text
stringlengths
1
17.4k
பாக். கவர்னர் கொலை திட்டமிட்ட சதியா?
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில கவர்னர் சல்மான் தசீர், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பழமைவாத முஸ்லிம் சட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக இவரை பாதுகாவலர் மாலிக் என்பவர் சுட்டுக்கொன்றார். கவர்னர் சல்மான் தசீரின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அதிபரின் அரசியல் ஆலோசகர் பைசல் ரசா அபிதி, ÔÔபாதுகாவலர் மாலிக் தீவிரவாத கொள்கையில் நம்பிக்கையுள்ளவர் என்பது என பஞ்சாப் போலீசுக்கு ஏற்கனவே தெரியும். அவரை வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பு பணிக்கு அனுப்ப வேண்டாம் என 5 மாதத்துக்கு முன்பே தடை விதிக்கப்பட்டிருந்தது. அப்படியிருந்தும் கவர்னரின் பாதுகாப்பு பணிக்கு மாலிக்கை அலட்சியமாக நியமித்துள்ளது பஞ்சாப் போலீஸ்ÕÕ என கூறியுள்ளார்.கைது செய்யப்பட்ட மாலிக், இஸ்லாமாபாத் கோர்ட்டுக்கு நேற்று கொண்டு வரப்பட்டார். அவருக்கு வக்கீல்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். ஒருவர் மாலிக்குக்கு மாலை அணிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கவர்னர் கொலையில் மிகப் பெரிய சதி இருக்கலாம் என கருதிய விசாரணை அதிகாரிகள், மாலிக்குடன் பணியாற்றிய 36 போலீசார் உள்பட 40 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
முகத்தை ஸ்கேன் பண்ணினா நடிகை வயசும் ‘நச்’னு தெரியும்
முகத்தில் உள்ள சுருக்கங்களை வைத்து வயதை அடையாளம் காண முடியும் என்பது எல்லாருக்கும் தெரியும். இது ஆண்,  பெண் இருபாலருக்கும் பொருந்தும். இந்த வழியில் வயதை தோராயமாகத்தான் சொல்ல முடியுமாம். ஆனால், முக எலும்புகளை  கொண்டு வயதை துல்லியமாக கணித்துக் கூற முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். வயதுக்கு ஏற்ப எலும்புகளும் மாற்றம் பெறும் என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள், முக எலும்புகளும் இதற்கு விதிவிலக்கல்ல என்கி ன்றனர். ரோசெஸ்டர் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மூப்பு குறித்து மேற்கொண்ட ஆராய்ச்சியில் இந்த தகவல்  வெளியாகி உள்ளது. முகத்தில் உள்ள சுருக்கங்கள் வயதுக்கேற்ப மாற்றத்தை தோற்றுவிக்கும். வயது ஏறும்போது எலும்புகள் பலவீனமாவதும் இயல்பு.  எலும்புகளில் ஏற்படும் மாறுபாடுகளை கொண்டே உடல் மற்றும் முகத்தில் உள்ள தோல் சுருக்கம் ஏற்படும். முதலில் மெதுவாகவே  தொடங்கும் இந்த செயல்பாடு வயது கூடகூட அதிக மாறுபாடு அடையும். இதனால் முக சுருக்கங்களும் அதிகரிக்கும். கம்ப்யூடட் டோமோகிராபி (சிடி) என்ற அதிநவீன ஸ்கேன் மூலம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதில் இது உறுதிப்படுத்தப்பட்டுள் ளது. வயது வித்தியாசமின்றி ஆண், பெண் ஏராளமானோர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். முக மாற்றம் என்பது வயதை  ஒட்டியதே என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சி, தக்க மருத்துவ ஆலோசனைகள் மூலம்  இத்தகைய பாதிப்பை தள்ளிப்போட முடியும் என்பது ஆராய்ச்சியாளர்கள் தரும் ஆறுதல் வார்த்தைகள்.
யு.பி.எஸ்.சி நடத்தும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு படை தேர்வு
இந்தியன் மிலிட்டரி அகடமி: திருமணமாகாத ஆண்கள் ஜன.2., 1988க்கு முன்னதாகவோ, ஜன.1., 1993க்கு பின்னர் பிறந்தவராகவோ இருக்கக் கூடாது. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டம். இந்தியன் நேவல் அகடமி: திருமணமாகாத ஆண்கள் ஜன.2, 1990க்கு முன்னதாகவோ, ஜன.1 1993க்கு பின்னரோ பிறந்தவராக இருக்கக் கூடாது. ஆனால் என்சிசி நேவல் அணியில் 'சி' சான்றிதழ் பெற்றவர்கள் ஜன.2., 1988ல் பிறந்தவராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.கல்வித்தகுதி: பி.இ., பட்டம்.ஏர்போர்ஸ் அகடமி: திருமணமாகாத ஆண்கள் ஜன.2., 1989க்கு முன்பும், ஜன.1.,1993க்கு பின்பும் பிறந்தவர்களாக இருக்கக் கூடாது. பிளஸ் 2 வில் இயற்பியல், கணிதப் பாடங்களுடன் பயின்று ஏதேனும் ஒரு டிகிரி அல்லது பி.இ. பட்டம். ஆபீசர்ஸ் டிரெய்னி அகடமி:  திருமணமான அல்லது திருமணமாகாத ஆண்கள் விண்ணப்பிக்கலாம். ஜன.2.,1987க்கு முன்னதாகவோ, ஜன.1 1993க்கு பின்னரோ பிறந்தவராகவோ இருக்கக் கூடாது. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டம்.ஆபீசர்ஸ் டிரெய்னி அகடமி (பெண்கள்): திருமணமாகாத பெண்கள், குழந்தையில்லாத, மறுமணம் செய்யாத விதவைகள், குழந்தையில்லாத விவாகரத்தான மறுமணம் செய்யாத பெண்கள் விண்ணப்பிக்கலாம். வயது :  ஜன.2.,1987க்கு முன்னரோ அல்லது ஜன.1, 1993க்கு பின்னரோ பிறந்தவர்களாக இருக்கக் கூடாது. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டம்.விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் அல்லது தபாலில் விண்ணப்பிக்கலாம். தபாலில் விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் தலைமை தபால் நிலையங்களில் விற்கப்படும் யுபிஎஸ்சி பொது விண்ணப்பத்தை தீ20 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் www.upsconline.nic.in இணையதளத்தில் மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தேர்வுக்கட்டணம்: ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் கட்டணம் ரூ.50ஐ ஸ்டேட்பாங்கின் ஏதேனும் ஒரு கிளையில் ரொக்கமாக செலுத்தலாம்.தபாலில் விண்ணப்பிப்பவர்கள் தீ100ஐ சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் ஃபீ ஸ்டாம்ப் மூலம் செலுத்தலாம். எஸ்சி., எஸ்டி.,யினர் மற்றும் பெண்களுக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது.தபாலில் விண்ணப்பிப்பவர்கள்: The Controller of Examinations, Union Public Service Commission, Dholpur House, Shahjahan Road, New Delhi 110069 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.ஆன்லைனில் மற்றும் தபாலில் விண்ணப்பிக்க கடைசிநாள்: 25.10.2010.மேலும் விவரங்களுக்கு செப்.25& அக்.1., தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் பேப்பரை பார்க்கவும்.
யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் எம்பிஏ படித்தவர்களுக்கு வாய்ப்பு
250 வயது: 21-30.கல்வித்தகுதி: 60 சதவீத தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பட்டம்.  (இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 55 சதவீதம் போதுமானது.) இத்துடன் எம்.பி.ஏ., அல்லது நிர்வாக பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம்: ரூ.300. யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் எந்தக் கிளை மூலமும் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம்.எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் குழுவிவாதம் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 7.10.2010. எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 5.12.2010.மேலும் விவரங்களுக்கு www.unionbankofindia.nic.in  இணையதளத்தை பார்க்கவும்.
இஎஸ்ஐ நிறுவனத்தில் கிளார்க், ஸ்டெனோகிராபர் வேலை
மொத்த இடங்கள்: 3 கல்வித்தகுதி: பிளஸ் 2 அல்லது அதற்கு சமமான தகுதி. அத்துடன் இந்தி அல்லது ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் டைப் செய்யவும், கம்ப்யூட்டர் அறிவும் பெற்றிருக்க வேண்டும்.2. லோயர் டிவிஷன் கிளார்க்: மொத்த இடங்கள்: 39. இதில் உள் ஒதுக்கீடாக முன்னாள் ராணுவத்தினருக்கு 3 இடங்களும், மாற்றுத் திறனாளிகளுக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. கல்வித்தகுதி: பிளஸ் 2 அல்லது அதற்கு சமமான தகுதி. அத்துடன் நிமிடத்திற்கு இந்தியில் 35 வார்த்தைகள் அல்லது ஆங்கிலத்தில் 40 வார்த்தைகளும் டைப் செய்ய வேண்டும். மேலும் கம்ப்யூட்டர் அறிவும் பெற்றிருக்க வேண்டும்.வயது: 18 -27. ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தளர்வு உண்டு.விண்ணப்ப கட்டணம்: ரூ.225ஐ இஎஸ்ஐ பண்ட் அக்கவுன்ட் நம்பர் 1 என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் டிடி எடுத்து அனுப்ப வேண்டும். பெண்கள், எஸ்சி.,மற்றும் எஸ்டி பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் இஎஸ்ஐ ஊழியர்கள் ஆகியோர் ரூ.25 செலுத்தினால் போதும். எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பிரின்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சான்றிதழ்களின் நகல்கள், டிடி ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.முகவரி: The  Additional Commissioner, ESI Corporation, Regional Office, 143, Sterling Road, Nungambakkam, Chennai600034.ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.10.2010. பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி தேதி: 20.10.2010.மேலும் விவரங்களுக்கு www.esi chennai.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.
மத்திய ரிசர்வ் படையில் 376 ஏஎஸ்ஐ, ஹெட் கான்ஸ்டபிள் பிளஸ் 2 மற்றும் சுருக்கெழுத்து படித்தவர்களுக்கு வாய்ப்பு
273 (பொது-18, ஓபிசி-22, எஸ்சி-8, எஸ்டி-120, டிபார்ட் மென்டல்-74, முன்னாள் ராணுத் தினர்-31). சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800. தகுதி: பிளஸ் 2 வுடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் வேகம் பெற்றிருக்க வேண்டும். 10 நிமிடங்கள் தேர்வு நடைபெறும். 2. ஹெட் காஸ்டபிள் (மினிஸ்டரியல்): மொத்த இடங்கள்: 103 (பொது-38, ஓபிசி-27, எஸ்சி-22, எஸ்டி-16) சம்ப ளம்: ரூ.5,200- ரூ.20.200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.தகுதி: பிளஸ் 2 தகுதியுடன் கம்ப் யூட்டரில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். குருப் ‘டி’ பிரிவில் பணிபுரிபவர்களுக் கும், கான்ஸ்டபிள்களும் இப் பணிக்கு விண்ணபிக் கலாம்.உடற்தகுதி: உயரம் 163 செ.மீ., (எஸ்சி.,எஸ்டி பிரி வினருக்கு 162.5 செ.மீ). மார்பளவு 77-82 செ.மீ (எஸ்சி.,எஸ்டியின ருக்கு 78-81 செ.மீ). வயது: 16.11.2010 அன்று 18-25 வயதிற்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரி வினருக்கு வயதுவரம் பில் சலுகை உண்டு. தேர்வுக்கட்டணம்: ரூ.30/- இதனை DIGP, Group Centre, CRPF, Avadi, Chennai 600065 மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்குஷ்ஷ்ஷ்.நீக்ஷீஜீயீ.ஸீவீநீ.வீஸீஇணையதளத்தை பார்க்கவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: DIGP, Group Centre, CRPF, Avadi, Tamilnadu 600065.விண்ணப்ப கடைசி நாள்: 16.11.2010.
