text
stringlengths
11
513
நாட்டைச் சேர்ந்தவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் பல கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே அவற்றைப் பற்றித் தமது புதினங்களில் எழுதியவர். எண்பது நாளில் உலகத்தைச் சுற்றி , பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம் உள்ளிட்ட பல புதினங்களைப் படைத்துள்ளார். அவர் எழுதிய ஆழ்கடலின் அடியில் என்னும் புதினம் குறிப்பிடத்தக்க ஒன்று. அதன் மொழிபெயர்ப்பின் சுருக்கம் நமக்குப் பாடமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. கற்பவை கற்றபின் 1. ஆழ்கடல் காட்சியொன்றைக் கற்பனையாகப் படம் வரைந்து வண்ணம் தீட்டுக. 2. நீர்மூழ்கிக் கப்பல் இயங்கும் முறைபற்றிய செய்திகளைத்
திரட்டித் தொகுத்து எழுதுக. மதிப்பீடு ஆழ்கடலின் அடியில் ' கதையைச் சுருக்கி எழுதுக. திரிசொல் பெயர் , வினை , இடை , உரி ஆகிய நான்கு வகையிலும் வரும். ( எ.கா. ) அழுவம் , வங்கம் இயம்பினான் , பயின்றாள் அன்ன , மான கூர் , கழி திரிசொற்களை ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் எனவும் , பல பொருள் குறித்த ஒரு திரிசொல் எனவும் இருவகைப்படுத்தலாம். வங்கம் , அம்பி , நாவாய் – என்பன கப்பல் என்னும் ஒரே பொருளைத் தருவதால் ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் என்பர். இதழ் என்னும் சொல் பூவின் இதழ் , உதடு , கண் இமை , பனையேடு , நாளிதழ் ஆகிய
பல பொருள்களைத் தருவதால் பல பொருள் குறித்த ஒரு திரிசொல் என்பர். பெயர்த் திரிசொல் வினைத் திரிசொல் இடைத் திரிசொல் உரித் திரிசொல் திசைச்சொல் சாவி , சன்னல் , பண்டிகை , இரயில் முதலிய சொற்கள் தமிழில் வழக்கில் இருந்தாலும் இவை தமிழ்ச்சொற்கள் அல்ல. பிறமொழிகளில் இருந்து வந்து தமிழில் வழங்கி வருபவையாகும். இவ்வாறு வடமொழி தவிர , பிற மொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் திசைச்சொற்கள் எனப்படும். முற்காலத்தில் பாண்டிநாட்டைத் தவிர , தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வழங்கிய கேணி ( கிணறு ) , பெற்றம் ( பசு ) போன்ற
சொற்களையும் திசைச்சொற்கள் என்றே வழங்கினர். வடசொல் வருடம் , மாதம் , கமலம் , விடம் , சக்கரம் முதலிய சொற்கள் தமிழில் வழக்கில் இருந்தாலும் இவை தமிழ்ச்சொற்கள் அல்ல. இவை வடமொழி எனப்படும் சமஸ்கிருத மொழிச்சொற்கள் ஆகும். இவ்வாறு வடமொழியிலிருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் வடசொற்கள் எனப்படும். வடசொற்களைத் தற்சமம் , தற்பவம் என இருவகையாகப் பிரிப்பர். கமலம் , அலங்காரம் என வடமொழியில் இருப்பது போன்றே தமிழில் எழுதுவதைத் தற்சமம் என்பர். லக்ஷ்மி என்பதை இலக்குமி என்றும் , விஷம் என்பதை விடம் என்றும் தமிழ் எழுத்துகளால்
மாற்றி எழுதுவதைச் தற்பவம் என்பர். கற்பவை கற்றபின் நாளிதழ் செய்தியொன்றை எடுத்துக்கொண்டு அதிலுள்ள நால்வகைச் சொற்களையும் வகைப்படுத்திப் பட்டியல் உருவாக்குக. இயல் ஐந்து கவிதைப்பேழை ப இன்பத்தமிழ்க் கல்வி நுழையும்முன் பாரதிதாசன் கவிதை எழுதுவதற்காகத் தாளையும் எழுதுகோலையும் எடுத்தார். எதைப்பற்றி எழுதுவது எனச் சிந்தித்தார். வானம் , ஓடை , காடு , தென்றல் , மயில் போன்ற இயற்கைப் பொருள்கள் எல்லாம் அவர் கருத்தைக் கவர்ந்தன. எனினும் புரட்சிக்கவிஞராகிய பாவேந்தர் தமிழரின் இன்னல் தீர்க்கும் வழி ஒன்றைக் கவிதையாகப் படைத்தார். அதை
நாமும் படித்துச் சுவைப்போம். ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொன்னது வான் ஓடையும் தாமரைப் பூக்களும் தங்களின் ஓவியந் தீட்டுக என்றுரைக்கும் காடும் கழனியும் கார்முகிலும் வந்து கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும் ஆடும் மயில் நிகர் பெண்களெல்லாம் உயிர் அன்பினைச் சித்திரம் செய்க என்றார் சோலைக் குளிர்தரு தென்றல் வரும்பசுந் தோகை மயில்வரும் அன்னம் வரும் மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும் மாணிக்கப் பரிதி காட்சி தரும் வேலைச் சுமந்திடும் வீரரின் தோள் உயர் வெற்பென்று சொல்லி வரைக என்னும் கோலங்கள் யாவும் மலை
மலையாய் வந்து கூவின என்னை – இவற்றிடையே இன்னவிலே தமிழ் நாட்டினிலேயுள்ள என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார் அன்னதோர் காட்சி இரக்கமுண்டாக்கியென் ஆவியில் வந்து கலந்ததுவே இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர் என்றுரைக்கும் நிலை எய்தி விட்டால் துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் நெஞ்சினில் தூய்மை உண்டாகிடும் வீரம் வரும் ! பாரதிதாசன் I சொல்லும் பொருளும் எத்தனிக்கும் - முயலும் மலை வயல் சமம் வெற்பு கழனி நிகர் பாடலின் பொருள் கவிதை எழுத ஏடு ஒன்று எடுத்தேன். என்னைக் கவிதையாக எழுதுக என்று வானம் கூறியது. நீரோடையும் தாமரை
மலர்களும் " எங்களைக் கவி ஓவியமாகத் தீட்டுக " என்றன. காடும் வயல்களும் கருநிற மேகங்களும் என் கண்களைக் கவர்ந்து , கவிதையில் இடம்பெற முயன்றன. ஆடும் மயில் போன்ற பெண்கள் " அன்பினைக் கவிதையாக எழுதுக " என்றனர். பரிதி அன்னதோர் கார்முகில் துயின்றிருந்தார் சோலையின் குளிர்ந்த தென்றல் வந்தது. பசுமையான தோகையையுடைய மயில் வந்தது. அன்னம் வந்தது. மாணிக்கம் போல் ஒளி வீசி மாலையில் மேற்குத் திசையில் மறைகின்ற கதிரவனும் வந்தான். வேல் ஏந்திய வீரர்கள் , " மலை போன்ற எங்களது தோள்களின் அழகினை எழுதுங்கள் " என்றனர். இவ்வாறு அழகிய
காட்சிகள் எல்லாம் பெருந்திரளாக வந்து தங்களைக் கவிதையாக எழுதுமாறு கூறின. ஆனால் , துன்பத்தில் கிடக்கும் என் தமிழ்நாட்டு மக்கள் அறியாமையில் தூங்கிக் கிடக்கிறார்கள். அந்தக் காட்சி என் மனத்தில் இரக்கத்தை உண்டாக்கி , என் உயிரில் வந்து கலந்து விட்டது. இத்துன்பம் நீங்க அனைவரும் இன்பத்தமிழ்க் கல்வியைக் கற்றவர்கள் என்னும் நிலை ஏற்பட வேண்டும். அந்நிலை ஏற்பட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கிடும். நெஞ்சில் தூய்மை உண்டாகிடும். வீரம் வரும். நூல் வெளி கவிஞர் , இதழாளர் , தமிழாசிரியர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் பாரதிதாசன்.
