text
stringlengths
0
6.49k
சேவை-சார் கட்டமைப்பு (SOA ) கோட்பாடுகளைக் கொண்டும் வலைத்தள சேவைகளைச் செயல்படுத்தலாம், தகவல் தொடர்புக்கு இங்கு தேவையாக இருப்பது ஒரு செய்தியே தவிர ஒரு செயல்முறையல்ல. இதனைச் "செய்தி-சார்" சேவைகள் என்று அழைப்பர்.
பல முக்கியத் தொழிற்சாலை நிபுணர்கள் மற்றும் மென்பொருள் விற்பனையாளர்களால் SOA வலைத்தள சேவைகள் ஆதரிக்கப்படுகின்றன. RPC வலைத்தள சேவைகள் போல் அல்லாது இதில் உள்ள தளர்வான இணைப்பு மிகுதியாக விரும்பப்படுகின்றது, ஏனேனில் WSDL தரும் ஒப்பந்தத்தின் மையமாக விரும்பத்தக்க அடிப்படைச் செயலாக்க விவரங்கள் உள்ளன.
மென்பொருள்பாக ஆராய்ச்சியாளர்கள் நிறுவனங்களின் சேவை பாட்டைகளைப் பயன்படுத்தி செய்தி-சார் செய்முறை மற்றும் வலைத்தள சேவைகளை இணைத்து நிகழ்ச்சி-செலுத்தும் SOAவை உருவாக்குகின்றனர். இந்த திறந்த வெளி மூலத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு ESB ம்யூல் மற்றொன்று திறந்த ESB ஆகும்.
முடிவாக குறிப்பு நிலை இடமாற்றம் (REST) என்பது HTTP ஐப் பயன்படுத்தும் கட்டமைப்புகள் பற்றி அல்லது அது போல் இருக்கும் நெறிமுறைகளைக் கொண்டு புகழ்பெற்ற, தரமான செயல்பாடுகளைக் (HTTP க்கான GET, POST, PUT, DELETE போன்றவை) கட்டுப்படுத்தும் இடைமுகத்தை விவரிக்க முயற்சிக்கின்றது. இவை செய்திகளுக்கோ அல்லது செயல்முறைகளுக்கோ மாறான முழுமையான வள ஆதாரங்களுடன் தொடர்பு கொள்வதை மையமாகக் கொண்டுள்ளன.
HTTP மீதான SOAP செய்திகளை விவரிப்பதற்கு REST ஐ (அவற்றில் ஒன்று 'RESTful') அடிப்படையாகக் கொண்ட ஓர் கட்டமைப்பில் WSDL ஐப் பயன்படுத்த முடியும். இதன் செயல்திறன்களின் விவரிப்புகளில் இவை முழுமையாக SOAP மூலமாகவே நடைமுறைபடுத்தப்படுகிறது (எ.கா.WS-இடமாற்றம்) அல்லது SOAP இன் பயன்பாடு இல்லாமலும் இதனை உருவாக்க முடியும்.
WSDL வகைமை 2.0, அனைத்து HTTP கோரிக்கை செயல்முறைகளை இணைப்பதற்கான ஆதரவை வழங்குகின்றது. (GET மட்டுமல்லாமல் POST இன் வகைமை 1.1 இலும் உள்ளது) இதனால் REST சார்ந்த வலைத்தள சேவைகளை முழுமையாக நடைமுறைபடுத்த முடிகின்றது.
இருப்பினும் கூட, மென்பொருள் மேம்பாட்டு பொருள்களின் விவரக்கூற்றுக்கான ஆதரவு இன்றும் மிகக்குறைவாகவே உள்ளது, இது போன்ற கருவிகள் பெரும்பாலும் WSDL 1.1 இல் மட்டுமே அமைந்துள்ளன.
வலைத்தள சேவைகளை இருமுறைகளில் எழுத முடியும்:
REST சார்ந்த வலைத்தள சேவைகள் அல்லாதவை மிகவும் சிக்கலானவை என்று விமர்ச்சிக்கப்படுகின்றது மேலும் இவை பெரிய மென்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களைச் சார்ந்து வருவதால் திறந்த வெளி மூலத்தைக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படுவது இல்லை என்றும் குற்றம் சாட்டப்படுகின்றது. அபசே ஆக்சிஸ் மற்றும் அபசே CXF போன்றவை திறந்த வெளி செயலாக்கங்கள் ஆகும்.