கொங்கன் ரயில்வே கழகத்தில் : டிப்ளமோ/பி.காம்/பி.இ.படித்தவர்கள்தேவை
ரூ.29,539. கல்வித்தகுதி: சிவில் பிரிவில் 55 சதவீத தேர்ச்சியுடன் பி.இ மற்றும் 3 வருட பணிஅனுபவம்.2. செக்ஷன் இன்ஜினியர்-10. சம்பளம்: ரூ.24,275. கல்வித்தகுதி: சிவில் பிரிவில் 55 சதவீத தேர்ச்சியுடன் பி.இ மற்றும் ஒரு வருட முன் அனுபவம்.3. ஆபீஸ் அசிஸ்டென்ட்-3. சம்ப ளம்: ரூ.17,216. கல்வித்தகுதி: 10+2+3 கல்வி முறையில் 50 சத தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு டிகிரி. மற்றும் அலுவலக பணியில் 2 வருட முன் அனுபவம்.4. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்-5. சம்பளம்: ரூ19,431. கல்வித்தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் 55 சதவீத தேர்ச்சியுடன் டிப்ளமோ. அத்துடன் ஆட்டோகாட், சிவில் பிரிவில் 2 வருட அனுபவம்.5. அக்கவுன்ட்ஸ் அசிஸ்டென்ட்- 5. சம்பளம்: ரூ.19,431. கல்வித்தகுதி: 55 சதவீத தேர்ச்சியுடன் பி.காம் அல்லது எம்.காம்.,. அத்துடன் கம்ப்யூட்டர் சார்ந்த அக்கவுன்ட் பணியில் 3 வருட பணிஅனுபவம்.பணிஒப்பந்த காலம் 2 ஆண்டுகள். பணி திறனை பொறுத்து ஒப்பந்த காலம் 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப் படலாம். வயது: 1.1.1975 அன்றோ அல்லது அதற்கு பின்னர் பிறந்தவர்கள் விண் ணப்பிக்கலாம். மத்திய அரசு விதி முறைகளின்படி வயது வரம்பு தளர்த் தப்படும். விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்களுக்கு www.konkan railway.recruits என்ற இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Chief Personnel Officer, Administration, Konkan Railway Corporation Ltd., Project Division, 5th Floor, Belapur Bhavan, Plot no.6, Sector 11, CBD Belapur, Navi, Mumbai 400 614.விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.11.2010.
பி.இ., பி.டெக்., படித்தவர்கள் கடற்படை அதிகாரியாகலாம்
19லிருந்து 25க்குள் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 2.7.1986க்கும் 1.1.1992க்கும் இடையில் (இரண்டு தேதிகள் உட்பட) பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ/பி.டெக்  அல்லது எலக்ட்ரானிக்ஸ்/ இயற்பியல் பிரிவில் முதுகலை பட்டம். 2011 ஜனவரியிலிருந்து ஜூனிற்கும் தேர்வு நடத்தப் படும். தேர்வு மையங்கள்: பெங்களூர், போபால், கோவை. தேர்வு இரு கட்டங்களாக நடை பெறும்.  அனைத்துத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெறு பவர்கள் அடங்கிய மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு காலியிடங்களுக்கு ஏற்ப பயிற்சிக்கு அனுப்பப்படுவர். பயிற்சி 2011 ஜூலையில் தொடங்கும். பயிற்சிக்குப் பின்SubLieutenant அந்தஸ்தில் பணியில் அமர்த் தப்படுவர். மாதிரி விண்ணப்பபடிவம் மற்றும் விண்ணப் பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.nausenabharti.nic.in இணையதளத் தையோ அல்லது எம்ப்ளாய்மென்ட் நியூஸ் அக்.23-29 இதழையோ பார்க்கவும்.விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: POST BAG NO:04, R.K.PURAM (Main), NEWDELHI 110 066.விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.11.2010.
டிஎன்பிஎஸ்சி நடத்தும் புள்ளியியல் உதவியாளர் தேர்வு
மொத்த இடங்கள்-12. கல்வித்தகுதி: புள்ளியியலை துணைப்பாடமாக கொண்டு புள்ளியியல் அல்லது கணிதத்தில் முதுநிலை பட்டம்.   2. வட்டார நல புள்ளியியலாளர்: மொத்த இடங்கள்-49. கல்வித்தகுதி: கணிதம் அல்லது புள்ளியியல் பாடத்தில் இரண்டாம் நிலை தேர்ச்சியுடன் புள்ளியியலை துணைப்பாடமாகக் கொண்டு ஏதேனும் ஒரு டிகிரி. புள்ளியியல் துறையில் 3 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.3. சிறப்பு உதவியாளர்: மொத்த இடங்கள்:4. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழிலில் உயர்நிலை தேர்ச்சி.வயது: 1.7.2010ன்படி 18 வயதிலிருந்து 30க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பில் சலுகை உண்டு. விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.தேர்வுக்கட்டணம்: ரூ.100/- டிஎன்பிஎஸ்சியால் பட்டியிலிடப்பட்ட தபால் அலுவலகங்களில் ரூ.100 செலுத்தி அதற்கான ரசீதை சேவைக் கட்டணமாக ரூ.12 செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த ரசீதை விண்ணப்பத்தின் குறிப்பிடப்பட்ட பகுதியில் ஒட்ட வேண்டும்.விண்ணப்பங்களை அந்தந்த தலைமை தபால் அலுவலகங்களில் ரூ.30 செலுத்தியோ அல்லது சென்னை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நேரடியாகவோ பெற்றுக் கொள்ளலாம்.  விண்ணப்பதாரர்கள் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.30, தேர்வுக்கட்டணமாக ரூ.100, மொத்தம் ரூ.130 ஐ தபால் அலுவலகத்தில் செலுத்தி அதன் ரசீதை விண்ணப்பத்தின் பிரின்ட் அவுட்டுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களுடன் அனுப்ப வேண்டிய முகவரி:The Controller of Examinations, Office of the Tamil Nadu Public Service Commis sion, No.1 Greams Road, Chennai 600006.விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.7. புள்ளியியல் பணிக்கான தேர்வுகள் நடைபெறும் நாள்: பிப்.26,27. சிறப்பு உதவியாளர் பணிக்கான தேர்வு நடைபெறும் நாள்: பிப்.20.மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in  இணையதளத்தை பார்க்கவும்.
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ரயில்வேயில் வேலை
மொத்த இடங்கள்: 800. சம்பளவிகிதம்: ரூ.5,200- ரூ.20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800. வயது: 1.1.2011 அன்று பொது பிரிவினருக்கு 30 வயதிற்குள்ளும், ஓபிசியினருக்கு 33 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். மிலிட்டரி சர்வீஸ் தளர்வும் வழங்கப்படும்.2. கலாசி (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிக்னல் மற்றும் டெலிகாம்): மொத்த இடங்கள்:179.விண்ணப்ப கட்டணம் கிடையாது. எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, உடற்தகுதித்தேர்வு இல்லை. மாதிரி விண்ணப்ப படிவம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.rrcer.com இணையதளத்தை பார்க்கவும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:Assistant Personnel Officer (Recruitment), Railway Recruitment Cell, GM s Annex Building, South East Central Railway, Bilaspur 495004. Chhattisgarh.விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள்: 29.11.2010. மேலும் விவரங்களுக்கு அக்.30-நவ.5 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸைப் பார்க்கவும்.
தேசிய நீர்மின்கழகத்தில் இன்ஜினியர் பணி டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு
12 ( பொது-9, எஸ்சி-3). சம்பளம்: ரூ.7,900- ரூ.13,700.தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் கில் 60 சதவீத  தேர்ச்சியுடன் டிப்ளமோ. எஸ்சி/எஸ்டி/மாற்றுத் திறனாளிகளுக்கு 50 சதவீதம் போதுமானது.2. ஜூனியர் இன்ஜினியர் (மெக்கா னிக்கல்): 8 (பொது-5, எஸ்சி-1, எஸ்டி-1, ஓபிசி-1). தகுதி: மெக்கா னிக்கல் இன்ஜினியரிங்கில் 60 சதவீத தேர்ச்சியுடன் டிப்ளமோ. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு 50 சதவீத தேர்ச்சி போதுமானது.வயது: இரு பணிகளுக் கும் 1.12.2010 அன்று 30க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு. எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படை யில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்ப கட்டணம்: ரூ.250/- இதை‘‘NHDC Ltd’’என்ற பெயரில் போபாலில் மாற்றத்தக்க வகையில் கிராஸ் செய்யப்பட்ட டிடியாக எடுக்க வேண்டும். எஸ்சி.,எஸ்டியினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.nhdcindia.com என்ற இணைய தளத்தை பார்க்கவும். பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ்களுடன் அனுப்ப வேண்டிய முகவரி:The Senior Manager (HR)-Rectt., NHDC Ltd., NHDC Parisar, Shamia Hills, BHOPAL (M.P). Pin: 462013.விண்ணப்பிக்க கடைசி நாள்: 5.1.2011.
புரொபஷனரி ஆபீசர் காலியிடங்கள்
55 சதவீத தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பட்டம். கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன். வயது: 1.5.2011 அன்று 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, குழு விவாதம், மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். பெங்களூர் அருகே மணிபால் அகாடமியில்  2011 மே முதல் 14 மாதங்களுக்கு உதவித் தொகையுடன் கூடிய பயிற்சியளிக்கப்படும். பயிற்சிக்குப் பின்னர் உதவி மேலாளராக பணி அமர்த்தப்படுவர். இதற்கான தேர்வுகள் 2011 ஜனவரி, பிப்ரவரியில் நடைபெறும்.ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 5.1.2011.மேலும் விவரங்களுக்கு www.icici.nic.in. இணையதளத்தை பார்க்கவும்.
இந்தோ-திபெத் எல்லைக்காவல் படையில் 416 போலீஸ் இடங்கள்
மொத்த இடங்கள்: 123 (பொது-63, ஓபிசி-33, எஸ்சி-18, எஸ்டி-9).2. கான்ஸ்டபிள் (வாஷர்மேன்): 49 (பொது-26, ஓபிசி-13, எஸ்சி-7, எஸ்டி-3).3. கான்ஸ்டபிள் (பார்பர்): 41 (பொது-22, ஓபிசி-10, எஸ்சி-6, எஸ்டி-3).4. கான்ஸ்டபிள் (வாட்டர் கேரியர்): 86 (பொது-45, ஓபிசி-23, எஸ்சி-12, எஸ்டி-6).5. கான்ஸ்டபிள் (சபை கரம்சாரி): 117 (பொது-61, ஓபிசி-31, எஸ்சி-17, எஸ்டி-8).கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி. வயது: 12.1.2011 அன்று 18 லிருந்து 25க்குள். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2000.விண்ணப்ப கட்டணம்: ரூ.50ஐ IG Northern Frontier, ITBP என்ற பெயரில் ஸ்டேட்பாங்கின் ஏதேனும் ஒரு கிளையில் டேராடூனில் மாற்றத்தக்க வகையில் டிடி எடுக்க வேண்டும்.நேரடி ஆள் சேர்ப்பு நடைபெறும் நாள்: 16.3.2011. காலை 8 மணி.  உடல்திறன், எழுத்து, நேர்காணல், மருத்துவசோதனை அடிப்படையில் விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்படுவர்.மேற்கண்ட தேதியில் நேரடி ஆள்சேர்ப்புக்கு விண்ணப்பதாரர் அணுக வேண்டிய மையம்:Group Centre CRPF, Jai Jawahar Nagar, Hakimpet, Ranga Reddy Dt., Andhra Pradesh- 500075.