இவர் கவிதை , கதை , கட்டுரை , நாடகம் ஆகியவற்றைப் படைப்பதில் வல்லவர். பாண்டியன் பரிசு , அழகின் சிரிப்பு , இசையமுது , இருண்ட வீடு , குடும்ப விளக்கு , கண்ணகி புரட்சிக் காப்பியம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய பிசிராந்தையார் என்னும் நாடகநூலுக்குச் சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது. 1. 2. கதிரவன் அப்படிஒரு மழைமேகம் உறங்கியிருந்தார் பாரதிதாசன் கவிதைகள் என்னும் தொகுப்பிலிருந்து தமிழ்ப்பேறு என்னும் தலைப்பில் உள்ள பாடல் இங்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. கற்பவை கற்றபின் இயற்கைக்காட்சி குறித்து
நான்கு வரிகளில் கவிதை எழுதுக. ' தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது ' என்பது குறித்து வகுப்பில் கலந்துரையாடுக. இயல் ஐந்து நுழையும்முன் கவிதைப்பேழை அழியாச் செல்வம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பல்வகையான செல்வங்களைச் சேர்த்து வைக்கின்றனர். அவற்றுள் சில செல்வங்கள் களவு போகவோ , அழியவோ கூடும். ஆகையால் பெற்றோர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வங்களுள் சிறந்ததும் , அழியாததும் ஆகிய செல்வத்தைப் பற்றி அறிவோம். சொல்லும் பொருளும் வைப்புழி - பொருள் சேமித்து வைக்கும் இடம் கோட்படா - ஒருவரால் கொள்ளப்படாது
வாய்த்து ஈயில் விச்சை கல்வி வவ்வார் கவர முடியாது எச்சம்- செல்வம் பாடலின் பொருள் வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார் எச்சம் எனவொருவன் மக்கட்குச் செய்வன விச்சைமற்று அல்ல பிற. * வாய்க்கும்படி கொடுத்தாலும் கல்வியைப் பொருள் போல வைத்திருப்பினும் அது பிறரால் கொள்ளப்படாது. ஒருவற்கு வாய்க்கும்படி கொடுத்தாலும் குறைவுபடாது. மிக்க சிறப்பினை உடைய அரசராலும் கவர முடியாது. ஆதலால் ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்வியே ஆகும். மற்றவை செல்வம் ஆகா. -சமண
முனிவர் நூல் வெளி நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இது நானூறு வெண்பாக்களால் ஆனது. இந்நூலை நாலடி நானூறு என்றும் , வேளாண்வேதம் என்றும் அழைப்பர். திருக்குறள் போன்றே அறம் , பொருள் , இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது. இந்நூல் திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுவதை நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் தொடர் மூலம் அறியலாம். இயல் ஐந்து நுழையும்முன் ரைநடை உலகம் வாழ்விக்கும் கல்வி உலகில் பலவகையான செல்வங்கள் உள்ளன. அவற்றுள் அழியாத
செல்வம் கல்விச் செல்வம் ஆகும். பிற செல்வங்கள் அனைத்தும் அழியும் தன்மையுடையன. கல்வி கற்பதற்குக் கால எல்லை இல்லை. கல்வியின் இன்றியமையாமை , கற்க வேண்டிய நூல்கள் , கற்கும் கால அளவு ஆகியவற்றைக் குறித்து அறிந்து கொள்வோம். உலகிலுள்ள உயிரினங்களுள் மனிதப்பிறவி தனித்தன்மை உடையது. ஏனென்றால் மனிதப் பிறவிக்குத்தான் எதிர்காலம் சொல்ல முடியாது. ஒரு வாழைக்கன்று வைத்தால் அஃது எதிர்காலத்தில் வாழைமரமாகி வாழையிலை , வாழைப்பூ , வாழைக்காய் , வாழைப்பழம் , வாழைத்தண்டு ஆகியவற்றைத் தரும் என்று வைக்கும்போதே சொல்லலாம். ஒரு பசுமாடு கன்று
ஈன்றால் அஃது எதிர்காலத்தில் பால் தரும் என்று சொல்லிவிடலாம். மனிதன் எதிர்காலத்தில் என்ன ஆவான் என்று சொல்லவே முடியாது. அதனால்தான் இஃது அருமையான பிறவி. ஒரு வீட்டில் குழந்தை பிறந்து அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் என்ன குழந்தை பிறந்திருக்கிறது என்று கேட்டால் , ஆண்குழந்தை அல்லது பெண்குழந்தை என்றுதான் பெற்ற தாய் சொல்லுவாள். அப்படி இல்லாமல் ஒரு மாவட்ட ஆட்சியர் பிறந்திருக்கிறார் என்று சொல்ல முடியுமா ? மகாத்மா காந்தி பிறந்த உடனே அவரது தாயார் புத்திலிபாயிடம் போய் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ' என்ன குழந்தை ? ' என்று
கேட்டார்கள். ஆண் குழந்தை என்றுதானே அந்த அம்மா சொல்லி இருப்பார். அப்படி இல்லாமல் " இப்போதுதான் மகாத்மா காந்தியடிகள் பிறந்திருக்கிறார். உங்களுக்கெல்லாம் சுதந்திரம் வாங்கிக் கொடுக்கப் போகிறார் " என்றா சொல்லியிருப்பார் ? காலமறிதல் உலகில் மிகவும் அருமையானது என்னவென்றால் அது காலம்தான். மற்றவை எல்லாம் போனால் வரும். காலமும் நேரமும் போனால் வராது. மேசை நாற்காலி போனால் வரும். ஆனால் தேர்வு நேரத்தில் ஒரு பையன் நான்கு நாள்களை வீணடித்து விட்டால் போனது போனதுதான். இன்னொரு மாணவனிடத்திலே கடன் கேட்க முடியாது. " ஒரு நாலு நாள்
இருந்தால் கொடுடா ! மனப்பாடம் பண்ணிவிட்டுத் திரும்பத் தந்து விடுகிறேன் " என்றெல்லாம் கேட்க முடியாது. இதற்காகத்தான் காலமறிதல் , கல்வி என்னும் இரண்டு அதிகாரங்களையும் திருவள்ளுவர் எழுதியுள்ளார். அழியாச்செல்வம் இந்த உலகத்தில் எல்லாச் செல்வமும் மறைந்துவிடும் ; அழிந்துவிடும். நான் வெளியூர் சென்றபோது நண்பரைக் கேட்டேன் , " இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னே இங்கே ஒரு பெரிய ஆலமரம் இருந்ததே , அஃது எங்கே ? " என்று. " அது புயல் காற்றிலே விழுந்து விட்டது " என்று சொன்னார். அஃது அழிகிற செல்வம். " அங்கே ஒரு பெரிய
கட்டடம் இருந்ததே , அஃது எங்கே ? " என்று கேட்டேன். " அது மழை பெய்து இடிந்து விட்டது " என்று பதில் வந்தது. இதுவும் அழிகிற செல்வம். நாம் பேசும் போது , " அதோ போகிறாரே , அவர் பத்து ஆண்டுகளுக்கு முன்னே இரண்டு இலட்ச ரூபாய் வைத்திருந்தார். இப்போது எல்லாம் செலவாகிப்போய் இரண்டு ரூபாய் கடன் கேட்கிறார் " என்று சொல்வோம். இஃது அழிகிற செல்வம். கல்வி அப்படிப்பட்டதன்று. " அதோ போகிறாரே அவர் பத்து ஆண்டுகளுக்கு முன்னே பட்டம் பெற்றிருந்தார். இப்போது எல்லாம் செலவாகிப்போய் வெறும் பத்தாம் வகுப்பு ஆகி விட்டார் " என்று சொல்ல
மாட்டோம். ஏனென்றால் கல்வி அழியாதது. அதனால்தான் , கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை என்று வள்ளுவர் கூறுகிறார். இல்லை. கூ ஒளிவிளக்கு கல்வி ஓர் ஒளிவிளக்கு. அதாவது இருக்கும் இடத்தை ஒளிமயமாக ஆக்குவது. அதனுடைய குறிப்பு என்னவென்றால் ஒருவன் கற்றுவிட்டால் , அப்படிக் கற்ற கல்வியைப் பலருக்கும் அளிக்க வேண்டும். அப்படிப் பலருக்கும் ஒளி தருவதுதான் கல்வி. கல்வி இல்லாத நாடு விளக்கில்லாத வீடு. விளக்கில்லாத வீட்டில் யார் குடியிருப்பார்கள் ? வீடு இருட்டாக இருக்கும். அதுபோல் கல்வி இல்லாத குடும்பத்தை யாரும்
மதிக்கமாட்டார்கள். கற்றவரும் கல்லாதவரும் கல்வியறிவு இல்லாதவர்களைத் திருவள்ளுவர் போல் குறை கூறியவர் வேறு எவரும் விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர் ( குறள் 410 ) 106 ( குறள் 400 ) என்னும் திருக்குறளில் கல்வியறிவு இல்லாதவனை விலங்கு என்கிறார். ஏன் விலங்கு என்று சொன்னார் ? அது சொன்னால் கேட்காது. மாடு ஒன்று தெருவில் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த மாட்டைப் பார்த்து , " நான் வீட்டுக்குப் போகிறேன். என் பின்னாலேயே வா " என்றால் வருமா ? நம்கூட அது வருவதற்குக் கையில் பச்சைப்புல்
வைத்துக்கொண்டு காட்டவேண்டும். அது மட்டுமில்லாமல் விலங்கு நல்ல செயல்களைத் தானாகச் செய்யாது. ஒரு பசுமாடு இருக்கிறது. ஒரு பொருளை உருட்ட வேண்டும் என்றால் அது தானாகவே போய் உருட்டிவிடும். ஒருபொருளை உடைக்க வேண்டும் என்றால் தானாகவே போய் உடைத்துவிடும். ஓர் ஆளை முட்ட வேண்டுமென்றால் தானாகவே போய் முட்டிவிடும். இவ்வளவும் கெட்ட செயல்கள். இவ்வளவும் செய்த அந்தப் பசுமாடு பால் கொடுப்பது நல்ல செயல். ஆனால் அதைத் தானாகக் கொடுக்காது. தானாகவே நம் வீட்டிற்குள் வந்து , ' எங்கே சொம்பைக் காணோமே ? ' என்று அதுவாகவே எடுத்து வந்து பாலைக்
கொடுத்து விட்டுப் போகாது. நல்ல செயலை மனிதன் தானாகச் செய்ய வேண்டும் என்கிறார் வள்ளுவர். இன்னொருவர் வந்து சொல்ல வேண்டும் என்று காத்திருக்கக் கூடாது. நன்றின்பால் உய்ப்பது அறிவு என்று வள்ளுவர் இதற்காகத்தான் சொன்னார். அந்த அறிவைப் பெற உதவுவது கல்வி. கல்வியும் பள்ளியும் கல்வி கற்பதற்காகவே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறோம். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களால்தான் இளம்பிள்ளைகளை நல்ல குடிமக்களாக உருவாக்க முடியும். மாணவர்களில் எத்தனையோ மருத்துவர்கள் இருப்பார்கள். எத்தனையோ பொறியியலாளர்கள்
இருப்பார்கள். எத்தனையோ அறிவியல் அறிஞர்கள் இருப்பார்கள். அதைக் கண்டுபிடித்துச் சொல்பவர்கள் ஆசிரியர்கள். அதை நோக்கிச் செலுத்துவதற்காகத்தான் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். நமது எதிர்காலத்தை உருவாக்கும் பள்ளிக்குக் கோயில் என்று பெயர் வைத்தார் பாரதியார். " பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் ; எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம் " என்றார். ஏன் அப்படிச் சொன்னார் பாரதி ? ஏனெனில் கல்விக் கூடங்களில்தான் குழந்தைகளின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. மாணவர்கள் எல்லோரும் எதிர்காலத்திலே மேதைகளாக ஆகவேண்டும். இந்த உலகமே
போற்றக்கூடிய அறிஞர்களாக ஆகவேண்டும். அதற்காகத்தான் கோயில்களாகிய பள்ளிக்கூடங்களில் குழந்தைகளைக் கொண்டு வந்து விடுகிறோம். ஓர் ஆசிரியர் எல்லா மாணவர்களுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தார். அவர்களெல்லாம் பத்தாம் வகுப்பு , பன்னிரண்டாம் வகுப்பு என்று படித்து வெற்றி பெற்றார்கள். அதற்குப் பிறகு இந்த ஆசிரியர் என்ன செய்வார் ? அவர்களுக்கெல்லாம் வாழ்த்துக் கூறி , ' நீங்கள் எல்லாம் மேலே நன்றாகப் படித்துக் கல்லூரியில் கெட்டிக்காரன் என்று பெயர் வாங்குங்கள் ' என்று சொல்லித்தான் அனுப்புவார். அப்படியில்லாமல் அவர்களுக்குச் சொல்லிக்
கொடுத்ததை எல்லாம் திருப்பியா கேட்பார் ? ' என்னிடம் இருந்த கல்வியை எல்லாம் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்து விட்டேன். எல்லாக் கல்வியையும் நீங்களே எடுத்துக்கொண்டு போய்விட்டால் அடுத்து வருபவர்களுக்கு நான் எப்படிச் சொல்லிக் கொடுப்பேன் ? நான் சொல்லிக்கொடுத்த கல்வியை எல்லாம் திருப்பி கொடுங்க ' என்றா கேட்பார் ? கேட்கமாட்டார். ஏனென்றால் கல்வியானது கொடுக்கக் கொடுக்க வளரும். பணம் கொடுக்கக் கொடுக்கக் குறையும். கற்க கசடற படிக்க வேண்டிய நூல்களையும் நன்கு ஆராய்ந்து தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். சிலர் பத்துப் புத்தகங்கள்
எழுதுகிறார்கள். சிலர் ஐம்பது புத்தகங்கள் எழுதுகிறார்கள். ஆனால் திருவள்ளுவர் வாழ்நாள் முழுக்க ஒரே ஒரு நூல்தான் எழுதி இருக்கிறார். அப்படி என்றால் எவ்வளவு சிந்தித்துச் சிந்தித்து எழுதி இருக்க வேண்டும் ! சில நூல்களைப் பற்றிச் சிந்தனை செய்யவே வேண்டாம். சில நூல்கள் படித்தவுடனேயே விளங்கும். சில நூல்களைப் படித்துவிட்டு ஆழமாகச் சிந்திக்க வேண்டும். பூமியிலே விளைகின்ற பொருள்களில் சில பூமிக்கு மேலேயே விளையும். கத்தரிக்காய் , வாழைக்காய் , கீரை இவையெல்லாம் பூமிக்கு மேலே விளையும். சில மண்ணுக்குள்ளேயே உண்டாகி இருக்கும்.