REST வலைத்தளச் சேவை உருவாக்குநர்களின் ஒரே கவலை என்னவென்றால், தொலை இடைபறிமாற்றத்திற்கான புதிய இடைமுகங்களை SOAP WS கருவிகள் எளிதாக விவரிக்கின்றன, இதனால் ஜாவா, C# அல்லது VB குறியீடு ஆகியவற்றிலிருந்து WSDL மற்றும் சேவை API ஆகியவற்றை விரிவாக்க அடிக்கடி தன்னிலை ஆய்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதன்மூலம் இயந்திரங்கள் எளிதில் சீர்குலைவது மிகுதியாகலாம் என்ற வாதம் எழுகின்றது. வழங்கியில் ஒரு சிறிய மாற்றம் இருந்தாலும் (SOAP அடுக்கை மேம்படுத்துவது) வேறு WSDL ஐ ஈடுபடுத்தி வித்தியாசமான சேவை நெறிமுறைகளைக் கையாள வேண்டிய நிலை உள்ளது. WSDL மற்றும் XSD சேவை விவரங்கள் SOAP இன் தனிப்பட்ட வகையிலான இறுதி முடிவுடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த முடிவுப்பகுதி மாற்றமடைவதால் இது உடைந்து போக நேரிடுகின்றது. இதுமட்டுமின்றி பயன்படுத்துவோரின் SOAP அடுக்கும் மேம்படுத்தி உருவாக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. நன்கு அமைக்கப்பட்டிருக்கும் SOAP முடிவுப்பகுதிகள் (கையால் எழுதப்பட்ட XSD மற்றும் WSDL) இதனால் பாதிப்படைவதில்லை என்றாலும் இதிலும் நிலவக்கூடிய சிக்கல் என்னவென்றால், ஒவ்வொரு தனிப்பட்ட சேவையும் ஒவ்வொரு தனிப்பட்ட பயனாளருக்கு கண்டிப்பாகத் தேவைப்படுவதாகும்.
வலைத்தள சேவைகளில் XML ஐ செய்தி முறைமையாகவும் அவற்றின் சூழல் மற்றும் போக்குவரத்தில் SOAP, HTTP ஆகியவற்றைப் பயன்படுத்தப்படுவது அதன் செயலாக்கம் குறித்த கவலையை எழுப்புகின்றது. இருப்பினும் VTD-XML போன்றவற்றில் XML சார்ந்த செயலாக்கப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு XML வரிசைமுறை நுணுக்கம்/குறியீடு தொழில்நுட்பங்கள் ஆகியவை உள்ளன.
வலைத்தளச் சேவைகளில் ஏற்படும் சிக்கல்களுக்கு வேறு சிலவழிகள் மூலமும் தீர்வு காணலாம், அவ்வழிகள் பழமை மற்றும் நவீன முறையிலிருக்கலாம். RMI அநேக மென்பொருள் பாகம் சார்ந்த அமைப்புகளில் பரவலான பயன்பாடுடைய ஒன்றாக உள்ளது. மிகவும் நவீனமாக இருக்கும் CORBA மற்றும் DCOM போன்றவை பகிர்ந்தளிக்கப்பட்ட பொருள்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன, சிலநேரங்களில் வலைத்தளச் சேவைகளின் செயலாக்கங்களும் அவற்றைப் போலவே செயல்பட முயற்சிக்கின்றன.
மேலும் பல அடிப்படை முயற்சிகளில் RPCக்குப் பொருந்தும் ஒன்றாகவும் SOAPக்கு முன்னோடியுமான XML-RPCயும் SOAP இல்லாமல் பயன்படுத்தக்கூடிய HTTPயின் பல்வேறு முறைகளும் உள்ளடங்கும்.
</doc>
<doc id="73736" url="https://ta.wikipedia.org/wiki?curid=73736" title="பெரும் தலைநெடுஞ்சாலை">
பெரும் தலைநெடுஞ்சாலை
பெரும் தலைநெடுஞ்சாலை (Grand Trunk Road , GT Road) தெற்கு ஆசியாவின் மிகத் தொன்மையான மற்றும் நீளமான நெடுஞ்சாலையை சேர் சா சூரி அமைத்தர் . பல நூற்றாண்டுகளாக இந்தியத் துணைக்கண்டத்தின் கிழக்கு மேற்கு பகுதிகளை இணைத்து வந்துள்ளது. இது கிழக்கே வங்காளத்திலிருந்து இந்தியாவின் வடக்கில் சென்று பாக்கிஸ்தானின் பெஷாவரில் முடிகிறது.
