text
stringlengths
1
17.4k
தூக்கில் தொங்கும் சேவல்கள் திருடர்களை காவு வாங்கும் முனி
நாலு ஆள் உயரம், முறுக்கு மீசை, கையில் வீச்சரிவாளுடன் முனியின் மிரட்டும் தோற்றம், அருகில் கம்பீரமாய் குதிரை, எண்ணிக்கை யில் அடங்காமல் குத்தப்பட்டிருக்கும் வேல் கம்பு, அடர்ந்து கவிழ்ந்து கிடக்கும் மரங்கள், அவற்றின் கிளைகளில் செத்து தொங்கும்  சேவல்கள் என வாணியாறு முனியப்பன் கோயிலை நெருங்கும் போதே பக்தியுடன் பயமும் தொற்றிக் கொள்கிறது. அயோக்கியத்தனம், அடாவடி செய்பவர்களை கதிகலங்க வைக்கும் இந்த கோயில், தர்மபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி வாணியாற்றின் கரையில்  இருக்கிறது.கோயிலை சுற்றியிருக்கும் மரங்களில் மனிதர்கள் தூக்கில் தொங்குவது போல செத்து தொங்கிக் கொண்டிருக்கின்றன சேவல்கள். சு ருக்கில் சிக்கியிருக்கும் ஒவ்வொரு சேவலிலும் ஒரு திருட்டு சம்பவம்தான் ஒளிந்திருக்கிறது. திருடர்களை உடனுக்குடன் தண்டிக்கும்  நீதிபதியாக இந்த முனியப்பனை நினைக்கிறார்கள் இப்பகுதி மக்கள். எங்கு திருட்டு நடந்தாலும் சரி. போலீசுக்கு போவதில்லை.  தலைக்கு குளித்து ஒரு சேவலுடன் முனியப்பன் கோயிலுக்கு செல்கிறார்கள். சூடம் ஏற்றி சாமி கும்பிட்டுவிட்டு சேவல் கழுத்தில்  கயிற்றை கட்டி, அங்குள்ள மரத்தில் தூக்கில் தொங்க விட்டு விடுகிறார்கள். கோழி துடி துடித்து இறந்து விடும். அதோடு திருடனுக் கும் கெடு தொடங்கி விடும் என கண்ணில் அனல் தெறிக்க கூறுகிறார்கள் முனியின் பக்தர்கள்.‘முதலில் சாதாரணமாய் வாந்தி, மயக்கத்தில் ஆரம்பிக்கும். அப்போதே தவறை உணர்ந்து திருட்டுபொருளை சம்பந்தப்பட்டவர் கண் ணில் படுமாறு வைத்து விட்டுச் சென்றால் உயிர் தப்பும். இல்லையென்றால் சாதாரண வாந்தி ரத்த வாந்தியாகும். பேதி சீதமாகும்.  அதன் பிறகும் திருந்தாதவர்களை முனி சும்மா விடுவதில்லை. துடி துடித்து இறந்த சேவல் போல கொள்ளையனும் துடித்து  சாவான்’ என்பது சேவலை தொங்கவிட்டவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. உதாரணத்துக்கு சில சம்பவங்க ளையும் சொல்கிறார்கள்.இப்பகுதியில் திருடர்கள் மர்மமாய் இறப்பது தொடர்ந்து வருகிறதாம். சேவலை தூக்கில் போட்ட சில மணி நேரங்களிலேயே திருடு போன பொருள் எவ்வித சேதாரமுமின்றி கிடைத்த சம்பவங்கள் இங்கு ஏராளம் என்கிறார்கள் இப்பகுதியினர். 15 நாட்களுக்கு முன்பு  திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகேயுள்ள பி.எல். தண்டா பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவரது பட்டி மாடுகளில்  ஒன்று திடீரென மாயமாகி விட்டது. 10 நாட்கள் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து முனியப்பன் கோயிலுக்கு வந்து சேவலைக்கில் போட்டு வேண்டிச் சென்றார். ஊர் போன மறுநாளே அவரது மாடு  வீட்டு வாசலில் நின்றதாம். இதுபோல் பொருள் உடனடியாக கிடைத்தவர்கள் கோயிலுக்கு வந்து கோழி பலியிட்டு அன்னதானம்  வழங்குவார்கள். முனியப்பன் கோயிலில் தினமும் யாராவது ஒருவர் விருந்து வைப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பவுர்ணமி ஜாமத்தில் மாயமான கர்ப்பிணி
அமானுஷ்யமான சம்பவங்கள் நம்மை சுற்றி ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. புருவம் உயர சொல்லப்படும் விஷயங் களை கேட்கும் போது நமக்கும் திகில் தொற்றிக் கொள்ளும். அப்படி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பனங்காட்டில் 80 ஆண்டு களுக்கு முன்பு நடந்த மர்மத்துக்கு இன்னும் விடை கிடைக்காமல் உள்ளது.பனங்காட்டை சேர்ந்த சடையப்ப பூசாரி, அமராவதி நதிக்கரை முனியப்பன் கோயிலில் பூஜை செய்து, உடுக்கை அடித்து பாட  ஆரம்பித்தால், முனிகள் அவருக்குள் இறங்கி ஆட்டம் போட துவங்கும். அவர் ஏவும் வேலைகளை உடனே செய்து முடிக்கும் என் பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை.அன்றைய காலக்கட்டத்தில் அமராவதி நதிக்கரையின் இரு கரைகளிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விவசாய பூமி. முப்போக மும் நெல் விளையும். அமாவாசைக்கு 10 நாட்களுக்கு பிறகு துவங்கி, பவுர்ணமி வரை நிலா வெளிச்சத்தில் வயலில் பணிகள் நடக் கும். ஒருமுறை விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் பனங்காடு விவசாயிகள் கஷ்டப்பட்டனர். பணிகளை முடிக்க முடி யுமா என்று விவசாயிகளுக்கு சந்தேகம்.சடையப்ப பூசாரியிடம் குறி கேட்டனர். ‘நாற்று நடவு முடித்து தருவது என் பொறுப்பு’ என்று வாக்கு கொடுத்தார். தலைச்சன் பிள் ளையை சுமக்கும் கர்ப்பிணி ஒருத்தியை பவுர்ணமி இரவு நடவுக்கு அனுப்ப வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். சந்தோஷமாக  ஒப்புக்கொண்டாள் ஆலடிக்களத்தை சேர்ந்த அய்யாவு மனைவி செல்வி. பவுர்ணமி நாள் வந்தது. பகலில் நாற்றங்கால்களில் இருந்த நெல் நாற்றுகளை, கட்டுகளாக கட்டி வயல்களில் நடவுக்கு போட்டனர்.  நிலவு மெல்ல மேலெழுந்து உலா வரத் துவங்கியது. முனியப்பன் கோயிலில் பூஜையும் தொடங்கியது. நடு ஜாமம் வந்ததும் சடை யப்ப பூசாரி ஆற்றில் குளித்துவிட்டு கோயிலுக்கு வந்தார். அங்கே செல்விக்கு மஞ்சள் பூசி தனியாக அமைக்கப்பட்டிருந்த மண் மேட் டில் உட்கார வைத்திருந்தனர். உடுக்கை எடுத்து அடித்தபடியே பேச ஆரம்பித்தார் பூசாரி. “வயல்ல முனியோட சேந்து, செல்வி நாத்து நடுறத யார் பாத்தாலும் உசிருக்கு ஆபத்து’’ என்று எச்சரித்தார். கூட்டத்தில் இருந்தவர்களுக்கு பயம் தொற்றி கொண்டது.தலைவிரி கோலமாய் ஆடிக்கொண்டிருந்த பூசாரி திடீரென உரத்த குரலில் “போ தாயி... போ. முனிகளோடு சேர்ந்து போயி... நாத்து  நடவு செய்யி. போ தாயி எந்திருச்சுப் போ..’’ என்று கட்டளையிட்டார். அமைதியாக அமர்ந்திருந்த செல்வி ஆவேசமாக எழுந்து  நடக்க ஆரம்பித்தாள். அவள் போன பாதையைக் கூட, பயத்தில் யாரும் திரும்பி பார்க்கவில்லை. செல்வியை நடவுக்கு அனுப்பிவி ட்டு கோயிலுக்குள் போன பூசாரி, பொழுது விடிந்துதான் வெளியே வந்தார். கோயில் வாசலில் மக்கள் காத்திருந்தார்கள். ‘‘நாத்து நடவு முடிஞ்சிடிச்சு. வாங்க போய் பார்க்கலாம்’’ என்றார். வயலில் அளவு மாறா மல் நாற்று நடப்பட்டிருந்தது. செல்வி? காணோம். ஊர் முழுக்க தேடியும் அவளைப் பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை. செல்வியை முனி காவு வாங்கி விட்ட தாக ஊரில் பேசிக்கொண்டார்கள். ஆவேசம் வந்தவராய் பூசாரி சொன்னார்.. ‘‘என்னிக்காச்சும் ஒருநாள் அவ வந்துருவா... வர லேனா இயற்கையோட கலந்துட்டானு அர்த்தம்’’ பூதகமாய் சொல்லி முற்றுபுள்ளி வைத்தார். சம்பவம் நடந்து 80 ஆண்டுகள் ஆகி விட்டது. செல்வி என்ன ஆனாள் என்பது இன்றும் மர்மமாகவே இருக்கிறது. செல்வி நாற்று நட்ட வயல் இன்றும் ‘புள்ளத்தாச்சி  வயல்’ என மண்மேடாக கிடக்கிறது.
காமன்வெல்த் ஊழல்: சுரேஷ் கல்மாடியிடம் 102 கேள்விகள்
காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் சுரேஷ் கல்மாடியிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினார்கள். டெல்லியில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகள் ஏற்பாடு செய்ததில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது பற்றி விசாரணை நடத்திய சிபிஐ போட்டி ஏற்பாடு குழுவைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. ஒருங்கிணைப்புக்குழு தலைவர் சுரேஷ் கல்மாடியின் மும்பை, புனே மற்றும் டெல்லி வீடுகளில் கடந்த மாதம் 24ம் தேதி அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. ஊழல் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அதனை வெளியிடாமல் இருக்க ரூ.4 கோடி கொடுக்க வேண்டும் எனவும் மர்மநபர் ஒருவர் சுரேஷ் கல்மாடிக்கு எழுதிய மிரட்டல் கடிதத்தையும் சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றினர்.‘மிரட்டல் கடிதம் எழுதியவர் யாரென தெரியாது’ என்று சுரேஷ் கல்மாடி கூறினார். இந்த சோதனையை தொடர்ந்து சுரேஷ் கல்மாடியின் உதவியாளர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. சுரேஷ் கல்மாடிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு கல்மாடி மறுப்பு தெரிவித்திருந்தார்.இந்நிலையில் இன்று காலை சிபிஐ அலுவலகத்துக்கு சுரேஷ் கல்மாடி வந்தார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். இதுவரை சிக்கிய ஆதாரங்கள் அடிப்படையில் 102 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் ஒன்றை சிபிஐ அதிகாரிகள் தயாரித்திருந்தனர். இந்தப் பட்டியலின்படி கல்மாடியிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
மச்சுபிச்சு மலை ரகசியம்
தென்அமெரிக்க நாடான பெருவில் காடுகள் மிகவும் பயங்கரமானவை. மலைகள், நதிகள், பள்ளத்தாக்கு, அடர்ந்த மரங்கள், வழிம றிக்கும் கொடிகள், இலைச் சருகுகளுக்கு இடையே ஊர்ந்து மறையும் கட்டுவிரியன் பாம்புகள் என காட்சியளிக்கும் அந்த காட்டு  வழியாக பயணிப்பது மிகவும் கடுமையானது. 1911ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பிங்காம்,  மர்ம போர்வை அணிந்திருந்த காட்டுக்குள் ஆய்வுக்காக நுழைந்தார். மண்டிக் கிடந்த புதர்களுக்கு இடையே, மலைச்சரிவுகளில் செதுக்கப்பட்ட தளங்கள்.. அதில் கற்களால் கட்டப்பட்ட பிரமிக்க வைக்கும் கட்டுமானங்கள் தெரிந்தன. உடனே அதை மீட்டெடுக்கும் பணியில் இறங்கினார். புதர்களை அகற்றி ஆய்வுகளை தொடங்கினார். பல நூற்றாண்டுகள் பராமரிப்பின்றி கிடந்தாலும் அவை சேதம் ஏதும் அடையாமல் பரிமளித்தன. நீண்ட ஆய்வுக்கு பிறகு மச்சுபிச்சு மலை அதிசயங்கள், அதில் மறைந்திருந்த ரகசியங்கள் குறித்து உலகுக்கு அறிவித்தார். பெரு நாட்டில் வாழ்ந்த இன்கா சாம்ராஜ்யம் வளர்ச்சியின் உச்சத்தில் இருந்த 1450&ம் ஆண்டில் மச்சுபிச்சு மலை கட்டுமானங்கள்  அமைக்கப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கணிக்கின்றனர். இன்கா சாம்ராஜ்யத்தின் தலைநகரான குஸ்கோ நகரில் இருந்து சுமார்  80 கி.மீ. தொலைவில் அடர்ந்த காடுகளுக்கு இடையே மச்சுபிச்சு அமைந்துள்ளது. இதன் 3 புறமும் சூழ்ந்து பாயும் உருபாமா நதி  மச்சுபிச்சுவுக்கு இயற்கை அகழிபோல் அமைந்துள்ளது. இது இன்கா சக்கரவர்த்தி பச்சாகுட்டியின் மலை வாசஸ்தலம் எனவும், எதிரி கள் நெருங்க முடியாத அளவுக்கு பாதுக்கப்பட்ட பகுதி எனவும் கூறப்படுகிறது.சுமார் நூறு ஆண்டுகள் புகழின் உச்சியில் இருந்த இன்கா சாம்ராஜ்யம் 1572&ல் சரிந்தது. பெரியம்மை தாக்குதல் மற்றும் ஸ்பானிஷ்  படையெடுப்பால் இன்கா இனம் அழிந்து போனது. ஆனால் ஸ்பானிஷ் வீரர்களால் மச்சுபிச்சுவை மட்டும் கண்டுபிடிக்க முடியவி ல்லை. இதனால் அது சேதப்படாமல் தப்பியது.நிலநடுக்க அபாயம் உள்ள பகுதி பெரு. எனவே அங்கு வசித்த இன்கா மக்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத கட்டிடங்களை கட்டு வதில் திறமை மிக்கவர்களாக இருந்துள்ளனர். பெரிய வழவழப்பான சதுர கற்களை அடுக்கி முக்கிய கட்டிடங்களின் சுவர்கள் கட் டப்பட்டன. இவை நிலநடுக்கத்தின்போது குலுங்கினாலும் நொறுங்கி விழாமல் அசைந்து கொடுத்து, பின்னர் பழைய நிலைக்கே தி ரும்பி விடுமாம். இரு கற்களுக்கு இடையே ஒரு பிளேடுகூட நுழைய முடியாத படி கனகச்சிதமாக சுவர்களை அமைத்துள்ளனர். கத வு, ஜன்னல்கள் வளைவான முனைகளுடன் முக்கோண வடிவில் கீழிருந்து மேல் சரிவாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பல நில  அதிர்வுகளை தாங்கி இன்றும் இந்த கட்டிடங்கள் நிமிர்ந்து நிற்கின்றன.மச்சுபிச்சுமலை மையப்பகுதியில் இன்டிகுவாட்னா, சூரிய கோயில் மற்றும் 3 ஜன்னல்கள் அறை என 3 முக்கிய கட்டிடங்கள் உள் ளன. இதில் இன்டிகுவாட்னா இன்கா மக்களின் சூரிய கடிகாரம் மற்றும் நாள்காட்டி எனக் கருதப்படுகிறது. சூரியனை நோக்கி நடப் பட்டிருக்கும் இந்த கல் ஏற்படுத்தும் நிழலை வைத்து நேரம் மற்றும் நாட்களை அவர்கள் கணக்கிட்டனர். மச்சுபிச்சு மலையானது  குடியிருப்பு பகுதி, விவசாய பகுதி என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் இடையே பெரிய மதில் சுவர். விவசாய தளங் களில் நீரூற்றுகள், ஓடைகள் என திட்டமிடப்பட்ட பாசன வசதி செய்யப்பட்டுள்ளது. மச்சுபிச்சு மட்டுமின்றி அருகில் உள்ள மலை களிலும் கட்டுமானங்கள், விவசாய தளங்கள் உள்ளன. இவற்றுக்கு இடையே சாலை வசதியும் செய்யப்பட்டிருப்பது பிரமிப்பாக உள் ளது.இந்நிலையில் பராமரிப்பின்றி விடப்பட்ட மச்சுபிச்சு மலை அடர்ந்த காடுகளால் மூடப்பட்டது. அதற்கு பின்னர் பல நூற்றாண்டுகள்  அது வெளியுலகுக்கு தெரியாமலே இருந்தது. 1911&ல் அமெரிக்க ஆராய்ச்சியாளர் பிங்காம் தான் கண்டறிந்து உலகுக்கு அறிவித்தார்.  அப்போதிருந்துமச்சு பிச்சு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த தலமாகிவிட்டது. மச்சுபிச்சுவை பாதுகாக்கப்பட்ட, வரலாற்று முக்கியத்து வம் வாய்ந்த பகுதியாக 1981&ல் பெரு அரசு அறிவித்தது. 1983&ல் யுனெஸ்கோ அமைப்பு அதை உலக பாரம்பரிய தலமாக அறிவித் தது. 2007&ல் யுனெஸ்கோ நடத்திய வாக்கெடுப்பில் மச்சுபிச்சு மலை 7 உலக அதிசயங்களில் ஒன்றாக தேர்வானது. பெருநாட்டின்  முக்கிய சுற்றுலா தலமாகியுள்ளது. மச்சு பிச்சுவில் ஆய்வு நடத்திய பிங்காம் அங்கிருந்த விலை மதிப்பற்ற கோப்பைகள்,  வெள்ளி சிலைகள், நகைகள், மனித எலும்புகள்  உள்பட ஆயிரக்கணக்கான பொருட்களை யேல் பல்கலைக்கழகத்துக்கு எடுத்துவந்துவிட்டார். தற்போதும் அவை யேல் பல்கலைக்க ழத்திலேயே உள்ளன. அவற்றை பெருவிடம் திருப்பி அளிக்க யேல் மறுத்து வருகிறது. அவற்றை பாதுகாக்க பெருவில் போதிய வசதி யில்லை என சாக்கு கூறி யேல் பல்கலை தட்டிக்கழித்து வருகிறது.கடல் மட்டத்தில் இருந்து சுமார் 8 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் மச்சுபிச்சு மலையில் கட்டிடங்களையும் சுவர்களையும் கட்ட  இன்கா மக்கள் எங்கிருந்து கற்களை எடுத்துச் சென்றார்கள் என்பது இன்று வரையில் புதிராக இருக்கிறது. மேலும், மச்சுபிச்சு பகுதி யில் ஏராளமான மனித எலும்புக்கூடுகள் கிடைத்திருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை பெண்களுடையது. பெண்கள் கூட்டம்  கூட்டமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது. கொத்துக் கொத்தாக பெண்களை கொலை செய்ய எ ன்ன அவசியம் வந்தது? மச்சுபிச்சு மர்மம் இன்றளவும் தொடர்கிறது.
ரத்த பலி வாங்கும் விபரீத ஆவி!
கடந்த 18ம் தேதி சாயங்காலம்... அடைமழையை கிழித்தபடி ஒரு சுமோ புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி பறந்து கொண்டி ருந்தது. வளைகாப்பு நிகழ்ச்சிக்காக வந்த உறவினர்களை புதுவையில் இறக்கி விட்டு மீண்டும் சொந்த ஊரான விழுப்புரத்துக்கு தி ரும்பிக்கொண்டிருந்தார்கள் அதில் பயணித்தவர்கள். மகிழ்ச்சியாக பேசி சிரித்தபடி காருக்குள் நிம்மதியாக சாய்ந்திருந்தனர். அந்த  நிம்மதி வெகுநேரம் நீடிக்கவில்லை. கெங்கராயபாளையத்தை தாண்டி குடுமியாங்குப்பம் என்ற இடத்தை கடந்தபோது அது காணாமல் போனது. எதிரே வந்த வேன் அவர்களின் காரை பதம் பார்த்ததில் காரோடு சேர்ந்து 4 பேர் நசுங்கினார்கள். கீழே குதிக்க முயன்ற டிரைவரும் உயிர் தப்பவில்லை. பின்னால் வந்த லாரி அவர் உயிரை பறித்துக் கொண்டு பறந்து விட்டது. வேனில் இருந்தவர்களுக்கும் ரத்தம் சொட்ட சொட்ட காயம். இது போன்ற விபத்து நடப்பது சகஜம் தானே என்றால் பதறியடித்து மறுக்கிறார்கள் குடுமியாங்குப்பம் வாசிகள். ‘ஏற்கனவே இந்த ரோட்டில் ஏகப்பட்ட விபத்துகள் நடந்திருக்கிறது. அதிலும் குறிப்பா குடுமியாங்குப்பம் பகுதி ரோட்டில் அடிக்கடி  விபத்து நடந்து உயிர்கள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் உயிர்கள் காவு வாங்கப்படுவது போல  விபத்துகள் நடப்பதால் அந்த இடத்தை கடக்கவே பயமாக இருக்கிறது’ என்று பீதியுடன் சொல்கிறார்கள் ஊர்க்காரர்கள். இங்க  ரோட்டோரத்தில இருக்கிற ஆஞ்சநேயர் கோயில் மேலேயே மூணு தடவை வண்டிகள் மோதி சேதமாயிருக்கிறது. ஒரு வேளை சாமி  குத்தமா இருக்குமோ என சிலர் அச்சப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இதுபற்றி ஊர் பெரியவர் ஒருவரிடம் கேட்டபோது பீதியுடன் அவர் கூறியது, ‘சில வருடங்களாக கெங்கராயபாளையத்தில இருந்து  குடுமியாங்குப்பம் வரையுள்ள 2 கிலோ மீட்டர் தூரமுள்ள ரோட்டில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் ஏதாவது காத்து, கருப்போட  விளையாட்டா இருக்குமோனு ஊர்க்காரங்கள்லாம் பயத்தில இருக்காங்க. குறிப்பிட்ட இடத்தில மட்டும் அடிக்கடி உயிர்கள் காவு  வாங்கப்படுவதை பாத்தா... அத நம்பாமவும் இருக்க முடியல. ஒவ்வொரு முறையும் நாங்க இந்த பகுதிய கடக்கும் போதும் சாமிய  வேண்டிக்கிட்டுதான் போவோம்‘.அந்த பகுதியில கெட்ட ஆவிங்க நடமாட்டம் இருக்கு. அதுதான் விபத்த நடக்க வச்சு ரத்தப்பலி வாங்குது என்று பலர் அச்சத்து டன் கூறுகிறார்கள். டிரைவர்களிடம் இதுபற்றி கேட்ட போது, ‘மற்ற பகுதியில செல்லும் போது எதுவும் தெரியறதில்ல. ஆனா கெங் கராயபாளையத்தை தாண்டி குடுமியாங்குப்பம் வரைக்கும் கடக்கும்போது மட்டும் எங்களை  அறியாமல் ஒரு வித படபடப்பு வந்து  விடுகிறது. ரோடு நல்லா இருந்தாலும், பெரிய அளவில் வளைவுகள் இல்லாவிட்டாலும் எதிரே வரும் வாகனம் மீது மோதி விபத்து  நடந்து விடுகிறது. இல்லாவிட்டால் யாராவது ரோட்டை கடக்கும் போது அடிபடறாங்க. எங்களுக்கே என்னன்னு சொல்ல தெரி யல... தினமும் உயிரை கையில பிடிச்சிட்டுத்தான் போக வேண்டியிருக்கு’ என்று பயத்துடன் சொல்கிறார்கள்.