அவற்றை நாம்தான் தோண்டி எடுக்க வேண்டும். அதுபோல நாம் படிக்கும் நூல்களில் சிலவற்றை ஒரு முறை படித்தால் போதாது. மீண்டும் மீண்டும் ஆழ்ந்து படித்தால்தான் அதன் பொருள் விளங்கும். அப்படிப்பட்ட நூல்களை ஆழ்ந்து ஆராய்ந்து படிக்க வேண்டும். அதனால்தான் திருவள்ளுவர் ' கற்க கசடற - கற்பவை ' என்று சொன்னார். எதைப் படிக்க வேண்டுமோ அதைத்தான் படிக்க வேண்டும். எனவே , நாம் வாழ்நாள் முழுவதும் கற்போம் ; கற்க வேண்டியவற்றைக் கற்போம் ; நூலின் உட்பொருளை உணர்ந்து கற்போம் ; அதன்படி நடந்து வாழ்வில் உயர்வடைவோம். நூல் வெளி திருக்குறள்
வகுப்புகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளைப் பரப்பும் பணி செய்தவர் திருக்குறளார் வீ. முனிசாமி. நகைச்சுவை ததும்பும் தமது பேச்சால் மக்களைக் கவர்ந்தவர் இவர். வள்ளுவர் உள்ளம் , வள்ளுவர் காட்டிய வழி , திருக்குறளில் நகைச்சுவை உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம் என்னும் இவரது நூல் பெரும் புகழ் பெற்றது. இக்கட்டுரை சிந்தனைக் களஞ்சியம் என்னும் இவரது நூலிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது. கற்பவை கற்றபின் கல்வி தொடர்பான பாடல் வரிகளைத் தொகுத்து எழுதுக. (
எ.கா. ) கல்வி கரையில ; கற்பவர் நாள் சில. கோடை விடுமுறை தொடங்கியபோதும் இந்தக் குழப்பம் மதிவாணனுக்கு இருந்தது. நாலைந்து நாள்கள் அக்காவீடு , அத்தை வீடு போய் வந்தான். தொலைக்காட்சி பார்த்துப் பொழுது போக்கினான். நண்பன் கவின் ஒரு நாள் அழைத்தான். " சும்மாதானே இருக்கே. வாடா பின்னலாடை நிறுவனத்துக்குப் போகலாம். புதிய உடைகள் , எழுதுகோல்கள் , குறிப்பேடுகள் , வாங்கப் பணம் சம்பாதிச்சுருவே. இந்த விடுமுறையிலே வீட்லேயும் சுமையா இருக்க வேண்டியதில்லே.. பின்னலாடை நிறுவனத்துக்கு ஆளு வேணும். வாடா.. " என்றான். சரி என்று
சேர்ந்துவிட்டான். ஒன்றரை மாதங்கள் ஓடிவிட்டன. பின்னலாடை நிறுவன வேலை புதுசாக இருந்தது. ஆடைகளை அடுக்கிக் கட்டும் வேலைதான். சனிக்கிழமை வாரச் சம்பளம். பத்து மணிக்கும் பிற்பகலிலும் வடை , தேநீர். இரவில் பரோட்டா , தோசை என்று சுவையாகச் சாப்பிட முடிந்தது. அம்மா அவனது சம்பளப் பணத்தைப் பத்திரமாக வைத்திருப்பதாய்ச் சொன்னார். செலவழிந்து போயிருந்தாலும் கொடுத்துவிடுவார். பள்ளி திறக்கும்போது நல்லா செலவு செய்யலாம். நல்ல சம்பளம் கிடைக்கிறது. பின்னலாடைக்குத் தேவை மிகுதியாக இருக்கிறது. எனவே வேலைக்குக் குறைவில்லை. அதிகாரிகள்
ஆய்வுக்கு வரும்போது வெளியில் அனுப்பி விடுகிறார்கள். ஒரு வேளை கண்டுபிடித்துவிட்டால் , வயது பதினைந்து என்று சொல்லச் சொன்னார்கள். பின்னலாடை நிறுவனத்துக்குப் போய்க்கொண்டே இருந்தால் அவனும் குழந்தைத் தொழிலாளிதான். வாழ்க்கை முழுவதும் தொழிலாளிதான் என்பது நினைவுக்கு வந்தது. தொழிலாளியாக இருப்பது கேவலம் இல்லை. ஆனால் , படிக்கிற வயதில் வேலை தேவையா ? மருத்துவர் , பொறியாளர் , வெளிநாட்டு வேலை என்று அவனுக்குள்ளும் கனவுகள் இருந்தன. படித்தால் வேறு வேலை பார்க்கலாம். அதிகமான சம்பளம் கிடைக்கும். படித்துவிட்டுச் சொந்தமாகத்
தொழிலும் செய்யலாம். அப்படி இல்லாமல் இந்த வயதிலிருந்து தொழிலாளியாகவே வாழ்க்கையைக் கடத்துவதா ? சிந்தித்தான். கல்வியறிவு முதன்மையானது. ஒரு பட்டமாவது வாங்க வேண்டும். எதிரில் இருந்த விளம்பரப்பலகை கண்ணில் பட்டது. அதில் அம்பேத்கரும் அப்துல் கலாமும் தென்பட்டனர். இவர்களைப் போல் உயரவேண்டுமானால் படிப்பு வேண்டும். படிப்பில்லாமல் உயரமுடியுமா ? படிப்பு அடிப்படைத் தேவை. பள்ளிக்குப் போகவில்லை என்று சொன்னாலும் அப்பா " சரி " என்பார். ' சம்பளம் வருதே ' என்பார். இந்தக் குறைந்த சம்பளத்திற்காகப் படிப்பைத் தொலைப்பதா ? போண்டாவும்
வடையும் பரோட்டாவும் வீட்டில் கிடைக்காது. அவற்றுக்கு அடிமையாவதா ? தலையை உலுக்கிக் கொண்டான் மதிவாணன். வரும் பேருந்துகள் நிரம்பி வழிந்தன. ஒவ்வொரு நாளும் இப்படித்தான். மிகுதியான கூட்டம். பேருந்தில் நுழைவது ஒரு விளையாட்டுச் சாதனை. பின்னலாடை நிறுவனத்துக்குப் ( பேருந்து நிலுந்தம் போனால் உடையெல்லாம் கசங்கி அழுக்காகி இருக்கும். இரவும் இதே நிலைதான். பேருந்து ஒன்று வந்தது. கூட்டம் பிதுங்கி வழிந்தது. கவின் மதிவாணனின் கையை இழுத்தான். ' கூட்டந்தான். ஆனா போயிடலாம். மதிவாணன் தன் அருகில் வந்து நின்ற முதியவரைப் பார்த்தான்.
முகம் இடுங்கி இருந்தது. மழிக்கப்படாத முகம். சோர்வாக இருந்தார். " இது நல்லூர் போகுமா ? " என்று கேட்டார். மதிவாணன் வந்து நின்ற பேருந்தைப் பார்த்தான். முதியவரின் பார்வை அக்கம் பக்கமிருந்த சிறுவர்களின்மீது இருந்தது. " என்னப்பா , இது நல்லூர் போகுமா ? " அவர்களுள் ஒரு சிறுவன் பேருந்தின் முகப்பைக் கூர்ந்து கவனித்தான். எதுவும் பேசாமல் புன்முறுவல் வந்தது. " என்னப்பா போகுமா ? " என்று மீண்டும் கேட்டார் அவர். " யாருக்குத் தெரியும் ? எங்களுக்குப் படிக்கத் தெரியாதே " என்று கூறியபடி ஒரு சிறுவன் முகத்தைத் திருப்பிக்
கொண்டான். " சின்னப் பசங்களா இருக்கீங்க. இதுகூட படிச்சுச் சொல்லத் தெரியாதா ? " ஒருவன் வெறுப்புடன் இடைமறித்தான். " பெரியவரே... இதப் படிக்கக்கூட உங்களுக்குத் தெரியாதா... ? " ' ஓ... ' வென்று கேலியான ஓசை வந்தது. சிரித்தார்கள். இதைக் கவனித்துக் கொண்டிருந்தான் மதிவாணன். அவர் அருகே சென்றான். " இந்தப் பேருந்து நல்லூர் போகாதுங்க. நல்லூர் பேருந்து வந்தா சொல்றேன் " என்றான். " சரி தம்பி ". முதியவருக்குப் படிப்பு இல்லை. பேருந்தில் எழுதி இருப்பதைப் படிக்க முடியவில்லை. இந்த வயதிலும் அவமானப்படுகிறார். கல்வியறிவு இல்லாமல்
போய்விட்டால் நானும் இப்படித்தான் வாழ்க்கை முழுவதும் அவமானப்படவேண்டும். நல்ல கல்வியறிவு தலைநிமிர்ந்து நிற்க வைக்கும். நல்ல படிப்புதான் சிறந்த மனிதனாக்கும் என்ற எண்ணம் வந்தது. பேருந்துகளின் ஓசை காதை அடைத்தது. விறுவிறுவென்று நடக்கத் தொடங்கினான். " டேய் ! " குரல் கவினிடமிருந்து வந்தது. " எங்கடா போறே ? " " பள்ளிக்கு " " பள்ளி திறக்கறதுக்கு இன்னும் ரெண்டு நாள் இருக்கே " " பள்ளிக்குப் போறேண்டா " சாலையைக் கடந்தபோது மதிவாணனுக்குப் பெருமூச்சு வந்தது. இறக்கைகளைக் கட்டிக்கொண்டு பறப்பது போல் இருந்தது. இப்படியே பறந்துபோய்
யாருமில்லாத பள்ளியை வேடிக்கை பார்க்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. நூல் வெளி இக்கதையை எழுதியவர் சுப்ரபாரதிமணியன். இவர் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு , இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துகளை வலியுறுத்திச் சிறுகதை , புதினம் , கட்டுரை முதலியவற்றை எழுதியுள்ளார் ; கனவு என்னும் இலக்கிய இதழை நடத்தி வருகிறார். பின்னல் , வேட்டை , தண்ணீர் யுத்தம் , புத்துமண் , கதை சொல்லும் கலை உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். கற்பவை கற்றபின் 1. ' பள்ளி மறுதிறப்பு ' என்னும் கதையை வகுப்பில் நாடகமாக நடித்துக் காட்டுக. 2.
எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு எவ்வாறு உதவுவீர்கள் ? வகுப்பில் கலந்துரையாடுக. மதிப்பீடு மதிவாணன் பள்ளிக்குச் செல்ல முடிவெடுத்த நிகழ்வைச் சுருக்கி எழுதுக. இயல் ஐந்து கற்கண்டு ஓரெழுத்து ஒருமொழி ஈ , பூ , கை ஆகிய எழுத்துகளைக் கவனியுங்கள். ஓரெழுத்து ஒருமொழி , பகுபதம் , பகாப்பதம் இவை ஒவ்வொன்றிற்கும் பொருள் உண்டு. இவ்வாறு ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவதை ஓரெழுத்து ஒரு மொழி என்பர். நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதிய பவணந்தி முனிவர் தமிழில் நாற்பத்திரண்டு ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றில் நொ , து ஆகிய இரண்டு சொற்களைத்தவிர ஏனைய நாற்பது சொற்களும் நெடில் எழுத்துகளாக அமைந்தவை ஆகும். பகுபதம் தெரிந்து தெளிவோம் ஓரெழுத்து ஒரு மொழிகளும் அவற்றின் பொருளும் - 1. ஆ- பசு 2. ஈ- கொடு 3. ஊ- இறைச்சி 4. ஏ- அம்பு 5. ஐ- தலைவன் 6. ஓ மதகுநீர் தாங்கும் பலகை 7. கா- சோலை 8.கூ - பூமி 9. கை- ஒழுக்கம் 10. கோ - அரசன் 11. சா- இறந்துபோ 12. சீ- இகழ்ச்சி 13. சே- உயர்வு 14. சோ- மதில் 15. தா- கொடு 16. தீ- நெருப்பு 17. தூ- தூய்மை 18. தே- கடவுள் 19. தை- தைத்தல் 20. நா- நாவு 21. நீ- முன்னிலை ஒருமை 22. நே- அன்பு 23. நை-
இழிவு 24. நோ- வறுமை 25. பா- பாடல் 26. பூ- மலர் 27 , பே – மேகம் 28 , பை- இளமை 29. போ- செல் 30. மா- மாமரம் 31.மீ- வான் 32. மூ மூப்பு 33. மே- அன்பு 34. மை- அஞ்சனம் 35. மோ- மோத்தல் 36 , யா- அகலம் 37. வா- அழைத்தல் 38. வீ- மலர் 39. வை- புல் 40. வௌ- கவர் 41. நொ- நோய் 42. து- உண். 7th 5id - Tamil CBSEE Paga - 1-222.indd 114 வேலன் , படித்தான் ஆகிய சொற்களைக் கவனியுங்கள். வேலன் என்னும் சொல்லை வேல் + அன் எனப் பிரிக்கலாம். படித்தான் என்னும் சொல்லை படி + த் + த் + ஆன் எனப் பிரிக்கலாம். இவ்வாறு சிறுசிறு உறுப்புகளாகப்
பிரிக்கும் வகையில் அமையும் சொற்களைப் பகுபதங்கள் என்பர். பிரிக்கப்படும் உறுப்புகளைப் பகுபத உறுப்புகள் எனக் குறிப்பிடுவர். இயல் ஆறு 48 கற்றல் நோக்கங்கள் $ கலை வண்ணம் கலைகளின் இன்றியமையாமையைக் கவிதை வாயிலாக அறிதல் இருபொருள் தரும் வகையில் அமைந்த பாடலின் சொல் நயங்களை உணர்தல் ஓவியக்கலையின் மேன்மையையும் அது மனித வாழ்வோடு இணைந்துள்ள நுட்பத்தையும் உன ர்ந்து போற்றுதல் தமிழகச் சுற்றுலா இடங்களையும் அவை வெளிப்படுத்தும் கலை , பண்பாட்டுக் கூறுகளையும் படித்தறிதல் தொழிற்பெயரின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல் இயல் ஆறு
நுழையும்முன் ஒரு வேண்டுகோள் கலையுலகப் பிரும்மாக்களே மண்ணின் வனப்புக்குப் கவிதைப்பேழை கலைகள் மனிதர்களின் வாழ்வோடு இணைந்தே வளர்ந்திருக்கின்றன. ஒரு கலைஞன் தான் படைக்கும் ஒவ்வொன்றையும் அழகியலோடு படைப்பான். கலைப்படைப்பு அழகியலை மட்டும் வெளிப்படுத்தினால் போதாது. அது மானுடத்தைப் பேச வேண்டும். இதனைக் கலைஞர்களிடம் ஒரு வேண்டுகோளாக வைக்கிறார் இப்பாடலின் ஆசிரியர். அதனை அறிவோம். புதிய அழகுகள் சேர்ப்பவர்களே ஒரு மானுடத்தின் வேண்டுகோள் நீங்கள் சிற்பிகளாகப் பாறை உடைப்பவனின் சிலை வடித்தால் வியர்வை நெடி வீசட்டும் அதில்
வயல்வெளி உழவனின் உருவ வார்ப்பெனில் ஈரமண் வாசம் இருக்க வேண்டும் அதில் ஓவியர்களாகத் தாய்மையின் பூரிப்பைச் சித்திரமாக்கினால் அவள் முகப்பொலிவில் வழித்தெடுக்குமாறு இருக்கட்டும் கரிசன பாச உணர்வுகள் ஒரு சின்ன மழலைச் சித்திரமா பால் மணம் கமழ வேண்டும் அதன் பளிங்கு மேனியில் ஆல்ப்ஸ் மலைச் சிகரங்களா அட்லாண்டிக் சமுத்திர அலைகளா அமேசான் காடுகளா பனிபடர் பள்ளத்தாக்குகளா தொங்கும் அதிசயத் தோட்டங்களா இயற்கையின் பிரமிப்பு எதுவும் கலைவடிவு கொள்ளலாம் ஏதாயினும் இதை நினைவில் கொள்ளுங்கள் மானுட அடையாளம் ஒன்று இருக்கவேண்டும் அதில்
கட்டாயம் மனிதன் இல்லாத இணையாத எந்த வனப்பும் வனப்பில்லை அவன் கலவாத எதிலும்ஜீவ உயிர்ப்பில்லை... -தேனரசன் இயல் ஆறு நுழையும்முன் சொல்லும் பொருளும் வண்கீரை முட்டப்போய் மறித்தல் பாடலின் பொருள் கவிதைப்பேழை கீரைப்பாத்தியும் குதிரையும் ( இரட்டுற மொழிதல் ) தமிழில் சொல்நயமும் பொருள்நயமும் மிகுந்த பலவகையான பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படும் இரட்டுறமொழிதலும் அவற்றுள் ஒன்று. இதனைச் ' சிலேடை ' என்றும் கூறுவர். அவ்வகையில் அமைந்த சுவையான பாடல் ஒன்றை அறிவோம். கட்டி அடிக்கையால்
கால்மாறிப் பாய்கையால் வெட்டி மறிக்கின்ற மேன்மையால் - முட்டப்போய் மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன் ஏறப் பரியாகு மே * காளமேகப்புலவர் வளமான கீரை முழுதாகச் சென்று தடுத்தல் ( மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்தி கட்டுதல் ) , எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல் பரி கால் கீரைப்பாத்தியில் மண் கட்டிகளை அடித்துத் தூளாக்குவர் ; மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திகளாக்கி வைத்திருப்பர் ; வாய்க்காலில் மாறிமாறி நீர் பாய்ச்சுவர் ; நீர் கடைமடையின் இறுதி வரை சென்று மாற்றி விடத் திரும்பும். குதிரை வண்டிகளில் கட்டி , அடித்து
ஓட்டப்படும் ; கால் மாறிமாறிப் பாய்ந்து செல்லும் ; எதிரிகளை மறித்துத் தாக்கும் ; போக வேண்டிய இடம் முழுவதும் சென்று மீண்டும் திரும்பி வரும். இக்காரணங்களால் கீரைப் பாத்தியும் , ஏறிப் பயணம் செய்யும் குதிரையும் ஒன்றாகக் கருதப்படும். குதிரை வாய்க்கால் , குதிரையின் கால் இயல் ஆறு நுழையும்முன் -ரைநடை உலகம் பேசும் ஓவியங்கள் ஆயகலைகள் அறுபத்து நான்கனுள் ஒன்று ஓவியக்கலை. காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் ஓவியத்திற்கு உண்டு. ஒரு கருத்தைப் பேச்சாலும் எழுத்தாலும் வெளிப்படுத்துவதைக் காட்டிலும் ஓர்
ஓவியத்தால் மிக நுட்பமாகப் புரிய வைத்துவிட முடியும். அதனால்தான் ஓவியத்தை நுண்கலைகளுள் முதன்மையான ஒன்றாகக் கருதுகின்றனர். இத்தகைய சிறப்பு மிக்க ஓவியக்கலையைப் பற்றி அறிவோம். ஒரு விடுமுறை நாளன்று கண்ணனும் மணியும் அரசுப் பொருள்காட்சிக் கூடத்திற்குச் செல்கின்றனர். ஒவ்வோர் அரங்காகக் கண்டுகளித்தவாறே சென்று இறுதியில் ஓவியக்கூடத்தை அடைகின்றனர். மணி : கண்ணா அந்த அறிவிப்புப் பலகையைப் பார். கண்ணன் : மணி ! இங்குக் குகை போன்று வடிவமைக்கப்பட்ட பாறையில் அழகான ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. அந்தப் பொத்தானை அழுத்து. குகை ஓவியம்
பேசுவதைக் கேட்போம். ( மணி பொத்தானை அழுத்துகிறான் ) குகை ஓவியம் : நான்தான் குகை ஓவியம் பேசுகிறேன். பழங்கால மனிதர்கள் குகைகளில்தான் வாழ்ந்து வந்தனர். அங்குதான் அவர்கள் முதலில் ஓவியங்களை வரையத் தொடங்கினார்கள். செய்திகளை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்காக எங்களை வரைந்தனர். வேட்டைக்குச் செல்லுதல் , நடனம் ஆடுதல் , போர் செய்தல் போன்ற காட்சிகள் வரையப்பட்டன. நாங்கள் பெரும்பாலும் கோட்டோவியமாக இருப்போம். மண் மற்றும் கல் துகள்களைக் கொண்டு எங்களுக்கு வண்ணம் தீட்டினர். எங்களை உற்று நோக்கினால் பழந்தமிழரின் வாழ்க்கை முறைகளை
அறிந்து கொள்ளலாம். மணி : கண்ணா ! இதோ இங்குள்ள சுவர் ஓவியத்தின் பொத்தானை அழுத்து. ( கண்ணன் பொத்தானை அழுத்துகிறான். ) சுவர் ஓவியம் : மனிதர்கள் வீடுகட்டி வாழத் தொடங்கிய காலம் முதல் சுவர் ஓவியங்களாகிய எங்களை வரைந்து வருகின்றனர். அரண்மனைகள் , மண்டபங்கள் , கோவில்கள் போன்றவற்றின் சுவர்களிலும் மேற்கூரைகளிலும் எங்களைக் காணமுடியும். சித்தன்னவாசல் என்னும் ஊரில் எங்களைப் பார்த்திருப்பீர்கள். எங்களை எவ்வாறு வரைந்தனர் தெரியுமா ? முதலில் ஆற்று மணலுடன் சுண்ணாம்பைச் சேர்த்துச் சுவரைச் சமப்படுத்துவர். சுவர் ஈரப்பதமாக
இருக்கும்போது எங்களை வரைவர். சுவர் உலர்ந்தபிறகு எங்களை வரைவதும் உண்டு. தஞ்சைப் பெரியகோயிலில் சுவர் ஓவியங்களான எங்களை ஏராளமாகக் காணமுடியும். கருவறைச் சுற்றுச்சுவரிலும் மண்டபங்களின் சுவர்களிலும் நாங்கள் அழகாகக் காட்சியளிக்கிறோம். நாயன்மார்களில் ஒருவரான சுந்தரரின் வாழ்க்கை நிகழ்வுகளாக நாங்கள் வரையப்பட்டிருக்கிறோம். மணி : கண்ணா , வா ! அதோ ! அங்குள்ள துணி ஓவியங்களைப் பார்ப்போம். ( கண்ணன் துணி ஓவியத்தின் அருகிலுள்ள பொத்தானை அழுத்துகிறான். ) துணி ஓவியம் : துணிகளில் ஓவியங்கள் வரையும் முறை பழங்காலம் முதலே வழக்கத்தில்
இருந்துள்ளது. ஓவியம் வரையப் பயன்படும் துணியை எழினி , திரைச்சீலை , கிழி , படாம் எனப் பல பெயர்களில் அழைப்பர். சீவகசிந்தாமணிக் காப்பியத்தில் குணமாலை என்னும் தலைவி யானையைக் கண்டு அஞ்சிய காட்சியைச் சீவகன் துணியில் வரைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. தற்காலத்தில் எங்களைக் கலம்காரி ஓவியங்கள் என்னும் பெயரில் தமிழகத்திலும் ஆந்திராவிலும் ஓவியர்கள் வரைந்து வருகின்றனர். கண்ணன் : மணி , வா ! அந்த ஓலைச்சுவடி ஓவியத்தைப் பார்ப்போம். தெரிந்து தெளிவோம் புனையா ஓவியங்கள் பற்றி நம் இலக்கியங்கள் கூறும் செய்திகள் ( கண்ணன் ஓலைச்சுவடி
ஓவியத்தின் அருகிலுள்ள பொத்தானை அழுத்துகிறான் ) இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும் புனையா ஓவியம் கடுப்பப் புனைவில் - நெடுநல்வாடை ஓலைச்சுவடி ஓவியம் : ஓலைச்சுவடிகள் மீது எழுத்தாணிகளைக் கொண்டு கோட்டோவியமாகவும் வண்ணப்பூச்சு ஓவியமாகவும் எங்களை வரைவார்கள். நாங்கள் பெரும்பாலும் இதிகாசம் மற்றும் புராணக் காட்சிகளாகவே இருக்கிறோம். தற்காலத்தில் எங்களைக் காண்பது அரிதாகிவிட்டது. தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்திற்குச் சென்றால் எங்களைக் காணலாம். புனையா ஓவியம் புறம் போந்தன்ன மணி :
தாள்களில் ஓவியம் வரையும்போதே நாம் அழிப்பான்களைக் கொண்டு பலமுறை அழித்து அழித்து வரைகிறோம். ஒருமுறை எழுத்தாணியால் கீறிவிட்டால் திருத்தமுடியாத ஓலைச்சுவடிகளில் நம் முன்னோர் ஓவியம் வரைந்துள்ளனர். அவர்களின் திறமையை எண்ணிப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. – பரிபாடல் ( 19 : 54-55 ) கண்ணன் : சரி , வா ! செப்பேட்டுஓவியம் என்ன சொல்கிறது என்று கேட்போம். ( கண்ணன் செப்பேட்டு ஓவியத்தின் அருகிலுள்ள பொத்தானை அழுத்துகிறான் ) செப்பேட்டு ஓவியம் : முற்காலத்தில் மன்னர்களின் ஆணைகளையும் ஆவணங்களையும் செப்பேடுகளில் பொறிப்பது வழக்கம்.