இன்று 2500 கி.மீ தொலைவுள்ள ஒரே தொடர்ந்த சாலையாக ஜி.டி சாலை உள்ளது. பங்களாதேசத்தின் நாராயண்கஞ்ச் மாவட்ட சோனார்காவில் துவங்கி இந்தியாவில் கொல்கத்தா,பர்த்மான்,துர்காப்பூர், அசன்சால்,தன்பாத், ஔரங்காபாத், வாரணாசி, அலகாபாத், கான்பூர், அலிகர்,மீரட்,தில்லி,கர்னால்,அம்பாலா,லூதியானா,ஜலந்தர்,அமிர்தசரஸ் நகரங்களைக் கடந்து பாக்கிஸ்தானில் லாகூர்,குஜ்ரன்வாலா,குஜ்ரத்,ஜீலம், ராவல்பிண்டி,அட்டோக் மாவட்டம்,நோசேரா,பெஷாவர் வழியே லான்டி கோடால் என்னுமிடத்தில் முடிகிறது.
இந்தியாவிற்குள் கொல்கத்தாவிற்கும் கான்பூருக்கும் இடையே இது தேசிய நெடுஞ்சாலை எண் 2 ஆகவும், கான்பூர்- தில்லி இடையே தே.நெ 91 ஆகவும் தில்லி - வாகா இடையே தே.நெ 1 ஆகவும் உள்ளது. தில்லிக்கும் முசாபர்நகரிடையே தேசிய நெடுஞ்சாலை 58 வடக்கே டேராடூனுகுச் செல்கிறது. பாக்கிஸ்தானில் இதன் பெரும்பகுதி தே.நெ 5 ஆக உள்ளது.
மௌரியர்களின் காலத்தில் இந்தியாவின் மேற்கு ஆசியா மற்றும் யவன உலகுடனான தரைவழி வணிகப் பரிமாற்றம் வடமேற்கு நகரமான தக்சசீலா (தற்போது பாக்கிஸ்தானில் உள்ளது) வழியே நடைபெற்றது அண்மைய ஆய்வுகளின்படிதெரிய வந்துள்ளது.தக்சசீலா மௌரியப் பேரரசின் பிற பகுதிகளுடன் நன்றாக பிணைக்கப்பட்டிருந்தது. தக்சசீலாவிலிருந்து பாடலிபுத்திரம் (தற்போதைய பட்னா)வரை நெடுஞ்சாலையை அமைத்தனர். மூன்றாம் நூற்றாண்டில் இச்சாலை அமைக்கப்பட்டது. இதன் பராமரிப்பைப் பேண பல அதிகாரிகளை நியமித்த சந்திரகுப்த மௌரியரைப் பற்றி அவரது அரசவையில் 15 ஆண்டுகள் கழித்த கிரேக்க தூதர் மெகஸ்தனீசு மூலம் அறிகிறோம்.
16ஆம் நூற்றாண்டில் கங்கைச் சமவெளியில் புதிதாக ஓர் நெடுஞ்சாலையை அப்போது வட இந்தியா முழுமையும் ஆண்டுவந்த பஷ்டூன் அரசர் ஷேர் ஷா சூரியால் கட்டமைக்கப்பட்டது. இராணுவ, நிர்வாக நலன்களுக்காக தனது பேரரசின் பல பகுதிகளை இவ்வாறு இணைக்க விரும்பினார். இன்றிருக்கும் பெரும் தலைநெடுஞ்சாலையின் முன்னோடியாக கருதப்படும் இச்சாலை சதக்-இ-ஆசம் (இராச பாட்டை) என அழைக்கப்படலாயிற்று.