மத்திய அரசுப் பணியில் 2086 பணியிடங்கள்: 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு
196 (பொது-102, ஓபிசி-57, எஸ்சி-32, எஸ்டி-5). வயது: 31.12.2010 அன்று 18 லிருந்து 25க் குள். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை உண்டு.சம்பளம்: ரூ.5,200-ரூ.20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி.விண்ணப்ப கட்டணம்: ரூ.100/- தபாலில் விண்ணப்பிப்பவர்கள் இதை சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் ஃபீ ஸ்டாம்ப் மூலம் செலுத்த வேண்டும். ஆன்லைனில் விண் ணப்பிப்பவர்கள் இணையதளத் தில் செலானை பதிவிறக்கம் செய்து ஏதேனும் ஒரு ஸ்டேட் வங்கியில் செலுத்தலாம். எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 27.02.2011. தமிழ்நாட்டில் கோவை, சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.மாதிரி விண்ணப்பம் மற்றும் விவரங்களுக்கு www.sscsr.gov.in இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: Regional Director (SR), Staff Selection Commission, EVK Sampath Building, 2nd Floor, College Road, Chennai. விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.12.2010. ஒன்றுக்கு மேற்பட்ட மாநில காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் தனித்தனி விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
260 ரன் இலக்காக இருந்தால் ஜெயித்திருப்போம்: டோனி
கேப்டவுனில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டி யில் இந்திய அணிக்கு 340 ரன்களை வெற்றி இலக்காக தென் ஆப்ரிக்கா நிர்ணயித்தது. கடின இலக்கை நோக்கி ஆடிய இந்தியா நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. இத னால் போட்டி டிராவில் முடிந்தது. இரு அணி களும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் கோப்பை பகிர்ந்து வழங்கப்பட்டது.போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் டோனி கூறுகையில், 2வது இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி  130 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்த போது எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் அதன் பின்னர் விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்த தவறிவிட்டோம். காலிஸ் அருமையாக ஆடி ஆட்டத்தை எங்கள் கையில் இருந்து பறித்துவிட்டார். அவரை மட்டும் அல்லாமல் பின்கள வீரர்களையும் நாங்கள் கட்டுப்படுத்த தவறிவிட்டோம். 250 முதல் 260 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தால் ஜெயிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். 340 ரன்கள் என்பது கடைசி நாளில் கடினமாக இலக்கு. இந்திய பந்து வீச்சாளர்கள் பழைய பந்திலும் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்த தொடரில் முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்த நிலையில் அடுத்து வெற்றி பெற்றோம். ஒட்டு மொத்தத்தில் டெஸ்ட் தொடர் எங்களுக்கு சிறப்பாக அமைந்தது.சேவாக்கின் மோசமான பார்மினால் அணியின் வாய்ப்புகள் பறி போனதா? என்ற கேள்விக்கு டோனி பதில் அளிக்கையில், எல்லோருமே சிறப்பாக தான் ஆடவேண்டும் என நினைப்பார்கள். சேவாக் சிறப்பாக தான் ஆடினார். ஆனால் எல்லா நேரமும் வீரர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்பதற்கு கியாரண்டி கொடுக்க முடியாது என்றார்.
ஒருநாள் போட்டி தொடர் தெ.ஆ. அணியில் காலிஸ் நீக்கம் பாக். வம்சாவளி வீரருக்கு வாய்ப்பு
இந்தியா&தென் ஆப்ரிக்க அணிகள் இடையேயான டெஸ்ட் தொடர் 1&1 என்ற கணக்கில் சமனில் முடிந் தது. தொடர்ந்து இரு அணிகளும் ஒரு 20&20 மற்றும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் மோதுகிறது. 20&20 ஆட்டம் வரும் 9ந்தேதி நடக்கிறது. ஒருநாள் போட்டி தொடர் 12ந்தேதி துவங்குகிறது. இந்நிலையில் ஒருநாள் போட்டி தொடருக்கான தென் ஆப்ரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்த காலிஸ் நீக்கப்பட்டுள் ளார். மேலும் புதுமுக வீரர்களாக பாகிஸ்தான் வம்சாவளியான சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தகீர், ஆல்ரவுண்டர் பா டூ பிளசிஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அணி விவரம்:சுமித்(கேப்டன்), அம்லா, டிவில்லியர்ஸ், டூம்னி, பா டூ பிளசிஸ், ராபின் பீட்டர்சன், போத்தா, காலின் இங்ராம், டேவிட் மில்லர், மோர்னே மோர்கல், பார்னல், ஸ்டெய்ன், இம்ரான் தகீர், சோட் சோபி.
நெல்லை இஎஸ்ஐ ஆஸ்பத்திரியில் டெக்னீஷியன் பணி
The Medical Superin tendent, ESI Hospital, Tirunelveli Camp Office, ESI Hospital Cum-ODC, Ashok Pillar Road, K.K. Nagar, Chennai- 600078.விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.1.2011
20&20 கேப்டன் பதவி கிளார்க் ‘கல்தா’
ஆஸி. அணியின் கேப்டன் ரிக்கி பான்டிங்கின் பதவி கேள்விக்குறியாக உள்ளது. காயம் காரணமாக தற்போது ஓய்வில் உள்ள பான்டிங் அணிக்கு மீண்டும் திரும்பும் போது கேப்டனாக திரும்புவாரா என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் 20&20 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் கிளார்க் அந்த பதவியில் இருந்து விலகுவதாக இன்று திடீரென அறிவித்தார். ஒரு நாள் போட்டியில் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். 20&20 அணிக்கு கேமரூன் ஒயிட் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
ரயில்வேயில் 11, 439 காலியிடம்
1.1.2010ன்படி 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ அல்லது அதற்கு சமமான தேர்ச்சி. தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.வயது: 1.1.2011ன்படி 18 வயதிலிருந்து 33க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுத் தளர்வு உண்டு. விண்ணப்பதாரர்கள் உடற்தகுதித் தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.விண்ணப்ப கட்டணம்: ரூ.40/ Assistant Personnel Officer (Recruitment), Railway Recruitment Cell, New Delhi என்ற பெயரில் டி.டி எடுக்க வேண்டும். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு  www.nr.indianrailways.gov.in இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.2.2011.
சானியா ஜோடி தோல்வி
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடந்து வரும் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் சானியா (இந்தியா)& வோரகோவா(செக்குடியரசு) ஜோடி 1&6, 1&6 என்ற நேர் செட்டில் பெஸ்கி (செக்குடியரசு)& செர்போட்னிக் (சுலோவேனியா) ஜோடியிடம் தோல்வி அடைந்தது. ஒற்றையர் பிரிவு காலிறுதியில் முன்னணி வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா 2&6, 5&7 என்ற நேர் செட்டில் ஹங்கேரியின் கிரீட்டாவிடம் தோல்வியை தழுவினார்.
முதல் டெஸ்ட் துவக்கம்: நியூசி.க்கு 6 விக்கெட் காலி
பாகிஸ்தான்& நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை ஹாமில்டனில் துவங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது.இதையடுத்து நியூசிலாந்து பேட்டிங்கை துவக்கியது. மெக்கிங்தோஸ் 5, மெக்குல்லம் 56, குப்தில் 50, ரோஸ் டெய்லர் 6, ரைடர் 22, யங்க் 14 ஆகிய ரன்களில் ஆட்டமிழந்தனர். 64 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் நியூசிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன் எடுத்திருந்தது. பாக். தரப்பில் அப்துர் ரகுமான் 3 விக்கெட் சாய்த்தார்.
ஆஸி. இன்னிங்ஸ் தோல்வி தொடரையும் இழந்தது
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்தது. இதன் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 280 ரன் எடுத்தது. இங்கிலாந்து 644 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 2வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய 4வது நாள் ஆட்டம் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. சுமித் 24, சிடில் 17 ரன்னுடன் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். சிடில் 43, ஹில்பன்ஹாஸ் 7, பீர் 7 ரன்களில் ஆட்டமிழக்க முடிவில் ஆஸி. அணி 281 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சுமித் 54 ரன்னுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல்இருந்தார். இதனால் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே 2 டெஸ்டில் வெற்றி பெற்றிருந்ததால் தொடரை 3&1 என்ற கணக்கில் வென்று இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது. ஆஸி. மண்ணில் இங்கிலாந்து அணி 24 வருடங்களுக்கு பிறகு தற்போது தான் ஆஷஸ் கோப்பையை வென்றுள்ளது.
பி.எட். படித்தவர்களுக்கு விமானப்படையில் வேலை
சீனியர் நான்கமிஷன்டு ஆபீசர். கல்வித்தகுதி: கலை/வணிகவியல்/அறிவியல் பாடங்களில் டிகிரியுடன் பி.எட்., அல்லது 2 வருட ஆசிரியர் பணி அனுபவம். டிகிரி மற்றும் பி.எட்டில் 50 சதவீத தேர்ச்சி. அல்லது எம்.ஏ., ஆங்கிலம்/எம்எஸ்சி (கணிதம், இயற்பியல், கம்ப்யூட்டர் அறிவியல்)/ எம்சிஏ தகுதியுடன் பி.எட்., அல்லது 2 வருட ஆசிரியராக பணியாற்றிய அனுபவம்.வயது: டிகிரியுடன் பி.எட்., தகுதி யுடையவர்கள் 1.1.1987க்கும் 31.5.1994க் கும் இடைப்பட்ட நாளில் பிறந்தவராக இருக்க வேண்டும் (இரு தேதிகள் உட்பட). அதிக பட்ச வயது வரம்பு:25. முதுநிலை படிப்புடன் பி.எட். தகுதி யுடையவர்கள் 1.1.1984க்கும் 31.5.1994க் கும் இடைப்பட்ட தேதியில் பிறந்தவராக இருக்க வேண்டும். ( இரு தேதிகள் உட்பட). அதிக பட்ச வயது வரம்பு: 28.உயரம்: 152.5 செ.மீ., 5 செ.மீ., மார்பு விரியும் தன்மை கொண்டவராக இருக்க வேண்டும். உயரத்திற்கும், வயதிற்கும் ஏற்ற எடை.விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, உடற்தகுதித்தேர்வு, நேர்முகத்தேர்வு, மருத்துவ சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வு 2011 மார்ச்சில் பெங்களூர், பாரக்பூர், மும்பை, போபால் ஆகிய ஊர்களில் நடைபெறும்.மாதிரி விண்ணப்பத்தை www.carrerairforce.nic.in இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள லாம்.விண்ணப்பத்தில் ஒட்டும் பாஸ் போர்ட் அளவு படம் டிச.8,2010க்கு முன்ன தாக எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். ஒட்டப்பட்ட போட்டோவைப் போன்று மேலும் 2 நகல்களை வைத்து பின் செய்ய வேண்டும். விண்ணப்பத்துடன் வயது வரம்பு உறுதிப்படுத்த 10ம் வகுப்பு சான்றிதழின் அட்டெஸ்ட் நகல், கல்வித்தகுதி சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல்களின் அட்டெஸ்ட் நகல்கள், ஆசிரியர் பணி அனுபவம் உறுதிப்படுத்தும் சான்றிதழ் களின் அட்டெஸ்ட் நகல், சுயமுகவரியிட்ட 24 செ.மீ நீளம், 10 செ.மீ., அகலம் உள்ள வெள்ளை நிற விண்ணப்ப உறை ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.விண்ணப்பத்தை சாதாரண தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி:President, Central Airman Selection Board, Post Box No.11807, New Delhi- 110 010. விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள்: 10.1.2011.
