறான். ஏழு பேரின் வாழ்க்கைக்கு உதவ வேண்டும் என்பது அது. தன் உறுப்புகளை ஒவ்வொன்றாகத் தானம் செய்ய நினைக்கிறான். தான் உதவும் அனைவரும் நல்லவர்களா, கருணை உள்ளம் படைத்தவர்களா, நிஜமாகவே வசதிக் குறைவானவர்களா என்றெல்லாம் துப்பறிந்து ஒவ்வொரு ஆளாய்த் தேர்வு செய்கிறான். நுரையீரல் பாதிக்கப்பட்ட தன் தம்பிக்கு ஒரு நுரையீரல் அளிக்கிறான். அவனின் அரசுத் துறை அடையாள அட்டையை எடுத்து ஆள் மாறாட்டம் செய்துதான் ஆட்களைத் தேர்வு செய்யும் துப்பறியும் வேலையைச் செய்கிறான். பார்வையற்ற இசைக் கலைஞன் ஒருவனைத் தேர்வு செய்கிறான் கண் தானத்துக்கு. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணிக்குத் தன் குடலைத் தானம் செய்கிறான். காதலனால் வன்முறைக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் ஒரு பெண்மணிக்கும் அவள் குழந்தைகளுக்கும் தன் வீட்டை எழுதி வைத்துவிட்டு ஓட்டல் அறைக்கு மாறுகிறான். எலும்பு நோயுள்ள ஒரு சிறுவனையும் தேர்வு செய்கிறான். உயில் காத்த உயிர் இடையில் இதய நோய் பாதிப்பில் உள்ள எமிலி என்ற ஓர் இளம் பெண்ணைச் சந்திக்கிறான். அவளுடைய ரத்த வகையும் எளிதில் கிடைக்காதது. சில வாரங்களில் இறக்கும் அவளுக்கு உதவப்போக, இருவரும் நெருக்கமாகிறார்கள். தன் காதலி நினைவில் உயிர் வாழும் டிம்மிற்கு எமிலியின் அன்பை ஏற்க முடியவில்லை. எனினும் இறக்கும் தறுவாயில் உள்ளவள் என்ற கருணை மெல்ல அன்பாக மாறுவதையும் கவனிக்கத் தவறவில்லை. அவள் தரும் தனி விருந்தில் அவளுடன் காதல் செய்கிறான். அந்த நேரத்தில் டிம்மின் தம்பி, அண்ணனின் முரணான நடவடிக்கைகளைக் கண்டு சந்தேகப்பட்டு அவன் காரையும் அடையாள அட்டையையும் மீட்டுப் போகிறான். எமிலி படுக்கையை விட்டு எழுவதற்குள், ஆஸ்பத்திரிக்கு ஓடி அவள் டாக்டரைச் சந்தித்து அவள் பிழைக்க வாய்ப்புள்ளதா என்று பதற்றமாகக் கேட்கிறான். இல்லை என்று தீர்மானமாகத் தெரிந்ததும் தன் இறுதிப் பணியை நிறைவேற்றுகிறான். அவன் உயிலின்படி அவன் இதயம் எமிலிக்குப் பொருத்தப்படுகிறது. அவள் பிழைக்கிறாள். டிம்மின் உயில் கடிதங்கள் மூலம் அவன் உதவிய ஏழு பேர் பற்றி அறிகிறாள். மனம் உடைந்துபோகிறாள். டிம்மால் பார்வை பெற்ற எர்சா குழந்தைகளுடன் இசை நிகழ்ச்சி நடக்கையில் அவனைச் சென்று சந்திக்கிறாள் எமிலி. டிம்மின் கண்களை எர்சாவிடம் கண்டு கலங்குகிறாள். அவள் அழுகையைக் கண்டவுடன், “நீ எமிலியாகத்தான் இருக்க வேண்டும்!” என்று சொல்ல டிம்மின் நினைவில், நன்றியுணர்வில் இருவரும் அணைத்துக்கொள்கிறார்கள். குற்றவுணர்ச்சிக்குப் பிறகு குற்றவுணர்ச்சி தரும் பாரம் அசாத்தியமானது. சுய மதிப்பை, உறவுகளை, வேலையை, சமூகப் பொறுப்புகளை என எல்லாவற்றையும் களவாடிவிடும். தனக்கு இழைத்துக்கொள்ளும் தண்டனையாய்த் தன் முக்கிய உறவுகளையும் தண்டிக்கும். எந்த தர்க்க விதிகளுக்கும் சிக்காத சிந்தனைகளைக் கொடுக்கும். தப்ப முடியாத குற்றவுணர்ச்சிகளால் பாதிக்கப்படுகையில் அதிலிருந்து மீளுதல் மாபெரும் சாதனை. அதற்கும் அடுத்த கட்டமாக அதற்குப் பிராயச்சித்தமாக ஒரு நற்காரியத்தின் தன் சக்திகளையும் நேரத்தையும் நினைவுகளையும் குவிப்பது மிகச் சிறந்த சுய சிகிச்சை. ஏழு பேரைத் தெரியாமல் கொன்றதற்காக ஏழு பேர் வாழ்க்கையை மாற்றத் தன் உயிரைத் தரும் பாத்திரம் பூஜிக்க வேண்டிய குணநலன் கொண்டது. செய்கின்ற தவறுகளுக்கு நியாயம் கற்பித்தும், பிறர் மீது பழி சுமத்தியும், தன் சுயத்தைக் காப்பாற்றிக்கொள்ள எதையும் செய்யலாம் என்று பெரும்பாலானோர் நினைக்கும் இந்தக் காலகட்டத்தில் தன் தவறுக்கு வருந்தி அதன் மூலம் பிறர் வாழ்க்கையை மாற்றிய நாயகனின் தியாகம் போற்றத்தக்கது. டைனமைட் எனும் வெடி மருந்தைக் கண்டுபிடித்த ஆல்ஃப்ரெட் நோபல் தனது கண்டுபிடிப்பால் நிகழக்கூடிய அழிவை எண்ணி குற்றவுணர்வு கொண்டார். அந்தக் குற்ற உணர்விலிருந்து மீளத்தான் மனித குலத்துக்குச் சிறப்பு சேர்க்கும் பணிகளுக்கு நோபல் பரிசை நிறுவினார். குற்றத்தின் பாதிப்பு எதிராளிக்குப் பல நேரங்களில் ஒரு முறைதான். குற்றம் இழைத்தவனின் குற்றவுணர்ச்சி சம்பந்தப்பட்டவருக்கு வாழ்நாள் முழுதும்கூட நீடிக்கலாம். ஆனால் இந்த உணர்வை ஏற்று, அதிலிருந்து மீண்டு, பின்னர் இயல்பு நிலையில் பிறர் துயர் நீக்கப் பணி புரிதல் என்பது ஒரு அரிய செயல். இந்தப் பட கதாநாயகன்போலத் தன்னை அழித்துக்கூடச் செய்யத் தேவையில்லை. நாம் வாழ்ந்து அதைச் செய்யலாம். தன் சுயத்தால் ஒப்புக்கொள்ள முடியாத மன நிலையை மாற்றி அந்த எதிர்மறை சக்தியை, சமூகம் ஒப்புக்கொள்ளும் நேர்மறை சக்தியாக மாற்றுவதை உளவியலில் Sublimation என்பார்கள். அதுதான் மனிதத் துயருக்கான மாமருந்து எனவும் சொல்லலாம். தன் துயரிலும் பிறர் நலம் காண வாழ்வதுதான் தெய்வீகம். அந்த ஒரு தெய்வீக அனுபவம் இந்தப் படைப்பைக் காண்கையில் ஏற்படுகிறது. நன்றி - தஃ இந்து Tweet Newer Post Older Post Home 0 comments: Post a Comment Follow @writer_cps Followers Featured Post மின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள் வே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...
இந்தித் திரையுலகத்தை யோசிக்க வைத்திருக்கிறது, கடந்த வாரம் வெளியான அனுராக் காஷ்யப்பின் ‘பாம்பே வெல்வெட்’ படத்தின் வணிகத் தோல்வி. பாக்ஸ் ஸ்டார், ரன்பீர், அனுஷ்கா ஷர்மா, திரிவேதியின் இசை, கரண் ஜோஹரின் நடிப்பு அறிமுகம் போன்ற அதிகபட்ச சுவாரஸ்யங்கள் இதில் இருந்தன. அனுராக்கின் முதல் கமர்ஷியல் படமான இதன் பட்ஜெட் சுமார் எண்பது கோடி என்கிறது பாலிவுட் வட்டாரம், அதுவும் திரையிடம் மற்றும் விளம்பரச் செலவு ஆகியவை தவிர்த்த தொகையே இது என்கிறது. தன் பட தோல்வி குறித்து அனுராக் ஒரு பக்கம் பதில் சொல்லிக்கொண்டிருக்க, டிவிட்டரில் ராம்கோபால் வர்மா கலாய்க்க, பதிலுக்கு அனுராக் அவரின் ‘ஆக்’ திரைப்படத்தைக் கலாய்க்க விஷயம் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. வியாபாரரீதியில் படம் தோல்வி என்றாலும் அனுராகின் இன்னொரு மைல்கல் படமென்று கொண்டாடும் தரப்பும் இருக்கத்தான் செய்கிறது. அறுபதுகளின் பம்பாய் ரன்பீர் கபூர் பம்பாயில் பாலியல் தொழில் செய்யும் தாய்க்குப் பிறந்தவன். அந்தச் சூழலில் வளர்ந்து வருபவன். அதனால் மிகச் சுலபமாக கிரிமினல் வேலைகளில் சிறுவயது முதலே ஈடுபட்டு வருகிறவன். தாயின் வேலை பிடிக்காமல் வளர்பவன். பாசத்துக்காக ஏங்குகிறவன். அவனுக்கும் இன்னொரு சிறுவனுக்கும் நட்பாகி இருவரும் ஒரு சேர சிறு சிறு கிரிமினல் வேலைகள் செய்து வளர்கிறார்கள். வளர்ந்துவரும் நேரத்தில் பம்பாயின் பிசினெஸ்மேன், டோரண்ட் எனும் பத்திரிகை அதிபரான, கரண் ஜோஹருக்கு அறிமுகமாகிறார். அவர் தனது நிழல் உலக வேலைகளுக்கு ரன்பீரைப் பயன்படுத்தி, தன் எதிரிகளை அழிக்கிறார். ரன்பீருக்கோ தான் பிறந்து வளர்ந்த சூழலிலிருந்து மும்பையின் பெரிய மனிதராக வர வேண்டுமென்ற ஆசை. அந்த ஆசையைப் பயன்படுத்திக் குளிர்காய்கிறார் கரண். ரன்பீர் பெயரில் பினாமியாய் ஆரம்பிக்கும் பம்பாய் வெல்வெட் எனும் உயர் ரக பார் ரெஸ்டாரண்டைத் தன் ஆதாயத்துக்காக விருந்தினர்களைக் குஷிப்படுத்துமிடமாக மாற்றிக்கொடுக்க, ரன்பீர் விறுவிறுவென்று வளர்ந்து நிற்கிறார். ஒரு நெகடிவ், ஒரு அழகி கோவாவில் போர்ச்சுகீஸியக் குடும்பத்தில் பிறந்து அருமையான குரல் வளம் கொண்ட சிறுமியான அனுஷ்காவை அவருடைய ஆசிரியை தன் பொறுப்பில் வளர்க்கிறார். ஆசிரியையின் ஒடுக்குதல் தாங்காமல் அனுஷ்கா பம்பாய்க்குத் தப்பித்து வருகிறார். பம்பாயில் சாதிக்க வரும் அனுஷ்காவுக்கு நிழல் உலக மனிதர் ஒருவரின் தொடர்பு கிடைக்கிறது. கரணுக்கும் அவருடைய நண்பனாய் இருந்து பின்னாளில் போட்டி பத்திரிகையை ஆரம்பித்த கிளிட்ஸ் பத்திரிகையின் அதிபருக்கும் பிரச்சினை. அவர் ரியல் எஸ்டேட் தொழிலில் நுழைந்து பம்பாயின் மேயருடன் நெருக்கமான நண்பராகி சில பல வேலைகளில் இறங்குகிறார். நேர்மையான அமைச்சர் ஒருவரின் அந்தரங்க போட்டோ நெகட்டிவ் ரன்பீரிடம் இருக்கிறது. அதை வைத்து ரியல் எஸ்டேட் தொழிலில் பெரிய நாரிமன் பாயிண்ட் இருக்கும் ஒரு முக்கிய இடத்தை ஆக்கிரமிக்க முயல்கிறார் அவர். அந்த போட்டோ நெகட்டிவை வாங்க கிளிட்ஸ் பத்திரிகை ஆசிரியர் ரன்பீரின் பாம்பே வெல்வெட்டுக்கு அனுஷ்காவைப் பாடகியாய் அனுப்பிவைக்கிறார். உளவு பார்க்க வந்த அனுஷ்காவுக்கும், ரன்பீருக்கும் காதல் பற்றிக்கொள்கிறது. தன் மனைவியை வைத்தே காரியம் சாதித்துக் கொள்ளும் கரண், ரன்பீர் அடுத்த கட்டமாய் வளர்ந்தால், தனக்கு அடங்கமாட்டானென்று ரன்பீரை அடக்கப் பார்க்கிறார். கடைசியில் கரணின் சதிக்கு, தன் காதலாலும், தீரா ஆசையாலும் இறக்கிறார். ரன்பீர். எங்கே சிக்கல்? இதே போன்ற கதையைப் பல நடிகர்கள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள் ஏற்கெனவே கையாண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தில் அனுராக் சொல்ல முயன்ற விஷயங்கள் அபாரம். அக்காலகட்டத்தை கண்முன் நிறுத்தும் கலை இயக்குநரின் கை வண்ணம். வெள்ளைக்காரனை வெளியேற்றிய பின், வெள்ளைக்காரனின் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய பணக்காரர்களின் நடவடிக்கைகள், பம்பாயை வியாபாரத் தளமாகக் கொண்டு நடக்கும் அரசியல் மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள், நிழலுலக வேலைகள். அரசியல் பின்னணிகள், ரன்பீரை, அவனது நெட்வொர்கைப் பிடிக்க முயலும் போலீஸ் அதிகாரி கே.கே.மேனன், அரசியல்வாதியுடன் இணைந்துகொண்டு அவருக்கு எதிராகச் சதி செய்யும் போலீஸ் கமிஷனர் என நிறைய விஷயங்களைத் தொட்டிருக்கிறார். இத்தனை கதைகளையும் சொல்லும் பாணியில், ஒரு காட்சியிலிருந்து இன்னொரு காட்சிக்கும் மாறும் விஷயங்களில், குறிப்பாக ரன்பீரின் சிறு வயது காட்சிகளிலிருந்து பதினைந்து வருடங்கள் முன் நோக்கி வரும் ஸ்டைல், அனுஷ்கா சிறு வயதுப் பெண்ணாக அவரின் ஆசிரியையிடம் பின்னங்காலில் அடிவாங்கித் தழும்பேறிய காலுடன் நடக்க ஆரம்பிக்க, அடுத்த ஷாட்டில் வேறொரு பெரிய பெண்ணின் பின்னங்காலில் ஆரம்பித்து, அனுஷ்காவைக் காட்டும்போது அவரது வளர்ச்சியை, கால ஓட்டத்தைப் புரியவைத்த விதம் பளிச். பாலியல் தொழில் செய்யும் தாயின் மேலுள்ள கோபத்தை வெளிக்காட்ட, வெளிநாட்டுப் படங்களில் வருவதைப் போலக் கூண்டினுள் சண்டை போடும் ஆளிடம் தன் கோபத்தை, வெறியை, ஏமாற்றத்தை வெளிப்படுத்தி, அடி வாங்கிக்கொண்டு பணத்தைக் கொடுக்கும் தருணம் என நேர்த்தியாக நகருகிறது படம். அமித் திரிவேதியின் இசையில் வரும் அருமையான க்ளாஸிக்கல் இசை, அதற்கான விஷுவல்கள், காஸ்ட்யூம்கள், என ஓபராவைக் கண் முன் நிறுத்தியது. ஆக்‌ஷன் காட்சிகளில் வெளிப்படும் வன்முறை, அழகியல், ரவிராயின் விஷுவல்கள். சின்ன சின்ன வசனங்கள் என மெனக்கெட்டிருக்கிறார்கள். சினிமா மீது ஆர்வமுள்ள கலைஞர்கள் கதை சொல்லும் விதத்திலும், நடிகர்களின் நடிப்பு, பேசப்படாத வசனங்கள், காட்சிகளை நகர்த்திய விதம் இப்படி நுணுக்கமாகப் பார்த்தால் நிறைய விஷயங்கள் ஒவ்வொரு முறையும் பார்வையாளனுக்குப் புதிதாகத் தோன்றக்கூடியவை சினிமாவை நேசிக்கத் தொடங்கும் புதியவர்கள் கற்றுக்கொள்ளக் கூடிய விஷயங்கள் ஏராளம். புளிப்பேறிய காதல் அதே நேரத்தில் தாதாக்களை, அரசியல்வாதிகளைப் பற்றிய கதையில் காதல் எனும் டெம்ப்ளேட்டை அடித்து நொறுக்கி, நெளியும்வரை புடைத்தெடுத்திருப்பதால் காட்சிகளில் பெரிய திருப்பங்களில்லை. பார்வையாளனைக் கவர நினைத்து எழுதப்பட்ட நிறைய கிளைக் கதைகள், பின்பு அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லாத திரைக்கதை, ஓபரா டைப் காதல், குழந்தைத்தனமான ரன்பீரின் முகம், அழுத்தமில்லாத காதல், கூண்டுச் சண்டை எனத் தடம் மாறி போய்க்கொண்டிருக்கிறது. இதனால் இந்த பாம்பே வெல்வெட்டின் காட்சிகள் ரசிகனுக்குத் தொடர்பற்று அன்னியமாகப் போய்விட்டன. Tweet Newer Post Older Post Home 0 comments: Post a Comment Follow @writer_cps Followers Featured Post மின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள் வே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...
15 வயது சிறுமி 9 மாதங்களாக பாலியல் வன்கொடுமை... 33 பேர் கொண்ட கும்பல் கைது.... அதிர வைத்த சம்பவம்...!!! • Seithi Solai Skip to content Monday, November 29, 2021 Responsive Menu Support Documentation Download Seithi Solai உள்ளூர் முதல் உலகம் வரை Search Search MENUMENU அரசியல் செய்திகள் மாநில செய்திகள் தேசிய செய்திகள் தேசிய செய்திகள் உலக செய்திகள் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா ஆன்மிகம் ஜோதிடம் ராசிபலன் இந்து இஸ்லாம் கிறிஸ்த்து பல்சுவை வழிபாட்டு முறை கதைகள் கால் பந்து பேட்டி டென்னிஸ் கட்டுரைகள் கவிதைகள் கோவில்கள் டிரெய்லர் மற்றவை விமர்சனம் வர்த்தகம் கல்வி வரலாற்றில் இன்று வானிலை டெக்னாலஜி ஆட்டோ மொபைல் வேலைவாய்ப்பு லைப் ஸ்டைல் சமையல் குறிப்புகள் இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் அழகுக்குறிப்பு குழந்தை வளர்ப்பு மாவட்ட செய்திகள் சென்னை கோயம்புத்தூர் மதுரை திருச்சி சேலம் ஈரோடு திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திண்டுக்கல் தேனி தஞ்சாவூர் கடலூர் நாகப்பட்டினம் செங்கல்பட்டு விழுப்புரம் திருவண்ணாமலை விருதுநகர் திருப்பூர் கிருஷ்ணகிரி புதுச்சேரி கரூர் தர்மபுரி நாமக்கல் புதுக்கோட்டை ராமநாதபுரம் திருவாரூர் அரியலூர் நீலகிரி சிவகங்கை பெரம்பலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் தென்காசி கள்ளக்குறிச்சி விளையாட்டு கிரிக்கெட் கபடி ஹாக்கி பேட்மிண்டன் Home 15 வயது சிறுமி 9 மாதங்களாக பாலியல் வன்கொடுமை… 33 பேர் கொண்ட கும்பல் கைது…. அதிர வைத்த சம்பவம்…!!! தேசிய செய்திகள் 15 வயது சிறுமி 9 மாதங்களாக பாலியல் வன்கொடுமை… 33 பேர் கொண்ட கும்பல் கைது…. அதிர வைத்த சம்பவம்…!!! September 27, 2021 Subbu lakshmi No Comments மராட்டிய மாநிலத்தில், 15 வயது சிறுமியை 9 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த 33 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர வைத்துள்ளது. மராட்டிய மாநிலம், தானே மாவட்டத்தில் டோம்பிவிலி பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிறுமியின் நண்பர்கள் சிலர் சேர்ந்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவை தொடர்ந்து பயன்படுத்தி சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் இந்த வீடியோவை மேலும் சிலருக்கு அனுப்பி அவர்களும் அந்த சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுபற்றி சிறுமி தன்னுடைய அத்தையிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் கடந்த 23ஆம் தேதி பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணையில் 33 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் 2 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Post Views: 0 Tags: 15 வயது சிறுமி, 33 பேர் கைது, கற்பழிப்பு Post navigation பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வழக்கு… செப்டம்பர் 30 வரை நீதிமன்ற காவல்!! ‘சிவகுமாரின் சபதம்’ படத்தின்… கலக்கலான புதிய புரோமோ வீடியோ ரிலீஸ்…!!! Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment Name * Email * Website வரலாற்றில் இன்று பல்சுவை வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று நவம்பர் 29…!! November 29, 2021 Rugaiya beevi பல்சுவை வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று நவம்பர் 28…!! November 28, 2021 Rugaiya beevi Uncategorized பல்சுவை வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று நவம்பர் 27…!! November 27, 2021 Rugaiya beevi பல்சுவை வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று நவம்பர் 26…!! November 26, 2021 Rugaiya beevi NewsCard NewsCard is a Multi-Purpose Magazine/News WordPress Theme. NewsCard is specially designed for magazine sites (food, travel, fashion, music, health, sports, photography), news sites, shopping sites, personal/photo blog and many more. There are Front Page Template, Sidebar Page Layout, Top Bar, Header Image/Overlay/Advertisement, Social Profiles and Banner Slider. Also supports popular plugins like WooCommerce, bbPress, Contact Form 7 and many more. It is also translation ready. Rss “ஒமிக்ரான் வைரஸை தடுக்க புதிய கட்டுப்பாடுகள்!”… இங்கிலாந்து அரசு அறிவிப்பு…!! November 29, 2021 ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும், ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு பரவத்தொடங்கியதால் இங்கிலாந்து அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, உலக நாடுகள் தீவிர… The post “ஒமிக்ரான் வைரஸை தடுக்க புதிய கட்டுப்பாடுகள்!”… இங்கிலாந்து அரசு அறிவிப்பு…!! appeared first on Seithi Solai. Siva Ranjani #BREAKING : எதிர்கட்சி எம்.பிக்கள் முழக்கம்…. நண்பகல் 12 மணிவரை மக்களவை ஒத்திவைப்பு!! November 29, 2021 எதிர்கட்சிகளின் முழக்கத்தால் நண்பகல் 12 மணிக்கு மக்களவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கிய நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு, தொடர் முழக்கம் எழுப்பியதால் முதல் நாளன்று மக்களவை நண்பகல்… The post #BREAKING : எதிர்கட்சி எம்.பிக்கள் முழக்கம்…. நண்பகல் 12 மணிவரை மக்களவை ஒத்திவைப்பு!! appeared first on Seithi Solai. MM SELVAM Justin : மழை பாதிப்பு…. முதல்வர் நேரில் ஆய்வு….!!!! November 29, 2021 காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜபுரம் பகுதியில் பிடிசி குடியிருப்பில் மழை பாதித்த இடங்களை முதல்வர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. தொடர்ந்து… The post Justin : மழை பாதிப்பு…. முதல்வர் நேரில் ஆய்வு….!!!! appeared first on Seithi Solai. Ramya Suresh JUSTIN: அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க அரசு தயாராக உள்ளது…. பிரதமர் மோடி…!!!! November 29, 2021 நாடாளுமன்றத்தில் அனைத்து விவாதங்களை குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 23-ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்… The post JUSTIN: அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க அரசு தயாராக உள்ளது…. பிரதமர் மோடி…!!!! appeared first on Seithi Solai. Ramya Suresh #BREAKING : எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க தயார் – பிரதமர் மோடி!! November 29, 2021 அமைதியான முறையில் விவாதங்கள் நடைபெற வேண்டும் என எதிர்க் கட்சிகளுக்கு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், பிரதமர் மோடி டெல்லி நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது… The post #BREAKING : எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க தயார் – பிரதமர் மோடி!! appeared first on Seithi Solai. MM SELVAM “அளவுக்கு அதிகமாக மது குடித்த நபர்” திடீரென நேர்ந்த கொடுமை…. திருவள்ளூரில் நடந்த சோகம்….!!! November 29, 2021 அளவுக்கு அதிகமாக மது குடித்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி இந்திரா நகரில் பரோட்டா மாஸ்டரான சந்திரசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு திருவள்ளூர் தேரடி அருகே உள்ள… The post “அளவுக்கு அதிகமாக மது குடித்த நபர்” திடீரென நேர்ந்த கொடுமை…. திருவள்ளூரில் நடந்த சோகம்….!!! appeared first on Seithi Solai. Nanthini Pandi தைவான் எங்கள் நாட்டின் ஒரு பகுதி…! அத்துமீறும் சீன விமானங்கள்…. வெளியான பரபரப்பு தகவல்….!! November 29, 2021 அமெரிக்க பிரதிநிதிகள் தைவான் நாட்டிற்கு வருகை தந்திருந்த நிலையில் தைவான் வான் எல்லைக்குள் சீன விமானங்கள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தைவான் நாட்டிற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் 5 பேர் வருகை தந்துள்ளனர். இதன் காரணமாக எரிச்சலில் இருந்த சீனா… The post தைவான் எங்கள் நாட்டின் ஒரு பகுதி…! அத்துமீறும் சீன விமானங்கள்…. வெளியான பரபரப்பு தகவல்….!! appeared first on Seithi Solai. Anu shya பெண்கள் இலவச கேஸ் சிலிண்டர் பெற…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!! November 29, 2021 உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பெண்கள் இலவசமாக கேஸ் சிலிண்டர் மற்றும் அடுப்பு பெறுவது சுலபமாகி விட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள ஏழை பெண்கள் சுகாதாரமான சமையல் எரிவாயு பெற முடியும். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இந்த… The post பெண்கள் இலவச கேஸ் சிலிண்டர் பெற…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!! appeared first on Seithi Solai. Nanthini Nandi “தெரியாமல் உரசி விட்டது” வாலிபருக்கு நடந்த கொடுமை…. போலீஸின் அதிரடி நடவடிக்கை….!!! November 29, 2021 இருசக்கர வாகனத்தில் வந்து உரசிய வாலிபரை தாக்கிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மா.பொ.சி நகரில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் சசி ராஜன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.… The post “தெரியாமல் உரசி விட்டது” வாலிபருக்கு நடந்த கொடுமை…. போலீஸின் அதிரடி நடவடிக்கை….!!! appeared first on Seithi Solai. Nanthini Pandi “வெளுத்து வாங்கிய கனமழை” இடிந்து விழுந்த வீடுகள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!! November 29, 2021 மழையினால் வீடு இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள தோகைமலை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதனால் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கின்றது. இந்நிலையில் வடசேரி பகுதியில்… The post “வெளுத்து வாங்கிய கனமழை” இடிந்து விழுந்த வீடுகள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!! appeared first on Seithi Solai.
போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகைக்கு ஜாமீன் மறுப்பு! - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com Skip to content Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com Tamil No 1 Digital News Platform. providing All kinds of news in Tamil Corona Update தேர்தல் செய்திகள் அரசியல் சினிமா செய்திகள் விளையாட்டு செய்திகள் வணிகம் உலக செய்திகள் தேசிய செய்திகள் போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகைக்கு ஜாமீன் மறுப்பு! September 11, 2020 September 11, 2020 Anitha S 357 Views 0 Comments Bail Denied, Drug, Rhea chakraborty, suicide, Sushant Singh Rajput, சுஷாந்த் சிங், போதைப்பொருள் விவகாரம், ரியா சக்கரபோர்த்தி, ஜாமீன் மறுப்பு போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பிரபல இந்தி நடிகை ரியா சக்கரபோர்த்திக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. அவர், தற்கொலை செய்துகொண்ட பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் வழங்கியதாகவும், அதற்காக பணம் கொடுத்ததாகவும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் விசாரணையின் போது, நடிகை ரியா சக்கரபோர்த்தியும் இதனை ஒப்பு கொண்டதாகவும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் சிறையில் உள்ள நடிகை ரியா, ஜாமீன் கேட்டு மும்பையில் இருக்கும் செசன்ஸ் கோர்ட்டில் தனது வக்கீல் மூலம் மனு தாக்கல் செய்தார். ரியா தாக்கல் செய்துள்ள மனுவில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தன்னிடம் கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற்றதாக கூறியுள்ளார். தான் எந்த தவறும் செய்யவில்லை என்று நடிகை ரியா தெரிவித்து இருந்த மனுவின் மீது இன்று தீர்ப்பளித்த மும்பை செசன்ஸ் நீதிமன்றம், நடிகை ரியா சக்கரபோர்த்திக்கு ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.
ஊசிப்புட்டான்: ``நிலவின் பின்னணியில் ஓங்கு தாங்காய் ஒரு கரிய உருவம்” | அத்தியாயம் - 6| story of a boy nicknamed as oosipputtan part 6 - Vikatan Save the vikatan web app to Home Screen tap on Add to home screen. X Subscribe to vikatan Login செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் கனமழை: அப்டேட்ஸ் New ஆன்லைன் தொடர்கள் New My News ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் ராசி காலண்டர் மேலும் மெனுவில் Search Published: 28 Oct 2021 11 AM Updated: 28 Oct 2021 11 AM ஊசிப்புட்டான்: ``நிலவின் பின்னணியில் ஓங்கு தாங்காய் ஒரு கரிய உருவம்” | அத்தியாயம் - 6 வாஸ்தோரமணன்.கோ ஊசிப்புட்டான்: ``நிலவின் பின்னணியில் ஓங்கு தாங்காய் ஒரு கரிய உருவம்” | அத்தியாயம் - 6 ஊசிப்புட்டான்: `எவம்ல அந்த வாத்தியான்... அவெம் பேரு என்னல..?’ | அத்தியாயம் - 10 ஊசிப்புட்டான்: ``பாடங்கத்துக் கொடுக்குத வாத்தியாங்கிட்ட மரியாத வேணும் சார்'' | அத்தியாயம் - 9 ஊசிப்புட்டான் : ``ஒனக்கு ஏம்டே இந்த எளவு வேலையெல்லாம்...'' | அத்தியாயம் - 8 ஊசிப்புட்டான்: ``இனி நாந்தா உன் மூத்தப்பா’’ | அத்தியாயம் - 7 ஊசிப்புட்டான்: ``நிலவின் பின்னணியில் ஓங்கு தாங்காய் ஒரு கரிய உருவம்” | அத்தியாயம் - 6 ஊசிப்புட்டான்: ``இப்ப யார் குடியைக் கெடுக்கப் போறே?” | அத்தியாயம் - 5 ஊசிப்புட்டான் - `நம்பிக்கை வெச்சவனை ஏமாத்துறது எவ்ளோ பெரிய துரோகம்!' | அத்தியாயம் - 4 ஊசிப்புட்டான் - `பட்டைக்கு எப்பயுமே பாளையங்கொட்டைதான்!'|அத்தியாயம் - 3 ஊசிப் புட்டான்: `பயப்படுறவன்தான் கத்துவான்' | அத்தியாயம் - 2 ஊசிப் புட்டான் - சங்குத்துறைக் கடல் - அத்தியாயம் - 1 ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் Use App ஊசிப்புட்டான் ``இல்லை நான் என் விருப்பப்படிதான் வாழுவேன்னு நினைச்சேன்னா, ஏற்கெனவே பெத்த தகப்பனுக்குக் கொள்ளிவெச்சுட்ட மாதிரி இந்தத் தள்ளைக்கும் கொள்ளியவெச்சுட்டு உன் விருப்பம் போல எக்கேடும் கெட்டுப் போ...” உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் பூமியின் சுழற்சி யாருடைய தேவைகளுக்காகவும், அவசியத்துக்காகவும் தன் வேகத்தை மட்டுப்படுத்துவதோ வேகப்படுத்துவதோ கிடையாது. ஆனால் வருடத்துக்கு முன்னூற்று அறுபத்தி ஐந்தே கால் நாள்கள். ஒரு நாளுக்கு இருபத்தி நான்கு மணி நேரம். ஒரு மணி நேரத்துக்கு அறுபது நிமிடங்கள். ஒரு நிமிடத்துக்கு அறுபது நொடிகள் எனக் கூறுபோட்ட மனிதர்களுக்கு மட்டும் அதீத சந்தோஷத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலம், அடுத்து என்ன நிகழப்போகிறது என்பதை அறியாமல் பயத்தோடு நகர்த்துகிற காலம் என இரண்டு கால தருணங்களிலும் பூமியின் வேகம் மிக மெதுவாகவும் இன்னும் ஒரு சிலருக்கோ மிக மிக மெதுவாகவும் நகர்வதாக உணர்கிறார்கள். விஜயாவின் ஒரு கையில் கண்ணகப்பையும் மறுகையில் ரோஸ் நிற கார்டையும் பார்த்ததும், பூமி மிக மிக மெதுவாகச் சுழல்வதாத்தான் ரவிக்குத் தோன்றியது. அடுத்து என்ன நிகழப் போகிறது என்பது அவனுக்குத் தெரியவில்லை. அதனால் அவனுள் வெவ்வேறு வகையிலான கணிப்புகளும் சந்தேகங்களும் முளைவிடத் தொடங்கியிருந்தன. முதலில் அவனுள் தோன்றிய சந்தேகம் அம்மா கையில் இருப்பது ப்ராக்ரஸ் கார்டுதானா என்பதில் தொடங்கி அடுத்ததாக அது ப்ராக்ரஸ் கார்டாகவே இருக்கும் பட்சத்தில் அந்த கார்ட் தன்னுடைய கார்டா அல்லது தம்பி சந்திரனுடைய கார்டா என்பதில் வந்து நின்று சற்று இளைப்பாறியது. அது இளைப்பாறிய தருணத்தில் சந்திரன் அமர்ந்து பனங்கிழங்கைச் சாப்பிடும் அழகைப் பார்த்தால் அவனுடைய கார்டாக இருக்க வாய்ப்பில்லை என்கிற கணிப்பில் ஆரம்பித்து அது தன்னுடைய கார்டாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது என்ற ஊர்ஜிதத்தில் வந்து நின்றது. மனம் ஊர்ஜிதம் செய்ததும், விஜயாவின் கையில் இருப்பது ப்ராக்ரஸ் கார்டுதானா என்கிற சந்தேகம் அவனைவிட்டு அகன்றுவிட்டது. குறைந்த அளவு மார்க் வாங்கியதோ அல்லது சிவப்பு மசியால் கோடு போட்டு `ஃபெயில்’ என்று காட்டியிருக்கும் மார்க்கையோ குறித்துக் கவலையில்லை. ஏதேனும் சொல்லித் தப்பிவிடலாம். மாறாக, மொத்த மதிப்பெண்களுக்குக் கீழாக வருகை என்று இருக்கும் கட்டத்தினுள் 18/18 என்று இல்லாமல் 13/18 என்று இருப்பதைப் பார்த்திருந்தால் என்ன செய்வது... அதை எப்படிச் சமாளிப்பது? அந்த ஐந்து நாள்களும் பள்ளிக்குச் செல்லாமல் எங்கே சென்றாய் என்று அடுத்த கேள்வி வருகையில் எங்கே சென்றதாகச் சொல்வது என யோசிக்க யோசிக்க, அவனுடைய பாதத்தில் துளிர்த்த வேர், பூமியைச் சுற்றவிடாமல் தடுத்து நிறுத்தியிருப்பதாகத் தோன்றச் செய்தது. அப்படியே திகைத்துப் போய் நின்றவன் மனதினுள் முதன்முதலாக ஒரு தீர்க்கமான கேள்வி எழுந்தது. `நமக்கெ ப்ராக்ரஸ் கார்டு எப்படி அம்மெக்க கைல வந்துச்சு?’ ஊசிப்புட்டான் தான் நின்ற இடத்திலிருந்து நகராமலேயே தலையை மட்டும் திருப்பிச் சந்திரனைப் பார்த்தான். அவன் இன்னமும் பனங்கிழங்கைக் கடித்து, மென்று தின்றுகொண்டிருந்தான். அவன் பனங்கிழங்கை மெல்லும் சப்தம் அங்கிருந்த நிசப்தத்தைக் கிழித்ததோடு அல்லாமல் ரவியின் செவிப்பறையையும் கிழிப்பதைப்போல ரவிக்குத் தோன்றியது. ‘இவன்தான் வாங்கிட்டு வந்து கொடுத்துருப்பான்’ அவனுள் எழுந்த கோபத்தை அவன் கண்கள் வெளிப்படுத்தின. Also Read ஊசிப்புட்டான்: ``இப்ப யார் குடியைக் கெடுக்கப் போறே?” | அத்தியாயம் - 5 ``லேய் அவனை ஏம்ல மொறைக்குத...” விஜயாவின் குரல் கோபமாக வெளிப்படாமல் அவளுக்கே உரித்தான அதிகாரத்தோடு வெளிப்பட, ரவிக்குக் குழப்பம் இன்னும் அதிகமானது. `ஒருவேள அம்மெக்க கைல இருக்கது நமக்க ப்ராக்ரஸ் கார்டு இல்லியா’ திரும்பி மீண்டும் விஜயாவைப் பார்த்தான். ``லேய் ஒன்னத்தாம்ல கேக்கேன். அவன ஏம்ல மொறச்சுப் பாக்குத..?” ``ந்நா ஒண்ணும் மொறக்கலியே...” சமாளிக்கும் குரலில் ரவி சொல்ல, ``போ... போயி கண்ணாடில ஒன் மொகரையைப் பாரு. தெரியும்.” சொல்லிவிட்டு அவள் மீண்டும் அடுக்களைக்குள் செல்லவும், `அப்பாடா... அம்மெக்க கைல இருக்கது நமக்கெ ப்ராக்ரஸு கார்டு இல்லை’ ரவியிடமிருந்து நிம்மதிப் பெருமூச்சொன்று வெளியேறியது. `அடச்சை... எளவுல கொஞ்ச நேரத்துல என்னெல்லாம் நெனச்சு பயந்து தொலச்சிட்டேன்...’ அவனது பயம் அவனுக்கே சிரிப்பை வரவழைக்க, புன்னகைத்துக்கொண்டான். பூமியின் சுற்றல் அதன் இயல்புநிலைக்குத் திரும்பியதைப்போல அவனுக்கு இருந்தது ``கெழங்கு சாப்பிடுதியாலே...” அடுக்களையிலிருந்து விஜயாவின் குரல் கேட்டது. ``ம்ம்ம் குடும்மா...” உற்சாகமாகக் குரல் கொடுத்தான் ரவி. ``மொதல்ல போய் பள்ளிக்கூட யூனிஃபார்ம மாத்திட்டு மொகம் கழுவிட்டு வா” என்றாள் ``கெழங்கத் தின்னுட்டு மாத்திக்கறேன்” என்றான் பதிலுக்கு ரவியும் நிதானமாக. ``சடையையும் நிக்கரையும் மாத்துறதும் கெடயாது, கொண்டாடுறதும் கெடையாது. தொவைக்கிறப்பல்லாம் ஒரு சொமட்டுக்கு அழுக்கு போகுது” என்று சொன்ன விஜயாவின் குரல் ஒரு நொடி நின்று பின் சற்று சந்தேகத் தொனியில், ``லேய் ஆமா இப்பெல்லாம் உன் சட்டைல நிக்கர்லல்லாம் பெருசா அழுக்கு வர்றதில்லயே, இப்பல்லாம் ஸ்கூல் மண்ணுல பொரளுறது இல்லியா?” விஜயாவின் அந்தச் சந்தகேக் கேள்வியால் சற்று நிலை தடுமாறிய ரவியிடமிருந்து பதில் வராமல் போகவே, ``சட்டெயெல்லாம் பெருசா கசங்குன மாதிரியும் இல்லை. ஸ்கூலுக்கு ஒழுங்காத்தான் போறியா” என அடுத்த சந்தேகக் கேள்வியைக் கேட்டாள் விஜயா. முதல் சந்தேகக் கேள்வியிலிருந்தே வெளி வந்திராத ரவியிடம், அடுத்த கேள்வியின் கொக்கி விழ, அதைச் சமாளிக்கத் தெரியாத ரவியோ கோபமாக, ``அவ்ளோ சந்தேகமிருந்ததுன்னா ஸ்கூல்ல வந்து வாத்தியாருகிட்ட கேட்டுக்கவேண்டியதுதான” என ஏறக்குறையக் கத்தினான். ரவியின் கோபக் குரலைக் கேட்டு அடுக்களையிலிருந்து வெளியே வந்தவள், கோபமாக, ``லேய் என்னல இது புதுப் பழக்கம்?” என்றாள். ``என்னது, என்ன புதுப் பழக்கம்” என அதே கோபத்தோடே கேட்டான் ரவி. ``இப்படி எடுத்தெறிஞ்சு பேசுற பழக்கம்...” ஊசிப்புட்டான் ``பின்ன என்ன... முன்னாடிலெல்லாம் ஏம்ல சட்டையையும் நிக்கரையும் இப்படி அழுக்காக்கிட்டு வர்றேன்னு கேப்ப. இப்ப என்னடான்னா சட்டையும் நிக்கரும் ஏன் அழுக்காகலைனு கேக்க. நான் இப்ப என்னதான் பண்ணணும்னு சொல்ற?” பேசியபடியே சட்டையைக் கழற்றித் தரையில் எறிந்தான் ரவி. ``என்னல பெத்த அம்மெகிட்ட பேசுறோங்கிற மரியாத இல்லாம பேசுக. இனி ஒரு வார்த்த இப்பிடிப் பேசுனேன்னா, கைல கண்ணாப்ப சூடா தா இருக்கு. வாயில சூடு போட்டு விட்ருவேன். பாத்துக்க” கண்களில் அனல் தெறிக்க, வலக்கையில் பிடித்திருந்த கண்ணகப்பையை ரவியின் முகத்துக்கு நேராக நீட்டிப் பேசினாள் விஜயா. பள்ளிக்கூடத்துக்கு சரியாகப் போகாதது தெரிந்துவிடுமோ என்கிற பயத்தில், பதற்றத்தில் அவன் கோபமாகப் பேசியது அப்போதுதான் அவனுக்கு உறைத்தது. ``நானும் கொஞ்ச நாளா உன்னை கவனிச்சுட்டுதாம்ல இருக்கேன். ஒன் பேச்சு, போக்கு, நடவடிக்கைன்னு ஒண்ணுகூட சரியாப் படலை எனக்கு” ரவியின் மௌனக் குளத்தின் மேல் மீண்டும் ஒரு கல் வந்து விழுந்தது. `அம்மெக்கி எல்லாம் தெரிஞ்சு போயிடிச்சோ’ என்ற சந்தேகம் அவனுள் எழவும், அவனையும் அறியாமல் அவனிடமிருந்து மூச்சுக்காற்று வேக வேகமாக வெளியேறிக் கை விரல்களை நடுங்கவைத்தன. ``இந்த மாசத்திக்க ப்ராக்ரஸ் கார்டு எங்கல” என விஜயா அதட்டிக் கேட்கவும், என்ன பதில் பேச எனத் தெரியாமல் ரவி உறைந்துபோய் அவளைப் பார்த்தான். Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். ``கேக்கேம்லால ப்ராக்ரஸ் கார்டை எங்கல?” ``அது… அது… இன்னும் தரலை” தட்டுத் தடுமாறி ரவி பதில் சொல்கையில், அவன் குரலோடு கால்கள் வரையிலும் நடுங்கின. ``சந்த்ரா அடுப்பு பக்கத்துல இவங்கார்டு இருக்கு. அதை எடுத்துட்டு வால” என்று விஜயா சொல்ல, சந்திரன் தான் இருந்த இடத்திலிருந்து இறங்கி அடுக்களைக்குள் சென்றான். `அப்படீன்னா அம்மெக்க கைல இருந்தது என்னோட ப்ராக்ரஸ் கார்டுதானா’ அந்த நிமிடமே பூமி இரண்டாகப் பிளந்து தன்னை உள்வாங்கிவிடாதா என ரவிக்குத் தோன்றியது. சந்திரன் எடுத்து வந்து கொடுத்த ப்ராக்ரஸ் கார்டை ரவியின் முகத்தை நோக்கி விசிறியடித்தாள் விஜயா. ``வழக்கமா ரெண்டு இல்ல மூணு பாடத்துலதானல பெயிலாவ. இந்தத் தடவை என்னல நாலு பாடத்துல பெயிலாயிருக்க...” தன் முன்னால் கிடந்த ப்ராக்ரஸ் கார்டை எடுத்து ரவி பார்த்தான். நாலு பாடத்தில் சிவப்புக் கோடும் ஒரு பாடத்துக்கு `a’ என்றும் போட்டிருந்தது. `கணக்கு பரீச்சை அன்னிக்கு நான் போகலியா’ எனத் தோன்றிய அதே வேளையில், `அட்டெண்டன்சை அம்மெ கவனிக்கல’ என்கிற நினைப்பு அவனுக்கு ஆறுதலாக இருந்தது. ``என்னல நான் பாட்டுக்குக் கேட்டுட்டேயிருக்கேன். நீ ஒம்பாட்டுக்கு கல்லுளிமங்கன் மாதிரி நிக்க?” விஜயாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்லிச் சமாளிப்பது எனத் தெரியாததால் தலை குனிந்தபடியே நின்றான் ரவி. ``கொஞ்ச முன்னாடி வாய் கிழியப் பேசுனேல்லலே. அந்த வாய இப்பத் தெறந்து பேசேம்ல. வாய்ல என்ன பழையாத்து மண்ண கொழச்சா அடச்சிவெச்சுருக்க..?” ``நீ நல்லா படிச்சு எங்களைக் காப்பாத்துவேன்னு உங்கப்பா நம்புனாரு. அப்படி நம்பிக்கவெச்ச மனுசனை பாதிலயே...” கண்களில் கண்ணீர் திரண்டு வெளிவந்து குரல் அடைத்துக் கமற, ஒரு நொடி நிதானித்து உடுத்தியிருந்த சேலையின் தலைப்பால் கண்ணில் திரண்டிருந்த கண்ணீரைத் துடைத்தபடியே தீர்க்கமான குரலில், ``நீ நல்லா படிச்சு என்னயவெல்லாம் காப்பாத்த வேணாம். உன்னயே நீ காப்பாத்திக்கிட்டா போதும். இல்லை, நான் என் விருப்பப்படிதான் வாழுவேன்னு நினைச்சேன்னா, ஏற்கெனவே பெத்த தகப்பனுக்கு கொள்ளவெச்சுட்ட மாதிரி இந்தத் தள்ளைக்கும் கொள்ளியவெச்சுட்டு உன் விருப்பம்போல எக்கேடும் கெட்டுப் போ...” சொல்லிவிட்டு கண்களைத் துடைத்தபடியே அடுக்களைக்குள் சென்ற விஜயாவை, `அவசரப்பட்டுக் கோபப்பட்டுட்டோமே’ என்கிற குற்றவுணர்வு மேலிட, பார்த்தபடியே நின்றான் ரவி. ஊசிப்புட்டான் திண்ணையில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தவன் காதுகளில் இரவின் அமைதியைக் குலைக்கும்விதமாக யாரோ ஒருவர் நடந்து வரும் காலடிச் சப்தம் கேட்கவும், அரைக்கண் திறந்து பார்த்தான். அவன் முன்னால் முழு நிலவின் பின்னணியில், ஓங்கு தாங்காய் வளர்ந்த கரிய உருவம் ஒன்று நிற்பது தெரிந்தது. அந்த இருளிலும் அந்த உருவத்தின் கண்களில் ஒரு வெளிச்சம். நிற்பது யாரென உற்றுப் பார்த்து அவன் சுதாரிக்கும் முன்னமே அந்த உருவம் அவன் அருகிலிருந்து நகர்ந்து, வீட்டு வாசற்கதவைத் திறந்து, ஒரு கணம் நின்று ரவியைப் பார்த்தது. நிலவின் வெளிச்சத்தில் தெரிந்த அந்த முகத்தை ரவி உற்றுப் பார்க்க, அந்த உருவம் எந்தவிதமான சப்தத்தையும் எழுப்பாமல் வீட்டினுள் நுழைந்தது. நிலவின் வெண்ணிற ஒளியில் தெரிந்த சுவடுகளை வைத்து அந்த முகம் யாருடைய முகமென ரவி யோசிக்க யோசிக்க, கொஞ்சம் கொஞ்சமாக அந்த முகம் யாருடையது என அவனுக்குப் புலப்பட ஆரம்பித்தது. `நம்பிக்கை துரோகத்தை மாதிரி ஒரு மோசமான துரோகம் இந்த உலகத்துல எதுவுங் கெடயாது’ சின்னத்தம்பியின் குரல் அசரீரியாக ரவியின் காதுகளில் ஒலித்தது. `பால்ராஜ் மாமா ஏன் இந்த நேரத்துல நம்ம வீட்டுக்கு வாறாரு?’ (திமுறுவான்...) Also Read ஊசிப்புட்டான் - `நம்பிக்கை வெச்சவனை ஏமாத்துறது எவ்ளோ பெரிய துரோகம்!' | அத்தியாயம் - 4 தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism literature story art litrature oosipputtan வாஸ்தோ வாஸ்தோ நாகர்கோவிலைச் சேர்ந்தவர். கவிதை, நாவல், பயண அனுபவ நூல் எழுதியுள்ளார். திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும் திரைத்துறையில் பணிபுரிந்திருக்கிறார். ரமணன்.கோ He is an artist, he conducted many free art classes in school and college levels.His art exhibitions and art shows all over Tamilnadu , Bombay and Delhi art India festivals are very famous and appreciated . His art work is periodically published in magazine "Thadam".
[ November 28, 2021 ] கோவையின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கலந்தாய்வு: அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு News [ November 28, 2021 ] Free Medical Eye Care camp organised News [ November 28, 2021 ] Rotary Coimbatore East presents Nation Builder Award News [ November 27, 2021 ] AIC Raise’s startup gathers Rs.1.6 cr fund Business [ November 27, 2021 ] ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் உடல் உறுப்புகள் தின கருத்தரங்கு News Search for: HomeNewsசெவ்வாய் கிரகத்திலிருந்து வெற்றிகரமாக சாம்பிள் கற்களை எடுத்த நாசா! செவ்வாய் கிரகத்திலிருந்து வெற்றிகரமாக சாம்பிள் கற்களை எடுத்த நாசா! September 14, 2021 CovaiMail News Comments Off on செவ்வாய் கிரகத்திலிருந்து வெற்றிகரமாக சாம்பிள் கற்களை எடுத்த நாசா! சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்திலிருந்து வெற்றிகரமாக சாம்பிள் கற்களை எடுத்துள்ளது. செவ்வாய் கிரகத்திலிருந்து செப் 6 மற்றும் 8ம் தேதிகளில் சாம்பிள்கள் எடுக்கப்பட்டதை அடுத்து அதுகுறித்த அதிகார்பூர்வத் தகவலை நாசா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘6 செப்டம்பர் அன்று எடுக்கப்பட்ட சாம்பிளுக்கு மொண்ட்டினைர் என்றும் 8 செப்டமபர் அன்று எடுக்கப்பட்ட சாம்பிளுக்கு மொண்டக்னாக் என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசாவின் விண்கலமான ‘பெர்செவரன்ஸ்’ செவ்வாய்க்கு சென்று சாம்பிள்களை எடுத்து வந்துள்ளது., ஏற்கெனவே எடுத்துவந்த வேறு சில சாம்பிள்களுடன் இந்த கற்கள் ஒப்பிடப்பட்டு அவற்றின் காலநிலை அளவிடப்படும் என நாசா அறிவித்துள்ளது. இதுவரை கணிக்கப்பட்டுள்ளதன் படி செவ்வாயில் எரிமலைச் சீற்றங்களுக்கான தடயங்களும் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களும் கிடைத்துள்ளன. செவ்வாயிலிருந்து எடுக்கப்பட்டுள்ள கற்கள் உயிர்கள் வாழத் தகுந்த சூழல் செவ்வாய் கிரகத்தில் இருப்பதை உறுதி செய்துள்ளதாக ஆய்வுக்குழுவின் தலைவர் கென் ஃபார்லி தெரிவித்துள்ளார். செவ்வாயிலிருந்து எடுக்கப்பட்ட பாறைகளில் ஒன்று எரிமலைச் சீற்றத்தின் எச்சமாக இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அந்தக் கல்லில் இருக்கும் கிரிஸ்டல்கள் அந்தக் கல் உருவான காலநிலையைக் கணிக்க உதவும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்படி எடுக்கப்படும் ஒவ்வொரு கல்லின் காலநிலை கணிக்கப்பட்டு செவ்வாய் கிரகம் இதுவரை எப்படியிருந்தது என்கிற வரலாறு கணிக்கப்படும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். செவ்வாயில் இருக்கும் பள்ளத்தாக்குகளில் ஏற்கெனவே தண்ணீர் இருக்கும் தடயங்களை நாசாவின் இதே விண்கலம் முன்னர் வெளியிட்டிருந்தது. இதுதவிர அந்த கோளில் வேறு எங்கும் தண்ணீரின் தடயங்கள் இருக்கிறதா என்கிற ஆய்வை நாசா மேற்கொண்டு வருகிறது. தற்போது ஜெசெரோ என்னும் பள்ளத்தாக்கில் ஆய்வை மேற்கொண்டு வரும் நாசா ஐம்பது வருடங்களுக்கு முன்பு அங்கே தண்ணீர் இருந்திருக்கலாம் எனக் கணித்துள்ளனர். நாசா தலைமையகத்தைச் சேர்ந்த மிட்ச் ஸ்கூல்ட் கூறுகையில், ‘இந்த சாம்பிள்களுக்கு பூமியில் மதிப்பு அதிகம். இந்த சாம்பிள்களைக் கொண்டு இது உருவான சூழல் அதன் மூலம் செவ்வாயில் தண்ணீரின் நிலைத்தன்மை ஆகியவற்றைக் கணிக்க முடியும்’ என்றுள்ளார். Previous குளக்கரையில் மருத்துவக்கழிவுகள்: நோய் தொற்று பரவும் அபாயம் Next 10 நாட்களில் 13 திகில் படங்களை பார்ப்பவர்களுக்கு ரூ.95,000 பரிசு! Search for: Follow on Facebook Stay connected facebook twitter About Us The Covai Mail is a weekly newspaper published in Coimbatore city and is bilingual (English and Tamil). We have a total circulation of 23,000 copies every week. The Covai Mail reaches every class of people possible ranging from businessmen to the common man.
Home » Economy » அன்னிய நேரடி முதலீட்டு விதிகளை மாற்றியமைப்பதன் மூலம் இந்திய நிறுவனங்களை சீனாவின் பொருளாதார கையகப்படுத்துதலை இந்தியா முறியடித்ததா? Economy அன்னிய நேரடி முதலீட்டு விதிகளை மாற்றியமைப்பதன் மூலம் இந்திய நிறுவனங்களை சீனாவின் பொருளாதார கையகப்படுத்துதலை இந்தியா முறியடித்ததா? ஏப்ரல் 19, 2020 0 SaveSavedRemoved 0 புதிய ஆய்வு கலிபோர்னியாவில் கொரோனா வைரஸ் நிகழ்வுகளின் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருப்பதைக் காட்டுகிறது COVID-19 க்கு இடையில் உலகெங்கிலும் உள்ள சந்தைகள் குன்றிலிருந்து விழுந்தன. கொரோனா வைரஸின் தாக்கங்களுக்கு பதிலளிக்கும் விதமாக மேற்கத்திய உலகமும் இந்தியாவும் பொருளாதாரங்களை பூட்டுவதால், சீனா ஏற்கனவே தனது சொந்த பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான பாதையில் உள்ளது. பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது கவலைக்குரிய வெளிநாட்டு சொத்துக்களை பொருத்தமான காசோலைகள் மற்றும் நிலுவைகள் இல்லாமல் வாங்க முடியும் என்ற கவலையை எழுப்பியுள்ளது. COVID-19 தொற்றுநோயால் இந்திய நிறுவனங்களின் “சந்தர்ப்பவாத கையகப்படுத்தல் அல்லது கையகப்படுத்தல்” நிறுத்த அதன் அந்நிய நேரடி முதலீட்டு கொள்கைகளில் தற்போதுள்ள விதியை மாற்றப்போவதாக இந்திய அரசு இன்று தெரிவித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட விதிகள் சீனா மற்றும் நேபாளம், பூட்டான் மற்றும் மியான்மர் போன்ற பிற நாடுகளுடன் இந்தியாவுடன் நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் அண்டை நாடுகளைச் சேர்ந்த குடியேறிய நிறுவனங்களை இலக்காகக் கொண்டுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் கைகுலுக்கின்றனர்.ராய்ட்டர்ஸ் கைத்தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான திணைக்களம் (டிபிஐஐடி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தற்போதைய கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் திருத்தப்பட்ட பாரா காரணமாக இந்திய நிறுவனங்களின் சந்தர்ப்பவாத கையகப்படுத்தல் / கையகப்படுத்துதல்களைத் தடுப்பதற்கான தற்போதைய அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையை இந்திய அரசு மதிப்பாய்வு செய்துள்ளது. ஒருங்கிணைந்த அன்னிய நேரடி முதலீடு கொள்கை, 2017 இல் உள்ளபடி தற்போதுள்ள அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையின் 3.1.1. “ இந்த வார தொடக்கத்தில், இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது, அங்கு சந்தை கட்டுப்பாட்டாளர் சீனாவிலிருந்து அல்லது சீனா வழியாக இந்திய பங்குச் சந்தைகளில் வரும் முதலீடுகளின் விவரங்களைத் தேடினார். மேலும், மார்ச் மாத காலாண்டில் நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநரான எச்.டி.எஃப்.சி வங்கியில் சீன மக்கள் வங்கி (பிபிஓசி) தனது பங்குகளை 0.8 சதவீதத்திலிருந்து 1.01 சதவீதமாக உயர்த்தியதால், ஒரு ‘சந்தர்ப்பவாத கையகப்படுத்துதலுக்கு’ எதிரான அச்சமும் அதிகரித்தது. மேலும், சீன நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் பில்லியனை முதலீடு செய்துள்ளன, குறிப்பாக அதன் தொடக்க சுற்றுச்சூழல் அமைப்பில். அலிபாபா, பைடெடென்ஸ், மற்றும் டென்சென்ட் உள்ளிட்ட முக்கிய சீன தொழில்நுட்ப நிறுவனங்களும் நிதி நிறுவனங்களும் இந்திய தொடக்கங்களில் பில்லியன் கணக்கான டாலர்களை செலுத்தியுள்ளன. உதாரணமாக, ஜாக் மா தலைமையிலான அலிபாபா பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது, மேலும் அதன் போர்ட்ஃபோலியோவில் பணம் செலுத்தும் நிறுவனமான பேடிஎம் (~ $ 400) மற்றும் அதன் ஈ-காமர்ஸ் கை பேடிஎம் மால் (~ $ 150), உணவு விநியோக தொடக்க சோமாடோ (~ $ 200), ஆன்லைன் மளிகை பிக்பாஸ்கெட் (million 250 மில்லியன்), ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் ஸ்னாப்டீல் (~ 700). ஆஸ்திரேலியாவும் வெளிநாட்டு முதலீடுகளை மறுஆய்வு செய்ய அழைப்பு விடுத்தது சீன நிறுவனங்கள் பங்குகளை உயர்த்தியதை அடுத்து, இந்தியா தனது வெளிநாட்டு முதலீடுகளை மறுபரிசீலனை செய்யும் ஒரே நாடு அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். COVID-19 நெருக்கடியின் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து துன்பகரமான ஆஸ்திரேலிய சொத்துக்களைப் பாதுகாக்க நாட்டில் முன்மொழியப்பட்ட அனைத்து வெளிநாட்டு முதலீடுகளையும் மறுஆய்வு செய்வதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் கடந்த மாதம் அறிவித்தது. படத்தில்: மும்பையில் உள்ள ஒரு தரகு நிறுவனத்தில் பங்கு தரங்களை ஒரு தரகர் கண்காணிக்கிறார்ராய்ட்டர்ஸ் மேலும், சீன பங்குச் சந்தைகளும் மற்ற சகாக்களுக்கு மாறாக வழக்கம்போல வியாபாரம் செய்கின்றன. இந்த வெடிப்பின் போது மேற்கு பொருளாதாரங்கள் மற்றும் இந்தியா முழுவதிலும் உள்ள சந்தைகள் 10-25 சதவிகிதம் சரிவைக் கண்டன, ஆனால் வைரஸைக் கட்டுப்படுத்த சீனாவின் விரைவான நடவடிக்கைகள் மற்றும் அதன் செயல்திறன்மிக்க கொள்கைகள் ஷாங்காய் மற்றும் ஷென்சென் ஆகியவற்றில் சீன பங்குகளின் பெரும் மீள்திருத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. பங்குச் சந்தைகள் அதன் சிறந்த செயல்திறனை ஒரு வாரத்தில் 5 சதவிகிதம் பதிவு செய்தன. Anu Priya “வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.” READ கிளாசோ HUL இல் 3.9 பில்லியன் டாலர் பங்குகளை விற்க உள்ளது - வணிக செய்தி SaveSavedRemoved 0 Previous பெரிதாக்க Vs ஸ்கைப்: எந்த வீடியோ கான்பரன்சிங் பயன்பாட்டை நீங்கள் பயன்படுத்த வேண்டும் - தொழில்நுட்பம் Next ஃபேஷனின் மூன்றாவது வருகை: பிந்தைய தொற்றுநோய்க்கான 11 கணிப்புகள் - புருன்சிற்கான அம்சம் Related Articles Added to wishlistRemoved from wishlist 0 அறிமுகப்படுத்தப்பட்ட 48 நிமிடங்களுக்குப் பிறகு கேடிஎம்ஸின் சூப்பர் பைக் கையிருப்பில் இல்லை, முன்பதிவு எப்போது தொடங்கும் என்பதை அறிவீர்கள் Added to wishlistRemoved from wishlist 0 புதிய ஹோண்டா சிவிக் முதல் படம் வெளியிடப்பட்ட புதுப்பிப்பு விவரங்கள் Added to wishlistRemoved from wishlist 0 எலோன் மஸ்க்கின் காதலி மீண்டும் பச்சை குத்தப்பட்ட படம் சோஷியல் மீடியாவில் வைரலாகிவிட்டது – எலோன் மஸ்க்கின் காதலியின் டாப்லெஸ் புகைப்படம் தீப்பிடித்தது, பின்னால் பச்சை குத்தியது சமூக ஊடகங்களில் வைரலாகியது
சீனாவின் ஷாண்டோங் மாகாணமான கிங்டாவோவில் கடந்த வாரம் கிங்டாவோ துறைமுகத்தில் டிரக்குகள் போக்குவரத்து கொள்கலன்கள். எங்களுக்கு … [+] சீனாவுக்கான அமெரிக்க ஏற்றுமதியைப் போலவே சீனா மற்றும் வியட்நாமில் இருந்து இறக்குமதி வேகமாக வளர்ந்து வருகிறது. (கெட்டி இமேஜஸ் வழியாக யூ ஃபாங்க்பிங் / வி.சி.ஜி புகைப்படம்) கெட்டி இமேஜஸ் வழியாக வி.சி.ஜி. இன்று வெளியிடப்பட்ட ஏப்ரல் முதல் ஆண்டு வரையிலான தரவுகளின்படி, அமெரிக்க ஏற்றுமதி-வர்த்தக வர்த்தகம் 2019 ஆம் ஆண்டின் சாதனையை விட 4.56% மற்றும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட 2020 மொத்தத்தை விட 15.45% முன்னிலையில் உள்ளது. அமெரிக்காவின் இறக்குமதியால் சாதனை வேகம் தூண்டப்படுகிறது, இது 2019 ஆம் ஆண்டின் சாதனை ஆண்டை விட 7.03% மற்றும் கடந்த ஆண்டை விட 17.40% அதிகரித்துள்ளது. ஏற்றுமதியும் சிறப்பாக செயல்படுகிறது, இது 2019 முதல் நான்கு மாதங்களில் 0.89% மற்றும் 2020 ஐ விட 12.50% அதிகரித்துள்ளது. இதன் பொருள், அமெரிக்க வர்த்தக பற்றாக்குறை பதிவு செய்யப்பட்ட பிரதேசத்திலும் உள்ளது. உண்மையில், இது 315.22 பில்லியன் டாலர்களை முதலிடத்தில் வைத்திருக்கிறது, இது ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 300 பில்லியன் டாலரை விட முதல் முறையாகும். மெக்ஸிகோ நாட்டின் முதலிடத்தில் உள்ள வர்த்தக பங்காளியாக உள்ளது, இது 2.98% அதிகரிப்புடன், கனடா (2.61%) மற்றும் சீனா (13.57%) ஆகியவை உள்ளன. சீனா 2020 ஐ நாட்டின் சிறந்த வர்த்தக பங்காளியாக முடித்து, ஆண்டின் இரண்டாம் பாதியில் தனது வர்த்தகத்தை அதிகரிக்க முனைகிறது. இந்த ஆண்டு இந்த ஆண்டு அமெரிக்க வர்த்தகத்தில் 43.23% பங்கைக் கொண்டுள்ளது. உண்மையில், ஏப்ரல் மாதத்தில் குறைந்தது இரண்டு தசாப்தங்களாக அமெரிக்க வர்த்தகத்தில் 40% க்கும் அதிகமானவை அவை, 2020 மட்டுமே விதிவிலக்கு. கடந்த ஆண்டு, சீனாவுடனான அமெரிக்க வர்த்தகம் அதன் பணிநிறுத்தத்தின் போது மிக வேகமாக வீழ்ச்சியடைந்தது, பின்னர் அமெரிக்காவின் பணிநிறுத்தம் மூன்றும் 39.80% ஆக இருந்தது. முதல் நான்கு மாதங்களுக்கான அமெரிக்க வர்த்தகத்தின் சீனாவின் சதவீதம் 11.22% ஆகும், இது 2008 ஆம் ஆண்டிலிருந்து அடமானத் தலைமையிலான நிதி நெருக்கடியுடன் உலகம் மோதிக்கொண்டிருந்த மிகக் குறைந்த மொத்தமாகும். இந்த ஆண்டு, அமெரிக்க வர்த்தகத்தின் சீனாவின் சதவீதம் 14.01% வரை இருந்தது, இது 2015 முதல் 2018 வரையிலான நான்கு ஆண்டுகளில் ஒப்பிடத்தக்க காலங்களில் இருந்த சதவீதத்தை விட குறைவாகவே உள்ளது. ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க வர்த்தகம் மொத்தம் 1.41 டிரில்லியன் டாலராக இருந்தது, ஏற்றுமதி 547.55 பில்லியன் டாலர் அல்லது மொத்தத்தில் 39%, மற்றும் இறக்குமதி 862.78 பில்லியன் டாலர். அந்த சதவீதம் – டாலரில் 39 காசுகள் – பெரும்பாலான ஆண்டுகளுக்கான சதவீதத்துடன் ஒப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டில் இதே நான்கு மாத காலப்பகுதியில் கிடைத்த லாபம், சாதனை படைக்கும் ஆண்டாக மாறும், இது 61.53 பில்லியன் டாலர்கள். அந்த மொத்தத்தில், சீனாவுடனான அமெரிக்க வர்த்தகம் 23.60 பில்லியன் டாலர் அல்லது 38.35% ஆகும். வியட்நாம், அமெரிக்காவுடனான அதன் வர்த்தகம் 45.82% அல்லது அமெரிக்க சராசரியான 4.56% ஐ விட 10 மடங்கு வேகமாக அதிகரித்துள்ளது – வேறு ஒரு நாடு மட்டுமே 10 பில்லியன் டாலருக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. அமெரிக்க வர்த்தக பங்காளிகளில் வியட்நாம் எட்டாவது இடத்தில் உள்ளது, இது 2020 ல் இருந்து ஐந்து ஆகும். இது தைவான், இந்தியா, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து மற்றும் நெதர்லாந்தைக் கடந்து சென்றது. 2019 முதல் நான்கு மாதங்களில் சீனாவின் அதிகரிப்பு, வியட்நாம் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் அமெரிக்க வர்த்தக பங்காளிகளான தென் கொரியா, சுவிட்சர்லாந்து, மெக்ஸிகோ மற்றும் கனடா போன்றவற்றைப் போலல்லாமல், அமெரிக்க ஏற்றுமதியால் வழிநடத்தப்பட்டது. சீனாவுக்கான அமெரிக்க ஏற்றுமதி 12.93 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது, இது 38.41% க்கு சமம், இறக்குமதி 10.67% அல்லது 7.61% அதிகரித்துள்ளது. ஆயினும்கூட, 2019 முதல் 56.68 பில்லியன் அமெரிக்க டாலர் இறக்குமதியின் ஒட்டுமொத்த அதிகரிப்பு இன்னும் சிறியதாக இருந்தாலும் சீனாவால் வழிநடத்தப்பட்டது. அதன் இறக்குமதி 10.67 பில்லியன் டாலர்களாகவும், வியட்நாமில் இருந்து 10.53 பில்லியன் டாலர்களாகவும் அதிகரித்துள்ளது. ஒரு சதவீத அடிப்படையில், அது நெருக்கமாக இல்லை. குறிப்பிட்டுள்ளபடி, சீனாவிலிருந்து அதிகரிப்பு 7.61% ஆகவும், வியட்நாமில் இருந்து 51.01% ஆகவும் அதிகரித்துள்ளது. Mikesh Arjun “எதிர்கால டீன் சிலை. ஹார்ட்கோர் ட்விட்டர் டிரெயில்ப்ளேஸர். ஆத்திரமூட்டும் வகையில் தாழ்மையான பயண சுவிசேஷகர்.” READ சீனாவின் சிஞ்சியாங்கில் தடுப்பு மையம் SaveSavedRemoved 0 Previous Die besten 30 Jonas Brothers Sucker für Sie Next Die besten 30 Herren Pullover Schwarz für Sie Related Articles Added to wishlistRemoved from wishlist 0 “கடைசி ரஷ்ய பேரரசரின்” தம்பியை கழுத்தை நெரித்த பிரேசிலிய போர் வீரர் சாண்டோஸ். Added to wishlistRemoved from wishlist 0 இங்கிலாந்து பிரதமர் ஜான்சன், பயணத் தடை தொடர்பாக தென்னாப்பிரிக்காவுக்கு உறுதியளிக்க முயற்சிக்கிறார் Added to wishlistRemoved from wishlist 0 ஹர்திக் பாண்டியா பந்துவீசவில்லை, எனவே அவரை ஆல் ரவுண்டர் என்று அழைக்கலாமா என்று கபில் தேவ் கேட்கிறார் Added to wishlistRemoved from wishlist 0 அமெரிக்காவில் மணமகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உணவு நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்ட மேனெக்வின் ஸ்டாண்ட்-இன் | வாழ்க்கை
வேலணை மத்திய கல்லூரியில் நடைபெற்ற, பழைய மாணவர் சங்கத்தின் மாதாந்த,ஒன்று கூடல்-விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam Home செய்திகள் இலங்கைச் செய்திகள் தீவகச் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா ஆன்மீகம் காணொளிகள் அறப்பணிச் செய்திகள் சிறப்புக் கட்டுரைகள் தொடர்புகளுக்கு வேலணை மத்திய கல்லூரியில் நடைபெற்ற, பழைய மாணவர் சங்கத்தின் மாதாந்த,ஒன்று கூடல்-விபரங்கள் இணைப்பு! வேலணை மத்திய கல்லூரியின்,பழைய மாணவர் சங்கத்தின் தாய்ச்சங்கத்தின் நிர்வாக சபையின் மாதாந்த,ஒன்று கூடலானது 29-03-2015 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு, சங்கத்தின் தலைவரும்,கல்லூரியின் முதல்வருமாகிய,கௌரவ திரு சிவசாமி கிருபாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,கல்லூரி மாணவர்களின் கல்வி வளர்ச்சி தொடர்பாக ஆராயப்பட்டதுடன்-இனி வரும் காலங்களில் பழைய மாணவர் சங்கத்தின் நிதி மூலம் வேதனம் வழங்கும்-எந்தப் பதவி வெற்றிடங்களுக்கும்(கல்வி,கல்வி சாரா அலுவலகர்)எமது கல்லூரியின் பழைய மாணவர்களுக்கே முன்னுரிமை வழங்குவது-என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டது. இத்துடன் எதிர் வரும் யூன் மாதம்-கல்லூரியில் தாய்ச் சங்கத்தின்” உறவுச் சங்கமம்” என்னும் நிகழ்வு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு-அதற்கான குழு ஒன்றும்,கல்லூரியின் முதல்வரின் தலைமையில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கானஆரம்ப கட்ட நிதி சேகரிப்பினை-கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் யாழ்நகர் பகுதியில் மேற் கொள்ளவுள்ளனர். இந்நிகழ்வின் மூலம் திரட்டப்படும் நிதி-எதிர்காலத்தில் கல்லூரி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு செலவிடப்படும்-என்ற தீர்மானமும் இறுதியாக நிறைவேற்றப்பட்டது. தகவல்-அல்லையூர் இணையத்திற்காக,வேலணையிலிருந்து…. திரு I.S. நாதன் Tweet Buffer Pin It 2015-03-30 allaiyoor Previous: தீவகம் நயினாதீவில்-க.பொ.த சா/த பரீட்சையில் சித்தியடைந்த,மாணவர்களின் பெயர்,விபரங்கள் இணைப்பு! Next: மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகரின் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம்-விபரங்கள் இணைப்பு!
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றி ஆட்சி நடத்தி வருகிறார்கள். தலிபான்கள் ஆட்சி செய்வது குறித்து பல உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆப்கானை தலிபான் என்ன செய்யப்போகிறது ? தலிபான்கள் ஆட்சியின் அந்நாட்டு மக்கள் என்னென்னெ துன்பங்களையெல்லாம் எதிர்கொள்ள போகின்றார்கள் என விமர்சனங்கள் தலிபான்கள் மீது இருந்த நிலையில் தற்போது உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் அரசு பாராட்டை பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் மொத்த பரப்பளவில் வெறும் 5% மட்டுமே இருக்கும் காடுகளை பாதுகாக்கும் நோக்கோடு ஆப்கானிஸ்தான் தலிபான்கள் அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது தான் இந்த வரவேற்பு காரணமாக அமைந்துள்ளது. அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் இந்துகுஷ் மலை தொடரில் அதிகமாக காடுகள் அமைந்துள்ளன. அங்கு வசித்து வரும் பழங்குடியின மக்களே அந்த காடுகளை பாதுகாத்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தலிபான் அரசாங்கம் ஆப்கானிஸ்தானில் காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கும் வகையில் மரங்களை வெட்ட மற்றும் அதன் விற்பனை செய்வதற்கு தடை விதித்துள்ளது. இதுகுறித்து தலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாகித் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில், மரங்களை வெட்டுவது விற்பனை செய்வது தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள், மாகாண அதிகாரிகள் இது போன்ற செயலை தடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலதிக செய்திகள் கேட்டால் தரணும் இல்லாட்டி இப்படித்தான் செய்வோம்: ம... “பிரசவத்திற்கு மிதிவண்டியில் சென்ற நாடாளுமன்ற உறுப... புதிய வகை கொரோனா பேரழிவு ஏற்படுத்துமா..? - இங்கிலா... நடிகர்கள் நடிகைகளை ஏமாற்றி 200 கோடி வரை மோசடி செய்... தங்கத்தை தேடிச்சென்றவருக்கு கிடைத்த 17 கிலோ எடை க... ஆமையால் நேர்ந்த சோகம்: மூன்று உயிர் பலி: பலர் கவலை... கனடாவில் ஒன்றரை 15 வருடத்தில் இல்லாத அளவு படுகொலை ... “15 வயதில் தலீபான்களால் சுடப்பட்ட பெண்!”… ஆக்ஸ்போர... Post navigation காபூலில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்.. 10 பேர் உயிரிழந்த விவகாரம்.. அமெரிக்க அதிபர் எடுத்த முடிவு..!! பிரபல கனேடிய நடிகை கொலை வழக்கில் முக்கிய திருப்பம் Popular News வீதியில் மின்னல் வேகத்தில் பறக்கும் உணவு: நம்பமுடியாத அளவிற்கு வைரலாகும் வீடியோ இதோ..! Suma Suma சிங்களத்தின் அறிவிக்கப்படாத வெளிநாட்டு அமைச்சர்கள் இவர்கள் இருவர் தான்: பாருங்கள் எத்தனை பீலா என்று.. athirvu.com தலைவர் பிரபாகரன் போதைப்பொருள் வியாபாரியாம்-டக்ளசிற்கு செருப்படி பதிலடி கொடுத்த சிறிதரன்..! Suma Suma வரலாறு படைத்த சுபாஷ்கரன்: உலகில் முதல் தமிழன் Paris Football கிளப்பை வாங்கியுள்ளார் ! athirvu.com பொஸ்வான வைரஸ்: நாம் மிகவும் அதிர்ச்சியில் உள்ளோம்: பிரிட்டன் அமைச்சர் ஆபிரிக்காவையே தடை செய்துள்ளார் athirvu.com You may Missed Top News லண்டனில் 3வது நபருக்கு பொஸ்வான வைரஸ்: அதிரும் தகவல் வெளியானது ! 28th November 2021 athirvu.com Top News யாழ்ப்பாணத்தில் மருத்துவபீட மாணவன் கொலையா?? மறைக்கப்பட்ட பல அதிர்ச்சித் தகவல்கள்!! 28th November 2021 athirvu.com Top BIG BOSS NEWS திருக்குறள் சொல்லலனா தண்டனை.. பெண் போட்டியாளருக்கு ஜால்ரா அடிக்கும் ராஜமாதா 28th November 2021 Tamil Tamil விறு விறுப்பு கேட்டால் தரணும் இல்லாட்டி இப்படித்தான் செய்வோம்: மேலாளர் கொஞ்சம் அசந்த நேரம் குடிமகன் செய்த செயல்! 28th November 2021 Suma Suma Copyright © 2021 ATHIRVU.COM Theme by: Theme Horse Proudly Powered by: WordPress We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept All”, you consent to the use of ALL the cookies. However, you may visit "Cookie Settings" to provide a controlled consent. Cookie SettingsAccept All Manage consent Close Privacy Overview This website uses cookies to improve your experience while you navigate through the website. Out of these, the cookies that are categorized as necessary are stored on your browser as they are essential for the working of basic functionalities of the website. We also use third-party cookies that help us analyze and understand how you use this website. These cookies will be stored in your browser only with your consent. You also have the option to opt-out of these cookies. But opting out of some of these cookies may affect your browsing experience. Necessary Necessary Always Enabled Necessary cookies are absolutely essential for the website to function properly. These cookies ensure basic functionalities and security features of the website, anonymously. Cookie Duration Description cookielawinfo-checkbox-analytics 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". cookielawinfo-checkbox-functional 11 months The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". cookielawinfo-checkbox-necessary 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". cookielawinfo-checkbox-others 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. cookielawinfo-checkbox-performance 11 months This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". viewed_cookie_policy 11 months The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. Functional Functional Functional cookies help to perform certain functionalities like sharing the content of the website on social media platforms, collect feedbacks, and other third-party features. Performance Performance Performance cookies are used to understand and analyze the key performance indexes of the website which helps in delivering a better user experience for the visitors. Analytics Analytics Analytical cookies are used to understand how visitors interact with the website. These cookies help provide information on metrics the number of visitors, bounce rate, traffic source, etc. Advertisement Advertisement Advertisement cookies are used to provide visitors with relevant ads and marketing campaigns. These cookies track visitors across websites and collect information to provide customized ads. Others Others Other uncategorized cookies are those that are being analyzed and have not been classified into a category as yet.
LIFE GOES ON PICTURES நிறுவனம் தயாரித்துள்ள படம் ஊமைச் செந்நாய். அறிமுக இயக்குநர் அர்ஜுன் ஏகலைவன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகனாக மைக்கேல் தங்கதுரை நடிக்கிறார். கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் புகழ்பெற்ற இவர் பர்மா, நளனும் நந்தினியும் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர். கதாநாயகியாக சனம் ஷெட்டி நடிக்கிறார். பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பின்னர் வெளியாகும் இவரது முதல் படம் இது. குற்றம் கடிதல் படத்தில் நடித்த சாய் ராஜ்குமார் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தெகிடி, தலைவி படங்களில் கவனம் ஈர்த்த ஜெயக்குமார், எமன் படத்தில் வில்லனாக நடித்த அருள் டி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை கல்யாண் வெங்கட்ராமன் கவனித்துள்ளார். இவர் சிபிராஜ் நடித்து விரைவில் வெளிவரவுள்ள ரேஞ்சர் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ஏ.ஆர்.ரகுமானின் கேஎம் இசைப்பள்ளி மாணவரான சிவா இந்தப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அதுல் விஜய் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். பட்டினப்பாக்கம், ரிச்சி உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய இவர் தற்போது ஆரி நடித்துவரும் பகவான் படத்திலும் பணியாறியுள்ளார். துப்பறிவாளன் சுட்டுப்பிடிக்க உத்தரவு உள்ளிட்ட பல படங்களில் ஆக்சன் இயக்குனராக பணியாற்றிய தினேஷ் கார்த்திக் இந்தப்படத்தில். சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். ஆக்சனுக்கு முக்கியத்துவம் உருவாகியுள்ள இந்தப்படத்தில் ஒரு கன்டெய்னருக்குள்ளேயே நடக்கும் சண்டைக்காட்சியும் கிளைமாக்ஸில் சோளக்காட்டில் படமாக்கப்பட்டுள்ள ஆக்சன் காட்சியும் ஹைலைட்டாக இருக்கும். 35 நாட்கள் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஊமைச் செந்நாய் என்கிற தலைப்புக்கு ஏற்றபடி இந்தப்படம் க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் நடிகர்கள் ; மைக்கேல் தங்கதுரை, சனம் ஷெட்டி, சாய் ராஜ்குமார், கஜராஜ், ஜெயகுமார், அருள் டி சங்கர் மற்றும் பலர் தயாரிப்பு ; LIFE GOES ON PICTURES இயக்குநர் ; அர்ஜூன் ஏகலைவன் ஒளிப்பதிவு ; கல்யாண் வெங்கட்ராமன் இசை ; சிவா படத்தொகுப்பு ; அதுல் விஜய் சண்டைப்பயிற்சி ; தினேஷ் காசி மக்கள் தொடர்பு ; A.ஜான் Share on Facebook Bookmark on Delicious Tweet it! Digg it! Share this on Technorati Share it on Reddit Share on FriendFeed Post on Google Reader Share to MySpace Share it on StumbleUpon 0 comments: Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) Pageviews Search Recent Updates Recent Posts Widget Your browser does not support JavaScript! Contact Us Name Email * Message * Copyright 2020 © Search Tamil Movie and Blogger About We are a young and passionate kollywood news and gallery development team from Chennai. We take pride in our work. Every features was display here to viewers easy and worth the time spent on our portal.
LTTE , பிரபாகரன் மற்றும் சீமான் ஈழத்தமிழர்களை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்வது என்பது, தமிழில் அ..ஆ கற்பதற்கு சமம். ஆண்டுக்கு 12 மாதம் என்றால், தமிழக அரசியலில் 2 மாதம் காவிரிக்கும் 1 மாதம் ஈழத்தமிழர்களுக்கு என்று பிரித்த்து வைக்கப்படும் . பல ஆண்டு காலங்களாக இந்த அரசியல் செய்யப்பட்டடு வருகிறது. கருணாநிதி, MG ராமச்சந்திரன், ஜெயலலிதா என்று முதல்வர்களில் ஆரமித்து, சத்தியராஜ் போன்ற occasional போராளிகள் வரை, இதற்க்கு விதிவிலக்கல்ல. இதை மட்டுமே வைத்து அரசியல்… Categoriesindia, LTTE, seeman, tamil, tamilan, கருணாநிதி, காந்தி, சீமான், ஜெயலலிதா, தமிழக, தமிழ், வைகோ
பாபுக் புயல் தாக்குதலால் தாய்லாந்தில் 3 பேர் பலியாகினர். மேலும் 34 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். தாய்லாந்து வளைகுடாவில் புயல் உருவாகி உள்ளது. இதற்கு பாபுக் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது அந்தமான் கடல் நோக்கி 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து சென்றது. பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. இந்நிலையில், பாபுக் புயல் தாக்குதலால் தாய்லாந்தின் பட்டானி மாநிலத்தில் மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு மீனவரை தேடி வருகின்றனர். இதேபோல் தம்மாரட் மாநிலத்தில் 2 பேர் இறந்தனர். இதன்மூலம் பாபுக் புயல் தாக்குதலால் தாய்லாந்து நாட்டில் 3 பேர் பலியாகி உள்ளனர். இந்த புயலால் தாய்லாந்தின் சம்ப்ஹார்ன், சோங்க்லா, பட்டாலங், பட்டானி, பெட்சாபுரி, பிரசாப் கிரிகான், சூரட் தானி மற்றும் நாகோன் சி தம்மாரட் உள்ளிட்ட 8 மாநிலங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளன. புயல் தாக்கத்தைத் தொடர்ந்து மீட்புப் பணிகளில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். தம்மாரட் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 34 ஆயிரம் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
'''''சுயம்வரம்''''' என்பது 1999 ஆம் ஆண்டு இந்தியத் தமிழ் மொழி நகைச்சுவை-நாடகத் திரைப்படமாகும், இது தமிழ் திரையுலகில் நடிகர்களிடமிருந்துஒரு குழுவினராக நடித்ததுமற்றும் தொழில்துறையைச் சேர்ந்த ஒரு பெரிய தொழில்நுட்பக் குழுவால் படமாக்கப்பட்டது. இப்படத்தின் கதையை தயாரித்து எழுதியுள்ள கிரிதரில்லால் நாக்பால் 14 முக்கிய இயக்குனர்கள், 19 ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தமிழ் திரையுலகில் முப்பதுக்கும் மேற்பட்ட முன்னணி நடிகர்களை ஒன்றிணைத்தார். *23 மணித்தியாலம் 58 நிமிடங்களில் படமாக்கப்பட்ட இத்திரைப்படம் கின்னஸ் உலக சாதனைப்புத்தகத்தில் இடப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.▼ === ஒரு படத்தில் அதிக நட்சத்திரங்களை நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனையையும், 23 மணிநேர 58 நிமிடங்களில் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், மிக விரைவான அம்ச நீள திரைப்படமாகவும் இந்த படம் திகழ்கிறது . இந்த படம் 16 ஜூலை 1999 அன்று விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களுக்கு வெளியிடப்பட்டது, தயாரிப்பாளர்களின் நோக்கங்களை பாராட்டியது. === ▲*=== 23 மணித்தியாலம் 58 நிமிடங்களில் படமாக்கப்பட்ட இத்திரைப்படம் கின்னஸ் உலக சாதனைப்புத்தகத்தில் இடப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. === === கதைச்சுருக்கம் === குசெலன் ( விஜயகுமார் ) மற்றும் சுசீலா ( மஞ்சுலா ) ஆகியோருக்கு ஒன்பது குழந்தைகள் உள்ளனர்: மூன்று சிறுவர்கள் (அருணாச்சலம் ( சத்தியராஜ் ), அவுதாயப்பன் ( பிரபு ) & இந்திரன் ( அப்பாஸ் )) மற்றும் ஆறு பெண்கள் (ஊர்வசி ( ரம்பா ), ஈஸ்வரி ( ரோஜா ), உமா ( கஸ்தூரி ) ஐஸ்வர்யா ( மகேஸ்வரியை ), ஹேமா ( Preetha விஜயகுமார் ) & Ezhilarasi ( Suvalakshmi )). அஷகப்பன் ( பார்த்திபன் ) குடும்பத்தின் விசுவாசமான ஊழியர், கிருஷ்ணா ( நெப்போலியன் ) அவர்களது குடும்ப மருத்துவர். குசெலனின் 60 வது பிறந்தநாள் கொண்டாட்டங்களுடன் படம் துவங்குகிறது, ஆனால் அவருக்கு மாரடைப்பு வருகிறது. மருத்துவமனையில், குசெலன் நீண்ட காலம் வாழமாட்டார் என்று குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்படுகிறது, மேலும் அவரது கடைசி நாட்களில் அவருக்கு வசதியாக இருக்க முடிவு செய்கிறார். பேரழிவிற்குள்ளான குடும்பத்திலிருந்து, குசெலன் கடைசியாக ஒரு உதவி கேட்கிறார்: அவர் இறப்பதற்கு முன்பு அவரது குழந்தைகள் அனைவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். குழந்தைகள் ஒப்புக்கொள்கிறார்கள், குசெலனின் குழந்தைகளை திருமணம் செய்யத் தெரிவுசெய்யப்பட்டவர்கள் குடும்ப சொத்துக்களில் ஒரு பகுதியையும் ஒரு கோடி ரொக்கத்தையும் பெறுவார்கள் என்று மாநிலம் தழுவிய விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. செல்வத்தைப் பற்றிய குறிப்பு, மணமகன் மற்றும் மணமகனை முழு டிரக் மூலம் ஞானபிதன் ( கே. பாக்யராஜ் ) மற்றும் அரிவோஜிமங்கை ( ஊர்வசி ) அல்லது மருத்துவர்கள் மித்ராபுதன் ( ஜனகராஜ் ) மற்றும் பஞ்சபூதம் ( செந்தில் ) ஆகியோரால் நேர்காணல் செய்யக் கூடியது என்று சொல்லத் தேவையில்லை . குசெலன், சுசீலா மற்றும் கிருஷ்ணா எல்லாம் திட்டமிட்டபடி நடக்கும் என்று நினைத்து மகிழ்ச்சியடைகிறார்கள், ஆனால் அவர்களுக்குத் தெரியாத ஒரு பெரிய இடையூறு உள்ளது: பெரும்பாலான குழந்தைகள் ஏற்கனவே காதலித்துள்ளனர். அருணாச்சலம், Aavudaiappan, மற்றும் இந்திரன் காதல் வீழ்ச்சி அடைந்துள்ளன குஷ்பு , சாவித்ரி ( ஐஸ்வர்யா ), மற்றும் ஹீரா முறையே. ஈஸ்வரி, உமா, ஐஸ்வர்யா, ஹேமா ஆகியோர் முறையே கண்ணா ( பிரபு தேவா ), பல்லவன் ( பாண்டியராஜன் ), க ut தம் ( வினீத் ), மற்றும் காந்தன் ( லிவிங்ஸ்டன் ) ஆகியோரை காதலிக்கிறார்கள் . அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் காதலனை நேர்காணலுக்கு தயார்படுத்துகிறார்கள், சில கடின உழைப்பு மற்றும் லஞ்சம் கொடுத்த பிறகு, அவர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஊர்வசி இல்லாத மனம் கொண்ட மருத்துவர் ராம்குமாருடன் (கார்த்திக் ), ஒரு கிளினிக்கில் ஒரு மருத்துவர் பதவிக்கான நேர்காணல் என்று நினைத்து நேர்காணலில் காண்பிப்பவர், எசிலராசி அசாகப்பனுடன் ஜோடி சேர்ந்தார். கபிலன் ( மன்சூர் அலி கான் ), விச்சித்ரா ( விச்சித்ரா ) உடன் சேர்ந்து , ஒரு மாப்பிள்ளையாக தனது வழியைப் புழுக்க முயற்சிக்கிறார், அந்த முயற்சி தோல்வியடையும் போது, ​​அவர் ஒன்பது மணப்பெண்களை மீட்கும் பொருட்டு கடத்துகிறார். கபிலனையும் அவரது உதவியாளர்களையும் தோற்கடித்த கிருஷ்ணா தனது நண்பர் ஏ.சி.பி சஞ்சய் ஐ.பி.எஸ் ( அர்ஜுன் சர்ஜா ) என்பவரை அழைத்து, திருமண மண்டபத்தில் கபிலன் நடத்திய வெடிகுண்டைத் தகர்த்து மணப்பெண்களைக் காப்பாற்றுகிறார். மணப்பெண்களைக் கண்டுபிடித்த பிறகு, திருமணத்திற்குப் பிறகு, குசெலன் தனது மாரடைப்பு ஒரு நகைச்சுவையானது என்றும், அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் விரும்பினார்.
வருண் பவுலிங்கை பாகிஸ்தான் தெருக்களில் கிரிக்கெட் ஆடும் பசங்களே கிழித்து எடுத்துருவாய்ங்க - சல்மான் பட் | salman butt opines even pakistan kids can play well varun chakravarthy bowling after t20 world cup india vs pakistan match Malayalam English Kannada Telugu Tamil Bangla Hindi Live TV Languages Live TV Politics Coronavirus Tamil Nadu Cinema Video Gallery India World Sports Life Style Business Crime Technology live TV Tamil News sports Cricket வருண் பவுலிங்கை பாகிஸ்தான் தெருக்களில் கிரிக்கெட் ஆடும் பசங்களே கிழித்து எடுத்துருவாய்ங்க - சல்மான் பட் வருண் சக்கரவர்த்தி எல்லாம் பாகிஸ்தானுக்கு ஒரு மாயாஜால ஸ்பின்னரே கிடையாது என்றும், அவரது பவுலிங்கை பாகிஸ்தானில் தெருவில் கிரிக்கெட் ஆடும் சிறுவர்களே கிழித்து எடுத்துவிடுவார்கள் என்றும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார். karthikeyan V Dubai - United Arab Emirates, First Published Oct 25, 2021, 10:15 PM IST டி20 உலக கோப்பையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற பேரார்வத்துடன் இந்திய அணியில் எடுக்கப்பட்டவர் தமிழகத்தை சேர்ந்த ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி. இந்திய அணியில் கடந்த 3-4 ஆண்டுகளாக நட்சத்திர ஸ்பின்னராக ஆடிவந்த யுஸ்வேந்திர சாஹல் கூட அணியில் எடுக்கப்படாமல் ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்ட ராகுல் சாஹர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் அணியில் எடுக்கப்பட்டனர் ஆரம்பத்திலிருந்தே மாயாஜால ஸ்பின்னர் என்ற அடையாளத்துடன் ஐபிஎல்லிலும் சர்வதேச கிரிக்கெட்டிலும் அடையாளப்படுத்தப்பட்டவர் வருண் சக்கரவர்த்தி. 2019ல் நடந்த 13வது சீசனில் முதல் முறையாக ஐபிஎல்லில் ஆடினார் வருண். அந்த சீசனில் பஞ்சாப் அணியில் ஆடிய வருணுக்கு கேகேஆருக்கு எதிரான போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டது. அவர் ஐபிஎல்லில் வீசிய முதல் ஓவரையே சுனில் நரைன் பொளந்துகட்ட, அதன்பின்னர் வருணுக்கு வாய்ப்பே வழங்கப்படவில்லை. அடுத்த சீசனில்(2020) வருணை ஏலத்தில் எடுத்த கேகேஆர் அணி அவருக்கு சில வாய்ப்புகள் அளித்தன. ஆனால் ஐபிஎல் 14வது சீசனில்(2021) கேகேஆர் அணியில் சுனில் நரைனுடன் இணைந்து பிரதான ஸ்பின்னராக ஆடிய வருண் சக்கரவர்த்தி, எதிரணி பேட்ஸ்மேன்களை ரன் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தியதுடன் முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளையும் வீழ்த்தி கொடுத்தார். அதிலும், டி20 உலக கோப்பை நடக்கும் இதே அமீரக ஆடுகளங்களில் தான் ஐபிஎல் 14வது சீசனின் 2ம் பாகமும் நடந்தது. அமீரகத்தில் வருண் சிறப்பாக வீசியதன் விளைவாக டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்தார். அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய போட்டியில் அவரது பவுலிங் கொஞ்சம் கூட எடுபடவில்லை. அவர் பாகிஸ்தானுக்கு எதிராக முதல்முறையாக ஆடினார். ஆனாலும் பாகிஸ்தான் வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவரையும் வருண் சர்ப்ரைஸ் செய்யவேயில்லை. அவரது பவுலிங்கை பாபரும் ரிஸ்வானும் ஒரு பொருட்டாகக்கூட மதிக்கவில்லை. வருண் சக்கரவர்த்தியின் 4 ஓவர்களை மிகத்தெளிவாகவும் சுலபமாகவும் எதிர்கொண்டு ஆடினர். வருண் 4 ஓவர்களில் 33 ரன்களை விட்டுக்கொடுத்தார். அவரால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. இந்நிலையில், வருண் சக்கரவர்த்தியின் பவுலிங் குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட், வருண் சக்கரவர்த்தி மாயாஜால ஸ்பின்னராக இருக்கலாம். ஆனால் அவர் எந்தவிதத்திலும் பாகிஸ்தான் வீரர்களை சைப்ரைஸ் செய்யவில்லை. பாகிஸ்தானில் தெருக்களில் கிரிக்கெட் ஆடும் சிறுவர்கள் கூட வருணின் பவுலிங்கை சிறப்பாக எதிர்கொண்டு பேட்டிங் ஆடுவார்கள். ஏனெனில், பாகிஸ்தான் தெருக்களில் விளையாடும் சிறுவர்களே கைவிரல்களில் பந்தை வைத்து பல வித்தைகளை செய்வார்கள்; நல்ல வேரியேஷனிலும் வீசுவார்கள். இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் கூட அவரது கிரிக்கெட் கெரியரின் தொடக்கத்தில் பல அணிகளை தொந்தரவு செய்தார். ஆனால் அவர் எந்தவிதத்திலும் பாகிஸ்தானை பாதிக்கவில்லை. பாகிஸ்தான் வீரர்கள் மெண்டிஸின் பவுலிங்கை அடித்து நொறுக்கியதில், அதன்பின்னர் இந்தியாவுக்கு எதிராகக்கூட அவரை சேர்ப்பதை நிறுத்திவிட்டது இலங்கை அணி என்றார் சல்மான் பட். Last Updated Oct 25, 2021, 10:15 PM IST t20 world cup india vs pakistan pakistan win team india mystery spinner varun chakravarthy salman butt Follow Us: Download App: RELATED STORIES IPL 2022 Retention: உன் சேவை இனிமேல் எங்களுக்கு தேவையில்லை..! செல்லப்பிள்ளையை கழட்டிவிட்ட ஆர்சிபி IND vs NZ இந்தியா 2 செசனில் மேட்ச்சை முடிச்சுரும்னு நெனச்சேன்..! இந்திய பவுலர்கள் மீது இன்சமாம் அதிருப்தி IND vs NZ விராட் கோலி கம்பேக்.. இந்திய அணியிலிருந்து தூக்கி எறியப்படும் சீனியர் வீரர்..? IPL 2022 Retention: ஐபிஎல் அணிகளால் கழட்டிவிடப்பட்ட பெரிய வீரர்கள்..! IPL 2022 Retention: ஐபிஎல் அணிகள் தக்கவைத்த வீரர்களின் முழு விவரம்..! Top Stories Jai Bhim:சந்துரு ஒன்னுமே செய்யல.. இந்த சமூகத்தினர்தான் எங்களை பாதுகாத்தனர்.. இராசாக்கண்ணு மகன் பகீர்.! #Marakkar : ஊடக செய்திகளில் உண்மையில்லை; OTT ஒப்பந்தம் குறித்து உண்மையை உடைத்த மோகன்லால் Sivashankar Baba : சிவசங்கர் பாபாவின் ‘இரகசிய அறை’.. என்ன இருக்கிறது…? சி.பி.சி.ஐ.டி சோதனை.. சிக்குவாரா..? தம்பி மனைவி உள்ளிட்ட பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு.. மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர்.. போலீசில் பகீர்
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை என்பனவற்றை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கிணங்க நடத்துவதற்கு முயற்சிப்பதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், உயர்தர பரீட்சை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்நிலையில், பரீட்சையில் தோற்றும் பிள்ளைகளின் உடல் நிலை தொடர்பில் முழுமையான தகவல்களை பெறும் நோக்கில் பெற்றோருக்கு படிவம் ஒன்று வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு பக்க வரிசைப்படுத்தல் | மறுப்பு பதிப்புரிமை © 2012-2021 | கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
[ இன்று உலகில் உலகில் அதிகமாக 210 கோடி கிறித்துவர் கொண்ட கிறிஸ்துவ மதமிருந்தாலும், அதனுடைய வளர்ச்சி 1900 ஆண்டிலிருந்து 2000 வரை 26.9சதவீதத்திலிருந்து 29.9 சதவீதம் தான். அதாவது வெறும் மூன்று சதவீதம் தான். ஆனால் இஸ்லாமியர் வளர்ச்சி 12.4 சதவீதத்திலிருந்து 19.2 சதவிதத்தினை எட்டி, ஏழு சதவீத வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றால் ஆச்சரியமாக இல்லையா? இத்தனைக்கும் இஸ்லாமிய நாடுகள் வளர்ச்சியடைந்த வல்லரசாக இல்லையே! இன்றைய முஸ்லிம்களின் வாழ்வு கொந்தளிக்கும் கடலில் கப்பல் ஓட்டும் மாலுமியைப் போன்றது தான். ஆனால் அதனை சமாளித்து திறம்பட வழி நடத்துபவனே சிறந்த மாலுமியாகக் கருதப்படும். தோல்வி-அவமானங்களை வெற்றியின் மூலதனமாக எடுத்துக் கொண்டு உலகத்தில் தலை நிமிர்ந்து நிற்க முயல வேண்டும். இன கருத்து வேறுபாடுகளை களைய வேண்டும். அதாவது ஷியா-சுன்னி என்ற வேறுபாடு களைந்து பிரிந்து நிற்கும் ஐக்கிய அரபு நாடுகள்-எகிப்து-சிரியா-ஜோர்டன்-அரேபியா-ஈரான்-பாகிஸ்தான ஆகியவை ஒரு குடையின் கீழ் நிற்க வேண்டும். அந்த அமைப்புகள் ‘நாட்டோ’ போன்ற பாதுகாப்பு அமைப்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.] உலக மக்களினை நல் வழிப்படுத்தி ஏக இறை தத்துவத்தினை எடுத்தியம்ப அனுப்பப்பட்ட நபிமார்கள் மூஸா அலைஹிஸ்ஸலாம், ஈஸா அலைஹிஸ்ஸலாம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் அடித்தளம் அமைக்கப்பட்ட மதங்கள் தான் ஜூடேயிஸமும், கிறித்துவமும், இஸ்லாமும் என நாம் அறிவோம். ஆனால் இஸ்ரேயிலர்கள் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை கடவுளாகவும், கிறித்துவர்கள் ஈஸாவை கடவுளின் மகனாகவும் நெறி தவறி அழைக்கின்றனர். ஆனால் முஸ்லிம்கள் மட்டும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எந்த நேரத்திலும் கடவுளாகவோ அல்லது கடவுளின் மகனாகவோ நினைக்கவில்லை. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வஹி மூலம் இறக்கப்பட்ட குர்ஆனில் மூஸா அலைஹிஸ்ஸலாம், ஈஸா அலைஹிஸ்ஸலாம் ஆகியோரையும் இறைத்தூதர்கள் என்றே அழைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இறக்கப்பட்ட தவ்ராத்-இன்ஜில் வேதத்தையும் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது. இறைவனால் படைக்கப்பட்ட மூஸா அலைஹிஸ்ஸலாம், ஈஸா அலைஹிஸ்ஸலாம் ஆகியோரை கடவுளாக அழைக்காது முஸ்லிம்கள் நபிகளாக ஏன் அழைக்க வேண்டும் என்ற கோபத்தினாலோ என்னவோ முஸ்லிம்களை இஸ்ரவேலர்களும், கிறித்துவர்களும் எதிரிகளாக நினைக்கின்றனர்.. மக்கா நகரில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாலகனாக இருந்தபோது ”நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்” என்று அழைக்கப்பட்ட போதும் தனது 40 வயதில் ”தனக்கு அல்லாஹ்வால் வஹி இறக்கப்பட்டது” என்று சொன்ன மாத்திரத்தில் யாரும் அதனை நம்பவில்லை. ஆனால் அவரது அன்புத் துணைவியார் கதிஜா பிராட்டியார் மட்டும் அவர்களை அரவணைத்து முதலில் ஏக இறை தத்துவத்தினை ஏற்றுக் கொண்டார்கள் என்பது வரலாறு. அன்னை கதிஜா ரளியல்லாஹு அன்ஹா ஒருவரே முதலில் இஸ்லாமை ஏற்றதிலிருந்து; கல்லடியும், சொல்லடியும், மேலை நாடுகளின் நவீன பாஸ்பரஸ் குண்டடியும் பொருட்படுத்தாது அரேபியாவிலிருந்து-ஜிம்பாவே வரை 130 நாடுகளில் 130 கோடி மக்கள் ஏக இறை தத்துவத்தினை ஏற்று முஸ்லிம்களாக மாறி இமய மலைபோல உயர்ந்து நிற்கவில்லையா இஸ்லாம்? இன்று உலகில் அதிகமாக 210 கோடி கிறித்துவர் கொண்ட கிறிஸ்துவ மதமிருந்தாலும், அதனுடைய வளர்ச்சி 1900 ஆண்டிலிருந்து 2000 வரை 26.9சதவீதத்திலிருந்து 29.9 சதவீதம் தான்;. அதாவது வெறும் மூன்று சதவீதம் தான். ஆனால் இஸ்லாமியர் வளர்ச்சி 12.4 சதவீதத்திலிருந்து 19.2 சதவிதத்தினை எட்டி, ஏழு சதவீத வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றால் ஆச்சரியமாக இல்லையா? இத்தனைக்கும் இஸ்லாமிய நாடுகள் வளர்ச்சியடைந்த வல்லரசாக இல்லையே! ஆனால் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்தால் வல்லரசுகள் வல்லூராக மாறி ஆப்கானிஸ்தானிலும், இராக்கிலும் வேட்டையாடுவது ஏன்? அவர்களுக்குத் தெரியாது விளையாடும் பந்தினை சுவற்றிலோ-தரையிலோ எவ்வளவு வேகம் ஓங்கி அடிக்கிறோமோ அவ்வளவு தூரம் எழும்பும் என்பதினை பார்க்கிறோம். அதேபோல் இஸ்லாமியர் எவ்வளவு நசுக்கப்பட்டாலும் பீனிக்ஸ் பறவையாக எரியும் சாம்பலிருந்து சீறிப் பாய்வார்கள் என ஆதிக்க சக்திகள் அறிய மாட்டார்கள். வரலாற்று இடைக்காலத்தில் முஸ்லிம் அரசர்களால் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும் இன்று உலகத்தினையே தனது ஆயுத பலத்தால் மிரட்டும் அமெரிக்காவினாலேயோ அல்லது நேட்டோ கிறித்துவ நாடுகளினாலேயோ வலுக்கட்டாயமாக மக்களை கிறித்துவ மதத்திற்கு மாற்றம் செய்ய முடியுமா? கிறித்துவ சேவை மையங்கள் கூட ஏழை மக்களை கவர கல்வி, உணவு, வீடு, சுகாதாரம் போன்ற அன்பின் அடையாங்களை மக்களிடையே அள்ளி வீசித்தானே அவர்களை கிறித்துவ மதத்திற்கு இழுக்கிறார்கள். பின் எப்படி இஸ்லாமிய மன்னர்கள் மட்டும் வரலாற்று இடைக்காலத்தில்(Medival) மக்களை கட்டாயப்படுத்தி இஸ்லாத்தில் இணைத்திருப்பார்கள் என்று ஏன் அவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்? வரலாற்று இடைப்பட்ட(Medival) காலத்தில் நடந்தது என்ன? யூதர்கள், கிறித்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் புண்ணிய தலமாக கருதப்படும் ஜெரூசலம் முஸ்லிம்கள் ஆட்சி செய்த பாலஸ்தீன நாட்டில் இருந்தது. முஸ்லிம்களிடமிருந்த ஜெரூசலத்தினை கைப்பற்ற நீண்ட ”புனிதப்போர்” (Crusade ) என்று பெயரிட்ட பெரியதோர் போரினை ஐரோப்பிய துணைக் கண்டத்தில் நடத்தினர். ஆனால் முஸ்லிம்கள் ஈமானை கேடயமாகவும், ஏக இறைத்தத்துவத்தினை வாளாகவும் கையிலெடுத்து பல உயிர்களை பறிகொடுத்ததால் ஜெரூசலத்தினை தங்களுடன் தக்க வைத்தனர் என்றால் எப்படி அவர்களால் அன்று மட்டும் முடிந்தது? இறைவனால் இறைக்கட்டளைகளை இஸ்ரவேலர்கள் மீறியதால் பழிக்கப்பட்டது மட்டுமல்ல, முதலாவது-இரண்டாவது உலகப்போர்களில் பந்தாடப்பட்டனர். கிறித்துவ-இஸ்ரேயிலக் கூட்டுப்படை இரண்டாம் உலகப் போரில் வெற்றியடைந்த களிப்பில் பாலஸ்தீனர்களுக்கிடையே இஸ்ரேயில் என்ற நாட்டினை உருவாக்கி பாலஸ்தீனர்களுக்கு நாடு என்ற அமைப்பே இல்லாமல் அகதிகளாக ஆக்கப்பட்டனர். 1945 ஆம் ஆண்டு சர்வதேச சபையான ஐ.நா அமையப்பட்டாலும், 1948 ஆம் ஆண்டு சரவதேச மனித உரிமை சாசனம் எழுதப்பட்டாலும் பாலஸ்தீனர்களுக்கு இன்று வரை தனிநாடு என்று பிரகடனம் செய்ய உரிமை இல்லை. இன்றைய முஸ்லிம் உலகின் கொந்தளிப்பிற்கு காரணமே பாலஸ்தீனத்தின் பரிதாப நிலையே என்று உலக ஊடகங்கள் சொல்கின்றன. ஆகவே முஸ்லிம் நாடுகளான ஈரானோ, ஈராக்கோ, பாகிஸ்தானோ இஸ்ரேயிலுக்கு எதிராக பலம் வாய்ந்ததாக மாறக்கூடாது என்பதால் தான் கிறித்துவ கூட்டமைப்பு ஈராக்கை சின்னாபின்னமாக்கி, பாக்கிஸ்தானின் அணு ஆயிதத்தினை கண்காணித்து அந்த நாட்டில் ரகசியமாக ஊடுருவி ஆளில்லா விமானங்கள் மூலம் நிர்மூலமாக்குகின்றனர். பாலஸ்தீன குழந்தைகளோ அல்லது ஈராக் அல்லது ஆப்பானிஸ்தான் குழந்தைகளோ பள்ளிக்கூடங்களுக்குக்கூட செல்ல முடியாது பரிதவிக்கின்றனர். இவ்வளவிற்கும் ”1989 ஆம் ஆண்டு ஐ.நா வின் சர்வதேச குழந்தைகள் ஆண்டு” என்று அறிவித்து அவர்களுக்கான உரிமை 20 ஆண்டுகளாகியும் பறிக்கப்டுகிறதே வேதனையாக இல்லையா? அமெரிக்காவின் இரட்டைக்கோபுரங்கள் 2001 ஆம் ஆண்டு தாக்கப்பட்டதிற்கு ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் தான் காரணம் என்று அந்த நாட்டில் படையெடுத்து தாலிபான்களை விரட்டிய பின்பு அந்த நாட்டை விட்டு வெளியேராமால் ஊழல் நிறைந்த அமெரிக்காவில் வசித்த டாக்டர் கரசாய் ஆட்சியினை நிறுவி அதற்கு ஆதரவு கொடுத்ததோடு மட்டுமல்லாமல், உயிர் கொல்லி ஆயுதங்கள் ஈராக் ஜனாதிபதி வைத்திருக்கிறார் என்று 2003 ஆம் ஆண்டு ஈராக்கில் படையெடுத்த கூட்டுப்படை உயிர் கொல்லி ஆயுதங்கள் ஈராக்கில் இல்லை என்ற உண்மையினை ஒப்புக் கொண்டு வெளியேராமால் இன்னும் அட்டைபோல் ஒட்டி அந்த நாட்டின் எண்ணெய் வளத்தினை உறிஞ்சிக் கொண்டுள்ளது என்ற செய்திகள் நாள்தோறும் நாம் படிக்க வில்லையா? ஈரான் சிவில் உபயோகத்திற்காக அதாவது மின்சாரம் போன்றவைகளை தயாரிப்பதிற்காக அணுவினை பயன்படுத்துகிறோம் என்றாலும் அதற்கு பொருளாதார தடையேற்படுத்துவதா? இதே போன்றுதான் 60 ஆண்டுகளுக்கு முன்பு சீனா நாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. அது என்னவானது? விவசாய நாடான சீன நாட்டினை தொழிற்சாலை மிகுந்த நாடாக ஆக்கி இன்று ஏற்றுமதியினை 17.7 சதவீதம் அதிகரித்து ஜெர்மனி நாட்டினை பின்தள்ளி உலக ஏற்றுமதியின் முன்னணி நாடாக சீனாவினை மாசேதுங் உருவாக்கவில்லையா? ஏன் முஸ்லிம்களால் முடியாதா? ஏகாபத்திய நாடுகள் முஸ்லிம்களை நடத்தும் விதம் கோபமூட்டும் செயலானது தான் அதற்காக தீவிரவாதம் ஒரு வடிகாலாகுமா? இன்றைய முஸ்லிம்களின் வாழ்வு கொந்தளிக்கும் கடலில் கப்பல் ஓட்டும் மாலுமியைப் போன்றது தான். நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அதனை சமாளித்து திறம்பட வழி நடத்துபவனே சிறந்த மாலுமியாகக் கருதப்படும். தோல்வி-அவமானங்களை வெற்றியின் மூலதனமாக எடுத்துக் கொண்டு உலகத்தில் தலை நிமிர்ந்து நிற்க சில யோசனைகளை சொல்லலாம் என நினைக்கிறேன்: கிராம பொருளாதாரத்தினை மேன் படுத்தி-உற்பத்திற்கு உதவும் தொழில்களை தொடங்க வேண்டும். சீனா உலகில் எப்படி இவ்வளவு தூரத்திற்கு வளர்ச்சியடைந்த வல்லரசாக மாறியது என்று ஆராயும் போது வருடத்திற்கு 20 லட்சம் சீனர் ஆங்கிலக் கல்வி கற்கின்றனர் என்பது தெரிய வந்தது. அதன் மூலம் ஆங்கிலம் பேசும் நாடுகளுடன் தொடர்பு கொண்டு அவர்கள் முன்னேற்றத்தின் ரகசியங்களை அறிந்து-அவர்களுக்கு மேலாக ஒரு படி உயர்துள்ளனர். அதே போன்று இஸ்லாமியரும் ஆங்கிலக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இன கருத்து வேறுபாடுகளை களைய வேண்டும். அதாவது ஷியா-சுன்னி என்ற வேறுபாடு களைந்து பிரிந்து நிற்கும் ஐக்கிய அரபு நாடுகள்-எகிப்து-சிரியா-ஜோர்டன்-அரேபியா-ஈரான்-பாகிஸ்தான ஆகியவை ஒரு குடையின் கீழ் நிற்க வேண்டும். அந்த அமைப்புகள் நாட்டோ போன்ற பாதுகாப்பு அமைப்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பொருளாதார ஏற்றுமதி-இறக்குமதியில் வரியில்லா வர்த்தகத்தினை எற்படுத்த வேண்டும். தங்களுக்கென்ற ஈரோ போன்ற நாணயம் உருவாக்க வேண்டும். அதே போன்று விஞ்ஞான-ஆராய்ச்சிகளை தங்களுடன் பரிமாற்றம செய்து கொள்ள வேண்டும். வறுமையில் தவழும் இஸ்லாமிய நாடுகளுக்கு பொருளுதவி கொடுக்க வேண்டும். எப்படி பொருளாதாரத்தில் சிக்கி தவிக்கும் துபாய் நாட்டிற்கு அபுதாபி நாடு கடன் கொடுத்து கை தூக்கியதோ அதேபோன்ற உதவிகளை செய்ய வேண்டும். இஸ்லாமிய ஏழை நாடுகளில் பசியாலும்-நோயாலும் உழலும் மக்களுக்கு கல்வி-மருத்துவம்-வீடு-வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும். உலக முஸ்லிம்கள் நினைத்தால் வானத்தையும் வில்லாக முறித்து-கடலிலும் எதிர் நீச்சலடித்து, பூமியிலும் வல்லரசாக மாறி எதிர்கால சவால்களை முறியடிக்கலாம் என்று எதிர்பார்க்கலாமா? Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Math Captcha 91 − 81 = Categories Categories Select Category English (319) Convert to Islam (13) Education (14) Essays (85) Family (11) Hadith (8) Haj (5) History (20) India News (20) Muslim World (34) News (9) Politics (4) QnA (19) Quran (3) Ramadhan (15) Science (7) Society (16) World News (36) Multimedia (6) Audio (2) Video (4) Uncategorized (11) இஸ்லாம் (3,748) ஆய்வுக்கட்டுரைகள் (200) இமாம் கஸ்ஸாலி (ரஹ்) (9) இம்மை மறுமை (110) இஸ்லாத்தை தழுவியோர் (90) கட்டுரைகள் (1,703) குர்ஆனும் விஞ்ஞானமும் (29) குர்ஆன் (190) கேள்வி பதில் (201) சொற்பொழிவுகள் (17) ஜகாத் (44) தொழுகை (150) நூல்கள் (40) நோன்பு (135) வரலாறு (378) ஹஜ் (57) ஹதீஸ் (215) ஹஸீனா அம்மா பக்கங்கள் (19) ‘துஆ’க்கள் (43) ‘ஷிர்க்’ – இணை வைப்பு (118) கட்டுரைகள் (3,082) Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) (154) அப்துர் ரஹ்மான் உமரி (53) அரசியல் (311) உடல் நலம் (446) எச்சரிக்கை! (103) கதைகள் (63) கதையல்ல நிஜம் (108) கல்வி (84) கவிதைகள் (161) குண நலன்கள் (303) சட்டங்கள் (55) சமூக அக்கரை (675) நாட்டு நடப்பு (82) பொது (352) பொருளாதாரம் (27) விஞ்ஞானம் (105) குடும்பம் (1,522) M.A. முஹம்மது அலீ (48) ஆண்-பெண் பாலியல் (83) ஆண்கள் (73) இல்லறம் (484) குழந்தைகள் (183) செய்திகள் (1) பெண்கள் (585) பெற்றோர்-உறவினர் (65) செய்திகள் (328) இந்தியா (142) உலகம் (130) ஒரு வரி (10) கல்வி (32) தமிழ் நாடு (1) முக்கிய நிகழ்வுகள் (13) Archives Archives Select Month December 2021 (1) November 2021 (14) October 2021 (17) September 2021 (8) May 2021 (2) April 2021 (15) March 2021 (17) February 2021 (17) January 2021 (17) December 2020 (20) November 2020 (17) October 2020 (18) September 2020 (20) August 2020 (31) July 2020 (30) June 2020 (21) May 2020 (27) April 2020 (22) March 2020 (30) February 2020 (19) January 2020 (22) December 2019 (25) November 2019 (14) October 2019 (15) September 2019 (16) August 2019 (18) July 2019 (16) June 2019 (15) May 2019 (12) April 2019 (12) March 2019 (17) February 2019 (17) January 2019 (27) December 2018 (35) November 2018 (18) October 2018 (22) September 2018 (31) August 2018 (27) July 2018 (16) June 2018 (12) May 2018 (14) April 2018 (22) March 2018 (29) February 2018 (30) January 2018 (35) December 2017 (23) November 2017 (30) October 2017 (33) September 2017 (28) August 2017 (30) July 2017 (30) June 2017 (19) May 2017 (34) April 2017 (31) March 2017 (35) February 2017 (36) January 2017 (27) December 2016 (59) November 2016 (48) October 2016 (44) September 2016 (41) August 2016 (27) July 2016 (33) June 2016 (42) May 2016 (52) April 2016 (53) March 2016 (37) February 2016 (42) January 2016 (64) December 2015 (47) November 2015 (40) October 2015 (36) September 2015 (65) August 2015 (56) July 2015 (35) June 2015 (42) May 2015 (58) April 2015 (79) March 2015 (40) February 2015 (29) January 2015 (54) December 2014 (79) November 2014 (66) October 2014 (78) September 2014 (67) August 2014 (62) July 2014 (84) June 2014 (82) May 2014 (100) April 2014 (84) March 2014 (92) February 2014 (80) January 2014 (85) December 2013 (69) November 2013 (91) October 2013 (89) September 2013 (68) August 2013 (76) July 2013 (101) June 2013 (84) May 2013 (94) April 2013 (13) March 2013 (84) February 2013 (64) January 2013 (85) December 2012 (93) November 2012 (106) October 2012 (82) September 2012 (92) June 2012 (50) May 2012 (103) April 2012 (145) March 2012 (103) February 2012 (168) January 2012 (44) December 2011 (125) November 2011 (99) October 2011 (112) September 2011 (90) August 2011 (130) July 2011 (150) June 2011 (86) May 2011 (138) April 2011 (30) March 2011 (148) February 2011 (97) January 2011 (61) December 2010 (103) November 2010 (87) October 2010 (129) September 2010 (145) August 2010 (114) July 2010 (70) June 2010 (130) May 2010 (131) April 2010 (116) March 2010 (134) February 2010 (99) January 2010 (154) December 2009 (136) November 2009 (106) October 2009 (61) September 2009 (66) August 2009 (61) July 2009 (55) June 2009 (53) May 2009 (81) April 2009 (43) March 2009 (70) February 2009 (43) January 2009 (64) December 2008 (29) November 2008 (35) October 2008 (31) September 2008 (63) August 2008 (114)
Junior Vikatan - 19 January 2020 - கரீபியன் கடலில் உள்ள ஈக்குவடார் தீவில் நித்யானந்தா அடைக்கலமாகியிருப்பதாக ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகின. | Nithyananda atrocities - Nithyananda in ship - Vikatan Save the vikatan web app to Home Screen tap on Add to home screen. X Subscribe to vikatan Login செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் கனமழை: அப்டேட்ஸ் New ஆன்லைன் தொடர்கள் New My News ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் ராசி காலண்டர் மேலும் மெனுவில் Search ஜூனியர் விகடன் அலசல் கப்பலில் கைலாசா! - கூடுவிட்டு கூடு பாயும் யுக்தி - ‘அடடே’ ஆராய்ச்சியில் நித்தி கழுகார் மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க-வுடன் மறைமுகக் கூட்டு... தி.மு.க கூட்டணிக்கு காங்கிரஸ் வேட்டு?! கழுகார் பதில்கள் அரசியல் மறைமுகத் தேர்தல் ரகளைகள் இலங்கைத் தமிழர்களின் பிரச்னைகளை இந்துக்களின் பிரச்னைகள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்! ஜே.என்.யூ முகமூடித் தாக்குதல்... துணைவேந்தர்மீது பழிபோடுகிறதா பா.ஜ.க? அப்போது ஹெலிகாப்டருக்கு பில் அனுப்பினர்... இப்போது அரிசிக்கு பில் அனுப்பியுள்ளனர்! சமூகம் இது கொண்டாட்டத்தின் திருவிழா..! Face Recognition பாசிட்டிவ் தொழில்நுட்பமா... ‘‘சத்தம் போடாமல் பின்னால் வந்து கட்டிப் பிடித்தார்!’’ சுதந்திரம் தேடி! - அரச குடும்பத்தைத் துறந்த ஹாரி... அதிர்ச்சியில் இங்கிலாந்து ராணி தொடர்கள் தங்க வேட்டை - மினி தொடர் - 7 கலை மிஸ்டர் மியாவ் க்ரைம் வில்சன் கொலையின் பின்னணி... தகர்க்கப்பட்டதா தீவிரவாதிகளின் சதித்திட்டம்? Published: 14 Jan 2020 5 AM Updated: 14 Jan 2020 5 AM கப்பலில் கைலாசா! - கூடுவிட்டு கூடு பாயும் யுக்தி - ‘அடடே’ ஆராய்ச்சியில் நித்தி ஜூனியர் விகடன் டீம்பிரேம் டாவின்ஸி ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் Use App நித்யானந்தா லியானா - படங்கள்: nithyananda.org உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் பிரீமியம் ஸ்டோரி எங்கே நித்தி? நித்யானந்தாவின் பக்தர்களுக்கே விடைதெரியாத கேள்வி இது. இந்திய உளவுத்துறை கண்கொத்திப் பாம்பாக கண்காணித்து வந்தாலும், நித்தியை கைதுசெய்வது அத்தனை சுலபமான விஷயமாகத் தெரியவில்லை. கரீபியன் கடலில் உள்ள ஈக்குவடார் தீவில் நித்யானந்தா அடைக்கலமாகியிருப்பதாக ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால், ‘நித்யானந்தா எங்கள் நாட்டில் இல்லை’ என்று அந்த நாட்டு தூதரகம் அதிகாரபூர்வமாகவே அறிவித்துவிட்டது. அடுத்ததாக, டிரினிடாட் டொபாகோ என்கிற தீவில்தான் நித்யானந்தா இருக்கிறார் என்று கூறப்பட்டது. ‘நித்யானந்தா எங்கே இருக்கிறார்?’ என்று இப்படி ஆளாளுக்கு ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருக்கும் வேளையில்தான், ‘கைலாசா என்கிற தீவு, கரீபியன் கடலில் எந்த நாட்டுக்கு அருகில் இருக்கிறது?’ என்ற கேள்வியும் வலுத்தது. அதற்குப் பதில் சொல்லாத நித்யானந்தா, ‘கைலாசா இந்துக்களுக்கான தேசமாகத் திகழும்’ என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லி வந்தார். இந்த நிலையில்தான் நித்தி இருக்கும் இடம் குறித்த, திடுக்கிடும் புதிய தகவல்கள் கிடைத்திருக் கின்றன. ‘‘இந்தியாவின் பாஸ்போர்ட் நித்யானந்தாவுக்கு எப்போதோ காலாவதியாகிவிட்டது. ஆகையால், இப்போது அவரால் சட்டபூர்வமாக வெளிநாடு களுக்குச் செல்ல முடியாது. எப்படியாவது புதிய பாஸ்போர்ட் பெற்றுவிட வேண்டும் என்று தீவிர முயற்சியில் நித்தி இருந்தபோதுதான், ஈக்குவடார் நாட்டில் உள்ள சில மாஃபியா குழுக்களின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது’’ என்கின்றனர் நித்யானந்தா குறித்த தகவல்களைச் சேகரித்துவரும் உளவுத் துறையினர். ‘‘நித்யானந்தா குறித்து வேறு என்னென்ன தகவல்கள் கிடைத்திருக்கின்றன?’’ என்று அவர்களிடம் விசாரித்தோம்... ‘‘ஈக்குவடார் நாட்டில் உள்ள மாஃபியாக்களின் தொடர்புகள் நித்திக்குக் கிடைத்ததும், அவர்களிடம் நித்தி வைத்த முதல் கோரிக்கை, ‘கரீபியன் கடல் பகுதியிலுள்ள குட்டி நாட்டிலிருந்து பாஸ்போர்ட் ஒன்று வேண்டும்’ என்பதுதான். இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் பணம் கைமாறியிருக்கிறது. பணம் கைமாறியதும் பேசியபடியே பெலிஸ் என்ற குட்டித் தீவின் பாஸ்போர்ட்டை நித்யானந்தாவுக்கு ஏற்பாடுசெய்து கொடுத்திருக்கிறது அந்த மாஃபியா கும்பல். அந்த பாஸ்போர்ட்டை வைத்துதான் கரீபியன் தீவில் உள்ள பல்வேறு நாடுகளுக்கும் விசிட் அடித்துக் கொண்டிருக்கிறார் நித்தி. எந்த நாட்டுக்குச் சென்றாலும் நித்யானந்தாவைப் பற்றி விசாரிக்கப்படுவதால், ‘நாம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சிக்கிக்கொள்ளலாம்’ என்கிற அச்சம் நித்யானந்தாவுக்கு எழுந்திருக்கிறது. ‘எந்த இடம் பாதுகாப்பாக இருக்கும்?’ என்று தீவிர ஆலோசனை நடத்தியிருக்கிறார் நித்தி. இதனையடுத்து, சிறிய அளவிலான சொகுசுக் கப்பல் ஒன்றை விலைக்கு வாங்கியிருக்கிறார். அந்தக் கப்பல்தான் தற்காலிகமாக கைலாசாவாக மாறியிருக்கிறது. சகல வசதிகளுடன் கூடிய அந்தக் கப்பலில் இருந்துதான் ‘சத்சங்’ என்று சொல்லப்படும் ஆன்மிக உரையின் ஷூட் நடத்தப்படுகிறது. அந்தக் கப்பல் தற்போது கரீபியன் கடல் பகுதியின் சர்வதேச எல்லையில் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருக்கிறது. சர்வதேச கடல் பகுதியில் பயணிக்கும் கப்பலை, வேறு நாட்டு கப்பல் படையினர் பிடிக்க முடியாது. எளிதில் புரியும்படி சொல்ல வேண்டுமானால், சிங்கம்–2 படத்தில் டேனி என்கிற கடத்தல் மன்னன் சர்வதேசக் கடல் பகுதியில் சுற்றித் திரிவார் அல்லவா? கிட்டத்தட்ட நித்தியும் அப்படித்தான் சர்வதேசக் கடல் பகுதியில் தற்போது சுற்றிக்கொண்டிருக்கிறார். இந்திய உளவுத்துறை சர்வதேச அளவில் சல்லடை போட்டுத் தேடிவருவதால், எந்த நாட்டிலும் நித்தியால் நிம்மதியாக இருக்க முடிய வில்லை. அவர் வாங்கியுள்ள கைலாசா தீவை தனி நாடாக அறிவிப்பதற்கான அனுமதி கிடைப்பதிலும் இழுபறி நீடிக்கிறது. இந்திய வெளியுறவுத் துறை சமீபத்தில் ஐ.நா-விடம் இதுகுறித்த நீண்ட அறிக்கை ஒன்றையும் அளித்துள்ளதால், நித்திக்கான நெருக்கடி இன்னும் அதிகமாகியுள்ளது. தனது யூ-டியூப் உரையினை பெரும்பாலும் தனது சொகுசுக் கப்பலில் வைத்துக்கொள்ளும் நித்தி, அதன் ஒளிபரப்பை மட்டும் ஏதாதொரு நாட்டினுடைய ஐ.பி அட்ரஸிலிருந்து செய்வதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. தகவல் தொழில்நுட்பப் பிரிவில் நிபுணத்துவம் வாய்ந்த மூன்று பேர் நித்தி யுடன் இருக்கின்றனர். அவர்கள்மூலமே கைலாசா டி.வி ஒளிபரப்பு தங்குதடையின்றி நடக்கிறது” என்றார்கள். Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். நித்தியின் அம்மா பெயரில் சொத்துக்கள்.! இதற்கிடையில்தான், ‘இந்தியாவில் உள்ள நித்யானந்தாவின் சொத்துகளின் நிலை என்ன?’ என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இதுகுறித்தும் உளவுத் துறையினர் சில தகவல்களைத் திரட்டியுள் ளனர். அதுகுறித்து விவரம் அறிந்த அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ‘‘நித்யானந்தாவுக்கு பெருமதிப்புள்ள சொத்துகள் இருப்பது ஏற்கெனவே நாம் அறிந்ததுதான். அதைத்தவிர தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களும் கிலோகணக்கில் இருந்தன. அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பணமாக மாற்றிவந்தனர். நித்யானந்தா அறக்கட்டளை பெயரில் இருந்த சொத்துகள் அனைத்தும், கடந்த சில தினங்களுக்கு முன்பு நித்யானந்தாவின் அம்மா பெயருக்கு மாற்றப்பட்டுள்ளன. நித்யானந்தாவின் அம்மா லோகநாயகியும் தன்னை ஒரு துறவி என்று சொல்லிக்கொள்பவர். நித்யானந்தா சொத்துக்களின் முழுவிவரமும் ரஞ்சிதா, லோகநாயகி மற்றும் கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகள்களான மா நிராமாயா, மா அச்சலா ஆகியோருக்கு மட்டுமே தெரியும். நித்தி இருக்கும் கரீபியன் தீவுக்குச் சென்றுவிட்டு, கடந்த வாரம் இந்தியா வந்துள்ளார் ரஞ்சிதா. அவர் இந்தியா வந்த பிறகுதான் அறக்கட்டளை சொத்துகளை லோகநாயகி பெயரில் மாற்றும் வேலை விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இதுமட்டுமல்லாது, பிடதி ஆசிரமத்திலிருந்த 600 பவுன் நகைகளை மோக்‌ஷ பிரியானந்தா என்பவர் மூலம் வெளியே கொண்டுசென்றிருக்கின்றனர்’’ என்றனர். குழந்தைகளைக் காட்டி கரன்சி வசூல்! நித்யானந்தாவின் ஆசிரமத்திலும், அவரின் குருகுலப் பள்ளிகளிலும் ஏராளமான குழந்தைகள் படித்துவந்தனர். ‘‘அந்தக் குழந்தைகள் சாப்பிடுவது, பயிற்சி செய்வது, மிகவும் மெலிந்து இருப்பது போன்ற புகைப்படங்களை வெளிநாட்டுப் பக்தர்களுக்கு அனுப்பி, ஏராளமான நிதியைப் பெற்றிருக்கிறார்’’ என்று குஜராத் காவல்துறையில் புகார் கொடுத்த ஜனார்த்தன சர்மா தெரிவித்திருக்கிறார். ‘‘குழந்தைகள் பெயரைப் பயன்படுத்தியே வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் நித்யானந்தாவின் ஆசிரமத்துக்கு வந்தது உண்மை. அதுமட்டுமல்லாது, பக்தி பிரியானந்தா என்ற பெண் பக்தர், குஜராத் மாநில தொழில் அதிபர்கள் பலரிடம் இந்தக் குழந்தைகளுக்காக 200 கோடி ரூபாய் வரை பணம் வசூல் செய்திருக்கிறார். இதற்கான ஆவணங்களை நான் திரட்டிக் கொண்டிருக்கிறேன். புட்டபர்த்தி சாய் பாபா பெயரைப் பயன்படுத்தியும் நித்யானந்தா மோசடி செய்துள்ளார்’’ என்று புகார்களை அடுக்குகிறார் ஜனார்த்தன சர்மா. கூடுவிட்டு கூடு பாயும் யுக்தி! சரி... நித்யானந்தாவின் இலக்குதான் என்ன? அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் சொன்ன தகவல்கள் நம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன. ‘‘குண்டலினியை எழுப்புவதில் நித்யானந்தா கைதேர்ந்தவர். அவருடைய வீடியோக்களில்கூட அதுகுறித்த பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அதையும்தாண்டி ‘ஏழாம் அறிவு’ என்று யோகிகளால் அழைக்கப்படும் யோக சக்தியை, தன்வயப்படுத்த வேண்டும் என்பதே அவருடைய நீண்டநாள் இலக்கு. அந்தக் காலத்தில் சித்தர்கள் இந்த யோக நிலை மூலமே, ஒரு உடலைவிட்டு மற்றொரு உடலுக்குள் செல்லும் யுக்தியைப் பெற்றனர். அவர்கள் பல ஆண்டுகள் இளமையுடன் வாழ்ந்த ரகசியமும் அதுதான் என்று முழுமையாக நம்புகிறார் நித்யானந்தா. தனது யூ டியூப் சேனலில் தினமும் இரண்டு மணி நேரமாவது நேரலையில் பேசிவிடும் நித்யானந்தா, வாரத்துக்கு நான்கு முறையாவது குண்டலினி சக்தி எழுப்புதல் குறித்து விளக்குகிறார். என்ன உணவு முறைகளைப் பின்பற்ற வேண்டும், மனதை அடக்குவது எப்படி, மூச்சுப் பயிற்சியின் ரகசியங்கள் குறித்தெல்லாம் அதில் பேசுகிறார். குண்டலினி சக்தியின் அடுத்தடுத்த படிநிலைகளைக் கடந்து கூடுவிட்டு கூடு பாயும் சித்த நிலையை அடைய வேண்டும் என்பதுதான் நித்யானந்தாவின் நோக்கம். இதன் ஒரு பகுதியாகத்தான், தன் பெயரை மந்திரமாக உச்சரிக்குமாறு தன் பக்தர்களுக்குக் கட்டளையிட்டுள்ளார். ஒரு பெயரை ஒரு லட்சம் முறை தொடர்ந்து உச்சரிக்கும்போது, அந்தப் பெயர் மந்திரமாக மாறிவிடும் என்பதுதான் நித்யானந்தா நம்பும் ஆன்மிகக் கணக்கு. இதற்காக நித்யானந்தா தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, ஜோதிமயம் என்கிற நிலைக்குச் செல்ல அவர் தொடர்ந்து ஆராய்ச்சி களையும் மேற்கொண்டுவருகிறார். கன்னிப்பெண்களை அதற்காக அவர் பயன்படுத்துகிறாரோ என்ற சந்தேகமும் இருக்கிறது’’ என்கிறார்கள். நித்யானந்தா நித்தி சொல்லும் ஜோதிநிலை என்பது என்ன? ஆன்மிகவாதிகள் சிலரிடம் அதுகுறித்துக் கேட்டோம். ‘‘உடல் தனியாகவும், உயிர் தனியாகவும் இருக்கும் நிலையைத்தான் யோகத்தில் ஜோதிநிலை என்று குறிப்பிடுவர். அதாவது, தூய்மையான துறவு வாழ்வு வாழ்ந்த வர்கள் உயிருடன் இருக்கும்போதே உடலில் இருந்து ஆன்மாவை வெளியேற்றி ஜோதிமயமாகி விடுவார்கள். நித்யானந்தாவுக்கு அதெல்லாம் சாத்தியமில்லை. ஏற்கெனவே ஆன்மிகத்தின் பெயரில் பல மோசடிகளை அரங்கேற்றிய நித்யானந்தா, இப்போது கைலாசா, ஜோதிநிலை என்று புதிய மோசடிகளைக் கையிலெடுக்க ஆரம்பித்துள்ளார்’’ என்கிறார்கள். இந்தச் சூழலில், தன் சொத்துகளை நித்யானந்தா அபகரித்துவிட்டதாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் புகார் அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ‘‘விரை விலேயே நித்யானந்தா எங்களிடம் சிக்குவார். இன்டர்போல் உதவியுடன் அவரைக் கைது செய்வோம்’’ என்று அடித்துச் சொல்கின்றனர் மத்திய உளவுத்துறை அதிகாரிகள்.
`அருங்காட்சியகத்தில் அபிநந்தன் சிறைபிடிக்கப்பட்ட உருவ பொம்மை!' - புதிய சர்ச்சையில் பாகிஸ்தான் | Pakistan displays abhinandan's mannequin in PAF museum, says Pak journalist - Vikatan Save the vikatan web app to Home Screen tap on Add to home screen. X Subscribe to vikatan Login செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் கனமழை: அப்டேட்ஸ் New ஆன்லைன் தொடர்கள் New My News ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் ராசி காலண்டர் மேலும் மெனுவில் Search Published: 10 Nov 2019 2 PM Updated: 10 Nov 2019 2 PM `அருங்காட்சியகத்தில் அபிநந்தன் சிறைப்பிடிக்கப்பட்ட உருவ பொம்மை!' - புதிய சர்ச்சையில் பாகிஸ்தான் தினேஷ் ராமையா ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் Use App அபிநந்தன் உருவபொம்மை ( Twitter/AnwarLodhi ) பாகிஸ்தானின் விமானப்படை அருங்காட்சியகத்தில், இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் சிறைப்பிடிக்கப்பட்டது போன்ற உருவபொம்மையை வைத்திருப்பதாக வெளியான தகவல், புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் இந்திய ராணுவ நிலைகளைக் குறிவைத்த பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானத்தை, இந்திய விமானப்படை வீரர் விங்க் கமாண்டர் அபிநந்தன், மிக் 21 ரக விமானத்தில் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி துரத்திச்சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக விமானம் தாக்குதலுக்கு உள்ளாகவே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அவர் தரையிறங்க நேர்ந்தது. இதையடுத்து, அவரை பாகிஸ்தான் ராணுவம் சிறைப்பிடித்தது. அவர், இஸ்லாமாபாத்துக்கு கொண்டுசெல்லப்பட்டார். சிறைப்பிடிக்கப்பட்டு 58 மணி நேரத்துக்குப் பின்னர், இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். அபிநந்தன் பாகிஸ்தானில் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தபோது அவர், கையில் தேநீர் கோப்பையுடன் அந்நாட்டு ராணுவத்தினர் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையிலான வீடியோ ஒன்றை பாகிஸ்தான் வெளியிட்டது. அதேபோல், பாகிஸ்தான் ராணுவத்தை அவர் புகழ்ந்து பேசுவதுபோலவும் ஒரு வீடியோ வெளியானது. இந்தியா வந்தபின்னர் அவர் கூறிய தகவல்களின் அடிப்படையில், இரண்டாவது வீடியோ போலியானது என்று தெரியவந்தது. இந்தியா திரும்பிய அபிநந்தனுக்கு, டெல்லி விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் பணிக்குத் திரும்பினார். Also Read `அபிநந்தன் சிக்கியதற்குக் காரணமே தகவல் தொடர்பு சாதனங்கள்தான்!' - பின்னணியை விவரிக்கும் அதிகாரிகள் இந்த நிலையில், அபிநந்தன் சிறைப்பிடிக்கப்பட்டதுபோன்ற உருவபொம்மை, பாகிஸ்தான் விமானப்படை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான அன்வர் லோதி, இதுதொடர்பான புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார். ட்விட்டர் பதிவு அதில், இந்திய விமானப்படை சீருடையுடன் அபிநந்தன் நிற்பது போலவும், அவருக்குப் பின்னால் பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர் நிற்பது போலவும் அந்த உருவபொம்மை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ''பாகிஸ்தான் விமானப்படை, அபிநந்தனின் உருவ பொம்மையை அருங்காட்சியகத்தில் வைத்திருக்கிறது. அவர் கையில் தேநீர் கோப்பை இருப்பதுபோல் அமைக்கப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்'' என்று அன்வர் லோதி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். இந்த விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதி எல்லை தொடர்பான பிரச்சனைகளை நேரடியாக கள ஆய்வுசெய்து தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்காக மண்முனைப்பற்று பிரதேச செயலக அபிவிருத்திக்குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு பிரதேசத்திற்கு வியாழக்கிழமை(17) நேரடிகள விஜயம் செய்துள்ளார்.. இவ்விஜயத்தின்போது மண்முனைப்பற்று பிரதேசசெயலக பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி நமசிவாயம் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். இவ்விஜயத்தின்போது நீண்டகாலமாக ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பொலிஸ் நிலையத்தின் பெயர் கர்பலா பொலிஸ் நிலையம் எனக்காணப்படுவதாக அப்பகுதி கிராம மட்ட அமைப்புக்களும் ஆலயபரிபாலன சபையினரும் இராஜாங்க அமைச்சருக்கு சுட்டிக்காட்டியதற்கிணங்க அப்பொலிஸ் நிலையத்தின்பெயரை ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு போலிஸ் நிலையமென பெயர்மாற்றம் செய்வதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொள்வதற்கான உடனடி உத்தரவுகளை மண்முனைப்பற்று பிரதேச செயலாளருக்கு பிறப்பிப்பித்தார். அத்தோடு ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு கிராம சேவையாளர்பிரிவில் கடற்கரையோரமாக அமைந்துள்ள அரசகாணிகளை ஊடறுத்து மண்முனைப்பற்று பிரதேச சபையின் எந்தவொரு அனுமதியுமின்றி கட்டடங்களை உடைத்த எச்சமான கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டு வருகின்ற நடைபாதைகளையும் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்ற அரச காணிகளையும் நேரடியாக பார்வையிட்டதோடு அவற்றை அகற்றுவதற்கான பூர்வாங்க சட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள மண்முனைப்பற்று பிரதேச சபையின் சபைக்கூட்டத்தில் பெரும்பான்மை பிரதேசசபை உறுப்பினர்களின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றி கனரக வாகனங்களை பயன்படுத்தி உடனடியாக இந்த நடைபாதைகளை ஆக்கிரமிப்பு காணிகளை அகற்றுமாறும் இதற்கான பூரணமான ஒத்துழைப்புக்களை மண்முனைப்பற்று பிரதேச சபையிலுள்ள அனைத்து தமிழ் இனப்பிரதேச சபை உறுப்பினர்களும் வழங்கவேண்டு மென்றும் அவ்வாறு ஒத்துழைப்பு வழங்காத எந்தவொரு தமிழ் இனப்பிரதேசசபை உறுப்பினர்களும் தமிழர்களாக இருக்கதகுதியற்றவர்கள் என இதன்போது அமைச்சர் தெரிவித்தார். ஆரையம்பதியின் கடற்கரையோரமாக எல்லைப்பகுதி காவல் தெய்வமாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆரையம்பதி கடற்கரை நரசிங்கப் பெருமானாலய சூழலை பார்வையிட்டதோடு அவ்வாலயத்தின் உறுதியான இருப்பே ஆரையம்பதியின் நீண்டகால எல்லை மற்றும் கடல்வள இருப்பு பாதுகாப்பிற்கு அவசியமானதென அமைச்சர் கருத்துரைத்தார் ஆரையம்பதி கடற்கரை நரசிங்கப் பெருமானாலய நிர்வாகசபையினரின் வேண்டுகோளிற்கமைய ஆலய வளாகத்துள் தென்னங் கன்று ஒன்றையும் இராஜாங்க அமைச்சர் நட்டும் வைத்தார். SHARE Author: sirnews verified_user RELATED STORIES ← Newer Post Older Post → Home Blog Comments Facebook Comments 0 Comments: Post a Comment Eluvannews Click to website http://www.ep.gov.lk/ta/ සියලුම පාලම්වල ප්‍රමිතිය සොයා බැලීමට විශේෂ කණ්ඩායමක් යවනු ලැබේ - නැගෙනහිර පළාත් ගරු ආණ්ඩුකාර District Secretariat - Batticaloa Batch-1 (From 12-10-2020 to 16-10-2020) Popular Posts கட்டுரை : சர்வதே சிறுவர் தினம் இன்று. (ஒக்டோபர் - 01) கட்டுரை : சர்வதே சிறுவர் தினம் இன்று. இளவயது திருமணத்தை உடன் நிறுத்த வேண்டும் – பாசாலை அதிபர் ஆதங்கம். இ ள வயது திருமணத்தை உடன் நிறுத்த வேண்டும் – பாசாலை அதிபர் ஆதங்கம் . அரச காணி மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவற்றைச் சுற்றி வேலிபோட்ட பிரதேச சபைத் தவிசாளர். அரச காணி மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவற்றைச் சுற்றி வேலிபோட்ட பிரதேச சபைத் தவிசாளர் . மனை சார்ந்த பொருளாதார ஊக்குவிப்பதற்காக 1200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு கிழக்கில் 82 ஆயிரம் குடும்பங்களுக்கு ஊக்குவிப்பு. மனை சார்ந்த பொருளாதார ஊக்குவிப்பதற்காக 1200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு கிழக்கில் 82 ஆயிரம் குடும்பங்களுக்கு ஊக்குவிப்பு. மட்டக்களப்பில் மழை வெள்ளம் வீதிளை ஊடறுத்து வெள்ள நீர் பாய்கின்றது. மட்டக்களப்பில் மழை வெள்ளம் வீதிளை ஊடறுத்து வெள்ள நீர் பாய்கின்றது . Labels ஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு
சேனலை மாற்றிக்கொண்டு வரும்போது வாலி பேசிக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தார். ‘என்னதான் சொல்கிறார்’என்று சில கணங்கள் நிதானிக்க, அந்த காமெடி ஷோவை பார்க்க நேர்ந்தது. ‘தனக்கு வாழ்வு கொடுத்தவர்’ என்று கருணாநிதியைப்பற்றி ஊனும் உயிரும் உடன்பிறப்புக்களும் உருகப் பேசிக்கொண்டு இருந்தார் கவிஞர். சும்மா சொல்லக்கூடாது. மடை திறந்த வெள்ளம் போலத்தான் பேச்சும் வருகிறது. எதோ ஒரு பாட்டு எழுதியிருந்தாராம். அதில் எழுத்துப் பிழைகள் இருந்ததை கருணாநிதி சுட்டிக் காண்பித்தாராம். வல்லினத்திற்கும் மெல்லினத்திற்கும் இடையில் இடையினம் வரக்கூடாது என்றாராம். எப்பேர்ப்பட்ட தீர்க்கதரிசினம் என்று புகழ்ந்து, அரசியலுக்கும் இன்று அப்படியே பொருந்துகிறது பாருங்களேன் என்று சொல்லவும், கருணாநிதி முகத்தில் புன்னகை பூக்க, ஸ்டாலின்+ கனிமொழி,+தயாநிதி மாறன் குலுங்கிச் சிரிக்க, ரஜினிகாந்த் வாய்விட்டுச் சிரிக்க, கூட்டம் ஆரவாரிக்க, எப்படி ஒரு கண்கொள்ளாக் காட்சி. என்ன தவம் செய்தனர் இந்த தமிழ் மக்கள். சுதாரிக்கும்முன், அடுத்த கதை வாலியிடமிருந்து! எங்கள் தங்கம் படத்தில் எம்.ஜி.ஆர் வாயசைக்கும் பாடலுக்கு “நான் அளவோடு ரசிப்பவன்..” என்று முதல்வரி எழுதி, அடுத்தவரிக்கு வார்த்தைகளைத் தேடிக்கொண்டு இருக்கும்போது கலைஞர் அங்கு வந்தாராம். சஸ்பென்ஸ் வைத்து நிறுத்தினார் நெட்வொர்க்குக்கே தாங்க முடியவில்லை. எதோ தடங்கலாகி சில கணங்கள் காணாமல் போனது. திரும்பச் சரியானபோது, எல்லோரும் சிரித்துக் கொண்டு இருந்தார்கள். “எதையும் அளவின்றி கொடுப்பவன்” என்று யாருங்க சொன்னது? யோசித்துக்கொண்டு இருக்கும்போது, வாலி அவர் பாட்டுக்கு போய்க்கொண்டே இருந்தார். அவ்வப்போது மேடையில் கவிஞர் வைரமுத்துவைவையும் காண்பித்தார்கள். ‘இன்றைக்கு எதாவது கவிதை மன்றமா’ என யோனை வந்தது. வழக்கமாக, ‘கருணாநிதிதானே மேடையில் நடுவராக இருப்பார், இங்கு வாலி மேடையில் நடுவராகவும், கலைஞர் பார்வையாளராகவும் இருக்கிறாரே’ என கூடவே வியப்பும் வந்தது. மேடையில் மத்தியமந்திரிகள் ஜெகத்ரட்சகன், ராஜா கூடவே சுப.வீரபாண்டியன் போன்றோரையும் காண்பிக்கவும், இது வேறு என்ற தெளிவு வந்தது. மேடையின் பின்னணியில் அண்ணாவோடு கலைஞர் பவ்யமாக சிரித்து குனிந்து நிற்பதைப் பார்த்தவுடன், கலைஞருக்கு கொடுக்கப்பட்ட அண்ணா விருது என்பது நினைவுக்கு வந்தது. இப்படி எல்லாம் வந்தபின் பார்த்தே விடுவது என்கிற தைரியமும் வந்தது. இன்ன வார்த்தைகள் என்று கிடையாது. வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருந்தார்கள். அமைச்சர்களும், அதிகாரிகளும் ‘எம் பணி கைதட்டி சிரித்துக் கிடப்பதே’ என்பதாய் கீழே இருந்தார்கள். முதல்வரிசை நடுவில் முதலமைச்சர் கருணாநிதிம், நடிகர் ரஜினிகாந்த்தும் இருக்க, அப்புறமும், இப்புறமும், மனைவி, குழந்தைகள், பேரன்மார், அமைச்சர்கள் புடைசூழ்ந்திருந்தனர். பின்புறம் அதிகாரிகள், அவர்கள் குடும்பத்தார், இன்னும் பலர் வரிசையாய் உட்கார்ந்திருந்தனர். இன்று காலையில் எத்தனை ‘உலகத்தமிழர்கள்’ இந்த அற்புதத்தை கண்டு களித்தார்கள் என்று தெரியவில்லை. மெய்சிலிர்த்தார்கள் என்று புரியவில்லை. தாங்கள் தயாரித்த ‘நினைத்தாலே இனிக்கும்’படம் டாப் டென்னில் முதல் படமாய் காண்பித்து சன் டிவி நிறுவனம் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும் போதுதான், கலைஞர் டி.வி இந்தக் காட்சியைக் காண்பித்துக் கொண்டிருந்தது. ஜெகத்ரட்சகன் ‘கலைஞரின் பேச்சாற்றல்’ என பேச வந்தார். ராமாயாண வரிகளையெலாம் மனப்பாடமாய் சந்தசுதியோடு ஒப்பித்து இடையிடையே, கலைஞரை ‘ஆறரை கோடி தமிழ்மக்களின் இதயநாயகன்’ என கொண்டாடித் தீர்த்தார். சிறைக்குச் சென்று, கருணாநிதி சட்டசபை உறுப்பினராகி, சட்டமன்றத்துக்குள் நுழைந்தாராம். அப்போது அனந்தநாயகியம்மாள் “என்ன கலைஞரே! மாமியார் வீடு எப்படி இருந்தது” என்று கேட்டாராம். உடனே அவர் “உங்கள் தாய்வீடு நன்றாக இருந்தது” என்றாராம். எப்பேர்ப்பட்ட பேச்சாற்றல் என போற்றினார். கூட்டம் ஆர்ப்பரித்தது. சுற்றிலும் எல்லோரும் சிரிக்கும்போது ரஜினி என்ன முகத்தை இறுக்கமாகவா வைத்திருக்க முடியும். தேமேன்னு சிரித்தார். அவ்வப்போது கால்களை ஆட்டி தன்னை உற்சாகப்படுத்திக்கொண்டார். கருணாநிதி எதைச்செய்தாலும் அதில் ஆழ்ந்த பொருளிருக்குமாம், நாணயம் மிக்கவர் அண்ணா என்பதால்தான் அவரது படத்தை ருபாய் நோட்டில் இல்லாமல் நாணயத்தில் பொறிக்க வழிசெய்தாராம் முதலமைச்சர். ஆமாம், இந்த காங்கிரஸார் எந்தக் காரணத்திற்காக காந்தி படத்தை ருபாய் நோட்டில் பதித்தார்கள் என்று தெரியவில்லையே? தொடர்ந்து உணர்ச்சிவசப்படாமல் நிதானமாகவும், கொஞ்சம் தெளிவாகவும் பேசினார் மத்திய மந்திரி ராஜா. அண்ணா, பெரியாரை எல்லாம் அந்த அரங்கத்தில் பேசியது கொஞ்சம் ஆற்றுப்படுத்தியது. கலைஞர் தன்னை நாத்திகர் என்று சொல்லிக்கொள்ளவும், பகுத்தறிவுக் கொள்கை மிக்கவர் எனச் சொல்லிக்கொள்ளத் தயங்கியது இல்லை என்றதோடு நில்லாமல் கடவுள், ஆன்மீகம் குறித்த கடுமையான விமர்சனங்களையெல்லாம் பெரியாரின் வார்த்தைகளோடு குறிப்பிட்டார். இந்த ‘ஈயாடவில்லை’ என்னும் பதத்திற்கான அர்த்தங்கள் ரஜினியின் முகத்தில் தெரிந்தன. அப்புறம் யார்..? நம்ம வைரமுத்து அவர்கள். உடலை முறுக்கேற்றி, எல்லோரையும் விஞ்சிவிட வேண்டும் என்ற முஸ்தீபோடு வந்தார். தனக்கேயான அந்த விசித்திர உடல்மொழியோடு, ’கலைஞரின் எழுத்தாற்றலை’ அரங்கமெங்கும் நிரப்பினார். ‘அண்ணா ஒரு எழுத்தாளர், ஆனால் கலைஞர் எழுத்தாளர் மட்டுமல்ல, படைப்பாளியுங்கூட’ என்று தனது மேதமையால் கருணாநிதியை அளக்க ஆரம்பித்தார். ‘காளிதாசன், ஷேக்ஸ்பியருக்கும் இணையான, அதற்கும் மேலான உவமைகளைக் கையாண்டவர் கலைஞர்’ என்று அவரது உலக இலக்கிய அறிவை வெளிப்படுத்திய போது ‘அப்படியா’ என்றும் மொத்தக் கூட்டமே புல்லரித்துப் போயிருந்தது. ரஜினியின் புருவங்கள் உயர்ந்து நின்றன. சகிக்கமுடியாமல் டி.வியை அணைத்துவிட்டேன். அந்தக் காலத்து அரசவைகளில், நம் புலவர் பெருமக்களின் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து சங்கடமடைந்தேன். எட்டையபுரத்து அரசவையில் கவிஞராய் கொஞ்ச நாட்கள் இருந்துவிட்டு, ‘பன்றியைபோல மண்ணிடைச் சேற்றில்’ கிடந்தேன் என சுயசரிதையில் எழுதிய பாரதி விஸ்வரூபமெடுத்து நின்றான். கருணாநிதியின் தமிழுக்கான பங்களிப்பை குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாதுதான். ஆனால் தமிழே அவர்தான், தமிழை வாழவைத்தது அவர்தான் என்று சொல்வதெல்லாம் எப்படிச் சரியாகும்? சிறுவயதில் கருணாநிதி எழுதிய ‘நெஞ்சுக்கு நீதி’யை முழுமையாகப் படித்து அவர் மீது பெரும் மதிப்பு கொண்டவனாய் இருந்ததுண்டு. எல்லாவற்றையும் காலம் கரைத்துக்கொண்டு இருக்கிறது. போலியான, சம்பந்தமற்ற, தேவையற்ற புகழுரைகளை ஒரு மனிதர் எப்படி ஆடாமல், அசையாமல் மணிக்கணக்கில் கேட்டுக்கொண்டு இருக்க முடிகிறது என்று புரியவில்லை. ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. தனது படங்களைப் பார்க்க வாருங்கள் என்று கலைஞரை ரஜினிகாந்த் அழைத்து, மணிக்கணக்காய் உட்கார்ந்து பார்க்க வைத்ததற்கு சரியான பழிக்குப் பழி இது. அவர் ஆடுவதை, பாடுவதை, சொடக்குப்போட்டு சவால் விடுவதை, நூறு பேரை பந்தாடுவதையெல்லாம் பார்க்கவைத்த கொடுமைக்கு கொடுக்கப்பட்ட சரியான தண்டனை இது. * Tags அரசியல் கருணாநிதி ரஜினிகாந்த் புதியது பழையவை மாதவராஜ் உலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள். மேலும் காட்டு கருத்துரையிடுக 56 கருத்துகள் * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin. நாமக்கல் சிபி 20 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 7:29 //தனது படங்களைப் பார்க்க வாருங்கள் என்று கலைஞரை ரஜினிகாந்த் அழைத்து, மணிக்கணக்காய் உட்கார்ந்து பார்க்க வைத்ததற்கு சரியான பழிக்குப் பழி இது. அவர் ஆடுவதை, பாடுவதை, சொடக்குப்போட்டு சவால் விடுவதை, நூறு பேரை பந்தாடுவதையெல்லாம் பார்க்கவைத்த கொடுமைக்கு கொடுக்கப்பட்ட சரியான தண்டனை இது// :)) பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி நாமக்கல் சிபி 20 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 7:29 //தனது படங்களைப் பார்க்க வாருங்கள் என்று கலைஞரை ரஜினிகாந்த் அழைத்து, மணிக்கணக்காய் உட்கார்ந்து பார்க்க வைத்ததற்கு சரியான பழிக்குப் பழி இது. அவர் ஆடுவதை, பாடுவதை, சொடக்குப்போட்டு சவால் விடுவதை, நூறு பேரை பந்தாடுவதையெல்லாம் பார்க்கவைத்த கொடுமைக்கு கொடுக்கப்பட்ட சரியான தண்டனை இது// Ore Kallil Irandu Maangai! பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி ஜோ/Joe 20 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 7:34 //சகிக்கமுடியாமல் டி.வியை அணைத்துவிட்டேன்.// இதை முதலிலேயே செய்திருக்கலாம் .. ரொம்ப டென்சன் ஆகாம நீங்களும் ,இந்த பதிவை படிக்க அவசியமின்றி நாங்களும் பயன் பெற்றிருப்போம். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி அறிவிலி 20 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 7:35 //சரியான தண்டனை இது// ROTFL பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி Karthikeyan G 20 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 7:44 :-))) பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி velji 20 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 7:47 you linked two separate incidents in their own way!nice! பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி Unknown 20 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 8:04 நான் டிவி பார்ப்பதை நிறுத்தி மூன்று ஆண்டிகள் ஆகின்றது..இது போன்ற கொடுமைகளுக்கு உள்ளாகாமல் இருப்பதில் மகிழ்ச்சியே ;)))) பகிர்விற்கு நன்றி தோழர். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி ஜ்யோவ்ராம் சுந்தர் 20 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 8:08 இந்த எழவிற்குத்தான் நான் டீவி பக்கமே போவதில்லை. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பாலா 20 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 9:00 ஹாஹாஹாஹாஹா பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி selventhiran 20 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 9:13 முத்தமிழ் வித்தகர் முன்னால முத்தமிழையும் வித்துருக்காய்ங்க போல... பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி அம்பிகா 20 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 9:17 காலில் விழும் கலாச்சாரம் எவ்வளவு அருவருப்பானதோ அதே போல் தான் இதுவும். இதையெல்லாம் பார்க்காமல் இருப்பது நம் ஆரோக்கியத்துக்கு நல்லது. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி அ.மு.செய்யது 20 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 9:23 //இன்று காலையில் எத்தனை ‘உலகத்தமிழர்கள்’ இந்த அற்புதத்தை கண்டு களித்தார்கள் என்று தெரியவில்லை. மெய்சிலிர்த்தார்கள் என்று புரியவில்லை.// அந்த‌ அப்பாவி உல‌க‌த்த‌மிழ‌ர்க‌ளில் நானுமொருவ‌ன். குறிப்பாக‌, வைர‌முத்துவின் புக‌ழார‌ம் க‌லைஞ‌ருக்கு திக‌ட்டியிருக்கும்.. ஏ.கே 47 க‌த்தி நுனி போல‌ க‌லைஞ‌ர் என்ற‌தும் என‌க்கு மெய்சிலிர்த்து....அட‌ங்கொக்கா ம‌க்கா.. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி Venkatesh Kumaravel 20 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 9:45 சும்மா ஒரு விளையாட்டுக்கு கேக்குறேன்... இந்தப் பதிவை எழுதுவது மு.க-வை யாராவது திட்டவேண்டும், அவரை அத்தனை பேரும் பாராட்டுவது மாதிரி நடிப்பது கூட எனக்கு பொறுக்கவில்லை என்பதற்கான மறுமொழிதானே? இதே நிகழ்ச்சியை சற்று மாற்றி மாதவராஜ் சாரை வைரமுத்துவும், வாலியும் பாராட்டினால் வேண்டாம் என்று மறுத்துவிடுவீர்களா? எல்லாருக்குமே ஈகோ தானே சார்? பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி Venkatesh Kumaravel 20 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 9:45 -பின்னூட்டக் கயமை (அ) பொழுது போகாமை- பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா 20 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 9:52 அண்ணா நூற்றாண்டு விழாவில் அண்ணாவின் தம்பி எனச் சொல்லும் கள்ளர் கூட்டத் தலைவனுக்கு ஜால்ரா அடித்தார்கள். பாவம் அண்ணா. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி Unknown 20 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 11:34 விடுங்கண்ணே!அரசியல்ல இதெல்லாம் சகஜம்தானே... கலைஞர் விருதையும் அறிவித்து அதையும் அவ்ர் தனக்கு தானே கொடுத்துக்காம இருந்தா சரி! பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பின்னோக்கி 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 12:25 //“எதையும் அளவின்றி கொடுப்பவன்” என்று யாருங்க சொன்னது? யோசித்துக்கொண்டு இருக்கும்போது, வாலி அவர் பாட்டுக்கு போய்க்கொண்டே இருந்தார். அந்த வரிகளை கருணாநிதி தான் சொன்னாராம். நானே இந்த கருத்துரையைப் பார்த்து கலங்கிப்போனேன். எப்பேர்பட்ட தமிழ் இலக்கியவாதி கலைஞர் என்று. ஒரு வேளை நான் அவரது புத்தகங்கள் எதுவும் படிக்காததால் அவரை சரியாக மதிப்பிடவில்லையோ ? அண்ணாவை விட இவர் பெரிய எழுத்தாளர்/பேச்சாளர் என்று அனைவரும் கூறினார்கள். அது உண்மையா ? ஏனென்றால் நான் அண்ணா எழுதியதை/பேசியதை அறிந்தவன் இல்லை. யாரிடமாவது கேட்கவேண்டும் என நினைத்தேன். உங்கள் பதிவு அதற்கு பதிலாக இருந்தது. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பின்னோக்கி 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 12:28 காலையில meeting இனிமேல தான் eating என்று கலைஞர் சொன்னதாக ஒருவர் சொன்னார். இந்த மாதிரி நிமிடத்துக்கு ஒரு முறை பேசக்கூடியவர் விஜய T. ராஜேந்தர் என நினைத்துக் கொண்டேன். அப்புறம் வாலி தனக்கு உயிர் கொடுத்தவர் என சொன்னார், ஏன் அப்படி சொன்னார் என எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரியுமா ? பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி RAGUNATHAN 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 1:12 அடடே இன்னும் நீங்க டி. வி. பாகுரீங்களா பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி அது சரி(18185106603874041862) 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 1:32 // கலைஞருக்கு கொடுக்கப்பட்ட அண்ணா விருது என்பது நினைவுக்கு வந்தது. // இது தான் நமக்கு நாமே திட்டமா?? // கருணாநிதியின் தமிழுக்கான பங்களிப்பை குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாதுதான். ஆனால் தமிழே அவர்தான், தமிழை வாழவைத்தது அவர்தான் என்று சொல்வதெல்லாம் எப்படிச் சரியாகும்? // முத்தமிழ் வித்தவர், எளக்கியவியாதி கலைஞ்சரை பத்தி இப்படியெல்லாம் கேள்வி கேக்கப்படாது....அப்புறம் ஒங்களை தாக்கி ஒடன்பொறப்புக்கு ஒரு கடுதாசி எழுத வேண்டி வரும்... // போலியான, சம்பந்தமற்ற, தேவையற்ற புகழுரைகளை ஒரு மனிதர் எப்படி ஆடாமல், அசையாமல் மணிக்கணக்கில் கேட்டுக்கொண்டு இருக்க முடிகிறது என்று புரியவில்லை. // இதுக்கு தாங்க பகுத்தறிவு வேணும்கிறது....இப்பவாவது ஒத்துக்கறீங்களா கலைஞசருக்கு பகுத்தறிவு இருக்குன்னு?? // ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. தனது படங்களைப் பார்க்க வாருங்கள் என்று கலைஞரை ரஜினிகாந்த் அழைத்து, மணிக்கணக்காய் உட்கார்ந்து பார்க்க வைத்ததற்கு சரியான பழிக்குப் பழி இது. அவர் ஆடுவதை, பாடுவதை, சொடக்குப்போட்டு சவால் விடுவதை, நூறு பேரை பந்தாடுவதையெல்லாம் பார்க்கவைத்த கொடுமைக்கு கொடுக்கப்பட்ட சரியான தண்டனை இது. // ரஜினி படம்னாலும் வருசத்துக்கு ஒண்ணு வருது....இவரு அன்றாடம் இது மாதிரி ஒரு அல்லக்கை நி(பு)கழ்ச்சிக்கு போய்க்கிட்டுல்ல இருக்காரு....காசு குடுத்து இவரே ஏற்பாடு பண்ணுவாரோ??? நீங்க எழுதியிருக்கதை படிச்சே எனக்கு பீதியாருக்கு...ரஜினிக்கு பேதியே ஆயிருக்கும்....தமிழ்நாட்டுல உயிர் வாழ்றது எவ்வளவு கஷ்டமா இருக்குடா சாமி! :0))) பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 1:43 தலைப்பை சற்று மாற்றி வைத்திருக்கலாம். "முக வைச்சுற்றி சில காக்கைகள்". அவஸ்தைகளிலே பெரிய அவஸ்தை மற்றவர்கள் தன்னை கூச்சநாச்சமில்லாமல் புகழ்வதை பலர் பார்க்க கேட்பதுதான். அதெற்கெல்லாம் ஒரு பக்குவம் இருக்கனும். "இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாண்டா" -ன்னு வடிவேலு சொன்னது தான் ஞாபகம் வருகிறது. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 1:47 இருபத்தி மூன்றாம் புலிகேசி Vs ஓணான்டி புலவர். மா மன்னா?! மாமா மண்ணா? குறிப்பு: மூணு சுழி "ண்" ல எந்த உள் குத்தும் இல்ல. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 7:28 எம் ஜி ஆர் எதையும் அளவில்லாமல் கொடுப்பவர் என்றால், கருனாநிதி எதையும் கொடுக்காமல் வருபவர் என்று கவிஞர்கண்ணதாசன் சொலியதாக படித்திருகிறேன் எதற்கு என்று மட்டும் கேட்டு விடாதீர்கள். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி விநாயக முருகன் 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 7:39 அந்த கொடுமையை நானும் டி.வியில் பார்த்தேன். வாலி கவிதை டி.ராஜேந்தர் வசனம் போல இருந்தது. வைரமுத்து பேசியது அபத்தம். வாங்குன காசுக்கு என்னமா பீல் பண்ணி.... பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி குப்பன்.யாஹூ 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 8:22 இதே வாலி, ஜெகத்ரட்சகன் ஒரு காலத்தில் எம்ஜியாரை இப்படித்தான் பாராட்டி பேசிய நபர்கள். நாளையே ஜெயலலிதா முதல்வர் ஆனதும் வாலி அம்மா, தாயீ அஷ்ட லக்ஸ்மி என்று துதி பாடுவார். அதையும் ரஜனி கமல் கை கொட்டி சிரிப்பார். நமக்கு ஒரு காமெடி நிகழ்ச்சி. இன்றும் கலைஞர் டிவி பாருங்கள், அண்ணா நூறாண்டு விழா. இன்னும் ஒரு கவி அரங்கம். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி அம்பிகா 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 9:39 காலையில் கவியரங்கம் பார்த்ததால் வந்த கடுப்பு, இரவில் இந்த பின்னுட்டங்களை படித்ததில் தீர்ந்திருக்குமே! வாய் விட்டு சிரிக்க வைத்தன. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி ஈரோடு கதிர் 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 10:10 சனிக்கிழமையே... இதுக்கான விளம்பரம் கலைஞர் டிவில திருப்பி திருப்பி போட்டாங்க... ஜெகத்ரட்சகன் பேசுற சீன்ல ரஜினி சிரிக்கிற மாதிரி நடிக்க, கலைஞரே அவர பாவமா பார்க்கிற மாதிரி நடிக்க.... முடியல... அப்பவே முடிவு பண்ணிட்டேன்.... ஞாயித்துக்கிழமை வீட்ல இருந்தா புத்தி மாறி இதப் பார்த்தாலும் பார்த்துடுவோம்னு... எஸ்கேப் ஆயிட்டேன் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 10:20 நாமக்கல் சிபி! ‘கல்லோ மாங்காயோ’ என்று கவிதைகள் வந்தாலும் வரும். ஜோ! நமக்கு பட்டால்தானே தெரியுது நண்பா... அறிவிலி! பார்த்த எனக்கும்தான். கார்த்திகேயன்...! :-))) வேல்ஜி! நன்றி. உமாஷக்தி! வாருமுன் காத்துக்கொண்டீர்கள். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 10:29 ஜ்யோவ்ராம்சுந்தர்! உங்களது கோபமும், எரிச்சலும் மிக இயல்பாய் வார்த்தைகளில் தெரிகின்றன. சட்டென சிரிப்பு வந்தது. பாலா! தங்கள் சிரிப்புக்கு மிக்க நன்றி. செல்வேந்திரன்! தம்பி... வித்தவங்களையெல்லாம் வித்தகர் பார்த்துச் சிரித்ததை நீங்க பார்த்திருக்கணும். அவரா வாங்குறவரு....? பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 10:35 அம்பிகா! //இதையெல்லாம் பார்க்காமல் இருப்பது நம் ஆரோக்கியத்துக்கு நல்லது.// ரசித்தேன். ‘குடி குடியைக் கெடுக்கும்’, ‘புகை உடல்நலத்திற்கு தீங்கானது’ போன்ற வாசகங்கள் எதாவது வெளியிடலாமோ? செய்யது! ரொம்ப சந்தோஷமா இருந்தது. நீங்களும் அந்த கொடுமையை அனுபவித்தீர்களா? ஆமாமாம். ஏ.கே 47 தான். ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். வெங்கிராஜா! தவறான எண்ணுக்கு போன் செய்திருக்கிறீர்கள் நண்பரே! அனானி! ‘கள்ளர் கூட்டத்தலைவர்’ என்றெல்லாம் வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாமே. அண்ணா நூற்றாண்டு விழா இப்படி என்றால், உலகத்தமிழ் மாநாடு எப்படி இருக்கும்? பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 10:41 அண்டோ! எந்த உலகத்தில் இருக்கிறாய் நீ தம்பி? பின்னோக்கி! அந்த வரிகளை கருணாநிதிதான் சொன்னாரா! நன்றாக கொடுத்தாரே எம்.ஜி.ஆர் கருணாநிதிக்கு....! ஆமாமாம், டி.ஆர் பின்னி எடுத்துவிடுவார்தான். இதெல்லாம் தெரியாத மார்ட்டின் லூதர் கிங், சர்ச்சில், லெனின் போன்றவர்கள் எல்லாம் என்ன பேச்சாளர்கள்? உலகையே அதிரவைத்த பேச்சாளர்கள் என்று அவர்களை எந்தக் கிறுக்கன் சொல்லியிருப்பான்! ரகுநாதன்! என்ன செய்ய... பார்த்துட்டேனே... பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி Deepa 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 10:51 //போலியான, சம்பந்தமற்ற, தேவையற்ற புகழுரைகளை ஒரு மனிதர் எப்படி ஆடாமல், அசையாமல் மணிக்கணக்கில் கேட்டுக்கொண்டு இருக்க முடிகிறது என்று புரியவில்லை. // அய்யய்யோ அது மிகத் தேவையான குணாம்சமாயிற்றே. அது இல்லா விட்டால் யாரும் பெரிய மனுஷன் என்று ஒத்துக் கொள்ளமாட்டார்கள். கடைசி வரி சூப்பர் பஞ்ச்! ஆமாம், ரஜினிக்குத் தேவை தான். நமக்கு என்ன தலையெழுத்து... இதெல்லாம் பார்க்க/கேட்க?? பாரதியை நினைவு கூர்ந்தது மிகவும் அருமை. ஹூம். அவர் வாழ்ந்த இதே மண்ணில் கவிஞர் என்ற பெயரில் மார்தட்டி வருபவர்களைக் கண்டால்...... :-(((( பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 10:51 அதுசரி! உங்கல் பின்னூட்டம் பார்த்து வாய்விட்டுச் சிரித்தேன். என் எரிச்சலும் குறைந்து போனது நன்றி. ஆனாலும் சீரியஸான கேள்விகளைத்தான் கேட்டு இருக்கீங்க... அனானி! ஓஹோ... இதற்கும் அந்த வடிவேலுவின் வசனம் பொருந்துமோ! சரி.... நமக்கு? அனானி! எதற்கு என்று நான் கேட்கவே மாட்டேன்... விநாயக முருகன்! நீங்களும் பார்த்தீர்களா? வாழ்க வையகம்! ராம்ஜி! எல்லாம் சரிதான். அதென்ன, கடைசியில் இன்றும் டிவி பார்க்கச் சொல்லியிருக்கீங்க? ஏன் இந்தக் கொலைவெறி? அம்பிகா! ஆமாம். கொஞ்சம் குறைந்திருக்கிறது.... கதிர்! மணியோசை கேட்டே யானையிடம் இருந்த தப்பித்த புத்திசாலி நீங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 11:04 ரஜினி கொடுமைபடுத்த படுவது இருக்கட்டும். உங்கள் பதிவுகளை படித்து நாங்கள் கொடுமைபடுத்த படுவது பற்றி யொசியுங்கள். பதிவு எழுத மேட்டர் இல்லைன்னா நாலு பதிவுகளை படியுங்க சார். இதுமாதிரி கண்டதையும் எழுதி எங்களை சாவடிக்காதீங்க. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி Suresh Kumar 21 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 11:07 ஆனா எப்படி தான் இப்படியெல்லாம் யோசிக்கிறாங்களோ அவங்களே ஒரு அமைப்பை தொடங்கி ஆண்டு தோறும் அவங்களுக்கே விருதுகளை பங்கு வைப்பாங்களாம் அதுக்கு ஒரு கூட்டம் வருத்த படாத வாலிபர் சங்கம் போல . அவங்கள பற்றி அவங்களே பேசி பெருமை பாடுவாங்களாம் என்ன கொடுமை ......... பாடி பாரிசில் வாங்கிய நவீன புலவர்களை என்ன சொல்ல பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி ஆரூரன் விசுவநாதன் 21 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 12:43 அண்ணா விருதை கலைஞருக்கு கொடுத்தார்கள், கொஞ்ச நாளில் கலைஞர் விருது அண்ணாவிற்கு கொடுத்தாலும் கொடுப்பார்கள். 23ம் புலிக்கேசி படத்தில் இரண்டு துதி பாடிகள் வருவார்களே, அவர்களை நினைவிற்கு வந்தனர். மகள்,மகன் சென்னையில் தந்தைக்காற்றும் உதவியும், தந்தை தில்லியில் மகனுக்காற்றும் உதவியும்,........ வாழும் வள்ளுவர் தான்..... வெட்கங்கெட்டவர்கள்..... அன்புடன் ஆரூரன் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி anujanya 21 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 2:26 ஆம் மாதவ், நிறைய அசட்டுத் தனமாகவும், அருவருப்பாகவும் இருந்தது அந்த நிகழ்ச்சி. ஜகத் பாதி பேசும் போதே தாங்க முடியாமல் வேறு சேனல் பார்க்கச் சென்றேன். வைரமுத்துவின் தாக்குதலிலிருந்து தப்பி விட்டேன் :) தன் காலடியில் வீழ்பவர்களை ரசிக்கும் ஜெயாவின் குரூரத்திற்கும் இந்த புகழ் மாலைகளை குறும் புன்னகையுடன் ரசித்த கலைஞருக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை :( அனுஜன்யா பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி butterfly Surya 21 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 5:22 ஆல் இண்டியா ஐஸ் வைப்போர் சங்க நிகழ்ச்சிகள் அருமை... நிறுவனர்: ஜெகத்ரட்சகன். மற்றவர்: உறுப்பினர்கள். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா 21 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 5:57 அந்த கொடுமையை நானும் டி.வியில் பார்த்தேன். 23ம் புலிக்கேசி படத்தில் இரண்டு துதி பாடிகள் வருவார்களே, அவர்களை நினைவிற்கு வந்தனர். yenna kodumai sir ethu. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி நந்தாகுமாரன் 21 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 7:33 அருவருப்பை அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் // பாரதி விஸ்வரூபமெடுத்து நின்றான் // உணரவேண்டிய உண்மை பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி வால்பையன் 21 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 7:59 அருமையான நகைச்சுவையை மிஸ் பண்ணிட்டேன் போல! பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா 21 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 8:27 பணம் சம்பாதிப்பத்ற்காக, தான் ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கும் மகளிர் விடுதி சம்பந்தமாக அரசாங்க ரீதியாக உதவி செய்திருக்கும் முதல்வருக்கு வைரமுத்துவும், தனது மருத்துவ சிகிச்சைக்காக பணம் கொடுத்து உதவியருக்கு வாலியும்...வேற எப்படித்தான் தங்களது நன்றிக்கடனை செலுத்துவது? நாமதான் இதையெல்லாம் கண்டும் காணாம இருந்துக்கணும். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பொன் மாலை பொழுது 21 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 11:44 இந்த கருமங்களுக்கும், சீரியல் கொடுமைகளுக்கும் பயந்தே தான் நான் கேபுள் இணைப்பு இல்லாமல் T.V. வைத்திருக்கிறேன். வெறும் DVD யும் MP3 பாடல் களும் போதுமென்று. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 22 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 7:58 தீபா! நன்றி. உனது பின்னூட்டத்தில் வரும் ‘ஹூம்’ அங்கே உனது பதிவின் தலைப்புமாகி இருக்கிறது. எத்தனை ஹூம்கள். அனானி நண்பரே! உங்களைப் போன்றோரைக் கொடுமைப்படுத்தியதில் வருத்தமொன்றும் ஏனக்கில்லை. சுரேஷ்குமார்! நன்றி. நவீன பாணர்கள் அவர்கள். ஆரூரன்! வாழும் வள்ளுவரா! அப்படியும் சொல்றாங்களா!!!! அனுஜன்யா! //தன் காலடியில் வீழ்பவர்களை ரசிக்கும் ஜெயாவின் குரூரத்திற்கும் இந்த புகழ் மாலைகளை குறும் புன்னகையுடன் ரசித்த கலைஞருக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை// சரியாகச் சொன்னீர்கள். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 22 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 8:03 butterfly surya! நன்றி. அனானி! நன்றி. நந்தா! நன்றி. வால்பையன்! நீங்க மிஸ் பண்ணியிருக்கக் கூடாது. பதிவுலகம் ஒரு அருமையான நையாண்டிப் பதிவை இழந்துவிட்டது! அனானி! அப்படியா....! கக்கு மாணிக்கம்! நல்ல முடிவுதான். நன்றிங்க. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மங்களூர் சிவா 22 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 12:40 :))) பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி அமிர்தவர்ஷினி அம்மா 22 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 1:42 எனக்கும் அந்த நிகழ்ச்சியை கொஞ்ச நேரமே (ஷ் அப்பா.., முடியல) பார்த்தபோது இதுதான் தோன்றியது. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 23 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 7:38 மங்களூர் சிவா! நன்றி. அமித்து அம்மா! //(ஷ் அப்பா.., முடியல)// கரண்ட போனவுடன் வர்ற கமெண்ட் மாதிரி இருக்கு. :-))))) பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி thiyaa 23 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 7:41 அருமை பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி சவுக்கு 23 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 10:43 அருமையான பதிவு. ஆனால், தாங்கள் எப்படி இதைப் பொறுமையோடு பார்த்தீர்கள் என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு வேளை ரிமோட் ரிப்பேர் ஆகியிருக்கக் கூடும். தாங்களே ஒரு விழா நடத்தி, தங்களின் கைத்தடிகளை விட்டு வாழ்த்திப் பேச வைத்து, தங்கள் டிவியிலேயே அதை ஒளிபரப்பி, கண்டு மகிழும், கருணாநிதி, ஒரு "நார்சிஸ்ட்" என்றே நினைக்கிறேன். எவ்வளவு அரசுப் பணிகள் இருந்தாலும், இது போன்ற பாராட்டு விழாக்களுக்கு கருணாநிதி நேரம் ஒதுக்க தவறியதே இல்லை. இதில், வரும் 26ம் தேதி, கருணாநிதிக்கு அண்ணா விருது வழங்கப் படப் போகிறதாம். இது தொடர்பாக, அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம் இந்த தளத்தில் காணலாம். www.savukku.blogspot.com பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி யோகன் பாரிஸ்(Johan-Paris) 23 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 2:15 //போலியான, சம்பந்தமற்ற, தேவையற்ற புகழுரைகளை ஒரு மனிதர் எப்படி ஆடாமல், அசையாமல் மணிக்கணக்கில் கேட்டுக்கொண்டு இருக்க முடிகிறது என்று புரியவில்லை.// நெடுநாளாக எனது புரியாமையும் இதே! ///ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. தனது படங்களைப் பார்க்க வாருங்கள் என்று கலைஞரை ரஜினிகாந்த் அழைத்து, மணிக்கணக்காய் உட்கார்ந்து பார்க்க வைத்ததற்கு சரியான பழிக்குப் பழி இது. அவர் ஆடுவதை, பாடுவதை, சொடக்குப்போட்டு சவால் விடுவதை, நூறு பேரை பந்தாடுவதையெல்லாம் பார்க்கவைத்த கொடுமைக்கு கொடுக்கப்பட்ட சரியான தண்டனை இது. /// மிகச் சரியான கணிப்பு! ஆனாலும் உங்களுக்குப் பொறுமை அதிகம்!மேடையில் காக்காக் கும்பலுடன் கலைஞரை கண்டால்; மாறிவிடுவேன். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி Unknown 24 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 3:31 மாது அந்த நிகழ்ச்சியை நானும் பார்த்தேன் மன்னர் கால புலவர்கள் நினைவு சரிதான் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி Unknown 24 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 10:22 //‘பன்றியைபோல மண்ணிடைச் சேற்றில்’// இதுகள் எல்லாம் பன்றிகள் என்று கூறி பன்றிகளை கேவலப்படுத்தகூடாது. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி ramgoby 25 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 8:37 இந்த மாதிரி நிகழ்சிகள் வரும்பொழுது நான் கவிதையை மட்டுமே ரசிப்பேன் மத்தபடி எல்லாமே பிஸ்னஸ்னு நான் நினைகிறேன்.. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 28 செப்டம்பர், 2009 அன்று முற்பகல் 11:33 தியாவின் பேனா! நன்றி. ஒப்பாரி! நகைச்சுவையாக பார்க்க முடிந்ததால், பொறுமை இருந்தது. லிங்க்கை தவறாக கொடுத்து இருக்கிறீர்கள். இந்தப் பதிவுக்கே வருகிறது. பரவாயில்லை. தேடிப் பார்த்துவிட்டேன். யோகன் பாரிஸ்! எனக்கு பொறுமையே கிடையாது என்றுதான் வீட்டில் சொல்கிறார்கள். ரவிசங்கர்! நன்றி. பகுத்தறிவு! கோபம் புரிகிறது. இருந்தாலும்..... ராம்கோபி! பிசினஸா.....! என்ன பிசினஸ்? பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி சவுக்கு 28 செப்டம்பர், 2009 அன்று பிற்பகல் 3:05 மன்னிக்கவும். தவறான லிங்க் கொடுத்ததற்கு. இந்த லிங்க் சரியாக இருக்கும். http://savukku.blogspot.com/2009/09/blog-post_22.html பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி கருத்துரையைச் சேர் மேலும் ஏற்றுக... பக்கங்கள் Home எழுதியவை Subscribe Enter your email address: Delivered by FeedBurner அறிமுகம் மாதவராஜ் உலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.