இச்சாலை துவக்கத்தில் அவரது தலைநகரான ஆக்ராவையும் அவரது பிறந்த ஊரான சசாராமையும் இணைக்கப் போடப்பட்டது. இது மேலும் விரிவுபடுத்தப்பட்டு மேற்கே மூல்தான் வரையும் கிழக்கே (தற்போது பங்களாதேசத்தில் உள்ள) சோனார்காவ் வரையும் நீட்டிக்கப்பட்டது. அவரது காலத்திற்கு பிறகு அவரது பரம்பரை முடிந்தபோதும் இச்சாலை அவரது பங்களிப்பை நினைவுபடுத்திக் கொண்டு பயனாகி வந்தது. பின்னர் வந்த முகலாய மன்னர்கள் இந்தச் சாலையை மேற்கில் நீட்டித்தனர். ஒரு நேரத்தில் கைபர் கணவாயைக் கடந்து ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் வரை இந்த சாலை இருந்தது. பின்னர் பிரித்தானிய ஆட்சியாளர்கள் இந்தச் சாலையை மேலும் தரமுயர்த்தினர். கொல்கத்தாவிலிருந்து பெஷாவர் வரை சீரமைக்கப்பட்டது. அவர்கள் காலத்தில் இது கிராண்ட் டிரங்க் ரோடு என்று மறுபெயரிடப்பட்டது.
இந்த சாலையின் இருபுறமும் மரங்கள் நடப்பட்டன. இடைவழி உணவகங்களும் தங்குவிடுதிகளும் ஏற்படுத்தப்பட்டன. மைல்கற்கள் நடப்பட்டன. இன்றும் சில பழைய கற்களை தில்லி - அம்பாலா நெடுஞ்சாலையில் காணலாம். இதனால் வணிகம், பயணம் மற்றும் அஞ்சல் சேவைகள் பயனடைந்தன. தவிர, மேற்கிலிருந்து முகலாயர்/ஆப்கானியர் துருப்பு நடமாட்டத்திற்கும் பிரித்தானியரின் துருப்புகள் வங்காளத்திலிருந்து கங்கைச்சமவெளி அடையவும் உதவியுள்ளது.
இன்றும் இந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் இந்தச்சாலை ஓர் முக்கிய தடமாக இருந்து வருகிறது. இந்தியாவில் தங்க நாற்கரச்சாலை திட்டத்தின் பகுதியாக உள்ளது. "உலகில் வேறெங்கும் இல்லாதவாறு பெரும் தலைநெடுஞ்சாலை வாழ்வின் நதியாக" நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக விளங்கி வருகிறது.
</doc>
<doc id="73741" url="https://ta.wikipedia.org/wiki?curid=73741" title="சேவா இனக்குழு">
சேவா இனக்குழு
சேவா இனக்குழு நடு/தெற்கு ஆப்பிரிக்கப் பகுதியைச் சேர்ந்த ஒரு மக்கள் இனம். இவர்கள் தம்மைச் சூழவுள்ள இனக்குழுக்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். சிறப்பாக, தும்புக்கா இனக்குழுவுடனும், நிசெங்கா இனக்குழுவுடனும் இவர்களுக்கு நெருங்கிய உறவு உண்டு. வரலாற்று அடிப்படையில் பெம்பா இனக்குழுவினருடனும் இவர்களுக்கு உறவுண்டு. இவ்விரு இனத்தவரினதும் மூலம் காங்கோ சனநாயகக் குடியரசு ஆகும். நிசெங்கா, தும்புக்கா ஆகிய இன மக்களுடையத்தைப் போலவே சேவா இனக்குழுவினருடைய நிலப் பகுதிகளில் பெரும்பகுதி நிகோனி இனத்தவரின் செல்வாக்கின் கீழ் உள்ளது. "சேவா" என்னும் பெயருக்கு மாற்றாக "நியஞ்சா" என்னும் பெயரும் இவ்வினக் குழுவினருக்கு வழங்கி வருகிறது. இவர்கள் சிச்சேவா என்னும் மொழியைப் பேசுகிறார்கள். தும்புக்கா, செங்கா, நிசெங்கா மாங்காஞ்சா ஆகிய இன மக்களைப் போலவே சேவா இனக்குழுவினரும் பண்டைக்கால மராவி (மலாவி) மக்களில் எஞ்சிய பிரிவினர் ஆவர்.
சேவா இனத்தவரில் இரண்டு பெரிய குலங்கள் உள்ளன. அவை பிகிரி, பண்டா என்பன. பிகிரி குலத்தவர் அரசர்களுடனும், உயர் குடியினருடனும் தொடர்பு கொண்டவர்கள். "பண்டா" குலம் நோய் தீர்ப்போர், மத குருக்கள் போன்றோரை உள்ளடக்கியது.
