text
stringlengths
16
178
அடுத்தாரைக்‌ கெடுத்து அன்னம்‌ இட்டாரைக்‌ கன்னம்‌ இடுகிறான்‌.
அடுத்து அடுத்துச்‌ சொன்னால்‌ தொடுத்துக்‌ கெடுப்பான்‌ மடந்தை.
அடுத்து வந்தவர்க்கு ஆதரவு சொல்வோன்‌ குரு.
அடுப்பனலில்‌ வெண்ணெயை வைத்த கதை.
அடுப்பு எரிந்தால்‌ பொரி பொரியும்‌.
அடுப்புக்‌ கட்டிக்கு அழகு வேண்டுமா?
அடுப்புநெருப்பும்‌ போய்‌ வாய்த்தவிடும்‌ போச்சு.
அடுத்த வீட்டுக்காரனுக்‌ கதிகாரம்‌ வந்தால்‌ அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல்‌ லாபம்‌,
அடுத்த வீட்டுக்காரனுக்கு அதியோகம்‌ வந்தால்‌ அண்‌டை வீடு குதிரை லாயம்‌.
அடுத்துமுயன்றாலும்‌ ஆகுநாள்தான்‌ ஆகும்‌.
அடே அத்தான்‌, அத்தான்‌, அம்மான்‌ பண்ணினாற்‌ போலிருக்கவில்லை அடா.
அடைந்தோரை ஆதரி.
அடைபட்டுக்‌ இடக்கிறான்‌ செட்டி, அவனை அழைத்து வா பணம்பாக்கி என்கிறான்‌ பட்டி.
அடையலரை அடுத்து வெல்லு.
அடைப்பைப்‌ பிடுங்கினால்‌ பாம்பு கடிக்கும்‌.
அடைமழைக்குள்ளே ஓர்‌ ஆட்டுக்குட்டி செத்தது போல.
அடைமழை விட்டும்‌ செடிமழை விடவில்லை.
அஷ்ட தரித்திரம்‌ தாய்‌ வீடு, அதிலும்‌ தரித்திரம்‌ மாமியார் வீடு.
அஷ்டதரித்திரம்‌ பிடித்தவன்‌ அமராவதியில்‌ வாழ்கிறானென்று நித்திய தரித்திரம்‌ பிடித்தவன்‌ நின்றநிலையிலே பிட்டுக்கொண்டு வந்தான்‌.
அட்டமத்துச்‌ சனி கிட்டவந்தது போல.
அட்டமத்துச்‌ சனி நட்டம்‌ வரச்செய்யும்‌.
அட்டமத்துச்‌ சனி பிடித்தது, பிட்டத்துத்‌ துணியையும்‌ உரிந்துகொண்டது.
அட்டமத்துச்‌ சனியை வட்டிக்கு வாங்கினாற்போல.
அட்டாதுட்டி கொள்ளித்தேன்‌.
அட்டாலும்‌ பால்‌ சுவையில்‌ குன்றாது
அட்டைக்கும்‌ திருத்தியில்லை, அக்கினிக்கும்‌ திருத்தியில்லை.
அட்டையை எடுத்து மெத்தையில்‌ வைத்தாலும்‌ செத்‌தையைச்‌ செத்தையை நாடும்‌.
அட்டையைப்‌ பிடித்து மெத்தையில்‌ வைத்ததுபோல.
அணி பூண்ட நாய்போல.
அணியத்திலே கிழிஞ்சாலும்‌ கிழிஞ்சுது, அமரத்திலே இழிஞ்சாலும்‌ கிழிஞ்சது.
அணில்‌ ஊணும்‌, ஆமை நடையும்‌.
அணில்‌ எஏறவிட்ட நாய்‌ (பார்ப்பது) போல
அணில்‌ கொப்பிலும்‌, ஆமை கிணற்றிலும்‌.
அணில்‌ நொட்டினதும்‌ தென்னமரம்‌ வீழ்ந்ததும்‌.
அணு மகா மேரு ஆமா?
அணிற்பிள்ளைக்கு நுங்கு அரிதோ, ஆண்டிச்சி பிள்ளைக்கு சோறு அரிதோ?
அணுவும்‌ மலையாச்சு, மலையும்‌ அணுவாச்சு.
அணை கடந்த வெள்ளம்‌ அழுதாலும்‌ வராது.
அணை கடந்த வெள்ளத்தை மறிப்பவர்‌ ஆர்‌?
அண்டங்காக்காய்‌ குழறுகிறாப்போல.
அண்டத்தில்‌ இல்லாததும்‌ பிண்டத்தில்‌ உண்டா?
அண்டத்திற்கு உன்ளது பிண்டத்திற்கும்‌ உண்டு.
அண்டத்துக்கொத்தது பிண்டத்துக்கு.
அண்டத்தைச்‌ சுமக்கிறவனுக்குச்‌ சுண்டைக்காய்‌ பாரமா?
அண்டத்தைக்‌ கையில்‌ வைத்தாட்டும்‌ பிடாரிக்குச்‌ சுண்டைக்காய்‌ எடுப்பது பாரமா?
அண்ட நிழலில்லாமற்போனாலும்‌ பேர்‌ ஆலாலவிருக்ஷம்‌
அண்டை அயல்‌ பார்த்துப்‌ பேசுகிறது.
அண்டமும்‌ பிண்டமும்‌, அந்தரங்கமும்‌ வெளியரங்கமும்‌.
அண்டர்‌ எப்படியோ தொண்டரும்‌ அப்படியே.
அண்டாத பிடாரி ஆருக்கு அடங்குவாள்‌?
அண்டைமேலே கோபம்‌ கடாவின்‌ மேலே காட்டினதுபோல.