உலகப் பேரழகியின் மர்ம மரணம்
வரலாற்று பேரழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பவர் கிளியோபாட்ரா. கி.மு. 69&30 காலத்தில் வாழ்ந்தவள். பாலில்  குளிப்பாள்.. கண்களில் பல வண்ண மைகளால் அலங்காரம் செய்துகொள்வாள்.. உடல் மினுமினுப்புக்காக முத்துக்களை வினிகரில்  கரைத்து அருந்துவாள்.. என பல கதைகள் அவளை பற்றி உலவுகின்றன. அவள் பேரழகி மட்டுமல்ல ஜூலியஸ் சீசர், மார்க் ஆன் டனி போன்ற மாவீரர்களின் காதல் மனைவியாகவும் இருந்தாள். கிரேக்கம், ரோம், எகிப்து என பல நாடுகளின் வரலாறே அவளால்  மாறியது. போராட்டங்களும், மர்மங்களும் நிரம்பிய அவளது வரலாற்றை இன்றும் பல மேற்கத்திய பல்கலைக்கழகங்கள் ஆராய்ந்து  கொண்டிருக்கின்றன. எகிப்து பேரரசியாக இருந்தாலும் அவள் கிரேக்க பேரரசர் அலெக்சாண்டரின் தளபதி தாலமியின் வம்சாவளியில் வந்தவள். தாலமி கள் தங்களை கிரேக்கர்கள் எனக்கூறுவதில் பெருமை கொண்டிருந்தனர். ஆனால் 12&ம் தாலமியின் மகளாக பிறந்த கிளியோபாட்ரா  தன்னை எகிப்து தேவதை இசிஸின் மறுபிறவி எனக் கூறிக்கொண்டாள். தனது முன்னோர்களை போல் அல்லாமல் மிகுந்த சிரத்தை  எடுத்து எகிப்து மொழியை கற்றுக்கொண்டாள். இதனால் எகிப்து மக்கள் அவளை ஒரு தேவதையாகவே கொண்டாடினர்.வசீகரம், இளமை, புத்திக்கூர்மை, தேசப்பற்று, நினைத்தை சாதிக்கும் உறுதி இவைதான் கிளியோபாட்ராவின் வெற்றி ரகசியம். 11  மொழிகள் சரளமாக பேசுவாள். பேச்சாற்றலும் நிறைந்தவள். அவளது பேச்சுக்கு யாரும் மறு பேச்சு பேசியதில்லை.14 வயதாகும்போதே தந்தையுடன் சேர்ந்து ஆட்சியை பகிர்ந்துகொண்டாள். தந்தை இறந்த பின் 18&வது வயதில் அரசியானாள்.  எகிப்து அரச வழக்கப்படி அரசி மட்டும் தனியாக ஆட்சி நடத்தமுடியாது. இதனால் அந்நாட்டு வழக்கப்படி தனது தம்பி 13&ம் தால மியை திருமணம் செய்துகொண்டாள். எகிப்தில் பெரும் படை கிடையாது. நைல் நதி தீரம் என்பதால் செல்வத்துக்கு பஞ்சமில்லை. இதனால் அண்டைநாடுகள் எகிப்து  மேல் ஒரு கண்ணாகவே இருந்தன.எகிப்தையும் தனது ஆட்சியையும் பாதுகாக்க கிளியோபாட்ரா எடுத்த முடிவு யாரும் எதிர்பாராதது. அப்போது வலிமையுடன் இ ருந்த ரோமப்பேரரசர் ஜூலியஸ் சீசரை காதலிக்க முடிவு செய்தாள். முதல் சந்திப்பிலேயே ஜூலியஸ் சீசரை தன் காதல் வலையில்  வீழ்த்தினாள். அப்போது கிளியோபாட்ராவுக்கு 21 வயது, சீசருக்கு 54. விரைவில் சீசரின் மகனுக்கு கிளியோபாட்ரா தாயானாள். இந்நிலையில் மர்மமான முறையில் 13&ம் தாலமி கொல்லப்பட்டார். கிளியோபாட்ராதான் கொன்றதாக கூறப்படுகிறது. அதன் பின் னர், காதலி கிளியோபாட்ராவை ரோமுக்கு அழைத்து வந்தார் சீசர். இது ரோமானியர்களுக்கு பிடிக்கவில்லை. இது சீசரின் உயி ருக்கே ஆபத்தானது. அதிகார போராட்டத்தில் சீசர் கொல்லப்பட்டார். ஆட்சியை பிடிப்பதில் சீசரின் வாரிசுகளுக்கும் தளபதி களுக்கும் மோதல். இனியும் அங்கிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்தாள் கிளியோபாட்ரா. உடனடியாக எகிப்துக்கு தப்பினாள்.சற்றும் தாமதிக்காமல் தொடர்ந்தது அவளது அடுத்த காதல் அத்தியாயம். தனது சாகசத்தால் ரோம பேரரசின் அதிகாரத்தை கைப் பற்றிய தளபதி மார்க் ஆன்டனியை திருமணம் செய்தாள். அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன. இந்த காலத்தில் தனது 2 சகோதரி கள் மற்றும் சகோதரனை கிளியோபாட்ரா கொன்று எகிப்து அரசுக்கு தன்னைத் தவிர வேறு வாரிசுகள் இல்லாமல் செய்துகொண் டாள்.இந்நிலையில் கிளியோபாட்ராவுக்கு சீசரின் வாரிசான அகஸ்டஸ் சீசரால் ஆபத்து வந்தது. கடும் கோபத்தில் இருந்த அகஸ்டஸ் சீசர்  எகிப்து மீது போர் தொடுத்தார். இதில் பரிதாபமாக தோற்ற ஆன்டனி தற்கொலை செய்து கொண்டார். கிளியோபாட்ராவும் அவ ளது குழந்தைகளும் சிறைபிடிக்கப்பட்டனர். சிறை வாழ்க்கையை விரும்பாத கிளியோபாட்ரா எகிப்து பாலைவனத்தில் திரியும் கொடிய விஷம்கொண்ட நல்லபாம்பை கடிக்க  வைத்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. 39 வயதில் அவளது சகாப்தம் முடிவுக்கு வந்தது.வாழ்நாள் முழுவதும் தன் அழகிய தோற்றம் மீது அக்கறை செலுத்தி வந்த கிளியோபாட்ரா பாம்பு கடித்து இறந்திருக்கமாட்டாள்  என ஜெர்மன் வரலாற்று ஆராய்ச்சியாளர் கிறிஸ்டோபர் செபர் சந்தேகத்தை கிளப்பியுள்ளார். ‘‘பாம்பு கடித்தால் அடுத்த நொடி மர ணம் நிகழ்வதில்லை.சற்று நேர மரண போராட்டம் உண்டு. இதனால் உடல் அலங்கோலமாகி முகம் விகாரமாகிவிடும். கிளியோ பாட்ரா அதை விரும்பவில்லை. அவள் வாழ்ந்த காலத்தில் எகிப்தில் மிகவும் பயங்கரமான விஷம் ஒன்று வழக்கத்தில் இருந்தது. ஓபி யம் மற்றும் விஷத்தாவரங்களின் கூட்டால் செய்யப்படும் கஷாயம் அது. கிளியோபாட்ரா அதைத்தான் அருந்தினாள்’’ என்கிறார்  செபர். எகிப்து பழங்கால ஏடுகளில் இருந்து இதற்கான ஆதாரங்களையும் காட்டுகிறார் செபர். உலகப் பேரழகி கிளியோபாட்ராவின்  வாழ்வு மட்டுமல்ல, மரணமும் புதிரும் மர்மமாகவே இருக்கிறது இன்று வரை.
அமாவாசை இருட்டில் பேய் விரட்டும் முனி
சேலம் - தர்மபுரி எல்லையில் இருக்கிறது தொப்பூர் கிராமம். இங்குள்ள பாலத்தின் அருகே பிரசித்தி பெற்ற முனியப்ப சுவாமி கோயில் உள்ளது. முறுக்கு மீசையுடன் 15 அடி உயரத்தில் பார்ப்பவர்களுக்கு கிலி ஏற்படுத்தும் விதமாய் அருகருகே 2 முனியப்பன் சிலைகள். வலது புற முனியப்பன், கைகளில் ஆள் உயர அரிவாளுடனும், குதிரையை சங்கிலியால் கட்டி வைத்தபடி மிரள வைக்கி றார். மற்றொரு முனியப்பன் 4 அடி உயர கத்தியுடன் காட்சி தருகிறார். இந்த 2 முனியப்பன் சிலைக்கு கீழே பழமை வாய்ந்த மற்றொரு முனியப்பன் சுவாமி சிலையும் இருக்கிறது. கோயிலை சுற்றி புங்க மரம், வேப்பமரம்  உள்ளன. இங்குதான் ஆடு, கோழி, பன்றிகளை பலியிட்டு பூஜை நடத்தப்படுகிறது. பில்லி சூனியம் அகற்றுவது, பேயை விரட்டுவது, திருட்டு போன பொருளை கண்டுபிடிப்பது, தொழிலை பெருக்குவது ஆகியவைதான் இந்த கோயிலின் சிறப்பம்சம்.பெரும்பாலும் அமாவாசை அல்லது ஞாயிற்றுக்கிழமை நாட்களில் சேலம், தர்மபுரி, கோவை, பெங்களூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து  பேய், பிசாசு ஓட்டுவதற்கும், காத்து கருப்பு அண்டாமல் இருக்கவும், பில்லி, சூனியத்தை அகற்றவும் நிறைய பேர் வருகிறார்கள். அமாவாசை கும்மிருட்டில் பேயை, முனி விரட்டும் காட்சி காண்பவர்கள் மிரண்டு தான் போகிறார்கள்.  முனியப்பன் அருள் வந்து,  உடுக்கை ஒலியுடன் பேயை விரட்ட ஆடியபடி வரும் பூசாரியின் ஆக்ரோஷம் நடுநடுங்க வைத்து விடுகிறது.அதே வேகத்தில பேய் பிடித்து ஆடுபவர்களின் உச்சி மண்டை தலை முடியை முடிச்சு போட்டு பேயை ஓட்டும் காட்சி திகில் அடையச் செய்யும். பேய் மீண்டும் அண்டாமல் இருக்க, முடியை வெட்டி பூசாரி நாலாபுறமும் ஆவேசமாய் வீசி எறிகிறார். அடுத்த நிமிடமே பேய் பிடித்து ஆடியவர் சுருண்டு விழுகிறார். பிடித்த பேய் விலகி ஓடியதை போல இயல்பாய் மாறும் காட்சிகள் அமாவாசை இருட்டில் அரங்கேறுகின்றன. அகோர பேய்களையும் இந்த முனி விரட்டி விடும் என்பது இந்த பகுதி மக்களின் நம்பிக்கை. பேய் ஓட்டும் போதும், பில்லி, சூனியம் எடுக்கும் போதும், கோழிகளை கோயில் மரத்தில், கழுத்தில் கயிறு கட்டி தூக்கிலிடுவது  போல தொங்க விடுகின்றனர். கோழி தானாக இறந்ததும், பூசாரி அதனை பிய்த்து நாலாபுறமும் வீசுகிறார். வீசப்பட்ட கோழியை  யாரும் சாப்பிடக் கூடாது. சாப்பிட்டால் மீண்டும் பேய் பிடித்துவிடுமாம். அது முனியின் கோபம் என்று இந்த பகுதி மக்கள் நம்புகி றார்கள். இந்த முனி கடும் கோபக்காரராம். தன்னை யாராவது அலட்சியமாக பேசினால் ரெண்டில் ஒன்று பார்த்து விடுவார் என்று பதறுகி றார்கள் கிராம மக்கள். இந்த வழியாக செல்லும் லாரி டிரைவர்கள் அனைவரும், தினசரி முனியப்பன் சுவாமியை வழிபட்டுதான்  செல்கிறார்கள். அவசர கதியில் வழிபடாமல் சென்ற லாரிகள் டயர் வெடித்து பயணம் தடைப்பட்டு விடுகிறது என்கிறார்கள் டிரை வர்கள். முனியை வழிபட்டு சென்றால் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். முனியப்ப சுவாமி ரொம்ப சக்தி வாய்ந்தவர். அதுக்கு  இங்க பேய் ஓட்ட வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தான் சாட்சி என்கிறார் பூசாரி அன்பழகன்.
நடுக்கடலில் மிரட்டிய பேய் கப்பல்!
நியூயார்க் துறைமுகத்தில் இருந்து மேரி செலஸ்டி என்ற சொகுசு கப்பல் கானா நோக்கி நவம்பர் மாதம் புறப்பட்டது. ஐரோப்பிய  கடற்கரை வழியாக பயணத்தை தொடர்ந்த கப்பல் டிசம்பர் 4&ம் தேதி அட்லான்டிக்  கடலின் நடுப்பகுதியில் அசோரிஸ் தீவுகள்  பகுதி வழியாக காற்றை கிழித்துக்கொண்டு அலைகளில் மிதந்தபடி அமைதியாக சென்று கொண்டிருந்தது.அந்த வழியாக வந்த டே கிரேஷியா என்ற பிரிட்டிஷ் கப்பலில் சென்றவர்கள் நடுக்கடலில் மற்றொரு கப்பல் செல்வதை பார்த்து  மகிழ்ந்தனர். மேரி செலஸ்டி கப்பலில் சென்றவர்களை தொடர்பு கொள்ள முயன்றனர். இதற்காக பல்வேறு சிக்னல்கள் கொடுத்தனர்.  ஆனால், எந்த பதிலும் இல்லை. கப்பலை நெருங்கி வந்து சத்தம் போட்டனர். அப்போதும், அந்த கப்பலில் எந்த சலனமும் இல்லை.  இதனால், சிறு படகுகள் உதவியுடன் மேரி செலஸ்டி கப்பலில் ஏறி உள்ளே சென்றனர்.கப்பலில் விளக்குகள் ஜொலித்துக் கொண்டிருந்தன. உணவு பரிமாறும் கூடத்தில் காலை உணவு தயாராக இருந்தது. துவைக்கப்பட்ட  துணிகள் கொடிகளில் உலர்த்தப்பட்டிருந்தன. பாதுகாப்பான அறைகளிலும் ஏராளமான உணவுப்பொருட்கள். தயார் நிலையில் உயிர்  காக்கும் படகுகள் அதனதன் இடத்தில் வைக்கப்பட்டிருந்தன. துடைத்துவிட்டதுபோல கப்பல் பளிச்சென்று இருந்தது.தளம்தளமாக சென்று தேடினர். ஆனால், ஒருவரைக்கூட காணமுடியவில்லை. எல்லாரும் எங்கே போனார்கள்? பிரிட்டிஷ் பயணி களுக்கு ஆச்சரியம். மேல் தளத்தில் ஆரம்பித்து கீழ் தளம் வரை பாத்ரூமைக்கூட விடாமல் தேடினர். ம்ஹூம். ஆள்அரவமே இல் லை.‘இந்த கப்பல் விபத்தில் சிக்கியிருக்கலாமோ’ என்று ஒருவர் சொன்னார். விபத்தென்றால் சிறு சேதமாவது இருக்க வேண்டும். மேலும்,  ஒன்றிரண்டு பேராவது மிஞ்சியிருப்பார்கள். அதுவும் இல்லை. போராட்டம், சண்டை நடந்ததற்கான அறிகுறியும் இல்லை. கொள்ளை  நடந்ததுபோலவும் தெரியவில்லை. எல்லா பொருட்களும் அப்படியே இருக்கின்றன. உணவுகள் தயாராக உள்ளன. தயாரித்தவர்கள்  யார் எனத் தெரியவில்லை. கப்பலில் இருந்தவர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என்றால் உயிர்காக்கும் படகுகள் அனைத்தும் பத்திர மாக உள்ளன?என்னதான் நடந்தது இந்த கப்பலில்? யாருமே இல்லாமல் கப்பல் மட்டும் பயணத்தை அமைதியாக தொடர்ந்தபடி இருந்தது. பிரிட் டிஷ் பயணிகளுக்கு பீதி அதிகரித்தது. பேய் கப்பலாக இருக்குமோ? சந்தேகத்துடன் இதயத் துடிப்பும் பலமடங்கு அதிகரித்தது.  அலறி அடித்துக்கொண்டு கப்பலை விட்டு இறங்க முயன்றனர்.திடீரென ஏதோ உருண்டு விழும் சத்தம் கீழ் தளத்தில் கேட்டது. பயணிகள் யாரும் நகரவில்லை. பதற்றத்துடன் சில நொடிகள்  கடந்த பிறகு, சாம்பல் நிற பூனை தாவி ஓடி வந்தது. பிரிட்டிஷ் மக்களை பொறுத்தவரை, கப்பல் பயணத்தின்போது பூனையை காண் பது நல்ல சகுனம். அந்த சூழ்நிலையில் அங்கு பூனையை பார்த்ததும் அவர்களுக்கு சற்று நிம்மதி. அடுத்த சந்தேகம்.. யாருமில்லாத கப்பலில் பூனை எப்படி தனியாக இருக்கிறது? ‘இதையெல்லாம் சிந்திக்க நேரமில்லை. தாமதித்தால் நாமும் மாயமாகக்கூடும். ஓடு, தப்பி ஓடு’ என்றபடி அவசர அவசரமாக மேரி  செலஸ்டி கப்பலை விட்டு வெளியேறினர்.பேய் கப்பல் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. சம்பவம் நடந்தது 1872&ல். 138 ஆண்டுகள் ஓடிவிட்டன. கப்பலில் சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்ற விபரம் இதுநாள் வரை தெரியவில்லை. கப்பல் மர்மங்கள் வரலாற்றில் இதுவும் இடம் பிடித்திருக்கிறது.
புதையலை காவல் காக்கும் 7 பூதம்
‘டோய்... தப்பித்தவறிகூட அந்த குகை பக்கம் போயிடாத. அங்க பூதம் இருக்கு. ஒண்ணு ரெண்டில்ல, ஏழு பூதமாக்கும். புதயல அது தான் காப்பாத்துது. யாராவது எடுக்கப்போனா சும்மா உடாது. அலாக்கா தூக்கி விழுங்கிப்புடும்’’ & இப்படித்தான் சின்னஞ்சிறுசுகளி டம்  பூச்சாண்டி காட்டி வருகின்றனர் கிராமத்து பெரிசுகள்.காலப்போக்கில் காற்றில் பரவும் இந்த தகவலுக்கு புது மெருகு பூசி ஆளாளுக்கு கூட்டியோ, குறைத்தோ வெவ்வேறு கதைகள் சொல் கின்றனர். புதையலை காவல் காக்கும் பூதம் பற்றிய கிலி அப்பகுதியில் பலரிடம் காணப்படுகிறது. அவர்கள் சொல்லும் குகைக்குள்  தங்கமும் வைரமும் எப்படி வந்தது? அதிர்ச்சிகரமான பதில்களும், ஆச்சரிய தகவல்களும் பின்னிப்பிணைந்து கிடக்கின்றன. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பி.என்.பட்டி பேரூராட்சி பகுதியில் உள்ளது கோட்டைக்கரடு. இந்த கரட்டின் மீது திப்பு சுல் தான் கோட்டை சிதைந்த நிலையில் இன்றும் காணப்படுகிறது. எங்கும் அடர்ந்த புதர்கள். மொட்டையாக, வழுக்கையாக, கூர்ப்பான தாக.. என பல வடிவில் பாறைகள். இங்குதான் குகைக்குள் 7 கொப்பரைகள் அதாவது 7 அண்டாக்கள் நிறைய புதையல் இருப்பதாக  சொல்கின்றனர் மக்கள்.‘புதையல் எடுக்கப் போனா, பூதம் விழுங்கிடும்’ என்ற பயமுறுத்தலையும் மீறி சிலர் நெஞ்சை நிமிர்த்தி குகைக்குள் சென்றிருக்கின்ற னர். கும்மிருட்டாக இருக்கும் குகையில் பாதை தெரிவதற்காகவும், எதிரே ஏதும் அபாயம் இருக்கிறதா என்பதை உணரவும், விஷப் பூச்சிகளிடம் இருந்து தப்பிக்கவும் தீப்பந்தம் ஏந்திச் சென்றனராம். குகைக்குள் நுழைந்து சில அடி தூரம் சென்றதுமே தீப்பந்தம் படா ரென்று அணைந்திருக்கிறது. தைரியமாய் உள்ளே போன வீராப்பு ஆசாமிகள் குலைநடுங்கிப்போய் குகையை விட்டு தலைதெறிக்க  ஓடி வந்த சம்பவம் அடிக்கடி நடந்திருக்கிறது.நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்து அதற்கான காரணங்கள், பழங்கதைகளை விவரிக்கின்றனர் மக்கள்... ஏழு பூதத்தின் வேலைதான் அது. அதுனால முடியாதது ஒண்ணுமே இல்ல. புதையல் தேடிப் போனவங்க உசிரோடு திரும்பினதா  சரித்திரம் இல்ல. அது.. வெள்ளைக்கார ஆட்சி இந்தியாவுல காலூன்றி, வேரூன்றின நேரம்.. அப்ப மேட்டூர் பகுதி திப்பு சுல்தான் ஆளுகைல இருந்திச்சு. தன்னை பாதுகாத்துக்க கரட்டின் மீது திப்பு சுல்தான் கோட்டை கட்டினான். எதிரிகள் நெருங்கின சூழ்நிலை யில, தப்பி தலைமறைவாகி பதுங்கிக்கொள்ள இந்த கோட்டைதான் அவனுக்கு பயன்பட்டது. கோட்டையூரில் இருந்து இது 15 கி.மீ.  தூரத்துல இருக்கு.புதையலை பூதம் காவல் காக்கும் குகையும் இங்கதான் இருக்கு. கோட்டைக்கரட்டில் இருந்து கோட்டையூருக்கு ரகசிய சுரங்கம் இ ருக்கு. பிரிட்டிஷ் படையிடம் இருந்து தப்பிய திப்பு சுல்தான் படை வீரர்கள் இது வழியாத்தான் தப்பினாங்க.இங்குள்ள குகையிலதான் 7 கொப்பரை நிறைய தங்கம், வைரம், வைடூரிய நகைகள் இருக்கு. அதை காலம் காலமா ஏழு பூதம்தான்  காவல் காக்குது. யாரையும் பூதம் உள்ள விடாது. மீறிப் போனவங்க உசிரோட திரும்பினதா சரித்திரம் இல்ல. 20 வருஷம் முன்னாடி  வரை, குகைக்குள்ள 10 அடி தூரமாவது போய்ட்டு வர்ற அளவுக்கு இருக்கும். இப்ப நுழையக்கூட முடியாத அளவுக்கு புதர் மண்டியி ருக்கு’’ என்கின்றனர் மக்கள்.சிலர் தங்கள் அனுபவத்தை பீதி குறையாமல் விவரிக்கின்றனர்.. ‘‘நான்கூட குகைக்கு போயிருக்கேன். தீப்பந்தம் அணையிறாப்புல இ ருந்திச்சு. உடனே வெளியே வந்துட்டேன். அந்த கண நேர வெளிச்சத்தில உள்ளே பாத்தேன். குகை முழுக்க மனித எலும்புக்கூடு  குவிஞ்சு கிடந்தது. புதையல் தேடிப் போனவங்களை பூதம் அலாக்கா தூக்கி விழுங்கி எலும்புக்கூட்டை அங்கயே வீசியிருக்கு. மனு ஷங்க பாச்சா பூதத்துக்கிட்ட பலிக்காது’’ என்கின்றனர்.ஒரு ஆள் மட்டும் நுழையும் அளவுக்கு இருக்கிறது குகைப் பாதை. மலை உச்சியில் இருந்து மேட்டூர் அணை சுவர் வரை கற்கள் அ டுக்கப்பட்டதற்கான அடையாளம் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. தண்ணீர் வற்றும் நேரத்தில் மட்டும் இது வெளியே தெரிகி றது.ஊரை விட்டு வெகு தூரம் தள்ளி இருப்பதால் யாரும் குகைப் பக்கமோ, திப்பு சுல்தான் கோட்டைப் பக்கமோ செல்வதில்லை.  கோட்டையூருக்கும், குகைக்கும் இடைப்பட்ட ரகசிய வழி குறித்த மர்மம் இன்னும் நீடிக்கிறது. கோட்டையூர் & கோட்டைக்கரடு &  திப்புசுல்தான் கோட்டை., ரகசிய சுரங்கப்பாதை... இவை எல்லாமே மர்மமாய் இருக்கிறது.