அதைப்போல உளிகொண்டு தெரிந்து தெளிவோம் ஓவிய மண்டபத்தில் பல வகை ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு விளக்கிக் கூறினர் என்ற செய்தி பரிபாடலில் இடம் பெற்றுள்ளது. 129 -மணிமேகலை அரசு வரைகோடுகளாக எங்களையும் வரைந்தனர். பொதுவாக நீர்நிலைகள் , செடிகொடிகள் , பறவைகள் , விலங்குகள் , குறியீடுகள் போன்றவையாக எங்களைக் காணலாம். கண்ணன் : அங்கே சில புதுமையான ஓவியங்கள் காணப்படுகின்றனவே ! வா ! சென்று பார்க்கலாம். மணி தந்த ஓவியங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே ! இவை யார் தந்த ஓவியங்களாக
இருக்கும் ? ( கண்ணன் தந்த ஓவியத்தின் அருகிலுள்ள பொத்தானை அழுத்துகிறான் ) தந்த ஓவியம் : நாங்கள் யானைத் தந்தங்களின் மீது வரையப்பட்ட ஓவியங்கள். வயது முதிர்ந்து இறந்த யானையின் தந்தங்களின்மீது பலவகை நீர்வண்ணங்களைப் பயன்படுத்தி அழகான ஓவியங்களாக எங்களை வரைவார்கள். எங்களைக் கேரள மாநிலத்தில் அதிகமாகக் காணமுடியும். கண்ணன் : வா ! அங்கே உள்ள கண்ணாடி ஓவியங்களைப் பார்ப்போம். ( கண்ணன் கண்ணாடி ஓவியத்தின் அருகிலுள்ள பொத்தானை அழுத்துகிறான். ) கண்ணாடி ஓவியம் : கண்ணாடிகள் முகம் பார்க்க மட்டும்தான் பயன்படும் என
நினைத்திருப்பீர்கள். ஆனால் , அழகிய வண்ண ஓவியங்களாகிய எங்களை வரையவும் கண்ணாடிகளைப் பயன்படுத்துகின்றனர். பலவகையான உருவங்கள் , இயற்கைக் காட்சிகள் போன்றவைகளாக நாங்கள் வரையப்படுகிறோம். எங்களை உருவாக்கும் ஓவியர்கள் தஞ்சாவூரில் மிகுதியாக உள்ளனர். மணி : அடடா , ஓவியங்களில்தான் எத்தனை வகைகள் ! இதோ ! இருபதாம் நூற்றாண்டு ஓவியங்கள் என்னும் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம். அதோ ! அங்கே நாம் இப்போது வரைவது போலத் தாள்களில் வரையப்பட்ட ஓவியங்கள் உள்ளன. வா , சென்று பார்க்கலாம். ( கண்ணன் தாள் ஓவியத்தின் அருகிலுள்ள பொத்தானை
அழுத்துகிறான் ) தாள் ஓவியம் : தற்காலத்தில் பரவலான பயன்பாட்டில் இருப்பவர்கள் நாங்களே. கோட்டோவியங்கள் , வண்ண ஓவியங்கள் , நவீன ஓவியங்கள் எனப் பலவகையான வடிவங்களில் நாங்கள் காணப்படுகின்றோம். கரிக்கோல் , நீர்வண்ணம் , எண்ணெய் வண்ணம் ஆகியவற்றைப் பயன்படுத்தி எங்களை வரைகின்றனர். ( கண்ணன் அருகிலிருந்த கருத்துப்பட ஓவியத்தின் பொத்தானை அழுத்துகிறான். ) கருத்துப்பட ஓவியம் : அரசியல் கருத்துகளை எளிமையாக விளக்குவதற்கு நாங்கள் பயன்படுகிறோம். இந்தியா இதழில் பாரதியார்தான் எங்களை முதன்முதலில் தெரிந்து தெளிவோம் வேறுபெயர்களை
அறிவோம் ஓவியம் ஓவியம் வரைபவர் ஓவியக் கூடம் ஓவு , ஓவியம் , ஓவம் , சித்திரம் , படம் , படாம் , வட்டிகைச்செய்தி கண்ணுள் வினைஞர் , ஓவியப் புலவர் , ஓவமாக்கள் , கிளவி வல்லோன் , சித்திரக்காரர் , வித்தகர் எழுதெழில் அம்பலம் , எழுத்துநிலை மண்டபம் , சித்திர அம்பலம் , சித்திரக்கூடம் , சித்திரமாடம் , சித்திரமண்டபம் , சித்திர சபை தமிழில் அறிமுகப்படுத்தினார். இப்போது பெரும்பாலான இதழ்களில் நீங்கள் எங்களைப் பார்க்க முடியும். எங்களுடைய மற்றொரு வடிவமே கேலிச்சித்திரம் ஆகும். மனித உருவங்களை விந்தையான தோற்றங்களில் நகைச்சுவை
தோன்றும்படி வரைவதையே கேலிச்சித்திரம் என்பர். ( கண்ணன் நவீன ஓவியத்தின் அருகிலுள்ள பொத்தானை அழுத்துகிறான் ) தெரிந்து தெளிவோம் நவீன ஓவியம் பாரதியார் வெளியிட்ட கேலிச்சித்திரம் ஓவியக்கலையின் மிகப் புதுமையான வடிவமாக நாங்கள் விளங்குகிறோம். புதுமையான பார்வையில் கருத்துகள் வெளிப்படுமாறு எங்களை வரைகின்றனர். பார்வையாளர்களின் மனப்பான்மைக்கு புதிய ஐரோப்பியக் கலை நுணுக்கத்துடன் இந்தியக் கதை மரபுகளை ஓவியங்களில் இணைத்து புதுமைகளைப் புகுத்தியவர் இராஜா இரவிவர்மா. இவரது ஓவியமுறைகள் பிற்காலத்தில் நாட்காட்டிகளில் அதிகம்
பயன்படுத்தப்பட்டன. நாட்காட்டி ஓவியம் வரையும் முறையின் முன்னோடிகளுள் கருதப்படுபவர் ஒருவராகக் கொண்டையராஜு. நாட்காட்டி ஓவியங்களைப் பசார் பெயிண்டிங் என்றும் அழைப்பர் கண்ணன் : அதிலும் ஓவியங்களே நம்மோடு பேசியது மிகமிகச் சிறப்பாக இருந்தது. இந்த நாளை நம்மால் மறக்கவே முடியாது ! நாமும் சிறந்த ஓவியங்களை வரைந்து பழகுவோம். கற்பவை கற்றபின் ஏற்பப் பொருள்கொள்ளும் கோடுகளாகவும் கிறுக்கல்களாகவும் நாங்கள் வரையப்படுகிறோம். பல வண்ணக் கொண்டும் எங்களை கலவைகளைக் வரைகின்றனர். வகையில் மணி : இந்தக் கண்காட்சியின் மூலம் பலவகையான
ஓவியங்களைப் பற்றி அறிந்து கொண்டோம். 1. உமக்குப் பிடித்த காட்சியை வரைந்து வண்ணம் தீட்டுக. 2. பருவ இதழ்களில் வெளிவந்த பலவகை ஓவியங்களைச் சேகரித்துப் படத்தொகுப்பு உருவாக்குக. மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப் பயன்பட்ட பொருள்களில் ஒன்று அ ) மண்துகள் ஆ ) நீர் வண்ணம் இ ) எண்ணெய் வண்ணம் ஈ ) கரிக்கோல் 2. நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம் அ ) குகை ஓவியம் ஆ ) சுவர் ஓவியம் இ ) கண்ணாடி ஓவியம் ஈ ) கேலிச்சித்திரம் ' கோட்டோவியம் ' என்னும் சொல்லைப் பிரித்து
எழுதக் கிடைப்பது அ ) கோடு + ஓவியம் ஆ ) கோட்டு + ஓவியம் இ ) கோட் + டோவியம் ஈ ) கோடி + ஓவியம் 4. ' செப்பேடு ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ ) செப்பு + ஈடு ஆ ) செப்பு + இ ) செப்பு + ஏடு ஈ ) செப்பு + யேடு 3. 5. எழுத்து + ஆணி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் அ ) எழுத்துஆணி ஆ ) எழுத்தாணி ஈ ) எழுதாணி இ ) எழுத்துதாணி கோடிட்ட இடங்ளை நிரப்புக. 1. கருத்துப் படங்களை அறிமுகப்படுத்தியவர் 2. கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது 3. மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் பாதுகாத்தனர். குறுவினா 1.