அண்டையிற்‌ சமர்த்தன்‌ இல்லாத ராஜாவுக்கு அபகீர்த்தி வரும்‌
அண்டை வீட்டுக்‌ கடனும்‌ பிட்டத்துச்‌ சிரங்கு மாகாது.
அண்டை வீட்டுக்காரி பின்ளைபெற்றாளென்று அசல்‌ வீட்டுக்காரி இடித்துக்‌ கொண்டதுபோல.
அண்டை வீட்டுச்‌ சண்டை கண்ணுக்குக்‌ குளிர்ச்சி
அண்டை வீட்டுச்‌ சுப்பிக்கும்‌ எதிர்வீட்டுக்‌ காமாட்சிக்குமா கவலை?
அண்டை வீட்டுப்‌ பார்ப்பான்‌ சண்டை மூட்டித்‌ தீர்ப்பான்‌
அண்ணனார்‌ சேனையிலே அன்ளி உண்ணப்போகிறாள்‌.
அண்ணனிடத்தில்‌ ஆறுமாதம்‌ வாழ்ந்தாலும்‌ அண்ணியிடத்தில்‌ அரை நாழிகை வாழலாமா?
அண்ணனானவன்‌ தம்பிக்கு மூத்தவன்‌;
அண்ணனுக்குத்‌ தம்பி அல்லவென்று போகுமா?
அண்ணனுக்குப்பெண்‌ பிறந்தால்‌ அத்தை அசல்‌ நாட்டாள்‌.
அண்ணற ஆயிரம்‌ பொன்னிலும்‌ நிண்ணற ஓருகாசு பெரிது.
அண்ணனைக்‌ கொன்றபழி, சந்தையிலே தீர்த்துக்கொள்ளுகிறதுபோல
அண்ணன்‌ உண்ணாதது எல்லாம்‌ மைத்துனிக்கு லாபம்‌.
அண்ணன்‌ கொம்பு பம்பள பளாச்சு.
அண்ணன்‌ சம்பாதிக்கிறது, தம்பி அரைஞாண்‌ கயிற்‌றுக்குச்‌ சரி.
அண்ணன்‌ தம்பிதான்‌ சென்மப்‌ பகையாளி.
அண்ணன்‌ தம்பி வேண்டும்‌ இன்னம்‌ தம்பிரானே
அண்ணன்தான்‌ கூடப்‌ பிறந்தான்‌ அண்ணியும்‌ கூடப்‌ பிறந்தாளோ?
அண்ணன்‌ பெரியவன்‌, அப்பா, காலைப்பிடி.
அண்ணன்‌ பெரியவன்‌, சிற்றப்பா, சுருட்டுக்கு நெருப்புக்‌ கொண்டுவா.
அண்ணன்பேரிலிருந்த கோபத்தை நாய்பேரிலாற்றினான்‌.
அண்ணாக்கும்‌ தொண்டையும்‌ அதிர அடைத்தது.
அண்ணாணங்கை அப்ஸரஸ்திரீ.
அண்ணாண்டி, வாரும்‌, சண்டையை ஒப்புக்கொள்ளும்‌.
அண்ணாமலையாருக்கு அறுபத்துநாலுபூசை, ஆண்டிகளுக்கு எழுபத்துநாலு பூசை.
அண்ணாமலையார்‌ அருளுண்டானால்‌ மன்னார்சாமி மயிரைப்‌ பிடுங்குமா?
அண்ணாவி பிள்ளைக்குப்‌ பணம்‌ பஞ்சமா, அம்பட்டன்‌ பிள்ளைக்கு மயிர்‌ பஞ்சமா?
அண்ணாவுக்கு மனது வரவேணும்‌, மதனி பிள்ளை பெறவேணும்‌.
அதமனுக்கு ஆயிரம்‌ ஆயுசு.
அதிக ஆசை அதிக நஷ்டம்‌.
அதிக ஆசை மிக தரித்திரம்‌.
அதிக கரிசனமானாலும்‌ ஆமுடையானை அப்பா என்றழைக்கிறதா?
அதிகார மில்லாவிட்டால்‌ பரியாரம்‌ வேணும்‌.
அதிகாரியுடனே எதிர்பண்ணலாமா?
அதிகாரியும்‌ தலையாரியும்கூடி விடியுமட்டும்‌ திருடலாம்‌
அதிகாரி வீட்டில்‌ திருடித்‌ தலையாரி வீட்டில்‌ வைத்‌ததுபோல.
அதிகாரி வீட்டுக்‌ கோழிமுட்டை குடியானவன்‌ வீட்டு அம்மியை உடைத்ததாம்‌
அதிக்கிரமமான ஊரிலே கொழிக்திற மீனும்‌ சரிக்கு மாம்‌.
அதிசயமான ரம்பை அரிசி கொட்டுகிற தொம்பை
அதியாக்‌ குறியால்‌ கருமாரிப்‌ பாய்ச்சல்‌.
அதிர அடித்தால்‌ உதிர விளையும்‌
அதிரந்‌ தடித்தாருக்கு ஐயருமில்லை, பிடாரியாருமில்லை.
அதிருஷ்டமும்‌ ஐசுவரியமும்‌ ஒருவர்‌ பங்கல்ல.
அதிருஷ்டம்‌ ஆறாய்ப்‌ பெருகுகிறது
அதிருஷ்டம்‌ இருந்தால்‌ அரசு பண்ணலாம்‌.
அதிருஷ்டம்‌ இல்லாதவனுக்கு கலப்பால்‌ வந்தாலும்‌, அதையும்‌ பூனை குடிக்கும்‌.
அதிருஷ்டம்‌ கெட்ட கழுக்காணி.
அதிருஷ்டம்கெட்டதுக்கு அறுபதுநாழியும்தியாச்சியம்‌.