காவிரி கரையில் கரை ஒதுங்கும் உடல்கள்: சூறாவளியாய் சுழன்று வரும் ஆவிகள்
மீன்கள் கூட்டமாக துள்ளுவதுபோல் சத்தம்... வலை விரிச்சா எதுவும் சிக்குவதில்லை. பரிசலில் பலர் மீன் பிடிப்பதுபோல் தெரிகி றது... பக்கத்தில் போனா ஆளே இருக்க மாட்டாங்க. காவிரி ஆற்றுப் பகுதியில்தான் இந்த மாயாஜாலம். அங்கே என்ன நடக்குது.  ஆத்துல மீன் மாதிரி ஓடுறது யாரு, அரூபமாக பரிசலில் மீன் பிடிப்பது யாரு... இந்த கேள்வியை யாரிடம் கேட்டாலும், ‘எல்லாம்  ஆவிகள் செய்யற சேட்டைதான்’ என்கின்றனர். பெத்து வளர்த்த பிள்ளைங்க வயதானதால விரட்டியடிச்சிட்டாங்க, காதலுக்கு வீட்ல எதிர்ப்பு, கள்ளக்காதல் அம்பலமானதால் அவ மானம்.. இப்படி பல விஷயங்களால் மனம் நொந்தவர்கள் நிம்மதி தேடிச் செல்லும் இடம் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணை.  காவிரி ஆறுதான் அவர்களுக்கு அடைக்கலம். விரக்தியோடு வந்து விழுபவர்களை கட்டித்தழுவி விழுங்கிவிடுகிறது ஆற்று நீர்.தானாக விழுந்து உயிரை மாய்ப்பவர்கள் ஒரு பக்கம். போதையில் ஆற்றில் இறங்குபவர்கள், கவனக் குறைவாக குளிப்பவர்கள், பரிச லில் இருந்து கவிழ்ந்து ஆற்றில் விழுபவர்கள் என்ற வகையிலும் மரணக் கணக்கு அதிகரிக்கிறது. இவர்களது உடல் பல மைல் தூரம் அடித்துச் செல்லப்பட்டு, சேலம், தர்மபுரி மாவட்ட எல்லைகளான கோட்டையூர், ஒட்டனூர்,  பண்ணவாடி, நாகமரை, ஏமனூர் ஆகிய பகுதிகளில் கரை ஒதுங்குகின்றன. அற்ப ஆயுளில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து  கொள்ளும் பலரது உடல் கரையில் ஒதுங்கி அழுகி, எலும்புக்கூடாகி கிடக்கிறது. ஆனால், அவர்களது ஆவி மட்டும் காவிரிக் கரை யையே சுற்றிச்சுற்றி வருகிறதாம். சொந்த, பந்தங்களை தேடி கரையோர கிராமங்களுக்கும் ஆவிகள் விசிட் அடிப்பதாக சொல்கின்ற னர். வழியில் யாராவது சிக்கிக்கொண்டால் அவர்களை ஆட்டிப் படைக்கிறது. பல உயிர்களை பலி வாங்கி, தனக்கு துணை சேர்த் துக் கொள்கிறது.சில ஆண்டுகளுக்கு முன்பு கோட்டையூர் பரிசல் துறை. மீனவ குடும்பம் ஒன்று பரிசலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தது. பச்சை  குழந்தையுடன் பெண்ணும் வலை வீசினார். உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. திடீரென ஒரு சத்தம். கண் மூடி  கண் திறப்பதற்குள் சூறாவளியாய் வருகிறது காற்று. அவ்வளவுதான் பரிசல் தலைகுப்புற மிதந்தது. அதிலிருந்த பெண்ணும், அவளது  கைக் குழந்தையும் நீரில் பிணமாக மிதந்தனர். சுழன்றடித்த சூறாவளியாய் வந்தது வேறு எதுவும் இல்லை.. ஆவிகளின் அட்டகாசம்தான் என அஞ்சியபடி சொல்கிறார்கள் மீனவர் கள். இதனால், பெரும்பாலும் உச்சிவெயில் நேரத்தில் அந்தப் பகுதியில் யாரும் மீன்பிடிக்க செல்வதில்லை. மீனவர்கள், கரையோர  விவசாயிகளுக்கு மதிய உணவு கொடுக்க வரும் பெண்களையும் ஆவிகள் பிடித்து பாடாய்படுத்துகிறதாம்.சடலங்கள் அதிகம் ஒதுங்கும் கரையோர பகுதிகளில் அடிக்கடி சலங்கை ஒலி கேட்பதாகவும், பெண்கள் தங்களை ஆசையாய்  அழைப்பது போன்று இருப்பதாகவும் மீனவர்கள் பீதியுடன் கூறுகின்றனர். கரையோர கிராமங்களில் வசிக்கும் ஏராளமான பெண்கள்  பேய் பிடித்த நிலையில் கோயில்களுக்கும், மந்திவாதிகளை தேடியும் படையெடுத்து வருகின்றனர். ஆவி பீதியால் கிராம மக்கள், மீன வர்களின் கையிலும், இடுப்பிலும் டஜன் கணக்கில் மந்திரரித்த தாயத்துகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் ஆவிகளின் அட்டகாசம் அதிகமாகி விடுகிறதாம். இதனால் அந்த நாட்களில் மீனவர்களும் விவ சாயிகளும் தொழிலுக்கு லீவு விட்டு விடுகின்றனர். அதையும் மீறி மீன் பிடிக்க சென்றவர்களில் சிலர் திரும்பி வரவில்லை என்கின்ற னர். ‘‘நடுராத்திரியில ஊரு பக்கமா ஆவிங்க வந்து போகும். அப்ப நாய்ங்க எல்லாம் ஒரே நேரத்துல ஊளையிடும். சில நேரத்துல ஊரே  மயான அமைதியில இருக்கும். அப்ப, வினோதமா ஒரு சத்தம் கேட்கும். பல பேரு என்னென்னமோ பூஜையெல்லாம் செஞ்சி பாத் துட்டாங்க. ஆனா, ஆவிங்க அடங்குனா மாதிரி தெரியல’’ என்று பீதி கிளப்புகிறார் ஒரு பெரியவர்.பண்ணவாடி பரிசல் துறையில் மீன் வறுத்து விற்கும் 70 வயது லட்சுமி பாட்டி சொல்றாங்க.. வாழவேண்டிய வயசுல உசுர விடுறவங்களோட ஆவி இந்தப் பக்கம் அதிகமா சுத்திட்டுதான் இருக்கு. ஒரு நாள் வேலமங்கலம் கரட் டுப் பகுதியில புருஷனும் பொஞ்சாதியும் மீன் பிடிச்சிட்டு இருந்தாங்க. திடீர்னு மழையும் காத்தும் சேந்து வந்துடுச்சி. பரிசல பாறை  மறைவுல நிறுத்திட்டு திரும்பியிருக்காங்க.  கரையில பரக், பரக்குனு சத்தம் கேட்டிருக்கு. உத்து பாத்தப்ப குழந்த மாதிரி ஒரு உருவம்  தெரிஞ்சிருக்கு. ரெண்டு பேருக்கும் தூக்கி வாரிப்போட்டுடுச்சாம். கரைக்கு ஓடிவந்து, அங்க நிறுத்தியிருந்த வண்டிய எடுத்துக்கிட்டு  புறப்பட்டாங்க. அப்ப அந்த குழந்தை உருவம் வானத்துக்கும், பூமிக்குமா எழுந்து நின்னுச்சாம். உசுரு தப்பி வூட்டுக்கு வந்தவங்கதான்.  அப்புறம் குளிர்காய்ச்ச வந்து படுத்த படுக்கையாயிட்டாங்க. பாடம் போட்டு, எந்திரம் கட்டி, மருத்துவம் பார்த்து அவங்க மீண்டு  வர்றதுக்குள்ள போதும்போதும்னு ஆயிடுச்சி... படபடப்பு நிற்காமல் சொல்லி முடித்தார் பாட்டி. ஆவி பீதியில் இன்னமும் பல கிராமங்கள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன.
இருட்டில் துரத்திய வேட்டி உருவம்
‘‘ஏய்... மணி பத்தாச்சு. த்ரீஃபேஸ் கரண்டு வந்திருக்கும். தோப்புக்கு போய் மோட்டார் போட்டு வந்துரலாம். துணைக்கு வர்றியா?’’  நண்பருடன் கிளம்பினார் புதுவை குருவிநத்தத்தை சேர்ந்த ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 25 வயது வாலிபர். கல்யாணம் ஆக வில்லை. துணிச்சல்காரர். மறக்காமல் டார்ச் லைட்டையும் எடுத்துக்கொண்டார்.இருட்டென்றால் அப்படி ஒரு இருட்டு. டார்ச் லைட்டை அடித்தபடியே வயல் வரப்பில் நடந்து சென்றார்கள். ஆளை மறைக்கும்  அளவுக்கு செடி, கொடிகள் வளர்ந்திருந்ததால் அதன் நடுவே புகுந்து சென்றார்கள். 20 நிமிஷ நேர நடைக்கு பிறகு, தென்னந்தோப் புக்கு வந்து சேர்ந்தனர். அங்கு மோட்டார் கொட்டகை மேல் மங்கலாக எரிந்துகொண்டிருந்தது குண்டு பல்பு.கொட்டகைக்கு போய் மோட்டாரை போட்டார் ராஜா. பட்டென்று சத்தம். பீஸ் போய்விட்டது. ஒற்றை பல்பும் அணைந்ததில்  கும்மிருட்டு பயமுறுத்தியது.பீஸை போடலாம் என்றால் டார்ச் மங்க ஆரம்பித்தது. திருகி, தட்டிப் பார்த்தும் பயனில்லை. என்ன செய்யலாம் என்று இருவரும்  யோசனையில் இருந்த நேரத்தில்.. திடீரென படபடவென்று சத்தம். பக்கத்தில் தரைக் கிணற்றில் உள்ள மோட்டார் கொட்டகை தகரம் தடதடவென்று ஆடிக்கொண் டிருந்தது. இந்த நேரத்தில் என்ன சத்தம்..? ராஜா மெதுவாக எட்டிப் பார்த்தார். ஆள்நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் வெள்ளை வேட்டி காற்றில் பறப்பதுபோல இருந்தது.தைரியம் உள்ளவர்தான் என்றாலும் வியர்க்க ஆரம்பித்தது. நண்பரை கூப்பிட்டார். ‘‘அங்கு என்னமோ அசையுது பாரு’’. நண்பர்  பார்த்தார். ராஜாவும் சேர்ந்து பார்த்தார். வேட்டி அசைந்த இடத்தில் இப்போது ஒரு உருவம் தெரிந்தது. இருவரையும் பீதி பற்றிக் கொண்டது. உடல் வெடவெடக்க ஆரம்பித்தது. லப்டப் அதிகரித்தது. ‘‘வா போய்டலாம்’’ஓட்டமும் நடையுமாக புறப்பட்டார்கள். சிறிது தூரம் போனதும் நண்பருக்கு சந்தேகம். நின்று திரும்பிப் பார்த்தார். அவர்களுக்கு பின்னால் 10 அடி தூரத்தில் வேட்டி அசைந்துகொண்டிருந்தது. அப்போது ஓட்டம் பிடித்தவர்கள்தான்..  வயல், வரப்பு, மரவள்ளிக்கி ழங்கு தோட்டம், கரும்புக்காடு.. கண்மண் தெரியாமல் ஓடினார்கள். எங்கெங்கோ சுற்றி ஒருவழியாக ஊர் வந்து சேர்ந்தார்கள். அது வரை அவர்களை துரத்திவந்த வேட்டி உருவம் ஊர் எல்லையோடு நின்றுவிட்டது.வீட்டுக்கு சென்று பல மணி நேரம் ஆன பிறகும், அவர்களது பதற்றம் அடங்கவில்லை. அன்று இரவு முழுவதும் இருவருக்கும் தூக் கமே வரவில்லை. கண்ணை சற்று மூடினாலும் கண்எதிரே வேட்டி அசைந்து கிலி ஏற்படுத்தியது. இந்த விஷயம் வெளியே தெரியவந்ததில்.. மறுநாள் ஊரே பரபரத்தது.ஊர் பெரியவர் ஒருவர் சொன்னார்.. ‘‘அந்த மோட்டார் கொட்டாயில 6 மாசம் முன்னாடி பஞ்சு வியாபாரி ஒருத்தரு, தொட்டியில  கால்கழுவ போனப்போ, போஸ்ட் தாங்கிப்பிடிக்கும் எர்த் கம்பியில தலை பட்டுருச்சு. கரண்டு அடிச்சி அங்கேயே செத்துட்டாரு.  அவருதான் ஆவியா சுத்துராரு’’ என்றார். சம்பவம் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்றாலும் இப்போதும் அந்த தோப்பு பகுதி அப்பகுதியினருக்கு பீதியாகத்தான் இருக்கிறது.இன்னொருவர் வேறொரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.. ‘‘40 வருஷம் முன்னாடி மயிலம் முருகன் கோயிலுக்கு பங்குனி உத்திரம்  திருவிழாக்கு அப்பா, அம்மா கூட்டிட்டு போயிருந்தாங்க. எனக்கு 12 வயசு இருக்கும். ஊர் திரும்ப பஸ்சுக்கு காத்திருந்தோம். பஸ்  கிடைக்காததால விழுப்புரம் போயி கடலூர் வந்தோம். கங்கணாங்குப்பம் பெண்ணையாத்து பக்கத்துல இறங்கி ஆத்தக் கடந்து  போய்டலாம்னாங்க. தண்ணி இல்லை. அதனால, தைரியமா நடந்து வந்தோம், ஆத்து நடுவுல வந்தப்போ 60 அடி உசரம் கொண்ட 5 உருவங்க சுடுகாட்டை நோக்கி போயிட்டு இருந்தது. எல்லாரும் பயந்துட்டோம். உருவமெல்லாம் போனதுக்கு அப்புறம் வீடு வந்து சேர்ந்தோம். சுடுகாட்டு பகுதியில ஆவிங்க இப்படி கருப்பு உருவம் எடுத்து அலையும்னு பெரியவங்க சொன்னாங்க. பெண்ணையாத்துப்பக்கம் போனாலே கருப்பு உருவம்தான் ஞாபகம் வருது’’ என்றார்.
கதிகலங்க வைக்கும் முனி ராசா
கொஞ்ச நாளைக்கு முன்னாடி இந்த பகுதியில நாலு வழி ரோடு போட்டாங்க. அதுக்காக குறுக்கே நிற்கிற முனி கோயிலை இடிச்சு ட்டு வேறு இடத்துக்கு மாத்தணும்னு சொன்னாங்க. நாங்கள்லாம் சேர்ந்து எவ்வளவோ எதிர்ப்பு காட்டியும் வடநாட்டு இன்ஜினிய ருங்க கேட்கல.  ‘‘எங்களுக்கு ரோட் போட்றதுதான் முக்யம் மேன். சாமி எல்லாம் அப்றம்...’’ என்று கூறிவிட்டு பணியில் இறங்கியுள்ளனர்.‘‘முனிகிட்டயே மல்லுக்கு நிற்கிறான்டா. இனி இவன் பாடு; அந்த முனி பாடு’’ என்று ஒதுங்கிக் கொண்டார்கள் கிராம மக்கள். ‘‘கோயில சுத்தி அளவு எடுத்துட்டு, பத்தடி கூட நகர்ந்திருக்க மாட்டார் வடநாட்டு இன்ஜினியர். வயத்த கலக்கி பேதி பிடுங்கிடுச்சு.  அவரும் பார்க்காத டாக்டர் இல்ல. செய்யாத வைத்தியம் இல்ல. முனி விவகாரமாச்சே, டாக்டரால தீர்க்க முடியுமா? தோப்போரமா  அடிச்சு கொட்டுகிற பம்புசெட் மாதிரி இன்ஜினியருக்கு நிக்காம ஓடியது. சாப்பிட்டது, வாயை தாண்டுவதற்குள் வெளியே வந்து  விழுந்தது. ஆள் கிறங்கி, கிறுகிறுத்து போயிட்டாரு.அவருகிட்ட வேலை பார்த்த உள்ளூர்க்காரங்க, மெதுவாக கிட்டபோயி, ‘இன்ஜினியர் அய்யா... ஒண்ணு சொன்னா தப்பா நினைச் சுக்க மாட்டீங்களே’ கேட்க, ‘ஒன் என்னா மேன்? ஹன்ட்ரட் கூட சொல்லு. என் பிராப்ளம் முதல்ல அரெஸ்ட் ஆகணும்’ என்று  புலம்பிவிட்டார்.‘இது தெய்வ குத்தமுங்க அய்யா. முனிகிட்ட மனசுருக வேண்டி, நேர்த்திக்கடன் செலுத்தறதா வேண்டிக்குங்க. சட்டுனு நிக்கும்’னு  சொன்னாங்க. மறுப்பு தெரிவிக்கிற நிலையில அவரு இல்ல. முனிகிட்ட சரண்டர் ஆயிட்டாரு.... அப்புறம்தான் ‘அரெஸ்ட்’ ஆச்சு.  முனியோட சக்தியை உணர்ந்து கொண்ட இன்ஜினியர் 10,001 ரூபா காணிக்கையா செலுத்திட்டு, கோயிலுக்கும்... அந்த திசைக்கும்  ஒரு கும்பிடு போட்டுவிட்டு எஸ்கேப் ஆயிட்டாரு... என்று சொல்லி முடித்தார் அந்தப் பெரியவர். இப்போதும் முனி பயம் எல்லாருக்கும் இருக்கிறது. ஊரில் யாராவது புதிதாய் வாகனம் வாங்கினால் ஒரு எட்டு இங்கு வந்து  சேவலோ... கோழியோ பலி கொடுத்து விடுவது வழக்கம். அதன் பிறகு ரத்தப்பலி கேட்காதாம்.வாழ்க்கையை நகர்த்தி செல்பவை நம்பிக்கைகளே. சமயத்தில் அவை மூட நம்பிக்கை என்று சுட்டிக் காட்டப்படுவதும் உண்டு.  ஆனால், அனுவித்து உணர்ந்தவர்களுக்கு மட்டுமே அது மூடநம்பிக்கையா அல்லது பரிபூரண உண்மையா என்கிற மர்மத்துக்கான  விடை தெரியும். தப்பு செய்தவர்களை முனி, ரத்தம் கக்கவிடும் என்கிற விஷயத்தை பொறுத்தவரை... சூரக்குண்டு மக்களுக்கு அது  நம்பிக்கை. மற்றவர்களுக்கு இன்னமும் அது மர்மமே!
கல்லறையை காவல் காக்கும் குட்டிச்சாத்தான்!
புதையலை காவல் காக்க மந்திரவாதிகள் ஏவி விட்ட குட்டிச் சாத் தான் வானத்துக்கும் பூமிக்குமா எகிறி எகிறி குதிக்கிறது..’’ கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பலரும் இப்படித்தான் பீதியில்  சொல்கின்றனர். குட்டிச்சாத்தான் பீதிக்கு அப்பகுதியினர் சொல்லும் விளக்கம் இதுதான்..மன்னர்கள் ஆட்சியின்போது தலைநகராக விளங்கிய இடம் சூளகிரி. திப்பு சுல்தான் போன்ற மன்னர்கள் இங்கு கோட்டை கட்டி  ஆட்சி செய்துள்ளனர். ராஜ குடும்பத்தினர், போரில் வீர மரணம் அடைபவர்களின் உடல்களை இங்குள்ள மலை மற்றும் சுற்றியுள்ள  இடங்களில் புதைத்து வைத்துள்ளனர்.செல்வ செழிப்பும், தங்கம், வைரம் என தாராளமாய் கொட்டிக்கிடந்த காலம் அது. இறந்தவர்களின் உடலுடன் அவற்றையும் சேர் த்து கல்லறைகளில் வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதுபோல சூளகிரி மலைப்பகுதியில் 100&க்கும் மேற்பட்ட கல்லறைகள்  உள்ளன.இது மட்டுமல்லாமல், ஒரு மலை மீது வெட்ட வெளியில் பலகை கற்களால் நாலாபுறமும் அடைக்கப்பட்ட கல்லறைகளும் உள்ளன. காலப்போக்கில் பலகை கற்கள் உடைந்ததில்.. தற்போது மண்ணுக்குள் புதைந்து கிடந்த கல்லறைகள் வெளியே தெரிய ஆரம்பித்துள் ளன. இதை மோப்பம் பிடித்த மந்திரவாதிகளும், மை போட்டு பார்க்கும் சூனியக்காரர்களும் சூளகிரிக்கு படையெடுக்கத் தொடங்கி யுள்ளனர்.கல்லறையில் வைக்கப்பட்ட தங்க, வைர ஆபரணங்கள், ஆடைகள் போன்றவற்றை வெளியாட்கள் யாரும் நெருங்க முடியாது. ஆவி கள் அதை சுற்றிச் சுற்றியே அலைந்துகொண்டிருக்கும். ஆனால், பிரத்யேக பூஜைகள் செய்து அவற்றை விரட்டிவிட்டு புதையலை எ டுக்க வருகிறது மந்திரவாதிகள் கும்பல்.கல்லறையை கண்டுபிடிப்பதும் அதற்குள் உறங்கி கிடக்கும் ஆவியை வெளியேற்றுவதும் சாதாரணமான விஷயமல்ல. இரவு 10  மணிக்கு மேல் ஊர் மக்கள் உறங்கிய பிறகு மந்திரவாதிகள் ஓசையின்றி படையெடுக்கின்றனர். கல்லறை இருக்கும் இடத்தை யூகித்து  கண்டுபிடிக்கின்றனர். ஆனால், குறிப்பாக எந்த இடம் கல்லறை என்று கண்டுபிடிப்பதற்குள் இரவாகிவிடுகிறது. அதற்குப் பிறகு  உடனே பூஜை செய்ய முடியாது என்பதால் அடுத்த நாள்தான் பூஜை நடத்துகின்றனர். அதுவரை கல்லறை நகைகளை காப்பாற்றுவ தற்கும் உலவும் ஆவிகளை அடக்கி வைப்பதற்காகவும் குட்டிச்சாத்தானை காவலுக்கு ஏவிவிடுகின்றனர் மந்திரவாதிகள்.வரும் மந்திரவாதிகள் எல்லாம் ஆளுக்கொரு குட்டிச்சாத்தானை ஏவுவதால் அப்பகுதியில் அவற்றின் நடமாட்டம் அதிகரித்திருக்கிற து. விவரம் தெரியாமல் அப்பகுதிக்கு செல்லும் அப்பாவி பொதுமக்கள் குட்டிச்சாத்தானின் சேட்டைக்கு இலக்காகி விடுகின்றனர்.சூளகிரியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மனைவி முனிரத்தினம்மா காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு இடத்தில்  பள்ளம் தோண்டப்பட்டிருப்பதை பார்த்தார். கிட்டே சென்று பார்த்துள்ளார். மண் கலசங்கள், வெற்றிலை பாக்கு, தேங்காய், பழம்,  பொரி கடலை, எலுமிச்சம்பழம் ஆகியவை சிதறிக் கிடந்துள்ளன. முந்தைய நாள்தான் அங்கு மந்திரவாதிகள் ஆவிகளை அடக்கும்  பூஜையை செய்துள்ளனர். இது தெரியாமல் கல்லறைக்கு அருகே சென்று பார்த்த முனிரத்தினம்மாவை ஏதோவொரு சக்தி திடீரென  தூக்கி வீசியது.மயங்கி விழுந்தவர் விழுந்தவர்தான். வெகு நேரம் கழித்து நினைவு திரும்பியது. உடல் முழுவதும் வியர்த்துப் போயிருந்தது. நடக்க  முடியவில்லை. கை, கால்கள் வீங்கியிருந்தன. மிகவும் சிரமப்பட்டு தவழ்ந்தபடியே வீடு போய்ச் சேர்ந்தார். கல்லறைக்கு அருகில் எ ன்ன நடந்தது என்பதுகூட அவருக்கு தெளிவாக நினைவில்லை. பிரமை பிடித்ததுபோலவே இருந்தார்.குடும்பத்தினர் பீதியடைந்தனர். மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றனர். முனிரத்தினம்மாவை உற்றுப் பார்த்தார் மந்திரவாதி. இது  குட்டிச்சாத்தான் வேலை என தெரிந்துகொண்டார். சில மந்திரங்கள் சொல்லி விபூதியை முகத்தில் வீசினார். அவ்வளவுதான்.. நிலந டுக்கம் ஏற்பட்டதுபோல குலுங்கிய முனிரத்தினம்மா அதே இடத்தில் விழுந்தார்.சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்தது. பழைய முனிரத்தினம்மாவாக கண் விழித்தார். ‘‘ஒரு அடி உசரம், தேங்காய் சைசுக்கு தலை,  விரல் அளவு மட்டுமே நீளம் கொண்ட கை.. இந்த உருவம்தான் குட்டிச்சாத்தான். வானத்துக்கும் பூமிக்குமா எகிறிக் குதிக்கும். அதை  சாதாரணமா நெனைக்காதீங்க. பயங்கரமானது, கொடூரமானது. அதை அடக்கவே முடியாது’’ என்றார் மந்திரவாதி. அதைக் கேட்டு  பீதியில் உறைந்து போயினர்.சூளகிரி காட்டுப் பகுதிக்கு மக்கள் போவதே இல்லை. தெரியாமல் சென்றவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மந்திரம் செய்துதான் குட் டிச்சாத்தானை விரட்டவேண்டி உள்ளது என்கின்றனர் அப்பகுதி மக்கள் பீதி அடங்காமல்.