ஓவியங்களின் வகைகள் யாவை ? 2. குகை ஓவியங்களில் இருந்து நாம் அறியும் செய்திகள் யாவை ? 3. தாள் ஓவியங்களை எவற்றைக் கொண்டு வரைவர் ? சுவர் ஓவியங்கள் காணப்படும் இடங்களைக் கூறுக. 5. செப்பேட்டு ஓவியங்களில் காணப்படும் காட்சிகள் யாவை ? சிறுவினா 1. கேலிச்சித்திரம் என்றால் என்ன ? 2. ஓலைச்சுவடி ஓவியங்கள் குறித்து நீங்கள் அறிந்து கொண்டவற்றை எழுதுக. சிந்தனை வினா தந்த ஓவியங்கள் கேரளாவில் அதிகம் காணப்படுவது ஏன் ? மீது பொறித்துப் இயல் ஆறு நுழையும்முன் விரிவானம் தமிழ் ஒளிர் இடங்கள் மனிதர்கள் புதிய புதிய இடங்களைக் காண்பதில்
விருப்பம் உடையவர்கள். பழமையான நினைவுச் சின்னங்கள் , இயற்கை அழகு நிறைந்த பகுதிகள் , வழிபாட்டு இடங்கள் , கடற்கரைப் பகுதிகள் , தேசியப் பூங்காக்கள் போன்ற இடங்களைக் காண்பது உள்ளத்துக்கு மகிழ்ச்சியைத் தரும். அவற்றுள் தமிழின் பெருமையை விளக்கும் இடங்கள் சிலவற்றை அறிவோம். அன்பு மாணவர்களே ! புத்தகங்களில் பல வகை உண்டு. கதைப் புத்தகங்கள் , கட்டுரைப் புத்தகங்கள் , கவிதைப் புத்தகங்கள் ஆகியவை நீங்கள் அறிந்தவையே. இது தமிழுடன் தொடர்புடைய இடங்கள் குறித்த கையேடு. இக்கையேடு அத்தகைய இடங்களை நேரில் காண வேண்டும் என்ற ஆர்வத்தைத்
தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை சரசுவதி மகால் நூலகம் முகக இந்தியாவில் உள்ள தொன்மையான நூலகங்களுள் தஞ்சை சரசுவதி மகால் நூலகமும் ஒன்று. இந்நூலகம் கி.பி. ( பொ.ஆ. ) 1122 முதல் இயங்கி வருவதாகக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. இங்குத் தமிழ் , தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் ஓலைச் சுவடிகளும் கையெழுத்துப் படிகளும் உள்ளன. தலைசிறந்த ஓவியங்களும் தொன்மையான இசைக் கருவிகளும் சிற்பங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன. செம்மொழியாகிய தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர் தமிழுக்கு ஒரு பல்கலைக்கழகம் அமைய வேண்டும்
எண்ணத்தின் அடிப்படையில் தமிழக அரசால் கி.பி. ( பொ.ஆ. ) 1981 இல் தோற்றுவிக்கப்பட்டது ஏக்கர் என்ற தமிழ்ப்பல்கலைக்கழகம். தஞ்சாவூரில் ஆயிரம் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. வானத்தில் இருந்து பார்க்கும் பொழுது " தமிழ்நாடு " எனத் தெரியும் வகையில் இதன் கட்டட அமைப்பு உள்ளது. இந்திய நாகரிகத்தின் பண்பாட்டுக் கூறுகள் அனைத்தையும் விரிவாகவும் ஆழமாகவும் ஆராய வேண்டும் என்பதே இப்பல்கலைக்கழகத்தின் நோக்கம். கஎ இங்குக் கலைப்புலம் , சுவடிப்புலம் , வளர்தமிழ்ப்புலம் , மொழிப்புலம் , அறிவியல்புலம் ஆகிய ஐந்து புலங்களும்
இருபத்தைந்து துறைகளும் உள்ளன. இப்பல்கலைக்கழகம் தமிழ்மொழி ஆய்வுகள் செய்வது மட்டுமன்றி , சித்த மருத்துவத்துறை மூலம் பொதுமக்களுக்குப் பயனுள்ள வகையில் மருத்துவத் தொண்டு செய்து வருகிறது. இந்திய ஆட்சிப்பணி பயிற்சியாளர்களுக்குத் தமிழ்மொழிப்பயிற்சியை இப்பல்கலைக்கழகமே வழங்குகிறது. இங்கு மிகப்பெரிய நூலகம் ஒன்று அமைந்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இங்குக் கல்வி கற்று வருகின்றனர். உ.வே.சா நூலகம் - சென்னை கி.பி. ( பொ.ஆ. ) 1942 இல் தொடங்கப்பட்ட இந்நூலகத்தில் தமிழ் , தெலுங்கு , வடமொழி உள்ளிட்ட
பல்வேறு மொழி நூல்கள் உள்ளன. இங்கு 2128 ஓலைச்சுவடிகளும் 2941 தமிழ் நூல்களும் உள்ளன. கீழ்த்திசை நூலகம் - சென்னை இந்நூலகம் கி.பி. ( பொ.ஆ. ) 1869 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்குத் தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் ஓலைச்சுவடிகள் உள்ளன. கணிதம் , வானியல் , மருத்துவம் , வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறை நூல்களும் இடம்பெற்றுள்ளன. இது தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாம் தளத்தில் இயங்கி வருகின்றது. கன்னிமாரா நூலகம் ( பொ.ஆ. ) 1896 இல் தொடங்கப்பட்ட கன்னிமாரா நூலகம் தமிழ்நாட்டின் மைய நூலகம்
ஆகும். இஃது இந்திய நாட்டின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இந்நூலகத்தில் ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. இந்தியாவில் வெளியிடப்படும் புத்தகங்கள் , நாளிதழ்கள் , பருவ இதழ்கள் ஆகியவற்றின் ஒரு படி ( பிரதி ) இங்குப் பாதுகாக்கப்படுகிறது. இந்நூலகத்தின் மூன்றாம் தளத்தில் மறைமலை அடிகள் நூலகமும் செயல்பட்டு வருகின்றது. இதன் அடிப்பகுதி இருபத்தைந்து அடி நீளமும் இருபத்தைந்து அடி அகலமும் உடையது. தேரின் மொத்த உயரம் 128 அடி. இரண்டு பக்கங்களிலும் பக்கத்திற்கு நான்கு சக்கரங்கள் தனிக்கற்களால்
அமைக்கப்பட்டுள்ளன. கடைக்கோடி இரண்டு சக்கரங்கள் பெரியனவாகவும் நடுவில் இரண்டு சக்கரங்கள் சிறியனவாகவும் உள்ளன. தேரின் மையத்தில் உள்ள எண்கோண வடிவக் கருவறையில் திருவள்ளுவரின் சிலை கவினுற அமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டம் சென்னை திருவள்ளுவரின் புகழை உலகறியச் செய்யும் வகையில் சென்னைக் கோடம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் என்னும் கலைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் கி.பி. ( பொ.ஆ. ) 1973 இல் தொடங்கி 1976 இல் முடிக்கப்பட்டன. இது திருவாரூர்த் தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்டு அதனை இரண்டு யானைகள்
இழுத்துச் செல்வது போன்று கருங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான அரங்கம் ஒன்றும் உள்ளது. வள்ளுவர் கோட்டத்தில் 1330 குறட்பாக்களும் செதுக்கப்பட்டுள்ளன. அறத்துப்பால் கருநிறப் பளிங்குக் கல்லிலும் பொருட்பால் வெண்ணிறப் பளிங்குக் கல்லிலும் இன்பத்துப்பால் செந்நிறப் பளிங்குக் கல்லிலும் அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் திருக்குறளின் கருத்துகளை விளக்கும் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. இந்தியாவின் தெற்கு எல்லையாகிய கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் சிலை தமிழக அரசால்
நிறுவப்பட்டுள்ளது. விவேகானந்தர் பாறைக்கு அருகில் , கடல் நடுவே நீர் மட்டத்திலிருந்து முப்பது அடி உயரப் பாறை மீது இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. கி.பி. ( பொ.ஆ. ) 1990 ஆம் ஆண்டு இப்பணி தொடங்கியது. பொதுமக்கள் பார்வைக்காக 2000 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் முதல் நாள் அன்று திறந்துவைக்கப்பட்டது. பாறையிலிருந்து சிலையின் உயரம் மொத்தம் 133 அடி. இது திருக்குறளின் மொத்த அதிகாரங்களைக் குறிக்கிறது. அறத்துப்பாலின் அதிகாரங்களை உணர்த்துவதுபோல் பீடம் முப்பத்தெட்டு அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. பொருட்பால் , இன்பத்துப்பால்
ஆகியவற்றின் மொத்த அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் சிலை தொண்ணூற்றைந்து அடி உயரம் உடையதாக அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி பீடத்தின் உட்புறத்தில் மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. மண்டபத்தின் உட்சுவரில் அதிகாரத்திற்கு ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் செதுக்கப்பட்டுள்ளன. திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு மூன்று டன் முதல் எட்டு டன் வரை எடை உள்ள 3,681 கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. திருவள்ளுவர் சிலை மொத்தம் ஏழாயிரம் டன் எடை கொண்டது. திருவள்ளுவர் சிலைக்குச் செல்வதற்குப் படகு
வசதி செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர். தமிழின் பெருமைமிகு அடையாளமாக இச்சிலை உயர்ந்து நிற்கிறது. உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மதுரை மாநகரின் தல்லாகுளம் பகுதியில் காந்தி அருங்காட்சியகம் அருகில் உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டுள்ளது. இது சுமார் எண்பத்தேழு ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் மனத்தைக் கவரும் வகையில் கட்டப்பட்டுள்ளது. கி.பி. ( பொ.ஆ. ) 1981 - ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் மதுரையில் உலகத் தமிழ்ச்
சங்கம் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இக்கட்டடம் கட்டப்பட்டு உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை கி.பி. ( பொ.ஆ. ) 2016 ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது. இதனுள் பன்னாட்டு அளவிலான கருத்தரங்கக் கூடங்கள் , ஆய்வரங்கங்கள் , நூலகம் , பார்வையாளர் அரங்கம் ஆகியன கவினுற அமைக்கப்பட்டுள்ளன. வெளிப்புறச் சுற்றுச்சுவர்களில் 1330 குறட்பாக்களும் இடம்பெற்றுள்ளன. உலகத் தமிழ்ச் சங்கத்தின் மற்றோர் அமைப்பான சங்கத்தமிழ்க் காட்சிக்கூடம் தனிக்கட்டடத்தில் இயங்கி வருகிறது. தருமிக்குப் பாண்டிய மன்னன் பொற்கிழி வழங்கிய திருவிளையாடல்
புராணக் காட்சி இதன் நுழைவாயிலில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள காட்சிக்கூடத்தில் வள்ளல்கள் , புலவர்கள் ஆகியோரின் வாழ்க்கை நிகழ்வுகள் ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் உள்ளன. தொல்காப்பியர் , ஒளவையார் , கபிலர் ஆகியோரின் முழுஉருவ வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் இதன் சுற்றுச் சுவர்களில் சங்க இலக்கியக் காட்சிகள் வண்ண ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. மூன்றாம் தமிழ்ச்சங்கம் அமைந்த மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கக் கட்டடமும் சங்கத்தமிழ்க் காட்சிக்கூடமும் தமிழின் பெருமையைப் பறைசாற்றி நிற்கின்றன.