நமது பதிவர் குசும்பன் இந்த தீபாவளிக்கு, தான் பிறந்த மண்ணுக்கு வருகிறாராம். சந்தோஷத்தோடும் பிரியத்தோடும் அவரது பதிவில் எழுத, பிரியமுள்ள நமது வலை சமூகத்து மக்கள் வாழ்த்து தெரிவித்து கொண்டாடுகிறார்கள். நேசமித்ரன், மண்குதிரை, பா.ராஜாராம் போன்றவர்களின் பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் இந்த மண்ணில் வாழ்ந்த வாழ்க்கையும், அதைப் பிரிந்திருக்கிற துயரங்களும் மெல்லிதாய் படிந்திருப்பதை பார்த்திருக்கிறேன். இதே மனநிலையை அயல்தேசத்தில் இருக்கும் பல நண்பர்களின் குரல்களில் கேட்டிருக்கிறேன். ஏன், பம்பாயில் இருக்கிற நமது அனுஜன்யாவுக்குக் கூட, எப்போது தமிழகம் வருவோம் என்றிருக்கிறது. இப்படி மனிதர்கள் எங்கிருந்தாலும், வேர் பிடித்த தத்தம் மண்ணின் சிந்தனைகள் வற்றாமல் ஓடிக்கொண்டு இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. நோபல் பரிசு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ராமகிருஷ்ணனை அப்படி புரிந்துகொள்ள முடியவில்லை. நேற்று தினத்தந்தியில் அப்படி ஒரு செய்தி வந்திருப்பதாக நண்பர் ஒருவர் சொன்னார். அதிர்ச்சியாக இருந்தது. பத்திரிகை வாங்கி படித்தேன். எரிச்சல் வந்தது. உறுதிசெய்து கொள்ள இணையத்திலும் பார்த்தேன். வருத்தத்தையும், வேதனையையும் விஞ்சி கோபம் வந்தது. நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ராமகிருஷ்ணன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றதும் இங்குள்ள ஊடகங்களும், மக்களும் அடைந்த சந்தோஷம் மிகப் பெரியது. வலையுலகத்தில் கூட பல பதிவர்கள் கொண்டாடி இருந்தனர். வாழ்த்துக்களைத் தெரிவித்து இருந்தனர். இதைப்பற்றித்தான் அந்த விஞ்ஞானி ராமகிருஷ்ணன் வருத்தப்பட்டு, பெரும் இம்சையாக இருப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறார். PTI நிறுவனத்துக்கு அள்ளித் தெளித்திருக்கும் முத்துக்கள் இதோ: "இந்தியாவில் இருந்து எல்லா தரப்பு மக்களும் எனக்கு இ-மெயில் அனுப்பி வருகிறார்கள். எனது இ-மெயில் பகுதியையே நிரப்பி முடக்கி விடுகிறார்கள். அவர்களது கடிதங்களை அழிப்பதற்கே எனக்கு ஒன்றிரண்டு மணி நேரம் ஆகி விடுகிறது. இவர்களது இ-மெயில் வெள்ளத்தால், எனது சகாக்களிடம் இருந்து வரும் முக்கியமான தகவல்கள் கூட கிடைக்காமல் போய் விடுகின்றன" "இவர்களுக்கு இரக்கமே கிடையாதா? நான் நோபல் பரிசு பெற்றதற்காக இவர்கள் பெருமைப்படுவது எல்லாம் சரிதான். அதற்காக என்னை ஏன் தொந்தரவு செய்கிறார்கள்?" "இவர்களில் பலர் பல ஆண்டுகளாக என்னைத் தொடர்பு கொள்வதில் அக்கறையே இல்லாமல் இருந்தவர்கள். இப்போது திடீரென என்னைத் தொடர்பு கொள்ளும் ஆர்வம் எப்படி வந்தது? எனக்கு இது விநோதமாக தெரிகிறது" "எனக்கு இந்தியாவில் பணியாற்ற வாய்ப்பு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுபோல் யாரும் என்னை அணுகவில்லை. அப்படியே அணுகினாலும், அந்த வாய்ப்பை நான் உடனடியாக மறுத்து விடுவேன் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்." "நான் இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் உள்ள எனது நுண்ணணு உயிரியல் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றுவதைத்தான் பெரிதும் விரும்புகிறேன். அதை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை. அதை விட மகிழ்ச்சியாக பணியாற்றக் கூடிய இடத்தை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது" அவரால் கற்பனை செய்ய முடியாமல் போகட்டும். உங்களால் ஜீரணிக்க முடிகிறதா? என்னால் எல்லாம் முடியவில்லை, சாமி! தன் தேசத்து மனிதன், தன் மொழி பேசும் மனிதன் ஒருவனுக்கு உலக அளவில் ஒரு அங்கீகாரம் என்று தெரிந்து சந்தோஷமாய் கொண்டாடும் மனிதர்களை இப்படியா அலட்சியப்படுத்துவது? தனது அன்றாடப் பணிகளுக்கு தொந்தரவாகவே இருந்தாலும் அதனை இப்படியா காலில் போட்டு மிதிப்பது? அப்படி எத்தனை நாள் இவர்கள் தொந்தரவு செய்துவிடப் போகிறார்கள்? பிறந்த மண்ணின் மீது அணு அளவு கூட சினேகமும், பிரியமும் தொனிக்காத இந்த மனிதன் யாராயிருந்தால் நமக்கென்ன? மனிதகுலத்துக்கு நல்லது செய்கிற கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிற சாதனைக்குத்தான் இந்த பரிசு, வெங்காயமெல்லாம். சக மனிதனையே நேசிக்கத் தெரியாத இந்த அந்நியனுக்கு நோபல் பரிசு கிடைத்தால் என்ன, கிடைக்காவிட்டால் என்ன. வாருங்கள் குசும்பன். நிச்சயம் உங்களைப் போன்றவர்களுக்கு போன் செய்ய நேரத்தை ஒதுக்கலாம், சந்தோஷமாக! * Tags நோபல் பரிசு புதியது பழையவை மாதவராஜ் உலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள். மேலும் காட்டு கருத்துரையிடுக 61 கருத்துகள் * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin. ஈரோடு கதிர் 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 8:57 அவரு என்ன சாதினு பார்த்து... அந்த சாதிக்காரங்கள சந்தோஷப்படுத்தி ஓட்டு வாங்க அரசாங்கம் அவருக்கு பத்து லட்சம் அல்லது இருபது லடசம்னும் பரிசு தராம இருந்ததுக்கு சந்தோஷப்படுவோம் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி வெண்ணிற இரவுகள்....! 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 9:03 ஆமாம் வேதனையான செய்தி பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பிரபாகர் 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 9:03 அய்யா காலை வணக்கம். அவரை நம்மவராக நினைத்தது நம் குற்றம். இரண்டாவது, நம்மவர்கள் தேவையெனில் தலையில் வைத்து கொண்டாடுவார்கள். இல்லையெனில் தரையில் போட்டும் மிதிப்பார்கள். இரண்டாவது, அவர் அந்த சூழலில் தன்னை முழுமையாய் இணைத்துக்கொண்டார் என எண்ணிக் கொள்ளவேண்டியதுதான். எங்கிருந்தாலும் வாழ்க என அவரிடம் இல்லாத பெருந்தன்மையோடு வாழ்த்த வேண்டியதுதான். பிரபாகர். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி Robin 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 9:12 //"இவர்களில் பலர் பல ஆண்டுகளாக என்னைத் தொடர்பு கொள்வதில் அக்கறையே இல்லாமல் இருந்தவர்கள். இப்போது திடீரென என்னைத் தொடர்பு கொள்ளும் ஆர்வம் எப்படி வந்தது? எனக்கு இது விநோதமாக தெரிகிறது" // - எனக்கு இந்த பேச்சுதான் விநோதமாக தெரிகிறது! பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி ச.செந்தில்வேலன் / S.Senthilvelan 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 9:32 உங்களுக்கு வந்த கோபம் எனக்கும் வந்தது. அவருக்கு நோபல் பரிசளித்தன்று சிஎன்என் நிருபர் அவரிடம் கேட்கிறார், "நீங்கள் இந்தியர் என்பதற்கு பெருமை கொள்கிறீர்களா?" அவரது பதில்.."இந்தியன் என்பதை விட மனிதன் என்பது தான் முக்கியம். இதில் தேசியவாதத்திற்கு இடமில்லை". அவர் எப்படியோ? "தம்பி.. நம்மூர்ல மழை தூருதுபா"னு எங்கப்பா நேத்து சொன்னதுல இருந்து, எனக்கு எங்கூர் நினைவே தான். என்ன தான் சொல்லுங்க .. "சொர்க்கமே என்றாலும்...." பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி anujanya 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 9:35 விடுங்க மாதவ். உங்கள் வருத்தம் புரிகிறது. நம் ஊரில் பிறந்தார். பரோடாவில் படித்தார் என்றறிகிறோம். இங்கிருந்து செல்கையில் மனிதனாகச் சென்றவர், அயல்நாட்டில் விஞ்ஞானி ஆகியிருக்கிறார். விஞ்ஞானத் தத்துவப்படி ஒன்றை இழந்தால் தான் இன்னொன்று பெற முடியும். மனிதநேயம் துறந்து, விஞ்ஞானி ஆகியிருக்கிறார். நமக்கு மனிதநேயம் இருப்பதால், பிரபாகர் சொல்வது போல் விட்டுத் தள்ளுவோம். அனுஜன்யா பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 9:38 அன்னை தெரசாவை இந்தியராக பார்க்கிறோம். அல்பேனிய அரசுக்கு இந்தியா தெரிவித்த மறுப்பு http://www.irishtimes.com/newspaper/world/2009/1015/1224256689880.html ராமகிருஷ்ணன் இந்தியக்குடிமகன் கூட இல்லை என்று நினைக்கிறேன். மிகச்சிறிய வயதில் அங்கே சென்றிருப்பார் என்று நினைக்கிறேன். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பின்னோக்கி 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 9:48 எனக்கு அவர் கூறியது சரியென்றே படுகிறது. அவர் தமிழர் என்ற அடையாளத்தை தொலைத்து யுகமாகிறது. அவரை நம் மக்கள் கொண்டாடுவதை பார்த்த போது எனக்கு சிரிப்பு தான் வந்தது. தமிழ் நாட்டில் பிறந்த அல்லது பெற்றோர் தமிழர் என்பதால், ஒருவர் தமிழர் என கொண்டாடுவது மடத்தனமானது. ஒரு சிலர் இங்கு பணம் செலவழித்து பெரிய விளம்பரதட்டிகளை வைத்திருக்கிறார்கள். கல்பனா சாவ்லாவுக்கும் இதே தான். தான் வாழும் நாட்டின் அடையாளத்தோடு குடிமகனான ஒருவரை நாம் கொண்டாடுவது நிறுத்தப்படவேண்டும். எல்லாம் மீடியா பண்ணும் வேலை. செய்தியை படித்தவர்களில் 10 ல் ஒருவருக்கு கூட அவர் எதற்காக பரிசு பெற்றார் எனத் தெரியாது. உயர்நிலையை அடைபவனின் பிறப்பை ஆராய்ந்து மகிழும் பழக்கம் நமக்கு போனால் ஒழிய, நாம் திருந்த முடியாது. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 9:58 கதிர்! பயமாத்தான் இருக்கு! வெண்ணிற இரவுகள்! நன்றி. பிரபாகர்! அந்த பெருந்தன்மை எனக்கும் வருமா என்று தெரியவில்லை. ராபின்! அவரே விநோதமாக இருக்கும்போது... ச.செந்தில்வேல்! அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 10:01 அனுஜன்யா! ஆஹா...! எனக்கு இப்படிச் சொல்லத் தெரியவில்லையே... சின்ன அம்மிணி! இருக்கலாம் நீங்கள் சொல்வது போல. ஆனால் வேரின் வாசம் அறியாமலா போகும் மனது? பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி velji 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 10:02 குரோமோசோம் ஆராய்சியில் ஈடுபடும்போது அடிப்படை உணர்வில் மாற்றம் நிகழுமா என்பதும் ஆராயப்படவேண்டிய விஷயம் போல. பின்னோக்கி சொல்வதும் சரி.அமெரிக்க இந்தியர் என்றா செய்திகளில் பிரதானப்படுத்தப்பட்டார்?! பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 10:09 பின்னோக்கி! நீங்கள் சொல்வதில் ஓரளவுக்கு உடன்பாடு உண்டுதான். தன் தேசம், தன் மொழி, தன் இனம், என்றெல்லாம் அடையாளப்படுத்திவிடக் கூடாது. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்னும் சர்வதேச மனிதனாக நாம் மாற வேண்டும்.எல்லாம் சரிதான். எவ்வளவுதான் பறவை சுதந்திரமாகப் பறந்தாலும் அதற்கென்று அடைவதற்கு ஒரு மரம் உண்டு. ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி’ என பாரதி பாடியதில் நம்மையறியாமல் ஒரு சிலிர்ப்பு உண்டு. இது ஒருவகையான தொப்புள்கொடி உணர்வுகள். இதைத் தாண்ட வேண்டும் என்றால் முதலில் அவன் பிறந்த மண்ணை மதிப்பவனாகவே இருக்க வேண்டும். பிறந்த மண்ணையே மதிக்காதவன் எந்த மண்னை மதிக்கப் போகிறான்? தமிழனோ, இந்தியனோ, முதலில் சக மனிதனை மதிக்கத் தெரிய வேண்டுமே. அதை நான் இந்த அந்நியரிடம் காண முடியவில்லை. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி தீப்பெட்டி 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 10:10 அவர் சொல்வதில் தவறில்லை. நாம் தான் எதற்கெடுத்தாலும் யாரையும் தலையில் தூக்கி வைத்து ஆட தயங்கியதில்லை. அவர் தம்மை தமிழராக உணர்கிறாரா என்பதை பற்றி அறியாமல் தமிழன் சாதித்துவிட்டதாக வீண்பெருமை கொள்கிறோம். அவர் சாதித்ததில் தமிழகத்தின், தமிழின் பங்கு என்ன? நாம் எதற்கு பெருமை கொள்ள வேண்டும்? அவர் பெயர் மட்டுமே தமிழர்களின் பெயர் போல இருக்கிறது.. நமது வேலை நமது நாட்டில் இருப்பவர்களுக்கு ஏன் நோபல் கிடைப்பதில்லை? அந்த வாய்ப்பையும் வசதிகளயும் கொண்டு வருவது எப்படி? என்று ஆக்கப்போர்வமாகவும் அறிவுப்பூர்வமாகவும் விவாதிப்பதை விட்டு விட்டு யாரோ எங்கேயோ எதனாலோ சாதித்ததை நமது பெருமையாக சொல்வதும், இங்கே வாழ்ந்து தமிழராய் உணர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ரஜினி,ஜெயா போன்றவர்களை தமிழரில்லை வந்தேறிகளெனச் சொல்லி விவாதிப்பதும் தமிழர்களுக்கு விமோசனமில்லையெனத் தெரிகிறது.. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பின்னோக்கி 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 10:22 மாதவராஜ்: உங்கள் கட்டுரைக்கு முற்றிலும் சம்மந்தமானதில்லை என் பின்னூட்டம். அதனால் சிறு குழப்பம். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 10:39 பின்னோக்கி! முற்றிலும் சம்பந்தமில்லாதாக ஒன்றும் தாங்கள் சொல்லவில்லை நண்பரே. முக்கியமான விஷயத்தைத்தான் சொல்லியிருப்பதாக நான் நினைக்கிறேன்.இது போன்ற விவாதங்களும் அவசியம் என்றே கருதுகிறேன். தீப்பெட்டி! மக்களிடம் நீங்கள் சொல்வது போல பல குறைகள் இருக்கின்றன. அதை நாம்தான் திரும்ப திரும்ப பேசிக்கொண்டு இருக்கிறோமே. ஒரு உயர்வு அடைந்த மனிதர்,சகிப்புத்தன்மையற்றவராகவும்,தான் பிறந்த மண் குறித்து எந்த உணர்வும் அற்றவராகவும் இருப்பதைத்தான் இங்கு நான் சொல்லியிருக்கிறேன். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி ராகவன் 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 10:57 அன்பு மாதவராஜ், மனதில் உள்ளதை பேசியதற்கு அவரை மதிக்கத் தான் தோன்றுகிறது. இதை நாம் ஒரு அவமதிப்பாக ஏன் கருத வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. தனக்கு தோன்றியதை உண்மையாய் பேசுபவர்கள் பாக்கியவான்கள் என்றே நினைக்கிறேன். இங்கு எத்தனை பேர் போலியாய் இருக்கிறார்கள், நம்மை ஆள்பவர்கள் உட்பட, இதன் பாதிப்பு தான் நமக்கு அதிகம், இவர்கள் தான் துரோகிகள். நம் வாழ்த்துக்களை புறக்கனிப்பது யாருக்கு இழப்பு, நமக்கா, அவருக்குத் தானே இழப்பு. நாம் அனுப்பிய பூங்கொத்துக்கள் புறக்கனிக்கப்பட்டாலும் அதன் தண்மையை இழக்காமல் மணக்கும் தானே. வேர்களை மறந்தது, விழுதுகளை இழந்தது மரத்திற்கு தான் பலவீனமே ஒழிய மண்ணுக்கு அல்ல. நன்றாக உற்றுப்பாருங்கள் அவருக்கு தொப்புள் அடையாளங்கள் இருக்காது (navel correction செய்தவர்கள் நமக்கு தேவையே இல்லை). அன்புடன், ராகவன் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி dondu(#11168674346665545885) 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 11:07 பலர் தங்களை அவரது ஆசிரியர்களாக இருந்தவர் என்றெல்லாம் சொந்தம் கொண்டாடியிருக்கிறார்கள். பல மெயில்கள் இந்த தோரணையில், எரிச்சல் ஏன் வராது? அன்புடன், டோண்டு ராகவன் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி ஹரன் 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 11:16 //எனக்கு அவர் கூறியது சரியென்றே படுகிறது. அவர் தமிழர் என்ற அடையாளத்தை தொலைத்து யுகமாகிறது. அவரை நம் மக்கள் கொண்டாடுவதை பார்த்த போது எனக்கு சிரிப்பு தான் வந்தது. தமிழ் நாட்டில் பிறந்த அல்லது பெற்றோர் தமிழர் என்பதால், ஒருவர் தமிழர் என கொண்டாடுவது மடத்தனமானது.// இவருக்கும், மற்ற அமெரிக்கர்களுக்கும் வித்தியாசம் உள்ளதா? இவருக்கும், மற்ற ஆசியர்களுக்கும் வித்தியாசம் உள்ளதா? இவருக்கும், மற்ற வட இந்தியர்களுக்கும் வித்தியாசம் உள்ளதா? இவைகளெல்லாம் எங்கிருந்து வந்தன? பிறந்த மண், தாய்மொழி, இனம் ஆகிய அடையாளங்களை, குடியுரிமையோ, மதமோ மாற்றமுடியாது. ‘நாற்றின்' வீரியத்தில் ‘மண்ணுக்கும்' பங்கு உண்டு. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி அம்பிகா 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 11:29 உறவினர் ஒருவர் சிறுவயதிலேயே அமெரிக்காவில் வேலை கிடைத்து சென்றார். அங்கேயே குடியுரிமை வாங்கி மனைவி குழந்தைகளுடன் செட்டிலாகி விட்டார்.பெற்றவர்களின் மறைவுக்குக் கூட வரவில்லை. பெற்ற தாய், பிறந்த பொன்னாடு..... என்பதெல்லாம் ஏட்டு சுரைக்காய் ஆகிவிடுமா? பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 12:29 இவ்ளோ நாள் இல்லாமல் இப்போ என்னா? அப்படின்னு நினைக்கிறதுல்ல நிறைய விசயம் இருக்கம், இங்கே எந்த அளவுக்கு அவருக்கு முன்னால் உதவிகள் இருந்திருக்குமோ? இந்தியாவில கொண்டாடுறதுக்கு ஒன்னும் இல்ல என்பதை, இலங்கை பிரச்சினையில் நம்ம தமிழனுடைய நிலை எனக்கு உணர்த்தி விட்டது, சுய நலத்தின் உச்சியில் உள்ளான் தமிழன்! பாலகுமாரன் எங்கோ எழுதி இருப்பார், நமக்கு ஒரு போர் தேவை, நாம் இழந்த மணிதத்தை மீட்டெடுக்க! தீவாளி கொண்டாடுங்க நல்லா! ஓசி யில கலைஞர் டப்பாஸூ கொடுக்கல ...?! பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பித்தனின் வாக்கு 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 12:39 மண்ணின் மணம் என்பது பிறப்பில் இருந்து சிறிது காலம் வாழ்ந்து பிரிந்து இருக்கவேண்டும். அவர் பிறந்த நினைவுகள் தோன்றும் முன்பே இங்கிருந்து சென்றுவிட்டார். மும்பையில் நியுக்கிளியர் முறை வாழ்க்கை நடத்தியவருக்கு நமது கலாச்சாரம் தெரியாது. அதுவும் இல்லாமல் அவர் ஒரு நூறு சத்விகித ஆராய்ச்சியாளர். ஒரு மைல்கல் தாண்டியவுடன் அடுத்த வேலையை பார்க்க நினைக்கின்றார். இங்கிருப்பவர்கள் போல் அதையே வைத்துக் கொண்டு கூடி கும்மியடிக்கும் கலை அவருக்கு தெரியாது என்று நினைக்கின்றேன். இங்க இருந்திருந்தால் கண்டிப்பாக ஜாதியில் ஒருக்கப்பட்டு புறக்கணிக்கப் பட்டு அதை எல்லாம் மீறி சாதனை செய்தவுடன் தமிழன் ஆகி இருப்பார். அது இல்லாமல் முழுக்க முழுக்க ஆராய்ச்சி சூழலில் இருந்ததால் அவரால் தடங்கல்களை ஏத்துக்க முடியவில்லை. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி ஜெஸ்வந்தி - Jeswanthy 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 12:47 மனதில் உள்ளதை அழகாகக் கொட்டி இருக்கிறீர்கள். அவர் கொடுத்த பேட்டி வேதனைக் குரியது. பலர் இப்படி பிறந்த மண்ணை மறந்து விடுகிறார்கள். அவர் கேம்ப்ரிட்ஜில் வேலை செய்வது தப்பில்லை. வாழ்த்துக்கள் தொந்தரவு என்று அலுத்துக் கொண்டது தப்புத் தான். குசும்பன் வாழ்க. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி அது ஒரு கனாக் காலம் 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 12:57 இது மீடியா திரிபாய் கூட இருக்கலாம் அல்லவா ? " உங்களுக்கு நிறைய பாராட்டுதலும், தந்தியும், எ ஈமெயில்களும் ...வருமே, அதை எப்படி சமாளிக்கிறீர்கள் " என்று கேட்டுஇருக்கலாம் நிருபர். அதன் பதில் , அவர் உண்மையை சொன்னதால், "நிறய வருகிறது,,,ஒரே தலை வலி "என்று மற்ற கேள்விகளின் ஊடே இதையும் சொல்லிருப்பார். ஒரு தமிழனை தாழ்த்தி சொல்ல இப்படியும் திருத்தி செய்தி வெளி இட்டிருக்கலாம் அல்லவா ? பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 12:57 >> பெற்ற தாய், பிறந்த >>> பொன்னாடு..... என்பதெல்லாம் ஏட்டு சுரைக்காய் ஆகிவிடுமா? --- Appdi illeenga. It is not correct to give someone's email id with out his permission. Will anyone of you accept if you receive 1000s of mails in a single day and u spending too much time in sorting out that? Instead we could have got a guestbook(web) signed by everyone. Blog writer, Ithellam too much. As it states, you cannot expect how one should react. That is his personal. Everyone needs a privacy and own community. We have lakhs of people in India who are longing for such bulk emails, popularity & fame. Paavam, pidikkalanna vitrungalen...atha vittutu, "naanga appreciate pannom, neenga accept pannalanna" enna artham? Aen, neenga una phone number, personal email id ellam public a kuduthu paarunga..appo theriyum! பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி venu's pathivukal 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 1:04 அன்பு மாதவ் உங்கள் கோபம் அதீதம் என்பது என் தாழ்மையான கருத்து. அந்நியன் என்ற தலைப்பு அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஓர் உண்மையான அறிவுஜ“வி, ஞானி அல்லது ஒரு குழந்தையைப் போல் வெங்கடராமன் ராமகிருஷ்ணன் எல்லாம் கடந்த நிலையில் இருப்பதால் அப்படி சொல்கிறார் என்று கூட பார்க்க வேண்டாம். ஒரு செயலை முடித்துக் கொண்டு அடுத்த பயணத்தில் கருத்தூன்றிவிடும் எவருக்கும் சில நேரம் பாராட்டுரைகளும், புகழ் மாலைகளும் (பல நேரம் சம்பந்தா சம்பந்தமில்லாத அபத்த மொழியில் இருப்பவை) கூட ஓர் உறுத்தலை (a sort of discomfort) ஏற்படுத்தக் கூடும். எல்லாவற்றையும் விடக் கொடுமை, அவர் பயிலாத பள்ளியின் புகைப்படங்களும், அவருக்குப் பாடம் நடத்தாத ஆசிரியர்கள் பெயர்களும் பத்திரிகையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருப்பதும் அவருக்கு உளவியல் ரீதியாக எத்தனைச் சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதையும் நீங்கள் கருத்தில் எடுக்க வேண்டும். 'நீர்வழிப் படூஉம் புணைபோல்'.....என்று கணியன் பூங்குன்றனார் எதற்கு எழுதி வைத்தார்.. இழுத்துச் செல்வது விதியாகத் தான் இருக்க வேண்டுமென்பதில்லையே, அறிவின் தேடலாகக் கூட இருக்கலாம் அல்லவா ? மேற்படி அறிஞர் சிதம்பரத்தில் உதித்து, பரோடாவில் பயின்று அமெரிக்கா சென்றார். அவருக்கு உரித்தான இடம் எப்படி சென்னையாகவோ, தில்லியாகவோ, ஏன், பரோடாவாகவோ மட்டும் இருக்க முடியும்? இது என்ன புதுவகை மிரட்டல்? அப்படியானால், பிறந்த மண்ணுக்கே அத்தனை பெருமக்களும் திரும்ப வேண்டுமென்றால், அது அவர்கள் 'அவதரித்த' சிற்றூர் மண்ணைக் குறிக்கிறதா, அந்த ஊரடங்கியிருக்கும் தேசத்தின் வரைபட எல்லைக்குள் எல்லாம் 'அவரது மண்ணா ?' நோபல் பரிசுக்காக அவர் எதையும் செய்திருக்கவில்லை. அது அவரை எட்டியது. சொல்லப் போனால், அவர் இயல்பியல் விஞ்ஞானி. தேடல் என்னவோ வேதியலில். பரிசும் அதில்தான். அறிவியலை அக்கக்காகப் பிரிக்க முடியாது, உயிரியல் விஷயமொன்றில் அடிப்படையில் ஏதாவது கேள்விக்கு விடை தேடினால், நீங்கள் வேதியலில் வந்து நிற்க வேண்டியிருக்கும் என்பது அவரது நேர்காணலில் கிடைத்த சிறப்பான பதில். எனக்கென்னவோ, எது உனது மண் என்ற கேள்விக்குப் பதில், மனிதகுலத்திற்கான சேவைக்கு உழைப்பவராயிருப்பவர் அவரது பணிக்கு உகந்த மண்ணாக எதைக் கருதுகிறாரோ அதுவாகத் தான் இருக்கும் என்றே படுகிறது. எஸ் வி வேணுகோபாலன் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி khaleel 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 1:14 Dear Madhavaraj, Your anger and disapproval is quite normal. However i suggest that this is looked at from his perspective. May be he has been ignored all his life by all these people who are claiming him as his student (which infact is a lie) anyway his reaction is little on the higher side. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 1:18 அவர் கூறியிருப்பதில் முக்கியமான ஒன்றை தாங்கள் குறிப்பிடவில்லை. நான் ஒருவன் பரிசு வாங்கியதால் பல இளைஞர்கள் ஊக்கம் அடைந்தால் சிறப்பானது தான். அதற்காக தனி மனிதனாகிய எனக்கு முக்கியத்துவம் அளிப்பது தேவையில்லாதது என்றும் கூறி இருக்கிறார். இந்த பின்னணியில் பார்த்தால் அவர் கூறியிருப்பது தவறு என்று எண்ண முடியவில்லை. அவர் அளவில் எப்போதோ கடந்து சென்ற ஒன்றாக இருக்கும் இந்தக கண்டுபிடிப்பு. எனவே தனது தற்கால ஆராய்ச்சி பாதிப்படைவதால் எரிச்சல் அடைகிறார்.அவ்வளவு தான். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி சந்தனமுல்லை 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 1:33 நல்லா இருக்கு இடுகையும்...பின்னூட்டங்களும்-குறிப்பாக வேணுகோபாலன்,ராகவனது பின்னூட்டங்கள்!! அவர் பேசியது அரகன்ட் என்று தோன்றினாலும் இவர்களது பின்னூட்டங்கள் அவரது நிலையை தெளிவாக்குகின்றன!! பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 1:50 அவர் கூறியது சரிதான்.ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களின் மத்தியில் முக்கியமானவற்றை அவர் எப்படி அறிவார்.மேலும் அவர் இந்தியாவை விட்டு சென்று அங்கே குடியேறிவிட்டார்.பெங்களூர் ஐஐஎஸ்சியில் வகுப்பெடுக்கிறார். ஒரு அறிவியலாளாரக என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்.அவர் எதற்கு இந்தியாவிற்கு திரும்ப வர வேண்டும். கேம்பிரிட்ஜில் அறிவியல ஆய்வு மேற்கொண்டால் உங்களுக்கு என்ன நட்டம்.மண்,மரபு,பாரம்பரியம் என்ற பெயரில் மனிதர்கள் நாம் நினைக்கும்படி இருக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள். இந்தியாவிற்கு வருகிறார்,இங்குள்ளவர்களிடம் தொடர்பில் இருக்கிறார்- அவருக்கு அது போதும்.நீங்கள் அவர் சிதம்பரம் மண்ணில் படுத்து உருண்டு தாய்நாடே தமிழினமே உனக்கு நான் புகழ் சேர்த்து விட்டேன் என்று உரத்த குரலில் கண்ணீர் மல்க சிவாஜி கணே சன் போல் மிகை நடிப்பு காட்ட வேண்டும் என்று எதிர்பார்கிறீர்களோ :) பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி selventhiran 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 2:46 கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் துவங்கி வெங்கி வரைக்கும் யாராவது மூணு தலைமுறைக்கு முன்ன இந்தியாவுல பொறந்திருந்தாக் கூட அவர் ஒரு இந்தியர்... அவரது சாதனையில் நமக்குப் பெருமைன்னு கிளம்பிடற ஆட்டுமந்தைக் கூட்டம் நம்மளுடையது. அவர்கள் இன்னொரு நாட்டின் குடியுரிமையைப் பெற்று, அவ்வரசாங்கம் தருகிற சலுகைகளையும், சம்பளங்களையும் வைத்துக்கொண்டு சாதனை படைக்கிறார்கள். இந்த தேசத்திற்கும் அவர்களுக்கும் கிஞ்சித்தும் சம்பந்தமில்லை. வெங்கி என்பவர் இன்ன இடத்தில், உயர் பதவி வகிக்கிறார் என்று இந்திய ஊடகங்களில் செய்தி வெளியானதே இல்லை. அவர் ஒன்றை சாதித்ததும் ஓடிப்போய் ஒட்டிக்கொள்வது. பெருமை கொண்டாடுவது, குடம் உடைப்பதெல்லாம் ஊடகங்களின் தவறு. மக்களைக் குறை சொல்லி என்ன... அவர்களை தேசத்தின் பெயரால்தான் ஏமாற்ற முடிகிறது.... பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 2:53 அவரின் ஆராய்ச்சியே க்ரோமொசொம்களைப் பற்றித்தானே! அவரை குற்றம் சொல்ல வேண்டாம். வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும்? படிப்புக்கும் பண்புக்கும் சம்பந்தமில்லை. நம்ப ஆளுங்களுக்கு இது தேவைத்தான். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 4:43 ராகவன்! மனதில் உள்ளதை பேசியதற்கு மதிக்கத் தோன்றுவது உங்கள் பெருந்தன்மையாகவே பார்க்கிறேன். உலகம் போற்றக் கூடிய இத்தருணத்தில், தனக்காக சந்தோஷப்படுகிறவர்களை ஒருவர் மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அவர்களின் அன்பினை ஏற்றுக்கொள்வதில் இத்தனை மனப்புழுக்கம் தேவையில்லையே. இதுதான் என் கோபம். // வேர்களை மறந்தது, விழுதுகளை இழந்தது மரத்திற்கு தான் பலவீனமே ஒழிய மண்ணுக்கு அல்ல.// இதை ஒப்புக்கொள்கிறேன். ஏற்றுக்கொள்கிறேன். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 4:58 டோண்டு சார்! அந்தக் காரணங்களுக்காக அவர் எவ்வளவு வேண்டுமானாலும் கோபப்படலாம். அதில் எனக்கு மாறுபட்ட கருத்தில்லை. ஹரன்! நாற்றின் வீரியத்தில் மண்ணுக்கும் பங்கு உண்டு என்பதைக்கூட அந்த நுண்ணணு விஞ்ஞானி மறக்கடும். மறுக்கட்டும். ஆனால் மண் முகமலர்ச்சியுடன் சிரிப்பதையாவது அவர் எரிச்சலில்லாமல் ஏற்றுக்கொள்ளலாம் இல்லையா? அம்பிகா! ஆமாம். ஏற்கனவே ஏட்டுச்சுரக்காயாகி விட்டது. மணிப்பாக்கம்! இந்தியாவை அவர் கொண்டாடவும் வேண்டாம், இந்தியாவில் கொண்டாடவும் வேண்டாம். யாரையும் அவமதிக்க வேண்டாம் என்பதே நான் சொல்ல வந்தது. பித்தனின் வாக்கு! நீங்களுமே நான் சொல்ல வந்ததை சரியாகப் புரிந்துகொள்ளவில்லையோ என்றுதான் தோன்றுகிறது. அவர் இந்தியாவையோ, தமிழ்மொழியையோ தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும் என்று சொல்லவில்லை. இங்கு வர வேண்டும் என்றும் சொல்லவில்லை. ஆனால், அதுகுறித்து நியாயமாகவே சந்தோஷப்படும் மனிதர்களின் உணர்வுகளையும் புண்படுத்துகிற மாதிரி, சொல்லிய முறையில் இருக்கும் வன்மம்தான் எனக்கு கோபமூட்டுகிறது. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 5:08 ஜெஸ்வந்தி! புரிதலுக்கு நன்றி. அது ஒரு கனாக்காலம்! உங்கள் ஆதங்கம் புரிகிறது. நல்லெண்னமும் புரிகிறது. ஆனால் அவர் அப்படித்தான் பேசியிருக்கிறார் என்பதை அவர் PTIக்கு அளித்த பேட்டியினை உறுதிசெய்த பின்னரே பதிவு எழுதினேன். அனானி! மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதீர்கள். உங்கள் வியாக்கியானமே சரியில்லை. நோபல் பரிசு வாங்கியது அவரது பர்சனல் சாதனையாக இருக்கலாம். ஆனால் அவரது ஆராய்ச்சி மனிதகுலத்துக்கானது. அதற்கான நன்றியை, பாராட்டுதல்களை உலகமே சொல்லத்தான் செய்யும். ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 5:23 அன்புள்ள எஸ்.வி.வி! நீங்கள் தாழ்மையாக தெரிவித்திருக்கும் இந்த பின்னூட்டம் எனக்கு வருத்தமே அளிக்கிறது. //அந்நியன் என்ற தலைப்பு அச்சத்தை ஏற்படுத்துகிறது.// // இது என்ன புதுவகை மிரட்டல்? // இந்த இரு வாக்கியங்களும், அதற்குள் இருக்கிற அர்த்தங்களும் வேதனையளிக்கின்றன. மனிதர்களிடமிருந்து தன்னை அந்நியப்படுத்திக்கொள்ள நினைப்பவரை, அந்நியன் என்றுதானே சொல்ல முடியும். அடுத்து, நான் என்ன மிரட்டுகிறேன்? மண் குறித்த பதத்தோடு இணைத்து இதனைத் தாங்கள் இங்கு சொல்லியிருப்பதை கண்டிக்கிறேன். என் பதிவை தயவு செய்து திரும்ப ஒருமுறைப் படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள். அவரை நான் இந்தியாவுக்கோ, சிதம்பரத்துக்கோ வந்து ஒற்றைக்காலில் நிற்கச் சொல்லவில்லை. //பிறந்த மண்ணின் மீது அணு அளவு கூட சினேகமும், பிரியமும் தொனிக்காத இந்த மனிதன் யாராயிருந்தால் நமக்கென்ன?// தொனிக்காத என்ற வார்த்தையைத்தான் பயன் படுத்தியிருக்கிறேன். அவரது வார்த்தைகளைப் பாருங்கள். ஏன் இந்த துவேஷமும், வன்மமும் அதில் பொறி விடுகிறது. எவ்வளவு நாகரீகமாகச் சொல்லியிருக்க வேண்டும் இதே கருத்தை. அவர் எவ்வளவு பெரிய அறிவு ஜீவியாக இருக்கட்டும். நோபல் பரிசுக்காக இந்த ஆராய்ச்சி பண்ணாதவராக இருக்கட்டும்.ஆனால், இன்று அவர் சாதனை நாளைய உலகத்துக்குத் தானே. உலகம் அவரை நன்றியோடு பார்க்கும்தானே. தெரிந்தவர்கள் பெருமையாய் பார்ப்பார்கள்தானே. உண்மையாகவே இங்குள்ள எத்தனை பேர் பூரிப்படைந்திருப்பார்கள்தானே. அதற்கு இதுவா மரியாதை? பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 5:34 கலீல்! நன்றி. அனானி! உயர்ந்த இடத்தில் இருப்பவர்களுக்கு மனிதர்கள் மீது பிரியம்தான் வரவேண்டும். சந்தனமுல்லை! நன்றி. அனானி! // சிதம்பரம் மண்ணில் படுத்து உருண்டு தாய்நாடே தமிழினமே உனக்கு நான் புகழ் சேர்த்து விட்டேன் என்று உரத்த குரலில் கண்ணீர் மல்க சிவாஜி கணே சன் போல் மிகை நடிப்பு காட்ட வேண்டும் என்று எதிர்பார்கிறீர்களோ // அப்படி நான் எங்கய்யா சொன்னேன்? செல்வேந்திரன்! நம்ம மக்கள் ஆட்டு மந்தையாகவே இருக்கட்டும். அவர் இந்த தேசத்துக்கு சம்பந்தமே இல்லாதவராக இருக்கட்டும். சாதாரண, சாமானிய மக்களுக்கு, ’எதோ இங்கப் பிறந்த ஒரு மனுஷன் பெரிய சாதனை படைச்சிருக்காராம்பா’ என்னும் பாமரத்தனமான, வெகுளித்தனமான சந்தோஷப்படுகிறவர்களுக்கு அவர் இந்தப் பேட்டி மூலம் சொல்கிற செய்தி என்ன? இதுதானா? பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 5:36 M.S.E.R.K! // படிப்புக்கும் பண்புக்கும் சம்பந்தமில்லை. நம்ப ஆளுங்களுக்கு இது தேவைதான்// உண்மைதாங்க. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி நாஸியா 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 5:36 அவரு இவ்வளவு அலட்சியப்படுத்தி இருக்க கூடாது தான். இருந்தாலும் அவரும் அவர் ஆராய்ச்சியும் இந்திய மட்டுமின்றி மனித குலத்திற்கே பயன்படக்கூடியது. ஒட்டுமொத்த மனித சமுதாயம் பயன் பெரும் எனும்போது, நாடுகளோ, மொழிகளோ குறுக்கே நிற்காது. மேலும் அவர் இந்தியாவை தாழ்த்தி, அமெரிக்காவை உயர்த்த வில்லை. அவர் வேலையை அவர் செய்கிறார். அவ்வளவே. என்னை இந்த கருத்து மிகவும் கவர்ந்தது: "But I, personally, am not important. The fact that I am of Indian origin is even less important. We are all human beings, and our nationality is simply an accident of birth," he said. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி நாஸியா 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 5:43 Oops... என் பின்னூட்டத்தில் நிறைய எழுத்து பிழைகள். மன்னிக்கணும் சகோதரரே. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி Unknown 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 6:42 மாதவராஜ், இந்தியர்களுக்குக் குறிப்பாகத் தமிழர்களுக்கு இது தேவைதான். சினிமா நடிகர்களுக்கு,அரசியல்வாதிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு சதவீதமேனும் அறிவியல்துறையில் இருப்பவர்களுக்கு நாம் கொடுப்பதில்லை. கலைத்துறையில் இருப்பவர்களைச் சாதனையாளர்களாயும், அறிவியல் துறையில் இருப்பவர்களைப் பணம் பண்ணும் மிஷின்களாகவுமே பார்ப்பது வழக்கமாகிவிட்டது. ஒரு அறிவியல் பத்திரிகை இல்லை தமிழில். சினிமாவுக்காக பக்கம் பக்கமாக ஒதுக்கும் எந்த வெகுஜனப் பத்திரிகையும் அறிவியலுக்காக ஒரு பக்கத்தைக்கூட ஒதுக்கியதில்லை. எந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் அறிவியல் சம்பந்தமாய் வாரத்தில் ஒரு மணிநேரம்கூட ஒதுக்கப்படுவதில்லை. இப்படி இருக்கையில் அறிவியல் சம்பந்தமான வசதி வாய்ப்புகள் எப்போது வரும்? அந்தது துறையில் படிப்பவன் தாய்நாட்டில் வேலை பார்க்கும் காலம் எப்போது வரும்? புதிய கண்டுபிடிப்புகள் எங்கிருந்து வரும்?... இந்த சமூகம் மாறும்வரை இன்னும் பல ராமகிருஷ்ணன்களைச் சந்தித்தாக வேண்டியிருக்கும். ஏன் இந்த முறைகூட ராமகிருஷ்ணனைப் பற்றி முழுமையான செய்திகள் வராமல் யார் கைதைப் பற்றிச் செய்திகள் வந்தன என்று பார்த்துக்கொள்ளுங்களேன்... அறிவியலுக்கு வெகுஜன ஊடகங்களில் இடம் கேட்டுப் போராடியது சுஜாதா மட்டுமே.. இப்போது அவரும் இல்லை. இனிமேல் எந்த விஞ்ஞானியும் தன்னைத் தமிழன் என்று சொல்லிப் பெருமைப்படப்போவதில்லை. அப்படிப் பெருமைப்படுவதற்குத் தமிழும் தமிழர்களும் அவர்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்பது உண்மை. (விரும்பினால் இந்தியன் என்று தேசியத்தை மட்டும் ஏற்றுக் கொள்ளலாம். தமிழன் என்றெல்லாம் சொல்லும்படி எதிர்பார்ப்பது முட்டாள்தனம்). பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி Radhakrishnan 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 7:02 பல சாதனைகளை படைத்தவர், தனது மனதில் இருந்த விசயத்தை கொஞ்சம் கவனத்துடன் சொல்லியிருந்தால் இப்படியெல்லாம் அவர் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்க மாட்டார். 'யாகாவாராயினும் நா காக்க' பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 7:30 நாஸியா! தாங்கள் குறிப்பிட்ட, அவரது வாசகங்கள் சரியானதாகவே இருக்கட்டும். அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் அலட்சியப்படுத்திய தொனிதான் எனக்கு கடுமையானதாய் இருந்தது. தன் சுயநலம் சார்ந்த விஷயமாக கருதுவதால்தான் இது தொந்தரவாகத் தோன்றுகிறது. கிருத்திகன் குமாரசாமி! எல்லாம் சரிதான் நண்பரே! //தமிழன் என்றெல்லாம் சொல்லும்படி எதிர்பார்ப்பது முட்டாள்தனம்// நான் தமிழன் என்று சொல்லும்படி அவரிடம் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. Rads! அதுதான்... சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பீர் | Peer 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 8:03 இந்தச் செய்தியை நேற்று வாசித்த போதே ஒரு இந்தியனாய், தமிழனாய், (அவருக்காக) நான் கொண்டிருந்த பெருமை, கர்வம் சுக்குநூறாகிவிட்டது. :( (ஆஸ்காரும், தேசிய விருதும் வாங்கியவர்களும் கூட இவ்வகைதானோ என்றும் நினைக்கத்தோன்றுகிறது) பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி நாஸியா 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 9:03 \\தன் சுயநலம் சார்ந்த விஷயமாக கருதுவதால்தான் இது தொந்தரவாகத் தோன்றுகிறது\\ ஒத்துக்கொள்கிறேன் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 9:10 veelji தங்கள் பின்னூட்டத்தை இப்போதுதான் கவனித்தேன். கிண்டலை ரசித்தேன். பீர்! நன்றி, நாஸியா! மிக்க நன்றி. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பிரதீப் - கற்றது நிதியியல்! 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 9:10 சரியாதான் சொல்லியிருக்கார்! சொந்தம் கொண்டாடாமல் பாராட்டி மட்டும் வைப்பது சாலச் சிறந்தது! பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பிரதீப் - கற்றது நிதியியல்! 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 9:14 //எனக்கென்னவோ, எது உனது மண் என்ற கேள்விக்குப் பதில், மனிதகுலத்திற்கான சேவைக்கு உழைப்பவராயிருப்பவர் அவரது பணிக்கு உகந்த மண்ணாக எதைக் கருதுகிறாரோ அதுவாகத் தான் இருக்கும் என்றே படுகிறது. எஸ் வி வேணுகோபாலன்// நச்! பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 9:22 பிரதீப்! //எனக்கென்னவோ, எது உனது மண் என்ற கேள்விக்குப் பதில், மனிதகுலத்திற்கான சேவைக்கு உழைப்பவராயிருப்பவர் அவரது பணிக்கு உகந்த மண்ணாக எதைக் கருதுகிறாரோ அதுவாகத் தான் இருக்கும் என்றே படுகிறது.// உண்மைதான். ஆனால் சுயநலமும், திமிரும் கொண்ட வெங்கடராமன் ராமகிருஷ்ணனுக்கு எல்லாம் இந்த வரிகள் பொருந்தாது. உலகத்து மண்ணையெல்லாம் நேசித்த சேகுவேரா, மார்க்ஸ் போன்ற மகத்தானவர்களுக்கே பொருந்தும். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி shankar07@ovi.com 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 9:49 தோழர் மாதவராஜ்... தினமணியில் இந்தச் செய்தியைப் பார்த்தபோது என் மனதுக்குள் தோன்றியதும் இதுதான்... **பிறந்த மண்ணின் மீது அணு அளவு கூட சினேகமும், பிரியமும் தொனிக்காத இந்த மனிதன் யாராயிருந்தால் நமக்கென்ன? சக மனிதனையே நேசிக்கத் தெரியாத இந்த அந்நியனுக்கு நோபல் பரிசு கிடைத்தால் என்ன, கிடைக்காவிட்டால் என்ன...** உங்கள் எழுத்திலும் அதையே பார்த்தபோது சக மனிதனை உணர்ந்தேன். இந்த உணர்வில்லாத அந்த மனிதருக்கு அந்நியன் என்பதை விட சரியான அடைமொழி வேறொன்றுமில்லை! சிவா பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி selventhiran 16 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 12:10 பாமரத்தனமான, வெகுளித்தனமான சந்தோஷப்படுகிறவர்களுக்கு அவர் இந்தப் பேட்டி மூலம் சொல்கிற செய்தி என்ன? இதுதானா? // அண்ணே... இண்டர்நெட் கனெக்சனோடு கூடிய கம்ப்யூட்டரின் உதவி கொண்டு வெங்கியின் மின்னஞ்சல் முகவரியை சேஸ் செய்து ஆங்கிலத்தில் பாராட்டுக் கடிதம் எழுதுபவர்கள் பாமரத்தனமான வெகுளிகளென எனக்குத் தோன்றவில்லை. படித்த, வசதி படைத்த நடுத்தர அல்லது அதற்கு மேல் உள்ள இந்தியர்களின் வேலை இது. நீங்கள் சொல்கிற பாமரர்களுக்கு இதைக்காட்டிலும் முக்கியமான வேறு கவலைகள் இருக்கின்றன :) டிஸ்கி: கடவுளே... அண்ணனுடனான உரையாடலில் கூட ஸ்மைலீ போட வேண்டி இருக்கிறதே... பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி selventhiran 16 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 12:12 தவிர, சாதாரண கோயிந்துவான எனக்கே தேவையற்ற மின்னஞ்சல்களைக் கண்டால் கன எரிச்சல் வருகிறது. முக்கியமான பணியிலும், பொறுப்பான பதவியிலும் இருப்பவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு மெயில்களை அனுப்புவதும் ஒருவகை 'ப்ரைவேசி' பிரச்சினைதான்! பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா 16 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 2:16 எந்த நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானிக்கு, நாம் பரிசு பெறும்போது பெருவாரியான பாராட்டு மினஞ்சல்கள் வரும் எனவும் அதர்காக தனியாக ஒரு மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும் என தெரிய வில்லையா? பின்னோக்கி! கருத்துக்களுடன் உடன்படுகிறேன் அழகுமுகிலன் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 16 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 5:24 சிவா! அழகுமுகிலன்! நன்றி. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 16 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 6:10 செல்வேந்திரன்! தம்பி பாமரத்தனமானவர்கள், வெகுளித்தனமானவர்கள் என்று நான் குறிப்பிட்டது, இ-மெயில் அனுப்பாமல், பத்திரிகையில் படித்து, சந்தோஷப்பட்டுக் கொண்டு இருந்த குப்ப்னையும், சுப்பனையும். இ-மெயில் அனுப்பியவர்களுக்கு சொன்னது,இந்த வெட்டித்தனங்களுக்குப் பதில் குசும்பனுக்கு போன் செய்யுங்கள் என்பதே. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி வெண்காட்டான் 16 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 6:46 இந்தியன் என்பதை விட மனிதன் என்பது தான் முக்கியம். /// இந்தியன் என்பதைவிட மனிதன் என்று தன் கருத்தைக் கூறியிருக்கிறார். அவரின் பேட்டியில் அவர் என்ன அர்த்தத்தில் அதை சொல்லியிருக்கிறார் என்பதை விடுத்து அதில் உள்ள பிழையான அர்த்தம் தரும் விடயங்களை மட்டுமே வெளியிட்டுள்ளீர்கள். சில இந்திய ஊடகங்கள் செய்வது போல. (உதாரணம். இந்தியன் என்று பெருமைபடவில்லை என்று மட்டும் சொல்வதுக்கும் இந்தியனை விட மனிதன் என்று சொல்வதை பெருமைபடுவதாக சொல்வதற்கும் நிறைய வித்தியாசம். ஏனையா இந்த பாரபட்சம்? இமெயில் விடயம்: எம்மவர்கள் இதில் சளைத்வர்கள் அல்ல. இலகுவாக ஸ்பாம் மூலம் வடிகட்டலாம். ஆனால் மக்களை திருந்தத் தான் சொல்கிறார். இவ்வளவு காலமும் இவர் எங்கு இருக்கிறார் என்று கூட அறியாத நீங்கள் இப்போது தலையில் வைத்து கொண்டாடினால் ஒருவருக்கு வரும் ஆதங்கமே இது. ///"எனக்கு இந்தியாவில் பணியாற்ற வாய்ப்பு ....... மறுத்து விடுவேன் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்." /// இந்தியாவில் படித்துவிட்டு வெளிநாடு சென்று வேலைசெய்வது பிழை என்றால் இதுவும் பிழைதானே. கோடி கோடியாக இவரின் படிப்பிற்கு செலவளித்த நாட்டில் பணீபுரிய அவர் விரும்புவது அவரின் நல்ல மனதே. இந்தியன் என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் அவர் இருக்க விரும்பவில்லை. (தமிழன் என்று கூட) அவர் படிப்பின் பயன்கள் இந்தியாற்கு மட்டும் என்று இருக்க நினைப்பது சுயநலன் இல்லையா? வெளிநாடுகளில் படித்து புகழ் பெற்றால் மட்டுமே நாம் கண்டுகொள்வொம். மற்றும் படி? ஒருவர் தொடர்ந்து பணியாற்றிய இடத்தைவிட்டு மாறமாட்டேன் என்பது பிழையா? மனதை தொட்டு சொல்லுங்கள். இவர் இந்தியாவில் இருந்தால் இதை சாதித்திருப்பாரா? என்னைப் பொறுத்தவரை அவர் தான் இந்தியன் தமிழன் என்பதை விட மனிதன் என்பதையே முதன்மை படுத்தியிருக்கிறார். இப்போது அவர் தமிழன் என்பதற்காக நான் பெருமைப்படுகிறேன். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா 16 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 8:30 http://timesofindia.indiatimes.com/india/A-little-less-nationalistic-hero-worship-please/articleshow/5129529.cms பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மு.சீனிவாசன் 16 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 11:28 உங்களிடமிருந்து இப்படியொரு எதிர்ப்பை நான் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. / ஆனால் சுயநலமும், திமிரும் கொண்ட வெங்கடராமன் ராமகிருஷ்ணனுக்கு / இந்த அளவுக்கு அவரைப்பற்றித் தவறான ஒர் பிம்பத்தை உருவாக்குவது தவறு. உங்களைப் பற்றி முழுதும் தெரியாமலேயே, நீங்கள் அனானிகளுக்கு கடுமையோடு பதில் சொல்வதை மட்டும் பார்த்து, நீங்கள் ஒரு திமிர் பிடித்தவர் என்று நான் சொன்னால் எப்படி இருக்குமோ அப்படித்தான் நீங்கள் அவரைப் பற்றி சொல்வதும். சுனிதா வில்லியம், கல்பனா சாவ்லா போன்றோர்களை நாம் தான் இந்திய வம்சாவளி என்று சொல்லிக்கொண்டோமே தவிர, அவர்களுக்கு அந்த எண்ணம் கொஞம் கூட இருந்திருக்காது. ”சரி...தமிழனா, இந்தியனா இருக்க வேண்டாம்...ஒரு சக மனுஷனோட பாராட்டா எடுத்துக்கொண்டு மதிக்கலாம் இல்லையா” என்று நீங்கள் வாதிடலாம். அந்த மாதிரி இந்தியாவில் சாதிச்ச சக மனிதர்கள் எல்லோரையும் நீங்கள் பாரட்டியாயிற்றா? இளையராஜா போன்ற எண்ணற்ற சாதனையாளர்களை கண்டு கொள்ளாமலும் அங்கீகரிக்காமலும் விட்டுவிட்டு, அவரை பாராட்டப்போனது...வசதியான பங்காளியை மட்டும் நம் வீட்டுக் கல்யாணத்துக்கு அழைப்பது போன்றது. ”மாதவராஜுக்கு குறும்படம் எடுக்க சொல்லிக் கொடுத்ததே நான் தான்”னு நாளைக்கு நான் ஒரு பத்திரிகை செய்தி கொடுத்தா உங்களுக்கு எரிச்சல் வருமா வராதா? நான் பசியோடு இருக்கும்போது என்னை திரும்பிக்கூட பார்க்காத என் பங்காளி வீட்டினர், நான் சாதனையாளனா மேடையில் நிற்கும்போது வந்து ஒட்டிக்கொண்டு சொந்தம் கொண்டாடினால்? அதுவும் என்னை அரவணைத்தவர்கள்கூட மேடையின் கீழே இருக்கும் போது? அதுபோன்ற ஒரு சூழ்நிலை தான் இதுவும். கொஞ்ச நாள் முன்னாடி, தமிழ் மணத்தில் உங்களுக்கு சம்பந்தமே இல்லாமல் எதிர் வாக்குகள் சில போட்டிருக்கிறார்கள் என்று சொல்லி வருத்தப்பட்டீர்கள். சாதாரண விசயத்துக்கே இப்படியென்றால், வேளைப்பளு அதிகம் இருக்கும் ஒருவருடைய மின்னஞ்சலுக்கு யார் வேண்டுமானாலும் மடல் அனுப்பி அவருடைய privacy ல தலையிடுவதை மட்டும் அவர் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மங்களூர் சிவா 17 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 1:23 / ஆனால் சுயநலமும், திமிரும் கொண்ட வெங்கடராமன் ராமகிருஷ்ணனுக்கு / இருக்கட்டுமே! நாம் நல்ல மனிதனாக வாழ்த்துவோம். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா 17 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 12:23 Mathavji, u r calm,cool,cultured,handsomeman.As an artist u must be spontaneous not hasty.As a writer u must have compassion,not anger.Do u know that 60% of the population of Newyork is Italian origin.Italy is not celebrating Newyork celebrities.We always try to change the wheel of history.Ramki"s mother came to T.N to delever the baby.The noblelaurate is not to beblamed.A learned professor said his daughter studied with ramki at Annamalai Uty.These are all nonsensical.Ramki published his papers seven yrs back. he is doing further research.Ramki became a scientist not because that he is a Bramin or because he is a man from Tamilnadu.Anyway I am a regular reader of Theeratha Pakkangal.All the best...kashyapan. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பா.ராஜாராம் 18 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 4:06 எனெக்கென்னவோ,இப்படி தோனுது மாதவன்... அவரின் இந்த வெற்றியை,பகிரும் பொருட்டு,வந்து வாஞ்சையாக கை பற்றிய அவர் வீட்டு மனிதர்களை கூட புறக்கனித்திருப்பாரோ என்னவோ!அதற்க்கு கூட அவருக்கு உரிமை இருக்குதான்....அவர்கள்,அவர் வீட்டு மனிதர்கள்.கையை உதறவும் இப்படி திடீரென கொம்பு முளைத்த முகத்தை காட்டவும் நியாயம் இருக்கிறது. "மண்ணுல பிறந்த மனுஷன்" என்கிற ஒரே அடையாளத்துக்காக,சந்தோசத்தை பகிர்ந்து கொள்வது பாவமா அந்நியன் ராமகிருஷ்ணன்?மனிதர்கள் ராமகிருஷ்ணன்..பீ துடைக்கும் குச்சி அல்ல... . . இது தலைப்பு மாதவன்!இதுதான்,தலைப்பு மாதவன்!! பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா 3 மார்ச், 2010 அன்று பிற்பகல் 1:54 RAMAKRISHNAN'S INTERVIEW was a pervertional/intellectual arrogance one which is to be ignored along with him..Those people have no heart but having only objective interests only.One who loves not his country/people cannot love anything..he is a man to be ignored..isolated..He is a dry outlook ,ordinary man..Such nonsence attitudes must be condomned openly--no other way---vimalavidya@gmail.com பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி கருத்துரையைச் சேர் மேலும் ஏற்றுக... பக்கங்கள் Home எழுதியவை Subscribe Enter your email address: Delivered by FeedBurner அறிமுகம் மாதவராஜ் உலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.
நமது பதிவர் குசும்பன் இந்த தீபாவளிக்கு, தான் பிறந்த மண்ணுக்கு வருகிறாராம். சந்தோஷத்தோடும் பிரியத்தோடும் அவரது பதிவில் எழுத, பிரியமுள்ள நமது வலை சமூகத்து மக்கள் வாழ்த்து தெரிவித்து கொண்டாடுகிறார்கள். நேசமித்ரன், மண்குதிரை, பா.ராஜாராம் போன்றவர்களின் பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் இந்த மண்ணில் வாழ்ந்த வாழ்க்கையும், அதைப் பிரிந்திருக்கிற துயரங்களும் மெல்லிதாய் படிந்திருப்பதை பார்த்திருக்கிறேன். இதே மனநிலையை அயல்தேசத்தில் இருக்கும் பல நண்பர்களின் குரல்களில் கேட்டிருக்கிறேன். ஏன், பம்பாயில் இருக்கிற நமது அனுஜன்யாவுக்குக் கூட, எப்போது தமிழகம் வருவோம் என்றிருக்கிறது. இப்படி மனிதர்கள் எங்கிருந்தாலும், வேர் பிடித்த தத்தம் மண்ணின் சிந்தனைகள் வற்றாமல் ஓடிக்கொண்டு இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. நோபல் பரிசு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ராமகிருஷ்ணனை அப்படி புரிந்துகொள்ள முடியவில்லை. நேற்று தினத்தந்தியில் அப்படி ஒரு செய்தி வந்திருப்பதாக நண்பர் ஒருவர் சொன்னார். அதிர்ச்சியாக இருந்தது. பத்திரிகை வாங்கி படித்தேன். எரிச்சல் வந்தது. உறுதிசெய்து கொள்ள இணையத்திலும் பார்த்தேன். வருத்தத்தையும், வேதனையையும் விஞ்சி கோபம் வந்தது. நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ராமகிருஷ்ணன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றதும் இங்குள்ள ஊடகங்களும், மக்களும் அடைந்த சந்தோஷம் மிகப் பெரியது. வலையுலகத்தில் கூட பல பதிவர்கள் கொண்டாடி இருந்தனர். வாழ்த்துக்களைத் தெரிவித்து இருந்தனர். இதைப்பற்றித்தான் அந்த விஞ்ஞானி ராமகிருஷ்ணன் வருத்தப்பட்டு, பெரும் இம்சையாக இருப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறார். PTI நிறுவனத்துக்கு அள்ளித் தெளித்திருக்கும் முத்துக்கள் இதோ: "இந்தியாவில் இருந்து எல்லா தரப்பு மக்களும் எனக்கு இ-மெயில் அனுப்பி வருகிறார்கள். எனது இ-மெயில் பகுதியையே நிரப்பி முடக்கி விடுகிறார்கள். அவர்களது கடிதங்களை அழிப்பதற்கே எனக்கு ஒன்றிரண்டு மணி நேரம் ஆகி விடுகிறது. இவர்களது இ-மெயில் வெள்ளத்தால், எனது சகாக்களிடம் இருந்து வரும் முக்கியமான தகவல்கள் கூட கிடைக்காமல் போய் விடுகின்றன" "இவர்களுக்கு இரக்கமே கிடையாதா? நான் நோபல் பரிசு பெற்றதற்காக இவர்கள் பெருமைப்படுவது எல்லாம் சரிதான். அதற்காக என்னை ஏன் தொந்தரவு செய்கிறார்கள்?" "இவர்களில் பலர் பல ஆண்டுகளாக என்னைத் தொடர்பு கொள்வதில் அக்கறையே இல்லாமல் இருந்தவர்கள். இப்போது திடீரென என்னைத் தொடர்பு கொள்ளும் ஆர்வம் எப்படி வந்தது? எனக்கு இது விநோதமாக தெரிகிறது" "எனக்கு இந்தியாவில் பணியாற்ற வாய்ப்பு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுபோல் யாரும் என்னை அணுகவில்லை. அப்படியே அணுகினாலும், அந்த வாய்ப்பை நான் உடனடியாக மறுத்து விடுவேன் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்." "நான் இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் உள்ள எனது நுண்ணணு உயிரியல் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றுவதைத்தான் பெரிதும் விரும்புகிறேன். அதை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை. அதை விட மகிழ்ச்சியாக பணியாற்றக் கூடிய இடத்தை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது" அவரால் கற்பனை செய்ய முடியாமல் போகட்டும். உங்களால் ஜீரணிக்க முடிகிறதா? என்னால் எல்லாம் முடியவில்லை, சாமி! தன் தேசத்து மனிதன், தன் மொழி பேசும் மனிதன் ஒருவனுக்கு உலக அளவில் ஒரு அங்கீகாரம் என்று தெரிந்து சந்தோஷமாய் கொண்டாடும் மனிதர்களை இப்படியா அலட்சியப்படுத்துவது? தனது அன்றாடப் பணிகளுக்கு தொந்தரவாகவே இருந்தாலும் அதனை இப்படியா காலில் போட்டு மிதிப்பது? அப்படி எத்தனை நாள் இவர்கள் தொந்தரவு செய்துவிடப் போகிறார்கள்? பிறந்த மண்ணின் மீது அணு அளவு கூட சினேகமும், பிரியமும் தொனிக்காத இந்த மனிதன் யாராயிருந்தால் நமக்கென்ன? மனிதகுலத்துக்கு நல்லது செய்கிற கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிற சாதனைக்குத்தான் இந்த பரிசு, வெங்காயமெல்லாம். சக மனிதனையே நேசிக்கத் தெரியாத இந்த அந்நியனுக்கு நோபல் பரிசு கிடைத்தால் என்ன, கிடைக்காவிட்டால் என்ன. வாருங்கள் குசும்பன். நிச்சயம் உங்களைப் போன்றவர்களுக்கு போன் செய்ய நேரத்தை ஒதுக்கலாம், சந்தோஷமாக! * Tags நோபல் பரிசு புதியது பழையவை மாதவராஜ் உலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள். மேலும் காட்டு கருத்துரையிடுக 61 கருத்துகள் * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin. ஈரோடு கதிர் 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 8:57 அவரு என்ன சாதினு பார்த்து... அந்த சாதிக்காரங்கள சந்தோஷப்படுத்தி ஓட்டு வாங்க அரசாங்கம் அவருக்கு பத்து லட்சம் அல்லது இருபது லடசம்னும் பரிசு தராம இருந்ததுக்கு சந்தோஷப்படுவோம் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி வெண்ணிற இரவுகள்....! 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 9:03 ஆமாம் வேதனையான செய்தி பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பிரபாகர் 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 9:03 அய்யா காலை வணக்கம். அவரை நம்மவராக நினைத்தது நம் குற்றம். இரண்டாவது, நம்மவர்கள் தேவையெனில் தலையில் வைத்து கொண்டாடுவார்கள். இல்லையெனில் தரையில் போட்டும் மிதிப்பார்கள். இரண்டாவது, அவர் அந்த சூழலில் தன்னை முழுமையாய் இணைத்துக்கொண்டார் என எண்ணிக் கொள்ளவேண்டியதுதான். எங்கிருந்தாலும் வாழ்க என அவரிடம் இல்லாத பெருந்தன்மையோடு வாழ்த்த வேண்டியதுதான். பிரபாகர். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி Robin 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 9:12 //"இவர்களில் பலர் பல ஆண்டுகளாக என்னைத் தொடர்பு கொள்வதில் அக்கறையே இல்லாமல் இருந்தவர்கள். இப்போது திடீரென என்னைத் தொடர்பு கொள்ளும் ஆர்வம் எப்படி வந்தது? எனக்கு இது விநோதமாக தெரிகிறது" // - எனக்கு இந்த பேச்சுதான் விநோதமாக தெரிகிறது! பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி ச.செந்தில்வேலன் / S.Senthilvelan 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 9:32 உங்களுக்கு வந்த கோபம் எனக்கும் வந்தது. அவருக்கு நோபல் பரிசளித்தன்று சிஎன்என் நிருபர் அவரிடம் கேட்கிறார், "நீங்கள் இந்தியர் என்பதற்கு பெருமை கொள்கிறீர்களா?" அவரது பதில்.."இந்தியன் என்பதை விட மனிதன் என்பது தான் முக்கியம். இதில் தேசியவாதத்திற்கு இடமில்லை". அவர் எப்படியோ? "தம்பி.. நம்மூர்ல மழை தூருதுபா"னு எங்கப்பா நேத்து சொன்னதுல இருந்து, எனக்கு எங்கூர் நினைவே தான். என்ன தான் சொல்லுங்க .. "சொர்க்கமே என்றாலும்...." பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி anujanya 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 9:35 விடுங்க மாதவ். உங்கள் வருத்தம் புரிகிறது. நம் ஊரில் பிறந்தார். பரோடாவில் படித்தார் என்றறிகிறோம். இங்கிருந்து செல்கையில் மனிதனாகச் சென்றவர், அயல்நாட்டில் விஞ்ஞானி ஆகியிருக்கிறார். விஞ்ஞானத் தத்துவப்படி ஒன்றை இழந்தால் தான் இன்னொன்று பெற முடியும். மனிதநேயம் துறந்து, விஞ்ஞானி ஆகியிருக்கிறார். நமக்கு மனிதநேயம் இருப்பதால், பிரபாகர் சொல்வது போல் விட்டுத் தள்ளுவோம். அனுஜன்யா பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 9:38 அன்னை தெரசாவை இந்தியராக பார்க்கிறோம். அல்பேனிய அரசுக்கு இந்தியா தெரிவித்த மறுப்பு http://www.irishtimes.com/newspaper/world/2009/1015/1224256689880.html ராமகிருஷ்ணன் இந்தியக்குடிமகன் கூட இல்லை என்று நினைக்கிறேன். மிகச்சிறிய வயதில் அங்கே சென்றிருப்பார் என்று நினைக்கிறேன். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பின்னோக்கி 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 9:48 எனக்கு அவர் கூறியது சரியென்றே படுகிறது. அவர் தமிழர் என்ற அடையாளத்தை தொலைத்து யுகமாகிறது. அவரை நம் மக்கள் கொண்டாடுவதை பார்த்த போது எனக்கு சிரிப்பு தான் வந்தது. தமிழ் நாட்டில் பிறந்த அல்லது பெற்றோர் தமிழர் என்பதால், ஒருவர் தமிழர் என கொண்டாடுவது மடத்தனமானது. ஒரு சிலர் இங்கு பணம் செலவழித்து பெரிய விளம்பரதட்டிகளை வைத்திருக்கிறார்கள். கல்பனா சாவ்லாவுக்கும் இதே தான். தான் வாழும் நாட்டின் அடையாளத்தோடு குடிமகனான ஒருவரை நாம் கொண்டாடுவது நிறுத்தப்படவேண்டும். எல்லாம் மீடியா பண்ணும் வேலை. செய்தியை படித்தவர்களில் 10 ல் ஒருவருக்கு கூட அவர் எதற்காக பரிசு பெற்றார் எனத் தெரியாது. உயர்நிலையை அடைபவனின் பிறப்பை ஆராய்ந்து மகிழும் பழக்கம் நமக்கு போனால் ஒழிய, நாம் திருந்த முடியாது. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 9:58 கதிர்! பயமாத்தான் இருக்கு! வெண்ணிற இரவுகள்! நன்றி. பிரபாகர்! அந்த பெருந்தன்மை எனக்கும் வருமா என்று தெரியவில்லை. ராபின்! அவரே விநோதமாக இருக்கும்போது... ச.செந்தில்வேல்! அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 10:01 அனுஜன்யா! ஆஹா...! எனக்கு இப்படிச் சொல்லத் தெரியவில்லையே... சின்ன அம்மிணி! இருக்கலாம் நீங்கள் சொல்வது போல. ஆனால் வேரின் வாசம் அறியாமலா போகும் மனது? பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி velji 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 10:02 குரோமோசோம் ஆராய்சியில் ஈடுபடும்போது அடிப்படை உணர்வில் மாற்றம் நிகழுமா என்பதும் ஆராயப்படவேண்டிய விஷயம் போல. பின்னோக்கி சொல்வதும் சரி.அமெரிக்க இந்தியர் என்றா செய்திகளில் பிரதானப்படுத்தப்பட்டார்?! பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 10:09 பின்னோக்கி! நீங்கள் சொல்வதில் ஓரளவுக்கு உடன்பாடு உண்டுதான். தன் தேசம், தன் மொழி, தன் இனம், என்றெல்லாம் அடையாளப்படுத்திவிடக் கூடாது. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்னும் சர்வதேச மனிதனாக நாம் மாற வேண்டும்.எல்லாம் சரிதான். எவ்வளவுதான் பறவை சுதந்திரமாகப் பறந்தாலும் அதற்கென்று அடைவதற்கு ஒரு மரம் உண்டு. ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி’ என பாரதி பாடியதில் நம்மையறியாமல் ஒரு சிலிர்ப்பு உண்டு. இது ஒருவகையான தொப்புள்கொடி உணர்வுகள். இதைத் தாண்ட வேண்டும் என்றால் முதலில் அவன் பிறந்த மண்ணை மதிப்பவனாகவே இருக்க வேண்டும். பிறந்த மண்ணையே மதிக்காதவன் எந்த மண்னை மதிக்கப் போகிறான்? தமிழனோ, இந்தியனோ, முதலில் சக மனிதனை மதிக்கத் தெரிய வேண்டுமே. அதை நான் இந்த அந்நியரிடம் காண முடியவில்லை. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி தீப்பெட்டி 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 10:10 அவர் சொல்வதில் தவறில்லை. நாம் தான் எதற்கெடுத்தாலும் யாரையும் தலையில் தூக்கி வைத்து ஆட தயங்கியதில்லை. அவர் தம்மை தமிழராக உணர்கிறாரா என்பதை பற்றி அறியாமல் தமிழன் சாதித்துவிட்டதாக வீண்பெருமை கொள்கிறோம். அவர் சாதித்ததில் தமிழகத்தின், தமிழின் பங்கு என்ன? நாம் எதற்கு பெருமை கொள்ள வேண்டும்? அவர் பெயர் மட்டுமே தமிழர்களின் பெயர் போல இருக்கிறது.. நமது வேலை நமது நாட்டில் இருப்பவர்களுக்கு ஏன் நோபல் கிடைப்பதில்லை? அந்த வாய்ப்பையும் வசதிகளயும் கொண்டு வருவது எப்படி? என்று ஆக்கப்போர்வமாகவும் அறிவுப்பூர்வமாகவும் விவாதிப்பதை விட்டு விட்டு யாரோ எங்கேயோ எதனாலோ சாதித்ததை நமது பெருமையாக சொல்வதும், இங்கே வாழ்ந்து தமிழராய் உணர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ரஜினி,ஜெயா போன்றவர்களை தமிழரில்லை வந்தேறிகளெனச் சொல்லி விவாதிப்பதும் தமிழர்களுக்கு விமோசனமில்லையெனத் தெரிகிறது.. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பின்னோக்கி 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 10:22 மாதவராஜ்: உங்கள் கட்டுரைக்கு முற்றிலும் சம்மந்தமானதில்லை என் பின்னூட்டம். அதனால் சிறு குழப்பம். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 10:39 பின்னோக்கி! முற்றிலும் சம்பந்தமில்லாதாக ஒன்றும் தாங்கள் சொல்லவில்லை நண்பரே. முக்கியமான விஷயத்தைத்தான் சொல்லியிருப்பதாக நான் நினைக்கிறேன்.இது போன்ற விவாதங்களும் அவசியம் என்றே கருதுகிறேன். தீப்பெட்டி! மக்களிடம் நீங்கள் சொல்வது போல பல குறைகள் இருக்கின்றன. அதை நாம்தான் திரும்ப திரும்ப பேசிக்கொண்டு இருக்கிறோமே. ஒரு உயர்வு அடைந்த மனிதர்,சகிப்புத்தன்மையற்றவராகவும்,தான் பிறந்த மண் குறித்து எந்த உணர்வும் அற்றவராகவும் இருப்பதைத்தான் இங்கு நான் சொல்லியிருக்கிறேன். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி ராகவன் 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 10:57 அன்பு மாதவராஜ், மனதில் உள்ளதை பேசியதற்கு அவரை மதிக்கத் தான் தோன்றுகிறது. இதை நாம் ஒரு அவமதிப்பாக ஏன் கருத வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. தனக்கு தோன்றியதை உண்மையாய் பேசுபவர்கள் பாக்கியவான்கள் என்றே நினைக்கிறேன். இங்கு எத்தனை பேர் போலியாய் இருக்கிறார்கள், நம்மை ஆள்பவர்கள் உட்பட, இதன் பாதிப்பு தான் நமக்கு அதிகம், இவர்கள் தான் துரோகிகள். நம் வாழ்த்துக்களை புறக்கனிப்பது யாருக்கு இழப்பு, நமக்கா, அவருக்குத் தானே இழப்பு. நாம் அனுப்பிய பூங்கொத்துக்கள் புறக்கனிக்கப்பட்டாலும் அதன் தண்மையை இழக்காமல் மணக்கும் தானே. வேர்களை மறந்தது, விழுதுகளை இழந்தது மரத்திற்கு தான் பலவீனமே ஒழிய மண்ணுக்கு அல்ல. நன்றாக உற்றுப்பாருங்கள் அவருக்கு தொப்புள் அடையாளங்கள் இருக்காது (navel correction செய்தவர்கள் நமக்கு தேவையே இல்லை). அன்புடன், ராகவன் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி dondu(#11168674346665545885) 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 11:07 பலர் தங்களை அவரது ஆசிரியர்களாக இருந்தவர் என்றெல்லாம் சொந்தம் கொண்டாடியிருக்கிறார்கள். பல மெயில்கள் இந்த தோரணையில், எரிச்சல் ஏன் வராது? அன்புடன், டோண்டு ராகவன் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி ஹரன் 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 11:16 //எனக்கு அவர் கூறியது சரியென்றே படுகிறது. அவர் தமிழர் என்ற அடையாளத்தை தொலைத்து யுகமாகிறது. அவரை நம் மக்கள் கொண்டாடுவதை பார்த்த போது எனக்கு சிரிப்பு தான் வந்தது. தமிழ் நாட்டில் பிறந்த அல்லது பெற்றோர் தமிழர் என்பதால், ஒருவர் தமிழர் என கொண்டாடுவது மடத்தனமானது.// இவருக்கும், மற்ற அமெரிக்கர்களுக்கும் வித்தியாசம் உள்ளதா? இவருக்கும், மற்ற ஆசியர்களுக்கும் வித்தியாசம் உள்ளதா? இவருக்கும், மற்ற வட இந்தியர்களுக்கும் வித்தியாசம் உள்ளதா? இவைகளெல்லாம் எங்கிருந்து வந்தன? பிறந்த மண், தாய்மொழி, இனம் ஆகிய அடையாளங்களை, குடியுரிமையோ, மதமோ மாற்றமுடியாது. ‘நாற்றின்' வீரியத்தில் ‘மண்ணுக்கும்' பங்கு உண்டு. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி அம்பிகா 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 11:29 உறவினர் ஒருவர் சிறுவயதிலேயே அமெரிக்காவில் வேலை கிடைத்து சென்றார். அங்கேயே குடியுரிமை வாங்கி மனைவி குழந்தைகளுடன் செட்டிலாகி விட்டார்.பெற்றவர்களின் மறைவுக்குக் கூட வரவில்லை. பெற்ற தாய், பிறந்த பொன்னாடு..... என்பதெல்லாம் ஏட்டு சுரைக்காய் ஆகிவிடுமா? பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 12:29 இவ்ளோ நாள் இல்லாமல் இப்போ என்னா? அப்படின்னு நினைக்கிறதுல்ல நிறைய விசயம் இருக்கம், இங்கே எந்த அளவுக்கு அவருக்கு முன்னால் உதவிகள் இருந்திருக்குமோ? இந்தியாவில கொண்டாடுறதுக்கு ஒன்னும் இல்ல என்பதை, இலங்கை பிரச்சினையில் நம்ம தமிழனுடைய நிலை எனக்கு உணர்த்தி விட்டது, சுய நலத்தின் உச்சியில் உள்ளான் தமிழன்! பாலகுமாரன் எங்கோ எழுதி இருப்பார், நமக்கு ஒரு போர் தேவை, நாம் இழந்த மணிதத்தை மீட்டெடுக்க! தீவாளி கொண்டாடுங்க நல்லா! ஓசி யில கலைஞர் டப்பாஸூ கொடுக்கல ...?! பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பித்தனின் வாக்கு 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 12:39 மண்ணின் மணம் என்பது பிறப்பில் இருந்து சிறிது காலம் வாழ்ந்து பிரிந்து இருக்கவேண்டும். அவர் பிறந்த நினைவுகள் தோன்றும் முன்பே இங்கிருந்து சென்றுவிட்டார். மும்பையில் நியுக்கிளியர் முறை வாழ்க்கை நடத்தியவருக்கு நமது கலாச்சாரம் தெரியாது. அதுவும் இல்லாமல் அவர் ஒரு நூறு சத்விகித ஆராய்ச்சியாளர். ஒரு மைல்கல் தாண்டியவுடன் அடுத்த வேலையை பார்க்க நினைக்கின்றார். இங்கிருப்பவர்கள் போல் அதையே வைத்துக் கொண்டு கூடி கும்மியடிக்கும் கலை அவருக்கு தெரியாது என்று நினைக்கின்றேன். இங்க இருந்திருந்தால் கண்டிப்பாக ஜாதியில் ஒருக்கப்பட்டு புறக்கணிக்கப் பட்டு அதை எல்லாம் மீறி சாதனை செய்தவுடன் தமிழன் ஆகி இருப்பார். அது இல்லாமல் முழுக்க முழுக்க ஆராய்ச்சி சூழலில் இருந்ததால் அவரால் தடங்கல்களை ஏத்துக்க முடியவில்லை. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி ஜெஸ்வந்தி - Jeswanthy 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 12:47 மனதில் உள்ளதை அழகாகக் கொட்டி இருக்கிறீர்கள். அவர் கொடுத்த பேட்டி வேதனைக் குரியது. பலர் இப்படி பிறந்த மண்ணை மறந்து விடுகிறார்கள். அவர் கேம்ப்ரிட்ஜில் வேலை செய்வது தப்பில்லை. வாழ்த்துக்கள் தொந்தரவு என்று அலுத்துக் கொண்டது தப்புத் தான். குசும்பன் வாழ்க. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி அது ஒரு கனாக் காலம் 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 12:57 இது மீடியா திரிபாய் கூட இருக்கலாம் அல்லவா ? " உங்களுக்கு நிறைய பாராட்டுதலும், தந்தியும், எ ஈமெயில்களும் ...வருமே, அதை எப்படி சமாளிக்கிறீர்கள் " என்று கேட்டுஇருக்கலாம் நிருபர். அதன் பதில் , அவர் உண்மையை சொன்னதால், "நிறய வருகிறது,,,ஒரே தலை வலி "என்று மற்ற கேள்விகளின் ஊடே இதையும் சொல்லிருப்பார். ஒரு தமிழனை தாழ்த்தி சொல்ல இப்படியும் திருத்தி செய்தி வெளி இட்டிருக்கலாம் அல்லவா ? பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 12:57 >> பெற்ற தாய், பிறந்த >>> பொன்னாடு..... என்பதெல்லாம் ஏட்டு சுரைக்காய் ஆகிவிடுமா? --- Appdi illeenga. It is not correct to give someone's email id with out his permission. Will anyone of you accept if you receive 1000s of mails in a single day and u spending too much time in sorting out that? Instead we could have got a guestbook(web) signed by everyone. Blog writer, Ithellam too much. As it states, you cannot expect how one should react. That is his personal. Everyone needs a privacy and own community. We have lakhs of people in India who are longing for such bulk emails, popularity & fame. Paavam, pidikkalanna vitrungalen...atha vittutu, "naanga appreciate pannom, neenga accept pannalanna" enna artham? Aen, neenga una phone number, personal email id ellam public a kuduthu paarunga..appo theriyum! பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி venu's pathivukal 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 1:04 அன்பு மாதவ் உங்கள் கோபம் அதீதம் என்பது என் தாழ்மையான கருத்து. அந்நியன் என்ற தலைப்பு அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஓர் உண்மையான அறிவுஜ“வி, ஞானி அல்லது ஒரு குழந்தையைப் போல் வெங்கடராமன் ராமகிருஷ்ணன் எல்லாம் கடந்த நிலையில் இருப்பதால் அப்படி சொல்கிறார் என்று கூட பார்க்க வேண்டாம். ஒரு செயலை முடித்துக் கொண்டு அடுத்த பயணத்தில் கருத்தூன்றிவிடும் எவருக்கும் சில நேரம் பாராட்டுரைகளும், புகழ் மாலைகளும் (பல நேரம் சம்பந்தா சம்பந்தமில்லாத அபத்த மொழியில் இருப்பவை) கூட ஓர் உறுத்தலை (a sort of discomfort) ஏற்படுத்தக் கூடும். எல்லாவற்றையும் விடக் கொடுமை, அவர் பயிலாத பள்ளியின் புகைப்படங்களும், அவருக்குப் பாடம் நடத்தாத ஆசிரியர்கள் பெயர்களும் பத்திரிகையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருப்பதும் அவருக்கு உளவியல் ரீதியாக எத்தனைச் சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதையும் நீங்கள் கருத்தில் எடுக்க வேண்டும். 'நீர்வழிப் படூஉம் புணைபோல்'.....என்று கணியன் பூங்குன்றனார் எதற்கு எழுதி வைத்தார்.. இழுத்துச் செல்வது விதியாகத் தான் இருக்க வேண்டுமென்பதில்லையே, அறிவின் தேடலாகக் கூட இருக்கலாம் அல்லவா ? மேற்படி அறிஞர் சிதம்பரத்தில் உதித்து, பரோடாவில் பயின்று அமெரிக்கா சென்றார். அவருக்கு உரித்தான இடம் எப்படி சென்னையாகவோ, தில்லியாகவோ, ஏன், பரோடாவாகவோ மட்டும் இருக்க முடியும்? இது என்ன புதுவகை மிரட்டல்? அப்படியானால், பிறந்த மண்ணுக்கே அத்தனை பெருமக்களும் திரும்ப வேண்டுமென்றால், அது அவர்கள் 'அவதரித்த' சிற்றூர் மண்ணைக் குறிக்கிறதா, அந்த ஊரடங்கியிருக்கும் தேசத்தின் வரைபட எல்லைக்குள் எல்லாம் 'அவரது மண்ணா ?' நோபல் பரிசுக்காக அவர் எதையும் செய்திருக்கவில்லை. அது அவரை எட்டியது. சொல்லப் போனால், அவர் இயல்பியல் விஞ்ஞானி. தேடல் என்னவோ வேதியலில். பரிசும் அதில்தான். அறிவியலை அக்கக்காகப் பிரிக்க முடியாது, உயிரியல் விஷயமொன்றில் அடிப்படையில் ஏதாவது கேள்விக்கு விடை தேடினால், நீங்கள் வேதியலில் வந்து நிற்க வேண்டியிருக்கும் என்பது அவரது நேர்காணலில் கிடைத்த சிறப்பான பதில். எனக்கென்னவோ, எது உனது மண் என்ற கேள்விக்குப் பதில், மனிதகுலத்திற்கான சேவைக்கு உழைப்பவராயிருப்பவர் அவரது பணிக்கு உகந்த மண்ணாக எதைக் கருதுகிறாரோ அதுவாகத் தான் இருக்கும் என்றே படுகிறது. எஸ் வி வேணுகோபாலன் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி khaleel 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 1:14 Dear Madhavaraj, Your anger and disapproval is quite normal. However i suggest that this is looked at from his perspective. May be he has been ignored all his life by all these people who are claiming him as his student (which infact is a lie) anyway his reaction is little on the higher side. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 1:18 அவர் கூறியிருப்பதில் முக்கியமான ஒன்றை தாங்கள் குறிப்பிடவில்லை. நான் ஒருவன் பரிசு வாங்கியதால் பல இளைஞர்கள் ஊக்கம் அடைந்தால் சிறப்பானது தான். அதற்காக தனி மனிதனாகிய எனக்கு முக்கியத்துவம் அளிப்பது தேவையில்லாதது என்றும் கூறி இருக்கிறார். இந்த பின்னணியில் பார்த்தால் அவர் கூறியிருப்பது தவறு என்று எண்ண முடியவில்லை. அவர் அளவில் எப்போதோ கடந்து சென்ற ஒன்றாக இருக்கும் இந்தக கண்டுபிடிப்பு. எனவே தனது தற்கால ஆராய்ச்சி பாதிப்படைவதால் எரிச்சல் அடைகிறார்.அவ்வளவு தான். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி சந்தனமுல்லை 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 1:33 நல்லா இருக்கு இடுகையும்...பின்னூட்டங்களும்-குறிப்பாக வேணுகோபாலன்,ராகவனது பின்னூட்டங்கள்!! அவர் பேசியது அரகன்ட் என்று தோன்றினாலும் இவர்களது பின்னூட்டங்கள் அவரது நிலையை தெளிவாக்குகின்றன!! பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 1:50 அவர் கூறியது சரிதான்.ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களின் மத்தியில் முக்கியமானவற்றை அவர் எப்படி அறிவார்.மேலும் அவர் இந்தியாவை விட்டு சென்று அங்கே குடியேறிவிட்டார்.பெங்களூர் ஐஐஎஸ்சியில் வகுப்பெடுக்கிறார். ஒரு அறிவியலாளாரக என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்.அவர் எதற்கு இந்தியாவிற்கு திரும்ப வர வேண்டும். கேம்பிரிட்ஜில் அறிவியல ஆய்வு மேற்கொண்டால் உங்களுக்கு என்ன நட்டம்.மண்,மரபு,பாரம்பரியம் என்ற பெயரில் மனிதர்கள் நாம் நினைக்கும்படி இருக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள். இந்தியாவிற்கு வருகிறார்,இங்குள்ளவர்களிடம் தொடர்பில் இருக்கிறார்- அவருக்கு அது போதும்.நீங்கள் அவர் சிதம்பரம் மண்ணில் படுத்து உருண்டு தாய்நாடே தமிழினமே உனக்கு நான் புகழ் சேர்த்து விட்டேன் என்று உரத்த குரலில் கண்ணீர் மல்க சிவாஜி கணே சன் போல் மிகை நடிப்பு காட்ட வேண்டும் என்று எதிர்பார்கிறீர்களோ :) பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி selventhiran 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 2:46 கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் துவங்கி வெங்கி வரைக்கும் யாராவது மூணு தலைமுறைக்கு முன்ன இந்தியாவுல பொறந்திருந்தாக் கூட அவர் ஒரு இந்தியர்... அவரது சாதனையில் நமக்குப் பெருமைன்னு கிளம்பிடற ஆட்டுமந்தைக் கூட்டம் நம்மளுடையது. அவர்கள் இன்னொரு நாட்டின் குடியுரிமையைப் பெற்று, அவ்வரசாங்கம் தருகிற சலுகைகளையும், சம்பளங்களையும் வைத்துக்கொண்டு சாதனை படைக்கிறார்கள். இந்த தேசத்திற்கும் அவர்களுக்கும் கிஞ்சித்தும் சம்பந்தமில்லை. வெங்கி என்பவர் இன்ன இடத்தில், உயர் பதவி வகிக்கிறார் என்று இந்திய ஊடகங்களில் செய்தி வெளியானதே இல்லை. அவர் ஒன்றை சாதித்ததும் ஓடிப்போய் ஒட்டிக்கொள்வது. பெருமை கொண்டாடுவது, குடம் உடைப்பதெல்லாம் ஊடகங்களின் தவறு. மக்களைக் குறை சொல்லி என்ன... அவர்களை தேசத்தின் பெயரால்தான் ஏமாற்ற முடிகிறது.... பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 2:53 அவரின் ஆராய்ச்சியே க்ரோமொசொம்களைப் பற்றித்தானே! அவரை குற்றம் சொல்ல வேண்டாம். வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும்? படிப்புக்கும் பண்புக்கும் சம்பந்தமில்லை. நம்ப ஆளுங்களுக்கு இது தேவைத்தான். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 4:43 ராகவன்! மனதில் உள்ளதை பேசியதற்கு மதிக்கத் தோன்றுவது உங்கள் பெருந்தன்மையாகவே பார்க்கிறேன். உலகம் போற்றக் கூடிய இத்தருணத்தில், தனக்காக சந்தோஷப்படுகிறவர்களை ஒருவர் மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அவர்களின் அன்பினை ஏற்றுக்கொள்வதில் இத்தனை மனப்புழுக்கம் தேவையில்லையே. இதுதான் என் கோபம். // வேர்களை மறந்தது, விழுதுகளை இழந்தது மரத்திற்கு தான் பலவீனமே ஒழிய மண்ணுக்கு அல்ல.// இதை ஒப்புக்கொள்கிறேன். ஏற்றுக்கொள்கிறேன். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 4:58 டோண்டு சார்! அந்தக் காரணங்களுக்காக அவர் எவ்வளவு வேண்டுமானாலும் கோபப்படலாம். அதில் எனக்கு மாறுபட்ட கருத்தில்லை. ஹரன்! நாற்றின் வீரியத்தில் மண்ணுக்கும் பங்கு உண்டு என்பதைக்கூட அந்த நுண்ணணு விஞ்ஞானி மறக்கடும். மறுக்கட்டும். ஆனால் மண் முகமலர்ச்சியுடன் சிரிப்பதையாவது அவர் எரிச்சலில்லாமல் ஏற்றுக்கொள்ளலாம் இல்லையா? அம்பிகா! ஆமாம். ஏற்கனவே ஏட்டுச்சுரக்காயாகி விட்டது. மணிப்பாக்கம்! இந்தியாவை அவர் கொண்டாடவும் வேண்டாம், இந்தியாவில் கொண்டாடவும் வேண்டாம். யாரையும் அவமதிக்க வேண்டாம் என்பதே நான் சொல்ல வந்தது. பித்தனின் வாக்கு! நீங்களுமே நான் சொல்ல வந்ததை சரியாகப் புரிந்துகொள்ளவில்லையோ என்றுதான் தோன்றுகிறது. அவர் இந்தியாவையோ, தமிழ்மொழியையோ தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும் என்று சொல்லவில்லை. இங்கு வர வேண்டும் என்றும் சொல்லவில்லை. ஆனால், அதுகுறித்து நியாயமாகவே சந்தோஷப்படும் மனிதர்களின் உணர்வுகளையும் புண்படுத்துகிற மாதிரி, சொல்லிய முறையில் இருக்கும் வன்மம்தான் எனக்கு கோபமூட்டுகிறது. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 5:08 ஜெஸ்வந்தி! புரிதலுக்கு நன்றி. அது ஒரு கனாக்காலம்! உங்கள் ஆதங்கம் புரிகிறது. நல்லெண்னமும் புரிகிறது. ஆனால் அவர் அப்படித்தான் பேசியிருக்கிறார் என்பதை அவர் PTIக்கு அளித்த பேட்டியினை உறுதிசெய்த பின்னரே பதிவு எழுதினேன். அனானி! மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதீர்கள். உங்கள் வியாக்கியானமே சரியில்லை. நோபல் பரிசு வாங்கியது அவரது பர்சனல் சாதனையாக இருக்கலாம். ஆனால் அவரது ஆராய்ச்சி மனிதகுலத்துக்கானது. அதற்கான நன்றியை, பாராட்டுதல்களை உலகமே சொல்லத்தான் செய்யும். ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 5:23 அன்புள்ள எஸ்.வி.வி! நீங்கள் தாழ்மையாக தெரிவித்திருக்கும் இந்த பின்னூட்டம் எனக்கு வருத்தமே அளிக்கிறது. //அந்நியன் என்ற தலைப்பு அச்சத்தை ஏற்படுத்துகிறது.// // இது என்ன புதுவகை மிரட்டல்? // இந்த இரு வாக்கியங்களும், அதற்குள் இருக்கிற அர்த்தங்களும் வேதனையளிக்கின்றன. மனிதர்களிடமிருந்து தன்னை அந்நியப்படுத்திக்கொள்ள நினைப்பவரை, அந்நியன் என்றுதானே சொல்ல முடியும். அடுத்து, நான் என்ன மிரட்டுகிறேன்? மண் குறித்த பதத்தோடு இணைத்து இதனைத் தாங்கள் இங்கு சொல்லியிருப்பதை கண்டிக்கிறேன். என் பதிவை தயவு செய்து திரும்ப ஒருமுறைப் படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள். அவரை நான் இந்தியாவுக்கோ, சிதம்பரத்துக்கோ வந்து ஒற்றைக்காலில் நிற்கச் சொல்லவில்லை. //பிறந்த மண்ணின் மீது அணு அளவு கூட சினேகமும், பிரியமும் தொனிக்காத இந்த மனிதன் யாராயிருந்தால் நமக்கென்ன?// தொனிக்காத என்ற வார்த்தையைத்தான் பயன் படுத்தியிருக்கிறேன். அவரது வார்த்தைகளைப் பாருங்கள். ஏன் இந்த துவேஷமும், வன்மமும் அதில் பொறி விடுகிறது. எவ்வளவு நாகரீகமாகச் சொல்லியிருக்க வேண்டும் இதே கருத்தை. அவர் எவ்வளவு பெரிய அறிவு ஜீவியாக இருக்கட்டும். நோபல் பரிசுக்காக இந்த ஆராய்ச்சி பண்ணாதவராக இருக்கட்டும்.ஆனால், இன்று அவர் சாதனை நாளைய உலகத்துக்குத் தானே. உலகம் அவரை நன்றியோடு பார்க்கும்தானே. தெரிந்தவர்கள் பெருமையாய் பார்ப்பார்கள்தானே. உண்மையாகவே இங்குள்ள எத்தனை பேர் பூரிப்படைந்திருப்பார்கள்தானே. அதற்கு இதுவா மரியாதை? பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 5:34 கலீல்! நன்றி. அனானி! உயர்ந்த இடத்தில் இருப்பவர்களுக்கு மனிதர்கள் மீது பிரியம்தான் வரவேண்டும். சந்தனமுல்லை! நன்றி. அனானி! // சிதம்பரம் மண்ணில் படுத்து உருண்டு தாய்நாடே தமிழினமே உனக்கு நான் புகழ் சேர்த்து விட்டேன் என்று உரத்த குரலில் கண்ணீர் மல்க சிவாஜி கணே சன் போல் மிகை நடிப்பு காட்ட வேண்டும் என்று எதிர்பார்கிறீர்களோ // அப்படி நான் எங்கய்யா சொன்னேன்? செல்வேந்திரன்! நம்ம மக்கள் ஆட்டு மந்தையாகவே இருக்கட்டும். அவர் இந்த தேசத்துக்கு சம்பந்தமே இல்லாதவராக இருக்கட்டும். சாதாரண, சாமானிய மக்களுக்கு, ’எதோ இங்கப் பிறந்த ஒரு மனுஷன் பெரிய சாதனை படைச்சிருக்காராம்பா’ என்னும் பாமரத்தனமான, வெகுளித்தனமான சந்தோஷப்படுகிறவர்களுக்கு அவர் இந்தப் பேட்டி மூலம் சொல்கிற செய்தி என்ன? இதுதானா? பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 5:36 M.S.E.R.K! // படிப்புக்கும் பண்புக்கும் சம்பந்தமில்லை. நம்ப ஆளுங்களுக்கு இது தேவைதான்// உண்மைதாங்க. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி நாஸியா 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 5:36 அவரு இவ்வளவு அலட்சியப்படுத்தி இருக்க கூடாது தான். இருந்தாலும் அவரும் அவர் ஆராய்ச்சியும் இந்திய மட்டுமின்றி மனித குலத்திற்கே பயன்படக்கூடியது. ஒட்டுமொத்த மனித சமுதாயம் பயன் பெரும் எனும்போது, நாடுகளோ, மொழிகளோ குறுக்கே நிற்காது. மேலும் அவர் இந்தியாவை தாழ்த்தி, அமெரிக்காவை உயர்த்த வில்லை. அவர் வேலையை அவர் செய்கிறார். அவ்வளவே. என்னை இந்த கருத்து மிகவும் கவர்ந்தது: "But I, personally, am not important. The fact that I am of Indian origin is even less important. We are all human beings, and our nationality is simply an accident of birth," he said. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி நாஸியா 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 5:43 Oops... என் பின்னூட்டத்தில் நிறைய எழுத்து பிழைகள். மன்னிக்கணும் சகோதரரே. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி Unknown 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 6:42 மாதவராஜ், இந்தியர்களுக்குக் குறிப்பாகத் தமிழர்களுக்கு இது தேவைதான். சினிமா நடிகர்களுக்கு,அரசியல்வாதிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு சதவீதமேனும் அறிவியல்துறையில் இருப்பவர்களுக்கு நாம் கொடுப்பதில்லை. கலைத்துறையில் இருப்பவர்களைச் சாதனையாளர்களாயும், அறிவியல் துறையில் இருப்பவர்களைப் பணம் பண்ணும் மிஷின்களாகவுமே பார்ப்பது வழக்கமாகிவிட்டது. ஒரு அறிவியல் பத்திரிகை இல்லை தமிழில். சினிமாவுக்காக பக்கம் பக்கமாக ஒதுக்கும் எந்த வெகுஜனப் பத்திரிகையும் அறிவியலுக்காக ஒரு பக்கத்தைக்கூட ஒதுக்கியதில்லை. எந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் அறிவியல் சம்பந்தமாய் வாரத்தில் ஒரு மணிநேரம்கூட ஒதுக்கப்படுவதில்லை. இப்படி இருக்கையில் அறிவியல் சம்பந்தமான வசதி வாய்ப்புகள் எப்போது வரும்? அந்தது துறையில் படிப்பவன் தாய்நாட்டில் வேலை பார்க்கும் காலம் எப்போது வரும்? புதிய கண்டுபிடிப்புகள் எங்கிருந்து வரும்?... இந்த சமூகம் மாறும்வரை இன்னும் பல ராமகிருஷ்ணன்களைச் சந்தித்தாக வேண்டியிருக்கும். ஏன் இந்த முறைகூட ராமகிருஷ்ணனைப் பற்றி முழுமையான செய்திகள் வராமல் யார் கைதைப் பற்றிச் செய்திகள் வந்தன என்று பார்த்துக்கொள்ளுங்களேன்... அறிவியலுக்கு வெகுஜன ஊடகங்களில் இடம் கேட்டுப் போராடியது சுஜாதா மட்டுமே.. இப்போது அவரும் இல்லை. இனிமேல் எந்த விஞ்ஞானியும் தன்னைத் தமிழன் என்று சொல்லிப் பெருமைப்படப்போவதில்லை. அப்படிப் பெருமைப்படுவதற்குத் தமிழும் தமிழர்களும் அவர்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்பது உண்மை. (விரும்பினால் இந்தியன் என்று தேசியத்தை மட்டும் ஏற்றுக் கொள்ளலாம். தமிழன் என்றெல்லாம் சொல்லும்படி எதிர்பார்ப்பது முட்டாள்தனம்). பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி Radhakrishnan 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 7:02 பல சாதனைகளை படைத்தவர், தனது மனதில் இருந்த விசயத்தை கொஞ்சம் கவனத்துடன் சொல்லியிருந்தால் இப்படியெல்லாம் அவர் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்க மாட்டார். 'யாகாவாராயினும் நா காக்க' பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 7:30 நாஸியா! தாங்கள் குறிப்பிட்ட, அவரது வாசகங்கள் சரியானதாகவே இருக்கட்டும். அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் அலட்சியப்படுத்திய தொனிதான் எனக்கு கடுமையானதாய் இருந்தது. தன் சுயநலம் சார்ந்த விஷயமாக கருதுவதால்தான் இது தொந்தரவாகத் தோன்றுகிறது. கிருத்திகன் குமாரசாமி! எல்லாம் சரிதான் நண்பரே! //தமிழன் என்றெல்லாம் சொல்லும்படி எதிர்பார்ப்பது முட்டாள்தனம்// நான் தமிழன் என்று சொல்லும்படி அவரிடம் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. Rads! அதுதான்... சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பீர் | Peer 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 8:03 இந்தச் செய்தியை நேற்று வாசித்த போதே ஒரு இந்தியனாய், தமிழனாய், (அவருக்காக) நான் கொண்டிருந்த பெருமை, கர்வம் சுக்குநூறாகிவிட்டது. :( (ஆஸ்காரும், தேசிய விருதும் வாங்கியவர்களும் கூட இவ்வகைதானோ என்றும் நினைக்கத்தோன்றுகிறது) பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி நாஸியா 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 9:03 \\தன் சுயநலம் சார்ந்த விஷயமாக கருதுவதால்தான் இது தொந்தரவாகத் தோன்றுகிறது\\ ஒத்துக்கொள்கிறேன் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 9:10 veelji தங்கள் பின்னூட்டத்தை இப்போதுதான் கவனித்தேன். கிண்டலை ரசித்தேன். பீர்! நன்றி, நாஸியா! மிக்க நன்றி. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பிரதீப் - கற்றது நிதியியல்! 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 9:10 சரியாதான் சொல்லியிருக்கார்! சொந்தம் கொண்டாடாமல் பாராட்டி மட்டும் வைப்பது சாலச் சிறந்தது! பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பிரதீப் - கற்றது நிதியியல்! 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 9:14 //எனக்கென்னவோ, எது உனது மண் என்ற கேள்விக்குப் பதில், மனிதகுலத்திற்கான சேவைக்கு உழைப்பவராயிருப்பவர் அவரது பணிக்கு உகந்த மண்ணாக எதைக் கருதுகிறாரோ அதுவாகத் தான் இருக்கும் என்றே படுகிறது. எஸ் வி வேணுகோபாலன்// நச்! பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 9:22 பிரதீப்! //எனக்கென்னவோ, எது உனது மண் என்ற கேள்விக்குப் பதில், மனிதகுலத்திற்கான சேவைக்கு உழைப்பவராயிருப்பவர் அவரது பணிக்கு உகந்த மண்ணாக எதைக் கருதுகிறாரோ அதுவாகத் தான் இருக்கும் என்றே படுகிறது.// உண்மைதான். ஆனால் சுயநலமும், திமிரும் கொண்ட வெங்கடராமன் ராமகிருஷ்ணனுக்கு எல்லாம் இந்த வரிகள் பொருந்தாது. உலகத்து மண்ணையெல்லாம் நேசித்த சேகுவேரா, மார்க்ஸ் போன்ற மகத்தானவர்களுக்கே பொருந்தும். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி shankar07@ovi.com 15 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 9:49 தோழர் மாதவராஜ்... தினமணியில் இந்தச் செய்தியைப் பார்த்தபோது என் மனதுக்குள் தோன்றியதும் இதுதான்... **பிறந்த மண்ணின் மீது அணு அளவு கூட சினேகமும், பிரியமும் தொனிக்காத இந்த மனிதன் யாராயிருந்தால் நமக்கென்ன? சக மனிதனையே நேசிக்கத் தெரியாத இந்த அந்நியனுக்கு நோபல் பரிசு கிடைத்தால் என்ன, கிடைக்காவிட்டால் என்ன...** உங்கள் எழுத்திலும் அதையே பார்த்தபோது சக மனிதனை உணர்ந்தேன். இந்த உணர்வில்லாத அந்த மனிதருக்கு அந்நியன் என்பதை விட சரியான அடைமொழி வேறொன்றுமில்லை! சிவா பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி selventhiran 16 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 12:10 பாமரத்தனமான, வெகுளித்தனமான சந்தோஷப்படுகிறவர்களுக்கு அவர் இந்தப் பேட்டி மூலம் சொல்கிற செய்தி என்ன? இதுதானா? // அண்ணே... இண்டர்நெட் கனெக்சனோடு கூடிய கம்ப்யூட்டரின் உதவி கொண்டு வெங்கியின் மின்னஞ்சல் முகவரியை சேஸ் செய்து ஆங்கிலத்தில் பாராட்டுக் கடிதம் எழுதுபவர்கள் பாமரத்தனமான வெகுளிகளென எனக்குத் தோன்றவில்லை. படித்த, வசதி படைத்த நடுத்தர அல்லது அதற்கு மேல் உள்ள இந்தியர்களின் வேலை இது. நீங்கள் சொல்கிற பாமரர்களுக்கு இதைக்காட்டிலும் முக்கியமான வேறு கவலைகள் இருக்கின்றன :) டிஸ்கி: கடவுளே... அண்ணனுடனான உரையாடலில் கூட ஸ்மைலீ போட வேண்டி இருக்கிறதே... பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி selventhiran 16 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 12:12 தவிர, சாதாரண கோயிந்துவான எனக்கே தேவையற்ற மின்னஞ்சல்களைக் கண்டால் கன எரிச்சல் வருகிறது. முக்கியமான பணியிலும், பொறுப்பான பதவியிலும் இருப்பவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு மெயில்களை அனுப்புவதும் ஒருவகை 'ப்ரைவேசி' பிரச்சினைதான்! பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா 16 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 2:16 எந்த நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானிக்கு, நாம் பரிசு பெறும்போது பெருவாரியான பாராட்டு மினஞ்சல்கள் வரும் எனவும் அதர்காக தனியாக ஒரு மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும் என தெரிய வில்லையா? பின்னோக்கி! கருத்துக்களுடன் உடன்படுகிறேன் அழகுமுகிலன் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 16 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 5:24 சிவா! அழகுமுகிலன்! நன்றி. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 16 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 6:10 செல்வேந்திரன்! தம்பி பாமரத்தனமானவர்கள், வெகுளித்தனமானவர்கள் என்று நான் குறிப்பிட்டது, இ-மெயில் அனுப்பாமல், பத்திரிகையில் படித்து, சந்தோஷப்பட்டுக் கொண்டு இருந்த குப்ப்னையும், சுப்பனையும். இ-மெயில் அனுப்பியவர்களுக்கு சொன்னது,இந்த வெட்டித்தனங்களுக்குப் பதில் குசும்பனுக்கு போன் செய்யுங்கள் என்பதே. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி வெண்காட்டான் 16 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 6:46 இந்தியன் என்பதை விட மனிதன் என்பது தான் முக்கியம். /// இந்தியன் என்பதைவிட மனிதன் என்று தன் கருத்தைக் கூறியிருக்கிறார். அவரின் பேட்டியில் அவர் என்ன அர்த்தத்தில் அதை சொல்லியிருக்கிறார் என்பதை விடுத்து அதில் உள்ள பிழையான அர்த்தம் தரும் விடயங்களை மட்டுமே வெளியிட்டுள்ளீர்கள். சில இந்திய ஊடகங்கள் செய்வது போல. (உதாரணம். இந்தியன் என்று பெருமைபடவில்லை என்று மட்டும் சொல்வதுக்கும் இந்தியனை விட மனிதன் என்று சொல்வதை பெருமைபடுவதாக சொல்வதற்கும் நிறைய வித்தியாசம். ஏனையா இந்த பாரபட்சம்? இமெயில் விடயம்: எம்மவர்கள் இதில் சளைத்வர்கள் அல்ல. இலகுவாக ஸ்பாம் மூலம் வடிகட்டலாம். ஆனால் மக்களை திருந்தத் தான் சொல்கிறார். இவ்வளவு காலமும் இவர் எங்கு இருக்கிறார் என்று கூட அறியாத நீங்கள் இப்போது தலையில் வைத்து கொண்டாடினால் ஒருவருக்கு வரும் ஆதங்கமே இது. ///"எனக்கு இந்தியாவில் பணியாற்ற வாய்ப்பு ....... மறுத்து விடுவேன் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்." /// இந்தியாவில் படித்துவிட்டு வெளிநாடு சென்று வேலைசெய்வது பிழை என்றால் இதுவும் பிழைதானே. கோடி கோடியாக இவரின் படிப்பிற்கு செலவளித்த நாட்டில் பணீபுரிய அவர் விரும்புவது அவரின் நல்ல மனதே. இந்தியன் என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் அவர் இருக்க விரும்பவில்லை. (தமிழன் என்று கூட) அவர் படிப்பின் பயன்கள் இந்தியாற்கு மட்டும் என்று இருக்க நினைப்பது சுயநலன் இல்லையா? வெளிநாடுகளில் படித்து புகழ் பெற்றால் மட்டுமே நாம் கண்டுகொள்வொம். மற்றும் படி? ஒருவர் தொடர்ந்து பணியாற்றிய இடத்தைவிட்டு மாறமாட்டேன் என்பது பிழையா? மனதை தொட்டு சொல்லுங்கள். இவர் இந்தியாவில் இருந்தால் இதை சாதித்திருப்பாரா? என்னைப் பொறுத்தவரை அவர் தான் இந்தியன் தமிழன் என்பதை விட மனிதன் என்பதையே முதன்மை படுத்தியிருக்கிறார். இப்போது அவர் தமிழன் என்பதற்காக நான் பெருமைப்படுகிறேன். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா 16 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 8:30 http://timesofindia.indiatimes.com/india/A-little-less-nationalistic-hero-worship-please/articleshow/5129529.cms பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மு.சீனிவாசன் 16 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 11:28 உங்களிடமிருந்து இப்படியொரு எதிர்ப்பை நான் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. / ஆனால் சுயநலமும், திமிரும் கொண்ட வெங்கடராமன் ராமகிருஷ்ணனுக்கு / இந்த அளவுக்கு அவரைப்பற்றித் தவறான ஒர் பிம்பத்தை உருவாக்குவது தவறு. உங்களைப் பற்றி முழுதும் தெரியாமலேயே, நீங்கள் அனானிகளுக்கு கடுமையோடு பதில் சொல்வதை மட்டும் பார்த்து, நீங்கள் ஒரு திமிர் பிடித்தவர் என்று நான் சொன்னால் எப்படி இருக்குமோ அப்படித்தான் நீங்கள் அவரைப் பற்றி சொல்வதும். சுனிதா வில்லியம், கல்பனா சாவ்லா போன்றோர்களை நாம் தான் இந்திய வம்சாவளி என்று சொல்லிக்கொண்டோமே தவிர, அவர்களுக்கு அந்த எண்ணம் கொஞம் கூட இருந்திருக்காது. ”சரி...தமிழனா, இந்தியனா இருக்க வேண்டாம்...ஒரு சக மனுஷனோட பாராட்டா எடுத்துக்கொண்டு மதிக்கலாம் இல்லையா” என்று நீங்கள் வாதிடலாம். அந்த மாதிரி இந்தியாவில் சாதிச்ச சக மனிதர்கள் எல்லோரையும் நீங்கள் பாரட்டியாயிற்றா? இளையராஜா போன்ற எண்ணற்ற சாதனையாளர்களை கண்டு கொள்ளாமலும் அங்கீகரிக்காமலும் விட்டுவிட்டு, அவரை பாராட்டப்போனது...வசதியான பங்காளியை மட்டும் நம் வீட்டுக் கல்யாணத்துக்கு அழைப்பது போன்றது. ”மாதவராஜுக்கு குறும்படம் எடுக்க சொல்லிக் கொடுத்ததே நான் தான்”னு நாளைக்கு நான் ஒரு பத்திரிகை செய்தி கொடுத்தா உங்களுக்கு எரிச்சல் வருமா வராதா? நான் பசியோடு இருக்கும்போது என்னை திரும்பிக்கூட பார்க்காத என் பங்காளி வீட்டினர், நான் சாதனையாளனா மேடையில் நிற்கும்போது வந்து ஒட்டிக்கொண்டு சொந்தம் கொண்டாடினால்? அதுவும் என்னை அரவணைத்தவர்கள்கூட மேடையின் கீழே இருக்கும் போது? அதுபோன்ற ஒரு சூழ்நிலை தான் இதுவும். கொஞ்ச நாள் முன்னாடி, தமிழ் மணத்தில் உங்களுக்கு சம்பந்தமே இல்லாமல் எதிர் வாக்குகள் சில போட்டிருக்கிறார்கள் என்று சொல்லி வருத்தப்பட்டீர்கள். சாதாரண விசயத்துக்கே இப்படியென்றால், வேளைப்பளு அதிகம் இருக்கும் ஒருவருடைய மின்னஞ்சலுக்கு யார் வேண்டுமானாலும் மடல் அனுப்பி அவருடைய privacy ல தலையிடுவதை மட்டும் அவர் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மங்களூர் சிவா 17 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 1:23 / ஆனால் சுயநலமும், திமிரும் கொண்ட வெங்கடராமன் ராமகிருஷ்ணனுக்கு / இருக்கட்டுமே! நாம் நல்ல மனிதனாக வாழ்த்துவோம். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா 17 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 12:23 Mathavji, u r calm,cool,cultured,handsomeman.As an artist u must be spontaneous not hasty.As a writer u must have compassion,not anger.Do u know that 60% of the population of Newyork is Italian origin.Italy is not celebrating Newyork celebrities.We always try to change the wheel of history.Ramki"s mother came to T.N to delever the baby.The noblelaurate is not to beblamed.A learned professor said his daughter studied with ramki at Annamalai Uty.These are all nonsensical.Ramki published his papers seven yrs back. he is doing further research.Ramki became a scientist not because that he is a Bramin or because he is a man from Tamilnadu.Anyway I am a regular reader of Theeratha Pakkangal.All the best...kashyapan. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பா.ராஜாராம் 18 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 4:06 எனெக்கென்னவோ,இப்படி தோனுது மாதவன்... அவரின் இந்த வெற்றியை,பகிரும் பொருட்டு,வந்து வாஞ்சையாக கை பற்றிய அவர் வீட்டு மனிதர்களை கூட புறக்கனித்திருப்பாரோ என்னவோ!அதற்க்கு கூட அவருக்கு உரிமை இருக்குதான்....அவர்கள்,அவர் வீட்டு மனிதர்கள்.கையை உதறவும் இப்படி திடீரென கொம்பு முளைத்த முகத்தை காட்டவும் நியாயம் இருக்கிறது. "மண்ணுல பிறந்த மனுஷன்" என்கிற ஒரே அடையாளத்துக்காக,சந்தோசத்தை பகிர்ந்து கொள்வது பாவமா அந்நியன் ராமகிருஷ்ணன்?மனிதர்கள் ராமகிருஷ்ணன்..பீ துடைக்கும் குச்சி அல்ல... . . இது தலைப்பு மாதவன்!இதுதான்,தலைப்பு மாதவன்!! பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா 3 மார்ச், 2010 அன்று பிற்பகல் 1:54 RAMAKRISHNAN'S INTERVIEW was a pervertional/intellectual arrogance one which is to be ignored along with him..Those people have no heart but having only objective interests only.One who loves not his country/people cannot love anything..he is a man to be ignored..isolated..He is a dry outlook ,ordinary man..Such nonsence attitudes must be condomned openly--no other way---vimalavidya@gmail.com பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி கருத்துரையைச் சேர் மேலும் ஏற்றுக... பக்கங்கள் Home எழுதியவை Subscribe Enter your email address: Delivered by FeedBurner அறிமுகம் மாதவராஜ் உலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.
பிரச்சினை இல்லாத பிரச்சினை எதுவும் உலகில் இருப்பதாக என் சிறு புத்திக்கு தெரியவில்லை, எந்தவொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு இருக்கும் என்று யாரோ எதற்காகவோ எப்போது உளறிக்கொட்டியது இப்போது ஏனோ எனக்கு ஞாபகம் வந்ததால் தூங்க முயன்ற நான் தூக்கம் வராமல் விழித்து என் தூக்கப்பிரச்சினைக்கு உடனடித்தீர்வாக விழித்திருந்து ஏதாவது செய் என்று எண்ணியதால் இந்த தீர்வு பற்றிய ஆராய்சியினை என்னுடைய பிளாக்கில் ஒரு இடைக்காலத்தீர்வாக பதிந்து வைக்கிறேன். எந்தவொரு தீர்வும் முடிவான/முழுமையான தீர்வல்ல என்பது என் மனதில் உதித்த முழுமையடையாத தீர்வு, தீர்வுகள் காலப்போக்கில் மாறிக்கொண்டேயிருக்கும், அந்தத்தீர்வுகள் எப்படி இருக்கும் என்று நாம் கணிக்கமுடியுமா என்பது என்னைவிட என் வாரிசுகள் புத்திசாலிகள் என்று ஒத்துக்கொள்ளும் நான் அநததீர்வுகளும் மேம்படுத்தப்பட்டதாகவே இருக்கும் எனக்கருதுகிறேன். மொத்தத்தில் இந்தப்பிரச்சினைக்கு இதுதான் முடிவான / முழுமையான தீர்வு எனும் கூறும் இசங்களோ, மதங்களோ முடிவான தீர்வுகளாக இருக்கமுடியாது என்பதுதான் மனதில் உதித்த முழுமையில்லாத இன்றைய தீர்வு. பதிவர் குடுகுடுப்பை at 11:05 PM Labels: அனுபவம், மொக்கை 11 comments: செல்வா said... அப்படின்னா நீங்க என்னதான் தீர்வு தரீங்க ..?!! September 28, 2010 at 12:54 AM நட்புடன் ஜமால் said... மு.பி ந - வாதிகள் எங்கேப்பா ... September 28, 2010 at 1:25 AM Anonymous said... //மொத்தத்தில் இந்தப்பிரச்சினைக்கு இதுதான் முடிவான / முழுமையான தீர்வு எனும் கூறும் இசங்களோ, மதங்களோ முடிவான தீர்வுகளாக இருக்கமுடியாது// எல்லா பதிவுலையும் , ஒரு மெசேஜ்...... வாழ்க கு.ஜ.மு.க பொது செயலாளர் September 28, 2010 at 1:29 AM Unknown said... ஜரி September 28, 2010 at 6:09 AM பழமைபேசி said... ஆக, மெய்யில் ஊசலாடிக் கொண்டிருக்கும் உயிரை விடுப்பதே நிரந்தரத் தீர்வு எனச் சொல்ல வருகிறீர்களா தலைவரே??
துணியைப் பிழிகிறாற்போல் வலி என் உடலைப் பிழிகிறது.. படுக்க முடியவில்லை. உட்கார முடியவில்லை. நிற்க பயமாயிருக்கிறது. வலி என் உயிரைப் பிழிகிறது.. மனம் நடுங்குகிறது.. உடலெல்லாம் வேர்க்கிறது. என்ன சோதனை! இந்த நேரம் பார்த்து செந்தில் ஊரிலில்லை.. டாக்டர் கணித்த தேதிக்கு முன்பே இப்படி எதிர்பாராமல் வலியெடுக்குமென்று யாருக்குத் தெரியும்? எனக்கே தெரியாதபோது செந்திலுக்கு எப்படித் தெரியும்? ‘ ‘இன்னும் எட்டு நாள் இருக்கு. ரெண்டு நாளைல ஓடியாந்துருவேன்’ என்று சொல்லித்தான் சென்றான். நாலைந்து முறை போன் செய்தேன் .தொடர்பு கொள்ள முடியவில்லை.. ஏதேனும் ஆபீஸ் மீட்டிங்கில் இருக்கிறானோ? ரீ சார்ஜ் செய்ய மறந்துவிட்டானோ? தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறானோ? செல்போனில் பேட்டரி தீர்ந்துவிட்டதோ? கைப்பேசியைத் தொலைத்துவிட்டானோ? வலியின் நடுவில் அதற்கு மேல் யோசிக்க என்னால் முடியவில்லை… அம்மா உடனே அடுத்த வீட்டுக்கார எலக்ட்ரீசியன் அண்ணனிடம் போய் சொன்னாள். அவர் உடனே ஆட்டோவை அழைத்து வரச் சென்றிருந்தார். ..வலி தாங்கமுடியாமல் அழுதேன். ‘பொம்பளையாப் பொறந்துட்டோம்.! என்ன செய்யறது? தாயி, கொஞ்சம் பொறுத்துக்க. ஆட்டோ வந்துரும்.’’ ஆட்டோவில் அம்மாவும் நானும் ஏறிக்கொண்டோம். ஆட்டோவின் குலுக்கலில்வலி அதிகமானது. ஏய்! செந்தில்! இன்னொருமுறை பசப்பிக்கொண்டு என் பக்கத்தில் வந்தால் உன்னை என்ன செய்கிறேன் பார்! கடவுளே, அந்தப் பாவி செய்த அட்டகாசத்துக்கு நான் எப்படி அவஸ்தைப்படுகிறேன்!? மருத்துவமனையில் உடனடியாக லேபர் வார்டுக்கு அழைத்துச் சென்றார்கள். என் உடல் இரண்டாகப் பிளந்துவிடுவது போல் வலித்தது. அப்போது என் உடலில் நிகழ்ந்தவைகளை உணரும்போது எனக்கே அருவருப்பாயிருந்தது. எந்த சாதியானாலும் எந்த தேசமானாலும் எந்த ஜீவராசியானாலும் பெண்ணாய் பிறப்பது ஒரு சாபமென்ற எண்ணம்தான் வந்தது… இந்த நிலையில் என்னைப் பார்த்தால் ‘நீ எனக்கு வேணும்’ என்று செந்தில் சொல்வானா? அசதியில் உறங்கிப் போனேன். விழித்தெழுந்தபோது அம்மா முகமெல்லாம் பல்லாய் நின்றிருந்தாள். “ஆம்பளைப்புள்ளை” நானும் சிரித்தேன்…இருப்போமா செத்துப்போவோமா என்று நினக்குமளவுக்கு வலியில் துடித்த எனக்கு எப்படி சிரிப்பு வந்தது? எனக்கேத் தெரியவில்லை.. உடம்பு வெலவெலத்துப் போயிருந்தது. உரக்கப் பேசக்கூடத் தெம்பில்லை. நர்சிடம் ஜாடையில் கேட்டேன். ‘பாப்பா எங்கே?’ ‘மொத பிரசவமா? நர்ஸ் கேட்டாள். ஆமாமென்று தலையாட்டினேன். ‘பேபியை க்ளீன் பண்ணிகிட்டிருக்காங்க. முடியட்டும். கொண்டுவரேன்’ என்றாள். . அதற்குள் நான் என் மகனைக் கற்பனை செய்தேன். செந்தில்போல இருப்பானா? என்னைப் போல இருப்பானா? இருவர் போலவும் இருக்கவேண்டும். என் கதுப்புக் கன்னங்கள் என் சுருட்டைமுடி, செந்திலின் அகன்ற கண்கள் இருக்கவேண்டும். நோஞ்சானாய் இருக்கக்கூடாது. செந்தில்போல் பயில்வானாட்டமிருக்கவேண்டும். மனசு பரபரத்துக் கொண்டிருந்தது. “மூணு கிலோ இருக்கறான் உன் புள்ளை”’ என்றபடியே நர்ஸ் குழந்தையைக் கொண்டு வந்தாள். ‘எச்சா, கொறவா?’ அம்மா கேட்டாள். ‘ரெண்டரை கிலோ நார்மல். இது அமுல் பேபி’ என்றவாறே குழந்தையை என்னருகில் கிடத்தினாள். செந்தில் என்மேல் கொண்ட காதலின் சாட்சியைப் பார்த்து நான்பரவசப்பட்டேன். முத்தமிட்டேன். விழித்துக்கொண்ட பாப்பா அழுதது. ”அம்மா வேலையை ஆரம்பி” என்று குழந்தையை நர்ஸ் என்னிடம் தந்தாள். ஆடைகளைச் சரிசெய்துகொண்டு குழந்தையை என் மார்பிலணைத்துக் கொண்டேன். கடவுள் தன் படைப்புத் தொழிலை பெண்ணின் வயிற்றில் நிகழ்த்துகிறான். காத்தல் தொழிலை பெண்ணின் மார்பில் ஆரம்பிக்கிறான்…பெண்ணாகப் பிறந்தது பெருமையாக இருந்தது.. குழந்தை வீறிட்டு அழுதான். அம்மாடி! எத்தனை கோபம்! ‘ஏன் பேபி அழுவுது?’ அமுல் பேபி க்ரை பேபி என்றவாறே நர்ஸ் அருகில் வந்தாள். குழந்தையின் உதடுகளைப் பிரித்துப் பார்த்தாள். ‘மக்குப் பொண்ணே’ என்று செல்லமாய் கடிந்துகொண்டாள். ‘அம்மா, நீங்க கொஞ்சம் அந்தாண்டை போயிருங்க’ என்று அம்மாவை அனுப்பினாள். என்னைச் சுற்றி திரையைப் போட்டாள். ‘இப்படி, தெரியுதா?’ என்று குறும்புச் சிரிப்பு சிரித்தாள். வெட்கத்துடன் நானும் சிரித்தேன். ‘பேபி பால் குடிக்கும் போது யாரும் பாக்க கூடாது. உங்கவீட்டுக்காரருக்கும் அதே ரூல்தான்’ என்றபடியே நகர்ந்தாள். செந்திலுக்கு வீட்டுக்காரரென்ற பதவி எனக்கு வேடிக்கையாகவிருந்தது. ஒரே ஊரில் பள்ளி நாட்களிலிருந்து பழகியவர்களென்பதாலோ என்னவோ, புருசன் பொண்டாட்டி முறைமைகள் எதுவும் எங்களுக்குள் இருக்கவில்லை. நான் செந்திலைப் பெயரிட்டுத்தான் அழைத்தேன். செந்திலும் கணவனாய் நினைத்து என்னை அதிகாரம் செய்ததுமில்லை. நாங்கள் சிநேகிதர்களாகவே இருந்தோம். சில நிமிடங்களில் குழந்தை தூங்கிப்போனான். மீண்டும் செந்திலுக்குப் போன் செய்தேன். மறுபுறம் ரிங்டோன் கேட்கவில்லை. சோர்வு கண்களைச் சொருகியது. தூங்கினேனா விழித்திருந்தானே தெரியவில்லை. செந்திலை நினைத்துக் கொண்டேன்.. கடுவன் பூனை போல் என்னை எப்படி துரத்தினான்? கிராமத்தில் அவர்கள் வயலைத் தாண்டி நான் போகும்போதும் வரும்போதும் எப்படி என்னை வழிமறிப்பான்?. எப்போதும் கேலியும் கிண்டலும் நகைச்சுவையுமாய் என்னிடம் எப்படியெல்லாம் பேச்சுக் கொடுப்பான்? ‘ ஏ பானு, பாம்பைக் கடிச்சுட்டியாமே?’ ‘பாம்பு வந்து உங்கிட்டே சொல்லிச்சாக்கும்’’ ‘சொல்லிச்சாவா? ஓன்னு அழுதுச்சு. மருந்துகட்டு போட்டு உங்க தோட்டத்துல வுட்டுட்டு இப்பத்தான் வாரேன்.’ எங்கள் வெற்றிலைக் கொடிக்காலில் வெற்றிலை பறிக்கும்போது என்னைப் பச்சைப் பாம்பு கையில் கொத்திவிட்டது. நான் பயத்தில் கையை உதறியபோது தூரப்போய் விழுந்துவிட்டது. ‘பல்லு மட்டும்தான் பட்டிருக்குது. எதுக்கும் இருக்கட்டும்’ என்று பச்சிலைக் கட்டு போட்டிருந்தார். பண்டிதர். அதற்குத்தான் இத்தனை கிண்டல். நானும் செந்திலின் கண்ணில் படக்கூடாதென்று எத்தனையோ எச்சரிக்கையாகத்தான் வருவேன். ஆனால் அந்த தடித்தாண்டவராயன் எப்படியும் என்னைப் பார்த்துவிடுவான். ‘ஏ பானு, முந்திரிப்பழம் பறிச்சு வெச்சுருக்கறேன்.. ருசியாருக்கு ரெண்டு சாப்டுட்டுப் போ’ என்றான் ஒரு நாள். ‘முந்திரிப் பழமும் வேண்டாம். உன் சங்காத்தமும் வேண்டாம்’ என்று துடுக்காகச் சொன்னேன்.. அன்று ஏனோ எனக்கு மனசு சரியில்லை ‘அப்படி என்ன எம்மேல குத்தம் கண்டுட்டே? நான் எங்கனாச்சும் திருடினேனா? எவனையாவது கொலை செஞ்சேனா? உன் சங்காத்தம் வேண்டாம்னு எடுத்தெறிஞ்சு சொல்லிப்புட்டே?’ ‘பொறவென்ன? போக வர என்னை சீண்டிகிட்டிருந்தா எரிச்சல் வருதில்லே” ‘ஒரு மனுசன் பிரியமாப் பேசினா எதுக்கு எரிச்சல் வரணும்?” ‘நீ பிரியமாப் பேசறதுக்கு, நான் உனக்கு மொறப்பொண்ணா? ஏ, பானு, ஏ,பானுன்னு வயக்காட்டுலே பொண்டாட்டியைப் பாத்து புருசன் கூவற மாதிரி கூவறே? உனக்கு கிறுக்கு பிடிச்சுப் போச்சா?” தூரத்திலிருந்து செந்தில் எழுந்து வந்தான். அவனுடைய முகம் சுருங்கிப்போனது. ‘ஆமா, எனக்கு கிறுக்கு பிடிச்சு போச்சு..ஏன் நான் உன்னையே நெனச்கிட்டிருக்கேன்னு எனக்கே புரியலே.. எந்த வேலையும் ஓடமாட்டேங்குது. எனக்கு நீ வேணும்னுமட்டும்தான் எனக்குத் தோணுது. வெக்காளியம்மன் சத்தியமா சொல்றேன், பானு. எனக்கு வேணும்.. என் மனசில காயம் பண்ணிட்டேன். பொண்ணு கட்டுனா உன்னைத்தான் கட்டுவேன்’’ செந்திலின் குரல் விம்மியது. கண்களில் நீர் தளும்பியது. .அந்த ஒரு விரல்சொடுக்கு நேரத்தில் இருபத்து நாலு வயது செந்தில் எனக்கு பொம்மைக்காக அழும் குழந்தையைப் போல் தெரிந்தான். குழந்தையாய் இருந்தால் தோளில் சாய்த்துக் கொண்டு சமாதானம் செய்யலாம். இவனைத் தோளில் சாய்த்துக் கொள்வது ஆபத்து என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். ஆனாலும் அவனுடைய மென்மையான மனதை நோகடித்திருக்க வேண்டாமென்று நினைத்தேன். ‘‘கோவத்துல ஏசிட்டேன். மன்னிச்சிரு’ என்று வருத்தம் தெரிவித்தேன். ‘நீ எனக்கு வேணும்’ என்ற செந்திலின் வார்த்தைகள் என் மனதில் ஒட்டிக் கொண்டது. இருபது வயது பெண்ணைப் பார்த்து இருபத்து நாலு வயது ஆள் ‘நீ எனக்கு வேணும்’ என்று சொன்னால் இனந்தெரியாத மகிழ்ச்சி ஏற்படத்தானே செய்கிறது.? அதிலும் அவளைவிட படிப்பு, சாதி, சொத்துசுகம் அத்தனையிலும் உயரமான இடத்தில் இருக்கும் ஒருவன் ‘நீ எனக்கு வேணும்’ என்று விம்மும் குரலில் சொன்னால் அவன்மீது ஈர்ப்பு ஏற்படாமலிருக்குமா? எப்படியும் இன்னும் ஒரு வருசத்திலோ அல்லது இரண்டு வருசத்திலோ இன்னொரு வீட்டுக்கு நான் போகத்தான் வேண்டும். முன்பின் தெரியாத ஒருவனின் அன்பை சம்பாதிக்கவேண்டும். அதைவிட என்மீது பிரியப்படும் ஒருவனை நான் ஏற்றுக் கொண்டாலென்ன? கொடிக்காலில் வெற்றிலை பறித்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.. களத்துமேட்டில் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருந்தவாறே ‘ஏ பானு வெத்தலை பறிச்சுட்டுப் போறியா? இங்கே மணக்குது’ என்றான்… ‘துளிர் வெத்தலை மணக்காம என்ன செய்யும்?’ என்றவாறே கைகளில் ஜாடை காட்டி செந்திலை அழைத்தேன்.. அருகில் வந்தபோது வெற்றிலைக்கூடையை எடுத்து அவன் முகத்துக்கு நேராக வைத்தேன். ‘நான் நாளைக்கு பொழுது சாய வருவேன்.. எனக்கு முந்திரிப் பழம் தரணும்’ என்றவாறே என் முகத்தை முந்தானையால் மறைத்துக் கொண்டு செந்திலின் முகத்தைப் பார்த்தேன்.. அவன் முகம் மாலைச் சூரியனாய் பிரகாசித்தது. ‘‘சோறும் கட்டுத்துணியும் வாங்கித் தர அப்பன் வேணும். படிக்க வெக்க அப்பன் வேணும். பொண்ணு கட்டணும்னா அப்பன் வேணாம். உங்க நோக்கத்துக்கு எவளை வேணா இளுத்துகிட்டு வருவீங்க. நாங்க ஒத்துக்கணும். நல்லா இருக்குடா உன் நாயம்…. குடும்பங்கறது ஒரு கோட்டை மாதிரி. அதுல யாரை வேணும்னாலும் உள்ளே விட முடியாது… அந்தக் கொசவன் பொண்ணைத் தான் கட்டிக்குவேன்னு ஒத்தைக்கால்ல நிக்கறதானா ஒரு வேலையைத் தேடிக்கிட்டு கண்மறைவாப் போயிரு.. எனக்குப் புள்ளையே பொறக்கலேன்னு நெனச்சுக்கறேன்.’ என்றார் செந்திலின் அப்பா. ‘சீர் செனத்தி இல்லாம ஒரு பஞ்சைப் பொண்ணை மருமவளா கொண்டுவந்தா பொன்னம்மான்னு சாதி சனம் காரித் துப்பும்’ என்றாள் செந்திலின் அம்மா. “அந்தப் புள்ளையாண்டான் உன்னை வசியம் பண்ணிட்டான்.. நீ தலகாலு புரியாம குதிக்கறே பானு.. வயசுக் கோளாறு.. அப்படி பேசவெக்குது. சேலை முள்ளுல விளுந்தாலும் முள்ளு சேலைல விளுந்தாலும் சேதாரம் சேலைக்குத்தான்.. புரிஞ்சுக்க. அதெல்லாம் இல்லை. நான் புடிச்ச முயலுக்கு மூணு காலுதான்னு வாசப்படி தாண்டிப் போறியா, போ. ஆனா அப்பறம் கண்ணைக் கசக்கிகிட்டு வராதே.’ என்றார் அப்பா. .. “ஆத்தா அப்பன் சொன்னபடி இந்தக் கொசவனைக் கட்டிகிட்டேன். ஒசத்தியா சொல்லிக்க எதுனாச்சும் உண்டா? அத்தங்காட்டியும் சிறுசுங்களை சேத்து வெச்சா என் பொண்ணாவது சொகப்படும்’’ எங்கள் காதலை ஆதரித்தவள் அம்மா மட்டும்தான். செந்தில் பாலிடெக்னிக் படித்திருந்தான் .எங்கள் அதிருஷ்டம் செந்திலுக்கு பெங்களூரைத் தலைமையகமாகக் கொண்டிருந்த கம்பெனியின் சென்னைக் கிளையில் வேலை கிடைத்தது. அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டும் கம்பெனி. செந்தில் வேலைக்குச் சேர்ந்து ஆறுமாதங்கள் கழித்து சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். பதிவு செய்துகொண்டோம். சென்னை வந்தோம். சட்டி குண்டானிலிருந்து எல்லாம் வாங்கவேண்டியிருந்தது. ஒவ்வொரு மாதமும் கொஞ்சம் கொஞ்சமாய். செந்தில் வீட்டில் சாமான்களை நிரப்பினான். எனக்கு விலை அதிகமான சேலைகள் வாங்கித் தந்தான்..’’ மாசத்துல பாதிநாள் வெளியூர் டூட்டி வருது. ஒண்டியா இருப்பே.. ராவில கட்டிலிலே பேசமுடியாது. போன்லே பேசுவோம்’’ என்று ஒரு செல்போனை வாங்கிக் கொடுத்திருந்தான். எனக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. ‘நெறய செலவு பண்றியே? கடன் வாங்கறியா?’ என ஆதங்கத்துடன் கேட்டேன். ‘கஞ்சப் பிசுநாரி தங்கவேல் உடையார் பையன் நானு. கடன் வாங்குவேனா? வெளியூர் போனா கம்பெனில ஓட்டல், சாப்பாட்டுச் செலவுக்கு பேட்டா தருவானுங்க. அதுல மிச்சம் பிடிப்பேன். பேட்டாவுக்கு ஆசைப்பட்டுத்தான் வெளியூர் போறத்துக்கு ஒத்துக்கறேன்.. காசு தரானுங்க. ஆனா கசக்கிப் பிழியறானுங்க’’ குழந்தை அழுதான். அம்மா வேலை செய்தேன். சில நிமிடங்களில் தூங்கிப் போனான். செந்திலுக்குப் போன் செய்தேன். மறுபுறம் ஒலிக்கவில்லை..முன்பெல்லாம் நான் மிஸ்டு கால் தருவேன். அடுத்த நிமிஷம் செந்திலிடமிருந்து போன் வரும். இரண்டு வருடங்களில் செந்திலிடம் கேலிப் பேச்சும் உற்சாகமும் குறைந்துபோயிவிட்டது. வேலைப்பளுவா தெரியவில்லை. ஆனால் செந்தில் இரண்டு வருடங்களில் மிகவும் மாறிப்போய்விட்டான். ‘என்ன ஊர் இது? எந்நேரமும் வெக்கை.. எங்கே போனாலும் நெரிசல். எதற்கெடுத்தாலும் அடாவடி.பிடிக்கவேயில்லை’ என்று சலித்துக் கொள்வான். ‘வேலையை விட்டுடலாம்னு யோசிக்கறேன்’ செந்தில் அதிர்ச்சியைத் தந்தான், ஒருநாள். ‘ஏன்?’ ‘ஒரு ஆள் சம்பளத்துக்கு மூணு ஆள் வேலை வாங்கறானுங்க. மனுசனை மனுசனாவே மதிக்கமாட்டேன்றானுவ. ஒருத்தன் கிட்டே கைகட்டி வேலை செய்யக் கூடாது பானு. நாய் பொழப்பு. வெள்ளாமை பண்றதுதான் கௌரவம்” “வேலைய விட்டியின்னா ரெண்டு பேரும் சேந்து பிச்சையெடுக்கிறதா? இன்னும் நாலு மாசம் ஓடிச்சுன்னா கொளந்தை வேற பொறக்கப்போவுது. ’ “ஏன் பிச்சையெடுக்கணும். எங்க பாட்டன் சொத்துல எனக்கு பங்கு உண்டுன்னு கம்பெனி வக்கீல் சொல்றாரு. அதனாலே எங்கப்பாரை எனக்குச் சேரவேண்டிய சொத்தைக் கொடுன்னு கேக்கப் போறேன்’’ அதன்பிறகு செந்தில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதாகச் சொன்னான். செந்திலின் அப்பா ஓரிருமுறை அவனை ஆபீசில் பார்த்திருக்கிறார்.. செந்தில் சொல்லித்தான் எனக்கும் தெரியும். எதற்காக வந்தார் எனக் கேட்டேன். ‘எல்லாம் சொத்துப் பிரச்சினைதான்’ என்றான் செந்தில். ஒருமுறை வீட்டுக்கும் வந்தார்..சாப்பிடச் சொன்னேன். ‘‘கருவேப்பிலைக் கன்னு மாதிரி எனக்கிருக்கற ஒரே மவனை எனக்குத் தூரமாக்கிட்டியே பொண்ணே, உங் கையால எப்படி சாப்புடறது?’ தோளிலிருந்த துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டார். ‘ஐயா., நான் செந்திலுக்கு களுத்தை நீட்டினது நெசந்தான். ஆனா உங்களுக்கு எந்தத் துரோகமும் கனவுலே கூட நெனக்கலே.. உங்க சொத்து சுகத்துக்கு ஆசைப்படலே..எனக்கு வேணவும் வேணாம்’ என்றேன். எனக்கு ஒன்றுமட்டும் புரிந்தது. செந்திலின் அப்பாவுடைய மேல்சாதி மனசு என்னை மருமகளாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவள் என்பதால் அவருடைய காசு பணம் என்னை ஏற்கவில்லை. செந்திலுக்கு மீண்டும் போன் செய்தேன்..இணைப்பு கிடைக்கவில்லை. சற்று நேரம் கழித்துப் போன் ஒலித்தது. செந்திலாகத்தானிருக்கும். ”செந்தில்,.நமக்கு ஆம்பளைப்புள்ளை பொறந்திருக்குறான்.! உன் மகன் உன்னை மாதிரியே தாட்டியாயிருக்கிறான். உன்னைப் போலவே யானைக் காது .நர்ஸ் அக்கா அமுல்பேபின்னு பேர் வெச்சுருக்காங்க. அப்பாவைப் பாக்கணும்னு அழுவறான்….’ ”அப்படியா? இதோ ஓடியாந்துடறேன்.. சட்டை காப்பு எல்லாம் வாங்கிட்டு வரேன். நீ சொஸ்தமா இருக்கறியா பானு?” கைப்பேசியின் ஒலியை நிறுத்தி பேசத் துவங்குமுன்பே என் மனசு ஒரு கற்பனைப் பேச்சையல்லவா தயாரிக்கிறது! ”அலோ. கொசத்தெரு பெருமாளு பொண்ணு பானுதானே பேசறது?” ”ஆமா, நீங்க யாரு பேசறது?” ”நா தியாகதுர்கத்திலேருந்து சோலை நாயக்கர் பேசறேன்” சோலை நாயக்கர் அப்பாவின் உடன் பிறவாச் சகோதரர்.. பேங்க் மூலமாக ஆடு, மாடு வாங்கித் தந்து அப்பாவுக்கு உதவியவர். வெற்றிலைக் கொடிக்காலை அப்பாவுக்கு விற்று மெதுவாகப் பணம் வாங்கிக் கொண்டவர்.. பஞ்சாயத்து யூனியன் தலைவராக இருந்தவர். ”பானுதான் பேசறேன், பெரியப்பா? நல்லா இருக்கீங்களா? அப்பா நல்லாருக்காரா?” ”பிள்ளைப்பேறு நல்லபடியா ஆவணுமேன்னு உங்கப்பா வெசனப்பட்டுக் கொண்டிருந்தாரு’ ”உங்களுக்குப் பேரன் பொறந்திருக்கான் பெரியப்பா” ”எப்ப?” ”இன்னிக்கு காலைல” ”ரொம்ப சந்தோசம்.. சின்னப்புள்ளைக்கு ஒரு சின்னப்புள்ளே” கடகடவெனச் சிரித்தார். ”உங்கம்மா அன்னம் பக்கத்துல இருக்குதா? போனை அம்மாகிட்டேகொடு தாயி” போனை அம்மாவிடம் கொடுத்தேன். அம்மாவின் கண்கள் கலங்கின. சேலையால் வாயை மூடிக்கொண்டாள்.. குமுறி அழுதாள். ”மூத்தாரே, எனக்கு நெஞ்சடைக்குது, பானுகிட்டே பேசுங்க,” அம்மா போனை என்னிடம் தந்தாள். “பானு பேசறேன். சொல்லுங்க பெரியப்பா” “என்னத்தைச் சொல்றது தாயி. மனசைத் தேத்திக்க..உங்க மாமனார் தங்கவேலு மவனுக்கு சொத்தை பிரிச்சு கொடுத்துட்டாரு..அத்தோட ஒரு வில்லங்கம் பண்ணிட்டாரு. உன் புருசனுக்கு ராசீபுரத்துலே வேற பொண்ணைக் கட்டிவெச்சுட்டாருன்னு பேசிக்கறாங்க. ஒரே பொண்ணாம். ராசிபுரத்துலே, ஒரு சினிமாக் கொட்டாயி, மல்லிகரைலே ஒரு சினிமாக் கொட்டாயி இருக்குதாம். எல்லாம் கமுக்கமா நடந்து போச்சு” கைப்பேசி கைநழுவிப் போனது. என் உடல் நடுங்கியது. என் உயிர் பல்லியின் அறுந்தவால் போலத் துடித்தது.. சோலை நாயக்கரின் வார்த்தைகள் தீப்பந்தங்களாய் என்னை எரித்துக் கொண்டிருந்தன. ஒரு கடுவன்பூனையைப் போல என்னை சுற்றிச் சுற்றி வந்த செந்திலா இப்படிச் செய்தான்? ஒரு பொம்மை வேண்டுமென்று அழும் குழந்தைபோல் தெரிந்த செந்திலா இப்படிச் செய்தான்? ஆஸ்தி வேண்டாம். ஆசைப்பட்ட பானுதான் வேண்டுமென்று அடம் பிடித்து என்னை மணந்த செந்திலா இப்படிச் செய்தான்? கடவுளே! சோலை நாயக்கர் சொன்ன செய்தி உண்மையாயிருக்ககூடாது. அது உண்மையானால் எந்தப் பெண்ணுக்கும் என் கதி நேரக்கூடாது… மீண்டும் செந்திலின் கைப்பேசிக்கு தோடர்பு கொண்டேன். “நீங்கள் அழைத்த எண் உபயோகத்தில் இல்லை,” என்றது கைப்பேசி. *** பகிர்க Tweet WhatsApp Email Print Related 5 Replies to “பொம்மை” valavaduraian சொல்கிறார்: ஆகஸ்ட் 23, 2020 அன்று, 6:09 காலை மணிக்கு மிகமிகச் சாதாரண சிறுகதை பதிலளிக்க ந.ஜெகதீசன் சொல்கிறார்: ஆகஸ்ட் 25, 2020 அன்று, 5:00 காலை மணிக்கு காதலிக்கும் போது அன்பும் காதலும் பொங்கும் ஆண் மனம் திருமணத்துக்கு பிறகு தடம்புரண்டு போவதை சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள். குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ பிறக்கலாம் என்றாலும் அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தையை ஏன் எழுத்தாளர் படைத்தார் என்ற கேள்வி எனக்கு பிறந்தது! // உலகத்தை வயிற்றில் பிறப்பித்து அவளது மார்பில் காக்க தொடங்குகிறாள் பெண்// எனக்கு இந்த வரிகள் மிகவும் பிடித்திருந்தது. எதிர்பாராத திருப்பத்தை தந்து மனதில் சாதிய ஆணாதிக்க கீரலிட்டு கொஞ்சம் கசிய வைக்கத்தான் செய்கிறது இந்த சிறுகதை. வாழ்த்துகள். பதிலளிக்க Boomadevi சொல்கிறார்: செப்டம்பர் 4, 2020 அன்று, 10:51 காலை மணிக்கு அர்த்தமில்லாதது காதல்,கல்யாணம்…… பதிலளிக்க Kailash, Hyderabad சொல்கிறார்: ஆகஸ்ட் 25, 2020 அன்று, 4:43 மணி மணிக்கு It is happening, job is important than a husband for a girl, today may be love exist, who knows what happened tomorrow? பதிலளிக்க jananesan சொல்கிறார்: ஆகஸ்ட் 27, 2020 அன்று, 9:30 காலை மணிக்கு இன்றைய எதார்த்ததைச் சொல்லும் கதை. சாதியத்திலிருந்து விடுதலைப் பெற்றால் தான் காதல் வாழும். இந்த படைப்பாளி சாதிப் பெயர்களைத் தவிர்த்திருக்கலாம். ஆனாலும் குறைகளுக்கு அப்பால் இளம்படைப்பாளிகள் ஊக்குவிக்கப் படவேண்டும். வாழ்த்துகள் லாவண்யா .எழுத எழுத க்குறைகள் குறையும் . பதிலளிக்க Leave a Reply to Boomadevi Cancel reply This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed. Post navigation Previous Previous post: அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 Next Next post: பாரதியின் கடைய வாழ்வு தேடு… தேடு … படைப்புகளும் பகுப்புகளும் படைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-252 இதழ்-253 இதழ்-254 இதழ்-255 இதழ்-256 இதழ்-257 இதழ்-258 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியக் கட்டுரை இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நிதி நிர்வாகக் கட்டுரை நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரக் கட்டுரை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்பு நாவல் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized எழுத்தாளர்கள் எழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆண்டனி கில் ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆமிராபாலன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலட்சுமிநாராயணன் இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan உஷாதீபன் எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா கா.ரபீக் ராஜா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ காரலின் கொர்மான் கார்த்தி கார்த்திக் கிருபாகரன் கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக முத்துக்கண்ணன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி சியாம் பாரதி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுதா ஶ்ரீநிவாசன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜாஷுவா ராத்மான் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜிஃப்ரி ஹாசன் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஆர்ச்சர் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேன் ஹெர்ஷ்ஃபீல்ட் ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் தைஸ் லைஸ்டர் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு ravishankar குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்மா ஸச்தேவ் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணற்காடர் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மதுரா மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷாதிர் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special முந்தைய பதிவுகள் முந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2021 அக்டோபர் 2021 செப்டம்பர் 2021 ஆகஸ்ட் 2021 ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள் Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email. Email Address Subscribe Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use. To find out more, including how to control cookies, see here: Cookie Policy உங்கள் படைப்புகளை அனுப்ப.. வாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். எழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.) ஒலிவனம்: Listen to the Fiction: Solvanam Audio ஆன்கர் எஃப்.எம். (anchor.fm) 4 யூடியுப் – ஒளிவனம் (YouTube) 3 ஸ்பாடிஃபை (Spotify) 2 சவுண்ட் கிளவுட் (SoundCloud) 1 கிண்டில் புத்தகங்கள் எழுத்தாளர் அம்பை: சொல்வனம் சிறப்பிதழ்கள் 0 ரொபெர்த்தோ பொலான்யோ ஆக்கங்களும் விமர்சனங்களும் 0 வீடும் வெளியும்: கவிதைகளும் கதைகளும் 0 சிறப்பிதழ்கள் அ.முத்துலிங்கம்: 166 அசோகமித்திரன்: 100 அம்பை: 200 அறி-புனை: 189 இசை: இதழ் 15 க.நா.சுப்ரமணியம்: 75 சிறுகதை 1: 107 சிறுகதை 2: 108 சொ.வ. 250 இதழ் தி.ஜானகிராமன்: 50 தீபாவளி – 2020 தொழில்நுட்பம்: 150 பெண்கள் சிறப்பிதழ் 1: 115 பெண்கள் சிறப்பிதழ் 2: 116 பொலான்யோ: 225 லாசரா & சிசு செல்லப்பா: 86 வங்கச் சிறப்பிதழ் 1: 240 வங்கச் சிறப்பிதழ் II: 241 வி. எஸ். நைபால்: 194 வெங்கட் சாமிநாதன்: 139 ஸீபால்ட்: 204 அதிகம் வாசிக்கப்பட்டவை ஆய்வக-கசிவு கோட்பாடு என்ற மர்மமான கோவிட்-19 வழக்கு கவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில சக்யை பாரதியின் ஆறிலொரு பங்கு - தமிழின் முதல் சிறுகதை மனிதர்கள் விளையாடுகிற விளையாட்டு காந்தள் மெல்விரல் தமிழகமும் இராமாயணத் தொடர்பு நம்பிக்கைகளும் திருக்கோயில்களில் நவக்கிரகங்களின் அமைப்பு வார்த்தை என்பது வசவு அல்ல! திருப்பூர் குமரன் என்றொரு தியாக உரு தொகுப்புகள் கி.ரா. – அ.ரா. (2) தீர யோசித்தல் (1) புவிச் சூடேற்றம் (5) காவிய ஆத்மாவைத் தேடி (3) பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் (6) முதலியத்தை எதிர்க்கும் பொதுமம் (4) இவர்கள் இல்லையேல் – நாவல் (5) மிளகு: இரா முருகன் – நாவல் (9) ஹைக்கூ வரிசை (5) தடக் குறிப்புகள் (4) தேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2) பூமிக்கோள் (5) பய வியாபாரியா ஹிட்ச்காக் (2) காருகுறிச்சி (3) காடு (2) மின்னல் சங்கேதம் (12) வங்கம் (13) பரோபகாரம் (5) மொபைல் தொடர்பாடல் வரலாறு (2) தலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11) இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (16) வண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2) மற்றவர்களின் வாழ்வுகள் (2) விஞ்ஞான திரித்தல் (30) கைச்சிட்டா (8) நோயாளி எண் பூஜ்யம் (2) ஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2) வேகமாய் நின்றாய் காளி! (5) சட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2) கா மென் (2) இசைபட வாழ்வோம் (2) ஹெரால்ட் ப்ளூம் (4) உலக தத்துவம் (6) வெளி மூச்சு (2) 20xx கதைகள் (16) ஆட்டத்தின் ஐந்து விதிகள் (8) தொடர்கள் 20xx கதைகள் – அமர்நாத் எம். எல். – வண்ணநிலவன் சி.சு.செல்லப்பா – வெ.சா தமிழ் இசை மரபு – வெசா தமிழ் இலக்கியம் – வெ.சா. தெருக்கூத்து – வெ.சா. யாமினி – வெங்கட் சாமிநாதன் Writer Prabhu Mayiladuthurai's "Matru" short story/ எழுத்தாளர் பிரபு மயிலாடுதுறையின் சிறுகதை "மாற்று" - Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் Writer Prabhu Mayiladuthurai's "Matru" short story/ எழுத்தாளர் பிரபு மயிலாடுதுறையின் சிறுகதை "மாற்று" To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2020/09/12/மாற்று/ ஒலி வடிவம்: சரஸ்வதி தியாகராஜன்/Voice: Saraswathi Thiagarajan Writer Prabhu Mayiladuthurai's "Matru" short story/ எழுத்தாளர் பிரபு மயிலாடுதுறையின் சிறுகதை "மாற்று" 11:40 Writer Prabhu Mayiladuthurai's "Viyazhan" short story/ எழுத்தாளர் பிரபு மயிலாடுதுறையின் சிறுகதை "வியாழன்" 10:08 Writer K. J. Ashok Kumar's "Kuthirai Maram" Long story/ எழுத்தாளர் கே.ஜே.அசோக்குமாரின் குறுநாவல் "குதிரை மரம்" 01:23:47 Writer P. Ramanujam's short story " Vaccination Vaibhavam"/எழுத்தாளர் பா. ராமானுஜத்தின் சிறுகதை "வேக்ஸினேஷன் வைபவம்" 14:58 Writer Ivaan Karthik's "MazhaiyilNanaiyumAlaigal" short story/ எழுத்தாளர் இவான் கார்த்திக்கின் சிறுகதை "மழையில் நனையும் அலைகள்” 12:46
ஈரோடு,ஜன.20- அத்திக்கடவு – அவினாசி திட்ட முதல் நீரேற்று நிலையம் அமைப்பதற் கான பணிகளை தமிழக அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். ஈரோடு மாவட்டம், காளிங்கரா யன்பாளையத்தில் அத்திக்கடவு –அவிநாசி திட்டத்தில் அமைக்கப் பட உள்ள முதல் நீரேற்று நிலை யத்துக்கான இடத்தை திங்களன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங் கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர்கள் கூறுகையில், கடந்த ஆண்டு 2019 பிப். 28 ஆம் தேதியன்று ரூ 1,652 கோடியில் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்கு தமிழக முதல்வர் அடிக் கல் நாட்டினார். ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களை நிரப்பும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் நோக்கம், பவானி ஆற்றின் உபரி நீரின் ஒரு பகுதியை கொண்டு, நிலத்தடி நீர் மட்டம் உயர்த் துதல், செறிவூட்டல், பாசன பயன்பாட் டுக்கு வழங்குதலாகும். பவானி ஆற்று நீர் கடைசி அணைக்கட்டான காளிங்கராயன் அணைக்கட்டை அடைகிறது. பின், உபரி நீர் காவிரி யில் விடப்படுகிறது. இந்த உபரி நீரான 1.5 டி.எம்.சி தண்ணீரை ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் வறட்சியான பகுதியில் உள்ள, 1,044 குளங்கள், குட்டை, ஏரியை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் காளிங்கராயன் அணைக் கட்டில் இருந்து வெளியேறும் உபரி நீர் மின் உற்பத்திக்கும் பயன்ப டுத்தப்படும். இவ்வாறு அமைச்சர்கள் தெரிவித்தனர். Tags அத்திக்கடவு – அவிநாசி திட்ட முதல் நீரேற்று நிலையம் காளிங்கராயன் அணைக்கட்டில் அமைச்சர்கள் ஆய்வு Similar Posts For You அத்திக்கடவு – அவிநாசி திட்ட முதல் நீரேற்று நிலையம் காளிங்கராயன் அணைக்கட்டில் அமைச்சர்கள் ஆய்வு நமது நிருபர் 1/21/2020 5:30:00 AM சென்னைக்கு மீண்டும் ரெட் அலெர்ட் நமது நிருபர் 11/27/2021 8:23:53 PM சிபிஎஸ்இ தேர்வு நடத்துவது பற்றி பள்ளியே முடிவு செய்யலாம் – சிபிஎஸ்இ நமது நிருபர் 11/27/2021 7:40:32 PM Tags தொடர்புடைய செய்திகள் விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல் நமது நிருபர் டிசம்பர் 1, 2021 ‘பி.1.1.529’ கொரோனா திரிபுக்கு ‘ஓமிக்ரான்’ என பெயரிட்ட உலக சுகாதார நிறுவனம் நமது நிருபர் நவம்பர் 27, 2021 பழனி: பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியர் கைது நமது நிருபர் நவம்பர் 27, 2021 ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் நமது நிருபர் நவம்பர் 27, 2021 சென்னை, காஞ்சிபுரத்தில் கனமழை நமது நிருபர் நவம்பர் 27, 2021 தீக்கதிர் தீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.
காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு வைரலாகும் பதிவுகளில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆட்சியில் இறந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறித்த தகவலும் ஒன்று. 2004-2014 காங்கிரஸ் ஆட்சி…
இணையத்தில் வெளியான அண்ணாத்த... படக்குழுவினர் அதிர்ச்சி || Tamil cinema Annaatthe movie released tamil rockers தலைவாசல் செய்திகள் சினிமா விமர்சனம் முன்னோட்டம் சினிமா செய்திகள் கிசுகிசு நட்சத்திர பக்கம் சினி வரலாறு திரைப்படங்கள் தரவரிசை ஆன்மிகம் ஜோதிடம் ஆரோக்கியம் தொழில்நுட்பம் ஆட்டோமொபைல் உண்மை எது MM Apps ஸ்பெஷல்ஸ் இந்தியா vs நியூசிலாந்து சென்னை 06-12-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764 iFLICKS தொடர்புக்கு: 8754422764 Open in App செய்திகள் சினிமா ஆன்மிகம் ஜோதிடம் ஆரோக்கியம் தொழில்நுட்பம் ஆட்டோமொபைல் உண்மை எது MM Apps ஸ்பெஷல்ஸ் இந்தியா vs நியூசிலாந்து விமர்சனம் முன்னோட்டம் சினிமா செய்திகள் கிசுகிசு நட்சத்திர பக்கம் சினி வரலாறு திரைப்படங்கள் தரவரிசை Home cinema Tamil Cinema News Open in App இணையத்தில் வெளியான அண்ணாத்த... படக்குழுவினர் அதிர்ச்சி பதிவு: நவம்பர் 05, 2021 12:42 IST Share Tweet Comments () அ- அ+ × Email this article to a friend Recipient's Name Recipient's Email ID Your Name Your Email ID Message in details Send சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் அண்ணாத்த திரைப்படம் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அண்ணாத்த சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் அண்ணாத்த திரைப்படம் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை கொடுத்தார்கள். இந்நிலையில் அண்ணாத்த திரைப்படம் வெளியான சில மணி நேரத்திலேயே தமிழ்ராக்கர்ஸ், மூவிரூல்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட இணையதளங்களில் படம் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தை திருட்டு தனமாக இணையத்தில் வெளியிட உயர்நீதி மன்றம் தடை விதித்தது. தற்போது தடையை மீறி இணையத்தில் வெளியாகி இருக்கிறது. Related Tags : அண்ணாத்த | ரஜினி | Annaatthe | Rajini | Rajinikanth தலைவர் 168 - அண்ணாத்த பற்றிய செய்திகள் இதுவரை... சொல்லி அடித்திருக்கிறார் இயக்குனர் சிவா - ரஜினி புகழாரம் நவம்பர் 15, 2021 19:11 மீண்டும் இணையும் ‘அண்ணாத்த’ கூட்டணி? நவம்பர் 09, 2021 08:11 ‘அண்ணாத்த’ படத்தை தேசத்துரோக ரேஞ்சுக்கு விமர்சனம் செய்வது வேதனையாக இருக்கிறது - பேரரசு நவம்பர் 08, 2021 07:11 அண்ணாத்த படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? நவம்பர் 06, 2021 14:11 வெளிநாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் ‘அண்ணாத்த’ நவம்பர் 02, 2021 18:11 மேலும் தலைவர் 168 - அண்ணாத்த பற்றிய செய்திகள் Share Tweet Comments () அ- அ+ × Email this article to a friend Recipient's Name Recipient's Email ID Your Name Your Email ID Message in details Send மேலும் சினிமா செய்திகள் குடும்பங்கள் கொண்டாடும் கதையில் சரத்குமார்- சுஹாசினி நான் மிகமிக துணிச்சலான பெண்: நடிகை சோனியா அகர்வால் பிரபல இயக்குனர் படத்தில் கதை நாயகனாக நடிக்கும் செல்வராகவன் திரில்லர் படத்தில் நடிக்கும் நான்கு கதாநாயகிகள் தங்க மீன்கள் சாதனாவின் நடனத்திற்கு குவியும் பாராட்டுகள் தொடர்புடைய செய்திகள் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குபவர் இவரா? சசிகுமாருக்கு அறிவுரை சொன்ன ரஜினி சொல்லி அடித்திருக்கிறார் இயக்குனர் சிவா - ரஜினி புகழாரம் ‘அண்ணாத்த’ படத்தை தேசத்துரோக ரேஞ்சுக்கு விமர்சனம் செய்வது வேதனையாக இருக்கிறது - பேரரசு அண்ணாத்த படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளிநாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் ‘அண்ணாத்த’ அதிகம் வாசிக்கப்பட்டவை தங்க மீன்கள் சாதனாவின் நடனத்திற்கு குவியும் பாராட்டுகள் கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் பிரபாஸின் ராதே ஷியாம் படத்திலிருந்து வெளியான காதல் கீதம் திரில்லர் படத்தில் நடிக்கும் நான்கு கதாநாயகிகள் பிரபல இயக்குனர் படத்தில் கதை நாயகனாக நடிக்கும் செல்வராகவன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கிய கமல் Follow @MaalaiMalar Tweets by @maalaimalar Top Tamil News Breaking News India News World News Tamilnadu News District News Sports News Puducherry News Sirappu Katturaigal Tamil Cinema Tamil Cinema Review Tamil Cinema Preview Tamil Cinema News Tamil Cinema Gossip Star Profiles History of Tamil Cinema Tamil Movies Top Tamil Movies Spirituality Dosha pariharangal Virathangal Weekly Special Slogans Temples Worship Thirupaavai Islam Christianity Wellbeing Fitness and Yoga Home Remedies Health Food Recipe Child care Tips Natural Beauty Tips Medicine for Womens Safety Tips for Women Cookery Receipes Latest Technology Latest Tech News Latest Mobile Tabs & Computers Latest Gadgets Tech Tips Automobile Automobile News Bike Car News New Launch Auto Tips/Leaks Specials T20 WorldCup World Test Championship Tokyo Olympics India vs England TNPL Cricket IPL 2021 India vs New Zealand மற்றவை ஜோதிடம் உண்மை எது MM Apps இந்தியா vs நியூசிலாந்து தேர்தல் 2016 What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | Astrology in Tamil. Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World. You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India. Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these. We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc. Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tiruppur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil. Others Other than News and Entertainment in Tamil we also provide astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc. We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers. If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format. To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store Download Our Apps தனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள் வலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய காப்புரிமை 2021, © Malar Publications (P) Ltd. Powered by Vishwak | <") != ' ') { $('body').append(''); $('#promoad').append(ad); $('#promoad').slideDown('10000'); setTimeout(function () { $('#promoad').slideUp('10000'); }, 18000); } } function PutRoadBlockAd(ad) { if (ad != undefined && ad != null && ad.trim() != '' && ad.replace(/>\s+<") != ' ') { var width = $(window).width(); var wid; (width > 700) ? wid = "90%" : wid = "100%"; $('body').append(''); $('body').append(' CLOSE X ' + ad + ' '); $('#roadBlockAddModal').modal('show'); $('#roadBlockAddModal').on('shown.bs.modal', function () { setTimeout(function () { $('#roadBlockAddModal').modal('hide'); }, 10000); }); } }
Premika (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:43, 22 மார்ச் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{பத்திரிகை| நூலக எண் = 26929 | ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) (வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு) தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக வலம்புரி 2000.06.29 நூலக எண் 26929 வெளியீடு 2000.06.29 சுழற்சி நாளிதழ் மொழி தமிழ் பக்கங்கள் 4 வாசிக்க வலம்புரி 2000.06.29 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி நூல்கள் [11,879] இதழ்கள் [13,498] பத்திரிகைகள் [53,802] பிரசுரங்கள் [1,193] நினைவு மலர்கள் [1,526] சிறப்பு மலர்கள் [5,638] எழுத்தாளர்கள் [4,921] பதிப்பாளர்கள் [4,233] வெளியீட்டு ஆண்டு [187] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,707] வாழ்க்கை வரலாறுகள் [3,164] உங்கள் பங்களிப்புகளுக்கு "https://noolaham.org/wiki/index.php?title=வலம்புரி_2000.06.29&oldid=226533" இருந்து மீள்விக்கப்பட்டது
"https://ta.wikinews.org/w/index.php?title=விக்கிசெய்தி:2018/ஏப்ரல்/2&oldid=47672" இருந்து மீள்விக்கப்பட்டது
சி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments 1 அரசியலிலோ , சினிமாவிலோ யாரோ ஒரு முக்கியப்புள்ளியுடன் எடுத்த புகைப்படங்களை தற்பெருமைக்காக காட்டுவது ஒரு வித தாழ்வுமனப்பான்மையை காட்டுவதே ============= 2 கலைஞரின் சாணக்கியத்தனம் எடுபடாமல் போன ஒரே நபர் எம் ஜி"யார் . அதே எம் ஜி யார் ஆளுமை ஜெயிக்கமுடியாத நபர் ஜெ.அப்பேர்ப்பட்ட ஜெ வால் தவிர்க்க முடியாத நபர் சசிகலா.சசிகலாவை ஆட்டுவித்தவர் நடராஜன் ============= 3 பழ வகைகளில் எட்டப்பர்கள் பலாச்சுளையும்",கொய்யாப்பழமும்.வீடடில் எங்கே மறைத்து வைத்தாலும் வாசம் காட்டிக்கொடுத்து விடும் =========== 4 எதிர்காலத்துல பொண்ணுங்க வீட்டு பீரோக்கள்ல பிறந்த வீட்டு சீதன புடவைகள் புகுந்த வீட்டு புடவைகள் FB பாலோயர்ஸ் பரிசா"தந்த புடவைகள் னு ஒதுக்குவாங்க போல ========== 5 நெட் தமிழன் பாலோயர்ஸ்க்கு பட்டுப்புடவையா அனுப்பிட்டே இருக்காப்டியே?ஏது அவ்ளோ"காசு?ஜவுளிக்கடை ஆண்ட்டியை கரெக்ட் பண்ணிட்டாப்டியா? ============ 6 முதலாளி ஒரு"கிறிஸ்துவர் என்பதால் தமிழ் நாட்டில் ஆச்சி மசாலா என்ற பிராண்டை தவிர்ப்போம் என்று கூறுபவர்கள் முஸ்லீம் நாட்டிலிருந்து கிடைக்கும் பெட்ரோல்,டீசல் உபயோகப்படுத்த மாட்டார்களா? ======== 7 வெளியூர் அவசியம் செல்ல வேண்டி இருப்போர் பஸ்களை தவிர்த்து ரயிலில் செல்லலாம், அது கூடுதல் பாதுகாப்பு ============== 8 உதய சூரியன் மறைந்த நேரம் சூரிய அஸ்தமனம் 6.10 pm ================= 9 ஜெ இறப்புச்செய்தி வந்த போது அதிமுக தொண்டர்கள் காட்டிய அதே அமைதியை திமுக தொண்டர்களும் காட்டுவார்கள் , பொது மக்களுக்கு, மாநில அமைதிக்கு குந்தகம் விளைவிக்க மாட்டார்கள் என நம்பலாம் ========== 10 பொதுவாக தலைவர்கள் இறப்புச்செய்தியை நள்ளிரவில் 11 அல்லது 12 மணிக்கு அறிவிப்பதே நல்லது, பணி இடத்தில் இருப்போர் பாதுகாப்பாக வீடு திரும்ப கால அவகாசம் தேவை =============== 11 வழக்கமாக கருணாநிதி எனவே உச்சரிக்கும் சன் டி வி இப்போது பொறுப்பாக கலைஞர் காலமானார் என மரியாதையாக அறிவித்திருப்பது நல்ல மாற்றம் ============ 12 ஜெ , கலைஞர் இருவரின் மரணச்செய்தியுமே திடீர் என வராமல் தொண்டர்களை ஒரு வித தயார் நிலைக்கு வர வைத்து பின் வ்ந்தது மாநில அமைதிக்கு நல்ல விஷயம் ============== 13 ஈரோடு −அரசு,தனியார் பஸ்கள் ஓடவில்லை ,மாலை 7 மணியிலிருந்து நிறுத்தம்,ரயில் நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம்.வரிசையில் நின்று டிக்கெட் எடுக்க முடியாதோர் அருகாமை நெட் செண்ட்டரில் எடுக்கலாம் =========== 14 சட்டப்படி மெரீனாவில்"இடம்"ஒதுக்க வழி இல்லை,ஆனால் தார்மீக முறைப்படி இடம் தரலாம்.தீர்ப்பு கிட்டத்தட்ட இந்த பார்மட்டில் வரும் ============ 15 கோர்ட்"தீர்ப்பு திமுக வுக்கு சாதகம்,இதை இவங்களா தந்திருந்தா நல்ல பேராவது மிஞ்சி இருக்கும் ============= 16 Sun Music, KTV , Adithya TV, சிரிப்பொலி போன்ற தொலைக்காட்சிகளில் தங்கு தடையின்றி விளம்பரங்களோடு வழக்கமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. *துக்கத்தில்* கடைகளை மூடியுள்ள வியாபார நண்பர்களுக்கு நன்றி.. #WhatsApp frwrd ============= 17 தலைவர்களின் இறுதிப்பயணத்தில் ரெக்கார்டான கூட்டம் இதுவரை அறிஞர்"அண்ணாவுக்கு (1.5 கோடிக்கு மேல் தோராயமாக) எம்ஜியார் அந்த எண்ணிக்கையை எட்டமுடியவில்லை என்றாலும் 1 கோடி தாண்டினார் கலைஞர் 3 வது இடம் ============= 18 கலைஞர் இறந்த துக்கத்தில் நிஜமான சோகமுகம் காட்டியவர்களில் (ரத்த சம்பந்தம் அல்லாத)முக்கியமானோர் 1 விஜயகாந்த் 2 வைரமுத்து 3 அன்பழகன் க ரத்த சொந்தத்தில் ஒப்பனையுடன் வந்து தொண்டர்களை முகம் மாற"வைத்தவர்கள் ஸ்டாலின் கனிமொழி அழகிரி ================ 19 திமுக உடன்பிறப்புகளில் பலரும்"ஆன் லைன்"போராளிகளாகவே கடந்த 2 தினங்களாக ட்வீட்டினர்.நேரில் அஞ்சலி செலுத்த 10% பேர் கூட சென்னை செல்லவில்லை (எம்ஜியார் வாக்குவங்கிக்கும் கலைஞர் வாக்கு வங்கிக்கும் இதுதான் வித்தியாசம்) கிராமம் vs நகரம் ============ 20 அதிமுக போல் திமுக வுக்கு எப்போதும் ,எந்த சூழலிலும் அனுதாப வாக்கு வங்கி"உருவானதில்லை,ஆனால்"கலைஞரின் இறுதிக்கட்டத்தில் ஸ்டாலின் கடைப்பிடித்த மூவ்கள்,அவரது உணர்வு,நல்ல மகனாக நடந்தது அனைத்தும் நடுநிலை வாக்காளர்களை"கவரும். ========== Tweet Newer Post Older Post Home 0 comments: Post a Comment Follow @writer_cps Followers Featured Post மின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள் வே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...
Nanayam Vikatan - 03 January 2021 - பங்குச் சந்தை 2020... எதிர்பாராத ஏற்றம் இனியும் தொடருமா? - முதலீட்டாளர்கள் இனி என்ன செய்யலாம்? | Stock market 2020 Will the unexpected uptick continue? What can investors do now? - Vikatan Save the vikatan web app to Home Screen tap on Add to home screen. X READ IN APP Login செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் விளையாட்டு கிரிக்கெட் கால்பந்து ஐ.பி.எல் ஆன்லைன் தொடர்கள் New My News ராசி காலண்டர் மேலும் மெனுவில் Search நாணயம் விகடன் நடப்பு இந்தியப் பொருளாதாரம் 2020: கொரோனா தாக்குதலும் அரசின் மீட்பு நடவடிக்கைகளும்..! தங்க நகை... அவசரத் தேவைக்கு விற்பதா, அடமானம் வைப்பதா? - எது பெஸ்ட்? தொடர்ந்து நடைபெறும் வங்கி மோசடிகள்! - அதிகரிக்கும் வாராக்கடன் சிக்கல்! ஆதாயத்தை அள்ளிக் கொடுத்த குளோபல் ஃபண்டுகள்! - 2020-ல் முதலீட்டு லாபம்... ரியல் எஸ்டேட் 2020: சொந்த வீட்டின் முக்கியத்துவத்தை உணரவைத்த கோவிட்-19 சரியான மருத்துவக் காப்பீட்டு பாலிசி எது? - பதில் சொல்கிறார் எஸ்.பி.ஐ நிபுணர்... விற்பனைக் குழுவின் வெற்றிக்கு வித்திடும் உத்திகள்..! - சூப்பர் சேல்ஸ் மேனேஜருக்கான டிப்ஸ் கூலர் பாக்ஸ் உற்பத்தியில் கலக்கும் பேராவூரணி! - கோடிக்கணக்கில் நடைபெறும் வியாபாரம்... என்.எஃப்.ஓ-வில் முதலீடு செய்யலாமா? - விழிப்புணர்வுக் கூட்டத்தில் விளக்கம் தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசி... 2021 ஏப்ரல் 1 முதல்..! - என்னென்ன அம்சங்கள்..? சந்தைக்குப் புதுசு : ஆண்டுக்கு 9.25% - 10.25% வட்டி தரும் என்.சி.டி..! பிசினஸ் 2020: சாதித்த முகேஷ் அம்பானி... மோதிய டாடா - மிஸ்திரி! பழைமை முதல் புதுமை வரை… புதுச்சேரி சந்தை! - எல்லா பொருள்களும் இங்கே..! ஃபார்ம் 26 ஏ.எஸ்... வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஏன் அவசியம்? - அறிய வேண்டிய முக்கிய அம்சங்கள்... ஆசிரியர் பக்கம் நம்பிக்கையுடன் புத்தாண்டை வரவேற்போம்! தொடர்கள் நெருக்கும் கடன்... நிரந்தரத் தீர்வு! - 4 - நிம்மதியைப் பறித்த வருமானத்துக்கு மீறிய கடன்..! மியூச்சுவல் ஃபண்ட் மியூச்சுவல் ஃபண்ட் 2020... துணிந்தவர்கள் ஜெயித்தனர், ஒதுங்கியவர்கள் இழந்தனர்! மியூச்சுவல் ஃபண்ட் என்.ஏ.வி... புதிய மாற்றங்கள்..! - முதலீட்டாளர்கள் அறிய வேண்டியவை... மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... தமிழ்நாட்டின் பங்களிப்பு எப்படி? - கடன் ஃபண்டுகளில் முதலீடு 59% பங்குச் சந்தை ஷேர்லக் : புத்தாண்டில் முதலீட்டுக்கு கவனிக்க வேண்டிய பங்குகள்..! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு... பங்குச் சந்தை 2020... எதிர்பாராத ஏற்றம் இனியும் தொடருமா? - முதலீட்டாளர்கள் இனி என்ன செய்யலாம்? எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்! - அறிவோம் பங்கு நிறுவனம்..! பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு! கேள்வி-பதில் ஐ.பி.ஓ வெளியீடு... விலையை எப்படி நிர்ணயம் செய்கிறார்கள்? கேள்வி - பதில் : வருமான வரியைச் சேமிக்க இரண்டாவது வீட்டுக் கடன் வாங்குவது சரியா? அறிவிப்பு ஹலோ வாசகர்களே... Published: 26 Dec 2020 5 AM Updated: 26 Dec 2020 5 AM பங்குச் சந்தை 2020... எதிர்பாராத ஏற்றம் இனியும் தொடருமா? - முதலீட்டாளர்கள் இனி என்ன செய்யலாம்? நாணயம் விகடன் டீம் ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் Use App பங்குச் சந்தை SHARE MARKET 2020 உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் பிரீமியம் ஸ்டோரி இந்த 2020-ம் ஆண்டில் நாம் எல்லோரும் வியக்கும்படி வரலாற்று உச்சத்தைத் தொட்ட பங்குச் சந்தை, தற்போது ஏற்ற இறக்கத்தில் இருக்கிறது. இதற்குக் காரணம், தொடர்ந்து எட்டு வாரங்களாக சந்தை உயர்ந்ததுதான். பெரும் பாலானவர்கள் சந்தை இறங்கும் என்று கணித்தாலும் சந்தை உயர்ந்து கொண்டுதான் வந்தது. தற்போது வைரஸ் உருமாறி இருப்பதாலும், இதன் பரவும் வேகம் அதிகரித்திருப்பதாலும், இங்கி லாந்தில் ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டிருப்பதால் மீண்டும் மக்களிடையே அச்சம் உருவாகியிருக்கிறது. இதனால் சந்தையில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் இந்த ஆண்டில் பங்குச் சந்தையில் நடந்த முக்கியமான நிகழ்வுகளைப் பார்ப்போம். எப்படி இருந்தது பங்குச் சந்தை? இந்த ஆண்டின் தொடக்கத்தில் சந்தையில் உற்சாகம் இருந்தது. முக்கிய குறியீடுகள் உயர்ந்து கொண்டே இருந்தன. ஜனவரி 20-ம் தேதி அப்போதைய நிலவரப்படி 12430 புள்ளி என்னும் புதிய உச்சத்தை நிஃப்டி தொட்டது. இந்தச் சமயத்தில் வெளிநாட்டிலிருந்து கேரளா வந்த ஒருவருக்கு வைரஸ் தாக்கம் கண்டு பிடிக்கப்பட்டது. வி.விஜயகுமார் நிறுவனர், zebuetrade.com இதைத் தொடர்ந்து படிப்படியாக நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருந்தது. இதனால் ஏற்றத்தில் இருந்த இந்தியப் பங்குச் சந்தை சரியத் தொடங்கியது. மார்ச் 24-ம் தேதி 7511 என்னும் அளவுக்கு நிஃப்டி சரிந்தது. 46 வர்த்தக நாளில் 40% அளவுக்கு நிஃப்டி சரிந்தது. இந்தச் சமயத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதனால் ஒட்டு மொத்த பொருளா தாரமும் பாதிக்கப் படக்கூடும் என்னும் அச்சம் அனைவரிடத்திலும் எழுந்தது. பங்குச் சந்தை கடுமையாகச் சரிந்திருந்த சூழலில் பொருளா தாரத்திலும் முடக்கம் ஏற்பட்டதால் பங்குச் சந்தை மேலும் சரியக்கூடும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். இதற்கு ஏற்ப ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அந்நிய முதலீடு தொடர்ந்து வெளியேறிவந்தது. உயர்ந்த தங்கம்... ஆனால், சந்தை வேறுவிதமாக ரியாக்ட் செய்தது. இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பல நாடுகளில் கடுமையான கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் முதலீடு செய்வதற்கு ஏதுவான சந்தை சர்வதேச அளவில் குறைவாகவே இருந்தது. அதனால் இங்கிருந்து வெளியேறி அந்நிய முதலீடு மீண்டும் வந்தது. மே மாதத்திலிருந்து தற்போதுவரை தொடர்ந்து நிகர முதலீடு இருந்து வருகிறது. (செப்டம்பரில் அந்நிய முதலிடு வெளியேறியது) சந்தையில் முதலீடு செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை; மற்றும் சர்வதேச அளவில் நிச்சயமற்ற சூழல் நிலவியதால் தங்கத்தின் விலையும் கடுமையாக உயர்ந்தது. ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் புதிய உச்சத்தைத் தொட்டது. (ஒரு அவுன்ஸ் தங்கம் 2,034 டாலர்) மார்ச் மாதத் திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை தொடந்து உயர்ந்த தங்கம் தற்போது கொஞ்சம் குறைய தொடங்கி யிருக்கிறது. இறக்கத்தில் கச்சா எண்ணெய் விலை... கமாடிட்டி சந்தையில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மதிப்பு இருக்கும். அந்த மதிப்புக்குக் கீழ் சரிவு ஏற்படாது என்பது பல முதலீட்டாளர்களின் நம்பிக்கை. ஆனால், அந்த நம்பிக்கை இந்த ஆண்டு உடைந்தது. வீட்டிலிருந்தே வேலை, வெளியே செல்ல கடும் கட்டுப்பாடுகள், விமான பயணங்கள் ரத்து என சர்வதேச அளவில் விதிமுறைகள் இருந்ததால் போக்குவரத்துக்கான தேவை குறைந்தது. பொருளாதார மந்த நிலை ஏற்படும் என்னும் அச்சத்தால் கச்சா எண்ணெய் தேவை குறையும் என முதலீட்டாளர்கள் கருதினார்கள். அதனால் கச்சா எண்ணெய் தொடர் சரிவில் இருந்தது. உச்சபட்சமாக ஏப்ரல் 20-ம் தேதி கச்சா எண்ணெய் எதிர் மறையில் சென்றது. புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் வாங்குபவர்களுக்கு பணம் கொடுத்தது எனச் சொல்லலாம். அப்போது இந்தியாவில் ஊரடங்கு விதிமுறைகள் இருந்தன. பங்குச் சந்தையின் நேர வர்த்தகத்துக்கும் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டன. இரவு வரை நீடிக்கும் கமாடிட்டி சந்தை மாலை 5 மணிக்கு முடிக்கப்பட்டது. சர்வதேச அளவில் நடக்கும் கமாடிட்டி வர்த்த கத்தில் இந்திய முதலீட்டாளர்கள் பங்கேற்க முடி யவில்லை. அதனால் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் வைத்திருக்கும் பொசிஷனை வாடிக்கை யாளர்களாலும் மாற்றியமைக்க முடியவில்லை. ஒருவேளை வர்த்தகம் நடந்திருக்கும் பட்சத்தில் புரோக்கிங் நிறுவனங்கள் ஸ்கோயர் ஆப் செய்திருக்கும். எதுவும் செய்ய முடியாத தால் பல முதலீட் டாளர்கள் பெரிய தொகையை இழந்து சந்தையிலிருந்து வெளியேறினார்கள். கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் புதிதாக சந்தைக்கு முதலீடு செய்ய வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது..! முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்த தால் அவர்களால் புரோக்கிங் நிறுவனங் களுக்கு பணம் செலுத்த முடியவில்லை. ஆனால், அந்த ஒப்பந்தத்துக்கு (கச்சா எண்ணெய்) புரோக்கிங் நிறுவனங்கள் பணம் செலுத்தும் சூழலுக்குத் தள்ளப் பட்டார்கள். சில புரோக்கிங் நிறுவனங் களுக்கு இந்த ஒரு நாள் வர்த்தகத்தில் சில கோடிகள் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதே காலத்தில் அமெரிக்க முதலீட்டாளரான வாரன் பஃபெட், விமான நிறுவனங்களில் வைத்திருந்த பங்குகளை முழுமை யாக விற்றார். மீண்டும் உயர்ந்த சந்தை... வீட்டிலிருந்தே வேலை செய்வது என்பது புது வாழ்வியல் முறையாக மாறியது. சில துறை களுக்கு இது வரம். பல துறை களுக்கு இது சாபம். இந்தச் சூழலில் சர்வதேச அளவில் வேலை இழப்புகள், சம்பள குறைப்புகள் நடந்தன. இதனால் சர்வதேச அளவில் பல அரசுகள் ஊக்க நடவடிக்கையை எடுத்தன. பல நாடுகளில் பல பில்லியன் டாலர் அளவுக்கு ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டது. சர்வதேச அளவில் பல நாடுகளின் வட்டி விகிதமும் குறைவாகவே இருந்தது. அடுத்ததாக மக்களின் செலவழிக்கும் பழக்கத்தில் மாற்றம் இருந்து. அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே செலவு செய்தனர். அதனால் உபரித் தொகை பெரும்பாலானவர் களிடம் இருந்தது. தவிர அவர்களிடம் நிறைய நேரமும் இருந்ததால் பங்குச் சந்தை முதலீட்டைக் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தினார்கள். இதுபோன்ற நபர்களிடம் உள்ள உபரி பணம் பங்குச் சந்தைக்கு முதலீடாக வந்தது. புதிய இளம் வயது முதலீட்டாளர்கள்... மேலும், பல புதிய இளம் வயது முதலீட்டாளர்கள் ஏப்ரல் மாதத் துக்குப் பிறகு, முதலீட்டைத் தொடங்கினார்கள். ஒவ்வொரு மாதமும் புதிதாக சந்தைக்கு முதலீடு செய்ய வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா விலும் இது போன்ற முதலீட் டாளர்கள் (ராபின்வுட் முதலீட் டாளர்கள் என அழைக் கிறார்கள்) உயர்ந்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 30 லட்சம் முதலீட்டாளர்கள் அமெரிக் காவில் முதலீட்டைத் தொடங்கி யிருக்கிறார்கள். இதே காலத்தில், தடுப்பூசி தொடர்பாக நம்பிக்கை அளிக்கும் தகவல்களும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. வைரஸ் பாதிப்புகள் குறையத் தொடங்கின. இது போல, பல காரணங்களால் மார்ச் மாதம் 7511 புள்ளிகள் என்ற அளவுக்கு சரிந்த நிஃப்டி, டிசம்பரில் 13777 என்னும் அளவுக்கு உயர்ந்தது. ஐ.பி.ஓ-களின் காலம்... நிதி திரட்ட வேண்டும் எனத் திட்டமிட்ட நிறுவனங்கள் பங்குச் சந்தையின் ஏற்றத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டன. இந்த ஆண்டு இதுவரை 13 நிறுவனங்களின் ஐ.பி.ஓ வெளியாகியிருக்கிறது. ரூ.26,186 கோடி அளவுக்கு நிதி திரட்டி இருக்கின்றன. பெரும்பாலான நிறுவனங் களின் ஐ.பி.ஓ-வுக்கு முதலீட் டாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு இருந்தது. பர்கர் கிங், கெம்காம், மசகன் டாக், ஹாப்பியஸ்ட் மைண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் ஐ.பி.ஓ-வுக்கு 100 மடங்குக்கு மேல் விண்ணப்பங்கள் குவிந்தன. ஒரு சிலவற்றைத் தவிர பெரும் பாலான ஐ.பி.ஓ-க்கள் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்தன. 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2020-ம் ஆண்டு வெளியான ஐ.பி.ஓ-க்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதனால் மேலும் பல நிறுவனங்கள் ஐ.பி.ஓ வெளியிடத் தயாராகின. அடுத்தாண்டு ஐ.பி.ஓ-வுக்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்பதை சந்தையின் போக்கை வைத்துதான் நிறுவனங்கள் தீர்மானிக்கும். செபியின் அதிரடி... முதலீட்டாளர்கள் நலனை பாதுகாக்கும் நடவடிக்கையை செபி தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்த ஆண்டும் அந்த நடவடிக்கையைத் தொடர்ந்தது. பங்குகள் அடமானம் மற்றும் மார்ஜின் தொடர்பாகப் புதிய விதிமுறையைக் கொண்டு வந்தது. அதாவது வாடிக்கையளர் டீமேட் கணக்கில் இருக்கும் பங்குகள் அவர் வசம் மட்டுமே இருக்கும். பங்குகளை விற்கும்போது மட்டுமே வெளியேறும். முன்பு மார்ஜின் தேவை களுக்கு பங்குகளை அடமானத்தில் வைத்தால், பங்குகளின் உரிமத்தையே மாற்றிக் கொடுக்க வேண்டிய சூழல் இருந்தது. ஆனால், இப்போது பங்குகளை அடமானத்தில் வைக்கும்போது உங்கள் கணக்கில்தான் அந்த பங்கு இருக்கும். உங்களிடம் இருக்கும் தொகைக்கு ஏற்பவே வர்த்தகத்தின் அளவும் இருக்க வேண்டும் என்பதுதான் மார்ஜின் விதிமுறையின் சாரம்சம். புரோக்கிங் மட்டுமல்லாமல், பி.எம்.எஸ், மியூச்சுவல் ஃபண்ட் என பங்குச் சந்தை சார்ந்த அனைத்து இடங்களிலும் செபி பல முன்னெடுப்புகளைச் செய்தது. ஒட்டுமொத்தமாக, 2020-ம் ஆண்டு சிறப்பாக இருந்த மிகச் சில துறைகளில் பங்குச் சந்தையும் ஒன்று. இதே அளவுக்கான லாபம் அடுத்தாண்டு கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம். உணர்வுகளைத் தவிர்த்து முதலீடு செய்தால் நிச்சயம் லாபம் கிடைக்கும். மார்ச் மாதத்தில் இனி உலகம் அவ்வளவு தான் என நினைப்பதும் தவறு, டிசம்பரில் இனி எல்லாம் ஏற்றமே என நினைப்பதும் தவறு. பிட்ஸ் மூலதனம் இல்லாமல் தவிக்கும் பஞ்சாப் & சிந்த் வங்கிக்காக ரூ.5,500 கோடிக்கு வட்டி எதுவும் இல்லாத ஜீரோ கூப்பனை வெளியிட மத்திய அரசாங்கம் முடிவு செய்து உள்ளது. இந்த ஜீரோ கூப்பன் வெளியிடுவது இதுவே முதல் முறை ஆகும்!
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : இஸ்லாமிய வாரிசுரிமை சட்டங்கள் ஆசிரியர் : M.முஹம்மத் யூசுப் மிஸ்பாஹி பதிப்பகம் : சாஜிதா புக் சென்டர் நூல் பிரிவு : IF - 01 - 1647 நூல் அறிமுகம் இஸ்லாத்தில் வாரிசுரிமை சட்டங்கள் விளக்கப்பட்டு இருப்பது போன்று வேற இந்த மதங்களிலும் விளக்கப்படவில்லை.வாரிசுகளுக்கு உரிய உரிமைகளை வழங்குவதில் இஸ்லாம் காட்டுகின்ற ... Read More May 30, 2018anjuman arivagam 10 Mar2018 ஃபிக்ஹுஸ் ஸுன்னா ஏழாம் பாகம் 0 0 March 10, 2018 நூல்கள் அறிவோம் நூல் பெயர் : ஃபிக்ஹுஸ் ஸுன்னா ஏழாம் பாகம் ஆசிரியர் : அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக் பதிப்பகம் : இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் நூல் பிரிவு : IF - 01 - 1151 நூல் அறிமுகம் இந்நூல் அறிமுகம் இதன் முதலாம் பாகத்திற்கான பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏழாம் பாகமான இந்நூலின் பொருளடக்கம் 1. மணவிலக்கு (தலாக்) 2. மணவிலக்கின் முறை 3. மணவிலக்கின் சாட்சி 4. மணவிலக்கு ... Read More March 10, 2018anjuman arivagam 10 Mar2018 ஃபிக்ஹுஸ் ஸுன்னா ஆறாம் பாகம் 0 0 March 10, 2018 நூல்கள் அறிவோம் நூல் பெயர் : ஃபிக்ஹுஸ் ஸுன்னா ஆறாம் பாகம் ஆசிரியர் : அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக் பதிப்பகம் : இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் நூல் பிரிவு : IF - 01 - 1152 நூல் அறிமுகம் இந்நூல் அறிமுகம் இதன் முதலாம் பாகத்திற்கான பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆறாம் பாகமான இந்நூலின் பொருளடக்கம் 1. திருமணம் 2. திருமண நுட்பம் 3. திருமணத்தின் சட்டமுறைமை 4. மணமகள் தேர்வு 5. ... Read More March 10, 2018anjuman arivagam 10 Mar2018 ஃபிக்ஹுஸ் ஸுன்னா ஐந்தாம் பாகம் 0 0 March 10, 2018 நூல்கள் அறிவோம் நூல் பெயர் : ஃபிக்ஹுஸ் ஸுன்னா ஐந்தாம் பாகம் ஆசிரியர் : அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக் பதிப்பகம் : இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் நூல் பிரிவு : IF - 01 - 1153 நூல் அறிமுகம் இந்நூல் அறிமுகம் இதன் முதலாம் பாகத்திற்கான பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்தாம் பாகமான இந்நூலின் ... Read More March 10, 2018anjuman arivagam 10 Mar2018 ஃபிக்ஹுஸ் ஸுன்னா நான்காம் பாகம் 0 0 March 10, 2018 நூல்கள் அறிவோம் நூல் பெயர் : ஃபிக்ஹுஸ் ஸுன்னா நான்காம் பாகம் ஆசிரியர் : அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக் பதிப்பகம் : இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் நூல் பிரிவு : IF - 01 - 1154 நூல் அறிமுகம் இந்நூல் அறிமுகம் இதன் முதலாம் பாகத்திற்கான பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நான்காம் பாகமான இந்நூலின் பொருளடக்கம் 1. ஜனாஸா 2. நோயும் சிகிச்சையும் 3. மரண வேளையில் கவனிக்க வேண்டிய ... Read More March 10, 2018anjuman arivagam 08 Mar2018 ஃபிக்ஹுஸ் ஸுன்னா மூன்றாம் பாகம் 0 0 March 8, 2018 நூல்கள் அறிவோம் நூல் பெயர் : ஃபிக்ஹுஸ் ஸுன்னா மூன்றாம் பாகம் ஆசிரியர் : அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக் பதிப்பகம் : இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் நூல் பிரிவு : IF - 01 - 1155 நூல் அறிமுகம் இந்நூல் அறிமுகம் இதன் முதலாம் பாகத்திற்கான பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் பாகமான இந்நூலின் பொருளடக்கம் 1. ஜகாத் 2. தங்கமும் வெள்ளியும் 3. வியாபாரப் பொருள்களுக்கான ஜகாத் 4. விவசாய ... Read More March 8, 2018anjuman arivagam 06 Mar2018 ஃபிக்ஹுஸ் ஸுன்னா இரண்டாம் பாகம் 0 0 March 6, 2018 நூல்கள் அறிவோம் நூல் பெயர் : ஃபிக்ஹுஸ் ஸுன்னா இரண்டாம் பாகம் ஆசிரியர் : அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக் பதிப்பகம் : இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் நூல் பிரிவு : IF - 01 - 1156 நூல் அறிமுகம் இந்நூல் அறிமுகம் இதன் முதலாம் பாகத்திற்கான பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாம் பாகமான இந்நூலின் ... Read More March 6, 2018anjuman arivagam 06 Mar2018 ஃபிக்ஹுஸ் ஸுன்னா முதல் பாகம் 0 3 March 6, 2018 நூல்கள் அறிவோம் நூல் பெயர் : ஃபிக்ஹுஸ் ஸுன்னா முதல் பாகம் ஆசிரியர் : அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக் பதிப்பகம் : இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் நூல் பிரிவு : IF - 01 நூல் அறிமுகம் ‘இஸ்லாமியச் சட்டத் துறை என்றாலே அது மெத்தப்படித்த அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் உரியது; எளியோருக்கும் இஸ்லாமியச் சட்டங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ எனும் ‘இரும்புச் சுவர்’ சூழல்தான் ... Read More
ரெசிடென்ட் ஈவில் 3 ரீமேக் அதன் முன்னோடிகளை விட அதிரடி சார்ந்ததாக இருக்கலாம், ஆனால் ரக்கூன் நகரத்தில் இன்னும் புதிர் தீர்க்கும் விஷயங்கள் உள்ளன. குடியுரிமை ஈவில் 3 அதன் முன்னோடியுடன் ஒப்பிடும்போது இது மிகவும் நடவடிக்கை சார்ந்த விவகாரமாக இருக்கலாம், ஆனால் இதன் பொருள் என்னவென்றால், அனைத்து முக்கியமான சாம்பல் நிற விஷயங்களையும் பயன்படுத்தாமல் நீங்கள் ரக்கூன் நகரத்திலிருந்து தப்பிக்க முடியும். சிம்மாசனத்தின் விளையாட்டு 10 ஸ்பாய்லர்கள் ரீமேக்கின் முன்னுரையை நீங்கள் முடித்துவிட்டு, சுரங்கப்பாதையை அடைந்ததும், உங்கள் முதல் பணி (மரியாதைக்குரிய கார்லோஸ் ஒலிவேராவால் வழங்கப்பட்டது) போக்குவரத்து நெட்வொர்க்கின் சக்தியை தப்பிப்பதற்கான வழிமுறையாக மீட்டெடுப்பதாகும். அந்த முக்கிய நோக்கம் வியக்கத்தக்க வகையில் நேரடியானது, இருப்பினும் சில முக்கியமான போனஸ் உருப்படிகளை நீங்களே அடித்துக் கொள்ள நிலத்தடியில் இருந்து வெளிவந்தவுடன் தாக்கப்பட்ட பாதையில் இருந்து மாற்றுப்பாதையை எடுக்க விரும்புகிறீர்கள். கூறப்பட்ட கொள்ளை சம்பாதிக்க, நீங்கள் தொடங்கும் டவுன்டவுன் பகுதி முழுவதும் சிதறிய மூன்று முக்கிய பொருட்களைக் கண்டுபிடித்து அவற்றை சரியான ஓய்வு இடத்திற்குத் திருப்பித் தர வேண்டும். சிவப்பு, நீலம் மற்றும் பச்சை நகைகளை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதற்கான உதவிக்குறிப்புகளுக்கு கீழே உள்ள இடைவெளியைத் தொடரவும். இணையத்திலிருந்து மேலும் பெரிதாக்க கிளிக் செய்க சிவப்பு நகை பெற எளிதான மற்றும் மிகவும் எளிமையானது: சந்திரனின் டோனட்ஸில் சிவப்பு நகைகளைக் காண்பீர்கள். உணவகத்திற்குள் சென்று மீண்டும் சமையலறை பகுதிக்குச் செல்லுங்கள். உங்கள் முன்னேற்றத்தை சேமிக்க தட்டச்சுப்பொறியையும் அழகாக அலங்கரிக்கப்பட்ட பெட்டியையும் உள்ளே காணலாம். நகை # 1 ஐப் பெற அந்த உறிஞ்சியைத் திறக்கவும். திரிபு அத்தியாயம் 11 சீசன் 3 நீல நகை டவுன்டவுன் பகுதிக்குச் செல்லும்போது இந்த ரத்தினம் கன்வீனியன்ஸ் ஸ்டோருக்குள் இருக்கிறது, இருப்பினும் கதவின் பூட்டை உடைக்க உங்களுக்கு ஒரு ஜோடி போல்ட் கட்டர்கள் தேவை. அனைத்து முக்கியமான கருவியையும் பெற, கைட் பிரதர்ஸ் ரயில்வேக்குச் சென்று தீ குழாய் எடுக்கவும். துணை மின்நிலையத்திற்கு உங்கள் வழியைத் தடுக்கும் தீப்பிழம்புகளைத் தணித்து, அவற்றைப் பெற சேமிக்கும் அறைக்குச் செல்லுங்கள். மீண்டும் கன்வீனியன்ஸ் கடைக்குச் சென்று, பூட்டை உடைத்து ரத்தினத்தைப் பிடுங்கவும். பச்சை நகை நீங்கள் துணை மின்நிலையத்திலிருந்து பூட்டுதலைப் பெற்றவுடன் (இதை நீங்கள் முக்கிய நோக்கத்தின் ஒரு பகுதியாகச் செய்ய வேண்டும்), டவுன்டவுன் பொம்மை கடைக்குத் திரும்பிச் சென்று, ஜில் பூட்டுத் திறனின் முதன்மை ஆசிரியராக தனது திறமைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். கடையின் உள்ளே, பச்சை நகையை வைத்திருக்கும் மற்றொரு பெட்டியைக் காண்பீர்கள். ஃபோர்ட்நைட் சீசன் 8 வாரம் 7 ஏமாற்று தாளை சவால் செய்கிறது மூவரையும் சுரங்கப்பாதையில் உள்ள கைட் பிரதர்ஸ் நினைவுச்சின்னத்திற்கு அழைத்துச் சென்று, ஷாட்கனுக்கு ஒரு தந்திரோபாய பங்கு உட்பட பல சுத்தமாக வெகுமதிகளுக்காக அவற்றை சுவரோவியத்தில் செருகவும். மேலும் குடியுரிமை ஈவில் 3 முதல் நெமஸிஸ் முதலாளி சந்திப்பை எவ்வாறு கையாள்வது என்பது உள்ளிட்ட வழிகாட்டிகள் இங்கே பார்க்கவும். சுவாரசியமான கட்டுரைகள் ஒரு குழந்தையாக கமோராவை தானோஸ் ஏன் கொல்லவில்லை என்று மார்வெல் வெளிப்படுத்துகிறது நகைச்சுவை புத்தகங்கள் டேர்டெவில் ஸ்டார் வின்சென்ட் டி ஓனோஃப்ரியோ கிங்பினாக திரும்புவதற்கான பேச்சுவார்த்தைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சிங்கப்பூர், மாரியம்மன் கோவிலில் வணங்கப்படும் அரவான். பாம்பு வடிவில் உள்ள தலைமறைப்பு அரவானின் தலைக்குப் பாதுகாப்பாக உள்ளது. தேவநாகரி इरावान् சமசுகிருதம் Irāvāṇ வகை நாகர் துணை மோகினி (கிருஷ்ணரின் பெண் வடிவம்) அரவான் இந்து காப்பியமான மகாபாரதத்தில் தோன்றும் ஒரு சிறிய கதாபாத்திரம். இவர் இரவன், இராவத்[1] மற்றும் இராவந்த் என்றும் அறியப்படுகிறார். அரவான் பாண்டவ இளவரசன் அருச்சுனன் (மகாபாரதத்தின் முக்கிய கதாநாயகர்களில் ஒருவர்) மற்றும் நாக இளவரசி உலுப்பி ஆகியோரின் மகன். அரவான் கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் முக்கியக் கடவுளாக உள்ளார். ”கூத்தாண்டவர்” என்பது இந்த வழிபாட்டு மரபில் அரவானுக்கு வழங்கப்படும் பொதுவான பெயர். திரௌபதி வழிபாட்டு மரபிலும் இவர் முக்கியப் பங்கு வகிக்கிறார். இந்த இரண்டு வழிபாட்டு மரபுகளும் தென்னிந்தியாவில் அரவானைக் கிராம தெய்வமாக வழிபடும் பகுதிகளிலிருந்து தோன்றியவை. அரவான், அலி என்று அழைக்கப்படும் திருநங்கைகள் (இவர்கள் தென்னிந்தியாவில் அரவாணி என்றும், தெற்கு ஆசியா முழுவதும் ஹிஜிரா என்றும் அறியப்படுகின்றனர்) சமூகத்தின் காவல் தெய்வமுமாவார்.[2] மகாபாரதக் காப்பியத்தின் முக்கியக் கருப்பொருளான, 18 நாட்கள் நடைபெற்ற குருட்சேத்திரப் போரில் (மகாபாரதப் போர்) அரவான் வீரமரணம் அடைவதாக மகாபாரதம் சித்தரிக்கிறது. போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்குக் காளி அருள் வழங்க வேண்டும் என்பதற்காக அரவான் தன்னையே பலி கொடுத்ததைச் சிறப்பிக்கும் மரபும் தென்னிந்திய சமூகத்தில் உள்ளது. தன்னையே பலி கொடுத்ததற்காகக் கிருஷ்ணர் அரவானுக்கு வழங்கிய மூன்று வரங்களில் ஒன்றே கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் மையமாக உள்ளது. அரவான், தான் இறப்பதற்கு முன்பு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். மோகினி என்ற பெண் வடிவமாக மாறி கிருஷ்ணர் அரவானின் வேண்டுதலை நிறைவேற்றினார். இந்த நிகழ்வு, தமிழ்நாட்டில் உள்ள கூவாகம் என்ற இடத்தில் 18 நாள் திருவிழாவில் நினைவுகூரப்படுகிறது. இதில் முதலில் அரவானை திருநங்கைகளுக்கும் அந்த ஊரைச் சேர்ந்த அவருக்கு நேர்ந்துவிடப்பட்ட ஆண்களுக்கும் திருமணம் செய்து வைக்கின்றனர். அடுத்து அரவான் பலியிடல் நிகழ்த்தப்பட்டபின்னர் அவர்கள் விதவைக் கோலம் கொள்கின்றனர். தனது வெட்டுண்ட தலையில் உள்ள கண்களின் மூலம் மகாபாரதப் போர் முழுவதையும் பார்ப்பதற்குக் கிருஷ்ணர் அரவானுக்கு வழங்கிய மற்றொரு வரத்தைத் திரௌபதி வழிபாட்டு மரபு மையமாகக் கொண்டுள்ளது. மற்றொரு 18 நாள் திருவிழாவில், மகாபாரதப் போரைச் சித்தரிக்கும் சடங்குகளைப் பார்க்கும் வண்ணம் அரவானின் தலை கம்பத்தின் மேல் உயர்த்தி வைக்கப்படும். அலங்காரம் செய்த அரவானின் தலையே திரௌபதி கோவில்களிலுள்ள பொதுவான கடவுள் உருவமாகும். பெரும்பாலும் இந்தத் தலைகள் எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய வகையில் மரத்தால் செய்யப்பட்டவையாக இருக்கும். சிலநேரங்களில் கோவில் வளாகத்தில் இந்தத் தலைக்கு என்று சிறு கோவில் அமைக்கப்பட்டிருக்கும் அல்லது தீய சக்திகளிலிருந்து பாதுகாக்கும் காவலாகக் கோவில் கூரைகளின் மூலையில் அமைக்கப்பட்டிருக்கும். தன் வெட்டுண்ட தலையின் உருவமாகவே அரவான் வணங்கப்படுகிறார். அவர் தீராத நோய்களைக் குணப்படுத்துவதாகவும் குழந்தையில்லாத பெண்களுக்குக் குழந்தைப்பேறு அளிப்பதாகவும் நம்பப்படுகிறது. அரவான் இந்தோனேசியாவிலும் அறியப்படுகிறார் (இங்கு அவரது பெயர் Irawan என்று எழுத்துக்கூட்டப்படுகிறது). சாவகப் பகுதியின் முக்கிய தீவுகளில் உள்ள அரவானுக்கென்று தனிப்பட்ட மரபுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக இவற்றில் நாகருடன் அரவானுக்கு தொடர்பு இல்லை. மேலும் சில சாவக மரபுகளில் அரவானும் கிருஷ்ணரின் மகளாகிய திதிசரியும் திருமணம் செய்துகொள்வதாகவும், தவறாக அடையாளம் காணப்படுவதால் அரவானுக்கு மரணம் நேர்வதாகவும் கருதப்படுகிறது. இந்தக் கதைகள் சாவகத்தின் பாரம்பரிய நாடகக்கலைகளான வயாங் (குறிப்பாக வையாங்க் குளிட் என்ற நிழல்-பொம்மலாட்ட) முறையில் சொல்லப்படுகின்றன. பொருளடக்கம் 1 பெயர் வரலாறு மற்றும் பிற பெயர்கள் 2 உருவ விளக்கம் 3 இலக்கியத்தில் அரவான் 4 மகாபாரதம் 5 தமிழ் மரபுகள் 5.1 பலிக்காகத் தேர்ந்தெடுத்தல் 5.2 மூன்று வரங்கள் 5.3 அரவானிலிருந்து கூத்தாண்டவர் 6 வழிபாடு 6.1 பின்பற்றுவோர் மற்றும் கோவில்கள் 6.2 கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் சடங்குகள் 6.3 திரௌபதி வழிபாட்டு மரபின் சடங்குகள் 7 சாவக மக்களின் மரபுகள் 8 குறிப்புகள் 9 புற இணைப்புகள் பெயர் வரலாறு மற்றும் பிற பெயர்கள்[தொகு] மோனியர் வில்லியம்சின் சமற்கிருதம்-ஆங்கிலம் அகராதி (1899), இரவன் என்ற பெயர் இராவத் (इरावत्, Irāvat) என்ற வேர்ச்சொல்லிருந்து உருவானது என்று குறிப்பிடுகிறது.[3] இராவத் என்ற சொல், இடா (इडा) என்ற வார்த்தையுடன் நெருங்கிய தொடர்புள்ள இரா (इरा) என்ற வார்த்தையிலிருந்து உருவானதாகும். இரா என்ற வார்த்தைக்கு "உணவைக் கொண்டிருத்தல்", "அதிகப்படியான பொருள்களைக் கொண்டிருத்தல்", அல்லது "வசதியாக இருத்தல்" (மகாபாரதம், ரிக் மற்றும் அதர்வ வேத சாத்திரங்களில் பயன்பாடு) என்று பொருள் கொள்ளப்படுகிறது.[4] ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சமயத் துறை[5] பேராசிரியர் ஆல்ஃப் ஹில்டிபைட்டெல் (Alf Hiltebeitel) இரவன் அல்லது இரவந்த் என்ற சமசுகிருதப் பெயர் இடாவந்த் (இடா வைக் கொண்டிருக்கும் ஒருவன்) என்பதிலிருந்து உருவானதாகக் கூறுகிறார். இடா என்ற வார்த்தை, சமய ரீதியாக ஒரு தியாகத்தின் அனைத்து ஆக்கத்தன்மை நிறைந்த நன்மைகளும் (உண்பவர்களுக்குக்) கிடைக்கச் செய்யும் ஓர் உண்ணக்கூடிய பொருளைக் குறிக்கிறது என பிரெஞ்சு இந்தியவியலாளர் மடிலைன் பியார்டூ (Madeleine Biardeau) விளக்குகிறார்.[6] இந்த வரையறையின் அடிப்படையில், இரவன் என்றால் மகாபாரதத்தில் தியாகத்திற்குப் பலியாகும் ஒருவர் என்று பொருளென பியர்டூ கருதுகிறார். வேறு இடங்களில் தேவர்களும் அசுரர்களும் அடையப் போட்டியிடும் ஒரு பொருளாகவும் இடா குறிப்பிடப்படுகிறது.[6] இரவன் எனும் பெயர் அரவன் என்று பொதுவாக அறியப்படுகிறது. தென்னிந்தியாவில் அரவான் என்று வழங்கப்படுகிறது. தென்னிந்தியாவில் அரவான் இரண்டு வழிபாட்டு மரபுகளில் வணங்கப்படுகிறார், அவை: கூத்தாண்டவர் வழிபாட்டு மரபும் (அரவானுக்கு மட்டுமானது) திரௌபதி (அரவானின் மாற்றாந்தாய்-அருச்சுனனின் மனைவி) வழிபாட்டு மரபும். கூத்தாண்டவர் மரபில் அரவான் கூத்தாண்டவர் அல்லது கூத்தாண்டர் என்று அறியப்படுகிறார். கூத்தசுரன் என்ற அரக்கனைக் கூத்தாண்டவர் கொலை செய்வதாகக் கூறும் புராணக் கதையின் அடிப்படையில் இந்தப் பெயர் ஏற்பட்டது.[7] தமிழ்ப் பெயரான அரவான் அரவு (பாம்பு) என்ற வார்த்தையிலிருந்து உருவானதாகப் பரவலாக நம்பப்படுகிறது. அரவானுக்கும் பாம்புக்கும் உள்ள தொடர்பு அவரது உருவத்தோற்றத்தில் வெளிப்படுகிறது.[6] உருவ விளக்கம்[தொகு] சிங்கப்பூர் ஆசிய நாகரிகங்கள் அருங்காட்சியகத்தில் அரவான் சிலை அரவான் வெட்டுண்ட தலையின் உருவமாகவே எப்போதும் கோவில்களில் வணங்கப்படுகிறார். வழக்கமாக மீசை, பெரிய கண்கள் மற்றும் காதுகள் ஆகியவற்றுடன் அரவான் சித்தரிக்கப்படுகிறார்; ஒரு கூம்பு வடிவ மகுடம், நெற்றியில் வைணவ நாமம் மற்றும் காதணிகளை அணிந்து காட்சியளிக்கிறார். மகுடத்தின் மீது நாகப்பாம்பு படமெடுப்பது போன்றோ, அல்லது அதிலிருந்து நாகப்பாம்பின் தலைகள் வருவது போன்றோ அல்லது அதன் பின்புறத்திலிருந்து ஒரு நாகப்பாம்பு வருவது போன்றோ அரவானின் உருவம் பொதுவாகச் சித்தரிக்கப்படுகிறது.[8] கூவாகத்தில் இருக்கும் அரவான் சிலையின் மகுடத்திலும் பாம்பு உருவம் இடம்பெற்றுள்ளது.[9] பேய்களைச் சித்தரிக்கப் பயன்படுத்தப்படும் கோரைப் பற்கள் இருப்பது அரவான் உருவத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும். கூவாகத்தில் உள்ள அரவானின் உருவத்தில் இது போன்ற கோரைப் பற்கள் இல்லை எனினும், அரவானின் பேய் குணங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் திரௌபதி வழிபாட்டு மரபில் அவரது சிலைகளில் இந்த கோரைப் பற்கள் பெரும்பாலும் இடம்பெறுகின்றன.[10] அரவான் தலை சிலைகள் ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்படுவதற்கு ஏற்றவாறு எளிதாகவும், வண்ணம் தீட்டப்பட்டோ அல்லது தீட்டப்படாமலோ இருக்கும். இச்சிலைகள் அரவான் கோவில்களில் ஒன்றாக வைக்கப்பட்டிருக்கும். கூவாகம், கொத்தடை, கொத்தட்டை மற்றும் பிள்ளையார்க்குப்பம் போன்ற இடங்களிலுள்ள அரவான் உருவங்கள் சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட முகத்துடன் பலவண்ண ஆபணரங்களைக் கொண்டு சித்தரிக்கப்பட்டுள்ளன. கொத்தட்டை, மதுக்கரை மற்றும் பிள்ளையார்குப்பம் போன்ற இடங்களில் வண்ணம் தீட்டப்படாத கருப்பு நிற கல் சிற்பங்களைக் காணலாம்.[9][11][12][13][14][15] அரவானது தியாகத்தைச் சித்தரிக்கும் ஓவியங்களும் உள்ளன. இக்காட்சிகளில் பெரும்பாலும், அரவானின் தலை வெட்டப்படும் நேரத்தில் அவர் காளி தெய்வத்தினை வணங்கி நிற்பதைப் போன்று இருக்கும். தன் தலையைத் தானே வெட்டிக் கொண்ட அரவான், ஒரு கையில் வாளுடன் மற்றொரு கையில் வெட்டுண்ட தலையை ஏந்தி காளிக்கு அளிப்பது போன்ற ஓவியங்களும் உள்ளன. (இத்தகைய ஓவியமொன்று சென்னை, சௌக்கார்பேட்டையில் உள்ளது).[16][17] இலக்கியத்தில் அரவான்[தொகு] மகாபாரத காப்பியத்தில், அதன் முக்கியக் கதாநாயகனான அருச்சுனரின் மகனாக ஒரு சிறிய கதாப்பாத்திரமாக அரவான் தோன்றுகிறார். மகாபாரதத்தின் பின்புலத்திலிருந்து, அதன் காலம் முந்தைய வேத காலத்திற்கு பிறகும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவில் முதல் பேரரசு உருவானதற்கு முன்பும் அமைந்த காலம் என அறியப்படுகிறது. எனவே அதன் காலம் கிமு எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.[18] சிறிதும் மாறாமலிருந்த வேதங்களைப் போலன்றி, பிரபலமான மகாபாரதம் மொழியிலும் நடையிலும், கதை சொல்பவர்களால் மாற்றப்பட்டிருக்கவேண்டுமெனப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.[18] இத்தகைய மாறும் தன்மையுடைய காப்பியத்தின் மிகப் பழமையான பகுதிகள் இதைப் பற்றிய புற மேற்கோள்களை விடப் பழமையானதல்ல என நம்பப்படுகிறது. கிமு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த பாணினியின் இலக்கணக் கையேடான அட்டாத்தியாயி இத்தகைய மேற்கோள் குறிப்பிடும் ஒரு நூலாகும்.[18][19] குப்தர்கள் காலத்தின் முற்பகுதியிலேயே (நான்காம் நூற்றாண்டில்) மகாபாரதம் இறுதி வடிவம் அடைந்தது என மதிப்பிடப்பட்டுள்ளது.[18] மகாபாரதத்தின் முதல் இலக்கியத் திறனாய்வின் ஆசிரியர் பின் வருமாறு குறிப்பிடுகிறார்: ”மாறும் தன்மையுடைய நூலின் அசல் வடிவத்தை அதன் உண்மையான வகை மற்றும் கருத்தியல் கிளையமைப்பு (stemma codicum ) வடிவங்களைக் கொண்டு பெற நினைப்பது பயனற்றது. நமக்குக் கிடைக்கக்கூடிய கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டு அதன் மிகப் பழைய வடிவத்தைக் கண்டுபிடிப்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.”[20] சிங்கப்பூர் மாரியம்மன் கோவிலில் உள்ள மரத்தால் ஆன அரவானின் தலை அரவான் அருச்சுனன் மற்றும் உலுப்பியின் மகன் என இரு புராணங்களில் குறிப்பிடப்படுகிறார். அவையாவன 1) விஷ்ணு புராணம் (4:20:12). இதன் காலம் பிற்கால வேத காலத்திலிருந்து குப்தர் காலம் வரை இருக்கலாம் 2) பாகவத புராணம் (9:22:32). இது பொதுவாக வேதகாலத்தியது என கருதப்பட்டாலும், நவீன அறிஞர்கள் இதன் காலம் கிபி 9 அல்லது 10ஆம் நூற்றாண்டு எனக் கருதுகிறார்கள்.[21][22][23] மகாபாரதத்தின் சமசுகிருதப் பதிப்பில், 18 நாட்கள் நடந்த மகாபாரதப் போரின் போது அரவான் இறந்ததாகக் குறிப்பிடப்பட்டாலும், மகாபாரதத்தின் தமிழ் பதிப்புகள் போர் துவங்குவதற்கு முன்பே அவர் காளிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டதாகக் கூறுகின்றன. ஹில்டிபெய்டல் இதனைப் பெண் கடவுளுக்கு முன்னர் தன்னைத் தானே வெட்டிக் கொள்வதையும், தலையறுத்துக் கொள்வதையும் உயர்வாகக் கருதும் தென்னிந்திய மரபோடு தொடர்பு படுத்துகிறார்.[24][25] போரிடும் தமிழ் அரசர்கள் வெற்றி வேண்டி வெற்றி தேவியின் முன் தங்கள் குருதியைச் சிந்துவதைச் சித்தரிக்கும் தமிழ் சிற்பங்களைக் குறிப்பிட்டு அதே போல தேவி மகாத்மயம் என்ற புராணத்தின் இறுதியில் வரும் ஒரு காட்சியுடன் அவற்றை ஒப்பிடுகிறார்.[24](இத்தமிழ் சிற்பங்களில் காட்டப்படும் தெய்வம் கொற்றவை, துர்க்கையுடனும் காளியுடனும் தொடர்புபடுத்தப்படுகிறது)[24] ஹில்டிபெய்டல் தெலுங்கு மரபுக் கதைகளில் குறிப்பிடப்படும் பார்பரிக்காவின்[26] தன் பலியினை அரவான் கதையுடன் ஒப்பிடுகிறார். பார்பரிக்கா மகாபாரதத்தில் வரும் மற்றொரு கதாபாத்திரம். அரவானைப் போலவே தன் கழுத்தைத் தானே வெட்டிக் கொண்டு தியாகம் செய்தவர் பார்பரிக்கா. தெலுங்கு மரபுக்கதைகளில் மட்டுமல்லாது இராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், கார்ஹ்வால், குருச்சேத்திரம், புந்தேல்கண்ட் மற்றும் ஒரிசா ஆகிய பகுதிகளின் மரபுக் கதைகளிலும் பார்பரிக்கா இடம் பெறுகிறார். தலையை வெட்டித் தியாகம் செய்த பின்னும், வெட்டுண்ட தலையின் கண்கள் மூலம் மகாபாரதப் போர் முழுவதையும் காணும் வரம் பெறுவதே அரவானுக்கும் பார்பரிக்காவிற்கும் உள்ள கவனிக்கத்தக்க ஒற்றுமையாகும்.[27][28] தமிழ் இலக்கியத்தில் அரவானின் தியாகச் செயல் பற்றிய முதல் குறிப்பு பெருந்தேவனார் ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதிய பாரத வெண்பா என்ற நூலில் காணப்படுகிறது. இதுவே மகாபாரதத்தின் தமிழ்ப் பதிப்புகளுள் தற்போது கிடைப்பவனவற்றுள் மிகப் பழமையானது. பதினான்காம் நூற்றாண்டில் வில்லிபுத்தூராழ்வார் மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் நல்லாப்பிள்ளை ஆகியோர் எழுதிய மகாபாரதங்களிலும் அரவான் பற்றிய கதை குறிப்பிடப்பட்டுள்ளது.[29] கூத்தாண்டவர் கோவிலைப் பற்றிய கூத்தாண்டவர் தல புராணம் என்ற நூலிலும் அரவான் கதை குறிப்பிடப்பட்டுள்ளது.[30] அரவான் மரபு பற்றிய விவரங்களைக் கூத்து என்னும் தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலையின் மூலம் அறிந்து கொள்ளலாம். மரபுவழி தெருக்கூத்தில் ”அரவான் களப்பலி” பிரபலமான ஒரு கருப்பொருளாக உள்ளது. மகாபாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகப் போர் நடக்கும் முன்பு காளிக்கு அரவான் தன்னையே பலி கொடுத்த கதையை அரவான் களப்பலி கூறுகிறது. மெலட்டூர், கொடுகிழி மற்றும் ஏர்வாடி போன்ற சிற்றூர்களில் ஆண்டுதோறும் அரவான் களப்பலி பல்வேறு கூத்து வடிவங்களில் அரங்கேற்றப்படுகிறது. கரம்பையில், ஆண்டுத் திருவிழாவின் (ஏப்ரல்-மே மாதத்தில் நடைபெறும்) 18 ஆம் நாளன்று திரௌபதி வழிபாட்டின் ஒரு பகுதியாக அரவான் களப்பலி நிகழ்த்தப்படுகிறது.[31] தற்காலப் புரிதல்களில் அரவானின் தலை, தியாகத்தை மற்றுமல்லாமல் மீட்டுருவாக்கம் மற்றும் தொடர்ச்சி ஆகிய கருப்பொருள்களையும் குறிப்பதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. தலை வெட்டப்பட்ட பின்னரும் அத்தலையினால் மகாபாரதப் போர் முழுவதையும் அரவானால் காணமுடிவதே இத்தகு புரிதலுக்கு அடிப்படை.[32] எடுத்துக்காட்டாக, ராமசாமிப்புலவரின் "மேற்கோள்விளக்கக் கதை அகரவரிசை" (1963) என்ற புத்தகத்தில் தன்னைத் தானே தியாகம் செய்து கொண்டதற்கு எடுத்துக்காட்டாக இருப்பதால் தமிழ் நாட்டில் ஒரு நாட்டுப்புற நாயகனாக அரவான் இன்றும் கருதப்படுவதாக கூறப்படுகிறது.[33] அரவான் கதாபாத்திரம் போருக்குச் சமூகம் கொடுக்கும் விலையையும் உணர்த்துகிறது. "என்றும் திருப்தியடையாத போர்க் கடவுள் புசிப்பதற்காகப்" பல தாய்மார்கள் தயக்கத்துடன் போருக்கு அனுப்பி வைத்த எண்ணற்ற அப்பாவிகளை அரவான் நினைவுபடுத்துகிறார்.[31] இந்தியவியலாளர் டேவிட் ஷுல்மேன், அரவானின் பலி தமிழ் காப்பிய மரபுகளில் வரும் பாம்புப் பலியின் இன்னொரு வடிவம் என்று கூறுகிறார்.[34] மகாபாரதம்[தொகு] மகாபாரதப் போரிலிருந்து ஒரு காட்சி, அங்கூர் வாட்டில் உள்ள ஒரு சிற்பம் மகாபாரதத்தின் முதல் புத்தகமான ”ஆதி பர்வ”த்தில் (தொடக்கங்களின் புத்தகம்) அரவானின் பெற்றோர்களுக்குத் திருமணம் நடந்ததாக குறிப்பிட்டப்பட்டுள்ளது. அரவானின் பிறப்பு மற்றும் இறப்பு பற்றிய விவரங்கள் மகாபாரதத்தின் ஆறாவது புத்தகமான “பீஷ்ம பர்வ”த்தில் (பீஷ்மர் பற்றிய புத்தகம்) இடம் பெற்றுள்ளன.[35][36] மகாபாரதத்தின் ஆறாவது புத்தகத்தில், பாண்டவர்களில் மூன்றாவது சகோதரனான அருச்சுனன், திரௌபதி-பாண்டவர்களின் திருமண விதிமுறைகளை மீறியதால் இந்திரபிரஸ்த (பாண்டவர் பேரரசின் தலைநகரம்) நகரத்திலிருந்து ஓராண்டு புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டு நாடுகடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. அருச்சுனன் வடகிழக்கு இந்தியாவிற்குச் சென்று, அங்கிருந்த நாக வம்சத்தின் விதவை இளவரசி உலுப்பி என்ற பெண்ணின் மீது காதல் கொள்கிறார். அங்கு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்; அவர்களுக்கு அரவான் என்ற மகன் பிறந்தார். நாகர்களின் இருப்பிடமான நாகலோகத்தில் அரவானையும் உலுப்பியையும் விட்டுவிட்டு அருச்சுனன் தனது யாத்திரையைத் தொடர்ந்தார்.[37] அரவான் ”பரச்சேத்திரத்தில்” (வேறொருவருக்குச் சொந்தமான பகுதி) பிறந்ததாகக் கூறப்படுகிறது. பரச்சேத்திரத்தில் பிறத்தல் என்பது மற்றொருவரின் மனைவிக்கு பிறத்தலைக் குறிக்கிறதென ஹில்டிபைடெல் கருதுகிறார். தனது தாயின் பாதுகாப்பில் நாகலோகத்தில் அரவான் வளர்ந்தார். அருச்சுனன் மீது அரவானின் தாய்வழி மாமனுக்கு இருந்த வெறுப்பு காரணமாக அவர் அரவானை ஏற்றுக்கொள்ளவில்லை. அரவான் வளர்ந்த பிறகு, தனது தந்தையுடன் சேர்ந்து வாழும் எண்ணத்துடன் இந்திரனின் (அருச்சுனனின் தந்தை) இருப்பிடமான இந்திரலோகத்திற்கு சென்றார். தனது வளர்ந்த மகனைக் கண்ட அருச்சுனன் குருசேத்திரப் போரில் தனக்கு உதவியாக இருக்கும்படி வேண்டினார்.[35][38] இவ்வாறாகப் பாண்டவர்களின் எதிரிகளான கௌரவர்களுக்கு எதிராக, அரவான் தனது தந்தை மற்றும் பாண்டவர்களுக்கு உதவ குருசேத்திரப் போர்க்களத்தை வந்தடைகிறார். போரின் முதல் நாளில், அரவான் சுருதாயுசூ என்பவனுடன் சண்டையிட்டார். சுருதாயுசூ முற்பிறவியில் குரோதவாசா என்ற அரக்கனாக இருந்த சத்திரிய அரசனாவார். பின்னர் அவர் அர்ச்சுனனால் கொல்லப்பட்டார்.[39][40] போரின் ஏழாம் நாளன்று அவந்தி இளவரசர்களான விந்தா மற்று அனுவிந்தா ஆகியோரை அரவான் தோற்கடித்தார். பின்னர் இவர்களும் அர்ச்சுனனால் கொல்லப்பட்டனர்.[41][42] போரின் எட்டாம் நாளில், காந்தார தேசத்தின் இளவரசர்களுடன் அரவான் போரிட்டார். அவர்கள் சுவாலா அரசனின் மகன்களும் கௌரவர்களின் தாய்வழி மாமனான சகுனியின் இளைய சகோதரர்களுமாவர். கயா, கவாக்சா, விர்சவா, சர்மாவாத், அர்சவா மற்றும் சுகா ஆகிய சகோதரர்கள், கௌரவர்களின் ஒட்டுமொத்த படைவீரர் துணையுடன் அரவானைத் தாக்கினர். ஆனால் அரவானின் நாகர் படை இவர்களில் ஒருவரைத் தவிர மீதமிருந்த அனைவரையும் கொன்றது. எதிரிகளை வதைப்பவன் என்று போற்றப்படும், மாய வித்தையில் கைதேர்ந்தவரான அரவான், வாள் சண்டையில் ஐந்து காந்தார இளவரசர்களைக் கொன்றார், விர்சவா மட்டும் தப்பிவிட்டார்.[43][44] இதற்குப் பழிவாங்கும் விதமாக கௌரவர்களின் மூத்த சகோதரன் துரியோதனன், ரிஷ்யசிரிங்கரின் மகனாகிய அரக்கன் அலம்பூசனிடம் அரவானைக் கொன்றுவிடும்படி ஆணையிட்டார். இந்த முறை அரவானைப் போன்று அலும்பூசனும் போரில் மாயக் கலையைப் பயன்படுத்தினார். தன்னிடமிருந்த வில்லைக் கொண்டு அலம்பூசன் அரவானைத் தாக்கினார்; ஆனால் எதிர்த்துத் தாக்கிய அரவான், அலம்பூசனின் வில்லை உடைத்தெறிந்து அவனைப் பல துண்டுகளாக வெட்டியெறிந்தார். அப்போதும் அலம்பூசனின் உடல் மீண்டும் தானாக ஒன்றிணைந்தது. பின்னர் அரவான் சேசா (அனந்தா) எனும் பாம்பு வடிவத்தை அடைகிறார், அப்போது அவரது பாம்புப் படை அவரைச் சுற்றி வளைத்து அவரைப் பாதுகாக்கிறது. அப்போது அலம்பூசன் பாம்புகளுக்குப் பகைவனான கருட வடிவத்திற்கு மாறி, பாம்புப் படையைத் தாக்கி அழித்து அரவானின் தலையைக் கொய்து கொல்கிறார். பின்னர் அரவானின் தந்தை வழி சகோதரனான கடோத்கசன் அலம்பூசனைக் கொன்று பழி தீர்க்கிறார்.[38][43][45] தமிழ் மரபுகள்[தொகு] பலிக்காகத் தேர்ந்தெடுத்தல்[தொகு] அரவான் பற்றிய தமிழ் மரபுகளைப் பற்றிய முதல் குறிப்புகள், பெருந்தேவனார் எழுதிய மகாபாரதத் தமிழ்ப் பதிப்பான பாரத வெண்பாவில் (ஒன்பதாம் நூற்றாண்டு) காணப்படுகின்றன.[46] களப்பலி என்ற சடங்கைப் பற்றிச் சொல்வது இந்த நூலின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். மகாபாரதத்தின் தமிழ்ப் பதிப்புகளில் மட்டுமே களப்பலி பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. இது போரில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகப் போர் தொடங்குவதற்கு முன்பே செய்யப்படும் சடங்கு. மகாபாரதப் போர் துவங்குவதற்கு முன்பு கௌரவர்களின் தலைவனும் பாண்டவர்களின் எதிரியுமான துரியோதனன், பாண்டவர்களின் சோதிட வல்லுநரான சகாதேவன் மூலமாக அமாவாசை தினமே (சோதிடம் பார்த்த நாளுக்கு அடுத்த நாள்) களப்பலி செய்வதற்கு உகந்த நாள் என்பதை அறிந்து கொள்கிறார் என்று பெருந்தேவனார் விளக்குகிறார். இதனால் துரியோதனன் அரவானிடம் பேசி அவரைக் களப்பலி கொடுக்கச் சம்மதம் பெறுகிறார்.[25] காளியின் உருவச்சிலை பாண்டவர்களின் நெருங்கிய நண்பரும் ஆலோசகருமான கிருஷ்ணர், துரியோதனனின் திட்டத்தை அறிந்து கொண்டு, அரவான் கௌரவர்களுக்காகத் தியாகம் செய்யாமல் பாண்டவர்களுக்காகத் தன்னைத் தியாகம் செய்யும் வண்ணம் ஒரு திட்டம் தீட்டுகிறார். பாண்டவர்களில் மூத்தவரான தருமனிடம் இதைப் பற்றி ஆலோசித்து, காளி தெய்வத்திற்குப் பலி கொடுப்பதை ஆயுதபூசையின் ஒரு பகுதியாக நிறைவேற்றலாம் எனப் பரிந்துரைக்கிறார். இவ்வாறு பலி கொடுக்கச்செய்வதற்குத் தன்னையும் சேர்த்து நான்கு பேர் பொருத்தமானவர்கள் என்று கிருஷ்ணர் கருதுகிறார். மற்ற மூவர்: கௌரவர்களின் பக்கமுள்ள சால்யன், பாண்டவர்களின் படைத்தலைவர் அருச்சுனன் மற்றும் அரவான். இந்த நான்கு பேரிலிருந்து அரவான் தான் சரியான தேர்வாக இருக்குமென்று கிருஷ்ணர் முடிவு செய்கிறார். அரவான், கிருஷ்ணரின் உத்தரவை ஏற்று பாண்டவர்களுக்காகக் களப்பலியாகச் சம்மதிக்கிறார். துரியோதனனிடம் கெளரவர்களுக்காகக் களப்பலியாவதாக முன்பே வாக்களித்திருந்ததையும் கூறுகிறார்.[47][48] பின்னாளில் வந்த தமிழ் நூல்கள் பெருந்தேவனாரின் பதிப்பிலிருந்து மாறுபடுகின்றன. வில்லிப்புத்தூராழ்வாரின் பதினான்காம் நூற்றாண்டு பதிப்பில், கிருஷ்ணர் முதலில் தானே களப்பலியாக முன்வருவதாகவும், அரவான் தானாக முன்வந்து அவருக்குப் பதிலாகத் தான் களப்பலியாகச் சம்மதிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நூலில் துரியோதனன் பற்றிய செய்தி ஏதுமில்லை.[49] கௌரவர்கள் ஒரு வெள்ளை யானையைப் பலி கொடுத்ததை ஈடு செய்ய அரவானைப் பலியிடுவதாக பிற கதைகள் கூறுகின்றன.[49] தஞ்சாவூர் மாவட்டத்தின் நெப்பத்தூர் என்ற கிராமத்திலுள்ள மரபுகள் படி அரவான் மிக வலிமையானவர் என்றும் ஒரே நொடியில் துரியோதனனின் படைகளை அழித்துப் போரே ஏற்படாமல் தடுத்திருந்திருக்கக்கூடிய சக்தியுள்ளவராகவும் நம்பப்படுகிறது. அதனால், கிருஷ்ணர் பெரும்பலியான போர் நிகழ வேண்டும் என்பதற்காக அரவானைப் பலி கொடுப்பதே சிறந்தது எனப் பரிந்துரைக்கிறார்.[50] தெருக்கூத்து நாடகங்களில், அரவானின் தியாகச் செயலானது தங்கள் தந்தையர்களுக்காக தமது பாலுறவு இன்பத்தையும் இளமையையும் விட்டுக்கொடுத்த யயாதியின் மகன் புரு மற்றும் சாந்தனுவின் மகன் பீஷ்மர் ஆகியோருடன் ஒப்பிடப்படுகிறது. இந்த நாடகங்களில், அரவானின் சம்மதம் கிடைத்த பிறகு கிருஷ்ணர் அரவானின் தாயான நாகக்கன்னி உலுப்பியின் அனுமதியைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. முதலில் அரவானின் முடிவை அவனது தாய் கடுமையாக எதிர்க்கிறார். ஆனால் கடைசியில் தான் காளிக்கு அர்ப்பணிக்கப்படவே பிறந்தவன் என்று அரவான் எடுத்துக்கூறிய பின்னர் அரவானின் தாய் ஒப்புக்கொள்கிறார்.[47] இந்தக் கதையின் அனைத்து வடிவங்களிலும், இறுதியில் கிருஷ்ணர் சூரிய தேவனையும் சந்திர தேவனையும் கட்டுப்படுத்தி அவர்களின் நகர்வை மாற்றியமைத்து அன்றைய நாளுக்கு ஒரு நாள் முன்னரே அமாவாசை தினம் வரும் வண்ணம் செய்வதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் தனது உடலின் முதல் பலியைப் பாண்டவர்களுக்காக அரவானால் செய்ய இயலுகிறது. துரியோதனனுக்குச் செய்து கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற மறுநாள் கெளரவர்களுக்காக எஞ்சியிருக்கும் உடலைப் பலி கொடுக்கிறார். இவ்வாறு செய்ததன் மூலம் துரியோதனனுக்குத் தான் செய்து கொடுத்த வாக்குறுதியையும் அரவான் காப்பாற்றினார்.[46][47][48] மூன்று வரங்கள்[தொகு] பாரத வெண்பாவில், அரவான் கிருஷ்ணரிடம் தான் போர்க்களத்தில் ஒரு சிறந்த வீரனால் வீர மரணம் அடைய வேண்டும் என்ற வரத்தை வேண்டியதாகக் கூறப்படுகிறது. பாரத வெண்பாவில் அரவான் ஒரே ஒரு வரம் மட்டும் கேட்டதாகக் கூறப்பட்டிருப்பினும், பொதுவாகத் தமிழ் மரபுகளில் அரவான் மூன்று வரங்களைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. பாரத வெண்பாவில் அரவான் ஒரு வரம் மட்டுமே வாங்கியதாகக் கூறப்படுவது, போருக்கு முன்பு அரவான் தன்னைத் தியாகம் செய்து கொண்டதாகத் தமிழ் மரபுகளில் கூறப்படுவதையும், மகாபாரதத்தின் முந்தைய சமசுகிருத பதிப்பில் அரவான் போரிட்டு மடிவதாகச் சொல்லப்படுவதையும் பொருந்திப் பார்க்க 9ஆம் நூற்றாண்டில் நடந்த முயற்சியைக் குறிக்கிறது என ஹில்டிபைடெல் கருதுகிறார்.[46] கூத்தாண்டவர் மற்றும் திரௌபதி ஆகிய இரு மரபுகளிலும், அரவான் 18 நாள் போர் முழுவதையும் காண வேண்டும் என்ற இரண்டாவது வரத்தையும் பெற்றதாக நம்பப்படுகிறது. வில்லிப்புத்தூராழ்வாரின் 14ஆம் நூற்றாண்டு மகாபாரதப் பதிப்பில் இரண்டாவது வரம் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. இந்தப் பதிப்பில், அரவான் போரில் எதிரிகள் பலரைக் கொன்று வீர மரணம் அடைந்த பின்னர் சில நாட்கள் மட்டும் போரைப் பார்ப்பதற்கான வரத்தைப் பெறுவதாக உள்ளது. ஆனால் போரின் எட்டாம் நாளில் அரவான் இறந்த பிறகு வெட்டுண்ட தலையுடன் போர் முழுவதையும் கண்டானா என்பது பற்றிய தகவல்களை வில்லிப்புத்தூராழ்வார் குறிப்பிடவில்லை.[51] பேளூர் கோவிலில் மோகினி சிலை. நாட்டார் மரபுகளில் கிருஷ்ணர் மோகினி வடிவம் கொண்டு அரவானை மணந்தார் என நம்பப்படுகிறது. மூன்றாவது வரம் பற்றிய தகவல்கள் நாட்டுப்புற சடங்குகளில் மட்டுமே காணப்படுகின்றன. தன்னைப் பலி கொடுக்குமுன் திருமணம் செய்து கொள்ளவேண்டும் எனும் மூன்றாம் வரத்தைப் பெறுவதன் மூலம் அரவான் தன் உடலைத்தகனம் செய்து ஈமச்சடங்குகள் நடக்க வழிவகை செய்கிறார். (மணம் புரியாதவர்கள் புதைக்கப்படுவர்). ஆனால் அரவானைத் திருமணம் செய்து கொண்டால் விதவையாவது நிச்சயம் என்பதால் அரவானை எந்தப் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. இந்த சிக்கலைத் தீர்க்க கிருஷ்ணர் மோகினி என்ற பெண் வடிவம் ஏற்று அரவானைத் திருமணம் செய்து கொண்டு ஓர் இரவு அரவானுடன் இருந்ததாக கூத்தாண்டவர் மரபில் கூறப்படுகிறது. அரவான் தன்னையே பலி கொடுத்த அடுத்த நாள் கிருஷ்ணர் மோகினியின் வடிவில் விதவைக் கோலம் பூண்டு புலம்பியதாகவும், அதன் பிறகு மீண்டும் பழைய ஆண் வடிவத்திற்கு மாறி போரில் ஈடுபட்டதாகவும் இம்மரபில் கூறப்படுகிறது.[46][47][48][52] தெருக்கூத்து கதைகளில் சிறப்பான முறையில் திருமணச் சடங்குகள் நடைபெறுவது போலவும் அதனையடுத்து மோகினி திடீரென்று பிரிந்து செல்வது போலவும் காண்பிக்கப்படுகின்றன. இது இத்திருமணம் உடலுறவில் முடியவில்லை என்பதைக் குறிக்கிறது.[53] திருநங்கைகளிடையே பிரபலமான மற்றொரு கதை வடிவில் அரவான் தாம்பத்திய இன்பத்தைப் பெற வேண்டியே திருமண வரம் பெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது. இதில் திருமணத்துக்கு பின் அரவான் மோகினியுடன் உடலுறவு கொள்வது தெளிவாகச் சொல்லப்படுகிறது.[54][55] திருமணம் பற்றிய இந்த மூன்றாவது வரம் குறித்து அனைத்து நாட்டுப்புற மரபுகளிலும் ஒரே மாதிரியான செய்திகள் இல்லை. வேறு சில மரபுகளில் கிருஷ்ணர் போருக்கு முன்பு வேறு சில திருமணங்களை ஏற்பாடு செய்வதாகக் கூறப்படுகிறது. தஞ்சாவூர் மரபுகளில் அரவானுக்கும் மோகினிக்கும் திருமணம் நடப்பதில்லை. மாறாக அரவான், கிருஷ்ணரின் இளைய ஒன்றுவிட்ட சகோதரன் சாத்யகியின் மகள் பரவநாச்சியாளை திருமணம் செய்து கொள்வதாகக் கூறப்படுகிறது.[56] முதல் வரமும் (வீர மரணம்) மூன்றாவது வரமும் (திருமணம்) கூத்தாண்டவர் வழிபாட்டு மரபில் உருவானவை என்றும் இரண்டாவது வரம் திரௌபதி வழிபாட்டு மரபில் உருவானது என்று ஹில்டிபைடெல் கூறுகிறார். கூத்தாண்டவர் வழிபாட்டு மரபில், வீர மரணம் மற்றும் திருமண நிகழ்வு ஆகிய இரண்டு சடங்குகளும் இடம்பெறுகின்றன. இச்சடங்குகளை திருநங்கைகள் நிகழ்த்துகின்றனர். ஆனால் திரௌபதி வழிபாட்டு மரவில், கம்பத்தில் பொருத்திய களிமண்ணால் செய்யப்பட்ட அரவானின் தலை, 18 நாள் நடைபெறும் போர் நிகழ்வுகளைப் பார்ப்பதைக் குறிக்கும் சடங்கே முக்கிய நிகழ்வாக நிகழ்த்தப்படுகிறது. மேலும், தஞ்சாவூர் பகுதியில் உள்ள திரௌபதி வழிபாட்டு மரபின் நூல்களில் இந்த வரம் மட்டுமே இடம்பெறுகிறது; மற்ற இரு வரங்கள் காணப்படவில்லை.[57][58] போருக்கு முன்பு அரவானைப் பலி கொடுப்பது முதல், இரண்டாவது வரங்களுக்கு முரணாக உள்ளது. ஆனால் இந்த மரபுகளில் இம்முரணுக்குத் தனிப்பட்ட விளக்கங்கள் உள்ளன. போருக்கு முன்பு தன்னைத்தானே பலி கொடுப்பது போரின் போது வீர மரணம் அடைதல் என்ற நிகழ்வுக்கு முரணாக உள்ளது. மேலும் இவை இரண்டுமே உயிருடன் இருந்து போர் நிகழ்வுகள் முழுவதையும் காணுதல் என்பதற்கு முரணாக உள்ளன. கூத்தாண்டவர் வழிபாட்டு மரபில், அரவானின் பலிக்கு பிறகு அவரது உடல் மீண்டும் தானாகவே ஒன்றிணைந்து முழுமையானதாகவும், இதனால் போரின் எட்டாம் நாள் அரவான் வீர மரணம் அடைய முடிந்ததாகவும் விளக்கமளிக்கப்படுகிறது. போரின் அனைத்து நிகழ்வுகளையும் அரவான் தொடர்ந்து கவனித்தார் என்ற இரண்டாவது வரம் கூத்தாண்டவர் வழிபாட்டு மரபில் பெரிதாகக் கருதப்படுவதில்லை. மற்றொரு புறம், திரௌபதி வழிபாட்டு மரபில் முதல் வரமான வீர மரணம் பெரிதாகக் கருதப்படவில்லை. மேலும் அரவான் தனது வெட்டுண்ட தலையில் உள்ள கண்கள் மூலம் போரின் நிகழ்வுகளை தொடர்ந்து பார்க்க முடியும் எனக் கூறுவதன் மூலம், அரவான் தொடர்ந்து போரைப் பார்த்தது குறித்த இரண்டாவது வரம் பற்றிய குழப்பத்தை இந்த மரபு தீர்க்கிறது. மூன்றாம் கண்ணோட்டம் ஒன்று, அரவான் தன்னைத் தானே தியாகம் செய்து கொண்ட பிறகு அரவானின் உடல் மீண்டும் ஒன்றிணைந்து முழுமையடைந்ததாகவும், எட்டாம் நாள் அவர் தலை துண்டிக்கப்படும் வரை வீரத்துடன் சண்டையிட்டதாகவும், தனது வெட்டுண்ட தலையிலிருந்த கண்களின் மூலம் போரின் எஞ்சிய நாட்களைக் கண்டார் என்றும் கூறி, இந்த மூன்று வரங்களையும் பொருத்தி விளக்குகிறது.[57] தமிழ் மரபுகளில் அரவானின் போருக்கு முந்தைய பலி பொதுவான ஒன்றாக உள்ளது. அரவான் கேட்ட வரங்கள் கிடைக்கப்பெற்றதும் பலிக்குத் தயாராகிறார். பின்னர் குருட்சேத்திர போர்க்களத்திற்குச் செல்கிறார். தருமன் தனது ஆயுதக் கூடத்தில் காளியை வணங்கிய போது அரவான் தனது அணிகலன்களையும் மார்புக் கவசத்தையும் நீக்கிவிட்டு வணங்கினார். அடுத்து அவர் தனது உடலை 32 துண்டுகளாக வெட்டினார். (அவரது உடலின் 32 கச்சித அம்சங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு துண்டு என்ற கணக்கில்) பின்னர் அவற்றை தருமன் காளி தேவிக்குப் படைத்தார். தெருக்கூத்தில் அரவானாக நடிக்கும் நடிகர் கழுத்திலிருந்து கீழ்நோக்கி ஒரு வெள்ளைத் துணியைக் கட்டிக்கொண்டு இந்தக் காட்சிகளை நடித்துக்காட்டுவார். இந்தக் காட்சியில் நடிக்கும் நேரத்தில் அரவானின் ஆன்மா நடிகரின் உடலில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. தெருக்கூத்து நடைபெறும் மேடையில் இப்பலியைக் குறிக்கும் வகையில் சிலநேரங்களில் கோழி பலியிடப்படும்.[56][59] வில்லிப்புத்தூராழ்வாரின் மகாபாரதத்தில் அரவானின் தன்பலியை முழுமையாக்க காளிக்கு யானை ஒன்று பலிகொடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.[49] அரவான் தனது சதைகளை வெட்டியெடுத்து, அவரது தலையும் எலும்புக்கூடும் மட்டுமே மிஞ்சியிருக்கும் தருணத்தில். கிருஷ்ணர், அரவானின் தாத்தாவும் உலுப்பியின் தந்தையுமான ஆதிசேஷனை வணங்குமாறு அரவானுக்கு அறிவுறுத்துகிறார். அப்போது ஆதிசேஷன் அரவானின் உடலைச் சுற்றிக்கொண்டு அவனது சதையாக மாறுகிறார், இதனால் அவனது உடல் மீண்டும் வடிவம் பெறுகிறது.[60] கிருஷ்ணர் இரண்டாவது வரத்தை நிறைவேற்ற, பலம் வாய்ந்த அரவானைத் தோற்கடிக்கும் வகையில் எதிரிப் படையிலிருக்கும் ஒருவனை மிகவும் வலிமையானவனாக மாற்றுகிறார். இதன் மூலம் அரவானுக்கு வீர மரணம் அளிக்கப்படுகிறது. இதற்கு கிருஷ்ணர் அலம்பூசனைத் தேர்வு செய்தார். பிறகு அசரீரி மூலமாக அலம்பூசனை கருட வடிவம் எடுக்க யோசனை கூறுகிறார் அல்லது அலம்பூசனுக்கு உதவ உண்மையான கருடனை அனுப்புகிறார் எனக் கூறப்படுகிறது. ஆதிசேஷன், தனது எதிரியான கருடனைக் கண்டதும் பயத்தின் காரணமாக அரவானிடமிருந்து விலகிச் செல்ல, பாதுகாப்பற்ற நிலையில் சோர்வாக இருந்த அரவானை அலம்பூசன் தலையைக் கொய்து கொல்கிறார்.[61] அரவானிலிருந்து கூத்தாண்டவர்[தொகு] கூவாகம் பகுதியில் கூறப்படும் ஒரு மரபுக் கதையில், அரவான் எப்படி கூத்தாண்டர் என அழைக்கப்படலானார் என விவரிக்கப்படுகிறது. போருக்குப் பிறகு, கௌரவர்களை அழித்தது குறித்து பாண்டவர்கள் பெருமை பேசிக் கொண்டிருக்கும் போது கிருஷ்ணர் இந்த போர் முழுவதையும் நேரில் பார்த்தவரான அரவானிடம் "இந்த போரில் பாண்டவர்கள் வெற்றியடைய உண்மையான காரணம் யார்"? என்று கேட்கிறார். எதிர்களின் தலையைக் கொய்யும் கிருஷ்ணரின் சக்கரம் மற்றும் அவர்களின் குருதியைச் சேகரிக்கும் சங்கு ஆகிய இந்த இரண்டையும் தான் கண்டதாக அரவான் பதிலளித்தார். வெற்றிக்கு முழுக்காரணம் கிருஷ்ணர் என உணர்த்துவதாகவே இந்தப் பதில் கொள்ளப்படுகிறது.[7] செருக்கும் எளிதில் கோபம் கொள்ளும் குணமும் கொண்டவருமான பீமனுக்கு அரவானின் இந்த பதில் கடும் கோபத்தை உண்டாக்கியது. (போரை வெல்லுவதில் பீமன் ஆற்றிய பெரும் பங்கு மகாபாரதத்தில் சொல்லப்பட்டுள்ளது). பீமன் அரவானைத் தாக்குவதற்கு முன்பு, அரவானது தலையை கரபரிகா ஆற்றில் வீசுமாறு கிருஷ்ணர் ஆணையிட்டார். ஆற்றில் விழுந்து குழந்தை வடிவம் பெறுகின்ற அரவானை ஆற்றங்கரையோரத்தில் இருந்த சந்திரகிரி நகரின் அரசன் கண்டெடுக்கிறார். அரசன் குழந்தையைத் தூக்கும் போது "குவா குவா" என்று குழந்தை அழுததால் அந்த இடத்துக்கு கூவாகம் என்றும் அந்தக் குழந்தைக்கு கரபாலன் ("நாணல்-குழந்தை") என்றும் பெயரிட்டார்.[7] காரபாலன் வளர்ந்த பின்னர், ஒரு போரில் தனது வளர்ப்புத் தந்தையைக் காயப்படுத்திய கூத்தசூரன் என்ற அரக்கனைக் கொல்வதாக இக்கதையில் கூறப்படுகிறது. இந்த மரபின் மகாதேவியாக வணங்கப்படும் திரௌபதி அம்மன், கரபாலனுக்கு கூத்தாண்டவர் (கூத்தசூரனை கொன்றவன்) என்ற புதிய பெயரை வழங்கி ஆசீர்வதித்து கூவாகத்தில் அவருக்கு கோவில் ஒன்றையும் அருளுகிறாள்.[7] இந்த மரபிற்குள்ளேயும் பல வேறுபாடுகள் உள்ளன. இதன் சில கதை வடிவங்களில், குழந்தையைச் சந்திரகிரியின் அரசியான கிருபான்ஞ்சி என்பவர் கண்டெடுத்தாகக் கூறப்படுகிறது.[7] பிற கதை வடிவங்களில் சந்திரகிரியின் அரசன் மற்றும் கூவாகம் கோவில் பற்றி எதுவும் கூறப்படவில்லை. மாறாக, இவை அரக்கன் கூத்தசூரனைப் பற்றி அதிகம் கூறுகின்றன. மேலும் தலையை மட்டும் கொண்டிருக்கும், நீரில் பிறந்த ஒருவனால் மட்டுமே அவனைக் கொல்ல முடியும் என்ற வரம் பெற்றதைப் பற்றியும் கூறுகின்றன. கிருஷ்ண அவதாரம் எடுத்த விஷ்ணு, இந்த அரக்கனை அரவான் கொல்வார் என்று கடவுள்களுக்குக் கூறுகிறார். இதை மனதில் கொண்டே அரவானின் தலை ஆற்றில் தூக்கி எறிய ஆணையிடுகிறார். பின்னர் அது கூத்தன் ("நீரில் பிறந்தவன்") என்ற குழந்தையாக மாறி அரக்கனைக் கொல்கிறது.[62] வழிபாடு[தொகு] பின்பற்றுவோர் மற்றும் கோவில்கள்[தொகு] கூத்தாண்டவர் வழிபாட்டு மரபே முதல் தமிழ் அரவான் வழிபாட்டு மரபு என ஹில்டிபெய்டல் வாதிடுகிறார்.[63] ஆனால் இது மட்டுமே அரவானை வணங்கும் மரபல்ல. திரௌபதி வழிபாட்டு மரபும் அதற்கே உரித்தான அரவான் வழிபாட்டு சடங்குகளையும் முறைகளையும் உருவாக்கிக் கொண்டுள்ளது. தமிழ் நாட்டின் கடலூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் போன்ற பல மாவட்டங்களில் கூத்தாண்டவருக்கு அதிகமான பக்தர்கள் உள்ளனர்.[64][65] திரௌபதியை வழிபடும் பக்தர்கள் மேற்கூறிய மாவட்டங்களைத் தவிர காஞ்சீபுரம் (முன்பு செங்கல்பட்டு) மாவட்டத்திலும் பரவியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவின் தென் மாவட்டங்களிலும் திரௌபதி கோவில்கள் காணப்படுகின்றன. திரௌபதி கோவில்களை விட கூத்தாண்டவர் கோவில்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுலிருந்து கோயம்புத்தூர் வரை நீண்டு செல்லும் பகுதிகளில் மட்டும் கூத்தாண்டவர் கோவில்கள் காணப்படுகின்றன. இவற்றுள் முப்பத்திரண்டு கோவில்கள் பிரபலமானவை, அதில் கூவாகம் மிக முக்கியமானது. இந்த 32 கோவில்கள் உள்ள இடங்கள்:[66] கோயம்புத்துர் மாவட்டம் சிங்காநல்லூர் (நீலிக்கோணாம்பாளையம்) கஞ்சப்பள்ளி குமாரமங்கலம் குறிச்சி குட்டாம்பட்டி துடியலூர் கடலூர் மாவட்டம்[64] கொத்தட்டை [15] புவனகிரி தேவனாம்பட்டணம் திருவேட்களம் ஈரோடு மாவட்டம்[67] களரிகியம் சேலம் மாவட்டம் பழையசூரமங்கலம் பனைமடல் பேளூர் தெடாவூர் திருவண்ணாமலை மாவட்டம்[64] சேர்ப்பாப்பட்டு கீழ்வானம்பட்டி தேவனூர் வேதாந்தவதி வீரனேந்தல் வேலூர் மாவட்டம்[64] சோழவரம் ஒடுகத்தூர் புலிமேடு புதூர் வெள்ளையம்பட்டி வரகூர் விழுப்புரம் மாவட்டம்[64] கொணலூர் கூவாகம் பெண்ணைவளம் தைலாபுரம் கிளியனூர் புதுச்சேரி யூனியன் பிரதேசம்[68] மதுக்கரை[11] பிள்ளையார்க்குப்பம்[13] திரௌபதி கோவில்களில் வெட்டுண்ட அரவானின் தலை பரவலாக இடம்பெற்றுள்ளது. இது பெரும்பாலும் மரத்தினால் செய்யப்பட்ட எளிதாக எடுத்துச்செல்லும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட தலையாக இருக்கும். சில நேரங்களில் கோவில் வளாகத்தில் ஒரு தனிக்கோவிலில் வைக்கப்பட்டிருக்கும்.[69] திரௌபதி கோவில்களின் கூரை மூலைகள் மற்றும் ஓரங்களில் அரவான் தலைச் சிற்பம் வைக்கப்பட்டிருக்கும். பேய் அல்லது பூத வடிவில், அரவான் கோவிலையும் படுகளம் விழாவையும் தீய ஆன்மாக்களிடமிருந்து காக்கும் பாதுகாவலனாகக் திகழ்கிறார்.[70] திரௌபதி வழிபாட்டு மரபில், படுகளம் என்பது மகாபாரதப் போர் நிகழ்வை நிகழ்த்திக்காட்டும் மைதானமாகும். தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டைப் பகுதிகளில் அரவானின் தலை தனி மண்டபம் அல்லது மாடக்குழியுள் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய அரவான் தலை, கும்பகோணத்தின் ஹாஜியார் தெரு கோவிலில் காணப்படுகிறது.[71] கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் சடங்குகள்[தொகு] கூத்தாண்டவர் வழிபாட்டு மரபில், அரவான் கூத்தாண்டவராக அறியப்படுகிறார்; இந்த மரபில் கூத்தாண்டவரே முக்கியக் கடவுளாகக் கருதப்படுகிறார். கூத்தாண்டவரின் முதன்மைக் கோவில் தமிழ் நாட்டில் கூவாகம் என்ற இடத்தில் உள்ளது. இந்த மரபில் ஆண்டுதோறும் சித்திரை (ஏப்ரல்-மே) மாதத்தின் பௌர்ணமி தினத்திற்கு முந்தைய அல்லது பிந்தைய 18 நாட்களில் திருவிழா நடக்கிறது. இதில் அரவானுக்கும் கிருஷ்ணரின் பெண் வடிவமான மோகினிக்கும் நடக்கும் திருமணம், அரவானின் பலிக்குப் பின் மோகினி விதவையாகுதல் மற்றும் புலம்பல் ஆகியவையே முக்கிய சடங்குகளாகும். இத் திருவிழாவின் முக்கிய நாளான பௌர்ணமி அன்று அரவானின் தன்பலி நடத்திக் காட்டப்படுகிறது.[55][72] தன்பலி சடங்கு நிகழ்வுக்கு முன்பு கூவாகமெங்கும் தூக்கிச் சொல்லப்படும் கூத்தாண்டவர் / அரவான் தங்களை அரவாணிகள் என்று அழைத்துக்கொள்கின்ற, இங்கு வாழும் திருநங்கைகள், அரவானுக்கும் மோகினிக்கும் நடைபெறும் திருமணத்தை நடத்தி காட்டுவதன் மூலம் கூவாகம் திருவிழாவில் கலந்துகொள்வர். (தமிழ் நாட்டின் தேவனாம்பட்டினம், திருவேட்களம், அதிவராகநத்தம் (சிதம்பரத்திலிருந்து வடமேற்கே 5 கிமீ தொலைவில் உள்ளது) மற்றும் கொத்தடை மற்றும் புதுச்சேரியில்[73] உள்ள பிள்ளையார்குப்பம் போன்ற இடங்களில் சிறியளவில் நடைபெறும் கூத்தாண்டவர் திருவிழாக்களிலும் திருநங்கைகள் இதே போன்று கலந்து கொள்வர். பல ஆண்டுகளாக உள்ளூரைச் சேர்ந்த திருநங்கைகளே இந்த விழாவில் கலந்து கொண்டு வருகின்றனர் எனினும், 1960 ஆம் ஆண்டு முதல் தமிழ் நாடு மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகள், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் திருநங்கைகள் வந்து இந்த விழாவில் கலந்துகொள்கின்றனர்.[51][74][75] திருநங்கைகளையும் சேர்த்து தோரயமாக 25,000 மாற்றுப்பால் உடையணிந்தவர்கள் இந்த திருவிழாவைக் காண வருகின்றனர்.[76] 1906 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஃபிரான்சிசின் பதிவு வன்னியர் மற்றும் மற்ற சூத்திரர் சமூகங்களைச் சேர்ந்த ஆண்களே பெண்கள் உடையணிந்து இவ்விழாவுக்கு வருவதாகக் கூறுகிறது. இவ்விழா சூத்திரர்களிடையே பிரபலமானது என்றும் கூறுகிறது. ஆனால் திருநங்கைகள் பற்றி வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை. மேலும் ஆண்களைக் கூத்தாண்டவருக்கு மணமுடிப்பதும் அவர்கள் விதவைக்கோலமேற்பதும் திருவிழாவின் இறுதி நாள் நடைபெற்றதாக பிரான்சிஸ் கூறுகிறார் (தற்போதைய விழாக்களில் திருமணச்சடங்கு 14ம் நாளும், விதவைக்கோலச் சடங்கு 16ம் நாளும் நிகழ்த்தப்படுகின்றன).[77] கூத்தாண்டவர் திருவிழாவின் முதல் ஆறு நாட்களின் போது, வானவேடிக்கைகள் மற்றும் இசை வாத்தியங்கள் முழங்க அரவானின் தலை (சாமி ) கூவாகத்தின் முக்கிய வீதிகளில் நடனத்துடன் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும். இந்த ஊர்வலத்தின் போது ஒவ்வொரு வீட்டிலிருந்தும் தீபாராதனை, தேங்காய் உடைத்தல் மற்றும் பிற சடங்குகளுடன் அரவானுக்குப் பூசை செய்வர். 13 ஆம் நாளில் அரவானின் ஆன்மா சடங்கு முறைப்படி தலையிலிருந்து ஒரு பானைக்கு மாற்றப்படுகிறது. இதன் பிறகு தலைக்கு வண்ணம் தீட்டப்படுகிறது. 14 ஆம் நாளின் மாலை நேரத்தில் ஊர்வலத் தேரில் 20 அடி உயரமுள்ள நீண்ட கம்பம் ஒன்று செங்குத்தாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்தக் கம்பம் தான் திருவிழாவின் அடுத்து வரும் நாட்களில் அரவானின் தலை மற்றும் உடலைத் தாங்குகிறது. "கம்பம் நிறுத்துதல்" சடங்குக்குப் பிறகு, அரவானை மணப்பதாக வேண்டிக் கொண்ட இளம் மற்றும் நடுத்தர வயது ஆண்கள் (கூவாகம், அதன் சுற்றுப் பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் வணிகர்கள்) திருமணமான பெண்களின் அடையாளமான தாலியை வாங்குவார்கள். அரவான் சார்பாகக் கருதப்படும் பூசாரி கோவிலின் உட்புறக் கருவறையில் வைத்து அவர்களது கழுத்தில் தாலியைக் கட்டுவார்.[78][79] திருமணமான ஆண்களும் நோய்வாய்ப்பட்ட ஆண்களும் கூட அரவானை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகத் திருவிழாவில் பெண் உடையணிந்து அரவானைத் திருமணம் செய்து கொள்வர்.[74] 14 ஆம் நாளிலிருந்து 16 ஆம் நாள் வரை திருநங்கைகள் வருகை அதிகமாக இருக்கும். அவர்கள் 15 ஆம் நாளின் இரவு அரவானின் பூங்கரகத்தைத் தலையில் வைத்து நடனமாடுவர். இதில் அரவானின் சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது.[78] இந்த நடனத்திற்குப் பிறகு அவர்களுக்குத் தாலி கட்டி பூசாரி அவர்களை அரவானுக்குத் திருமணம் செய்து வைப்பார். பிறகு அவர்கள் தங்கள் திருமணத்தை முழுமைப்படுத்துவதற்கு அடையாளமாக உடலுறவில் ஈடுபடுவர். அன்று இரவு முழுவதும் திருநங்கைகள் கட்டுப்பாடற்று பலருடன் உடலுறுவு கொண்டு கொண்டாடுவர்.[55][72] ஆனால் அரவானை மணந்த கிராமவாசிகள் இவ்வாறு உடலுறவில் பங்கு கொள்வதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. இத்திருநங்கைகள் பெண்களின் உடைகளையும் அணிகலன்களையும் அணிந்து கொள்கின்றனர். ஆனால் நேர்த்திக்கடனுக்காக அரவானைத் திருமணம் செய்துகொள்ளும் கிராமத்துவாசிகள் வழக்கமான ஆண் உடைகளையே அணிகின்றனர்.[80] அரவானுக்காக ஒப்பாரி வைக்கும் அவரது ”மணப்பெண்”கள் (திருநங்கைகள்) 16 ஆம் நாளின் முற்பகுதியில், அரவானின் ஆன்மா புதிதாக வண்ணம் தீட்டப்பட்ட தலைக்குள் மீண்டும் செலுத்தப்பட்டு, அரவானின் கண்களுக்கு வண்ணம் தீட்டி, ”சாமி திருக்கண் திறத்தல்” சடங்கு நடைபெறுகிறது. பின்னர் அரவானின் தலையை, எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய கேடயத்தின் மீது வைத்து கிராமம் முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர். இந்தக் கேடயத்துடன் இன்னும் இரண்டு தேர்களும் எடுத்துச் செல்லப்படுகின்றன. ஒன்றில் அரவானின் மார்புக் கவசம் மற்றும் ஆபரணங்கள் வைக்கப்பட்டிருக்கும்; இவை இல்லையென்றால் திருவிழா முழுமையடையவில்லை என்றே கருதப்படுகிறது. மற்றொன்றில் அரவானின் பூ மகுடம் வைத்து கொண்டு செல்லப்படுகிறது. சேவல்களைப் பலிகொடுக்கும் சடங்குடன் திருவிழா முடிவடைகிறது. வைக்கோல் கொண்டு உருவாக்கப்பட்ட உடலில் அரவானின் தலை பொருத்தப்படுகிறது. அந்த உடலுக்கு அவரது கவசமும் ஆபரணங்களும் அணிவிக்கப்பட்டு பூமாலையும் சூட்டப்படுகிறது. முன்பு நடப்பட்ட நீண்ட கம்பத்தில் அரவானின் தலையும் உடலும் பொருத்தப்படுகின்றன. களப்பலிக்காக அரவானைத் தயார்ப்படுத்தவும் போரின் எட்டாம் நாள் மரணத்தை நிகழ்த்திக் காட்டும் சடங்குக்காகவும் இந்த உருவம் கிராமம் முழுவதும் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். மதியவேளையில், அரவான் களப்பலியைக் குறிக்கும் வகையில் தேர் வடக்கு நோக்கி திருப்பி வைக்கப்படுகிறது. பின்னர் குருட்சேத்திர போர்க்கள மேடையை நோக்கி திருப்பி வைக்கப்படுகிறது. இது போர்க்களத்தில் நுழைந்து அலம்பூசனின் கையால் இறப்பதற்காக அரவான் வருகிறார் என்பதைக் குறிக்கிறது. குருசேத்திரத்தை அடைந்த பிறகு பூமாலைகள் கழற்றப்படும். போரின் எட்டாம் நாள் அரவான் தனது சதைகளை இழந்து தோல்வி அடைந்ததை இது குறிக்கிறது.[78] போர்க்களத்திலிருந்து திரும்பி வரும் போது இந்தத் தேர் ஒப்பாரிச் சடங்குகள் செய்வதற்கென ஒதுக்கப்பட்டிருக்கும் ”அழுகளம்” மைதானத்தை நோக்கி செல்லும். அரவான் களப்பலியாகத் தன்னைத் கொடுத்ததால் கணவனை இழந்து விதவைகளாகும் திருநங்கைகள் தங்கள் தலைமுடியைக் கலைத்து அலங்கோலமாக்கி புலம்பி அழுவர். அரவான் கொஞ்சம் கொஞ்சமாக பலம் இழப்பதைக் குறிக்கும் விதத்தில் அரவானின் உடலில் இருக்கும் பூமாலைகள் ஒவ்வொன்றாக பக்தர்கள் மீது வீசி எறியப்படும். புராணக் கதையின் மோகினியைப் போலவே, திருநங்கைகள் தங்கள் வளையல்களை உடைத்தும், மார்பில் அடித்துக் கொண்டும், தங்கள் மணக்கோலத்தை அழித்தும் அரவானின் இறப்பிற்காகத் துக்கம் அனுசரிப்பர். அவர்கள் தங்கள் தாலிகளை அறுத்து இதற்காக திருவிழாவில் நடப்பட்டிருக்கும் ”வெள்ளிக்கால்” என்ற கம்பத்தின் மீது அவற்றை வீசியெறிவர். பின்னர் அவர்கள் குளித்து விட்டுத் தங்களது விதவைக் கோலத்தைக் குறிக்கும் விதமாக வெள்ளைச் சேலையை அணிந்து கொள்வர். விழா முடிந்து ஒரு மாத காலம் வரை வளையல்களையும், பல வண்ணச் சேலைகளையும் அணியாமல் தங்கள் விதவைக் கோலத்தைக் குறிக்கின்றனர்.[78] உச்சிப் பகல்வேளைக்குப் பிறகு அரவானது தேர் அழுகளத்தை அடையும் போது, அரவானின் உடம்பில் இருந்த அலங்காரங்கள் அகற்றப்பட்டு வைக்கோலாலான எலும்புக்கூடு மட்டும் காட்சியளிக்கும். பெரும்பாலான திருநங்கைகள் அங்கிருந்து சென்ற பின்னர் அரவானைத் திருமணம் செய்த ஆண்கள் தங்களது தாலிகளை அறுத்தும் வளையல்களை உடைத்தும் விதவைக் கோலம் ஏற்றுக்கொள்வர் (வெள்ளிக்கால் சடங்கு). அப்போது ”பாரதியார்” (மகாபாரதக் கதை கூறுபவர்) மகாபாரதத்தின் முடிவுக் காட்சிகளை விவரிக்கிறார். இது போரைக் காண வேண்டும் என்ற அரவானின் ஆசையை நிறைவேற்றுவதன் அடையாளமாகச் செய்யப்படுகிறது. போரின் இறுதியில் அரவானின் தலையை விட்டு உயிர் பிரிந்து செல்லும் போது, திருநங்கைகள் அரவானின் களப்பலிக்காக அழுகிறார்கள், அதே சமயம் கிராமவாசிகள் முன்னோர் ஒருவர் இறந்து விட்டார் என்பதற்காக அழுகிறார்கள் என்று ஹில்டிபைடெல் கருதுகிறார்.[78] அழுகளத்தில் இறந்த அரவானை கௌரவப்படுத்தும் விதமாக அர்ப்பணிப்பின் அடையாளமாக சமைத்த "இரத்த சோறு" அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இது அரவானின் தியாகத்தின் குறியீடாகும். இந்த சோறு குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்குக் குழந்தை பாக்கியம் அளிப்பதாக நம்பப்படுகிறது. அந்தி வேளையில் இறப்பு சடங்குகள் முடிந்த பிறகு அரவானின் தேர் “இழவு வீடு” போலக் கருதப்படுகிறது. அரவானின் எலும்புகூடான உடம்பிலிருந்து உயிரற்ற தலை நீக்கப்பட்டு, துணிகள் கொண்டு மூடப்பட்டு, சவ ஊர்வலம் போல கிராமம் முழுவதும் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. அந்தத் தலை காளிகோவிலுக்கு எடுத்து செல்லப்படுகிறது, அங்கே அரவானின் தலைக்கு மீண்டும் உயிர் கிடைக்கிறது. ”விடையாட்டி” (திரும்பும் நடனம்) சடங்கின் போது, 17 ஆம் நாளின் விடியற்காலை வரை அரவானின் தலை மீண்டும் ஒரு முறை கிராமத்தைச் சுற்றி வலம் வருகிறது. 18 ஆம் நாளான இறுதி நாளன்று, அரவானின் தலை மீண்டும் ஒருமுறை அலங்கரிக்கப்பட்டுக் கிராமத்தை இறுதியாகச் சுற்றி வருகிறது. அன்று மாலை, கோவிலின் கருவறையில் நடக்கும் மகுடம் சூட்டு விழாவில் பூசாரி தருமராக அரவானின் தலைக்கு மகுடம் சூட்டுகிறார்.[78][81] திரௌபதி வழிபாட்டு மரபின் சடங்குகள்[தொகு] அய்யம்பேட்டை திரெளபதி அம்மன் கோவிலில் உள்ள 13 அடி உயர அரவான் தலை. அவரது மகுடத்தில் ஒரு நாகப்பாம்புத் தலையையும், மகுடத்தின் பின்புறத்திலிருந்து ஒரு ஐந்து தலை நாகம் வெளி வருவதையும் இதில் காணலாம் திரௌபதியின் வழிபாட்டு மரபினர், ”படுகளம்” எனப்படும் ஆண்டு விழாவை நடத்துவதன் மூலம் மகாபாரதப் போரை நினைவுகூர்கின்றனர். இந்த விழா திரௌபதியின் திருமணத்தைக் காட்டும் கூத்து நிகழ்ச்சியுடன் தொடங்கும்.[82] இந்தத் திருவிழாவின் போது, திரௌபதியாக நடிப்பவரும், பொது நிகழ்வுகளில் பங்கு பெறும் பிற பெண்களும் அரவானுக்காகவும் போரில் மடிந்த பிற வீரர்களுக்காகவும் புலம்புவர்.[83] படுகளம் திருவிழா நடத்தப்படும் நாட்களின் எண்ணிக்கையும் அதில் அரவான் களப்பலிக் கூத்து நிகழ்ச்சி நடத்தப்படும் நாளும் அந்தந்த ஊரைப் பொறுத்து மாறுபடுகின்றன. ஆனால் பொதுவாகக் களப்பலி நிகழ்ச்சி எங்கு நடைபெறுகிறதோ, அந்த இடம் குருட்சேத்திர போர்க்களத்தைக் குறிக்கும் குறியீடாகக் கருதப்படுகிறது.[84] தமிழ் நாட்டில் உள்ள இருங்கல் என்ற பகுதியில், 18 நாட்கள் நடத்தப்படும் திருவிழாவின் இறுதி நாளான 18 ஆம் நாள் படுகளம் சடங்கு நிகழ்த்தப்படுகிறது. இச்சடங்குக்கு 16 நாட்களுக்கு முன் இந்தக் கூத்து நிகழ்த்தப்படுகிறது. ஆனால் சிங்கப்பூரில் இந்தக் களப்பலிக் கூத்து புரட்டாசி மாதத்தின் (செப்டம்பர்-அக்டோபர்) அமாவாசை நாளன்று நிகழ்த்தப்படுகிறது.[85] 10 முதல் 12 நாட்களே நடக்கும் திருவிழாக்களில் இந்தக் கூத்தும் அரவானின் களப்பலிச் சடங்கும் விழாவின் இறுதி நாள் இரவு நிகழ்த்தப்படும். இப்பழக்கம் பெரும்பாலும் பெங்களூர் மற்றும் சென்னையின் சௌக்கார்பேட்டை, ஆலந்தூர் மற்றும் பூந்தமல்லி ஆகிய இடங்களில் காணப்படுகிறது.[84] இந்த விழாக்களில் அரவானின் தோற்றத்திலும் சில வேறுபாடுகள் உள்ளன. சென்னை மற்றும் பாண்டிச்சேரி கோவில்களில் நடைபெறும் விழாக்களில் நிரந்தரமான மரத்தாலான தலை உருவம் பயன்படுத்தப்படும். கிராமப் பகுதிகளில் அரவானின் தலை மற்றும் உடல் களிமண்ணால் செய்யப்பட்டதாக இருக்கும்; இரண்டும் திருவிழா முடிந்தபின்னர் அழிக்கப்படும்.[84] திண்டிவனத்தில் மூங்கில் மற்றும் களிமண்ணால் செய்யப்பட்ட அரவானின் தலையற்ற உடல் பயன்படுத்தப்படுகிறது. கையில் வில்லுடன் இடது முழங்காலில் மண்டியிட்டு வீரமாக அரவான் காட்சியளிப்பார். பின்னர் சடங்கு முறைப்படி களிமண் தலை பொருத்தப்பட்டு, அரவானின் உருவ பொம்மை 7 அடி உயரமுள்ளதாகும். முதன்மைப் பூசாரி வாளை எடுத்து அரவான் தலையை வெட்டுவார். அரவான் தியாகம் செய்த உடல் 32 துண்டுகளாக்கப்பட்டதை உணர்த்தும் வண்ணம் ஒரு பூசணிக்காய் 32 துண்டுகளாக வெட்டப்பட்டும். அடுத்ததாக, அரவானுக்கு அவரது குருதியைப் படைக்கும் விதமாக (அரவானுக்காக முன்பே பலி கொடுக்கப்பட்ட) ஆட்டின் குருதி படைக்கப்படும். அரவானின் உடல் கழுத்திலிருந்து கீழ்ப்பகுதி வரை இரத்தக்கறை படிந்த வெள்ளைத் துணி கொண்டு மூடப்படும். இறுதியாக இரத்தத்தில் நனைக்கப்பட்ட அரிசி அரவானின் முகத்தில் தூவப்படும். பக்தர்கள் விழா முடிந்த பிறகு இந்த அரிசியை உட்கொள்கின்றனர். கூத்தாண்டவர் வழிபாட்டு மரபு பக்தர்களைப் போலவே இவர்களும் அரவானின் முகத்தில் தூவப்பட்ட இந்த அரிசியை உண்பதால் விழா முடிந்த பிறகு, பிள்ளைப் பேறு பாக்கியம் உண்டாகும் என நம்புகின்றனர்.[86] கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சத்திரம் கருப்பூர் என்ற ஊரில் அரவானின் 25 அடி நீளமுள்ள சிலை கிடைமட்டமாக நிலத்தில் படுத்து இருப்பது போன்று வடிவமைக்கப்படுகிறது. பின்னர் அரவானின் கதை நிகழ்த்திக் காட்டப்படுகிறது. நாடகத்தில் நடிக்கும் நடிகர் ஒருவர் மீது காளி தெய்வம் இறங்கியிருப்பதாக நம்பப்படுகிறது. அவர் சேவல் ஒன்றைச் சிலையின் கழுத்துப் பகுதியில் பலிகொடுக்கிறார். இது அரவானின் பலியைக் குறிக்கிறது. பின்னர் மீண்டும் இரத்தத்தில் நனைக்கப்பட்ட அரிசி பக்தர்களுக்கு, குறிப்பாக குழந்தையில்லாப் பெண்களுக்கு வழங்கப்படுகிறது.[87] இதே மாதிரியான பலிகொடுக்கும் நிகழ்வுகளும் இரத்தத்தில் நனைக்கப்பட்ட அரிசி வழங்குவதும் மேலக்கரை[88], ஆலந்தூர், பூந்தமல்லி மற்றும் விழுப்புரம் போன்ற பகுதிகளிலும் நடைபெறுகின்றன. ஆலந்தூர் மற்றும் பூந்தமல்லி பகுதிகளில் ஆடு பலியிடப்படுகிறது. கடலூர், பாதிரிக்குப்பம் மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் சேவல் பலியிடப்படுகிறது.[89] கடலூர் தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் அரவானின் தலை படுகளம் மற்றும் மகாபாரதப் போரின் நிகழ்வுகளை பார்ப்பதற்காக உயர்த்திய நிலையில் வைக்கப்படுகிறது.[64][90] சாவக மக்களின் மரபுகள்[தொகு] ஏழாம் நூற்றாண்டிலிருந்து சுமத்ரா தீவின் ஸ்ரீவிஜய வம்சத்தினால் ஆளப்பட்டுவந்த இந்தோனேசியாவின் சாவகத் தீவின் (ஜாவா) சில பகுதிகளில் இந்து சமயம் பின்பற்றப்பட்டு வந்தது. இங்கு மகாபாரத மரபு பரவி மாற்றங்களும் அடைந்தது. சமசுகிருத காப்பியங்கள் சாவகத்தின் கிராமப் பகுதிகளில் அறிமுகமானது பற்றிய முதல் ஆதாரம் பலிதுங்க (Balitung) மன்னனால் கி.பி. 907 இல் வெளியிடப்பட்ட சாங்சாங் (Sangsang) செப்புப் பட்டயங்களில் காணப்படுகிறது.[91] மகாபாரதத்தை சாவக மொழியில் பெயர்க்கும் பணி அரசன் தர்மவாங்சா தேகு (கி.பி. 990–1016)[91] என்பவரின் ஆதரவினால் தொடங்கப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பு முடிந்த பின்னர் ஒரு மாதத்திற்கு ஒரு மாலை குறைவான காலத்துக்கு (அக்டோபர் 14 - நவம்பர் 12, 996) விராட பர்வம் (மகாபாரதத்தின் நான்காம் நூல்) மக்கள் முன் வாசிக்கப்பட்டது.[91] சாவக மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட முதல் மகாபாரதப் பதிப்பு மிகவும் சுருக்கமாகவும் உரைநடை வடிவிலும் இருந்தது.[91] ஆனால் விரைவில் கிழக்கு சாவகத்தின் புலவர்கள், மகாபாரதத்தின் பர்வங்களின் (புத்தகங்கள் அல்லது அதிகாரங்கள்) கருப்பொருள்களை விரிவுபடுத்தியும், அவற்றை சாவகச் சூழலுக்கேற்ப மாற்றியும் “காகவின்” என்ற நீண்ட கவிதைகளைப் படைக்கத் தொடங்கினர்.[91] பெட்ரஸ் ஜோசப்ஸ் ஜோட்மல்டர் (Petrus Josephus Zoetmulder), என்ற டச்சு அறிஞர் இப்படைப்புகளைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “இந்த ஆண்களும் பெண்களும் இந்தியப் பெயர்களைக் கொண்டுள்ளனர். ஆனால் அடிப்படையில் இவர்கள் சாவக மக்களே - இவர்கள் சாவக மக்கள் போலத் தான் யோசிக்கிறார்கள், நடக்கிறார்கள், சாவகச் சூழலில் தான் வாழ்கிறார்கள்”.[92] வயாங் கோலெக் பொம்மலாட்ட மரபில் ”பாம்பாங்” அரவான் கைப்பாவை சாவகத்தின் வயாங் குலிட் பொம்மலாட்ட மரபில் அரவான் கைப்பாவை ஜாவா மக்களின் பாரம்பரிய நாடக வடிவமான ”வயாங்” (wayang) மற்றும் பொம்மலாட்ட நிகழ்ச்சியான ”வயாங் குலிட்”(wayang kulit) ஆகிய கலைகளின் மூலம், அரவான் மற்றும் சாவக மரபு மகாபாரதத்திலிருந்து பிற கதாப்பாத்திரங்களின் கதைகள் கூறப்படுகின்றன. அரவான் என்ற பெயர் சாவகப் பகுதியில் Irawan என்று எழுத்துக்கூட்டப்படுகிறது. இந்தியாவில் உள்ளது போலவே அர்துசுனன் (அருச்சுனன்) மற்றும் உலுப்பியின் மகனாகவே அரவான் கருதப்படுகிறார். இந்தியாவில் அரவானின் தாய் உலுப்பி என்ற நாகர் இனப் பெண்ணாவார். ஆனால் சாவக மரபில் அவர் யாசாரதா துறவி மடத்தின் முனிவர் கன்வர் (பொம்மலாட்டத்தில் ஜயாவிலபர்) என்பவரின் மகள் எனக் கூறப்படுகிறது. துறவி மடத்தில் பிறந்து தனது தந்தையிடமிருந்து விலகி தாய் மற்றும் தாத்தா ஆகியோரால் அரவான் வளர்க்கப்படுகிறார்.[93][94] பாண்டவர்களின் அமர்தா காலகட்டத்தில் நடைபெறுவதாக எழுதப்பட்ட 40க்கும் மேற்பட்ட ”லகோன்”களில் (நாடகங்கள்) அரவானும் அரவானின் மாற்றாந்தாய் மகனான அபிமன்யு அல்லது அங்கவிசயனும் முக்கிய கதாநாயகர்களாக உள்ளனர்.[95] இந்த லகோன்களில் அரவான் ”லிஜேபன்” (lijepan) பாத்திரமாக சித்தரிக்கப்படுகிறார். லிஜேபன் என்பது சிறிய, நற்குணமும் கட்டுப்பாடும், தன்னடக்கமும் உள்ள பாத்திரம் எனப் பொருள்படும். வயாங் குலிட் பொம்மலாட்ட மரபில் அரவான் ”பாம்பாங்” (நற்குணமுள்ள போர்வீரன்) என்ற பெயருடன் வெள்ளை நிற முகம் மற்றும் மென்மையான குரலுடன் சித்தரிக்கப்படுகிறார்.[96] அரவான் அமைதியான மற்றும் தீர்க்கமான குணமுள்ளவராகவும் காட்டப்படுகிறார்.[94] ”அரவான் ராபி” (Irawan Rabi, அரவானின் திருமணம்) என்ற பிரபலமான லகோன் அரவானுக்கும் கிருஷ்ணரின் மகளான திதிசாரிக்கும் இடையே இருந்த காதலைச் சொல்கிறது. அரவானுக்காக திதிசாரியை திருமணம் செய்ய நிச்சயிக்கப்படிருக்கும் வேளையில் கிருஷ்ணரின் சகோதரரும் கௌரவர்களின் நண்பருமான பலதேவர், திதிசாரி துரியோதனனின் மகனாகிய லஷ்மண மந்திரகுமரனை திருமணம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். இது பெரும் சிக்கலை உண்டாக்குகிறது. இந்த சிக்கல் பாண்டவர்கள், கௌரவர்கள் மற்றும் அரக்கப் பேரரசு (ogre-kingdom) ஆகிய மூன்று குழுக்களுக்கிடையிலான மோதலாக முடிகிறது. அரக்கர்களின் அரசன் பரந்த்ஜனா திதிசாரியை கடத்துவதற்கு திட்டமிடுகிறார். இதனால் விளையும் குழப்பம் கௌரவர்களுக்கு ஏமாற்றத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்துகிறது. கிருஷ்ணரின் மூத்த மகளும் அபிமன்யுவின் மனைவியும் அவரிடமிருந்து பிரிந்து வாழ்பவளுமான சிதி சேந்தாரி, இந்த நிலையை சாதகமாகப் பயன்படுத்தி அரவானையும் திதிசாரியையும் சேர்த்து வைத்து, தானும் தனது கணவருடன் சேர திட்டம் தீட்டுகிறாள்.[97][98] அரவானும் திதிசாரியுமே இந்த லகோனின் நாயகன்-நாயகியாகக் கருதப்பட்டாலும் நாடகத்தில் அவர்கள் வெறுமனே பார்வையாளர்களாகவே உள்ளனர்.[97] இந்த லகோனில் அரவான் ஒரு சிறிய பாத்திரம் தான் என்று ஜேம்ஸ் ஆர். பிராண்டன் கூறுகிறார்.[99] அரவான் மனத்திடம் இல்லாதவராகவும் மற்றவர்களால் வழிநடத்தப்படுபவராகவும் சித்தரிக்கப்படுகிறார் (இது தெற்கு ஆசியாவின் கலை வடிவங்களில் பரவலான சித்தரிப்பு) [97] ”சீரத் லம்பகான் பெர்கிவா பெர்கிவாதி” (Serat Lampahan Pregiwa Pregiwati) என்ற மற்றொரு லகோனும் அரவான்-திதிசாரி காதலைப் பற்றிக் கூறுகிறது.[100] நான்காம் மங்குனேகரா அரசனின் அவைப்புலவரான ஆர். எம். நிக். விரயகுசுமா (R. M. Ng. Wiryakusuma) 1883 ஆம் ஆண்டில் ”மகாபட்” என்ற கவிதை வடிவில் ”சீரத் கம்பிரனம்” என்ற லகோனை எழுதினார். அவருக்கு பின்வந்த புலவர்கள் அதை மேலும் விரிவுபடுத்தினர். இக்கதையில் அரவான் நாக்ரான்காங் கெஞ்சனா என்ற பகுதியின் அரசனாவதாகவும் ”பிரபு கம்பீரனம்” என்ற பட்டத்தைப் பெறுவதாகவும் கூறப்படுகிறது.[101] ”அரவான் மாலிங்” (Irawan Maling) என்ற மற்றொரு லகோன் அரவானுக்கும் அங்கவிசயனுக்கும் இடையே நடந்த சண்டையை விவரிக்கிறது.[102] ”பார்த்தவிசயா” (அருச்சுனனின் வெற்றி) அல்லது ”இரவான் தகா” (அரவானின் மரணம்) என்ற காகவின் கவிதை நூலில், மகாபாரதப் போரில் அரவான் மரணமடைவது விவரிக்கப்படுகிறது.[103] அரவான் பாரதப் போரின் ஆரம்பத்தில் தனது சகோதரர்களுடன் போர்க்களத்திற்குச் செல்கிறார். அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கௌரவர்கள் பலரைக் கொல்கின்றனர். பிறகு காலசரங்கி என்ற அரக்கன் அரவானைத் தாக்குகிறார். காலசரங்கியின் தந்தையைக் கொன்ற அருச்சுனனைப் போலவே தோற்றம் கொண்ட அரவானை, அருச்சுனன் எனத் தவறாக எண்ணிய காலசரங்கி, அரவானைக் கொன்றுவிடுகிறார்.[94] அரவானின் மரணத்திற்கு பழிவாங்கும் விதமாக அருச்சுனன் காலசரங்கியைக் கொன்றுவிடுகிறார். சாவக மொழி மகாபாரதத்தில் போரின் தொடக்கத்திலேயே அரவானின் மரணம் நிகழ்வதாகக் கூறப்படுகிறது.[104] இந்தக் கதையின் பொம்மலாட்ட வடிவங்களில் அரவானுக்கும் காலசரங்கிக்கும் நடக்கும் சண்டை பாரதப் போருக்கு முன்பு அரவான் தனது தந்தையைச் சந்திப்பதற்கு முன்பு நடப்பதாகக் கூறப்படுகிறது.[94] குறிப்புகள்[தொகு] ↑ Sörensen (1902) p. 345 indexes the name as Irāvat. ↑ Somasundaram O, S (Jan–Mar 2009). "Transgenderism: Facts and fictions". Indian Journal of Psychiatry 51 (1): 73–75. doi:10.4103/0019-5545.44917. பப்மெட்:19742192. பப்மெட் சென்ட்ரல்:2738402. http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2738402/. ↑ by sandhi with the onomastic suffix आन्. Iravan is the masculine nominative singular of the root form Iravat. ↑ Monier-Williams (2008). "Monier Williams Sanskrit-English Dictionary". Universität zu Köln. மூல முகவரியிலிருந்து 26 டிசம்பர் 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 7 May 2010. ↑ See "Religion Department". Official site of GWU. The George Washington University (GWU). பார்த்த நாள் 22 March 2010. for Alf Hiltebeitel's profile. ↑ 6.0 6.1 6.2 Hiltebeitel (1988) p. 320, Madeleine Biardeau is quoted on the page. ↑ 7.0 7.1 7.2 7.3 7.4 Hiltebeitel (1995) pp. 455–56 ↑ Hiltebeitel (1991) p. 309 ↑ 9.0 9.1 Hiltebeitel (1998) pp. 152, 160, 162, 165 for Koovagam images ↑ Hiltebeitel (1998) p. 147 ↑ 11.0 11.1 See Madurai's temple photos at n.g3nd3r (Jul 2, 2008). "Madukarai". Picasa Web Albums. மூல முகவரியிலிருந்து 7 நவம்பர் 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 27 March 2010. ↑ See Kothadai's temple's photos at n.g3nd3r (Jul 2, 2008). "Kothadai". Picasa Web Albums. மூல முகவரியிலிருந்து 7 நவம்பர் 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 27 March 2010. ↑ 13.0 13.1 See Pillaiyar-Kuppam's photos at n.g3nd3r (Jul 2, 2008). "Pillaiyar Kuppam". Picassa Web Albums. மூல முகவரியிலிருந்து 7 நவம்பர் 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 27 March 2010. ↑ See Devanampattinam's photos at n.g3nd3r (Jul 2, 2008). "Devanampattinam". Picasa Web Albums. மூல முகவரியிலிருந்து 7 நவம்பர் 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 27 March 2010. ↑ 15.0 15.1 "Kothattai Aravaan Festival". Flickr. Dilip Muralidaran (2008). பார்த்த நாள் 27 March 2010. ↑ See Hiltebeitel (1991) pp. 254–56, 268; Hiltebeitel (1988) p. 249 for Draupadi cult images. ↑ "ARAVAN KADABALI" (French). பார்த்த நாள் 27 March 2010. ↑ 18.0 18.1 18.2 18.3 Buitenen (1973) pp. xxiv–xxv ↑ Brockington (1998) p. 26 ↑ Sukthankar (1933) "Prolegomena" p. lxxxvi. Emphasis is original. ↑ For Viṣṇu Purana 4:20:49 and article on Irāvat, see Dikshitar (1951) p. 199. ↑ Vishnu Purana 4:20:12 translation at Wilson, Horace Hayman (1840). "The Vishnu Purana". Yahshuan Archives. மூல முகவரியிலிருந்து 4 மார்ச் 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 20 March 2010. ↑ Aadhar, Anand. "Bhāgavata Purana 9:22:32". பார்த்த நாள் 20 March 2010. ↑ 24.0 24.1 24.2 Hiltebeitel (1988) pp. 318–20 ↑ 25.0 25.1 Hiltebeitel (1991) p. 284 ↑ Barbarika is described as the son of Iravan's cousin, Ghatotkacha in the Mahabharata. ↑ See Hiltebeitel (1999) for parallels with Barbarika's story ↑ Hiltebeitel (1988) pp. 317–18 ↑ Hiltebeitel (1988) p. 318 ↑ Pattanaik (2000) p. 37 ↑ 31.0 31.1 Santhanam, Kausalya (August 17, 2001). "Symbol of sacrifice". தி இந்து. Archived from the original on 4 நவம்பர் 2012. https://web.archive.org/web/20121104064550/http://www.hindu.com/2001/08/17/stories/0917035f.htm. பார்த்த நாள்: 7 May 2010. ↑ Hiltebeitel (1988) p. 332 ↑ Shulman (1978) p. 132. Iramacamippulavar, Merkolvilakka kkatai akaravaricai (Madras, 1963), 1:40–44. ↑ Shulman (1978) p. 131 ↑ 35.0 35.1 Hiltebeitel (1995) p. 448 ↑ Sörensen 1902, p. 345. Index notes references to Irāvat in Mahabharata book 6, chapters 45, 56, 75, 81, 83, 90, 91, and 96 of the Bombay edition. ↑ For Iravan article, see Mani (1975) pp. 331–32. ↑ 38.0 38.1 Vogel (1995) pp. 75–76 ↑ Mani (1975) p. 743 (Mahabharata—Bhishma Parva 45:69) ↑ Ganguli (1883–1896). "XLV". The Mahabharata Book 6: Bhishma Parva. http://www.sacred-texts.com/hin/m06/m06045.htm. பார்த்த நாள்: 7 May 2010. ↑ For Vinda and Anuvinda, Mani (1975) (Mahabharata—Bhishma Parva 83:18–22) pp. 45, 857 ↑ Ganguli (1883–1896). "LXXXIV". The Mahabharata Book 6: Bhishma Parva. http://www.sacred-texts.com/hin/m06/m06084.htm. பார்த்த நாள்: 7 May 2010. ↑ 43.0 43.1 Ganguli (1883–1896). "Section XCI". The Mahabharata Book 6: Bhishma Parva. http://www.sacred-texts.com/hin/m06/m06091.htm#fr_438. பார்த்த நாள்: 7 May 2010. ↑ For sons of Subala, Mani (1975) pp. 90, 178, 217, 287, 758, 881. For Iravan, Mani (1975) pp. 331–32 (Mahabharata—Bhishma Parva 90:27–46) ↑ For Almabusha, Mani (1975) p. 24. For Iravan, Mani (1975) pp. 331–32 (Bhisma Parva 90:56–76) ↑ 46.0 46.1 46.2 46.3 Hiltebeitel (1995) p. 452 ↑ 47.0 47.1 47.2 47.3 Hiltebeitel (1988) pp. 322–24 ↑ 48.0 48.1 48.2 Hiltebeitel (1991) pp. 284–85 ↑ 49.0 49.1 49.2 Makaparatam of Villiputtiralvar (Villiputuralvar) 2659–2667 (kalappali. 0.8 Shulman (1978) p. 131 ↑ Shulman (1978) p. 133 ↑ 51.0 51.1 Hiltebeitel (1995) p. 453 ↑ Pattanaik (2002) p. 87 ↑ Hiltebeitel (1988) p. 324 ↑ Doshi, Tishani (May 25, 2003). "Lessons in transformation". தி இந்து. Archived from the original on 6 ஜூன் 2011. https://web.archive.org/web/20110606124222/http://www.hinduonnet.com/mag/2003/05/25/stories/2003052500600500.htm. பார்த்த நாள்: 19 March 2010. ↑ 55.0 55.1 55.2 Goldman (1993) p. 388 ↑ 56.0 56.1 Hiltebeitel (1991) p. 286 ↑ 57.0 57.1 Hiltebeitel (1988) p. 325 ↑ Hiltebeitel (1991) p. 285 ↑ Hiltebeitel (1988) p. 326 ↑ Hiltebeitel (1988) p. 329 ↑ Hiltebeitel (1988) p. 331 ↑ Hiltebeitel (1995) pp. 464–65 ↑ "This Aravan-Kuttantavar cult may well be older than the Draupadi cult and was almost certainly originally independent of it, as it still largely is today." Hiltebeitel (1988) p. 320 ↑ 64.0 64.1 64.2 64.3 64.4 64.5 Hiltebeitel refers to the North and South Arcot districts. In 1989, North Arcot was split into two districts—Tiruvannamalai and Vellore; and in 1993, South Arcot was also split into two districts—Cuddalore and Villupuram. The towns in the following table are grouped according to their current district names (taluks are noted as provided by Hiltebeitel.) ↑ See for overview of districts (Please follow links for specific details): "Districts of Tamil Nadu". Official Govt. site. Government of Tamil Nadu. மூல முகவரியிலிருந்து 2 ஏப்ரல் 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 1 April 2010. ↑ Hiltebeitel (1995) p. 448. For a map dedicating location of the 32 temples see p. 449. ↑ Until 1996, Erode district was called Periyar district. ↑ Puducherry was formerly called Pondicherry. ↑ Hiltebeitel (1988) p. 327 ↑ Hiltebeitel (1991) p. 298 ↑ Hiltebeitel (1991) p. 314 ↑ 72.0 72.1 Gurung, Madhu (Mar 18, 2007). "Journey of possibilities". தி இந்து. Archived from the original on 26 மார்ச் 2008. https://web.archive.org/web/20080326191521/http://www.hinduonnet.com/thehindu/mag/2007/03/18/stories/2007031800220100.htm. பார்த்த நாள்: 19 March 2010. ↑ See Niklas (2003) p. 14 for the account of the 10-day Pillaiyarkuppam festival, which is similar to the Koovagam description. ↑ 74.0 74.1 Thurston (2001) pp. 10–12 ↑ Elmore (2003) p. 18 ↑ Verma, Varuna (April 29, 2007). "Celebrating the third sex". The Telegraph (கொல்கத்தா). Archived from the original on பிப்ரவரி 1, 2009. https://web.archive.org/web/20090201033150/http://www.telegraphindia.com/1070429/asp/7days/story_7705455.asp. பார்த்த நாள்: May 14, 2009. ↑ Hiltebeitel (1995) p. 454 ↑ 78.0 78.1 78.2 78.3 78.4 78.5 See: Hiltebeitel (1991) p. 301 Hiltebeitel (1995) pp. 457–64 Pattanaik (2002) p. 87 ↑ தாலி கட்டுதல், தமிழர் திருமணங்களின் முக்கியச் சடங்கு. மணப்பெண் மணமகனின் வாழ்விலும் இல்லத்திலும் நுழைவதைக் குறிக்கிறது. ↑ See photos of the marriage ceremony at n.g3nd3r (Jul 2, 2008). "Koovagam:Marriage to Aravan". Picassa Web Albums. மூல முகவரியிலிருந்து 7 நவம்பர் 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 26 March 2010.. ↑ See photos of the ceremony of dancing of Aravan's head and the procession at n.g3nd3r (Jul 2, 2008). "Koovagam: Procession of Aravan". Picassa Web Albums. மூல முகவரியிலிருந்து 7 நவம்பர் 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 26 March 2010. and n.g3nd3r (Jul 2, 2008). "Koovagam: Widowhood". Picassa Web Albums. மூல முகவரியிலிருந்து 7 நவம்பர் 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 26 March 2010. ↑ Hiltebeitel (1988) p. 145 ↑ Hiltebeitel (1995) p. 462 ↑ 84.0 84.1 84.2 Hiltebeitel (1991) p. 288 ↑ Hiltebeitel (1991) p. 287 ↑ Hiltebeitel (1991) pp. 289–93 ↑ Hiltebeitel (1991) pp. 294–96 ↑ Hiltebeitel (1991) pp. 292–93 ↑ Hiltebeitel (1991) pp. 296–97 ↑ Hiltebeitel (1991) p. 294 ↑ 91.0 91.1 91.2 91.3 91.4 Supomo (1995) ↑ Zoetmulder (1974) pp. 187–188 ↑ For Ulupi: Sudibyoprono (1991) pp. 551–52 ↑ 94.0 94.1 94.2 94.3 For Irawan article: Sudibyoprono (1991) p. 237 ↑ Brandon (1993) p. 13 ↑ Mrázek (2005) pp. 274–75 ↑ 97.0 97.1 97.2 Brandon (1993) pp. 70–71 ↑ Alkire, Stephen R. and Guritno, Pandam (translation); Brandon, James R (English version) (1993). "Irawan's Wedding (Irawan Rabi)". in Brandon. பக். 171–268. ↑ Brandon (1993) p. 75 ↑ Florida (2000) p. 309 ↑ Florida (2000) p. 312 ↑ Florida (2000) p. 435 ↑ Creese (1999) p. 78 ↑ For Bharatayuddha: Sudibyoprono (1991) p. 88 புற இணைப்புகள்[தொகு] விக்கிமீடியா பொதுவகத்தில், அரவான் என்பதின் ஊடகங்கள் உள்ளன. கூவாகம் திருவிழா கூவாகம் திருவிழா பற்றிய பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சி பா உ தொ மகாபாரதம் பட்டியல் வலைவாசல் குரு வம்சம் புரூரவன் நகுசன் யயாதி புரு யது குரு துஷ்யந்தன் பரதன் பிரதிபன் சாந்தனு பாக்லீகர் சோமதத்தன் பூரிசிரவஸ் கங்கை பீஷ்மர் சத்தியவதி சித்திராங்கதன் விசித்திரவீரியன் அம்பிகை அம்பாலிகா விதுரன் திருதராட்டிரன் காந்தாரி பாண்டு குந்தி மாதுரி பாண்டவர் தருமன் (கங்கன்) வீமன் (வல்லபன்) அருச்சுனன் (பிருகன்னளை) நகுலன் (கிரந்திகன்) சகாதேவன் (தந்திரிபாலன்) திரௌபதி (சைரந்திரி) கௌரவர் துரியோதனன் துச்சாதனன் விகர்ணன் யுயுத்சு துச்சலை பானுமதி இடும்பி கடோற்கஜன் அகிலாவதி சுபத்திரை உத்தரை உலுப்பி சித்திராங்கதை அபிமன்யு அரவான் பாப்புருவாகனன் உபபாண்டவர்கள் பர்பரிகன் விருசசேனன் பரீட்சித்து ஜனமேஜயன் ஏனையோர் வியாசர் வைசம்பாயனர் ரோமஹர்சணர் உக்கிரசிரவஸ் சௌனகர் கிருபர் பரசுராமர் துரோணர் அசுவத்தாமன் ஏகலைவன் பலராமன் கிருட்டிணன் ருக்மணி உருக்மி ச‌‌த்‌தியபாமா‌ சாத்தியகி கிருதவர்மன் ஜராசந்தன் சிசுபாலன் தந்தவக்ரன் திருஷ்டகேது சகுனி உலூகன் சுபலன் கர்ணன் விருசசேனன் விருச்சகேது அம்பை துருபதன் திருட்டத்துயும்னன் சிகண்டி சஞ்சயன் விராடன் சுதேஷ்ணை கீசகன் உத்தரன் மயாசுரன் ஜயத்திரதன் இடும்பன் சல்லியன் அதிரதன் பகாசுரன் அனுமார் இந்திரன் ஊர்வசி தட்சகன் துர்வாசர் சனத்குமாரர் சௌனகர் தௌமியர் புரோசனன் சித்திரசேனன் ஆஸ்திகர் ஜரத்காரு ஆணி மாண்டவியர் உத்தங்கர் உத்தவர் சியவனர் சுகன்யா தர்மவியாதன் குருச்சேத்திரப் போர் முதல்நாள் இரண்டாம் நாள் மூன்றாம் நாள் நான்காம் நாள் ஐந்தாம் நாள் ஆறாம் நாள் ஏழாம் நாள் எட்டாம் நாள் ஒன்பதாம் நாள் பத்தாம் நாள் பதினோராம் நாள் பன்னிரண்டாம் நாள் பதின்மூன்றாம் நாள் பதின்நான்காம் நாள் பதினைந்தாம் நாள் பதினாறாம் நாள் பதினேழாம் நாள் பதினெட்டாம் நாள் போரில் ஈடுபட்ட நாடுகளும் இனக்குழுக்களும் குரு பாஞ்சாலம் துவாரகை மத்சயம் காந்தாரம் திரிகர்த்தம் சிந்து பிராக்ஜோதிசம் அங்கம் சேதி அவந்தி வத்சம் அஸ்மகம் ஆபீரம் உத்தர குரு ஒட்டரம் கரூசகம் கலிங்கம் காஞ்சி காஷ்மீரம் குந்தினம் கோசலம் சரஸ்வதம் சிவி சுக்மா சூத்திரம் சூரசேனம் சோனிதம் சௌவீரம் தசார்னம் நிசாதம் நேபா பர்வதம் பரதம் பரம காம்போஜம் பௌரண்டரம் மகதம் மத்திரம் யெளதேயம் வங்கம் துஷாரம் யாதவர்கள் பாக்லீகர்கள் ஆந்திரர்கள் சம்சப்தகர்கள் ஹர ஹூணர்கள் கசர்கள் கிராதர்கள் சகர்கள் சீனர்கள் பாரதர்கள் மிலேச்சர்கள் யவனர்கள் ஹூனர்கள் காம்போஜர்கள் தராதரர்கள் புலிந்தர்கள் ஏனையவை குரு நாடு பாஞ்சாலம் துவாரகை அஸ்தினாபுரம் அரக்கு மாளிகை இந்திரப்பிரஸ்தம் காண்டவப்பிரஸ்தம் குருச்சேத்திரம் நைமிசாரண்யம் காண்டீபம் பகவத் கீதை வியாத கீதை விதுர நீதி சனத்சுஜாதீயம் விஷ்ணு சஹஸ்ரநாமம் உத்தவ கீதை 18 பர்வங்கள் ஆதி பருவம் சபா பருவம் ஆரண்யக பருவம் விராட பருவம் உத்யோக பருவம் பீஷ்ம பருவம் துரோண பருவம் கர்ண பருவம் சல்லிய பருவம் சௌப்திக பருவம் ஸ்திரீ பருவம் சாந்தி பருவம் அனுசாசன பருவம் அசுவமேத பருவம் ஆசிரமவாசிக பருவம் மௌசல பருவம் மகாபிரஸ்தானிக பருவம் சுவர்க்க ஆரோஹன பருவம் பட்டியல் வலைவாசல் "https://ta.wikipedia.org/w/index.php?title=அரவான்&oldid=3260853" இருந்து மீள்விக்கப்பட்டது பகுப்புகள்: இந்துக் கடவுள்கள் இந்துக்களின் பாம்பு வழிபாடுகள் மகாபாரதக் கதை மாந்தர்கள் இந்து வட்டாரக் கடவுள்கள் மறைக்கப்பட்ட பகுப்பு: Commons category with local link same as on Wikidata வழிசெலுத்தல் பட்டி சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள் புகுபதிகை செய்யப்படவில்லை இந்த ஐபி க்கான பேச்சு பங்களிப்புக்கள் புதிய கணக்கை உருவாக்கு புகுபதிகை பெயர்வெளிகள் கட்டுரை உரையாடல் மாறிகள் expanded collapsed பார்வைகள் படிக்கவும் தொகு வரலாற்றைக் காட்டவும் மேலும் expanded collapsed தேடுக வழிசெலுத்தல் முதற் பக்கம் அண்மைய மாற்றங்கள் உதவி கோருக புதிய கட்டுரை எழுதுக தேர்ந்தெடுத்த கட்டுரைகள் ஏதாவது ஒரு கட்டுரை தமிழில் எழுத ஆலமரத்தடி Embassy சென்ற மாதப் புள்ளிவிவரம் Traffic stats உதவி உதவி ஆவணங்கள் Font help புதுப்பயனர் உதவி தமிழ் விக்கிமீடியத் திட்டங்கள் விக்சனரி விக்கிசெய்திகள் விக்கிமூலம் விக்கிநூல்கள் விக்கிமேற்கோள் பொதுவகம் விக்கித்தரவு பிற விக்கிப்பீடியர் வலைவாசல் நன்கொடைகள் நடப்பு நிகழ்வுகள் கருவிப் பெட்டி இப்பக்கத்தை இணைத்தவை தொடர்பான மாற்றங்கள் கோப்பைப் பதிவேற்று சிறப்புப் பக்கங்கள் நிலையான இணைப்பு இப்பக்கத்தின் தகவல் குறுந்தொடுப்பு இக்கட்டுரையை மேற்கோள் காட்டு விக்கித்தரவுஉருப்படி அச்சு/ஏற்றுமதி ஒரு புத்தகம் உருவாக்கு PDF என தகவலிறக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிப்பு பிற திட்டங்களில் விக்கிமீடியா பொதுவகம் மற்ற மொழிகளில் বাংলা English Español فارسی Français ગુજરાતી हिन्दी Bahasa Indonesia Jawa ಕನ್ನಡ मैथिली മലയാളം मराठी नेपाली Polski Русский Sunda ไทย اردو இணைப்புக்களைத் தொகு இப்பக்கத்தைக் கடைசியாக 28 ஆகத்து 2021, 10:26 மணிக்குத் திருத்தினோம். அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.