ஆஷஸ் டெஸ்ட் இங்கிலாந்து 644 ரன் குவிப்பு
சிட்னியில் நடந்து வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 280 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து நேற்றைய 3வது நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 488 ரன்கள் குவித்தது. பிரியர் 54, பெர்சனன் ரன் எதும் எடுக்காத நிலையில் இன்று 4வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். பிரியர் அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் 130 பந்தில் 11 பவுண்டரி ஒரு சிக்சருடன் 118 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பெர்சனன் 35, டிரம்லெட் 12 ரன்னில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் 644 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. ஆஸி. தரப்பில் ஜான்சன் 4, ஹில்பன்ஹாஸ் 3 விக்கெட் வீழ்த்தினர். 364 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸி. அணி 2வது இன்னிங்சை ஆடத்தொடங்கியது.
காக்க காக்க.. கனகவேல் காக்க (சூரசம்ஹாரம்)
சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் முருகப் பெருமான் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. சூரனுடன் போரிட்ட கந்தப் பெருமான் அவனை வதம் செய்த நாளே கந்த சஷ்டியாகும். சஷ்டி என்றால் 6. ஆறு நாட்கள் விரதம் இருந்து கந்தப் பெருமானை வழிபடுவதே சஷ்டி விரதம். 6 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் கந்த சஷ்டி அன்று மட்டுமாவது விரதம் இருக்கலாம். சஷ்டியன்று விரதம் இருந்து சாமி தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும்.முருகனுக்கு பல்வேறு விரதங்கள், உற்சவங்கள், வழிபாடுகள் இருந்தாலும் அவை எல்லாவற்றிலும் சிறப்பானதாக சஷ்டி விரதம் கூறப்பட்டுள்ளது. ‘சட்டியில் இருந்தால் ஆப்பையில் வரும்’ என்பார்களே, அது கந்த சஷ்டி விரத மகிமையை வெளிப்படுத்தும் வகையில் உருவானதுதான். ‘சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்ற வாக்கியமே மருவி இவ்வாறு மாறியிருக்கிறது. அதாவது, சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் சிசு தோன்றும். சஷ்டியில் விரதம் இருந்து முருகப் பெருமானை மனதார வேண்டினால் சற்புத்திர யோகத்தை அருள்வார்.அகப்பை என்பது கருப்பையை மட்டுமல்ல, நமது ‘அகம்’ என்கிற மனத்தையும் குறிக்கிறது. நம் மனதில் இருக்கிற பேராசை, வெறுப்பு, ஆணவம், கோபம், வஞ்சம் தீர்த்தல், கருமித்தனம் உள்பட பல்வேறு தீய குணங்களையும் அழித்து நமக்கு நல்வழி காட்டுகிறார் முருகப் பெருமான். முருகனுக்கு கிழமை, நட்சத்திரம், திதி ஆகிய மூன்றிலும் விரதங்கள் இருக்கின்றன. கிழமைகளில் செவ்வாய், நட்சத்திரத்தில் கிருத்திகை, திதியில் சஷ்டி ஆகியவை முருகனுக்கு உகந்தவை. இந்நாட்களில் விரதம் இருந்து முருகனை வழிபடுவது சகல தடைகளையும் நீக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.நீர் விரதம், பால் விரதம், மவுன விரதம் என பலவகை விரதங்கள் உண்டு. அவரவர் குடும்ப வழக்கப்படி இதை அனுசரிப்பார்கள். முருகனின் அறுபடை வீடுகளில் நேர்த்திக்கடன் நிறைவேற்றுதல், காவடி எடுத்தல், அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல் போன்ற வழிபாடுகளையும் கந்த சஷ்டியன்று செய்வார்கள்.சஷ்டி விரத காலத்திலும் சூரசம்ஹார தினத்தன்றும் காலை, மாலை இரு வேளையும் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், சண்முக கவசம், திருப்புகழ், கந்தர் கலிவெண்பா போன்றவற்றை பாராயணம் செய்யலாம். மனதை ஒருமுகப்படுத்தி இவற்றை சொல்லி முருகனை துதிப்பது நற்பலன்களை தரும்.ஜாதக அமைப்பின்படி செவ்வாய் திசை, குரு திசை நடப்பவர்கள், நிலப் பிரச்னை, சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு, சொத்து பிரச்னை, குழந்தை பாக்ய தடை உள்ளவர்கள் கந்த சஷ்டி விரதம் இருந்து சூரசம்ஹார தரிசனம் செய்தால் சூரனை வேல்கொண்டு அழித்ததுபோல நமது பிரச்னைகளையும் கந்தப்பெருமான் வேலாய் வந்து நின்று அழித்து வளமிகுந்த வாழ்வை அருள்வார் என்பது நம்பிக்கை.முருகனை குறித்து செய்யப்படும் அர்ச்சனையில் ‘சஷ்டிப் பிரியாய நம’ என்று வரும். சஷ்டிப் பிரியனான முருகனை கந்தசஷ்டியன்று வழிபடுவோம். சகல நலன்களும் பெறுவோம்.
வைகுண்ட ஏகாதசி....
‘காயத்ரிக்கு நிகரான மந்திரம் இல்லை. ஏகாதசிக்கு ஈடான விரதமில்லை’ என்பார்கள். விரதங்களிலேயே சிறந்ததாக கருதப்படுவது ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இருந்து 11&ம் நாள் ஏகாதசி. மாதத்துக்கு இரண்டு என ஒரு ஆண்டில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். ஏகாதசியில் விரதம் இருப்பது ஒவ்வொரு மாதத்தில் ஒவ்வொரு பலன்களை தரும் என கூறப்படுகிறது.சித்திரை மாத ஏகாதசியில் விரதம் இருந்தால் விரும்பிய பேறுகள் எல்லாம் உண்டாகும். வைகாசி & கயிலாய யாத்திரை மேற்கொண்டு பத்ரிநாத்தை தரிசித்த பலன் கிடைக்கும். ஆனி & சொர்க்கம் செல்லும் பாக்யம். ஆடி & ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும். ஆவணி & மக்கள்செல்வம் உண்டாகும். குழந்தைகளின் நோய், நொடிகள் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு உண்டாகும்.புரட்டாசி & நிம்மதியான வாழ்வு கிடைக்கும். ஐப்பசி & சகல வளங்களும் உண்டாகும். கார்த்திகை & மகிழ்ச்சியான வாழ்வு மலரும். தை & பித்ரு சாபங்கள் நீங்கி, முன்னோர் அருளாசி கிடைக்கும். மாசி & சகல பாவங்கள், தோஷங்கள் நீங்கும். பங்குனி & தடை, தடங்கல்கள் நீங்கி வெற்றிகள் குவியும்.எல்லா ஏகாதசிகளிலும் விரதம் இருப்பவர்கள் உண்டு. ஏகாதசியன்று விரதம் இருந்து மறுநாள் துவாதசியன்று காலையில் பூஜை முடித்து சாப்பிடுவார்கள்.ஏகாதசிகளில் சிறந்ததாக கூறப்படுவது மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி. மனிதர்களுக்கு இரவு, பகல் மாறிமாறி வருவதுபோல தேவர்களுக்கும் உண்டு. ஆடி முதல் மார்கழி வரையிலான 6 மாதங்கள் அவர்களுக்கு இரவு நேரமான தட்சிணாயனம். தை மாதம் தொடங்கி ஆனி வரையிலான 6 மாதங்கள் பகல் நேரமான உத்தராயனம். பகல் தொடங்குவதற்கு முந்தைய விடியற்காலை நேரம் நமக்கு பிரம்மமுகூர்த்தம் எனப்படுகிறது.இந்த நேரத்தில் எழுந்திருப்பது, நல்ல காரியங்கள் செய்வது மிகுந்த பலன் உடையதாக கூறப்படுகிறது. தேவர்களைப் பொருத்தவரை, மார்கழி மாதம்தான் பகல் தொடங்குவதற்கு முன்பு வரும் பிரம்மமுகூர்த்தம். அதனால், மாதங்களில் மார்கழி சிறப்பாக கூறப்படுகிறது. அதில் வரும் ஏகாதசி திதி சிறப்பு பெறுகிறது. இதுவே வைகுண்ட ஏகாதசி. பாற்கடலில் துயில் கொண்டிருக்கும் மகாவிஷ்ணு விழித்தெழும் காலத்தில் அவனை தொழுவது சகல நலன்களையும் சேர்க்கும் என்பது ஐதீகம்.முரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக தனது உடலில் இருந்து மோகினியை மகாவிஷ்ணு தோற்றுவித்தார். முரனை மோகினி சம்ஹரித்த நாளே ஏகாதசி. அன்றைய தினம் தன்னை வழிபடுபவர்களுக்கு வைகுண்ட பதவி அளிப்பதாகவும் பெருமாள் அருளினார். எல்லா ஏகாதசிகளும் விரதம் இருக்க முடியாதவர்கள் வைகுண்ட ஏகாதசியில் இருக்கலாம். ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமியிலேயே விரதம் தொடங்க வேண்டும். அன்றை தினம் ஒருவேளை மட்டும் சாப்பிடுவார்கள்.ஏகாதசி தினம் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது சிறப்பு. முடியாதவர்கள் சுவாமிக்கு படைத்த பழம், பால் உண்ணலாம். விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் பாடலாம். அதிகாலையில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசலுக்கு பெருமாள் எழுந்தருள்வார். அவரோடு சேர்ந்து நாமும் பரமபத வாசலை மிதிப்பது மிகவும் விசேஷம். அன்றைய தினம் இரவு கண் விழிக்க வேண்டும்.மறுநாள் துவாதசியன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் உள்பட 21 கறியுடன் நிவேதனம் படைத்து ஏழைகள், அடியார்களுக்கு வழங்கி பின்னர் நாம் சாப்பிடுவது சிறப்பானதாகும். வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருப்பது 3 கோடி ஏகாதசிகள் விரதம் இருப்பதற்கான பலனை கொடுக்கும் என்பது நம்பிக்கை.
கிரகங்கள் அருளும் உயர்கல்வி யோகம்
பணம், பொருள், சொத்துக்கள், வீடு, நிலபுலன்கள் எல்லாம் செல்வம் எனப்படுகிறது. இவை அழியக்கூடியவை. மேலும், இவை கொடுக்கக் கொடுக்க குறையக் கூடியது. அழிவு இல்லாதது கல்விச் செல்வம். கொடுக்கக் கொடுக்க வளரக் கூடியது. கல்வி அறிவில்லாத ஒருவருக்கு கற்றுத் தருவதால் நமது கல்விச் செல்வம் மேலும் மேலும் வளரும். தொழில் மற்றும் வியாபாரம் மூலமாகத்தான் பொருள் செல்வத்தை ஈட்ட முடியும் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. இப்போது அப்படியல்ல.கல்வியறிவு பெற்றவர்கள்தான் தங்களது கல்வித் திறமையால் பெரும் கோடீஸ்வரர்களாக விளங்குகிறார்கள். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு மட்டுமல்லாமல் செழிப்பும் உண்டாகிறது. கம்ப்யூட்டர் யுகத்தில் காமதேனு போல வாரிக் கொடுக்கக் கூடிய கல்வி யோகம் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலருக்கு கல்வி சரளமாக வரும். சிலருக்கு அதிக முயற்சி தேவைப்படும். சிலருக்கு படித்த படிப்புக்கும் பார்க்கும் வேலைக்கும் சம்பந்தமே இருக்காது.கல்வி பெற நமக்கு கிடைக்கிற வாய்ப்புகளும் கடும் உழைப்பு, விடாமுயற்சியும் கல்விச் செல்வத்தை நமக்கு வாரி வழங்குகிறது என்றாலும் ஜாதக அமைப்பிலும் இதற்கு பங்கு இருக்கிறது. ஒருவருடைய ஜாதக கட்டத்தை எடுத்துக் கொண்டால் அதில் லக்னம் என்று இருக்கும். இதுவே முதல் கட்டம். இந்த கட்டத்தில் இருந்துதான் ஒன்று, இரண்டு என்று எண்ணவேண்டும். இதில் லக்னம் மிக முக்கியமானது. அதற்கு உரிய கிரகம் எதுவோ அந்த கிரகமே லக்னாதிபதி. அதற்கடுத்து உயர்நிலை கல்வி வரை பேசக்கூடிய இடம் நான்காம் இடம்.பட்டப்படிப்பு, மேல் படிப்பு, ஆராய்ச்சி படிப்புக்கள் எல்லாம் ஒன்பதாம் இடத்தில் இருந்து முடிவு செய்யப்படுகின்றன. இந்த மூன்று இடங்களும், இந்த மூன்று இடங்களுக்குரிய கிரகமும்தான் நமக்கு கல்வி செல்வத்தை தருகின்றன. மேலும் வித்யாகாரகன் என்ற புதன் கிரகம் மிகவும் முக்கியமானது. அத்துடன் வியாழன் என்ற குருவின் பலமும் மிகவும் அவசியம். இந்த அடிப்படை அம்சங்கள் பலமாக இருந்தால் உயர் கல்வி யோகம் சிறப்பாக அமையும்.பொதுவாக ஜாதக கட்டத்தில் நான்காம் வீட்டின் கிரகமும், ஒன்பதாம் வீட்டின் கிரகமும் நீச்சம் அடையாமலும், 6, 8, 12 ஆகிய இடங்களில் இல்லாமலும் இருக்க வேண்டும். கல்வி பயிலும் காலகட்டத்தில் (16 முதல் 26 வயது வரை) நல்ல யோகமான திசைகள் நடப்பது மேலும் சிறப்பை தரும். கஷ்டமான அறிவியல், கணித பாடங்களைக்கூட எளிதில் புரிந்துகொள்ளும் ஆற்றல் உண்டாகும்.ஆராய்ச்சி துறையில் பட்டம் பெற, மாஸ்டர் டிகிரி பெற 1, 4, 9&ம் அதிபதிகள் பலம் பெற்று இருக்க வேண்டும். சந்திரனுக்கு கேந்திரத்தில் புதன் இருப்பது வித்யா யோகம். இது உயர்ந்த கல்வியையும், அந்தஸ்தையும் அளிக்கும். மேஷ ராசியில் சூரியன், புதன் சேர்ந்து இருந்தால் ஆராய்ச்சி பட்டம் பெறும் யோகம் உண்டு. பத்தாம் இடத்தில் சூரியன், கேது, செவ்வாய் சேர்ந்து இருந்தால் மருத்துவ துறையில் சாதிக்கும் யோகம் ஏற்படும்.புதன், சனி, செவ்வாய் கிரகங்கள் பலமாக இருந்தால் இன்ஜினியரிங் பிரிவில் யோகம் உண்டு. பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் ராகு, சனி சேர்ந்து இருந்தால் டெக்னிக்கல் துறையில் படிப்பு அமையும். இரண்டாம் அதிபதியுடன் புதன், செவ்வாய் சேர்ந்து இருந்தால் பேச்சாற்றல் தேவைப்படக்கூடிய விரிவுரையாளர், விற்பனை பிரதிநிதி, அரசியல்துறை, வக்கீல் என சாதனை படைக்கலாம்.பத்தாம் அதிபதியுடன் சூரியன் சேர்ந்தால் அரசு உத்யோகம் அமையும்.பத்தாம் அதிபதியுடன் இரண்டாம் அதிபதி, குரு சேர்ந்தால் வங்கியில் உத்யோகம் அமையும். பத்தாம் அதிபதியுடன் புதன், செவ்வாய் சேர்வதால் கம்ப்யூட்டர் துறையில் சிறப்பு உண்டு. இந்த அம்சங்கள் மிகவும் முக்கியமானதாகும். இதை தவிர சில கிரக பார்வை, சேர்க்கை காரணமாக கல்வி யோகம் மிகவும் பிரகாசமடையும். சரஸ்வதி தேவியுடன் குரு, புதன் ஆகிய கிரங்களையும் வழிபட்டு வந்தால் கல்வியில் ஏற்றம் பெறலாம்.
நியூசி.-பாக். டெஸ்ட் நாளை துவக்கம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே நடந்த 20-20 தொடரை பாகிஸ்தான் 1-2 என்ற கணக்கில் இழந்தது. தொடர்ந்து இரு அணிகள் இடையே 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெறுகிறது. இதன் முதல் ஆட்டம் நாளை ஹாமில்டன் நகரில் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு துவங்குகிறது.
துர்க்கா தேவியை வழிபட்டால் பில்லி, சூன்யம் பறந்தோடும்
சிறப்பான திதிகளில் ஒன்று பவுர்ணமி. இந்த நாளில் சூரியன் இருக்கும் ராசிக்கு ஏழாவது ராசியில் சந்திரன் இருந்து இருவரும் பார்த்துக் கொள்வதால் இந்த பவுர்ணமி யோகம் உண்டாகிறது. சந்திரன் அம்பாளின் அம்சமாக ஜோதிட, வேத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.கிரகங்களின் அதிர்ஷ்டம் பெற்ற நாள் பவுர்ணமி. அன்றைய தினம் கடல் தன் இயல்பு நிலையில் இருந்து மாறி சீற்றத்துடன் கொந்தளிக்கும். அதுபோல நம் மனமும் அமைதியில்லாமல் அலை பாயும். மனோ வியாதி உள்ளவர்களுக்கு அன்றைய தினம் சற்று கடினமான தினமாக இருக்கும். சந்திரன் மனோகாரகன், மனத்தை ஆள்பவன். அதனால் பவுர்ணமியில் இந்த மாற்றங்கள் ஏற்படுவதாக சொல்கின்றன சாஸ்திரங்கள்.பவுர்ணமி தினத்தில் அம்பாள் வழிபாடு மிகவும் சிறப்பானது. ஸ்ரீசக்கர நாயகியான ஆதிபராசக்தி பதினாறு அம்சங்களாக மகா திரிபுர சுந்தரியாக பவுர்ணமியன்று அருள்பாலிப்பதாக ஐதீகம். மேலும் ஸ்ரீ சந்திரிகா என்ற அவதாரத்திலும், துர்க்கையின் அம்சத்திலும் அம்பாள் இருப்பதாக சித்தர்கள் தங்கள் நூலில் குறிப்பிட்டுள்ளனர். பவுர்ணமி தினத்தில் மாலை ஆறு மணிக்கு மேல் சத்திய நாராயணன் பூஜை செய்வது மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். சித்தர்களின் கூற்றுப்படி, நம் துக்கங்களையும், தடைகளையும், இடையூறுகளையும், நோய், நொடிகளையும், பில்லி, சூன்யம், ஏவல் போன்ற தீவினைகளையும், கிரக தோஷங்களையும் போக்கும் வழிபாடு ஸ்ரீதுர்க்கா தேவி வழிபாடு. துர்க்கா தேவியை ஒவ்வொரு பவுர்ணமி வரும் கிழமைக்கேற்ப வழிபடுவதால் அந்த கிரக தோஷ அவஸ்தையில் இருந்து விடுபடலாம்.ஞாயிற்றுக்கிழமையில் வரும் பவுர்ணமி, சூரியனுக்கு ஏற்றதாகும். சூரிய திசை நடப்பவர்கள், சூரிய தோஷம் உள்ளவர்கள், கிருத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரக்காரர்கள், 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், சிம்ம ராசியில் பிறந்தவர்கள் ஆகியோர் வழிபட சகல யோகங்கள் விருத்தியடையும். துர்க்கைக்கு சிகப்பு புடவை அல்லது சட்டைத் துணி சாற்றி, செந்தாமரை மலர் வைத்து, அர்ச்சனை செய்ய வேண்டும். செவ்வாழைப்பழம், சர்க்கரைப் பொங்கல் படைத்து பக்தர்களுக்கு வழங்கலாம். தீராத நோய்கள் தீரும். மன அமைதி ஏற்படும்.திங்கட்கிழமையில் வரும் பௌர்ணமி சந்திரனுக்கு ஏற்ற தினமாகும். சந்திர திசை நடப்பவர்கள், ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரக்காரர்கள், 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் கடக ராசியில் பிறந்தவர்கள் ஆகியோர் வழிபட யோகங்கள் விருத்தியடையும். துர்க்கைக்கு வெண்பட்டு, ஆரஞ்சு புடவை சாற்றி மல்லிகை பூ மாலை சூட்டி அர்ச்சனை செய்ய வேண்டும். அனைத்து பழவகைகளுடன் கல்கண்டு சாதம் படைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக தரலாம். மன அமைதியும், சுபகாரிய விஷயங்களும் கூடிவரும். வெளிநாட்டு பயணங்களில் இருக்கும் தடை விலகும்.செவ்வாய்க்கிழமையில் வரும் பவுர்ணமி, அங்காரகன் எனும் செவ்வாய்க்கு ஏற்ற தினமாகும். செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், மிருக சீரிடம், சித்திரை, அவிட்ட நட்சத்திரக்காரர்கள், 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், மேஷம், விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் ஆகியோர் வழிபட யோகங்கள் விருத்தியடையும். துர்க்கைக்கு சிகப்பு நிற புடவை அல்லது துணி சாற்றி செவ்வரளி, சிகப்பு நிற பூக்களால் அர்ச்சனை செய்து பழங்கள், சித்ரான்னம் படைத்து பக்தர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். எதிர்ப்புகள் மறையும். சகோதர உறவுகளால் நன்மை ஏற்படும். நிலம் சொத்து சேர்க்கை ஏற்படும்.புதன்கிழமையில் வரும் பவுர்ணமி புத பகவானுக்கு ஏற்ற தினமாகும். புதன் திசை நடப்பவர்கள், ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரக்காரர்கள், 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், மிதுனம், கன்னி ராசியில் பிறந்தவர்கள் ஆகியோர் வழிபட சகல யோகங்கள் விருத்தியடையும். துர்க்கைக்கு பச்சைநிற புடவை சாற்றி மரிக்கொழுந்து, முல்லை, மல்லிகையால் அர்ச்சனை செய்து பால் பாயாசம், பஞ்சாமிர்தம் படைத்து பக்தர்களுக்கு தரலாம். கல்வி தடை விலகும், ஞாபக சக்தி அதிகரிக்கும். மாமன் வகை உறவுகள் பலப்படும்.வியாழக்கிழமையில் வரும் பவுர்ணமி வியாழன் என்ற குருவிற்கு ஏற்ற தினமாகும். குரு திசை நடப்பவர்கள், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள், 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் தனுசு, மீனம் ராசியில் பிறந்தவர்கள் ஆகியோர் இந்நாளில் வழிபட சகல யோகங்கள் விருத்தியடையும். துர்க்கைக்கு மஞ்சள் நிற புடவை அல்லது ஜாக்கெட் துணி சாற்றி, சாமந்தி, மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்து கொண்டைக்கடலை சுண்டல், தயிர் சாதம், பழங்கள் படைத்து பக்தர்களுக்கு வழங்கினால் சுபகாரியத் தடைகள் விலகும். தோஷங்கள் நீங்கும். செல்வாக்கு, பொன், பொருள் சேர்க்கை உண்டு.வெள்ளிக்கிழமையில் வரும் பவுர்ணமி சுக்கிரனுக்கு ஏற்ற தினமாகும். திருமணத் தடை, களத்திர தோஷம் உள்ளவர்கள் சுக்கிர திசை நடப்பவர்கள் பரணி, பூரம், பூராட நட்சத்திரக்காரர்கள், 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ரிஷபம், துலாம் ராசியில் பிறந்தவர்கள், ஆகியோர் வழிபட, சகல யோகங்கள் விருத்தியடையும்.  துர்க்கைக்கு வெண்பட்டு புடவை சாற்றி மல்லிகைப்பூ, கதம்ப பூமாலை, பழ வகைகள் நிவேதனம் செய்ய வேண்டும். பிரிந்த தம்பதியர் சேருவார்கள். தடைபட்ட கட்டிட வேலைகள் நிறைவேறும். கையில் பணம் புரளும்.சனிக்கிழமையில் வரும் பவுர்ணமி, சனீஸ்வரருக்கு ஏற்ற தினமாகும். நாவில் சனி, அஷ்டம சனி, ஏழரை சனி மற்றும் சனி திசை நடப்பவர்கள், பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள், 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், மகரம், கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஆகியோர் வழிபட சகல யோகங்கள் விருத்தியடையும். துர்க்கைக்கு நீலநிற புடவை அல்லது நீலத்துணி சாற்றி மரிக்கொழுந்து, சங்கு பூ, கதம்ப மாலை அர்ச்சனை செய்து காய்கறி கலந்த சாதம், எள் சாதம், தயிர் சாதம், பாலில் தேன் கலந்து படைத்து பக்தர்களுக்கு தந்தால் தீராத நோய், நொடிகள் தீரும். மன அமைதி ஏற்படும். கிரக தோஷம் விலகும்.