பாண்டியன் கிராம வங்கியில் 248 ஆபீசர் பணியிடங்கள்
மொத்த இடங்கள்: 138 (பொது74, ஓபிசி37, எஸ்சி26, எஸ்டி1). வயது: 18க்கு மேல்   28க்குள். கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டம். கம்ப்யூட்டர் திறன் விரும்பத் தக்கது.2. ஆபீசர்நிலை (1): 84 (பொது41, ஓபிசி21, எஸ்சி11, எஸ்டி11). வயது: 18க்கு மேல் 28க்குள். கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டம். வேளாண்மை, தோட்டக் கலை, வனவியல், கால்நடை அறிவியல், கூட்டுறவு, விவசாய சந்தையியல், தகவல் தொடர்பியல், மேலாண்மை, சட்டம், பொருளியல் கணக்கியல் பட்டங்களுக்கு முன்னுரிமை.3. ஆபீசர் நிலை (2): 24 (பொது24). வயது: 21க்கு மேல் 32க்குள். கல்வித்தகுதி:  எலக்ட்ரா னிக்ஸ்/தகவல் தொடர்பியல்/கம்ப்யூட்டர் அறிவியல்/தகவல் தொழில்நுட்பவியல் பாடங்கள் ஏதேனும் ஒன்றில் 50 சதவீத மதிப்பெண் தேர்ச்சியுடன் டிகிரி மற்றும் கம்ப்யூட்டர் தகுதி4. ஆபீசர் நிலை (3): 2 (பொது2). வயது: 40க்குள். கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் பாங்கிங், மார்க்கெட்டிங், சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் பாடத்தில் டிப்ளமோ. இதுதவிர ஏதேனும் ஒரு வங்கியில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் அதிகாரியாக பணிபுரிந்த அனுபவம்.  இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை உண்டு. வயது வரம்பிற்கு 26.8.2010 தேதியை அடிப்படையாக கொள்ள வேண்டும்.இவற்றில் ஊனமுற்றோருக்கு 8 இடங்களும், முன்னாள் ராணுவத் தினருக்கு 13 இடங்களும் ஒதுக்கப் பட்டுள்ளன.விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசியினருக்கு ஒவ்வொரு பதவிக்கும் தலா ரூ.300. எஸ்சி., எஸ்டி., முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஊனமுற்றோருக்கு தலா ரூ.50 மட்டும். இதை‘‘Pandyan Grama Bank Recruitment Project-2010’’என்ற பெயருக்கு மதுரையில் செலுத்தத்தக் கவகை யில் டிடி எடுக்க வேண்டும்.எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக் கப்படுவர். தேர்வு மதுரை, நெல்லை, விருதுநகர், திருச்சி ஆகிய மையங் களில் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் www.pandyangramabank.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு மேற்குறிப் பிட்ட இணையதளத்தை பார்க்க வும்.ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.1.2011. பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்:1.2.2011. தேர்வு நடைபெறும் நாட்கள்: ஆபீஸ் அசிஸ்டென்ட்ஸ்: 10.4.2011. ஆபீசர்ஸ்:17.4.2011.
டைரக்ஷன் எனக்கு டைம்பாஸ் : பிரபு தேவா
இந்த ஆண்டில் புது பட வாய்ப்புகளால் எனது கால்ஷீட் டைரி பிசியாக இருக்கிறது. தங்கர்பச்சானின் 'களவாடிய பொழுதுகள்'Õ, சந்தோஷ் சிவனின் 'உருமி' படங்களில் நடித்து முடித்தேன். 'எங்கேயும் காதல்' படத்தை இயக்கி முடித்தாகிவிட்டது. அடுத்து, விஷால், சமீரா ரெட்டி நடிக்கும் படத்தை இயக்குகிறேன். இதையடுத்து இந்தியில் அக்ஷய் குமார் நடிக்கும் படமும் சல்மான் கானுடன் ஒரு படமும் உள்ளது. டைரக்ஷனில் கவனம் செலுத்தினாலும் நடிப்பு என வந்துவிட்டால் டைரக்ஷன் பற்றி யோசிக்க மாட்டேன். ஒரு நேரத்தில் ஒரு பணியில் கவனம் செலுத்துவதே எனக்கு பிடிக்கும். 'களவாடிய பொழுதுகள்' படத்தில் நடித்தபோது, எந்த படத்துக்கும் நடனம் அமைக்க செல்லவில்லை. டைரக்ஷன் வேலையிலும் ஈடுபடவில்லை. அதே நேரம், டைரக்ஷன் மற்றும் நடிப்பை விட எனக்கு பிடித்தது டான்ஸ்தான். அது என் ரத¢தத்தில் ஊறியது. அதை யாராலும் பிரிக்க முடியாது. டைரக்ஷன், நடிப்பு இரண்டும் எனக்கு டைம்பாஸ்தான். சிங்கப்பூரில் நடத்தி வரும் டான்ஸ் பள்ளியில் இந்த ஆண்டு அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன். இவ்வாறு பிரபு தேவா கூறினார்.
கவர்ச்சிக்கு மாறியது ஏன்? விமலா ராமன்
ஹோம்லியாக மட்டுமே நடிப்பேன் என நான் சொல்லவில்லை. தமிழில் தொடர்ந்து ஹோம்லி வேடங்களே கிடைத்தன. தெலுங்கில் வாய்ப்பு வந்தபோது, ஒரு மாற்றத்துக்கு கவர்ச்சியாக நடிக்க விரும்பினேன். அதே நேரம், கதைக்கும் அது தேவையாக இருந்தது. அதனால் அப்படி நடித்தேன். தமிழிலும் கதைக்கு தேவையான பட்சத்தில் கவர்ச்சியாக நடிப்பேன். தெலுங்கில் இப்போது சூர்யதேவரா பிரபாகர் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். இதில் கதையே என¢னைச் சுற்றித்தான் நடக்கும். த்ரில் படமிது. 'டேம் 999' என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறேன். என¢னை அறிமுகப்படுத¢தியது தமிழ் சினிமாதான். அதனால் அதை எப்போதும் மறக்க மாட்டேன். இவ்வாறு விமலா ராமன் கூறினார்.
நடிகை வருத்தம் தள்ளிப்போன படம்
கோடம்பாக்கம் கோடங்கிநல்ல காலம் பொறக்குது...நல்ல காலம் பொறக்குது...சுனேன நடிகை ரொம்பவே வருத்தமா இருக்கிறாராம்... இருக்கிறாராம்... ஷூட்டிங் முடிஞ்ச படங்கள் ரிலீசாகாம நிக்குது. ஷூட்டிங் தொடங்கின படங்கள், பாதியில நிக்குது. புது வாய்ப்புகளும் இல்லை. இதனால வருத்தமா இருக்கிறாராம். தமிழ்ல வாய்ப்பிழந்த நடிகைகளுக்கு ஒரே ஆறுதல் கன்னட சினிமாதான். அங்கே போகலாமான்னு தீவிரமா யோசிக்கிறாராம்... யோசிக்கிறாராம்...டாடி படத்துல நடிக்கிறாரு விரல் நடிகரு. அடுத்த படத்துக்கு ஹீரோயின்கள் கிடைக்கல. திரைக்கதையும் ரெடி ஆகலையாம்... ஆகலையாம்... இதனால அந்த படத்தை தள்ளிப்போட்டிருக்கிறாராம்... தள்ளிப்போட்டிருக்கிறாராம்...கேப்டன் நடிகர்கிட்ட கதை சொல்ல சில இயக்குனருங்க முயற்சி பண்ணினாங்களாம்... பண்ணினாங்களாம்... ஆனா, கதை கேட்க நடிகருக்கு விருப்பம் இல்லையாம்... இல்லையாம்... 'எலெக்ஷன் முடியட்டும். நடிப்பையெல்லாம் பிறகு பார்த்துக்கலாம்'னு சொல்றாராம்... சொல்றாராம்...
கிளிப்பிங்ஸ்
இந்த ஆண்டு ஹாலிவுட்டில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் ஏ.ஆர். ரகுமான்.'மல்லுசிங்' மலையாள படத்தில் சீக்கியராக நடிக்கிறார் பிருத்விராஜ்.'பசங்க' பாண்டிராஜ் இயக்கும் படத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கிறார் அமலா பால்.சிம்பு, அனுஷ்கா நடித்துள்ள 'வானம்' அடுத்த மாதம் ரிலீசாகிறது.பின்னி மில்லில் தனித்தனியே ஷூட்டிங்கில் இருந்தபோது, அஜீத்&விஜய் சந்தித்து பேசிக்கொண்டனர். கடந்த 4ம் தேதி தனது பிறந்த நாளை கேரளாவில் 'வந்தான் வென்றான்' படக்குழுவுடன் கொண்டாடினார் ஜீவா. 'சமீபத்தில் பிரேக்கே இல்லாமல் 12 மணி நேரம் நடித்தேன்' என்கிறார் ஜெனிலியா. ராதாமோகன் இயக்கத்தில் நாகார்ஜுனா, பிரகாஷ் ராஜ் நடித்துள்ள 'பயணம்', பிப்ரவரி 4ல் ரிலீசாகிறது.
சம்ஜூதா ரயில் குண்டுவெடிப்புக்கு இந்து தீவிரவாதிகள்தான் காரணம்
அறுபத்தெட்டு பேரை பலிவாங்கிய சம்ஜூதா ரயில் குண்டுவெடிப்புக்கு இந்து தீவிரவாதிகள் தான் காரணம் என ஆர்எஸ்எஸ் தலைவர் சுவாமி அசிமானந்தா சிபிஐயிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். டெல்லியிலிருந்து வாகா எல்லை வழியாக வாரத்துக்கு இரண்டு முறை லாகூர் செல்லும் சம்ஜூதா எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 2007ம் ஆண்டு இரண்டு சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில் 68 பேர் பலியானார்கள். இவற்றில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிபிஐ அண்மையில் ஆர்எஸ்எஸ் தலைவர் அசிமானந்தாவை கைது செய்தது. இந்த வழக்கில் அவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். சாட்சிகள் சட்டம் பிரிவு 164ன் கீழ் மாஜிஸ்திரேட் முன்பு அசிமானந்தா அளித்த வாக்குமூலம் தற்போது தெகல்கா இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த சட்டப்பிரிவின்படி பெறப்படும் வாக்குமூலம் நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தனது வாக்குமூலத்தில் சம்ஜூதா குண்டுவெடிப்புக்கு இந்து தீவிரவாதிகள் தான் காரணம் என அசிமானந்தா ஒப்புக் கொண்டுள்ளார். பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் ஒவ்வொரு குண்டுவெடிப்புக்கும் பதிலடி கொடுக்க வேண்டும் என தனது ஆதரவாளர்களை துண்டியதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். தீவிரவாத நடவடிக்கைகளில் ஆர்எஸ்எஸ் தலைவர் இந்த்ரேஷ்க்கு தொடர்பு இருப்பதாகவும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
நகைக்கடையில் துணிகர கொள்ளை போலீசை கண்டதும் கும்பல் ஓட்டம்
நகைக்கடை சுவரில் துளையிட்டு கொள்ளையடித்து கொண்டிருந்த போது, போலீசார் வந்ததால் கும்பல் தப்பியோடியது. இதனால் பல லட்சம் நகைகள் தப்பின. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள வணிகவளாகத்தில் தேவன் என்பவருக்கு சொந்தமான எஸ்கேபி தங்க நகைக்கடை உள்ளது. நேற்று இரவு 10 மணிக்கு ஊழியர்கள் வழக்கம்போல கடையை பூட்டி விட்டு சென்றனர். கடை உரிமையாளர் தேவன், சென்னைக்கு அவசர வேலையாக சென்று விட்டார்.நேற்றிரவு போச்சம்பள்ளி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று அதிகாலை 1.30 மணியளவில், வணிகவளாகத்தின் பின்சுவர் பகுதியில் சுவரை இடிக்கும் சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்து, சத்தம் வந்த இடம் அருகில் சென்று பார்த்தனர். சுவரில் துளையிட்டு மர்ம ஆசாமிகள் நகைக்கடையில் கொள்ளையடித்து கொண்டிருப்பதை பார்த்தனர். போலீசாரை கண்டதும் மர்ம ஆசாமிகள், கையில் சிக்கிய நகைகளுடன் அங்கிருந்து தப்பி ஓடினர்.இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.பாபுவிற்கு போச்சம்பள்ளி போலீசார் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு எஸ்.பி பாபு, பர்கூர் டிஎஸ்பி வைத்தியலிங்கம் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்தனர். கிருஷ்ணகிரியில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் அங்குமிங்கும் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் அர்ஜூனன் கூறுகையில்,  திருட்டுப்போன நகைகளின் மதிப்பு தெரியவில்லை. கடையின் உரிமையாளர் வெளியூர் சென்றுள்ளார். அவர் வந்தபிறகு தான் கூற முடியும் என்றார். இச்சம்பவம் அப்பகுதியில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சி மாறிய காங்கிரஸ் பெண் எம்எல்ஏ பதவி பறிப்பு
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள அரைடங்கா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ சாவித்ரி மித்ரா, தொடர்ந்து 5 முறை எம்எல்ஏ பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த தலைவர் ஆவார். மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கமிட்டியின் துணை தலைவராகவும் பதவி வகித்து வந்தார். இவர் கடந்த மாதம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இதை தொடர்ந்து அவரது பதவியை பறிக்க வேண்டும் என மாநில சபாநாயகர் எச்.ஏ.ஹலிமுக்கு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் மனாஸ் புனியா கடிதம் அனுப்பினார். சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு சாவித்ரி மித்ரா பதில் அளிக்காததை தொடர்ந்து நேற்று அவரது பதவியை பறிப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதுவரை 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திரிணாமுல் காங்கிரசுக்கு தாவிய காரணத்துக்காக பதவி இழந்துள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் அதிமுக, மதிமுக, கடும் அமளி
ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் சட்டசபையில் இன்று கூச்சலிட்டு கடும் அமளியில் இறங்கினர். இதனால், அவர்களை அவைக் காவலர்கள் குண்டுகட்டாக தூக்கிச் சென்று வெளியேற்றினர். தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா 9.34க்கு தனது உரையை வாசிக்கத் தொடங்கினார். அப்போது அதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்றனர். எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஏதோ பேசினார். அதிமுக உறுப்பினர்கள், ‘மைக்கை ஆன் செய்யுங்கள்’ என்று கூறி கூச்சல் எழுப்பினர். ஆளுநர் தனது  உரையை தொடர்ந்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக, அதிமுகவினர் கூச்சல் எழுப்பினர். 9.37 வரை கூச்சல் தொடர்ந்தது. அதிமுக உறுப்பினர்களுடன் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உறுப்பினர்களும் சேர்ந்து கொண்டு கூச்சல் எழுப்பியதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.  அப்போது சபாநாயகர் ஆவுடையப்பன் எழுந்து, ‘ஆளுநர் உரை நிகழ்த்தும்போது அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், பேரவையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் அதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் செயல்படுகின்றனர். எனவே பேரவை விதி 286ல் வகை செய்யப்பட்டுள்ளபடி எனது அதிகாரத்தை பயன்படுத்தி, அவர்களை அவையில் இருந்து வெளியேற்றும்படி அவைக் காவலர்களுக்கு உத்தரவிடுகிறேன்’ என்றார்.இதையடுத்து  கூச்சலில் ஈடுபட்டவர்களை வெளியேற்ற அவைக் காவலர்கள் உள்ளே வந்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் அவையின் நடுப்பகுதிக்கு வந்து காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதிமுக உறுப்பினர்கள் அவையின் நடுவில் அமர்ந்தனர். சில உறுப்பினர்கள் ஆளுநர் உரையை கிழித்து வீசினர். கடும் அமளி நிலவியதால், ஒவ்வொரு உறுப்பினரையும் குண்டுக்கட்டாக தூக்கி அவைக் காவலர்கள் வெளியேற்றத் தொடங்கினர்.தங்களை தூக்க வந்த காவலர்களுடன் பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலைப்பேட்டை சண்முகம் ஆகியோர் மோதலில் ஈடுபட்டனர். இதனால், ஒவ்வொரு உறுப்பினரையும் நான்கு, ஐந்து காவலர்கள் ஒன்றாகச் சேர்ந்து தூக்கி வெளியேற்றினர். இன்னொருபுறம் மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் பாலபாரதி, குடியாத்தம் லதா ஆகியோர் வெளியேற மறுத்ததால் அவர்களை பெண் காவலர்கள் குண்டுகட்டாக தூக்கி அவைக்கு வெளியே கொண்டுவந்து இறக்கி விட்டனர். இந்த அமளி அடங்க 9.46க்கு மேல் ஆனது. இதனால் சட்டசபையில் பெரும் பரபரப்பு நிலவியது. அவர்களை வெளியேற்றிய பின் ஆளுநர் தனது உரையை தொடர்ந்தார்.
ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியினர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு
தெலங்கானா தனி மாநிலம் அமைப்பது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் 5 பேர் கொண்ட கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இதன் அறிக்கை கடந்த  டிசம்பர் 30ம் தேதி உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் ஒப்படைக்கப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த அறிக்கை குறித்து உள்ளுர் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த கமிட்டி உறுப்பினர்கள் அபுசலே ஷரீப் மற்றும் ரவீந்தர் கவுர் ஆகியோர், ‘தெலங்கானா தனி மாநில கோரிக்கையில் சிறுபான்மையினர் அதிக ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் தங்கள் சொந்த வளர்ச்சியில்தான் அக்கறை காட்டி வருகிறார்கள்’ என்றனர். இது முஸ்லிம்களின் உணர்வை பாதிக்கும் வகையில் இருப்பதாக தெலங்கானா மக்கள் அமைப்பின் பொது செயலாளர் ரஹ்மான், தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை நீதிமன்றம் விசாரித்து, மத உணர்வை புண்படுத்தியதாக கூறப்படும் கிருஷ்ணா கமிட்டி உறுப்பினர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டது.
மணல் லாரிகள் ஸ்டிரைக் நள்ளிரவில் தொடங்கியது
ஆற்றில் மணல் திட்டு உள்ள இடங்களில் மனித சக்தி மூலமே மணல் அள்ள வேண்டும். பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் மனிதர்கள் மூலம் மணல் அள்ளினால் லாரிகளில் லோடு செய்ய நீண்ட நேரம் ஆகும். விவசாய தொழிலுக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் மணல் அள்ள தொழிலாளர்கள் யாரும் கிடைப்பதில்லை. மேலும் ஆற்றில் தண்ணீர் செல்லும் நிலையில், ஆற்றுக்குள் மனிதர்கள் இறங்கி மணல் அள்ள முடியாது என்று மணல் லாரி உரிமையாளர்கள் குமுறி வருகின்றனர். எனவே பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மணல் அள்ள அனுமதி அளிக்கக்கோரி, மணல் லாரி உரிமையாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 75 ஆயிரம் மணல் லாரிகள் இயக்கப்படவில்லை. மணல் லாரிகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மணல் தட்டுபாடு பரவலாக ஏற்பட துவங்கியுள்ளது. மணல் விலையும் கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது.இது குறித்து மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் செல்ல.ராசாமணி கூறியதாவது: தமிழகம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் மணல் லாரிகள் மணல் அள்ள குவாரிக்கு செல்லவில்லை. இதனால் பொதுப்பணித்துறை மூலம் நடத்தப்படும் மணல் குவாரிகள் மூடப்பட்டுவிட்டன. மணல் லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால், மணல் விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ஒரு யூனிட் மணல் ரூ. 1500க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு யூனிட் ரூ. 4500க்கு விற்பனையாகிறது. அதுவும் தேவைக்கேற்ப கிடைப்பதில்லை. மாநிலம் முழுவதும் மணல் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால், அரசு கட்டிட பணிகள் மற்றும் தனியார் கட்டிட பணிகள் பாதிக்கப்படும். எங்களின் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 9&ம் தேதி கோவையில் மாநிலம் முழுவதும் உள்ள மணல் லாரி உரிமையாளர்கள் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு செல்ல.ராசாமணி தெரிவித்தார்.
தெருமுனை கூட்டங்களுக்கு சுப்ரீம் கோர்ட் திடீர் தடை
அரசியல் கட்சிகள் நடத்தும் தெருமுனை பொதுக்கூட்டங்களால் போக்குவரத்து, மாணவர்கள் படிப்பு, பொதுமக்களின் அமைதி என பல விஷயங்கள் பாதிக்கப்படுவதாக கேரள ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தெருமுனை பொதுக்கூட்டங்களுக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தெருமுனை பொதுக் கூட்டங்களுக்கு தடை விதித்து கேரள ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு சரியானதே என தீர்ப்பளித்துள்ளது. மேலும் இந்த உத்தரவினால் அரசுக்கு நல்ல பெயர் ஏற்படும் எனவும் இதனை கேரள அரசு எதிர்ப்பதன் நோக்கம் புரியவில்லை எனவும் கருத்து தெரிவித்தது.
இறுதி வாக்காளர் பட்டியல் தாலுகா, ஆர்டிஓ ஆபீஸ்களில் ஜனவரி 10ல் பார்க்கலாம்
தமிழகம் முழுவதும¢ ஜனவரி 1&ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஆண்டு அக்டோபர் 25ம் தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய வாக்காளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. வாக்காளர் பெயர் சேர்க்க நவம்பர் 7ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகை விடுமுறைக்காக பலர் சொந்த ஊருக்கு சென்றதால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவம்பர் 13&ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. கடைசி நாளன்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க¢க பலர் ஆர்வத்துடன் மனு அளித்தனர். வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட சேர்த¢தல், நீக்கல், திருத்தம் குறித்த அனைத்து விண்ணப்பங்களும் 100 சதவீதம் வீடு, வீடாக விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து  வாக்காளர்களின் முழு விவரங்களையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி நடந்தது. தற்போது இறுதி வாக்காளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழகம¢ முழுவதும் 234 சட்டசபை தொகுதிகளிலும் வருகிற 10ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. கலெக்டர் அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டிருக்கும். வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என பொதுமக்கள் சரி பார்த்துக் கொள்ளலாம்.
பொங்கல் விடுமுறை மறுப்பு : முதல்வர் தலையிட கோரிக்கை
கேரள மாநில தமிழ் பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் பேச்சிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை: கேரளாவில் பாலக்காடு, வயநாடு, இடுக்கி, பத்தினம் திட்டா, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்கிறார்கள். 1956ம் ஆண்டு மாநில பிரிவினைக்கு முன்பே கேரள மாநிலத்தில் நிரந்தர குடிமக்களாக வாழ்ந்து வருகிறார்கள். தமிழர் வசிக்கும் பகுதிகளில் பொங்கல் நாளில் அரசு விடுமுறை விடுமாறு கேரள முதல்வர் அச்சுதானந்தனிடம் பல முறை மனு தரப்பட்டது. ஆனால் விடுமுறை அளிக்க கேரள அரசு தயக்கம் காட்டுகிறது. தமிழக முதல்வர் கருணாநிதி, கேரள முதல்வருடன் பேசி பொங்கல் விடுமுறை பெற்று தர ஏற்பாடு செய்யவேண்டும்.