* சுயநலத்தால் சுகம் கிடைக்கும் என்று மனிதன் முட்டாள்தனமாக நினைக்கிறான். உண்மையில், தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. * நம்மை நாமே பெரிதாக எண்ணிக் கொண்டு அகந்தை கொள்வது கூடாது. சாதாரணமானவர்களாக நம்மை கருதும் போது தான், நம்மிடம் கருணையும், பணிவும், நல்ல சிந்தனையும் வெளிப்படத் தொடங்கும். * விவசாயி மடையைத் திறந்து விட்டால் புவியீர்ப்பு விசையால் நீர் தானாக பள்ளத்தைநோக்கிப் பாய்வது போல எல்லா ஆற்றல்களும் மனிதனுக்கு இயல்பிலேயே இருக்கின்றன. ஆன்மிகத்தின் உதவியால் தடைகளைப் போக்கி நாம் நிறை நிலையை அடைய வேண்டும். * ஆன்மிகத்தின் உதவியால் தீயவர்கள் கூட மகானாக முடியும். வாழ்வில் தடைகளைப் போக்கினால் போதும். நம் இயல்பான குணமாகிய நிறை நிலையின் வாசல்கள் தானாகவே திறந்து விடும். * நன்மை செய்யவும், நல்லவர்களாக வாழவும் விரும்புபவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். * உண்மை எதற்கும் தலை வணங்கத் தேவையில்லை. மனித சமூகம் தான் உண்மைக்குத் தலை வணங்க வேண்டும். * எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது. அதை விழித்து எழச் செய்வதே நல்லாசிரியரின் கடமை. * இன்றைய கல்வித்திட்டம் மனிதனை இயந்திரமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. ஒழுக்கம், மனவலிமை, பரந்த அறிவு இவற்றை புகட்டுவதாக கல்வித்திட்டம் மாற வேண்டும். * மனிதர்கள் விலங்குகளை விட அதிக ஒழுக்கமானவர்களாக இல்லை. சமுதாயக் கட்டுப்பாடு என்ற சாட்டையால் மனிதன் அடக்கி வைக்கப்பட்டிருக்கிறான். * கற்புநெறியில் இருந்து பிறழும் போது, மனித சமூகம் முடிவை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகும். * நாம் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்வை அனுசரித்து அமைத்துக் கொள்வது தான் வெற்றி வாழ்வுக்கான ரகசியம். - விவேகானந்தர் இன்று விவேகானந்தரின் 150வது ஜெயந்தி! அவரது சில பொன்மொழிகளை பகிர்வதன் மூலம் நினைவு கூர்ந்துள்ளேன்! நன்றி! ஆன்மீகம் Get link Facebook Twitter Pinterest Email Other Apps Comments பூந்தளிர் January 12, 2013 at 6:28 PM விவேகானந்தரின் பொன்மொழிகள் பகிர்வுக்கு நன்றி. எல்லாமே நல்லா இருக்கு. ReplyDelete Replies Reply rajamelaiyur January 12, 2013 at 6:58 PM பகிர்வுக்கு நன்றி நண்பா ReplyDelete Replies Reply குட்டன்ஜி January 12, 2013 at 7:04 PM இந்நாளில் ஸ்வாமிஜி அவர்களின் பொன்மொழிகளை நினைவூட்டியமைக்கு நன்றி ReplyDelete Replies Reply ezhil January 12, 2013 at 8:34 PM இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில் ReplyDelete Replies Reply Seeni January 13, 2013 at 5:02 AM nalla pakivu sako... ReplyDelete Replies Reply டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று January 13, 2013 at 6:16 AM நல்ல நாளில் நல் வார்த்தைகள் ReplyDelete Replies Reply நண்டு @நொரண்டு -ஈரோடு January 13, 2013 at 6:41 PM அருமை. ReplyDelete Replies Reply Anonymous January 13, 2013 at 9:11 PM எனக்கு ரொம்ப பிடித்தவரோட பிறந்தநாளில் அவர் கூறிய பொன்மொழிவை பகிர்ந்தமைக்கு நன்றி! ReplyDelete Replies Reply காரஞ்சன் சிந்தனைகள் January 13, 2013 at 10:24 PM அருமையான பொன்மொழிகளை பகிர்ந்தமைக்கு நன்றி! ReplyDelete Replies Reply Add comment Load more... Post a Comment Popular posts from this blog என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்! November 14, 2014 என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்! இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி, ஒருவருக்கு காந்தி, ஒருவருக்கு பாரதி, ஒருவருக்கு நேதாஜி என்று ஒவ்வொருவரும் ஒருவர் மீது அபிமானமாக இருப்பார்கள். இந்த ஒருவர் மீது அபிமானம் என்பது முதலில் தாய்மீது ஆரம்பிக்கிறது, அப்படியே தகப்பன், சித்தப்பா, சித்தி, மாமா, அண்ணன், தம்பி, தாத்தா, பாட்டி என்று வளர்ந்து பிற்காலத்தே தலைவர்கள் மீதோ இல்லை சினிமா நடிகர் நடிகைகள் மீதோ மாறுகிறது. இதில் பெரிய தவறு இருப்பதாக நான் ஒன்றும் கருதவில்லை! ஒரு நடிகனோ, நடிகையோ, இல்லை தலைவரையோ நமது ஆதர்சமாக நாம் ஏற்றுக்கொள்வதில் எந்த தப்பும் இல்லைதான். அதே சமயம் அவர்கள் சொல்வதெல்லாம் வேதவாக்காக எடுத்துக்கொண்டு அப்படியே பின்பற்றுவதில்தான் தான் சிக்கலே இருக்கிறது. அது எப்படியோ போகிறது விடுங்கள்! சொல்லவந்த விஷயம் மாறிப்போகிறது. சின்ன வயதில் நான் நேருமீது அபிமானம் கொண்டு இருந்தேன். இதற்கு காரணம் நான் படித்த பாடம் ஒன்றில் நேரு ஒரு சிறுமிக்கு யானையை பரிசாக தந்தார் என்பதுதான். யாரோ ஒரு முகம் தெரியாத சிறுமிக Read more வெற்றி உன் பக்கம்! கவிதை! August 01, 2012 வெற்றி உன் பக்கம்! நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா! நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே! வேளை வரும் என்று மூலையில் கிடாதே! மூளையை உபயோகி! உதறி எறி உன் தயக்கங்களை! உற்சாகமாக புறப்படு! உன் வாழ்க்கை சிறக்க உறுதியாய் திட்டமிடு! இறுதி வரை போராடு! சலித்து போகாமல் சல்லடை போடு! உன் வாய்ப்பு உன் காலடியில் விழும்! வீணாக்காமல் விரைந்து பற்றிடு! வெற்றி உன் பக்கம் விரைந்து வந்திடும்! நம்பு இளைஞா! நம்மால் முடியும் என்று நம்பு நண்பா! முடியாதது எதுவும் இல்லை என்ற முனைப்பு உன்னிடம் இருந்தால் மலையும் கடுகாகும்! கடலின் அலைகளை எதிர்த்து கப்பல் நீந்த வில்லையா? காற்றை கிழித்து விமானங்கள் பறக்கவில்லையா? பூமியைத் துளைத்து நீர் ஊற்றெடுக்கவில்லையா? முட்டையை உடைத்து பறவைகள் பிறக்கவில்லையா? நிலவை மறைக்க மேகம் முயல்வதில்லையா? எதிர் நீச்சல் போட பழகு! என்னாலும் முடியும் என நினை! எந்நாளும் உன் பொன்னாள் ஆகும்நாள் தூரத்தில் இல்லை! டிஸ்கி} நேற்று பேய்கள் ஓய்வதில்லை பதிவிட்ட சில நிம Read more உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்! May 01, 2015 உழைத்துக் கொண்டே இருப்பவனுக்கு ஓய்வெடுப்பது பிடிப்பதில்லை! ஓய்விலும் ஓர் வேலை செய்து திருப்தி அடைய முயற்சிக்கும் மனசு! ஒய்வையே எண்ணமாக கொண்டவனுக்கு உழைக்கப் பிடிப்பதில்லை! எண்ணற்ற வேலைகள் அவன் முன்னே குவிந்தாலும் ஏதும் வேலைகள் இல்லை! என்பான்! ஓடிக்கொண்டே இருப்பதுதான் சிலருக்கு அழகு! ஓய்வெடுத்தல் அவருக்கு தூரப் பழகு! ஓடாமலே ஓரிடத்தில் நிற்பதே சிலருக்கு வழக்கம்! ஓடிப்பார்க்க சொன்னால் வந்திருமே வருத்தம்! சிற்றெரும்புகள் தான் ஆனாலும் கற்றுக்கொடுக்கின்றன சுறுசுறுப்பை! காட்டெருமைகளாய் இருந்தாலும் காட்டுகின்றன சோம்பேறித்தனத்தை! ஓர் துளி வியர்வை மண்ணில் விழுகையில் உப்புக்கள் கூட உழைப்பால் இனிக்கின்றன! தேயத் தேயவே பளிச்சிடுகின்றன இயந்திரங்கள்! வாழ்க்கையில் கைவிடக் கூடாத ஒன்று உழைப்பு! உழைப்பை நீ கைவிட்டால் உயர்வு உன்னை கைவிடும்! உழைப்புக்கு காலமில்லை! உழைக்கத் துவங்கிவிட்டால் ஓய்வெடுக்க நேரமில்லை! உழைக்கத் துவங்கிவிட்டால் மலைகூட கடுகாகும்! ஓய்வெடுக்க நினைக்கையில் கடுகும் மலையாகும்! இருபத்திநாலுமணி நேரமும்
வல்லக்கோட்டை என்ற நாட்டை வல்லபன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். வல்லக்கோட்டை செல்வச்செழிப்பான நாடு. மக்களும் எந்த ஒரு குறையும் இல்லாமல் மன்னனின் நல்லாட்சியில் சிறப்பாக வாழ்ந்துவந்தார்கள். வல்லப மகாராஜாவுக்கு நாள்தோறும் அழகாக முகச்சவரம் செய்துவைக்க நாவிதர் ஒருவர் இருந்தார். நாவிதர் தன் கைத்திறமை எல்லாம் காட்டி மிகச்சிறப்பாக சிறிது கூட வலி இல்லாமல் இதமாக முகச்சவரம் செய்துவிடுவார். இதனால் மகாராஜா மிகவும் அகம் மகிழ்ந்து அவருக்கு நிறைய ஊதியம் தந்துவந்தார். நாவிதருக்கு தேவைக்கு அதிகமாகவே வருமானம் வந்தாலும் அதை செலவு செய்ய மனம் வருவதில்லை. வீட்டில் குழந்தைகள் கிழிந்த ஆடை உடுத்துவார்கள். விழா பண்டிகை எதையும் கொண்டாட மாட்டார். நல்ல உணவு வகைகளை சமைத்து உண்ண மாட்டார்கள். கிடைக்கும் பணத்தை எல்லாம் சேர்த்து வைத்துக்கொண்டிருந்தார் அந்த நாவிதர். நிறைய செல்வம் சேர்த்தபின்னும் இன்னும் சேர்க்க வேண்டும் என்ற தீராத ஆவலில் இருந்தார். ஒருநாள் அந்த நாவிதர் வெளியூர் சென்று காட்டுவழியே திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ ஓர் குரல் எதிரொலித்தது. “ ஐயா, நாவிதரே! உமக்கு ஏழுகுடம் தங்கம் வேண்டுமா?” என்று கேட்டது அந்த குரல். நாவிதர் சுற்றும் முற்றும் பார்த்தார். யாரும் தென்படவே இல்லை! மிகவும் பயந்து போனார். ஆனால் ஆசை அவரை விடவில்லை! ஏழுகுடம் தங்கம் கிடைக்கிறதென்றால் சும்மாவா? “ யார் யார் கொடுப்பார்கள்?” என்று கேட்டார். “ அதைப்பற்றி உனக்கென்ன கவலை? உனக்கு ஏழுகுடம் தங்கம் வேண்டுமா சொல்?” என்றது குரல் “ ஆனால் அப்புறம் திருப்ப கேட்க மாட்டாயே!” என்றார் நாவிதர். “ நானாக கேட்கமாட்டேன்! ஆனால் நீயாக திருப்பிக் கொடுத்தால் வாங்கிக் கொள்வேன்!” என்றது குரல். “ நான் ஏன் திருப்பிக் கொடுக்க போகிறேன்! சரி! எனக்கு ஏழுகுடம் தங்கம் வேண்டும்! என்றார் நாவிதர். “ நீ கேட்டபடி ஏழுகுடம் தங்கம் உன் வீட்டில் இருக்கும்!” சொல்லிவிட்டு குரல் மறைந்தது. நாவிதர் அவசர அவசரமாக தன் வீட்டுக்குச் சென்று பார்த்தார். வீட்டுக்குள் ஏழு புதிய குடங்கள் மூடியுடன் இருந்தன. ஆவலாக திறந்து பார்த்தார். ஆறு குடங்களில் தங்கம் நிறைந்து இருந்தது. ஏழாவது குடம் நிறையாமல் கொஞ்சம் குறைவாக இருந்தது. “ இந்த குடம் மட்டும் ஏன் நிறையாமல் இருக்கிறது?” என்று கேட்ட நாவிதர். அதுவரை தான் சேர்த்து வைத்த பணத்தையெல்லாம் தங்கமாக மாற்றி அதில் போட்டார். அப்போதும் குடம் நிறையவில்லை. எப்படியாவது இந்த குடத்தை நிரப்பிவிட வேண்டும் என்று முடிவு செய்தார் நாவிதர். மறுநாள் அரசனுக்கு முகச்சவரம் செய்கையில், “மஹாராஜா! தாங்கள் எனக்கு கொடுக்கும் ஊதியம் போதுமானதாக இல்லை!” என்றார். ராஜாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. “நான் அதிகமாகத்தானே கொடுக்கிறேன்! அது உனக்கு போதவில்லையா? சரி! இப்போது கொடுப்பதை விட இரண்டு பங்கு அதிகமாக நாளை முதல் கொடுத்துவிடுகிறேன்!” என்றார். நாவிதர் அந்த ஊதியத்தையும் தங்கமாக மாற்றி குடத்தில் போட ஆரம்பித்தார். பிள்ளை குட்டிகளை கவனிக்கவில்லை! சாப்பாட்டைப் பற்றி யோசிக்கவில்லை! அவர் நினைவெல்லாம் அந்த ஏழுகுடம் தங்கம் பற்றித்தான். ஆனால் அந்த ஏழாவது குடம் நிறைந்த பாடில்லை. மஹாராஜாவைத் தவிர மற்றவர்களுக்கு சவரம் செய்து சம்பாதித்தார். அதுவும் அந்த குடம் நிறைய போதவில்லை. சரி பிச்சை எடுப்போம் என்று நகர வீதிகளில் பிச்சை எடுத்து அதையும் தங்கமாக மாற்றி குடத்தில் போட்டார். அப்போதும் குடம் நிறையவே இல்லை. என்ன செய்தால் அந்த குடம் நிறையும் என்று நாவிதருக்கு புரியவில்லை! எவ்வளவு போட்டாலும் நிறையவில்லையே! நான் என்ன செய்வேன்? என்று புலம்பியபடியே பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார் நாவிதர். ஒரு சமயம், நகர்வலம் வந்தார் வல்லப மஹாராஜா. அப்போது பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நாவிதரை பார்த்து அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடனே நாவிதரை அழைத்தார். “ ஏனய்யா! நாவிதரே! உனக்கு நான் இரண்டு மடங்கு அதிகமாக ஊதியம் தருகின்றேன். போதாக்குறைக்கு இன்னும் பலருக்கு முகச்சவரம் செய்து சம்பாதிக்கிறாய்! அப்புறமும் ஏன் பணம் பணம் என்று அலைந்து பிச்சை எடுக்கிறாய்? ஒருவேளை உனக்கு அந்த ஏழுகுடம் தங்கம் கிடைத்துவிட்டதா?” என்றார். “மஹாராஜா! உங்களுக்கு அந்த ஏழுகுடம் தங்கம் பற்றித் தெரியுமா?” “ ஏன் தெரியாமல்? அதில் ஏழாவது குடம் நிறையவே நிறையாது! அதுதான் நமது ஆசை! அதற்கு அளவே கிடையாது! மீதி ஆறுகுடத்தில் இருந்தும் நம்மால் தங்கத்தை எடுக்க முடியாது. ஏழாவது குடத்தை நிரப்பவும் முடியாது!” “ ஐயோ! பேராசையால் மோசம் போனேனே! என் வீட்டில் ஏழுகுடம் தங்கம் இருக்கிறதே! என்ன செய்வேன்?” ”அந்த ஏழு தங்க குடங்களால் உனக்கு ஒரு குன்றிமணி அளவு கூட பிரயோசனம் கிடையாது. எங்கு கிடைத்ததோ அங்கே சென்று திருப்பி எடுத்துக் கொள் என்றுசொல்லி விட்டுவிடு! இல்லையேல் உன் நிம்மதிதான் கெடும். இனியாவது கிடைக்கும் பணத்தை உன் மனைவி மக்களுக்கு செலவு செய்து குடும்பத்தை காப்பாற்றும் வழியைப் பார்! இல்லை இப்படி பணப்பேயாக அலைவதானால் நாளை முதல் உனக்கு அரண்மனையில் வேலை இல்லை!.” “ வேண்டாம் மஹாராஜா! அந்த குடங்களை நான் திருப்பி கொடுத்துவிடுகின்றேன்! எனக்கு நிம்மதி கிடைத்தால் போதும்!” நாவிதர் காட்டிற்கு சென்று “எனக்கு ஏழுகுடம் தங்கம் வேண்டாம் திருப்பி எடுத்துக் கொள்!” என்றார். திரும்பவும் வீட்டிற்கு வந்து பார்த்தார். அந்த ஏழு குடங்களும் காணாமல் போயிருந்தன. அந்தோ பரிதாபம்! அந்த ஏழாவது குடத்தில் அவர் உழைத்து போட்ட தங்கமும் சேர்ந்து காணாமல் போய்விட்டது. பேராசையால் இருந்த சொத்தையும் இழந்த அவர் திருந்தினார். அதன் பின் கிடைக்கும் பணத்தை மனைவி குழந்தைகளுக்கு செலவு செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்தார். (செவிவழிக்கதை) தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி! சிறுவர் பகுதி Get link Facebook Twitter Pinterest Email Other Apps Comments கரந்தை ஜெயக்குமார் August 22, 2015 at 6:50 PM அருமையான கதை நண்பரே நன்றி ReplyDelete Replies Reply balaamagi August 22, 2015 at 7:28 PM நல்ல நீதிச் சொல்லும் கதை, வாழ்த்துக்கள் தளீர், ReplyDelete Replies Reply KILLERGEE Devakottai August 22, 2015 at 8:24 PM நல்ல படிப்பினையை கொடுத்தது நமக்கும் ... ReplyDelete Replies Reply Unknown August 22, 2015 at 8:38 PM Nice ReplyDelete Replies Reply கவிஞர்.த.ரூபன் August 22, 2015 at 9:46 PM வணக்கம் ஐயா கதை மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி -நன்றி- -அன்புடன்- -ரூபன்- ReplyDelete Replies Reply Thulasidharan V Thillaiakathu August 22, 2015 at 10:47 PM மிக மிக நல்ல கதை சுரேஷ்! .. கீதா: என்னிடமும் இது போன்று நிறைய கதைகள்...எனது மகனுக்குச் சிறிய வயதில் சொல்லி இருக்கின்றேன். கணக்கில் அடங்காதவை. பின்னர் அவன் வளர்ந்ததும் அவனுக்குப் புத்தகம் வாசிக்கும் வழக்கம் வேண்டும் என்று நிறைய புத்தகங்களும் நடைபாதைக் கடையில் வாங்கி கொடுத்திருக்கின்றேன். இப்போது வெளிநாடுகளில் இருக்கும் எனது கசின்களின் பேரன் பேத்திகளுக்கும், அவர்களின் அம்மாக்களுக்கும் ஸ்கைப்பில் சொல்லி வருகின்றேன். வாரியாரின் கதைகள் உட்பட...அதை எங்கள் தளத்திலும் பகிரலமா என்றும் தோன்றுகின்றது. இத்தனை நாள் ஏனோ எனக்கு அது உரைக்கவே இல்லை...மிக்க நன்றி சுரேஷ்... ReplyDelete Replies Reply Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University August 23, 2015 at 7:46 AM நல்ல நீதிக்கதை. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு பாடம். ReplyDelete Replies Reply தேன்மதுரத்தமிழ் கிரேஸ் August 23, 2015 at 7:49 PM நல்ல அறிவுரை சொல்லும் கதை பகிர்விற்கு நன்றி சகோ ReplyDelete Replies Reply Geetha Sambasivam August 26, 2015 at 4:20 PM நல்ல கதை! ReplyDelete Replies Reply Add comment Load more... Post a Comment Popular posts from this blog என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்! November 14, 2014 என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்! இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி, ஒருவருக்கு காந்தி, ஒருவருக்கு பாரதி, ஒருவருக்கு நேதாஜி என்று ஒவ்வொருவரும் ஒருவர் மீது அபிமானமாக இருப்பார்கள். இந்த ஒருவர் மீது அபிமானம் என்பது முதலில் தாய்மீது ஆரம்பிக்கிறது, அப்படியே தகப்பன், சித்தப்பா, சித்தி, மாமா, அண்ணன், தம்பி, தாத்தா, பாட்டி என்று வளர்ந்து பிற்காலத்தே தலைவர்கள் மீதோ இல்லை சினிமா நடிகர் நடிகைகள் மீதோ மாறுகிறது. இதில் பெரிய தவறு இருப்பதாக நான் ஒன்றும் கருதவில்லை! ஒரு நடிகனோ, நடிகையோ, இல்லை தலைவரையோ நமது ஆதர்சமாக நாம் ஏற்றுக்கொள்வதில் எந்த தப்பும் இல்லைதான். அதே சமயம் அவர்கள் சொல்வதெல்லாம் வேதவாக்காக எடுத்துக்கொண்டு அப்படியே பின்பற்றுவதில்தான் தான் சிக்கலே இருக்கிறது. அது எப்படியோ போகிறது விடுங்கள்! சொல்லவந்த விஷயம் மாறிப்போகிறது. சின்ன வயதில் நான் நேருமீது அபிமானம் கொண்டு இருந்தேன். இதற்கு காரணம் நான் படித்த பாடம் ஒன்றில் நேரு ஒரு சிறுமிக்கு யானையை பரிசாக தந்தார் என்பதுதான். யாரோ ஒரு முகம் தெரியாத சிறுமிக Read more வெற்றி உன் பக்கம்! கவிதை! August 01, 2012 வெற்றி உன் பக்கம்! நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா! நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே! வேளை வரும் என்று மூலையில் கிடாதே! மூளையை உபயோகி! உதறி எறி உன் தயக்கங்களை! உற்சாகமாக புறப்படு! உன் வாழ்க்கை சிறக்க உறுதியாய் திட்டமிடு! இறுதி வரை போராடு! சலித்து போகாமல் சல்லடை போடு! உன் வாய்ப்பு உன் காலடியில் விழும்! வீணாக்காமல் விரைந்து பற்றிடு! வெற்றி உன் பக்கம் விரைந்து வந்திடும்! நம்பு இளைஞா! நம்மால் முடியும் என்று நம்பு நண்பா! முடியாதது எதுவும் இல்லை என்ற முனைப்பு உன்னிடம் இருந்தால் மலையும் கடுகாகும்! கடலின் அலைகளை எதிர்த்து கப்பல் நீந்த வில்லையா? காற்றை கிழித்து விமானங்கள் பறக்கவில்லையா? பூமியைத் துளைத்து நீர் ஊற்றெடுக்கவில்லையா? முட்டையை உடைத்து பறவைகள் பிறக்கவில்லையா? நிலவை மறைக்க மேகம் முயல்வதில்லையா? எதிர் நீச்சல் போட பழகு! என்னாலும் முடியும் என நினை! எந்நாளும் உன் பொன்னாள் ஆகும்நாள் தூரத்தில் இல்லை! டிஸ்கி} நேற்று பேய்கள் ஓய்வதில்லை பதிவிட்ட சில நிம Read more உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்! May 01, 2015 உழைத்துக் கொண்டே இருப்பவனுக்கு ஓய்வெடுப்பது பிடிப்பதில்லை! ஓய்விலும் ஓர் வேலை செய்து திருப்தி அடைய முயற்சிக்கும் மனசு! ஒய்வையே எண்ணமாக கொண்டவனுக்கு உழைக்கப் பிடிப்பதில்லை! எண்ணற்ற வேலைகள் அவன் முன்னே குவிந்தாலும் ஏதும் வேலைகள் இல்லை! என்பான்! ஓடிக்கொண்டே இருப்பதுதான் சிலருக்கு அழகு! ஓய்வெடுத்தல் அவருக்கு தூரப் பழகு! ஓடாமலே ஓரிடத்தில் நிற்பதே சிலருக்கு வழக்கம்! ஓடிப்பார்க்க சொன்னால் வந்திருமே வருத்தம்! சிற்றெரும்புகள் தான் ஆனாலும் கற்றுக்கொடுக்கின்றன சுறுசுறுப்பை! காட்டெருமைகளாய் இருந்தாலும் காட்டுகின்றன சோம்பேறித்தனத்தை! ஓர் துளி வியர்வை மண்ணில் விழுகையில் உப்புக்கள் கூட உழைப்பால் இனிக்கின்றன! தேயத் தேயவே பளிச்சிடுகின்றன இயந்திரங்கள்! வாழ்க்கையில் கைவிடக் கூடாத ஒன்று உழைப்பு! உழைப்பை நீ கைவிட்டால் உயர்வு உன்னை கைவிடும்! உழைப்புக்கு காலமில்லை! உழைக்கத் துவங்கிவிட்டால் ஓய்வெடுக்க நேரமில்லை! உழைக்கத் துவங்கிவிட்டால் மலைகூட கடுகாகும்! ஓய்வெடுக்க நினைக்கையில் கடுகும் மலையாகும்! இருபத்திநாலுமணி நேரமும்
அங்கங்கள் குலுங்க மாடர்னாக வேற லெவலில் நடனமாடிய பிரபல நடிகை காஜல் !! - என்ன அம்மிணி கல்யாணத்துக்கு அப்பறம் செமையா மாறிட்டீங்களே !! ரசிகர்களை சூடேற்றிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் உள்ளே !!! - Voice Of Kollywood Home செய்திகள் ஹீரோ ஹீரோயின் விமர்சனம் விருதுகள் வைரல் சின்னத்திரை பிக் பாஸ் தமிழ் தொடர்கள் ஹாலிவுட் கிசு கிசு புகைப்படங்கள் வீடியோ Search Tuesday, December 7, 2021 About Us Contact Us Privacy Policy Terms and Conditions Disclaimer Voice Of Kollywood Home செய்திகள் ஹீரோ ஹீரோயின் விமர்சனம் விருதுகள் வைரல் சின்னத்திரை பிக் பாஸ் தமிழ் தொடர்கள் ஹாலிவுட் கிசு கிசு புகைப்படங்கள் வீடியோ Home இதர செய்திகள் அங்கங்கள் குலுங்க மாடர்னாக வேற லெவலில் நடனமாடிய பிரபல நடிகை காஜல் !! – ... இதர செய்திகள் கிசு கிசு செய்திகள் தமிழ் சினிமா புகைப்படங்கள் வீடியோ வைரல் ஹீரோயின் அங்கங்கள் குலுங்க மாடர்னாக வேற லெவலில் நடனமாடிய பிரபல நடிகை காஜல் !! – என்ன அம்மிணி கல்யாணத்துக்கு அப்பறம் செமையா மாறிட்டீங்களே !! ரசிகர்களை சூடேற்றிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் உள்ளே !!! By thor hammer - July 31, 2021 482 Facebook Twitter Google+ Pinterest WhatsApp தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் பல நடிகைகள் முப்பதை வயதை கடந்த நிலையிலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து முன்னணி நடிகையாக நடித்து வருவதோடு பல ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்கள். இந்நிலையில் சமீப காலமாக பல முன்னணி நடிகைகள் சினிமா வாழ்க்கைக்கு சற்று இடைவெளி கொடுத்து திருமண வாழ்க்கையில் தங்கள் கவனத்தை செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் பிரபல முன்னணி நடிகை காஜல் அகர்வால். மும்பையை பூர்விகமாக கொண்ட காஜல் தனது ஆரம்பகாலத்தில் மாடலாக பல விளம்பர படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இதன் மூலம் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பிரபலமாகி கடந்த 2004-ம் ஆண்டு ஹோ கயாஹ் நாஹ் எனும் ஹிந்தி படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகிற்கு அறிமுகமானர். இதனை தொடர்ந்து தனது அழகான உடலமைப்பு மற்றும் தேர்ந்த நடிப்பால் பலரது மனதை வெகுவாக கவர்ந்த காஜல் ஹிந்தி படங்களை தொடர்ந்து தமிழ் , தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் பல வெற்றி படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். சொல்லபோனால் இவர் நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு பல முன்னணி நடிகர்களுடன் நடித்த பெருமைக்குரியவர். இவ்வாறு சினிமாவில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக படங்களில் பிசியாக நடித்து வந்த அம்மிணி கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணம் முடிந்த கையோடு மாலதீவுக்கு ஹனிமூன் சென்ற தம்பதி அங்கு சென்று அவர்கள் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை சூடேற்றி வந்தார். இந்நிலையில் திருமணம் முடிந்து தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அம்மிணி இனியும் படங்களில் தொடர்ந்து படங்களில் நடிப்பீர்களா என கேட்டதற்கு எனது கணவர் வேண்டாம் என சொல்லும் வரை நடிப்பேன் அவர் நடிக்க வேண்டாம் என்றால் நான் நடிப்பதை நிறுத்தி விடுவேன் என கூறியுள்ளார். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு மாடர்னாக புகைப்படம் பதிவிடுவதை நிறுத்தி விடுவர் என பலர் எண்ணிய நிலையில் சமீபத்தில் அங்கங்கள் வெளியே தெரிய மாடர்னாக உடை அணிந்து வேற லெவலில் நடனம் ஆடி அந்த வீடியோவை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் நம்ம காஜலா இது என்னப்பா கல்யாணத்துக்கு முன்னாடி விட இப்ப மாடர்ன்ல வேற லெவல் பண்றாங்களே என வாயடைத்து போயுள்ளனர். இந்நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பலரது விமர்சனங்களை பெற்று வருகிறது. View this post on Instagram A post shared by Kajal A Kitchlu (@kajalaggarwalofficial) Nisha❤💝@MonsterBaddie @RaashiSahaDeva @juicythoppul @Saran_Vallavan @WolfieAdel @JeevaBhai00 pic.twitter.com/NjbxhFczui — PRIYA🕊️ (@manjutwtz3) July 30, 2021 TAGS actress kajal agarwal Facebook Twitter Google+ Pinterest WhatsApp Previous articleதமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்க போகும் கனவுகன்னி நடிகை சன்னி லியோன் !! – அட அவருக்கு ஹீரோவா நடிக்கபோறது இந்த டிக்டாக் பிரபலமா !! வேற லெவல் போங்க !! ரசிகர்களை உறையவைத்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் உள்ளே !!! Next articleவிபத்து கூறித்து நடிகை யாஷிகாவின் ரகசிய காதலர் கொடுத்த வாக்குமூலம் !! அட இவரு அம்மிணியா லிப்லாக் அடிச்சவாரச்சே !! வெளிவந்த வீடியோ !! ரசிகர்களை திக்குமுக்காட வைத்த புகைப்படங்கள் உள்ளே !!! thor hammer RELATED ARTICLESMORE FROM AUTHOR அந்த காட்சியில எனக்கு ஜோடியா இந்த நடிகைதான் நடிக்கணும் என கட்டளையிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி !! அம்மிணி சும்மாவே வேற லெவல் அதுவும் இந்த சீன்லையா !! ரசிகர்களை உறையவைத்த... பள்ளிப்பருவத்தில் இப்படி திருத்திருவென முழிக்கும் விஜய் டிவி பிரபலம் யார் தெரியுமா? – அட இவரா அப்போ இப்படி இருக்காரு!! வெளிவந்த புகைப்படம்!! உறைந்துபோன ரசிகர்கள்!! அம்பலமான போலி ஜூலியின் காதலர்கள் பட்டியல் !! – காதலன் மீது கொடுத்த வழக்கில் தானாக மாட்டிகொண்ட அம்மிணி !! வெளிவந்த தகவல்களால் மிரண்டுபோன காவல்துறையினர் !!! அந்த காலத்திலேயே கோர்ட்டு சூட்டுடன் கியுட்டாக இருக்கும் இந்த விஜய் டிவி பிரபலம் யார் தெரியுமா? – அட இவர எல்லோருக்குமே புடிக்குமே !! வெளிவந்த புகைப்படம்!! உறைந்து போன ரசிகர்கள்!! அட இந்த பிரபல நடிகை தான் பிரபல நடிகர் பாக்யராஜ்ன் முதல் சம்சாரமா? – தனது முதல் மனைவி கொடுத்த பரிசை இன்றும் வைத்திருக்கும் !! – வெளிவந்த தகவல்கள் மற்றும்... ஒரு வருடத்திலேயே விவாகரத்தில் முடிந்து போன பிக்பாஸ் இசைவாணியின் கல்யாண வாழ்க்கை !! – அட மாப்பிள்ளை இந்த பிரபலமா !! வெளிவந்த தகவல்கள் !!ரசிகர்களை வாயடைக்க வைத்த புகைப்படங்கள் உள்ளே... LEAVE A REPLY Cancel reply Please enter your comment! Please enter your name here You have entered an incorrect email address! Please enter your email address here Save my name, email, and website in this browser for the next time I comment. LATEST POSTS அந்த காட்சியில எனக்கு ஜோடியா இந்த நடிகைதான் நடிக்கணும்... December 5, 2021 பள்ளிப்பருவத்தில் இப்படி திருத்திருவென முழிக்கும் விஜய் டிவி பிரபலம்... December 5, 2021 அம்பலமான போலி ஜூலியின் காதலர்கள் பட்டியல் !! –... December 5, 2021 அந்த காலத்திலேயே கோர்ட்டு சூட்டுடன் கியுட்டாக இருக்கும் இந்த... December 5, 2021 அட இந்த பிரபல நடிகை தான் பிரபல நடிகர்... December 4, 2021 voiceofkollywood.com, deliver a variety of Tamil cinema news, Tamil serial news, Tamil cinema reviews, Tamil movie updates, Tamil actor news, Tamil actress news and related news and updates. Contact us: [email protected] POPULAR POSTS காமெடி ஜாம்பவன் கவுண்டமணியின் மகளா இது? இவர் செய்த செயலால் குவியும் பாராட்டுக்கள் !! February 6, 2020 “பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த மருத்துவர்கள்” வருத்ததுடன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளிறிய பிரபலம்!! – மனமுருகவைத்த வீடியோ உள்ளே! October 12, 2020 பிரபுதேவாவிற்கு விரைவில் இரண்டாவது திருமணம்!! – அட மனைவி இவரா? நீண்ட நாள் முடிவில் மாற்றம்!! வெளிவந்த புகைப்படம்!! ஆச்சர்யத்தில்... November 12, 2020 POPULAR CATEGORY தமிழ் சினிமா1942 செய்திகள்1815 ஹீரோயின்1359 புகைப்படங்கள்1321 வைரல்821 சின்னத்திரை707 ஹீரோ645 கிசு கிசு347 தொடர்கள்307 About Us Contact Us Privacy Policy Terms and Conditions Disclaimer © Copyright @2021 voiceofkollywood.com- All Rights Reserved. error: Content is protected !! '); var formated_str = arr_splits[i].replace(/\surl\(\'(?!data\:)/gi, function regex_function(str) { return ' url(\'' + dir_path + '/' + str.replace(/url\(\'/gi, '').replace(/^\s+|\s+$/gm,''); }); splited_css += ""; } var td_theme_css = jQuery('link#td-theme-css'); if (td_theme_css.length) { td_theme_css.after(splited_css); } } }); } })();
2 பெண் குழந்தைகளுக்கு 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை : நாமக்கல் அருகே 75 வயது முதியவர் உட்பட 7 பேர் கைது! நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இரண்டு பெண் குழந்தைகளை 6 மாத காலமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக 75 வயது முதியவர் உட்பட 7 பேர் கைது. Prem Kumar Updated on : 12 October 2020, 12:52 PM நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்து உள்ளது அணைப்பாளையம் கிராமம். அங்கு வசித்துவரும் 12 மற்றும் 13 வயதுடைய சிறுமிகள் இரண்டு பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாகவும், கடந்த 6 மாத காலமாக அப்பகுதியில், உள்ள சிலர் பாலியல் வன்கொடுமை செய்து வருவதாகவும் அப்பகுதியை சேர்ந்த ஒருவர், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சித பிரியாவிற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். அதன் பேரில், போலிஸார் இன்று அங்கு சென்று விசாரணை நடத்தியதில் 2 பெண் குழந்தைகளுக்கு தொடர்ந்து சிலர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து 75 முதியவர் உட்பட 6 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிவா, சண்முகம், முத்துசாமி, மணிகண்டன், சூர்யா, வரதராஜ் ஆகிய 7 பேரையும், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Also Read 6 வயது மகனை கொன்ற கும்பலால் தாய் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஆற்றில் வீச்சு.. பீகாரில் கொடூரம் namakkal நாமக்கல் பாலியல் வன்கொடுமை sexually abuse sexual assaulted ரஞ்சித பிரியா Trending கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் திருமணத்தில் செல்போன்களுக்கு தடை... OTT நிறுவனத்துடன் 100 கோடி ஒப்பந்தம்? "அரசுக்கு ஆதரவா தீர்ப்பு கொடுத்தா பணி ஓய்வுக்குப் பிறகு பதவியா?” : மக்களவையில் தயாநிதி மாறன் விளாசல்! சுதந்திரம் 75 : “விடுதலைப்போரில் வீரத் தமிழர்கள்” - சிறப்பு கட்டுரை ! நாடாளுமன்றத்துக்கு லீவ் எடுக்காம வாங்க : சத்தம் போட்ட பிரதமர் மோடி - யாரை பார்த்துச் சொன்னார் ? Latest Stories கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் திருமணத்தில் செல்போன்களுக்கு தடை... OTT நிறுவனத்துடன் 100 கோடி ஒப்பந்தம்? "அரசுக்கு ஆதரவா தீர்ப்பு கொடுத்தா பணி ஓய்வுக்குப் பிறகு பதவியா?” : மக்களவையில் தயாநிதி மாறன் விளாசல்! கோவில் நிலத்தை அபகரிக்க முதியவரை மிரட்டிய அதிமுக துணை சேர்மன்; ஆட்சியரிடம் முறையிட படையெடுத்த நாகை மக்கள்
வேளாங்கண்ணி பேராலயத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி உள்ளூர் பக்தர்கள் வழிபாடு || Velankanni matha church special prayer தலைவாசல் செய்திகள் சினிமா ஆன்மிகம் தோஷ பரிகாரங்கள் முக்கிய விரதங்கள் இந்த வார விசேஷங்கள் ஸ்லோகங்கள் கோவில்கள் வழிபாடு திருப்பாவை இஸ்லாம் கிறித்தவம் ஜோதிடம் ஆரோக்கியம் தொழில்நுட்பம் ஆட்டோமொபைல் உண்மை எது MM Apps ஸ்பெஷல்ஸ் இந்தியா vs நியூசிலாந்து சென்னை 07-12-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764 iFLICKS தொடர்புக்கு: 8754422764 Open in App செய்திகள் சினிமா ஆன்மிகம் ஜோதிடம் ஆரோக்கியம் தொழில்நுட்பம் ஆட்டோமொபைல் உண்மை எது MM Apps ஸ்பெஷல்ஸ் இந்தியா vs நியூசிலாந்து தோஷ பரிகாரங்கள் முக்கிய விரதங்கள் இந்த வார விசேஷங்கள் ஸ்லோகங்கள் கோவில்கள் வழிபாடு திருப்பாவை இஸ்லாம் கிறித்தவம் Home devotional Open in App வேளாங்கண்ணி பேராலயத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி உள்ளூர் பக்தர்கள் வழிபாடு பதிவு: செப்டம்பர் 03, 2020 10:36 IST Share Tweet Comments () அ- அ+ × Email this article to a friend Recipient's Name Recipient's Email Id Your Name Your Email Id Message in details Send 5 மாதங்களுக்கு பிறகு வேளாங்கண்ணி பேராலயம் திறக்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றி உள்ளூர் பக்தர்கள் பேராலயத்திற்குள் சென்று வழிபாடு செய்தனர். வேளாங்கண்ணி பேராலயம் திறந்ததையொட்டி பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வழிபட சென்றதை படத்தில் காணலாம். 5 மாதங்களுக்கு பிறகு வேளாங்கண்ணி பேராலயம் திறக்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றி உள்ளூர் பக்தர்கள் பேராலயத்திற்குள் சென்று வழிபாடு செய்தனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்து உள்ளது. உலக பிரசித்தி பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாளையொட்டி 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படும். இந்த திருவிழா ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வரை நடைபெறும். இதில் பல்வேறு நாடுகள், வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணி திருவிழாவுக்கு வருவர். திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வேளாங்கண்ணியில் பக்தர்களின் கூட்டம் அலை மோதும். இந்த நிலையில் கொரோனா தொற்று பரவுதலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால் வேளாங்கண்ணி பேராலயம் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டது. இந்த நிலையில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனையொட்டி பக்தர்கள் வழிபடுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் வேளாங் கண்ணி பேராலயத்தில் மேற்கொள்ளப்பட்டது. சமூக இடைவெளி, முககவசம், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு வழி முறைகளை பின்பற்றுவதற்கு ஏற்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. கோவில் முன் பகுதியில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு வசதியாக தடுப்புகளும் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த பணிகள் அனைத்தும் வேளாங் கண்ணி பேராலய நிர்வாகம் சார்பில் நடந்தது. ஆனால் வேளாங்கண்ணி பேராலயம் நேற்று முன்தினம் திறக்கப்படவில்லை. பேராலய ஆண்டு திருவிழாவில் வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என்றும், வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் மாவட்ட கலெக்டர் அறிவித்தார். இதனால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் 5 மாதங்களுக்கு பிறகு வேளாங்கண்ணி பேராலயம் நேற்று திறக்கப்பட்டது. அன்னையை தரிசனம் செய்வதற்கு வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த உள்ளூர் பக்தர்கள் மட்டும் காலை 8 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரையில் பேராலயத்தின் உள்ளே சென்று தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. நேற்று காலை 8 மணிக்கு முக கவசம் அணிந்தும், கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும், உடல் வெப்பநிலையை பரிசோதித்த பின்னரே பேராலயத்திற்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு வேளாங்கண்ணி பேராலயம் மீண்டும் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சமூக இடைவெளியை பின்பற்றி ஆரோக்கிய மாதாவை வழிபட்டனர். வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. Related Tags : Velankanni | matha | வேளாங்கண்ணி | மாதா கோவில் Share Tweet Comments () அ- அ+ × Email this article to a friend Recipient's Name Recipient's Email Id Your Name Your Email Id Message in details Send முதன்மை செய்திகள் குரூப்-4 தேர்வு அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும்- டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி மகாராஷ்டிராவில் மேலும் 2 பேருக்கு தொற்று- இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 23 ஆக உயர்வு கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50000 நிவாரணம் -அரசாணை வெளியிட்டது தமிழக அரசு மேலும் ஆன்மிகம் தலைப்புச்செய்திகள் பணப்பரிவர்த்தனை செய்யக் கூடாத நாட்களும்... பரிகாரமும்... சுவாமி ஐயப்பன் பயோடேட்டா சபரிமலையில் வழிபாடும், ஐதீகமும் பத்மாவதி தாயார் கோவிலில் நாளை பஞ்சமி தீர்த்தம் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் தொடர்புடைய செய்திகள் வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் 17 நாட்களுக்கு பிறகு பிரார்த்தனை நடத்த அனுமதி அன்னை வேளாங்கண்ணி மாதா தங்கத்தேர் கெபித் திருவிழா வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா நிறைவு வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர்பவனி பக்தர்கள் இன்றி நடந்தது அதிகம் வாசிக்கப்பட்டவை கமலுக்கு தமிழக மருத்துவத்துறை நோட்டீஸ் திட்டுவதற்கு வாய்ப்பே தரவில்லை - பாரதிராஜா வரவேற்பு முடிந்ததும் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் சகோதரியின் தலையை துண்டித்து, தலையுடன் செல்பி - காதல் திருமணம் செய்ததால் தம்பி வெறிச்செயல் கமலுக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அஷ்வினுக்கு வாய்ப்பு கொடுக்காதது குறித்து விராட் கோலி பதில் அளிக்க வேண்டும்- முன்னாள் கேப்டன் சொல்கிறார் அதிக முறை தொடர் நாயகன் விருது - சாதனை பட்டியலில் 2ம் இடம்பிடித்தார் அஷ்வின் வான்கடே டெஸ்ட்: இந்தியா 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி- தொடரையும் கைப்பற்றியது 5 மகள்களுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை ஒமைக்ரானால் 3-வது அலை வர வாய்ப்புள்ளதா?: பொது சுகாதாரத்துறை நிபுணர்கள் விளக்கம் Follow @MaalaiMalar Tweets by @maalaimalar Top Tamil News Breaking News India News World News Tamilnadu News District News Sports News Puducherry News Sirappu Katturaigal Tamil Cinema Tamil Cinema Review Tamil Cinema Preview Tamil Cinema News Tamil Cinema Gossip Star Profiles History of Tamil Cinema Tamil Movies Top Tamil Movies Spirituality Dosha pariharangal Virathangal Weekly Special Slogans Temples Worship Thirupaavai Islam Christianity Wellbeing Fitness and Yoga Home Remedies Health Food Recipe Child care Tips Natural Beauty Tips Medicine for Womens Safety Tips for Women Cookery Receipes Latest Technology Latest Tech News Latest Mobile Tabs & Computers Latest Gadgets Tech Tips Automobile Automobile News Bike Car News New Launch Auto Tips/Leaks Specials T20 WorldCup World Test Championship Tokyo Olympics India vs England TNPL Cricket IPL 2021 India vs New Zealand மற்றவை ஜோதிடம் உண்மை எது MM Apps இந்தியா vs நியூசிலாந்து தேர்தல் 2016 What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil. Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World. You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India. Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these. We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc. Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil. Others Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc. We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers. If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format. To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official Home » » இந்திய குடியரசு தின வரலாறு - ஓர் சிறப்பு பார்வை இந்திய குடியரசு தின வரலாறு - ஓர் சிறப்பு பார்வை 5 comments இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும். ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள், படிப்படியாகத் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர். அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், அத்திருநாளில் தமது தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க திருநாளான குடியரசு தினம் என்றால் என்ன? அதை கொண்டாடப்படுவதற்கான முதற்காரணம் என்ன? என்பதை விரிவாகக் காண்போம். ஆங்கிலேயரின் ஆட்சி ஐரோப்பாவைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா என்பவர், கடல்வழிப் பயணமாக 1948 ஆம் ஆண்டு இந்தியாவைக் கண்டறிந்தார். அதன் பிறகு, இந்தியாவின் வளமையைக் கண்ட ஐரோப்பியர்கள் வணிகம் செய்யும் நோக்கத்துடன், இந்தியாவில் குடியேறினர். அதன் அடிப்படையில் போர்ச்சுகீசியர்கள், முதன் முதலாக இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுகாரர்களும் என இந்தியாவில் வணிக முகாம்களை ஏற்படுத்திக்கொண்டு வாணிபத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் குடியேறிய அனைத்து ஐரோப்பியர்களும், வணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டாலும், பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்றை நிறுவி நிரந்தரமாக வணிகத்தில் ஈடுபட்டனர். நாளடைவில் இந்திய மன்னர்களிடம் இருந்த ஒற்றுமையின்மையை நன்றாகப் பயன்படுத்தி, படிப்படியாக தங்களுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தி, இந்தியாவை முழுமையாகத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார்கள். குறுகிய காலத்திற்குள் இந்தியாவைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்கள், இந்திய வளத்தை சுரண்டியது மட்டுமல்லாமல், மக்களை அடிமையாக்கி கொடுங்கோல் ஆட்சி புரியத் தொடங்கினார்கள். இந்தியா சுதந்திரம் அடைதல் ஆங்கிலேயர்களின் அடக்குமுறையைக் கண்டு வெகுண்ட மக்கள் நாளுக்கு நாள் போராட்டங்கள், கழகங்கள், புரட்சிகள் எனத் தொடங்கி, பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவை விட்டே விரட்ட எண்ணினர். அதன் அடிப்படையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய இந்தியாவில் தேசியவாத உணர்வுகள், காட்டுத் தீ போல் இந்திய மக்களிடையே பரவத்தொடங்கியது. ‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி’ என்னும் அமைப்பில் ஒன்றிணைந்த இந்திய மக்கள், ‘மின்டோ-மார்லி சீர்திருத்தம்’, ‘மாண்டேகு செமஸ் போர்டு சீர்திருத்தம்’, ‘காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்’, ‘சட்ட மறுப்பு இயக்கம்’, ‘சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு’, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’, ‘உப்பு சத்தியாகிரகம்’ எனப் பல போராட்டங்களை ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரங்கேற்றினர். இறுதியில், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை இந்தியா என்ற புதிய பாரதம் உதயமானது. இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம் 1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் “பூரண சுயராஜ்யம்” (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக “சுதந்திர நாளாகக்” கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்தியக் குடியரசு தினம் 1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. குடியரசு என்பதன் பொருள் குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம். குடியரசு தினக் கொண்டாட்டம் இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும். இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.
ஆர்யன் கான் சம்பந்தப்பட்ட வழக்கும், மத்திய சமூகநீதி அமைச்சகத்தின் பரிந்துரையும்!|Aryan khan narcotics case Vs Social justice Ministry suggestion - Vikatan Save the vikatan web app to Home Screen tap on Add to home screen. X READ IN APP Login செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் விளையாட்டு கிரிக்கெட் கால்பந்து ஐ.பி.எல் ஆன்லைன் தொடர்கள் New My News ராசி காலண்டர் மேலும் மெனுவில் Search Published: 28 Oct 2021 4 PM Updated: 28 Oct 2021 4 PM ஆர்யன் கான் சம்பந்தப்பட்ட வழக்கும், மத்திய சமூகநீதி அமைச்சகத்தின் பரிந்துரையும்! ரா.அரவிந்தராஜ் ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் Use App போதைப்பொருள் அடிமை ( Image by Daniel Reche from Pixabay ) `சொந்தப் பயன்பாட்டுக்காகக் கொஞ்சமாகப் போதைப்பொருள் வைத்திருப்பதைக் குற்றப்பட்டியலிலிருந்து நீக்குங்கள்' என மத்திய சமூகநீதி அமைச்சகம் பரிந்துரை வழங்கியிருக்கிறது. உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் இந்தியாவில், ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. கடந்த சில மாதங்களில் மட்டும் பல்லாயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. பாலிவுட், டோலிவுட் எனத் திரைப்படத்துறைக்குள் போதைப்பொருள் புழங்கும் செய்திகளும் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. சமூக நீதி அமைச்சகம் குறிப்பாக, மும்பை சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக்கூறி பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன்கான் கடந்த அக்டோபர் 3-ம் தேதி தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் (NCB) கைதுசெய்யப்பட்டார். ஆர்யன் கான்மீது போதைப்பொருள் மற்றும் மனநோய் மருந்துகள் சட்டத்தின் கீழ் (Narcotic Drugs and Psychotropic Substances Act (NDPS), 1985) பிரிவு 8(c), 20(b), 27, 35 ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆர்யன் கான் வழக்கு விசாரணையின் ஒவ்வொரு நாளும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தன. தற்போது ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது. மகன் ஆர்யன் கானுடன் ஷாருக் கான் இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக மத்திய சமூகநீதி அமைச்சகம் வெளியிட்டிருக்கும் பரிந்துரை அறிக்கை ஒன்று விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசின் சமூகநீதி அமைச்சகத்தின் பரிந்துரைகள்: மத்திய அரசின் சமூகநீதி அமைச்சகம், சமீபத்தில் ஒரு பரிந்துரை அறிக்கையைத் தயார்செய்து, அதை வருவாய்த்துறையிடம் சமர்ப்பித்திருக்கிறது. சமூகநீதி அதில், `சொந்தப் பயன்பாட்டுக்காகக் குறைவான அளவில் போதைப்பொருள் வைத்திருப்பதைக் குற்றப்பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் எனவும், அதற்கேற்ப NDPS சட்டங்களில், சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் எனவும் பரிந்துரை செய்திருக்கிறது. மேலும், குறைவான அளவில் போதைப்பொருள் வைத்திருப்பவர்களைக் கைதுசெய்து, சிறையிலடைக்காமல் அரசு மறுவாழ்வு மையங்களில் கட்டாய சிகிச்சையில் அமர்த்த வேண்டும் என மத்திய சமூகநீதி அமைச்சகம் கோரியிருக்கிறது. Also Read ஆர்யன் கான் வழக்கு: பணம் பறிப்பதாகக் குற்றம்சாட்டப்பட்ட சமீர் வான்கடேவே விசாரிப்பார் என அறிவிப்பு! ஹெராயின் சமூகநீதி அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்தச் சட்டங்கள் போதைப்பொருளை முதன்முறையாக பயன்படுத்துபவர்கள், பொழுதுபோக்குக்காகப் பயன்படுத்துபவர்கள், முற்றிலும் அடிமையானவர்கள் என எந்தவகையிலும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. அனைவருக்கும் ஒரே மாதிரியான தண்டனையை வழங்குகிறது. எனவே, சிறைத் தண்டனை, அபராதம் என்பதற்கு பதிலாக குறைந்தபட்சம் ஒரு மாதமாவது அரசு நடத்தும் மறுவாழ்வு, ஆலோசனை மையங்களில் கட்டாய சிகிச்சை பெறக்கூடிய வகையில் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பது அதன் பரிந்துரையாக இருக்கிறது. Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். ஏற்கெனவே உள்ள நடைமுறை என்ன? இந்தியாவில், போதைப்பொருள் வைத்திருப்பது, விற்பனை செய்வது, பயன்படுத்துவது போன்றவை சட்டவிரோதம். அதையும் மீறி போதைப்பொருள்கள் பயன்படுத்தினால், `போதைப்பொருள் மற்றும் மனநோய் மருந்துகள் சட்டம் (NDPS ACT) 27-வது பிரிவின்படி, ஓராண்டுவரை சிறைத் தண்டனையோ, ரூ.20,000 வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும். தற்போது, பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் கைதுசெய்யப்பட்டிருக்கும் சட்டப்பிரிவில் 27-வது பிரிவும் முக்கியமான ஒன்று. போதைப்பொருள் இதுகுறித்து, மனித உரிமைச் செயற்பாட்டாளரும், மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநருமான ஹென்றி திபேனிடன் பேசினோம். ``ஆர்யன் கான் போன்ற பணக்காரக் குடும்பத்து இளைஞனை விடுங்கள், சாதாரண ஏழைக் குடும்பத்து இளைஞர்களும் இப்படித்தான் தினமும் கைதாகிறார்கள். அவையெல்லாம் வெளியில் தெரிவதில்லை. ஹென்றி திபேன் இன்றைக்கு நகர்ப்புறங்கள் முதல் கிராமப்புறங்கள் வரை சாதாரணமாகவே பள்ளிக் கல்லூரிகளின் வளாகத்தில் கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நம்முடைய இளம் சமுதாயத்தைச் சீரழிக்கக்கூடிய இந்த நடைமுறைகள் பெரும்பாலும் காவல்துறையின் கண்முன்னே நடக்கிறது என்பதுதான் வருத்தத்துக்குரிய செய்தி. இதில், ஏதேனும் ஒரு சூழ்நிலையில், காவல்துறையினர் யாரையாவது பிடித்துவிடுகிறார்கள். அவர்களிடம் `Commercial Quantity' அளவுக்கு Narcotics Content இருந்தாலோ அல்லது இருந்தது என காவல்துறையால் சொல்லப்பட்டாலோ, நிரூபிக்கக்கூடத் தேவையில்லை. அவர்களைத் தூக்கி சிறையிலடைக்கலாம். ஜாமீன்கூட கிடைக்காது, அவர்கள் சிறையிலேயே ஒழியவேண்டியதுதான். இதுதான் இப்போதிருக்கிற கொடூரச் சட்டம். ஹென்றி திபேன் இப்படி, போதைப்பொருள் சார்ந்திருக்கக்கூடிய விஷயங்களில், வெறும் தண்டனைக்குரிய வழக்காக வைத்து மட்டும், நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று, ஆறு ஆண்டுகளாக வழக்கு நடத்தி, விடுதலை பெறக்கூடிய நிலை இருப்பது சரியல்ல. பயன்படுத்தியவர்கள், பாதிக்கப்பட்டவர்களை விடுத்து, போதைப்பொருள் விற்பனையாளர்கள், புரோக்கர்கள் உள்ளிட்டோரைக் கைதுசெய்து தண்டனை வழங்க வேண்டும். குறிப்பாக, போதைப்பொருள் பயன்படுத்தியவர்களை குற்றவாளிகளாகக் கருதி சிறைத் தண்டனை வழங்காமல், பாதிக்கப்பட்டவர்களாகக் கருதி மறுவாழ்வு மையங்களில் கட்டாய சிகிச்சை அளிக்க வேண்டும். அந்த மறுவாழ்வு மையமும் மற்றொரு சிறைச்சாலை போன்று அல்லாமல் பயிற்சிபெற்ற, நிபுணத்துவம் பெற்ற ஆலோசனையாளர்கள் (Counsellor), மனநல மருத்துவர்கள் (Psychiatrist), சமூக ஆர்வலர்களால் (Social Activist) நடத்தப்படுகிற, ஓர் உண்மையான மறுவாழ்வு மையமாக இருக்க வேண்டும். போதைப்பொருள் நாங்கள் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக நினைக்க வேண்டாம்; அந்தக் கொடிய பழக்கத்திலிருந்து அவர்களை முற்றிலுமாக விடுவிக்கக்கூடிய உண்மையான தீர்வைத் தேடுகிறோம். எனவே, சிறைக்கு மாற்றாக மறுவாழ்வு மையம் (Rehabilitation Centre) தேவை என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. இந்தப் பரிந்துரை நிச்சயம் வரவேற்கக்கூடிய ஒரு விஷயம்" என்றார். இன்றைய சூழலில், திரைத்துறை மட்டுமின்றி, பெரிய வி.ஐ.பி குடும்பத்தினர் முதல் சாதாரண குடிசைவாழ் இளைஞர்கள் வரையிலும் போதைப்பொருள் நுகர்வு கலாசாரம் ஊடுருவிவருகிறது. அரசு உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறினால் சட்ட, ஒழுங்கு பிரச்னை ஏற்படும். சமூகச் சீர்கேடுகள் தலைதூக்கும். இந்தியாவின் மிகப்பெரிய வளமாக இருக்கும் இளைஞர் சக்தி வீண் விரையமாகும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை செய்துவருகின்றனர்.
ஆயுள் காப்பீடு மற்றும் முதலீடு குறித்து தமிழில் பேசும் தளம். I am not a professional financial advisor – certified or otherwise The purpose of articles written here is purely educational and in no way to be constituted to be financial advice. Consider your current situation, financial needs and goals and Invest as you see fit or consult a Professional Financial Advisor before investing Search Main menu Home தொடர்பு கொள்ள பொறுப்புத் துறப்பு Category Archives: Credit Card க்ரெடிட் கார்ட் – வரமா இல்லை சாபமா .? Posted on July 2, 2019 by Boston Sriram 1 க்ரெடிட் கார்ட் எண்பதுகளில் க்ரெடிட் கார்ட் கௌரவக் குறைச்சலாகப் பார்க்கப் பட்டது, பணம் கொடுத்தே பொருள் வாங்கியவர்கள் க்ரெடிட் கார்ட் நீட்டுவதை கடன் சொல்வதைப் போல எண்ணினார்கள். இந்தியாவில் க்ரெடிட் கார்டை பரவலாக உபயோகித்த முதல் தலைமுறையினர் தொண்ணூறுகளில் அது செயல் படும் விதம் புரியாமல் “ரிவால்விங் க்ரெடிட்டில்” சிக்கி சின்னாபின்னமானார்கள் இன்றைய தலைமுறை க்ரெடிட் கார்டின் கழுத்தை நெரிக்கும் அளவுக்கு எப்போதும் லிமிட் முழுவதையும் உபயோக்கின்றன்றனர். ஆக மொத்தம் க்ரெடிட் கார்ட் என்கிற வஸ்து பெரும்பாலான நேரங்களில் சரியாக புரிந்து கொள்ளப்படவேயில்லை. அமெரிக்கவில் க்ரெடிட் ஸ்கோர் போல இந்தியாவிலும் சிபில் ஸ்கோர் வந்தப்புறம் “நான் க்ரெடிட் கார்ட் எல்லாம் வச்சிக்கவே மாட்டேன்” என்று சொல்வது வேலைக்காக்காது – ஏன்னா நீங்க கடன் வாங்கி ஒழுங்கா கட்டியிருந்தாத்தான் உங்க சிபில் ஸ்கோர் ஏறும். வீட்டுக்கடன், வாகனக் கடன் போன்ற பெரிய கடன்கள் வாங்கப் போகும் போது அதிக ஸ்கோர் இருந்தாத்தான் வட்டி கம்மியா இருக்கும். நான் கார்டே வச்சிக்கிட்டத்தில்லைன்னு சொல்றவருக்கான வட்டி கார்டுக்கு மாசா மாசம் ஒழுங்கா டியூ கட்றவருக்கான வட்டியை விட அதிகமா இருக்கும். க்ரெடிட் கார்ட்டை வரமாவதும் சாபமாவதும் நாம் அதைக் கையாள்வதைப் பொருத்ததே 1. க்ரெடிட் கார்டின் பாலபாடம் இலவசக் கார்டை மட்டுமே வாங்க வேண்டும். இலவச கார்டுகள் இருக்கும் போது Annual Fee கொடுத்து கார்ட் வாங்குவது வீண் 2. ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாம், ரெண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம் – எண்பதுகளில் பிரபலமாக இருந்த வாசகம் – இது க்ரெடிட் கார்டுகளுக்கும் பொருந்தும் – பத்து கார்டு கையில் இருந்தால் எதை உபயோகிக்கிறோம், எதுக்கு எப்போ டியூ என்று மறத்து விடும். 99% மக்களுக்கு ரெண்டு கார்டுக்கு மேல் தேவையில்லை 3. ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் மாதாவையும் மாதாந்திர டியூவையும் ஒரு நாளும் மறக்க வேண்டாம் – கார்டோட டியூ தேதிக்கு 5 நாள் முன்ன ஞாபகப் படுத்தறா மாதிரி ஒரு நோட்டிஃபிகேசன் வைத்துக் கொள்ள வேண்டும், கடைசி நாள் வரை காத்திராமல் சீக்கிரமே பணத்தைச் செலுத்த வேண்டும் 4. பணத்தைச் செலுத்தும் போது ஸ்டேட்மெண்ட் பேலன்ஸ் முழுவதையும் செலுத்த வேண்டும். 5 % கட்டினா போதும் 10% கட்டினா போதும்னு பேங்க் காரன் சொல்லுவான் – ரிவால்விங் க்ரெடிட் ஒரு புதைமணல் அதில் சிக்கி மீண்டு வருவதற்கான வாய்ப்பு ரொம்ப கம்மி 5. ரிவால்விங் க்ரெடிட் உபயோகிக்காமல் பேலன்ஸ் முழுவதையும் எப்படிச் செலுத்துவது? அது ரொம்ப சிம்பிள் – அடுத்த மாசம் உங்களால் எவ்வளவு பணம் க்ரெடிட் கார்டுக்கு கட்ட முடியுமோ அதற்கும் கம்மியா இந்த மாசம் கார்டில் பொருட்கள் வாங்க வேண்டும்.. ரொம்ப சிம்பிள்தானே? 6. வங்கிகள் தரும் க்ரெடிட் லிமிட் பெரும்பாலும் பயனர்களை ரிவால்விங் க்ரெடிட் சுழலுக்குள் இழுக்கும் அளவுக்கே இருக்கும். பொதுவா ஒருத்தருக்குத் தரவேண்டிய லிமிட்டின் ரெண்டு மடங்கு தருகின்றன வங்கிகள். அவன் சொல்றதை தூர தூக்கிக் கடாசிட்டு நீங்களே உங்களுக்கு ஒரு லிமிட் செட் பண்ணுங்க – பொதுவா அது வங்கி தரும் லிமிட்டில் பாதியா இருக்கும். குறிப்பா சொல்லணும்னா சம்பளத்திலேருந்து – வாடகை அல்லது இ எம் ஐ, கார்டில் தேய்க்காத பிற செலவுகள், சேமிப்பு இவை போக எவ்வளவு கட்ட முடியுமோ அதுக்கு 5-10% கம்மியா லிமிட் முடிவு பண்ணிக்கோங்க 7. Credit Utilization Ratio : சிபில் ஸ்கோரை நிர்ணயிக்கும் முக்கிய காரணி இது. உங்களுக்கு வங்கி தந்திருக்கும் லிமிட்டில் எத்தனை சதவீதம் உபயோக்கிறீர்கள் என்பதைக் குறிப்பது இது. உங்க லிமிட் 1 லட்ச ரூபாய் என்றும் இன்று உங்க பேலன்ஸ் 50,000 என்றும் வைத்துக் கொண்டால் உங்க Credit Utilization Ratio 50%, இது ஒரு போதும் 90% தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 80%க்கு குறைவாக வைத்துக் கொள்வது உசிதம். இதற்கு ஒரு சின்ன ட்ரிக் இருக்கு. உங்க Credit Utilization Ratio வங்கியால் சிபிலுக்கு மாதமொரு முறை அதாவது ஸ்டேட்மெண்ட் எடுத்தவுடன் ரிப்போர்ட் செய்யப்படும் – உங்க பில்லிங் ட்10ம் தேதி என்று வைத்துக் கொள்வோம் – நீங்க ஸ்டேமெண்ட்டுக்கெல்லாம் காத்திராமல் 5 ம் தேதியே இருக்கும் பேலன்ஸை க்ளியர் செய்து கொண்டே வந்தால் ஒவ்வொரு மாதமும் உங்க Credit Utilization Ratio மிகக் குறைவாகவே ரிப்போர்ட் ஆகும். 8. க்ரெடிட் கார்டுகள் தரும் ரிவார்ட்ஸ் ஒரு வரப்பிரசாதம். கையில் பணம் எடுத்துச் செல்ல வேண்டாம், ஒழுங்காக திருப்பிக் கட்டினால் சிபில் ஸ்கோர் ஏறும் இவை போக கார்டுகள் வேறு ஒரு சலுகையும் தருகின்றன. அதுதான் கேஷ் பேக் மற்றும் ரிவார்ட்ஸ். குறிப்பிட்ட வகை ஷாப்பிங்குகளுக்கு கேஷ் பேக் தரும் கார்டுகள் உள்ளன. சிடி ரிவார்ட்ஸ் க்ரெடிட் கார்ட் போன்ற கார்டுகள் நீங்கள் பெரும் ரிவார்ட்ஸ் பாயிண்ட்களை பணமாக மாற்றி அதை உங்க கார்ட் பேலன்ஸ்க்கு கட்டுவதற்கு அனுமதிக்கின்றன. அதாவது கார்டும் இலவசம், அதைக் கொண்டு செய்யும் சில பர்ச்சேஸ்களுக்கு கேஷ் பேக், மற்ற பர்ச்சேஸ்களுக்கும் சுமாரா 1% ஸ்டேண்டெண்ட் க்ரெடிட் – சுருக்கமாச் சொன்னா கரும்பு தின்னக் கூலி. இப்படி நமக்கு நாமே விதிகளை வகுத்துக் கொண்டு அதை பின்பற்றுவோருக்கு க்ரெடிட் கார்ட் ஒரு நல்ல வரம். கார்டுதான் இருக்கேன்னு வருமானத்துக்கு மேல செலவு செய்தாலும், இம்மாதம் வாங்கிய பொருட்களுக்கு அடுத்த மாதம் முழுத் தொகையையும் கட்டாமல் வட்டி கட்டுவோருக்கும் வீட்டுக்கு ஆட்டோ வருமளவுக்கு அதுவே சாபம் ஜூன் மாத மல்லிகை மகள் இதழில் வந்த என் கட்டுரை. Posted in Credit Card | 1 Reply க்ரெடிட் கார்டும் CIBIL ஸ்கோரும் Posted on June 16, 2019 by Boston Sriram எனக்கு முந்தையத் தலைமுறை க்ரெடிட் கார்டை கௌரவக் குறைச்சலாகப் பார்த்தது, பணம் கொடுத்தே பொருள் வாங்கியவர்கள் க்ரெடிட் கார்ட் நீட்டுவதை கடன் சொல்வதைப் போல எண்ணினார்கள். என் நண்பர்கள் இந்தியாவில் க்ரெடிட் கார்டை பரவலாக உபயோகித்த முதல் தலைமுறையினர். அது செயல் படும் விதம் புரியாமல் “ரிவால்விங் க்ரெடிட்டில்” சிக்கி சின்னாபின்னமானார்கள் இன்றைய தலைமுறை க்ரெடிட் கார்டின் கழுத்தை நெரிக்கும் அளவுக்கு எப்போதும் லிமிட் முழுவதையும் உபயோக்கின்றன்றனர். ஆக மொத்தம் க்ரெடிட் கார்ட் என்கிற வஸ்து பெரும்பாலான நேரங்களில் சரியாக புரிந்து கொள்ளப்படவேயில்லை. சிபில் ஸ்கோர் வந்தப்புறம் “நான் க்ரெடிட் கார்ட் எல்லாம் வச்சிக்கவே மாட்டேன்” என்று சொல்வது வேலைக்காக்காது – ஏன்னா நீங்க கடன் வாங்கி ஒழுங்கா கட்டியிருந்தாத்தான் உங்க சிபில் ஸ்கோர் ஏறும். வீட்டுக்கடன், வாகனக் கடன் போன்ற Big Ticket Loan வாங்கப் போகும் போது அதிக ஸ்கோர் இருந்தாத்தான் வட்டி கம்மியா இருக்கும். நான் கார்டே வச்சிக்கிட்டத்தில்லைன்னு சொல்றவருக்கான வட்டி கார்டுக்கு மாசா மாசம் ஒழுங்கா டியூ கட்றவருக்கான வட்டியை விட அதிகமா இருக்கும். க்ரெடிட் கார்ட்டை ஒழுங்கா கையாள்வது எப்படி 1. Credit Card பாலபாடம் இலவசக் கார்டை மட்டுமே வாங்குங்க – இலவச கார்டுகள் இருக்கும் போது Annual Fee கொடுத்து கார்ட் வாங்குவது வீண் 2. ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாம், ரெண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம் – எண்பதுகளில் பிரபலமாக இருந்த வாசகம் – இது க்ரெடிட் கார்டுகளுக்கும் பொருந்தும் – பத்து கார்டு கையில் இருந்தால் எதை உபயோகிக்கிறோம், எதுக்கு எப்போ டியூ என்று மறத்து விடும். 99% மக்களுக்கு ரெண்டு கார்டுக்கு மேல் தேவையில்லை 3. ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் மாதாவையும் மாதாந்திர டியூவையும் ஒரு நாளும் மறக்க வேண்டாம் – கார்டோட டியூ தேதிக்கு 5 நாள் முன்ன ஞாபகப் படுத்தறா மாதிரி ஒரு நோட்டிஃபிகேசன் வச்சிக்கோங்க, கடைசி நாள் வரை காத்திராமல் சீக்கிரமே பணத்தைச் செலுத்தவும் 4. பணத்தைச் செலுத்தும் போது ஸ்டேட்மெண்ட் பேலன்ஸ் முழுவதையும் செலுத்தவும். 5 % கட்டினா போதும் 10% கட்டினா போதும்னு பேங்க் காரன் சொல்லுவான் – ரிவால்விங் க்ரெடிட் ஒரு புதைமணல் அதில் சிக்கி மீண்டு வருவதற்கான வாய்ப்பு ரொம்ப கம்மி 5. ரிவால்விங் க்ரெடிட் உபயோகிக்காமல் பேலன்ஸ் முழுவதையும் எப்படிச் செலுத்துவது? அது ரொம்ப சிம்பிள் – அடுத்த மாசம் உங்களால் எவ்வளவு பணம் க்ரெடிட் கார்டுக்கு கட்ட முடியுமோ அதற்கும் கம்மியா இந்த மாசம் கார்டில் தேய்ங்க.. ரொம்ப சிம்பிள்தானே? 6. வங்கிகள் தரும் க்ரெடிட் லிமிட் பெரும்பாலும் உங்களை ரிவால்விங் க்ரெடிட் சுழலுக்குள் இழுக்கும் அளவுக்கே இருக்கும். என் அனுபவத்தில் பொதுவா பயனருக்குத் தரவேண்டிய லிமிட்டின் ரெண்டு மடங்கு தருகின்றன வங்கிகள். அவன் சொல்றதை தூர தூக்கிக் கடாசிட்டு நீங்களே உங்களுக்கு ஒரு லிமிட் செட் பண்ணுங்க – பொதுவா அது வங்கி தரும் லிமிட்டில் பாதியா இருக்கும். குறிப்பா சொல்லணும்னா சம்பளத்திலேருந்து – வாடகை அல்லது இ எம் ஐ, கார்டில் தேய்க்காத பிற செலவுகள், சேமிப்பு இவை போக எவ்வளவு கட்ட முடியுமோ அதுக்கு 5-10% கம்மியா லிமிட் முடிவு பண்ணிக்கோங்க 7. Credit Utilization Ratio : சிபில் ஸ்கோரை நிர்ணயிக்கும் முக்கிய காரணி இது. உங்களுக்கு வங்கி தந்திருக்கும் லிமிட்டில் எத்தை % உபயோக்கிறீர்கள் என்பதைக் குறிப்பது இது. உங்க லிமிட் 1 லட்ச ரூபாய் என்றும் இன்று உங்க பேலன்ஸ் 50,000 என்றும் வைத்துக் கொண்டால் உங்க Credit Utilization Ratio 50%, இது ஒரு போதும் 90% தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 80%க்கு குறைவாக வைத்துக் கொள்வது உசிதம். இதற்கு ஒரு சின்ன ட்ரிக் இருக்கு. உங்க Credit Utilization Ratio வங்கியால் சிபிலுக்கு மாதமொரு முறை அதாவது ஸ்டேட்மெண்ட் எடுத்தவுடன் ரிப்போர்ட் செய்யப்படும் – உங்க பில்லிங் ட்10ம் தேதி என்று வைத்துக் கொள்வோம் – நீங்க ஸ்டேமெண்ட்டுக்கெல்லாம் காத்திராமல் 5 ம் தேதியே இருக்கும் பேலன்ஸை க்ளியர் செய்து கொண்டே வந்தால் ஒவ்வொரு மாதமும் உங்க Credit Utilization Ratio மிகக் குறைவாகவே ரிப்போர்ட் ஆகும். 8. க்ரெடிட் கார்டுகள் தரும் ரிவார்ட்ஸை ஒழுங்காக உபயோகியுங்கள். கையில் பணம் எடுத்துச் செல்ல வேண்டாம், ஒழுங்காக திருப்பிக் கட்டினால் சிபில் ஸ்கோர் ஏறும் இவை போக கார்டுகள் வேறு ஒரு சலுகையும் தருகின்றன. அதுதான் கேஷ் பேக் மற்றும் ரிவார்ட்ஸ். குறிப்பிட்ட வகை ஷாப்பிங்குகளுக்கு கேஷ் பேக் தரும் கார்டுகள் உள்ளன. சிடி ரிவார்ட்ஸ் க்ரெடிட் கார்ட் போன்ற கார்டுகள் நீங்கள் பெரும் ரிவார்ட்ஸ் பாயிண்ட்களை பணமாக மாற்றி அதை உங்க கார்ட் பேலன்ஸ்க்கு கட்டுவதற்கு அனுமதிக்கின்றன. அதாவது கார்டும் இலவசம், அதைக் கொண்டு செய்யும் சில பர்ச்சேஸ்களுக்கு கேஷ் பேக், மற்ற பர்ச்சேஸ்களுக்கும் சுமாரா 1% ஸ்டேண்டெண்ட் க்ரெடிட் – சுருக்கமாச் சொன்னா கரும்பு தின்னக் கூலி. இப்படி நமக்கு நாமே விதிகளை வகுத்துக் கொண்டால் க்ரெடிட் கார்ட் ஒரு நல்ல வரம் Posted in CIBIL Score, Credit Card பாஸ்டன் ஸ்ரீராம் – ஓர் அறிமுகம் பிறந்து வளரந்தது சென்னையில், தில்லியில் ஐந்தாண்டு காலம் பணிபுரிந்தபின் 2007 முதல் அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்கு அருகில் வாசம். படிப்பு பெருசா ஏறலேன்னாலும் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது கேக்கறாங்களேன்னு தில்லியின் IIFT இன் Executive Masters in International Business முடிச்சு பட்டம் வாங்கி ஓரமா வச்சாச்சு. அமெரிக்காவில் ஒரு மென்பொருள் கன்சல்டன்சியில் துணைத்தலைவராக (Vice President) இருப்பது பொருளீட்ட. சமூக வலைத்தளங்களிலும் த்திரிக்கைகளிலும் தனிநபர் சேமிப்பு, முதலீடு, ஆயுள் காப்பீடு குறித்து எழுதுவது சுயதிருப்திக்காக. இவை குறித்து படித்து பட்டம் பெறாவிட்டாலும் 25 ஆண்டுகால முதலீட்டு அனுபவம் இவை குறித்து ஓரளவேனும் எழுத அனுமதிக்கிறது. கடந்த சில ஆண்டுகள் எழுதிய கட்டுரைகளை தொகுக்கவும் இனி எழுதப்போகும் கட்டுரைகளுக்காகவும் இந்தத் தளம். இங்குள்ள கட்டுரைகள் பெரும்பாலும் டெர்ம் இன்சூரன்ஸ் மற்றும்
www.tamilvu.org பயன்படுத்தி, நீங்கள் உங்கள் சாதனத்தின் குக்கீகளை வைக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். விவரங்களுக்கு எங்கள் தனியுரிமை மற்றும் கொள்கைகள் பார்க்கவும்.
இங்க வந்தப்பிறகு, நான்தான் காய்கறிகள் வாங்கிவருவேன். அதுவும் மறுநாளுக்குத் தேவையானது மட்டும்தான் வாங்குவேன். எத்தனையோவருடம் விமானத்தில் வரும் காய்கறிகளை வாங்கி, அதை குளிர்சாதனப் பெட்டியில் இட்டு அன்றைய வாரத்துக்கான உணவைச் செய்தவனுக்கு,புதிய காய்கறிகளைப் பார்ப்பதே மிக்க மகிழ்ச்சியா இருக்கு. பக்கத்திலேயே கடை இருக்கும்போது எதற்கு நிறைய காய்கறிகளை வாங்கிகுளிர்சாதனப் பெட்டியில் வைக்கணும்? நான் வெண்டைக்காயை அழுத்திப் பார்த்து வாங்குவதைப் பார்த்த அங்கு வேலை பார்க்கும் பெண்மணி, நுனியை உடைச்சுப் பார்த்து வாங்குங்கஎன்றாள். நான், நுனியை உடைத்தால் மற்றவர்கள் எப்படி வாங்குவாங்க, அப்படிச் செய்யலாமா என்றேன். அதுக்கு, இங்க, காய்கறி, பழங்களைஏஜெண்டுகள்தான் சப்ளை பண்றாங்க. அன்றன்றைக்கு வாடியது, கெட்டுப்போனவைகளை இரவே, ஏஜெண்டு திரும்ப்பப் பெற்றுக்கொள்வார்.அதுனால எங்களுக்கு நஷ்டம் இல்லை. சும்மா உடைத்துப் பார்த்தே வாங்குங்க என்றார். அன்றைக்கு, அப்போதான் பறங்கிக்காயை கட் செய்து வைத்துக்கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும், எனக்குத்தான் பிடிக்காது, பசங்களாவதுசாப்பிடட்டும் என்று வாங்கிவந்தேன். அதை வைத்து, என் மனைவி, தயிர்ப்பச்சிடி செய்தாள். ரொம்ப ரிலக்டன்’டாத்தான் நான் தட்டில்போட்டுக்கொண்டேன். துவையல் சாதத்திற்கு மிக நன்றாக இருந்தது. இந்த வார திங்கள் பதிவாக, அதனை எங்கள் பிளாக்குக்கு அனுப்பினேன். செய்முறை இதுல பெருசா அளவுலாம் கிடையாது. தேவையான பொருட்கள், பறங்கிக்காய், 2-3 பச்சை மிளகாய், 3 மேசைக்கரண்டி தேங்காய் துருவல், கடுகுதிருவமாற, தேவையான அளவு தயிர், கொஞ்சம் உப்பு, கொத்தமல்லித் தழை அலங்கரிக்க. முதலில் பறங்கிக்காய் தோலை எடுத்துவிட்டு, நன்கு திருவிக்கொள்ளுங்கள். இதை கொஞ்சம் வேகவைத்துக்கொள்ளணும். அதுக்காக எங்க வீட்டில் அவனில் வேகவைக்கும் சாதனம் இருக்கு. அதுல கீழ கொஞ்சம் தண்ணீர்விட்டுவிட்டு, மேல் தட்டில் திருவின பறங்கிக்காய் கொட்டி, மூடிவிட்டு, அவனில் 4 நிமிடங்கள் வைத்தால் தேவையான அளவு வெந்துவிடும். பச்சை மிளகாய், தேங்காயை மிக்சியில் நன்கு அரைத்துக்கொள்ளவும். பாத்திரத்தில் வெந்த பறங்கிக்காய், தயிர், பச்சைமிளகாய்/தேங்காய் அரைத்த கலவை, தேவையான உப்பு போட்டு கலந்துகொள்ளவும். சிறிது எண்ணெயில் கடுகை திருவமாறி, இதனுடன் சேர்க்கவும். கொத்தமல்லித் தழையை இதனுடன் சேர்த்துக் கலக்கவும். அவ்ளோதான். பறங்கிக்காய் தயிர் பச்சிடி ரெடி. சித்த மருத்துவம், பறங்கிக்காயின் மருத்துவப் பயன்களைச் சொல்லுது. பித்தத்தை நீக்கும், நல்ல பசியை உண்டாக்கும். உடம்பு சூடாகிவிட்டால்,பறங்கிக்காய் சாப்பிட குளிர்ச்சியடையும் என்றெல்லாம் சொல்லுது. இதுநாள் வரை நான், பறங்கி அல்வா, பறங்கிக்காயை உபயோகப்படுத்தி,வெல்லம் சேர்த்துச் செய்யும் கறியைத் தவிர வேறு எதற்கும் உபயோகப்படுத்தியதில்லை. ஹோட்டல்களில், பறங்கிக்காய் விலை குறைவுஎன்பதாலும், பருப்பின் அளவைக் குறைத்து பறங்கிக்காயை அதிகரிப்பதால் சாம்பார் பருப்பு போட்டதுபோல் தெரியும் என்றுஉபயோகப்படுத்துவார்கள். ஆனால் இந்த பறங்கிக்காய் பச்சிடியை நான் விரும்பிச் சாப்பிட்டேன். சப்பாத்திக்கே, சைட் டிஷ் ஆக, இந்தப் பச்சிடியை உபயோகப்படுத்தலாமோ? நீங்களும் செய்துபார்த்துவிட்டுச் சொல்லுங்கள். அன்புடன் நெல்லைத்தமிழன் Posted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் Labels: சமையல், பறங்கிக்காய் தயிர் பச்சிடி, Monday Food Stuff 167 கருத்துகள்: துரை செல்வராஜூ 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 6:00 வாழ்க.... பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி துரை செல்வராஜூ 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 6:02 அன்பின் ஸ்ரீராம் கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு.... பதிலளிநீக்கு பதில்கள் ஸ்ரீராம். 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 6:04 இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார். நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி துரை செல்வராஜூ 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 6:06 நெல்லை அவங்க பரங்கிக்காய் தயிர் பச்சடி செஞ்சிருக்காங்க... சும்மாவே தின்னுடலாம் போல இருக்கு.. எங்கேப்பா போனீங்க... எல்லாரும்!... பதிலளிநீக்கு பதில்கள் Anuprem 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 6:06 நான் இருக்கேன்...☺️ நீக்கு பதில்கள் பதிலளி ஸ்ரீராம். 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 6:08 // சும்மாவே தின்னுடலாம் போல இருக்கு.. எங்கேப்பா போனீங்க... எல்லாரும்!... // ஹா... ஹா... ஹா.. தயிர்ப் பகடி பெரும்பாலும் தனியாகத்தான் சாப்பிட முடியும்! நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத்தமிழன் 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 9:33 துரை செல்வராஜு சார்... என்ன இருந்தாலும் பறங்கிக்காய் அல்வா மாதிரி வராது. நீக்கு பதில்கள் பதிலளி Thulasidharan V Thillaiakathu 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 6:27 துரை அண்ணே நான் இப்பத்தான் வர முடிஞ்சுச்சு...ஸாரி அண்ணா இனிமே திங்க வாவது வந்துடறேன் நாம எல்லாம் சேர்ந்து உக்காந்து சாப்பிடலாம்...ஹா ஹா ஹா கீதா நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி Anuprem 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 6:06 இனிய காலை வணக்கம் 💐💐💐💐💐👍 பதிலளிநீக்கு பதில்கள் ஸ்ரீராம். 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 6:09 இனிய காலை வணக்கம் அனுராதா பிரேம்குமார். நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி Anuprem 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 6:08 அருமையா இருக்கு... அம்மா பூசணியில் இது மாதரி செய்வாங்க... பதிலளிநீக்கு பதில்கள் நெல்லைத்தமிழன் 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 9:34 பூசனி பச்சிடியும் பறங்கிப் பச்சிடியும் இருவேறு சுவை அனுராதா ப்ரேம்குமார். நீக்கு பதில்கள் பதிலளி Anuprem 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 11:20 பரங்கியில் செஞ்சு பார்க்கலாம் அடுத்த முறை... நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி வெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 6:18 இனிய காலை வணக்கம்..... பதிலளிநீக்கு பதில்கள் ஸ்ரீராம். 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 6:36 காலை வணக்கம் வெங்கட். நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி வெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 6:19 ஆஹா பரங்கிக்காயில் பச்சடி... அதுவும் தேங்காய் போட்டு! பார்க்க நல்லா இருக்கு. Its Different too! ட்ரை பண்ணலாம்! பதிலளிநீக்கு பதில்கள் நெல்லைத்தமிழன் 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 9:35 பறங்கிக்காய் பச்சிடி பேச்சலர்ஸ் ஈசியா செய்யலாம். நன்றி வெங்கட். நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி Geetha Sambasivam 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 6:20 பறங்கிக் காய் ஓலன் தான் இன்னிக்குச் செய்யப் போறேன். ரொம்ப நாளாச்சு. சுமார் 3, 4 நாட்கள் கழிச்சு நேத்தித் தான் நான் சமைக்க ஆரம்பிச்சேன். இன்னிக்குப் பறங்கிக்காய் ஓலன் செய்யணும்னு ஆசை வந்திருக்கு. :))))) பதிலளிநீக்கு பதில்கள் ஸ்ரீராம். 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 6:36 கீதா அக்கா... ஓலன் என்பது அவியல் மாதிரி இல்லையோ? நீக்கு பதில்கள் பதிலளி Geetha Sambasivam 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 6:38 @ஸ்ரீராம், ஓலனுக்குத் தேங்காய்ப் பால் விடணும். தயிர் இல்லை. நீக்கு பதில்கள் பதிலளி ஸ்ரீராம். 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 6:40 ஓஹோ... சரி.. சரி.. நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத் தமிழன் 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 8:22 கீசா மேடம்.... அவருக்கு ஓகேவான்னு கேட்டுட்டீங்களோ? ஹாஹாஹா Back to normal என்பதறிந்து மகிழ்ச்சி. நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத்தமிழன் 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 9:52 ஓலனுக்கு மிளகு கிடையாதோ? அது எரிசேரிக்கோ? நீக்கு பதில்கள் பதிலளி Geetha Sambasivam 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 10:10 ஓலன் ரொம்பவே காரம் கம்மியானது. வயித்தை ஒண்ணும் பண்ணாது! பச்சைமிளகாய் மட்டும் ஒன்றோ பாதியோ அவரவர் விருப்பம் போல் போடலாம். நீக்கு பதில்கள் பதிலளி Geetha Sambasivam 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 10:12 எரிசேரி சிலர் பறங்கிக்காயிலும் பண்ணறாங்க தான். ஆனால் எனக்கு, வாழைக்காய், சேனைக்கிழங்கு ரெண்டிலே பண்ணினால் தான் பிடிக்கும். இரண்டையும் சேர்த்துப் போட்டும் பண்ணுவேன். எரிசேரிக்கு மி.வத்தல், மிளகு இரண்டும்! வறுக்காமல் போடணும். இப்போல்லாம் மி.பொடி, மிளகு பொடி போடறாங்க! அது அவ்வளவு ருசியாத் தெரியலை! நீக்கு பதில்கள் பதிலளி Thulasidharan V Thillaiakathu 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 6:31 யெஸ் ஓலன் செம சாஃப்ட் ரெசிப்பி. தேங்காய்ப்பால் வயிற்றுக்கு ஒன்னும் பண்ணாது கீதாக்கா சொல்லியிருப்பது போல். செம டேஸ்டியா இருக்கும். நெல்லை எரிசேரிக்குத்தான் மிளகு... அக்கா நான் பொடித்துத்தான் போடுவேன். மத்தன் எரிசேரியும் செய்வதுண்டு கேரளத்து எரிசேரி போல் அதாவது மத்தன்/பரங்கிக்காய் ப்ளஸ் பெரும்பயறு கேரளத்து ஸ்டைல். வாழை சேனை போட்டு எங்கள் வீட்டில் செய்வது பாலக்காட்டு ஸ்டைல்... கீதா நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத்தமிழன் 31 ஜூலை, 2018 அன்று முற்பகல் 10:30 கீதா ரங்கன்..... நீங்க எந்த ஊர்க்காரங்கன்னு எப்போதும் என்னைக் குழப்பறீங்க. இப்போல்லாம் ஓலன் பண்ணறீங்களா? நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி Geetha Sambasivam 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 6:21 இந்தப்பச்சடி, துவையல் சாதம் மட்டுமில்லாமல், மிளகு குழம்பு, பொடி சாதங்கள், வத்தக்குழம்பு ஆகியவற்றோடும் ஒத்துப் போகும். என் புக்ககத்தில் அடிக்கடி செய்வது இது. ஆனால் வேக வைக்காமல் துருவி நன்கு வதக்கிடுவோம். இதையே வெல்லம் போட்டும் செய்வது உண்டு. கிட்டத்தட்ட மாங்காய்ப் பச்சடி போல. பதிலளிநீக்கு பதில்கள் Geetha Sambasivam 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 10:13 இளம் பறங்கிக் கொட்டையை இளங்கொட்டை என்போம். அதில் பால் கூட்டு அருமையாக இருக்கும். அடைக்கும் துருவியோ பொடியாக நறுக்கியோ சேர்ப்பது உண்டு. எங்க வீட்டில் பறங்கிக்கொட்டை அடை அடிக்கடி இருக்கும். நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத்தமிழன் 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 6:39 ஆமாம் கீசா மேடம். மசாலா அல்லது கொஞ்சம் காரம் இருக்கற எல்லாக் கலவை சாத்த்துக்கும் இது நல்லா வரும் நீக்கு பதில்கள் பதிலளி அதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 9:15 // Geetha Sambasivam30 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 10:13 இளம் பறங்கிக் கொட்டையை இளங்கொட்டை என்போம். அதில் பால் கூட்டு அருமையாக இருக்கும். அடைக்கும் துருவியோ பொடியாக நறுக்கியோ சேர்ப்பது உண்டு. எங்க வீட்டில் பறங்கிக்கொட்டை அடை அடிக்கடி இருக்கும்./// மீ ஃபுல்லாஆஆஆஆஆஆஆ அரிச்சுப் போனேன்ன்.. இப்படிக் கேள்விப்பட்டதே இல்லை... நீக்கு பதில்கள் பதிலளி Geetha Sambasivam 31 ஜூலை, 2018 அன்று முற்பகல் 11:02 //http://sivamgss.blogspot.com/2018/03/blog-post_19.html// இங்கே போய்ப் பாருங்க அதிரடி, ஞானி, உங்க கமென்டும் அதிலே இருக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இதிலே வல்லாரை யூஸ் வேறே குடிச்சாறது! :P :P :P :P :P நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி வெங்கட் நாகராஜ் 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 6:22 சமீபத்தில் எனது கல்லூரித் தோழி, வீட்டில் பறித்த பரங்கிக்காய்களை வைத்து என்ன செய்வது என்று கேட்ட போது, இரண்டு ரெசிப்பிகள் அனுப்பி வைத்தேன். பரங்கிக்காய் பாசயம் மற்றும் பரங்கிக்காய் தொக்கு! http://kovai2delhi.blogspot.com/2011/08/blog-post_13.html http://kovai2delhi.blogspot.com/2011/05/blog-post_25.html இப்ப இந்த லிங்க்-உம் அனுப்பி வைக்கிறேன். பதிலளிநீக்கு பதில்கள் Thulasidharan V Thillaiakathu 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 6:33 வெங்கட்ஜி பரங்கிக்காயில் நிறைய செய்யலாம். வெஸ்டர்ன் ஸ்டைலில் பம்ப்கின் பட்டர் என்று (வெண்ணை எலலம் சேர்க்கவே வேண்டாம் அது ஏன் பட்ட என்றால் பரங்கியை நல்லா மையா அரைச்சு செய்யறது...ஸ்வீட் ப்ரெட் எல்லாத்துக்கும் நல்லாருக்கும்...) கீதா நீக்கு பதில்கள் பதிலளி Geetha Sambasivam 31 ஜூலை, 2018 அன்று முற்பகல் 11:07 அங்கேயும் போய்ப் பார்த்தேன். ஒரே வித்தியாசம் நான் கொஞ்சம் பாதாம், முந்திரி, பிஸ்தாவை ஊற வைச்சு அரைத்துச் சேர்ப்பேன். :))) காரட்டில் கூட இப்படிப் பாயசம் பண்ணுவது உண்டு. நீக்கு பதில்கள் பதிலளி Geetha Sambasivam 31 ஜூலை, 2018 அன்று முற்பகல் 11:11 தொக்கும் பார்த்தேன். இதுவரை தொக்குப்பண்ணியதில்லை. அதையும் பார்த்துடுவோம். :)))) நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி Geetha Sambasivam 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 6:24 பறங்கிக்காயில் அல்வாவும் செய்யலாம், வெங்கட். பிஸ்தா எசென்ஸ் சேர்த்துச் செய்தால் அருமையா இருக்கும். ராஜஸ்தான், குஜராத்தில் வீட்டில் காய்க்கும் காய்களைக் கொடுத்தது போக மிச்சத்தை இப்படிச் செய்வோம். சர்க்கரை போடாத கோவா கொஞ்சம் சேர்க்கணும். நான் நல்ல பாலைச் சுண்ட வைச்சுச் சேர்த்துடுவேன். பதிலளிநீக்கு பதில்கள் நெல்லைத்தமிழன் 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 9:44 வாங்க கீதா சாம்பசிவம் மேடம். பறங்கி அல்வாவை நினைவுபடுத்திவிட்டீர்கள். நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத்தமிழன் 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 9:48 பறங்கிக்காய் அல்வா கடைல விற்பதில்லையே. அது ஏன்? நீக்கு பதில்கள் பதிலளி Geetha Sambasivam 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 10:14 தெரியலை! பொதுவாச் சென்னையில் பறங்கி காயாக எங்கே கிடைக்குது? மஞ்சள் பழம் தானே! நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி Geetha Sambasivam 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 6:24 ஆதியின் ரெசிபியும் போய்ப் பார்க்கிறேன். பதிலளிநீக்கு பதில்கள் vallisimhan 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 6:43 பறங்கிக்காய் அல்வாக்கு அப்புறமா இந்த பச்சடி சூப்பர் ஆக இருக்கு. மைல்ட் அண்ட் ஷார்ப். வண்ணமும் சேர்ந்து பார்க்கவே நன்றாக இருக்கு. மனம் நிறை வாழ்த்துகள் நெல்லைத் தமிழன். இன்று இன்று பறங்கிக்காய் வத்தக் குழம்பு. நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத்தமிழன் 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 9:39 பார்த்தீங்களா வல்லிம்மா... நெல்லைக் காரங்களுக்குத்தான், பறங்கி அல்வா ரொம்பப்பிடிக்கும். அழகா வெல்லத்தில் செய்யறதை விட்டுட்டு வடவர்கள்மாதிரி கோவா சேர்ப்பது எனக்குப் பிடிக்காது. ஆனா பசங்க அதைத்தான் விரும்பறால்க. நீக்கு பதில்கள் பதிலளி Geetha Sambasivam 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 10:15 //நெல்லைக் காரங்களுக்குத்தான், பறங்கி அல்வா ரொம்பப்பிடிக்கும்./// grrrrrrrrrrrrrrrrrrrr நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத்தமிழன் 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 1:06 கீசா மேடம்... நீங்களும் எங்க ஊர்தான். (ஒரு காலத்துல). அப்புறம்தானே திருநெல்வேலி ஜில்லா என்றே ஒன்று வந்தது. (ஆமாம்.... நாமெல்லாம் நெல்லை, மதுரை, தஞ்சை என்று சொல்லிக்கொள்கிறோமே தவிர, இருப்பது சம்பந்தமில்லா ஊர்களில் என்று உங்களுக்கு எப்போவேனும் தோன்றியிருக்கா? அதிலும் சென்னைவாசிகள் பெரும்பாலும்-6க்கு 1ன்னு சொல்றாங்க, வெளியூர்ல இருந்து வந்தவங்களாம். எனக்கு நெல்லை சென்றபோது, மனதளவுல அது தனி உணர்வு. அது மத்தவங்களுக்குத் தெரியாது, புரியாது. உங்களுக்கும் அப்படியே என்று நினைக்கிறேன் (நெல்லையில் அல்ல... கோபு ஐயங்கார் கடைத்தெரு ஹா ஹா ஹா) நீக்கு பதில்கள் பதிலளி Geetha Sambasivam 31 ஜூலை, 2018 அன்று முற்பகல் 11:13 அதெல்லாம் இல்லை. எங்க ஊரு மதுரை! எப்போவுமே தனியாக்கும்! என்ன நினைச்சீங்க எங்க ஊரை? :)))))) எனக்கு இங்கே திருச்சியில்/ஶ்ரீரங்கத்தில் என்னமோ வித்தியாசமே தெரியலை! மனதில் இந்த ஊர் வாசம் பதிந்து போய் மணக்கிறது! ஆனாலும் மதுரைன்னா!!!!!!!!!!!!!!!!! :)))))))) நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத்தமிழன் 31 ஜூலை, 2018 அன்று முற்பகல் 11:25 நான்லாம் சட்டுனு ஒத்துக்கமாட்டேன். நான் மதுரைல படித்தபோது, (நாகமலை), காலேஜ் ஹவுசுக்கு வார இறுதியில் வந்து பட்டர் நான்+சைட் டிஷ், 4 அல்லது 7 ரூபாய்னு ஞாபகம், சாப்பிட்டுட்டுப் போவேன். ரொம்ப அருமையா இருக்கும். மதுரைக்கு நான் இப்போ போனால், எங்கு சாப்பிடலாம், என்ன என்னவற்றை மிஸ் செய்யக்கூடாது (சாப்பிடுபவற்றில்) என்று சொல்லுங்க பார்க்கலாம். நீக்கு பதில்கள் பதிலளி Geetha Sambasivam 31 ஜூலை, 2018 அன்று முற்பகல் 11:42 மதுரையில் இப்போச் சாப்பாடு எங்கே நல்லா இருக்கும்னு தெரியலை! ஏனெனில் நாங்க போயிட்டு உடனே திரும்பிடுவோம். கோபு ஐயங்காரிடம் டிஃபன் மட்டும் சாப்பிட்டுப்போம். ஆனால் அனைவரும் தானப்பமுதலி அக்ரஹாரத்தில் மாடர்ன் ரெஸ்டாரன்டில் சாப்பாடு நல்லா இருக்கும்னு சொல்றாங்க! முயற்சி செய்து பார்த்துட்டுச் சொல்லுங்க! நானும் போனால் சாப்பிட்டுக்கலாமே! :)))) மற்றபடி முன்னிருந்த சமையல் செட் ஏதும் இப்போது இல்லை என்பதால் எது மிஸ் செய்யக் கூடாது என்பது தெரியலை! முன்னெல்லாம் நாகப்பட்டினம் நெய்மிட்டாய்க்கடையில் (மேலகோபுர வாசலில்) மத்தியானம் 11 மணியிலிருந்து ஒரு மணிக்குள்ளாக உருளைக்கிழங்கு மசாலா கிடைக்கும். அந்த மசாலாவுக்கு ஈடு, இணை இல்லை. தையல் இலையில் சுற்றி வைத்து நாலணாவுக்கு விற்றபோதில் இருந்து வாங்கி இருக்கோம். இப்போப் பத்து ரூபாய்னு நினைக்கிறேன். அந்த ருசி இல்லை. (அந்தக் கடைக்காரர் எங்களுக்கு நெருங்கிய சொந்தம் தான். இப்போ இருப்பது மூன்றாம் தலைமுறை. அவங்களுக்கு அடையாளம் தெரியறதில்லை!) நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத்தமிழன் 31 ஜூலை, 2018 அன்று முற்பகல் 11:58 //உருளைக்கிழங்கு மசாலா கிடைக்கும்// - அப்போ அங்க போகும்போது, பூரி இல்லைனா சப்பாத்தியை கையோடு கொண்டுபோகணுமா? ஸ்ரீராம் ஏதோ, முந்திரி அல்வா, சுந்தரி அல்வான்னு ஏதோ சொன்னாரே. அதெல்லாம் உங்களுக்குத் தெரியாதா? நீக்கு பதில்கள் பதிலளி Geetha Sambasivam 31 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 12:12 உ.கி.மசாலாவை நாங்க அப்படியே சாப்பிடுவோம்! :) அந்தக் காலத்தில் இருந்தே! ஶ்ரீராம் சொல்லும் கடை எல்லாம் தெரியலை. முன்னாலே மேலகோபுர வாசலிலே அனுமந்தராயன் தெருவுக்கு எதிரே டெல்லிவாலா இருந்தது. இரண்டு வருடங்கள் முன்னர் மதுரை போனப்போ அங்கே சப்பாத்தி நல்லா இருக்கும்னு சொல்லி ரங்க்ஸோட அங்கே போனால் ஙே! முன்னர் இருந்த கடையாவே இல்லை! அப்புறமா வெளியே வந்து மேலமாசி வீதி முருகன் இட்லிக்கடையில் வேண்டாவெறுப்பாச் சாப்பிட்டோம். அங்கே இருந்து அதான் பக்கம். நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி கரந்தை ஜெயக்குமார் 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 6:33 அருமை பதிலளிநீக்கு பதில்கள் நெல்லைத்தமிழன் 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 9:40 வருகைக்கு நன்றி ஜெயக்குமார் சார். ரொம்ப நாளைக்கு அப்புறம் பார்க்கிறேனோ? நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி Avargal Unmaigal 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 6:49 பரங்கிகாயில் பச்சடி செய்தது இல்லை...நாங்கள் பரங்கிகாயை வத்த குழம்பு வைக்க பயன்படுத்து வோம் பதிலளிநீக்கு பதில்கள் நெல்லைத்தமிழன் 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 9:41 செங்கோட்டை துரை... நான் இதுவரை வத்தக்குழம்பில் பரங்கி சேர்த்து சாப்பிட்டதில்லை. நீக்கு பதில்கள் பதிலளி Geetha Sambasivam 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 10:17 மாமியார் பண்ணுவார். எங்க வீடுகளில் வற்றல் போட்டால் தான் வத்தக்குழம்பு என்பதால் இதைப் பறங்கிக்காய் வெறும் குழம்பு என்போம். கூடவே மொச்சை, கொண்டைக்கடலை போன்றவை வறுத்துச் சேர்த்துத் தேங்காயும் பல்லுப் பல்லாகக் கீறிச் சேர்த்துப் பண்ணுவார். ஆனால் இவருக்கு என்னமோ பிடிக்கிறதில்லை. ஒரு தரம் சொல்லாமல் செய்துடணும்னு இருக்கேன். :))))) நீக்கு பதில்கள் பதிலளி அதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 9:14 //செங்கோட்டை துரை...// இது எப்போ இந்த அசம்பாவிதம் அரங்கேறியது செங்கோட்டையில்?:) சொல்லவேயில்ல:)) நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத்தமிழன் 31 ஜூலை, 2018 அன்று முற்பகல் 10:35 அதிரா... அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் துரை, பிறப்பால் திருநெல்வேலிக்கார்ர்தான் (செங்கோட்டை). அப்புறம் மதுரைக் காரராக கன்வெர்ட் ஆயிட்டாரு.... நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி Bhanumathy Venkateswaran 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 7:00 அனைவருக்கும் காலை வணக்கம் பதிலளிநீக்கு பதில்கள் நெல்லைத்தமிழன் 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 9:43 வணக்கம் பானுமதி மேடம் நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி kankaatchi.blogspot.com 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 7:02 பரங்கி காய் விதையில் உள்ள பருப்பு ஏழைகளின் பாதாம். ஆனால் யாரும் அதை உணருவதில்லை.அதன் மகிமை தெரியாமல் குப்பையில் வீசிவிடுவது அறியாமையின் உச்ச கட்டம். நான் ஏற்கெனவே அந்த பருப்பை கொண்டு பர்பி செய்து என்வலையில் பதிவிட்டிருந்தேன் பதிலளிநீக்கு பதில்கள் நெல்லைத் தமிழன் 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 8:29 பட்டாபிராமன். உப்பு தடவிக் காயவிட்ட பூசனி விதைகள், அரேபியர்களின் விருப்ப உணவு. நாம உப்புக்கடலையைக் கொரிப்பதுபோல் அவங்க, பூசனி விதையை உடைத்துச் சாப்பிடுவாங்க. பர்பி செய்யற அளவு, யாரு விதைகளை உடைத்துக் கொடுத்தது? அந்தப் பொறுமைசாலி வாழ்க நீக்கு பதில்கள் பதிலளி Geetha Sambasivam 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 10:17 சின்ன வயசில் இந்தப் பருப்பு நிறையச் சாப்பிட்டிருக்கேன். நீக்கு பதில்கள் பதிலளி kankaatchi.blogspot.com 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 3:46 பரங்கிக்காய் விதைகள் நன்றாக உணர்ந்தவுடன் சிறு கட்டையால் தட்டினால் இரண்டாக பிளக்கும். பருப்புகளை பிரித்து எடுத்து முந்திரி, பாதாம் அல்வா செய்வதுபோல் செய்யவேண்டும். பொறுமை இல்லாதவர்களுக்கு pumpkin seeds onlinine மூலம் அல்லது பெரிய அங்காடிகளில் வாங்கி பயன்படுத்தலாம் . நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத்தமிழன் 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 7:16 மீள் வருகைக்கு நன்றி பட்டாபி. பரங்கி விதை உடைப்பது கடினம். நான் முதல்முறையில் பாதாம் தோல் உரிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். இத்தனைக்கும் நான் இருந்த ஊரில் தோல் எடுத்ததும் விலை மலிவாக் கிடைக்கும் நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத்தமிழன் 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 7:47 பட்டாபி to be read as பட்டாபிராமன் சார். இப்போதான் இதைக் கவனித்தேன். மொபைலில் மறுமொழி எழுதறேன். நீக்கு பதில்கள் பதிலளி அதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 9:12 நானும் இந்த விதைகளை ஒருபோதும் எறிவதில்லை, எனக்கு ரொம்பப் பிடிக்கும், அப்படியே காய வைத்து எடுத்து சாப்பிடுவேன். நெ.தமிழன், அல்மண்ட் ஐ தண்ணியில் ஊற விட்டுப்போட்டு தோலை உரித்துச் சாப்பிடுங்கோ.. உரிப்பதும் ஈசி, சுவையும் பல மடங்கு அதிகம்.. அப்படியே பால் குடிப்பதுபோல இருக்கும் சாப்பிட. பச்சையாக எனில் சாப்பிடக் கஸ்டம் ரேஸ்ட். நான் ஒருவருக்கு 5/6 என எண்ணி எடுத்து ஒரு கப்பில் போட்டு தண்ணி ஊத்தி விட்டிடுவேன், அடுத்தநாள் உரித்துக் குடுப்பேன். பச்சையாகக் கொடுத்தால் சாப்பிட மாட்டினம், அத்தோடு 5/6 க்கு மேல் சாப்பிடவும் கூடாதாம் ஒரு நாளைக்கு. நீக்கு பதில்கள் பதிலளி அதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 9:12 //பரங்கி விதை உடைப்பது கடினம்.// உடைக்கோணும் எண்டில்லை, அப்படியே சாப்பிடுவேன் நான்:)) நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத்தமிழன் 31 ஜூலை, 2018 அன்று முற்பகல் 10:39 ஞானி அதிராவுக்கு நான் கிச்சன் கிளாஸ் எடுக்க வேண்டியிருக்கு. ஆல்மன்டை கொதிக்கிற வெந்நீரில் 20 நிமிஷம் ஊறவிட்டு அப்புறம் தோலை உரிக்கணும். நான் ஒரு நாள் குளிர்நீரில் ஊறப்போட்டும் தோலை உரிக்கமுடியலை. (என் பையனுக்கு பாதாம் பர்ஃபி செய்ய முயன்றபோது) நீக்கு பதில்கள் பதிலளி Geetha Sambasivam 31 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 12:14 பாதாமை ராத்திரியே நாங்கல்லாம் ஊற வைப்போம். காலை பிதுக்கினாலே போதும். அழகா உரிஞ்சு வரும். யு.எஸ்ஸிலும் அப்படிப் பண்ணி இருக்கோம். இங்கேயும்! ப்ளாஞ்சிங் செய்யத் தான் கொதிநீரில் போட்டு உடனே எடுப்போம். அது பாதாம் பவுடர் தயாரிக்க, பாதாம் பால் தயாரிக்க என்று செய்கையில் நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி கோமதி அரசு 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 7:37 அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன். பரங்கி காய் தயிர் பச்சடி செய்முறை படங்கள் அழகு. நான் துருவி வதக்கி தயிரில் ஆறியவுடன் போட்டு விடுவேன். நீங்கள் சொன்னது போல் செய்து பார்க்கிறேன். பதிலளிநீக்கு பதில்கள் நெல்லைத்தமிழன் 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 9:42 வாழ்க வளமுடன் கோமதி அரசு மேடம். வருகைக்கு நன்றி நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி KILLERGEE Devakottai 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 7:43 புகைப்படங்களே ஆசையை தூண்டுகின்றன... வெண்டைக்காயின் நுணியை மடக்கிப்பார்த்து வாங்குவதுபோல், தக்காளியை பிதுக்கிப்பார்த்து வாங்க முடியுமா ? பதிலளிநீக்கு பதில்கள் துரை செல்வராஜூ 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 8:17 // தக்காளிய..// தலைவா!.. எல்லாரும் கொம்பு மேல நின்னாங்கன்னா.. நீங்க மட்டும் கொடி மேல நிக்கிறீங்களே!... புல்லரிக்குது போங்க!... வாழ்க உங்கள் தொண்டு!.. நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத் தமிழன் 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 8:25 கில்லர்ஜி... வெண்டைக்காயை நுனி உடைத்து யாரும் வாங்கவிடுவதில்லை. பெரும்பாலும் சின்ன வெங்காயத்தைக்கூட பொறுக்க விடுவதில்லை. இதுல தக்காளியைப் பிதுக்கி வாங்கணுமா? சரிதான். நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத்தமிழன் 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 9:56 கில்லர்ஜி... நீங்க சொல்றதைப் பார்த்தால், ஆண்களுக்கு கல்லைத்தூக்கணும், மாட்டை அடக்கணும் என்பதுபோல் பெண்களுக்கும் திருமணத்துக்கு தேர்ந்தெடுக்க ஏதேனும் மெதட் சொல்வீங்க போலிருக்கு நீக்கு பதில்கள் பதிலளி KILLERGEE Devakottai 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 1:37 நெ.த. அவர்கள்.... என்னை சிக்கலில் இழுத்துவிடும் திட்டமா ? நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி Nagendra Bharathi 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 8:50 அருமை பதிலளிநீக்கு பதில்கள் நெல்லைத்தமிழன் 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 1:00 நன்றி நாகேந்திர பாரதி. நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி Ajai Sunilkar Joseph 30 ஜூலை, 2018 அன்று முற்பகல் 10:31 ஆரோக்கியமான உணவு, செய்முறை விளக்கம் அருமை பதிலளிநீக்கு பதில்கள் நெல்லைத்தமிழன் 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 1:00 மிக்க நன்றி அஜை சுனில்கர் ஜோசப். நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி காமாட்சி 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 12:40 நாங்கள் துருவலை வதக்கிப்போட்டு பச்சடி செய்வோம். காரஸாரமான துவையல்,பொடிபோட்டுச் சாப்பிடும்போது இடையே ஸாவதானமானருசி காம்பினேஷன் ஆகிறது. பறங்கிக்காய் ஸாம்பார், பொங்கிஇடும்போது பொங்கல் சாதத்துடன் கட்டாயமிருக்கும். கல்யாணம்,பூணூல், மற்றும் விசேஷங்களுக்கு முன் இந்தச் சம்பிரதாயம் உண்டு. பறங்கிக்காய் ஸூப் பச்சை மக்கா சோளத்துடன் அரைத்துச் செய்வதும் இப்போது பரவி வருகிறது. அழகாக, ருசியாகச் செய்து கொடுத்த திருமதி நெல்லைத் தமிழனிற்கு பாராட்டுகள். நான் எதிலும் நேபாளத்தைப் பற்றி நினைவு கூறுவேனே! அந்த வகையில் அவர்கள் மிளகாய் வற்றலையும்,வெந்தயத்தையும் தாளித்துக் கொட்டிதான் பறங்கிக்காய் கறி செய்வார்கள். அந்த வகையும் தனி ருசி. நம்ம தமிழ்நாட்டு வழக்கம்தான் நம்முடைய வழி. பறங்கிக்காயின் உட்புற குடலையும் விடாது துவையல் அரைப்பவர்கள் உண்டு. புளிவிட்ட வெல்லப் பச்சடி. கீதா எழுதாதது இதுவானா உண்டா? அன்புடன் பதிலளிநீக்கு பதில்கள் நெல்லைத்தமிழன் 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 1:41 வாங்க காமாட்சி அம்மா. உங்களுக்குத் தெரியாத சமையல் விஷயம் உண்டா? சூப், பச்சை மக்காச் சோளத்துடன் அரைப்பது எல்லாம் நான் அறியாத்து. பொதுவா பஞ்சத்துல உபயோகமாகிற காய் இதுன்னு நினைக்கிறேன். உபயோகப் படுத்தாமல் அப்படியே கூரையில் தொங்கிக் கொண்டிருந்தால் சாமியாருக்கு குடுவையாகவும் உபயோகப்படும். ஹாஹாஹா வருகைக்கு நன்றி நீக்கு பதில்கள் பதிலளி Geetha Sambasivam 31 ஜூலை, 2018 அன்று முற்பகல் 11:15 இப்போத் தான் வெஜிடபுள் சூப் என்னும் பெயரில் பல ஓட்டல்களிலும் இது கொடுக்கிறாங்க! :)))) ஒரு முறை குடிச்சிருக்கேன். :) நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி பெயரில்லா 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 1:20 பரங்கிக்காயும் பூசணியும் வேறா ? பதிலளிநீக்கு பதில்கள் நெல்லைத்தமிழன் 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 1:36 பூசனி - வெண் பூசனி, சாம்பல் பூசனி, தடியங்காய் எல்லாம் ஒண்ணுதான். திருஷ்டிக்கு உடைக்கும் பூசனி இது. தண்ணீர்ச் சத்து அதிகம் உள்ள பூசனி இது. பரங்கிக்காய்- மலையாளத்தில் மத்தன், சர்க்கரைப் பூசனி, மஞ்சள் பூசனி - எல்லாம் ஒரே வகைப் பூசனி. நீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 1:40 நல்லவேளை அனானி நாதான்னு கண்டுபிடிக்கலை நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத்தமிழன் 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 1:46 நீங்கதான்னு கண்டுபிடிச்சதுனாலதான் உடனே பதில் எழுதினேன் :) நீக்கு பதில்கள் பதிலளி Angel 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 1:49 அவ்வ்வ்வ்வ் :)) எப்படி எப்படி நான் ஸ்மைலி கூட போடல்லையே :) ஸ்பெல்லிங் மிஸ்டேக் கூட விடாம டைப்பினேனே :) நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி Angel 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 1:41 பச்சடி நல்ல இருக்கு நெல்லைத்தமிழன் .இங்கே Egypt பூசணி பார்க்க சுரைக்காய் ஷேப்பில் இருக்கும் அதிலும் செய்யலாமா ? அது ஸ்கின் தடிமனான இருக்கும் பதிலளிநீக்கு பதில்கள் நெல்லைத்தமிழன் 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 2:30 சும்மா செஞ்சு பாருங்க. நல்லாத்தான் இருக்கும். ஆமாம்... அங்க குளிர்ல, பச்சிடில்லாம் நல்லா இருக்குமா? நீக்கு பதில்கள் பதிலளி Angel 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 3:35 குளிரோ வெயிலோ :) எனக்கு கிரீக் யோகர்ட் இல்லாம நாள் கடக்காது :) இதோ இதே ரெசிப்பியை இன்னிக்கு இந்த ஊர் காய் வைச்சி செய்யப்போறேன் :) பறங்கிக்காய்க்கு பதில் வேற :) செஞ்சிட்டு சொல்றேன் நீக்கு பதில்கள் பதிலளி Angel 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 3:37 வீகன் ரெசிப்பீஸ் ஸ்டார்ட் செஞ்சேன் அதில் அரிசி அளவை குறைச்சு கூட்டு பச்சடிலாம் நிறைய சாப்பிடுவேன் நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி Angel 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 1:44 எங்க வீட்ல அம்மா பூசணி சாம்பாருக்கும் அப்புறம் காரக்குழம்பு /வற்றக்குழம்புக்கும் சமைப்பாங்க நெய்யூற்றி சாப்பிட்டா செம ருசி . பச்சை தோலுடன் இருப்பது பரங்கி என்று நானே ஆராய்ச்சி செஞ்சி கண்டுபிடிச்சேன் பதிலளிநீக்கு பதில்கள் நெல்லைத்தமிழன் 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 7:02 அம்மா சமையலை மிஸ் பண்ணாதவர் எவர்? அதிலும் பெண்கள். அவங்கதான் பிறந்த வீட்டில் அனேகமா ஒரு வேலையும் செய்யாம கால் மேல கால் போட்டுக்கிட்டு ஜாலியா சாப்பிடலாம் நீக்கு பதில்கள் பதிலளி அதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 9:07 //அவங்கதான் பிறந்த வீட்டில் அனேகமா ஒரு வேலையும் செய்யாம கால் மேல கால் போட்டுக்கிட்டு ஜாலியா சாப்பிடலாம் // கர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஏன் ஆண்கள் மட்டும் என்னவாம் அவங்க காலுக்கு கீழ கால் போட்டோ ஜாலியில்லாமல் சாப்பிடுவினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. எந்த வீட்டிலும் ஆண்பிள்ளைகளுக்குத்தான் மரியாதை அதிகம்:)).. ஒரு வேலை செய்ய வந்தாலும் விட மாட்டினம் கர்ர்ர்:)) ஹா ஹா ஹா நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத்தமிழன் 31 ஜூலை, 2018 அன்று முற்பகல் 10:43 என்னத்தைதான் தமிழைப் புரிஞ்சிக்கிறீங்களோ அதிரா. பெண்கள் பிறந்த வீட்டில்தான் ஜாலியா கால்மேல கால் போட்டுக்கிட்டு சாப்பிடலாம். ஆண்கள்,எப்போதும் கால் மேல கால்போட்டு சாப்பிடுவாங்க, ஏன் உப்பு குறைவு, இன்னைக்கு ஏன் இதைப் பண்ணலை, இது என் அம்மா பண்ணற மாதிரி இல்லைனு தைரியமா குறை சொல்லலாம். ஹாஹா நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி Angel 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 1:47 அதை குளிர்சாதனப் பெட்டியில் இட்டு அன்றைய வாரத்துக்கான உணவைச் செய்தவனுக்கு// ஜெர்மனில அப்படிதான் பலர் செய்வாங்க .ஆனா லண்டனில் தினமும் கடைக்கு போவேன் வெண்டை கத்திரி அன்னணிக்கு வாங்கி சமைக்கிறேன் :) ஆணானாலும் சென்னை வெஜிஸ் மாதிரி வராது யூ எஞ்சோய் :) பதிலளிநீக்கு பதில்கள் Angel 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 2:06 //ஆனாலும் // டைப்பிங் எர்ரர் :) நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத்தமிழன் 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 6:57 ஏற்கனவே சொல்லியிருக்கேன்னு நினைக்கறேன். வார இறுதியில்ர ஒரு வாரத்துக்கான சமையலைச் செய்து குளிர் சாதனப் பெட்டில வச்சு வாரம் முழுவதும் சாதம் மட்டும் செய்து சுட வச்சு சாப்பிடறவங்களை மிடில் ஈஸ்ட்ல தெரியும். ஒருவர் 6-9 மாத்த்துக்கு ஒருமுறை கனடா சென்று பசங்களுக்கு டிரே டிரேயா சைட் டிஷ் பண்ணிவச்சுட்டும் வருவாராம். எனக்குத்தான் இதை நினைத்தால் ஒருமாதிரி இருக்கும் நீக்கு பதில்கள் பதிலளி அதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 9:05 வேறு வழியில்லாமல் அப்படிப் பண்ணுகிறார்கள், ஆனா என்னதான் இருப்பினும் சுடச்சுட செய்து சாப்பிடுவதுபோல எதுவும் வராது.. தோசை இட்லி கூட எனக்கு உடனுக்குடன் செய்து முடிப்பதுதான் பிடிக்கும், ஃபிரிஜ்ஜில வச்சு வச்சு செய்வது பிடிக்காது. ரெடிமேட்டாக வாங்கும் மா வகையும் கொஞ்சம் கூடப் பிடிக்கல்ல[தோசை, இட்லி அப்பம்- மா] நீக்கு பதில்கள் பதிலளி Angel 31 ஜூலை, 2018 அன்று முற்பகல் 12:13 //எனக்குத்தான் இதை நினைத்தால் ஒருமாதிரி இருக்கும்// இங்கே வெளிநாட்டு வாழ் இந்தியர் ஸ்ரீலங்கன்ஸ்க்கு அதிக குடல் ரிலேட்டட் நோய் வர காரணமே இது தாம் அதோட ப்ரெஷ்க்ஷர் ,லிவர் கிட்னி பிரச்சினைக்கும் இதான் காரணம் .ப்ரிட்ஜில் இருக்கும் சமோசாவை வாங்கி பொரிக்கிறாங்க :( .எனக்கு மைக்ரோவேவ் சமையலே பிடிக்காது தினமும் ஒரு கூட்டு ஒரு குழம்பு இப்படித்தான் செய்றேன் . நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத்தமிழன் 31 ஜூலை, 2018 அன்று முற்பகல் 10:45 அட... ஆமாம்ல. குளிர்சாதனப் பெட்டில வச்சு திருப்பித் திருப்பி சுடவச்சு சாப்பிட்டால் எல்லா வகையான குடல் நோய்களும் வரும்.. நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி Angel 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 1:52 சப்பாத்திக்கே, சைட் டிஷ் ஆக, இந்தப் பச்சிடியை உபயோகப்படுத்தலாமோ?// சப்பாத்திக்கு ட்ரை பண்ணலாம் ,ஆனால் இடியாப்பத்துக்கு /சேவைக்கு ..நிச்சயம் நல்ல இருக்கும்போலிருக்கு .நான் செஞ்சிட்டு சொல்றேன் பதிலளிநீக்கு பதில்கள் நெல்லைத்தமிழன் 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 2:29 சப்பாத்திக்கு நல்லா இருக்கும். இடியாப்பத்துக்கு-ரொம்ப ஜலமா இருந்தால் நல்லா இருக்குமான்னு தெரியலை. அடைக்கெல்லாம் தொட்டுக்கலாம்னு தோன்றியது. நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி ராஜி 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 2:22 இப்படி ஒரு பச்சடியா?! அவன் இல்லாதவங்க ஆவியில் வேக வைக்கலாமா?! இல்ல சாதம் வடிக்குற மாதிரி வடிச்சுக்குலாமா?! இல்ல வாணலில வறுத்துக்கலாமா?! பதிலளிநீக்கு பதில்கள் நெல்லைத்தமிழன் 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 2:28 பறங்கிக்காய் வேகணும். அவ்வளவுதான். வாணலிலயும் வதக்கலாம். இல்லைனா ஆவில வேகவைக்கலாம். மொத்தத்துல நல்லா வதங்கியிருக்கணும். (பச்சையா அவ்வளவு நல்லா இருக்காதுன்னு நினைக்கறேன்). நன்றி ராஜி. நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி G.M Balasubramaniam 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 3:20 பறங்கிக்காய் பச்சடி செய்து பார்த்ததில்லை பறங்கிக்கயில் ஓலன்செய்வதுண்டு செய்முறை எளிது பயறை வேக வைத்து அதுவெந்துவரும்போதுபறங்கிக்காய் துண்டுகளை கீறிய பச்சை மிளகாயுடன் கருவேப்பிலையும்சேர்த்து நன்கு வெந்த பிறகு நல்ல தேங்காய் எண்ணை ஊற்றி தாளிதம் செய்தால் முடிந்தது ஓலன் கேரள விருந்துகளில் ஒரு மஸ்ட் ஐட்டெம் பதிலளிநீக்கு பதில்கள் நெல்லைத்தமிழன் 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 4:21 வாங்க ஜி எம் பி சார்.. சட் என ஓலன் செய்முறையைச் சொல்லிட்டீங்களே. எப்போ உங்களுக்கு செய்துபார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது? உங்க உணவுப் பழக்கம் கல்யாணத்துக்கு அப்புறம் மாறிடுத்தா? நீக்கு பதில்கள் பதிலளி G.M Balasubramaniam 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 5:12 பூவையர் எண்ணங்கள் என்னும் வலைப் பதிவே இருக்கிறது அவ்வப்போதுஅதில் எழுதியும் வருகிறேன் நானென்செய்முறைகளை படத்துடன்விளக்குவது இல்லை ஏதாவது எக்செப்ஷன்ஸ் இருக்கலாம் என் உணவுப்பழக்கம்மாறவில்லை என் மனையுடையதும் மாறவில்லை ஒரே மாற்றம் அவள அசைவத்திலிருந்து சைவத்துக்கு மாறிவிட்டாள் திருமணத்துப்பின் உங்கள் மின் அஞ்சல் முகவரி மாறி இருக்குமோ நீக்கு பதில்கள் பதிலளி G.M Balasubramaniam 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 5:17 http://kamalabalu294.blogspot.com/2017/07/blog-post.html பதிவையும் தளத்தையும்பாருங்கள் நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத்தமிழன் 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 6:46 ஜி எம் பி சார்.. திருமணத்துக்குப் பின் உணவுப் பழக்கம்னை நான் சொல்றது, உதாரணமா இடியாப்பம் கடலைக்கறி, பத்ரி டிபனுக்கு இந்தமாதிரி. ஶ்ரீராம்கூட எங்கயோ சொல்லியிருந்தாரே வீட்ல பூண்டு உபயோகப்படுத்த மாட்டாங்க என்பதுபோல். இமெயில் முகவரி மாற்றம்- இது புரியலை நீக்கு பதில்கள் பதிலளி G.M Balasubramaniam 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 9:00 நீங்கள் உங்கள் கம்பனியின் முகவ்ரி கொடுத்திருந்தீர்கள் இப்போது இந்தியா வந்து விட்டதால் மாறியிருக்குமோ என்றுதான் கேட்டே ன் நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத்தமிழன் 31 ஜூலை, 2018 அன்று முற்பகல் 10:47 ஜி எம் பி சார்... வாட்சப்ல உங்களுக்கு எழுதியிருந்தேனே. இப்போ திருப்பி அனுப்பறேன். நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி ADHI VENKAT 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 3:31 பறங்கிக்காய் பச்சடி வித்தியாசமா இருக்கு.. செய்து பார்க்கிறேன்.. பதிலளிநீக்கு பதில்கள் நெல்லைத்தமிழன் 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 4:12 வருக ஆதி வெங்கட். கதம்ப சாத்த்துடன், அதிலும் காரமான சாத்த்துடன்-புளியோதரை, எள் சாதம் போன்று, நல்லா இருக்கும் நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி அபயாஅருணா 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 4:09 பூசணிக்காய் தயிர் பச்சடியின் distant cousin மாதிரி இல்ல இருக்கு . செஞ்சு பார்க்கணும் பதிலளிநீக்கு பதில்கள் நெல்லைத்தமிழன் 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 4:15 ஆமாம். இல்லை. டேஸ்ட் வேற வேற. நன்றி அபயா அருணா நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி நெல்லைத்தமிழன் 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 4:12 இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மனோ சாமிநாதன் 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 4:54 மிக அருமையான குறிப்பு!! பதிலளிநீக்கு பதில்கள் நெல்லைத்தமிழன் 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 6:52 நன்றி மனோ சாமிநாதன். நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி Kamala Hariharan 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 5:28 வணக்கம் நெல்லைத் தமிழன் சகோதரரே தாங்கள் அறிமுகபடுத்தியுள்ள பரங்கி தயிர் பச்சடி படங்களுடன். செய்முறையும் மிகவும் நன்றாக உள்ளது. பரங்கிகாயில், வறுத்து அரைச்ச சாம்பார், கூட்டு, கறி, துவையல் என பல செய்துள்ளேன். இந்த மாதிரி. தயிர் பச்சடி செய்ததில்லை. இனி அடுத்த முறை இதுதான். படங்களை பார்க்கும் போதே மிகவும் அருமையாக இருக்குமென்று தோன்றுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி. தாங்கள் சென்ற முறை செய்த வல்லாரை கீரை துவையலும் மிக நன்றாக உள்ளது. அதையும் செய்கிறேன். நன்றியுடன் கமலா ஹரிஹரன். பதிலளிநீக்கு பதில்கள் நெல்லைத்தமிழன் 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 6:52 வாங்க கமலா ஹரிஹரன். செய்து பாருங்கள். நான் சாப்பிட்டுப் பார்த்தது இப்போதுதான் நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி Thulasidharan V Thillaiakathu 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 6:37 நெல்லை செம பச்சடி..நான் துருவி வதக்கிச் செய்வதுண்டு. வேக வைத்துத்தான் செய்தேன் முதலில் அப்புறம் வதக்கிச் செய்தால் டேஸ்ட் இன்னும் நல்லாருக்குனு மகன் சொன்னதால் (சிறிய வயதில்) அப்புறம் அப்படியே!!! புடலங்காய் பச்சடியும் நல்லாருக்கும்...வெள்ளைப் பூஷணியிலும் செய்வேன். சுரைக்காய், பீர்க்கங்காய் எலலம் பொதுவாக எல்லா காய்களிலும் நான் செய்வதுண்டு. துவையல் சாதம் அல்லது கலந்த சாதம் செய்தால் இப்படித் தொட்டுக் கொள்ள...நல்லாருக்கும். வத்தக் குழம்பு, மிளகுக் குழம்பிற்கும் கூட நல்லாருக்கும்... சூப்பரா படங்கள் எல்லாம் எடுத்துப் போட்டுருக்கீங்க நெல்லை கீதா பதிலளிநீக்கு பதில்கள் நெல்லைத்தமிழன் 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 6:50 நன்றி கீதா ரங்கன். புடலை, சுரை, பீர்க்கங்காய் பச்சடியா? படித்தால் பிடிக்கும்னு தோணலை. ஆனால் நீங்க நல்லாருக்கும்னு சொன்னால் நிச்சயமா நல்லாருக்கும் (கடுகோரை அனுபவம்) விரைவில் ரெண்டு ரிசைப்பி எபில எழுதுங்க நீக்கு பதில்கள் பதிலளி அதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 9:02 அது நெ.தமிழன், என் வாழைக்காய்தோல் சம்பல் பார்த்தீங்க தானே இங்கு[சந்தடி சாக்கில சொல்லி நினைவு படுத்திடோணும்.. முதல்ல அதைச் செய்யுங்கோ பின்பு இதுபற்றி ஓசிக்கலாம் கர்ர்ர்ர்ர்:))].. அதேபோலதான். சிலர் அரைத்தும் செய்வதுண்டு.. எதுக்கும் ரெசிப்பி வரட்டும். நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத்தமிழன் 31 ஜூலை, 2018 அன்று முற்பகல் 10:50 மனைவிட்ட சொல்லி பண்ணச் சொல்றேன். பிரச்சனை என்னன்னா, மகளுக்குப் பிடிக்கணும். பார்க்கலாம் நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத்தமிழன் 31 ஜூலை, 2018 அன்று முற்பகல் 10:52 ஆனா அதிரா, எனக்கு பெர்மனன்டா கிச்சன் கிடைக்காமலிருக்க நீங்க பண்ணற சதியில்லையே? எதுக்குச் சொல்றேன்னா, நான் ரொம்ப அப்பாவி. நீக்கு பதில்கள் பதிலளி Geetha Sambasivam 31 ஜூலை, 2018 அன்று முற்பகல் 11:32 பிஞ்சுப் புடலையா இருக்கணும், பீர்க்கையும் பிஞ்சாக இருக்கணும். வதக்கும்போதே நீர் விட்டுக்கும். தயிர்ப்பச்சடி செய்தால் நன்றாக இருக்கும். சுரைக்காய் சாப்பிடுவதில்லை. கோவைக்காயும் சாப்பிடுவதில்லை. நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி Bhanumathy Venkateswaran 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 7:19 நான் நேற்றுதான் பறங்கி கொட்டையில் பால் கூட்டு செய்து, அதை திங்கற கிழமைக்கு அனுப்ப வேண்டும் என்று ரெடி பண்ணினேன். இன்றைக்கு, நெல்லை தமிழனின் பறங்கிக்காய் தயிர் பச்சடி ரெசிபி!!! முயற்சிக்கலாம். பதிலளிநீக்கு பதில்கள் நெல்லைத்தமிழன் 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 7:28 வருகைக்கு நன்றி. நீங்கள் நூற்றுல் ஒருவர். பால்கூட்டையும் அனுப்புங்க. படித்துவிட்டு எழுதறோம். நான் ஒரு ஸ்வீட் செய்முறை அனுப்பப்போறேன் நீக்கு பதில்கள் பதிலளி Geetha Sambasivam 31 ஜூலை, 2018 அன்று முற்பகல் 11:32 எனக்குப் பறங்கிக்கொட்டைப்பால்க் கூட்டு ரொம்பப் பிடிக்கும். நம்ம ரங்க்ஸ் நேர் எதிர்! ஆதலால் பண்ணவே முடியாது! :)))) நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி அதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 9:00 ஆஆஆஆஆஆஆ மீ 103 ஆவது நெம்பர்ர்ர்:)).. இப்போதான் வர முடிஞ்சுது.. அதுசரி ஏன் இதுக்குப் பறங்கிக்காய் எனும் பெயர் வந்தது???:) நாங்கள் இதை சக்கரைப் பூசணி என்போம், இனிக்கும் எல்லோ.. அதேபோல பட்டர் நட் பூசணியை.. டுபாய்ப் பூசணி என்போம்:)).. அது இங்கு தாராளமாக வாங்கலாம் ஆனா இந்த ச.பூ தமிழ்க் கடையில மட்டுமே ஒரியினல் கிடைக்குது, வெளிநாட்டு உற்பத்தி சுவை இல்லை. பதிலளிநீக்கு பதில்கள் நெல்லைத்தமிழன் 31 ஜூலை, 2018 அன்று முற்பகல் 10:55 அதிரா, சர்க்கரை பூசனி அல்வா வெல்லம் போட்டுதான் செய்யமுடியும், வெண் பூசனி அல்வாவை (காசி அல்வா) ஜீனி போட்டுத்தான் செய்ய முடியும். ஏன்னு யோசிங்க. நீக்கு பதில்கள் பதிலளி Geetha Sambasivam 31 ஜூலை, 2018 அன்று முற்பகல் 11:34 அதிரடி, பறங்கிக்காய், அதாவது சர்க்கரைப்பூஷணியில் சர்க்கரை சேர்த்தும் அல்வா பண்ணலாம். கோவா கிடைச்சால் போடுங்க. இல்லைனா பறங்கிக்காயைத் துருவி நெய்யில் வதக்கி நல்ல திக்கான க்ரீம் பாலைச் சேர்த்து வேக வைத்துச் சர்க்கரை போட்டுச் செய்து பாருங்க! விடமாட்டீங்க! :)))) நெ.த. சொல்றதை எல்லாம் கேட்காதீங்க! :)))))) நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத்தமிழன் 31 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 12:02 கீசா மேடம் - அடுத்த ஜென்மத்தில் (அப்படி ஒன்று இருந்தால்), நீங்க கோவா லதான் (இது வேற கோவா) பிறப்பீங்கன்னு நினைக்கறேன். வட நாட்டுக்காரங்க மாதிரி, எதுலயும் கோவாவைப் போட்டு அல்வா. நம்ம ஊர் மெதட், பாகில், காயைக் கிளறி அல்வா செய்யறதுதான். இதுல சர்க்கரைப் பூசனில ஜீனி சேர்த்து அல்வாவா? அட ஆண்டவா... எப்படி வருமோ.. நீக்கு பதில்கள் பதிலளி Geetha Sambasivam 31 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 12:16 நெ.த.க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீக்கு பதில்கள் பதிலளி Geetha Sambasivam 31 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 12:17 எனக்கு மறு ஜன்மமே இல்லைனு எங்க குடும்ப ஜோசியரும் இன்னும் 2,3 பேரும் சொல்லி இருக்காங்க! :))))) நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத்தமிழன் 31 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 12:31 /எனக்கு மறு ஜன்மமே இல்லைனு// - ஒருவேளை அவங்களுக்கு மறு ஜென்மம் இருப்பதால், பயந்துக்கிட்டு, உங்களுக்கு இனி ஜென்மமே இல்லைன்னு சொல்லியிருப்பாங்களோ? எனக்கு நாடி ஜோதிடத்தில், அடுத்த ஜென்மம் திருவாரூரில், அதுவும் மணமாகாத வாழ்வு, அதுவே கடைசி என்று சொல்லியிருக்காங்க. ஆமாம், அப்படிப் பிறக்கும்போது, என் நல் வாழ்க்கைக்கு இப்போ எப்படி பணம் போட்டு வைக்கிறது? ஆமாம், எந்த ஊர்ல பிறக்க 'முக்தி' என்று சொல்லியிருக்காங்க? ஏன் கேட்கிறேன்னா, நீங்க பிறந்த ஊரைத் தெரிஞ்சிக்கலாம்னுதான். ஹா ஹா. நீக்கு பதில்கள் பதிலளி Geetha Sambasivam 31 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 1:05 நான் பிறந்து, வளர்ந்து, படிச்சுக் கல்யாணம் பண்ணிண்டது எல்லாமும் மதுரை தான்! மதுரையே தான்!:))))) எண்பதுகள் வரைக்கும் அப்பா, அம்மாவும் மதுரையில் தான் இருந்தாங்க. அப்புறமா அண்ணாவுக்குக் கல்யாணம் ஆகிக் குழந்தை பிறந்ததும் சென்னை-மதுரை என்று இருந்துவிட்டுப் பின்னர் தம்பி கல்யாணத்தின் பின்னர் நிரந்தர மதுரை வாசம். நான் எவ்வளவோ சொன்னேன், மதுரையைக் காலி செய்ய வேண்டாம்னு! கேட்கலை! எனக்கு இன்னமும் அந்த வருத்தம் உண்டு! :( ஆனால் அப்போ இருந்த மதுரை இப்போ இல்லை தான்! நீக்கு பதில்கள் பதிலளி ஸ்ரீராம். 31 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 1:36 எனக்கும் முதலில் மதுரையை விட்டு வந்தது கஷ்டமாகத்தான் இருந்தது. இப்போ அப்படித் தோன்றவில்லை. நீக்கு பதில்கள் பதிலளி ஸ்ரீராம். 31 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 1:37 //எனக்கு நாடி ஜோதிடத்தில், அடுத்த ஜென்மம் திருவாரூரில், அதுவும் மணமாகாத வாழ்வு, அதுவே கடைசி என்று சொல்லியிருக்காங்க. // நெல்லை... அப்போ இந்த ஜென்மத்தில் எந்தத் தப்பும் பண்ணவில்லை என்று அர்த்தம். பண்ணப்போவதும் இல்லை என்றும் அர்த்தம்... எனக்கும் அங்க ஒரு ஸீட் போடுங்களேன்! நீக்கு பதில்கள் பதிலளி ஸ்ரீராம். 31 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 1:39 //எனக்கு மறு ஜன்மமே இல்லைனு எங்க குடும்ப ஜோசியரும் இன்னும் 2,3 பேரும் சொல்லி இருக்காங்க! :)))))// கீதாக்கா.. இந்த ஜென்மத்தைப் பத்தியே ஒண்ணும் தெரியலை... அடுத்த ஜென்மம் பற்றி எப்படிச் சொல்றாங்க?!! நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத்தமிழன் 31 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 2:02 ஸ்ரீராம்.. அப்படி எப்படிச் சொல்றீங்க? தப்பே செய்யலைனா, எதுக்கு இன்னொரு ஜென்மம்? அந்த ஜென்மத்துல தனிமை எதுக்கு? "திருவாரூரில் பிறக்க முக்தி" என்பதெல்லாம் எந்த அளவு சரி? அப்போ மதுரைல பிறந்தவங்களுக்கு 'முக்தி'யா? இப்படி எழுதி கீசா மேடத்தை வம்புக்கு இழுத்தால், அவங்க பயந்து காணாமல் போய்ட்டாங்க... நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத்தமிழன் 31 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 2:05 ஸ்ரீராம், ஒரு ஜோசியர், என் ஜாதகத்தைப் பார்த்து, இத்தனை வருடம், இத்தனை மாதம், இவ்வளவு நாள் என்று (ஓரிரு நிமிடங்களுக்குள்ளேயே) சொல்லிட்டார். எனக்கு திக் என்று ஆகிவிட்டது. அது எப்படி அப்படிச் சொல்லமுடியும்? ஒருவர் இப்போ இறப்பார் என்று சொல்லுவதற்கே ரொம்ப நேரம் செலவழித்து கிரகக் கணக்கெல்லாம் பார்க்கணும். என்னைப் பொறுத்தவரையில், 'இப்போ சொல்றதுக்கே', 'நீங்க சொன்னீங்க, ஆனா நான் பட்னு போய்ட்டேனே' என்று கேட்கமுடியாது, இல்லை நாம அதைத் தாண்டி இருந்தால், 'ஜோசியர் அதுவரை இருப்பாரா', நாம் போய்க் கேள்வி கேட்க என்பதும் சந்தேகம்தான். அதனால இதெல்லாம் நமக்கு டைம் பாஸ்தான். நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத்தமிழன் 31 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 2:09 தாம்பரத்துல நாடி ஜோதிடம் பார்க்கப் போயிருந்தேன் (இருக்கும் 10-14 வருஷம்). என் அப்பா, தானும் என்ன நடக்கிறது என்று பார்க்க வருகிறேன் என்றார். நான் அவர்ட்ட, எதுவும் பேசக்கூடாது, எந்த க்ளூவும் குடுத்துடக்கூடாது என்று சொல்லி கூட்டிப்போயிருந்தேன். மற்றவற்றை மறந்துவிடுவோம், ஒரு ஓலைச் சுவடியில் என் அம்மா பெயரும், அப்பா பெயரும் எழுதியிருந்ததை அவர் சிறிது நேரம் கழித்து எடுத்துவந்துவிட்டார் (நாடி ஜோதிடக்காரர்). அந்தப் பெயர்கள் உள்ள வரிகளைத் தவிர மற்றவை படிக்கும்படியாக இல்லை. இது ஃப்ராடு என்று எண்ணிக்கொண்டாலும், அது எப்படி என்ற கேள்வி வருவதைத் தவிர்க்கமுடியவில்லை. வெ.ஆ, ஜோதிடத்தில் பி.எச்.டி வாங்கியவர். மிகத் திறமையாளராம். அதனால்தான் அவர் நம்பர் கேட்டேன். ஹா ஹா. எனக்கு இதிலெல்லாம் ஒரு ஆர்வம்தான். நீக்கு பதில்கள் பதிலளி ஸ்ரீராம். 31 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 2:36 // இவ்வளவு நாள் என்று (ஓரிரு நிமிடங்களுக்குள்ளேயே) சொல்லிட்டார்./ என் பாஸுக்கு கூட அவர் தனது 38 வது வயதில் மறைந்து விடுவார் என்று ஜோசியம் சொல்லி இருந்தார்கள். எனக்கும் முன்னரே சொல்லி இருந்தார். நான் நம்பவில்லை. ஆனால் அவர் அந்த 38 வது வயதைத் தாண்டுவதற்குள் மனதளவில் பட்டபாடு.... நீக்கு பதில்கள் பதிலளி ஸ்ரீராம். 31 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 2:37 நாடி ஜோதிடம் பார்க்க வேண்டும் என்று எனக்கும் ஆவல் உண்டு. நடந்ததை எல்லோரும் சொல்லி விடுகிறார்கள். எதிர்காலம் குறித்துச் சொல்லப்படுவதுதான் பெரும்பாலும் நடப்பதில்லை! நீக்கு பதில்கள் பதிலளி Geetha Sambasivam 31 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 4:36 எங்கேயும் பயந்துண்டு ஓடலை. வீட்டில் வேலை இல்லையா என்ன? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! என்னைப் பொறுத்தவரை குடும்ப ஜோசியர் கல்யாணம், குழந்தைகள் பத்திச் சொன்னதும் என் நண்பர்கள் புக்ககம் பத்திச் சொன்னதும் அப்படியே பலிச்சிருக்கு. மத்தபடி ஒரு வள்ளுவன், எங்க குடும்ப ஜோசியர் மற்றும் இன்னும் 2 பேர் மறுபிறவி கிடையாதுனு சொன்னாங்க! நான் அதை எல்லாம் ரொம்பத் தீவிரமா எடுத்துக்கறதில்லை. இன்னும் சொல்லப் போனால் அடுத்த பிறவியிலே இந்தப் பிறவி ஞாபகம் வருமா வராதானு எல்லாம் கவலைப்படுவேன். :))) அதே போல் உலகம் அழிந்து மீண்டும் பிறக்கையில் மீண்டும் சத்ய யுகம் அதாவது கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம்னு பிறக்குமானும் ஒரே கவலை! அப்போ என்ன பிறவி எடுப்பேன் என்பதும் தோணும். அப்போதும் கலியுகத்தில் இதே மாதிரி கீதாவாகத் தான் பிறப்பேனா என்றெல்லாம் யோசனைகள் ஓடும்! நீக்கு பதில்கள் பதிலளி Geetha Sambasivam 31 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 4:42 மத்தபடி இந்த ஜாதகத்தைத் தூக்கிக் கொண்டு அலையறதிலே நம்ம ரங்க்ஸுக்கு ஈடு, இணை இல்லை. காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை உள்ள ஜோதிடர்கள், நாடி ஜோதிடம், பிரச்னம் உட்படப் பார்த்துட்டார். ஆனால் நாடி ஜோதிடம் இங்கே பார்ப்பதெல்லாம் ஜுஜுபி! :( ஏமாற்று வேலை! எனக்கு எதிர்காலம் குறித்துச் சொன்னதும் பலித்துள்ளது, ஒரு பெண், (அப்போ என் பெண் வயிற்றில் இருந்தாள். பெண் தான் பிறக்கும் என நிச்சயமாய்ச் சொன்னார்கள். ) ஒரு ஆண் குழந்தை என்பதைச் சரியாகச் சொன்னார்கள். அதே போல் குழந்தைகள் இருவருமே வெளிநாட்டில் இருப்பாங்க என்பதையும் சொன்னார்கள். நானும் 50 வயசுக்கு மேல் வெளிநாடு போவேன் எனவும் சொல்லி இருந்தாங்க. அப்போ அதை நான் நம்பவில்லை. அதிலும் ரொம்பச் சின்ன வயசு வேறே! ஆகவே யார் சொன்னாலும் அதற்கு மனதிற்குள் ஓர் எதிர்ப்புத் தோன்றும். என்றாலும் அதிகம் வெளிக்காட்டிக்க மாட்டேன். அதன் தாக்கத்தைப் புரிந்து கொண்டதால். ஆனால் என் கணவரின் மாற்றல் பத்தி எங்க குடும்ப ஜோசியர் சொன்னது பலிக்கவும் தான் "அட!" என்று தோன்றியது. பின்னரும் ஓர் ஆர்வம் உண்டு. ஆனால் தேடிக் கொண்டு போனதில்லை. எங்க பொண்ணு எதுக்கெடுத்தாலும் ஜோசியம் பார்ப்பா! அன்றாட நாள்பலன் பார்ப்பா! அவ அப்பா மாதிரி! நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத்தமிழன் 31 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 5:08 எங்களுக்கும் இந்த இந்த ஜோசியர் ரொம்ப நல்லாச் சொல்றார்னு கைகாட்டி விடறது. நாங்களும் உங்கள மாதிரி எதிர்காலத்தைப் பற்றித் தெரிஞ்சுப்போமே (இன்னும் இரண்டு வாரங்களுக்குள் கீசா மேடம் ரெசிப்பி எ.பியில் வருதா உள்பட) நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத்தமிழன் 1 ஆகஸ்ட், 2018 அன்று பிற்பகல் 8:40 //தனது 38 வது வயதில் மறைந்து விடுவார் என்று ஜோசியம்// - ஸ்ரீராம்... இது எனக்கும் விளங்கிக்கொள்ளமுடியாத சமாச்சாரமாகத்தான் இருக்கு. எனக்கு ஒரு ஜோசியர் (என் அப்பா மறைந்து 5 வருடங்களுக்குப் பிறகு பார்த்தேன்), என் அப்பா இறக்கும் நேரம் அப்போ வரலை, இப்போதான் போயிருக்கணும் என்று சொன்னார். இன்னொரு ஜோதிடர், 'உங்க அம்மா இதுவரை போகவில்லை என்றால் இன்னும் பத்து வருடம் இருப்பார்' என்றும் சொன்னார். இதெல்லாம் புரிந்துகொள்வது கடினம். ஒருவேளை அவங்க சில கிரகங்களைப் பார்த்துவிட்டு, அந்த நிகழ்வுகளின்போது அந்த ஜாதகரின் ஆயுள் முடியும் வாய்ப்பு இருக்கு என்று கணிக்கிறார்களோ? நீக்கு பதில்கள் பதிலளி ஸ்ரீராம். 1 ஆகஸ்ட், 2018 அன்று பிற்பகல் 8:58 ஒன்றும் புரியவில்லை. ஆனால் அந்நேரம் மனதுக்குள் திகிலாய், கவலையாய் இருந்தது நிஜம். அது கடந்து சில வருடங்கள் வரையும் டென்ஷனும் இருந்தது. இந்த பாணி கமெண்ட் பெட்டியில் இந்த கமெண்ட் எங்கே இருக்குன்னு தேடி பதில் போடறது ஒரு மாதிரி கஷ்டமாவும் இருக்கு!!! நீக்கு பதில்கள் பதிலளி Geetha Sambasivam 2 ஆகஸ்ட், 2018 அன்று முற்பகல் 6:59 //ஒன்றும் புரியவில்லை. ஆனால் அந்நேரம் மனதுக்குள் திகிலாய், கவலையாய் இருந்தது நிஜம். அது கடந்து சில வருடங்கள் வரையும் டென்ஷனும் இருந்தது// இதை எல்லாம் நம்பவே கூடாது. ஏனெனில் எந்தஜோசியரும் அப்படிச் சொல்வாங்களானு தெரியலை. ஆனால் என் மாமியாருக்கு 60 ஆம் வயசு ஆரம்பிக்கையில் இறந்து போவாங்கனு யாரோ சொன்னதை நம்பி என் கடைசி மைத்துனன் எல்லோருக்கும் தகவல் தெரிவித்துவிட எல்லா இடங்களிலிருந்தும் கடிதங்கள்! அவங்க என்னமோ ஆரோக்கியமாத் தான் இருந்தாங்க. சொல்லப் போனால் ஓடி ஆடி வேலை செய்தாங்க! ஆனாலும் இந்த மாதிரிச் சொன்னதில் உள்ளூர ஒரு சந்தோஷமும் இருந்தது. எப்படி உயிர் போகும்னு பார்க்கலாம்னு இரவு 12 மணி வரை என் மாமனார், மைத்துனர் எல்லோரும் முழிச்சுட்டும் இருந்தாங்க! நாங்க போய்ப் படுத்துட்டோம். ஏனெனில் இதை நம்பலை என்பதே காரணம். ஆனால் அம்மாவின் மேல் அக்கறை இல்லைனு மாமியாருக்குக் கொஞ்சம் வருத்தம். நான் எவ்வளவோ சொன்னேன், இதை எல்லாம் நம்பாதீங்கனு! யாரும் கேட்கலை! :))) அக்கம்பக்கம் உள்ளவர்கள் எல்லாம் மறுநாள் விசாரிச்சாங்க. எனக்கென்னமோ நம் தலையில் என்ன எழுதி இருக்கோ அதை மாத்த முடியாது. அதைத் தாங்கும் வல்லமை இருந்தால் போதும் என்றே தோணும். முன்னாடியே தெரிஞ்சுட்டு என்ன செய்யப் போறோம்? நீக்கு பதில்கள் பதிலளி Geetha Sambasivam 2 ஆகஸ்ட், 2018 அன்று முற்பகல் 7:06 அதே சமயம் கிட்டத்தட்ட இந்தச் சம்பவம் நடந்து ஓரிரு வருடங்களில் என் அம்மாவுக்குக் கீமோதெரபி கொடுத்தும் குணமாகா நிலையில் படுத்த படுக்கை ஆனார்! மருத்துவர்கள் ஆறு மாசம் என கெடு வைத்திருந்தார்கள். அப்போது அங்கே அம்பத்தூரில் ஒரு பாட்டி (இங்கே திருச்சி பக்கம் குழுமணி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்) இந்த ஜோசியம், கைநாடி பார்த்துச் சொல்லுதல், கை வைத்தியம் செய்தல், மணிமந்திர ஔஷதங்களால் விஷக்கடிக்கு மந்திரித்தல் போன்றவற்றைச் செய்வார். அவருக்கு அப்போது சுமார் எழுபது வயதுக்குள் இருக்கும். அவர் அம்மாவைப் பார்க்க வந்திருந்தப்போக் கைநாடியைப் பார்த்துட்டு மிகச் சரியாக இத்தனை நாட்களுக்கான நாடி பேசுகிறது. இந்த நாள், இந்தக் கிழமை, இத்தனை மணிக்குள்ளாக இந்த ஜீவன் உடலை விட்டுப் பிரியும் என்று சொன்னார். அதே மாதிரி அதே பாட்டி 2002 ஆம் வருடம் என் அப்பாவுக்கும் கெடு வைத்துச் சொன்னார். ஆனால் அப்பாவின் உள் மனம் எதையோ நினைத்து அலை பாய்கிறது என்றும் அதைக் கண்டு பிடித்து நிவர்த்தி செய்யும்படியும் சொன்னார். என் தம்பி அப்போது தாம்பரத்தில் புது வீடு வாங்கி இருந்தார். அந்த வீட்டுக்கு அப்பா போகவே இல்லை. நடமாட்டம் இல்லை! ஆகவே அந்த வீட்டு மண்ணை எடுத்து வந்து நீரில் கரைத்து வடிகட்டி வெறும் நீரை மட்டும் கொடுத்தோம். அன்று ஒரு நாள் போக மறுநாள் இரவில் உயிர் பிரிந்தது. அதுவும் அந்தப் பாட்டி சொன்ன கெடுவுக்குள்ளேயே! நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத்தமிழன் 2 ஆகஸ்ட், 2018 அன்று முற்பகல் 9:17 கீசா மேடம்.. முன்கூட்டியே தெரிந்தால் preparedஆ இருக்கலாம். எத்தனை பேருக்கு எமன் வந்து, ‘கிளம்பு, உன் டைம் முடிந்தது’ என்று சொல்லும்போது, ‘நான் ரெடி புறப்பட’ என்று சொல்லமுடியும்? குறைந்த பட்சம், மாடில துணி காயப்போட்டிருக்கேன் எடுத்துவச்சிட்டு வந்துடறேன், இட்லிக்கு ஊறப்போட்டிருக்கேன், அரைச்சிட்டு வந்துடறேன் என்று தாமதப்படுத்தத்தான் தோணும். ஹா ஹா ஹா நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத்தமிழன் 2 ஆகஸ்ட், 2018 அன்று முற்பகல் 9:19 இப்பக்கூட, பேங்க் அக்கவுன்ட், ஆன்லைன் பாஸ்வேர்ட் போன்று பல பென்டிங் ஐட்டம் இருக்குன்னே மனசுல தோணும் நீக்கு பதில்கள் பதிலளி நெல்லைத்தமிழன் 2 ஆகஸ்ட், 2018 அன்று முற்பகல் 9:23 ஶ்ரீராம்— சப்ஜெக்டை ஜாலியா எடுத்துக்கோங்க. இந்தமாதிரி ஒருவர் மறைவார்னு சொல்லும்போது, நாம அந்த மனிதருக்காக கவலைப்படுவோமா இல்லை காத்திருக்கும் வேலைகளுக்காக, பண மற்ற ஆதாரங்களுக்காக கவலைப்படுவோமா அல்லது நாம தனியே எப்படி காலத்தை ஓட்டறதுன்னு கவலைப்படுவோமா? நம்ம மனசுல டென்ஷன் உண்டாக்க் காரணி என்னவாயிருக்கும்? நீக்கு பதில்கள் பதிலளி Geetha Sambasivam 2 ஆகஸ்ட், 2018 அன்று முற்பகல் 11:41 நாம தயாரா இருக்கணும்னா முழு நினைவில் இருக்கணுமே! இந்த இரண்டு சமயங்களிலும் அப்படி இல்லை. இன்னொருத்தர் கொஞ்சம் உடம்பு முடியாமல் போனதுமே அந்தப் பாட்டியை வரவழைத்து நாடியைப் பார்க்கச் சொல்லணும்னு சொன்னார். பாட்டி வர முடியாதுனு சொல்லிட்டாங்க! அவர் அதன் பின்னர் பல வருஷங்கள் இருந்தார்! :))))) பாட்டியும் கிட்டத்தட்ட செஞ்சுரி அடித்தார்! :))))) ஆனால் கடைசி வரை தானே சமைத்துச் சாப்பிட்டார். இருந்தது பிள்ளையோடு தான் என்றாலும் பாட்டிக்குத் தனிக் கும்முட்டி, தனி வெண்கலப்பானை, எல்லாம் தனி! குளித்துவிட்டுத் தானே சமைத்துக் கொள்வார். நீக்கு பதில்கள் பதிலளி ஸ்ரீராம். 2 ஆகஸ்ட், 2018 அன்று பிற்பகல் 12:02 //இதை எல்லாம் நம்பவே கூடாது. // சரிதான் கீதா அக்கா.. நமக்கு சரி.. நம்பியும், நம்பாமலும் பயத்திலும் சந்தேகத்திலும் இருந்த பாஸை என்ன சொல்லி மாற்ற?!!!! நீக்கு பதில்கள் பதிலளி ஸ்ரீராம். 2 ஆகஸ்ட், 2018 அன்று பிற்பகல் 12:03 //ஶ்ரீராம்— சப்ஜெக்டை ஜாலியா எடுத்துக்கோங்க. // நெல்லை.. அப்பவே ஜாலியாதான் எடுத்துக்கிட்டேன். அது நடக்காது என்று எனக்கு நூறு சதவிகிதம் நம்பிக்கை இருந்தது. என்னைத்தவிர மற்றவர்கள் இதுபற்றி பேசும்போது எப்படிச் சொன்னாலும் தவறாகும் என்று சும்மா இருக்க நேரிடும்! தயாரா இருப்பதைப் பற்றி ஒரு கவிதை எழுதி வைத்திருந்தேன். ரொம்பப் பழைய கவிதை. தேடித் தேடிப் பார்க்கிறேன்.. கிடைத்த பாடில்லை! நீங்கள் சொல்லியிருக்கும் குறிப்புகள் எல்லாம் வரும்! நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி அதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) 30 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 9:28 பறங்கிக்காயில் பச்சடி.. புதுசா இருக்கு. ஆனாலும் தோல் பச்சையாக இருப்பதைக் காட்டிலும் மஞ்சளாக.. பட்டர் கலரில் இருப்பதுதான் மாச்சத்து அதிகம் என்பது என் கருத்து.. அப்படியே கட்டியாக இருக்கும் ஒவ்வொரு துண்டும். இதை செய்து பார்க்க ஆசை.. ஆனா நிட்சயமாக தெரியும் நான் மட்டுமே சாப்பிட்டு முடிக்கோணும். //இதை கொஞ்சம் வேகவைத்துக்கொள்ளணும். அதுக்காக எங்க வீட்டில் அவனில் வேகவைக்கும் சாதனம் இருக்கு. அதுல கீழ கொஞ்சம் தண்ணீர்விட்டுவிட்டு, மேல் தட்டில் திருவின பறங்கிக்காய் கொட்டி, மூடிவிட்டு, அவனில் 4 // மைக்குரோவேவில் வைத்து எடுத்து விட்டுச் செய்யலாம் என நினைக்கிறேன். பதிலளிநீக்கு பதில்கள் நெல்லைத்தமிழன் 31 ஜூலை, 2018 அன்று முற்பகல் 10:59 மத்தவங்களுக்கும் கொடுத்துட்டு சாப்பிடுங்க. இல்லைனா மத்தவங்க, "என்னடா ஒடியல் கூழ், சம்பல்லாம் நமக்குக் கொடுத்துட்டு இவங்க மாத்திரம் தனியா என்னவோ சாப்பிடறாங்களே" என்று சந்தேகப்படப் போறாங்க. நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி kankaatchi.blogspot.com 31 ஜூலை, 2018 அன்று முற்பகல் 8:54 பரங்கி விதையை உடைத்து பருப்பை எடுக்க எளிய வழி. நன்றாக காய வைத்து அதை மிக்ஸியில் போட்டு அரைத்தால் பருப்பு மாவாகிவிடும் மேல் தோல் அரைபடாது. சல்லடையில் சலித்தால் மாவு தனியாக வந்துவிடும் தோல் சல்லடையில் தங்கிவிடும். இது நான் கண்டுபிடித்த வழி. பதிலளிநீக்கு பதில்கள் நெல்லைத்தமிழன் 31 ஜூலை, 2018 அன்று முற்பகல் 10:56 ஆஹா... பட்டாபி சார்... நீங்கள் நல்ல உணவுப் பிரியர்தான். ரசனையா எழுதியிருக்கீங்க. நன்றி நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி Geetha Sambasivam 31 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 5:15 எங்க குடும்ப ஜோசியர் அப்போவே போய்ச் சேர்ந்துட்டார். அதையும் எழுதி வைச்சிருந்தார். அப்படியே செத்துப் போனார்! மற்ற இருவரும் எங்கே இருக்காங்களோ, இல்லையோ தெரியாது, ஒருத்தர் என்னுடன் வேலை பார்த்தவர், இன்னொருத்தர் என்னுடன் படித்தவர். ரெண்டு பேருக்கும் என் வயசு தான்! பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி K. ASOKAN 31 ஜூலை, 2018 அன்று பிற்பகல் 10:02 அருமையான செய்முறை விளக்கம் பாராட்டுகள் பதிலளிநீக்கு பதில்கள் நெல்லைத்தமிழன் 1 ஆகஸ்ட், 2018 அன்று முற்பகல் 11:12 வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அசோகன் குப்புசாமி நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி கருத்துரையைச் சேர் மேலும் ஏற்றுக... இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க! புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom) காசிக்குப் போகும் சம்சாரி (மின்னூல்) ஸ்ரீராம் எழுதியது LINK அனுபவ பாடங்கள் (மின்னூல்) K G கௌதமன்(எழுதியது) LINK கதைத் தொகுப்பு (மின்னூல்) KG கௌதமன் (LINK_ ரசிகர் மன்றம்! பழையது கேட்கின் ... ► 2021 (337) ► டிசம்பர் (3) ► நவம்பர் (30) ► அக்டோபர் (31) ► செப்டம்பர் (30) ► ஆகஸ்ட் (31) ► ஜூலை (31) ► ஜூன் (30) ► மே (31) ► ஏப்ரல் (30) ► மார்ச் (31) ► பிப்ரவரி (28) ► ஜனவரி (31) ► 2020 (366) ► டிசம்பர் (31) ► நவம்பர் (30) ► அக்டோபர் (31) ► செப்டம்பர் (30) ► ஆகஸ்ட் (31) ► ஜூலை (31) ► ஜூன் (30) ► மே (31) ► ஏப்ரல் (30) ► மார்ச் (31) ► பிப்ரவரி (29) ► ஜனவரி (31) ► 2019 (365) ► டிசம்பர் (30) ► நவம்பர் (31) ► அக்டோபர் (31) ► செப்டம்பர் (30) ► ஆகஸ்ட் (31) ► ஜூலை (31) ► ஜூன் (30) ► மே (31) ► ஏப்ரல் (30) ► மார்ச் (31) ► பிப்ரவரி (28) ► ஜனவரி (31) ▼ 2018 (364) ► டிசம்பர் (31) ► நவம்பர் (30) ► அக்டோபர் (31) ► செப்டம்பர் (30) ► ஆகஸ்ட் (31) ▼ ஜூலை (31) கேட்டு வாங்கிப் போடும் கதை : வயசு - ரிஷபன் திங்கக்கிழமை 180730 : பறங்கிக்காய் தயிர் பச்சிடி... ஞாயிறு 180729 : கலைஞர் படித்த போர்ட் ஹைஸ்கூல்.. டாக்டர் வாத்தியார் வெள்ளி வீடியோ 180727 : சின்னச் சின்ன காரணத்தால் ... டேஸ்ட் பாலன்ஸ் பண்ணியிருக்காங்க... புதன் வந்தாச்சு; பதில்கள் வந்தாச்சு! 180725 கேட்டு வாங்கிப் போடும் கதை : வேர்கள் - துரை செல... "திங்க"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லை... ஞாயிறு 180722 : ..மாறலாமா என்று யோசித்துக் கொண்ட... ​பாஸ் பாஸ் பாஸிட்டிவ்.. வெள்ளி வீடியோ 180720 : கன்னங் கருமுகில் குழல் கு... தூக்கம் வரும் முன்னே.. குறட்டை வரும் பின்னே... நீ கே, நா சொ .... புதன் 180718 கேட்டு வாங்கிப் போடும் கதை : மாறிய காலம், மாறாத ... திங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்ல... ஞாயிறு 180715 : காலம் நமக்குத் தோழன்... காற்று... ஒரு இட்லி பத்து பைசா வெள்ளி வீடியோ 180713 : நாணத்திலே முந் தானை நனை... முக(ம்)மூடி முத்தம் கேள்வி பதில் புதன் 180711 கேட்டு வாங்கிப் போடும் கதை : காசு வரை பிள்ளை - க... "திங்க"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச... ஞாயிறு 180708 : குடந்தை காட்டேஜில் ஓரிரவு...! வாயில்லா ஜீவன்களுக்கான முதியோர் இல்லம் வெள்ளி வீடியோ 180706 : கருநீலக் கண்கள் ரெண்டும் ... வரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதா... கேளுங்க, சொல்றோம்! புதன் 180704 கேட்டு வாங்கிப் போடும் கதை - இதந்தரு மனையின் நீங்க... "திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா ஞாயிறு 180701 : வடை கொண்டு வந்த காகம் ► ஜூன் (30) ► மே (31) ► ஏப்ரல் (30) ► மார்ச் (31) ► பிப்ரவரி (28) ► ஜனவரி (30) ► 2017 (349) ► டிசம்பர் (31) ► நவம்பர் (30) ► அக்டோபர் (31) ► செப்டம்பர் (30) ► ஆகஸ்ட் (30) ► ஜூலை (28) ► ஜூன் (28) ► மே (29) ► ஏப்ரல் (27) ► மார்ச் (28) ► பிப்ரவரி (27) ► ஜனவரி (30) ► 2016 (339) ► டிசம்பர் (22) ► நவம்பர் (30) ► அக்டோபர் (30) ► செப்டம்பர் (30) ► ஆகஸ்ட் (30) ► ஜூலை (31) ► ஜூன் (30) ► மே (31) ► ஏப்ரல் (29) ► மார்ச் (26) ► பிப்ரவரி (25) ► ஜனவரி (25) ► 2015 (298) ► டிசம்பர் (25) ► நவம்பர் (22) ► அக்டோபர் (26) ► செப்டம்பர் (29) ► ஆகஸ்ட் (25) ► ஜூலை (23) ► ஜூன் (24) ► மே (25) ► ஏப்ரல் (24) ► மார்ச் (25) ► பிப்ரவரி (24) ► ஜனவரி (26) ► 2014 (273) ► டிசம்பர் (20) ► நவம்பர் (22) ► அக்டோபர் (26) ► செப்டம்பர் (21) ► ஆகஸ்ட் (22) ► ஜூலை (21) ► ஜூன் (21) ► மே (24) ► ஏப்ரல் (24) ► மார்ச் (25) ► பிப்ரவரி (22) ► ஜனவரி (25) ► 2013 (276) ► டிசம்பர் (22) ► நவம்பர் (21) ► அக்டோபர் (22) ► செப்டம்பர் (22) ► ஆகஸ்ட் (25) ► ஜூலை (27) ► ஜூன் (22) ► மே (24) ► ஏப்ரல் (26) ► மார்ச் (22) ► பிப்ரவரி (19) ► ஜனவரி (24) ► 2012 (263) ► டிசம்பர் (21) ► நவம்பர் (23) ► அக்டோபர் (20) ► செப்டம்பர் (25) ► ஆகஸ்ட் (19) ► ஜூலை (24) ► ஜூன் (21) ► மே (22) ► ஏப்ரல் (25) ► மார்ச் (24) ► பிப்ரவரி (19) ► ஜனவரி (20) ► 2011 (249) ► டிசம்பர் (19) ► நவம்பர் (18) ► அக்டோபர் (28) ► செப்டம்பர் (20) ► ஆகஸ்ட் (25) ► ஜூலை (19) ► ஜூன் (20) ► மே (21) ► ஏப்ரல் (20) ► மார்ச் (22) ► பிப்ரவரி (18) ► ஜனவரி (19) ► 2010 (331) ► டிசம்பர் (24) ► நவம்பர் (18) ► அக்டோபர் (21) ► செப்டம்பர் (21) ► ஆகஸ்ட் (23) ► ஜூலை (24) ► ஜூன் (24) ► மே (35) ► ஏப்ரல் (35) ► மார்ச் (40) ► பிப்ரவரி (28) ► ஜனவரி (38) ► 2009 (304) ► டிசம்பர் (28) ► நவம்பர் (38) ► அக்டோபர் (54) ► செப்டம்பர் (41) ► ஆகஸ்ட் (44) ► ஜூலை (95) ► ஜூன் (4) உங்கள் ப்ளாக்! எங்கள் விருப்பம் !! சும்மா ஃபோன் ராஜாங்கமும் ஸ்ம்யூல் சாம்ராஜ்யமும் ! - 2941. Today released a children book by Udaishankar at Karaikudi M A M Mahal Book Fair. 2942. My book was released by Kalaivani , headmistress of Siru... 2 மணிநேரம் முன்பு Rammalar’s Weblog மரங்கொத்திப் பறவையின் வினோத குணங்கள் - தினத்தந்தி 4 மணிநேரம் முன்பு எண்ணங்கள் பயணம் எங்கே! எங்கே! - வண்டி மீண்டும் விழுப்புரம் ரயில் நிலையத்தை அடைந்து நின்றது. அப்பா போய் விசாரித்து வந்ததில் வெண்ணாறு/வெட்டாறு கரை உடைந்துவிட்டதால் கடலூர் மெயின் லைனில் த... 5 மணிநேரம் முன்பு thambattam பெயரில் என்ன இருக்கிறது? - *பெயரில் என்ன இருக்கிறது?* ஒரு ரோஜாவை எந்த பெயரிட்டு அழைத்தால் என்ன? அது ரோஜாவாகத்தனே இருக்கும் என்னும் ஷேக்ஸ்பியரின் பிரபலமான வாசகத்தை எல்லோரும் ஒரு ... 5 மணிநேரம் முன்பு venkatnagaraj அவரும் நானும் - தொடர் - பகுதி இரண்டு - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நேற்று வெளியிட்ட அவரும் நானும்... 7 மணிநேரம் முன்பு பசுபதிவுகள் 1984. அநுத்தமா - 4 - *அங்கயற்கண்ணி* *அநுத்தமா* *டிசம்பர் 3*. அநுத்தமாவின் நினைவு தினம். *1947*-இல் மணியம் அவர்களின் மணியான ஓவியங்களுடன் கல்கியில் வந்த , பரிசு பெற்ற கதை இதோ. ... 15 மணிநேரம் முன்பு நாச்சியார் 2007 April ,,,,150...இன்று டிசம்பர் 3 வரை 2501 பதிவுகள் - வல்லிசிம்ஹன் 2007 April Post 150 . *ஒரு வருடமும் ஓடி விட்டது. என்னதான் துளசி மாதிரி சத்தம் போடாம இருக்கணும்ன்னு பார்த்தாக் கூட முக்கால் குடம், நிறைகு... 17 மணிநேரம் முன்பு தீதும் நன்றும் பிறர் தர வாரா... படித்துப் பயந்தது..நிஜந்தானா.. - #வெள்ளை_விஷம் ... நேற்று யதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்.. ரொம்ப நாளா எனக்கு இருந்த ஒரு சந்தேகத்தை அவரிடம் கேட்ட... 23 மணிநேரம் முன்பு gmb writes இல்லறம் துறவறம் - இல்லறம் துறவறம் எது பற்றி எழுதுவது. சரி இல்லறமா துற்வறமாச் என்பதுபற்றி நமக்கு தெரிந்ததை எழுதுவோம் இயற்கையாகஅமைவது இல்லறம்தான் அது நல்லறமாக அமைத்துக்கொள்... 1 நாள் முன்பு Killergee தொலைநோக்கு பார்வை - *மேலேயுள்ள புகைப்படத்தில் திரைப்படக் கூத்தாடியின் பதாகைக்கு பாலூற்றும் பெண்ணை பார்த்தீர்களா ? இப்பெண் வீட்டுக்கு விளக்கு ஏற்றுவதற்கு தகுதியானவளா ? இதற்க... 1 நாள் முன்பு அனுவின் தமிழ் துளிகள் தீப ஒளி காட்சிகள் ... - வாழ்க வளமுடன் .... Read more » 2 நாட்கள் முன்பு திருமதி பக்கங்கள் ஏரியும், அழகான வாத்துக்களும் - போன மாதம் ஒரு சனிக்கிழமை இந்த ஏரிக்கு மகள் அழைத்து போனாள். வீட்டிலிருந்து 25 நிமிட நேரத்தில் போகும் தூரத்தில் இந்த அழகான ஏரி இருக்கிறது. ஏரிக்கு போ... 2 நாட்கள் முன்பு கனவும் கமலாவும் .... விருந்தும், மருந்தும். - வணக்கம் அன்பான சகோதர சகோதரிகளே.அந்தக் காலத்தில் மருந்தும், விருந்தும் மூன்று நாட்கள் என்பார்கள். .அதன் அர்த்தம் உண்மையில் உணர்ந்து சொல்லப் பட்டதுதான் போலு... 3 நாட்கள் முன்பு முத்துச்சரம் தீபங்கள் ஏற்றும் திருக்கார்த்திகை மாதம் (1) - #1 திருக்கார்த்திகை தீபம் கார்த்திகைத் திங்களின் எல்லா நாட்களிலும் தீபங்கள் ஏற்றி வாசலில் வைப்பதும், திருக்கார்த்திகை அன்று வீட்டிலிருக்கும் விளக்குகள்... 4 நாட்கள் முன்பு முத்துச்சிதறல் ரஸமலாய்!!! - ரொம்ப நாளாகிறது ஒரு சமையல் குறிப்பு போட்டு. அதனால் ஒரு இனிப்பான குறிப்பாக ‘ ரஸமலாய்’ பற்றி பதிவு பண்ணலாம் என்று நினைத்தேன். இனி ரஸமலாய் பற்றி: ரஸமலாய்... 6 நாட்கள் முன்பு முனைவர் ஜம்புலிங்கம் திருக்குறள்-சிறப்புரை : முனைவர் ரெ. குமரன் - முனைவர் இரெ.குமரன் எழுதியுள்ள *திருக்குறள்-சிறப்புரை* என்னும் நூல் இலக்கியப்பொருளின் நோக்கில் உரையைக் கொண்டுள்ள நூலாகும். குறளின் வரிகளுக்கேற்ற வகையில் ப... 1 வாரம் முன்பு Thillaiakathu Chronicles பெங்களூர் – நாகர்கோவில் (கடம்போடுவாழ்வு, திருவனந்தபுரம் வழி திருவண்பரிசாரம்) – 2 - *சாது பொங்கினால்……காடும் ஊரும் கொள்ளாது - 2* *https://thillaiakathuchronicles.blogspot.com/2021/11/%20%20%20%20%20%20%20%20%201.html பகுதி 1* *பகுதி... 1 வாரம் முன்பு மனசு நூல் விமர்சனம் : மலையாளத் திரையோரம் - மலையாளத் திரையோரம்... ஆசிப் மீரான் அண்ணன் எழுதியிருக்கும் மலையாளத் திரைப்பட விமர்சனக் கட்டுரைகள் அடங்கிய நூல். இதில் மொத்தம் 19 படங்கள் குறித்தான விமர்சன... 1 வாரம் முன்பு தஞ்சையம்பதி தீபத் திருநாள் - நாடும் வீடும்நலம் பெற வேண்டும்..பகையும் பிணியும்தொலைந்திட வேண்டும்..***இன்றுதிருக்கார்த்திகைதீபத் திருநாள்..ஈசனுக்கும்எம்பெருமான்முருகவேளுக்கும்உரிய பொன்ன... 2 வாரங்கள் முன்பு ஏகாந்தன் Aekaanthan இருதரப்பு கிரிக்கெட்: இந்தியா-நியூஸிலாந்து டி-20 தொடர் - கைக்கெட்டாத உலகக்கோப்பையை மறந்துவிடலாம்! இன்று (17/11/21) ஜெய்ப்பூரில் துவங்குகிறது நியூஸிலாந்து, இந்தியாவுக்கு இடையேயான 3-மேட்ச் டி-20 தொடர். இதற்குப் பின... 2 வாரங்கள் முன்பு திண்டுக்கல் தனபாலன் முத்துப்பல் சிரிப்பென்னவோ... - திருக்குறளில் நகைச்சுவை முந்தைய பதிவுகள் : *அறத்துப்பால் :**① * சிரிக்க சிரிக்க... *② * மானிட லீலை...! *பொருட்பால் :**③ * துன்பம் நேர்கையில்... *④ * கிசுக... 4 வாரங்கள் முன்பு துளசிதளம் பதினேழு முடிஞ்சு பதினெட்டு ஆரம்பம்...... - நம்ம துளசிதளம், கோமாவில் இருக்கு ! எப்பவாவதுதான் விழிப்பு வருது. உடனே மீண்டும் கோமா நிலை..... இந்த வருஷத்தில் இதுவரை வெறும் ஒன்பதே பதிவுகள்தான். இ... 2 மாதங்கள் முன்பு சொல்லுகிறேன் கணபதியே வருகவருக. - Originally posted on சொல்லுகிறேன்: வாக்குண்டாம் நல்ல மன முண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்... 2 மாதங்கள் முன்பு கார்த்திக் துக்ளக் அரசுகள் எங்கும் உண்டு - மிக முட்டாள்தனமாக நடக்கும் அரசை ” துக்ளக் அரசு ” என்று விமர்சிக்கும் வழக்கம் பாரதத்தில் உண்டு. இதுநாள் வரை அத்தைகய அரசுகள் பாரதத்தில் மட்டுமே உண்டு என்று ந... 2 மாதங்கள் முன்பு அகரம் சாவித்திரிபாய் ஃபூலே: முதல் பெண் ஆசிரியர், கல்வியாளர், முதல் பெண்ணியவாதி, கவிஞர் - சாவித்திரிபாய் ஜோதிராவ் ஃபூலே (Savitribai Jyotirao Phule) இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்பது நம்மில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். மகாராஷ்டிராவைச் சேர... 2 மாதங்கள் முன்பு அக்கம் பக்கம்! என்ன சேதி! சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகள்! ஏய்ப்பதில் கலீஞர்கள்! - முந்தைய பதிவில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு நிறைவைப் பற்றிய ஒருபக்கப்பார்வையைப் பகிர்ந்து இருந்தேன். ஆனால் சொல்வதற்கு இன்னமும் நிறைய இருக்கிறது. ... 4 மாதங்கள் முன்பு ஆன்மிக பயணம் சிங்கழகரின் அனுபவங்கள் தொடர்ச்சி! ஶ்ரீரங்க ரங்க நாதரின் பாதம் பணிந்தோம். - அன்றைக்குச் சுமார் பதினெட்டு ஆண்டுகள் முன்னர் ஶ்ரீரங்க நகரில் இருந்து அரங்க விக்ரஹத்தோடு புறப்பட்ட கோஷ்டி கர்நாடகத்தின் மேல்கோட்டையை அடைந்து அங்குள்ள தி... 5 மாதங்கள் முன்பு ஆன்மீகம்4டம்மீஸ் ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 69 - 981. அஸ்ப₁ர்ஶாய நம꞉ தொட இயலாதவர் 982. அஶப்₃தா₃ய நம꞉ ஒலியற்றவர் 983. ஶப்₃த₃பா₄ஜே நம꞉ (வேத) ஶப்தங்களை (தன்னைத் தெரிவிப்பவையாகக்) கொண்டவர் 984. மந்த்₁ரே நம꞉... 5 மாதங்கள் முன்பு நிகழ்காலம் Mirror work கண்ணாடிப் பயிற்சி - Mirror work கண்ணாடிப் பயிற்சி நம் ஆழ் மனதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் எண்ணங்கள், நினைவுகள், நம்பிக்கைகள் , தவறான அபிப்பிராயங்கள் பட்... 6 மாதங்கள் முன்பு kaagidha pookal பாகற்காய் பிரட்டல் ,பொரியல் - சென்ற பதிவில் ஜவ்வரிசி புட்டிங் இல் முடித்து வடை புராணத்தை தொடருவதாக சொல்லியிருந்தேன் .ஆனால் இன்றைய அதீஸ் பேலஸ் அப்டேட்டில் பாகற்காயை பார்த்ததால் வடையில... 7 மாதங்கள் முன்பு பூ வனம் மொழி - *11* என்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப... 7 மாதங்கள் முன்பு சாப்பிடலாம் வாங்க தக்காளி சாதம்/ராகேஷ் ரகுநாதன் முறையில் சில மாற்றங்களோடு! - ஏற்கெனவே இந்த வலைப்பக்கத்தில் தக்காளிச் சாதம் செய்முறைகள் போட்டிருந்தாலும் இது சாறு எடுத்துக் கொண்டு தேங்காய்ப் பால் விட்டுச் செய்ததால் விபரமாகப் படங்களோ... 8 மாதங்கள் முன்பு நான் நானாக . . . தங்க இளவரசியின் ஆலயம் - Radin Mas Ayu என்ற சிறு ஆலயம், இதை Mount Faber-இன் அடிவாரத்தில் காணமுடிகிறது. இந்த ஆலயத்தைப் பற்றிய சுவாரஸ்யக் கதை ஒன்று இருக்கிறது. Pangeran... 8 மாதங்கள் முன்பு ஒரே இந்தியா செய்திகள் Hello world! - Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! 8 மாதங்கள் முன்பு மின்நிலா மின்நிலா 042 - *சுட்டி : >> மின்நிலா 042* 8 மாதங்கள் முன்பு என் பக்கம் “அதீஸ் பலஸ்😻” உங்களை அன்புடன் அழைக்கிறது🙏 - *பிஸியான செக் ஆக .. சே....சே... டங்கு ஸ்லிப்பாகுதே:)).. செஃப் ஆக மாறிய அதீஸ்:))* மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது பழைய மொழி, ஆனா அதுதான் இப்பவும் உண்மை... 8 மாதங்கள் முன்பு Sowmya's Kitchen ஆளி விதை இட்லி பொடி - தேவையான பொருட்கள் ஆளி விதை – 1 கப் ( Flax Seed)கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு – 1 டேபிள்… 10 மாதங்கள் முன்பு VK' s corner சரணாகதி... - நேற்று சுந்தர காண்டம் படிக்கத் தோன்றியது.... ஹனுமனின் குணாதிசியங்கள்... unquestioning loyalty... confidence இல்லாவிட்டால், கடலை தாண்ட முடியுமா.. நடுவ... 11 மாதங்கள் முன்பு தேவதையின் சமையல் பக்கம் வீட்டுத்தோட்டத்தில் கீரை ,மணத்தக்காளி ,முளைக்கீரை - *முளைக்கீரை ..* *(*இந்த தோட்டப்பதிவு ஒரு சேமிப்பாக இருக்கட்டும்னு இங்கே பதிவு இடுகிறேன்* )* ... 1 ஆண்டு முன்பு செல்லப்பா தமிழ் டயரி தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம் - *தமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்* *-இராய செல்லப்பா* (கொஞ்சம் நீளமான பதிவு) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அடிக்கடி நடக்கும் விவாதங்களில் முக்கியமா... 1 ஆண்டு முன்பு Kasu Sobhana ! - test 1 ஆண்டு முன்பு manakottai Post Covid Pandemic - *POST COVID-19 PANDEMIC* Yes, I am talking about the Corona Virus named COVID-19 which has caught us all off guard. It has now slowly mushroomed... 1 ஆண்டு முன்பு VAI. GOPALAKRISHNAN 22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு ! - *கொரனா வைரஸ் பீதி * *இந்தியா முழுவதும் ஊரடங்கு* *22.03.2020 ஞாயிறு* *^22.03.2020 AT TIRUCHIRAPPALLI TOWN^* *^22.03.2020 AT MARINE DRIVE - MUMBAI^* *... 1 ஆண்டு முன்பு என்னுலகம் புதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...