நவராத்திரி.. சுபராத்திரி!
சிவனுக்கு உகந்தது சிவராத்திரி. அவர் தம் தேவியர்க்கு உகந்தது நவராத்திரி. நவம் என்றால் 9 என்று பொருள். ஒன்பது ஒரு பெருக்கமான எண் ஆகும். இதன் சக்தியும், ஆதிக்கமும் மிகவும் உயர்ந்தது. நவக்கிரகங்கள், நவரத்தினங்கள், நவதானியங்கள் என்று ஒன்பதின் முக்கியத்துவம் அதிகம்.சக்தி வடிவமாகிய அம்பாளுக்கு எத்தனையோ விழாக்கள். உற்சவங்கள் இருந்தாலும் கோயில்களிலும் வீட்டிலும் 10 நாட்கள் கொண்டாடப்படும் ஒரே பண்டிகை நவராத்திரி. புரட்டாசி மாதம் சூரியன் கன்னி ராசியில் இருக்கும்போது அமாவாசையில் இருந்து வளர்பிறையில் 9 இரவுகளுடன் கூடுதலாக ஒருநாள் தசமி திதியையும் சேர்த்து நவராத்திரி என்றும் தசரா என்றும் நம் பாரதத்தில் காலம் காலமாக கொண்டாடப்படுகிறது.அஷ்டமி, நவமி ஆகிய இரண்டு திதிகளை ஜோதிட சாஸ்திரப்படி  முக்கிய சுபகாரியங்களுக்கு விலக்கி வைக்கிறோம். அந்த இரண்டு திதிகளை சிறப்பிப்பதற்காகவும், எல்லா திதிகளிலும் இறைவனின் அம்சம் உள்ளது என்பதை புரியவைப்பதற்காகவுமே நவராத்திரியில் அஷ்டமி, நவமி, திதிக்கு முக்கியத்துவம் தந்து கடைசி நாளான தசமி திதியில் விஜயதசமி என்று கொண்டாடி நிறைவு செய்கிறோம்.நவராத்திரி வழிபாட்டில் முதல் மூன்று நாட்கள் இச்சா சக்தியாகிய துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் கிரியா சக்தியாகிய லட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் ஞான சக்தியாகிய சரஸ்வதியையும் வழிபடுகிறோம்.அஷ்டமி அன்று தீய சக்திகளை அழிப்பதற்காக காளி, நீலி, சூரி என்று பயங்கர தோற்றத்துடன் அருள்பாலிக்கும் சக்தி அம்சத்தை வணங்கும் நாள். துர்க்கை அம்மன், பிரத்யங்கரா தேவி, இந்திராணி, சாமுண்டி போன்ற தெய்வங்களை வழிபடுவதன் மூலம் நம் இல்லத்தில் உள்ள தீய சக்திகள், ஏவல், பில்லி, சூனியம், வாஸ்து குறைபாடுகள் போன்றவை நீங்கி சுபிட்சம் பெருகும்.நவமி நாள்தான் மகாநவமி. அன்றைய தினம் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. கல்வி, கலைகளில் சிறந்து விளங்க பிரார்த்தித்து புத்தகங்கள், நாம் பயன்படுத்தும் பேனா, பென்சில், இசைக் கருவிகள் போன்றவற்றை சரஸ்வதி முன்பு வைத்து பூஜை செய்ய வேண்டும். நலங்கள், வளங்கள் பெருகுவதற்காக அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வியாபார நிறுவனங்களில் இருக்கும் அனைத்து தளவாடங்கள், கருவிகள், வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்பட நமக்கு பயன் தரும் அனைத்து பொருட்களுக்கும் சந்தனம், குங்குமம் வைத்து பூ வைத்து, பூஜைகள் செய்து வழிபடுவது மகா நவமியின் சிறப்பாகும்.மற்ற மாதங்களில் வரும் தசமி திதி சிறப்புமிக்கதாக இருந்தாலும், நவராத்திரிக்கு அடுத்த நாள் வரும் தசமி, விஜய தசமி என்று போற்றப்பட்டுகிறது. சகல காரிய வெற்றிகளையும், அஷ்டஐஸ்வர்யங்களையும் ஒருங்கே வாரி வழங்கக்கூடிய நாள். இந்த நாள் சரஸ்வதி தேவிக்கு மிகவும் உகந்த நாளாகும். கல்வி, இசை மற்றும் கலைகள் கற்கவும், புதுக்கணக்கு ஆரம்பிக்கவும், முக்கிய பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் போடுவதற்கும் இந்த நாள் சிறப்பானதாக கருதப்படுகிறது. விஜயதசமியில் தொடங்கப்படும் கல்வி, கலைகள், புதிய தொழில்கள் எல்லாம் விருத்தியடையும் என்பது ஐதீகம்.நவராத்திரி ஒன்பது நாளும் பெண்களுக்கு உண்டான முக்கிய பண்டிகையாகும். அவரவர் வசதிக்கேற்ப, குடும்ப வழக்கப்படி 1, 3, 5, 7, 9, 11 என்ற அளவில்  கொலு படிகள் அமைத்து அதில் கடவுள் அவதார சிலைகள், தலைவர்கள் சிலைகள், பறவைகள், மிருகங்கள் என பொம்மைகளை அடுக்கி உற்றார், உறவினர், நண்பர்கள், சுற்றம் என எல்லோரையும் அழைத்து மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொள்வது சிறப்பு. வந்தவர்களுக்கு சுண்டல், சர்க்கரை பொங்கல், இனிப்பு வகைகள், ஜாக்கெட் பிட், பழங்கள், பூ, மஞ்சள், தேங்காய் என மங்கல பொருட்களை கொடுத்து உபசரித்து அவர்களின் அன்பையும், ஆசியையும் பெறுவதே இந்த வழிபாட்டின் தத்துவம். ஜோதிட சாஸ்திரப்படி, கொலு வைத்து நவராத்திரி விரத பூஜையை செய்வது சுபகாரியத் தடைகள், குழந்தை பாக்ய தடை, இனம்புரியாத கவலைகள், பயம் போன்ற தீய சக்திகள் அனைத்தையும் நீக்கி வீட்டில் மகிழ்ச்சியையும் சகல வளங்களையும் அள்ளித் தரும்.
ஆறு பலங்கள் தரும் ஆஞ்சநேயா!
மாதங்களில் சிறப்பு பெற்றது மார்கழி. கடவுளர்களுக்கும் தேவர்களுக்கும் பகல் வேளை தொடங்கும் முன்பாக வரும் பிரம்ம முகூர்த்த காலம் என்று கருதப்படும் புண்ணிய மாதம். இதுபோல, திதிகளில் நிறைவானதாக கருதப்படுவது அமாவாசை. அறிவு, ஞானத்தின் அடையாளமாக திகழ்வது மூல நட்சத்திரம்.சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவனே ஆஞ்சநேயன்.பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயு தேவனுக்கு மகனாக பிறந்தவர். ஆகாயத்தில் பறந்து பெருங்கடலைத் தாண்டியவர். பூமாதேவியின் மகளான சீதாதேவியின் பரிபூரண அருளாசியை பெற்றவர்.வாலில் வைக்கப்பட்ட நெருப்பையும் வசமாக்கி இலங்கையை அழித்தவர். இவ்வாறு பஞ்ச பூதங்களையும் வசப்படுத்தியவர். அதேபோல மெய், வாய், கண், மூக்கு, செவி என ஐம்புலன்களையும் அடக்கியவர்.இலங்கைக்கு பாலம் அமைக்கும் திருப்பணியில் அனுமன் தீவிரமாக இருந்தபோது வந்தார் சனி பகவான். ‘‘ஆஞ்சநேயா!உன்னை இரண்டரை மணி நேரம் பிடிக்க வேண்டும். உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியை சொல். அங்கு இரண்டரை மணி நேரம் இருந்துவிட்டு போய்விடுகிறேன்’’ என்றார். ‘‘கடமையை செய்துகொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்தல் தவறு. அதனால், தலையில் உட்கார்ந்துகொள்’’ என்றார். சனி பகவானும் ஏறி அமர்ந்தார்.கற்களையும் மலைகளையும் மாறி மாறி தலையில் ஏற்றினார் அனுமன். பாரம் தாங்காமல் சனி பகவான் அலறினார். ‘‘சொன்ன சொல் தவறக்கூடாது. இரண்டரை மணி நேரம் கழித்துதான் இறங்க வேண்டும்’’ என்றார் அனுமன். அதன் பிறகே இறக்கிவிட்டார். ‘ராம பக்தர்களையும் ஆஞ்சநேய பக்தர்களையும் இனி தொடுவதில்லை’ என்று கூறிவிட்டு அகன்றார் சனீஸ்வரன்.அனுமனுக்கு துளசி மாலை சாத்தி வழிபட்டால், சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தது ராம நாமம். அனுமன் ஜெயந்தியன்று ‘ராம ராம ராம’ நாமம் சொல்வது விசேஷம். ‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, வாயுபுத்ராய தீமஹி, தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்’ என்பது அனுமனுக்கான காயத்ரி மந்திரமாகும்.இதையும் சொல்லி வழிபடலாம். அனுமன் ஜெயந்தியன்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து, துளசி அர்ச்சனை செய்யலாம். வெற்றிலை அல்லது வடை மாலை சாத்தலாம். வெண்ணெய் சாத்தி வழிபட்டு பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.ஆன்ம பலம், மனபலம், புத்திபலம், உடல் பலம், பிராண பலம், சம்பத் பலம் எனப்படும் செல்வச் செழிப்பு என்ற 6 பலங்களையும் அருள்பவர் அனுமன். அவரை பக்தியுடன் வழிபட்டால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அழியும். சிறந்த அறிவுத்திறன், புத்திக்கூர்மை, வீரம், விவேகம் உண்டாகும்.
டெஸ்ட் போட்டிக்கு காலிங்வுட் குட்பை
இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன். பால் காலிங்வுட். 34 வயதான அவர் தற்போது ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆடிவருகிறார். இந்நிலையில் இந்த தொடருடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக காலிங்வுட் அறிவித்துள்ளார். ஒருநாள் போட்டி மற்றும் 20-20ல் தொடர்ந்து ஆடுவேன் எனவும் அவர் தெரிவித்தார்.
டெரகோட்டா பொம்மையில் பணம் அள்ளலாம்
நாங்கள் பரம்பரையாக மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம். எனது தந்தை வி.கிருஷ்ணபத்தர் மண்பாண்டங்கள் செய்வதில் திறமையானவர். சிறு வயதிலேயே மண்பாண்டங்கள், சாமி சிலைகளை விளையாட்டாக செய்து பழகினேன். பின்னர் முறைப்படி என் தந்தையிடம் கற்றுக் கொண்டேன். டெரகோட்டா எனப்படும் சுடுமண் சிற்பங்களுக்கு கிராக்கி அதிகரிக்கவே அவற்றை செய்வதில் ஈடுபாடு காட்டினேன். 1990ம் ஆண்டு ஓம் சக்தி பைன் ஆர்ட்ஸ் அண்டு டெரகோட்டா ஒர்க்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினேன். மாவட்ட தொழில் மையத்தின் மூலம் ஏராளமானோருக்கு பயிற்சி அளித்துள்ளோம். இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயிற்சி பெற்று தனியாக தொழில் செய்து நல்ல வருமானம் ஈட்டுகின்றனர். விழுப்புரம் மாவட்டம் சங்கராபரணி ஆற்றங்கரையில் கிடைக்கும் ஒருவித களிமண் இந்த டெரகோட்டா பொம்மைகள் செய்ய ஏற்றது. எந்த வடிவத்தை செய்தாலும் அச்சு பிசகாமல் வளைந்து கொடுக்கும். வெடிப்பு வராது, நாம் நினைத்த வடிவம் கிடைக்கும். இந்த மண்ணை வடிகட்டினால் கிடைக்கும் களிமண்ணைக்கொண்டு சிறிய பொம்மைகள், அலங்கார பொருட்கள், மணிகள் போன்றவற்றை செய்யலாம். மீதமுள்ள மண்ணில் வைக்கோல் கூளம், யானை சாணம் போன்றவற்றை கலந்து பிசைந்து ஒரு அடி முதல் 32 அடி உயர சிலை வரை செய்யலாம். மேலும் வில்லியனூர் டெரகோட்டாவுக்கு புவி குறியீடு பெற்றுள்ளோம்.  உலக அளவில் இந்த பொருட்களுக்கு மரியாதை உள்ளது.  வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இந்த டெரகோட்டா பொம்மைகள் மிகவும் கவர்ந்திழுக்கின்றன. பெரிய ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், கார்ப்பரேட் அலுவலகங்கள், ரிசார்ட்ஸ் போன்ற இடங்களில் இந்த டெரகோட்டா பொம்மைகளுக்கு நல்ல மவுசு உண்டு. இங்கு வைப்பதற்கென்றே பெரிய ஜாடிகள், உருளிகள் (தண்ணீர் ஊற்றி பூக்களை போட்டு வைப்பது) போன்றவற்றை பல வடிவங்களில் வேலைப்பாடுகளுடன் செய்து தருகிறோம். நமது நாட்டிலும் இப்போது இந்த தொழில் பல ஆயிரம் குடும்பங்களை வாழ வைக்கிறது. மத்திய அரசின் கைவினைப்பொருள் அபிவிருத்தி ஆணையம் ஏராளமானோருக்கு உதவித்தொகையுடன் பயிற்சி அளிக்கிறது. ஏராளமான வெளிநாடுகளுக்கு இந்த பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு அன்னிய செலாவணி அதிகம் கிடைக்கிறது. தாய்லாந்து, வியட்னாமைப்போல புதுவையிலும் கைவினை கிராமம் கண்டிப்பாக தேவை. இதன்மூலம் ஏராளமான கைவினை கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, சந்தை வாய்ப்பு கிடைக்கும். இங்கு காட்சி மையம் ஒன்றும் வைத்து விட்டால் இத்தொழில் மேலும் பிரபலமடையும்.  இதற்கு மூலதனம் தேவையில்லை, மூளைத்தனம் இருந்தால் போதும். அதே நேரம் பெரிய அளவில் தொழிலாக செய்தால் ஏராளமானோருக்கு வேலை கொடுக்கலாம். லட்சக்கணக்கில் வருமானமும் ஈட்டலாம். மாதம் 5 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை வருமானம் பெறமுடியும். மொத்தத்தில் நம் தமிழர்களுக்கே உரிய இந்த கைவினைக்கலையை அழிந்து விடாமல் பாதுகாக்கும் சக்தி இளைய சமுதாயத்திடம் உள்ளது. அதனை பொறுப்புடன் உணர்ந்து செயல்பட்டால் டெரகோட்டா கலை மேலும் பல ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும். இவ்வாறு முனுசாமி கூறினார்.செய்வது எப்படி?டெரகோட்டா பொம்மைகள் செய்வதற்கு தேவை நல்ல களிமண். ஆறு, ஏரி, குளக்கரைகளில் இது கிடைக்கும். வில்லியனூரை பொறுத்தவரை சங்கராபரணி ஆற்றங்கரையில் நல்ல களிமண் கிடைக்கிறது. இந்த களிமண்ணை எடுத்து வெயிலில் உலர வைத்து பின்னர் தண்ணீர் ஊற்றி ஒரு நாள் முழுக்க ஊறவைக்க வேண்டும். மறுநாள் அதனை எடுத்து பிசைந்து கையாலும், எந்திரத்தாலும் நாம் விரும்பும் வடிவ பொருட்களை செய்யலாம். சிறிய பொருட்களை கையால் செய்யலாம். பெரிய சிலைகள், பொம்மைகள் போன்றவை எந்திரத்தில் செய்யலாம். கிராம தேவதைகள், விலங்குகள், பறவைகள், அய்யனார், குதிரை, யானை போன்றவற்றை தற்போது மிகவும் கலை நுட்பத்துடன் தயாரிக்கின்றன. அரை அங்குலம் முதல் 32 அடி உயரம் வரை  சிற்பங்கள் செய்யப்படுகிறது.களிமண்ணால் செய்தபின்னர் அவற்றை காயவைத்து பின்னர் சூளையில் வைத்து சுட வேண்டும். நன்றாக வெந்தபிறகு சிலைகள், பொருட்கள் தயாராகி விடும். இவற்றுக்கு இயற்கை வண்ணம் (இளஞ்சிவப்பு நிறம்) பூசி விற்பனைக்கு அனுப்பலாம்.இன்வெஸ்ட்மென்ட் இதற்கு பெரிய முதலீடு வேண்டாம். வீட்டிலேயே செய்து கொடுத்து வருமானம் ஈட்டலாம். ரூ.10 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை போட்டு தொழில் தொடங்கலாம்.  20க்கு 40 அடி அளவுள்ள கொட்டகை இருந்தால் சிறிய அளவில் தொழில் தொடங்கலாம். இங்கு களிமண், பதப்படுத்தும் இடம், மோல்டிங், பினிஷிங், பயரிங் (சூளை), பேக்கிங், விற்பனை, காட்சியகம் போன்றவை இருக்க வேண்டும். 60க்கு 180 அளவு கொண்ட கொட்டகை அமைத்தால் பெரிய அளவில் செய்ய முடியும். தற்போது விறகு சூளைக்கு பதிலாக கேஸ் மூலம் எரியும் அடுப்பும் வந்து விட்டது. மழைக்காலங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரியான பயிற்சி இல்லாதவர்கள் கூட வீட்டுவேலைநேரம் போக மற்ற நேரத்தில் அகல்விளக்கு அச்சு வாங்கி வந்து அகல்விளக்கு செய்து ஒரு நாளைக்கு 500 ரூபாய் வரை வருமானம் பெறலாம். நல்ல கற்பனைத்திறன், பொறுமை, அழகியல் ரசனை இவை இருந்தால் இந்த தொழிலில் நீங்கள்தான் ராஜாஉதவித்தொகையுடன் பயிற்சிஇந்த தொழிலுக்கு மாவட்ட தொழில் மையம் உதவித்தொகையுடன் பயிற்சியும் அளிக்கிறது.8 ம் வகுப்புக்கு மேல் படித்தவர்களுக்கு 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி காலங்களில் மாதம் 1500 ரூபாய் உதவித்தொகையும் உண்டு. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (டிஆர்டிஏ), ஆதிதிராவிடர் நலத்துறை (ஒரு வருடம்), மகளிர் மேம்பாட்டுக்கழகம் (மகளிருக்கு மட்டும்) ஆகியவையும் பயிற்சி அளிக்கின்றன. மகளிர் மேம்பாட்டுக்கழகம் 3 முதல் 6 மாத பயிற்சி அளிக்கிறது. மத்திய அரசின் கைவினை அபிவிருத்தி ஆணையர் அலுவலகம் 14 வயது நிரம்பியவர்களுக்கு இத்தொழில் குறித்து 1500 ரூபாய் உதவித்தொகையுடன் ஒரு வருட பயிற்சி அளிக்கிறது. பயிற்சி முடித்தவர்களுக்கு அட்வான்ஸ் டிரைனிங் (குரு சிஷ்யா பரம்பரா திட்டம்) 6 மாதம் அளிக்கப்படுகிறது. இதில் மாதாமாதம் 2 ஆயிரம் உதவித்தொகையும் உண்டு. அடுத்த ஆண்டு 3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் 3 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கருவிகளும் இலவசம். தனியார் அமைப்புகள், கல்லூரிகள், என்ஜிஓ அமைப்புகள் ஆகியவை இதனை எடுத்துச்செய்யலாம்.சந்தை வாய்ப்புபயிற்சி முடித்தவுடன் நாம் செய்யும் பொருட்களை விற்பனை செய்யவும் மாவட்ட தொழில் மையம் ஏற்பாடு செய்கிறது. மாநில, தேசிய மற்றும் உலக வர்த்தக கண்காட்சி போன்றவற்றுக்கு அழைத்துச்செல்கிறது. போக்குவரத்து செலவும் அளிக்கின்றனர். இதன்மூலம் நாம் தனிப்பட்ட முறையிலும் விற்பனை வாய்ப்பை பெற முடியும்.மத்திய அரசு கைவினை அபிவிருத்தி ஆணையம் மூலம் கிராப்ட் பஜார், காந்தி சில்ப் பஜார், டெல்லி ஹாட் போன்ற கண்காட்சிகளிலும் பங்கு பெற வாய்ப்பு அளிக்கப்படுகிறது. வெளிநாட்டில் நடக்கும் கண்காட்சிகளிலும் நாம் பங்கு பெற வாய்ப்பு கிடைக்கும். இன்சூரன்ஸ், மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு போன்றவையும் உள்ளது. சிறப்புகள்டெரகோட்டா பொம்மைகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இயற்கையோடு ஒன்றிணைந்து இருப்பதால் சுற்றுச்சூழலுக்கு எந்த கெடுதலும் ஏற்படாது. உடைந்து போனால் கூட அவற்றை தூர எறிந்து விட்டு புதியதை வைத்துக்கொள்ளலாம். விலையும் குறைவு. மண்பாண்டங்களில் சமைத்தால் உணவு சுவையாக இருக்கும்.நீண்டநேரமானாலும் கெட்டுப்போகாது. மண்பானை நீரை குடித்தால் உடலுக்கு நல்லது. தற்போது தேனீர் கோப்பைகள், ஐஸ் கிரீம் கப்புகள் கூட மண்பாண்டங்களில் செய்கிறார்கள். டெரகோட்டா பொம்மைகள், அலங்கார பொருட்கள் வீட்டின் வரவேற்பு அறையில் வைத்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வீட்டு வாசல் மற்றும் பூஜை அறைகளில் தண்ணீர் நிரப்பி பூக்களை போட்டு வைக்கும் உருளிகள் வாஸ்து குணம் கொண்டவை. இவ்வாறு பல சிறப்புகள் உள்ளன.என்னென்ன செய்யலாம்? டெரகோட்டா பொம்மைகளை பொறுத்தவரை அரை அங்குல விநாயகர் சிலை முதல் 32 அடி உயர சிலை வரை செய்யலாம். சிறிய விநாயகர் பொம்மைகள், குபேரன் சிலை, யானை, குதிரை போன்ற விலங்குகள் சிலைகள், அலங்கார விளக்குகள், உருளிகள், தொங்கும் விளக்குகள், அகல் விளக்குகள், மனித உருவங்கள், சுவற்றில் செய்யும் உருவங்கள், ஆபரணங்கள், டைல்ஸ், டிசைன்கள், தொங்கும் மணிகள், வாஸ்து மணி, அலங்கார மணி, செராமிக் பொம்மைகள் இன்னும் ஏராளமான பொருட்களை நம் கற்பனைத்திறனுக்கேற்ற வகையில் செய்யலாம்.