நகர்ப்புற குடிசை ஏழைகள் அனைவருக்கும் பாதுகாப்பான வீடுகள் வழங்க சிறப்பு திட்டம்
ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றிய விவரம் வருமாறு: தலைமை செயலகத்தின் 2ம் கட்டப்பணிகளும், ரூ.60 கோடியே 86 லட்சம் செலவில் புதிய கலைவாணர் அரங்கம் கட்டும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது தமிழக அரசுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. தமிழக மீனவர்களை பாதுகாக்கவும், இலங்கை தமிழர்களின் இன்னல்களை களைந்திடவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று இந்த அரசு வலியுறுத்துகிறது.மழை வெள்ளம் காரணமாக போதுமான வடிகால் வசதியின்றி பயிர்ச் சேதமும், பொருள் சேதமும் அடிக்கடி ஏற்படும் நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர் மாவட்டங்களில் முறையான வடிகால் வசதிகள் ஏற்படுத்தி வெள்ள பாதிப்பை நிரந்தரமாக தடுத்திட சிறப்பு வெள்ள மேலாண்மைத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.* வடகிழக்கு பருவ மழை அதிக அளவில் பெய்யும்போது, சரபங்கா நதி, திருமணிமுத்தாறு, அய்யாறு ஆகிய உபநதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இந்த 3 ஆறுகளையும் ஓர் இணைப்புக் கால்வாய் மூலம் இணைத்து வறட்சி பகுதிகளில் விவசாயத்திற்கு பயன்படும் வகையில் இந்த ஆறுகள் பாய்ந்தோடும் சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களிலுள்ள கண்மாய்கள், குளங்களுக்கு வெள்ள நீரைத் திருப்பி விட்டு இப்பகுதிகளில் நிலத்தடி நீரை செறிவூட்டும் வகையில் ஒரு சிறப்பு திட்டத்தை தீட்டி நிறைவேற்ற உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.* பனை, தென்னை விவசாயிகளின் நலன்கருதி பனை நுங்குச் சாறும், தென்னை இளநீரும் பக்குவப்படுத்தப்பட்டு தயாரிக்கப்படுகின்ற சுவைநீர், காதி கிராமத் தொழிற்சங்கங்களின் வாயிலாக விற்பனை செய்யப்படும். தென்னை நலவாரியம் மூலம் தேங்காயை கொள்முதல் செய்து கொப்பரை தயாரிக்கவும், இந்த வாரியம் மூலம் தயாரிக்கப்படுகின்ற தேங்காய் எண்ணெயை சத்துணவு திட்டத்தில் தற்போது வழங்கப்படும் பாமாயிலுக்கு பதில் பயன்படுத்தவும், கூட்டுறவு அங்காடிகள் மூலம் விற்பனை செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.தமிழ்நாட்டில் வனவளத்தைப் பாதுகாக்க ரூ.686 கோடியில் ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவன உதவியுடன் ‘தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமைத் திட்டம்’ செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான நாட்டுப் படகுகளுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, ஒரு படகுக்கு 200 லிட்டர் வீதம் மாதம் 3200 கிலோ லிட்டர், மானிய விலையில் வழங்க உத்தரவிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அரசு ஆண்டுக்கு ரூ.80 கோடி மானியம் வழங்குகிறது.கிழக்குக் கடற்கரை மற்றும் தென்னகச் சுற்றுலா மையங்களை அழகுபடுத்தவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் ஆசிய வங்கியின் நிதியுதவியுடன் ரூ.450 கோடி செலவில் ஒரு சிறப்புச் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.* ஏழை எளிய மாணவர்களும் உயர் கல்வியை தடையின்றி பெறும் வகையில் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியலில் முதுகலை பட்டம் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நடப்பு ஆண்டில் ஓர் உன்னத முயற்சியாக பட்டதாரியே இல்லாத குடும்பங்களில் இருந்து தொழிற்கல்வி பயில ஒற்றை சாளர முறையில் ஒதுக்கீடு பெரும் மாணவ, மாணவியருக்கு அரசால் அனுமதிக்கப்பட்ட முழு கல்வி கட்டணத்தையும் அரசே ஏற்கும் என உத்தரவிடப்பட்டு இந்த ஆண்டு 80 ஆயிரத்து 450 தொழிற்கல்வி படிக்கும் முதல் தலைமுறை மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை மேலும் குறைத்து, பிறந்த குழந்தைகள் அனைவரையும் காத்திட உதவும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளின் உதவியோடு ஒரு வயது வரையுள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர அவசர சிகிச்சை திட்டம் என்னும் புதிய திட்டத்தினை இந்த ஆண்டில் ரூ.10 கோடி செலவில் அறிமுகம் செய்திடவும், அடுத்த ஆண்டில் இத்திட்டத்தினை ரூ.15 கோடி நிதி ஓதுக்கீட்டில் செயல்படுத்திடவும் இந்த அரசு முடிவெடுத்துள்ளது.சித்த மருத்துவத்தின் தாயகம் என கருதப்படும் தமிழகத்தில்தான் இந்தியாவிலேயே சித்த, ஆயுர்வேத, யுனானி, யோகா இயற்கை மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆகிய 5 பிரிவுகளுக்கான மருத்துவத்திற்கான கல்லூரிகளை அரசே நடத்தி வருகின்றது. பாரம்பரியம் மிக்க இந்திய மருத்துவத்தையும் மற்றும் ஓமியோபதி மருத்துவத்தையும் வளர்த்தெடுக்க தற்போதுள்ள ஆறு அரசு இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி கல்லூரிகளையும், இது போன்ற 26 தனியார் கல்லூரிகளையும் உள்ளடக்கி தனியாக இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி பல்கலைக்கழகம் ஒன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடங்கப்படும்.தமிழ்நாட்டிலிருந்து சென்று வெளிநாட்டில் பணிபுரியும் தமிழர்களின் நலனுக்காக வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் ஒன்றை அமைக்க இந்த அரசு உத்தரவிட்டுள்ளது. மாற்று திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திட வழிகாட்டும் திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக மாற்று திறனாளிகள் நலம் காக்க தனி நல வாரியம் அமைக்கப்பட்டு, தனித்துறையும் ஏற்படுத்தப்பட்டு முதல்வர் கருணாநிதி அவர்களே முன்வந்து அந்த துறையை தன் தலைமையிலே ஏற்று செயல்படுவது சிறப்புக்குரியதாகும். தமிழகத்தில் பல்லாண்டு காலத்திற்கு முன்பு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை பஞ்சமர்கள் அல்லாதவர்கள் பட்டா மாறுதல் செய்து வைத்திருப்பதாகவும் காலப்போக்கில் அவற்றை பல்வேறு தரப்பினர் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வருவதாகவும் ஆக்கிரமிப்பு செய்த நிலங்கள் பலவற்றில் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டுள்ளதாகவும், ஒப்படை நிபந்தனைகள் மீறப்பட்டு, கிரயம் செய்யப்பட்டு பலருக்கு கைமாற்றப்பட்டுள்ளதாகவும்; அடிக்கடி அரசுக்கு முறையீடுகள் வருவதோடு, ஏடுகளிலும் செய்திகள் வருகின்றன.பஞ்சமி நிலம் தொடர்பான பல்வேறு பிரச்னைகளையும், சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டு, பரிசீலனை செய்து, அவர்களிடமே திரும்ப ஓப்படைக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரைகள் வழங்குவதற்கு, உயர்நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதியரசர் ஒருவர் தலைமையில் குழு அமைப்பதென அரசு முடிவு செய்துள்ளது. கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ஒரு சிறப்பு ஒதுக்கீடாக நபார்டு வங்கியின் உதவியை எதிர்நோக்கி ரூ.320 கோடி உடனடியாக அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது.வறுமை ஒழிப்பு திட்டத்திலேயே ஒரு புது முயற்சியாக உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாட்டில் ‘வாழ்ந்து காட்டுவோம்’ என்ற திட்டம் 16 மாவட்டங்களில் உள்ள 2,509 ஊராட்சிகளில் ரூ.717 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மேலும் 10 மாவட்டங்களுக்கு ரூ.950 கோடி செலவில் இந்த ஆண்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் 1,161 ஊராட்சிகளில் வாழும் 9.6 லட்சம் ஏழை குடும்பத்தினர் பயன்பெறுவர்.நகர்ப்புற உள்ளாட்சிகளில் சாலைகள் மேம்பாட்டுக்காக இந்த ஆண்டு ரூ.1,051 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை கொண்டு நகர உள்ளாட்சி அமைப்புகளுக்குட்பட்ட 3,500 கிலோ மீட்டர் சாலைகளை மேம்படுத்தும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.சென்னை நகரும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் வேகமாக வளர்ந்து வருகின்றன. இதேபோல் கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி போன்ற பிற நகரங்களும் வளர்ந்து வருகின்றன. இத்தகைய வளர்ச்சியினால் புதிதாக உருவாகிவரும் புறநகர் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமாகிறது. சென்னை மாநகராட்சி மற்றும் அதன் எல்லையை ஒட்டி அமைந்துள்ள புறநகர் பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வளர்ச்சி மையமாகச் செயல்படும் முக்கிய நகரங்கள் மற்றும் அவற்றை ஒட்டி உள்ள பகுதிகளிலும், மதுரை, கோவை, திருச்சி, நெல்லை மாநகராட்சிகள், ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி போன்ற புதிதாக அமைக்கப்பட்ட மாநகராட்சிகளிலும் குடிநீர் சாலைகள், கழிவுநீர் வசதி, திடக்கழிவு மேலாண்மை, மின்விளக்கு போன்ற பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.15,000 கோடி தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஆதாரத்தை மாநிலத்தின் நிதி ஆதாரத்தில் இருந்தும், சர்வதேச நிதியுதவி அமைப்புகளிடம் இருந்தும் பெற்று தரம்மிக்க அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும்.குடிசைகளில் வாழும் லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து பல இன்னல்களை சந்தித்து வருவதை கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தமிழகத்தை குடிசைகள் அற்ற மாநிலமாக மாற்ற ‘கலைஞர் வீடு வழங்கும் திட்டம்’ என்னும் ஓர் உன்னதமான திட்டத்தை அரசு அறிவித்தது. தமிழகத்தில் 21 லட்சம் குடிசைகளை 6 ஆண்டு காலத்தில் கான்கிரீட் வீடுகளாக மாற்ற திட்டமிட்டு, அரசின் சார்பில் வீடு ஒன்றுக்கு ரூ.60 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தது. அந்த தொகை போதுமானதாக இல்லை என்றதால் ரூ.75 ஆயிரமாக அரசு உயர்த்தியது. முதல்கட்டமாக மூன்று லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளது. இதற்காக 2010&2011ம் ஆண்டிற்கு ரூ.2,250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.75 ஆயிரம் ரூபாயும் போதாது என்றதால் மேலும் ரூ.20 ஆயிரம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடனாக பெற்றுக்கொள்ள அரசு முயற்சி எடுத்து வருகிறது. 2வது கட்டமாக இந்த ஆண்டிலேயே மேலும் மூன்று லட்சம் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டும் பணிகளை தொடங்க அனுமதி அளிக்கப்படும்.தமிழகத்தில் குடிசைகளற்ற கிராமங்களை உருவாக்குவதுபோல் குடிசை பகுதிகளற்ற நகரங்களையும் உருவாக்க இந்த அரசால்தான் 1970ம் ஆண்டில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் தொடங்கப்பட்டது. இந்த வாரியம் மூலம் ஒரு லட்சத்து 6 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த முயற்சியை தீவிரப்படுத்த 2011&2012ம் ஆண்டில் தொடங்கி அடுத்து ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் உள்ள இரண்டரை லட்சம் குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற இந்த அரசு உரிய நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.நகர்ப்புறத்தை நாடிவரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவ்வாறு வருபவர்கள் நிரந்தரமாக தங்குவதற்கு வசதியான வீடுகள் போதுமான எண்ணிக்கையில் இல்லை. இத்தகைய குடும்பங்கள் சுகாதாரமற்ற, பாதுகாப்பற்ற சூழலில் உள்ளதாகவும், பெரும்பாலானோர் புறம்போக்கு பகுதியில் வசிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு பாதுகாப்பான வீடுகள் கட்டித்தர மேலும் பல ஆண்டுகள் தாமதமாகும் என்பதால், ஒரு சிறப்பு திட்டம் தயாரித்து இத்தகைய திட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் நிதி உதவியை பெற்று கூடுதலாக தேவைப்படும் தொகையை மாநில அரசே ஏற்று 2017ம் ஆண்டுக்குள் நகர்ப்புற குடிசை பகுதிகளில் உள்ள அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் பாதுகாப்பான வீடுகள் கட்டி வழங்கப்படும். இத்திட்டத்திற்கும் அடையாள அட்டை வழங்கி 2011&12ம் ஆண்டில் வீடுகள் கட்டும் முதற்கட்ட பணிகள் தொடங்கப்படும். இதன்மூலம் தமிழகமெங்கும் குடிசைகளே இல்லா நகரங்கள் உருவாக்கப்பட்டு அனைவருக்கும் பாதுகாப்பான வீடுகள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.