</doc>
<doc id="73742" url="https://ta.wikipedia.org/wiki?curid=73742" title="சோக்வே இனக்குழு">
சோக்வே இனக்குழு
சோக்வே இனக்குழு நடு ஆப்பிரிக்காவில் வாழும் ஒரு இனக்குழு ஆகும். இவர்கள் முபுண்டு, முபுட்டி பிக்மிக்களின் வழிவந்தவர்களாகக் கருதப்படுகின்றது. பெரிய அளவிலான சோக்வே குழுக்கள் தற்போது அங்கோலா, சாம்பியா, காங்கோ சனநாயகக் குடியரசு ஆகிய நாடுகளில் வாழுகின்றனர். இவர்கள் பாண்டு குடும்ப மொழிகளுள் ஒன்றாகிய சோக்வே என்னும் மொழியைப் பேசுகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் தாம் வாழும் நாடுகளின் அலுவல் மொழிகளையும் பேச வல்லவர்களாக உள்ளனர். இதன்படி சாம்பியாவில் வாழும் சோக்வேக்களில் பலர் ஆங்கில மொழியையும், காங்கோ சனநாயகக் குடியரசில் வாழ்வோர் பிரெஞ்சு மொழியையும், அங்கோலாவில் இருப்போர் போத்துக்கேய மொழியையும் முதல் அல்லது இரண்டாம் மொழியாகப் பயன்படுத்துகின்றனர்.
</doc>
<doc id="73743" url="https://ta.wikipedia.org/wiki?curid=73743" title="பெரியபட்டினம்">
பெரியபட்டினம்
பெரிய‌ப‌ட்டின‌ம் ("Periyapattinam"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில், இராமநாதபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.
இராமநாதபுரம் நகருக்கு தென்கிழக்கே இருப‌து கி.மீ தொலைவில் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ளது இந்த கிராமம். இப்னு பதூதா, மார்க்கோ போலோ போன்றவர்கள் வந்திறங்கிய வர‌லாற்று சிறப்பு மிக்க கிழக்குக் கடற்கரை துறைமுக நகரங்களில் ஒன்றாக திக‌ழ்ந்துள்ள‌து.
பத்தாம் நூற்றாண்டில் பராக்கிரம பட்டினம்
என்றும், பன்னிரண்டாம் நூற்றாண்டில் பவித்திர மாணிக்க பட்டினம் என்றும்,பதினான்காம் நூற்றாண்டில் சீனர்களால் டாய்-இ-ச்சிஹ்-லச் (தா-பத்தன்) என்றும் இன்று பெரிய‌ப‌ட்டின‌ம் என்றும் அழைக்க‌ப்ப‌டுகிற‌து. பல்லாயிரம் முஸ்லிம்களை உள்ளடக்கியது. இங்கு க‌ட‌ல்தொழில் முக்கிய‌த்தொழிலாக‌ இருக்கிற‌து.
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,
குடும்பங்களின் எண்ணிக்கை : 1777
பெரியபட்டினம் மேல்நிலை பள்ளி. இதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு அடிப்படை கல்வி வசதிகள் உள்ள பள்ளி ஒன்றாகும்.
இளைஞர்கள் இப்போதெல்லாம் சென்னை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களுக்குச் சென்று கல்வி கற்கிறார்கள்.
பிரபலமான பள்ளிகள் சில
பிரபலமான கல்லூரி சில
வெற்றிலை (Betel)
இராமநாதபுரம் மாவட்டத்திலேயே எங்கள் ஊர் வெற்றிலை (Betel) தான் சிறந்தது.
மாவட்டத்திலேயே அதிகமாக பயிர்செய்யபடுகிறதும் இங்குதான். பெரியபட்டினம் வெற்றிலை
என்றால் நல்ல இளம் பச்சை நிறைத்தில் குறைந்த காரமுடன் நல்லா சிவக்கும் தன்மை கொண்டது.
இங்கு பயிர்செய்யபடும் வெற்றிலை இதற மாவட்டம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
வெற்றிலைப் பயிருக்கு விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டி பதியன் போட்டுத்தான்
பயிர் செய்கிறார்கள். “கரும் பச்சை என்பது ஆண் வெற்றிலை””இளம் பச்சை என்பது பெண் வெற்றிலை”
என்று சொல்வார்கள். ஆண்டாண்டு காலமாக பயிரிட்டு வந்த ”வெற்றிலை கொடிக்கால்” முன்பு மாதிரி