ஐசிசி கனவு அணியில் சச்சின், சேவாக், கபில்தேவ்
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் துவங்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆகிறது. இதை கொண்டாடும் விதமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) ‘கனவு அணி’ ஒன்றை தேர்வு செய்வதற்காக ஆன்லைனில் வாக்கெடுப்பு நடத்தியது. 97 நாடுகளில் உள்ள 6 லட்சம் ரசிகர்கள் இதில் வாக்களித்தனர். இதன் முடிவில் கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய வீரர்கள் சச்சின், சேவாக், கபில்தேவ் இடம் பெற்றுள்ளனர். சச்சின், சேவாக் சிறந்த துவக்க ஜோடி என்ற முறையில் தேர்வாகி உள்ளது. 2006ம் ஆண்டு தென் ஆப்ரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் ஜோகன்ஸ்பர்க்கில் நகரில் மோதிய ஒரு நாள் போட்டி சிறந்த ஆட்டமாக தேர்வாகியுள்ளது. இந்த ஆட்டத்தில் ஆஸி. 434 ரன்கள் குவித்தது. ஆனால் தென் ஆப்ரிக்கா தனது புயல் வேக பேட்டிங்கால் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அணி விவரம்: சச்சின், சேவாக், விவியன் ரிச்சர்ட்ஸ், லாரா, ரிக்கி பான்டிங், கபில்தேவ், கில்கிறிஸ்ட், டொனால்டு, வாசிம் அக்ரம், மெக்ராத், முரளீதரன்.
மண் புழு உரம் தயாரித்தால் மளமளன்னு குவியுது பணம்!
எங்கள் குழுவினர் தொழில் துவங்க யோசித்தபோது, இடமும், மூலப்பொருளும் இலவசமாகக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தோம். அதற்கேற்ப ஈரோடு காய்கனி மார்க்கெட்டில் உள்ள இடத்தைப் பயன்படுத்தி, அதில் செய்ய ஏதுவான தொழிலை யோசித்தபோது, காய்கனி மார்க்கெட்டில் கழிவுகளாகக் கொட்டப்படும் காய்கனி குப்பைகளை சேகரித்து, அதன் மூலம் மண் புழு உரம் தயாரிக்கத் திட்டமிட்டோம். இத்தொழிலுக்குத் தேவையான மாட்டுச்சாணம் மற்றும் மண்புழுக்களை மட்டும் வெளியே வாங்கினோம். காய்கறிக்கழிவு, மாட்டுச்சாணம், செம்மண், மண்புழு கலவையில் 2 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் தெளிக்க வேண்டும், ஒரு மாதத்திற்குப் பின்னர் வாரம் ஒரு முறை மேலாகப் படியும் உரத்தை அள்ளி சேகரிக்க வேண்டும். உழைப்பும் பெரிய அளவில் இல்லை. 3 மாதத்தில் மண் புழு உரம் மற்றும் மண்புழுக்கள் உற்பத்தியாகி விற்பனைக்கு தயாராகியது. அவற்றை பாக்கெட் போட்டு கடைக்கு விற்கிறோம். விவசாயிகள் மொத்தமாகவும் வாங்கிச் செல்கிறார்கள். ஷெட், காய்கறிக்கழிவுகள் ஆகியவை இலவசமாகக் கிடைத்ததால், சாணம், செம்மண், மண்புழுக்கள் மற்றும் பராமரிப்புச்செலவு மட்டும் தான். அதற்கு ரூ.10 ஆயிரம் செலவானது. உரம் மற்றும் மண்புழுக்கள் விற்றதில் ரூ. 24 ஆயிரம் கிடைத்தது. 3 மாதத்தில் ரூ.14 ஆயிரம் லாபம். இதே போல் கூடுதலாக ஷெட் அமைத்து உற்பத்தி செய்தால் பல மடங்கு லாபம் பெருகும் வாய்ப்புள்ளது. லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்ஒரு செட்டில் ஒன்றரை டன் மண்புழு உரம் கிடைக்கிறது. இதன் மதிப்பு ரூ. 22,500. மண்புழுக்கள் 5 ஆயிரம் கிடைக்கிறது. இதில் சிறியவை 50 பைசாவுக்கும், பெரியவை ஜீ1க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் சராசரியாக ரூ. 4 ஆயிரம். மொத்தம் ரூ. 26,500. இதில் உற்பத்திச் செலவு ரூ. 12 ஆயிரம் போக, லாபம் ரூ.14,500. இதில் கட்டுமானச் செலவுக்கான தொகையை மீட்க ரூ. 2,500 ஒதுக்கியது போக, 12 ஆயிரம் லாபம் கிடைக்கும்.மண் புழு உரத்தின் தேவை அதிகரித்து வருவதால், அதற்கேற்ப உற்பத்தி அதிகரிக்க, இடப்பரப்பளவை அதிகரித்து குறைந்தபட்சம் 3 ஷெட் போட்டு மண் புழு உற்பத்தி செய்வதன் மூலம் 3 மாதத்தில் ரூ.36 ஆயிரம் லாபம் கிடைக்கும். ஒரு ஆண்டில் ரூ. 1.44 லட்சம் லாபம் கிடைக்கும். ஒருவரே இத்தொழிலுக்குப் போதுமென்பதால், தனி நபருக்கு மாதம் ரூ.12 ஆயிரம் லாபம் கிடைக்கும். இத்தனைக்கும் இந்த தொழிலிலேயே முழுமையாக ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை. ‘சைடு' தொழிலாகக்கூட செய்யலாம். இடத்தின் அளவை கூட்ட, கூட்ட தொழிற்சாலை போன்று அமைத்து, லட்சக்கணக்கில் லாபம் சம்பாதிக்கலாம்.சரியான முறையில் மார்க்கெட்டிங் செய்தால், எவ்வளவு வேண்டுமானாலும் விற்கலாம். எதிர்காலத்தில் இதன் விலை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. இடம் நிறைய இருந்தால், அதற்கேற்ப மண் புழு உரத் தயாரிப்பை அதிகரிக்க ஷெட்டை விரிவுபடுத்தலாம். அதற்கு தகுந்தபடி கைநிறைய பணம் கிடைக்கும்.மூலப்பொருள் எங்கே கிடைக்கும்? செம்மண் அல்லது கரிசல் மண்ணை விவசாய நிலங்களில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். சாணத்தை கால்நடை வளர்ப்போரிடம் வாங்கலாம். விவசாயிகள் தங்கள் நிலப்பகுதியில் தோண்டிய குழியில் கழிவுகளையும் மண்ணையும் போட்டு மக்க வைத்திருப்பார்கள், அதை வாங்கிக் கொள்ளலாம். மண்புழுக்கள் ஏற்கனவே மண்புழு உரம் தயாரிப்பவர்களிடம் கிடைக்கும்.  மூலதன செலவு என்ன?கட்டமைப்புகள்:     சொந்தமாகவோ, வாடகைக்கோ ஒரு சென்ட் இடம்.     10க்கு 15 அடி நீள, அகலம், 4 அடி உயரமுள்ள தொட்டி. அதைச்சுற்றி  இடுப்பளவு காம்பவுண்ட் சுவர். மேற்கூரை ஷெட்.(ஆஸ்பெஸ்டாஸ் அல்லது கூரை.) கட்டமைப்புக்கான செலவு ஒரு ஷெட்டுக்கு ரூ.50 ஆயிரம்.உற்பத்திச் செலவு:     அடியில் பரப்ப செம்மண் அரை டன் ரூ. 500.    காய்கறிக் கழிவுகள் அல்லது மக்கிய மண் ஒரு டன் ரூ. 1500.    மாட்டுச்சாணம் ஒரு டன் ரூ.3 ஆயிரம்.    5 ஆயிரம் எண்ணிக்கையுள்ள மண்புழுக்கள் & ரூ. 5 ஆயிரம்    பராமரிப்பு கூலி  ரூ. 500.     இடம் வாடகை 3 மாதத்திற்கு அதிகபட்சம் ரூ. 1500    மூலதனச் செலவு ரூ. 62 ஆயிரம்.    இத்தொழிலுக்கு வங்கிக் கடனும் கிடைக்கிறது.தயாரிப்பது எப்படி? மண் புழு உரம் அமைக்கும் தொட்டியில் அரை டன் செம்மண், அதற்கு மேல் ஒரு டன்  காய்கறிக்கழிவு அல்லது மக்கிய மண்ணை பரப்ப வேண்டும். 20 நாள் கழித்து, அதன் மேல் ஒரு டன் மாட்டுச்சாணம் கொட்ட வேண்டும். அடுத்த 10 நாளில் மாட்டுச்சாணத்தின் மேல் 5 ஆயிரம் மண் புழுக்களை விட வேண்டும். மேல் பகுதியில் தேங்காய் நார் பரப்பி, 2 நாளுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து வர வேண்டும்.ஒரு மாதத்தில் மேலிருந்து மண் புழுக்கள் உள்ளே ஊடுருவும். மேலேயுள்ள மண்ணைச் சாப்பிட்டு, வெளியாகும் கழிவுகள் உரங்களாக மேல் பகுதியில் படியும். ஒரு மாதத்திலிருந்து வாரம் ஒரு முறை மேற்புற மண், அதாவது மண்புழு உரத்தை அள்ள வேண்டும். படிப்படியாக மேற்புறம் அனைத்தும் மண்புழு கழிவுகளாக, உரமாக வந்து கொண்டிருக்கும். 3 மாத நிறைவில் கீழுள்ள செம்மண் பரப்புக்கு மண்புழுக்கள் சென்று விடும்.  இதன் மூலம் 2 டன் பரப்புள்ள மண், சாணப்பரப்பில், கல், செத்தை கழிவுகள் போக ஒன்றரை டன் மண்புழு உரம் கிடைக்கும். இதற்கிடையில், மண் புழுக்கள் அனைத்தும் முட்டையிட்டு, சம எண்ணிக்கையில் புதிய மண்புழுக்கள் உருவாகியிருக்கும். நண்பேன்டா....விவசாயிகளின் நண்பன் என்று அழைக்கப்படும் மண்புழு, உலகில் 120 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளது. ஒவ்வொரு வகை மண்புழுவும் வெவ்வேறு விதமான தட்பவெப்ப சூழலில்,வெவ்வேறு ஆழத்தில் 3 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. ஆண், பெண் என்ற தனிப்பால் இல்லை. அனைத்து புழுக்களுமே 45 நாட்களுக்கு ஒரு முறை 30 முட்டைகள் வரை இடும். ‘யுஜினத்Õ வகை மண்புழுக்கள் இந்தியாவில் அதிகளவில் உள்ளது. 15 செமீ முதல் 20 செமீ நீளமுடையது. ஒரு கிராம் எடையுள்ளது. காய்கறி, வைக்கோல், ஈரவைக்கோல், காய்ந்த சருகுகள், சாணஎரு, கழிவுஎரு, கோழிஎரு உள்ளிட்டவைகள் மண்புழுக்களுக்கு சிறந்த உணவாகும். மண்புழுக்களுக்கு உணவை விட தண்ணீர் மிகவும் அவசியம். உண்ணும் உணவில் 30 முதல் 40 சதவீதம் வரை தண்ணீர் இருக்க வேண்டும். பொதுவாக பகல் நேரத்தைவிட இரவில்தான் அதிகமாக சுற்றி திரியக்கூடியது . சூரியக்கதிர்கள் இதன் மீது நேரடியாக படக்கூடாது. சூரியகதிர்கள் பட்டால் உடலில் காயங்கள் ஏற்பட்டு இறந்துவிடும். விளைநிலங்களுக்கு பயன்படுத்தப்படும் மண்புழுக்களின் கழிவுகளில் நைட்ரஜனை நிலைநிறுத்தும் பாக்டீரியாக்களும், பாஸ்பேட்டை கரைக்கக் கூடிய பாக்டீரியாக்களும் அதிகமாக உள்ளன. மேலும் மண்புழு கழிவில்(மண்புழு உரம்) இரும்பு, துத்தநாகம், மக்னீசியம், மாங்கனீசு போன்ற நுண்ணூட்ட சத்துக்கள் அதிக அளவில் உள்ளதோடு ஹார்மோன்கள், வைட்டமின்களும் உள்ளன. இதனால் மண்புழு உரமிடப்பட்ட பயிர்கள் நன்றாக வளர்வதோடு விளைச்சலும் அதிகரிக்கிறது. மேலும் இதன்கழிவுகள் மண்ணில் வாழும் பல வகையான நுண்ணுயிர்களுக்கு உணவாகவும் பயன்படுகின்றது. இது தவிர மண்புழு கழிவுக்கு மண்ணின் ஈர தன்மையை நிலை நிறுத்தும் திறன் அதிகம். வாரத்திற்கு மூன்று முறை தண்ணீர் பாய்ச்சுவதாக இருந்தால் மண்புழு உரம் இடப்பட்ட நிலங்களுக்கு இரண்டு முறை பாய்ச்சினாலே போதும் என்கின்றனர் வேளாண்துறையினர்.சந்தை வாய்ப்பு: இயற்கை உரத்தில் உற்பத்தியாகும் காய்கறி மற்றும் பயிர்களுக்கு மவுசு இருப்பதால், மண் புழு உரத்துக்கு தேவை அதிகரித்து வருகிறது. விவசாய நிலங்களின் மண் வளத்தை மீட்கவும் மண் புழு உரங்களையே பரிந்துரைக்கின்றனர். சாதாரண நிலங்களுக்கு மட்டுமல்லாமல், மலைப்பயிரான தேயிலை, காபித் தோட்டங்களுக்கும்கூட மண் புழு உரங்களை வாங்கிச்செல்கின்றனர். இதனால் நிலங்களுக்கு டன் கணக்கில் மண் புழு உரம் தேவைப்படுகிறது.வீடுகளில் பூந்தோட்டம் அமைப்பவர்களும், தொட்டிகளில் அழகுச் செடி வளர்ப்பவர்களுக்கும், பாக்கெட்களில் போட்டுள்ள மண்புழு உரத்தைப் பயன்படுத்துவது எளிதாக உள்ளது. அதற்காக ஒரு கிலோ, 2 கிலோ அளவில் பாக்கெட்களை வாங்க நர்சரி மற்றும் டிபார்ட்மென்டல் ஸ்டோர்களை அணுகுகிறார்கள். அங்கும் சப்ளை செய்யலாம்.
இந்தியா வெற்றிக்கு 342 ரன்கள் தேவை
இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்து வருகிறது. இதன் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 362 ரன்னும் இந்தியா 364 ரன்னும் எடுத்தன. 2வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்ரிக்கா நேற்றைய 4வது நாள் ஆட்டத்தை 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன் என்ற நிலையில் தொடர்ந்தது. பீட்டர்சன் 22, அம்லா (0) இருவரும் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். பீட்டர்சன் 22, அம்லா 2 ரன்னில் ஹர்பஜன்சிங் பந்தில் ஆட்டமிழந்தனர். டிவிலியர்ஸ் 13 ரன்னில் ஜாகீர்கான் பந்தில் போல்டானார். அதன் பின்னர் களம் வந்த பிரின்ஸ் 22 ரன்னில் இஷாந்த் வேகத்தில் அவுட்டானார். தென் ஆப்ரிக்கா 130 ரன்னுக்கு 6 விக்கெட் எடுத்து தவித்த நிலையில் காலி சுடன் பவுச்சர் இணைந்து மிரட்டினார். காலிஸ் தனது 40வது சதத்தை பூர்த்தி செய்தார். பவுச்சர் 55 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்.  ஸ்டெயின் 32, மார்கெல் 28, சோட்சோபி 8 ரன் எடுத்து ஆட்டமி ழக்க முடிவில் தென் ஆப்ரிக்கா அனைத்து விக்கெட்களையும் இழந்து 341 ரன் எடுத்தது. காலிஸ் 109 ரன் (240பந்து, 8 பவுண்டரி) எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.ஹர்பஜன் 7, ஜாகீர், இஷாந்த், சச்சின் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். தென் ஆப்ரிக்க அணி ஆட்டமிழந்ததும் நேற்றைய ஆட்டம் முடிந் தது. 342 ரன்கள் இலக்குடன் இந்திய அணி இன்றைய கடைசி நாள் ஆட்டத்தை ஆடுகிறது. இந்த இலக்கை இந்திய அணி அடைந்தால் டெஸ்ட் போட்டியில் புதிய சாதனை படைக்கும். மேலும் தென் ஆப்ரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றும். ஆனால் கடைசி நாளில் 90 ஓவர்களில் 342 ரன்களை குவிப்பது அவ்வளவு எளிதல்ல.
தெலுங்கு படத்தில் ஆமிர்?
ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் நடித்த பிறகு தென்னிந்திய கலைஞர்கள் மீது ஆமிர் கானுக்கு அதிக நம்பிக்கை வந்துவிட்டது என்கிறது பாலிவுட் வட்டாரம். 'மகதீரா' தெலுங்கு படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய இந்தி 'கஜினி' பட தயாரிப்பாளர்கள் முயன்றனர். இதற்காக ஆமிர் கானிடமும் பேசப்பட்டது. படத்தை பார்த்த ஆமிர் கான் மிகவும் சந்தோஷப்பட்டாராம். படத்தை பாராட்டியும் இருக்கிறார். ஆனால் கால்ஷீட் பிரச்னை, வேறு சில காரணங்களால் இதில் அவர் நடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதே நேரம், இப¢பட இயக்குனர் ராஜமவுலியை தனது வீட்டுக்கே அழைத்து பேசியிருக்கிறார். இது குறித்து ராஜமவுலி கூறும்போது, 'ஆமிர் கான் என்னை அழைத்ததை நம்பவே முடியவில்லை. அவருடன் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தேன். இது பெருமையாக இருக்கிறது. சினிமாவை பற்றி நிறைய விஷயங்களை பேசினோம்' என்றார். ராஜமவுலி இத்துடன் முடித்துக் கொண்டாலும் அவர் இயக்க உள்ள தெலுங்கு படத்தில் ஆமிர் கானை நடிக்க கேட்டதாக தகவல் பரவியுள்ளது. அப்படத்தில் கவுரவ வேடம் ஒன்று உள்ளது. அதில் ஓரிரு நாட்கள் நடித்து தருமாறு அவர் கேட்டார் என கூறப்படுகிறது.
ஆக்ஷன் வேடத்தில் நடிக்க சமந்தா மறுப்பு
தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கும் படம், கவுதம் மேனன், ராஜமவுலி இயக்கும் படங்கள் உள்ளன. நடிப்புடன் விளம்பரங்களிலும் நான் கவனம் செலுத்துவதாக சொல்கிறார்கள். விளம்பர படங்களில் அதிகம் நடிக்கவில¢லை. அதே நேரம், என்னை மதித்து கடை திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைக்கிறார்கள். இதை எனக்கான கவுரவமாக கருதுகிறேன். அதற்காக இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். ஒரே மாதிரியாக நடிப்பது எனக்கு பிடிக்காது. வித்தியாசமான வேடங்களை ஏற்கவே விரும்புகிறேன். அதே நேரம், ஆக்ஷன் வேடங்களில் நடிக்க மாட்டேன். அது எனக்கு ஒத்துவராது. ஏஞ்சலினா ஜூலி, 'டாம்ப் ரைடர்' படத்தில் நடித்தது போல் சண்டைக் காட்சிகளில் நடிக்க என்னால் முடியாது. மற்ற கதாபாத்திரங்களில் சிறப்பாக நடிக்க முடியும். அடுத்தடுத்து படங்கள் ஒப்பந்தமானதற்கு நான் அழகாக இருப்பது  காரணமா எனக் கேட்கிறார்கள். நான் அழகு என நானே நினைப்பதில்லை. சந்தோஷமாக இருக்க¤றேன். அதனால் நான் அழகாக தெரியலாம்.
பாவாடை தைத்தால் பணம்...
15 ஆண்டுகளுக்கு முன்பு தையல் கற்றுக் கொண்டேன். 6 ஆண்டுகளுக்கு முன்பு கிணத்துக்கடவு ஒன்றியம் மூலம் சுய உதவிக்குழு துவங்கும் வாய்ப்பு கிடைத்தது. 12 பேர் சேர்ந்து, இக்குழுவை உருவாக்கினோம். ‘உள்பாவாடையா... தைச்சு என்னங்க கிடைக்கும்’ என்று முதலில் சிலர் கேலி பேசினர். ஆனால், உழைப்பு உயர்வைத் தரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. உள்பாவாடை தயாரிக்கும் தொழில் தொடங்கி, அதில் சாதித்து காட்டினோம்.தொடக்கத்தில் ஸி25 ஆயிரம் கடனுதவி கிடைத்தது. அதை திருப்பி செலுத்திய பின்,  ரூ. 1.25 லட்சம் மானியத்துடன்  ரூ. 5 லட்சம் கடனுதவி கிடைத்தது. லாபம் மூலம் கடனை அடைத்தோம். முதலீடு திரும்பக் கிடைத்தது. கடனை காலம் தவறாமல் திருப்பி செலுத்தியது, சிறந்த முறையில் லாபகரமாக தொழில் செய்தது ஆகியவற்றுக்காக தமிழக அரசின் மணிமேகலை விருது  ரூ. 10 ஆயிரம் பரிசுடன் கிடைத்தது. குழுவில் உள்ள 12 பேரில் 9 பேர் முஸ்லிம், 3 பேர் இந்து. நாங்கள் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம். தொழில் மேம்பாட்டுக்கு அடுத்தகட்டமாக  ரூ. 3 லட்சம் கடன் கேட்டுள்ளோம். அது கிடைத்தால் மேலும் எங்கள் தொழில் சிறக்கும். இவ்வாறு ஜெய்புன்னிசா கூறினார்.வேலை ஈஸிபாவாடை தயாரிக்கும் வேலை எளிதானது. கட்டிங், தைப்பது ஈஸி. தைத்த பின் நாடா கோர்க்காமல், தைக்கும்போதே நாடாவுடன் தைத்தால், பாவாடையின் இடுப்பு பகுதி தரம் குறையாமல் இருக்கும். பாவாடையின் கீழ் பகுதியில் சன்னமாக ஒரு லேஸ் வைத்தால் எடுப்பாக இருக்கும். சின்ன டிசைனில் மெஷின் எம்ப்ராய்டரி செய்தால் மதிப்பு கூடும். தைக்கும்போதே வழக்கமாக சப்ளை செய்யும் ஜவுளிக்கடை அல்லது நிறுவன லேபிளை சேர்த்து தைக்கலாம். குறைந்தபட்ச இன்ச் 36க்கு குறையாமல் இருந்தால் நல்லது. 26 இன்ச் இடுப்புள்ளவர்கள்கூட எளிதில் நாடாவை சுருக்கிக் கட்டிக் கொள்ள முடியும். பெண்களின் இடுப்பு பருமனுக்கேற்ப அதிகபட்சம் 44 இன்ச் வரை தைக்கலாம். சேலையின் மேட்சிங்குக்காக பாவாடையில் 600 கலர்கள் வரை தைக்கிறார்கள்.அதிக லாபம்ஜவுளி மார்க்கெட்டில் மொத்தமாக விற்றால் குறைந்த லாபமே கிடைக்கும். ஆனால், உடனடியாக விற்றுவிடலாம். தனிப்பட்ட ஜவுளி, ரெடிமேட், மேட்சிங் சென்டர்களில் விற்றால் பாவாடை ஒன்றுக்கு ஸி5க்கு குறையாது. கிராமப்புற சந்தைகள், வீடுகளில் நேரடி விற்பனை மூலம் பாவாடைக்கு தலா  ரூ. 10 லாபம் கிடைக்கும்.துணி, நூல், நாடா, தையல் கூலி ஆகியவை சேர்த்து 6 பார்ட் பாவாடைக்கு  ரூ. 55, 7 பார்ட்  ரூ. 65, 8 பார்ட்  ரூ. 75 உற்பத்தி செலவாகிறது. பாவாடை ஒன்றுக்கு லாபம்  ரூ. 5 வீதம் மாதம் 7500 பாவாடை மூலம் ரூ. 37,500 லாபம். இதுதவிர துணிகளை பாவாடைக்கு வெட்டும்போது கடைசியாக மிஞ்சும் அரை மீட்டர், முக்கால் மீட்டர் துணிகள் மூலம் மாதம் குறைந்தபட்சம் 50 முதல் அதிகபட்சம் 100 சிறுமிகளுக்கான ஷிம்மீஸ் தயாரிக்க முடியும். அதன் மூலம் உபரி லாபம்  ரூ. 2500. உற்பத்தி வேகம், கூடுதல் நேரம் வேலை பார்த்தால் இன்னும் லாபத்தை அதிகரிக்கலாம்.முதலீடு, உற்பத்தி எவ்வளவு? தொழிற்கூடமாக அமைக்க விரும்புவோருக்கு, குறைந்தபட்சம் 10க்கு 20 அடி இடம். பவர் தையல் இயந்திரம் 6(தலா  ரூ. 10 ஆயிரம்), மேனுவல் தையல் இயந்திரம் 3(தலா  ரூ. 5500), பவர் ஜிக்ஜாக் தையல் இயந்திரம் 2(தலா  ரூ. 11 ஆயிரம்), பவர் ஓவர்லாக் தையல் இயந்திரம்( ரூ. 6000), கட்டிங், பேக்கிங் டேபிள் 2 (தலா  ரூ. 4 ஆயிரம்), அலமாரி 1 ( ரூ. 10 ஆயிரம்) என உள்கட்டமைப்பு முதலீடு  ரூ. 1.45 லட்சம். கட்டிங் செய்ய ஒருவர், தைக்க 7, மடிக்க 2, பேக்கிங் 2 என 12 பேர் மூலம் ஒரு நாளைக்கு 300 பாவாடைகள் உற்பத்தி செய்யலாம். தினசரி 300 பாவாடை வீதம் மாதம் 25 நாளில் 7500 பாவாடைகள் தயாரிக்கலாம். ஒரு பாவாடைக்கு 2.25 மீட்டர் வீதம் 16,625 மீட்டர் துணி தேவை. மீட்டர் தலா  ரூ. 30 வீதம்  ரூ. 4.99 லட்சம் மற்றும் நூல், நாடா, ஜிக்ஜாக் நூல், ஓவர்லாக் நூலுக்கு ஆயிரம் ரூபாய் என உற்பத்தி முதலீடு  ரூ. 5 லட்சம். தையல் இயந்திரங்கள், நூல் வகைகள் அனைத்து இடங்களிலும், பாவாடைக்குத் தேவையான காட்டன் துணிகள் பல வண்ணங் களில் ஈரோட்டில் குறைந்த விலையில் கிடைக்கிறது. மொத்த முதலீடு  ரூ. 6.45 லட்சம், இது 12 பேருக்கானது. ஒருவருடைய பங்கு  ரூ. 54 ஆயிரம். மகளிர் குழு போன்ற அமைப்பாக இருந்தால், மானியத்துடன் கடன் பெற்று தொழில் செய்யலாம். முதலீடு போட வேண்டியதில்லை. தொழிலை தனி நபர் செய்ய முன்வந்தால் தலா ஒரு பவர் தையல் இயந்திரம், ஜிக்ஜாக், ஓவர்லாக் இயந்திரம் மற்றும் உள்கட்டமைப்புக்கு  ரூ. 31 ஆயிரமும், உற்பத்திக்கு  ரூ. 39 ஆயிரமும் என  ரூ. 70 ஆயிரம் தேவை.