கிராமப்புறங்களில் ஏழை குடும்பங்கள் பாதுகாப்பான வீடுகள் கட்டுவதற்கு மத்திய நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிற ‘இந்திரா நினைவு குடியிருப்பு’ திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடுகள் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வீடுகள் சில இடங்களில் பெருமளவில் சேதமடைந்த நிலையில் உள்ளது. அத்தகைய வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதை ஏற்று இந்த அரசு 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி பெருமளவில் பாதிப்படைந்துள்ள வீடுகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு சீரமைத்துக் கொள்ளும் வகையில் வீடு ஒன்றுக்கு தலா ரூ.15 ஆயிரம் தமிழக அரசு நிதி உதவியாக வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நெம்மேலியில் கல்லூரிகாஞ்சிபுரம் மாவட்டம் & ராஜீவ்காந்தி சிலைக்கும், கிழக்கு கடற்கரை சாலைக்கும் இடையில் உள்ள நெம்மேலியிலும், தூத்துக்குடி மாவட்டம் & நாகலாபுரத்திலும், தர்மபுரி மாவட்டம் & அரூரிலும், விழுப்புரம் மாவட்டம் & கள்ளக்குறிச்சியிலும் விருதுநகர் மாவட்டம் & திருச்சுழியிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்படும். வேளாண்மை தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள விவசாயிகள் நிறைந்த நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் பெரிதும் பயன் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு நாகை மாவட்டத்தில் உள்ள கீவலூரில் இந்த ஆண்டு புதிதாக விவசாய கல்லூரி ஒன்று தொடங்கப்படும். அண்மையில் நடைபெற்ற வேளாண்மை அலுவலர்கள் மாநாட்டில் முதல்வர் கருணாநிதி அறிவித்ததற்கு இணங்க இந்தியாவிலேயே முதன் முதலாக கால்நடை பல்கலைக்கழகத்தையும் கோவையில் வேளாண்மை பல்கலைக் கழகத்தையும் தொடங்கி பெருமை சேர்த்த இந்த அரசு வேளாண்மையின் எதிர்காலம் என்று கருதப்பட்ட தோட்டக் கலைக்கு என தனியே தோட்டக்கலை பல்கலைக் கழகம் ஒன்றை கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இந்த ஆண்டில் தொடங்கும்சென்னையில் அறிவியல் பெருநகரம்கடந்த வாரம் சென்னைக்கு வருகை தந்து 98வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், ‘இந்திய அறிவியல் அரங்கில் தமிழகம் தனிச் சிறப்பு பெற்றுள்ளது. இந்தியாவின் நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியரான சர் சி.வி. ராமன் சென்னை மாநில கல்லூரியில் பயின்றவர். நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் எஸ்.சந்திர சேகரும் சென்னை வாசிதான். உலக புகழ் பெற்ற கனித மேதை ராமானுஜமும் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான். இத்தகைய காரணங்களால் இந்திய அறிவியல் அரங்கில் தமிழகம் தனிச்சிறப்புடன் விளங்குகிறது’ என்று கூறியது நாம் எல்லாம் தலை நிமிர்ந்து மகிழக்கூடிய பாராட்டுரையாகும். முதல்வர் கருணாநிதி சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில் (எம்ஐடி) 1990ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதிஆற்றிய உரையில், ‘சென்னை பல்கலைக்கழகம் அமைந்திருக்கின்ற இடத்தையும் அதை சுற்றியுள்ள அறிவு நிலையங்களையும், அவற்றை போல அறிவியல் புதுமைகளை செய்கின்ற இடங்களை எல்லாம் இணைத்து இந்த பகுதியையே ஓர் அறிவியல் நகரமாக சென்னை மாநகரத்திலே உருவாக்க வேண்டும்’ என்று அறிவித்தார். அவர் கருதி பார்த்தவாறு அறிவியல் நகரம் அமையவில்லை என்பது ஒரு பெரும் குறையாகவே உள்ளதால், சென்னையில் அண்ணா பல்கலை கழகம், இந்திய தொழில்நுட்ப நிறுவனம் போன்ற 69க்கும் மேற்பட்ட உயர்கல்வி ஆய்வு நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, உயர் அறிவியல் ஆய்வுக்கு உகந்த வசதிகளை உள்ளடக்கி இளைய தலைமுறையினரின் அறிவு வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் தூய்மை பகுதியாக விளங்கிட உலகத்தரம் மிக்க அறிவியல் பெருநகரம் அமைக்கப்படும். மருத்துவ கல்லூரிகள்மாவட்டந்தோறும் மருத்துவ கல்லூரி என்னும் இந்த அரசின் நோக்கத்தை தொடர்ந்து நிறைவேற்றிடும் வகையில், அடுத்தபடியாக ராமநாதபுரம், கடலூர் மற்றும் திண்டுக்கல்லிலும் அரசு மருத்துவ கல்லூரி தொடங்கப்படும். இதன் மூலம் வருங்காலத்தில் தகுதியுடைய மருத்துவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் கணிசமாக உயர வாய்ப்புள்ளது.மெட்ரோ ரயில்&2சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்டமாக மூலக்கடை & திருமங்கலம், மூலக்கடை & திருவான்மியூர், லஸ் & ஐயப்பன்தாங்கல் வழியாக பூந்தமல்லி வரை பாதைகள் அமைப்பது பற்றிதிட்டஆய்வு மேற்கொள்ளப்படும்.
சட்டசபைக்கு காய்கறி மாலையுடன் வந்த அதிமுக எம்எல்ஏ-க்கள்
சட்டசபைக்கு இன்று, கருப்பு சட்டை அணிந்து, காய்கறி மாலைகளுடன் வந்த அதிமுக எம்எல்ஏக்களால் பரபரப்பு ஏற்பட்டது.சட்டப்பேரவை கூட்டத்தொடர் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா உரையுடன் இன்று காலை தொடங்கியது. அதிமுக, மதிமுக எம்எல்ஏ&க்கள் கருப்பு சட்டை அணிந்து இன்று பேரவைக்குள் வந்தனர். பொள்ளாச்சி ஜெயராமன், திருத்தணி அரி உள்ளிட்ட சில எம்எல்ஏ&க்கள் கருப்புச் சட்டையுடன், கழுத்தில் காய்கறிகளை மாலையாக அணிந்து வந்தனர். அதிமுக எம்எல்ஏ ஜெயகுமார் கருப்புச் சட்டை அணிந்து ஒரு தட்டில் ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் காய்கறிகளுடன் பேரவைக்கு வந்தார். அதே போல், கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏ&க்கள் கருப்பு துண்டு அணிந்து பேரவைக்கு வந்தனர்.
தமிழகத்துக்கு கூடுதலாக 1040 மெகாவாட் மின்சாரம்
மீஞ்சூர் அடுத்த வல்லூரில் தேசிய அனல் மின் நிறுவனமும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து 1,500 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை கட்டி வருகிறது. இந்த நிலையத்தை தேசிய அனல் மின் நிறுவன செயல்திட்ட உயர் அதிகாரி சூர்யநாராயணன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டனர். பின்னர் சூர்யநாராயணன் கூறியதாவது:  வல்லூரில் 1,184 ஏக்கரில் ரூ.8,443 கோடியில் 1500 மெகாவாட் மின்சாரம் தயார் செய்ய கடந்த 2002ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. கட்டுமானப் பணிகள், இயந்திரம் நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் மற்றும் 2ம் அலகுக்கான கொதிகலன் உருளைகள் நிறுவும் பணிகள் மற்றும் கொதிகலன் நீர் அழுத்த பரிசோதனை பணிகள் முடிவடைந்துள்ளன. பூகம்பம் மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படாதவாறு நவீன முறையில் கொதிகலன் அமைக்கப்பட்டுள்ளது. கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு பாய்லரை குளிர்ந்த தன்மை பெற பயன்படுத்தப்படுகிறது. தற்போது 2,000க்கு அதிகமான தனியார் ஊழியர்கள் வேலை செய்கின்றனர். மின் நிலையப் பணிகள் முடிவடைந்த பின் 600 பேர் நிரந்தர ஊழியர்களாக பணியாற்றுவார்கள். முதல் யூனிட் அக்டோபர் 2011லும் 2வது யூனிட் டிசம்பர் 11லும் 3வது யூனிட் 2012 நவம்பரிலும் முடிவடைந்து உற்பத்தி தொடங்கப்படும். இதனால் தமிழக அரசுக்கு 1040 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இவ்வாறு சூர்யநாராயணன் கூறினார்.
கல்லூரிகளில் ராகிங் கொடுமை
கல்லூரியில் ஜூனியர் மாணவர்களை சீனியர்கள் ராகிங் செய்வது உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமாக உள்ளது. ராகிங் செய்வது காட்டுமிராண்டித்தனம் என உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ள போதிலும் அவ்வப்போது ராகிங் செய்திகள் வெளியாகி வருகின்றன. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த சிறிய கிராமத்தை சேர்ந்தவர்கள் ரசாக், முகமது. நண்பர்கள். கோவை குனியமுத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி முதலாமாண்டு மாணவர்கள். அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் கேரளாவை சேர்ந்த 7 மாணவர்கள் கோவை புதூரில் ஒரு அறை எடுத்து தங்கியுள்ளனர். ரசாக்கையும், முகமதுவையும் தங்கள் ரூமுக்கு அழைத்து சென்று இவர்கள் அடைத்து வைத்துள்ளனர். மது மற்றும் போதை மாத்திரைகளை வலுக்கட்டாயமாக வாயில் ஊற்றியும், திணித்தும் அடித்து உதைத்துள்ளனர். 2 மணி நேரம் கொடுத்து 150 கொசுக்களை உயிருடன் பிடித்து வரவேண்டும் என்றும் கூறியுள்ளனர். தொடர்ந்து பலமணி நேரம் டார்ச்சர் செய்தபிறகு விடுவித்து உள்ளனர். டார்ச்சர் அனுபவித்த மாணவர்கள் போலீசில் புகார் செய்ய 7 சீனியர்கள் மீது ராகிங் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.நன்கொடை அதிகம் வாங்கும் கல்லூரிகளில்தான் ராகிங் கொடுமை அதிகமாக நடக்கிறது. இதுபற்றி புகார் வந்தால் கூட வெளியில் பரவினால் பெயர் கெட்டு, வருமானம் போய்விடும் என பயந்து கல்லூரி நிர்வாகம் அமுக்கி விடுகிறது. ராகிங் செய்தால் கடும் தண்டனை. கல்லூரி முதல்வர்தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என கடுமையான பல விதிமுறைகள் இருந்தபோதும் நன்கொடை கொடுக்கும் ‘ராகிங் மாணவர்களை’ காப்பாற்ற கல்லூரி நிர்வாகம் நினைப்பதால்தான் ராகிங் கொடுமை தொடர்கிறது.ராகிங் கொடுமைக்கு பயந்து படிப்பை பாதியிலே விட்ட மாணவர்கள் பல ஆயிரம் பேர். எதிர்த்து நிற்க முடியாமலும் வீட்டுக்கு பயந்தும் என்ன செய்வதென தெரியாமல் தற்கொலை செய்துகொண்ட மாணவர்கள் சில நூறாவது இருப்பார்கள். கல்லூரி நிர்வாகம் நினைத்தால் ராகிங்கை முழுமையாக தடுக்க முடியும். அப்படிப்பட்ட கல்லுரிகளும் இருக்கத்தான் செய்கின்றன. வெளியில் அட்டகாசம் செய்யும் மாணவர்கள் கல்லூரி பஸ்சில் ஏறியது முதல் திரும்ப வீட்டுக்கு வந்துசேரும்வரை வாலை சுருட்டிக்கொண்டு இருக்கிறார்கள். காரணம், யாராக இருந்தாலும் ராகிங் செய்தால் அடிஉதை, கல்லூரியில் இருந்து நீக்கம், அபராதம் என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். கல்லூரி வாழ்க்கையில் கேலி, கிண்டல் இருக்கத்தான் செய்யும். அப்படிப்பட்ட வயது அது. ஆனால் அது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் யாருக்கும் பிரச்னை இல்லை.
புழல் சிறையில் கைதியிடம் செல்போன் போலீசார் விசாரணை
புழல்சிறையில், காவலர்கள் நேற்று, இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். சிறையில் கைதிகள் உள்ள அறையின் ஒவ்வொரு பிளாக்காக சென்று சோதனை நடத்தினர். அப்போது 10வது பிளாக்கில் உள்ள ஒரு கைதி செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். சிறைகாவலரை பார்த்ததும் அந்த கைதி செல்போனை வெளியே வீசினார். சிறைகாவலர்கள் அந்த செல்போனை பறிமுதல் செய்தனர். கைதியிடம் விசாரித்ததில் அவர் பெயர் ராஜேஷ் என்கிற சின்ராஜ் (23), திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. திருவள்ளூர் பகுதியில் அடிதடி, வழிப்பறி வழக்கில் கைதாகி கடந்த ஏப்ரல் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்து சிறைஜெயிலர் இளவரசன் புழல் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறை கைதிக்கு செல்போன் எப்படி கிடைத்தது. இவர் யார் யாரிடம் பேசினார் என் விசாரிக்கிறார்கள்.