சிற்பக் கலைக்கூடம் - பூம்புகார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்களின் தலைநகரமாகவும் துறைமுக நகரமாகவும் விளங்கியது பூம்புகார். இந்நகரைப் பற்றிய செய்திகள் சிலப்பதிகாரத்திலும் பட்டினப்பாலையிலும் இடம்பெற்றுள்ளன. இங்கு மருவூர்ப்பாக்கம் என்னும் கடல் பகுதியும் பட்டினப்பாக்கம் என்னும் நகரப் பகுதியும் அமைந்திருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. பின்னர் ஏற்பட்ட கடல்கோளினால் பூம்புகார் நகரம் அழிந்துவிட்டது. இந்நகரத்தின் பெருமையை உலகறியச் செய்ய கி.பி. ( பொ.ஆ. ) 1973 ஆம் ஆண்டு பூம்புகார் கடற்கரையில் சிற்பக்
கலைக்கூடம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இக்கூடம் ஏழுநிலை மாடங்களைக் கொண்டது. கண்ணகியின் வரலாற்றை விளக்கும் நாற்பத்தொன்பது சிற்பத் தொகுதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. மாதவிக்கும் ஒரு நெடிய சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது. கலைக்கூடத்திற்கு அருகில் இலஞ்சிமன்றம் , பாவைமன்றம் , நெடுங்கல்மன்றம் அமைந்துள்ளன. இலஞ்சிமன்றத்திலும் பாவைமன்றத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ள பெண்களின் உருவங்கள் நம் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. நெடுங்கல் மன்றத்தில் நெடிய கற்றூண் ஒன்றும் அதைச் சுற்றி எட்டுச் சிறிய கற்றூண்களும் எட்டு மனித உருவங்களும்
தற்காலச் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டுகளாய் நிற்கின்றன. ஆகியன இக்கையேட்டில் நாம் கண்ட பகுதிகள் அனைத்தும் தமிழின் பெருமையை உலகறியச் செய்ய நிறுவப்பட்டவை ஆகும். இவற்றைக் காணும் பொழுது தமிழரின் வாழ்வையும் தமிழ்மொழியின் சிறப்பையும் அறிய முடிகிறது. இத்தகைய சிறப்புமிக்க இடங்களுக்குச் சென்று பார்வையிடுவதும் அவற்றைப் பாதுகாப்பதும் தமிழராகிய நம்முடைய கடமை ஆகும். கற்பவை கற்றபின் 1. உங்கள் மாவட்டத்திலுள்ள சுற்றுலா இடங்களின் சிறப்புகளை எழுதி வருக. 2. நீங்கள் கண்டுகளித்த இடங்களின் தனித்தன்மைகளை எழுதுக. * மதிப்பீடு
நீங்கள் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தால் , வள்ளுவர் கோட்டம் / திருவள்ளுவர் சிலை இடத்தைப் பார்வையிட வருபவர்களுக்கு எவ்வாறு விளக்கிக் கூறுவீர்கள் இயல் ஏழு நயத்தகு நாகரிகம் கற்றல் நோக்கங்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் காட்டும் சமூக வாழ்வியலைப் புரிந்து கொள்ளுதல் எளிய நாட்டுப்புறப்பாடல்களின் ஓசை நயத்தினையும் அதில் பொதிந்துள்ள சமூகச் செய்திகளையும் புரிந்து கொள்ளுதல் திருநெல்வேலி மாவட்டத்தின் வரலாற்றையும் சிறப்புகளையும் அறிதல் கருத்துகளைத் தொகுத்துக் கடிதம் எழுதும் திறன் பெறுதல் அணியால் சுவை பெறும் பாடல்களைப்
படித்துச் சுவைத்தல் இயல் ஏழு நுழையும்முன் கவிதைப்பேழை வயலும் வாழ்வும் உலகில் பலவகையான தொழில்கள் நடைபெறுகின்றன. அவற்றுள் பசிதீர்க்கும் தொழிலாகிய உழவுத்தொழில் முதன்மையானதாகும். நிலத்தைத் தெரிவு செய்தல் , நாற்றுப் பறித்தல் , நாற்று நடுதல் , நீர் பாய்ச்சுதல் , அறுவடை செய்தல் , போரடித்தல் , நெல்பெறுதல் ஆகியன உழவுத்தொழிலின் செயல்பாடுகள் ஆகும். இவற்றைப் பற்றிய நாட்டுப்புறப்பாடல் ஒன்றை அறிவோம். ஓடை எல்லாம் தாண்டிப்போயி ஏலேலங்கிடி ஏலேலோ ஒண்ணரைக்குழி நிலமும் பார்த்து - ஏலேலங்கிடி ஏலேலோ சீலையெல்லாம் வரிஞ்சுக்கட்டி -
ஏலேலங்கிடி ஏலேலோ சேத்துக்குள்ளே இறங்குறாங்க - ஏலேலங்கிடி ஏலேலோ நாத்தெல்லாம் பிடுங்கையிலே - ஏலேலங்கிடி ஏலேலோ நண்டும் சேர்த்துப் பிடிக்கிறாங்க ஏலேலங்கிடி ஏலேலோ ஒருசாணுக்கு ஒரு நாற்றுத்தான் - ஏலேலங்கிடி ஏலேலோ ஓடியோடி நட்டோமையா - ஏலேலங்கிடி ஏலேலோ மடமடன்னு மடைவழியே - ஏலேலங்கிடி ஏலேலோ மண்குளிரத் தண்ணீர்பாய - ஏலேலங்கிடி ஏலேலோ சாலுசாலாத் தாளுவிட்டு ஏலேலங்கிடி ஏலேலோ நாலுநாலா வளருதம்மா ஏலேலங்கிடி ஏலேலோ மணிபோலப் பால்பிடித்து - ஏலேலங்கிடி ஏலேலோ மனதையெல்லாம் மயக்குதம்மா - ஏலேலங்கிடி ஏலேலோ அறுப்பறுக்க ஆளுக்கெல்லாம் -
ஏலேலங்கிடி ஏலேலோ ஆளுபணம் கொடுத்துவாரான் - ஏலேலங்கிடி ஏலேலோ சும்மாடும் தேர்ந்தெடுத்து - ஏலேலங்கிடி ஏலேலோ சுறுசுறுப்பாய்க் கொண்டு போனார் - ஏலேலங்கிடி ஏலேலோ கிழக்கத்தி மாடெல்லாம் ஏலேலங்கிடி ஏலேலோ கீழே பார்த்து மிதிக்குதையா - ஏலேலங்கிடி ஏலேலோ கால்படவும் கதிருபூரா - ஏலேலங்கிடி ஏலேலோ கழலுதையா மணிமணியா - ஏலேலங்கிடி ஏலேலோ தொகுப்பாசிரியர் - கி.வா. ஜகந்நாதன் சொல்லும் பொருளும் குழி சாண் மணி சும்மாடு பாடலின் பொருள் உழவு செய்யும் மக்கள் ஓடையைக் கடந்து சென்று ஒன்றரைக் குழி நிலத்தைத் தேர்ந்தெடுத்தனர். பெண்கள் புடவையை
இறுகக்கட்டி நடவு செய்ய வயலில் இறங்கினர். நாற்றுப் பறிக்கும்போது ஆண்களும் பெண்களும் வயல் வரப்பில் உள்ள நண்டுகளையும் பிடித்தனர். நில அளவைப்பெயர் நீட்டல் அளவைப்பெயர் முற்றிய நெல் பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக்கொள்ளும் துணிச்சுருள் ஒரு சாணுக்கு ஒரு நாற்று வீதம் சுறுசுறுப்பாக நட்டனர். நடவு நட்ட வயலின் மண்குளிருமாறு மடைவழியே நீர்பாய்ச்சினர். நட்ட நெற்பயிர்கள் வரிசையாக வளர்ந்து சழித்தன. பால் பிடித்து முற்றிய நெல்மணிகள் மனம் சீலை மடை புடவை வயலுக்கு நீர் வரும் வழி உதிர்தல் தெரிந்து தெளிவோம் அறுவடை செய்த
நெற்கதிர்களைக் களத்தில் அடித்து நெல்லைப் பிரிப்பர். நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மயங்குமாறு ( நாட்டுப்புறப்பாடல் ) விளைந்தன. அறுவடை செய்யும் ஆட்களுக்குப் பணம் கொடுத்தனர். அறுவடை செய்த நெல்தாள்களைக் கட்டுகளாகக் கட்டித் தலைக்குச் மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர். இதற்குப் போரடித்தல் என்று பெயர். மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல்லென்று ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை சும்மாடு வைத்துத் தூக்கிச் சென்று களத்தில் சேர்த்தனர். கதிரடித்த நெல்தாள்களைக் கிழக்கத்தி மாடுகளைக் கொண்டு
மிதிக்கச் செய்தனர். மாடுகள் மிதித்த நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தன. நூல் வெளி நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காகப் பாடும் பாடலே நாட்டுப்புறப்பாடல் எனப்படுகிறது. இதனை வாய்மொழி இலக்கியம் என்றும் வழங்குவர். பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புறப்பாடல்களை மலை அருவி என்னும் நூலில் கி.வா. ஜகந்நாதன் தொகுத்துள்ளார். அந்நூலில் உள்ள உழவுத்தொழில் பற்றிய பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது. கற்பவை கற்றபின் வேளாண்மை சார்ந்த கருவிகளின் பெயர்களை எழுதி வருக.
இயல் நுழையும்முன் ரைநடை உலகம் திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி தொடக்கத்தில் காடுகளில் வாழ்ந்து வந்த மனிதன் பின்னர் ஊர்களை உருவாக்கிக் கொண்டு வாழத் தொடங்கினான். சிறிய ஊர்கள் வளர்ச்சி அடைந்து நகரங்களாக மாறின. நகரங்களில் பெரும்பாலானவை ஆற்றங்கரைகளில் அமைந்திருந்தன. ஆற்றங்கரைகளில் சிறந்து விளங்கும் நகரங்கள் தமிழ்நாட்டில் பல உள்ளன. அவற்றுள் ஒரு நகரத்தைப் பற்றி அறிவோம். அன்பு நண்பன் எழிலனுக்கு , வணக்கம். நான் நலம். நீயும் உன் குடும்பத்தினரும் நலமா ? சென்ற ஆண்டுவரை நாம் ஒரே பள்ளியில் ஒன்றாகப் படித்து வந்தோம்.