பைனான்சியர்களை சந்தித்த நடிகர்
கோடம்பாக்கம் கோடங்கி...நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...இங்கிலீஷ் புத்தகத்துக்கு படு கிளாமரா போஸ் கொடுத்திருக்கிறாராம் இலி நடிகை. எல்லாமே கிளுகிளு போஸாம்... போஸாம்... இந்தி படத்துல நடிக்கிறதால அங்கே பிக்கப் ஆகவே இந்த டெக்னிக்காம்... டெக்னிக்காம்...சமீர நடிகைக்கு மத்த மொழிகள்ல வாய்ப்புகள் குறைஞ்சி போச்சாம்... போச்சாம்... அதனால தமிழ்ல கவனம் செலுத்த விரும்புறாராம். அதுக்காக நம்மூர் இயக்குனர்கள¢கிட்ட நட்பை வளர்க்கிறாராம்... வளர்க்கிறாராம்... அதுக்கு கை மேல் பலனும் கிடைச்சிருக்காம்... கிடைச்சிருக்காம்...ரொம்ப நாளா தன்னோட படம் வராததால காதல் நடிகரு வருத்தமா இருக்கிறாராம்... இருக்கிறாராம்... ஷூட்டிங் நின்ற படங்களையும் திரும்ப ஆரம்பிக்கலாமேனு டைரக்டருங்ககிட்ட பேசுறாராம். இதுக்காக தனக்கு தெரிஞ்ச பைனான்சியர்களையும் நடிகரு சந்திச்சு பேசினாராம்... பேசினாராம்...
கிளிப்பிங்ஸ்
*ஜீவா, கார்த்திகா, அஜ்மல், பியா நடித்துள்ள 'கோ' படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 16ம் தேதி நடக்கிறது.*மோகன்லால் நடித்துள்ள 'கிறிஸ்டியன் பிரதர்ஸ்' இந்த வாரம் திரைக்கு வர இருந்தது. இப்போது இரண்டாவது முறையாக ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது.*பிரபு தேவா இயக்கும் படத்தில் விஷாலுடன் 2 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.*பாலா இயக்கும் 'அவன் இவன்' பட ஷூட்டிங் தேனியில் நடந்து வருகிறது.*ஹரி இயக்கத்தில் தனுஷ், தமன்னா நடிக்கும் 'வேங்கை' பட ஷூட்டிங் 50 சதவீதம் முடிந்துள்ளது.*போஜ்புரியில் மவுசு குறைந்துவிட்டதால் அங்கு சிறு வேடங்களில் நடித்து வருகிறார் நக்மா.*'அசையும் படம்' என்ற பெயரில் ஒளிப்பதிவு விஷயங்கள் குறித்து புத்தகம் எழுதியிருக்கிறார் கேமராமேன் சி.ஜே. ராஜ்குமார்.*தெலுங்கு 'பில்லா 2'வில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். முதல் பார்ட்டிலும் அவர்தான் நடித்திருந்தார். *'புது பாடகர்கள் தங்களுக்கென ஒரு பாணியை ஏற்படுத்த வேண்டும். பிரபல பாடகர்களை காப்பி அடிக்கக் கூடாது' என்கிறார் ஹரிஹரன்.
பேஸ் புக் மொத்த மதிப்பு 2.25 லட்சம் கோடி
பிரபல சமூக இணைப்பு இணைய தளமான பேஸ்புக்கின் மதிப்பு 2.25 லட்சம் கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கோல்டுமேன் சாச் மற்றும் ரஷ்ய முதலீட்டாளரிடம் இருந்து 2,250 கோடி முதலீடு பெற பேஸ்புக் இணையதளம் ஒப்பந்தம் செய்துள் ளது.இந்த ஒப்பந்தத்தின்படி ஈபே, யாகூ மற்றும் டைம் வார்னர் இணைய தளங்களின் மதிப்பை காட்டிலும் பேஸ்புக் மதிப்பு உயர்ந்துள்ளது. அமெரிக்க பங்கு சந்தை முதலீட்டில் முன்னணி வகிக்கும் நிறுவனம் கோல்டுமேன் சாச். இந்நிறு வனத்தின் முதலீடு, பேஸ்புக் இணைய தளத்துக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.திறமையான ஊழியர்களை நியமிப்பது, புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்வது, சிறிய இணைய தளங்களை விலைக்கு வாங்குவது ஆகியவற்றுக்கு முதலீட்டை பயன்படுத்த அது திட்டமிட்டுள்ளது.இதுவரை பேஸ்புக் பொது பங்குகள் வெளியிட வில்லை. 2012ம் ஆண்டில் வெளியிடக் கூடும் என்று தெரிகிறது.
குளிரில் 40,000 நண்டுகள் சாவு
இங்கிலாந்தில் குளிர் தாங்க முடியாமல் 40 ஆயிரம் கடல்வாழ் நண்டுகள் பரிதாபமாக இறந்து கரை ஒதுங்கியுள்ளன. இங்கிலாந்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கென்ட் கவுன்டி தனெட் மற்றும் அதை ஒட்டியுள்ள இடங்களில் தொடர்ந்து நூற்றுக்கணக்கான நண்டுகள், கடல் பாசிகள், நத்தைகள் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. வெஸ்ட்ப்ரூக், கிளிப்டன்வில், கிங்ஸ்கேட் கடற்கரைகளிலும் ஏராளமான நண்டுகள், நத்தைகள் இறந்து கரை ஒதுங்குகின்றன. கடல் நீர் ஐஸ்கட்டி அளவுக்கு ஜில்லென்று மாறியதால் குளிர் தாங்காமல் உயிரினங்கள் இறந்துவிட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இவ்வாறு கடந்த ஆண்டும் ஆயிரக்கணக்கில் கடல்வாழ் உயிரினங்கள் இறந்தது குறிப்பிடத்தக்கது.
பகுதிநேர பிஇ படிப்பில் சேர வேண்டுமா?
பள்ளியிறுதி தேர்வை நிறைவு செய்யும் பலருக்கு இன்ஜினியராக வேண்டும் என்பதே கனவாக உள்ளது. மதிப்பெண் குறைந்துவிடுவதாலும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் பலருக்கு இப்படிப்பில் சேர வாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்து தங்களது தொழிற்படிப்பு ஆவலை ஈடு செய்து கொள்கின்றனர். டிப்ள மோ படிப்பை நிறைவு செய்த பலர் பல்வேறு தொழில் நிறுவனங்களில் தங்களது இன்ஜினியரிங் கனவு நிறைவேறாமல் வாழ் வாதார கட்டாயத்தின் அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களை போன்றவர்களுக்கு மதுரையில் உள்ள அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பகுதிநேர பிஇ படிக்க வழிகாட்டுகிறது. மதுரை அண்ணா பல்கலைக்கழகத்தின் திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் உறுப்புக்கல்லூரிகளில் இந்த பகுதிநேர படிப்புகள் நடத்தப்படுகிறது. டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்து விட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இதில் சேர தகுதியுடையவர்கள்.சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகள் பகுதிநேர படிப்பில் இடம்பெற்றுள்ளன.  இப்படிப்பில் சேருவதற்கு பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்ப கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.300 செலுத்தினால் போதுமானது. கட்டணத்தை ‘The Director Admissions, Anna University of Technology Madurai, Madurai625002’ என்ற பெயரில் மதுரையில் மாற்றத்தக்க வகையில் டிடியாக எடுத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் நவ.10க்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களை www.autmdu.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
லூக்சி ஹேண்ட்ஸ் ப்ரீ கேமரா
அழகான இயற்கை காட்சிகளையும், அற்புதங்களையும் படம் பிடிப்பதில் பெரும்பாலோருக்கு ஆர்வம் அதிகம். இதற்காக கேமராவும் கையுமாக அலைய முடியாதே. இப்படிப்பட்ட ஆர்வலர்களுக்கு என்றே நவீன ஹேண்ட்ஸ் ப்ரீ கேமரா அறிமுகமாகி உள்ளது. இதை தூக்கிக் சுமக்க வேண்டிய அவசியம் இல்லை. கீழே போட்டுவிடுவோமோ... எங்காவது மறந்து வைத்து விடுவோமோ என்றெல்லாம் பயப்படவும் தேவையில்லை.அத்தனை கையடக்க ஸாரி... காதடக்க கேமராதான் லூக்ஸி. வெளியில் புறப்பட தயாரானதும் லூக்சியை காதில் மாட்டிக் கொண்டால் போதும். காதே கேமரா ஆகிவிடும். பல இடங்களில் அலைந்து திரிந்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் ஆடையை மாற்றுவதுபோல லூக்சியை கழற்றி வைத்து விடலாம். நுணுக்கமானது மட்டுமின்றி மிகவும் பாதுகாப்பானதும்கூட. தொடர்ந்து 5 மணி நேரம் இதில் படம் பிடிக்கலாம். போட்டோ மற்றும் வீடியோவில் அதிக ஆர்வம் கொண்ட குடும்பத்தினரின் அற்புத கண்டுபிடிப்பு இது. தங்கள் வீட்டு குழந்தைகளின் குறும்புகளை படம் பிடிக்க விளையாட்டாக கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கருவியை, மேலும் சில தொழில்நுட்பங்களை சேர்த்து சாதனை கேமராக்கி விட்டனர்.லூக்சியில் உள்ள சிறிய பட்டனை அழுத்தினால் கேமரா படம் எடுக்க துவங்கி விடும். இதில் இன்னொரு வசதியும் உள்ளது. 30 நொடிகளுக்கு முன்பு வரை எடுக்கப்பட்ட படங்களையும் உடனடியாக பேஸ் புக், ட்விட்டர், உங்களின் ஈ&மெயில் போன்ற இணையதளங்களுக்கு அனுப்பும் வசதியும் செய்யப்பட்டிருப்பது இதன் கூடுதல் சிறப்பு. காட்சிகளுடன் ஒலியும் துல்லியமாக பதிவாகுமாம்.
விவசாயம் பார்த்துக்கொண்டே படிக்கலாம்
விவசாய புரட்சியில் பல்வேறு மைல்கற்களை தாண்டி புதிய தொழில்நுட்பங்களுக்குள் அடியெடுத்து வைத்துள்ளோம். இதற்காக மத்திய, மாநில அரசுகள் கோடிக்கணக்கில் நிதியை வாரி வழங்கி வருகிறது. வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. சில நேரங்களில் வேளாண் துறை மூலம் அளிக்கப்படும் பயிற்சிகளின் முழு சாராம்சமும் விவசாயிகளை சென்றடைவதில்லை. இதனை உணர்ந்து கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி இயக்ககம் புதிய பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. Bachelor of Farm Technology என்றழைக்கப்படும் இப்பாடப்பிரிவை பல்கலைக்கழக   துணைவேந்தர் முருகேசபூபதி துவக்கி வைத்துள்ளார்.   இப்படிப்பின் கால அளவு 3 ஆண்டுகள். செமஸ்டர் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மொத்தம் 6 செமஸ்டர்கள்.   ஒரு செமஸ்டருக்கு   ரூ.7500 வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தமிழ்வழியில் மட்டும் நடத்தப்படும் இப்படிப்பை 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 30 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகள் படிக்கலாம். கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண் கல்லூரிகள் ஆராய்ச்சி நிலையங்கள் உள்ள இடங்களில் இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். சனி, ஞாயிறு ஆகிய விடு முறை நாட்களில் மட்டுமே வகுப்பகள் நடைபெறும். இதனால் விவ சாய பணிக்கு இடையூறு ஏற்படாது. இப்படிப்பை படிப்பதன் மூலம் அரசு வேலைக்கு செல்ல முடியாது. இருந்தபோதிலும் விவசாயத்தின் அடிப்படை கூறுகள், புதிய தொழில்நுட்பங்கள், அதிக மகசூல் பெறும் வழிமுறைகள், காலத்திற்கேற்ற பயிர் சாகுபடி, நோய் கட்டுப்பாடுகள், இயற்கை உரங்கள் பயன்பாடு மற்றும் விவசாயம் தொடர்பான அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும். இப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களை கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் கோவை, மதுரை, திருச்சி, கிள்ளிகுளம் ஆகிய இடங்களில் செயல்படும் அரசு வேளாண் கல்லூரிகளில் பெற்றுக்கொள்ளலாம் என கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி டீன் ஏ.ராஜராஜன் தெரிவித்துள்ளார்.
ஒபாமா மனைவி கர்ப்பம்? வல்லரசை வறுத்த வதந்தி
‘‘விசயம் தெரியுமா? நம்ம ஒபாமா சம்சாரம் வாயும் வயிறுமா இருக்காளாமே’’ ‘‘ரெண்டு மாசமாம்க்கா’’ ‘‘ஆகஸ்ட்டுல ஒபாமாக்கு பொறந்தநாள். அதுக்கு முன்னாடி கொழந்த பொறந்துடுமாம்’’ அமெரிக்காவில் இதுதான் இப்போது பரபரப்பு பேச்சு. ‘‘அமெரிக்க அதிபர் ஒபாமா & மிஷெல் தம்பதிக்கு மலியா (13), சஷா (10) என்று இரண்டு குழந்தைகள். இந்நிலையில், அதிபர் மனைவி மிஷெல் மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். அவர் 2 மாத கர்ப்பமாக உள்ளார். ஜூலையில் டெலிவரி நடக்கும் என தெரிகிறது. இத்தகவலை வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பு செயலாளர் ராபர்ட் கிப்ஸ் தெரிவித்துள்ளார்’’ என்று அமெரிக்காவின் வீக்லி வேர்ல்டு நியூஸ் இணையதளத்தில்  பரபரப்பு செய்தி வெளியானது. தொடர்ச்சியாக பல இணையதளங்கள், அமெரிக்க பத்திரிகைகளிலும் பிளாஷ் செய்தியாக இது வெளியானதில் அமெரிக்க மக்கள் பரப்பாகினர். முழுக்க முழுக்க வதந்தி. வெ.மா. செயலர் சொன்னதாக புருடா விட்டிருக்கிறார்கள் என்று பிறகு தெரியவந்துள்ளது. அதே நேரம், ‘மிஷெல் கர்ப்பமாக இல்லை’ என்று மறுப்பு செய்தியும் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியிடப்படவில்லை. நிஜமாகவே மிஷெல் கர்ப்பமா, இல்லையா? அமெரிக்காவில் பரபரப்பு தொடர்கிறது.
திறன் வளர்ப்பு பயிற்சி பெற்றால் இன்ஜி. ஆசிரியர்கள் ஜொலிக்கலாம்
ஆசிரியர்கள் என்றாலே எதிர்கால சந்ததிகளை நிர்ணயிக்கும் சக்தி என்றுதான் பொருள். இத்தகு பெருமைக்குரிய ஆசிரியர் பணியில் இருப்பவர்கள் கூடுதல் தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமும், அவசியமுமாக உள்ளது. அப்போதுதான் தன்னிடம் படிக்கும் மாணவர்களையும் திறன்மிக்கவர்களாக உருவாக்க முடியும். இந்த விதி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல கல்லூரி மற்றும் இன்ஜினியரிங் உள்ளிட்ட உயர்கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.இதற்காகவே ஆசிரியர்களுக்கு அவர்கள் சார்ந்த துறை சார்பில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் இன்ஜினியரிங் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சியை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வழங்குகிறது. ‘Quality  Improvement Programme (QIP2011)’  என்ற பெயரில் நடத்தப்படும் இப்பயிற்சியில் சேர ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பொதுப்பிரிவினர் ரூ.500ம், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ரூ.250ம் ‘IIT Roorkee QIP‘ என்ற பெயரில் Roorkee ல் மாற்றத்தக்க வகையில் டிடியாக எடுத்து அனுப்ப வேண்டும். www.aicteindia.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். இந்த இணையதள முகவரியில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டிய சான்றுகள் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். ஆன்லைனில் வரும் நவ.11&க்குள், தபாலில் நவ.16க்குள்ளாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை  ‘Principal Coordinator QIP, Quality Improvement Programme centre, Indian Institute and Technology Roorkee,  Roorkee247667‘ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மகாத்மா காந்தி பற்றி படிக்க ஆசையா?
‘அகிம்சை‘ என்ற தாரக மந்திரத்தை பயன்படுத்தி ஆங்கிலேயர்    அடிமைப் படுத்திய இந்தியாவிற்கு விடுதலை பெற்றுத்தந்தவர் மகாத்மா காந்தி. காந்தியின் கொள்கைகளை பற்றி அறிந்து கொள்ள சில பல்கலைக்கழகங்கள் இது சம்பந்தமான படிப்புகளை வழங்கி வருகிறது. காந்தியடிகளை பற்றி மக்கள் மத்தியில் சரியான கோணத்தில் கொண்டு செல்லும் வகையில் சென் னையில் உள்ள காந்தி கல்வி நிலையம் ‘அஞ்சல் மூலம் அறிவோம் காந் தியை‘ எனும் தலைப்பில் புதிதாக   அஞ்சல்வழிக் கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இல்லத்தரசிகள், நேர்மையாக தொழில் செய்ய முனைவோர், அரசியல் மூலம் மக் களுக்கு நல்லவை செய்ய விரும்வோர், இளைஞர்கள், மாணவர்கள் என அனைவருக்காகவும் இப்படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பாடத்திட்டம் உள்ளது. படிப்பின் கால அளவு 3 மாதங்கள். இதில் சேர கல்வித்தகுதியோ, வயது வரம்போ கிடையாது. பதிவுக்கட்டணம் னீ150. வேறு கட்டணம் எதுவும் இல்லை. இப்பயிற்சியில் சேருவோருக்கு அருகில் உள்ள நகரங்களில் நேரடி தொடர்பு வகுப்புகள் நடை பெறும். பதிவுக்கட்டணம் செலுத்தியர்களுக்கு பாடத்திட்ட நூல்கள் அனுப்பி வைக்கப்படும். தேர்வு எழுத மையங்களுக்கு அலையவேண்டிய தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே தேர்வு எழுதலாம். இதற்குரிய வினாத்தாள் வீட்டிற்கே அனுப்பப்படும். தேர்வு எழுதியபின்னர் விடைத்தாள்களை காந்தி கல்வி நிலையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வீட்டிற்கே வந்து சேரும். பதிவுக்கட்டணத்தை வரும் நவ.15க்குள் செலுத்த வேண்டும். வரும் 2011 ஜனவரி 30ம் தேதி தேர்வு நடைபெறும்.எந்த வழியில் (தமிழ், ஆங்கிலம்) படிக்க விரும்புகிறீர்கள் என்பதை தெளிவாக குறிப்பிட்டு பதிவுக்கட்டணத்தை மணியார்டர் மூலமாகவோ, காந்தி ஸ்டடி சென்டர் என்ற பெயரில் டிடி எடுத்தோ ‘இயக்குனர், காந்தி கல்வி நிலையம், 58, வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை 600017’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களை 044-24340607, 24346549 ஆகிய தொலை பேசி எண்களிலோ, gandhi study centre.org என்ற இணையதள முகவரியிலோ தெரிந்து கொள்ளலாம்.