விபசாரம் செய்வதற்காக லாட்ஜில் அடைத்த 18 பெண்கள் மீட்பு : 2 பேர் கைது
பாடியில் உள்ள லாட்ஜூகளில் அடைத்து வைத்து, விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 18 பெண்களை போலீசார் மீட்டனர். சென்னை அருகே அம்பத்தூர் பாடி சி.டி.எச். சாலை அண்ணா தெரு உள்ளிட்ட இடங்களில் உள்ள லாட்ஜ்களில் விபசாரம் நடப்பதாக புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி சிறப்பு படை கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார், கொரட்டூர் இன்ஸ்பெக்டர் அகஸ்டின் ஆகியோர் லாட்ஜ்களில் நேற்று சோதனை நடத்தினர். 2 லாட்ஜூகளில் விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்கு அடைத்து வைக்கப்பட்டு இருந்த 18 பெண்களை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக லாட்ஜ் உரிமையாளர் சக்திவேல் (51), மேலாளர் செல்வராஜ் (57) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட பெண்களை சென்னையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
சுற்றுலா பஸ் கவிழ்ந்து 11 பக்தர்கள் படுகாயம்
கர்நாடக மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தர்மாபுரம் பகுதியை சேர்ந்த 49 பக்தர்கள், சபரிமலையில் ஐயப்பனை தரிசித்து விட்டு, வேலூரில் உள்ள கோயில்களை தரிசிக்க வந்துகொண்டிருந்தனர். தி.மலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கொண்டம் அருகே இன்று அதிகாலை  5 மணியளவில் வந்தபோது, திடீரென பஸ் நிலைதடுமாறி பக்கவாட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த சங்கரா (28), முத்தண்ணா (25), பாலகிருஷ்ணன் (19), பிரசன்னா (22), ராமன்ஜி (40), வெங்கட்நாராயணா (52), கண்ணன் (35), ஆதிநாராயணன் (35), சுப்பம்மாள் (50) உட்பட 11 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பொங்கல் விடுமுறை மறுப்பு முதல்வர் தலையிட கோரிக்கை
கேரள மாநில தமிழ் பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் பேச்சிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை: கேரளாவில் பாலக்காடு, வயநாடு, இடுக்கி, பத்தினம் திட்டா, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்கிறார்கள். 1956ம் ஆண்டு மாநில பிரிவினைக்கு முன்பே கேரள மாநிலத்தில் நிரந்தர குடிமக்களாக வாழ்ந்து வருகிறார்கள். தமிழர் வசிக்கும் பகுதிகளில் பொங்கல் நாளில் அரசு விடுமுறை விடுமாறு கேரள முதல்வர் அச்சுதானந்தனிடம் பல முறை மனு தரப்பட்டது. ஆனால் விடுமுறை அளிக்க கேரள அரசு தயக்கம் காட்டுகிறது. தமிழக முதல்வர் கருணாநிதி, கேரள முதல்வருடன் பேசி பொங்கல் விடுமுறை பெற்று தர ஏற்பாடு செய்யவேண்டும்.
திருச்செந்தூர் கோயிலில் 2 புதிய வாசல்கள்
திருச்செந்தூர் கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் தேவதாசசுந்தரம் கூறியதாவது: கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூட்டநெரிசலை தவிர்க்க மகாமண்டபம் வழியாக சென்று சாமி தரிசனம் செய்வதற்காக, இந்து சமய அறநிலையத்துறை தலைமை ஸ்தபதி முத்தையா மற்றும் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து சாஸ்திரப்படியும், சிற்பக்கலை சம்பிரதாயபடியும் 2 வாசல்கள் புதியதாக ஏற்படுத்த உள்ளோம். சுவாமி ஜெயந்திநாதருக்கு எதிர்புறமும், மகாமண்டபம் நடராஜர் சன்னதிக்கு எதிர்புறமும் 2 வாசல்கள் மூன்றரை அடி அகலத்திலும், ஆறரை அடி உயரத்திலும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் சிபாரிசுகளை கேஸ் டைரியில் குறிப்பிட வேண்டாம்
குற்றவழக்குகளில் சிக்குபவர்களை விடுவிப்பதற்காக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் ஆகியோர் தொலைபேசி வாயிலாக செய்யும் சிபாரிசுகளை கேஸ் டைரியில் குறிப்பிட வேண்டாம் என மாநிலத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் மகாராஷ்டிர உள்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அடிதடி வழக்குகள், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல், போக்குவரத்து விதி மீறுதல் போன்ற சிறு வழக்குகளில் சிக்குபவர்கள்  எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் சிபாரிசுகளில் வெளியே வருவது புதிய விஷயம் அல்ல. எல்லா மாநிலங்களிலும் எல்லா காவல்நிலையங்களிலும் அன்றாடம் நடைபெறும் மிக சாதாரண விஷயம்தான். சீரியசான குற்றங்களிலும் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் தலையீடு வரும்போது அவற்றை கேஸ் டைரியில் எழுதி வைப்பது போலீசாரின் வாடிக்கை. புல்தானா மாவட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவின் உறவினர் ஒருவர் கடந்த 2006ம் ஆண்டு கந்துவட்டி புகாரில் சிக்கினார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிக்கு அப்போதைய முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் போன் செய்து வழக்குப் பதிய வேண்டாம் என கேட்டுக் கொண்டார். இந்த விவரத்தை அந்த போலீஸ் அதிகாரி கேஸ் டைரியில் பதிவு செய்தார். இந்த வழக்கு அண்மையில் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் பணியில் குறுக்கிட்டதற்காக மாஜி முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்குக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த சர்ச்சையை தொடர்ந்து மாநிலத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் மாநில உள்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் போனில் செய்யும் சிபாரிசுகளை கேஸ் டைரியில் எழுத வேண்டாம் எனவும் அவற்றை ரகசியமாக வைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஈரோடு மார்க்கெட்டில் மஞ்சள் விலை திடீர் சரிவு
கர்நாடக மாநிலம் மைசூர், மாண்டியா, குண்டல்பேட் பகுதிகளில் டிசம்பர் கடைசி வாரம், மஞ்சள் அறுவடை துவங்கியது. ஈரோடு மார்க்கெட்டுக்கு கர்நாடக மஞ்சள் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், 2 வாரம் முன்பு, ஒரு குவின்டால் விலை ரூ.17000 ஆக இருந்தது.  நேற்று ஒரு குவின்டால் விலை ரூ.15,569 & ரூ.16,081 ஆக இருந்தது. விலை குவின்டாலுக்கு ரூ.ஆயிரம் வரை சரிந்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை எதிரொலி எம்.பி., எம்எல்ஏ வீடுகள் முற்றுகை
தனி தெலங்கானா கோரிக்கையை வலியுறுத்தி எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் வீடுகளை முற்றுகையிடப்போவதாக மாணவர் சங்கங்கள் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அவர்களது வீடுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்து அரசு அலுவலகங்களை டிஆர்எஸ் கட்சியினர் முற்றுகையிட்டனர்.ஆந்திராவை பிரித்து தெலங்கானா தனி மாநிலம் அமைக்கும் கோரிக்கை வலுத்ததால் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியை மத்திய அரசு அமைத்தது. கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையை மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. ‘தெலங்கானா பிரித்தால் பிரச்னைகள் வரும். பிரிக்காமல் இருப்பதே நல்லது’ என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. தனி தெலங்கானா கோரிக்கையில் தீவிரமாக இருந்தவர்கள் மத்தியில் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையை கண்டித்து ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று ஒருநாள் பந்த்துக்கு அழைப்பு விடுத்தனர். பல்கலை வளாகத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசாரை நோக்கி மாணவர்கள் சரமாரியாக கற்களை வீசினர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகள் வீசினர். இதனால் பதற்றம் அதிகரித்தது. மாணவிகள் சிலர் ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி உருவ பொம்மையை எரிக்க ஊர்வலமாக வந்தனர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசி மாணவிகளை விரட்டினர்.இதற்கிடையில், 6 பஸ், 2 கார்களை மாணவர்கள் அடித்து நொறுக்கினர். ஒரு பஸ், ஜீப்பை தீ வைத்து கொளுத்தினர். போலீசார் மீது சில மாணவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் 5 போலீசார் காயமடைந்தனர். அப்பகுதி போர்க்களம் போல மாறியது. தெலங்கானா போராட்டங்களை ஏன் டிவியில் ஒளிபரப்புவதில்லை என கேட்டு 2 சேனல்களின் வாகனங்களை மாணவர்கள் தீயிட்டு கொளுத்தினர். டிவி நிருபர், வீடியோகிராபரையும் தாக்கினர். படுகாயம் அடைந்த அவர்களை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்நிலையில், கல்வி நிறுவனங்களுக்கு இன்று முதல் 18-ம் தேதி வரை பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. உஸ்மானியா பல்கலை உள்பட பல்வேறு கல்லூரிகள், விடுதிகள் நேற்று இரவு மூடப்பட்டன.போலீசார் நடத்திய தடியடி, கண்ணீர் புகை தாக்குதலை கண்டித்தும் உஸ்மானியா பல்கலையில் இருந்து போலீசை உடனே வெளியேற்றக் கோரியும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சியினர் தெலங்கானா மாவட்டம் முழுவதும் இன்று தர்ணா போராட்டங்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஐதராபாத்-விஜயவாடா, ஐதராபாத்-கம்மம், ஐதராபாத்- நிஜாமாபாத் உள்பட பல்வேறு சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசு அலுவலகங்களையும் டிஆர்எஸ் கட்சியினர் முற்றுகையிட்டனர். இதனால் அரசு பணிகள் ஸ்தம்பித்தன. தொடர்ந்து பரபரப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் அடுத்தகட்டமாக தெலங்கானா பகுதியில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களின் வீடுகளை முற்றுகையிடப் போவதாக மாணவர் சங்கங்கள் அதிரடியாக அறிவித்துள்ளன. இதையடுத்து, அவர்களது வீடு, அலுவலகம் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் தெலங்கானா பகுதியில் பதற்றமும், பரபரப்பும் தொடர்ந்து நீடிக்கிறது.
தேர்வு தேதியில் திடீர் மாற்றம் விஏஓ தேர்வு பிப்ரவரி 20ல் நடக்கிறது
விஏஓ தேர்வு தேதியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக பிப்ரவரி 20ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,400 கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களான 1,077ஐ நிரப்பவும் தேர்வு நடத்தப்பட உள்ளது.இதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி வரை பெறப்பட்டன. சுமார் 3 மாதங்களாக இதற்கான தேர்வு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், விஏஓ தேர்வு பிப்ரவரி 27ம் தேதி நடத்தப்படும் என தேர்வாணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இத்தேர்வை 10 லட்சத்து 10 ஆயிரம் பேர் எழுத உள்ளனர். கூடுதலாக 831 விஏஓ காலிப் பணியிடங்களுக்கும் அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அனைத்து விஏஓ காலிப் பணியிடங்களுக்கும் பிப்ரவரி 27ம் தேதி தேர்வு நடத்தப்பட இருந்தது. விஏஓ தேர்வும், மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வும் ஒரே நாளில் நடைபெற இருந்தது. இதனை மாற்றி அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டது.இந்நிலையில் இத்தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் திடீரென மாற்றி அறிவித்துள்ளது. அதாவது, ஒரு வாரம் முன்னதாக பிப்ரவரி 20ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: விஏஓ தேர்வு பிப்ரவரி 27ம் தேதி அறிவிக்கப்பட்டது, பிப்ரவரி 20ம் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதே போல் தமிழ்நாடு பொது சுகாதார சார் நிலை பணியில் புள்ளியியல் உதவியாளர் பதவி தேர்வு பிப்ரவரி 19ல் இருந்து 26ம் தேதிக்கும், மருத்துவ சார்நிலை பணியில் வட்டார சுகாதார புள்ளியர் பதவிக்கான தேர்வு 19ம் தேதியில் இருந்து 26ம் தேதிக்கும், கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையில் சிறப்பு உதவியாளர் பதவிக்கான தேர்வு பிப்ரவரி 20ம் தேதியில் இருந்து மார்ச் 6ம் தேதிக்கும், தொகுதி 1க்கான முதனிலைத் தேர்வு மே 22ம் தேதியில் இருந்து மே 5ம் தேதிக்கும், ஒருங்கிணைந்த சார்நிலைப்பணிகள் 1ல் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு ஜூன் 12ம் தேதியில் இருந்து ஜூன் 19ம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.