இந்த ஆண்டு என் தந்தையின் பணி மாறுதல் காரணமாக எங்கள் சொந்த ஊருக்கு வந்துவிட்டோம். வரும் கோடை விடுமுறையில் எங்கள் ஊராகிய திருநெல்வேலிக்கு நீ வரவேண்டும் என்று உன்னை அன்புடன் அழைக்கிறேன். திருநெல்வேலி தமிழகத்தின் பழமையான நகரங்களுள் ஒன்று. பழந்தமிழகத்தைச் சேர , சோழ , பாண்டியர் என்னும் மூவேந்தர் ஆண்டு வந்தனர் என்பது நமக்குத் தெரியும். அவர்களுள் பாண்டியர்களின் தலைநகரமாக மதுரை விளங்கியது. அவர்களது இரண்டாவது தலைநகரமாகத் திருநெல்வேலி விளங்கியது. இந்நகரைச் சுற்றி நெல் வயல்கள் போல் அமைந்திருந்ததால் திருநெல்வேலி எனப்
பெயர் பெற்றது. தற்போது நெல்லை என்று மருவி வழங்கப்படுகிறது. திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று திருஞானசம்பந்தரும் , தண்பொருநைப் புனல் நாடு என்று சேக்கிழாரும் திருநெல்வேலியின் சிறப்பைப் போற்றியுள்ளனர். வேலி ருநெல்வேலி மாவட்டம் மலை வளம் மிகுந்த பகுதியாகும். இப்பகுதியின் சிறப்புமிக்க மலையாகிய பொதிகை மலை இலக்கியங்களில் பாராட்டப்பட்டு உள்ளது. பொதியி லாயினும் இமய மாயினும் பதியெழு அறியாப் பழங்குடி என்று இளங்கோவடிகள் பொதிகை மலைக்கு முதலிடம் கொடுத்துப் பாடுகிறார். இலக்கியங்களில் திரிகூடமலை என வழங்கப்படும்
குற்றாலமலை புகழ் பெற்ற சுற்றுலா இடமாகத் திகழ்கின்றது. வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் என்று குற்றால மலைவளத்தைத் திரிகூட இராசப்பக் கவிராயர் தம் குற்றாலக் குறவஞ்சி நூலில் பாடியுள்ளார். திருநெல்வேலிப் பகுதியை வளம் செழிக்கச் செய்யும் ஆறு தாமிரபரணி ஆகும். இதனைத் தண்பொருநை நதி என்று முன்னர் அழைத்தனர். இது பச்சையாறு , மணிமுத்தாறு , சிற்றாறு , காரையாறு , சேர்வலாறு , கடனாநதி என்று பல கிளை ஆறுகளாகப் பிரிந்து திருநெல்வேலியை நீர்வளம் மிக்க மாவட்டமாகச் செய்கிறது.
திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையான தெரிந்து தெளிவோம் முற்காலத்தில் திருநெல்வேலிக்கு வேணுவனம் என்னும் பெயரும் இருந்துள்ளது. மூங்கில்காடு என்பது அதன் பொருளாகும். மூங்கில் நெல் மிகுதியாக விளைந்தமையால் அப்பகுதிக்கு நெல்வேலி என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கருதுவர். பங்கு வகிப்பது உழவுத்தொழில். தாமிரபரணி ஆற்றின் மூலம் இங்கு உழவுத்தொழில் நடைபெறுகின்றது. இங்குக் குளத்துப் பாசனமும் கிணற்றுப் பாசனமும்கூடப் பயன்பாட்டில் உள்ளன. இருபருவங்களில் நெல் பயிரிடப்படுகின்றது. மானாவாரிப் பயிர்களாகச்
சிறுதானியங்கள் , எண்ணெய்வித்துகள் , காய்கனிகள் , பருத்தி , பயறுவகைகள் போன்றன பயிரிடப்படுகின்றன. இராதாபுரம் , நாங்குநேரி , அம்பாசமுத்திரம் , தென்காசி போன்ற பகுதிகளில் பெருமளவில் வாழை பயிரிடப்படுகின்றது. இங்கு விளையும் வாழைத்தார்கள் தமிழ்நாடு மட்டுமன்றிக் கர்நாடகம் , போன்ற கேரளம் மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் நெல்லை மாவட்டமே முதலிடம் வகிக்கின்றது. கடலோர மற்றும் உள்நாட்டு மீன்பிடித் தொழிலும் இம்மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. பிற தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில்
கொற்கை என்னும் துறைமுகம் இருந்தது. இங்கு முத்துக்குளித்தல் சிறப்பாக நடைபெற்றதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. கொற்கையில் விளைந்த பாண்டி நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாக விளங்கியது. முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை ( நற்றிணை 23 : 6 ) தெரிந்து தெளிவோம் ருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஆதிச்சநல்லூர் என்னும் இடத்தில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வில் இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கப் பழந்தமிழர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழரின் தொன்மைக்கும் நாகரிகச் சிறப்புக்கும் சான்றாக
விளங்கும் தொல்பொருள்கள் இங்குக் கிடைத்துள்ளன. இவ்வூர் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. கொற்கையில் பெருந்துறை முத்து ( அகம் 27 : 9 ) என்று சங்க இலக்கியங்கள் கொற்கையின் முத்துகளைக் கூறுகின்றன. கிரேக்க , உரோமாபுரி நாடுகளைச் சேர்ந்தவர்களான யவனர்கள் இந்த முத்துகளை விரும்பி வாங்கிச் சென்றனர். பொருநை எனப்படும் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நெல்லை மாநகரின் அமைப்பு சிறப்பானது. நகரின் நடுவே நெல்லையப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. கோவிலைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் மாட வீதிகள் அமைந்துள்ளன. அவற்றைச்
சுற்றித் தேரோடும் வீதிகள் அழகுற அமைந்துள்ளன. இங்குத் திங்கள்தோறும் திருவிழா நடைபெறும் என்பதை , திங்கள் நாள்விழா மல்கு திருநெல் வேலியுறை செல்வர் தாமே என்னும் திருஞானசம்பந்தர் பாடல் அடிகளால் அறியலாம். நெல்லை மாநகரில் உள்ள தெருக்கள் பல அதன் பழமைக்குச் சான்றாக உள்ளன. காவற்புரைத் தெரு என்று ஒரு தெரு உள்ளது. காவற்புரை என்றால் சிறைச்சாலை. அரசரால் தண்டிக்கப்பட்டவர்கள் இங்குச் சிறை வைக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது. மேல வீதியை அடுத்துக் கூழைக்கடைத் தெரு உள்ளது. கூலம் என்பது தானியத்தைக் குறிக்கும். கூலக்கடைத்தெரு
என்பதே மருவிக் கூழைக்கடைத் தெரு என வழங்கப்படுகிறது. அக்கசாலை என்பது அணிகலன்களும் பொற்காசுகளும் உருவாக்கும் இடம். முற்காலத்தில் பொன் நாணயங்கள் உருவாக்கும் பணியாளர்கள் வாழ்ந்த பகுதி அக்கசாலைத் தெரு என்னும் பெயரில் அமைந்துள்ளது. தெரிந்து தெளிவோம் தாமிரபரணி ஆற்றின் மேற்குக் கரையில் திருநெல்வேலியும் கிழக்குக் கரையில் பாளையங்கோட்டையும் அமைந்துள்ளன. இவ்விரு நகரங்களும் இரட்டை நகரங்கள் என அழைக்கப்படுகின்றன. பாளையங்கோட்டையில் அதிக அளவில் கல்வி நிலையங்கள் இருப்பதால் அந்நகரைத் ஆக்ஸ்போர்டு என்பர். தென்னிந்தியாவின் நெல்லை
நகரின் மேற்கே பேட்டை என்னும் ஊர் உள்ளது. வணிகம் நடைபெறும் பகுதியைப் பேட்டை என வழங்குதல் பண்டைய மரபு. இப்பகுதி முன்பு பெருவணிகம் நடைபெற்ற இடமாக இருந்திருக்க வேண்டும். பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனை நெல்லை நகர மக்கள் எதிர்கொண்டு வரவேற்ற இடம் பாண்டியபுரம் எனவும் அவன் தேவியாகிய மங்கையர்க்கரசியை மகளிர் எதிர்கொண்டு வரவேற்ற இடம் திருமங்கை நகர் என்றும் வழங்கப்படுகின்றன. நாயக்க மன்னரின் தளவாயாக விளங்கிய அரியநாதரின் வழித் தோன்றல் வீரராகவர். அவரது பெயரில் அமைந்த ஊர் வீரராகவபுரம் எனவும் , அவரது துணைவியார் மீனாட்சி
அம்மையார் பெயரில் உள்ள ஊர் மீனாட்சிபுரம் எனவும் வழங்கப்பட்டு வருகின்றன. சேரன்மாதேவி , கங்கைகொண்டான் , திருமலையப்பபுரம் , வீரபாண்டியப்பட்டினம் , குலசேகரன்பட்டினம் போன்ற ஊர்கள் பண்டைய வரலாற்றை நினைவூட்டுவனவாக உள்ளன. பாளையங்கோட்டை , உக்கிரன்கோட்டை , செங்கோட்டை என்னும் இம்மாவட்டத்தில் கோட்டைகள் பல இருந்தமைக்குச் சான்றாக விளங்குகின்றன. அகத்தியர் பொதிகை மலையில் வாழ்ந்தார் என்பர். சங்கப் புலவரான மாறோக்கத்து நப்பசலையார் , நம்மாழ்வார் , பெரியாழ்வார் , குமரகுருபரர் , திரிகூடராசப்பக் கவிராயர் , கவிராசப் பண்டிதர்
ஆகியோர் திருநெல்வேலிச் சீமையில் பிறந்து தமிழுக்குச் செழுமை சேர்த்துள்ளனர். அயல்நாட்டு அறிஞர்களான ஜி.யு.போப் , கால்டுவெல் , வீரமாமுனிவர் போன்றோரையும் தமிழின்பால் ஈர்த்த பெருமைக்கு உரியது திருநெல்வேலி. இத்தகைய சிறப்புமிக்க திருநெல்வேலிக்கு உன்னை அன்போடு அழைக்கின்றேன். பெயர்கள் இயல் ஏழு நுழையும்முன் விரிவானம் திருநெல்வேலிச் சீமையும் கவிகளும் நல்ல பாடல்களைப் படித்துச் சுவைப்பது உள்ளத்திற்கு மகிழ்ச்சி அளிக்கும். அதுபோலவே சிறந்த புலவர்களைப் பற்றி அறிந்து கொள்வதும் நமக்கு மகிழ்ச்சி தரும். தமிழகத்தின் பல்வேறு
பகுதிகளிலும் சிறந்த புலவர்கள் பலர் உருவாகியுள்ளனர். அவர்களுள் திருநெல்வேலிப் பகுதியைச் சேர்ந்த புலவர்களைப் பற்றி அறிந்து கொள்வோம். ஒரு நாட்டில் காவியம் உண்டாகிக் கொண்டே இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது அவ்வளவு சரியல்ல. பொதுவாக , ஆயிரம் வருஷத்துக்கு ஒரு தடவை கவிஞன் பிறக்கிறான் என்று சொல்லுவார்கள். ஒருவகையாக அஃது உண்மைதான். கவி அவ்வளவு அருமை. ஆனால் , கவியை அனுபவிக்கிற திறமை அவ்வளவு அபூர்வமான விஷயம் அல்ல ; ஆண் , பெண் எல்லோருமே அனுபவிக்கிற விஷயந்தான் அது. வானத்தில் விளைந்த சுடர்கள்போல இயற்கையில் விளைந்த