கடற்சார்ந்த டிப்ளமோ படிப்புக்கு 10ம் வகுப்பு போதும்
முப்படைகளில் ஒன்றாக விளங்குவது கப்பற்படை. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கப்பற்படைக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். இதே போல் கடற்சார்ந்த பிற தொழில்களிலும் வேலைவாய்ப்புகள் உலகம் முழுவதும் கொட்டிக்கிடக்கிறது. இதனால் தற் போது பல கல்வி நிறுவனங்கள் கடற்சார்ந்த படிப்புகளை வழங்க முன்வருகின்றன. இவ்வாண்டில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்லைக்கழகத்தில் கடற்சார் பொருளாதார மேம்பாடு என்ற முதுகலை பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதனிடையே தமிழக அரசின் கீழ் இயங்கும் ‘தமிழ்நாடு மேரி டைம் அகடமி’ நிறுவனம் PRESEA COURSE FOR GENERAL PURPOSE RATINGS' என்ற படிப்பை நடத்தி வருகிறது. இந்த படிப்பில் சேர பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 3.1.2011 தேதிப் படி பதினேழரை வயது முதல் 25 வயதிற்குள்   உள்ள நபர்கள் இப்படிப்பில் சேர தகுதியுடையவர்கள். படிப்பின்  கால  அளவு 6 மாதங்கள்.  இதற்கு கல்விக் கட்டணமாக 1 லட்சத்து 20 ஆயிரம் செலுத்த வேண்டும்.எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.  மொத் தம் 40 இடங்களுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும். இதற்கான எழுத்துத்தேர்வு மற் றும் நேர்முகத்தேர்வுகள் சென்னையில் உள்ள ‘தமிழ்நாடு மேரிடைம் அகடமி’யில் நடத்தப்படும். தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு 3.1.2011அன்று வகுப்புகள் துவங்கும். இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பாஸ்போர்ட் வைத்திருத்தல் அவசியம்.விண்ணப்பக்கட்டணம் ரூ.300ஐ ‘Director, Tamilnadu Maritime Acadamy' என்ற பெயரில் தூத்துக்குடியில் மாற்றத்தக்க வகையில் குறுக்கு கோடிட்ட டிடியாக எடுத்து ‘The Director, Tamilnadu Maritime Acadamy, 333, South Beach Road, Thoothukudy 628001, Tamilnadu' என்ற முகவரிக்கு முழுவிவரம் அடங்கிய கோரிக்கை கடிதத்துடன் அனுப்பி விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம்.  பூர்த்தி செய்த விண்ணப்பத்தை இம்முகவரிக்கு நவ.23ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
ஊதியத்தை கொட்டிக்கொடுக்கும் அனிமேஷன், மல்டிமீடியா
வேலைவாய்ப்பு சந்தையில் முன்னேறி வரும் இத்துறை சார்ந்த வேலைவாய்ப்பு படிப்புகளை பல முன்னணி கம்ப்யூட்டர் கல்வி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. தமிழகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளும் இதுபோன்ற வேலைவாய்ப்புகளை பெற்று வாழ்வில் ஒளிர வேண்டும் என்ற அடிப்படையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்ககமானது ஆப்டெக்-அரினாவுடன் இணைந்து பிஎஸ்சி மல்டிமீடியா அன்ட் அனிமேஷன் என்ற படிப்பை இக்கல்வியாண்டில் அறிமுகப்படுத்தி உள்ளது. இப்படிப்பின் கால அளவு 3 ஆண்டுகள். பிளஸ் 2 படிப்பில் எந்த பாடத்தை  எடுத்து  படித்திருந்தாலும் இப்படிப்பை படிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை www.msuniv.ac.in, arenamultimedia.com ஆகிய இணையதள முகவரிகளில் இருந்து பதிவிறக் கம் செய்து உரிய பதிவுக்கட்டணத்தை  ‘Registrar , Manonmaniam Sundaranar University, Tirunelveli' என்ற பெயரில் நெல்லையில் மாற்றத்தக்க வகையில் எடுத்து உரிய சான்றுகளை இணைத்து   இப்படிப்பு தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட கல்வி மையங்களில் சமர்ப்பித்து படிப்பில் சேரலாம்.மேலும் விவரங்களை   www.msuniv.ac.in என்ற இணையதளத்திலும், 0462-2333741, 2333721 ஆகிய பல்கலைக்கழக தொலைபேசி எண்களிலும் அறிந்து கொள்ளலாம். மேலும் ‘Arena Animation - Multimedia Training Business   of Aptech   Ltd, 64, Cathedral Road, Opp.Hotel Maris, Gopalapuram, Chennai600086 (044 28115023, 39106850)’ என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
மருத்துவம், இன்ஜினியரிங் மட்டும்தான் படிப்பா? லட்சக்கணக்கில் சம்பாதிக்க சி.ஏ
மருத்துவம், பொறியியல் படிப்புகள் மீதுதான் பல மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், மோகம் இருக்கிறது. அதில்தான் அதிகம் சம்பாதிக்கலாம்  என நினைக்கிறார்கள். ஆனால் லட்சக்கணக்கில் சம்பாத்தியத்தை அள்ளி தரும் வேறு படிப்புகளும் உள்ளன. அதில் ஒன்றுதான் பட்டயக் கணக்கியல்  (சி.ஏ) படிப்பு. உடனடி வேலைவாய்ப்பு, வருவாய்க்கு சி.ஏ. படிப்பு உத்தரவாதம் தருகிறது.நாடு முழுவதும் 1.5 லட்சம் சி.ஏ. முடித்தவர்களின் கீழ், 7.2 லட்சம் பேர் சிஏ பயிற்சி பெற்று வருகின்றனர். ஒரு நிறுவனத்தை துவங்குதல், அதன்  வளர்ச்சி, தனிநபர் முதலீடு, வங்கிகடன் மற்றும் பங்கு வர்த்தகத்தில் சி.ஏ படித்தவர்களின் பங்கு அவசியம்.பொருளாதாரம், தகவல் தொழில்நுட்பம், ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து சி.ஏ. படித்த தணிக்கையாளர்களின்  தேவை அதிகரித்து வருகிறது. கலால் சுங்கம், வணிக வருமான வரிகள், மதிப்புக்கூட்டு வரியை முறைப்படுத்த தணிக்கை அவசியம்.  தணிக்கைக்கான அடிப்படைக் கொள்கைகளை வகுப்பதில் இந்திய தணிக்கையாளர்கள் முன்னோடியாக இருக்கின்றனர்.சி.ஏ. படிக்க அடிப்படைத் தகுதி பிளஸ் 2 தேர்ச்சி. முதலில் சி.பி.டி.எனப்படும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று பின்னர் ஐ.பி.சி.சி என்ற மற்றொரு  தேர்வை எழுத வேண்டும். தொடர்ந்து பதிவு பெற்ற சி.ஏ. படித்த தணிக்கையாளர்களின் கீழ் 3 ஆண்டு பயிற்சி பெற வேண்டும். பயிற்சி தொடங்கும்  போதே அகில இந்திய பட்டயக் கணக்காளர் சங்கத்தில் பெயர் பதிவு செய்ய வேண்டும். 3 ஆண்டு பயிற்சி முடிவில் உரிமம் பெற்ற பட்டயக்  கணக்காளருக்கான சான்றிதழ் வழங்கப்படும். இளங்கலை வணிகவியல் (பி.காம்) முடித்தவர்களுக்கு பயிற்சி மிக எளிது. இதற்காக அடிப்படை தகவல்கள் மற்றும் விண்ணப்பபடிவம் பெறுதல்,  பதிவு பெற்ற தணிக்கையாளர்கள் பற்றிய தகவல்களை ஷ்ஷ்ஷ்.வீநீணீவீ.ஷீக்ஷீரீ என்ற இணைய தளத்தில் பெறலாம்.சி.ஏ. படித்தவருக்கு குறைந்த பட்ச மாத சம்பளம் ரூ. 50 ஆயிரம் என அகில இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்கம் நிர்ணயம் செய்துள்ளது. திறமை  அடிப்படையில் ஒரு பட்டயக் கணக்காளர் ஆண்டுக்கு ரூ. 70 லட்சம் வரை சம்பளம் பெற முடியும். வருங்கால தேவையைக் கருத்தில் கொண்டு  கணக்காளர் சங்கம் நாடு முழுவதும் பயிற்சி கூடங்களை நிறுவ முடிவு செய்துள்ளது. இதன் தொடக்கமாக கோவை உள்ளிட்ட நாட்டின் முக்கிய  நகரங்களில் இதற்காக பணி தொடங்கப்பட்டுள்ளது.இன்னும் சில மாதங்களில் வீடியோ கான்பரன்சிங் முறையில் பயிற்சி தொடங்கவுள்ளது. டிசம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான  கருத்தரங்கு கோவையில் நடக்கிறது. இத்தகவலை சங்கத் தலைவர் அமர்ஜித் சோப்ரா மற்றும் துணைத்தலைவர் ராமசாமி தெரிவித்தனர்.
சில்லரை வணிக நிர்வாகம் படித்தால் வேலை உறுதி
கிராமத்துக்கு ஒரு மளிகை கடை இருந்த நிலை மாறி தற்போது நாட்டின் முன்னணி நிறுவனங்களே சிறு நகரங்களில் கூட சூப்பர் மார்க்கெட்களையும், வணிக நிறுவனங்களையும் திறக்க ஆரம்பித்து விட்டன. உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமில்லாமல் அமெரிக்காவின் வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் சில்லரை வர்த்தக கடைகளை திறந்து வருகின்றன. தற்போது சில்லரை வணிகத்தின் மதிப்பு உள்நாட்டில் 10 லட்சம் கோடியாக உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இதன் மதிப்பு 30 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் 200 கோடி பேருக்கு இதில் வேலை வாய்ப்பு கிடைக்கும் சில்லரை வணிக நிர்வாகத்தில் சான்றிதழ் படிப்பு முதல் எம்பிஏ வரை பல படிப்புகள் வழங்கப்படுகின்றன. சான்றிதழ் படிப்புகளுக்கு பிளஸ் 2 படித்திருந்தால் போதும். விற்பனை பிரதிநிதி, கொள்முதல் அலுவலர், கிடங்கு மேலாளர், சப்ளை செயின் டிஸ்ட்ரிபியூட்டர்,  நிர்வாக பிரிவு என பல பிரிவுகளில் ஒரே நிறுவனத்தில் எளிதில் வேலை கிடைக்கிறது. தமிழகத்தில் செயல்படும் அனைத்து பல்கலைக்கழகங்களும் சில்லரை வணிகம் தொடர்பாக நிர்வாகவியல் படிப்புகளை தொலைதூர கல்வியில் வழங்குகின்றன. பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், இந்தியன் ஸ்கூல் ஆப் ரிடெய்ல் மேனேஜ்மென்ட், சென்னை ரீச் ஸ்கூல் மேனேஜ்மென்ட் போன்ற இடங்களில் சான்றிதழ், டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் பல நிர்வாகவியல் கல்லூரிகளிலும் இதற்கு எம்பிஏ படிப்பு தனியாக உள்ளது.
ப்ராக்டிஸ் இருந்தா இங்கிலீஷ் ஈஸி
ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு எளிதாகிறது. ஆனால் இங்கிலீஷ் என்றாலே பலர் ஓட்டம் பிடித்து விடுகிறார்கள். முறையான பயிற்சி இருந்தால் ஆங்கிலம், நுனி நாக்கில் பேசும் அளவுக்கு எளிதாகி விடும். ஆங்கில மொழி பயிற்சியகங்கள் புற்றீசல்கள் போல பெருகியுள்ளன. முறையான பயிற்சியகங்களை தேர்ந்தெடுப்பது அவசியம். பல்வேறு மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பிரிட்டிஷ்  கவுன்சில் மூலம் குழந்தைகளுக்கான அடிப்படை ஆங்கில சான்றிதழ் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம், குழந்தைகள் ஆங்கிலம் குறித்த அடிப்படை அறிவைப் பெறுகின்றனர். எழுத்து, இலக்கணம், சொற்கள், உச்சரிப்பு, கவனித்தல், பேச்சு என பயிற்சி விரிய வேண்டும். பயிற்சி முறையாக இருந்தால், தமிழ் வழி கற்கும் மாணவர்களும் இயல்பாக ஆங்கிலம் பேசலாம். சிறப்பாக எழுதலாம். ‘தமிழ் வழிக்கல்வி பயிலும் 5ம் வகுப்பு மாணவன் தவறில்லாமல் ஆங்கிலம் பேச குறைந்தது 240 மணி நேரம் பிடிக்கும். பயிற்சியகங்களில் போதனையை காட்டிலும் பயிற்சி  கூடுதலாக இருந்தால் ஆங்கிலத்தில் அசத்துவது எளிதாகும்Õ என்கின்றனர் பயிற்சியாளர்கள். வெளிநாடுகளில் மேல்படிப்பைத் தொடரவும், குறிப்பிட்ட வேலைவாய்ப்பை பெறவும் ஆங்கிலத்தேர்வுகள் எழுத வேண்டியிருக்கிறது. இங்கிலாந்துக்கு டி.இ.எல்.டி.எஸ், அமெரிக்காவுக்கு டி.ஓ.இ.எப்.எல், ஆஸ்திரேலியாவுக்கு ஓ.இ.டி என்ற தேர்வு எழுத வேண்டும். முறையான அனுமதி பெற்ற பயிற்சியகங்களில் தேர்வுக்கான பயிற்சியை பெறலாம்.  எல்லாவற்றுக்கும் மேலாக தேவைக்காக கற்பதைக் காட்டிலும், ஆர்வத்துடன் கற்றால் ஆங்கிலம் எளிதாகிவிடும்.
பிசியோதெரபிஸ்டிடம் சில்மிஷம் 10ம் வகுப்பு மாணவர் கைது
பிசியோதெரபிஸ்டிடம்  சில்மிஷம் செய்ததாக 10ம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டார்.அபிராமபுரத்தை சேர்ந்தவர் யாத்ரிகா (37) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிசியோதெரபிஸ்ட்.  நேற்று முன்தினம் மாலை, அபிராமபுரம் பாபாதெருவில் யாத்ரிகா நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது சைக்கிளில் 16 வயதுடைய சிறுவன் பின் தொடர்ந்து வந்தான். பின் யாத் ரிகாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டான். அதிர்ச்சி அடைந்த யாத்ரிகா, சத்தம் போட்டதும் சிறு வன் ஓடினான். அங்கிருந்த பொதுமக்கள் அவனை பிடித்து, அபிராமபுரம் போலீசில் ஒப்ப டைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சில்மிஷம் செய்த சிறுவனை கைது செய்தனர்.  அவன் 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால் டுடோரியலில் படித்து வருவதாக போலீ சார் தெரிவித்தனர்.
அறிவு + சம்பளம் தரும் நூலகப் படிப்பு
ஒவ்வொரு துறையிலும் தொடர்புடைய புத்தகங்களை சேகரித்து பாதுகாக்கும் பணியை நூலகங்கள் செய்கின்றன. பள்ளி, கல்லூரிகள் மட்டுமில்லாமல் நீதிமன்றம், மருத்துவமனைகள், பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நூலகங்கள் இன்றியமையாத தேவையாக மாறி வருகின்றன.புத்தகங்கள் சேகரித்து வைப்பது மட்டுமில்லாமல் தொடர்புடைய தகவல்களை தொகுத்து கம்ப்யூட்டரில் பாதுகாப்பதற்கு நூலக தொடர்புடைய அறிவு தேவைப்படுகிறது. பல நிறுவனங்கள் நூலக படிப்பில் பட்டம் பெற்றவர்களை நூலகர் வேலைக்கு அமர்த்துகின்றன. உதவி நூலகர் மற்றும் நூலக பராமரிப்பு பணிக்கு நூலக படிப்பில் சான்றிதழ் பெற்றவர்களின் தேவை அதிகம் இருக்கிறது. இதனால் சிஎல்ஐஎஸ்(சர்டிபிகேட் ஆப் லைப்ரரி இன்பர்மேசன் சயின்ஸ்) எனப்படும் சான்றிதழ் பயிற்சி முடித்தவர்கள் உடனடியாக வேலைக்கு சேர்க்கப்படுகின்றனர்.தமிழகத்தில் மதுரை காமராஜர் பல்கலை, அழகப்பா பல்கலை,  அண்ணா மலை பல்கலை, சென்னை பல்கலை, இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைக் கழகம் போன்ற இடங்களில் நூலகர் சான்றிதழ் பயிற்சி படிப்பு அஞ்சல் வழியில் வழங்கப்படுகிறது. இதற்கு மேல் நிலைப்படிப்பு முடித்திருந்தால் போதுமானது. நூலகராவதன் மூலம் நமது அறிவையும் வளர்த்து கொள்ள முடியும்.
போதையும் சந்தேகமும் குடும்பத்தையே அழித்தது : தலையில் கல்லை போட்டு மனைவி, மகள் படுகொலை
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி, மகளின் தலையில் குழவிக் கல்லை போட்டு படு கொலை செய்த குடிகார கணவன், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி உறையூர் பாண்டமங்கலம் நாடார் மில் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (38), கொத்த னார். மனைவி ராஜேஸ்வரி (35). இவர்களுக்கு வைஷ்ணவி (10), ஜெயஸ்ரீ (5) என்ற மகள் களும், ராஜ்குமார் (8) என்ற மகனும் உள்ளனர். வைஷ்ணவி அப்பகுதியில் உள்ள பள்ளியில்  5&ம் வகுப்பு படித்து வந்தார். மனைவியின் நடத்தை மீது ஆறுமுகத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் குடித்து விட்டு  வந்து அடிக்கடி மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார். இந்நிலையில், நேற்றிரவு குழந்தை கள் ஜெயஸ்ரீயும் ராஜ்குமாரும் அருகில் உள்ள பாட்டி வீட்டுக்கு படுக்க சென்றுவிட்டனர்.  வைஷ்ணவி மட்டும் அம்மாவுடன் இருந்தாள். வெளியில் சென்றிருந்த ஆறுமுகம் வர தாமதமா னதால் இருவரும் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கிவிட்டனர். நள்ளிரவில் குடிபோதையில் வீட் டுக்குள் நுழைந்த ஆறுமுகம், திடீரென அங்கிருந்த குழவிக் கல்லை எடுத்து தூங்கிக் கொண்டி ருந்த ராஜேஸ்வரி தலையில் ஓங்கி அடித்தார். அருகில் படுத்திருந்த வைஷ்ணவி தலையிலும் க ல்லை போட்டார். இருவரும் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர்.  பின்னர் ஆறுமுகம், வீட்டின் உத்தரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.இன்று காலை பாட்டி வீட்டில் இருந்து வந்த குழந்தைகள், வீட்டுக்குள் அம்மாவும் அக்காவும்  ரத்த வெள்ளத்திலும், அப்பா தூக்கில் தொங்குவதையும் பார்த்து கதறினர். தகவல் கிடைத்து  வந்த உறையூர் போலீசார், 3 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவம னைக்கு அனுப்பினர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பொறியியல் படித்த மாணவர்களுக்கு வேலையளிக்கும் துணை படிப்புகள்
இந்தியாவில் நூற்றுக்கணக்கில் பொறியியல் கல்லூரிகள் பெருகிவிட்டன. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் பொறியியல் படிப்பை முடித்து வெளியேறுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் உடனடியாக வேலை கிடைத்துவிடுவதில்லை. தேர்வு செய்த படிப்பின் அடிப்படையிலேயே வேலையும், ஊதியமும் கிடைக்கிறது. வேலைவாய்ப்பு பற்றாக்குறையை போக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.அதனடிப்படையில் மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘சென்டர் பார் டெவலப்மென்ட் ஆப் அட்வான்ஸ்ட் கம்ப்யூட்டிங்Õ பயிற்சி மையம் உடனடி வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் பொறி யியல் துறை சார்ந்த பல்வேறு துணை படிப்புகளை சென்னை உள்பட நாடு முழுவதும் 34 பயிற்சி மையங்களில் வழங்கி வருகிறது. வரும் 2011 பிப்ரவரியில் வகுப்புகள் துவங்க உள்ளன. இதற்கான நுழைவுத்தேர்வுகள் இரு பிரிவாக நடத்தப்படுகின்றன.PG Diploma in Integrated VLSI and Embedded System Design (DIVESD) படிப்புக்கு எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், ணிஜி&ஜிசி, எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ருமென்டேசன், கம்ப்யூட்டர் பிரிவில் பிடெக், எம்டெக், பிஇ, எம்இ அல்லது எம்எஸ்சி எலக்ட்ரானிக்ஸ், பிஎஸ்சி எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.PG Diploma in Advanced Computer   Arts (  Multimedia) (DACA) படிப்புக்கு எம்எப்ஏ, பிஎப்ஏ, பிஆர்க் அல்லது அட்வர்டைசிங், கமர்ஷியல் ஆர்ட்ஸ், பெயின்டிங், ஸ்கல்ப்ட்சர், பேஷன் டிசைனிங், இன்டீரியர் டெக்கரேஷன் பிரிவில் பட்டப்படிப்பு, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். PG Diploma in Very Large   Scale Integration Design (DVLSI) படிப்பை பிஇ முடித்தவர்கள் அல்லது எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் எம்எஸ்சி முடித்தவர்கள் படிக்கலாம். இப்படிப்புகளுக்கு வரும் நவ.27ல் நடைபெறும் சிஇடி-1 நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் முடிந்து விட்டது. விண்ணப்பிக்க தவறியவர்கள் டிச.18ல் நடைபெற உள்ள சிஇடி-2வது நுழைவுத்தேர்வுக்கு   டிச.15க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பதிவிறக்கம், விண்ணப்பிக்கும் விவரம் ஆகியவற்றை www.acts.cdac.in  என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் சென்னையில் உள்ள பயிற்சி மையத்தை 044-22542226, 27, 28 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
நிரந்தர வேலைவாய்ப்பு அளிக்கும் ஜவுளி மேலாண்மையியல் படிப்பு
‘ஆள் பாதி, ஆடை பாதி', ‘ஆடையில்லா மனிதன் அரை மனிதன்' இவைதான் மனிதகுல கோட்பாடு. அந்தளவுக்கு ஆடைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. எதை வேண்டுமானாலும் உடுத்தலாம், எப்படி வேண்டுமானாலும் உடுத்தலாம் என்ற நிலையில் இருந்து விலகி நமது நிறம், உடல்வாகு ஆகியவற்றுக்கு தகுந்த உடை களை தேர்வு செய்து நாகரீக முன்னேற்றத்திற்கேற்ப அணிவது நடைமுறையாகி விட்டது. ஜவுளி உற்பத்தி நிறுவனங்களும் நமது தேவையை அறிந்து பல்வேறு டிசைன்களில் உடை களை உற்பத்தி செய்து களமிறக்கி வருகின்றன.இதன் பின்னணியில் லட்சக்கணக்கான நபர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்றால் நம்ப முடி கிறதா? கோவை, ஈரோடு சுற்று வட்டார பகுதிகளில் மட்டும் இத்துறையில் வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கிறது. அதிலும் குறிப்பாக டெக்ஸ்டைல் சார்ந்த படிப்பு படித்தவர்களுக்கு பணிவாய்ப்புகள் மிக அதிகம். ஜவுளித்துறையில் புரட்சிக்கு வித்திடும் வகையில் இன்று பல்வேறு கல்வி நிறுவனங்கள் பேஷன் டெக்னாலஜி, டெக்ஸ் டைல் மேனேஜ்மென்ட் சார்ந்த படிப்புகளை வழங்க துவங்கிவிட்டன.கோவையில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மேலாண்மை பள்ளி மற்றும் இந்திராகாந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகம் ஆகியவவை இணைந்து 2 வருட எம்பிஏ டெக்ஸ்டைல் மேனேஜ்மென்ட் படிப்பை வழங்கி வருகிறது. நடப்பாண்டில் மாணவர் சேர்க்கைக் கான அறிவிப்பையும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஏதேனும் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இப்படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் கள். எஸ்சி, எஸ்டி பிரி வினர் 40 சதவீத மதிப் பெண் பெற்றால் போதும்.நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். வரும் டிச.15ல் நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது. ஜன.24ல் வகுப்புகள் ஆரம்பமாகிறது. சேர்க்கை இடங்கள், விண்ணப்பம், கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் www.svpitm.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இப்படிப்பிற்கு வரும் டிச.30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
சுயஉதவி குழுக்களுக்கு நிதி ஒதுக்க லஞ்சம் : கைவினைப்பொருள் உதவி இயக்குனர் கைது
மத்திய அரசின் கைவினைப்பொருள் அபிவிருத்திஆணையரக மண்டல அலுவலகம் சேலத்தில் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் உள்பட 12 மாவட்டங்கள் உள்ளன. அம்பேத்கர் கைவினைஞர் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சுயஉதவிக் குழுக்கள் மூலம் கைவினைப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. மாவட்டம்தோறும் சுயஉதவிக் குழுக்களை தேர்வு செய்து பயிற்சி அளித்து தொழில் வாய்ப்பு அளிக்கும் பணியில் தன்னார்வ அமைப்புகள் நியமிக்கப்பட்டுள்ளன. கோவையில் ஈகோ கிரீன் யூனிட் அமைப்பை நடத்தி வருபவர் சூலூரை சேர்ந்த பாபு. கோவை மாவட்டத்தில் 15 சுயஉதவிக் குழுக்களை தேர்வு செய்து, அதற்கான பட்டியலை கைவினைப்பொருள் ஆணையரகத்தில் வழங்கி, பயனாளிகளுக்குரிய நிதியுதவி கோரினார். உதவி இயக்குனராக உள்ள குருமூர்த்தி (56), பயனாளிகள் பட்டியலை பெற்று, அதற்குரிய நிதியை ஒதுக்க பாபுவிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதையடுத்து, ரூ.5 ஆயிரத்தை முதல்கட்டமாக தருவதாக பாபு ஒப்புக்கொண்டார். பின்னர் சிபிஐ விஜிலென்ஸ் போலீசில் புகார் செய்தார்.விஜிலென்ஸ் போலீசார் கொடுத்த திட்டப்படி ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை நேற்று குருமூர்த்தியிடம் பாபு வழங்கினார். அதை அவர் பெற்றபோது, சிபிஐ அதிகாரிகள் குருமூர்த்தியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.