வணக்கம். குட்டிக் குட்டி ராட்டினங்கள் ; கலர் கலரான பானங்கள் ; காற்றில் கலக்கும் குலவைச் சத்தங்கள் ; ஓசையில்லா பிரார்த்தனைகள் என ஒரு வாரமாய் திருவிழாக் கோலத்தில் உருமாறிப் போயிருந்த எங்கள் சாலைகள் தகிக்கும் வெயிலில் இப்போது நிசப்தமாய் காட்சி தருகின்றன ! இன்னுமொரு பங்குனித் திருவிழா அழகாய் நிறைவு பெற்ற திருப்தியில் ஊரே லயித்திருக்க - நமக்கோ பரபரப்பு ஓய்ந்தபாடில்லை ! நமது "வேங்கையின் திருவிழாவுக்கு" இன்னும் ஏழு தினங்கள் மட்டும்மே எஞ்சியிருக்க, இங்கே 'லப்-டப்'கள் overdrive -ல் உள்ளன என்பது தான் நிஜம் ! மெகா பணிகள் நமக்குப் புதியவைகளல்ல ; குறுகலான காலக்கெடுவுக்குள் காரியம் சாதிக்க நமது டீம் சமீபமாய் பழகியும் உள்ளது தான் ! ஆனால் ஒவ்வொரு project -ம் முந்தையதுக்குத் துளியும் தொடர்பின்றி முற்றிலும் புதியதொரு அனுபவம் தர வல்லதாய் இருப்பது தானே நமது பிழைப்பின் தனித்தன்மையே !! So NBS தயாரித்த அனுபவங்களோ ; LMS தந்த பாடங்களோ கைகொடுக்குமென்ற உத்தரவாதங்கள் துளி கூட இல்லாதொரு நிலையில் தான் இம்முறையும் பிள்ளையார் சுழி போட்டு வைத்தோம் ! தொட்ட மாத்திரத்திலேயே அத்தனையும் பொன்னாகும் ஒரு யோக வேளையில் NBS -ன் திட்டமிடல் துவங்கியிருக்குமோ என்னவோ - அதன் பணிகள் சகலமும் செம வழுக்களை நடந்தேறின ! இத்தனைக்கும் வண்ணப் பாணிகளுக்கு ; ராட்சஸ இதழ்களுக்கு நாம் பரிச்சயம் செய்து கொண்டிருந்த துவக்க நாட்களவை ! Yes, of course குட்டிக்கரணங்கள் எக்கச்சக்கமாய் போடத் தேவைப்பட்டது தான் ; ஆனால் பெரியதொரு டென்ஷன் இன்றி பணிகளை நிறைவேற்றுவது அன்றைக்கு எப்படியோ சாத்தியமானது ! Maybe அதற்கு முந்தைய 2 மாதங்களின் நமது ரெகுலர் அட்டவணை ரொம்பவே நோஞ்சானாக அமைந்திருந்தது - NBS -ன் பொருட்டு முழுக் கவனமும் தர உதவியதோ - என்னவோ ?! LMS-ஐப் பொறுத்தவரை தயாரிப்பினில் ஏகப்பட்ட படபடப்பு 60 முழு நாட்களுக்கு எனக்குள் குடியிருந்தது ! நாட்காட்டியின் ஒவ்வொரு சருகையும் கிழிக்கும் ஒவ்வொரு காலையிலும் வயிறு கலங்காது இருக்காது - ஆகாரத்தில் துளியும் கோளாறு இலாத போதிலுமே ! ஆனால் jigsaw puzzle -ன் பல முகங்கள் 'பட பட'வென்று ஒன்று சேர்வது போல கதைகளின் பணிகள் ; அச்சு ; பைண்டிங் என எல்லாமே ஒரு திடீர் வேகம் பெற்று deadline -க்கு வெகு முன்கூட்டியே இதழ் தயாராகியிருந்தது ! ஆனால் - மின்னும் மரணமோ முற்றிலும் மாறுபட்டதொரு அனுபவம் ! பாகம் 11 நீங்கலாக மற்ற அத்தியாயங்கள் எதற்கும் மாங்கு-மாங்கென்று மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு இங்கே அவசியமில்லை எனும் போது இந்தப் பணி cakewalk ஆக இருந்திடவேண்டுமென்ற மிதப்பு எனக்குள் நிறையவே இருந்தது - துவக்க நாட்களில் ! தவிரவும், முன்பதிவுகளின் ஆரம்பத்து மந்தகதி எனக்குள்ளும் ஒரு சூட்டிகையைக் கொண்டு வரவில்லை என்பதும் நிஜமே ! "ஆஹ்...மாதம் 50 முன்பதிவுகள் என்ற வேகத்தில் தான் புக்கிங் நடக்கிறது ; 500-ஐ எட்டிட எப்படியும் எட்டுப் பத்து மாதங்கள் ஆகிதேனும் போது எக்கச்சக்கமாய் அவகாசம் தான் உள்ளதே ! " என்ற கொழுப்பு குடி கொண்டிருந்தது ! பிளஸ் ஒரு குறிப்பிட்ட வெளியீட்டுத் தேதியோ-மாதமோ நிர்ணயம் செய்திராத நிலையில், அவ்வப்போது முன்னின்ற மாதாந்திர ரெகுலர் இதழ்களுக்குள் மூழ்கிடுவதில் மும்முரமாகிப் போனோம் ! ஜனவரியில் "சென்னைப் புத்தக விழா " ; "பௌன்சர் அறிமுகம்" என இரு முக்கிய நிகழ்வுகள் காத்திருந்ததால் டிசெம்பரின் பெரும் பகுதி அந்த முனைப்பிலேயே செலவாகிப் போயிருந்தது ! சொல்லப் போனால் பௌன்சரின் முதல் ஆல்பம் + சென்ற மாதத்து ஆல்பம் # 2-ன் பொருட்டு நான் எடுத்துக் கொண்ட தயாரிப்பு அவகாசம் மாமூலை விட 50% ஜாஸ்தி ! ஜனவரியின் பரபரப்புகளின் மீது லேசாகத் தூசு படியத் தொடங்கிய வேளைகளில் தான் "மின்னும் மரணம்" எனது focus-க்குள் சீரியசாகப் புகுந்திடத் தொடங்கியது ! 11 பாகங்கள் ; நம்மிடம் பணியாற்றி வரும் 5 DTP டீம்களிடம் ஆளுக்கு இரண்டாய்ப் பகிர்ந்து தந்து விட்டால் - மேகி நூடுல்ஸ் பாணியில் பதார்த்தம் தயாராகிடுமே என்று யதார்த்தமாய் நான் சிந்தித்து - தைப் பொங்கல் முடிந்த பின்னொரு சுபயோக சுபதினத்தில் மி.மி. வேலைகளை முடுக்கி விடத் தொடங்கினேன் ! அப்போது தான் காதோடு சேர்த்து 'பொளேர் ..பொளேர்' என சாத்துக்கள் விழுந்தன நமது அன்றைய DTP டீமின் புண்ணியத்தில் ! ஏற்கனவே அது பற்றி இங்கு நான் லேசாக எழுதியிருந்தது கூட நினைவிருக்கலாம் ! வெளியூரில் வேலையென ஒருத்தர் சொல்லாமல் கொள்ளாமல் புறப்பட ; தாய்மைப் பேற்றின் காரணமாய் அடுத்தவர் விடைகொடுக்க ; திருமண ஏற்பாட்டின் காரணமாய் மூன்றாமவர் bye -bye சொல்ல, நானும் மைதீனும் ginger உண்ட monkeys பாணியில் ஒருத்தர் முகத்தை அடுத்தவர் பார்த்துக் கொண்டோம் ! எஞ்சியிருந்த 2 பணியாளர்களும் கூட பகுதி நேரத்து ஊழியர்கள் மாத்திரமே எனும் போது - அந்தந்த மாதங்களது கதைகளைக் களமிறக்குவதற்குள்ளாகவே குடல் வாய்க்கு வரத் தொடங்கி விட்டது ! "விடாதே ...பிடி...வேலைக்குப் புதியவர்களை எப்படியேனும் அமர்த்து.." என்று வலைபோட்டு நகரைச் சுற்றி வர - "டிசைனிங் தெரியும் ; Coreldraw தெரியும் ; ஆனால் டமில்..டமில் டைப்பிங் நஹி மாலும் !" என்ற டயலாக்குகளுக்கு எங்களது காதார்கள் நிறையவே பரிச்சயமாகிப் போனார்கள் ! தமிழ் அச்சுக்கோர்ப்பறியாது - வண்டி வண்டியை வசனங்கள் கொண்ட நமது கதைகளைக் கரை சேர்ப்பது எவ்விதமோ ? என்ற பீதியில் நியூஸ் பேப்பர்களில் விளம்பரங்கள் ; வெளியூர் பதிப்புகளிலும் விளம்பரங்கள் என சத்தமின்றிச் செய்தோம் ! விண்ணப்பங்களும் வந்தன தான் - ஆனால் அவர்கள் எதிர்பார்த்த கட்டணங்களுக்கு நமது கோவணங்களையும் சேர்த்து விற்றால் கூட கட்டுபடியாகாது என்ற நிலை ! திரும்பவும் துவக்கத்துப் புள்ளிக்கே செல்வோமென்ற தீர்மானத்தில் உள்ளூரிலேயே தேடலைத் தொடர்ந்தோம் ! ஆண்டவனும் நிச்சயமாய் ஒரு காமிக்ஸ் பிரியர் என்பதாலோ - என்னவோ நம் உளைச்சலுக்கு மருந்திட்டார் - புதிதாய் ஒரு அணியை அறிமுகம் செய்து வைத்ததன் மூலமாய் ! புதுவரவுகளை ஒரேடியாகப் பிழிந்து எடுத்து அவர்களும் பேஸ்த்தடித்துப் போய் விடக்கூடாதே என்ற பயம் ஒரு பக்கம் ; நாட்கள் நழுவிச் செல்கின்றனவே என்ற நடுக்கம் இன்னொரு பக்கம் - எப்படியோ பணிகள் ஒரு மாதிரியாக அரங்கேறத் தொடங்கின ! பாகம், பாகமாய் கதை என் மேஜைக்கு வரத் துவங்கிய போது அடுத்தகட்ட அந்தர்பல்டிகள் ஆரம்பித்தன ! "பார்ட் பார்ட்டாய் டைப்செட் செய்யப்பட்டு வருது ....அன்னிக்கு விடிய விடிய முழித்திருந்து அண்ணாத்தே வேலை பாக்குது ...இரண்டே வாரத்திலே எல்லா வேலையும் முடிக்குது !" என்ற மௌன சபதத்தோடு முதல் அத்தியாயத்துக்குள் புகுந்தால் - 'கட கட' வென ஓசை மேஜைக்கு மேலிருந்தும், கீழிருந்தும் கேட்கத் தொடங்கியிருந்தது ! "அரே..பேஸ்மென்ட் வீக்கா இருந்தாக்கா முட்டிங்கால்களின் நடனக் கச்சேரி சகஜம் தான் ; ஆனால் ஊப்பர் கதக்களி ஏனோ ?" என்ற குழப்பத்தோடு தந்தியடிக்கும் என் பற்களை உற்றுப் பார்த்தேன் ! ஒரு மூட்டை வசனங்கள் ...மத்தியிலே தம்மாத்துண்டாய் ஆங்காங்கே ஒரு சப்பை மூக்கரின் சித்திரங்கள் என என் மேஜையிலிருந்த பக்கங்கள் காற்றில் படபடப்பதோடு - எனக்குள்ளும் பீதியை உருவாக்கிக் கொண்டிருந்தன ! அந்நாட்களில் "மின்னும் மரணம்" கதையின் 10 பாகங்களையும் டிசைன் டிசைனாய் நாம் பிரித்துப் போட்டிருந்த சமயங்களில் நமது ஆர்டிஸ்ட்களின் சகாயத்தால் படங்களை வெட்டியும், ஒட்டியும் வசன மழைகளை லாவகமாக இங்குமங்கும் திணித்திருந்தோம் என்பதும், இன்றைய standard format-ல் அந்த பல்டிகளுக்கெல்லாம் இடமில்லை எனும் போது - சிக்கிய சந்திலெல்லாம் நமது (புது) DTP அணி சிந்து பாடியுள்ளது என்பதையும் உணர முடிந்தது ! கோனார் உரைக்குள் கொஞ்சமாய் நம் டைகரை நடமாட அனுமத்தித்த உணர்வைத் தவிர்க்க இயலவில்லை ! To be fair to them - அனுபவசாலிகளே தண்ணி குடிக்கக் கூடிய இந்தக் கதையை எடுத்த எடுப்பிலேயே புதியவர்களிடம் ஒப்படைத்தது பெரியதொரு சவாலே ! Sincere ஆக முயற்சித்திருந்த அவர்களது பணிகளையும் குறை சொல்வதற்கில்லை ! ஆனால் பட்டி-டின்கெரிங்க் அவசியமோ அவசியம் என்றான நிலை ! மதுரையில் கொத்து புரோட்டா போடுவதைப் பார்த்திருப்போர்க்குத் தெரியும் - அந்த தோசைக் கல்லின் மீது புரோட்டா படும் பாடு ! தொடர்ந்த நாட்களில் அதே பாடு தான் பட்டனர் நமது DTP அணியினரும் என் கைகளில் ! "இதை அங்கே நகற்றுங்கள் ; இதைக் குட்டியாக்குங்கள் ; அதை அந்த இடைவெளியில் பொருத்துங்கள் " என்று ஓராயிரம் மாற்றங்களைச் செய்யச் சொல்லி அவர்களது பிராணன்களில் ஒரு பகுதியை வாங்கினேன் என்றால் - பிழை திருத்தப் படலத்திலும், எடிட்டிங் efforts லும் மிச்சம் மீதியை கரைந்தே போகச் செய்திருப்பேன் ! எழுத்துப் பிழைகளைத் தேடிக் கொண்டு மேலோட்டமாய் ஒரு வாசிப்பைப் போட்டு விட்டு - proofreading-க்கு தள்ளி விட்டு விடலாமென்ற வேகத்தில் திரும்பவும் உள்ளே நுழைந்த எனக்கு முட்டிங்கால்கள் இன்னுமொரு ஜலதரங்கக் கச்சேரி வாசிக்கத் தொடங்கின ! ஒரு பக்கத்துக்கு சராசரியாய் 10-12 frames ; ஒவ்வொரு frame குள்ளும் குறைந்த பட்சம் 3-4 டயலாக் பலூன்கள் ; ஒவ்வொருவரும் கிடைக்கும் முதல் வாய்ப்பில் ஏகமாய் வசனங்கள் பேசுவது என்ற பாணியைக் கடைப்பிடித்து வந்ததால் - ஒரு நேரத்திற்கு 10-12 பக்கங்களைத் திருத்தி கரைசேர்ப்பதே பெரும்பாடாகிப் போனது ! "இத்தனை பெரியதொரு முயற்சி எனும் போது - முடிந்தளவுக்கு சிற்சில பிழைகளையும் சரி செய்து விடலாமே ?" என கடல்கடந்த நண்பரொருவவரோடு சமீபமாய் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் கருத்துச் சொல்லியிருந்தது தலைக்குள் தொட்டுப் பிடித்து விளையாட - பரணிலிருந்து ஒரிஜினல் ஆங்கிலப் பதிப்புகளையும் எடுத்துக் கொண்டு - திரும்பவும் பக்கம் 1-க்குப் பயணமானேன் ! ஷப்பா...குட்டிக் குட்டியாய் ஆங்காங்கே அந்நாட்களில் நிகழ்ந்திருந்த மொழிமாற்றப் பிழைகள் ; அடிக்கொருதரம் தலைகாட்டிய "சாக்கடைப் புழுக்களே" ; " தெரு நாய்க்குப் பிறந்த நீசனே " டயலாக்குகள் ; செய்திடக்கூடிய மெல்லிய நகாசு வேலைகள் என என்னென்னவோ கண்ணில்படத் துவங்க, "மாற்றங்கள் / திருத்தங்கள் செய்யாது ஆணியே பிடுங்கப் போவதில்லை !" என்ற வைராக்கியம் குடி கொண்டது ! So சிக்கிய அவகாசங்களிலெல்லாம் - மி.மி. ஆங்கிலப் பதிப்புகள் ; நமது அந்நாட்களது இதழ்கள் + தற்போதைய printouts என குட்டி போட்ட குரங்கு ஜாடையில் தூக்கிக் கொண்டு திரிய ஆரம்பித்தேன் - அன்று முதலாய் ! தாம்பரம் ரயில் நிலையத்து ஆறாம் நம்பர் பிளாட்பார்மில் கூட "மின்னும் மரணம்" தொடர்பான அதிகாலை நினைவுகள் எனது souvenirs பட்டியலில் உண்டு ! ஒரு மாதிரியாய் இந்தக் கூத்துக்களும் நிறைவு பெற்று அச்சுக்குத் தயாராகும் சமயம் "வைட்டமின் ப" பற்றாக்குறை ஜிங்கு ஜிங்கென்று தலைவிரித்தாடத் தொடங்கியிருந்தது ! ஒரு மொத்தமாய் பணம் கைக்குக் கிட்டுவதற்கும் - ஒன்பது மாத அவகாசத்தினில் பிரித்துப் பிரித்து வசூலாவதற்கும் தான் ஏகப்பட்ட வித்தியாசமுள்ளதே ?! அவ்வப்போது வரும் சில ஆயிரங்கள் அவ்வப்போதைய அவசியச் செலவுகளுக்கு ஸ்வாஹா ஆகிப் போயிருக்க - ஒட்டு மொத்தமாய் ராயல்டிக்கும், பேப்பர் கொள்முதலுக்கும் பணம் புரட்ட உள்ளூர் பேங்குகளின் கஜானாக்களை டால்டன்கள் பாணியில் துவாரம் போட்டால் என்னவென்ற அளவிற்கு மகா சிந்தனைகள் கிளைவிட்டிருந்தன ! நிறைய சர்க்கஸ் ; எக்கச்சக்க அந்தர் பல்டிகள் ; நிறைய "ஹி..ஹி..ஹி.."களுக்குப் பின்பாய் அந்தக் கிணற்றையும் தாண்டிவிட - அச்சுப் பணிகளை ஆரம்பிக்கும் வேலை புலர்ந்திருந்த போது மார்ச்சின் மூன்றாம் வாரம் துவங்கும் வேளையில் இருந்தோம் ! நம்மவர்களை விடிய விடிய விழித்திருக்கச் செய்து அச்சு வேலைகளை நடத்தினாலும் கூட இது சுமார் 2 வாரத்து job என்பது தான் யதார்த்தம் ! பற்றாக்குறைக்கு, நான் இல்லாத் தருணங்களில் பிரிண்டிங் செய்திட வேண்டாமென்ற ஊரடங்கு உத்தரவை சமீபமாய் நாமே அமல்படுத்தியிருக்க, எனது ஊர்சுற்றல் படலங்கள் நிகழும் சமயமெல்லாம் அச்சு வேலைகளையும் ஆறப் போடவும் தேவையாகிப் போனது ! நான் உடனிருந்து பெரிதாய் கிழிக்கப் போவது எதுவும் கிடையாதென்ற போதிலும், பகலோ ; ராத்திரியோ - அச்சின் தருணங்களில் நானும் அங்கேயே குடியிருக்கிறேன் என்றால் செய்யும் பணிகளின் முக்கியத்துவம் பற்றி நம்மவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இந்தப் பழக்கம் தொடர்கிறது ! இதெல்லாம் ஒரு பக்கத்துப் பிரயத்தனங்கள் எனில் - "அட்டைப்படம்" என்ற அந்த அஸ்திரம் எனக்கு அஸ்தியில் ஜூரம் வரச் செய்து கொண்டிருந்தது ! LMS -க்கெல்லாம் படக்கென ஒரிஜினல் டிசைனின் மாதிரி செட் ஆகிட ; அதனை மாலையப்பன் அழகாய் வரைந்து தர ; நமது டிசைனர் மேம்படுத்தித் தர துளியும் சிரமமின்றி அட்டைப்படம் தேறியிருந்தது ! ஆனால் மி.மி மெகா முயற்சிக்கோ என்ன முட்டு முட்டினாலும் திருப்தியாக ஒரிஜினல் சிக்கவேயில்லை ! எங்கோ - எதையோ உருட்டி 2 மாதிரிகளைத் தேடிப்பிடித்து நமது ஓவியரை வரவழைத்து படம் போட்டால் - உஹும் ...எனக்குத் துளி கூடத் திருப்தியில்லை ! இன்னொருபக்கமோ நமது டிசைனர் பொன்னனிடம் சில பல மாதிரிகளைக் காட்டி, அவரது கைவண்ணத்தில் எதையேனும் தயார் செய்திடவும் சொல்லியிருந்தேன் ! அவரும் ரெடி செய்து காட்டிய முதல் டிசைன் சற்றே வித்தியாசமாய் இருப்பினும், என் உற்சாக மீட்டரில் துள்ளல் ஏதும் பதிவாகவில்லை ! உதட்டைப் பிதுக்கி விட்டு - "I want more emotions" என்று சொல்லிவிட்டு 'உர்ர்' ரென்ற முகத்தோடு 10 நாட்கள் சுற்றி வந்தேன் ! நெட்டில் எங்கெங்கோ உருட்டி, ஏதேதோ கௌபாய் டிசைங்களைத் தேடித் பிடித்தாலும், ஜிரௌவின் அமர கதாப்பாத்திரத்துக்கு நியாயம் செய்யும் விதமாய் எனக்கு உருப்படியாய் எதுவும் கிடைத்தபாடில்லை ! நாட்கள் நெருங்கிட - எனது பய மீட்டர் படபடக்கத் தொடங்க, டைகரின் சில பல அத்தியாயங்களின் ஒரிஜினல் ராப்பர் டிசைன்களில் எதையாச்சும் தத்து எடுத்துக் கொள்ளலாமா ? என்ற ரீதிக்கு சென்று விட்டேன் ! ஆனால் அத்தனையுமே ஏற்கனவே பற்பல தருணங்களில் நாம் சுட்ட ஊத்தப்பங்கள் தான் எனும் போது அவற்றில் ஒன்றை இப்போது திரும்பவும் சூடு பண்ண மனசு கேட்கவில்லை ! அப்போது தான் நமது டிசைனர் புதிதாய் 2 டிசைன்களின் first looks அனுப்பி வைக்க என் மண்டைக்குள் பலப் பிரகாசம் பெற்றதை உணர முடிந்தது ! அவற்றுள் ஒன்றைத் தேர்வு செய்து - அதனில் மாற்றங்கள் / திருத்தங்கள் என கிட்டத்தட்ட 10 நாட்களாக கபடி ஆடத் தொடங்கினோம் ! "இதை பச்சையாக்கிப் பார்ப்போமே ; இல்லை..இல்லை..ப்ளூ...!! இதை சின்னதாக்குவோம் ...முன்னட்டையில் சில்க் புள்ளை வரட்டும் - நோ-நோ..பின்னட்டையில் அம்மணி---நோ-நோ..டைகர் தான்...எழுத்தை வேற ஸ்டைலில் போட்டுப் பார்ப்போமே!" என தினமும் ஒரு correction சொல்லி பொன்னனின் தூக்கத்தை அம்பேலாக்கிய புண்ணியத்தையும் ஈட்டிக் கொண்டேன் ! டிசைனைப் பற்றிச் சொல்ல வேண்டுமெனில் - இது நமது மாமூலான "மஞ்சக்கலரு ஜிங்குச்சா..பச்சைக்கலரு ஜிங்குச்சா.." ஸ்டைலில் சுத்தமாய் இராது ! ரொம்பவே offbeat பாணியில் இதனை உருவாக்க வேண்டுமென்று நானும், பொன்னனும் முனைப்பாக இருக்க, மாற்றங்கள் டிசைன் பாணியில் மட்டுமன்றி ; பிராசசிங் முறையில் ; அச்சுக் காகிதத்தில் ; அச்சிடும் முறையில் என்று ஏகமாய் இருக்கட்டுமே என்று பொன்னன் கோரிக்கை வைத்தார் ! செலவு டிரௌசரைக் கழற்றும் விதமாய் இருந்த போதிலும் மந்திரித்த ஆடு போல மண்டையை ஆட்டி வைத்தேன் ! இறுதி நிமிட நகாசு வேலைகளையும் முடித்து, ராப்பர் அச்சுக்குச் சென்றது 6 மணி நேரங்களுக்கு முன்பு தான் என்றால் எங்கள் லூட்டிகளின் பரிமாணங்களைப் புரிந்து கொண்டிருக்கலாமே ?! ராப்பரை நேரில் பார்க்கும் வரை அதன் feel என்னவென்பதைப் புரிந்திடுவது சிரமம் என்பதால் இப்போதைக்கு let's leave it under wraps ?! 19-ஆம் தேதிக்கு இதழை நீங்கள் பார்த்திடும் போது எங்களின் இந்த முயற்சிகள் ஈட்டும் மதிப்பெண்களை அறிந்திடும் ஆவல் இப்போதே ! But please be warned guys - இது நமது மாமூலான பாணியில் இருக்கப் போகுமொரு அட்டைப்படமல்ல ! இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் உட்பக்கத்தில் இரு இடங்களில் சற்றே சொதப்பலான எழுத்துப் பிழைகள் தலைதூக்கியிருப்பதை லேட்டாகக் கவனிக்க - விடாதே...ஸ்டிக்கர் செய்து அது தலையில் போட்டு அமுக்கு ! என்று நம்மவர்கள் இப்போதும் கூட பணி செய்து வருகிறார்கள் ! Phew !! இந்த ரணகளங்கள் ஒரு பக்கமெனில் - நான் பெரிதாய் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாது சுற்றி வர முயற்சித்துக் கொண்டிருந்த போதிலும் - மின்னஞ்சல்களில் அர்ச்சனைகளுக்கும், அறிவுரைகளுக்கும் பஞ்சமே இருந்திடவில்லை ! "டெக்ஸ் வில்லர் கதைக்கு தாம் - தூம் ஏற்பாடுகளும், முன்னறிவிப்புகளும் களை கட்டுகிறது ; டைகர் என்றால் இளப்பமா ? " என்ற காரசார மெயில்கள் ஒருபக்கமெனில் ; "மின்னும் மரணம் வெளியீட்டு விழாவின் திட்டமிடல் இப்போது வரை ஏனில்லை ? என்று பத்தி பத்தியாய் பதைபதைப்பு இன்னொரு பக்கம் ! இதன் நடுவே, கவிதைகளைப் பதிவில் பகிர்ந்திடப் பிரியம் கொள்ளா நண்பர்கள் மின்னஞ்சல்களில் திறமைகளைக் காட்டியிருக்க நமது inbox-ல் திருவிழாக்கோலம் தான் ! ஆத்திரங்களும், ஆதங்கங்களும் , அறிவுரைகளும் பகிரப்படுவது காமிக்ஸ் மீதான நேசத்தின் பொருட்டே என்பதைப் புரிந்து கொள்ள நானொரு ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க அவசியமே இல்லை தான் ! ஆனால் இங்கே என்பக்கத்து நடைமுறைப் பிரச்சனைகளைச் சமாளிக்க சற்றே working space எனக்குத் தேவையென்பதை நண்பர்கள் உணரும் நாள் புலரும் போது எனது சுவாசம் சற்றே இலகுவாகிடும் ! ஒவ்வொரு கட்டத்திலும் நேர்ந்திடும் சிற்சிறு சிக்கல்களை ; தாமதங்களை நான் டமாரம் அடித்துக் கொண்டே போனால் அந்த அயர்ச்சி உங்களையும் தொற்றிக் கொண்டு விடக்கூடும் என்பதால் அதனை நான் செய்ய முனைவதில்லை ! அத்தியாவசியம் என்ற நிலை ஏற்படும் வரை என் தலைவலிகள் எனதாக மட்டுமே இருந்து விட்டுப் போகட்டுமே ?! So எனது மௌனங்கள் மெத்தனத்தின் அடையாளமாய்ப் பார்க்கப்பட்டு, அதன் பொருட்டும் சஞ்சலம் கொள்ள வேண்டாமே - ப்ளீஸ் ?! பைண்டிங்கில் இன்னொரு பக்கம் பணிகள் வேகமாய் அரங்கேறி வர, 19-ம் தேதியின் காலைக்குள் நம் கைகளில் "மின்னும் மரணம்" தகதகப்பது இப்போது உறுதி ! (இன்னமும் அந்த போஸ்டர் வேலை பாக்கியுள்ளது ! phew again !!!) பெரியாள் யாரையாவது வைத்து இந்த மெகா இதழை வெளியிடலாமே ? என்ற ரீதியிலும் நண்பர்களின் கோரிக்கைகள் வந்துள்ளன ! என்னைப் பொறுத்தவரை இந்த இதாலே நமது வாசக வட்டத்தின் ஒரு கொண்டாட்டமே எனும் போது உங்களை விட இத்தருணத்தில் பெரியாட்கள் வேறு யாரிருக்க முடியும் ? என்ற எண்ணம் தான் ! This is truly a celebration of the spirit of the tamil comics fans !! So இதற்கென ஒரு VIP -ஐத் தேடுவானேன் ? காலை 11 மணிக்குத் துவங்கும் புத்தக விழாவில் நமது ஸ்டால் எண் : 128-ல் எப்போதும் போலவே மின்னும் மரணத்தை unveil செய்திடுவோமா ? அல்லது அருகாமையில் ஏதேனும் ஹோட்டலில் AC அரங்கம் கிடைக்கும் பட்சத்தில் buffet lunch சகிதம் அங்கே நம் சந்திப்பை அரங்கேற்றிடுவோமா ? புத்தக சங்கமத்தின் வெளியரங்கில் புத்தக வெளியீட்டு நிகழ்வுகள் மாலைகளில் உண்டென்று சொன்னார்கள் ! ஆனால் சாயந்திரம் வரையிலும் இதழை உங்கள் கண்களில் காட்டாது வைத்திருப்பது என் மண்டையின் ஆரோக்கியத்துக்கு உகந்ததல்ல என்பதால் அந்த சிந்தனை சுகப்படவில்லை ! தவிர, பஸ் / ரயில் பிடித்து ஊர் திரும்பக்கூடிய நண்பர்களை மாலை நேரத்து நிகழ்வுகள் தாமதப்படுத்தவும் கூடுமே என்று நினைக்கத் தோன்றியது ! So - "காலை எழுந்தவுடன் மின்னும் மரணம் " என்ற slogan தேவலை என்று தோன்றியது ! எங்கே ? என்ற தேர்வு உங்களது folks ! "வெளியீட்டு விழா" என்ற சிந்தனைக்கு நான் எதிரியல்ல ; its just that I am totally drained at the moment that I don't have it in me to plan ! உங்களிடம் அது பற்றி திட்டமிடல்(கள்) ஏதேனும் இருப்பினும் காதுகளை இரவல் தர நான் தயார்! என் தந்தையையும் அழைத்து வர முயற்சிப்பேன் ; அதனையும் கருத்தில் கொண்டு பிளான் பண்ணிடலாமே ?! பந்து உங்களது தரப்பில் உள்ளது guys - ஆடும் விதம் இனி உங்களது ! எல்லோருக்கும் எற்புடையதொரு திட்டமிடலுக்கு நாங்கள் ஒ.கே. ! Start music ! Before I wind up - "மூட்டை சுமந்தது போலான இந்த நீட்டல்-முழக்கல் அவசியம் தானா ? இத்தனை பில்டப் ஓவர் !" என்ற சிந்தனை கொண்டிருக்கக்கூடிய நண்பர்களின் பொருட்டு : இது என் ஒருவனது பீற்றலின் நோக்கில் எழுதப்பட piece அல்ல ! ஒரு மெகா முயற்சியை வழக்கமான, பிசியான அட்டவணைக்கு மத்தியினில் செயல்படுத்திப் பார்க்க எத்தனிக்கும் சமயங்களில் நமது சின்ன டீமுக்கு நேர்ந்திடும் overload-ன் மீதான ஒரு பார்வையே இது ! அப்புறம், இத்தனை எழுதி விட்டு - கதையின் நாயகரைப் பற்றி எழுதவில்லையே - என்ற விசனத்துக்குச் சொந்தம் கொண்ட நண்பர்களின் பொருட்டு : இது "the making of மின்னும் மரணம்" போன்றதொரு ஆக்கம் மட்டுமே ; "தளபதி" பற்றி வரும் வாரத்தினில் ! கிட்டத்தட்ட 2 மாதங்களாய் ஒவ்வொரு சனியிரவும் ஒரு வண்டிப் பக்கங்களை வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டு அவற்றையே முறைத்துப் பார்த்துப் பழகியான நிலையில் இன்றைக்குக் காலியாகக் காட்சி தரும் என் மேஜையைப் பார்க்கும் போது எப்படியோ உள்ளது ! இரு மாதம் என்னோடிருந்த அந்த வேங்கை இன்று வெளியே வலம் வரத் தயாராகி விட்டதால் - இனி அந்த மேஜையினில் அடுத்த தொப்பிக்காரருக்கு இடம் ஒதுக்க ஆரம்பித்து விட்டேன் !! சில பயணங்கள் முடியாதிருப்பதில் தான் வாழ்க்கையின் சுவாரஸ்யமே உள்ளதோ ?! சில சுமைகளும் சுகமாய்த் தெரிவதன் மாயம் தான் என்னவோ ? விடை தேடுகிறேன்! Bye guys & good night ! at 4/12/2015 02:47:00 am Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest 265 comments: கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 12 April 2015 at 02:53:00 GMT+5:30 காலை வணக்கம் ReplyDelete Replies Vijayan 12 April 2015 at 03:00:00 GMT+5:30 கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : குட் நைட் !! Delete Replies Reply Unknown 12 April 2015 at 07:02:00 GMT+5:30 உங்க அப்ரோச்ச நான் பாராட்டுறேன் Delete Replies Reply Reply Periyar 12 April 2015 at 03:08:00 GMT+5:30 விடிஞ்சிருச்சா ... :) ReplyDelete Replies கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 12 April 2015 at 03:51:00 GMT+5:30 இன்னும் தூங்கவே இல்ல Delete Replies Reply Reply Selvam 12 April 2015 at 03:13:00 GMT+5:30 Waiting for Tiger ReplyDelete Replies கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 12 April 2015 at 03:52:00 GMT+5:30 வேட்டைக்கு ரெடியா Delete Replies Reply Reply Radja 12 April 2015 at 03:30:00 GMT+5:30 யப்பா இதை படிப்பதற்கே இவ்வளவு மலைப்பாக இருக்கிறதே, இதை வாழ்ந்து பார்த்த உங்களுக்கும் மற்றும் உங்கள் டீமுக்கும் கோடி வந்தனங்கள். இந்த making of மின்னும் மரணம், உங்களின் மேல் உள்ள பிரமிப்பை அதிகரிக்கச் செய்கிறது. It's true. நமது காமிக்ஸில் இது ஒரு மைல்கல் இதழ் என்பது இப்போதே தெள்ளத்தெளிவு. ReplyDelete Replies கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 12 April 2015 at 03:52:00 GMT+5:30 உண்மை Delete Replies Reply Vijayan 12 April 2015 at 14:59:00 GMT+5:30 Radja : //நமது காமிக்ஸில் இது ஒரு மைல்கல் இதழ் என்பது இப்போதே தெள்ளத்தெளிவு.// முதல் நாலிலக்க விலையிலான இதழ் என்பதைத் தாண்டியும் சாதிக்க வேண்டுமென்ற பிரார்த்தனை எங்களுள் ! Delete Replies Reply Reply கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 12 April 2015 at 04:01:00 GMT+5:30 ஏசி ஹால், லன்ச் இதெல்லாம் அதிகம் செலவு வைக்கும், அது மட்டுமல்ல எல்லோரும் பங்கு பெறுவதும் சிரமம் புத்தக கண்காட்சி நடக்கும் இடத்தில் என்றால் நலம் என்பது என் கருத்து ReplyDelete Replies saint satan 12 April 2015 at 06:40:00 GMT+5:30 //புத்தக கண்காட்சி நடக்கும் இடத்தில் என்றால் நலம் என்பது என் கருத்து// அடியேனின் விருப்பமும் இதுவே.கண்காட்சி ஏற்பாட்டாளர்களிடம் முன்கூட்டியே அனுமதி பெற்று நமது ஸ்டாலிலேயே புத்தக வெளியீட்டை வைத்து கொள்ளலாம்.அப்படியொரு அனுமதி கிடைக்காத பட்சத்தில் வேண்டுமானால் ஹால் ஏற்பாடு செய்து கொள்ளலாம். Delete Replies Reply Arivarasu @ Ravi 12 April 2015 at 07:34:00 GMT+5:30 // புத்தக கண்காட்சி நடக்கும் இடத்தில் என்றால் நலம் என்பது என் கருத்து.// முதலில் இதற்கு முயற்சி செய்யலாம்,அப்படி வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் ஏதேனும் ஹோட்டல் ஹாலில் நடத்தலாம். எங்கு நடக்கிறது என்பதை விட அது எவ்வளவு சிறப்பாக நடக்கிறது,நடத்துகிறோம் என்பதே முக்கியம். Delete Replies Reply சேலம் Tex விஜயராகவன் 12 April 2015 at 08:30:00 GMT+5:30 ///எங்கு நடக்கிறது என்பதை விட அது எவ்வளவு சிறப்பாக நடக்கிறது,நடத்துகிறோம் என்பதே முக்கியம்.///- அதே தான் சார் . ஆடம்பரம் இல்லாத எளிமையான விழாவே போதும் என்பதே என் கருத்தும் சார் . தங்கள் தந்தையாரை சந்திக்க ஆவலுடன் உள்ளேன் சார் . அனைவரின் காலார் நலன்களை மட்டுமே கருத்தில் கொள்ளுங்கள் சார் . வயிரார் நலன்களை இராயப்பேட்டை ஏரியா பிரியாணிகள் பார்த்து கொள்ளும் சார் . தட் தட் மேன் தட் தட் பில் - என்பது எங்கள் மூத்தவர் தாரக மந்திரம் சார் . Delete Replies Reply Unknown 12 April 2015 at 11:47:00 GMT+5:30 +1 Delete Replies Reply Reply மகேந்திரன் பரமசிவம் 12 April 2015 at 04:29:00 GMT+5:30 //தமிழ் காமிக்ஸின் ஆயுளோ ; வளர்ச்சியோ எனது கைகளில் என்பதெல்லாம் ஒரு மாயை ! மாறாக எனது வளர்ச்சிகள் சார்ந்திருப்பது தமிழ் காமிக்ஸை என்பதே நிஜம் ! காமிக்ஸ் எனும் ஒரு பின்னணியின்றி நான் ஓசையின்றி வேறேனும் தொழிலில் பெரிதாய் சாதித்து / சம்பாதித்து வந்திருந்தால் கூட - அடுத்த தெருவிலிருப்பவருக்குக் கூட நானொரு முட்டைகண் XYZ மட்டுமே ! (அதற்காக நான் இப்போதொரு VIP என்றெல்லாம் சொல்லவரவில்லை !) // நீங்கள் தன்னடக்கமாக என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் sir! உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் ஆலை இல்லாத ஊரில் எங்களுக்கு cadbury சாக்லேட் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள். நாங்கள் வேண்டுமானாலும் அவ்வப்போது "We are with you" என்று பீலா விட்டாலும் நீங்கள் எங்களுடன் இருப்பதே எங்களுக்கு உற்சாகமும் பெருமையும் தருகிறது, 2014 மே முதல் 2015 February வரையிலான புத்தகங்கள் எனக்கு மார்ச்சில் கிடைத்தது. 90% கதைகளை படித்து விட்டேன். முதலில் படித்து முடித்தது Spider. இரணடாவது மாயாவி. பிறகுதான் மற்றதெல்லாம் படித்தேன். LMS ல் இன்னும் 2 கதைகள் பாக்கி. கதை, தரம், மற்றும் மொழிபெயர்ப்பு அனைத்திலும் எனக்கு மிக்க திருப்தி. Spider எனது மகளுக்கு படித்துக் காண்பித்தேன். மிகவும் ரசித்தார். என்ன சக்கடைப் புழுவை poopsi worm என்றும் வேறு சிலவற்றை மாற்றியும் படித்தேன்.இன்னொரு நண்பர் ஜூன் மாதம் முதல் வாரம் அங்கிருந்து வருகிறார். டெக்ஸ் முதல் வாரம் வருவாரா? வந்தால் அனைத்து புத்தகங்களும் எனக்கு ஜூனில் கிடைத்து விடும். மிகவும் சந்தோசமாக இருக்கிறது சார். எங்களை சந்தோசப்படுத்த கடினமாக உழைக்கும் உங்களுக்கும் உங்கள் டீமிற்கும் வந்தனம். நீங்களும் உங்கள் டீமும் நல்ல வெற்றி அடைந்து உற்சாகமும் சந்தோசமும் பொங்க இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். ReplyDelete Replies V Karthikeyan 12 April 2015 at 07:39:00 GMT+5:30 @Mahendran paramasivam போன வருசம் என்னுடைய நிலமையும் இதுதான். இந்த வருசம் மாசா மாசம் புத்தகங்கள் வந்துருது, என்ன ஒரு 15 நாள் தாமதமாக வரும். ஆனாலும் ஒவ்வொரு மாசமும் புத்தகம் வந்து படிப்பது ஒரு சூப்பர் அனுபவம் Delete Replies Reply Vijayan 12 April 2015 at 14:56:00 GMT+5:30 Mahendran Paramasivam : //Spider எனது மகளுக்கு படித்துக் காண்பித்தேன். மிகவும் ரசித்தார்.// ஒரு கடல்கடந்த இளம் தலைமுறைக்கும் (தமிழில்) காமிக்ஸ் சென்றடைவது சந்தோஷம் தருகிறது ! Carry on the good work !! Delete Replies Reply Reply Erode VIJAY 12 April 2015 at 05:37:00 GMT+5:30 அம்மாடியோவ்!!!!!!¡!!!!!!!!!¡!!¡¡!!!!¡!!!!!!!!!!!!!¡!!!!!!!!!!!! இத்தனை சிக்கல்களா?!!!!!!!!/ //யப்பா இதை படிப்பதற்கே இவ்வளவு மலைப்பாக இருக்கிறதே, இதை வாழ்ந்து பார்த்த உங்களுக்கும் மற்றும் உங்கள் டீமுக்கும் கோடி வந்தனங்கள். இந்த making of மின்னும் மரணம், உங்களின் மேல் உள்ள பிரமிப்பை அதிகரிக்கச் செய்கிறது. It's true. நமது காமிக்ஸில் இது ஒரு மைல்கல் இதழ் என்பது இப்போதே தெள்ளத்தெளிவு./// (நன்றி: Radja) ReplyDelete Replies Reply salemkelamaran@gmail.com 12 April 2015 at 06:06:00 GMT+5:30 12 வது ReplyDelete Replies Reply Erode VIJAY 12 April 2015 at 06:07:00 GMT+5:30 ஆனாலும் எடிட்டர் சார்... இத்தனை சிரமங்கள், சிக்கல்கள், வேலைப்பளுவின் இடையிலும் இப்படியொரு ஹாஸ்யமான நடையுடன் நள்ளிரவு தாண்டிய நேரத்தில் ஒரு பதிவைப் போட்டுத்தள்ள உங்களுக்கு எப்படித்தான் சாத்தியமாகியதோ!!! நானாக இருந்திருந்தால் "இன்னும் ஒரு மாதத்துக்கு பதிவும் கிடையாது... பணியாரமும் கிடையாது. எல்லாரும் ஓடிப்போய்விடுங்கள் இங்கிருத்து... க்ரா... உர்ர்ர்..." என்று முழங்கியிருப்பேன்! அதுவும் கடைசியாக //சில பயணங்கள் முடியாதிருப்பதில் தான் வாழ்க்கையின் சுவாரஸ்யமே உள்ளதோ ?! சில சுமைகளும் சுகமாய்த் தெரிவதன் மாயம் தான் என்னவோ ? விடை தேடுகிறேன்! Bye guys & good night ! /// அப்படீன்னு ஒரு போடு போட்டீங்க பாருங்க....!! உங்களுக்கெல்லாம் இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்! நல்லா அவஸ்தைப் படுங்க! ReplyDelete Replies V Karthikeyan 12 April 2015 at 07:11:00 GMT+5:30 // "இன்னும் ஒரு மாதத்துக்கு பதிவும் கிடையாது... பணியாரமும் கிடையாது. எல்லாரும் ஓடிப்போய்விடுங்கள் இங்கிருத்து... க்ரா... உர்ர்ர்..." // LOL @Erode vijay உங்களுக்கு நகைச்சுவை இயல்பாகவே சூப்பராக வருது. Delete Replies Reply Vijayan 12 April 2015 at 14:53:00 GMT+5:30 Erode VIJAY : இடுக்கண் வருங்கால் என்ன செய்வதென்று தான் பெரும் புலவர் சொல்லிச் சென்று விட்டாரே ...பின்னே அதை ஆறாம் வகுப்பில் படித்ததோடு காற்றில் பறக்க விடுவானேன் ? Delete Replies Reply Reply Selvam abirami 12 April 2015 at 06:26:00 GMT+5:30 Hi .... ReplyDelete Replies Reply POSTAL PHOENIX 12 April 2015 at 06:45:00 GMT+5:30 Good morning editor sir and dear friends. We are also waiting for Thalapathi ReplyDelete Replies Vijayan 12 April 2015 at 14:50:00 GMT+5:30 POSTAL PHOENIX : Not too long a wait now..! Delete Replies Reply Reply Dr.Sundar,Salem. 12 April 2015 at 06:53:00 GMT+5:30 டியர் விஜயன் சார்,இப்போதெல்லாம்,ஒவ்வொரு பதிவை முடிக்கும்போதும் நீங்கள் எழுதும் வார்த்தைகள் மனதை என்னவோ செய்கின்றன.மின்னும் மரணம் 'பிரசவவலி'யை அழகாக எழுத்தில் கொண்டுவந்துள்ளீர்கள்.டெக்ஸ் கதையாக இருந்தால்,ஏழெட்டு கும்மாங்குத்து,பத்திருவது டமால்டுமீல்,இருக்குமே தவிர மொழிபெயர்ப்பில் அதிகம் சிக்கலிருக்காது.ஆனால் டைகர் கதையில் மூளைக்கு அதிகம் வேளையிருக்கும்.,என்பது இப்போதாவது டெக்ஸ் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு,உரைத்தால் சரி.:-) ReplyDelete Replies PrabakarT 12 April 2015 at 08:34:00 GMT+5:30 // ஆனால் டைகர் கதையில் மூளைக்கு அதிகம் வேளையிருக்கும்., // உண்மை உண்மை உண்மை இதில் ஒரு உள்குத்து இருப்பதாக தெரிகிறது நண்பரே ;-) " மூளை " யாருக்கு என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி கதாசிரியருக்கு அப்படீன்னு சொல்லுங்க ஒத்துக்குறேன் ஓவியருக்குன்னு சொல்லுங்க ஒத்துக்கறேன் ஆனா தயவு செய்து " அவருக்குன்னு " மட்டும் சொல்லிடாதீங்க இந்த பச்ச மண்ணு மனசு தாங்காது :( . Delete Replies Reply Vijayan 12 April 2015 at 14:49:00 GMT+5:30 Dr.Sundar,Salem. //டெக்ஸ் கதையாக இருந்தால் மொழிபெயர்ப்பில் அதிகம் சிக்கலிருக்காது// ஆஹா..இப்படியும் ஒரு நினைப்பா ? மொழிமாற்றத்தில் சுலபம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது டாக்டர் ! ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் பெண்டைக் கழற்றும் சக்தி கொண்டவை ! Delete Replies Reply Reply கரூர் சரவணன் 12 April 2015 at 07:04:00 GMT+5:30 காலை வணக்கங்கள் நண்பர்களே...ஒரு மெகா புத்தகத்தின் பொருட்டு தங்களின் உழைப்பு மற்றும் வேலைபளுக்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... புத்தகத்தை ..மன்னிக்கவும் பொக்கிசத்தை எதிபார்த்து காத்திருக்கிறோம்.... ReplyDelete Replies Vijayan 12 April 2015 at 14:45:00 GMT+5:30 கருவூர் சரவணன் : ஒரு வாரமே காத்திருப்பு ! Delete Replies Reply Reply V Karthikeyan 12 April 2015 at 07:05:00 GMT+5:30 Wow யப்பா இவ்வளவு சிக்கல்கலா உங்களுடைய இந்த முயற்ச்சி நிச்சயம் வெற்றி பெரும் மின்னும் மரணம், LMS ஐ தூக்கி சாப்பிட்டு விடும் என்று நினைக்கின்றேன். It's reall inspiring to know that you try so hard to being the best that you can.👏 Can't wait 😀 ReplyDelete Replies Vijayan 12 April 2015 at 14:45:00 GMT+5:30 V Karthikeyan : மாறி வரும் நம் ரசனைகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் நியாயம் செய்யும் கடமை நமக்குண்டல்லவா நண்பரே ?! Let's at least not be found wanting on efforts ! Delete Replies Reply Reply Erode VIJAY 12 April 2015 at 07:12:00 GMT+5:30 மதிய உணவுடன் ஏதேனும் ஒரு ஹோட்டலில் 'மி.ம' வெளியீடு என்பது ஓ.கே தான்! ஆனால் ஏற்கனவே டால்டன்களில் ஒருவராக மாறி பேங்க்கை ஓட்டைபோட முயற்சித்திருக்கும் எடிட்டரின் பாக்கெட்டுகளை ஓட்டைபோட நாங்களும் டால்டன்களாக மாறுவதில் எங்களுக்கு உடன்பாடில்லை! (அதானே நண்பர்களே?) மாறாக, * வெளியீட்டு விழாவுக்கு வருகைதரும் நண்பர்கள் தங்களால் இயன்ற சிறு தொகையை (கொடுத்தே தீரவேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லாமல்) நம் நண்பர்களில் யாரிடமாவது செலுத்தவேண்டியது (ரசீதெல்லாம் தரப்படமாட்டாது ஆமாம்). * வசூலாகும் தொகை - பில் தொகையைவிட குறைச்சல் என்றால், மீதத் தொகையை எடிட்டர் செலுத்தவேண்டியது. * ஒருவேளை, வசூலாகும் தொகை பில் தொகையைவிட அதிகமென்றால், பில் செலுத்தியதுபோக மீதமுள்ள தொகையை மாலைநேர டீ செலவுகளுக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டியது! குறிப்பு: 'பணம் அனுப்பினால் சாப்பாடு பார்சலில் அனுப்பப்படுமா' என்று யாராவது கேட்டீர்களோ தெரியும் சேதி! கிர்ர்ர்... ;) ReplyDelete Replies கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 12 April 2015 at 09:13:00 GMT+5:30 Good idea ஈசேலி விஜய் Delete Replies Reply Radja 12 April 2015 at 12:30:00 GMT+5:30 //ஒருவேளை, வசூலாகும் தொகை பில் தொகையைவிட அதிகமென்றால், பில் செலுத்தியதுபோக மீதமுள்ள தொகையை மாலைநேர டீ செலவுகளுக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டியது! // அதுக்கு அப்புறமும் பணம் மிச்சமிருந்தால்?? :D Jokes part. Really a nice idea Vijay. Delete Replies Reply Reply Dr.Sundar,Salem. 12 April 2015 at 07:18:00 GMT+5:30 டியர் விஜயன் சார்,இவ்வளவு நீண்ட பதிவிட்டும்,தளபதியின் அட்டை படத்தை கண்ணில காட்டலீயே,அட அதுகூட பரவாயில்லை,சஸ்பென்ஸ் போயிடும்னு சிலர் நினைக்கலாம்,பட்,பிரிண்டான புத்தகத்தில் சில பக்கங்களையாவது காட்டலாமே சார்.நீங்க ரொம்ப சஸ்பென்ஸ் மெயின்டெய்ன் செய்யறதாலே,ஏதோ,இனிய அதிர்ச்சி.,டைகர் புத்தகத்தில் இருக்கும் என்று சொல்லும் நண்பர்களின் கூற்று,வலுப்பெற்று வருவதாகவே எனக்கு தோன்றுகிறது. ReplyDelete Replies Erode VIJAY 12 April 2015 at 07:25:00 GMT+5:30 //ஏதோ,இனிய அதிர்ச்சி.,டைகர் புத்தகத்தில் இருக்கும் என்று சொல்லும் நண்பர்களின் கூற்று,வலுப்பெற்று வருவதாகவே எனக்கு தோன்றுகிறது/// நண்பர்களின் கூற்று எப்போதும்போல இந்தமுறையும் ஊத்திக்கக்கூடாது என வேண்டிக்கொள்கிறேன்! :D Delete Replies Reply கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 12 April 2015 at 09:24:00 GMT+5:30 ஆமா ஆமா இரத்த கோட்டை முழு தொகுப்பையும் நைசா உள்ள சொருகிட்டாராம் ;) Delete Replies Reply மேற்கிலிருந்து ம. ராஜவேல். 12 April 2015 at 10:25:00 GMT+5:30 கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )....ஹாஹாஹா...மிகவும் அட்டகாசமான நகைச்சுவை. @எடிட்டர் கவனிக்கவும்...அடுத்த தொகுப்பிற்கான முன்பதிவை, இந்த வெளீயீட்டில் ஆரம்பிக்கலாமே. Delete Replies Reply Vijayan 12 April 2015 at 14:37:00 GMT+5:30 @ FRIENDS : S.விஜயன். c/o சஞ்சய் ராமசாமி ! ஐயாம் எஸ்கேப் !! Delete Replies Reply Reply Arivarasu @ Ravi 12 April 2015 at 07:29:00 GMT+5:30 காலை வணக்கம் எடி சார் & நண்பர்களே. ReplyDelete Replies Reply Dasu bala 12 April 2015 at 07:31:00 GMT+5:30 Happy morning to all ReplyDelete Replies Reply T K AHMED BASHA 12 April 2015 at 07:33:00 GMT+5:30 இந்தப்பதிவை படிக்க ஆரம்பித்தவுடன் எனக்கு வயிறு கலக்க ஆரம்பித்து விட்டது. இவ்வளவு பிரச்சினைகள் தாண்டி புத்தகம் நேரத்தில் தயாராகி விட்டது என்றதும் தான் நிம்மதியாக உள்ளது ஆசிரியரே ... ஆமாம் சந்தாதாரர்களுக்கு என்றைக்கு கிடைக்கும் ...? ReplyDelete Replies V Karthikeyan 12 April 2015 at 07:42:00 GMT+5:30 I had same feeling, thought editor is going to say that book will be delayed by couple of weeks. But at the end editor finished everything on time Delete Replies Reply Vijayan 12 April 2015 at 14:33:00 GMT+5:30 செய்து விட்டுச் சொல்வோமே என்ற சிந்தனை தான் ! Delete Replies Reply T K AHMED BASHA 12 April 2015 at 22:18:00 GMT+5:30 புரியவில்லை ஆசிரியரே .. Delete Replies Reply Reply Partheeban 12 April 2015 at 07:39:00 GMT+5:30 Waiting 4 tiger's roar... ReplyDelete Replies Vijayan 12 April 2015 at 14:33:00 GMT+5:30 M. Vidya : Just a week's wait..! Delete Replies Reply Reply சேலம் Tex விஜயராகவன் 12 April 2015 at 07:55:00 GMT+5:30 //அத்தியாவசியம் என்ற நிலை ஏற்படும் வரை என் தலைவலிகள் எனதாக மட்டுமே இருந்து விட்டுப் போகட்டுமே ?! So எனது மௌனங்கள் மெத்தனத்தின் அடையாளமாய்ப் பார்க்கப்பட்டு, அதன் பொருட்டும் சஞ்சலம் கொள்ள வேண்டாமே - ப்ளீஸ்//- உண்மை உரைக்கும் உத்தம்மான வரிகள் சார் . காலை வணக்கம் சார் . நீங்கள் குறிப்பிடும் சஞ்சலம் சற்றே எட்டிப் பாரக்க ஆரம்பித்தது என்னவோ நிஜம்தான் சார் . ஆனாலும் இன்றைய பதிவில் நீங்கள் நிச்சயமாக நடப்பது என்ன ?- என்பது பற்றி எழுதுவீர்கள் என நம்பினேன் சார் . (அட நம்புங்கள் நட்புகளா மற்றும். சக விசிலடிச்சான் குஞ்சுகளா ). அடேயப்பா .. நிஜமான மலைப்பு தரும் பணிதான் சார் . இவ்வளவு சிரமப்பட்டு குறித்த நேரத்தில் பணியை முடித்த உங்கள் அணியினரை என்ன சொல்லி பாராட்ட சார் . வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் . ReplyDelete Replies Vijayan 12 April 2015 at 14:32:00 GMT+5:30 சேலம் Tex விஜயராகவன் : நம்பிக்கைகள் வீண் போகாது நண்பரே ! Delete Replies Reply Reply Arivarasu @ Ravi 12 April 2015 at 07:59:00 GMT+5:30 //பைண்டிங்கில் இன்னொரு பக்கம் பணிகள் வேகமாய் அரங்கேறி வர, 19-ம் தேதியின் காலைக்குள் நம் கைகளில் "மின்னும் மரணம்" தகதகப்பது இப்போது உறுதி ! // அருமை சார் இதை படிக்கும் போதே உடலில் மின்சாரம் பாய்ந்த சிலிர்ப்பு ஏற்படுவது ஏனோ தெரியவில்லை.உங்களுடைய & உங்கள் டீமின் அர்பணிப்பு உணர்வுக்கு தலை வணங்குகிறேன். ReplyDelete Replies Vijayan 12 April 2015 at 14:30:00 GMT+5:30 Arivarasu @ Ravi : நம் டீமின் உழைப்பு இம்முறை அசாத்தியம் ! Delete Replies Reply Arivarasu @ Ravi 12 April 2015 at 17:02:00 GMT+5:30 உங்களுடைய வழிகாட்டல் இன்றி எதுவும் சாத்தியம் இல்லை சார். Delete Replies Reply Reply பாலாஜி 12 April 2015 at 08:01:00 GMT+5:30 தல ரசிகர்கள் சார்பில் தளபதியை வரவேற்க தயாராகிறோம்!!! dr சுந்தரம் சார் ..தல கும் கும் னு கெட்டவங்கல தான் கும்முவாறு,... அப்பாவிகள அட்டாக் பண்ண மாட்டாரு!!! கதையே இல்லாமலா தல வண்டி இவ்ளோ நாள் ஓடிகிட்டு இருக்கு?? just think it sir... ReplyDelete Replies Vijayan 12 April 2015 at 14:28:00 GMT+5:30 balaji ramnath : ஜாலியாக விடுங்க சார் ! தலையின் முதல் ரசிகர்கள் தளபதி முகாமில் இருப்பதும் ; தளபதியின் சிஷ்யர்கள் தலையின் கேம்பில் இருப்பதும் ஊரறிந்த இரகசியம் தானே ?! Delete Replies Reply பாலாஜி 12 April 2015 at 15:07:00 GMT+5:30 Done!!! Delete Replies Reply Reply rajaganesh 12 April 2015 at 08:06:00 GMT+5:30 I am waiting for Thalapathi. Thanku Vijiyan Sir.Thanku Sir. Thanku sir........ ReplyDelete Replies Reply PrabakarT 12 April 2015 at 08:12:00 GMT+5:30 வாழ்த்துக்கள் விஜயன் சார் எவ்வளவு தடைகளை தாண்டி வந்துள்ளீர்கள் இதுவே ஒரு காமிக்ஸ் காதலரல்லாது வேறு யாராவதாக இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த புத்தகம் வெளிவருவது சிரமமே அதற்காக முதற்கண் எங்களது நன்றி சார் _/\_ ReplyDelete Replies Vijayan 12 April 2015 at 14:26:00 GMT+5:30 rajaganesh & Prabakar T : அட..நன்றியாவது ஒன்றாவது ! அதற்கேது சார் இங்கே அவசியம் ? Delete Replies Reply Reply Jagath kumar 12 April 2015 at 08:13:00 GMT+5:30 // 19-ம் தேதியின் காலைக்குள் நம் கைகளில் "மின்னும் மரணம்" தகதகப்பது இப்போது உறுதி ! // APRIL 19 SUNDAY VARUDHU SIR. COURIER OFFICE LEAVE. SO (UNGA VAAKKU NIRAIVERA) NEENGA APRIL 17TH EVENING BOOK'KA ANUPPIDUNGA. ReplyDelete Replies Vijayan 12 April 2015 at 14:23:00 GMT+5:30 Jagath Kumar : ஏப்ரல் 18-க்கு முன்பாக தயாரிப்புப் பணிகள் முடிய வாய்ப்பிலையே நண்பரே ! Delete Replies Reply Jagath kumar 12 April 2015 at 15:09:00 GMT+5:30 IT'S OK SIR..!! NEENGA 20'LA ANUPPI 21'LA ENGA KAIKKU KIDAICHALUM ENGALUKKU SANDHOSHAME..!! Delete Replies Reply Reply PrabakarT 12 April 2015 at 08:21:00 GMT+5:30 சார் எங்களுக்கு மிகப்பெரிய VIP நீங்கதான் உங்க தந்தையரும் உடன் வரும்போது அதைவிட பெரிய பேறு வேறு ஏது எங்களுக்கு புத்தக விழா முக்கியம் அதனுடன் சேர்த்து நண்பர்கள் அனைவரையும் மறுபடியும் ஒருங்கே சேர்த்து காணக்கிடைக்கும் சந்தர்ப்பம் ஆஹா நினைத்தாலே இனிக்கும் (இனிக்கிறது) எங்க எப்படி வேணாலும் வையுங்க நாங்க ரெடி :)) . ReplyDelete Replies Erode VIJAY 12 April 2015 at 10:21:00 GMT+5:30 //சார் எங்களுக்கு மிகப்பெரிய VIP நீங்கதான் // 100% உண்மைதான் சிபி அவர்களே! ஆனால் வெகுஜனத்தின் பார்வை நம் காமிக்ஸ் மீது இன்னும் சற்று அதிகமாகத் திரும்ப சில ஸ்டண்ட் வேலைகள் அவசியமாகிறது ( நகைக்கடை திறப்பு விழாவுக்கு நடிகையை அழைப்பதுபோல). காமிக்ஸ் மீது ஈடுபாடுகொண்ட சினிமாத் துறையினர் யாரையாவது வைத்து வெளியிட்டால் (டைரக்டர் சிம்பு, மிஸ்கின்etc.,) மீடியாவின் பார்வையும், அதன்மூலம் விளம்பரமும் கிடைக்கும்! '1000 ரூபாயில் வெளிவரும் முதல் காமிக்ஸ்' என்ற மகத்தான சாதனை நம் சிலருக்குள் மட்டுமே முடங்கிப்போவதில் எனக்கு உடன்பாடில்லை! Delete Replies Reply Vijayan 12 April 2015 at 14:22:00 GMT+5:30 Erode VIJAY : நல்ல சிந்தனையே...அந்த நகைக் கடை திறப்பு விழா பாணிகள் பக்கமாய் செயலாளரின் குதிரைகள் ஓடாத வரைக்கும் ! Delete Replies Reply Reply Parani from Thoothukudi 12 April 2015 at 08:24:00 GMT+5:30 கொள்ளைக்கார மாயாவி – முதல் முறையாக படித்தேன். முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை விறுவிறுப்பு, அதைவிட சிறப்பு இயல்பான ஒரு கதை. அதிர்வு கருவி திருடு போவது, அதுவும் நிழல்படை வீரர்கள் முன்னால், இதை விட பெருத்த அவமானம் வேறு எதுவும் இல்லை என்ற நிலையில்; அதனை கண்டு பிடிக்க வழிகள் ஏதும் இல்லா நிலையில் தன்னை பகடைகாயாக சம்மதித்து, சிறையில் பொறுமையாக நாட்களை கடப்பதில் ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் அவர்களின் நன்மதிப்பை பெற தனது தலைவரை கொல்வது (இங்கு ஒரு படபடப்பு, உண்மையில் நிழல் படை தலைவர் இறந்து விட்டாரா, அப்படி இல்லேன்னா எப்படி தப்பிப்பார்); இறுதியில் சாதாரணமாக அவர்களுடன் சண்டை போட்டு வெல்வது என அனைத்து வகையிலும் என்னை கவர்ந்து விட்டது. அதிர்வு கருவி – பூ சுற்றல் என சொல்லலாம், ஆனால் இது போன்ற விசயம்கள் நடைமுறைக்கு சாத்தியம்; சாதாரண செல்போன் வைபரேசன் போல பலமடங்கு அதிர்வு உண்டாக்க கூடிய கருவிகள் கண்டு பிடிக்க வாய்ப்புகள் அதிகம். அதே நேரம் இது போன்ற கதைகளை ஹோலிவூட்டில் வந்தால் ஆச்சரியத்துடன் ரசிக்கிறோம், பாண்டாசி, கலக்கிடாங்க என இன்றும் ரசிக்கும் நாம், இது போன்ற நமது கதைகளை பூசுற்றல் என நினைக்காமல் படித்தால் கண்டிப்பாக பிடிக்கும். இது போன்ற லைட் வெயிட் கதைகள் நமது குழந்தைகளுக்கு அருமையான பொழுதுபோக்கு; அவர்கள் ரசிப்பார்கள், எனது மகளுக்கு இந்த கதையை சொன்ன போது மிகவும் ரசித்தால். ReplyDelete Replies Vijayan 12 April 2015 at 14:16:00 GMT+5:30 Parani from Bangalore :அட..இத்தனை காலமாக கொ.மா. படித்திருக்கவில்லையா ? I agree - இலகுவான வாசிப்புகளுக்கு இவற்றை அடித்துக் கொள்ள முடியாது ! //எனது மகளுக்கு இந்த கதையை சொன்ன போது மிகவும் ரசித்தாள்.// கதை சொல்வது அற்புதமானதொரு அனுபவம் - நமக்கும், கேட்கும் குழந்தைகளுக்கும் ! தொடரட்டும் !! Delete Replies Reply Reply Ranjith R 12 April 2015 at 08:33:00 GMT+5:30 வெளியில் ஒட்டலில் வைப்பது வேண்டாம் சார், மிண்ணும் மரணத்தை புத்தக கண்காட்சியில் உங்கள் அப்பா கையால் வெளியிடாலம், ReplyDelete Replies Vijayan 12 April 2015 at 14:13:00 GMT+5:30 ranjith ranjith : :-) Delete Replies Reply Reply Podiyan 12 April 2015 at 08:36:00 GMT+5:30 இனிய காலை வணக்கம் நண்பர்களே! இன்றைய நாளும் உங்களுக்கு மிகச் சிறப்பானதாக அமையட்டும்! ReplyDelete Replies Reply Sam Tex 12 April 2015 at 09:10:00 GMT+5:30 இனிய காலை வணக்கம் நண்பர்களே உங்கள் அனைவருக்கும் புதிய 'மன்மத' வருட புத்தாண்டு வாழ்த்துக்கள் ReplyDelete Replies Reply Paranitharan.k 12 April 2015 at 09:14:00 GMT+5:30 அப்பாடி எத்தனை நாட்கள் ஆகி விட்டது இப்படி ஒரு "குண்டு "பதிவை படித்து ...:) ReplyDelete Replies V Karthikeyan 12 April 2015 at 09:16:00 GMT+5:30 +1 Delete Replies Reply Vijayan 12 April 2015 at 14:11:00 GMT+5:30 Paranitharan K : தலீவரே...பதிவுகள் தொடர்ச்சியாய் குண்டாக இருந்திட்டால் , எனது விரல்கள் உங்கள் ஜாடைக்கு மாறிப் போய் விடும் !! Delete Replies Reply Paranitharan.k 12 April 2015 at 14:14:00 GMT+5:30 :):):) Delete Replies Reply Reply N. Arul 12 April 2015 at 09:25:00 GMT+5:30 Dear Mr. Vijayan... the book can be released in the stall itself, if the organisers have no objection on that. it would be difficult and as well as expensive to release the book in a separate Hall. I thought initially to give a suggestion that the book release can be done in SIVAKASI itself, so that many readers will be having a chance to visit the lion in it's den. (anyway many people will be travelling to chennai and instead of that they can travel to Sivakasi.). However it is too late for that now. ReplyDelete Replies Vijayan 12 April 2015 at 14:09:00 GMT+5:30 Comic Rider Arul : எங்களைத் தேடி நீங்கள் அனைவரும் வருவதென்பது இந்தக் கோடை விடுமுறைகளின் மத்தியில் எத்தனை தூரம் சாத்தியமென்று தெரியவில்லை ! டிக்கெட் செலவுகள் ஒருபக்கமிருக்க, டிக்கெட்கள் கிடைக்க வேண்டுமே முதலில் ! If at all things could be managed, we would be delighted to host you here !! Delete Replies Reply Reply N. Arul 12 April 2015 at 09:27:00 GMT+5:30 (adding this line)........To visit the Lion in it's den and witness the release of tiger from it's Cage..... ReplyDelete Replies Reply senthilwest2000@ Karumandabam Senthil 12 April 2015 at 09:31:00 GMT+5:30 வேங்கையின் வேட்டை ஆரம்பமாகி விட்டது ! வெளியிட்டு தேதி தொடர்பாக சிறு ஆலோசனை 19 ம் தேதி sunday வருவதால் வெளியூர் காமிக்ஸ் அன்பர்களுக்கு திங்கட்கிழமை பணிக்கு செல்வதில் சிரமமாகிவிடலாம் என்பதால் 17ம் தேதியோ 18ம் தேதியோ வெளியிட்டுவிடலாம் ! ReplyDelete Replies Vijayan 12 April 2015 at 14:06:00 GMT+5:30 senthilwest2000@ Karumandabam Senthil : ஞாயிறுக்கு முன்பாக இதழே தயாராகியிராது நண்பரே ! Delete Replies Reply Reply Paranitharan.k 12 April 2015 at 09:31:00 GMT+5:30 சார் ...உண்மையை சொல்கிறேன் தவறாக நினைக்க வேண்டாம் .மின்னும் மரணம் இதழை பொறுத்த வரை முன் பதிவை கட்டி விட்டேனே தவிர மனதின் ஓர் ஓரத்தில் ஆயிரம் ரூபாய் போட்டு ஒரு இதழை வாங்குகிறோமே ...தேவைதானா ..புது இதழ் என்றால் ஆயிரத்திற்கும் அதிகம் என்றாலும் ஓகே .இது ஏற்கனவே நம்மிடம் உள்ள புத்தகம் ..கதை அருமையான கதை தான் .அதனால் தானே மொத்தமாக இதுவரை இரண்டு முறை மீண்டும் படித்து உள்ளோம் .ஒரே ஒரு புது பாகம் ..அதுவும் காதல் பாகம் எனும் போது இவ்வளவு தொகை கொடுத்து வாங்க வேண்டுமா வண்ணம் என்ற காரணத்திற்காக மட்டும் என்ற எண்ணம் தலை தூக்கி கொண்டே இருந்தது நிஜம் .எனவே தான் காலம் தாழ்த்தி முன் பதிவு செய்தேன் ... ஆனால் இந்த பதிவை படித்தவுடன் மனதில் இத்தனை நாள் இருந்த ஒரு வெறுமை நீங்கியதுடன் நான் முன் பதிவு செய்யாமல் இருந்தால் இதற்கு பணம் கட்டாமல் இருந்து விட்டோமே என்று இப்போது பெரிய ஆதங்கமே ஏற்பட்டு இருக்கும் .. நன்றி சார் ...உங்களுக்கும் ..உங்கள் "உழைப்பாளர் " குடும்பத்திற்கும் ... ReplyDelete Replies Erode VIJAY 12 April 2015 at 09:58:00 GMT+5:30 எ..எங்க தலீவரை இப்படி அடிக்கடி கண்கலங்க வைக்கறதுல இந்த எதிர்கட்சிக்காரங்களுக்கு அப்படி என்னதான் சந்தோசமோ தெரியலை! நீங்க கவலைப்படாதீங்க தலீவரே! 'இரத்தைக் கோட்டை' முன்பதிவுத் தொகையை முதலில் நீங்களே செலுத்திட்டா அப்புறம் நாம யாருன்னு புரியவச்சுடலாமில்ல? :) Delete Replies Reply Radja 12 April 2015 at 12:21:00 GMT+5:30 //ஒரே ஒரு புது பாகம் ..அதுவும் காதல் பாகம்// என்னாது காதல் பாகமா ?? தலீவரே! பேர் தான் அரிசோனா லவ் வே தவிரே, கதை சும்மா விறு விறு என நகரும் சிவகாசி பட்டாசு ரகத்தை சார்ந்தது. It's one of the best stories in the series. பாருங்களேன் கதையை படித்துவிட்டு நீங்களே உங்களுடை கருத்தை மாற்றிக்கொள்வீர்கள் !!! :D (Thanks Vijay for the Smiley) Delete Replies Reply Paranitharan.k 12 April 2015 at 13:23:00 GMT+5:30 ராட்ஜா தி பாஸ் சார் ....# ஒரு முறை ஆசிரியர் சார் ...காதல் பாகம் என்பதால் அதை வெளி இட வில்லை என சொல்லியதாக நினைவு .....அதுதான் ...நான் அப்படி குறிப்பிட காரணம் ... விறுவிறுப்பான ஆக்ஷன் சாகசம் என்றால் சந்தோஷமே... :-) Delete Replies Reply Vijayan 12 April 2015 at 14:05:00 GMT+5:30 Paranitharan K : "காதல் காட்சிகளும் "நிறைந்த பாகம் என்பதால் இத்தனை காலம் காத்திருப்பில் இருந்தது தலீவரே ! அது சரி..தற்போது இந்த ஒற்றை பாகத்துக்காக மட்டுமே சங்கச் செயலாளர் கடவாயில் பம்ப்செட் பொருத்திக் கொண்டு சுற்றி வருவதைக் கவனிக்கவில்லையா ? போச்சு போங்க ! Delete Replies Reply Paranitharan.k 12 April 2015 at 14:17:00 GMT+5:30 :):):) Delete Replies Reply மகேந்திரன் பரமசிவம் 12 April 2015 at 16:16:00 GMT+5:30 //"காதல் காட்சிகளும் "நிறைந்த பாகம் என்பதால் இத்தனை காலம் காத்திருப்பில் இருந்தது தலீவரே ! // என்ன காதல் காட்சி.. அதான் எல்லாம் எடிட் பண்ணிடுவிங்களே... Delete Replies Reply Reply MKS.RAMM 12 April 2015 at 10:09:00 GMT+5:30 Sir , Dont feel that your table is empty .. Lets start another mega special .. Ratha padalam (XIII) full in colour .. Consider it Sir ... ReplyDelete Replies Vijayan 12 April 2015 at 14:02:00 GMT+5:30 Mks Ramm : ஹல்லோ..ஹலோ....ஹல்லோ..இங்கே சிக்னலே கிடைக்க மாட்டேங்குது ! Delete Replies Reply Reply Ramesh 12 April 2015 at 10:20:00 GMT+5:30 அனைவருக்கும் வணக்கம். வேங்கை வெளியே வர தயாராகி வருகிறதா? கேட்கவே சந்தோசமாகவுள்ளது. அடிக்கிற அனலுக்கு ஒரு அனல் பறக்கும் மெகா இதழை நினைக்கவே அட்டகாசமாக உள்ளது. அனால் தாங்கள் படும், பட்ட சிரமங்கள் இதழை தாங்கள் வெளியிடும்போது காணமல் போய் விடும். புத்தகத்தில் கண்டிப்பாக நன்றாகவே வரவேண்டும். தங்கள் நல்ல மனத்திற்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும். ReplyDelete Replies Vijayan 12 April 2015 at 14:01:00 GMT+5:30 ricky_tbm Ramesh : :-) Delete Replies Reply Reply Sam Tex 12 April 2015 at 10:25:00 GMT+5:30 எடி சார் உங்களுக்கும் உங்கள் டீமுக்கும் மெத்ததொரு சல்யூட் சார் புத்தகம் வெளியீடு ஸ்டாலிலயேவைத்துக் கொள்ளலாம். அதிலும் காலை என்பதே நலம் சார் என் போன்ற வெளியூரில் வசிக்கும் வாசகர்களுக்கு பேருதவியாய் இருக்கும் சென்னை வாசகர்கள் சென்னை வரும் நண்பர்களை வரவேற்க தயாராகுங்கள் ReplyDelete Replies Vijayan 12 April 2015 at 14:00:00 GMT+5:30 Jaya Sekhar : பகல் பொழுதிலேயே வைத்துக் கொள்வோம் நண்பரே ! Delete Replies Reply Reply Parani from Thoothukudi 12 April 2015 at 10:26:00 GMT+5:30 விஜயன் சார், ஒவ்வொரு மைல் கல் இதழ்கள் வெளிவர நீங்களும் நமது அலுவலக நண்பர்கள் அடிக்கும் அந்தர் பல்டிகளை பார்க்கும் போது கண்களில் நீர் வருகிறது! "நன்றி" அடிமனதில் இருந்து வரும் உணர்வு பூர்வமான வார்த்தை! எளிதாக மாதம் ஒரு குண்டு புத்தகம் வேண்டும் என நண்பர்கள் இங்கு பதிவிடலாம், ஆனால் அதனை உருவாக்கி நமது கைகளில் சேர்க்க நீங்கள் படும்பாடு மறக்க முடியாது. நமது மைல்கல் இதழ்களில் இதுவும் சாதனை படைக்க வாழ்த்துகள். ReplyDelete Replies Vijayan 12 April 2015 at 13:55:00 GMT+5:30 Parani from Bangalore : அட..ஒரு விருந்தெனும் வேளையில் ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் செய்யும் வேலைகளும் கூட இதே போல் தானே நண்பரே ?! மேஜைக்கு வரும் ருசியான பதார்த்தங்களின் பின்னே சமையலறையின் வியர்வை இல்லாது போக முடியுமா ? ரசித்து சாப்பிடும் போது பட்ட சிரமங்கள் மறந்து / பறந்து போய் விடாதா ? Delete Replies Reply Reply Parani from Thoothukudi 12 April 2015 at 10:30:00 GMT+5:30 விஜயன் சார், நமது மின்னும் மரணம் புத்தக வெளிஈட்டை நமது புத்தக திருவிழாவில் வைத்து கொள்ளலாம். தனியாக ஹால் பிடித்து வெளி ஈடுட முயற்சிப்பது இன்னும் நமது வேலை பளுவை அதிகரிக்கும்; மேலும் செலவு அதிகமாகும்; இதனை நண்பர்கள் சேர்ந்து நடத்தலாம் என்றால் அனைவராலும் செலவில் பங்கேற்பது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாத விஷயம். எனவே மி.ம. வெளிஈட்டை புத்தக திருவிழாவில் வைத்துகொள்ளலாம். ReplyDelete Replies Vijayan 12 April 2015 at 13:52:00 GMT+5:30 Parani from Bangalore : அனைவருக்கும் ஏற்புடைய தீர்மானம் நமக்கும் ஒ.கே. !! Delete Replies Reply Reply Parani from Thoothukudi 12 April 2015 at 10:36:00 GMT+5:30 விஜயன் சார், புத்தகம் வெளி ஈடும் நேரம் பற்றிய எனது சிறிய கோரிக்கை: கடந்த பதிவு வரை புத்தகம் வெளியீடுவது மாலை என அறிவித்தால் என்னை போல் சில நண்பர்கள் காலையில் கிளம்பி சென்னைக்கு மதியம் வருவது போல் திட்டமிட்டு இருந்தோம். காலை 11 மணிக்கு என்றால் எங்களால் இதில் கலந்து கொள்ள முடியாது. காலை 11 மணி என்பதற்கு பதில் மதியம் 2 அல்லது 3 மணிக்கு நமது மின்னும் மரணத்தை வெளி ஈட முடியுமா! இதனால் நாங்கள் அனைவரும் இதில் பங்கேற்க முடியும், அதே போல் அங்கு இருந்து மாலை கிளம்பி இரவில் நண்பர்கள் அனைவரும் அவர்களின் இருப்பிடம் சேர்ந்து விடலாம்! ReplyDelete Replies Vijayan 12 April 2015 at 13:51:00 GMT+5:30 Parani from Bangalore : காலை Shatabdi-ஐ பிடிக்க முடிந்தால் 11 மணிக்கெல்லாம் சென்னையைத் தொட்டு விடலாமே ? Delete Replies Reply Reply Parani from Thoothukudi 12 April 2015 at 10:39:00 GMT+5:30 விஜயன் சார், நமது காமிக்ஸ் VIP நீங்கள் தான், எனவே இதனை நீங்கள் வெளி ஈட நமது VVIP, அதுதான் உங்கள் தந்தை பெற்று கொள்வது மிகவும் அர்த்தமுள்ள வெளி ஈடாக அமையும் என்பது எனது எண்ணம்! ReplyDelete Replies Vijayan 12 April 2015 at 13:39:00 GMT+5:30 Parani from Bangalore : நண்பரே - "VIP" அது இதுவென்ற அடைமொழிகளோடு அடியேனை ஓரம் கொண்டு போய் விட வேண்டாம் ! "VVIP " இருக்கும் போது நான் நம் ஜோதியில் ஐக்கியமாகி ஜாலியாகப் பொழுதை ஒட்டிக் கொள்கிறேனே ! :-) Delete Replies Reply Reply Parani from Thoothukudi 12 April 2015 at 10:42:00 GMT+5:30 சென்னை நண்பர்களுக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புத்தக திருவிழா திடலுக்கு வர பஸ் மற்றும் மெட்ரோ ரயில் விவரம்களை சொன்னால் உதவியாக இருக்கும். பயணசீட்டு எல்லாம் போட்டாச்சு, வீட்டில் பேச்சு வார்த்தை ஓடி கொண்டு இருக்கிறது.. அனுமதிக்காக ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறேன். ReplyDelete Replies திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 12 April 2015 at 12:38:00 GMT+5:30 Map with Bus number - http://goo.gl/YU8qgl Bus : 21, 19E, 38C Delete Replies Reply Reply Texkit 12 April 2015 at 11:10:00 GMT+5:30 65th ReplyDelete Replies Reply mayavi.siva 12 April 2015 at 11:15:00 GMT+5:30 காலை வணக்கங்கள் நண்பர்களே..! திரு விஜயன் அவர்களுக்கு, என் கற்பனையில்...மி.ம.வெளியீடு நெருக்கடியில் VIP களுடன் மேடையில் நீங்களும்,கீழே நாங்களும் என முக்கிய தருணத்தில் உங்களை விட்டு,அருகில் இல்லாமல், எதிரில் (கொஞ்சமே எட்டாத தூரம் என்றாலும்கூட) நிற்பது, கொஞ்சம் நேரமே என்றாலும்...உங்களை பிரிந்திருப்பது..என்ன சொல்வது மனதில் ஒரு சின்ன கணமா,பாரமா, பெருமூச்சா,உறுத்தலா சொல்ல தெரியவில்லையே..! பாலகனாக மாறும் அந்த தருணத்தில் மனதில் தோன்றும் ஏக்கத்தை சொல்ல...அகப்படாத ஒரு வார்த்தை..ம்..! // என்னைப் பொறுத்தவரை இந்த இதழாலே நமது வாசக வட்டத்தின் ஒரு கொண்டாட்டமே எனும் போது உங்களை விட இத்தருணத்தில் பெரியாட்கள் வேறு யாரிருக்க முடியும் ? // மேற்கண்ட உங்கள் வார்த்தைகள் படித்தும்..ஒரு நிமிடம் மனம் கனத்து, என் கண்கள் பளித்துவிட்டன காமிக்ஸ் காதலரே..! வரும் பிரமுகர்கள் எல்லோர் கால்களிலும் விழுந்து விழுந்து வணங்கும் மகனுக்கு...ஏழை விவசாய தந்தையில் கால்களில் விழுந்து ஆசிபெறுவதே பிரதானம் என தெரியாமல், அந்த முக்கிய தருணத்தில் அருகில் வைத்துக்கொள்ளாமல்...புகழ் ஒன்றே குறி என ஓடும் இந்த கலியுகத்தில், தப்பி பிழைத்த இந்த காமிக்ஸ் உலக நட்பை விட்டுத்தராமல் கட்டியனைத்த உங்களை...மானசீகமாக என் இரு கரங்களாலும் ஒருமுறை இறுக கட்டியணைத்து கொள்கிறேன் காமிக்ஸ் காதலரே..! வருகை தரும் 'பெரியாட்கள்' பட்டியல் தெரிந்தால், விழாவை நிறைவாக திட்டமிடமுடியும்..! வரிசைஎண்களுடன் துவக்குகிறேன்..! 0. சர்வாதிகாரி ஸ்டாலின் 1. புனித சாத்தான் 2. ஈரோடு விஜய் 3. ஸ்பைடர் ஸ்ரீதர் 4. டெக்ஸ் விஜயராகவன் 5. சுசிந்தர்குமார் 6. கார்த்திக் 7. யுவா கண்ணன் 8. கிட் ஆர்ட்டின் கண்ணன் 9. ஜெயகுமார் 10. தங்கராஜ் துரை 11. பழனி வேல் 12. பிரபாகர்.T 13. ரம்மி XIII 14. அறிவரசு@ரவி 15. ஸலூம் பெர்னாண்டஸ் 16. ஸ்ரீதர் சொக்கப்பன் 17. செல்வம் அபிராமி 18. மயிலாடுதுறை ராஜா 19. புளுபெர்ரி.நாகராஜன் 20. ராஜ் முத்து குமார் 21. ரபீக் ராஜா 22. பெங்களூர் பரணி 23. கோவை ரமேஷ் சண்முகசுந்தரம் 25. மாயாவி.சிவா 26. மடிப்பாக்கம் வெங்கடேஸ்வரன் 27. கிருஷ்ணா VV 28. காமிக்ஸ் லவ்வர் ராகவன் 29. நரேஷ்குமார் 30. சத்யா 32. லக்கி லிமிட் 31. கிங் விஸ்வா .....அன்பு கூர்ந்து எண்களுடன் பட்டியலை தொடருங்கள் நண்பர்களே..! ReplyDelete Replies Sam Tex 12 April 2015 at 12:50:00 GMT+5:30 This comment has been removed by the author. Delete Replies Reply Vijayan 12 April 2015 at 13:34:00 GMT+5:30 mayavi. siva : இரண்டு நிமிட ஒளி வட்டப் பார்வைகள் ; 'பெரியவர்களோடு' தோள் உரசிட எப்போதாவது கிடைக்கும் சில பல நிமிடத்து வாய்ப்புகள் - இவற்றின் ஆயுட்காலம் என் நினைவலைகளுக்குள் எப்போதுமே ரொம்பவே குறைவு ! விற்பனைக்கு உதவிடும் பொருட்டும், காமிக்ஸ் இன்னமும் ஜீவனோடு தழைத்து நிற்கின்றது என்ற சேதியைப் பரப்புவதற்கும் அந்த ஒளிவட்டங்கள் உதவிடும் என்பதே அவற்றின் பக்கம் எனக்குத் தெரிந்திடும் அனுகூலம் ! ஆனால் ஒவ்வொரு சந்திப்பின் போதும் நண்பர்களின் மத்தியில் நாங்கள் உணரும் அந்த நேசமும், உற்சாகமும் , கலப்படமில்லா மகிழ்வும் எங்களின் வாழ்க்கைகளுக்கு அர்த்தம் கற்பிக்கும் தருணங்கள் ! எல்லாப் புகழும் படைப்பாளிகளுக்கும், காமிக்ஸ் எனும் இந்தக் கலைக்கும் அர்ப்பணமாகிட வேண்டிய பொழுதுகளில் நாம் ஏன் அந்த frame -க்குள் தலையை நுழைப்பானேன் ? உங்களோடு சேர்ந்து நின்று கொண்டு வழுக்கை மண்டையில் வழியும் வியர்வையை துடைத்துக் கொண்டே ஜாலியாக பேசுவதற்கு வேறு எது தான் ஈடாகிட முடியும் ? இன்றைக்கும், என்றைக்கும் அந்த சந்தோஷத்துக்கு இணை கிடையாதே ! Delete Replies Reply Paranitharan.k 12 April 2015 at 14:26:00 GMT+5:30 மாயாஜீ ....உங்கள் ....நமது நண்பர்களின் பயணம் இனிதே அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .... Delete Replies Reply Vijayan 12 April 2015 at 15:01:00 GMT+5:30 mayavi.siva : அட...சர்வாதிகாரியும் பயணம் மேற்கொள்கிறாரா ? சூப்பர் ! Delete Replies Reply mayavi.siva 12 April 2015 at 15:26:00 GMT+5:30 @ Vijayan Sir : பட்டியலில் அவருக்கு எண் கவனிக்க..! ஒரு மரியாதை நிமித்தமே..! :-))) Delete Replies Reply Reply rajaganesh 12 April 2015 at 11:21:00 GMT+5:30 Rajaganesh.Ariyalur..... ReplyDelete Replies Reply RAMG75 12 April 2015 at 12:01:00 GMT+5:30 32.ராம்குமார் (ramg75) ReplyDelete Replies Reply Erode VIJAY 12 April 2015 at 12:17:00 GMT+5:30 'மி.ம' வெளியீட்டு விழாவை 1. ஸ்டாலிலேயே நடத்துவது 2. புத்தக சங்கமத்திலேயே இதற்கென ஒதுக்கப்பட்ட அரங்கத்தில் நடத்துவது 3. ஹோட்டலில் ஒரு அரங்கத்தை வாடகைக்கு எடுத்து நடத்துவது மேலே உள்ள 3 பாயிண்டுகளின் சாதக பாதகங்களை (என் அறிவுக்கு எட்டிய வரையில்) கொஞ்சம் அலசியிருக்கிறேன்... 1.ஸ்டாலிலேயே நடத்துவது நிறைகள்: * செலவு கிடையாது * வெளியீட்டை முடித்த கையோடு விற்பனையையும் சூடாகத் துவங்கிவிடலாம் குறைகள்: * நம்முடைய மகிழ்ச்சி ஆரவாரமும், கூட்டமும் மற்ற ஸ்டால் பொறுப்பாளர்களை முகம் சுளிக்கவைக்கும் (கடந்த காலத்தில் நாம் நிறையவே சந்தித்திட்ட பிரச்சினைதான் இது). இதனால் அடுத்தமுறை ஸ்டால் கிடைப்பதில் சிக்கல் நேரிடக்கூடும்! * குறுகலான இடத்தில் நாம் நிற்க, நடக்கவே சிரமம் ஏற்படும் * வெயில் காலம் என்பதால் வியர்வையில் குளிக்க நேரிடலாம் 2. புத்தக சங்கமத்தில் இதற்கென உள்ள அரங்கத்தில் நடத்துவது நிறைகள்: * ஹோட்டல் வாடகையோடு ஒப்பிட்டால் குறைவான அரங்கக் கட்டணம் ( அதிகமிருக்க வாய்ப்பிருக்காது என்றே நினைக்கிறேன்) * புத்தகத்திருவிழா அமைப்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட புத்தக வெளியீடாக அமையும் * அனைவருக்கும் வசதியான இடம் * யாராவது ஒரு VIPயை வைத்து வெளியிடலாம் * மீடியாக்களின் பார்வையும் அதன்மூலம் கிடைக்கும் விளம்பரமும். குறைகள்: * நாம் கேட்கும் நேரத்தில் அரங்கம் கிடைப்பதில் உள்ள சிக்கல் * அரங்கத்திற்கான கட்டணம் 3. ஹோட்டலில் ஒரு அரங்கத்தில் (மதிய உணவுடன்) நடத்துவது நிறைகள்: * நண்பர்கள் கொண்டாட, குதூகலிக்கத் தடை ஏதும் இருக்காது * வசதியான இடம் * வியர்வை மழையில் நனையவேண்டியதிருக்காது * யாரவது VIPஐ அழைப்பதில் comfortable ஆக உணர்வோம் * மதிய உணவு * 3 அல்லது 4 மணிநேரங்கள் வசதியாக உரையாடும் வாய்ப்பு. * மீடியாக்களின் வெளிச்சம் குறைகள் : * செலவு அதிகம் * புத்தக சங்கமத்திற்கு அருகிலேயே ஹோட்டல் (அரங்கத்துடன்) கிடைப்பதில் உள்ள சிக்கல் * இதுபற்றிய விவரமறியாத / வலைக்கு அப்பாற்பட்ட நண்பர்கள் ஸ்டாலுக்கு வந்து பார்த்துவிட்டு ஏமாந்து சென்றுவிடும் வாய்ப்பு. ( வேறு ஏதேனும் நிறை/குறை இருந்தால் நண்பர்கள் சொல்லலாமே ப்ளீஸ்?) ReplyDelete Replies Vijayan 12 April 2015 at 13:12:00 GMT+5:30 Erode VIJAY : நாட்டாமைகளாக தீர்ப்புச் சொல்ல அரசமரம், தண்ணீர் செம்பு ; துண்டு என்று சகலத்தையும் தயாராக எடுத்துக் கொடுத்தால் - முன்சீப் கோர்ட் வக்கீலைப் போல பாய்ண்டுகளை மட்டும் அடுக்கி வைத்து விட்டு ஒதுங்கிக் கொண்டால் எப்படியாம் ? அட...எங்கே நமது தாரமங்கலத்து பாப்பையா சார் ? Delete Replies Reply Paranitharan.k 12 April 2015 at 13:31:00 GMT+5:30 ஆசிரியர் சார் ....இந்த முறை தாரமங்கல தலிவரு சென்னை வருவது கடினம் போல உள்ளதால் இந்த வழக்கிற்கு தீர்ப்பு சொல்ல தகுதி இல்லாமல் போய் விட்டது ..... :-( Delete Replies Reply Vijayan 12 April 2015 at 13:36:00 GMT+5:30 Paranitharan K : ஐயகோ...என்ன இது..நீதிக்கு வந்த சோதனை ?! Delete Replies Reply Vijayan 12 April 2015 at 13:48:00 GMT+5:30 Erode VIJAY : Jokes apart : உங்களின் OPTION # 2-ன் குறைகள் அரங்கக் கட்டணமாக இருக்க வாய்ப்பில்லை ; அது நிச்சயமாய் பெரியதொரு தொகையாக இராது ! ஆனால் அது வெளியரங்கம் எனும் போது பகலில் அனல் பறக்கும் என்பது மட்டுமே சிக்கல் ! OPTION # 3-ஐப் பொறுத்த வரையிலும் வெளியே ஒரு AC ஹால் எடுப்பதில் செலவினங்களை ஒரு சிக்கலாகப் பார்த்திடும் அவசியம் நிச்சயமாய் இராது ! எவ்வளவோ தொலைவுகளிலிருந்து நம் பொருட்டு இந்த மண்டையைப் பிளக்கும் வெயிலில் வரும் நண்பர்களுக்கு ஒரு வேளை உணவுக்கு நாம் வழி செய்வதால் குறைந்தா போய்விடப் போகிறோம் ? Not at all ! //இதுபற்றிய விவரமறியாத / வலைக்கு அப்பாற்பட்ட நண்பர்கள் ஸ்டாலுக்கு வந்து பார்த்துவிட்டு ஏமாந்து சென்றுவிடும் வாய்ப்பு.// இது மாத்திரமே என் பார்வைக்குத் தோன்றிடும் சிரமம் ! இதற்கு ஏதேனும் தீர்வு கிட்டும் பட்சம் - சீனியர் எடிட்டர் சந்தோஷமாய் பில்லுக்குப் பணம் தந்திடுவார் ! Delete Replies Reply Thamira 12 April 2015 at 14:02:00 GMT+5:30 வலைக்கு அப்பாற்பட்ட நண்பர்கள் ஸ்டாலுக்கு வந்து பார்த்துவிட்டு ஏமாந்து // வலைக்கு அப்பாற்பட்ட எனில், இன்றைய பொழுதில் அவர்களில் 'வலையில் இயங்காத சந்தாதாரர்கள்' ஒரு முக்கியப் பங்கு வகிப்பார்கள் அல்லவா? சந்தாதாரர்கள் அல்லாதோரை த‌கவல் சென்றடைவது சிரமம் இருப்பினும் சந்தாதாரர்களுக்கு விபரம் தெரிவித்து, தபாலில்/கூரியரில்/ஒரு போஸ்ட் கார்டில் அழைப்பு அனுப்பிவிடலாமே. பர்சனல் டச்சாகவும் இருக்கும். இது சாத்தியமா தெரியவில்லை. சும்மா ஒரு யோசனையாக சொல்லிவைக்கிறேன். Delete Replies Reply Vijayan 12 April 2015 at 14:12:00 GMT+5:30 ஆதி தாமிரா : Oh yes...சாத்தியமே ! நாமொரு தீர்மானத்துக்கு முதலில் வந்திடும் பட்சத்தில் ! Delete Replies Reply Paranitharan.k 12 April 2015 at 14:21:00 GMT+5:30 சார் ...இது நீதிக்கு வந்த சோதனை அல்ல ...பொண்டாட்டியால் புருஷனுக்கு வந்த சோதனை ... (வெளியே சொல்லிராதீங்க சார் ..மானா ...மரி....போயிறும் ) Delete Replies Reply Sam Tex 12 April 2015 at 16:13:00 GMT+5:30 ///இதுபற்றிய விவரமறியாத / வலைக்கு அப்பாற்பட்ட நண்பர்கள் ஸ்டாலுக்கு வந்து பார்த்துவிட்டு ஏமாந்து சென்றுவிடும் வாய்ப்பு./// எடி சார் நீங்கள் சிரமம் பார்க்காமல் சந்தா கட்டியுள்ள அனைவருக்கும் விழா நடக்கும் இடம் , நேரத்தை கடிதம் வாயிலாக தெரிவித்தால் வருபவர்கள் அனைவரும் சிரமம் இல்லாமல் வந்திடமுடியும் அல்லவா!! Delete Replies Reply Reply Thamira 12 April 2015 at 13:54:00 GMT+5:30 அருமையான பகிர்வு. மின்னும் மரணம் ஒரு சாத‌னை இதழ். புத்தக வெளியீட்டுக்கு புத்தக கண்காட்சி ஸ்டால், அரங்கம் இவையெல்லாம் நிச்சயம் இடைஞ்சலாகவும், பின்விளைவுகள் ஏற்படுத்துவதாகவும்தான் அமையும். இந்தச் சாத‌னைக்கு நமது காமிக்ஸ் குடும்பம் மட்டுமேதான் காரணம், நாமே பெருமைக்குரியவர்கள். அதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த வாய்ப்பை விளம்பரத்துக்காக பயன்படுத்திக்கொள்வதுதான் நம் எதிர்காலத்துக்கு, காமிக்ஸ் வளர்ச்சிக்கு நன்மை பயக்கும். ஆகவே, சிறிது செலவைப் பாராமல் அண்ணாசாலை 'புக் பாயின்ட்' போன்ற நடுத்தரமான ஒரு அரங்கில், ஓரிரு விஐபிக்களை அழைத்து, சற்றே மீடியா வெளிச்சம் படும்படி புத்தக வெளியீட்டை நடத்துவதுதான் சரியாக இருக்கும். கிங் விஸ்வா போன்ற முன்னோடிகள், மீடியா நண்பர்கள் இதற்கான முன்னேற்பாடுகளை சிறப்புறச் செய்வார்கள் (ஏற்கனவே பணிகளைத் துவக்கியிருப்பார்கள் என நம்புகிறேன்) என்பதில் ஐயமில்லை. பஃபே போன்ற பெரிய செலவுகளைக் குறைத்துக்கொண்டு சிம்பிளாக ஸ்னாக்ஸோடு முடித்துக்கொள்ளலாம். ஒரு வேளை மாலை வேளையில் புத்தக வெளியீட்டை வைக்க நேர்ந்தாலும், காலையிலேயே நம் ஸ்டாலில் புத்தக விற்பனையை துவக்கிவிடலாம். இதிலென்ன ஃபார்மாலிடி வேண்டியிருக்கிறது? பர்சனல் சோகம்: தீவிர வெளிநாட்டு சதி காரணமாக, சரியாக 15ம் தேதி பணி காரணமாக மும்பை செல்லவிருப்பதால், ஊஊஊம் ஊஊம் என்று அழுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. உங்களை பார்ப்பது, விழாவை மிஸ் பண்ணுவது மட்டுமல்லாது, இதழ் வீட்டுக்கு வந்தபின்பும் அதைப் பார்க்க நான் 10 நாட்கள் காத்திருக்க வேண்டுமென்பதுதான் இன்னும் கடுப்பேற்றுகிறது. :‍(( ஊர் வம்பு: எங்கள் தளபதிக்கு இப்படி ஒரு வரலாற்றுச்சிறப்பு மிக்க இதழ் உருவானதில் பேருவகையும், பெருமையும் பெருகுகிறது என்னுள். எதிர்காலத்தில் டெக்ஸ் ரசிகர்களின் தொல்லை தாளாமல் இப்படி ஒரு இதழ் வந்தாலும் கூட முதல் இதழ் என்ற சாதனை தளபதிக்குரியதாகவே வரலாற்றில் பதிந்திருக்கும். பை தி வே, பெருமையெல்லாம் தேடி வர‌ வேண்டும், தொல்லை செய்து வாங்குவதில் என்ன பெருமை இருக்கப்போகிறது? :‍)))) ReplyDelete Replies Vijayan 12 April 2015 at 13:59:00 GMT+5:30 ஆதி தாமிரா : //செலவைப் பாராமல் அண்ணாசாலை 'புக் பாயின்ட்' போன்ற நடுத்தரமான ஒரு அரங்கில், ஓரிரு விஐபிக்களை அழைத்து, சற்றே மீடியா வெளிச்சம் படும்படி புத்தக வெளியீட்டை நடத்துவதுதான் சரியாக இருக்கும்// ஐடியா சொல்லிவிட்டு எஸ்கேப் ஆவது பற்றாதென்று - சைக்கிள் கேப்பில் தல-தளபதி என பற்றவும் வைப்பது !! அய்யா..நீர் புலவர் !! Delete Replies Reply Sam Tex 12 April 2015 at 16:21:00 GMT+5:30 /// தொல்லை செய்து வாங்குவதில் என்ன பெருமை இருக்கப்போகிறது /// தலை தளபதி இருசாரரும் அப்படி தொல்லை செய்ததினால்தானே இன்று காமிக்ஸ் உலகில் புதியதொரு சாதனை புத்தகமாக 'மி.ம' வருகின்றது இது உங்களுக்கு தெரியாதா ஆதி சார் Delete Replies Reply Erode VIJAY 12 April 2015 at 23:33:00 GMT+5:30 @ ஆதி யாருங்க அது? மும்பை போறீங்கன்னா கிளம்பிப் போக வேண்டியதுதானே? அப்புறம் என்ன 'அண்ணாசாலை புக் பாயிண்ட்ல விழாவை வச்சுக்கங்க... ஆதித்தனார் சாலை சிக்னல் பாயிண்ட்ல விழாவை வச்சுக்கங்க'னு அட்வைஸ் வேண்டிக்கிடக்கு? போய் நேரங்காலத்தோட ட்ரெயினைப் பிடிக்கற வழியைப் பாருங்க. ஆயிரம் ரூவா புத்தகத்தையும் நாங்க மரத்துக்கடியில வச்சுத்தான் ரிலீஸ் பண்ணுவோம்... ன்னான்றீங்க இப்ப? எப்படியும் அடுத்த வருடம் CBF சமயத்திலயும் வேலை விசயமா விசாகப்பட்ணம் போவீங்க... இப்பவே டிக்கெட் போட்டுவச்சுடுங்க. :))))))) (என்ன பாக்குறீங்க... நீங்க போடுற அதே இஸ்மைலி தான்!) Delete Replies Reply Reply Parani from Thoothukudi 12 April 2015 at 15:23:00 GMT+5:30 விஜயன் சார், எந்த ட்ரைன் நேரத்திற்கு வந்து சேர்க்கிறது நமது ஊரில்? 11 மணி என்றாலும் அது வந்து நான் அங்கு இருந்து ஆட்டோ அல்லது பஸ் பிடித்து வருவதற்குள் 12 மணி ஆகிவிடும் :-) மேலும் நான் தற்சமயம் வரும் ட்ரைன் 12 மணிக்கு வரும், அங்கு இருந்து புத்தகம் நடக்கும் இடத்திற்கு வந்து சேர 1 மணி ஆகிவிடும் :-( ReplyDelete Replies mayavi.siva 12 April 2015 at 15:30:00 GMT+5:30 @ பரணி: முயன்றால் முன்பே வரலாம் நண்பரே..! 108 க்கு நம் மனம் வழிவிட்டு தயாராவது போலவே..! Delete Replies Reply Parani from Thoothukudi 12 April 2015 at 15:32:00 GMT+5:30 சதாப்தி எல்லாம் இன்றைய சூழ்நிலையில் யோசிக்க கூட முடியாத விஷயம் சார்! Delete Replies Reply Parani from Thoothukudi 12 April 2015 at 15:35:00 GMT+5:30 This comment has been removed by the author. Delete Replies Reply Parani from Thoothukudi 12 April 2015 at 15:42:00 GMT+5:30 சிவா, முடியும். ஆனால் புத்தக வெளி ஈடும் "சரியான நேரத்தை" ஆசிரியர் முடிவு செய்து சொன்னால் வந்து விடுவேன்! Delete Replies Reply mayavi.siva 12 April 2015 at 17:53:00 GMT+5:30 //காலை 11 மணிக்குத் துவங்கும் புத்தக விழாவில் நமது ஸ்டால் எண் : 128-ல் எப்போதும் போலவே மின்னும் மரணத்தை unveil செய்திடுவோமா ? அல்லது அருகாமையில் ஏதேனும் ஹோட்டலில் AC அரங்கம் கிடைக்கும் பட்சத்தில் buffet lunch சகிதம் அங்கே நம் சந்திப்பை அரங்கேற்றிடுவோமா ? புத்தக சங்கமத்தின் வெளியரங்கில் புத்தக வெளியீட்டு நிகழ்வுகள் மாலைகளில் உண்டென்று சொன்னார்கள் ! ஆனால் சாயந்திரம் வரையிலும் இதழை உங்கள் கண்களில் காட்டாது வைத்திருப்பது என் மண்டையின் ஆரோக்கியத்துக்கு உகந்ததல்ல என்பதால் அந்த சிந்தனை சுகப்படவில்லை !// //Parani from Bangalore : காலை Shatabdi-ஐ பிடிக்க முடிந்தால் 11 மணிக்கெல்லாம் சென்னையைத் தொட்டு விடலாமே ?// எடிட்டரின் மேற்கண்ட எண்ணங்கள் உறுதிபடுத்தும் நேரம்: காலை 11:00 க்குவந்துவிடும் படி திட்டமிடுங்கள் என்பதேயாகும். இதை மனதில் கொண்டு வந்துவிடுங்கள் பரணி..! Delete Replies Reply Parani from Thoothukudi 12 April 2015 at 22:07:00 GMT+5:30 நான் குழம்பியதன் காரணம், ஒரு வேலை வெளி இடத்தில் புத்தகம் வெளியிடுவதாக இருந்தால் நேரமாற்றம் இருக்கும் என்ற எண்ணத்தில் எழுந்த கேள்வி! Delete Replies Reply Reply Parani from Thoothukudi 12 April 2015 at 15:27:00 GMT+5:30 This comment has been removed by the author. ReplyDelete Replies Reply mayavi.siva 12 April 2015 at 15:47:00 GMT+5:30 மின்னும் மரணம் கொண்டாட்டம்..! பகுதி-1 என் கணிப்பு படி திருவிழாவின் மையப்பகுதியான நேரம் காலை 11:30 to 12:30 அன்றையதினம் எப்படியிருக்கும் ? என் மனக்கண்ணில் தெரியும் காட்சிகள் இனி வரும்மாறு..! ( இது கொஞ்சமேனும் திட்டமிட உதவுமே என்பதே ) மாயாவி.சிவாவின் டைரி குறிப்பு..! தேதி: ஞாயிறுக்கிழமை,19-ஏப்ரல்,2015. 5:00 AM : விடிய விடிய காமிக்ஸ்பற்றி 'அரட்டைஅரங்கம்' கேட்டுட்டிருந்த 'இரயில் போகி'... "போறீங்களாப்பா..நைட்டு இதே வண்டிதானே? சீக்கிரம் வந்துடுங்க..! உங்க கொண்டாட்ட கதையை கேக்க நான் காத்திருக்கேன்."..என இரும்புகுதிரை கேட்க...நாங்கள் இருபது பேரும் சென்ட்ரலில் இருந்து, ராயபேட்டைக்கு பஸ் ஏறினோம். 6:00 AM : ஒரு வழியாக ராயபேட்டைGHக்கு எதிரில் ரூம் போட்டுவிட்டு தெரு முனையில் இருந்த டீ கடையில், 'சப்' ன்னு இருந்த காபி டீ யை ஒருவரும் கண்டுக்காமல்...வாட்ஸ்ஆப், fb, sms, மூலமாக நண்பர்கள் யார்யாரெல்லாம் எந்தெந்த ஊரில் இருந்து, எந்நேரம் வர்றாங்கன்னு வாங்கி பேப்பரை படிக்காம பேசிட்டிருந்தோம். 'இதுவரை முகம் காட்டாத ஒருவர் விழாவுக்கு வர்றார்' ன்னு வந்த மெயில் பத்தி பேசினது பெரிய டாப்பிக்..! 7:00 AM : விதவிதமான சோப்,சென்ட் வாசனையுடன்..கொண்டுவந்த பைகளை கண்ட மேனிக்கு கலைத்து, ஆளாளுக்கு கலர்கலராய் சட்டைகள் போட்டுக்கொண்டு, ராவுடிக்கு தாயரானர்கள். இதில் பொறுப்பாக குளித்து பட்டை போட்டுக்கொண்டிருந்த நண்பர் "மாயாவி பக்கத்து கோவிலுக்கு போய்ட்டு வரலாமா..! " ன்னு கேட்க 'தோ' என அவருடன் நடைபோட்டேன். 8:00 AM : " சுவ்வப்பா..இப்பவே வெயில் சட்டைய நனச்சிடுச்சே, ஏங்க டிபனுக்கு நேரமாச்சிங்க சீக்கிரம் ரெடியாவுங்க அப்பறம் ஆறிபோனத்தை சாபிடணும், ஏங்க குளிச்சி ஒரு பிரயோஜனமும் இல்லிங்க, நைட்டு போக்குள்ல குளிச்சிசா தான் பெஸ்ட்டு,குளிக்கறதா இருந்தா ஜட்டி பனியனை துவச்சு போடுங்க, சாயந்தரமே போட்டிருக்கிறதெல்லாம் நஞ்சி போய்டும்,அது யூஸ் அன் துரோதான், ஆண்டவா...அஞ்சி நிமிஷத்துல கரண்டை திரும்ப கொடுத்து, என் உசுரை காப்பைத்திட்டேப்பா..முருகா, நீ ரெண்டு சம்சாரத்தோட நல்லயிருக்கனம்பா..!" என விதவிதமான டையலாக்..ஹீ..ஹீ..! 9:00 AM : "ஐயோ காலைலியே இட்லியா? ஒடம்பு கெட்டுபோய்டுங்க..! ஏங்க இங்க பன் புரோட்டா, முட்ட வீச்சு எங்க நல்லஇருக்குங்க..?" என தெருவில் உள்ள ஒருவனை விடாமல் விசாரித்து கொண்டே ஒரு குழு போக...அவர்கள் விசாரித்ததை பார்த்துக்கொண்டே ஒரு குழு ஆஆஆ ன்னு நிற்க... "காலையிலயே கிளம்பிட்டாங்கையா.." என இன்னொரு குழு நடையை கட்ட... 'டிபன் படலம்' துவங்கியது தொடர்ச்சி : மாலை வேளையில் ReplyDelete Replies Arivarasu @ Ravi 12 April 2015 at 17:20:00 GMT+5:30 பட்டைய கிளப்புறிங்க மாயாவி ஜி.இன்னும் இன்னும் எமோஷன உங்ககிட்ட எதிர்பார்க்கிறோம். அருமை நண்பரே அருமை. Delete Replies Reply KiD ஆர்டின் KannaN 12 April 2015 at 17:21:00 GMT+5:30 வேதாளரே.! ஹிஹிஹி.! இதை படிக்கும் போது., நகைக்கடை திறக்க நடிகர் நடிகையர் செய்யும் அலப்பறைதான் நினைவுக்கு வருது. (அந்த பங்க்ஷன் வெள்ளிக்கிழமை) . Delete Replies Reply Arivarasu @ Ravi 12 April 2015 at 17:29:00 GMT+5:30 நாங்களும் வாரோம், நீங்களும் வாங்க, அதானே ஹி,ஹி. Delete Replies Reply mayavi.siva 12 April 2015 at 18:26:00 GMT+5:30 மின்னும் மரணம் கொண்டாட்டம்..! பகுதி-2 9:00 AM : எடிட்டரின் புதிய பதிவு "இன்னும் என் காதுகளில் மி.ம. கலரில் சார்..கலரில் சார்..என வேண்டுகோள்கள் ஒழித்துக்கொண்டே இருக்கிறது...ஆனால் அது முடிந்து உங்கள் கைகளில் கனக்க தயாரகிவிட்டனவே...என எதிரில் உள்ள புத்தகங்கள் உரக்க சொல்வது போலவும், நம் கனவில இந்த அற்புதத்தை தயாரித்தோம் என்ற வியப்புடன் வெளியீட்டுக்கு கிளம்பி விட்டேன். இன்னும் இரண்டு மணிநேரத்தில் புத்தககண்காட்சி." என்ற உற்சாக துவகத்துடனும்... " ALL FRIENDS: ymca வில் நானும் உங்களுடன் இணைந்து கொள்கிறேன், அங்கிருந்து அருகில் உள்ள தனி அரங்கிற்கு உற்சாக நடை போடுவோம்" என்ற குறிப்பும் வந்தன. 10:00 AM : "* ஹலோ..நாங்க மெஸ்ல டிபன் முடிச்சாச்சி..நீங்க எங்க இருக்கிங்க..? * நாங்க ymca எதிர்ல இருக்கோம்..நீங்க வந்துடுங்க அங்க வெயிட் பண்றேன். * நாங்க டிரெயின்ல இருவது பேர் வந்தோம், நீங்க வந்துட்டிருக்கிங்களா ? அப்ப 11 மணிக்குள்ள ymca வந்துடுங்க * ymca குள்ள இருக்கிங்களா? முன்னாடியே போன் பண்ணியிருந்தா, ரூமுக்கு வந்து ஒன்னாவே சாப்பிட்டிருக்கலாம், *டூ ஹவர்சா அங்கியேவா இருக்கிங்க? என்னை அடையாளம் தெரியுமில்லையா? வந்துடறேன்..! " பல நண்பர்கள் சக நண்பர்களிடம் போனில் பேசியவை காதுகளில் ஒலித்தன..! 11:00 AM : YMCA கிரவுண்டின் மரத்தடியில் மெதுவாக நண்பர்கள் வரத்துவங்கினர்...பெங்களூரில் இருந்து கார்த்திக் சோமாலிங்கா, ஸ்ரீராம்,பரணி,TK அகமத் பாசா,சுப்பிரமணி-கோவையில் இருந்து பொன்ராஜ், தங்கவேல்,ரமேஷ் சண்முகசுந்தரம்-பாண்டிச்சேரியில் இருந்து கலீல்நண்பர்கள் கார்த்திகேயன்,வில்லர் fan,பாலாஜி சுந்தர்,ராம்குமார்,செந்தில் குமார்-திருப்பூரில் இருந்து சிபி,ரம்மி,நாகராஜன்,ராஜ்குமார்,டெக்ஸ் சம்பத்-ஈரோடு சர்வாதிகாரி,விஜய்,புனித சாத்தான்,ராஜா,சங்கர்,பேங்க் குமார்,வினோஜ்-தமிழகத்தின் மையத்தில் இருந்து டெக்ஸ்விஜயராகவன்,ஸ்பைடர்ஸ்ரீதர்,போ.கு.தலைவர்,கிட்ஆர்ட்டின்கண்ணன், ஜெயகுமார்,Dr.சுந்தர்,கார்த்திக்,யுவாகண்ணன்,பழனிவேல்,சுசிந்தர்,மல்லூர் ரவி,கர்ணன்,ஆ.ப.ராஜ்குமார், அஸ்தம்பட்டி குமார்,டிரைவர் குமார்-தமிழகத்தின் தலைமையகத்தில் இருந்து RT.முருகன்,ரபீக் ராஜா,ஜான் சைமன்,சொக்கலிங்கம்,கிருஷ்ணாVV,லக்கிலிமிட்,ராஜ்முத்துகுமார்,ராகவன்,மஞ்சள்.ச.மாவீரன்,நரேஷ்குமார்,சத்யா,பெருமாள்,வெங்கடேஸ்வரன்-சிவகாசி SS சௌந்தர்,RSK சரவணன் மற்றும் செல்வம் அபிராமி,சாலும், சாக்ரடிஸ்,ஜோசப்...இன்னும்,இன்னும் காமிக்ஸ் பிரியர்கள் வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் போல கிரவுண்டில் இருந்த மரங்களின் நிழலில் கூடியவாறு பேசிக்கொண்டிருந்தார்கள். காமிக்ஸ் பிரியர்களை இப்படி ஒரு சேரபார்ப்பது என் கேமராவில் 'இங்கே'கிளிக்' செய்ய சரியான வேட்டை. 11:15 AM : 'கிங் விஸ்வா' மட்டும் மிஸ்ஸிங், காரணம் 1000 ரூபாய்க்கு இப்படி ஒரு பிரம்மாண்ட படைப்பு பார்க்கும் ஆவலில் மூத்த பிரபல காமிக்ஸ் பிரியர்கள் அவர்களே விருப்பம் தெரிவித்ததால், 'S.ராமகிருஷ்ணன் டிராஸ்கி மருது' ரெண்டு சீப்கெஸ்ட்டை கூட்டிட்டு வர்றபொறுப்புள இருக்கார்..! அப்ப எல்லோரும் பாரபரபானார்கள், எல்லோரு கண்களும் மெயின் கேட்டை பார்த்தது. காரணம் மொபைலில் வந்த notify மெயில்- //Mr.மரமண்டை: நீங்கள் பார்க்க விரும்பும் முகம் கால்டாக்ஸியில் உள்ளே வருகிறார்// உண்மையில் கால்டாக்ஸி வந்தது, அப்படியேன்றால் வருவது மரமண்டையா ? யார் அந்த மரமண்டை? என்ற கேள்வியுடன்...அதில் இருந்து இறங்கியவர் முகம் பார்த்ததும் ஒரு நிமிடம் எல்லோரும் அதிர்ந்து விட்டார்கள்..அதிர்ந்து..! தொடர்ச்சி :நள்ளிரவு or அதிகாலையில்..ஹீ..ஹீ..! Delete Replies Reply V Karthikeyan 12 April 2015 at 20:12:00 GMT+5:30 @mayavi siva- கலக்குங்க Delete Replies Reply Arivarasu @ Ravi 12 April 2015 at 22:01:00 GMT+5:30 மாயாவி எனக்கு அப்படியே மூன்று தியேட்டரில் (சப்னா) அமர்ந்து படம் பாக்கற பீலிங் வருது. Delete Replies Reply Reply Unknown 12 April 2015 at 16:15:00 GMT+5:30 ANAIVARUKKUM VANAKKAM VARUTHU VARUTHU ADA VILAKU VILAKU VAYNKAI VELIAY VARUTHU VAYNKAI TIGERTHAAN ATHU SEERUM NAALTHAAN ENDRU MANAM KUTHOOKALIKKIRATHU ENNAAL CHENNAI VARA MUDIYAATHATHAI NINAITHU VARUTHAMAKA ULLATHU BY THE BY ST CORIER NOKKI VALIMEL VILIVAITHU KAATHIRUPPAYN ReplyDelete Replies Reply MH Mohideen 12 April 2015 at 17:03:00 GMT+5:30 சார், ஒரு உற்சாகமான பதிவு. ஒரு கனவு இதழ் மெய்ப்பட கடினமாக உழைத்த உங்களுக்கும், உங்கள் டீமிற்கும் நன்றிகள். மஞ்ச கலரு, பச்சைக் கலரு ஜிங்குச்சா அட்டையில் இல்லையென்றால், பெயருக்கேற்றார்ப் போல் 'மின்னும் மரணம்' தங்கக் நிறத்தில் தகதகக்கப் போகிறது தானே? அப்புறம், வெளியீட்டு விழா வெளி அரங்கமா..? அல்லது குளு குளு அரங்கமா..? இந்த விஷயத்தில் என் மண்டை கொஞ்சம் மந்தமாகவேயிருக்கிறது! மதியம் உண்ண உணவு பிரியாணி தானே, கொஞ்சம் சிக்கன் 65, அக்குவா ஃபீனா, செரிமானத்திற்கு 7Up, ஃபினிஷிங் டச்சாக ஸ்வீட் பீடா இவைகளை நண்பர்கள் கொஞ்சம் confirm செய்தால் தெம்பாகயிருக்கும்! ReplyDelete Replies Reply KiD ஆர்டின் KannaN 12 April 2015 at 17:04:00 GMT+5:30 என்னாங்க நடக்குது இங்க.??? ReplyDelete Replies Arivarasu @ Ravi 12 April 2015 at 17:22:00 GMT+5:30 எல்லாமே நடக்குது. Delete Replies Reply Reply KiD ஆர்டின் KannaN 12 April 2015 at 17:13:00 GMT+5:30 // சில பயணங்கள் முடியாதிருப்பதில் தான் வாழ்க்கையின் சுவாரஸ்யமே உள்ளதோ ?! சில சுமைகளும் சுகமாய்த் தெரிவதன் மாயம் தான் என்னவோ ? விடை தேடுகிறேன்! // விடுங்க சார்.!! அடுத்து ஒரு ஆயிரம் ரூபாய் புக்கு. , தீபாவளிமலர்னு அறிவிச்சிட்டா போச்சி.! சுகமான சுமைகள் தொடர்ந்து இருக்குமே.! எப்பூடீ.!!! ReplyDelete Replies Arivarasu @ Ravi 12 April 2015 at 17:51:00 GMT+5:30 சூப்பர். +111 Delete Replies Reply Reply Arivarasu @ Ravi 12 April 2015 at 17:28:00 GMT+5:30 // சில பயணங்கள் முடியாதிருப்பதில் தான் வாழ்க்கையின் சுவாரஸ்யமே உள்ளதோ ?! சில சுமைகளும் சுகமாய்த் தெரிவதன் மாயம் தான் என்னவோ ? விடை தேடுகிறேன்! // என்னதான் கடின அனுபவங்களை பட்டாலும் நீங்களும் உங்கள் டீமும் அதை திரும்பவும் சுகமான நினைவுகளாய் விட்டு விட்டு மீண்டும் அடுத்த சுகமான சுமைகளுக்கு தயாராகி விடுவிர்கள் என்று எங்களுக்கு தெரியும் சார். ஏனெனில் த்ரில்,டெட் லைன் தான் உங்களுக்கு பழகிவிட்டதே, ஹி,ஹி நான் இப்ப என்ன சொல்ல வரேன்னா அடுத்த குண்டு புக்குக்கு சீக்கிரம் ரெடியாவுங்க சார். ReplyDelete Replies Dasu bala 12 April 2015 at 19:29:00 GMT+5:30 //ஏனெனில் த்ரில்,டெட் லைன் தான் உங்களுக்கு பழகிவிட்டதே, ஹி,ஹி நான் இப்ப என்ன சொல்ல வரேன்னா அடுத்த குண்டு புக்குக்கு சீக்கிரம் ரெடியாவுங்க சார்.// +1 Delete Replies Reply Reply Arivarasu @ Ravi 12 April 2015 at 17:41:00 GMT+5:30 // ! So - "காலை எழுந்தவுடன் மின்னும் மரணம் " என்ற slogan தேவலை என்று தோன்றியது ! எங்கே ? // அருமையான ஸ்லோகன் சார்,மின்னும் மரணம் வெளியீட்டு விழா முடியும் வரை இதை வைத்து கொள்வோம், பிறகு "காலை எழுந்தவுடன் காமிக்ஸ் " என்று மாற்றிக்கொள்ளலாம் சார். ReplyDelete Replies Reply Arivarasu @ Ravi 12 April 2015 at 17:48:00 GMT+5:30 // ஆனால் இங்கே என்பக்கத்து நடைமுறைப் பிரச்சனைகளைச் சமாளிக்க சற்றே working space எனக்குத் தேவையென்பதை நண்பர்கள் உணரும் நாள் புலரும் போது எனது சுவாசம் சற்றே இலகுவாகிடும் ! // உண்மைதான் வெளியில் இருந்து விமர்சன கணைகளை விடுபவர்களுக்கு நிதர்சனம் புரிய வாய்ப்பில்லை,எல்லாவற்றிற்கும் நீங்களும் பதில் அளிப்பது சாத்தியம் அல்ல.உங்கள் மவுனம் காரணத்துடன் தான் உள்ளது என்று எல்லோரும் நாளடைவில் புரிந்து கொள்வர். நாங்கள் உங்களுடைய அனுபவத்தை நம்புகிறோம் சார். ReplyDelete Replies Reply parimel 12 April 2015 at 18:34:00 GMT+5:30 இது போன்ற சந்தர்பங்கள் எப்பொழுதும் அமைவதில்லை. எனவே புத்தக வெளியீட்டு விழா நல்லதே. புத்தக கண்காட்சி அரங்கத்தில் நடத்துவது சற்று நெருடலாகவே அமையும். ஒருவருக்கு ஒருவர் free யாக move செய்ய இயலாது. வெளியில் A.C அரங்கமே சரி. 100 நபர்களுக்கு அதிகம் இல்லை என்றால், புத்தக கண்காட்சிக்கு அருகாமையில் இல்லாமல் ( நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகில்) என்றால் என்னால் ஒரு அரங்கம் கட்டணம் எதுவும் இல்லாமல் (மின்சாரம்+cleaning =Rs.3000/- மட்டும் செலுத்தவேண்டும்) ஏற்பாடு செய்து தர முடியும். உணவு வெளியில் இருந்து நம் விருப்பப்படி ஏற்பாடு செய்து கொள்ளலாம். நான் இந்த ஏற்பாடை செய்ய தயாராக உள்ளேன். வேறு யாரும் இதைவிட சிறந்த ஏற்பாடு செய்தாலும் வரவேற்க தக்கதே. ReplyDelete Replies mayavi.siva 12 April 2015 at 18:45:00 GMT+5:30 மாலை வணக்கம் பெருமாள் ஸார், அருமை..! முதலில் கைகொடுங்கள்..! உற்சாகமான தகவல், ஒரு சந்தேகம்..ராயபேட்டை ymca வுக்கும், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கும் எவ்வளவு தூரம் ? ராயபேட்டைக்கு அருகிலேயே ஏதும் கிடைக்க வாய்ப்புண்டா...பாருங்களே..ப்ளிஸ்..! Delete Replies Reply Erode VIJAY 12 April 2015 at 18:47:00 GMT+5:30 @ Parimel இது சாத்தியமாகிறதோ இல்லையோ, உங்கள் எண்ணங்களுக்குத் தலைவணங்குகிறேன்! Delete Replies Reply Erode VIJAY 12 April 2015 at 18:53:00 GMT+5:30 @ மாயாவி Parimelஐ பெருமாள் ஆக்கிட்டீங்களே மயாவி சீவா! :D Delete Replies Reply சேலம் Tex விஜயராகவன் 12 April 2015 at 20:16:00 GMT+5:30 அருமையான எண்ணங்கள் பரிமள் சார் . நீங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கை க்கு அருகே தான் வர வாய்ப்பு உள்ளது . மேப்பில் நுங்கம்பாக்கம் டூ புத்தகவிழா அரங்கம் 6கிமீ என உள்ளது . இனிமேல் ஆசிரியர் தான் இந்த முயற்சி சரிவருமா என பரிசீலிக்க வேண்டும் . Delete Replies Reply V Karthikeyan 12 April 2015 at 20:19:00 GMT+5:30 @parimel - சூப்பர். பேச்சு மட்டும் இல்லாமல் செயலிலும் இறங்க ரெடியாக உள்ளீர்கள். Delete Replies Reply Arivarasu @ Ravi 12 April 2015 at 22:10:00 GMT+5:30 பரிமள் சாரின் ஐடியா அருமையானது சீக்கிரம் முடிவெடுங்கள். Delete Replies Reply KiD ஆர்டின் KannaN 12 April 2015 at 22:26:00 GMT+5:30 மன்னிக்கவும் நண்பர்களே.! அவருடைய பெயர் தமிழில் பரிமேல் என்று உச்சரிக்க முடியலாம்னு நினைக்கிறேன் "பரிமேலழகர் " என்பதன் சுருக்கமாக இருக்க வேண்டும். தவறெனில் நண்பர்கள் மன்னிச்சூ.!!! Delete Replies Reply mayavi.siva 12 April 2015 at 22:31:00 GMT+5:30 இத்தாலி விஜய் அவர்களே..அவர் நமக்கு தெரிந்த நண்பரே, அவர் முழு பெயர் கதிரேசன் பரிமேழகன் . டைபிங் மிஸ்டேக் மன்னிக்க..! Delete Replies Reply Reply மகேந்திரன் பரமசிவம் 12 April 2015 at 19:12:00 GMT+5:30 Vijay. I send you an email on this from my yahoo id. Please respond to that when you get a chance. ReplyDelete Replies Erode VIJAY 12 April 2015 at 19:35:00 GMT+5:30 Got it and replied! :) Delete Replies Reply Reply கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 12 April 2015 at 20:04:00 GMT+5:30 இணையத்திற்கு வெளியே உள்ள நண்பர்களும் கலந்து கொள்ள உதவும் வழிகள் 1.சந்தாவில் உள்ள நண்பர்களுக்கு தொலைபேசியில் அழைத்தல்/குறுஞ்செய்தி அனுப்புதல்/மின்னஞ்சல் அனுப்புதல் 2.fb &WhatsApp ல் தகவல் பரிமாற்றம் 3.நமக்கு தெரிந்த நண்பர்களுக்கு நாமே தெரிவித்தல் 4. ReplyDelete Replies Reply Thiruchelvam Prapananth 12 April 2015 at 20:18:00 GMT+5:30 156 வது ReplyDelete Replies Reply Vijayan 12 April 2015 at 21:20:00 GMT+5:30 @ ALL : நண்பர்களே, "சென்னை புத்தக சங்கமம்" ஜனவரியின் விழாவை விடப் பன்மடங்கு சிறியதே ! அதிலும் இந்தாண்டு 150 ஸ்டால்களுக்கும் குறைவாகவே உள்ளது தெரிகிறது ! அதிர்ஷ்டவசமாக நமது ஸ்டால் நுழைவாயிலை ஒட்டிய வரிசையில் முதலாவதாக உள்ளது ! ஸ்டால் லேயவுட் மேப்பினை மேலே கொடுத்துள்ளேன் - பாருங்களேன் ! ReplyDelete Replies Parani from Thoothukudi 12 April 2015 at 21:54:00 GMT+5:30 This comment has been removed by the author. Delete Replies Reply Parani from Thoothukudi 12 April 2015 at 21:58:00 GMT+5:30 This comment has been removed by the author. Delete Replies Reply mayavi.siva 12 April 2015 at 23:05:00 GMT+5:30 எடிட்டர் ஸார்... *அதிர்ஷ்டவசமாக நமது ஸ்டால் நுழைவாயிலை ஓட்டிய வரிசையில் முதலாவதாக மட்டுமில்லை. *அதை விட அதிர்ஷ்டம் நுழைவாயிலை எதிரில் இல்லாமல் பின் முதல் வரிசையில் உள்ளது. *அதை விட அதிர்ஷ்டம் மீட்டிங் ஹால் புத்தககண்காட்சியில் உள்ளேயே உள்ளது. *அதை விட அதிர்ஷ்டம் ஸ்டாலை ஓட்டி மினி மீட்டிங் ஹால் உள்ளது என்பதே..! *அதைவிட சூப்பர் அதிர்ஷ்டம் காலை 11:00 மணிக்கு எந்த புத்தக வெளியீடும் இல்லை என்பதே..! ஆக காலையில் முதல் வேலையாக வெளியீட்டு வேலையை சட்டுன்னு முடிச்சிட்டு, சேல்ஸ் ஆரம்பிச்சுட்டு...கச்சேரியை ஆரம்பிச்சு..அப்படியே எதிரில் உள்ள நல்ல ஹோட்டலுக்கு பொடிநடையாக போய் சாப்பிட்டு வந்து...சும்மா கிடக்கிற மீட்டிங் ஹால் சேர்லயே உட்காந்து ஆரம்பிச்சா....நிமிஷத்துல நாள் சுவாகா.! :-))) Delete Replies Reply Sam Tex 13 April 2015 at 09:30:00 GMT+5:30 பக்கத்திலேயே கேன்டீனும் இருக்கா என்று விசாரித்து வையுங்கள் மாயாவி சார் Delete Replies Reply Reply KiD ஆர்டின் KannaN 12 April 2015 at 21:53:00 GMT+5:30 சென்னை மாநகர ரசிகப் பெருமக்களுக்கு ஓர் நற்ச்செய்தி : 🙏🙏🙏 வருகின்ற 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் சேந்தம்பட்டி முத்தையன் குழுவினரின் கரகாட்டம் நடைபெற இருக்கிறது. சேந்தம்பட்டி முத்தையன் - மாயாவி சிவா. கரகாட்ட குயின் காமாட்சி - டெக்ஸ் விஜயராகவன். தனித்தவில் வித்வான்கள்.:- "கோடையிடி " கிட் ஆர்டின் கண்ணன். "கலியுக நந்தி " ஸ்பைடர் ஸ்ரீதர். துணைத் தவில் - அறிவரசு ரவி. நாதஸ்வரம் - "நாதஸ்" சிபி (எ) பிரபாகர். ஒத்து ஊதுபவர் - ரம்மி lll (எ) ரமேஷ். "நந்தவனத்தில் வந்த ராச குமாரி " பாடலை பாட இருப்பவர் - "கானக்குயில் " ஏழரை இசைவேந்தர் ஈரோடு விஜய். கோரஸ் பாடுவோர் - மேச்சேரி ஜெயக்குமார்., சேலம் கார்த்திக். ஜிகினா சட்டை., ரோஸ்பவுடர்., லிப்ஸ்டிக் உபயம் - யுவா கண்ணன்., சுசீந்தர குமார். நன்றியுரை - அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கே ஆலோசனை சொல்லும் அன்பர் - புனித சாத்தான் (எ) நல்ல பிசாசு (எ) சகுணி (எ) சோமசுந்தரனார். மைக் ஸ்பான்சர் - துரை தியாகராஜ் கச்சேரி புக் செய்தவர் - சர்வாதிகாரி ஸ்டாலின். புரோக்கிராமு சிறப்பா நடக்க வெளியே இருந்து வேண்டிக் கொள்வோர் - போ.கு.த. பரணியானந்தா. சேலம் "சில்க் " சுந்தர். வருகின்ற 18ஆம் தேதி இரவு 9 மணியளவில் சேலத்தில் இருந்து "சொப்பன சுந்தரி " வைத்திருந்த காரில் கிளம்பி., எங்கள் கரகாட்ட கோஷ்டி ஞாயிறு காலையில் சென்னை வந்தடையும். ஆடப்போகும் தெருக்கள் கோணல் மாணலாக இல்லாமல் நேராக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய எங்க கோஷ்டி மானேசர் ஷல்லூம் பெர்னான்டஸ்., ஒருநாள் முன்னதாகவே சென்னை வந்தடைவார். வெளியூர் ஆட்டக்காரங்கள மதிக்குறதுதான் உள்ளூர் ஆட்டக்காரங்களுக்கு பெருமை. எனவே சூடா மோரு குடுத்து வழியனுப்பி வைக்கும்படி உள்ளூர் ஆட்டக்காரங்களை கேட்டுக் கொள்கிறோம். அந்த மாரியாத்தா அருளால எல்லாரும் நல்லா இருப்பிங்க தம்பி.!! (கோஷ்டியில பேரு வராதவங்க தயவு செஞ்சி மன்னிச்சூ.) ReplyDelete Replies Arivarasu @ Ravi 12 April 2015 at 22:09:00 GMT+5:30 ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா முடியல கண்ணன் முடியல, படிச்சு படிச்சு சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணி வந்துடுச்சு. Delete Replies Reply KANNAN S YUVA 12 April 2015 at 22:32:00 GMT+5:30 ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா முடியல கண்ணன் ஜி முடியல, படிச்சு படிச்சு சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணி வந்துடுச்சு. Delete Replies Reply KANNAN S YUVA 12 April 2015 at 22:33:00 GMT+5:30 ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா முடியல கண்ணன் ஜி முடியல, படிச்சு படிச்சு சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணி வந்துடுச்சு. Delete Replies Reply mayavi.siva 12 April 2015 at 22:42:00 GMT+5:30 ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா முடியல கண்ணன் முடியல, படிச்சு படிச்சு சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணி வந்துடுச்சு. சென்னை நோக்கிவரும் கரகாட்ட கோஷ்டியின் கம்பேனி கார் பார்க்க...இங்கே'கிளிக்' Delete Replies Reply Erode VIJAY 13 April 2015 at 00:04:00 GMT+5:30 ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ROFL. அட்டகாசம் தனித் தவில்காரரே! செமையா வாசிக்கறீங்க. என்னா ஒரு கற்பனை வளம்!! :)))) Delete Replies Reply Parani from Thoothukudi 13 April 2015 at 07:18:00 GMT+5:30 ரவி கண்ணன் @ லொள்ளு தாங்கல! Delete Replies Reply Sam Tex 13 April 2015 at 09:32:00 GMT+5:30 ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா முடியல கண்ணன் முடியல, படிச்சு படிச்சு சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணி வந்துடுச்சு. Delete Replies Reply கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 13 April 2015 at 11:52:00 GMT+5:30 செயலார் பட்டய கிளப்புவார் ! Delete Replies Reply Reply Parani from Thoothukudi 12 April 2015 at 22:27:00 GMT+5:30 விஜயன் சார், புத்தக வெளியிட எந்த நேரத்தில் வைத்தாலும் அதில் கலந்து கொள்ள எதுவாக எல்லா combinationனிலும் பயணச்சீட்டு போட்டு விட்டேன்! ஆல் செட்! ReplyDelete Replies V Karthikeyan 13 April 2015 at 06:51:00 GMT+5:30 Super parani. Delete Replies Reply கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 13 April 2015 at 11:51:00 GMT+5:30 நீங்க சிறந்த கேமரா காரர் மாதிரி போஸ் கொடுத்துட்டு திரியாம.... நல்ல படமா எடுத்து போடுங்க பரணி ... Delete Replies Reply Reply Thiruchelvam Prapananth 12 April 2015 at 23:42:00 GMT+5:30 டியர் எடிட்டர் ஸர்ர், இது ஒரு மைல்கல் இதழ் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த பொக்கிஷத்தை அள்ள ஏப்பிரல் 19 வரை கரத்திருப்பதும் ஒரு சுகமரன அனுபவமே. மின்னும் மரணம் making of படிக்கும்போதே எனக்கு கண்ணை கட்டுகிறதே. வரழ்ந்து பர்ர்த்த உங்களுக்கு எப்படி இருக்கும் ஸர்ர்? அந்தர் பல்டிகள் சகஜம் என்பது புரிகிறது. சூப்பர் ஸர்ர். ReplyDelete Replies Reply WillerFan@RajaG 13 April 2015 at 00:38:00 GMT+5:30 அருமையான பதிவு. புத்தகத்தை காணும் ஆவல் இப்பொழுதே பற்றிக்கொள்ள ஆரம்பித்து விட்டது. ReplyDelete Replies Reply Thiruchelvam Prapananth 13 April 2015 at 01:15:00 GMT+5:30 ஹ ஹ ஹ ஹ ஹ . அட்டகரஸ்யி. ReplyDelete Replies Reply Parani from Thoothukudi 13 April 2015 at 07:21:00 GMT+5:30 விஜயன் சார், உங்களுக்கு ஏது சரி என படுகிறதோ அதன் படி வெளியீட்டு விழாவை திட்டமிடவும்! யு ஆர் தே பாஸ்! ReplyDelete Replies Reply Unknown 13 April 2015 at 07:41:00 GMT+5:30 interesting video found while casual browsing Top 10 Comic Books That Deserve A Movie Or TV Show Adaptation https://www.youtube.com/watch?v=dHqtfgA3yGA MICHEL BLANC-DUMONT drawing Blueberry (real time video) https://www.youtube.com/watch?v=bOo34F-cJzA RARE "Lt. Blueberry" footage. A COMIC CLASSIC with Martin Kove https://www.youtube.com/watch?v=J8IdGYoMi00 MOEBIUS DRAWING BLUEBERRY https://www.youtube.com/watch?v=31eMG8MoXD8 ReplyDelete Replies Unknown 13 April 2015 at 07:45:00 GMT+5:30 jst thinking why dont we request our MalayAppan sir to draw one of his version(speedy sketch drawing) of Tiger and post it in youtube! Delete Replies Reply Reply Vijayan 13 April 2015 at 08:28:00 GMT+5:30 நண்பர்களே, திட்டமிடல்கள் பிரமாதம். எனக்கு மனதில் தோன்றியவை : 1.19-ஆம் தேதி நம் ஸ்டாலுக்கு வரவிருக்கும் நண்பர்களின் பட்டியல் முதலில் தேவை - உங்களின் முன்பதிவுப் பிரதிகளை சென்னைக்குக் கொண்டு வரும் பொருட்டு ! நம்மவர்கள் கூரியரில் அவற்றை உங்கள் முன்பதிவு விலாசங்களுக்கு அனுப்பி வைத்து விட்டால் - சென்னையில் திரும்பவும் ஒரு பிரதி வாங்கும் விரயம் நேரலாம் ! So லிஸ்ட் is a must ! 2.கரகாட்டக் கோஷ்டியில் கவுண்டமணி யாரு ; செந்தில் யாரு போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விபரங்கள் மிஸ்ஸிங் !! அதை சரி செய்யும் வேலைகள் ஒரு பக்கமிருக்க, உள்ளூர் ஆட்டக்காரர்களின் பங்களிப்பு இல்லாது போனால் களைகட்டாது ! So எந்தத் திட்டமிடலாக இருப்பினும், அதனில் உள்ளூர் ராமராஜன்களும், அசலூர் கனகாக்களும் or vice versa மேடையேறுவது முக்கியம் அல்லவா ? 3.சேர்ந்தம்பட்டியிலிருந்து செட்டாக வரும் கோஷ்டி நீங்கலாக ஒற்றை வித்வான்கள் பெங்களூருபட்டிகளில் இருந்தும், திருச்சிப்பட்டிகளில் இருந்தும் இதர பட்டிகளில் இருந்தும் காலைப் பயணமாய் வரும் வாய்ப்புகள் உள்ள போது, பெட்டியும், கையுமாய் அவர்களை இரு வேறு இடங்களுக்கு அலைய வைப்பது சிரமமாக இருக்கலாம் ! 4.பரிமேல் சார் சொல்லும் அரங்கு அருமை தான் ; ஆனால் ராயபேட்டாவிலிருந்து நுங்கம்பாக்கம் போக வர ; இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க கொளுத்தும் இந்த வெயிலில் எல்லோருக்கும் ரசிக்குமா என்பது தெரியவில்லையே ! தவிர, நாம் புத்தக விழாவில் காலைப் பொழுதைக் கழித்து விட்டு - மதிய நேரத்துக்கு நுங்கம்பாக்கம் செல்வதாக இருப்பின், அங்கே முன்கூட்டிச் சென்று லஞ்ச் ஏற்பாடுகளைக் கவனிக்க யாரேனும் இருத்தல் அவசியமாகும் தானே ? அது சாத்தியமில்லை எனும் போது 2 இடங்களது புரோக்ராம் என்பது சுகப்படாது ! So let's keep it to 1 location - wherever that is ? 5.இன்றைய பொழுதும் சிந்தித்து விட்டு, உள்ளூர் ஆட்டக்காரர்களின் inputs கிடைத்தால் அதனையும் இணைத்துக் கொண்டு, இரவுக்குள் ஒரு முடிவுக்கு வருவோமே ?! ReplyDelete Replies mayavi.siva 13 April 2015 at 08:55:00 GMT+5:30 சூப்பர்..! உடனே களத்தில்இறங்குகிறேன்..! Delete Replies Reply mayavi.siva 13 April 2015 at 09:33:00 GMT+5:30 ஒரு குட்டி யோசனை-1 *புத்தககண்காட்சியில் உள்ளே உள்ள மீட்டிங் ஹாலில் கொஞ்சம் 'குளுகுளு'வென்று இருக்க ரெண்டு aircooler இரண்டு jet fan வாடகைக்கு எடுத்து போட்டால் 75 % எரிச்சல் போயே போயிந்தீ...ஹீ..ஹீ..! Delete Replies Reply கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 13 April 2015 at 11:47:00 GMT+5:30 தீ ...தீ.... Delete Replies Reply Reply Ranjith R 13 April 2015 at 08:49:00 GMT+5:30 மிண்ணும் மரணம் புத்தகத்தை புக்பேரில் வெயிடுவாதுதான் மிகசிறந்த வழியாக இருக்கும். ReplyDelete Replies Reply Ranjith R 13 April 2015 at 08:54:00 GMT+5:30 சார் முன் கூட்டியே பணம் கட்டியவர்களுக்கு எந்த தேதியில் புத்தகம் அனுப்பி வைப்பிர்கள்,18ந் தேதி அனுப்பி வைத்தால்.19ந் தேதி ஞாயிற்றுக்கிழமை புத்தகம் கிடைக்காது,20ந் தேதியில் தான் புத்தகம் கிடைக்கும். சனிக்கிழமை கிடைகும்மாறு வழிவகை செய்ய முடியுமா? ReplyDelete Replies Reply Ranjith R 13 April 2015 at 09:04:00 GMT+5:30 இல்லையேன்றால் புத்தக வெளியிட்டு விழாவை 20ந்தேதி வையுங்கள் .எல்லோரும் ஒரே நேரத்தில் புத்தகங்கள் கிடைத்தது போல் இருக்கும் ReplyDelete Replies Reply Paranitharan.k 13 April 2015 at 09:30:00 GMT+5:30 பரிமல் சார் ..# அருமை ...உங்கள் எண்ணத்திற்கும் ...மனதிற்கும் ... .காமிக்ஸ் நண்பர்கள் சார்பாக மாபெரும் பாராட்டுகள் .அது நடைமுறைக்கு வந்தாலும் ..வரா விட்டாலும் .... ************************** ரவிகண்ணன் $ கிட் ஆர்ட்டின் # ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா முடியல கண்ணன் முடியல, படிச்சு படிச்சு சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணி வந்து விட்டது .... இப்போது மாயாவி சிவா ஜி அவர்களுக்கு ஒரு போட்டி ...ரவிகண்ணன் அவர்கள் கற்பனைக்கு உங்கள் புகைப்படத்தால் உயிர் ஊட்டுங்கள்....எப்படி இருக்கும் என்று பார்க்கலாம் ....நீங்கள் வென்றால் ஒரு பரிசு எங்கள் செயலாளர் தருவார் :-) ************************* ஆசரியர் சார் ..சந்தா நண்பர்களுக்கு புத்தகம் எப்போது கிடைக்கும் என்று சொன்னால் மகிழ்வோம் .... *************************** ReplyDelete Replies Reply Madhiyilamandhiri 13 April 2015 at 11:20:00 GMT+5:30 எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாரே ...............இன்னும் கொஞ்சம் அடிச்சா என்ன .................? அந்த ரத்த படலம் ..............வண்ணத்தில் ReplyDelete Replies கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 13 April 2015 at 11:42:00 GMT+5:30 நண்பரே முழு வண்ணத்தில் .... Delete Replies Reply Madhiyilamandhiri 13 April 2015 at 11:45:00 GMT+5:30 சார்.......... கீழ வலை விரிக்காமல் மூக்குல அடிபடாம ....... ரத்தம் வராம .... டபுள் அந்தர் பல்டி அடிபீங்கலாமே ................... அதே மாதிரி இன்னொருக்கா சார் Delete Replies Reply Reply கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 13 April 2015 at 11:41:00 GMT+5:30 சார் தங்கள் எழுத்துக்களில் இதும் ஓர் தனி இடம் பிடித்துவிட்டது ...அனைத்து நண்பர்களும் உரக்க கூறியது போல ....நீங்கள் புத்தகம் தயாராகி விடுமா என பட்ட அதே பதை பதைப்பை எங்களுக்குள்ளும் துவக்கவரி முதல் விதைத்து விட்டீர்கள் ....புத்தகம் தயார் என்றவுடன்தான் உயிரே வந்தது நிஜம். ஆனால் அடுத்த வாரம் என கூறி நச்சென அம்மி கல்லை தலையில் போட்டாலும் புத்தகம் சிறப்பாய் வர வேண்டும் என்ற தங்கள் என்னத்தால்தானே ...இந்த சாகசங்களுக்கு இடையிலும் தங்கள் பொறுப்புணர்வை மெச்சிய படி துடித்து கொண்டிருக்கிறது உயிர்.... ஆனால் செவ்வாய் அன்று எந்த வகையில் தாமதமானாலும்.....அதாவது பிறருக்கு கிடைத்து எனக்கு வந்து சேரவில்லை என்றால் புல்டோசரை என் மேல் ஏற்றிய பாவம் தங்களை சாரும் .... நண்பர்களில் கலை கட்டிய உற்ச்சாகம் மேலும் உற்சாகத்தை பன்மடங்கு பூசிவிட்டது ..... சூப்பர் சார் அற்புதம் நிகழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நமது வாசக நண்பர்களின் உற்ச்சாகம் கலந்த நன்றியை கூறி விடுங்கள்...சூப்பர் நன்றி சார் தங்களது உர்ச்சாகள் மீட்டிடும் வரிகளுக்கு ......தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இரத்த படலம் முழு தொகுப்பும் வெளியிடும் தங்கள் என்னத்தை முடிந்தால் மதியமே கூறி விடுங்கள் என்னால் நாளை பங்கு பெற இயலாது என்பதால் இப்போதே கூறி கொள்கிறேன்...இல்லாவிடில் நாளை இரவில் அறிவித்து விடுங்கள் நானும் துவக்கத்திலே பங்கு கொள்ள எதுவாக ...நன்றி சார் .... ReplyDelete Replies Reply கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 13 April 2015 at 11:45:00 GMT+5:30 சார் லார்கோ இரண்டாம் பாகமும் அருமை .....விஜய் லார்கோ அந்த கொடாளிலை தூக்கி செல்வது எதிரியை தீர்த்து கட்ட....சென்ற இதழில் , இறந்து கிடந்த fbi ஆசாமி துப்பாக்கியை தேடி எடுத்து செல்வாரே ...கை ரேகைகளை படர விடுவதுதானே அவரது ஸ்டைல் ReplyDelete Replies Reply Add comment Load more... Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) Total Pageviews Comics Lovers ஆன்லைனில் வாங்கிட : FACEBOOK BULLETIN BOARD Lion-Muthu Comics Promote Your Page Too Contact Form Name Email * Message * Feedjit Click below to buy CINEBOOK English Comics Online from us ! CLICK IMAGE FOR BOOKSELLERS LISTS Featured post ஒரு அட்டவணைத் திருவிழா !! OUR WEBSITE Click on the logo to go to official website About Me Vijayan View my complete profile Blog Archive ► 2021 (113) ► November (6) ► October (17) ► September (7) ► August (9) ► July (8) ► June (11) ► May (25) ► April (8) ► March (9) ► February (7) ► January (6) ► 2020 (102) ► December (6) ► November (6) ► October (6) ► September (6) ► August (9) ► July (8) ► June (11) ► May (9) ► April (12) ► March (12) ► February (8) ► January (9) ► 2019 (77) ► December (6) ► November (5) ► October (12) ► September (6) ► August (7) ► July (5) ► June (5) ► May (9) ► April (4) ► March (5) ► February (5) ► January (8) ► 2018 (83) ► December (4) ► November (5) ► October (6) ► September (10) ► August (7) ► July (8) ► June (6) ► May (6) ► April (7) ► March (11) ► February (6) ► January (7) ► 2017 (89) ► December (5) ► November (5) ► October (11) ► September (8) ► August (9) ► July (10) ► June (7) ► May (5) ► April (7) ► March (7) ► February (7) ► January (8) ► 2016 (83) ► December (6) ► November (5) ► October (6) ► September (6) ► August (10) ► July (8) ► June (9) ► May (8) ► April (5) ► March (6) ► February (7) ► January (7) ▼ 2015 (69) ► December (5) ► November (7) ► October (6) ► September (7) ► August (6) ► July (4) ► June (5) ► May (5) ▼ April (7) ஒரு பறக்கும் பால்யம் ! வேங்கையின் விஸ்வரூபம் ! இது புலியின் தினம்..! சித்திரையின் சந்தோஷம் ! வேங்கையின் திருவிழா !! கொஞ்சம் சிந்திங்க பாஸ் !! ரொம்பவே புதுசும்...ரொம்பவே பழசும்...! ► March (6) ► February (4) ► January (7) ► 2014 (66) ► December (4) ► November (7) ► October (4) ► September (8) ► August (6) ► July (6) ► June (4) ► May (4) ► April (8) ► March (4) ► February (5) ► January (6) ► 2013 (58) ► December (4) ► November (4) ► October (7) ► September (5) ► August (5) ► July (5) ► June (4) ► May (5) ► April (4) ► March (5) ► February (5) ► January (5) ► 2012 (66) ► December (5) ► November (4) ► October (3) ► September (4) ► August (5) ► July (3) ► June (5) ► May (4) ► April (9) ► March (8) ► February (7) ► January (9) ► 2011 (5) ► December (5) News 7 நண்பர்களே, வணக்கம். புது வருஷமும் புலர்ந்து மூன்று வாரங்களும் ஓட்டமெடுத்து விட்டாச்சு ; முன்னணியில் நிற்போருக்கு நம்பிக்கைகளோடு தடுப்பூசி... கடைசி க்வாட்டர் '21...! நண்பர்களே, வணக்கம். செப்டெம்பரின் முக்கால்வாசி கடந்து சென்றிருக்க, ஆண்டின் கடைசிக் க்வாட்டர் நம் முன்னே !! (" கடைசிக் க்வாட்டர்" ... சின்னச் சின்ன ஆசைகள் !! நண்பர்களே, வணக்கம். சான் பிரான்சிஸ்கோவுக்கும், லாஸ் ஏஞ்சலீசுக்கும் மத்தியில் ஒன்றரை நாட்களாய்த் தெறிக்கும் பயணங்களில் இங்கே ஒரே பிசி ! &quo...
இப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு வடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை சுவேதாசுவதர உபநிஷத விளக்கம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது: (முந்திய 100 | அடுத்த 100) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார். நூலகம்:375 ‎ (← இணைப்புக்கள்) (முந்திய 100 | அடுத்த 100) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார். "https://noolaham.org/wiki/index.php/சிறப்பு:WhatLinksHere/சுவேதாசுவதர_உபநிஷத_விளக்கம்" இருந்து மீள்விக்கப்பட்டது
இப் பக்கத்தில் தற்பொழுது உள்ளடக்கம் எதுவுமில்லை. நீங்கள் இப்பக்க தலைப்பை வேறு பக்கங்களில் தேடவோ அல்லது இப்பக்கத்தை தொகுக்கவோ முடியும்.
உங்கள் கூந்தல் உதிர்வை தடுக்க வேண்டுமா? அப்போ இந்த உணவுகளை மட்டும் தொடவே தொடாதீங்க..! | 7 worst foods that could cause hair loss expert reveals – News18 Tamil லைஃப்ஸ்டைல் CHANGE LANGUAGE தமிழ் ENGLISHहिन्दी मराठीગુજરાતીঅসমীয়া ಕನ್ನಡ বাংলা മലയാളം తెలుగు ਪੰਜਾਬੀ اردو ଓଡ଼ିଆ WATCH LIVE TV DOWNLOAD APP FOLLOW US ON Trending Topics :#மழை#பிக்பாஸ்#கிரைம்#பெண்குயின் கார்னர் தமிழ்நாடு சினிமா ராசிபலன் லைஃப்ஸ்டைல் விளையாட்டு இந்தியா உலகம் வணிகம் ஆன்மிகம் Live TV தமிழ்நாடு சினிமா ராசிபலன் லைஃப்ஸ்டைல் விளையாட்டு இந்தியா உலகம் வணிகம் ஆன்மிகம் Live TV Latest News மீம்ஸ் டெக் ஆட்டோ வேலை கல்வி ஆல்பம் வீடியோ Explainers Trending Games Win 1 Lakh – MC PRO Contest #CryptoKiSamajh Latest News மீம்ஸ் டெக் ஆட்டோ வேலை கல்வி ஆல்பம் வீடியோ Explainers Trending Games Win 1 Lakh – MC PRO Contest #CryptoKiSamajh Choose your district உங்கள் மாவட்டத்தைத் தேர்வுசெய்க கோயம்புத்தூர் மதுரை திருச்சி தேனி ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் கன்னியாகுமரி நாமக்கல் தஞ்சாவூர் புதுக்கோட்டை Home » photogallery » lifestyle » BEAUTY 7 WORST FOODS THAT COULD CAUSE HAIR LOSS EXPERT REVEALS ESR GHTA உங்கள் முடி உதிர்வை தடுக்க வேண்டுமா? அப்போ இந்த உணவுகளை மட்டும் தொடவே தொடாதீங்க..! நாம் உண்ணும் உணவுகள் ஆரோக்கியமானதாக இருக்கும் பட்சத்தில் உடல் உறுப்புகளும் ஆரோக்கியமடையும். அதன் மூலம் சரும பொலிவும் கிடைப்பதுடன் கூந்தல் உதிர்வையும் தடுக்க முடியும். News18 Tamil | January 17, 2021, 07:03 IST 1/ 9 ஆரோக்கியமான, வலுவான மற்றும் அடர்த்தியான கூந்தல் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் விரும்பத்தக்க ஒன்றாக இருக்கும். அழகான கூந்தலை பெற விலையுயர்ந்த முடி பராமரிப்பு தயாரிப்புகளைப் பயன்படுத்துவது மட்டுமல்ல. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதாலும் பெற முடியும். உடலின் உறுப்புகள் ஆரோக்கியமாக செயல்படும் போது அவை சரும பொலிவிலும், கூந்தலின் ஆரோக்கியமான வளர்ச்சியிலும் வெளிப்பட செய்யும். 2/ 9 அதன்படி நாம் உண்ணும் உணவுகள் ஆரோக்கியமானதாக இருக்கும் பட்சத்தில் உடல் உறுப்புகளும் ஆரோக்கியமடையும். அதன் மூலம் சரும பொலிவும் கிடைப்பதுடன் கூந்தல் உதிர்வையும் தடுக்க முடியும். நீங்கள் செய்யும் உணவுத் தேர்வுகள் உங்கள் தலைமுடிக்கு சேதம் விளைவிப்பதாகவும் அமையலாம் அல்லது சில அதிசயங்களை நிகழ்த்தவும் செய்யலாம். அந்த வகையில் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி கூந்தல் உதிர்வுக்கு தீர்வு காண வேண்டுமெனில் கீழ்காணும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. 3/ 9 1. சர்க்கரை : ஸ்னீக்கி அச்சுறுத்தல் உங்கள் தலைமுடிக்கும் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மோசமானது. இது, உடலில் கால்சியம் சேர்வதை தடுத்து எலும்பு தேய்மானத்தை உண்டாக்குகிறது. அதிக சர்க்கரை சாப்பிடுவதால், நீரிழிவு மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும் இன்சுலின் எதிர்ப்பு காரணமாக நீங்கள் முடியை இழக்க நேரிடலாம். சர்க்கரை கரும்பிலிருந்து தயாரிக்கப்பட்டாலும் பல இரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்படும் இவை உடலில் தீராத நோயான இதய பாதிப்பு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை உண்டாகும். மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் வழுக்கை ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சர்க்கரை, மாவுச்சத்து மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகள் இன்சுலின் எதிர்ப்புக்கு பின்னணியில் உள்ள முதல் காரணியாக இருக்கிறது. 4/ 9 2. ஆல்கஹால் : நமது தலைமுடி கெரட்டின் எனப்படும் புரதத்தால் ஆனது. கெரட்டின் உங்கள் தலைமுடிக்கு ஒரு நல்ல அமைப்பைக் கொடுக்கும். ஆனால் ஆல்கஹால் இந்த புரதத் தொகுப்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் முடி பலவீனமடைய காரணமாகவும் உள்ளது. மேலும், அதிக ஆல்கஹால் உட்கொள்வது ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி தலைமுடியின் வேர்பகுதியை செயலிழக்க செய்யலாம். 5/ 9 3. சோடா : டயட் சோடாக்களில் அஸ்பார்டேம் எனப்படும் ஒரு செயற்கை இனிப்பு உள்ளது. இது தலைமுடி வேர்களை சேதப்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நீங்கள் சமீபத்தில் முடி உதிர்தலை சந்திக்கிறீர்கள் என்றால், இந்த டயட் சோடாக்களை முழுமையாக தவிர்ப்பது நல்லது. அதேபோல, சில செயற்கை குளிர்பானங்களை அருந்துவது தற்காலிகமாக நாவுக்கு சுவை தரக்கூடியவையாக இருக்கும். ஆனால் இவை உடலில் சத்துக்களாக செயல்படுவதில்லை. உடல் ஆரோக்கியத்திற்கு குறைபாட்டையே உண்டாக்கும். அது போலவே இவை தலைமுடி வளர்ச்சியையும் அதிகமாக பாதிக்கும். 6/ 9 4. ஜங்க் புட் : ஜங்க் புட்ஸ் பெரும்பாலும் நிறைவுற்ற மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளால் நிறைந்திருக்கும். அவை உங்கள் உடலை பருமனாக்குவதோடு, இருதய நோய்களுக்கும் வழிவகுக்கிறது. அதேபோல தலைமுடி உத்தரவுக்கும் காரணமாக அமைகின்றது. மேலும், எண்ணெய் நிறைந்த உணவுகள் உங்கள் உச்சந்தலையை க்ரீஸாக மாற்றும் மற்றும் துளைகளை அடைத்து, முடி வேர்களின் மினியேட்டரைசேஷனுக்கு வழிவகுக்கும். அதே போல செயற்கை உணவுகளில் கலந்திருக்கும் இரசாயனங்கள், செயற்கை சுவையூட்டிகள் போன்றவை எல்லாமே கேடு தரக்கூடியவையே. அதனால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் இதையெல்லாம் தவிர்ப்பதே நல்லது. 7/ 9 5. பச்சை முட்டையின் வெள்ளைகரு : முட்டைகள் கூந்தலுக்கு மிகச் சிறந்தவை. ஆனால் அவற்றை பச்சையாக உட்கொள்ளக் கூடாது. பச்சை முட்டையின் வெள்ளைகரு, கெரட்டின் உற்பத்திக்கு உதவும் வைட்டமின் பயோட்டின் குறைபாட்டை ஏற்படுத்தும். பச்சை முட்டையில் வெள்ளை நிறத்தில் இருக்கும் அவிடின் தான் பயோட்டினுடன் இணைந்து அதன் குடல் உறிஞ்சுதலுக்கு இடையூறாக இருக்கிறது. 8/ 9 6. மீன் : அசைவ உணவுகளில் சிறந்தவையே மீன் உணவு தான். ஆனால் பாதரசம் நிறைந்த மீன் வகைகள் உடலுக்கு கேடு தருவது போன்று தலைமுடிக்கும் கேடு தருகிறது. அதிக அளவு பாதரசம் திடீரென முடி உதிர்வதற்கு வழிவகுக்கும். வாள்மீன், கானாங்கெளுத்தி, சுறா போன்ற கடல் நீர் மீன்கள் மற்றும் சில வகையான டுனா மீன்களில் பாதரசம் நிறைந்திருக்கும். இதை தவிர்ப்பதே நல்லது. செலெனிய வகை உணவுகளும் முடி உதிர்வை ஊக்கப்படுத்தும். கடல் உணவான சிப்பி, கோதுமை ரொட்டி போன்றவற்றில் இவை உண்டு. இதை முற்றிலும் தவிர்க்க வேண்டாம். ஆனால் அளவாக எடுத்துகொள்ள வேண்டும். 9/ 9 7. உயர் கிளைசெமிக் உணவுகள் (High-Glycemic Index Foods) : உயர் கிளைசெமிக் உணவுகள் தான் இன்சுலின் ஸ்பைக்கை ஏற்படுத்துகின்றன. சுத்திகரிக்கப்பட்ட மாவு, ரொட்டி மற்றும் சர்க்கரை போன்ற உணவுகள் அனைத்தும் உயர் கிளைசெமிக் குறியீட்டு உணவுகள் ஆகும். இந்த உணவுகள் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி இன்சுலின் மற்றும் ஆண்ட்ரோஜன்களில் ஒரு ஸ்பைக்கை ஏற்படுத்தும். அவை தலைமுடி வேர்களுடன் பிணைக்கப்பட்டு முடி உதிர்வதற்கு வழிவகுக்கும். அண்மைச்செய்தி ... ... ... ... ... Latest Story Links Trending Tag Latest Story TNPSCSmokingCongressChennai High courtTourismViral Videocollege studentAustraliaCaptain Virat KohliNandamuri Balakrishnacorona positiveTasmacActor AjithColors Tamil | கலர்ஸ் தமிழ்mohanlal
சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் சோழ நாட்டில் ஆனந்தபுரம் என்ற ஊர் இருந்தது. பெயரில் தான் ஆனந்தம் இருந்ததே தவிர மக்களின் வாழ்வில் அது இல்லை. 10 வருடமாகவே கடும் பஞ்சம் அந்த ஊர் மக்களை வாட்டி வதைத்தது. மக்கள் அனைவரும் கிழங்கையே தின்று வந்தனர். இதை அறிந்ததும் மன்னன் மிகவும் வருத்தப்பட்டான். அவனுடைய உணவுக்கூடத்திலோ மக்கள் அனைவரது பசியையும் தீர்க்குமளவுக்கு உணவு இல்லை. சரி!!! இருக்கும் உணவை அனுப்பினால் முடிந்த அளவு பசியைத்தீர்க்கலாமே என்று இருக்கும் உணவை ஒரு மாட்டு வண்டியில் அனுப்பினார். முதலில் வருகின்றவர்களுக்கே உணவு என்ற நிலையானது. 1000 மக்கள் இருக்கும் அந்த ஊரில் முதலில் வரும் 100 பேருக்கே உணவு என்ற நிலையானது. உணவு கிடைத்தவர்கள் நன்றாக சாப்பிட்டனர். முதல் நாள் வந்த 100 பேரும் அடுத்த நாள் மற்றவர்களை விட வேகமாக வர அவர்கள் சாப்பிட்ட உணவு உதவியது. இதுவே தினமும் நிகழ்ந்தது. இது தான் இன்றைய இட ஒதுக்கீட்டின் நிலை. இந்த இட ஒதுக்கீட்டை இரு தலைமுறைகள் பயன்படுத்திக் கொண்டது. இதற்கு மேல் இதே முறையில் இட ஒதுக்கீட்டை பயன்படுத்தினால் அது இதுவரை பயன்படுத்திய கூட்டத்தையே சென்றடையும். உதாரணத்திற்கு நான் என்னையே சொல்லலாம். நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்காக ஒதுக்கிய இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி பொறியியல் படித்தேன். நான் பொருளாதாறத்தல், பெற்றோரின் கல்வி முதலியவற்றால் பிற்படுத்தப்பட்டவன்தான். ஆனால் நான் இப்பொழுது ஒரு நல்ல வேலையில் இருக்கிறேன். எனக்கு அடுத்த சந்ததியினர் பிற்படுத்தப்பட்டவரா? அது எப்படி நியாயமாகும்? எப்படியும் நல்ல பள்ளியில் நகரத்தில் படிக்கும் என் வாரிசுகள், கிராமத்தில் சத்துணவுக்காவே பள்ளிக்கு வரும் வசதியற்ற பிள்ளைகளுக்கு கொடுக்கும் சளுகைளை பறிக்க போட்டிக்கு நிற்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு பிறப்பாலே அந்த உரிமை அளிக்கப்பட்டுள்ளது. இது என்னைப் போலவே சலுகைகளைப் பெற்று முன்னேறிய அனைவருக்கும் பொருந்தும். எனவே சலுகைக்கான தகுதி (Qualification, Criteria) மாற்ற வேண்டும். பெற்றோரின் கல்வி, பொருளாதாரம் முதலியவற்றைக் கொண்டே இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். பெற்றோர்களில் ஒருவறேனும் கல்லூரி படிப்பு பெற்றிருக்கும் குழந்தைகளுக்கு இட ஒதுக்கிடு மறுக்கப்பட வேண்டும். படிக்காதவர்களின் பிள்ளைகளும் அரசு பள்ளிகளில் படித்தால் மட்டுமே சலுகைகள் பெற வேண்டும். ஆகவே ஒரு தலைமுறைக்கு மேல் யாராலும் சலுகைகளைப் பெற முடியாது. படித்தவர்களின் பிள்ளைகள் ஓபன் கோட்டாவில் தான் வர வேண்டும். அதேப் போல் இட ஒதுக்கீடு என்று சீட்டு மட்டும் கொடுத்தால் வசதியற்றவர்கள் எப்படி படிப்பார்கள்? அதனால் அவர்களுடைய கல்லூரி (college + hostel) முழு செலவையும் அரசே ஏற்க வேண்டும். கலர் டீவியும், கம்ப்யூட்டரும் தருவோம் என்ற இரு அரசுகளும் சொல்லும் பொழுது, இதுவும் முடியும் என்றே நம்புகிறேன். இட ஒதுக்கீடின் சதவிகிதமும் 5 வருடத்திற்கு ஒரு முறை 10% குறைந்துக் கொண்டே வர வேண்டும். ஆக இன்னும் 35 வருடத்திற்கு பிறகு இட ஒதுக்கீடே தேவையில்லை என்ற நிலை வர வேண்டும். அதாவது பிற்படுத்தப்பட்டோர்/ தாழ்த்தப்பட்டோர் இல்லை என்ற நிலை வர வேண்டும். அறிவைக் கொடு போதும்….. என்னைவிட எவனும் உயர்ந்தவனும் இல்லை!!! தாழ்ந்தவனும் இல்லை. கல்வி இருந்தால் ஏகலைவனும் அர்ச்சுனனுக்கு நிகராணவனே!!! Filed under: Uncategorized | 43 Comments » நாள் காட்டி ஜூலை 2006 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 « ஜூன் ஆக » சமீபத்திய பதிவுகள் குட்டிப் பாப்பா சும்மா சும்மா… நெல்லிக்காய் – 12 இறுதி பாகம் நட்சத்திர நன்றி!!! தட்டுங்கள் திறக்கப்படும்!!! சூரியனுக்கு டார்ச் லைட்டு கண்ணன் – கர்ணன் கவுண்டர்’ஸ் டெவில் ஷோ (3) – தனுஷ் பாஸ்டன் சந்திப்பு – பாபாவின் பார்வையில் கற்றதும்… பெற்றதும் முந்தைய பதிவுகள் மே 2009 (1) ஜனவரி 2008 (1) திசெம்பர் 2006 (24) நவம்பர் 2006 (15) ஒக்ரோபர் 2006 (14) செப்ரெம்பர் 2006 (18) ஓகஸ்ட் 2006 (26) ஜூலை 2006 (23) ஜூன் 2006 (2) மே 2006 (3) எச்சரிக்கை இது முழுக்க முழுக்க வெட்டியாக பொழுதை கழிக்க ஆசைப்படுபவர்களுக்காக மட்டுமே!!! வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer. Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
2004 ம் ஆண்டு “கண்களால் கைது செய்” என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. “பருத்திவீரன்” படத்தில் நடித்து பிரபலமானதுடன் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். நடிகை பிரியாமணி கொரோனா ஊரடங்கில் அளித்த பேட்டியில் கூறியதாவது: “நான் ‘விராட பருவம்’ என்ற படத்தில் நக்சலைட்டாக நடித்து வருகிறேன். ஊரடங்கில் கதைகள் கேட்கிறேன். சினிமா துறையில் ஒரு காலத்தில் கதாநாயகனுக்கு ஒரு மரியாதை கதாநாயகிக்கு ஒரு மரியாதை என்று வித்தியாசம் இருந்தது. தற்போது அந்நிலை மாறிவிட்டது. காஜல் அகர்வால், தமன்னா, நயன்தாரா, சமந்தா போன்றவர்கள் மார்க்கெட்டை பொருத்து சம்பளம் வாங்குகின்றனர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். பணத்தின் மீது எனக்கு ஆர்வம் இல்லை. எனக்கு கொடுக்கும் சம்பளத்தில் மகிச்சியாக உள்ளேன். மேலும் எனக்கு நல்ல கணவர் மற்றும் குடும்பம் கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். திருமணமான மூன்றாவது நாளில் படப்பிடிப்பிற்கு சென்றேன். எனக்கு கணவரின் குடும்பத்தில் நல்ல ஆதரவு கிடைத்தது, எனவே சினிமாவில் நீட்டிக்க விரும்புகிறேன். என்னுடைய கணவர் தான் கால்ஷீட் விஷயங்களை கவனித்து வருகிறார். ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி போன்ற வில்லி வேடத்தில் நடிக்க எனக்கு ஆசையாக உள்ளது. முழு நீள நகைச்சுவை வேடத்தில் நடிக்கவும் ஆசை. படப்பிடிப்புகள் தற்போது துவங்குவது போல் தெரியவில்லை. எனவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன்” என்று நடிகை ப்ரியாமணி கூறியுள்ளார். Post Views: 0 Tags: சினிமா, தமிழ் சினிமா, பிரியாமணி, பேட்டி Post navigation ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார்…!!! நாங்க மட்டும் சும்மா இருப்போமா…! பதிலடி கொடுத்த சீனா …..! உற்று நோக்கும் உலக நாடுகள் …!! Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment Name * Email * Website வரலாற்றில் இன்று பல்சுவை வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று டிசம்பர் 3…!! December 3, 2021 Rugaiya beevi பல்சுவை வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று டிசம்பர் 2…!! December 2, 2021 Rugaiya beevi பல்சுவை வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று டிசம்பர் 1…!! December 1, 2021 Rugaiya beevi பல்சுவை வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று நவம்பர் 30…!! November 30, 2021 Rugaiya beevi NewsCard NewsCard is a Multi-Purpose Magazine/News WordPress Theme. NewsCard is specially designed for magazine sites (food, travel, fashion, music, health, sports, photography), news sites, shopping sites, personal/photo blog and many more. There are Front Page Template, Sidebar Page Layout, Top Bar, Header Image/Overlay/Advertisement, Social Profiles and Banner Slider. Also supports popular plugins like WooCommerce, bbPress, Contact Form 7 and many more. It is also translation ready. Rss பராமரிப்பின்றி இயங்கிய பேருந்துகள்…. தகுதி சான்றிதழ்கள் ரத்து…. அதிகாரிகளின் அதிரடி ஆய்வு…!! December 3, 2021 பழுதடைந்த காணப்பட்ட 12 பேருந்துகளின் தகுதி சான்றிதழ்களை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி, அரசு போக்குவரத்துக்… The post பராமரிப்பின்றி இயங்கிய பேருந்துகள்…. தகுதி சான்றிதழ்கள் ரத்து…. அதிகாரிகளின் அதிரடி ஆய்வு…!! appeared first on Seithi Solai. Gayathri Raji IND VS NZ : 2-வது டெஸ்ட் போட்டி ….டாஸ் போடுவதில் தாமதம் ….!!! December 3, 2021 இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனிடையே இரு அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. ஆனால்… The post IND VS NZ : 2-வது டெஸ்ட் போட்டி ….டாஸ் போடுவதில் தாமதம் ….!!! appeared first on Seithi Solai. Ramya kumar ALERT: அந்தமான் அருகே மீண்டும்…. மக்களே உஷார்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!! December 3, 2021 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் நல்ல மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது . நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன, இதனை தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் இயல்பை விட கூடுதலான மழை பொழிவு இருக்கும் என்று… The post ALERT: அந்தமான் அருகே மீண்டும்…. மக்களே உஷார்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!! appeared first on Seithi Solai. soundarya Kapil ”வலிமை” வில்லனுக்கு அஜித் கொடுத்த சர்ப்ரைஸ்…… என்னன்னு தெரியுமா……? December 3, 2021 அஜித் கார்த்திகேயாவின் திருமணத்திற்கு போனில் அழைத்து வாழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித். வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை” இந்த படத்தில் வில்லனாக நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். சமீபத்தில்… The post ”வலிமை” வில்லனுக்கு அஜித் கொடுத்த சர்ப்ரைஸ்…… என்னன்னு தெரியுமா……? appeared first on Seithi Solai. Sowmiya balamurugan அனைத்து அரசு துறைகளிலும் அதிரடி…. தமிழக அரசு சூப்பர் உத்தரவு….!! December 3, 2021 காகிதமில்லா நிர்வாகத்தை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசு முக்கிய உத்தரவு ஒன்றை தற்போது பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் நீரஜ் மிட்டல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது; “இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் அவரது ஆவணங்கள், சான்றிதழ்களை… The post அனைத்து அரசு துறைகளிலும் அதிரடி…. தமிழக அரசு சூப்பர் உத்தரவு….!! appeared first on Seithi Solai. Ramya Suresh அதிமுகவில் சசிகலாவா?…. உறுப்பினர் பதவி கூட இல்ல…. முன்னாள் அமைச்சர் பொன்னையன் காட்டம்….!!!! December 3, 2021 அதிமுகவில் சசிகலா அடிப்படை உறுப்பினராக கூட சேர்த்துக்கொள்ளப்படமாட்டார் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியுள்ளார். அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் இளைய மகளான நர்மதா-கௌதம் திருமணம் நேற்று சேலம் அருகே உள்ள சூரமங்கலத்தில் நடைபெற்றது. இதில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன்,… The post அதிமுகவில் சசிகலாவா?…. உறுப்பினர் பதவி கூட இல்ல…. முன்னாள் அமைச்சர் பொன்னையன் காட்டம்….!!!! appeared first on Seithi Solai. Subbu lakshmi “மழை நீரில் வழுக்கி விழுந்தாள்” நாடகமாடிய கணவர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!! December 3, 2021 மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு மழைநீரில் வழுக்கி விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் சென்னை மாவட்டத்திலுள்ள புரசைவாக்கம் பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமாவதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 5 வயதில்… The post “மழை நீரில் வழுக்கி விழுந்தாள்” நாடகமாடிய கணவர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!! appeared first on Seithi Solai. Gayathri Raji ”பிக்பாஸ் 5”…… வெளியே செல்ல பிரியங்கா எடுத்த முடிவு…… பரப்பரப்பான புரோமோ……!!! December 3, 2021 பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. 50 நாட்களை கடந்து மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீசனில் ஒவ்வொரு போட்டியாளரும் மற்றவர்கள்… The post ”பிக்பாஸ் 5”…… வெளியே செல்ல பிரியங்கா எடுத்த முடிவு…… பரப்பரப்பான புரோமோ……!!! appeared first on Seithi Solai. Sowmiya balamurugan JUST IN: தற்கொலைக்கான காரணம் என்ன…? செல்போனை ஆய்வு செய்ய முடிவு…!!!! December 3, 2021 முன்னாள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மா பாளையத்தை சேர்ந்தவர். 1983 இல் எப்எஸ்ஐ அதிகாரியாகத் தேர்ச்சி பெற்று வனத்துறையில் சென்னை உட்பட… The post JUST IN: தற்கொலைக்கான காரணம் என்ன…? செல்போனை ஆய்வு செய்ய முடிவு…!!!! appeared first on Seithi Solai. soundarya Kapil ஒமைக்ரான் எதிரொலி: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும்….. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு…!!! December 3, 2021 தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், இந்தியா மற்றும் தமிழகத்தில் தொற்று பாதிப்பு பரவாமல் இருப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில… The post ஒமைக்ரான் எதிரொலி: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும்….. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு…!!! appeared first on Seithi Solai.
Paytm IPO: ₹16,600 கோடி திரட்டப்போகும் பேடிஎம்; பங்குச்சந்தையின் மிகப்பெரிய IPO-வாக மாறுமா? | paytm ipo to begin next month - all set to become india-s biggest ipo - Vikatan Save the vikatan web app to Home Screen tap on Add to home screen. X Subscribe to vikatan Login செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் கனமழை: அப்டேட்ஸ் New ஆன்லைன் தொடர்கள் New My News ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் ராசி காலண்டர் மேலும் மெனுவில் Search Published: 27 Oct 2021 2 PM Updated: 27 Oct 2021 2 PM Paytm IPO: ₹16,600 கோடி திரட்டப்போகும் பேடிஎம்; பங்குச்சந்தையின் மிகப்பெரிய IPO-வாக மாறுமா? செ.கார்த்திகேயன் ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் Use App Paytm பேடிஎம் நிறுவனத்தின் இந்த ஐ.பி.ஒ வெளியீடு மிகப் பெரிய ஐ.பி.ஓ-வாக பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் சீன முதலீட்டில் இயங்கினாலும், தொடர்ந்து இந்தியர் மற்றும் இந்திய நிர்வாகக் குழுவின் கீழ் இயங்கிவரும் காரணத்தால் எவ்விதமான தடுமாற்றமும் சரிவும் இல்லாமல் இயங்கி வருகிறது. உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் இந்தியாவின் மிகப் பெரிய டிஜிட்டல் நிதிச் சேவை நிறுவனமான பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனம் `One97 Communications' பங்குச் சந்தையில் ஐ.பி.ஓ வெளியிட்டு நிதி திரட்ட முடிவு செய்திருந்தது. இதற்கான அனுமதியைக் கேட்டு செபி அமைப்புக்கு சில மாதங்களுக்குமுன் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், அதற்கான அனுமதியை செபி தற்போது வழங்கியிருக்கிறது. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டின்மூலம் சுமார் ரூ.16,600 கோடியை முதலீட்டாளர்களிடம் இருந்த இந்த நிறுவனம் திரட்ட இலக்கு நிர்ணயித்திருக்கிறது. கடந்த 2010-ம் ஆண்டு `கோல் இந்தியா' நிறுவனம் ஐ.பி.ஓ மூலம் ரூ.15,000 கோடி திரட்டியது. இதுவரை இந்தியாவில் அதிக தொகை திரட்டப்பட்ட ஐபிஓ இதுதான். ஐ.பி.ஓ Also Read IPO திருவிழா... முதலீடு செய்யும் முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள்! | Startup IPO | Nanayam Vikatan பேடிஎம் நிறுவனத்தின் இந்த ஐ.பி.ஒ வெளியீடு மிகப் பெரிய ஐ.பி.ஓ-வாக பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் சீன முதலீட்டில் இயங்கினாலும், தொடர்ந்து இந்தியர் மற்றும் இந்திய நிர்வாகக் குழுவின் கீழ் இயங்கிவரும் காரணத்தால் எவ்விதமான தடுமாற்றமும் சரிவும் இல்லாமல் இயங்கி வருகிறது. ஸொமேட்டோ ஐ.பி.ஓ வெற்றிக்குபின், இந்திய பங்குச் சந்தைக்கு வரும் இரண்டாவது பெரிய ஸ்டார்ட்அப் நிறுவனம் பேடிஎம். சமீபத்தில் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அடுத்தடுத்து ஐ.பி.ஓ வெளியிட்டு வருகின்றன. முதலில் மும்பை பங்குச் சந்தையில் ஸொமேட்டோ நிறுவனமும் அதன்பின்பு அமெரிக்கச் சந்தையில் ஃபிரஷ்வொர்க்ஸ் நிறுவனமும் தங்கள் பங்குகளை வெளியிட்டன. அதைத் தொடர்ந்து நைகா, பாலிசிபஜார், மொபிகிவிக், ஃபைன் லேப்ஸ், டெல்வரி ஆகிய நிறுவனங்கள் ஐ.பி.ஓ வெளியிடத் தயாராக உள்ளன. இதற்கிடையில் பேடிஎம் நிறுவனத்துக்கு செபியிடம் ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் ரூ.8,300 கோடியை புதிய பங்கு வெளியீட்டின் மூலமும், ஓ.எஃப்.எஸ் முறையிலும், அதாவது தனது நிறுவனத்தில் ஏற்கெனவே முதலீடு செய்திருக்கும் பங்குதாரர்களின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலமாக ரூ.8,300 கோடியையும் திரட்ட இந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக அதன் டி.ஆர்.ஹெ.பி ஆவணத்தில் தெரிவித்துள்ளது. அதே சமயம், முதலீட்டாளர்களின் தேவையைப் பொறுத்து பங்கு வெளியீட்டு அளவை ரூ.16,600 கோடியிலிருந்து ரூ.18,300 கோடியாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. வரும் நவம்பர் மாதத்துக்குள் இந்நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. IPO Also Read OYO மீது செபியிடம் புகார் அளித்துள்ள ஜோஸ்டல் நிறுவனம்; திட்டமிட்டபடி IPO வெளியாகுமா? தற்போதைய நிலையில், பேடிஎம் நிறுவனத்தில் பெர்க்‌ஷயர் ஹாத்வே, சாஃப்ட்பேங்க், அலிபாபா ஏ.ஜி.ஹெச் ஹோல்டிங்க்ஸ், டிஸ்கவரி கேப்பிட்டல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன. ஆண்ட் ஃபைனன்ஸியல்ஸ் நிறுவனம் அதிகபட்சமாக இந்த நிறுவனத்தின் 40 சதவிகிதப் பங்குகளை வைத்திருக்கிறது. ஸொமேட்டோ நிறுவனத்தின் பங்கு, வர்த்தகமாகத் தொடங்கிய முதல் நாளன்றே கணிசமான லாபம் தந்தது. அதுபோல், இந்த நிறுவனப் பங்கும் லாபம் தருமா என்கிற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடம் நிறையவே இருக்கிறது. பேடிஎம் என்பது பலரும் அறிந்த ஒரு பிராண்ட் என்பதால், பல முதலீட்டாளர்கள் இந்த ஐ.பி.ஒ.வில் முதலீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
தலைப்பு விபர மொழி பெயர்ப்பு: ஆங்கிலம் - அரபு - தெலுங்கு - அம்ஹாரிக் - மலயாளம் - போர்துகேயர் - திக்ரின்யா
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்றின், விநியோகப் பணியில் ஈடுபட்டிருந்தவரை வழிமறித்த கும்பல் ஒன்று, அவரை வாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளன. இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கோண்டாவிலைச் சேர்ந்த பாலச்சந்திரன் மதனகரன் வயது -43 என்பவரே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகி, தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கொள்ளைக் கும்பல் ஒன்றே இவ்வாறு வாளால் வெட்டிவிட்டு, அவரது மோட்டார் சைக்கிளை அபகரித்துச் சென்றுள்ளது என்று சுன்னாகம் பொலிஸார் முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசியலில் எல்லாம் எனக்கு ஆர்வம் எப்போதும் இருந்ததில்லை என்ற போதும் நேற்றைய கனவு எனக்கே சற்று ஆச்சர்யமாகத்தான் இருந்தது. அதில் நான் வடக்கத்திய அரசியல்வாதிகள் மோடிஜி, தெற்கத்திய 'காதல் மன்னன்' ஷைனிங் ஸ்டார் போன்றோர் அணிந்து பிரபலப்படுத்திய அந்த கொட்டுடன் இணைந்த பைஜாமாவை அணிந்திருக்கிறேன். என்னைச் சுற்றி நாலைந்து அமைச்சர்கள். ஒரு சீரியசான விவாதம் நடந்து கொண்டிருப்பதற்கான அறிகுறி அங்கே தென்பட்டது. ஒரு மந்திரி "நாட்டில் விலைவாசி மிகவும் உயர்ந்துவிட்டது, பெட்ரோல் ஒரு லிட்டர் இருநூறு ரூபாய். இப்படியே சென்றால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் எல்லோரும் தற்கொலை செய்து கொள்வார்கள்" அதை ஆமோதிப்பது போல் நான்கைந்து வழுக்கை மண்டைகள் தலையை ஆட்டின. இன்னொரு வெள்ளை வேட்டி பேசத் துவங்கியது, “அமெரிக்காவின் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதல பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. இதை தடுத்து நிறுத்தாவிட்டால் இந்த விலைவாசி ஏற்றத்தையோ, மக்கள் பிரச்சனைகளையோ தடுத்து நிறுத்தவே முடியாது.” என்கிறார். “உங்கள் மீது உள்ள நல்ல அபிப்ராயத்தினால்தான் கடந்த இரண்டு தேர்தல்களிலும் நமது கட்சிக்கு ஒட்டு போட்டு ஆட்சியில் அமர வைத்தார்கள். இப்போது இந்தப் பிரச்சனையைத் தீர்க்காவிட்டால் அடுத்த தேர்தலில் நாம் ஆட்சிக்கு வருவது சந்தேகம்தான்" என்று தன் பங்குக்கு குரல் கொடுத்தார் ஒரு தாடிவாலா. அதுவரை அமைதியாக இருந்த நான் அருகே இருந்த பானையிலிருந்து நீர் எடுத்து அருந்துகிறேன். குரலை செருமிக் கொண்டு பேசத் துவங்குகிறேன். இவை எல்லாமே உறக்கத்தில்தான் நிகழ்கிறது என்றபோதும் நான் என்ன பேசப் போகிறேன் என்ற ஆவல் எனக்கே தோன்றி நானே என்னை கவனிக்கத் துவங்குகிறேன்.”நீங்கள் சொல்வது எல்லாமே சரிதான். நாட்டின் இப்போதைய தேவை பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதும் விலைவாசியை கட்டுக்குள் வைப்பதும்தான். நான் அதற்கு ஒரு யோசனை வைத்திருக்கிறேன்.” என்றதும் அனைவரது கண்களும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. பாதி குடித்து வைக்கப்பட்டிருந்த காபி கோப்பையின் மீது அமர்ந்திருந்த ஈ கூட குடிப்பதை நிறுத்திவிட்டு என்னை உற்று நோக்கியது. "நான் சொல்லப் போற விஷயம் ஒருவேளை நமது கட்சியில் உள்ளவர்களுக்கும் பாதகமாக அமைய வாய்ப்பு இருக்கிறது. யாரும் இந்த யோசனையை ஏற்றுக் கொள்வார்களா என்பதும் தெரியவில்லை. ஆனால் நான் நேற்று குடியரசுத் தலைவரிடம் இதைப் பற்றிப் பேசினேன். அவரும் இந்த யோசனை மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் இதற்கென புதிய அவசர சட்டம் போட்டு உடனே அமலுக்கு கொண்டு வரலாம் எனவும் கூறினார்" பாதகமான விஷயமா, அது என்னவாக இருக்கும் என ஒவ்வொருவரும் சிந்திக்கத் துவங்கியிருந்தார்கள். அப்போது அறையின் மூலையில் வைக்கப்பட்டிருந்த ஏ.ஸி யிலிருந்துஅந்த டைல்ஸ் தரையில் விழுந்த நீரின் சப்தம் துல்லியமாகக் கேட்டது. கையில் வைத்திருந்த குவளைத் தண்ணீரை காலி செய்துவிட்டு "அந்தத் திட்டம் இதுதான்.” என்றதும் என்னோடு சேர்த்து அந்த ஐந்து அமைச்சர்களும், ஈயும் காதைத் தீட்டிக் கொண்டு கேட்கத் தயாரானோம். எங்களோடு கூட்டணியில் சேர அறைக்கு வெளியே ஒரு பல்லியும் தயாராக இருந்தது. “நாட்டில் லஞ்சத்தை ஒழிக்க ஆயிரம் சட்டம் போட்டாலும் செயல்படுத்தினாலும் நம் பிரச்சனைகள் தீரப் போவதில்லை. இந்த பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அது ஒரு சிலரிடம் ஒளிந்து கிடக்கும் கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வது தான்.” என்றதும் 'ஃப்பூ, இவ்வளவுதானா? இதை அந்தக்காலத்திலேயே சிவாஜி படத்துல ஷங்கர் சொல்லிவிட்டார்' என்பது போல ஒரு ஏளனப் பார்வையை தவழ விட்டார் தாடிவாலா. நான் தொடர்ந்தேன் "அது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதை நானும் அறிவேன். ஆனால் என்னுடைய யோசனை மூலம் அதை எளிதாக நடைமுறைக்கு கொண்டு வரலாம். இப்போதிருக்கும் ரூபாய்களை செல்லாத பணமாக அறிவித்துவிட்டு ரூபே என்றொரு புதிய பணத்தை அறிமுகம் செய்யப் போகிறேன். இப்போது கையில் வைத்திருக்கும் பணத்திற்கு மாற்றாக இந்த ரூபேயை வங்கிகளில் வந்து பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு செய்யும் போது பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரூபாய்கள் வெளியே வந்துதானே ஆக வேண்டும். ஒவ்வொரு பணத்திற்கும் கணக்கும், அதிகப்படியான பணம் வைத்திருப்பவர்கள் வருமான வரி கட்டியிருப்பதற்கான சான்றையும் காண்பித்தல் அவசியம், இன்னும் ஆறே மாதங்களில் பணவீக்கம் என்ன நாட்டில் உள்ள பெரும்பாலான பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.” அந்த ஏ.ஸி யிலும் தாடிவாலாவின் முகத்தில் வியர்வைப் பூக்கள் பூத்திருந்தது. மற்றவர்களுக்கும் உள்ளூர பயம் பரவத் துவங்கியது. “சூப்பரே" என்று கைதட்டி ஆரவாரம் செய்தது கோப்பையின் மேல் நின்றிருந்த ஈ. டிஸ்கி: இது எனக்குத் தோன்றிய ஒரு கனவு மட்டுமே. இது சாத்தியமா, இல்லையா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. பயணித்தவர் : aavee , நேரம் : 3:17 PM Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest 14 comments: sury siva July 20, 2016 at 4:52 PM கருப்பு பணம் கரன்சி லே மட்டும் இல்ல தலைவா !! சுப்பு தாத்தா. ReplyDelete Replies aavee July 21, 2016 at 6:02 AM தாத்தா எஸ் எஸ் ஐ நோ.. பட் கனவில் வந்ததை அப்படியே எழுதியிருந்தேன். :) Delete Replies Reply Reply Thulasidharan V Thillaiakathu July 20, 2016 at 5:43 PM அந்த ரூபே வந்தாலும் சில மாதங்களில் "கறுப்பு ரூபே" எனும் ரூபமாக மாறிவிடுமே...அப்புறம் அதை வெளியில் கொண்டு வர ரூபேயின் ரூபம் என்னவாகும் ஆவி??!!! ஹிஹிஹி கீதா ReplyDelete Replies aavee July 21, 2016 at 6:03 AM நிறைய மாற்றங்கள் எதார்த்தத்தில் இன்னும் பல சட்டங்கள் அதனோடு சேர்ந்து வர வேண்டும். ஆனால் அதெல்லாம் வாய்ப்பே இல்லை. Delete Replies Reply Reply Avargal Unmaigal July 20, 2016 at 5:48 PM வாலிப வயதில் இருக்கும் உங்களுக்கு ஆயிரக்கணக்கான கிளு கிளூ ஜிலு ஜிலு கனவகள் எல்லாம் வந்திருக்கும் அதையெல்லாம் சொல்லாமல் சும்மா இந்த அரசியல் கனவுகளை மட்டும் சொன்ன உங்களை வன்மையாக கண்டிக்கிறேன் ReplyDelete Replies Thulasidharan V Thillaiakathu July 20, 2016 at 5:54 PM ஹஹஹஹஹ் அட கரெக்ட்டுதான் இல்ல...??!! ஆனா அதுக்குத்தான் இந்த மதுரைத் தமிழன் அப்படின்ற வாலிபர் இருக்காரே..ஹஹஹ் கீதா Delete Replies Reply aavee July 21, 2016 at 6:05 AM //வாலிப வயதில் இருக்கும் உங்களுக்கு ஆயிரக்கணக்கான கிளு கிளூ ஜிலு ஜிலு கனவகள் எல்லாம் வந்திருக்கும் அதையெல்லாம் சொல்லாமல் // ஹிஹிஹீ Delete Replies Reply Reply Thulasidharan V Thillaiakathu July 20, 2016 at 5:50 PM என்ன ரூபமாக மாறினாலும், பொருளாதாரம் படித்த, இந்த நாட்டின் ஒரு பிரஜையாக உங்கள் கனவை ரசித்தேன் ஆவி!!! கீதா ReplyDelete Replies aavee July 21, 2016 at 6:05 AM நன்றி சேச்சி.. Delete Replies Reply Reply ஸ்ரீராம். July 20, 2016 at 7:51 PM அடடே... ReplyDelete Replies aavee July 21, 2016 at 6:05 AM :) Delete Replies Reply Reply வெங்கட் நாகராஜ் July 22, 2016 at 8:10 PM நல்ல கனவு. கனவிலாவது கருப்புப் பணம் வெளியே வரட்டும்! ReplyDelete Replies Reply Thulasidharan V Thillaiakathu November 9, 2016 at 1:42 PM ஆவி பாராட்டு மழை இந்தச் சேச்சியிடமிருந்து. இப்போது மீண்டும் உங்கள் பதிவை வாசித்து நன்றாக நினைவில் வைத்துக் கொண்டேன்!!!! சீரியஸாகச் சொல்லுகிறேன் இந்தப் பதிவை அப்படியே, மற்றும் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, இல்லை என்றால் ஹிந்தியில் மொழி பெயர்த்து மோடிஜிக்கு அனுப்பி வையுங்கள். உண்மையாகத்தான் சொல்லுகிறேன். இந்த லிங்கையும் அனுப்பிக் கூடவே தமிழ் தெரிந்த ஒருவரையும் அங்கு தொடர்பு கொண்டு மோடிக்குச் சொல்லுங்கள் இப்படி ஒரு இளம் குடிமகன் 5,6 மாதங்களுக்கு முன்பே கனவு கண்டேன் என்று யார் கண்டா மோடிஜி ஒருவேளை உங்களுக்கு அவரது அவையில் ஒரு பதவி கொடுத்தாலும் கொடுப்பார். ஆவி கனவு காணுங்கள் என்று!!!!!!பேட்டென்ட் பண்ணுங்க!!!! இதுவும் கறுப்பாக மாறாமல் இருக்க இப்போதிருந்தே கடுமையானச் சட்டங்கள் வர வேண்டும்.. கீதா ReplyDelete Replies Reply Thulasidharan V Thillaiakathu November 9, 2016 at 1:42 PM இதைச் சுட்டி ஒரு பதிவு போடுங்கள் ஆவி கீதா ReplyDelete Replies Reply Add comment Load more... படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க.. Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) இதுவும் பிடிக்கும்.. படிங்க!! கடந்த காலப் பயணங்கள்.. ► 2020 (3) ► Aug (1) ► Apr (1) ► Jan (1) ► 2019 (3) ► Dec (1) ► Nov (2) ► 2017 (7) ► Nov (1) ► Jul (1) ► Jun (1) ► May (3) ► Feb (1) ▼ 2016 (18) ► Dec (3) ► Sep (1) ▼ Jul (4) மயக்குறு மகள் கனவு அரசியல்! Blind Date ம் "ஙே" மொமேன்ட்டுகளும் பொதுவில் சொல்லக் கூடிய வார்த்தையா F**K? 18+ ► Apr (1) ► Mar (5) ► Feb (2) ► Jan (2) ► 2015 (33) ► Dec (4) ► Nov (7) ► Oct (3) ► Sep (4) ► Aug (1) ► Jul (1) ► Apr (6) ► Mar (1) ► Feb (5) ► Jan (1) ► 2014 (89) ► Nov (4) ► Oct (2) ► Sep (7) ► Aug (6) ► Jul (3) ► Jun (15) ► May (7) ► Apr (18) ► Mar (10) ► Feb (9) ► Jan (8) ► 2013 (163) ► Dec (18) ► Nov (20) ► Oct (19) ► Sep (19) ► Aug (11) ► Jul (8) ► Jun (9) ► May (6) ► Apr (11) ► Mar (14) ► Feb (12) ► Jan (16) ► 2012 (28) ► Dec (8) ► Nov (11) ► Oct (6) ► Sep (1) ► Aug (2) ► 2011 (19) ► Aug (1) ► Apr (1) ► Mar (5) ► Feb (8) ► Jan (4) ► 2010 (38) ► Dec (3) ► Nov (2) ► Oct (6) ► Sep (8) ► Aug (8) ► Jul (6) ► May (1) ► Mar (3) ► Feb (1) பயணத்தில் உடன் வர.. Popular Posts ரயிலில் வந்த மயில்!! சுஜாதா வெறும் பொழுதுபோக்கு எழுத்தாளர் மட்டுமே..! - எஸ்.ரா யார் படிக்க இந்த "ஆவிப்பா" ? ஸ்கூல் பையனுக்கு வாழ்த்து சொல்லும் பிரபலங்கள்.. அன்புக்குரியவர்கள் அலங்கரித்த ஆவிப்பா மேடை.. தலைவாரிப் பூச்சூடி உன்னை- சில நன்றிகள் பயணிகள்-நிழற்குடை - 2014FEB06 ஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி! அமெரிக்க வாழ்க்கை!! உறக்கம் பறித்த ஸ்னேகிதியே !! (திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி) எது பிடிக்கும்?? சினிமா (162) திரை விமர்சனம் (103) கவிதைகள் (39) தொடர்கதை (35) கட்டுரை (26) சிறுகதைகள் (22) கொண்டாட்டங்கள் (21) இசை விமர்சனம் (20) பயணக்கட்டுரை (18) இன்ஜினியர் (17) காதல் (17) நகைச்சுவை (17) விளையாட்டு (12) செய்திகள் (10) என் கூட ஓடி வர்றவுக!! venkatnagaraj அவரும் நானும் - தொடர் - பகுதி மூன்று 8 hours ago எங்கள் Blog ஏணிமலை 2/5 12 hours ago Avargal Unmaigal தந்தையைப் பறிகொடுத்த பெண்ணிடம் நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி நடந்து கொள்ளும் கிழ்தரமான செயல்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் பல சமூக நலத் திட்டங்களின் இன்னோறு திட்டமாக நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிருவப்படுவது குறிப்பிடலாம். சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் பிரதேசங்களின் மக்களின் சுத்தமான குடிநீர் தேவையை பூர்த்திசெய்து இந்த நோய் நாட்டின் அகற்ற கடற்படை முன்நின்று வழிநடத்துகிறார்கள். அதின் இன்னோறு திட்டமாக பதவிய அளகிம்புலவ சேதியகிரி ரஜமகா விகாரை, வவுனியா மடுகந்த, பொளிபிதிகம தலாவ, பல்லேகல மற்றும் பொத்துவில் ஆகிய இடங்களில் நிறுவப்பட்ட 05 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இன்று (23) மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கபபட்டது. நிறுவப்பட்டுள்ள நீர்சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் தலாவையில் 450 குடும்பங்களும், மடுகந்தவில் 400 குடும்பங்களும், சேதியகிரி ரஜமகா விகாரையில் தரித்துள்ள பௌத்த துறவிகள் மற்றும் அதனைச் சூழவுள்ள 350 குடும்பங்களும்,பல்லேகளவில் 600 குடும்பங்களும், பொத்துவில்லில் 680 குடும்பங்களும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர். மேலும், சேதியகிரி ரஜமகா விகாரையில் நிறுவப்பட்ட நீர்சுத்திகரிப்பு நிலையத்திற்கான நிதி அனுசரணை புத்த சாசன அமைச்சினால் வழங்கப்பட்ட அதேவேளை இதர நீர்சுத்திகரிப்பு நிலையங்கள், சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியின் நிதி அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்டன. இந்த சமூக நலத் திட்டம் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு தன்னுடைய அறிவு மற்றும் தொழில்நுட்ப திறனை சாதகமாக பயன்படுத்தி குறுகிய நேரத்துக்குள் குறைந்த செலவின் செய்யப்படும். இது வரை 112 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிருவப்பட்டு 50,455 குடும்பங்களுக்கு மற்றும் 40,600 மேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். எதிர்காலத்திலும் இத்தகைய பல சமூக சேவைகள் இலங்கை கடற்படை மூலம் நடத்தப்படும். அது அபாயகரமான சிறுநீரக நோய் இலங்கையின் அகற்ற உதவாகும். எங்களை தொடர்புக்கொள்ள கடற்படைத் தலைமயைகம் கொழும்பு தொ.பே இல: +94 11 7190000 : +94 11 2421151 தொடர்புடைய இணைப்புகள் Galle Dialogue பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சகம் இலங்கை ராணுவம் இலங்கை விமானப்படை Copyright © Sri Lanka Navy 2020 | Designed and maintained by Directorate of Naval Information Technology
இலங்கையில் உள்ள ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர்கள் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு இலங்கையில் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குரூப் கேப்டன் சோன் அன்வின் (Sean Unwin) மற்றும் புதிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்க உள்ள கேப்டன் இயன் கெய்ன் (Ian Cain) ஆகியோர் இன்று (2020 டிசம்பர் 01) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தனர். இலங்கையில் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர், குரூப் கேப்டன் சோன் அன்வின் தனது பதவியில் இருந்து விலகுவதற்கு முன் புதிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்க உள்ள கேப்டன் இயன் கேன் அறிமுகப்படுத்துவதுக்காக நடத்திய இந்த சந்திப்பில் கடற்படைத் தளபதியும் பாதுகாப்பு ஆலோசகர்களும் பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்களில் நல்லுறவு கலந்துரையாடினர். மேலும், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினரும் நினைவு பரிசுகளை பரிமாறிக்கொண்டனர். எங்களை தொடர்புக்கொள்ள கடற்படைத் தலைமயைகம் கொழும்பு தொ.பே இல: +94 11 7190000 : +94 11 2421151 தொடர்புடைய இணைப்புகள் Galle Dialogue பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சகம் இலங்கை ராணுவம் இலங்கை விமானப்படை Copyright © Sri Lanka Navy 2020 | Designed and maintained by Directorate of Naval Information Technology
தி.மண்டபம், பழங்குடியின இருளர் பெண்களை பாலியல் வன்முறை செய்த கிரிமினல் போலீசாரை கைது செய்! 5.12.11 கண்டன ஆர்ப்பாட்டம் | புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி Home அறிமுகம் திரைப்படங்கள் போராட்ட செய்திகள் இணைப்புகள் நூலகம் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி Entries RSS | Comments RSS தொடர்புக்கு: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675 மின்னஞ்சல்: rsyfchennai@gmail.com வருகைப் பதிவேடு 214,413 பார்வைகள் தொகுப்புகள் தொகுப்புகள் Select Month September 2012 August 2012 July 2012 June 2012 May 2012 April 2012 March 2012 February 2012 January 2012 December 2011 November 2011 October 2011 September 2011 August 2011 July 2011 April 2011 March 2011 August 2010 June 2010 April 2010 March 2010 February 2010 January 2010 December 2009 November 2009 October 2009 September 2009 August 2009 July 2009 June 2009 March 2009 February 2009 அண்மைய இடுகைகள் “எம் தாய்மண் உணர்ச்சிக்கு ஈடாகுமா உன் கூலிப்படையின் சம்பள உணர்ச்சி!” கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்! உலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு…! சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு கூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு! நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு!! தோழர் மாவோ: எம் விடுதலைப்பாதையில் உன் சிந்தனை ஒளிவெள்ளம்! பார்ப்பனக் குடுமியில் பாரதியின் மீசை உயர்நீதிமன்ற 150வது ஆண்டு விழா யாருக்காக! இஸ்ரோ செஞ்சுரியினால் இந்தியனுக்கு என்ன பயன்? கல்யாண் ஜூவல்லர்ஸ் புரட்சியை மிஞ்சிய ரஜினியின் புரட்சி! நீ தான் ஆசிரியன் – கவிதை பக்கங்கள் அறிமுகம் திரைப்படங்கள் போராட்ட செய்திகள் இணைப்புகள் நூலகம் கருப்பொருள் கருப்பொருள் Select Category 1 அசை படங்கள் அடிப்படை உரிமை அடிமை மோகம் அதிகார வர்க்கம் அமெரிக்க பயங்கரவாதம் அரங்கக் கூட்டம் அரசியல் அழுகி நாறும் முதலாளித்துவம் ஆசான்கள் ஆதிக்க சாதிவெறி ஆர்.எஸ்.எஸ் ஆர்ப்பாட்டம் ஆவணப்படம் இந்திய ராணுவம் இந்து பயங்கரவாதம் இந்து பாசிசம் இந்து மதம் இளைஞர்கள் இவர் தான் லெனின் ஈழம் உயர் கல்வி உரைவீச்சு உலகமயமாக்கல் உளவியல் உளவு வேலை உள்ளிருப்பு போராட்டம் உழைக்கும் மகளிர் தினம் உழைக்கும் மக்கள் ஊடகங்கள் ஊடகம் எது தேசபக்தி ஏகாதிபத்திய அடிமை ஏகாதிபத்திய கைக்கூலிகள் ஏகாதிபத்தியம் ஓட்டுப் பொறுக்கிகள் ஓவியங்கள் கட்டுரை கம்யூனிசம் கருத்தரங்கம் கருத்துப்படம் கல்வி உரிமை கல்வி கட்டணக்கொள்ளை கல்வி கட்டுரை கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாடு கல்வி தனியார்மய ஒழிப்பு கல்வி தனியார்மயம் கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு கழிசடைகள் கவிதை கவிதைகள் காங்கிரஸ் காங்கிரஸ் துரோக வரலாறு காதல் – பாலியல் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி கார்ல் மார்க்ஸ் கிரிக்கெட் சூதாட்டம் கீழைக்காற்று குடும்பம் குறுக்கு வெட்டு பகுதி குழந்தைகள் கூடங்குளம் சட்டக் கல்லூரி சமச்சீர் கல்வி சமூக விமர்சனம் சாதி மறுப்பு சாலை மறியல் சி.பி.எம் சினிமா சினிமா கழிசடைகள் சிறப்புக் கட்டுரைகள் சிறு வெளியீடு சுவரொட்டி சென்னை புத்தகக் கண்காட்சி சோசலிசம் சோவியத் திரைப்படங்கள் சோவியத் யூனியன் ஜெயாவின் பேயாட்சி டாடா டைஃபி தனியார்மய கல்வியின் லாபவெறி தனியார்மயம் தாராளமய பயங்கரவாதம் தெருமுனைக்கூட்டம் தேசிய இனவெறி தேர்தல் பாதை தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் தொழிலாளர் வர்க்கம் தோழர் ஸ்டாலின் நக்சல்பாரிகள் நச்சுப் பிரச்சாரம் நவம்பர் புரட்சி நாள் நாகரீகக் கோமாளி நீதித்துறை நுகர்வு கலாச்சாரம் நூல் அறிமுகம் நூல்கள் பகத்சிங் பள்ளி மாணவர்கள் பழங்குடியின மாணவர்கள் பாசிசம் பாடல்கள் பார்ப்பனிய கொடுமைகள் பார்ப்பனியம் பிரச்சார இயக்கம் பிராந்திய மேலாதிக்கம் பு.மா.இ.மு புகைப்படங்கள் புதிய கலாச்சாரம் புத்தகக் கண்காட்சியில் புமாஇமு புரட்சி புரட்சிகர கவிதைகள் புரட்சிகர திருமணம் புரட்சிகர பாடல்கள் பெட்ரோல் பேட்டி போராடும் உலகம் போராட்ட செய்திகள் போராட்ட நிதி போராட்டத்தில் நாங்கள் போராட்டம் போலி கம்யூனிஸ்டுகள் போலி சுதந்திரம் போலி ஜனநாயகத் தேர்தல் போலி ஜனநாயகம் போலீசு ஆட்சி ம.க.இ.க மக்கள் கலை இலக்கியக் கழகம் மறுகாலனியாக்கம் மாணவர் விடுதி மாணவர்கள் மாணவர்கள்-இளைஞர்கள் முதலாளித்துவ பயங்கரவாதம் முதலாளித்துவம் முல்லைப் பெரியாறு மெட்ரோ ரயில் மே தினம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் லெனின் வணிகமயம் விடுதலைப் போர் விலைவாசி உயர்வு விளையாட்டு வெளியீடுகள் ஸ்டாலின் தி.மண்டபம், பழங்குடியின இருளர் பெண்களை பாலியல் வன்முறை செய்த கிரிமினல் போலீசாரை கைது செய்! 5.12.11 கண்டன ஆர்ப்பாட்டம் Posted on December 4, 2011 by புமாஇமு Share this: Twitter Facebook Like this: Like Loading... Related Filed under: அதிகார வர்க்கம் | Tagged: அரசியல், கண்டன ஆர்ப்பாட்டம், காக்கிச்சட்டை ரவுடிகள், காவல்துறை, சமூகம், ஜெயலலிதா, ஜெயா, தமிழக அரசு, தமிழகம், நிகழ்வுகள், பரமக்குடி துப்பாக்கிசூடு, மனித உரிமை பாதுகாப்பு மையம், வெறியாட்டம் | « அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கிடைக்காத நிலையில், கோயில்களில் கழிப்பறை கட்டும் ஜெயா அரசின் வக்கிரம்! NCBH வைரவிழா : நிலப்பண்ணையின் கைகளினால் “தோழர்.கார்ல் மார்க்சின்” நூலை வெளியிட்ட போலி கம்யூனிஸ்டுகளை புறக்கணிப்போம்! » Leave a Reply Cancel reply Enter your comment here... Fill in your details below or click an icon to log in: Email (required) (Address never made public) Name (required) Website You are commenting using your WordPress.com account. ( Log Out / Change ) You are commenting using your Google account. ( Log Out / Change ) You are commenting using your Twitter account. ( Log Out / Change ) You are commenting using your Facebook account. ( Log Out / Change ) Cancel Connecting to %s Notify me of new comments via email. Notify me of new posts via email. Δ புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2012 மின்னிதழ் வினவு செய்திகள் நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சுப்பிரமணியனின் புரட்சிகர உணர்வை வரித்துக் கொள்வோம் ! AFSPA -ஐ இரத்து செய் : நாகாலாந்து கிராம மக்களை சுட்டுக் கொன்ற துணை இராணுவப்படை புதிய ஜனநாயகம் டிசம்பர் 2021 மின்னிதழ் ! வேளாண் சட்டங்கள் வாபஸ் : மோடியை பணியவைத்த விவசாயிகள் போராட்டம்! கர்நாடகா : கிறிஸ்துவ ஜபக் கூட்டங்களை தடுக்கும் பஜரங்தள் ! பாகிஸ்தானின் பஜ்ரங்தள் : ‘தெஹ்ரிக்-இ-லப்பைக் பாகிஸ்தான்’ கட்சி | கருத்துப்படம் முல்லைப் பெரியாறு அணையை தகர்க்கத் துடிக்கும் கேரள அரசு ! புதிய ஜனநாயகம் டிசம்பர் – 2021 அச்சு இதழ் ! 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் – விவாதம் நடத்தினால் என்ன பயன் ? 12-ம் வகுப்பு தேர்வில் குஜராத் கலவரம் தொடர்பான கேள்வி : பதறிய சி.பி.எஸ்.இ தமிழில் எழுத வாசகர்கள் குறிச்சொற்கள் 1 அசை படங்கள் அடிப்படை உரிமை அரசியல் அழுகி நாறும் முதலாளித்துவம் ஆர்ப்பாட்டம் ஈழம் ஓட்டுப் பொறுக்கிகள் கருத்துப்படம் கல்வி கட்டணக்கொள்ளை கல்வி தனியார்மயம் கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு கவிதைகள் குறுக்கு வெட்டு பகுதி கூடங்குளம் சமச்சீர் கல்வி ஜெயாவின் பேயாட்சி தாராளமய பயங்கரவாதம் தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் பகத்சிங் பார்ப்பனிய கொடுமைகள் பு.மா.இ.மு புரட்சிகர கவிதைகள் போராட்ட செய்திகள் போராட்டத்தில் நாங்கள் போராட்டம் போலி ஜனநாயகம் மறுகாலனியாக்கம் மாணவர்கள் வெளியீடுகள் Create a free website or blog at WordPress.com. WP Designer. Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
தெலுங்கு மொழியிலே குதிரையென்றால் குர்ரம் என்று சொல்வார்கள். இப்போ எதுக்கு தெலுங்கு என்று கேட்காதீர்கள். மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு ஸ்டாலின் அவர்களின் எதிர்ப்பு காரணமாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்திக்குப் பதிலாக தெலுங்கினை விருப்ப மொழியாக மாற்றியதற்கும், தன்னை மலையாளி என்று கூறிய திரு.கருணாநிதியை தீவிர விசாரணைக்குப் பிறகு தெலுங்கர் என்று திட்டவட்டமாக திரு.எம்.ஜி.ஆர். அறிவித்ததற்கும் நான் தெலுங்கைப் பற்றி பேசுவதற்கும் ஒரு சம்மந்தமும் இல்லை – எனக்கு […] Posted in Politics, Religion, TamilTagged , #bjp#CAB#CitizenshipAmmendmentBill2019#Eelam#India#IndiaSupportsCAB#Srilanka#TamilLeave a comment அவருக்கு மட்டுமா? On December 5, 2019 By vaanaram கிராமத்துல ஒரு கதை சொல்லுவாங்க — கவுண்டமணி காமெடியாக் கூட வந்திருக்கு — கிராமத்து நாட்டாமை ரொம்ப செல்வாக்கா இருக்காரு. அவரோட மச்சானுக்கு பொறாமை. ஒரு நாள் நாட்டாமையோட மனைவி என்னோட தம்பியையும் பெரிய மனுஷனாக்கி விடுங்களேன்னு ஒரே பொலம்பல். நாட்டாமையும் போகுமிடத்துக்கெல்லாம் மச்சானைக் கூட்டிச் செல்கிறார். ஒரு இழவு வீட்டுக்குச் செல்கிறார். மகனை இழந்த தாய் கதறுகிறார். “ நீங்கள் அவருக்கு மட்டுமா? எங்கள் எல்லோருக்கும் தாய்” என்று […] Posted in Development, History, International, PoliticsTagged , #bjp#CAB#IndiaLeave a comment யார் தலைவன் On October 12, 2019 By vaanaram என்னங்க உங்க தல வேட்டி சட்ட போட்டு கலக்கிட்டாரு போல? என்ன இப்படி சொல்லிட்டீங்க. தல மொத மொதல நடிச்சதே ஒரு வேட்டி விளம்பரத்துல தானே. சும்மாவா? என்ன சொல்லுறீங்க? தல அஜித் நடிச்ச விசுவாசம் பத்தி தானே கேட்டிங்க? இல்ல இல்ல, நான் சொன்னது சினிமா தல இல்ல. நிஜ வாழ்க்கையில், நம் இந்தியாவுக்கே தல. பிரிதமர் மோடி அவர்களை தான் சொன்னேன். ஓ, நீங்க மகாபலிபுரம் விசிட் பத்தி […] Posted in InternationalTagged , #ChennaiSummit#China#India#NaMosteXiLeave a comment சந்திராயன் : அந்த சில நிமிடம் On September 6, 2019 September 6, 2019 By vaanaram இன்னும் சில மணித்துளிகள் தான் என்று காத்திருந்த நமக்கு இதோ வந்தே விட்டது அந்த சில மணி துளிகள். விக்ரம், இன்னும் சிறிது மணித்துளிகளில் தரை தொட்டு விடும். தரை என்று சொல்வது சரியா? புவியிருப்பு சக்தி இருந்தால் தானே அது தரை? இங்கு தான் புவியிருப்பு இல்லையா? நிலவிருப்பு இருக்குமோ? இருக்கட்டும். ஆம், விக்ரம் நிலவில் கால் பாதிக்கும் நேரம், அதோ, அங்கே நீல வானிலிருந்து பல தூய […] Posted in Development, InternationalTagged , #Chandrayaan2#India#LunarMission#MoonLeave a comment ஊரு சுத்தும் மோடி! இந்தியா பக்கம் வாடி! On September 6, 2019 September 6, 2019 By vaanaram திரைகடலோடியும் திரவியம் தேடு! இது யாருக்கு சொன்னாங்களோ தெரியாது. நம்ம பிரதமர் மோடி திரவியம் தேடுறாரா தெரியாது, ஆனா என்னமா ஊரு சுத்துறாரு, பார்ரா! மனுஷன் நம்ம வரி பணத்துல இது வர 55 வாட்டி வெளிநாடு போய் வந்திருக்காரு! அதுல ரஷ்யாவுக்கு மட்டுமே 4 தடவைபோய் வந்திருக்காரு! அப்படி ரஷ்யால மனுஷன் பண்ணது என்னவா இருக்கும்? கிழக்கு பொருளாதார மன்றம் (Eastern Economic Forum, EEF) இந்த EEF […] Posted in Development, Economy, International, TamilnaduTagged , #Chennai#India#Russia#Tamilnadumodi1 Comment ஒரு முகமாகும் பன்முகம் On June 22, 2019 July 4, 2019 By vaanaram பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலை இந்தப் பன்முகத்தன்மையைக் கேள்விக்குறியாக்குவதோடு அதன் அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்க்கிறது. பன்முகத்தன்மை இப்போது பலமுனை சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. பன்முகத்தன்மை அழிந்தால் இந்தியாவின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் – இப்படிப்பட்ட வாதங்கள் அதிகமாக ஒலிக்கத் துவங்கியுள்ளது, குறிப்பாக மோடி இரண்டாம் முறையாகப் பிரதமராகப் பதவியேற்றதில் இருந்து. பன்முகத்தன்மை சந்திக்கும் சவால்கள் என்னென்ன? உண்மையிலேயே பன்முகத்தன்மைக்கு எதிராக யுத்தம் ஆரம்பித்துள்ளதா? யார் இதன் பின்னே இருக்கிறார்கள்? […] Posted in History, ReligionTagged , #Diversity#IndiahindumodiLeave a comment வேட்டை… On February 27, 2019 May 27, 2019 By vaanaram பிப்ரவரி 14ம் தேதி புல்வாமாவில் நடந்த துயர சம்பவங்களுக்கு பின், இந்திய நாட்டில் ஒட்டுமொத்த இந்தியர்களின் பொதுவான எண்ணம் அண்டை நாட்டுக்கு தக்க பதிலடி தரவேண்டும் என்பதாகவே இருந்தது. அன்று நடந்தவற்றையும் அதன் பின் நிலவிய மக்களின் மனப்போக்கினை பற்றியும் தெளிவாக இங்கு பதிவிட்டிருந்தேன். அன்று முதல், ஒவ்வொரு இந்திய குடிமகனும், நம் ராணுவத்திற்கு பலம் சேர்க்க குரல் எழுப்பிய வண்ணமே இருந்தனர். அதுமட்டுமல்ல, ராணுவத்தை எதிர்த்து தேச விரோத குரல் எழும்பிய போதெல்லாம் அக்குரலை […] Posted in International, PoliticsTagged , #India#IndiaStrikesBack#SurgicalStrikemodiLeave a comment இராணுவ வீரர் என்னும் நம் சொந்தம் On February 17, 2019 July 4, 2019 By vaanaram பிப்ரவரி 14, காதலர்கள் தினம். ஒருபுறம், காரணம் யாதாயினும் காதல் செய்யுங்கள், ஆதலால் காதல் செய்யுங்கள் என்று அன்பை வளர்க்க கூறிக்கொண்டிருக்கும் சாமானியர்கள். மறுபுறம் காதலில் நம்பிக்கை உள்ளவர்கள் தங்கள் சுதந்திரத்தை அனுபவித்து கொண்டிருந்த வேளை. இதற்கிடையில், இது ஓர் சமூக பேரழிவு என்று இன்னும் சிலர் தங்கள் கருத்து சுதந்திரத்தை முழுமையாக ரசித்து கொண்டிருக்கையில். அங்கு, என் மண்ணின் பாதுகாப்பிற்காக இரவு பகல் பாராமல் உழைத்த என் அருமை […] Posted in History, PoliticsTagged , #Army#CRPF#India#IndianArmy#PulwamaLeave a comment கடமையும் உரிமையும்.. On January 27, 2019 July 4, 2019 By vaanaram #கடமை #உரிமை இன்னும் நம் நாட்டில் எதற்காகக் குடியரசு தினம் கொண்டாடுகிறோம் என்று கூடத் தெரியாத அறிவிலி தலைவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்பேற்பட்ட தலைவர்கள்தான் அப்பாவி தொண்டர்களை தூண்டி விட்டு ‘வாழ்வுரிமை போராட்டம்‘ ‘தமிழர் உரிமை போராட்டம்‘ எனப் பல்வேறு போராட்டங்களை நடத்திக்கொண்டு இந்த நாட்டின் அமைதியை குலைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்போதுள்ள சூழ்நிலையில் மக்களுக்கும் ‘உரிமைப் பிரச்சனை தான் 24 மணி நேர போராட்டமாகத் தோன்றுகிறதே தவிர ‘கடமை‘ என்பதைப் பற்றி […] Posted in History, PoliticsTagged , #India#Nationalism#Patriotism#republicday#உரிமை#கடமைLeave a comment கூண்டுக் கிளிகள் On January 16, 2019 By vaanaram நம் பாரத நாட்டை பல ஆண்டுகள், காங்கிரஸ் என்ற கட்சியின் மூலமாக தன் குடும்ப ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தது நேரு/இந்திரா/ராஜிவ்/சோனியா குடும்பம். இவர்கள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சியில் இருந்துள்ளனர். ஆனாலும் இந்தியா இன்றளவும் மூன்றாம் உலக நாடுகள் பட்டியலிலேயே தான் உள்ளது. இது தான் இந்த குடும்பத்தின் முக்கிய சாதனை. இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்தும் ஒரு நாட்டை முன்னேற்ற முடியவில்லை என்பதும் ஒரு சாதனை தானே?! இவர்களிடம் […]
"சூரனை வதம் செய்த சுப்பிரமணியன்" சூரசம்ஹாரம் கோலாகலம்..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News முகப்பு செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் More விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English RECENT NEWS அரியலூரில் வயதானவர்களிடம் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக பலரிடம் பணத்தை கையாடல் செய்த இளம்பெண்ணை கைது செய்த போலீசார்.! Dec 07, 2021 தமிழ்நாடு சிட்கோ தொழில் மனைகள் விலை குறைப்பு - முதலமைச்சர... Dec 07, 2021 நடிகர் ரஜினிகாந்துடன் சசிகலா சந்திப்பு ! Dec 07, 2021 பல் மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வில் இடம் ஒதுக்கியும், க... Dec 07, 2021 சந்தையில் தவறவிட்ட 3 வயது குழந்தை.. பத்திரமாக மீட்டுகொடுத... Dec 07, 2021 திருத்திக் கொள்ளுங்கள் அல்லது மாற்றப்படுவீர்கள் : பாஜக எ... Dec 07, 2021 தமிழ்நாடு "சூரனை வதம் செய்த சுப்பிரமணியன்" சூரசம்ஹாரம் கோலாகலம்..! Nov 09, 2021 07:03:12 PM 0 2899 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் ஒன்றான கந்தசஷ்டி திருவிழா கடந்த 4 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. கொரொனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுபாடுகளுடன் இந்த திருவிழா நடந்து வந்தது. 6 ம் திரு நாளான இன்று மாலை 4:30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளினார். பின்னர் கோயில் கடற்கரை முகப்பில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லாத நிலையில், சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை முகப்பில் மூன்று பக்கமும் சுற்றி தகரகத்தினால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சூரசம்ஹார லீலை கோவில் வளாகத்தில் உள்ள திருவாட்சி மண்டபத்தில் கோவில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் மட்டும் பங்கேற்க எளிமையாக நடைபெற்றது. மதுரை பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் சூரசம்ஹார நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. வேல் வாங்குதல் நிகழ்ச்சிக்குப் பின் சுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பாடாகி சூரனையும் பத்மாசூரனையும் சம்ஹாரம் செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. News Online live news news tv news today news today tamil news today india news today chennai news today tamil Nadu news today Chennai tamil watch news online polimer news live tamil Tamil News Live online tamil news chennai news lord murugan SHARE RELATED POSTS 2 பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளி தாயும் தற்கொலை : கரூரில் பரபரப்பு ! கனமழையால் அரியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், கரைகளில் உடைப்பு ஏற்பட்டு, ஊருக்குள் புகுந்த தண்ணீர் இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்து வந்த இருவரை கையும் களவுமாக பிடித்து, போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள் தாய், மகள் உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை.. பெண்களை குறிவைத்து தாக்கிய மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு..! தடுப்பூசி செலுத்தாமல் சான்றிதழ் வழங்கினால் நடவடிக்கை - ஊழியர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் எச்சரிக்கை லாரி உரிமையாளரிடம் 25 ஆயிரம் ரூபாய் கையூட்டு பெற்ற நில வருவாய் ஆய்வாளர்.. கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்..! ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் வீட்டில் அதிரடி சோதனை.. ரூ, 23லட்சம் ரொக்கம், 193சவரன் தங்க நகைகள் பறிமுதல்..! வீச்சரிவாளை காட்டி மிரட்டி தங்க சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் ; சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செமஸ்டர் தேர்வு எழுதிய 90 சதவீதம் பேர் தோல்வி என அறிவிப்பு ; ஆட்சியர் அலுவலகம் முன் மாணவர்கள் போராட்டம் Click to comment LEAVE COMMENT Please Enter Your Comment Please Enter Your Name SUBMIT Comments BIG STORY புள்ளீங்கோ மீது காதல்.. சகோதரி கழுத்தறுத்து கொலை..! திருமணத்தை தடுக்க விபரீதம்..! Dec 07, 2021 அவன் கூட தான் இருப்பேன்.. இப்ப எனக்கு வயசு இருக்கு..! பெற... Dec 07, 2021 கேப்பியா ? இனி கேப்பியா ? நீதிமன்றத்தில் வழக்கறிஞரை விரட... Dec 07, 2021 தாக்கப்பட்ட போலீசார்.. தகர்க்கப்பட்ட கைவிலங்கு.. தப்பிக்க... Dec 06, 2021 பெண் சிசு கொலை, கொடூரத் தாய் கைது... தகாத உறவால் நேர்ந்த ... Dec 06, 2021 விபத்தில் சிக்கியவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை: மருத்து... Dec 06, 2021 About us Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
சிறுமிக்கு பாலியல் தொல்லை Archives - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com
கடந்த சில நாட்களாகப் பெருங்காற்று வீசிக்கொண்டிருக்கிறது.பக்கத்து வீட்டில் பிரமாண்டமாகக் கிளைவிட்டு வளர்ந்து நிற்கும் ஒரு பெரிய மரம், காற்றின் வேகத்தில் வேரோடு பிடுங்கப்படும்போல் ஆட்டம் போடுகிறது. மாதவனின்,தோட்டத்தில் வளர்ந்து கிடக்கும் செடிகளும் கொடிகளும் அடங்காத காற்றுக்கு நின்று பிடிக்க முடியாமல் அல்லாடுகின்றன. சில கிழமைகளாக அவன் வீட்டில் தொடரும் பிரச்சினைகளால் மாதவனின் மனமும் அப்படித்தான் நிம்மதியின்றி தவிக்கிறது. அவன். தனது வேலிக்கு அப்பால் நிற்கும், பக்கத்து வீட்டுக் கிழவரை ஏறிட்டுப் பார்த்தான். கடந்த சில மாதங்களாக அவன் படும் பாட்டை யாரிடமாவது சொல்லியழவேண்டும் போலிருந்து. மிஸ்டர் லிவிங்ஸ்டன்,அவர்களின் வீடுகளுக்கு இடையிலுள்ள வேலிக்கு மேலால் ஒருத்தொருக்கொருத்தர் வழமைபோல்,’குட்மோர்னிங்’ சொல்லிக் கொண்டபோது அவன் பதிலுக்குக் ‘குட்மோர்ணிங்’ என்றான்.அவன் குரலில் சோர்வு, கண்களில் சோகம், முகத்தில் ஒரு அளவிடமுடியாத பயம் என்பவற்றை அவதானித்த லிவிங்ஸ்டன்,’ என்ன, சின்னக் குழந்தை பெரிய தலையிடி தருகிறதா?’ என்று வேடிக்கையாகக் கேட்டார். ‘எனக்குப் பிறந்த சின்னக் குழந்தை பிரச்சினை தரவில்லை,ஆனால் அதைப் பெற்றெடுத்த பெரிய குழந்தை பிரச்சினை தருகிறது’ அவன் தனது குரலில் வேடிக்கைத் தொனியை வரவழைத்துக்கொண்டு அவருக்குச் சொன்னான். அந்த ஆங்கிலேயக் கிழவர், குழந்தை பிறந்தவுடன் யாரும் துணையில்லாமல்த் தனியாக வாழும் அடுத்த வீட்டு இளம் தம்பதிகளில் மிகவும் பரிதாபப் படுபவர். ‘உனது மனைவிக்கு உன்னைக் கவனித்துக்கொள்ள நேரமில்லை என்று மனவருத்தப் படுகிறாயா, முதற்குழந்தை பிறந்ததும் பெரும்பாலான தாய்மார் அவர்களுக்குக் கணவன் இருப்பதையே மறந்தவிடுவார்கள்.அதிலும் உதவிக்கு யாருமில்லாத சூழ்நிலையில்,அவள் குழந்தையுடன் கூடநேரத்தைச் செலவிடுவது சகஜம்’ அவர் ஆறுதலாகச் சொன்னார். அவரின் மனைவி, அவர்களின் மகளின் பிரசவம் பார்க்க,மாதவன் தம்பதிகள் பக்கத்து வீட்டுக்கு வந்த சில நாட்களில் கனடா சென்று விட்டாள். மாதவன்;, நித்யா தம்பதிகளுக்கு மூன்று மாதங்களுக்கு முன் அவர்களின் முதற் குழந்தை பிறந்திருக்கிறது. அவர்கள் அந்த வீட்டுக்கு வந்து கிட்டத்தட்ட ஆறுமாதங்களாகின்றன. மாதவனும்; மிஸ்டர் லிவிங்ஸடனும பக்கத்து வீட்டுக்காரர்கள் என்றாலும், இன,மத, வயது வித்தியாசத்தால் மிகவும் வித்தியாசமானவர்கள். ‘முதற்பிள்ளை பிறந்தபோது நாங்களும்தான் அந்தக் குழந்தையை எப்படிப் பார்த்துக் கொள்வது என்று மிகவும் குழம்பிப்போனோம்.. முதல் சில மாதங்கள்; மிகவும் கஷ்டமாக இருக்கும் அதன்பின் தாயும் சேயும் ஒருத்தரை ஒருத்தர் நன்றாகப் புரிந்து கொள்வார்கள்’ மாதவன், பக்கத்து வீட்டுக் கிழவரின் குரலில் தொனித்த பாசத்தை உள்வாங்கிக் கொண்டபோது நெகிழ்ந்து விட்டான். அவனின் மனதில் நிறைந்து கிடக்கும் பல பிரச்சினைகளை அவரிடம் மனம் விட்டுப் பேசவேண்டும்போலிருந்தது. ‘தாயும் பிள்ளைக்குமிடையிலான பிரச்சினையில்லை..’அவன் மேலதிகமாகச் சொல்லத் தயங்கினான். கிழவர் அவனை உற்றுப் பார்த்தார். அவரும் ஒருகாலத்தில் இளவயதுத் தகப்பனாக இருந்து,மனைவிக்கு ஆறுதல் சொன்னவர்.தனக்குப் பக்கத்து வீட்டு இளம் தகப்பனின் நிலை அவருக்குப் புரிந்ததோ என்னவோ,’என்னவென்றாலும் யாருக்கும் சொன்னால் மனப் பாரம் குறையும்’ என்றார். அதிகாலையில் வேலைக்குப் போகும் அவசரத்துடனிருந்தவன், ‘உங்களுக்கு நேரமிருந்தால் பின்னேரம் வாருங்களேன், சேர்ந்திருந்து பீர் அடிக்கவேண்டும்போலிருக்கிறது’ என்றான். கிழவர் மிகச் சந்தோசத்துடன் சம்மதம் தெரிவித்தார்.அவர் இப்போதுதான் மாதவன் வீட்டில் உறைப்பான கோழிக்கறி சாப்பிடப் பழகுகிறார். எழுபதுவயதான அவரின் மனைவி நீண்டகாலமாக மகளுடன் தங்கியிருப்பதால் உண்டான தனிமையை மாதவன்-நித்தியா தம்பதிகள் குறைத்திருக்கிறார்கள் அந்தத் தெருவிலுள்ள கடைசி வீடுகளில் அவர்கள் குடியிருக்கிறார்கள். முன்பக்கத்தில் ஒரு பெரிய பார்க் இருக்கிறது. மாதவனின் வீடு தெருவின் கடைசி வீடு. தெருவை அடுத்துப் பெரிய விளையாட்டுத் திடல்,அங்கு,சிலவேளைகளில் ஆரவாரத்துடன் இளைஞர்கள் பந்தடித்து விளையாடுவார்கள். அதையொட்டிய குழந்தைகள் பாடசாலை,காலையிலிருந்து பின்னேரம் வரை கல கலவென்றிருக்கும். அவைகளைவிட மற்ற நேரங்களில்,,வீட்டுக்குப் பக்கத்தில் பெரிய ஜனநடமாட்டமில்லை, இப்படியான அமைதியான இடம் நித்யாவுக்குப் பிடித்துக் கொண்டதால் நித்யா இந்த வீட்டை வாங்க விரும்பினாள். அருகில் உள்ள முதுமையான தம்பதிகளை அவர்களுடன் பேசிய சில நிமிடங்ளிலேயே, ‘நல்ல மனிதர்கள், கனிவான தொனியில் பேசுபவர்கள்’ என்றெல்லாம் அவர்கள் இருவருக்கும்; பிடித்துக் கொண்டது. வீpட்டைத்; தாண்டியிருக்கும் ஆரம்பப் பாடசாலை அவர்களுக்கு இன்னும் சில வருடங்களில் மிக மிக வேண்டியதாகவிருந்தது. முன்னாலிருக்கும் பிரமாண்டமான பார்க்கை மிகவும் பிடித்துக் கொண்டது. அங்கு மிகவும்,வயதுபோன பிரமாண்டமான மரங்கள் கிளைவிட்டு வளர்ந்திருந்தன அவைகளின் வயது பல நூற்றுக்கணக்கானவையாக இருக்கலாம் பல தலைமுறை மனிதர்களையும்,பல்வேறு சரித்திரங்களையும் கண்டிருக்கலாம். அவர்களின்;; பக்கத்து வீட்டுக்காரின் வீட்டுக்குப் பின்னாலும் ஒரு பெரிய மரமிருக்கிறது. மாதவன் வீட்டுக்குப் பக்கம் அந்த மரத்தின் கிளைகள் வந்து வெளிச்சத்தை மறைக்காமல் மிஸ்டர் லிவிங்ஸ்டன் கிழவர் அடிக்கடி அந்த மரத்தின் கிளைகளைத் வெட்டிக் கொள்வார் என்று சொன்னார். முக்கியமாக, இருபக்க வீடுகளையும் பிரிக்கும், அந்தப் பிரமாண்டமான மரத்திற்கு அண்மையிலிருந்த கிறீன் ஹவுஸ் அவனின் மனைவி நித்யாவுக்கு அளவுக்கு மீறியளவுக்குப் பிடித்ததாக இருந்தது. மாதவனும், நித்யாவும் அந்த வீட்டைப் பார்க்க வந்தபோது,அந்த வீட்டுச் சொந்தக்காரனான அல்பேர்ட,;,நித்யாவின் அளவுக்கு மீறியஆனந்தத்தைப்பார்த்து,’எனது மனைவியும் உங்களைப் போற்தான். இந்தக் கிறீன் ஹவுசில் உயிராயிருந்தாள்..’அவன் குரலில் சோகம். மாதவனும்,நித்யாவும் அந்த வீட்டைப்பார்க்க வந்தபோது அல்போர்ட்; மட்டும்தானிருந்தான்.மனைவி வீட்டிலில்லை என்றான்.அவர்கள் அதுபற்றி கேள்வி கேட்காமால், வீட்டைப்பற்றிய விபரங்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ‘இந்த நாட்டில் வெளியில் வைத்து வளர்க்க முடியாத மலர்களையும் கொடிகளையும் வளர்க்க மிகவும் அருமையாக இந்த கிறீன் ஹவுஸை அமைத்திருக்கிறார்கள்’ என்று பூரிப்பில் கூவினாள் நித்யா. மனம் திறந்த மகிழ்வுடன் அவள் சிரிக்கும்போது மலர்கள் குலுங்குவதுபோலிருக்கும். அவளின் அழகிய மலர்ந்த பூரிப்பை மாதவன் ரசித்தான். அவள் ஆசைப் பட்ட அந்த வீட்டை வாங்குவது என்று அந்த நிமிடமே மாதவன் முடிவு செய்துவிட்டான். அவள் அழகான பெண் என்ற அவள் கணவன் மாதவனுக்குப் பெருமை. அவனை விட ஆறுவயது குறைந்த அவளை அவன் ஏதோ ஒரு சிறு குழந்தைபோலப் பார்த்துக்கொள்வான் அதற்குக் காரணம், அவளின் கள்ளம் கபடமற்ற பேச்சு, கண்ணைக் கவரும் அழகு,அளவுக்கு மீறாத தேவைகள்,அவளிடமிருந்து அவனுக்குக் கிடைக்கும் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத அன்பு என்று எத்தனையையோ அடுக்கிக் கொண்டு போகலாம். பெரும்பாலான மனைவிகள்போல், கணவர்களிடம் அதிகம் எதிர்பார்க்காதவள்.அதற்குக் காரணம், தாய் தகப்பனின்றிப் பாட்டி, பாட்டனின் அன்பில் வளர்ந்ததும், அவர்கள் அவளின் தேவைகளை அவள் கேட்காமல் அவர்கள் நிறைவேற்றி வைத்ததும் ஒருகாரணமாகவிருக்கலாம். மாதவன், லண்டனில் வேலைசெய்பவன். நகர சபை ஒன்றில் வேலைசெய்கிறான். ஓரளவு உயர்ந்தவேலையிலிருப்பவன் வசதியாக வீடுவாங்க வளமுள்ளவன். நித்யா,லண்டனில் கொம்பனியில் செய்துகொண்டிருந்த வேலையை இராஜினாமா செய்துவிட்டு தங்களுக்குப் பிறக்கும் குழந்தை ஒரு அமைதியான இடத்தில் வளரவேண்டும் என்று லண்டனுக்கு வெளியில் வீடு தேடினாள். அவர்கள் வீடு பார்த்த இடம் லண்டனை விட்டு எத்தனையோ மைல்கள் தள்ளிய தூரத்திலுள்ள செல்ம்ஸ்போர்ட் என்ற நகரையண்டியிருக்கிறது.ஆங்கிலேயர்களுக்குத் தங்கள் சரித்திரத்துடன் சம்பந்தப் பட்ட பழைய தடயங்களை அழிப்பது பிடிக்காது. அதனால் அவற்றைக் காப்பாற்றப் பாராளுமன்றத்தால் பல சட்ட திட்டங்களையுண்டாக்கி வைத்திருக்கிறார்கள். அவர்கள் குடிவந்த கிராமமும் அப்படியான பழைய சரித்திரச்; சான்றுகளைத் தன்னுடையதாக்கிய பழைய கிராமம். அங்கு,ஓரு பத்திரிகைக் கடை, ஒரு மரக்கறிக்கடை, ஒரு மாமிச்கடை ஒரு தபால் நிலையம், அந்தக் கிராமத்தார் ஒன்று கூடிக் குடிக்கவும் பேசிப் பழகுவதற்குமான ஒரு ‘பப்’;, கல்யாண,இறப்பு,பிறப்பு,சடங்குகளுக்கு இன்றியமையாத ஒரு தேவாலயம் அத்துடன், பொதுக் கூட்டங்கள் கொண்டாட்டங்களுக்கான ஒரு மண்டபம் என்பதுபோல் அமைந்த ஆங்கிலேயக் கிராமம் அது. அதைவிட மேலதிக தேவைகளான புகையிரத நிலையம், சுப்பர் மார்க்கெட், பல்கலைக்கழகம், தொழிற்சாலைகள் என்பன போன்ற தேவைகளுக்கு, ,இரண்டு மைல்களுக்கப்பால் ஒரு நகரிருக்கிறது. மாதவன்,தனது காரில் ட்ரெயில்வே நிலையம் சென்று அங்கு காரைப் பார்க் பண்ணி விட்டு லண்டன் பிரயாணத்தைத் தொடங்குவான். மனைவிக்குப் பிடித்த வீட்டை வாங்கிக்கொடுத்து அவளைச் சந்தோசப் படுத்தியதில் மாதவன் அளப்பரிய ஆனந்தமடைந்தான்.அந்த வீடு, கிட்டத்தட்ட இருநுர்று வருட சரித்திரத்தைக் கொண்ட புராதன வீடு;. எத்தனையோ தலைமுறை அந்த வீட்டில் பிறந்து, வாழ்ந்து இறந்திருக்கலாம். மத்திய தரப் பிரித்தானியரின் மிக வசதியான பழைய வீடுகள்போல் நான்கு அறைகள், மூன்று பாத்றூம்கள், பெரிய ஹால்,சமயலறை. டைனிங்றூம், ஸ்ரடி றூம்,பாதாள அறை என்று பல வசதிகளைக் கொண்டிருந்தது. நித்யாவுக்கு அந்த வீட்டின் வசதிகளைப் பற்றிப் பெரிய அக்கறையில்லை.அவள் இலங்கையில்,கிழக்குப் பகுதிக் கிராhமம் ஒன்றில் அங்குள்ள எல்லா மக்களையும்போல், பல மலர் கொடியுள்ள இடத்தில்;, தென்னையும், பலாமரமும், பப்பாளி, தோடை,எலுமிச்சை என்று எத்தனையோ ரகமான இயற்கைவளம் மிகுந்த இடத்திலுள்ள ஒரு சிறு தனிவீட்டில் பிறந்து வளர்ந்தவள்.தனது, சிறுவயது நினைவுகளைத் தூண்டும்,இந்தக் கிராமத்து வீட்டை நித்யா தெரிவு செய்ததில் மாதவனுக்கு எந்த ஆச்சரியமில்லை. மாதவன் இலங்கையில் கொழும்பு மாநகரிற் பிறந்தவன்,வளர்ந்தவன்,பதினாறு வயதுவரை படித்தவன்,லண்டன் மாநகரில் காலடி எடுத்து வைத்ததும் அதன் பிரமாண்டம் அவனை மலைக்கப் பண்ணினாலும், அதுவரையும் நகரில் வாழ்ந்த பழக்கத்தால் அவன் அந்த வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டான். நித்யா அவளின் ஆசைக்காக வாங்கிய அந்த வீட்டுக்குக் குடிவந்த அடுத்த நாளே நித்தியா அவளின் ஆசையின் சின்னமான அந்த ‘கிறீன்’ஹவுஸ்க்குள் தன்னை இணைத்துக் கொண்டாள். அந்தப் பழைய வீட்டில் அந்த,’கிறீன் ஹவுஸ்’ புதிதாகக் கட்டப்பட்டிருந்தது. அந்தப் புது வீட்டுக்கு வந்த கொஞ்ச காலத்தில் பெரும்பாலான நேரத்தை அந்தக் கிறீன் ஹவுசில் போக்கினாள். அந்த இடத்தில் ஏதோ பல காலம் வாழ்ந்த பெண் போல் மிகவும் கவனமாக அந்த இடத்தைப் பராமரித்துக் கொள்ளத் தொடங்கிளாள். அவர்களுக்கு முதல் அந்த வீட்டில் குடியிருந்த ஆங்கிலேயத் தம்பதிகளும் அந்தக்,’கிறீன்ஹவுசுடன்’ மிகவும் இணைந்திருந்ததாகப் பக்கத்து வீட்டுக் கிழவர் சொன்னார். அந்த வீடடிலிருந்த தம்பதிகளான அல்பேர்ட்டும் அவன் மனைவி இஸபெல்லாவும் அதிக காலம் அந்த வீட்டில் தங்கவில்லை என்றும் கிழவர் சொல்லியிருந்தார். இஸபெல்லா,சட்டென்று அல்போர்ட்டைப் பிரிந்து போனபின் அவளின் பிரிவு தாங்கமுடியாத அவள் கணவன் வீட்டை விற்க முடிவு செய்ததாகவும் கிழவர் சொல்லியிருந்தார். மாதவன் ட்;ரெயினில் ஏறியதும், வீட்டுக்கு வந்து பினனேரம், கிழவர் லிவிங்ஸ்டனுக்குத் தன் பிரச்சினைகளை எப்படிச் சொல்வது என்று யோசித்தான்.அவர் இவன் சொல்லப் போவதை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார் என்றும் அவனால் யோசிக்க முடியாதிருந்தது. ‘எங்கள் வீட்டு,’கிறின் ஹவுஸில்’பேயிருப்பதாக’ அவள் மனைவி நித்யா சொல்கிறாள் என்பதைக் கிழவருக்குச் சொல்ல அவனுக்கு வெட்கமாகவிருந்தது. அவன் சமயவாதியல்ல.பட்டணத்தில் பிறந்து வளர்ந்தவன்,உண்மைகளை விஞ்ஞான ரீதியாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதில் சிறுவயதிலிரு;து பிடிவாதமாகவிருப்பவன். நித்யா சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள்.இலங்கையின் கிழக்குப் பகுதியில்,இயற்கையின் அத்தனை அழகுகளுடனும் சுற்றி வளைக்கப்பட்ட அந்தக் கிராமம் பேய் பிசாசு, செய்வினை சூனியத்திற்கு மிகவும் பெயர் போனது.சிறுவயதில் தாய் தகப்பனும்,அவளின் ஒரேயொரு தமயனுயும் சிங்கள இனவாதத்திற்குப் பலியான நாளிலிருந்து, அந்நியமான மனிதர்களையோ அல்லது அவளுக்குப் பிடிக்காத எதையும் பார்த்தால் பயந்து நடுங்குபவள் என்று அவனுக்குச் சொல்லியிருக்கிறாள். ஐந்து வயதில் தனது பெற்றோரும்; தமையனும்; அகால மரணத்தில் இறந்தபோது, அவர்களுடன் பேசுவதாக நினைத்துக்கொண்டு நித்யா ஆடு,மாடு,பூனைகள்,நாய்களுடன் மட்டுமல்லாமல் அவள் தாய் அதிகாலையில் பூசைக்கு மலர் மலர் பறிக்கும் மல்லிகை மரங்களிடமும் பேசிக் கொண்டிருந்ததாக அவளின் பாட்டனார் அவனுக்குச் சொல்லியிருந்தார். அந்தப் பழைய நினைவுகளுடன்தான் இந்த கிறீன் ஹவுஸில் தன்னைப் பிணத்துக்கொண்டாளா? அந்த வீடடுத்; தோட்டமும், சூடான நாடுகளில் வளரும் செடிகொடிகளையம் கண்டதும் அவளுக்குத் தாய் தகப்பன் தமயன் நினைவு வந்திருக்கிறதா? மாதவன் பல கேள்விகளைத் தனக்குள் நினைத்துக்கொண்டான். ஆங்கில நாட்டில் வளரமுடியாத சூடான நாட்டுப் பூக்கள், மிகவும் கவனமான திட்டத்துடன கட்டப்பட்ட, கண்ணாடிக் கூரைகள் கொண்ட அந்தக் கிறின் ஹவுஸில் பாதுகாப்பாக வளர்கிறது. ஓரு மல்லிகைக் கொடியும் வளர்கிறது! தாய் தகப்பனையிழந்த அவளை அவளின் தாத்தா பாட்டியார் பாதுகாத்தார்கள்.அன்பும் ஆசையாயுடனும் அவள் வாழ்க்கையைக் கொண்டு நடத்த உதவினார்கள். அவளுக்குப் பதினெட்டு வயதானதும் அவளின் மாமாவின் உதவியுடன் லண்டனுக்குப் படிக்க வந்தவள். லண்டனுக்கு வந்து இரண்டு வருடங்கள் தனது ஆங்கில அறிவை விரிவாக்கிக்கொண்டு பல்கலைகழகப் படிப்பைத் தொடங்கியிருந்தாள். மிகவும் இறுக்கமான குடும்ப அமைப்புக்குள் வாழ்ந்து பழகிய நித்யாவுக்;கு லண்டனில் பிரமாண்டமான வாழ்க்கை பயத்தைத் தந்ததாக அவனுக்குச் சொல்லியிருக்கிறாள். படித்து முடித்ததும்,திரும்பவும் தாத்தா பாட்டியிடம் போய்ச் சேரவேண்டும் என்ற துடிப்புடன் தனது படிப்பை லண்டனில் ஆரம்பித்தாள்.அவள் பிறந்த அழகிய கோளாவில் கிராமமும்,;அதைத் தழுவியோடும் புனல் பொங்கும் தில்லையாறும்,கோளாவில்; கிராமத்து மக்களும்,அவர்களின் சடங்குகளும்,கிராமத்துப் பாடல்களும அவள் இறக்கும்வரை அவள் மூச்சோடு இணைந்திருப்பவை என்று அவனுக்குத் தெரியும். அவன் லண்டன் பல்கலைக்கழகத்தில் நித்யாவைக் கண்டதும் அவளில் காதல் வயப்பட்டதும்,அவன் தனது வாழ்க்கையில் கற்பனைகூட செய்திருக்காத ஏதோ கனவுபோன்ற விடயங்கள். அவன் அவளைக் கண்டது ஒரு அவசரமான காலைப் பொழுதில், லண்டனின் மத்தியிலுள்ள மிகவும் பிஸியான றஸ்ஸல் சதுக்கப் பாதாளப் புகையிரத நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது, நடந்த ஒரு சிறிய சந்தர்ப்பமாகும். பாடசாலைகள், யூனிவசிட்டிகள் எல்லாம் வசந்தகாலத்தின்; ஆறுகிழமை விடுமுறைக்குப் பின் லண்டன் மாணவர் கூட்டத்தால் பொங்கி வழியத் தொடங்கி விட்டது. 2001ம்; ஆண்டு,செப்டம்பர் மாதத்தில் முதற்கிழமையில் ஓருநாள்,லண்டன் மாநகர் இடைவிடாத மழையாலும் பெருங்காற்றாலும் வதைபட்டுக் கொண்டிருந்தபோது, பாதாள ட்ரெயினால் இறங்கித் தனது யூனிவர்சிட்டிக்குப் போகத் தெருவை அவசரமாகத் தாண்டிக் கொண்டிக் கொண்டிருந்தபோது,பெருவாரியான ஜனக்கூட்டத்தில் அவளுக்குப் பக்கத்தால் வந்து கொண்டிருந்தவனுடன் நித்தியா மோதிக்கொண்டாள். அவள்.மிகப் பரபரப்புடன்.தர்மசங்கடத்துடன்,அழாதகுறையாகத் தனது பார்வையை நிமிர்த்தி,’ஐ யாம் சாரி..’என்றாள்,நீரில் தவழும் மீன்களாக அவள் கண்கள் ஒரு கணம்; அவன் முகத்iதில் நீச்சலடித்தன.. மாதவன்,’பரவாயில்லை..மழையில் பாதையெல்லாம் நெரிசலாக இருக்கிறது’ என்றான். அவளின் கண்களில் பிரதிபலித்த ஏதோ ஒரு அசாதாரண சக்தியில் அவன் ஒரு கணம் திடுக்கிட்ட விட்டான்.அவனின் பார்வை தன் முகத்தில் பதிந்திருப்பதை அவதானித்த,அவள் தலையைத் தாழ்த்திக்கொண்டு அவசரமாக ஓடிவிட்டாள். அதன்பின் அவன் பிரயாணம் செய்யும் ட்ரெயினில் அவள் வந்து ஏறுவதைப பலநாட்கள் அவன் அவதானித்தான். அவனுக்கு அப்போது இருபத்தி ஆறுவயது. முதலாம் பட்டம் பெற்று இருவருடங்கள் ஒரு இடத்தில் உத்தியோகம் பார்த்தபின்,அதைத் தொடர்ந்து தனது இரண்டாவது பட்டப்படிப்பான முதுகலைப் படிப்பை அவன் ஆரம்பித்திருந்தான். அவள் அவனின் யூனிவர்சிட்டிக்குப் பக்கத்திருக்கும் பல பல்கலைக்கழகங்களில் ஒன்றில் முதலாவது மாணவியாயிருக்கலாம் என்று அவன் நினைத்தான். அவள் இலங்கை அல்லது இந்தியாவைச் சேர்ந்தவள் என்றும் லண்டனுக்கு அண்மையிற்தான் வந்திருக்கவேண்டும் என்றும் ஊகித்தான்;.அவன் அவனது பதினாறாவது வயதில் லண்டனுக்கு வந்தவன். இலங்கையில் நடந்துகொண்டிருந்த அரசியற் பிரச்சினைகளால் அவர்கள் குடும்பம் அகதிகளாக ஓடிவந்தபோது அவன் வந்தான்.அவன் லண்டனுக்கு வந்து சிலவருடங்கள் அவளைப் போலத்தான் பரபரப்பான பார்வையுடன் தவித்தான். அவள் யார் என்று தெரியவேண்டும் போலிருந்தது, ஆனால் அவள்,ட்ரெயினில் ஏறியதும் யாரையும் பார்க்காமல் எப்போதும் எதையோ வாசித்துக் கொண்டிருப்பாள்.அவளின் அமைதியான, ஆடம்பரமற்ற தோற்றம் அவனைக் கவர்ந்தது.லண்டன் டரெயினில் யாருடனும் யாரும் பேசிக் கொள்ளமாட்டார்கள். வருடக் கணக்காக ஒரே நேரத்தில் அதே ட்ரெயினில் பிரயாணம் செய்பவர்களாகவிருப்பார்கள் ஆனால் ஒருத்தொருக்கொருத்தர் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளமாட்டார்கள்.அவளிடம் பேசி அவள் பெயர் என்ன, எங்கிருந்து வருகிறாள் என்றெல்லாம் தெரிந்துகொள்ள அவன் மனம் விரும்பினாலும் அவை சாத்தியமான காரியமாகத் தெரியவில்லை. அவள் லண்டனுக்கு வெளியிலிருந்து வருபவள் என்பது அவளின் நடவடிக்கைகளிலிருந்து தெரிந்தது.அதாவது, வெளியூர்ப் பிராயணங்களின் கேந்திர இடங்களிலொன்றான கிங்க் க்றாஸ் ஸ்ரேசனில் பாதாள ட்ரெயின் நிற்கும்போது அவள் வந்து ஏறுவாள். அவர்கள் மோதிக் கொண்ட சிலவாரங்களின் பின் அவன் இரண்டாம் பட்டத்திற்கான படிப்புப் படித்துக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு பகிரங்க செமினாருக்கு அடுத்தடுத்த பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தபோது அவளும் அவர்களில் ஒருத்தியாகவிருந்தாள். செமினார் முடிந்ததும் மாணவர் கூட்டம் ‘ஸ்ருடன்ஸ் பாரை’ முற்றுகையிட்டுக்கொண்டிருந்தது. அந்த நெருசலில் அவன் அவளைத் தேடினான். பாரின் ஒரு மூலையில்,ஒருசில மாணவிகளுடன் ஆரன்ஞ் சாறை உறிஞ்சிக் கொண்டு ஏதோ கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தாள்.அவன் துணிவாக அந்தப் பக்கம்; போனான். தயக்கமில்லாமல், அந்த மாணவிகளுக்கு அருகில் வந்து, ‘எக்ஸ்கியுஸ் மி’ என்று பொதுப் படையாகச் சொன்னான். அங்கிருந்த மாணவிகள் இவன் யார் என்பதுபோல் ஒருத்தொருக்கொருத்தர் பார்த்துக் கொண்டனர். அவன்,நித்யாவைப் பார்த்து ,’ஹலோ’ சொன்னான். அவனை ஏறிடடுப் பார்த்த நித்யா அவன் யார் என்று தெரிந்த தோரணையில் தனது பார்வையை அவன் முகத்தில் பதித்துக்கொண்டு தர்மசங்கடத்துடன் அவனை எடைபோட்டாள். ‘ஞாபகமிருக்கிருக்கிறதா..அன்று மழையில் ஓடிக்கொண்டிருந்தபோது..’ அவன் முடிக்கவில்லை,அவள் அவனை ‘நன்றாக’..ஞாபகம் வந்த பாவனை கலந்த புன்முறுவலுடன்,’ஹலோ’ சொன்னாள். ‘ உங்களைக் குழப்புவதற்கு மன்னிக்கவும்..எனது பெயர் மாதவன்..இந்த யுனியில் மாஸ்டர் செய்துகொண்டிருக்கிறேன்’ என்றான். ‘ஹலோ.. நான் நித்யா..அடுத்த யூனியில் பர்ஸ்ட் டிகிரி செய்துகொண்டிருக்கிறேன்’என்றாள். இருவரும் மழையில் நனைந்தபோது மோதிக்கொண்ட சந்திப்பைத் தங்களுடன் வந்த சினேகிதிகளுக்குச் சொல்லிக் கொண்டார்கள். அதன் பின் அவன் நீண்ட நேரம் அவளுடன் வந்திருந்த மாணவிகள் கூட்டத்துடன் அன்று நடந்த செமினார் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். அதன்பின் இருவரும் அடுத்த சில நாட்களில் ஒருத்தரை ஒருத்தர் ட்ரெயினில் கண்டதும் ‘ஹலோ’ சொல்லத் தொடங்கி இருவரையும் புரிந்து கொள்ளத் தொடங்கினர். அடுத்த நாள் எப்போது வரும் அவளைக் காண எவ்வளவு நேரமெடுக்கும் என அவன் மனம் தவிக்கத் தொடங்கியது. இங்கிலாந்தின் நான்கு பருவங்களும் ஒன்றையொன்று துரத்தியடித்தன.ஒருவருடம் எப்படி ஓடியது என்று யோசிக்முதல் அடுத்த வருடம் வந்து விட்டது. தனது படிப்பு முடிய அமெரிக்கா போவதாகத் தான் யோசித்திருப்பதாக அவன் சொன்னபோது,’ ஏன் ஊருக்குத் திரும்பிப்போகும் யோசனை இல்லையா?’ என்று கேட்டவள்,அவன் மறுமொழி சொல்ல வாய்திறக்க முதலே,தான தனது படிப்பு முடிய ஊருக்குப் போகத் துடித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னாள். லண்டனுக்கு வருவதற்கு உலகெங்கிலுமள்ள மக்கள் ஏதோவெல்லாம் செய்துகொண்டிருக்கிறார்கள். இவள் என்னவென்றால்? அவன் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தான். ‘பணம் மட்டும்தானா வாழ்க்கையில் சந்தோசத்தையும்,முழுமையையும் தரும்?’அவள் அவனிடம் கேள்விகளைத் தொடுத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அப்போது இருபத்தியொரு வயது.அவர்கள் சந்தித்து ஒருவருடமாகிறது. அவனின் படிப்பு முடியப் போகிறது. இனி அவளை அவன் அடிக்கடி காணமுடியாது. ட்;ரெயினில் பக்கத்திலிருந்து பேசிக்கொணN;ட பிரயாணம் செய்யமுடியாது. றஸ்ஸல் சந்தியில் பிரிந்து தங்கள் யுனிவர்சிட்டிகளுக்குப் போகமுடியாது. அவனின் படிப்பு முடிந்து வேலை செய்யத் தொடங்கியதும்;, அவர்கள் வீட்டுக்கு அம்மாவின் சொந்தக்காரர்கள் வந்திருந்தார்கள்.மகனுக்குப் படிப்பு முடிந்து விட்டதைத் தெரிந்து கொண்ட உறவினர்கள் அவனுக்குக் கல்யாணம் பேச முனைவது மாதவனின் தாய்க்குத் தெரியும். அவனிடம் அவள் மெல்லமாக அவர்களின் வருகையின் காரணத்தைச் சொன்னபோது,அவன் தாயை ஏறிட்டுப்பார்த்தான். அவன் தங்கைக்குக் கல்யாணமாகிவிட்டது. அவனின் திருமணத்தையும் சீக்கிரத்தில் நடத்தி முடிக்கவேண்டும் என்று அவனின் பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பது அவனுக்குத் தெரியும். ‘அம்மா. தயவு செய்து இரண்டு வருடத்தக்கு என்னை வற்புறுத்தவேண்டாம்’ அவன் குரலில் தொனித்த உறுதி அவனுக்கே புரியவில்லை. ஏன் இரண்டு வருடம் என்று அம்மா கேட்டால்,’நான் நித்யாவின் படிப்பு முடியும்வரை காத்திருக்கப்போகிறேன்’ என்று சொல்லியிருப்பானா? அதுவும் அவனுக்குத் தெரியாது,ஏனென்றால் நித்யாவும் அவனும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புகிறார்களா என்று அவனுக்கே சரியாகத் தெரியாது. ஆனால் நித்யாவில் அவனுக்குள்ள ஈர்ப்பை அவன் மறுக்க முடியாது. மகனின் பிடிவாத குணத்தைத் தெரிந்து கொண்ட அம்மா மௌனமானாள். இரண்டு வருடங்கள் பறந்தன. ஏப்போதாவது நடக்கும் பொது செமினார்க்களில் நித்யாவும் அவனும் சந்தித்துக் கொண்டார்கள். அவளின் மூன்றாம் ஆண்டின் இறுதியில் அவள் படிப்பில் மிகவும் கவனமாக இருந்ததால் அவள் செமினார்களுக்கு வருவதையும் தவிர்த்திருந்தாள். இ மெயில்களில் பொது நலன்களை ஏதோ ஒரு சாட்டுக்கு வைத்துக்கொண்டு அவர்கள் தொடர்பு தொடர்ந்தது. அவள் படிப்பு முடிந்து விட்டது. பட்டமளிப்புப் படத்தையனுப்பியிருந்தாள்.அவன் தாமதிக்கவில்லை. ‘ஐ லவ் யு..’என்று தொடங்கி, அவளை அவன் ஏன்விரும்புகிறான் என்பதை விளக்கி.அவள் அவனைத் திருமணம் செய்யச் சம்மதித்தால் அவன் மிகவும் அதிர்ஷ்டசாலியானவனாக நினைத்தக்கொள்வான் என்று சுருக்கமாக எழுதினான். அவளிடமிருந்து சில வாரங்களுக்கு மேல் பதிலே வரவேயில்லை. அவன் சோர்ந்து போகவில்லை. நித்யா அவனைப் பற்றியும் அவனுடன் இணையப்போகும் அவளின் எதிர்காலத்தையும் பற்றியும் நன்றாக யோசிக்கடடு;ம் என்று நினைத்துக் கொண்டு பொறுமையாக இருந்தான். ஒரு நாள் அவன் எதிர்பார்த்திருந்த இமெயில் வந்தது. அவளை அவன் சவுத்பாங்க் என்ற இடத்தில் சந்திக்க முடியுமா என்று கேட்டு எழுதியிருந்தாள். லண்டன் மத்தியில் வாட்டாலூ என்ற இடத்திலுள்ள சவுத்பாங்க் என்ற இடம் பல தரப்பட்ட கலைக்கூடங்களின் நிகழ்விடம். ஓரு பக்கத்தில் பிரமாண்டமான பிரித்தானிய பாராளுமன்றமும்,அதைத் தழுவி ஓடும்; தேம்ஸ் நதி, அதையண்டிய பல தரப்பட்ட பிரபலமான இடங்கள்,அவள் அவனை அவ்விடத்திற்கு வரச் சொல்லியிருந்தாள். அந்தப் பின்னேரம், மிகவும் முக்கியமானதாக அவன் மனம் சொல்லியது. அவள் வந்தாள்.அவள் இப்போது ஒரு ஐ.டி.கம்பனியில் வேலை செய்வதாகச் சொன்னாள். அந்த மாலைவெயிலின் பிரதிபலிப்பில்,அழகாகத் தோன்றினாள்.அள்ளியணைக்க அவன் மனம் துடித்தது,அடக்கிகொண்டான். அவனை நேரடியாகப் பார்க்கத் தர்ம சங்கடப்பட்டாள். அவன் அதை எதிர்பார்த்ததால் அலட்டிக்கொள்ளவில்லை.அவன் இருவருக்கும் குளிர் பானங்கள் ஆர்டர் பண்ணினான்.அவள் எதையோ தீவிரமாக யோசிப்பது அவனுக்குத் தெரிந்தது. ‘என்னைத் திருமணம் செய்து கொள்வதால் நீங்கள் சந்தோசமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறீர்களா?’ அவள் உடனடியாக விடயத்துக்கு வந்தது அவனுக்குத் திருப்தியாகவிருந்தது.அவளின் கேள்வியில்,’நான் உன்னைத் திருமணம் செய்யச் சம்மதம்’ என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அவன் அவளைப் பார்த்து மெல்லமாகச் சிரித்தான்.’ உன்னுடன் நரகத்துக்குப் போவதாக இருந்தாலும் அதை என் எனது பாக்கியமாகக் கருதுவேன்’. அவன் குறும்புத்தனமாகச் சொன்னான். ‘நான் அமானுஷ சக்தியை நம்புவள்’ அவள் அவன் கண்களைப் பார்த்துக் கொண்டு சொன்னாள். அவன் அவளை ஏறிட்டுப் பார்த்தான். இறங்கு வெயிலின் வெளிச்சம் அவளின் கண்களில் பிரதிபலித்தது. ஏதோ ஒரு சக்தி அவனை ,’மௌனமாகவிருந்து அவள் சொல்வதைக்கேள்’ எனறு ஆணித்தரமாகக் கட்டளையிட்டது போலிருந்தது. ‘ எனக்கு சோகம் வரும் நேரங்களில் என்னைவிட்டுப் பிரிந்துபோன எனது தாய் தகப்பன், தமயனுடன் எனக்குப் பேசவேண்டும போலிருக்கும். அப்போது அவர்களுக்குப் பிடித்த மலர்கள்,கடவுள் படங்களைக்கண்டால் அவற்றுடன் பேசுவேன். அதைப் பைத்தியத்தனம் என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள்.ஆனால் எனக்கு என் அம்மா கனவில் வந்து எனக்கு என்ன நடக்கும் என்று எனது எதிர்காலத்தைச் சூசகமாகச் சொல்வதுண்டு..’அவள் அவனை நேரே பார்த்தபடி சொல்லிக் கொண்டிருந்தாள். அவன் ஏதோ ஒரு ஆணைக்குக்; கட்டுப் பட்ட உணர்வுடன் கேட்டுக் கொண்டிருந்தான். ‘உங்களைக் காணுவதற்கு…மோதிக்கொள்வதற்கு முதல் நாளிரவு எனது தாய் எனக்குப் பிடித்த மல்லிகை மலர்களைத் தந்ததாகக் கனவு கண்டேன். அவள் சந்தோசமாக அதைக்கொடுத்தாள்;’ அவள் கண்களிலிருந்து சட்டென்று நீர்வழியத் தொடங்கியது.அதை வழித்துத் துடைக்க அவன் கரங்கள் துடித்தன.அவன் தன் மன நிலையை அடக்கிக்கொண்டான்.அவளின் பேச்சால் அபரிமிதமான அமைதி அவர்களைச் சுற்றிவருவதாக அவன் உணர்ந்தான். அவன் உடம்பு சில்லிட்டது. ‘ லண்டன் யூனிவாசிட்டிக்குப் போவதை அவள் ஆசிர்வாதிப்பதாக நினைத்தேன்’ அவள் கண்கள் அவனில் நிலைத்திருந்தது. அவன் பேச்சு மூச்சற்றுப்போய் அவள் சொல்வதைக்கேட்டுக் கொண்டிருந்தான் ‘நீங்கள் என்னைக் கல்யாணம் செய்யக் கேட்பீர்கள் என்று எனக்கு எப்போதோ தெரியும்’ அவள் வார்த்தைகள் அவன் மனத்தை ஊடுருவியது. அவள் அவனின் மன உணர்வுகளை அப்பட்டமாகப் புரிந்துகொண்டவள் மாதிரிச் சொல்லிக் கொண்டிருந்தாள். ‘அன்று நீங்கள் என்னிடம் செமினார் அன்று பேசியதற்கு முதல் இரவு உங்களையும் அம்மாவையும் கனவில் கண்டேன். அம்மா எங்களை ஆசிர்வதித்தாள்’ அவள் சொல்வதெல்லாம் அவள் கண்ட கனவின் பிரதிபலிப்பா? அல்லது அவர்களின் சந்திப்பால் தொடர்ந்த அவள் மனத்தின் கற்பனை வடிவங்களா?அவனுக்குத் தெரியாது. அவள் அவனை நிமிர்ந்து பார்த்துச் சொல்லிக் கொண்டிருக்கும் விடயங்களை அவன் நம்புவதா என்பது அவனுக்குப் பிரச்சினையில்லை. அவனுக்குள் அவள்; நுழைந்து விட்டாள். அவன் மூச்சில்,அவள் நாமம் இணைந்திருக்கிறது. அவனுக்கு அவளுடன் சேர்ந்த எதிர்காலம் வேண்டும்.அவனால் அவனுள் வரும் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குள்த் தள்ளப் பட்டிருப்பதைப் புரிந்துகொண்டபோது அவனுக்கு மெய்சிலிர்த்தது. அவள் சொல்வதுபோல் அமானுஷ சக்திகள் உள்ளவளா? இவளுக்கும் எனக்கும் முன்பிறப்பில் தொடர்பிருந்ததா? இன்னும் எத்தனை பிறப்புகளுக்குள்ளும் அவன் அவளுடன் இணையத் தயார். அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.அது அவளுக்குக் கேட்டதுபோல்,’எனக்கு லண்டன் பிடிக்காது’ அவள் தொடர்ந்தாள் அவள் தனக்கு இங்கிலாந்த பிடிக்காது என்று சொல்லவில்லை என்பது அவனுக்குத் திருப்தியாகவிருந்தது. ‘நீங்கள் நன்றாக யோசித்து விட்டு உங்கள் முடிவைச் சொல்லுங்கள்’அவள் எழுந்தாள். போய்விட்டாள்.இவனைச் சரியாகப் புரிந்துவிட்ட தொனி அவள் குரலில். அமானுஷத்தை நம்புவளாம்!.அவன் விஞ்ஞான விளக்கக்களின் மூலம் உலகை அளவிடுபவன். மாதவன் சில நாட்கள் தீவிரமாக யோசித்தான்.அவனுக்கு இருபத்தியொன்பது வயது. பல விதமான முற்போக்குக் கொள்கைகளையுடையவன். பேய் பிசாசுகள் பற்றிப் பேசுபவர்களை இதுவரைப் புரிந்து கொள்ளாதவன். இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது? தெரிந்து கொண்டே, பேய் பிசாசுகளை நம்பும் ஒரு பெண்ணைச் செய்வதா? அவனின் நண்பன் சிவராம், மனிதர்களின் அபரிமிதமான,சக்திகளை உணர்வுகளைப் பற்றிய விடயங்களில் அக்கறையுள்ளவன். முப்பது வருடகாலமாக இலங்கையில் தமிழ்ப் போராளிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துமிடையில் நடந்த போரில் தங்கள் உறவினர்களைப் பறிகொடுத்தவர்கள் ஏராளம். மறைந்து போன அந்தத் தமிழர்கள் பலருக்கு என்ன நடந்தத என்று தெரியாமற் தவிக்குப் பல்லாயிரக்கணக்கான், தாய் தகப்பன்கள், மனைவியர், குழந்தைகள்,என்போர்; பலர் தங்களிடமிருந்து பல கருத்துக்களை, கனவுகளை, நம்பிக்கைகளைச் சுமந்துகொண்டு துயர வாழ்க்கை நடத்தம் துன்பத்தின் பல கதைகளை அவர்களிடமிருந்து கேட்டவன். மாதவன் சிவராமிடம் நித்யாவின் பெயரைச் சொல்லாமல் அவள் சொன்ன அமானுஷ விடயங்கள் பற்றிக் கேட்டான். ‘நீ சொல்லும் பெண்ணின், வாழக்கையில் சட்டென்று மிக மிகத் துன்பமான இழப்புகளைச் சந்திதத்தால் அந்தப் பெண் இறந்து விட்ட மனிதர்கள் இன்னும் தன்னுடன் வாழ்வதாக நினைத்துக்கொள்வதில் திருப்தி கொள்கிறாள். அவர்களுக்குப் பிடித்த விடயங்கள், பொருட்களில் தன்னைப் பிணைத்துக்கொள்வதில் சந்தோசப் படுகிறாள். இறந்து விட்ட எங்கள் மூதாதையர்களுக்கும் நாங்கள் அந்த நம்பிக்கையிற்தானே சடங்குகள் செய்கிறோம்.’அவன் தொடர்ந்தான். ‘சிறு குழந்தைகள் கற்பனைச் சிநேகிதர்களை வைத்திருப்பது உனக்குத் தெரியும். ஓரு சில மனிதர்கள்;, அகாலமாக இறந்து விட்ட தங்களின் அன்புக்கு உரியவர்களைக் கனவு காண்பதும், அவர்களின் ஆவி தங்களுடன் பேசுவதாகவும் சொல்வதைக் கேள்விப் பட்டிருப்பாய். துக்கமான குடும்ப சரித்திரத்தைக் கொண்ட குழந்தைகள் தங்கள் துயர் மறக்க மலரிலும், செடியிலும் சிலவேளை பூனை நாய் போன்ற மிருகங்களிலும்,அளவுக்கு மீறிய அக்கறை காட்டுவார்கள்.இது ஒரு மன நோயல்ல..ஆனால் அது எதிர்காலத்தில் வரும் பிரச்சினைகளுக்கு அவள் எப்படி முகம் கொடுக்கப்போகிறது என்பதை இனித்தான் அவதானிக்கவேண்டும்’ என்று விளக்கி முடித்தான். மாதவன், அவனுக்குப் பிடித்த நித்யாவைத் திருமணம் செய்வதை அவனுடைய குடும்பம் அவ்வளவாக விரும்பவில்லை. அவர்கள் இலங்கையில் வடக்கின் பாரம்பரியத்தைக் கொண்டவர்கள். நித்யா கிழக்குப் பக்கத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து இப்போதுதான் லண்டனுக்கு வந்திருப்பவள். வித்தியாசமான குடும்ப, பொருளாதார, கல்வி நிலைகளிலிருந்து வந்தவர்கள். மாதவனின் பிடிவாதத்துக்கு அவர்கள் இடம் கொடுத்து நித்யாவை மருமகளாக்கிக் கொண்டார்கள். அவளின் அழகும், பவித்திரமான குணங்களும் மாமியாரைக் கவர்ந்து விட்டது. ஆனால் மாதவனின் பாட்டியார், மிகவும் பழைய கொள்கைகள் உள்ளவள். மாதவன்,எப்போதும் நித்யாவுனுடன் ஒட்டிக் கொண்டிருப்பதையும் மாதவன் நித்யாவைத் தலையிற் தூக்கி வைத்துக் கொண்டாடுவதையும் அவள் வெறுத்தாள். ‘என்ன இவன் ஏதோ அவள் போட்ட வசிய மந்திரத்துக்கு அடிமைப்பட்டதுபோல் அவளைத் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறான்?’ எரிச்சல் தாங்காத பாட்டி பொரிந்து தள்ளினாள் மாதவன் கல்யாணமாகி ஒருசில மாதங்களில் தனிவீடு வாங்கிக்கொண்டு நித்யாவுடன் வந்துவிட்டான்.அவர்களுக்குக் குழந்தை பிறக்கப்போவது தெரிந்ததும்,’ எங்களுக்கு ஆண்குழந்தைதான் பிறக்கும்’ என்று நித்யா சொன்னாள்;. அகாலமாக இறந்து விட்ட எனது தமயன் அல்லது அவள் தந்தை எனது மகனானகப் பிறக்கப்போகிறான் என்று அவள் சொல்லவில்லை. ‘பெரும்பாலான பெண்கள் முதற் குழந்தையாகப் ஆண்குழந்தையைத் தான் விரும்புவார்கள்’ அவன் தனக்கு மனதில் பட்டதைச் சொன்னான். அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். ‘எங்களுக்கு என்ன குழந்தை பிறந்தாலும் எனக்குப் பரவாயில்லை..அது எங்களின் அன்பின் சங்கமத்தின் அடையாளம், ஆனால் எனது வயிற்றில் ஆண்குழந்தைதான் வந்திருக்கிறது என்று எனக்குத் தெரியும். எங்கள் குழந்தைக்கு விஷ்ணு என்று பெயர் வைப்போமா?’ அவள் கனவில் பேசுவது போல்ப் பேசினாள். அவன் பெயர் மாதவன். அவளின் தகப்பன் பெயர் கிருஷ்ணகுமார். இறந்து விட்ட அவளின் தமயனின் பெயர் கண்ணன். அத்தனை பெயர்களும்,காக்கும் கடவுள்,திருமாலின் பெயர்கள். ஆனால்,அவளின்; குடும்பம் கடவுளர்களாலும் காப்பாற்ற முடியாத விதத்தில் சிங்கள இனவாதிகளால் படுகொலை செய்யப் பட்டுவிட்டார்கள். அவளின் தாய் தகப்பன்,1986ம் ஆண்டு, உடல் நலமில்லாமல், வருந்தும் தங்கள் மகன் கண்ணனுக்கு வைத்தியம் பார்க்க, இலங்கையின் தலைநகரான கொழும்புக்குச் சென்றார்கள். அந்தக் காலகட்டத்தில் அப்போது அரசிலிருந்து ஐக்கிய தேசியக் கடசியின் ஆதரவுடன் சிங்கள இனவாதம் தலைவிரித்தாடிக் கொண்டிருந்தது. நித்யாவின் தாய், தகப்பன், தமயனுடன்,இலங்கையின் கிழக்கிலிருந்து தலைநகரான கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பஸ்ஸில் பிரயாணம் செய்த ஐம்பத்தியாறு தமிழ் உயிர்களுக்கு என்ன நடந்ததென்று இதுவரையும் தெரியாது. அவர்களை இழந்தபோது நித்தியாவுக்கு ஐந்து வயது. தாய்,தகப்பன் தமயனின் முகத்தைச் சரியாக ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாத வயது. அவர்களின் படங்களை வைத்துக் கொண்டு பழைய வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறாள். இப்போது குழந்தைக்கு விஷ்ணு என்று பெயர் வைக்கப் போகிறாளாம்!.அவர்களைத் தனது வாழ்க்கை முழுதும் ஞாபகப் படுத்த அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தாளா? மாதவன் அவள் சொல்வதன் அர்த்தம் புரிந்ததும் மெய் சிலிர்த்து விட்டான். குழந்தை வயிற்றில் வந்ததும்,அவளின் விருப்பத்தின்படி லண்டனுக்கு வெளியே வீடு வாங்கிக் கொண்டு வெளியே வந்து விட்டார்கள். அந்தப் புதுவீட்டுக்கு வந்த நாளிலிருந்து நித்யா பெரும்பாலான நேரத்தை அந்தக் கிறீன் ஹவுஸில் செலவிடுகிறாள். பல வசதிகளையம் கொண்ட ஒரு மண்டபம் போன்றது அந்தக் கிறீன் ஹவுஸ். இருபக்கங்களும் பெரிய மேடைகள் அமைக்கப்பட்டு பலவகையான உயர்தர மலர் செடிகள் வைக்கப் பட்டன. நித்யாவுக்கு ‘ஓர்கிட்’ மலர்கள்; என்றால் பெரிய விருப்பம். அவளின் சிறுவயதில்,அவளின் தாத்தாவுடன் அவரின் வயலுக்கு,காடுகள் அடர்ந்த கோமாரி என்ற பிரதேசத்துக்குப் போகும்போது, அங்கு உள்ள மிக அடர்ந்த காடுகளில் பலவித ‘ஓர்கிட்’; மலர்களைக் கண்டு பரவசப் பட்டதாகச் சொன்னாள். அவர்கள் அந்த வீட்டுக்கு ஆனிமாத முற்பகுதியில் வந்தார்கள். அவள் அப்போது ஆறுமாதக் கர்ப்பவதி. மாதவன் வேலைக்குப் போனதும் அவளின் வீட்டையும் கிறீன் ஹவுஸையும் அழகு படுத்துவதில் அவள் நேரம் கழிந்தது.அந்தக் கிறீன் ஹவுஸ் அழகிய மலர்களால் அலங்கரிக்கப் பட்டது. அந்த மண்டபத்தில். இருவர் இருந்து சாப்பிடவோ அல்லாது தேனீர் பருகவோ ஒரு சின்ன மேசையும் இரு நாற்காலிகளுமிருந்தன. ஓரு ஓரத்தில், களைப்பு வந்தால் சாய்ந்து படுக்க ஒரு சாய்மானக்கதிரை (நாற்காலி) போடப்பட்டிருந்தது. ஏற்கனவே நீர்; வசதியும், மின்சார வசதியுமிருந்ததால் மாதவன், சில அழகிய லைட்களைப் பூட்டினான். நித்யா அவ்விடத்தில் நிறைய நேரத்தைச் செலவளிப்பதால் அவள் தேனிர் வைத்துக்கொள்ளும் வசதியும் செய்து கொடுத்தான். அவன் வீட்டில் நிற்கும்போது அவர்களின் மதிய சாப்பாடு கிறீன் ஹவுஸில் நடக்கும். ஓக்டோபர் முற்பகுதியில்,அவர்களுக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. ‘விஷ்ணு’ என்று நிமிடத்துக்கொருதரம் சொல்லிக் கொஞ்சிக் கொண்டிருந்தாள் நித்யா. அப்போது சரியாகக் குளிர் வரத் தொடங்கவில்லை.பகல் நேரத்தில் அந்தக் கிறீன் ஹவுசில் அந்தக் குழந்தையுடன் நீண்ட நேரம் செலவிடுவாள். குழந்தை பிறந்து இரண்டு வாரங்கள் அவனின் பாட்டி வந்து நித்யாவுக்கு உதவியாகவிருந்தாள். அந்தக் கிழவிக்கு,மாதவன் அவளைச் செல்லம் பண்ணுவதால் நித்யாவை ஏற்கனவே பெரிதாகப் பிடிக்காது. நித்யா இப்போது மாதவனைச் சட்டை செய்யாமல் குழந்தையுடன் ஒவ்வொரு நிமிடத்தையும் செலவிடுவதைப் பார்த்துவிட்ட, ‘என்ன நித்யாவுக்கு வீட்டில் புருஷன் இருக்கிறான் என்ற ஞாபகமே போய்விட்டதா’ என்று முணுமுணுத்தாள். அவனும் கிழவியைப் பொருட் படுத்தாமல்,நித்யா அவர்களின்; குழந்தையுடன் கூடநேரத்தைச் செலவிடுவதற்கு உதவி செய்தான். முதல் ஆறுகிழமையும் அவன் விடுதலை எடுத்துக் கொண்டு வீட்டோடு நின்றிருந்து அவளையும் குழந்தையையும்; பார்த்துக் கொண்டான். ‘குளிர்வரத் தொடங்கியதும் கிறீன் ஹவுஸ் மிகவும் குளிராக இருக்கும்’அவன் அப்படிச் சொன்னபோது அவள் அவனை நீண்டநேரம் பார்த்தாள். ‘குழந்தையை நன்றாகப் போர்த்துக் கொண்டு வந்தால்ப் போயிற்று’ என்றாள்.அப்படிச் சொல்லும்போது அவளின் குரல் யாரோ குரல்போலிருந்தது. அதன் பின் வழக்கம்போல் இலையுதிர்காலக் காற்றும் மழையும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டபோது,அவன் நித்யா, குழந்தையை கிறீன் ஹவுசுக்குக் கொண்டு போகக் கூடாது என்று திட்டவட்டமாகச் சொன்னான். அவள் முகம் சட்டென்று வாடியது. அக்டோபர் மாத இறுதியில்;; அடிக்கடி மழையாயிருந்ததால் அவள் குழந்தையைக் கிறீன் ஹவுசுக்குக் கொண்டு செல்லவில்லை. ஆனால் அடிக்கடி அந்தப் பச்சை வீட்டை வெறித்துப் பார்த்துப் பெருமூச்சு விடுவாள். ‘என்ன அப்படிப் பார்த்துக் கொண்டு நிற்கிறாய்’ என்று அவன் கேட்டபோது, ‘ கிறீன் ஹவுஸில் யாரோ நிற்பது போலிருக்கிறது’ என்றாள். ‘ உனது அம்மாவா?;’ மாதவன் வேடிக்கையாகக் கேட்டான். அவள் அவனுக்குப் பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். ”நித்யா, எங்களின் குழந்தையைப் பார்க்க உனது பெற்றோர் இவ்விடமில்லையே என்று துக்கப் படுவது எனக்குப் புரியும். ஆனால் தயவு செய்து, உனது அம்மாவின் ஞாபகம் வந்தபோதெல்லாம் குழந்தையை அந்தக் கிறீன் ஹவுசுக்குள் கொண்டு செல்லாதே’ அவன் அன்புடன் வேண்டிக் கொண்டான். ஆனால் ஒரு நடு இரவு ஏதோ சப்தம் கேட்டு எழுந்தவன், பக்கத்தில் நித்யாவையோ தொட்டிலில் குழந்தையையோ காணாததால் அலறிப் புடைத்துக்கொண்டு வெளியே வந்தான். கிறீன் ஹவுசில் லைட் எரிந்தது. அங்கு போனால் நித்யா குழந்தையுடன் அங்குள்ள சாய்ந்தாடும் நாற்காலியில் படுத்திருந்தாள். ஆத்திரத்தில் அவன் மனம் பற்றியெரிந்தது. என்னவென்று ஒருதாய் இப்படி ஒரு பச்சை மண்ணை இந்தக் குளிருக்குள் கொண்டுவரலாம்? ‘ என்ன உனது அம்மா உனது கனவில் வந்து உன்னை இங்கே வரச் சொன்னாளா?’ அவன் தான் என்ன பேசுகிறான் என்று தெரியாமல் கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டினான். அவள் அவனை வெறித்துப் பார்த்தாள் அந்தப் பார்வையை அவன் விரும்பவில்லை. அவள் யாரோ ஒருத்திபோல் அவனை உறுத்துப் பார்த்தது அவனுக்கு எரிச்சலாகவிருந்தது. சிலருக்கு நித்திரையில் எழும்பி நடக்கும் வருத்தம் இருப்பதென்றும் அந்த நேரத்தில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்ன பேசுகிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது என்று அவன் படித்திருக்கிறான். அப்படி ஒரு நோயால் நித்யா துன்பப்படுகிறாளா? அவன் குழப்பத்துடன் பலதையும் யோசித்தபடி, தாயையும் சேயையும் கட்டியணைத்தபடி அறைக்குள் கொண்டு வந்து சேர்த்ததும், ‘ உனக்கென்ன பைத்தியமா இப்படி இந்தப் பச்சை மண்ணை இந்தக் குளிரில் வதைப்பதற்கு?’ அவன் அவனால் கட்டுப்படுத்த முடியாத ஆத்திரத்தில் இரைந்தான். அவள் அவளை ஒரு அந்நியனைப் பார்ப்பதுபோல் வெறித்துப் பார்த்தாள். அந்தப் பார்வை அவனுக்குத் தர்மசங்கடத்தைத் தந்தது.அவனுக்குக் கோபம் அளவுக்கு மீறியது. தனது கோபத்தை வெளிப்படுத்த இரைந்து கத்திக் கொண்டிருந்தான். ‘ நான் இந்த கிறீன் ஹவுஸைச் சீக்கிரம் அடித்து நொறுக்கினாற்தான் உனக்குப் புத்தி வரும்’ அவன் தொடர்ந்து அதிர்ந்து கொண்டிருந்தான். அதுதான் முதற்தடவை அவளிடம் இரைந்து பேசியது. அவன் குழந்தையை நித்யாவிடமிருந்து பறித்துத் தன்னோடு அணைத்துக் கொண்டான். அவள் அப்போதுதான் ஏதோ சுயநினைவுக்கு வந்தவள்போல்,அவனைப் பார்த்து விம்மி விம்மி அழத் தொடங்கிவிட்டாள். ‘ நான்..நான். வேண்டுமென்றே அங்கு போகவில்லை.’அவள் மேலே சொல்லத் தெரியாமல் விம்மினாள். ‘நித்யா எங்கள் குழந்தை இந்தக் குளிரைத் தாங்காதம்மா’ அவன் அவள் அழுகையைத் தாங்காது அணைத்தபடி சொன்னான். ‘மன்னித்து விடுங்கள்..இனி அப்படிச் செய்ய மாட்டேன்’ அழுதபடி சொன்னாள்.மாதவனுக்கு நித்யாவைப் பார்க்கப் பரிதாபமாகவிருந்தது. அவள்தனது தாயின் நினைவு வரும்போதெல்லாம் அந்தப் பச்சை வீட்டுக்குள் தஞ்சம் கேட்கிறாளா? அவனுக்கு எதையும் தெளிவாக யோசிக்க முடியாமல் மனம் தத்தளித்தது. அதற்கு அடுத்த நாள் அவனின் சினேகிதன் சிவராமும் அவனின் ஆங்கில மனைவி டேப்ராவும் மாதவன் தம்பதிகளைப் பார்க்க வந்திருந்தார்கள்.நித்யா சமையல் வேலையில் பிஸியாகவிருந்தாள்.நித்யாவுக்கு டேப்ராவை மிகவும் பிடிக்கும். மாதவன் மாதிரியே சிவராமும் டேப்ராவைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும் காலத்தில் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டவன். டேப்ரா முற்போக்குக் கொள்கைகளையுடைய ஒரு ஆங்கிலப் பெண்ணியவாதி. உலக அரசியலில், முக்கியமாகப் பெண்கள் சம்பந்தப் பட்ட விடயங்களில் மிகவும் அக்கறையுள்ளவள்.பல்கலைக் கழகமொன்றில் பெண்களின் கல்வி சம்பந்தப்பட்ட சரித்திரத்தை ஆராயும் பாடத்தில் விரிவுரையாளராகக் கடமை புரிபவள். குழந்தை பிறந்த நாளிலிருந்து தொடரும் பிரச்சினைகளால்,சரியாக நித்திரை வராததால், மாதவன்; சோர்ந்து போயிருந்தான்.மிகவும் களைத்துப் போயிருந்த நித்யா,அவர்கள் வரும்போது நித்யாவும் ஏனோ தானோ என்று வந்தவர்களை வரவேற்றாள். வந்திருந்த சினேகிதர்களுக்கு அந்த வீடு.வழக்கமான கல கலப்பற்ற ஒரு சோகமான வீடாகத் தெரிந்தது. சிவராமும் டேப்ராவும் அந்த வீட்டுக்கு இரண்டாம் தடவையாக வந்திருக்கிறார்கள். முதற்தரம் வந்தபோது, அவர்கள் வந்து கொஞ்ச நேரத்தில் வீட்டைச் சுற்றிப் பார்த்து விட்டபின், அந்தப் பச்சை வீட்டுக்குள் நுழைந்தார்கள். நித்யா கிட்டத் தட்ட ,அந்த கிறீன் ஹவுசிலேயே குடியிருப்பதைப் பார்த்து டேப்ரா ஒருகணம் திகைத்து விட்டாள். அதைப் பற்றி அவள் மாதவனுக்குச் சொல்லி ஆச்சரியப் பட்டபோது, ‘ என்ன செய்வது,நான் வேலைக்குப் போனதும் அவளின் தனிமையைப் போக்க இந்த கிறின் ஹவுஸில் பெரும்பாலான நேரத்தைச் செலவிடுகிறாள்’ என்றான். நித்யா அந்த பச்சை வீட்டுக்குள் நேற்று இரவில் குழந்தையுடன் போயிருந்தாது அவன் மனதில் அனலாக இன்னும் எரிந்து கொண்டிருந்தது. அதை இன்று வந்திருக்கும் அவர்களுக்கு எப்படிச் சொல்வது என்று மாதவன் தவித்தான். டேப்ராவின் மூலம் நித்யாவுக்குப் புத்திமதி சொல்லப் பண்ணவேண்டும் மாதவன் யோசித்தான். இதுவரையும்,நித்யா அவனை அந்நியனாக நடத்துவதை அவனின் சொந்தக்காரர்களுக்குச் சொல்லத் தயங்கினான். ‘ நீதானே எதோ புதினமான புனிதமான காதல் என்றெல்லாம் புலம்பிக்கொண்டு திரிந்தாய்,இப்போது என்ன நடக்கிறது என்று பார்த்தாயா,ஆரம்பத்தில் அவளின் செய்த சூனியத்தின் மந்திரத்திரத்தாலோ மாயையாலோ அவளின் காலடியில் காவடி எடுத்துச் சுருண்டு கிடந்தாய். உன் தலைவிதி அப்படியாய்ப் போய்விட்டது’ என்று அவன் பாட்டி அவனில் இரங்கி நடிப்பதுபோல் நித்யாவை வறுத்தெடுப்பாள். ‘ குழந்தை பிறந்ததும் வாழக்கையோ தலை கீழாக மாறியிருக்குமே’சிவராமன் மாதவன் நித்யா தம்பதிகளின் வாழ்க்கையின் சிக்கலைத் தெரியாமல்,குழந்தை பிறந்ததால் அந்த இளம் தம்பதியினர் ‘சாதாரண’ வாழ்க்கை முறை தடைப்பட்டதைக் கேட்டான்.. ‘நித்யாவின் நடவடிக்கைகள் அசாதாரணமாகவிருக்கிறது,என்னிடம் நெருங்கப் பழகுவதையும் மனம்விட்டு விடயங்களைப் பேசுவதையும் தவிர்க்கிறாள்’ மாதவன் மென்று விழுங்கிக்கொண்டு முணுமுணுத்தான். டேப்ரா அவனை ஏற இறங்கப் பார்த்தாள்.’ஆண்களுக்கு,பெண்கள் ஒரு உயிரைத் தங்கள் வயிற்றில் தாங்குவதன் தார்ப்பரியமோ. அல்லது அந்த உயிர் உலகுக்கு வந்ததும் அதை எப்படிப் பராமரிப்பது என்று ஒரு இளம் தாய்படும் துயர்களோ ஒரு நாளும் சரியாகப் புரியாது. புதிய ஒரு ஜீவனைப் பராமரிக்கும் பொறுப்பைச் சரியாக புரிந்துகொளளாமல். அவளின் நிலைக்கு உதவாமல் அவள் உங்களுடன் நெருக்கமாயில்லை என்று சொல்வது வெட்கமாயில்லையா? டேப்ரா மாதவனைப் பார்த்து பொரிந்து தள்ளினாள். நித்யாவுக்கும் தனக்கும் ‘செக்ஸ் லவ்’ சரியில்லை என்று தான் சொல்வதாக டேப்ரா எடுத்துக் கொண்டதை மாதவன் உணர்ந்து கொண்டான் அவனுக்கு அவளின் ஆத்திரம் நம்பமுடியாதிருந்தது. நித்யாவையும் குழந்தையையும் அவன் எவ்வளவு தூரம் கண்ணும் மணியுமாகப் பார்த்துக் கொள்கிறான் என்பதை எப்படி டேப்ராவுக்கு விளங்கப் படுத்துவது? ‘ டேப்ரா, ஒரு புதிய தாய் ஒரு சிறு குழந்தையுடன் என்ன பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிவரும் என்று உன்னை விட எனக்குக் கூடத் தெரியும். எங்களுக்குள் எங்கள் குழந்தையை எப்படி வளர்ப்பது என்பது பிரச்சினையாகவிருக்கவில்லை. ஆனால் நித்யா சிலவேளைகளில் தன்னை மறந்து எதையோ யோசிக்கிறாள். என்னை அந்நியனாகப் பார்க்கிறாள். குழந்தையை என்னிடமிருந்து வாங்கிக்கொண்டு இறுக அணைத்துக் கொண்டு படுக்கையறைக்குள் மறைந்து விடுகிறாள். அதனால்,அவளுக்கும் எனக்குமிடையில் எங்கள் குழந்தை பற்றிய தர்க்கங்கள் அடிக்கடி வருகின்றன’ அவன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அழுது விடுவான்போலிருந்தது. சிவராம் மாதவனைத் துன்பப்படுத்திய டேப்ராவை முறைத்துப் பார்த்தான். ‘மாதவன் நான் உன்னைப் புண்படுத்துவதற்காக ஒன்றும் சொல்லவில்லை. குழந்தை பிறந்ததும் ஒரு பெண்ணின் உடம்பிலும் உள்ளத்திலம் பாரிய மாற்றங்கள் நடக்கின்றன. இதன் தார்ப்பரியத்தைச் சரியாகக் கணித்துப் பராமரிக்காவிட்டால் எத்தனையோ பிரச்சினைகள் வரலாம். குழந்தை பிரசவம் நடக்கும்போது ஒரு பெண் கிட்டத்தட்ட ஐந்நூறு மில்லி லீட்டர்ஸ் குருதிpயை இழக்கவேண்டி வரலாம் அதன் பாரதூரமான விளைவுகள் எத்தனையோ. சாதாரண மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் இழக்கும் குருதியை விடப் பிரமாண்டமானது இது.. அதனால் ஏற்படும் களைப்பு, குழந்தைக்குப் பால் கொடுக்கவேண்டியதால் அடிக்கடி எழும்பும் நித்திரையின்மை, அத்துடன் சட்டென்று உடம்பில் ஏற்படும் சுரப்பியின் மாறுதல்கள் என்பதை அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளத் தெரியாத பயம் என்பதை உணர எவ்வளவு காலம் எடுக்கும் தெரியுமா, இந்தப் பிரச்சினைகளைச் சரியாக அணுகத் தெரியாத பெண்கள் டிப்ரஷனுக்கள் தள்ளப் படுவதுமுண்டு என்று தெரியுமா?’ டேப்ரா கேள்விக்கு மேல் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தாள். அந்த நேரம் நித்யா அவ்விடம் வந்து சேர்ந்தாள். கணவரையும் நண்பர்களையும் நேரடியாகப் பார்த்தாள். மற்ற மூன்று பேரும் தாங்கள் நித்யாவைப் பேசுவதை நிறுத்திக்கொண்டு.ஒருத்தரை ஒருத்தர் தர்ம சங்கடத்துடன் பார்த்துக் கொண்டனர். ‘என்னுடையவர், நான் இரவில் குழந்தையுடன் கிறீன் ஹவுசுக்கு ஓடிப் போய் இருக்கிறேன் என்று சொன்னாரா?’ நித்யா ஆறுதலாகக் கேட்டாள். மாதவன் திடுக்கிட்டு விட்டான். அவன் அதைப்பற்றி டேப்ராவுக்கோ சிவராமுக்கோ மூச்சு விடவில்லை. டேப்ராவும் சிவராமும் ஒருத்தரை ஒருத்தர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டனர். நித்யாவின் பார்வை அவர்களின் வீட்டுக்கு முன்னாலிருந்து பிரமாண்டமான பார்க்கில் பதிந்திருந்தது. இலையுதிர் காலம் தொடங்கிவிட்டதால் அந்தப் பார்க்கின் பல மரங்கள் இலைகளை உதிர்க்கத் தொடங்கியிருந்தன. ‘என்ன ஒரேயடியாக அந்தப் பார்க்கில் கண்ணாகவிருக்கிறாய்?’ டேப்ரா சிரித்தபடி கேட்டாள். நித்யா வந்ததும்,கிறீன்ஹவுஸ் பற்றிப் பேசியதும் அதனால்; மாதவன் தர்மசங்கடப் படுவதை அவள் அவதானித்திருந்தாள். ‘இந்த இடம் மிகவும் சோகமான பிரதேசமாக நான் உணர்கிறேன். எங்கள் கிறீன் ஹவுஸில் யாரோ இருப்பதாக நான் உணர்கிறேன். நேற்றிரவு அங்கிருந்து யாரோ என்னையழைப்பது போலிருந்தது. அங்கு நான் எப்படிப் போய்ச் சேர்ந்தேன் என்று தெரியாது. இதை எல்லாம் இவரிடம் சொன்னால் அவர் இரைந்து கொட்டுவார் என்றபடியால் நான் வாய் திறக்கில்லை, நீங்கள் எங்களின் அன்பான சினேகிதர்கள் என்னைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.’ நித்யாவின் குரல் மிகவும் தெளிவாக இருந்தது. மற்றவர்கள் ஒன்றும் பேசவில்லை. அவள் அப்படிச் சொல்வாள் எனப்தை யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சி அந்த இடத்தில் படர்ந்த மௌனத்தில் பளிச்சிட்டது. ‘நித்யா அந்தக் கிறின் ஹவுசுக்குப் பக்கத்தில் பக்கத்து வீட்டாரின் பெரியமரம் பிரமாண்டான கிளைகளுடன் காற்றில் அடிபடும்போது அதன் நிழல்களின் பிரதிபிம்பம் பல உருவங்களைக் காட்டுவதுபோன்ற பிரமையைத் தரும்’ மாதவன் நித்யாவின் பயத்தைப் போக்கும் தோரணையிற் சொன்னான். அவள் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். ‘நிழலுக்கும் நியத்துக்கும் எனக்கு வித்தியாசம் தெரியும்..நான் அமானுஷத்தை நம்புவள்’ என்று அவள் மிகவும் சாதாரணமாகச் சொன்னாள். ‘நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைத்தாலும் எனக்கு அக்கறையில்லை’ என்ற தொனி அவள் குரலில் அப்பட்டமாகவிருந்தது. சிவராம் நித்யா சொல்வதை மிகவும் அவதானமாகக் கேட்டான். அவள் மிகவும் தெளிவாகப் பேசுவதை அவன் உற்றுக் கவனித்தான். ஓருகாலத்தில், மாதவன் அமானுஷத்தை நம்பும் பெண்ணைப் பற்றிச் சொன்னதை ஞாபகப்படுத்திக் கொண்டான். அவனுக்குத் தன் நண்பனின் நிலை புரியத் தொடங்கியது. குழந்தை பிறந்தைவுடன் மாரடிக்கும் களைப்பில் அவள் அந்த வார்த்தைகளைக் கொட்டவில்லை என்பதும் அப்பட்டமாகப் புரிந்தது. டேப்ரா நித்யாவின் பேச்சை மாற்றுவதற்காக, ‘நாங்கள் இனிச் சாப்பிடுவோமா,எனக்குப் பசிக்கிறது’ என்றாள். எல்லோரும் டைனிங் றூமுக்குப் போனதும் அவர்களின் பேச்சு எங்கேயெல்லாமோ சுற்றித் திரிந்தது. மாதவனால் அந்த உப்புச் சப்பற்ற சம்பாஷணைகளைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நித்யாவின் குடும்பம் அகாலமாக இறந்துபோன கதையை அவர்களுக்குச் சொன்னான். நித்யா அமானுஷத்தை நம்புவதற்கு அவளுக்கு அவளின் குடும்பத்தில் வைத்திருந்த அளப் பரிய ஈர்ப்பு என்பதைத் தன் சினேகிதனுக்கும் மனைவிக்கும் விளங்கப் படுத்தினான். நித்யாவுக்குத் துன்பம் வரும்போது அவள் தனது அம்மாவின் போட்டோவை வைத்துக் கொண்டு பேசிக் கொள்வதைப் பற்றிச் சொன்னான். நித்யாவுக்கு அவன் மனம் திறந்து தன்னைப் பற்றிச்சினேகிதர்களுக்குச் சொன்னது திருப்தியாகவிருந்தது;. ‘இதை வேடிக்கையாகத் தயவுசெய்து எடுக்கவேண்டாம்’ நித்யா அழுதுவிடுவாள் போலிருந்தது. ‘யாராவது என்னைப் புரிந்து கொள்ளுங்கள்’ என்ற தாபம் அவள் குரலிற் தொனித்தது. ‘உங்கள் அம்மாவை நீங்கள் மிகவும் நேசித்ததாக அடிக்கடி சொல்லியிருக்கிறீர்கள்..கிறீன் ஹவுஸிலிருந்து உங்களை அழைப்பது உங்கள் அம்மாவா?’ சிவராம் கேட்டான்.’இல்லை..’ அவள் சட்டென்று சொன்னாள். ‘ பேய்க்கதைகளில் நம்பிக்கையுண்டா?’ டேப்ரா கேட்ட கேள்விக்கு நித்யா,’கிறிஸ்தவ மதத்தில் புனித தந்தை, புனித மகன்,புனித ஆவி என்றுதானே வழிபடுகிறார்கள். அவர்களெல்லாம் முட்டாள்களா?’ என்று கேட்டாள் அதற்கு,டேப்ரா,’நித்யா நான் உன்னை ஒரு முட்டாள்ப் பெண் என்று நினைக்கவில்லை ஆனால் இந்தப் பிரதேசமும் ஒருகாலத்தில் நூற்றுக்கணக்கான பெண்களை அவர்கள் சூனியக்காரிகள் என்று கொலை செய்த பல இடங்களில் ஒரு இடம்.. உனக்குத் தெரியுமா, 1484ம் ஆண்டுக்கும் 1750க்குமிடையில் சமயவாதிகள் இங்கிலாந்திலும் ஐரோப்பிலும் இருநுர்றாயிரத்தற்கும் (200.000) மேற்பட்ட பெண்களைச் சூனியக்காரிகள் என்று, மிகவும் கொடுமையான சித்திரவதைகள் செய்தும் கொலை செய்தும் உயிருடன் கொழுத்தியும் முடித்தார்கள். அவர்களின் ஆவிகள் இந்தப் பிரதேசத்தில் முக்கியமாக உங்களுக்கு முன்னாற் பரந்து கிடக்கும் பார்க் போன்ற இடங்களில் அலைவதாக எத்தனையோ கதைகள் உண்டு. நீP இந்தப் பக்கம் வீடு வாங்கிக்கொண்டு வந்தபோது யாரோ உனக்கு அந்தப் பேய்க்கதைகளைச் சொல்லியிருக்கலாம்..’ டேப்ரா சொல்லி முடிக்கவில்லை. நித்யா இடைமறித்தாள்.’ டேப்ரா என்னையழைப்பது எனக்குப் பயம் தரவேண்டு;மென்று நினைக்கும் பேய் என்று நான் நினைக்கவில்லை’ என்றாள். மற்றவர்களுக்கு,முக்கியமாக மாதவனுக்குத் தொடர்ந்து ‘பேய்கள்’ பற்றிப் பேசிக் கொண்டிருக்க விருப்பமில்லை.அவன் பேச்சை மாற்றினான். கணவனின் குணம் அறிந்த நித்யா பவ்யமாகத் தனது ‘பேய்க்’கதையை நிறுத்தினாள். சில நாட்களின் பின்,சிவராம் போன் பண்ணி நித்யாவை ஒரு டாக்டரிடம் கொண்டுபோய்க் காட்டச் சொன்னான். அவள் வரமாட்டாள் என்று மாதவனுக்கத்; தெரியும். ஆனால் மாதவன் தனக்கு ஒரு அப்பாயின்ட்மென்ட எடுத்துக் கொண்டு டாக்டரிடம் சென்றான். ‘ என்ன பிரச்சினை?’ நடுத்தரவயது ஆங்கில டாக்டர் மாதவனின் மெடிக்கல் நோட்ஸ்களை ஆராய்ந்தபடி அவனை வினவினார். ‘ எங்களுக்குக் குழந்தை பிறந்த நாளிலிருந்து எனது மனைவியின் நடத்தையால் எனக்குச் சித்தம் கலங்குகிறது’ அவன் படபடவென்று சொன்னான். ‘ ‘முதற் பிள்ளைதானே’ டாக்டரின் கேள்விக்கு,அவன் ‘உம்’ கொட்டினான். ‘அது சாதாரணமான விடயம்..எனது மனைவியும் ஆறுமாதத்துக்கு நான் அந்த வீட்டில் இருக்கிறேனா என்றுகூடத் தெரியாமல் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள்’ டாக்டரின் முகத்தில் அவரின் பழைய ஞாபகங்கள் வந்தபடியால் ஒரு அழகான புன்முறவல். ‘ என்னுடைய கதை வேறு விதமானது..’ அவன் தயங்கினான். நடுச்சாமத்தில் இந்தக் குளிரில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு கிறீன் ஹவுசுக்குள் எனது மனைவி போகிறாள் என்று டாக்டருக்குச் சொன்னால். என்ன நடக்கும்? அவன் சட்டென்று யோசித்தான். குழந்தையைச் சரியாகப் பார்க்கத் தெரியாத தாய்தகப்பன் என்று அரசாங்கம் அவர்களின் குழந்தையைப் பறித்தெடுக்குமா? அல்லது எனது மனைவி அமானுஷ சக்திகள் பற்றிப் பேசுகிறாள் என்றால் அவளைப் பைத்திக்கார வைத்தியசாலைக்கு அனுப்புவார்களா? அவனுக்குப் பயம் வந்தது. தான் அங்கு வந்தது பிழை என்று புரிந்தது. அவரிடம் கடைசிவரைக்கும் நித்யாவின் ‘பேய்க்’ கதைகளைச் சொல்லவேண்டாமென்று மனம் ஆணையிட்டது. நித்யாவை அவர் கேலி செய்வதை அவன் தாங்கமாட்டான். ‘ஏன் செக்ஸ் லைவ் சரியில்லையா..கொஞ்சம் பொறுத்துக் கொள்..இன்னும் கொஞ்சநாளில் நீ அந்த வீடடிலிருப்பது அவளுக்கு ஞாபகம் வரும்’ அவர் மாதவன் மாதிரி, எத்தனையோ கணவர்கள் வந்து எனது மனைவியும் நானும் குழந்தை பிறந்தபின்,’நெருக்கமாயில்லை’ என்று ஒப்பாரி வைப்பதைக் கேட்டிருப்பார் என்பது அவனுக்குத் தெரியும். அவனின் முகத்தில் படரும் தர்மங்கடத்தைப் பார்த்த அவர்,கொஞசம் அவதானமாக அவனைப் பார்த்துக் கொண்டு, ‘உங்களுக்கு உங்கள் மனைவியின் மனநிலை பற்றிப் பயம் இருந்தால் அவளை ஒரு தரம் கூட்டிக்கொண்டுவாருங்கள்’ என்றார். மாதவன் அவரின் சொற்களைக் கிரகிக்க முதல் அவர் தொடர்ந்தார்.. ‘குழந்தை பிறந்தபின் சில பெண்கள் அவர்களின் ,உடலில். உள்ளத்தில், வாழ்க்கைச் சூழ்நிலையில் சட்டென்று வந்த மாற்றத்தை முகம் கொடுக்க முடியாமற் தடுமாறுவார்கள்,அதனால் சிலவேளை மனஅழுத்தம் வருவதுண்டு. பெரும்பாலும் கூட்டுக் குடும்ப அமைப்பிலிருந்து வந்த பெண்கள் அவர்களுக்குத் தேவையான அன்பும் ஆதரவும் இல்லாதபோது இப்படியான நிலைக்குள்த் தள்ளப் படுவதை எனது அனுபவத்திற் கண்டிருக்கிறேன். ஆனால் அன்பான நல்ல பராமரிப்பான,,ஆதரவான சூழ்நிலையைத் தொடர்ந்தால் அவர்கள், ஒரு சில மாதங்களில் பெரும்பாலும் படிப்படியாகச் சரியாகிவிடுவார்கள்;. நீங்கள் இருவரும் ஒருத்தருடன் இணைந்து மிகவும் நெருக்கமான உறவைப் பேணுவது மிக மிக அத்தியாவசியமான விடயம். நான் எதைப் பற்றிக் குறிப்பிடுகிறேன் என்று உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.அப்படியிமில்லை என்றால்..’ தொடர்ந்து மேலே சொல்லாமல் அவர் அவனைப் பார்த்தார். என்ன சொல்லப் போகிறார்? அவளைப் பைத்திய வைத்திய சாலையில் அனுமதிக்கவேண்டும் என்று சொல்லப் போகிறாரா? மன அழுத்ததைத்; தவிர்க்க மாத்திரைகள் கொடுத்து,அவளின் உணர்வுகளின் சுயமையைப் பறித்துவிட்டு, நடமாடும் ஒரு வெற்றுப் பிணமாக வாழலாம் என்று சொல்லப் போகிறாரா? அல்லது அவளுக்கு மன அழுத்தத்தைத் தரும்; குழந்தையிடமிருந்து ஒரு குறிப்பிட்ட காலம் அவளைப் பிரித்து வைக்க வேண்டும் என்று சொல்லப் போகிறாரா? அவளிடமிருந்து குழந்தையைப் பிரித்தால் அவளுக்குக் கட்டாயம் பைத்தியம் வருவதுமட்டுமல்ல அவள் தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளத் துணிந்தாலும் ஆச்சரியமில்லை. அந்தவிதமான நினைவுகள் அவன் மனதில் படரத் தொடங்கியதும் அவன் நடுங்கிவிட்டான். ‘ அப்படி ஒரு தேவையுமில்லை..குழந்தை இரவில் அடிக்கடி எழும்புவதால் எனது நித்திரை குழம்புகிறது..அதுதான் நீங்கள் எனக்குக் கொஞ்சம் நித்திரை மாத்திரை தரமுடியுமா என்று கேட்க வந்தேன்’ என்று சாமர்த்தியமகச் சொன்னான். டாக்டர் கொடுத்த மாத்திரையை அவன் தொடவில்லை. நித்யா தற்செயலாகக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு நடுச்சாமத்தில் கிறீன் ஹவுசுக்குப் போய்விடுவாளோ என்ற பயத்தில் கண்ணும் கருத்துமாக அவளைக் கவனித்தான். அவனின் உடலும் உள்ளமும் சோர்ந்து போயிருப்பதை அடுத்த வீட்டுக் கிழவனே அவதானித்து விட்டார்.பல கேள்விகள் கேட்கிறார். பாசமுள்ள கிழவனுக்கு எப்படி நித்யாவின் ,’பேய்க்’ கதைகளைச் சொல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. அவருடன் பேசிய அன்று பின்னேரம், வேலையால் வீடு திரும்பும்போது அவன் மனம் பலவற்றையம் யோசித்தது. பெரும்காற்ற மிக மோசமாக வீசிக்கொண்டிருந்தது. அத்திலாந்துக் கடலில் ஏற்பட்ட காலநிலை மாறுதலால்,இன்னும் சில நாட்கள் இங்கிலாந்தில்,இப்படியான பெருங்காற்று வீசும் என்றும் அதற்கேற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பொது மக்கள் கைக்கொள்ளவேண்டும் என்று பிரித்தானிய காலநிலை அவதானிப்பு நிலையம் அடிக்கடி அறிவித்திருத்துக் கொண்டிருக்கிறது. அடுத்த வீட்டுக் கிழவரை பியர் குடிக்கக் கூப்பிட்டது அவனுக்கு ஞாபகம் வந்தது. நித்யா இரவுச் சாப்பாடு சமைக்க முதல் கிழவருக்குச் சாப்பிடத் தக்கதான உறைப்புடன் கோழிக்கறி சமைக்கச் சொல்லவேண்டும் என்று போன்பண்ணினால் அவளிடமிருந்து ஒரு பதிலும் இல்லை. அவள் குழந்தையுடன் பிசியாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு கொஞ்ச நேரம் கழித்து,இன்னொருதரம் போன்பண்ணினான் அதற்கும் பதில் இல்லை. அவளுக்கு என்ன நடந்திருக்கும், மோபைல் டெலிபோனிலை வீட்டில் வைத்து விட்டு கிறீன்ஹவுஸில் குழந்தையுடன் போய்த் தூங்குகிறாளா? இந்தக் காற்றும் குளிரிலும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளித் தோட்டத்தில் திரிகிறாளா?அவனுக்கு நித்யாவில் அளவுக்கு மீறிய கோபம் வந்தது. அவளிடம் பேசமுடியாததால் அடுத்த வீட்டுக் கிழவனுக்குப் போன் பண்ணினான். அவரிடமிருந்தும் பதிலில்லை. அவர் பின்னேரங்களில்,பெரும்பாலும் லைப்ரரிக்குப் போகிறவர். போயிருப்பார் போலும். மாதவனுக்குப் பயம் பிடித்துக் கொண்டது. குழந்தையை அவள் இரவில் தூக்கிக் கொண்டு திரிவதால் குழந்தைக்கு இன்னும் தடிமலோ காய்ச்சலோ வரவில்லை என்று அவன் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டான். அவனுக்கு உடனடியாக வீட்டுக்கு ஓடவேண்டுமென்றால் முடியாத காரியம். பெரும் காற்று காரணமாகப் பெருமரம் ஒன்று தண்டவாளத்தில் வீழ்ந்ததால் அவன் போகவேண்டிய ட்ரெயின் ஒரு மணித்தியாலம் லேட். அட கடவுளே, தண்டவாளத்தில் முறிந்து விழுந்தகிளைபோல, கிறீன் ஹவுஸ் பக்கம் நித்யா,குழந்தையுடன் போயிருந்தபோது அடுத்த வீட்டுக் கிழவரின் பெருமரத்தின் கிளை எதும் அந்தப் பச்சை வீட்டுக் கண்ணாடிக் கூரையில் விழுந்திருந்தால்? அப்படி நினைத்ததம்,அவன் மனம் பட்ட பாட்டை அவனைத் தவிர வேறு யாராலும் புரிந்து கொள்ள முடியாது. ட்ரெயின் அவன் இறங்கவேண்டிய இடத்தில் நின்றதும்,அவன் எத்தனை மைல் வேகத்தில் தனது காரை ஓட்டிக் கொண்டு வீட்டுக்குப் போனான் என்று அவனுக்கே தெரியாது. தெருவின் கடைசியில் அவன் திரும்பியபோது அவன் வீட்டுக்கு முன்னால் சிவப்பு வெளிச்சங்களை வீசியபடி போலிஸ்கார் நின்றிருந்தது. அவன் வாயுலர்ந்தத. மனம் படபடவென அடித்துக் கொண்டது. நித்யாவுக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதும் நடந்து விட்டதா? வாயுலர, நா மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்ள,அவன் அலறாத குறையாக,’ நித்யா’ என்று இரைந்துகொண்டு ஓடினான். அவனைக் கண்டதும், ஒரு போலிசார்,’ நீங்கள் இந்த வீட்டுச் சொந்தக்காரனா?’ என்று கேட்டான். அப்போது மிஸ்டர் லிவிங்ஸ்டன் வெளியே வந்தார்.’ ஐ யாம் சாரி மாது’ என்றார். என்ன நடக்கிறது? நித்யா எங்கே போனாள்? ‘ மாது, உங்கள் கிறீன்ஹவுஸ்..’கிழவர் ஏதோ சொல்ல முனைவதையும் பொருட்படுத்தாது,அவன் கண்கள் அவளையும் குழந்தையையும் தேடின. பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்பதையும் மறந்து,’நித்யா’ என்று அலறினான். அவள் குழந்தையை அணைத்தபடி ஓடிவந்து அவனைக் கட்டிக்கொண்டாள். அவன் தனது குடும்பத்தை இறுக அணைத்து முத்தமிட்டான். ‘ஏன் இந்தப் போலிசார்கள் எங்கள்; வீட்டில்?’ மனைவியை அணைத்தபடி கேட்டான். ‘போலிசாரைக் கேளுங்கள்’ அவள் கணவனைப் போலிசார் பக்கம் காட்டினாள். போலிசாருக்கு முன் கிழவர் அவனிடம் சொன்னார், ‘மாது, நீ என்னோட பேசிவிட்டுப் வேலைக்குப் போய்க் கொஞ்ச நேரத்தில் என் வீட்டுப் பெரியமரம் உன் வீட்டுக் கிறீன்ஹவுஸில் ஒரேயடியாகச் சரிந்து விட்டது. உனது கிறீன் ஹவுஸ் தரை மட்டமாகி விட்டது. நல்ல காலம் உனது வீடு ஒரு சேதமுமில்லாமற் தப்பி விட்டது. கிறீன் ஹவுசின் வீட்டின் அடித்தளமே பெருமரத்தின் வீழ்ச்சியால் உடைந்து சிதறி விட்டது.தோட்டம் முழுக்கக் கிளைகளும் கண்ணாடிகளுமாகச்; சிதறியது. பெரிய மரத்தை என்னால் ஒன்றும் பண்ண முடியாது, உதவிக்கு ஆட்களையழைத்தேன், நாங்கள்; உனது கிறீன் ஹவுசில் மரத்தையகற்ற வேலை செய்தபோது..கிழவர் மேலே கொண்டு பேசமுடியாமல் விம்மத்; தொடங்கிவிட்டார். நித்யாவுக்குப் பிரியமான கிறின் ஹவுஸ் தனது மரத்தால் அழிந்து விட்டது என்பதற்காக அவர் இவ்வளவு துன்பப் படுகிறாரா? அவனுக்கு அவரைப் பார்க்கப் பரிதாபமாகவிருந்தது. ‘கிறீன் ஹவுஸை உடைத்துக் கொண்டு விழுந்திருந்த பெருமரத்தின் பெரும் கிளையொன்றை அகற்ற முயன்றபோது.கிறீக் ஹவுசின் அடித்தளம் உடைந்திருப்பதும் அங்கு பிளவு பட்ட குழியில்,ஏதோ அசாதாரணமாகத் தெரிந்ததால், அந்தக் குழியைப் பார்த்தபோது..’ கிழவர் குழந்தை மாதிரி அழத் தொடங்கிவிட்டார். அந்த நேரம் இன்னும் பல போலிஸ் கார்கள் வீட்டை முற்றுகையிட்டன. ‘சாரி சார், நீங்கள் இந்த வீட்டிலிருந்து உங்கள் தோட்டத்திற்குக் கொஞ்சகாலம் போகமுடியாமல் தடைபோடப் போகிறோம்’ அதிகார பூர்வமாக ஒரு போலிஸ் அதிகாரி சொன்னான்.’ ‘எங்கள் தோட்டத்திற்கு நாங்கள் போகக்கூடாதா?’ மாதவன் குழம்பிப் போய்க் கேட்டான். ‘ஆமாம் நீங்கள் அங்கு போகக் கூடாது’ ‘ஏன்?’ ‘அது ஒரு கொலைக் கூடம் அங்கு,உங்கள் கிறீன் ஹவுஸில் ஒரு பெண்ணின் சடலம் புதைக்கப் பட்டிருக்கிறது அதைத் தோண்டியெடுத்து விசாரணை முடியும் வரைக்கும்,நீங்கள் உங்கள் வீட்டில் மட்டும் உலாவலாம் அதுமட்டுமல்ல எங்கள் விசாரணைக்குத் தேவையானால் உங்கள் வீட்டையும் அக்குவேறாகப் பிரிக்கவேண்டி வரலாம்’ போலிஸார் அதிகாரமாகச் சொல்லி விட்டு நகர்ந்தார்கள். மாதவனின் வீடு தனியான வீடென்றபடியால்,அதைச்சுற்றி வர இருவழிகள் உண்டு அதில் ; வீட்டையண்டியிருந்து, தோட்டத்திற்குப் போவதான பாதையைப் போலிசார் அடைத்து விட்டார்கள். இரவு தொடர்ந்தது. போலிசார் விடாமல் கிறீன்ஹவுஸை அடுத்து எதை எதையெல்லாமொ தோண்டிக் கொண்டிருந்தார்கள். பக்கத்து வீடடுக்கிழவர் மிகவும் உடைந்துபோனார். நித்யாவும் மாதவனும் அவருக்குச் சாப்பாடு போட்டார்கள். கிழவருக்குச் சாப்பாடு இறங்கவில்லை.’ இஸபெல்லா நல்ல பெண்..’ கிழவர் ஒரு குழந்தைபோற் தேம்பினார். மாதவனுக்கு .இப்போது சில விடயங்கள் ஞாபகம் வந்தன.அவர்கள் வீடு பார்க்க வந்தபோது அந்த வீட்டுக்காரனான அல்பேர்ட் மட்டும்தானிருந்தான். அவனின் மனைவி வீட்டிலிருக்கவில்லை. ‘எனது மனைவிக்கும் இந்த கிறீன் ஹவுஸ் மிகவும் பிடிக்கும்’ என்று அல்பேர்ட் சொன்னான் மகளின் பிரசவம் பார்க்கக் கனடாவுக்குச் செல்லமுன்னர் கிழவரின் மனைவி, ‘ இஸபெல்லாவும் நித்யா மாதிரித்தான் அந்தக் கிறின் ஹவுஸில் உயிராகவிருந்தாள்,எந்த நேரமும் அதற்குள்ளேயே நேரத்தைச் செலவளிப்பதாக அவள் கணவன் அல்பேர்ட் முணுமுணுப்பான். அவன் ஒரு முன்கோபி எதற்கெடுத்தாலும் பிழைபிடிப்பதாக இஸபெல்லா சொல்லியிருக்கிறாள்;’ என்று சொன்னாள். புதைக்கப் பட்டிருப்பது இசபெல்லாவா? யாரோ அந்த கிறீன் ஹவுஸிலிருந்து என்னைப் பார்க்கிறார்கள், அழைக்கிறார்கள் என்று நித்யா சொன்னதெல்லாம் அவளின் அமானுஷ உள்ளுணர்வால் இறந்து விட்ட இசபெல்லாவைக் கண்ட விடயங்களா? மாதவனுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. போலிசார் அவர்களிடம் வந்து,’ மேலதிக தேடுதலுக்காக இந்த வீட்டையும் நாங்கள் பரிசீலனை செய்யவேண்டும். அதுவரைக்கும் நீங்கள் இந்த வீட்டை விட்டுப் போவது நல்லது’ என்றார்கள். பக்கத்து நகரில் மாதவன் தம்பதிகளுக்க ஹோட்டேல் ஒன்று ஆயத்தம் செய்து கொடுத்தார்கள். அவசர அவசரமாகத் தங்களுக்குத் தேவையான சாமான்களை எடுத்துக் கொண்டு போலிஸ் பாதுகாப்புடன் மாதவனும் நித்யாவும் தங்கள் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறினார்கள். அடுத்தடுத்த நாட்களில் போலிசாரின் விசாரணைகளின் செய்திகள் பத்திரிகைகளில் வரத் தொடங்கின. ‘அந்த வீட்டில் கண்டெடுத்த பிணம் இஸபெல்லா டேவிட்சன் என்ற பெண்ணின் சடலமென்றும், அவள் நான்குமாதக் கர்ப்பவதியாக இருக்கும்போது கழுத்தை நெரித்துக் கொலை செய்யப் பட்டுப் புதைக்கப் பட்டிருந்தாள் எனவும் அது தொடர்பாக அவள் கணவன் அல்பேர்ட் டேவிட்ஸனைப் போலிசார் தேடுவதாகவும்’ செய்திகள் வெளியிடப் பட்டிருந்தன. செய்திகள் கேள்விப் பட்ட சிவராம் மாதவனுக்கு போன் பண்ணினான். ‘அந்த கிறீன் ஹவுஸில் இஸபெல்லாவின் உடல் பதைக்கப் பட்டிருந்ததை நித்யாவின் உள்ளுணர்வு சொல்லியதா?’ மாதவன் நண்பனைக் கேட்டான். ‘அப்படியொன்றுமில்லை. நீ அன்றைக்குச் சொன்னதுபோல் அந்த மரக்கிளைகளின் நிழல்கள் கிறீன்ஹவுசில் பட்டு ஆடும்போது, நித்யா அதை மனித உருவமாகக் கற்பனை செய்திருக்கலாம். இனி அவள் அந்தக் கிறீன் ஹவுஸ் பற்றிப் பேசுவாள் என்று நான் நினைக்கவில்லை’ என்றான் சிவராம் ‘அந்த வீட்டுக்குத் திரும்பிப் போவதா அல்லது வேறு வீடு பார்ப்போமா’ மாதவன் மனைவியைக் கேட்டான். ‘அந்த வீட்டுக்குப் போவம்;, ஆனால் கிறீன் ஹவுஸ் திருத்தக் கட்டப் படவேண்டாம்.அது எதையோ எனக்குச் சொல்லத் தவித்ததாக நான் உணர்ந்தேன். இஸபெல்லா தனக்கும்; தன் குழந்தைக்கும் நீதி கிடைக்கவேண்டும் என்று என்னைப் பாவித்தாள் என்று நினைக்கிறேன்.அதன் கதை முடிந்து விட்டது.;. ஆனால் இஸபெல்லின் ஆவி நல்லது என்று எனக்குத் தெரியும் ‘ நித்யா அமைதியாகச் சொன்னாள். அவள் குரலில் ஒரு அசாதாரணமான தொனியிருந்தது. இஸபெ;பலாவின் ஆவி, தன்னையும் தனது குழந்தையையும் கொடுமை செய்த தனது கொலைகாரக் கணவனை உலகத்துக்குக் காட்டிக்கொடுக்க, நித்யாவின் அமானுஷ சக்தியைப் பயன் படுத்தியதா? அப்படியென்றால் தங்கள் சொந்தங்களையிழந்த தமிழர்களுக்கு எந்த சக்தியும் ஏன் இதுவரை உதவவில்லை? தனக்கு விடை தெரியாத கேள்விகளைக் கேடடுத் தன்னைச் குழப்பிக் கொள்ள மாதவன்; தயாராகவில்லை. (யாவும் கர்ப்பனையே) தொடர்புடைய சிறுகதைகள் சாக்கலேட் மாமா 'சாக்கலேட் மாமா இறந்து விட்டாராம்' வாழ வேண்டிய பலர் இலங்கையில் இறந்து கொண்டிருக்கிறார்கள்.அல்லது இறக்கப் பண்ணப்பட்டிருக்கிறார்கள்.'சொக்கலேட் மாமா' வயது வந்தவர். அவர்இறந்தது ஒன்றும் பெரிய விடயமில்லைதான் ஆனாலும் அவர் எப்படி இறந்தார் என்று என் சினேகிதி பிலோமினா சொன்னபோது,பார்வதி என்ற இளம்பெண் என் ... மேலும் கதையை படிக்க... (காதலின்) ‘ஏக்கம்’ கொழும்பு - இலங்கைத் தலைநகர் 1971 சூரியன் மறையும் மனோரம்யமான அந்த மாலை நேர அழகை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.அந்தக் காட்சியின் அழகையோ அல்லது அவள் உடலைத் தழுவி ஓடும் தென்றலையோ,அல்லது கோல எழில் தவழும் கொழும்பு- கால்பேஸ் கடற்கரையின் அழகிய காட்சிகளையோ ... மேலும் கதையை படிக்க... இரட்டைத் தத்துவங்கள் லண்டன் 1991 “எனக்காக இவ்வளவு சிரமம் எடுத்ததற்கு நன்றி” டொக்டர் ரமேஷ் பட்டேலின் குரலில் நன்றிபடர்ந்தது. “இந்த நாட்டில் கறுப்பு டொக்டர்களாக வேலை செய்கிறோம். எங்களில் எப்போது என்ன பிழை பிடிப்போம் என்று பார்த்திருக்கிறார்கள் இந்த வெள்ளையர்கள். அவர்களை எதிர்நோக்க நாங்கள் ஒற்றுமையாய் இருக்க ... மேலும் கதையை படிக்க... காங்கிறீட் கண்மூடித் திறப்பதற்குள் ஒவ்வொரு பருவகாலமும் ஒரு காலத்தை இன்னொரு பருவகாலம் முந்திக்கொள்ளும்போது அதிவிரைவாக வந்துபோகின்றன. கோடை விடுமுறை சட்டென்று முடிந்துவிட்டது. விடுதலைக்கு வெளிநாடு போனவர்கள் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். வழக்கமான பாதை. வழமையான பிரயாணம். இரண்டு வார விடுமுறையில் லண்டனை விட்டுப்போனபின் நடந்த மாற்றங்கள் பிரமாண்டமாகத் ... மேலும் கதையை படிக்க... மோகினிப்பேய் வேலை செய்யத் தொடங்கிய நாளிலிருந்து,சம்பளத்துடன் ஒரு நீண்ட விடுமுறை எடுக்கவேண்டுமென்று ஆசைப் பட்டவன் ராகவன். அவன் தனது இருபத்திமூன்றாம் வயதில் யுனிவர்சிட்டிப் படிப்பை முடித்து,கொழும்பில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கமர்ந்து கொஞ்சநாட்களில், கல்லூரி நாட்களிலும் யுனிவர்சிட்டி நாட்களிலும் இருந்து சுதந்திரமோ,நேரமோ இனிவருவது அருமை ... மேலும் கதையை படிக்க... வடக்கத்தி மாப்பிள்ளை லண்டன்: அந்த அதிரிச்சியை எப்படித்தாங்குவது என்று இலட்சுமிக்குத் தெரியவில்லை. அவள் அந்த விடயத்தைச் சொன்னதும் அவளின் குடும்பத்தினர் அவளைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவார்கள் என்று எவ்வளவு கற்பனை செய்திருந்தாள். அவளின் குடும்பத்தினர் அவளிடம் நடந்துகொண்ட முறையைப் பற்றிய நினைவு தொடர்ந்தது.அவள் எரிச்சலுடன் நடந்தாள்.அவள் மனம் மிகவும் ... மேலும் கதையை படிக்க... அம்மா ஒரு அகதி 'அம்மா பாவம்' என்று தனது தாயில் பரிதாப்படுவதற்கு அப்பால், தாயின் நிலை பற்றி மேலதிகமாக யோசிக்க மாலினியால் முடியவில்லை. மாலினியின் கணவன்,புண்ணியமூர்த்தி, 'நான் மட்டும் உனது அம்மாவைப் பார்க்கும் பொறுப்பை ஏன் எடுக்க வேணும்?' என்று மாலினியிடம் முணுமுணுத்தான். அம்மாவுக்குப் பல பிள்ளைகள் ... மேலும் கதையை படிக்க... நேற்றைய மனிதர்கள் லண்டன் 2002 நேரம் இரவு நடுச்சாமத்துக்கு மேலாகிவிட்டது என்று படுக்கைக்குப் பக்கத்து மேசையில் வைத்திருக்கும் மணிக்கூடு சொல்கிறது. வேதநாயகம் தூக்கம் வராமற் தவித்துக்கொண்டிருந்தார்.அந்தப்பக்கம் இந்தப் பக்கம் என்று புரண்டுபடுத்தாலும் அவரின் மனதில் அலைபாயும் உணர்வுகளைத் தடுக்க அவரால் முடியவில்லை. மனதிலுள்ள பாரம் தொண்டையில் அடைபட்டு ... மேலும் கதையை படிக்க... சின்னம்மாவின் ‘அவர்’ சிவா தனது மனைவி கலாவின் சின்னம்மா தேவராணியை அன்று பினனேரம் சென்று பார்ப்பதாக முடிவு கட்டிய விடயம் அவனது நண்பன் ஒருத்தனின் எதிர்பாராத வருகையால் தடைபட்டுக் கொண்டிருக்கிறது. வந்திருந்த நண்பனுக்குத் தேனீர் கொண்டு வந்த கலாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதைச் சிவா ... மேலும் கதையை படிக்க... ஓநாய்கள் நத்தார்ப் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. பக்கத்து வீட்டுக்கார கிறிஸ்வத குடும்பத்தினர், நத்தார்ப்பண்டிகையைக் கொண்டாட, பலகார வகை செய்யும் ஆரவாரம் குமாரின்; கவனத்தை இழுக்கிறது. பக்கத்து வீட்டாருக்கு அண்டை அயலாரானவர்களைப் பற்றிய பெரிய சிந்தனையற்றுத் தங்கள் வேலைகளில் கவனமாக இருக்கிறார்கள். ... மேலும் கதையை படிக்க... சாக்கலேட் மாமா (காதலின்) ‘ஏக்கம்’ இரட்டைத் தத்துவங்கள் காங்கிறீட் மோகினிப்பேய் வடக்கத்தி மாப்பிள்ளை அம்மா ஒரு அகதி நேற்றைய மனிதர்கள் சின்னம்மாவின் ‘அவர்’ ஓநாய்கள் அச்செடு கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Name * Email * Website Comment You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong> Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g) தேடுக மின்கவி – ADVT E-Book / Printed Books வெளியிட அணுகவும் More » திருக்குறள் சமஸ்கிருத மொழிபெயர்ப்பு – ADVT திருக்குறள் சமஸ்கிருத புத்தகத்தை வாங்க அணுகவும் More » சமீபத்தில் தேதி மாதம் பிசிராந்தையாரும் கோப்பெருஞ் சோழனும் -மு.இராசாக்கண்ணு சிலுக்காணத்தம்மன்! -கிரேஸி மோகன் மூலக்கதை -பொன் குலேந்திரன் இருபது வருஷங்களும் மூன்று ஆசைகளும் -செ.யோகநாதன் புயல் உறையும் பூக்கள் -வல்லபாய் (தாம்)பத்தியம் -காரை ஆடலரசன் எதிர்பாராத யுத்தம் -சோலச்சி பக்திப் பரிசு -இணுவில் பவா என்னைப் பார் காய்ச்சல் வரும் -ரெ.சசிக்குமார் பேதை -கி.ராஜநாராயணன் December 2021 M T W T F S S « Nov 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 December 2021 (20) November 2021 (90) October 2021 (100) September 2021 (100) August 2021 (100) July 2021 (172) June 2021 (265) May 2021 (253) April 2021 (145) March 2021 (128) February 2021 (158) January 2021 (109) December 2020 (161) November 2020 (78) October 2020 (93) September 2020 (60) August 2020 (80) July 2020 (60) June 2020 (137) May 2020 (100) April 2020 (89) March 2020 (212) February 2020 (80) January 2020 (80) December 2019 (99) November 2019 (86) October 2019 (80) September 2019 (70) August 2019 (50) July 2019 (60) June 2019 (100) May 2019 (440) April 2019 (117) March 2019 (77) February 2019 (88) January 2019 (60) December 2018 (78) November 2018 (39) October 2018 (87) September 2018 (57) August 2018 (67) July 2018 (28) June 2018 (20) May 2018 (21) April 2018 (40) March 2018 (60) February 2018 (50) January 2018 (80) December 2017 (60) November 2017 (70) October 2017 (88) September 2017 (50) August 2017 (20) July 2017 (10) June 2017 (18) May 2017 (29) April 2017 (30) March 2017 (40) February 2017 (30) January 2017 (49) December 2016 (100) November 2016 (126) October 2016 (69) September 2016 (50) August 2016 (59) July 2016 (50) June 2016 (58) May 2016 (60) April 2016 (68) March 2016 (68) February 2016 (59) January 2016 (47) December 2015 (67) November 2015 (80) October 2015 (80) September 2015 (50) August 2015 (38) July 2015 (20) June 2015 (39) May 2015 (38) April 2015 (60) March 2015 (68) February 2015 (10) January 2015 (30) December 2014 (37) November 2014 (77) October 2014 (98) September 2014 (69) August 2014 (89) July 2014 (107) June 2014 (102) May 2014 (99) April 2014 (109) March 2014 (127) February 2014 (97) January 2014 (98) December 2013 (101) November 2013 (91) October 2013 (169) September 2013 (65) August 2013 (74) July 2013 (101) June 2013 (107) May 2013 (292) April 2013 (124) March 2013 (176) February 2013 (496) January 2013 (309) December 2012 (246) November 2012 (44) October 2012 (244) September 2012 (330) August 2012 (418) July 2012 (259) June 2012 (39) May 2012 (283) April 2012 (82) February 2012 (287) January 2012 (582) December 2011 (36) தமிழ்ச்சரம்.காம் – ADVT தமிழ்ச்சரம் பற்றி அறிந்து கொள்ள...More » சிறப்பு கதைகளில் 5 குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்! அர்ஜுனனை அதிர வைத்த கர்ணன்! கல்யாணியும் நிலாவும் புகை தொடர்பு எல்லைக்கு அப்பால்… இளம் எழுத்தாளர்கள் We welcome young writers, to submit short stories to our sirukathaigal.com website or send audio file for our YouTube channel. சிறுகதைகள் தளத்தில் கதைகளை பதிவதற்கும், ஒலிவடிவத்தை YouTube தளத்தில் ஏற்றுவதற்கும், இளம்-எழுத்தாளர்கள் யாவரையும் வரவேற்கிறோம். நற்சான்றிதழ் படிப்பாளிகளுக்கும், படைப்பாளிகளுக்கும் மனநிறைவையும்,மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் சீரிய முயற்சி இது.தொடரவும்,விரிவுபடுத்தவும் வாழ்த்துக்கள். தற்பொழுது எந்த தமிழ் பத்திரிக்கையும் புதிய சிறுகதை எழுத்தாளர்களுக்கு இடம் கொடுப்பதே இல்லை. இப்படி இருந்தால் தமிழில் புதிய முயற்சி என்பதே இல்லாமல் போய் விடாதா? உங்களுடைய இந்த தளம் மிகவும் அருமையான இலக்கியத் தொண்டை செய்வதாகவே நான் நினைக்கிறேன். மாதத்திற்கு இரண்டு சிறந்த சிறுகதைகளை தேர்ந்தெடுத்து தருமாறு புகழ பெற்ற எழுத்தாளர்களைக் கேட்டுக் கொள்ளலாம் என்பது எனது அபிப்ராயம். தமிழ் சிறு கதை வரலாற்றை பின்னாளில் எழுதும் போது தங்களுடைய பணி கண்டிப்பாக குறிப்பிடப்படும். சிறுகதைகளுக்கு ஏற்ற தளம் சிறுகதைகள்.காம், இளம் கதையாசிரியர்களுக்கும், வாய்ப்பில்லா கதையாசிரியர்களுக்கும் தங்கள் திறமைகளை காட்டுவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பு, என்னுடைய கதைகளும் இதில் இடம்பெற்றிருப்பதில் மிக்க மகிழ்வே – வாய்ப்பளித்த சிறுகதைகள் குழுமத்திற்கு மிக்க நன்றி. நான் எழுதிய சிறுகதை தங்கள் இணைய தளத்தில் பிரசுரமானது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியும் அதைவிடப் பன்மடங்கு பெருமையும் கொள்கிறேன். எண்ணற்ற சிறுகதைகளை விருப்ப்பத்திற்கேற்ப் தேர்ந்தெடுக்க வசதியாய் தொகுத்து அளிக்கும் உமது தளம் என்னைப் போன்ற ஆயிரமாயிரம் சிறுகதைப் பிரியர்களுக்கு ஒரு வரப்ரசாதமாய் அமைந்துள்ளது. மேன்மேலும்,பொலிவுடனும் மெருகுடனும் வளர வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. தங்களின் சிறுகதைகள் இணையதளம் என்னை மிகவும் கவர்ந்தது மட்டுமல்லாமல், நானும் பங்கு கொள்ள வேண்டுமென்கிற ஆவலையும் ஏற்படுத்தியது. தமிழின் பிரபல எழுத்தாளர்களின் படைப்புக்களையும் தமிழாகவே வாழ்ந்து மறைந்த அற்புதக் கதையாசிரியர்களின் கதைகளையும் வெளியிடுவதோடு, வளரும் எழுத்தாளர்களின் படைப்புக்களையும் வெளியிட்டுச் சிறந்த தொண்டாற்றி வரும் முயற்சி பாராட்டுக்குரியது. இத்தகைய முயற்சியால் சிறுகதைகள் சாகாவரம் பெறும் என்பது எனது கணிப்பு! இளம் எழுத்தாளர்கள் மற்றும் கதாசிரியர்களை ஊக்குவிக்கும் அருமையானதோர் தளம்.சிறுகதைகளுக்காக பிரத்யோகமாக உருவாக்கப்பட்டுள்ள இத்தளம் மிக நன்றாக உள்ளது. எழுத்தாளர்கள் பொக்கிஷமாய் நினைக்கும் தங்கள் எழுத்துக்களை பாதுகாத்து வைக்கும் பெட்டகமாகவும், வாசிப்பாளர்களுக்கு பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகளை தேடி கொடுக்கும் நூலகமாகவும் செயல் படும் சிறுகதை தளத்திற்கு மனம் கனிந்த நன்றி! இலக்கிய உலகில் சிறுகதைகள் என்ற வடிவம் பல பரிமாணங்களில் வேரூன்றியுள்ளது. நல்ல கதைகளை – சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை தேடி படிப்பது என்ற இலக்கிய தேடல்களை காலத்திற்கேற்ப கணினி வேகத்தில் நம் முன்னே பட்டியலிடுகிறது இத்தளம். கொட்டிக்கிடக்கும் படைப்புகள் இதுவா.. அதுவா.. என தெரிவு செய்யும் முன்பாகவே படைப்புகளுக்குள் மனம் புகுந்து கொள்கிறது. காலவேகத்திற்கு ஈடு கொடுக்கும் சிறந்த கலைவடிவம் இந்த தளம்.நன்றி! சிறுகதை . கொம், நிர்வாகத்த்கினருக்கு, உங்கள் தளத்தில் என் சிறுகதைகளும் பிரசுரமானதில் மிக்க மகிழ்ச்சி, ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் உள்ளவர்கள் மட்டுமே வாசித்த கதைகளைப் பலரும் வாசிக்கும் வழிவகை செய்திருக்கிறீர்கள், எனது கதைகளைப் போல பலரின் சிறுகதைகளுக்கும் அங்கீகாரம் கிடைத்தமையும், வாசிக்கும், வாசகர்கள் குறைந்து விட்டார்கள் என்பதை இத்தளம் நிரூபிக்கிறது. கதைகளை வாசிப்போரின் எண்ணிக்கை கண்டு மனநிறைவுகொள்கிறேன் . நானும் வாசித்துப் பலனடைகிறேன்.நன்றியுடன். தங்களது இணையதளத்தின் மூலமாக எண்ணிக்கையிலடங்காத எழுத்தாளர்களின் படைப்புகள் பல்வேறுபட்ட வாசகர்களை சென்றடைகிறது. தங்களின் இந்த பங்களிப்பு சிறுகதை உலகில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். வாழ்த்துக்களும்…நன்றிகளும். வாரப் பத்திரிக்கைகளைத் தொடர்ந்து படிக்க வசதி இல்லாத அயல் நாட்டில் வாழும் தமிழர்களுக்கு இணையவழி கதைகள் படிக்க இத்தளம் உதவும். அத்துடன் இளம் எழுத்தாளர்களின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் உங்கள் முயற்சி போற்றுதலுக்குரியது, this is the icing on the cake. தங்கள் சேவைக்கு நன்றி. சிறுகதைகள் மிக அருமையான தளமாக உள்ளது. கமல்ஹாசனின் சிறுகதையை இத்தளத்தில்தான் வாசித்தேன். பகிர்விற்கு நன்றி. இந்த தளத்தை இவ்வளவு நாள் எப்படி பாரதிருந்தேன். மிக அருமையாக உள்ளது. உங்கள் இனணயதளத்தில் எனது கதைகளை வெளியிடும் போது உற்சாகமாய் உள்ளது,மேலும் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டுகிறது. புதிய எழுத்தாளர்களுக்கு உங்கள் இணையத்தளம் ஒரு வரப்பிரசாதம். அத்தனை எழுத்தாளர்களின் கதைகளையும் வாசித்து, தேர்ந்தெடுத்து வெளியிடுவது என்பது சாதாரண காரியம் இல்லை,அதை நீங்கள் சரிவர நடைமுறை படுத்துறீங்கள்.அதற்காக உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த தளத்தின் சேவை சொல்லில் அடங்குவதில்லை.வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு மிகச் சிறந்த பயிற்சிக்களம் இந்த தளம். வணக்கம். நம்முடைய சிறுகதை இணையதளத்தில் பிரிசுரிக்கப்படும்போது உலகிலுள்ள எத்தனையோ நாடுகளிலுள்ள எண்ணற்ற வாசகர்களால் வாசிக்கப்படுகிறது என்பதை நினைக்கும்போது ஒரு படைப்பாளியின் மனம் எவ்வாறு பரவசமடையும் என்பதை ஒரு சக படைப்பாளியால் தான் உணர முடியும். நீங்கள் செய்து வரும் மகத்தான பணிக்கு எல்லா எழுத்தாளர்களின் சார்பிலும் என் மனமார்ந்த பாராட்டுகள்! வணக்கம்..தங்களது சிறுகதைகள் தளம் பார்த்தேன். எனது இரண்டு கதைகளும் கூட இருந்தது. மிக்க மகிழ்ச்சி…நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்.. நன்றி. இது சிறுகதை எழுத்தர்களின் களம். பிரசுரங்கள் கனவு எனும் நிலை மாறி யாரும் தன் எழுத்தை பதியலாம் எனும் யதார்த்தம். தளத்தின் ஆதரவு. இதை சிகரங்களுக்குக் கொண்டு செல்லும்.மிக உயர்ந்த பணி. எழுத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாகி தமிழின் சிறப்பை வெளிக்கொணரும்.வாழ்த்துக்கள்.நன்றி. அற்புதமான தளம். சில நாட்களுக்கு முன்புதான் முதன்முதலாக வந்தேன். தரமான சிறுகதைகளை தொகுத்து தருகிறீர்கள். வாழ்த்துக்கள். பின்னூட்டங்கள், ஹிட்ஸ் பற்றி கவலைப்படாமல் இச்சேவையைத் தொடருங்கள். எனக்குத் தெரிந்தவர்களுக்கும் பரிந்துரைக்கிறேன்… ஈடிலா ஜோதிதன்னில் என்னையும் கலக்கவைத்தீர்…. கோடியாய் கொட்டிக்கொட்டி, குவிக்கின்றேன் நன்றி நன்றி….! கதைகள்தாம் இணையவழியில், ”பதிவுகள்” தளத்திலுண்டு….! அதைத்தாங்கள் எடுக்கமுடிந்தால், ஆட்சேபம் எதுவுமில்லை….! சிரமங்கள் நுமக்குவேண்டா, சீக்கிரம் அனுப்பிவைப்பேன்….! கரங்கூப்பி மீண்டும் தங்கள், கடமைக்கு நன்றிசொன்னேன்….! நன்றியுடன். I have been following Sirukathaigal.com for the past few months. The portal has a good traffic and has a wide collection of short stories. For budding writers like me, there are no good platforms to get our works published and reviewed. Kudos to Sirukathaigal.com and your unceasing work. கடந்த சில நாட்களாக உங்கள் தளத்தை வாசித்து வருபவன் என்ற முறையில் உங்கள் அத்தனை முயற்சிக்கும் என் பாராட்டுக்கள். எனது முகநூல் பக்கத்தில் எழுதிக் கொண்டிருக்கும் நான் அதைத் தாண்டி வெளியே வர எண்ணியதால் உங்களுக்கு அனுப்புகிறேன். சிறுகதையைப் பற்றிய நிறைய வரையறையைத் தொகுத்து உள்ள, பல விதமான சிறுகதையைப் பற்றி பேசும் தங்கள் தளம் வளரும் எழுத்தாளனுக்கு ஒரு அடையாளம். உங்களது ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி. என்னை போல் கதை எழுத ஆர்வம் உள்ளவர்களுக்கு உங்கள் தளம் ஒரு வரபிரசாதம். நீங்கள் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். எனது படைப்புகளை உங்களை தேடி வந்து கொண்டேயிருக்கும். ஆதரவு கொடுக்கும்படி அன்புடன் கேட்டு கொள்கின்றேன். ஒரு கூகுள் தேடலில் உங்கள் தளத்தை வந்தடைந்து என் கதைகளை அங்கு கண்டேன். உங்கள் தளத்தின் வடிவமைப்பும், இயங்குமுறையும் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துகளும், நன்றியும்! சிறுகதைகளுக்கென்றே ஒரு தளம் இருப்பதும், எழுத்தாளர்களின் படைப்புகள் இங்கே சேமிக்கப்பட்டு மக்களின் வாசிப்பை மேம்படுத்துவதில் மிகவும் சிறப்பாகச்செயல்படுவதும் மகிழ்ச்சிக்குரியதும் வரவேற்கப்பட வேண்டியதுமாகும். என்னை சிறுகதைகள் இணையதளத்தில் சேர்த்தமைக்காக மிக்க நன்றி மேலும் மிகுந்த மகிழ்ச்சியும் அடைகிறேன் சிறுகதைகள் இனணயதளம் மூலம் இளைய தலைமுறை எழுத்தாளர்களை இவ்வுலகிற்கு அடையாளபடுத்தும் மிக பெரிய பணியை சிறப்புடன் செய்துவருக்கிறீர்கள் வாழ்க வளர்க உங்கள் பணி. வணக்கம். தமிழில் பற்று கொண்டவர்கள் தம் கற்பனைத் திறனையும், தமது நாட்டின் கலாசாரத்தையும் இணைத்துக் கதைகள் எழுதலாம். ஆனால், அதைப் பாரெங்கும் பரப்பும் நற்பணியை உங்கள் தளம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. என்னதான் சொந்த நாட்டில் நம் படைப்புகள் வெளியானாலும், அதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் படித்துப் பாராட்டுகிறார்கள் எனும்போது கிடைக்கும் ஆனந்தமே தனி. வளர்க உம் தொண்டு! this web site will grow popular. your efforts is precious. thanking you! சிறுகதைகளுக்கான சிறந்த இணையதளமான சிறுகதைகள். காம் இணைய தளத்தில் இணைவதில் மகிழ்கிறேன். முன்னணி எழுத்தாளர்கள் பலரின் சிறுகதைகளுடன் வளர்ந்து வரும் எழுத்தாளர்களின் கதைகளும் இத்தளத்தில் வாசிக்கக் கிடைப்பது தனிச்சிறப்பு. என் போன்ற அறிமுக எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் வெளியிட்டு வருவதற்கு நன்றி. வளரட்டும் தங்கள் இலக்கியப் பணி. மனமார்ந்த நன்றி 02-07-2012 தேதிட்ட குங்குமம் இதழில், மற்றும் 13-02-2013 தேதிட்ட ஆனந்த விகடன் இதழிலும் எங்கள் தளத்தை பற்றி பாராட்டி எழுதி உள்ளனர். இந்த இரு இதழ் ஆசிரியர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. பாரதிதாசன் பல்கலையைக்கழகத்தில் UG Programme Tamil Syllabus இல் எங்கள் தளத்தை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி. மொரிஷியஸ் பள்ளிக்கூட இணையதளத்தின் Oriental Languages Department இல் எங்கள் தளத்தை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி. பதினொன்றாம் வகுப்பு புதிய சமச்சீர் தமிழ் புத்தகத்தில் சிறுகதைகள் இணையதளத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்த வாசகர்கள் Copyrights © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content. விளம்பரம் சிறுகதைகள் தளத்தில் விளம்பரம் செய்ய இங்கே சொடுக்கவும். செய்திமடல் ஈமெயில் வழியாக உடனுக்குடன் கதைகளை பதிவேற்றும்போது அறிந்து கொள்ள: Name Email இதரப் பக்கங்கள் கதை கேளுங்கள் செய்திமடல்கள் விளம்பரம் செய்வதற்கு சேவைக்கான விதிமுறை அந்தரங்க கொள்கைகள் கதையாசிரியர்கள் A.H.யாசிர் அரபாத் (1) G.T.சத்யா (3) ஃபிர்தௌஸ் ராஜகுமாரன் (1) ஃபீனிக்ஸ்தாசன் (1) அ.அறிவுநம்பி (1) அ.இளஞாயிறு (1) அ.உமர் பாரூக் (4) அ.எக்பர்ட் சச்சிதானந்தம் (4) அ.செ.முருகானந்தன் (5) அ.தி.லெட்சுமி (1) அ.ந.கந்தசாமி (5) அ.பாண்டியன் (3) அ.மாதவையர் (2) அ.மு.ஹாரீத் (3) அ.முத்துலிங்கம் (99) அ.முரளி (1) அ.ரெங்கசாமி (2) அ.வெண்ணிலா (5) அ.வேளாங்கண்ணி (15) அகணி சுரேஸ் (3) அகமது ஃபைசல் (4) அகரமுதல்வன் (1) அகரம் செ.தர்மலிங்கம் (3) அகஸ்தியன் (1) அகிலன் (1) அகிலன் கண்ணன் (1) அகிலா (5) அகிலா கார்த்திகேயன் (7) அகிலாண்டபாரதி (1) அகில் (1) அங்கையன் கயிலாசநாதன் (14) அசோகன் குப்புசாமி (37) அசோகமித்திரன் (4) அஜயன் பாலா (10) அஜேஷ் சுந்தரம் (1) அடியான் (3) அண்டனூர் சுரா (19) அண்ணாதுரை சி.என். (23) அதி (2) அதிரை தங்க செல்வராஜன் (2) அதிஷா (1) அநுத்தமா (1) அந்தியூர் முருகேசன் (3) அனிதா கௌரிசங்கர் (8) அனிதா சரவணன் (8) அனு ஸ்ரீராம் (3) அனுசுயா தேவி (1) அனுபமா உதிவ் (1) அனுஷ்யா ஷாம்பவி (22) அன்னோஜன் (3) அன்புசெல்வம் (1) அபர்ணா (1) அபிமானி (4) அபிராமி துர்காதாஸ் (1) அப்சல் (4) அப்பாதுரை (42) அப்புசாமி (75) அமரர் ரஸவாதி (1) அமலன் எபிநேசர் (2) அமுதா பாலகிருஷ்ணன் (1) அமைதிச்சாரல் (13) அம்புஜவல்லி தேசிகாச்சாரி (2) அம்பை (1) அம்பை வி.பாலச்சந்திரன் (1) அம்ஸி (1) அயென் வில்சன் (5) அய்க்கண் (3) அய்யப்ப மாதவன் (5) அய்யப்பன் மகாராஜன் (2) அரவிந்த் கார்த்திக் (7) அரவிந்த் சச்சிதானந்தம் (14) அரவிந்த் பாலாஜி (1) அரவிந்த் மனோ (10) அரவிந்த் ரவி (1) அரவிந்த் ஸ்ரீகாந்த் (2) அராத்து (2) அரி.கார்த்திக் (2) அருண் காந்தி (8) அருண் சரண்யா (7) அருண் சுந்தரராஜன் (1) அருண். கோ (2) அரும்பின் பரிமளம் (2) அரும்பூர் க.குமாரகுரு (16) அருள் (2) அறிவுமதி (2) அலர்மேலு ரிஷி (5) அலெக்ஸ் பாண்டியன் (1) அழ.கிருஷ்ணமூர்த்தி (1) அழ.வள்ளியப்பா (22) அழகிய இளவேனில் (2) அழகிய சிங்கர் (2) அழகிய பெரியவன் (5) அவனி அரவிந்தன் (2) அஷ்ரஃப் சிஹாப்தீன் (1) அஸ்வகோஷ் (9) ஆ.அருண் (1) ஆ.கிருஷ்ணகுமார் (2) ஆ.மாதவன் (2) ஆ.ஸ்ரீவத்சவன் (1) ஆடூர் ஆர்.வெங்கடேசன் (17) ஆண்டாள் பிரியதர்ஷினி (2) ஆதவன் (15) ஆதவன் தீட்சண்யா (20) ஆதி தாமிரா (1) ஆதி பிரகாசு (1) ஆதிரா (1) ஆதிரை சுப்பிரமணியன் (4) ஆதிலட்சுமி சிவகுமார் (4) ஆத்மார்த்தி (13) ஆனந்தராஜ் (1) ஆனந்தி (90) ஆனந்த் சீனிவாசன் (3) ஆனந்த் ராகவ் (15) ஆபிதீன் (4) ஆரணி யுவராஜ் (6) ஆரார் மிதுன் (3) ஆரூர்தாஸ் (1) ஆர். நீலா (1) ஆர்.அபிலாஷ் (3) ஆர்.அருண்குமார் (1) ஆர்.உஷாநந்தினி (1) ஆர்.என்.ஆர்.மனோகர் (1) ஆர்.கனகராஜ் (1) ஆர்.குருமூர்த்தி (22) ஆர்.கே.சண்முகம் (6) ஆர்.கே.நாராயண் (1) ஆர்.சங்கர் (5) ஆர்.சந்திரஹாசன் (1) ஆர்.சிவசுப்ரமணியன் (1) ஆர்.சுமதி (2) ஆர்.சூடாமணி (7) ஆர்.பஞ்சவர்ணம் (1) ஆர்.பரிமளா ராஜேந்திரன் (29) ஆர்.பாரதிராஜா (5) ஆர்.பாஸ்கர் (14) ஆர்.பி.சாரதி (9) ஆர்.மணிமாலா (5) ஆர்.ரக்ஷனா சக்தி (1) ஆர்.ரவிசங்கர் (9) ஆர்.ரவிந்திரன் (1) ஆர்.லக்ஷ்மி பாலகிருஷ்ணன் (1) ஆர்.வசந்தகுமார் (3) ஆர்.வி.சரவணன் (2) ஆர்.வெங்கடேஷ் (3) ஆர்.ஷைலஜா (1) ஆர்னிகா நாசர் (15) ஆலந்தூர் மள்ளன் (5) ஆல்பர்ட் பெர்னாண்டோ (2) ஆழ்வாநேரி சாலமன் (1) இ.இளங்கோவன் (2) இ.பு.ஞானப்பிரகாசன் (2) இ.புனின் (1) இ.வில்சன் (4) இ.ஷேக் முகம்மது ஹஸன் முகைதீன் (1) இசைஅமைப்பாளர் சுந்தர் சி பாபு (1) இடலாக்குடி ஹஸன் (1) இணுவில் பவா (5) இணுவையூர் மயூரன் (1) இதயதீபா (1) இதயராசன் (1) இதயா ஏசுராஜ் (2) இந்திரா செளந்தர்ராஜன் (4) இந்திரா பார்த்தசாரதி (21) இந்திரா பாலசுப்ரமணியன் (6) இந்திராகாந்தி அலங்காரம் (1) இந்திராமைந்தன் (4) இந்துமதி (3) இமையம் (20) இம்தியாஸ் சவுக்கத் (1) இயக்குநர் சுசீந்திரன் (1) இயக்குநர் ரமணா (1) இர.தமிழரசன் (2) இரஜகை நிலவன் (23) இரமணிஷர்மா (7) இரவி அருணாசலம் (1) இரா.எட்வின் (1) இரா.கருணாகரன் (4) இரா.கோவர்தனன் (1) இரா.சடகோபன் (59) இரா.சந்தோஷ் குமார் (7) இரா.சம்பந்தன் (5) இரா.சரவணன் (1) இரா.சேகர் (4) இரா.சோமசுந்தரம் (3) இரா.தெய்வானை (4) இரா.நாராயணன் (6) இரா.மீ.தீத்தாரப்பன் (3) இரா.மு.மோதிரேகா (1) இரா.முருகன் (23) இராசேந்திர சோழன் (8) இராஜசோழன் (1) இராஜன் முருகவேல் (11) இராஜராஜன் (3) இராஜராஜேஸ்வரி (1) இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (96) இராதிகா சஷாங்க் (2) இராம.முத்துகணேசன் (1) இராம.வயிரவன் (5) இராம் சபரிஷ் (2) இறை.ச.இராசேந்திரன் (1) இலங்கையர்கோன் (2) இலவசக்கொத்தனார் (6) இளங்கோ (1) இளஞ்சேரல் (2) இளந்திரையன் (2) இளவல் ஹரிஹரன் (2) இளவேனில் (1) இளைய அப்துல்லாஹ் (3) இளையராஜா (3) இவள் பாரதி (2) ஈசன் நாகமுத்து (1) ஈரோடு காதர் (8) ஈஸ்வரன் தனலட்சுமி (1) உடுமலை நன்னன் (2) உடுவை எஸ்.தில்லைநடராசா (9) உதகை மாறன் (1) உதயகுமாரி கிருஷ்ணன் (6) உதயகுமார்.ஜி (2) உதயசங்கர் (5) உதயணன் (1) உதா பார்த்திபன் (1) உமா கல்யாணி (6) உமா ஜானகிராமன் (1) உமா மகேஸ்வரி (1) உமா மஹேஸ்வரி (1) உமா வரதராஜன் (1) உமா ஷக்தி (2) உமையாழ் பெரிந்தேவி (1) உஷா (2) உஷா அன்பரசு (59) உஷா சங்கரநாராயணன் (4) உஷா சுப்ரமணியன் (2) உஷா நாராயணன் (1) உஷா முத்துராமன் (3) உஷாதீபன் (63) ஊடகம் (1) எச்.எப்.ரிஸ்னா (1) எச்.எம்.அப்துல் ஹமீது (2) என்.ஆர்.தாசன் (1) என்.கணேசன் (8) என்.சந்திரசேகரன் (9) என்.சி.மோகன்தாஸ் (1) என்.சிவபாலன் (1) என்.சுவாமிநாதன் (3) என்.செல்வராஜ் (3) என்.சொக்கன் (32) என்.ஜெகநாதன் (1) என்.ராஜேஸ்வரி (2) என்.விநாயக முருகன் (2) என்.ஸ்ரீராம் (5) எம். பிரபு (1) எம்.அரவிந்த் (1) எம்.ஆர்.மூர்த்தி (1) எம்.இந்திரானி (8) எம்.இம்ரான் பேகம் (1) எம்.எம்.அலி அக்பர் (2) எம்.எம்.நெளஷாத் (4) எம்.எஸ்.அமானுல்லா (1) எம்.எஸ்.கமலா (1) எம்.எஸ்.கல்யாணசுந்தரம் (1) எம்.எஸ்.தீபதர்ஷினி (1) எம்.எஸ்.ருக்மணி தேசிகன் (9) எம்.ஏ.சுசீலா (18) எம்.ஏ.நுஃமான் (1) எம்.ஏ.ஷாஹுல் ஷமீது ஜலாலீ (6) எம்.கதிர்வேல் (1) எம்.கனி (8) எம்.குமாரன் (1) எம்.கே.குமார் (1) எம்.கே.சங்கரன் (1) எம்.கோசலைராமன் (3) எம்.கோபாலகிருஷ்ணன் (2) எம்.சீ.யே.பரீத் (5) எம்.சேகர் (11) எம்.ஜி.கன்னியப்பன் (2) எம்.ஜி.விஜயலெஷ்மி கங்காதரன் (7) எம்.ஜெ.கோகுல் (1) எம்.டி.கருணாகரன் (1) எம்.டி.முத்துக்குமாரசாமி (3) எம்.தேவகுமார் (16) எம்.பாலமுரளி (10) எம்.முகேஷ் (1) எம்.ரிஷான் ஷெரீப் (21) எம்.ரிஸ்வானா (5) எம்.வி.வெங்கட்ராம் (4) எம்.ஸ்டாலின் சரவணன் (1) எர்ஷாத் முகமத் (1) எல்.பிரகாஷ் (1) எல்.ரகோத்தமன் (1) எல்.வி.வாசுதேவன் (1) எழிலி (1) எழில் வரதன் (34) எழில்மொழி (1) எஸ். வெங்கடராமன் (2) எஸ்.அகஸ்தியர் (11) எஸ்.அர்ஷியா (8) எஸ்.ஆறுமுகம் (1) எஸ்.எஜ்.எம்.ரபிதீன் (14) எஸ்.எஸ்.முருகராசு (1) எஸ்.கண்ணன் (526) எஸ்.கமலா இந்திரஜித் (6) எஸ்.காமராஜ் (3) எஸ்.குழந்தைசாமி (1) எஸ்.கே.விஜி (2) எஸ்.கோபாலகிருஷ்ணன் (2) எஸ்.சக்திவேல் (10) எஸ்.சஞ்சய் (2) எஸ்.சம்பத் (1) எஸ்.சுஜின் (1) எஸ்.சுவாமிநாதன் (1) எஸ்.செந்தில்குமார் (23) எஸ்.செல்வசுந்தரி (5) எஸ்.ஜூலியட் மரியலில்லி (4) எஸ்.ஜெயலட்சுமி (2) எஸ்.ஜே.இதயா (1) எஸ்.டினேஷ்சாந்த் (2) எஸ்.தேன்மொழி (1) எஸ்.பழனிச்சாமி (1) எஸ்.பிரகாஷ் (1) எஸ்.பிரபாகரன் (2) எஸ்.பொன்னுத்துரை (2) எஸ்.மீனாட்சிசுந்தரம் (1) எஸ்.ராஜகுமாரன் (4) எஸ்.ராஜகோபால் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (48) எஸ்.ராமன் (13) எஸ்.வடிவேலு (1) எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி (1) எஸ்.வி.விஜயராகவாச்சாரி (1) எஸ்.வெங்கட்ராமன் (2) எஸ்.ஷங்கரநாராயணன் (35) எஸ்கேபி.கருணா (2) ஏ.ஆர்.நரசிம்ஹன் (3) ஏ.ஆர்.முருகேசன் (2) ஏ.எஸ்.ராகவன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (6) ஏ.கல்யாணசுந்தரம் (3) ஏ.கே.ராமானுஜன் (1) ஏ.தேவராஜன் (1) ஏக்நாத் (4) ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் (1) ஏலங்குழலி (2) ஐ.ஆர்.கரோலின் (21) ஐ.தி.சம்பந்தன் (1) ஐரேனிபுரம் பால்ராசய்யா (26) ஐஷ்வர்யன் (2) ஐஸ்வர்யா (1) ஐில்ஸ்ரீ (1) ஒளிப்பதிவாளர் கோபிநாத் (1) ஒளியவன் (14) ஓஷோ சிறிரதி (3) க.கமலகண்ணன் (6) க.கலாமோகன் (1) க.சிவகுமார் (3) க.சீ.சிவகுமார் (19) க.சு.வேலாயுதன் (1) க.சுபஸ்ரீ (1) க.சுப்பிரமணியம் (1) க.சுமதி (1) க.நவசோதி (1) க.நவம் (4) க.நா.சுப்ரமண்யம் (7) க.நாகப்பன் (1) க.பார்வதிபாமா (1) க.பாலாசி (1) க.மணிகண்டன் (1) க.ரகுநாதன் (5) க.ராஜம்ரஞ்சனி (5) க.வேதா ஸ்ரீதர் (1) க.ஸ்ரீப்ரியா (6) கங்காதுரை கணேசன் (8) கஜரதன் நாகரத்தினம் (4) கடல்புத்திரன் (61) கணேசகுமாரன் (7) கணேஷ் இராம் (1) கணேஷ் மாணிக்கா (2) கணேஷ் வெங்கட் (1) கணையாழி (1) கண்ணன் செளந்தர் (3) கண்மணி குணசேகரன் (1) கதிரவன் எழில்மன்னன் (1) கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி (4) கந்தர்வன் (7) கனகலதா கிருஷ்ணசாமி (1) கனகா பாலன் (1) கனவுப்பிரியன் (3) கன்னிக்கோவில் ராஜா (17) கபாலி (8) கபீா் பீ முகமது (3) கமலன் (1) கமலப்பித்தன் (1) கமலா பத்மநாபன் (1) கமலா விருத்தாச்சலம் (1) கமலாதேவி அரவிந்தன் (13) கமல்ஹாசன் (1) கயல்விழி முருகேசன் (1) கருணாகரன் (2) கற்பகம் இளங்கோவன் (1) கற்பனை மனிதன் (3) கலவை சண்முகம் (3) கலா விசு (2) கலைச்செல்வம் (2) கலைச்செல்வி (9) கலைவேந்தன் (7) கல்கி (77) கல்கிதாசன் (10) கல்லை நூர்ஜஹான் ரஹீம் (3) களந்தை பீர்முகம்மது (1) கவிகோ அப்துல் ரகுமான் (1) கவிஜி (43) கவிதா (1) கவிதா சொர்ணவல்லி (7) கவிதா பாரதி (2) கவிதா முரளிதரன் (1) கவின்மலர் (9) கவிப்பித்தன் (9) கா.அப்பாத்துரை (8) கா.சி.வேங்கடரமணி (1) கா.மது (8) கா.விசயநரசிம்மன் (1) காசாங்காடு வீ.காசிநாதன் (3) காசி ஆனந்தன் (1) காசி சுப்ரமணியம் (1) காசிநாதன் (1) காஞ்சனா ஜெயதிலகர் (2) காஞ்சனா தாமோதரன் (10) காஞ்சி செல்வம் (3) காந்தி சங்கர் (1) காயத்ரி (5) காரை ஆடலரசன் (320) காரைநகரான் (39) கார்த்திகா (1) கார்த்திகா வாசுதேவன் (10) கார்த்திகாகுமாரி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) கார்த்திக் ஆலங்காட்டான் (1) கார்த்திக் கிருபாகரன் (5) கார்த்திக் செல்வா (1) கார்த்திக் பாலசுப்ரமணியன் (17) கார்த்திக்குமார் (1) காலபைரவன் (1) காவேரி (1) கி.அன்புமொழி (3) கி.ஆ.பெ.விசுவநாதம் (100) கி.எல்லாளன் (3) கி.கல்யாணராமன் (5) கி.கார்த்திகேயன் (2) கி.சுரேந்தர் (2) கி.நடராசன் (17) கி.பாலசுப்ரமண்யன் (1) கி.பென்னேஸ்வரன் (4) கி.மஞ்சுளா (10) கி.மூர்த்தி (4) கி.ரவிக்குமார் (1) கி.ராஜநாராயணன் (39) கி.வா.ஜகந்நாதன் (41) கி.வெ.ரமணி (1) கிண்ணியா சபருள்ளா (9) கிரகம் (6) கிரிஜா ஜின்னா (2) கிரிஜா மணாளன் (2) கிருத்திகா (5) கிருஷ்ணன் நம்பி (1) கிருஷ்ணமூர்த்தி (1) கிருஷ்ணா (4) கிருஷ்ணா டாவின்ஸி (2) கிரேஸி மோகன் (5) கிறிஸ்டஸ் செல்வகுமார் (5) கிஷோர் ஸ்ரீராம் (1) கீதா புருஷ் (1) கீதா பென்னெட் (8) கீதா மதிவாணன் (7) கீத்தா பரமானந்தன் (6) கீரனூர் ஜாகிர்ராஜா (1) கீழை நாடன் (5) கு.அருணாசலம் (3) கு.அழகர்சாமி (3) கு.சரவணபிரகாஷ் (2) கு.சிவராமன் (1) கு.ப.சேது அம்மாள் (1) கு.ப.ராஜகோபாலன் (7) குகப்பிரியை (1) குண்டலகேசி (1) குந்தவை வந்தியத்தேவன் (3) குப்பிழான் ஐ.சண்முகன் (13) குமரவேலன் (12) குமாரசெல்வா (1) குமுதினி (1) குரல்செல்வன் (2) குரு அரவிந்தன் (50) குரு பாலசுப்ரமணியன் (1) குருசு.சாக்ரடீஸ் (2) குருநாதன் ரமணி (10) குறும்பலாப்பேரிப் பாண்டியன் (13) குலசேகரன் (6) குளிர்தழல் (1) கெளதம் கிருஷ்ணன் (2) கெளரி கிருபானந்தன் (6) கே.ஆனந்தன் (1) கே.ஆர்.அய்யங்கார் (3) கே.எஸ்.சுதாகர் (34) கே.கணேசன் (1) கே.சுரேந்தர் (1) கே.செந்தில்குமார் (1) கே.ஜி.ஜவஹர் (1) கே.ஜே.அசோக்குமார் (2) கே.தியாகராஜன் (1) கே.தேவசுந்தரம் (2) கே.நர்மதா (1) கே.பாரதி மீனா (1) கே.பாலமுருகன் (14) கே.பி.ஜனார்த்தனன் (7) கே.பி.பத்மநாபன் (2) கே.புதுராஜா (4) கே.பொன்னப்பன் (2) கே.மணிகண்டன் (1) கே.முரளிதரன் (1) கே.ரங்கநாதன் (1) கே.ரவிஷங்கர் (3) கே.ராஜலக்ஷ்மி (6) கே.வி.ஜெயஸ்ரீ (1) கே.வி.ஷைலஜா (1) கே.விஜயன் (5) கேகே (1) கேசவன் (1) கேசவமணி (1) கோகுலக்கண்ணன் (2) கை.அறிவழகன் (1) கோ.ஒளிவண்ணன் (11) கோ.கார்முகிலன் (1) கோ.புண்ணியவான் (21) கோ.பூர்ணசந்தரன் (3) கோ.மிதுராங்கன் (5) கோ.முனியாண்டி (7) கோகிலா மகேந்திரன் (9) கோகுலக்கண்ணன் (6) கோணங்கி (4) கோதண்டபானி நிரஞ்சலாதேவி (24) கோபாலன் நாகநாதன் (11) கோபி GPR (1) கோபி கிருஷ்ணன் (7) கோபிநாத் (1) கோபிநாத் மோகன் (1) கோமகள் (2) கோமதி (11) கோமதி ஸ்வாமிநாதன் (1) கோமல் சுவாமிநாதன் (1) கோவர்தனா (3) கோவி.கண்ணன் (3) கோவிலூர் செல்வராஜன் (2) கௌதம சித்தார்த்தன் (2) கௌரி அனந்தன் (1) கௌரி அம்மாள் (1) கௌரி கிருபானந்தன் (1) கௌரி கோபாலகிருஷணன் (1) கௌரி மகேஸ் (2) ச. முருகானந்தன் (1) ச.கருணாநிதி (3) ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை (2) ச.ஜான் பிரிட்டோ (1) ச.ஜெகன் (4) ச.தமிழ்ச்செல்வன் (2) ச.நித்யலக்ஷ்மி (3) ச.நேசம் (1) ச.பாலமுருகன் (4) ச.பிரசன்னகிருஷ்ணன் (5) ச.பிரசன்னா (6) ச.மணிகண்டன் (1) ச.முத்தமிழ் (1) ச.முருகேஸ்வரி (8) ச.ராம்கபிலன் (1) ச.வித்யாசாகர் (1) சகாரா (1) சக்தி ரவிச்சந்திரன் (1) சக்திபிரியா (1) சக்திப்ரபா (1) சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி (4) சங்கரன் அஸ்வதி (19) சங்கர் கோட்டாறு (2) சங்கர் துரைஸ்வாமி (1) சங்கர் நாராயண் (1) சசி (5) சசிகலா சாந்தாராம் (1) சசிதரன் (2) சதங்கா (31) சதீஷ் குமார்.R (1) சதீஷ் சந்திரன் (2) சதீஷ்குமார்.ஜி.பி (1) சதீஸ் சங்கவி (7) சதீஸ் ஜெகதீசன் (2) சத்தியப்பிரியன் (10) சத்யராஜ்குமார் (21) சத்யஸ்ரீ (8) சத்யா சுரேஷ் (1) சத்யானந்தன் (3) சந்திரகௌரி சிவபாலன் (2) சந்திரமௌளீஸ்வரன் (7) சந்திரவதனா செல்வகுமாரன் (29) சந்திரா (14) சந்திரா இரவீந்திரன் (12) சந்திரா தனபால் (3) சந்தோஷ் பாலாஜி (1) சந்ரு (1) சன்மது (2) சபிதா (2) சபிதா இப்ராகிம் (1) சமணன் (1) சம்பத் (12) சம்பத் தனசேகரன் (1) சம்பந்தன் (3) சம்யுக்தா (1) சயந்தன் (4) சரசா சூரி (74) சரசுராம் (3) சரணமுதன் நற்குணன் (1) சரண் (10) சரளா முருகையன் (2) சரவணன் குமரேசன் (3) சரவணபாபு ஸ்ரீனிவாசன் (1) சரஸ்வதி ராஜேந்திரன் (62) சரஸ்வதி ராம்நாத் (1) சரோஜா ராமமூர்த்தி (2) சரோஜ் நீடின்பன் (13) சர்வஜித் (3) சல்மா (1) சஹானா கோவிந்த் (1) சா.கந்தசாமி (8) சா.கோமதி (1) சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (1) சாத்தூர் அமுதன் (1) சாந்தி முருகன் (6) சாந்தி ரமேஸ் வவுனியன் (3) சாந்தினி ஜோன்ஸ் (1) சாம் குருபாதம் (6) சாம்பவி (1) சாம்ராஜ் (1) சாயம் வெ.ராஜாராமன் (1) சாரதா விஸ்வநாதன் (3) சாரு நிவேதிதா (12) சார்வாகன் (3) சாவி (20) சி.ஆர்.வெங்கடேஷ் (54) சி.இராமச்சந்திரன் (8) சி.சந்திரபாபு (1) சி.சு.செல்லப்பா (17) சி.சுப்பிரமணிய பாரதி (20) சி.ஜெயபாரதன் (1) சி.பி.செந்தில் குமார் (2) சி.மதிவாணன் (30) சி.முருகேஷ்பாபு (10) சி.வைத்தியலிங்கம் (1) சிதனா (1) சித்தாந்தன் (1) சித்திரவீதிக்காரன் (1) சித்திரா (1) சித்ரன் ரகுநாத் (10) சித்ரா சுரேஷ் (1) சித்ரா தணிகைவேல் (5) சின்னப்பயல் (5) சியாமினி இராசரத்தினம் (1) சிரீஷ் ஸ்ரீனிவாசன் (2) சிறகு இரவிச்சந்திரன் (4) சிறில் அலெக்ஸ் (10) சிறீநான்.மணிகண்டன் (1) சிறுவர் கதைகள் (288) சிவ பிரசாத் (1) சிவகாசி மணியம் (2) சிவகாசி ராஜ்கதிர் (1) சிவகுமார் முத்தய்யா (6) சிவக்குமார் அசோகன் (5) சிவசக்தி (2) சிவசித்திரை (4) சிவசைலம் (1) சிவஞானம் (1) சிவதீபன் (8) சிவனார் செல்வன் (3) சிவனேசு (2) சிவஸ்ரீ (3) சீ.மணிவாசகன் (6) சீ.முத்துசாமி (3) சீதா கணேஷ் (1) சீதா ரவி (1) சீத்தா வெங்கடேஷ் (1) சு.அப்துல் கரீம் (5) சு.இரமேஷ் (1) சு.கிருஷ்ணமூர்த்தி (21) சு.சசிகலா (2) சு.சமுத்திரம் (51) சு.சோமு (20) சு.மணிவண்ணன் (1) சு.மு.அகமது (11) சு.யுவ‌ராஜ‌ன் (5) சு.ரா (2) சு.ராம்குமார் (4) சுகந்தி (11) சுகந்தி சுப்ரமணியன் (3) சுகா (3) சுகுணா திவாகர் (4) சுஜாதா (49) சுஜாதா குரு (1) சுஜாதா தேசிகன் (1) சுஜாதா நடராஜன் (3) சுஜின் சௌந்தர்ராஜன் (1) சுதா ரவி (2) சுதாகர் ஜெயராமன் (3) சுதாராஜ் (76) சுதேசமித்திரன் (5) சுந்தர ராமசாமி (1) சுந்தரேசன் புருஷோத்தமன் (6) சுப.செல்வி (1) சுப.திருப்பதி (1) சுபத்ரா (9) சுபமி (1) சுபஸ்ரீ ஸ்ரீராம் (3) சுபா (7) சுபா வெங்கட் (1) சுப்பிரமணியன் ரமேஷ் (1) சுப்ரஜா (2) சுப்ரபாரதிமணியன் (49) சுப்ரமண்ய ராஜூ (1) சுப்ரா (9) சுமங்கலா (1) சுமங்கலி (1) சுமதி குமார் (2) சுமதி ரங்கநாதன் (1) சுமதி ரூபன் (11) சுரா (1) சுரேஜமீ (1) சுரேந்தர்நாத் (1) சுரேஷ் சுப்ரமணியம் (6) சுரேஷ் பாபு (3) சுவாமிநாதன் (1) சூத்ரதாரி (1) சூரிய கணேசன் (9) சூர்ய மைந்தன் (1) சூர்யகலா (1) சூர்யா (91) செ.அகிலாண்டேஸ்வரி (13) செ.இராசேட் குமார் (7) செ.கதிர்காமநாதன் (1) செ.குணரத்தினம் (2) செ.செந்தில்குமார் (1) செ.ஜெயஸ்ரீ (2) செ.ப.பன்னீர்செல்வம் (1) செ.பி.இராசாராம் (2) செ.யோகநாதன் (22) செ.ராஜேஸ்வரி (1) செங்கை ஆழியான் (4) செங்கை செல்வராசன் (1) செந்தமிழ் செல்வன் (1) செந்தில்நாதன் (1) செந்தூரன் ஈஸ்வரநாதன் (1) சென்றாயகுமார் (2) செம்பியன் செல்வன் (2) செய்யாறு தி.தா.நாராயணன் (71) செல்வம் கந்தசாமி (20) செல்வராஜ் ஜெகதீசன் (18) செல்வா வினோத் (1) செல்வேந்திரன் (3) செழியன் (5) சே.கிருஷ்ணமூர்த்தி (2) சேவியர் (5) சொ.பிரபாகரன் (12) சோ (9) சோ.சுப்புராஜ் (16) சோ.ஜெயந்தி (2) சோ.தர்மன் (2) சோனா கிருஷ்ணமுர்த்தி (1) சோம.வள்ளியப்பன் (14) சோலச்சி (17) சோலை சுந்தரபெருமாள் (3) சௌ.முரளிதரன் (74) ஜ.ரா.சுந்தரேசன் (75) ஜனகன் (1) ஜனநேசன் (3) ஜம்பு (12) ஜம்புநாத் (1) ஜா.தீபா (1) ஜானி JJP (7) ஜான் துரைராஜ் (4) ஜான்பால் நவீன் (2) ஜாய் சத்தியா (1) ஜி.ஆனந்த் (1) ஜி.ஆரோக்கியதாஸ் (2) ஜி.ஆர். (1) ஜி.ஆர்.சுரேந்தர்நாத் (18) ஜி.எச்.எஸ்.மணியன் (1) ஜி.கனிமொழி (1) ஜி.குப்புசாமி (3) ஜி.கே.பொன்னம்மாள் (1) ஜி.சச்சிதாநந்தம் (2) ஜி.சிவக்குமார் (15) ஜி.நாகராஜன் (6) ஜி.மறைமுதல்வன் (6) ஜீ.முருகன் (12) ஜீலன் (1) ஜீவகரிகாலன் (2) ஜெ.சங்கரன் (234) ஜெ.பாலா (1) ஜெ.ரகுநாதன் (6) ஜெ.ராஜேஷ் (1) ஜெகதீஷ் (3) ஜெகதீஸ்வரன் (6) ஜெகன்ஜி (9) ஜெயகணேஷ் (1) ஜெயகாந்தன் (50) ஜெயசீதா (13) ஜெயசீலன் (2) ஜெயச்சந்துரு (2) ஜெயந்தன் (3) ஜெயந்தன் சந்திரசேகரன் (1) ஜெயந்தி சங்கர் (19) ஜெயந்தி சதீஷ் (1) ஜெயந்திமோகன் (2) ஜெயபாரதி (1) ஜெயப்பிரகாஷ் (1) ஜெயமோகன் (52) ஜெயரமணி (1) ஜெயராணி (2) ஜெயலட்சுமி (1) ஜெயஸ்ரீ ஆனந்த் (2) ஜெயஸ்ரீ ஷங்கர் (24) ஜெயா சீனிவாசன் (2) ஜெயா மாறன் (1) ஜெய்குமார் (1) ஜெய்சங்கர் ஜெயராமையா (2) ஜெஸிலா (10) ஜே.எம்.சாலி (1) ஜே.எஸ்.ராகவன் (4) ஜே.கே (45) ஜே.செல்லம் ஜெரினா (16) ஜே.டேனியல் (2) ஜே.பி.சாணக்யா (2) ஜே.வி.நாதன் (55) ஜே.ஷாஜஹான் (1) ஜ்வாலாமாலினி (1) ஞா.கலையரசி (2) ஞானபாரதி (1) ஞானம் (1) டாக்டர் என்.லட்சுமி அய்யர் (3) டாக்டர் நடேசன் (11) டானியல் ஜீவா (9) டி.இரவிச்சந்திரன் (1) டி.எம்.ராஜகோபாலன் (2) டி.எஸ்.கோதண்டராமன் (1) டி.எஸ்.வேங்கட ரமணி (1) டி.குலசேகர் (3) டி.சாய்சுப்புலட்சுமி (8) டி.ஜார்ஜ் வில்லியம் (1) டி.பாலமுருகன் (1) டீனா (2) டைரக்டர் ப.நீலகண்டன் (1) டொமினிக் ஜீவா (12) த.ஜார்ஜ் (10) த.நரேஸ் நியூட்டன் (5) த.நா.சேனாதிபதி (1) த.முரளி (1) த.ராஜன் (5) தக்ஷ்ணாமூர்த்தி (1) தங்க. ஆரோக்கியதாசன் (4) தங்க.ஜெய்சக்திவேல் (2) தங்கம் (1) தங்கம் கிருஷ்ணமுர்த்தி (22) தங்கம் ராமசாமி (1) தங்கர்பச்சான் (2) தஞ்சாவூர்க் கவிராயர் (2) தஞ்சாவூர்க்கவிராயர் (3) தஞ்சை தாமு (2) தஞ்சை பிரகாஷ் (2) தனலட்சுமி ஈஸ்வரன் (1) தனுசஜ்ஜீ (1) தனுஜா ஜெயராமன் (3) தபூ சங்கர் (1) தமயந்தி (17) தமிழச்சி தங்கபாண்டியன் (2) தமிழருவிமணியன் (2) தமிழினி (1) தமிழொளிப்புதல்வன் (2) தமிழ்த்தேனீ (3) தமிழ்நதி (1) தமிழ்மகன் (19) தரஹி கண்ணன் (3) தருணாதித்தன் (1) தர்மபுத்ரன் (11) தர்மராஜ் (2) தா.பாலகணேசன் (1) தாட்சாயணி (16) தாமரை செந்தூர்பாண்டி (2) தாமரைமணாளன் (1) தாமிரா (10) தாமோதர ஆசான் (1) தாமோதரன் (1) தாரணி வரதராஜன் (1) தி.இரா.மீனா (1) தி.குழந்தைவேலு (1) தி.செங்கல்வராய முதலியார் (6) தி.ஜ.ர (4) தி.ஜானகிராமன் (3) தி.ஞானசேகரன் (30) தி.தயானந்தன் பிரான்சிஸ் (1) தி.திருக்குமரன் (2) தி.தெய்வநாயகம் (1) தி.மயூரன் (1) தி.ராஜேந்திரன் (1) தி.ஸ்ரீ. (8) திசேரா (1) தினேஷ் (1) தியா (2) திரு (6) திருதாரை தமிழ்மதி (1) திருநெல்வேலி உலகநாதன் (2) திருப்பதி பாலாஜி (25) திருப்பூர் கிருஷ்ணன் (1) திருமேனி சரவணன் (1) திருவாரூர் சரவணன் (1) திருவாரூர் பாபு (22) திருவிக்ரமன் (1) திரேசியா பவுலோஸ் (4) திலகபாமா (10) திலகவதி (10) திலிப் நாராயணன் (1) திலிப்குமார் (1) திலீப்குமார் (7) திவானா சாரதி (3) தீபக் (1) தீபச்செல்வன் (2) து.டெல்பியா நான்சி (2) து.ரா. (1) துக்காராம் கோபால்ராவ் (1) துடுப்பதி ரகுநாதன் (113) துரை (2) துரோணா (3) துளசி (1) துவாரகா சாமிநாதன் (1) தூயவன் (8) தூரன் குணா (3) தெனாலிராமன் (11) தெளிவத்தை ஜோசப் (13) தே.சுந்தர்ராஜ் (3) தே.புதுராஜா (1) தேசிகன் (1) தேனப்பன் (1) தேமொழி (17) தேவகி கருணாகரன் (1) தேவன் (17) தேவராஜ் விட்டலன் (11) தேவவிரதன் (29) தேவிபாலா (3) தொ.மு.சி.ரகுநாதன் (6) தோப்பில் முஹம்மது மீரான் (4) ந.சிதம்பர சுப்ரமணியன் (1) ந.சுதர்சன் (1) ந.சோலையப்பன் (1) ந.தாமரைக் கண்ணன் (1) ந.பச்சைபாலன் (7) ந.பிச்சமூர்த்தி (11) ந.பிரபாகரன் (1) ந.முத்துசாமி (4) ந.லெட்சுமி (12) ந.வரலட்சுமி (2) நகுலன் (3) நஞ்சுண்டன் (2) நட.சிவகுமார் (3) நடராஜன் கல்பட்டு (1) நடராஜன் பிரபாகரன் (1) நடிகை சிநேகா (1) நடிகை ஷீலா (1) நத்தம் எஸ்.சுரேஷ்பாபு (3) நந்தன் (1) நந்தன் ஶ்ரீதரன் (5) நந்தினி நாதன் (4) நந்து சுந்து (4) நப்ளி (8) நயீம் சையத் (17) நரனிதாசன் (1) நர்சிம் (9) நறுமுகை (2) நளாயினி தாமரைச்செல்வன் (4) நவஜோதி ஜோகரட்னம் (8) நவநீ (9) நவீத் அஹ்மத் (1) நா.கிருஷ்ணமூர்த்தி (4) நா.பார்த்தசாரதி (25) நா.பாலேஸ்வரி (2) நா.முத்துநிலவன் (4) நாகமணி (4) நாகரத்தினம் கிருஷ்ணா (19) நாகா (2) நாகா செல்வா (3) நாகா ரா (2) நாகூர் ரூமி (11) நாங்குநேரி வாசஸ்ரீ (23) நாச்சியாள் (4) நாஞ்சில் எழுத்தாணி (1) நாஞ்சில்நாடன் (28) நாட்டுப்பூக்கள் சுயம்பு (1) நாதன் (1) நாரா.நாச்சியப்பன் (17) நிக்கோலஸ் (1) நித்தியா வெங்கடேஷ் (1) நித்யா (6) நித்யா இறையன்பு (3) நித்யா சுப்ரமணியன் (1) நித்யா பாலாஜி (1) நிப்தாஸ் அஹமத் (1) நியாஸ் அகமது (5) நிரஞ்சன் பாரதி (1) நிர்மலா பாரதி (1) நிர்மலா ராகவன் (116) நிலாமகள் (5) நிலாரசிகன் (61) நிலாரவி (18) நிலாவண்ணன் (7) நிலாவதனி (5) நீல பத்மநாபன் (13) நூருத்தீன் (2) நெய்வாசல் நெடுஞ்செழியன் (4) நெய்வேலி பாரதிக்குமார் (13) நெய்வேலி ராமன்ஜி (4) நெல்சன் வாசுதேவன் (1) நேதாஜி தாசன் (4) நோர்வே நக்கீரா (1) நோர்வே நக்கீரா (5) ப.ஆப்டீன் (13) ப.எங்கல்ஸ் (1) ப.கல்யாணசுந்தரம் (1) ப.சுயம்புகனி (1) ப.பிரபாகரன் (2) ப.மதியழகன் (28) பசுந்திரா (6) பஞ்சதந்திர கதைகள் (17) பஞ்சாட்சரம் செல்வராஜன் (1) படுதலம் சுகுமாரன் (14) பட்டுக்கோட்டை பிரபாகர் (14) பட்டுக்கோட்டை ராஜேஷ் (1) பத்மகுமாரி (5) பத்மா ஹரிகிருஷ்ணன் (2) பரத்ராம்சண் (1) பரமார்த்த குரு (1) பரமு (3) பரிசல்காரன் (1) பரிவை சே.குமார் (9) பலதிசை ஸ்ரீ (எ) ஸைலபதி (3) பவள சங்கரி (19) பவளமணி பிரகாசம் (1) பவா செல்லதுரை (16) பவித்ரன் (10) பவித்ரா நந்தகுமார் (5) பவித்ரா யுவராஜ் (1) பவுன்குமார் (2) பா.அ.சிவம் (1) பா.அய்யாசாமி (76) பா.ஆதித்யா (1) பா.இராதாகிருஷ்ணன் (6) பா.கலுசுலிங்கம் (2) பா.சத்தியமோகன் (3) பா.சரவணகுமரன் (1) பா.சி.ராமச்சந்திரன் (1) பா.சிங்கமுத்து (1) பா.செயப்பிரகாசம் (3) பா.ஜீவிதா (1) பா.தினேஷ்பாபு (1) பா.திருச்செந்தாழை (2) பா.ராகவன் (1) பா.ராமச்சந்திரன் (1) பா.ராமானுஜம் (2) பா.விசாலம் (1) பா.வெங்கடேசன் (1) பாகிரதி சேஷப்பன் (6) பாகை இறையடியான் (1) பாக்கியம் ராமசாமி (80) பாட்டாளி (2) பானுமதி ராஜகோபாலன் (2) பானுமதி ராமகிருஷ்ணா (1) பானுரவி (12) பாபு மாதவ் (1) பாப்லோ அறிவுக்குயில் (1) பாமா (10) பாமா கோபாலன் (1) பாரததேவி (20) பாரதி கிருஷ்ணகுமார் (6) பாரதி தேவராஜ் (11) பாரதிசந்திரன் (1) பாரதிதம்பி (11) பாரதிநேசன் (3) பாரதிபாலன் (3) பாரதியான் (5) பாரதிராஜன் (1) பாரதிராமன் (5) பாரத் ராஜ் (1) பார்த்தசாரதி நாராயணன் (2) பார்வதி இராமச்சந்திரன் (5) பாலகுமாரன் (2) பாலசுப்ரமணியன் சிவராமன் (3) பாலா விஸ்வநாதன் (3) பாலாஜி மீனாட்சிசுந்தரம் (3) பாலாஜி ஸ்ரீராமன் (2) பாலு சத்யா (2) பால்ராஜன் ராஜ்குமார் (1) பாளை. சுசி (1) பாளையம் சையத் (1) பாவண்ணன் (19) பாஸ்கர் சக்தி (18) பாஸ்டன் பாலாஜி (2) பி.அமல்ராஜ் (4) பி.என்.எஸ்.பாண்டியன் (1) பி.என்.பரசுராமன் (18) பி.எஸ்.ராமையா (5) பி.காவிரி (1) பி.ச.குப்புசாமி (1) பி.சந்த்ரமௌலி (1) பி.ஜி.கதிரவன் (1) பி.ஜெகன்நாதன் (21) பி.தமிழ்முகில் நீலமேகம் (4) பி.நடராஜன் (2) பி.பாலசுப்ரமணியன் (1) பி.பிரகாஷ் (2) பி.விமல் ராஜ் (6) பி.வெ.சுசீலா (1) பிரசன்ன ரணதீரன் புகழேந்தி (22) பிரசன்னகிருஷ்ணன் (3) பிரசன்னா சுவாமிநாதன் (5) பிரசன்னா ரவீந்திரன் (1) பிரணா (4) பிரதீப்குமார் (1) பிரத்யுக்ஷா பிரஜோத் (2) பிரபஞ்சன் (18) பிரபா செந்தாமரை (5) பிரபுராஜ் (1) பிரமிள் (2) பிரவின் செல்வம் (2) பிருந்தா சேது (2) பிரேம பிரபா (3) பிரேமா ரத்தன் (9) பீர்பால் (53) பு.செல்வராசன் (3) புதியமாதவி (10) புதுகை சஞ்சீவி (1) புதுமைப்பித்தன் (92) புதுவண்டி ரவீந்திரன் (4) புதுவை பிரபா (2) புவனா நடராஜன் (1) புவனா ஸ்ரீதர் (1) புஷ்பன் (1) புஷ்பா தங்கதுரை (2) புஷ்பா ராகவன் (2) பூ.சுப்ரமணியன் (24) பூமணி (1) பூரணி (6) பூர்ணம் விசுவநாதன் (1) பூவை எஸ்.ஆறுமுகம் (18) பெ.அ.சதிஷ்குமார் (1) பெ.தூரன் (5) பொள்ளாச்சி அபி (1) பொ.கருணாகரமூர்த்தி (49) பொன் குலேந்திரன் (76) பொன்.அம்பலத்தார் (1) பொன்.அருணாச்சலம் (2) பொன்.இளவேனில் (1) பொன்.கண்ணகி (1) பொன்.குமார் (1) பொன்.வாசுதேவன் (1) பொள்ளாச்சி அபி (11) போகன் சங்கர் (3) போதிபாலன் (2) போப்பு (3) போளூர் சி.ரகுபதி (8) ப்ரஸன்னா (1) ப்ரியா தம்பி (2) ம.இராஜ்குமார் (1) ம.காமுத்துரை (25) ம.தி.முத்துக்குமார் (1) ம.ந.ராமசாமி (1) ம.நவீன் (19) ம.மீனாட்சிசுந்தரம் (2) ம.வே.சிவகுமார் (2) மகரிஷி (1) மகாதேவன் செல்வி (1) மகேந்திரன் நவமணி (2) மகேஷ் சுப்பிரமணியம் (3) மகேஷ் சேந்தலிங்கம் (3) மஞ்சு பாஸ்கர் (2) மடிப்பாக்கம் ரவி (4) மட்டுவில் ஞானக்குமாரன் (1) மணி அமரன் (1) மணிபாரதி (1) மணிமாலா மதியழகன் (9) மண்குதிரை (1) மதன்.எஸ் (1) மதி (1) மதியழகன் சுப்பையா (1) மதியழகன் முனியாண்டி (4) மதுமிதா (1) மதுரபாரதி (1) மனுபாரதி (4) மனோகரன் கிருஷ்ணன் (3) மனோவசந்த் (16) மன்னார் அமுதன் (2) மம்மூட்டி (1) மயாதி (10) மயிலம் இளமுருகு (9) மயூரா ரத்தினசாமி (1) மரியாதைராமன் (1) மருதம் கேதீஸ் (1) மருதூர் வாணர் (1) மலர்மதி (2) மலேசிய கதைகள் (9) மஸீதா புன்னியாமீன் (1) மஹாத்மன் (4) மா.அரங்கநாதன் (6) மா.சண்முகசிவா (4) மா.தாமோதரகண்ணன் (1) மா.பிரபாகரன் (11) மா.புகழேந்தி (13) மாதங்கி (2) மாதவி (2) மாதவிக்குட்டி (1) மாத்தளை சோமு (2) மானசா (1) மானிப்பாய் சுதன் (13) மாயாவி (1) மாரி செல்வராஜ் (2) மாலதி சிவராமகிருஷ்ணன் (4) மாலன் (39) மிகையிலான் (2) மிது (1) மிருணாளினி (1) மில்லத் அஹமது (3) மீ.மணிகண்டன் (8) மீனா சுந்தர் (3) மீனாகுமாரி சந்திரமோகன் (4) மு.அருண்குமார் (2) மு.இராசாக்கண்ணு (2) மு.கருணாநிதி (1) மு.குலசேகரன் (1) மு.கோபி சரபோஜி (7) மு.சிவலிங்கம் (11) மு.சீதாராமன் (1) மு.சுயம்புலிங்கம் (1) மு.பஷீர் (12) மு.முருகேஷ் (1) மு.மேத்தா (2) மு.வரதராசனார் (6) மு.வெங்கட்ராமன் (1) மு.ஹரிகிருஷ்ணன் (1) முகில் தினகரன் (54) முகுந்தன் கந்தசாமி (1) முக்தா சீனிவாசன் (1) முத்து சுப்ரமணியன் (7) முத்துலட்சுமி சங்கரன் (1) முனிஸ்வரன் குமார் (15) முனைவர் ஆ.சந்திரன் (6) முனைவர் க.மோகன் (2) முனைவர் க.லெனின் (41) முனைவர் செ.இராஜேஸ்வரி (9) முனைவர் ப.சரவணன் (6) முனைவர் பூ.மு.அன்புசிவா (6) முனைவர் வா.நேரு (5) முனைவர். கு.சிதம்பரம் (2) முனைவர்.தமிழப்பன் (1) மும்தாஜ் யாசீன் (3) முரளி (21) முரளி கருணாநிதி (5) முரளிகண்ணன் (1) முருகு (1) முல்லா (23) முல்லை பி.எல்.முத்தையா (173) முல்லைஅமுதன் (10) மூதூர் மொகமட் ராபி (30) மூவலூர் இராமாமிர்தம் (1) மெய் புங்காடன் (1) மெலட்டூர் இரா. நடராஜன் (16) மெளனி (7) மேரித்தங்கம் (2) மேலாண்மை பொன்னுசாமி (14) மைதிலி ராம்ஜி (6) மொ.ஜெ.வெங்கடேஷ் (1) மோனிகா மாறன் (7) மௌனி (3) யாழன் ஆதி (1) யு.குழந்தைசாமி (2) யுகபாரதி (1) யுவகிருஷ்ணா (38) யுவன் சந்திரசேகர் (4) யுவராஜன் (1) யூமா வாசுகி (3) யெஸ்.பால பாரதி (1) யோ.கர்ணன் (5) யோ.பெனடிக்ற் பாலன் (19) யோகராணி கணேசன் (19) யோகி (1) யோகேஷ் (1) யோகேஸ் (1) ர.ஆனந்தன் (4) ர.பிரபு (1) ரகுநந்தன் (1) ரங்கா (2) ரஜனி (4) ரஜினிகாந்த் தங்கராஜ் (1) ரஜ்னீஷ் (2) ரஞ்சகுமார் (8) ரஞ்சனி நாராயணன் (2) ரஞ்சன் (15) ரஞ்சிதா ரவீந்திரன் (3) ரஞ்ஜனி கார்த்திகேயன் (5) ரமணி (21) ரமணி ரங்கநாதன் (1) ரமேஷ் கல்யாண் (4) ரமேஷ் வைத்யா (10) ரமேஸ் யோகா (4) ரம்யா அசோக் (1) ரவிகாந்தன் (1) ரா.கி.ரங்கராஜன் (2) ரா.கிரிதரன் (14) ரா.சீனிவாசன் (1) ரா.பார்த்திபன் (1) ரா.பாலகிருஷ்ணன் (1) ரா.ராஜசேகர் (3) ராகவன் (42) ராகவன் தம்பி (5) ராசி.அழகப்பன் (1) ராசுக்குட்டி (2) ராச் (2) ராஜம் கிருஷ்ணன் (5) ராஜலக்ஷ்மி பரமசிவம் (1) ராஜவேல் (1) ராஜஸ்ரீ இறையன்பு (1) ராஜா கண்ணன் (3) ராஜாஜி ராஜகோபாலன் (4) ராஜி ரகுநாதன் (41) ராஜூ முருகன் (9) ராஜேந்திர சோழன் (1) ராஜேஷ்குமார் (10) ராஜேஸ்வரி ரத்தினசபாபதி (20) ராஜ்திலக் (3) ராணி மணாளன் (11) ராதா பாலு (2) ராமகிருஷ்ணன் (1) ராமசந்திரன் உஷா (1) ராமப்ரசாத் (8) ராமராஜன் மாணிக்கவேல் (8) ராமலக்ஷ்மி (2) ராமாநுஜம் (1) ராம் குமார் சுந்தரம் (1) ராம் முரளி (2) ராம் ஸ்ரீதர் (3) ராம்ஈஷ் (4) ராம்ஜி (2) ராம்பிரசாத் (4) ரிஷபக் கோமான் (5) ரிஷபன் (10) ரிஷ்வன் (9) ருக்மணி சேஷசாயி (1) ருக்மணி ஜெயராமன் (1) ருக்மிணி பார்த்தசாரதி (1) ரெ.கார்த்திகேசு (19) ரெ.சசிக்குமார் (20) ரெ.முத்தரசு (3) ரேகா ராகவன் (2) ரேணுகா விசுவலிங்கம் (3) ரேணுமோகன் (4) ரேவதி (1) ரேவதி பாலு (26) ரோசி கஜன் (3) ரோஸாவசந்த் (1) றஞ்சனி (1) லக்ஷ்மண பெருமாள் (8) லக்ஷ்மி (2) லக்ஷ்மி சரவணகுமார் (3) லக்ஷ்மி பாலசுப்ரமணியன் (2) லக்ஷ்மிகாந்தன் (1) லட்சுமி சரவணகுமார் (4) லட்சுமி பாலகிருஷ்ணன் (1) லட்சுமி ராமமூர்த்தி (1) லட்சுமி வெங்கட்ராமன் (1) லதா (1) லதா ரகுநாதன் (8) லதானந்த் (5) லதாமகன் (1) லலிதகிருஷ்ணன் (1) லலிதானந்த் (1) லஷ்மி சந்தானம் (1) லஷ்மி சரவணகுமார் (1) லஷ்மிகாந்தன் (4) லா.ச.ராமாமிர்தம் (45) லாசர் ஜோசப் (1) லால்குடி என்.உலகநாதன் (2) லாவண்யா (6) லாவண்யா பாலாஜி (2) லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (2) லூத்விக் (1) லெனின் ராமசந்திரன் (2) லெமூரியன் (3) லோ.கார்த்திகேசன் (1) வ.அ.இராசரத்தினம் (14) வ.இரா.தமிழ்நேசன் (7) வ.ஐ.ச.ஜெயபாலன் (3) வ.சா.நாகராஜன் (1) வ.சு. செங்கலவராய பிள்ளை (1) வ.ந.கிரிதரன் (21) வ.ராமசாமி (1) வ.வே.சு.ஐயர் (1) வ.ஸ்ரீநிவாசன் (13) வசந்தகிருஷ்ணன்.ஆ. (6) வசந்தகுமார் (2) வசந்தி முனீஷ் (1) வசுமதி ராமசாமி (1) வண்ணதாசன் (39) வண்ணநிலவன் (14) வத்ஸலா (3) வந்தியத்தேவன் (1) வரலொட்டி ரெங்கசாமி (12) வலசு வேலணை (1) வல்லபாய் (7) வல்லிக்கண்ணன் (76) வளர்கவி (3) வளவ.துரையன் (3) வழக்கறிஞர் சுமதி (1) வா.சேகர் (1) வா.மணிகண்டன் (45) வா.மு.கோமு (29) வாசவன் (1) வாசுகி நடேசன் (15) வாசுகி முத்துக்குமார் (3) வாணமதி (5) வாணி ஜெயம் (5) வாண்டுதாசன் (1) வாதுலன் (3) வானம்பாடிகள் பாலா (3) வாலாம்பாள் கோபாலகிருஷ்ணன் (1) வி.ஆர்.சுந்தரி (1) வி.உஷா (10) வி.கோபாலன் (1) வி.சகாயராஜா (1) வி.சிவாஜி (8) வி.ஜே.பிரேமலதா (4) வி.திருநாவுக்கரசு (1) வி.பாலகுமார் (4) வி.ராமநாதன் (1) விக்கி விக்னேஷ் (10) விக்கிரமன் (3) விக்னேஸ் பாபு (1) விக்ரமன் (1) விசாலம் முரளிதரன் (12) விஜயகுமார் (1) விஜயநரசிம்மன் (1) விஜயலட்சுமி ஸ்ரீதர் (3) விஜயா ஹேத்திராஜன் (1) விஜய் விக்கி (19) விஜய்ஆனந்தகுமார் (3) விஜி சுஷில் (13) விடுதலை மணி (1) வித்யா முரளிதரன் (2) வித்யாகிருஷ் (1) வித்யாசாகர் (11) விந்தன் (146) வினையன் (7) வினையூக்கி செல்வா (24) வினோத்குமார் (3) வினோத்குமார் சேகர் (3) வினோத்சந்தர் (4) வினோஷன் திருச்செல்வம் (1) விமலன் (51) விமலா ரமணி (16) விமல் தியாகராஜன் (2) விமல்ராஜ் அழகப்பன் (1) வியாஸ் (2) வில்லவன்கோதை (1) விழியன் (1) விவேகானந்தன் (1) விஷ்ணு சாம்ப்ரா (1) விஷ்ணுபுரம் சரவணன் (2) விஷ்வதாரா (1) விஸ்வபாரதி (8) விஸ்வபாலா (1) வீ.சந்திரா (2) வீ.விஷ்ணுகுமார் (1) வீயெஸ்வி (2) வீராசாமி ராஜேந்திரன் (1) வெ.இறையன்பு (7) வெ.சுதா சத்தியநாராயணா (1) வெ.சுப்ரமணியன் (28) வெ.மகாதேவன் (2) வெங்கட் சுப்பிரமணியன் (20) வெண்பூ வெங்கட் (1) வெயிலான் (1) வெலிகம ரிம்ஸா முஹம்மத் (1) வே.எழிலரசு (1) வே.குருநாதன் (3) வே.சபாநாயகம் (1) வே.சிவராஜா (8) வே.தர்மராஜ் (1) வே.ம.அருச்சுணன் (1) வே.முத்துக்குமார் (2) வே.முத்துசாமி (1) வேங்கடலட்சுமி (1) வேதா கோபாலன் (1) வேதாளம் சொல்லும் கதை (8) வேல.இராமமூர்த்தி (5) வேலு பார்த்திபன் (1) வேல்விழி மோகன் (5) வை.கோபாலகிருஷ்ணன் (7) வை.மு.கோதைநாயகி அம்மாள் (1) வைகறை கண்ணன் (10) வைகை (2) வைதீஸ்வரன் (1) வையவன் (5) ஷங்கர்பாபு (7) ஷன்முகப்ரியா (1) ஷமிலா ஜானகிராமன் (1) ஷஹான் நூர் (11) ஷாகுல் HSM (1) ஷானவாஸ் (1) ஷெண்பா (1) ஷைலஜா (13) ஷோபாசக்தி (5) ஷ்ருதி (1) ஸரோஜா ராமமூர்த்தி (1) ஸிந்துஜா (14) ஸோனா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ வேணுகோபாலன் (1) ஸ்ரீ.தாமோதரன் (324) ஸ்ரீஅருண்குமார் (3) ஸ்ரீஜா வெங்கடேஷ் (30) ஸ்ரீதரன் (1) ஸ்ரீதர் சந்திரசேகர் (1) ஸ்ரீதர் நாராயணன் (2) ஸ்ரீதேவி மோகன் (5) ஸ்ரீபிரியா (1) ஸ்ரீரஞ்சனி (5) ஸ்ரீராம் விக்னேஷ் (9) ஸ்ரீவிக்ரம் குமார் (1) ஸ்ரீவித்யா பசுபதி (2) ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ் (12) ஹப்ஸா ஹலீல் (1) ஹரன்பிரசன்னா (13) ஹரி கிருஷ்ணன் (2) ஹரிசாரதி (8) ஹஸீன் (1) ஹெப்சிபா ஜேசுதாசன் (1) ஹேமா (9) ஹேமி கிருஷ் (7) ஹைதர் அலி (2) ‘என்னார்’ (1) காதல் கதைகள் முதிர் கன்னியும், முதிர் காளையும் ஒரு காதலனின் டைரிக் குறிப்பு ! அக்னி நட்சத்திரம் பெரியம்மா மகன் மனதில் விழுந்த கீறல் உங்கள் கருத்து நாகா on என்னைப் பார் காய்ச்சல் வரும் M.A.M Amjad on ஓர் இரவு Thirumalai on நல்ல மகன்! ஆனந்தி பார்த்தசாரதி on பெட்டி வண்டி Dasarathan on இருளப்ப சாமியும் 21 கிடாயும் M VIGNESH on மின்கவி ADVT Thilaka on அது மட்டும்..? Thirumalai on என்னைப் பிடிச்சிருக்கா? Thirumalai on ஒரு காபி குடிக்கலாமா? Thirumalai on ஈகோ… நகைச்சுவை கதைகள் மாஸ்டர் மெதுவடை பிச்ச காக்கா தமிழ் மொழியும் சினிமாவும் ஜெய் கார்கில்! பதினான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் பூரணி பொறுப்பு அறிக்கை இந்த வலைத்தளத்தின் கருத்து மற்றும் வடிவமைப்பு தள உரிமையாளருக்கு மட்டுமே சொந்தமானது. தள உரிமையாளரின் அனுமதியின்றி கருத்து அல்லது வடிவமைப்பின் எந்த பகுதியையும் நகலெடுக்க / பயன்படுத்த முடியாது. இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 - 5 நாட்கள்) நீக்குகிறோம். © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2021]. Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content. It is believed that all the stories on this site were written by readers or famous authors. We are not responsible for any rights violated. If you wish, we will remove that story from this site (2 - 5 days) Powered by WordPress | Designed by: Online Desktop | Thanks to What is SharePoint, Microsoft Project Management Software and hosted exchange
‘ரங்கநதி’ - இந்தத் தலைப்புக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் பாதத்தை நனைத்து ஓடுவதால் ‘ரங்கநதி’ என்று பொருள் ‌கொண்டாலும் சரி, நாவலின் நாயகன் ரங்கனுக்கு வாழ்வாதாரமாய் இருந்து அன்னையாய் மாறும் ‘ரங்கநதி’ என்று பொருள் ‌கொண்டாலும் சரி, இரண்டுமே மிகப் பொருத்தமானவைதான். சில கதைகளை எழுத்தாளர்கள் எழுதுவார்கள். சில கதைகளோ எழுத்தாளர்களைக் கொண்டு தாங்களே வெளிப்பட்டு விடும். இந்த ‘ரங்கநதி’ அப்படித்தான். இந்திரா செளந்தர்ராஜனின் ‘மாஸ்டர் பீஸ்’களில் ஒன்றாகத்தான் எனக்குத் தோன்றியது. காவிரி ஆறு சில சமயங்களில் காதல் பேசும் குமரியென அமைதியாய் நடையிடுவாள். சில சமயங்களிலோ ரெளத்திரம் கொண்ட கண்ணகி போன்று சீறிப் பாய்ந்து வந்து தன்னில் குளி்க்க வரும் உயிர்களைப் பலிகொண்டு விடுவாள். அப்படி காவிரியின் வெள்ளத்தால் யாராவது இழுத்துச் செல்லப்பட்டால், ‘ரங்கனைக் கூப்பிடு’ என்பார்கள். முடிந்தால் .உயிருடனோ, இல்லையேல் பிணமாகவோ காவிரியில் மூழ்கிக் கொண்டு வந்து விடுவான். இதுதான் ரங்கனின் தொழில். சக்கரவர்த்தி ஐயங்கார் பெரும் செல்வந்தர். ஊரில் மதிப்புப் பெற்ற பெரிய மனிதர்ளில் ஒருவர். அவருடைய மகள் மைதிலி ஒருமுறை ஆற்றில் குளிக்க வர, ஆற்றுச் சுழலில் சிக்கிக் கொள்ள, அதைப் பார்க்கும் ரங்கன், நதியில் பாய்ந்து நீந்திச் சென்று அவளைக் காப்பாற்றுகிறான். அவள் உடை ஆற்றில் போய்விட ஆடையவற்ற வளாய் ஆன அவளுக்கு சிகிச்சை செய்து, மாற்றுடை தந்து அவள் வீட்டில் விட்டு சலனமில்லாமல் திரும்பிச் செல்கிறான். ஆனால் மைதிலியின் மனதில் அவன் புகுந்து விடுகிறான். மைதிலி, ரங்கனிடம் தன் காதலைச் சொல்ல, அவன் நிதர்சனம் புரிந்து மறு்க்கிறான். கோடீஸ்வரனின் மகள், ஊர் பெயரோ, பெற்றோர் பெயரோ தெரியாத பிணந்தூக்கியான ரங்கனைக் காதலிக்கிறாள் என்றால் பிரச்சனைகள் வராமல் இருக்குமா என்ன? ஆனால் ரங்கன் அனாதை இல்லை என்பதுதான் இங்கே சோகம். அவனைப் பெற்றவர், அதே ஸ்ரீரங்கத்தில் பலரால் மதிக்கப்படும், ஐயங்கார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர். தன் கண் முன்னாலேயே தன் மூத்த மகன் ‘பிணந்தூக்கி’யாக வாழ்வதைப் பார்த்து மனதிற்குள் குமையும்படியான ஒரு சூழலில் இருக்கிறார்.அவருக்கு மனக்குழப்பம் நேரிடும் போதெல்லாம் ஆறுதல் பெற அவர் நாடுவது ‘சிங்கராச்சாரியார்’ என்கிற ஒரு மகானை. இப்படிக் கதையில் விழும் முடிச்சைத் தொடர்ந்து படிக்க ஆரம்பி்த்த என்னை ரங்கநதி இழுத்துச் சென்றது, புரட்டி்ப் போட்டது, ஒரே மூச்சில் படித்துவிட்டுத்தான் கீழே வைக்கச் செய்தது. இந்திரா செளந்தர்ராஜன் கதையின் மைய இழையாக காதலை வைத்திருந்தாலும் கதையினூடாக சிறு உறுத்தலும் இல்லாமல், திணிப்பாகத் தெரியாமல் பல சமூக விஷயங்களைக் கையாண்டிருக்கிறார். சுயநலம் சார்ந்த மனித உறவுகள், இயற்கையைச் சுரண்டும் மனிதனி்ன் பேராசை, போலி கெளரவம் பார்ப்பதால் பாதிக்கும் உறவுகள், பணத்தின் மீது வெறி கொண்டால் மற்றவர‌ை எண்ணாமல் தன்னை மட்டுமே முன்னிலைப்டு்த்தும் மனப்பாங்கு, பிரதிபலன் பாராமல் ஏற்படும் நட்புகள், உறவுகள்... இப்படி நிறைய விஷயங்களை நிறைவாகத் தொட்டுச் செல்கிறார் நூலாசிரியர். இந்த ‘ரங்கநதி’யில் வரும் அனைவரும் மனித வாழ்வின் இயல்புக்கு மீறாத பாத்திரங்களாகவே படைக்கப்பட்டுள்ளனர். ரவுடி இடும்பனுடன் மோதி அவனைத் தாக்கி, அவனால் கடுமையாகத் தாக்கப்படும் ‘ஹீரோ’ ரங்கன் (நான் என்ன ரஜினிகாந்த, விஜயகாந்தா- கண்ணு செவக்க டயலாக் பேசி சண்டைபோடுறதுக்கு), சொத்தின் மேல் ஆசை வைத்து மைதிலியின் காதலுக்கு எதிராக சூழ்ச்சி வலை பின்னும் அண்ணி ரேவதி, தன் கணவனைக் காப்பாற்றியதால் அனாதை ரங்கனை ‘அண்ணா’ என்றழைத்து (உண்மையில் அவன் அண்ணன் என்பதறியாமல்) பாசம் காட்டும் உஷா -இப்படி அனைத்துக் கதாபாத்திரங்களும் அவரவர் இயல்பின்படி பக்கத்து வீட்டு மனிதர்கள் போல படைக்கப்பட்டிருப்பது மிகச் சிறப்பான விஷயம். எத்தனை பெரிய சுழலாக இருந்தாலும் நீந்தி உள்ளே மூழ்கியவற்றை எடுத்து வரும் ரங்கனை அந்த நதி எதுவும் செய்வதில்லை. அதன் ஆசி பெற்றவன் அவன். அந்த நதியில் மூழ்கி உயிர் விட்ட அவன் தாயின் ஆன்மா போல காவிரி அவனைக் காத்தாலும் அதை ‘ராட்சசி’ என்றே ரங்கன் கருதி திட்டும் முரண் வெகு சுவாரஸ்யம். தன் நிலை உணர்ந்தவனாய் ‘காதல் என்கிற விஷயம் தன் வாழ்வில் இல்லை’ என்று மைதிலிக்குப் புத்தி சொல்லும் ரங்கனின் மனம் எப்போது மாற்றம் பெற்று அவளைக் காதலிக்கத் தொடங்குகிறது என்பதையும், ‘‘நதியா இவ? என் வரைல ராட்சசி’’ என்று காவிரியை தூஷிக்கும் ரங்கன் அவளை அன்னையாக உணரத் துவங்குவதையும் திணிப்பில்லாமல் இயல்பாக விவரித்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இந்திரா செளந்தர்ராஜன். கதையின் ஊடாக அங்கங்கே தன்னுடைய சீரிய சிந்தகைனளையும் விதைக்கத் தவறவில்லை இந்திரா செளந்தர்ராஜன். இடும்பன் என்கிற கள்ளச்சாராய ரவுடியிடம் ரங்கன் பேசும் புள்ளிவிவரக் கணக்கு, சிங்கராச்சாரியாரை டி.வி. பேட்டி எடுக்கும் போது வெளிப்படும் கேள்வி பதில்கள் போன்று கதை நெடுகிலும் இந்திரா செளந்தர்ராஜனின் நற்கருத்துக்கள் விரவிக் கிடக்கின்றன. எப்படிப் பார்த்தாலும் சுப முடிவு வராது சோக முடிவாத்தான் இருக்கும் என்று மனதை தயார்படு்த்திக் கொண்டு படிக்கையில் சுப முடிவையும் தந்து மகிழ்ச்சிப்படுத்துகிறார் ஆசிரியர். ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் இடம் பெற்றிருக்கும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் (அவரே எழுதிய) கவிதைகள் இந்திரா செளந்தர்ராஜனின் ஆழ்ந்த தமிழறிவுக்குச் சான்றாக நிற்கின்றன. ‘ரங்கநதி’யின் அத்தியாயங்களில் குளி்த்தெழுந்தேன், சில அத்தியாயங்களில் மூச்சுத் திணறி காற்றுக்காய் போராடினேன், சில அத்தியாயங்களில் நீரினுள் ‘முங்கு நீச்சல்’ அடித்தேன்... இப்படி சுவாரஸ்யமான நதிக்குளியல் அனுபவ்ததை எனக்குத் தந்தது இந்த ‘ரங்கநதி’. ‘திருமகள் நிலையம்’ வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தின் விலை ரூ.275 என்பது ஒன்றுதான் கடினமான விஷயம். ஆனால் நூலின் உள்ளடக்கத்திற்காக இதை பொருட்படுத்தாமல் வாங்கி வாசிக்கலாம் என்பதே என் கருத்து. பின்குறிப்பு: நான் படித்து வியந்து உங்களைப் படிக்கச் சொல்லும் இந்த ‘ரங்கநதி’ ஸ்ரீரங்கத்துக் கதை. அடுத்ததாக எழுதவிருக்கும் பு்த்தகமும் ஸ்ரீரங்கக் கதைதான். இதிலாவது ரங்கன் என்பவன் கதாநாயக்ன். அந்தக் கதையிலோ ஸ்ரீரங்கத்து ரங்கநாதனே கதாநாயகன்! பொதுவாகவே எனக்கு ஸ்ரீரங்கத்துக்காரர்கள் மேல் நிறையப் பொறாமை உண்டு. ஸ்ரீரங்கத்துக்காரர்கள் கதை எழுதினாலும் சரி... ஸ்ரீரங்கத்தை நிலைக்களனாக வைத்து மற்றவர்கள் எழுதினாலும் சரி... அவையெல்லாம் அற்புதமாக அமைந்து விடுகின்றன. கொடுத்து வைச்சவங்கப்பா! Tweet Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Newer Post Older Post Home 23 comments: மகேந்திரன் June 1, 2012 at 7:07 AM நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றிகள் நண்பரே. வாங்கிப் படித்துவிடுகிறேன். ReplyDelete Replies Reply dondu(#11168674346665545885) June 1, 2012 at 10:52 AM குமுதம் ஸ்நேகிதியை வாங்கியதுமே வீட்டுக்கு வரு வைலேயே நடந்த வண்ணம் படித்தது இக்கதையையேதான். பிறகு பல முறை ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்தேன். அன்புடன், டோண்டு ராகவன் ReplyDelete Replies Reply பால கணேஷ் June 1, 2012 at 12:34 PM @ மகேந்திரன்... அவசியம் படியுங்கள் மகேன். நல்லதொரு வாசிப்பனுபவம் கிட்டும் என்பதற்கு நானே சாட்சி. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. @ dondu... அட... தொடர்கதையாப் படிக்கற வாய்ப்புக் கிடைச்சதா உங்களுக்கு? நான்லாம் சில சமயம் இப்படியான வாய்ப்பை தவற விட்டுடறேன். முழுப் புத்தகமாத்தான் படிச்சேன். ஆனாலும் மகிழ்வான அனுபவம் கிடைச்சது ராகவன் ஸார். உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் இதயம் நிறைந்த நன்றி. ReplyDelete Replies Reply ரிஷபன் June 1, 2012 at 12:58 PM பொதுவாகவே எனக்கு ஸ்ரீரங்கத்துக்காரர்கள் மேல் நிறையப் பொறாமை உண்டு. ஸ்ரீரங்கத்துக்காரர்கள் கதை எழுதினாலும் சரி... ஸ்ரீரங்கத்தை நிலைக்களனாக வைத்து மற்றவர்கள் எழுதினாலும் சரி... அவையெல்லாம் அற்புதமாக அமைந்து விடுகின்றன. கொடுத்து வைச்சவங்கப்பா! Thanks :) ReplyDelete Replies Reply பால கணேஷ் June 1, 2012 at 1:01 PM @ ரிஷபன்... வாங்க ஸ்ரீரங்கத்துக்காரரே... நான் பொறாமைப்படும் நபர்களில் நீங்களும் ஒருவராயிற்றே... இந்தப் பதிவு பிடிச்சிருந்துச்சா... மிக்க நன்றி. ReplyDelete Replies Reply வே.நடனசபாபதி June 1, 2012 at 2:00 PM ‘ரங்க நதி’ நூல் அறிமுகமும் விமரிசனமும் அருமை! தங்கள் பதிவைப் படித்ததுமே நூலைப் படிக்க ஆவல் வருவதும் உண்மை. ReplyDelete Replies Reply பால கணேஷ் June 1, 2012 at 2:57 PM @ வே.நடனசபாபதி... படித்துப் பாருங்கள். நான் சொல்லியவை சரியென்பதை உணர்வீர்கள் நண்பரே... உற்சாகம் தந்த உங்களின் வருகைக்கு மிக்க நன்றி. ReplyDelete Replies Reply இராஜராஜேஸ்வரி June 1, 2012 at 5:19 PM தொடராக வாசித்து மகிழ்ந்த மலரும் நினைவுகள் ! பகிர்வுக்கு நன்றி.. பாராட்டுக்கள்.. ReplyDelete Replies Reply ஸ்ரீராம். June 1, 2012 at 5:40 PM தலைப்பு மிக அழகாக இருக்கிறது. நாவல் படைக்க ரொம்பப் பொறுமை வேண்டும்! படிக்க மனம்தான் வேண்டும். உங்கள் அறிமுகம் புத்தகத்தைப் படித்துப் பாரேன் என்கிறது. மனதின் கட்டளைகள் மீறப் படுவதில்லை! ReplyDelete Replies Reply பால கணேஷ் June 1, 2012 at 8:10 PM @ இராஜராஜேஸ்வரி... அட, நீங்களு்ம் தொடராகப் படித்து அனுபவித்தீர்களா? மிக்க மகிழ்ச்சி. உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் இதயம் நிறை நன்றி! @ ஸ்ரீராம்... ஆஹா... கவிதை போலும் உங்கள் கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். படித்துப் பாருங்கள். பிடித்துப் போகும் ஸ்ரீராம். மிக்க நன்றி! ReplyDelete Replies Reply வெங்கட் நாகராஜ் June 1, 2012 at 9:45 PM நல்ல அறிமுகம். நிச்சயம் படித்து விடுகிறேன். //பொதுவாகவே எனக்கு ஸ்ரீரங்கத்துக்காரர்கள் மேல் நிறையப் பொறாமை உண்டு. ஸ்ரீரங்கத்துக்காரர்கள் கதை எழுதினாலும் சரி... ஸ்ரீரங்கத்தை நிலைக்களனாக வைத்து மற்றவர்கள் எழுதினாலும் சரி... அவையெல்லாம் அற்புதமாக அமைந்து விடுகின்றன. // உண்மை.... :) ReplyDelete Replies Reply பால கணேஷ் June 2, 2012 at 6:37 AM @ வெங்கட் நாகராஜ்... என் மீது நம்பிக்கை வைத்து படிக்கிறேன் என்ற நண்பருக்கு இதயம் நிறைந்த நன்றி! ReplyDelete Replies Reply தனிமரம் June 2, 2012 at 3:32 PM நல்ல நூல் அறிமுகம் இனித்தான் படிக்கோணும் கணேஸ் அண்ணா! ReplyDelete Replies Reply கீதமஞ்சரி June 2, 2012 at 5:46 PM இவ்வளவு சொல்றேன், இன்னுமா உனக்குப் படிக்கத் தோணவில்லையென்னும்படியான ஆழ்ந்த வாசிப்பனுபவத்துடன் கூடிய ஈர்ப்பான விமர்சனம். கிடைத்தால் படிக்கத் தவறவிடமாட்டேன். நன்றி கணேஷ். ReplyDelete Replies Reply பால கணேஷ் June 2, 2012 at 6:35 PM @ தனிமரம்... படித்து ரசியுங்கள் நேசன்! இங்கும் வருகை புரிந்து எனக்கு மகிழ்வு தந்த உங்களுக்கு என் இதய நன்றி! @ கீதமஞ்சரி... ‘ஆழ்ந்த வாசிப்பனுபவத்துடன்’ என்ற வார்த்தை எனக்கு மிகமிக மகிழ்வு தந்தது தோழி. இந்த நூல் அறிமுகத்தை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி! ReplyDelete Replies Reply Guru June 2, 2012 at 9:22 PM Ganesh sir i will buy and read. Thanks for your information. ReplyDelete Replies Reply பால கணேஷ் June 3, 2012 at 6:28 AM @ அ.குரு... படியுங்கள் குரு. நல்லதொரு வாசிப்பனுபவத்தை நீங்களும் பெற என் வாழ்த்துக்களும், உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றிகளும்! ReplyDelete Replies Reply அப்பாதுரை June 3, 2012 at 7:54 AM இன்னிக்கு கமெந்ட பெட்டி வேலை செய்யுதே? நல்ல முயற்சி கணேஷ். வாழ்த்துக்கள். ReplyDelete Replies Reply பால கணேஷ் June 3, 2012 at 10:48 AM @ அப்பாதுரை... முன்பே ஒரு முறை வந்தும் உங்களுக்கு கமெண்ட் பெட்டி வேலை செய்யலையா? அடடா... தெரியாமப் போச்சுதே! என் முயற்சியை வாழ்த்திய உங்களுக்கு என் இதய நன்றி! ReplyDelete Replies Reply anupartha(appy) June 27, 2012 at 5:49 PM நானும் தொடர் கதையாகத்தான் படித்தேன். And I enjoyed reading your blog.( Hey, how do you guys type that Tamil version..I had tough time)..I have tried it in my page too, but not very good. Best wishes Ganesh. Regards. ReplyDelete Replies Reply துளசி கோபால் June 14, 2015 at 3:46 PM கட்டாயம் படித்தே ஆகணும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டீர்களே கணேஷ் ReplyDelete Replies Reply துளசி கோபால் June 14, 2015 at 3:46 PM கட்டாயம் படித்தே ஆகணும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டீர்களே கணேஷ் ReplyDelete Replies Reply துளசி கோபால் June 14, 2015 at 3:47 PM கட்டாயம் படித்தே ஆகணும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டீர்களே கணேஷ் ReplyDelete Replies Reply Add comment Load more... Subscribe to: Post Comments (Atom) Followers Popular Posts பேசும் ஓவியங்கள்..! இ ந்த முறை ஒரு மாறுதலுக்காக ஜோக்குகளைக் கத்தரித்துப் போடுவதற்குப் பதிலாக நான் ரசித்த ஓவியங்களைக் கத்தரித்து உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்... கரையெல்லாம் செண்பகப் பூ சு ஜாதாவின் எழுத்தை ஆரம்ப காலம், இடைக்காலம், பிற்காலம் என மூன்றாகப் பிரிக்கலாம் என்பது என் கருத்து. ஆரம்பகால சுஜாதாவிடம் எழுத்தில் ஒரு துள... பேசும் ஓவியங்கள் - 2 நா ன் ரசித்த சில ஓவியர்களின் ஓவியங்களைத் தொகுத்து ‘பேசும் ஓவியங்கள்’ என்ற தலைப்பில் முன்னர் வெளியிட்டிருந்தேன். நிறையப் பேர் ரசித்துப் ப... பசுமை கொஞ்சிய நகரங்கள்! இ ங்கே நான் பகிர்ந்திருக்கும் ஒரு டஜன் படங்களைப் பார்த்து முடித்ததும் நீங்களும் என்னைப் போல் பெருமூச்சு விடுவீர்கள் என்பது நிச்சயம். அந்நா... சிரிப்பாய் சிரிக்குது சினிமா! ப ழைய குமுதம் இதழ்களிலிருந்து திரட்டிய சினிமா சம்பந்தப்பட்ட சிரிப்புத் தோரணங்களை இங்கே தந்திருக்கிறேன். அந்நாளைய நகைச்சுவை என்றாலும் இந்... கத்தரித்தவை - 4 பு ரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்து நின்று போன ப்ராஜக்ட்டுகள் ஒன்றிரண்டுதான். அவர் பாதிரியார் கெட்டப்பில் தோன்றும் இந்த ஸ்டில்லும் இத... Blog Archive ► 2017 (1) ► December (1) ► 2016 (1) ► October (1) ► 2015 (8) ► July (2) ► June (2) ► March (1) ► February (3) ► 2014 (6) ► March (1) ► February (3) ► January (2) ► 2013 (22) ► July (4) ► June (4) ► May (1) ► April (9) ► March (4) ▼ 2012 (29) ► November (2) ► October (3) ► September (2) ► August (5) ► July (7) ▼ June (8) சுஜாதாட்ஸ்! கத்தரித்தவை - 5 கேப்ஸ்யூல் நாவல் - 1 கத்தரித்தவை - 4 கத்தரித்தவை - 3 ரங்கராட்டினம் - ஓர் ஆனந்தப் பயணம்! கத்தரித்தவை - 2 ரங்கநதி - சிலிர்க்கும் அனுபவம்! ► May (2) Labels intro MGR Must Read இலக்கியம் என் ரசனை ஓவியங்கள் ஓ‌‌ஹென்றி கத்தரித்தவை கேப்ஸ்யூல் நாவல் சமூகப் புதினங்கள் சரித்திரம் சாண்டில்யன் சித்திர மேகலை சித்திரக் கதை சிறுகதைகள் சுஜாதா தொடர் நாவல் ராஜேந்திரகுமார் Contact info மேய்ச்சல் மைதானத்திற்கு வருகை தந்திருக்கும் உங்களுக்கு நல்வரவு! இந்தக் குதிரை மேய்ந்த மைதானங்களிலிருந்து கிடைத்த புற்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.
நமது முந்தய பதிவில் DoS பற்றி எழுதியிருந்தோம். இந்த பதிவில் DoS வகைகள் அதன் பின்னால் இருக்கும் தொழில்நுட்பம் பற்றி பார்ப்போம். DoS என்பது வழங்கியின் சேவையை, அலைக்கற்றை, நினைவகம், Processor போன்றவற்றை அதிகமாக பயன்படுத்தி (Over Load) அதன் மூலம் மற்ற பயனர்களுக்கு வழங்கியின் சேவையை தடை செய்வது என்பது நாம் அறிந்ததே. ICMP Flood: இதில் அதிகமான Ping request-களை அனுமதிக்கப்பட்டதை விட அதிக Load உடன் அனுப்புவர். அந்த ICMP packet களில் Source address (அனுப்புநர் IP) மாற்றப்பட்டிருக்கும். எனவே, அதற்கான பதில் தகவல் (Reply) அனுப்புநருக்கு வராது. இது பற்றிய விளக்கப்படம்.. SYN Flood: "TCP three way hand shake" என்பது ஒரு வழங்கியுடன் இணைப்பை ஏற்படுத்த நீங்கள் ஒரு request அனுப்புகிறீர்கள், அது SYN, அதற்கு வழங்கியிடமிருந்து பதில் வருகிறது, அது SYN+ACK அதன் பின்னர் நீங்கள் இணைப்பை உறுதி செய்கிறீர்கள், அது ACK. இதன் பின்னர் வழங்கியுடன் உங்கள் தகவல் பரிமாற்றம் நடைபெறும். இந்த SYN attack-ல் attacker கணிணியிலிருந்து SYN Request மட்டும் தொடர்ந்து அனுப்பப்படும், எனவே வழங்கியின் "Listen Queue" -ல் எளிதில் அனுமதிக்கப்பட்ட அளவு request -களால் நிரம்பிவிடும், அதன் பின்னர் வரும் பயனர்களின் request-களுக்கு தகவல் பரிமாற்றம் நடைபெறாது. Reflected Attack: இதில் attacker வழங்கியிலிருந்து அனுப்புவது போல (Forged) அனுப்புநர் IP மாற்றப்பட்டு முடிந்த வரை எல்லா கணிணிகளுக்கும் request அனுப்பப்படும். அதிலிருந்து வரும் பதில் (Reply) அனைத்தும் வழங்கிக்கு வந்து அதனை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யும். Application Level Attacks: இதில் வழங்கியின் வன்பொருட்கள் (memory, processor,..) resource - ஐ பயன்படுத்தி செயற்படாமல் செய்வதற்கு பதிலாக, அதில் இயங்கும் மென்பொருளை தொடர்ந்து தகவல்களை உள்ளிடுவது போன்றவற்றால் செயல்படாமல் இருக்கச் செய்வது. இதில் மென்பொருள் என்பது, Drupal, Wordpress, Forum scripts, போன்றவற்றை எடுத்துக்காட்டுகளாக கொள்ளலாம். இது போன்ற ஒரு attack யாஹீ மின்னஞ்சல் சேவையில் நிகழ்த்தப்பட்டது. Permanent DoS: இது மற்ற DoS attacks போல வழங்கியின் சேவையை தற்காலிகமாக தடை செய்யாமல் நிரந்தரமாக வழங்கியின் மென் பொருளையோ, வன் பொருளையோ செயலிழக்கச் செய்வதாகும். எடுத்துக்காட்டாக, வன்பொருட்களை பொருத்தவரைஅதன் இயங்குதள (Firmware) மென்பொருட்களில் Malicious codes-ஐ உட்புகுத்தி அதனி செயலிழக்கச்செய்வது போன்றவை இந்த வகையில் அடங்கும்.
திராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -"விடுதலை",12-7-1969 , 11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள் counter மின் மடலில் எமது படைப்புகளை பெற... மின்மடல் முகவரி முன் தோற்றம் இன்றைய சிந்தனை சுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன ? 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே! திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே! தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே! பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி? தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்? நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா? குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்? எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்? எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்? ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்? அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்? அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு? முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்? ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்? மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்? நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்? எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை? அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்? அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்? பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா? சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா? ஜாதி ஒழிப்புத் திலகம் (?) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...! - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்!) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா? அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா? - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா? -----"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே! தந்தைபெரியார் - "விடுதலை" 15-2-1973 பழைய பதிவுகள் Search This Blog 17.4.13 கல் முதலாளிகளுக்குச் சொத்துக் குவியாமல் என்ன செய்யும்? கல் முதலாளி இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்கத் தொழிலதிபர் ராமலிங்க ராஜூ என்பவர் ரூ.16.65 கோடியை காணிக்கையாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குக் கொடுத்துள்ளார். 11 கோடி ரூபாய் ஏழுமலையானுக்காம்; 5 கோடி ரூபாய் பத்மாவதி தாயாருக்காம். (கடவுளி டத்தில்கூட ஆண் - பெண் வித்தியாசம் தானோ!) கோவில்கள் தோன் றியது ஏன்? எனும் நூலினை திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் எழுதியுள்ளார். மத ஸ்தாபனங்களை மேற்பார்வை செய்யும் அரசாங்க அதிகார கோட் டைக் கொத்தளங்கள் உள்ள உள்ள நகரங்களி லும், கிராமங்களிலும் உள்ள தெய்வங்களுக்குச் சொந்தமான பலவித சொத்துக்களையும் ஓரி டத்தில் சேகரிக்க அரசரது பொக்கிஷத்திற்குக் கொண்டு போய் சேர்த்து விடலாம். அன்றியும் ஓர் இரவு தெய்வத்தையோ, படத்தையோ ஏற்படுத்தவேண் டியது; அல்லது ஒரு கெட்ட சகுனத்தைப் போக்க திருவிழாக்களும், கூட்டங்களும் நடத்துவ தாகப் பாசாங்கு செய்து ஜனங்களிடமிருந்து அரசனது செலவுக்குப் பணம் வசூலிக்கலாம் என்று கவுடில்யன் அர்த்த சாஸ்திரம் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இப்படி அரசனின் கரு வூலத்தில் குவிந்த மக்கள் பணம், பிறகு அர்ச்சகர் கைகளுக்கு வந்து சேர்ந் தது. நீதிக்கட்சி ஆட்சி யின்போதுதான் இந்தி யாவிலேயே முதன்முத லாக ஓர் சட்டம் இயற் றப்பட்டது. இந்து அற நிலையத் துறையிடம் கோவில்களும், அவற் றின் சொத்துகளும் வந்து சேர்ந்தன. சிதம்பரம் நடராஜன் கோவில் சொத்துகளோ நீண்ட காலமாக தீட்சதப் பார்ப்பனர்களின் தனிப் பட்ட சொத்துகளாகக் கைமாறின. மானமிகு கலைஞர் அவர்கள் அய்ந் தாம் முறையாக ஆட் சிக்கு வந்தபோது சிதம் பரம் கோவிலும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. திருப்பதி ஏழுமலை யான் கோவிலுக்கு அர சன் கிருஷ்ணதேவராயர் அளித்த நகைகள் எல் லாம் மாயமாகப் போய் விட்டன. ஆந்திர மாநில உயர்நீதிமன்றமோ ஏழு மலையான் கோவில் நகைக ளைக் கணக் கெடுக்க உத்தரவு பிறப் பித்துள்ளது. அமெரிக்காவரை ஏமாளிகள் இருந்தால் கல் முதலாளிகளுக்குச் சொத்துக் குவியாமல் என்ன செய்யும்? அந்தோ பரிதாபம் - அந்தக் குத்துக்கல்லு முதலாளியால் ஒரே ஒரு பருக்கையாவது உண்ண முடியுமா? -------------------- மயிலாடன் அவர்கள் 17-4-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை Posted by தமிழ் ஓவியா Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: பெரியார்-மயிலாடன் -மூடநம்பிக்கை-பார்ப்பனியம் 11 comments: தமிழ் ஓவியா said... பி.ஜே.பி. கூட்டணி சிதறுகிறது! அய்க்கிய ஜனதா தளத்தை எதிர்த்து பி.ஜே.பி. சாடல் நவீன்பட்நாயக்கும் பி.ஜே.பி.யை உதறுகிறார்! புதுடில்லி, ஏப்.17-பி.ஜே.பி. தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி யில் பிளவு ஏற்பட்டு சிதறுகிறது. அடுத்த ஆண்டு நடைபெற இருக் கும் நாடாளுமன்ற தேர்தலில், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது பற்றி பாரதீய ஜனதா தீவிரமாக பரிசீலித்து வருகிறது. ஆனால் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பாரதீய ஜனதாவின் கூட்டணிக் கட்சி யான அய்க்கிய ஜனதாதளம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மதச்சார் பற்ற ஒருவரைத்தான் பிரதமர் வேட் பாளராக பாரதீய ஜனதா அறிவிக்க வேண்டும் என்று அய்க்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார் கூறியுள்ளார். மோதல் மேலும் டில்லியில் நடைபெற்ற அய்க்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில், கூட்டணி யின் பிரதமர் வேட்பாளரை பாரதீய ஜனதா இந்த ஆண்டுக்குள் அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி கெடு விதிக்கப்பட்டு இருக்கிறது. இப்படியாக, பிரதமர் வேட்பாளர் விஷயத்தில் பாரதீய ஜனதாவுக்கு அய்க்கிய ஜனதாதளம் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆனால், நரேந்திர மோடிக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதாக நினைத்து அய்க்கிய ஜனதாதளத்தின் நிர்ப்பந்தங்களுக்கு பணிந்து அவரை கைவிட்டுவிட பாரதீய ஜனதா தயா ராக இல்லை என்றே தெரிகிறது. April 17, 2013 at 6:43 PM தமிழ் ஓவியா said... சாடல் நிதிஷ் குமார் எல்லை மீறி பேசு வதாகவே பெரும்பாலான பாரதீய ஜனதா தலைவர்கள் கருதுகிறார்கள். அக்கட்சியின் செய்தித் தொடர்பா ளரான மீனாட்சி லேகி டில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக் கையில்; நரேந்திர மோடி மீதான புகார்களை பாரதீய ஜனதா முற்றி லுமாக நிராகரிப்பதாகவும், அவரு டைய மதசார்பின்மை பற்றி நிதிஷ் குமார் உள்ளிட்ட யாருடைய நற்சான் றிதழும் தேவை இல்லை என்றும் கூறினார். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத் துக்கு பின்னரும், மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் நிதிஷ்குமார் அங் கம் வகித்தார் என்றும், இப்போதும் அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருந்து வருகிறார் என்றும் மீனாட்சி லேகி தெரிவித்தார். பாண்டே சீறுகிறார் பீகார் மாநில பாரதீய ஜனதா தலைவர் மங்கள் பாண்டே விடுத் துள்ள அறிக்கையில், நரேந்திர மோடி பாரதீய ஜனதா கட்சியின் மதிப்புக்குரிய தலைவர் என்றும், கூட்டணி கட்சித் தலைவர்கள் அவருக்கு எதிராக தெரிவிக்கும் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறி உள்ளார். பீகார் மாநிலத்தில் அய்க்கிய ஜனதாதளம்-பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நரேந்திர மோடியை முதலமைச்சர் நிதிஷ் குமார் விமர்சித்து இருப்பதை பாரதீய ஜனதா அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் கண்டித் துள்ளனர். நவீன் பட்நாயக் திட்டவட்டம் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் பிஜு ஜனதா தளம் கூட்டணி அமைக்காது என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் கடந்த 1999ஆம் ஆண்டில் இருந்து பிஜு ஜனதா தளம் ஆட்சியில் உள்ளது. அக்கட்சி பா.ஜ.க.வுடன் 2009ஆம் ஆண்டு வரை கூட்டணி வைத்திருந் தது. எனினும், 2009 இல் நடைபெற்ற ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் பா.ஜ.க.வுடனான கூட்டணியை அக்கட்சி முறித்துக் கொண்டது. வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் பிஜு ஜனதா தளமும் இடம் பெற்றிருந்தது. இப்போது அக் கட்சியை மீண்டும் இந்தக் கூட்டணியில் இணைக்க பா.ஜ.க. தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில், டில்லியில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் திங்கள் கிழமை செய்தியாளர்களிடம் பேசினார். அவரிடம், வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பீர் களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக் கும் பேச்சுக்கே இடமில்லை. மூன்றாவது அணி என்பது நல்ல வாய்ப்பாகும். ஆனால் அது இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது என்று அவர் பதிலளித் தார். நிதீஷ் அரசிலிருந்து பாஜக வெளியேறலாம்: அய்க்கிய ஜனதா தளம் பிகாரில் நிதீஷ் குமார் தலை மையிலான அரசை ஆதரிக்க வேண்டுமென்று பா.ஜ.க.வுக்கு எந்த கட்டாயமும் இல்லை; வேண்டுமென்றால் அரசில் இருந்து பாஜக விலகிக் கொள்ளலாம் என அய்க்கிய ஜனதா தளம் அறிவித்துள்ளது. பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிக்கக் கூடாது என்று அய்க்கிய ஜனதா தளம் கூறியுள்ளதை அடுத்து, அந்த இரு கட்சிகள் இடையே பிரச்சினை நிலவுகிறது. இந்நிலையில் பிகார் தலைநகர் பாட்னாவில் செவ்வாய்க்கிழமை, அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சிவானந்த் திவாரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பிகாரில் எங்கள் கட்சி ஆட் சிக்கு ஆதரவளிக்க வேண்டு மென்று கூறி பா.ஜ.க.வின் கால் களை நாங்கள் கட்டி வைத்திருக்கவும் இல்லை. ஆட்சி ஆதரவைத் தொடருங்கள் என்று கூறி அவர்கள் முன்பு தலைவணங்கிக் கேட்டுக் கொள்ளவும் இல்லை. பா.ஜ.க. ஒரு தனிப்பட்ட கட்சி, அது தனது விருப் பத்துக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கலாம். 17 ஆண்டுகளாக இந்த கூட்டணி உள்ளது. இது உடைவதால் யாருக்கும் மகிழ்ச்சி ஏற்படாது. பா.ஜ.க, காங்கிரஸ் ஆகியவை தேசிய கட்சிகள் அல்ல. அவர்கள் 4 மாநிலங்களில் ஆட்சியில் இருந்தால், நாங்கள் ஒரு மாநிலத்தில் ஆட்சியில் இருக்கிறோம். இதுதான் வித்தியாசம். நரேந்திர மோடி மதச்சார்பற்றவர் என்று பாஜக கருதினால், அவரை பிரதமர் வேட்பாளராக அறி விக்கட்டும். அதன் பிறகு நாங்கள் எங்கள் முடிவை அறிவிப்போம். பிகாரில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட அய்க்கிய ஜனதா தளம் தயாராகவே உள்ளது என்றார் சிவானந்த் திவாரி. April 17, 2013 at 6:43 PM தமிழ் ஓவியா said... கோபத்தை விட்டுவிடு வோருக்கே கொள்ளை இன்பம்! மனிதர்களாகிய நமது எதிரிகள் வெளியில் இருப்போர் என்றுதான் நம்மில் பலர் தவறாகக் கருதிக் கொண்டுள்ளோம். ஆனால், உண் மையான எதிரிகள் பலரும் நமக் குள்ளேயே இருக்கிறார்கள்; அவர் களது ஆளுமை பற்பல நேரங்களில் சிகரங்களைத் தொடவேண்டியவை ஆகும். அம்மனிதர்களைக்கூடச் சீர ழித்து சின்னாபின்னமாக்கி விடுகிறது! ஆம்! அந்தப் பெரிய எதிரி எது தெரியுமா? சினம் என்னும் சேர்ந் தாரைக் கொல்லி! ஆம், கோபம்தான்! அதனை அடக்கி ஆளுபவர் களுக்கு உள்ளம் மட்டுமல்ல; உடலும், உடல்நலனும்கூட உயர்ந்த முறையில் ஒத்துழைக்கும். இதுபற்றிப் பேசுவது, எழுதுவது எளிது; ஆனால், நடைமுறையில் இதனைக் கொண்டு ஒழுகுவது - கடைப்பிடித்து வாழுவது அவ்வளவு எளிதல்ல; வாழ்ந்து விடுபவர்கள் வெற்றியை அடைந்தவர்கள் மட்டு மல்ல; உண்மையான வீரர்கள் அவர்களேயாவார்கள்! அண்மையில் சிங்கப்பூரில் கிடைத்த ஒரு ஜப்பானியப் பேராசிரியர் கெண்டட்சூ தக்கமோரி (Kentetsu Takamori) என்பவர் (பவுத்த அறிஞர்) எழுதிய நல்ல படிப்பினைகளைக் கூறும் கதைத் தொகுப்பு நூல் ஒன் றைப் படித்தேன்; அதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி. சுவிட்சர்லாந்து நாட்டில் வாழ்ந்த ஒரு தத்துவ ஞானிக்குக் கோபமே வருவதில்லை. எப்போதும் சிரித்த முகத்துடன் எதையும் உள்வாங்கி, எவரிடமும் பேசிப் பழகும் இயல் பானவர். அவரது நண்பர்கள் சிலருக்கு ஒரு விசித்திர ஆசை! இவரை எப்படி யாவது ஆத்திரமூட்டச் செய்து இவர் கோபத்தில் கொதிப்பதைக் கண்டு சுவைக்கவேண்டும் என்பதுதான் அந்த ஆசை. அவர் தனியாகக் குடியிருந்த அந்த வீட்டில் அவருக்கு உதவிடும் உதவியாளரான ஒரு அம்மையாரிடம் அவரைக் கோபம் கொள்ளும்படிச் செய்தால் ஏராள பரிசுகள், பணம் தருகிறோம் என்று கூறினார்கள். மிக நீண்ட யோசனைக்குப் பின், அந்த உதவியாளரான பெண்மணி, வழக்கமாக தத்துவஞானி உறங்கப் போகுமுன், அவரது படுக்கையை நன்றாக அமைத்திருப்பார்; உதறி தட்டிப் போட்டு அழகுற அமைப்பது அன்றாட வழக்கம்! அன்று வேண்டுமென்றே இந்த உதவியாளர் அதைப் போடாமல் அலங்கோலமாக வைத்துவிட்டுப் போனார். விடிந்ததும் அவர் கடிந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்புடன்! பொழுது விடிந்து, இந்த அம்மையார் உதவியாளர், அவரைச் சந்தித்தபோது, அவர் வழக்கம்போல் புன்சிரிப்புடன் நேற்றிரவு படுக்கைப் போடவில்லை என்பதை அங்கு போன பிறகுதான் பார்த்தேன் என்று கூறிவிட்டுச் சென்றார்! ஏமாற்றமே மிஞ்சியது!! மறுநாளும் இப்படியே செய்தார் உதவியாளர்; அதற்கடுத்த நாளும், இந்த ஞானி, நேற்றிரவுகூட படுக்கை சரியாகப் போடப்படவில்லை. நீங்கள் வேறு முக்கிய அலுவல்களில் ஈடு பட்டிருக்கவேண்டும்; இன்றைக்குச் செய்து விடுங்கள் என்று பொறுமை யாகக் கூறினார்! மூன்றாம் நாள் காலை, நேற்றும் உங்களால் படுக்கை யைச் சரியாகப் போட இயலவில்லை; அதற்குக் காரணம் ஏதாவது இருக் கக்கூடும். கடந்த மூன்று நாள்களாக நானே போட்டுப் பழகிவிட்டேன். இனிமேல் நீங்கள் சிரமம் எடுத்துக் கொள்ளவேண்டாம். நானே போட்டுப் பழகிவிட்டேன் என்றார். இது இந்த உதவியாளரை வெட்க முறச் செய்தது. அந்த உதவியாளர் தத்துவ ஞானியின்முன் மண்டியிட்டு அழுதுவிட்டார்! நடந்ததைக் கூறித் தன்னை மன்னிக்கும்படி வேண்டி னார்! அப்போதும் அந்த ஞானி தனது வழக்கமான புன்சிரிப்பை விடாமல், காட்டியபடியே இருந்தார். ஏதும் சொல்லவில்லை. #### மற்றொரு கதை. விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு பணக்கார பிரபு வீட்டில், ஒரு ஆட்டுக்குட்டி நுழைந்து விருந்தைப் பாழாக்கி விட்டதாம். இதைக் கண்டு மிகுந்த ஆத்திரம்கொண்டு, அந்த ஆட்டுக் குட்டிமீது எரிகின்ற நிலக்கரியை எடுத்துக் கொட்டி விட்டாராம். அதன்மீதுள்ள ஆட்டுத் தோலில் தீப்பிடித்துக் கொண்டது. அது பங்களாவுக்குள் அங்கும் இங்கும் வலி தாங்காமல் எரியும் நெருப்புடன் ஓடத் தொடங்கியது! அது ஆட்டு மந்தை யில் ஓடியது, அங்கும் தீ, எங்கும் தீ! குதிர் அருகில் புரண்டது, குதிரும் தீப்பிடித்து எல்லாமே நாசமாகியது! இந்தத் தீ எல்லாவிடங்களிலும் பரவி, எல்லாவற்றையும் எரித்து நாசமாக்கியது! பொறுமை முன்னவரை உயர்த் தியது; பின்னவரின் ஆத்திரமோ பெரும் அழிவையே உருவாக்கியது! எனவே, கோபத்தைக் கொல்க! மனதை வெல்க!! பொறுத்தவர்க்கு எப்போதும் இன்பம்; ஒறுத்தவருக்கு அந்தக் கணம் மட்டுமே இன்பம்; பிறகு மாறாத்துன்பம் என்ற வள்ளுவரின் குறளில்தான் எவ்வளவு நேர்த்தி! - கி.வீரமணி வாழ்வியல் சிந்தனைகள் April 17, 2013 at 6:49 PM தமிழ் ஓவியா said... முற்போக்குச் சிந்தனை தேவை! கோவை சுந்தராபுரத்தில் நிறைவேற்றப்பட்ட 26 தீர்மானங்களுள் 24 ஆவது தீர்மானம் பெண்களுக்கு முற்போக்குச் சிந்தனை தேவை என்பதாகும். தீர்மானம் வருமாறு: கோயில் வழிபாடு, பண்டிகைகளைக் கொண் டாடுதல், சடங்குகளைச் செய்தல், மூடப்பழக்க வழக்கங்களைப் பின்பற்றுதல், சாமியாரிணிகள், ஜோதிடர்கள், மந்திரவாதிகளை நம்பி அவர்கள் பின்னால் செல்லுதல், மோசம் போதல் முதலியவை பெண்களை மேலும் இழிவுபடுத்தவும், முற் போக்குத் திசைக்கும், வளர்ச்சிக்கும், முன்னேற்றத் திற்கும் பயணிப்பதைத் தடுக்கவும்தான் பயன்படும் என்பதை உணர்ந்து, இந்தத் தளைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டு, பகுத்தறிவோடு சிந்தித்து, தன்னம்பிக்கையோடு செயல்படவேண்டும் என்று பெண்கள் சமூகத்தை இம்மாநாடு கேட்டுக்கொள் கிறது. வேதங்கள் - இதிகாசங்கள் - புராணங்கள் - சாஸ்திரங்கள் என்பவை அனைத்தும் பெண்களை இழிவுபடுத்தும் தன்மை கொண்டதாலும், ஆபாச உணர்வுகளை ஊட்டுவதாலும் பகுத்தறிவுக்கு விரோதமாக உள்ளதாலும் இவற்றை அறவே புறக்கணிக்கும்படி பெண்கள் சமூகத்தை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. இது மிகவும் முக்கியமான அடிப்படையான தீர்மானமாகும். நம்முடைய பெண்களின் நிலைமையைப்பற்றி பெண்ணுரிமைக் காவலரான தந்தை பெரியார் என்ன கூறுகிறார்? இன்றைய பெண் எவ்வளவோ கல்வியும், செல்வமும், நாகரிக அறிவும், கவுரவமும் உள்ள சுற்றத்தாருக்குள்ளும், சகவாசத்துக்குள்ளும் இருந்து வந்தும், மிகப் பழங்காலப் பட்டிக்காட்டு கிராமவாசிப் பெண்களைவிட இளப்பமாய் நடந்துகொள்வதைப் பார்த்தால், நமக்கு எவ்வளவு சங்கடமாய் இருக்கிறது? இப்படிப்பட்ட பெண்கள் வயிற்றில் பிள்ளைகள் பிறந்து இவர் களால் வளர்க்கப்பட்டால், அவற்றிற்கு மனிதத் தன்மை எப்படி ஏற்படும்? என்ற வினாவை எழுப்புகிறார் தந்தை பெரியார். மிகப் பழங்காலப் பட்டிக்காட்டு கிராமவாசிப் பெண்கள் என்று தந்தை பெரியார் அவர்கள் குறியீடாகச் சொல்லுவது அவர்களிடம் மண்டிக் கிடக்கும் மூட நம்பிக்கைகளும், பழைமைப் பிடிப்பு களும், சடங்குகளில் மூழ்கிக் கிடக்கும் பிற்போக்குத் தன்மையையும்தானே? தாங்கள் செய்யும் சடங்குகள் கொண்டாடும் பண்டிகைகளுக்கான காரணா காரியம் அவர்களுக்குத் தெரியுமா? தெரிந்திருந்தால் அவற்றை ஏற்றுக்கொள்வார்களா? கோவில் கோவிலாகச் சுற்றித் திரிவதும், அங்கப் பிரதட்சணம் செய்வதும் நாகரிகமானதுதானா? குழந்தைப் பேற்றுக்காக கோவிலுக்குமுன் குப்புறப்படுத்துக் கொள்வதும், ஆணி செருப்புக் காலால் அவர்களை மிதித்துப் பூசாரி செல்லுவதும் நாகரிகம்தானா - ஏற்புடையதுதானா? ஒரு பெண் கருவுறாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. ஆணிடம் குறைபாடு இருக்க லாம்; அல்லது பெண்ணிடம் குறைபாடு இருக்கலாம். அதனைக் குணப்படுத்தவேண்டிய இடம் மருத்துவ மனையே தவிர கோவில்கள் அல்ல - பூசாரிகளின் செருப்புக் காலும் அல்ல. பெரியபாளையத்தம்மன் கோவிலுக்குப் பெண்கள் வேப்பிலை ஆடையை அணிந்து செல்லுவது எல்லாம் எந்த அடிப்படையில்? பக்தி என்று வந்துவிட்டால் மான உணர்வுகூட பலி கொடுக்கப்படுகிறதே! கடவுள், மத, சாஸ்திர, வேத, புராண, இதிகாசங் களின் தன்மைதான் என்ன? இந்துக்களின் அய்ந் தாவது வேதம் என்று கூறுகிறார்களே கீதை - அந்தக் கீதை பெண்களை பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று சொல்லவில்லையா? பெண்களைக் கொல்லுதல் பாவமாகாது என்று சொல்லுவதுதானே மனுதர்ம சாஸ்திரம். அய்ந்து பேருக்கும் தேவி என்பதும், பெண்ணை வைத்து சூதாடியது என்பதும் மகாபாரதம் கூறும் இழிவு அல்லவா! இராமாயணத்தில் இராமன் சீதையைத் தீக் குளிக்கச் செய்ததும், நிறை மாதக் கர்ப்பிணியான சீதையை காட்டில் கொண்டு விட்டதும் எந்த வகையில் நியாயப்படுத்தப்படக் கூடியவை? கோவை தீர்மானம் இவற்றைத்தான் சுட்டிக்காட்டு கிறது; கல்வி வந்தாலும் இந்தக் காட்டுவிலங் காண்டித்தன கடும் குரங்குப் பிடியிலிருந்து பெண் கள் விடுதலை பெறாவிட்டால் பெண்களுக்கு மீட்சி இல்லை என்று சுட்டிக்காட்டுவதுதான் அந்த 24 ஆம் தீர்மானம். பெண்களே பெரியாரைத் துணை கொள்வீர்! April 17, 2013 at 6:49 PM தமிழ் ஓவியா said... சிந்தனா சக்தியற்றவன் தெரியாததை, இல்லாததை நம்ப வேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால், மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்றவனாக ஆகிவிடு கின்றான். (விடுதலை, 2.6.1970) April 17, 2013 at 6:50 PM தமிழ் ஓவியா said... சென்னை உயர்நீதிமன்ற இலச்சினையில் தமிழுக்கு இடமில்லை-இந்தி மட்டும் ஏனோ? ஆசிரியருக்குக் கடிதம் தமிழ்நாட்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் ஆவணங் கள் மற்றும் வழக்காடும் உரிமை வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் தமிழ் வேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டாலும் நிறைவேற்றம் என்பது ஏதோ கேட்கக் கூடாத, நடக்கக் கூடாத ஒன்று என்பது போல் இந்திய தேசியத்தால் கருதப் படலாமா? தமிழ்நாடு, தமிழர், தமிழ்மொழி இந்தியாவின் ஓர் அங்கம் என்றால் இந்தியா முழு மைக்கும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டாமா? ஆனால், கோரிக்கை என்னவோ இன்னமும் தமிழ்நாட் டிற்குள்தான். அதற்கே கோரிக்கை வைப்பதே பெரும் சாதனையாக, அதுவும் ஆளும்கட்சி முதல்வரால் வைக்கப்படும் கோரிக்கை என்ப தால் நாளிதழ்களில் முதற்பக்க செய்தியாகிறது. மத்திய அரசு ஏற்றுக்கொண்டதா? என்று இன்ன மும் மக்களுக்கு விளங்கவில்லை. அரசியல் நடத்துவதற்கு கோரிக்கை எழுப்புவதுமட்டுமே போது மானதா? என்றும் விளங்கவில்லை. இலச்சினையில் இந்தி புகுந்துள்ளது இது ஒருபுறம் இருக்க, சென்னை உயர்நீதிமன்றம் என்பது இன்னமும் மெட்ராஸ் அய்க்கோர்ட் என்று தான் ஆவணங்களில் உள்ளது. ஆங்கிலத்தில் CHENNAI என்று இல்லாமல் இன்னமும் HIGH COURT OF JUDICATURE MADRAS என்றுதான் உள்ளது. மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தின் சின்னம் ஆங்கிலத் தில் உள்ளது என்றாலும் அங்கே யும் வாய்மையே வெல்லும் என்ப தற்கு ஆங்கிலத்தில்TRUTH ALONE TRIUMPHS என்பதுகூட இந்தியில் உள்ளது. தேசியக்கொடி அவமதிப்பும் இலச்சினையில் உள்ளது எல்லாவற்றிற்கும் சிகரம் வைத் தாற்போல் சின்னத்தில் பொறிக் கப்பட்டுள்ள தேசியக்கொடி மூன்று நிறங்களில் இல்லாமல் பச்சை நிறத்தில் உள்ளது. கோபுரம் ஒரு நிறம், சிங்கம் ஒரு நிறம் மற்றும் நடுவில் வெள்ளை நிறம் என்று உள்ளது. நடுவில் உள்ள அசோகச் சக்கரம் நீலத்தில் இல்லாமல் அது வும் பச்சை நிறத்தில் உள்ளது. கவ னக்குறைவாக இருப்பவர்கள்கூட தமிழ் இல்லாதவாறு கவனமாக இருப்பது மட்டும் ஏனோ? இலச் சினை உள்பட ஆவணங்கள், வழக் காடுதல் உள்ளிட்ட அனைத்திலும் தமிழுக்குப் போராட வேண்டி உள்ளது. இந்தி மட்டும் இடம் பிடித்துக் கொண்டுள்ளது ஏனோ? தமிழர் தூக்கம் கலையும் நாள் எந்நாளோ? எல்லாவற்றிற்கும் திராவிடர் கழகம்தான் போராடவேண்டி உள்ளது தமிழின் பேரால் வாழும் சிலர் திராவிடத்தால் வாழ்ந்தோமா? என்றெல்லாம் பிதற்றிக்கொண்டு திரிவதும் புதியதொரு (FASHION) வாடிக்கையாகி வருகிறது. மற்ற வர்கள் கண்களை மூடிக்கொண்டு திராவிடத்தை எதிர்ப்பதாலேயே தமிழிய முத்திரை ஆழமாகக் குத்திக்கொண்டுள்ளதாக எண்ணு கிறார்கள். ஆரிய ஆதிக்க ஒழிப்பு, தமிழில் வழிபாடு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர், தமிழர் வாழ்வாதார உரிமை சேது சமுத்திரத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளிலும் திரா விடர் கழகம் மட்டும் தான் முழு மூச்சாக போராடி வருகிறதே அன்றி மற்றவர்கள் திராவிடத்தால் என்ன சாதித்தோம் என்று சோற் றில் முழுப்பூசணியை மறைக்கும் வேலை செய்துகொண்டு ஆரியத் துக்கு வால் பிடித்துவருகிறார்கள். தமிழ்நாடு அரசுத் தேர்வாணை யத்தில் தமிழுக்கு இடமில்லை என்றாலும், குடிமைப்பணிகளுக் கான தேர்வு தமிழில் எழுத உரிமை கோருவது என்றாலும், அரசின் இட ஒதுக்கீடு கொள்கையில் கோளாறு ஏற்பட்டாலும் எல்லா வற்றையும் உடனுக்குடன் சுட்டிக் காட்டிப் போராடுவதும், தொலை நோக்கோடு தமிழர் வாழ்வாதார உரிமைகளை நிலைநாட்டுவது என்றாலும் தமிழர்தலைவர் அவர் களின் அயராத உழைப்பால் திரா விடர் கழகம் தான் முனைப்பாக செயல்பட்டு வருகிறதே ஒழிய மற்றவர் குறைசொல்லிகளாக இருந்துவருவதுதான். காணக் கிடைப்பது வரும் தேர்தலை மய்ய மாகக் கொண்டே மற்றவர் செயல் படுவர். வரும் தலைமுறையைக் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருவது திராவிடர் கழகம் ஒன்று தான். தமிழினக்காவலராக தமிழர் தலைவர்தான் தன்னல மறுப்பாள ராக தொண்டாற்றி வருபவர். இன் றைய காலகட்டத்தில் ஊடகங்கள் அதிகமானாலும், இருட்டடிப்பு களும் அதிகமாகத்தான் இருந்து வருகிறது. அதையும் தாண்டி எவ்வித விளம்பரத்தையும் எதிர் பாராமல் நம் கடன் பெரியார் பணி முடிப்பதே என்று கடமையாற்றி வருவதே கருஞ்சட்டைப் பட் டாளம். -செஞ்சி ந.கதிரவன், மாவட்டச் செயலாளர், திராவிட கழகம், விழுப்புரம் மாவட்டம் April 17, 2013 at 6:50 PM தமிழ் ஓவியா said... பெரியாரியல் வாழ்க்கை முறை இரத்த அழுத்தத்தை குறைக்கிறது அகச்சுரப்பியல் நிபுணர் டாக்டர் மரு.கு.கண்ணன் விளக்கவுரை! மதுரை, ஏப். 17- 13.4.2013 சனிக் கிழமை மாலை நடைபெற்ற மதுரை விடுதலை வாசகர் வட்ட தொடர் சொற்பொழிவில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு அகச்சுரப்பியல் நிபுணர் டாக் டர் மரு.கு.கண்ணன் தக்க ஆதாரங்களுடன் விளக்கியது பார்வையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும் பெருமிதத்தை யும் அளித்தது. அவர் 'இரத்த அழுத்த உயர் வுக்கு யார் காரணம்?'' என்ற தலைப்பில் மிக விரிவாகவும் விளக்கமாகவும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் உரை யாற்றினார். இரத்த அழுத்த உயர்வுக்கான காரணங்களை ஒளிப்படக்காட்சி மற்றும் மடிக் கணினி மூலம் திரையிட்டுக் காட்சி தனது விளக்கவுரையை ஆற்றியது எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகை யில் அமைந்திருந்தது. பெரியாரியல் வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பவர்கள் 1.அடிமைத்தனத்தை வெறுப்பது, 2.அறியாமையை அகற்றுவது, 3.சமுதாய சமத்து வத்தை வலியுறுத்துவது, 4.கட வுள் மறுப்புக் கொள்கையில் உறுதியாக இருப்பது, 5.அறிவி யல் உணர்வோடு வாழ்வியலை கடைபிடிப்பது போன்ற பெரியாருடைய கருத்துக்களை பின்பற்றுவதால் அவர்களுக்கு இரத்த அழுத்த உயர்வு ஏற்பட வாய்ப்பே இல்லாமல் போய் விடுகிறது என்ற கருத்தினை அழுத்தமாக பதிவு செய்த போது பார்வையாளர்கள் பெரிதும் மகிழ்ச்சிப் பரவசத் தால் பெருத்த கரவொலி எழுப் பினர். அதோடு திரைப்பட நடிகர் புரட்சி தமிழன் சத்யராஜ் அவர் களை விமான நிலையத்தில் அண்மையில் டாக்டர் கண்ணன் சந்தித்து உரையாடிய போது சத்தியராஜ் அவர்கள் என்றைக்கு நான் கடவுளை மறந்தேனோ, அன்றிலிருந்து இரத்த அழுத்தமே இல்லை'' என்று கூறியதை கேட்டு பார்வையா ளர்கள் பெரிதும் ஆனந்தப் பட்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இக்கூட்டத்திற்கு பணி நிறைவு பெற்ற நீதிபதி பொ. நடராசன் தலைமை தாங் கினார். திருமதி.இரா.வே.சுசிலா வரவேற்புரை நிகழ்த்த, பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் தனராசு விடுதலை இம்மாத சிந்தனை என்ற தலைப் பில் விரிவாக விடுதலையில் வெளி யான பகுத்தறிவு சிந்தனைகளை விளக்கி காட்டினார். ஆயுள் காப்பீட்டுக்கழக அலுவலர் (பணிநிறைவு) காசி விஸ்வநாதன் சிறப்பு பேச்சாளர் பற்றிய அறிமுக உரையை ஆற்றினார். வேங்கை மாறன் நன்றி கூற கூட்டம் முடிவுற்றது. அறிவியல் சிந்தனையோடு மருத் துவர் மரு.கு. கண்ணன் ஆற்றிய உரை அனைவருக்கும் மகிழ்ச்சி யை யும் மனநிறைவையும் அளித்தது. April 17, 2013 at 6:52 PM தமிழ் ஓவியா said... பதில் சொல்லுமா அதிமுக ஏடு? மறுபடியும், மறுபடியும் அ.இ.அ.தி. மு.க.வின் அதிகார பூர்வ அக்கிரகார ஏடாகவே மாறிவிட்ட நமது எம்.ஜி.ஆர். வீண் வம்புக்கு வந்து வாங்கிக் கட்டிக் கொள்வதையே வாடிக்கையாக்கிக் கொண்டு விட்டது. அதுவும் ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி எல்லாம்கூட எழுதுகிறது என்றால், அதற்கொரு அசட்டுத் துணிச்சல் தேவைதான் என்பதை வேண்டுமானால் ஒத்துக் கொள்ள லாம். ஈழத் தமிழர் பிரச்சினையை மய்யப்படுத்திக் கருத்துக் கூறினார் திராவிடர் கழகத் தலைவர். நட்பு நாடு நட்பு நாடு என்று இலங்கையைச் சொல்லிக் கொண்டு வருகிறதே - இந்தியா - நட்பு நாடு என்றால் என்ன பொருள்? இந்தி யாவின் வெளிநாட்டின்கொள்கை மாற வேண் டும் என்று திராவிடர் கழகத் தலைவர் சொல்லி விட்டாராம். அத்திரிபாட்சா கொழுக்கட்டை என்று ஒருதாவு தாவுகிறது (அக்ரகார) அதிமுக ஏடு. திமுக காங்கிரசோடு கூட்டு சேர்ந்தது - இல்லை என்று மறுக்க வில்லை. அதிமுக காங்கிரசோடு கூட்டுச் சேர்ந்து மத்திய ஆட்சியில் பங்கு ஏற்கவில்லையா? பா.ஜ.க. வோடு கூட்டு சேர்ந்து மத்திய ஆட்சியில் பங்கு ஏற்கவில்லையா? அப்பொழுதெல்லாம் ஈழத் தமிழர் பிரச்சினை என்பது இல்லவே இல்லையா? அப்பொழுது எந்த நேரத்திலாவது இந்தியாவின் வெளிநாட்டுக் கொள் கையை அதிமுக விமர்சித்ததுண்டா? திராவிடர் கழகம் திமுக ஆதரிக் கிறது; அதிமுக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்ததும் உண்டு. அதற்காக அதிமுக ஆட்சியின் அத்தனை செயல் பாடுகளையும் ஆதரித்ததா என்ன? மத மாற்றத் தடுப்புச் சட்டம் கொண்டு வந்தபோது திராவிடர் கழகத் தலைவர் கண்டிக்கவில்லையா? வேதாகமக் கல்லூரி திறக்கப்பட இருப்பதாகச் சொன்னபோது எதிர்க்க வில்லையா? மதமாற்றத் தடுப்புச் சட்டம் கொண்டு வந்ததினால் (அதிமுக ஆட்சியை ஆதரித்த காரணத்தால்) அதற்கு திராவிடர் கழகத்தைப் பொறுப்பாக்க முடியுமா? ஈழத் தமிழர்கள் மீது போர் தொடுக் கப்பட்ட போது அதனைப் பச்சையாக ஆதரித்தாரா இல்லையா அதிமுக பொதுச் செயலாளர்? போர் நிறுத்தப்பட வேண்டும் என்று சொல்லுவது விடுதலைப்புலிகளைக் காப்பாற்றத் தான் என்று கூறினாரா இல்லையா? மரியாதையாக, நாணயமாக இவற் றிற்குப் பதில் சொல்லி விட்டு, மறுபடியும் பேனா பிடிக்கட்டும் பார்க்கலாம். கடைசியாக ஒரு கேள்வி இந்தி யாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் வேண்டுமா? கூடாதா? பதில் சொல்லட்டும். @@@@@@ April 18, 2013 at 7:51 PM தமிழ் ஓவியா said... மழை பொழிய.... பொள்ளாச்சி அருகே மழை வேண்டி மனிதப் பொம்மையைப் பாடையில் வைத்து, ஊர்வலமாக இழுத்துச் சென்று தீயிட்டுக் கொளுத்தினர் - கிராமப் பெண்கள் கடந்த சனியன்று, விளக்கில் எண்ணெய் ஊற்றி, பாடையைச் சுற்றி வந்து ஒப்பாரி வைத்து அழுதனர். மழை பொழிவதற்கும், இந்தச் சடங்குக்கும் என்ன சம்பந்தம்? கழுதைக்கும், கழுதைக்கும் திருமணம் செய்து வைத்தார்களே மழை கொட்டி தீர்த்ததா? மழை பொழிய இவ்வளவு எளிதான வழி இருந்தாலும் நாட்டில் பஞ்சம் ஏன்? ஏன்? பெண்கள் முதலில் திருந்த வேண்டும். திருச்செந்தூர் முருகனுக்கு சிங் கப்பூர் தொழிலதிபர் ஒரு கிலோ 400 கிராம் கொண்ட 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கிரீடத்தை காணிக்கையாக அளித்தார். தமிழ்ப் புத்தாண்டு முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சாமி தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் என்பவை இன்றைய செய்திகள். இந்தியாவில் 70 விழுக்காடு மக் களின் நாள் வருமானம் ரூ.20-க்குள் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, அந்தக் கடவு ளுக்கே நகைகளை செய்து அணி விப்பது அசல் முரண்பாடு அல்லவா? வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளி எடுத்து வைத்து அந்த வெல்லப்பிள்ளை யாருக்கே படைப்பதா என்று கிராமத் தில் பழமொழி ஒன்றைச் சொல்லு வார்கள். மனிதனால் படைக்கப்பட்ட கடவுள் அந்த மனிதனைப் போலவே ஏமாளி போலும்! @@@@@@ April 18, 2013 at 7:51 PM தமிழ் ஓவியா said... பெண்ணென்றால்... பெண் என்றாலே கேலி தானா? மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதி நிதிகள் அதையும் தாண்டி அமைச் சர்கள் எனும் நிலையில் உள்ளவர் கள்கூட இதற்கு விதி விலக்கு இல்லை. அண்மையில் மகாராட்டிர மாநில அமைச்சர் ஒருவர் மின் வெட்டையும், குழந்தைப் பேற்றையும் ஒப்பிட்டுக் கிண்டலடித்தார். இப்பொழுது மத்திய பிரதே சத்தைச் சேர்ந்த பிஜேபி அமைச்சர் விஜய்ஷா என்பவர் பழங்குடி மாணவர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்றின் பெண்களைப் பற்றி ஆபாச மான நகைச்சுவைத் துணுக்கை சொல்லப் போய் வீண் வம்பில் சிக்கிக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சரின் மனைவியும் இருந் திருக்கிறார். அதன் காரணமாக பிரச் சினையின் பலூன் உப்பி, கடைசியில் அமைச்சர் பதவி விலக நேரிட்டது. சட்டப் பேரவையில் உட்கார்ந்து கொண்டு கைப்பேசியில் ஆபாசப் படங்களைப் பார்ப்பது போன்ற வேலை களிலும் சிக்குகின்றனர் அமைச்சர் களும், சட்டப் பேரவை உறுப்பினர் களும். 2002இல் கோத்ரா பிரச்சினை யையொட்டி மோடி அரசால் திட்ட மிட்டு மேற்கொள்ளப்பட்ட சிறு பான்மையினருக்கான வன்முறையில் முசுலிம்கள் முகாம்களில் தங்கும்படி நேரிட்டது. அப்பொழுது முதல் அமைச்சரான நரேந்திரமோடி முகாம்கள் இனப் பெருக்கத்துக்கும் பயன்படுகின்றன என்று சொன்னாரே - அதே நேரத் தில் அவரை யாரும் பதவி விலகச் சொல்லவில்லை என்பது கவனிக்கத் தக்கது. April 18, 2013 at 7:52 PM தமிழ் ஓவியா said... பயன்படவேண்டும் சுக போகத்தினால் இன்பம் காணுவதில் பெருமை இல்லை. தொண்டு காரணமாக இன்பம் காணுவதே சிறந்த இன்பமாகும். வாழ்வு என்பது தங்களுக்கு மட்டும் என்று கருதக் கூடாது. மக்களுக்கு ஆகவும், தொண்டுக்கு ஆகவும் நம் வாழ்வு இருக்கவேண்டும் என்று கருதவேண்டும். (விடுதலை, 2.7.1962) April 18, 2013 at 7:53 PM Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) பதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா பதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண்டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ பதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா பதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ பனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ பனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி பதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ 19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. பத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா 19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா 19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி எட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா 19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி Blog Archive ► 2021 (14) ► May (10) ► March (1) ► February (1) ► January (2) ► 2020 (1) ► March (1) ► 2019 (1) ► January (1) ► 2018 (29) ► December (4) ► September (5) ► July (1) ► May (1) ► April (1) ► March (3) ► February (3) ► January (11) ► 2017 (4) ► December (1) ► August (2) ► January (1) ► 2016 (27) ► December (1) ► November (2) ► September (2) ► August (3) ► July (4) ► June (4) ► May (1) ► April (2) ► March (1) ► February (4) ► January (3) ► 2015 (298) ► November (3) ► October (14) ► September (28) ► August (16) ► July (32) ► June (37) ► May (25) ► April (35) ► March (37) ► February (29) ► January (42) ► 2014 (564) ► December (45) ► November (42) ► October (58) ► September (47) ► August (42) ► July (48) ► June (53) ► May (46) ► April (55) ► March (41) ► February (45) ► January (42) ▼ 2013 (466) ► December (39) ► November (47) ► October (50) ► September (38) ► August (39) ► July (35) ► June (36) ► May (35) ▼ April (44) திராவிடர் கழகம் தொழிலாளர் ஸ்தாபனமே!-திராவிடர் உணர... புரட்சிக் கவிஞரின் சிந்தனைகள்! இப்பொழுது சொல்லுங்கள் கங்கை புனித நீரா? ஜோசியம் என்றால் என்ன? அது உண்மையா?-பெரியார் புத்தகர்-பெரியாரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்! -2 புத்தகர் - பெரியாரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்! அருவிக்குத்தி சிறையில் பெரியார் மாரியம்மன் பற்றி பெரியார் ரத்தத்தில் அய்யங்கார் ரத்தம், பறையன் ரத்தம் என்ற ப... மறியலால் கள் குடியை நிறுத்த முடியுமா? பெரியார் பதில் மனிதத்துவத்தை மலர்விக்கும் மதமற்ற உலகம் தேவை! தேவை!! சாய்பாபா ஜாலம் - பி.சி. சர்க்கார் அம்பலப்படுத்தினார்! பழைய திருமண முறையின் அடிப்படை என்ன? - தந்தை பெரியார் அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் கல்யாணம்!சாந்... பெரியார் திடலில் புத்தகச் சங்கமம் நூல்கள் பற்றிய ச... பொருளாதாரம் பற்றி பெரியார் கல் முதலாளிகளுக்குச் சொத்துக் குவியாமல் என்ன செய்ய... ஒரு மனைவியிருக்க மறுமணம் செய்யலாமா?-பெரியார் டெசோ கூட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த த... சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி அய்யர் - அய்யங்கார் ச... ஜோதிடத்தைத் தடை செய்ய வேண்டும்!பெரியார் எப்போதும் ... அண்ணல்அம்பேத்கரும்-தந்தைபெரியாரும் பெண்களை நீ, போ என்றும், வாடி, போடி என்று விளிக்கக்... டாக்டர் அம்பேத்கர்பற்றி குடிஅரசு தலையங்கம் பாசிசம் சீறுகிறது - பார்ப்பனர் அல்லாதாரே எச்சரிக்கை! சித்திரையில் புத்தாண்டாம் தை கூடாது என்கிறது ஆரியக... சித்திரையில் புத்தாண்டாம் தை கூடாது என்கிறது ஆரியக... அர்ச்சகர் - ஜோசியர் சம்பாஷணை-பெரியார் எழுதிய உரையாடல் சீதை கற்பாயிருந்திருக்க முடியுமா? ஒரு நெருக்கடியா... விதண்டாவாதம் - தந்தை பெரியார் புரட்சிப் பெண்கள் மாநாட்டுச் சிந்தனை-பெரியார் பேசு... பழனி முருகன் கோயிலில் முன்பு அர்ச்சகராக இருந்தது ய... சோவுக்கு ஒரு சொட்டு! புத்த நெறி ஒரு மதம் அல்ல - கி.வீரமணி திராவிடம் என்னுஞ் சொன்மூலம் - தேவநேயப் பாவாணர் ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் பிஜேபி இரட்டை வேடம் தமிழ்த் தேசியத்தைப் புறக்கணிப்பீர்!இந்துத்துவா சக்... காந்தி, தீண்டாமைக்கு ஏன் சத்தியாக்கிரகம் செய்வதில்லை? ஜாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு கேட்பதால் ஜாதி உ... பார்ப்பனர்களைப்பற்றி தெரிந்தவர்களுக்குத்தான் இந்தச... எதிரி கலைஞரா? ராஜபக்சேவா? ஒருவருக்கொருவர் விமர்சனம... பெரியாரும்-உடுமலை நாராயணகவியும் சோதிடம் பற்றி உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்... அது என்ன கிராமக் கோயில் பூசாரிகளுக்காக மாநாடு? ► March (32) ► February (32) ► January (39) ► 2012 (506) ► December (34) ► November (40) ► October (43) ► September (42) ► August (42) ► July (43) ► June (38) ► May (48) ► April (44) ► March (48) ► February (38) ► January (46) ► 2011 (622) ► December (40) ► November (41) ► October (48) ► September (68) ► August (59) ► July (59) ► June (54) ► May (56) ► April (41) ► March (52) ► February (57) ► January (47) ► 2010 (827) ► December (42) ► November (55) ► October (52) ► September (73) ► August (66) ► July (85) ► June (79) ► May (56) ► April (63) ► March (79) ► February (75) ► January (102) ► 2009 (1381) ► December (84) ► November (102) ► October (76) ► September (111) ► August (147) ► July (145) ► June (143) ► May (90) ► April (135) ► March (112) ► February (117) ► January (119) ► 2008 (1129) ► December (118) ► November (144) ► October (135) ► September (88) ► August (130) ► July (125) ► June (99) ► May (94) ► April (100) ► March (42) ► February (42) ► January (12) ► 2007 (34) ► December (34) ஆங்கிலம் கற்க Popular Posts திமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல் கேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன? கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம... அண்ணாவின் பொன்மொழிகள் இன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ... ஒரு ரஞ்சிதா போனால் என்ன? எத்தனை குஞ்சிதாக்கள் கிடைப்பார்கள்? கப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப... என் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன் நம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத... பாண்டேவுக்கு பதிலடி! ஊன்றிப்படித்து உண்மைகளை அறியுங்கள்!! அன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ... அம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத... இதுதான் அய்யப்பன் உண்மை கதை அய்யோ அப்பா அய்யப்பா! இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன... பறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன? இன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்... மாணவர்களும் பொதுநலத் தொண்டும்! - பெரியார் தோழர்களே! இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப... ஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன? நியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந... Powered by Blogger. குறி சொற்கள் அண்ணா (102) அம்பேத்கர் (38) அய்யத்தெளிவு (18) அரசியல்-சமூகம்-இடஒதுக்கீடு (24) அரசியல்-சமூகம்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை (623) இடஒதுக்கீடு (4) உலக நாடுகள் (79) கடவுள்-மதம் (37) கலைஞர் (50) கலைவாணர் (7) காணொளி (3) காமராசர் (6) திராவிடர் இயக்கம் (757) நேர்காணல் (25) பதிலடி (17) பாரதியார் (14) பார்ப்பனியம் (234) பார்ப்பனியம் -மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம் (8) பார்ப்பனியம்-மூடநம்பிக்கை (36) பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம் (101) பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-ஜோதிடம் (23) புரட்சிக்கவிஞர் (20) பெரிய (1) பெரியார் (1715) பெரியார்-காமராசர் (2) பெரியார்-தலித் (51) பெரியார்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை (14) பெரியார்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-புத்தகம் (59) பெரியார்-பெண்ணியம் (5) பெரியார்-மயிலாடன் -மூடநம்பிக்கை-பார்ப்பனியம் (332) பெரியார்-மயிலாடன்-மூடநம்பிக்கை- பார்ப்பனியம் (90) பெரியார்-மற்றவர்கள் (87) பெரியார்-மின்சாரம் (362) பொதுவானவை (69) மூடநம்பிக்கை (92) விவேகானந்தர்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம் (9) வீரமணி (757) ஜோதிடம் (11) ஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ ஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.
Tech Tamizha - 01 July 2019 - டெக் தமிழா Notifications ஜூலை 2019 | Tech Tamizha Notifications July 2019 - Vikatan Save the vikatan web app to Home Screen tap on Add to home screen. X READ IN APP Login செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் விளையாட்டு கிரிக்கெட் கால்பந்து ஐ.பி.எல் ஆன்லைன் தொடர்கள் New My News ராசி காலண்டர் மேலும் மெனுவில் Search டெக் தமிழா தொழில்நுட்பம் இது `மார்க்' கணக்கு! ஆளப்போகும் 'அண்டர் டிஸ்ப்ளே' கேமரா தொழில்நுட்பம்! அந்தக் காலம்... அது அது அது... 40 ஆண்டுகளைக் கடந்த வாக்மேன் நினைவுகள்! 200 கோடிப்பு...! டெக் தமிழா Notifications கேட்ஜெட்ஸ் `இந்த மாதம், ஃபிட்னஸ் பேண்ட் மாதம்!' படையெடுக்கும் புதிய ஃபிட் பேண்ட்கள் அதே விலை; அசத்தல் அப்கிரேட்... ஷியோமியின் அடுத்த பட்ஜெட் மான்ஸ்டர்! #Redmi7A `இனி ஆஃப்லைன் ஸ்டோர்ஸ்தான் எங்க டார்கெட்!' ரூட்டை மாற்றும் ஒன்ப்ளஸ் #VikatanExclusive டெக் தமிழா Shares Published: 10 Jul 2019 1 PM Updated: 10 Jul 2019 1 PM டெக் தமிழா Notifications டெக் தமிழா கடந்த மாத டெக் செய்திகளின் தொகுப்பு! உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் பிரீமியம் ஸ்டோரி 64 MP கேமரா ரெட்மி அடுத்த கேமரா மான்ஸ்டர் ஷியோமி தனது ரெட்மி நோட் 7 ப்ரோ மொபைலில் 48MP கேமராவுடன் வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. அதன்பின் சில மொபைல்கள் 48 MP கேமரா சென்சாருடன் வெளிவந்தன. இப்போது இதற்கு இன்னும் ஒருபடி மேலே சென்று விரைவில் அறிமுகமாகவிருக்கும் Mi Mix 4 மாடலில் 64 MP சோனி சென்சார் கொடுக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகின்றன. ஷியோமி புதிய வடிவமைப்பு மாற்றங்கள் போன்ற புதிய விஷயங்களை Mix சீரிஸில்தான் முயற்சி செய்துபார்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது. டொனால்ட் டிரம்ப் வாவே தடை நீக்கம்! சீனா - அமெரிக்கா இடையேயான வர்த்தகப் போரில் அதிகம் பாதிக்கப்பட்டது வாவே நிறுவனம்தான். ஜப்பானின் ஒசாகா நடந்துமுடிந்த G-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தச் சிக்கல் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. ``அமெரிக்க நிறுவனங்கள் அவர்களது உபகரணங்களை வாவேவுக்கு விற்பனை செய்துகொள்ளலாம்" என டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். பேசும்போது உபகரணங்கள் என்ற அவர் வேறு எதையும் தெளிவாகக் குறிப்பிடவில்லை. சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ட்ரம்ப் இடையே நடைபெற்ற வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி விரைவில் மீண்டும் அமெரிக்க நிறுவனங்களுடன் வாவே வர்த்தகம் செய்யத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Flying-V V வடிவ விமானம் இப்போதைய விமானத்தின் தோற்றத்தை அப்படியே மாற்றும் புதிய V-வடிவிலான டிசைன் பற்றி ஆராய்ச்சி செய்யப்பட்டுவருகிறது. இதை `Flying-V' விமானம் என்று அழைக்கின்றனர். இந்த டிசைன் நெடுதூரம் பயணிக்கும் விமானங்களின் எரிபொருள் செலவை பெருமளவில் குறைக்குமாம். இதில் பயணிகள் இருக்கைகள் விமானத்தின் இறக்கைகளில் அமையும். லக்கேஜ் மற்றும் எரிபொருள் டேங்க்குகளும் இதே இடத்தில்தான் இருக்கும். இதன்மூலம் கூடுதல் ஏரோடைனமிக்காகவும், சற்றே எடைகுறைந்தும் இருக்கும் விமானம். இன்றைய விமானங்களைவிட சுமார் 20% வரை எரிபொருள் சேமிக்கமுடியும். ஆனால், போதிய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு முழுவதுமாக இந்த 'Flying-V' இயக்கத்திற்கு வர எப்படியும் 2040 ஆகிவிடும். அடோப் தொழில்நுட்பம் அடோப் அப்டேட் அடோப் நிறுவனமும் UC Berkeley-யைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் கைகோத்து ஏ.ஐ. ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மிஷின் லேர்னிங் அடிப்படையில் இயங்கும் இந்த ஏ.ஐ, ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட படங்களைக் கண்டுபிடித்துவிடுமாம். மார்ஃபிங் செய்யப்பட்ட படங்களை சில பேரிடமும் ஏ.ஐ.யிடமும் கொடுத்து எவையெல்லாம் மார்ஃபிங் செய்யப்பட்டவை எனக் கேட்டிருக்கிறார்கள். 53% தடவை மக்கள் சரியான விடையைச் சொல்லியிருக்கிறார்கள். ஏ.ஐ 99% தடவை சரியாகச் சொல்லியிருக்கிறது. இதை உடனடியாக ஒரு கமர்ஷியல் புராடக்டாக மாற்றும் எண்ணம் இல்லையெனச் சொல்லியிருக்கிறது அடோப். இதை எப்படி பயன்படுத்தப்போகிறார்கள் என்பது போகப்போகத்தான் தெரியும். எல்ஜி W சீரிஸ் எல்ஜி W சீரிஸ் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்புபவர்களுக்கு முதல் தேர்வு ரெட்மிதான். சமீபகாலமாக அதற்கு கடும் போட்டியாளராக மாறியிருக்கின்றது ரியல்மீ. சாம்சங், நோக்கியா போன்ற நிறுவனங்களே அதற்குப் பிறகுதான் நிற்கின்றன. எல்ஜி பட்ஜெட் செக்மென்ட்டில் சில மொபைல்களை விற்பனை செய்துவந்தாலும் அவை பெரிய அளவில் வரவேற்பைப் பெறுவதில்லை. காரணம் அதில் இருக்கும் வசதிகள், விலைக்கும் அதற்கும் கொஞ்சம்கூட சம்பந்தமே இருக்காது. அதை தற்போது உணர்ந்திருக்கிறது எல்ஜி நிறுவனம். இதைச் சரிசெய்து வசதிகள் அதிகம்கொண்ட W சீரிஸை பட்ஜெட் செக்மென்டில் களமிறக்கியிருக்கிறது எல்.ஜி. இவை 8,999 ரூபாயிலிருந்து கிடைக்கும். Also Read ஏ சீரிஸில் புதிய ஸ்மார்ட்போனை வெளியிடும் ஷியோமி - என்ன ஸ்பெஷல்? சூப்பர் ஃபிளாஷ் ஃபாஸ்ட் சார்ஜிங் சூப்பர் ஃபிளாஷ் ஃபாஸ்ட் சார்ஜிங்! கடந்த மார்ச் மாதம் ஷியோமி 100W சூப்பர் சார்ஜ் டர்போ என்ற தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருந்தது. அதன் மூலமாக ஒரு மொபைலை வெறும் 17 நிமிடங்களில் முழுவதுமாக சார்ஜ் செய்துகொள்ள முடியும் எனத் தெரிவித்திருந்தது. தற்போது விவோ நிறுவனம் அதை மிஞ்சியிருக்கிறது. 120W சூப்பர் ஃபிளாஷ் ஃபாஸ்ட் சார்ஜிங் என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறது. இதன் மூலமாக 4000 mAh பேட்டரியை வெறும் 13 நிமிடத்தில் ஃபுல் சார்ஜ் செய்துகொள்ள முடியும். வரும் 26-ம் தேதி விவோ நிறுவனம் 5G போனை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது. அப்போது இந்தத் தொழில்நுட்பமும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
This work by Ganasaraswathy is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 United States License. Login/Logout BackHistory Song - Kriti of Lord Shiva in Shanmugapriya (Thailaambhighe Hrudhaya Vaasaa Vaidyanadha {S:SongInfoTable| Shanmugapriya| Adi | Ganasaraswathy | Specify esnips song Name |GUID} <iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/Av_DTX1Ndy4" frameborder="0" allowfullscreen></iframe> {Tabs: English} Pallavi. Thailaambhighe Hrudhaya Vaasaa Vaidyanadha-yen ChiththamNiththam valamvarum DevaNallaasi thantharuLvaai || (Thailaambhighe) Anupallavi. Vairampol JolikkumNin vasiharaVadivam KaNdu Anandha KaNNirUkuththen Vaikunda HariNeyaa <pre class="chitta"> Chittaswaram. p P d n s - s n d p m - P m g r | S ; ; p m | g r s - s r g m p|| p P - d n S s - p P - d n R r | p P - S s P | , s n d p m p d || (Thailaambhighe) </pre> Charanam, PanjaMuga VinayaganThozhum ThiruNiir maNaMeaniyaa Chenjadi Sundhara SamaGana Rasiha Angaaharanuk karuLiya Shanmugapriya Anandhaa piNithudaikkum arumarunthea NiilakaNda kaNNIrangu Chittaaswaram. || (Thailaambhighe) {AddTab: தமிழ்} பல்லவி தைலாம்பிஹே ஹ்ருதய வாச வைத்யநாதா-என் சித்தம்நித்தம் வலம்வரும் தேவாநல்லாசி தந்தருள்வாய் || (தைலாம்பிஹே) அனுபல்லவி வைரம்போல் ஜொலிக்கும்நின் வசிகரவடிவம் கண்டு ஆனந்தகண்ணிர் ஊகுத்தேன் வைகுண்ட ஹரிநேயா சிட்டாஸ்வரம் ப பா த நி ஸ - ஸ் நி த ப ம - பா ம க ரி | ஸா ; ; ப ம | க ரி ஸ - ஸ ரி க ம ப || ப பா - த நி ஸா ஸ் - ப பா - த நி ரீ ரி | ப பா - ஸா ஸ பா | , ஸ் நி த ப ம ப த || (தைலாம்பிஹே) சரணம் பஞ்சமுக வினாயகன்தொழும் திருநீர் மணமேனியா செஞ்சடை ஸுந்தரா ஸாமகான ரஸிஹா அங்காஹரனுக் கருளிய ஷண்முகப்ரிய ஆனந்தா பிணிதுடைக்கும் அருமருந்தே நீலகண்டா கண்ணிரங்கு சிட்டாஸ்வரம் || (தைலாம்பிஹே) {AddTab: Meaning} {/Tabs}
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை ஆராய்ந்து முடிவெடுக்கிறவர்கள் என்றே இதுவரையிலும் உளவியலாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். புதிய ஆய்வு ஒன்று இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் இப்போது வெளியாகியிருக்கிறது. நீண்ட நெடுங்காலமாக, ‘பாலியல் விஷயத்தில் பெண்களை விட ஆண்கள் அதிக அக்கறை காட்டுகிறார்கள்’ என்ற நம்பிக்கையும் இன்றளவும் இருந்து வருகிறது. பிரபல உளவியலும், ஆண்கள் அதிக பார்வை சார்ந்தவர்கள், பாலியல் தூண்டுதல் படங்களுக்கு அல்லது அவர்களுக்கு முன்னால் இருக்கும் நபரின் உடலுக்கு பதிலளிப்பதாக கூறுகிறது. பெண்களோ, ஒரு நெருக்கமான உறவோடு தொடர்புடைய மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர்களாக கருதப்படுகிறார்கள். இந்த சிந்தனை ஆண்கள் மற்றும் பெண்களின் மூளை உண்மையில் விழிப்புணர்வை வித்தியாசமாக செயலாக்குகிறது என்று பரிந்துரை செய்தது. ‘சாதாரணமாக பாலியல் தூண்டுதல் என்பது ஒரு மாறுபடக்கூடிய, ஒருங்கிணைந்த நரம்பியல் இயற்பியல் செயல்முறையாகும். இது பெரும்பாலும் காட்சித் தூண்டுதல்களால் தூண்டப்படுகிறது. இதில் பதிலளிக்கும் அறிவாற்றல் செயல்நிலைதான் முதல் கட்டமாக இருக்கிறது. அடுத்த கட்டத்தில்தான் பாலியல் வேறுபாடுகள் ஏற்படுகின்றன’ என கூறியிருக்கிறது இந்த புதிய ஆய்வு. ஜெர்மனியின் Max Planck Institute for Biological Cybernetics நிறுவனத்தின் ஆராய்ச்சிக்குழுவின் இணை ஆசிரியரான ஹமீத் நூரி இது பற்றி கூறுகையில், ‘வழக்கமான, இதுவரை நம்பப்பட்ட ஒரு கருத்தை எங்கள் ஆய்வின் சவாலாக ஏற்றோம். நரம்பியல் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டபோது ஆண்கள் மற்றும் பெண்களின் மூளை ஆபாசக் காட்சிகளுக்கு ஒரே மாதிரிதான் பதிலளிக்கிறது’ என்கிறார். வெவ்வேறு உயிரியல், பாலியல் மற்றும் பாலியல் நோக்குநிலை கொண்ட வயது வந்தோர் சம்பந்தப்பட்ட 61 வெளியிடப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளை பகுப்பாய்வு செய்ததின் மூலம் தாங்கள் இந்த ஆய்வின் முடிவுக்கு வந்ததாக தேசிய அறிவியல் அகாடமியின் செயல்முறைகளைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். மேலும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவர்களின் மூளை, ஸ்கேனிங் இயந்திரத்தின் உள்ளே இருக்கும்போது பாலியல் படங்கள் மற்றும் சிற்றின்பத்தில் ஈடுபடும் படங்கள் காட்டப்பட்டன. பங்கேற்பாளர்கள் அனைவரும் படங்கள் காண்பிப்பதற்கு முன்பும், பாலியல் படங்களால் தூண்டப்பட்டதையும் ஸ்கேன் செய்து மதிப்பிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கு முந்தைய ஆய்வுகளில் பெண்களை விட ஆண்களே காட்சித்தூண்டல் மற்றும் போர்னோ படங்களால் தூண்டப்படுவதாகக் கூறியுள்ளன. மேலும் இந்த வேறுபாடுகள் மூளை தூண்டுதல்களைச் செயலாக்கும் விதத்தில் இருக்கக்கூடும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், தற்போதைய ஆய்வுகள் வெவ்வேறு முடிவுகளை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘இரு உயிரியல் பாலினங்களுக்கும், பாலியல் படங்கள் காட்டப்படும்போது Amygdala, Insula மற்றும் Striatum உள்ளிட்ட ஒரே மூளைப்பகுதிகளில் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை. மேலும் பெண் பாலுணர்வைச் சுற்றி நிறைய மேலோட்டமான கருத்துகள் உள்ளன. பெண்கள் காட்சிகள்ரீதியான விஷயங்களை விரும்புவதில்லை என்கிற விஷயத்தில் ஆண்களைப் போல வெளிப்படையான தகவல் தெரிவிக்காதவர்களாக இருக்கலாம். ஒருவேளை பெண்ணுக்கு இரண்டாம் நிலை தடுப்பு விளைவுகள் இருப்பதால் அவை உண்மையில் உணர்வதையும், வெளிப்படுத்துவதையும் தடுக்கலாம். ஆனாலும் குறைந்தபட்சம் இந்த தருணத்தில் ஆண்களும் பெண்களும் இந்த விஷயத்தில் பெரிய வித்தியாசமாக இல்லை என்பதையே எங்கள் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. காலம் நவீனமடைதல், பெண்களின் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவை இத்தகைய மாற்றங்களை பெண் மூளை அமைப்பில் உருவாக்கியிருக்கலாம் அல்லது ஏற்கெனவே இத்தகைய அமைப்பை உடையதாகவும் இருக்கலாம். இதுபற்றி இன்னும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன’ என்கிறார் ஆராய்ச்சியை மேற்கொண்ட நூரி.
பிறந்த கன்றுக்குட்டிகளைப் பராமரிப்பதில் பல யுக்திகள் இருக்கின்றன. இதில் முக்கியமானது அதன் கொம்பை அடுத்த 15நாட்களுக்குள் சுட்டுவிடுவது. தாய்மை (Motherhood) தாய்மை என்பது, மனிதர்களானாலும் சரி, விலங்குகளானாலும் மாபெரும் கவுரவத்திற்குரியது. தன்னலமில்லாதது. அவ்வாறு ஈன்றெடுக்கும் கன்றுகளைப் பராமரிப்பது கால்நடை வளர்ப்பில் மிக மிக முக்கியமானது. அந்த வகையில் பிறந்தக் கன்றுகளைப் பராமரிக்கும்போது பின்வரும் விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. உடல் சுத்தம் (Body cleansing) கன்று போட்டவுடன் தாய்ப்பசு கன்றுகளை நக்கிச் சுத்தம் செய்து விடும்.அப்படிச் செய்யவில்லை என்றால் சுத்தமான துணியைக் கொண்டு உடலை சுத்தம் செய்து கன்றை உலர வைக்க வேண்டும். வைக்கோலைக் கட்டிக் கொண்டு கன்றுகளை சுத்தம் செய்து உலர வைக்கலாம் மூச்சுத்திணறல் (Shortness of breath) மூச்சுத்திணறும் போது கன்றின் மூக்கில் உள்ள சளியை எடுத்து விட்டு மார்பகத்தைச் சுற்றி அழுத்தி விட்டால் மூச்சுத்திருப்பி கன்று நன்றாக சுவாசிக்க ஆரம்பித்து விடும் என்றார். தொப்புள் கொடி (Umbilical cord) பிறந்த கன்றில் தொப்புள் கொடியை சுமார் 2 முதல் 3 செ.மீ. நீளத்திற்கு விட்டு ஒரு சுத்தமான நூலினை இறுக்கமாக கட்டி விட வேண்டும். அதன் கீழ் 1 செ.மீ. விட்டு சுத்தமான கத்திரிக்கோலைக் கொண்டு கத்திரித்து விட வேண்டும். கத்திரித்த இடத்தில் உடனே டிஞ்சர் அயோடின் தடவி விட வேண்டும். சீம்பால் பிறந்த கன்றுகளுக்கு அரைமணி நேரத்திற்குள் சீம்பால் கிடைக்கச் செய்ய வேண்டும். சீம்பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது. நோய்களைக் கன்றுகளுக்கு வராமல் தடுக்கும். சீம்பாலில் மாவு மற்றும் கொழுப்புச் சத்துக்களுடன் கன்று வளர்ச்சிக்குத் தேவையான புரதம், உயிர்ச்சத்து, தாதுஉப்புகள் இம்முனோ கிளாபுலின் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை உள்ளன. பொதுவாக கன்றுக்குட்டிக்கு முதல் ஒரு வாரத்திற்கு தினசரி ஒன்றரை லிட்டர் வரை சீம்பால் கொடுக்கப்பட வேண்டும். கன்று பிறந்தவுடன் 10 முதல் 15 நிமிடத்திற்குள் முதல் கட்ட சீம்பாலும், 1 முதல் 2 மணி நேரம் கழித்து இரண்டாவது கட்ட சீம்பாலும் கொடுக்க வேண்டும். சீம்பால் கிடைக்காத நிலையில் நோய் உண்டாகலாம். அப்போது இதர பசுக்களின் சீம்பால் அளிக்கலாம். அப்படியும் கிடைக்கவில்லை என்றால் கீழ்க்கண்ட பொருட்கள் குறிப்பிட்ட விகிதத்தில் ஒரு நாளைக்கு 3 தடவை கொடுக்கலாம். முட்டை 1 (55 – 60 கிராம்), தண்ணீர் 300லி, விளக்கெண்ணெய் 12 தேக்கரண்டி, பால்500மிலி. கொம்பு (Horn) கன்று பிறந்து பதினைந்து நாட்களுக்குள் கொம்பை சுட்டுவிடுவது நல்லது. காரணம், முதல் இரண்டு, மூன்று வாரங்களில் கொம்பை சுட்டுவிடும் போது அதற்கு வேதனை தெரியாமல் இருக்கும் எனவே மூன்று வாரங்களுக்கு மேற்பட்ட காலங்களில் செய்யும் போது மிகுந்த வேதனையை அனுபவிக்கும். பொதுவாக நிறைய மாடு வைத்திருப்பவர்கள், மாடுகளுக்கு இடையே சண்டை வந்து, கொம்பை உடைத்துக் கொள்வதை தவிர்க்கவே கொம்பை சுடும் பழக்கத்தை கொண்டு வந்தார்கள். ஒன்றிண்டு மாடுகளை வைத்திருப்பவர்கள் கொம்பை சுடுவது அவசியமில்லை என்று கூறினார். கழிச்சல் அதிக சீம்பால் குடிப்பதால் பிறந்த கன்றுகளில் கழிச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனைத் தவர்க்க, பிறந்த கன்றுகள், வேண்டும் அளவிற்கு சீம்பால் குடிக்க அனுமதித்தல் அவசியம். மேலும், இளங்கன்றுகள் தரையில் உள்ள மண் போன்றவற்றை உண்ண அனுமதித்தல் கூடாது. இது போன்ற காரணங்களால் கன்றுகளுக்குக் கழிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது என்றார். பகிரவும்: Share on facebook Facebook Share on whatsapp WhatsApp Share on email Email Share on twitter Twitter பசுமை விவசாயம் என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்
'''விக்கிப்பல்கலைக்கழகம்''' (''Wikiversity'') என்பது கற்கும் கூட்டத்தினருக்கும் அவர்கள் கற்பதற்குத் தேவையான குறிப்புகளுக்கும் உதவி வழங்கும் [[விக்கிமீடியா]]த் திட்டமாகும்.
அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.
நவம்பர் 4 ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகிப்பதற்காக கடைகள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என்று உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகள் : தீபாவளி பண்டிகை நவம்பர் மாத தொடக்கத்திலேயே வருவதால் ரேஷன் பொருட்களும் பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். என்று முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். உடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க!! ரேஷன் கடை ஊழியர்கள் சரியான எடையில் பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும். பொது மக்களை கடை ஊழியர்கள் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதில் ஏதும் புகார்கள் வந்தால் கடை ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருட்களை பெற்று செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகிப்பதற்கான நேரத்தில் இன்று முதல் மாற்றம். தமிழகத்தில் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோக நேரத்தில் மாற்றம் கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நேரம் இன்று முதல் செயல்பாட்டிற்கு வருகிறது. அதன்படி ரேஷன் கடைகள் இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். உடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க!! இது உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளதாவது, தீபாவளி பண்டிகை நவம்பர் மாத தொடக்கத்திலேயே வருவதால் ரேஷன் பொருட்களும் பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். அதற்கிணங்க ரேஷன் கடைகள் நவம்பர் 1 முதல் 3 ஆம் தேதி வரை காலை 7 மணி முதல் இரவு 7 மணி செய்லபடும். மேலும் நாள் முழுவதும் ரேஷன் கடைகள் இயங்குவதால் ரேஷன் அட்டைதாரர்கள் தடையின்றி பொருட்களை பெறலாம் என குறிப்பிட்டுள்ளார்.
தேவதானப்பட்டி : கெங்குவார்பட்டியில் நெல்கொள்முதல் நிலையம் அமைக்காததால் அறுவடையான நெல்லை ரோட்டோரம் குவித்து உள்ளனர்.தேவதானப்பட்டி,கெங்குவார்பட்டியில் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் செய்த நெல் சாகுபடி சில வாரங்களாக அறுவடையாகிறது. ஒவ்வொரு ஆண்டும் நெல் அறுவடையின் போதுஅரசு தற்காலிக கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்தனர். இந்த ஆண்டு கொள்முதல் நிலையம் முழு செய்தியை படிக்க Login செய்யவும் தேவதானப்பட்டி : கெங்குவார்பட்டியில் நெல்கொள்முதல் நிலையம் அமைக்காததால் அறுவடையான நெல்லை ரோட்டோரம் குவித்து உள்ளனர். தேவதானப்பட்டி,கெங்குவார்பட்டியில் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் செய்த நெல் சாகுபடி சில வாரங்களாக அறுவடையாகிறது. ஒவ்வொரு ஆண்டும் நெல் அறுவடையின் போதுஅரசு தற்காலிக கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்தனர். இந்த ஆண்டு கொள்முதல் நிலையம் அமைக்காததால் கெங்குவார்பட்டி ரோட்டோரங்களில் நெல்லை கொட்டி வைத்துள்ளனர். அவ்வப்போது பெய்யும் மழையால் நெல் நனைத்து வீணாகிறது.பாதுகாக்க தார்பாய் இன்றி சிரமப்படுகின்றனர். இதனால் தற்காலிகமாக அறுவடை நிறுத்தியுள்ளனர்.விவசாயி காத்தமுத்து கூறுகையில்: கொள்முதல் நிலையம் துவக்க அதிகாரிகளிடம் பல முறை கோரியும் தாமதம் செய்கின்றனர். கெங்குவார்பட்டியில் விரைவில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். தேவதானப்பட்டி : கெங்குவார்பட்டியில் நெல்கொள்முதல் நிலையம் அமைக்காததால் அறுவடையான நெல்லை ரோட்டோரம் குவித்து உள்ளனர்.தேவதானப்பட்டி,கெங்குவார்பட்டியில் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...! சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் For technical contact : webmaster@dinamalar.in இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள். Allow ads on Dinamalar Back AdBlock Adblock Plus uBlock Origin Other 1. Click the AdBlock icon in the browser extension area on the upper right corner. 2. Select Don't run on pages on this site. 3. In the "Don’t run AdBlock on..." dialog box, select Exclude. The AdBlock icon changes to a “thumbs up” image. 1.Click the Adblock Plus icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button so that it slides left. 3. Click the Refresh button. 1. Click the uBlock Origin icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button. It turns gray, indicating that ads on that site are no longer being blocked. 3. Click the “Refresh” button 1. Click the icon of the ad blocker extension installed on your browser. You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed. 2. Follow the instructions for disabling the ad blocker on the site you’re viewing. You may have to select a menu option or click a button. 3. Refresh the page, either by following prompts or clicking your browser’s “Refresh” or “Reload” button. Refresh page உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join Telegram Channel for FREE Advertisement துாய்மை பணியாளர் பற்றாக்குறை குப்பை கையாள முடியாமல் திணறல் முந்தய பாதியில் நிற்கும் ரோடால் அவதி அடுத்து » பிரச்னைகள் முதல் பக்கம் » தினமலர் முதல் பக்கம் Close X சினிமா → கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் → கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு → கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் → தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் → தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
சென்னை: 'கோவில் தங்க நகைகளை உருக்கி, வங்கிகளில் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் வட்டியை செலவு செய்வோம் என்பது சட்ட விரோதமானது' என்று தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: பக்தர்கள் கோவிலுக்கு செலுத்தும் தங்க காணிக்கைகளை உருக்கி, அதை வங்கிகளில் தங்க பத்திரங்களாக மாற்றி, அதிலிருந்து கிடைக்கும் வட்டியை, மற்ற கோவில்கள் முழு செய்தியை படிக்க Login செய்யவும் சென்னை: 'கோவில் தங்க நகைகளை உருக்கி, வங்கிகளில் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் வட்டியை செலவு செய்வோம் என்பது சட்ட விரோதமானது' என்று தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: பக்தர்கள் கோவிலுக்கு செலுத்தும் தங்க காணிக்கைகளை உருக்கி, அதை வங்கிகளில் தங்க பத்திரங்களாக மாற்றி, அதிலிருந்து கிடைக்கும் வட்டியை, மற்ற கோவில்கள் பராமரிப்புக்கு செலவு செய்வோம் என்பது சட்ட விரோதமானது. பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேற செலுத்திய காணிக்கைகள், குறிப்பிட்ட கோவில் களின் முன்னேற்றத்திற்கு, நிர்வாகத்திற்கு பயன்பெற வேண்டும். அந்த வளத்தை பயன்படுத்தி, மற்ற கோவில்களுக்கு செலவு செய்வதற்கு, அரசுக்கு, அறநிலையத் துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை.கோவில்களுக்குஅறநிலையத்துறை தான் சொந்தக்காரர் என்பது போல, தி.மு.க.,அரசு செயல்படுவது, நம்பிக்கை துரோகம். உண்மையிலேயே அரசுக்கு, கோவில்கள் முன்னேற்றத்தில் அக்கறை இருந்தால், அரசின் வருமானத்தை பெருக்கி, அதை வைத்து செலவிட வேண்டும். திருப்பதி கோவிலில், இதுபோன்று செய்வதாக அமைச்சர் சேகர்பாபு சொல்லியிருப்பது, உண்மைக்கு புறம்பானது. இந்த அறமற்ற செயலை, தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். சென்னை: 'கோவில் தங்க நகைகளை உருக்கி, வங்கிகளில் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் வட்டியை செலவு செய்வோம் என்பது சட்ட விரோதமானது' என்று தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...! சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் For technical contact : webmaster@dinamalar.in இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள். Allow ads on Dinamalar Back AdBlock Adblock Plus uBlock Origin Other 1. Click the AdBlock icon in the browser extension area on the upper right corner. 2. Select Don't run on pages on this site. 3. In the "Don’t run AdBlock on..." dialog box, select Exclude. The AdBlock icon changes to a “thumbs up” image. 1.Click the Adblock Plus icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button so that it slides left. 3. Click the Refresh button. 1. Click the uBlock Origin icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button. It turns gray, indicating that ads on that site are no longer being blocked. 3. Click the “Refresh” button 1. Click the icon of the ad blocker extension installed on your browser. You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed. 2. Follow the instructions for disabling the ad blocker on the site you’re viewing. You may have to select a menu option or click a button. 3. Refresh the page, either by following prompts or clicking your browser’s “Refresh” or “Reload” button. Refresh page உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join Telegram Channel for FREE Advertisement Related Tags BJP Temple Jewels DMK 'வாட்ஸ் ஆப்' செயலியில் ரூபாய் சின்னம் சேர்ப்பு(1) முந்தய அ.தி.மு.க., தேர்தல் ஆலோசனை: இன்று முதல் பன்னீர் பங்கேற்பு(4) அடுத்து » அரசியல் முதல் பக்கம் » தினமலர் முதல் பக்கம் Close X சினிமா → கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் → கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு → கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் → தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் → தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
ராமேஸ்வரம் : 5 நாள் தடைக்கு பின் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.புரட்டாசி அமாவாசை, வழக்கமான தமிழக அரசின் 3 நாள் தடை என ராமேஸ்வரம் கோயிலில் கடந்த வாரத்தில் இரு நாட்கள் தவிர (திங்கள், வியாழன்) 5 நாளும் பக்தர்கள் தரிசிக்க தடை விதித்தனர்.நேற்று கோயில் திறந்ததும் தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்து, அக்னி முழு செய்தியை படிக்க Login செய்யவும் ராமேஸ்வரம் : 5 நாள் தடைக்கு பின் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். புரட்டாசி அமாவாசை, வழக்கமான தமிழக அரசின் 3 நாள் தடை என ராமேஸ்வரம் கோயிலில் கடந்த வாரத்தில் இரு நாட்கள் தவிர (திங்கள், வியாழன்) 5 நாளும் பக்தர்கள் தரிசிக்க தடை விதித்தனர்.நேற்று கோயில் திறந்ததும் தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்து, அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர். பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். ராமேஸ்வரம் : 5 நாள் தடைக்கு பின் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.புரட்டாசி அமாவாசை, வழக்கமான தமிழக அரசின் 3 நாள் தடை என ராமேஸ்வரம் கோயிலில் கடந்த ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...! சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் For technical contact : webmaster@dinamalar.in இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள். Allow ads on Dinamalar Back AdBlock Adblock Plus uBlock Origin Other 1. Click the AdBlock icon in the browser extension area on the upper right corner. 2. Select Don't run on pages on this site. 3. In the "Don’t run AdBlock on..." dialog box, select Exclude. The AdBlock icon changes to a “thumbs up” image. 1.Click the Adblock Plus icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button so that it slides left. 3. Click the Refresh button. 1. Click the uBlock Origin icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button. It turns gray, indicating that ads on that site are no longer being blocked. 3. Click the “Refresh” button 1. Click the icon of the ad blocker extension installed on your browser. You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed. 2. Follow the instructions for disabling the ad blocker on the site you’re viewing. You may have to select a menu option or click a button. 3. Refresh the page, either by following prompts or clicking your browser’s “Refresh” or “Reload” button. Refresh page உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join Telegram Channel for FREE Advertisement குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வந்த 262 பேர் மனுக்கள் முந்தய பரமக்குடியில் அரிய வகை மரங்களின் சரணாலயம்; மழை வளம் பெருக வாய்ப்பு அடுத்து » பொது முதல் பக்கம் » தினமலர் முதல் பக்கம் Close X சினிமா → கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் → கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு → கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் → தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் → தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
ஆனால் பலருக்கு இது தெரியாத காரணத்தினால் இனிப்பான சிவப்பு பகுதியை சுவைத்தவுடன் மிச்சத்தோலை அப்படியே எரிந்து விடுகின்றனர். இனியாவது அதன் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு வெள்ளைப் பகுதியையும் மறக்காமல் சாப்பிடுங்கள். நாவுக்கு வேண்டுமானால் அப்பகுதி சுவையில்லாமல் இருக்கலாம் ஆனால் இல்லறத்தின் சுவையை கூட்டுவதில் அது வயாக்ராவுக்கு சவால் விடும் பகுதி என்பதை மறந்து விட வேண்டாம். நம்மூரில் சர்வசாதாரணமாக கிடைக்கும் தர்பூசணிக்கு, ஆண்மையை அதிகரிப்பதில் வயாகராவை விஞ்சும் சக்தி உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. முதலிரவன்றே பிரிந்த புதுமணத் தம்பதிகள் என்று அடிக்கடி செய்திகள் வெளியாவதை பார்த்திருக்கிறோம். இதுபோல் திருமணமான புதிதிலேயே பல்வேறு தம்பதிகள் பிரிந்து செல் கிறார்கள். இதற்கு பின்னணியில் ஆண்மை குறைபாடே முக்கிய காரணமாக இருக்கிறது. குடும்ப நீதிமன்றங்களில் வரும் விவாகரத்து வழக்குகளில் இந்த பிரச்சினைக்காகத்தான் அதிக பெண்கள் வருகிறார்களாம். இப்போதெல்லாம் இளம் வயது ஆண்கள் கூட ஆண்மை குறைவால் பாதிக்கப்படுகிறார்கள். பிறப்பிலேயே ஆண்மையின்மை ஏற்பட்டு கவனிக்காமல் இருந்திருந்தால் அதனை மாற்ற முடியாது. ஆனால், மனம் மற்றும் உடல்ரீதியாக ஏற்படும் பிரச்சினைகளால் சிலர் தற்காலிகமாக ஆண்மைத்தன்மையை இழக்கிறார்கள். இதில், உடல்ரீதியாக பிரச்சினை ஏற்படுவோருக்கும், மற்ற ஆண்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தியை அமெரிக்க டாக்டர் கள் கண்டுபிடித்துள்ளார்கள். சர்வசாதாரணமாக கிடைக்கும் தர்பூசணி பழத்துக்கு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு என்பதை அமெரிக்காவில் உள்ள இந் \திய டாக்டர் தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரியவந் துள்ளது. ஆண்மையை தூண்டும் சக்தியை பொறுத்தவரை, மேலை நாட்டு வயாகரா மாத்திரைக்கு நிகராக இன்னும் ஏன் அதனையே விஞ்சக் கூடிய தன்மை தர்பூசணி பழத்துக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள்ளது. அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தக வலை இன்ப அதிர்ச்சியாக அவர்கள் வெளி யிட்டுள்ளார்கள். தர்பூசணிக்கு ஆசையை’ அதி கரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள். மனித உடலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத் தும் சத்து பொருள்கள் சில காய்கறிகளிலும், பழங்களிலும் உள்ளன. தர்பூசணியில் அது போல் உள்ள சிட்ரூலின்’ என்ற சத்து பொருள், வயாகராவை போல் இரத்த நாளங்களை விரிவடைய செய்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம். தர்பூசணியை சாப்பிட்ட பிறகு, ஏற்படும் இரசாயன மாற்றம் காரணமாகசிட்ரூலின்’, அர்ஜினைனாக’ எனும் இரசாயனப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்துக்கும், இரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது. வெள்ளை பகுதியில்தான் இந்த சிட்ரூலின் அர்ஜினைன் இரசாயன மாற்றமானது, சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை பயக்குமாம். இதில், முக்கியமானது என்னவென்றால், தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளது. ஆனால் பலருக்கு இது தெரியாத காரணத்தினால் இனிப்பான சிவப்பு பகுதியை சுவைத்தவுடன் அப்படியே தோலை எரிந்து விடுகின்றனர். இனியாவது அதன் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு வெள்ளைப்பகுதியையும் மறக்காமல் சாப்பிடுங்கள். நாவுக்கு வேண்டுமானால் அப்பகுதி சுவையில்லாமல் இருக்கலாம் ஆனால் இல்லறத்தின் சுவையை கூட்டுவதில் அது வயாக்ராவுக்கு சவால் விடும் பகுதி என்பதை மறந்து விட வேண்டாம். இது தெரிந்தால் நம்மவர்கள், வாழைப் பழத்தை விட்டு தோலை மட்டும் சாப்பிடு வதைப்போல், தர்பூசணியின் சிவப்பு பகுதியை விட்டுவிட்டு வெறும் வெள்ளை பகுதியை மட்டுமே சாப்பிடுவார்கள் என்பது நிச்சயம். Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Math Captcha 6 + 3 = Categories Categories Select Category English (319) Convert to Islam (13) Education (14) Essays (85) Family (11) Hadith (8) Haj (5) History (20) India News (20) Muslim World (34) News (9) Politics (4) QnA (19) Quran (3) Ramadhan (15) Science (7) Society (16) World News (36) Multimedia (6) Audio (2) Video (4) Uncategorized (11) இஸ்லாம் (3,748) ஆய்வுக்கட்டுரைகள் (200) இமாம் கஸ்ஸாலி (ரஹ்) (9) இம்மை மறுமை (110) இஸ்லாத்தை தழுவியோர் (90) கட்டுரைகள் (1,703) குர்ஆனும் விஞ்ஞானமும் (29) குர்ஆன் (190) கேள்வி பதில் (201) சொற்பொழிவுகள் (17) ஜகாத் (44) தொழுகை (150) நூல்கள் (40) நோன்பு (135) வரலாறு (378) ஹஜ் (57) ஹதீஸ் (215) ஹஸீனா அம்மா பக்கங்கள் (19) ‘துஆ’க்கள் (43) ‘ஷிர்க்’ – இணை வைப்பு (118) கட்டுரைகள் (3,082) Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) (154) அப்துர் ரஹ்மான் உமரி (53) அரசியல் (311) உடல் நலம் (446) எச்சரிக்கை! (103) கதைகள் (63) கதையல்ல நிஜம் (108) கல்வி (84) கவிதைகள் (161) குண நலன்கள் (303) சட்டங்கள் (55) சமூக அக்கரை (675) நாட்டு நடப்பு (82) பொது (352) பொருளாதாரம் (27) விஞ்ஞானம் (105) குடும்பம் (1,522) M.A. முஹம்மது அலீ (48) ஆண்-பெண் பாலியல் (83) ஆண்கள் (73) இல்லறம் (484) குழந்தைகள் (183) செய்திகள் (1) பெண்கள் (585) பெற்றோர்-உறவினர் (65) செய்திகள் (328) இந்தியா (142) உலகம் (130) ஒரு வரி (10) கல்வி (32) தமிழ் நாடு (1) முக்கிய நிகழ்வுகள் (13) Archives Archives Select Month December 2021 (1) November 2021 (14) October 2021 (17) September 2021 (8) May 2021 (2) April 2021 (15) March 2021 (17) February 2021 (17) January 2021 (17) December 2020 (20) November 2020 (17) October 2020 (18) September 2020 (20) August 2020 (31) July 2020 (30) June 2020 (21) May 2020 (27) April 2020 (22) March 2020 (30) February 2020 (19) January 2020 (22) December 2019 (25) November 2019 (14) October 2019 (15) September 2019 (16) August 2019 (18) July 2019 (16) June 2019 (15) May 2019 (12) April 2019 (12) March 2019 (17) February 2019 (17) January 2019 (27) December 2018 (35) November 2018 (18) October 2018 (22) September 2018 (31) August 2018 (27) July 2018 (16) June 2018 (12) May 2018 (14) April 2018 (22) March 2018 (29) February 2018 (30) January 2018 (35) December 2017 (23) November 2017 (30) October 2017 (33) September 2017 (28) August 2017 (30) July 2017 (30) June 2017 (19) May 2017 (34) April 2017 (31) March 2017 (35) February 2017 (36) January 2017 (27) December 2016 (59) November 2016 (48) October 2016 (44) September 2016 (41) August 2016 (27) July 2016 (33) June 2016 (42) May 2016 (52) April 2016 (53) March 2016 (37) February 2016 (42) January 2016 (64) December 2015 (47) November 2015 (40) October 2015 (36) September 2015 (65) August 2015 (56) July 2015 (35) June 2015 (42) May 2015 (58) April 2015 (79) March 2015 (40) February 2015 (29) January 2015 (54) December 2014 (79) November 2014 (66) October 2014 (78) September 2014 (67) August 2014 (62) July 2014 (84) June 2014 (82) May 2014 (100) April 2014 (84) March 2014 (92) February 2014 (80) January 2014 (85) December 2013 (69) November 2013 (91) October 2013 (89) September 2013 (68) August 2013 (76) July 2013 (101) June 2013 (84) May 2013 (94) April 2013 (13) March 2013 (84) February 2013 (64) January 2013 (85) December 2012 (93) November 2012 (106) October 2012 (82) September 2012 (92) June 2012 (50) May 2012 (103) April 2012 (145) March 2012 (103) February 2012 (168) January 2012 (44) December 2011 (125) November 2011 (99) October 2011 (112) September 2011 (90) August 2011 (130) July 2011 (150) June 2011 (86) May 2011 (138) April 2011 (30) March 2011 (148) February 2011 (97) January 2011 (61) December 2010 (103) November 2010 (87) October 2010 (129) September 2010 (145) August 2010 (114) July 2010 (70) June 2010 (130) May 2010 (131) April 2010 (116) March 2010 (134) February 2010 (99) January 2010 (154) December 2009 (136) November 2009 (106) October 2009 (61) September 2009 (66) August 2009 (61) July 2009 (55) June 2009 (53) May 2009 (81) April 2009 (43) March 2009 (70) February 2009 (43) January 2009 (64) December 2008 (29) November 2008 (35) October 2008 (31) September 2008 (63) August 2008 (114)
© 2021 தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | Recommended browsers: Google Chrome(Version 47 +), Firefox(Version 30 +) | Screen Resolution : 1920 X 1080 | Last Updated On May 3, 2021 @ 7:31 AM
Home / 1991 / ஈழப்படுகொலைகள் / கிளிநொச்சி மாவட்டம் / மாசி மாதம் / வட்டக்கச்சி வயல்வெளியில் புதைக்கப்பட்ட உறவுகள் வட்டக்கச்சி வயல்வெளியில் புதைக்கப்பட்ட உறவுகள் Unknown Wednesday, February 29, 2012 1991 , ஈழப்படுகொலைகள் , கிளிநொச்சி மாவட்டம் , மாசி மாதம் Edit சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவ முன்னெடுப்புக்கள் உக்கிரமடையத் தொடங்கிய பின்னர், குறிப்பாக 1980களின் பிற்பகுதியில் இருந்து, எந்தநேரத்திலும் எங்கும் குண்டு விழலாம், ஒரு உயிர் சாதாரணமாகப் பலிகொள்ளப்படலாம் என்ற நிலைதான் தமிழர் தாயகத்தில் நிலவியது. உறக்கத்தில் கூட உயிர் பறிக்கப்படலாம். உணவு உண்ணும்போது அடுத்த கவளம் தொண்டைக்குழியில் இறங்கும் வரை உயிர் இருக்கும் என்ற உத்தரவாதம் இல்லாத ஒரு வாழ்க்கை. அவ்வாறான காலகட்டத்தில், 28.02.1991 அன்று, வட்டக்கச்சியில், சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவுக் கோப்பையில், தசைத்துண்டங்களாகச் சிதறிவிழுந்த அவல சம்பவத்தை நிகழ்த்தியது சிறிலங்காவின் விமானப்படை. கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள நான்கு கிராமப்பிரிவுகளை உள்ளடக்கியது வட்டக்கச்சி. வருடம் முழுமைக்கும் வற்றாத நீர்வளமும் பசுமையும் செழுமையும் உள்ள கிராமம். விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டது. இரணைமடுக் குளத்தின் நீர்ப்பாசனத்தில் இரண்டுபோகங்கள் நெற்செய்கை மேற்கொள்ளப்படுவதால், வயல்வெளிகள் எப்போதும் பசுமையாகவே இருக்கும். தென்னந்தோப்புக்கள், மா , பலா, வாழை என பழத்தோட்டங்கள், வீதிகளிலும் வெளிகளிலும் சுற்றி வரும் கால்நடைகள், சல சலத்து ஒடும் நீரோடைகள் என வட்டக்கச்சியின் வனப்பு கொட்டிக்கிடக்கும். இப்பிரதேசத்தில் “அரச நெற்பண்ணை” என்னும் பெயரில் அரசுக்குச் சொந்தமான நெல்வயல்கள் உள்ளன. இங்கு வேலை செய்பவர்கள், தங்கியிருந்து வேலை செய்வதற்காக வட்டக்கச்சி மூன்றாம் வாய்க்காற் பகுதியில் அரச நெற்பண்ணை விடுதிகள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு ஐந்து குடும்பத்தை சேர்ந்தவர்கள் குடும்பமாகத் தங்கியிருந்து வயல்வேலை செய்து வந்தனர். 1991ஆம் ஆண்டு மாசி மாதம் இருபத்தெட்டாம் திகதி காலை 7.00 மணியளவில் வேலைக்குச் செல்வதற்காக விவசாயிகள் விடுதிகளில் காலை உணவு அருந்திக்கொண்டிருந்த வேளையில், சிறிலங்கா விமானப்படையின் இரண்டு “பொம்பர்” விமானங்கள் வட்டக்கச்சிப் பிரதேசத்தை மையப்படுத்தி வான்பரப்பில் வட்டமிட்டன. விமானத்தின் இரைச்சல்கேட்டு, குழிகளிலும் குன்றுகளிலும் ஓடி ஒழிவதற்கிடையில் மூன்று குண்டுகளை வீசிவிட்டுச் சென்றுவிட்டன. இதில் ஒரு குண்டு விடுதிக்குள் விழுந்து வெடிக்க மற்றைய இரண்டும் வயல்வெளிகளில் வீழ்ந்து வெடித்தன. இதில் ஒன்பது பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மூன்று பேர் காயமடைந்தனர். உயிரிழந்த ஒன்பது பேரில் ஆறு பேரின் உடல்கள் சிதறுண்டு உருக்குலைந்துபோக ஏனைய மூன்று பேரின் உடல்களையும் காயப்பட்ட மூவரையும் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றார்கள். இறந்தபோனவர்களின் உடல்களும், குண்டுவீச்சில் கொல்லப்பட்ட ஆடு, மாடு, கோழிகளும் ஒன்றாக ஒரேகுழியில் போட்டு மூடப்பட்டன. இந்தச் சம்பவத்தை அடுத்து, தமது உறவுகளையும் உடமைகளையும் இழந்த நிலையில், சிதைந்த போயிருந்த அந்த விடுதிகளில் வாழ்வதற்கு அச்சமடைந்து எஞ்சியிருந்த குடும்பங்கள் விடுதிகளை விட்டு வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றன. ”வியர்வை சிந்தி நாங்கள் உழைத்த நெல்வயல்களில் எங்கள் உறவுகள் சிந்திய குருதி கலந்திருக்கின்றது” என்று இன்று வரை அச்சம்பவத்தை மறக்கமுடியாமல் கண்ணீருடன் அவர்கள் கூறியது கனமாக வலித்தது. ஒரே நாளில் , சில நொடிப்பொழுதுகளில் ஒன்பது உறவுகளை ஒன்றாகப் புதைத்துவிட்டு, உறவாடி வாழ்ந்த மண்ணைவிட்டு வெளியேறிய அவர்களின் வேதனைகளை ஆறறுப்படுத்துவதற்கு வழி தெரியவில்லை, வார்த்தைகள் இருக்கவில்லை. இச்சம்பவத்தின் போது சம்பவ இடத்திலிருந்த இராமையா பரமசுந்தரம் அவர்கள் கூறும்போது,“நான் நெற்பண்ணையில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவேளை இரண்டு பொம்மர் விமானங்கள் வந்து குண்டு போட்டன. இந்தச் சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே ஒன்பது பேர் கொல்லப்பட்டார்கள். மூன்று பேர் காயமடைந்தார்கள். காயமடைந்தவர்களை உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு போய் காப்பாற்றிவிட்டோம். இறந்தவர்கள் அனைவரையும் ஒரே குழியில் போட்டுப் புதைத்தோம். இச்சம்பவத்தில் பண்ணையிலிருந்த, கிட்டத்தட்ட நாற்பது ஆடுகள், இருபது கோழிகளும் இறந்தன. அவற்றையும் மனித உடல்களுடன் ஒரே குழியில் போட்டுப் புதைக்க வேண்டிய சூழல் இருந்தது. ஏனென்றால் திரும்பவும் புக்காரா வந்து குண்டுபோடுமோ என்ற பயம் இருந்துகொண்டே இருந்தது. சம்பவம் நடந்த இடத்திற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வந்து பார்வையிட்டுச் சென்றது. மக்களை அழிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் இந்த இடத்தில் குண்டுபோட்டதாக நான் கருதுகிறேன். ஏனென்றால் காலையில் தொழிலுக்குப் போகமுன் வந்து குண்டு போட்டால் எல்லோரும் இறப்பார்கள் என்ற திட்டம்தான். இன்று நேற்றல்ல 1990ம் ஆண்டிலிருந்தே சிறிலங்கா இராணுவம் தமிழ் மக்களை கொலை செய்து கொண்டுதான் இருக்கிறது.” என்று தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினார். குண்டு வீச்சில் பலிகொள்ளப்பட்டவர்கள் இராசேந்திரம் சித்திரம்மா ஆறுமுகம் இராசேந்திரன் நாகமுத்து ஆறுமுகம் ஆறுமுகம் கமலாதேவி முனியாண்டி செல்வம் ஆறுமுகம் விஜயலட்சுமி முருகையா சுமதி சின்னத்தம்பி உமாதேவி முருகையா சித்திரா குறிப்பு :- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை. Share on Facebook Share on Twitter Share on Google Plus About Unknown This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel. RELATED POSTS Blogger Comment Facebook Comment 0 கருத்துரைகள் : Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments ( Atom ) Popular Post Video Category முக்கியசெய்திகள் விடுதலைத் தீப்பொறி (காணொளிகள்) தமிழீழ விடுதலைக்கான அரசியல் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக பண்பு மாற்றம் பெற்றபோது,அதை தீவிரமாக முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் ... திலீபன் அண்ணையைப்பற்றி......! ஊரெழு யாழ் நகரிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள செழிப்புமிக்க கிராமம். இக்கிராமத்தை பலாலி வீதி ஊடறுத்து கிழக்கு,மேற்கு... தலைவரின் உபாயம் 2001 ம் ஆண்டு முகமாலைப்பகுதியில் சிங்களத்தின் பாரிய படைநகர்வை எதிர்கொள்ள படையணிகள் தயாராகிக் கொண்டிருந்தன. விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை... மாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......! கார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச... வலிகளை மட்டும் சுமந்து திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர்ப்பிரதேசம் விடுதலைப்போராட்டத்திற்கு மிக முக்கிய பங்காற்றிய பிரதேசங்களில் ஒன்றாகும். மேஜர் கணேஸ், லெப் கே... போராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும் விழுந்த துரையப்பாவும் – பகுதி 5 துரையப்பாவின் வரவை எதிர்பார்த்து காத்திருந்த இவ்விடைக்காலத்தில் யாழ்பஸ்நிலையத்தில் கிருபாகரன் வேண்டிவந்த மேலாடைஅட்டையில் தன்னிடம் இருந்... தேசியத்தலைவர் பற்றி.........! தலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமை, ஆளுமை, உறுதி, கொள்கை வழுவாத்தன்மை பற்றி எவருக்கும் தெரியாமலிருக்காது. அதற்கு அப்பால் அவர் சிறந்த பண்... சிறிலங்காவின் பேரினவாத தற்காப்பு யுக்திகள் அண்மைய காலங்களில் அதிபர் மகிந்த ராசபக்சவின் வெளியுறவு கொள்கை மீதான அதிருப்தியை வெளிப்படுத்துவது போல் கொழும்பிலிருந்து வெளிவரும் கட்டுரை... யாழ்-குருநகர் புனித யாகப்ப்பர் ஆலயம் மீதான சுப்ப்பசொனிக் விமானக் குண்டு; வீச்சின் 16ம் ஆண்டு நினைவு - 13.11.1993 இன்று யாழ் குருநகர் புனித யாகப்பர் தேவாலயம் மீதான தாக்குதலின் 16ம் ஆண்டுகள் நினைவுதினம் இன்றாகும். தமிழ் மக்களை அழிக்கும் நோக்குடன் பொதுமக்க... பிரிகேடியர் பால்ராஜ் (காணொளி) காணொளி அதிகம் வாசிக்கபட்டவை 'விடுதலைப்படைப்பாளி' கப்டன் மலரவன் போர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய... சிறுநீர் கழிக்கச் சென்ற பெண்களின் உடலங்கள் புதர்களுக்குள் கிடந்தது- சாந்தி கூறும் முள்ளிவாய்க்கால் அவலம் என்ன? யுத்தத்தின் காரணமாக பல தடவைகள் இடம்பெயர்ந்த பிள்ளை ஒன்றுக்கு தாயான 42 வயதுடைய சாந்தி, தனது கணவனை யுத்தத்தில் இழந்து வாழ்கிறார். இ... இந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள் அமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ... மாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......! கார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச... ஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்! ஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என... தேசியத்தலைவரைப்பற்றி ...........!-05 சண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி... ஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே! ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற... தேசியத்தலைவரைப்பற்றி .......! - 04 2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்... கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்! கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிக... தேசியத்தலைவர் பற்றி ......! - 03 தலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தைப்பற்றிய பல விடயங்களைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதேவேளை சிறு சிறு விடயங்களைக் கூட தலைவர் எ... வலைப்பூக்கள் லியோ - 1985 ஆம் ஆண்டு வைகாசி நடுப்பகுதி , குமுதினிப்படுகொலைக்கு அடுத்தநாள் நான் முதன் முதலாய் இரத்ததானம் வழங்க யாழ் மருத்துவமனைக்கு போயிருந்தேன். எதிர்பாராதவித... 5 weeks ago தீபம் காணமல் போன பூனைக்குட்டி - குழந்தைகள்தான் உன்னை கடத்தியிருக்க வேண்டும் அவர்கள் மீண்டும் துவக்குகளை நீட்டத் தொடங்கியுள்ளனர் பீரங்கிகளை திருப்பி விட்டனர் சோதனைச்சாவடிகளை திறந்து கொண்... 2 years ago முத்து நிலவு (கவிதைகள்) - சு.ராஜசெல்வி- - நிலவு (கவிதைகள்) - சு.ராஜசெல்வி- (1) வண்ண வண்ண பூச்சி வண்ணாத்திப்பூச்சி உண்ண உண்ண பறந்து பூ மீது மென்மையாக இருந்து எண...
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், மேல்வடுகன்குட்டை கிராமம் அருள்மிகு சக்திவிநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம் 20-11-2016 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. தொடர்புக்கு Kumbabishekam.com (India) MJF Lion J. Janakiraman Chrompet, Chennai, Tamilnadu,600044 044-22730535 jjramanairforce@gmail.com சமீபத்திய பதிவுகள் DEVI PARASAKTHI TEMPLE USA- DONATION FOR TEMPLE CONSTRUCTION July 10, 2020 ADHIYUR AMMAPALAYAM ARULMIGU VINAYAGAR, MAARIAMMAN, MAAKALI AMMAN MAHAKUMBABISHEKAM INVITATION November 21, 2019 DUBAI TRIP – PART 4 October 7, 2019 DUBAI TRIP – PART 3 October 7, 2019 DUBAI TRIP – PART 2 October 7, 2019 DUBAI TRIP – PART 1 October 7, 2019 ARULMIGU DRAUPATHI AMMAN TEMPLE KUMBABISHEGAM September 11, 2019 SHRI KARPAGA VINAYAGAR SHRI SELVA MUTHUKUMARASWAMY SHRI THAIYALNAYAKI SHRI VAITHYANATHA SWAMY KOVIL KUDAMUZHUKU PERU VIZHA July 4, 2019 SHRI MATH PAMBAN SWAMIGAL ARULNERI ARAKKATTALAI GURU POOJAI VIZHA INVITATION June 22, 2019 VISHWAROOPA AYMANGALA PANCHAMUGA SHRI AANJANEYA SWAMY NUTHANA SHRIVARI VENKATACHALAPTHY SWAMI AALAYA KUMBABISHEKAM INVITATION June 22, 2019 கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள் DEVI PARASAKTHI TEMPLE USA- DONATION FOR TEMPLE CONSTRUCTION July 10, 2020 ADHIYUR AMMAPALAYAM ARULMIGU VINAYAGAR, MAARIAMMAN, MAAKALI AMMAN MAHAKUMBABISHEKAM INVITATION November 21, 2019 SHRI KARPAGA VINAYAGAR SHRI SELVA MUTHUKUMARASWAMY SHRI THAIYALNAYAKI SHRI VAITHYANATHA SWAMY KOVIL KUDAMUZHUKU PERU VIZHA July 4, 2019 VISHWAROOPA AYMANGALA PANCHAMUGA SHRI AANJANEYA SWAMY NUTHANA SHRIVARI VENKATACHALAPTHY SWAMI AALAYA KUMBABISHEKAM INVITATION June 22, 2019 ARULMIGU INBAMBIGAI UDANURAI IRULNEEKESWARAR TEMPLE KUMBABISHEKAM June 17, 2019 கும்பாபிஷேகம் புகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம். கும்பாபிஷேகம் நோக்கம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..
புகழ்பெற்ற brand இலிருந்து வாகனங்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் ikman முதன்மையான தேர்வுகளில் ஒன்றாகும். பெரும்பாலான இலங்கையர் அவர்கள் தேடும் brand இனை கண்டறிவதற்கு முந்தைய தெரிவாக ikman.lk ஐ விரும்புகின்றார்கள். இந்த online தளத்தில் பரந்த அளவிலான brands உள்ளது. நீங்கள் தேடும் brand ஐ தொந்தரவுகள் இல்லாமல் கண்டுபிடிப்பது சிரமமற்றமது. விலை, படங்கள், நிபந்தனைகள் மற்றும் பிற அத்தியவசிய விபரங்களை ஆராய்ந்து சரிபார்ப்பதன் மூலம் உங்கள் விருப்பத்தை தெரிவு செய்யலாம். ikman பல்வேறு brand களிலிருந்து வாங்குவதற்கும் வாகனங்களை விற்பதற்குமுள்ள மிகப் பெரிய சந்தைப்படுத்தல் marketplace| இடமாகும். நீங்கள் ஒரு பொருளுக்கு முடிவு காண்பதற்கு முன்பு, விற்பனையாளர்களுடன் ஒப்பந்தத்தைப் பற்றி கலந்துரையாடவும். இலங்கை இல் சிறந்த விலையில் Isuzu உங்களுக்கு ikman இல் தேடுவதற்கு Isuzu கசுதந்திரம் உள்ளது. அவை வெவ்வேறான விலை நிர்நயங்களை கொண்டுள்ளன. மேலும் நீங்கள் அதிக அல்லது குறைந்த விலையைத் தேர்ந்தெடுக்கலாம், இத்தனால் உங்கள் பணத்தொகைக்கு ஏற்றவாறு விளம்பரங்களைப் பெற்றுத்தரும். நீங்கள் வெவ்வேறு இடங்களில் காணலாம் இது உங்கள் வேலையை இலகுபடுத்தும். Transmission, Body Type, Price and Mileage மூலம் Isuzu விளம்பரங்களை பார்த்தவுடன், நீங்கள் விரும்பும் தீர்மானிக்கலாம், brand ஐ தீர்மானித்த பிறகு உங்கள் பணத்தொகைக்கு பொருத்தமானதா என்பதை கவனிக்க வேண்டும். உங்களுக்கு அதிக பணத்தொகை கிடைத்திருந்தால், புதிய வாகனங்களை பரிசீலிக்கலாம். ஆனால் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் குறைந்த பணத்தொகையில் வேலை செய்யக்கூடும். உங்கள் கனவு வாகனத்தை கண்டறிவதற்கு உடல் வகை, பரிமாற்றம், எரிபொருள் வகை மற்றும் செல்லும் தூரம் என்பன பிற காரணிகளாகும்.
பசுவின் சாணம் மற்றும் கோமியத்தைக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும் என்று, மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சௌகான் மாநில மக்களிடம் அறிவுறுத்தி உள்ளார். மத்திய பிரதேசத்தை ஆளும் பாஜக அரசு, பசுக்களை காப்பதற்கான சரணாலயங்கள் மற்றும் தங்குமிடங்களை உருவாக்கி பராமரித்து வருகிறது. இந்த மையங்களில், பசுக்களிடமிருந்து பெறப்படும் சாணம் மற்றும் கோமியம் கொண்டு லாபகரமான தொழில்கள் உருவாக்கப்பட்டு வருவதாக, மாநில முதல்வர் சிவ்ராஜ் சௌகான் கூறினார். மேலும், ”மாநிலத்தின் சுடுகாடுகளில் சாண வறட்டி கொண்டு சடலங்களை எரிப்பதன் மூலம் பெருமளவு மரங்கள் வெட்டப்படுவதை தடுத்துள்ளோம். அந்த வகையில், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் மத்தியில் மென்மேலும் லாபம் பெருக்கும் வகையில், பசுவின் சாணம் மற்றும் கோமியத்திலிருந்து உபயோகமான பொருட்களை உருவாக்குவோம். இவற்றால் நாட்டின் பொருளாதாரத்தையும் பலப்படுத்துவோம்” என்றும் அவர் கூறியுள்ளார். கரோனா பரவல் உச்சத்திலிருந்தபோது, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் பசுவின் சாணத்துக்கு உண்டு என்று குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் வதந்தி பரவியது. இதையடுத்து, அங்கு சாணம் மற்றும் கோமியத்தை உடலில் பூசிக்கொள்ளும் போக்கு அதிகரித்து சர்ச்சையை உருவாக்கியது. விலங்குகளின் கழிவுகளிலிருந்து பரவும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால், மனிதரின் உடல்நலத்துக்கு ஊறு உண்டாகும் என்று மருத்துவர்கள் கண்டித்த பிறகே, அந்தப் போக்கு முடிவுக்கு வந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப் படத்தின் படப்பிடிப்பிற்காக கர்நாடகாவில் உள்ள புலிகள் காப்பகத்திற்கு சென்றார் என்பது தெரிந்ததே இந்த நிலையில் அவருக்கு படப்பிடிப்பின்போது காயம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாகவும் வதந்திகள் பரவின ஆனால் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்து விட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்த போது ’தனக்கு எந்த விதமான காயமும் ஏற்படவில்லை என்றும் சாதாரண முள் தான் குத்தியது என்றும் அசால்டாக பேட்டி எடுத்து விட்டு வீடு திரும்பினார் ரஜினிகாந்த் நடித்த ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் இந்த ஆவணப்படம் விரைவில் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது
சமீபகாலமாக தமிழ் நடிகர்கள் இதர மொழிகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் கூட தனுஷ் இரண்டு நேரடி தெலுங்கு படத்தில்...
ஒவ்வொரு வார ஞாயிற்றுக்கிழமையும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள் நகரப்புற முதல் கிராமப்புற மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கும். அந்தவகையில் சன் டிவியில்... Entertainment | பொழுதுபோக்கு சாமி பட வில்லன் பெருமாள் பிச்சை ஞாபகம் இருக்கா.? நிஜத்தில் தெரியாத சுவாரஸ்யங்கள் By குணாNovember 22, 2021 திரையுலகில் ஹீரோக்களுக்கு கிடைப்பதை போல் வில்லன்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. ஆனால் ஒரு சில வில்லன் கதாபாத்திரங்கள் தங்கள் நடிப்பு மூலம் அந்த... Tamil Cinema News | சினிமா செய்திகள் ஓடாத சாமி 2 படம் செய்த பிரம்மாண்ட சாதனை.. இந்த வடக்கன்ஸ் தொல்லை தாங்க முடியலப்பா! By PraveenJuly 6, 2021 தமிழ் சினிமாவில் ஓடாத படங்கள் அனைத்தும் ஹிந்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வருவதை பார்த்து பலரும் குழப்பத்தில் சுற்றி வருகின்றனர். இத்தனைக்கும்...
இது அல்லாமல், யார் என்ன சொன்னாலும், அவர் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் எடுபடாது. இதை மனதில் படிய வைத்துக்கொள்ளுங்கள். மற்ற மதங்கள் போல் கலப்படம் செய்ய முடியாமல் போனதற்கு மேலே சொன்ன அடிப்படை அளவுகோல்கள் தான் காரணம். உலகம் அழியும் வரை எவராலும் இதை மாற்ற முடியாத அளவிற்கு இருப்பதால் தான் இஸ்லாம் தனித்து நிற்கின்றது. //• அரபு தேசங்களை இஸ்லாமின் கீழ் ஒரே ஆட்சிக்கு அடிகோலிய ஹசரத் முகம்மது அவர்கள், “பசுவின் பால் ஒரு மருந்து; அதன் நெய் அமிர்தம்; அதன் மாமிசம் ஒரு நோய்”// மேலே சொல்லப்பட்ட ஹதீத், " முலய்காஹ் பின்த் உமர்" என்பவரின் மூலமாக அறிவிக்கப்பட்டதாக அல்-பாகவி என்ற புத்தகத்திலும், இப்னு மசூத் அவர்கள் மூலமாக அறிவிக்கப்பட்டதாக (Mustadrak al-Hakim) முஷ்ததர்க் அல்-ஹகீம் என்ற புத்தகத்திலும் இடம்பெற்றத்தாக ஷேய்க் ரியாத் அல்-,முசைமிரி அறிவிக்கின்றார்கள். இது ஒரு இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஹதீத் என்பது பெரும்பான்மையான அறிஞ்சர்களின் கருத்து. மேலும் இன்னும் பல ஆதாரபூர்வமான ஹதீத்கள் இதை மறுக்கும் வகையிலும் அமைந்துள்ளது. எதை உண்ணக்கூடாது? நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மை யானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அவனுக்கு நன்றி செலுத்தி வாருங்கள். (தானாகச்) செத்த பிராணி, உதிரம், பன்றியிறைச்சி, அல்லாஹ் அல்லாதவருக்காக அறுக்கப்பட்ட பிராணி ஆகியவற்றையே உங்களுக்கு அல்லாஹ் தடைசெய்துள்ளான். ஆயினும், எவரேனும் விருப்பமில்லாமலும் வரம்பு மீறாமலும் (உண்ண) நிர்ப்பந்திக்கப் பட்டால், அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை. (2:172, 173) "... ஆனால், உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமை யினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (விலக்கப் பட்டவற்றைப் புசித்து)விட்டால் (அது குற்றமாகாது)" (5:3). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விலங்குகளில் கோரைப்பற்கள் உள்ள ஒவ்வொன்றையும், பறவைகளில் கோரை நகங்கள் உள்ள ஒவ்வொன்றையும் (உண்ணக் கூடாதெனத்) தடை செய்தார்கள். (புஹாரி 3914). நபி (ஸல்) அவர்கள் மாட்டை குர்பானி கொடுத்தார்கள்: "...இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , தம் துணைவியருக்காக மாடுகளை அறுத்துக் குர்பானி கொடுத்தார்கள்' ...." (புஹாரி 5559). இதிலிருந்து இஸ்லாத்தில் மாட்டிறைச்சியை தடை செய்யப்பட வில்லை என்று தெளிவாக தெரிகிண்றது. பிற உயிரினங்களிடம் கருணை காட்டுதல்:: இஸ்லாம் எந்த நிலையிலும், எந்த ஒரு உயிரினத்தையும் துன்புறுத்தக்கூடாது என்றும், உணவுக்காக கொல்ல நேரும்போது கூட, கடுமையான வழிமுறைகளை வைத்துள்ளது . "'ஒரு நாய் தாகத்தின் காரணமாக ஈர மண்ணை (நக்கி) சாப்பிடுவதை ஒருவர் பார்த்தார். உடனே அவர், தான் அணிந்திருந்த காலுறையை எடுத்து அதில் தண்ணீர் மொண்டு அந்நாய் தாகம் தீரும் வரை கொடுத்தார். எனவே அல்லாஹ் அம்மனிதருக்கு கருணை காட்டி அவரைச் சுவர்க்கத்தில் புகத்தினான்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்று என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புஹாரி 174) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஒரு பூனையை, அது சாகும்வரை சிறைவைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்துவைத்தபோது, அவள் அதற்கு உண்பதற்கும் கொடுக்கவில்லை; பருகுவதற்கும் கொடுக்கவில்லை;பூமியின் புழு பூச்சிகளைத் தின்ன (அதை அவிழ்த்து) விடவுமில்லை. அதனால் அவள் நரகத்தில் நுழைந்தாள். ((புஹாரி 4514) நான் இரண்டு விஷயங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து மனனமிட்டுள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எல்லாவற்றிலும் எளிய முறையை விதியாக்கியுள்ளான். எனவே,கொல்லும்போதும் எளிய முறையில் கொல்லுங்கள். அறுக்கும்போதும் எளிய முறையில் அறுங்கள். உங்களில் ஒருவர் அறுப்பதற்கு முன் கத்தியைத் தீட்டிக்கொள்ளட்டும். அறுக்கப்படும் பிராணியை ஆசுவாசப்படுத்தட்டும். (புஹாரி 3955)
தமிழக ஆலிம்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும். இஸ்லாமியப் பேரறிஞர். நபிமொழி கலை விற்பன்னர். சிறந்த பேராசிரியர்; பேச்சாளர். சமூக அக்கறையாளர் ,,,, எனப் பன்முக வித்தகர். தனிப்பட்ட முறையில் என்மீது பாசமும் பரிவும் கொண்ட மூத்த மகான். அன்னாருக்காகப் பிரார்த்திப்போம்.. اللهم اغفر له وارحمه و ادخله جنة الفردوس الأعلى يا ارحم الراحمين. اللهم اغسله بالماء والثلج و البرد ونق ذنوبه كما ينقى الثوب الأبيض من الدنس. Posted by Khan Baqavi at Saturday, November 13, 2021 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் முன்னாள் தலைவரும் லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் மூத்த பேராசிரியர் பெருந்தகை a.m. அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் சற்று முன் வபாத்தாகி விட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் Posted by Khan Baqavi at Saturday, November 13, 2021 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Thursday, October 28, 2021 பொறியியல் பட்டதாரிகளின் பரிதாப நிலை ~~~~~~~~~~~~~~~~~~~~ பொறியியல் பட்டதாரிகளின் பரிதாப நிலை ~~~~~~~~~~~~~~~~~~~~ தமிழ்நாட்டில் 2016-17இல் கல்லூரிகளில் 1,85,000ஆக இருந்த மொத்த இடங்கள்,நடப்புக் கல்வியாண்டில்1,51,870 இடங்களாகக் குறைந்துள்ளன. அதாவது56,801 இடங்கள் காலியாக உள்ளன.கல்லூரிகளின் எண்ணிக்கையும் 525இலிருந்து 440ஆகக் குறைந்து போனது. இதற்கு அடிப்படைக் காரணம், பொறியியல் படிப்புகளால் வேலைவாய்பிற்கு உத்தரவாதமோ உறுதியோ அளிக்க முடியாததுதான்.ஒன்றிய அரசின் மனிதவளத் துறை வெளியிட்ட 2019 அறிக்கையில், 38.52 லட்சம் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதாகக் குறிப்பிடுகிறது. ஆனால்,ஆஸ்பைரிங் மைன்ட்ஸ் எனும் வேலை வாய்ப்பு கணக்கெடுப்பு நிறுவனம்,2019இல் 80% பொறியாளர்கள் வேலைவாய்ப்பில்லாமல் உள்ளனர் என மதிப்பிட்டுள்ளது. இதனால் கிடைக்கும் எந்த வேலையையும் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு அப்பட்டதாரிகள் ஆளாகியுள்ளனர்.இதனால் கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பும் பாதிக்கப்படும் நிலை உருவாகிவருகிறது. ( இந்து தமிழ்-27.10.2021) Posted by Khan Baqavi at Thursday, October 28, 2021 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Monday, October 25, 2021 ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி- ஒரு சிறந்த முன்னோடி தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாம் எனும் இறைமார்க்கம் வேரூன்றி வளர்ந்திருக்கிறது. இதற்கு வரலாற்றுப் பூர்வமான தரவுகள் உண்டு. இக்காலகட்டத்தில், இங்கே தமிழகத்தில் இஸ்லாமிய மேதைகள், சட்ட அறிஞர்கள், மார்க்கத் தீர்ப்புகள் வழங்கும் முஃப்திகள் எனப் பல்துறை அறிஞர்கள் இருந்துள்ளனர். ஆனால், கடந்த 13 நூற்றாண்டுகளாக அரபி மொழியில் தமிழக முஸ்லிம்கள் திருக்குர்ஆனை ஓத மட்டுமே செய்துள்ளனர். அதன் பொருள், கருத்து, விளக்கம் ஆகியவற்றை ஆலிம்கள் வாயிலாக வாய்மொழியாகவே கேட்டு அறிந்து வந்துள்ளனர். தாய்மொழியாம் தமிழ்மொழியில் திருமறையின் மொழிபெயர்ப்பையோ உரைகளையோ வாசிக்கின்ற பெரும்பேறு கிடைக்காமலேயே இருந்துவந்துள்ளது. ஆ.கா. பாகவி இந்நிலையில், மார்க்க அறிஞர்களை மதிக்கும் ஒரு வணிகர் குடும்பத்தில் 26.11.1876 (ஹிஜ்ரி 1294) ஞாயிற்றுக்கிழமை சேலம் ஆத்தூரில் காதிர் முகைதீன் ஹாஜியார் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். அவருக்கு அப்துல் ஹமீது எனப் பெயர் சூட்டினர். குழந்தைப் பருவத்தை தாண்டி பள்ளியில் சேர்ந்து தமிழ் உள்ளிட்ட பாடங்களைக் கற்றார்.பின்னர் தமது இளமைப் பருவத்தில் கிலாஃபத் இயக்க முன்னோடியாகவும், மதுவிலக்குப் பிரசாரகராகவும், கதர் அணியாத திருமணங்களில் கலந்துகொள்ள மறுத்த காந்தியவாதியாகவும் விளங்கினார். பாகியாத்தின் பாக்கியம் இதற்கிடையில், அண்ணல் அஃலா ஹழ்ரத் ஷம்சுல் உலமா அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் வேலூர் நகரில் கி.பி. 1884 ( ஹிஜ்ரி 1301)ஆம் ஆண்டு அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத் எனும் பெயரில் ஓர் அரபிக் கல்லூரி தொடங்கி நடத்த வந்தார்கள். அங்கு நிஸாமிய்யா பாடத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தது. நிறுவனர் அஃலா ஹழ்ரத் அவர்களுடன் மூத்த ஆசிரியப் பெருமக்கள் பயிற்றறுவித்துவந்தனர். மெளலானாக்களான குலாம் முஹ்யித்தீன், அப்துல் காதிர் பாஷா, முஹம்மது கமாலுத்தீன், அப்துல் ஜப்பார் ஆகியோரும் , வட இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டிருந்த ஆசிரியர்கள் நூர் முஹம்மது பஞ்சாபி , ஷாஹ் ஸமான் தேவ்பந்தீ , அப்துர் ரஹ்மான் பஞ்சாபி ஆகியோரும் பணியாற்றிக் கொண்டிருந்தனர். கி.பி. 1892 ( ஹிஜ்ரி 1314)ஆம் ஆண்டில்-அதாவது 130 ஆண்டுகளுக்கு முன்- முதலாவது பட்டமளிப்பு விழா அங்கு நடந்தது. அதில் தஹ்சீல் ( இளங்கலை) வகுப்பில் தேறிய 17 ஆலிம்களுக்கும் முதவ்வல் (முதுகலை) வகுப்பில் தேறிய ஃபாஸில்கள் 2 பேருக்கும் தாருல் உலூம் தேவ்பந்தின் தலைமை ஆசிரியர் மெளலானா சையிது அஹ்மத் தஹ்லவீ அவர்கள் பட்டம் வழங்கினார்கள். பாகவி ஆனார் மெளலானா பாரம்பரியமிக்க இந்த அரபிக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் முதல் அணியில் தமது 17ஆம் வயதில் ஆ.கா. அப்துல் ஹமீது அவர்களும் இடம்பெற்றிருந்தார்கள். அங்கு பத்தாண்டுகள் கல்வி பயின்று 1906ஆம் ஆண்டு நடந்த இரண்டாம் பட்டமளிப்பு விழாவில் ஆலிம் பட்டம் பெற்றார்கள். அப்படியானால், 1896ஆம் ஆண்டு அன்னார் பாகியாத்தில் சேர்ந்திருக்க வேண்டும். அங்கு மாணவராகச் சேர்ந்த நாள் முதலாய் , திருக்குர்ஆனுக்குத் தமிழில் உரை எழுத வேண்டும் என்ற ஆர்வம் மெளலானா அப்துல் ஹமீது அவர்களுக்கு இருந்துவந்துள்ளது. ஆலிம் பட்டம் பெற்ற பிறகு வியாபாரம், அரசியல், கிலாஃபத் இயக்கம் என அன்னாரின் பொழுதுகள் கழிந்தன. பின்னர் 1926 பிப்ரவரி 19 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின் திருக்குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புப் பணியை மெளலானா அப்துல் ஹமீது பாகவி அவர்கள் தொடங்கினார்கள். அல்பகரா- அத்தியாயம் திருக்குர்ஆனின் 'அல்பகரா' (2) அத்தியாயத்தின் தமிழாக்கம், விரிவுரை ஆகியவற்றை எழுதி முடித்தபின், தமிழகத்தின் தலைசிறந்த ஆலிமகளின் பார்வைக்கு அனுப்பிவைத்து, அவர்கள் கொடுத்த முறையான திருத்தங்களுடன் 19.02.1929 அன்று முதல் பாகம் வெளியிடப்பட்டது. பின்னர் பொருளாதார தேக்கநிலை ஏற்படவே, சிரமப்பட்டுக் கொண்டிருந்த மெளலானா அவர்களுக்கு, ஹைதராபாத் நிஜாம் மன்னரின் மாமனார் நவாப் நஸீர் அவர்களின் அறிமுகம் கிடைத்தது.அதையடுத்து பொருளாதார உதவி கிடைக்கவே, காரைக்காலில் அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டது. இரவு பகலாக பணி தொடர்ந்தது. ஒரு வழியாக 1942 அக்டோபர் 24இல் திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு நிறைவடைந்தது.இருந்தாலும், உடனே அச்சிடாமல் , பாகியாத் பேராசிரியர் குழுவின் ஆய்விற்கு உட்படுத்தி 9.11.1943இல் பணி முடிவுற்றது. இரண்டாம் உலகப் போர் எழுபது வயதைக் கடந்துவிட்ட மெளலானா அவர்கள் பலமுறை பயணம் மேற்கொள்ள வேண்டியதாயிற்று. இரண்டாம் உலகப் போர் நடந்த நேரம் அது. பயணம் என்பதே பெரிய கேள்விக்குறியதான நேரம். இதனால் தமது மொழிபெயர்ப்பைப் பாதுகாக்க மெளலானா அப்துல் ஹமீது பாகவி அவர்கள் ஒரு வேலை செய்தார்கள். தமது கையேட்டுப் பிரதிநிதிகள் இரண்டைத் தயார் செய்தார்கள்.ஒரு பிரதியைத் தமது இல்லத்தில் பத்திரமாக வைத்துவிட்டு , மற்றொன்றை பாகியாத் கல்லூரி நூலகத்தில் பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்தார்கள். இறுதியாக, 1949ஆம்ஆண்டு மே மாதம் முதல் நாள் - ஹிஜ்ரி 1368 ரஜப் பிறை 2 -முழு தமிழ் மொழிபெயர்ப்பு வெளிவந்தது. 1955 ஜூன் 23ஆம் தேதி மெளலானா ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்கள் மறைந்தார்கள். அவர்களின் அகவை 79. அந்த மொழிபெயர்ப்பு இன்றுவரை கிடைக்கிறது.பல லட்சம் பிரதிகள் விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது. அன்னார் நமக்கெல்லாம் சிறந்த முன்மாதிரி என்பதில் ஐயமில்லை. ( 23.10.2021இல் நடந்த ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி அவர்களின் நினைவு நிகழ்ச்சியில் அ.முஹம்மது கான் பாகவி ஆற்றிய உரையின் சுருக்கம்) Posted by Khan Baqavi at Monday, October 25, 2021 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Tuesday, October 19, 2021 Posted by Khan Baqavi at Tuesday, October 19, 2021 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Posted by Khan Baqavi at Tuesday, October 19, 2021 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest ஆலிம் பப்ளிகேஷனின் இதயங்கனிந்த நன்றி ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ ஆலிம் பப்ளிகேஷனின் இதயங்கனிந்த நன்றி ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ இறையருளால் 16.10.2021 காலை எமது ஆலிம் பப்ளிகேஷனின் வெளியீடான முஸ்னது அஹ்மத் தமிழாக்கம் மூன்றாம் பாகம் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். எமது அன்பு அழைப்பை ஏற்று விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அறிஞர் பெருமக்கள், விழாவை மிக வெற்றிகரமாக நடத்திக்காட்டிய அப்பகுதி பிரமுகர்கள், விழாவில் திரளாகக் கலந்துகொண்ட ஆலிம்கள், பட்டதாரிகள்,வணிகர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் முதலான அனைத்து அன்பர்களுக்கும் எமது இதயங்கனிந்த நன்றியை சமர்ப்பிக்கிறோம். பாளையங்கோட்டையில் பிரபலமானதும் பிரமாண்டதுமான காயிதே மில்லத் moc அரங்கத்தை வழங்கி உதவிய நிர்வாகப் பெருமக்கள், நூல் தயாரிப்புச் செலவினங்களுக்கு வாரிவழங்கிய புரவலர்கள், எல்லா ஏற்பாடுகளையும் முன்நின்று சிரத்தையோடு கவனமாகச் செய்த பெருந்தகைகள், மக்களுக்கு விழா குறித்துப் பள்ளிவாசல்களில் அறிவிப்புச் செய்து உதவிய இமாம்கள் என அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஆலிம் பப்ளிகேஷன் மொழிபெயர்ப்புக் குழுவினர் மற்றும் நிர்வாகக் குழுவினர் சார்பாக இதயங்கனிந்த நன்றியைத் தெரிவிப்பதில் அகமகிழ்றோம். ஜஸாகுமுல்லாஹு கைரல் ஜஸா ஃபித்தாரைன். நம் தொடர்புகள் தொடரட்டும்! தொண்டுகள் சிறக்கட்டும்! நபிகளாரின் பொன்மொழிகள் அனைவரின் வாழ்க்கையாக மாறட்டும்! வஸ்ஸலாம். Posted by Khan Baqavi at Tuesday, October 19, 2021 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest நபிகளார் வெளியிட்ட உலகப் பிரகடனம் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ நபிகளார் வெளியிட்ட உலகப் பிரகடனம் ^^^^^^^^°^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புனித ஹஜ் பயணத்தின்போது பெருந்திரளாகக் குழுமியிருந்த மக்கள் முன் ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பேருரையில் உலக மக்களுக்கு வெளியிட்டப் பிரகடனம்: * மனிதர்களே! உங்கள் இறைவன் ஒருவன். உங்கள் தந்தை ஒருவரே. * எந்த அரபியருக்கும் அரபியர் அல்லாதோரைவிட, இறையச்சம் ஒன்றில் தவிர எந்த உயர்வும் கிடையாது. * அரபியரல்லாத எவருக்கும் அரபியரைவிட ,இறையச்சம் ஒன்றில் தவிர வேறு எந்த உயர்வும் கிடையாது. * வெள்ளையருக்குக் கறுப்பரைவிடவோ, கறுப்பருக்கு வெள்ளையரைவிடவோ , இறையச்சம் ஒன்றில் தவிர வேறு எந்த உயர்வும் கிடையாது. * இந்தப் புனிதத் தலத்தில் , இப்புனித மாதத்தில், இப்புனித நாள் எவ்வளவு மகத்தானதோ அவ்வளவு மகத்துவமிக்கவை உங்கள் உயிரும் உங்கள் உடைமையும் உங்கள் சுயமரியாதையும். ( முன்னது அஹ்மத் - ஹதீஸ் 22391) Posted by Khan Baqavi at Tuesday, October 19, 2021 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Tuesday, October 12, 2021 நவீன இந்தியப் பெண்களின் பரிதாப நிலை நவீன இந்தியப் பெண்களின் பரிதாப நிலை ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ பெங்களூரில் 10.10.2021 நடந்த உலக மனநல நாள் விழாவில் பேசிய கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் பேசியதாவது: இந்தியாவில் உள்ள நவீன பெண்களில் பெரும்பாலோர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்வே விரும்புகிறார்கள்.இதைக் கூற வருத்தமாக இருக்கிறது. ஒரு வேளை திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவதில்லை. வாடகைத் தாய் மூலமே குழந்தையைப் பெற்றெடுத்து வளர்க்கவே விரும்புகிறார்கள். நமது சிந்தனையில் தலைகீழ் மாற்றம் நடந்துள்ளது. இது சரியான போக்கு அல்ல.மேற்கத்திய பண்பாட்டுக் கூறுகளை இந்திய சமூகம் உள்வாங்கிக் கொண்டுள்ளது துரதிருஷ்ட வசமானது தாத்தா, பாட்டி உடனிருப்பதை விரும்பாத அவர்கள், தாய் தந்தையரை உடன் வைத்துக் கொள்ளத் தயங்குவது வேதனை அளிக்கிறது. (நன்றி-தினமணி ) Posted by Khan Baqavi at Tuesday, October 12, 2021 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Saturday, October 09, 2021 Posted by Khan Baqavi at Saturday, October 09, 2021 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Thursday, October 07, 2021 முஸ்னது அஹ்மத் தமிழாக்கம் மூன்றாம் பாகம் வெளியீட்டு விழா Posted by Khan Baqavi at Thursday, October 07, 2021 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Thursday, September 23, 2021 சுகாதாரத் துறை அமைச்சரின் அருமையான அறிவுறுத்தல் ~~~~~~~~~~~~~~~~~~~~ சுகாதாரத் துறை அமைச்சரின் அருமையான அறிவுறுத்தல் ~~~~~~~~~~~~~~~~~~~ குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கர்ப்பிணி பெண்கள் விரும்புகின்றனர்.இது தவறானது. இந்த முடிவை பெண்கள் கைவிட வேண்டும். சிசேரியன் மூலம் 10 அல்லது 15 நாட்களுக்கு முன்பாகவே குழந்தை பெற்றுக்கொள்ளும் போது, குழந்தையின் வளர்ச்சியில் குறைபாடு ஏற்படும்.எனவே, குழந்தையை முழுமையாக வளரவிட்டு , சுகப்பிரசவத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும்.அப்போதுதான் அக்குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு இது குறித்து ஆலோசனை வழங்குமாறு , சுகாதார அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று -22.09.2021- தெரிவித்தார். இந்த வேண்டுகோளில் தாய்மை வெளிப்படுகிறது. Posted by Khan Baqavi at Thursday, September 23, 2021 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Thursday, September 02, 2021 பாதிக்கப்பட்டவர்களுக்குப்பரிவு காட்டுங்கள்- காவலர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல் ~~~~~~~~~~~~~~~~~~ பாதிக்கப்பட்டவர்களுக்குப் பரிவு காட்டுங்கள்- காவலர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல் ~~~~~~~~~~~~~~~~~~~ அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால், மற்றொரு கை காவல் துறை.இரண்டும் முறையாகச் செயல்பட்டால், அந்த அரசு தலைசிறந்த அரசாகப் போற்றப்படும். மக்களோடு நேரடியாகத் தொடர்பு கொள்வோர் உதவி ஆய்வாளர்கள்தான். அந்த வகையில் முக்கியமான கடமையும் பொறுப்பும் உங்களுக்கு உள்ளது. காவல்துறை என்றாலே குற்றங்களைத் தடுக்கும் துறை, தண்டனை வாங்கித்தரும் துறை என்று மட்டுமே நினைக்கின்றனர். ஆனால், குற்றங்கள் நடக்காத சூழலை உருவாக்கும் துறையாக அது மாற வேண்டும் என்பது என் ஆசை. மக்கள் எதிர்பார்ப்பது அமைதியைத் தான். அந்த அமைதியை உருவாக்கும் கடமை காவல் துறைக்கு உண்டு. பயிற்சி முடிந்து நீங்கள் செயல்படத் தொடங்கும்போது அமைதியான தமிழகத்தை உருவாக்க சூளுரைக்க வேண்டும். அநியாயத்தைத் தடுக்க எப்போதும் தயங்காதீர்கள். நியாயத்திற்காக எப்போதும் நில்லுங்கள். உங்கள் பகுதியைக் குற்றம் நடக்காத பகுதியாக மாற்றுங்கள். உண்மைக் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துங்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டுங்கள்.இவற்றையெல்லாம் சட்டபூர்வமாகச் செய்யுங்கள். குறிப்பு: உரை நாள் +1.9.2021 நிகழ்ச்சி: காவல் உதவி ஆய்வாளர்களுக்கான பயிற்சி தொடக்க விழா. * முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்காக வாலி எழுதிய தத்துவப் பாடல்களை இவ்வுரை விஞ்சி விட்டது. Posted by Khan Baqavi at Thursday, September 02, 2021 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Thursday, August 26, 2021 இயலாமைக்கு வருந்துகிறேன் ~~~~~~~~~~~~~~~~~~~~~~ இயலாமைக்கு வருந்துகிறேன் ~~~~~~~~~~~~~~~~~~~~~~ அஸ்ஸலாமு அலைக்கும்.க்ரோனா பரவல் காரணத்தால் வீடு-அலுவலகம் என்ற அளவில் மட்டுமே என் நாட்கள் கழிகின்றன. உறவுகள், நண்பர்கள், மாணவர்கள், பெரியவர்கள்...என யாருடைய அழைப்பையும் ஏற்று நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் நிலையில் நான் இல்லை. தவிர்க்கவே முடியாத சில நிகழ்வுகளில் மட்டுமே கலந்து கொள்கிறேன். காணொளி வகுப்புகள், ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொள்வதுண்டு. எனவே , நண்பர்கள் யாரும், குறிப்பாக அன்பு மாணவர்கள் தம் இல்ல நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்ளாத தற்காக வருந்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். என் இயலாமைக்கு வருந்துகிறேன். வஸ்ஸலாம். அன்புடன் உங்கள் கான் பாகவி Posted by Khan Baqavi at Thursday, August 26, 2021 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Wednesday, August 25, 2021 Posted by Khan Baqavi at Wednesday, August 25, 2021 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Monday, August 02, 2021 காலச்சுவடு மதிப்புரையும் கான் பாகவி கருத்துரையும் *காலச்சுவடு மதிப்புரையும் கான் பாகவி கருத்துரையும்* ‘ரோஜா’ மனம் எனும் தலைப்பில் களந்தை பீர் முஹம்மது எழுதிய நூல் மதிப்புரை கண்டேன். அவர் பெயரைக் கண்டவுடன், எல்லாரையும் போன்று நானும் “என்ன பூகம்பத்தைக் கிளப்பியுள்ளாரோ!” என்ற தயக்கத்தில்தான் வாசிக்கத் தொடங்கினேன். நூலின் தலைப்பும் என் அச்சத்தை உறுப்படுத்தும்வகையில் ‘இந்திய சினிமாவில் முஸ்லிம்கள்’ என்று இருந்தது. நூலின் அட்டைப் படம்வேறு என் அச்சத்திற்கு எண்ணெய் வார்த்தது. மதிப்புரையை நுகர்ந்தபின் முகம் மலர்ந்தது. மனத்திற்குள் நூலாசிரியர் அப்சலையும் மதிப்புரை தீட்டிய களந்தையாரையும் வாழ்த்திக்கொண்டேன். சினிமா எனக்குத் தொடர்பில்லாத துறைதான். ஆனால், விவாதிக்கப்படும் பொருளோ முஸ்லிம்கள் தொடர்பானது; சொல்லப்போனால் இஸ்லாம் குறித்தது. சினிமா என்பது, என்போன்றோரின் பார்வையில் ஒரு பொழுதுபோக்குச் சாதனம். ஒரு படத்தின் கதைக்களம் கற்பனையாகவே இருந்தாலும், அதன் கரு உண்மைக்குப் புறம்பாக இருக்கலாமா? ஒரு சமூகத்தின் முகத்தைக் கோரப்படுத்துவதும் அதன் நம்பிக்கையையே குற்றப்படுத்திக் கூண்டில் நிறுத்துவதும்தான் பொழுதுபோக்கா? உலகின் எங்கோ ஒரு மூலையில் யாரோ சிலர் சுயநலத்திற்காக, அல்லது அரசியல் நோக்கத்திற்காக ஆயுதமேந்தி கண்மூடித்தனமாக அப்பாவிகளைச் சுட்டுத்தள்ளுகிறார்கள் என்றால், ஒட்டுமொத்த சமூகத்தின் மீதே ‘பயங்கரவாதிகள்’ முத்திரை குத்தி, சுமுக வாழ்வை மேற்கொண்டிருக்கும் பெரும்பான்மை அங்கத்தினரை இழிவுபடுத்துவது என்ன ரசனை? நல்ல வேளையாக, சமூக நீரோட்டத்திலிருந்து முஸ்லிம்களைப் பிரிப்பதற்கென்றே பலர் திரைப்படங்களைத் தயாரித்துவந்த நிலையில், அதற்கு நேரெதிரான படங்களையும் தயாரித்து சிலர் வெளியிட்டது ஆறுதல் அளிக்கிறது. சினிமாதானே என்று புறம்தள்ளிவிட்டுப் போக முடியாத அளவிற்கு அது இன்றைக்கு ஒரு பெரிய ஊடகமாக மாறிவிட்டிருக்கிறது. மணிரத்தினம் போன்றோர் திரையில் புதைத்த வெடிகுண்டுகளின் வடுக்கள் இன்னும் ஆறாத நிலையில், அப்சலின் இந்நூல் நிச்சயமாக வாசகர்களின் இதயக் கதவைத் திறக்கும் என நம்பலாம். பாகிஸ்தானையும் இந்திய முஸ்லிம்களையும் நட்புச் சக்திகளாகக் கருதி இந்துக் கலைஞர்கள் படம்பண்ணி மாபெரும் வசூலை ஈட்டியுள்ளார்கள் என்பது, ஒரு நல்ல அடையாளம். அதிலும், அவர்கள் தம்மையும் தம் வாழ்வையும் பணயம் வைத்துப் படங்கள் எடுத்து வென்றுள்ளார்கள் என்பது வியப்பின் உச்சம். சர்வதேச அளவில் ‘இஸ்லாமோபோபியா’ ஆட்டம் போட்டுக்கொண்டிருக்க, முஸ்லிம் சமூகம் முடங்கிக் கிடப்பதற்கு நூலாசிரியர் கண்டனம் தெரிவிக்கிறார். இது, சமூகத்தின் மீது அவருக்குள்ள அக்கறையைக் காட்டுகிறது. ஆம்! முஸ்லிம் சமூகம் தன் ஆற்றலை எதில் செலவிடுகிறது? தன்னைப் பற்றிய உண்மைகளை, தன் மார்க்கம் உலக மாந்தருக்குமுன் எடுத்துவைக்கும் மனிதநேயப் பக்கங்களை எப்போது வெளிச்சத்திற்குக் கொண்டுவரப் போகிறது? தம்மை நஞ்சூட்டிக் கொல்லப்போன யூத யுவதியை, கத்தியால் குத்தப்போன ஒரு இளைஞனைப் பழிதீர்க்க சக்தி இருந்தும் மன்னித்த மாநபி பற்றி எப்போது எடுத்துரைக்கப்போகிறது? அ. முஹம்மது கான் பாகவி சென்னை Posted by Khan Baqavi at Monday, August 02, 2021 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Monday, July 19, 2021 Posted by Khan Baqavi at Monday, July 19, 2021 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Monday, July 05, 2021 காலச்சுவடு இதழுக்கு கான் பாகவியின் மடல் காலச்சுவடு இதழுக்கு கான் பாகவியின் மடல் --------------------------------------------- அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, 'வரலாற்றில் பெயர் நிலைக்க...' எனும் தலையங்கம் கண்டேன். மகிழ்ச்சி அளிக்கும் தலையங்கம். அதே நேரத்தில், சார்பற்ற நடுநிலை தலையங்கம். பாராட்டுகள். கருணாநிதி மகன் என்ற அளவிலேயே அரசியல் தலைவராக அறியப்பட்டிருந்த ஸ்டாலின், அரிசியல் வியூகம், நிர்வாகத் திறமை, தந்தையை மிஞ்சிய சாணக்கியம், தற்புகழ் துறந்த உயர்ந்த நிலைப்பாடு, மாநில முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பு, எதிர்க் கட்சிகளையும் அரவணைக்கும் நளினமான நிர்வாகம் ... எனப் பன்முகம் கொண்ட சிறந்த முன்மாதிரியான தலைவராக இப்போது அறியப்படேகிறார். இது பலரும் எதிர்பார்த்திராத திருப்பம் என்றுதான் நினைக்கிறேன். அரசியல் பாலபாடம் படிக்க வேண்டிய அரசியல் மாணவர் என்றே பலரும் எடைபோட்டிருந்த நிலையில் , இல்லை; நான் அரசியல் ஆராய்ச்சியாளன் என்பதைத் தம் திட்டங்களாலும் நடவடிக்கைகளாலும் ஸ்டாலின் நிரூபித்து வருகிறார். துறை சார்ந்த அதிகாரிகள், நிபுணர்கள் ஆகியோரின் ஆலோசனைகள் பெற்றே அரசியல்வாதிகள் செயல்படுகிறார்கள் ; என்றாலும் நிபுணர்களைப் பயன்படுத்தவும் அவர்கள் முன்வைக்கும் திட்டங்களை இனம் கண்டு ஏற்கவும் அல்லது மறுக்கவும் சுய அறிவு தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது. செயல்திறன் மிக்க அதிகாரி இறையன்பு போன்றவர்கள் முந்தைய ஆட்சியிலும் இருக்கத்தானே செய்தார்கள்! எல்லாவற்றையும் விட, வீண் பந்தாக்களை ஸ்டாலின் புறக்கணித்து வருவது அவரது மதிப்பைக் கூட்டியுள்ளது. அன்புடன் உங்கள் அ. முஹம்மது கான் பாகவி சென்னை Posted by Khan Baqavi at Monday, July 05, 2021 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Wednesday, June 09, 2021 ©©©©©©©©©©©©©©©© அரபி மத்ரஸாக்களில் ஆன்லைன் வகுப்புகள் ©©©©©©©©©©©©©©©® புனித ரமளான் முடிந்து ஷவ்வால் மாதமும் முடியப் போகிறது. கடந்த ஆண்டைப் போன்றே இந்த ஆண்டும் மத்ரஸாக்கள் திறக்கப்படுவதில் இழுபறி உள்ளது. இதையடுத்து பாடங்கள் நடைபெறாமல் முன்பு போலவே வீணாகக் காலம் கழிகின்ற நிலையே காணப்படுகிறது. இது , மேலும் மாணவர்கள் துறை மாறுவதற்கு வழிவகுத்துவிடலாம். இருக்கும் மாணவர்களையாவது தக்கவைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் மீண்டும் நேர்ந்துள்ளது. எனவே,உடனே எல்லா மத்ரஸாக்களிலும் ஆன்லைன் ( காணோலி) வகுப்புகளை ஆரம்பித்து, இருக்கிற ஆசிரியர்களைக் கொண்டு பாடங்கள் நடத்த தயக்கமின்றி முன்வர வேண்டும். ஆண்டின் இறுதியில் முழுஆண்டுத் தேர்வுகளையும் நடத்தி முடிக்கத் தயாராக வேண்டும். பட்டவகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அதிகக் கூட்டம் சேர்க்காமல் கல்லூரியிலேயே வைத்து பட்டமளிப்பு விழா நடத்திவிடலாம். ஆக, தொடர்ந்து மத்ரஸாக்கள் செயல்பட வேண்டும். பூட்டிப்போட்டு பாடமும் நடத்தாமல் மாணவர்களை வேறு துறைகளுக்குத் தள்ளிவிட்டுவிடக் கூடாது.சிறிய மத்ரஸாக்களும் இதே நடைமுறையைக் கையாளலாம். வேலை செய்யாமல் ஊதியம் பெறுவதா என்ற கேள்வியும் இதன்மூலம் தவிர்க்கப்பட்டு விடும். ஆன்லைன் க்ளாஸ் எப்படி நடத்துவது என்ற நடைமுறை அறிந்தவர்கள் ஒவ்வோர் ஊரிலும் இருப்பார்கள். அவர்களின் உதவியை நாடலாம். காலத்தின் ஓட்டத்தை அறிந்து சவால்களை எதிர்கொள்ள முன்வராவிட்டால் இழப்பு நமக்குத்தான்; நம் சமுதாயத்திற்குத்தான் என்பதை மறந்துவிடலாகாது. ©©©©©©©©©©©©©©©® அன்புடன் உங்கள் கான் பாகவி. Posted by Khan Baqavi at Wednesday, June 09, 2021 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Tuesday, June 01, 2021 ~~~~~~~~~~~~~~~~~ குடும்பக் கட்டுப்பாடும் சீனாவும் ~~~~~~~~~~~~~~~~~~ மக்கட்தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு இளைஞர்களைவிட வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமானது. உழைக்க ஆட்கள் இல்லாமல் பொருளாதார தேக்க நிலை அங்கு உருவானது. இதனால் 2016ஆம் ஆண்டு இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள அரசு அனுமதித்தது. ஆனாலும் கடந்த ஆண்டு 1.2கோடி குழந்தைகளே பிறந்தனர். இது இப்போதுள்ள தேவையான அளவைவிட மிகவும் குறைவாகும் என அரசு கருதுகிறது. சீனாவின் மக்கட்தொகை 141 கோடியாக தற்போது உள்ளது. ஆண்-பெண் பாலின விகிதமும் குறைந்து வருகிறது. பெரும்பாலான தம்பதியர் ஆண்குழந்தை களையே விரும்புகின்றனர். பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்து வயிற்றிலேயே பெற்றோர் கொன்றுவிடுகின்றனர். இதனால் குடும்பக் கட்டுப்பாடு கொள்ள்கையைத் தளர்த்த சீன அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மூன்று குழந்தைகள் வரைப் பெற்றுக்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. *** வறுமையைப் பயந்து குழந்தைகளைக் கொல்லாதீர்கள்.( குர்ஆன்,17:31) *** இரு பெண் குழந்தைகளைப் பெற்று, அவர்களின் எதிர்காலம் வரை அன்போடு பராமரித்து வளர்ப்பவர்கள் சொர்க்கம் செல்வர். ( நபிமொழி ) *** இ Posted by Khan Baqavi at Tuesday, June 01, 2021 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Older Posts Home Subscribe to: Posts (Atom) வாசிப்பின் அவசியம் Followers நுகர்வு கலாசாரம் - ஜும்ஆ உரை 21ஆம் நூற்றாண்டில் உலமாக்களின் பங்கு - ஆலிம்களின் கருத்தரங்கு குழந்தைச் செல்வம் - ஜும்ஆ உரை (16.11.2012) மணவிலக்கு ஓர் யதார்த்தம் Blog Archive ► 2011 (23) ► July (12) ► August (3) ► September (2) ► October (3) ► November (2) ► December (1) ► 2012 (20) ► January (1) ► February (1) ► March (3) ► April (2) ► May (2) ► June (1) ► July (1) ► September (4) ► October (2) ► November (2) ► December (1) ► 2013 (27) ► January (3) ► February (1) ► March (3) ► April (4) ► May (2) ► June (3) ► July (3) ► August (1) ► October (2) ► November (1) ► December (4) ► 2014 (25) ► January (3) ► February (2) ► April (2) ► May (2) ► June (1) ► July (1) ► August (3) ► September (2) ► October (1) ► November (5) ► December (3) ► 2015 (26) ► January (4) ► February (4) ► March (3) ► April (2) ► May (2) ► June (2) ► August (1) ► September (2) ► October (2) ► November (2) ► December (2) ► 2016 (18) ► January (2) ► February (2) ► March (1) ► May (1) ► July (1) ► August (3) ► September (3) ► October (2) ► November (2) ► December (1) ► 2017 (40) ► January (1) ► February (1) ► March (2) ► April (5) ► June (1) ► July (3) ► August (4) ► September (5) ► October (8) ► November (4) ► December (6) ► 2018 (51) ► January (9) ► February (6) ► March (4) ► April (6) ► May (4) ► June (2) ► July (2) ► August (8) ► September (3) ► October (3) ► November (2) ► December (2) ► 2019 (17) ► January (2) ► February (2) ► March (1) ► April (3) ► May (4) ► July (2) ► August (2) ► September (1) ► 2020 (20) ► January (1) ► February (3) ► March (1) ► April (3) ► May (1) ► June (1) ► July (2) ► August (1) ► September (5) ► October (1) ► December (1) ▼ 2021 (39) ► January (3) ► February (4) ► March (5) ► April (3) ► May (4) ► June (2) ► July (2) ► August (3) ► September (2) ► October (9) ▼ November (2) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ... இஸ்லாமியப் பேரறிஞர் மறைவு.+++++++++++++ My Blog List கான் பாகவி இஸ்லாமியப் பேரறிஞர் மறைவு.+++++++++++++ - இஸ்லாமியப் பேரறிஞர் மறைவு.+++++++++++++ தமிழக ஆலிம்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும். இஸ்லாமியப் பேரறிஞர். நபிமொழி கலை விற்பன்ன...
எங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.
ஸ்ரீ காஞ்சி காமகோடி மஹாஸ்வாமிகள் காட்டிய வழியில் அநாதியான நமது இந்து மதத்தின் தர்ம நெறியில் வழி நடந்து ஸ்ரீமத் ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீமந்நாராயணீயம் மற்றும் பல க்ரந்தங்களை தினமும் அனுஸந்தானம் செய்து அக்கொள்கைகளையே தமது ஜன்ம லாபமாகக் கருதி வாழ்ந்து கட்டியவரும், ஸ்ரீ மஹாபெரியவாளின் திருவாக்கினால் ஆசியுடனும் அன்புடனும் ஸ்ரீ ஆங்கரை கல்யாணராம பாகவதர் [பூர்வாச்ரம நாமதேயம்] என்று அழைக்கப்பட்ட மஹான், ஸ்ரீ பார்த்தசாரதி க்ஷேத்ரமான சென்னை திருவல்லிக்கேணியிலேயே 50 வருஷங்கள் வாழ்ந்துவந்து, பணமோ கூட்டமோ சேர்க்காமல் பகவானிடத்தில் ஞான வைராக்யத்தை வேண்டிப் பெற்று முடிவில் 14.07.1992 அன்று ஸந்நியாஸ ஆஸ்ரமத்தை ஏற்றார். 1973 முதல் 1991 வரை 19 வருஷங்கள் ஒவ்வொரு வருஷமும் கோகுலாஷ்டமி சமயத்தில் ஸ்ரீ காஞ்சி காமகோடி மஹா பெரியவாளின் உத்தரவுப்படி ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹ மூல பாராயணமும் உபந்யாசமும் ஸ்ரீ மஹா பெரியவாள் முன்னிலையில் செய்யும் பாக்யத்தை ஸ்ரீ ஸ்வாமிகள் பெற்றவர். ஸ்ரீமத் ராமாயண நவாஹ பாராயணமும், ஸ்ரீமத் சுந்தரகாண்ட ஏகதின பாராயணமும், ஸ்ரீமந் நாராயணீயப் பாராயணமும் ஸ்ரீ மஹா பெரியவாள் ஸந்நிதியில் செய்தவர். படித்தவர், பாமரர், ஏழை, பணக்காரர் என்ற எந்த வேறுபாடின்றி தம்மிடம் வந்த அனைவருக்கும், இறைவன் பேரால் ஆறுதல் அளித்தவர். “சிவ சிவ” “ராம ராம” என்ற பகவானின் நாமங்களை தனிமையில் இடையறாது, மனமுருகி, ஜபித்து வந்தாலே “பற்றுகள் ஒழிந்து பகவானை அடையலாம்” என்று எளிமை வழியில் உயர்வடைய உபதேசித்து வந்தார். அநேக ஆப்தர்கள் ஹிருதயத்தில் பக்தி, ஸ்ரத்தை, அனுஷ்டானம் என்னும் தீபத்தை ஏற்றிவிட்டும் ஸ்ரீமத் பாகவத, ஸ்ரீமத் ராமாயண, ஸ்ரீமந் நாராயணீய பாராயணம் மற்றும் மஹான்களால் அருளிச் செய்யப்பட்ட ஸ்தோத்ரங்கள் பாராயணம் என்னும் ஸத்ப்ரவிருத்தியை ஏற்படுத்திவிட்டு, 19.01.2004 [சுபானு வருஷம், தை மாதம், ஐந்தாம் தேதி, கிருஷ்ண த்ரயோதசி] அன்று ஸித்தி அடைந்தார். அம்மஹானின் அதிஷ்டானம் திருச்சி ஜில்லா [திருச்சி-கரூர் மார்க்கத்தில்] திருச்சியிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் பழூர் கிராம அக்ரஹாரத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த மஹானின் அதிஷ்டானத்தில் ஸ்ரீமஹாலிங்கமூர்த்தி ப்ரதிஷ்டை செய்து, தினசரி பூஜை ஆராதனை செய்து வர ஏற்பாடு செய்துள்ளது. அந்த மஹான் அனுதினமும் சுமார் 35 வருஷங்கள் பூஜை செய்து வந்த ஸ்ரீகுருவாயூரப்பன் விக்ரஹமும், ஸ்ரீ காஞ்சி பெரியவாளின் பாதுகைகளும் இதே அதிஷ்டானத்தில் பிரதிஷ்டை செய்து, தினசரி பூஜையும் நடந்து வருகிறது. ஸ்ரீ ஸ்வாமிகள் ப்ரம்மீபூதராய் ஸித்தி அடைந்து அதிஷ்டானத்தில் ஸான்னித்யத்துடன் இருந்து வருகிறார். -o-o-o-o-o-o- அனேக பக்தர்களின் விருப்பத்திற்கிணங்க ஸ்ரீ ஸ்வாமிகள் உபந்யாசத்திலும், பாராயணத்திலும் பக்த ஜனங்களின் மனது உயர்ந்து பக்தி வளர்வதின் பொருட்டு அருளிச்செய்த சில முக்கியக் கருத்துக்களை, ஸ்வாமிகளுடன் கூடவே இருந்து 47 வருஷங்கள் கைங்கர்யம் செய்து வந்தவரான திருவல்லிக்கேணி ஸ்ரீ ஜானகிராமன் அவர்களால் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை இதன் அடுத்து வரும் பகுதிகளில் நாம் பார்ப்போம். -o-o-o-o-o-o- இந்த மிகச்சிறந்த மஹானை அவருடைய பூர்வாஸ்ரமத்திலும், பிறகு அவரின் ஸந்நியாஸ ஆஸ்ரமத்திலும், ஆண்டுதோறும் சென்னை திருவல்லிக்கேணிக்குச் சென்று தரிஸிக்கவும்,அவருடன் நெருங்கிப் பழகவும் அடியேன் பாக்யம் பெற்றிருந்தேன். என்னுடன் ஒரு தனி வாத்சல்யத்துடன் பழகி, என்னுடைய எவ்வளவோ பிரச்சனைகளுக்கு மிகச்சுலபமான தீர்வுகள் சொல்லியருளிய மிகச்சிறந்த குருநாதராகத் திகழ்ந்தவர். இன்றும் எங்கள் மனதில் நிலைத்து நிற்பவர். இந்த மஹான் ஸித்தியடைந்த நன்நாளில், அவரை புறப்பாட்டு ஸ்வாமி போல அமர வைத்து, மாலை மரியாதைகளுடன், ஏராளமான பக்தர்களும், பஜனை கோஷ்டிகளும், வைதீக வேதவித்துக்களும் பல்வேறு மந்த்ர கோஷங்களுடன், பழூர் அக்ரஹாரத்தில் பிருந்தாவனப் பிரவேஸம் செய்வித்த நேரம் அடியேன் அங்கு கூடவே இருந்து அனைத்தையும் ஆரம்பம் முதல் கடைசிவரை, முற்றிலும் காணும் பாக்யமும் பெற்றேன். அவரை அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்த குழியில் இறக்கிய நேரம், அவரின் கருணையினாலும், மிகச்சுலபமான வழிகாட்டுதலாலும், தங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்திக்கொண்டு, இறைவழியில் ஈடுபட்டு, மனநிம்மதியுடன் வாழ்க்கையில் பல்வேறு பயன்களை அடைந்த பக்தர்கள் பலரும், தாங்கள் அணிந்திருந்த தங்க நகைகளைக்கழட்டி அவர் மேனியில் அர்ப்பணித்தனர். பிற்பகல் சுமார் மூன்று மணிக்கு இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்ற நேரம், கருடபக்ஷி ஒன்று அவரின் அதிஷ்டானப்பகுதியை நீண்ட நேரம் வட்டமடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து நான் மெய்சிலிர்த்துப்போனேன். ஸ்ரீ குருவாயூரப்பன் மேல் தீவிர பக்திகொண்டிருந்த ஸ்வாமிகளை வைகுண்டம் கூட்டிப்போகவே அந்த கருடன் புறப்பட்டு வந்திருப்பதாக என்னால் நன்கு உணர முடிந்தது. அன்புடன் vgk -o-o-o-o-o-o-o- 22.01.2012 அன்று ஸ்வாமிகளின் எட்டாம் வருஷ ஆராதனை மஹோத்ஸவம் பழூர் அக்ரஹாரத்தில் உள்ள ஸ்வாமிகள் அதிஷ்டானத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. 16 வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் ஸ்ரீ மஹாபெரியவாளுடன் ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அதிஷ்டான நுழைவாயில் ஸ்ரீ ஸ்வாமிகள் பல்லாண்டு காலம் பூஜை செய்துவந்த ஸ்ரீ குருவாயூரப்பன் விக்ரஹம் அதிஷ்டானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவலிங்கம் -oOo- தொடரும் இடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 2:30 AM லேபிள்கள்: ஸத் விஷயம் - ஆன்மிகம் 29 comments: ப.கந்தசாமி February 16, 2012 at 4:01 AM நல்ல மஹான். ReplyDelete Replies Reply காரஞ்சன் சிந்தனைகள் February 16, 2012 at 6:37 AM தொடரட்டும் தகவல்கள்! நன்றி! காரஞ்சன்(சேஷ்) ReplyDelete Replies Reply வெங்கட் நாகராஜ் February 16, 2012 at 7:14 AM நல்ல தகவல்களுக்கு நன்றி.... தொடருங்கள்.... ReplyDelete Replies Reply RAMA RAVI (RAMVI) February 16, 2012 at 9:23 AM பாகவதர்களை பற்றி படித்து தெரிந்து கொள்வதற்கே பாக்கியம் செய்திருக்க வேண்டும். தொடர்ந்து எழுதுங்கள் படித்து பயன் பெறுவதுடன் புண்ணியமும் சேர்த்துக்கொள்கிறோம். ReplyDelete Replies Reply Shakthiprabha February 16, 2012 at 11:46 AM எங்களுக்கெல்லாம் இதனை பகிர்ந்து கொண்டு எங்களையும் மகிழ்விப்பதற்கு ரொம்ப ரொம்ப நன்றி. ReplyDelete Replies Reply கீதமஞ்சரி February 16, 2012 at 1:55 PM எழுத்தில் புலப்படுகிறது நெஞ்சத்தின் நெகிழ்ச்சி. நினைவுகளின் பகிர்வுக்கு மிகவும் நன்றி வை.கோ.சார். ReplyDelete Replies Reply viji February 16, 2012 at 3:21 PM Really very nice post. Thanks for the post sir, viji ReplyDelete Replies Reply Thenammai Lakshmanan February 16, 2012 at 3:50 PM மிக அருமை கோபால் சார்.. உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன். பெற்றுக் கொள்ளவும். ReplyDelete Replies Reply ADHI VENKAT February 16, 2012 at 3:50 PM நல்ல தகவல்கள். தொடர்ந்து இது போல் தாருங்கள் சார். ReplyDelete Replies Reply ஆச்சி ஸ்ரீதர் February 16, 2012 at 4:20 PM முதல் பதிவையும் படித்தேன்,இந்த பதிவில் தாங்கள் பகிர்ந்துள்ளதும் இந்த காலத்தில் நிகழந்ததுதானா என நம்பமுடியவில்லை. ReplyDelete Replies Reply Rathnavel Natarajan February 16, 2012 at 4:24 PM நல்ல பதிவு. நன்றி ஐயா. ReplyDelete Replies Reply Usha Srikumar February 16, 2012 at 5:06 PM Interesting post. Do share more info... ReplyDelete Replies Reply ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி February 16, 2012 at 5:45 PM ஒரு அற்புதமான பதிவு! ReplyDelete Replies Reply கோமதி அரசு February 16, 2012 at 10:14 PM நல்ல பகிர்வு. நல்ல தகவல்களுக்கு நன்றி. ReplyDelete Replies Reply இராஜராஜேஸ்வரி February 18, 2012 at 8:25 PM பிற்பகல் சுமார் மூன்று மணிக்கு இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்ற நேரம், கருடபக்ஷி ஒன்று அவரின் அதிஷ்டானப்பகுதியை நீண்ட நேரம் வட்டமடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து நான் மெய்சிலிர்த்துப்போனேன். ஸ்ரீ குருவாயூரப்பன் மேல் தீவிர பக்திகொண்டிருந்த ஸ்வாமிகளை வைகுண்டம் கூட்டிப்போகவே அந்த கருடன் புறப்பட்டு வந்திருப்பதாக என்னால் நன்கு உணர முடிந்தது. அற்புதமான உணர்வுப்பூர்வமான பகிர்வுகள்.. ReplyDelete Replies Reply கணேஷ் February 19, 2012 at 4:15 PM இந்த மகானை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள எனக்கு வாய்ப்பு அளித்தமைக்கு மிக்க நன்றி . ReplyDelete Replies Reply இராஜராஜேஸ்வரி February 4, 2013 at 3:33 PM ஸ்ரீ குருவாயூரப்பன் மேல் தீவிர பக்திகொண்டிருந்த ஸ்வாமிகளை வைகுண்டம் கூட்டிப்போகவே அந்த கருடன் புறப்பட்டு வந்திருப்பதாக என்னால் நன்கு உணர முடிந்தது. எத்தனை பக்திப்பூர்வமான உணர்வு ... ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் February 5, 2013 at 12:41 AM இராஜராஜேஸ்வரி February 4, 2013 at 2:03 AM *** ஸ்ரீ குருவாயூரப்பன் மேல் தீவிர பக்திகொண்டிருந்த ஸ்வாமிகளை வைகுண்டம் கூட்டிப்போகவே அந்த கருடன் புறப்பட்டு வந்திருப்பதாக என்னால் நன்கு உணர முடிந்தது.*** //எத்தனை பக்திப்பூர்வமான உணர்வு// தங்களின் அன்பான மீண்டும் வருகைக்கும், என் பக்திபூர்வமான உணர்வுகளைப்பற்றிய புரிதலுக்கும் மிக்க நன்றீங்க. ... Delete Replies Reply Reply Anonymous February 12, 2014 at 10:08 PM ஆதி கோவிந்தர தாமோதர ஸ்வமிகள் தொகுத்து வழங்கிய ஸ்லோகங்கள் தினமும் படிக்கும் பாக்கியம் பெற்று உள்ளேன். அதை மேலும் வாங்கி பலருக்கு இலவசமாக விநியோகிக்க ஆசை. அத்தனை ஸ்லோகம்களும் ரத்தினம்கள் ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் February 12, 2014 at 10:30 PM shobraj97 February 12, 2014 at 10:08 PM வாங்கோ, வணக்கம். தங்களின் முதல் வருகைக்கு நன்றி. //ஆதி கோவிந்தர தாமோதர ஸ்வமிகள் தொகுத்து வழங்கிய ஸ்லோகங்கள் தினமும் படிக்கும் பாக்கியம் பெற்று உள்ளேன். அதை மேலும் வாங்கி பலருக்கு இலவசமாக விநியோகிக்க ஆசை. அத்தனை ஸ்லோகம்களும் ரத்தினம்கள்.// இதைக்கேட்க எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அந்த ஸத்குரு அவர்களின் க்ருபையால் தாங்கள் நியாயமாக ஆசைப்படுவது எல்லாம் நல்லபடியாகவே நடக்கட்டும். வாழ்த்துகள். Delete Replies Reply Reply ப.கந்தசாமி April 26, 2015 at 10:28 AM :) ReplyDelete Replies Reply பூந்தளிர் May 29, 2015 at 6:06 PM பிற்பகல் சுமார் மூன்று மணிக்கு இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்ற நேரம், கருடபக்ஷி ஒன்று அவரின் அதிஷ்டானப்பகுதியை நீண்ட நேரம் வட்டமடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து நான் மெய்சிலிர்த்துப்போனேன். இந்த சம்பவத்தைப்படித்ததும் நாங்களும் மெய் சிலிர்த்துப்போனோம். ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் May 29, 2015 at 6:14 PM பூந்தளிர் May 29, 2015 at 6:06 PM **பிற்பகல் சுமார் மூன்று மணிக்கு இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்ற நேரம், கருடபக்ஷி ஒன்று அவரின் அதிஷ்டானப்பகுதியை நீண்ட நேரம் வட்டமடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து நான் மெய்சிலிர்த்துப்போனேன்.** //இந்த சம்பவத்தைப்படித்ததும் நாங்களும் மெய் சிலிர்த்துப்போனோம்.// :) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :) Delete Replies Reply Reply ஆன்மீக மணம் வீசும் June 17, 2015 at 2:08 PM அற்புதமான பதிவிற்கு நன்றி. //**பிற்பகல் சுமார் மூன்று மணிக்கு இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்ற நேரம், கருடபக்ஷி ஒன்று அவரின் அதிஷ்டானப்பகுதியை நீண்ட நேரம் வட்டமடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து நான் மெய்சிலிர்த்துப்போனேன்.**// படிக்கும் போதே மென் சிலிர்க்கிறது. ReplyDelete Replies Reply mru October 17, 2015 at 2:15 PM ????? நீங்க பளகிய யாரோ ஒரு சாமிய பத்தி சொல்லி வாரிக. பெரிய பெரிய மஹான்களோட பளகலா உங்களுக்கு நல்ல வாய்ப்பு கெடச்சிருக்கு ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் October 18, 2015 at 8:12 PM :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :) Delete Replies Reply Reply சரணாகதி. November 21, 2015 at 10:46 AM ஸ்ரீ ஸ்வாமிகளின் பிருந்தாவன பிரவேசத்தின்போது நீங்களும் அந்த இடத்தில் இருந்தது, கருட பஷி பறந்தது எல்லாமே மெய்சிலிர்க்க வைத்த நிகழ்வுகள் ReplyDelete Replies Reply மாயவரத்தான். எம்.ஜி.ஆர்... December 2, 2015 at 8:20 PM நல்ல பகிர்வு..உன்னதப் படங்கள்..மஹானின் படத்தை வெளியிட்டதற்கு நன்றி. ReplyDelete Replies Reply காரஞ்சன் சிந்தனைகள் December 18, 2015 at 7:56 PM :)) ReplyDelete Replies Reply Add comment Load more... Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) Popular Posts ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு!’ அன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க... ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அஷ்டகம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன... 38] தனக்கு மிஞ்சி தான தர்மம் ! ;) 2 ஸ்ரீராமஜயம் தீபத்தின் ஒளி எப்படி வேறுபாடு பார்க்காமல் .. உயர்ந்தவன், தாழ்ந்தவன், புழு, பறவை, மரம் மற்ற நீர் வாழ்பிராணிகள், ந... வெண்ணிலவைத்தொட்டு ....... முத்தமிட ஆசை ! மிளகாய்ப்பொடி கொஞ்சம் ....... தொட்டுக்கொள்ள ஆசை !! இட்லி / தோசைக்குத் தொட்டுக்கொள்ளும் காரசாரமான மிளகாய்ப்பொடி By வை. கோபாலகிருஷ்ணன் இட்லி, தோசை, அடை போன்ற சிற்றுண்டிகள் செய்த ... உணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் .... //மனோ, வாக், காயம் என்கிறபடி மனஸால் பகவத் ஸ்மரணம், வாக்கினால் மந்த்ரம், காயத்தால் (தேகத்தால்) கார்யம் மூன்றையும் சேர்த்துத்தான் ஆசாரங்கள் ஏ... 31] போதும் என்ற மனம் ! 2 ஸ்ரீராமஜயம் கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமான... ஊரைச்சொல்லவா!! பேரைச்சொல்லவா!! என் ஊரைப்பற்றி நான் ஏதாவது எழுதியே தீரவேண்டும் என்று ஒரு தேவதை எனக்கு அன்புக்கட்டளை இட்டுள்ளது: இப்ப இந்த பதிவை தொடர ... யானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே ! அன்புடையீர் ! அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ... 73 ] சக்தி மிக்க பஞ்சகவ்யம் ! 2 ஸ்ரீராமஜயம் பால், தயிர், நெய் இவற்றின் பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டது மட்டுமின்றி நம் பூர்வீகர்கள், சாணி. பசுமூத்திரம் இவற்றின்... VGK 11 ] நாவினால் சுட்ட வடு இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’ க்கான கதை விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 03.04.2014 வியாழக்கிழமை இந்திய நேரம்...
மைதா உணவு மிகவும் ருசிகரமான உணவாக இருந்தாலும் இதை உண்பதால் நமது உடலிற்கு பலவித தீமைகள் ஏற்படுகின்றன. இதனை நீங்கள் அதிக அளவில் எடுத்துக்கொள்ளும் போது உங்களின் இரத்த சர்க்கரையின் அளவு மிக வேகமாக அதிகரிக்கும். மைதா வகை உணவுகளை அதிகம் எடுத்து வந்தால் உங்கள் உடலில் கொழுப்பு அதிகரிக்கும். மேலும் இது உங்களுக்கு உடல் பருமன், இருதய கோளாறு, இரத்த அழுத்தம் போன்ற உடல் உபாதைகளை கொண்டு வரும். மைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால் செரிமான கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படும். மைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால் உங்கள் இரத்த நாளங்களில் அதிக அளவு கொழுப்பு படியும். முக்கியமாக உங்களின் இருதய இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து உங்களுக்கு இருதய கோளாறு, இரத்த குழாய் அடைப்பு, போன்ற பலவித பிரச்சினைகள் ஏற்படும். எனவே அதிக அளவு மைதாவினை உணவில் சேர்த்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது. மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்தது அல்ல, மைதாவில் நார் சத்து கிடையாது. நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியைக் குறைத்து விடும். மைதா உணவுகளைத் தொடர்ச்சியாகச் சாப்பிடுகிறவர்களுக்கு பெப்டிக் அல்சர், பித்தப்பைக்கல், சிறுநீரக கல், இருதய கோளாறு, நீரிழிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. நமது உடலில் 150 மில்லிகிராம் அளவுக்கு மேல் கெட்ட கொழுப்பு இருப்பது ஆபத்தானது. Post navigation Previous Post:உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய குஷ்பு மகள்.. ஹீரோயின் போல் இருக்கிறாரே..! வைரல் புகைப்படம் Next Post:திருமணம் முடிந்து மகள் அழாமல் செல்ல தந்தை செய்த குறும்புதனம்.. மாப்பிள்ளையின் ரியாக்சன் வேற லெவல்!!
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சிறப்பு வெளியீடாக ரிலீஸாகிறது “சில்லுக்கருப்பட்டி” - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web Skip to content December 9, 2021 Facebook Twitter Instagram AanthaiReporter.Com | Tamil Multimedia News Web Primary Menu செய்திகள் தமிழகம் இந்தியா உலகம் சினிமா சினிமா செய்திகள் சின்னத்திரை புகைப்படம் டிரைலர் எடிட்டர் சாய்ஸ் அலசல் ஆய்வு முடிவு சர்ச்சை ஆந்தை யார்! சொல்றாங்க டெக்னாலஜி வழிகாட்டி கல்வி வேலை வாய்ப்பு ரவி நாக் பகுதி வணிகம் டூரிஸ்ட் ஏரியா மறக்க முடியுமா Search for: Home சினிமா செய்திகள் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சிறப்பு வெளியீடாக ரிலீஸாகிறது “சில்லுக்கருப்பட்டி” Running News2 சினிமா செய்திகள் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சிறப்பு வெளியீடாக ரிலீஸாகிறது “சில்லுக்கருப்பட்டி” 2 years ago aanthai 0 SHARES ShareTweet நல்ல கருத்துக்கள் கொண்ட படங்கள் ஒரு குறிப்பிட்ட பிராண்ட்டின் அடையாளம் மூலம் அறிமுக மாகும் போது அதன் மீதான கவனம் இன்னும் அதிகமாகிறது. ஒரு படைப்பாளியின் படைப்பு சரியான முறையில் மார்கெட்டிங் செய்யப்பட்டு, பெருமளவு மக்களை சென்ற டைந்து, வெற்றி பெறும் போது தான் அவனது படைப்புலகம் பூரணத்துவம் பெறுகிறது. கடந்த சில வருடங்களில் மிக நல்ல கருத்துக்கள் கொண்ட படங்கள் மிக பெரிய நிறுவனத்தின் அடையாளத்துடன் வெளியாகி பெரு வெற்றியை அடைந்து வந்துள்ளது. ஒரு சிறு டீஸர் மூலமாகவே இணைய உலகின் கவனம் ஈர்த்த படம் “சில்லுக்கருப்பட்டி”. இத் திரைப்படத்தின் உரிமையை சூர்யா வின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ( 2D Entertainment ) வாங்கியிருப்பது இப்படத்தின்மீது பன்மடங்கு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சிறந்த வெளியீடாக உருவாகியுள்ள சிக்னேச்சர் வெளியீடாக ( Sakthi film factory signature release ) இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. 2D Entertainment நிறுவனம் கமர்ஷியல் படங்களை மட்டும் தயாரிப்பதோடல்லாமல், நல்ல திரைப்பட முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து வருகிறது. தரமான நல்ல படங்களை தொடர்ந்து தயாரித்தும், சில நல்ல கருத்துள்ள படங்களை கண்டறிந்தும், அவற்றை வாங்கி வெளியிட்டும் மாறுபட்ட சினிமா அனுபவங்களுக்கு தங்களது ஆதரவை தொடர்ந்து தந்து வருகிறது. அந்த வகையில் மிக நல்ல படமாக இயக்குநர் ஹலிதா சமீம் இயக்கியுள்ள “சில்லுக்கருப்பட்டி” படத்தின் மீதான ஈர்ப்பில் அப்படத்தின் உரிமையை பெற்றுள்ளார் 2D Entertainment நிறுவன CEO ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன். சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சிக்னேச்சர் வெளியீடு ( Sakthi film factory signature release ) என்பது மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட, சினிமாவை பெரும் காதலுடன் அணுகும் படங்களை மட்டும், மிக கவனமுடன் தேந்தெடுத்து, பெருமளவு ரசிகர்களுக்கு, பிரத்யேகமாக இந்த அடை யாளத்துடன் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சி ஆகும். இந்த அடையாளத்துடன் வெளியாகும் முதல் திரைப்படம் “சில்லுக்கருப்பட்டி” என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை மிகச் சரியான தேதியில் மிகப்பிரமாண்ட வெளியீடாக வெளியிட திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம் என்கிறார் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிர்வாகி சக்திவேலன். இயக்குநர் ஹலிதா சமீம் கூறியதாவது… நான் மிகப்பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறேன் “சில்லுக்கருப்பட்டி” படத்தினை பார்த்த மாத்திரத்தில் சூர்யா ஜோதிகா இருவரும் மனதார எங்களது குழுவை பாராட்டினார்கள். மேலும் உடனடியாக இப்படத்தின் உரிமையை வாங்குவதாக அறிவித்தார்கள் இதை விட மகிழ்ச்சி தரும் விசயம் எங்களுக்கு ஏதுமில்லை என்றார். “சில்லுக்கருப்பட்டி” நகரப் பின்னணியில் நான்கு அழகான குறுங்கதைகளை கூறும் ஆந்தாலஜி வகை திரைப்படமாகும். Divine Productions சார்பில் வெங்கடேஷ் வேலினீனி இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். சமுத்திரகனி, சுனைனா, லீலா சாம்சன். சாரா அர்ஜீன், மணிகண்டன் K, நிவேதிதா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். 0 SHARES ShareTweet Tags: 2D Entertainment sakthifilms Sillukarupatti surya Continue Reading Previous ஆசியாவின் பெரிய கிரவுட் ஃபண்டிங் படம் -‘ஹே மணி கம் டுடே Go டுமாரோ’! Next தர்பார் – டிரைலர்! More Stories Exclusive Running News சினிமா செய்திகள் விமர்சனம் ஆன்டி இந்தியன் விமர்சனம் 16 hours ago aanthai Exclusive Running News சினிமா செய்திகள் ‘மட்டி’ என்பது துணிச்சலும் சாகசமும் கலந்த கார் பந்தயத்தை மையப்படுத்திய சினிமா! 18 hours ago aanthai Exclusive Running News சினிமா செய்திகள் “ஆனந்தம் விளையாடும் வீடு” திரைப்பட இசை வெளியீட்டு விழா! 2 days ago aanthai Latest Popular Soldranga Exclusive Running News சினிமா செய்திகள் விமர்சனம் ஆன்டி இந்தியன் விமர்சனம் 16 hours ago aanthai Exclusive Running News சினிமா செய்திகள் ‘மட்டி’ என்பது துணிச்சலும் சாகசமும் கலந்த கார் பந்தயத்தை மையப்படுத்திய சினிமா! 18 hours ago aanthai Exclusive Slider இந்தியா முப்படைகளின் தலைமைத் தளபதி, அவரது மனைவி உள்ளிட்டோர் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தி உயிரிழப்பு! 19 hours ago aanthai Exclusive Running News சினிமா செய்திகள் “ஆனந்தம் விளையாடும் வீடு” திரைப்பட இசை வெளியீட்டு விழா! 2 days ago aanthai Exclusive Slider இந்தியா பார்லிமெண்டுக்கு ஆப்செண்ட் ஆகும் பாஜக எம்.பி.க்களுக்கு மோடி எச்சரிக்கை! 2 days ago aanthai Running News எச்சரிக்கை ஹெல்த் கேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்!
கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு பக்க வரிசைப்படுத்தல் | மறுப்பு பதிப்புரிமை © 2012-2021 | கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு