id
stringlengths
9
9
context
stringlengths
176
49.8k
question
stringlengths
19
121
answer_text
stringlengths
1
286
answer_start
int64
0
41k
language
stringclasses
2 values
b9abcb736
இந்தியாவில் 29 மாநிலங்களும், டெல்லி தேசிய தலைநகரப் பகுதி உள்ளிட்ட 7 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும் உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பாண்டிச்சேரி, டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் நடுவண் அரசினால் நியமிக்கப்படும் ஆளுனர்களைக் கொண்ட, குடியரசுத்தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும். 1956 ஆம் ஆண்டில், மாநிலங்கள் மீளமைப்புச் சட்டத்தின் கீழ் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதன் பின்னர், வட இந்தியப் பகுதிகளில் சில புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. மாநிலங்களும், ஒன்றியப் பகுதிகளும், மாவட்டங்கள் என்ற சிறிய நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆளுமை பகுதிகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல் பிரதேசம் அசாம் பீகார் சத்தீஸ்கர் கோவா குஜராத் அரியானா இமாசலப் பிரதேசம் ஜம்மு காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகம் கேரளம் மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரம் மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ் நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரப் பிரதேசம் உத்தரகண்ட் மேற்கு வங்காளம் யூனியன் பிரதேசங்கள் என்றழைக்கப்படும் ஒன்றிய பகுதிகள்: அந்தமான் நிக்கோபார் தீவுகள் சண்டிகர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தாமன், தியு லட்சத்தீவுகள் தில்லி புதுச்சேரி மாநிலங்களும் அவற்றின் தலைநகரங்களும் இந்திய மாநிலங்களின் உருவாக்கம் தற்போதைய இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், பூட்டான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியிருந்த பிரித்தானிய இந்தியா இரண்டு விதமான துணை அரசியல் அலகுகளைக் கொண்டிருந்தது. மாகாணங்கள், வைஸ்ராயினால் நியமிக்கப்பட்ட, ஆளுனர் அல்லது சிறப்பு ஆணையர் தரத்திலுள்ள பிரித்தானிய அதிகாரிகளால் நேரடியாக ஆளப்பட்டன. சமஸ்தானங்கள், பிரித்தானியரின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட உள்ளூர் பரம்பரை ஆட்சியாளர்களால் ஆளப்பட்டு வந்தன. பிரித்தானிய இந்தியா 15 மாகாணங்களைக் கொண்டிருந்தது: அஜ்மேர்-மேர்வாரா, அசாம், பலுச்சிஸ்தான், வங்காளம், பிகார், பம்பாய், மத்திய மாகாணங்களும், பெராரும், கூர்க், டெல்லி, மதராசு, வடமேற்கு எல்லை, ஒரிசா, பஞ்சாப், சிந்து, மற்றும் ஐக்கிய மாகாணங்கள். பிரித்தானிய இந்தியாவில், பல்வேறு அளவுகளில் பல சமஸ்தானங்களும் இருந்தன. இவற்றுள், ஒரு கோடிக்கு மேல் மக்கள்தொகையைக் கொண்ட ஐதராபாத் தொடக்கம், மிகச் சிறிய சமஸ்தானங்கள் வரை அடங்கி இருந்தன. இவற்றை விட வேறு இரு ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவில் சில நிலப்பகுதிகளை ஆண்டு வந்தன. போத்துக்கீச இந்தியா, கோவா, தமனும் தியுவும், தட்ராவும் நாகர் ஹவேலியும் ஆகிய கரையோரப் நிலப்பகுதிகளையும், பிரெஞ்சு இந்தியா, சண்டர்நகர், ஏனாம், பாண்டிச்சேரி, காரைக்கால், மாகே ஆகிய ஐந்து நிலப்பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தன. 1947ல் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது, மேற்படி மாகாணங்களும், சமஸ்தானங்களும், இரு நாடுகளுக்கும் இடையே பங்கிடப்பட்டன. பஞ்சாப், வங்காளம் ஆகிய இரண்டும் மட்டும், சமய அடிப்படையில் பிரித்து வழங்கப்பட்டன. ஐதராபாத்தின் இசுலாமிய ஆட்சியாளர் சுதந்திரமாக இருக்க முயன்றார் என்றாலும், இந்தியப் படை தலையிட்டு அதனை இந்தியாவுடன் இணைத்தது. ஜம்மு காஷ்மீருக்கு இரு நாடுகளுமே உரிமை கோரின. பெரும்பான்மை மக்கள் இசுலாமியர்களாக இருந்தார்கள். இந்துவாக இருந்த ஜம்மு காஷ்மீரின் ஆட்சியாளர் நாட்டை இந்தியாவுடன் இணைத்தார். 1950 ல், இந்திய அரசியல் சட்டம் நடப்புக்கு வந்ததுடன், பலவகையான மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. முன்னர் மாகாணங்களாயிருந்த, பிரிவு A மாநிலங்கள், ஆளுனராலும், தெரிவுசெய்யப்பட்ட சட்டசபையாலும் ஆளப்பட்டன. இந்தப் பிரிவில் அடங்கிய ஒன்பது மாநிலங்களாவன: அசாம், மேற்கு வங்காளம், பீகார், பம்பாய், மத்தியப் பிரதேசம் (முன்னர் மத்திய மாகாணங்களும், பெராரும்), மதராஸ், ஒரிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் (முன்னாள் ஐக்கிய மாகாணங்கள்). சென்னை மாகாணத்திலிருந்து தெலுங்கு பேசும் பகுதிகளை பிரித்து தனியாக ஆந்திர மாநிலம் உருவாக்கப்படவேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையின் ஒருபகுதியாக பொட்டி சிறீராமலு என்பவர் 58 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க 1953 அக்டோபர் 01 ஆம் நாள் ஆந்திரம் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. அதே ஆண்டில் பாசல் அலி என்பவரைத் தலைவராகவும் பணிக்கர், குன்சுரு போன்ற உறுப்பினர்களைக் கொண்ட மாநில மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் மொழியை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களை சீரமைக்க அறிவுறுத்தியது. இந்தக் குழுவின் பரிந்துரைகளின் பேரில் 1956 ஆம் ஆண்டில் மாநில சீரமைப்புச் சட்டம் நிறைவேற்றப் பட்டது. இந்தியா 14 மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. இதே அடிப்படையில் மகாராஷ்டிராவில் இருந்து குஜராத் (1960) பிரிக்கப்பட்டது. பின்னர் வந்த ஆண்டுகளில் மேலும் பல மாநிலங்கள் உருவாயின. 1963ல் நாகாலாந்து, 1966ல் அரியானா, 1971ல் இமாச்சலப் பிரதேசம், 1972ல் திரிபுரா, மேகலா மற்றும் மணிப்பூர், 1975ல் சிக்கிம், 1987ல் மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 2000 ஆவது ஆண்டில் சத்தீஸ்கர், உத்திராஞ்சல் மற்றும் ஜார்கண்ட் என மேலும் மூன்று மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 2014 ஆவது ஆண்டில் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலம் இந்தியாவின் 29 ஆவது மாநிலமாகும். இவற்றையும் பார்க்கவும் சனத்தொகை அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல் வெளியிணைப்புகள் பகுப்பு:இந்திய ஆட்சிப் பிரிவுகள் * பகுப்பு:இந்தியப் பட்டியல்கள்
இந்தியா நாட்டில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?
29
12
tamil
02221d130
வேதித் தனிமம் (Chemical element: இலங்கை வழக்கு: மூலகம்) என்பது அணுக்கருவில் ஒரே எண்ணிக்கையில் புரோட்டான்களைப் பெற்றிருக்கும் ஒரே வகையான அணுக்களைக் குறிக்கும் [1]. 118 தனிமங்கள் இதுவரை அடையாளம் கானப்பட்டுள்ளன. இவற்றில் 94 தனிமங்கள் இயற்கையில் தோன்றுவனவாகும் எஞ்சியிருக்கும் 24 தனிமங்களும் செயற்கை முறையில் தயாரிக்கப்படுவனவாகவும் இருக்கின்றன. 80 தனிமங்கள் குறைந்த பட்சமாக ஒரு ஐசோடோப்பையாவது பெற்றுள்ளன. 38 தனிமங்களின் உட்கருக்கள் கதிரியக்க உட்கருக்களாக உள்ளன. ஐதரசன், ஆக்சிசன், நைட்ரசன், இரும்பு, கந்தகம், பாசுபரசு, தங்கம், பாதரசம், யுரேனியம் போன்றவை தனிமங்களுக்கு சில எடுத்துக்காட்டுகளாகும். புவியில் ஆக்சிசன் என்ற தனிமம் எங்கும் நிறைந்திருக்கும் தனிமமாகவும், இரும்பு என்ற தனிமம் நிறை அடிப்படையில் அதிகமாகக் காணப்படும் தனிமமாகவும் கருதப்படுகிறது. அண்டமும் அதில் அடங்கியுள்ள அனைத்தும் பருப்பொருட்களால் ஆனவையாகும். இப்பருப்பொருட்கள் யாவும் வேதிதனிமங்களால் உருவாக்கப்பட்டவையாகும். நாம் கண்களால் காணக்கூடிய சாதாரணமான பருப்பொருட்கள் பிரபஞ்சத்தில் உள்ள பருப்பொருட்களில் வெறும் 15% மட்டுமே உருவாக்குகின்றன என்று வானியல் ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன. எஞ்சியுள்ளவை கரும்பொருள் எனப்படுகிறது. இதன் பகுதிக்கூறுகள் இதுவரை அறியப்படவில்லை. ஆனால்; நிச்சயமாக அது வேதித்தனிமங்களால் ஆக்கப்படவில்லை என்று உறுதியாகக் கூறப்படுகிறது. ஐதர்சன், ஈலியம் என்ற இரண்டு இலேசானத் தனிமங்களும் பெருவெடிப்பில் பிரபஞ்சம் உருவானபோது தோன்றியவைகளாகும். இவை பிரபஞ்சத்தில் காணப்படும் மிகப்பொதுவான தனிமங்களாகும். அடுத்த தனிமங்களான இலித்தியம், பெரிலியம், போரான் மூன்றும் பெரும்பாலும் அண்டக்கதிர்வீச்சின் அணுக்கருத் தொகுப்பு வினையால் உருவானவையாகும். எனவே இவை கன உலோகங்களைக் காட்டிலும் அரிதாகக் கிடைக்கின்றன. விண்மீன்களுக்குள் நிகழும் அணுக்கரு இணைவு மூலம் 6 முதல் 26 வரை புரோட்டான்களைக் கொண்ட தனிமங்கள் உருவாகின்றன. ஆக்சிசன், சிலிக்கன், இரும்பு போன்ற தனிமங்கள் அதிக அளவில் காணப்படுவது இதன் பிரதிபலிப்பாகும். 26 புரோட்டான்களைவிட அதிகமாகக் கொண்ட தனிமங்கள் மீயொளிர் விண்மீன் வெடிப்பு மூலம் மீயொளிர் விண்மீன்களில் தோன்றியவை ஆகும். இவ்விண்மீன்கள் வெடித்துச் சிதறும் போது இத்தனிமங்கள் விண்ணில் சிதறி கோள்கள் உருவாகும்பொது அவற்ருக்குள் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது [2]. தனிமம் என்ற சொல்லின் பொருள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புரோட்டான்களைக் கொண்டவை எனப் பொருள் கொள்ளப்படுகிறது. அது அயனியா வேதியியல் முறையில் பிணைக்கப்பட்டுள்ளதா என்பதைப்பற்றி கவலை கொள்வதில்லை. மேலும் ஒரு தூய்மையான வேதிப்பொருள் ஒரே தனிமத்தால் ஆனதையும் தனிமம் என்ற சொல் குறிக்கிறது. உதாரணம் ஐதரசன் [1].தனிமம் என்பது ஒரு தொடக்கநிலை பொருள் என்ற புரிதலும் கூறப்படுகிறது. இப்பொருளை ஆங்கில வேதியியல் நூல்கள் அங்கீகரிக்கவில்லை. ஆனால் சில மொழிகள் அங்கீகரிக்கின்றன. ஓர் எளிய தனிமத்திற்கு பல புறவேற்றுமை வடிவங்கள் இருக்கலாம். வெவ்வேறு தனிமங்கள் வேதியியல் முறையில் இணைந்து வேதிச் சேர்மங்களாக உருவாகின்றன. இவ்வாறு இணையும் தனிமங்களின் அணுக்கள் வேதிப் பிணைப்புகளால் ஒன்றாகப் பிணைக்கப்படுகின்றன. ஒப்பீட்டளவில் மிகக் குறைவான எண்ணிக்கை தனிமங்களே தூய கனிமங்களாக தனித்துக் கிடைக்கின்றன. செப்பு, வெள்ளி கார்பன் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். மந்த வாயுக்களும் அரியவகை தனிமங்களும் பிற வேதிப்பொருட்களுடன் இனைந்த நிலையிலேயே கிடைக்கின்றன. இயற்கையில் தனித்துக் கிடைப்பதாகக் கூறப்படும் 32 தனிமங்களும் கூட கலவைகளாகவே கிடைக்கின்றன. ஆக்சிசன், இரும்பு, நிக்கல் போன்ற தனிமங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். கார்பன், கந்தகம், செப்பு மற்றும் தங்கம் போன்ற இயல்பான தனிமங்களை கண்டுபிடித்த பழங்கால மனித சமூகங்கள் இத்தனிமங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன. பின்னர் தோன்றிய புதிய நாகரீக மக்கள் கரியைப் பயன்படுத்தி தனிமங்களை தூய்மைப்படுத்தவும் பிரித்தெடுக்கவும் கற்றனர். இரசவாதிகளும் வேதியியலாளர்களும் பின்னர் பல தனிமங்களை அடையாளம் கண்டார்கள்; கிட்டத்தட்ட இயற்கையில் தோன்றும் அனைத்து தனிமங்களும் 1900 ஆம் ஆண்டுகளில் கண்டறியப்பட்டது. . தனிமங்களின் அணு எண் அதிகரிப்பின் படி அவை தனிம வரிசை அட்டவணையில் அடுக்கப்பட்டன. அவற்றின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் தொகுக்கப்பட்டன. மாசுக்கள், அரை வாழ்வுக் காலம், தொழிற்சாலை செயல்பாடுகள் முதலியன அடையாளம் காணப்பட்டன. அண்டத்தில் மிகுந்து இருக்கும் கனிமங்கள் அண்டத்தில் மிகுந்து இருக்கும் முதல் பத்து தனிமங்கள் இங்கு அட்டவணையில் கொடுக்கப் பட்டுள்ளன. தனிமங்களின் குணங்கள் ஐதரசன் மற்றும் ஹீலியம் ஆகியன மிகவும் லேசான இரசாயன தனிமங்கள் ஆகும்.மற்ற தனிமங்களை ஒப்பிடும் போது இதன் நிறை 3: 1 பகுதியே ஆகும்.தனிமங்கள் இயற்கையாகவும், அணுக்கரு சிதைவின் மூலமும், காஸ்மிக் கதிர்களின் மூலமும் கிடைக்கப்படுகின்றது.ஒவ்வோரு தனிமத்திற்கும் அதன் அணு எண் , அடர்த்தி, உருகுநிலை, மற்றும் கொதிநிலை, அயனி ஆற்றல் ஆகிய கூறுகள் மாறுபடும். அணு எண் ஒரு தனிமத்தின் அணு எண் அதன் புரோட்டான்களின் எண்ணிக்கையை வைத்து வரையறுக்கப்படுகிறது[3].உதாரணமாக, அனைத்து கார்பன் அணுக்களின் கருவிலும் 6 புரோட்டான்கள் இருக்கும். எனவே கார்பனின் அணு எண் 6 .ஆனால் நியூட்ரான்கள் வெவ்வேறு எண்களில் இருக்கும்; நியூட்ரான்களின் எண்ணிக்கையை வேறுவேறாக கொண்ட ஒரே தனிமத்தின் அணுக்கள் ' ஓரிடத்தான்கள்' (isotope) என்று அழைக்கப்படுகின்றன . அணு கருவில் புரோட்டான்களின் எண்ணிக்கையே எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கிறது.அந்த எலக்ட்ரான்களே அந்த தனிமத்தின் மின் ஊட்டத்தை தீர்மானிக்கிறது. எலக்ட்ரான்கள் அணுவின் பல்வேறு இரசாயன பண்புகளை தீர்மானிக்க, அந்த அணு அதற்கான சுற்றுப்பாதையில் (orbitals) வைக்கப்படுகின்றது. ஒரு கருவில் நியூட்ரான்களின் எண்ணிக்கை இரசாயன பண்புகளை தீர்மானிக்கிறது. அணுக்கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை அந்த அணுவின் மின் சுமையையும் தீர்மாணிக்கிறது. மேலும் இதன்மூலம் அந்த அணுவின் அணுக்கருவைச் சுற்றும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையும் தீர்மானிக்கப்படுகின்றது. அணுவின் அணுக்கருவைச் சுற்றியுள்ள ஆர்பிட்டால்கள் எனப்படும் பல்வேறு சுற்றுப்பாதைகளில் எலக்ட்ரான்கள் நிரம்பியுள்ளன. இந்த ஆர்பிட்டால்களின் அமைப்பு அத்தனிமத்தின் பண்புகளுக்கு காரணமாகிறது. அணு எடை அணுநிறை அணு எண் போன்ற அணுவின் கூறுகள் தனிமங்களின் அடையாளத்திலும் செயல்பாட்டிலும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. பண்புகள் தணிமத்தின் பகுப்புகளில் பல்வேறு வகை உள்ளன. பொதுவாக தனிமத்தின் நிறம், மற்றும் இரசாயன பண்புகள், உருகுதல் மற்றும் கொதிநிலை, அவற்றின் அடர்த்தி,படிக கட்டமைப்புகள், மற்றும் தோற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உறுப்புகளின் பண்புகள் பிரிக்கப்படுகிறது. தனிமத்தின் வகைகள் ஆக்டினைடுகள், கார உலோகங்கள், கார மண் உலோகங்கள்,ஹாலஜன்கள், லாந்தனைடுகள், அரிய உலோகங்கள்; உலோகப்போலிகள் (மெட்டலாய்டுகள்), மந்த வாயுக்கள், பல்லணுவுள்ள அலோகங்கள் (நான்மெட்டல்கள்), ஈரணு உள்ள அலோகங்கள், மற்றும் இடைநிலை உலோகங்கள் ஆகியன தனிமத்தின் வகைகள் ஆகும். தனிமத்தின் மூன்று நிலைகள் தனிமங்கள் மூன்று நிலைகளிலும் காணப்படுகின்றன.பெரும்பாலான தனிமங்கள் திட நிலையிலேயே இருக்கின்றன. சில தனிமங்கள் வாயுக்களாக கிடைக்கின்றன.ஆனால்,புரோமின் மற்றும் பாதரசம் மட்டும் சாதாரண வளிமண்டல அழுத்தத்தில் இருக்கும் போது திரவங்கள் ஆகும். சீசியம் மற்றும் கால்லியம் இரண்டும் திட தனிமங்களாகும். ஆனால், முறையே 28.4° C (83.2 ° F), 29.8 ° C (85.6 ° F) வெப்பநிலையில் உருக ஆரம்பித்துவிடும். தனிமங்களின் பெயர்கள் தனிமங்களுக்கு முறையான பெயர் வைக்கும் முன்பு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பெயர் வழங்களாயிற்று.ஆனால் பின் சர்வதேச தொடர்பு மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக, பண்டைய மற்றும் மிக சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பெயர்களில் பயன்படுத்த தொடங்கினர். தூய மற்றும் பயன்பாட்டு வேதியியலிற்கான சர்வதேச ஒன்றியம் (ஐ. யு. பி. ஏ.) தனிமங்களின் அதிகாரப்பூர்வ பெயர்களை வெளியிட்டனர்.இவர்களே புதிய தனிமங்களுக்கும் பெயர் சூட்டுவர்.பொதுவாக தனிமங்களின் பெயர்கள் கண்டுபிடிப்பாளர்களின் பெயரையே சார்ந்து இருக்கும். தனிமமும் அதன் அடையாளமும் ஐசோடோப்புகளின் குறியீடுகள் ஐசோடோப்புகள் என்பவை ஒரே தனிமத்தின் வெவ்வேறு வகையான அணுக்களாகும். அதாவது அவற்றின் அணுக்கருவில் ஒரே எண்ணிக்கையில் புரோட்டான்களும் வெவ்வேறு எண்ணிக்கையில் நியூட்ரான்களும் காணப்படும். உதாரணமாக கார்பனுக்கு மூன்று ஐசோடோப்புகள் உள்ளன. கார்பனின் அனைத்து ஐசோடோப்புகளும் 6 புரோட்டன்களைக் கொண்டுள்ளன. ஆனால் அவற்றில் 6,7,8 நியூட்ரான்கள் இருக்கின்றன. எனவே இவற்ரின் அணு நிறைகளும் முறையே 12,13, 14 என மாறுபடுகின்றன. இதனால் கார்பனின் ஐசோடோப்புகள் கார்பன் -12, கார்பன் -13, கார்பன் -14 என்ற பெயர்களைப் பெறுகின்றன. சுருக்கமாக 12C, 13C, மற்றும் 14C என்ற குறியீடுகளாகச் சுருக்கி குறிக்கப்படுகின்றன. ஐசோடோப்புகள் ஓரிடத்தான் என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றன. ஓரிடத்தான்களுக்கும் ஏற்புடையய உறுப்புக் குறியீடுகள் உள்ளன. ஐசோடோப்புகள் அணுவின் நிறை எண் (மொத்த புரோட்டான்களும் நியூட்ரான்களும்), மூலம் வேறுபடுகின்றன.ஓரிடத்தான்கலின் குறியீட்டிற்கு தனிமத்தின் குறியீடு எழுதப்பட்டு பின்னர் அணு எண்னை அவற்றின் தலைமீது எழுதிப் பயன்படுத்தவேண்டும். எடுத்துக்காட்டாக 12c மற்றும் 235U. எனினும், கார்பன்-12 மற்றும் யுரேனியம் -235, அல்லது C-12, U-235 போன்ற மற்ற குறியீடுகளையும், பயன்படுத்தலாம். அறியப்பட்ட 118 தனிமங்கள் பற்றிய சுருக்கக் குறிப்பு மேலும் பார்க்க பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல் எண்வாரியாக தனிமங்களின் பட்டியல் தனிம அட்டவணை வேதியியல் சேர்மம் ஊசாத்துணைகள் பகுப்பு:வேதியியல் *
வேதியியல் தனிம அட்டவணையில் எத்தனை தனிமங்கள் உள்ளன?
118
164
tamil
45217c3cb
அப்துல் ரகுமான்,(நவம்பர் 9, 1937 - சூன் 2, 2017), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் ஆவார். அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார். 1960 க்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர். பிறப்பு அப்துல் ரகுமான் மதுரையில் வைகை ஆற்றின் தென்கரையில் 1937 நவம்பர் 2 ஆம் நாள் உருதுக் கவிஞர் மஹி என்னும் சையத் அஹமத் – ஜைனத் பேகம் இணையருக்கு மகனாகப் பிறந்தார். கல்வி அப்துல் ரகுமான் தனது தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் மதுரையில் உள்ள பள்ளிகளில் பெற்றார். பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் சேர்ந்து இடைநிலை வகுப்பில் தேறினார். தொடர்ந்து அக்கல்லூரியிலேயே பயின்று இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றார். அப்பொழுது முனைவர் மா. இராசமாணிக்கனார், ஔவை துரைசாமி, அ. கி. பரந்தாமனார், அவ்வை நடராசன், அ. மு. பரமசிவானந்தம் ஆகிய தமிழறிஞர்களிடம் பயின்றார். சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அதன் இயக்குநராகப் பணியாற்றிய ச. வே. சுப்பிரமணியத்தை வழிகாட்டியாகக் கொண்டு புதுக்கவிதையில் குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பணி தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றதும் தியாகராசர் நடத்திய தமிழ்நாடு என்னும் நாளிதழில் மெய்ப்பு திருத்துநராகச் சிலகாலம் பணியாற்றினார். அப்பொழுது தமிழகத்தில் இருந்த ஐந்து இசுலாமியக் கல்லூரிகளுக்கு [1] விரிவுரையாளர் பதவிக்காக விண்ணப்பித்தார். அவற்றுள் வாணியம்பாடி இசுலாமியா கல்லூரியில் பணியாற்ற அவருக்கு 1961 ஆம் ஆண்டில் வாய்ப்புக் கிடைத்து. அங்கே சிற்றுரையாளர், விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர், எனப் படிப்படியாக உயர்ந்து 1991ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வுபெற்றார். இதில் 20 ஆண்டுகள் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றினார். வக்பு வாரிய தலைவராக தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக 2009 மே முதல் 2011 வரை பணியாற்றி வந்தார் நூல்கள் படைத்தவை நூலாக வேண்டிய படைப்புகள் / தொடர்கள் முத்தாரத்தில் வெளிவந்த கேள்வி - பதில் ஆனந்தவிகடனில் வெளிவந்த ஈழ வரலாறு கவியரங்கக் கவிதைகள் பதிக்கப்பட்டவை குணங்குடியார் பாடற்கோவை ஐந்து சிறுகவிதைத் தொகுப்புகள் விருதுகள் கவிக்கோ என அழைக்கப்படும் அப்துல் ரகுமானுக்கு பல்வேறு விருதுகள் பல்வேறு அமைப்புகளால் வழங்கப்பட்டன. அவை வருமாறு: வ.எண்ஆண்டுவிருதுவழங்கியவர்குறிப்பு11986கவியரசர் பாரிவிழா விருது குன்றக்குடி அடிகளார்21989தமிழன்னை விருது தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் இவ்விருது புதுக்கவிதைக்காக வழங்கப்பட்டது31989பாரதிதாசன் விருது தமிழக அரசு41989கலைமாமணி விருதுதமிழக அரசு51992அக்ஷர விருது அக்னி61996சிற்பி அறக்கட்டளை விருதுகவிஞர் சிற்பி அறக்கட்டளை71997கலைஞர் விருது தி. மு,க. ஒரு இலட்சம் ரூபாய்81998ராணா இலக்கிய விருது91999சாகித்ய அகாடமி விருது சாகித்ய அகாடமி, டெல்லி ஆலாபனை கவிதைத் தொகுதிக்காக வழங்கப்பட்டது102006கம்ப காவலர்கொழும்பு கம்பன் கழகம், இலங்கை 112007 பொதிகை விருது பொதிகை தொலைக்காட்சி, சென்னை122007 கம்பர் விருது கம்பன் கழகம், சென்னை132007சி. பா. ஆதித்தனார் இலக்கிய பரிசு தினத்தந்தி நாளிதழ் ஒரு இலட்சம் ரூபாய்142008உமறுப் புலவர் விருது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஒரு இலட்சம் ரூபாய் சான்றடைவு வெளி இணைப்புகள் பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள் பகுப்பு:தமிழ்க் கவிஞர்கள் பகுப்பு:1937 பிறப்புகள் பகுப்பு:2017 இறப்புகள்
கவிஞர் அப்துல் ரகுமான் எங்கு பிறந்தார்?
மதுரையில் வைகை ஆற்றின் தென்கரையில்
1,158
tamil
9c3ee7a2b
திராவிட முன்னேற்றக் கழகம் (தி. மு. க., Dravida Munnetra Kazhagam) தமிழ்நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். தந்தை பெரியார் என அழைக்கப்படும் ஈ. வெ. இராமசாமியால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்திலிருந்து கா. ந. அண்ணாதுரையும், வேறு சில தலைவர்களும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 7, பவளக்காரத் தெரு, ஜார்ஜ் டவுன், சென்னையில் செப்டம்பர் 17, 1949இல் [4] கூடி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்குவது என்று முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 18 மாலை 4 மணிக்கு ராயபுரம் ராபின்சன் பூங்காவில் பேரணி நடத்தப்பட்டது. அக்கட்சியின் முதல் பொதுச்செயலராக திரு.அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடி, திமுகவின் கொடியாகத் தேர்வு செய்யப்பட்டது. வரலாறு 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் தி.மு.க. பங்கேற்கவில்லை. “திராவிடர்களின் கருத்தையறியாமலும் திராவிடர்களின் ஜீவாதார உரிமைக்கு ஊறு செய்யும் வகையிலும் ஒரே கட்சியரின் எதேச்சாதிகார முறைப்படியும் தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தை தி.மு.க. கண்டிப்பதன் அறிகுறியாக தேர்தலில் தி.மு.க. தனது வேட்பாளர்களை நிறுத்தவில்லை” என்று அக்கட்சி அறிவித்தது. இருப்பினும் “ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய திராவிட இன மொழிவழி மாநிலங்களை உள்ளடக்கிய தனியாட்சி பெற்ற திராவிட நாடு” கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளர்களை ஆதரிப்பதாக அக்கட்சி அறிவித்தது. 1953 சூலை 14, 15இல் அன்றைய முதல்வர் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்துக்கு எதிர்ப்பு, “டால்மியாபுரம்” பெயரை “கல்லக்குடி” என பெயர் மாற்றக்கோரி போராட்டம், தமிழ்நாட்டு மக்களை ‘நான்சென்ஸ்’ என நேரு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம் ஆகிய மும்முனைப் போராட்டங்களை தி.மு.க. நடத்தியது. 1956 மே 17, 18, 19, 20 தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. 2ஆவது மாநில மாநாட்டில் தேர்தலில் பங்கேற்பது என அக்கட்சி முடிவெடுத்தது. எந்த ஒரு மாநிலமும் எப்பொழுது வேண்டுமானாலும் இந்திய யூனியனில் இருந்து பிரிந்து சென்று தனித்து இயங்கும் உரிமையை தானே பெற்றிருக்க அரசியல் அமைப்பு “திருத்தம் வேண்டும்” என்று அத்தேர்தலில் தி.மு.க. கூறியது. மொத்தம் 112 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களில் அக்கட்சி வென்றது. 1958 மார்ச் 2இல் தி.மு.க. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு “உதயசூரியன்” தேர்தல் சின்னமாக ஒதுக்கப்பட்டது. 1959இல் நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தலில் 90 இடங்களில் வென்ற தி.மு.க. முதன்முறையாக மாநகராட்சி மேயர் பொறுப்பேற்றது. ஏப்ரல் 19, 1961இல் அக்கட்சியிலிருந்து ஈ.வெ.கி. சம்பத் வெளியேறி தமிழ்த் தேசியக் கட்சியை உருவாக்கினார். இது தி.மு.க.வில் ஏற்பட்ட முதல் பிளவு. இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக 1961இல் திமுக பேரணி நடத்தியது. 1962இல் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் “திராவிட நாடு” விடுதலை கோரிக்கையை முன் வைத்து பிரச்சாரம் செய்தது தி.மு.க. இராஜாஜியின் சுதந்திராக் கட்சி, முஸ்லீம் லீக் ஆகியவற்றுடன் இணைந்து போட்டியிட்ட தி.மு.க. 50 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் அக்கட்சிப் பொதுச்செயலாளர் அண்ணாதுரை, காஞ்சிபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் தோல்வியுற்றார். 1963இல் “பிரிவினை” பேசுவோர் தேர்தலில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் “பிரிவினைத் தடுப்புச் சட்ட மசோதா”-வை இந்திய அரசு அறிவித்தது. இதையடுத்து 1963 சூன் 8, 9, 10 தியதிகளில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் முக்கியக் கொள்கையான “திராவிட நாடு” விடுதலை கோரிக்கையில் மாற்றம் செய்யப்பட்டது. “தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய நான்கு மொழிவழி மாநிலங்களும் இந்திய அரசுரிமை, ஒருமைத் தன்மை, அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்குள் இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்களைப் பெற்று நெருங்கிய திராவிடக் கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது” என்று அக்கட்சியின் ‘குறிக்கோள்’ பகுதியில் மாற்றம் செய்யப்பட்டது. அதே ஆண்டில் நவம்பர் 17இல் இந்தியை, இந்தி பேசாத மக்களின் மீது இந்தியை திணிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 17-ஐ எரிப்பதாக தி.மு.க. அறிவித்தது. 1965 சனவரி 26 முதல் இந்தி கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து “சனவரி 26-இந்திய குடியரசு நாளை” துக்கநாளாக அறிவித்து கிளர்ச்சி நடத்தியது தி.மு.க. தி.மு.க.வினர் ஆட்சி செய்த காலமும் சில நிகழ்வுகளும் 1967-ல் நடைபெற்ற மூன்றாவது தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தி.மு.க. 138 இடங்களை வென்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. 1967 மார்ச் 6-ல் அக்கட்சிப் பொதுச்செயலாளர் அண்ணாதுரை தமிழ்நாட்டின் முதல்வரானார்.[5] அவர் 1969 பிப்ரவரி 3 வரை (மறையும் வரை) மட்டுமே ஆட்சியிலிருந்த போதும் சென்னை மாநிலத்தை “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்தது (1969 சனவரி 14); தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கையாக இரு மொழித் திட்டத்தை அறிவித்தது (1968 சனவரி 23-ல்). தாலி, சாதி, புரோகிதர் ஆகியவை இல்லாமல் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் சட்டம் ஆகியவற்றை நிறைவேற்றினார் அண்ணா. அண்ணா மறைந்தபின் அக்கட்சியில் 1969 சூலை 26 முதல் முதன்முறையாக ‘தலைவர் பதவி’ உருவாக்கப்பட்டது. அண்ணாவிற்கு பிறகு அண்ணாதுரை 1969 பிப்ரவரி 3ஆம் நாள் மறைந்ததை அடுத்து, அண்ணா அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே தி.மு.க சார்பில் அடுத்த முதல்வர் யார் என்பதில் கருணாநிதிக்கும், கல்வியமைச்சர் இரா. நெடுஞ்செழியனுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. பெரியார் தலையிட்டு சமரசம் ஏற்படுத்தி கருணாநிதியை போட்டியின்றி முதல்வராக்க முயற்சி செய்தும் நெடுஞ்செழியன் சம்மதிக்கவில்லை. பின்னர் கருணாநிதி சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் நெடுஞ்செழியன் அமைச்சரவையில் இருந்து விலகிக்கொண்டார். மு. கருணாநிதி, தமிழ்நாட்டு முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.[6] 1969- சூன் மாதத்தில் மு. கருணாநிதி தி.மு.க. தலைவராகவும், இரா. நெடுஞ்செழியன் பொதுச்செயலராகவும் தேர்வுசெய்யப்பட்டனர். 1971இல் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் 203 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 184 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்தது. திமுகவின் இந்த மாபெரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிச் சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. மு. கருணாநிதி, 2ஆவது முறையாக முதல்வர் பொறுப்பேற்றார். 1972 அக்டோபர் 14இல் கட்சிப் பொருளாளராக இருந்த நடிகர் எம்.ஜி.ஆர் தி.மு.க.விலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். தி.மு.க.வில் ஏற்பட்ட மிகப் பெரிய பிளவாக இது கருதப்பட்டது. 1974 ஏப்ரல் 20இல் ‘மாநில சுயாட்சி’ கோரும் தீர்மானத்தை தி.மு.க. அமைச்சரவை சட்டப் பேரவையில் நிறைவேற்றியது. 1975 சூன் 25இல் இந்திய அரசால் அவசரநிலை அறிவிக்கப்பட்டதையடுத்து 1976 ஜனவரி 31-ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 1976 முதல் 1976 வரை ஆட்சிப் பொறுப்பிலிருந்த தி.மு.க.வின் செயல்பாடுகளில் அனைத்து சாதியினர் அர்ச்சகராதல் சட்டம் (1971 சனவரி 12), அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டும் (1970) ஆகியவை முக்கியமானவையாகும். 1977 சூலை 4இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. 230 இடங்களில் போட்டியிட்டு 48 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக அமைந்தது. 1976 அவசரநிலை காலத்தில் அதிக பாதிப்புக்குள்ளானது தி.மு.க.. 1976 முதல் 1980 வரை அமைந்த நிலையற்ற மத்திய அரசுகளால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்தில் கொண்டும், நெருக்காடி கால நடவடிக்கைகளுக்காக, இந்திராகாந்தி அவர்கள் சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் திமுகவிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாலும், 1980இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் தி.மு.க. போட்டியிட்டது. நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் 16 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 16 இடங்களிலும் சட்டப் பேரவையில் 114 இடங்களில் போட்டியிட்டு 38 இடங்களிலும் வென்றது. 1976 முதல் 1989 வரை 13 ஆண்டு காலம் அண்ணா தி.மு.க. ஆளுங்கட்சியாகவும், தி.மு.க. எதிர்க்கட்சியாகவும் செயல்பட்டன. எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. தமிழீழத் தமிழர் போராட்டம், ஆதரவு இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றில் தீவிர ஈடுபாடு காட்டியது. 1983 ஆகத்து 10-ல் தமிழீழத் தமிழர் பிரச்சினையில் இந்திய, தமிழ்நாடு அரசுகளின் நிலைப்பாட்டைக் கண்டித்து தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, பொதுச் செயலர் பேராசிரியர் க. அன்பழகன் ஆகியோர் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். 1984-ல் நடைபெற்ற தேர்தலிலும் தி.மு.க. 24 இடங்களை மட்டும் பெற்று எதிர்க்கட்சியாக இருந்தது. இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக 1986 டிசம்பர் 9-ல் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். 1987 திசம்பர் 24-ல் எம்.ஜி.ஆர் மறைந்ததையடுத்து நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 203 இடங்களில் போட்டியிட்டு 151 இடங்களை வென்ற திமுக 1991 சனவரி 30 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. 1989 திசம்பர் 29-ல் பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கும் சட்டத்தை தி.மு.க. அரசு நிறைவேற்றியது. இந்திய அரசின் ரகசியங்களை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு திமுக அரசு தெரிவிப்பதாகக் கூறி தி.மு.க. அரசு 1991-ல் பதவி நீக்கம் செய்யப்பட்டது. 1991 மே 21-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இறந்தபோது நடைபெற்ற தேர்தலில் 174 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 2 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. 1991 முதல் 1996 வரை நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் (அக்கட்சியின்) ‘முரசொலி’ ஏடு ஒடுக்குமுறைக்குள்ளானது. 1993 அக்டோபர், 11-ல் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வை. கோபால்சாமி நீக்கப்பட்டார். இதையடுத்து, தி.மு.க.வில் 2-வது பெரிய பிளவு உருவானது. 1995-ல் தமிழீழத் தமிழர்களுக்கான ஆதரவுப் பேரணியை திமுக நடத்தியது. 1996 ஏப்ரல் 27-ல் நடைபெற்ற தேர்தலில் 166 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. “மெட்ராஸ்” என்று ஆங்கிலத்தில் சென்னை அழைக்கப்படுவதை “சென்னை” என்றே ஆங்கிலத்திலும் எழுத வேண்டும்; வாகன பதிவு எண்கள், விளம்பரப் பலகைகள், கோவில்கள் ஆகியவற்றில் தமிழை நடைமுறைப்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 2017 சனவரியில் செயல் தலைவர் பதவியில் மு. க. இசுதாலின் செயல்படுவார் என கருணாநிதி அறிவித்தார்.[7][8] மாநாடுகள் மாநில மாநாடுகள் திமுக. பல்வேறு மாநில மாநாடுகளை நடத்தியிருக்கிறது. அவை: முதல் மாநில மாநாடு 1951ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 13, 14, 15, 16ஆம் நாள்களில் சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ.திடலில் க. நா. அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. [9] இரண்டாவது மாநில மாநாடு 1956ஆம் ஆண்டு மே மாதம் 17, 18, 19, 20ஆம் நாள்களில் திருச்சி பந்தயத்திடலில் இரா. நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது. [10] பத்தாவது மாநில மாநாடு 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 15, 16 ஆம் நாள்களில் திருச்சியில் மு. கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. [11]. இம்மாநாடு திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிராட்டியூர் அருகே நடைபெற்றது. [12] மாவட்ட மாநாடுகள் திருச்சி மாவட்டம் திருச்சி மாவட்ட இரண்டாவது திமுக மாநாடு 26-4-1953ஆம் நாள் லால்குடி பாண்டியனார் அரங்கில் நடைபெற்றது, மாநாட்டிற்கு ஈ.வெ.கி.சம்பத் தலைமை வகித்தார்; மாநாட்டை கே. ஏ. மதியழகன் திறந்து வைத்தார். அண்ணாதுரை, இரா. நெடுஞ்செழியன், மு.கருணாநிதி, என்.எஸ்.இளங்கோ, எஸ்.கே.சாமி, ஏ.வி.பி. ஆசைத்தம்பி, க. அன்பழகன், என்.வி.நடராசன், இராசு-தங்கப்பழம், தில்லை வில்லாளன், அரங்கண்ணல், தாமரைச்செல்வன், இளம்வழுதி, கண்ணதாசன், சத்தியவாணி முத்து, பூங்கோதை, அருண்மொழி ஆகியோர் உரையாற்றினர். நாடாளுமன்றத் தேர்தல்களில் தி.மு.க. 1967-ல் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. முதன்முறையாகப் போட்டியிட்டது. போட்டியிட்ட 25 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதேபோல் 1971-ல் 23 இடங்கள், 77-ல் 19, 80-ல் 16, 84-ல் 27, 89-ல் 31, 91-ல் 29, 96-ல் 17, 98-ல் 6 இடங்களை திமுக பெற்றது. 1989-ல் இந்தியாவில் உருவான தேசிய முன்னணியில் முக்கியப் பங்கு வகித்த திமுக அம்முன்னணி அமைத்த அமைச்சரவையிலும் பங்கேற்றது. 1996-ல் உருவான ஐக்கிய முன்னணி அமைச்சரவையிலும் திமுக பங்கேற்றது. புதுவை, காரைக்கால், கருநாடகம், ஆந்திரம், மும்பை, அந்தமான் ஆகிய மாநிலங்களில் இக்கட்சிக்கு கிளைகள் உண்டு. திமுக.வின் அதிகாரப்பூர்வ ஏடாக ‘முரசொலி’ வெளிவந்து கொண்டிருக்கிறது. இக்கட்சியின் சார்பில் இந்திய மக்களவையில் 1998 ஆம் ஆண்டு 6 பேர், மாநிலங்களவையில் 7 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். பின்னர் 1999 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 18 இடங்களில் போட்டியிட்டு 11 உறுப்பினர்களை பெற்றது. இந்த தேர்தலில் திமுக, தனது அடிப்படை கொள்கைகளுக்கு எதிரான பாரதிய ஜனதாவுடனும் தன்னிடமிருந்து வெளியேறி புதிய கட்சியை உருவாக்கிய மதிமுகவுடனும் தேர்தல் உடன்பாடு வைத்தது. 2001 ஆம் ஆண்டுத் தேர்தலில் திமுக, பாரதிய ஜனதா, தலித் அமைப்புகளுடன் தேர்தலை சந்தித்து தோல்வியை எதிர்கொண்டது. 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க உள்ளிட்ட ஏழு கட்சிகளுடன் தி.மு.க கூட்டணி அமைத்து வரலாறு காணாத விதமாக போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது. இதன் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய மந்திரிகளாக பொறுப்பேற்றனர். மத்திய ஆட்சியில் பல முக்கிய முடிவுகளை எடுக்கும் சக்தியாக தி.மு.க உருவானது. 15ஆவது மக்களவைத் தேர்தல் ஐக்கிய முன்னணியின் அங்கமான திமுக தமிழகத்தில் 21 தொகுதிகளில் போட்டியிட்டு பின்வரும் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றது. [13]அதன் விபரம் [14] சிறீபெரும்புதூர் - த. ரா. பாலு தருமபுரி - தாமரைச்செல்வன் நாமக்கல் - காந்தி செல்வன் நீலகிரி (தனி) - ஆ. ராசா மதுரை - மு.க. அழகிரி கன்னியாகுமரி - ஹெலன் டேவிட்சன் தூத்துக்குடி - செயதுரை திருவண்ணாமலை- வேணுகோபால் நாகப்பட்டனம் (தனி)- ஏ.கே.எசு. விஜயன் அரக்கோணம் - செகத்ரட்சகன் வட சென்னை - டி.கே.எசு. இளங்கோவன் மத்திய சென்னை - தயாநிதி மாறன் கள்ளக்குறிச்சி - ஆதிசங்கர் கிருஷ்ணகிரி - சுகவனம் பெரம்பலூர் - நெப்போலியன் தஞ்சாவூர் - எஸ். எஸ். பழனிமாணிக்கம் இராமநாதபுரம் - ஜே. கே. ரித்தீசு 16ஆவது மக்களவைத் தேர்தல் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் தி.மு.க. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோற்றது. இதன் மூலம் மக்களவையில் தி.மு.க. உறுப்பினர்கள் ஒருவர்கூட இல்லாத சூழ்நிலை உருவானது. 2016 சட்டமன்ற தேர்தல் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.[15] 89 தொகுதிகளில் வெற்றிபெற்று பிரதான எதிர் கட்சியாக உள்ளது. வெளியீடுகள் சட்டதிட்டங்கள், 1952 [17] தீர்மானங்கள், 1952 [18] நம்நாடு என்னும் நாளிதழ் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இதழாக 1953 சூன் 15 முதல் அண்ணாதுரையை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்தது. [19] The Answer என்னும் ஆங்கில வெளியீடு. 15-சூன் -1953ஆம் நாள் நடைபெற்ற மும்முனைப்போராட்டத்தில் சென்னையில் கைதுசெய்யப்பட்ட கா. ந. அண்ணாதுரை, இரா. நெடுஞ்செழியன், ஈ. வெ. கி. சம்பத், என். வி. நடராசன், கே. ஏ. மதியழகன் ஆகியோர் நீதிமன்றத்தில் தந்த வாக்குமூலங்கள். [20] மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:திராவிட முன்னேற்றக் கழகம் பகுப்பு:இந்திய அரசியல் கட்சிகள் பகுப்பு:தமிழ்நாட்டு திராவிட அமைப்புகள் பகுப்பு:1949இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள் பகுப்பு:மு. கருணாநிதி
திமுக அரசியல் கட்சி எப்போது நிறுவப்பட்டது?
செப்டம்பர் 17, 1949
336
tamil
80a33a4e8
முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018)[2] திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். 1969ல் முதன்முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 2018 ஆகத்து 7 ஆம் நாள் தம்முடைய 94 ஆம் அகவையில் சென்னையில் காலமானார். இளமைப்பருவம் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 சூன் 3-இல் ஏழை இசை வேளாளர் குடும்பத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார் கருணாநிதி. இவருக்கு இரு சகோதரிகள் இருந்தனர். தொடக்கக்கல்வியை திருக்குவளையில் பெற்றார். பின்னர் திருவாரூரிலிருந்த மாவட்ட நாட்டாண்மைக்கழக உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றார். அங்கு இவருக்குத் தமிழாசிரியராக இருந்தவர் சி. இலக்குவனார். பள்ளியிறுதித்தேர்வில் இவர் தேர்ச்சியடையவில்லை. இளைஞர் அமைப்பு கருணாநிதி, தமது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். தமது வளரிளம் பருவத்தில், வட்டார மாணவர்கள் சிலரின் உதவியுடன் திருவாரூர் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்னும் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை 7-7-1944ஆம் நாள் உருவாக்கினார். அவரே அதன் தலைவராக மு.கருணாநிதியும் அமைச்சராக கே.வெங்கிடாசல என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். [3] இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. அதன் வழியாக மாணவநேசன் என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையை வெளியிட்டு இளைஞர்களைத் திரட்டினார். [4] சில காலத்துக்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான "அனைத்து மாணவர்களின் கழகம்" என்ற அமைப்பாக உருப்பெற்றது. கருணாநிதி, மற்ற உறுப்பினர்களுடனான சமூகப் பணியில் மாணவர் சமூகத்தையும் ஈடுபடுத்தினார். முரசொலி இதழ் முரசொலி என்னும் துண்டு வெளியீட்டை 1942ஆம் ஆண்டில் வெளியிட்டார். முரசொலி ஆரம்பித்த முதலாமாண்டு விழாவை அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோரை அழைத்து தம் மாணவர் மன்ற அணித்தோழர்களுடன் கொண்டாடினார். இடையில் சில காலம் அவ்விதழ் தடைபட்டது. பின்னர் 1946 முதல் 1948 மாத இதழாக நடத்தினார்.[5] சற்றொப்ப 25இதழ்கள் வரை வந்து மீண்டும் இதழ் தடைபட்டது. மீண்டும் 1953இல் மாத இதழாக சென்னையில் தொடங்கினார். 1960ஆம் ஆண்டில் அதனை நாளிதழாக மாற்றினார். அரசியல் தொடக்கம் நீதிக்கட்சியின் தூணாக கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14ஆவது அகவையில், அரசியல், சமூக இயக்கங்களில் முழுமையாக தம்மை ஈடுபடுத்திக்கொண்டார் [6]. கல்லக்குடி போராட்டம் கருணாநிதி தமிழ் அரசியலில் களமிறங்குவதற்கு உதவிய முதல் பிரதான எதிர்ப்பு, கல்லக்குடி ஆர்ப்பாட்டத்தில் (1953)[7] ஈடுபட்டது ஆகும். இந்த தொழிற்துறை நகரத்தின் அசல் பெயர் கள்ளக்குடி. இது வட இந்தியாவில் இருந்து ஒரு சிமென்ட் ஆலை ஒன்றை உருவாக்கிய சிம்மோகிராம் பிறகு டால்மியாபுரம் என மாற்றப்பட்டது. தி.மு.க. அந்த பெயரை கள்ளக்குடி என மீண்டும் மாற்ற வேண்டுமென விரும்பியது. கருணாநிதி மற்றும் அவருடைய தோழர்கள் இரயில் நிலையத்திலிருந்த டால்மியாபுரம் என்ற பெயரை அழித்தனர் மேலும் இரயில் மறியலிலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் இருவர் இறந்தனர், கருணாநிதி கைது செய்யப்பட்டார்.[7][8] இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் 1957 இல் நடைபெற்ற திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ் நாட்டில் நடுவண் அரசால் இந்தி திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்டோபர் 13, 1957 அன்றைய நாளை இந்தி எதிர்ப்பு நாளாக பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது. இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கிய கருணாநிதி நடுவண் அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து, "மொழிப்போராட்டம்.. எங்கள் பண்பாட்டை பாதுகாக்க, இது எமது மக்களின் தன்மானம் மற்றும் எங்களது கட்சியின் அரசியல் கொள்கை.. மேலும் இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு (எடுப்பு சாப்பாடு), ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு” என்று முழக்கமிட்டார். அக்டோபர், 1963, இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னையில் (மதராஸ்) கூட்டப்பட்டது. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடுவண் அரசின் புரிந்து கொள்ளாமையை உணர்த்தும் விதமாக இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்பு போராட்டம் நடத்துவெதென மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் 16 அன்று அண்ணாதுரையும், நவம்பர் 19 அன்று கருணாநிதியும் கைது செய்யப்பட்டு 25 நவம்பர் அன்று உயர் நீதிமன்ற ஆணையால் விடுவிக்கப்பட்டனர். தி.மு.க.வி. பதவிகள் பொருளாளர் 1960ஆம் ஆண்டில் தி.மு.க.வின் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969ஆம் ஆண்டு வரை அப்பதவியை வகித்தார். தலைவர் 1969ஆம் ஆண்டில் தி.மு.க.வின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது மறைவு வரை 50 ஆண்டுகள் அப்பதவியை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் இவர்வெற்றிபெற்றார். 1957ம் ஆண்டு சுயேச்சையாகவும் மற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுக வேட்பாளராகவும் போட்டியிட்டார். 1984ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை.[9][10] ஆண்டுதொகுதிவாக்கு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குவாக்கு வேறுபாடு 1957குளித்தலை22785கே. எ. தர்மலிங்கம்காங்கிரசு144898296 1962தஞ்சாவூர்32145ஏ.ஒய்.எஸ்.பரிசுத்த நாடார்காங்கிரசு302171928 1967சைதாப்பேட்டை53401எஸ். ஜி. வினாயகமூர்த்தி காங்கிரசு3291920482 1971சைதாப்பேட்டை63334என். காமலிங்கம்காங்கிரசு5082312511 1977அண்ணா நகர் 43076ஜி. கிருஷ்ணமூர்த்தி அதிமுக 1643816438 1980அண்ணா நகர் 51290எச். வி. அண்டே அதிமுக 50591699 1989துறைமுகம் 41632கே. எ. வகாப் முஸ்லீம் லீக் 964131991 1991துறைமுகம் 30932கே. சுப்பு காங்கிரசு30042890 1996சேப்பாக்கம் 46097நெல்லைக் கண்ணன்காங்கிரசு1031335784 2001சேப்பாக்கம் 29836தாமோதரன் காங்கிரசு250024834 2006சேப்பாக்கம் 34188தாவூத் மியாகான் சுயேச்சை256628526 2011 திருவாரூர் 109014எம்.இராசேந்திரன்அதிமுக5876550249 2016 திருவாரூர் 121473பன்னீர்செல்வம்அதிமுக5310768366 மாநிலத்திலேயே அதிக வாக்கு வித்தியாசம் சட்டமேலவை உறுப்பினர் இலங்கைத்தமிழருக்காக கருணாநிதியும் அன்பழகனும் தமது சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினர். அடுத்துவந்த சட்டமேலவைத்தேர்தலில் கருணாநிதி சட்டமேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சித்துணைத்தலைவர் 1962ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பின்னர் அமைந்த மூன்றாவது சட்டப்பேரவையில் இரா. நெடுஞ்செழியன் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தார். மு. கருணாநிதி எதிர்க்கட்சித்துணைத்தலைவராக இருந்தார். அமைச்சர் 1967ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியைப்பிடித்த பின்னர் கா. ந. அண்ணாதுரை தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பதவிவகித்தார். முதலமைச்சர் 1969–1971 --கா. ந. அண்ணாதுரை மறைவுக்குப் பின் முதல் முறை ஆட்சி 1971-1976—இரண்டாவது முறையாக 1989–1991 --எம். ஜி. இராமச்சந்திரன், மறைவுக்குப் பின் மூன்றாம் முறை ஆட்சி 1996-2001—நான்காம் முறை ஆட்சி 2006-2011—ஐந்தாம் முறை ஆட்சி என ஐந்துமுறை முதலமைச்சராக இருந்தார். அரசு நிர்வாகம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக, கிராமப்புறங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இலவச காப்பீடு திட்டங்கள், தொழில்மயமாக்குதலுக்கான நடவடிக்கைகள் போன்ற பலவற்றையும் மேற்கொண்டார். ஐ.டி துறையை மாநிலத்தில் வளர்க்கும் விதமாக, அவருடைய பதவிக் காலத்தில், டைடல் மென்பொருள் பூங்காவை உருவாக்கினார். ஒரகடத்தில், புதிய உழுவை உற்பத்தி செய்யும் செல்லைத் தொடங்கினார். மஹிந்திரா மற்றும் நிசான் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த அமைப்பின் கீழ் செயல்படுகிறது. விமர்சனங்கள் 1972 இல் விவசாயிகள் போராட்டத்தில் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள். 1976-ல் மு.கருணாநிதியின் ஆட்சி வீராணம் ஊழல் புகார் இலஞ்சத்தை காரணமாகக் காட்டி கலைக்கப்பட்டு ஆளுனர் ஆட்சிஅமல்படுத்தப்பட்டது. [11] [12] 1973 ல் மிசா 1975 சூன் மாதத்தில் நெருக்கடிக்கால அறிவிப்பை அப்பொழுதய இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அமல்படுத்தினார். 1977 ஆம் ஆண்டு அவசர நிலை முடிந்த பிறகு மதுரைக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வந்தபோது திமுகவினர் அவரை கடுமையாக தாக்கினார்கள். சென்னைக்கு வந்தபோதும் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள். காங்கிரஸ்ஐ கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, தொடக்க காலத்தில் பாரதிய ஜனதா கட்சியைக் கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, பொதுமக்களின், குறிப்பாக ஊடகங்களின், விமர்சனத்திற்கு உள்ளானது. எதிர்க்கட்சித்தலைவர் தமிழக சட்டப்பேரவையில் 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் அமைந்த சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தார். குடும்பம் தனிப்பட்ட வாழ்க்கை கருணாநிதி புலால் உணவுகளை உண்பவராக இருந்து பின் (தற்பொழுது) தாவர உணவு முறையை பின்பற்றுபவரானார். இவர் அரசியல் பணிகளையும், எழுத்துப் பணிகளையும் ஓய்வின்றி செய்ய முடிவதற்கு நாளும் யோகப் பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவற்றைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தமையே காரணமாகக் கூறப்படுகிறது. படைப்புகள் இவர் 75 திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். 15 நாவல்களையும் 20 நாடகங்களையும் 15 சிறுகதைகளையும் 210 கவிதைகளையும் படைத்துள்ளார். [13] மேலும் "நண்பனுக்கு", "உடன்பிறப்பே" என்னும் தலைப்புகளில் 7000க்கும் மேற்பட்ட மடல்களை எழுதியிருக்கிறார். [14] கரிகாலன் என்னும் பெயரில் கேள்வி-பதில் எழுதியிருக்கிறார். இவை தவிர தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்களை எழுதியிருக்கிறார். திரைப்படத் துறைப் பங்களிப்புகள் 20 வயதில், ஜுபிடர் பிக்சர்ஸ்-ன் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றினார். அவரது முதல் படமான ராஜகுமாரி என்னும் படத்தால் மிகவும் பிரபலமடைந்தார். ஒரு திரைக்கதை எழுத்தாளர் போன்ற திறமைகளை அவர் பல திரைப்படங்களுக்கு விரிவுபடுத்தினார். நாடகங்கள் அனார்கலி உதயசூரியன், 1959 இளைஞன் குரல், 1952 (31.8.52ஆம் நாள் தேனி வழக்க்குநிதிக்காக மதுரையில் அரங்கேற்றப்பட்டது)[15] ஒரே ரத்தம் காகிதப்பூ சாக்ரடீஸ் சாம்ராட் அசோகன் சிலப்பதிகாரம் சேரன் செங்குட்டுவன் திருவாளர் தேசியம்பிள்ளை தூக்கு மேடை,1957, முத்துவேல் பதிப்பகம், திருச்சி. நச்சுக் கோப்பை (பழனியப்பன் அல்லது சாந்தா அல்லது சமூகத்தின் கொடுமை என்னும் நாடகம் பின்னாளில் நச்சுக்கோப்பை என்னும் பெயரில் நிகழ்த்தப்பட்டது) நானே அறிவாளி பரதயாணம் பரப்பிரம்மம். 1953, திராவிடப்பண்ணை, திருச்சி. 26-2-1953ஆம் நாள் சென்னை ஒற்றைவாடைத் தியேட்டரில் புயல்நிவாரண நிதிக்காக நெடுஞ்செழியன் தலைமையில் அரங்கேற்றப்பட்டது. [16] பலிபீடம் நோக்கி, 1948, எரிமலைப் பதிப்பகம், துறையூர். பிள்ளையோ பிள்ளை (1948 சூலை; விந்தியம் வெளியீடு, திருவாரூர்)[17] பெரிய இடத்துப்பெண் (1948 செப்) மணிமகுடம், 1955, முத்துவேல் பதிப்பகம், திருச்சி. (4-9-1955 சென்னை செயின்ட் மேரி மண்டப்பத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன் குழுவினரால் கா. ந. அண்ணாதுரை தலைமையில் அரங்கேற்றம்) [18] மந்திரிகுமாரி வாழமுடியாதவர்கள் [19] (27-7-1951 இரவு 10;30 மணிக்கு காஞ்சி அசோகா அரங்கில் அரங்கேற்றம்) வரலாற்றுப்புனைவுகள் ரோமாபுரி பாண்டியன் தென்பாண்டிச் சிங்கம் ‎பாயும்புலி பண்டாரக வன்னியன் பொன்னர் சங்கர் புதினங்கள் வெள்ளிக்கிழமை, 1956 திசம்பர், திராவிடப்பண்ணை, சென்னை. புதையல் வான்கோழி சுருளிமலை ஒரு மரம் பூத்தது ஒரே ரத்தம் இரத்தக்கண்ணீர், திராவிடப்பண்ணை, திருச்சி [20] கிழவன் கனவு; 1945; வெளியிட்டவர்: சு.இராமநாதன், விஜயபுரம், திருவாரூர். [21] சிறுகதைகள் சங்கிலிச்சாமியார் நளாயினி (1956) திராவிடப்பண்ணை, திருச்சி [22] பழக்கூடை பதினாறு கதையினிலே கண்ணடக்கம், 1957, திராவிடப்பண்ணை, திருச்சி (கண்ணடக்கம், நெருப்பு, வேணியின் காதலன், நடுத்தெரு நாராயணி, அமிர்தமதி ஆகிய கதைகள் அடங்கியது) கவிதைகள் காலப்பேழையும் கவிதைச்சாவியும் கவிதைமழை - மூன்று தொகுதிகள் முத்தாரம், இ.பதி 1957, திராவிடப்பண்ணை, திருச்சி (மு.க.சிறையிலிருந்தபொழுது 1.பிறையே, 2.ஆடிக்காற்று, 3.பச்சைக்கிளி, 4.புகழ், 5.கருப்புப்பெண், 6.அகப்பை சித்தர், 7.மலையே வாழி, 8.நாடகமேடை, 9.அவள், 10.தளிர், 11.கடலே, 12.விண்மீன், 13.ஆறு, 14.வாழிய வைகறை, 15.தமிழே என்னும் தலைப்பில் எழுதிய கவிவசனங்களின் தொகுப்பு) உரைநூல்கள் திருக்குறள் உரை இலக்கிய மறுபடைப்புகள் குறளோவியம் சங்கத் தமிழ் தாய் தொல்காப்பியப்பூங்கா தன்வரலாறு இவர் தனது வாழ்க்கைவரலாற்றை நெஞ்சுக்கு நீதி என்னும் தலைப்பில் தினமணி கதிர் (முதலாவது பகுதி), முரசொலி, குங்குமம் ஆகிய இதழ்களில் தொடர்கட்டுரையாக எழுதினார். பின்னர் அக்கட்டுரைத்தொடர் அதேபெயரில் 4165 பக்கங்களில் ஆறு பாகங்களைக் கொண்ட நூலாக வெளிவந்துள்ளது. [23] சொற்பொழிவுகள் தலைமையுரை, பாரிநிலையம், சென்னை. [24] ‎மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று பெரியார் பிறவாதிருந்தால் கட்டுரைகள் அகிம்சாமூர்த்திகள், 1953, பாரிநிலையம், சென்னை. அல்லிதர்பார், 1953, பாரி நிலையம், சென்னை. ஆறுமாதக் கடுங்காவல், திராவிடப்பண்ணை, திருச்சி. இளைய சமுதாயம் எழுகவே இனமுழக்கம் உணர்ச்சிமாலை கருணாநிதியின் வர்ணனைகள், 1952, கருணாநிதி பதிப்பகம், சென்னை [25] சுழல்விளக்கு, 1952, கருணாநிதி பதிப்பகம், சென்னை [26] மலரும் நினைவுகள் முத்துக்குவியல் பூந்தோட்டம், திராவிடப்பண்ணை, திருச்சி. பெருமூச்சு பொன்னாரம் (கே. ஆர். நாராயணன் வெளியீடு) திராவிடசம்பத்து துடிக்கும் இளமை நாடும் நாடகமும், 1953, திராவிடப்பண்ணை, திருச்சி. விடுதலைக்கிளர்ச்சி, 1952, திராவிடப்பண்ணை, திருச்சி. [27] கதை, வசனம் பராசக்தி மலர், 1953 மனோகரா, மூனா கானா பதிப்பகம், சென்னை நாம், 1953, திராவிடப்பண்ணை, திருச்சி. திரும்பிப்பார், 1953, திராவிடப்பண்ணை, திருச்சி. பயணக்கட்டுரைகள் இனியவை இருபது விருதுகளும், பெற்ற சிறப்புகளும் உலகக் கலைப் படைப்பாளி என்ற விருது 2009ஆம் ஆண்டு நடந்த அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் (அ) பெப்சி மாநாட்டில் கருணாநிதிக்கு வழங்கப்பட்டது.[28] கருணாநிதி 1970 ஆம் ஆண்டு, பாரிஸில் நடந்த உலக தமிழ் மாநாட்டின் ஒரு கெளரவ உயர் பதவியாளராக இருந்தார். 1987 ஆம் ஆண்டு, மலேசியாவில் நடந்த உலக தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.   2010 ஆம் ஆண்டு,  ‘உலக தமிழ் செம்மொழி மாநாட்டின்’ அதிகாரபூர்வமான கருப்பொருள் பாடலை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார். இதன் பின்னணி இசையை ஏ. ஆர். ரகுமான் அமைத்தார். கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி![29] இறப்பு 2016-ம் ஆண்டு முதல் சுவாசக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த கருணாநிதிக்கு ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை, அதனை மாற்றுவதற்காக மருத்துவமனைக்குச் சென்று உடலை பரிசோதித்து வந்தார். அதன் பிறகு கருணாநிதி உடல்நலத்தில் வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது என்றும் சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக தனியார் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்பிறகு, 24 மணி நேரமும் மருத்துவர்கள் அடங்கிய குழு கருணாநிதியை வீட்டிலேயே கண்காணித்து வந்தனர். பின்பு கருணாநிதியின் உடலில் நலிவு அதிகமானதை அடுத்து, சூலை 27, 2018 அன்று நள்ளிரவில் இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு சூலை 29, 2018 அன்று கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவருவதாக கூறப்பட்டது. அதன் பின்பு ஆகத்து 06, 2018 அன்று இவரின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அதற்கு மறுநாள் ஆகத்து 07, 2018 அன்று சிகிச்சை பலனின்றி சென்னையில் காலமானார்.[30] கருணாநிதி பற்றி பிறர் எழுதிய நூல்கள் கருணாநிதி யார்? - மீ. சு. இளமுருகு பொற்செல்வி, 1951, காதலர்பண்ணை, நூல் வெளியீட்டகம், பெரியகுளம் [31] அயராத தொண்டன் அஞ்சுகச் செல்வன் - மீ. சு. இளமுருகு பொற்செல்வி, 1989, இன்பப்பாசறை பதிப்பகம், குளித்தளை மேற்கோள்கள் வெளி இணைப்புகள் |- |Precededby ஜெ. ஜெயலலிதா |} பகுப்பு:தமிழ்நாட்டு முதலமைச்சர்கள் பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள் பகுப்பு:திராவிட இயக்க எழுத்தாளர்கள் பகுப்பு:தமிழ் இறைமறுப்பாளர்கள் பகுப்பு:1924 பிறப்புகள் பகுப்பு:2018 இறப்புகள் பகுப்பு:இராசராசன் விருது பெற்றவர்கள் பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்ட நபர்கள் பகுப்பு:தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள் பகுப்பு:இந்திய இறைமறுப்பாளர்கள் பகுப்பு:கருணாநிதி குடும்பம் பகுப்பு:15 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பகுப்பு:14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பகுப்பு:13 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பகுப்பு:12 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள் பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு:திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள் பகுப்பு:திருக்குறள் உரையாசிரியர்கள் பகுப்பு:திருவாரூர் மாவட்ட நபர்கள்
கலைஞர் கருணாநிதியின் சொந்த ஊர் எது?
திருக்குவளை
699
tamil
2c9fa8009
நாகாலாந்து (Nagaland) இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம் ஆகும். இந்திய மாநிலங்களான அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் அயல் நாடான மியன்மார் என்பன இதனோடு எல்லைகளைக் கொண்டுள்ளன. இதன் மாநிலத் தலை நகரம் கோஹிமா ஆகும். நாகாலாந்து பதினோறு நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம் மாநிலத்தில் 16 முக்கிய இனக்குழுக்கள் வாழுகின்றன. இன அடிப்படையில் இவர்கள் இந்தோ-மொங்கொலொயிட் இனப்பிரிவைச் சேர்ந்த நாகா இனக் குழுக்கள் ஆவார். நாகாலாந்து டிசம்பர் 1, 1961 ல் ஒரு மாநிலமாக ஆக்கப்பட்டது. பட்டியல் பழங்குடி மக்கள் பெரும்பான்மையினத்தவராக உள்ள இம்மாநிலத்தில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) -0.58% ஆக குறைந்துள்ளது.[1]இம்மாநிலத்தின் ஆட்சி மொழி ஆங்கிலம் ஆகும். வரலாறு பழமைத்தன்மை நாகா மக்களின் பண்டைய வரலாறு தெளிவாக இல்லை. வெவ்வேறு காலக்கட்டங்களில் குடியேறிய பழங்குடிகள், தற்போது வடகிழக்கு இந்தியாவாக உள்ள பகுதிகளில் குடியேறி, தங்களின் இறையாண்மை உடைய மலை நாடுகளையும் கிராமங்களையும் நிறுவியுள்ளனர். இவர்கள் வடக்கு மங்கோலியப் பகுதி, தென்கிழக்கு ஆசியா அல்லது தென்மேற்கு சீனாவிலிருந்து வந்தவர்களா என்பதற்கான எந்த பதிவும் இல்லை. தவிர, அவர்களின் தோற்றமானது இந்தியாவின் கிழக்குப் பகுதியிலிருந்தும், கி.பி. 1228 ஆம் ஆண்டில் அகோமின் வருகைக்கு முன்பாக இன்றைய நாக மக்கள் குடியேறியதாக வரலாற்று பதிவுகளும் காட்டுகின்றன. 'நாகா' என்ற சொல்லின் தோற்றம் கூட தெளிவாக இல்லை.[2] பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஆனால் சர்ச்சைக்குரிய கருத்தாக, இந்தப் பெயர் பர்மிய சொல்லான 'நாக' அல்லது 'நாகா' என்பதிலிருந்து உருவானது, அதாவது காதணிகளைக் கொண்ட மக்கள் என்பது இதன் பொருள். வேறுசிலர் அதை குத்தப்பட்ட மூக்கு என்று பொருள்கூறுகின்றனர்.[3] naka மற்றும் naga இரண்டும் பர்மாவில் ஒன்றுபோலவே உச்சரிக்கப்படுகிறது.[4] நாகாலாந்தின் பழங்கால பெயர் 'நாகனச்சி' அல்லது 'நாகன்சி', இது நாகா மொழியிலிருந்து வந்தது.[5] தெற்காசியாவில் ஐரோப்பிய காலனித்துவத்தின் வருகைக்கு முன்னர், நாகா பழங்குடியினர், மீட்டி மக்கள் போன்ற இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளின்மீது பர்மியர்களால் பல போர்கள், துன்புறுத்தும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. படையெடுப்பாளர்கள் "தலையை வெட்டி வேட்டையாடவும்", இந்த பழங்குடி இனத்தவரின் செல்வங்களையும் தேடி வந்தனர். வடக்கு இமயமலையில் வாழும் மக்களைப் பற்றி பர்மிய வழிகாட்டிகளை பிரித்தானியர் கேட்டபோது, அவர்கள் 'நாகா' எனக் கூறினர். இது 'நாக' எனப் பதிவு செய்யப்பட்டு, அதன் பிறகு பயன்படுத்தப்பட்டது. பிரித்தானிய இந்தியா நாகா மக்கள் எந்த முடியாட்சிக்குக்கீழும் இல்லாமல் இறையாண்மையொடு பல தலைமுறைகளாக இருந்து வந்தனர். ஆனால் முதல் முறையாக பிரிட்த்தானியர் 1832 இல் அசாமிற்கும் மணிப்பூருக்கும் இடையே நேர்வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்தபோது நாகாலாந்திற்குள் நுழைந்தனர். அவர்களை அப்போது அனைத்து நாகா கிராமங்களும் எதிர்த்தன. பிரித்தானியர் நாகாலாந்தை தங்கள் ஆளுமைக்குக்கீழ் கொண்டுவர எண்ணிச் செயல்பட்டனர். அவர்களால் அவ்வளவு எளிதில் அதைச் செய்யமுடியவில்லை. 1879 இல் தற்போது நாகாலாந்தின் தலைநகரமாக இருக்கும் கொகிமாவிற்கு அருகில் உள்ள கிராமத்தில் நடந்த போரில் பிரித்தானியர் நாகா மக்களை முறியடித்தனர். பின்னர் 1880 இல் அமைதிப் பேச்சுவார்த்தைவழியாக நாகாலாந்து பிரித்தானியரின் ஆட்சியின்கீழ் கொண்டு வரப்பட்டது. பிரித்தானிய ஆட்சியின் காரணமாக, அதற்கு முன் தனித்தனி கிராமங்களாக இருந்த நாகா மக்களெல்லாம் நாகா என்ற ஒற்றை அடையாளத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். இது நாகா மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த காரணமாயிற்று. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருந்துவந்த கிருத்துவ மறைபணியாளர்களால் பிரித்தானிய இந்தியாவின்,[6] நாகாலாந்தின் நாகா பழங்குடியினர் மற்றும் அண்டை மாநில மக்களை அவர்களின் ஆன்ம வாத சமயத்திலிருந்து கிறித்துவத்துக்கு மாற்றினர்.[7] 20ஆம் நூற்றாண்டு 1944 ஆம் ஆண்டில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய இராணுவம் சப்பானிய இராணுவத்தின் உதவியுடன் இந்தியாவின் மீது பர்மா வழியாக படையெடுத்து. அது கோஹிமா வழியாக இந்தியாவை விடுவிக்க முயன்றது. மக்கள் வெளியேற்றப்பட்டனர். பிரித்தானிய இந்திய வீரர்களால் கோஹிமாவின் பகுதி 1944 சூன் பிரித்தானியரால் விடுவிக்கப்பட்டது. இந்திய தேசிய ராணுவம் பாதி வீரர்களை இழந்து, பட்டினியால் பலரை இழந்ததுடன், பர்மா வழியாக வெளியேறவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாயினர்.[8][9] நாகா இயக்கம் 1929 ஆம் ஆண்டில், சைமன் கமிசனிடம் நாகா கிளப்ப் (பின்னர் இது நாகா தேசிய கவுன்சிலாக ஆனது) நாகா மக்களின் கோரிக்கை சமர்பிக்கப்பட்டது. அதில் பிரித்தானிய இந்தியாவில் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் புதிய வரிகளில் இருந்து தங்களுக்கு விலக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வது, பிரித்தானிய இந்தியா தங்களுக்கு விடுதலை அளிக்கவேண்டுமென்று எண்ணினால் தயவுகூர்ந்து தங்களை யாரின் கீழும் விட்டுவிடாமல் நாகாலாந்து பழைய காலங்களில் எப்படி இருந்ததோ அப்படியே விட்டுவிடும்படி கேட்டுக்கொள்கிறோம். என கோரினர்.[10][11] 1929 முதல் 1935 வரையான காலப்பகுதியில், நாகா மக்களின் இறையாண்மைப் புரிதல் என்பது பாரம்பரிய பிராந்திய வரையறை அடிப்படையில் 'சுய-ஆட்சி' ஆகும். 1935 முதல் 1945 வரையான காலப்பகுதியில், நாகர்கள் அசாமில் மட்டுமே தன்னாட்சி உரிமையைக் கோரியிருந்தனர். 1946 ஆகத்து 1 இல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரான நேரு, நாகா மக்கள் இந்திய ஒன்றியத்தில் சேர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உள்ளூர் தன்னாட்சி உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவை நிர்வாகத்தின் பரந்த பகுதியினருக்கு வழங்கப்படும் என்றார். 1946 க்குப் பிறகு நாகர்கள் தங்கள் தனித்தன்மை வாய்ந்த ஒரு தனி நாடாகவும் சுயாதீனமாக வாழ தங்களுக்குள்ள முழு உரிமைக்காகவும் வலியுறுத்தினர். 1947 சூலை 19, இல் இந்திய விடுதலைக்கு முன்னர் நாகா தேசிய கவுன்சில் பிரதிநிதிகள் தில்ல்லியில் காந்தியைச் சந்தித்தனர். அவர்களுடன் நீண்ட கலந்துரையாடல் நடத்திய காந்தி, “இந்திய ஒன்றியத்துடன் இணைய விரும்பவில்லை என்றால், சுதந்திரமாக இருப்தைற்கு நாகாலாந்திற்கு அனைத்து உரிமையும் உண்டு” என்று உறுதியளித்தார். அதன்படி நாகாலாந்து 1947 ஆகத்து 14 இல் தன் சுதந்திரத்தை அறிவித்தது. இதை இந்திய ஒன்றிய அரசு எதிர்த்தது. நாகா மக்களின் ஒருமித்த கருத்தை இந்தியாவிற்குத் தெரிவிக்க பொது வாக்ககடுப்பு நடத்த இந்திய குடியரசுத்தலைவருக்கு மனு அளிக்கப்பட்டது. அது பொருட்படுத்தப்படாததால் 1951 மே 16 இல் பொது வாக்ககடுப்பு நடத்தி அந்த வாக்குச்சீட்டுகளை ஒன்றிணைத்து, 80 பவுண்ட் கொண்ட ஒரு புத்தகமாக இந்தியக்குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்கள். 1952ல் இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றபோது நாகாலாந்து மக்கள் அதனை முழுமையாகப் புறக்கணித்தனர்.[12] 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, நாலாந்து அஸ்ஸாம் மாகாணத்தின் பகுதியாக ஆக்கப்பட்டிருந்தது. இதனால் நாகர்களின் ஒரு பிரிவினரிடையே தேசியவாத நடவடிக்கைகள் உருவாயின. இந்த இயக்கமானது தொடர்ந்த வன்முறை சம்பவங்களுக்கு வழிவகுத்தது, அது அரசாங்க மற்றும் சிவில் உள்கட்டமைப்பு சேதப்படுத்தியது, அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொதுமக்களைத் தாக்கியது. இதைத் தொடர்ந்து இந்திய ஒன்றிய அரசு 1955 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தை அனுப்பியது. 1957 ஆம் ஆண்டில் நாகா தலைவர்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது அதன்படி நாகா மலைகளைக் கொண்டு ஒரு தனி பகுதியை உருவாக்க முடிவெடுக்கப்பட்டது. இதில் திருப்தி அடையாத பழங்குடியினர், மாநிலத்துக்கள் மீண்டும் வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டனர். பழங்குடியினர் இராணுவம் மற்றும் அரசாங்க நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றின்மீது தாக்குதல்கள்களை அதிகரித்தனர். 1958 இல் நாகாலாந்தில் இந்திய அரசானது ஆயுதப் படைச் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் இயற்றியது. மூன்று பேருக்கு ஒரு இரானுவ வீரர் என்ற விகிதத்தில் இராணுவம் அங்கு குவிக்கப்பட்டது. பின்னர் துணை இராணுவப் படையினால் பலர்கொல்லப்பட்டனர். 1960 சூலை மாதம் பிரதமர் நேரு மற்றும் நாகா மக்கள் மாநாட்டு தலைவர்களுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர், 16- அம்ச ஒப்பந்தம் உருவானது. இதன்படி, நாகாலாந்தை இந்திய ஒன்றியத்துக்கு உட்பட்ட முழுமையான மாநிலமாக இந்திய அரசு அங்கீகரித்தது.[13] இந்த ஒப்பந்தத்தின் இரண்டாவது அம்சத்தின் படி நாகாலாந்து இந்திய வெளியுறவுத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது. வருமான வரிவிலக்கு போன்ற அம்சங்களும் இதில் அடங்கும். இந்த 16 அம்ச ஒப்பந்தம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டு ‘Article371A’’ உருவாக்கப்பட்டது.[14] அதன்படி, 1961 ஆம் ஆண்டின் நாகாலாந்து இடைக்கால விதிமுறை விதிகளின் கீழ்,[15] அந்த பிரதேசமானது, பழங்குடியினர், பழக்கவழக்கங்கள் மற்றும் அந்தந்த பழங்குடியினரின் பயன்பாடு ஆகியவற்றின்படி பழங்குடியினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 45 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு இடைக்கால அமைப்புக்குகீழ் விடப்பட்டது. இதன் விளைவாக, நாகாலாந்து மாநிலமானது 1962 ஆம் ஆண்டு நாகலாந்து மாநில சட்டம் உருவானது.[16] 1963 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி இடைக்காலக் கால அமைப்பு கலைக்கப்பட்டு நாகலாந்து மாநிலமானது முறையாக உருவாக்கப்பட்டது 1963 திசம்பர் 1 அன்று கோஹிமாவானது மாநிலத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டது. 1964 ஆம் ஆண்டு சனவரி மாதம் நடந்த தேர்தல்களுக்குப் பிறகு, 1964 சனவரி 11, அன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாகாலாந்து சட்டமன்றம் அமைக்கப்பட்டது.[17][18] இதைத் தொடர்ந்தும் கிளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல்கள் தொடர்ந்தன. பேச்சுவார்த்தைகள் அறிவிக்கப்பட்டன, பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன, ஆனால் இதனால் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தவில்லை. 1973ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் தன்னிச்சையாக வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்குக் கீழ் இருந்த நாகாலாந்தை உள்துறை அமைச்சகத்திற்குக் கீழ் கொண்டு வந்தது. நாகாலாந்து சட்டமன்றத்தில், மீண்டும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்குக் கீழ் கொண்டு வரவேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1975 ஆம் ஆண்டு மார்ச் மாதம், பிரதமர் இந்திரா காந்தியால் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. 1975 நவம்பரில், மிகப்பெரும் கிளர்ச்சி குழுக்களின் தலைவர்கள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு, இந்திய அரசியலமைப்பை ஏற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டார்கள், ஆனாலும் ஒரு சிறிய குழு இதை ஏற்றுக்கொள்ளவில்லை மேலும் அவர்களது கிளர்ச்சி நடவடிக்கைகள் தொடர்ந்தன.[19] மாவட்டங்கள் இம்மாநிலத்தை நிர்வாக வசதிக்காக பதினோறு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்; திமாப்பூர் கிபைர் கோகிமா லோங்லெங் மோகோக்சுங் மோன் பெரேன் பேக் துவென்சங் வோக்கா சுனெபோட்டோ அரசியல் நாகாலாந்து சட்டமன்றத்தில் 60 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஏனைய மாநிலங்களைப் போலவே, முதல்வரே அரசின் தலைவராக இருப்பார். இந்த மாநிலம் முழுவதும் நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[20]. மக்கள் தொகையியல் 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 16,579 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நாகாலாந்து மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 1,978,502 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 71.14% மக்களும், நகரப்புறங்களில் 28.86% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் -0.58% ஆக குறைந்துள்ளது. மக்கள் தொகையில் 1,024,649 ஆண்களும் மற்றும் 953,853 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 931 வீதம் உள்ளனர். 16,579 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 119 வீதம் மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 79.55 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 82.75 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 76.11 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 291,071 ஆக உள்ளது. [21] நாகா இன மக்கள் இம்மாநிலத்தில் பெரும்பான்மை மக்கள் ஆவார். சமயம் இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 173,054 (8.75 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 48,963 (2.47 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 1,739,651 (87.93 %) ஆகவும்,, பௌத்த சமய மக்கள் தொகை 6,759 (0.34 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 1,890 (0.10 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 3,214 (0.16 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 2,316 (0.12 %) ஆகவும் உள்ளது. மொழிகள் இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான ஆங்கில மொழியுடன் பழங்குடி இன மொழியுமான நாகா மொழி மற்றும் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது. போக்குவரத்து இம்மாநிலத்தில் தொடருந்து மிகக் மிகக் குறைந்த அளவில் 7.98 miles (Error in convert: Unit name "கிமீ" is not known (help)) நீளத்தில் இருப்புப்பாதை கொண்டுள்ளது. இம்மாநிலத்தில் தேசிய மற்றும் மாநில சாலைகள் 15,000கி மீ நீளத்தில் உள்ளது. ஹார்ன்பில் விழா நாகாலாந்தின் பழங்குடிமக்களின் விழாவான ஹார்ன்பில் விழா உலகப்புகழ் பெற்றது. வளர்ச்சித் திட்டங்கள் தலைநகர் தில்லியில் இருந்து பத்து-பதினைந்து மணி நேரப்பிரயாணத் தொலைவில் நாகாலாந்து உள்ளது.[22] இயற்கை வளம் செறிந்த பகுதியாக இருப்பினும் போக்குவரத்தில் முழுமையாக இணைக்கப்படாததால், இந்தியாவின் மற்ற பகுதி மக்கள் கூட இப்பகுதியைச் சுற்றுலாவிற்குத் தேர்ந்தெடுப்பதில் முன்னுரிமை தராத சூழ்நிலை உள்ளது. எதிர்காலத்தில் வடகிழக்கு இந்திய மாணவர்களுக்கு என்று இஷான் உதய் எனும் கல்வி உதவிக்கட்டணத் திட்டமும், இந்திய நாட்டின் பிற பகுதிகளில் உள்ள ஐ.ஐ.டி போன்ற கல்வி நிலையங்களைச் சென்று பார்க்க வருடந்தோறும் அனுமதியும் ஏற்பாடும் செய்யும் இஷான் விகாஸ் எனும் திட்டமும் செயற்படுத்தப்படும் என்றும், ஐ.டி. அவுட்சவுர்சிங் வேலைவாய்ப்புகளை ஈர்க்கும் ஏற்பாடும் செய்யப்பட உள்ளன என்றும் குறிப்பிடப்படுகின்றது.[23][24] இதனையும் காண்க நாகா மக்கள் மேற்கோள்கள் வெளியிணைப்புகள் பகுப்பு:இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்
நாகாலாந்து மாநிலத்தின் தலைநகரம் எது?
கோஹிமா
232
tamil
e97e13d3a
ஜேம்ஸ் வாட் (James Watt, ஜனவரி 19, 1736 – ஆகஸ்ட் 25, 1819) ஒரு ஸ்காட்டியப் புத்தாக்குனரும், இயந்திரப் பொறியாளரும் ஆவார். நீராவி இயந்திரத்துக்கு இவர் செய்த மேம்பாடுகளே பிரித்தானியாவிலும், உலகின் பிற பாகங்களிலும் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்கு அடிப்படையாக அமைந்தன. ஜேம்ஸ் வாட் 1736 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் நாள் ஐந்தாம் கிளைடில் உள்ள கிரீனாக் என்னும் துறைமுகப் பகுதியில் பிறந்தார். இவரது தந்தையார் கப்பல் கட்டுனராகவும், கப்பல் உரிமையாளராகவும், ஒப்பந்தகாரராகவும் இருந்தார். ஜேம்ஸ் வாட்டின் தாயார் அக்னஸ் முயிர்ஹெட், மதிப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். நன்றாகப் படித்திருந்தார். வாட் ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்லவில்லை. ஆனால், பெரும்பாலும் வீட்டிலேயே தாயாரிடம் கற்றுவந்தார். கணிதம் கற்பதில் இவர் அதைக ஆர்வம் காட்டிவந்தார். இவர் 18 வயதாக இருந்தபோது இவரது தாயார் காலமானார். இவரது தந்தையின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டிருந்தது. கருவிகள் செய்வது பற்றிக் கற்றுக்கொள்வதற்காக இலண்டனுக்குச் சென்ற வாட், ஒராண்டின் பின்னர் திரும்பவும் ஸ்காட்லாந்துக்கு வந்தார். அங்கே அவர் தனது சொந்த கருவிகள் செய்யும் தொழில் தொடங்க எண்ணினார். நீராவி உடனான ஆரம்ப சோதனைகள் 1759 ஆம் ஆண்டில் வாட்டின் நண்பரான ஜான் ராப்சன், உந்து சக்தியின் ஆதாரமாக நீராவி பயன்படுத்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.[2] நியூகொமன் நீராவி இயந்திரத்தின் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் சுரங்கங்களில் இருந்து தண்ணீர் வெளியேற்றுவதற்கு கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. வாட் ஒரு இயங்கும் நீராவி இயந்திரத்தை அவர் பார்த்ததில்லை என்றாலும், நீராவி மூலம் பரிசோதனை செய்யத் தொடங்கினார். அவர் ஒரு மாதிரியைக் கட்ட முயன்றார்; அது திருப்திகரமாக வேலை செய்யத் தவறிவிட்டது, ஆனால் அவர் தனது பரிசோதனையைத் தொடர்ந்தார், அந்த நீராவி இயந்திரம் பற்றி அவர் எல்லாவற்றையும் படிக்கத் தொடங்கினார். உள்ளுறை வெப்பத்தின் முக்கிய்த்துவம் குறித்து வாட் உணரத்தொடங்கினார். மேலும் நிலையான வெப்ப மாற்றம் நிகலும்போது ஏற்ப்படும் வெப்ப ஆற்றல் நீராவி இயந்திரம் இயக்க பயன்படும் விதம் குறித்து புறிதல் வாட்டிற்கு புதியது மற்றும் இதைப் பற்றி வாட்டின் நன்பர் ஜோசப் பிளாக் சில வருடங்களுக்கு முன் கண்டுபிடித்திருந்தார். வெப்ப இயக்க ஆற்றல் துறையில், நீராவி இயந்திரம் இயக்கம் குறித்த புறிதல் ஆரம்ப நிலையிலேயே இருந்தது. மேலும் இதே நிலையில் முறைப்படுத்தப்படாமல் அடுத்த நூறு (100) ஆண்டுகள் நீடித்தது. 1763 இல், பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான ஒரு நியூகோம் இயந்திரத்தின் மாதிரியை சரி செய்ய வாட் கேட்டுக்கொள்ளப்பட்டார்.[2] பழுதுபார்த்தப் பின்னரும் கூட இயந்திரம் அரிதாகவே வேலை செய்தது. ஏராளமான பரிசோதனைகளுக்குப் பின்னர், ஒவ்வொரு சுழற்சியிலும் நீராவியால் பெற்ப்படும் வெப்ப ஆற்றலின் மூன்றில் ஒரு பங்கு இயந்திரத்தின் உருளையை வெப்பமடையச் செய்யவே பயன்பட்டது என்று வாட் விளக்கினார்.[3] இந்த வெப்ப ஆற்றல் வீணடிக்கபட்டது, ஏனெனில் ஒவ்வொரு சுழற்சியிலும் உருளையின் உள்ளே அழுத்தத்தை குறைப்பதற்க்காக குளிர்ந்த நீரானது நீராவியை குளிரடையச் செய்ய உட்செலுத்தப்பட்டது. இதனால் மீண்டும் மீண்டும் உருளையை வெப்பப்ப்டுத்துவதும், குளிர்விப்பதும் ஒவ்வொரு சுழற்சியிலும் நிகழ்வதால் இயந்திரம் அதிக இயக்க ஆற்றலாக திறனை மாற்றாமல் அதிக வெப்ப ஆற்றல் வீணடிக்கப்பட்டது. வாட்டின் முக்கியமான கண்டுபிடிப்பு மே 1765 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது,[4] காரணம் பிஸ்டனிக்கு வெளியே ஒரு தனி அறையில் நீராவியின் வெப்பத்தை குளிரச் செய்தார். இந்த செயல் முறையால் ஒரே சீரான வெப்பம் இயந்திர உருளையின் உட்பகுதியை பராமரிக்க முடிந்தது ஏன்னென்றால் உருளை சுற்றி ஒரு நீராவி ஜாக்கெட்டால் சூழப்பட்டிருந்தது.[3] இதனால் ஒவ்வொரு சுழற்சியிலும் சில சிறிய எரிசக்தி உறிஞ்சப்பட்டு, பயனுள்ள வேலையை செய்வதற்கு அதிக அளவில் இயக்க ஆற்றல் கிடைக்கிறது. அதே வருடத்தில் வாட் ஒரு செயல்படும் மாதிரியை உருவாக்கினார். ஒரு சாத்தியமான வேலை செய்யக்கூடிய வடிவமைப்பு இருந்தபோதிலும், முழு அளவிலான இயந்திரத்தை கட்டமைப்பதில் கணிசமான சிக்கல்கள் இருந்தன. இதற்கு அதிக மூலதனம் தேவைப்படுகிறது, அதில் சில கருப்புப் பணத்தில் இருந்து வந்தன. வாட்டிற்க்கு ஜான் ரோபக்கிடம் இருந்து கணிசமான ஆதரவு வந்தது. ஜான் பால்ல்க் அருகிலுள்ள பிரபலமான காரோன் இரும்பு பட்டறையின் நிறுவனராவார். வாட் இவருடன் ஒரு கூட்டணியை ஏற்ப்படுத்தினார். ரோபக் அவர்கள் போன்னஸ் எனும் இடதில் உள்ள கின்னேல் ஹவுஸ்சில் வசித்து வந்தார், அந்த சமயத்தில் வாட் அவரது நீராவி இயந்திரத்தை ரோபக் வீட்டிற்கு அருகில் உள்ள குடிழில் செம்மை பட செய்தார். அந்த குடிழின் கூண்டு மற்றும் வாட் மிகப்பெரிய திட்டங்களின் சாட்சியாக இன்றும் உள்ளது. [5] முதல் நீராவி இயந்திரம் 1776 ஆம் ஆண்டில், முதல் நீராவி இயந்திரங்கள் நிறுவப்பட்டு, வர்த்தக நிறுவனங்களில் வேலை செய்தன. இந்த முதல் இயந்திரங்கள் விசையியக்கக் திறனை வழங்க குழாய்களுக்குப் பயன்படுத்தப்பட்டன, அவை தண்டுகளின் அடிப்பகுதியில் குழாய் கம்பிகளை நகர்த்துவதற்கான ஒரே பரிமாற்ற இயக்கத்தை மட்டுமே உருவாக்கின. இந்த வடிவமைப்பு வணிகரீதியாக வெற்றிகரமாக இருந்தது, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வாட் அதிக இயந்திரங்களை நிறுவினார், குறிப்பாக கார்ன்வால் என்ற இடத்தில் உள்ள சுரங்கங்களில் இருந்து நீரை வெளியேற்றுவதற்காக நிறுவினார். இந்த ஆரம்ப இயந்திரங்கள் பவுல்டன் மற்றும் வாட் ஆகியோரால் தயாரிக்கப்படவில்லை, ஆனால் வாட் அவர்களால் வரையப்பட்ட வரைபடங்களின் அடிப்படையில் மற்றவர்களிடமிருந்து தயாரிக்கப்பட்டது, வாட் அவர்கள் ஆலோசக பொறியியலாளராக மட்டுமே பணியாற்றினார். இயந்திரங்கள் மற்றும் அதன் அதிர்வெண்ணின் துவக்கம் முதன்முறையாக வாட் அவர்களால் மேற்பார்வையிடப்பட்டது, பின்னர் அந்த வேலையை செய்ய அந்த நிறுவனத்தில் ஆண்கள் பணியமர்த்தப்பட்டனர். முதலில் இவை பெரிய இயந்திரங்களாக இருந்தன. உதாரணமாக, ஒரு உருளை 50 அங்குல விட்டம் கொண்டதாகவும் மற்றும் 24 அடி உயர உயரம் கொண்டதாகவும் இருந்தது. இந்த இயந்திரம் அமைப்பதற்க்கென்று தனிப்பட்ட கட்டிடம் தேவைப்பட்டது. பவுல்டன் மற்றும் வாட் தங்களின் ஆண்டு வருமானமாக, புதிய இயந்திரத்தால் சேமிக்கப்படும் நில்க்கரியின் அளவில் மூன்றில் ஒரு பகுதியை தங்களின் வேலைக்கான பணமாக பெற்றனர். கெளரவங்கள் வாட் தான் வாழ்ந்த காலத்திலேயே கெளரவிக்கப்பட்டிருக்கிறார். 1784 ஆம் ஆண்டில் அவர் எடின்பரோவின் ராயல் சொசைட்டி உறுப்பினராக கெளரவிக்கப்பட்டார், மேலும் 1787 ஆம் ஆண்டில் ராட்டர்டாமின் செய்முறைத் தத்துவத்திற்கான பட்டாவியன் சங்கத்தின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1789 ஆம் ஆண்டில் கட்டட பொறியாளர்களுக்கான ஸ்மிட்டோனிய சங்கத்தின் உயர்மட்ட குழுவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [6] 1806 ஆம் ஆண்டில், கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தின் சட்டத்திற்க்கான கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. பிரஞ்சு அகாடமி அவரை ஒரு அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினராக தேர்ந்தெடுத்தது மற்றும் 1814 இல் ஒரு வெளிநாட்டு இணைப்பாளராக நியமிக்கப்பட்டார். [7] வாட் என்ற திறனுக்கான அளவீட்டு அலகு (அனைத்துலக முறை அலகுகள்(SI) International System of Units (or "SI")) முறையாக , நீராவி இயந்திரத்தின் வளர்ச்சிக்கு ஜேம்ஸ் வாட்டின் பங்களிப்பிற்காக அவரது பெயரில் வாட் என்று பெயரிடப்பட்டது, மற்றும் 1889 ஆம் ஆண்டில் அறிவியல் மேம்பாட்டிற்கான பிரித்தானிய சங்கத்தின் இரண்டாம் காங்கிரஸால் இந்த அலகு ஏற்றுக்கொள்ளப்பட்டது, மேலும் 11 வது 1960 இல் திறன் (இயற்பியல்) சர்வதேச அமைப்பில் (அல்லது "SI") வாட் என்ற அலகு இணைக்கப்பட்டது. 29 மே 2009 அன்று இங்கிலாந்து வங்கி தனது புதிய £ 50 மதிப்புக் கொண்ட பவுண்டு ஸ்டெர்லிங் பணத்தாளில் பவுல்டான் மற்றும் வாட்டின் உருவங்கள் அச்சிடப்படும் என்று அறிவித்தது. இங்கிலாந்து வங்கியின் பணத்தாள் வரலாற்றில், இரு நபர்களின் உருவங்கள் அச்சிடப்படுவது இதுவே முதல் முறையாகும். [8] இந்த பண்த்தாள் நவம்பர் 2 இல் புழக்கத்திற்க்கு வரும என்று செப்டம்பர் 2011 இல் அறிவிக்கப்பட்டது. [9] நினைவிடங்கள் வாட் அவர்களின் பூத உடல், பர்மிங்காம் நகரில், ஹேண்ட்ஸ்வொர்தில் உள்ள புனித மேரி தேவாலயத்தின் மைதானத்தில் புதைக்கப்பட்டது. பின்நாளில் வாட் அவர்களின் கல்லறையின் மேல் தேவாலயத்தின் கட்டிடம் விரிவாக்கம் செய்யப்பட்டதன் காரணமாக, அவருடைய கல்லறை இப்போது தேவாலயத்தில் அடியில் புதையுண்டிருப்பதாக நம்பப்படுகிறது.[10] வாட் தனது ஓய்வு வாழ்க்கை நேரத்தை பெரும்பாலும் கேரட் அறை என்று அழைக்கப்படும் பட்டறையில் கழித்தார். இந்த அறை வாட் மறைவுக்குப் பிறகு 1853 ஆம் ஆண்டுவரை யவராலும் பயன்படுத்தப்படாமலும் கவனிக்கப்படாமலும் விடப்பட்டது. அதன் பிறகு வாட் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் J. P. முயர்ஹெட் அவர்களால் முதலில் பார்க்கப்பட்டது.[11] அதன் பிறகு, அந்த அறை எப்போதாவது பார்வையிடப்பட்டது, ஆனால் ஒரு புனித சன்னதி போல் தீண்டப்படாமல் இருந்தது. மேலும் வாட்டின் அறை காப்புரிமை அலுவலகமாக மாற்றுவதற்கு ஒரு முன்மொழிவு இருந்தபோதும் எந்த ஒரு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் இருந்தது. 1924 ஆம் ஆண்டில் வாட்டின் அறை இடித்துத் தள்ளியபோது, அறை மற்றும் அதன் அனைத்து பொருட்களும் அறிவியல் அருங்காட்சியகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டன, அங்கு அதன் மாதிரி மீண்டும் உருவாக்கப்பட்டது. இது பல வருடங்கள் பார்வையாளர்களுக்காக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது, ஆனால் கேலரி மூடப்பட்டிருந்த போது அந்த பட்டறையின் சுவர்கள்- முழுவதுமாக பெயர்தெடுக்கப்பட்டு அப்படியே, பாதுகாக்கப்பட்டு, மார்ச் 2011 இல் ஒரு புதிய நிரந்தர அறிவியல் அருங்காட்சியக கண்காட்சியின் ஒரு பகுதியாக "ஜேம்ஸ் வாட் மற்றும் எமது உலகம்" என்ற தலைப்பிடப்பட்டு, பொதுமக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது.[12] படத்தொகுப்பு Loughborough University இல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் வாட்டின் நீராவிப் பொறி ஜேம்ஸ் வாட் வேலை செய்யப் பயன்படுத்திய இடம் மேற்கோள்கள் பகுப்பு:1736 பிறப்புகள் பகுப்பு:பொறியியலாளர்கள் பகுப்பு:1819 இறப்புகள்
இயந்திரப் பொறியாளர் ஜேம்ஸ் வாட் எப்போது பிறந்தார்?
1736 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19
271
tamil
65a539bb0
பாக்கித்தான் (Pakistan, பாகிஸ்தான், ( அல்லது ; ), அதிகாரபூர்வமாக பாக்கிஸ்தான் இசுலாமியக் குடியரசு (), ஆசிய கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும். மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நாடுகளில் பாக்கிஸ்தானும் ஒன்று. பாக்கிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத். கராச்சி முக்கிய துறைமுகமும் தொழில் நகரமும் ஆகும். இந்திய எல்லையின் அருகில் உள்ள லாகூர் மற்றொரு முக்கிய நகரம். 180 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பாக்கிஸ்தான் ஆறாவது மிகுந்த மக்கள்தொகையுடைய நாடாகும். 796,095கிமீ2 () பரப்பளவுள்ள இந்த நாடு இதனடிப்படையில் 36வது பெரிய நாடாக விளங்குகின்றது. தெற்கில் அரபிக்கடல் மற்றும் ஓமன் குடாவில் தொலைவுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது; கிழக்கில் இந்தியாவும் மேற்கில் ஆப்கானிஸ்தானும் தென்மேற்கில் ஈரானும் வடகிழக்குக் கோடியில் சீன மக்கள் குடியரசும் எல்லைகளாக அமைந்துள்ளன. வடக்கில் ஆப்கானிஸ்தானின் குறுகிய வாகான் இடைப்பகுதி</i>யால் தஜிகிஸ்தானிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. தவிரவும் தனது கடல் எல்லையை ஓமனுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. தற்போது பாக்கிஸ்தானாக அறியப்படும் பகுதியில் பல தொன்மையான நாகரிகங்கள் தழைத்துள்ளன. புதிய கற்காலத்தின் மெகெர்கரும் வெண்கல காலத்து சிந்துவெளி நாகரிகமும் குறிப்பிடத்தக்கன. இந்துக்கள், இந்தோ-கிரேக்கர்கள், முஸ்லிம்கள், துருக்கிய-மங்கோலிய மரபினர், ஆப்கானியர்கள், சீக்கியர்கள் போன்ற பல்வேறு சமய, பண்பாட்டு அரசர்கள் இங்கு ஆண்டுள்ளனர். இந்திய மௌரியப் பேரரசு, பெர்சிய அகாமனிசியப் பேரரசு, மாசிடோனியாவின் அலெக்சாந்தர், அராபிய உமையா கலீபகம், மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு மங்கோலியப் பேரரசு, முகலாயப் பேரரசு, துராணிப் பேரரசு, மராத்தியப் பேரரசு, சீக்கியப் பேரரசு மற்றும் பிரித்தானியப் பேரரசு போன்ற பல பேரரசுகளும் அரச மரபினரும் இங்கு ஆட்சி புரிந்துள்ளனர். துணைக்கண்டத்தில் நிகழ்ந்த விடுதலைப் போராட்டங்கள் மற்றும் முகமது அலி ஜின்னாவின் பாக்கிஸ்தான் இயக்கத்தினால் முஸ்லிம்களுக்கான நாடாக துணைக்கண்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை அடக்கிய பாக்கிஸ்தான் 1947ஆம் ஆண்டில் உருவாயிற்று. 1956ஆம் ஆண்டில் தனக்கான அரசியலமைப்பை ஏற்று இஸ்லாமியக் குடியரசாகும் வரை பாக்கிஸ்தான் டொமினியனாக இருந்தது. 1971ஆம் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பின்னர் கிழக்கு பாக்கிஸ்தான் பிரிந்து புதிய நாடாக வங்காளதேசம் என்ற பெயரில் உதயமானது. நான்கு மாநிலங்களும் நான்கு கூட்டாட்சி ஆட்புலங்களையும் கொண்ட பாக்கிஸ்தான் கூட்டாட்சி நாடாளுமன்ற குடியரசாகும். பல மொழிகளையும் பல இனங்களையும் இதே போன்ற பலவகை புவியியல், வனவாழ்வினங்களையும் கொண்ட பன்முக நாடாக பாக்கிஸ்தான் விளங்குகின்றது. A regional and middle power, உலகில் மிகுந்த படைத்துறையினர் கொண்ட நாடுகளில் ஏழாவதாக உள்ள பாக்கிஸ்தான் அணுவாற்றல் மற்றும் அணு ஆயுத நாடாக, பிராந்தியத்தில் செல்வாக்குள்ள நாடாக[1][2] விளங்குகின்றது; முஸ்லிம் உலகில் அணு ஆயுதம் கொண்ட ஒரே நாடாகவும் தெற்காசியாவில் இரண்டாவது நாடாகவும் விளங்குகின்றது. பகுதியும் தொழில்மயமான பொருளாதாரத்தையும், நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட வேளாண்மைத் துறையையும் கொண்டுள்ள பாக்கிஸ்தான் உலகில் 26வது பெரிய பொருளாதாரமாகவும் பெயரளவு மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் 45வது பெரிய நாடாகவும் விளங்குகின்றது. உலகில் விரைவாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது. விடுதலைக்குப் பின்னரான பாக்கிஸ்தானின் வரலாற்றில் இடையிடையேயான படைத்துறை ஆட்சியும் அரசியல் நிலைத்தத் தன்மையின்மையும் இந்தோ-பாக்கிஸ்தான் போர்களும் முக்கியப் பங்காற்றுகின்றன. மிகுமக்கட்தொகை, தீவிரவாதம், ஏழ்மை, கல்வியின்மை, ஊழல் ஆகியன நாட்டின் முதன்மைப் பிரச்சினைகளாக உள்ளன. இவற்றிற்கிடையேயும் 2012ஆம் ஆண்டில் ஹேப்பி பிளானட் குறியீட்டில் 16வதாக வந்துள்ளது.[3] ஐக்கிய நாடுகள் அவை, நாடுகளின் பொதுநலவாயம், அடுத்த பதினொரு பொருளாதாரங்கள், பொருளாதார கூட்டுறவு அமைப்பு (ECO), காபி குழு, வளரும் எட்டு (D8), கெய்ர்ன்ஸ் குழு, கியோட்டோ நெறிமுறை, அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை, ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை, இஸ்லாமிக் கூட்டுறவிற்கான அமைப்பு, சார்க் மற்றும் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது.[4] பெயர்க்காரணம் பாக்கிஸ்தான் என்று அழைக்கப்படும் உருதுச் சொல்லுக்குப் பொருள், (பாக் + ஸ்தான்) தூய்மையான நிலம் என்பதாகும். பாக் என்றால் தூய்மையான என்று பொருள்[5]. வரலாறு 1947ல் இந்தியாவை விட்டு பிரித்தானியர் வெளியேறும் சமயம் இந்தியாவிலிருந்து கிழக்கிலும் மேற்கிலும் பிரித்து இருபகுதிகளுக்கும் நடுவே இந்தியா இருக்குமாறு உருவாக்கிய நாடு பாக்கிஸ்தான். இதனால் ஏற்பட்ட பல சிக்கல்களுக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்தியாவிற்கு கிழக்கில் இருந்த பாக்கிஸ்தானில், மேற்கு பாகிஸ்தானின் அதிகாரத்தை எதிர்த்து கலகம் ஏற்பட்ட போது, இந்தியாவின் தலையீட்டால் பிரிந்து வங்காளதேசம் என தனி நாடானது. புவியியல் பாக்கிஸ்தானின் அண்மையில் இந்தியா, சீனா, ஈரான், ஆப்கானித்தான் ஆகிய நாடுகள் உள்ளன. பாக்கிஸ்தானின் தெற்கில் அரபிக்கடல் உள்ளது. இந்தியாவிற்கும் இந்து மதத்திற்கும் பெயர் காரணமான சிந்து நதியின் பெரும் பகுதி தற்போது பாக்கிஸ்தானில் ஓடுகிறது. பழங்காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் மீது மத்திய ஆசியர்கள் படையெடுக்க உதவிய கைபர் கணவாய் மற்றும் போலன் கணவாய் என்பன தற்போது பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. மக்கள் மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் ஆறாம் இடம் வகிக்கிறது. இஸ்லாமியர்களை பெரும்பான்மையினராக கொண்டு அதிக இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் இரண்டாமிடம் வகிக்கிறது. பாக்கிஸ்தானில் உள்ள மக்களில் 96.3% மக்கள் இஸ்லாமியர்கள். உருது, ஆங்கிலம் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகள். உருது அதிகம் பேரால் பேசப்படுகிறது. அதிகம் பேர் தாய்மொழியாக கொண்ட மொழி பஞ்சாபி மொழி. சிந்தி மொழியும் அதிகம் பேசப்படுகிறது. நிர்வாகப் பிரிவுகள் பாக்கிஸ்தானானது, 4 மாகாணங்கள், 1 நடுவண நிர்வாகப்பழங்குடி பிரதேசம் மற்றும் 1 தலைநகரப்பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. மாகாணங்கள்: பலூச்சிஸ்தான் கைபர் பக்தூன்க்வா (NWFP) பஞ்சாப் சிந்து பிரதேசங்கள்: இஸ்லாமாபாத் தலைநகரப்பகுதி நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள் பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரம்: ஆசாத் காஷ்மீரம் கில்கித் - பல்திஸ்தான் அரசியல் அரசில் ராணுவத்தின் தலையீடு அதிகம். பலமுறை ராணுவம் அதிகாரத்தை தன் கையிலெடுத்துக்கொண்டு ஆட்சியைக் கலைத்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் 1973ல் உருவாக்கப்பட்டது. அது படைத்துறையினரால் (ராணுவத்தால்) 1977ல் கலைக்கப்பட்டது, மீண்டும் 1985ன் இறுதியில் சில மாற்றங்களுடன் உயிர்பிக்கப்பட்டது, மீண்டும் 1999ல் கலைக்கப்பட்டது. பாக்கிஸ்தானின் படைத்துறையைச் சேர்ந்த பெர்வேஸ் முஷாரஃப் அண்மையில் அதிபராக இருந்தார். முஷாரப் - பெனாசிர் இணக்கப்பாடு ஏற்படுவதில் குழப்பநிலை நீடித்து, இறுதியில் பெனாசிர் பூட்டோ கொலை செய்யப்பட்டார். தற்பொழுது பெனாசிர் பூட்டோவின் கணவர் ஆசிஃப் அலி சர்தாரி குடியரசுத்தலைவரகாக உள்ளார். பொருளாதாரம் பாக்கிஸ்தான் வளர்ந்து வரும் நாடுகளுள் ஒன்று. பெரும்பாலும் அமெரிக்காவை நம்பியே இதன் பொருளாதாரம் உள்ளது இராணுவபலத்தை பெருக்கும் முயற்சியில் அதிகமாக செலவு செய்யப்படுவதால் தொழில் முன்னேற்றத்தில் சற்று பின்தங்கியே உள்ளது. மிகுந்த வெளிநாட்டுக் கடன்களும் உண்டு. ஆப்கனிஸ்தானிலிருந்த தாலிபான்களின் மீதான அமெரிக்க படையெடுப்பில் உதவுமுகமாக நடந்துகொண்டதால் தற்காலிகமாக இச்சிக்கல்கள் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளுக்கு ஓப்பியம் போன்ற போதைப்பொருட்கள் கடத்திச் செல்லும் வழிகளில் பாக்கிஸ்தானும் ஒன்று என்பதால் வெளியுறவுச் சிக்கல்கள் உண்டு. குறிப்புகள் வெளி இணைப்புகள் பகுப்பு:பாக்கித்தான் பகுப்பு:முன்னாள் பிரித்தானியக் குடியேற்றங்கள் பகுப்பு:தெற்காசிய நாடுகள் பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
பாக்கித்தான் நாட்டின் தலைநகரம் எது?
இஸ்லாமாபாத்
221
tamil
bc05d5d9d
நெல் அல்லது அரிசி (ஒலிப்பு) (rice) என்பது புல் வகையை சேர்ந்த ஒரு தாவரமாகும். இது தென்கிழக்காசியாவில் தோன்றியது. இது ஈரநிலங்களில் வளரக்கூடியது. நெற்பயிர் சராசரியாக ஐந்து மாதங்கள் வரை வளரக் கூடிய ஓர் ஆண்டுத் தாவரமாகும். இப்பயிரின் விதையின் உமி என அழைக்கப்படும் மேலுறை நீக்கப்பட்ட பின் உணவாகப் பயன்படுத்தப் படுகிறது. இவ்வாறு மேலுறை நீக்கப்பட்ட விதை அரிசி என்று அழைக்கப்படுகிறது. ஆனால், அரிசிக்கு முளைக்கும் திறன் கிடையாது. நெல், சோளம், கோதுமைக்கு அடுத்து அதிகம் பயிரிடப்படும் தானியம் ஆகும். வரலாறு உலகில் முதன் முதலாக ஆசிய நெல் (Oryza sativa), ஆப்பிரிக்க நெல் (Oryza glaberimma) என இரு இன நெற்பயிர்கள் பயிரிடப்பட்டன. ஆசியாவில் நெல் சாகுபடி கி.மு 4500க்கு முன்பாகவே பல நாடுகளில் ஒரே சமயத்தில் துவங்கியதாகக் கருதப்படுகிறது. மேற்கூறிய இருவகை நெல் இனங்களின் பொதுவான முன்னோடி காட்டு நெல் இனம் Oryza rufipogan ஆகும். ஆசிய நெல் சிற்றினம் இமயமலை அடிவாரத்தில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இந்தியப்பகுதியில் Oryza sativa var. indica வும், சீனப்பகுதியில் Oryza sativa var. japonica வும் தோன்றின. இந்தியாவில், ஔவையார் மற்றும் பல பழம்பெரும் புலவர்கள் பாடிய நெல் மற்றும் அரிசி பற்றிய பாடல்கள் பல உள்ளன. நெல் விளையும் பகுதிகளில், நெல் நடுதல், அறுவடை போன்ற காலத்தையொட்டி பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. நெல் பற்றிய சில சமஸ்கிருத குறிப்புகளும் உள்ளன. சீனாவில், விவசாயம், நெல் ஆகிய இரண்டையும் குறிக்கும் சொல் ஒன்றே (XXX) ஆகும். ஆப்பிரிக்காவில் நெல் சுமார் கி.மு 1500 முதல் பயிரிடப்பட்டு வருகிறது. கி.மு 1500 – 800 ஆம் ஆண்டுகளில், நைகர் நதித்துவாரத்தில் பயிரிடப்பட்டு, பின் செனெகல் நாடு வரை பரவியது. எனினும், இதன் சாகுபடி மேற்கொண்டு பரவவில்லை. அரேபியர்களால் கி.பி 7 – 11 ஆம் நூற்றாண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆசிய நெல் இனங்கள் பயிரிடப்பட்டன. ஜப்பானில் நெற்பயிர் சீனாவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது என ஒரு சாரார் கருதுகின்றனர். ஆனால், ஜப்பானியர்கள் முன்னாளில் நீளமான தண்டுடைய, நீரில் வளரும் நெற்பயிர்களை படகில் சென்று அறுவடை செய்ததாக சில குறிப்புகளும் உள்ளன. உலர்நில (மானாவாரி) நெல் சாகுபடி கி.மு 1000 ஆம் ஆண்டு ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னாளில், கி.மு 300 இல் தற்கால நீர்நில சாகுபடி முறை யாயோய் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆசிய நெல் இனம் மத்திய கிழக்கு நாடுகளிலும் மத்திய தரைக்கடல் பகுதிகளிலும் சுமார் கி.மு 800 இல் பயிரிடத் துவங்கப்பட்டது. மவுரியர்கள் நெற்பயிரை ஸ்பெயின் நாட்டுக்கு அறிமுகப்படுத்தினர். 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நெல் இத்தாலி, பிரான்ஸ் நாடுகளுக்கும் பின்னர் எல்லா கண்டங்களுக்கும் பரவியது. 1694இல் அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில், மடகாஸ்கரிலிருந்து நெல் அறிமுகமானது. புயலால் பாதிப்படைந்து 'சார்ல்ஸ்டன்' என்ற துறைமுகத்துக்கு வந்த கப்பலின் தலைவர் ஒரு நெல் மூட்டையை அங்குள்ள விவசாயிகளுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். அவர்கள் அதனை பயிரிடத் தொடங்கினர். தென் அமெரிக்காவில் நெல் 18ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. முந்தைய அமெரிக்காவின் தென் கரோலினா, ஜார்ஜியா மாகாணங்கள், மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட கறுப்பின அடிமைகள் மூலம் நெல் பயிர் செய்து மிக அதிக இலாபம் ஈட்டினர். இவ்வடிமைகளுக்கு முன்னமே நெல் பயிர் பற்றிய அறிவு இருந்ததால், அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டனர். நில முதலாளிகள் அடிமைகளிடமிருந்து பாத்தி கட்டுதல், நீர் தேக்குதல் போன்ற உத்திகளை தெரிந்து கொண்டனர். முதலில் அமெரிக்காவில், நெல் கையால் (மர உலக்கை கொண்டு) குத்தப்பட்டு, பின் கூடைகளில் புடைக்கப்பட்டு அரிசி பிரித்தெடுக்கப்பட்டது. இவ்வுத்திகளும் ஆப்பிரிக்க அடிமைகளே அறிமுகப்படுத்தினர். பின்னர் 1787 இல், நீரால் இயங்கும் அரிசி அரவை இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு நெல் சாகுபடி நல்ல இலாபம் ஈட்டியது. 20ஆம் நூற்றாண்டில், அமெரிக்க உள்னாட்டு போருக்குப் பின் அடிமைகள் இல்லாமையால் நெல் சாகுபடி குறைந்து விட்டது. சங்கப்பாடல்களில் சங்க இலக்கியங்களில் நெல் பற்றிய பின்வரும் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன: நன்செய் நிலத்தில் விளையும் நெல்லை வெண்ணெல் [1] என்பர். புன்செய் நிலத்தில் வானம் பார்த்த பயிராக விளைந்த நெல் ஐவன வெண்ணெல் [2] எனப்படும். அண்மைக்காலம் வரையில் இதனைப் பச்சைமலைப் புனக்காட்டில் விளைவித்தனர். பண்டைய சேமிப்பு முறை மற்றும் நெற்களஞ்சியங்கள் அறுவடை செய்யப்பட்ட நெல்லைப் பாதுகாப்பாக சேமித்து வைக்க பெரிய மண் பானைகள், பத்தாயம் அல்லது குதிர் எனும் மரப்பலகைகளால் செய்யப்பட்ட அமைப்பு மற்றும் செங்கற்கள் கொண்டு அமைக்கப்பட்ட நெற்களஞ்சியங்கள் ஆகியவை பண்டைய நாட்களில் இருந்தன.[3] 600 ஆண்டு பழைமையான நெற்களஞ்சியங்கள் பல இந்துத் திருக்கோயில்களில் அமைந்துள்ளன. திருவரங்கம், திருஆனைக்கா, திருவரங்கம் கோயில்(திருக்கோயிலூர் அருகில்), அழகர்கோயில், தஞ்சாவூர், பாபநாசம், திருப்பாலத்துறை திருக்கோயில்களில் இத்தகைய நெற்களஞ்சியங்கள் உள்ளன.[3] பாரம்பரிய நெல் வகைகள் இந்தியாவில் 200000 மேற்பட்ட நெல் வகைகள் இருந்துள்ளதாக அறியப்படுகிறது.[4] தமிழக பாரம்பரிய நெல் வகைகள் வாடன் சம்பா முடுவு முழுங்கி களர் சம்பா குள்ள்க்கார் நவரை குழிவெடிச்சான் கார் அன்னமழகி இலுப்பைப்பூ சம்பா மாப்பிள்ளைச் சம்பா கருங்குறுவை கல்லுண்டை கருடன் சம்பா. பனங்காட்டு குடவாழை சீரக சம்பா வாசனை சீரக சம்பா விஷ்ணுபோகம்[5] கைவரை சம்பா அறுபதாம் குறுவை பூங்கார் காட்டு யானம் தேங்காய்ப்பூ சம்பா கிச்சடி சம்பா நெய் கிச்சி பாரம்பரிய நெல் வகைகள் காக்கும் முயற்சிகள் நமது நெல்லைக் காப்போம் அமைப்பு பாரம்பரிய நெல் வகைகள் காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆண்டு தோறும் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 27 ஆயிரம் விவசாயிகளுக்குப் பாரம்பரிய நெல் வகைகளை விநியோகித்துள்ளார்கள் என அறியப்படுகிறது.[6] உளுந்தூர்பேட்டை, ஸ்ரீசாரதா ஆசிரமம், ‘அக்ஷய க்ருஷி கேந்திரா’ (வேளாண்மை மையம்) பாரம்பரிய நெல் வகைகளில் 150 வகைகளை சேகரித்து, பெண்விவசாயிகளுக்கு பாரம்பரிய விதைநெல் வழங்கி பாரம்பரிய நெல் விதைகளைப் பாதுகாத்து வருகின்றது.[7][8][9][10] கர்நாடகத்தைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி ஸ்ரீனிவாசமூர்த்தி, இயற்கை விவசாய முறையின் உதவியுடன் பாரம்பரியமான 200 நெல் வகைகளைப் புதுப்பித்துள்ளார்.[11] நட்வர் சாரங்கி எனும் ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்தின் நரிசு கிராமத்தின் ஓய்வுபெற்ற பள்ளித் தலைமையாசிரியர் 360 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு, பாதுகாத்துள்ளார்.[12] ஊட்டச்சத்து உற்பத்தி உலக நெல் உற்பத்தி 1960 ஆம் ஆண்டில் 20 கோடி டன்களிலிருந்து சீராக உயர்ந்து 2004 இல் 60 கோடி டன்களாய் இருந்தது. அரிசி உற்பத்தி நெல் அளவில் சராசரியாக 68% ஆகும். 2004இல் சீனா (31%), இந்தியா (20%) மற்றும் இந்தோனேசியா (9%) நாடுகள் உலக நெல் உற்பத்தியில் முன்னிலை வகித்தன. உலக அளவில் மிக சிறிதளவே (உற்பத்தியில் 6%) நெல் ஏற்றுமதி ஆகிறது. ஏற்றுமதியில், தாய்லாந்து (26%), வியட்நாம் (15%), அமெரிக்கா (11%) ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. இந்தோனேசியா, வங்கதேசம், பிரேசில்,இந்தியா ஆகிய நாடுகள் அதிக அளவில நெல் இறக்குமதி செய்கின்றன. தமிழ்நாட்டில் தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டிணம் மாவட்டங்களில் நெல் அதிக அளவில் விளைகிறது. நெல் சாகுபடி உலகில் பெரும்பாலான மக்களின் அன்றாட உணவான அரிசி நெற்பயிரிலிருந்தே கிடைக்கிறது. உலகில் அதிகம் உண்ணப்படும் தானியம் அரிசியே ஆகும். உலகில், சோளத்திற்கும், கோதுமைக்கும் அடுத்ததாக, அதிகம் பயிரிடப்படுவது நெல்லே ஆகும். நெற்பயிர் மலிவாக வேலையாட்களும், அதிக மழையோ மற்ற நீராதாரங்களோ உள்ள பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. அதிக அளவில் மனித உழைப்பும், நீரும் நெல் பயிரிட தேவைப்படுகின்றன. இருப்பினும், மலைசாரல்களிலும் நெல் பயிரிடப்படுகிறது. ஆசியாவில் தோன்றினாலும், தொன்றுதொட்டே செய்யப்பட்ட நெல் வணிகத்தின் மூலம், அது உலகெங்கும் பயிரிடப்படுகிறது. நெற்பயிர் நீர் தேங்கிய பாத்திகளில் வளர்க்கப்படுகிறது. ஒரு சில நாடுகளில், சுமார் 15 செ.மீ நீர் தேக்கப்படுவதால், சில நாடுகளில் நெல்லுடன் மீன்களும் வளர்க்கப்படுகின்றன. நெற்பாத்திகள் நீர் தேக்கி வளர்க்கப்படுவதால், இயற்கையாகவே களைசெடிகள் குறைவாக இருக்கும். மண், தட்பவெப்பம் விதைத்தல், நடுதல் நீராதாரத்தைப் பொருத்து நெல் 'உலர்நில முறை' அல்லது 'நீர்நில முறை' ஆகிய முறைகளில் பயிரிடப்படுகிறது. உலர்நில முறையில், விதைகள் நேரடியாக விளைநிலத்தில் விதைக்கப்பட்டு, பின் முளைத்தலுக்கேற்ப அதிகப்படியான நெல் நாற்றுக்கள் களையப்படுகின்றன. நீர்நில முறையில், நெல் விதைகள் நாற்றங்கால் எனப்படும் சிறு நிலத்தில் விதைக்கப்பட்டு நாற்றுக்கள் பின்னர் விளை நிலத்தில் சரியான இடைவெளியில் நடப்படுகின்றன. இம்முறைகளின் பெயர் குறிப்பிடுவது போல, நீர்நில முறைக்கு அதிக நீர் தேவை. ந்நீர் நில முறையிலும் நேரடி விதைப்பு மூலம் நெல் விதைக்கப்பட்டு பின்னர் முளைத்தலுக்கேற்ப, அதிகமாக முளைத்த இடத்திலுள்ள நாற்றுகள் குறைவாக முளைத்த இடங்களில் நடப்படுகிறது. நாற்றங்கால் அமைத்தல் நீர் நில நெல் சாகுபடியில் நாற்றங்கால் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக, ஒரு ஏக்கர் நிலத்திற்கு, ஒரு சென்ட் (அதாவது, நடவுவயல் பரப்பில் 10%) நாற்றங்கால் தேவை. நடவுக்கு ஒரு மாதம் முன்பாக நாற்றங்கால் தயார் செய்யப்படுகிறது. நாற்றங்கால் நில மண் கட்டிகளின்றி நன்றாக தூளாகும் வரை உழுது, நீர் பாய்ச்சப்படுகிறது. சில விவசாயிகள், உழுவதற்கு சில நாட்கள் முன், நிலத்தில் நீர் பாய்ச்சுகின்றனர். இது களை விதைகளை முளைக்கச்செய்கிறது. பின்னர் உழும்போது, களைச்செடிகள் நிலத்தில் புதைக்கப்படுவதால் களை நிர்வாகம் குறைகிறது. ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு சுமார் 200 கிலோ மாட்டுச்சாண உரமிட்டு மீன்டும் ஈரநிலம் உழப்படுகிறது. பின், ஓரங்களில் வடிகால் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு, நடுவில் சற்றே மேடாக ஆனால் சமமாக இருக்குமாறு நிலம் சமன் செய்யப்படுகிறது. அடியுரமாக, 5- 10 கிலோ தழைச்சத்து (நைட்ரஜன்), 2 கிலோ உயிர்ச்சத்து (பாஸ்பரஸ்), 5 கிலோ மணிச்சத்து (பொட்டாசியம்), 3- 4 கிலோ சிங்க் சல்ஃபேட் (Zinc sulphate) இடப்படுகிறது. பின், ஒரு சென்ட் நாற்றங்காலூகு, 10- 12 கிலோ விதை சீராக தூவப்படுகிறது. சில நாடுகளில், விதைத்தபின் நாற்றங்கால் வாழை இலைகள் கொண்டு மூடப்படுகிறது. விதைத்த 5 நாட்களில், தேவைப்பட்டால் கை களையெடுப்போ, களைக்கொல்லியோ தெளிக்கப்படுகின்றன. இரும்பு சத்தின்றி நாற்றுகள் மஞ்சளானால், 2% ஃபெரஸ் சல்ஃபேட் (Ferrous suphate) தெளிக்கப்படுகிறது. நாற்று பறிக்க 10 நாட்களுக்கு முன் (விதைத்து சுமார் 3 வாரங்களில்), மேலுரமாக 1- 2 கிலோ தழைச்சத்து இடப்படுகிறது. விதை தேர்வு செய்தல் பொதுவாக, விவசாயிகள் முந்தைய பருவத்திலிருந்தோ மற்ற விவசாயிகளிடமிருந்தோ விதைகளைப் பெறுகின்றனர். அறுவடைக்கு முன், நிலத்தின் நல்ல பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு, பிற இரகங்களோ, களைகளோ நீக்கப்படுகின்றன. அறுவடைக்குப்பின், விதைக்கான நெல், கையால் போரடிக்கப்பட்டு (செடியிலிருந்து விதை உதிர்த்தல்), உலர்த்தி, காற்றில் தூற்றப்படுகிறது. பின்னர் விதைகள் பாதுகாப்பாக, பூச்சி தாக்குதலை தடுக்க நொச்சி இலைகள் அல்லது வேப்பிலைகள் கலந்து வைக்கப்படுகின்றன. விதைக்குமுன், நீரில் இடப்பட்டு மூழ்கும் விதைகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றன. நடவு வயல் தயாரிப்பு நாற்றங்காலில் 3 – 4 வாரங்கள் வளர்ந்தபின் நாற்றுகள் பறிக்கப்பட்டு கட்டப்படுகின்றன. நாற்று வளர்ச்சியை பொறுத்து நாற்றாங்காலில் இருபது நாட்களிலிருந்து அதிகபட்சமாக 35 நாட்கள் வரை நாற்று வளர்க்கப்படுகிறது. இவை பின் சுமார் 5 செ.மீ நீர் தேங்கிய நடவு வயலில் நடப்படுகின்றன. நாற்றுக்கள் குறுவையில் 15 X 10 செ.மீ இடைவெளியும், தாளடியில் 20 X 10 செ.மீ இடைவெளியும் விட்டு நடப்படுகின்றன. ஒவ்வொரு முறை நீர் அளவு குறைந்து நிலம் தெரியும்போதும், நீர் பாய்ச்சி 5 செ. மீ நீர் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படுகிறது. தேவையான தழைச்சத்து பிரித்து உரமாக இடப்படுகிறது. நட்ட ஐந்தாம் நாள் களைக்கொல்லி உபயோகித்தோ அல்லது 15 ஆம் நாள் கைகளாலோ களைகள் நீக்கப்படுகின்றன. தமிழக கிராமப்புறங்களில் நடவுப்பணி காலத்தில் அதற்கென உள்ள மக்களால் நடவு மேற்கொள்ளப்படுகிறது. சமீபகாலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடவு இயந்திரங்கள் சில இடங்களில் நல்ல பயனை கொடுத்தாலும் பெரும்பாலான விவசாயிகள் நடவுப்பணிக்கு விவசயக்கூலிகளை வைத்தே நடவு மேற்கொள்கின்றனர். இயந்திரங்களின் பயன்பாடு தமிழகத்தில் இதுவரை பரவலாகவில்லை. தமிழகத்தின் சில மாவட்டங்களில் நடவு சமயத்தில் குலவை இட்டு நடவுப்பணிகளை தொடங்குவது வழக்கத்தில் உள்ளது. திருத்திய நெல் சாகுபடி உலக நெல்லாராய்ச்சி நிறுவனம் (International Rice Research Institute, IRRI) மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆகியவை 'திருத்திய நெல் சாகுபடி' முறையை அறிமுகம் செய்துள்ளன. இதன் நோக்கம், நெல்லுக்கான நீர் தேவை, விதையளவு, தழைச்சத்து உரப்பயன்பாடு மற்றும் களை வளர்ச்சி யை குறைப்பதும், இதன் மூலம் அதிக விளைச்சலும், இலாபமும் பெறச்செய்வதும் ஆகும். இம்முறைப்படி, பாய் நாற்றஙகால் நடவு வயலின் மிக அருகிலேயே அமைக்கப்படுகிறது. விவசாயிகளைப் பொருத்த வரை நெல் இரகங்கள் பயிரிடும் காலம், முற்றும் காலம், கண்டுபிடிக்கப்பட்ட ஆராய்ச்சி நிலையம் ஆகிவற்றைப் பொருத்து வகைப்படுத்தப்படுகின்றன.இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் அரிசி நிறத்தைப் பொருத்து வெள்ளை, கருப்பு அல்லது சிகப்பு என நெல் இரகங்கள் உள்ளன. ஆப்பிரிக்கா போன்ற வறண்ட நிலப்பகுதிகளுக்கான அதிக விளைச்சல் தரக்கூடிய நெல் இரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை 'ஆப்பிரிக்காவுக்கான புதிய நெல்' (New Rice for Africa; XXX) என அழைக்கப்படுகின்றன. இவை மேற்கு ஆப்பிரிக்காவில் உணவுப் பஞ்சமில்லாதிருக்க உதவும் என நம்பப்படுகிறது. அரிசிகள் நுகர்வோரைப் பொருத்தவரை நெல் இரகங்கள் பெரும்பாலும் அவற்றிலிருந்து கிடைக்கும் அரிசியின் வடிவத்தாலும், குணத்தினாலும் வகைப்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இந்தியாவில் நீளமான, மணமுடைய 'பாஸ்மதி' அரிசி, நீளமான, சன்னமான 'பாட்னா' அரிசி, குட்டையான 'மசூரி' அரிசி ஆகிய இரகங்கள் பயிரிடப்படுகின்றன. தென்னிந்தியாவில், நீளமான சன்ன இரக 'பொன்னி' அரிசி பிரபலமானது. ஈரான் நாட்டில், ஹஷேமியுடனும் மிகவும் பிரபலமான நெல் இரகங்களை ஒன்றாகும்.[18] புழுங்கல் அரிசி தென் மற்றும் கிழக்கிந்தியாவில் அறுவடைக்குப்பின் நெல் நீரில் வேகவைத்து, உலர்த்தி, ஆலையில் அரைத்து அரிசியாக்கப்படுகிறது. இவ்வகை அரிசி 'புழுங்கல்' அரிசி என்று அழைக்கப்படுகிறது. கடின நெல் இரகங்களே இதற்கு உகந்தவை. புழுங்கல் அரிசி ஆலையில் தீட்டப்படும்போது, பல சத்துக்களை இழப்பதில்லை; எளிதில் செரிமாணம் ஆகக்கூடியது. ஆனால், வேக வைக்கப்பட்டதால், ஒரு வினோதமான வாசம் உடையதாய் இருக்கும். புழுங்கல் அரிசி தென்னிந்தியாவில் 'இட்லி' தயாரிக்கவும், உழைக்கும் வர்க்கத்தினரால் உணவுக்கும் பயன் படுத்தப்படுகிறது. பச்சரிசி அறுவடையான நெல்லை,வேக வைக்காமல், நேரடியாக ஆலையில் அரைப்பதால் கிடைக்கும் அரிசியைப் பச்சரிசி என்பர்.இவ்வித அரிசியை விரும்பி உண்ணுவோரும் உண்டு. செறிமானத்திறனில் இடைஞ்சல் வருவதாகச் சொல்லி, பலர் உண்ணுவதில்லை. மல்லிகை அரிசி தாய்லாந்தின் 'மல்லிகை' அரிசி (Thai Jasmine rice) நீள அரிசி வகை ஆகும். இவ்வகை நீல அரிசியில் அமைலோபெக்டின் குறைவாக இருப்பதால், வேகவைக்கப்படும்போது, ஒட்டும் தன்மை குறைவாக இருக்கும். சீனாவிலும், ஜப்பானிலும் பெரும்பாலும், குட்டையான ஒட்டும் தன்மை அதிகமுள்ள அரிசி இரகங்களே பயன்படுத்தப்படுகின்றன. சீன உணவகங்களில் நீளமான சற்றே ஒட்டும் தன்மையுள்ள அரிசி பயன்படுத்தப்படுகிறது. மணமுடைய அரிசி மணமுடைய அரிசி இரகங்கள் இயற்கையாகவே ஒரே மாதிரியான மாறாத மணம் கொண்டவை. இந்திய இரகங்களான 'பாஸ்மதி', 'பாட்னா' ஆகிய இரகங்கள் உலக அளவில் குறிப்பிடத்தக்கவை. அமெரிக்காவில் 'டெக்ஸ்மதி' என்ற பெயரில் விற்கப்பட்ட ஒரு மண அரிசி இரகம் 'காப்புரிமை' சமப்ந்தமான ஒரு பெரிய சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இது அமெரிக்க நீள அரிசியையும், பாஸ்மதியையும் கொண்டு உருவாக்கிய கலப்பின அரிசியாகும். நெல் மரபணு ஆராய்ச்சி நெல் தாவரத்தின் மரபணு வரைபடம் (en:gene map - எந்த மரபணு எந்த நிறப்புரியில், எந்த மரபணு இருக்கையில் உள்ளது என்பதைக் காட்டும் வரைபடம்) அறியப்பட்டுள்ளது. இவ்வரைபடம் முழுமையாக அறியப்பட்ட முதல் உயர் உயிரினம் என்ற சிறப்பு நெல்லையே சாரும். மேலும், புல் வகைத் தாவரங்களின் மாதிரியாக இண்டிக்கா (indica), ஜப்போனிக்கா (japonica) என்னும் இரு பயிரிடும் நெல் வகைகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றின் மொத்த மரபணுத்தொகையிலுள்ள மரபணு வரிசை (gene sequence) முற்றிலும் அறியப்பட்டு, 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.[19] அரிசியில் உயிர்ச்சத்து ஏ சத்தை அதிகரிக்க, உயிர்ச்சத்து ஏ க்கு முன்னோடியான பீட்டா கரோட்டீன் அதிகம் கொண்ட 'தங்க அரிசி' என்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல் இரகம் அறிவியலாளர்களால் உருவாக்கப்பட்டு, தொடர்ந்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகிறது[20]. மனித உடலில் இந்த பீட்டா கரோட்டீன் உயிர்ச்சத்து ஏ யாக மாற்றப்படக் கூடியது.[21] இது தேவையான அளவு பீட்டா-கரோட்டினை தருமா என்பதும், மரபணு மாற்று உணவு பாதுகாப்பானவை தானா என்பதும் பற்றிய சர்ச்சை தொடர்ந்து வருகிறது. நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள் நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள்[22] நெற்பேன் நெல் குருத்துப் பூச்சி நெல் இலைச் சுருட்டுப் புழு நெல் ஆனைக் கொம்பன் ஈ நெல் தத்துப் பூச்சிகள் கதிர் நாவாய்ப் பூச்சி அடிக்குறிப்பு இணைய இணைப்புகள் at Curlie by Isbel Diaz Torres, Havana Times, June 16, 2010 பகுப்பு:தமிழ் பொங்கல் பகுப்பு:காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள் பகுப்பு:தமிழ்நாட்டில் வேளாண்மை
நெல் தாவரத்தின் அறிவியல் பெயர் என்ன?
Oryza sativa
528
tamil
112d5df19
தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் என்றும், தஞ்சைப் பெரிய கோயில் ("Big temple") அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் ("Peruvudayar Temple") என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும்[1] , அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. கிபி 11-ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜராஜ சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தார்.[2]. 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்தb கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன.[3] இக்கோயில் தமிழகத்தின் மிகமுக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.[4] 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.[5] அழியாத சோழர் பெருங்கோயில்கள் என்ற பெயரில் இக்கோயில், கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில், தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் ஆகிய மூன்றும் யுனெஸ்கோ நிறுவனத்தால் பொது ஊழி உலகப்பாரம்பரியக் களப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.[6] தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[7] சொல்லிலக்கணம் தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்பதன் வடமொழியாக்கமே பிரகதீசுவரர் கோயில்.[8] இக்கோயில் தஞ்சைப் பெரிய கோயில்[9], பெரிய கோயில், இராஜராஜேஸ்வரன் கோயில், இராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது. முதலாம் இராஜராஜ சோழனால் கட்டுவிக்கப்பட்ட இக்கோயில் துவக்கக் காலத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் , 17 ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. வரலாறு முதலாம் இராஜராஜ சோழன் என்றழைக்கப்பட்ட சோழ அரசன் அருள்மொழிவர்மன் கனவில் அவனுக்கிடப்பட்ட ஆணையை நிறைவேற்றும் பொருட்டு, சோழர்களின் சிறப்பின் சின்னமாக விளங்கும் தஞ்சைப் பிரகதீசுவரர் கோயிலைக் கட்டுவித்தார்.[10] இக்கோயிலின் கட்டுமான வேலைகள் முதலாம் இராஜராஜனின் 19 ஆவது ஆட்சியாண்டில் துவக்கப்பட்டு (கி.பி. 1003-1004), அவனது 25 ஆவது ஆட்சியாண்டில் முடிவுற்றது (கிபி 1009-1010).[6][11] கோயிலின் வரைதிட்டத்தில், ஆள்கூற்று முறைமை, சமச்சீர்மை வடிவவியல் விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.[12] இதைத் தொடர்ந்து அடுத்த இரு நூற்றாண்டுகள் வரை கட்டப்பட்டக் கோயில்கள், சோழர்காலத்தில் தமிழர்கள் செல்வத்திலும், கலையிலும் சிறப்புற்று விளங்கியதற்குச் சான்றாகவுள்ளன. சோழர்காலக் கட்டிடக்கலையின் புதுவித அமைப்பாக சதுரப் போதிகைகள் கொண்ட பன்முகத் தூண்கள் காணப்படுகின்றன.[13] தனித்துவமான தென்னிந்தியக் கோயில் கட்டிடக்கலைக்கும், சோழர்களின் ஆட்சி மற்றும் தென்னிந்தியாவில் தமிழர்களின் நாகரிகத்திற்கும் சான்றாக அமைந்துள்ள இக்கோயில், கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, வெண்கலச் சிலையுருவாக்கம் ஆகியவற்றில் சோழர்களின் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.[14] இடைக்காலச் சோழர்கள் கி.பி. 985 முதல் 1070 வரை சோழர் கலை உயர்வடைந்து உச்ச நிலையில் இருந்தது. இடைக்காலச் சோழர் காலத்தில் ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டன. பரந்து கிடந்த சோழப் பேரரசு எங்கும் கோயில்கள் கட்டும் பணி தொடர்ச்சியாக நடந்தது. இக்காலத்தில் எத்தனையோ சிறு கோயில்களும் கட்டப்பட்டன. பெரிய கோவில் கட்டும் எண்ணத்தின் பின் புலம் காஞ்சியில் ராஜசிம்மனால் கட்டப்பட்ட கயிலாயநாதர் கோயில் ராஜராஜனை மிகவும் கவர்ந்தது. அதே போல் ஒரு கோவிலைக் கட்ட எண்ணிய இராஜராஜன் தஞ்சையில் பெரிய கோவிலைக் கட்டினான். பெரியகோவிலின் அமைப்பு, திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள அசலேஸ்வரர் சந்நிதியின் மாதிரியைக் கொண்டு உருவானதாகவும் செய்தி உண்டு. தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி, இளங்காட்டில் இராசராசனால் கட்டப்பெற்ற செங்கல்லால் ஆன சிறிய கோயில்தான் முன் மாதிரியாகும். திருவிடைமருதூர்க் கோவிலில் உள்ள மூலவரின் பெயர் மகாலிங்கம். இராஜராஜனுக்குப் பெயருக்கு ஏற்றார் போல் அந்த விக்கிரகம் இல்லை என்று எண்ணம். பின்னாளில் பெருவுடையார் என்ற பெயருக்கு ஏற்ப லிங்கமும் கோவிலும் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இக்கோயிலைக் கட்டத் தூண்டியது என்றும் ஓர் செய்தி உண்டு. கட்டமைப்பு இக்கோயிலின் தலைமைச் சிற்பி குஞ்சர மல்லன் ராஜராஜ ராமப் பெருந்தச்சன் எனக் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயிலின் அடிப்பாகம் 5 மீட்டர் (16 அடி) உயரம் கொண்டுள்ளது.[15] ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள நந்தி 20 டன் எடையும், இரண்டு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் நீளம், இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டதாகவும்,[16] லேபாக்ஷி கோயில் நந்திக்கு அடுத்தபடியாக, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தியுமாகவும் உள்ளது.[17] முதன்மைக் கடவுளான இலிங்கம் 3.7 மீட்டர் உயரமானது. வெளிப் பிரகாரம் 240 மீ. x 125 மீ. அளவிலானது.[16] 108 பரத நாட்டிய முத்திரைகளைக் காட்டும் நடனச் சிற்பங்கள் வெளிச்சுவற்றின் மேற்பகுதியில் வடிக்கப்பட்டுள்ளன.[16] பிற்காலத்தில் பாண்டியர்களால் 13 ஆம் நூற்றாண்டில் அம்மன் சன்னிதியும் விசயநகர அரசர்களால் சுப்பிரமணியர் சன்னிதியும் கட்டப்பட்டு, மராத்திய அரசர்களால் விநாயகர் சன்னிதி புதுப்பிக்கப்பட்டது.[16] தஞ்சை நாயக்கர்களாலும் இக்கோயில் மேம்படுத்தப்பட்டுள்ளது.[18] கோயில் அமைப்பு முக்கியமான கட்டடம் 150 அடி நீளம் இருக்கிறது. மிகப் பிரம்மாண்டமான விமானம் எகிப்தியப் பிரமிடுகளைப் போல கூர்நுனிக் கோபுரமாக அமைந்து கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு ஓங்கி வளர்ந்திருக்கிறது. அக்காலத்தில் புவனேஸ்வரத்தில் கட்டப்பட்ட லிங்கராஜர் கோயிலின் உயரம் 160 அடியாகும். இராஜராஜேஸ்வரம் அதையும் மிஞ்சி விட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் பிற்காலத்தில் கட்டப்பட்டவை - முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில், அம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியன. இவை தவிர இந்த மாபெரும் கோயிலின் ஏனைய பகுதிகள் யாவும் ஒரே காலத்தவை. இவற்றினுடைய பெருமிதத் தோற்றத்தையும் ஒருங்கிணைந்த திட்டத்தின் எளிமையான இயல்பையும் பாராட்டாமல் இருக்கமுடியாது. துணைச் சார்ந்த (Axial) மண்டபங்களும், விமானமும் அர்த்த மண்டபமும் மகாமண்டபமும் பெரிய நந்தியும் அவற்றிற்கேற்ற பொருத்தமான அளவுகளையுடைய ஒரு சுற்றுச் சுவருக்குள் அடங்கியிருக்கின்றன. இச்சுவரில் கிழக்கே ஒரு கோபுரம் இருக்கிறது. மதிலை ஒட்டி உள்பக்கமாக பல தூண்களுள்ள ஒரு நீண்ட மண்டபம் செல்லுகிறது. இது 35 உட்கோயில்களை இணைக்கிறது. நான்கு திக்குகளிலும் பல இடைவெளிகளுக்கு நடுவே கேந்திரமான இடங்களில் இந்த உட்கோயில்கள் கட்டப் பெற்றிருக்கின்றன. இரண்டாவது வெளிப் பிரகாரத்தின் வாயிலாக இருந்த இடத்தில் முன் பக்கத்தில் இரண்டாவது கோபுரம் இருக்கிறது. வடிவமைப்பு எகிப்திய பிரமிடுகளின் கட்டுமான முறைக்கும் தஞ்சை மற்றும் கங்கைகொண்ட சோழபுர கோவில்களின் கட்டுமான முறைக்கும் ஒற்றுமை இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரண்டிலுமே தேர்ந்தெடுக்கப்பட்ட கற்கள் அடுக்கியும் கோர்த்தும் வைத்து கட்டப்பட்டுள்ளது. இரண்டிலுமே கோள்களின் கதிர்வீச்சுக்கள் அதன் மையப் பகுதியில் குவியுமாறு வடிவமைக்கப்படுள்ளது. புவி அதிர்வுகளினால் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. கதிர்வீச்சுக்களின் குவியலில் பாதுகாக்கப்பட்ட அரசர்களின் உடல் கெடுவதில்லை. அதுபோல, சோழ கோவில்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஆவுடை-லிங்கங்கள் தொடர்ந்து சக்தியுள்ள மையமாக புகழுடைய கோவில்களாக சிறந்து விளங்குகின்றன. விமானம் முக்கிய விமானம் உத்தம வகையைச் சார்ந்தது; ஆதலால் இது மிகச் சிறந்தது. இதை, தமிழில் மாடக்கோயில் என்றும் சொல்வார்கள். இவ்வகைக்கு முதலாவது உதாரணம் தட்சிணமேரு-கோரங்கநாதர். இது பக்கவாட்டில் 99 அடி உள்ள சதுர அடித்தளத்தில் மீது அமைந்தது. படுக்கையான பகுதி, நீண்டு துருத்திக் கொண்டிருக்கும். ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. நடுவேயுள்ள பகுதி மற்ற பகுதிகளை விடப் பெரியது. தரை மட்டத்துக்குக் கீழே இருக்கும் தளத்திலிருந்து சிகரம் வரை குடாவும் மாடமும் மாறி மாறிக் காணப்படுகின்றன. சுவரில் பதித்த தூண்கள், பீடத்தை அழகுபடுத்துகின்றன. யாளி உருவத்தால் அழுத்தப்பட்ட கபோதம் உடைய பீடத்தின் மீது, இதைவிடச் சிறிய பரப்பில் 63அடி சதுரத்தில் ஒரு உபபீடம் எழுப்பப்பட்டிருக்கிறது. மேலேயும் கீழேயும் பத்ம தளங்கள் உடையதும் அரை வட்ட வடிவத்தில் பிரம்மாண்டமானதாய் அமைந்ததுமான குமுதத்தை ஏற்றுக்கொள்ள பத்ம தளமாக, கல்வெட்டுக்களுடன் கூடிய உபானம் விளங்குகிறது. குமுதம், கிழக்கு மூலையில் குறுக்காகத் திரும்பும் போது, விளிம்பில் எண்கோணமாக வெட்டப்படுகிறது. கண்டமும் கபோதமும் நெருங்கிக் காட்டப்பட்டுள்ளன. குமுதத்திற்கு நேர் உயரத்தில் வரி விமானம் கானப்படுகிறது. வரிசையாகப் பல சிங்கங்கள், அவறின் மீது சிங்கங்களை ஓட்டுபவர் மூலைகளில் சிங்கங்களுக்குப் பதிலாக, மகரங்களும் போர் வீரர்களும் வாயைப் பிளந்து கொண்டிருக்கும் குதிரைகளும் அவற்றின் மீதேறிச் சவாரி செய்பவர்களின் உருவங்களும் உள்ளன. உள்ளுறையின் செங்குத்தான சுவர்கள் தள அமைப்பைப் பின்பற்றிய 50அடி உயரத்துக்கு எழுப்பப்பட்டுள்ள, பிரம்மாண்டமான வளைந்த பிதுக்கம் அந்தச் சுவர்களை இரண்டு மாடிகளாகப் பிரிக்கிறது. இடைச்சிக் கல் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தது. அழகி என்னும் இடையர் குல மூதாட்டி சிவத்தொண்டு செய்ய விரும்பினார். ஏழை மூதாட்டி தன்னால் இயன்ற தொண்டாக கோவில் கட்டி முடிக்கும் வரை கோவில் கட்டும் சிற்பிகளின் தாகத்தை போக்கும் பொருட்டு தினமும் அவர்களுக்கு தயிர், மோர் வழங்கி வந்தார். இதனை அறிந்த மன்னர் அருள்மொழிவர்மன் (ராஜராஜசோழன்) இடையர் குல மூதாட்டியின் சிவத்தொண்டை அனைவரும் அறியும் வண்ணம் 80டன் எடை கொண்ட கல்லில் அழகி என்று பெயர் பொறித்து, அதனை ராஜகோபுரத்தின் உச்சியில் இடம் பெற செய்தார். அந்த கல் இடைச்சிக் கல் என்று அழைக்கப்படுகிறது. அந்த கல்லின் நிழலே இறைவன் பிரகதீஸ்வரர் மேல் விழுகிறது. நந்தி மண்டபம் தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. நந்திமண்டபத்திற்கு தெற்கே உள்ள திருச்சுற்று மாளிகையில் வடதிசையை நோக்கியபடி உள்ள நந்தியே இராஜராஜனால் பெருவுடையாருக்கு எதிரே அமைக்கப்பட்டதாகும். பின்னாளில் நாயக்கர்கள் சிவலிங்கத்துக்கு இணையான பெரிய நந்தியை நிறுவினர். முதலில் அமைக்கப்பட்ட நந்தி கேரளாந்தகன், இராஜராஜன் வாயில்களுக்கு இடைப்பட்ட பகுதிக்கும் பின்னர் திருச்சுற்று மாளிகைக்கும் மாற்றப்பட்டது.[19] சந்நிதிகள் சிவலிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ள, முக்கியமான கோயிலையும், அதனோடு கூடிய மண்டபங்களையும் தவிர, சண்டிகேஸ்வரர், அம்மன், நடராஜர், வராகி, சுப்பிரமணியர், கணபதி மற்றும் கருவூர்த் தேவர் கோயில்களும், இவ் வளாகத்துள் அமைந்துள்ளன. பெருவுடையார் சந்நிதி - பிரகதீசுவரர், பெருவுடையார் என்று அழைக்கப்படும் மூலவர் சிவபெருமான் லிங்க வடிவில் உள்ளார். இந்த மூலவரை இராஜராஜ சோழன் ராஜராஜீஸ்வரமுடையார் என்ற பெயரில் வழிபட்டுள்ளார். இம்மூலவருக்கு பீடம் இல்லை. பெரியநாயகி அம்மன் சந்நிதி - இக்கோவிலின் அம்மன் பெரியநாயகியாவார். இது பாண்டியர் கால கட்டுமானம். கருவூர் சித்தர் சந்நிதி - இக்கோவிலில் கருவூர் சித்தருக்கென தனி சந்நிதி அமைந்துள்ளது. வராகி அம்மன் சந்நிதி - இது சோழர் கால கட்டுமானமாக இருக்க வேண்டும் என்றே கருதப்படுகிறது. வேறெங்கிலும் இல்லாத வகையில் இந்த திருவுருவிற்கு இரண்டு கரங்கள் மட்டுமே இருப்பது வியக்கத்தக்கது. கல்வெட்டுக்கள் இக் கோயிலின் பலவிடங்களிலும் இருக்கும் கல்வெட்டுக்கள், இக் கோயிலில் இராஜராஜன் கொண்டிருந்த தனிப்பட்ட கரிசனத்தை விளக்குவதாகக் கூறப்படுகிறது. தான் மட்டுமன்றி, அரச குடும்பத்தினரும், அரச அலுவலரும், படையினரும், பொதுமக்களும் ஆகிய எல்லோருடைய பங்களிப்பும், கோயிலின் பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் இருக்கும்படி பார்த்துக்கொண்டானெனவும் தெரிகிறது. நிதித்தேவைகளும், அரசனால் இறையிலியாகக் கொடுக்கப்பட்ட நிலங்களிலும், கிராமங்களிலிருந்தும் வரும் வருவாயினாலும், இன்னும் வேறு வழிகளிலும் பெற்றுக்கொள்ளப்பட்டது. கோவிலின் முதல் கல்வெட்டே இதற்கு சான்று. "நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்த கல்லிலே வெட்டி அருள்க...." தன்னுடைய பங்களிப்பு மட்டுமன்றி மற்ற எல்லோரின் பங்களிப்பையும் ஆவணப் படுத்தியதே வியத்தகு ஒன்று. இங்கே மன்னர் தனக்கு அடுத்தபடியாக முக்கியத்துவத்தை அக்கன் -- தன் மூத்த சகோதரியான குந்தவை தேவிக்கு அளிக்கிறார். தன்னை வளர்த்து, கனவுகளை கொடுத்தவருக்கு அவர் செய்யும் சிறப்பாகும் இது. அடுத்து பெண்கள் என்னும் சொல்லின் மூலம் அவரது பட்டத்தரசியான தந்தி சக்தி விடங்கி மற்றும் மனைவியர் கொடுத்த கொடைகளும், கொடுப்பார் கொடுத்தனவும் என்பதின் மூலம் மற்றவர் எல்லோரும் கொடுத்த கொடைகளும் பட்டியலிடப்படுகின்றன. கோயிலில் அன்றாட கருமங்களை ஒழுங்காகச் செயல்படுத்துவதற்குப், பூசகர்களும், சிற்பிகளும் தேவார ஓதுவார்களும், இசைவாணர்களும், நடனமாதர்களும், மேலும் இன்னோரன்ன பணியாட்களும் தேவைகளுக்கேற்ப நியமிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. 50 ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் கோயிலிலிருந்ததாகக் கல்வெட்டுச் சான்றுகள் பகர்கின்றன. விழாக்கள் பிரம்மோற்சவம் - ராஜராஜசோழன் பிறந்தநாள் விழா அன்னாபிஷேகம் திருவாதிரை ஆடிப்பூரம் கார்த்திகை பிரதோசம் சிவராத்திரி தேரோட்டம் தஞ்சைப் பெரிய கோயிலின் சிறப்பு இக்கோவில் விமானத்தின் உயரம் 216அடி (66மீ) உயரம் கொண்டது.[20] இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீ உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பினார். இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயில் சுமார் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும். 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அரை அடி உயரம் கொண்ட லிங்கம் ஆகியன தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான நந்தி சிலையின் உயரமும், அகலமும் முறையே: 13 அடிகள் மற்றும் 16 அடிகள் ஆகும்.[10] தமிழகத்தில் சற்றொப்ப இதே அமைப்பிலுள்ள கோயில்கள் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரர் கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயில் ஆகியவையாகும். 1010 ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. ஆயிரம் ரூபாய் நோட்டு, தபால் தலை தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954ம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி 1000 நோட்டை வெளியிட்டது. அதில் தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பிரகதீசுவரர் ஆலயத்தின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் 4வது கவர்னரான சர் பெனகல் ராமாராவ், அதில் கையெழுத்திட்டார். டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் கான்பூர் ஆகிய நகரங்களில் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. 5 வரிசைகளிலான எண்களில் அந்த நோட்டுகள் வெளியாகின. மும்பையில் அச்சிடப்பட்ட நோட்டுகளின் வரிசை ஆங்கில எழுத்து ஏ ஆகும். மத்திய அரசு 1995 ஆம் ஆண்டில் மாமன்னர் ராஜராஜ சோழன் உருவம் பதித்த 2 ரூபாய் தபால் தலையை வெளியிட்டது. ஆயிரமாண்டு நிறைவு விழா தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவினை தஞ்சை மாநகரில் 2010 செப்டம்பர் 25, செப்டம்பர் 26-ந் தேதி ஆகிய 2 நாட்களுக்கு சிறப்புற நடத்தப்பட்டது. மத்திய மந்திரி ஆ. ராசா பெரியகோவில் உருவம் பொறித்த 5 ரூபாய் சிறப்பு தபால் தலையை முன்னால் முதல்-அமைச்சர் மு. கருணாநிதி முன்னிலையில் வெளியிட்டார். அதை மத்திய மந்திரி ஜி.கே.வாசன் பெற்றுக்கொண்டார். சிறப்பு தபால் தலையின் மாதிரி வடிவத்தை, முன்னால் முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். பின்னர் மத்திய மந்திரி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பெரிய கோவில் மற்றும் ராஜராஜன் உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை வெளியிட, அதை மத்திய மந்திரி நாராயணசாமி பெற்றுக்கொண்டார். விழாவின் முதல் நாள் காலை முதல் நாட்டுப்புறக் கலைஞர்களின் பல்வேறு தெருவோர நிகழ்ச்சிகள் நகரின் பல பகுதிகளில் நடத்தப்பட்டது. மாலையில் தஞ்சை பெரிய கோவிலில் அனைத்திந்திய பரதநாட்டிய கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் பத்மா சுப்ரமணியத்தின் தலைமையில் ஆயிரம் நடனக்கலைஞர்கள் கலந்து கொண்ட மாபெரும் நிகழ்ச்சி இடம்பெற்றது. அந்த நடன நிகழ்ச்சிக்கு முன்பாக நாதஸ்வர இசை நிகழ்ச்சியும், நடன நிகழ்ச்சிக்குப் பின்னர் 100 ஓதுவார்களின் திருமுறை இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இரண்டாம் நாள் காலையில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கமும், தஞ்சை பெரிய கோவிலில் பொது அரங்கமும், மாலையில் தஞ்சை திலகர் திடலில் முன்னால் முதல்வர் கருணாநிதி தலைமையில் தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலை வெளியிடுதல், தஞ்சை மாநகருக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தொடங்குதல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன. வரலாற்று கண்காட்சி ஒன்றும் நடத்தப்பட்டது[21]. கருத்துகளும் உண்மைகளும் தஞ்சை பெரிய கோயிலின் கோபுர நிழனானது தரையில் விழாது என்றொரு நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது. ஆனால் இக்கோயிலின் விமான நிழல் தரையில் விழுகின்ற படியே அமைக்கப்பட்டிருக்கிறது. [22] மேலும் படங்கள் தஞ்சை பெரிய கோயில் &lt;கோயில் வலது பக்கத்தின் முன் தோற்றம் கோயில் வலது பின்பக்கத்தின் தோற்றம் கோயில் இடது பக்கத்தின் முன் தோற்றம் கோயில் விமானம் கோயில் முற்றத்தில் உள்ள அலங்கரிக்கப்பட்டத் தூண் காளை முக சிவன் (நந்தி), கலசம் பின்னணியில் (விமானம்) நந்தி மண்டபக் கூரையில் வரையப்பட்ட சுவரோவியங்கள் மேலும் பார்க்க அழியாத சோழர் பெருங்கோயில்கள் கங்கைகொண்ட சோழபுரம் ஐராவதேஸ்வரர் கோயில் தஞ்சைப் பெரிய கோயில் தேரோட்டம் உசாத்துணை • குடவாயில் பாலசுப்ரமணியன், இராஜராஜேச்சரம், சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை, மஞ்சக்குடி, திருவாரூர் மாவட்டம், 2010 • தஞ்சைப்பெரிய கோயில் சோழர் கால ஓவியங்கள், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2010 ஆதாரங்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:தமிழகத்தின் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்கள் பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள் பகுப்பு:தஞ்சாவூர் வரலாறு
பிரிஹதீஸ்வரர் கோயில் எவ்வளவு வயது?
1000
564
tamil
df1aa5aa9
சூரியகாந்திகள் (Helianthus annuus ) என்பவை அமெரிக்க நாடுகளில் உருவான ஆண்டுத் தாவரங்கள் ஆகும். இவை மிகப்பெரிய மஞ்சரியை (பூங்கொத்து) உடையவை. விவரிப்பு இதில் பூ என அழைக்கப்படுவது உண்மையில் பெரும் எண்ணிக்கையிலான சிறுபூக்கள் (சிறிய பூக்கள்) ஒன்றாக்கப்பட்ட கொத்தா</i>கும் (முறையாகக் கூறுவதாயின் கூட்டுப் பூ ). வெளிப்புற சிறுபூக்கள் மலட்டுத்தன்மையான கீற்றுச் சிறுபூக்கள் ஆகும், அவை மஞ்சள், அரக்கு வண்ணம், செம்மஞ்சள் அல்லது பிற வண்ணங்களில் இருக்கலாம். வட்டவடிவான கொத்துக்கு உள்ளாகவுள்ள சிறுபூக்கள் தட்டு சிறுபூக்கள் எனப்படும், இவை முதிர்வடைந்து விதைகளாகும். சூரியகாந்திக் கொத்துக்குள் உள்ள சிறுபூக்கள் சுருளி அமைப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். பொதுவாக ஒவ்வொரு சிறு பூவும் கிட்டத்தட்ட தங்கக் கோணம் 137.5° ஆல் அடுத்த சிறுபூவை நோக்கி வரிசைப்படுத்தப்படும், இது ஒன்றோடொன்று தொடர்புபடுத்தும் சுருளிகள் வடிவமைப்பை உண்டாக்கும். இங்கு இடது சுருள்களின் எண்ணிக்கையும் வலது சுருள்களின் எண்ணிக்கையும் அடுத்தடுத்த ஃபிபனாச்சி எண்களாகும். பொதுவாக, ஒரு திசையில் 34 சுருள்களும் அடுத்த திசையில் 55 உம் உள்ளன; மிகப்பெரிய சூரியகாந்தியில் ஒரு திசையில் 89 உம் அடுத்ததில் 144 உம் இருக்கலாம்.[1][2][3] இந்த வடிவமைப்பானது பூங்கொத்துக்குள் மிகவும் திறனான முறையில் நிரப்பப்படும் விதைகளை உண்டாக்கும்.[4][5][6] ஒளிதூண்டுதிருப்பம் மொட்டு நிலையிலுள்ள சூரியகாந்திகள் ஒளிதூண்டுதிருப்பத்தைக் காண்பிக்கின்றன. சூரிய உதயத்தின்போது, பெரும்பாலான சூரியகாந்திகளின் முகங்கள் கிழக்கை நோக்கித் திரும்புகின்றன. அன்றைய நாள் நகரும்போது, அவையும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சூரியனைப் பின் தொடருகின்றவேளையில் இரவில் அவை மீண்டும் கிழக்குத் திசைக்குத் திரும்புகின்றன. இந்த நகர்வானது மொட்டிற்குச் சிறிது கீழாக உள்ள தண்டின் வளையத்தக்க பகுதியான இலையடிமுண்டிலுள்ள இயக்க கலங்களினால் ஏற்படுத்தப்படும். மொட்டு நிலை முடியும்போது, தண்டானது விறைப்படைந்து, பூக்கும் நிலையை அடையும். பூக்கும் நிலையிலுள்ள சூரியகாந்திகள் அவற்றின் ஒளிதூண்டுதிருப்பத் திறனை இழக்கின்றன. தண்டானது பொதுவாக கிழக்குநோக்கிய திசை அமைவில், "உறைந்த" நிலைக்கு வந்துவிடும். தண்டும் இலைகளும் தமது பச்சை வண்ணத்தை இழக்கும். காட்டுச் சூரியகாந்தி குறிப்பாகச் சூரியனை நோக்கித் திரும்பாது; முதிர்வடையும்போது இதன் பூக்கும் கொத்தானது பல திசைகளை நோக்கியிருக்கக்கூடும். இருந்தபோதிலும், இலைகள் சில ஒழிதூண்டுதிருப்பத்தைக் குறிப்பாக வெளிப்படுத்தும். வரலாறு சூரியகாந்தி மத்திய அமெரிக்க நாடுகளைச் சொந்த இடமாகக் கொண்டது. இது குறைந்தது கி.மு 2600 ஆண்டுகள் அளவில் முதன்முதலில் மெக்சிகோவில் பயிரிடப்பட்டது என்பது அதை உறுதிப்படுத்தும் சான்றாகும்.[7] இது இரண்டாம் முறையாக மத்திய மிசிசிப்பி பள்ளத்தாக்கில் பயிரிடப்பட்டிருக்கலாம் அல்லது முற்காலத்தில் மெக்சிகோவிலிருந்து சோளம் அறிமுகமாகியபோது இதுவும் அறிமுகமாகியிருக்கலாம். வடக்கு மெக்சிகோவில் மிகவும் முந்திய காலத்தில் முழுதாக பயிரிடப்பட்டதாக அறியப்பட்ட சூரியகாந்தி எடுத்துக்காட்டுகள் டென்னசியில் கி.மு 2300 அளவில் காணப்பட்டுள்ளன. பல உள்ளூர் அமெரிக்க மக்கள் சூரியகாந்தியை மெக்சிகோவின் ஆஸ்டெக்குகள் மற்றும் ஆட்டொமி மற்றும் தென்னமெரிக்காவில் இன்காகள் உள்ளடங்கலாக தமது சூரிய தெய்வத்தின் அடையாளமாகப் பயன்படுத்தினர். பிரான்சிஸ்கோ பிஸார்ரோ என்பவரே தஹுவண்டின்சுயோ, பெருவில் சூரியகாந்தியைச் சந்திக்கவேண்டியிருந்த முதலாவது ஐரோப்பியராவார். பூவின் தங்க படங்கள் மற்றும் அதோடு விதைகள் ஆகியவை 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஸ்பெயினுக்குத் திருப்பிக் கொண்டுசெல்லப்பட்டன. சூரியகாந்தியானது சூரிய சமயம் மற்றும் போர்முறை ஆகியவற்றுடன் தொடர்புள்ளதாக இருப்பதால், இதைப் பயிரிடுவதை ஸ்பெயின் நாட்டவர்கள் தடுக்க முயற்சிப்பதாக சில ஆய்வாளர்கள் விவாதிக்கிறார்கள்.[8] 18 ஆம் நூற்றாண்டின்போது, ஐரோப்பாவில், குறிப்பாக ரஷ்யன் பழமைவாத தேவாலய உறுப்பினர்களுடன், சூரியகாந்தி எண்ணெயின் பயன்பாடானது மிகவும் பிரபலமாகியது, ஏனெனில் தவக்காலத்தின்போது தடைசெய்யாத சில எண்ணெய்களில் சூரியகாந்தி எண்ணெயும் ஒன்றாக இருந்தது. பயிர்ச்செய்கையும் பயன்களும் சூரியகாந்திகள் சிறப்பாக வளருவதற்கு முழுமையான சூரியன் தேவை. அவை ஏராளமான பத்திரக்கலவையுடன் வளம்மிக்க, ஈரமான, நன்கு-வடிகட்டப்படும் மண்ணில் மிகச்சிறப்பாக வளரும். வர்த்தகரீதியான பயிர்ச்செய்கையில், விதைகள் 45செ.மீ (1.5அடி) இடைவெளியிலும் 2.5செ.மீ (1அங்) ஆழத்திலும் விதைக்கப்படும். சூரியகாந்தி "முழுமையான விதை" (பழம்) உப்புச் சேர்க்கப்பட்டு அல்லது சேர்க்கப்படாமல் அடுப்புகளில் வைத்து வறுத்த பின்னர் சிற்றுண்டியாக விற்கப்படும். சூரியகாந்திகளை வேர்க்கடலை வெண்ணெய் மாற்றாக சன்பட்டராகப் பதப்படுத்தலாம். ஜெர்மனியில், இதை ரை மாவுடன் சேர்த்து சோனன்ப்ளுமென்கர்ன்ப்ரட் (Sonnenblumenkernbrot) செய்கிறார்கள் (நேர்ப்பொருளாக: சூரியகாந்தி முழுமையான விதை வெதுப்பி), இது ஜெர்மன் மொழி பேசுகின்ற ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பிரபலமானது. இதை பறவைகளுக்கான உணவாகவும் விற்கிறார்கள், சமையலிலும் பச்சைக்காய்கறிக் கலவைகளிலும் இதை நேரடியாகப் பயன்படுத்தலாம். விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சூரியகாந்தி எண்ணெய் தாங்கி எண்ணெயாக சமையலுக்குப் பயன்படும், மேலும் இது ஆலிவ் எண்ணெயைவிட மலிவாக இருப்பதால் வெண்ணெய் (மார்ஜரின்) மற்றும் பயோடீசல் தயாரிப்புக்கும் பயன்படும். வேறுபடுகின்ற கொழுப்பமில சேர்வைகளுடன் பரந்துபட்ட சூரியகாந்தி வகைகள் உள்ளன; சில 'உயர் ஒலீக்' வகைகளின் எண்ணெயில், ஆலிவ் எண்ணெயை விடக்கூட அதிகமான அளவில் ஆரோக்கியமான நிரம்பாத கொழுப்புகள் உள்ளன. எண்ணெய் எடுப்பதற்காக விதைகளை பதப்படுத்திய பின்னர் எஞ்சுகின்ற கட்டியை கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தலாம். சமீபத்தில் உருவாக்கப்பட்ட சில இனங்கள் தொங்குகின்ற பூங்கொத்துகளை உடையன. பூக்களை அலங்காரத் தாவரமாக வளர்க்கின்ற தோட்டக்காரர்களை இந்த இனங்கள் குறைவாகவே ஈர்க்கின்றன, ஆனால் விவசாயிகளுக்கு கோரிக்கை விடுகின்றன, ஏனென்றால் அவை பறவைகளால் ஏற்படும் சேதம் மற்றும் சில தாவர நோய்களால் ஏற்படும் இழப்புக்களைக் குறைக்கின்றன. சூரியகாந்திகள் மரப்பாலையும் உற்பத்திசெய்யும், மேலும் குறைந்த ஒவ்வாமை ரப்பரைத் தயாரிப்பதற்கான மாற்றுத் தாவரமாக அவற்றை மேம்படுத்துவதற்காக பரிசோதனைகளுக்கு உள்ளாகின்றன. பாரம்பரியமாக பல நேட்டிவ் அமெரிக்கன் குழுக்கள், நன்கறியப்பட்ட மூன்று சகோதரிகள் பொருத்தமான சோளம், அவரை மற்றும் பூசணி ஆகியவற்றுக்கு "நான்காவது சகோதரியாக" அவர்களின் தோட்டங்களின் வடக்கு வரம்புகளில் சூரியகாந்திகளைப் பயிரிட்டனர்.[9] ஆண்டு இனங்கள் கொண்டுள்ள இரசாயனப் பதார்த்தங்களைச் சுரக்கும் பண்புகளுக்காக அவை பெரும்பாலும் பயிரிடப்படும். இருந்தபோதிலும், சரக்குப் பயிர்களை வளர்க்கின்ற வர்த்தகரீதியான விவசாயிகளுக்கு சூரியகாந்தியானது பிற விரும்பத்தகாத தாவரமாகவே இருக்கும், அடிக்கடி களையாகக் கருதப்படும். குறிப்பாக மத்தியமேற்கு அமெரிக்காவில், காட்டு (பல்லாண்டு வாழ்கின்ற) இனக்கள் சோளம் மற்றும் சோயாஅவரைத் தோட்டங்களில் அடிக்கடி காணப்படும், இவை விளைச்சலில் எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கக்கூடியன. ஈயம், ஆர்சனிக் மற்றும் யுரேனியம் போன்ற நச்சுப் பதார்த்தங்களை மண்ணிலிருந்து பிரித்தெடுப்பதற்கும் சூரியகாந்திகளைப் பயன்படுத்தக்கூடும். இவை செர்னோபில் அனர்த்தத்தின் பின்னர் மண்ணிலிருந்து யுரேனியம், செசியம்-137 மற்றும் துரந்தியம்-90 ஆகியவற்றை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்டன (தாவரமறுசீரமைப்பு என்பதைப் பார்க்கவும்). சிறுபூ ஒழுங்கமைப்பின் கணிதரீதியான மாதிரி சூரியகாந்திப் பூங்கொத்தின் சிறுபூக்களின் வடிவமைப்பின் மாதிரியை 1979 ஆம் ஆண்டில் ஹெச். வோஜெல் முன்வைத்தார்.[10] இது முனைவு ஆயங்களில் தெரிவிக்கப்படுகிறது r = c n , {\displaystyle r=c{\sqrt {n}},} θ = n × 137.5 ∘ , {\displaystyle \theta =n\times 137.5^{\circ },} இங்கே θ என்பது கோணம், r என்பது ஆரம் அல்லது மையத்திலிருந்தான தூரம், n என்பது சிறுபூவின் சுட்டி எண் மற்றும் c என்பது ஒரு மாறிலியான அளவீட்டுக் காரணியாகும். இது ஃபெர்மட்டின் சுருளி வடிவமாகும். கோணம் 137.5° என்பது தங்க விகிதத்துடன் தொடர்பானது, இது சிறுபூக்களின் நெருக்கமான அடுக்கைக் கொடுக்கிறது. இந்த மாதிரியானது சூரியகாந்திகளின் கணினி வரைகலைச் சித்தரிப்புகளை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.[11] அளவு சூரியகாந்திகள் மிகப் பொதுவாக 1.5 தொடக்கம் 3.5மீ (8–12அடி) வரையான உயரத்துக்கு வளர்கின்றன. 12-மீ (40அடி), பாரம்பரிய, தனித்த-பூங்கொத்து, சூரியகாந்தி தாவரமானது படுவாவில் வளர்க்கப்பட்டதாக 1567 ஆம் ஆண்டிலிருந்தான விஞ்ஞானரீதியான இலக்கியங்கள் கூறுகின்றன. இதே விதைகள் வேறு சமயங்களில் வேறு இடங்களில் கிட்டத்தட்ட எட்டு மீட்டர் (26அடி) உயரத்துக்கு வளர்ந்தன (எ.கா. மாட்ரிட்). எட்டு மீட்டருக்கும் அதிகமாக வளர்கின்ற மிக அண்மைக்கால அருஞ்செயல்கள் (கடந்த இருபது ஆண்டுகள்) நெதர்லாந்து மற்றும் ஒண்டாரியோ, கனடா இரு நாடுகளிலும் நடந்துள்ளன. பண்பாட்டு அடையாளம் சூரியகாந்தியானது அமெரிக்க மாநிலமான கன்சாஸின் மாநிலப் பூ ஆகும், மேலும் கிட்டாக்யுஷு, ஜப்பானின் நகரப் பூக்களில் ஒன்றாகும். சிவப்பு ரோஜாவானது சமதர்மம் அல்லது சமூக ஜனநாயகத்தின் அடையாளமாக இருப்பதுபோலவே, சூரியகாந்தியானது பெரும்பாலும் பசுமைக் கொள்கையின் அடையாளமாகப் பயன்படும். சைவ சமூகத்தின் சின்னமாகவும் சூரியகாந்தி உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியின்போது, இப்பூவானது கலைநயமுடைய இயக்கத்தின் அடையாளமாகப் பயன்பட்டது. வான் கோவின் மிகப் பிரபலமான ஓவியத்தின் பொருள் சூரியகாந்திகளாகும் (ஓவியங்களின் தொடர்) உக்ரெய்ன் நாட்டின் தேசியப் பூ சூரியகாந்தியாகும். வகைகள் பின்வருவன சூரியகாந்தி வகைகளாகும் (ஆங்கில அகரவரிசைப்படி உள்ளன): அமெரிக்கன் ஜயண்ட் ஹைப்ரிட் ஆர்னிகா ஆட்டம் பியூட்டி ஆஸ்டெக் சன் பிளாக் ஆயில் ட்வார்ஃப் சன்ஸ்பாட் ஈவ்னிங் சன் ஜயண்ட் ப்ரிம்ரோஸ் இண்டியன் பிளாங்கட் ஹைப்ரிட் ஐரிஷ் ஐஸ் இட்டாலியன் ஒய்ட் காங் ஹைப்ரிட் லார்ஜ் கிரே ஸ்ட்ரைப் லெமன் குயீன் மமட் சன்ஃபிளவர் மொங்கோலியா ஜயண்ட் ஆரஞ்ச் சன் பீச் பஷன் பெரிடாவிக் ரெட் சன் ரிங் ஆஃப் ஃபயர் ராஸ்டாவ் ஸ்கைஸ்கிரேப்பர் சோரயா ஸ்ட்ராபெரி ப்லாண்டே சனி ஹைப்ரிட் டையோ டாரஹுமாரா டெட்டி பியர் டைட்டன் வாலண்டைன் வெல்வெட் குயீன் எலோ எம்பிரஸ் பிற இனங்கள் வட அமெரிக்காவில் தோன்றிய 38 பல்லாண்டு வாழ்கின்ற சூரியகாந்தி இனங்களில் மாக்ஸிமில்லியன் சூரியகாந்தி (Helianthus maximillianii ) ஒன்றாகும். இவற்றை பல்லாண்டுவாழ் விதைப் பயிராக வளர்க்கக்கூடிய சாத்தியக்கூறை லேண்ட் இன்ஸ்டிடியூட் மற்றும் பிற இனப்பெருக்க திட்டங்கள் தற்போது ஆராய்கின்றன. சன்சோக் (ஜெருசலேம் (Jerusalem) கூனைப்பூ அல்லது கெலியந்தஸ் டுபரோசஸ் (Helianthus tuberosus)) என்பது சூரியகாந்திக்குத் தொடர்பானது, இது பல்லாண்டுவாழ் சூரியகாந்திக்குரிய இன்னொரு எடுத்துக்காட்டாகும். மெக்சிகன் சூரியகாந்தி என்பது டைதோனியா ரோடந்திபோலியா (Tithonia rotundifolia) ஆகும். இது மிகவும் தொலைவாகவே வட அமெரிக்க சூரியகாந்திகளுடன் தொடர்பானது. பொய்யான சூரியகாந்தி என்பது ஹெலியோப்சிஸ் (Heliopsis) இனத்துத் தாவரங்களைக் குறிக்கும். புகைப்படத் தொகுப்பு பம்பிள் தேனி தேன் எடுக்கிறது முளைத்து மூன்று நாட்களின் பின்னர் சூரியகாந்தி நாற்றுக்கள். பழங்களைத் தரக்கூடிய கொத்து சீனாவின் சிற்றுண்டிகளாக விற்கப்படும் கொத்துகள் நியூசிலாந்திலுள்ள சூரியகாந்தி குறிப்புகள் குறிப்புதவிகள் பாப், கெவின்; பால், மேரி ஈ. டி.; ஜோன்ஸ், ஜான் ஜி.; லெண்ட்ஸ், 3 டேவிட் எல்.;வோன் நாகி, கிறிஸ்டோபர்; வேகா ஃபிரான்ஸிஸ்கோ ஜெ.; கியூட்மையர் இர்வி ஆர்.; "ஒரிஜின் அண்ட் என்வயர்ன்மெண்டல் செட்டிங் ஆஃப் ஏன்சியண்ட் அக்ரிகல்ச்சர் இன் தி லாலாண்ட் ஆஃப் மீசொமெரிக்கா," சயின்ஸ், 18 மே 2001:தொகுதி. 292. எண். 5520, பக்கங்கள்.1370–1373. ஸுஸ்டிக், ரொப்ட். 1974. ஃபிளவர்ஸ் அண்ட் பிளாண்ட்ஸ். அன் இன்டர்நேஷனல் லெக்ஷிகான் வித் பயோக்ராபிக்கல் நோட்ஸ்' . குவாட்ரங்கிள்/தி நியூ யார்க் டைம்ஸ் புக் கோ. 329 பக்கங்கள். வூட், மர்சியா. ஜூன் 2002. "சன்ஃபிளவர் ரப்பர்?" அக்ரிகல்ச்சரல் ரிசர்ச். USDA. வெளிப்புற இணைப்புகள் பகுப்பு:மலர்கள் பகுப்பு:இருவித்திலைத் தாவரங்கள் பகுப்பு:கொட்டைகள்
சூரியகாந்தி தாவரத்தின் அறிவியல் பெயர் என்ன?
Helianthus annuus
17
tamil
b23b196f2
விஜய் (English: Vijay, பிறப்பு: சூன் 22, 1974; இயற்பெயர்: ஜோசப் விஜய்[1]) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை " இளையதளபதி" என்று அழைக்கிறார்கள். இவருக்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் உட்பட சீனா,[2] சப்பான்[3], ஐக்கிய இராச்சியம்[4] மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இரசிகர்கள் உள்ளனர்.[5] இவரது படங்கள் ஐந்து கண்டங்கள் மற்றும் எண்பது நாடுகளில் வெளியாகி உள்ளன.[6][7] விஜய் தனது 10வது வயதில் வெற்றி (1984) என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். தனது தந்தை இயக்கிய இது எங்கள் நீதி (1988) திரைப்படம் வரை குழந்தை நட்சத்திரமாகத் தொடர்ந்து நடித்தார். பின்னர் 18ம் வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு (1992) படத்தில் முதன்முறையாகக் கதாநாயகனாக நடித்தார். ஆனால் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக (1996) திரைப்படம் தான் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது.[8][9] இன்று வரை விஜய் கதாநாயகனாக 62 திரைப்படங்களில் நடித்துள்ளார். 3 தமிழக அரசு திரைப்பட விருதுகள், 1 காஸ்மோபாலிடன் விருது, 1 இந்தியா டுடே விருது, 1 சிமா விருது, 8 விஜய் விருதுகள், 3 எடிசன் விருதுகள், 2 விகடன் விருதுகள் உட்பட 50 விருதுகளை வென்றுள்ளார். ஒரு முறை ஐக்கிய இராச்சிய தேசிய திரைப்பட விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.[10] ஒரு பின்னணிப் பாடகராக பம்பாய் சிட்டி (1994) முதல் பாப்பா பாப்பா (2017) வரை விஜய் 32 பாடல்களைப் பாடியுள்ளார். நடிப்பு மற்றும் பாடல்கள் தவிர இவர் ஒரு சிறந்த நடனம் ஆடுபவரும் ஆவார்.[11] இவரது படங்கள் சீனாவின் ஷாங்காய் சர்வதேசத் திரைப்பட விழா[12], ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் சர்வதேசத் திரைப்பட விழா[13] மற்றும் தென்கொரியாவின் புச்சியான் சர்வதேசத் திரைப்பட விழா ஆகிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளன.[14] ஆரம்ப வாழ்க்கை மற்றும் குடும்பம் விஜய் 1974 ஆம் ஆண்டு சூன் 22 அன்று மதராசில் (தற்போது சென்னை) பிறந்தார். இவரது இயற்பெயர் ஜோசப் விஜய் ஆகும். இவரது தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தாயார் ஷோபா ஒரு பின்னணிப் பாடகி மற்றும் கருநாடக பாடகி ஆவார். விஜய்க்கு வித்யா என்ற பெயருடைய ஒரு சகோதரி இருந்தார். அவர் இரண்டு வயதில் இறந்து விட்டார். வித்யாவின் மரணம் விஜய்யை மிகவும் பாதித்தது. விஜயின் தாயாரின் கூற்றுப்படி விஜய் ஒரு குழந்தையாக இருந்தபொழுது மிகவும் பேசக்கூடியவராகவும், குறும்பு செய்பவராகவும் மற்றும் விளையாட்டுத்தனத்துடனும் இருந்தார். வித்யாவின் மரணத்திற்குப் பிறகு அமைதியாகி விட்டார்.[15] இவரது தங்கை வித்யாவின் கதை 2005ம் ஆண்டுப் படமான சுக்ரனில் சொல்லப்பட்டிருக்கும். அப்படத்தில் விஜய் ஒரு நீட்டிக்கப்பட்ட கௌரவத் தோற்றத்தில் நடித்திருந்தார்.[16] விஜய் தனது குழந்தைப் பருவம் முழுவதையும் சென்னையில் கழித்தார். விஜய் ஆரம்பத்தில் கோடம்பாக்கத்தில் உள்ள பாத்திமா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கினார்.[17] பின்னர் விருகம்பாக்கத்தில் உள்ள பாலலோக் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் இணைந்தார்.[18] லயோலா கல்லூரியில், விசுவல் கம்யூனிகேசன்சில் பட்டம் பெற சேர்ந்தார். இறுதியில் நடிப்பைத் தொடர ஆர்வமாக இருந்ததால் பாதியிலேயே படிப்பில் இருந்து வெளியேறினார்.[15] விஜய் பிரிட்டனில் பிறந்த இந்து இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை 25 ஆகத்து, 1999 அன்று மணந்தார். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறித்தவம் ஆகிய இரு முறைப்படியும் நடந்தது.[19][20] இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2000ல் லண்டனில் பிறந்த ஜேசன் சஞ்சய் என்ற மகன்[21] மற்றும் 2005ல் சென்னையில் பிறந்த திவ்யா சாஷா என்ற மகள்.[22] ஜேசன் சஞ்சய் தனது தந்தையின் வேட்டைக்காரன் (2009) படத்தில் ஒரு கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். திவ்யா சாஷா தனது தந்தையின் டீனேஜுக்கு முந்தைய வயதுடைய மகளாக தெறி (2016) திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படத்துறை விஜய் குழந்தைப் பருவத்தில் இருந்தே தன்னுடைய தந்தையின் படங்களில் நடித்து வருகிறார். பின்னர் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். கதாநாயகனாக அவர் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு. பின்னர் அவரது தந்தையின் இயக்கத்தில் கதாநாயகனாக பல படங்களில் நடிக்கத் தொடங்கினார். விஜய்க்காக தளபதி ஆன்தம் என்ற பெயரில் ஒரு பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள். எங்கேயும் எப்போதும் படத்தில் பேருந்து காட்சிகளில், கல்லூரி மாணவனாக நடித்த வாட்சன் என்பவர் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இப்பாடலை தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி வரும் வாட்சன், 2016 ஆம் ஆண்டு ஜனவரி 20ம் தேதிக்குள் இப்பாடலை தயார் செய்து வெளியிட தீர்மானித்து இருக்கிறார்.[23] 1984–1988 குழந்தை நட்சத்திரமாக பத்து வயதில், வெற்றி (1984) என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஜய் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு, குடும்பம் (1984), வசந்த ராகம் (1986), சட்டம் ஓரு விளையாட்டு (1987) மற்றும் இது எங்கள் நீதி (1988) போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ரஜினிகாந்த் முன்னணி நடிகராக நடித்த நான் சிகப்பு மனிதன் (1985) படத்திலும் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 1992–1996 துவக்கம் இவரது தந்தை இயக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றிய பிறகு, விஜய் தன் பதினெட்டாம் வயதில் நாளைய தீர்ப்பு (1992) படத்தில் முன்னணி நடிகராக அறிமுகமானார்.[24] விஜய், விஜயகாந்த்துடன் செந்தூரப் பாண்டி (1993) படத்தில் இணைந்து நடித்தார். இப்படம் நல்ல வசூல் செய்தது.[25] 1994 இல், இவர் ரசிகன் படத்தில் தோன்றினார், இதுவும் நல்ல வசூல் செய்தது.[26] இளைய தளபதி என்ற அடைமொழி விஜய்க்கு வழங்கப்பட்ட முதல் படம் இதுதான். இந்த அடைமொழி பிற்காலத்தில் ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் பிரபலமாக விளங்கியது.[27] இவர் தேவா மற்றும் ராஜாவின் பார்வையிலே போன்ற படங்களில் முன்னணி நடிகராக நடித்தார். மேற்குறிப்பிட்ட இரண்டாவது படத்தில் இவர் அஜித் குமாருடன் இணைந்து நடித்தார். பின்னர் விஷ்ணு மற்றும் சந்திரலேகா ஆகிய படங்களில் நடித்தார். 1995 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தில் நடித்தார். 1996–2003 திருப்புமுனை 1996 இல், விக்ரமன் இயக்கிய பூவே உனக்காகவேவில் விஜய் நடித்தார். இது அவரது முதல் வெற்றிகரமான படமாக மாறியது. விஜயின் திரைவாழ்க்கையில் திருப்புமுனையாகவும் அமைந்தது. இவரை ஒரு அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திரமாகவும் ஆக்கியது.[8] விஜயின் பத்தாவது படம் வசந்த வாசல் ஆகும். அதன்பின் இவர் மாண்புமிகு மாணவன் மற்றும் செல்வா ஆகிய சண்டைப் படங்களிலும், காலமெல்லாம் காத்திருப்பேன் என்ற படத்திலும் நடித்தார். 1997 இல், லவ் டுடே மற்றும் ஒன்ஸ் மோர் ஆகிய படங்களில் விஜய் நடித்தார். இதில் ஒன்ஸ் மோர் படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் சிம்ரனுடன் விஜய் இணைந்து நடித்தார். பின்னர் மணிரத்னம் தயாரிக்க வசந்த் இயக்கிய நேருக்கு நேர் படத்தில் நடித்தார். பாசில் இயக்கிய காதலுக்கு மரியாதை படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது கிடைத்தது. 1998 இல் விஜய் நினைத்தேன் வந்தாய், பிரியமுடன் மற்றும் நிலாவே வா ஆகிய திரைப்படங்களில் நடித்தார். 1999 ஆம் ஆண்டில் விஜய், சிம்ரனுடன் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் நடித்தார். இப்படதிற்கு சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது கிடைத்தது.[28] இதன்பின் விஜய் என்றென்றும் காதல், நெஞ்சினிலே மற்றும் கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய மின்சாரக் கண்ணா ஆகிய படங்களில் நடித்தார். 2000மாவது ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து, இவரது போக்கில் ஒரு மாற்றமாக, பொழுதுபோக்குப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். 2000 ஆம் ஆண்டில், இவர் கண்ணுக்குள் நிலவு, குஷி மற்றும் பிரியமானவளே ஆகிய படங்களில் நடித்தார். இவரது 2001 ஆம் ஆண்டு திரைப்படமான ஃப்ரண்ட்ஸ் சித்திக்கால் இயக்கப்பட்டது. இப்படத்தில் விஜய் சூர்யாவுடன் இணைந்து நடித்தார். பின்னர் விஜய் பத்ரி என்ற அதிரடித் திரைப்படம் மற்றும் ஷாஜஹான் ஆகிய படங்களில் நடித்தார். இதில் பத்ரி தெலுங்குப் படமான தம்முடு</i>வின் மறு ஆக்கம் ஆகும். 2002 இல், விஜய் தமிழன் படத்தில் நடித்தார். இப்படத்தில் தான் நடிகை பிரியங்கா சோப்ரா அறிமுகம் ஆனார்.[29][30] பின்னர், இவர் யூத் மற்றும் பகவதி ஆகிய படங்களில் நடித்தார். விஜய் 2003ம் ஆண்டை வசீகரா மற்றும் புதிய கீதை ஆகிய படங்களுடன் தொடங்கினார். 2003–2010 பரவலான வெற்றி 2003 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் விஜய் திருமலை என்ற படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்தார். இப்படம் கே. பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு அறிமுக இயக்குனர் ரமணாவால் இயக்கப்பட்டது. இப்படம் இவரை வித்தியாசமான கோணத்தில் காட்டியது. விஜயின் வாழ்க்கையில் திருமலை ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.[31] 2002 இல் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட உதயா, தாமதமாகி, 2004 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இறுதியாக வெளியிடப்பட்டது. தெலுங்கு படமான ஒக்கடுவின் மறு ஆக்கமான கில்லி 2004 இல் வெளியானது. தமிழ்நாட்டின் திரையரங்குகளில் 200 நாட்கள் ஓடியது. எஸ். தரணி இயக்கிய இப்படத்தை ஏ. எம். ரத்னம் தயாரித்தார். இப்படத்தில் இவருடன் த்ரிஷா மற்றும் பிரகாஷ் ராஜ் இணைந்து நடித்தனர்.[32] தமிழகத்தின் உள்மாநிலத் திரைப்படச் சந்தை வரலாற்றில் ₹50 கோடிக்கும் அதிகமான வசூல் செய்த முதல் திரைப்படம் கில்லி ஆகும்.[33] இதன்பின்னர் இவர் ரமணா மாதேஷ் இயக்கிய மதுர திரைப்படத்தில் நடித்தார். 2005 ஆம் ஆண்டில், இவர் பேரரசு இயக்கிய திருப்பாச்சியில் நடித்தார். பின் சுக்ரன் படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்தார். ஜான் மகேந்திரன் இயக்கிய சச்சின் படத்தில் ஜெனிலியா டிசோசாவுடன் நடித்தார். பின்னர் மீண்டும் பேரரசின் இயக்கத்தில் அசினுடன் இணைந்து சிவகாசி படத்தில் நடித்தார். விஜயின் அடுத்த படமான ஆதி இவரது தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் தயாரித்து ரமணா இயக்கத்தில் 2006 இல் வெளியானது. 2007 ஆம் ஆண்டின் முற்பகுதியில், விஜய் போக்கிரி படத்தில் நடித்தார். இது தெலுங்குப் படமான போக்கிரியின் மறு ஆக்கம் ஆகும். இப்படத்தை பிரபுதேவா இயக்கினார். இது 2007 ஆம் ஆண்டின் மூன்றாவது மிக அதிகமான வசூல் செய்த தமிழ் திரைப்படமாகும். இந்தப் படத்தில் விஜயின் கதாபாத்திரம், விமர்சகர்களால் நன்றாகப் பாராட்டப்பட்டது.[34][35] 2007 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், பரதன் இயக்கிய அழகிய தமிழ்மகன் படத்தில் விஜய் நடித்தார். இதில் இவர் வில்லன் மற்றும் கதாநாயகன் ஆகிய இரண்டு பாத்திரங்களிலும் நடித்தார். இந்த படம் மிதமான வசூல் செய்தது. 2008 ஆம் ஆண்டு விஜய் டி.வி. விருது விழாவில் மக்களின் விருப்பமான சூப்பர் ஸ்டார் என்ற விருதுடன் விஜய் கௌரவிக்கப்பட்டார்.[36] 2008 இல், இவர் மீண்டும் தரணியின் இயக்கத்தில் குருவி படத்தில் நடித்தார். 2009 இல், மீண்டும் பிரபுதேவாவின் இயக்கத்தில் வில்லு படத்தில் நடித்தார். அடுத்து இவர் ஏ.வி.எம். தயாரிப்பில் பாபுசிவன் இயக்கத்தில் வேட்டைக்காரன் படத்தில் நடித்தார். 2009 ஆம் ஆண்டின் மிக அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். 2010 இல், இவர் சுறா திரைப்படத்தில் நடித்தார். 2011–2016 சர்வதேச புகழ் 2011 இன் ஆரம்பத்தில் விஜய் மீண்டும் இயக்குனர் சித்திக் உடன் காவலன் படத்தில் இணைந்தார். இது பாடிகார்ட் என்ற மலையாள திரைப்படத்தின் ஒரு தமிழ் மறு ஆக்கம் ஆகும். இது பார்வையாளர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் நேர்மறையான பாராட்டைப் பெற்றது. நல்ல வசூலும் செய்தது.[37] சீனாவில் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் காவலன் திரையிடப்பட்டது.[38] அதே வருட தீபாவளியின் போது, எம். ராஜா இயக்கிய இவரது அடுத்த படமான வேலாயுதம் வெளியானது.[39] வேலாயுதம் 2011 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக ஆனது .[40] விஜயின் அடுத்த படம் நண்பன் ஆகும். இது 3 இடியட்ஸ் என்ற இந்தித் திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும். அமீர்கான் இந்தியில் நடித்த கதாபாத்திரத்தில் விஜய் நடித்தார். இப்படத்தை எஸ். ஷங்கர் இயக்கினார். இது 2012 பொங்கல் வார இறுதியில் வெளியிடப்பட்டது. வசூலில் பெரிய வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் நண்பன் திரையிடப்பட்டது.[41] படத்தில் விஜயின் நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. முன்னணி இந்திய நடிகர் கமல்ஹாசன் உட்பட பலரும் பாராட்டினர்.[42] நண்பன் 100 நாட்கள் ஓடியது.[43][44] பின்னர் பிரபுதேவா இயக்க அக்‌ஷய் குமார் நடித்த 2012 ஆம் ஆண்டு இந்தித் திரைப்படமான ரவுடி ரத்தோர் இல் இவர் ஒரு சிறப்பு தோற்றத்தில் தோன்றினார்.[45] எஸ். தாணுவின் தயாரிப்பில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கிய விஜயின் அடுத்த திரைப்படமான துப்பாக்கி 2012ம் ஆண்டு தீபாவளி அன்று வெளியிடப்பட்டது. இப்படம் நேர்மறையான விமர்சனத்தைப் பெற்றது.[46] சிவாஜி (2007) மற்றும் எந்திரனுக்குப் (2010) பிறகு 100 கோடி வசூல் செய்த மூன்றாவது தமிழ் திரைப்படம் ஆனது.[47] விஜயின் திரை வாழ்க்கையில் மிக அதிக வசூல் செய்த படமாகத் துப்பாக்கி ஆனது. ₹180 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த விஜயின் முதல் படமும் ஆனது.[33][48] ஏ. எல். விஜய் இயக்கிய இவரது அடுத்த படம் தலைவா, உலகளாவிய அளவில் 2013 ஆம் ஆண்டு ஆகத்து 9ல் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் தாமதமாக வெளியிடப்பட்டது.[49] காஜல் அகர்வால் மற்றும் மோகன்லாலுடன் இவர் இணைந்து நடித்த படமான ஜில்லா, ஆர். டி. நீசன் இயக்கத்தில் 2014ல் ஒரு பொங்கல் வார இறுதியில் வெளியிடப்பட்டது. வசூலில் வெற்றி பெற்றது.[50][51][52] விஜய் மீண்டும் கத்தியில் முருகதாஸ் உடன் பணியாற்றினார். சமந்தா ருத் பிரபு மற்றும் நீல் நிதின் முகேஷ் உடன் இணைந்து நடித்தார். இது 2014ம் ஆண்டு தீபாவளி அன்று வெளியிடப்பட்டது. நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[53] இது 2014ம் ஆண்டின் மிக அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படமாகும்.[54] 2015 ஆம் ஆண்டில், புலி படம் வெளியிடப்பட்டது. சமந்தா ருத் பிரபு மற்றும் எமி ஜாக்சனுடன் இணைந்து நடித்து, அட்லீ இயக்க எஸ். தாணுவால் தயாரிக்கப்பட்ட இவரது அடுத்த படமான தெறி ஏப்ரல் 2016ல் வெளியிடப்பட்டது. நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[55] தெறி 2016ம் ஆண்டின் அதிக வசூல் செய்த படம் ஆனது. ₹172 கோடிக்கும் அதிகமான வசூல் செய்த இவரது இரண்டாவது படமும் ஆனது.[33] 2017–தற்போது இவரது அடுத்த படமான பைரவா பரதனால் இயக்கப்பட்டது. இதில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்தார். இப்படம் ஜனவரி 2017 இல் வெளியிடப்பட்டது.[56] இவரது அடுத்த படம் மெர்சல், அட்லீயால் இயக்கப்பட்டது. சமந்தா ருத் பிரபு, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோருடன் இணைந்து நடித்தார். இப்படம் 2017 ஆம் ஆண்டின் பிற்பாதியில் வெளியிடப்பட்டது.[57] விஜயின் திரை வாழ்க்கையில் மிக அதிக வசூல் செய்த படமாக மெர்சல் ஆனது. இவரது படங்களில் ₹250 கோடிக்கும் அதிகமான வசூல் செய்த முதல் படமானது.[58] மெர்சல் திரைப்பட கதாபாத்திரத்திற்காக விஜய் 2018ல் ஐக்கிய இராச்சிய தேசிய திரைப்பட விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.[10] காவலனுக்குப் (2011) பிறகு சீனாவில் வெளியிடப்பட்ட இவரது இரண்டாவது படம் மெர்சல் ஆகும்.[59] மெர்சல் தென் கொரியாவின் புச்சியான் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[60] இவரது அடுத்த படமான சர்கார் ஏ. ஆர். முருகதாஸால் இயக்கப்பட்டது. இது ஒரு அரசியல் சார்ந்த படமாகும். இது 2018 தீபாவளிக்கு வெளியானது.[61] இந்தித் திரைப்படங்களில் ரவுடி ரத்தோர் (2012) படத்தில் சிந்தா சிந்தா பாடலில் விஜய் தன் முதல் இந்திப்படக் கௌரவத் தோற்றத்தில் தோன்றினார். இப்படத்தை பிரபுதேவா இயக்க அக்ஷய் குமார் நடித்திருந்தார். விஜயின் கௌரவத் தோற்றம் இந்தி இரசிகர்களால் விரும்பி ரசிக்கப்பட்டது.[62] விஜய் மற்றும் ஷாருக் கான் ஆகியோர் உலக அளவில் திரைச் சந்தையில் ஐந்து முறை மோதியுள்ளனர்.[63] அஜய் தேவ்கானின் இந்திப் படமான கோல்மால் எகைனில் (2017) ஒரு சண்டைக் காட்சியில் விஜய்க்கு ஒரு மரியாதையாக தெறி பட சுவரொட்டியுடன் விஜய் பாடலான வரலாம் வா பைரவா பின்னணியில் இசைக்கப்படும்.[64] இவருடைய தமிழ் படங்களில் பெரும்பாலானவை இந்திக்கு கோல்ட்மைன்ஸ் டெலிஃபிலிம்ஸ் மூலமாக டப்பிங் செய்யப்படுகின்றன. இப்படங்கள் சோனி மேக்ஸ் இந்தி தொலைக்காட்சிச் சேனலில் ஒளிபரப்பப்படுகிறது.[65] விஜயின் திரைப்படமான மெர்சல் அக்டோபர் 2017ல் இந்தித் திரைப்படங்களுக்குக் கடுமையான போட்டியைக் கொடுத்தது. சர்வதேச திரைச்சந்தைகளில் கோல்மால் எகைன் மற்றும் சீக்ரெட் சூப்பர்ஸ்டாரை விட அதிகமாக வசூல் செய்தது.[66] ஜூலை 2017ல் டேஞ்சரஸ் கிலாடி 3 (வேட்டைக்காரன்) மற்றும் போலிஸ்வாலா குண்டா 2 (ஜில்லா) பட ஒளிபரப்புகளின்போது ரிஷ்தே சினிபிலக்ஸ் இந்தித் தொலைக்காட்சிச் சேனல் முறையே #1 மற்றும் #3 ஆகிய இந்தித் திரைப்படத் தொலைக்காட்சி மதிப்பீட்டுப் புள்ளித் தரவரிசைகளைப் பிடித்தது. சோனி மேக்ஸ் இந்தித் தொலைக்காட்சிச் சேனல் இந்தித் திரைப்படத் தொலைக்காட்சி மதிப்பீட்டுப் புள்ளியில் #5 இடத்தைத் தெறி இந்தித் திரைப்பட ஒளிபரப்பின்போது பிடித்தது.[67] 2017ம் ஆண்டின் பிற்பகுதியில், கத்தியின் இந்திப் பதிப்பான காக்கி அவுர் கிலாடி வெளியாகி ஜீ சினிமா இந்தி தொலைக்காட்சிச் சேனலில் ஒளிபரப்பப்பட்டது.[68] தெலுங்கு அங்கீகாரம் மற்றும் வெற்றி விஜயின் திரைப்படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. அவைகளில் பெரும்பாலானவை வெற்றியடைந்துள்ளன. உதாரணமாக ஸ்னேஹிதுடு, துப்பாக்கி, ஜில்லா, போலிசோடு, ஏஜெண்ட் பைரவா மற்றும் அதிரிந்தி ஆகிய படங்களைக் குறிப்பிடலாம். நடிகர் சிரஞ்சீவி தெலுங்குத் திரையுலகிற்கு திரும்பிவந்து படம் ஒன்றில் நடிக்க விரும்பினார். அவருக்கு வெற்றி பெற்ற தமிழ் திரைப்படமான கத்தி திரைப்படத்தின் மறு ஆக்க உரிமைகளைப் பெற விஜய் உதவினார். தெலுங்கில் சிரஞ்சீவி கைதி நம்பர் 150 என்ற பெயரில் இதை மறு ஆக்கம் செய்து கதாநாயகனாக நடித்தார். இதற்கு நடிகர் சிரஞ்சீவி விஜய்க்கு நன்றி தெரிவித்தார்.[69] நடிகர் ஜூனியர் என். டி. ஆர். விஜயை தனது விருப்பமான நடனமாடுபவராக பாராட்டியுள்ளார். விஜய்யின் நடன அசைவுகள் தனக்குப் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். தனது கன்ட்ரி படத்திற்காக விஜயின் வசந்த முல்லை பாடல் நடன அசைவுகளைப் பின்பற்றியதையும் கூறியுள்ளார்.[70] ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களைப் பொறுத்த வரையில் விஜயின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திரைப்படத் தொடக்கமாக அதிரிந்தி அமைந்தது. ஒரு பெரிய வெற்றிப்படமாக மாறியது.[71] ஊடகங்களிலும் மற்றவைகளிலும் இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஃபோர்ப்ஸ் செலிபிரிட்டி 100 பட்டியலின் இந்திய பதிப்பில் பல முறை விஜய் இடம்பெற்றுள்ளார். 2012ல் #28,[72] 2013ல் #49,[73] 2014ல் #41,[74] 2016ல் #61[75] மற்றும் 2017ல் #31 ஆகிய இடங்களைப் பெற்றுள்ளார்.[76] 2017ல், தென்னிந்திய பொங்கல் திருவிழாவில், தமிழ் ஆண்மகன்கள் பாரம்பரிய உடை அணிவதை விளக்க நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் மூன்றாம் வகுப்புப் பாடப்புத்தகம் வேட்டி மற்றும் சட்டையுடன் விஜயின் படத்தைக் காட்டியது.[77][78] விளம்பர ஒப்புதல்கள் 2002ல், விஜய் கோக கோலா விளம்பரங்களில் தோன்றினார்.[79][80] 2005ல் ஒரு சன்ஃபீஸ்ட் விளம்பரத்தில் தோன்றினார்.[81] 2008ல், இந்திய பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[82] சனவரி 2009ல், விஜய் கோக கோலா விளம்பரத்தில் தோன்றினார்.[83] ஆகத்து 2010ல், தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கான விளம்பரத் தூதராக ஜோஸ் ஆலுக்காஸ் விஜயை ஒப்பந்தம் செய்தது.[84] டாடா டொகோமோ விளம்பரத்திலும் விஜய் தோன்றியுள்ளார்.[85] அறப்பணி விஜய் ஒரு சமூக நல அமைப்பான விஜய் மக்கள் இயக்கத்தைத் தொடங்கினார். இது ஜூலை 26, 2009 அன்று புதுக்கோட்டையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இவரது பெரும்பான்மையான அறப்பணிகளுக்கு இவ்வியக்கம்தான் பொறுப்பாக உள்ளது. தானே புயலுக்குப் பிறகு, கடலூரில் உள்ள கம்மியம்பேட்டையில் ஒரு நிவாரண முகாமுக்கு இவரது மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த முகாமில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் அரிசி வழங்கினார். அந்நேரத்தில் கடலூர் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. சில உதவிகளை வழங்கியதன் மூலம் மக்களுக்கு விஜய் உதவினார். முகாம் அமைக்கப்பட்ட பகுதி, தங்களது விருப்பத்திற்குரிய நட்சத்திரத்தை ஒரு தடவை பார்ப்பதற்காக கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் காரணமாக சீக்கிரமே ஒரு பண்டிகை தோற்றத்திற்கு மாறியது.[86] மே 2008ல், பள்ளியிலிருந்து படிப்பைப் பாதியிலேயே விட்டு வெளியேறும் குழந்தைகளை தடுக்கும் முயற்சியில் விஜய் ஹீரோவா? ஜீரோவா? என்ற ஒரு சிறிய பொது சேவை வீடியோவில் தோன்றினார்.[87] 2012ம் ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் முதலிடங்களைப் பெற்ற மாணவர்களுக்காக விஜய் கல்வி விருதுகள் 2012 ஆனது ஜூலை 8 ஆம் தேதி, 2012 அன்று விஜய் மக்கள் இயக்கத்தால் சென்னை ஜே. எஸ். கல்யாண மண்டபத்தில் நடத்தப்பட்டது. விருதுகளை விஜயே நேரில் வழங்கினார். தன் பிறந்த நாளில், 22 சூன் 2007ல் விஜய் எழும்பூர் அரசு பொது மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினார்.[88] நவம்பர் 2014ல், 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற ஒரு தேநீர் கடை உரிமையாளரின் மகளான ஃபாத்திமாவுக்கு கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இடம் கிடைக்க விஜய் உதவினார்.[89] செப்டம்பர் 2017ல், ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்களால் விஜய் மக்கள் இயக்க அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் ஆண்ட்ராய்ட் செயலி உலகெங்கிலும் உள்ள விஜய் ரசிகர்களை ஒன்றிணைக்கத் தொடங்கப்பட்டது.[90] 26 திசம்பர் 2017ல், பொள்ளாச்சியில் உள்ள விஜய் ரசிகர்கள், நோயாளிகளுக்கும் காயமடைந்தவர்களுக்கும் ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ஆட்டோ போன்ற இலவச தேவைகளை வழங்கி உதவியளித்தனர்.[91] 11 செப்டம்பர் 2017ல், நீட் தேர்வில் மருத்துவ சீட் பெறாமல் தோல்வியடைந்து தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்திற்கு விஜய் நிதி உதவி வழங்கினார்.[92] 7 சூன் 2018ல், ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி காவலர்களின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு விஜய் நிதி உதவி வழங்கினார்.[93] 22 ஆகத்து 2018ல், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள தன் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள் உதவியுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹70 லட்சம் மதிப்புள்ள பொருட்களை விஜய் அனுப்பி வைத்தார்.[94] நவம்பர் 2018ல் விஜய் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களுக்கு நிவாரணம் வழங்க தன் ஒவ்வொரு விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைமை நிர்வாகிகளின் வங்கிக் கணக்குகளில் ₹4.5 இலட்சம் செலுத்தினார்.[95] சமூக நல நடவடிக்கைகள் மூலம் ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களுக்காக சேவை செய்தது மற்றும் திரைத்துறையில் தான் செய்த சாதனைகள் ஆகியவற்றின் காரணமாக 2007ல் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம்) இருந்து விஜய் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்.[96] அரசியல் 2009ம் ஆண்டு விஜய் தனது ரசிகர்/நற்பணி மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அரசியல் அமைப்பாக மாற்றினார். இவ்வமைப்பு 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது. 2017 ஆண்டு மெர்சல் படத்தின் மூலம் பிழையான GST வரி விபரங்களை கூறியதாக, அரசியல் வட்டாரங்களில் மிகவும் விமர்சனங்களுக்கு உள்ளானார்.[97] திரைப்பட விபரம் நடித்த திரைப்படங்கள் பாடிய பாடல்கள் இவர் சில திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். அவை, விருதுகள் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் காதலுக்கு மரியாதை (1998)- சிறந்த நடிகர் விருது திருப்பாச்சி (2005)- சிறந்த நடிகர் விருது (சிறப்பு விருது) விஜய் தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சியால் வழங்கப்பட்ட விருதுகள் பிற விருதுகள் கில்லி (2004)- சென்னை கார்பரேட் கிளப் சிறந்த நடிகர் விருது கில்லி (2004)- தினகரன் சிறந்த நடிகர் விருது கில்லி (2004)- பிலிம் டுடே சிறந்த நடிகர் விருது பொதுச்சேவை அறிவிப்பு (2005)-க்கு வெள்ளி விருது போக்கிரி (2007)- தமிழின் சிறந்த நடிகருக்கான அம்ரிதா மாத்ருபூமி விருது போக்கிரி (2007)- சிறந்த நடிகருக்கான இசை அருவி தமிழ் இசை விருது வேட்டைக்காரன்(2009)- சிறந்த நடிகருக்கான இசைஅருவி தமிழ் இசை விருது துப்பாக்கி, நண்பன்(2012) - விகடன் சிறந்த நடிகர் விருது [108] மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள் பகுப்பு:1974 பிறப்புகள் பகுப்பு:தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் பகுப்பு:வாழும் நபர்கள் பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் பகுப்பு:சென்னை நடிகர்கள் பகுப்பு:சென்னை நபர்கள்
கத்தி தமிழ் திரைப்படம் எப்போது வெளியிடப்பட்டது?
2014
11,348
tamil
ea240e50a
இந்தக் கட்டுரை குறிப்பிடத்தக்க கொண்டாட்ட நாட்களை மாதவாரியாக வரிசைப்படுத்தித் தருகிறது. இவை பல்வேறு அரசுகளாலோ குழுக்களாலோ நிறுவனங்களாலோ குறிப்பிட்ட தலைப்பு அல்லது நிகழ்ச்சி அல்லது குழு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த கொண்டாடப்படுகின்றன. ஜனவரி கலப்பை திங்கள்கிழமை – எபிபனி விடுமுறைக் கழித்த முதல் திங்கள் கிழமை Handsel Monday – ஜனவரி முதல் திங்கள் கிழமை மார்ட்டின் லூதர் கிங் இளவல் நாள் – ஜனவரி மூன்றாம் திங்கள் கிழமை புத்தாண்டு – ஜனவரி 1 பனிக்கரடி நீச்ச்ல் நாள் – ஜனவரி 1 பொது மன்ற நாள் - ஜனவரி 1 ஐரோ நாள் – ஜனவரி 1 மயன்மார் விடுதலை நாள் – ஜனவரி 4 வெளிநாடுவாழ் இந்தியர் நாள் (Non-resident Indian Day) – ஜனவரி 9 தேசிய இளைஞர் நாள் (இந்தியா) – ஜனவரி 12 இந்தியப் படை நாள் – ஜனவரி 15 இயேசுவின் திருமுழுக்கு – ஜனவரி 19 National Hugging Day – ஜனவரி 21 தேசிய வாக்காளர் நாள் (இந்தியா) – ஜனவரி 25 Dydd Santes Dwynwen (Saint Dwynwen's – Welsh Valentine's Day) – ஜனவரி 25 Burns Night (Roberts Burns' birth anniversary) – ஜனவரி 25 குடிரசு நாள் (இந்தியா) – ஜனவரி 26 ஆத்திரேலியா நாள் – ஜனவரி 26 பன்னாட்டு பெரும் இன அழிப்பு நினைவு நாள் – ஜனவரி 27 Data Privacy Day – ஜனவரி 28 மாவீரர் நாள் (Mahatma Gandhi's Martyrdom Day) – ஜனவரி 30 International Street Children's Day – ஜனவரி 31 பெப்ருவரி Imbolc – February 1 World Hijab Day – February 1 Candlemas Day – February 2 உலக சதுப்பு நில நாள் – February 2 உலகப் புற்றுநோய் நாள் – February 4 Sami National Day – February 6 வேலன்டைன் நாள் – February 7 Propose Day – February 8 International Day of Zero Tolerance to Female Genital Mutilation – February 6 Waitangi Day (New Zealand) – February 6 டார்வின் நாள் – February 12 உலக வானொலி நாள் – February 13 வேலன்டைன் நாள் – February 14 சமூக நீதிக்கான உலக நாள் – February 20 பன்னாட்டுத் தாய்மொழி நாள் – February 21 Language Movement Day (Bangladesh) – February 21 Thinking Day – February 22 தேசிய அறிவியல் நாள் (இந்தியா) (India) – February 28 Rare Disease Day – February 28 Washington's Birthday – third Monday of February மார்ச் Saint David's Day (Wales) – March 1 Self-injury Awareness Day – March 1 Texas Independence Day – March 2 Dr. Seuss Day – March 2 உலகக் காட்டுயிர் நாள் – March 3 Saint Piran's Day – March 5 அனைத்துலக பெண்கள் நாள் – March 8 பை நாள் – March 14 White Day – March 14 World Consumer Rights Day – March 15 புனித பேட்ரிக்கின் நாள் – March 17 உலக தூக்க நாள் – March 18 உலக சிட்டுக்குருவிகள் நாள் – March 20 International Day of Happiness – March 20 உலக பொம்மலாட்ட நாள் – March 21 இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாள் – March 21 பன்னாட்டு வன நாள் – March 21 பன்னாட்டு வண்ண நாள் – March 21 உலக டவுன் நோய்க்கூட்டறிகுறி நாள் – March 21 உலகக் கவிதை நாள் – March 21 உலக நீர் நாள் – March 22 பாக்கித்தான் தேசிய நாள் – March 23 உலக காச நோய் நாள் – March 24 Purple Day – March 26 வங்காளதேச விடுதலை நாள் – March 26 ஏப்பிரல் ஏப்ரல் முட்டாள்கள் நாள் – April 1 பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள் – April 2 உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாள் – April 2 உலக சுகாதார நாள் – April 7 பன்னாட்டு உரோமா நாள் – April 8 International Louie Louie Day – April 11 Cosmonautics Day – April 12 Black Day – April 14 Pohela Boishakh (Bangla New Year's Day) – April 14 Day of Silence – April 15 Day of Dialogue – April 15 Foursquare Day – April 16 World Hemophilia Day – April 17 உலகப் பாரம்பரிய தினம் – 18 April புவி நாள் – April 22 St George's Day – April 23 உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் – April 23 International Sculpture Day – 24 April அன்சாக் நாள் – April 25 Liberation Day (Italy) – April 25 உலக மலேரியா நாள் – April 25 அறிவுசார் சொத்துரிமை நாள் – April 26 King's Day (The Netherlands) – April 27 International Dance Day – April 29 International Jazz Day – April 30 மே உலக சிரிப்பு நாள் – first Sunday of May மே நாள் – May 1 May Day – May 1 உலக பத்திரிகை சுதந்திர நாள் – May 3 Greenery Day – May 4 Remembrance of the Dead – May 4 Star Wars Day – May 4 சிங்க்கோ டே மாயோ – May 5 International Midwives' Day – May 5 International No Diet Day – May 6 Victory in Europe Day – May 8 Military Spouse Day – May 11 உலக செவிலியர் நாள் – May 12 International Day of Families – May 15 International Day Against Homophobia and Transphobia – May 17 உலக தகவல் சமூக நாள் – May 17 பன்னாட்டு பல்லுயிர் பெருக்க நாள் – May 22 World Turtle Day – May 23 Commonwealth Day – May 24 African Liberation Day – May 25 Geek Pride Day – May 25 சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் – May 25 Towel Day – May 25 World Multiple Sclerosis Day – May 25[1] மாதவிடாய் சுகாதார நாள் – May 28 உலக புகையிலை எதிர்ப்பு நாள் – May 31 நினைவு நாள் – last Monday of May ஜூன் Queen's Official Birthday – first, second or third Saturday in June புற்றுநோயிலிருந்து மீண்டோர் தினம் (US) – first Sunday of June National Doughnut Day (US) – first Friday of June Republic Day (Italy) – June 2 உலக சுற்றுச்சூழல் நாள் – June 5 நார்மாண்டி படையிறக்கம் – June 6 உலகப் பெருங்கடல்கள் நாள் – June 8 Independence Day (Philippines) – June 12 குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள் − June 12 உலக குருதிக் கொடையாளர் நாள் – June 14 Day of the African Child – June 16 Icelandic National Day – June 17 Autistic Pride Day – June 18 Juneteenth – June 19 and/or third Saturday of the month உலக அகதி நாள் – June 20 தந்தையர் தினம் – June 19 World Hydrography Day – June 21 Fête de la Musique – June 21 பன்னாட்டு யோகா நாள் – June 21 International Day against Drug Abuse and Illicit Trafficking – June 26 பை (கணித மாறிலி) – June 28 ஜூலை கனடா நாள் – July 1 தேசிய மருத்துவர்கள் நாள் (India) – July 1 Chartered Accountants' Day (India) – July 1 World UFO Day – July 2 Independence Day (United States) – July 4 உலக மக்கள் தொகை நாள் – July 11 மலாலா யூசப்சையி – July 12 பாஸ்டில் நாள் – July 14 World Day for International Justice – July 17 நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள் – July 18 பை நாள் – July 22 Kargil Vijay Diwas – July 26 உலகக் கல்லீரல் அழற்சி நாள் – July 28 பன்னாட்டுப் புலி நாள் – July 29 அமைப்பு நிர்வாகி பாராட்டு நாள் – last Friday in July ஆகத்து International Beer Day – first Friday of August Yorkshire Day – August 1 பன்னாட்டு நட்பு நாள் – first Sunday of August அனைத்துலக இளையோர் நாள் – August 12 பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள் – August 13 Youm-e-Azadi (Pakistan Independence Day) – August 14 National day of mourning (Bangladesh) – August 15 உலக நாடுகளின் விடுதலை நாட்கள் (India) – August 15 Victory over Japan Day (UK) – August 15 Day of the Assumption of the Virgin Mary – August 15 Bennington Battle Day – August 16 Indonesian Independence Day – August 17 உலக கொசு நாள் – August 20 Indian Akshay Urja Day – August 20 அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள் – August 23 European Day of Remembrance for Victims of Stalinism and Nazism – August 23 Women's Equality Day – August 26 தேசிய விளையாட்டு நாள் – August 29 மலேசிய விடுதலை நாள் (Malaysia National Day) – August 31 செபுதம்பர் Victory over Japan Day (US) – September 2 Skyscraper Day – September 3 International Day of Charity – September 5 ஆசிரியர் நாள் (India) – September 5 Defense Day – September 6 Brazilian Independence Day – September 7 World Suicide Prevention Day – September 10 Patriot Day – September 11 ஓணம் (Kerala, India) – September 14, 2016 இந்தி மொழி நாள் – September 14 Engineer's Day (India) – September 15 அனைத்துலக மக்களாட்சி நாள் – September 15 Malaysia Day – September 16 International Talk Like a Pirate Day – September 19 உலக அமைதி நாள் – September 21 World Car Free Day – September 22 Celebrate Bisexuality Day – September 23 As You Wish Day – September 25 European Day of Languages – September 26 உலக சுற்றுலா நாள் – September 27 World Rabies Day – September 28 World Heart Day – September 29 அக்தோபர் உலக வசிப்பிட நாள் – first Monday of October உலக கண்ணொளி தினம் – second Thursday of October International Coffee Day – October 1 உலக சைவ உணவு நாள் – October 1 காந்தி ஜெயந்தி – October 2 அனைத்துலக வன்முறையற்ற நாள் – October 2 German Unity Day – October 3 Stevie Ray Vaughan Day (Austin, Texas, US) – October 3 உலக விலங்கு நாள் – October 4 World Teachers' Day – October 5 Coaches' Day – October 6 German-American Day – October 6 National Poetry Day (Britain) – 6 October உலக அஞ்சல் நாள் – October 9 உலக மனநல நாள் – October 10 பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள் – October 11 உலகத் தர நிர்ணய நாள் – October 14 Pregnancy and Infant Loss Remembrance Day – October 15 உலகக் கைகழுவும் நாள் – October 15 உலக உணவு நாள் – October 16 உலக வறுமை ஒழிப்பு நாள் – October 17 மோல் நாள் – October 23 ஐக்கிய நாடுகள் நாள் – October 24 Intersex Awareness Day – October 26 தொழிலாளர் தினம் (New Zealand) – October 27 National Cat Day (US) – October 29 ஆலோவீன் – October 31 நவம்பர் Melbourne Cup Day – 1st Tuesday in November World Vegan Day – November 1 புனிதர் அனைவர் பெருவிழா – November 1 இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள் – November 2 Bonfire Night (also Guy Fawkes Night) – November 5 Intersex Day of Remembrance – November 8 Iqbal Day – November 9 Armistice Day (also Remembrance Day ) – November 11 Veterans Day (United States) – November 11 உலக நுரையீரல் அழற்சி நாள் – November 12 World Kindness Day – November 13 உலக நீரிழிவு நாள் – November 14 குழந்தைகள் நாள் (some countries) – November 14 World Prematurity Day – November 17 அனைத்துலக ஆண்கள் நாள் – November 19 உலகக் கழிவறை நாள் – November 19 ஆஸ்திரேலியா நாள் – November 19 குழந்தைகள் நாள் – November 20 Transgender Day of Remembrance – November 20 உலகத் தொலைக்காட்சி நாள் – November 21 பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் – November 25 அரசியல் சாசன தினம் (இந்தியா) – November 26 Saint Andrew's Day (Scotland) – November 30 Cities for Life Day – November 30 நன்றியறிதல் நாள் (அமெரிக்கா) – fourth Thursday of November திசம்பர் உலக எயிட்சு நாள் – December 1 பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் – December 3 International Volunteer Day – December 5 பன்னாட்டு மண் ஆண்டு – December 5 International Civil Aviation Day – December 7 International Anti-Corruption Day – December 9 மனித உரிமைகள் நாள் – December 10 பன்னாட்டுத் தேயிலை நாள் – December 15 வங்காளதேச வெற்றி நாள் – December 16 Christmas Eve – December 24 கிறித்துமசு – December 25 Good Governance Day (India) – December 25 முகம்மது அலி ஜின்னா – December 25 பொக்சிங் நாள் – December 26 குவான்சா – December 26 to January 1 New Year's Eve – December 31 மாறும் நாட்கள் Advent Sunday – Sunday nearest November 30 Ascension Day – depends on the date of Easter திருநீற்றுப் புதன் – depends on the date of Easter Buddha Purnima – full moon day of the வைகாசி month of the Hindu calendar சீனப் புத்தாண்டு – first day of the 1st month of the Chinese (lunar) calendar கொலம்பசு நாள் – second Monday of October Datta Jayanti Deepawali or Diwali – new moon night of the Hindu Lunisolar month Kartika உயிர்ப்பு ஞாயிறு – Western Christianity, Sunday March 22 to April 25 inclusive; Eastern Christianity, April 4 and May 8 (1900 to 2100) தியாகத் திருநாள் – 10th day of துல் ஹிஜ்ஜா ஈகைத் திருநாள் – first day of ஷவ்வால் பன்னாட்டு நட்பு நாள் – first Sunday of August ஹோலி – Phalgun Purnima of Hindu calendar International Bacon Day – first Saturday before அமெரிக்கத் தொழிலாளர் நாள் Lantern Festival – 15th day of the first month in the lunar year in the Chinese calendar மார்ட்டின் லூதர் கிங் நாள் (US) – third Monday of January பூரிம் – 14th of the Hebrew month of Adar Purnima Sukla Paksha – full moon day – December Shrove Tuesday – day before திருநீற்றுப் புதன் திரித்துவ ஞாயிறு – Sunday after Whitsun Whitsun (Pentecost) – depends on the date of Easter World Kidney Day – second Thursday in March World Leprosy Day – last Sunday in January உலக மெய்யியல் நாள் – third Thursday in November, November 21 மற்ற நாட்கள் மர நாள் குழந்தைகள் நாள் – dates vary between countries தந்தையர் தினம் – dates vary between countries Flag Day – dates vary between countries Hangul Day – October 9 (தென் கொரியா); January 15 (வடகொரியா) Imbolc – beginning of February or at the first local signs of spring Inventors' Day தொழிலாளர் தினம் – dates vary between countries மார்டி கிறாஸ் அன்னையர் நாள் – dates vary between countries மேலும் காண்க விழிப்புணர்வு நாட்கள் பன்னாட்டுக் கொண்டாட்டங்கள் கொண்டாட்ட மாதங்களின் பட்டியல் சுற்றுச் சூழல் நாட்களின் பட்டியல் உணவு நாட்களின் பட்டியல் விடுமுறை நாட்களின் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள்
போர்நிறுத்த நினைவுநாள் எப்போது கொண்டாடப்படுகிறது?
September 21
7,216
tamil
7d1a05033
இளம்பிள்ளை வாதம் பாதிக்கப்பட்டவரின் மலத்தின் வழியாகப் பரவும் தீநுண்மத் தொற்றுநோய் ஆகும். மலத் துகள்களினால் மாசடைந்த நீர், அல்லது உணவு வாய்வழியாக உட்கொள்ளப்படும்போது இந்நோய் தொற்றுகிறது. இது போலியோ என்னும் ஆங்கிலப் பெயராலும் பரவலாக அழைக்கப்படுகின்றது. போலியோமியெலிட்டிஸ் (Poliomyelitis) என்பது இந்நோயின் மருத்துவப் பெயர்.போலியோமைலிட்டிஸ் வைரஸ் தண்டுவடத்தைத் தாக்கும்போது ஏற்படும் பக்கவாதம் இது. இந் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களில் 90% பேரில் அறிகுறிகள் எதுவும் தோன்றுவதில்லை. எனினும் தீநுண்மங்கள் குருதியோட்டத்துடன் கலந்துவிடின் பல வகையான அறிகுறிகள் தோன்றுகின்றன. பாதிக்கப்படுபவர்களில் 1%க்கும் குறைவானவர்களில் தீநுண்மங்கள் மைய நரம்புத் தொகுதிக்குள் சென்று இயக்க நரம்பணுக்களைத் தாக்குவதனால் தசைநார்கள் பலவீனமுற்றுத் தீவிரமான தளர்வாதத்தை (flaccid paralysis) உருவாக்குகிறது. பாதிக்கப்படும் நரம்புகளைப் பொறுத்துப் பலவகையான வாத (paralysis) நிலைமைகள் ஏற்படலாம். முள்ளந்தண்டோடு தொடர்புள்ள இளம்பிள்ளை வாதமே மிகவும் பொதுவாகக் காணப்படுகின்றது. இது பொதுவாகக் கால்களைத் தாக்குகிறது. போலியோவைரசால் உண்டாகும் இந்நோய் முடமாக்கக் கூடியதும் மரணத்தை வரவழைப்பதுமான தொற்று நோய். மனிதரில் இருந்து மனிதருக்குப் பரவுகிறது. இது மூளையையும், தண்டுவடத்தையும் தாக்குவதால் பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. போலியோ வைரசுக்கு அறியப்பட்ட ஒரே புகலிடம் மனிதனே. தொற்று உள்ள ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவுகிறது. போலியோ தொற்றில் இரு அடிப்படை வடிவங்கள் உள்ளன நடுநரம்பு மண்டலத்தைத் தாக்காத குறும்நோய். இது சில சமயம் குறை இளம்பிள்ளைவாதம் என அழைக்கப்படும்.நடுநரம்பு மண்டலத்தைத் தாக்கும் பெரும்நோய். இதில் பக்கவாதம் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம நோய் அறிகுறிகள் குழந்தைகளில் 72% போலியோ தொற்று அறிகுறிகளைக் காட்டுவதில்லை. ஆனால் போலியோ வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மலம் மூலமாக, நோய்த்தொற்று பிறருக்குப் பரவும் அபாயம் உள்ளது.[1] ஏறக்குறைய 4-8% போலியோ தொற்று, குறும்நோயாக மாறுகிறது. மருத்துவ மற்றும் ஆய்வகச் சோதனைகளில் நடுநரம்பு மண்டலத்தைப் பாதித்ததற்கான தடயங்கள் இருப்பதில்லை. இது குறை இளம்பிள்ளை வாதம் எனப்படுகிறது. ஒரு வாரத்தில் முற்றிலும் குணமடைவது இதன் இயல்பு. இத்தகைய போலியோவைரஸ் தொற்றில் மூன்று அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன: மேல் மூச்சுப்பாதைத் தொற்று (தொண்டைவலியும் காய்ச்சலும்), இரைப்பைக்குடல் உபாதைகள் (குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு) மற்றும் இன்ஃபுளுயன்சா போன்ற நோய்கள். 1-2 % தொற்று, வாதமற்ற பரவாத மூளைக்காய்ச்சலாக (கழுத்து, முதுகு மற்றும்/அல்லது கால் விறைப்பு அறிகுறி) உருவாகிறது. இந்த அறிகுறிகள் சிறு நோய் போல பல நாட்கள் தொடரும். அதிக அல்லது அசாதாரண உணர்வுகள் ஏற்படும். 2-10 நாட்கள் வரை இவ்வறிகுறிகள் நீடித்துப் பின் முற்றிலும் மறைந்து போகும். ஒட்டுமொத்தப் போலியோ தொற்றில், 1% விட குறைவானவையே தசை மெலிந்த வாதமாக வெளிப்படுகிறது. ஒரு சிறு நோயைத் தொடர்ந்து 1-10 நாட்களில் இளம்பிள்ளை வாத அறிகுறிகள் பொதுவாகத் தொடங்குகின்றன. காய்ச்சல் இயல்பு நிலைக்கு வந்த பின் மேலும் வாதம் ஏற்படாது. தொடக்கத்தில் தசைநாண் செயல்பாடு அதிகரிப்பும், கடும் தசை வலியும், அவயவ அல்லது முதுகு பிடிப்போடும் கூடிய மேலோட்டமான அனிச்சை செயல் இழப்பு அறிகுறியில் அடங்கும். ஆழ்தசைநாண் அனிச்சை செயல்கள் குறைந்து இந்நோய் தொய்வு வாதமாக மாறும். பலநாட்கள் அல்லது வாரங்களுக்கு மாற்றமின்றி அவ்வாறே இருக்கும். இந்நிலையில் இது சமச்சீரற்றுக் காணப்படும். பின் வலிமை திரும்பத் தொடங்கும். நோயாளிக்கு உணர்விழப்போ அறிவாற்றல் மாற்றமோ இருக்காது.உடம்பிலுள்ள முக்கிய அங்கமான கை, கால் மற்றும் முதுகுதண்டு வடம் பகுதிகளை அசைக்க முடியாமல் பலவீனம் அடையும். ஒரு சில நாட்களில் வெப்பகாய்ச்சல் ஏற்பட்டு பேதி ஏற்படும்; தலை பாரமாக இருக்கும்; உடல் முழுதும் தீராத வலி இருக்கும்.[2] சிக்கல்கள் நிரந்தரமான தசை வாதமும், இடுப்பு, கணுக்கால், மற்றும் பாதங்களின் குறைபாடுகளும், ஊனமும், இளம்பிள்ளை வாதத்தினால் உண்டாகலாம். பல குறைபாடுகளை அறுவை மருத்துவத்தின் மூலமும் உடலியல் சிகிச்சை மூலமும் சரிசெய்ய முடியும் என்றாலும், வளர்ந்து வரும் நாடுகளில் இந்த சிகிச்சை முறைகள் சாத்தியமில்லை. இதன் காரணமாக இளம்பிள்ளை வாதத்திற்குத் தப்பிப் பிழைக்கும் குழந்தைகள் கடுமையான குறைபாடுகளுடன் வாழவேண்டியுள்ளது. கீழ்கண்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. நுரையீரல் அழற்சி இதயக்கீழறை மிகுவழுத்தம் அசைவின்மை நுரையீரல் பிரச்சினைகள் நுரையீரல் வீக்கம் அதிர்ச்சி நிரந்தரத் தசை வாதம் சிறுநீர்ப்பாதைத் தொற்று நோய்கண்டறிதல் வைரசைத் தனிமைப்படுத்தல் இளம்பிள்ளை வாதமுடைய ஒருவரின் மலம் அல்லது தொண்டையில் இருந்து போலியோவைரஸ் எடுக்கப்படுகிறது. மூளைத்தண்டுவட பாய்மத்தில் இருந்து வைரசைப் பிரித்து எடுப்பதே நோய்கண்டறிதல். ஆனால் அது அபூர்வமாகவே முடியக்கூடியது ஆகும். கடும் தளர் வாதம் உடைய ஒருவரிடம் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட வைரஸ் மேலும் சோதிக்கப்பட வேண்டும். ஒலிகோநியூக்ளியோடைட் படமிடல் (oligonucleotidemapping) அல்லது மரபணு வரிசைப்படுத்துதல் (genomic sequencing) மூலம் அந்த வைரசு இயற்கையானதா (“wild type”) அல்லது தடுப்புமருந்து வகையா (தடுப்பு மருந்து திரிபில் இருந்து பெறப்பட்டது) என்று தீர்மானிக்கப்படும். ஊனீரியல் தொடக்கத்திலேயே சமன்படுத்தும் எதிர்பொருட்கள் தோன்றி, நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அதிக அளவில் பெருகி இருக்கும். இதனால் நான்கு மடங்கு அதிகரிப்பை எதிர்பொருள் வேதியல் வினையூக்கி சோதனையால் காட்ட முடியாது. மூளைத்தண்டுவடப் பாய்மம் இளம்பிள்ளைவாதத் தொற்று நோய் இருந்தால் மூளைத் தண்டுவட பாய்மத்தில் பொதுவாக வெள்ளணுக்களின் என்ணிக்கை அதிகமாய் இருக்கும் (10-20 உயிரணுக்கள்/mm3, பெரும்பாலும் வடிநீரணுக்கள்). மேலும், புரத அளவும் சற்றே அதிகரிக்கும் (40–50 mg/100 mL). நோய் மேலாண்மை இளம்பிள்ளை வாதத்தைக் குணப்படுத்த முடியாது. எனவே நோயாளிக்கு ஆதரவு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளி நலமடையும் வரை அறிகுறிகளுக்கான சிகிச்சை அளிக்கப்படும். போலியோ அறிகுறிகளுக்கான மருந்துகள், உடற்பயிற்சிகள் மற்றும் சமநிலை உணவு.அளிக்க வேண்டும். தடுப்புமுறை இளம்பிள்ளை வாதம் இதுவரை குணப்படுத்த முடியாத நோயாக இருந்து வருகிறது. எனவே தடுப்பு மருந்து ஒன்றே பாதுகாப்பும் நோயைக் கட்டுப்படுத்தும் ஒரே வழியுமாகும். இரு வகையான தடுப்பு மருந்துகள் உள்ளன: வீரியம் அழிக்கப்பட்ட இளம்பிள்ளை வாதத் தடுப்பு மருந்து மற்றும் வாய்வழி இளம்பிள்ளை வாதத் தடுப்பு மருந்து . வயதைப் பொறுத்துக் காலிலோ புயத்திலோ வீரியம் அழிக்கப்பட்ட இளம்பிள்ளை வாதத் தடுப்பு மருந்து ஊசி வழியாகச் செலுத்தப்படுகிறது. பிற தடுப்பு மருந்துகள் அளிக்கும்போதே போலியோ தடுப்பு மருந்தும் அளிக்கலாம். குழந்தைப் பருவத்திலேயே தடுப்பு மருந்து கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு 4 வேளை வீரியம் அழிக்கப்பட்ட இளம்பிள்ளை வாதத் தடுப்பு மருந்து பின்வரும் வயதில் அளிக்கவேண்டும்: 2 வது மாதம், 4 வது மாதம், 6-18 வது மாதம் மற்றும் ஊக்க அளவு 4-6 வயதில். வாய்வழி இளம்பிள்ளை வாதத் தடுப்பு மருந்தில், மூன்று போலியோவைரஸ் வகையிலும் உயிருள்ள மற்றும் வீரியம் குறைந்த போலியோ வைரஸ் திரிபுகளின் கலவை இருக்கும். போலியோ சொட்டு மருந்துத் திட்டத்தின் கீழ் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுக்கு இரு வேளை வாய்வழி தடுப்பு மருந்து கொடுக்கப்படும். குழந்தைகள் காக்கப்படுவதோடு சமூகத்தில் பரவலாக்கப்பட்டு விரிவான பாதுகாப்பையும் அளிக்கிறது. 1952ம் ஆண்டில், 'ஜோனஸ் சால்க்’ (Jonas Salk) என்ற அமெரிக்க மருத்துவர், போலியோ நோய்க்குத் தடுப்பூசியைக் கண்டுபிடித்தார். அவர், தான் கண்டுபிடித்த உயிர்காக்கும் தடுப்பூசிக்கு, காப்புரிமை வேண்டாம் என மறுத்துவிட்டார்.எனது கண்டுபிடிப்பு, சூரியனுக்கு ஒப்பானது. அனைவருக்கும் பயனளிக்க வேண்டியது. சூரியனுக்கு காப்புரிமை கேட்க முடியுமா என்று, அதை மறுத்தவர் சால்க். 1957ம் ஆண்டில, 'ஆல்பர்ட் சாபின்’ (Albert Sabin) என்ற மற்றொரு அமெரிக்க மருத்துவர் இதே நோய்க்குத் தடுப்புச் சொட்டு மருந்தைக் கண்டுபிடித்தார். குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசியைப் போடுவதை விட சொட்டு மருந்தைக் கொடுப்பது எளிதாகவும், செலவு குறைவாகவும் இருந்தது. இதனால், இந்திய அரசாங்கம் 'குழந்தைகளுக்கு முறைப்படி போலியோ சொட்டு மருந்து கொடுத்தால், நோயைத் தடுக்கலாம்’ என்னும் விழிப்பு உணர்வை மக்களிடம் ஏற்படுத்தியது.[3] உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 16ம் தேதி ‘உலக போலியோ சொட்டு மருந்து தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் இளம்பிள்ளை வாதம் என்ற போலியோவை ஒழிக்க 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. பாதிக்கப்படுபவர்களில் 1%க்கும் குறைவானவர்களில் தீநுண்மங்கள் மைய நரம்புத் தொகுதிக்குள் சென்று இயக்க நரம்பணுக்களைத் தாக்குவதனால் தசைநார்கள் பலவீனமுற்றுத் தீவிரமான தளர்வாதத்தை (flaccid paralysis) உருவாக்குகிறது. பாதிக்கப்படும் நரம்புகளைப் பொறுத்துப் பலவகையான வாத (paralysis) நிலைமைகள் ஏற்படலாம். முள்ளந்தண்டோடு தொடர்புள்ள இளம்பிள்ளை வாதமே மிகவும் பொதுவாகக் காணப்படுகின்றது. இது பொதுவாகக் கால்களைத் தாக்குகிறது. இந்தியாவில் இளம்பிள்ளை வாதம் 2009ம் ஆண்டில் இந்தியாவில் 741 இளம்பிள்ளை வாதம் தாக்கிய சம்பவங்கள் பதியப்பட்டிருந்தன. இந்தியாவில் இளம்பிள்ளை வாதம் தாக்கிய கடைசி சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் ஜனவரி 13 2011ல் தெரியவந்தது. அங்கு ஒரு 18 வயது பெண்ணுக்கு இந்த நோய் தாக்கியிருந்தது. அதன் பிறகு தொடர்ந்து 3 ஆண்டுகளாக எந்த குழந்தைக்கும் போலியோ நோய் தாக்காததால், இந்தியா தன்னை போலியோ அற்ற நாடு என்று அறிவிக்கும் நிலையை 13 சனவரி 2014இல் எட்டியது. இந்திய அரசின் இந்த அறிவிப்பு 13 சனவரி 2014இல் வருகிறது என்றாலும், உலகச் சுகாதார நிறுவனம், இந்தியாவிலிருந்து வந்த கடைசி ஆய்வு மாதிரிகள் சிலவற்றை பரிசோதித்துப் பார்த்துவிட்டுப் பின்னர் பிப்ரவரி 11ம் தேதியே தனது அத்தாட்சிப் பத்திரத்தை வழங்கும்.[4] தெலங்கானாவின் தலைநகரான ஐதராபாத்தில் உள்ள அம்பர்பேட்டை கால்வாய் நீரை பரிசோதித்தபோது போலியோ வைரஸ் அதில் கலந்திருப்பது கண்டறியப்பட்டது[5] பாதிப்புகள் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு இல்லை. ஆனால், வடமாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார், டெல்லி, சண்டிகரில் 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை போலியோவால் குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். இதேபோல் அரியானா, பஞ்சாய், இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் 2010ம் ஆண்டில் ஆங்காங்கே போலியோ பாதிப்புகள் இருந்தது. தடுப்பூசி இந்தியாவில் குழந்தைகளுக்கு வாய் வழியாக போடப்படும் சொட்டு மருந்து மூலம், நாட்டில் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. சொட்டு மருந்து போடப்படும் 1 கோடி குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு தடுப்பு மருந்தின் மூலம் போலியோ பாதிப்பு வரவாய்ப்புள்ளது என்பதை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனவே, குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடுவதே சிறந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற பல்வேறு நாடுகளில் தற்போது வாய் வழியாக போலியோ சொட்டு மருந்து போடுவதை நிறுத்தியுள்ளனர். போலியோ தடுப்பூசி மட்டுமே போடுகின்றனர். போலியோ தடுப்பூசி போடுவதால், 100 சதவீதம் போலியோ பாதிப்பை தடுத்துவிடலாம். அதனால், வெளிநாடுகளை போல இந்தியாவிலும் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.[6] மேற்கோள்கள் வெளியிணைப்புகள் பகுப்பு:தொற்று நோய்கள்
இந்தியாவில் இருந்து போலியோ நோய் எப்போது ஒழிக்கப்பட்டது?
13 சனவரி 2014
8,197
tamil
9e83fce2d
மைக்ரோசாப்ட் நிறுவனம்(Microsoft Corporation) அமெரிக்காவை மையமாக கொண்டு செயல் படும் ஓர் பன்னாட்டு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது உலகின் மிகப் பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. கணினிக்குத் தேவையான பல வகை மென்பொருட்களை தயாரிப்பது, மேம்படுத்துவது, உரிமை மற்றும் ஆதரவு அளிப்பது போன்ற செயற்பாடுகளை உடையது. வாசிங்டனில் உள்ள ரெட்மாண்ட் நகரத்தில் இதன் தலைமை இடம் உள்ளது. இதனை பில் கேட்சும் பவுல் ஆல்லெனும் ஏப்ரல் 4, 1975இல் நிறுவினர். வருமானத்தின் அளவுகொண்டு உலகின் மிகப்பெரும் மென்பொருள் ஆக்குனராக மைக்ரோசாப்ட் விளங்குகிறது.[4] உலகளவில் பங்குச்சந்தையில் மிகக் கூடுதலான மொத்தமதிப்பைக் கொண்டுள்ள நிறுவனமாகவும் இது விளங்குகிறது.[5]விண்டோஸ் இயக்குதளங்கள், மைக்ரோசாப்ட் ஆபிஸ் ஆகியவை இதன் முக்கிய உற்பத்தி பொருட்கள் ஆகும். அல்டைர் 8800விற்கு பேசிக் மொழிமாற்றி மென்பொருளை உருவாக்கி விற்கும் நிறுவனமாக மைக்ரோசாப்ட் முதலில் துவங்கப்பட்டது. பின்னர் எம்.எஸ்.டாஸ் எனும் இயக்குதளத்தை 1980களில் அறிமுகப்படுத்தி தனி மேசைக் கணினி இயக்கு தளம் தயாரிப்பில் முன்னணி வகித்தது. இதனையொட்டி மைக்ரோசாப்ட் விண்டோசு எனும் வரைகலைச் சூழல் இயக்குதளங்களை ஒன்றையடுத்து ஒன்றாக உருவாக்கி விற்பனை செய்தது. இதனால் மைக்ரோசாப்ட், "ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மேசையிலும் மைக்ரோசாப்ட்டின் மென்பொருள்" என்ற நிலையை எட்டியது. 1986இல் வெளியிட்ட ஆரம்ப பொது விடுப்புகள் மற்றும் பிந்தைய பங்கு விலை ஏற்றங்கள் காரணமாக மைக்ரோசாப்ட் தனது ஊழியர்களில் மூவரை பில்லியனர்களாகவும் 12000 பேரை மில்லியனர்களாகவும் ஆக்கியது. 1990களிலிருந்து பல நிறுவனங்களை கையகப்படுத்தியும் இணைத்தும் தன்னை இயக்குதள சந்தையிலிருந்து விரிவுபடுத்திக் கொண்டுள்ளது. 2011இல் இசுகைப் தொழில்நுட்ப நிறுவனத்தை $8.5 பில்லியனுக்கு வாங்கியுள்ளது; இதுவரை இதுவே மிகப்பெரும் வாங்குதலாகும்.[6] 2013இல் மைக்ரோசாப்ட் தனிமேசைக் கணினி மற்றும் மடிக்கணினி இயக்குதளங்களிலும் அலுவலக திறன்பெருக்கு மென்பொருள் பயன்பாட்டுச் செயலிகளிலும் (குறிப்பாக மைக்ரோசாப்ட் ஆபிஸ் உடன்) முதன்மைநிலையில் உள்ளது. தவிர தனிமேசைக் கணினிகளுக்கும் கணிவழங்கிகளுக்கும் பல்வேறு மென்பொருள் பயன்பாட்டுச் செயலிகளை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது. மேலும் இணைய தேடுபொறிகள், நிகழ்பட ஆட்டத் தொழிற்துறை ( எக்ஸ் பாக்ஸ் மற்றும் எக்ஸ் பாக்ஸ் 360 வழங்கல்களுடன்), எண்ணிமச் சேவைகள் சந்தை (எம்எஸ்என் மூலமாக), மற்றும் நகர்பேசிகள் (விண்டோஸ் போன் இயக்குதளம் மூலமாக) போன்றவற்றிலும் முதன்மைநிலை எய்த முயன்று வருகிறது. சூன் 2012இல் முதன்முறையாக மைக்ரோசாப்ட் தனிக்கணினி வழங்குனர் சந்தையில் தனது மைக்ரோசாப்ட் சர்பேஸ் கைக் கணினி யுடன் நுழைந்துள்ளது. 1990களில் மைக்ரோசாப்ட் முற்றுரிமை வணிகச் செயல்பாடுகளையும் போட்டிக்கெதிரான செய்முறைகளிலும் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. தனது மென்பொருளைப் பயன்படுத்த நியாயமற்ற கட்டுப்பாடுகளை கடைபிடித்ததாகவும் தவறான தகவல்களை தனது சந்தைப்படுத்துதல் முயற்சிகளில் பயன்படுத்தியதாகவும் வழக்குகள் போடப்பட்டன. அமெரிக்காவின் நீதித்துறையும் ஐரோப்பியக் குழுமமும் மைக்ரோசாப்ட் சட்டங்களுக்குப் புறம்பாக செயல்பட்டதாக கண்டறிந்தனர். நிறுவனம் "மைக்ரோசாப்ட்" என்ற பெயர் மைக்ரோ கம்ப்யூட்டர் சாப்ட்வேர் என்ற ஆங்கிலச் சொற்களின் இணைப்பாகும். சூலை, 1975இல் பில் கேட்சு பவுல் ஆல்லெனுக்கு எழுதிய கடிதத்தில் முதன்முதலில் "மைக்ரோ-சாப்ட்" எனக் குறிப்பிட்டுள்ளார்.[7]. தற்போதைய வடிவம் நவம்பர் 26, 1976 அன்று நியூ மெக்சிகோ மாநிலத்தில் பதியப்பட்டது[8].. நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள ரெட்மாண்டில் அமைந்துள்ளது. இதனால் மைக்ரோசாப்ட் சில நேரங்களில் ரெட்மாண்ட் நிறுவனம் என்றழைக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் இயக்கு தளம் விண்டோசு பல பதிப்புகள் வெளியிடப்பட்டு கணினி உலகில் ஓர் சீர்தரமாக விளங்குகிறது. இந்த நிறுவனத்தில் 88,000 ஊழியர்கள் உலகெங்கும் பல நாடுகளில் பணி புரிகின்றனர். சனவரி 14, 2000 முதல் இசுட்டீவ் பால்மர் இதன் தலைவராக பொறுப்பில் உள்ளார். 2014 பிப்ரவரி 4ஆம் தேதி அன்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக சத்ய நாதெல்லா என்பவர் அமர்த்தப்பட்டார். இவர் ஒரு இந்தியர். அதேபோல் மைக்ரோசாப்ட்டின் புதிய தலைவராக ஜான் தாம்சன் தேர்வு செய்யப்பட்டார். இதுவரை தலைவர் பதவி வகித்த பில்கேட்ஸ் இனிமேல் தொழில்நுட்ப ஆலோசகராகச் செயல்படுவார் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. வரலாறு வணிகச் சின்னத்தின் கூர்ப்பு இசுகாட் பேக்கர் வடிவமைத்த மைக்ரோசாப்ட் "பாக்-மான்" சின்னம், 1987 முதல் 2012 வரை பயன்படுத்தப்பட்டது.[9][10] 2006–2011இல் மைக்ரோசாப்டின் சின்னம்[10] 2011–2012இல் வணிகச்சின்னம்.[11] 2012- நடப்பு:ஆகத்து 23, 2012இல் அறிமுகப்படுத்திய சின்னம் "எண்ணிம இயக்க உலகையும்" மைக்ரோசாப்டின் "பல்வேறு பொருட்களின் பட்டியலையும்" பிரதிபலிக்கிறது.[12] மேற்சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்பு:மைக்ரோசாப்ட் பகுப்பு:அமெரிக்க வணிக நிறுவனங்கள் பகுப்பு:நாசுடாக்கில் பட்டியிலடப்பட்டுள்ள நிறுவனங்கள் பகுப்பு:கணினி வன்பொருள் நிறுவனங்கள்
மைக்ரோசாப்ட் நிறுவனம் எப்போது நிறுவப்பட்டது?
ஏப்ரல் 4, 1975
428
tamil
28be79c22
கர்நாடகா (Karnāṭaka) என்பது இந்தியாவின் தென் பகுதியில் உள்ள ஒரு மாநிலமாகும். மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் இம் மாநிலம் நவம்பர் 1,1956 அன்று உருவாக்கப்பட்டது. மைசூர் மாநிலம் என்று அழைக்கப்பட்டு வந்த இம் மாநிலம் 1973 -இல் கர்நாடகா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கருநாடக மாநிலமானது மேற்கில் அரபிப் பெருங்கடலையும் வட மேற்கில் கோவாவையும், வடக்கில் மகாராஷ்டிராவையும், கிழக்கில் ஆந்திரப் பிரதேசத்தையும், தென் கிழக்கில் தமிழ்நாட்டையும், தென் மேற்கில் கேரளாவையும், எல்லைகளாகக் கொண்டுள்ளது. இம் மாநிலம் 74,122 சதுர மைல்கள், அதாவது 191,976 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் 5.83% ஆகும். 30 மாவட்டங்களைக் கொண்டுள்ள இம் மாநிலம் பரப்பளவில் இந்தியாவின் எட்டாவது மிகப் பெரிய மாநிலமாகத் திகழ்வதுடன் மக்கள்தொகையில் இந்திய அளவில் ஒன்பதாவது இடத்தையும் கொண்டுள்ளது. கன்னடம் ஆட்சி மொழியாகவும் பெருமளவு பேசப்படும் மொழியாகவும் உள்ளது. கருநாடகம் என்ற பெயருக்கு பல வித சொல்லிலக்கணம் பரிந்துரைக்கப்பட்டாலும், 'கரு' மற்றும் 'நாடு' என்ற கன்னட வார்த்தைகளில் இருந்துதான் அது உருவாக்கப்பட்டுள்ளது என்பது பொதுவான கருத்து. இந்த வார்த்தைகளின் பொருள் மேட்டு நிலம் என்பதாகும். ஆங்கிலேயர்கள் இம் மாநிலத்தை கர்நாடிக் என்றும் சில சமயங்களில் கர்நாடக் என்றும் குறிப்பிட்டனர். பழங் கற்கால பாரம்பரியத்தைக் கொண்டுள்ள கருநாடகம், புராதன மற்றும் மத்திய கால இந்தியாவின் சில வலிமை வாய்ந்த பேரரசுகளின் தாயகமாகவும் திகழ்ந்துள்ளது. இப் பேரரசுகளால் ஆதரிக்கப்பட்ட தத்துவ ஞானிகளும், இசை வல்லுநர்களும் சமய, பொருளாதார மற்றும் இலக்கிய இயக்கங்களைத் தொடங்கினர். அவை இன்றுவரை நிலைத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவிலேயே கன்னட மொழி எழுத்தாளர்கள்தான் அதிக அளவில் ஞானபீட விருது பெற்றுள்ளார்கள். மாநிலத் தலைநகராக விளங்கும் பெங்களூரு, இந்தியா சந்தித்து வரும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் முன்னோடியாக உள்ளது. வரலாறு கருநாடக வரலாற்றை அப்பகுதியில் கிடைத்துள்ள கைக் கோடரிகள் மற்றும் இதர கண்டுபிடிப்புகள் மூலம் பழங்கற்கால கைக் கோடரி கலாச்சாரத்துடன் அதற்கு இருந்துள்ள தொடர்பை அறிந்துகொள்ள முடிகிறது. புதிய கற்காலக் கலாச்சாரத்தின் சான்றுகளும் இம்மாநிலத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.[8][9] பண்டைய சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தின் எச்சமான ஹரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் கருநாடகத் தங்க சுரங்களைச் சார்ந்ததாக அறியப்படுவதன் மூலம் கருநாடக பகுதி பண்டைய காலம் தொட்டே வாணிபம், கலாச்சாரம் ஆகியவற்றில் முன்னேறி இருப்பது தெரிய வருகிறது. பொது வழக்க சகாப்தத்திற்கு 3 நூற்றாண்டுகளுக்கு முன்னதாக, கருநாடகத்தின் பெரும் பகுதி, பேரரசர் அசோகரின் மௌரிய ஆட்சிக்கு உட்படு முன், நந்தா பேரரசின் கீழ் இருந்தது. நான்கு நூற்றாண்டுகள் தொடர்ந்த சதவாகன ஆட்சி பெருமளவு கருநாடகத்தை அவர்களின் அதிகாரத்தின் கீழ் கொள்ள உதவி புரிந்தது. சாதவாகனர்களின் ஆட்சி இறக்கம் கருநாடகத்தை அடிச்சார்ந்த, முதல் அரசநாடுகளான கடம்பர்கள் மற்றும் மேலைக் கங்க வழியினரும் வளர வழி வகுத்தது. அதுவே, அப்பகுதி பக்கச் சார்பற்ற அரசியல் உருபொருளாக புகுந்து அடையாளம் காணவும் வழி வகுத்தது. மௌரிய சர்மாவால் தொடங்கப்பட்ட கடம்ப வம்சம், பனவாசியை தலைநகராக கொண்டது.[10][11] அது போல், மேலைக் கங்கர் மரபினர், தாலகாட்டை தலைநகராக கொண்டு அமைக்கப் பட்டது.[12][13] கடம்பர், சாளுக்கியர் கடம்பர் வம்சத்தைச் சார்ந்த முதலாவது கன்னடம் மொழியை நிர்வாக மொழியாகப் பயன்படுத்தினர் என்பது கால்மிதி கல்வெட்டு மூலமாகவும் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த செப்பு நாணயங்கள் மூலமாகவும் அறியலாம் [14][15] இவ்வம்சத்தைத் தொடர்ந்து சாளுக்கியர் வலிமை பெற்று ஆட்சியைக் கைப்பற்றினர். தக்காணத்தை முழுவதுமாக ஆட்சிக்குள் கொண்டு வந்த சாளுக்கியர் கருநாடகத்தை முழுவதும் இணைத்த பெருமை பெற்றவர்கள்.[16][17][18][19][20][21] சாளுக்கியர் கட்டிடக் கலை, கன்னட இலக்கியம், இசை ஆகியவற்றை பெரிதும் வளர்த்தனர்.[22][23] விசயநகரப் பேரரசு, இசுலாமியர் ஆட்சி 1565ஆம் ஆண்டு, கருநாடகம் மட்டுமல்லாது தென் இந்தியா முழுவதும் முக்கிய அரசியல் மாற்றத்தைச் சந்தித்தது. பல நூற்றாண்டுகளாக வலிமை பெற்று திகழ்ந்த விசயநகரப் பேரரசு இசுலாமிய சுல்தானகத்துடன் தோல்வியைத் தழுவியது. பின் பிஜபூர் சுல்தானகத்திடம் ஆட்சி சிறிது காலம் இருந்து, பின் மொகலாயர்களிடம் 17ஆம் நூற்றாண்டு இடம் மாறியது சுல்தானகத்தின் ஆட்சிகளின் போது உருது மற்றும் பாரசீக இலக்கியங்களும் வளர்க்கப்பட்டன. இதைத் தொடர்ந்து வடக்கு கருநாடகம் ஐதராபாத் நிசாமாலும் தெற்கு கர்நாடகம் மைசூர் உடையார்களாளும், ஆளப்பட்டது. மைசூர் அரசரான இரண்டாம் கிருட்டிணராச உடையார் மரணத்தைத் தொடர்ந்து, தளபதியான ஹைதர் அலி ஆட்சியைக் கைப்பற்றினார். ஆங்கிலேயருடன் பல போர்களில் வெற்றி கொண்ட அவரைத் தொடர்ந்து அவரது மகன் திப்பு சுல்தான் ஆட்சிப் பொறுப்பேற்று ஆங்கிலேயரை எதிர்த்தார். ஆங்கிலேயருடனான நான்காவது போரிற் திப்பு சுல்தான் மரணம் அடைந்ததன் மூலம் மைசூர் அரசு ஆங்கிலேய அரசுடன் 1799 இல் ஒருங்கிணைக்கப்பட்டது. புவியமைப்பு கருநாடகத்தின் மேற்கில் அரபிக் கடலும், வடமேற்கில் கோவாவும், வடக்கில் மகாராஷ்டிரமும், கிழக்கில் ஆந்திரப் பிரதேசமும், தென்கிழக்கில் தமிழகமும், தென்மேற்கில் கேரளமும் அமைந்துள்ளன. கருநாடகத்தில் பெரும்பாலும் மலைப் பகுதிகளே காணப்படுகிறது. கருநாடக மாநிலத்தின் தென் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. காவிரி ஆறு கருநாடகத்தில் தொடங்குகிறது. இம் மாநிலம் 3 முக்கிய நிலப்பகுதிகளைக் கொண்டுள்ளது கரவாளி கடற்கரை நிலப்பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான மலைப்பாங்கான மலைநாடு நிலப்பகுதி மற்றும் தக்காண பீடபூமியின் பாயலுசீமா சமவெளி. மாநிலத்தின் பெரும்பகுதி பாயலுசீமா சமவெளியின் வரண்ட நிலப்பகுதியாகும். பெயர் [24]. கருநாடகத்தில் பாயும் ஆறுகளாவன: காவேரி, துங்கபத்ரா, கிருஷ்ணா ஆறு மற்றும் சரவதி . கருநாடகத்தில் நான்கு பருவகாலங்கள் உணரப்படுகின்றன. குளிர்காலம் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களிலும், கோடைக்காலம் மார்ச் மற்றும் மே மாதங்களிலும், பருவக்காற்று காலம் ஜுன் முதல் செப்டம்பர் வரையிலும்,பருவக்காற்று கடைக்காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் உணரப்படுகின்றது.. மாவட்டங்கள் 1,91,791 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கர்நாடக மாநிலம் 30 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 30 மாவட்டங்கள், பெங்களூர், பெல்காம், குல்பர்கா, மைசூர் ஆகிய நான்கு ஆட்சிப்பிரிவுகளுள் அடங்கும். பெங்களூர் ஆட்சிப்பிரிவு பெங்களூர் மாவட்டம் பெங்களூரு ஊரக மாவட்டம் சித்ரதுர்கா மாவட்டம் தாவண்கரே மாவட்டம் கோலார் மாவட்டம் ஷிமோகா மாவட்டம் தும்கூர் மாவட்டம் பெல்காம் ஆட்சிப்பிரிவு பாகல்கோட் மாவட்டம் பெல்காம் மாவட்டம் பிஜப்பூர் மாவட்டம் தார்வாட் மாவட்டம் கதக் மாவட்டம் ஹவேரி மாவட்டம் உத்தர கன்னடம் மாவட்டம் குல்பர்கா ஆட்சிப்பிரிவு பெல்லாரி மாவட்டம் பீதர் மாவட்டம் கொப்பல் மாவட்டம் ராய்ச்சூர் மாவட்டம் மைசூர் ஆட்சிப்பிரிவு சிக்மகளூர் மாவட்டம் சாமராசநகர் மாவட்டம் தெற்கு கன்னடம் மாவட்டம் ஹாசன் மாவட்டம் குடகு மாவட்டம் மாண்டியா மாவட்டம் மைசூர் மாவட்டம் உடுப்பி மாவட்டம் மக்கள் தொகையியல் 2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கருநாடகத்தின் மொத்த மக்கள் தொகை 61,095,297 ஆக உள்ளது. அதில் 30,966,657 ஆண்களும்; 30,128,640 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 973 பெண்கள் வீதம் உள்ளனர். 2001 ஆண்டின் மக்கள் தொகையுடன் ஒப்புநோக்கும்போது மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.60% உயர்ந்துள்ளது. மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 319 நபர்கள் வீதம் உள்ளனர். நகரப்புறங்களில் 38.67% மக்களும், மக்கள் கிராமப்புறங்களிலும் 61.33% வாழ்கின்றனர். சராசரி கல்வியறிவு 75.36% ஆகவும், ஆண்களின் கல்வியறிவு 82.47 % ஆகவும், பெண்களின் கல்வியறிவு 68.08% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,161,033 ஆக உள்ளது.[25] சமயம் ஆறு கோடியே பதினொன்று இலட்சம் மக்கள்தொகை கொண்ட கருநாடக மாநிலத்தில் 51,317,472 (84.00 %) மக்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுபவராகவும், 7,893,065 (12.92%) இசுலாம் சமயத்தைப் பின்பற்றுபவராகவும், 1,142,647 (1.87%) கிறித்தவ சமயத்தைப் பின்பற்றுபவராகவும், 440,280 (0.72%) சமண சமயத்தைப் பின்பற்றுபவராகவும், 95,710 (0.16%) பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவராகவும், 28,773 (0.05%) சீக்கியம்|சீக்கிய சமயத்தைப்]] பின்பற்றுபவராகவும் உள்ளனர். பிற சமயத்தை பின்பற்றுவர்கள் எண்ணிக்கை 11,263 (0.02 %) ஆக உள்ளது. சமயம் குறிப்பிடாதவர்கள் எண்ணிக்கை 166,087 (0.27%) ஆக உள்ளது. மொழிகள் கர்நாடகா மாநிலத்தில் கன்னட மொழி அலுவல் மொழியாகவும் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழியாகவும் உள்ளது. சுமார் 64.75% மக்கள் இம்மொழியை பேசுகின்றனர். இது தவிர, தமிழ், மராத்தி, கொங்கனி, மலையாளம், துளு, பஞ்சாபி, உருது மற்றும் இந்தி ஆகிய மொழிகளும் பேசப்படுகின்றன. பண்பாடு பொருளாதாரம் கடந்த ஆண்டு கருநாடகத்தின் உள்மாநில உற்பத்தி சுமார் ரூ. 2152.82 பில்லியன் ($ 51.25 billion) என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் வேகமாக பொருளாதார வளர்ச்சி பெறும் மாநிலங்களில் ஒன்றாக கருநாடகம் கருதப்படுகிறது.[26] இம்மாநிலத்தின் 2007–2008 ஆண்டுகளுக்கான உள்மாநில உற்பத்தி வளர்ச்சி விகிதம் சுமார் 7% .[27] 2004-05 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கருநாடக மாநிலத்தின் பங்களிப்பு சுமார் 5.2% சதவிதமாக இருந்தது [28] கருநாடகம் கடந்த பத்தாண்டுகளில் மிகப்பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது. பத்தாண்டுகளில் உள்மாநில உற்பத்தி 56.2% சதவிகிதமும், தனி நபர் உள்மாநில உற்பத்தி 43.9% சதவிகிதமும் வளர்ந்துள்ளது.[29] 2006–2007 ஆம் ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ. 78.097 பில்லியன் ($ 1.7255 பில்லியன்) கருநாடகம் அன்னிய நேரடி முதலிடாக பெற்று இந்திய மாநிலங்களில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.[30] 2004ஆம் ஆண்டின் முடிவில், கருநாடகத்தில் வேலையில்லாதவர் விகிதம் 4.94% . இது தேசிய சராசரியான 5.99% விட குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.[31] கருநாடகத்தின் தலைநகரமான பெங்களூர் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரமாக கருதப்படுகிறது. கருநாடகத்தில் தங்கச் சுரங்கங்கள் அமைந்துள்ளன. கருநாடகம் மிகப்பெரிய பொதுத் துறை தொழிலகங்களின் மையமாக விளங்குகிறது. இந்துஸ்தான் வானூர்தியல் நிறுவனம் (Hindustan Aeronautics Limited) , தேசிய விண்வெளி ஆய்வகங்கள்( National Aerospace Laboratories), பாரத மிகுமின் தொழிலகம் (Bharat Heavy Electricals Limited) , இந்திய தொலைப்பேசி தொழிலகங்கள்(Indian Telephone Industries), இந்துஸ்தான் மெஷின் டுல்ஸ்(Hindustan Machine Tool), இந்திய மற்றும் பன்னாட்டு கணிப்பொறி நிறுவனங்கள் பெங்களூரு நகரில் உள்ளன. இந்திய அறிவியல் கழகம் மற்றும் இஸ்ரோ போன்ற அறிவியல் மையங்கள் பெங்களூருவில் அமைந்துள்ளது. சுற்றுலா மற்றும் வழிப்பாட்டுத் தலங்கள் கர்நாடக மாநில முக்கிய சுற்றுலா தலங்களும் கோயில்களும்; மைசூர் அரண்மனை, ஜோக் அருவி, சிவசமுத்திரம் அருவி, ஹம்பி, ஹளேபீடு, பாதமி குகைக் கோயில்கள், பந்திப்பூர் தேசியப் பூங்கா, பன்னேருகட்டா தேசியப் பூங்கா, அன்ஷி தேசியப் பூங்கா, சரவணபெலகுளா, அமிர்தேஸ்வரர் கோயில், உடுப்பி கிருஷ்ணர் கோயில், மேல்கோட்டை செல்வநாராயணர் கோயில், முருகன் கோயில், கேசவர் கோவில், சென்னகேசவர் கோயில், சென்னகேசவர் கோயில், பேளூர், மூகாம்பிகை கோயில், விருபாட்சர் கோயில், ஹோய்சாலேஸ்வரர் கோவில், திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில், முருதீசுவரா கோயில், சாமுண்டீசுவரி கோயில் மற்றும் தர்மஸ்தால கோயில் ஆகும். இவற்றையும் பாக்க மேற்கோள்கள் வெளி இணைப்பு பகுப்பு:கர்நாடகம் பகுப்பு:இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்
கர்நாடக மாநிலத்தின் தலைநகரம் எது?
பெங்களூரு
1,613
tamil
ac51a153d
பனை (Palmyra Palm), புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு (borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன. பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 – 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும். பனை தமிழ் நாட்டின் மாநில மரமாகும் பெயரிடல் பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு. தமிழில் உள்ள மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் புல், மரம் என்பவற்றுக்கு இடையேயான வேறுபாட்டைப் பின்வருமாறு வரையறை செய்கிறது. புறக் காழனவே புல்லெனப் படுமே (பாடல் 630) அகக் காழனவே மரமெனப் படுமே (பாடல் 631) பலவகையான பயன்களை நெடுங்காலத்துக்குத் தருவதால் பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர். பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவை 1. ஆண் பனை, 2. பெண் பனை, 3. கூந்தப்பனை, 4. தாளிப்பனை, 5. குமுதிப்பனை, 6.சாற்றுப்பனை, 7. ஈச்சம்பனை, 8. ஈழப்பனை, 9. சீமைப்பனை, 10. ஆதம்பனை, 11. திப்பிலிப்பனை, 12. உடலற்பனை, 13. கிச்சிலிப்பனை, 14. குடைப்பனை, 15. இளம்பனை 16. கூறைப்பனை, 17. இடுக்குப்பனை, 18. தாதம்பனை, 19. காந்தம்பனை, 20. பாக்குப்பனை, 21. ஈரம்பனை, 22. சீனப்பனை, 23. குண்டுப்பனை, 24. அலாம்பனை, 25. கொண்டைப்பனை, 26. ஏரிலைப்பனை, 27. ஏசறுப்பனை, 28. காட்டுப்பனை, 29. கதலிப்பனை, 30. வலியப்பனை, 31. வாதப்பனை, 32. அலகுப்பனை, 33. நிலப்பனை, 34. சனம்பனை சிற்றினங்கள் போரசசு (பனை) என்னும் பேரினத்தில் வரும் சிற்றினங்கள் போராசசு அத்தியோபம் - ஆப்பிரிக்கப் பனை மரம் (Borassus aethiopum) போ. அகேசி - மேற்கு ஆப்பிரிக்கப் பனை (Borassus akeassii – Ake Assi`s Palmyra Palm (West Africa) ) போ. ஃப்ளாபெல்லிபர் - ஆசியப் பனை (Borassus flabellifer – Asian Palmyra Palm (southern Asia and southeast Asia) ) போ. என்னியனசு - நியூ கினி பனை (Borassus heineanus – New Guinea Palmyra Palm (New Guinea) ) போ. மடகாசுகரியன்சிசு - மடகாசுகர் பனை (Borassus madagascariensis – Madagascar Palmyra Palm (Madagascar) ) போ. சாம்பிரானென்சிசு - சாம்பிரானோ பனை (மடகாசுகர்)(Borassus sambiranensis – Sambirano Palmyra Palm (Madagascar) ) காணப்படும் இடங்கள் இது ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டது எனக் கூறப்படுகிறது. ஆப்பிரிக்காவிலிருந்து மனித இனம் எங்கெங்கு இடம்பெயர்ந்ததோ அவ்விடங்களில் எல்லாம் ஆதி மனிதர்கள் பனை விதைகளை தங்களுடன் எடுத்துச் சென்றனர் எனச் சொல்லப்படுகிறது. ஏனென்றால், பனை மரங்கள் மக்கள் வாழும் பகுதிகளின் அருகிலேயே பெரும்பாலும் இருக்கிறது. இது பெரும்பாலும் அடர் காடுகளில் காண இயலாததற்கு காரணமாக இது கூறப்படுகிறது.[1] இது ஆசிய நாடுகளில்தான் பனைகள் அதிகம் காணப்படுகின்றன. தற்காலத்தில் ஆசியாவில் இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனீசியா, மியன்மார், தாய்லாந்து, வியட்நாம், சீனா போன்ற நாடுகளிலும், கொங்கோ போன்ற மேற்கு ஆபிரிக்க நாடுகளிலும் காணப்படுகின்றன. கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமம் (Kadhi and Village Industry Commission) எடுத்த கணக்கெடுக்கின்படி 10.2 கோடி பனை மரங்கள் இந்தியாவில் உள்ளன. தமிழ் நாட்டில் மட்டும் 5 கோடி பனை மரங்கள் உள்ளன.[2] இவற்றுள் 50 விழுக்காடு மரங்கள் நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் அடர்த்தியாக உள்ளன. சேலம்,நாமக்கல்,சென்னை, செங்கற்பட்டு, சிவகங்கை மாவட்டங்களில் அதிகமான அளவு நிறைந்துள்ளன. பிற மாவட்டங்களில் உள்ள மரங்களின் எண்ணிக்கை 30 லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளன. பனையின் பயன்கள் பனைமரம் உணவு மற்றும் உணவிலிப் பொருள்களை நல்குகிறது. உணவுப் பொருள்களில் பதநீர் முதன்மையானது. இதுவே கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் எனப் பல்வேறு உணவுப் பொருள்களாக வடிவம் பெறுகிறது. பனந்தும்பு, தூரிகைகள், கழிகள், பனையோலைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், மரம், மரப் பொருள்கள் ஆகியன பனையிலிருந்து பெறப்படும் உணவிலிப் பொருள்களாகும். கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமக் கணக்கின்படி ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வளவாய்ப்புடையது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், செர்மன், இத்தாலி, பெல்சியம், பிரான்சு, ஆசுதிரேலியா, சப்பான் போன்ற நாடுகளுக்கு பனைப் பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. உள் நாட்டிலே உணவிலிப் பனைப் பொருள்கள் பெரிதும் கோவா, கன்னியாகுமரி, பெல்லாரி ஆகிய இடங்களுக்கு விற்பனைக்கென அனுப்பி வைக்கப்படுகின்றன. இவற்றுள் கோவா முன்னணியில் இருக்கிறது. விவசாயம், கைத்தறிக்கு அடுத்தபடியாக பேரளவு வேலை வாய்ப்பினைக்கொண்டதாக பனைத்தொழில் விளங்குகிறது. 1985 – 86ஆம் ஆண்டில் தேசிய அளவில் 6.94 லட்சம் வேலை வாய்ப்பினையும் தமிழ் நாட்டு அளவில் 5.87 லட்சம் வேலை வாய்ப்பினையும் பனைத் தொழில் வழங்கி இருக்கிறது. இதில் பனைத் தொழிலாளர்கள் வெல்லம் காய்ச்சும் பெண்கள், தும்புக் கைவினைஞர்கள், வியாபாரிகள் ஆகியோர் அடங்குவர். இளம் மரங்கள் நீங்கலாக பனையேறத் தகுந்த எல்லா மரங்களையும் பயன்படுத்தினால் தமிழகத்தில் மட்டும் மேலும் 10 லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பினை இத்தொழில் வழங்கும். பனையின் இன்னல்கள் பனங்கருக்கு பனங்கருக்குகள், பனைமரமேறிகளுக்கு மிகுந்த ஊறு விளைவிப்பவையாகும். கூர்மையான அந்த முட்கள் போன்ற அமைவுகள், அவ்வேழை பனைமரமேறிகளுக்கு இன்னல் தருகிறது. பனங்கை பனங்கை அல்லது பனை வரிச்சல் என்பது பனை மரத்தை நீளவாக்கில் அறுத்தால் வரும் நீளமான மரக்கட்டை ஆகும். இது கட்டிடக் கூரைகளில் பயன்படுத்தப்படுகிறது. பனையேற்றம் பனையேறுதல் என்பது பருவகாலத் தொழில். ஏப்ரல் முதல் ஆகத்து மாதம் வரை இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களிலும் ஆகத்து முதல் மார்ச்சு மாதம் வரை கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை சேலம், தருமபுரி மாவட்டங்களிலும் பனையேற்றம் நிகழும். இது ஒரு பருவ காலத் தொழிலாக இருப்பதால் இம்மாவட்டங்களில் வேலை தேடி இடம்பெயருதல் பெருமளவு நிகழ்கிறது. பனையேற்றம் என்பது மரமேறுதல், பூ பக்குவம் அறிதல், சாறு சேகரித்தல் எனப் பல்வேறு திறன்களை உள்ளடக்கிய தொழில் ஆகும். மரமேற நெஞ்சப் பட்டை, இடை வார், தளை ஆகியன பயன்படுத்தப்படுகின்றன. இத்தொழில் புரியும்போது மரத்தின் சொரசொரப்பான பகுதியில் உடல் உராயும்பொழுது சிராய்ப்பு ஏற்பட்டு உடல் பொலிவிழக்கிறது. மரம் ஏறுதலின் இடரையும் துன்பத்தையும் களைய இயந்திரச் சாதனங்கள் எதுவுமில்லை. ஒரு மரம் சராசரி 36 முதல் 42 மீட்டர் வரை உயரமுடையது. எனவே ஒரு நாளைக்கு இரு முறை 30 முதல் 40 மரங்கள் ஏறுதல் என்பது பெரும் இடர் மிகுந்தது ஆகும். எனவே மிகுந்த அனுபவசாலிகளே பனைமரமேறுவர். தளைநாரைக் காலில் கட்டி பனைமரம் ஏறுவர். பனைத்தொழிலாளர் நிலை 80 விழுக்காட்டிற்கும் அதிகமான பனைத் தொழிலாளர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ்தான் வாழ்கிறார்கள். ஒரு பனைத் தொழிலாளர் நாள்தோறும் 10 முதல் 15 மணி நேரம் வரை மேற்கொள்ளும் வேலைக்கு 15 ரூபாய்கள் வரை சம்பாதிக்கிறார். எனவே ஒரு பனைத் தொழிலாளரின் குடும்ப வருமானமானது அவர் எத்தனை பனை மரங்கள் ஏறுகிறார் என்பதனையும் அவர் குடும்பத்தில் எத்தனை உழைப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதனையும் பொருத்தே அமைகிறது. பெரும்பான்மையான பனைத் தொழிலாளர்களுக்கு சொந்த மரங்களில்லை. தமிழகத்தில் உள்ள பனையேறும் குடும்பங்களில் 67.85% குடும்பங்களுக்கு சொந்த மரங்கள் கிடையாது என ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் நீங்கலாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நிலக்கிழார்கள் பனை மரங்களை குத்தகைக்கு எடுத்து பதநீர் இறக்கக் குறைந்த கூலிக்கு ஆள்களை நியமித்துக்கொள்கிறார்கள். பனஞ்சாறு உடலுக்கு நலம் தரும் நீரகம். இதில் கொழுப்பு, புரதம், கனிமங்கள், உயிர்சத்துகள், இரும்பு, எரியம், சுண்ணாம்பு, கரிநீரகி ஆகியன உள்ளன. இது சத்துள்ளது. எளிதில் செரிக்கக் கூடியது. இது எலும்புருக்கி நோயைக் குணப்படுத்தும் தன்மையுடையது என்றும் ஈரல் நோய்க்கு ஏற்ற மருந்தென்றும் கருதப்படுகிறது. 25% குறையாத பதனீர் நேரடியாகவே நுகரப்படுகிறது. மீதம் உள்ளவை வெல்லம் தயாரிக்கப் பயன்படுகின்றன. உற்பத்தி செய்யப்பட்ட வெல்லத்தின் பெரும்பகுதி உள்ளூரிலேயே விற்கப்படுகிறது. அவசரப் பணத்தேவை, சந்தைவிலையை அறியாமை, சந்தைக்குக் கொண்டு செல்ல நேரமின்மை ஆகியவற்றின் காரணமாக இடைத்தரகர்களின் சுரண்டலுக்கு ஆளாகின்றனர். பனைத்தொழில் உணவிலிப் பனைப்பொருள்களை உற்பத்தி செய்தல், சந்தையிடல் ஆகியவற்றிலும் கூடச் சிக்கல்கள் உள்ளன. போதிய முதலீடின்மை, தொழிலாளர் எண்ணிக்கைக் குறைவு ஆகியன பெரும் சிக்கல்கள் எனக் கூறப்படுகின்றன. மிகக் குறைந்த வருமானத்தையே நல்கும்நிலையில் பனைத்தொழில் இருப்பதால் தொழிலாளர்களை பெருமளவில் ஈர்க்க முடியாமல் இத்தொழில் மெல்ல மெல்ல நலிந்து கொண்டிருக்கிறது. எவ்வாறாயினும் பனைத்தொழில் பெருமளவு வேலைவாய்ப்பும்; உணவு மற்றும் உணவிலிப் பனைப் பொருள்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தேவை இருத்தல் வெள்ளிடை மலை. பனங்கற்கண்டு போன்ற மதிப்புடை உணவுப் பொருள்களை உற்பத்தி செய்தல் மூலம் முன்னைய சிக்கல்களை வினைவலிமையோடு எதிர்கொள்ள முடியும் என்பதை மார்த்தாண்டத்திலுள்ள பனைத் தொழிலாளர் மேம்பாட்டுச் சங்கம் கண்டது. பதநீரைக் கொண்டு வெல்லம் காய்ச்சுவதைக் காட்டிலும் பனங்கற்கண்டு தயாரித்தல் இலாபமுடையது என்று கண்டறியப்பட்டது. இவ்வுற்பத்தியால் பனைத்தொழிலாளர் வாழ்வும் தொழிற்றுறையின் வளர்ச்சியும் மேம்படுவது ஐயத்திற்கு இடமின்றி நிரூபனமானது. உணவிலிப் பனைப்பொருள்களை உற்பத்தி செய்யும் அலகுகளை தோற்றுவிக்கும் பணியில் கூட்டுறவுத்துறையும் தன்னார்வத் தொண்டகங்களும் தனியார்களும் ஈடுபட்டுள்ளனர். வடிவமைத்தல் பயிற்சி, உற்பத்திப் பொருள்களை பரவலாக்கல், சரியான முதலீடு, சந்தையிடல் வசதிகள் ஆகியன உணவிலிப் பொருள்களின் உற்பத்தியையும் சந்தையிடலையும் அதிகப்படுத்தியுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள பனைத் தொழிலாளர்களுக்கு பனைத் தொழில் கொண்டுள்ள வளவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு தந்து அவர்கள் வாழ்க்கையை சீர்படுத்துவதில் பனைத் தொழிலாளர் மேம்பாட்டுச் சங்கம் முன்னோடியாகத் திகழ்கிறது. காட்சியகம் ஆசிய பனைக்கூடு பனைமரத் தண்டு மேற்கு வங்காளம் ஆசியப்பனை, கொல்கத்தா. ஆப்பிரிக்கப் பனை ஆப்பிரிக்கப் பனம்பழம் ஆப்பிரிக்கப் பனை விதை பனங்கள், ஆந்திரா. கிளைப்பனை, வல்லிபுரம், இலங்கை பனங்கிழங்கு மேற்கோள்கள் இவற்றையும் பார்க்கவும் பனையிலிருந்து பெறப்படும் பயன்கள் ஆசியப் பனை வெளி இணைப்புகள் பகுப்பு:பனை
பனை மரத்தின் சராசரி உயரம் என்ன?
42
6,212
tamil
f87923d86
யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (~ 70 ஆண்டுகள்). மனிதர்கள் தவிர்ந்த மற்றைய விலங்குகளில் இதுவே அதிக நாட்கள் வாழும் தரைவாழ் விலங்கு ஆகும். யானைகள் மிகவும் வலிமையானவை. வேட்டை விலங்குகளும் காட்டுயிர்களின் உணவுப் படிநிலையில் உயர்நிலையிலுள்ளவைகளுமான சிங்கம் (அரிமா), புலி முதலியனவும் நெருங்க முடியாத வலிமை கொண்டவை. சிங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து, தனியாக வர நேரிடும் களைத்த அல்லது இளைத்த யானையைக் கொல்லும். ஆனால், இவ்வகை நிகழ்வுகள் மிகமிகக் குறைவே. யானைகள் குடும்பமாக வாழும். மேலும், இவை அதிக ஞாபக சக்தி கொண்டவை. யானைகளில் மூன்று சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன. அவை, ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், ஆசிய யானைகள் ஆகும். இவைகளுக்கிடையே சிறப்பான வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக, எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள்வரை உயிர்வாழ்கின்றன. ஆண் யானைக்குக் களிறு என்று பெயர். பெண் யானைக்குப் பிடி என்று பெயர். யானையின் குட்டியைக் கன்று என்றோ, குட்டியானை என்றோ சொல்வர். யானை உரக்க எழுப்பும் ஒலியைப் பிளிறுதல் என்பர். யானையினங்கள் ஆப்பிரிக்க யானைகள் ஆசிய யானைகளைவிட உருவத்தில் பெரியவை. பெரிய காது மடல்களைக் கொண்டுள்ளன. ஆப்பிரிக்க யானைகளில் ஆண், பெண் இரண்டும், தந்தங்களைக் கொண்டுள்ளன. ஆனால், ஆசியப் பெண் யானைகளில் தந்தம் அரிதாகவே காணப்படுகிறது. ஆப்பிரிக்க யானைகளின் முதுகுப்புறம், தலைக்கு அடுத்துச் சற்று உள்நோக்கி வளைந்தும், புடைத்த நெற்றி மேடுகள் இல்லாமல் சமமாகவும் இருக்கும். இவற்றின் துதிக்கையின் நுனியில் இரண்டு இதழ்கள் இருக்கும். ஆனால், முன்னங்கால்களில் நான்கு அல்லது ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் மூன்று நகங்களும் இருக்கும். ஆசிய யானைகளின் முதுகு சற்று உயர்ந்து மேடாக இருக்கும். நெற்றியில் இரு மேடுகளும், காது மடல்கள் சிறியனவாகவும் இருக்கும். துதிக்கை நுனியில் ஒரே ஓர் இதழும் இருக்கும் (மேல் புறம்). முன்னங்கால்களில் ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் நான்கு நகங்களும் இருக்கும். உணவும் வாழிடமும் யானைகள் இலையுண்ணிகள் அல்லது தாவர உண்ணிகள் ஆகும். இவை மூங்கில், கரும்பு போன்றவற்றை விரும்பி உண்கின்றன. இவை ஒரு நாளைக்கு 16 மணிநேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. மேலும், இவற்றின் செரிமானத் திறன் மிகவும் மந்தமானது. எனவே, இவை உண்பதில் 40 விழுக்காடே செரிமானம் ஆகிறது. எனவே, இவை நிறைய உணவு உட்கொள்ள நேரிடுகிறது. நன்கு வளர்ந்த யானைகள் நாள் ஒன்றுக்குச் சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன. உடலமைப்பு ஆண் யானைகள் பொதுவாக 3 மீட்டர் உயரமும் 6000 கிலோகிராம் எடையும் கொண்டவை. யானையின் தோல் மிகவும் தடிப்பானது. சுமார் 3 செ.மீ தடிப்பு இருக்கும். எனினும், மெத்தெனவே இருக்கும். இதனால், கொசு முதலியனவும் கடிக்கும். யானை வலுவான நான்கு கால்களைக் கொண்டிருக்கிறது. யானை பருமனான உடலைக் கொண்டிருந்தாலும் மலை மீதும், நெடுங்குத்தான இடங்களிலும் திறம்பட ஏறவும் இறங்கவும் வல்லது. "ஆனைக்கும் அடி சறுக்கும்" என்னும் பழமொழி, யானையின் நெடுங்குத்தான ஏற்ற இறக்கங்களில் அதன் நடைத்திறனைக் குறிப்பிட்டு எழுந்ததாகும். தும்பிக்கை யானையின் சிறப்பான உறுப்பு அதன் தும்பிக்கை. இது யானைகளில் மட்டுமே சிறப்பாகக் காணப்படுகின்றது. ஒருசில விலங்குகளிலே முன் மூக்குப் பகுதி சற்று நீண்டு இருந்தாலும் (நெடுமூக்குக் குரங்கு போல்), தும்பிக்கை போலும் நீண்ட உறுப்புடைய விலங்குகள் இல்லை. தும்பிக்கையானது மொத்தம் 40,000 தசைகளால் ஆனது. இது எல்லாப்புறங்களிலும் வளையக்கூடியது. தும்பிக்கையின் நுனியில் யானை மூச்சுவிடும் மூக்குத் துளைகளும், சின்னஞ்சிறிய, மிகவும் நுண்ணுணர்வு உள்ள விரல் நீட்சியும் இருக்கின்றன.[1] தும்பிக்கையால் சிறு குச்சி முதல் பெரிய மரம் வரை தூக்க முடியும். இவை பொதுவாக உணவை எடுப்பதற்கும் நீர் பருகுவதற்கும் உதவுகின்றன. பகை விலங்குகளின் தாக்குதலையும் யானை தும்பிக்கையால் எதிர்த்து முறியடிக்கிறது. கழுத்து குட்டையாக இருப்பதால் தும்பிக்கையின் முக்கியத்துவம் மிகப் பெரியது. தந்தம் யானைகள் இரண்டு தந்தங்களைக் கொண்டுள்ளன. இவைகளுக்கு யானைக் கோடு என்று பெயர். இந்த யானைக் கோடானது ஆசிய இந்திய யானைகளில் ஆண் யானைகளுக்கு (களிறுக்கு) மட்டுமே உண்டு பெண் யானைகளுக்குக் (பிடிக்குக்) கிடையா. ஆனால் ஆப்பிரிக்கக் காட்டு யானைகளில் ஆண் பெண் ஆகிய இருபால் யானைகளுக்கும் (களிறு, பிடி ஆகிய இரண்டிற்கும்) கோடு உண்டு. சுமத்ரா போர்னியோ பகுதிகளில் வாழும் யானை, இலங்கையின் யானைகளில் ஆண் பெண் (களிறு, பிடி) ஆகிய இருபால் விலங்குகளுக்கும் பெரும்பாலும் யானைக் கோடு கிடையா. யானைக் கோடானது யானையின் கடைவாய்ப் பற்களின் நீட்சியாகும். இதனால் இவைகளுக்கு யானைகளின் எயிறு அல்லது தந்தம் என்றும் பெயர் (எயிறு, தந்தம் என்றால் பல் என்று பொருள்). தந்தங்கள் 3 மீட்டர் (10 அடி) வரை வளரக்கூடியவை. மேலும் இவை 90 கிலோகிராம் எடை வரை இருக்கலாம். இத் தந்தங்கள் வியாபாரத்திற்காகவும் பயன்படுகின்றன. பல யானைகளைக்கொன்று எடுக்கப்பட்ட ஆறு டன் தந்தங்களை எதியோப்பியா நாடு 2015 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் தீயிட்டு அழித்தது.[2] தோல் யானையின் தோல் மிகவும் தடிப்பானது. உடலின் பெரும்பாலான பகுதிகளில் தடித்த தோல் காணப்படுகிறது. தோலின் தடிமன் ஏறத்தாழ இரண்டரை சென்டிமீட்டர் இருக்கும். எனினும் இதன் வாயைச் சுற்றியும் காதின் உட்பகுதியிலும் தோல் மெல்லியதாக உள்ளது. பொதுவாக ஆசிய யானைகளின் தோல் ஆப்பிரிக்க யானைகளை விட கூடுதலான முடியைக் கொண்டுள்ளது. யானைகள் பொதுவாக சேற்றையோ மண்ணையோ உடல் முழுதும் பூசிக் கொள்கின்றன. இது யானைச் சமூகத்தின் ஒரு முக்கியக் குணம் ஆகும். இது யானையின் தோலை சூரிய வெப்பத்தில் இருந்தும் கதிர் வீச்சில் இருந்தும் காத்துக் கொள்ள உதவுகிறது. யானையின் தோல் தடித்து இருப்பினும் இதன் உணர்திறன் அதிகம். இதனாலேயே யானைகள் சேற்றையோ அல்லது குளித்த பின் மண்ணை வாரித் தூற்றிக் கொள்கின்றன. கால்கள் யானையின் பெரிய உடலைத் தாங்குதற்கு ஏற்ப இவை வலிமையான கால்களைக் கொண்டுள்ளன. இவற்றின் கால்கள் செங்குத்தாக இருப்பதாலும் அகன்ற பாதங்கள் இருப்பதாலும் இவை நிற்பதற்கு தசையாற்றல் அதிகம் தேவையில்லை. எனவே இவற்றால் நீண்ட நேரம் இளைப்பாறாமல் நிற்க இயலும். ஆப்பிரிக்க யானைகள் நோயுற்றாலோ அல்லது காயம் பட்டாலோ தவிர பெரும்பாலும் அமர்வதில்லை. ஆனால் ஆசிய யானைகள் அடிக்கடி இளைப்பாறுகின்றன. யானை அகன்ற வட்டமான அடியைக் (பாதம்) பெற்றுள்ளது. ஆப்பிரிக்க யானைக்கு பின்னங்கால்களில் மூன்று உகிர்களும் (நகங்கள்) முன்னங்கால்களில் நான்கும் உள்ளன. ஆசிய யானைக்கு பின்னங்கால்களில் நான்கும் முன்னங்கால்களில் ஐந்துமாக உகிர்கள் உள்ளன. யானைகளால் நன்கு நீந்தவும் ஏறவும் முடியும். இவற்றால் குதிக்க இயலாது. காதுகள் யானைகள் நன்கு பெரிய அகன்ற மடல் போன்ற காதுகளைக் கொண்டுள்ளன. இவை யானையின் உடல் வெப்பநிலையைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. யானையின் காதுகள் இரத்த நாளங்கள் நிரம்பியனவாய் உள்ளன. வெப்பம் மிகுந்த இரத்தம் காதுகளில் பாயும் போது சுற்றுப்புறக் காற்று பட்டு குளிர்கிறது. பின் இது உடலுக்குள் சென்று வெப்பநிலையைக் குறைக்கிறது. இரத்தச் சுழற்சியின் காரணமாக இச்செயல் தொடர்ந்து நிகழ்ந்து வெப்பநிலை கட்டுக்குள் வைக்கப்படுகிறது. இதனாலேயே யானைகள் எப்போதும் காதுகளை அசைத்துக் கொண்டே இருப்பதைக் காணலாம். வளர்ந்த யானைக்காதுகளின் மேல் ஓரம் ஆசிய யானைக்கு வெளிப்புறம் மடிந்து இருக்கும், ஆப்பிரிக்க யானைக்கு உட்புறம் சுருண்டிருக்கும்.[3] அறிவாற்றல் தரையில் வாழும் விலங்குகளில் யானையின் மூளையே மிகவும் பெரியதாகும். இது ஐந்து கிலோ கிராமுக்கும் சற்று கூடிய எடையைக் கொண்டது. யானைகள் நினைவாற்றல் மிக்கன. விலங்குகளில் முதனிகளுக்கும் டால்பின்களுக்கும் அடுத்து யானைகளே அறிவாற்றல் நிரம்பியவையாகக் கருதப்படுகின்றன. மனிதர்களுக்கு அடுத்தபடியாக அறிவிற்சிறந்தவையாக யானைகள் கூறப்படுகின்றன. யானைகளின் மூளையும் அமைப்பிலும், நுட்பத்திலும் சிறந்தவை. கருவிகளைப் பயன்படுத்தவும் கற்றுக் கொள்கின்றன. பொதுவாக யானை இரக்கவுணர்ச்சி கொண்டது.[4] புலன் உணர்வு யானைகள் மிகச்சிறந்த கேட்கும் திறனையும் மோப்பத் திறனையும் பெற்றுள்ளன. யானையின் கண் சற்று கிட்டப்பார்வை கொண்டது. எனவே, ஒரு யானை தன் பார்வையை விட கூர்மையான கேட்பு சக்தியையும், நுட்பமான மோப்பத்திறனையுமே நம்பி வாழ்கிறது.[5] இவற்றின் தும்பிக்கையும் உணர்திறன் மிக்கது. இவற்றின் காதுகள் மட்டுமன்றி தும்பிக்கையும் அதிர்வுகளை உணர வல்லது. இவற்றின் பாதங்கள் மிகக் குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளையும் உணர வல்லன. சமூக வாழ்க்கை களிறுகளின் சமூக வாழ்க்கை முறையும் பிடிக்களின் வாழ்க்கை முறையும் வேறுபட்டது. களிறுகள் தான் பருவம் எய்தும் வரை தன் தாய் உள்ள குழுவோடு வாழும், பின் பெரும்பாலும் தனியாகவே வாழ்கின்றன. ஆனால் பிடிகள் நன்கு பிணைப்பான குடும்பமாக தாய், சகோதரி, மகள் என வாழ்கின்றன. இனப்பெருக்க காலங்களில் பருவமெய்திய பிடியும் தனித்துக்காணப்படும். தன்னுணர்வு யானைகள் தன்னுணர்வு கொண்டவை. இது கண்ணாடிச் சோதனை மூலம் நிறுவப்பட்டுள்ளது. யானைகள் முன் கண்ணாடியை வைக்கும் போது இவை தங்களை அடையாளம் கண்டுகொள்கின்றன. இத்திறன் இதுவரை மதிமாக்கள், சில குரங்கினங்கள், டால்பின்களில் மட்டுமே கண்டறியப் பட்டுள்ளது.யானைகள் ஒருவர் சுட்டிக்காட்டுவதைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவை என்று சிம்பாப்வேயில் பழக்கப்பட்ட யானைகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.[6] இனப்பெருக்கம் யானையின் சினைக்காலம் 22 மாதங்கள் ஆகும். இதுவே பாலூட்டிகளில் மிக நீண்ட சினைக்காலம் ஆகும். பொதுவாக இவை ஒரேயொரு கன்றையே ஈனுகின்றன. இரட்டைகள் பிறப்பது மிகவும் அரிது. பிறந்த யானைக் கன்றானது 90 – 115 கிலோகிராம் எடை வரை இருக்கும். யானை ஈனும் முன்னும், ஈனும் பொழுதும், ஈன்ற பின்னரும் அதனைச் சுற்றிலும் மற்ற வளர்ந்த யானைகள் இருந்து மிகவும் உதவுகின்றன. யானைக்கன்று பிறந்ததில் இருந்து, அது யானைக் கூட்டத்தாலேயே வளர்க்கப்படுகின்றது. அச்சுறுத்தல்கள் வேட்டையாடுதல் யானைகளுக்கு முக்கியமான அச்சுறுத்தல் வேட்டையாடுதல் ஆகும். யானைகள் அவற்றின் தந்தங்களுக்காக வேட்டை ஆடப்படுகின்றன. பெரியவையும், நீண்ட காலம் வாழுவனவும், குறைவான வேகத்தில் இனம் பெருகுவனவுமான யானைகளுக்கு, அளவு மீறி வேட்டையாடுதல் பெரும் பாதிப்பை எற்படுத்துகின்றது. இவை பெரிதாக இருப்பதனால் எளிதில் மறைந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு யானையும் வளர்ந்து இனம் பெருக்குவதற்குப் பல ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வொரு யானைக்கும் சராசரியாக நாளொன்றுக்கு 140 கிலோகிராம் (300 இறாத்தல்) இலை தழைகள் தேவைப்படுகின்றது. புலி, சிங்கம் போன்ற பெரிய கோண்மாக்கள் அழிக்கப்படுவதாலும் யானைகளின் உணவுக்குப் போட்டியாக உள்ள சிறய தாவர உண்ணிகள் பெருகி தாவரங்களைப் பெருமளவில் அழிப்பதால் யானைகளுக்கு உணவு பெறுவது கடினமாகின்றது. யானைகள் மனிதனால் கொல்லப்படுவதைத் தவிர பிற விலங்குகளால் உணவுக்காகக் கொல்லப்படுவது அரிது. வாழிடம் சுருங்குதல் யானைகளின் வாழிடங்கள் அழிக்கப் படுவதும் மற்றொரு முக்கியமான அச்சுறுத்தல் ஆகும். மனிதர் வேளாண்மை விரிவாக்கத்துக்காக யானைகளின் வாழிடங்களான காடுகளை அழித்துவருகிறார்கள். இது மனிதர்களின் நலனுக்கும் யானைகளின் நலன்களுக்குமிடையே முரண்பாடுகளை உருவாக்குகின்றது. எடுத்துக்காட்டாக யானைகள் புதிய வேளாண்மைக் குடியேற்றங்களுக்குள் நுழைந்து பயிர்களை அழித்துவிடுவதுடன் மக்களுக்கு உயிராபத்தையும் ஏற்படுத்துகின்றன. இவ்வாறான முரண்பாடுகளால், இலங்கையில் சராசரியாக ஆண்டொன்றுக்கு 150 யானைகளும், 100 மனிதர்களும் இறப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. காடழிப்பு யானைகளின் வாழிடத்தையும் குறைக்கின்றது. ஆசிய யானைகளின் அழிவுக்கான முதன்மைக் காரணம் வாழிடங்கள் இழக்கப்படுவதே என்று கூறப்படுகிறது. யானைகள் வாழ்வதற்கு பெரிய அளவிலான காட்டுப்பகுதிகள் தேவைப்படுகின்றன. ஏனெனில், யானைகள் கூட்டமாக ஒரு பகுதிக்குள் புகுந்து மரங்களையும் செடி கொடிகளையும் பெருமளவில் அழித்து உண்கின்றன. பின்னர் வேறிடத்துக்குச் செல்கின்றன. இவ்வாறு புதிய இடங்களுக்குச் சென்று அழிக்கப்பட்ட காடுகள் மீண்டும் வளர்ந்ததும் திரும்பவும் அதே இடத்துக்கு வந்து உணவைப் பெறுகின்றன. வாழிடங்களின் அளவு குறையும் போது, மிக விரைவிலேயே உணவு முடிவடைந்து விடுகிறது.[7] மனிதர்களும் யானைகளும் யானைகள், மனிதர்களினால் சட்டத்துக்கு அமைவாகவும், எதிராகவும் கொல்லப்படுவதனால், யானைகளின் உடலமைப்பில் எதிர்பாராத விளைவுகளும் ஏற்படுகின்றன. ஆப்பிரிக்காவில் தந்தங்களுக்காக வேட்டையாடுபவர்கள், பெரிய தந்தங்களுள்ள யானைகளையே வேட்டையாடுவதால் எஞ்சியிருக்கும் யானைகள் சிறிய தந்தங்கள் உள்ளவையாக அல்லது தந்தங்கள் இல்லாதவையாக உள்ளன. புதிதாகப் பிறக்கும் குட்டிகளும் இவற்றின் மூலமாகவே பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரிப்பதால் புதிய தலைமுறைகளில் தந்தமில்லாத் தன்மையை உருவாக்கும் மரபணுக்கள் கூடுதலாகிப் பெருமளவிலான தந்தமில்லா யானைகள் பிறப்பதற்கு வழியேற்படுகிறது. 1930ல் 1% ஆக இருந்த இவ்வாறான யானைகளின் தொகை இப்போது சில பகுதிகளில் 30% வரை அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் தந்தமில்லாத் தன்மை என்பது ஒரு அரிதான இயல்புப் பிறழ்வாக இருந்த நிலை மாறி இப்போது பொதுவான மரபுவழி இயல்பாக மாறிவருகிறது. இறப்பு இருதயக் கோளாறு, மாரடைப்பு, மூளையில் இரத்தக்கட்டி போன்றவற்றால் யானைகள் இறக்கக்கூடும்.[8] சங்க இலக்கியங்களில் யானை தமிழ் சங்க இலக்கியங்களில் யானையை, 170க்கும் மேற்பட்ட பெயர்களில் குறிப்பிடுகிறார்கள்.விரிவாக காணலாம். அவைகளில் சில வருமாறு; 1. யானை, 2. வேழம், 3. களிறு, 4. பிளிறு, 5. கலபம், 6. மாதங்கம், 7. கைமா, 8.உம்பல் - , 9. வாரணம், 10. அஞ்சனாவதி, 11. அத்தி, 12. அத்தினி, 13. அரசுவா, 14. அல்லியன், 15. அனுபமை, 16. ஆம்பல், 17. ஆனை, 18. இபம், 19. இரதி, 20. குஞ்சரம் / இராசகுஞ்சரம், 21. இருள், 22. தும்பு, 23. வல் விலங்கு, 24.கரி, 25.அஞ்சனம்,26.நாகம் (கதநாகம்), 27. பழமொழிகளும் சொலவடைகளும் தமிழில் யானை பற்றிய பழமொழிகளும் சொலவடைகளும் இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. பழமொழிகள் யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன். யானைக்கும் அடி சறுக்கும். யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே யானை கறுத்தாலும் ஆயிரம் பொன் சொலவடைகள் யானைப்பசிக்கு சோளப்பொரியா? யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டது போல துணை நூற்பட்டியல் Check date values in: |date= (help) மேற்கோள்கள் இவற்றையும் காண்க யானையின் தமிழ்ப்பெயர்கள் குருவாயூர் கேசவன் புற இணைப்புகள் * பகுப்பு:ஒலிக்கோப்பு உள்ள கட்டுரைகள்
யானையின் குழந்தை என்று என்ன அழைக்கப்படுகிறது?
கன்று
983
tamil
96ebbb003
தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு[5] (Association of Southeast Asian Nations),[6], அல்லது ஆசியான் (ASEAN /ˈɑːsi.ɑːn/ AH-see-ahn,[7] /ˈɑːzi.ɑːn/ AH-zee-ahn)[8][9], என்பது தென்கிழக்காசியாவின் 10 நாடுகளின் பொருளாதார, மற்றும் புவியியல் சார்ந்த அரசியல் கூட்டமைப்பு ஆகும். இதனை ஆகஸ்ட் 8, 1967 இல் இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து அமைத்தன[10]. அதன் பின்னர் புரூணை, மியான்மர், கம்போடியா, லாவோஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் இக் கூட்டமைப்புடன் இணைந்துகொண்டன. பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தல், உறுப்பு நாடுகளிடையே சமூக, மற்றும் பண்பாட்டு உறவுகளைப் பேணல், பிராந்தியத்தில் அமைதி பேணல், உறுப்பு நாடுகளுக்கு ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடச் சந்தர்ப்பத்தை வழங்குதல் என்பன இவ்வமைப்பின் முக்கிய குறிக்கோள்களில் அடங்குகின்றன[11]. ஆசியான் அமைப்பானது 4.46மில்லியன் km2 நிலப் பரப்பளவை உள்ளடக்கியுள்ளது. இது மொத்த உலகின் பரப்பளவின் 3% ஆகும். இப் பிராந்தியத்தின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 600 மில்லியனாக உள்ளது. இது மொத்த உலகின் மக்கள் தொகையின் 8.8% ஆகும். ஆசியான் அமைப்பின் கடற் பரப்பளவானது இதன் நிலப் பரப்பளவை விட மூன்று மடங்கு பெரியதாகும். 2011 ஆம் ஆண்டு இவ்வமைப்பின் ஒருங்கிணைந்த மொத்தத் தேசிய உற்பத்தியானது 2 டிரில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக வளர்ச்சியடைந்தது.[12] ஆசியான் அமைப்பை தனி அமைப்பாகக் கருதினால், இது உலகின் எட்டாவது மிகப்பெரிய பொருளதார அமைப்பாகக் காணப்படும். வரலாறு ஆசியான் கூட்டமைப்பிற்கு முன்னர் தோற்றம் பெற்ற அமைப்பே "தென்கிழக்கு ஆசியக் கூட்டமைப்பு" (Association of Southeast Asia) ஆகும். இது பொதுவாக ASA என அழைக்கப்பட்டது. இக் கூட்டமைப்பு பிலிப்பீன்சு, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கி 1961 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பீன்சு, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய ஐந்து நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பாங்கொக்கிலுள்ள தாய்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சரகத்தில் ஒன்றுகூடி "ஆசியான் பிரகடனத்தில்" கையெழுத்திட்டதன் மூலம் ஆசியான் கூட்டமைப்பு 1967 ஆகத்து 8 இல் நிறுவப்பட்டது. இந்த ஆசியான் பிரகடனமே பொதுவாக "பாங்கொக் பிரகடனம்" என அழைக்கப்படுகின்றது. இந்தோனேசியாவின் ஆடம் மாலிக், பிலிப்பீன்சின் நார்க்கிசோ ராமொஸ், மலேசியாவின் அப்துல் ரசாக், சிங்கப்பூரின் சி. இராசரத்தினம் மற்றும் தாய்லாந்தின் தனட் கோமன் ஆகிய இந்த ஐவரே இப்பிரகடனத்தில் கையெழுத்திட்ட வெளியுறவுத்துறை அமைச்சர்களாவார். இவர்களே இந்த ஆசியான் கூட்டமைப்பின் நிறுவுனர்கள் என அழைக்கப்படுகின்றனர்.[13] நோக்கங்கள் ஆசியான் பிரகடனத்தின்படி ஆசியான் கூட்டமைப்பானது உருவாக்கப்பட்டதன் நோக்கங்களாவன; கூட்டு முயற்சிகளின் மூலம் தென்கிழக்காசிய_நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை அதிகரித்தலும் சமூக கலாச்சார மேம்பாட்டை ஏற்படுத்துதலும். நீதிக்கும் சட்டத்திற்கும் மதிப்பளிப்பதன் மூலமும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் கொள்கைகளை கடைபிடிப்பதன் மூலமும் பிராந்தியத்தில் சமாதானத்தையும் உறுதிப்பாட்டையும் ஏற்படுத்துதல். தீவிர ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவியின் மூலம் பொருளாதார, சமூக, கலாச்சார, தொழில்நுட்ப, அறிவியல் மற்றும் நிர்வாகத் துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்துதல். கல்வி, தொழில், தொழில்நுட்ப, மற்றும் நிர்வாகத் துறைகளில், பயிற்சி மற்றும் ஆராய்ச்சி வசதிகளை ஏற்படுத்தி ஏனைய நாடுகளுக்கு உதவுதல். அவர்களின் விவசாயம் மற்றும் கைத்தொழிற் பயன்பாடு, வர்த்தகத்தினை விரிவாக்குதல், போக்குவரத்து வசதியை மேம்படுத்துதல், தொடர்பாடல் வசதிகளை ஏற்படுத்துதல் என்பவற்றில் கூடிய கவனமெடுத்தல். தென்கிழக்கு ஆசிய கற்கைநெறிகளை மேம்படுத்துதல். சமமான நோக்கங்களைக் கொண்ட சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புக்களுடன் நெருக்கமான நன்மைமிக்க உறவுகளை ஏற்படுத்துதல்.[14][15] தொடர்ந்த விரிவாக்கம் புரூணை நாடானது 1 ஜனவரி 1984 இல் சுதந்திரமடைந்ததன் பின்னர் ஒரு வாரத்தில் 8 ஜனவரி 1984 இல் இக்கூட்டமைப்புடன் ஆறாவது உறுப்பினராக இணைந்துகொண்டதன் மூலம் இக் கூட்டமைப்பின் வளர்ச்சி ஆரம்பித்தது.[16] 28 ஜூலை 1995 இல் வியட்நாம் இக்கூட்டமைப்புடன் ஏழாவது உறுப்பினராக இணைந்துகொண்டது.[17] வியட்நாம் இணைந்து இரண்டு வருடங்களின் பின்னர் 23 ஜூலை 1997 இல் லாவோஸ் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகள் ஆசியான் கூட்டமைப்பில் இணைந்துகொண்டன.[18] கம்போடியாவும் லாவோஸ் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளுடன் ஆசியான் கூட்டமைப்பில் இணைந்துகொள்ள இருந்த போதிலும் அந்நாட்டின் உள்நாட்டு அரசியல் போராட்டத்தின் காரணமாக இணைந்துகொள்ள முடியவில்லை. பின்னர் 30 ஏப்ரல் 1999 இல் கம்போடியா தனது அரசியல் உறுதிப்பாட்டின் பின்னர் ஆசியான் கூட்டமைப்பில் இணைந்துகொண்டது.[18][19] 1990 களில் ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்தவர்களின் எண்ணிக்கையும் நாடுகளுக்கிடையிலான மேலதிக ஒருங்கிணைப்பும் அதிகரித்தது. 1990 ஆம் ஆண்டு கிழக்கு ஆசியாவின் பொருளாதாரக் குழுவை உருவாக்க மலேசியா தீர்மானித்தது.[20] இதன் மூலம் ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்தவர்களையும் சீனக் குடியரசு, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளையும் உள்ளடக்கி ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பில் உள்ள ஐக்கிய அமெரிக்காவின் செல்வாக்கு அதிகரித்தலை முழு ஆசியப் பிராந்தியத்திலும் கட்டுப்படுத்துதலே இக் குழுவின் நோக்கமாகும்.[21][22] ஐக்கிய அமெரிக்காவில் இருந்தும் ஜப்பானி இருந்தும் வந்த பாரிய எதிர்ப்பின் காரணமாக இத்திட்டம் கைவிடப்பட்டது.[21][23] இத்திட்டம் தோல்வியில் முடிந்த போதிலும் அங்கத்துவ நாடுகள் மேலதிக ஒருங்கிணைப்பிற்குத் தமது பணியைத் தொடர்ந்து 1997 இல் ஆசியான் மற்றும் மூன்று (ASEAN Plus Three) எனப்படும் அமைப்பு உருவாக்கப்பட்டது. கிழக்குத் திமோரும் பப்புவா நியூ கினியாவும் 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசியான் உத்தியோகபூர்வ உச்சி மாநாட்டின் போது கிழக்குத் திமோர் ஆசியான் கூட்டமைப்பில் பதினோராவது அங்கத்தவராக இணைய விருப்பம் தெரிவித்து விண்ணப்பக் கடிதத்தைக் கையளித்தது. இந்தோனேசியா கிழக்குத் திமோருக்கு இதயங்கனிந்த வரவேற்பை தெரிவித்தது.[24][25][26] பப்புவா நியூகினியா 1976 ஆம் ஆண்டு பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டதுடன் 1981 ஆம் ஆண்டில் விசேட பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டது.[27] பப்புவா நியூகினியா ஒரு மெலனேசியன் அரசாகும். சுதந்திர வர்த்தகம் 2007 ஆம் ஆண்டில் ஆசியான் கூட்டமைப்பு தனது 40 ஆவது வருட நிறைவு விழாவையும் ஐக்கிய அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவுகளின் 30 வருடப் பூர்த்தியையும் கொண்டாடியது.[28] 2013 ஆம் ஆண்டளவில் சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்பாடுகளை ஏற்ப்டுத்திக் கொள்வதென 26 ஓகஸ்ட் 2007 இல் தீர்மானிக்கப்பட்டதுடன் 2015 ஆம் ஆண்டில் ஆசியான் பொருளாதார சமூகத்தை நிறுவுவதெனவும் முடிவெடுக்கப்பட்டது.[29][30] 27 பெப்ரவரி 2009 இல் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்று ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகளுக்கும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டது. இந்தச் சுதந்திர வர்த்தக ஒப்பந்தமானது 12 நாடுகளினதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2000 தொடக்கம் 2020 வரையான வருடக் காலப் பகுதியில் 48 பில்லியன் அமெரிக்க டொலர்களால் உயர்த்துவதையே நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.[31][32] ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகளும் அவர்களின் ஆறு பெரிய வர்த்தகப் பங்காளிகளான ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளும் 26-28 பெப்பிரவரி 2013 காலப்பகுதியில் இந்தோனேசியாவின் பாலி நகரில் பிராந்திய பரந்த பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர்.[33] ஆசியான் வழி அடிப்படை கோட்பாடுகள் சுதந்திரம், இறைமை, சமத்துவம், பிராந்திய ஒருமைப்பாடு, மற்றும் அனைத்து அங்கத்துவ நாடுகளின் தேசிய அடையாளங்களின் மீதான பரஸ்பர மரியாதை. வெளித் தலையீடு, நாசவேலை அல்லது பலாத்காரத்தில் இருந்து விடுபட்டுத் தன்னுடைய தேசிய இருப்புக்கு வழிவகுத்தல் ஒவ்வொரு அரசினதும் உரிமை. மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாக் கொள்கை. அமைதியான முறையில் வேறுபாடுகள் அல்லது பிணக்குகளை தீர்த்தல். படை அச்சுறுத்தல் அல்லது பயன்பாட்டை நிராகரித்தல். அங்கத்துவ நாடுகளுக்கு மத்தியில் திறமையான ஒத்துழைப்பு. விமர்சன வரவேற்பு ஆசியான் வழி அமைப்பின் உருவாக்க நிலைகளின் சூழ்நிலை சமகால அரசியல் யதார்த்தத்தில் இருந்து மாறுபட்டிருப்பதைக் காணலாம். கூட்டங்கள் ஆசியான் உச்சி மாநாடுகள் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பால் நடாத்தப்படும் கூட்டங்கள் ஆசியான் உச்சி மாநாடுகள் என அழைக்கப்படுகின்றன. இவ்வாறான ஆசியான் உச்சி மாநாடுகளில் உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் பிராந்தியப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கவும் அவற்றைத் தீர்க்கவும் சந்தித்துக்கொள்வதோடு, ஆசியான் பிராந்தியத்திற்குள் உட்படாத வேற்று நாட்டுத் தலைவர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு வெளிநாடுகளுடனான தொடர்புகளையும் வளர்த்துக்கொள்கின்றனர். ஆசியான் தலைவர்களின் உத்தியோகபூர்வ உச்சி மாநாடு முதன்முதலாக இந்தோனேசியாவின் பாலி நகரில் 1976 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆசியானின் மூன்றாவது உத்தியோகபூர்வ உச்சி மாநாடு பிலிப்பைன்சின் மணிலா நகரில் 1987 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்த மாநாட்டில் தென்கிழக்காசிய_நாடுகளின்_கூட்டமைபின் அரசுத் தலைவர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை சந்தித்துக் கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது.[34] தொடர்ச்சியாக 1992 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற நான்காவது உத்தியோகபூர்வ உச்சி மாநாட்டில் அரசுத் தலைவர்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்ள விருப்பமும் சம்மதமும் தெரிவித்ததையடுத்து மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஆசியான் உச்சி மாநாடுகளை நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது.[34] அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டில், இப்பிராந்தியத்தில் தாக்கம் செலுத்தும் அவசரப் பிரச்சினைகளை குறிப்பிடுவதற்காக வருடாந்தம் சந்தித்துக் கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. உத்தியோகபூர்வ உச்சி மாநாட்டை தமது பெயரின் அகர வரிசைப்படி ஒவ்வொரு நாட்டிலும் நடாத்த உறுப்பு நாடுகள் சம்மதம் தெரிவித்துக்கொண்டன. ஆனால் பர்மா நாடானது ஐக்கிய அமெரிக்காவாலும், ஐரோப்பிய ஒன்றியத்தாலும் ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்களின் காரணமாக 2006 ஆம் ஆண்டில் ஆசியான் உத்தியோகபூர்வ உச்சி மாநாட்டை நடாத்தும் உரிமையை 2004 ஆம் ஆண்டில் இழந்தது.[35] 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆசியான் சாசனம் நடைமுறைக்கு வந்ததையடுத்து ஆசியான் உத்தியோகபூர்வ உச்சி மாநாட்டை வருடத்திற்கு இருமுறை நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. ஆசியான் உத்தியோகபூர்வ உச்சி மாநாடு மூன்று நாட்களுக்கு நடைபெறும். மாநாட்டின் வழக்கமான நடைமுறைகள் பின்வருமாறு; உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் உள்ளக அமைப்பு கூட்டமொன்றை நடாத்துவார்கள். உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் ஆசியான் பிராந்திய மன்றத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் மாநாடொன்றை நடாத்துவார்கள். ஆசியான் மற்றும் மூன்று (ASEAN Plus Three) எனப்படும் கூட்டமொன்று தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் மூன்று பேச்சுவார்த்தைக் கூட்டாளிகளான சீன மக்கள் குடியரசு, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளின் அரசுத் தலைவர்களுக்கிடையில் நடைபெறும். ஆசியான் - சிஇஆர் (ASEAN-CER) எனப்படும் தனியான கூட்டமொன்று தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் இரண்டு பேச்சுவார்த்தைக் கூட்டாளிகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் அரசுத் தலைவர்களுக்கிடையில் நடைபெறும். பாங்கொக்கில் நடைபெற்ற ஐந்தாவது உத்தியோகபூர்வ உச்சி மாநாட்டில் அரசுத் தலைவர்கள், ஒவ்வொரு உத்தியோகபூர்வ உச்சி மாநாடுகளுக்கும் இடையில் சாதாரணமாக சந்தித்துக்கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது.:[34] கிழக்கு ஆசிய உத்தியோகபூர்வ உச்சிமாநாடு கிழக்கு ஆசிய உத்தியோகபூர்வ உச்சிமாநாடானது (EAS) ஆசியான் கூட்டமைப்பின் தலைமையுடன் கிழக்கு ஆசியா மற்றும் அப்பிராந்தியத்திலுள்ள 16 நாடுகளை உள்ளடக்கி ஒவ்வொரு வருடமும் கூட்டப்படும் ஒரு பரந்த ஆசிய அமைப்பாகும். இந்த உச்சிமாநாடானது வர்த்தகம், ஆற்றல் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்தவும் பிராந்திய ஒற்றுமையைக் கட்டியெழுப்பவும் நடாத்தப்படுகின்றது. ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்தவர்களான 10 நாடுகளுடன் சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளே இந்த உச்சிமாநாட்டின் அங்கத்துவ நாடுகளாகும். இந்த நாடுகளின் மொத்த மக்கள் தொகை அண்ணளவாக உலகின் மக்கள் தொகையின் அரைப் பங்காகும். 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ரஷ்யாவும், ஐக்கிய அமெரிக்காவும் 2011 ஆம் ஆண்டில் நடக்கும் உத்தியோகபூர்வ உச்சிமாநாட்டிற்கு இரு நாடுகளின் ஜனாதிபதிகளுடன் பூரண அங்கத்தவர்களாகக் கலந்துகொள்ள உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டது.[36] முதலாவது உத்தியோகபூர்வ உச்சிமாநாடானது கோலாலம்பூரில் 14 டிசம்பர் 2005 இல் நடைபெற்றது. அடுத்தடுத்த கூட்டங்கள் ஆசியான் தலைவர்களின் வருடாந்த சந்திப்பிற்குப் பின்னர் நடைபெற்றன. ஞாபகார்த்த உச்சிமாநாடு ஆசியான் கூட்டமைப்பிற்குள் உள்ளடங்காத நாடொன்றினால் ஆசியான் கூட்டமைப்பிற்கும் ஆசியான் கூட்டமைப்பிற்குள் உள்ளடங்காத நாடு ஒன்றிற்கும் இடையில் ஒரு மைல்கல் ஆண்டு நிறைவைக் குறிக்கும் பொருட்டு நடாத்தப்படும் மாநாடே ஞாபகார்த்த உச்சிமாநாடு எனப்படும். இம் மாநாட்டை நடாத்தும் நாடு இந்த மாநாட்டிற்கு ஆசியான் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் அரசுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து தமக்கிடையிலான எதிர்கால ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை பற்றிக் கலந்துரையாடும். பிராந்திய அமைப்பு ஆசியான் பிராந்திய அமைப்பு (ARF) என்பது ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இயங்கும் முறையான, உத்தியோகபூர்வ, பன்முக அமைப்பாகும். 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இவ்வமைப்பில் 27 நாடுகள் அங்கத்துவம் வகித்தனர். உரையாடல்களையும் ஆலோசனைகளையும் மேற்கொள்ளல், நம்பிக்கையை வளர்த்தல் மற்றும் பிராந்தியத்தில் முன்னெச்சரிக்கை இராஜதந்திரத்தைக் கடைப்பிடித்தல் என்பன ஆசியான் பிராந்திய அமைப்பின் நோக்கங்களாகும்.[41] ஆசியான் பிராந்திய அமைப்பின் சந்திப்பு முதன்முதலில் 1994 ஆம் ஆண்டு நடைபெற்றது. இவ்வமைப்பின் தற்போதைய அங்கத்தவர்கள் பின்வருமாறு: ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்தவர்கள், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், கனடா, சீனக் குடியரசு, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ஜப்பான், வட கொரியா, தென் கொரியா, மொங்கோலியா, நியூசிலாந்து, பாக்கிஸ்தான், பப்புவா நியூகினியா, ரஷ்யா, கிழக்குத் திமோர், ஐக்கிய அமெரிக்கா மற்றும் இலங்கை.[42] வேறு சந்திப்புக்கள் மேற்குறிப்ப்டப்பட்ட கூட்டங்களுக்கு மேலதிகமாக ஏனைய வழக்கமான[43] சந்திப்புக்களும் நடாத்தப்படுகின்றன.[44] இவற்றுள் ஆசியான் அமைச்சர்கள் கூட்டமும்[45] ஏனைய சிறிய கூட்டங்களும் உள்ளடங்கும்.[46] இக் கூட்டங்கள் பொதுவாக பாதுகாப்பு[43] அல்லது சுற்றுச்சூழலைப்[43][47] பற்றி அமைந்திருப்பதுடன் இக்கூட்டங்களில் அரசுத் தலைவர்களுக்குப் பதிலாக அமைச்சர்களே கலந்துகொள்வார்கள். மேலும் மூன்று ஆசியான் மற்றும் மூன்று என்பது ஆசியான் கூட்டமைப்பு நாடுகள், சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகியவை இணைந்து நடாத்தும் ஒரு மாநாடாகும். இது ஒவ்வொரு ஆசியான் உத்தியோகபூர்வ உச்சிமாநாட்டின் போதும் முக்கிய நிகழ்வாக நடைபெறும். இன்றுவரை சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகள் சுதந்திர வர்த்தக பகுதியை (FTA) உருவாக்கவில்லை. சுதந்திர வர்த்தக பகுதியை (FTA) உருவாக்குதல் குறித்த கூட்டமானது 2012 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் நடைபெற்றது.[48] ஆசியா-ஐரோப்பா சந்திப்பு ஆசியா-ஐரோப்பா சந்திப்பு (ASEM) ஆசிய ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் கூட்டுறவைப் பலப்படுத்தும் முகமாக 1996 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. விசேடமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஆசியான் கூட்டமைப்பிற்கும் இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தவே இச்சந்திப்பு ஆரம்பிக்கப்பட்டது.[49] ஆசியான் கூட்டமைப்பின் சார்பாக 45 ASEM பங்காளர்களில் ஒருவரான செயலாளர் கலந்துகொள்வார். அத்தோடு இச்சந்திப்போடு இணைந்து நடக்கும் ஆசியா - ஐரோப்பா அறக்கட்டளை (ASEF) என்ற சமூக கலாச்சார அமைப்பின் கூட்டத்திலும் ஆசியான் கூட்டமைப்பின் சார்பாக ஒரு பிரதிநிதி அரசாங்க குழுவில் நியமிக்கப்படுவார். ஆசியான்-ரஷ்யா உச்சிமாநாடு ஆசியான்-ரஷ்யா உச்சிமாநாடு என்பது ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகளின் தலைவர்களுக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் இடையில் வருடாந்தம் நடைபெறும் ஒரு சந்திப்பாகும். ஆசியான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு ஆசியான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பின் 44 ஆவது வருடாந்த சந்திப்பானது 16 ஜூலை ]]2011]] தொடக்கம் 23 ஜூலை 2011 வரை பாலி நகரில் நடைபெற்றது.இச்சந்திப்பில் இந்தோனேசியா ஆசியான் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகளின் குடிமக்களுக்கு ஆசியான் பிராந்தியத்திற்குள்ளான பயணங்களுக்கு ஒன்றுபட்ட ஆசியான் பயண விசாவை முன்மொழிந்தது.[50] 45 ஆவது வருடாந்த சந்திப்பானது கம்போடியாவின் புனோம் பென் நகரில் நடைபெற்றது. தென் சீனக் கடலின் உரிமை தொடர்பான சீனா மற்றும் அண்டை நாடுகளுடன் ஏற்பட்ட கருத்து முரண்டாடுகள் காரணமாக ஆசியான் கூட்டமைப்பின் வரலாற்றில் முதன்முறையாக இச்சந்திப்பின் முடிவில் இராஜதந்திர அறிக்கை அமைப்பினால் வெளியிடப்படவில்லை. பொருளாதார சமூகம் ஆசியான் கூட்டமைப்பின் உறுதியான பிராந்திய கூட்டுறவிற்கு ஆதாரமாக விளங்கும் முக்கிய மூன்ரு தூண்களாக பாதுகாப்பு, சமூக கலாச்சார ஒருங்கிணைப்பு மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பு என்பன உள்ளன.[51] ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகள் ஒன்றிணைந்து பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் பொருட்டு 2015 ஆம் ஆண்டு ஆசியான் பொருளாதார சமூகத்தை (AEC) உருவாக்கின.[52] 1989 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதிய்ல் ஆசியான் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகளின் சராசரிப் பொருளாதார வளர்ச்சியாக சிங்கப்பூர் 6.73 சதவீதமாகவும், மலேசியா 6.15 சதவீதமாகவும், இந்தோனேசியா 5.16 சதவீதமாகவும், தாய்லாந்து 5.02 சதவீதமாகவும், பிலிப்பைன்ஸ் 3.79 சதவீதமாகவும் இருந்தன. இந்தப் பொருளாதார வளர்ச்சியானது ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பின் சராசரிப் பொருளாதார வளர்ச்சியான 2.83 சதவீதத்திலும் அதிகமாகும்.[53] ஆசியானின் ஆறு பிரதானமானவர்கள் ஆசியான் கூட்டமைப்பிலுள்ள ஏனைய நாடுகளின் பொருளாதாரத்திலும் பார்க்கப் பலமடங்கு வளர்ச்சியடைந்த ஆறு பெரிய பொருளாதார நாடுகளே ஆசியானின் ஆறு பிரதானமானவர்கள் என அழைக்கப்படுகின்றன. வெளிநாட்டு நேரடி முதலீடு 2009 ஆம் ஆண்டில் ஆசியான் கூட்டமைப்பின் வெளிநாட்டு நேரடி முதலீடானது 37.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. பின்னர் 2010 ஆம் ஆண்டில் இரண்டு மடங்காகி 75.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்தது. ஆசியான் கூட்டமைப்பின் 22 சதவீத வெளிநாட்டு நேரடி முதலீடு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வருகின்றது. அடுத்ததாக 16 சதவீதம் ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகளிடமிருந்தும் ஜப்பான் மற்றும் ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்தும் கிடைக்கப் பெறுகின்றது. உள்ளார்ந்த ஆசியான் பயணம் ஆசியான் நாடுகளிடையே இலவச விசா சேவை அறிமுகம் செய்துவைக்கப்பட்டதால் உள்ளார்ந்த ஆசியான் பயணங்களின் எண்ணிக்கை மிகவும் வேகமாக அதிகரித்தது. 2010 ஆம் ஆண்டில் ஆசியான் அங்கத்துவ நாடுகளின் சுற்றூலாப் பயணிகளின் எண்ணிக்கையான 73 மில்லியனில் 47 சதவீதம் அல்லது 34 மில்லியன் சுற்றூலாப் பயணிகள் வேறோர் ஆசிய நாட்டிலிருந்து வந்தவர்களாவார்கள்.[54] உள்ளார்ந்த ஆசியான் வர்த்தகம் 2010 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியின் வரையில் உள்ளார்ந்த ஆசியான் வர்த்தகமானது மிக்கக் குறைந்த அளவிலேயே நடைபெற்று வருகின்றது. ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகள் ஆசியான் கூட்டமைப்பினுள் உள்ளடங்காத நாடுகளுக்கே அதிகமாக எற்றுமதியை மேற்கொண்டன. எனினும் ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகளுள் தமது ஏற்றுமதியில் லாவோஸ் 80 வீதத்தையும் மியான்மார் 50 வீதத்தையும் வேறோர் ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாட்டுக்கு எற்றுமதி செய்தது.[55] சாசனம் ஆசியான் கூட்டமைப்பின் அங்கத்துவ நாடுகள் 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாணியிலான சமூகத்தை நோக்கி நகரும் நோக்குடன் கையெழுத்திட்ட ஆசியான் சாசனத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் பொருட்டு 15 டிசம்பர் 2008 இல் இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் ஒன்றுகூடினார்கள்.[56] இந்த ஆசியான் சாசனம் ஆசியான் கூட்டமைப்பை ஒரு சட்ட அமைப்பாக மாற்றியதுடன் 500 மில்லியன் மக்கள் சூழ்ந்துள்ள இப்பிராந்தியத்தில் ஒரு சுதந்திர வர்த்தக பகுதியை உருவாக்குதல் அதன் இலக்காக அமைந்தது. கலாசார நடவடிக்கைகள் ஆசியான் பிராந்தியத்தை மேலும் ஒருங்கிணைக்கும் பொருட்டு ஆசியான் கூட்டமைப்பு பல்வேறு கலாச்சார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. இவற்றுள் விளையாட்டுக்கள், கல்வி நடவடிக்கைகள் என்பவற்றுடன் எழுத்தாளர்களுக்கான விருதுகளும் உள்ளடங்குகின்றன. ஆசியான் பல்கலைக்கழக வலையமைப்பு, ஆசியான் உயிர்ப் பல்வகைமைக்கான மையம், ஆசியான் சிறந்த விஞ்ஞானி மற்றும் தொழில்நுட்பவியலாளர் விருது, சிங்கப்பூரின் அனுசரணையில் வழங்கப்படும் ஆசியான் உதவித்தொகை என்பன இவற்றிற்குச் சில உதாரணங்களாகும். கல்வி மற்றும் மனித மேம்பாடு எழுத்தறிவு வீதம் பொதுவாக எழுத்தறிவு என்பது ஒரு மொழியை வாசிக்க, எழுத, பேச, கேட்டுப் புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலைக் குறிக்கும்.[57] ஆசியான் நாடுகளில் ஆறு நாடுகள் 2000 ஆம் ஆண்டளவில் 100% வீதத்தை நோக்கி வளர்ச்சியடைந்துள்ளன. 1990 களில் ஏற்படுத்தப்பட்ட கட்டாய ஆரம்க் கல்வியே இந்த எழுத்தறிவு வளர்ச்சிக்குக் காரணமாகும்.[58][59] வயது வந்தோருக்கான (15+) எழுத்தறிவு வீதம் பல நாடுகளில் உயர்வாக உள்ளது. ஆனால் இரு நாடுகளின் வயது வந்தோருக்கான எழுத்தறிவு வீதம் 90% இற்கு அண்மித்துக் காணப்படுகின்றது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான எழுத்தறிவு வீதத்தில் சிறு வித்தியாசத்தை காணக்கூடியதாக உள்ளது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான எழுத்தறிவு வீதம் கம்போடியாவில் 14% ஆகவும் லாவோசில் 19% ஆகவும் உள்ளது.[60] விளையாட்டுக்கள் தென்கிழக்கு ஆசிய விளையாட்டுக்கள் தென்கிழக்கு ஆசிய விளையாட்டுக்கள் பொதுவாக எஸ்.ஈ.ஏ விளையாட்டுக்கள் (SEA Games) என அழைக்கப்படுகின்றன. இது பல்வேறுவகையான விளையாட்டுக்களை உள்ளடக்கி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்றது. இவ்விளையாட்டுக்களில் தென்கிழக்காசியாவைச் சேர்ந்த 11 நாடுகள் பங்குபற்றுகின்றன. இவ்விளையாட்டுக்க தென்கிழக்கு ஆசிய விளையாட்டுக்கள் கூட்டமைப்பின் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவும் பன்னாட்டு ஒலிம்பிக் குழு (IOC) மற்றும் ஆசிய ஒலிம்பிக் குழு ஆகியவற்றின் மேற்பார்வையின் கீழும் நடைபெறுகின்றன. ஆசியான் மாற்றுத் திறனாளர் விளையாட்டுக்கள் ஆசியான் மாற்றுத் திறனாளர் விளையாட்டுக்கள் என்பது பல்வேறுவகையான விளையாட்டுக்களை உள்ளடக்கி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியாகும். இது ஒவ்வொரு தென்கிழக்கு ஆசிய விளையாட்டுக்களின் பின்னரும் நடைபெறுகின்றது. இவ்விளையாட்டுக்களில் தென்கிழக்காசியாவைச் சேர்ந்த 11 நாடுகள் பங்குபற்றுகின்றன. இவ்விளையாட்டுக்கள் மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களின் பின்னர் தோற்றம் பெற்றதுடன் இவ்விளையாட்டுக்களில் மாற்றுத்திறனாளிகளும், கண்பார்வைக் குறைபாடு உள்ளவர்களும் பங்குபற்றுகின்றனர். ஆசியான் காற்பந்து வெற்றிக்கிண்ணம் ஆசியான் கால்பந்து வெற்றிக்கிண்ணம் என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காற்பந்தாட்டப் போட்டியாகும். இப்போட்டிகள் ஆசியான் காற்பந்துக் கூட்டமைப்பினால் நடாத்தப்படுவதுடன் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பினால் அங்கீகாரம் பெறப்பட்டவையாகவும் உள்ளன. இப்போட்டிகளில் தென்கிழக்காசிய நாடுகளின் தேசியக் காற்பந்து அணிகள் பங்குபற்றுகின்றன. இப்போட்டிகள் 1996 ஆம் ஆண்டு டைகர் கிண்ணம் என்ற பெயரில் தொடங்கி வைக்கப்பட்டதுடன் பின்னர் ஆசிய பசிபிக் பிரெவெரீஸ் நிறுவனத்தின் அனுசரணை ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதால் ஆசியான் காற்பந்து வெற்றிக்கிண்ணம் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. தற்பொழுது, இந்த காற்பந்து விளையிட்டு போட்டி, AFF Suzuki என பெயர்மாற்றம் கண்டுலுள்ளது. இவண்டிற்கான இறுதிக்கட்ட சுற்று வரும் 18 நவம்பர் முதல் 15 டிசம்பர் 2018 வரை நடைபெறும்.[61][62] ஆசியான் 2030 பீபா உலகக் கோப்பை ஏல உரிமை ஜனவரி 2011: ஆசியான் கூட்டமப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இந்தோனேசியாவின் லம்பொக் நகரில் நடத்திய சந்திப்பை அடுத்து 2030 ஆம் ஆண்டில் உலகக்கோப்பை காற்பந்தை நடத்தும் உரிமையை ஒரு தனி அமைப்பாகப் பெறத் தீர்மானிக்கப்பட்டது.[63] மே 2011: ஆசியான் 2030 ஆம் ஆண்டு உலகக்கோப்பை காற்பந்தை நடாத்த அதன் முயற்சியில் முன்னோக்கி செல்ல வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இச் சந்திப்பு ஜனவரியில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் தொடர்ச்சியாக நடைபெற்றது.[64] ஆசியான் போட்டிகள் தென்கிழக்கு ஆசிய விளையாட்டுக்கள் ஆசியான் பல்கலைக்கழக விளையாட்டுக்கள் ஆசியான் பாடசாலை விளையாட்டுக்கள் ஆசியான் மாற்றுத் திறனாளர் விளையாட்டுக்கள் ஆசியான் காற்பந்து வெற்றிக்கிண்ணம் ஆசியான் அழகிப் போட்டி உசாத்துணைகள் CS1 maint: extra text: authors list (link) குறிப்புகள் வெளி இணைப்புகள் அமைப்புக்கள் , retrieved 13 March 2007. , retrieved 13 March 2007. , retrieved 13 March 2007. உத்தியொகபூர்வ உச்சிமாநாடுகள் official site. Retrieved 16 September 2007. , retrieved 13 March 2007. 12–14 December 2005 in Kuala Lumpur, Malaysia. Retrieved 13 March 2007. ஆசியான் அமைப்புக்கள் பகுப்பு:அமைப்புகள் பகுப்பு:தென்கிழக்காசிய நாடுகள் பகுப்பு:உலக நாடுகளின் கூட்டமைப்புக்கள் பகுப்பு:ரமோன் மக்சேசே விருது பெற்றோர் பகுப்பு:தென்கிழக்காசியா
தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பில் எத்தனை நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன?
10
193
tamil
6f8e70c1e
சர்தார் வல்லப்பாய் படேல் (ஆகத்து 10, 1875 - டிசம்பர் 15, 1950) (Sardar Vallabhbhai Jhaverbhai Patel, குஜராத்தி: વલ્લભભાઈ પટેલ, இந்தி: सरदार वल्लभभाई पटेल) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். குஜராத் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார்.[1] சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லப்பாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டார். வாழ்க்கை வரலாறு சர்தா வல்லபாய் படேல் லேவா படேல் சமூகத்திலிருந்து ஒரு குஜராத்தி குடும்பத்தில் பிறந்தார். சர்தார் வல்லபாய் படேலின் சொந்த ஊர் கரம்சாத் ஆகும். இவருக்கு சோமாபாய், நர்சிபாய் மற்றும் விதால்பாய் பட்டேல் என்ற மூன்று அண்ணன்களும், காசிபாய் என்ற தம்பியும் தைபா என்ற தங்கையும் உடன் பிறந்தவர்கள் ஆவார். அவரது தந்தை சுவாமிநாராயணனின் சம்ப்ரதாயின் ஒரு பக்தராக இருந்தார். அவரது தந்தை 20 கிமீ தொலைவில் உள்ள சுவாமிநாராயண் கோயிலுக்கு நடந்தே அழைத்துச் செல்வார். அது அவரது உடலை கட்டுகோப்பாகவும் வலிமையாகவும் உருவாக்க உதவியது. படேல் தனது 22 வயதில் தன்னுடைய மெட்ரிக்குலேசன் கல்வியில் தேர்ச்சி அடைந்தார். பட்டேல் தனக்குள்ளாகவே வழக்கறிஞர் ஆக வேண்டும் என தீர்மானித்து இங்கிலாந்து சென்று வழக்குரைஞர் படிப்பு படித்தார். அவர் மற்ற வழக்குரைஞர்களின் புத்தகங்களை வாங்கி படித்து இரண்டு ஆண்டுகளில் தேர்ச்சி அடைந்தார். சாதனைகள் சோமநாதபுரம் கோயிலை கே. எம். முன்ஷியுடன் இணைந்து மீண்டும் எழுப்ப காரணமாக இருந்தவர். அகமதாபாத்தில் வக்கீல் தொழில் நடத்தியபோது உள்ளூர் மக்களின் பிரச்சினைகளுக்கு உதவி, பிரபலமானார். 1917-ம் ஆண்டு மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார். சுதேசி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது காந்திஜியின் உரையைக் கேட்டவர், வக்கீல் தொழிலை உதறி சுதேசி இயக்கத்தில் இணைந்தார். • குஜராத்தில் கேடா என்ற இடத்தில் பயங்கர பஞ்சம். ஆங்கிலேய அரசிடம் வரி விலக்கு கேட்டு விவசாயிகள் போரா டினர். அரசு பணியாததால் காந்தி, படேல் தலைமையில் வரிகொடாமைப் போராட்டம் வெடித்தது. அரசு பணிந்தது. வரி ரத்தானது. படேலின் முதல் வெற்றி இது! • பார்டோலி என்ற இடத்தில் விவசாயிகள் நலன் காக்க நடைபெற்ற மற்றொரு சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் படேலுக்கு வெற்றி கிடைத்தது. அப்போதிருந்து மக்களால் ‘சர்தார்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். அதன் பிறகு போராட்டங்களும் சிறைவாசமும் அவருக்கு வாடிக்கையாகிப் போனது. • வட்டமேஜை மாநாட்டு தோல்விக்குப் பிறகு காந்தி, படேல் கைது செய்யப்பட்டனர். எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது இருவருக்கும் நெருக்கம் வளர்ந்தது. • சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்டார். இந்திய விவசாயிகளின் ஆன்மாவாக கருதப்பட்டார். நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் பணியாற்றினார். • நாடு முழுவதும் ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்துகொண்டிருந்த 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்ததுதான் உள்துறை அமைச்சராக அவர் ஆற்றிய முதல் பணி. வி.பி.மேனனுடன் இணைந்து அகண்ட பாரதத்தை அமைத்தார். • அகண்ட பாரதம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. அந்த இலக்குக்காக சகல வழிகளையும் பின்பற்றினார். சர்ச்சைகள், எதிர்ப்புகள் எழுந்தாலும் இரும்பு மனிதராக நின்று சமாளித்தார். • 75-ம் வயதில் இறந்தார். 1991-ல் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஒற்றுமைக்கான சிலை இவருடைய நினைவாக குஜராத் மாநிலத்தில் ஓடும் நர்மதா நதிக்கரையில், பட்டேலின் 143 வது பிறந்த நாளில் ஒற்றுமைக்கான சிலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.[2] இதுவே உலகின் மிக உயரமான சிலையாகும் (182 அடி). மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு:இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் பகுப்பு:1875 பிறப்புகள் பகுப்பு:1950 இறப்புகள் பகுப்பு:குஜராத் மக்கள் பகுப்பு:1ஆவது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு:காந்தியவாதிகள் பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தேதி என்ன?
ஆகத்து 10, 1875
26
tamil
b6c6aeb7a
தமிழ்நாடு (Tamil Nadu) என்து இந்தியாவின் 29 மாநிலங்களில் ஒன்றாகும். தமிழ்நாடு, தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. இதன் தலைநகராகச் சென்னை உள்ளது. தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன. புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு மாநிலம் எல்லைகளைக் கொண்டுள்ளது. புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை வீச்செல்லை, ஆனை மலை வீச்செல்லை, பாலக்காடு கணவாய் ஆகியவையும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவையும் தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன. தமிழகம் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் சென்னை மாகாணம் என்றும் அழைக்கப்பெற்றது. இதனைத் தமிழ்நாடு என்று மாற்றக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன. சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார்[11]. பின்னர் மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது. தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் பரப்பளவில் 11வதாகவும் மக்கள்தொகையில் ஏழாவதாகவும் விளங்குகிறது. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பங்களிப்பதில் நான்காவதாகவும் (2010இல்)[12] உள்ளது. 2006ஆம் ஆண்டில் மனித வளர்ச்சிச் சுட்டெண்ணில் பத்தாமிடத்தில் (ஒன்றிய ஆட்சிப்பகுதிகளையும் சேர்த்தால் பதினாறாவது இடத்தில்) இருந்தது.[13] மேலும் இந்தியாவிலேயே அதிக நகர்ப்புறமாக்கப்பட்ட மாநிலமாகத் திகழ்கிறது.[14] இந்தியாவின் 6% மக்கள்தொகையே கொண்டிருந்தும் மிகக் கூடுதலான வணிக நிறுவனங்கள் கொண்ட மாநிலமாகவும் (10,56%) மொத்த வேலை வாய்ப்புகள் கொண்ட மாநிலங்களுள் இரண்டாவதாகவும் (9,97%) விளங்குகிறது[15]. கி.மு. 500க்கும் முன்பிருந்தே இப்பகுதியில் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 20000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமை வாய்ந்த தமிழ் மொழி கல்வெட்டுக்களும் இலக்கியமும் காணக் கிடைக்கின்றன.[16]தொன்கதை பாரம்பரியத்தின் படி தமிழ் மொழியானது சிவ பெருமானால் அகத்தியருக்கு கற்பிக்கப்பட்டதாக நம்பப் படுகின்றது[17][18][19][20][21][22][23][24]. தமிழ்நாட்டில் பல இயற்கை வளங்கள், தமிழர் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன; எட்டு உலக பாரம்பரியக் களங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.[25][26] புவியமைப்பு தமிழ்நாடு இந்திய தீபகற்பத்தின் தென் கோடியில் அமைந்துள்ளது. வடக்கில் கருநாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களும், மேற்கில் கேரளாவும் உள்ளன. யூனியன் பிரதேசமாகிய புதுச்சேரி (முன்பு பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டது) தமிழ் நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்துக்குத் தென்கிழக்கில் இலங்கைத் தீவு உள்ளது. நாட்டின் ஏனைய பல பகுதிகளைப் போலன்றி, தமிழ்நாடு, அக்டோபர் – திசம்பர் மாதங்களில் "வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று" மூலமே மழை பெறுகிறது. இக்கால கட்டத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகும் புயற்சின்னங்களின் மூலம் பெய்யும் மழையை உழவர்கள் பெரிதும் நம்பியுள்ளனர். இம்மாநிலத்தின் முதன்மையான ஆறான காவிரி ஆறு வடக்கே கர்நாடக மாநிலத்தில் குடகு மலையில் உருவாகித் தமிழ்நாட்டில் பாய்கிறது. வைகை, தாமிரபரணி, பாலாறு ஆகியவை பிற முதன்மையான ஆறுகளாகும். மதராஸ் என்று 1996 வரை அழைக்கப்பட்டு வந்த சென்னையே தமிழ்நாடு மாநிலத்தின் மிகப் பெரிய நகரமும் அதன் தலைநகரமுமாகும். பதின்மூன்று கிலோமீட்டர் நீளமுடையதும், உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையுமான, மெரீனா கடற்கரை சென்னையில் உள்ளது. மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், திண்டுக்கல், திருநெல்வேலி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தூத்துக்குடி மற்றும் வேலூர் தமிழ் நாட்டின் ஏனைய பெரிய நகரங்களாகும். வரலாறு தமிழ்நாடு பண்டைக் காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் ஆளப்பெற்றது. மேலும், இம்மாநிலம் பல கோயில்களையும், சிற்பங்களையும் பெற்ற கலை அம்சம் கொண்ட பகுதியாக விளங்குகிறது. தமிழகத்தின் எல்லைகளைத் தொல்காப்பியப் பாடல் வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம் என்று வரையறுக்கிறது (தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம், 1-3). தொன்றுதொட்டே தமிழ் மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு தமிழகம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அதற்குச் சான்றாகக் கீழ்வரும் இலக்கியக் குறிப்புகளைக் காட்டலாம்: வையக வரைப்பில் தமிழகம் கேட்ப (புறநானூறு, 168:18) இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்க (பதிற்றுப்பத்து, இரண்டாம் பத்து, பதிகம்: 5) இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய (சிலப்பதிகாரம், அரங்கேற்றுகாதை: 38) சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் (மணிமேகலை, 17: 62) தமிழ்நாடு, ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழுகின்ற தமிழ் இன மக்களின் தோற்றம் தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்திருந்த தமிழர்கள், சிந்து வெளி நாகரீகத்துக்கு உரியவர்களுள் ஒரு பிரிவினராக இருந்தனர் என்று கருதுகிறார்கள். இவ்வினத்தவருடைய தெற்கு நோக்கிய பெயர்வு, ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கையுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. இக்கொள்கைப்படி, வடக்கிலிருந்து வந்த ஆரிய ஆக்கிரமிப்பு தமிழர்களை இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகியவை அடங்கிய தென்னிந்தியாவுக்குள் ஒடுக்கியதாகக் கருதப்படுகின்றது. வரலாற்று உண்மைகள் எவ்வாறு இருப்பினும், தற்காலத் தமிழ் மக்களுடைய அடையாளம் மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது எனலாம். இன்றைய தமிழ்நாட்டையும் உள்ளடக்கிப் பரந்திருந்த பண்டைய தமிழர் நாடு, பல்வேறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. இவற்றைக் காலத்துக்குக் காலம் பல அரச வம்சங்கள் ஆண்டுவந்தன. இவற்றுள் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கவர்கள்,வேளிர்கள் பாண்டியர், சேரர், சோழர், பல்லவர், சாளுக்கியர், விஜய நகரத்தார், நாயக்கர் என்போராவர். மேலே குறிப்பிடப்பட்ட மதுரை தற்கால மதுரைக்குத் தெற்கே அமைந்திருந்து பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் முற்றாக அழிந்து போனதாகப் பழந் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியக்கிடைக்கின்றது. பாண்டிய நாடு கல்வியிலும், வணிகத்திலும் சிறந்து விளங்கியது. தமிழகத்தின் மக்கள் அக்காலத்தின் பேரரசுகளாகிய கிரேக்க, ரோமப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவ்வப்போது பல்லவர்களாலும், சோழர்களாலும் அடக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் ஆற்றல் மிக்க அரச பரம்பரைகளில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர். கிபி 1 தொடக்கம் 4 ஆம் நூற்றாண்டுவரை சங்ககால மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர் கிபி முதலாம் நூற்றாண்டு தொடங்கி நான்காம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள் சேரர்களில் செங்குட்டுவன் மன்னனும், சோழர்களில் கரிகால் சோழன் மன்னனும், பாண்டியர்களில் நெடுஞ்செழியன் மன்னனும் பெயர் பெற்ற ஆட்சியாளர்களாகத் திகழ்ந்து, மிகவும் புகழ்பெற்று விளங்கினர். சேரர்கள் தற்கால கேரள மற்றும் கொங்கு மாவட்டங்களிலும், சோழர்கள் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளிலும், பாண்டியர்கள் மதுரை, நெல்லை மற்றும் தென் கேரள மாவட்டங்களிலும் செல்வாக்கு செலுத்தினர். இவர்கள் கூட்டணியால் தமிழகம் வடதிசை மவுரிய குப்தா பேரரசுகளின் ஆளுகையினை எதிர்த்து தனியரசுகளாக விளங்கின இவர்களின் போர் நடவடிக்கைகளில் சிறந்து விளங்கியதாக நம்பப்படுகிறது. கிபி 4 தொடக்கம் 9 ஆம் நூற்றாண்டுவரை கி.பி. நான்காம் நூற்றாண்டு முற்பகுதியில் களப்பிரர் என்னும் குலம் தெரியாத அரசர்கள் தமிழகத்தை ஆண்டனர். அவர்கள் மூவேந்தர்களையும் அடக்கி ஆண்டதால் அவர்களின் வரலாறு தெரியாமல் போயினும், பல்லவர் என்னும் அக்கால புதிய அரசர்கள் சுயாட்சி செலுத்தியதால் அவர்களைப் பற்றி மட்டும் குறிப்பிடத் தக்க ஆவணங்கள் கிடைத்துள்ளன. இக்களப்பிர அரசர்கள் கிபி 4 தொடக்கம் 6 ஆம் நூற்றாண்டுவரை ஆண்ட காலத்தைத் தமிழகத்தின் இருண்ட காலம் என்று வரலாற்றாளர்கள் கூறுவதுண்டு. கி.பி. நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சிறந்த கோவில்களை அமைத்த பல்லவர்கள் முன்னணிக்கு வந்தனர். இவர்கள் தென்னிந்தியாவில் 400 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். காஞ்சிபுரத்தைத் தலை நகரமாகக் கொண்டு தமிழ் நாட்டின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் சோழரைத் தோற்கடித்தனர். இவர்கள் செல்வாக்கு இலங்கை வரை பரவியிருந்ததாகக் கருதப்படுகிறது. முதலாம் மகேந்திரவர்மனும், அவனுடைய மகனான நரசிம்மவர்மனும் பல்லவர்களுள் சிறந்து விளங்கிய அரசர்களாவர். பல்லவர் கட்டிடக்கலை பல்லவர் காலத்திலேயே வளர்ச்சியடைந்து உருப்பெற்றது. இறுதிப் பல்லவ மன்னன் அபராசிதன் ஆவான். இவன் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டதுடன் பல்லவராட்சி தமிழ் நாட்டில் முடிவுக்கு வந்தது. இக்காலக்கட்டத்தில் (கிபி 300 – கிபி 600) பெளத்தம் தமிழகத்தில் மிகவும் செல்வாக்கோடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.[27] 9 தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டுவரை கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இராசராச சோழன் மற்றும் அவனது மகனான இராசேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் சோழர், தென்னிந்தியாவில் ஆற்றல் மிக்கவர்களாக உருவெடுத்தனர். இவர்களுடைய பேரரசு, மைய இந்தியா, ஒரிசா, மற்றும் வங்காளத்தின் சில பகுதிகள்வரைகூடப் பரவியிருந்தது. இராசராச சோழன் கிழக்கிலிருந்த சாளுக்கிய அரசர்கள் மற்றும் சேர மன்னர்களை வீழ்த்தினான். அத்துடன் பாண்டிய அரசிடமிருந்து இலங்கையின் சில பகுதிகளையும் கைப்பற்றினான். இராசேந்திர சோழன் மேலும் முன்னேறி அந்தமான் நிக்கோபார் தீவுகள், இலட்சத்தீவுகள், சுமத்ரா, சாவா, மலேயா மற்றும் பெகு தீவுகளையும் தன் கப்பற்படையைக் கொண்டு கைப்பற்றினான். அத்துடன் தற்போதைய பீகார் மற்றும் வங்காளப் பகுதிகளை ஆண்டு வந்த மகிபாலனையும் வீழ்த்தினான். தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் தலைநகரை உருவாக்கினான். பதின்மூன்றாம் நூற்றாண்டுவாக்கில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது. 14ஆம் நூற்றாண்டு 14ஆம் நூற்றாண்டில் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர். ஆயினும் அந்த எழுச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1316 இல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்சி ஆட்சியாளர்கள், மதுரையை முற்றுகையிட்டு சூறையாடினர். இசுலாமியர்களின் படையெடுப்பு சோழர்களையும் பாண்டியர்களையும் ஆற்றலற்றவர்களாக்கி இசுலாமிய "பாமினி" ஆட்சிக்கு வித்திட்டது. இசுலாமியப் படையெடுப்புக்கு பதிலடி தரும் வண்ணம் பல்வேறு சிற்றரசுகள் சேர்ந்து விசயநகர பேரரசைத் தோற்றுவித்தன. இப்பேரரசின் பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வையிட நாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள் நியமிக்கப் பட்டனர். அம்பியை தலை நகராகக் கொண்டிருந்த விசய நகரப் பேரரசு செல்வச் செழிப்போடும் அமைதியுடனும் திகழ்ந்தது. ஆனால், 1564 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த தலிகோட்டா போரில் தக்காணப் பீடபூமியைச் சேர்ந்த சுல்தான்களால் விசயநகர ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் ஆட்சிக்கடங்கிய பகுதிகள் யாவும் நாயக்கர்களிடையே பிரித்தளிக்கப்பட்டன. நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு அரசியல் அமைப்புகள் மாற்றி அமைக்க பட்டன பாளையங்கள் உருவாக்கப்பட்டு கிராம சுய ஆட்சி முறை ஒழிக்க பட்டது. தஞ்சை மற்றும் மதுரையைச் சேர்ந்த நாயக்கர்கள் புகழ் பெற்று விளங்கியதோடு பழங்கால கோயில்களைப் புதுப்பிக்கவும் செய்தனர். இன்றைய கேரளாவும் மலபாரை ஒட்டிய பகுதிகளும் சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி ரோமானியர்களுடனான வாணிபத்திற்கு ஏதுவாக இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பு நிகழும் வரை சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய நிலப்பகுதி பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது. 17 ஆம் நூற்றாண்டு 1639 இல்ஆ ங்கிலேயர்கள் மதராசில் (தற்பொழுது சென்னை என்று அழைக்கப்படுகிறது) கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவியபிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய பகுதி தொடங்கியது. தமிழ் நாட்டு சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பிரித்தாண்டு, அவர்களின் மேல் தங்கள் அதிகாரத்தைச் செலுத்தத் தொடங்கினர். தமிழ்நாடும் அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவும் மெல்ல மெல்ல ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் அதிகாரத்தைத் தம் வசப்படுத்திய இந்தக் காலக்கட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்களும் கணிசமானோர் இருந்தனர். வீரபாண்டிய கட்டபொம்மன்,அனந்த பத்மநாப நாடார், பூலித்தேவன், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வாண்டாயத் தேவன், அழகு முத்துக்கோன், வீரன் சுந்தரலிங்கம், ஒண்டி வீரன், பெரிய காலாடி, தீரன் சின்னமலை, போன்ற ஆட்சியாளர்கள் வெள்ளையரை எதிர்த்துப் போரிட படைகளைத் தலைமையேற்று நடத்தினர். 20 ஆம் நூற்றாண்டு 1947இல் இந்தியா விடுதலை அடைந்தபோது, மதராசு மாகாணம் (படம்) (The Madras Province) மதராசு மாநிலம் ஆனது. ஆனால் 1948ஆம் ஆண்டுவரை புதுக்கோட்டை சமஸ்தானம் தொண்டைமான் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. இதுவே இந்தியாவோடு சேர்ந்த கடைசி சில சமஸ்தானங்களுள் ஒன்றாகும். தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை மதராசு மாநிலத்தின் கீழ் வந்தன. 1953இல் மதராசு மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்களுள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும் தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராசு மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டது. 1956இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் மதராசு மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டது. 1969இல், மதராசு மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ‎திருவாங்கூர்-கொச்சி மாநிலத்தின் தென்பகுதியில் தமிழ் பேசும் மக்கள் வாழிடம் கன்னியாகுமரி மாவட்டமாக உருவாக்கப்பட்டு, நவம்பர் 1, 1956இல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. பாரம்பரியம் தமிழ்நாடு, இன்றும் செழிப்புடன் விளங்கும், வளமான இலக்கிய, இசை, நடனப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. இது இந்தியாவின் அதிக அளவு கைத்தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்று. சுப்பிரமணிய பாரதி,, வ. உ. சிதம்பரம்பிள்ளை, சி. வி. இராமன், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ,பெருந்தலைவர் காமராசர், சுப்பிரமணியன் சந்திரசேகர், ஆர். கே. நாராயண், ஆர். வெங்கட்ராமன், சி. என். அண்ணாதுரை, சீனிவாச ராமானுசன், அப்துல் கலாம், பாரதிதாசன், அயோத்தி தாசர், திரு.வி.க., கண்ணதாசன், என்.எஸ்.கிருட்டிணன்,ஈ.வே.ரா பெரியார் ஆகியோர் மாநிலத்தின் நன்கு அறியப்பட்டவர்களில் சிலராவர். இவர்களோடு, இளங்கோவடிகள், கண்ணகி, திருவள்ளுவர், தொல்காப்பியர், ஔவையார், கம்பர், கரிகால்சோழன், இராசராச சோழன், போன்ற முற்காலத்தவரும் இன்றும் நினைவில் இருப்பவர்களாகும். அரசியல் தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234. நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39. 1986 வரை தமிழ் நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர். தமிழ் நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகளாகத் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை விளங்குகின்றன. (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), இந்திய தேசிய காங்கிரசு, இந்தியக் குடியரசுக் கட்சி, அகில இந்திய பார்வார்ட்டு பிளாக், இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், பாரதிய ஜனதா கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், முஸ்லீம் லீக்,அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன. பெரியார் 1916இல் தோற்றுவித்த திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து, 1949 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை சி. என். அண்ணாதுரை தோற்றுவித்தார். 1947 இல் இந்திய விடுதலைக்குப் பிறகு 1967 வரை தமிழ்நாட்டை இந்திய தேசிய காங்கிரசு ஆண்டது. 1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. 1972 இல் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ம. கோ. இராமச்சந்திரன் தோற்றுவித்தார். 1977இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலில் ஆட்சியைப் பிடித்தது. 1967 முதல் 2016 இல் கடைசியாக நடந்த சட்டமன்றத் தேர்தல்வரை தி.மு.க. அல்லது அ.இ.அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்று அல்லது அக்கட்சிகள் தலைமை வகிக்கும் கூட்டணிகள் பெரும்பான்மை தொகுதிகளை வென்று வருகின்றன. தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தல்களில் பல கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதுண்டு என்றாலும், இதுவரை தனிக்கட்சி ஆட்சியே நடைபெறுகிறது. முதன் முறையாகத் தி.மு.க. ஒரு அறுதிப் பெரும்பான்மையற்ற சிறுபான்மை அரசாகச் (2006–2011) செயல்பட்டது. இருப்பினும், தமிழக கட்சிகள் நடுவண் அரசில் செல்வாக்கோடு விளங்கிக் கூட்டணி ஆட்சி அமைக்க உதவவும், பங்கேற்கவும் செய்கின்றன. மாவட்டங்கள் தமிழ் நாட்டில் தற்போது 33 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன. இவற்றுள் விதிவிலக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில், நீலமலை மாவட்டத்தின் தலைநகர் உதகமண்டலம் என்றுள்ளன. தற்போதுள்ள மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாகப் பெயர்மாற்றம் பெற்றுவந்துள்ளன. ஒரு சில காலகட்டங்களில் மாவட்டங்களின் பெயருடன் காலம் சென்ற தமிழக தலைவர்கள் பெயரும் இணைத்துப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தன. தற்போது அப்பெயர்கள் நீக்கப்பட்டு, மாவட்டங்களின் பெயர்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன. இந்த 33 மாவட்டங்களில் 288 வருவாய் வட்டங்கள் உள்ளது. அரியலூர் மாவட்டம் இராமநாதபுரம் மாவட்டம் ஈரோடு மாவட்டம் கடலூர் மாவட்டம் கரூர் மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் கிருட்டிணகிரி மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் சிவகங்கை மாவட்டம் சென்னை மாவட்டம் சேலம் மாவட்டம் தஞ்சாவூர் மாவட்டம் தருமபுரி மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம் திருப்பூர் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளூர் மாவட்டம் திருவாரூர் மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் தேனி மாவட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் நாமக்கல் மாவட்டம் நீலமலை மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம் பெரம்பலூர் மாவட்டம் மதுரை மாவட்டம் விருதுநகர் மாவட்டம் விழுப்புரம் மாவட்டம் வேலூர் மாவட்டம் நகரங்கள் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் முதல் 15 பெரிய நகரங்கள்:[28] சென்னை கோயம்புத்தூர் மதுரை திருச்சி சேலம் திருப்பூர் ஈரோடு திருநெல்வேலி வேலூர் தூத்துக்குடி திருவண்ணாமலை திண்டுக்கல் தஞ்சாவூர் நாகர்கோவில் கடலூர் உள்ளாட்சி அமைப்புகள் தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளும், 125 நகராட்சி மன்றங்களும், 529 பேரூராட்சிகளும், 385 ஊராட்சி ஒன்றியங்களும் மற்றும் 12,524 ஊராட்சி மன்றங்களும் உள்ளது. மக்கள் வகைப்பாடு தமிழ்நாடு இந்தியாவின் ஏழாவது மக்கட்தொகை மிகுந்த மாநிலமாகும். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 72.147.030 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 36.137.975 மற்றும் பெண்கள் 36.009.055 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,423,832 ஆக உள்ளது. அதில் சிறுவர்கள் 3.820.276 ஆகவும்: சிறுமிகள் 3.603.556 ஆகவும் உள்ளனர். மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.61% ஆக உள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 996 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 555 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் படிப்பறிவு 51,837,507 (80.09 %) ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 28.040.491 (86,77 %) ஆகவும், பெண்களின் படிப்பறிவு 23.797.016 (73,44 %) ஆகவும் உள்ளது. நகரப்புறங்களில் 48,40% மக்களும், கிராமப்புறங்களில் 51,60 % மக்களும் வாழ்கின்றனர்.[29] சமயம் தமிழகத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 63.188.168 (87,58 %) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 4,229,479 (5,86 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 4.418.331 (6,12 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள்தொகை 14.601 (0,02 %) ஆகவும், சமண சமய மக்கள்தொகை 89.265 (0,12 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 11.186 (0,02 %) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 7.414 (0,01 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 188.586 (0,26 %) ஆகவும் உள்ளது. மொழிகள் 89 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். தெலுங்கு (5,65%), கன்னடம் (1,68%), உருது (1,51%), மலையாளம் (0,89%) ஆகிய மொழிகளும் பேசப்படுகின்றன. பழங்குடிகள் தமிழகத்தின் மக்கள்தொகையில் 3.5% மக்கள் பழங்குடிகள் (2001 கணக்கெடுப்பு). மாநிலத்தில் 40-க்கும் மேற்பட்ட பழங்குடிகள் உள்ளனர். நீலமலை, ஆனைமலை, கொல்லிமலை ஆகிய பகுதிகளில் குறிப்பிடத் தக்க எண்ணிக்கையில் தோடர், காடர், குறும்பர், காணிக்காரர், மலமலசர், பணியர், பழியர் முதலிய பழங்குடி இன மக்கள் வாழ்கின்றனர். பொருளாதாரம் தமிழ்நாடு, நல்ல தொழில் வளர்ச்சி கண்டுள்ள ஒருசில இந்திய மாநிலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. தமிழக மக்கள் தொகையில் குறிப்பிடத் தகுந்த பகுதியினர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் பொறியியல், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்கள், நெசவாலைகளுக்கும், ஆடை ஏற்றுமதி, விவசாய உபகரணங்கள், மோட்டார், கிரைண்டர் உற்பத்திக்கும், ஈரோடு மஞ்சள் சாகுபடி மற்றும் ஆடை ஏற்றுமதிக்கும், கரூர் இல்ல உப-சவுளி ஏற்றுமதி மற்றும் கனரக வாகன கூடு கட்டும் தொழில்களுக்கும், திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கும், சேலம் இரும்பு உருக்கு, அலுமினியம், ஆலைகளுக்காகவும், சவ்வரிசி, மாம்பழ, பட்டு சேலை, பருத்தி உற்பத்திக்கும் , கனரக தொழிற்சாலைகளுக்கும் ,மின்சார உற்பத்திக்காகவும், கனரக வாகனங்கள் கட்டுமானத்திலும், நிலக்கடலை, கரும்பு, தக்காளி போன்ற பயிர் உற்பத்திக்கும், நாமக்கல் கோழிப் பண்ணைகளுக்கும், சிவகாசி அச்சுத்தொழில், பட்டாசு உற்பத்திக்கும், காவிரி பாசன பகுதியில் அமைந்துள்ள திருச்சி, தஞ்சாவூர் போன்ற பகுதிகளும் கன்னியாகுமரி மாவட்ட நாஞ்சில் நாட்டுப் பகுதியும் விவசாயத்திற்கும், வேலூர் தோல் தொழிலுக்கும், சென்னை வாகன உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களுக்கும் பெயர் பெற்றுள்ளன. பாலிவுட் என அழைக்கப்படும் மும்பை திரைப்படத் துறைக்கு அடுத்ததாக, தமிழகத் திரைப்படத்துறை இந்தியாவின் இரண்டாவது பெரிய திரைப்படத் தொழில் மையமாகக் கோலிவுட் என்னும் பெயரோடு (கோடம்பாக்கம் + ஹாலிவுட் என்பதன் பெயர்த் தழுவல்) திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும், பெருமளவில் தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. தற்போதைய விலையில், 2011–2012 ஆண்டு கணக்கின்படி, தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி – 132.4 பில்லியன் அமெரிக்க டாலர் [30]. இந்தியாவில் தொழிற்சாலைகள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் - 26122 [31] மொத்த தொழில்துறை உற்பத்தியில் நாட்டில் முதலிடம். வெளிநாட்டு நேரடி முதலீட்டில் இந்தியாவில் முதல் மூன்று மாநிலங்களில் ஒன்று. இந்தியாவில் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில், தமிழ்நாட்டின் பங்கு 35 % சென்னையின் தானுந்துத் தயாரிப்பு திறன்: தானுந்து 13,80,000, வர்த்தக வாகனங்கள்: 3,61,000, ஸ்யுவி: 1,50,000 தானுந்துத் தொழிற்சாலைகள்: யுன்டாய், போர்டு, நிசான், அசோக் லேய்லான்ட் சென்னையில் உள்ள டயர் தயாரிப்பு நிறுவனங்கள்: எம்.ஆர்.எஃப், அப்பல்லோ டயர்ஸ், மிஷ்ஷலின், ஜெ.கெ டயர்ஸ் இலத்திரனியல் தொழிற்துறை: நோக்கியா, பாக்ஸ்கான், பிளக்ஸ்டிராநிக்ஸ், டெல், பிஒய்டி, வீடியொக்கான், சாம்சங், மோட்டரோலா இந்தியாவில் கறி-கோழி வளர்ப்பில், தமிழ்நாடு இரண்டாவது பெரியது [32]. இந்தியாவில் பால் உற்பத்தியில், தமிழ்நாடு இரண்டாவது பெரியது [33]. மின்சாரம்: 18083 மெகா வாட்(இரண்டாவது பெரியது) சிறப்பு பொருளாதார மண்டலம்: 92, தொழிற் பூங்கா: 19 [34] அதிக சாலை அடர்த்தி (மூன்றாவது பெரியது). சுகாதாரம், வீடமைப்பு, கல்வி ஆகிய துறைகளில் வளர்ச்சி அடைந்த மாநிலம். .ரகுராம் ராஜன் அறிக்கையின் படி தமிழ்நாடு இந்தியாவின் மூன்றாவது முன்னேறிய மாநிலம்[35]. தமிழ்நாட்டின் ஏழ்மை நிலை ரகுராம் ராஜன் அறிக்கையின் படி[2013ஆம் ஆண்டு], தமிழ்நாட்டின் ஏழ்மைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் விகிதம் 11.28 விழுக்காடு. இது மற்ற இந்திய மாநிலங்களை ஒப்பிடுகயில், தமிழ்நாட்டின் ஏழ்மை விகிதம் குறைவு [36]. 2004/2005ஆம் ஆண்டுகள் எடுத்த கணக்கெடுப்பு பணியின்போது 29.4 சதவீதத்தினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்தனர்.[37] ஆனால் இது 1999/00 கணிப்பீட்டின் படி 12-17 மில்லியன் மக்கள் அல்லது 21 விழுக்காடு மட்டுமே இருந்தது.[38] கல்வி அறிவு மற்றும் சமூக வளர்ச்சி சமூக முன்னேற்றத்தின் குறியீடுகளான (மனித வளர்ச்சிச் சுட்டெண்) பரவலான கல்வியறிவு, ஆண் - பெண் சமத்துவம், மேம்பட்ட பொது சுகாதாரம், நீண்ட சராசரி மனித ஆயுள், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, வேலை வாய்ப்புகள், தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியாவின் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாகத் தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாட்டு மக்களின் கல்வியறிவு இந்தியாவின் சராசரியைவிட அதிகம். இங்கு 2001–2011 காலக் கட்டத்தில் 74,04%ல் இருந்து 80,33% என்று கல்வியறிவு அதிகரித்தது. இன்று தமிழ்நாட்டில் 86,81% ஆண்களும் 73,86% பெண்களும் கல்வியறிவுடையவர் ஆவர். தமிழ்நாட்டில் 37 பல்கலைக்கழகங்கள், 454 பொறியியல் கல்லூரிகள், 1.150 கலைக் கல்லூரிகள், 2550 பள்ளிக்கூடங்கள் மற்றும் சுமார் 5.000 மருத்துவமனைகள் உள்ளன. இங்கு இரண்டு நடுவண் அரசு கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவை சென்னையில் அமைந்த இந்திய தொழில்நுட்பக் கழகம்,பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சியில் அமைந்த தேசிய தொழில்நுட்ப கழகம் ஆகும். மேலும் புகழ் மிக்க சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம்,அண்ணாமலை பல்கலைக்கழகம்,சேலம் சோனா பொறியியல் கல்லூரி்,பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம், வேலூர் கிருத்துவ மருத்துவ கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர்,பச்சையப்பன் கல்லூரி ,சென்னை, இலயோலாக் கல்லூரி ஆகியனவும் உள்ளன. தமிழகத்தில் வருடந்தோறும் 130.000 பேர் பொறியியல் படிப்பு முடித்துத் தேர்ச்சி பெறுகின்றனர். இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது. 525 பொறியியல் கல்லூரிகள்– 226034 பொறியியல் பட்டதாரிகள் (2012). 447 பலதொழில்நுட்பப் பயிலகம் – 171637 தொழில்நுட்பர்கள் (2012). 1622 தொழில் பயிற்சி நிறுவனம் – 173746 (2012). மருத்துவ கல்லூரி – 28 (ஆண்டு – 2012)[39]. பண்பாடு தமிழர் பண்பாடு நீண்ட கால வரலாறு கொண்டது. இலக்கியம், இசை, நாடகம் என்பன சார்ந்த பல்வேறு கலை வடிவங்கள் தமிழ் நாட்டில் சிறப்பான நிலையில் உள்ளன. பரத நாட்டியம், கர்நாடக இசை, திராவிடக் கட்டிடக்கலை போன்ற புகழ் பெற்ற உயர் கலை வடிவங்கள் பெரும்பாலும் தமிழகத்தில் வளர்ச்சியடைந்து சிறப்பெய்தியவை. மொழியும் இலக்கியமும் தமிழ் நாட்டின் ஆட்சி மொழி தமிழ் ஆகும். ஆங்கிலமும் அலுவல் மொழியாகப் பயன்படுகிறது. இந்தியா செம்மொழியாக அங்கீகரித்துள்ள மொழிகளில் தமிழ் முதலிடத்தில் உள்ளது. தமிழரின் பண்பாட்டில் தமிழ் மொழி மிக இன்றியமையாத இடத்தை வகிக்கிறது. சங்க இலக்கியங்கள் எனப்படும் தமிழின் மிகப் பழமையான இலக்கியங்கள் யாவும் செய்யுள் வடிவில் இயற்றப்பட்டவையாகும். தொன்மைக் காலம் முதலே இலக்கியம் மட்டுமல்லாமல் மக்களின் வாழ்க்கைக்கும் இலக்கணம் கண்ட மொழி தமிழ் மொழியாகும். திருக்குறள் என்ற அறநூல் தமிழின் மிகச் சிறந்த நீதிநூல் ஆகும். இது உலகின் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தன்னை இன்னாரென அடையாளம் காட்டாத ஒரு சிறந்த தமிழ்ப் புலவரால் இயற்றப்பட்டது இந்நூலாகும். நாடு, மொழி, இனம் கடந்து உலக மக்கள் யாவருக்கும் பொதுவான நீதியைக் கூறுவதால் திருக்குறள் உலகப் பொதுமறையெனப் போற்றப்படுகிறது. கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை (திருக்குறள் 400) தமிழின் இலக்கியங்களிலிருந்து அக்கால தமிழ் மக்களின் தலைசிறந்த பண்பாடு, வாழ்க்கை முறை போன்ற கூறுகளை நாம் அறியமுடிகிறது. இந்தியாவின் முதல் நூல்கள் தமிழிலேயே அச்சாயின. தமிழகத்தின் முதல் அச்சுக்கூடம் புன்னைக்காயலில் 1578இல் போர்த்துகீசியரால் நிறுவப்பட்டது.[40] பின்னர் தரங்கம்பாடி அச்சுக்கூடத்திலும் சென்னையிலும் ஏராளமான தமிழ் இலக்கியங்கள் அச்சுவடிவம் பெற்றன. இந்திய விடுதலைப் போரில் மக்களின் விடுதலை உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கு தமிழ் கவிஞர்களான பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் கவிதைகள் உதவியாய் இருந்தன. தற்காலத்தில் வாலி, வைரமுத்து, தாமரை போன்ற தமிழ்க் கவிஞர்கள் கவிதை படைக்கின்றனர். தமிழ் எழுத்தாளர்களால் புதினங்கள், சிறுகதைகள், பெருங்கதைகள் எனத் தமிழ் நூல்கள் வெளிவருகின்றன. போக்குவரத்து தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து மூலம் சிறு கிராமங்களை இணைப்பதால் போக்குவரத்து வளர்ச்சி அடைந்துள்ளது.இரயில் போக்குவரத்து மூலம் பெரும்பான்மையான நகரங்களையும், விமான போக்குவரத்து மூலம் முக்கிய நகரங்களையும் இணைக்கின்றன. விழாக்கள் பொங்கல் திருநாள் (தமிழர் திருநாள் அல்லது உழவர் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது), தமிழர்கள் கொண்டாடும் முதன்மையான திருநாள் ஆகும். தமிழ் மாதமான தை முதல் நாள் (சனவரி 14 அல்லது 15)-ல் இத்திருநாள் கொண்டாடப்படுகிறது. நோன்புப் பெருநாள், பக்ரீத், முகரம் இசுலாமியப் புத்தாண்டு பொங்கல் தவிர தீபாவளி, தைப்பூசம், வினாயகர் சதுர்த்தி, சரசுவதி (கல்விக் கடவுள்) பூசை, ஆயுத பூசை , கிறிஸ்துமஸ், புனித வெள்ளி போன்ற சமயம் சார்ந்த திருநாட்களும் கோடைக்கொண்டாட்டமாம் தமிழ் புத்தாண்டு திருநாளும் (சித்திரை மாதம் முதல் நாள் - ஏப்ரல் 13 அல்லது 14 ) மற்றும் ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் நடைபெறுகின்றன. சுற்றுலாத்துறை தமிழ்நாடு அழகிய நிலப் பகுதிகள், பாரம்பரியச் சின்னங்கள் நிறைந்த சுற்றுலா முதன்மைத்துவம் உள்ள மாநிலமாகும். தமிழ்நாடு, திராவிட கட்டிடக்கலை பாணியைப் பிரதிபலிக்கும் கோயில்களுக்குப் புகழ் பெற்றது. இக்கோயில்களுக்கு வியக்க வைக்கும் கோபுரங்களும் ரதங்களும் அழகு சேர்க்கின்றன.இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவிலின் மூன்றாம் பிரகாரம், உலகின் மிகப் பெரியதாகும். சோழர் கால தஞ்சை பெரிய கோவிலும் பல்லவர் கால மாமல்லபுரம் சிற்பங்களும் கோவில்களும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இராமநாதபுரம், தஞ்சை, மதுரை, சுவாமிதோப்பு காஞ்சி,சேலம்,தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்,மேச்சேரி பத்ரகாளியம்மன் மற்றும் செங்காட்டூர்(சேலம்) ஆகியவை கோயில் நகரங்களாகத் திகழ்கின்றன. கன்னியாகுமரி கடல் முனையில் அமைந்துள்ள வள்ளுவர் சிலையும் காண வேண்டிய இடமாகும். எழில் கொஞ்சும் நீலகிரி மற்றும் கோடைக்கானல் மலைப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப் பகுதிகள், கிழக்குக் கடற்கரை, ஏற்காடு, மேட்டூர், பூலாம்பட்டி போன்ற மனம் கவரும் தலங்களும் உண்டு. இவற்றையும் பார்க்கவும் தமிழ்நாட்டுப் பொருளாதாரம் தமிழ்நாடு வேளாண்மைத் தொழிற்துறை தமிழ்நாடு இலத்திரனியல் தொழிற்துறை தமிழ்நாடு தானுந்து தொழிற்துறை தமிழ்நாட்டு ஓவியக் கலை தமிழ்நாட்டு ஊர்களும் உணவுகளும் தமிழ்நாட்டு இந்துத்துவ அமைப்புகள் தமிழ்நாட்டு தொழிற்துறைகள் தமிழ்நாட்டு வேதிப்பொருள் தொழிற்துறை தமிழ்நாட்டு அறிவொளி இயக்கம் தமிழ்நாட்டு சீர்திருத்தங்கள் தமிழ்நாட்டு ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்கள் தமிழ்நாட்டு தலித் அமைப்புகள் தமிழக வரலாறு தமிழக ஏரிகள் தமிழ்நாடு துடுப்பாட்ட அணி தமிழ்நாட்டுக் காலநிலை தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் - அதிகாரப்பூர்வ இணையத்தளம் - நிலப்படங்களுக்கான அரசு இணையத்தளம் - அரசு சுற்றுலாத்துறை இணையத்தளம் * பகுப்பு:இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது?
சென்னை
137
tamil
33ba6e2bc
right | thumb | சுத்தி மற்றும் இறகு சோதனை - அப்பல்லோ 15 இன் விண்வெளி வீரர் டேவிட் ஸ்காட் கலிலியோவின் பிரபலமான ஈர்ப்பு சோதனையை நிலவில் மீண்டும் உருவாக்கியபோது . (1.38 MB, ஆக் / Theora வடிவம்) ஈர்ப்பு விசை அல்லது பொருள் ஈர்ப்பு விசை அல்லது புவி ஈர்ப்பு விசை என்பது இயற்கையாக பொருட்கள் ஒன்றை ஒன்று கவர்ந்து கொள்ளும் விசை, அவற்றின் திணிவுகளின் பெருக்கத்துக்கு நேர்விகிதத்தில் இருப்பது ஆகும். ஈர்ப்பு விசை என்பது பொருட்களை கைவிடும் பொழுது அவை கீழே விழுவதற்கும் மற்றும் அவைகளுக்கு எடையை கொடுப்பதுமே ஆகும். அண்டத்தில் உள்ள ஏதேனும் இரு பொருள்களுக்கு இடையே செயல்படுவது ஈர்ப்பு விசை ஆகும். இவ்விசையானது பொருள்களின் திணிவுகளைச் சார்ந்த கவர்ச்சி விசையாகும். அடிப்படை விசைகளில், பொருள் ஈர்ப்பு விசையே மிகவும் வலிமை குன்றிய விசையாகும். ஆனால் அண்டத்தில் நெடுந்தொலைவிற்குச் செயல்படக் கூடியது. இது 'ஈர்ப்பியல் விசை' எனவும் வழங்கப்படும். ஈர்ப்பு விசை பிரிந்திருக்கும் பொருட்களை ஒன்று சேர்பதற்கும், ஒன்று சேர்ந்த பொருட்கள் அப்படியே இருபதற்கும் உதவுகிறது. இதனால் பூமி, சூரியன், மற்றும் பிரபஞ்சத்தில் உள்ள பரவலான பொருட்கள் அப்படியே இருப்பதற்கு பங்களிக்கிறது. பூமி மற்றும் ஏனைய கோள்களை அதன் சுற்றுப்பாதையில் சுற்றவைப்பதற்கும்; சந்திரன் பூமியை சுற்றி வருவதற்கும்; அலைகள் உருவாவதற்கும்;திரவ போக்கு அதன் அடர்த்தி மாறல் விகிதம் மற்றும் புவியீர்ப்பை பொறுத்து செல்வதற்கும்; உருவாகும் நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் உள்ளே அதிக வெப்பம் உருவாகுவதற்கும்; மற்றும் பூமியில் காணப்படும் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெறுவதற்கும் காரணியாக ஈர்ப்பு விசை உள்ளது. ஈர்ப்பு விசை, மின்காந்த விசை, வலுவான அணுக்கரு விசை, வலுக்குன்றிய அணுக்கரு விசை ஆகியன இயற்கையின் நான்கு அடிப்படை விசைகள் ஆகும். நவீன இயற்பியல் ஈர்ப்பு விசையை, ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு மூலமாக அனைத்து அசைவற்ற பொருட்களின் இயக்கத்தை விளக்குகிறது. நியூட்டனின் எளிய பிரபஞ்ச ஈர்ப்பு விதி மிக அதிக இடங்களில் துல்லியமான தோராய மதிப்பை வழங்குகிறது. ஈர்ப்பு கோட்பாடு வரலாறு அறிவியல் புரட்சி ஈர்ப்பு கோட்பாடின் தற்கால வேலை 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மற்றும் 17 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கலிலியோ கலிலியால் தொடங்கப்பட்டது. அவரது புகழ்பெற்ற (எனினும் இது உறுதிப்படாத [1]) சோதனையான பீசா கோபுரத்தில் இருந்து பந்துகளை விட்டது, பின்னர் சாய்வுகளில் பந்துகளை கவனமாக அளவிட்டதன் மூலமாக கலிலியோ ஈர்ப்பு விசை அனைத்து பொருட்களையும் ஒரே வேகத்தில் துரிதப்படுத்துகிறது என்று காட்டினார். இது அரிஸ்டாடிலின் கொள்கையான கனமான பொருட்கள் அதிகமான வேக வளர்ச்சி கொண்டவை என்பதை மாற்றியது.[2] இலகுவான பொருட்கள் காற்றின் எதிர்ப்பினால் வளிமண்டலத்தில் மிகவும் மெதுவாக விழும் என்று கலிலியோ சரியாக சொன்னது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. கலிலியோவின் வேலை நியூட்டனின் ஈர்ப்பு விசை கோட்பாடு உருவாக உதவியது. நியூட்டனின் ஈர்ப்பு கோட்பாடு 1687 ஆம் ஆண்டு, ஆங்கில கணித மேதை சர் ஐசக் நியூட்டன் பிரின்சிப்பியா,என்னும் அறிவியல் இதழில் பிரபஞ்ச ஈர்ப்பு நேர்மாறான சதுர விதியை(Inverse Square Law) வெளியிட்டார். அவரது சொந்த வார்த்தைகளில், "கோள்கள் அவற்றின் சுற்றுப்பாதையில் சுற்றி வரச்செய்யும் விசை அவற்றின் ஆரத்திற்கு எதிர்மறையாக இருக்கும்" கண்டறிந்தார்.மேலும் அவர் இந்த கருத்தை சந்திரனுக்கும் பூமிக்கும் பயன்படுத்தினார்.அவைகள் ஏறக்குறைய ஒத்துபோவதை அறிந்தார். யுரேனஸ் நகர்வுகளை அடிப்படையாக கொண்டு நெப்டியூன் இருப்பதை கண்டறிய பயன்படுத்தப்படும் போது நியூட்டனின் கோட்பாடு, அதன் மிக பெரிய வெற்றியை கண்டது. இது மற்ற கிரகங்கள் நடவடிக்கைகளின் மூலமாக அறிய முடியாது. ஜான் கோச் ஆடம்ஸ்(John Couch Adams ) மற்றும் அற்பெயின் லு வெரியர்( Urbain Le Verrier)ஆகிய இருவரின் கணக்கீடுகளை கொண்டு கிரகத்தின் பொது நிலையை கணித்து, லு வெரியரின் கணக்கின்படி, ஜோஹ்ன் கோட்ஃபிரெய்ட் காலி(Johann Gottfried Galle) நெப்ட்டியுனை கண்டுபிடித்தார். புதனின் சுற்றுப்பாதையில் உள்ள ஒரு முரண்பாடு நியூட்டனின் கோட்பாட்டில் உள்ள குறைபாடுகளை சுட்டி காட்டியது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், அதன் சுற்றுப்பாதையில் இருந்த சிறிய குழப்பம் நியூட்டனின் கோட்பாடு கீழ் முற்றிலும் கணக்கில் கொள்ள முடியாது என்று அறியப்பட்டது, ஆனால் மற்றொரு கிரகத்தின் (மெர்குரியை விட சூரியனை நெருக்கமாக சுற்றிவரும் ஒரு கிரகம்) அனைத்து தேடல்களும் பலனற்றதாயிற்று. 1915 இல் இந்த பிரச்சினை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் புதிய பொது சார்பியல் கோட்பாடு மெர்குரியின் சுற்றுப்பாதையில் உள்ள சிறிய முரண்பாடுகளை கணக்கில் கொண்டு தீர்க்கப்பட்டது. நியூட்டனின் கோட்பாடு அகற்றப்பட்டுவிட்டது என்றாலும்,தற்கால சார்பின்மை ஈர்ப்பு கணக்குகள் பொது சார்பியல் கோட்பாடை விட எளிமையான நியூட்டனின் கோட்பாட்டை பயன்படுத்தி செய்யப்படும், மற்றும் போதுமான அளவு சிறிய எடைகள், வேகம் மற்றும் ஆற்றல் சம்பந்தப்பட்ட பெரும்பாலான பயன்பாடுகளுக்கு போதுமான அளவு துல்லியமான முடிவுகளை கொடுக்கிறது. நியூட்டனின் ஈர்ப்பியல் விதிப்படி, ஈர்ப்பு விசையானது, திணிவுகளின் பெருக்கற்பலனுக்கு நேர்த்தகவிலும், அவற்றிற்கிடையேயுள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் இருக்கும். அதாவது, m1 ,m2 என்பன இரு பொருள்களின் நிறை எனவும் r என்பது அவற்றிற்கு இடைப்பட்ட தொலைவு எனவும் கொண்டால், இவ்விரு பொருள்களுக்கு இடையேயான ஈர்ப்பு விசை, F = G m 1 m 2 r 2 {\displaystyle F=G{\frac {m_{1}m_{2}}{r^{2}}}} G என்பது ஈர்ப்பியல் மாறிலி. இதன் மதிப்பு 6.67 x 10−11 N m2 kg−2. SI அலகு முறைப்படி,நிறையின் அலகு கிலோகிராம்(kg) எனவும் தூரத்தின் அலகு மீட்டர்(m) எனவும் கொடுக்கப் பெற்றால் விசையின் அலகு நியூட்டன்(N) ஆகும். சமானத் தத்துவம் கலிலியோ, லோராண்டு எட்வோஸ் (Loránd Eötvös), மற்றும் ஐன்ஸ்டீன் உட்பட ஆராய்ச்சியாளர்களால் அடுத்தடுத்து வெளிக்கொணரப்பட்ட சமநிலை கோட்பாடு, அனைத்து பொருட்களும் ஒரே மாதிரி விழும் என்று கருத்து தெரிவித்துள்ளது. பலவீனமான சமநிலை கோட்பாடு சோதிக்க எளிய வழி ஒரு வெற்றிடத்தில் வெவ்வேறு எடை அல்லது கலவை கொண்ட இரண்டு பொருட்களை விட்டு, அவை ஒரே நேரத்தில் தரையில் விழுந்ததா என்று பார்ப்பதாகும். இந்த சோதனைகள் உராய்வு (காற்று எதிர்ப்பு உட்பட) புறக்கணிக்கத்தக்கதாக இருக்கும்போது அனைத்து பொருட்களும் அதே விகிதத்தில் விழுகிறது என்று நிரூபிக்கின்றது. மேலும் நவீன சோதனைகள் Eötvös கண்டுபிடித்த ஒரு வகை ஒரு திருகு(torsion) சமநிலையை பயன்படுத்தியது. செயற்கைக்கோள் சோதனைகள், எடுத்துக்காட்டாக ஸ்டெப்-செயற்கைகோள், விண்வெளியில் துல்லியமாக பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சமநிலை கோட்பாடு உருவாக்கங்கள் பின்வருமாறு: பலவீனமான சமநிலை கோட்பாடு: ஒரு ஈர்ப்பு புலத்தில் ஒரு புள்ளி நிறையின் போக்கு, அதன் ஆரம்ப நிலை மற்றும் வேகத்தை மட்டுமே சார்ந்துள்ளது, மற்றும் அதன் அமைப்பை பொறுத்து அல்ல . ஐன்ஸ்டினியன் சமநிலை கோட்பாடு:. தடையின்றி விழும் ஆய்வகத்தில் எந்த ஒரு ஈர்ப்பு அல்லாத சோதனையின் முடிவு, ஆய்வகத்தின் காலம், இடம் மற்றும் வேகத்தை சார்ந்திருக்காது. வலுவான சமநிலை கோட்பாட்டுக்கு மேலே உள்ள இரண்டும் தேவை. பொது சார்பியல் பொது சார்பியலில், ஈர்ப்பின் விளைவுகள் விசைக்கு பதிலாக காலவெளி வளைவு மூலமாக நடக்கிறது. பொது சார்பியலின் ஆரம்ப புள்ளி நிலைமை இயக்கத்தையும் தடையின்றி விழுதலையும் சமன்படுத்துதலாகும், மற்றும் தடையின்றி விழும் நிலைமை பொருட்கள், தரையில் துரிதப்படுத்தும் பார்வையாளர்களின் ஒப்புமையில் வேகம் அதிகரித்தலையும் சமநிலை கோட்பாடு விவரிக்கின்றது. நியூட்டனின் இயற்பியலில், பொருட்களை குறைந்த பட்சம் ஒரு விசை மூலம் இயக்கபட்டாலொழிய அத்தகைய முடுக்கம் ஏற்படாது. ஐன்ஸ்டீன், பொருட்கள் காலவெளியை வளைக்கின்றன என்பதையும், தடையற்று விழும் பொருட்கள், வளைந்த காலவெளி இடத்தில், நேரான பாதைகள் வழியாக செல்கின்றன என்றும் கூறினார். இந்த நேர் பாதைகள் புவியின் மேற்பரப்பிற்குரியவைகள் என்று அழைக்கப்படுகின்றன. நியூட்டனின் முதல் இயக்க விதி போல், ஐன்ஸ்டீனின் கோட்பாடு ஒரு பொருளின் மீது விசை பயன்படுத்தப்படும் போது, அது ஒரு புவிப்பரப்பில் இருந்து விலகுகிறது என்று கூறுகிறது. உதாரணமாக, தரையில் உறைநிலையற்ற நிலையில் நிற்கும்போது நாம் புவிமேற்பரப்புகளை பின்பற்றுவதில்லை. ஏனெனில் பூமியின் இயந்திர எதிர்ப்பு நம்மேல், விசையை செலுத்துகிறது. காலவெளியில் புவிமேற்பரப்புகளோடு சேர்ந்து நகருவதை, அசைவற்றதாக கருதுவதை இது விளக்குகிறது. ஐன்ஸ்டீன் பெருட்கள் இருப்பதையும் காலவெளி வளைவுகளையும் தொடர்புபடுத்தும் போது, சார்பியலில் புல சமன்பாடுகளை கண்டறிந்தார்.அதனால் அந்த சமன்பாடுகளுக்கு அவர் பெயர் வந்தது. ஐன்ஸ்டீனின் புல சமன்பாடுகள் ஒரே நேரத்தில் 10, நேர்கோடற்ற, வகைக்கெழு சமன்பாடுகளின் தொகுப்பாகும். புல சமன்பாடுகளின் தீர்வுகள், காலவெளியின் மீற்றரிழுவம் (metric tensor) கூறுகளாகும். ஒரு மீற்றரிழுவம், காலவெளியின் வடிவவியலை விளக்குகிறது. ஒரு காலவெளியின் கோளமேற்பரப்பிற்குரியவைகளின் பாதைகள், மீற்றரிழுவம் மூலம் கணக்கிடப்படுகிறது. ஐன்ஸ்டீனின் புல சமன்பாடுகளின் குறிப்பிடத்தக்க தீர்வுகள் பின்வருமாறு: Schwarzschild தீர்வு என்பது ஒரு கோள வடிவில் சமச்சீர் சுழலும் மின்னூட்டமற்ற பெரும் பொருள் சுற்றியுள்ள காலவெளியை விவரிப்பதாகும். சிறிய அளவு பொருட்களை, இந்த தீர்வு மைய ஒருமைத்தன்மையுடன் ஒரு கரும்புள்ளியை உருவாக்கியது. Schwarzschild ஆரத்தை விட அதிகமான தூரத்தில் இருக்கும் முடுக்கம் நியூட்டனின் ஈர்ப்பு விசை கோட்பாட்டின் மூலம் கணிக்கப்பட்டதற்கு சமமாக உள்ளது. Reissner-Nordström தீர்வில் மத்திய பொருளுக்கு மின்னூட்டம் உண்டு. கெர் தீர்வு: சுழலும் பொருட்களுக்கான விளக்கமாகும். இந்த தீர்வு பல நிகழ்வு எல்லைகளில் கறுப்பு ஓட்டைகளை உற்பத்தி செய்கிறது. கெர்-நேவ்மன் தீர்வு: மின்னூட்டம் பெற்ற, சுழலும் பொருட்களுக்கு ஆகும். இந்த தீர்வு பல நிகழ்வு எல்லைகளை கறுப்பு ஓட்டைகள் உற்பத்தி செய்கிறது. பிரபஞ்சத்தின் விரிவாக்கத்தை அண்டவியல் ஃப்ரைடுமேன்-லேமைட்ரீ-ராபர்ட்சன், வாக்கரின் தீர்வு பொது சார்பியல் சோதனைகளை கணித்துள்ளது. கள் பின்வரும் அடங்கும்: பொது சார்பியல் புதனின் முரண்பாடான சிறும வீச்சுக்கு காரணம் கூறுகிறது. நேரம் மெதுவாக இயங்கும் கணிப்பை பவுண்ட்-ரெபக்கா சோதனை, ஹபிலே-கீட்டிங் சோதனை, மற்றும் ஜி.பி. எஸ் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒளியின் விலகலை முதன்முதலில் மே 29, 1919 ஆம் ஆண்டு சூரிய கிரகணத்தின் போது ஆர்தர் ஸ்டான்லி எட்டிங்க்டன் தனது அவதானிப்புகள் மூலம் உறுதி செய்தார். எட்டிங்க்டன் பொது சார்பியல் கணிப்புகளும், நியூட்டனின் துகள் கொள்கை கணிப்புகளும் இணங்க, இருமுறை ஸ்டார்லைட் விலக்கங்களை அளவிட்டார். இருப்பினும், அவரது முடிவுகைளின் விளக்கம் பின்னர் மறுக்கப்பட்டது. சூரியனின் பின்னால் செல்லும் குவாசார்கள் செலுத்து ரேடியோ interferometric அளவீடுகளை பயன்படுத்தி சமீபத்திய பரிசோதனைகள் மூலம் இன்னும் துல்லியமாக, பொது சார்பியல் கோட்பாடு மூலம் கணித்து அளவிற்கு ஒளி விலகல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஈர்ப்பு லென்ஸ் பார்க்க. ஒரு பெரிய பொருள் நெருக்கமாக கடந்து செல்லும் போது ஒளியின் நேரம் தாமதமாவதை கிரகங்களுக்கு இடையிலான விண்வெளி சமிக்ஞைகளை மூலம் 1964 இல் இர்வின் முதலாம் ஷாபிரோ அடையாளம் கண்டார். ஈர்ப்பு கதிர்வீச்சு மறைமுகமாக, பைனரி பல்சர்கள் ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 1922 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டர் ஃப்ரைடுமேன் ஐன்ஸ்டீனின் சமன்பாடுகளை நிலையற்ற தீர்வுகளை (அண்டவியல் மாறிலி முன்னிலையில் கூட) கொண்டுள்ளது என்று கண்டறியப்பட்டது. 1927 ல் ஜார்ஜ் லேமைட்ரீ அண்டவியல் மாறிலி முன்னிலையில் ஐன்ஸ்டீனின் சமன்பாடுகள், நிலையான தீர்வுகள் நிலையற்றது என்று காட்டினார், மற்றும் ஐன்ஸ்டீன் கூறிய நிலையான பிரபஞ்சம் இருக்க முடியாது என்று கூறினார். பின்னர், 1931 ஆம் ஆண்டு, ஐன்ஸ்டீன் ஃப்ரைடுமேன் மற்றும் லேமைட்ரீ முடிவுகளுக்கு உடன்பட்டார். இதனால் பொது சார்பியல் பேரண்டம் நிலையற்றதென்றும் ஒன்று அது விரியும் அல்லது சுருங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 1929 ல் எட்வின் ஹப்பிள் பிரபஞ்சத்தின் விரிவாக்கத்தை உறுதி செய்தார். சட்ட இழுப்பு கோட்பாட்டின் கணிப்பு சமீபத்தில் ஈர்ப்பு ஆய்வு B முடிவுக்கு இசைவானதாக இருந்தது. பொது சார்பியல் அதிக எடை கொண்ட பொருட்களில் இருந்து ஒளி பயணிக்கும் போது அதன் ஆற்றல் இழக்க வேண்டும் கணித்துள்ளது. கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் நீல்ஸ் போர் கல்லூரி Radek Wojtak குழு 8000 க்லசட்டர் மண்டலங்களில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் மூலம் க்ளுச்டேர்களின் மையத்தில் இருந்து வரும் ஒளி அலைகள் விளிம்பில் இருந்து வருவதை காட்டிலும் சிவப்பு பெயர்ச்சி அடைந்துள்ளதை, ஈர்ப்பின் மூலமாக சக்தி குறைந்துள்ளதை காட்டுகிறது. ஈர்ப்பு மற்றும் குவாண்டம் மெக்கானிக்ஸ் பொது சார்பியல் கண்டுபிடித்து பல தசாப்தங்களுக்கு பின்நறும் பொது சார்பியலும் குவாண்டம் மெக்கானிக்ஸ் இணக்கமற்றது என்று உணரப்பட்டது. குவாண்டம் புல கொள்கையின் கட்டமைப்பிற்குள் மற்ற அடிப்படை விசைகள் போல் இது ஈர்ப்பு கவர்ச்சி விசையில் மின்காந்த விசையில் போட்டான்கள் பரிமாற்றம் நடப்பது போலவே, இங்கு க்ராவிட்டன்ஸ் பரிமாற்றம் காரணமாக விசை உருவாகிறது என்று விவரிக்க முடியும். இது கிளாசிக்கல் வரம்பில் பொது சார்பியலை மீண்டும் உருவாக்கியது. எனினும், இந்த அணுகுமுறையை குறுகிய நீளங்களில் ப்ளாங்க் நீளத்தில் அணுகமுடியாது. குவாண்டம் ஈர்ப்பின் (அல்லது குவாண்டம் மெக்கானிக்சுக்கு ஒரு புதிய அணுகுமுறை) முழுமையான கோட்பாடு தேவையாகும். குறிப்பிட்டவைகள் பூமியின் ஈர்ப்பு ஒவ்வொரு கிரக அமைப்பும் (பூமி உட்பட) அதன் சொந்த ஈர்ப்பு புலத்தால் சூழப்பட்டுள்ளது. அது அனைத்து பொருட்களின் மீது ஒரு கவரும் விசையை செலுத்துகிறது . ஒரு கோள வடிவில் சமச்சீர் கிரகத்தில் அனுமானித்து, எந்த ஒரு இடத்திலும் அதனின் புலத்தின் சக்தி கோள்களின் எடைக்கு நேர்விகிதத்திலும் மற்றும் உடல் மையத்தில் இருந்து அந்த இடத்தின் தூரம் சதுர எதிர் விகிதாசாரத்திலும் இருக்கும். ஈர்ப்புமண்டலத்தை வலிமை அதன் தாக்கத்தின் கீழ் இருக்கும் பொருள்களின் முடுக்கத்திற்கு சமமாகவும் பூமியின் மேற்பரப்பில், அதன் மதிப்பு, கிட்டத்தட்ட நிலையான சராசரி கீழே g என வெளிப்படுத்தப்படுகிறது. g = 9,81 M / s 2 = 32.2 அடி / s 2 காற்றின் எதிர்ப்பை புறக்கணித்து விட்டோமானால், ஒரு பொருள் பூமியின் மேற்பரப்பின் அருகில் தடையின்றி விழும் பொழுது, அதன் வேகம் நொடிக்கு 9.81 M / s (32.2 அடி / கள் அல்லது 22 மைல்) அதிகரிக்கிறது, என்று பொருள். அதாவது, ஓய்வு நிலையில் இருந்து தொடங்கும் ஒரு பொருள் ஒரு நொடியில் 9.81M / s (32.2 அடி / s) என்ற வேகத்தை அடையும்,இரண்டு விநாடிகள் கழித்து 19,62 M / s (64.4 அடி / கள்) என்ற வேகத்தை அடையும், மற்றும் ஒவ்வொரு 9.81M / s(32,2 அடி / s ) சேர்த்து அதன் வேகம் கிடைக்கும். மேலும், காற்று எதிருப்பு இல்லாத போது ஒரே உயரத்தில் இருந்து விழும் அனைத்து பொருட்களும், ஒரே நேரத்தில் தரையில் விழும். நியூட்டனின் 3 ஆம் விதிப்படி, பூமி தன் மீது விழும் பொருளின் மேல் செலுத்தும் அதே அளவு விசையை தானும் ஆனால் அதன் திசை அது செலுத்தும் திசைக்கு எதிர் திசையில் இருக்கும். அந்த பொருள் பூமி மீது மோதும் வரை பூமி பொருளை நோக்கி முடுக்கப்படுகிறது என்று பொருள். பூமியின் நிறை அதிகம் என்பதால்,இந்த எதிர் விசை மூலம் பூமிக்கு அளித்த முடுக்கம் பொருளுடன் ஒப்பிடுகையில் புறக்கணிக்கத்தக்கதாகும். அந்த பொருள் பூமியின் மீது மோதிய பிறகு திரும்பி எழவில்லையெனில் இரண்டும் தங்களுக்குள் விளக்கு விசையை செலுத்தியுள்ளன. அது பொருளின் ஈர்ப்பு விசையை சமன்படுத்தி மேலும் முடுக்கத்தை நிறுத்துகிறது. பூமியின் மேற்பரப்பில் அருகே விழும் பொருட்களின் சமன்பாடுகள் தொடர்ச்சியான ஈர்ப்பின் கீழ், பிரபஞ்ச ஈர்ப்பு நியூட்டனின் விதி எளிமையாக்கும் வகையில் F = mg, m என்பது பெருளின் நிறை மற்றும் g என்பது 9 .81 M / s 2 என்ற சராசரி அளவு கொண்ட ஒரு நிலையான வெக்டார். ஈர்ப்பின் முடுக்கம் இந்த g க்கு சமமாக இருக்கும். ஈர்ப்பின் கீழ் ஆரம்பத்தில் நிலையான நிலையில் இருந்து தடையின்றி விழும் பொருளின் கடந்துவிட்ட தூரம்அதன் நேரத்துக்கு சதுர நேர்விகிதத்தில் ஒரு குறைகிறது. வலப்பக்கம் உள்ள படம் அரை நொடி கால வெளியில் நொடிக்கு 20 ப்ளாஷ் விகிதத்தில் stroboscopic ப்ளாஷ் கொண்டு கைப்பற்றப்பட்டது 20 நொடியில் ஒரு பங்கு நேரத்தில் பந்து ஒரு அலகு தூரத்தை கடந்துள்ளது; (இங்கு ஒரு அலகு என்பது 12 மிமீ); இரண்டு பங்கு நேரத்தில் 4 அலகு தூரத்தையும்; 3 பங்கு நேரத்தில் 9 அலகு தூரத்தையும் கடந்தது. ஒரே சீரான ஈர்ப்பு என்ற ஊகத்தின் கீழ் h என்ற உயரத்தில் உள்ள ஒரு பொருளின் நிறை ஆற்றல் E= mgh (அல்லது E = Wh, W என்பது எடை.) இந்த சமன்பாடு பூமியின் மேற்பரப்பில் இருந்து சிறிய தூரங்களில் h மட்டுமே செல்லுபடியாகும். இதேபோல், h = v 2 2 g {\displaystyle h={\tfrac {v^{2}}{2g}}} என்ற செங்குத்தாக வீசப்பட்ட பொருளின் அதிகபட்ச உயரத்துக்கான சமன்பாடு சிறிய வேகத்துக்கும் சிறிய தூரத்துக்கும் மட்டுமே பயன்படுத்தலாம். ஈர்ப்பு மற்றும் வானியல் நமது சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்கள், சூரியனின் எடை, நட்சத்திரங்கள் தூரம், குவாசார்கள் மற்றும் இருண்ட பொருள் பற்றி விரிவான தகவல்களை நியூட்டனின் ஈர்ப்பு விதி தெரிவிக்கிறது. நாம் அனைத்து கோள்கள் அல்லது சூரியனுக்கு பயணம் செய்தது இல்லை என்றாலும், அவற்றின் எடை தெரியும். கோளப்பாதையின் பண்புகளில் ஈர்ப்பு விதிகளை பயன்படுத்துவதன் மூலம் இந்த எடை அளவிடப்படுகிறது. விண்வெளியில் ஒரு பொருள் தனது சுற்றுப்பாதையை தக்க வைத்து கொள்கிறது ஏனெனில் அதன் மேல் ஈர்ப்பு விசை செயல்படுகிறது. கோள்கள் நட்சத்திரங்களை சுற்றும், நட்சத்திரங்கள் விண்மீன் திரள் மையத்தை சுற்றும், விண்மீன் திரள்கள் அதன் நிறை மையத்தை சுற்றும், க்ளஸ்தர்கள்சூப்பர்க்லச்டரை சுற்றும். ஒரு பொருள் மற்றொரு பொருள் மீது செலுத்திய ஈர்ப்பு சக்தி அந்த பொருட்களின் எடைக்கு நேர் விகிதத்திலும் மற்றும் அவர்களுக்கு இடையே உள்ள தூரம் சதுர எதிர் விகிதாசாரத்தில் இருக்கும். ஈர்ப்பு கதிர்வீச்சு பொது சார்பியல், ஈர்ப்பு கதிர்வீச்சு காலவெளியின் வளைவு இணை சுற்றுவட்ட பாதை பொருட்களை கொண்டு இருப்பது போன்ற, ஊசலாடும் அமைந்துள்ள சூழ்நிலையில் உருவாக்கப்பட்டது. சூரிய குடும்பத்தில் உமிழப்படும் ஈர்ப்பு கதிர்வீச்சு அளவிடுவதற்கு மிகவும் சிறியதாக உள்ளது. எனினும், ஈர்ப்பு கதிர்வீச்சு பைனரி பல்சர் அமைப்புகளில் PSR B1913 +16 காலப்போக்கில் ஏற்படும் ஒரு ஆற்றல் இழப்பு என மறைமுகமாக கண்டறியப்பட்டுள்ளது. நியூட்ரான் நட்சத்திரம் சேர்க்கை மற்றும் கருங்குழி உருவாக்கம் ஈர்ப்பு கதிர்வீச்சு கண்டறியும் அளவு உருவாக்கலாம் என்று நம்பப்படுகிறது. LIGO போன்ற ஈர்ப்பு கதிர்வீச்சு ஆய்வுக்கூடங்கள் சிக்கலை ஆய்வு செய்கின்றன. எந்த ஒரு உறுதி கண்டறிதல்களையும் இந்த கருதுகோள் கதிரியக்கத்தின் மூலம் செய்யப்படவில்லை, ஆனால் LIGO பின்னால் உள்ள அறிவியல் செம்மைப்படுத்தபட்டுள்ளது மற்றும் கருவிகளுக்கு அதிக உணர்திறன் அடுத்த தசாப்தத்தில் வழங்கப்பட்டுள்ளது. . சிக்கல்கள் மற்றும் முரண்பாடுகள் ஈர்ப்பு சிறந்த கோட்பாடுகள் தேவை சுட்டி அல்லது ஒருவேளை வேறு வழிகளில் விளக்கலாம் இது போதுமான அளவு கணக்கில் இல்லை என்று சில அவதானிப்புகள், உள்ளன. அதிவேக நட்சத்திரங்கள்: விண்மீன்மண்டலங்களிலும் வெளிப்பகுதியில் உள்ள நட்சத்திரங்கள் வேகமாக நகரும்படி நட்சத்திரங்களின் திசைவேகங்கள் ஒரு பரவலாக பிரிக்கப்படிருக்கும் . க்ளுச்டேரில் உள்ள நட்சத்திர மண்டலங்கள், அதே மாதிரி காட்டியது. இருண்ட பொருள் மின்காந்த வாயிலாக அல்லாமல் ஈர்ப்பினால் தொடர்பு கொள்வது முரண்பாடாக இருக்கிறது. நியூட்டனின் இயக்கவியல் பல்வேறு மாற்றங்களை கூட முன்மொழியப்பட்டுள்ளன. பயணங்களின் ஒழுங்கின்மை: பல்வேறு விண்கலம் ஈர்ப்பு சூழ்ச்சி உதவிய போது எதிர்பார்த்ததை விட அதிக முடுக்கம் ஏற்பட்டுள்ளது. விரிவாக்கம் முடுக்கி: வெளியின் அளவியல் விரிவாக்கம் வேகமாக தோன்றுகிறது. இதற்கு விளக்கம் அளிக்க இருண்ட சக்தி முன்மொழியப்பட்டுள்ளது. வானியல் அலகின் முரணான அதிகரிப்பு: அண்மைய அளவீடுகள் கோள்களின் கோளப்பாதைகள் வேகமாக விரிவடைவதை சூரியனின் எடை ஆற்றலை வெளிவிடுவதன் மூலம் குறைவதை காட்டுகிறது. கூடுதல் ஆற்றல் கொண்ட ஃபோட்டான்கள்: ஃபோட்டான்கள் மண்டலம் கொத்தாக பயணிக்கும் பொது ஆற்றலை பெறவும் பின்னர் வழியில் மீண்டும் அதை இழக்கவும் வேண்டும். ஃபோட்டான்கள் ஆற்றலை திரும்பி அனுப்புவதைபிரபஞ்சத்தின் முடுக்கி விரிவாக்கம் நிறுத்த வேண்டும். இது ஈர்ப்பு எதிர்மறை சதுர விதியை விட குறிப்பிட்ட தூர அளவுகளில் வேகமாக குறைவதை சுட்டிக்காட்டலாம். இருண்ட ஓட்டம்: அண்டத்தின் இயக்கத்தை ஆய்வுகளின் புலப்படாத எடையை நோக்கி ஒரு மர்ம இருண்ட ஓட்டம் இருப்பதை கண்டிருக்கிறோம். பிக் ேங் தற்போதைய மாதிரிகள் பயன்படுத்தி அந்த ஈர்ப்பு குறிப்பிட்ட தூர அளவுகளில் தலைகீழ்-ஸ்கொயர் விட மெதுவாக குறையும் என்பதை என்பதால் இது போன்ற ஒரு பெரிய எடை சேர்ந்திருப்பது மிகவும் பெரியதாக உள்ளது. கூடுதல் எடை உடைய ஹைட்ரஜன் மேகங்கள்: லைமேன்-ஆல்பா காட்டின் நிறமாலை வரிகள் ஹைட்ரஜன் மேகங்கள் மேலும் எதிர்பார்க்கப்படும் குறிப்பிட்ட அளவுகளில் ஒன்றாக தடிமனாகின்றன மற்றும், இருண்ட ஓட்டம் போல், அந்த ஈர்ப்பு குறிப்பிட்ட தூரத்தை அளவுகளில் ஆஃப் தலைகீழ்-ஸ்கொயர் விட மெதுவாக விழும் குறிக்கலாம் என்று. மாற்று தத்துவங்கள் வரலாற்று மாற்று தத்துவங்கள் அரிஸ்டாட்டிலின் புவியீர்ப்பு தத்துவம் le சேஜ் ஈர்ப்பு கோட்பாடு (1784)(LeSage ஈர்ப்பு என்றும்) திரவம் சார்ந்த விளக்க அடிப்படையில் ஒரு ஒளி வாயு முழு பிரபஞ்சத்தை நிரப்புயுள்ளதை ஜார்ஜ் லூயிஸ் லு முனிவர் முன்மொழிந்தார். . ஈர்ப்பு ரிட்ஸ் கோட்பாடு, ஆன். கெம். பிசிக்ஸ். 13, 145, (1908) பக் 267-271, வெபர்-காஸ் மின்னியக்கவிசையியல் ஈர்ப்பு பயன்படுத்தப்படும். சிறுமை வீச்சு பாரம்பரிய முன்னேற்றம். ஈர்ப்பு Nordström கோட்பாடு (1912, 1913), பொது சார்பியல் முந்தைய போட்டியாளர். ஈர்ப்பு ஒயிட்ஹெட் கோட்பாடு (1922), பொது சார்பியல் மற்றொரு ஆரம்ப போட்டியாளர். சமீபத்திய மாற்று தத்துவங்கள் Brans-Dicke புவியீர்ப்பு கோட்பாடு (1961) தூண்டிய ஈர்ப்பு (1967), பொது சார்பியல் விஷயம் குவாண்டம் தள கோட்பாடுகளில் இருந்து எழும் என்று ஆண்ட்ரி Sakharov எண்ணினார். திருத்திய நியூட்டனின் இயக்கவியல் (மோண்ட்) (1981), Mordehai Milgrom சிறிய முடுக்கத்திற்கு நியூட்டனின் இரண்டாம் இயக்க சட்டம் ஒரு மாற்றத்தை முன்மொழிந்தார். ஜான் Moffat மூலம் Nonsymmetric ஈர்ப்பு கோட்பாடு (NGT) (1994) பண்புரு-வெக்டார் ஸ்கேலார் ஈர்ப்பு (TeVeS) (2004), ஜேக்கப் Bekenstein மூலம் மோண்ட் ஒரு சார்பு மாற்றம் ஒரு entropic சக்தியாக ஈர்ப்பு, எண்ட்ரோப்பியின் வெப்பவியக்கவியல் கருத்து இருந்து ஒரு அவசர நிகழ்வு என எழும் ஈர்ப்பு. Superfluid வெற்றிடம் கோட்பாடு ஈர்ப்பு கால வளைந்த superfluid சார்பின்மை பின்னணி ஒரு கூட்டு கிளர்வு முறைமை எழுகின்றன. காண்க விடுபடும் வேகம், குறைந்த வேகம் ஒரு ஈர்ப்பு இருந்து தப்பிக்க தேவை நியூட்டனின் இயக்க விதிகள் வளைவுந்தம் ஈர்ப்பு அலை கெப்லரின் கோள் இயக்க விதிகள் லெக்ராஞ்சியப் புள்ளி திட்ட புவியீர்ப்பு முடுக்கம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள் பகுப்பு:ஈர்ப்பு விசை
ஈர்ப்பு எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
1687
2,526
tamil
1b9c3a737
சஃகாரா அல்லது சஹாரா பாலைவனம் (அரபு:الصحراء الكبرى) என்பது ஆப்பிரிக்காவின் வடபகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய சுடு பாலைவனம் ஆகும். குளிர் பனிப் பாலை நிலமாக அண்டார்ட்டிக்காவைக் கொண்டால் சகாரா பாலைவனம் இரண்டாவது மிகப் பெரிய பாலைவனம் ஆகும். இதன் பரப்பளவு 9,000,000 சதுர கிலோமீட்டர்களாகும் (3,500,000 சதுர மைல்கள்). இப்பரப்பானது ஏறத்தாழ ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அளவுக்கு பெரியதாகும். இப்பாலைவனம் மத்திய தரைக்கடல் கடற்கரையின் வளமான பகுதிகள், மக்ரேபின் அட்லஸ் மலைகள், எகிப்து மற்றும் சூடானில் உள்ள நைல் ஆற்றுப் பள்ளத்தாக்கு ஆகியவற்றில் வளமான பகுதியைத் தவிர்த்து, வட ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியைக் கொண்டுள்ளது. இது கிழக்கில் செங்கடலில் இருந்து நீண்டும், வடக்கே மத்திய தரைக்கடலும், மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலையும் எல்லைகளாக கொண்டு, இதன் நிலப்பரப்பு கடற்கரையை நோக்கிச் செல்லச்செல்ல படிப்படியாக பாலைவனத்திலிருந்து கடலோர சமவெளியாக மாறுகிறது. தெற்கில், இது நைல் நதி பள்ளத்தாக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் துணை சகாராவின் வெப்பமான பகுதிக்கு அருகிலுள்ள அரைப் பாலைவன வெப்பமண்டல சவன்னாவை பட்டாயாச சுற்றியுள்ளது. சகாராவை மேற்கு சஹாரா, நடு அஹாகர் மலைகள், திபெஸ்டிக் மலைகள், ஏய்ர் மலைகள், டெனெரெ பாலைவனம், லிபிய பாலைவனம் போன்ற பல பிரதேசங்களாக பிரிக்கலாம். இப்பாலைவனம் ஏறத்தாழ 2.5 மில்லியன் ஆண்டுப் பழைமை வாய்ந்தது. அதற்கு முன் இங்கே ஏரிகளும் ஆறுகளும் இருந்தன. இப்பாலைவனம் செங்கடலில் ஆரம்பித்து நடு நிலக் கடற்பகுதி, அத்திலாந்திக்குப் பெருங்கடல் ஆகிய நீர்ப்பரப்புக்களை இணைக்கின்றது. இங்குள்ள சில மணற் குன்றுகள் கிட்டத்தட்ட 180மீ (590 அடி) உயரம் வரை இருக்கும். சகாரா என்னும் பெயர் பொதுவாக வழங்கினாலும், இது அரபு மொழியிற் பாலைவனம் என்னும் சொல்லாகிய சஹ்றா (صحراء) என்பதில் இருந்து எழுந்ததாகும். நிலவியல் சஹாரா பாலைவனத்திற்கு மேற்கில் அட்லாண்டிக் கடலும், வட திசையில் அத்திலசு மலையும் மத்தியத்தரைக்கடல் பகுதிகளும், கிழக்கில் செங்கடலும், தெற்கில் சூடான் பகுதிகளும் எல்லைகளாக அமைந்துள்ளன. சஹாரா பாலைவனம் அல்ஜீரியா, தசாது, எகிப்து, எரித்திரியா, லிபியா, மாலி, மௌரிடானியா, மொரோக்கோ, நைகர், சூடான், தூனிசியா, மேற்கு சஹாரா ஆகிய பன்னிரண்டு நாடுகள் வரை பரந்து விரிந்துள்ளது. இப்பாலைவனம் செங்கடலில் ஆரம்பித்து மத்தியத்தரைக் கடற்பகுதி மற்றும் அட்லான்டிக் பெருங்கடல் ஆகிய நீர்ப்பரப்புகளை இணைக்கின்றது. சஹாரா பாலைவனம் 9 மில்லியன் சதுர கிலோமீட்டர் (3,500,000 சதுர மைல்) அளவு கொண்டது. இது ஆப்பிரிக்காவில் 31 சதவிகிதம் என்றாலும் இந்த பரப்பளவு காலத்திற்குக் காலம் மாறுபடுகின்றது. 250 மி.மீ க்கும் குறைவான சராசரி வருடாந்திர மழைப்பகுதி கொண்ட அனைத்து பகுதிகளும் சகாரா பாலைவனத்திற்கு உள்ளடக்கப்பட்டிருந்தால், சகாரா 11 மில்லியன் சதுர கிலோமீட்டர் (4,200,000 சதுர மைல்) கொண்டதாக இருக்கும். பல ஆழ்ந்த சிதறல்களைக் கொண்ட மலைகள், பல எரிமலைகளும், இந்தப் பாலைவனத்திலிருந்து எழுந்தன, இதில் குறிப்பிடத்தக்கன அஹர் மலைகள், அஹாகர் மலைகள், சஹரன் அட்லஸ், திபீஸ்டிக் மலைகள், அட்ரார் டெஸ் இஃபோராஸ், செங்கடல மலை போன்றவை ஆகும். சகாராவின் மிக உயர்ந்த சிகரம் எமி குசீசி ஆகும், இது ஒரு கேடய எரிமலை ஆகும். சஹாரா ஆபிரிக்க கண்டத்தில் உள்ள மிகப் பெரிய பாலைவனமாகும். சஹாரா தெற்கு எல்லையாக சகேலில் எனும் சவன்னா புல்வெளி உள்ளது. சகேலிலிற்கு தெற்கே தெற்கு சூடான் நாடும் காங்கோ வடிநிலப் பகுதியும் உள்ளன. சஹாராவின் பெரும்பாலான பகுதி பாறைகற்களை கொண்டுள்ளது; மணற்குன்றுகளால் மூடப்பட்டிருக்கும் சிறிய பகுதி மட்டுமே மூடியுள்ளது. மக்கள் கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பனி யுகத்தில் சஹாரா பாலைவன விளிம்பில் வாழ்ந்து வந்தார்கள். அப்போது சஹாராவில் முதலைகளும் 30,000ற்கும் மேற்பட்ட மற்றுமுள்ள நீர்வாழ் விலங்குகளும் இருந்ததற்கான படிமங்கள் தென்கிழக்கு அல்ஜீரியாவில் கண்டறியப்பட்டுள்ளன. நவீன சஹாராவில் நைல் பள்ளத்தாக்கு தவிர மற்ற இடங்கள் பசுமையாக இருந்திருக்கவில்லை. சைத்தூன் மரம் போன்ற மத்திய தரைக் கடற் பகுதித் தாவரங்களே அங்கு இருந்தன. இந்நிலை கி.மு 1600 வரை இருந்தது. இப்போதய சஹாரா பகுதியில் பூமியின் அச்சு மாற்றமும் வெப்பநிலை மாற்றங்களுக்கும் ஏற்பட்ட பிறகு, இது மணற்பாங்கான பாலைவனமாக மாறியது. நடு சகாரா என்பது ஆங்காங்கே தாவரங்களுடன் கலப்பு நிலப்பகுதியாக உள்ளது. வடக்கு மற்றும் தெற்கு பாலைவனப்பகுதிகளானது, மலைப்பகுதியூடாக, சிதறிய புல்வெளி மற்றும் பாலைவனப் சிறு புதர் பகுதிகள், மரங்கள் மற்றும் உயரமான புதர்கள் போன்றவற்றைக் கொண்டதாக உள்ளது. நடு சகாராவின், கலப்பு பாலைப் பகுதியில், பெரும் பாலைவனத்தின் பல துணைப்பிரிவுகள் உள்ளன அவை: டேன்சுரூஃப், டெனெரெ, லிபிய பாலைவனம், கிழக்கு பாலைவனம், நுபியான் பாலைவனம் மற்றும் பல. இது மிகவும் வறண்ட பகுதிகளாக பல ஆண்டுகள் அடிக்கடி மழை இருக்காது. வடக்கு சகாரா என்பது எகிப்தில் மத்தியதரைக் கடல் மற்றும் லிபியாவின் பகுதிகளைக் கொண்டதாக உள்ளது. இது   மத்தியதரைக்கடல் வனப்பகுதி, மரக்காடு, மற்றும் வட ஆபிரிக்காவின் சூழல் மண்டலங்களை சுற்றிக் கொண்டுள்ளது, இவை அனைத்தும் மத்திய தரைக்கடல் காலநிலை மற்றும் வெப்பமான கோடைக்காலம் மற்றும் குளிர் மற்றும் மழையான குளிர்காலங்களைக் கொண்டுள்ளது. வடக்கின் எல்லைகள் 100 மில்லிமீட்டர் (3.9 அங்குலம்) வருடாந்திர மழையைப் பெறுகின்றது. [1] பருவகால அளவின் படி, சஹாராவின் தெற்கு எல்லையானது 150 மிமீ (5.9 அங்குலம்) வருடாந்திர மழைப்பொழிவு பெறுகிறது (இது ஒரு நீண்ட கால சராசரி அளவீடு ஆகும், மழைப்பொழிவு ஆண்டுதோறும் மாறுபடுகிறது). [1] சகாராவில் அமைந்துள்ள முக்கிய நகரங்கள், மவுரித்தானியாவின் தலைநகரான நுவாக்சூத், அல்ஜீரியாவின் தாமன்ராஸெட், ஓர்குலா, பெச்சர், ஹாஸ்ஸி மெஸ்அௗத், கர்தாயா, எல் ஒய்யுட்; மாலிவில் உள்ள திம்புக்டு; நைஜரில் அகடெஸ்; லிபியாவில் காட்; சாத் நகரில் ஃபைஏ-லார்கோவ் போன்ற தகரங்களாகும். சுற்றுச் சூழல் கடைசி பனி ஆண்டிற்குப் பிறகு சஹாரா பாலைவனம் வளமான இடமாக மாறியது. பின்னர் சிறிது சிறிதாக மீண்டும் பாலைவனமாக மாறி விட்டது என வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. கடந்த நூறு ஆண்டுகளில் சஹாரா பல சூழல் மாற்றங்களை சந்தித்திருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது போன்ற மாற்றங்கள் 41000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமி 22o முதல் 24.5o சாய்வதனால் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. மேலும் 15000 (17000 A.D) வருடங்கள் கழித்து சஹாரா பசுமையான இடமாக மாறும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது உலகிலேயே வெப்பம் மிகுந்த பகுதியாகும். ஆனாலும் இது வறண்ட பகுதியல்ல என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சஹாரா பாலைவனத்தில் மிக உயரிய மலைகளும் உள்ளன. அவற்றிற் சில மலைகளில் கோடை காலங்களிலும் பனி படர்ந்திருக்கும்[2][3]. திபெஸ்தி மலைகளில் ஏழு வருடங்களுக்கு ஒருமுறை 2500 மீட்டர் அளவு பனிப்படர்வு இருக்கும். சில மலைகளில் பனிப்படர்வு சில நிமிடங்களில் கரைந்து விடும்[4]. இதில் முக்கியமான மலைத் தொடர்கள் அல்ஜீரியப் பகுதிகளில் உள்ளன. எகிப்துப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 130 மீட்டர் தாழ்வான பகுதிகளும் உள்ளன. சஹாராவில் 25% பகுதியில் மணல் பரப்புக்கள் உள்ளன[2].சஹாராவில் பல ஆறுகள் ஓடுகின்றன. ஆனால் அவை குறிப்பிட்ட காலங்கள் மட்டுமே பாய்வனவாகும். நைகர் நதியும், நைல் நதியும் சஹாராவில் பாயும் வற்றாத நதிகள் ஆகும்.[2].சஹாராவில் பகலில் இருக்கும் வெப்பத்திற்கு இணையாக இரவில் குளிர் காற்று வீசும். சஹாராவில் கடுமையான மணற் புயல்களும் வீசும். மேற்கு அல்ஜீரியப் பகுதிகளில் காற்று கடுமையாக வீசும்[5][6]. இங்கு இரும்புத் தாதுக்களும் பெறுமளவிற் கிடைக்கின்றன. சில இடங்களில் யுரேனியமும், அல்ஜீரியாவில் எண்ணெய்யும், மேற்கு சஹாராவில் பாஸ்பேட்டு தாதுக்களும் அதிக அளவில் கிடைக்கின்றன. தாவரங்களும் விலங்குகளும் சஹாராவின் பல பகுதிகள் மனிதர்களும் விலங்குகளும் வாழ முடியாத இடங்களாகும். ஆனால் மனிதர்களும் விலங்குகளும் நீர் இருக்கும் சில இடங்களில் வசித்து வருகின்றனர்[7]. இந்திய ஒட்டகங்களும் ஆடுகளுமே சகாராவில் அதிகளவு காணப்படும் விலங்குகளாகும். பாலை நிலத்தில் வாழத் தகவமைத்துக் கொண்டுள்ளபடியால் ஒட்டகங்கள் இங்குள்ள நாடோடிகளால் விரும்பி வளர்க்கப்படுகின்றன. பாலத்தீன மஞ்சள் தேள் என்னும் தேள் இங்கு காணப்படுகிறது. இது 10 செ.மீ நீளம் வரை வளரும். இத்தேள் மிகவும் நச்சு வாய்ந்தது. எனினும் இத்தேள் கொட்டுவதால் வளர்ந்த மனிதர்கள் இறப்பது அரிதே. பல வகையான நரிகளும் இங்கு காணப்படுகின்றன. அடாக்சு எனப்படும் பெரிய வெண்ணிற இரலை இங்கு காணப்படுகிறது. இது நீண்ட நாட்கள் நீரில்லாமல் தாக்குப் பிடிக்க வல்லது. மேலும் தோர்க்காசு, ரிம், தாமா எனப்படும் சிறு மான்களும் காணப்படுகின்றன. இவையும் நீரில்லாமல் நீண்ட நாட்கள் வாழக் கூடியன. அல்சீரியா, தோகோ, நைசர், மாலி முதலான பகுதிகளில் சகாராச் சிறுத்தைகள் காணப்படுகின்றன. சிறு அளவிலான ஆப்பிரிக்கக் காட்டு நாய்களும் உள்ளன. பல்லிகள், மணல் விரியன், நெருப்புக் கோழி முதலியன இங்கு காணப்படும் மற்ற விலங்குகளாகும். இங்கு வெள்ளி எறும்புகள் எனும் உயிரினமும் உள்ளது. இது பூமிக்கடியில் குழிகளில் வசிக்கும். ஒரு மணி நேரத்திற்கு மேல் இவை வெளியில் திரிந்தால் இறந்து விடும். இவை வெப்பத்தினால் இறக்கும் உயிரிணங்களை உணவாக உட்கொள்ளும். வரலாறு நூபியர் நவீன கற்காலத்தில், அஃதாவது பொ.மு. 9500 இல் பாலைவனமாக மாற தொடங்க முன், இங்கு மத்திய சூடான் பகுதியில் வாழ்ந்த மக்களுக்குத் தேவையான உணவை வழங்கும் காலநிலை நிலவி வந்தது. எகிப்தியர்கள் போனீசியர்கள் கிரேக்கர்கள் நகர நாகரீகம் இஸ்லாமிய விஸ்தரிப்பு ===துருக்கியர்களின் காலம்=== ஐரோப்பியர்களின் குடியேற்றவாதம் பேரரசுகளின் உடைவுகளும் அதன் பின்னான காலமும் மக்களும் மொழிகளும் caravan transporting black African slaves across the Sahara.]] சகாராவைச் சேர்ந்த மக்கள் வெவ்வேறு பூர்வீகத்தைக் கொண்டவர்களாயும், வெவ்வேறு மொழிகளைப் பேசுபபர்களாகவும் உள்ளனர். அரேபிய மொழிகளே அதிகம் பேசப்படும் மொழிகளாக உள்ளன. படங்கள் பாலைவனச் சோலை காற்றினால் இயற்கையாகச் செதுக்கப்பட்ட பாறை மலை அல்ஜிரியா மணல் மேடுகள் மேற்கோள்கள் வெளியிணைப்புகள் நீரியல் and planned usage of the நிலத்தடி நீர்ப்படுகை பகுப்பு:பாலைவனங்கள் பகுப்பு:ஆப்பிரிக்கா பகுப்பு:அரபு மொழிச் சொற்கள்
சகாரா பாலைவனம் எங்கே அமைந்துள்ளது?
ஆப்பிரிக்கா
58
tamil
363dddf6f
தமிழ்நாடு (Tamil Nadu) என்து இந்தியாவின் 29 மாநிலங்களில் ஒன்றாகும். தமிழ்நாடு, தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. இதன் தலைநகராகச் சென்னை உள்ளது. தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன. புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு மாநிலம் எல்லைகளைக் கொண்டுள்ளது. புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை வீச்செல்லை, ஆனை மலை வீச்செல்லை, பாலக்காடு கணவாய் ஆகியவையும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவையும் தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன. தமிழகம் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் சென்னை மாகாணம் என்றும் அழைக்கப்பெற்றது. இதனைத் தமிழ்நாடு என்று மாற்றக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன. சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார்[11]. பின்னர் மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது. தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் பரப்பளவில் 11வதாகவும் மக்கள்தொகையில் ஏழாவதாகவும் விளங்குகிறது. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பங்களிப்பதில் நான்காவதாகவும் (2010இல்)[12] உள்ளது. 2006ஆம் ஆண்டில் மனித வளர்ச்சிச் சுட்டெண்ணில் பத்தாமிடத்தில் (ஒன்றிய ஆட்சிப்பகுதிகளையும் சேர்த்தால் பதினாறாவது இடத்தில்) இருந்தது.[13] மேலும் இந்தியாவிலேயே அதிக நகர்ப்புறமாக்கப்பட்ட மாநிலமாகத் திகழ்கிறது.[14] இந்தியாவின் 6% மக்கள்தொகையே கொண்டிருந்தும் மிகக் கூடுதலான வணிக நிறுவனங்கள் கொண்ட மாநிலமாகவும் (10,56%) மொத்த வேலை வாய்ப்புகள் கொண்ட மாநிலங்களுள் இரண்டாவதாகவும் (9,97%) விளங்குகிறது[15]. கி.மு. 500க்கும் முன்பிருந்தே இப்பகுதியில் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 20000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமை வாய்ந்த தமிழ் மொழி கல்வெட்டுக்களும் இலக்கியமும் காணக் கிடைக்கின்றன.[16]தொன்கதை பாரம்பரியத்தின் படி தமிழ் மொழியானது சிவ பெருமானால் அகத்தியருக்கு கற்பிக்கப்பட்டதாக நம்பப் படுகின்றது[17][18][19][20][21][22][23][24]. தமிழ்நாட்டில் பல இயற்கை வளங்கள், தமிழர் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன; எட்டு உலக பாரம்பரியக் களங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.[25][26] புவியமைப்பு தமிழ்நாடு இந்திய தீபகற்பத்தின் தென் கோடியில் அமைந்துள்ளது. வடக்கில் கருநாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களும், மேற்கில் கேரளாவும் உள்ளன. யூனியன் பிரதேசமாகிய புதுச்சேரி (முன்பு பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டது) தமிழ் நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்துக்குத் தென்கிழக்கில் இலங்கைத் தீவு உள்ளது. நாட்டின் ஏனைய பல பகுதிகளைப் போலன்றி, தமிழ்நாடு, அக்டோபர் – திசம்பர் மாதங்களில் "வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று" மூலமே மழை பெறுகிறது. இக்கால கட்டத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகும் புயற்சின்னங்களின் மூலம் பெய்யும் மழையை உழவர்கள் பெரிதும் நம்பியுள்ளனர். இம்மாநிலத்தின் முதன்மையான ஆறான காவிரி ஆறு வடக்கே கர்நாடக மாநிலத்தில் குடகு மலையில் உருவாகித் தமிழ்நாட்டில் பாய்கிறது. வைகை, தாமிரபரணி, பாலாறு ஆகியவை பிற முதன்மையான ஆறுகளாகும். மதராஸ் என்று 1996 வரை அழைக்கப்பட்டு வந்த சென்னையே தமிழ்நாடு மாநிலத்தின் மிகப் பெரிய நகரமும் அதன் தலைநகரமுமாகும். பதின்மூன்று கிலோமீட்டர் நீளமுடையதும், உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையுமான, மெரீனா கடற்கரை சென்னையில் உள்ளது. மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், திண்டுக்கல், திருநெல்வேலி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தூத்துக்குடி மற்றும் வேலூர் தமிழ் நாட்டின் ஏனைய பெரிய நகரங்களாகும். வரலாறு தமிழ்நாடு பண்டைக் காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் ஆளப்பெற்றது. மேலும், இம்மாநிலம் பல கோயில்களையும், சிற்பங்களையும் பெற்ற கலை அம்சம் கொண்ட பகுதியாக விளங்குகிறது. தமிழகத்தின் எல்லைகளைத் தொல்காப்பியப் பாடல் வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம் என்று வரையறுக்கிறது (தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம், 1-3). தொன்றுதொட்டே தமிழ் மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு தமிழகம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அதற்குச் சான்றாகக் கீழ்வரும் இலக்கியக் குறிப்புகளைக் காட்டலாம்: வையக வரைப்பில் தமிழகம் கேட்ப (புறநானூறு, 168:18) இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்க (பதிற்றுப்பத்து, இரண்டாம் பத்து, பதிகம்: 5) இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய (சிலப்பதிகாரம், அரங்கேற்றுகாதை: 38) சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் (மணிமேகலை, 17: 62) தமிழ்நாடு, ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழுகின்ற தமிழ் இன மக்களின் தோற்றம் தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்திருந்த தமிழர்கள், சிந்து வெளி நாகரீகத்துக்கு உரியவர்களுள் ஒரு பிரிவினராக இருந்தனர் என்று கருதுகிறார்கள். இவ்வினத்தவருடைய தெற்கு நோக்கிய பெயர்வு, ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கையுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. இக்கொள்கைப்படி, வடக்கிலிருந்து வந்த ஆரிய ஆக்கிரமிப்பு தமிழர்களை இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகியவை அடங்கிய தென்னிந்தியாவுக்குள் ஒடுக்கியதாகக் கருதப்படுகின்றது. வரலாற்று உண்மைகள் எவ்வாறு இருப்பினும், தற்காலத் தமிழ் மக்களுடைய அடையாளம் மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது எனலாம். இன்றைய தமிழ்நாட்டையும் உள்ளடக்கிப் பரந்திருந்த பண்டைய தமிழர் நாடு, பல்வேறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. இவற்றைக் காலத்துக்குக் காலம் பல அரச வம்சங்கள் ஆண்டுவந்தன. இவற்றுள் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கவர்கள்,வேளிர்கள் பாண்டியர், சேரர், சோழர், பல்லவர், சாளுக்கியர், விஜய நகரத்தார், நாயக்கர் என்போராவர். மேலே குறிப்பிடப்பட்ட மதுரை தற்கால மதுரைக்குத் தெற்கே அமைந்திருந்து பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் முற்றாக அழிந்து போனதாகப் பழந் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியக்கிடைக்கின்றது. பாண்டிய நாடு கல்வியிலும், வணிகத்திலும் சிறந்து விளங்கியது. தமிழகத்தின் மக்கள் அக்காலத்தின் பேரரசுகளாகிய கிரேக்க, ரோமப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவ்வப்போது பல்லவர்களாலும், சோழர்களாலும் அடக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் ஆற்றல் மிக்க அரச பரம்பரைகளில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர். கிபி 1 தொடக்கம் 4 ஆம் நூற்றாண்டுவரை சங்ககால மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர் கிபி முதலாம் நூற்றாண்டு தொடங்கி நான்காம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள் சேரர்களில் செங்குட்டுவன் மன்னனும், சோழர்களில் கரிகால் சோழன் மன்னனும், பாண்டியர்களில் நெடுஞ்செழியன் மன்னனும் பெயர் பெற்ற ஆட்சியாளர்களாகத் திகழ்ந்து, மிகவும் புகழ்பெற்று விளங்கினர். சேரர்கள் தற்கால கேரள மற்றும் கொங்கு மாவட்டங்களிலும், சோழர்கள் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளிலும், பாண்டியர்கள் மதுரை, நெல்லை மற்றும் தென் கேரள மாவட்டங்களிலும் செல்வாக்கு செலுத்தினர். இவர்கள் கூட்டணியால் தமிழகம் வடதிசை மவுரிய குப்தா பேரரசுகளின் ஆளுகையினை எதிர்த்து தனியரசுகளாக விளங்கின இவர்களின் போர் நடவடிக்கைகளில் சிறந்து விளங்கியதாக நம்பப்படுகிறது. கிபி 4 தொடக்கம் 9 ஆம் நூற்றாண்டுவரை கி.பி. நான்காம் நூற்றாண்டு முற்பகுதியில் களப்பிரர் என்னும் குலம் தெரியாத அரசர்கள் தமிழகத்தை ஆண்டனர். அவர்கள் மூவேந்தர்களையும் அடக்கி ஆண்டதால் அவர்களின் வரலாறு தெரியாமல் போயினும், பல்லவர் என்னும் அக்கால புதிய அரசர்கள் சுயாட்சி செலுத்தியதால் அவர்களைப் பற்றி மட்டும் குறிப்பிடத் தக்க ஆவணங்கள் கிடைத்துள்ளன. இக்களப்பிர அரசர்கள் கிபி 4 தொடக்கம் 6 ஆம் நூற்றாண்டுவரை ஆண்ட காலத்தைத் தமிழகத்தின் இருண்ட காலம் என்று வரலாற்றாளர்கள் கூறுவதுண்டு. கி.பி. நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சிறந்த கோவில்களை அமைத்த பல்லவர்கள் முன்னணிக்கு வந்தனர். இவர்கள் தென்னிந்தியாவில் 400 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். காஞ்சிபுரத்தைத் தலை நகரமாகக் கொண்டு தமிழ் நாட்டின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் சோழரைத் தோற்கடித்தனர். இவர்கள் செல்வாக்கு இலங்கை வரை பரவியிருந்ததாகக் கருதப்படுகிறது. முதலாம் மகேந்திரவர்மனும், அவனுடைய மகனான நரசிம்மவர்மனும் பல்லவர்களுள் சிறந்து விளங்கிய அரசர்களாவர். பல்லவர் கட்டிடக்கலை பல்லவர் காலத்திலேயே வளர்ச்சியடைந்து உருப்பெற்றது. இறுதிப் பல்லவ மன்னன் அபராசிதன் ஆவான். இவன் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டதுடன் பல்லவராட்சி தமிழ் நாட்டில் முடிவுக்கு வந்தது. இக்காலக்கட்டத்தில் (கிபி 300 – கிபி 600) பெளத்தம் தமிழகத்தில் மிகவும் செல்வாக்கோடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.[27] 9 தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டுவரை கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இராசராச சோழன் மற்றும் அவனது மகனான இராசேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் சோழர், தென்னிந்தியாவில் ஆற்றல் மிக்கவர்களாக உருவெடுத்தனர். இவர்களுடைய பேரரசு, மைய இந்தியா, ஒரிசா, மற்றும் வங்காளத்தின் சில பகுதிகள்வரைகூடப் பரவியிருந்தது. இராசராச சோழன் கிழக்கிலிருந்த சாளுக்கிய அரசர்கள் மற்றும் சேர மன்னர்களை வீழ்த்தினான். அத்துடன் பாண்டிய அரசிடமிருந்து இலங்கையின் சில பகுதிகளையும் கைப்பற்றினான். இராசேந்திர சோழன் மேலும் முன்னேறி அந்தமான் நிக்கோபார் தீவுகள், இலட்சத்தீவுகள், சுமத்ரா, சாவா, மலேயா மற்றும் பெகு தீவுகளையும் தன் கப்பற்படையைக் கொண்டு கைப்பற்றினான். அத்துடன் தற்போதைய பீகார் மற்றும் வங்காளப் பகுதிகளை ஆண்டு வந்த மகிபாலனையும் வீழ்த்தினான். தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் தலைநகரை உருவாக்கினான். பதின்மூன்றாம் நூற்றாண்டுவாக்கில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது. 14ஆம் நூற்றாண்டு 14ஆம் நூற்றாண்டில் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர். ஆயினும் அந்த எழுச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1316 இல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்சி ஆட்சியாளர்கள், மதுரையை முற்றுகையிட்டு சூறையாடினர். இசுலாமியர்களின் படையெடுப்பு சோழர்களையும் பாண்டியர்களையும் ஆற்றலற்றவர்களாக்கி இசுலாமிய "பாமினி" ஆட்சிக்கு வித்திட்டது. இசுலாமியப் படையெடுப்புக்கு பதிலடி தரும் வண்ணம் பல்வேறு சிற்றரசுகள் சேர்ந்து விசயநகர பேரரசைத் தோற்றுவித்தன. இப்பேரரசின் பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வையிட நாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள் நியமிக்கப் பட்டனர். அம்பியை தலை நகராகக் கொண்டிருந்த விசய நகரப் பேரரசு செல்வச் செழிப்போடும் அமைதியுடனும் திகழ்ந்தது. ஆனால், 1564 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த தலிகோட்டா போரில் தக்காணப் பீடபூமியைச் சேர்ந்த சுல்தான்களால் விசயநகர ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் ஆட்சிக்கடங்கிய பகுதிகள் யாவும் நாயக்கர்களிடையே பிரித்தளிக்கப்பட்டன. நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு அரசியல் அமைப்புகள் மாற்றி அமைக்க பட்டன பாளையங்கள் உருவாக்கப்பட்டு கிராம சுய ஆட்சி முறை ஒழிக்க பட்டது. தஞ்சை மற்றும் மதுரையைச் சேர்ந்த நாயக்கர்கள் புகழ் பெற்று விளங்கியதோடு பழங்கால கோயில்களைப் புதுப்பிக்கவும் செய்தனர். இன்றைய கேரளாவும் மலபாரை ஒட்டிய பகுதிகளும் சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி ரோமானியர்களுடனான வாணிபத்திற்கு ஏதுவாக இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பு நிகழும் வரை சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய நிலப்பகுதி பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது. 17 ஆம் நூற்றாண்டு 1639 இல்ஆ ங்கிலேயர்கள் மதராசில் (தற்பொழுது சென்னை என்று அழைக்கப்படுகிறது) கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவியபிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய பகுதி தொடங்கியது. தமிழ் நாட்டு சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பிரித்தாண்டு, அவர்களின் மேல் தங்கள் அதிகாரத்தைச் செலுத்தத் தொடங்கினர். தமிழ்நாடும் அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவும் மெல்ல மெல்ல ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் அதிகாரத்தைத் தம் வசப்படுத்திய இந்தக் காலக்கட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்களும் கணிசமானோர் இருந்தனர். வீரபாண்டிய கட்டபொம்மன்,அனந்த பத்மநாப நாடார், பூலித்தேவன், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வாண்டாயத் தேவன், அழகு முத்துக்கோன், வீரன் சுந்தரலிங்கம், ஒண்டி வீரன், பெரிய காலாடி, தீரன் சின்னமலை, போன்ற ஆட்சியாளர்கள் வெள்ளையரை எதிர்த்துப் போரிட படைகளைத் தலைமையேற்று நடத்தினர். 20 ஆம் நூற்றாண்டு 1947இல் இந்தியா விடுதலை அடைந்தபோது, மதராசு மாகாணம் (படம்) (The Madras Province) மதராசு மாநிலம் ஆனது. ஆனால் 1948ஆம் ஆண்டுவரை புதுக்கோட்டை சமஸ்தானம் தொண்டைமான் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. இதுவே இந்தியாவோடு சேர்ந்த கடைசி சில சமஸ்தானங்களுள் ஒன்றாகும். தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை மதராசு மாநிலத்தின் கீழ் வந்தன. 1953இல் மதராசு மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்களுள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும் தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராசு மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டது. 1956இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் மதராசு மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டது. 1969இல், மதராசு மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ‎திருவாங்கூர்-கொச்சி மாநிலத்தின் தென்பகுதியில் தமிழ் பேசும் மக்கள் வாழிடம் கன்னியாகுமரி மாவட்டமாக உருவாக்கப்பட்டு, நவம்பர் 1, 1956இல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. பாரம்பரியம் தமிழ்நாடு, இன்றும் செழிப்புடன் விளங்கும், வளமான இலக்கிய, இசை, நடனப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. இது இந்தியாவின் அதிக அளவு கைத்தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்று. சுப்பிரமணிய பாரதி,, வ. உ. சிதம்பரம்பிள்ளை, சி. வி. இராமன், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ,பெருந்தலைவர் காமராசர், சுப்பிரமணியன் சந்திரசேகர், ஆர். கே. நாராயண், ஆர். வெங்கட்ராமன், சி. என். அண்ணாதுரை, சீனிவாச ராமானுசன், அப்துல் கலாம், பாரதிதாசன், அயோத்தி தாசர், திரு.வி.க., கண்ணதாசன், என்.எஸ்.கிருட்டிணன்,ஈ.வே.ரா பெரியார் ஆகியோர் மாநிலத்தின் நன்கு அறியப்பட்டவர்களில் சிலராவர். இவர்களோடு, இளங்கோவடிகள், கண்ணகி, திருவள்ளுவர், தொல்காப்பியர், ஔவையார், கம்பர், கரிகால்சோழன், இராசராச சோழன், போன்ற முற்காலத்தவரும் இன்றும் நினைவில் இருப்பவர்களாகும். அரசியல் தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234. நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39. 1986 வரை தமிழ் நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர். தமிழ் நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகளாகத் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை விளங்குகின்றன. (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), இந்திய தேசிய காங்கிரசு, இந்தியக் குடியரசுக் கட்சி, அகில இந்திய பார்வார்ட்டு பிளாக், இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், பாரதிய ஜனதா கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், முஸ்லீம் லீக்,அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன. பெரியார் 1916இல் தோற்றுவித்த திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து, 1949 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை சி. என். அண்ணாதுரை தோற்றுவித்தார். 1947 இல் இந்திய விடுதலைக்குப் பிறகு 1967 வரை தமிழ்நாட்டை இந்திய தேசிய காங்கிரசு ஆண்டது. 1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. 1972 இல் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ம. கோ. இராமச்சந்திரன் தோற்றுவித்தார். 1977இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலில் ஆட்சியைப் பிடித்தது. 1967 முதல் 2016 இல் கடைசியாக நடந்த சட்டமன்றத் தேர்தல்வரை தி.மு.க. அல்லது அ.இ.அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்று அல்லது அக்கட்சிகள் தலைமை வகிக்கும் கூட்டணிகள் பெரும்பான்மை தொகுதிகளை வென்று வருகின்றன. தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தல்களில் பல கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதுண்டு என்றாலும், இதுவரை தனிக்கட்சி ஆட்சியே நடைபெறுகிறது. முதன் முறையாகத் தி.மு.க. ஒரு அறுதிப் பெரும்பான்மையற்ற சிறுபான்மை அரசாகச் (2006–2011) செயல்பட்டது. இருப்பினும், தமிழக கட்சிகள் நடுவண் அரசில் செல்வாக்கோடு விளங்கிக் கூட்டணி ஆட்சி அமைக்க உதவவும், பங்கேற்கவும் செய்கின்றன. மாவட்டங்கள் தமிழ் நாட்டில் தற்போது 33 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன. இவற்றுள் விதிவிலக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில், நீலமலை மாவட்டத்தின் தலைநகர் உதகமண்டலம் என்றுள்ளன. தற்போதுள்ள மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாகப் பெயர்மாற்றம் பெற்றுவந்துள்ளன. ஒரு சில காலகட்டங்களில் மாவட்டங்களின் பெயருடன் காலம் சென்ற தமிழக தலைவர்கள் பெயரும் இணைத்துப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தன. தற்போது அப்பெயர்கள் நீக்கப்பட்டு, மாவட்டங்களின் பெயர்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன. இந்த 33 மாவட்டங்களில் 288 வருவாய் வட்டங்கள் உள்ளது. அரியலூர் மாவட்டம் இராமநாதபுரம் மாவட்டம் ஈரோடு மாவட்டம் கடலூர் மாவட்டம் கரூர் மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் கிருட்டிணகிரி மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் சிவகங்கை மாவட்டம் சென்னை மாவட்டம் சேலம் மாவட்டம் தஞ்சாவூர் மாவட்டம் தருமபுரி மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம் திருப்பூர் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளூர் மாவட்டம் திருவாரூர் மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் தேனி மாவட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் நாமக்கல் மாவட்டம் நீலமலை மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம் பெரம்பலூர் மாவட்டம் மதுரை மாவட்டம் விருதுநகர் மாவட்டம் விழுப்புரம் மாவட்டம் வேலூர் மாவட்டம் நகரங்கள் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் முதல் 15 பெரிய நகரங்கள்:[28] சென்னை கோயம்புத்தூர் மதுரை திருச்சி சேலம் திருப்பூர் ஈரோடு திருநெல்வேலி வேலூர் தூத்துக்குடி திருவண்ணாமலை திண்டுக்கல் தஞ்சாவூர் நாகர்கோவில் கடலூர் உள்ளாட்சி அமைப்புகள் தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளும், 125 நகராட்சி மன்றங்களும், 529 பேரூராட்சிகளும், 385 ஊராட்சி ஒன்றியங்களும் மற்றும் 12,524 ஊராட்சி மன்றங்களும் உள்ளது. மக்கள் வகைப்பாடு தமிழ்நாடு இந்தியாவின் ஏழாவது மக்கட்தொகை மிகுந்த மாநிலமாகும். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 72.147.030 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 36.137.975 மற்றும் பெண்கள் 36.009.055 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,423,832 ஆக உள்ளது. அதில் சிறுவர்கள் 3.820.276 ஆகவும்: சிறுமிகள் 3.603.556 ஆகவும் உள்ளனர். மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.61% ஆக உள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 996 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 555 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் படிப்பறிவு 51,837,507 (80.09 %) ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 28.040.491 (86,77 %) ஆகவும், பெண்களின் படிப்பறிவு 23.797.016 (73,44 %) ஆகவும் உள்ளது. நகரப்புறங்களில் 48,40% மக்களும், கிராமப்புறங்களில் 51,60 % மக்களும் வாழ்கின்றனர்.[29] சமயம் தமிழகத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 63.188.168 (87,58 %) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 4,229,479 (5,86 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 4.418.331 (6,12 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள்தொகை 14.601 (0,02 %) ஆகவும், சமண சமய மக்கள்தொகை 89.265 (0,12 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 11.186 (0,02 %) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 7.414 (0,01 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 188.586 (0,26 %) ஆகவும் உள்ளது. மொழிகள் 89 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். தெலுங்கு (5,65%), கன்னடம் (1,68%), உருது (1,51%), மலையாளம் (0,89%) ஆகிய மொழிகளும் பேசப்படுகின்றன. பழங்குடிகள் தமிழகத்தின் மக்கள்தொகையில் 3.5% மக்கள் பழங்குடிகள் (2001 கணக்கெடுப்பு). மாநிலத்தில் 40-க்கும் மேற்பட்ட பழங்குடிகள் உள்ளனர். நீலமலை, ஆனைமலை, கொல்லிமலை ஆகிய பகுதிகளில் குறிப்பிடத் தக்க எண்ணிக்கையில் தோடர், காடர், குறும்பர், காணிக்காரர், மலமலசர், பணியர், பழியர் முதலிய பழங்குடி இன மக்கள் வாழ்கின்றனர். பொருளாதாரம் தமிழ்நாடு, நல்ல தொழில் வளர்ச்சி கண்டுள்ள ஒருசில இந்திய மாநிலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. தமிழக மக்கள் தொகையில் குறிப்பிடத் தகுந்த பகுதியினர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் பொறியியல், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்கள், நெசவாலைகளுக்கும், ஆடை ஏற்றுமதி, விவசாய உபகரணங்கள், மோட்டார், கிரைண்டர் உற்பத்திக்கும், ஈரோடு மஞ்சள் சாகுபடி மற்றும் ஆடை ஏற்றுமதிக்கும், கரூர் இல்ல உப-சவுளி ஏற்றுமதி மற்றும் கனரக வாகன கூடு கட்டும் தொழில்களுக்கும், திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கும், சேலம் இரும்பு உருக்கு, அலுமினியம், ஆலைகளுக்காகவும், சவ்வரிசி, மாம்பழ, பட்டு சேலை, பருத்தி உற்பத்திக்கும் , கனரக தொழிற்சாலைகளுக்கும் ,மின்சார உற்பத்திக்காகவும், கனரக வாகனங்கள் கட்டுமானத்திலும், நிலக்கடலை, கரும்பு, தக்காளி போன்ற பயிர் உற்பத்திக்கும், நாமக்கல் கோழிப் பண்ணைகளுக்கும், சிவகாசி அச்சுத்தொழில், பட்டாசு உற்பத்திக்கும், காவிரி பாசன பகுதியில் அமைந்துள்ள திருச்சி, தஞ்சாவூர் போன்ற பகுதிகளும் கன்னியாகுமரி மாவட்ட நாஞ்சில் நாட்டுப் பகுதியும் விவசாயத்திற்கும், வேலூர் தோல் தொழிலுக்கும், சென்னை வாகன உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களுக்கும் பெயர் பெற்றுள்ளன. பாலிவுட் என அழைக்கப்படும் மும்பை திரைப்படத் துறைக்கு அடுத்ததாக, தமிழகத் திரைப்படத்துறை இந்தியாவின் இரண்டாவது பெரிய திரைப்படத் தொழில் மையமாகக் கோலிவுட் என்னும் பெயரோடு (கோடம்பாக்கம் + ஹாலிவுட் என்பதன் பெயர்த் தழுவல்) திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும், பெருமளவில் தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. தற்போதைய விலையில், 2011–2012 ஆண்டு கணக்கின்படி, தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி – 132.4 பில்லியன் அமெரிக்க டாலர் [30]. இந்தியாவில் தொழிற்சாலைகள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் - 26122 [31] மொத்த தொழில்துறை உற்பத்தியில் நாட்டில் முதலிடம். வெளிநாட்டு நேரடி முதலீட்டில் இந்தியாவில் முதல் மூன்று மாநிலங்களில் ஒன்று. இந்தியாவில் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில், தமிழ்நாட்டின் பங்கு 35 % சென்னையின் தானுந்துத் தயாரிப்பு திறன்: தானுந்து 13,80,000, வர்த்தக வாகனங்கள்: 3,61,000, ஸ்யுவி: 1,50,000 தானுந்துத் தொழிற்சாலைகள்: யுன்டாய், போர்டு, நிசான், அசோக் லேய்லான்ட் சென்னையில் உள்ள டயர் தயாரிப்பு நிறுவனங்கள்: எம்.ஆர்.எஃப், அப்பல்லோ டயர்ஸ், மிஷ்ஷலின், ஜெ.கெ டயர்ஸ் இலத்திரனியல் தொழிற்துறை: நோக்கியா, பாக்ஸ்கான், பிளக்ஸ்டிராநிக்ஸ், டெல், பிஒய்டி, வீடியொக்கான், சாம்சங், மோட்டரோலா இந்தியாவில் கறி-கோழி வளர்ப்பில், தமிழ்நாடு இரண்டாவது பெரியது [32]. இந்தியாவில் பால் உற்பத்தியில், தமிழ்நாடு இரண்டாவது பெரியது [33]. மின்சாரம்: 18083 மெகா வாட்(இரண்டாவது பெரியது) சிறப்பு பொருளாதார மண்டலம்: 92, தொழிற் பூங்கா: 19 [34] அதிக சாலை அடர்த்தி (மூன்றாவது பெரியது). சுகாதாரம், வீடமைப்பு, கல்வி ஆகிய துறைகளில் வளர்ச்சி அடைந்த மாநிலம். .ரகுராம் ராஜன் அறிக்கையின் படி தமிழ்நாடு இந்தியாவின் மூன்றாவது முன்னேறிய மாநிலம்[35]. தமிழ்நாட்டின் ஏழ்மை நிலை ரகுராம் ராஜன் அறிக்கையின் படி[2013ஆம் ஆண்டு], தமிழ்நாட்டின் ஏழ்மைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் விகிதம் 11.28 விழுக்காடு. இது மற்ற இந்திய மாநிலங்களை ஒப்பிடுகயில், தமிழ்நாட்டின் ஏழ்மை விகிதம் குறைவு [36]. 2004/2005ஆம் ஆண்டுகள் எடுத்த கணக்கெடுப்பு பணியின்போது 29.4 சதவீதத்தினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்தனர்.[37] ஆனால் இது 1999/00 கணிப்பீட்டின் படி 12-17 மில்லியன் மக்கள் அல்லது 21 விழுக்காடு மட்டுமே இருந்தது.[38] கல்வி அறிவு மற்றும் சமூக வளர்ச்சி சமூக முன்னேற்றத்தின் குறியீடுகளான (மனித வளர்ச்சிச் சுட்டெண்) பரவலான கல்வியறிவு, ஆண் - பெண் சமத்துவம், மேம்பட்ட பொது சுகாதாரம், நீண்ட சராசரி மனித ஆயுள், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, வேலை வாய்ப்புகள், தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியாவின் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாகத் தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாட்டு மக்களின் கல்வியறிவு இந்தியாவின் சராசரியைவிட அதிகம். இங்கு 2001–2011 காலக் கட்டத்தில் 74,04%ல் இருந்து 80,33% என்று கல்வியறிவு அதிகரித்தது. இன்று தமிழ்நாட்டில் 86,81% ஆண்களும் 73,86% பெண்களும் கல்வியறிவுடையவர் ஆவர். தமிழ்நாட்டில் 37 பல்கலைக்கழகங்கள், 454 பொறியியல் கல்லூரிகள், 1.150 கலைக் கல்லூரிகள், 2550 பள்ளிக்கூடங்கள் மற்றும் சுமார் 5.000 மருத்துவமனைகள் உள்ளன. இங்கு இரண்டு நடுவண் அரசு கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவை சென்னையில் அமைந்த இந்திய தொழில்நுட்பக் கழகம்,பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சியில் அமைந்த தேசிய தொழில்நுட்ப கழகம் ஆகும். மேலும் புகழ் மிக்க சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம்,அண்ணாமலை பல்கலைக்கழகம்,சேலம் சோனா பொறியியல் கல்லூரி்,பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம், வேலூர் கிருத்துவ மருத்துவ கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர்,பச்சையப்பன் கல்லூரி ,சென்னை, இலயோலாக் கல்லூரி ஆகியனவும் உள்ளன. தமிழகத்தில் வருடந்தோறும் 130.000 பேர் பொறியியல் படிப்பு முடித்துத் தேர்ச்சி பெறுகின்றனர். இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது. 525 பொறியியல் கல்லூரிகள்– 226034 பொறியியல் பட்டதாரிகள் (2012). 447 பலதொழில்நுட்பப் பயிலகம் – 171637 தொழில்நுட்பர்கள் (2012). 1622 தொழில் பயிற்சி நிறுவனம் – 173746 (2012). மருத்துவ கல்லூரி – 28 (ஆண்டு – 2012)[39]. பண்பாடு தமிழர் பண்பாடு நீண்ட கால வரலாறு கொண்டது. இலக்கியம், இசை, நாடகம் என்பன சார்ந்த பல்வேறு கலை வடிவங்கள் தமிழ் நாட்டில் சிறப்பான நிலையில் உள்ளன. பரத நாட்டியம், கர்நாடக இசை, திராவிடக் கட்டிடக்கலை போன்ற புகழ் பெற்ற உயர் கலை வடிவங்கள் பெரும்பாலும் தமிழகத்தில் வளர்ச்சியடைந்து சிறப்பெய்தியவை. மொழியும் இலக்கியமும் தமிழ் நாட்டின் ஆட்சி மொழி தமிழ் ஆகும். ஆங்கிலமும் அலுவல் மொழியாகப் பயன்படுகிறது. இந்தியா செம்மொழியாக அங்கீகரித்துள்ள மொழிகளில் தமிழ் முதலிடத்தில் உள்ளது. தமிழரின் பண்பாட்டில் தமிழ் மொழி மிக இன்றியமையாத இடத்தை வகிக்கிறது. சங்க இலக்கியங்கள் எனப்படும் தமிழின் மிகப் பழமையான இலக்கியங்கள் யாவும் செய்யுள் வடிவில் இயற்றப்பட்டவையாகும். தொன்மைக் காலம் முதலே இலக்கியம் மட்டுமல்லாமல் மக்களின் வாழ்க்கைக்கும் இலக்கணம் கண்ட மொழி தமிழ் மொழியாகும். திருக்குறள் என்ற அறநூல் தமிழின் மிகச் சிறந்த நீதிநூல் ஆகும். இது உலகின் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தன்னை இன்னாரென அடையாளம் காட்டாத ஒரு சிறந்த தமிழ்ப் புலவரால் இயற்றப்பட்டது இந்நூலாகும். நாடு, மொழி, இனம் கடந்து உலக மக்கள் யாவருக்கும் பொதுவான நீதியைக் கூறுவதால் திருக்குறள் உலகப் பொதுமறையெனப் போற்றப்படுகிறது. கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை (திருக்குறள் 400) தமிழின் இலக்கியங்களிலிருந்து அக்கால தமிழ் மக்களின் தலைசிறந்த பண்பாடு, வாழ்க்கை முறை போன்ற கூறுகளை நாம் அறியமுடிகிறது. இந்தியாவின் முதல் நூல்கள் தமிழிலேயே அச்சாயின. தமிழகத்தின் முதல் அச்சுக்கூடம் புன்னைக்காயலில் 1578இல் போர்த்துகீசியரால் நிறுவப்பட்டது.[40] பின்னர் தரங்கம்பாடி அச்சுக்கூடத்திலும் சென்னையிலும் ஏராளமான தமிழ் இலக்கியங்கள் அச்சுவடிவம் பெற்றன. இந்திய விடுதலைப் போரில் மக்களின் விடுதலை உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கு தமிழ் கவிஞர்களான பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் கவிதைகள் உதவியாய் இருந்தன. தற்காலத்தில் வாலி, வைரமுத்து, தாமரை போன்ற தமிழ்க் கவிஞர்கள் கவிதை படைக்கின்றனர். தமிழ் எழுத்தாளர்களால் புதினங்கள், சிறுகதைகள், பெருங்கதைகள் எனத் தமிழ் நூல்கள் வெளிவருகின்றன. போக்குவரத்து தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து மூலம் சிறு கிராமங்களை இணைப்பதால் போக்குவரத்து வளர்ச்சி அடைந்துள்ளது.இரயில் போக்குவரத்து மூலம் பெரும்பான்மையான நகரங்களையும், விமான போக்குவரத்து மூலம் முக்கிய நகரங்களையும் இணைக்கின்றன. விழாக்கள் பொங்கல் திருநாள் (தமிழர் திருநாள் அல்லது உழவர் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது), தமிழர்கள் கொண்டாடும் முதன்மையான திருநாள் ஆகும். தமிழ் மாதமான தை முதல் நாள் (சனவரி 14 அல்லது 15)-ல் இத்திருநாள் கொண்டாடப்படுகிறது. நோன்புப் பெருநாள், பக்ரீத், முகரம் இசுலாமியப் புத்தாண்டு பொங்கல் தவிர தீபாவளி, தைப்பூசம், வினாயகர் சதுர்த்தி, சரசுவதி (கல்விக் கடவுள்) பூசை, ஆயுத பூசை , கிறிஸ்துமஸ், புனித வெள்ளி போன்ற சமயம் சார்ந்த திருநாட்களும் கோடைக்கொண்டாட்டமாம் தமிழ் புத்தாண்டு திருநாளும் (சித்திரை மாதம் முதல் நாள் - ஏப்ரல் 13 அல்லது 14 ) மற்றும் ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் நடைபெறுகின்றன. சுற்றுலாத்துறை தமிழ்நாடு அழகிய நிலப் பகுதிகள், பாரம்பரியச் சின்னங்கள் நிறைந்த சுற்றுலா முதன்மைத்துவம் உள்ள மாநிலமாகும். தமிழ்நாடு, திராவிட கட்டிடக்கலை பாணியைப் பிரதிபலிக்கும் கோயில்களுக்குப் புகழ் பெற்றது. இக்கோயில்களுக்கு வியக்க வைக்கும் கோபுரங்களும் ரதங்களும் அழகு சேர்க்கின்றன.இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவிலின் மூன்றாம் பிரகாரம், உலகின் மிகப் பெரியதாகும். சோழர் கால தஞ்சை பெரிய கோவிலும் பல்லவர் கால மாமல்லபுரம் சிற்பங்களும் கோவில்களும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இராமநாதபுரம், தஞ்சை, மதுரை, சுவாமிதோப்பு காஞ்சி,சேலம்,தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்,மேச்சேரி பத்ரகாளியம்மன் மற்றும் செங்காட்டூர்(சேலம்) ஆகியவை கோயில் நகரங்களாகத் திகழ்கின்றன. கன்னியாகுமரி கடல் முனையில் அமைந்துள்ள வள்ளுவர் சிலையும் காண வேண்டிய இடமாகும். எழில் கொஞ்சும் நீலகிரி மற்றும் கோடைக்கானல் மலைப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப் பகுதிகள், கிழக்குக் கடற்கரை, ஏற்காடு, மேட்டூர், பூலாம்பட்டி போன்ற மனம் கவரும் தலங்களும் உண்டு. இவற்றையும் பார்க்கவும் தமிழ்நாட்டுப் பொருளாதாரம் தமிழ்நாடு வேளாண்மைத் தொழிற்துறை தமிழ்நாடு இலத்திரனியல் தொழிற்துறை தமிழ்நாடு தானுந்து தொழிற்துறை தமிழ்நாட்டு ஓவியக் கலை தமிழ்நாட்டு ஊர்களும் உணவுகளும் தமிழ்நாட்டு இந்துத்துவ அமைப்புகள் தமிழ்நாட்டு தொழிற்துறைகள் தமிழ்நாட்டு வேதிப்பொருள் தொழிற்துறை தமிழ்நாட்டு அறிவொளி இயக்கம் தமிழ்நாட்டு சீர்திருத்தங்கள் தமிழ்நாட்டு ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்கள் தமிழ்நாட்டு தலித் அமைப்புகள் தமிழக வரலாறு தமிழக ஏரிகள் தமிழ்நாடு துடுப்பாட்ட அணி தமிழ்நாட்டுக் காலநிலை தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் - அதிகாரப்பூர்வ இணையத்தளம் - நிலப்படங்களுக்கான அரசு இணையத்தளம் - அரசு சுற்றுலாத்துறை இணையத்தளம் * பகுப்பு:இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்
தமிழ்நாட்டின் பழைய பெயர் என்ன?
சென்னை மாகாணம்
783
tamil
a4fdb6236
பெங்களூர் (Kannada: ಬೆಂಗಳೂರು) கர்நாடக மாநிலத்தின் தலைநகராகும். கர்நாடகாவின் தென்கிழக்கு பகுதியில் தக்காண பீடபூமியில் அமைந்துள்ள இந்நகரம் மக்கள்தொகையின் அடிப்படையில் இந்தியாவின் மூன்றாவது பெருநகரமாகவும்[1] நகர்ப்புற மக்கள்தொகை அடர்த்தியில் ஐந்தாவது பெரியதாகவும் திகழ்கிறது. நவீன பெங்களூரின் சிற்பியாக பலர் கருதும் முதலாம் கெம்பெ கவுடா இந்த இடத்தில் ஒரு செங்கல்-கலவை கோட்டையைக் கட்டி இதனை விஜயநகர சாம்ராச்சிய பிராந்தியமாக நிறுவிய 1537 ஆம் ஆண்டு முதல் தான் இந்நகரத்தின் நவீன வரலாறானது துவங்குவதாக பலர் கருதுகின்றனர். பிரித்தானிய ஆட்சியின் போது, இது தென்னிந்தியாவில் காலனி ஆட்சி மையமாக ஆனது. இன்று, ஒரு பெரிய வளரும் பெருநகரமாக, இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற பல கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் தாயகமாக பெங்களூரு திகழ்கிறது. ஏராளமான பொதுத்துறை கனரக தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்கள், விண்வெளி, தொலைத்தொடர்பு, மற்றும் பாதுகாப்பு துறை நிறுவனங்கள் இந்நகரில் அமைந்துள்ளன. தகவல் தொழில்நுட்பத்துறை வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியில் நாட்டின் முன்னணியில் திகழும் தனது பெருமைமிகு நிலையின் காரணமாக, பெங்களூரு இந்தியாவின் 'சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.[2] மக்கள்பரவலில் பன்முகத்தன்மை கொண்டதான பெங்களூரு பெரும் பொருளாதார மையமாகத் திகழ்வதோடு இந்தியாவில் மிகத் துரிதமாய் வளரும் பெரு நகரமாகவும் உள்ளது. 2015ஆம் ஆண்டு பெங்களுரு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[3] பெயர்வரலாறு பெங்களூரு என்ற நகரப் பெயரின் ஆங்கிலவயமாக்க பிரயோகமான பெங்களூர் என்னும் பெயர் தான் சில ஆண்டுகள் முன்பு வரை பயன்படுத்தப்பட்டு வந்தது. "பெங்களூரு" என்கிற பெயருக்கான முதல்முதல் குறிப்பு ஒன்பதாம் நூற்றாண்டு மேற்கு கங்க வம்சத்தின் "வீரக் கல்" (ஒரு மாவீரனின் சிறப்பம்சங்களைப் போற்றும் கல் எழுத்துக்கள்) ஒன்றில் செதுக்கப்பட்டுள்ள எழுத்துக்களில் காணத்தக்கதாய் இருக்கிறது. பெகரில் கண்டெடுக்கப்பட்ட இந்த கல்வெட்டில், "பெங்களூரு" என்பது 890 ஆம் ஆண்டில் யுத்தம் நடந்த ஒரு இடமாகக் குறிப்பிடப்படுகிறது. கங்க சாம்ராச்சியத்தின் ஒரு பகுதியாக இந்த இடம் இருந்தது. இது பெங்கவால்-உரு, அதாவது ஹலெகன்னடாவில் (பழைய கன்னடம்) "காவலர்களின் நகரம்" என்று அழைக்கப்பட்டது.[4] தி ஹிந்து பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரை கூறுகிறது:[5]கிபி 890 காலத்தியதாக இருக்கும் ஒரு கல்வெட்டு, பெங்களூரு 1,000 வருடங்களுக்கும் பழமையானது என்று காண்பிக்கிறது. ஆனால் இக்கல்வெட்டு நகருக்கருகில் பெகுரில் பார்வதி நாகேஸ்வரா கோவிலில் கவனிப்பாரின்றி இருக்கிறது...ஹலே கன்னட (பழைய கன்னடம்) மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த கல்வெட்டு எழுத்துக்கள் 890 ஆம் ஆண்டின் பெங்களூரு போர் ஒன்றைக் குறிப்பிடுகிறது. இதனை வரலாற்று ஆசிரியரான ஆர்.நரசிம்மச்சார் தனது கர்நாடிகா கல்லெழுத்துவியல் (தொகுதி. 10 துணைச்சேர்ப்பு) தொகுப்பில் பதிவு செய்திருந்தும் கூட, அதனை பாதுகாக்க இதுவரை எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. சொல்வழக்கு கதையாக இருந்தாலும் கூட பிரபலமான பழைய சம்பவம் ஒன்று இவ்வாறு நினைவு கூர்கிறது: 11 ஆம் நூற்றாண்டின் ஹோய்சாலா அரசரான இரண்டாம் வீர வல்லாளர், வேட்டையாட சென்ற போது காட்டில் வந்த வழியை மறந்து விட்டார். பசியிலும் களைப்பிலும் இருந்த போது, ஒரு ஏழை கிழவியை அவர் சந்தித்தார். அந்த கிழவி அவருக்கு அவித்த பயிறு பரிமாறினார். ராஜா நன்றியுடன் "பென்ட-கால்-உரு" (Kannada: ಬೆಂದಕಾಳೂರು) (வார்த்தை அர்த்தத்தில், "அவித்த பீன்ஸ்களின் நகரம்") என்று அந்த இடத்திற்கு பெயரிட்டார். அது இறுதியில் "பெங்களூரு" என்று ஆனது.[6][7] 11, டிசம்பர் 2005 அன்று, பெங்களூர் என்கிற பெயரை பெங்களூரு என்று பெயர்மாற்றம் செய்வதற்கு ஞானபீட விருது வென்ற யூ.ஆர். அனந்தமூர்த்தி அளித்திருந்த ஒரு யோசனையை ஏற்றுக் கொண்டதாக கர்நாடக அரசு அறிவித்தது.[8] 27, செப்டம்பர் 2006 அன்று புருகத் பெங்களூரு மகாநகர பலிகே (BBMP) உத்தேசிக்கப்பட்ட பெயர் மாற்றத்தை அமல்படுத்த தீர்மானம் நிறைவேற்றியது.[9] கர்நாடகா அரசாங்கத்தால் அந்த தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதிகாரப்பூர்வமாக நவம்பர் 1, 2006 முதல் பெயர் மாற்றத்தை அமலாக்க முடிவு செய்யப்பட்டது.[10][11] ஆயினும், மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து ஒப்புதல் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதங்களின் காரணமாக இந்த நிகழ்முறை சற்று முடங்கியது.[12] வரலாறு மேலைக் கங்கர்களின் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆட்சிக்கு பிறகு, கிபி 1024 ஆம் ஆண்டு சோழர் களால் பெங்களூரு கைப்பற்றப்பட்டு பின் 1070 ஆம் ஆண்டில் சாளுக்கிய-சோழர்களின் வசம் சென்றது. 1116 ஆம் ஆண்டில், ஹோய்சாளப் பேரரசு சோழர்களை தூக்கியெறிந்ததோடு தனது ஆட்சியை பெங்களூருக்கும் நீட்டித்தது. நவீன பெங்களூரு விஜயநகர சாம்ராச்சியத்தின் குத்தகைதாரர்களில் ஒருவரான முதலாம் கெம்பெ கவுடாவினால் நிறுவப்பட்டது. இவர் செங்கல்-கலவை கோட்டை ஒன்றையும் நந்தி கோயில் ஒன்றையும் நவீன பெங்களூருவின் அருகாமையில் 1537 ஆம் ஆண்டில் கட்டினார். புதிய நகரத்தை கெம்பெ கவுடா "கந்துபூமி" அல்லது "நாயகர்களின் பூமி" என்று குறிப்பிட்டார்.[7] பெங்களூரு கோட்டைக்குள்ளாக, நகரம் சிறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது - ஒவ்வொன்றும் ஒரு "பேட்டெ" (பேட்டை) என்றழைக்கப்பட்டது. நகரம் இரண்டு முக்கிய வீதிகளைக் கொண்டிருந்தது. சிக்கபேட்டெ வீதி கிழக்கு-மேற்காக சென்றது, தொட்டபேட்டெ வீதி வடக்கு-தெற்காக சென்றது. இவை குறுக்கிட்ட இடம் பெங்களூரின் இதயமான தொட்டபேட்டெ சதுக்கத்தை உருவாக்கியது. கெம்பெ கவுடாவுக்கு அடுத்து வந்த, இரண்டாம் கெம்பெ கவுடா, பெங்களூரின் எல்லைகளாக அமைந்த நான்கு புகழ்பெற்ற கோபுரங்களைக் கட்டினார்.[13] விஜயநகர ஆட்சியின் போது, பெங்களூரு "தேவராயநகர" மற்றும் "கல்யாணபுரா" ("மங்கள நகரம்") என்றும் அழைக்கப்பட்டது. விஜயநகரப் பேரரசு வீழ்ந்த பின், பெங்களூரின் ஆட்சி பல கைகளுக்கு மாறியது. 1638 ஆம் ஆண்டில், ரனதுல்லா கான் தலைமையிலான ஒரு பெரும் பீஜப்பூர் படை ஷாஜி போன்ஸ்லேவுடன் இணைந்து மூன்றாம் கெம்பெ கவுடாவைத் தோற்கடித்தது. பெங்களூரு ஷாஜிக்கு கொடையாகக் கொடுக்கப்பட்டது. 1687 ஆம் ஆண்டில், முகலாய தளபதியான காசிம் கான் ஷாஜியின் மகனான எகோஜியைத் தோற்கடித்து, பெங்களூரை மைசூரின் சிக்கதேவராஜ உடையாருக்கு (1673-1704) 300,000 ரூபாய்க்கு விற்று விட்டார்.[14][15] 1759 ஆம் ஆண்டில் இரண்டாம் கிருஷ்ணராஜ உடையார் இறந்த பிறகு, மைசூர் ராணுவத்தின் படைத் தளபதியாக இருந்த ஹைதர் அலி தன்னை மைசூரின் உண்மையான ஆட்சியாளராக பிரகடனப்படுத்திக் கொண்டார். பின்னர் ஆட்சி மைசூர்ப் புலி என்று அழைக்கப்பட்ட ஹைதர் அலியின் மகனான திப்பு சுல்தான் வசம் சென்றது. நான்காம் ஆங்கிலேய-மைசூர் போரில் (1799) திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டு மரணத்தை தழுவிய பிறகு இறுதியில் பெங்களூரு பிரித்தானிய இந்திய சாம்ராச்சியத்துடன் இணைக்கப்பட்டது. பிரித்தானியர்கள் பெங்களூரு "பீடெ"யின் நிர்வாகக் கட்டுப்பாட்டை மைசூர் பேரரசரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு, கன்டோன்மென்டை மட்டும் தங்கள் பரிபாலனத்தின் கீழ் வைத்துக் கொண்டனர். மைசூர் ராச்சியத்தின் 'இருப்பிடம்' முதலில் மைசூரில் 1799 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. பின் இது 1804 ஆம் ஆண்டில் பெங்களூருக்கு மாற்றப்பட்டது. இந்த காலத்தில் மதராஸ் பிரசிடென்சியில் இருந்து தொழிலாளர்களை பணியமர்த்தி பின் அவர்களை கன்டோன்ட்மென்ட் பகுதிக்கு மாற்றுவது பிரித்தானியருக்கு சுலபமானதாக இருந்தது. மைசூர் ராஜ்ஜியம் தனது தலைநகரை மைசூர் நகரத்தில் இருந்து பெங்களூருக்கு 1831 ஆம் ஆண்டில் மாற்றியது.[16] இந்த காலகட்டத்தின் இரண்டு முக்கிய வளர்ச்சிகள் நகரின் துரித வளர்ச்சிக்கு பங்களித்தது: அவற்றுள் ஒன்று தந்தி இணைப்புகளின் அறிமுகம் மற்றையது 1864 ஆம் ஆண்டின் மதராசுக்கான இரயில் இணைப்பாகும். 19 ஆம் நூற்றாண்டில் பெங்களூரு ஒரு இரட்டை நகரமாய் ஆனது. "பெடெ" வாசிகள் பெரும்பாலும் கன்னடத்தினராக இருந்தார்கள். பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட "கன்டோன்ட்மென்ட்" பகுதி குடியிருப்புவாசிகள் பெருமளவில் தமிழர்களாக இருந்தனர்.[17] 1898 ஆம் ஆண்டில் பெங்களூரில் பிளேக் தொற்றுநோய் பரவியது. இது அந்நகரின் மக்கள்தொகையை பெருமளவு குறைத்தது. மல்லேஸ்வரா மற்றும் பசவனகுடியின் புதிய விரிவாக்க பகுதிகள் 'பெடெ'யின் வடக்கு மற்றும் தெற்கில் உருவாக்கப்பட்டன. தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தொலைபேசி கம்பிகள் இடப்பட்டன. 1898 ஆம் ஆண்டில் ஒரு சுகாதார அதிகாரியும் நியமனம் செய்யப்பட்டார். 1906 ஆம் ஆண்டில், இந்தியாவில் முதன்முதலில் மின்சாரத்தை பெற்ற நகரமாக பெங்களூரு ஆனது. சிவசமுத்திரத்தில் அமைந்துள்ள நீர்மின் ஆலையில் இருந்து மின்சாரம் பெறப்பட்டது. இந்தியாவின் தோட்ட நகரமாக பெங்களூரின் புகழ் 1927 ஆம் ஆண்டில் நான்காம் கிருஷ்ணராஜ உடையாரின் ஆட்சியின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களின் போது துவங்கியது. நகரை அழகுபடுத்துவதற்காக பூங்காக்கள், கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனைகள் கட்டப்பட்டன. 1947 ஆகஸ்டு மாதத்தில் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, மைசூர் மகாராஜா அரசபிரமுகராக இருந்த புதிய மைசூர் ராச்சியத்தில் தான் பெங்களூரு தொடர்ந்தது. பொதுத் துறை வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி ஆகியவை மாநிலத்தின் பிற பகுதியில் இருந்து கன்னடத்தினர் நகருக்குள் குடியேறுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியது. 1941-51 மற்றும் 1971-81 தசாப்தங்களில் பெங்களூரு துரித வளர்ச்சியை கண்டது. இது வடக்கு கர்நாடகாவில் இருந்து ஏராளமானோர் இந்நகரில் குடியேற வழி செய்தது. 1961 ஆம் ஆண்டுவாக்கில், 1,207,000 மக்கள்தொகையுடன் இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமாக பெங்களூரு ஆகியிருந்தது.[13] தொடர்ந்து வந்த சகாப்தங்களில், நகரில் பல தனியார் நிறுவனங்கள் தோன்றியதைத் தொடர்ந்து பெங்களூரின் உற்பத்தி தளம் தொடர்ந்து விரிவாக்கம் கண்டு வந்தது. பெங்களூரு தனது நில விற்பனைச் சந்தையில் 1980கள் மற்றும் 1990களில் பெரும் வளர்ச்சியைக் கண்டது. நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மூலதன முதலீட்டாளர்கள் பெங்களூரின் பெருமளவிலான காலி மனைகள் மற்றும் வீடுகளை பலமாடி அடுக்கங்களாக மாற்றியதால் இந்த வளர்ச்சி உத்வேகம் பெற்றது.[18] 1985 ஆம் ஆண்டில், டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனம் தான் பெங்களூரில் தனது தளத்தை அமைத்த முதல் பன்னாட்டு நிறுவனமாகும். பிற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் பின்தொடர்ந்தன. 20 ஆம் நூற்றாண்டின் இறுதிவாக்கில், பெங்களூரு தன்னை இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்காக உறுதியாக நிறுவிக் கொண்டிருந்தது . புவியியல் தென்னிந்திய மாநிலமான கர்நாடகத்தின் தென்கிழக்கில் பெங்களூரு அமைந்துள்ளது. இது மைசூர் பீடபூமியின் (இருதய பகுதியில் கேம்பிரியனுக்கு முந்தைய பரந்த தக்காண பீடபூமியின் ஒரு பகுதி) 920 மீ (3,018 அடி) சராசரி உயரத்தில் அமைந்துள்ளது. இது 741 கிமீ² (286 மைல்²).[19] பரப்பளவில் அமைந்துள்ளது. பெங்களூரு நகரத்தின் பெரும் பகுதி கர்நாடகத்தின் பெங்களூரு நகர மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுற்றியிருக்கும் கிராமப் பகுதிகள் பெங்களூரு கிராம மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். பழைய பெங்களூரு கிராம மாவட்டத்தில் இருந்து ராமநகரா என்னும் புதிய மாவட்டத்தை கர்நாடகா அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கிறது. நகரின் வழியாய் ஓடும் பெரிய ஆறு எதுவும் இல்லை. ஆயினும் வடக்கில் 60 கிமீ தொலைவில் (37 மைல்கள்) நந்தி மலையில் ஆர்க்காவதி ஆறும் தென்பெண்ணை ஆறும் சந்தித்துக் கொள்கின்றன. அர்காவதி ஆற்றின் சிறு கிளைநதியான விருட்சபவதி ஆறு நகருக்குள்ளாக பசவனகுடியில் தோன்றி நகரின் வழியே பாய்கிறது. பெங்களூரின் பெரும் கழிவுகளை அர்க்காவதி மற்றும் விருட்சபவதி ஆறுகள் சேர்ந்து தான் சுமக்கின்றன. 1922 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஒரு கழிவுநீர் அமைப்பு நகரின் 215 கிமீ² (133 மைல்²) தூரத்திற்கு பரந்து அமைந்து பெங்களூரின் சுற்றளவில் அமைந்துள்ள ஐந்து கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களை இணைக்கிறது.[20] 16 ஆம் நூற்றாண்டில், நகரின் நீர்த்தேவைகளை நிறைவு செய்வதற்காக முதலாம் கெம்பெ கவுடா பல ஏரிகளைக் கட்டினார். கெம்பம்புதி கெரே தான் இந்த ஏரிகளில் மிகவும் முதன்மையானதாக இருந்தது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில், நகருக்கு நீர் விநியோகம் செய்வதற்கு சர் மிர்சா இஸ்மாயில் (மைசூர் திவான், கிபி 1926-41) மூலம் நந்தி ஹில்ஸ் வாட்டர்ஒர்க்ஸ் நிறுவப்பட்டது. தற்போது நகருக்கான நீர் வழங்கலில் சுமார் 80% பங்கினை காவிரி நதி அளிக்கிறது. எஞ்சிய 20% திப்பகொண்டனஹல்லி மற்றும் ஹெசராகட்டா ஆகிய அர்காவதி ஆற்றின் நீர்த்தேக்கங்கள் மூலம் பெறப்படுகிறது.[21] பெங்களூரு ஒரு நாளைக்கு 800 மில்லியன் லிட்டர்கள் (211 மில்லியன் அமெரிக்க கேலன்கள்) நீரைப் பெறுகிறது. இது வேறு எந்த ஒரு இந்திய நகரத்தைக் காட்டிலும் அதிகமானதாகும்.[22] ஆயினும், பெங்களூரு சில சமயங்களில் குறிப்பாக கோடைப் பருவங்களின் போது நீர்ப்பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. பெங்களூரு ஏராளமான நன்னீர் ஏரிகள் மற்றும் குளங்களைக் கொண்டிருக்கிறது. மடிவாலா குளம், ஹெப்பல் ஏரி, அல்சூர் ஏரி மற்றும் சாங்க்கி குளம் ஆகியவை அவற்றில் பெரியவையாகும். வண்டல் படிவுகளின் வண்டல் மற்றும் மணல் அடுக்குகளில் இருந்து நிலத்தடிநீர் தோன்றுகிறது. நகரத்தின் தாவர வகைகளைப் பொறுத்த வரை பெரும் எண்ணிக்கையில் இலையுதிர் வகை மரங்களும் சிறு எண்ணிக்கையில் தென்னை மரங்களும் உள்ளன. பெங்களூரு நிலவதிர்வு மண்டலத்தில் இரண்டாம் அடுக்கு பகுதியாக (ஒரு ஸ்திரமான மண்டலம்) வகுக்கப்பட்டிருந்தாலும், 4.5 ரிக்டர் அளவுக்கான பெரிய பூகம்பங்களை இது கண்டிருக்கிறது.[23] காலநிலை அதிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் காரணத்தால், பெங்களூரு ஆண்டுமுழுவதும் பெரும்பாலும் ரம்மியமான காலநிலையையே கொண்டிருக்கிறது, ஆயினும் அவ்வப்போதான வெப்ப அலைகள் கோடையில் அசவுகரியத்தை உண்டுபண்ணத்தக்கனவாக இருக்கின்றன.[24] ஜனவரி மாதம் மிகவும் குளிர்ந்த மாதமாக இருக்கிறது. சராசரி குறைந்த வெப்பநிலை 15.1°C ஆக இருக்கும். ஏப்ரல் மாதம் மிகவும் வெப்பமான மாதமாக இருக்கிறது. சராசரி உயர்ந்த வெப்பநிலையாக 33.6°C இருக்கும்.[25] பெங்களூரில் மிக அதிகமாகப் பதிவான வெப்பநிலை 38.9°C ஆகும். மிகவும் குறைந்தபட்சமாக 7.8°C (1884 ஜனவரி) பதிவாகியிருக்கிறது.[26][27] குளிர்கால வெப்பநிலைகள் அபூர்வமாகத் தான் 12°C க்கு கீழ் சரியும். கோடை வெப்பநிலைகள் அபூர்வமாகத் தான் 36-37°C (100°F) க்கு அதிகமாக இருக்கும். வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவக்காற்று இரண்டில் இருந்தும் பெங்களூரு மழைப்பொழிவைப் பெறுகிறது. செப்டம்பர், அக்டோபர் மற்றும் ஆகஸ்டு ஆகியவை முறையே மிகவும் மழைப்பொழிவு மிகுந்த காலங்களாகும்.[25] ஓரளவு அடிக்கடி நிகழும் இடிமின்னலுடனான புயல் மழையால் கோடை வெப்பம் சரிக்கட்டப்படுகிறது. இது மின்துண்டிப்பு மற்றும் உள்ளூர் வெள்ளப்போக்கிற்கும் அவ்வப்போது காரணமாகிறது. 24 மணி நேர காலத்தில் பதிவான மிக அதிக மழைப்பொழிவு அக்டோபர் 1, 1997 அன்று பதிவானது.[28] நகர நிர்வாகம் புருகத் பெங்களூரு மகாநகர பலிகே (BBMP) தான் நகரத்தின் நிர்வாகத்திற்கான பொறுப்பில் இருக்கிறது.[29] புருகத் பெங்களூரு மகாநகர பலிகே பெருநகர மாமன்றம் மூலம் நடத்தப்படுகிறது. மாமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு வார்டுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மாமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. மாமன்றத்தின் ஒரு மேயர் மற்றும் ஆணையர் இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் இருந்து ஒருவருக்கோ அல்லது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் வேட்பாளர் ஒருவருக்கோ இந்த இடம் ஒதுக்கப்படுகிறது. பெங்களூரின் துரித வளர்ச்சியானது போக்குவரத்து நெருக்கடி மற்றும் உள்கட்டுமான பழமைப்படல் ஆகியவை தொடர்பான பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. இவை பெங்களூரு மகாநகர பாலிகேவுக்கு தீர்ப்பதற்கு சவாலளிக்கும் பிரச்சினைகளாக உள்ளன. 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த பெங்களூரின் இயற்பியல், உயிரியல் மற்றும் சமூகபொருளாதார அளவீடுகள் குறித்த பெதெல்ல சுற்றுச்சூழல் மதிப்பீடு அமைப்பு (BEES), பெங்களூரின் தண்ணீர் தரம் மற்றும் பிராந்திய மற்றும் நீர்ப்புற சூழலமைப்பு ஏறக்குறைய உன்னதமானவை யாக இருப்பதாக சுட்டிக் காட்டியது. நகரின் சமூக பொருளாதார அளவீடுகள் (போக்குவரத்து நெரிசல், வாழ்க்கைத் தரம்) ஆகியவை குறைந்த மதிப்பெண்களே பெற்றன.[30] நகரின் திட்டமிடப்படாத வளர்ச்சியானது பெரும் போக்குவரத்து நெருக்கடியில் விளைந்தது. மேற்பால அமைப்பு கட்டுவதன் மூலமும் ஒருவழிப்பாதைகள் மூலமும் இந்த பிரச்சினையைத் தீர்க்க மாநகராட்சி முனைந்தது. சில மேற்பாலங்களும் ஒருவழிப் பாதைகளும் போக்குவரத்து நெருக்கடியான சூழலை ஓரளவுக்குக் குறைக்க உதவினாலும் நகர போக்குவரத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு அவற்றால் ஈடு கொடுக்க முடியவில்லை.[30] 2005 ஆம் ஆண்டில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு இரண்டும் தங்களது வருடாந்திர நிதி ஒதுக்கீட்டில் பெங்களூரின் உள்கட்டுமான மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க தொகையை ஒதுக்கின.[31] நகர வளர்ச்சித் திட்டங்களை வடிவமைப்பதிலும் செயல்படுத்துவதிலும் பெங்களூரு வளர்ச்சி கழகம் (BDA) மற்றும் பெங்களூரு திட்டப் பணிப்படை (BATF) ஆகியவற்றுடன் இணைந்து பெங்களூரு மகாநகர பாலிகே செயல்படுகிறது. ஒரு நாளைக்கு 3,000 டன்கள் திடக்கழிவினை பெங்களூரு உருவாக்குகிறது. இதில் 1,139 டன்கள் சேகரிக்கப்பட்டு கர்நாடகா கழிவுர மேம்பாட்டு வாரியம் போன்ற கழிவுரப் பிரிவுகளுக்கு அனுப்பப்படுகின்றன. எஞ்சிய திடக் கழிவுகள் நகராட்சியால் திறந்த வெளிகளிலோ அல்லது நகருக்கு வெளியே சாலையோரங்களிலோ கொட்டப்படுகின்றன.[32] போக்குவரத்து காவல்துறை, நகர ஆயுதப்படை காவல்துறை, மத்திய குற்றவியல் பிரிவு மற்றும் நகர குற்றவியல் ஆவணப் பிரிவு உள்ளிட்ட ஆறு புவியியல் மண்டலங்களை பெங்களூரு நகர காவல்துறை (BCP) கொண்டுள்ளது. அத்துடன் இரண்டு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்பட 86 காவல் நிலையங்களையும் இயக்குகிறது.[33] கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் என்கிற வகையில் கர்நாடகா உயர்நீதி மன்றம், கர்நாடகா சட்டமன்றம் மற்றும் கர்நாடக ஆளுநர் இல்லம் ஆகிய முக்கிய மாநில அரசாங்க அமைப்புகளின் இருப்பிடங்கள் பெங்களூரில் அமைந்துள்ளன. இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு மூன்று உறுப்பினர்களையும், கர்நாடகா சட்ட மன்றத்திற்கு 28 உறுப்பினர்களையும் பெங்களூரு பங்களிப்பு செய்கிறது.[34] பெங்களூரில் மின்சார ஒழுங்கு கர்நாடகா மின் விநியோக நிறுவனம் (KPTCL) மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தியாவில் பல நகரங்களைப் போலவே, பெங்களூரிலும் அறிவிக்கப்பட்ட மின்தடை உள்ளது. குறிப்பாக கோடைக் காலங்களில். வீட்டுத் தேவைகள் மற்றும் பெருநிறுவனத் தேவைகள் இரண்டின் நுகர்வையும் பூர்த்தி செய்வதற்கு மின்சாரம் வழங்கும் நிறுவனங்களுக்கு இது அவசியமாகிறது. பொருளாதாரம் பெங்களூரின் பொருளாதாரம் (2002-03 மொத்த மாவட்ட வருவாய்) அதனை இந்தியாவின் ஒரு பிரதான பொருளாதார மையமாக ஆக்குகிறது.[35] 10.3% பொருளாதார வளர்ச்சியுடன், பெங்களூரு தான் இந்தியாவில் மிகத்துரித வளர்ச்சியுறும் முக்கிய பெரு நகரமாக இருக்கிறது.[36] தவிரவும், பெங்களூரு தான் இந்தியாவின் நான்காவது பெரிய துரித நகர்வு நுகர்வு பொருள் (FMCG) சந்தையாக இருக்கிறது.[37] மிக உயர்ந்த சொத்துமதிப்பு கொண்ட தனிநபர்கள் எண்ணிக்கையில் மூன்றாவது பெரிய மையமாக திகழும் இந்நகரம் 10,000 க்கும் அதிகமான டாலர் மில்லியனர்களைக் கொண்டுள்ளது. அத்துடன் முதலீடு செய்யத்தக்க உபரியைக் கொண்டுள்ள சுமார் 60,000 பெரும் பணக்காரர்களையும் கொண்டுள்ளது.[38] 2001 வாக்கில், அந்நிய நேரடி முதலீட்டில் பெங்களூரின் பங்களிப்பு இந்திய நகரங்களில் நான்காவது பெரியதாகும்.[39] 1940 ஆம் ஆண்டில் சர் மிர்சா இஸ்மாயில் மற்றும் சர் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா ஆகிய தொழில்துறை முன்னோடிகள் பெங்களூரின் வலிமையான உற்பத்தி மற்றும் தொழில்துறை அடித்தளத்தை அபிவிருத்தி செய்வதில் முக்கிய பங்கை ஆற்றினார்கள். பல பொதுத்துறை நிறுவனங்களின் தலைமையகங்கள் பெங்களூரில் அமைந்துள்ளன. 1972 ஜூன் மாதத்தில், விண்வெளித் துறையின் கீழ் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) உருவாக்கப்பட்டு அதன் தலைமையகம் இந்நகரில் அமைந்தது. இன்போசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய இந்தியாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய மென்பொருள் நிறுவனங்கள் தங்களது தலைமையகங்களை பெங்களூரில் கொண்டுள்ளன. நகரில் அமைந்துள்ள ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் காரணமாக பெங்களூரு இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. இவை இந்தியாவின்₹144,214 crore (US$20billion)2006-07 தகவல்தொழில்நுட்ப சேவை ஏற்றுமதியில் 33% பங்களிப்பு செய்தன.[40] தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியானது நகருக்கு பிரத்தியேக சவால்களையும் அளித்திருக்கிறது. நகரத்தின் உள்கட்டமைப்பில் மேம்பாட்டைக் கோரும் நகரின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், கர்நாடகத்தின் கிராமப் பகுதி மக்களையே தங்கள் பிரதான வாக்கு வங்கிகளாகக் கொண்டிருக்கும் மாநில அரசாங்கத்திற்கும் இடையே சிலசமயங்களில் கருத்து மோதல்கள் ஏற்படுகின்றன.[41] இந்தியாவில் உயிரித் தொழில்நுட்பம் தொடர்பான துறைகளின் மையமாக பெங்களூரு விளங்குகிறது. 2005 ஆம் ஆண்டில், இந்தியாவின் 265 உயிரிதொழில்நுட்ப நிறுவனங்களில் சுமார் 47% இங்கு அமைந்திருந்தன; இந்தியாவின் மிகப்பெரிய உயிரிதொழில்நுட்ப நிறுவனமான பயோகான் நிறுவனமும் இதில் அடங்கும்.[42][43] போக்குவரத்து பெங்களூரில் புதிதாகக் கட்டப்பட்ட பெங்களூரு சர்வதேச விமான நிலையம் (ATA குறியீடு: BLR) 24 மே 2008 முதல் தனது செயல்பாட்டைத் துவக்கியது. முன்னதாக நகருக்கு எச்ஏஎல் விமானநிலையம் சேவையாற்றி வந்தது. இது இந்தியாவின் நான்காவது பரபரப்பான விமானநிலையமாக இருந்தது.[44][45][46] ஏர் டெக்கான் மற்றும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தங்களது தலைமையகங்களை பெங்களூரில் கொண்டுள்ளன.[47] நம்ம மெட்ரோ என்றழைக்கப்படும் துரித போக்குவரத்து அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. நிறைவுறுகையில் இது 41 நிறுத்தங்களை அடக்கி, தரைக்கு மேலும், தரைக்குகீழும் ஆன தொடர்வண்டி வலைப்பின்னலைக் கொண்டிருக்கும்.[48] இந்திய ரயில்வே மூலம் பெங்களூரு நாட்டின் பிற நகரங்களுடன் நல்ல இணைப்பைப் பெற்றிருக்கிறது. ராஜதானி எக்ஸ்பிரஸ் நகரை இந்திய தலைநகரான புது டெல்லியுடன் இணைக்கிறது. இருப்புப் பாதை வழியே கர்நாடகாவின் அநேக நகரங்கள், மற்றும் மும்பை, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத், மற்றும் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுடனும் பெங்களூரு இணைக்கப்பட்டுள்ளது.[49] ஆட்டோக்கள் என்றழைக்கப்படும் மூன்று சக்கர, கருப்பு மற்றும் மஞ்சள் நிற தானியங்கி மூவுருளி உந்து போக்குவரத்துக்கு பிரபலமானதாகும்.[50]] மீட்டர் பொருத்தப்பட்டுள்ள இவை மூன்று பயணிகள் வரை சுமந்து செல்லும். சற்று கூடுதல் கட்டணத்தில் வாடகை மகிழுந்து சேவைகளும் உண்டு.[50] பெங்களூரு பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (BMTC) மூலம் இயக்கப்படும் பேருந்துகளும் நகரில் பொதுப் போக்குவரத்துக்கான ஒரு வழியாக இருக்கின்றது.[51] பயணிகள் இந்த பேருந்துகளில் பயணிக்கும் போது டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். அடிக்கடி பயணம் செய்யும் பயணிகளுக்கு பேருந்து முன் அனுமதிச் சீட்டு வசதியையும் போக்குவரத்துக் கழகம் வழங்குகிறது. முக்கிய தடங்களில் குளிரூட்டப்பட்ட, சிவப்பு வண்ண வால்வோ பேருந்துகளையும் இப்போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது.[51] பெங்களூரை கர்நாடகாவின் பிற பகுதிகள் மற்றும் பிற மாநிலங்களுடன் இணைக்கும் வகையில் கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் 6,600 பேருந்துகளை 5,700 கால அட்டவணை நேரங்களில் இயக்கி வருகிறது.[52] மக்கள் வாழ்வியல் பெங்களூரு நகரம் மக்கள்தொகையில் இந்தியாவின் மூன்றாவது பெரிய நகரமாகவும் உலகின் 28வது பெரிய நகரமாகவும் திகழ்கிறது. 2009 ஆம் ஆண்டு மக்கள்தொகை 5,300,000 இருந்ததாய் மதிப்பிடப்பட்டது.[53] 1991-2001 காலத்தில் புது டெல்லிக்கு அடுத்து மிகத் துரித வளர்ச்சி கண்ட இந்திய பெருநகரம் பெங்களூரு ஆகும். இந்த பத்தாண்டுகளில் வளர்ச்சி விகிதம் 38% ஆக இருந்தது. பெங்களூருவாசிகள் ஆங்கிலத்தில் பெங்களூரியன்ஸ் என்றும் கன்னடத்தில் பெங்களூரினவாரு என்றும் குறிப்பிடப்படுகிறார்கள். கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள் நகர மக்கள்தொகையில் சுமார் 39% ஆக இருக்கிறார்கள்.[54][55] நகரத்தின் பன்முகக் கலாச்சார இயல்பால் பிற மாநிலங்களில் இருந்து மக்கள் பெங்களூரு வந்து குடியேறுகின்றனர்.[56] நகரின் மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 14.3% இருக்கிறார்கள். கன்னடம் மற்றும் ஆங்கிலம் தவிர தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகியவை நகரில் பேசப்படும் பிற முக்கிய மொழிகளாக உள்ளன.[57] 2001 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, பெங்களூரு மக்கள்தொகையில் 79.37% பேர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். இது ஏறக்குறைய தேசிய சராசரியை ஒட்டி இருக்கிறது.[58] முஸ்லீம்கள் மக்கள்தொகையில் 13.37% பேர் இருக்கிறார்கள். இதுவும் ஏறக்குறைய தேசிய சராசரி அளவை ஒட்டியே உள்ளது. கிறிஸ்தவ மற்றும் சமண மதத்தவர்கள் மக்கள்தொகையில் முறையே 5.79% மற்றும் 1.05% இருக்கிறார்கள். இது இம்மதங்களின் தேசிய சராசரிகளை விட இருமடங்காகும். ஆங்கிலோ இந்தியர்களும் நகரில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலுள்ள பிரிவினராக உள்ளனர். பெங்களூரு மக்கள்தொகையில் பெண்கள் 47.5% உள்ளனர். மும்பைக்கு பிறகு இந்திய பெருநகரங்களில் பெங்களூரு தான் இரண்டாவது பெரிய எழுத்தறிவு விகிதம் (83%) கொண்ட நகரமாய் உள்ளது. பெங்களூரு மக்கள்தொகையில் சுமார் 10% சேரிகளில்[59] வாழ்கிறார்கள். மும்பையுடனும் மற்றும் நைரோபி போன்ற வளரும் நாடுகளின் பிற நகரங்களுடனும் ஒப்பிடுகையில் இது குறைந்த அளவேயாகும்.[60] இந்தியாவின் 35 பெரிய நகரங்களில் பதிவாகும் மொத்த குற்றங்களில் பெங்களூரு 9.2% பங்களிப்பை கொண்டிருப்பதாக 2004 தேசிய குற்றப் பதிவுகள் கழகம் சுட்டிக் காட்டுகிறது. டெல்லி மற்றும் மும்பை முறையே 15.7% மற்றும் 9.5% பங்களிக்கின்றன.[61] பண்பாடு பெங்களூரு "இந்தியாவின் தோட்ட நகரம்"[62] என்று அழைக்கப்படுகிறது. இதற்குக் காரணம் இங்கு லால் பாக் மற்றும் கப்பன் பார்க் உள்ளிட்ட பல பொதுப் பூங்காக்கள் உள்ளன. பழைய மைசூர் சாம்ராச்சியத்தின் பாரம்பரிய கொண்டாட்ட அடையாளமான தசரா தான் அரசாங்க பண்டிகை ஆகும். பெரும் உற்சாகத்துடன் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. "கரக சக்தியோத்சவா" அல்லது பெங்களூரு கரகா என்றழைக்கப்படும் பெங்களூரின் மிக முக்கியமான பழமையான பண்டிகைகளை நகரம் கொண்டாடுகிறது.[63] "தீபங்களின் பண்டிகை"யான தீபாவளி மக்கள்வாழ்க்கைமுறை மற்றும் மத எல்லைகளைக் கடந்து கொண்டாடப்படும் மற்றுமொரு முக்கிய பண்டிகையாகும். பிற பாரம்பரிய இந்திய பண்டிகைகளான விநாயகர் சதுர்த்தி, உகாதி, சங்கராந்தி, ஈத் உல்-பித்ர், மற்றும் கிறிஸ்துமஸ் ஆகியவையும் இங்கு கொண்டாடப்படுகின்றன. கன்னட திரை உலகின் தாயகமாக பெங்களூரு விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80 கன்னட திரைப்படங்கள் இங்கிருந்து வெளியாகின்றன.[64]. மறைந்த நடிகரான டாக்டர். ராஜ்குமார் கன்னடத் திரையுலகிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தவர்களில் மிக முக்கியமான ஒருவர் ஆவார். சமையல்கலையின் பன்முகத்தன்மை பெங்களூரின் சமூக மற்றும் பொருளாதார பன்முகத்தன்மையை பிரதிபலிப்பதாய் உள்ளது. ரோட்டோரக் கடையினர், தேநீர்க்கடையினர், மற்றும் தென்னிந்திய, வட இந்திய, சீன மற்றும் மேற்கத்திய துரித உணவுகள் நகரில் மிகவும் பிரபலம் பெற்றுத் திகழ்கின்றன. உடுப்பி உணவகங்கள் மிகவும் பிரபலம் பெற்றவையாய் உள்ளன. இவை முதன்மையாக பிராந்திய சைவ உணவுகளை வழங்குகின்றன. இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனத்தின் முக்கிய மையமாகவும் பெங்களூரு திகழ்கிறது. பாரம்பரிய இசை மற்றும் நடனக் கச்சேரிகள் ஆண்டு முழுவதிலும் குறிப்பாக ராமநவமி மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாக்களின் போது பரவலாக நடத்தப்படுகின்றன. நகரில் உற்சாகமான கன்னட நாடக இயக்கமும் இருக்கிறது. ரங்க சங்கரா போன்ற அமைப்புகள் இதனை முன்னெடுத்துச் செல்கின்றன. சர்வதேச ராக் கச்சேரிகள் நடப்பதற்கான முதன்மை இடங்களில் ஒன்றாகவும் பெங்களூர் ஆகியுள்ளது.[65] விளையாட்டு மட்டைப்பந்து தான் பெங்களூரின் மிகப் பிரபல விளையாட்டுகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. இந்திய மட்டைப்பந்து அணியின் முன்னாள் தலைவர்களான ராகுல் டிராவிட் மற்றும் அனில் கும்ப்ளே, மற்றும் ராபின் உத்தப்பா மற்றும் இன்னும் பலர் உள்பட ஏராளமான தேசிய மட்டைப்பந்து வீரர்கள் பெங்களூரில் இருந்து வந்துள்ளனர். பல சிறுவர்கள் சாலைகளிலும் நகரின் பல பொது இடங்களிலும் சாலையோர கிரிக்கெட் விளையாடுவதைக் காணலாம். பெங்களூரின் முதன்மையான உலகளாவிய மட்டைப்பந்து மைதானமாக எம். சின்னசுவாமி அரங்கம் உள்ளது. இது 40,000[66] பேர் அமரும் இடம் கொண்டதாகும். 1987 துடுப்பாட்ட உலகக்கிண்ணம், 1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் மற்றும் 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் ஆகியவற்றின் ஆட்டங்கள் இங்கு நடந்துள்ளன. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிளையணியான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் பிரீமியர் ஹாக்கி லீக் (PHL) கிளையணியான பெங்களூரு ஹை-ஃபிளையர்ஸ் ஆகியவை நகரில் அமைந்துள்ளன. இந்தியாவின் டேவிஸ் கோப்பை டென்னிஸ் அணி உறுப்பினர்களான மகேஷ் பூபதி[67] மற்றும் ரோகன் போபன்னா[68] ஆகியோரும் பெங்களூரில் தான் வசிக்கிறார்கள். நகரில் ஆண்டுதோறும் பெண்கள் டென்னிஸ் கழகத்தின் பெங்களூரு ஓபன் போட்டிகள் நடக்கின்றன. செப்டம்பர் 2008 துவங்கி, ஆண்டுதோறும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் டென்னிஸ் ஓபன் ஏடிபி போட்டிகளும் பெங்களூரில் நடைபெறுகின்றன.[69] தேசிய நீச்சல் வெற்றிவீரரான நிஷா மிலெட், உலக ஸ்னூக்கர் வெற்றிவீரரான பங்கஜ் அத்வானி மற்றும் முன்னாள் அனைத்து இங்கிலாந்து ஓபன் பூப்பந்து வெற்றிவீரரான பிரகாஷ் படுகோனே ஆகியோரும் பெங்களூரில் இருந்து வரும் பிற விளையாட்டு பிரபலங்களில் அடங்குவர். கல்வி 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை, பெங்களூரில் கல்வி என்பது பிரதானமாக மதத் தலைவர்களால் நடத்தப்பட்டதால் அந்த மதத்து மாணவர்களுக்கு மட்டுமேயானதாக இருந்தது.[70] மும்மடி கிருஷ்ணராஜா உடையார் ஆட்சியின் போது மேற்கத்திய கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பெங்களூரில் இரண்டு பள்ளிகள் நிறுவப்பட்டன. இதனையடுத்து, வெஸ்லியன் மிஷன் 1851 ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை நிறுவியது. 1858 ஆம் ஆண்டில் பெங்களூரு உயர்நிலைப் பள்ளி அரசாங்கத்தால் துவக்கப்பட்டது.[71] சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில், இளம் குழந்தைகளுக்கான பள்ளிகள் மாற்றம் கண்டுள்ளன.[72] இடைநிலைக் கல்வி பள்ளி இறுதித் தேர்வு சான்றிதழ் (எஸ்எஸ்எல்சி), இடைநிலைக் கல்விக்கான இந்திய சான்றிதழ் மற்றும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் போன்ற கல்வி வாரியங்கள் ஏதேனும் ஒன்றின் கீழ் ஆரம்ப கல்வி மற்றும் இடைநிலைக் கல்வியை வழங்கும் பல்வேறு பள்ளிகள் பெங்களூரில் உள்ளன.[73] பெங்களூரு பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகவோ அல்லது தனியார் பள்ளிகளாகவோ (அரசு உதவி பெறும் மற்றும் பெறாத பள்ளிகள்) உள்ளன.[74] தங்களது இடைநிலைக் கல்வியை முடித்த பிறகு, மாணவர்கள் பொதுவாக பல்கலைக்கு முந்தைய பியுசி படிப்பை கலை, வணிகம் அல்லது அறிவியல் ஆகிய மூன்று பிரிவுகளில் ஒன்றில் மேற்கொள்கிறார்கள்.[75] தேவையான படிப்பை முடித்தபிறகு, பல்கலைக்கழகங்களில் பொது அல்லது தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர்கள் பதிவு செய்து படிப்பைத் தொடரலாம். 1964 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பெங்களூரு பல்கலைக்கழகம் சுமார் 500 கல்லூரிகளுக்கு இணைப்புத் தொடர்பு வழங்குகிறது. மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 300,000 க்கும் அதிகமாக இருக்கிறது. பெங்களூருக்கு உள்ளேயே இந்த பல்கலைக்கழகம் ஞானபாரதி மற்றும் மத்திய கல்லூரி என இரண்டு வளாகங்களைக் கொண்டுள்ளது.[76] 1909 ஆம் ஆண்டில் பெங்களூரில் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் கழகம் தான் இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் படிப்புக்கான முதன்மை நிறுவனமாகும்.[77] இந்திய பல்கலைக்கழக தேசிய சட்டப் பள்ளி (NLSIU), இந்திய மேலாண்மை நிறுவனம் பெங்களூரு (ஐஐஎம்-பி) மற்றும் இந்திய புள்ளியியல் ஆய்வு நிறுவனம் ஆகிய தேசியப் புகழ்பெற்ற நிறுவனங்களும் பெங்களூரில் அமைந்துள்ளன. இந்தியாவின் முதன்மையான மனநல சுகாதார நிறுவனமும் பெங்களூரில் தான் அமைந்துள்ளது.[77] முதன்மையான மனநல சுகாதார நிறுவனமான மனநல சுகாதாரம் மற்றும் நரம்பியல் அறிவியலுக்கான தேசிய நிறுவனம் (NIMHANS) பெங்களூரில் அமைந்துள்ளது. ஊடகங்கள் முதல் அச்சகம் பெங்களூரில் 1840 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது.[78] 1859 ஆம் ஆண்டில் பெங்களூரு ஹெரால்டு பத்திரிகை பெங்களூரில்[79] வெளியிடப்படும் முதல் வாரமிருமுறை ஆங்கில இதழாக வெளியானது. 1860 ஆம் ஆண்டில் மைசூர் விருட்டினா போதினி பெங்களூரில் விற்பனையாகும் முதல் கன்னட செய்தித்தாளானது.[78] தற்போது விஜய கர்நாடகா மற்றும் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகியவை தான் முறையே கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் பெங்களூரில் மிக அதிக அளவில் விற்பனையாகும் பத்திரிகைகளாக இருக்கின்றன. இவற்றுக்கு நெருக்கமாக பிரஜாவாணி மற்றும் டெக்கான் ஹெரால்டு ஆகியவை வருகின்றன.[80][81] இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஒலிபரப்பு நிறுவனமான அனைத்து இந்திய வானொலி தனது பெங்களூரு நிலையத்தில் இருந்து 1955 ஆம் ஆண்டில் ஒளிபரப்பைத் துவக்கியது.[82] ரேடியோ சிட்டி தான் பெங்களூரில் ஒலிபரப்பான முதல் தனியார் பண்பலை வானொலியாகும்.[83] சமீப வருடங்களில், ஏராளமான பண்பலை நிலையங்கள் பெங்களூரில் இருந்து தங்கள் ஒலிபரப்பைத் துவக்கியுள்ளன.[84] நவம்பர் 1, 1981 அன்று தூர்தர்ஷன் தனது ஒளிபரப்பு மையத்தை இங்கு நிறுவி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் துவங்கியது.[85] தூர்தர்ஷனின் பெங்களூரு அலுவலகத்தில் 1983 ஆம் ஆண்டில் ஒரு தயாரிப்பு மையம் நிறுவப்பட்டது. இதனையடுத்து 19 நவம்பர் 1983 முதல் கன்னடத்தில் ஒரு செய்தி நிகழ்ச்சியை அறிமுகப்படுத்த முடிந்தது.[85] 15, ஆகஸ்டு 1991 அன்று தூர்தர்ஷன் கன்னட செயற்கைக்கோள் சேனல் ஒன்றையும் துவக்கியது. அது இப்போது டிடி சந்தனா என்று பெயரிடப்பட்டுள்ளது.[85] 1991 செப்டம்பர் மாதத்தில் ஸ்டார் டிவியின் சேனல்கள் ஒளிபரப்பைத் துவக்கியபோது தனியார் செய்தித் தொலைக்காட்சிகள் பெங்களூரில் கால்பதித்தன.[86] பெங்களூரில் பார்க்க முடிகிற செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை சென்ற வருடங்களில் மிகுந்த வளர்ச்சி கண்டிருந்தாலும்[87], இந்த வளர்ச்சி தொலைக்காட்சி அலைவரிசை விநியோகஸ்தர்கள் இடையே அவ்வப்போது மோதல்களுக்கும் இட்டுச் செல்கிறது.[88] பெங்களூரில் துவங்கிய முதல் இணைய சேவை வழங்குநர் பெங்களூரு STPI ஆகும். இந்நிறுவனம் 1990களின் ஆரம்பத்திலேயே இணைய சேவைகளை வழங்கத் துவங்கியிருந்தது.[89] ஆயினும் இந்த இணைய சேவை பெருநிறுவனங்களுக்கு மட்டுமே அதிகம் பயன்பட்டதாய் இருந்தது. 1995 ஆம் ஆண்டின் இறுதியில் VSNL பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தத்தக்க தொலைபேசிக் கம்பிவழி இணைய சேவைகளை அறிமுகப்படுத்திய பின் தான் இந்நிலை மாறியது.[90] இப்போது பெங்களூரு தான் இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையிலான அகலப்பட்டை இணைய இணைப்புகள் கொண்ட நகரமாக உள்ளது.[91] கூடுதல் பார்வைக்கு பெங்களூரு சுற்றுலாத் தளங்கள் கர்நாடகா நம்ம மெட்ரோ குறிப்புகள் கூடுதல் வாசிப்பு ஹசன், ஃபஸ்லுல். நூற்றாண்டுகளின் வழி பெங்களூரு. பெங்களூரு: வரலாற்று வெளியீடுகள், 1970. பிளங்கெட், ரிச்சார்டு. தென்னிந்தியா. லோன்லி பிளானட், 2001. ISBN 1-86450-161-8 ஹன்டன், காட்டன், பர்ன், மெயர். . 2006ஆக்ஸ்போர்டு கிளாரென்டன் பிரஸ். 1909. "பெங்களூரு." . 1911 பதிப்பு. ஹயவதன ராவ், தி மைசூர் ஸ்டேட் கெசெட்டர், 1929 புற இணைப்புகள் பகுப்பு:கர்நாடக மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் பகுப்பு:இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள் பகுப்பு:கர்நாடகாவிலுள்ள மாநகரங்கள் பகுப்பு:பெங்களூர் பகுப்பு:மேற்கோள் வழுவுள்ள பக்கங்கள்-கூகுள் தமிழாக்கம்
பெங்களூர் நகரத்தின் பரப்பளவு என்ன?
741 கிமீ
8,944
tamil
5c7263938
இதயம் (ஒலிப்பு) அல்லது இருதயம் (ஒலிப்பு) அல்லது உயிர்முதல் (அதாவது உயிர் வாழ்வதற்கான முதலான ஒன்று அல்லது முதன்மையான ஒன்று) (மாற்றுச்சொற்கள்: நெஞ்சு, நெஞ்சாங்குலை ) என்பது குருதிச் சுற்றோட்டத்தொகுதி கொண்டுள்ள எல்லா உயிரினங்களிலும் காணப்படும் ஒரு நாரியத் தசையாலான ஓர் உறுப்பாகும்.[1] இதன் தொழில் தொடர்ச்சியான சீரான முறையில் சுருங்கி விரிதலின் மூலம் உடல் முழுவதும் குருதியைக் குருதிக்குழாய்களின் வழியாகச் செலுத்துவது ஆகும். இதன்மூலம் குருதி உடலுக்குத் தேவையான உயிர்வளி மற்றும் ஊட்டப் பொருட்களை வழங்கி வளர்சிதைக் கழிவுப் பொருட்களை அகற்ற உதவுகின்றது. முதுகெலும்பிகளில் இதயமானது இதயத்தசை என்னும் தானே இயங்கும் வரித்தசையால் ஆனது. இது இதயத்தில் மட்டுமே காணப்படுகிறது. சராசரி ஒரு மனிதனின் இதயத் துடிப்பானது நிமிடத்திற்கு 72 அடிப்புகள் ஆகும். ஒரு 66 வயது முதிர்ந்த ஒருவருக்கு அவரது வாழ் நாளில் ஏறக்குறைய 2.5 பில்லியன் தடவை துடிக்கும். இதயம் பெண்களில் சராசரியாக 250 – 300 கிராமும் (9 – 11 அவுன்சு) ஆண்களில் 300 – 350 கிராம் (11 – 12 அவுன்சு) எடை கொண்டுள்ளது.[2] இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு வரும் குழாய்கள் சிரைகள் அல்லது நாளங்கள் எனவும் இதயத்தில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள் தமனிகள் அல்லது நாடிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இதயமானது ஒரு பாதுகாப்புப் பையினுள் அமைந்துள்ளது, இது இதய வெளியுறைப்பை அல்லது பெரிகார்டியம் எனப்படும். இதய வெளியுறைப்பையுள் காணப்படும் நீர்மமானது இதயத்தை அதிர்ச்சிகளில் இருந்தும் இதயம் சுருங்கி விரியும் போது மற்ற பாகங்களுடன் உராய்வதைத் தடுக்கவும் உதவுகிறது. மேல் இதயவுறைப் படை (இதய வெளியுறையின் ஒருபகுதி), இதயத்தசைப் படை, இதய அகவுறைப்படை எனும் படைகளால் இதயத்தின் சுவர் ஆக்கப்பட்டுள்ளது. இதயம் சீரான நிலையில் இயங்கிட இதய மின்கடத்துகை ஒருங்கியம் உதவுகின்றது. அமைப்பு இதயத்தின் அமைப்பு பல்வேறு விலங்குகளுக்கு இடையில் வேறுபடுகின்றது, தலைகாலிகளில் இரண்டு "செவுள் இதயமும்" (gill hearts) ஒரு "தொகுதி இதயமும்" அமைந்துள்ளது. முதுகெலும்பிகளில் உடலின் முன் பகுதியில் சமிபாட்டுத்தொகுதிக்குப் பின்புறத்தில் இருதயம் அமைந்துள்ளது. எப்பொழுதும் இதய வெளியுறை சுற்றுச்சவ்வினால் சூழப்பட்டிருக்கும். அமைவிடம் மற்றும் வடிவம் நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள் ஐந்தும் எட்டும் உள்ள மட்டத்தில் நடு மார்பிடையப் பகுதியில் (middle mediastinum) இரட்டை மென்சவ்வாலான ஒரு பாதுகாப்புப் பையினுள் மனித இதயம் அமைந்துள்ளது. இது இதய வெளியுறைப்பை அல்லது பெரிகார்டியம் எனப்படும். வெளியுறைப்பை மார்பிடையத்துடன் ஒட்டிக் காணப்படும்.[3]இரண்டு அடுக்காக இருக்கும் இதய வெளியுறைப்பையுள் நீர்மம் காணப்படும். இந்த நீர்மமானது இதயம் இயங்கும்போது ஏற்படும் உராய்வைத் தடுப்பதுடன், இதயத்தைத் திடீர் அதிர்ச்சிகளில் இருந்தும் பாதுகாக்கும். மேல் இதயவுறைப் படை (இதய வெளியுறையின் ஒருபகுதி), இதயத்தசைப் படை, இதய அகவுறைப்படை எனும் படைகளால் இதயத்தின் சுவர் ஆக்கப்பட்டுள்ளது. இதயத்தின் பிற்புறப்பகுதி முள்ளந்தண்டெலும்புகளின் முன்பாக அமைந்துள்ளது. இதயத்தின் முற்பகுதி மார்புப்பட்டை மற்றும் விலாக் கசியிழையங்களின் பின்னே அமைந்துள்ளது.[4] இதயத்தின் மேற்பகுதியில் பெரு நாடிகளும் நாளங்களும் இணைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது விலா என்புக் கசியிழைய மட்டத்தில் இதய மேற்பகுதி அமைந்துள்ளது.[4] இதயம் கூம்பு வடிவானது. இதயமுனை எனப்படும் இதயத்தின் கீழ் முனைப்பகுதி மார்புப்பட்டையின் இடப்புறத்தே அமைந்துள்ளது. இதயத்தின் பெரும்பான்மைப் பகுதி இடது மார்பில் அமைந்துள்ளது (உள்ளுறுப்பு இடப்பிறழ்வில் வலது புறம் அமைந்திருக்கும்). நுரையீரல் தவிர்ந்த உடலின் அனைத்துப் பகுதிக்கும் குருதியைச் செலுத்துவதற்காக இதயத்தின் இடது பகுதி வலிமை மிக்கதாக அமைந்துள்ளது.[4] இதயம் இடது, வலது நுரையீரல்களின் இடையே காணப்படுவதால் இடது நுரையீரலில் இதயம் அமையக்கூடியவாறு ஒரு பள்ளம் உள்ளது. இதனால் இடது நுரையீரலானது வலது நுரையீரலை விட சிறியதாக இருக்கிறது. [4] இதயமானது இதயத்தசை என்னும் தன்விருப்பில்லாது தானே இயங்கும் வரித்தசையால் ஆனது. இதயவறை இதயம் நான்கு அறைகளைக் கொண்டது. குருதியைப் பெற்றுக்கொள்ளும் இரண்டு மேலறைகள், குருதியை வெளியேற்றும் இரண்டு கீழறைகள். இதய மேலறை இதயக் கீழறையுடன் மேற்கீழறை அடைப்பிதழ்கள் மூலம் தொடர்புற்று உள்ளது. இவை மேற்கீழறைப் பிரிசுவரில் அமைந்துள்ளன. இடது புறத்தில் காணப்படுவது இருகூர் அடைப்பிதழ் என்றும், வலது புறத்தில் காணப்படுவது முக்கூர் அடைப்பிதழ் என்றும் அழைக்கப்படுகிறது. மேற்கீழறைப் பிரிசுவரால் இதயம் பிரிக்கப்படுவது இதயத்தின் வெளிப்புறத்தில் முடியுரு வரிப்பள்ளம் (Coronary sulcus) எனும் வெட்டாகத் தென்படுகின்றது. [5] இடது மற்றும் வலது இதய மேலறைகளில் காது போன்ற அமைப்புடைய நீட்டம் ஒன்று காணப்படும், இதுவும் ஒரு சிறிய அறை போன்ற அமைப்பிலேயே காணப்படுகின்றது. இது இதய மேலறை நீட்டம் அல்லது இதய மேலறைச் சோணை எனப்படும்.[6] இடது மேல் மற்றும் கீழ் இதயவறைகள் சேர்ந்து இடது இதயம் என்று அழைக்கப்படுகின்றது, இதே போன்று வலது இதயவறைகள் சேர்ந்து வலது இதயம் என்று அழைக்கப்படுகின்றது. இதயக் கீழ் அறைகள் இரண்டும் கீழறைப் பிரிசுவர் மூலம் பிரிக்கப்படுகின்றன. இதயத்தின் கீழறைகள் மேலறைகளை விட தடிப்பாக இருக்கின்றன. அதிலும் இடது கீழறையானது குருதியை உடல் முழுவதும் செலுத்துவதற்கு அதிக வேகம் தேவைப்படுவதால் அது வலது கீழறையை விட தடிப்பாக உள்ளது. இதய அடைப்பிதழ் மனிதன் உட்பட முலையூட்டிகளில் நான்கு வகையான அடைப்பிதழ்கள் காணப்படுகின்றன. இதய மேலறைகளுக்கும் இதயக் கீழறைகளுக்கும் இடையே குருதியோட்டத்தைக் கட்டுப்படுத்தும் இரண்டு அடைப்பிதழ்கள், இடது புறத்தில் இரு இதழ்களைக் கொண்ட இருகூர் அடைப்பிதழ் மற்றும் வலது புறத்தில் மூன்று இதழ்களைக் கொண்ட முக்கூர் அடைப்பிதழ் ஆகியனவாகும். [7] இவற்றின் இதழ்கள் இதயவாயினாண்கள் மூலம் பிணைக்கப்பட்டுள்ளன[8] , இதயவாயினாண்கள் நுண்காம்புத்தசை மூலம் கீழறைச் சுவருடன் தொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இதழ்களும் ஒவ்வொரு நுண்காம்புத்தசையுடன் பிணைக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, இரு இதழ்களைக் கொண்ட இருகூர் அடைப்பிதழ் இரண்டு நுண்காம்புத்தசை மூலம் இடது கீழறைச் சுவருடன் தொடுக்கப்பட்டுள்ளன.[7] இதயக் கீழறைகளுக்கும் வெளியேறும் தமனிகளுக்கும் இடையே உள்ள அடைப்பிதழ்கள் அரைமதி அடைப்பிதழ்கள் ஆகும். பெருநாடி அடைப்பிதழ் இடது கீழ் இதயவறைக்கும் பெருநாடிக்கும் இடையில் அமைந்துள்ளது. நுரையீரல் அடைப்பிதழ் வலது கீழ் இதயவறைக்கும் நுரையீரல் நாடிக்கும் இடையில் அமைந்துள்ளது. இவை நுண்காம்புத்தசையுடன் தொடுக்கப்பட்டிருப்பது இல்லை. இதயச் சுவர் இதய வெளியுறைப்பையால் இதயம் சூழப்பட்டுள்ளது. இது இரண்டு படை மென்சவ்வுகளை உடையது. வெளியில் அமைந்துள்ள நார்ச்சவ்வுப்படை, நார்ச்சவ்வு வெளியுறை எனப்படும். உட்புறத்தே அமைந்துள்ள நீர்ச்சவ்வுப் படை மேல் இதயவுறைப் படை எனப்படும்.[4] இவை இரண்டிற்குமிடையே வெளியுறை நீர்மம் உள்ளது. வெளியில் மேல் இதயவுறைப் படை (இதய வெளியுறையின் ஒருபகுதி), நடுவில் இதயத்தசைப் படை, உள்ளே இதய அகவுறைப்படை ஆகிய மூன்று படைகளால் இதயத்தின் சுவர் ஆக்கப்பட்டுள்ளது. இதய அகவுறைப்படை எளிய செதிண்மேலணிக் கலங்களால் ஆக்கப்பட்டுள்ளது. இது இதய அறைகளையும் அடைப்பிதழ்களையும் மூடிக் காணப்படுகின்றது. இது நாடி மற்றும் நாளங்களின் அகவணிக் கலங்களாகத் தொடர்ச்சி பெறுகின்றது. மேலும் மெல்லிய படை தொடுப்பிழையம் மூலம் இதயத்தசைப் படையுடன் இணைகின்றது. என்டோதீலின் அல்லது அகவணியன் எனப்படும் புரதக்கூறு அகவணிக் கலம் மூலம் சுரக்கப்படுகின்றது. இதயத்தின் சுருங்கி விரிதலைக் கட்டுப்படுத்துவதில் இவையும் ஒரு அங்கம் வகிக்கின்றன.[4] நடு இதயத்தசைப் படையை ஆக்கும் இதயத்தசை இச்சையில்லா இயங்கும் வரித்தசையால் ஆனது. இதயத்தசை இரண்டுவிதமான கலங்களைக் கொண்டுள்ளது, சுருங்கும் தொழிலைச் செய்யும் தசைக் கலங்கள் மற்றும் இதய மின்கடத்துகை ஒருங்கியத்துக்குரிய துடிப்புச்சீராக்கிக் கலங்கள் ( pacemaker cells). இவற்றுள் இதயத்தசை பெரும்பான்மையானது (99%), மீதியுள்ளவை (1%) துடிப்புச்சீராக்கிக் கலங்கள் ஆகும்.[4] முடியுருக் குருதிச்சுற்றோட்டம் தசை உட்பட்ட இதயத்தின் பகுதிகள் உயிர்வளியையும் ஊட்டக்கூறுகளையும் பெற்று கழிவுப்பொருட்களை நீக்குவதற்கு முடியுருக் குருதிச்சுற்றோட்டம் உதவுகின்றது. நாடிகள், நாளங்கள், நிணநீர்க் குழல்கள் இதில் அடங்குகின்றது. இதயத்தசைக்கு உயிர்வளி செறிந்த குருதியை வழங்கும் குருதிக்குழாய்கள் முடியுருத்தமனிகளாகும். இதயத்தசையில் இருந்து உயிர்வளி அகற்றப்பட்ட குருதியை எடுத்துச் செல்லும் குருதிக்குழாய்கள் இதய நாளங்கள் ஆகும். முடியுருத்தமனிகள் இடது, வலது என இரண்டாக உள்ளது, இவை பெருநாடியில் இருந்து தோன்றுகின்றன. இவற்றில் அடைப்பு ஏற்படுவது மாரடைப்பை ஏற்படுத்துகின்றது. நரம்பு விநியோகம் துணைப்பரிவு இயக்கத்தைக் கொண்ட அலையு நரம்பு மூலமும் பரிவு நரம்பியக்கம் மூலமும் இதயம் நரம்பு விநியோகத்தைப் பெற்றுக்கொள்கின்றது. பரிவு, துணைப்பரிவு நரம்புகளை நீள்வளையமையவிழையம் கட்டுப்படுத்துகின்றது. இந்த நரம்புகளின் தொழிற்பாட்டினால் இதயத்துடிப்பு வீதம் மாறுபடுகின்றது. உடற்பயிற்சி, மன அழுத்தம், குருதியிழப்பு, உடல் வறட்சி ஆகியனவற்றின் போது பரிவு நரம்புத்தொகுதி செயற்படுத்தப்படுகின்றது. இது இதயத் துடிப்பை அதிகரிக்கவைக்கின்றது. இதற்கு மாறாக துணைப்பரிவு நரம்பு செயற்படுத்தப்பட்டால் இதயத் துடிப்பு குறைகின்றது. இந்த நரம்புகள் அனைத்தும் சேர்ந்து ஒரு பின்னலை ஏற்படுத்துகின்றது, இது இதய நரம்புப்பின்னல் எனப்படும்.[9] துணைப்பரிவு நரம்பியக்கம் இதயத்தின் செயல்பாட்டைக் குறைக்க உதவுகிறது. பரிவு நரம்பியக்கம் இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. இதய உடலியங்கியல் குருதி ஓட்டம் குருதியின் தொடர்ச்சியான சுற்றோட்டத்திற்கு இதயம் ஒரு பாய்வு எக்கி போன்று தொடர்ச்சியாகச் செயற்படுகின்றது. தொகுதிச் சுற்றோட்டம் மற்றும் நுரையீரற் சுற்றோட்டம் என்று இருவகையாக இதயத்தில் இருந்து வெளியேறும் குருதியின் ஓட்டம் வகைப்படுத்தப்படுகின்றது. இடது இதயக் கீழறையில் இருந்து உடலின் அனைத்துப் பாகங்களில் உள்ள உயிரணுக்களுக்கு நாடிகள் மூலம் ஊட்டக்கூறும் உயிர்வளியும் செறிந்த குருதி கொண்டு செல்லப்படுகின்றது. அங்கிருந்து நாளங்கள் வழியாகக் கொண்டுவரப்படும் உயிர்வளி நீங்கிய குருதி மேற்பெருநாளம், கீழ்ப்பெருநாளம் வழியாக வலது இதய மேலறையை அடைகின்றது. இது தொகுதிச் சுற்றோட்டம் எனப்படுகின்றது. வலது இதயக் கீழறையில் இருந்து உயிர்வளி நீங்கிய குருதி நுரையீரலை அடைந்து அங்கு சுத்திகரிக்கப்பட்டு உயிர்வளி செறிந்த குருதியாக இடது இதய மேலறையை அடைகின்றது, இது நுரையீரற் சுற்றோட்டம் எனப்படுகின்றது. இதய வட்டம் ஒவ்வொரு இதயத் துடிப்பின் போது இதயம் சுருங்கி விரிதலும் அதன்போது உண்டாகும் மின்னிய நிகழ்வுகளும் இதய வட்டம் எனப்படும்.[10] இதில் இதயம் சுருங்கும் அவத்தை இதயச்சுருக்கம் (systole) எனவும் இதயம் விரியும் அவத்தை இதயவிரிவு (இதயவிரிவு) எனவும் அழைக்கப்படுகின்றது. இதய வெளியேற்றக் கொள்ளளவு நிமிடமொன்றிற்கு இதய சுருக்கத்தின் போது இடது, வலது கீழ் இதயவறைகளினால் வெளியேற்றப்படும் குருதியின் மொத்தக் கொள்ளளவு இதய வெளியேற்றக் கொள்ளளவு எனப்படுகின்றது. பொதுவாக இதய வெளியேற்றவளவு நிமிடத்துக்கு ஐந்து இலீட்டராகக் கருதப்படுகிறது. துடிப்புக்கொள்ளளவு என்பது ஒரு தடவை இதயம் சுருங்கும் போது இடது கீழ் இதயவறையால் வெளியற்றப்படும் குருதியின் கொள்ளளவு. இது ஒரு ஆரோக்கியமான 70 கிலோகிராம் எடையுள்ள மனிதனுக்கு 70 மில்லிலீட்டர் ஆகும். [11] இதய வெளியேற்றக் கொள்ளளவு = துடிப்புக்கொள்ளளவு X இதயத்துடிப்பு வீதம் [4] எடுத்துக்காட்டாக, இதய வெளியேற்றக் கொள்ளளவு = 70 மில்லிலீட்டர் X 72 = 5040 மில்லிலீட்டர் / நிமிடம் உடல் மேற்பரப்பு இதய வெளியேற்றக் கொள்ளளவுடன் தொடர்புபடுத்தப்பட்டு பெறப்படும் தரவு இதயச் சுட்டெண் என அழைக்கப்படுகின்றது. மின்கடத்துகை சிரைப்பைச் சீர்த்துடிப்பு (Sinus rhythm) என்பது இதயத்தின் துடிப்புச்சீராக்கியாகிய சிரைப்பைச்சோணைக் கணுவில் தொடங்கும் சீரான பழுதற்ற இதயத்துடிப்பு. இதயத்தின் சுருங்கலையும் விரிவடைதலையும் சீரான நிலையில் பேணுவதற்கு இதயத்தின் தசைப்பகுதிகளுக்கு மின்னோட்டம் மூலம் சமிக்ஞை அனுப்பப்படல் அவசியமாகின்றது. சிரைப்பைச்சோணைக் கணு, மேற்கீழறைக் கணு, கிசுவின் கட்டு மற்றும் அதனது கிளைகள், பேர்கிஞ்சி இழைகள் ஆகிய சிறப்பு இதயத்தசை உயிரணுத் தொகுதிகள் ஒன்று சேர்ந்து இதய மின்கடத்துகை ஒருங்கியம் என அழைக்கப்படுகின்றது. வலது மேலிதயவறையின் மேற்பகுதியில் மேற்பெருநாளத்தின் அருகாமையில் சிரைப்பைச்சோணைக் கணு அமைந்துள்ளது.[12] இதயத்துடிப்பு வீதம் இதயத்துடிப்பு வீதம் என்பது நிமிடத்துக்கு இதயம் எத்தனை தடவை துடிக்கிறது என்பதன் அளவு. பொதுவாக, வளர்ந்தோரில் 60 தொடக்கம் 100 வரை இயல்பான துடிப்பு எனக் கருதப்படுகின்றது. சிரைப்பைச்சோணைக் கணுவில் உள்ள உயிரணுக்கள் அவற்றின் மென்சவ்வில் மறை ஏற்றத்தைக் கொண்டுள்ளன. சோடியம் விரைவாக உயிரணுக்குள் உட்செல்லும்போது அவை நேர் ஏற்றத்தைப் பெறுகின்றது. இது முனைவுநீக்கம் எனப்படுகின்றது, இது தொடர்ச்சியாக சீராக நிகழ்ந்து கொண்டிருக்கும்.[4] உயிரணு போதிய ஏற்றம் பெற்றபின்னர் சோடியம் உள்ளே வருவதற்கு உதவிய வழி மூடப்பட்டுவிடும். இதன் பின்னர் பொட்டாசியம் வெளியேறும் கணத்தில் கால்சியம் உள்ளெடுக்கப்படும். துரப்போனின் C எனும் புரதத்துடன் சேர்ந்துகொண்ட கல்சியம் இதயத்தசையின் சுருக்கத்தை ஏற்படுத்துகின்றது. துரப்போனின் பிணைவு நீங்கும் போது இதயம் விரிவடைகின்றது. பரிவு மற்றும் துணைப்பரிவு நரம்பு வழியாக மூளையில் உள்ள இதயக்குழலிய மையத்தால் இதயத்துடிப்பு கட்டுப்படுத்தப்படுகின்றது.[13] குருதிக் குழாய்களில் அழுத்த உணர்விகள் எனும் அமைப்பு காணப்படுகின்றது. குருதிக்குழாய் சுருங்கும் போது அல்லது விரிவடையும் போது இவை இழுவையடைந்து தூண்டப்படுகின்றன. இது இதயக்குழலிய மையத்துக்கு அறிவிக்கப்படுகின்றது. இதனால் குருதி அழுத்தம் சீரான நிலையில் பேணப்படுகின்றது. குருதி அழுத்தம் குறைகையில் அழுத்த உணர்விகள் இழுவையடைவது குறைகின்றது. அழுத்த உணர்விகள் மூளைக்கு தகவல் அனுப்பும் வீதம் குறைகின்றது, இதனால் இதயக்குழலிய மையம் பரிவு நரம்பின் செயற்பாட்டை அதிகரித்து துணைப்பரிவு நரம்பு செயற்பாட்டைக் குறைக்கின்றது. எடுத்துக்காட்டாக, காயமடைந்த நபர் ஒருவருக்கு ஏற்படும் குருதிப்பெருக்கால் குருதி அழுத்தம் குறைகின்றது. அழுத்த உணர்விகள் இதனை உணர்ந்து தூண்டப்பட்டு தகவலை இதயக்குழலிய மையத்துக்கு அறிவிக்கின்றன. மூளை பரிவு நரம்பின் செயற்பாட்டை அதிகரிக்கின்றது. இதனால் இதயத்தின் துடிப்பு கூடுகின்றது.[14] உடற்பயிற்சி, வயது, உடல் வெப்பநிலை, அடிப்படை வளர்சிதைமாற்ற வீதம், மனோநிலை போன்றன இதயத் துடிப்பை மாற்றவல்ல காரணிகள் ஆகும். எபிநெப்ரின் (அதிரினலின்) , நார்எபிநெப்ரின், கேடயச் சுரப்பி இயக்குநீர்கள் ஆகியனவற்றின் மிகைப்பாடு இதயத்துடிப்பை அதிகரிக்கவல்லது. கால்சியம், பொட்டாசியம், சோடியம் ஆகியன இதயத்துடிப்பை சீராகப் பேணுவதில் முக்கியமான தனிமங்கள் ஆகும். இதய ஒலி பொதுவாக ஆரோக்கியமான இதயத்தில் இருவகை இதய ஒலிகளைக் கேட்கலாம். இவற்றின் ஒலிகள் பொதுவாக "லப்-டப்" என்று விவரிக்கப்படுகின்றது. இவை முதலாம் (S1), இரண்டாம் (S2) இதய ஒலிப்புகள் என அழைக்கபப்டுகின்றன. லப் எனப்படும் முதலாம் இதய ஒலிப்பு இருகூர் அடைப்பிதழ் மற்றும் முக்கூர் அடைப்பிதழ் ஆகியனவை மூடும் போது ஏற்படும் ஒலியாகும். டப் என அழைக்கப்படும் இரண்டாவது இதய ஒலிப்பு பெருநாடி அடைப்பிதழ் மற்றும் நுரையீரல் அடைப்பிதழ் ஆகியனவற்றின் மூடுகையால் ஏற்படுகின்றது. இரண்டாம் இதய ஒலிப்பு இயல்பான நிலையில் உட்சுவாசத்தின் போது பிரிகையடையும். எனினும் இவற்றின் ஒலிப்பிரிகைக்கு இடையேயான இடைவெளி கூடுமாயின் அது நோய்களுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கக்கூடும். இவை தவிர மூன்றாம் (S3, லப்-டப்-டா), நான்காம் (S4, ட-லப்-டப்) இதய ஒலிப்புகள் உள்ளன. இவை பொதுவாக நாற்கால் பாயச்சலோட்டம் (gallop rhythm) என அழைக்கப்படுகின்றன. குதிரை ஒன்று ஓடும் போது ஏற்படக்கூடிய ட-ட-ட எனும் சந்தம் காரணமாக இவ்வாறு அழைக்கப்படுகின்றது.[15] மூன்றாம் இதய ஒலிப்பு இளவயதினர், விளையாட்டு வீரர், சிலவேளைகளில் கர்ப்பிணிகள் ஆகியோரில் இயல்பாகக் காணப்படலாம். ஆனால் பிந்தைய காலப் பகுதியில் மீண்டும் இவ்வொலிப்பு தோன்றினால் அது இதயச் செயலிழப்பின் காரணமாக இருக்கக்கூடும். உயர் குருதியழுத்தம், இதயத்தசை மிகை வளர்ச்சியில் முதலாம் இதய ஒலிப்பின் சற்று முன்னர் கேட்கக்கூடிய ஒலி நான்காம் இதய ஒலிப்பாகும். இதய நோய்கள் பிறவியில் ஏற்படக்கூடிய கோளாறுகள், இதய வால்வுகளில் ஏற்படும் நோய்கள், இதயத் தசைகளில் ஏற்படும் நோய்கள் போன்ற காரணங்களால் மற்றும் இதயத்துடன் நேரடி இணைப்பைக் கொண்ட குருதிக் குழாய்களில் ஏற்படக்கூடிய நோய்கள் மூலமாகவும் இதய நோய்கள் ஏற்படலாம். இதய அடைப்பிதழ் நோய் இதய அடைப்பிதழ் நோய் (Valvular heart disease) என்பது இதயத்தின் அடைப்பிதழ்களில் ஏற்படும் குறைபாடுகளால் உண்டாகும் நோயாகும். இதய அடைப்பிதழ்க் குறைபாடுகள் பிறவிக்குறைபாடாகவோ அல்லது பிறப்பின் பின்னர் பெற்றதாகவோ இருக்கலாம். நோயின் தீவிரத்தைப் பொறுத்து மருந்துகள் மூலமாகவோ அல்லது திருத்தல் அறுவைச்சிகிச்சை அல்லது அடைப்பிதழ் மாற்று அறுவைச்சிகிச்சை மூலமாகவோ சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. குருதி ஊட்டக்குறை இதய நோய் இதயத் தசைக்குக் குருதியோட்டம் குறைவாகச் செல்வதால் குருதியூட்டக்குறை இதய நோய் அல்லது முடியுருநாடி இதய நோய் ஏற்படுகின்றது. குருதியூட்டக்குறை இதய நோய் உண்டாவதற்கான மிக முக்கியமான காரணி முடியுரு நாடி கூழ்மத்தடிப்பு ஆகும். வயது, புகைப்பிடித்தல், உயர் குருதிக் கொலசுடிரோல், நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் போன்ற சில காரணிகளால் இந்நோயின் இடர்ப்பாடு அதிகரிக்கின்றது. குருதியூட்டக்குறையால் மார்பு நெரிப்பு, மாரடைப்பு போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன. மாரடைப்பு இதயத்தின் பகுதிகளுக்குக் குருதியோட்டம் தடைப்படும்போது இதயத்திசு இறப்பு அல்லது இதயத்தசை இறப்பு (Myocardial infarction) ஏற்படுகிறது. இது பெரும்பாலும் முடியுருத் தமனியில் தடையோ குறுக்கமோ ஏற்படுவதால் உண்டாகிறது. இத் தமனிகளின் சுவர்களில் கொலஸ்டிரால் போன்ற கொழுப்புப் பொருட்களும் வெள்ளைக் குருதி அணுக்களும் சேர்ந்து உட்புறத்தில் வீக்கத்தழும்பு உருவாகுவதால் தமனி குறுகிவிடுகின்றது. தமனியில் உள்ள இத்தகைய நிலை தமனிக்கூழ்மைத் தடிப்பு என அழைக்கப்படுகின்றது. இதனால் இதயத் தசைகளுக்குக் குறைந்த அளவு குருதியே செல்வதால் உயிர்வளிப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்நிலை கொண்டுள்ளவர் கடினமாய் உழைக்கும் வேளையில் அவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்படும். ஓய்வு எடுக்கும் போதும் நைட்ரேட்டு மாத்திரைகள் சாப்பிடும் போதும் இதய குருதியோட்டம் சீரடைந்து இந்த வலி குறையும். இதை மார்பு நெரிப்பு என்கிறோம். இந்த நிலைக்கான மருத்துவ உதவியை உரிய காலத்தில் தராவிட்டால் வீக்கத்தழும்பு வெடித்து குருதிக்குழாய்களுள் குருதி உறைந்து குழலியக்குருதியுறைமை ஏற்பட்டு நிரந்தரமான அடைப்பு உருவாகும். இந்நிலையில் குறிப்பிட்ட இதயத்தசைப் பகுதி குருதி பெறுவதை முற்றிலும் இழக்கின்றது. இதனால் இதயத் தசைகள் இறந்து விடுகின்றன. இந்த நேரத்தில் ஓய்வு எடுத்தாலும் வலி குறையாது. இத்தகைய சூழலே இதயத்தசை இறப்பு ஆகும். சமூகம் மற்றும் கலாச்சாரம் காதலா்களின் சின்னம் உடலின் முக்கியமான உறுப்பு என்பதால் இதயம் உடலின் மத்தியில் அமைந்துள்ளது என்று நீண்ட காலமாக அடையாளம் காணப்பட்டு வந்துள்ளது. உயிரின் ஆதாரம், உள்ளத்தின் இருப்பிடம், உணர்வுகளின் மையம் என்று இதயம் கருதப்படுகின்றது.[16] இதனால் காதல் அல்லது அன்பு என்பதன் சின்னமும் இதயமாக உள்ளது. மதங்களிலும் இதயத்தின் சின்னம் உபயோகிக்கப்படுகின்றது. மனிதாபிமானம் அற்றவர்களை "இதயமே இல்லாதவர்" என்று விவரிப்பது சமூகத்தில் இன்றும் நடைமுறையில் உள்ளது. [17] உணவு கோழி, ஆடு, மாடு, பன்றி போன்றனவற்றின் இதயம் பரவலாக உணவாக உட்கொள்ளப்படுகின்றது. இவை தசை உறுப்பு என்பதால் புரதம் செறிந்த உணவாகும். வேறு விலங்குகளின் இதயம் சுற்றோட்டத்தொகுதி உடைய முதுகெலும்பிலிகளில் (முள்ளந்தண்டிலிகள்) இருதயம் ஒரு குழாய் வடிவில் அல்லது சிறுபை வடிவில் காணப்படும், இது புரதம், வெல்லம், கொழுப்பு போன்ற ஊட்டச்சத்துகள் அடங்கிய நீர்மத்தைச் செலுத்த உதவுகின்றது. பூச்சியினங்களில் வழமையாக "முதுகுக் குழாய்" என்று அழைக்கப்படுகின்றது, பூச்சிகளின் "குருதி" ஒட்சிசன் ஏற்றப்படாத நிலையில் காணப்படுகின்றது, ஏனெனில் அவை உடலின் மேற்பரப்பு மூலமாகவே சுவாசத்தை மேற்கொள்கின்றன, எனினும் சில கணுக்காலிகள் போன்ற பூச்சிகள் மற்றும் மெல்லுடலிகள் குருதிநிணநீரைக் (hemolymph) கொண்டுள்ளன, இவற்றுள் செம்பைத் தளமாக உடைய கீமோசையனின் (hemocyanin) ஒட்சிசனைக் காவுகின்றது, இது முதுகெலும்பிகளின் செவ்வணுக்களில் காணப்படும் இரும்பை தளமாக உடைய குருதிவளிக்காவியை ஒத்தது. படத்தொகுப்பு மனித இதயம் முற்புறத் தோற்றம் மனித இதயம் பிற்புறத் தோற்றம் முடியுருக் குருதிச்சுற்றோட்டம் உடற்கூற்றியல் இதய மாதிரி இதயமும் சுற்றோட்டமும் மேலும் பார்க்க வலது இதயம் இடது இதயம் இடது ஏட்ரியம் வலது ஏட்ரியம் இடது வெண்ட்டிரிக்கிள் வலது வெண்ட்டிரிக்கிள் வெளி இணைப்புகள் மேற்கோள்கள் பகுப்பு:உடல் உள்ளுறுப்புகள் பகுப்பு:இதய உடற்கூற்றியல் பகுப்பு:குருதிச் சுற்றோட்டத்தொகுதி
சராசரி மனித ஆண் இதயத்தின் எடை என்ன?
300 – 350 கிராம்
902
tamil
d1e47c02c
அரசர்களின் விளையாட்டு என வருணிக்கப்படும் சதுரங்கம் (Chess), இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டு ஆகும். ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் இவ்விளையாட்டில் பயன்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இரண்டு நிறங்களில் காய்கள் அமைந்திருப்பது வழக்கம். விளையாடும் பலகை, 8 வரிசைகளிலும், 8 நிரல்களிலும் (8 x 8) அமைந்த மொத்தமாக 64 கட்டங்களைக் கொண்ட சதுர வடிவமானது. பொதுவாகக் கறுப்பு, வெள்ளை நிறங்களில் மாறி மாறி அமைந்திருக்கும். சதுரங்கம் அதிட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டு அன்று. மதியூகமும், தந்திரமும் இவ்விளையாட்டுக்கு முக்கியமானவையாகும். தற்காலங்களில் இவ்விளையாட்டானது பாடசாலைப் பாடவிதானத்திலும் கொண்டுவரப்பட்டுள்ளது. உலகம் பூராகவுமுள்ள பல மில்லியக்கணக்கான மக்களால் வீடுகளில், பூங்காக்களில், கழகங்களில், இணையத்தளத்தில், கணனியிலும் போட்டித்தொடர்களாகவும் விளையாடப்பட்டு வருகிறது. சதுரங்கம் மனித இனத்தின் பிரபல விளையாட்டுகளில் ஒன்றாகும். இது ஒரு விளையாட்டாக மட்டுமன்றி, ஒரு கலையாகவும் அறிவியலாகவும் கூட வர்ணிக்கப்படுவதுண்டு. இது சில சமயம் ஒரு போர் விளையாட்டாகவும், "மூளை சார்ந்த போர்க்கலை"யாகவும் பார்க்கப்படுவதுண்டு. பல விதமான சதுரங்க விளையாட்டுகளும், அதனுடன் தொடர்புடைய சில விளையாட்டுகளும் உலகமெங்கிலும் விளையாடப்படுகின்றன. சீனாவின் ஷியாங்கி, சப்பானின் ஷோகி, நேபாளத்தின் புத்தி சல் என்பன இவற்றுள் புகழ் வாய்ந்தவை. ஒருவருடைய பகுதியில் (வெள்ளை/ கறுப்பு) ஓர் அரசன், ஓர் அரசி, இரு மந்திரிகள், இரு குதிரைகள், இரு கோட்டைகள் மற்றும் எட்டு சிப்பாய்கள் காணப்படும். ஒவ்வொரு வகையான காயும் விதம் விதமாக நகரக்கூடியவை. விளையாடும் வழிமுறை சதுரங்கம் இருவரால் விளையாடப்படும் ஆட்டமாகும். தனது அரசனை பாதுகாத்துக்கொண்டு, எதிரியின் அரசனைப் பிடிப்பதே ஆட்டத்தின் சூட்சமம். எதிரி அரசனை, எதிரி தனது அரசனை பிடித்துவிடுவதற்கு முன்பு பிடித்துவிட்டால் வெற்றி கிடைத்துவிடும். விளையாட்டும் முடிவடைந்து விடும். சதுரங்கம் ஒரு சதுரப்பலகையில் விளையாடப்படும். இந்தச் சதுரப்பலகை படத்தில் காட்டப்பட்டுள்ளது போல வெள்ளை கறுப்பு என மாறி மாறி 8x8=64 சதுரங்களை கொண்டிருக்கின்றது. அதாவது 8 நிரைகளையும் 1, 2, 3, 4, 5, 6. 7, 8 (கீழிருந்து மேலாக), 8 நிரல்களையும் a, b, c, d, e, f, g, h (இடத்திலிருந்து வலமாக) கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு சதுரத்தையும் இயற்கணித குறியீட்டுக்கமைய தனித்துவமாக குறிக்கலாம். முதலாவது சதுரம் (a, 1), இரண்டாவது சதுரம் (a, 2) என்று 64வது சதுரம் (h, 8) என்று அமையும். இந்த விளையாட்டில் இரு அணிகள் அல்லது படைகள் உண்டு. அவை முறையே வெள்ளைப் படை, கறுப்புப் படை என்று அழைக்கப்படும். ஒவ்வொரு படையிலும் 16 காய்கள் உண்டு. ஒவ்வொரு படையிலும் ஒரு அரசன், ஒரு அரசி, இரு மந்திரிகள், இரு குதிரைகள், இரு கோட்டைகள், எட்டு படைவீரர்கள் ஆகிய காய்கள் இருக்கும். ஆரம்ப நிலை படத்தில் காட்டப்பட்டவாறு ஆரம்ப அடுக்கல் அமையவேண்டும். முதல் நிரலில் அல்லது வரிசையில் வெள்ளைப் படையின் கோட்டை, குதிரை, மந்திரி, அரசி, அரசன், மந்திரி, குதிரை, கோட்டை என்று அமையும். இங்கு வெள்ளை அரசி (d, 1) வெள்ளைச் சதுரத்திலும் வெள்ளை அரசன் (e, 1) கறுப்புச் சதுரத்திலும் நிற்கவேண்டும். இரண்டாவது நிரலில் எட்டு வெள்ளைப் படைவீரர்களும் நிற்கும். இதைப் போலவே எதிர் திசையில் அதாவது எட்டாவது நிரலில் கறுப்புப் படையின் கோட்டை, குதிரை, மந்திரி, அரசி, அரசன், மந்திரி, குதிரை, கோட்டை என்று அமையும். இங்கு கறுப்பு அரசி (d, 8) கறுப்புச் சதுரத்திலும் கறுப்பு அரசன் (e, 8) வெள்ளைச் சதுரத்திலும் நிற்க வேண்டும். ஏழாவது நிரலில் எட்டு கறுப்புப் படைவீரர்களும் நிற்கும். காய்கள் நகர்வு முறைகள் அரசன் அரசன் அல்லது ராஜா தான் இருக்கும் இடத்தில் இருந்து எத்திசையிலும் ஒரு சதுரத்துக்கு மட்டுமே நகரமுடியும். abcdefgh8877665544332211abcdefgh e4 கட்டத்தில் உள்ள வெள்ளை ராஜா ஒரே ஒரு கட்டம் மட்டும் நகர்ந்து e3,e5.d3,d4,d5,f3,f4,f5 ஆகிய எட்டு கட்டங்களில் ஏதாவது ஒரு கட்டத்திற்கு செல்ல முடியும். ஆனால் ஒரு சிறப்பு வகை நகர்த்தலில் மட்டும் ராஜாவை இரண்டு சதுரங்கள் நகர்த்தலாம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இந்நகர்விற்கு கோட்டை கட்டுதல் (castling) என்று பெயர். இப்படி ராஜா இரு கட்டங்கள் நகரும்பொழுது, கோட்டை அரசரைத்தாண்டி அடுத்தக் கட்டத்தில் இடப்புறமோ வலப்புறமோ நிற்கும். இப்படி ஒரு ஆட்டத்தில் அரசரும் யானையும் ஒரே நேரத்தில் நகருவதை கோட்டை கட்டுதல் என்பர். இவ்வாறு கோட்டை கட்டுவதற்கு முன்பாக ராஜா, கோட்டை என்ற இரண்டு காய்களில் ஒன்றைக் கூட நகர்த்தி இருக்கக்கூடாது. அப்படி நகர்த்தி இருந்தால் கோட்டை கட்டும் நகர்வை செய்ய முடியாது. மேலும் ராஜாவுக்கு ஆபத்து (check) இருக்கும் போதும், கோட்டை கட்டலின் விளைவாக ராஜா நிற்கும் இடத்தில் ஆபத்து (check) இருந்தாலும் கோட்டை கட்டும் நகர்வை செய்ய முடியாது. ராணி இருக்கும் பக்கமாக கோட்டை கட்டிக்கொள்வதை நீண்ட கோட்டை கட்டுதல் என்பர். ராஜா தன் பக்கத்தில் கோட்டை அமைத்துக் கொள்வதை குறுகிய கோட்டை கட்டுதல் என்பர். ராணி அரசியால் தான் இருக்கும் இடத்தில் இருந்து எத்திசையிலும் நெடு வரிசையிலோ, கிடைவரிசையிலோ மூலைவிட்டமாகவோ எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது. படத்தில் படத்தில் காட்டப்படும் ராணியை நாம் தேவைக்கேற்ப காட்டப்பட்ட ஏதாவது ஒரு கட்டத்திற்கு நகர்த்திக் கொள்ள இயலும். மந்திரி மந்திரி அல்லது தேர்' 'நகர்வு முறை: மந்திரி அல்லது தேர் மூலைவிட்டமாக எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது. படத்தில் e4 கட்டத்தில் நிற்கும் மந்திரியை நாம் தேவைக்கேற்ப f5,g6,h7,d5,c6,b7,a8,f3,g2,h1,d3,c2,b1 ஆகிய 13 கட்டங்களில் ஏதாவது ஒரு கட்டத்திற்கு நகர்த்திக் கொள்ள இயலும் குதிரை குதிரை: தான் இருக்கும் இடத்தில் இருந்து எத்திசையிலும் ’ட’ வடிவில் நகர முடியும் (ஒரு கட்டம் மேல்-கீழாகவோ அல்லது இடம் வலமாகவோ நகர்ந்த பின் இரு கட்டங்கள் செங்குத்தான திசையில் நகரும்). குதிரை மட்டும் காயைத்தாண்டிச் செல்லும் திறம் கொண்டது. படத்தில் e4 கட்டத்தில் நிற்கும் குதிரையை நாம் தேவைக்கேற்ப f6,d6,g5,g3,f3,d3,c3,c5 ஆகிய எட்டு கட்டங்களில் ஏதாவது ஒன்றில் நகர்த்திக் கொள்ள இயலும்.குதிரை கருப்புக் கட்டத்தில் இருக்குமேயானால் வெள்ளைக் கட்டத்திற்கும் வெள்ளைக் கட்டத்தில் நிற்குமேயானால் கருப்புக் கட்டத்திற்கும் நகர்ந்து செல்லும் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். கோட்டை கோட்டை: தான் இருக்கும் இடத்தில் இருந்து நேராக எத்திசையிலும் முன்னே பின்னே அல்லது இட வலமாக எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் கோட்டையால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது. படத்தில் e4 கட்டத்தில் நிற்கும் கோட்டையை நாம் தேவைக்கேற்ப e5,e6,e7,e8,e3,e2,e1,f4,g4,h4,d4,c4,b4,a4 ஆகிய 14 கட்டங்களில் ஏதாவது ஒன்றில் நகர்த்திக் கொள்ள இயலும். படைவீரர் படைவீரர்: தான் இருக்கும் இடத்தில் இருந்து நேரே முன்நோக்கி மட்டும் ஒரு சதுரம் நகர முடியும். ஆனால் ஆரம்பநிலையில் மட்டும் தான் இருக்கும் இடத்தில் இருந்து முன்நோக்கி இருசதுரங்கள் விளையாடும் வீரர் விரும்பினால் நகர்த்த்திக் கொள்ளலாம். படைவீரர் தன் தாக்குதலை முன்நோக்கிய மூலைவிட்டமாக மட்டுமே மேற்கொள்ளலாம். ஆனால், தாக்குதலில் இருந்து தப்பும் நோக்கில் ஆரம்ப நிலையில் இருந்து இரு சதுரங்கள் நகரமுடியாது.[1] வெள்ளைப் படைவீரர் 5ம் வரியில் இருக்கும் போது கறுப்பு படைவீரர் வெள்ளைப் படைவீரருக்கு பக்கத்தில் நகர்த்தினால் கறுப்பு படைவீரரை வெள்ளைப் படைவீரர் தாக்கலாம். இதனை எம்பஸ் (Enpassant) என்று கூறுவார்கள். படைவீரரை படிப்படியாக நகர்த்திக் கொண்டு கடைசிப் பெட்டியை அடைந்தால் அப்படைவீரனை பதவி உயர்வு கொடுத்து ராணி, மந்திரி, குதிரை மற்றும் கோட்டை ஆகியவற்றில் ஒன்றாக மாறிக்கொள்ளலாம். படத்தில் e4 கட்டத்தில் நிற்கும் படைவீரன் e5 கட்டத்திற்கு மட்டுமே முன்னேறிச் செல்ல முடியும். ஆனால் இவ்வீரனால் f5, d5 கட்டங்களில் உள்ள எதிரியின் காயைத் தாக்கி வெட்ட முடியும. ஒரு வேளை எதிரியினால் வெட்டுப்படாமல் படிப்படியாக முன்னேறி e8 கட்டத்தை இவ்வீரன் அடைந்தால் அவன் பதவி உயர்வு அடைவான்.. ஆட்டம் வெள்ளைப் படையணியே முதலில் நகரவேண்டும். யார் வெள்ளைப் படையணி என்பதை ஆடுபவர்கள் தீர்மானிக்கவேண்டும். முதலில் யார் நகர்த்துகின்றார்களோ அவர்களுக்கு ஆட்டத்தில் ஒருவித இலாபம் இருக்கும் என்று கருதுகிறார்கள். கருப்புப் படையணியைக் கொண்டிருப்பவன் இந்த ஆரம்ப முன்னிலையை சமன் செய்ய கூடுதலாக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். . வரலாறு thumbnail|Right|அவர்கள் வெளியில் சதுரங்கம் விளையாட வேண்டும் போது பல மக்கள் பயன்படுத்தப்படும் ஹோபார்ட், டாஸ்மேனியா படம் பெரிய சதுரங்க தொகுப்பு. சதுரங்கத்தின் தோற்றம் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நிலவினாலும், ஏழாம் நூற்றாண்டு அளவில் இந்தியாவில் விளையாடப்பட்டு வந்த சதுரங்கம் என்னும் விளையாட்டிலிருந்தே இது வளர்ச்சியடைந்தது என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து.[2] இங்கிருந்து மேற்கே ஐரோப்பாவுக்கும், கிழக்கே கொரியா வரையும் பல வேறுபாடுகளுடன் பரவியது. இது மங்கோலியா வழியாக ரஷ்யாவுக்குப் பரவியது. அங்கே ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விளையாடப்பட்டதாகத் தெரிகிறது. இந்தியாவிலிருந்து பாரசீகத்துக்குப் பரவிய இவ்விளையாட்டு, பாரசீகத்தை இஸ்லாமியர்கள் கைப்பற்றிய பின்னர் இஸ்லாமிய நாடுகள் பலவற்றிலும் பரவியது. முஸ்லிம்களால் பத்தாம் நூற்றாண்டு அளவில் இது ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டில், காஸ்ட்டில்லின் அல்போன்சோ X-இன் ஆதரவில், சதுரங்கம், பாக்கம்மொன், டைஸ் என்னும் விளையாட்டுக்கள் தொடர்பான நூலொன்று எழுதப்பட்டுள்ளது. 11 ஆம் நூற்றாண்டில் சதுரங்கம் இங்கிலாந்தை எட்டியது. அங்கே அது கூரியர் முதலிய வேறுபட்ட வடிவங்களாக உருவெடுத்தது. 15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சதுரங்கக் காய்களின் நகர்த்தல்களுக்கான வரைமுறைகள் இத்தாலியில் பயன்பாட்டுக்கு வந்தன. "போன்"கள் (வீரர்) முதல் நகர்த்தலின்போது இரண்டு கட்டங்கள் முன் நகரலாம் என்ற விதி ஏற்பட்டது, "பிஷப்" திறந்த கட்டங்களின் மூலைவிட்டம் வழியாக எவ்வளவு தூரமும் செல்லலாம் என்ற விதியும் புழக்கத்துக்கு வந்தது. முன்னர் இவை மூலைவிட்டம் வழியாக இரண்டு கட்டங்கள் மட்டுமே நகர அனுமதிக்கப்பட்டது. ஆனால் கட்டங்களைப் பாய்ந்து செல்ல இவற்றுக்கிருந்த அனுமதி நீக்கப்பட்டது. மூலை விட்டம் வழியாக ஒருகட்டம் மட்டுமே நகரலாம் என "இராணி"க்கிருந்த சக்தி கூட்டப்பட்டு திறந்த கட்டங்களினூடாக எத்திசையிலும், எவ்வளவு தூரமும் நகரலாம் என அனுமதிக்கப்பட்டு "இராணி" ஒரு மிகச் சக்திவாய்ந்த காயாக ஆக்கப்பட்டது. மேற்படி மாற்றங்கள் சதுரங்கத்தை கூடுதலாகப் பகுப்பாய்வு செய்வதற்கு வழிவகுத்ததின் மூலம், பல ஈடுபாடுள்ள சதுரங்க ஆர்வலர்களை உருவாக்கியது. அக்காலம் தொட்டு ஐரோப்பாவில் சதுரங்கம் அதிகம் மாற்றமில்லாது இன்று விளையாடப்படுவது போலவே இருந்துவருகிறது. சமநிலைக்கான நிபந்தனைகள் தவிர்ந்த ஏனைய, தற்போது புழக்கத்திலுள்ள வரைமுறைகள் யாவும் 19 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட்டன. "ஸ்டவுண்டன்" தொகுதி எனப்படும் மிகப் பிரபலமான காய் வடிவமைப்பு நத்தானியேல் குக் என்பவரால் 1849 இல் வடிவமைக்கப்பட்டு, அக்காலத்தில் முன்னணிச் சதுரங்கம் விளையாட்டு வீரரான ஹோவார்ட் ஸ்டவுண்டன் என்பவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டபின், 1924 இல் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு ஆல் உத்தியோக பூர்வமாகப் புழங்க விடப்பட்டது. ஒரு காலத்தில் சதுரங்க விளையாட்டுக்கள் விபரிப்பு சதுரங்கம் குறியீடுகள் (descriptive chess notation) மூலம் பதிவு செய்யப்பட்டன. இது இன்னும் சில விளையாட்டாளர்களால் பயன்படுத்தப்பட்டுவரினும், புதிய, சுருக்கமான அட்சரகணித சதுரங்கக் குறியீடுகளால் இவை படிப்படியாக மாற்றீடு செய்யப்பட்டு வருகின்றன. காவத்தக்க விளையாட்டுக் குறியீடு (Portable Game Notation – PGN) முறையே கணிணிப் பயன்பாட்டு வடிவில் அமைந்த மிகப் பொதுவான குறியீட்டு ஒழுங்கு ஆகும். மனித மூளைக்கு மட்டுமே உரித்துடையதாகக் கருதப்பட்ட சதுரங்க விளையாட்டை இப்பொழுது, மனிதர்கள் மட்டுமன்றி இயந்திரங்களும் விளையாடத் தொடங்கிவிட்டன. ஆரம்பகாலங்களில் வெறும் ஆர்வம் காரணமாகப் பயன்பட்டுவந்த ஒன்றாக இருந்த போதிலும், கணினி சதுரங்கம் விளையாடும் கணினிகள் வளர்ந்து திறமையான மனிதர்களுக்கே சவால்விடக்கூடிய, சிலசமயம் தோற்கடிக்கக்கூடிய அளவுக்குச் சக்தி மிக்கவையாகிவிட்டன. அக்காலத்தில் சதுரங்க விளையாட்டில் உலகில் முதல் நிலையிலிருந்த காரி காஸ்பரோவ், 1996ல், 6 விளையாட்டுகள் கொண்ட சதுரங்க ஆட்டத்தை ஐபிஎம் சதுரங்கக் கணினியான டீப் புளூ (ஆழ் நீலம்) வுக்கு எதிராக விளையாடினார். முதல் விளையாட்டில் (டீப் புளூ- காஸ்பரோவ், 1996, விளையாட்டு 1) காஸ்பரோவை வென்றது லம் கணினி உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனாலும் 3 விளையாட்டுக்களை வென்றது மூலமும், ஏனைய இரண்டிலும் சமநிலையை அடைந்தது மூலமும் காஸ்பரோவ் வெற்றிபெற்றார். 1997 இல் மறுபடியும் நடைபெற்ற 6 விளையாட்டுகள் கொண்ட ஆட்டத்தில் கணினி வெற்றிபெற்றது. அக்டோபர் 2002ல் விளாமிடிர் கிராம்னிக் எட்டு விளையாட்டுகள் கொண்ட ஆட்டத்தில் டீப் பிரிட்ஸ் என்னும் கணினி நிரல் உடன் சமநிலை பெற்றார். 2003 பெப்ரவரியில், டீப் ஜூனியர் எனும் கணினி நிரல் உடன் விளையாடிய 6 விளையாட்டு ஆட்டத்திலும், பின்னர் நவம்பரில் X3D பிரிட்ஸ் உடன் விளையாடிய 4 விளையாட்டு ஆட்டத்திலும் காஸ்பரோவ் சமநிலையையே பெற்றார். வியூகமும் உத்திகளும் இங்கே வியூகம் என்பது ஒரு விளையாட்டிற்கான ஒரு நீண்ட நேர இலக்குக்கான வழிமுறையையும், உத்தி என்பது உடனடியான நகர்த்தலுக்கான தந்திரங்களையும் குறிக்கிறது. சதுரங்க விளையாட்டில் நீண்ட நேர வழிமுறைகளையும், உடனடி உத்திகளையும் வேறுபடுத்தமுடியாது. ஏனெனில் வியூகம் சார்ந்த இலக்குகளை உத்திகள் மூலமே அடையமுடியும். அதே வேளை முன்னைய வியூகங்களே பின்னைய நகர்த்தல்களின் போது உத்திகளுக்கான சந்தர்ப்பங்களை வழங்குகின்றன. வேறுபட்ட வியூகம் மற்றும் உத்தி வழிமுறைகள் காரணமாக ஒரு சதுரங்க விளையாட்டை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். முதலாவது "தொடக்க ஆட்டம்", வழக்கமாக இப்பிரிவு ஆட்டம் 10 முதல் 25 நகர்த்தல்களைக் கொண்டிருக்கும். இக் கட்டத்தில் விளையாடுபவர்கள் தங்கள் படைகளை வரப்போகும் போருக்குத் தயார் படுத்துவர். அடுத்தது "நடு ஆட்டம்" இது விளையாட்டின் முதிர்நிலை. இறுதியாக "முடிவு ஆட்டம்", இக் கட்டத்தில் பொதுவாகப் பெரும்பாலான காய்கள் வெளியேறியிருக்கும். அதனால், அரசனுக்கு விளையாட்டில் முக்கிய பங்கு இருக்கும். தொடக்க ஆட்டம் சதுரங்க விளையாட்டின் தொடக்க ஆட்டம், ஆரம்ப நடவடிக்கைகளான சில திறப்பு நகர்வுகளை அடிப்படையாக கொண்டு ஆரம்பமாகிறது. இத்திறப்பு நகர்வுகள் அனுபவங்களின் அடிப்படையில் திட்டமிடப்பட்டு சிறு சிறு தொகுப்புகளாக பெயரிடப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ரூயி லோப்பஸ் திறப்பு, சிசிலியன் தடுப்பாட்டம் என்பன சில உதாரணங்களாகும். இவ்வாறு பெயரிடப்பட்ட பல்வேறு திறப்பு நகர்வுகள் குறிப்புதவி நூலான திறப்பு நகர்வுகளின் கலைக் களஞ்சியம் திரட்டில் பட்டியலிடப்பட்டுள்ளன. இப்பட்டியலில் அமைதியான முற்றுகை உத்தி முதல் தீவிர தாக்குதல் உத்தி வரையிலான ஏராளமான திறப்பு நகர்வு வரிசைகள் இடம்பெற்றுள்ளன. இவ்வரிசைகள் இரு தரப்பினருக்குமான முப்பது நகர்வுகள் வரை நீண்டுள்ளவையாக தொகுக்கப்பட்டுள்ளன. தொழில் முறை சதுரங்க வீரர்கள் இத்திறப்பு கோட்பாடுகளை படித்து ஆராய பல ஆண்டுகள் வரை செலவழித்து தெளிவடைய முயல்கிறார்கள். பெரும்பாலான திறப்பு நகர்வுகளின் அடிப்படை நோக்கம் ஒரேமாதிரியாகவே காணப்படுகிறது. முன்னேற்றம்: எதிரியின் காய்களை நம்முடைய பிரதேசத்தில் ஊடுறுவாமல் தடுக்கவும் அதே நேரத்தில் நம் காய்கள் முன்னேறி எதிரியின் பகுதியில் நுழையவும் திட்டமிடும் நுட்பம் முதலாவது நோக்கமாகும். இந்நுட்பமானது நம்முடைய காய்களை, குறிப்பாக குதிரை மற்றும் மந்திரியை உபயோகமான இடத்தில் நிறுத்தி ஆட்டத்தின் போக்கை நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்வதை கற்பிக்கிறது. மத்திய சதுரங்கள் கட்டுப்பாடு: சதுரங்க பலகையின் மத்திய சதுரங்கள் நம் காய்களின் கட்டுப்பாட்டில் இருந்தால், நம் காய்களை இலகுவாக எந்த பகுதிக்கும் நகர்த்தமுடியும் என்பது மற்றொரு நோக்கமாகும். மத்திய சதுரங்களை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது எதிரியின் காய்களை முன்னேற விடாமல் தடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசனின் பாதுகாப்பு: அபாயகரமான தாக்குதல்களில் இருந்து அரசனை பாதுகாப்பது மூன்றாவது நோக்கமாகும். உரிய நேரத்தில் கோட்டை கட்டிக் கொள்ளுதல் அரசனின் பாதுகாப்பிற்கு சற்று உதவும் என்பது இந்நோக்கத்தின் அடிப்படையாகும். சிப்பாய்கள் அணிவகுப்பு: ஆதரவாக தோள் கொடுக்கும் வீரர்கள் துணையிருந்தால் ஒரு சிப்பாய் வீரனால் எளிமையாக முன்னேறிச் செல்லமுடியும் என்ற அடிப்படை நான்காவது நோக்கமாகும். தனிமைப்படுத்தப்பட்ட சிப்பாய், ஒரு சிப்பாயின் முதுகின் பின்னால் மறைந்து நிற்கும் சிப்பாய் போன்ற பலவீனங்களை உருவாக்குவதை தவிர்ப்பதும், இப்பலவீனங்களை எதிரியின் சிப்பாய்களுக்கிடையில் ஏற்படுத்த கட்டாயப்படுத்துவதும் இந்நோக்கத்திலுள்ள நுட்பங்களாகும். நடு ஆட்டம் திறப்பு நகர்வுகளின் வரிசையில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஆட்டத்தை தொடங்கிய பிறகு சதுரங்க விளையாட்டின் முக்கியப் பகுதியாக திகழ்வது நடு ஆட்டமாகும். சதுரங்கப் பலகையில் உள்ள பெரும்பாலான காய்கள் தடையின்றி முன்னேற வழிகள் கிடைத்தவுடன் நடு ஆட்டம் துவங்குவதாக கருதப்படுகிறது. தொடக்கம் மற்றும் நடு ஆட்டங்களுக்கு இடையே தெளிவான வரிசைத் தொகுப்புகள் வரையறுக்கப்படவில்லை. ஏனெனில், திறப்புக் கோட்பாடுகளை முடித்துக் கொள்ளும் வீரர்கள், தங்கள் காய்களின் அமைவிடம், பலம், பலவீனம் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் சுயசிந்தனையில் தனித்துவமான திட்டங்களை அமைக்க முற்படுவர். இந்நிலையில் வீரர்கள் தங்கள் எதிரியைத் தாக்குதல், கைப்பற்றுதல், முன்னேறுதல், பலிகொடுத்தல் முதலான தந்திரங்களை கையாளும் சாத்தியக்கூறுகளை ஆராய்வர். ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய சேர்க்கை நகர்வுகள் படலம் நடு ஆட்டங்களில்தான் தோற்றம் பெறுகின்றன. சேர்க்கை நகர்வுகள் என்பன ஆதாயத்தை அடிப்படையாக கொண்ட சில தந்திர நகர்வுகளின் தொடர் ஆகும். திட்டமிடப்பட்ட இத்தொடர் நகர்வுகள் எதிரி ராசாவின் மீது தாக்குதல் தொடுக்கும் உத்தியோடு இணைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட சில பொதுவான நகர்த்தல் முறைகள் அவற்றைக் கண்டறிந்தவர்கள் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. உதாரணமாக, போடென் மேட் அல்லது லஸ்கர்-பார் சேர்க்கைகள். வியூகத்தின் அடிப்படைகள் சதுரங்கத்தின் வியூகம்; காய்களின் நிலைகளை மதிப்பிடல், இலக்குகளை முடிவு செய்தல், விளையாட்டுக்கான நீண்ட நேரத் திட்டங்களை உருவாக்குதல் என்பவற்றோடு தொடர்புடையது. மதிப்பீடு செய்யும்போது, விளையாடுபவர்கள் பலகையில் உள்ள காய்களின் மதிப்பு, போர்வீரர் அமைப்பு, அரசனின் பாதுகாப்பு, வெளிகள், முக்கிய கட்டங்களினதும் கட்டத் தொகுதிகளினதும் கட்டுப்பாடு ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். காய்களின் நிலைகளை மதிப்பிடுவதில் முக்கியமானது இரு தரப்பினதும் மொத்தப் பெறுமதியைக் கணக்கிடுவதாகும். இதற்காகப் பயன்படுத்தப்படும் மதிப்பீட்டுப் புள்ளிகள் அநுபவத்தினால் பெறப்படுபவை. பொதுவாகப் படைவீரர்களுக்கு ஒரு புள்ளியும்; குதிரைக்கும், மந்திரிக்கும் மூன்று புள்ளிகள் வீதமும், கோட்டைக்கு ஐந்து புள்ளிகளும், அரசிக்கு ஒன்பது புள்ளிகளும் வழங்கப்படுகின்றன. விளையாட்டின் முடிவுக் கட்டத்தில், அரசனுக்கு, குதிரை அல்லது மந்திரியிலும் மதிப்புக் கூடுதலாக இருக்கும் ஆனால் கோட்டையிலும் குறைவான மதிப்பே அரசனுக்கு வழங்கப்படுகிறது. இதனால் அரசனுக்கு போரிடும் மதிப்பாக நான்கு புள்ளிகள் வழங்கப்படுவது உண்டு. இந்த அடிப்படை மதிப்புகள், காய்களின் நிலை, காய்களுக்கு இடையிலான தொடர்புகள், நிலையின் வகை போன்ற பிற சூழ்நிலைகளைப் பொறுத்து மாற்றம் செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, முன்னேறி இருக்கும் படைவீரர்களுக்குத் தொடக்க நிலையில் இருக்கும் படைவீரரிலும் மதிப்பு அதிகம். இரண்டு மந்திரிகள் இருப்பது ஒரு மந்திரியும் ஒரு குதிரையும் இருப்பதிலும் கூடிய மதிப்பு உள்ளது. அதே வேளை பல படைவீரர்களுடன் கூடிய மூடிய நிலைகளில் குதிரைக்கு மதிப்பு அதிகம். படைவீரர்கள் குறைவாக இருந்து திறந்த நிலை காணப்படுமானால் மந்திரிக்குக் கூடுதல் மதிப்பு உண்டு. சதுரங்க நிலைகளை மதிப்பீடு செய்வதில் இன்னொரு முக்கிய அம்சம் "படைவீரர் அமைப்பு". படைவீரர்களே சதுரங்கப் பலகையில் உள்ள காய்களில் நகர்திறன் குறைந்தவை. இதனால் இவை ஒப்பீட்டளவில் நிலையானவை என்பதுடன், இவை பெரும்பாலும் விளையாட்டின் வியூகம் சார்ந்த இயல்புகளைத் தீர்மானிக்கின்றன. தனிமையான, இரட்டையான, பின்தங்கிய, படைவீரர்களைக் கொண்ட அல்லது வெளிகொண்ட படைவீரர் அமைப்புக்கள் வலுக்குறைவானவை. ஒரு முறை உருவாகிவிட்டால் பொதுவாக அதுவே நிலைபெற்று விடுகிறது. இதனால், தாக்குதலுக்கான வாய்ப்பு முதலிய வேறு வாய்ப்புக்கள் இருந்தாலன்றி, இவ்வாறான நிலை ஏற்படாதவாறு பாதுகாத்துக்கொள்வது வழக்கம். உத்திகளின் அடிப்படைகள் உத்திகள் குறுகிய நேரத்துக்குரிய நடவடிக்கைகளைக் குறிக்கின்றன. இவை குறுகிய நேரத்துக்கானவை என்பதால், மனித மூளையோ அல்லது கணினியோ இலகுவில் அதன் விளைவுகளைக் கணிக்கக்கூடியதாக இருக்கும். எனினும் இக் கணிப்பின் ஆழம் விளையாடுபவரின் திறமையையோ, கணினியின் ஆற்றலையோ பொறுத்தது. இரண்டு தரப்பிலும் நகர்த்தலுக்கான வாய்ப்புக்கள் அதிகம் இருக்கும்போது அதிகம் ஆழமான கணிப்பு இலகுவானதல்ல. ஆனால் சிக்கலான வேளைகளில், குறைந்த அளவு வய்ப்புக்கள் இருக்கும்போது, ஆழமாக, தொடர்ச்சியான பல நகர்வுகளைக் கணிக்க முடியும். எளிமையான, ஒன்று அல்லது இரண்டு நகர்த்தல்களுக்குள் அடங்கும் உத்திசார்ந்த செயற்பாடுகள் - பயமுறுத்தல்கள், காய்களைக் கொடுத்து எடுத்தல், இரட்டைத் தாக்குதல் போன்றவற்றை - ஒன்று சேர்த்து மேலும் சிக்கலான உத்திகளாகப் பயன்படுத்தலாம். வழமையாக இது ஒரு தரப்பிலிருந்தோ அல்லது சில சமயங்களில் இரு தரப்பிலும் இருந்தோ வரக்கூடும். கோட்பாட்டாளர்கள் பல அடிப்படையான உத்தி முறைகளையும், வழமையான நகர்வுகளையும் விளக்கியுள்ளனர். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் at Curlie - தினமலர் (தமிழில்) பன்னாட்டு நிறுவனங்கள் – பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு – [International Correspondence Chess Federation] செய்திகள் பகுப்பு:தனிநபர் விளையாட்டுக்கள்
சதுரங்க விளையாட்டு எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
ஏழாம் நூற்றாண்டு
7,425
tamil
27ddb4214
முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018)[2] திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். 1969ல் முதன்முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 2018 ஆகத்து 7 ஆம் நாள் தம்முடைய 94 ஆம் அகவையில் சென்னையில் காலமானார். இளமைப்பருவம் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 சூன் 3-இல் ஏழை இசை வேளாளர் குடும்பத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார் கருணாநிதி. இவருக்கு இரு சகோதரிகள் இருந்தனர். தொடக்கக்கல்வியை திருக்குவளையில் பெற்றார். பின்னர் திருவாரூரிலிருந்த மாவட்ட நாட்டாண்மைக்கழக உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றார். அங்கு இவருக்குத் தமிழாசிரியராக இருந்தவர் சி. இலக்குவனார். பள்ளியிறுதித்தேர்வில் இவர் தேர்ச்சியடையவில்லை. இளைஞர் அமைப்பு கருணாநிதி, தமது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். தமது வளரிளம் பருவத்தில், வட்டார மாணவர்கள் சிலரின் உதவியுடன் திருவாரூர் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்னும் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை 7-7-1944ஆம் நாள் உருவாக்கினார். அவரே அதன் தலைவராக மு.கருணாநிதியும் அமைச்சராக கே.வெங்கிடாசல என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். [3] இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. அதன் வழியாக மாணவநேசன் என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையை வெளியிட்டு இளைஞர்களைத் திரட்டினார். [4] சில காலத்துக்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான "அனைத்து மாணவர்களின் கழகம்" என்ற அமைப்பாக உருப்பெற்றது. கருணாநிதி, மற்ற உறுப்பினர்களுடனான சமூகப் பணியில் மாணவர் சமூகத்தையும் ஈடுபடுத்தினார். முரசொலி இதழ் முரசொலி என்னும் துண்டு வெளியீட்டை 1942ஆம் ஆண்டில் வெளியிட்டார். முரசொலி ஆரம்பித்த முதலாமாண்டு விழாவை அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோரை அழைத்து தம் மாணவர் மன்ற அணித்தோழர்களுடன் கொண்டாடினார். இடையில் சில காலம் அவ்விதழ் தடைபட்டது. பின்னர் 1946 முதல் 1948 மாத இதழாக நடத்தினார்.[5] சற்றொப்ப 25இதழ்கள் வரை வந்து மீண்டும் இதழ் தடைபட்டது. மீண்டும் 1953இல் மாத இதழாக சென்னையில் தொடங்கினார். 1960ஆம் ஆண்டில் அதனை நாளிதழாக மாற்றினார். அரசியல் தொடக்கம் நீதிக்கட்சியின் தூணாக கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14ஆவது அகவையில், அரசியல், சமூக இயக்கங்களில் முழுமையாக தம்மை ஈடுபடுத்திக்கொண்டார் [6]. கல்லக்குடி போராட்டம் கருணாநிதி தமிழ் அரசியலில் களமிறங்குவதற்கு உதவிய முதல் பிரதான எதிர்ப்பு, கல்லக்குடி ஆர்ப்பாட்டத்தில் (1953)[7] ஈடுபட்டது ஆகும். இந்த தொழிற்துறை நகரத்தின் அசல் பெயர் கள்ளக்குடி. இது வட இந்தியாவில் இருந்து ஒரு சிமென்ட் ஆலை ஒன்றை உருவாக்கிய சிம்மோகிராம் பிறகு டால்மியாபுரம் என மாற்றப்பட்டது. தி.மு.க. அந்த பெயரை கள்ளக்குடி என மீண்டும் மாற்ற வேண்டுமென விரும்பியது. கருணாநிதி மற்றும் அவருடைய தோழர்கள் இரயில் நிலையத்திலிருந்த டால்மியாபுரம் என்ற பெயரை அழித்தனர் மேலும் இரயில் மறியலிலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் இருவர் இறந்தனர், கருணாநிதி கைது செய்யப்பட்டார்.[7][8] இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் 1957 இல் நடைபெற்ற திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ் நாட்டில் நடுவண் அரசால் இந்தி திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்டோபர் 13, 1957 அன்றைய நாளை இந்தி எதிர்ப்பு நாளாக பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது. இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கிய கருணாநிதி நடுவண் அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து, "மொழிப்போராட்டம்.. எங்கள் பண்பாட்டை பாதுகாக்க, இது எமது மக்களின் தன்மானம் மற்றும் எங்களது கட்சியின் அரசியல் கொள்கை.. மேலும் இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு (எடுப்பு சாப்பாடு), ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு” என்று முழக்கமிட்டார். அக்டோபர், 1963, இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னையில் (மதராஸ்) கூட்டப்பட்டது. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடுவண் அரசின் புரிந்து கொள்ளாமையை உணர்த்தும் விதமாக இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்பு போராட்டம் நடத்துவெதென மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் 16 அன்று அண்ணாதுரையும், நவம்பர் 19 அன்று கருணாநிதியும் கைது செய்யப்பட்டு 25 நவம்பர் அன்று உயர் நீதிமன்ற ஆணையால் விடுவிக்கப்பட்டனர். தி.மு.க.வி. பதவிகள் பொருளாளர் 1960ஆம் ஆண்டில் தி.மு.க.வின் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969ஆம் ஆண்டு வரை அப்பதவியை வகித்தார். தலைவர் 1969ஆம் ஆண்டில் தி.மு.க.வின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது மறைவு வரை 50 ஆண்டுகள் அப்பதவியை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் இவர்வெற்றிபெற்றார். 1957ம் ஆண்டு சுயேச்சையாகவும் மற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுக வேட்பாளராகவும் போட்டியிட்டார். 1984ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை.[9][10] ஆண்டுதொகுதிவாக்கு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குவாக்கு வேறுபாடு 1957குளித்தலை22785கே. எ. தர்மலிங்கம்காங்கிரசு144898296 1962தஞ்சாவூர்32145ஏ.ஒய்.எஸ்.பரிசுத்த நாடார்காங்கிரசு302171928 1967சைதாப்பேட்டை53401எஸ். ஜி. வினாயகமூர்த்தி காங்கிரசு3291920482 1971சைதாப்பேட்டை63334என். காமலிங்கம்காங்கிரசு5082312511 1977அண்ணா நகர் 43076ஜி. கிருஷ்ணமூர்த்தி அதிமுக 1643816438 1980அண்ணா நகர் 51290எச். வி. அண்டே அதிமுக 50591699 1989துறைமுகம் 41632கே. எ. வகாப் முஸ்லீம் லீக் 964131991 1991துறைமுகம் 30932கே. சுப்பு காங்கிரசு30042890 1996சேப்பாக்கம் 46097நெல்லைக் கண்ணன்காங்கிரசு1031335784 2001சேப்பாக்கம் 29836தாமோதரன் காங்கிரசு250024834 2006சேப்பாக்கம் 34188தாவூத் மியாகான் சுயேச்சை256628526 2011 திருவாரூர் 109014எம்.இராசேந்திரன்அதிமுக5876550249 2016 திருவாரூர் 121473பன்னீர்செல்வம்அதிமுக5310768366 மாநிலத்திலேயே அதிக வாக்கு வித்தியாசம் சட்டமேலவை உறுப்பினர் இலங்கைத்தமிழருக்காக கருணாநிதியும் அன்பழகனும் தமது சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினர். அடுத்துவந்த சட்டமேலவைத்தேர்தலில் கருணாநிதி சட்டமேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சித்துணைத்தலைவர் 1962ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பின்னர் அமைந்த மூன்றாவது சட்டப்பேரவையில் இரா. நெடுஞ்செழியன் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தார். மு. கருணாநிதி எதிர்க்கட்சித்துணைத்தலைவராக இருந்தார். அமைச்சர் 1967ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியைப்பிடித்த பின்னர் கா. ந. அண்ணாதுரை தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பதவிவகித்தார். முதலமைச்சர் 1969–1971 --கா. ந. அண்ணாதுரை மறைவுக்குப் பின் முதல் முறை ஆட்சி 1971-1976—இரண்டாவது முறையாக 1989–1991 --எம். ஜி. இராமச்சந்திரன், மறைவுக்குப் பின் மூன்றாம் முறை ஆட்சி 1996-2001—நான்காம் முறை ஆட்சி 2006-2011—ஐந்தாம் முறை ஆட்சி என ஐந்துமுறை முதலமைச்சராக இருந்தார். அரசு நிர்வாகம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக, கிராமப்புறங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இலவச காப்பீடு திட்டங்கள், தொழில்மயமாக்குதலுக்கான நடவடிக்கைகள் போன்ற பலவற்றையும் மேற்கொண்டார். ஐ.டி துறையை மாநிலத்தில் வளர்க்கும் விதமாக, அவருடைய பதவிக் காலத்தில், டைடல் மென்பொருள் பூங்காவை உருவாக்கினார். ஒரகடத்தில், புதிய உழுவை உற்பத்தி செய்யும் செல்லைத் தொடங்கினார். மஹிந்திரா மற்றும் நிசான் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த அமைப்பின் கீழ் செயல்படுகிறது. விமர்சனங்கள் 1972 இல் விவசாயிகள் போராட்டத்தில் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள். 1976-ல் மு.கருணாநிதியின் ஆட்சி வீராணம் ஊழல் புகார் இலஞ்சத்தை காரணமாகக் காட்டி கலைக்கப்பட்டு ஆளுனர் ஆட்சிஅமல்படுத்தப்பட்டது. [11] [12] 1973 ல் மிசா 1975 சூன் மாதத்தில் நெருக்கடிக்கால அறிவிப்பை அப்பொழுதய இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அமல்படுத்தினார். 1977 ஆம் ஆண்டு அவசர நிலை முடிந்த பிறகு மதுரைக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வந்தபோது திமுகவினர் அவரை கடுமையாக தாக்கினார்கள். சென்னைக்கு வந்தபோதும் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள். காங்கிரஸ்ஐ கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, தொடக்க காலத்தில் பாரதிய ஜனதா கட்சியைக் கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, பொதுமக்களின், குறிப்பாக ஊடகங்களின், விமர்சனத்திற்கு உள்ளானது. எதிர்க்கட்சித்தலைவர் தமிழக சட்டப்பேரவையில் 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் அமைந்த சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தார். குடும்பம் தனிப்பட்ட வாழ்க்கை கருணாநிதி புலால் உணவுகளை உண்பவராக இருந்து பின் (தற்பொழுது) தாவர உணவு முறையை பின்பற்றுபவரானார். இவர் அரசியல் பணிகளையும், எழுத்துப் பணிகளையும் ஓய்வின்றி செய்ய முடிவதற்கு நாளும் யோகப் பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவற்றைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தமையே காரணமாகக் கூறப்படுகிறது. படைப்புகள் இவர் 75 திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். 15 நாவல்களையும் 20 நாடகங்களையும் 15 சிறுகதைகளையும் 210 கவிதைகளையும் படைத்துள்ளார். [13] மேலும் "நண்பனுக்கு", "உடன்பிறப்பே" என்னும் தலைப்புகளில் 7000க்கும் மேற்பட்ட மடல்களை எழுதியிருக்கிறார். [14] கரிகாலன் என்னும் பெயரில் கேள்வி-பதில் எழுதியிருக்கிறார். இவை தவிர தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்களை எழுதியிருக்கிறார். திரைப்படத் துறைப் பங்களிப்புகள் 20 வயதில், ஜுபிடர் பிக்சர்ஸ்-ன் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றினார். அவரது முதல் படமான ராஜகுமாரி என்னும் படத்தால் மிகவும் பிரபலமடைந்தார். ஒரு திரைக்கதை எழுத்தாளர் போன்ற திறமைகளை அவர் பல திரைப்படங்களுக்கு விரிவுபடுத்தினார். நாடகங்கள் அனார்கலி உதயசூரியன், 1959 இளைஞன் குரல், 1952 (31.8.52ஆம் நாள் தேனி வழக்க்குநிதிக்காக மதுரையில் அரங்கேற்றப்பட்டது)[15] ஒரே ரத்தம் காகிதப்பூ சாக்ரடீஸ் சாம்ராட் அசோகன் சிலப்பதிகாரம் சேரன் செங்குட்டுவன் திருவாளர் தேசியம்பிள்ளை தூக்கு மேடை,1957, முத்துவேல் பதிப்பகம், திருச்சி. நச்சுக் கோப்பை (பழனியப்பன் அல்லது சாந்தா அல்லது சமூகத்தின் கொடுமை என்னும் நாடகம் பின்னாளில் நச்சுக்கோப்பை என்னும் பெயரில் நிகழ்த்தப்பட்டது) நானே அறிவாளி பரதயாணம் பரப்பிரம்மம். 1953, திராவிடப்பண்ணை, திருச்சி. 26-2-1953ஆம் நாள் சென்னை ஒற்றைவாடைத் தியேட்டரில் புயல்நிவாரண நிதிக்காக நெடுஞ்செழியன் தலைமையில் அரங்கேற்றப்பட்டது. [16] பலிபீடம் நோக்கி, 1948, எரிமலைப் பதிப்பகம், துறையூர். பிள்ளையோ பிள்ளை (1948 சூலை; விந்தியம் வெளியீடு, திருவாரூர்)[17] பெரிய இடத்துப்பெண் (1948 செப்) மணிமகுடம், 1955, முத்துவேல் பதிப்பகம், திருச்சி. (4-9-1955 சென்னை செயின்ட் மேரி மண்டப்பத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன் குழுவினரால் கா. ந. அண்ணாதுரை தலைமையில் அரங்கேற்றம்) [18] மந்திரிகுமாரி வாழமுடியாதவர்கள் [19] (27-7-1951 இரவு 10;30 மணிக்கு காஞ்சி அசோகா அரங்கில் அரங்கேற்றம்) வரலாற்றுப்புனைவுகள் ரோமாபுரி பாண்டியன் தென்பாண்டிச் சிங்கம் ‎பாயும்புலி பண்டாரக வன்னியன் பொன்னர் சங்கர் புதினங்கள் வெள்ளிக்கிழமை, 1956 திசம்பர், திராவிடப்பண்ணை, சென்னை. புதையல் வான்கோழி சுருளிமலை ஒரு மரம் பூத்தது ஒரே ரத்தம் இரத்தக்கண்ணீர், திராவிடப்பண்ணை, திருச்சி [20] கிழவன் கனவு; 1945; வெளியிட்டவர்: சு.இராமநாதன், விஜயபுரம், திருவாரூர். [21] சிறுகதைகள் சங்கிலிச்சாமியார் நளாயினி (1956) திராவிடப்பண்ணை, திருச்சி [22] பழக்கூடை பதினாறு கதையினிலே கண்ணடக்கம், 1957, திராவிடப்பண்ணை, திருச்சி (கண்ணடக்கம், நெருப்பு, வேணியின் காதலன், நடுத்தெரு நாராயணி, அமிர்தமதி ஆகிய கதைகள் அடங்கியது) கவிதைகள் காலப்பேழையும் கவிதைச்சாவியும் கவிதைமழை - மூன்று தொகுதிகள் முத்தாரம், இ.பதி 1957, திராவிடப்பண்ணை, திருச்சி (மு.க.சிறையிலிருந்தபொழுது 1.பிறையே, 2.ஆடிக்காற்று, 3.பச்சைக்கிளி, 4.புகழ், 5.கருப்புப்பெண், 6.அகப்பை சித்தர், 7.மலையே வாழி, 8.நாடகமேடை, 9.அவள், 10.தளிர், 11.கடலே, 12.விண்மீன், 13.ஆறு, 14.வாழிய வைகறை, 15.தமிழே என்னும் தலைப்பில் எழுதிய கவிவசனங்களின் தொகுப்பு) உரைநூல்கள் திருக்குறள் உரை இலக்கிய மறுபடைப்புகள் குறளோவியம் சங்கத் தமிழ் தாய் தொல்காப்பியப்பூங்கா தன்வரலாறு இவர் தனது வாழ்க்கைவரலாற்றை நெஞ்சுக்கு நீதி என்னும் தலைப்பில் தினமணி கதிர் (முதலாவது பகுதி), முரசொலி, குங்குமம் ஆகிய இதழ்களில் தொடர்கட்டுரையாக எழுதினார். பின்னர் அக்கட்டுரைத்தொடர் அதேபெயரில் 4165 பக்கங்களில் ஆறு பாகங்களைக் கொண்ட நூலாக வெளிவந்துள்ளது. [23] சொற்பொழிவுகள் தலைமையுரை, பாரிநிலையம், சென்னை. [24] ‎மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று பெரியார் பிறவாதிருந்தால் கட்டுரைகள் அகிம்சாமூர்த்திகள், 1953, பாரிநிலையம், சென்னை. அல்லிதர்பார், 1953, பாரி நிலையம், சென்னை. ஆறுமாதக் கடுங்காவல், திராவிடப்பண்ணை, திருச்சி. இளைய சமுதாயம் எழுகவே இனமுழக்கம் உணர்ச்சிமாலை கருணாநிதியின் வர்ணனைகள், 1952, கருணாநிதி பதிப்பகம், சென்னை [25] சுழல்விளக்கு, 1952, கருணாநிதி பதிப்பகம், சென்னை [26] மலரும் நினைவுகள் முத்துக்குவியல் பூந்தோட்டம், திராவிடப்பண்ணை, திருச்சி. பெருமூச்சு பொன்னாரம் (கே. ஆர். நாராயணன் வெளியீடு) திராவிடசம்பத்து துடிக்கும் இளமை நாடும் நாடகமும், 1953, திராவிடப்பண்ணை, திருச்சி. விடுதலைக்கிளர்ச்சி, 1952, திராவிடப்பண்ணை, திருச்சி. [27] கதை, வசனம் பராசக்தி மலர், 1953 மனோகரா, மூனா கானா பதிப்பகம், சென்னை நாம், 1953, திராவிடப்பண்ணை, திருச்சி. திரும்பிப்பார், 1953, திராவிடப்பண்ணை, திருச்சி. பயணக்கட்டுரைகள் இனியவை இருபது விருதுகளும், பெற்ற சிறப்புகளும் உலகக் கலைப் படைப்பாளி என்ற விருது 2009ஆம் ஆண்டு நடந்த அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் (அ) பெப்சி மாநாட்டில் கருணாநிதிக்கு வழங்கப்பட்டது.[28] கருணாநிதி 1970 ஆம் ஆண்டு, பாரிஸில் நடந்த உலக தமிழ் மாநாட்டின் ஒரு கெளரவ உயர் பதவியாளராக இருந்தார். 1987 ஆம் ஆண்டு, மலேசியாவில் நடந்த உலக தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.   2010 ஆம் ஆண்டு,  ‘உலக தமிழ் செம்மொழி மாநாட்டின்’ அதிகாரபூர்வமான கருப்பொருள் பாடலை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார். இதன் பின்னணி இசையை ஏ. ஆர். ரகுமான் அமைத்தார். கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி![29] இறப்பு 2016-ம் ஆண்டு முதல் சுவாசக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த கருணாநிதிக்கு ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை, அதனை மாற்றுவதற்காக மருத்துவமனைக்குச் சென்று உடலை பரிசோதித்து வந்தார். அதன் பிறகு கருணாநிதி உடல்நலத்தில் வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது என்றும் சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக தனியார் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்பிறகு, 24 மணி நேரமும் மருத்துவர்கள் அடங்கிய குழு கருணாநிதியை வீட்டிலேயே கண்காணித்து வந்தனர். பின்பு கருணாநிதியின் உடலில் நலிவு அதிகமானதை அடுத்து, சூலை 27, 2018 அன்று நள்ளிரவில் இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு சூலை 29, 2018 அன்று கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவருவதாக கூறப்பட்டது. அதன் பின்பு ஆகத்து 06, 2018 அன்று இவரின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அதற்கு மறுநாள் ஆகத்து 07, 2018 அன்று சிகிச்சை பலனின்றி சென்னையில் காலமானார்.[30] கருணாநிதி பற்றி பிறர் எழுதிய நூல்கள் கருணாநிதி யார்? - மீ. சு. இளமுருகு பொற்செல்வி, 1951, காதலர்பண்ணை, நூல் வெளியீட்டகம், பெரியகுளம் [31] அயராத தொண்டன் அஞ்சுகச் செல்வன் - மீ. சு. இளமுருகு பொற்செல்வி, 1989, இன்பப்பாசறை பதிப்பகம், குளித்தளை மேற்கோள்கள் வெளி இணைப்புகள் |- |Vacantகுடியரசுத் தலைவர் ஆட்சிTitle last held byஜானகி இராமச்சந்திரன் | தமிழ்நாட்டு முதலமைச்சர் இரண்டாம் முறை 1989–1990 |Vacantகுடியரசுத் தலைவர் ஆட்சிTitle next held byஜெ. ஜெயலலிதா |- |Precededby ஜெ. ஜெயலலிதா | தமிழ்நாட்டு முதலமைச்சர் மூன்றாம் முறை 1996–2001 | Succeededby ஜெ. ஜெயலலிதா |- | தமிழ்நாட்டு முதலமைச்சர் நான்காம் முறை 2006–2011 |} பகுப்பு:தமிழ்நாட்டு முதலமைச்சர்கள் பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள் பகுப்பு:திராவிட இயக்க எழுத்தாளர்கள் பகுப்பு:தமிழ் இறைமறுப்பாளர்கள் பகுப்பு:1924 பிறப்புகள் பகுப்பு:2018 இறப்புகள் பகுப்பு:இராசராசன் விருது பெற்றவர்கள் பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்ட நபர்கள் பகுப்பு:தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள் பகுப்பு:இந்திய இறைமறுப்பாளர்கள் பகுப்பு:கருணாநிதி குடும்பம் பகுப்பு:15 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பகுப்பு:14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பகுப்பு:13 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பகுப்பு:12 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள் பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு:திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள் பகுப்பு:திருக்குறள் உரையாசிரியர்கள் பகுப்பு:திருவாரூர் மாவட்ட நபர்கள்
திமுக அரசியல் கட்சித் தலைவர் கருணாநிதி எப்போது பிறந்தார்?
1924 சூன் 3
731
tamil
b861d93af
தமிழ்நாடு (Tamil Nadu) என்து இந்தியாவின் 29 மாநிலங்களில் ஒன்றாகும். தமிழ்நாடு, தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. இதன் தலைநகராகச் சென்னை உள்ளது. தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன. புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு மாநிலம் எல்லைகளைக் கொண்டுள்ளது. புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை வீச்செல்லை, ஆனை மலை வீச்செல்லை, பாலக்காடு கணவாய் ஆகியவையும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவையும் தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன. தமிழகம் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் சென்னை மாகாணம் என்றும் அழைக்கப்பெற்றது. இதனைத் தமிழ்நாடு என்று மாற்றக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன. சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார்[11]. பின்னர் மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது. தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் பரப்பளவில் 11வதாகவும் மக்கள்தொகையில் ஏழாவதாகவும் விளங்குகிறது. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பங்களிப்பதில் நான்காவதாகவும் (2010இல்)[12] உள்ளது. 2006ஆம் ஆண்டில் மனித வளர்ச்சிச் சுட்டெண்ணில் பத்தாமிடத்தில் (ஒன்றிய ஆட்சிப்பகுதிகளையும் சேர்த்தால் பதினாறாவது இடத்தில்) இருந்தது.[13] மேலும் இந்தியாவிலேயே அதிக நகர்ப்புறமாக்கப்பட்ட மாநிலமாகத் திகழ்கிறது.[14] இந்தியாவின் 6% மக்கள்தொகையே கொண்டிருந்தும் மிகக் கூடுதலான வணிக நிறுவனங்கள் கொண்ட மாநிலமாகவும் (10,56%) மொத்த வேலை வாய்ப்புகள் கொண்ட மாநிலங்களுள் இரண்டாவதாகவும் (9,97%) விளங்குகிறது[15]. கி.மு. 500க்கும் முன்பிருந்தே இப்பகுதியில் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 20000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமை வாய்ந்த தமிழ் மொழி கல்வெட்டுக்களும் இலக்கியமும் காணக் கிடைக்கின்றன.[16]தொன்கதை பாரம்பரியத்தின் படி தமிழ் மொழியானது சிவ பெருமானால் அகத்தியருக்கு கற்பிக்கப்பட்டதாக நம்பப் படுகின்றது[17][18][19][20][21][22][23][24]. தமிழ்நாட்டில் பல இயற்கை வளங்கள், தமிழர் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன; எட்டு உலக பாரம்பரியக் களங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.[25][26] புவியமைப்பு தமிழ்நாடு இந்திய தீபகற்பத்தின் தென் கோடியில் அமைந்துள்ளது. வடக்கில் கருநாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களும், மேற்கில் கேரளாவும் உள்ளன. யூனியன் பிரதேசமாகிய புதுச்சேரி (முன்பு பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டது) தமிழ் நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்துக்குத் தென்கிழக்கில் இலங்கைத் தீவு உள்ளது. நாட்டின் ஏனைய பல பகுதிகளைப் போலன்றி, தமிழ்நாடு, அக்டோபர் – திசம்பர் மாதங்களில் "வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று" மூலமே மழை பெறுகிறது. இக்கால கட்டத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகும் புயற்சின்னங்களின் மூலம் பெய்யும் மழையை உழவர்கள் பெரிதும் நம்பியுள்ளனர். இம்மாநிலத்தின் முதன்மையான ஆறான காவிரி ஆறு வடக்கே கர்நாடக மாநிலத்தில் குடகு மலையில் உருவாகித் தமிழ்நாட்டில் பாய்கிறது. வைகை, தாமிரபரணி, பாலாறு ஆகியவை பிற முதன்மையான ஆறுகளாகும். மதராஸ் என்று 1996 வரை அழைக்கப்பட்டு வந்த சென்னையே தமிழ்நாடு மாநிலத்தின் மிகப் பெரிய நகரமும் அதன் தலைநகரமுமாகும். பதின்மூன்று கிலோமீட்டர் நீளமுடையதும், உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையுமான, மெரீனா கடற்கரை சென்னையில் உள்ளது. மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், திண்டுக்கல், திருநெல்வேலி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தூத்துக்குடி மற்றும் வேலூர் தமிழ் நாட்டின் ஏனைய பெரிய நகரங்களாகும். வரலாறு தமிழ்நாடு பண்டைக் காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் ஆளப்பெற்றது. மேலும், இம்மாநிலம் பல கோயில்களையும், சிற்பங்களையும் பெற்ற கலை அம்சம் கொண்ட பகுதியாக விளங்குகிறது. தமிழகத்தின் எல்லைகளைத் தொல்காப்பியப் பாடல் வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம் என்று வரையறுக்கிறது (தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம், 1-3). தொன்றுதொட்டே தமிழ் மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு தமிழகம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அதற்குச் சான்றாகக் கீழ்வரும் இலக்கியக் குறிப்புகளைக் காட்டலாம்: வையக வரைப்பில் தமிழகம் கேட்ப (புறநானூறு, 168:18) இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்க (பதிற்றுப்பத்து, இரண்டாம் பத்து, பதிகம்: 5) இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய (சிலப்பதிகாரம், அரங்கேற்றுகாதை: 38) சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் (மணிமேகலை, 17: 62) தமிழ்நாடு, ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழுகின்ற தமிழ் இன மக்களின் தோற்றம் தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்திருந்த தமிழர்கள், சிந்து வெளி நாகரீகத்துக்கு உரியவர்களுள் ஒரு பிரிவினராக இருந்தனர் என்று கருதுகிறார்கள். இவ்வினத்தவருடைய தெற்கு நோக்கிய பெயர்வு, ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கையுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. இக்கொள்கைப்படி, வடக்கிலிருந்து வந்த ஆரிய ஆக்கிரமிப்பு தமிழர்களை இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகியவை அடங்கிய தென்னிந்தியாவுக்குள் ஒடுக்கியதாகக் கருதப்படுகின்றது. வரலாற்று உண்மைகள் எவ்வாறு இருப்பினும், தற்காலத் தமிழ் மக்களுடைய அடையாளம் மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது எனலாம். இன்றைய தமிழ்நாட்டையும் உள்ளடக்கிப் பரந்திருந்த பண்டைய தமிழர் நாடு, பல்வேறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. இவற்றைக் காலத்துக்குக் காலம் பல அரச வம்சங்கள் ஆண்டுவந்தன. இவற்றுள் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கவர்கள்,வேளிர்கள் பாண்டியர், சேரர், சோழர், பல்லவர், சாளுக்கியர், விஜய நகரத்தார், நாயக்கர் என்போராவர். மேலே குறிப்பிடப்பட்ட மதுரை தற்கால மதுரைக்குத் தெற்கே அமைந்திருந்து பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் முற்றாக அழிந்து போனதாகப் பழந் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியக்கிடைக்கின்றது. பாண்டிய நாடு கல்வியிலும், வணிகத்திலும் சிறந்து விளங்கியது. தமிழகத்தின் மக்கள் அக்காலத்தின் பேரரசுகளாகிய கிரேக்க, ரோமப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவ்வப்போது பல்லவர்களாலும், சோழர்களாலும் அடக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் ஆற்றல் மிக்க அரச பரம்பரைகளில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர். கிபி 1 தொடக்கம் 4 ஆம் நூற்றாண்டுவரை சங்ககால மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர் கிபி முதலாம் நூற்றாண்டு தொடங்கி நான்காம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள் சேரர்களில் செங்குட்டுவன் மன்னனும், சோழர்களில் கரிகால் சோழன் மன்னனும், பாண்டியர்களில் நெடுஞ்செழியன் மன்னனும் பெயர் பெற்ற ஆட்சியாளர்களாகத் திகழ்ந்து, மிகவும் புகழ்பெற்று விளங்கினர். சேரர்கள் தற்கால கேரள மற்றும் கொங்கு மாவட்டங்களிலும், சோழர்கள் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளிலும், பாண்டியர்கள் மதுரை, நெல்லை மற்றும் தென் கேரள மாவட்டங்களிலும் செல்வாக்கு செலுத்தினர். இவர்கள் கூட்டணியால் தமிழகம் வடதிசை மவுரிய குப்தா பேரரசுகளின் ஆளுகையினை எதிர்த்து தனியரசுகளாக விளங்கின இவர்களின் போர் நடவடிக்கைகளில் சிறந்து விளங்கியதாக நம்பப்படுகிறது. கிபி 4 தொடக்கம் 9 ஆம் நூற்றாண்டுவரை கி.பி. நான்காம் நூற்றாண்டு முற்பகுதியில் களப்பிரர் என்னும் குலம் தெரியாத அரசர்கள் தமிழகத்தை ஆண்டனர். அவர்கள் மூவேந்தர்களையும் அடக்கி ஆண்டதால் அவர்களின் வரலாறு தெரியாமல் போயினும், பல்லவர் என்னும் அக்கால புதிய அரசர்கள் சுயாட்சி செலுத்தியதால் அவர்களைப் பற்றி மட்டும் குறிப்பிடத் தக்க ஆவணங்கள் கிடைத்துள்ளன. இக்களப்பிர அரசர்கள் கிபி 4 தொடக்கம் 6 ஆம் நூற்றாண்டுவரை ஆண்ட காலத்தைத் தமிழகத்தின் இருண்ட காலம் என்று வரலாற்றாளர்கள் கூறுவதுண்டு. கி.பி. நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சிறந்த கோவில்களை அமைத்த பல்லவர்கள் முன்னணிக்கு வந்தனர். இவர்கள் தென்னிந்தியாவில் 400 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். காஞ்சிபுரத்தைத் தலை நகரமாகக் கொண்டு தமிழ் நாட்டின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் சோழரைத் தோற்கடித்தனர். இவர்கள் செல்வாக்கு இலங்கை வரை பரவியிருந்ததாகக் கருதப்படுகிறது. முதலாம் மகேந்திரவர்மனும், அவனுடைய மகனான நரசிம்மவர்மனும் பல்லவர்களுள் சிறந்து விளங்கிய அரசர்களாவர். பல்லவர் கட்டிடக்கலை பல்லவர் காலத்திலேயே வளர்ச்சியடைந்து உருப்பெற்றது. இறுதிப் பல்லவ மன்னன் அபராசிதன் ஆவான். இவன் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டதுடன் பல்லவராட்சி தமிழ் நாட்டில் முடிவுக்கு வந்தது. இக்காலக்கட்டத்தில் (கிபி 300 – கிபி 600) பெளத்தம் தமிழகத்தில் மிகவும் செல்வாக்கோடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.[27] 9 தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டுவரை கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இராசராச சோழன் மற்றும் அவனது மகனான இராசேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் சோழர், தென்னிந்தியாவில் ஆற்றல் மிக்கவர்களாக உருவெடுத்தனர். இவர்களுடைய பேரரசு, மைய இந்தியா, ஒரிசா, மற்றும் வங்காளத்தின் சில பகுதிகள்வரைகூடப் பரவியிருந்தது. இராசராச சோழன் கிழக்கிலிருந்த சாளுக்கிய அரசர்கள் மற்றும் சேர மன்னர்களை வீழ்த்தினான். அத்துடன் பாண்டிய அரசிடமிருந்து இலங்கையின் சில பகுதிகளையும் கைப்பற்றினான். இராசேந்திர சோழன் மேலும் முன்னேறி அந்தமான் நிக்கோபார் தீவுகள், இலட்சத்தீவுகள், சுமத்ரா, சாவா, மலேயா மற்றும் பெகு தீவுகளையும் தன் கப்பற்படையைக் கொண்டு கைப்பற்றினான். அத்துடன் தற்போதைய பீகார் மற்றும் வங்காளப் பகுதிகளை ஆண்டு வந்த மகிபாலனையும் வீழ்த்தினான். தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் தலைநகரை உருவாக்கினான். பதின்மூன்றாம் நூற்றாண்டுவாக்கில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது. 14ஆம் நூற்றாண்டு 14ஆம் நூற்றாண்டில் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர். ஆயினும் அந்த எழுச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1316 இல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்சி ஆட்சியாளர்கள், மதுரையை முற்றுகையிட்டு சூறையாடினர். இசுலாமியர்களின் படையெடுப்பு சோழர்களையும் பாண்டியர்களையும் ஆற்றலற்றவர்களாக்கி இசுலாமிய "பாமினி" ஆட்சிக்கு வித்திட்டது. இசுலாமியப் படையெடுப்புக்கு பதிலடி தரும் வண்ணம் பல்வேறு சிற்றரசுகள் சேர்ந்து விசயநகர பேரரசைத் தோற்றுவித்தன. இப்பேரரசின் பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வையிட நாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள் நியமிக்கப் பட்டனர். அம்பியை தலை நகராகக் கொண்டிருந்த விசய நகரப் பேரரசு செல்வச் செழிப்போடும் அமைதியுடனும் திகழ்ந்தது. ஆனால், 1564 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த தலிகோட்டா போரில் தக்காணப் பீடபூமியைச் சேர்ந்த சுல்தான்களால் விசயநகர ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் ஆட்சிக்கடங்கிய பகுதிகள் யாவும் நாயக்கர்களிடையே பிரித்தளிக்கப்பட்டன. நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு அரசியல் அமைப்புகள் மாற்றி அமைக்க பட்டன பாளையங்கள் உருவாக்கப்பட்டு கிராம சுய ஆட்சி முறை ஒழிக்க பட்டது. தஞ்சை மற்றும் மதுரையைச் சேர்ந்த நாயக்கர்கள் புகழ் பெற்று விளங்கியதோடு பழங்கால கோயில்களைப் புதுப்பிக்கவும் செய்தனர். இன்றைய கேரளாவும் மலபாரை ஒட்டிய பகுதிகளும் சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி ரோமானியர்களுடனான வாணிபத்திற்கு ஏதுவாக இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பு நிகழும் வரை சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய நிலப்பகுதி பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது. 17 ஆம் நூற்றாண்டு 1639 இல்ஆ ங்கிலேயர்கள் மதராசில் (தற்பொழுது சென்னை என்று அழைக்கப்படுகிறது) கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவியபிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய பகுதி தொடங்கியது. தமிழ் நாட்டு சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பிரித்தாண்டு, அவர்களின் மேல் தங்கள் அதிகாரத்தைச் செலுத்தத் தொடங்கினர். தமிழ்நாடும் அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவும் மெல்ல மெல்ல ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் அதிகாரத்தைத் தம் வசப்படுத்திய இந்தக் காலக்கட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்களும் கணிசமானோர் இருந்தனர். வீரபாண்டிய கட்டபொம்மன்,அனந்த பத்மநாப நாடார், பூலித்தேவன், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வாண்டாயத் தேவன், அழகு முத்துக்கோன், வீரன் சுந்தரலிங்கம், ஒண்டி வீரன், பெரிய காலாடி, தீரன் சின்னமலை, போன்ற ஆட்சியாளர்கள் வெள்ளையரை எதிர்த்துப் போரிட படைகளைத் தலைமையேற்று நடத்தினர். 20 ஆம் நூற்றாண்டு 1947இல் இந்தியா விடுதலை அடைந்தபோது, மதராசு மாகாணம் (படம்) (The Madras Province) மதராசு மாநிலம் ஆனது. ஆனால் 1948ஆம் ஆண்டுவரை புதுக்கோட்டை சமஸ்தானம் தொண்டைமான் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. இதுவே இந்தியாவோடு சேர்ந்த கடைசி சில சமஸ்தானங்களுள் ஒன்றாகும். தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை மதராசு மாநிலத்தின் கீழ் வந்தன. 1953இல் மதராசு மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்களுள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும் தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராசு மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டது. 1956இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் மதராசு மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டது. 1969இல், மதராசு மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ‎திருவாங்கூர்-கொச்சி மாநிலத்தின் தென்பகுதியில் தமிழ் பேசும் மக்கள் வாழிடம் கன்னியாகுமரி மாவட்டமாக உருவாக்கப்பட்டு, நவம்பர் 1, 1956இல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. பாரம்பரியம் தமிழ்நாடு, இன்றும் செழிப்புடன் விளங்கும், வளமான இலக்கிய, இசை, நடனப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. இது இந்தியாவின் அதிக அளவு கைத்தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்று. சுப்பிரமணிய பாரதி,, வ. உ. சிதம்பரம்பிள்ளை, சி. வி. இராமன், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ,பெருந்தலைவர் காமராசர், சுப்பிரமணியன் சந்திரசேகர், ஆர். கே. நாராயண், ஆர். வெங்கட்ராமன், சி. என். அண்ணாதுரை, சீனிவாச ராமானுசன், அப்துல் கலாம், பாரதிதாசன், அயோத்தி தாசர், திரு.வி.க., கண்ணதாசன், என்.எஸ்.கிருட்டிணன்,ஈ.வே.ரா பெரியார் ஆகியோர் மாநிலத்தின் நன்கு அறியப்பட்டவர்களில் சிலராவர். இவர்களோடு, இளங்கோவடிகள், கண்ணகி, திருவள்ளுவர், தொல்காப்பியர், ஔவையார், கம்பர், கரிகால்சோழன், இராசராச சோழன், போன்ற முற்காலத்தவரும் இன்றும் நினைவில் இருப்பவர்களாகும். அரசியல் தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234. நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39. 1986 வரை தமிழ் நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர். தமிழ் நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகளாகத் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை விளங்குகின்றன. (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), இந்திய தேசிய காங்கிரசு, இந்தியக் குடியரசுக் கட்சி, அகில இந்திய பார்வார்ட்டு பிளாக், இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், பாரதிய ஜனதா கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், முஸ்லீம் லீக்,அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன. பெரியார் 1916இல் தோற்றுவித்த திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து, 1949 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை சி. என். அண்ணாதுரை தோற்றுவித்தார். 1947 இல் இந்திய விடுதலைக்குப் பிறகு 1967 வரை தமிழ்நாட்டை இந்திய தேசிய காங்கிரசு ஆண்டது. 1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. 1972 இல் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ம. கோ. இராமச்சந்திரன் தோற்றுவித்தார். 1977இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலில் ஆட்சியைப் பிடித்தது. 1967 முதல் 2016 இல் கடைசியாக நடந்த சட்டமன்றத் தேர்தல்வரை தி.மு.க. அல்லது அ.இ.அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்று அல்லது அக்கட்சிகள் தலைமை வகிக்கும் கூட்டணிகள் பெரும்பான்மை தொகுதிகளை வென்று வருகின்றன. தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தல்களில் பல கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதுண்டு என்றாலும், இதுவரை தனிக்கட்சி ஆட்சியே நடைபெறுகிறது. முதன் முறையாகத் தி.மு.க. ஒரு அறுதிப் பெரும்பான்மையற்ற சிறுபான்மை அரசாகச் (2006–2011) செயல்பட்டது. இருப்பினும், தமிழக கட்சிகள் நடுவண் அரசில் செல்வாக்கோடு விளங்கிக் கூட்டணி ஆட்சி அமைக்க உதவவும், பங்கேற்கவும் செய்கின்றன. மாவட்டங்கள் தமிழ் நாட்டில் தற்போது 33 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன. இவற்றுள் விதிவிலக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில், நீலமலை மாவட்டத்தின் தலைநகர் உதகமண்டலம் என்றுள்ளன. தற்போதுள்ள மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாகப் பெயர்மாற்றம் பெற்றுவந்துள்ளன. ஒரு சில காலகட்டங்களில் மாவட்டங்களின் பெயருடன் காலம் சென்ற தமிழக தலைவர்கள் பெயரும் இணைத்துப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தன. தற்போது அப்பெயர்கள் நீக்கப்பட்டு, மாவட்டங்களின் பெயர்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன. இந்த 33 மாவட்டங்களில் 288 வருவாய் வட்டங்கள் உள்ளது. அரியலூர் மாவட்டம் இராமநாதபுரம் மாவட்டம் ஈரோடு மாவட்டம் கடலூர் மாவட்டம் கரூர் மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் கிருட்டிணகிரி மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் சிவகங்கை மாவட்டம் சென்னை மாவட்டம் சேலம் மாவட்டம் தஞ்சாவூர் மாவட்டம் தருமபுரி மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம் திருப்பூர் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளூர் மாவட்டம் திருவாரூர் மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் தேனி மாவட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் நாமக்கல் மாவட்டம் நீலமலை மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம் பெரம்பலூர் மாவட்டம் மதுரை மாவட்டம் விருதுநகர் மாவட்டம் விழுப்புரம் மாவட்டம் வேலூர் மாவட்டம் நகரங்கள் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் முதல் 15 பெரிய நகரங்கள்:[28] சென்னை கோயம்புத்தூர் மதுரை திருச்சி சேலம் திருப்பூர் ஈரோடு திருநெல்வேலி வேலூர் தூத்துக்குடி திருவண்ணாமலை திண்டுக்கல் தஞ்சாவூர் நாகர்கோவில் கடலூர் உள்ளாட்சி அமைப்புகள் தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளும், 125 நகராட்சி மன்றங்களும், 529 பேரூராட்சிகளும், 385 ஊராட்சி ஒன்றியங்களும் மற்றும் 12,524 ஊராட்சி மன்றங்களும் உள்ளது. மக்கள் வகைப்பாடு தமிழ்நாடு இந்தியாவின் ஏழாவது மக்கட்தொகை மிகுந்த மாநிலமாகும். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 72.147.030 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 36.137.975 மற்றும் பெண்கள் 36.009.055 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,423,832 ஆக உள்ளது. அதில் சிறுவர்கள் 3.820.276 ஆகவும்: சிறுமிகள் 3.603.556 ஆகவும் உள்ளனர். மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.61% ஆக உள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 996 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 555 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் படிப்பறிவு 51,837,507 (80.09 %) ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 28.040.491 (86,77 %) ஆகவும், பெண்களின் படிப்பறிவு 23.797.016 (73,44 %) ஆகவும் உள்ளது. நகரப்புறங்களில் 48,40% மக்களும், கிராமப்புறங்களில் 51,60 % மக்களும் வாழ்கின்றனர்.[29] சமயம் தமிழகத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 63.188.168 (87,58 %) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 4,229,479 (5,86 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 4.418.331 (6,12 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள்தொகை 14.601 (0,02 %) ஆகவும், சமண சமய மக்கள்தொகை 89.265 (0,12 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 11.186 (0,02 %) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 7.414 (0,01 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 188.586 (0,26 %) ஆகவும் உள்ளது. மொழிகள் 89 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். தெலுங்கு (5,65%), கன்னடம் (1,68%), உருது (1,51%), மலையாளம் (0,89%) ஆகிய மொழிகளும் பேசப்படுகின்றன. பழங்குடிகள் தமிழகத்தின் மக்கள்தொகையில் 3.5% மக்கள் பழங்குடிகள் (2001 கணக்கெடுப்பு). மாநிலத்தில் 40-க்கும் மேற்பட்ட பழங்குடிகள் உள்ளனர். நீலமலை, ஆனைமலை, கொல்லிமலை ஆகிய பகுதிகளில் குறிப்பிடத் தக்க எண்ணிக்கையில் தோடர், காடர், குறும்பர், காணிக்காரர், மலமலசர், பணியர், பழியர் முதலிய பழங்குடி இன மக்கள் வாழ்கின்றனர். பொருளாதாரம் தமிழ்நாடு, நல்ல தொழில் வளர்ச்சி கண்டுள்ள ஒருசில இந்திய மாநிலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. தமிழக மக்கள் தொகையில் குறிப்பிடத் தகுந்த பகுதியினர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் பொறியியல், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்கள், நெசவாலைகளுக்கும், ஆடை ஏற்றுமதி, விவசாய உபகரணங்கள், மோட்டார், கிரைண்டர் உற்பத்திக்கும், ஈரோடு மஞ்சள் சாகுபடி மற்றும் ஆடை ஏற்றுமதிக்கும், கரூர் இல்ல உப-சவுளி ஏற்றுமதி மற்றும் கனரக வாகன கூடு கட்டும் தொழில்களுக்கும், திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கும், சேலம் இரும்பு உருக்கு, அலுமினியம், ஆலைகளுக்காகவும், சவ்வரிசி, மாம்பழ, பட்டு சேலை, பருத்தி உற்பத்திக்கும் , கனரக தொழிற்சாலைகளுக்கும் ,மின்சார உற்பத்திக்காகவும், கனரக வாகனங்கள் கட்டுமானத்திலும், நிலக்கடலை, கரும்பு, தக்காளி போன்ற பயிர் உற்பத்திக்கும், நாமக்கல் கோழிப் பண்ணைகளுக்கும், சிவகாசி அச்சுத்தொழில், பட்டாசு உற்பத்திக்கும், காவிரி பாசன பகுதியில் அமைந்துள்ள திருச்சி, தஞ்சாவூர் போன்ற பகுதிகளும் கன்னியாகுமரி மாவட்ட நாஞ்சில் நாட்டுப் பகுதியும் விவசாயத்திற்கும், வேலூர் தோல் தொழிலுக்கும், சென்னை வாகன உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களுக்கும் பெயர் பெற்றுள்ளன. பாலிவுட் என அழைக்கப்படும் மும்பை திரைப்படத் துறைக்கு அடுத்ததாக, தமிழகத் திரைப்படத்துறை இந்தியாவின் இரண்டாவது பெரிய திரைப்படத் தொழில் மையமாகக் கோலிவுட் என்னும் பெயரோடு (கோடம்பாக்கம் + ஹாலிவுட் என்பதன் பெயர்த் தழுவல்) திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும், பெருமளவில் தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. தற்போதைய விலையில், 2011–2012 ஆண்டு கணக்கின்படி, தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி – 132.4 பில்லியன் அமெரிக்க டாலர் [30]. இந்தியாவில் தொழிற்சாலைகள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் - 26122 [31] மொத்த தொழில்துறை உற்பத்தியில் நாட்டில் முதலிடம். வெளிநாட்டு நேரடி முதலீட்டில் இந்தியாவில் முதல் மூன்று மாநிலங்களில் ஒன்று. இந்தியாவில் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில், தமிழ்நாட்டின் பங்கு 35 % சென்னையின் தானுந்துத் தயாரிப்பு திறன்: தானுந்து 13,80,000, வர்த்தக வாகனங்கள்: 3,61,000, ஸ்யுவி: 1,50,000 தானுந்துத் தொழிற்சாலைகள்: யுன்டாய், போர்டு, நிசான், அசோக் லேய்லான்ட் சென்னையில் உள்ள டயர் தயாரிப்பு நிறுவனங்கள்: எம்.ஆர்.எஃப், அப்பல்லோ டயர்ஸ், மிஷ்ஷலின், ஜெ.கெ டயர்ஸ் இலத்திரனியல் தொழிற்துறை: நோக்கியா, பாக்ஸ்கான், பிளக்ஸ்டிராநிக்ஸ், டெல், பிஒய்டி, வீடியொக்கான், சாம்சங், மோட்டரோலா இந்தியாவில் கறி-கோழி வளர்ப்பில், தமிழ்நாடு இரண்டாவது பெரியது [32]. இந்தியாவில் பால் உற்பத்தியில், தமிழ்நாடு இரண்டாவது பெரியது [33]. மின்சாரம்: 18083 மெகா வாட்(இரண்டாவது பெரியது) சிறப்பு பொருளாதார மண்டலம்: 92, தொழிற் பூங்கா: 19 [34] அதிக சாலை அடர்த்தி (மூன்றாவது பெரியது). சுகாதாரம், வீடமைப்பு, கல்வி ஆகிய துறைகளில் வளர்ச்சி அடைந்த மாநிலம். .ரகுராம் ராஜன் அறிக்கையின் படி தமிழ்நாடு இந்தியாவின் மூன்றாவது முன்னேறிய மாநிலம்[35]. தமிழ்நாட்டின் ஏழ்மை நிலை ரகுராம் ராஜன் அறிக்கையின் படி[2013ஆம் ஆண்டு], தமிழ்நாட்டின் ஏழ்மைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் விகிதம் 11.28 விழுக்காடு. இது மற்ற இந்திய மாநிலங்களை ஒப்பிடுகயில், தமிழ்நாட்டின் ஏழ்மை விகிதம் குறைவு [36]. 2004/2005ஆம் ஆண்டுகள் எடுத்த கணக்கெடுப்பு பணியின்போது 29.4 சதவீதத்தினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்தனர்.[37] ஆனால் இது 1999/00 கணிப்பீட்டின் படி 12-17 மில்லியன் மக்கள் அல்லது 21 விழுக்காடு மட்டுமே இருந்தது.[38] கல்வி அறிவு மற்றும் சமூக வளர்ச்சி சமூக முன்னேற்றத்தின் குறியீடுகளான (மனித வளர்ச்சிச் சுட்டெண்) பரவலான கல்வியறிவு, ஆண் - பெண் சமத்துவம், மேம்பட்ட பொது சுகாதாரம், நீண்ட சராசரி மனித ஆயுள், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, வேலை வாய்ப்புகள், தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியாவின் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாகத் தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாட்டு மக்களின் கல்வியறிவு இந்தியாவின் சராசரியைவிட அதிகம். இங்கு 2001–2011 காலக் கட்டத்தில் 74,04%ல் இருந்து 80,33% என்று கல்வியறிவு அதிகரித்தது. இன்று தமிழ்நாட்டில் 86,81% ஆண்களும் 73,86% பெண்களும் கல்வியறிவுடையவர் ஆவர். தமிழ்நாட்டில் 37 பல்கலைக்கழகங்கள், 454 பொறியியல் கல்லூரிகள், 1.150 கலைக் கல்லூரிகள், 2550 பள்ளிக்கூடங்கள் மற்றும் சுமார் 5.000 மருத்துவமனைகள் உள்ளன. இங்கு இரண்டு நடுவண் அரசு கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவை சென்னையில் அமைந்த இந்திய தொழில்நுட்பக் கழகம்,பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சியில் அமைந்த தேசிய தொழில்நுட்ப கழகம் ஆகும். மேலும் புகழ் மிக்க சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம்,அண்ணாமலை பல்கலைக்கழகம்,சேலம் சோனா பொறியியல் கல்லூரி்,பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம், வேலூர் கிருத்துவ மருத்துவ கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர்,பச்சையப்பன் கல்லூரி ,சென்னை, இலயோலாக் கல்லூரி ஆகியனவும் உள்ளன. தமிழகத்தில் வருடந்தோறும் 130.000 பேர் பொறியியல் படிப்பு முடித்துத் தேர்ச்சி பெறுகின்றனர். இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது. 525 பொறியியல் கல்லூரிகள்– 226034 பொறியியல் பட்டதாரிகள் (2012). 447 பலதொழில்நுட்பப் பயிலகம் – 171637 தொழில்நுட்பர்கள் (2012). 1622 தொழில் பயிற்சி நிறுவனம் – 173746 (2012). மருத்துவ கல்லூரி – 28 (ஆண்டு – 2012)[39]. பண்பாடு தமிழர் பண்பாடு நீண்ட கால வரலாறு கொண்டது. இலக்கியம், இசை, நாடகம் என்பன சார்ந்த பல்வேறு கலை வடிவங்கள் தமிழ் நாட்டில் சிறப்பான நிலையில் உள்ளன. பரத நாட்டியம், கர்நாடக இசை, திராவிடக் கட்டிடக்கலை போன்ற புகழ் பெற்ற உயர் கலை வடிவங்கள் பெரும்பாலும் தமிழகத்தில் வளர்ச்சியடைந்து சிறப்பெய்தியவை. மொழியும் இலக்கியமும் தமிழ் நாட்டின் ஆட்சி மொழி தமிழ் ஆகும். ஆங்கிலமும் அலுவல் மொழியாகப் பயன்படுகிறது. இந்தியா செம்மொழியாக அங்கீகரித்துள்ள மொழிகளில் தமிழ் முதலிடத்தில் உள்ளது. தமிழரின் பண்பாட்டில் தமிழ் மொழி மிக இன்றியமையாத இடத்தை வகிக்கிறது. சங்க இலக்கியங்கள் எனப்படும் தமிழின் மிகப் பழமையான இலக்கியங்கள் யாவும் செய்யுள் வடிவில் இயற்றப்பட்டவையாகும். தொன்மைக் காலம் முதலே இலக்கியம் மட்டுமல்லாமல் மக்களின் வாழ்க்கைக்கும் இலக்கணம் கண்ட மொழி தமிழ் மொழியாகும். திருக்குறள் என்ற அறநூல் தமிழின் மிகச் சிறந்த நீதிநூல் ஆகும். இது உலகின் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தன்னை இன்னாரென அடையாளம் காட்டாத ஒரு சிறந்த தமிழ்ப் புலவரால் இயற்றப்பட்டது இந்நூலாகும். நாடு, மொழி, இனம் கடந்து உலக மக்கள் யாவருக்கும் பொதுவான நீதியைக் கூறுவதால் திருக்குறள் உலகப் பொதுமறையெனப் போற்றப்படுகிறது. கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை (திருக்குறள் 400) தமிழின் இலக்கியங்களிலிருந்து அக்கால தமிழ் மக்களின் தலைசிறந்த பண்பாடு, வாழ்க்கை முறை போன்ற கூறுகளை நாம் அறியமுடிகிறது. இந்தியாவின் முதல் நூல்கள் தமிழிலேயே அச்சாயின. தமிழகத்தின் முதல் அச்சுக்கூடம் புன்னைக்காயலில் 1578இல் போர்த்துகீசியரால் நிறுவப்பட்டது.[40] பின்னர் தரங்கம்பாடி அச்சுக்கூடத்திலும் சென்னையிலும் ஏராளமான தமிழ் இலக்கியங்கள் அச்சுவடிவம் பெற்றன. இந்திய விடுதலைப் போரில் மக்களின் விடுதலை உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கு தமிழ் கவிஞர்களான பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் கவிதைகள் உதவியாய் இருந்தன. தற்காலத்தில் வாலி, வைரமுத்து, தாமரை போன்ற தமிழ்க் கவிஞர்கள் கவிதை படைக்கின்றனர். தமிழ் எழுத்தாளர்களால் புதினங்கள், சிறுகதைகள், பெருங்கதைகள் எனத் தமிழ் நூல்கள் வெளிவருகின்றன. போக்குவரத்து தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து மூலம் சிறு கிராமங்களை இணைப்பதால் போக்குவரத்து வளர்ச்சி அடைந்துள்ளது.இரயில் போக்குவரத்து மூலம் பெரும்பான்மையான நகரங்களையும், விமான போக்குவரத்து மூலம் முக்கிய நகரங்களையும் இணைக்கின்றன. விழாக்கள் பொங்கல் திருநாள் (தமிழர் திருநாள் அல்லது உழவர் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது), தமிழர்கள் கொண்டாடும் முதன்மையான திருநாள் ஆகும். தமிழ் மாதமான தை முதல் நாள் (சனவரி 14 அல்லது 15)-ல் இத்திருநாள் கொண்டாடப்படுகிறது. நோன்புப் பெருநாள், பக்ரீத், முகரம் இசுலாமியப் புத்தாண்டு பொங்கல் தவிர தீபாவளி, தைப்பூசம், வினாயகர் சதுர்த்தி, சரசுவதி (கல்விக் கடவுள்) பூசை, ஆயுத பூசை , கிறிஸ்துமஸ், புனித வெள்ளி போன்ற சமயம் சார்ந்த திருநாட்களும் கோடைக்கொண்டாட்டமாம் தமிழ் புத்தாண்டு திருநாளும் (சித்திரை மாதம் முதல் நாள் - ஏப்ரல் 13 அல்லது 14 ) மற்றும் ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் நடைபெறுகின்றன. சுற்றுலாத்துறை தமிழ்நாடு அழகிய நிலப் பகுதிகள், பாரம்பரியச் சின்னங்கள் நிறைந்த சுற்றுலா முதன்மைத்துவம் உள்ள மாநிலமாகும். தமிழ்நாடு, திராவிட கட்டிடக்கலை பாணியைப் பிரதிபலிக்கும் கோயில்களுக்குப் புகழ் பெற்றது. இக்கோயில்களுக்கு வியக்க வைக்கும் கோபுரங்களும் ரதங்களும் அழகு சேர்க்கின்றன.இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவிலின் மூன்றாம் பிரகாரம், உலகின் மிகப் பெரியதாகும். சோழர் கால தஞ்சை பெரிய கோவிலும் பல்லவர் கால மாமல்லபுரம் சிற்பங்களும் கோவில்களும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இராமநாதபுரம், தஞ்சை, மதுரை, சுவாமிதோப்பு காஞ்சி,சேலம்,தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்,மேச்சேரி பத்ரகாளியம்மன் மற்றும் செங்காட்டூர்(சேலம்) ஆகியவை கோயில் நகரங்களாகத் திகழ்கின்றன. கன்னியாகுமரி கடல் முனையில் அமைந்துள்ள வள்ளுவர் சிலையும் காண வேண்டிய இடமாகும். எழில் கொஞ்சும் நீலகிரி மற்றும் கோடைக்கானல் மலைப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப் பகுதிகள், கிழக்குக் கடற்கரை, ஏற்காடு, மேட்டூர், பூலாம்பட்டி போன்ற மனம் கவரும் தலங்களும் உண்டு. இவற்றையும் பார்க்கவும் தமிழ்நாட்டுப் பொருளாதாரம் தமிழ்நாடு வேளாண்மைத் தொழிற்துறை தமிழ்நாடு இலத்திரனியல் தொழிற்துறை தமிழ்நாடு தானுந்து தொழிற்துறை தமிழ்நாட்டு ஓவியக் கலை தமிழ்நாட்டு ஊர்களும் உணவுகளும் தமிழ்நாட்டு இந்துத்துவ அமைப்புகள் தமிழ்நாட்டு தொழிற்துறைகள் தமிழ்நாட்டு வேதிப்பொருள் தொழிற்துறை தமிழ்நாட்டு அறிவொளி இயக்கம் தமிழ்நாட்டு சீர்திருத்தங்கள் தமிழ்நாட்டு ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்கள் தமிழ்நாட்டு தலித் அமைப்புகள் தமிழக வரலாறு தமிழக ஏரிகள் தமிழ்நாடு துடுப்பாட்ட அணி தமிழ்நாட்டுக் காலநிலை தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் - அதிகாரப்பூர்வ இணையத்தளம் - நிலப்படங்களுக்கான அரசு இணையத்தளம் - அரசு சுற்றுலாத்துறை இணையத்தளம் * பகுப்பு:இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்
தமிழ்நாடு மாநில மக்களின் தாய் மொழி என்ன?
தமிழைத்
17,669
tamil
bdec7aa95
இந்தியாவில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி அல்லது கம்பெனி ஆட்சி (Company rule in India) or (Company Raj),[1]. 1757ஆம் ஆண்டில் நடந்த பிளாசி சண்டைக்குப்பின், வங்காள நவாப், பிரிட்டன் கிழக்கிந்திய கம்பேனி நிறுவனத்திடம் சரண் அடைந்த பின், இந்திய துணைக் கண்டத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பேனியின் ஆட்சி காலூன்றியது. [2] 1765 ஆண்டு முதல் வங்காளம், ஒரிசா மற்றும் பிகாரில் திவானி எனும் நிலவரி வசூலிக்கும் உரிமையைப் பெற்றது.[3] 1773ஆம் ஆண்டில், கிழக்கிந்திய கம்பேனியின் ஆட்சிக்குட்பட்ட நிலப்பரப்பின், தலைமை ஆளுனர், வாரன் ஹேஸ்டிங்ஸ் நேரடி நிர்வாகத்தில், கல்கத்தா நகரை தலைமையகமாகக் செயல்பட்டது. [4]கிழக்கிந்திய கம்பேனி நிறுவனம் பல பங்குதாரர்களைக் கொண்ட, லாப நோக்கத்துடன் செயல்படும், தனியார் கூட்டு வர்த்தக நிறுவனம் ஆகும். இதன் நிர்வாகக் குழு மற்றும் தலைமையகம் லண்டனில் அமைந்திருந்தது. கிழக்கிந்திய கம்பேனி தனக்கென காவல் படை, இராணுவப் படை மற்றும் நீதிமன்றங்கள் கொண்டது. கிழக்கிந்திய கம்பேனி நிர்வாகிகள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஊழல்களையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் தடுத்து நிறுத்திட, பிட்டின் இந்தியா சட்டம், பிரித்தானிய அரசு நடைமுறைப்படுத்தியது. கிழக்கிந்திய நிறுவனச் சட்டம், 1784, சிப்பாய்க் கிளர்ச்சி, 1857க்குப் பின், பிரித்தானிய அரசு கொண்டு வந்த இந்திய அரசுச் சட்டம், 1858க்கு பின்னர் முடிவடைந்தது. 1858ஆம் ஆண்டில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் கலைக்கப்பட்டு, இந்தியத் துணைக் கண்டத்தை, இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வில் தேறிய அதிகாரிகளின் நிர்வாகத்தில், பிரித்தானியப் பேரரசு தனது நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. எல்லைகளை விரிவு செய்தல் 1765 மற்றும் 1805இல் இந்தியா, பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பேனி ஆட்சிப் பகுதிகள், இளஞ்சிவப்பு நிறத்தில். 1837 மற்றும் 1857இல் இந்தியா, பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பேனி ஆட்சிப்பகுதிகள் (இளஞ்சிவப்பு நிறத்தில்) மற்றும் பிற பகுதிகள் இந்தியத் துணைக் கண்டத்தில் வணிகம் செய்து லாபம் ஈட்டும் நோக்கத்தில், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பேனி, பிரித்தானிய வணிகர்களால் லண்டனில் 1600ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தின் மசூலிப்பட்டணக் கடற்கரையில் 1611ஆம் ஆண்டிலும், சூரத்தில் 1612ஆம் ஆண்டிலும், 1640இல் விஜயநகரப் பேரரசின் அனுமதியுடன், சென்னையிலும். பின் பம்பாய் நகரிலும் வணிகக் கூடங்களை திறந்தனர். இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் 1640ஆம் ஆண்டில் கல்கத்தாவில் தொழிற்கூடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தொடங்கினர். போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனி, பிரான்சு இந்திய கம்பேனி, டச்சு இந்திய கம்பேனிகளுடான போட்டியில், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வெற்றி அடைந்தது. ராபர்ட் கிளைவ் மற்றும் ஆண்ட்ரே பஸ்தாமாண்டி ஆகிய கிழக்கிந்தியக் கம்பேனியின் படைத் தலைவர்களின் தலைமையிலான படைகள், 1757இல் நடந்த பிளாசிப் போர் மற்றும் 1764இல் நடந்த பக்சார் போர்களில் பெற்ற வெற்றியால், வங்காளம், ஒரிசா மற்றும் பிகாரில் நிலவரி வசூலிக்கும் உரிமையும், 1773இல் கீழ் கங்கைப் பகுதிகளில் பல நிலப்பரப்புகளும் அடைந்தனர். கர்நாடகப் போர்கள் (1746 – 1758), ஆங்கிலேய-மைசூர்ப் போர்கள் (1766-1799), ஆங்கிலேய-மராட்டியப் போர்கள் (1772-1818), ஆங்கிலேய-நேபாளப் போர் (1814 - 16), ஆங்கிலேய-பர்மியப் போர்கள் (1824-1826), இரண்டாம் ஆங்கிலேய-சீக்கியப் போர்கள் (1849-1856) மூலம் வட மேற்கு இந்தியாவிலும், மேற்கு இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும், வடகிழக்கு இந்தியாவிலும், கிழக்கிந்தியக் கம்பெனியினர தங்களது ஆளும் நிலப்பரப்பை விரிவுபடுத்திக் கொண்டனர்.[5][6] ஆங்கிலேய-நேபாளப் போர் (1814–16) முடிவில் ஏற்பட்ட சுகௌலி உடன்படிக்கை மூலம், நேபாள இராச்சியத்தின் கார்வால், குமாவுன், சிக்கிம், டார்ஜிலிங் மற்றும் மேற்கு தராய் சமவெளிப் பகுதிகள் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனியினர் கைக்கு வந்தது. ஆங்கிலேய-பர்மியப் போர்கள் மூலம் அசாம், மணிப்பூர், அரக்கான் பகுதிகளை, பர்மாவிடமிருந்து கைப்பற்றினர். ஆங்கிலேய-மராட்டியப் போர்கள் மூலம் குஜராத், ராஜபுதனம், மத்திய இந்தியா மற்றும் மகாராட்டிரா பகுதிகளை, மராட்டியர்களிடமிருந்து கைப்பற்றினர். ஆங்கிலேய–சீக்கியர் போர்களின் (1848 - 1849) முடிவில்[7], சீக்கியப் பேரரசிடமிருந்த பஞ்சாப் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணப் பகுதிகள் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியுடன் இணைக்கப்பட்டது. சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய நகரங்களைத் தலைநகராகக் கொண்ட நிலப்பரப்புகள் என்றும், கிழக்கிந்தியக் கம்பேனியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளான ரோகில்கண்ட், கோரக்பூர், தோவாப், தில்லி, அசாம், சிந்து, பஞ்சாப் மாகாணம், வடமேற்கு எல்லைப்புற மாகாணம் மற்றும் காஷ்மீர் பகுதிகள் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின் நேரடி நிர்வாகத்தில் இருந்தன. மேலும் ஆண்டு தோறும் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பேனிக்கு கப்பம் கட்டிக் கொண்டு, தன்னிச்சையாக ஆண்ட மன்னர்களின் நிலப்பரப்புகள் (தனக்கென தனி இராணுவப் படைகள் வைத்துக் கொள்ளாத) எண்ணற்ற சுதேச சமஸ்தானங்கள், கிழக்கிந்திய ஆட்சிப் பகுதிகள் இருந்தது. 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியத் துணை கண்டத்தின் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகள், இந்து, இசுலாமிய மற்றும் சீக்கிய சுதேச சமஸ்தான மன்னராட்சியில் இருந்தன. சென்னை மாகாணத்தில் கம்பனி ஆட்சி (1684-1858) தமிழகத்தில் முதன் முதலில் ஆங்கிலேயர் பதினாறாம் நூற்றாண்டில் கால் பதித்தனர்.[8] தற்கால சென்னை நகரத்தில், புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினர். முதலில் வர்த்தகம் மட்டும் செய்து வந்த ஆங்கில கிழக்கிந்தியக் கம்பனி, பின் மெல்ல மெல்ல உள்ளூர் அரசியல் விவகாரங்களில் தலையிடத் தொடங்கியது. 1684 ஆம் ஆண்டு தென்னாட்டில் உள்ள கம்பனி பிரதேசங்கள், சென்னை மாகாணம் என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டன. பதினெட்டாம் நூற்றாண்டில், நடைபெற்ற கர்நாடகப் போர்களால், ஆங்கிலேயர்களின் கை ஓங்கியது. ஆற்காடு நவாப் மற்றும், ஃபிரஞ்சுப் படைகளை வென்றதால், அவர்களின் ஆதிக்கத்திலிருந்த பல பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தன. ஹைதர் அலி, மற்றும் திப்பு சுல்தானை வீழ்த்தியதின் மூலம் மேற்கிலும், கட்டபொம்மன், மருது பாண்டியர் முதலிய பாளையக்காரர்களை வென்றதன் மூலம் சென்னை மாகாணத்தில் கம்பெனி ஆட்சி வலுப்பெற்றது. இராணுவம் மற்றும் குடிமைப் பணிகள் 1772ஆம் ஆண்டில் வாரன் ஹேஸ்டிங் முதல் கவர்னர் ஜெனரலாக, கொல்கத்தாவில் பதவியேற்றவுடன், கிழக்கிந்தியக் கம்பெனியின், வங்காள மாகாண இராணுவத்தை விரைவாக பெருக்கினார். அயோத்தி வீரர்கள், இராஜபுதன ராஜபுத்திரர்கள் மற்றும் பிராமணர்களை கம்பேனி படையணிகளில் திரட்டினார். மூன்றாம் ஆங்கிலேய-மைசூர் போருக்குப்பின் 1791இல் சென்னை மாகாணப் படைகளுக்கு ஆதரவாகவும், ஜாவா, இலங்கை போன்ற வெளி நாட்டுப் போர்களுக்குத் துணையாக வங்காள மாகாணப் படைகள் பயன்பட்டன. வேலூர் சிப்பாய் எழுச்சியின் போது, 1806இல் கிழக்கிந்திய கம்பேனியின் படையில் 1,54,500 படைவீரர்களும் அதிகாரிகளும் இருந்தனர்.[10] வளர்ச்சிப் பணிகள் அஞ்சல், தந்தி சேவைகள் தொடங்கப்பட்டது. ஆங்கிலேய முறை கல்வி வளர்ந்தது. தொடருந்து சேவை துவக்கப்பட்டது. தலைமை ஆளுனர்கள் பிரித்தானிய கிழக்கிந்திய ஆட்சியில், முக்கிய நிகழ்வுகளின் போது இருந்த தலைமை ஆளுனர்களின் பெயர்கள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. } கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் வீழ்ச்சி கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழ் அமைந்த கம்பெனி ஆட்சியின் நிர்வாகத்தில் ஊழல் பெருகியதாலும், கடுமையான பஞ்சத்தாலும் கம்பெனியின் நிதி திவாலா நிலைக்குச் சென்றதாலும், சிப்பாய்க் கிளர்ச்சிக்குப்பின் 1858ஆம் ஆண்டின் இறுதியில், கிழக்கிந்திய நிறுவனத்தை கலைக்கப்பட்டதால், இந்தியாவில் கம்பெனி ஆட்சி முடிவுற்று, பிரித்தானியா பேரரசின் கீழ் பதவி வகித்த வைஸ்ராய் தலைமையில் இந்திய துணைக் கண்டத்து ஆட்சியை தனது நேரடிக் கட்டுக்குள் கொண்டு வந்தது. இதனையும் காண்க பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் பிளாசி சண்டை 1757 பக்சார் சண்டை 1764 பர்மாவில் பிரித்தானிய ஆட்சி பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு அடிக்குறிப்புகள் வெளி இணைப்புகள் External link in |publisher= (help) External link in |publisher= (help) பகுப்பு:பிரித்தானிய இந்தியா பகுப்பு:பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி பகுப்பு:இந்திய வரலாறு
இந்தியாவை பிரிட்டிஷ் அரசு எப்போது கைப்பற்றியது?
1757
118
tamil
89c5b6175
பிட்காயின் (Bitcoin)(எண்ணிம நாணயக் குறியீடு: BTC), என்பது சத்தோசி நகமோட்டோவால் உருவாக்கப்பட்ட ஒரு எண்ணிம நாணயம் ஆகும். இப்பயன்பாட்டுக்காக அவர் உருவாக்கிய திறந்த மூல மென்பொருளும் இதே பெயராலேயே அழைக்கப்படுகிறது. தொடரேடு முறையில் இது இயங்குகிறது.[1] ஆரம்ப கட்டம் சடோஷி நாகமோட்டோவின் கூற்றுப்படி, “ஒருவருக்கொருவர் நேரடியாக கொடுத்து வாங்கக் கூடிய மின்னணு பணம்” என்று இதை வர்ணிக்கிறார். இந்த பிட்காயினை ஒருவர் நேரடியாக மற்றவருக்கு பிட்காயின் முகவரி வாயிலாக அனுப்பமுடியும். பயன்படுத்துபவரைப் பொறுத்த அளவில் இதை “இணையப் பயன்பாட்டிற்கான பணம்” என்று கூறலாம். அதேநேரத்தில் மூன்றடுக்கு பதிவேட்டுப் பராமரிப்பு (Triple-entry book keeping system) கொண்ட ஒரு நாணயமும் ஆகும். பரவலாக்கப்பட்ட முறைமை (Decentralized System) பெரும்பாலான நாணயமுறைகளைப் போலன்றி, பிட்காயின் நாணயத்தைக் கட்டுப்படுத்தும் நடுவண் அமைப்பு ஏதும் இல்லை. இரகசியக் குறியீட்டு முறையைப் பயன்படுத்துவது மூலம் இதில் அடிப்படை பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மோசடிகளைத் தவிர்க்க ஒரு பிட்காயினை அதன் உரிமையாளர் ஒரு முறை மட்டுமே செலவழிக்க முடியும். ஒரே பிட்காயினை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியாது. அடையாளம் காட்டாதவர் கூட பிட்காயினைப் பயன்படுத்த முடியும். பிட்காயின்களை தனிப்பட்ட கணிணிகளிலோ அல்லது மூன்றாம் தரப்பு வலைத்தளங்களிலோ அல்லது பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கருவிகளிளோ சேமிக்க முடியும். எப்படியாக இருந்தாலும் பிட்காயின் முகவரி உள்ள யாருக்கு வேண்டுமானாலும் இணையம் மூலம் பணத்தை அனுப்பலாம். எந்த அரசாங்கமும் பிட்காயினின் மதிப்பை மாற்ற முடியாது. அதிக பிட்காயின்களை உருவாக்கி யாரும் பணவீக்கத்தையும் உருவாக்க முடியாது. தொடரேடு அனைத்து பிட்காயின் பரிமாற்றங்களும் “தொடரேடு” என்ற நிரந்தர பதிவேட்டில் பதியப்படும். இப்பதிவேட்டை பிட்காயின் "பராமரிப்பாளர்கள்" (miners) மற்றும் “கணுக்கள்” (Nodes) ஆகியோர் மட்டும் பதிவுகள் செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டது. பிட்காயின் பராமரிப்பு பிட்காயின் பராமரிப்பு (மைனிங்) என்பது சுரங்கம் தோண்டுதல் போன்றது. பல்வேறு கணித கோட்பாடுகளையும், சவால்களையும், நவீன கணினித் தொழில்நுட்ப உதவியால் சமாளித்து, புதிய நாணையத்தை உருவாக்குவது, ஏற்கனவே பரிமாரப்பட்ட நாணையங்களை சரிபார்ப்பது போன்றவைகளை குறிப்பிடும். இந்த கணக்கீடுகளை செய்ய பல இடங்களில் உள்ள கணினிகள்தான் “கணுக்கள்”. காலத்திற்கு ஏற்ப கணித விகிதங்கள் மாறுபடும். சவால்களை சமாளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும். முறைகேடுகள் இதில் செய்ய இயலாது. பிட்காயின் மதிப்பு பிட்காயின் மதிப்பு அதனுடைய தட்டுப்பாட்டிற்கு ஏற்ப மதிப்பை கூட்டவும், குறைக்கவும் செய்கின்றது. பிட்காயினுடைய விலையை அதனை விற்பவரும், வாங்குபவருமே முடிவு செய்கின்றனர். ஆரம்ப காலங்களில் 0.01$ க்கு குறைவாக இருந்தது, அதிகபட்சமாக 2018-ம் ஆண்டு சனவரி மாதத்தில் 20,000 அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்ந்த இப்பிட்காயின், அக்டோபர் 2018, அன்று 6,000 டாலர் அளவில் உள்ளது. வெளி இணைப்புகள் மேற்கோள்கள் பகுப்பு:திறந்த மூல மென்பொருள் பகுப்பு:நாணய முறை பகுப்பு:மின் வணிகம் பகுப்பு:2009 மென்பொருள் பகுப்பு:எண்ணிம நாணயம்
பிட்காயின் யாரால் உருவாக்கப்பட்டது?
சத்தோசி நகமோட்டோ
58
tamil
3c37e5c8a
Coordinates: இசுரேல் (Israel, Hebrew: יִשְׂרָאֵל‎; யிஸ்ராஎல்; Arabic: إِسْرَائِيل‎, யிஸ்ராஎல், அலுவலக ரீதியாக இசுரேல் நாடு; [மெதிநாத் யிஸ்ராஎல்](எபிரேயம்), [தவுலத் இஸ்ராஇல்](அரபு)) என்பது மேற்கு ஆசியாவில், மத்திய தரைக்கடலின் தென்கிழக்கு கரையில் உள்ள ஒரு நாடு. இது இசுரவேல், இசுரயேல், இஸ்ரவேல், இஸ்ரயேல் எனவும் தமிழில் அழைக்கப்படுகிறது. இது வடக்கில் லெபனானுடனும், வடகிழக்கில் சிரியாவுடனும், கிழக்கில் யோர்தானுடனும் மேற்குக்கரையுடனும், தென்மேற்கில் எகிப்துடனும் காசா கரையுடனும், தெற்கில் செங்கடலில் அஃகபா குடாவுடனும் தன் எல்லைகளைக் கொண்டு, புவியியல் ரீதியாக பல மாறுபட்ட தன்மைகளைக் கொண்ட அம்சங்களை தன் சிறிய நிலப்பரப்பில் கொண்டுள்ளது.[7][8] இதன் அடிப்படை சட்டத்தின்படி, இந்நாடு யூத மற்றும் குடியாட்சி நாடாக அறிவிக்கப்பட்டு, மக்களாட்சி முறையில் நாடாளுமன்றம் அமைத்து நாட்டை ஆளுகின்றது. இது யூதர்களின் உலகிலுள்ள ஒரேயொரு தாய் நாடாகவுள்ளது.[9] 29 நவம்பர் 1947 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை பிரித்தானிய பாலஸ்தீனத்தின பிரிப்பினை நடைமுறைப்படுத்த பரிந்துரை செய்தது. 14 மே 1947 இல் உலக சீயொனிச அமைப்பின்[10] செயற்படுத்தல் தலைவர் மற்றும் இசுரேலுக்கான யூத முகவர் அமைப்பின் தலைவருமான டேவிட் பென்-குரியன் "இசுரேல் தேசத்தில் இசுரேலிய நாட்டின் உருவாக்கம், இசுரேல் நாடு எனப்படும்" என பிரகடனப்படுத்தினார். இச் சுதந்திரப் பிரகடனம் 15 மே 1948 அன்று பிரித்தானிய பலஸ்தீன கட்டளையமைப்பை நீக்கியது.[11][12][13] அடுத்த நாள் அருகிலுள்ள அரபு நாடுகள் இசுரேல் மீது படையெடுக்க இசுரேலிய படைகள் அவற்றுடன் சண்டையிட்டன.[14] அதிலிருந்து இசுரேல் அருகிலுள்ள அரபு நாடுகளுடன் சில போர்கள் ஊடாக சண்டையிட்டு வருகின்றது.[15] இதனூடாக இசுரேல் மேற்குக்கரை, சீனாய் தீபகற்பம் (1967 முதல் 1982 வரையில்), தென் லெபனானின் பகுதிகள் (1982 முதல் 2000 வரையில்), காசா கரை கோலான் குன்றுகள் என்பவற்றைக் கைப்பற்றியது. இவற்றிலிருந்து சில பகுதிகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஆயினும் மேற்குக் கரையுடனான எல்லை சர்ச்சைக்குரியது.[16][17][18][19][20] இசுரேல் சமாதான ஒப்பந்தங்களை எகிப்துடனும் யோர்தானுடனும் செய்தாலும், இதுவரை இசுரேலிய-பலத்தீன முரண்பாட்டு தீர்வுக்கான முன்னெடுப்புக்கள் சமாதானத்தை ஏற்படுத்தவில்லை. இசுரேலின் வர்த்தக மையமாக டெல் அவீவ் காணப்பட,[21] எருசலேம் நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட இடமாகவும் தலைநகராகவும் உள்ளது.[note 1][22] இசுரேலின் மக்கட்தொகை 2013 இல் 8,051,200 என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 6,045,900 பேர் யூதர்கள். அராபியர்கள் நாட்டின் இரண்டாவது பெரிய மக்கள் கூட்டமாக 1,663,400 பேர் என்ற எண்ணிக்கையில் உள்ளனர்.[2][23] இசுரேலிய அராபியர்களில் பெரும்பான்மையானவர்கள் இசுலாமியர்களாகவும், ஏனையவர்கள் கிறித்தவர்களாகவும் டூர்சுக்களாகவும் உள்ளனர். இவர்களைத்தவிர சிறுபான்மையாக மார்னோயர்கள், சமாரியர்கள், கருப்பு எபிரேய இசுரேலியர்கள்,[24] ஆர்மேனியர்கள், சிர்காசியர்கள் போன்ற இனத்தவர்களும் உள்ளனர். இசுரேல் குறிப்பிட்டளவு வெளிநாட்டு தொழிலாளர்களையும் ஆப்பிரிக்கா, ஆசியாவிலிருந்து புகலிடம் தேடியவர்களையும் கொண்டுள்ளது. இசுரேல் நாடாளுமன்ற முறை, விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை, பொது வாக்குரிமை என்பவற்றுடன் சார்பாண்மை மக்களாட்சி கொண்ட ஓர் நாடு.[25][26] இசுரேலிய அதிபர் அரசாங்கத்தின் தலைவராகவும் கெனெசெட் இசுரேலின் சட்டசபையின் சட்டமியற்றும் உறுப்பாக செயல்படுகிறது. இசுரேல் ஒரு வளர்ந்த நாடும் பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பு நாடும் ஆகும்.[27] 2012இன்படி இதன் பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் 43வது இடத்தில் உள்ளது. இசுரேல் மனித வளர்ச்சி சுட்டெண்ணின் அடிப்படையில் மத்திய கிழக்கில் உயர்வாகவும் ஆசியாவில் மூன்றாம் இடத்திலும் உள்ளது.[28] இதன் குடிமக்கள் ஆயுள் எதிர்பார்ப்பு அடிப்படையில் உலகில் அதிகம் ஆயுள் எதிர்பார்ப்பு உள்ள குடிமக்களில் உள்வாங்கப்படுகின்றனர்.[29] பெயர் 1948 இல் சுதந்திரத்தைத் தொடர்ந்து, அந்நாடு "இசுரேல் அரசு" (மெதிநாத் யிஸ்ராஎல்) என்பதை எடுத்துக் கொண்டது. இதனுடன் இசுரேல் தேசம், சீயோன், யூதேயா ஆகிய பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டன.[30] இசுரேலின் குடிமக்கள் இசுரேலியர் என அழைக்கப்படுவர் என வெளிவிவகால அமைச்சு அறிவித்தது.[31] இசுரேல் தேசம், இசுரயேலின் பிள்ளைகள் ஆகிய பெயர்கள் விவிலிய இசுரயேல் அரசு பற்றியும் முழு யூத அரசு பற்றியும் குறிக்கப் பயன்பட்டது.[32] இசுரேல் எனும் பெயர் குலப்பிதாவாகிய யாக்கோபுவை (எபிரேயம்:, ; Greek: Ἰσραήλ இஸ்ராயல்; "கடவுளுடன் போரிட்டவர்"[33]) குறிக்கப் பயன்பட்டது. எபிரேய விவிலியத்தின்படி, அவர் கடவுளின் தூதனுடன் மல்யுத்தம் செய்து வென்ற பின் அப்பெயர் அவருக்கு கிடைத்தது.[34] யாக்கோபின் பனிரெண்டு மகன்களும் இசுரயேலரின் மூதாதையர்கள் ஆவர். இவர்கள் இசுரேலின் பனிரெண்டு குலங்கள் அல்லது இசுரயேலின் பிள்ளைகள் எனவும் அழைக்கப்படுவர். யாக்கோபும் அவர் மகன்களும் கானானில் வாழ்ந்தாலும் பஞ்சத்தின் நிமித்தம் எகிப்துக்கு செல்ல கட்டாயமாக்கப்பட்டு, அவர்களின் நான்காம் தலைமுறை மோசே வரை அங்கு வாழ்ந்தனர்.[35] மோசே தலைமையில் இசுரயேலர் கானானுக்குத் திரும்பினர். ஆரம்ப தொல்பொருளாய்வுப் பொருள் மெனெப்தா நடுகலில் "இசுரேல்" என்ற சொல்லைக் கொண்டுள்ளது. பண்டைய எகிப்தின் இந்நடுகல் கி.மு. 13ம் நூற்றாண்டைக்குரியது.[36] இது யூதம், கிறித்தவம், இசுலாம், பகாய் ஆகிய ஆபிரகாமிய சமயங்களுக்கு புனிதமாக இருப்பதால் திருநாடு எனவும் அழைக்கப்படுகிறது. இப்பகுதி யூதேயா, சமாரியா, தென் சிரியா, சிரியா பாலத்தீனா, எருசலேம் பேரரசு, இதுமேயா மாகாணம், கோலே-சிரியா, ரெட்டேனு மற்றும் கானான் உட்பட்ட பல பெயர்களால் பல நூற்றாண்டுகளிலும் அழைக்கப்பட்டுள்ளது. வரலாறு பழங்காலம் தொல்லியல் சான்றின்படி, எகிப்திய நினைவுச் சின்னமாகிய "மெனெப்தா நடுகல்" என்று குறிப்பிடப்படும் கல்லில் உள்ள ஒரு குறிப்பு முதன்முதலில் இசுரேலியல் என்ற சொல்லைக் குறிப்பிட்டது. இந்நினைவுக்கல் 10 அடி உயரம் கொண்டதாகும். இது கி.மு. 1211 ஆண்டினது என்று கணித்துள்ளனர்.[37] மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக யூதர்கள் 'இசுரேல்' என்னும் நிலத்தைத் தங்கள் தாயகமாக, புனித நிலமாக கருதி வந்துள்ளனர். தோராவின்படி, யூதர்களின் பிதாப்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களுக்கு கடவுள் நாட்டை வாக்களித்ததாக நம்புகின்றனர்.[38][39] விவிலியத்தின் அடிப்படையில், அம்மூன்று பிதாப்பிதாக்களின் காலம் கி.மு 2ம் மில்லேனியத்தின் ஆரம்பம் என கருதப்படுகின்றது.[40] முதலாவது இசுரயேல் அரசு தோராயமாக கி.மு. 11ம் நூற்றாண்டு காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. இசுரேலிய முடியாட்சியும் அரசும் சிறிதும் பெரிதுமாய் இடைவெளி விட்டு நானூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர்.[41][42][43][44] வட இசுரேலிய அரசு கி.மு 722 இல் வீழ்ச்சியுற்றது. தென் யூத அரசு அசிரிய ஆட்சி வரை நிலைத்தது. பபிலோனியா வருகையால் கி.மு. 586 இல் யூத அரசு வெற்றி கொள்ளப்பட்டது. முற்காலம் பின்னர் வந்த அசிரிய, பாபிலோனிய, பாரசீக, கிரேக்க, ரோமானிய, பைசாந்திய அரசுகளின் ஆட்சியில் சிறிதும் பெரிதுமாய் யூதர்கள் இசுரேலை விட்டு வெளியேறிவிட்டனர். இதனால் யூதர்களின் எண்ணிக்கை அங்கே மிகவும் அருகிவிட்டது. சியோனிசம் அலியா இசுரேல் அல்லது அலியா என்னும் இன்றுள்ள நாட்டின் நிலத்தில் தற்காலக் குடியேற்றம் 1881ல் தொடங்கியது. பிற நாடுகளில் சிறுபான்மையாராக வாழ்ந்து இனவேற்றுமையாலும் பிற துன்பங்களாலும் உழன்ற யூதர்கள் மோசசு ஃகெசு (Moses Hess) என்பவர் போன்ற கருத்துக்களைப் பின்பற்றி இசுரேல் நிலத்தைமீண்டும் பெறுவதற்காக சிறிது சிறிதாக நிலங்களை ஆட்டோமன் மற்றும் அரேபியர்களிடமமிருந்து வாங்கத் தொடங்கினர். தியோடோர் ஹெர்ட்சு (1860–1904) என்னும் ஆஸ்திரிய யூதர் சியோனிய இயக்கம் ஒன்றைத் தொடங்கினார் 1896ல் செருமானிய மொழியில் டெர் யூடென்ஸ்டாட் ("யூதர் நாடு) என்னும் வெளியீட்டைக் கொண்டு வந்தார். அதற்கு அடுத்த ஆண்டு முதல் உலக சியோனியப் பேரவையைக் கூட்ட உதவினார். சியோனிய இயக்கம் தொடங்கிய பின்னர் இரண்டாவது அலியா அமைக்க வழி வகுத்தது. சுமார் 40,000 யூதர்கள் 1904–1914 ஆண்டுகளில் வந்துசேர்ந்தனர். 1917ல் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் ஆர்தர் பால்ஃவோர் அவர்கள் பால்ஃவோர் பேரறிவிப்பு எனப்படும் அறிவிப்பில் யூதர்களுக்கென தாயகமாக ஒரு தனி பாலசுத்தீனம் அமைப்பதில் இசைவான நோக்குடையவர்களாக இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார். 1920ல் பாலசுத்தீனம் உலகநாடுகள் குழுமத்தில் பிரித்தானியர் ஆட்சி செலுத்தும் ஒரு நிலமாக மாறியது. முதலாம் போருக்குப் பின்னர், மூன்றாவது அலையாக 1919-1923 ஆம் ஆண்டுகளிலும், நான்காவது அலையாக 1924–1929 ஆம் ஆண்டுகளிலும், யூதர்களின் குடியேற்றம் நிகழ்ந்தது. இவை அலியா-3 என்றும் அலியா-4 என்றும் அழைக்கப்படுவன. 1929ல் நிகழ்ந்த அரேபிய கலவரங்களில் 133 யூதர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 67 பேர் எபிரோனைச் சேர்ந்தவர்கள். 1933 வாக்கில் எழத்தொடங்கிய நாசிசத்தால் ஐந்தாவது அலையாக யூதர்கள் குடியேறினர். இந்த அலியா-5 க்குப் பிறகு, 1922ல் அப்பகுதியில் இருந்த மக்கள் தொகையில் 11% யூதர்களாக இருந்தநிலை மாறி, 1940ல் யூதர்கள் மக்கள் தொகையில் 30% ஆக உயர்ந்தார்கள். நிலப்பகுதியில், 28% சியோனிச நிறுவனங்கள் வாங்கியிருந்தன. இது தவிர யூதர்கள் தனிப்பட்ட முறையிலும் நிலங்களை வாங்கியிருந்தனர். இசுரேலின் தென் பாதி வறண்ட பாலை நிலமாகவும், மக்கட்தொகை நெருக்கமற்றதாகவும் இருந்தது. இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் ஐரோப்பாவில் மிகப்பெரிய அளவில் நிகழ்ந்த இனப்படுகொலையில் ஏராளமான யூதர்கள் கொல்லப்பட்ட பின்னர், ஒப்புதலின்றி (சட்டமுரணாக) ஏராளமான வெளி நாட்டு யூதர்கள் வந்து இறங்கினர். இரண்டாம் உலகப் போரின் இறுதியில் பாலசுத்தீனத்தில் சுமார் 600,000 யூதர்கள் இருந்தனர். 1939ல், பிரித்தன் பாலஸ்தீனத்தில் யூத வந்தேறுதலை யுத்ததின் போது 75000 க்கு கட்டுப்படுத்தவும், அவர்களால் நிலம் விலைக்கு வாங்கப்படுவதை கட்டுப் படுத்தவும் திட்டமிட்டது. அது 36-39 அரபு ரகளைகளுக்கு பதிலாக இருக்கலாம். இத்திட்டம் யூதர்களாலும், சியோனிஸ்டுகளாலும், 1917 பால்பர் ஆணைக்கு எதிரான நம்பிக்கைத்துரோகமாகக் கருதப் பட்டது. அராபியர்களும் திருப்தி அடையவில்லை; ஏனெனில் அவர்கள் யூத வந்தேறுவதை முற்றிலும் தடுக்கக் கோரினர். அப்படியும், இத்திட்டத்தை பிரிட்டன் ஐநா ஒப்பாட்சி முடியும் வரை கடைப்பிடித்தது. யூதர்களின் தலைமறைவான குழுக்கள் (பாசறைகள்) பாலஸ்தீனர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே வலுவடைந்து வந்த முரண்பாடுகளாலும், பிரித்தானியரிடம் இருந்து யூதர்களுக்கான உறுதிகோள் ஏதும் வராததினாலும் யூதர்கள் தாங்களேதங்களை பாதுகாக முடிவெடுத்தனர். பால்பூர் அறிவிப்பையும் யூத தேசத்தையும் எதிர்த்த அரபு தேசீயவாதிகள், யூதர்களுக்கு எதிரான கலவரங்களை எரூசலம், ஹீப்ரான், ஜாப்பா, ஹைபாவில் தூண்டினர். 1921 யூத எதிர்ப்பு கலவரங்களை தொடர்ந்து, ஹகானா என்ற அமைப்பு தற்காப்பிற்க்காக யூதர்களால் ஆரம்பிக்கப் பட்டது. 1931, ஹகானாவிள் பிளவு ஏற்ப்பட்டு, இர்குன் அமைப்பு வெளியேரியது. இர்குன் இன்னும் தீவிர செயல் நோக்கை பின்பற்றி, யூதர்களிள் மேல் ஏற்பட்ட வன்முறைகளுக்கு பதிலடி கொடுத்து, பிரித்தானிய ஐநா ஒப்படைப்பு அரசாங்கத்தின் மீதும் தாக்கியது. இர்குனிலிருந்து இன்னும் தீவிர செயல்வாத லேஹி குழு பிளந்து வெளியேரியது. இர்குன் கொள்கைக்கு மாற்றாக, அது உலகப் போரில், பிரித்தனுடன் ஒத்துழைப்பை மறுத்தது.. இக்குழுக்கள் 1948 அரபு-இஸ்ரேலிய போர் முன், இஸ்ரேலி பாதுகாப்பு சேனை உதயத்திலும், அலியா-பெத் போன்ற இஸ்ரேலிய அகதிகள் வரவழிப்பிலும், பெரும் தாக்கம் ஏற்படுத்தின. நாடு நிறுவப்படுதல் 1947ல் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே மிகுதி பெற்று வந்த வன்முறை நிகழ்வுகளைக் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ இயலாத நிலையில், பிரிட்டன் நாடு தன் ஆட்சி உரிமையில் இருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்தது. 1947ல் உலகநாடுகளின் பேரவை (UN General Assemby), பாலசுத்தீனத்தை இருநாடுகளாகப் பிரிக்க ஒப்புதல் அளித்தது. யூதர்கள் இருக்க நிலப்பகுதியில் 55% யும், அராபியர்கள் இருக்க நிலத்தில் 45% யும் தருவதென இருந்தது. எருசலேம் நகரம் உலகநாடுகள் நிர்வகிக்கும் நகரமாக இருக்கட்டும் என்றும் முடிவு செய்தது. எருசலேமை ஈரின மக்களும் தமக்கே வேண்டும் என மிக வல்லுரிமையோடு கோருவார்கள் என்றும் அதனைத் தவிர்ப்பதற்காக இம்முடிவு என்று கூறப்பட்டது. இரு நாடுகளாகப் பிரிப்பது என்னும் திட்டத்தை உலகநாடுகளின் பேரவை நவம்பர் 29, 1947ல் ஏற்ற உடன், யூதர்களின் சார்பாக டேவிட் பென்கூரியன் (David Ben-Gurion) தற்காலிகமாக ஏற்றுக்கொண்டார், ஆனால் அரேபியர்களின் குழு (Arab League) மறுத்தது. இதைத் தொடர்ந்து அரேபியர்கள் யூதர்களின் மீதும், யூதர்கள் அரேபியர்களின் மீதும் நடத்திய தாக்குதல்களின் விளைவாகப் பரவிய உள்நாட்டுப் போர், 1948க்கான இசுரேலிய விடுதலைப்போரின் முதல் கட்டமாக அமைந்தது. பிரித்தானியரின் ஆட்சி உரிமை மே 15, 1948 பிற்பகல் 5 மணிக்கு முடிவடையும் முன்னரே, மே 14, 1948ல் இசுரேலிய நாடு தம் நாடு உருவானதை அறிவித்தது. விடுதலைப் போரும் மக்கள் திரண்டு வருவதும் இசுரேல் ராஜ்ஜியத்தின் நிர்மாணத்தின் பின், எகிப்து, சிரியா, யோர்தான், இராக் நாடுகளின் சேனைகள் போரில் கலந்து கொண்டு, 1948 அரபு-இசுரேலி போர் இரண்டாம் நிலை தொட்டது. வடக்கிலிருந்து வந்த சிரியா, லெபனான், இராக் படைகள் இசுரேல் எல்லையில் நிறுத்தப்பட்டன; யோர்தான் படைகள் கிழக்கு எருசலேமை கைப்பற்றி மேற்கு எருசலேமை முற்றுகையிட்டன. ஹகானா அப்படி ஊடுருவிய படைகளை நிறுத்தியது, இர்குன் படைகள் எகிப்து படைகளை நிறுத்தியது. 1948 ஜூனில், ஐ.நா. ஒரு மாத போர்நிறுத்த பிரகடனம் செய்தது; அச்சமயம் இசுரேல் பாதுகாப்பு படை அரசாங்க ரீதியில் தாபிக்கப் பட்டது.. பல மாத போருக்குப் பின், 1949ல், போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்ப்பட்டு, தாற்காலிக எல்லைகள் நிலைக்கப் பட்டன. இசுரேல் யோர்தான் நதிக்கு மேற்கே ஒப்பந்த பகுதிகளின் 26% நிலைத்தை அடைந்தது. யோர்தான் 'மேற்குக் கரை' என்ற யூதேயா, சமாரியா போன்ற மலைப் பிரதேசங்களை ஏற்றது. எகிப்து காசா என அழைக்கப்படும் சிறிய கடலோர நிலத்தை அடைந்தது. போர்போதும், பின்னும் இசுரேலிய பிரதான அமைச்சர் டேவிட் பென்குரியன் , பல்மாக், இர்குன், லேஹி முதலிய அமைப்புகளைக் கலைக்க உத்தரவிட்டார். ஒரு சுவீட நாட்டு தூதுவாலய ஊழியரை கொலையினால் , இர்குன்னும் லேஹியும் பயங்கர வாத அமைப்புகளாக அழைக்கப் பட்டு தடை செய்யப் பட்டன. பல அரபு மக்கள் புதிய இசுரேலிய நாட்டினிலிருந்து வெளியேரினர் அல்லது வெளியேற்றப் பட்டனர். (அகதிகள் எண்ணிக்கை 600000 ந்து 900000 ஆக கணக்கிடப் பட்டுள்ளது; ஐ.நா. கணக்கு 711000 ஆகும்.) அதே சமயம் 1000000 யூதர்கள் அரபு நாடுகளிலிருந்து துரத்தப் பட்டனர். (ஆதாரங்கள் சந்தேகத்திற்கு உரியது) யூத இன அழிப்பை (ஹோலோகாஸ்ட்) பிழைத்தவர்களும், அரபு நாடுகளிலிருந்த வந்த யூத அகதிகளும் இசுரேல் மக்கள் தொகையை ஒரே வருடத்தில் இரு மடங்காக்கினர் 1950களிலும் 1960களிலும் 1954–1955 ஆண்டுகளில் தலைமை அமைச்சராய் இருந்த மோசே சாரெட் அரசு எகிப்து மீதான குண்டுவீச்சில் தவறியதால் மதிப்பிழந்தது. 1956ல் எகிப்து நாடு பிரித்தானியரும், பிரெஞ்சுக்காரரும் அதிருப்தி அடையத்தக்க வகையில் சுயஸ் கால்வாயை (Suez Canal) நாட்டுடைமையாக்கியது. இதைதொடர்ந்து இசுரேல் இவ்விரு ஐரொப்பிய அரசாங்களுடன் மறைமுக அணி அமைத்து, எகிப்து மீது போர் தொடுத்தது. சூயஸ் முட்டுதலுக்கு பின், உலக நிர்பந்தத்தினால் இசுரேல் சைனாய் குடாவிலிருந்து வெளியேறியது. 1955ல் பென் குரியன் மீண்டும் தலைமை அமைச்சராகி 1963ல் ராஜிநாமா செய்தார். அவருக்கு பின் லீவை எஷ்கால் தலைமை அமைச்சரானார். 1961ல், 'கடைசி முடிவு' என்றழைக்கப் பட்ட யூத அழிவுத் திட்டத்தை இயக்கிய நாஜி யுத்த குற்றவாளி அடால்ப் ஐக்மனைக் கைது செய்து இசுரேலுக்குக் கொண்டுவந்து விசாரித்துத் தூக்கிலிட்டனர். ஐக்மன் இசுரேலிய வழக்கு மன்றங்களினால் தூக்கு போடப் பட்ட ஒரே நபர். மே 1967 ல், இசுரேலுக்கும், அதன் பக்க நாடுகளுக்கிடையே மறுபடியும் சூடு பிடித்தது. சிரியா, யோர்தான் எகிப்து போர் வீராப்பு பேசின; எகிப்து ஐ.நா. பார்வையாளர்களை வெளியேற்றியது. எகிப்து இசுரேலிய கப்பல்களுக்கு திராணா குடாவில் தடையிட்ட போது, அது போருக்கான அறிகுறியாகக் கருதி, இசுரேல் எகிப்தை முன்னேற்பாடாக சூன் 5ல் தாக்கியது. ஆறு நாட்கள் நீடித்த அரபு-இசுரேலிய போரில், இசுரேல் அரபுப்படைகளைத் தோற்கடித்து, விமானப்படைகளைத் தூளாக்கி வென்றது. கிழக்கு எருசலேம், மேற்குக்கரை, காசா நிலப்பட்டை, சைனாய், கோலன் சிகரங்கள் இவற்றை அரபு நாடுகளிடமிருந்து கைப்பற்றியது. 'பச்சை கோடு'-1949 கைப்பற்றப்பட்ட நிலங்களின் நிர்வாக எல்லையாயிற்று. பத்து வருடங்களுக்கு பின், எகிப்துடன் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின்படி காசாவை எகிப்துக்குக் கொடுத்தது. 1967ல், அமெரிக்க கப்பலான லிபர்ட்டி இசுரேல் விமானங்களால் தாக்கப்பட்டு 34 அமெரிக்க துருப்புகள் உயிரிழந்தனர்; பின்னர் மேற்கொண்ட ஆய்வின்படி அது கப்பலை சரியாக அடையாளம் காண முடியாமல் செய்த பிழை என உறுதியிடப்பட்டது. 1969ல். கோல்டா மேர் என்ற பெண் தலைமை அமைச்சரானார். 1970களில் 1967ன் போருக்குப் பின் 1968–1972 ஆண்டுகளில் இசுரேல், சிரியா, எகிப்து ஆகிய நாடுகளுக்கிடையே பற்பல சண்டைகள் நிகழ்ந்தன. 1970 முதலில், பாலஸ்தீன பயங்கரவாத அமைப்புகள் இசுரேல், யூத குறிகள் மீது பல தாக்குதல்களைத் தொடங்கியன. இவற்றில் முதன்மையானது, 1972 ஒலிம்பிக் விளையாட்டுகளில், பாலஸ்தீன பயங்கரவாதிகள் இசுரேல் விளையாட்டு வீர்ர்களை பிணையாக பிடித்து, அவர்களைக் கொன்றனர். பதிலுக்கு, இசுரேல் 'கடவுள் பழி' என்ற செய்கைகளினால் மொசாத் ஆட்களின் மூலம் பல பயங்கர வாதிகளை கொன்றது. அக்டோபர் 6, 1973, யோம் கிப்புர் யூத நோன்பு நாளில், எகிப்து, சிரிய படைகள் திடீரென்று, முன்னறிவிப்பன்றி தாக்கின. ஆனால், முதலில் திகிலாக்கியும், அவை 1967ல் இஸ்ரேலுலிடம் இழந்த நிலங்களை மீள்கொள்ள முடியவில்லை. போரின் பின் பல வருடங்கள் சண்டையின்றி இருந்ததால், சமாதான பேச்சுகளுக்கு உடந்தையாக இருந்தது. 1974ல், மைரின் பதவி விலகளுக்குப்பின், இட்ஷாக் ரபின் ஐந்தாவது பிரதான அமைச்சரானார். 1977 கெனெச்சட் தேர்தல்களில் 1948 லிருந்து ஆளுமணியிலிருந்த மார்ச் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியே வந்தது. மேனாசம் பெகின் தலைமையிலான புதிய லிகுட் கட்சி அரசாங்கத்தை பொறுப்பேற்றது. 1974 நவம்பரில், எகிப்து ஜனாதிபதி அன்வர் சாதத், யூத நாட்டுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம் செய்து கெனெச்சட் என்ற மக்களவைக்கு மொழி பெயர்ந்தார். இதுவே இசுரேலுக்கு ஒரு அரபு நாட்டின் முதல் ஏற்றுக்கொள்ளுதல் ஆகும். அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பித்து காம்ப் டேவிட் இழைகளுக்கு வித்திட்டது . மார்ச் 1979ல், வாஷிங்டனில், இசுரேல்-எதிப்த்து சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இசுரேல் 1967ல், எகிப்தினிடம் கைப்பற்றிய எல்லா பகுதிகளையும் திருப்பிக் கொடுத்தது. பாலஸ்தீனர்களுக்கும் சுயாட்சி படலாம் என்றும் ஒத்துக் கொள்ளப்பட்டது. 1980கள் சூலை 7 ஆம் நாள் 1981ல் இசுரேலிய வானூர்திப் படை இராக் நாட்டில் ஓசிரிக் என்னும் இடத்தில் இருந்த (அணுக்கரு உலை உள்ள) அணுக்கரு நிலையத்தைத் தாக்கியழித்தனர். இராக்கியர்கள அணுகுண்டு தயாரிப்பதைத் தடுக்கவே இம்முயற்சி என்று கூறப்பட்டது. 1982ல் இசுரேல் லெபனான் மீது தாகுதல் தொடங்கியது., இஸ்ரேல் 1975 முதல் உள்நாட்டுப் போரில் முழுகியிருந்த லெபனான் மேல் படையெடுத்தது. அதை முதலில் வடக்கிலிருக்கும் குடிகளை பாலஸ்தீனிய பயங்கரவாத தாக்குதலிருந்து காப்பாற்றவதாக சாக்கு சொல்லப் பட்டது. ஆனால் 40 கி.மீ. எல்லைக்கு வெளியே காப்பு மண்டலம் ஏற்ப்படுத்திய பின், இஸ்ரேலி படை இன்னும் வடக்கே முன்னேறி, லெபனான் தலைநகர் பெய்ரூட்டை கைப்பற்றியது. பாலஸ்தீன விடுதலை அணி லெபனானிலிருந்து வெளியேற்றப்பட்டபின், டுநீசியாவின் தலைநகர் டூனிசிக்கு புலம் பெயர்ந்தன. இந்த விளைவினால் ஆரம்பித்த லெபனான் போர்களில் சோர்வுற்ற பிரதமர் பெகின் 1983ல் ராஜிநாமா செய்து, இட்ஷாக் ஷமீருக்கு இடம் விட்டார்.. 1986ல், லெபனானிலிருந்து பெரியளவில் வெளியேறினாலும், காப்பு மண்டலம் 2000 வரை வைக்கப் பட்டது. அதையும் 2000ல், காலி செய்தது. 1980ல் அரசாங்கம் இடது-வலதுசாரிகளினிடையே மாறி மாறி ஆயிற்று. 1984ல் இடது சாரி ஷிமோன் பெரெஸ் பிரதமரானார்; 1986ல் ஷமீர் மறுபடியும் பதவியேற்றார்.. பாலஸ்தீன முதல் எழுச்சி (இண்டிபாடா) 1987ல் தொடங்கி வன்முறைகள் நிகழ்ந்தன. அதனால் ஷமீர் 1988ல், பிரதம அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படார். 1990கள் வளைகுடா யுத்தத்தில், ஒரு பங்கும் இல்லாமலேயே, ஒரு கட்சியும் சாராமலேயே, இஸ்ரேல் பல இராக்கிய ஏவுகணைகளால் அடிக்கப் பட்டு 2 குடிகள் கொல்லப்பட்டனர். 1990ல், அப்போது குலைந்த சோவியத் ஒன்றியத்திலிருந்து பேரளவு யூத வந்தேரிகள் புகுந்தனர். அவர்கள் 'மீள்வருகை நீதி'யின் படி, இஸ்ரேலிய குடிமக்கள் உரிமையை உடனே பெற்றனர். 1990-91ல், 380000 பேர் வந்து குடியிருப்பு உரிமை பெற்றனர். அவர்கள் வாக்குகளை கவர தொழிலாளர் கட்சி, வேலையில்லாமை, வீடு மூட்டப் பிரச்சினைகள் போன்றவற்றை ஆளும் லிகுத் கட்சியின் மேல் போட்டு பரப்புரை செய்தது. அதனால் வந்தேரிகள் தொழிலாளர் கட்சிக்கே 1992 தேர்தலில் ஆதரவு காட்டி வாக்கிட்டு, அக்கட்சிக்கு மக்களவையில் 61% பெரும்பான்மை உரிமையை கொடுத்தனர்.. தேர்தல் தீர்ப்பின்படி, இட்ஷாக் ரபின் பிரதம அமைச்சராகி, இடது சாரி அரசாங்கத்தை மேற்கொண்டார். தேர்தல் போது, அவர் இஸ்ரேலியர்களுக்கு தற்காப்பும், அராபிகளுடன் மொத்த சமாதானத்தையும் 9 மாதங்களுக்குள் காட்டுவதாக சூளுரைத்தார். 1993ல். அரசாங்கம் மட்றீட் சமாதான பேச்சை கைவிட்டு, நார்வே தலைநகர் ஆஸ்லோவில் பாலஸ்தீன விடுதலை அணியுடன் சமாதான சம்மதம் அளித்தது. அதனால் ஜோர்டன் இசுரேலை ஏற்றுக்கொள்ளும் இரண்டாவது அரபு நாடானது. முதலில் பெருமளவிலிருந்த சமாதான சம்மதத்தின் ஆதரவு, ஹமாஸ் போன்ற பாலஸ்தீன சம்மதத்தின் எதிரிகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்களால் கீழிறங்கியது. நவம்னர் 4, 1995ல். இகால் அமீர் என்ற யூத வெறியாளர் பிரதமர் ரபீனை சுட்டுக் கொன்றார். இக்கொலையினால் கொந்தளிப்புற்ற பொதுமக்கள், ஆஸ்லோ சம்மதத்தின் எதிரிகளின் மேல் வெறுப்பு கொண்டு, சம்மதத்தின் யூகியான ஷிமொன் பெரசுக்கு ஆதரவு காட்டத் தொடங்கினர். ஆனால் புதிய பாலஸ்தீனிய தற்கொலை சம்பவங்களாலும், பயங்கர வாதத்தை புகழ்ந்த யாச்சர் ஆராபத் மேலிருந்த எரிச்சலாலும், பெரச் ஆதரவு ஓரளவு மலிந்து, 1996 தேர்தலில் பெரெச், லிகுட் வேட்பாளர் பின்யமின் நடன்யாகு என்பவரிடம் தோற்றார். ஆஸ்லோ சம்மததின் எதிரி போல தோன்றினாலும், நடன்யாகு ஹெப்ரான் பகுதியிலிருந்து வெளியேரி, பாலஸ்தீன தேசீய மன்றத்திற்க்கு மேலும் ஆதீனம் கொடுக்குமாறு கையெழுத்திட்டர். நடன்யாகு ஆட்சிகாலத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் ஓரளவு மழுங்கின. ஆனால் 1999 தேர்தல்களில் தொழிலாளர் கட்சி எஹூத் பராக் நடன்யாகுவை பெருவித்தியாசத்தில் தோற்க்கடித்து, அடுத்த பிரதமரானார். இசுரேலின் நில நாட்டு அமைப்பு இசுரேலுக்கு வடக்கில் லெபனான், கிழக்கில் சிரியா, ஜோர்தான், மற்றும் மேற்குக் கரை, தென்மேற்கில் எகிப்து மற்றும் காசா கரை ஆகிய நாடுகளும் பகுதிகளும் அமைந்தன. மேற்கில் நடுநிலக்கடலும் தெற்கில் அக்காபா விரிகுடாவிலும் கடற்கரைகள் உள்ளன. 1967ல் நிகழ்ந்த ஆறுநாள் போரில் இசுரேல் யோர்தானைச்சேர்ந்த மேற்குக்கரை (West Bank) சிரியாவைச் சேர்ந்த கோலான் குன்றுகள் (Golan Heights), எகிப்த்தைச் சேர்ந்த காசாப் பகுதி ஆகியவற்றைக் கைப்பற்றியிருந்தது. 1982வுக்கு முன் பல படையினர்களும் குடியேற்றவர்களும் சைனைவிலிருந்து திரும்பப்பெற்றுள்ளது. மேற்குக்கரை, காசா கரை, கோலான் குன்றுகள் ஆகிய பகுதிகளின் நிலைமையை இன்று வரை முடிவு செய்யவில்லை. 1967ல் கைப்பற்றின நிலங்களை தவிர இசுரேலின் மொத்த பரப்பளவு 20,770 கிமீ² அல்லது 8,019 சதுர மைல்; (1% நீர்). இசுரேல் சட்டத்தின் படி கிழக்கு ஜெரூசலெம் மற்றும் கோலான் குன்றுகள் உட்பட மொத்த பரப்பளவு 22,145 கிமீ² அல்லது 8,550 மைல்²; ஒரு சதவீதம் கீழே நீர். இசுரேல் கட்டுப்பாட்டில் மொத்த பரப்பளவு 28,023 கிமீ² அல்லது 10,820 மைல்² (~1% நீர்). மாநகரப் பரப்பளவுகள் 2004 இசுரேல் புள்ளியியல் மையத்தின் கணக்கெடுப்பின் படி டெல் அவீவ் (மக்கள் தொகை 2,933,300), ஹைஃபா (மக்கள் தொகை 980,600), பீர்ஷெபா (மக்கள் தொகை 511,700) ஆகிய மூன்று மாநகரங்கள் இசுரேலில் உள்ளன.[45] ஜெரூசலெமும் இசுரேலின் மாநகரங்களில் சேர்த்துக் கொள்ளலாம், ஆனால் இந்நகரத்தின் எல்லைகள் உறழ்வு பட்டுள்ளது காரணமாக சரியாக மக்கள் தொகையை கணக்கெடுக்கமுடியாது. 2005 கணக்கெடுப்பின் படி அரசின் படி ஜெரூசலெம் மக்கள் தொகை 706,368 ஆகும். சில வேளைகளில் அரபு முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையான நாசரேத்தும் மாநகரமாக குறிப்பிட்டுள்ளது. . சட்ட மன்றம் இசுரேலின் ஆட்சி ஒரேயொரு சட்டமன்றத்தின் அடிப்படையில் நிகழுகின்றது. இசுரேலின் நாடாளும் சட்டமன்றத்திற்கு கெனெசெட் (Knesset ஃஈபுரு மொழியில் כנסת = கூட்டம், மன்றம், assembly) என்று பெயர். இதில் 120 கெனெசெட் உறுப்பினர்கள் (நாடாளுமன்ற உறுப்பினர்கள்) உண்டு. ஆட்சி செலுத்துவோர் இசுரேலியக் குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவர் எனினும் அதிக ஆட்சிப்பொறுப்புகளும் ஆணை மற்றும் கட்டளை இடும் உரிமையும் அற்றவர். தேர்தலில் பெரும்பானமை வெற்றி பெற்ற கட்சியின் தலைவரை தலைமை அமைச்சராய் தேர்ந்தெடுப்பது குடியரசுத் தலைவரின் முக்கியப் பொறுப்புகளில் ஒன்று. நாட்டை நடத்தும் பொறுப்பும் அதிகாரமும் தலைமை அமைச்சரைச் சேர்ந்தது. தலைமை அமைச்சர் தன் அமைச்சர் குழுவைக்கொண்டு நாட்டை நடத்துவார். மக்கள் மக்கள் வகைப்பாடு இசுரேலின் நடுவண் புள்ளியியல் துறையின் மே 2006 ஆம் ஆண்டின் கணக்குப்படி இசுரேலில் 7 மில்லியன் உள்ளனர். அவற்றில் 77% மக்கள் யூதர்கள், 18.5% அராபியர்கள், 4.3% மற்ற இனத்தவர்..[46] யூதர்களில் 68% மக்கள் இசுரேலில் பிறந்தவர்கள் (இவர்களை சபரா என்பர்), அல்லது ஐரோப்பாவில் இருந்து குடியேறியவர் (இவர்கள் ஓலிம் எனப்படுபவர்), 22% மக்கள் ஐரோப்பாவில் இருந்தும் அமெரிக்கவில் இருந்தும் வந்து குடியேறியவர், 10% ஆசியா-ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறியவர்.[47] ஆதாரங்களும் மேற்கோள்களும் குறிப்பு வெளி இணைப்புக்கள் அரசாங்கம் at the Israel Ministry of Foreign Affairs of the Israel Tourism Ministry of the Israel Central Bureau of Statistics பொது தகவல் at The Washington Post at the Jewish Virtual Library from International Futures வரைபடங்கள் Wikimedia Atlas of Israel விபரக்கோவை at Curlie பகுப்பு:இசுரேல் பகுப்பு:முன்னாள் பிரித்தானியக் குடியேற்றங்கள் பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
இசுரேல் நாட்டின் தலைநகரம் எது?
எருசலேம்
1,995
tamil
565f0b09c
கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (அல்லது பொதுவாக வட கொரியா) கிழக்கு ஆசியாவில் உள்ள கொரியத் தீபகற்பத்தின் வட பகுதியில் அமைந்த ஒரு நாடாகும். இதன் மிகப்பெரிய நகரம் மற்றும் தலைநகரம் பியொங்யாங் ஆகும். இதன் வடக்கில் சீனாவும் ரஷ்யாவும் அமைந்துள்ளன. தெற்கே தென் கொரியா அமைந்துள்ளது. 1948 இல் கொரியா நாட்டில் இருந்து பிரிந்து இந்நாடு உருவானது. இரண்டாம் உலகப் போரின் பின் 1945, ஆகஸ்டு 15 இல் ஜப்பான் நாட்டிடம் இருந்து இது சுதந்திரம் பெற்றது. எனினும் இன்னமும் இவ்விரு நாடுகளுக்கிடையே எல்லைப் பிரச்னை நிலவுகிறது. 1.21 மில்லியன் வீரர்களுடன் சீனா, அமெரிக்கா , மற்றும் இந்தியா விற்கு அடுத்து உலகில் 4 ஆவது பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ளது.இது ஒரு அணு ஆயுத நாடாகவும் மற்றும் விண்வெளி ஆய்விலும் முழுக் கவனம் செலுத்தி வருகிறது. . வரலாறு கி.மு. 2333 ல் கொஜோசியோன் டாங் (Gojoseon Dangun) மூலம் முதல் கொரிய அரசு நிறுவப்பட்டது. வடக்கு கொரிய தீபகற்பம் மற்றும் மஞ்சூரியா பகுதிகள் வரை விரிவடைந்தது.இதைப் பற்றிய குறிப்புகள் கி.மு. 7 ஆம் நூற்றாண்டுகளில் சீன வரலாற்றுக் குறிப்புகளில் கூறப்படுகிறது. சீன ஹன் பாரம்பரியத்துடன் ஏற்பட்ட பல மோதல்களை அடுத்து கொஜோசியோன் அரசு சிதைந்தது.கொரியா வடக்கில் கோகுர்யோ, மற்றும் பெக்ஜ் மற்றும் தெற்கில் சில்லா ஆகிய மூன்று அரசுகளாகப் பிரிவடைந்தது. 372 ல் கோகுர்யோ அரசின் அதிகாரப்பூர்வ மதமாகப் புத்த மதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் சீனாவுடன் பல யுத்தங்கள் மற்றும் சீன படையெடுப்புகள் மூலம் சிறந்த நிலையை அடைந்தது. 7 ஆம் நூற்றாண்டில் உள்நாட்டு வாரிசுப் போர்களால் வீழ்ச்சியடைந்தது 676 ல் ஒருங்கிணைந்த சில்லா நாட்டின் ஆட்சியின் கீழ் மற்ற நாடுகள் ஒன்றிணைக்கப்பட்டது.இக்காலத்தில் கொரியா மற்றும் சீனா இடையில் மிகவும் அமைதியான உறவு இருந்தது. இது 7-10 வது நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் வரை நீடித்தது. 13 ஆம் நூற்றாண்டில் மங்கோலியப் படையெடுப்பு மூலம் இது மிகவும் பாதிக்கப்பட்டது.1388 ல் மங்கோலியப் பேரரசு வீழ்ச்சிக்குப் பின்னர் ஜோசியான் வம்சம் நிலைபெற்றது. 1394 ல் ஜோசியான் நாட்டில் ஏற்ப்பட்ட அமைதியின்மை அரசியல் பிரச்சனைகளைத் தொடர்ந்து இதன் தலைநகரம் தெற்கு ஹான்யாங்கிற்கு (தற்கால சியோல்) மாற்றப்பட்டது. 1592–1598 வரையிலான காலகட்டத்தில் கொரியாவை கைப்பற்றும் எண்ணத்தில் இரண்டு முறை ஜப்பான் படையெடுபை முறியடித்தது. 17-19 நூற்றாண்டுகளில் சீனாவின் சார்ந்த தன்னிச்சையான நாடாக மாறியது. 1871 இல் காங்வா தீவில் அமெரிக்கப் படைகளுடன் ஏற்பட்டபோரில் 243 கொரிய வீரர்கள் கொல்லப்பட்ட பின் கொரியா ஜப்பான் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. 1910 ல் ஜப்பான் பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொரியா வந்தது. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஜப்பான் சரணடைந்ததை அடுத்து ஜப்பானிய ஆட்சி முடிவுக்கு வந்தது 1948 ல் வட மற்றும் தென் கொரியாக்கள் பிரிக்கப்பட்டன. 1950 ல் கொரிய போர் ஏற்ப்பட்டது 1953 ஆம் ஆண்டு ஒரு போர் நிறுத்த சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது. 1991 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையில் இவ்விரு நாடுகளுக்கும் அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. சமயம் இரண்டு கொரியாக்களுக்கும் பொதுவான சமயமாக பௌத்தம் நிலவுகிறது. அத்துடன் கன்பூசியம், கிறிஸ்தவம் போன்றனவும் கடைப்பிடிக்கப்படுகின்றன. 64.3 விழுக்காட்டினர் மதமற்றவர்களாகவும் 16 விழுக்காட்டினர் கொரிய சாமனிசம் என்ற சமயத்தையும் 13.5 விழுக்காட்டினர் சோண்டோயிசம் என்ற சமயத்தையும் 4.5 விழுக்காட்டினர் புத்த மதத்தையும் 1.7 விழுக்காட்டினர் கிறித்தவ சமயத்தையும் பின்பற்றுகிறார்கள். மத உரிமைகள் மதச் சடங்குகள் செய்யும் உரிமைகள் உள்ளன  இருப்பினும் வட கொரிய அரசு மதத்தை ஊக்குவிப்பதில்லை. வட கொரிய அரசு ஒரு நாத்திக அரசாக உள்ளது. வட கொரியாவில் மத தண்டனைகள் உள்ளது என ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் கூறியது. மொழி கொரிய மொழி வட கொரியா, தென் கொரியா இரண்டுக்கும் பொதுவாக உள்ளது. ஆனாலும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஒலிப்பு முறையில் சிறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. நிர்வாக அலகுகள் வட கொரியா ஒன்பது மாகாணங்களையும் மூன்று சிறப்புப் பிரிவுகளையும் கொண்டுள்ளது. மாகாணங்கள் சஹாங்-டூ வட ஹாம்கயாங் தெற்கு ஹாம்கயாங் வடக்கு க்வாங்கே தெற்கு க்வாங்கே காங்வோன்-டூ வடக்கு பியாங்கன் தெற்கு பியாங்கன் ரெயாங்கங்-டூ பிரிவுகள் கெசாங் தொழில் மண்டலம் கும்காங்க்சன் சுற்றுலா மண்டலம் சின்நியு சிறப்பு மண்டலம் நேரடி ஆட்சியின் கீழுள்ள நகரங்கள் பியாங்யாங் ராஸன் முக்கிய நகரங்கள் சின்நியுஜு]] கெசாங் நம்போ சோங்ஜின் வான்சன் சரிவான் ஹவுர்யோங் ஹம்ஹங் ஹேஜு காங்க்ஜி ஹெய்சான் கிம்சியாக் காங்க்சோ வெளி இணைப்புகள் - வட கொரியா பற்றி மேற்கோள்கள் பகுப்பு:கொரியா பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
வட கொரியாவின் தலைநகரம் எது
பியொங்யாங்
174
tamil
ba683e260
கலீலியோ கலிலி (Galileo Galilei; இத்தாலிய ஒலிப்பில்: கலிலேயோ கலிலே; 15, பிப்ரவரி 1564[3]– 8, சனவரி 1642), ஓர் இத்தாலிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியல் வல்லுநர், பொறியாளர், மற்றும் மெய்யியலாளர் ஆவார். இவர் பதினேழாம் நூற்றாண்டின் அறிவியல் புரட்சியில் மிக முதன்மையான பங்கை ஆற்றியுள்ளார். கலீலியோ "நோக்கு வானியலின் தந்தை",[4] "நவீன இயற்பியலின் தந்தை",[5][6] "நவீன அறிவியலின் தந்தை"[7] என்று பலவாறாகப் பெருமையுடன் அழைக்கப்படுகிறார். தொலைநோக்கி மூலம் வெள்ளியின் வெவ்வேறு முகங்களை உறுதி செய்தல், வியாழனின் நான்கு பெரிய நிலாக்களைக் (அவரது புகழைச் சொல்லும் வகையில் கலிலியின் நிலவுகள் என்று அழைக்கப்படுகின்றன) கண்டுபிடித்தல், சூரியப்புள்ளிகளை நோக்குதல் மற்றும் ஆராய்தல் ஆகியவை நோக்கு வானியலுக்கு இவர் அளித்த பெரிய பங்களிப்புகள் ஆகும். கலீலியோ பயனுறு அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் ஈடுபட்டு, மேம்படுத்தப்பட்ட இராணுவ திசைகாட்டி உட்பட பல்வேறு கருவிகளைக் கண்டுபிடித்துள்ளார். கலீலியோவின் சூரியமையக் கொள்கை அவரது வாழ்நாளில் பிறரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. நிறைய வானியலாளர்கள் இந்தக் கோட்பாட்டை எதிர்த்தனர். அக்காலத்தில், பெரும்பாலான வானியலாளர்கள் புவிமையக் கொள்கையையோ, தைக்கோனிக் அமைப்பையோ ஏற்றுக் கொண்டிருந்தனர்.[8] கலீலியோ பின்னர் தனது "இருவகை முதன்மை உலகக் கண்ணோட்டம் சார்ந்த உரையாடல்கள் " என்ற புத்தகத்தில் அவருடைய சூரியமையக் கொள்கைக்கு நிறைய சான்றுகளை அளித்தார். ஆனால் அது திருத்தந்தை எட்டாம் அர்பனைத் தாக்குவது போல் தோன்றியதால், புலன் விசாரிக்கப்பட்டு வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார். கலீலியோ தன் இறுதிக் காலம் முழுவதையுமே வீட்டுச்சிறையிலேயே கழித்தார்.[9][10] கலீலியோ இப்படி வீட்டுச்சிறையில் இருந்தபோது தான் தன் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றும் இறுதிப் படைப்புமான இரண்டு புதிய அறிவியல்கள் என்ற நூலை எழுதினார். தான் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடத்திய, தற்போது இயங்கியல், பொருட்களின் வலிமை என்று அறியப்படும் துறைகளைப் பற்றிய ஆய்வுகளை இந்த நூலில் தொகுத்து அளித்தார்.[11][12] இளமையும் குடும்பமும் கலிலீ, இத்தாலியில் (அப்போது பிளொரன்சு குறுமன்னராட்சியில் இருந்த) பிசா நகரில் 1564இல் பிறந்தார்;[1] புகழ்பெற்றிருந்த குழல் இசைக்கருவிக் கலைஞரும் இசையமைப்பாளருமான வின்சென்சோ கலிலி என்பவருக்கும் கியுலியா அம்மனாட்டிக்கும் ஆறு குழந்தைகளில் முதலாவதாகப் பிறந்தார். குழல் இசையைத் தந்தையிடமிருந்து கற்றுத் தேர்ந்தார். தந்தையிடமிருந்தே மேலும் நிறுவப்பட்டிருந்த கோட்பாடுகள் மீதான ஐயங்கள்,[13] நன்கு வரையறுக்கப்பட்ட சோதனை முடிவுகளின் மதிப்பு, கணிதமும் சோதனையும் இணைந்து உருவாக்கும் முடிவுகள் ஆகியவற்றின் மீது பிடிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். கலிலீயுடன் பிறந்த ஐவரில் மூவரே இளவயதைத் தாண்டினர். மிகவும் இளையவரான மைக்கேலேஞ்சலோ குழல் வாசிப்பதில் திறமை பெற்றிருந்தார்; இவரே கலிலியின் இளமைக்காலத்து நிதிச் சுமைப் பிரச்சினைகளுக்குக் காரணமாகவிருந்தார். தனது தந்தை உறுதியளித்திருந்த வரதட்சணையை மைக்கேலேஞ்சலோ தனது மனைவி குடும்பத்தாருக்குக் கொடுக்க இயலாது சட்ட வழக்குகளைச் சந்தித்தார். தவிரவும் தனது இசை முயற்சிகளுக்கும் சுற்றுலாக்களுக்கும் கலிலீயிடம் கடன் கேட்டவண்ணம் இருந்தார். இந்த நிதித் தேவையே கலிலீயை புத்தாக்கங்களை உருவாக்கி கூடுதல் வருவாய் ஈட்ட உந்துதலாக இருந்திருக்க வேண்டும். கலீலியோ கலிலீ எட்டாண்டுகள் இருந்தபோது இவரது குடும்பம் புளோரன்சிற்குக் குடிபெயர்ந்த போது, யகோபோ போர்கினியிடம் இரண்டாண்டுகள் விட்டுச் செல்லப்பட்டார்.[1] பின்னர் புளோரன்சிலிருந்து தென்கிழக்கே 35 கி.மீ. தொலைவில் உள்ள வல்லம்புரோசாவில் கமல்டோலெசு துறவியர்மடத்தில் கல்வி கற்றார்.[1] பெயர் கலிலீ என்ற குடும்பப் பெயர் கி.பி 1370 முதல் 1450 வரை பிளாரன்சில் மருத்துவராக வாழ்ந்த கலீலியோ போனலுத்தி என்ற முன்னோரின் பெயரில் இருந்து பெறப்பட்டதாகும். போனலுத்தி பல்கலைக்கழக ஆசிரியராகவும், அரசியலாளராகவும் திகழ்ந்தவர்; இவரின் வழிதோன்றிகள் குடும்பப் பெயரைப் போனலுத்தி என்பதிலிருந்து கலிலீ என 14 ஆம் நூற்றாண்டில் இருந்து அவருக்கு மதிப்புத் தர மாற்றிக்கொண்டனர்.[14] கலீலியோ போனலுத்தி, 200 ஆண்டுகட்குப் பின்னர் அவரது பெயர்பெற்ற பிறங்கடையான (வாரிசான) கலீலியோ கலீலி புதைக்கப்பட்ட அதே தேவாலயக் கல்லறையான பிளாரன்சு நகரத்தின் சாந்தா குரோசு பாசிலிக்காவில் புதைக்கப்பட்டுள்ளார். பதினாறாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் தசுக்கான் குடும்பங்களில் மூத்தமகனுக்குத் தந்தையாரின் பெயரைக் குடும்பப் பெயராக வைத்தல் பொதுவான வழக்கில் இருந்தது[15] - எனவே இவரது பெயர் கட்டாயமாக கலீலியோ போனலுத்தி என்ற முன்னோர் பெயரில் இருந்துதான் பெறப்பட்டிருக்கவேண்டும் என்பதில்லை. இத்தாலிய ஆண்பெயராக கலீலியோ வைக்கப்பட்டிருக்கலாம். (மேலும் குடும்பப் பெயராக அன்று விவிலியம் வழி பெயர்பெற்றிருந்த வடக்கு இசுரவேலின் நகரான கலிலீ, இலத்தீனில் கலீலியசு என்றால் கலிலீ சார்ந்த என்று பொருள், என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கலாம்)..[16][17] இவரது பெயர், குடும்பப் பெயர் ஆகியவற்றின் விவிலிய வேர்கள் 1614 இல் பின்வரும் கலீலியோ சார்ந்த நிகழ்வில் இரட்டுற மொழிதலுக்கு வழிவகுத்தன.[18] கலீலியோவின் எதிர்ப்பாளர்களில் ஒருவரான டொமினிக்கான் பாதிரியாரான தொம்மாசோ காச்சினி, கலீலியோவுக்கு எதிராக மிகவும் தாக்கம் விளைவித்த ஓர் உரையை ஆற்றினார் sermon. இதில் விவிலியத்தில் இருந்து Acts 1:11, "கலீலி நகரத்தவர்களே, ஏன் வானகத்தில் வந்து மலங்க மலங்க விழிக்கின்றீர்கள்?" எனும் மேற்கோளை எடுத்துரைத்தார்.[19] குழந்தைகள் உண்மையிலேயே உரோமனியக் கத்தோலிக்க இறையன்பு சான்றவராக இருந்தபோதிலும்,[20] கலீலியோ, மரீனா காம்பா என்பவரோடு மணம்புரியாமல் வாழ்ந்து மூன்று குழந்தைகட்குத் தந்தையானார். இவர்கட்கு வர்ஜீனியா (பிறப்பு 1600), இலிவியா (பிறப்பு 1601) என இருமகள்களும் வின்செஞ்சோ காம்பா (பிறப்பு 1606) என்று ஒரு மகனும் பிறந்தனர் .[21] சட்ட நடைமுறைக்கு மாறாக பிறந்ததால் இவர் தன் பெண்மக்கள் இருவரும் திருமணம் புரியத் தகுதியற்றவராகக் கருதினார். இல்லாவிட்டாலும் தன் உடன்பிறந்தவர்கட்கு நடந்ததைப் போலவே பேரளவு சீர்தரவேண்டிய நிதிநிலைச் சுமையை ஏற்கவேண்டும் .[22] இதற்கு மாற்றான பெண்மக்களின் வாழ்க்கை சமய வாழ்க்கையாகவே இருந்தது. இருபெண்களுமே ஆர்செட்ரியில் இருந்த சான் மாத்தியோ துறவுமடத்தால் கன்னித் துறுவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டனர். அங்கேயே தம் முழுவாழ்நாளையும் கழித்தனர்.[23] மடத்துள் வர்ஜீனியா மரியா செலெசுட்டே எனும் பெயரை ஏற்றார். இலிவியா அர்சஞ்சேலா எனும் பெயரை ஏற்றார்.. மரிய்ய 2 ஏப்பிரல் 1634 இல் இறந்தார். பிளாரன்சில் சாந்தா குரோசில் இருந்த பாசிலிக்கா எனும் கலீலியோவின் கல்லறையிலேயே அவருடன் புதைக்கப்பட்டார். இலிவியாவோ தன் வாழ்நாள் முழுவதும் உடல்நலமின்றியே வாழ்ந்துள்ளார். வின்செஞ்சோ பின்னர் கலீலியோவின் சட்டப்படியான மகனாக ஏற்பு பெற்று சேசுடில்லா போச்சினேரியை திருமணம் செய்துக் கொண்டார்.[24] அறிவியல் அறிஞராக கலிலியோ முதலில் பைசா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயிலத்தான் சேர்ந்தார்.[25] 1581 இல், அவர் மருத்துவம் படிக்கும்போது, ஒரு நாள், வளியோட்டங்கள் பெரிய, சிறிய அலைவுகளில் சரவிளக்கை தனி ஊசல் போல ஆடவைப்பதை கவனித்தார். தன்னுடைய இதயத்துடிப்பை வைத்துப்பார்க்கும்போது அந்த சரவிளக்கு பெரிய அலைவிலும் சிறிய அலைவிலும் ஓரலைவை ஒரே நேரம் எடுத்துக் கொள்வதைப் பார்த்தார். தனது வீட்டிற்கு திரும்பியதும் இரண்டு ஒரே நீளம் கொண்ட தனி ஊசல்களை வெவ்வேறு அளவில் அலையவிட்டுப் பார்க்கும்போது அவை இரண்டும் ஒரே நேர அளவில் அலைவதைக் கவனித்தார். இதன் பிறகுதான் கிறித்தியன் ஐகன்சு இந்த நெறிமுறையைப் பயன்படுத்தி ஒரு துல்லியமான கடிகாரத்தை உருவாக்கினார். இதுவரைக்கும் தன் வாழ்வில் தான் கணித படிப்பிலிருந்து தள்ளி இருந்துள்ளார். ஏனெனில் அக்காலத்தில் ஓர் இயற்பியலாளரை விட ஒரு கணிதவியலாளர் குறைந்த பணத்தையே ஈட்ட முடிந்துள்ளது. ஆனால் வடிவவியல் பற்றிய ஒரு சொற்பொழிவைக் கேட்டபிறகு தன் தந்தையைத் தன்னைக் கணிதம் படிக்க இசையவைத்தார். பிறகு அவர் வெப்பநிலைமானியின் முன்வடிவமைப்பை) உருவாக்கினார். 1586 இல் தான் கண்டுபிடித்த நீரியல் துலாவைப் பற்றி ஒரு புத்தகத்தை வெளியிட்டார். இதுதான் அவரை முதன்முதலாக அறிவியல் உலகிற்கு அறிமுகப்படுத்தியது. 1589 இல், இவர் பைசா நகரப் பல்கலைக்கழகத்தின் "கணிதக் கட்டிலுக்குப்" பேராசிரியராக அமர்த்தப்பட்டார். 1591 இல் கலிலியோவின் தந்தை இறந்தார். எனவே தம்பி மைக்கேலேஞ்சலோவைப் பார்த்துகொள்ளும் பொறுப்பையும் ஏற்றார். 1592 இல், கலிலியோ படுவா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1610 வரை அங்கு வடிவியல், இயக்கவியல், வானியல் ஆகிய துறைகளில் கல்வி பயிற்றுவித்தார். இந்த காலங்களில் கலிலியோ தூய அடிப்படை அறிவியல் (எடுத்துக்காட்டாக, இயக்கவியல், வானியல்) செயல்முறை அறிவியலில் (எடுத்துகாட்டாக, பொருட்களின் வலிமை, தொலைநோக்கியின் முன்னேற்றம் ஆகியவை இரண்டிலும்) நிறைய கண்டுபிடிப்புகளை உருவாக்கினார். கலீலியோவும் கெப்ளரும் ஓதக் கோட்பாடுகளும் பேராயர் பெல்லார்மைன் கோப்பர்நிக்கசுவின் சூரிய மையக் கோட்பாட்டமைப்பு எற்கப்பட வேண்டுமென்றால், முதலில் புறநிலையாக சூரியன் புவியைச் சுற்றவில்லை எனவும் புவிதான் சூரியனைச் சுற்றுகிறது எனவும் நிறுவிடவேண்டும் என்று 1615 இல் கூறினார்".[26] கலீலியோ புவி இயங்குவதை நிறுவிடும் புறநிலையான சான்றாகத் தன் ஓதக் கோட்பாட்டைக் கருதினார். இந்தக் கோட்பாட்டின் அருமையைக் கருதியே இருபெரும் உலக அமைப்புகள் பற்றிய உரையாடல் என்ற தன் நூலின் பெயரையே கடலோத உயரோதமும் பாய்வும் பற்றிய உரையாடல் என மாற்றினார்.[27] கலீலியோவின் வீட்டுச்சிறையாணைக்குப் பிறகு நூலின் தலைப்பில் இருந்து கடலோத மேற்கோள் நீக்கப்பட்டுவிட்டது. புவி தன் சாய்வான அச்சில் சூரியனைச் சுற்றிவரும்போது அதன் சுழற்சியில் அமையும் வேக ஏற்றமும் குறைவும் தான், கலீலியோவின் கருத்துப்படி, கடல்நீரில் ஏற்ற வற்றத்தை உருவாக்கி கடலோதங்களை உருவாக்குகின்றன.இவர் முதன்முதலில் தன் ஓதக் கோட்பாட்டை 1616 இல் பேராயர் ஆர்சினிக்கு அனுப்பிவைத்தார்.[28]இவர் கோட்பாடு தான் முதலில் ஓதங்களின் உருவளவின் மீதும் தோன்றும் நேரத்தின் மீதும் கடல்வடிவம் தரும் விளைவை நன்கு விளக்கியது; இவர் அட்ரியாட்டிக் கடல் நடுவில் ஓதமின்மையையும் முனைகளில் ஓதம் உருவாதலையும் சரியாகக் கூறினார். என்றாலும் ஓதங்களுக்கான பொதுக்கோட்பாடாகத் தோல்வியே கண்டது. இந்தக் கோட்பாடு சரியென்றால் ஒருநாளில் ஓர் உயரோதம் தன் ஏற்படவேண்டும். கலீலியோவும் மற்றவரும் இப்போதாமையை அறிந்தே இருந்தனர். வெனிசில் ஒருநாளில் இரு ஓதங்கள் 12 மணி நேர இடைவெளியில் ஏற்படுவதை அறிந்திருந்தனர். கலீலியோ இந்தப் பிறழ்வைப் புறக்கணித்ததோடு இந்நிலை கடல்வடிவம், கடலாழம் போன்ற பிற காரணிகளால் ஏற்படுவதாக்க் கூறினார்.[29]கலீலியோவின் இந்த வாதங்கள் பொய்யானவை என உறுதிப்படுத்திய அய்ன்சுட்டீன், கலீலியோ இந்த நயப்பான வாதங்களை உருவாக்கி சான்றின்றி ஏற்றது புவியின் சுழற்சியைப் புறநிலையாக நிறுவிடவே எனும் கருத்தையும் வெளியிட்டார்.[30] நிலா ஈர்ப்பு விசை தான் கடலோதங்களை ஏற்படுத்துகிறது என்ற அவரது சமகாலத்தவரான யோகான்னசு கெப்ளரின் கருத்தைக் கலீலியோ புறக்கணித்தார்.[31] (மேலும் கெப்ளரின் கோள்களின் நீள்வட்ட வட்டணைகளில் கலீலியோ ஆர்வம் காட்டவில்லை.)[32][33] வால்வெள்ளிகள் குறித்த முரண்பாடும் மதிப்பிடுதல் நூலும் கலீலியோ 1619 இல் இயேசுசார் உரோமனோ கல்லூரியில் கணிதவியல் பேராசிரியராகவிருந்த ஒராசியோ கிராசியுடன் முரண்பட நேர்ந்துள்ளது.முதலில் இது வால்வெள்ளிகளின் தன்மை குறித்த விவாதமாகத் தொடங்கி, கலீலியோ தன் மதிப்பீடு நூலை 1623 இல் வெளியிட்டதும், கடைசியில் இவ்விவாதம் விரிவடைந்து, அறிவியலின் தன்மை குறித்த முரண்பாடாக முற்றியுள்ளது. நூலின் முதல் பக்கம் இவரை தசுக்கனி பேரரசின் முதன்மைக் கணிதவியலாளராகவும் மெய்யியலாளராகவும் குறிப்பிடுகிறது. மதிப்பிடு நூலின் அறிவியல் நடைமுறை பற்றிய கலீலியோவின் வளமான எண்ணக் கருக்கள் செறிந்திருந்ததால், இது அவரது அறிவியல் கொள்கை அறிக்கையாகவே கருதப்படுகிறது.[34] பாதிரி கிராசி 1619 இன் தொடக்கத்தில், 1618 ஆம் ஆண்டின் மூன்று வால்வெள்ளிகள் குறித்த வானியல் விவாதம் எனும் சிறுநூலைப் பெயரின்றி வெளியிட்டார்.[35] இது முந்தைய ஆண்டு நவம்பரில் தோன்றிய வால்வெள்ளியின் தன்மையைக் குறித்து அலசியது. அதில் கிராசி வால்வெள்ளி புவியில் இருந்து நிலையான தொலைவுள்ள பெருவட்டத்தில் இயங்கும் நெருப்பு வான்பொருளாகும் எனும் முடிவை வெளியிட்டிருந்தார்.[36] மேலும் இது நிலாவை விட மெதுவாக இயங்குவதால் இது நிலாவை விட நெடுந்தொலைவில் அமைந்திருக்கவேண்டும் எனவும் அறிவித்திருந்தார். சூரிய மைய நிலைப்பாடு குறித்த முரண்பாடு இறப்பு சூரியனை மையமாகக் கொண்டு புவியும் மற்ற கிரகங்களும் சுற்றுகிறது என்ற கிறித்தவ சமய நம்பிக்கைகளுக்கு எதிரான உண்மையை மக்களிடையே வெளிப்படுத்தியமைக்காக 1642 முதல் இறக்கும் வரை கத்தோலிக்க திருச்சபையால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் இவர் காய்ச்சலும் இதய குலைவும் கண்டு 1642 ஜனவரி 8 இல் தன் 77 ஆம் அகவையில் இறந்தார்.[11][37] தசுக்கனியி பேரரசரான இரண்டாம் பெர்டினாண்டோ, இவரது தந்தையும் முன்னோரும் அடக்கம் செய்யப்பட்டுள்ள சாந்தா குரோசில் உள்ள பாசிலிக்காவில் முதன்மைப் பகுதியில் அடக்கம் செய்து ஒரு சலவைக்கல் நினைவுச் சின்னமும் எழுப்பிட விரும்பினார்.[38] கத்தோலிக்கத் தேவாலயத்தால் இவரது கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக கலீலியோ கண்டிக்கப்பட்டவர் என்பதால், எட்டாம் உர்பன் போப்பும் பேராயர் பிரான்செசுகோ பார்பெரினியும் எதிர்க்கவே இத்திட்டம் கைவிடப்பட்டது.[39][40] மாற்றாக இவர் பாசிலிக்காவின் தென்வளாகத்துக்கு அருகில் அமைந்த நோவிசெசு கல்லறைத் தோட்டத்திற்கு அண்மையில் ஒரு சிறிய அறையில் புதைக்கப்பட்டார் from the southern transept of the basilica to the sacristy.[41] இவருக்கு மதிப்பு தர பாசிலிக்கா கல்லறையில் நினைவுச் சின்னம் எழுபப்பட்டதும் இவரின் முழு உடலும் அங்கே 1737 இல் மீள அடக்கம் செய்யப்பட்டது;[42] இந்நிலையில் இவர் உடலில் இருந்து மூன்று விரல்களும் ஒரு பல்லும் நீக்கப்பட்டன.[43] இம்மூன்றில் ஒன்றான வலது கை நடுவிரல் பிளாரன்சில் உள்ள கலீலியொ அருங்காட்சியகத்தில் இப்போது வைக்கப்பட்டுள்ளது.[44] அறிவியல் முறைகள் கலீலியோ செய்முறைகளாலும் கணிதவியலின் துனைகொண்டும் இப்புதுமை வாய்ந்த சேர்க்கை வாயிலாக இயக்கம் பற்றிய அறிவியலுக்குப் பெரும்பங்களிப்பு செய்துள்ளார்.[45] அக்கால அறிவியலின் வகைமை, காந்தமும் மின்சாரமும் குறித்த வில்லியம் கில்பர்ட்டின் பண்பியலான ஆய்வுகளாலேயே வறையறுக்கப்பட்டிருந்தது. இசைக்கலைஞரும் இசைக்கோட்பாட்டாளருமான கலீலியோவின் தந்தையார் வின்செஞ்சோ கலிலீ செய்முறைகள் வாயிலாக முதன்முதலில் இயற்பியலின் நேரியல்பற்ற உறவைக் கண்டறிந்து வெளியிட்டுள்ளார்: ஒருநீட்டிய சரத்தின் (கம்பியின்) உரப்பு இழுப்பின் சதுர (குழிப்பு அல்லது இருபடி) வேராக அமைதலைச் செய்முறையால் அவர் நிறுவினார்.[46] கலீலியோ தான் இயற்பியல் விதிகளை மிகத் தெளிவாக கணிதவியலாக விளக்கிய முதல் அறிவியலாளர் ஆவார். வானியல் கலிலியோ 1609 இல் 3x உருப்பெருக்கல் கொண்ட ஒரு தொலைநோக்கியை உருவாக்கினார். அதன் பின்னர் அவர் 30x உருபெருக்கல் வரை கொண்ட தொலைநோக்கிகளை உருவாக்கினர்.[47] ஒரு கலிலியன் தொலைநோக்கி மூலம் பார்வையாளர் பெரிதான நிமிர்ந்த படங்களை பார்க்க முடியும். கலிலியோ இதை வானத்தை ஆராய பயன்படுத்தினார். அந்த காலத்தில் இந்த தேவைக்கான நல்ல தொலைநோக்கிகளை உருவாக்கக்கூடிய வெகு சிலரில் அவர் ஒருவர். 25 ஆகஸ்ட் 1609 இல், அவர் வெனிஸ் நகர சட்டமியற்றுபவர்களிடம் சுமார் 8 அல்லது 9 உருப்பெருக்கல் கொண்ட தன் தொலைநோக்கியை விவரித்தார். அவரது தொலைநோக்கிகளை கலிலியோ கடல்வணிகர்களுக்கு அளித்து பணம் ஈட்டினார். அவ்வணிகர்கள் அத்தொலைநோக்கிகளை கடலில் நன்கு பயன்படுவதாக பார்த்தனர். அவர் சைட்ரஸ் நுன்சியஸ் (விண்மீன்கள் தூதன்) என்ற தலைப்பில் ஒரு சிறிய ஆய்வு கட்டுரையில் மார்ச் 1610 இல் தனது ஆரம்ப தொலைநோக்கி வானியல் ஆய்வுகளை வெளியிட்டார். வியாழன் 7 ஜனவரி 1610 இல் கலிலியோ வியாழனுக்கு அருகில் மூன்று நட்சத்திரங்களை கண்டார். அதற்கடுத்த இரவுகளில் இந்த "நட்சத்திரங்கள்" வியாழனுக்கு ஒப்பிடும்போது நகர்கின்றன என்பதை கவனித்தார்.ஆதலால் அவைகள் நிலையான நட்சத்திரங்கள் அல்ல என்று கண்டறிந்தார். 10 ஜனவரியில் அவற்றில் ஒன்று மறைந்துவிட்டதை அவர் கண்டார். அது வியாழனின் பின் மறைந்திருக்கவேண்டும் என்று அவர் எண்ணினார். ஆதலால் அம்மூன்றும் வியாழனின் நிலாக்களாக இருக்கவேண்டும் என்பதை அவர் கண்டார். அவர் ஜனவரி 13 ஆம் தேதி நான்காவது வியாழனின் நிலாவை கண்டறிந்தார். பிறகு வானவியலாளர்கள் இந்நான்கு நிலைகளையும் கலிலியன் நிலாக்கள் என்று அவர் பெருமையில் பெயரிட்டனர். இந்த நிலாக்கள் தற்போது ஐயோ, ஐரோப்பா, கேனிமெட் மற்றும் கால்லிச்டோ என்று அழைக்கப்படுகின்றன. வியாழன் கோளைப் பற்றிய தனது இந்த கவனிப்புகள் வானவியலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் அதுவரை அனைத்து வானியல் பொருட்களும் பூமியையே சுற்றுகின்றன என்ற அரிஸ்டாட்டிலின் கருத்தே உலகில் மேலோங்கியிருந்தது. மேலும் முதலில் நிறைய வானவியலாளர்கள் இதை நம்ப மறுத்தனர். தனது ஆய்வுகள் கிறிஸ்டோபர் க்ளவியசின் ஆய்வுமையத்தால் சரி என்று கூறப்பட்டது. அதன் பின்னர் 1611 இல் ரோமுக்கு சென்ற போது அவர் ஒரு நாயகனின் வரவேற்பு பெற்றார்.[48] கலிலியோ அடுத்த பதினெட்டு மாதங்களில் செயற்கைக்கோள்களை கண்காணித்து தொடர்ந்து, 1611 இன் மத்தியில் அவர் அவை குறித்த குறிப்பிடத்தக்க துல்லியமான மதிப்பீடுகளை பெற்றார். கெப்லெர் இத்தகைய காரியம் சாத்தியமே இல்லை என்று எண்ணினார். சூரியனின் கரும்புள்ளிகள் கலிலியோ சூரியனின் கரும்புள்ளிகளை கவனித்த முதல் ஐரோப்பியர்களில் ஒருவர் ஆவார். கெப்லர் அறியாமல் 1607 இல் இதை கண்டார். ஆனால் அப்போது அவர் அதை மெர்குரி என எண்ணினார். அவர் முன்னர் மெர்குரி என்று சார்லிமேக்னி காலத்தில் தவறாக கருதப்பட்ட ஒரு அவதானிப்பை அது உண்மையில் சூரியனின் கரும்புள்ளி என கூறினார். சூரியனின் கரும்புள்ளிகளின் இடமாற்றம் சூரியன் சுழல்கிறது என்ற கெப்லரின் கூற்றை ஆதரித்தது. மேலும் பிரான்செஸ்கோ சிச்சியின் கரும்புள்ளி மீதான கவனிப்புகள் ப்டோலேமியின் வானியல் கூற்றுகளை தகர்த்தது. நிலா தனது தொலைநோக்கி மூலம் தாமஸ் ஹாரியட் (ஒரு ஆங்கிலேய கணிதவியலாளர் மற்றும் ஆய்வாளர்) ஏற்கனவே நிலாவில் வெளிச்சம், அது ஒரு கச்சிதமான உருண்டையாக இருந்திருந்தால் எப்படி பரவ வேண்டுமோ அப்படி பரவவில்லை என்பதை கண்டார். ஆனால் தனது அறியாமையால் அதை சரியாக புரிந்துகொள்ளாமல் போய்விட்டார். கலிலியோவோ அவ்வெளிச்சத்தின் பரவலில் இருக்கும் மாறுதல்களை சரியாக நிலாவில் மலைகளும் குழிகளும் உள்ளன என்று புரிந்துகொண்டார். தனது ஆய்வில் அவர் நிலாவின் டாப்பலாஜிக்கல் வரைபடங்களை வரைந்தார். மேலும் நிலாவின் மலைகளின் உயரத்தை கணிக்கவும் செய்தார். நிலவு நீண்ட காலமாக அரிஸ்டாட்டில் கூறியபடி ஒரு அருமையான உருண்டை அல்ல என்பது அப்போது தெரியவந்தது. வெள்ளி, சனி, மற்றும் நெப்டியூன் செப்டம்பர் 1610 முதல், கலிலியோ வெள்ளி நிலவை ஒத்த பரிமாணங்களை காட்டின என்பதை கவனித்தார். நிக்கோலஸ் கோப்பர்நிக்கசால் உருவாக்கப்பட்ட சூரியமைய மாதிரி சூரியனை சுற்றி வீனஸ் சுற்றுவதனால் அதன் அனைத்து நிலா போன்ற பரிமாணங்களையும் பார்க்க முடியும் என்று கூறுகிறது. ஆனால் ப்டாலமியின் பூமிமைய மாதிரி மூலம் இதை விவரிக்க முடியாது. ஆதலால் இதன் மூலம் பூமிமைய கொள்கை தகர்க்கப்பட்டது. ஆனாலும் முழு சூரியமைய கொள்கை தேவையில்லாமல் பாதி சூரியமைய மற்றும் பாதி பூமிமைய கொள்கை கொண்டும் இதை விளக்கமுடியும். ஆதலால் நிறைய வானவியலாளர்கள் முதலில் பாதி சூரியமைய மற்றும் பாதி பூமிமைய கொள்கைக்கு மாறி பின்னர் வேறு பிற வாதங்களின் விளைவாக முழு சூரியமைய கொள்கைக்கு மாறினார். கலிலியோ சனி கிரகத்தை கவனித்தார், மேலும் முதலில், அதன் வளையங்களை தவறாக கிரகங்கள் என எண்ணினார். கலிலியோ 1612 இல் நெப்டியூன் கிரகத்தை பார்த்தார். அது மங்கலான நட்சத்திரங்களில் ஒன்றாக அவரது கையேடுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவருக்கு அது ஒரு கிரகம் என்று தெரியவில்லை, ஆனால் அவர் அதை கண்காணிப்பதை இழப்பதற்கு முன் நட்சத்திரங்களுக்கு ஒப்பிடும் போது அது நகர்கிறது என்ற கவனிப்பை ஏற்படுத்தியிருந்தார். தொழில்நுட்பம் 1595 மற்றும் 1598 க்கு இடையில், கலிலியோ ஒரு வடிவவியல் மற்றும் இராணுவ திசைகாட்டியை உருவாக்கினார். இராணுவ வீரர்களுக்கு இது பீரங்கிகளை சரியாக உயர்த்துவது மட்டுமல்லாமல் எவ்வளவு வெடி மருந்து தேவை என்பதை நிர்ணயிக்கவும் பயன்பட்டது. 1593இல் கலிலியோ ஒரு வெப்பமானி உருவாக்கினார். ஒரு விளக்கில் உள்ள காற்றின் விரிவடைதல் மற்றும் சுருங்குதலை பயன்படுத்தி அதனுடன் இணைக்கப்பட்ட குழாயில் நீரில் இயக்கத்தை உருவாக்கி இச்செயலை அவர் சாத்தியமாக்கினார். விழும் பொருட்கள் கலிலியோவின் மாணவர் வின்சென்சோ விவியாணி கலிலியோவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அதில் வெவ்வேறு எடை கொண்ட பொருட்களை அவர் பைசாவின் சாய்ந்த கோபுரத்தில் இருந்து விழச்செய்து அவை இரண்டும் கீழே வர ஒரே நேரம் எடுத்துக்கொள்கின்றன என்பதை காட்டினார். இது அரிஸ்டாட்டிலின் பொருட்கள் விழ எடுத்துக்கொள்ளும் நேரம் அவைகளின் எடையை பொருத்து அமையும் என்ற கூற்றை பொய்ப்பித்தது. கலிலியோ ஒரு பொருள் விழும் போது அது வெற்றிடத்தில் விழுந்தால் அது சீரான வேகமாற்றத்துடன் விழும் என்று அனுமானித்திருந்தார். மேலும் ஓய்வில் இருந்து ஆரம்பித்து சீரான வேகவளர்ச்சியில் செல்லும் ஒரு பொருளுக்கான இயக்கவியல் விதியை (d ∝ t 2) கலிலியோ சரியாக கணித்திருந்தார். மேலும் இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய தூய துறைகளில் நிறைய பங்களிப்புகள் வழங்கியிருக்கிறார். இவற்றையும் பார்க்க தொலைநோக்கி கலிலியோ விண்கலம் கலிலியின் நிலவுகள் அரிசுட்டார்க்கசு உசாத்துணை பகுப்பு:இத்தாலிய அறிவியலாளர்கள் பகுப்பு:1564 பிறப்புகள் பகுப்பு:1642 இறப்புகள் பகுப்பு:கலிலியோ கலிலி பகுப்பு:இத்தாலிய வானியலாளர்கள் பகுப்பு:நிலா கண்டுபிடிப்பாளர்கள் பகுப்பு:இத்தாலிய இயற்பியலாளர்கள்
வெப்பமானி எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
1593
17,167
tamil
e7dce8a1c
அண்ணா நூற்றாண்டு நூலகம், தமிழக மக்களால் அன்புடன் "அண்ணா" என்றழைக்கப்படும் முன்னாள் தமிழக முதலமைச்சர் சி. என். அண்ணாதுரையின் 102வது பிறந்த தினத்தை முன்னிட்டு, 2010ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் தேதியன்று அந்நாள் தமிழக முதலமைச்சர் டாக்டர். மு.கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. ஆசியாவின் பெரிய நூலகங்களில் முதன்மையான அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கால்கோள் விழா முன்னாள் தமிழக முதல் அமைச்சர் டாக்டர். மு.கருணாநிதியால் 2008ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 16ஆம் நாள் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கப்பட்டது. நூல்கள் மற்றும் கற்பதில் அண்ணா கொண்ட பற்று மற்றும் தீராத ஆர்வத்தை மரியாதை செய்யும் பொருட்டும், அவரது நூற்றாண்டை நினைவுறுத்தும் விதமாகவும் "அண்ணா நூற்றாண்டு நூலகம்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. 3.75 லட்சம் சதுர அடி பரப்பில் அமைந்துள்ள நூலகம் தரைத்தளம் நீங்கலாக 8 தளங்களைக் கொண்டது. தற்சமயம் பல்வேறு துறை சார்ந்த 5 லட்சம் புத்தகங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள நூலகம், மிகவும் குறுகிய காலத்தில் 12 லட்சம் புத்தகங்களாக அதிகரிக்கும் நோக்கத்துடன் இயங்குகிறது. இது தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். நூலகத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக "உலக இணைய மின் நூலகத்துடன்" (World Digital Library) இணைக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் 31 மாவட்ட நூலகங்களையும் கன்னிமரா நூலகத்துடன் இணைக்கும் கணினி இணைப்பு தற்போது செயலாக்கத்தில் உள்ளது. இந்த அனைத்து இணைப்புகளும் "அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன்" இணைக்கப்படும். நூலக அமைப்பு அண்ணா நூற்றாண்டு நூலகம் ஒன்பது தளங்களுடன் பிரம்மாண்டமாக செயல்படுகிறது. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் என்ற பெருமையுடன் தமிழகத்திற்கு அழகு சேர்க்கிறது. மேலும் இந்நூலகம் சர்வதேச தரத்துடன் அமைந்துள்ளதால் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து அனைத்து தரப்பு மக்களும் வருகை தருகிறார்கள். இந்நூலகத்தின் ஒவ்வொரு தளமும் தனிச் சிறப்புடன் விளங்குகிறது. சொந்த நூல்கள் பயன்படுத்தும் பிரிவு: பயனாளர்கள் தங்கள் சொந்த நூல்கள் மற்றும் மடிக்கணினிகளைக் கொண்டு வந்து படிப்பதற்கான தனி பிரிவு உள்ளது. உரிய அனுமதியுடன் வாசகர்கள் தங்கள் புத்தகங்களைக் குறிப்பிட்ட பகுதிக்குள் பயன்படுத்தலாம். மெய்ப்புல அறைகூவலர் பிரிவு: மெய்ப்புல அறைகூவலர் பிரிவில் பார்வையற்றோர்களுக்காகச் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இப்பிரிவில் மெய்ப்புல அறைகூவலர்கள் தங்களின் கல்வி தாகத்தைப் போக்கிக்கொள்ளலாம். இப்பிரிவில் 500 க்கும் மேற்பட்ட பிரைய்லி புத்தகங்களும், 400 க்கும் மேற்பட்ட குறுந்தகடுகளும் உள்ளன. நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் பிரிவு: நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் பிரிவில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கில் பல நாளிதழ்களும், பருவ இதழ்களும் உள்ளன. தமிழில் வெளியிடப்படும் அனைத்து பருவ இதழ்களும் இங்கு உள்ளது என்பது தனிச்சிறப்பு. கல்வி, கலை, இலக்கியம், பண்பாடு, அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு, சமயம், மருத்துவம் மற்றும் பொழுதுபோக்கு சம்மந்தமான பருவ இதழ்களும் உள்ளன. உள் நாடு மற்றும் வெளி நாடுகளிலிருந்தும் பருவ இதழ்கள் பெறப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு பருவ இதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் என்று பகுக்கப்பட்டு எளிய முறையில் அலமாரியில் வைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக பழைய நாளிதழ்களும், பருவ இதழ்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. குழந்தைகள் பிரிவு: முதல் தளத்தில் 15000 சதுர அடிப் பரப்பில் குழந்தைகளுக்கென்று உருவாக்கப்பட்ட நூற்பிரிவு அமைந்துள்ளது. இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் அவர்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் தருவிக்கப்பட்ட ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் குழந்தைகளுக்காகத் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. இப்பிரிவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள். பொதுமக்களும் பார்வையாளர்களாக வந்து செல்லலாம். குழந்தைகள் பிரிவின் நுழைவாயிலின் எதிர்புறம் இயற்கை எழில் கொஞ்சும் செயற்கை மரமும், அதில் அமர்ந்திருக்கும் பறவைகளும் மற்றும் குரங்குகளும் காண்போரை மகிழ வைக்கின்றன. குழந்தைகள் கலை நிகழ்ச்சிக்கென்று சிறிய மேடையும் அமைக்கப் பட்டுள்ளது. இப்பிரிவில் வைக்கப்பட்டுள்ள நூல்கள் குழந்தைகளின் படிக்கும் ஆர்வத்தை மேலும் மேலும் தூண்டுபவையாகவும் உள்ளன. இங்கு வைக்கப்பட்டுள்ள கணினிகளின் வழியாக குழந்தைகள் நீதிக் கதைகள் கேட்கவும், விரும்பும் விளையாட்டுகளை விளையாடவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ் நூல்கள் பிரிவு: இரண்டாவது தளத்தில் தமிழ் நூல்கள் அ மற்றும் ஆ என இரண்டு பிரிவுகளாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. 'அ' பிரிவில், அண்ணா எழுதிய மற்றும் அண்ணாவைப் பற்றிய நூல்கள், பெரியாரின் நூல்கள், பொது அறிவு நூல்கள், கணினி அறிவியல், கலைக் களஞ்சியம், தொகுப்பு நூல்கள், இதழியல், தத்துவம் மற்றும் உளவியல், சுய முன்னேற்ற நூல்கள், சமய நூல்கள், ஆன்மீகம், சமூகவியல், அரசியல், பொருளியல், சட்டம், வணிகவியல், மொழியியல், நாட்டுப்புறவியல், தமிழ் அகராதி, இலக்கண நூல்கள், அறிவியல், வானியல், கணிதவியல், தொழில் நுட்பவியல்,மருத்துவம், பொறியியல், வேளாண்மை, நுண்கலைகள், திரைப்படவியல், விளையாட்டு பற்றிய அனைத்து நூல்களும் உள்ளன. 'ஆ' பிரிவில், சங்க இலக்கிய நூல்கள், சிற்றிலக்கியங்கள், கவிதைகள், கதைகள், கட்டுரைகள், சிறு கதைகள், புதினம், நாடகம், பயணக் கட்டுரைகள், கடிதங்கள், நகைச்சுவை நூல்கள், வாழ்க்கை வரலாறு, இலங்கைத் தமிழர் வரலாறு, புவியியல் மற்றும் அரிய நூல்கள் போன்றவை மிகச்சிறந்த முறையில் பகுத்து வைக்கப்பட்டுள்ளன. ஆங்கில நூல்கள் பிரிவு: மூன்றாவ‌து முத‌ல் ஏழாம் த‌ள‌ம் வரை ஆங்கில‌ நூல்க‌ள் பாட‌ வாரியாக‌ ப‌குத்து வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன. மூன்றாவது தளத்தில் ஆங்கில மொழியிலான பல புத்தகங்கள் உள்ளன. பொது அறிவு, கணினி அறிவியல், நூலகம் &amp; தகவல் அறிவியல், தத்துவம், உளவியல், அற இயல் மற்றும் மதம், சமூகவியல், புள்ளியியல், மற்றும் அரசியல் தொடர்பான நூல்கள் உள்ளன. நான்காவது தளத்தில் பொருளியல், சட்டம், பொது நிர்வாகம், கல்வி, வணிகவியல், மொழியியல், மற்றும் இலக்கியம் தொடர்பான நூல்கள் உள்ளன. ஐந்தாவது தளத்தில் பொது அறிவியல், கணிதவியல்,, வானவியல், இயற்பியல், வேதியியல், புவியமைப்பியல், உயிரியல், மற்றும் மருத்துவம் தொடர்பான நூல்கள் உள்ளன. ஆறாவது தளத்தில் பொறியியல், வேளாண்மை, உணவியல், மேலாண்மை, கட்டிடக்கலை, நுண்கலை, மற்றும் விளையாட்டு தொடர்பான நூல்கள் உள்ளன. ஏழாவது தளத்தில் வரலாறு, புவியியல், வேதியியல், சுற்றுலா &amp; பயண மேலாண்மை மற்றும் வாழ்க்கை வரலாறு தொடர்பான நூல்கள் உள்ளன. ஏழு தளங்கள் உள்ளன. படக் காட்சியகம் முகப்பு இலச்சினையற்ற முகப்பு இலச்சினையுடன் கூடிய முகப்பு அண்ணா நூற்றாண்டு நூலக, தள விவரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முன்தோற்றம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கல்வெட்டு சர்ச்சை நவம்பர் 2, 2011 அன்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் நூலகம் கல்லூரிச் சாலையிலுள்ள டி.பி.ஐ. வளாகத்திற்கு மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் அமைக்கப்படும் அம்மருத்துவமனை இந்தியாவிலேயே முதல்முறையாக குழந்தைகளுக்கான மருத்துவமனை என்று அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. அரசின் இம்முடிவை எதிர்த்து மூவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கு விசாரணை நவம்பர் 4, 2011 அன்று நடைபெற்றது. இதில் உயர்நீதிமன்றம் அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதித்து அரசின் பதிலை எதிர்பார்த்து அறிக்கை அனுப்பி வழக்கை ஆறு வாரங்கள் தள்ளிவைத்தது.[1] அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 2012 செப்டம்பர் 9ம் தேதி திருமண விழா நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.[2] அதே போன்று நூலகத்தை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையாக மாற்றவும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.[3] மேலும் பார்க்க கன்னிமாரா பொது நூலகம் வெளியிணைப்புகள் மேற்கோள்கள் பகுப்பு:சென்னை கட்டிடங்கள் பகுப்பு:தமிழ் நூலகங்கள் பகுப்பு:தமிழ்நாட்டு நூலகங்கள் பகுப்பு:தமிழ்நாடு அரசின் அமைப்புகள் பகுப்பு:சென்னை நூலகங்கள்
அண்ணா நூற்றாண்டு நூலகம் எங்கு உள்ளது?
தமிழகத்திற்கு
1,540
tamil
de2d1e19a
பேரரசன் அலெக்சாந்தர் அல்லது மகா அலெக்சாண்டர் (Alexander the Great, கிரேக்கம்: Αλέξανδρος ο Μέγας அல்லது Μέγας Aλέξανδρος,[1] Megas Alexandros; சூலை 20, கிமு 356 - சூன் 10/ 11, கிமு 323), கிரேக்கத்தின்[2][3] பகுதியான மக்கெடோனின் பேரரசர் (கிமு 336–323). மக்கெடோனின் மூன்றாம் அலெக்சாண்டர் எனவும் இவர் அழைக்கப்படுகிறார். உலக வரலாற்றில் பெரும் வெற்றிகளைப் பெற்ற இராணுவத் தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இவர் ஈடுபட்ட எந்தப் போரிலும் தோல்வியடைந்ததில்லை எனவும் சொல்லப்படுகிறது. இவரது காலத்தில் பண்டைய கிரேக்கர்களுக்குத் தெரிந்த உலகின் பெரும் பகுதியைக் கைப்பற்றி ஆண்டார். அலெக்சாந்தர் அவரது தந்தை இரண்டாம் பிலிப் இறந்த பின்னர் மக்கெடோனின் மன்னனாக முடிசூடிக்கொண்டார். பிலிப் மன்னன் பண்டைய கிரேக்கப் பெருநிலப்பரப்பைச் சேர்ந்த பல நகரங்களை மக்கெடோனிய ஆட்சியின் கீழ் ஒன்றிணைத்தார். அலெக்சாந்தர் கிரேக்கத்தின் தெற்குப்பகுதி நகரங்களை முறியடித்து அவைகளை மக்கெடோனிய ஆட்சியின் கீழ் இணைத்தார். பின்னர் கிழக்குப் பகுதியில் அக்கீமனிட் பாரசிகப் பேரரசைக் கைப்பற்றினார். இவர் அனதோலியா, சிரியா, பினீசியா, காசா, எகிப்து, பாரசீகம், பாக்திரியா, மெசொப்பொத்தேமியா ஆகிய நாடுகளைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல், தனது பேரரசின் எல்லைகளை இந்தியாவின் பஞ்சாப் வரை நீட்டியிருந்தார். இறப்பதற்கு முன்பே, அரேபியக் குடாநாட்டுக்குள் தனது வணிக நடவடிக்கைகளையும், படை நடவடிக்கைகளையும் விரிவாக்குவதற்குத் திட்டமிட்டிருந்தார். இதன் பின்னர் மேற்கே கார்த்தேஜ், ரோம், ஐபீரியக் குடாநாடு ஆகியவற்றை நோக்கிச் செல்லவும் அவரிடம் திட்டம் இருந்தது. அலெக்சாந்தர் பல வெளிநாட்டவர்களைத் தனது படையில் சேர்த்திருந்தார். இதனால் சில அறிஞர்கள் இவர் இணைப்புக் கொள்கையைக் கடைப்பிடித்தார் என்றனர். தனது படை வீரர்களையும், பிற நாட்டுப் பெண்களை மணம் செய்யுமாறு ஊக்கப்படுத்தினார். அவரும் கூட இரண்டு வெளிநாட்டு இளவரசிகளை மணம் செய்தார். பன்னிரண்டு ஆண்டுகாலத் தொடர்ச்சியான படை நடவடிக்கைகளுக்குப் பின்னர் அலெக்சாந்தர் காலமானார். இவரது இறப்புக்கான காரணம் தெளிவில்லை. மலேரியா, நஞ்சூட்டல், தைபோய்ட்டுக் காய்ச்சல், வைரஸ் தொற்று போன்ற ஏதாவது ஒன்றால் அல்லது அளவு மீறிய குடிப்பழக்கத்தால் இறந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. அலெக்சாந்தரின் விரிவாக்கங்களும், மரபுரிமைப் பேறுகளும் (legacy) அவர் இறந்து பலகாலங்களின் பின்னரும் நிலைத்திருந்ததுடன், தொலைதூர இடங்களிலும், கிரேக்கக் குடியேற்றங்களும், அதன் பண்பாட்டுச் செல்வாக்கும் பல நூற்றாண்டுகள் நீடிப்பதற்கு உதவின. இக்காலம் ஹெலெனிய காலம் எனப்படுவதுடன், இது கிரேக்கம், மையக்கிழக்கு, இந்தியா ஆகியவற்றின் ஒரு கலப்புப் பண்பாடாக விளங்கியது. தொடக்க காலம் வம்சாவழி மற்றும் குழந்தைப்பருவம் அலெக்சாண்டர் பண்டைய கிரேக்க நாட்காட்டியின் மாதமான ஹெகடோம்பியன் மாதத்தில் ஆறாம் நாள் (தற்போதைய நாட்காட்டியில் தோராயமாக கிமு 356 ஆம் ஆண்டு சூலை மாதம் 6 ஆம் நாள்) அன்று பண்டைய கிரேக்கப் பேரரசின் மக்கெடோனின் தலைநகர் பெல்லாவில் அவரது தந்தை இரண்டாம் பிலிப்பின் நான்காம் மனைவி ஒலிம்பியாசுக்கும் பிலிப்புக்கும் மகனாக பிறந்தார். இவரது தாயார் ஒலிம்பியாசின் தந்தை எபிராஸ் நாட்டின் அரசர் நியாப்டோலேமஸ் ஆவார். இவரது தந்தை இரண்டாம் பிலிப்பிற்கு ற்கு ஏழு அல்லது எட்டு மனைவிகள் இருந்த போதிலும் இவரது தாயார் ஒலிம்பியாஸ் மூலம் மட்டுமே சட்டப்பூர்வ வாரிசு உண்டு. பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியர் புளூட்டாக்கின் கூற்றுப்படி அலெக்சாண்டரை சுற்றிலும் அவரது குடும்பத்தில் பல்வேறு சகாப்தம் படைத்த மாவீரர்கள் இருந்துள்ளனர் என்று தெரியவருகிறது. அலெக்சாண்டரின் இளமைப்பருவத்தில் அவர் ஒரு செவிலியரால் வளர்க்கப்பட்டார். அலெக்சாண்டரும் பிற்காலத்தில் அவரது படையினை வியூகம் வகுக்கும் க்ளைடஸ் தி ப்ளாக் என்னும் பதவியில் அமர்ந்த அவரது சகோதரியுமான லனைகியும் இவர்களது தாயான ஒலிம்பியாசின் உறவினாரான லியோநிடாஸ் என்பவரிடம் கட்டுபாடான கல்விமுறையில் பயின்றனர். அலெக்சாண்டர் மக்கெடோனியானின் மென்மையான இளைஞனாக வளர்ந்தார். யாழிசை மீட்டுவதிலும், படிப்பதிலும், போர்க்கலையிலும், வேட்டையாடுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார். அலெக்ஸாண்டர் பத்தாவது வயதில் இருந்தபொழுது தேச்சாலி என்னுமிடத்தில் இருந்து வந்த ஒரு வணிகர் அவரது தந்தையிடம் ஒரு குதிரையை விற்க முனைந்தார். அப்போது அந்தக் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக யாருக்கும் அடங்காமல் இருப்பதை உணர்ந்து அவரது தந்தை பிலிப் அதை வாங்காமல் வெளியில் அனுப்ப நினைத்தார். அந்த தருணத்தில் அங்கிருந்த அலெக்சாண்டர் அந்த குதிரையானது தனது சொந்த நிழலை பார்த்தே மிரட்சி அடைவதை கண்டறிந்தார். அதோடு அந்த குதிரையை தானே பழக்கப்படுத்தி கொள்வதாகவும் தெரிவித்தார். சொன்னதைப்போல அதை அடக்கி பழக்கப்படுத்தியும் காட்டினார். புளூட்டாக் இதை தனது குறிப்பில் மிக விரிவாக புகழ்ந்து குறிப்பிடுகிறார். அரசர் பிலிப் தனது மகனாகிய அலெக்சாண்டரிடம், "மகனே நீ கண்டிப்பாக இந்த உலகத்தையே வெல்லப்போகிறாய், உன்னை பொருத்தமட்டில் மக்கெடோன் மிகச்சிறியது," என்று கூறினதாக புளூட்டாக் விளக்குகிறார். அதோடு அந்த குதிரையை அலெக்சாண்டருக்கே பரிசாக அளித்தார். அலெக்சாண்டர் அந்த குதிரைக்கு பூசிஃபலாஸ் (ox-head) என்று பெயரிட்டார். அந்த பூசிஃபலாஸ் என்கிற குதிரை தான் மாவீரன் அலெக்சாண்டரை இந்திய துணைக்கண்டம் வரை போர்களினூடே சுமந்து வந்தது. பிற்காலத்தில் வயோதிகம் (தனது 30ஆம் வயதில்) காரணமாக அந்த குதிரை இறந்த பின்னர் அதன் நினைவாக ஒரு நகரத்திற்கு அலெக்சாண்டர் பூசிஃபலா (Bucephala) என்று பெயரிட்டார். இளமைப்பருவமும் கல்வியும் அலெக்சாண்டரின் 13 ஆம் வயதின் ஆரம்பத்தில் அவரது தந்தை அவருக்கு கல்வி போதிக்க ஐசோக்ரேட்ஸ், ஸ்பீயூசிபஸ் போன்ற மிகச்சிறந்த அறிஞர்களை நியமித்தார். அவர்களுக்கு பின்னராக இரண்டாம் பிலிப் மன்னர் அரிஸ்டாட்டிலைக் கல்வி போதிக்க நியமித்தார். கல்வி போதிப்பதற்காக மைசாவில் இருந்த நிம்பஸ் கோயிலை வகுப்பறையாக கொடுத்தார். அலெக்சாண்டர் கல்விகற்று திரும்பும் தருணத்தில் அவரது ஆசிரியரான அரிஸ்டாட்டிலின் சொந்த நகரான தன்னால் அழிக்கப்பட்ட ஸ்டாகிரா-வை மீண்டும் நிர்மாணித்து தருவதென ஒப்புக்கொண்டார். மேலும் அங்கு மக்களை குடியேற செய்து அங்கிருந்து அடிமைகளாக பிரிக்கபட்ட மக்களை விடுவிப்பதாகவும் உறுதியளித்தார். மைசா கோயிலானது டாலேமி, ஹேஃபைசன் மற்றும் காசந்தர் போன்ற இடங்களை போலவே இதுவும் அலெக்சாண்டரும் மற்றும் மாக்கெடோனியானின் மேன்மக்கள் வகுப்பினரின் குழந்தைகளும் பயிலும் வாரிய பள்ளி போலானது. அவருடன் பயின்ற பல மாணவர்கள் பிற்காலத்தில் அலெக்சாண்டரின் உற்ற நண்பர்களாகவும் நம்பிக்கைக்குரிய அரசு அதிகாரிகளாகவும் திகழ்ந்தனர். மேலும் சிலர் துணைவராகவும் இருந்ததாக அறியப்படுகிறது. அரிஸ்டாட்டில் அலெக்சாண்டருக்கும் அவரது தோழர்கள் அனைவருக்கும் மருத்துவம், தத்துவம், நன்னெறி, மதம், தருக்கம், மற்றும் கலை போன்றவற்றை பயிற்றுவித்தார். அரிஸ்டாட்டிலின் போதனையில் அலெக்சாண்டர் அவரை சுற்றியுள்ள திசைகள் அனைத்திலும் உள்ள நாடுகளை அறிவது போன்ற பாடங்களில் மேம்பட்டிருந்தார். குறிப்பாக அரிஸ்டாட்டில் அலெக்சாண்டரை திசையனைத்திலும் உள்ள நாடுகளை பற்றிய கல்விதனை போதித்து வல்லுனராக மாற்றினார். அந்த அறிவே பின்னாளில் அலெக்சாண்டரை உலகம் முழுமையையும் சுற்றிவந்து வெற்றிகொள்ள வழிவகுத்தது. இரண்டாம் பிலிப்பின் வாரிசு மாக்கெடோனின் ஆட்சியாளராகவும் எழுச்சியும் தனது 16 ஆம் வயதில் தனது கல்வியை அரிஸ்டாட்டிலிடம் பயின்று முடித்தார் அலெக்சாண்டர். பய்சான்டியான் உடனான மன்னர் பிலிப்பின் வாரிசு போட்டியில் வெற்றிபெற்ற அலெக்சாண்டர் வெளிப்படையான ஒரே வாரிசாக அறிவிக்கப்பட்டார். பிலிப் இல்லாத காலகட்டங்களில் திரேசிய நாட்டினர் மாக்கெடோனின் மீது படையெடுத்தனர். அலெக்சாண்டர் உடனே அதற்குத் தக்க பதிலடி கொடுத்தார். அவர்களை தனது எல்லையில் இருந்து ஓட ஓட விரட்டியடித்தார். பின்னர் கிரேக்கத்தில் குடியேற்ற ஆதிக்கத்தை விதைத்தார். அது மட்டுமல்லாது அலெக்சாண்ட்ரோபோலிஸ் என்கிற நகரையும் நிர்மாணித்தார். பின்னர் பிலிப் திரும்பி வந்ததும் அலெக்சாண்டரை ஒரு சிறு படைக்குத் தலைமையாக நியமித்து அனுப்பி தெற்கு திரேசை கைப்பற்றி வரப் பணித்தார். கிரேக்கத்தின் பெரிந்தஸ் நகரத்திற்கு எதிரான போரில் அலெக்சாண்டர் தனது தந்தையின் உயிரை காப்பாற்றினார். இதை தொடர்ந்து கிரேக்கத்தில் நடந்த பல போர்களில் தனது தந்தையின் வழிகாட்டுதலின் பேரில் நிறைய வெற்றிகளை ஈட்டினார். பின்னாளில் சில காலம் கழித்து கி.மு.338 ல் அலெக்சாண்டரின் படைகளும் அவரது தந்தை இரண்டாம் பிலிப்பின் படைகளும் இணைந்தன. மேலும் அவை தெற்கு தெர்மொபைலியா வழியாக வலம் வந்தன. பின்னர் தேபான் காரிசன் கூட்டத்திடம் வெற்றியை ஈட்டிய பின்னர் தேபெஸ் மற்றும் ஏதென்சிலிருந்து சிலநாள் பயண தூரத்திலிருந்த ஏலாடிய நகரை வெற்றி பெற்றனர். பின்னர் டிமொஸ்திநீசால் ஆளப்பட்ட ஏதென்சு, தேபெசு மாக்கெடோனியாவை வெல்ல முயன்றனர். அதேநேரம் ஃபிலிப்பும், ஏதென்சும் தேபெஸ் மீது முகாமிட்டு வெல்ல முயன்றனர். ஆனால் இந்தப் போட்டியில் ஏதென்ஸ் வென்றது. பின்னர் ஃபிலிப் அம்பிச்ஸா நோக்கி சென்றார். ஃபிலிப் தெற்கு நோக்கி சென்ற பொழுது அவரது எதிரிகள் கேரோனிய பகுதியில் அவரை சுற்றி வழிமறித்து தாக்கினர். அப்பொழுது நடந்த சண்டையில் அலெக்ஸாண்டர் வலது புறமிருந்த படையையும் அவரது தந்தை இடப்புறமிருந்த படையையும் திறம்பட வழிநடத்தி நம்பிக்கைக்குரிய தளபதிகளின் துணையுடன் அந்த போரில் வெற்றி கண்டனர். கேரோனிய போரில் வென்ற பிறகு ஃபிலிப்-ம் அலெக்ஸாண்டரும் எதிர்ப்பில்லாத பெலோபோன்நீஸ்-ஐ வென்றனர். பின்னர் அவர்கள் ஸ்பார்ட்டாவை அடையும் வரைக்கும் அடுத்திருந்த அனைத்து நகரங்களனைதிலும் அவர்களுக்கு வரவேற்பே கிடைத்தது. ஸ்பார்ட்டாவை தவிர்த்து தான் வெற்றி பெற்ற அனைத்து நகரங்களையும் இணைத்து ஹெல்லேனிக் கூட்டாட்சியை ஏற்படுத்தினார் ஃபிலிப். பின்னன் அதற்கு ஹெகேமொன் கூட்டமைப்பு என பெயரிட்டார். மேலும் அந்த கூட்டமைப்பை பாரசீக சாம்ராஜ்யத்தின் மீது படையெடுக்க பணித்தார். நாடு கடத்தலும் திரும்புதலும் பெல்லா நாட்டிற்கே திரும்பிய ஃப்லிப் அந்த நாட்டில் கிளியோபாட்ரா யூரிடைஸ் என்ற பெண்ணை மணந்துகொண்டார். இந்த திருமணத்தின் மூலம் ஃப்லிப்பின் வாரிசு என்கிற அலெக்ஸாண்டரின் நிலைமை கீழிறங்கியது, ஏனென்றால் அலெக்ஸாண்டரின் தாயார் பெல்லாவை சேர்ந்தவரல்லர். இதன் மூலம் கிளியோபாட்ராவிற்கு பிறக்கும் குழந்தையோ அல்லது அவரது உறவில் நெருங்கிய ஆணோ தான் அரியணை ஏற முடியும் என்கிற நிலை உருவானது. இவ்வாறிருக்கையில் ஃப்லிப்பின் உறவினரும் அவரின் படைத்தளபதியுமான அட்டாலூஸ் திருமண விருந்தின் பொழுது மதுபோதையில் சட்டபடியான நீராடி வாரிசுக்கே அரியணை என்று பிரார்த்தனை செய்தார். இந்த பிரச்சனை பெரிதாகி வெடித்த பொழுது சதிகாரர்களினால் அலெக்ஸாண்டருக்கு தொல்லைகள் பெருகின அப்பொழுது இளவரசானாக இருந்த அலெக்ஸாண்டர் தனது தாயாருட மாசிடோனை விட்டு வெளியேறினார். தாயை மொலோசியன்ஸ் நாட்டின் தலைகரான டோடோனாவில் இருந்த அவரது சகோதரரான மன்னர் எபிரசின் முதலாம் அலெக்ஸாண்டர் வீட்டில் விட்டுவிட்டு தனது பயணத்தை தொடர்ந்தார். தனது பயணத்தில் அவர் இலிரியன் அரசரிடம் சென்று தஞ்சம் புகுந்தார், அலெக்ஸாண்டர் சில வருடங்களுக்கு முன்னர் அலெக்ஸாண்டரின் படையினரால் தோற்க்கடிக்கப்பட்ட இலிரியன் மன்னர் அகதியாக அலெக்ஸாண்டர் வந்திருந்த போதும் அவரை ஒரு விருந்தாளியாகவே பாவித்து நடத்தினார். இந்த நேரத்தில் அனைத்து ராணுவ பயிற்சியிலும் தேர்ச்சி பெற்ற தனது மகனை மீட்க மன்னர் ஃப்லிப் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதற்கிடையில் அலெக்ஸாண்டருடைய குடும்ப நண்பரான டிமரட்டஸ்-கோரிந்தியான் என்பவற்றின் முயற்சியால் அலெக்ஸாண்டர் ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் மாசிடோனியாவிற்கு வந்தார். பின்வந்த வருடங்களில் பாரசீகத்தின் காரியாவின் ஆளுநர் அலெக்ஸாண்டரின் சகோதரர் ஃப்லிப் அரிடியாசுக்கு அவரது மகளை மணமுடித்து கொடுக்க முன்வந்தார். இது அலெக்ஸாண்டர் மற்றும் அவரது தாயார் ஒலிம்பியாஸுக்கும் அலெக்ஸாண்டரின் நண்பர்களுக்கும் மன்னர் இரண்டாம் ஃப்லிப் தனது மற்றொரு மகானான அரிடியாசை தனக்கு அடுத்தபடியான அரியணைக்கான வாரிசாக கருதுவது போல தோன்றியது. இதனால் ஒரு தூது மூலம் இந்த திருமண ஏற்பாட்டை அலெக்ஸாண்டர் தடை செய்ய நினைத்தார். அந்த பெண்ணை அரிடியாசுக்கு பதிலாக தானே மணமுடித்து கொள்ள முயற்சித்தார். இதையறிந்த மன்னர் இரண்டாம் ஃப்லிப் இளவரசன் அலெக்ஸாண்டரை காரியா ஆளுநரின் மகளை கவர நினைத்த செயலுக்காக கண்டித்தார். மேலும் அலெக்ஸாண்டருக்கு இதைவிட சிறந்த ஒரு இடத்தில் பெண்ணை மனைவியாக்க நினைப்பதாக கூறினார். இந்த விளைவில் அலெக்ஸாண்டரின் நான்கு நண்பர்களை (ஹர்பளுஸ், நியர்சுஸ், டாலமி, மற்றும் எரிகையுஸ்) மன்னர் நாடுகடத்தினார். மாசிடோனின் மன்னனாக வாரிசாக ஏற்றல் கி.மு.336-ல் ஏகே'யில் ஒலிம்பியாஸின் சகோதரர் எபிரசின் முதலாம் அலெக்ஸாண்டரின் மகள் கிளியோபட்ராவின் திருமணத்தின் பொழுது மன்னர் இரண்டாம் ஃபிலிப் அவரது பாதுகாவல தலைவனால் (பாசநியாஸ்) கொலைசெய்யப்பட்டார். பின்னர் தப்பிசெல்ல முற்பட்ட பொழுது அவரும் மற்றும் அலெக்ஸாண்டரின் இறந்து துணைவர்களும் (பெர்டிக்காஸ் மற்றும் லியோனாடஸ்) அவருடன் சேர்த்து காவலர்களால் பிடித்து கொல்லப்பட்டனர். இதன்பின்னர் அலெக்ஸாண்டர் தனது 20 ஆம் வயதில் மன்னனாக அரியணை ஏறினார். வலிமையின் ஒருங்கிணைப்பு அரியணைக்கு தன்னுடன் போட்டியிட்ட அனைவரையும் வென்று தனி ஒருவராக மகத்தான ஆட்சியை அலெக்ஸாண்டர் துவக்கினார். இதில் தனது உறவினர் நான்காம் அமைண்டாஸ்-ஐ அலெக்ஸாண்டர் இழந்தார். மேலும் லின்செஸ்டிஸ் எல்லைக்கு உட்பட்ட இரு மாசிடோனியன் இளவரசர்களையும் இழக்க நேரிட்டது. மேலும் அலெக்ஸாண்டர் ஒலிம்பியாஸின் துணையுடன் கிளியோபாட்ரா, அட்டாலஸ், மற்றும் பலரை இந்த போட்டியில் கொன்று தீர்த்தார். மன்னர் ஃபிலிப்பின் மரணச்செய்தி தேபெஸ், ஏதென்ஸ், தேசாலி, மற்றும் திரேசிய பழங்குடிகள் மேலும் வடக்கு மாசிடோன் ஆகிய இடங்களில் பெரும் கிளர்ச்சியை உண்டாக்கியது. இந்த கிளர்ச்சியை கேள்விப்பட்ட அலெக்ஸாண்டர் உடனுக்குடன் பதில் நடவடிக்கைகளை மேற்கொண்டார். தந்திரமும் செயல்திறனும் ஒருங்கே இணைத்து செயல்பட்ட அலெக்ஸாண்டர் 3000 குதிரைப்படையை கொண்டு தேசாலி நோக்கி பயணித்தார். அப்பொழுது ஒலிம்பஸ் மலைகளுக்கும் ஒஸ்ஸா மலைகளுக்கும் இடையில் த்ரேசியன் படைகளால் சூழபட்டார். அப்பொழுது அலெக்ஸாண்டர் தனது படைகளை ஒஸ்ஸா மலைகளின் மீதாக கடந்து செல்ல ஆணையிட்டார். மறுநாள் காலை திரேசிய படைகள் விழித்தெழுந்த பொழுது தாம் சுற்றி வளைத்த அலெக்ஸாண்டரின் படைகள் தற்பொழுது தங்களை சுற்றி வலைத்திருப்பதை உணர்ந்தனர். பின்னர் அவர்களது குதிரைப்படையையும் தனது குதிரைப்படையுடன் இணைத்துக்கொண்டு அங்கிருந்து பிலோபோநீஸ் நோக்கி பயணித்தார். வழியில் தெர்மொபைலியில் முகமிட்ட அலெக்ஸாண்டர் அங்கிருந்த அம்பிக்டையோனிக் கூட்டமைப்பிற்கு தலைவராக அங்கீகாரம் செய்யப்பெற்றார். பின்னர் கோரிந்த் நோக்கி முன்னேறினார். ஏதேன்ஸும் அலெக்ஸாண்டருடன் அமைதியாக பணிந்தது. அலெக்ஸாண்டரும் பழங்குடியினரை மன்னித்தார். அலெக்ஸாண்டரின் சரித்திரத்தில் புகழ் வாய்ந்த சைனிக் டியோஜெனிஸ் உடனான போர் அலெக்ஸாண்டர் கோரிந்தில் தங்கியிருந்த பொழுது தான் நிகழ்ந்தது. அந்த போரில் வென்ற அலெக்ஸாண்டர் டியோஜெனிஸிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்ட பொழுது தந்ததுவ வாதிகள் அலெக்ஸாண்டரிடம் ஏளனமாக பதில் கூறினர். நீங்கள் கொஞ்சம் தள்ளி நிற்க வேண்டும் எங்கள் மீது சூரியனின் ஒளி படவில்லை என்று கூறினர். இந்த பதில் அலெக்ஸாண்டரை பிரமிக்க வைத்தது. அதற்க்கு பதிலாக அலெக்ஸாண்டர் அவர்களிடம் நான் அலெக்ஸாண்டராக இல்லாமலிருந்தால் நான் ஒரு டியோஜெனிஸாகத்தான் இருக்க விரும்புகிறேன் என்று கூறினார். அலெக்ஸாண்டருக்கு கோரிந்தில் தான் அவர் தந்தை ஃபிலிப்பை போன்று முன்னின்று நடத்தும் தலைவர் என்று பொருள் படும் HEGEMON என்ற பட்டம் சூட்டப்பட்டது. மேலும் இதன் பின் தான் த்ரேசியர்களின் போர் மற்றும் பாரசீக போர் போன்றவை அலெக்ஸாண்டரால் நிகழ்த்தபெற்றன. பால்கன் குடா போர்கள் ஆசியாவின் மீது போர்தொடுத்து செல்லும் முன்பாக அலெக்ஸாண்டர் தனது வடக்கு மாகாண எல்லைகளை வலுப்படுத்த எண்ணினார். கி.மு.335 வசந்த காலத்தின் பொழுது இவர் பல்வேறு படையெடுப்புகளை நிகழ்த்தினார். ஆம்பிபோலிஸில் இருந்து கிளம்பி கிழக்கு நோக்கி பயணித்து சுதந்திர த்ரேசியா'வை ஹேமுஸ் மலையிலும், ட்ரீபள்ளி, லைகிநூஸ் ஆற்றின் அருகில் டானூப்-ஐயும், கேடே பழங்குடிகளை கடற்கரை போரிலும் வென்றார். பின்னர் க்ளிடுஸில் இல்லிரியா மன்னர், மற்றும் டாலண்டியின் க்ளுகியாஸ் போன்றவர்கள் கிளப்பிய எழுச்சியை போரில் அடக்கினார். அவர்களை போரில் தங்களது படைகளுடன் புறமுதுகிட்டு ஓடசெய்தார். இந்த வெற்றிகளின் மூலம் அலெக்ஸாண்டர் வடக்கு எல்லைப்பகுதிகளில் ஈடு இணையற்ற பலம்கொண்ட பாதுகாப்பை நிறுவினார். அலெக்ஸாண்டர் வடக்கில் போர் புரிந்து கொண்டிருந்த சமயத்தில் தேபேஸும், ஏதேன்ஸும் மீண்டு ஒருமுறை கிளர்ச்சியை விதைத்தனர். அலெக்ஸாண்டர் உடனே தெர்க்குக் நோக்கி விரைந்து தேபேஸுடன் போரிட்டு வென்றார். இந்த போரில் தேபேஸின் தாக்குதல் சொல்லிகொள்ளும்படியாக இல்லை. மேலும் அந்த தேசத்தை அலெக்ஸாண்டர் துண்டாடினர். தேபேஸின் இந்த முடிவில் பயந்து போன ஏதென்ஸ் கிரீஸை விட்டு பின்வாங்கி ஓடியது. இதனால் கிரீஸில் தற்காலிகமாக அமைதி நிலைநாட்டப்பட்டது. பின்னர் ஆன்டிபெட்டர்-ஐ ஆட்சிபொறுப்பில் அமர்த்திவிட்டு அலெக்ஸாண்டர் ஆசியா நோக்கி பயணிக்க ஆரம்பித்தார். பாரசீகப் பேரரசில் வெற்றிகள் சின்னாசியா கி.மு.334 ல் தோராயமாக 48,100 காலாட்படை வீரர்களுடனும், 6,100 குதிரைப்படை வீரர்களுடனும் 120 கப்பல்களில் 38,000 கப்பற்படை வீரர்களுடனும் மாசிடோனில் இருந்து பல்வேறு கிரேக்க மாநிலங்களின் வழியாக அலெக்ஸாண்டரின் படையானது ஹெல்லஸ்போன்ட்-ஐ கடந்தது. பிரமாண்ட படையுடன் த்ரஸ், பையோனியா, மற்றும் இல்லிரியாவுடன் இணைந்து பாரசீகம் வழியாக ஆசிய மண்ணில் அலெக்ஸாண்டர் தனது ஆளுமையை ஊன்றினார். மேலும் ஆசியாவை கடவுளின் பரிசாகவும் கருதினார். இதுவே அலெக்ஸாண்டருக்கு போர் மீதிருந்த நாட்டத்தை விளக்குகிறது. பாரசீகத்தின் க்ராநிகஸ்-ஸில் பெற்ற முதல் வெற்றிக்கு பிறகு ஹளிகர்நாஸ்ஸஸ்-ஸில் அலெக்ஸாண்டர் பாரசீக மாகாணங்களின் சரணடைவை ஏற்றுக்கொண்டார். அலெக்ஸாண்டரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடா-விடம் காரியா அரசின் ஆட்சிபொறுப்பை ஒப்படைத்தார். ஹளிகர்நாஸ்ஸஸ்-ஸில் இருந்து அலெக்ஸாண்டர் மலைநாடான லிசியா மற்றும் பம்பிலியா வழியாக பயணித்தார். கண்ணில்பட்ட நாடுகள அனைத்தையும் வெற்றி கொண்டார். பாரசீக கடற்படைத்தளங்கள் அனைத்தையும் அழித்தொழித்தார். பம்பிலியா-விலிருந்து கடலோரங்களை வென்ற பின்பு நிலபகுதிகள் நோக்கி வேகமாக முன்னேறினார். லிவன்ட் மற்றும் சிரியா ஆசியாவின் குளிகால போர்தொடர்களை மேற்கொண்ட பின்பு அலெக்ஸாண்டரின் படை சிலிசியன் வாயில் வழியாக கி.மு.333-ல் கடந்து சென்று பாரசீகத்தின் பிரதான படைகளான மூன்றாம் டாரியஸ்-ன் படைகளை நவம்பர் மாதத்தில் இஸ்சுஸ் போரில் வெற்றிபெற்றார். இந்த போரில் டாரியஸ் தனது மனைவியுடனும் இறந்து மகள்களுடனும் புறமுதுகிட்டு பின்வாங்கியதால் அவரது படைகள் சின்னாபின்னபடுத்தபட்டன. இதனால் டாரியஸ் தனது தாய் சிசிகம்பிஸையும், மேலும் தனது அளவற்ற செல்வங்களையும் இழக்க நேரிட்டது. இதன்பின்னர் அலெக்ஸாண்டர் சிரியாவை நோக்கி முன்னேறினார். அதில் பெரும்பாலான லிவன்ட் கடற்கரை அரசுகளையும் வென்றார். பின் கி.மு.332-ல் நெடிய போருக்கு பின் டைர்-ஐயும் வென்றார். பின்னர் போரில் பிடிபட்ட போய்க்கைதிகளை கொன்று அவர்களது மனைவி குழந்தைகளை அடிமை வியாபாரிகளிடம் விற்றார். எகிப்து அலெக்ஸாண்டர் டைரை கைப்பற்றிய பின்பு அவரது வழியில் காஜாவை தவிர இடைப்பட்ட அனைத்து எகிப்திய அரசுகளனைத்தையும் சுலபமாக வென்றார். வலிமையாக செரிவூட்டபட்டிருந்த காஜா குன்றுகளின் மீது கட்டபட்டிருந்த நகரமாகும். அதை வெல்ல அலெக்ஸாண்டர் கடுமையாக போராட வேண்டி இருந்தது. மூன்று வெற்றிகரமான திடீர் தாக்குதல்களுக்கு பின்பு அதன் வலிமை குன்றி காஜா வீழ்ந்தது. இந்த போருக்கு முன்பு அலெக்ஸாண்டருக்கு இப்போரில் ஏற்பட்டதை போல கடுமையான காயம் ஏற்பட்டதில்லை. அதேபோல ஜெருசலேம் அலெக்ஸாண்டரிடம் போரிடாமலேயே பணிந்து சரணடைந்தது. கி.மு.332-ல் அலெக்ஸாண்டர் எகிப்தில் நுழைந்தார். அங்கு அலெக்ஸாண்டரை விடுதலையளிக்க வந்த ஒரு போராளியாக தான் மதித்தனர். அங்கு அவர் தன்னை பிரபஞ்சத்தின் தலைவராக உணர்ந்தார். கடவுளின் மகனாக பாவித்தனர். இதற்கு பின்பு தான் அலெக்ஸாண்டர் அடிக்கடி கடவுள் சியுசு-அம்மோன்-ஐ தனது தந்தையாக சுட்டிக்காட்டினார். மற்றும் தான் மேம்பட்ட உருவம் பொறித்த நாணயங்களையும் வெளியிடலானார். இவர் எகிப்தில் தங்கி இருந்த பொழுது எகிப்தில் எழுப்பப்பட்ட அலெக்ஸாண்ட்ரியா-வை நிறுவினார். அதுவே இவரது மறைவிற்கு பிறகு டோலேமைக் சாம்ராஜ்யத்தின் தலைமையாக பிற்காலத்தில் இருந்தது. அசிரியா மற்றும் பாபிலோனியா கி.மு.331-ல் அலெக்ஸாண்டர் எகிப்தை விட்டு வெளியேறி கிழக்கு நோக்கி மெசபடோமியா நோக்கி பயணித்தார் (தற்போதைய வடக்கு ஈராக்). அங்கு குகமேலா-வில் நடந்த போரில் மீண்டும் டாரியஸை வீழ்த்தினார். அந்த போரிலும் போர்க்களத்திலிருந்து டாரியஸ் மீண்டும் புறமுதுகிட்டு ஓடினார். இந்த முறை அலெக்ஸாண்டர் டாரியஸை அரபெல்லா மலைத்தொடர் வரை துரத்திசென்றார். இங்கு குகமேலாவில் நடந்த சண்டையே இவர்களிருவருக்கிடையே நடந்த கடைசிப்போராகும். அலெக்ஸாண்டர் பாபிலோனை கைப்பற்றிய பொழுது டாரியஸ் அந்த போரிலிருந்து தப்பித்து எக்பட்டானா மலைத்தொடர்களை கடந்து ஓடினார். பாரசீகம் பாபிலோனில் இருந்து அசீமேனிட்-ன் தலைநகரங்களில் ஒன்றான அலெக்ஸாண்டர் சூசா-விற்கு சென்றார். அங்கு பெரும் செல்வங்களை தனதாக்கினார். இவரது படையின் பெரும்பகுதியை பாரசீகத்தின் பிரபல தலைமையிடமான பேர்ஸ்போலிஸ்-ஸுக்கு அனுப்பினார். அலெக்ஸாண்டரே தானே தலைமையேற்று அந்த பயணத்திற்கான படைப்பிரிவுகளை தேர்ந்தெடுத்தார். மேலும் அந்த நகரையும் அங்கிருந்த கருவூலத்தையும் சூறாவளியை போன்று கவர்ந்தெடுத்தார். அவர் பேர்ஸ்போலிஸ்-ஸில் நுழைந்த பின்பு அவரது படையினரை அந்த நகரில் பலநாட்கள் கொள்ளையிட அனுமதித்தார். அலெக்ஸாண்டர் பேர்ஸ்போலிஸ் நகரில் ஐந்து மாதங்கள் தங்கினார். அங்கு அவர் தங்கியிருந்த பொழுது கிழக்கு சேர்சேஷ் மாளிகையும் அந்த நகரும் தீ விபத்தில் சாம்பலான பின்ம்பு அங்கிருந்து வெளியேறினார். இந்த தீ விபத்திற்கு மதுவிருந்து மாளிகையில் ஏற்பட்ட விபத்து காரணமென்றும், இரண்டாம் பாரசீக போரின் பொழுது ஏதென்ஸின் அக்ரோபோலிஸ் எரிக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நிகழ்வென்றும் இரு வேறு காரணங்கள் நிலவின. பேரரசின் வீழ்ச்சியும் கிழக்கும் அலெக்ஸாண்டர் டாரியஸை முதலில் மீதியாவில் இருந்தும் பின்னர் பார்த்தியாவில் இருந்தும் விரட்டியடித்தார். அதன் பின்னர் அந்த பாரசீக மன்னன் பெஸ்சுஸ் என்கிற ராஜியத்தினரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டான். அவர்கள் பின்னர் தாங்கள் கொண்டு சென்று கொலைசெய்த நபர் தான் டாரியஸ் மன்னன் என்று அறிவித்தனர். பின்னலில் அலெக்ஸாண்டருடன் மத்திய ஆசியாவில் குரில்லா போரிட்டு பின்வாங்கிய ஐந்தாம் அர்தஷெர்ஷெஸ் தான் பெஸ்சுஸ் ராஜ்யத்தின் மன்னன் ஆவார். அலெக்ஸாண்டர் டாரியஸை எரித்தார் அவனது இறுதி சடங்கை அசீமேனிட் வாரிசுகளை செய்ய அனுமதித்தார். டாரியஸ் இறந்த வேளையில் அசீமேனிட் அரியணைக்கு தனது பெயரை சூட்டியிருந்தான். இதுவே அதற்குப் பின்பு அந்த அரியணை ஏறிய அனைவரின் வீழ்ச்சிக்கு காரணம் என அசீமேனிடை ஆண்டவர்கள் கருதினர். அலெக்ஸாண்டர் இல்லாத வேளையில் மாசிடோன் ஆன்டிபெட்டர்-ஐ ஆட்சி பொறுப்பில் அமர்த்திவிட்டு ஆசியாவில் வெகுகாலம் அலெக்ஸாண்டர் தங்கிவிட்ட்மையால் இரண்டாம் ஃப்லிப்பின் பழைய காவலர்கள் மாசிடோனின் ஆட்சிக் கட்டிலை ஆன்டிபெட்டரிடம் இருந்து பறித்தனர். அலெக்ஸாண்டர் தேபெஸ் நாட்டிலிருந்தும் வெளியேறியமையால் அங்கும் மீண்டும் கிரீஸின் ஆதிக்கம் பெற்றது. மாறாக ஸ்பார்டா-வின் அரசன் மூன்றாம் அகிஸ் ஆன்டிபெட்டர்-ஐ மெகாலோபோலிஸ் போரில் வென்று கொலைசெய்தான். ஆன்டிபெட்டர் இதை ஸ்பார்டா அரசன் அலெக்ஸாண்டருக்கு அளித்த தண்டனையாக குறிப்பிட்டார். மேலும் அவ்வேளையில் ஆன்டிபெட்ட'ருக்கும் அலெக்ஸாண்டரின் தாயார் ஒலிம்பியாஸுக்கும் இடையே மனக்கசப்பும் இருந்தது. ஒருவர் மீது ஒருவர் அலெக்ஸாண்டரிடம் இதை புகராகவே அளித்திருந்தனர். மொத்தத்தில் கிரேக்கம் அலெக்ஸாண்டர் இல்லாத வேளையில் மிகவும் சுதந்திரமாக அமைதியாக பழையபடிக்கே திரும்பியிருந்தது. அவர் வென்ற நாடுகளில் பலவற்றை அலெக்ஸாண்டரே விரும்பி திரும்ப போகட்டும் என்று விட்டிருந்தார். இந்த வேளையில் அவருடன் இருந்த பல வீரர்கள் மிகுந்த சோர்வில் இருந்தனர். இருந்தாலும் அலெக்ஸாண்டரின் கட்டளைக்கு பணிந்து தொடர்ந்து மாசிடோனியாவிலிருந்து அவருடன் பயணித்திருந்தனர். நீண்ட பயணமும் இடையறாத போர்களும் அவர்களை மிகுந்த சோர்வில் தள்ளியிருந்தது. அவர்களில் விரும்பிய பலரை திரும்ப ரோம் நகருக்கே அனுப்பியும் வைத்தார். லட்சிய தாகம் கொண்டிருந்தவர்களை மட்டுமே தன்னுடன் வைத்துக்கொண்டார். இந்தியப் படையெடுப்பு இந்திய துணைக்கண்டத்தில் அலெக்ஸாண்டரின் படையெடுப்பு ஸ்பிடமெனிஸ்-ஸின் மரணத்திற்கு பின்பும், ரோக்ஷனா (பாக்டரியான் இனத்தின் ரோஷனக்) உடனான மரணத்தினாலும் அலெக்ஸாண்டர் இந்திய துணைக்கண்டத்தின் பக்கம் கவனம் செலுத்தினார். காந்தார (தற்போதைய வடக்கு பாகிஸ்தான்) நாட்டின் குழுக்களின் தலைவரும் முன்னாள் ஆளுநருமானவரின் அழைப்பின் பெயரில் அலெக்ஸாண்டர் அங்கு பயணித்தார். இண்டஸ் முதல் ஹைடஸ்பஸ் வரை விரிந்திருந்த அப்போதைய டக்ஸ்ஸில்லா ராஜ்யத்தின் அரசர் ஒம்பிஸ், சில மலைவாசி குழுக்கள், மற்றும் ஆஸ்பஸியோய், அஸ்ஸாகேநோயி போன்றவர்கள் அலெக்ஸாண்டரின் நண்பரிடம் பணிய மறுத்தனர். கி.மு.327/326-ஆம் ஆண்டின் குளிர்காலங்களில் அலெக்ஸாண்டர் தானே தலைமையேற்று அந்த மலைவாசி குழுக்களுடன் போர் புரிந்தார். குனார் சமவெளியில் ஆஸ்பஸியோய், சுவாத் மற்றும் புநர் சமவெளியில் அஸ்ஸாகேநோயி போன்றோரிடம் சண்டையிட்டார். இவற்றிலெல்லாம் அலெக்ஸாண்டர் எளிதில் வென்ற பொழுதிலும் அவரது தோளில் ஆஸ்பஸியோய்-உடன் சண்டையிட்ட பொழுது காயம் பெரிதானது. பலம் வாய்ந்த அஸ்ஸாகேநோயி-யிடம் போரிட்ட அலெக்ஸாண்டர் ஓரா மற்றும் ஒர்நோஸ் போன்ற கோட்டைகளில் பெரும் ரத்தவெள்ள சண்டைக்கு பின்பே வெற்றியை ஈட்ட முடிந்தது. அப்பொழுது நடந்த சண்டையில் அலெக்ஸாண்டரின் கணுக்காலில் பலத்த காயம் உண்டானது. கியூரிடஸ்-ஸின் கூற்றுப்படி அலெக்ஸாண்டர் மாஸ்ஸாகாவை முற்றிலும் அழிக்காவிட்டாலும் ஓரா-வில் ஏற்படுத்தியதை போன்றே பெரும் சேதத்தை உண்டு பண்ணினார் என்று அறிய முடிகிறது. மாஸ்ஸாகா-வின் துயர முடிவினால் அங்கிருந்த பெரும்பாலோர் வெளியேறினர். தொடர்ந்து நெருக்கமாக சண்டையிட்ட அலெக்ஸாண்டர் அந்த மலைக்கோட்டைகளை இரத்தம் தோய்ந்த நான்கு நாள் சண்டைக்கு பிறகு வென்றார். இதன் பிறகு அலெக்ஸாண்டர் சிந்து நதியை கடந்து வந்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போரில் பஞ்சாப் பகுதியை ஆண்டு வந்த இந்திய மன்னன் போரஸை வென்றார். அதுவரை யானைப்படையையே பார்த்திராத அலெக்ஸாண்டரின் படைகள் முதல் முறையாக யானைப்படையை பார்த்ததில் பிரமித்து பயந்து முதல் முறையாக பின்னோக்கி அடியெடுத்து வைத்தனர். ஹைடஸ்பேஸ்-ஸில் கி.மு.326-ல் நடந்த இந்த போர்களில் ஆச்சர்யம் அடைந்த அலெக்ஸாண்டர் மன்னர் போரஸின் வீரத்தை கண்டு பிரமித்து போரஸிடம் நட்பு பாராட்டினார். மேலும் போரஸையே அவன் அதுவரை ஆண்டு வந்த பகுதிகளுக்கு சத்ரப் எனப்படும் பொறுப்பாளியாக நியமித்து அதுவரை அவனது ஆளுகைக்குட்படாத பகுதிகளையும் அவனது கட்டுபாட்டில் கொடுத்தார். கிரீஸில் இருந்து வெகுதூரத்தில் இந்த நிலப்பகுதிகள் தன்னால் கவனித்துக்கொள்ள முடியாத படியால் இந்த பகுதியில் இருந்த பெரும் பகுதியை போரஸின் ஆளுகையின் கீழ் தனது பிரதிநிதியாக நியமித்து கௌரவப்படுத்தினார். ஹைடஸ்பேஸ் ஆற்றின் இரு கரைகளிலும் இரு நகரங்களை அலெக்ஸாண்டர் நிர்மாணித்தார் அவற்றில் ஒன்றிற்கு இத்தருணத்தில் இறந்த தனது குதிரையின் நினைவாக பூசிஃபலா என்று பெயரிட்டார். மற்றொரு நகரத்தின் பெயர் நிசிய(வெற்றி) அதுவே தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் மாங் பகுதி. அலெக்ஸாண்டர் படையில் ராணுவப்புரட்சி போரஸ் மன்னனின் சாம்ராஜ்யத்திற்கு கிழக்கே இருந்த மகத நாட்டின் நந்தர் அரசும் வங்காளத்தின் கங்கரிடை அரசும் அலெக்ஸாண்டரின் மாபெரும் படைகள் அடுத்தது கிழக்கு நோக்கி தங்களை தான் குறிவைக்கும் என்று பயந்தன. அதே சமயம் ஹைபசிஸ் ஆற்றின் கரையில் அலெக்ஸாண்டரின் படையில் உட்பூசல் வெடித்தது. தொடர்ந்து அவர்கள் கிழக்கு நோக்கி பயணிக்க தயாராக இல்லை. இந்த ஆறு தான் அலெக்ஸாண்டரின் கிழக்கு திசையின் எல்லையாக இருந்தது. அதே சமயம் லட்சிய வேட்கை தணிந்து சோர்ந்திருந்த மாசீடோனிய படையினர் அங்கேயே தங்கினர். இதன் காரணமாக அலெக்ஸாண்டர் அவர்களை கங்கை ஆற்றையும் கடக்க வேண்டும் என்று கட்டாயமாக கூறிய பொழுது அலெக்ஸாண்டரை கடுமையாக வெறுத்தனர். மேலும் இந்த ஆற்றை கடக்கையில் வெகுவானோர் இறக்க நேரிடும் என்றும் மறுகரையில் கண்டேரி மற்றும் ப்ரேசி போன்ற அரசர்களிடம் எண்பதாயிரம் எண்ணிக்கை கொண்ட குதிரைப்படையும், இரண்டு லட்சம் காலாட்படை வீரர்களும், எட்டு ஆயிரம் தேர்ப்படையும், மேலும் ஆறாயிரம் யானைப்படையும் கொண்ட மிகப்பெரிய படையணிகள் இருப்பதாலும் மேற்கொண்டு நகர கண்டிப்பாக மறுத்துவிட்டனர். ஆகிலும் அலெக்ஸாண்டர் மேற்கொண்டு முன்னேற வீரர்களை தயார் படுத்தலானார். ஆனால் அவரது தளபதி கொயேநூஸ் அலெக்ஸாண்டருடன் வாக்குவாதம் செய்து அவரது எண்ணத்தை மாற்றினார். அந்த தளபதி அலெக்ஸாண்டரிடம் நமது படை வீரர்கள் தங்களது பெற்றோரையும், மனைவியரையும், குழந்தைகளையும் விட்டு பிரிந்து வந்து பல வருடங்கள் ஆகிறதென்றும், அவர்களுக்கு வாழ்வில் மிச்சமுள்ள நாட்களை அமைதியாக செலவிட அனுமதிக்க வேண்டுமென்றும். அனைவரையும் தாயகம் திரும்ப அனுமதிக்க வேண்டுமென்றும் விவாதித்தார். ஒருவழியாக அலெக்ஸாண்டர் தெற்கு நோக்கி திரும்ப சம்மதித்தார். மீண்டும் சிந்து நதி கடந்து வழியில் மல்லி மலைவாழ் (தற்போதைய முல்தான்) மக்களையும் மேலும் சில இந்திய பழங்குடியினரையும் எதிர்கொண்டார். அலெக்ஸாண்டர் தனது படையின் பெரும்பகுதியை தனது தளபதி கிராடேராஸ் தலைமையில் கார்மேனியாவிற்கு (தற்போதைய தெற்கு ஈரான்) அனுப்பிவைத்தார். மற்றும் தனது கடற்படை தொகுதியை பாரசீக குடா பகுதிகளுக்கு தனது கடற்ப்படை அதிகாரி நியர்சுஸ் தலைமையில் அனுப்பினர். மீதமுள்ள படையினரை தானே தலைமை ஏற்று தெற்கு நோக்கி கடுமையான கேட்ரோசியன் பாலை நிலம் வழியாக வழிநடத்தி பாரசீகம் சென்றார். வழியில் அவர் கி.மு.324'ல் சூசா-வை அடைந்த பொழுது இதற்க்கு முன்பு எப்பொழுதும் இல்லாத அளவு தனது படையின் பெரும்பகுதியை அந்த பாலை நிலத்தின் கொடுமைக்கு பலியாக இழந்திருந்தார். பாரசீகத்தில் அந்திம காலங்களில் அலெக்ஸாண்டர் இவர் இல்லாத காலகட்டங்களில் இவர் ஆட்சி பொறுப்பில் அமர்த்திய பல சர்வாதிகார ஆளுநர்களும் சத்ரப்'களும் எல்லை மீறிய செயல்களில் ஈடுபட்டதை அலெக்ஸாண்டர் கண்டறிந்தார் இதன் காரணமாக அவர்களில் பலரை கொன்றார். மேலும் அவரது வீரர்களுக்கு கடன் வழங்கினார். மேலும் இவர் க்ராடேருஸ் தலைமையில் வாலிபம் கடந்த பலவீனமான வீரனாக மாசீடோன்-க்கு திரும்புவதாக அறிவித்தார். இவரது படையினர் அந்த கூற்றை தவறாக புரிந்துகொண்டு ஒபிஸ் நகரில் கழகத்தில் ஈடுபட்டனர். பாரசீகத்தின் இறையாண்மையை மதிக்க தவறினர். மூன்று நாட்களுக்கு பின்னும் அடங்காத கழகத்தினால் வெறுப்புற்ற அலெக்ஸாண்டர் மசீடோனியர்களால் அளிக்கப்பட்ட அலகுகளையே பாரசீகத்தில் பின்பற்றலாம் என்று அறிவித்தார். இதன் பின் தவறை உணர்ந்த மாசீடோனியர்கள் மன்னிப்பு கோரினர். அலெக்ஸாண்டரும் மன்னித்தார். அதற்காக அவரளித்த விருந்தில் பல்லாயிரகணக்கனோர் ஒன்றாக உணவருந்தி களித்தனர். பாரசீகத்தினருக்கும் மாசீடோனியர்களுக்கும் இடையில் சமாதானம் உண்டுபண்ணும் முயற்சியாக பாரசீகத்தின் குலத்திலிருந்து ஒருவரை அலெக்ஸாண்டர் மணந்துகொண்டார். எக்பட்டானா-விற்கு திரும்பிய பின்பு அலெக்ஸாண்டர் பாரசீகத்தின் கருவூலத்தை மீட்டெடுத்தார். இவரது நெருங்கிய ரகசிய தோழனான ஹெபெஷன் மர்மமான முறையில் இறந்தார். அவர் உடல்நலமின்றி இறந்தாலும் நஞ்சூட்டப்பட்டு கொல்லப்பட்டதாகவும் சான்றுகள் இருந்தமையால் அலெக்ஸாண்டர் மிகவும் மனம் வெதும்பினார். அலெக்ஸாண்டர் ஹெபெஷனின் மரணத்தினால் குலைந்து போனார். மேலும் துணைவனும் தோழனுமான ஹெபெஷனின் ஈமசடங்கிற்கு பாபிலோனில் மிக்க பொருட்செலவில் ஏற்பாடுகள் செய்ய கட்டளையிட்டார். இதன் பின்னர் மீண்டும் ஒரு பெரிய அளவிலான போர்த்தொடருக்கு அலெக்ஸாண்டர் திட்டம் தீட்டினார். ஆனால் அவற்றை எல்லாம் ஆரம்பிக்கும் முன்பே அவர் மரணித்தார். மரணம் கி.மு.323-ல் ஜூன் 10 அல்லது 11 ஆம் நாளில் தனது 32 ஆவது வயதில் அலெக்ஸாண்டர் பாபிலோனிலுள்ள இரண்டாம் நெபுகன்ட்நேசர் மாளிகையில் உயிர்நீத்தார். இருப்பினும் இவரது மரண தேதியின் மீது இன்றும் கூட நிறைய விவாதங்கள் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறன. அலெக்ஸாண்டரின் சொந்த உறவுமுறைகள் அலெக்ஸாண்டருடைய வாழ்வில் பெரும்பாலான காலங்கள் அவரது தோழனும், ரகசிய துணையும், மெய்க்காப்பாளனும், தளபதியுமான, ஹெபெஷன் உடன் தான் கழிந்தன. ஹெபெஷனின் மரணம் அலெக்ஸாண்டரை தனது அந்திம காலத்திற்கு இட்டுசென்றது. இந்த நிகழ்வே அவரது அந்திம காலங்களில் அவரை உடல்நல குறைவிற்கும், மனநல சிதைவிற்கும் உண்டாக்கியது. அலெக்ஸாண்டர் இருமுறை திருமணம் செய்து கொண்டார். ரோக்ஷனா (பாக்டரியான் மேன்குடியினரின் மகள்), மற்றும் பாரசீக அரசன் மூன்றாம் டாரியஸின் மகள் இரண்டாம் ஸ்டாடீரா ஆகியோரை மணந்தார். அதே போல அவருக்கு இரு ஆண் குழந்தைகள் இருந்தனர். ரோக்ஷனா மூலமாக நேரடி சட்டபூர்வ வாரிசாக மாசீடோனின் நான்காம் அலெக்ஸாண்டர்-உம், பர்ஷைன் மூலமாக மாசீடோனின் ஹெரகில்ஸ். மேலும் அவர் தனது ஒரு மகவை ரோக்ஷனா பாபிலோனில் இருந்த பொழுது கவனமின்மையால் இழந்தார். அலெக்ஸாண்டரின் பாலீர்ப்பு பற்றி நிறைய கருத்து விவாதங்கள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன. எந்த ஒரு பண்டைய குறிப்பிலும் அலெக்ஸாண்டரை ஓரின சேர்க்கையாளர் என்றோ ஹெபெஷன் உடனான உறவு காமம் கலந்த உறவு என்றோ குறிப்பிடபடவில்லை. அதே சமயம் ஆயிலியன் தனது எழுத்துகளில் அலெக்ஸாண்டரின் ட்ராய் பிரவேசத்தின் பொழு நிகழ்ந்த நிகழ்வினை பின்வருமாறு குறிப்பிடுகிறார். அலெக்ஸாண்டர் அக்கீலியஸின் சிலைக்கும் ஹெபெஷன் பேட்ரோகுலஸின் சிலைக்கும் மாலை அணிவித்தார்கள் இதை தவிர வேறு எந்த வித கொச்சை குறிப்புகளும் பண்டைய கிரேக்க பண்பாடு பற்றிய குறிப்புகளில் காணப்படவில்லை. ஆனாலும் இந்த வார்த்தைக்கு காமம் கலந்த அர்த்தம் மட்டுமே கொள்ளப்படும் என்கிற கட்டாயமும் இல்லை. ஒருவேளை அலெக்ஸாண்டர் இருபாலீர்ப்பும் கொண்டிருக்க வாய்ப்புண்டு. அது அவரது காலகட்டங்களில் கிரேக்க கலாசாரத்தில் தவறானதுமில்லை மேலும் அவர் தனது அந்திமகாலம் நெருங்கும் தருவாய் வரைக்கும் தனக்கென்று ஒரு வாரிசை உருவாக்கவில்லை. மேலும் அலெக்ஸாண்டரின் பெண்தேடும் படலம் அவரது தந்தையாரின் பெண் தேடலை விட மிக பிரமாண்டமானது என்று ஆக்டேன் கருத்துகளை முன்வைக்கிறார். மனைவியரை தவிர அலெக்ஸாண்டருக்கு நிறைய பெண் தொடர்புகள் உண்டு. மேலும் அலெக்ஸாண்டர் தனக்கென பாரசீக மன்னர்களின் வழக்கத்தின் படி அந்தப்புரங்கள் அமைத்து அதில் எண்ணற்ற பெண்களை நிறைத்திருந்தார். ஆனால் அவர்களிடத்தில் வெகு அரிதாக தான் பொழுதினை கழித்தார். அலெக்ஸாண்டர் இந்த சிற்றின்ப விஷயத்தில் மிகுந்த தன்னடக்கத்துடன் வாழ்ந்தார். இருந்த போதிலும் ப்ளுடர்ச் அலெக்ஸாண்டர் ரோக்ஷனாவிடம் மதிமயங்கியதாக குறிப்பிடுகிறார். அவளிடத்தில் மட்டும் காதலை கொடுத்ததாகவும் குடிப்பிடுகிறார். கிரீனும் இதையே வழிமொழிகிறார், அலெக்ஸாண்டர் தன்னை தத்தெடுத்த காரியாவின் அடா மற்றும் அலெக்ஸாண்டரின் மரணசெய்தி கேட்டதும் துக்கத்தில் உயிர்நீத்த டாரியஸின் தாயார் சிஸிகம்பிஸ் முதற்கொண்டு பல பெண்களுடன் நட்பு கொண்டிருந்தார் என்று குறிப்பிடுகிறார். அலெக்சாந்தரின் படைத்தலைவர்கள் செலூக்கஸ் நிக்காத்தர் தாலமி சோத்தர் லிசிமச்சூஸ் ஆண்டிகோணஸ் சசாண்டர் அலெக்சாண்டருக்குப் பின் அலெக்சாண்டரின் மறைவிற்குப் பின் நான்காம் அலெக்சாண்டர் கிரேக்கப் பேரரசை 13 ஆண்டுகள் ஆண்டார். கி மு 311இல் நடந்த முதல் வாரிசுரிமைப் போரின் முடிவில் அலெக்சாண்டரின் நண்பரும், படைத்தலைவருமான செலூக்கஸ் நிக்காத்தர் கிரேக்கப் பேரரசின் மேற்காசியா பகுதிகளுக்கு கி மு 305இல் மன்னராக முடிசூட்டுக்கொண்டார். வட ஆப்பிரிக்கா பகுதிகளுக்கு தாலமி சோத்தர் எனும் படைத்தலைவர் கிமு 305ல் தாலமைக் பேரரசை நிறுவினார். பின்னர் அலெக்சாண்டரின் வேறு படைத்தலைவர்களான லிசிமச்சூஸ், ஆண்டிகோணஸ் மற்றும் சசாண்டர் ஆகியவர்கள் கிரேக்கப் பேரரசின் ஐரோப்பிய பகுதிகளை கைப்பற்றி ஆண்டனர். இதனையும் காண்க நான்காம் அலெக்சாண்டர் போரஸ் மாசிடோனியா ஹெலனிய காலம் வாரிசுரிமைப் போர் செலூக்கியப் பேரரசு தாலமைக் பேரரசு கிரேக்க பாக்திரியா பேரரசு இந்தோ கிரேக்க நாடு குறிப்புகள் வெளி இணைப்புகள் பகுப்பு:கிரேக்கப் பேரரசர்கள் பகுப்பு:பண்டைய கிரேக்க நபர்கள் பகுப்பு:இந்திய வரலாறு
பேரரசர் அலெக்சாந்தர் எப்போது பிறந்தார்?
கிமு 356 ஆம் ஆண்டு சூலை மாதம் 6
2,468
tamil
bc9f0d533
ரேடியம் (Radium) என்பது Ra என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கதிர்வீச்சு இயல்புள்ள ஒரு தனிமமாகும். இதன் அணு எண் 88 ஆகும். இதன் அணுநிறை 226 ஆகும். தனிம வரிசை அட்டவணையின் நெடுங்குழு 2 இல் இடம்பெற்றுள்ள ஆறாவது தனிமம் ரேடியம் ஆகும். காரமண் உலோகம் என்றும் இதை வகைப்படுத்துவர். தூய்மையான ரேடியம் வெள்ளியைப் போல வெண்மை நிறமுடையதாக உள்ளது. ஆனால் காற்றில் வெளிப்பட நேர்ந்தால் ரேடியம் ஆக்சிசனுக்குப் பதிலாக நைட்ரசனுடன் உடனடியாக வினைபுரிந்து ரேடியம் நைட்ரைடு (Ra3N2) என்ற கருப்பு நிற மேற்பரப்பு அடுக்காக உருவாகிறது. ரேடியத்தின் அனைத்து ஐசோடோப்புகளும் அதிகமான கதிரியக்கத் தன்மையுடையனவாகும். இவற்றில் ரேடியம் -226 என்ற ஐசோடோப்பு அதிக நிலைப்புத்தன்மை கொண்டதாக உள்ளது. இதனுடைய அரை ஆயுள் காலம் 1600 ஆண்டுகளாகும். கதிரியக்கச் சிதைவடைந்து இந்த ஐசோடோப்பு ரேடான் வாயுவாக, குறிப்பாக ரேடான் - 222 என்ற ஐசோடோப்பாக மாறுகிறது. ரேடியம் சிதைவடையும்போது அயனியாக்கும் கதிர் ஒரு விளைபொருளாகும். இது ஒளிரும் வேதிப்பொருட்களை கிளர்வூட்டி கதிரியக்க ஒளிர்வைத் தருகிறது. ரேடியம் குளோரைடு வடிவத்தில் ரேடியம் 1898 ஆம் ஆண்டு மேரிகியூரி மற்றும் பியரிகியூரி தம்பதியரால் கண்டறியப்பட்டது. பிரஞ்சு அறிவியல் அகாதமியில் யுரேனைட்டு என்ற கனிமத்திலிருந்து ரேடியம் தனித்துப் பிரித்தெடுக்கப்பட்டு ஐந்து நாட்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்டது. மேரிகியூரியும் ஆன்றே -லூயிசு டெபியர்ன் ஆகியோர் 1911 ஆம் ஆண்டு ரேடியம் குளோரைடை மின்னாற்பகுப்பு செய்து ரேடியத்தை அதனுடைய உலோக நிலையில் தயாரித்தனர்[1] இயற்கையில் ரேடியம் யுரேனியம் மற்றும் தோரியம் தாதுக்களில் மிகச்சிறிய அளவில் காணப்படுகிறது. வாழும் உயிரினங்களுக்கு ரேடியம் ஒன்றும் அத்தியாவசியமான தேவையாக இல்லை. இதன் கதிரியக்க மற்றும் இரசாயன வினைத்திறன் காரணமாக உயிர் வேதியியல் செயல்முறைகளில் இணைந்திருக்கும்போது, ஆரோக்கியத்திற்கு பாதகமான விளைவுகள் ஏற்படலாம். அணுக்கரு மருத்துவத்தில் பயன்படுவதைத் தவிர்த்து ரேடியத்திற்கு என வேறு வணிகப்பயன்பாடுகள் ஏதுமில்லை. முன்னர் இது கதிர் ஒளி வீசுகின்ற சாதனங்களுக்கான கதிரியக்க ஆதாரமாக பயன்படுத்தப்பட்டது. மேலும் இது பிணி நீக்கும் மருந்தாக கருதப்பட்டு கதிரியக்க போலி மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டது. இன்று இத்தகைய பயன்பாடுகளுக்காக ரேடியம் பயன்படுத்தப்படுவதில்லை. ஏனெனில் ரேடியத்தின் நச்சுத்தன்மை இன்று உணரப்பட்டுவிட்டது. எனவே குறைந்த நச்சுத்தன்மை கொண்ட ஐசோடோப்புகள் இக்கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றன. பண்புகள் அறியப்பட்டுள்ள காரமண் உலோகங்களில் மிகவும் கனமான உலோகம் ரேடியம் ஆகும். மற்றும் அக்குழுவில் இடம்பெற்றுள்ள ஒரே கதிரியக்க உலோகமும் இதுவேயாகும். ரேடியத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் பேரியம் தனிமத்தின் பண்புகளை ஒத்ததாக உள்ளது. தூய ரேடியம் ஓர் ஆவியாகக் கூடிய தனிமமாகும். இதன் இலேசான இணை தனிமங்களாகக் கருதப்படும் கால்சியம், இசுட்ரோன்சியம் மற்றும் பேரியம் ஆகியவை சிறிய மஞ்சள் நிறத்தில் இருந்தாலும் இது வெள்ளியைப் போல வெண்மை நிறத்துடன் காணப்படுகிறது. இதனுடைய நிறம் காற்றில் விரைவாக மங்கிவிடுகிறது. காற்றுடன் வினைபுரிந்து ரேடியம் நைட்ரைடு கருப்பு படலமாக இதன் மேற்பரப்பில் உருவாகிறது. ரேடியத்தின் உருகு நிலை 700 பாகை செல்சியசு வெப்ப நிலை அல்லது 960 பாகை செல்சியசு வெப்பநிலை இவற்றில் ஒன்றாக இருக்கலாம். மற்றும் இதனுடைய கொதி நிலை 1737 பாகை செல்சியசு வெப்பநிலை ஆகும். இவ்விரு அளவுகளும் பேரியத்தைக் காட்டிலும் குறைவான அளவுகளாக உள்ளன. தனிமவரிசை அட்டவணையின் ஆவர்த்தன போக்குகளுக்கு உட்பட்டதாகவும் இந்த அளவுகள் உள்ளன[2] . அட்டவணையின் மேலிருந்து கீழாகச் செல்லும்போது நெடுங்குழு 2 இன் தனிமங்கள் இத்தகைய போக்கையே காட்டுகின்றன. பேரியம் மற்றும் கார உலோகங்களைப் போல ரேடியம் சாதாரண வெப்ப நிலை மற்றும் அழுத்தத்தில் பொருள் மைய கனசதுர வடிவில் படிகமாகிறது. ரேடியம்-ரேடியம் பிணைப்பின் பிணைப்பு இடைவெளி 514.8 பைக்கோ மீட்டர்களாகும். இதன் அடர்த்தி 5.5 கிராம்/செ.மீ3 ஆகும். இது பேரியத்தின் அடர்த்தியைக் காட்டிலும் அதிகமாகும். ரேடியம்-பேரியம் அடர்த்தி வீதம் ரேடியம்-பேரியம் அணு நிறை வீதத்துடன் ஒப்பிட்டு நோக்கத்தக்கதாக உள்ளது. ஏனெனில் இரண்டு தனிமங்களும் ஒரே மாதிரியான படிகக் கட்டமைப்பில் படிகமாகியுள்ளன. ஐசோடோப்புகள் நிறை எண்கள் 202 முதல் 234 வரை உள்ள 33 ஐசோடோப்புகளை ரேடியம் கொண்டுள்ளது. இவை அனைத்தும் கதிரியக்கச் செயல்பாடு கொண்டவையாகும். அரை ஆயுட்காலம் 11.4 நாட்களைக் கொண்ட 223Ra, அரை ஆயுட்காலம் 3.64 நாட்களைக் கொண்ட 224Ra , அரை ஆயுட்காலம் 1600 ஆண்டுகள் கொண்ட 226Ra, அரை ஆயுட்காலம் 5.75 ஆண்டுகள் கொண்ட 228Ra என்ற நான்கு ஐசோடோப்புகளும் தோரியம்-232, யுரேனியம்-235, மற்றும் யுரேனியம்-238 போன்ற ஐசோடோப்புகளின் சிதைவுச் சங்கிலியிலிருந்து இயற்கையாகத் தோன்றுகின்றன. 223Ra ஐசோடோப்பு யுரேனியம்-235 ஐசோடோப்பிலிருந்தும், 226Ra ஐசோடோப்பு யுரேனியம்-235 ஐசோடோப்பிலிருந்தும், மற்ற இரண்டு ஐசோடோப்புகளும் தோரியம் 232 ஐசோடோப்பிலிருந்தும் உருவாகின்றன. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் at The Periodic Table of Videos (University of Nottingham) பகுப்பு:தனிமங்கள் பகுப்பு:காரக்கனிம மாழைகள்
ரேடியம் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
மேரிகியூரி மற்றும் பியரிகியூரி
990
tamil
b4a53c845
தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் என்றும், தஞ்சைப் பெரிய கோயில் ("Big temple") அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் ("Peruvudayar Temple") என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும்[1] , அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. கிபி 11-ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜராஜ சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தார்.[2]. 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்தb கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன.[3] இக்கோயில் தமிழகத்தின் மிகமுக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.[4] 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.[5] அழியாத சோழர் பெருங்கோயில்கள் என்ற பெயரில் இக்கோயில், கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில், தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் ஆகிய மூன்றும் யுனெஸ்கோ நிறுவனத்தால் பொது ஊழி உலகப்பாரம்பரியக் களப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.[6] தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[7] சொல்லிலக்கணம் தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்பதன் வடமொழியாக்கமே பிரகதீசுவரர் கோயில்.[8] இக்கோயில் தஞ்சைப் பெரிய கோயில்[9], பெரிய கோயில், இராஜராஜேஸ்வரன் கோயில், இராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது. முதலாம் இராஜராஜ சோழனால் கட்டுவிக்கப்பட்ட இக்கோயில் துவக்கக் காலத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் , 17 ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. வரலாறு முதலாம் இராஜராஜ சோழன் என்றழைக்கப்பட்ட சோழ அரசன் அருள்மொழிவர்மன் கனவில் அவனுக்கிடப்பட்ட ஆணையை நிறைவேற்றும் பொருட்டு, சோழர்களின் சிறப்பின் சின்னமாக விளங்கும் தஞ்சைப் பிரகதீசுவரர் கோயிலைக் கட்டுவித்தார்.[10] இக்கோயிலின் கட்டுமான வேலைகள் முதலாம் இராஜராஜனின் 19 ஆவது ஆட்சியாண்டில் துவக்கப்பட்டு (கி.பி. 1003-1004), அவனது 25 ஆவது ஆட்சியாண்டில் முடிவுற்றது (கிபி 1009-1010).[6][11] கோயிலின் வரைதிட்டத்தில், ஆள்கூற்று முறைமை, சமச்சீர்மை வடிவவியல் விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.[12] இதைத் தொடர்ந்து அடுத்த இரு நூற்றாண்டுகள் வரை கட்டப்பட்டக் கோயில்கள், சோழர்காலத்தில் தமிழர்கள் செல்வத்திலும், கலையிலும் சிறப்புற்று விளங்கியதற்குச் சான்றாகவுள்ளன. சோழர்காலக் கட்டிடக்கலையின் புதுவித அமைப்பாக சதுரப் போதிகைகள் கொண்ட பன்முகத் தூண்கள் காணப்படுகின்றன.[13] தனித்துவமான தென்னிந்தியக் கோயில் கட்டிடக்கலைக்கும், சோழர்களின் ஆட்சி மற்றும் தென்னிந்தியாவில் தமிழர்களின் நாகரிகத்திற்கும் சான்றாக அமைந்துள்ள இக்கோயில், கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, வெண்கலச் சிலையுருவாக்கம் ஆகியவற்றில் சோழர்களின் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.[14] இடைக்காலச் சோழர்கள் கி.பி. 985 முதல் 1070 வரை சோழர் கலை உயர்வடைந்து உச்ச நிலையில் இருந்தது. இடைக்காலச் சோழர் காலத்தில் ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டன. பரந்து கிடந்த சோழப் பேரரசு எங்கும் கோயில்கள் கட்டும் பணி தொடர்ச்சியாக நடந்தது. இக்காலத்தில் எத்தனையோ சிறு கோயில்களும் கட்டப்பட்டன. பெரிய கோவில் கட்டும் எண்ணத்தின் பின் புலம் காஞ்சியில் ராஜசிம்மனால் கட்டப்பட்ட கயிலாயநாதர் கோயில் ராஜராஜனை மிகவும் கவர்ந்தது. அதே போல் ஒரு கோவிலைக் கட்ட எண்ணிய இராஜராஜன் தஞ்சையில் பெரிய கோவிலைக் கட்டினான். பெரியகோவிலின் அமைப்பு, திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள அசலேஸ்வரர் சந்நிதியின் மாதிரியைக் கொண்டு உருவானதாகவும் செய்தி உண்டு. தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி, இளங்காட்டில் இராசராசனால் கட்டப்பெற்ற செங்கல்லால் ஆன சிறிய கோயில்தான் முன் மாதிரியாகும். திருவிடைமருதூர்க் கோவிலில் உள்ள மூலவரின் பெயர் மகாலிங்கம். இராஜராஜனுக்குப் பெயருக்கு ஏற்றார் போல் அந்த விக்கிரகம் இல்லை என்று எண்ணம். பின்னாளில் பெருவுடையார் என்ற பெயருக்கு ஏற்ப லிங்கமும் கோவிலும் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இக்கோயிலைக் கட்டத் தூண்டியது என்றும் ஓர் செய்தி உண்டு. கட்டமைப்பு இக்கோயிலின் தலைமைச் சிற்பி குஞ்சர மல்லன் ராஜராஜ ராமப் பெருந்தச்சன் எனக் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயிலின் அடிப்பாகம் 5 மீட்டர் (16 அடி) உயரம் கொண்டுள்ளது.[15] ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள நந்தி 20 டன் எடையும், இரண்டு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் நீளம், இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டதாகவும்,[16] லேபாக்ஷி கோயில் நந்திக்கு அடுத்தபடியாக, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தியுமாகவும் உள்ளது.[17] முதன்மைக் கடவுளான இலிங்கம் 3.7 மீட்டர் உயரமானது. வெளிப் பிரகாரம் 240 மீ. x 125 மீ. அளவிலானது.[16] 108 பரத நாட்டிய முத்திரைகளைக் காட்டும் நடனச் சிற்பங்கள் வெளிச்சுவற்றின் மேற்பகுதியில் வடிக்கப்பட்டுள்ளன.[16] பிற்காலத்தில் பாண்டியர்களால் 13 ஆம் நூற்றாண்டில் அம்மன் சன்னிதியும் விசயநகர அரசர்களால் சுப்பிரமணியர் சன்னிதியும் கட்டப்பட்டு, மராத்திய அரசர்களால் விநாயகர் சன்னிதி புதுப்பிக்கப்பட்டது.[16] தஞ்சை நாயக்கர்களாலும் இக்கோயில் மேம்படுத்தப்பட்டுள்ளது.[18] கோயில் அமைப்பு முக்கியமான கட்டடம் 150 அடி நீளம் இருக்கிறது. மிகப் பிரம்மாண்டமான விமானம் எகிப்தியப் பிரமிடுகளைப் போல கூர்நுனிக் கோபுரமாக அமைந்து கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு ஓங்கி வளர்ந்திருக்கிறது. அக்காலத்தில் புவனேஸ்வரத்தில் கட்டப்பட்ட லிங்கராஜர் கோயிலின் உயரம் 160 அடியாகும். இராஜராஜேஸ்வரம் அதையும் மிஞ்சி விட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் பிற்காலத்தில் கட்டப்பட்டவை - முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில், அம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியன. இவை தவிர இந்த மாபெரும் கோயிலின் ஏனைய பகுதிகள் யாவும் ஒரே காலத்தவை. இவற்றினுடைய பெருமிதத் தோற்றத்தையும் ஒருங்கிணைந்த திட்டத்தின் எளிமையான இயல்பையும் பாராட்டாமல் இருக்கமுடியாது. துணைச் சார்ந்த (Axial) மண்டபங்களும், விமானமும் அர்த்த மண்டபமும் மகாமண்டபமும் பெரிய நந்தியும் அவற்றிற்கேற்ற பொருத்தமான அளவுகளையுடைய ஒரு சுற்றுச் சுவருக்குள் அடங்கியிருக்கின்றன. இச்சுவரில் கிழக்கே ஒரு கோபுரம் இருக்கிறது. மதிலை ஒட்டி உள்பக்கமாக பல தூண்களுள்ள ஒரு நீண்ட மண்டபம் செல்லுகிறது. இது 35 உட்கோயில்களை இணைக்கிறது. நான்கு திக்குகளிலும் பல இடைவெளிகளுக்கு நடுவே கேந்திரமான இடங்களில் இந்த உட்கோயில்கள் கட்டப் பெற்றிருக்கின்றன. இரண்டாவது வெளிப் பிரகாரத்தின் வாயிலாக இருந்த இடத்தில் முன் பக்கத்தில் இரண்டாவது கோபுரம் இருக்கிறது. வடிவமைப்பு எகிப்திய பிரமிடுகளின் கட்டுமான முறைக்கும் தஞ்சை மற்றும் கங்கைகொண்ட சோழபுர கோவில்களின் கட்டுமான முறைக்கும் ஒற்றுமை இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரண்டிலுமே தேர்ந்தெடுக்கப்பட்ட கற்கள் அடுக்கியும் கோர்த்தும் வைத்து கட்டப்பட்டுள்ளது. இரண்டிலுமே கோள்களின் கதிர்வீச்சுக்கள் அதன் மையப் பகுதியில் குவியுமாறு வடிவமைக்கப்படுள்ளது. புவி அதிர்வுகளினால் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. கதிர்வீச்சுக்களின் குவியலில் பாதுகாக்கப்பட்ட அரசர்களின் உடல் கெடுவதில்லை. அதுபோல, சோழ கோவில்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஆவுடை-லிங்கங்கள் தொடர்ந்து சக்தியுள்ள மையமாக புகழுடைய கோவில்களாக சிறந்து விளங்குகின்றன. விமானம் முக்கிய விமானம் உத்தம வகையைச் சார்ந்தது; ஆதலால் இது மிகச் சிறந்தது. இதை, தமிழில் மாடக்கோயில் என்றும் சொல்வார்கள். இவ்வகைக்கு முதலாவது உதாரணம் தட்சிணமேரு-கோரங்கநாதர். இது பக்கவாட்டில் 99 அடி உள்ள சதுர அடித்தளத்தில் மீது அமைந்தது. படுக்கையான பகுதி, நீண்டு துருத்திக் கொண்டிருக்கும். ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. நடுவேயுள்ள பகுதி மற்ற பகுதிகளை விடப் பெரியது. தரை மட்டத்துக்குக் கீழே இருக்கும் தளத்திலிருந்து சிகரம் வரை குடாவும் மாடமும் மாறி மாறிக் காணப்படுகின்றன. சுவரில் பதித்த தூண்கள், பீடத்தை அழகுபடுத்துகின்றன. யாளி உருவத்தால் அழுத்தப்பட்ட கபோதம் உடைய பீடத்தின் மீது, இதைவிடச் சிறிய பரப்பில் 63அடி சதுரத்தில் ஒரு உபபீடம் எழுப்பப்பட்டிருக்கிறது. மேலேயும் கீழேயும் பத்ம தளங்கள் உடையதும் அரை வட்ட வடிவத்தில் பிரம்மாண்டமானதாய் அமைந்ததுமான குமுதத்தை ஏற்றுக்கொள்ள பத்ம தளமாக, கல்வெட்டுக்களுடன் கூடிய உபானம் விளங்குகிறது. குமுதம், கிழக்கு மூலையில் குறுக்காகத் திரும்பும் போது, விளிம்பில் எண்கோணமாக வெட்டப்படுகிறது. கண்டமும் கபோதமும் நெருங்கிக் காட்டப்பட்டுள்ளன. குமுதத்திற்கு நேர் உயரத்தில் வரி விமானம் கானப்படுகிறது. வரிசையாகப் பல சிங்கங்கள், அவறின் மீது சிங்கங்களை ஓட்டுபவர் மூலைகளில் சிங்கங்களுக்குப் பதிலாக, மகரங்களும் போர் வீரர்களும் வாயைப் பிளந்து கொண்டிருக்கும் குதிரைகளும் அவற்றின் மீதேறிச் சவாரி செய்பவர்களின் உருவங்களும் உள்ளன. உள்ளுறையின் செங்குத்தான சுவர்கள் தள அமைப்பைப் பின்பற்றிய 50அடி உயரத்துக்கு எழுப்பப்பட்டுள்ள, பிரம்மாண்டமான வளைந்த பிதுக்கம் அந்தச் சுவர்களை இரண்டு மாடிகளாகப் பிரிக்கிறது. இடைச்சிக் கல் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தது. அழகி என்னும் இடையர் குல மூதாட்டி சிவத்தொண்டு செய்ய விரும்பினார். ஏழை மூதாட்டி தன்னால் இயன்ற தொண்டாக கோவில் கட்டி முடிக்கும் வரை கோவில் கட்டும் சிற்பிகளின் தாகத்தை போக்கும் பொருட்டு தினமும் அவர்களுக்கு தயிர், மோர் வழங்கி வந்தார். இதனை அறிந்த மன்னர் அருள்மொழிவர்மன் (ராஜராஜசோழன்) இடையர் குல மூதாட்டியின் சிவத்தொண்டை அனைவரும் அறியும் வண்ணம் 80டன் எடை கொண்ட கல்லில் அழகி என்று பெயர் பொறித்து, அதனை ராஜகோபுரத்தின் உச்சியில் இடம் பெற செய்தார். அந்த கல் இடைச்சிக் கல் என்று அழைக்கப்படுகிறது. அந்த கல்லின் நிழலே இறைவன் பிரகதீஸ்வரர் மேல் விழுகிறது. நந்தி மண்டபம் தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. நந்திமண்டபத்திற்கு தெற்கே உள்ள திருச்சுற்று மாளிகையில் வடதிசையை நோக்கியபடி உள்ள நந்தியே இராஜராஜனால் பெருவுடையாருக்கு எதிரே அமைக்கப்பட்டதாகும். பின்னாளில் நாயக்கர்கள் சிவலிங்கத்துக்கு இணையான பெரிய நந்தியை நிறுவினர். முதலில் அமைக்கப்பட்ட நந்தி கேரளாந்தகன், இராஜராஜன் வாயில்களுக்கு இடைப்பட்ட பகுதிக்கும் பின்னர் திருச்சுற்று மாளிகைக்கும் மாற்றப்பட்டது.[19] சந்நிதிகள் சிவலிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ள, முக்கியமான கோயிலையும், அதனோடு கூடிய மண்டபங்களையும் தவிர, சண்டிகேஸ்வரர், அம்மன், நடராஜர், வராகி, சுப்பிரமணியர், கணபதி மற்றும் கருவூர்த் தேவர் கோயில்களும், இவ் வளாகத்துள் அமைந்துள்ளன. பெருவுடையார் சந்நிதி - பிரகதீசுவரர், பெருவுடையார் என்று அழைக்கப்படும் மூலவர் சிவபெருமான் லிங்க வடிவில் உள்ளார். இந்த மூலவரை இராஜராஜ சோழன் ராஜராஜீஸ்வரமுடையார் என்ற பெயரில் வழிபட்டுள்ளார். இம்மூலவருக்கு பீடம் இல்லை. பெரியநாயகி அம்மன் சந்நிதி - இக்கோவிலின் அம்மன் பெரியநாயகியாவார். இது பாண்டியர் கால கட்டுமானம். கருவூர் சித்தர் சந்நிதி - இக்கோவிலில் கருவூர் சித்தருக்கென தனி சந்நிதி அமைந்துள்ளது. வராகி அம்மன் சந்நிதி - இது சோழர் கால கட்டுமானமாக இருக்க வேண்டும் என்றே கருதப்படுகிறது. வேறெங்கிலும் இல்லாத வகையில் இந்த திருவுருவிற்கு இரண்டு கரங்கள் மட்டுமே இருப்பது வியக்கத்தக்கது. கல்வெட்டுக்கள் இக் கோயிலின் பலவிடங்களிலும் இருக்கும் கல்வெட்டுக்கள், இக் கோயிலில் இராஜராஜன் கொண்டிருந்த தனிப்பட்ட கரிசனத்தை விளக்குவதாகக் கூறப்படுகிறது. தான் மட்டுமன்றி, அரச குடும்பத்தினரும், அரச அலுவலரும், படையினரும், பொதுமக்களும் ஆகிய எல்லோருடைய பங்களிப்பும், கோயிலின் பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் இருக்கும்படி பார்த்துக்கொண்டானெனவும் தெரிகிறது. நிதித்தேவைகளும், அரசனால் இறையிலியாகக் கொடுக்கப்பட்ட நிலங்களிலும், கிராமங்களிலிருந்தும் வரும் வருவாயினாலும், இன்னும் வேறு வழிகளிலும் பெற்றுக்கொள்ளப்பட்டது. கோவிலின் முதல் கல்வெட்டே இதற்கு சான்று. "நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்த கல்லிலே வெட்டி அருள்க...." தன்னுடைய பங்களிப்பு மட்டுமன்றி மற்ற எல்லோரின் பங்களிப்பையும் ஆவணப் படுத்தியதே வியத்தகு ஒன்று. இங்கே மன்னர் தனக்கு அடுத்தபடியாக முக்கியத்துவத்தை அக்கன் -- தன் மூத்த சகோதரியான குந்தவை தேவிக்கு அளிக்கிறார். தன்னை வளர்த்து, கனவுகளை கொடுத்தவருக்கு அவர் செய்யும் சிறப்பாகும் இது. அடுத்து பெண்கள் என்னும் சொல்லின் மூலம் அவரது பட்டத்தரசியான தந்தி சக்தி விடங்கி மற்றும் மனைவியர் கொடுத்த கொடைகளும், கொடுப்பார் கொடுத்தனவும் என்பதின் மூலம் மற்றவர் எல்லோரும் கொடுத்த கொடைகளும் பட்டியலிடப்படுகின்றன. கோயிலில் அன்றாட கருமங்களை ஒழுங்காகச் செயல்படுத்துவதற்குப், பூசகர்களும், சிற்பிகளும் தேவார ஓதுவார்களும், இசைவாணர்களும், நடனமாதர்களும், மேலும் இன்னோரன்ன பணியாட்களும் தேவைகளுக்கேற்ப நியமிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. 50 ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் கோயிலிலிருந்ததாகக் கல்வெட்டுச் சான்றுகள் பகர்கின்றன. விழாக்கள் பிரம்மோற்சவம் - ராஜராஜசோழன் பிறந்தநாள் விழா அன்னாபிஷேகம் திருவாதிரை ஆடிப்பூரம் கார்த்திகை பிரதோசம் சிவராத்திரி தேரோட்டம் தஞ்சைப் பெரிய கோயிலின் சிறப்பு இக்கோவில் விமானத்தின் உயரம் 216அடி (66மீ) உயரம் கொண்டது.[20] இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீ உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பினார். இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயில் சுமார் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும். 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அரை அடி உயரம் கொண்ட லிங்கம் ஆகியன தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான நந்தி சிலையின் உயரமும், அகலமும் முறையே: 13 அடிகள் மற்றும் 16 அடிகள் ஆகும்.[10] தமிழகத்தில் சற்றொப்ப இதே அமைப்பிலுள்ள கோயில்கள் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரர் கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயில் ஆகியவையாகும். 1010 ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. ஆயிரம் ரூபாய் நோட்டு, தபால் தலை தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954ம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி ₹ 1000 நோட்டை வெளியிட்டது. அதில் தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பிரகதீசுவரர் ஆலயத்தின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் 4வது கவர்னரான சர் பெனகல் ராமாராவ், அதில் கையெழுத்திட்டார். டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் கான்பூர் ஆகிய நகரங்களில் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. 5 வரிசைகளிலான எண்களில் அந்த நோட்டுகள் வெளியாகின. மும்பையில் அச்சிடப்பட்ட நோட்டுகளின் வரிசை ஆங்கில எழுத்து ஏ ஆகும். மத்திய அரசு 1995 ஆம் ஆண்டில் மாமன்னர் ராஜராஜ சோழன் உருவம் பதித்த 2 ரூபாய் தபால் தலையை வெளியிட்டது. ஆயிரமாண்டு நிறைவு விழா தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவினை தஞ்சை மாநகரில் 2010 செப்டம்பர் 25, செப்டம்பர் 26-ந் தேதி ஆகிய 2 நாட்களுக்கு சிறப்புற நடத்தப்பட்டது. மத்திய மந்திரி ஆ. ராசா பெரியகோவில் உருவம் பொறித்த 5 ரூபாய் சிறப்பு தபால் தலையை முன்னால் முதல்-அமைச்சர் மு. கருணாநிதி முன்னிலையில் வெளியிட்டார். அதை மத்திய மந்திரி ஜி.கே.வாசன் பெற்றுக்கொண்டார். சிறப்பு தபால் தலையின் மாதிரி வடிவத்தை, முன்னால் முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். பின்னர் மத்திய மந்திரி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பெரிய கோவில் மற்றும் ராஜராஜன் உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை வெளியிட, அதை மத்திய மந்திரி நாராயணசாமி பெற்றுக்கொண்டார். விழாவின் முதல் நாள் காலை முதல் நாட்டுப்புறக் கலைஞர்களின் பல்வேறு தெருவோர நிகழ்ச்சிகள் நகரின் பல பகுதிகளில் நடத்தப்பட்டது. மாலையில் தஞ்சை பெரிய கோவிலில் அனைத்திந்திய பரதநாட்டிய கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் பத்மா சுப்ரமணியத்தின் தலைமையில் ஆயிரம் நடனக்கலைஞர்கள் கலந்து கொண்ட மாபெரும் நிகழ்ச்சி இடம்பெற்றது. அந்த நடன நிகழ்ச்சிக்கு முன்பாக நாதஸ்வர இசை நிகழ்ச்சியும், நடன நிகழ்ச்சிக்குப் பின்னர் 100 ஓதுவார்களின் திருமுறை இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இரண்டாம் நாள் காலையில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கமும், தஞ்சை பெரிய கோவிலில் பொது அரங்கமும், மாலையில் தஞ்சை திலகர் திடலில் முன்னால் முதல்வர் கருணாநிதி தலைமையில் தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலை வெளியிடுதல், தஞ்சை மாநகருக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தொடங்குதல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன. வரலாற்று கண்காட்சி ஒன்றும் நடத்தப்பட்டது[21]. கருத்துகளும் உண்மைகளும் தஞ்சை பெரிய கோயிலின் கோபுர நிழனானது தரையில் விழாது என்றொரு நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது. ஆனால் இக்கோயிலின் விமான நிழல் தரையில் விழுகின்ற படியே அமைக்கப்பட்டிருக்கிறது. [22] மேலும் படங்கள் தஞ்சை பெரிய கோயில் &lt;கோயில் வலது பக்கத்தின் முன் தோற்றம் கோயில் வலது பின்பக்கத்தின் தோற்றம் கோயில் இடது பக்கத்தின் முன் தோற்றம் கோயில் விமானம் கோயில் முற்றத்தில் உள்ள அலங்கரிக்கப்பட்டத் தூண் காளை முக சிவன் (நந்தி), கலசம் பின்னணியில் (விமானம்) நந்தி மண்டபக் கூரையில் வரையப்பட்ட சுவரோவியங்கள் மேலும் பார்க்க அழியாத சோழர் பெருங்கோயில்கள் கங்கைகொண்ட சோழபுரம் ஐராவதேஸ்வரர் கோயில் தஞ்சைப் பெரிய கோயில் தேரோட்டம் உசாத்துணை • குடவாயில் பாலசுப்ரமணியன், இராஜராஜேச்சரம், சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை, மஞ்சக்குடி, திருவாரூர் மாவட்டம், 2010 • தஞ்சைப்பெரிய கோயில் சோழர் கால ஓவியங்கள், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2010 ஆதாரங்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:தமிழகத்தின் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்கள் பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள் பகுப்பு:தஞ்சாவூர் வரலாறு
தமிழ்நாட்டின் மிகப்பெரிய சிவபெருமான் கோயில் எது?
தஞ்சைப் பெரிய கோயில்
37
tamil
5179ed725
ரேடியம் (Radium) என்பது Ra என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கதிர்வீச்சு இயல்புள்ள ஒரு தனிமமாகும். இதன் அணு எண் 88 ஆகும். இதன் அணுநிறை 226 ஆகும். தனிம வரிசை அட்டவணையின் நெடுங்குழு 2 இல் இடம்பெற்றுள்ள ஆறாவது தனிமம் ரேடியம் ஆகும். காரமண் உலோகம் என்றும் இதை வகைப்படுத்துவர். தூய்மையான ரேடியம் வெள்ளியைப் போல வெண்மை நிறமுடையதாக உள்ளது. ஆனால் காற்றில் வெளிப்பட நேர்ந்தால் ரேடியம் ஆக்சிசனுக்குப் பதிலாக நைட்ரசனுடன் உடனடியாக வினைபுரிந்து ரேடியம் நைட்ரைடு (Ra3N2) என்ற கருப்பு நிற மேற்பரப்பு அடுக்காக உருவாகிறது. ரேடியத்தின் அனைத்து ஐசோடோப்புகளும் அதிகமான கதிரியக்கத் தன்மையுடையனவாகும். இவற்றில் ரேடியம் -226 என்ற ஐசோடோப்பு அதிக நிலைப்புத்தன்மை கொண்டதாக உள்ளது. இதனுடைய அரை ஆயுள் காலம் 1600 ஆண்டுகளாகும். கதிரியக்கச் சிதைவடைந்து இந்த ஐசோடோப்பு ரேடான் வாயுவாக, குறிப்பாக ரேடான் - 222 என்ற ஐசோடோப்பாக மாறுகிறது. ரேடியம் சிதைவடையும்போது அயனியாக்கும் கதிர் ஒரு விளைபொருளாகும். இது ஒளிரும் வேதிப்பொருட்களை கிளர்வூட்டி கதிரியக்க ஒளிர்வைத் தருகிறது. ரேடியம் குளோரைடு வடிவத்தில் ரேடியம் 1898 ஆம் ஆண்டு மேரிகியூரி மற்றும் பியரிகியூரி தம்பதியரால் கண்டறியப்பட்டது. பிரஞ்சு அறிவியல் அகாதமியில் யுரேனைட்டு என்ற கனிமத்திலிருந்து ரேடியம் தனித்துப் பிரித்தெடுக்கப்பட்டு ஐந்து நாட்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்டது. மேரிகியூரியும் ஆன்றே -லூயிசு டெபியர்ன் ஆகியோர் 1911 ஆம் ஆண்டு ரேடியம் குளோரைடை மின்னாற்பகுப்பு செய்து ரேடியத்தை அதனுடைய உலோக நிலையில் தயாரித்தனர்[1] இயற்கையில் ரேடியம் யுரேனியம் மற்றும் தோரியம் தாதுக்களில் மிகச்சிறிய அளவில் காணப்படுகிறது. வாழும் உயிரினங்களுக்கு ரேடியம் ஒன்றும் அத்தியாவசியமான தேவையாக இல்லை. இதன் கதிரியக்க மற்றும் இரசாயன வினைத்திறன் காரணமாக உயிர் வேதியியல் செயல்முறைகளில் இணைந்திருக்கும்போது, ஆரோக்கியத்திற்கு பாதகமான விளைவுகள் ஏற்படலாம். அணுக்கரு மருத்துவத்தில் பயன்படுவதைத் தவிர்த்து ரேடியத்திற்கு என வேறு வணிகப்பயன்பாடுகள் ஏதுமில்லை. முன்னர் இது கதிர் ஒளி வீசுகின்ற சாதனங்களுக்கான கதிரியக்க ஆதாரமாக பயன்படுத்தப்பட்டது. மேலும் இது பிணி நீக்கும் மருந்தாக கருதப்பட்டு கதிரியக்க போலி மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டது. இன்று இத்தகைய பயன்பாடுகளுக்காக ரேடியம் பயன்படுத்தப்படுவதில்லை. ஏனெனில் ரேடியத்தின் நச்சுத்தன்மை இன்று உணரப்பட்டுவிட்டது. எனவே குறைந்த நச்சுத்தன்மை கொண்ட ஐசோடோப்புகள் இக்கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றன. பண்புகள் அறியப்பட்டுள்ள காரமண் உலோகங்களில் மிகவும் கனமான உலோகம் ரேடியம் ஆகும். மற்றும் அக்குழுவில் இடம்பெற்றுள்ள ஒரே கதிரியக்க உலோகமும் இதுவேயாகும். ரேடியத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் பேரியம் தனிமத்தின் பண்புகளை ஒத்ததாக உள்ளது. தூய ரேடியம் ஓர் ஆவியாகக் கூடிய தனிமமாகும். இதன் இலேசான இணை தனிமங்களாகக் கருதப்படும் கால்சியம், இசுட்ரோன்சியம் மற்றும் பேரியம் ஆகியவை சிறிய மஞ்சள் நிறத்தில் இருந்தாலும் இது வெள்ளியைப் போல வெண்மை நிறத்துடன் காணப்படுகிறது. இதனுடைய நிறம் காற்றில் விரைவாக மங்கிவிடுகிறது. காற்றுடன் வினைபுரிந்து ரேடியம் நைட்ரைடு கருப்பு படலமாக இதன் மேற்பரப்பில் உருவாகிறது. ரேடியத்தின் உருகு நிலை 700 பாகை செல்சியசு வெப்ப நிலை அல்லது 960 பாகை செல்சியசு வெப்பநிலை இவற்றில் ஒன்றாக இருக்கலாம். மற்றும் இதனுடைய கொதி நிலை 1737 பாகை செல்சியசு வெப்பநிலை ஆகும். இவ்விரு அளவுகளும் பேரியத்தைக் காட்டிலும் குறைவான அளவுகளாக உள்ளன. தனிமவரிசை அட்டவணையின் ஆவர்த்தன போக்குகளுக்கு உட்பட்டதாகவும் இந்த அளவுகள் உள்ளன[2] . அட்டவணையின் மேலிருந்து கீழாகச் செல்லும்போது நெடுங்குழு 2 இன் தனிமங்கள் இத்தகைய போக்கையே காட்டுகின்றன. பேரியம் மற்றும் கார உலோகங்களைப் போல ரேடியம் சாதாரண வெப்ப நிலை மற்றும் அழுத்தத்தில் பொருள் மைய கனசதுர வடிவில் படிகமாகிறது. ரேடியம்-ரேடியம் பிணைப்பின் பிணைப்பு இடைவெளி 514.8 பைக்கோ மீட்டர்களாகும். இதன் அடர்த்தி 5.5 கிராம்/செ.மீ3 ஆகும். இது பேரியத்தின் அடர்த்தியைக் காட்டிலும் அதிகமாகும். ரேடியம்-பேரியம் அடர்த்தி வீதம் ரேடியம்-பேரியம் அணு நிறை வீதத்துடன் ஒப்பிட்டு நோக்கத்தக்கதாக உள்ளது. ஏனெனில் இரண்டு தனிமங்களும் ஒரே மாதிரியான படிகக் கட்டமைப்பில் படிகமாகியுள்ளன. ஐசோடோப்புகள் நிறை எண்கள் 202 முதல் 234 வரை உள்ள 33 ஐசோடோப்புகளை ரேடியம் கொண்டுள்ளது. இவை அனைத்தும் கதிரியக்கச் செயல்பாடு கொண்டவையாகும். அரை ஆயுட்காலம் 11.4 நாட்களைக் கொண்ட 223Ra, அரை ஆயுட்காலம் 3.64 நாட்களைக் கொண்ட 224Ra , அரை ஆயுட்காலம் 1600 ஆண்டுகள் கொண்ட 226Ra, அரை ஆயுட்காலம் 5.75 ஆண்டுகள் கொண்ட 228Ra என்ற நான்கு ஐசோடோப்புகளும் தோரியம்-232, யுரேனியம்-235, மற்றும் யுரேனியம்-238 போன்ற ஐசோடோப்புகளின் சிதைவுச் சங்கிலியிலிருந்து இயற்கையாகத் தோன்றுகின்றன. 223Ra ஐசோடோப்பு யுரேனியம்-235 ஐசோடோப்பிலிருந்தும், 226Ra ஐசோடோப்பு யுரேனியம்-235 ஐசோடோப்பிலிருந்தும், மற்ற இரண்டு ஐசோடோப்புகளும் தோரியம் 232 ஐசோடோப்பிலிருந்தும் உருவாகின்றன. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் at The Periodic Table of Videos (University of Nottingham) பகுப்பு:தனிமங்கள் பகுப்பு:காரக்கனிம மாழைகள்
ரேடியம் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
1898
975
tamil
6a928d011
டாட்டா குழுமம் (Hindi: टाटा समूह) என்பது பெரும்திரளாகப் பரவியுள்ள பன்னாட்டு நிறுவனமாகும், இந்நிறுவனம் இந்தியாவின் மும்பை நகரைத் தலைமையிடமாகக் கொண்டது. சந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில், டாட்டா குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பெருநிறுவன குழுமமாகும். மேலும் இந்நிறுவனம் உலகில் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[3][4] இந்நிறுவனம் இரும்பு, வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல்தொடர்பு, மின்சாரம், தேயிலை மற்றும் மருத்துவ வசதி ஆகிய துறைகளில் பங்குகளைக் கொண்டுள்ளது. டாட்டா குழுமம் ஆறு கண்டங்களில் 85 நாடுகளுக்கும் மேலாக தனது செயல்பாடுகளைக் கொண்டுள்ளது, மேலும் அதன் நிறுவனங்கள் 80 நாடுகளுக்கு அதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்கின்றன. டாட்டா குழுமமானது அதன் ஏழு வணிகப் பிரிவுகளில் 114 நிறுவனங்களையும் துணைநிறுவனங்களையும் கொண்டுள்ளது [5], அவற்றில் 27 வெளிப்படையாக பட்டியலிடப்பட்டுள்ளன. டாட்டா குழுமத்தின் உரிமையில் 65.8% அறக்கட்டளைகளில் மூலம் நடத்தப்படுகின்றன.[6] டாட்டா ஸ்டீல், கோரஸ் ஸ்டீல், டாட்டா மோட்டார்ஸ், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், டாட்டா டெக்னாலஜீஸ், டாட்டா டீ, டைட்டன் இண்டஸ்ட்ரீஸ், டாட்டா பவர், டாட்டா கம்யூனிகேஷன்ஸ், டாட்டா டெலிசர்வீசஸ் மற்றும் தாஜ் ஹோட்டல்ஸ் உள்ளிட்டவை இந்தக் குழுமத்தின் முக்கிய பங்குவகிக்கின்ற நிறுவனங்கள் ஆகின்றன. இந்தக் குழுமமானது அதன் நிறுவனர் ஜாம்சேத்ஜி டாட்டாவின் பெயரைக் கொண்டுள்ளது, இவரது குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் குழுமத்தின் நிலையான தலைவராக இருக்கின்றார். டாட்டா குழுமத்தின் தற்போதைய தலைவர் ரத்தன் டாட்டா, இவர் ஜே. ஆர். டி. டாட்டாவிடமிருந்து 1991 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றுள்ளார். மேலும் உலகமய காலகட்டத்தில் இவர் தற்போது முக்கிய சர்வதேச வர்த்தகப் புள்ளிகளில் ஒருவராக உள்ளார்.[7] நிறுவனமானது தற்போது குடும்ப வாரிசுகளின் அடிப்படையில் அதன் ஐந்தாம் தலைமுறையில் உள்ளது.[8] ரெப்யூடேஷன் இன்ஸ்டியூட் மூலமான 2009 ஆண்டின் கருத்துக்கணிப்பில், உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் 11 ஆவது இடத்தை டாட்டா குழுமத்திற்கு வழங்கியது.[9] அந்த கருத்துக்கணிப்பில் 600 உலகளாவிய நிறுவனங்கள் அடங்கியிருந்தன. வரலாறு 1868 ஆம் ஆண்டில் ஜேம்சேட்ஜி நஸ்ஸர்வன்ஜி டாட்டா அவர்கள் ஒரு வர்த்தக நிறுவனத்தை அபின் வர்த்தகத்திற்காக மும்பையில் நிறுவியபோது, டாட்டா குழுமத்தின் தொடக்கம் இருந்ததாக தடமறியமுடியும்.[10] அதனைத் தொடர்ந்து 1877 ஆம் ஆண்டில் நாக்பூர் நகரில் எம்பிரஸ் மில்ஸை தொடங்கப்பட்டது. 1903 ஆம் ஆண்டில் வர்த்தகத்திற்காக பாம்பேயில் தாஜ் மஹால் ஹோட்டல் திறக்கப்பட்டது. 1904 ஆம் ஆண்டில் ஜாம்சேட்ஜி இறந்த பின்னர் அவரது மூத்த மகன் சர் தோரப் டாட்டா அவர்கள் குழுமத்தின் தலைவரானார். அவரது பொறுப்பின் கீழ், இந்தக் குழுமமானது இரும்பு உற்பத்தியிலும் (1905) மற்றும் ஹைட்ராலிக் மின் உற்பத்தியிலும் (1910) முதலீடு செய்தது. 1934 ஆம் ஆண்டில் தோரப் டாட்டா இறந்த பிறகு, நவ்ரோஜி சக்லத்வாலா அவர்கள் 1938 ஆம் ஆண்டி வரையில் குழுமத்திற்குத் தலைமையேற்றார். அவர் ஜே.ஆர்.டி டாட்டா அவர்களால் தோற்கடிக்கப்பட்டார். டாட்டா கெமிக்கல்ஸ் (1939), டாட்டா மோட்டார்ஸ் மற்றும் டாட்டா இண்டஸ்ட்ரீஸ் (இரண்டும் 1945), வோல்டாஸ் (1954), டாட்டா டீ (1962), டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (1968) மற்றும் டைட்டன் இண்டஸ்ட்ரீஸ் (1984) உள்ளிட்ட அவரது நிறுவுதல்களுடன் இந்தக் குழுமமானது குறிப்பிடத்தகுந்த அளவில் விரிவானது. 1991 ஆம் ஆண்டில் ஜே.ஆர்.டி டாட்டா வழியில் ரத்தன் டாட்டா குழுமத்தின் கடமைமிக்க தலைவரானார்.[11] நிறுவனங்கள் பொறியியல் 1 டி.ஏ.எல் (TAL) மேனுஃபேக்ட்சரிக் சொல்யூசன்ஸ் நிறுவனம் போயிங் 787 விமானங்களில் நிறுவப்பட்டுள்ள டைட்டேனியம் கலப்பு தள விட்டங்களை ஏற்றுமதிசெய்கின்றது.[12] டாட்டா ஆட்டோகம்ப் சிஸ்டம்ஸ் லிமிடேட் (TACO) மற்றும் அதன் துணைநிறுவனங்கள், தானியங்கி பாகங்கள் உற்பத்தி டாட்டா மோட்டார்ஸ் (முன்னதாக டாட்டா எஞ்ஜினியரிங் மற்றும் லோகமேட்டிவ்ஸ் கம்பெனி லிட். (TELCO) எனப்பட்டது), வணிக வாகனங்கள் (இந்தியாவில் மிகப்பெரியது) மற்றும் பயணிகள் வாகனங்கள் ஆகியவற்றின் உற்பத்தியாளர். ஜாக்குவார் மற்றும் லேண்ட் ரோவர் டாட்டா பிராஜெக்ட்ஸ் டாட்டா கன்சல்ட்டிங் எஞ்ஜினியரிங் லிமிட்டேட் டெல்கோ கன்ஸ்ட்ரக்சன் எக்யூப்மெண்ட் கம்பெனி டி.ஆர்.எஃப்(TRF) பல்க் மெட்டீரியல் ஹேண்ட்லிங் எக்யூப்மெண்ட் &amp; சிஸ்டம்ஸ் அண்ட் போர்ட் &amp; யார்டு எக்யூப்மெண்ட்ஸ். வோல்டாஸ், நுகர்வோர் மின்னணு நிறுவனம் 2 மின்சக்தி டாட்டா பவர் என்பது மிகப்பெரிய தனியார் பிரிவு மின்சக்தி நிறுவனங்களில் ஒன்று. இது இந்தியாவின் வணிகத் தலைநகரான மும்பை மாநகருக்கும் புதுடில்லியின் பல பகுதிகளுக்கும் மின்சக்தி வழங்குகின்றது. இரசாயனம் ராலிஸ் இந்தியா டாட்டா பிக்மெண்ட்ஸ் இந்தியாவின் மும்பை மாநகரைத் தலைமையிடமாகக் கொண்ட டாட்டா கெமிக்கல்ஸ், இது இந்தியாவில் மிகப்பெரிய ஒற்றை சோடா சாம்பல் தயாரிப்புத் திறன் ஆலையைக் கொண்டிருக்கின்றது. 2006 ஆம் ஆண்டிலிருந்து டாட்டா கெமிக்கல்ஸ் நிறுவனமானது, கென்யா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் செயல்பாடுகளைக் கொண்ட இங்கிலாந்து அடிப்படை ராசாயன நிறுவனமான ப்ரூன்னர் மோண்ட் என்ற நிறுவனத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் பெங்களூர் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட அட்வினஸ் தெருபெயோட்டிக்ஸ் நிறுவனமானது, மருந்துகள், விவசாயம் மற்றும் உயிர்தொழில்நுட்பத் துறைகளுக்கான மருந்து கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒப்பந்த ஆராய்ச்சி அமைப்பு ஆகும். சேவைகள் இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி டாட்டா ஹவுசிங் டெவலெப்மெண்ட் கம்பெனி லிட். (THDC) டாட்டா ஏ.ஐ.ஜி (TATA AIG) பொதுக் காப்பீடு டாட்டா ஏ.ஐ.ஜி (TATA AIG) ஆயுட்காப்பீடு டாட்டா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிட்டேட் டாட்டா சொத்து நிர்வாகம் டாட்டா நிதி சேவைகள் டாட்டா கேபிட்டல் டாட்டா முதலீட்டு நிறுவனம் டாட்டா தர மேலாண்மை சேவைகள் டாட்டா ஷேர் ரெஜிஸ்டரி தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய ஆலோசனை நிறுவனங்களில் ஒன்றான டாட்டா ஸ்டேட்டர்ஜிக் மேனேஜ்மெண்ட் குரூப். டாட்டா சர்வீசஸ் நுகர்வோர் தயாரிப்புகள் டாட்டா உப்பு, ஐ-சக்தி உப்பு, டாட்டா உப்பு லைட் எய்ட் ஓ கிளாக் காஃபி டாட்டா செராமிக்ஸ் இன்பினிட்டி ரீட்டெயில் டாட்டா டீ லிமிட்டேட் நிறுவனம் தேயிலை மற்றும் தேயிலைத் தயாரிப்பு நிறுவனங்களில் உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளர் ஆகும். மேலும் இந்நிறுவனம் ஐரோப்பாவில் முதன்மையாக விற்பனையாகும் தேயிலை பிராண்டான டெட்லேவை சொந்தமாகவும் கொண்டுள்ளது. டைட்டன் கடிகாரங்களின் உற்பத்தியாளரான டைட்டன் இண்டஸ்ட்ரீஸ் ட்ரெண்ட் (வெஸ்ட்சைடு) டாட்டா ஸ்கை டாட்டா இண்டர்நேஷனல் லிட் - தோல் தயாரிப்புகள் பிரிவு தனிஸ்க் ஜூவல்லரி ஸ்டார் பஜார் தகவல் அமைப்புகள் மற்றும் தகவல்தொடர்புகள் கம்ப்யூட்டேஷனல் ரிசர்ஜ் லேபரட்டரீஸ் இன்கேட் (INCAT) நெல்கோ (Nelco) நெலிட்டோ சிஸ்டம்ஸ் டாட்டா பிசினஸ் சப்போர்ட் சர்வீசஸ் (முன்னர் சேர்விஸ்சோல்) டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் லிட். (டி.சி.எஸ் (TCS)) என்பது 2008-09 ஆம் நிதியாண்டில் 6 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான வருமானத்தைக் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனம். டாட்டா எல்க்ஸி என்பது டாட்டா குழுமத்தின் மற்றொரு மென்பொருள் மற்றும் தொழிற்துறை வடிவமைப்பு நிறுவனம் ஆகும். இது பெங்களூர் மற்றும் திருவனந்தபுரம் அடிப்படையானது. இது இந்தியாவின் அனிமேஷன் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று. டாட்டா இண்டராக்டிவ் சிஸ்டம்ஸ் டாட்டா டெக்னாலஜீஸ் லிமிட்டேட் டாட்டா டெலிசர்வீசஸ் டாட்டாநெட் டாட்டா கம்யூனிகேஷன்ஸ், முன்னதாக இந்தியாவின் தகவல்தொடர்பு ஜாம்பவானாக இருந்த VSNL ஆகும். இந்நிறுவனம் 2002 ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் VSNL கையகப்படுத்திய டெலிகுளோப் நிறுவனத்தையும் டாட்டா சொந்தமாகக் கொண்டுள்ளது. சி.எம்.சி (CMC) லிமிட்டேட் டாட்டா வர்த்தகச் சின்னம் டாட்டாவின் வர்த்தகச் சின்னமானது வோல்ப் ஓலின்ஸ் கன்சல்டன்சியால் வடிவமைக்கப்பட்டது. வர்த்தகச் சின்னமானது குறிப்பிட்ட பாய்மத்தன்மையைக் குறிக்கின்றது; இது அறிவின் நீரூற்றாக இருப்பதையும் காணலாம்; இது மக்கள் பாதுகாப்பைப் பெறக்கூடிய நம்பகமான மரமாக இருக்கும். அறப்பணி மற்றும் தேசிய கட்டுமானம் டாட்டா குழுமம் இந்தியாவில் பல தரமான ஆராய்ச்சி, கல்வி மற்றும் கலாச்சார நிறுவனங்களை தொடங்கியும் அவற்றிற்கு நிதியுதவி அளித்தும் உதவிக்கொண்டிருக்கின்றது. இந்தியாவில் இது முன்னணியான மற்றும் அளவுகடந்த மதிப்புமிக்க அறப்பணி செய்யும் பெருநிறுவனங்களில் ஒன்றாக உள்ளது[13][14]. 2007 ஆம் ஆண்டில் நீண்ட காலமாக அறப்பணி நடவடிக்கைகளில் ஈடுபட்டத்தைக் கௌரவப்படுத்துவதற்காக டாட்டா குழுமத்திற்கு அறிப்பணிக்கான கார்னேகி விருது அளிக்கப்பட்டு கௌரப்படுத்தப்பட்டது[15]. டாட்டா குழுமத்தால் நிறுவப்பட்ட பல கல்விநிறுவனங்களாவன: டாட்டா இன்ஸ்டியூட் ஆப் பன்டமெண்டல் ரிசர்ஜ் டாட்டா இன்ஸ்டியூட் ஆப் சோசியல் சயின்சஸ் இண்டியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் நேஷனல் செண்டர் ஃபார் பெர்பார்மிங் ஆர்ட்ஸ் டாட்டா மேனேஜ்மெண்ட் டிரெய்னிங் செண்டர் டாட்டா மெமோரியல் மருத்துவமனை டாட்டா அறக்கட்டளைகள், டாட்டாவின் மகன்களின் வணிகக் குழுமத்தின் தலைமையினால் நடத்தப்படுகின்ற அறப்பணிகளுக்கான அமைப்புகளின் குழுமம்[16] ஜே.ஆர்.டி டாட்டா எக்கோடெக்னாலஜி மையம் எனர்ஜி அண்ட் ரிசோர்ஸ் இன்ஸ்டியூட் (முன்னர் டாட்டா எனர்ஜி அண்ட் ரிசர்ஜ் இன்ஸ்டியூட் என்று அறியப்பட்டது) - இது புதுப்பிக்கப்படக் கூடிய எரிசக்தி துறையில் ஆராய்ச்சி விளைவுகளுக்காக முழுமையாக ஒதுக்கப்பட்ட இலாபநோக்கற்ற நிறுவனம் (NPO) ஆகும். முழுமையான பட்டியல் த்தில் கிடைக்கின்றது. டாடாவின் கையகப்படுத்தல்கள் மற்றும் இலக்குகள் பிப்ரவரி 2000 - டெட்லே தேயிலை நிறுவனம், $407 மில்லியன் மார்ச் 2004 - டேவூ கமர்சியல் வெஹிக்கிள் நிறுவனம், $102 மில்லியன் ஆகஸ்ட் 2004 - நாட்ஸ்டீல்ஸ் ஸ்டீல் வணிகம், $292 மில்லியன் நவம்பர் 2004 - டைக்கோ குளோபல் நெட்வொர்க், $130 மில்லியன் ஜூலை 2005 - டெலிகுளோப் இண்டர்நேஷனல் ஹோல்டிங்க்ஸ், $239 மில்லியன் அக்டோபர் 2005 - குட் எர்த் கார்ப்பரேஷன் December 2005 - மில்லேனியம் ஸ்டீல், தாய்லாந்து, $167 மில்லியன் டிசம்பர் 2005 - ப்ரூன்னர் மோண்ட் கெமிக்கல்ஸ் லிமிட்டேட், $120 மில்லியன் ஜூன் 2006 - எய்ட் ஓ'கிளாக் காஃபி, $220 மில்லியன் நவம்பர் 2006 - ரிட்ஸ் கர்ல்டன் போஸ்டன், $170 மில்லியன் ஜன் 2007 - கோரஸ் குரூப், $12 பில்லியன் March 2007 - பூமி ரிசோர்சஸ், $1.1 பில்லியன் April 2007 - கேம்ப்டன் ப்ளேஸ் ஹோட்டல், சான் பிரான்சிஸ்கோ, $60 மில்லியன் பிப்ரவரி 2008 - ஜெனரல் கெமிக்கல் இண்டஸ்ட்ரியல் புராடக்ட்ஸ், $1 பில்லியன் மார்ச் 2008 - ஜாக்குவார் கார்ஸ் மற்றும் லேண்ட் ரோவர், $2.3 பில்லியன் March 2008 - சேர்விப்லெம் SA, ஸ்பெயின் April 2008 - காம்போலெஸா லெப்ரெரோ SA, ஸ்பெயின் மே 2008 - பியாக்கியோ ஏரோ இண்டஸ்ட்ரீஸ் S.p.A., இத்தாலி ஜூன் 2008 - சீனா எண்டர்பிரைஸ் கம்யூனிகேஷன்ஸ், சீனா ஜூன் 2008 - நியோடெல், தென்னாப்பிரிக்கா. அக்டோபர் 2008 - மில்ஜோ க்ரென்லாண்ட் / இன்னோவஸ்ஜோன், நார்வே இமாசிட் இரசாயன நிறுவனம், மொராக்கோ [17] இலக்குகள் குளோஸ் பிரதர்ஸ் குரூப், $2.9 பில்லியன் ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் ஹோட்டல்ஸ், $2.5 பில்லியன் ஜனவரி 2008 - டி-சிஸ்டம்ஸ் இண்டர்நேஷனல் (டச்சி டெலிகாம் நிறுவனத்தின் ஐ.டி. பிரிவு) வருவாய் டாட்டா அதன் வருமானத்தின் 2/3 க்கும் மேலான பாகத்தை இந்தியாவிற்கு வெளியே பெறுகின்றது.[17] முரண்பாடுகள் மற்றும் சர்ச்சைகள் கலிங்காநகர், ஒரிசா 2 ஜனவரி 2006 அன்று, ஒரிசாவின் கலிங்கநகரில் மலைவாழ் கிராமத்தினரின் கூட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். டாட்டா ஸ்டீல் தொழிற்சாலைக்காக வரலாற்றுக் காலம் முதல் தாங்கள் சொந்தமாகக் கொண்டிருந்த நிலத்தில் சுற்றுச்சுவர் கட்டுமானத்தை எதிர்த்து கிராமத்தினர் போராடினர். வெட்டுக்காயங்களைக் கொண்ட நிலையில் பல பிணங்கள் அவர்களின் குடும்பங்களுக்குத் திரும்பின. கருத்துக்கூற வேண்டிய நிலையில், இது எதிர்பாராதவிதமாக நடந்த நிகழ்ச்சி என்று டாட்டா அதிகாரிகள் கூறினர். ஆனால் டாட்டா அங்கு தொழிற்சாலை அமைப்பதற்க்கான திட்டத்தைத் தொடரவிருப்பதாகவும் கூறப்பட்டது.[18] டோ கிமிக்கல்ஸ், போபால் வாயுக்கசிவு பேரிடர் 2006 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில், யூனியன் கார்பைடு நிறுவனத்தின் திவாலில் இருந்து காப்பது மற்றும் கார்பைடின் புதிய முதலாளியான டோவ் கெமிக்கல் மூலமாக முன்னேற்றத்திற்கான முதலீடுகள் ஆகிய ரத்தன் டாட்டாவின் சலுகையைக் கண்டு போபால் வாயுக்கசிவு பேரிடரில் தப்பியவர்கள் கடும் கோபமுற்றனர். டாட்டா நிறுவனம் போபாலில் கார்பைடு மூலமான மிகுந்து காணப்படுகின்ற நச்சுக் கழிவுகளை அகற்ற பெருந்தன்மை முயற்சியை வழிநடத்த முனைந்தது. தூய்மைப்படுத்துவதற்காக அமெரிக்கன் எம்.என்.சி இடமிருந்து ரூ. 100 கோடியைப் பெறுவதற்கான கோரிக்கைக்கான டோ கெமிக்கலின் கடனை இந்திய அரசாங்கம் வைத்திருந்த அதே நேரத்தில், நிறுவனத்தின் கடனைத் தக்கவைப்பதற்கான சட்டரீதியான ஏமாற்று வேலையாகவும், இந்தியாவில் டோவ்வின் முதலீடுகளை எளிதாக்கும் நோக்கம் கொண்டதாகவும் டாட்டாவின் சலுகை இருப்பதாக தப்பியவர்களின் குழு கூறியது.[19] பர்மாவின் இராணுவ ஆட்சிக்கு வழங்குதல் வன்பொருள்கள் மற்றும் தானியங்கு இயந்திரங்களை பர்மாவின் கொடுமைப்படுத்தும் மற்றும் மக்களாட்சியற்ற இராணுவ நிர்வாகத்திற்கு வழங்கும் உடன்படிக்கைகளை டாட்டா மோட்டார் அறிவித்தது, இது மனித உரிமைகள் மற்றும் குடியரசு அமைபுகளால் விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கின்றது. 2006 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில், மியான்மரின் தலைமை இராணுவ அதிகாரி ஜெனரல். துரா ஷ்வே மான் புனேவில் உள்ள டாட்டா மோட்டார்ஸ் தொழிற்சாலையைப் பார்வையிட்டார். ["மியான்மர் டைஸ்." டிசம்பர் 8, 2008. த டெலிகிராப், கொல்கத்தா, இந்தியா]. 2009 ஆம் ஆண்டில், டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் மியான்மரில் டிரக் உற்பத்தியைத் தொடங்கயிருக்கின்ற திட்டங்கள் பற்றி பத்திரிக்கைக்கு அறிவித்தது.[20],[21] சிங்கூரில் நிலம் கையகப்படுத்தல் மேற்கு வங்காளத்தில் சிங்கூர் சர்ச்சை[22] டாட்டாவின் சமுதாய சாதனையின் மீது மேலும் பல கேள்விகளுக்கு வழிவகுத்தது, நிர்பந்த வெளியேற்றம் போதாத ஈட்டுத்தொகை ஆகியவற்றை எதிர்த்து உள்ளூர் கிராம வாசிகள் மற்றும் பல அரசியல் கட்சிகளின் போராட்டங்களினால் டாட்டாவின் நானோ தொழிற்சாலை இடமாற்றப்பட்டது. போராட்டம் முன்னேற்றமடைந்ததாலும், ஆளும் சி.பி.ஐ.(எம்) அரசாங்கத்தின் ஆதரவில் ஏற்பட்ட முரண்பாட்டாலும், இறுதியில் டாட்டா பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தத் திட்டத்தை மேற்கு வங்காள மாநிலைத்தை விட்டே வெளியேற்றியது. சிங்கூர் சர்ச்சையானது ரத்தன் டாட்டா பொதுப்படையாக விமர்சிக்கத் தூண்டியபோது, ஏதேனும் சுற்றுச்சூழல் அல்லது சமூக சிக்கல்களைக் கருதியது போது போன்ற சில நிகழ்வுகளில் ஒன்றாக இருந்தது. அங்கு நானோ திட்டத்தை வெற்றிகரமாக அமைக்க வெற்றிகரமாக உதவி, இந்தச் சூழலை விரைவில் தீர்த்ததற்காக குஜராத்தில் தொழிற்புரட்சி கொண்டுவந்த குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியை தொடர்ந்து ரத்தன் டாட்டா பாராட்டியும் அரவணைத்து சென்றார்.[23] தாம்ரா துறைமுகம் சுற்றுச்சூழலின் முன்னர், தாம்ரா துறைமுக சர்ச்சையானது இந்தியாவிலும் டாட்டாவின் உலகளாவிய சந்தைகளிலும் குறிப்பிடத்தகுந்த பரபரப்பைப் பெற்றுத் தந்தது. (‘இந்தியா – தண்ணீரில் டாட்டா தடுமாறியது’, எத்திக்கல் கார்ப்பரேஷன், நவம்பர் 2007, இலண்டன், ஐக்கிய ராச்சியம்)[24] தாம்ரா துறைமுகம் என்பது டாட்டா ஸ்டீல் மற்றும் லார்சன் &amp; டூப்ரோ இடையிலான முதலீட்டு நிறுவனம். இது காஹிர்மாதா சரணாலயம் மற்றும் பிதர்கனிகா தேசியப் பூங்காவின் அருகில் அமைந்திருப்பதால், இதற்கு கிரீன்பீஸ் உள்ளிட்ட இந்திய மற்றும் சர்வதேச அமைப்புகளிலிடமிருந்து விமர்சனங்கள் வந்தன. காஹிர்மாதா கடற்கரை என்பது ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளுக்கான உலகின் மிகப்பெரிய புகலிடங்களில் ஒன்று ஆகும், மேலும் பிதர்கனிகா என்பது வடிவமைக்கப்பட்ட ராம்சார் தளமும் இந்தியாவின் இரண்டாவது பெரிய சதுப்புநிலக் காடும் ஆகும். டாட்டா அதிகாரிகள் இந்தத் துறைமுகமானது சுற்றுச்சூழல் கேட்டை வலியுறுத்துகின்றது என்பதை மறுத்தனர், மேலும் துயர்தணிப்பு அளவீடுகள் IUCN இன் அறிவுரைப்படி செயல்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.[25] மற்றொரு விதத்தில், கிரீன்பீஸ் உள்ளிட்ட சுற்றுச்சூழல் அமைப்புகள், அந்தத் திட்டத்திற்காக எந்தவொரு சரியான சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வும் நடைபெறவில்லை என்று சுட்டிக்காட்டுகின்றன, இது அளவில் மற்றும் முதலில் முன்மொழியப்பட்ட விவரக்குறிப்புகளிலும் மற்றும் காஹிர்ம்தா கடற்கரையில் மிகப்பெரிய வாழ்விடம் மற்றும் பீதார்கனிகா சதுப்புநில காட்டின் சூழலில் குறுக்கிட முடிந்த துறைமுகம் ஆகியவற்றில் மாற்றத்தை உட்படுத்துகின்றது.[26],[27] தாம்ரா துறைமுகக் கட்டுமானமானது குறைந்த அளவிலான உணமை அடிப்படைத் தகவல்களையும் மற்றும் தவறான வழிநடத்தலையும் கொண்டுள்ளது என்றும் கிரீன்பீஸால் நடத்தப்பட்ட போராட்டங்கள் குற்றம் சாட்டின. மேலும் கிரீன்பீஸ் கேவிகளுக்குப் பதிலாக DPCL இன் (தாம்ரா போர்ட் கம்பெனி லிமிட்டேட்) மறுமொழியானது இந்த காரணிகளில் நிலைத்து நின்றது [28],[29]. டான்சானியாவில் சோடா பிரித்தெடுத்தல் தொழிற்சாலை டாட்ட நிறுவனம் ஒரு டான்சானிய நிறுவனத்துடன் சோடாச் சாம்பல் பிரித்தெடுத்தல் தொழிற்சாலையை டான்சானியாவில் கட்டமைக்க இணைந்து பணியாற்றியது.[30] டான்சானிய அரசாங்கம் இந்தத் திட்டத்திற்கு அனைத்து உதவியையும் வழங்கியது.[30] மற்றொரு புறம், இது நேட்ரான் ஏரி அருகில் இருப்பதாலும், ஏரியின் சுற்றுச்சூழல் அமைப்பையும் அதன் அருகில் வசிப்பவர்களையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது என்பதாலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த தொழிற்சாலையை எதிர்க்கின்றனர்.[31] டாட்டா நிறுவனம் தொழிற்சாலைக்கான இடத்தை மாற்றி ஏரியிலிருந்து 32 கி.மீ தொலைவில் கட்டமைக்கத் திட்டமிடுகின்றது, ஆனால் தொடர்ந்து எதிர்ப்பாளர்கள் இது சுற்றுச்சூழலை எதிர்மறையாக ஊறுவிளைவிக்கும் என்று கருதுகின்றனர்.[31] மேலும் அது ஏற்கனவே அழிந்து வருகின்ற சிறிய ஃபிளமிங்கோ பறவைகளையும் பாதிக்க முடியும். நேட்ரான் ஏரியில் சிறிய ஃபிளமிங்கோ பறவைகளின் மூன்றில் இரண்டுபங்கு இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது.[32] சோடா சாம்பல் உற்பத்தியானது ஏரியிலிருந்து பெறப்படும் நீரிலிருந்து வரும் உப்புத் தண்ணீரில் பிரித்தெடுக்கப்படுகின்றது, பின்னர் பயன்படுத்தப்பட்ட தண்ணீர் மீண்டும் ஏரிக்கே திருப்பிவிடப்படுகின்றது. இந்தச் செயலாக்கமானது ஏரியின் இரசாயன உருவாக்கத்தில் குறுக்கிட முடியும்.[30] இருபத்தி இரண்டு ஆப்பிரிக்க நாடுகள் இந்த திட்ட உருவாக்கத்திற்கு எதிராக இருந்து, கட்டுமானத்தை நிறுத்துவதற்கான புகாரில் கையெழுத்திட்டுள்ளன.[30] மேலும் காண்க ஜாம்சேட்ஜி டாட்டா தோரப்ஜி டாட்டா ஜே.ஆர்.டி.டாட்டா ரத்தன் டாட்டா பிரதீப் தேஸ்வினி டாட்டா பல்லோனி மிஸ்டரி கோரஸ் குழு குறிப்புகள் புற இணைப்புகள் Jamsetji Nusserwanji Tata: The founder of the Tata Empire பகுப்பு:வணிக நிறுவனங்கள் பகுப்பு:இந்திய வணிக நிறுவனங்கள் பகுப்பு:டாட்டா குழுமம் பகுப்பு:கூகுள் தமிழாக்கம்-நிறுவனங்கள்
டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் எப்போது நிறுவப்பட்டது?
1945
2,756
tamil
5d372a4dc
{{IPA}}, formats symbols of the International Phonetic Alphabet {{PUA}}, marks characters from the Private Use Area that should be retained {{transl}}, generic romanization {{script}}, scripts in Unicode navigation box {{unichar}}, formats a Unicode character description {{Unicode templates}}, a navbox linking to multiple Unicode templates{{Template disambiguation}} should never be transcluded in the main namespace.) இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்று. இது கிழக்கில் தமிழ் நாட்டையும், வடக்கில் கர்நாடகத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. மேற்கில் அரபுக் கடல் உள்ளது. மலையாளம் கேரளாவின் முதன்மையான மொழியாகும். தமிழ் பேசுவோரும் அதிகமாக காணப்படுகினறனர். கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரம். பிற குறிப்பிடத்தக்க நகரங்கள் கொச்சி,கோழிக்கோடு திருச்சூர் மற்றும் கோட்டயம் ஆகும். இந்திய மாநிலங்களில் கல்வியறிவு (எழுத்தறிவு) விகிதத்தில் கேரளம் முதலிடம் வகிக்கிறது. பெயர்க் காரணம் கேரளா என்ற சொல், தமிழ்ச் சொல்லான “சேரளம்” (மலைச் சரிவு) அல்லது சேர நாடு என்பதிலிருந்து தோன்றியது என்பது அறிஞர்களின் கூற்று.[9][10] இன்றைய கேரளா, வரலாற்று காலத்தில் “சேர நாடு” என்று அழைக்கப்பட்டு வந்தது. 3ஆம் நூற்றாண்டு பேரரசர் அசோகரின் கல்வெட்டில் கேரளா - “கேரளபுத்திரர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[11] மேலும், ரோமானிய வணிகன் பெரிபுளீஸின் நிலவரைபடத்தில், இன்றைய கேரளப் பகுதியை சேரபுத்ரா என்று குறிப்பிடுகின்றார். கேரள மக்கள் மலையாளிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.[12] மலையில் (மேற்கு தொடர்ச்சி மலைகள்) வாழ்பவர்கள் என்பது அதன் பொருள் ஆகும். சிறப்புகள் 5 ஏப்ரல் 1957ல் ஜனநாயக முறைப்படி, ஆசியாவிலேயே முதன் முதலாக கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த முதல் மாநிலம் ஆதி சங்கரர் (கி.பி.788-820) பிறந்த இடம் காலடி இந்திய செவ்வியல் நடன வடிவம் "கதகளி"யின் பிறப்பிடம் இரப்பர் உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி மாநிலம் இந்தியாவின் நறுமணத் தோட்டம் களரிப்பயிற்று தற்காப்புக் கலையின் பிறப்பிடம் இந்தியாவின் முதல் டிஜிட்டல் மாநிலம்[13] வளைகுடா நாடுகளில் பணி புரியும் இந்தியர்களில் கேரள மாநிலத்தவர்கள் அதிகமாக உள்ளனர். அதனால் வெளிநாட்டு செலாவணி கேரளத்திற்கு கூடுதலாக கிடைக்கிறது. புவியமைப்பு 38,852 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தின் கிழக்கே மேற்கு தொடர்ச்சி மலைகள்; மேற்கில் அரபிக் கடல்; தென்கிழக்கில் தமிழ்நாடு; வடகிழக்கில் கர்நாடகம் எல்லைகளாக அமைந்துள்ளது. ஆறுகள் நெய்யாறு, பம்பை, மணிமலை, பெரியாறு, பாரதப்புழை, சித்தாறு மற்றும் மூவாற்றுப்புழை ஆகியவை கேரளத்தின் முக்கிய ஆறுகள். வரலாறு பரசுராமரின் கோடரி கடலைப் பிளந்த தால் தோன்றிய நாடு கேரளம் என்பது புராணக் கதை.இதனை பார்க்கவ சேத்திரம் என்றும் பரசுராம சேத்திரம் என்றும் வழங்குகின்றனர்.[14] போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என பல ஐரோப்பியர் கேரளத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டினர். 1947வாக்கில் கேரளம் திருவிதாங்கூர், கொச்சி மற்றும் மலபார் என மூன்று சமஸ்தானங்களாக இருந்தது. மலபார் சீரமைப்புச் சட்டம் 1956ன் படி, திருவிதாங்கூர், கொச்சி மற்றும் மலபார் பகுதிகள் இணைக்கப்பட்டு, நவம்பர் 1956ல் இன்றைய கேரளம் உதயமானது. பொருளாதாரம் விவசாயம் முக்கிய தொழில். உணவுப் பொருள் சாகுபடியை விட பணப்பயிர் சாகுபடி அதிகரித்து வருகிறது. பாரம்பரிய தொழில்களான கைத்தறி, கயிறு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு போன்ற தொழில்களும் சிறப்பாக நடைபெறுகிறது. ஆட்சிப் பிரிவுகள் கேரளம் பதினான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருவன: காசர்கோடு கண்ணூர் வயநாடு கோழிக்கோடு மலைப்புரம் பாலக்காடு திருச்சூர் எர்ணாகுளம் இடுக்கி ஆலப்புழா கோட்டயம் பத்தனம்திட்டா கொல்லம் திருவனந்தபுரம் கேரளத்தில் 63 வட்டங்களும், 1634 வருவாய் ஊராட்சிகளும், 978 ஊராட்சிகளும் ஐந்து நகராட்சிகளும் உள்ளன. அரசியல் இது இருபது மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[15] கேரள சட்டமன்றத்திற்காக, கேரளத்தை 140 தொகுதிகளாகப் பிரித்துள்ளனர்.[15] மக்கள் தொகையியல் 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கேரளா மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 33,406,061 ஆக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 4.91% விகிதம் ஆக உயர்துள்ளது. மக்கள்தொகையில் ஆண்கள் 16,027,412 மற்றும் பெண்கள் 17,378,649 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1084 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 860 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 94.00% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 96.11% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 92.07% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3,472,955 ஆக உள்ளது.[16] சமயம் இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 18,282,492 (54.73 %) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 8,873,472 (26.56 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 6,141,269 (18.38 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள்தொகை 3,814 (0.01 %) ஆகவும், சமண சமய மக்கள்தொகை 4,489 (0.01 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 4,752 (0.01 %) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 7,618 (0.02 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 88,155 (0.26 %) ஆகவும் உள்ளது. மொழி இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான மலையாத்துடன், தமிழ், கன்னடம், உருது மற்றும் கொங்கணி மொழிகள் பேசப்படுகிறது. கலைகள் கூடியாட்டம், கதகளி, கேரள நடனம், மோகினியாட்டம், தெய்யம், துள்ளல் ஆகியவை கேரளத்தின் நாட்டிய வகைகளாகும். வர்மக்கலை, களரி போன்ற தற்காப்புக் கலைகளும் கேரளத்திலிருந்து தோன்றியவையே. செண்டை மேளம் புகழ் பெற்றது. சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்கள் சுற்றுலா தலங்கள் தேக்கடி, பெரியார் தேசியப் பூங்கா, மூணார், வயநாடு, ஆலப்புழாவின் கட்டு வள்ளம்,கொச்சி மற்றும் கொல்லம்.[17] ஆன்மிக தலங்கள் சபரிமலை, ஆற்றுக்கால் பகவதி கோவில், சோட்டானிக்கரை பகவதி கோயில், ஆறு அய்யப்பன் கோயில்கள்,மீன்குளத்தி பகவதி கோயில்,குருவாயூர் குருவாயூரப்பன் கோயில், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் மற்றும் மங்கலதேவி கண்ணகி கோவில் ஆகும். வைணவத் திருத்தலங்கள் 108 வைணவத் திருத்தலங்களில் 11 வைணவத் திருத்தலங்கள் கேரளத்தில் அமைந்துள்ளது. அவைகள்: திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில், திருவனந்தபுரம் மாவட்டம் திருக்கடித்தானம், கோட்டயம் மாவட்டம் திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில், எர்ணாகுளம் மாவட்டம் திருமூழிக்களம், எர்ணாகுளம் மாவட்டம் திருப்புலியூர், ஆலப்புழா மாவட்டம் திருச்செங்குன்றூர், ஆலப்புழா மாவட்டம் திருவண்வண்டூர், ஆலப்புழா மாவட்டம் திருவல்லவாழ், பத்தனம்திட்டா மாவட்டம் திருவாறன்விளை, பத்தனம்திட்டா மாவட்டம் திருவித்துவக்கோடு, திருச்சூர் மாவட்டம் திருநாவாய், மலப்புறம் மாவட்டம் விழாக்கள் ஓணம் மற்றும் விஷு கேரளத்தின் முக்கிய பண்டிகைகளாகும். கிறிஸ்துமஸும் ரமலான் பெருநாளும் இங்கு கொண்டாட படுகிறது. மேலும் திருச்சூர் பூரம் திருவிழா, பெண்களின் ஐயப்பன் கோயில் எனப்படும் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில் மகம் திருவிழா, மகர விளக்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. இறைச்சி கேரள மாநிலத்தின் கால்நடை பராமரிப்புத் துறையின் தகவல்படி 2009–2010 ஆண்டில் மட்டும் 61 லட்சம் பசு உட்பட்ட கால்நடைகள் தமிழகம் மூலம் கேரளாவிற்கு இறைச்சிக்காகக் கொண்டு வரப்பட்டன. 18 லட்சம் கால்நடைகள் சோதனையை மீறிக் கடத்தப்பட்டவை.[18] மேலும் பார்க்க கேரள அரசு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் (தமிழில்) பகுப்பு:கேரளம்bs
கேரள மாநிலத்தின் தலைநகரம் எது?
திருவனந்தபுரம்
677
tamil
f7bd94bb9
கணிதத்தில் பெருக்கல் (Multiplication) என்பது ஒரு அடிப்படையான கணிதச் செயல் ஆகும். கழித்தல், கூட்டல், வகுத்தல் ஆகியவை ஏனைய மூன்று கணித அடிப்படைச் செயல்களாகும். பெருக்கப் படும் இரண்டு எண்களில் ஒன்று முழு எண்ணாக இருப்பின், அவ்வெண்களின் பெருக்கல், அம் முழு எண்ணின் எண்ணிக்கையளவு தடவை மற்ற எண்ணின் தொடர்ச்சியான கூட்டலாகும். a × n = a + ⋯ + a ⏟ n {\displaystyle {{a\times n=} \atop {\ }}{{\underbrace {a+\cdots +a} } \atop n}} எடுத்துக்காட்டாக, 7 × 4 என்பது, 7 + 7 + 7 + 7, அல்லது 4 + 4 + 4 + 4 + 4 + 4 + 4 (நான்கு ஏழுகள் அல்லது ஏழு நான்குகள் = 28) என்பதற்குச் சமனாகும். 7 × 4 = 4 + 4 + 4 + 4 + 4 + 4 + 4 = 28 {\displaystyle 7\times 4=4+4+4+4+4+4+4=28} இதில் 7 மற்றும் 4 இரண்டும் காரணிகள் எனவும் 28 பெருக்குத்தொகை எனவும் அழைக்கப்படும். இரண்டு பின்னங்களை ஒன்றுடன் ஒன்று பெருக்கும்போது கிடைக்கும் விடையின் பகுதியும், விகுதியும், பெருக்கப்பட்ட பின்னங்களின் பகுதிகளின் பெருக்கமாகவும், விகுதிகளின் பெருக்கமாகவும் அமையும். எடுத்துக் காட்டாக, a/b × c/d = (ac)/(bd). அதுபோலவே, 2/3 × 3/4 = (2×3)/(3×4) = 6/12 = 1/2. பெருக்கலின் முக்கியப் பண்பு பரிமாற்றுத்தன்மையாகும். பெருக்கப்படும் இரு எண்களின் வரிசை மாறினாலும் பெருக்குத்தொகையில் மாற்றமிருக்காது. 4 × 3 = 3 + 3 + 3 + 3 = 12 {\displaystyle 4\times 3=3+3+3+3=12} 3 × 4 = 4 + 4 + 4 = 12 {\displaystyle 3\times 4=4+4+4=12} நேர்ம முழுஎண்களின் பெருக்கலை செவ்வகமாக அடுக்கப்பட்ட பொருட்களின் எண்ணிக்கையாக அல்லது அச்செவ்வகத்தின் பரப்பளவாகக் கொள்ளலாம். பெருக்கலின் பரிமாற்றுத்தன்மையின் காரணமாக பரப்பளவு காண்பதற்காக, செவ்வகத்தின் எப்பக்கம் முதலில் அளக்கப்படுகிறது என்பது முக்கியமில்லை. பெருக்கலின் நேர்மாறு செயல் வகுத்தலாகும். எடுத்துக்காட்டாக 3 x 4 =12; 12 ஐ 3 ஆல் வகுக்க 4 உம், 4 ஆல் வகுக்க 3 உம் விடையாகக் கிடைக்கும். ஒரு எண்ணை 3 ஆல் பெருக்கிக் கிடைக்கும் விடையை மீண்டும் 3 ஆல் வகுத்தால் பழைய எண்ணே விடையாகக் கிடைக்கும். சிக்கலெண்கள் போன்ற பிறவகை எண்களுக்கும் அணிகள் போன்றவற்றுக்கும் பெருக்கல் வரையறுக்கப்பட்டுள்ளது. குறியீடும் தொடர்பான சொற்களும் பெருக்கல், பெருக்கல் குறி எனப்படும் "x" மூலம் குறிக்கப்படுகின்றது.[1] இது பெருக்கப்பட வேண்டிய எண்களுக்கு இடையே எழுதப்படுகின்றது (எகா: 3 x 4). பெருக்கலின் மூலம் கிடைக்கும் விளைவு, அதாவது பெருக்குத்தொகை, சமன் குறியுடன் எழுதப்படும். எடுத்துக் காட்டாக: 3 × 2 = 6 {\displaystyle 3\times 2=6} 2 × 2 = 4 {\displaystyle 2\times 2=4} 5 × 2 = 10 {\displaystyle 5\times 2=10} பெருக்கப்படும் இரு எண்களுக்கிடையே முற்றுப்புள்ளி (.) குறியிட்டும் பெருக்கல் குறிக்கப்படுகிறது.[2] 5 ⋅ 2 or 5 . 2 {\displaystyle 5\cdot 2\quad {\text{or}}\quad 5\,.\,2} இயற்கணிதத்தில், இரு மாறிகளின் பெருக்கல் இரண்டுக்குமிடையே எந்தவொரு குறியும் இல்லாமல் அவையிரண்டையும் அடுத்தடுத்து எழுதும்முறையில் குறிக்கப்படுகிறது. x மடங்கு y என்பதற்கு xy ; x இன் 5 மடங்கு என்பதற்கு 5<i data-parsoid='{"dsr":[3996,4001,2,2]}'>x என்றும் எழுதப்படுகிறது.[3] அடைப்புக்குறிக்குள் எழுதப்படும் கணியங்களின் பெருக்கலையும் இம்முறையில் எழுதலாம். எழுத்துக்காட்டாக, 5 x 2 = 5(2) அல்லது (5)(2). திசையன்களின் பெருக்கலில் 'x' மற்றும் ' ⋅ {\displaystyle \cdot } ' குறியீடுகளில் வேறுபாடு உள்ளது. இரு திசையன்களின் குறுக்குப் பெருக்கலில் 'x' குறியீடும், புள்ளிப் பெருக்கலுக்கு ' ⋅ {\displaystyle \cdot } ' குறியீடும் பயன்படுத்தப்படுகிறது. கணினி நிரலாக்கத்தில், "உடுக்குக்குறி" பெருக்கலின் குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. (5*2) பொதுவாக,பெருக்கப்படவேண்டிய எண்கள் "காரணிகள்" என அழைக்கப்படுகின்றன. பெருக்கப்பட வேண்டிய எண் "பெருக்கபடுமெண்" ("multiplicand") என்றும் பெருக்கும் எண் "பெருக்கி" அல்லது "பெருக்கு எண்" ("multiplier") என்றும் அழைக்கப்படுகிறது. வழக்கமாக ஒரு பெருக்கலில்,பெருக்கி முதலிலும், பெருக்குபடுவெண் இரண்டாவதாகவும் எழுதப்படும்.[4] (though this can vary by language[5]). சில சமயங்களில் மாற்றி எழுதப்படுவதும் உண்டு.[6] மேலும் சில இடங்களில் "காரணி" என்ற சொல்லுக்கு ஒத்ததாக "பெருக்குபடுமெண்" கருதப்படுகிறது..[7] இயற்கணிதத்தில் ஒரு மாறி அல்லது கோவையின் பெருக்கு எண்ணானது குணகம் அல்லது கெழு என அழைக்கப்படுகிறது. (3<i data-parsoid='{"dsr":[6800,6806,2,2]}'>xy2 இல் 3 என்பது கெழு). பெருக்கலில் கிடைக்கும் விடை, பெருக்குத்தொகை என அழைக்கப்படுகிறது. முழுவெண்களின் பெருக்குத்தொகை அப்பெருக்கலின் காரணிகள் ஒவ்வொன்றின் மடங்காக இருக்கும். எடுத்துக்காட்டாக 3, 5 இன் பெருக்குத்தொகை 15; 15, 3 மற்றும் 5 இன் மடங்காக உள்ளதைக் காணலாம். கணக்கிடுதல் வழக்கமாக எண் பெருக்கல், பெருக்கல் வாய்ப்பாடு கொண்டு செய்யப்படுகிறது. பெருக்கும் எண்களின் தசமபின்ன இலக்கங்கள் இரண்டிற்கும் அதிகமாக உள்ளபோது பெருக்கல் சற்று கடினமானதாகவும் பிழை நேரக்கூடியதாகவும் ஆகிறது. இந்தகையப் பெருக்கல்களை எளிதாக்குவதற்கு பொது மடக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டன. நழுவு சட்டத்தைப் பயன்படுத்தி மூன்று தானங்கள் வரை துல்லியமாகப் பெருக்க இயலும். 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து, கண்டுபிடிக்கப்பட்ட கணிப்பான்களின் உதவியால் 10 இடங்கள்வரைத் துல்லியமாகப் பெருக்குவது எளிதாயிற்று. தற்காலக் கணினிகள் மற்றும் கணிப்பான்களின் உதவியால், பெருக்கல் வாய்ப்பாடின்றி பெரியளவிலான பெருக்கலையும் எளிதாகச் செய்ய முடிகிறது. வரலாற்று முறைகள் பண்டைய எகிப்து, பண்டைக் கிரேக்கம், பண்டைய இந்திய மற்றும் பண்டைய சீன வரலாறுப்பதிவுகளில் பெருக்கல் முறைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. பழைய கற்காலத்தின் இறுதிப்பகுதியில் நடு ஆப்பிரிக்காவில் பெருக்கல் என்பது அறியப்பட்டிருந்தது என்பதை கிமு 18,000 - 20,000 காலத்திய இஷான்கோ எலும்பு காட்டுகிறது. எகிப்தியர்கள் ரைன்ட் கணிதப் பப்பிரசில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள எகிப்திய பெருக்கல் முறையில், முழுவெண்கள் மற்றும் பின்னங்களின் பெருக்கலில், தொடர் கூட்டல்கள் மற்றும் இரட்டித்தல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 13 , 21 இன் பெருக்குத்தொகை காண: 21 ஐ மும்முறை இரட்டிக்க வேண்டும். ; 4 × 21 = 2 × 42 = 84; . இரட்டித்த தொடரின் பொருத்தமான இலக்கங்களைக் கூட்டி இறுதிப் பெருக்குத்தொகை பெறப்படுகிறது: 13 × 21 = (1 + 4 + 8) × 21 = (1 × 21) + (4 × 21) + (8 × 21) = 21 + 84 + 168 = 273. பபிலோனியர்கள் தற்கால தசம முறையையொத்த, அறுபதின்ம இடஞ்சார் குறியீடு முறையை (sexagesimal)பபிலோனியர்கள் பயன்படுத்தினர். எனவே பாபிலோனியப் பெருக்கல் முறையானது, இன்றையத் தசமப் பெருக்கலை மிகவும் ஒத்திருந்தது. பபிலோனியர்கள் பெருக்கல் வாய்ப்பாடுகளைப் பயன்படுத்தினர். இந்த வாய்ப்பாடுகளில் குறிப்பிட்ட ஒரு முதன்மை எண்ணின் முதல் 20 மடங்குகள் இருந்தன (principal number n: n, 2<i data-parsoid='{"dsr":[9163,9168,2,2]}'>n, ..., 20<i data-parsoid='{"dsr":[9177,9182,2,2]}'>n) அதனைத் தொடர்ந்து 10<i data-parsoid='{"dsr":[9203,9208,2,2]}'>n: 30<i data-parsoid='{"dsr":[9212,9217,2,2]}'>n 40<i data-parsoid='{"dsr":[9220,9225,2,2]}'>n, 50<i data-parsoid='{"dsr":[9229,9234,2,2]}'>n ஆகியவையும் இருந்தன. அறுபதின்மப் பெருக்கலில்: 53<i data-parsoid='{"dsr":[9284,9289,2,2]}'>n இன் மதிப்பு காண்பதற்கு: 50<i data-parsoid='{"dsr":[9318,9323,2,2]}'>n மற்றும் 3<i data-parsoid='{"dsr":[9333,9338,2,2]}'>n இன் மதிப்புகளை வாய்ப்பாட்டில் இருந்து கண்டுபிடித்து அவற்றைக் கூட்டினால் விடை கிடைத்து விடும். சீனர் துவக்ககாலத்தில் சீனர்கள் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய செயல்களுக்கு சிறுகோல்களை இடமதிப்புமுறையில் பயன்படுத்தினர். எனினும் கிமு 300க்கும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்த கணித நூலான சௌபி சுவான்ஜிங் (Zhoubi Suanjing) மற்றும் கணிதக்கலையில் ஒன்பது அத்தியாயங்கள்(Nine Chapters on the Mathematical Art) என்ற நூலிலும் பெருக்கல் கணக்கீடுகள் வார்த்தைகளில் எழுத்துவடிவில் காணப்படுகின்றன. இடமதிப்பு தசம எண்கணிதத் தீர்வுமுறைகள் முகம்மது இப்னு மூசா அல்-குவாரிஸ்மி எனும் கணிதவியலாளரால் அரபுநாடுகளில் 9 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்கால முறைகள் இந்து-அரபு எண்ணுருக்கள் அடிப்படையிலான தற்காலப் பெருக்கல் முறையானது இந்தியக் கணிதவியலாளர் பிரம்மகுப்தரால் விவரிக்கப்பட்டது. பிரம்மகுப்தர் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தலின் விதிகளை வகுத்திருந்தார். பிரின்ஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியரான ஹென்றி புர்ச்சர்டு பைன் (Henry Burchard Fine) என்பவரின் கூற்று: இந்தியர்கள் இடஞ்சார் தசமமுறையைக் கண்டுபித்தவர்கள் மட்டுமல்லாது, அம்முறையிலுள்ள அடிப்படைக் கணக்கிடும் முறைகளையும் அறிந்திருந்தனர். கூட்டலும் கழித்தலும் தற்காலத்தில் செய்யப்படுவது போலவே அவர்கள் அக்காலத்தில் செய்தனர். பெருக்கலுக்கு அவர்கள் பலமுறைகளைப் பயன்படுத்தினர். அவற்றுள் ஒன்று, தற்போது நாம் பின்பற்றும் பெருக்கல் முறையாகும். ஆனால் வகுத்தலை அவர்கள் கடினப்பட்டுச் செய்தனர். [8] கட்ட முறை கட்டமுறை அல்லது பெட்டிமுறைப் பெருக்கல் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் துவக்கப்பள்ளிகளில் பயன்படுத்தப்படுகிறது. இம்முறையில் இலக்கப் பெருக்கல் எவ்வாறு செய்யப்படுகிறது என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். 34, 13 இன் பெருக்கல் கட்டமுறையில்: பின்னர் கட்டத்துக்கள் அமையும் நான்கு விடைகளையும் கூட்டி இறுதி விடைப் பெறப்படுகிறது. பண்புகள் இயல் எண்கள், முழு எண்கள் பின்னங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மெய்யெண்கள் மற்றும் சிக்கலெண்கள் பெருக்கலுக்குக் குறிப்பிட்ட சில பண்புகள் உள்ளன. பரிமாற்றுத்தன்மை பெருக்கப்படும் எண்களின் வரிசை முக்கியமில்லை. அவை மாற்றப்படலாம்: சேர்ப்புப் பண்பு கூட்டல் மற்றும் பெருக்கலை மட்டும் கொண்டிருந்தால் செயலியை அமல்படுத்தும் வரிசை முறை மாறலாம்: பங்கீட்டுப் பண்பு கூட்டல், பெருக்கல் இரண்டுக்கும் பொருந்தும். இயற்கணிதக் கோவைகளை எளிமையாக்க இப்பண்பு பெரிதும் உதவும். முற்றொருமை உறுப்பு பெருக்கல் சமனி 1; எந்தவொரு எண்ணும் 1 ஆல் பெருக்கப்படுவதால் மாற்றமே அடைவதில்லை. இது சமனிப்பண்பு எனப்படுகிறது. 0 இன் பண்பு எந்தவொரு எண்ணையும் பூச்சியத்தால் பெருக்கக் கிடைக்கும் விடை பூச்சியமே ஆகும். இப்பண்பு பெருக்கலின் சுழியப் பண்பு அல்லது பூச்சியப் பண்பு எனப்படும். எதிரெண் எந்தவொரு எண்ணையும் −1 ஆல் பெருக்கினால் அந்த எண்ணின் கூட்டல் நேர்மாறு, அதாவது அதன் எதிரெண் கிடைக்கும். where ( − x ) + x = 0 {\displaystyle (-x)+x=0} –1 ஐ –1 ஆல் பெருக்கினால் விடை 1. நேர்மாறு உறுப்பு பூச்சியம் தவிர்த்த எந்தவொரு எண் x ≠ 0, க்கும் பெருக்கல் நேர்மாறு உண்டு. x இன் பெருக்கல் நேர்மாறு: , . வரிசைக் காப்பு நேர்ம எண்ணால் பெருக்கல், பெருக்குபடுமெண்களின் வரிசையைக் காக்கும்; மாற்றாது. , எனில் . எதிர்ம எண்ணால் பெருக்கல், பெருக்குபடுமெண்களின் வரிசையை எதிராக்கும் , எனில் . சிக்கலெண்களுக்கு வரிசைப்பண்பு கிடையாது. எண்கள் தவிர்த்த பிற முறமைகளில் பெருக்கலுக்கு இப்பண்புகள் பொருந்தாது. எடுத்துக்காட்டாக, அணிகளின் பெருக்கலுக்குப் பரிமாற்றுத்தன்மை கிடையாது.. வெவ்வேறு வகையான எண்களின் பெருக்கல் முழு எண்கள் எனில்: N × ( M ) = ( N ) × M = ( N M ) = ( M N ) ∈ Z {\displaystyle N\times (M)=(N)\times M=(NM)=(MN)\in {\mathbb {Z}}} N × ( − M ) = ( − N ) × M = − ( N × M ) = − ( M N ) = − ( N M ) ∈ Z {\displaystyle N\times (-M)=(-N)\times M=-(N\times M)=-(MN)=-(NM)\in {\mathbb {Z}}} ( − N ) × ( − M ) = N × M = ( N M ) = ( M N ) ∈ Z {\displaystyle (-N)\times (-M)=N\times M=(NM)=(MN)\in {\mathbb {Z}}} விகிதமுறு எண்கள் A B × C D {\displaystyle {\frac {A}{B}}\times {\frac {C}{D}}} A B × C D = ( A × C ) ( B × D ) {\displaystyle {\frac {A}{B}}\times {\frac {C}{D}}={\frac {(A\times C)}{(B\times D)}}} . மெய்யெண்கள் மெய்யெண்களும் அவற்றின் பெருக்கலும் விகிதமுஎண்களின் தொடர்களின் மூலம் வரையறுக்கப்படலாம். சிக்கலெண்கள் z 1 {\displaystyle z_{1}} , z 2 {\displaystyle z_{2}} இரு சிக்கலெண்கள் எனில், அவற்றின் வரிசைப்படுத்த சோடிகளின் வடிவில் பெருக்கல்: ( a 1 , b 1 ) {\displaystyle (a_{1},b_{1})} , ( a 2 , b 2 ) {\displaystyle (a_{2},b_{2})} z 1 × z 2 {\displaystyle z_{1}\times z_{2}} = ( a 1 × a 2 − b 1 × b 2 , a 1 × b 2 + a 2 × b 1 ) {\displaystyle (a_{1}\times a_{2}-b_{1}\times b_{2},a_{1}\times b_{2}+a_{2}\times b_{1})} . மேலும், − 1 = i {\displaystyle {\sqrt {-1}}=i} z 1 × z 2 = ( a 1 + b 1 i ) ( a 2 + b 2 i ) = ( a 1 × a 2 ) + ( a 1 × b 2 i ) + ( b 1 × a 2 i ) + ( b 1 × b 2 i 2 ) = ( a 1 a 2 − b 1 b 2 ) + ( a 1 b 2 + b 1 a 2 ) i . {\displaystyle z_{1}\times z_{2}=(a_{1}+b_{1}i)(a_{2}+b_{2}i)=(a_{1}\times a_{2})+(a_{1}\times b_{2}i)+(b_{1}\times a_{2}i)+(b_{1}\times b_{2}i^{2})=(a_{1}a_{2}-b_{1}b_{2})+(a_{1}b_{2}+b_{1}a_{2})i.} வகுத்தல் வகுத்தலானது வகு எண்ணின் பெருக்கல் நேர்மாறால் பெருக்குவதற்குச் சமமாகும். x y = x ( 1 y ) {\displaystyle {\frac {x}{y}}=x\left({\frac {1}{y}}\right)} . அடுக்கேற்றம் ஒரே எண்ணைப் பலமுறை பெருக்குவது அடுக்கேற்றம் ஆகும். 2×2×2 = 23 மேற்கோள்கள் இவற்றையும் பார்க்கவும் கூட்டல் கழித்தல் வகுத்தல் பகுப்பு:எண்கணிதம் பகுப்பு:ஈருறுப்புச் செயல்கள்
கணிதத்தில் பெருக்குதல் சின்னம் எது?
x
1,625
tamil
8f43cf028
அண்ணா நூற்றாண்டு நூலகம், தமிழக மக்களால் அன்புடன் "அண்ணா" என்றழைக்கப்படும் முன்னாள் தமிழக முதலமைச்சர் சி. என். அண்ணாதுரையின் 102வது பிறந்த தினத்தை முன்னிட்டு, 2010ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் தேதியன்று அந்நாள் தமிழக முதலமைச்சர் டாக்டர். மு.கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. ஆசியாவின் பெரிய நூலகங்களில் முதன்மையான அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கால்கோள் விழா முன்னாள் தமிழக முதல் அமைச்சர் டாக்டர். மு.கருணாநிதியால் 2008ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 16ஆம் நாள் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கப்பட்டது. நூல்கள் மற்றும் கற்பதில் அண்ணா கொண்ட பற்று மற்றும் தீராத ஆர்வத்தை மரியாதை செய்யும் பொருட்டும், அவரது நூற்றாண்டை நினைவுறுத்தும் விதமாகவும் "அண்ணா நூற்றாண்டு நூலகம்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. 3.75 லட்சம் சதுர அடி பரப்பில் அமைந்துள்ள நூலகம் தரைத்தளம் நீங்கலாக 8 தளங்களைக் கொண்டது. தற்சமயம் பல்வேறு துறை சார்ந்த 5 லட்சம் புத்தகங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள நூலகம், மிகவும் குறுகிய காலத்தில் 12 லட்சம் புத்தகங்களாக அதிகரிக்கும் நோக்கத்துடன் இயங்குகிறது. இது தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். நூலகத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக "உலக இணைய மின் நூலகத்துடன்" (World Digital Library) இணைக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் 31 மாவட்ட நூலகங்களையும் கன்னிமரா நூலகத்துடன் இணைக்கும் கணினி இணைப்பு தற்போது செயலாக்கத்தில் உள்ளது. இந்த அனைத்து இணைப்புகளும் "அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன்" இணைக்கப்படும். நூலக அமைப்பு அண்ணா நூற்றாண்டு நூலகம் ஒன்பது தளங்களுடன் பிரம்மாண்டமாக செயல்படுகிறது. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் என்ற பெருமையுடன் தமிழகத்திற்கு அழகு சேர்க்கிறது. மேலும் இந்நூலகம் சர்வதேச தரத்துடன் அமைந்துள்ளதால் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து அனைத்து தரப்பு மக்களும் வருகை தருகிறார்கள். இந்நூலகத்தின் ஒவ்வொரு தளமும் தனிச் சிறப்புடன் விளங்குகிறது. சொந்த நூல்கள் பயன்படுத்தும் பிரிவு: பயனாளர்கள் தங்கள் சொந்த நூல்கள் மற்றும் மடிக்கணினிகளைக் கொண்டு வந்து படிப்பதற்கான தனி பிரிவு உள்ளது. உரிய அனுமதியுடன் வாசகர்கள் தங்கள் புத்தகங்களைக் குறிப்பிட்ட பகுதிக்குள் பயன்படுத்தலாம். மெய்ப்புல அறைகூவலர் பிரிவு: மெய்ப்புல அறைகூவலர் பிரிவில் பார்வையற்றோர்களுக்காகச் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இப்பிரிவில் மெய்ப்புல அறைகூவலர்கள் தங்களின் கல்வி தாகத்தைப் போக்கிக்கொள்ளலாம். இப்பிரிவில் 500 க்கும் மேற்பட்ட பிரைய்லி புத்தகங்களும், 400 க்கும் மேற்பட்ட குறுந்தகடுகளும் உள்ளன. நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் பிரிவு: நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் பிரிவில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கில் பல நாளிதழ்களும், பருவ இதழ்களும் உள்ளன. தமிழில் வெளியிடப்படும் அனைத்து பருவ இதழ்களும் இங்கு உள்ளது என்பது தனிச்சிறப்பு. கல்வி, கலை, இலக்கியம், பண்பாடு, அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு, சமயம், மருத்துவம் மற்றும் பொழுதுபோக்கு சம்மந்தமான பருவ இதழ்களும் உள்ளன. உள் நாடு மற்றும் வெளி நாடுகளிலிருந்தும் பருவ இதழ்கள் பெறப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு பருவ இதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் என்று பகுக்கப்பட்டு எளிய முறையில் அலமாரியில் வைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக பழைய நாளிதழ்களும், பருவ இதழ்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. குழந்தைகள் பிரிவு: முதல் தளத்தில் 15000 சதுர அடிப் பரப்பில் குழந்தைகளுக்கென்று உருவாக்கப்பட்ட நூற்பிரிவு அமைந்துள்ளது. இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் அவர்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் தருவிக்கப்பட்ட ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் குழந்தைகளுக்காகத் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. இப்பிரிவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள். பொதுமக்களும் பார்வையாளர்களாக வந்து செல்லலாம். குழந்தைகள் பிரிவின் நுழைவாயிலின் எதிர்புறம் இயற்கை எழில் கொஞ்சும் செயற்கை மரமும், அதில் அமர்ந்திருக்கும் பறவைகளும் மற்றும் குரங்குகளும் காண்போரை மகிழ வைக்கின்றன. குழந்தைகள் கலை நிகழ்ச்சிக்கென்று சிறிய மேடையும் அமைக்கப் பட்டுள்ளது. இப்பிரிவில் வைக்கப்பட்டுள்ள நூல்கள் குழந்தைகளின் படிக்கும் ஆர்வத்தை மேலும் மேலும் தூண்டுபவையாகவும் உள்ளன. இங்கு வைக்கப்பட்டுள்ள கணினிகளின் வழியாக குழந்தைகள் நீதிக் கதைகள் கேட்கவும், விரும்பும் விளையாட்டுகளை விளையாடவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ் நூல்கள் பிரிவு: இரண்டாவது தளத்தில் தமிழ் நூல்கள் அ மற்றும் ஆ என இரண்டு பிரிவுகளாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. 'அ' பிரிவில், அண்ணா எழுதிய மற்றும் அண்ணாவைப் பற்றிய நூல்கள், பெரியாரின் நூல்கள், பொது அறிவு நூல்கள், கணினி அறிவியல், கலைக் களஞ்சியம், தொகுப்பு நூல்கள், இதழியல், தத்துவம் மற்றும் உளவியல், சுய முன்னேற்ற நூல்கள், சமய நூல்கள், ஆன்மீகம், சமூகவியல், அரசியல், பொருளியல், சட்டம், வணிகவியல், மொழியியல், நாட்டுப்புறவியல், தமிழ் அகராதி, இலக்கண நூல்கள், அறிவியல், வானியல், கணிதவியல், தொழில் நுட்பவியல்,மருத்துவம், பொறியியல், வேளாண்மை, நுண்கலைகள், திரைப்படவியல், விளையாட்டு பற்றிய அனைத்து நூல்களும் உள்ளன. 'ஆ' பிரிவில், சங்க இலக்கிய நூல்கள், சிற்றிலக்கியங்கள், கவிதைகள், கதைகள், கட்டுரைகள், சிறு கதைகள், புதினம், நாடகம், பயணக் கட்டுரைகள், கடிதங்கள், நகைச்சுவை நூல்கள், வாழ்க்கை வரலாறு, இலங்கைத் தமிழர் வரலாறு, புவியியல் மற்றும் அரிய நூல்கள் போன்றவை மிகச்சிறந்த முறையில் பகுத்து வைக்கப்பட்டுள்ளன. ஆங்கில நூல்கள் பிரிவு: மூன்றாவ‌து முத‌ல் ஏழாம் த‌ள‌ம் வரை ஆங்கில‌ நூல்க‌ள் பாட‌ வாரியாக‌ ப‌குத்து வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன. மூன்றாவது தளத்தில் ஆங்கில மொழியிலான பல புத்தகங்கள் உள்ளன. பொது அறிவு, கணினி அறிவியல், நூலகம் &amp; தகவல் அறிவியல், தத்துவம், உளவியல், அற இயல் மற்றும் மதம், சமூகவியல், புள்ளியியல், மற்றும் அரசியல் தொடர்பான நூல்கள் உள்ளன. நான்காவது தளத்தில் பொருளியல், சட்டம், பொது நிர்வாகம், கல்வி, வணிகவியல், மொழியியல், மற்றும் இலக்கியம் தொடர்பான நூல்கள் உள்ளன. ஐந்தாவது தளத்தில் பொது அறிவியல், கணிதவியல்,, வானவியல், இயற்பியல், வேதியியல், புவியமைப்பியல், உயிரியல், மற்றும் மருத்துவம் தொடர்பான நூல்கள் உள்ளன. ஆறாவது தளத்தில் பொறியியல், வேளாண்மை, உணவியல், மேலாண்மை, கட்டிடக்கலை, நுண்கலை, மற்றும் விளையாட்டு தொடர்பான நூல்கள் உள்ளன. ஏழாவது தளத்தில் வரலாறு, புவியியல், வேதியியல், சுற்றுலா &amp; பயண மேலாண்மை மற்றும் வாழ்க்கை வரலாறு தொடர்பான நூல்கள் உள்ளன. ஏழு தளங்கள் உள்ளன. படக் காட்சியகம் முகப்பு இலச்சினையற்ற முகப்பு இலச்சினையுடன் கூடிய முகப்பு அண்ணா நூற்றாண்டு நூலக, தள விவரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முன்தோற்றம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கல்வெட்டு சர்ச்சை நவம்பர் 2, 2011 அன்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் நூலகம் கல்லூரிச் சாலையிலுள்ள டி.பி.ஐ. வளாகத்திற்கு மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் அமைக்கப்படும் அம்மருத்துவமனை இந்தியாவிலேயே முதல்முறையாக குழந்தைகளுக்கான மருத்துவமனை என்று அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. அரசின் இம்முடிவை எதிர்த்து மூவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கு விசாரணை நவம்பர் 4, 2011 அன்று நடைபெற்றது. இதில் உயர்நீதிமன்றம் அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதித்து அரசின் பதிலை எதிர்பார்த்து அறிக்கை அனுப்பி வழக்கை ஆறு வாரங்கள் தள்ளிவைத்தது.[1] அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 2012 செப்டம்பர் 9ம் தேதி திருமண விழா நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.[2] அதே போன்று நூலகத்தை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையாக மாற்றவும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.[3] மேலும் பார்க்க கன்னிமாரா பொது நூலகம் வெளியிணைப்புகள் மேற்கோள்கள் பகுப்பு:சென்னை கட்டிடங்கள் பகுப்பு:தமிழ் நூலகங்கள் பகுப்பு:தமிழ்நாட்டு நூலகங்கள் பகுப்பு:தமிழ்நாடு அரசின் அமைப்புகள் பகுப்பு:சென்னை நூலகங்கள்
அண்ணா நூற்றாண்டு நூலகம் யாரால் கட்டப்பட்டது?
டாக்டர். மு.கருணாநிதி
226
tamil
ad90053ce
டாடா நானோ என்பது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் இந்திய சந்தையை முதன்மையாகக் குறி வைத்து உருவாக்கப்பட்ட, பின்புறம் இயந்திரம் கொண்ட நான்கு பேர் பயணிக்கக் கூடிய நகரக் கார் (நான்கு சக்கர வாகனம்) ஆகும். இந்தக் கார் சிறந்த எரிபொருள் பயனுறுதி உடையது, நெடுஞ்சாலைகளிலும் , நகரப்பகுதிகளிலும் எய்தப்பெறுகிறது.[1] இது முதன்முறையாக ஜனவரி 10, 2008 ல் இந்தியத் தலைநகர் புது டில்லி ப்ராகதி மைதானில் நடைபெற்ற ஒன்பதாம் வருடாந்திர வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.[2] நானோ வணிக ரீதியிலான விற்பனை துவக்கமாக 2009 ஆம் ஆண்டு மார்ச் 23 அன்று துவங்கப்பட்டது, மேலும், ஏப்ரல் 9 லிருந்து 25 வரை முன்பதிவு செய்ய கால நிர்ணயம் செய்யப்பட்டதில் 200,000 மேற்பட்ட கார் முன்பதிவுகளை உண்டாக்கியது.[3][4] கார் விற்பனை ஜூலை 2009 ல் துவங்கவுள்ளது.[5] துவக்க விலையாக ரூபாய் 115,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஏறக்குறைய UK ஸ்டெர்லிங் 1,515அல்லது US$2,407 ற்கு சமமானது. இது மாருதி 800 றை விட விலைக் குறைவானது. மாருதி இதற்கு அடுத்தபடியான முக்கிய போட்டியாளராகவும், விலைக் குறைந்த இந்தியக் காராகவும் ரூபாய் 184,641 ($3,865 U.S.) ஆகவுள்ளது.[6][7][8] டாடா உலகிலேயே[9] மிகக் குறைந்த விலையுள்ள காரை உற்பத்திசெய்ய - துவக்க விலையாக ரூபாய் 100,000 (ஏறக்குறைய US$2,000 ஆக ) குறிவைத்தது.[10][11] 2008 முற்பகுதியில் ந்யூஸ்வீக் செய்திப் பத்திரிகை நானோவை "21 நூற்றாண்டின் கார் இனங்களில் புதியவையாக"வும் " (கார்களில்) ஓர் முரண் தத்துவமாக சிறிய,லேசான,விலை குறைந்த" உள்ளடக்கமாகவும், அதிக செலவில்லாத தனிப்பட்ட போக்குவரத்து வாகனமாகவும்- உள்ளார்ந்த, "உலகளவிலான போக்குவரத்து இடையூறிணை" ஏற்படுத்தக் கூடிய அளவில் ஓர் பாகமாகவும் அடையாளம் கண்டது.[12] வால் ஸ்டிரீட் ஜர்னல் இதழ் சிறிய கார்களை நோக்கிய, நானோவை உள்ளடக்கிய உலகளவிலான போக்கினை உறுதி செய்தது. "நானோ" என்பதன் பொருள் குஜராத்தி [13] மொழியில் "சிறிய" என்பதாகும். டாடா குழுமத்தின் நிறுவனர்களின் மொழியாகும் குஜராத்தி. "நானோ" ஒரு பில்லியனைக் குறிக்கும் SI முன்னைடையிலிருந்து வந்தது ஆங்கில வழக்கு மொழியில் அடிக்கடி "சிறிய" என்பதைக் குறிக்க SI பயன்படுகிறது.[14] மேலோட்டமான பார்வை நானோவின் அறிமுகம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்ததற்கு அதன் குறைந்த விலை இலக்கே காரணம். தி ஃபினான்ஷியல் டைம்ஸ் எழுதியது: "இந்தியா ஓர் நவீன தேசமாக மாற விரும்பச் செய்ய ஒரு குறியீடு உண்டென்றால், அது சிறிய கார் அதுவும் சிறிய விலைப் பட்டியுடன் கூடிய, நானோவாகவே நிச்சயம் இருக்கும்.உள்நாட்டு பொறியியல் வளர்ப்பிற்கு ஓர் வெற்றியாக, $2,200 (யூரோ 1,490, ஸ்டெர்லிங் 1,186) நானோ இலட்சக்கணக்கான இந்தியர்களின் கனவான நிச்சயமற்ற நகர்புற சுபிட்சத்தை சுருக்குகிறது. இந்தக் கார் இந்திய பொருளாதாரத்தை மேலுயர்த்துமென எதிர்பார்க்கப்படுகிறது, தொழில் முனைவோருக்கான வாய்ப்புக்களை இந்தியா [15][16] முழுதும் உருவாக்குவதோடு, இந்திய கார் சந்தையை 65% [17] மாக விரிவாக்குகிறது. இக்கார் டாடா குழுமத்தலைவரும், டாடா மோட்டார்ஸ் தலைவருமான ரத்தன் டாடாவினால் தொலை நோக்கு பார்வையுடன் உண்டாக்கப்பட்டு, அவரால் சுற்றுச்சூழல் நட்புடனான "மக்கள் கார்" என விவரிக்கப்பட்டது. நானோ அதன் குறைந்த விலைக்காகவும் [18][19], சூழல் நட்பு முயற்சியான காற்றடைப்பு எரிபொருள் வகை[20] மற்றும் மின்சார கார் வகைக்காகவும் (மின் நானோ)[21][22], பெரிதும் பல தரப்பிலிருந்தும், ஊடகங்களிலும் பாராட்டப்பட்டது. டாடா குழுமம் பேரளவில் நானோவை உற்பத்தி செய்து, குறிப்பாக மின் வகையை, மேலும்,இந்தியாவில் விற்பது மட்டுமின்றி, உலகம் முழுதும் ஏற்றுமதி செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.[23][24][25] இந்தக் காரை விமர்சித்தவர்கள் இந்தியாவில் இதன் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தினர் (ஆண்டுத்தோறும்[26] 90,000 பேர் சாலை விபத்துக்களில் இறப்பதால்)மேலும் இது ஏற்படுத்தப் போகும்[27] சூழல் சீர்கேட்டையும் விமர்சித்தனர் (நோபல் அமைதிப் பரிசு வென்ற ராஜேந்திர பச்சௌரியின் [28] விமர்சனம் உட்பட). இருப்பினும், டாடா மோட்டார்ஸ் கரிம எரிபொருள் வகைகளுடன் சூழல் நட்பு வகைகளுடன் கட்டாயமாக வெளியிட உறுதியளித்தனர்.[29][30] நானோவானது முதலில் மேற்கு வங்கத்தில் உள்ள சிங்கூரில் அமைந்த புதிய தொழிற்சாலையில் உற்பத்திச் செய்ய திட்டமிடப்பட்டது, ஆனால் அதிகரித்து வந்த வன்முறை டாடாக்களை அக்டோபர் 2008ல் அங்கிருந்து வெளியேறச் செய்தது. (கீழேயுள்ள சிங்கூர் தொழிற்சாலை வெளியேற்றம் பகுதியைப் பார்க்கவும்.)தற்போது, டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே இயங்கி வரும் பந்த்நகர் (உத்தரகண்ட்) தொழிற்சாலையில் நானோவை உற்பத்தி செய்து வருகிறது மேலும் தாய்த் தொழிற்சாலை சனந்த் குஜராத்தில் அமையவுள்ளது.[31] நிறுவனம் துவக்கத்தில் தற்போதைய வணிகர் வலைத்தொடர்பையே சார்ந்திருக்கும்.[32] புதிய நானோ தொழிற்சாலை சிங்கூரின் 300,000 எண்ணிக்கையிலான கார்களை உற்பத்தி செய்யும் வசதியுடன் ஒப்பிடுகையில் 500,000 எண்ணிக்கையிலான கார்களை உற்பத்திச் செய்யும். குஜராத் மாநிலமானது மேற்கு வங்க அரசு அளித்த அனைத்து ஊக்கச் சலுகைகளையும் ஒத்தவகையில் அளிக்க ஒப்புக்கொண்டது.[33] வடிவமைப்பு டாடா குழுமங்களின் தலைவர் ரத்தன் டாடா 2003ல்[34] உலகின் மிகக் குறைந்த கார் உற்பத்தியை மேம்படுத்த துவங்கியதற்கு எழுச்சியூட்டும்படியாக அமைந்தது இந்திய குடும்பங்கள் வைத்திருந்த நான்கு சக்கர வாகனங்களின்[35] எண்ணிக்கையை விட இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகமிருந்ததே. நானோவின் வளர்ச்சியானது குறைந்த செலவிலான Ace நான்கு சக்கர டிரக் வாகனத்தின் 2005 ஆம் ஆண்டு மே மாதத்தின் வெற்றியின் மூலம் உறுதி நிலைப்பட்டது.[34] இக்கார் வெறும் நான்கு சக்கர ஆட்டோ ரிக்ஷா என ஊகிக்கப்பட்டதற்கு எதிராக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, இவ்வாகனமானது "ஒரு முறையாக வடிவமைக்கப்பட்ட மற்றும் உருவாக்கப்பட்ட கார்" எனக் கட்டுரை வெளியிட்டது.[36] தலைவர் கூறியதாகச் சொல்லப்பட்டது,"இக்கார் நெகிழித் திரைகளுடனோ அல்லது கூரையுடனோ இருப்பதல்ல- இது ஒரு உண்மையான கார்." [34] அதன் வடிவமைப்பு இலக்குகளைச் சாதிக்க, டாடா உற்பத்தி முறைகளை செப்பனிட்டார், கண்டுபிடிப்புக்களை வலியுறுத்தினார், மேலும் புதிய வடிவமைப்பு அணுகுமுறைகளை வழங்குநர்களிடமிருந்து எதிர்பார்த்தார்.[36] இக்கார் இத்தாலியின் Institute of Development in Automotive Engineering னால் வடிவமைக்கப்பட்டது- ரத்தன் டாடா சில மாறுதல்களுடன் வேண்டியது,உதாரணமாக கண்ணாடி துடைப்பான்களில் இரண்டில் ஒன்றை நீக்கக் கோரியது உட்பட.[34] நானோவின் பல பாகங்கள் ஜெர்மனியில் பாஷ்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை, இவை ஃபூயல் இஞ்ஜெக்சன்,ப்ரேக் சிஸ்டம்,வால்யூ மோட்டாரானிக் ECU, ABS மற்றும் இதர தொழில்நுட்பங்கள் போல.[37] நானோ 21% கூடுதல் உட்பகுதியைக் கொண்டது (தலைக்கு மேலிருக்கும் அறையென்ற போதிலும் அதன் உயர்ந்த நிற்றல் நிலையில்) மேலும் 8% சிறிய வெளிப்புறப் பகுதியை அதன் நெருங்கிய போட்டியாளரான மாருதி 800 ஐக் காட்டிலும் பெற்றுள்ளது. காரை டாடா மூன்று பதிப்புகளில் கொடுத்துள்ளது: அடிப்படை Tata Nano; Cx; மற்றும் Lx. Cx மற்றும் Lx பதிப்புகளில் ஒவ்வொன்றிலும் குளிர் பதன வசதி,தானே இயங்கும் சாளரங்கள் மற்றும் மையப் பூட்டு வசதி உள்ளன. டாடா துவக்கத்தில் 250,000 எண்ணிக்கையிலான கார்களை வருடந்தோறும் உற்பத்தி இலக்காக நிர்ணயித்துள்ளது. செலவின குறைப்பு அம்சங்கள் நானோவின் கதவு பின்புறம் திறக்காது. அதற்குப் பதிலாக பின்புற இருக்கைகள் மடிக்கப்பட்டு பின்புறம் செல்ல முடியும்.[38][39] வழக்கத்திற்கு மாறாக இரு கண்ணாடி துடைப்பான்களுக்குப் பதிலாக ஒன்று மட்டுமே இருக்கும்.[40] பவர் ஸ்டியரிங் கிடையாது.[41] அதன் கதவு திறப்பான் எளிமையாக்கப்பட்டுள்ளது.[42] சக்கரங்களில் நான்கு முடுக்கிகளுக்குப்பதிலாக மூன்று மட்டுமே இருக்கும்.[43] ஒருபுறம் மட்டுமே பார்க்க பார்வைக் கண்ணாடியுண்டு.[44] முன்புற இருக்கைகள் ஒரே போன்றவை மேலும் ஒருங்கிணைக்கப்பட்ட தலை ஓய்வு வசதி உண்டு. விலை டாடா துவக்கத்தில் வாகனத்தை "உலகிலேயே[9] குறைந்த விலையிலான உற்பத்திக் கார்" என குறிக்கோள் கொண்டார்- துவக்க விலையாக ரூபாய் 100,000 அல்லது US $ 2000 (அன்றைய அன்னிய செலாவணி மாற்று விகிதத்தை பயன்படுத்தி)மாக as of 22March2009)[10][11] 6 ஆண்டுகளுக்கு முன்பு, பண்ட விலைகள் அப்போது உயர்ந்து வந்தாலும் கூட நோக்கமாகக் கொண்டார்.[45] As of August2008, கார் மேம்படுத்தப்பட்டு[46] வந்த போது பண்ட விலைகள் 13% லிருந்து 23% மாக உயர்ந்தது, டாடா தன் முன்னிருந்த மாற்றுக்களை சந்தித்தார்: காரை செயற்கையாக அரசுத் தரும் மானியங்கள் மற்றும் வரிச் சலுகைகளால் விலைக் குறைவாக அறிமுகம் செய்வது இலாபத்தை ஒத்திவைப்பது பிற பண்ட உற்பத்தியாளர்கள் தொழில்கள் ஆகியவற்றை இணைப்பதன் மூலம் அவற்றின் செலவைக் குறைத்து செயற்கையாக காரின் இலாபத்தைக் கூட்டுவது பகுதியளவு விலைக்குறைந்த பாலிமர்கள் அல்லது விரைவில் மக்கக் கூடிய நெகிழிகளை முழு உலோகத்திலான உடற்பகுதிக்கு பதிலாக பயன்படுத்தலாம் காரின் விலையைக் கூட்டுவது[46] முன்மாதிரி பதிப்புகள் அதன் துவக்கத்தில் நானோ மூன்று சீர்நிலை மட்டங்களில் கிடைத்தது.[6] டாடா நானோவின் அடிப்படை விலையான ரூபாய் 123,000 க்கு மேல் அதிகப்படியான கட்டணம் ஏதுமில்லை. டாடா நானோ டீலக்ஸ் CX ரூபாய் 151,000,௦௦௦ குளிர்பதன வசதியுடன் உள்ளது. சொகுசு டாடா நானோ LX ரூபாய் 172,000, குளிர்பதன வசதி, நெய்யப்பட்ட துணி வகை இருக்கைகள் மற்றும் மைய பூட்டு வசதி ஆகியவற்றைக் கொண்டது. நானோ ஐரோப்பா, டாடா நானோவின் ஐரோப்பிய பதிப்பு மேற்ச்சொன்ன அனைத்தையும் தவிர பெரிய கொள்ளளவும், பெரிய மூன்று சிலிண்டர் இயந்திரமும், ஆண்டி-லாக் பிரேக் முறையும் (ABS) மேலும் ஐரோப்பிய விபத்து தரங்களுடன் மாசு கட்டுப்பாட்டு விதி முறைகளையும் சந்திக்கிறது. அடிப்படை மாதிரி ஓட்டுனர் இருக்கையைத் தவிர குறிப்பிட்ட அளவிலான இருக்கைகளை மட்டுமே கொண்டிருக்கும், இது சரிப்படுத்திக்கொள்ளும்படியானது , டீலக்ஸ் மற்றும் சொகுசு மாதிரிகள் குளிர்பதன வசதியுடனும் உடல் நிறத்திலான முட்டுத்தாங்கியுடனும் இருக்கும்.[47] தொழில்நுட்ப தனிக்குறிப்பீடு டாடா மோட்டார்ஸ்சின் கூற்றுப்படி, நானோ கார்35PS (26kW; 35hp) 624 cc பின்புற இயந்திரமும், பின்புற சக்கர இழுப்பானுடனும், எரிபொருள் சிக்கனம் 4.55 லி/100 கிமி (22கிமி/லி,51.7 mpg (US),62 mpg (UK) நகரத்திலும், மேலும், 3.85லி/100 கிமி (26கிமி/லி,61.1 mpg (US), 73.3 mpg (UK) நெடுஞ்சாலைகளிலும் தரவல்லது. முதல் முறையாக இரு சிலிண்டர் தடையற்ற பெட்ரோல் இயந்திரம் காரில் ஒற்றைச் சமநிலை எந்திரத்தண்டுடன் பயன்படுத்தப்படுகிறது.[48] டாடா மோட்டார்ஸ் நானோ வடிவமைப்பின் போது ஏற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு 34 காப்புரிமை பதிவுகளுக்கு விண்ணப்பித்ததாக கூறியுள்ளவற்றில், பாதிக்கு மேற்பட்டவை பவர்டிரெய்ன் பாகத்திற்காக மேற்கொண்டதாகும்.[49] இத்திட்டத்தின் இயக்குநர் கிரீஷ் வாக் நானோவின் வடிவமைப்புக்கு பின்னணியில் செயல்பட்ட மூளைகளில் முக்கியமானவராக நன்மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளார்.[49][50] டாடாவின் நானோ காப்புரிமை விண்ணப்பங்களின் மீதான நிலுவையிலிருந்தவற்றைப் பற்றி அதிகமான அளவில் பேசப்பட்டது. இருப்பினும் புது டில்லி வாகன கண்காட்சியில் செய்தியாளர்களை சந்தித்தப்போது ரத்தன் டாடா இந்த காப்புரிமைகள் புரட்சிகரமானவையோ அல்லது புவியை அதிரவைக்கும் தொழில்நுட்பமோ கிடையாது எனச் சுட்டினார். அவர் கூறினார், இவற்றில் பெரும்பாலானவை கார் தொடர்புடைய இம்மைச் சார்ந்த பாகங்களான இரு-சிலிண்டரின் ஒற்றைச் சமநிலை எந்திரத்தண்டு மற்றும் எவ்வாறு கியர்கள் வண்டி செலுத்தப்படும்போது குறைக்கப்படுகின்றன என்பது பற்றியது. இருந்தாலும் இந்தக் கார் பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்றது, இது ராய்டர்ஸ் உட்பட. அதற்கான காரணமாக "இதுவரை அணுகப்படாத சந்தையின் பகுதியை குறிவைத்து தற்போதுள்ள தொழில்நுட்பங்களைக் சுண்டி இழுத்துக்கொண்டு செல்லும் முறையினால்," இன்னும் இதே ராய்டர்ஸ்ஸால் நானோ அந்தளவிற்கு "அதன் தொழில்நுட்பத்தில் புரட்சிகரமானதல்ல", விலைக் குறைவானது மட்டுமே எனக் கூறப்பட்டது.[51] மேலும், இன்னும் வெளியிடப்படாத காரின் எதிபார்க்கப்படும் தொழில்நுட்பங்களில் புரட்சிகரமான அழுத்தப்பட்ட காற்று எரிபொருள் அமைப்பும்[52],சூழல் நட்புடனான மின்சார பதிப்பும்[21],உள்ளடக்கப்படடுள்ளன,இவை டாடாக்கள் ஏற்கனவே செய்துவரும் தொழில்நுட்பப் பணிகள் கூறப்பட்டிருந்தாலும், இதுவரை அதிகாரபூர்வமாக இந்தத் தொழில்நுட்பங்களை புதிய காரில் உள்ளடக்கும் தேதி விபரம் வெளியிடப்படவில்லை. டாடாக்கள், நானோ பாரத் ஸ்டேஜ்-III (ஈரோ-III போன்ற)சூழல் தரக் கட்டுப்பாடுகளையும் கூடவே ஈரோ-IV மாசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்கும் உட்பட்டது என்கின்றனர்.[53] ரத்தன் டாடாவும் கூறினார்," இந்தக் கார் முன்புறமான மோதல்களையும், பக்கவாட்டு மோதல்களின் பாதிப்பினையும் தாங்கும் தேர்வில் தேறியுள்ளது." [54] டாடா நானோ தேவைப்படும் 'உறுதியளிப்பு' சோதனைகளை புனேயிலுள்ள Automotive Research Association of India (ARAI)மூலம் தேர்ந்துள்ளது. இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால் அரசால் ஏற்படுத்தப்பட்ட சாலையில் கார் செல்லத் தேவையான அனைத்து குறிப்பிடப்பட்ட, மாசு அல்லது சத்தம் மற்றும் அதிர்வு உட்பட எல்லா தனிப்பட குறித்துக் காட்டப்படும் அம்சங்களையும் சந்தித்து, கார் சாலையில் பறக்கத் தயாரான நிலையிலுள்ளது. டாடா நானோ ARAI யினால் செய்யப்பட்ட 'உறுதியளிப்பு' சோதனையில்3.6 கிமி/லி சென்று சமாளித்தது.[55] இது டாடா நேனோவை எரிபொருள் சிக்கனம் மிகுந்த காராக ஆக்குகின்றது. நானோ கார் தான் இந்தியாவிலேயே ARAI யில் செய்யப்பட்ட சோதனைகளின் உண்மையான எரிபொருள் மைல்கல் தகவல்களை தனது கண்ணாடிகளில் பொருத்தியுள்ள முதல் காராகும். ARAI யை பொருத்தவரை நானோ 2010 போது இந்தியாவில் அமல்படுத்தப்படும் ஈரோ IV மாசு தரக்கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது, இதுவரை ஈரோ III தர நிலையிலேயே உறுதியளிக்கப்பட்டுள்ளது.[56] பின்புறம் பொருத்தப்பட்டுள்ள இயந்திரம் பின்புறம் பொருத்தப்பட்டுள்ள இயந்திரம் உட்பகுதியை அதிகரிக்க உதவுகிறது, இது மூல வடிவமமும் , மற்றொரு தொழில்நுட்ப கண்டுபிடிப்பான பியட் 500 "மக்கள் கார்" போன்றது. நானோவைப் போன்ற பாணியிலான கருத்துக் கொண்ட, பின்புறம் இயந்திரம் கொண்ட வடிவமைப்புடன் கூடிய UK ரோவர் குழுமத்தால் ௧௯௯௦ 1990 களில் முன்பரிந்துரைக்கப்பட்ட மூல வடிவமான மினியை பின் தொடர்ந்த வாகனமானது தயாரிப்பிற்கு கொண்டு செல்லப்படவில்லை.[57] BMW வினால் இத் திட்டம் எடுத்துக் கொள்ளப்பட்டப் பிறகு புதியமினி கார் தொழில்நுட்ப ரீதியாக மரபு சார்ந்த பெரிய காராகவே இருந்தது. தனித்திருந்த தற்போது செயல்படாத MG ரோவர் குழுமம் பின்னர் தங்களது ரோவர் சிட்டி ரோவர் காருக்கு டாடா இண்டிகாவை அடிப்படையாக வைத்துக் கொண்டது. காற்றழுத்தப்பட்ட இயந்திரத்தை ஓர் மாற்றாகத் தர டாடா கருதியதாக கூறப்பட்டது.[58] ஊகிக்கப்படும் வேறுபாடுகள் வழக்கமான பெட்ரொல்[30] மற்றும் மரபு சார்ந்த தவிர கீழ்க்காணும் வேறுபட்ட வகைகளும் வெளிவருமென எதிர்பார்க்கபடுகிறது. டீசல் ஒரு இணையதளம் டாடா நானோ 690 cc டீசல் இயந்திரத்துடன் 2009 ஆம் ஆண்டு செப்டம்பரில் வெளிவருமெனத் தெரிவித்தது.[63] டாடா மோட்டார்ஸ் இதுவரை இதனை உறுதி செய்யவில்லையென்பது டீசல் பதிப்பு எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை சைகைப்படுத்தியது. "இதுவரை டீசல் மாறுபட்ட மாதிரி கொடுக்கப்படவில்லை. தற்போது பெட்ரோல் பதிப்பாகவே அளிக்கப்படவுள்ளது."[64] காற்றழுத்தப்பட்ட இயந்திரம் டாடா மோட்டார்ஸ் பிரெஞ்சு நாட்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து காற்றழுத்தப்பட்ட இயந்திரத்தை எரிபொருளாக பயன்படுத்த வேலை செய்கிறது.[52] இந்த காரணத்திற்காக நிறுவனம் Moteur Development International (MDI) யோடு உடன்படிக்கையொன்றை ஏற்படுத்தியுள்ளது.[30] மின்சார செலுத்துவாகனம் அல்லது மின்சார பதிப்பு டாடாக்கள் மின்சார பதிப்பொன்றையும் தயாரித்து வருவதாகவும், அதற்கு மின்-நானோ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் (சூரிய சக்தி தகடுகள் பொருத்தப்பட்டதாகவோ அலலது பக்கவாட்டிலோ)[21][65] இது "உலகின் விலை குறைவான மின்சார கார்"[66] ஆக மாறுமென கருதவும் சூழல் நட்பு மிகுந்திருப்பதால் பல ஆர்வலர்கள் மற்றும் ஊடக ஆதரவும் பெற்றிருக்கிறது.[67] மரபுச் சார்ந்த எரிபொருள் பதிப்புக்கள் போன்று இதுவும் விலை குறைவானதாக இருக்குமென கூறப்படுகிறது. டாடா நானோவை ஏற்றுமதிச் சந்தை கட்டுப்பாடுகளுடன்[68] கூடிய வகையில் இருக்கவும், அது போன்றதொரு காரை உலகம் முழுதும் ஏற்றுமதி செய்யவும், குறிப்பாக UK மற்றும் மீதமுள்ள ஐரோப்பா கண்டம்[23][24],[69] US மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு செய்ய திட்டமிட்டுள்ளது.[25][70][71][72] ஈகனாமிக் டைம்ஸ் கூறியது[73] "மின்சார நானோ" இன்னும் கூட நல்லவிதமான பொருளாதார, சுத்தமான மற்றும் சூழல் எண்ணங்களுடன் தனிப்பட்ட வாகனமாக உலகம் முழுதும் இருக்கும்."ஆட்டோ பில்ட்,என்னும் ஹாம்பர்க் நகர பத்திரிகையின்படி, மின்-நானோ நார்வே நாட்டு மின் கார் நிபுணர்களான Miljøbil Grenland AS ன் ஒத்துழைப்புடன் கட்டப்படுகின்றது.[74][75][76][77] கலப்பின கார் லெஃப்ட்லானென்நியூஸ் கூறியது " கலப்பு எரிபொருள் பதிப்பும் (டாடா நானோவின்)வரலாம், எனினும் மின்சார மோட்டாருக்கு இணையாக எந்த வகையான எரிபொருளைக் கொண்ட பெட்ரோல் அல்லது டீசல் பதிப்பை வெளியிடுவது என்பது பற்றி இதுவரை தெரியவில்லை.[78] நானோ ஐரோப்பா டாடா மோட்டார்ஸ் 2009 ஜெனிவா வாகன கண்காட்சியின்போது நானோ ஈரோப்பா என்ற நானோ சிறு காரினை வெளியிட்டது. ஐரோப்பா மற்றும் UK[79] செல்லும் கார் சாதாரண நானோவைவிட பல மேம்பாடுகளைக் கொண்டிருக்கும். நானோ ஐரோப்பா அதிகரிக்கப்பட்ட சக்கர அடித்தளமும்,புதிய 3சிலிண்டர் இயந்திரம் மற்றும் உட்புற மற்றும் வெளிப்புற மேம்பாட்டினையும் கொண்டிருக்கும். நானோ ஐரோப்பா விலை கூடுதலாகவும், கனமாகவும், குறைந்த எரிபொருள் சிக்கனத்துடனும் சாதாரண நானோவைவிட US $6000 விலை அளவுடனிருக்கும்.[80] எதிர்பார்ப்புகள் ஒரு அறிக்கையின்படி இந்தியா, மற்ற நாடுகளைப் போல குறிப்பாக ஐரோப்பிய நாடுகளைப் போல நானோவைப் பற்றி ஏராளமான எதிர்பார்ப்புகள் உண்டு. மேலும் குறிப்பாக நானோ[81] மின்சார பதிப்பிற்காக ஆர்வமுடன் காத்திருக்கின்றனர், அதிகாரபூர்வமாக ஆவணங்களில்[66][82] இருப்பது போன்று "உலகின் விலைக்குறைவான மின்சாரக் கார்" நிகழக்கூடியதாக ஆக்கியுள்ளது. கார் தானாகவே இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு இந்திய கார் சந்தையையும் 65% விரிவுபடுத்தும் என தரப்படுத்துதல் நிறுவனமான CRISIL கூறியுள்ளது.[17] இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் எகனாமிக் டைம்ஸ் குறிப்பிடுகிறது:[17] Tata Nano’s launch could expand the Indian car market by 65%, according to rating agency CRISIL. The low price makes the car affordable for families with incomes of Rs 1 lakh [100,000] per annum, the agency said. The increase in the market is expected to push up car sales by 20% over the previous year. “The unveiling of Tata Nano, the cheapest car in the world, triggers an important event in the car market. Based on the statement by company officials, CRISIL Research estimates the consumer price of the car at around Rs 1.3 lakh. This brings down the cost of ownership of an entry level car in India by 30%,” the company said in a report. வரலாற்றில் இடம் சில செய்தி தோற்றுவாய்கள் நானோவை ஹென்றி ஃபோர்ட்டின் ஒரு நூற்றாண்டுக்கு முன் செய்தமாதிரி டி காருடன் ஒப்பிட்டனர்: லைவ்மிண்ட் கூறியது: Ford Motor Co. is rich because Henry Ford used the assembly-line to produce the Model T in 1908. Ratan Tata is a late entrepreneur, making the Nano in 2008. India is 100 years behind. But we are waking up to the possibility of catching up. I just hope our planners wake up soon.[83] டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் நானோவை மாதிரி டி யுடன் ஒப்பிட்டது: நானோ இன்னும் தயாரிப்பிற்கு வரவில்லையென்றாலும், கின்னஸ் உலக் சாதனைப் புத்தகத்தில் ஏற்கனவே இடம்பெற்றுவிட்டது.[82] சிங்கூர் தொழிற்சாலை வெளியேற்றம் பலத்த ஊகங்களுக்குப் பிறகு, டாடா மோட்டார்ஸ் 2006 ஆம் ஆண்டு மே 19 அன்று மேற்கு வங்கத்திலுள்ள சிங்கூரில் டாடா நானோவை உற்பத்திச் செய்யப்போவதாக அறிவித்தது.[84] இருப்பினும், ஒரு வாரத்திற்குள் ஒரு சில விவசாயிகள் டாடா நிறுவனம் தங்கள் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களைத் துவங்கினர்.[85] இந்த வழக்கு மமதா பானர்ஜி, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் அவர்களால் கைக்கொள்ளப்பட்டது.[86] சூழ்நிலை டாடாக்கள் வெளியேறுவதாக மிரட்டும் அளவிற்கு சென்றது[87],மேலும் தானாகவே நிலம் தர முன்வந்த விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகை பட்டுவாடாவும் எதிர்ப்பாளர்களால் தடைப்பட்டது.[88] இது பின்னர் திரிணமுல் காங்கிரஸ்சால் அக்டோபரில் கடைப்பிடிக்கப்பட்ட மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டத்தில் தொடர்ந்தது.[89] மாநில அரசு அரசியல் கட்சிகள் சிங்கூரில் கூட்டங்கள் அல்லது ஊர்வலங்கள் நடத்த தடை விதித்தது, மேலும் பெரிய காவற்படையை அங்கே நிலைநிறுத்தியது.[90][91] 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் நாள் காவலர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பரவலான வன்முறை ஏற்பட்டது.[92] 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 4 அன்று மமதா பானர்ஜி உண்ணாநிலைப் போராட்டதில் இறங்கினார். அதன் பின்னர், ஓர் 48 மணி நேர வேலை நிறுத்தம் அவரால் அறிவிக்கப்பட்டது. இது தபசி என்னும் விவசாய நில பாதுகாப்புக் குழு பிரச்சாரகரின் எரிந்த உடற்பகுதி நானோ சிங்கூர்ஆலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிவிக்கப்பட்டது.[93] இரு இடது கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் பின்னர் கொலைக்காக ஆயுள் தண்டனை வழங்கி தண்டிக்கப்பட்டனர்.[94] அவரது 24 ஆம் நாள் போராட்டத்தின்போது, பானர்ஜிக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இறுதியாக அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரது வேண்டுகோள்களுக்குப் பிறகு தனது உண்ணாநிலைப் போராட்டத்தை விலக்கிக் கொண்டார்.[95] நிலத்தின் மீதான எதிர்ப்புகள் 2007[96] ளிலும் தொடர்ந்த போது, ரத்தன் டாடா இச்சர்ச்சையில் வர்த்தகப் போட்டியாளர்களின் பங்கிருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.[97] பிப்ரவரி 2007 ல் நில கையக்கப்படுத்துதல் துவக்கத்தில் விமர்சிக்கப்பட்டாலும் பின்னர் 2008 ல் கொல்கொத்தா உயர் நீதி மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது.[98][99] அரசியல் அமைதியின்மையும் மழையும் ஆலை நிறுவுதலை தடைச் செய்ததால் டாடா மோட்டார்ஸ் நானோ துவக்கத்தை செப்டெம்பர் 2008 வரை தாமதித்தது.[100] வன்முறை 2008[101][102][103] முழுதும் தொடர்ந்தது. மேலும் 2008 ஆம் ஆண்டு செப்டம்பரில் டாடா மோட்டார்ஸ் சிங்கூரில் தங்கள் பணியை இடை நிறுத்தம் செய்வதாக அறிவித்தது.[104] அக்டோபர் 2 2008 ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் சிங்கூரிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தனர்.[105] அக்டோபர் 7 2008 ல் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி டாடா மோட்டார்ஸ்சுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று மூலம் நானோ ஆலைத் தொடங்க குஜராத்தில்அகமதாபாத் மாவட்டத்தில் சனந்த் எனும் பகுதியில் நிலம் அளிக்க கையொப்பமிட்டார்.[106] விமர்சனங்கள்,விவகாரங்கள் மற்றும் பிரச்சினைகள் பாதுகாப்பு பற்றிய கேள்விகள் தி டைம்ஸ் இதழ் கூறுகிறது:[26] டாடா மோட்டார்ஸ் நானோவை இந்தப் பாதுகாப்பு அம்சங்களுடன் மின்சார பதிப்பில் ஒரு காற்றுப்பை அமைப்பு உட்பட நானோ பதிப்புகளை அளிக்கும்.ஜப்பான் மற்றும் கொரியா தயாரிப்புகளான முழு உலோக உடற் பகுதியை நானோ பாதுகாப்பு அம்சங்களான கிரம்புள் சோன்ஸ், உட்புகா எதிர்ப்பு கதவுகள், இருக்கை பட்டிகள், வலுவான இருக்கைகள் மற்றும் கைதாங்கிகள், உடலுடன் இணைக்கப்பட்ட பின்புறக் கண்ணாடி போன்றவற்றுடன் கூடியது. சக்கரங்களுக்கு குழாய்கள் கிடையாது. பேரளவு வாகனமயமாக்கல் நானோ தற்போது சூழல் நட்புக் கொண்ட மிதி வண்டிகளையும் மற்றும் இரு சக்கர வாகனங்களையும் பயன்படுத்தும் மக்கள் கூட்டத்தில் உருவாக்கப்பட்டும் வடிவமைக்கப்பட்டும் அறிமுகப்படுத்தப்படும்போது சூழலியலாளர்கள் அதன் மிகக் குறைந்த விலை பேரளவு வாகனமயமாக்கல் இந்தியா போன்ற நாடுகளில் மாசினை அதிகரிப்பதோடு எரிபொருள் தேவையையும் அதிகரிக்கும் என கவலைத் தெரிவிக்கிறார்கள். சூழல் மீது கவனம் கொண்ட ஜெர்மன் செய்தித்தாளான டெய் டாகெஸ்சீதுங் டாடா நானோ குறைந்த அளவில் வோல்ஸ்வேகன் போன்ற வாகனங்களோடு ஒப்பிடும்போது மாசினை வெளியிடுவதால் இது போன்றகவலைகள் "பொருத்தமற்றவை" என உணர்த்துகிறது. மேலும் தொழில்மயமான நாடுகள் தங்களது மாசு அளவினை குறைக்கவும் கார் பயன்பாட்டினை குறைக்கவும் காண விழைய வேண்டிய போது வளரும் நாடுகள் அவர்களது வாகன போக்குவரத்து உரிமைகளை மறுக்கப்படக் கூடாது என்கிறது.[107] டெய் வெல்ட்த் காரானது சூழல் பாதுகாப்பு விதிகளை பூர்த்தி செய்வதோடு இந்தியாவில் குறைந்த மாசுபாட்டையே ஏற்படுத்தும் எனக் கூறுகிறது.[108] மும்பை போன்ற நெருக்கடி மிகுந்த மாநகரங்களில் ரத்தன் டாடா எத்தகைய வாகனத்தையும் வைத்திருக்காத தனிநபர்களுக்கு மட்டுமே நானோவை வழங்கும் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார். நானோ மேற்கொண்டு அதிகச்சுமைக்கொண்ட மற்றும் தேய்ந்த்துப்போன இரு- விசை மாசு ஏற்படுத்தும் இரு மற்றும் மூன்றுச் சக்கர வாகனங்களின் இடத்தை இட்டு நிரப்பும். புது டில்லியிலுள்ள Centre for Science and Environment யின் இணை இயக்குநர் அனுமிதா ராய்சொளத்திரியின் கூற்றுப்படி தற்போதைய கொள்கை மற்றும் கட்டுப்பாட்டு வரைச்சட்டங்களின்படி "விலைக்குறைந்த கார்கள் அழிவுண்டாக்குபவை." [52] பயன்படுத்தப்பட்ட கார்களின் சந்தை விளைவுகள் நானோ பயன்படுத்தப்பட்ட கார்களின் சந்தையை கடுமையாகப் பாதிக்கும், ஏனெனில் பல இந்தியர்கள் நானோவின் வெளியீட்டிற்காக காத்திருந்து, நானோவின் நெருங்கிய போட்டியாளரான மாருதி 800 ( மீண்டும் அடையாளம் கண்ட சுசூகி ஆல்டோ) ன் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கத் தயங்குகின்றனர். நானோவின் வெளியீட்டிற்குப் பிறகு பயன்படுத்தப்பட்ட கார்களினுடையதும்,மாருதி 800 கார்களினுடையதும் முறையே 30% மற்றும் 20% விற்பனை குறைந்துவிட்டது. ஒரு வாகன இதழியலாளர் தொகுத்துக் கூறுகிறார்: " மக்கள் தங்களைத் தானேயும்-எங்களையும் கேட்கிறார்கள்-ஏன் அவர்கள் 250,000 ரூபாய்களை மாருதி ஆல்டோவிற்கு கொடுக்க வேண்டும், எப்போது அவர்கள் காத்திருந்து புதிய நானோவை குறைந்த விலைக்கு அதுவும் உண்மையில் அளவில் பெரியதானதை ஒரு சில மாதங்களில் பெற முடியும்போது." [109] போட்டியாளர்கள் போட்டிக் கார் தயாரிப்பாளர்களான பஜாஜ் ஆட்டோ.பியட்,ஜெனரல் மோட்டார்,ஃபோர்ட் மோட்டார்,ஹுயூண்டாய் மற்றும் டயோட்டா ஆகிய அனைவரும் வளரும் சந்தைகளில் நடுத்தரு நுகர்வோருக்கு வாங்கக கூடிய விலையில் சிறிய காரினைத் தயாரிக்க ஆர்வம் தெரிவித்துள்ளனர். மககள் அடிக்கடி மாறுபடுகிற எரிபொருள் விலைப் பற்றி கவனம் கொண்டிருப்பதால் சிறிய கார்களின் தேவை பெரிய அளவிலுள்ளது. ஹோண்டா மற்றும் டயோட்டா ஆகிய நிறுவனங்கள் தூய்மையான பெட்ரோல்-மின்சார கலப்பு கார்களின் தயாரிப்பில் முன்னணியிலுள்ளனர், மேலும் சில சூழலியலாளர்கள் இது போன்ற தொழில்நுட்பங்களின் விலையைக் குறைப்பதில் முயற்சிகள் கவனம் கொள்ள வேண்டுமென வாதிடுகின்றனர்.[110] அதிக செலவில்லாத மற்றும் சூழல் நட்புக் கொண்ட மின்சார கார்களான தாரா டைனி, ஒரேவா சூப்பர் ( இரண்டும் டாடா நானோவைவிட விலை குறைவானவை எனக் கூறப்படுகிறது)மற்றும் REVA [111] குறிப்பிடத்தக்க ஆபத்தை நானோவிற்கு தரக் கூடியவை. டாடா நானோவை எதிர்க்கொள்ள மாருதி சுசூகி குறைந்த விலைக் கொண்ட ஆல்டோவை அறிமுகப்படுத்தப் போவதாக வதந்திகளும் உள்ளன.[112] மேலும் காண்க இந்தியவில் போக்குவரத்து குறிப்புகள் புற இணைப்புகள் பகுப்பு:டாட்டா மோட்டார்சு பகுப்பு:மேற்கோள் வழுவுள்ள பக்கங்கள்-கூகுள் தமிழாக்கம்
டாடா நானோ கார் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்தது?
2009 ஆம் ஆண்டு மார்ச் 23
496
tamil
9711e7bbe
முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018)[2] திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். 1969ல் முதன்முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 2018 ஆகத்து 7 ஆம் நாள் தம்முடைய 94 ஆம் அகவையில் சென்னையில் காலமானார். இளமைப்பருவம் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 சூன் 3-இல் ஏழை இசை வேளாளர் குடும்பத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார் கருணாநிதி. இவருக்கு இரு சகோதரிகள் இருந்தனர். தொடக்கக்கல்வியை திருக்குவளையில் பெற்றார். பின்னர் திருவாரூரிலிருந்த மாவட்ட நாட்டாண்மைக்கழக உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றார். அங்கு இவருக்குத் தமிழாசிரியராக இருந்தவர் சி. இலக்குவனார். பள்ளியிறுதித்தேர்வில் இவர் தேர்ச்சியடையவில்லை. இளைஞர் அமைப்பு கருணாநிதி, தமது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். தமது வளரிளம் பருவத்தில், வட்டார மாணவர்கள் சிலரின் உதவியுடன் திருவாரூர் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்னும் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை 7-7-1944ஆம் நாள் உருவாக்கினார். அவரே அதன் தலைவராக மு.கருணாநிதியும் அமைச்சராக கே.வெங்கிடாசல என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். [3] இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. அதன் வழியாக மாணவநேசன் என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையை வெளியிட்டு இளைஞர்களைத் திரட்டினார். [4] சில காலத்துக்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான "அனைத்து மாணவர்களின் கழகம்" என்ற அமைப்பாக உருப்பெற்றது. கருணாநிதி, மற்ற உறுப்பினர்களுடனான சமூகப் பணியில் மாணவர் சமூகத்தையும் ஈடுபடுத்தினார். முரசொலி இதழ் முரசொலி என்னும் துண்டு வெளியீட்டை 1942ஆம் ஆண்டில் வெளியிட்டார். முரசொலி ஆரம்பித்த முதலாமாண்டு விழாவை அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோரை அழைத்து தம் மாணவர் மன்ற அணித்தோழர்களுடன் கொண்டாடினார். இடையில் சில காலம் அவ்விதழ் தடைபட்டது. பின்னர் 1946 முதல் 1948 மாத இதழாக நடத்தினார்.[5] சற்றொப்ப 25இதழ்கள் வரை வந்து மீண்டும் இதழ் தடைபட்டது. மீண்டும் 1953இல் மாத இதழாக சென்னையில் தொடங்கினார். 1960ஆம் ஆண்டில் அதனை நாளிதழாக மாற்றினார். அரசியல் தொடக்கம் நீதிக்கட்சியின் தூணாக கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14ஆவது அகவையில், அரசியல், சமூக இயக்கங்களில் முழுமையாக தம்மை ஈடுபடுத்திக்கொண்டார் [6]. கல்லக்குடி போராட்டம் கருணாநிதி தமிழ் அரசியலில் களமிறங்குவதற்கு உதவிய முதல் பிரதான எதிர்ப்பு, கல்லக்குடி ஆர்ப்பாட்டத்தில் (1953)[7] ஈடுபட்டது ஆகும். இந்த தொழிற்துறை நகரத்தின் அசல் பெயர் கள்ளக்குடி. இது வட இந்தியாவில் இருந்து ஒரு சிமென்ட் ஆலை ஒன்றை உருவாக்கிய சிம்மோகிராம் பிறகு டால்மியாபுரம் என மாற்றப்பட்டது. தி.மு.க. அந்த பெயரை கள்ளக்குடி என மீண்டும் மாற்ற வேண்டுமென விரும்பியது. கருணாநிதி மற்றும் அவருடைய தோழர்கள் இரயில் நிலையத்திலிருந்த டால்மியாபுரம் என்ற பெயரை அழித்தனர் மேலும் இரயில் மறியலிலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் இருவர் இறந்தனர், கருணாநிதி கைது செய்யப்பட்டார்.[7][8] இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் 1957 இல் நடைபெற்ற திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ் நாட்டில் நடுவண் அரசால் இந்தி திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்டோபர் 13, 1957 அன்றைய நாளை இந்தி எதிர்ப்பு நாளாக பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது. இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கிய கருணாநிதி நடுவண் அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து, "மொழிப்போராட்டம்.. எங்கள் பண்பாட்டை பாதுகாக்க, இது எமது மக்களின் தன்மானம் மற்றும் எங்களது கட்சியின் அரசியல் கொள்கை.. மேலும் இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு (எடுப்பு சாப்பாடு), ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு” என்று முழக்கமிட்டார். அக்டோபர், 1963, இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னையில் (மதராஸ்) கூட்டப்பட்டது. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடுவண் அரசின் புரிந்து கொள்ளாமையை உணர்த்தும் விதமாக இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்பு போராட்டம் நடத்துவெதென மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் 16 அன்று அண்ணாதுரையும், நவம்பர் 19 அன்று கருணாநிதியும் கைது செய்யப்பட்டு 25 நவம்பர் அன்று உயர் நீதிமன்ற ஆணையால் விடுவிக்கப்பட்டனர். தி.மு.க.வி. பதவிகள் பொருளாளர் 1960ஆம் ஆண்டில் தி.மு.க.வின் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969ஆம் ஆண்டு வரை அப்பதவியை வகித்தார். தலைவர் 1969ஆம் ஆண்டில் தி.மு.க.வின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது மறைவு வரை 50 ஆண்டுகள் அப்பதவியை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் இவர்வெற்றிபெற்றார். 1957ம் ஆண்டு சுயேச்சையாகவும் மற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுக வேட்பாளராகவும் போட்டியிட்டார். 1984ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை.[9][10] ஆண்டுதொகுதிவாக்கு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குவாக்கு வேறுபாடு 1957குளித்தலை22785கே. எ. தர்மலிங்கம்காங்கிரசு144898296 1962தஞ்சாவூர்32145ஏ.ஒய்.எஸ்.பரிசுத்த நாடார்காங்கிரசு302171928 1967சைதாப்பேட்டை53401எஸ். ஜி. வினாயகமூர்த்தி காங்கிரசு3291920482 1971சைதாப்பேட்டை63334என். காமலிங்கம்காங்கிரசு5082312511 1977அண்ணா நகர் 43076ஜி. கிருஷ்ணமூர்த்தி அதிமுக 1643816438 1980அண்ணா நகர் 51290எச். வி. அண்டே அதிமுக 50591699 1989துறைமுகம் 41632கே. எ. வகாப் முஸ்லீம் லீக் 964131991 1991துறைமுகம் 30932கே. சுப்பு காங்கிரசு30042890 1996சேப்பாக்கம் 46097நெல்லைக் கண்ணன்காங்கிரசு1031335784 2001சேப்பாக்கம் 29836தாமோதரன் காங்கிரசு250024834 2006சேப்பாக்கம் 34188தாவூத் மியாகான் சுயேச்சை256628526 2011 திருவாரூர் 109014எம்.இராசேந்திரன்அதிமுக5876550249 2016 திருவாரூர் 121473பன்னீர்செல்வம்அதிமுக5310768366 மாநிலத்திலேயே அதிக வாக்கு வித்தியாசம் சட்டமேலவை உறுப்பினர் இலங்கைத்தமிழருக்காக கருணாநிதியும் அன்பழகனும் தமது சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினர். அடுத்துவந்த சட்டமேலவைத்தேர்தலில் கருணாநிதி சட்டமேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சித்துணைத்தலைவர் 1962ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பின்னர் அமைந்த மூன்றாவது சட்டப்பேரவையில் இரா. நெடுஞ்செழியன் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தார். மு. கருணாநிதி எதிர்க்கட்சித்துணைத்தலைவராக இருந்தார். அமைச்சர் 1967ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியைப்பிடித்த பின்னர் கா. ந. அண்ணாதுரை தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பதவிவகித்தார். முதலமைச்சர் 1969–1971 --கா. ந. அண்ணாதுரை மறைவுக்குப் பின் முதல் முறை ஆட்சி 1971-1976—இரண்டாவது முறையாக 1989–1991 --எம். ஜி. இராமச்சந்திரன், மறைவுக்குப் பின் மூன்றாம் முறை ஆட்சி 1996-2001—நான்காம் முறை ஆட்சி 2006-2011—ஐந்தாம் முறை ஆட்சி என ஐந்துமுறை முதலமைச்சராக இருந்தார். அரசு நிர்வாகம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக, கிராமப்புறங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இலவச காப்பீடு திட்டங்கள், தொழில்மயமாக்குதலுக்கான நடவடிக்கைகள் போன்ற பலவற்றையும் மேற்கொண்டார். ஐ.டி துறையை மாநிலத்தில் வளர்க்கும் விதமாக, அவருடைய பதவிக் காலத்தில், டைடல் மென்பொருள் பூங்காவை உருவாக்கினார். ஒரகடத்தில், புதிய உழுவை உற்பத்தி செய்யும் செல்லைத் தொடங்கினார். மஹிந்திரா மற்றும் நிசான் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த அமைப்பின் கீழ் செயல்படுகிறது. விமர்சனங்கள் 1972 இல் விவசாயிகள் போராட்டத்தில் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள். 1976-ல் மு.கருணாநிதியின் ஆட்சி வீராணம் ஊழல் புகார் இலஞ்சத்தை காரணமாகக் காட்டி கலைக்கப்பட்டு ஆளுனர் ஆட்சிஅமல்படுத்தப்பட்டது. [11] [12] 1973 ல் மிசா 1975 சூன் மாதத்தில் நெருக்கடிக்கால அறிவிப்பை அப்பொழுதய இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அமல்படுத்தினார். 1977 ஆம் ஆண்டு அவசர நிலை முடிந்த பிறகு மதுரைக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வந்தபோது திமுகவினர் அவரை கடுமையாக தாக்கினார்கள். சென்னைக்கு வந்தபோதும் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள். காங்கிரஸ்ஐ கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, தொடக்க காலத்தில் பாரதிய ஜனதா கட்சியைக் கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, பொதுமக்களின், குறிப்பாக ஊடகங்களின், விமர்சனத்திற்கு உள்ளானது. எதிர்க்கட்சித்தலைவர் தமிழக சட்டப்பேரவையில் 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் அமைந்த சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தார். குடும்பம் தனிப்பட்ட வாழ்க்கை கருணாநிதி புலால் உணவுகளை உண்பவராக இருந்து பின் (தற்பொழுது) தாவர உணவு முறையை பின்பற்றுபவரானார். இவர் அரசியல் பணிகளையும், எழுத்துப் பணிகளையும் ஓய்வின்றி செய்ய முடிவதற்கு நாளும் யோகப் பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவற்றைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தமையே காரணமாகக் கூறப்படுகிறது. படைப்புகள் இவர் 75 திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். 15 நாவல்களையும் 20 நாடகங்களையும் 15 சிறுகதைகளையும் 210 கவிதைகளையும் படைத்துள்ளார். [13] மேலும் "நண்பனுக்கு", "உடன்பிறப்பே" என்னும் தலைப்புகளில் 7000க்கும் மேற்பட்ட மடல்களை எழுதியிருக்கிறார். [14] கரிகாலன் என்னும் பெயரில் கேள்வி-பதில் எழுதியிருக்கிறார். இவை தவிர தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்களை எழுதியிருக்கிறார். திரைப்படத் துறைப் பங்களிப்புகள் 20 வயதில், ஜுபிடர் பிக்சர்ஸ்-ன் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றினார். அவரது முதல் படமான ராஜகுமாரி என்னும் படத்தால் மிகவும் பிரபலமடைந்தார். ஒரு திரைக்கதை எழுத்தாளர் போன்ற திறமைகளை அவர் பல திரைப்படங்களுக்கு விரிவுபடுத்தினார். நாடகங்கள் அனார்கலி உதயசூரியன், 1959 இளைஞன் குரல், 1952 (31.8.52ஆம் நாள் தேனி வழக்க்குநிதிக்காக மதுரையில் அரங்கேற்றப்பட்டது)[15] ஒரே ரத்தம் காகிதப்பூ சாக்ரடீஸ் சாம்ராட் அசோகன் சிலப்பதிகாரம் சேரன் செங்குட்டுவன் திருவாளர் தேசியம்பிள்ளை தூக்கு மேடை,1957, முத்துவேல் பதிப்பகம், திருச்சி. நச்சுக் கோப்பை (பழனியப்பன் அல்லது சாந்தா அல்லது சமூகத்தின் கொடுமை என்னும் நாடகம் பின்னாளில் நச்சுக்கோப்பை என்னும் பெயரில் நிகழ்த்தப்பட்டது) நானே அறிவாளி பரதயாணம் பரப்பிரம்மம். 1953, திராவிடப்பண்ணை, திருச்சி. 26-2-1953ஆம் நாள் சென்னை ஒற்றைவாடைத் தியேட்டரில் புயல்நிவாரண நிதிக்காக நெடுஞ்செழியன் தலைமையில் அரங்கேற்றப்பட்டது. [16] பலிபீடம் நோக்கி, 1948, எரிமலைப் பதிப்பகம், துறையூர். பிள்ளையோ பிள்ளை (1948 சூலை; விந்தியம் வெளியீடு, திருவாரூர்)[17] பெரிய இடத்துப்பெண் (1948 செப்) மணிமகுடம், 1955, முத்துவேல் பதிப்பகம், திருச்சி. (4-9-1955 சென்னை செயின்ட் மேரி மண்டப்பத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன் குழுவினரால் கா. ந. அண்ணாதுரை தலைமையில் அரங்கேற்றம்) [18] மந்திரிகுமாரி வாழமுடியாதவர்கள் [19] (27-7-1951 இரவு 10;30 மணிக்கு காஞ்சி அசோகா அரங்கில் அரங்கேற்றம்) வரலாற்றுப்புனைவுகள் ரோமாபுரி பாண்டியன் தென்பாண்டிச் சிங்கம் ‎பாயும்புலி பண்டாரக வன்னியன் பொன்னர் சங்கர் புதினங்கள் வெள்ளிக்கிழமை, 1956 திசம்பர், திராவிடப்பண்ணை, சென்னை. புதையல் வான்கோழி சுருளிமலை ஒரு மரம் பூத்தது ஒரே ரத்தம் இரத்தக்கண்ணீர், திராவிடப்பண்ணை, திருச்சி [20] கிழவன் கனவு; 1945; வெளியிட்டவர்: சு.இராமநாதன், விஜயபுரம், திருவாரூர். [21] சிறுகதைகள் சங்கிலிச்சாமியார் நளாயினி (1956) திராவிடப்பண்ணை, திருச்சி [22] பழக்கூடை பதினாறு கதையினிலே கண்ணடக்கம், 1957, திராவிடப்பண்ணை, திருச்சி (கண்ணடக்கம், நெருப்பு, வேணியின் காதலன், நடுத்தெரு நாராயணி, அமிர்தமதி ஆகிய கதைகள் அடங்கியது) கவிதைகள் காலப்பேழையும் கவிதைச்சாவியும் கவிதைமழை - மூன்று தொகுதிகள் முத்தாரம், இ.பதி 1957, திராவிடப்பண்ணை, திருச்சி (மு.க.சிறையிலிருந்தபொழுது 1.பிறையே, 2.ஆடிக்காற்று, 3.பச்சைக்கிளி, 4.புகழ், 5.கருப்புப்பெண், 6.அகப்பை சித்தர், 7.மலையே வாழி, 8.நாடகமேடை, 9.அவள், 10.தளிர், 11.கடலே, 12.விண்மீன், 13.ஆறு, 14.வாழிய வைகறை, 15.தமிழே என்னும் தலைப்பில் எழுதிய கவிவசனங்களின் தொகுப்பு) உரைநூல்கள் திருக்குறள் உரை இலக்கிய மறுபடைப்புகள் குறளோவியம் சங்கத் தமிழ் தாய் தொல்காப்பியப்பூங்கா தன்வரலாறு இவர் தனது வாழ்க்கைவரலாற்றை நெஞ்சுக்கு நீதி என்னும் தலைப்பில் தினமணி கதிர் (முதலாவது பகுதி), முரசொலி, குங்குமம் ஆகிய இதழ்களில் தொடர்கட்டுரையாக எழுதினார். பின்னர் அக்கட்டுரைத்தொடர் அதேபெயரில் 4165 பக்கங்களில் ஆறு பாகங்களைக் கொண்ட நூலாக வெளிவந்துள்ளது. [23] சொற்பொழிவுகள் தலைமையுரை, பாரிநிலையம், சென்னை. [24] ‎மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று பெரியார் பிறவாதிருந்தால் கட்டுரைகள் அகிம்சாமூர்த்திகள், 1953, பாரிநிலையம், சென்னை. அல்லிதர்பார், 1953, பாரி நிலையம், சென்னை. ஆறுமாதக் கடுங்காவல், திராவிடப்பண்ணை, திருச்சி. இளைய சமுதாயம் எழுகவே இனமுழக்கம் உணர்ச்சிமாலை கருணாநிதியின் வர்ணனைகள், 1952, கருணாநிதி பதிப்பகம், சென்னை [25] சுழல்விளக்கு, 1952, கருணாநிதி பதிப்பகம், சென்னை [26] மலரும் நினைவுகள் முத்துக்குவியல் பூந்தோட்டம், திராவிடப்பண்ணை, திருச்சி. பெருமூச்சு பொன்னாரம் (கே. ஆர். நாராயணன் வெளியீடு) திராவிடசம்பத்து துடிக்கும் இளமை நாடும் நாடகமும், 1953, திராவிடப்பண்ணை, திருச்சி. விடுதலைக்கிளர்ச்சி, 1952, திராவிடப்பண்ணை, திருச்சி. [27] கதை, வசனம் பராசக்தி மலர், 1953 மனோகரா, மூனா கானா பதிப்பகம், சென்னை நாம், 1953, திராவிடப்பண்ணை, திருச்சி. திரும்பிப்பார், 1953, திராவிடப்பண்ணை, திருச்சி. பயணக்கட்டுரைகள் இனியவை இருபது விருதுகளும், பெற்ற சிறப்புகளும் உலகக் கலைப் படைப்பாளி என்ற விருது 2009ஆம் ஆண்டு நடந்த அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் (அ) பெப்சி மாநாட்டில் கருணாநிதிக்கு வழங்கப்பட்டது.[28] கருணாநிதி 1970 ஆம் ஆண்டு, பாரிஸில் நடந்த உலக தமிழ் மாநாட்டின் ஒரு கெளரவ உயர் பதவியாளராக இருந்தார். 1987 ஆம் ஆண்டு, மலேசியாவில் நடந்த உலக தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.   2010 ஆம் ஆண்டு,  ‘உலக தமிழ் செம்மொழி மாநாட்டின்’ அதிகாரபூர்வமான கருப்பொருள் பாடலை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார். இதன் பின்னணி இசையை ஏ. ஆர். ரகுமான் அமைத்தார். கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி![29] இறப்பு 2016-ம் ஆண்டு முதல் சுவாசக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த கருணாநிதிக்கு ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை, அதனை மாற்றுவதற்காக மருத்துவமனைக்குச் சென்று உடலை பரிசோதித்து வந்தார். அதன் பிறகு கருணாநிதி உடல்நலத்தில் வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது என்றும் சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக தனியார் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்பிறகு, 24 மணி நேரமும் மருத்துவர்கள் அடங்கிய குழு கருணாநிதியை வீட்டிலேயே கண்காணித்து வந்தனர். பின்பு கருணாநிதியின் உடலில் நலிவு அதிகமானதை அடுத்து, சூலை 27, 2018 அன்று நள்ளிரவில் இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு சூலை 29, 2018 அன்று கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவருவதாக கூறப்பட்டது. அதன் பின்பு ஆகத்து 06, 2018 அன்று இவரின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அதற்கு மறுநாள் ஆகத்து 07, 2018 அன்று சிகிச்சை பலனின்றி சென்னையில் காலமானார்.[30] கருணாநிதி பற்றி பிறர் எழுதிய நூல்கள் கருணாநிதி யார்? - மீ. சு. இளமுருகு பொற்செல்வி, 1951, காதலர்பண்ணை, நூல் வெளியீட்டகம், பெரியகுளம் [31] அயராத தொண்டன் அஞ்சுகச் செல்வன் - மீ. சு. இளமுருகு பொற்செல்வி, 1989, இன்பப்பாசறை பதிப்பகம், குளித்தளை மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:தமிழ்நாட்டு முதலமைச்சர்கள் பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள் பகுப்பு:திராவிட இயக்க எழுத்தாளர்கள் பகுப்பு:தமிழ் இறைமறுப்பாளர்கள் பகுப்பு:1924 பிறப்புகள் பகுப்பு:2018 இறப்புகள் பகுப்பு:இராசராசன் விருது பெற்றவர்கள் பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்ட நபர்கள் பகுப்பு:தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள் பகுப்பு:இந்திய இறைமறுப்பாளர்கள் பகுப்பு:கருணாநிதி குடும்பம் பகுப்பு:15 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பகுப்பு:14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பகுப்பு:13 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பகுப்பு:12 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள் பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு:திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள் பகுப்பு:திருக்குறள் உரையாசிரியர்கள் பகுப்பு:திருவாரூர் மாவட்ட நபர்கள்
தமிழ்நாடு அரசியல்வாதி கலைஞர் கருணாநிதி எப்போது பிறந்தார்?
1924 சூன் 3
731
tamil
877bb6df2
முன்கழுத்துக் கழலை அல்லது கண்டக்கழலை (Goitre) என்பது தைராய்டு சுரப்பி பெரிதாவதால் கழுத்தில் தொண்டைப் பகுதிக்குக் கீழே ஏற்படும் வீக்கமாகும்.[1].[2] இது பெரும்பாலும் அயோடின் குறைபாட்டின் விளைவாகவே ஏற்படுகிறது. சில வேளைகளில் உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாகவும் சிலரிடையே தோன்றுவதாகவும் அறியப்பட்டுள்ளது. தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாததால் முன்கழுத்துக் கழலை உருவாகிறது. உலக அளவில் 90% முன்கழுத்துக் கழலை நோய்கள் அயோடின் குறைபாட்டால் ஏற்படுகிறது.[3] அவை பெரும்பாலும் தீங்கற்ற கட்டிகளாகவே உள்ளன. முன்கழுத்துக் கழலை நோயின் அறிகுறிகள் தைராய்டு சுரப்புக் குறை மற்றும் அதிதைராய்டியம் ஆகியவற்றின் காரணமாக முன்கழுத்துக் கழலை நோயின் அறிகுறிகள் தோன்றுகின்றன. அதிதைராய்டியம் காரணமாக அட்ரீனல்வினையிய செயல்பாடுகளான: இதயத் துடிப்பு மிகைப்பு, மிகுதியான நெஞ்சுத்துடிப்பு (palpitations), பதற்றம் (nervousness), உடல் நடுக்கம் (tremor), உயர்த்தப்பட்ட குருதி அழுத்தம் மற்றும் சுற்று சூழலால் ஏற்படும் வெப்பத்தை தாங்க முடியாமல் போவது (heat intolerance) ஆகியவை உண்டாகும். அதியவளர்சிதைமாற்றம் (hypermetabolism), அதிகப்படியான தைராய்டு இயக்குநீர் சுரப்பு, அதிக ஆக்சிசன் நுகர்வு, புரத வளர்சிதையில் ஏற்படும் மாற்றங்கள், இயல்புக்கு மீறிக் கண்விழி பிதுங்கியிருத்தல் (exophthalmos) ஆகிய அறிகுறிகள் மூலமாகவும் முன்கழுத்துக் கழலை நோயின் அறிகுறிகள் தென்படுகின்றன.[4] தைராய்டு சுரப்புக் குறைவால் பசியில்லாவிட்டாலும் உடல் எடை அதிகரிக்கிறது, மலச்சிக்கல், சோம்பல் மற்றும் குளிர் தாங்க இயலாமை (cold intolerance) ஆகிய அறிகுறிகளும் காணப்படுகிறது. சுரப்பி வீக்கமடைதல் குறைந்த அயோடின் மட்டத்தில் றைஅயடோதைரோனின்(Triodothyronin) மற்றும் ரெட்ராஅயடோதைரோனின்(Tetreiodothyronin) குறைவடைகின்றன. இதனால் அசினர் கலங்கள்(Acini Cell) தைராயிட்டு சுரப்பியிலிருந்து வீக்கமடையத் தொடங்குகின்றன. முன் கழுத்துக் கழலை ஏற்படக் காரணங்கள் உலக அளவில், முன் கழுத்துக் கழலை ஏற்பட அயோடின் குறைபாடே காரணமாகும். அயோடின் கலந்த உப்பு பயன்படுத்தாத நாடுகளில் இந் நோய் அதிகமாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. செலீனியம் குறைவாலும் இந் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. அயோடின் கலந்த உப்பை பயன்படுத்தும் நாடுகளில் காசிமோடோவின் தைராய்டழற்சி (Hashimoto's thyroiditis) என்ற நோய் உண்டாகிறது.[5] சயனைடு விசத்தாலும் முன் கழுத்துக் கழலை ஏற்படுகிறது. வெப்ப மண்டல நாடுகளில் சயனைடு அதிகமுள்ள மரவள்ளி கிழங்கை அதிகம் உண்ணும் நாடுகளில், இந் நோய் அதிகம் காணப்படுகிறது.[6] குறை தைராய்டு, அயோடின் குறைபாடு, தைராய்டு வீக்க நோய்க் காரணி (Goitrogen), கபச்சுரப்பி நோய் (Pituitary disease), கிரேவின் நோய் (Graves' disease), தைராய்டு புற்று நோய் ஆகியவையும் முன் கழுத்துக் கழலையுடன் தொடர்புடைய சில நோய்கள் ஆகும். அயோடின் பற்றாக்குறை காரணமாகவே பொதுவாகக் கண்டக் கழலை ஏற்படுகின்றது.ஆயினும் அயோடின் குறைபாடு இல்லாத வேளையிலும் உணவில் கழலையைத் தோற்றுவிக்கும் கூறுகள் (Goitrogenic substances) உள்ளெடுக்கப்படும் போது சிலருக்கு கண்டக் கழலை ஏற்படுகின்றது. கழலையைத் தோற்றுவிக்கும் கூறுகள் சில தாவர உணவு வர்க்கங்களில் காணப்படும் எதிர்ப் போசனைக் கூறுகள்(Anti nutritional Factors) கழலையைத் தோற்றுவிக்கின்றன. எ.கா: தயோசயனைட்டு(Thiocyanate): மரவள்ளி, கோவா, பூக்கோவா, முள்ளங்கி என்பவற்றில் தயோசயனைட்டு அதிக அளவில் காணப்படுகின்றது. பேர்க்குளோரேட்டு(Perchlorate): கரட், கடுகு என்பவற்றில் பேர்க்குளோரேட்டு அதிக அளவில் காணப்படுகின்றது. தயோயூரியா(Thiourea): தயோயுரசில்(Thiouracil): கோயிற்றின்(Goitrin) புற அமைப்பியல் முன் கழுத்துக் கழலைகள் வளர்ச்சி வீதம் அல்லது வளர்ச்சியின் அளவைப் பொறுத்து, அவை வகைப்படுத்தப்படுகின்றன. வளர்ச்சி வீதம் ஒரு கணுவுள்ள முன் கழுத்துக் கழலை: பல கணுக்களுள்ள முன் கழுத்துக் கழலை;[7][8] பரவலான முன் கழுத்துக் கழலை: மிகைப்பெருக்கம் காரணமாக உருவாகிறது. அளவு வகை I (அழுத்தச்சோதனை முன் கழுத்துக் கழலை (palpation goitre)): பொதுவாகத் தெரிவதில்லை, ஆனால் அழுத்தச்சோதனை மூலமே கண்டறிய முடியும். வகை II: தொட்டு உணரக்கூடிய முன் கழுத்துக் கழலையாக இருக்கும், எளிதில் கண்டறியலாம். வகை III: மிகப் பெரிய முன் கழுத்துக் கழலை, அழுத்திய இடம் அமுக்கப்பட்டிருக்கும். வகை I முன் கழுத்துக் கழலை வகை III முன் கழுத்துக் கழலை வகை III முன் கழுத்துக் கழலை முன் கழுத்துக் கழலை நோயின் அறிகுறிகள் கழுத்தின் கீழ் பகுதியில் கண்ணுக்குத் தெரியுமாறு வீக்கம் இருக்கும். தொண்டைப் பகுதியில் இறுக்கமாக உணருதல் இருமல் குரலில் மாற்றம் உணவை விழுங்குவதில் சிரமம் மூச்சு விடுவதில் சிரமம்[9] சிகிச்சை முன் கழுத்துக் கழலை ஏற்படும் காரணத்தைப் பொறுத்து சிகிச்சை முறை மாறுபடுகிறது. தைராய்டு இயக்குநீர் (thyroid hormone) அதிகமாக சுரக்கும் பட்சத்தில் அவற்றை சுருக்க கதிரியக்க அயோடின் (radioactive iodine) பயன்படுத்தப்படுகிறது. முன் கழுத்துக் கழலை அயோடின் குறைபாட்டால் ஏற்பட்டால் லுகோலின் அயோடின் (Lugol's Iodine) அல்லது பொட்டாசியம் அயோடைடு கரைசல் ஆகியவை குறைந்த அளவில் மருந்தாக வழங்கப்படும். தைராய்டு சுரப்பியின் செயல்பாடு குறைவால் முன் கழுத்துக் கழலை ஏற்பட்டால், அவற்றை தூண்டும் உணவுகள் வழங்கப்படும். மிகவும் முடியாத நோயாளிகளின் தைராய்டு சுரப்பி முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நீக்கப்படும்.[10] மேற்கோள்கள் வெளி இணைப்புகள் (ஆங்கிலம்) பகுப்பு:நாளமில்லாச்சுரப்பியியல் பகுப்பு:ஊட்டக்குறைபாடு
முன்கழுத்துக் கழலை எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது?
அயோடின்
165
tamil
74cc89475
லால் பகதூர் சாஸ்திரி (அக்டோபர் 2, 1904 - சனவரி 11, 1966) இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆவார். இவர் ஒரு முக்கியமான விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பதவிக்கு வந்தார். இவர் முறையாகத் தெரிவு செய்யப்படும் வரை குல்சாரிலால் நந்தா 14 நாட்கள் இடைக்காலப் பிரதமராக இருந்தார். இவர் பதவியேற்று 2 ஆண்டுகளுக்கு உள்ளாகவே, சோவியத் ஒன்றியத்திலுள்ள தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது காலமானார். வரலாறு லால் பகதூர் 1904ம் ஆண்டு தற்போதய உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள முகல்சராய் என்ற ஊரில் பிறந்தார். பிறந்த போது அவருக்கு வைத்த பெயர் லால் பகதூர் சிறிவஸ்தவா. இவரின் தந்தை சரதா பிரசாத் பள்ளி ஆசிரியர். பின்பு அலகாபாத்திலுள்ள வருவாய்த் துறையில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார் [1]. மூன்று மாத குழந்தையாக இருந்த போது கங்கை கரையில் தாயாரின் கையில் இருந்து நழுவி ஓர் இடையரின் கூடையில் விழுந்து விட்டார். இடையருக்குக் குழந்தை கிடையாது, எனவே இது தனக்குக் கடவுளின் பரிசு எனக் கருதி லால்பகதூரைத் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டார். குழந்தையைக் காணாத லால்பகதூரின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர். காவலர்கள் லால்பகதூரைக் கண்டு பிடித்து அவர் தம் பெற்றோரிடம் சேர்ப்பித்தனர் [2].. லால்பகதூர் ஒன்றரை வயது குழந்தையாக இருந்த பொழுது இவரின் தந்தை இறந்து விட்டார். எனவே தாயார் ராம்துல்லாரி தேவி இவரையும் இவரின் இரண்டு சகோதரிகளையும் அழைத்துக்கொண்டு தன் தந்தை வீட்டிற்குச் சென்று தங்கிவிட்டார் [3]. 10 வயது வரை தன் பாட்டனார் கசாரி லால் வீட்டிலேயே லால் பகதூர் வளர்ந்தார். அங்கு உயர் நிலைப்பள்ளி இல்லாததால் மேற்கொண்டு படிக்க வாரணாசிக்கு அனுப்பப்பட்டார். அங்கு தாய்வழி மாமா வீட்டில் தங்கி இருந்து அரிஸ்சந்தரா உயர் நிலைப்பள்ளியில் சேர்ந்து படிக்கலானார். வாரணாசியில் உள்ள போது ஒரு முறை நண்பர்களுடன் கங்கை ஆற்றின் மறு கரையில் நடந்த சந்தையைப் பார்க்க போனார். திரும்பும் போது படகுக்குக் கொடுக்க போதிய பணம் இல்லை, நண்பர்களிடம் கடன் பெறுவதற்குப் பதிலாக ஆற்றை நீந்திக் கடந்தார் [4]. நதிக்கரையை கடந்து படிக்கப்போக பணமில்லாமல் நீந்திப்போய் படித்த அவருக்கு அங்கே மிஷ்ராஜி என்கிற அற்புதமான ஆசிரியர் கிடைத்தார்.[5] மாணவனாக இருக்கும்போது இவருக்கு புத்தகங்கள் படிப்பதென்றால் மிகவும் பிடிக்கும். குரு நானக்கின் வரிகள் மீது பிரியமாக இருந்தார். இந்திய சுதந்திர போராட்ட வீ ரர் பால கங்காதர திலகர் அவர்களை போற்றினார், 1915 ம் ஆண்டு வாரணாசியில் மகாத்மா காந்தி அடிகளின் உரையை கேட்ட பிறகு தன் வாழ்க்கையை நாட்டிற்கு அர்பணித்தார் [6]. சாதி முறையை எதிர்த்த இவர் தன் பெயரில் இருந்த சிறிவஸ்தவா என்ற சாதியை குறிக்கும் குடும்ப பெயரை நீக்கினார் [1]. 1921 ல் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி அடிகள் தொடங்கிய போது அதில் கலந்து கொண்டு சிறை சென்றார். காவலில் வைக்க உரிய வயது இவருக்கு இல்லாததால் அரசு இவரைக் கைது செய்து காவலில் வைக்காமல் வெளியில் அனுப்பியது [7]. பின் வாரணாசியிலுள்ள தேசியவாதி சிவ் பிரசாத் குப்தா அவர்களால் தொடங்கப்பட்ட காசி வித்தியாபீடத்தில் இணைந்து 4 ஆண்டுகள் படித்தார். அங்கு முனைவர் பகவன்தாஸ் அவர்களின் மெய்யியல் தொடர்பான விரிவுரையில் பெரிதும் கவரப்பட்டார். 1926 இல் காசி வித்தியாபீடத்தில் படிப்பை முடித்ததும் சாஸ்திரி என்னும் பட்டம் கொடுக்கப்பட்டது. இது பின் இவர் பெயருடன் இணைந்து விட்டது[3]. மக்கள் சமுதாயத்தின் பணியாள் என்ற அமைப்பில் வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்து முசாப்பர்பூர் என்னும் இடத்தில் அரிசனங்களின் மேம்பாட்டுக்காக உழைத்தார்[8]. பின் அவ்வமைப்பின் தலைவரானார். 1921ல் லலிதா தேவியை மணந்தார். பெரும் வரதட்சணை வாங்கும் பழக்கம் வெகுவாக இருந்த போதிலும் இவர் காதியையும் இராட்டையும் மட்டும் வரதட்சணையாக வாங்கி கொண்டார். 1930 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார் [9]. அச்சமயம் இவரின் பெண்ணின் உடல் நலம் மிக மோசமானதால், எந்த போராட்டத்திலும் ஈடுபட கூடாது என்ற நிபந்தனையின் பேரில் 15 நாட்களுக்கு விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் வீட்டிற்கு வருவதற்குள் அவர் பெண் மரணமெய்திவிட்டார். ஈமச்சடங்குகளை முடித்து விட்டு 15 நாட்கள் முடிவதற்கு நாள் உள்ள போதும் தாமாகவே சிறைச்சாலைக்குத் திரும்பிவிட்டார் [10]. அடுத்த ஆண்டு இவர் மகனுக்கு சுரம் என்றதால் ஒரு வாரம் வெளியில் செல்ல அனுமதி வாங்கினார். ஆனால் மகனுக்கு ஒரு வாரத்தில் சுரம் சரி ஆகாததால் குடும்ப உறுப்பினர்கள் வேண்டுகோளையும் மீறி சிறைச்சாலைக்குத் திரும்பினார்[10]. 1937 ல் உத்திரப் பிரதேச நாடாளுமன்ற குழுவின் ஒருங்கிணைப்புச் செயலாளராகப் பணிக்கமர்ந்தார் [11]. 1940 ல் சுதந்திர இயக்கத்திற்கு ஆதரவாகத் தனி நபர் சத்தியாகிரகம் இருந்ததால் ஓர் ஆண்டு சிறைத் தண்டனை பெற்றார் [12]. 1942 ம் ஆண்டு காந்தி அடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்தார். சிறையிலிருந்து விடுதலையாகி வந்திருந்த லால் பகதூர் சாஸ்திரி அலகாபாத்துக்கு பயணம் செய்து ஜவகர்லால் நேருவின் ஆனந்த பவன் இல்லத்திலிருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடர்பாக குறிப்புகளையும் ஆணைகளையும் ஒரு வார காலத்திற்குச் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வழங்கினார். அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட லால்பகதூர் சாஸ்திரி 1946 ம் ஆண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டார்[12]. இவர் மொத்தமாக ஏறக்குறைய 9 ஆண்டுகள் சிறையில் கழித்தார்[13]. சிறையில் இருந்த காலத்தில் பல புத்தகங்களைப் படித்தார். மேற்கத்திய தத்துவஞானிகள், புரட்சியாளர்கள், சமூகச் சீர்திருத்தவாதிகள் ஆகியோரைப்பற்றி நன்கு அறிந்து கொண்டார். மேரி கியூரியின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் மொழி பெயர்த்தார்[9]. அமைச்சராக அரசில் இந்திய விடுதலைக்கு பிறகு சாஸ்திரி உத்தர பிரதேசத்தின் நாடாளுமன்ற செயலராக நியமிக்கப்பட்டார். உத்தர பிரதேச முதலமைச்சர் கோவிந்த் வல்லப் பந்த் அவர்களின் அமைச்சரவையில் காவல் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். போக்குவரத்துத் துறை அமைச்சராக இவரே முதலில் பெண்களை நடத்துனராக நியமித்தார். காவல் துறை அமைச்சராக, கட்டுப்பாடற்ற கூட்டத்தைக் கலைப்பதற்குக் கம்பால் அடிப்பதற்குப் பதிலாக நீரை பீய்ச்சி அடிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டார் [14]. 1951 ல் காங்கிரஸ் செயற்குழுவுக்குப் பொது செயலாளராக நியமிக்கப்பட்டார். தலைவராக ஜவகர்லால் நேரு இருந்தார். வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தல், தேர்தல் நடவடிக்கைகள், தேர்தல் விளம்பரங்களின் போக்கு போன்றவற்றிற்கு இவர் பொறுப்பாளராக இருந்தார். காங்கிரஸ் கட்சி 1952, 1957, 1962 ம் ஆண்டுகளில் நடைபெற்ற பொது தேர்தல்களில் பெற்ற பெரு வெற்றிகளுக்கு இவரது பங்களிப்பும் காரணமாகும். 1951 ல் நேருவால் இந்திய மேலவைக்கு நியமிக்கப்பட்டார். 1951-1956 வரை ரயில்வே மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணிபுரிந்தார். 1956 ல் மெகபூப்நகர் ரயில் விபத்தில் 112 பேர் இறந்ததற்குத் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக முன்வந்தார். எனினும் நேரு இவரின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளவில்லை [15]. 3 மாதங்கள் கழித்து அரியலூரில் நடைபெற்ற இரயில் விபத்தில் 144 பேர் இறந்தனர். அதைத் தொடர்ந்து சாஸ்திரி பதவி விலகல் கடிதத்தை நேருவிடம் ஒப்படைத்தார். பதவி விலகலை ஏற்றுக்கொண்ட நேரு இச்சம்பவம் பற்றி நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது விபத்துக்கு சாஸ்திரி காரணமில்லை என்ற போதிலும் அரசியல் சாசன முறைமைக்கு இது முன்மாதிரியாக விளங்கும் என்று கூறினார் [3]. அப்போது அத்துறை இணை அமைச்சராக இருந்தவர் ஓ.வி.அளகேசன். அடுத்து வந்த பொதுத்தேர்தலில் இவ்விபத்து பற்றிய பிரச்சாரம் செய்தே ஓ.வி.அளகேசன் தோற்கடிக்கப்பட்டார்.[16] 1957 ஆண்டு நடந்த பொது தேர்தலைத் தொடர்ந்து சாஸ்திரி நடுவண் அமைச்சரவையில் இணைந்தார். முதலில் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தார். பின்பு வணிக மற்றும் தொழில் துறை அமைச்சராகப் பணிபுரிந்தார். 1961 ல் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்[3]. இவர் உள்துறை அமைச்சராக இருந்தபொழுது சந்தானம் தலைமையில் ஊழல் தடுப்பு குழு அமைவதற்குக் காரணமாகவிருந்தார் [17]. இலக்கிய ஆர்வம் லால் பகதூர் சாஸ்திரி மேரி கியூரியின் வரலாற்றை இந்தியில் மொழிபெயர்த்துள்ளார். இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பற்றி இவர் எழுதிய நூலை முடிக்கும் முன்பே இறந்துவிட்டார்.[18] பிரதமராக ஜவகர்லால் நேரு 1964 மே 27 ல் மறைந்ததை தொடர்ந்து அரசில் வெற்றிடம் ஏற்பட்டது. அப்போதய காங்கிரஸ் தலைவர் காமராஜர் சாஸ்திரி பிரதமராக வருவதற்கு காரணமாக இருந்தார். நேருவின் கொள்கையுடையரும் சமதர்மவாதியான இவரது தன்மையான பாங்கும் பேச்சும், பழமையை விரும்பும் வலதுசாரியான மொரார்ஜி தேசாய் பிரதமராவதை விரும்பாதோரிடம் செல்வாக்கு செலுத்தியது. மாற்று கருத்துகளையும் மதித்து சமரசம் காணும் இவரது இயல்பான குணத்தினால் இவரது பணி சிறப்பாக நடந்தது. குறுகிய காலம் ஆட்சியிலிருந்த இவரால் நாட்டின் பொருளாதார நெருக்கடியையும், உணவு பற்றாக்குறையையும் சமாளிக்க முடியவில்லை. எனினும் இந்திய மக்களிடம் இவரின் மதிப்பு குறையவில்லை, இவர் இந்தியாவில் பசுமை புரட்சி கொண்டுவர முயன்றார். பசுமை புரட்சி மூலம் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதுடன் தேவைக்கதிகமாகவும் உணவு உற்பத்தி செய்தது, அதை பார்க்க இவர் உயிரோடு இல்லை. பாகிஸ்தானுடனான 22 நாள் போரின் போது ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்ற முழக்கத்தை உருவாக்கினார். பசுமை புரட்சியை இவர் வழியுறுத்திய போதும் வெள்ளை புரட்சியையும் ஊக்கப்படுத்தினார். 1964 அக்டோபர் கைரா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் போது பால் வளம் பற்றி இவருக்கு சிறப்பான கருத்து உருவாயிற்று. ஆனந்தில் வெற்றிகரமாக செயல்பட்ட பால் துறையை போல் நாடு முழுதும் பால்வளத்துறை செயல்பட வேண்டும் என விரும்பினார்[17]. இதன் காரணமாக 1965ல் தேசிய பால்பண்ணை வளர்ச்சி துறை அமைக்கப்பட்டது. பாகிஸ்தான் போர் இவரது அரசுக்கு பாகிஸ்தான் மூலம் பெரும் சிக்கல் வந்தது. கட்ச் தீபகற்பத்தில் பாதியை பாகிஸ்தான் உரிமை கோரியது. 1965 ஆகஸ்ட் பாகிஸ்தான் அப்பகுதிக்கு ஊடுருவல் படைகளை அனுப்பியது. அது அப்பகுதியிலிருந்த இந்திய பீரங்கி படை அணிகளுடன் பூசலை ஏற்படுத்தியது. கட்ச் பகுதியில் நடைபெற்ற மோதல்கள் குறித்து மக்களவையில் சாஸ்திரி இவ்வாறு கூறினார் [19]. நமது வரம்புக்குட்பட்ட வளங்களை பயன்படுத்துவதில் நாம் என்றைக்கும் பொருளாதார வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை தருகிறோம். எனவே இதை உற்று நோக்கும் எவருக்கும் இந்தியாவுக்கு எல்லைப்பகுதி சச்சரவுகளில் விருப்பம் இல்லை என்பதுவும் நல்லுறவற்ற சூழலை இந்தியா விரும்பவில்லை என்பதும் விளங்கும்...... இச்சூழலில் அரசின் கடமை தெளிவானது. அதை அரசு முழுமையாக திறம்பட செயல்படுத்தும்....... நாங்கள் ஏழ்மையில் தேவைப்படும் காலத்தில் வாழ தயங்கமாட்டோம் ஆனால் எக்காரணம் கொண்டும் எங்கள் விடுதலையை அழிக்க விடமாட்டோம்... ஐக்கிய ராச்சியத்தின் பிரதமர் முன்மொழிந்த திட்டப்படி பாகிஸ்தானுக்கு கோரிய 50% க்கு பதிலாக 10% கட்ச் பகுதி வழங்கப்பட்டது. எனினும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு எண்ணம் காஷ்மீர் பகுதியிலும் குவிந்திருந்தது. பாகிஸ்தானிலிருந்து ஆயுதம் தாங்கியோர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவினர். அதைத்தொடர்ந்து சாஸ்திரி படை பலமானது படை பலம் கொண்டு சந்திக்கப்படும் என பாகிஸ்தானை எச்சரித்தார்.[20]. 1965 செப்டம்பர் மாதம் பெரிய அளவில் பாகிஸ்தான் போர் வீரர்களும் ஆயுததாரிகளும் இந்தியப்பகுதியில் ஊடுருவினர். அரசு கவிழும் என்பதுடன் அவர்களுக்கு ஆதரவாக கிளர்ச்சி நடைபெறும் என்றும் எதிர்பார்த்தனர். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. இந்தியா தனது படைகளை எல்லைக்கட்டுப்பாட்டு பகுதிக்கு அனுப்பியது, மேலும் லாகூர் அருகே எல்லையை தாண்டி பாகிஸ்தானை மிரட்டியது. போர் மூண்டதும் பஞ்சாப் பகுதியில் பெருமளவில் பீரங்கி சண்டை நடைபெற்றது. இரு நாட்டு படைகளும் பல வெற்றிகளைப் பெற்றன. இந்திய படைகள் லாகூரை தங்கள் குண்டு வீச்சு எல்லைக்குள் கொணர்ந்தனர். இந்திய பாகிஸ்தான் போர் நடந்து கொண்டுள்ள போது செப்டம்பர் 17, 1965 அன்று சீனாவிடமிருந்து இந்தியாவிற்கு கடிதம் கிடைத்தது. அதில் இந்திய இராணுவம் சீன பகுதியில் கருவிகளை நிறுவியுள்ளதாகவும், அதை விலக்கிக்கொள்ளாவிட்டால் சீனாவின் சீற்றத்திற்கு இந்தியா ஆளாகும் என்றும் கூறியது. சீனாவின் இப்பயமுறுத்தல் கண்டும் சாஸ்திரி சீனாவின் இக்குற்றச்சாட்டு தவறானது என கூறியதுடன் சீனா இந்தியாவை தாக்குமானால் இந்திய விடுதலையை காக்க உறுதியுடன் நாம் சண்டையிடுவோம் என்றார் [21]. சீனா எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்திய பாகிஸ்தான் போர் இரு நாடுகளுக்கும் பலத்த ஆள் மற்றும் பொருளாதார சேதங்களை உண்டாக்கியது. இந்திய பாகிஸ்தான் போர் செப்டம்பர் 23 1965 அன்று ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த ஆணை மூலம் முடிவுக்கு வந்தது. மரணம் போர் நிறுத்த சாற்றுதலுக்குப் பின் அதனை அமல்படுத்துவதில் இருந்த, இடைவிடாத பிரச்னைக்குத் தீர்வு காண சாஸ்திரியும் பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப் கானும் சோவியத் ஒன்றிய தலைவர் அலெக்சி கோசிசின் அவர்களால் தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்கள். 1966 ஜனவரி 2 ஆம் நாள் இந்திய அமைச்சரவையின் முழு சம்மதத்தோடு லால் பகதூர் சாஸ்திரி தாஷ்கண்ட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே ஏழு நாட்கள் இரு நாட்டுத் தலைவர்களும் அவர்தம் குழுவினரும் பேசிப் பார்த்தும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அன்று இரவு கோசிசின் தலையிட்டு இரு தலைவர்களுடனும் தனித் தனியே பேசிப் பார்த்து உடன்படிக்கைக்கு வழிகண்டார். மறுநாள் ஜனவரி 10, 1966 ல் சாஸ்திரியும் கானும் தாஷ்கண்ட் சாற்றுதலில் கையொப்பமிட்டார்கள்.மிக எளிதான ஷரத்துக்களே நிறைந்துள்ள (ஒன்பது அம்சங்கள்) இந்த சாற்றுதல் கையெழுத்தாக ஏன் அத்தனை நாட்கள் பிடித்தன என்று சிந்தித்தாலே, இரு நாட்டிற்கும் இடையே இருந்த மனதளவிலான பெரிய இடைவெளி புரியும். அன்று இரவு, ரஷ்யப் பிரதமர் தந்த விருந்தில் கலந்து கொண்டுவிட்டு தன் அறைக்குத் திரும்பிய சாஸ்திரிக்கு இரவு ஒரு மணிக்கு மேல் இருமல், மார்வலி, மூச்சுத் திணறல் என்று ஆரம்பித்து உயிர் பிரிந்து விட்டது. மாரடைப்பு வந்து காலை 1.32 மணிக்கு இறந்தார் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இரண்டு முறை இவருக்கு மாரடைப்பு வந்துள்ளது. பதவியில் உள்ளபோது வெளிநாட்டில் இறந்த ஒரே இந்திய பிரதமராவார். இவர் இறப்பில் சதி வேலை இருக்கலாம் என்றும் பலர் கருதுகின்றனர்.[22] ரஷ்யாவில் இறந்திருந்த இந்தியப் பிரதமர் குறித்து, “சாஸ்திரி இல்லாமல் உலகமே கொஞ்சம் சிறுத்து விட்டது” என்று அமெரிக்க அதிபர் ஜான்ஸன் தெரிவித்தார். சாஸ்திரியின் உடலை சவப்பெட்டியில் ஏற்றி இந்தியா கொண்டுவர நடந்த ஏற்பாடுகளின் போது, கோஸிஜினும் அயூப்கானும் அந்தப் பெட்டியை விமானத்தில் ஏற்ற சுமந்து வந்தார்கள். எத்தனையோ பதவிகள் வகித்த சாஸ்திரிக்கு சொந்தமாக வீடு ஒன்று கிடையாது. கடைசி காலத்தில் தவணை முறையில் கார் ஒன்று வாங்கி அந்தக் கடனை வாரிசுகளுக்கு விட்டுச் சென்றார். கல்லறை காந்தியடிகளை அடக்கம் செய்த இடத்தின் அருகிலேயே லால் பகதூர் சாஸ்திரியின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. கல்லறையில் "வாழ்க போர்வீரன்! வாழ்க விவசாயி" என்ற பொருள்படும் "ஜெய் ஜவான் ஜய் கிஷாண்" என்ற வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளது. [18] மேற்கோள்கள் இவற்றையும் பார்க்கவும் இந்தியப் பிரதமர்கள் பிரபல இந்தியர்களின் பட்டியல் வெளி இணைப்புகள் விகடன் பகுப்பு:இந்தியப் பிரதமர்கள் பகுப்பு:பாரத ரத்னா விருது பெற்றவர்கள் பகுப்பு:1904 பிறப்புகள் பகுப்பு:1966 இறப்புகள் பகுப்பு:இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள் பகுப்பு:இந்திய இரயில்வே அமைச்சர்கள் பகுப்பு:1ஆவது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு:2ஆவது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு:3வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு:உத்தரப் பிரதேச நபர்கள்
லால் பகதூர் சாஸ்திரியின் தாயார் பெயர் என்ன?
ராம்துல்லாரி தேவி
1,302
tamil
5d7f78ede
சபரிமலை (Sabarimala), மலையாளம்: (ശബരിമല) என்பது கேரளாவிலுள்ள மேற்கு ‎மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மஹிஷி என்ற ‎பெயர்கொண்ட அசுரபலம் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு ‎சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என ‎வழங்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சபரிமலை அய்யப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் ஒரு ‎மலையின் உச்சியில் உள்ளது. மேலும் சராசரியான ‎கடல் மட்டத்துடன் ஒப்பிடும் போது, 914 மீட்டர் உயரத்தில் ‎காணப்படுகிறது. மேலும் மலைகள் மற்றும் காடுகளால் ‎சூழ்ந்துள்ளது. சபரிமலையை சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலையிலும் ‎கோவில்கள் காணப்படுகின்றன. நிலக்கல், காளகெட்டி, மற்றும் ‎கரிமலை போன்ற இடங்களில் இன்றும் நாம் நடைமுறைச்சார்ந்த ‎மற்றும் குறைபடாத கோவில்களை காணலாம். இதர மலைகளில் ‎பழங்காலத்து கோவில்களின் எஞ்சிய பாகங்களைக் காணலாம். [1] சங்ககால வரலாறு இது சங்ககாலச் சேரர்களின் வழிபாட்டுத் தலம். வழிபாட்டு மரபு ஆண்டுதோறும் சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் ‎சபரிமலைக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.[2] உலக ‎அளவில் ஒவ்வொரு ஆண்டும் மிகையான அளவில் ‎புனிதப்பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் ‎சபரிமலையே ஆகும். சபரிமலைக்குப் புனிதப்பயணம் ‎மேற்கொள்ளும் ஒவ்வொரு பக்தனும், சாதி, மத, இன, தகுதி ‎அல்லது சமூக அந்தஸ்து போன்ற வேறுபாடுகளை ‎பொருட்படுத்தாமல், ஒரே மனதுடன், ஒரே வேட்கையுடனும், ஒரே ‎மந்திரத்தை உட்கொண்டும், அதாவது இறைவனான சுவாமி ‎ஐயப்பனின் திருவடிகளை அடைய வேண்டும் என்ற ‎குறிக்கோளுடன் புனிதப்பயணம் மேற்கொள்ளும் பக்தர்களின் ‎மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இருந்தாலும் 10 முதல் 50 ‎வயதுக்குட்பட்ட பெண்கள் சமூக ரீதியாக இப்பயணத்தை ‎மேற்கொள்வதில்லை. மேலும் கோவிலுக்குள் செல்வதற்கு ‎அனுமதி வழங்கப்படுவதில்லை. சுவாமி ஐயப்பனை சார்ந்த ‎வரலாற்றுக் கதைகளில் வீட்டு விலக்குக்குரிய பெண்கள் இங்கு ‎வருவதை தடை செய்துள்ளபடியாலும் மேலும் இதர பல ‎காரணங்களாலும், பொதுவாக பெண்கள் இந்தக் கோவிலுக்கு ‎வருகை புரிவதில்லை. இதற்கான முக்கிய காரணம் சுவாமி ‎ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற ஐதீகமே. மண்டல பூசை என ‎அறிவிக்கப்பட்ட நாட்களிலும் (தோராயமாக நவம்பர் 15 முதல் ‎திசம்பர் 26 வரையிலும்), மகர விளக்கு அன்றும் (சனவரி 14- "மகர ‎சங்கராந்தி") மற்றும் விஷு (ஏப்ரல் 14), மற்றும் ஒவ்வொரு ‎மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மட்டும் கோவில் ‎பிரார்த்தனை செய்வதற்காக திறந்து வைக்கப்படுகிறது. ‎ புனிதப் பயணம் புனிதப்பயணம் மேற்கொள்வதற்கு முதலில் பக்தர்கள் 48 நாட்கள் ‎கொண்ட விருதத்தை (கடினமான தவம்) பக்தர்கள் ஏற்றுக் ‎கொள்ளவேண்டும். இதற்காக பக்தர்கள் துவக்க நாளன்று உருத்திராட்சத்தினாலோ அல்லது துளசி மணிகளாலோ செய்யப்பட்ட ‎சிறப்பு மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளவேண்டும். ‎அப்பொழுது முதலே விரதத்தை மேற்கொள்ளும் அடியார்கள் ‎பொதுவாக மாமிச உணவு, மீன், மதுபானங்கள், புகையிலை, ‎பெண்களுடன் தொடர்பு, அநாகரிகமான பேச்சுக்கள் மற்றும் ‎வார்த்தைகளை தவிர்த்தல், மேலும் தலை முடி மற்றும் ‎முகத்தில் வளரும் மீசை போன்றவைகளை திருத்தாமல் இருக்க ‎வேண்டும், மேலும் இது போன்ற விதிமுறைகளை ஆசாரத்துடன் ‎கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அவர்கள் உள்ளூர் ‎கோவில்களுக்கு சென்று அங்கு பிரார்த்தனை செய்ய வேண்டும். ‎மேலும் எளிய கருப்பு, நீல அல்லது குங்குமப்பூ நிறத்திலுள்ள ‎பாரம்பரிய துணிகளை மட்டுமே அணிய வேண்டும். தற்பொழுது ‎விரதங்களுக்கான விதிமுறைகளை கெடுபிடியுடன் முந்தைய ‎நாட்களில் இருந்தது போன்று பின்பற்றாவிட்டாலும், ‎மக்கள் பொதுவாக ஒரு விதிமுறைக்கு உட்பட்டு, அனுட்டித்து வருகின்றனர். பயணம் மேற்கொள்பவர்களுக்கு உள்ள கட்டுப்பாடுகளுக்குக் காரணமாக பின்பவருவன சொல்லப்படுகின்றன: முற்காலத்தில் "பெரிய பாதை" மட்டுமே இருந்தது. காட்டின் வழி செல்லவேண்டும், விலங்குகள் அதிகம், வெள்ளை நிறம் வெகு தூரம் வரை தெரியும் நிறம் என்பதால் காட்டு விலங்குகளிடமிருந்து தப்ப குறைந்த ஒளி சிதறல் கொண்ட கருப்பு, நீலம் ஆகிய நிறங்கள் ஆகிய துணிகள் பயன்படுத்தினர். முந்தைய காலத்தில் காட்டு வழியாக சென்று பம்பா நதியை அடைய வெகு நாட்கள் ஆகும் எனவே, இறைவனுக்கு சமர்பிக்கும் பொருள்கள் ஒரு புறமும், வழி உணவிற்கான பொருள்கள் மற்றொரு புறமுமாக இருமுடி பை ஏற்றுச் சென்றனர். குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டும், பிரம்மச்சரியம் மேற்கொள்ள வேண்டும், சவரம் செய்யக்கூடாது ஆகியன போன்றும், இப்புனித யாத்திரையை மேற்கொள்ளும்போது ஏற்படகூடிய நிகழ்வுகளுக்காக பயணிகளைத் தயார்படுத்தும் முறையாக இவ்வழி முறைகள் உதவும். நூற்றுக்கணக்கான பக்தர்கள் இன்றும், சுவாமி ஐயப்பன் அன்றைய ‎தினங்களில் மேற்கொண்டது போலவே என்ற நம்பிக்கையுடன், ‎எருமேலியில் இருந்து புறப்பட்டு, பரம்பரை பரம்பரையாக வரும் ‎காட்டு மலைப்பாதைகளில், (சுமார் 45 கிலோ மீட்டர்கள் தூரம் ‎கொண்டது) காலணிகள் அணியாமல், நடந்து செல்வதையே ‎விரும்புகின்றனர். இந்தப் பயணத்தின் முதல் பகுதி, ‎எருமேலியில் இருந்து தொடங்கி அழுதா நதி வரை கொண்டு ‎செல்லும். பிறகு அழுதா மலையைத்தாண்டி கரியம் தோடினை ‎அடைய வேண்டும். இப்பொழுது புனிதமான கரிமலையை ‎ஏறிக் கடக்க வேண்டும். அங்கிருந்து செறியனவட்டம், ‎வலியனவட்டம் ஆகிய இடங்களைக் கடந்து முடிவில் பம்பா ‎நதியைச் சேரும். 'திருவாபரண கோஷப் பயணம்' ‎மேற்கொள்வோர் ஆறன்முள கொட்டாரம் என்ற இடத்தில் ‎தங்கிச் செல்ல வேண்டும். ஆனால் புனிதப் பயணத்தை ‎மேற்கொள்ளும் பல பக்தர்கள் வாகனங்களில் பயணம் செய்து ‎மாற்றுவழிகளில் புனிதமான பம்பா நதிக்கரையை அடைகின்றனர். ‎அதற்குப்பிறகு, புனிதப் பயணம் மேற்கொள்ளும் அனைவரும் ‎சுமார் நான்கு கிலோமீட்டார் தூரம் கொண்ட ஏற்றத்துடன் கூடிய ‎‎(நீலிமலை) காட்டுமலைப்பாதையில் ஏறி சபரிமலையை அடைய ‎வேண்டும். ஒரு காலத்தில் கனத்த காட்டுப் பகுதியாக இருந்த ‎இந்த ஒற்றைவழிப்பாதை, தற்பொழுது மேம்படுத்தப்பட்டு, இரு ‎பக்கங்களிலும் கடைகள் மற்றும் மருத்துவ வசதிகளுடன் கூடிய ‎சாலையாக காணப்படுகின்றன. ‎நீண்ட தொலைவில் இருந்து வரும் பக்தர்கள் தரிசன வசதிக்காக, சபரிமலையில் 2011 முதல் இணையத்தில் முன்பதிவு செய்யும் வசதியும் தொடங்கப்பட்டுள்ளது. கேரள காவல் துறை இதற்காக ஏற்பாட்டினை செய்துள்ளது.[3] திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம் திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம் (TDB) சபரிமலை சுவாமி ‎ஐயப்பன் கோவிலை சுமார் ரூபாய் 30 கோடியளவில் ($7 ‎மில்லியன்) காப்பீடு செய்து கொண்டுள்ளது. மேலும் இந்த ‎இடத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு ‎விபத்துகளில் இருந்து இலவசமாகக் காப்பீடு அளிக்கும் திட்டத்தையும் ‎அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. நீலக்கல்லில் இருந்து ‎மலையேற்றப் பாதையில் சன்னிதானம் வரை சென்றடையும் 18 ‎கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாதையில் வரும் பக்தர்களில் ‎விபத்துக்குள்ளாகி அடிபட்டோர் மற்றும் இறந்தவர்களுக்கு சுமார் ‎ஒரு லட்சம் ரூபாய் வரை இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலமாக ‎வழங்க இயலும். ‎சபரிமலைப் பயணம் காரணமாக கேரள அரசாங்கத்திற்கு நல்ல ‎வருமானம் கிடைப்பதோடு, கேரளத்தின் பொருளாதாரத்திற்கு ‎சுமார் 10,000 கோடி ரூபாய் வரை வருமானத்தை பங்களித்து ‎வருகிறது. கோவில் பிரசாதங்கள் சபரிமலை கோவிலில் அரவணை மற்றும் அப்பம் பிரசாதமாக ‎வழங்கப்படுகின்றன. இவை அரிசி, நெய், சர்க்கரை போன்ற ‎பொருட்களால் உருவாக்கப்படுகின்றன. சபரிமலையில் இந்தப் ‎பிரசாதத்தை செய்வதற்கான அரிசி செட்டிக்குளங்கரை தேவி ‎கோவிலில் இருந்து பெறப்படுகிறது. திருவாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் கீழ் உள்ள கோவில்களில் இக்கோவில் இரண்டாவது ‎மிகப்பெரிய கோவிலாகும். இந்தக்கோவில் மாவேலிக்கரா என்ற ‎இடத்தில் உள்ளது.‎ ஹரிவராசனம் இரவில் கோவிலின் நடை சார்த்தப்படுவதற்கு முன்பு ‎ஹரிவராசனம் என்ற பாடல் இசைக்கப்படுகிறது. தற்காலத்தில் ‎சபரிமலையில் இறைவன் உறங்கச்செல்வதற்கு முன் ‎இசைக்கப்படும் தாலாட்டுப் பாட்டு (உறக்கப்பாட்டு), ‎ஹரிவராசனம் என்ற பாடல், ஸ்ரீ கம்பக்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச ‎அய்யர் இயற்றி இசை அமைத்ததாகும். ஸ்ரீனிவாச ‎அய்யர் கோவிலில், சுவாமி அய்யப்பரின் சந்நிதியில் ‎நின்றுகொண்டு, அத்தாழ பூசைக்குப் பிறகு, இந்தப் பாடலை பாடி ‎வந்தார். சுவாமி விமோசானனந்தா அவர்களின் முயற்சியால், ‎கோவிலின் தந்திரி மற்றும் மேல்சாந்தி, இப்பாடலை ஒரு ‎தாலாட்டுப்பாடலாக ஏற்றுக்கொண்டனர். இந்தப் பாடல் 352 ‎எழுத்துக்கள், 108 சொற்கள் மற்றும் 32 வரிகள் கொண்டதாகும் (8 ‎செய்யுள் பத்திகள்). அநேக புகழ் பெற்ற பாடகர்களால் பாடப்பெற்ற இந்தப்பாடலின் ‎பதிப்புகள் இருந்தாலும், கோவில் நடையில் கே. ஜே. யேசுதாஸ் ‎பாடிய பாடலே ஒலிபரப்பப்படுகின்றது. அச்சமயம் பக்தர்கள் மட்டுமல்லாது அரசுப் பணியில் ஈடுபட்டிருப்போரும், வணிகத்தில் ஈடுபட்டுள்ளோரும் எழுந்து நிற்கிறார்கள். பாரம்பரிய இராக தாளத்துடன் இப்பாடல் இசையமைக்கப்பட்டுள்ளது. ஒரு தேசிய கீதம் இசைக்கப்படும்போது தரப்படும் மரியாதை, இப்பாடல் ஒலிபரப்பப்படும்போதும் தரப்படுகிறது. நெய்யபிசேகம் சபரிமலைக் கோவிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் முதன்மை ‎சடங்கானது பக்தர்கள் அவர்களுடைய தலையில் சுமந்து வரும் ‎பள்ளிக்கட்டு அல்லது இருமுடியில் (பருத்தித் துணியால் ‎கைகளால் தைக்கப்பெற்ற இறைவனுக்கு படைப்பதற்காக ‎பொருட்களை வைப்பதற்கு இரு அறைகள் கொண்ட பை) ‎காணப்படும் புனிதமான நெய்யைக் கொண்டு சுவாமி ஐயப்பனின் ‎மூல விக்கிரகத்தின் மீது புரியப்படும் நெய்யபிசேகம் ஆகும். ‎ஜீவாத்மா மற்றும் பரமாத்மாவின் புனித சேர்க்கையைக் குறிக்கும் ‎தத்துவமாக இது கருதப்படுகிறது. முதல் முறையாக பயணம் ‎மேற்கொள்ளும் பக்தர்கள் (கன்னி அய்யப்பன்மார்கள் எனப்படுவோர்) ‎குங்குமப்பூ நிறம் கொண்ட இருமுடியை சுமந்துவர வேண்டும். ‎இதர புனிதப்பயணம் மேற்கொள்வோர் கருப்பு அல்லது நீல ‎வண்ணத்திலான இருமுடிகளை பயன்படுத்துவார்கள். அகம் பிரம்மாஸ்மி மற்றும் தத்வமசி ‎இந்தக் கோவிலுக்கு புனிதப்பயணம் புரிந்து வரும் பக்தர்களுக்கு ‎கிடைக்கும் இணையற்ற அறிவு, சமக்கிருத மொழியில், தத் த்வம் ‎அசி, அதன் பொருளானது "நீயும் ஒரு கடவுள்" என்பதற்கான ‎ஞானமே. இதனால் புனிதப்பயணம் மேற்கொள்ளும் ‎ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் சுவாமி என்று ‎அழைக்கிறார்கள். மேலும் அனைவரும் அந்த பரமாத்மா அல்லது உலகளாவிய ஆத்மா ‎என்ற நிலையை அடைய வேண்டும் என்ற வேட்கையை ‎இச்சொல் குறிக்கிறது. கண்டரரு மகேஸ்வரரு என்ற தழமொன் ‎குடும்பத்தினரே தற்போது சபரிமலை கோவிலின் தலைமை பூசாரியாக (தந்திரி) இருப்பவர். சபரிமலைக்கு ‎அருகாமையிலுள்ள இதர புகழ் பெற்ற ‎கோவில்கள் நீலக்கல் கோவில், பத்தனம்திட்டா மலையாளப்புழா கோவில், பத்தனம்திட்டா ஆரன்முலா பார்த்தசாரதி கோவில் ‎ ‎மகாதேவர் கோவில், செங்கன்னூர் ‎ஸ்ரீவல்லபா கோவில், திருவல்லா ‎கவியூர்ஆஞ்சநேயா கோவில், திருவல்லா ‎செட்டிக்குளங்கரை தேவி கோவில், மாவேலிக்கரா ‎மன்னார்சாலை கோவில், ஹரிப்பாடு ‎சுப்பிரமணியர் கோவில், ஹரிப்பாடு ‎சாக்குளத்துக்காவு கோவில், திருவல்லா ‎கண்டியூர் மகாசிவர் கோவில், மாவேலிக்கரா ‎சுனக்கற மகாதேவர் கோவில், மாவேலிக்கரா ‎பதநிலம் பரப்பிரம்மா கோவில், நூரநாடு மேற்கோள்கள் இவற்றையும் காண்க ஆறு அய்யப்பன் கோயில்கள் வெளி இணைப்புகள் தினமலர் - வரலாறு, வண்ணப்படங்கள், பாடல்கள், ‎வழித்தடங்கள், காலண்டர், பூஜை பற்றிய தகவல்கள் ‎ ‎* பகுப்பு:கேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் பகுப்பு:இந்து யாத்திரைத் தலங்கள் பகுப்பு:இந்து புனித நகரங்கள் பகுப்பு:கேரள இந்துக் கோயில்கள்
சபரிமலை அய்யப்பன் கோவில் எங்கு உள்ளது?
பத்தனம்தித்தா
85
tamil
2ea84c0a5
அ. இர. ரகுமான் (அல்லா இரக்கா இரகுமான், பிறப்பு: ஜனவரி 6, 1966), புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார். மேலும் இத்திரைப்பட இசைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும் , பாஃப்டா விருதும் கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரேயாவார். இவருக்கு 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்ம பூசண் விருது அளிக்கப்பட்டது. இவர் ஆசியாவின் மொசார்ட் என்றும் அழைக்கப்படுகிறார்[1]. [2009] ஆம் ஆண்டு 81ஆம் ஆஸ்கார் விருதுகளுக்காக அமைத்த மாபெரும் மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று அவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திரச் சொல்லைப் பாடினார்.[2] 2017 ஆம் ஆண்டு இவருக்கு தமிழ் ரத்னா விருது வழங்கி அமெரிக்கா தமிழ் சங்கம் கவுரவித்துள்ளது.[3] வாழ்க்கைக் குறிப்பு ரகுமான் 1966 சனவரி 6 ஆம் திகதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். அருணாச்சலம் சேகர் திலீப் குமார் என்பது இவரது இயற்பெயர் ஆகும். இசையுலகப் பயணத்தை 1985 இல் ஆரம்பித்தார். இவரின் குடும்பம் இசை சார்ந்தது. இவரின் தந்தை சேகர் மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். அதன் பின் குடும்பத்தில் வருமானம் இல்லாத நிலையில் தன் தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்குவிட்டு அந்த வருமானத்தில் பியானோ, ஆர்மோனியம் மற்றும் கித்தார் வாசிக்கக் கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்டார். 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காகச் சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார். இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா, அமின் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். 1992 இல் தனது வீட்டிலேயே இசைக் கலையகத்தை அமைத்தார். இதே ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம், இவருடய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கித் தந்தது. பின்னர் 1997ல் மின்சாரக் கனவும், 2002 லகான் இந்தி படமும், 2003-இல் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் இவருக்குத் தேசிய விருதுகள் வாங்கித் தந்தன. முத்து திரைப்படம் சப்பானில் வெற்றி பெற்று, இவரது புகழ் உலகமெங்கும் பரவத் தொடங்கியது. 2012 இல் இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலேயே நவீன தொழில்நுட்ப ரெகார்டிங் ஸ்டுடியோவாக உள்ளது. இசையில் ஆரம்ப காலம் ரகுமான் தனது ஒன்பதாது வயதில் தந்தையை இழந்ததால், விளம்பரங்களுக்கு இசையமைத்தார். திரிலோக் மற்றும் சாரதா ஆகியோருடன் இணைந்து விளம்பரப் படங்களை இவர் தயாரித்தார். அதன் மூலம் ரகுமான் வெகுவாக அறியப்பட்டார். பூஸ்ட், ஏசியன் பெயின்ட்ஸ், ஏர்டெல், லியோ காபி ஆகிய 300க்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களுக்கு ரகுமான் இசையமைத்தார். படைப்புகள் திரைப்பட இசையமைப்புகள் குறிப்பு: "ஆண்டு", பன்மொழித் திரைப்படமாயின், எந்த மொழியில் அத்திரைப்படம் முதலில் வெளியானதோ, அந்த ஆண்டைக் குறிக்கும். பின் வரும் பிற மொழித் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்: 1993 யோதா (மலையாளம்) 1999 Return of the Thief of Baghdad (ஆங்கிலம்) 2003 Tian di ying xiong (சீன மொழி) 1999- பிஸா- ஹிந்தி) (ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைப்பு). திரைப்படமல்லாத இசையமைப்புகள் Return of the Thief of Baghdad (2003) தீன் இசை மாலை (1989) (திலீப் குமார் என்ற பெயரில்) செட் மீ ஃப்ரீ (1991) வந்தே மாதரம் (1997) ஜன கண மன (2000) பாம்பே ட்ரீம்ஸ் (2002) (இசை நாடகம்) இக்னைட்டட் மைன்ட்ஸ் (2003) (இசைத்தொகுப்பு வெளியிடப்படாத நேரடி இசை நிகழ்ச்சி) ராகாஸ் டான்ஸ்(2004) (வனேசா மே நடனத்திலிருந்து) இவர் பெற்ற விருதுகள் இசைத்துறையில் ஏ.ஆர். ரகுமானின் 20 ஆண்டுகாலப் பங்களிப்பைப் பெருமைப்படுத்தும் வகையில் அவருக்கு, அமெரிக்காவின் பெர்க்லீ இசைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க உள்ளது[4]. 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளருக்காகவும் சிறந்த பாடலுக்காகவும் ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் மொரீசியசு நாட்டின் விருது, மலேசிய விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது, தேசிய திரைப்பட விருது, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது, தமிழக அரசு திரைப்பட விருது (ஆறு முறை), பிலிம்பேர் விருது (13 முறை), பிலிம்பேர் சவுத் விருது (12 முறை - அதில் 9 முறை தொடர்ந்து பெற்றார்), ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது, 2009ஆம் ஆண்டு வெளியான "ஸ்லம்டாக் மில்லினியர்" படத்திற்காக கோல்டன் குளோப் விருது, பெப்டா விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார். மிடில்செக்ஸ் பல்கலைக்கழகமும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமும் வழங்கிய மதிப்புறு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். ரங் தே பசந்தி, லகான், சாத்தியா, தால் ஆகிய திரைப்படங்களுக்காக ஐ.ஐ.எஃப்.ஏ விருது பெற்றுள்ளார். சிகரமாக, இந்தியக் குடிமக்களுக்கான மூன்றாம் உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு இவருக்கு அளிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டில் இவருக்கு இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருதும் வழங்கப்பட்டது. ஸ்வரலயா யேசுதாஸ் விருது(2006), மத்தியப்பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது (2004) ஆகிய மாநில விருதுகளைப் பெற்றுள்ளார். ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகம் இவருக்கு உலகப் பங்களிப்புக்கான மதிப்புறு விருதை வழங்கியுள்ளது. இந்திய அணியின் நல்லெண்ணத் தூதர் ரியோ டி ஜனேரோ 2016 ஓலிம்பிக் விளையாட்டுக்கள் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்காக ஏ. ஆர். ரகுமான் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டார்.[5] மேற்கோள்கள் வெளி இணைப்புகள் at AllMusic at பில்போர்ட் (இதழ்) at IMDb NAMM Oral History Program (2013) பகுப்பு:ஏ. ஆர். ரகுமான் பகுப்பு:பத்ம பூசண் விருது பெற்ற தமிழர்கள் பகுப்பு:1966 பிறப்புகள் பகுப்பு:சென்னை நபர்கள் பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் பகுப்பு:1967 பிறப்புகள் பகுப்பு:வாழும் நபர்கள் பகுப்பு:பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள் பகுப்பு:இந்திய முஸ்லிம்கள் பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்
இந்திய இசை இயக்குனர் ஏ.ஆர்.ரஹ்மான் எப்போது பிறந்தார்?
ஜனவரி 6, 1966
48
tamil
34846a420
சென்னை (Chennai) தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் (Madras) என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 10 மில்லியன் (ஒரு கோடி) மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 17ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை தென்னிந்தியாவின் வாசலாகக் கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை கோலிவுட் (Kollywood) என அறியப்படும் தமிழ்த் திரைப்படத் துறையின் தாயகம். பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன. சென்னையின் பொருளாதாரம் பலதரப்பட்ட தொழில்களைச் சார்ந்தது. ஊர்தி, தகவல் தொழில்நுட்பம், வன்பொருள் தயாரிப்பு, மருத்துவம் போன்ற பல துறைகளைக் கொண்டது. ஊர்தி மற்றும் ஊர்திகளின் உதிரி பாகங்கள் உற்பத்தியில் நாட்டின் 35 விழுக்காடு சென்னையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மேலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நியூயார்க் டைம்ஸ் இதழின் 2014இல் செல்ல வேண்டிய உலகின் 52 இடங்களின் பட்டியலில் சென்னை 26வது இடத்தைப் பெற்றுள்ளது[11]. வரலாறு சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது.கி.பி. 1ஆம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாகக் கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னைக் கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது. 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி தான் தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் இந்நகரம் உருவானது. அன்றைய தினம் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தங்களது உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவருடன் இப்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை இவர்களிடம் விற்ற அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரின் தந்தையான சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாகக் கோட்டைக்கு வடக்கில் உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் 1639ஆம் ஆண்டு[12] செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டியதைத் தொடர்ந்து தான் சென்னை நகரம் உருவாகி வளர்ந்தது என்றாலும் பின்னர் நகரத்தோடு இணைந்த ஊர்களான திருவல்லிக்கேணி, மைலாப்பூர், திருவொற்றியூர், திருவான்மியூர் ஆகிய பகுதிகள் அதற்கு மேலும் பல நூற்றாண்டுகள் தொன்மையானவை. சென்னையில் உள்ள மயிலாப்பூர் பல்லவ அரசின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. இயேசுவின் தோழர்களுள் ஒருவரான புனித தாமஸ் கி.பி. 52 முதல் 70 வரை இங்கு வந்து போதித்ததாகக் கருதுபவர்கள் உண்டு. 16ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர் 1522ஆம் ஆண்டு சாந்தோம் (சான் தோம - "புனித தோமஸ்") என்ற பெயரில் ஒரு துறைமுகத்தை நிறுவினர். பிறகு 1612ஆம் ஆண்டு டச்சு நாட்டவரிடம் இவ்விடம் கைமாறியது. 1639ஆம் ஆண்டு ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாகத் தேர்வு செய்யப்பட்டது. ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்தக் கோட்டையை மையமாகக் கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன. 1522ஆம் ஆண்டில் இங்கு வந்த போத்துக்கீசர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதி போத்துக்கீசர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612ஆம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது. 1688ஆம் ஆண்டில் சென்னை முதல் நகர அவையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையைச் சென்னை பெற்றது. கிழக்கிந்தியக் கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது படை நடவடிக்கைகளுக்கான தளமாக இதைப் பயன்படுத்தினார். பின்னர் இது பிரித்தானிய அரசின் இந்தியக் குடியிருப்புப் பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான "சென்னை மாகாணம்" என்ற பெயர் பெற்றது. 1746ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு படைகள் கைப்பற்றின. 1749ஆம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகராக மதராஸ் ஆனது. சென்னை மாகாணம் 1969ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகரின் பெயரான மதராஸ் என்பதும் 1996ஆம் ஆண்டு சென்னை என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகி மாநிலத்தின் தலைநகரானது சென்னை. மதராஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் தமிழக அரசு 1966இல் சென்னை என மாற்றம் செய்தது. வெங்கடபதி சகோதரர்களிடமிருந்து சென்னை ஜார்ஜ் கோட்டை நிலத்தை பிரித்தானியர் வாங்கியதால், தங்கள் தந்தை 'சென்னப்ப நாயக்கர்' பெயரால் சென்னப்பட்டணம் என இந்நகரம் அழைக்கப்பட வேண்டும் என வெங்கடபதி சகோதரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆகவே சென்னை ஜார்ஜ் கோட்டை நிலமும் அதனைச் சுற்றிய பகுதிகளும் சென்னை என அழைக்கப்படுகிறது. டிசம்பர் 2004 ஆழிப்பேரலை தாக்குதலில் பெரும் பாதிப்புக்குள்ளான இடங்களில் சென்னையும் ஒன்றாகும். புவியியல் இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள சென்னை, தமிழகத்தின் வடகிழக்கு கோடியில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அருகில் உள்ளது. சென்னை நகரின் கிழக்கில் வங்காள விரிகுடா உள்ளது. சென்னை நகரத்தின் பரப்பளவு 174 கி.மீ². சென்னை மாவட்டமும், திருவள்ளூர், மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளும் சென்னை மாநகரப் பகுதிகளாகக் கருதப்படுகின்றன. சென்னை நகரின் அருகாமையில் மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், ஸ்ரீஹரிக்கோட்டா ஆகிய ஊர்கள் உள்ளன. சென்னையில் வெப்பமும் ஈரப்பதமும் வருடம் முழுவதும் மிகுந்து காணப்படுகிறது. சென்னையில் பதிவு செய்யப்பட்ட அதிக வெப்பநிலை 44.1˚ செல்சியஸ், குறைந்த வெப்பநிலை 15.8˚ செல்சியஸ். தென்கிழக்கு பருவமழையும், முக்கியமாக வடகிழக்கு பருவமழையும் நகருக்கு மழை கொண்டு வருகிறது. சென்னையில் வருடத்திற்கு சுமார் 1300 மி.மீ மழை பெய்கிறது. பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளில் சென்னையின் கடற்கரை நகரின் மிக உட்புறத்தே அங்கப்ப நாயக்கன் தெரு உள்ள தொலைவில் இருந்தது. பிற்பட்ட காலப்பகுதியில் கடல் நன்றாக உள்வாங்கித் தற்போதைய இடத்தில் நிலைக்கொண்டுவிட்டது.[13][14] கோட்டைக்குள் இருக்கும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் வண்ண வரைபடங்கள் சிலவற்றில் கடலின் அலைகள் கோட்டையின் சுவர்களுக்கு மிக மிக அருகில் காண்பிக்கப்பட்டிருக்கின்றன. கூவம், மற்றும் அடையாறு ஆகிய நதிகள் சென்னை நகரின் வழியாகப் பாய்கின்றன. புழல் ஏரி, சோழவரம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய ஏரிகளிலிருந்து நகருக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை ஆகும். 13 கி.மீ. நீளம் உள்ள இக்கடற்கரை, மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையின் வடகோடியில் கூவம் கடலில் கலக்கும் இடத்திற்கு தெற்கில் உள்ள பகுதி மெரினா கடற்கரை என்றும், அதன் தெற்கில் அடையாறு கடலில் கலக்கும் பகுதிக்கு வடக்கில் உள்ள பகுதி சாந்தோம் கடற்கரை என்றும், அடையாற்றின் தெற்கில் உள்ள பகுதி எலியட் அல்லது பெசன்ட் நகர் கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது. சென்னை நகரின் தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை வட சென்னையில் உள்ளன. மத்திய சென்னை, சென்னையின் முக்கியப் பகுதியாகும். தென் சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. நிர்வாகம் சென்னை மாநகரின் நிர்வாகம் சென்னை மாநகராட்சியின் பொறுப்பில் உள்ளது. மாநகராட்சியின் மேயர் (மாநகரத் தந்தை) என்று அழைக்கப்படுகிறார். இவர் தவிர 200 வட்டங்களிலிருந்து 200 மாமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தற்போதைய மேயர் சைதை துரை சாமி அவர்களும் துணைமேயர் பெசமின் அவர்களும் அக்டோபர் 29, 2011 முதல் இப்பதவியை வகித்து வருகிறார்கள். சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றது. சென்னை மாநகராட்சி 1688 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது இந்தியாவில் மட்டுமின்றி இங்கிலாந்து அல்லாத காமன் வெல்த் நாடுகளின் மாநகராட்சியைக் காட்டிலும் பழமையானது. தமிழகத் தலைமைச்செயலகம் இங்கு உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வந்தது. பின் 13 மார்ச் 2010 அன்று ஓமந்துரார் அரசினர் தோட்டத்தில் 400 கோடிகளுக்கு மேல் செலவில் கட்டப்பட்ட பசுமை கட்டடத்தில் மாற்றப்பட்டது. இது உலகின் முதல் பசுமை சட்டமன்ற கட்டடமாகும். ஓராண்டிற்கு பிறகு தமிழகத் தலைமைச்செயலகம் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் 18 தமிழக சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. வட சென்னையில் திருவொற்றியூர்,ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி), இராயபுரம் ஆகிய தொகுதிகளும், மத்திய சென்னையில் வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய தொகுதிகளும்,தென் சென்னையில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர்,மைலாப்பூர்,வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய தொகுதிகளும் உள்ளன. இந்திய பாராளுமன்றத்தின் மூன்று தொகுதிகள் சென்னையில் உள்ளன. அவை வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகியவையாகும். தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களின் உயர்நீதிமன்றம் சென்னையில் உள்ளது. தமிழகக் காவல் துறையின் பிரிவான சென்னை பெருநகரக் காவல்துறை சென்னையில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கிறது. சென்னை மாநகர் முப்பத்தாறு காவல் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 121 காவல் நிலையங்கள் சென்னை மாநகரப் பகுதியில் உள்ளன. பொருளாதாரம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் முதலே தெற்காசியாவின் முக்கிய துறைமுகங்களுள் ஒன்றாகச் சென்னை விளங்கி வருகிறது. பல இந்திய நிறுவனங்களின் கிளைகள் சென்னையில் உள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்களுள் ஒன்றாகவும், தமிழகத்தின் தலைநகராகவும் சென்னை விளங்குவதால், பல தேசிய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் சென்னையில் உள்ளன. 1990களிலிருந்து, சென்னை இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. தென் சென்னையில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளன. தரமணியில் உள்ள டைடல் பூங்கா இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவாகும். சோழிங்கநல்லூர் எல்காட் தொழில்நுட்ப பூங்கா, சிறுசேரி சிப்காட் தொழில்நுட்ப பூங்கா ஆகியவை மென்பொருள் உருவாக்கம் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் உள்ளிட்ட பல பிரிவுகளில் சிறந்து விளங்குகிறது. மேலும் சில தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் நகரங்களும் கட்டப்பட்டு வருகின்றன. இந்தியாவின் வாகன உற்பத்தியில் சென்னை முதலிடம் வகிக்கிறது. பெரம்பூரில் இயங்கிவரும் இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (Integral Coach Factory) இந்திய ரயில்வேயின் முதன்மையான ரயில் உற்பத்தி தொழிற்சாலையாகும். அம்பத்தூர் மற்றும் பாடி பகுதிகளில் பல தொழிற்சாலைகள் உள்ளன. டி.வி.எஸ், அசோக் லேலண்ட், ஹுண்டாய் , ஃபோர்டு , மிட்சுபிசி, டி.ஐ மிதிவண்டிகள், எம்.ஆர்.எஃப், பி.எம்.டபிள்யூ (BMW), ரினல்ட் நிசான் போன்ற நிறுவனங்களின் தொழிற்சாலைகள் சென்னையில் உள்ளன. சென்னையை அடுத்த ஆவடியில் கன ஊர்தி தொழிற்சாலை உள்ளது. இந்தியாவின் முக்கிய போர் பீரங்கியான அர்ஜுன் இங்கு தயாரிக்கப்படுகிறது. மக்கள் சென்னையின் மக்கள் தொகை சுமார் 7.45 மில்லியன் ஆகும். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 24,418 மக்கள் வசிக்கின்றனர். ஆயிரம் ஆண்களுக்கு 948 பெண்கள் உள்ளனர். கல்வியறிவு விகிதம் 80.14%. நகரின் 25 விழுக்காடு மக்கள் குடிசைப் பகுதிகளில் வசிக்கின்றனர். சென்னையில் தமிழ் மொழி பேசுவோரே பெரும்பான்மை, இதைத்தவிர ஆங்கிலம், தெலுங்கு, உருது, கன்னடம், மலையாளம், ஹிந்தி, போன்ற மொழிகளும் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் தமிழிற்கு அடுத்த படியாக, இந்திய மொழிகளில், தெலுங்கே அதிக அளவில் பேசப்படுகிறது. அலுவலகங்களிலும் கல்விக் கூடங்களிலும் ஆங்கிலம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலோ இந்திய மக்களும், மற்ற நாட்டவரும் சிறு அளவில் காணப்படுகின்றனர். இங்கு பேசப்படும் பல மொழிகளின் கலவையில் உருவான மெட்ராஸ் பாஷை உள்ளூர் மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்களாலும், ஆட்டோ மற்றும் லாரி ஓட்டுனர்கள் போன்றோராலும் ஒயிலாகப் பேசப்படுகிறது. இந்த மொழி அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாத மொழியாகக் கருதப்படுகிறது. கலாசாரம் சென்னையில் வாழும் பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாகச் சென்னையின் கலாச்சாரம் விளங்குகிறது. நவீனமும் பாரம்பரியமும் இங்கு கலந்து காணப்படுகிறது. சென்னையில் வருடந்தோறும் டிசம்பர் மாதம் முழுவதும் இசைத் திருவிழா இசை ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் தினந்தோறும் சென்னையின் பல இடங்களில் கர்நாடக சங்கீத கச்சேரிகள் நடத்தப்படுகின்றன. சென்னை அடையாறில் உள்ள கலாக்ஷேத்ராவில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் வந்து பரதநாட்டியமும் மற்ற பாரம்பரியக் கலைகளும் பயின்று செல்கின்றனர். தமிழ் மற்றும் ஆங்கில நாடகங்கள் வருடந்தோறும் அரங்கேற்றப்படுகின்றன. சென்னையிலும் சுற்றுப்புறங்களிலும் உள்ள கல்லூரிகளில் வருடந்தோறும் கலைத்திருவிழாக்கள் மாணவர்களால் நடத்தப்படுகின்றன. சென்னையில் உள்ள கோலிவுட் என்றழைக்கப்படும் தமிழ் திரைப்படத் துறை இந்தியாவில் பாலிவுட்டுக்கு அடுத்தபடியாக மிகப் பெரியது. தமிழ் திரைப்படப் பாடல்கள் சென்னை மக்களால் மிகவும் ரசிக்கப்படுகிறது. தனியார் தொலைக்காட்சிகளிலும் வானொலி அலைவரிசைகளிலும் திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சிகள் அதிகம் ஒலிபரப்பப்படுவதைக் காணலாம். அரிசி இங்கு பிரதான உணவாக இருக்கின்றது. பிரபலமான தெற்காசிய உணவான பிரியாணியும், இட்லி, வடை, தோசை போன்ற தென்னிந்திய உணவு வகைகளும் சமீபத்தில் மேற்கத்திய நாகரிகத்தின் பாதிப்பால் பீட்ஸா, பர்கர் போன்ற உணவு வகைகளும் சென்னையில் பிரபலமாய் உள்ளன. புனித ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் கட்டிடம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் அரசு அருங்காட்சியகம் போன்று ஆங்கிலேயரின் பாதிப்பில் உருவான கட்டடங்களையும் அதிகமாகக் காணலாம். சமீபத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியால் பல நவீன கட்டடங்கள் பெருகி வருகின்றன. சமயங்கள் 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மற்ற தமிழ் நகரங்களைப்போல, சென்னை மாநகரிலும் இந்து மக்களின் எண்ணிக்கை அதிக அளவிலுள்ளன. இதற்கு அடுத்தப்படியாக, இசுலாமியம் மற்றும் கிறித்துவம் மேலோங்கிக் காணப்படுகிறது. இதை தவிர, சைணம், பௌத்தம் மற்றும் சீக்கிய சமயங்களும் உ ள்ளன. சென்னையில் மயிலை கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் மற்றும் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் போன்ற பல பழங்கால கோயில்கள் உள்ளன. திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில், வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில் என நான்கு தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் சென்னை மாவட்டத்திற்குள் அமைந்துள்ளன. தொன்மையான சாந்தோம் தேவாலயம், தென் இந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த தேவாலயமாகும். சாந்தோம் அவர்கள், இயேசுவின் 12 சீடர்களில் ஒருவராவர். சிலவும் இங்கு உள்ளன. இதை போர்சுக்கல் நாட்டை சார்ந்தவர்கள் எழுப்பியதாகக் கருதப்படுகிறது. போக்குவரத்து சென்னையில் ஆகாய மார்க்கமாகவும், கடல் வழியாகவும், ரயில் மற்றும் சாலை வழியிலும் போக்குவரத்தை மேற்கொள்ளலாம். இந்திய நாட்டின் ரயில் அமைப்பு, சென்னையில் தான் தொடங்கியது எனக் கூறலாம். 1832ம் ஆண்டில் சென்னையில் முதல் ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. 1837ல் சரக்கு ஏற்றுமதி செய்வதற்காக, ஒரு சிறிய ரயில் பாதை அமைக்கப்பட்டது. 16 வருடங்களுக்கு பின்னர், முதல் நுகர்வோர் ரயில் பாதை தானேவில் அமைக்கப்படது. 1931ம் ஆண்டில், சென்னை கடற்கரைக்கும் தாம்பரத்துக்கும் இடையே புறநகர் ரயில் பாதை அமைக்கப்பட்டது. சென்னைய்ல் சுமார் 65 ஆண்டுகள், டிராம்ஸ் போக்குவரத்து அமைப்பு இயங்கியது. பின்னர் 1950ல், ராஜகோபாலச்சாரி முதலமைச்சாராய் பணியாற்றியப் போது, டிராம்ஸ் போக்குவரத்து நிறுத்தப்படது. 2012ன் போது சுமார் 37,60,000 வாகனங்கள் பதிவுச் செய்யப்பட்டிருந்த்தது. பின்னர், 2016ல் சுமார் 47,57,000 வாகனங்கள் இயங்கிவருகின்றன. ஆகாய வழி போக்குவரத்து சென்னை விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பிற நகரங்களுக்கும் தெற்கு, மற்றும் தென்கிழக்காசியா, வளைகுடா நாடுகள், ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய பகுதிகளுக்கும் நல்ல விமானப் போக்குவரத்து உண்டு. சென்னை விமான நிலையம், இந்தியாவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சரக்கு விமான நிலையமாகும். கடல் வழி போக்குவரத்து சென்னை துறைமுகம் இந்தியாவில் முக்கிய துறைமுகங்களுள் ஒன்று. மேலும் சென்னையின் வடக்கில் உள்ள எண்ணூர் துறைமுகத்தில் நிலக்கரி, தாதுக்கள் போன்ற பொருட்களின் போக்குவரத்து நடைபெறுகிறது. ரயில் வழி போக்குவரத்து சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ஆகியவை சென்னையின் இரு முக்கிய ரயில் நிலையங்கள். சென்னை சென்ட்ரல், இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது. சென்னை எழும்பூர், மற்ற தமிழக நகரங்களுக்குச் சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது. இப்போது சென்னையில் உள்ள தாம்பரம் ரயில் நிலையத்தையும் சென்னையின் மூன்றாவது முனையாக மாற்றப் பட்டுள்ளது. சென்னை புறநகர் இருப்புவழி நான்கு மார்க்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை - தாம்பரம், தாம்பரம் – செங்கல்பட்டு ஆகியவை. இவை தவிர சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கத்தில் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் சேவை முதற்கட்டமாக ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையிலான 10.15 கி.மீ தூரத்திற்கும் பின்னர் இரண்டாம் கட்டமாக சின்னமலை – விமான நிலையம் இடையேயான 8.6 கி.மீ தூரத்திற்கும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிற வழித்தடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது. சாலை வழி போக்குவரத்து சென்னை நகரிலிருந்து இந்தியாவின் மற்ற நகரங்களுக்குச் சென்று வர நல்ல சாலை வசதிகள் உள்ளன. ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் சென்னையை கொல்கத்தா, பெங்களூர், திருச்சி, பாண்டிச்சேரி, திருவள்ளூர் ஆகிய நகரங்களுடன் இணைக்கின்றன. சென்னை கோயம்பேட்டில் உள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையமாகும். சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களையும் இணைக்கும் பொதுப் போக்குவரத்து வசதியாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் செயல்பட்டு வருகிறது. சுமார் 2773 பேருந்துகள் 375 வழித்தடங்கள் மூலம் சென்னை நகரின் பகுதிகளை இணைக்கின்றன. மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் நூற்றுக்கணக்கான சிற்றுந்துகளும் நகர் முழுவதும் இயக்கப்படுகின்றது. இது தவிர பல்லாயிரக்கணக்கான ஆட்டோக்களும், கால் டாக்ஸிக்களும் நகரத்தில் ஓடுகின்றன. தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களின் முக்கிய இடங்களுக்கும் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றது. தகவல் தொடர்பு தென்கிழக்காசிய கண்ணாடி நூலிழை மையங்களுள் ஒன்றான சென்னை இந்தியாவில் தகவல் தொடர்பில் முதலிடம் வகிக்கிறது. இங்கு பி.எஸ்.என்.எல், டாடா, ரிலையன்ஸ், ஏர்டெல் ஆகிய தொலைபேசி நிறுவனங்கள் தொலைபேசி இணைப்பு அளிக்கின்றன. பி.எஸ். என்.எல், ஏர்டெல், வோடபோன், ஏர்செல், டாடா, ரிலையன்ஸ், ஐடியா ஆகிய நிறுவனங்கள் நகர்பேசி இணைப்பு அளிக்கின்றன. இது தவிர இந்நிறுவனங்கள் அகலப்பாட்டைஇணைய இணைப்புகளும் அளிக்கின்றன. அனைத்து தேசிய, அனைத்துலக தொலைக்காட்சிகளும் சென்னையில் தெரிகின்றன. சன் டிவி மற்றும் அதன் பல்வேறு சிறப்பு அலைவரிசைகளான சன் மியூசிக்,சன் நியூஸ்,கே டிவி, ஆதித்யா, மக்கள் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி மற்றும் அதன் பல்வேறு சிறப்பு அலைவரிசைகளான கலைஞர் செய்திகள், இசையருவி, சித்திரம், சிரிப்பொலி, ராஜ் தொலைக்காட்சி மற்றும் அதன் அலைவரிசைகள் ராஜ் நியூஸ், ராஜ் டிஜிட்டல் ப்ளஸ், ஸ்டார் விஜய், ஜெயா தொலைக்காட்சி மற்றும் அதன் அலைவரிசைகள் ஜெயா மாக்சு, ஜெயா பிளசு, தூர்தர்சன் பொதிகை, டிஸ்கவரி தமிழ் ஆகிய தொலைக்காட்சி அலைவரிசைகள் அவற்றில் பரவலான சிலவாகும். நான்கு ஏ. எம் மற்றும் பதினொன்று பண்பலை அலைவரிசைகளில் வானொலி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. சூரியன் பண்பலை,ரேடியோ மிர்ச்சி, ரேடியோ சிட்டி, ஹலோ, ரேடியோ ஒன், ஆஹா, பிக், ரெயின்போ பண்பலை, எப் எம் கோல்டு ஆகியன அவற்றில் சிலவாகும். தினகரன், தமிழ் முரசு, தினத்தந்தி, தின மலர், தினமணி, மாலை மலர், தி இந்து ஆகிய தமிழ் செய்தித் தாள்களும், தி இந்து, தி நியூ இந்தியன் எக்சுபிரசு, டெக்கான் கிரானிக்கிள், தி டைம்சு ஆப் இந்தியா ஆகிய ஆங்கில செய்தித்தாள்களும் சென்னையில் அச்சிடப்படுகின்றன. ஆனந்த விகடன், குமுதம், கல்கி, குங்குமம், நக்கீரன், புதிய தலைமுறை ஆகியவை இங்கு அச்சிடப்படும் முக்கிய வார இதழ்கள். மருத்துவம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ராயபேட்டை அரசு மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை ஆகியவை புகழ்பெற்ற அரசு மருத்துவமனைகளாகும். இவை தவிர அப்போல்லோ மருத்துவமனை, மலர் மருத்துவமனை, MIOT மருத்துவமனை, குளோபல் மருத்துவமனை, விஜயா மருத்துவமனை போன்ற சிறந்த தனியார் மருத்துவமனைகளும் இயங்கி வருகின்றன. காலநிலை சென்னையில் கோடைக்காலத்தில் அதிக பட்ச வெப்பம் சுட்டெரிக்கும் நாட்கள் மே முதல் சூன் வரையான காலமாகும். அப்போது சில நாட்களைக் கத்தரி வெயில் அல்லது அக்னி நட்சத்திரம் என்றும் அழைக்கின்றனர்.[16] அக்காலங்களில் அதிக பட்ச வெப்பமாக 38–42°C (100–108°F) இருக்கும். சனவரியில் குளிர் அதிகம் இருக்கும். அப்போது குறைந்த பட்ச வெப்பநிலை 18–20°C (64–68°F). மிகக் குறைந்த வெப்பநிலையாகப் 15.8°C (60.4°F) பதிவாகியுள்ளது மேலும் அதிகபட்சமாகப் 45°C (113°F) பதிவாகியுள்ளது[17] சராசரி மழைப்பொழிவு 140cm (55in) [18]. இந்நகரம் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்திருக்கிறது. அக்டோபர் மாதத்திலிருந்து திசம்பர் மாதங்களில் மழைக்காலமாகும். சில சமயங்களில் புயல் காற்று வங்காளவிரிகுடா பக்கங்களிலிருந்து வருகிறது. 2005 ஆம் ஆண்டு அதிக பட்ச மழைப்பொழிவாகப் 257cm (101in) பதிவாகியுள்ளது.[19] ஏப்ரல் முதல் அக்டோபர் வரை தென்மேற்கு பருவக்காற்று காலமாகும் [20] மற்ற எல்லா மாதங்களிலும் வடகிழக்கு காற்று அடிக்கிறது. பொதுவாக வடகிழக்கு பருவமழையின் காரணமாக 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி காலையில் மட்டும் 16 சென்டிமீட்டர் மழைபெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.[21] கல்வி சென்னையில் உள்ள ஐ.ஐ.டியும், அண்ணா பல்கலைக்கழகமும், இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களுள் சிலவாகும். இவை தவிர பல தனியார் தொழில்நுட்பக் கல்லூரிகளும் நிகர்நிலை பல்கலைகழகங்களும் மருத்துவ கல்லூரிகளும் சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ளன. சென்னை பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தைப் பயன்படுத்தும் பல கலை, அறிவியல் கல்லூரிகள் சென்னையில் உள்ளன. அவற்றுள் சென்னை மாநிலக் கல்லூரி, சென்னை கிறித்துவ கல்லூரி, லயோலா கல்லூரி, புதுக்கல்லூரி, வைஷ்ணவ் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, S.I.E.T கல்லூரி, விவேகானந்தா கல்லூரி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இது தவிர என்.ஐ.எஃப்.டி (National Institute of Fashion Technology – தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி), ஏ.சி.ஜெ (Asian College of Journalism), சென்னை சமூகப்பணிப் பள்ளி (Madras School of Social Work) போன்ற கல்வி நிறுவனங்களும் உள்ளன. வருடந்தோறும் பள்ளி இறுதித் தேர்வுகளில் இந்தியாவிலேயே சென்னை மாணாக்கர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதைக் காணலாம். நூலகங்கள் சென்னையில் உள்ள கன்னிமரா பொது நூலகம் தேசிய களஞ்சிய நூலகங்களுள் (National Depository Libraries) ஒன்று. இதன் அடிக்கல் 1890-இல் நாட்டப்பட்டு, 1896-இல் துவங்கி வைக்கப்பட்டது; அப்போதைய மதறாஸ் மாநிலத்தின் கவர்னரான கன்னிமரா பிரபுவின் பெயர் இந்நூலகத்திற்கு சூட்டப்பட்டது.[23] செப்டம்பர் 15, 2010 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகம் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது; இது தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் ஆகும். 3.75 இலட்சம் சதுர அடிப் பரப்பில் ஏறத்தாழ 180 கோடி[24] செலவில் கட்டப்பட்டது. விளையாட்டு மற்ற இந்திய நகரங்களைப் போலச் சென்னையிலும் கிரிக்கெட்டே பிரபலமான விளையாட்டாகும்.[25] சென்னையிலுள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கம் 50000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது. இந்திய கிரிக்கெட் அணி இங்கு தான் முதன் முதலாக டெஸ்ட் போட்டியை வென்றது. ஐ.ஐ.டி வளாகத்திலுள்ள கெம்பிளாஸ்ட் கிரிக்கெட் மைதானம் மற்றொரு முக்கிய மைதானம். நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் அரங்கத்தில் வருடந்தோறும் ஜனவரி மாதம் சர்வதேச ஏ.டி.பி பந்தயமான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபறுகின்றன. விஜய் அமிர்தராஜ், இராமநாதன் கிருஷ்ணன், ரமேஷ் கிருஷ்ணன் போன்று சர்வதேச போட்டிகளில் முத்திரை பதித்த பல இந்திய ஆட்டக்காரர்கள் சென்னையைச் சேர்ந்தவர்களே. எழும்பூரிலுள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கம் 4000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது. இது செயற்கை தரை கொண்டது. 1995ஆம் ஆண்டு இங்கு சாம்பியன் கோப்பைப் பந்தயத்தொடர் நடந்தது. 2005 டிசம்பரிலும் இப்போட்டிகள் இங்கு நடைபெறும். ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் கால்பந்து, தடகளப்போட்டிகள் போன்றவை நடைபெறுகின்றன. இதன் வளாகத்தில் உள்ள உள்ளக விளையாட்டரங்கில் கூடைப்பந்து, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம் போன்ற போட்டிகள் நடத்தும் வசதிகள் உள்ளன. 1996 ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. மூன்று கோல்ஃப் விளையாடும் இடங்கள் உள்ளன. ஸ்ரீபெரும்புதூரில் மோட்டர் பந்தய போட்டிகள் நடைபெறும் களம் உள்ளது. உயிரியல் பூங்காக்கள் கிண்டியில் உள்ள உயிரியல் பூங்காவில் மான்கள், பாம்புகள், ஆமைகள் ஆகியவை உள்ளன. ஆளுனர் வசிக்கும் ராஜ் பவனிலும், அதை ஒட்டியுள்ள ஐ.ஐ.டி வளாகத்திலும் குரங்குகளும் மான்களும் துள்ளி விளையாடுவதைக் காணலாம். வண்டலூரிலுள்ள அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில் சுமார் 80 மிருக வகைகள் உள்ளன. சென்னையின் தெற்கில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் முதலைப்பண்ணை உள்ளது. இங்கு முதலைகள், ஆமைகள், பாம்புகள் ஆகியவை வளர்க்கப்படுவதுடன் ஆராய்ச்சியும் நடைபெறுகிறது. பொழுதுபோக்கு உலகின் இரண்டாவது நீளமான மெரினா கடற்கரை, எழில்மிகு பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை ஆகியவை புகழ்பெற்ற இடங்களாகும். வள்ளுவர் கோட்டம், அரசு அருங்காட்சியகம், முட்டுக்காடு படகு குழாம், பிர்லா கோளரங்கம் மற்றும் தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள் கிஷ்கிந்தா, குயின்ஸ் லேன்ட், விஜிபி கோல்டன் பீச், மாயாஜால், MGM Dizzee World உள்ளிட்டவைகள் மக்களை கவர்ந்த சிறந்த சுற்றுலாத் தலங்களாகும். பிரச்சனைகள் மாசு மிகுந்த குடிநீர் மற்றும் குடிநீர் பற்றாக்குறை அதிக மக்கள் தொகை அடர்த்தி 25% மக்கள் குடிசைப்பகுதிகளில் வாழ்வது மாசு மிகுந்த சுற்றுப்புறச் சூழல் வாகன நெரிசல் மாசு மிகுந்த சாலைகள் மற்றும் சாலைகள் பராமரிக்கப்படாமை சென்னை சார்ந்த மென்பொருள் நிறுவன வளர்ச்சி விளைவுகள் சென்னை ராஜீவ் காந்தி சாலையில் அமைந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்ட மென்பொருள் நிறுவனங்கள் உள்ளிட்ட பல தேவைகளுக்குமாக நிலத்தடி தண்ணீர் லாரிகளால் உறிஞ்சப்படுவதால் பாதிக்கப்படும் சோழவரம், திருமழிசை. போன்ற பகுதி மக்கள் மக்கள் 2013ஆம் ஆண்டு தண்ணீர் லாரிகளை அனுமதிக்கப்பட்டதற்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதைத் தடுத்ததால், அப்பகுதியின் தனியார் தண்ணீர் லாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் செய்தனர்.ராஜீவ் காந்தி சாலையில் அமைந்திருந்த மென்பொருள் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டன, சில நிறுவனங்கள் தண்ணீர்த் தட்டுப்பாடால் விடுமுறை விட எத்தனித்தன. அரசால் விவசாயிகள் சமாதானப்படுத்தப்பட்டு மீண்டும் தண்ணீர் உறிஞ்சப்பட அனுமதிக்கப்பட்ட பின்னர் இந்நிறுவனங்களின் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கிற்று.[26] நிலத்தடி நீர் இவ்வாறு உறிஞ்சப்படுவதால் வேறு வழியின்றி விவசாயிகள் நிலத்தை விற்று விட்டு பிழைப்பு தேடி சென்னை நகருக்குள் வரவேண்டிய தேவை ஏற்படுத்தப்படுகின்றது.[27] சென்னை 375 சென்னை நகரம் உருவாகி 2014ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 22ஆம் நாளுடன் 375 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் விதமாக சென்னை 375 விழா, சென்னைவாசிகளால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.[28][29].[30] [31]. [32].* [33]. [34]. சகோதர நகரங்கள் உலகில் உள்ள சில நகரங்கள் சென்னை அரசு நிர்வாகத்துடன் அதிகாரப்பூர்வ தொடர்புகளைக் கொண்டுள்ளது. கலை, கலாச்சாரத்தை அந்த நகரங்கள் சென்னையுடன் பகிர்ந்து கொள்கின்றன. சென்னையுடன் தொடர்புடைய சகோதர நகரங்கள் கீழே. சென்னை பெரு வெள்ளம் 2015 டிசம்பர் மாதம் சென்னையில் கனமழை கொட்டியது. செம்பரம்பாக்கம் ஏரி தூர்வாரப்படாததால் உடையும் அபாயம் ஏற்பட்டது. மேலும் படிக்க சென்னை தினம் வலைவாசல்:சென்னை மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தினமலர் தினமலர்  பகுப்பு:சென்னை சுற்றுப் பகுதிகள் பகுப்பு:தமிழ்நாட்டிலுள்ள மாநகரங்கள் பகுப்பு:இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள்
சென்னை நகரம் எப்போது நிறுவப்பட்டது?
1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22
1,493
tamil
6d57418b8
இரண்டாம் உலகப்போர் அல்லது உலகப் போர் 2 (Second World War) என்பது 1939-45 காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு போர். இதில் அனைத்து பெரும் அரசுகள் (great powers) உள்பட உலக நாடுகளுள் பெரும்பாலானவை ஏதேனும் ஒரு வகையில் ஈடுபட்டன. இவை அச்சு நாடுகள், நேச நாடுகள் என இரு பெரும் தரப்புகளாகப் பிரிந்திருந்தன. உலக வரலாற்றில் அதுவரை கண்டிராத வண்ணம் மிகப்பெரும் அளவில் இப்போர் நடைபெற்றது. ஏறத்தாழ 10 கோடி போர் வீரர்கள் இதில் பங்கு கொண்டனர். ஒட்டுமொத்த போர் என்னும் கோட்பாட்டிற்கு இணங்க, இப்போரில் ஈடுபட்ட நாடுகள் தங்களது ஒட்டுமொத்த பொருளாதார, உற்பத்தி, தொழில், படைத்துறை மற்றும் அறிவியல் வளங்களைப் பயன்படுத்தி தங்கள் எதிரிகளை அழிக்க முயன்றன. இதனால் இராணுவ மற்றும் குடிசார் வளங்களுக் கிடையேயான வேறுபாடு மறைந்து போனது. பெரும் இன அழிப்பு, அணுகுண்டு வீச்சு போன்ற பெரும் உயிரிழப்பு நிகழ்வுகள் நடந்த இப்போரே வரலாற்றில் அதிக அளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய போராகும்.[1] செப்டம்பர் 1, 1939ல் நாசி ஜெர்மனியின் போலந்து படையெடுப்புடன் இப்போர் துவங்கியதாகப் பொதுவாக வரலாற்றாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒரு புறம் பிரிட்டன் அதன் பேரரசில் இடம் பெற்றிருந்த நாடுகள் பிரான்சு ஆகியவை நேச நாட்டு அணியிலிருந்தன. மறுபுறம் நாசி ஜெர்மனி மற்றும் பாசிச இத்தாலி ஆகியவை சேர்ந்து அச்சு அணியை உருவாக்கின. 1939–41ல் அச்சுப் படைகள் மேற்கு ஐரோப்பா முழுவதையும் கைப்பற்றின. பிரிட்டன் மட்டும் அவற்றின் பிடியிலிருந்து தப்பியது. பின் வடக்கு ஆப்பிரிக்காவைக் கைப்பற்ற அச்சுப் படைகள் முயன்றன. ஜூன் 1941ல் அச்சுப் படைகள் சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்ததால் சோவியத் ஒன்றியம் நேச நாட்டு அணியில் இணைந்தது. 1930களின் துவக்கத்திலிருந்து சீனா மீது போர் தொடுத்து அதன் பல பகுதிகளைக் ஆக்கிரமித்திருந்த சப்பானியப் பேரரசும் அச்சு அணியில் இணைந்தது. டிசம்பர் 1941ல் ஐக்கிய அமெரிக்காவைத் தாக்கியதன் மூலம் சப்பான் இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டது. அதுவரை நேச நாடுகளுக்குத் தளவாட வழங்கலை மட்டும் செய்து வந்த அமெரிக்காவும் போரில் நேரடியாக ஈடுபட்டது. சப்பானியப் படைகள் விரைவில் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி இந்தியாவின் கிழக்கெல்லை வரை முன்னேறி விட்டன. 1942 வரை அச்சு நாடுகளுக்குச் சாதகமாக இருந்த போர் நிலவரம் அவ்வாண்டு நேரெதிரானது. ஐரோப்பாவின் கிழக்கு முனையில் அச்சு நாட்டு முன்னேற்றம் சோவியத் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. வடக்கு ஆப்பிரிக்காவிலும் அச்சுப் படைகள் முறியடிக்கப்பட்டு பின்வாங்கின. பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்கப் படைகள் நேச நாட்டு படைகள் இழந்த பகுதிகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கைப்பற்றத் தொடங்கின. 1943ல் இத்தாலி மீது நேச நாட்டுப் படைகள் படையெடுத்தன; விரைவில் அந்நாடு சரணடைந்தது. 1944ல் மேற்கு ஐரோப்பாவை மீட்க நேச நாட்டுப் படைகள் கடல் வழியாகப் படையெடுத்தன. கிழக்கில் சோவியத் படைகளாலும் மேற்கில் பிரிட்டானிய, அமெரிக்க, பிரெஞ்சுப் படைகளாலும் தாக்கப்பட்ட ஜெர்மனி ஈராண்டுகளுக்குள்ளாகத் தோற்கடிக்கப்பட்டது. மே 1945ல் ஜெர்மனியின் சரணடைவுடன் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது. 1943-45 காலகட்டத்தில் பசிபிக் பெருங்கடலின் தீவுக்கூட்டங்களைக் கைப்பற்றிச் சப்பானியத் தாயகத் தீவுகளை நோக்கி முன்னேறிய அமெரிக்கா, ஆகஸ்ட் 1945ல் சப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள்மீது அணு குண்டுகளை வீசியது. இதன் விளைவாகச் சப்பான் சரணடைந்து இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது. இப்போரின் விளைவாக உலக அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. ஐரோப்பிய காலனிய பேரரசுகள் தங்கள் வல்லமையை இழந்தன; ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் காலனிமயமழித்தல் தொடங்கியது. அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் உலகின் புதிய வல்லரசுகளாகின; அவற்றுக்கிடையே பனிப்போர் துவங்கியது. உலக அமைதிக்காகச் செயல்பட ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்டது. கால கட்டம் இரண்டாம் உலகப் போரின் தொடக்கமாகப் போலந்தின் மீதான ஜெர்மன் படையெடுப்பு நடந்த செப்டம்பர் 1, 1939ம் ஆண்டு கருதப்படுகிறது. பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஜெர்மனி மீது போரை அறிவித்தன. பலர் போரின் தொடக்கமாக இரண்டாம் சீன-ஜப்பானிய போர் தொடங்கிய ஜூலை 7, 1937 நாளைக் குறிப்பிடுகின்றனர்.[2] ஆங்கில வரலாற்றாசிரியர் ஏ.ஜே.பி. டெய்லர் (A.J.P. Taylor) கூற்றுப்படி, கிழக்காசியாவின் சீன-ஜப்பானிய போரும், ஐரோப்பிய மற்றும் அதன் காலனி நாடுகளை உள்ளடக்கிய இரண்டாம் ஐரோப்பிய போரும் தனித்தனியாக நடைபெற்று வந்தது. இந்த இரண்டு போர்களும் 1941ல் இணைந்து உலகளாவிய போராக உருவெடுத்து 1945 வரை தொடர்ந்தது. இரண்டாம் உலகப்போரின் இறுதி நாள்குறித்து ஒத்த கருத்து எதுவும் எட்டப்படவில்லை. இரண்டாம் உலகப்போர், ஜப்பான் வீழ்ந்த, ஆகஸ்ட் 14, 1945 அன்று முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்டாலும் ஜப்பான் செப்டம்பர் 2, 1945 அன்றுதான் அதிகாரப்பூர்வமாகச் சரணடைந்தது. சில ஐரோப்பிய வரலாற்று நூல்கள் ஜெர்மனி தோல்வியடைந்த, மே 8, 1945ம் நாளைக் குறிப்பிடுகின்றன. எனினும் ஜப்பான் உடனான நேச நாடுகளின் அமைதி ஒப்பந்தம் 1951ல்தான் கையெழுத்தானது.[3] அவ்வாறே செருமனியுடன் இறுதி தீர்வு ஒப்பந்தம் 1990 வரை மேற்கொள்ளப்படவில்லை.[4] போரின் பின்னணி முதல் உலகப்போரில் மைய சக்தி நாடுகளான ஆஸ்திரிய-ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் ஓட்டோமான் பேரரசின் வீழ்ச்சி, ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளின் அரசியல் மற்றும் ராஜதந்திர நிலவரங்களை வெகுவாக மாற்றியது. 1917ல் ரஷ்ய பொதுவுடைமைக் கட்சியின் போல்ஷெவிக் பிரிவு ரஷ்யாவில் ஆட்சியை கைப்பற்றியது. இதற்கிடையில், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி, செர்பியா, மற்றும் ருமேனியா ஆகிய நேச நாடுகளின் வெற்றி மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி மற்றும் ரஷ்ய பேரரசின் சரிவால் உருவான புதிய நாடுகள் ஆகியவை கிழக்கு ஐரோப்பாவின் வரைபடத்தில் பெரிய மாற்றங்களை உண்டாக்கின. போருக்குப் பிறகு ஐரோப்பாவில் அமைதியின்மை நிலவியது. வெர்சாய் உடன்படிக்கையின்படி, ஜெர்மனி பொருளாதார, பிராந்திய மற்றும் காலனியாதிக்க ரீதியாக நிறைய இழப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. ஜெர்மனி தனது நிலப்பரப்பில் பதின்மூன்று சதவீதத்தையும் தனது அனைத்து காலனிகளையும் இழந்தது. மேலும் ஜெர்மனி மீது ராணுவ ரீதியான பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கிடையில் ரஷ்ய உள்நாட்டு போரின் விளைவாகச் சோவியத் யூனியன் உருவாகியது. 1924ல் லெனினின் மரணத்திற்கு பிறகு சோவியத் யூனியனின் அதிகாரத்திற்கு வந்த ஜோசப் ஸ்டாலின், புதிய பொருளாதார கொள்கைகளுக்குப் பதிலாக ஐந்தாண்டுத் திட்டங்களை அமல்படுத்த தொடங்கினார். ஜெர்மன் பேரரசு 1918–19 ஜெர்மன் புரட்சியில் கலைக்கப்பட்டு, ஒரு ஜனநாயக அரசு உருவானது. போர்களுக்கு இடையிலான காலத்தில், ஜெர்மனி தேசியவாதிகள் மற்றும் கம்யூனிஸ்ட்கள் இடையே உள்நாட்டு மோதல்கள் ஏற்பட்டது. இதே போன்ற நிலைமை இத்தாலியிலும் உருவானது. நேச நாடுகளின் அணியிலிருந்து இத்தாலி சில பிராந்திய வெற்றியை அடைந்தது என்றாலும், இத்தாலிய தேசியவாதிகள் இலண்டன் உடன்படிக்கை மீது கோபம் கொண்டிருந்தனர். 1922 முதல் 1925 வரை, பெனிட்டோ முசோலினி தலைமையில் இத்தாலிய பாசிச இயக்கம் புதிய ரோமானிய பேரரசை உருவாக்கும் உறுதியுடன் அதிகாரத்தைக் கைப்பற்றியது. ஜெர்மனியில், அடோல்ப் ஹிட்லர் தலைமையிலான நாட்சி கட்சி ஆட்சியைப் பிடித்து, 1933 இல், ஹிட்லர் அதிபர் ஆனார். சீனாவில் குவோமின்டாங் கட்சி 1920களில் சீன ஒருங்கிணைப்புக்கான ராணுவ நடவடிக்கையைக் குறுநில மன்னர்களுக்கு எதிராகத் தொடங்கியது. ஆனால் விரைவிலேயே அதன் முன்னாள் சீன கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு எதிராக உள்நாட்டு போரில் இறங்கியது. நீண்ட நாட்களாகச் சீனாவை ஆக்கிரமிக்கும் எண்ணத்தில் இருந்த ஜப்பான், 1931ல், மஞ்சூரியன் சம்பவத்தைக் காரணமாக வைத்து மஞ்சூரியாவை ஆக்கிரமித்து மஞ்சுகோ என்று அழைக்கப்பட்ட பொம்மை அரசாங்கத்தை நிறுவியது. ஜப்பானை எதிர்க்க வலு இல்லாத சீனா, உலக நாடுகள் சங்கத்திடம் உதவி கோரியது. உலக நாடுகள் சங்கம் ஜப்பானை மஞ்சூரிய ஆக்கிரமிப்புக்காகக் கண்டித்தது. அதனால் ஜப்பான், உலக நாடுகள் சங்கத்திலிருந்து விலகியது. பின்னர் இரண்டு நாடுகளும் 1933ல் Tanggu போர் நிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திடும் வரை, ஷாங்காய், ரேஹே மற்றும் ஹெபெய் பகுதிகளில் பல சிறு மோதல்களில் இறங்கின. அதன் பின்னரும் சீன தன்னார்வ படைகள் மஞ்சூரியாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பை தொடர்ந்து எதிர்த்தன. அடால்ஃப் ஹிட்லர், 1923ல் ஜெர்மன் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, 1933ல் ஜெர்மனின் அதிபர் ஆனார். அவர் சனநாயகத்தை ஒழித்து நாஜிக்கொள்கையை அறிமுகப்படுத்தினார். அதோடு வெர்சாய் உடன்படிக்கையை மீறும் விதமாக ராணுவ சீர்திருத்த நடவடிக்கைகளையும் ஆயுத கொள்வனவுகளையும் செய்யத் தொடங்கினார். இதற்கிடையில் பிரான்ஸ், இத்தாலியுடன் கூட்டணி வைக்கும் எண்ணத்துடன், இத்தாலிக்கு எதியோப்பியா மீதான காலனி ஆக்கிரமிப்பை அனுமதித்தது. 1935ல், ஜெர்மனி சார் பேசின் பகுதியை சட்டபூர்வமாகத் தன்னுடன் இணைத்துக் கொண்டதால் நிலைமை இன்னும் மோசமடைந்தது. ஜெர்மனி கட்டுப்படுத்த நினைத்த, ஐக்கிய ராஜ்யம், பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாடுகள் Stresa முன்னணி அமைப்பை உருவாக்கின. கிழக்கு ஐரோப்பாவின் பரந்த பகுதிகளைக் கைப்பற்றும் ஜெர்மனியின் நோக்கங்களால் கவலையடைந்த சோவியத் யூனியன், பிரான்ஸ் உடன் பரஸ்பர உதவி ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் முன்பாக, உலக நாடுகள் சங்கத்தின் ஒப்புதலுக்கு செல்ல வேண்டி இருந்ததால் அவ்வளவாகப் பயன் தராமல் போனது. எனினும், ஜூன் 1935 ல், ஐக்கிய ராஜ்யம் ஜெர்மனி உடன் ஒரு சுயாதீன கடற்படை ஒப்பந்தம் செய்து, சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. ஐரோப்பா மற்றும் ஆசிய நிகழ்வுகளை பற்றிக் கவலை கொண்ட அமெரிக்கா, ஆகஸ்ட் மாதம் நடுநிலைத்தன்மை சட்டத்தை நிறைவேற்றியது. அக்டோபர் மாதம், இத்தாலி எத்தியோப்பியா மீது படையெடுத்தது. இந்தப் படையெடுப்புக்கு ஜெர்மனி ஆதரவு தெரிவித்ததால் அதற்குப் பிரதி பலனாக இத்தாலி, ஜெர்மனியின் ஆஸ்திரிய ஆக்கிரமிப்பு நோக்கத்தின் மீதான ஆட்சேபணைகளை திரும்பப் பெற்றது. ஹிட்லர் வெர்சாய் மற்றும் லோகர்னோ உடன்படிக்கையை மீறி Rhineland பகுதியில் ராணுவத்தை குவித்தார். இதற்கு மற்ற ஐரோப்பிய வல்லரசுகளிடமிருந்து பெரிய அளவில் எதிர்ப்பு வரவில்லை. ஜூலையில் ஸ்பெயின் உள்நாட்டு போர் தொடங்கிய போது, ஹிட்லரும் முசோலினியும் "பாசிச தேசியவாத படைகளையும்", சோவியத் யூனியன் ஸ்பானிய குடியரசையும் ஆதரித்தன. இரண்டு தரப்புமே இந்த சண்டையைத் தங்களது புதிய ஆயுதங்களையும் போர் தந்திரங்களையும் பரிசோதிக்கப் பயன்படுத்தி கொண்டன. 1939 ஆம் ஆண்டு தேசியவாதப்படைகள் போரை வென்றன. அக்டோபர் 1936 இல், ஜெர்மனியும் இத்தாலியும் அச்சு நாடுகள் அமைப்பை உருவாக்கின. ஒரு மாதம் கழித்து, ஜெர்மனியும் ஜப்பானும் அனைத்துலக பொதுவுடைமை இயக்க எதிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஒரு வருடம் கழித்து இத்தாலியும் இந்த ஒப்பந்தத்தில் இணைந்தது. சீனாவில் Xi'an சம்பவத்திற்கு பிறகு குவோமின்டாங் மற்றும் கம்யூனிச படைகள் ஜப்பானை எதிர்த்து ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கும் பொருட்டு யுத்த நிறுத்தத்தை அறிவித்தன. போருக்கு முந்தைய நிகழ்வுகள் இத்தாலியின் எத்தியோப்பிய ஆக்கிரமிப்பு இரண்டாம் இத்தாலிய-அபிசீனிய போர், அக்டோபர் 1935 ல் தொடங்கி மே 1936 இல் முடிவடைந்த ஒரு சுருக்கமான காலனித்துவ போர். இந்தப் போர் இத்தாலிய பேரரசின் ஆயுதப்படைகளுக்கும் எத்தியோப்பிய பேரரசின் (அபிசீனியா) ஆயுதப்படைகளுக்கும் இடையே நடந்தது. போரின் முடிவில் இத்தாலி வெற்றி பெற்று எத்தியோப்பியாவில் தனது காலனியை நிறுவியது. இதனால் எத்தியோப்பியா கிழக்கு ஆப்பிரிக்க இத்தாலியில் இணைக்கப்பட்டது. இந்தப் போர் உலக நாடுகள் அமைப்பு அமைதியை நிலை நாட்டும் ஒரு வலுவான அமைப்பாக இல்லை என்பதை வெளிப்படுத்தியது. இத்தாலியும் எத்தியோப்பியாவும் உலக நாடுகள் அமைப்பின் அங்கத்தினர்களாக இருந்த போதிலும் அந்த அமைப்பு இத்தாலியின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஸ்பானிய உள்நாட்டு போர் ஸ்பானிய உள்நாட்டு போர், 1 ஏப்ரல் 1939 முதல் 17 ஜூலை 1939 வரை ஸ்பெயினில் நடந்த பெரிய உள்நாட்டு போர். ஜெர்மனி மற்றும் இத்தாலி, கிளர்ச்சியில் ஈடுபட்ட பிரான்சிஸ்கோ பிராங்கோ தலைமையிலான தேசியவாத படைகளுக்கு ஆதரவு கொடுத்தன. சோவியத் யூனியன் தனது ஆதரவை இடதுசாரி சிந்தனை உடைய அங்கு ஏற்கனவே ஆட்சியில் இருந்த ஸ்பானிய குடியரசுக்குக் கொடுத்தது. ஜெர்மனியும் சோவியத் ஒன்றியமும் இந்த சண்டையைத் தங்களது புதிய ஆயுதங்களையும் போர் தந்திரங்களையும் பரிசோதிக்கப் பயன்படுத்தி கொண்டன. ஜெர்மனியின் கொண்டோர் லீஜியன் திட்டமிட்டு நிகழ்த்திய ஜெர்னீகா குண்டுவீச்சு அடுத்த பெரிய போர் பொதுமக்கள்மீது பயங்கரவாத குண்டு தாக்குதல்களை உள்ளடக்கலாம் என்ற பரவலான கவலைகளுக்குப் பங்களித்தது. ஜப்பானின் சீன ஆக்கிரமிப்பு ஜூலை 1937ல், ஜப்பான், மார்கோ போலோ பாலம் சம்பவம் நடந்த பிறகு, சீனாவின் முந்தைய தலை நகரான பெய்ஜிங்கை கைப்பற்றியது. இந்தச் சம்பவம் ஜப்பான் முழுமையான சீன ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க வித்திட்டது. இந்த நேரத்தில் விரைவாகச் செயல்பட்ட சோவியத், சீனாவுக்கு தளவாடங்கள் வழங்கி உதவி செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் மூலம் சீன – ஜெர்மனி ஒத்துழைப்பு (1911–1941) முடிவுக்கு வந்தது. சீனப் போர்ப்படை தளபதி சங் கை செக் ஷாங்காய் நகரத்தைப் பாதுகாக்க ஜெர்மனியால் பயிற்றுவிக்கப்பட்ட தனது சிறந்த படைபிரிவை பயன்படுத்தியும் மூன்று மாதங்களுக்குப் பிறகு ஷாங்காய் நகரம் ஜப்பானியர்கள் வசம் வீழ்ந்தது. ஜப்பானிய படைகள் சீனப்படைகளை பின்தள்ளி முன்னேறி டிசம்பர் 1937ல் தலைநகர் நாஞ்சிங்கை கைப்பற்றின. இதன்பின் நடந்த நாஞ்சிங் படுகொலை சம்பவத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் சரணடைந்த சீன வீரர்களும் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான சீனப்பெண்கள் ஜப்பானிய ராணுவ வீரர்களால் கற்பழிக்கப்பட்டனர். ஜூன் 1938ல், சீன படைகள் ஜப்பானிய படைகளின் முன்னேற்றத்தைத் தடுக்க மஞ்சள் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தின. இதன் மூலம் சீனப்படையினருக்கு வுஹன் (Wuhan) நகரத்தில் தற்காப்பு முயற்சிகள் எடுக்கச் சிறிது நேரம் கிடைத்தது. ஆனாலும் வுஹன் நகரம் அக்டோபர் மாதத்தில் ஜப்பானிய படையினரிடம் வீழ்ந்தது. ஜப்பானியர்கள் எதிர்பார்த்தது போல் இந்த வெற்றிகளால் சீனர்களின் எதிர்ப்பை முறியடிக்க முடியவில்லை. சீன அரசாங்கம் தனது இருப்பிடத்தை நாட்டின் உட்பகுதிக்கு மாற்றி அங்கிருந்து போரைத் தொடர்ந்தது. ஜப்பானின் சோவியத் யூனியன் மற்றும் மங்கோலிய ஆக்கிரமிப்பு 1938 ம் ஆண்டு ஜூலை 29 அன்று, ஜப்பானிய படைகள் சோவியத் ஒன்றியத்தில் நுழைந்ததும் காசன் ஏரிப்போர் மூண்டது. இந்தச் சண்டையில் சோவியத் வெற்றி அடைந்தாலும் ஜப்பான் போரின் முடிவைத் தோல்வி என்று ஒப்புக்கொள்ளவில்லை. இதற்குப் பின்னும் ஜப்பானிய-மங்கோலியன் எல்லையை விரிவாக்க 11 மே 1939 அன்று கல்கின் கோல் நதிப்போரை தொடங்கியது. ஜப்பானிய தாக்குதல் முதலில் சிறிது வெற்றி அடைந்தாலும் பின் சோவியத் படைகளிடம் ஜப்பானிய படைகள் பெரிய தோல்வியைத் தழுவின. இந்த மோதல்களின் முடிவுகளால் ஜப்பானிய அரசாங்கத்தின் ஒரு பிரிவினர் சீனப்போரில் சோவியத் ஒன்றியத்தின் தலையீட்டை தவிர்க்கச் சோவியத் ஒன்றியத்துடன் சமாதானமாகச் செல்ல வேண்டும் என்று கருதத் தொடங்கினர். அதற்குப் பதிலாக அவர்கள் ஜப்பானிய அரசாங்கம் பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் கவனம் செலுத்த விரும்பினர். ஐரோப்பிய ஆக்கிரமிப்புகள் மற்றும் ஒப்பந்தங்கள் ஐரோப்பாவில், ஜெர்மனியும் இத்தாலியும், பல வெளிப்படையான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தன. மார்ச் 1938 இல், ஜெர்மனி ஆஸ்திரியாவை தன்னுடன் இணைத்துக்கொண்டது. ஆனாலும் பிற ஐரோப்பிய நாடுகளிடமிருந்து பெரிய அளவில் ஆட்சேபனைகள் எழவில்லை. இதனால் உந்தப்பட்ட ஹிட்லர் செக்கோஸ்லோவாக்கியாவின் ஜெர்மானியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியான சுதேண்டேன்லாந்துவை ஜெர்மனியின் ஒரு பகுதியாகக் கோர ஆரம்பித்தார். விரைவிலேயே பிரிட்டனும் பிரான்சும் செக்கோஸ்லோவாக்கியா அரசின் விருப்பத்திற்கு எதிராக இந்தப் பகுதியை ஜெர்மனுக்கு விட்டுக்கொடுத்தன. இதற்குப் பதிலாக ஜெர்மனியும் வேறெந்த நிலப்பகுதியின் மீதும் உரிமை கோரப்படாது என்று உறுதி அளித்தது. இதற்குப் பின்னும், ஜெர்மனியும் இத்தாலியும், செக்கோஸ்லோவாக்கியா தனது நிலப்பரப்பை ஹங்கேரிக்கும் போலந்திற்கும் விட்டுக் கொடுக்க வைத்தன. மார்ச் 1939 ல் ஜெர்மனி, செக்கோஸ்லோவாக்கியாவின் எஞ்சிய பகுதிகளை ஆக்கிரமித்தது. பின் நாட்டை இரண்டாகப் பிரித்து ஸ்லோவாக் குடியரசு எனும் பகுதியையும் பொஹிமியா மற்றும் மொராவியா பாதுகாக்கபட்ட பகுதியையும் உருவாக்கியது. ஹிட்லர் டான்ஜிக் பகுதியின் மீது உரிமை கோர ஆரம்பித்தும் விழித்துக் கொண்ட பிரிட்டனும் பிரான்சும், போலந்தின் சுதந்திரத்திற்கு உதவி செய்வதாக உறுதி அளித்தன. இத்தாலி அல்பேனியாவை கைப்பற்றியதை தொடர்ந்து இதே உறுதி மொழி ருமேனியாவிற்கும் கிரீசுவிற்கும் அளிக்கப்பட்டது. போலந்திற்கு பிரிட்டன்-பிரெஞ்சு உறுதி மொழியைத் தொடர்ந்து ஜெர்மனியும் இத்தாலியும் நட்புறவு மற்றும் கூட்டணிக்கான இரும்பு ஒப்பந்தம் செய்து கொண்டன. ஆகஸ்ட் 1939 இல், ஜெர்மனியும் சோவியத் ஒன்றியமும் தங்களின் மற்ற நாடுகளுடனான போர்களின் போது பரஸ்பரமாக நடுநிலை வகிக்கும் ரகசிய மொலோடோவ்-ரிப்பன்ட்ராப் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான அரசியல் மற்றும் பிராந்திய உரிமைகளை வரையறுத்துக் கொண்டன. மேற்கு போலந்து (இரண்டாம் போலந்துக் குடியரசு) மற்றும் லித்துவேனியா மீது செல்வாக்கு செலுத்தும் உரிமை ஜெர்மனிக்கும் கிழக்கு போலந்து, பின்லாந்து, எசுத்தோனியா, லாத்வியா மற்றும் பெஸ்ஸரேபியா பகுதிகளின் மீதான உரிமை சோவியத் ஒன்றியத்துக்கும் கிடைத்தது. இதன் மூலம் போலந்து விடுதலை கேள்விக்குறியானது. போரின் போக்கு ஐரோப்பாவில் போர் வெடித்தது (1939–40) செப்டம்பர் 1,1939ல், ஜெர்மனியும் ஸ்லோவாக் குடியரசும் போலந்து நாட்டின் மீது தாக்குதல் நடத்தின. செப்டம்பர் 3,1939ல், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் பொதுநலவாய நாடுகள் ஜெர்மனியின் மீது போர்ப் பிரகடனம் செய்தன. ஆனாலும் பிரான்ஸ் நடத்திய சிறிய அளவிலான சார் படையெடுப்பு தவிர போலந்திற்கு வேறு எந்த உதவியும் கிடைக்கவில்லை. பிரான்சும் பிரிட்டனும் ஜெர்மனியின் பொருளாதாரத்தை சீர்குலைக்கவும் போர் முயற்சிகளைக் கட்டுப்படுத்தவும் ஜெர்மனி மீது கடல் அடைப்பைத் தொடங்கின. செப்டம்பர் 17,1939ல் ஜப்பானுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்ட சோவியத் ஒன்றியம் போலந்து நாட்டைத் தாக்கியது. இவ்வாறு ஜெர்மனி, சோவியத் ஒன்றியம், லிதுவேனியா மற்றும் ஸ்லோவாக் நாடுகளுக்கு இடையே போலந்து துண்டுகளாகச் சிதறினாலும், போலந்து நாட்டினர் சரணடைய மறுத்து நிழல் அரசாங்கத்தையும் புரட்சி படையையும் நிறுவி நேச நாடுகளுடன் இணைந்து தொடர்ந்து போரிட்டனர். மேற்கு ஐரோப்பாவில் (1940–41) ஏப்ரல் 1940 இல், சுவீடனிலிருந்து செல்லும் இரும்புக்காகக் கப்பல் விநியோகத்தைப் பாதுகாக்கவும், இயற்கை நோர்வே நீரை எடுப்பதைத் தடுப்பதற்காக நேச நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைக்கெதிராகவும் செருமனி வெசெரியூபங் நடவடிக்கைமூலம் டென்மார்க்கையும் நோர்வேயையும் ஆக்கிமித்தது.[5] டென்மார்க் உடனடியாகக் கீழ்ப்படிந்தது. நேச நாடுகளின் உதவியுடன் நார்வே போர்த்தொடர் மூலம் இரு மாதங்களுக்குச் சண்டையிட்ட நோர்வே செருமனியினால் வெற்றி கொள்ளப்பட்டது.[6] மத்தியதரை (1940–41) மத்தியதரையில் நடவடிக்கையைத் தொடங்கிய இத்தாலி முதற்கட்டமாகச் சூனில் மால்டாவை முற்றுகையிட்டது. பின்பு, ஆகஸ்த்தில் பிரித்தானிய சோமாலிலாந்துத்தை வெற்றி கொண்டு, செப்தம்பர் 1940 இல் பிரித்தானியாவின் வைத்திருந்த எகிப்து மீது இத்தாலி படையெடுத்தது. இட்லரின் வெற்றியைப் பார்த்துப் பொறாமை கொண்ட முசோலினியின் ஆசையால் ஒக்டோபர் 1940 இல், இத்தாலி கிரேக்கம் மீது போர் தொடுத்தது. ஆயினும் தாக்குதல் சில நாட்களில் பின்வாங்குதலுக்கு உள்ளாகி அல்பேனியா வரை இத்தாலியப் படைகள் பின்வாங்க நேரிட்டது.[7] அச்சு நாடுகள் சோவியற் உரசியா மீது தாக்குதல் (1941) ஒப்பீட்டளவில் ஐரோப்பா, ஆசியா சூழ்நிலை உறுதியாக இருக்கும்போது, செருமனி, சப்பான், சோவியத் உரசியா என்பன ஆயத்தங்களை மேற்கொண்டன. சோவியத்தின் செருமனியுடனான பதட்டம் அதிகரித்திருக்கையிலும், ஐரோப்பிய போரைச் சாதகமாக்கி தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஐரோப்பிய செல்வந்த வள உடைமைகளைக் கைப்பற்ற சப்பான் திட்டமிட்டிருக்கையிலும், 1941 ஏப்ரலில் சோவியற்–சப்பான் நடுநிலை ஓப்பந்தம் சோவியற்றுக்கும் சப்பானுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டன.[8] இத்தருணத்தில் செருனி சோவியற் ஒன்றியம்மீது தாக்குதல் நடத்த மறைவாக ஆயத்தப்பட்டுக் கொண்டிருந்து, சோவிற் எல்லையில் படைகளைக் குவித்துக் கொண்டிருந்தது.[9] பசிபிக்கில் போர் வெடித்தது (1941) 1931ம் ஆண்டில் சீனாவின் மன்சூரியன் பகுதியைக் கைப்பற்றி "மன்சுகோ" எனும் பொம்மை அரசாங்கத்தை உருவாக்கியதன் மூலம் பசிபிக் பகுதியில் போரைத் துவங்கி வைத்தது. இதனால் புருட்டல் (Burutal) என்ற இடத்தில் போர் நடந்தது. அச்சு நாடுகளான இத்தாலி, செர்மனி, மற்றும் சப்பானும் 1940 செப்டம்பர் 27ல் முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பசிபிக் கடல் பகுதியில் கிடைக்கும் இயற்கை வளங்களை அவகரித்துக்கொள்ள ஜப்பான் கனவு கண்டது. 1941 டிசம்பர் 7 அன்று அமெரிக்காவின் அவாய் தீவில் அமைந்துள்ள முத்து துறைமுகத்தைச் சப்பான் தனது போர் விமானங்களால் தாக்குதல் நடத்தியதால் அமெரிக்காவின் போர் கப்பல்களும், விமானங்களும் நாசமாகியது. இத்தீவை சூறையாடியதன் மூலம் தனது நீண்ட நாள் கனவு நிறைவேறியதாகச் சப்பான் எண்ணியது. அமெரிக்கா தன்னை சுதாரித்துக் கொள்ளும் முன்னர் "இபா" விமானத்தளத்தையும் சூறையாடியது. இப்போதுதான் அமெரிக்கா செர்மனிக்கு எதிராகப் போர் தோடுக்க முடிவு செய்தது. டிசம்பர் 1941ல் மேற்கு பசிபிக் கடல் பகுதியில் அமெரிக்காவின் இவான் மற்றும் வடக்கு பசிப்பிக்கில் அமைந்துள்ள வகெ தீவையும் கைப்பற்றியது. 1942 பாதியிலேயே அமெரிக்காவின் பிலிப்பைன்சு, டச்சுக் கிழக்கு இந்தியப் பகுதி, ஹாங்காங், மலேயா, சிங்கப்பூர், மற்றும் பர்மாவையும் கைப்பற்றியது. தாய்லாந்து நடுநிலை வகித்தது. 1942ல் இந்தோ-இங்கிலாங்து படைகள் இந்திய பகுதியிலும், ஆஸ்திரேலியா-நியூசிலாந்து படைகள் நியூ கினிப் பகுதியிலும் சப்பான் படைகளை எதிர்த்தன. சாலமன் தீவில் நடந்த சண்டையால் அமெரிக்கா வெற்றியைத் தனதாக்கிக்கோண்டது.ஜப்பான் 43,000 படைவீரர்களைக் கொண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை கைப்பற்றியதால் அமெரிக்காவின் தளபதி மேக் ஆர்த்தர் ஆஸ்திரேலியாவிற்குத் தன் குடும்பத்துடன் தப்பி ஓடினார். 1944ல் மேக் ஆர்த்தர் பெரும்படையுடன் வந்து பிலிப்பைன்ஸை கைப்பற்றினார். 1945 ஆகஸ்ட் 6 இல் காலை 7 மணிக்கு அமெரிக்காவின் பி-29 விமானம் சப்பானின் இரோசிமா மீது அணுகுண்டை வீசியது. இதனால் 78,000 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னரும் கதிர்வீச்சால் 12,000 பேர் மரணம் அடைந்தார்கள். மூன்று நாட்கள் கழித்து அமெரிக்கா – இங்கிலாந்து நாட்டவரால் தயாரிக்கப்பட்ட அணுக்குண்டை அமெரிக்கா சப்பானின் துறைமுக நகரமான நாகசாகி மீது வீசியது. இதனால் 38,000 பேர் மரணம் அடைந்தனர். 1945ல் ஆகஸ்ட் 15ல் சப்பான் சரணடைந்தது. அச்சு நாடுகள் முன்னேற்றம் தடைபட்டது (1942–43) 1941 ஜூலை மாதவாக்கில் ஜெர்மனி மின்னல் போர் முறையில் பக்கத்து நாடுகள் அனைத்தையும் ஆக்கிரமிப்பு செய்துகொண்டது. ஜெர்மனியின் போர் விமானங்கள் குண்டு மழை பொழியும் ராணுவ வீரர்கள் பாராசூட் மூலம் குதித்து பொதுமக்களைத் துப்பாக்கியால் சரமாரியாக் சுடுவார்கள், என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளக்கூட அவகாசம் கொடுக்கமாட்டர்கள். போலந்து,டென்மார்க்,நார்வே, நெதர்லாந்து, பெல்ஜியம், லக்ஸம்பர்க், பிரான்ஸ் பொன்ற ஐரோப்பிய நாடுகள் அனைத்தையும் போர் துடங்கிய இரண்டு ஆண்டுகளில் ஜெர்மனி ஆக்கிரமிப்பு செய்துகொண்டது. நெடுநாட்கள் நடுநிலையில் இருந்த அமெரிக்கா போர் அரிவிக்காத்துவரை ஜெர்மனி வெற்றிக்கழிப்பில் இருந்தது. ஜெர்மனியின் அகங்காரம்,'ஹிட்லர்' தன்னுடன் ஒப்பந்ததில் கையெழுத்திட்ட மற்ற நாடுகளான ஜப்பானுடனும், இத்தாலியுடனும் தான் படையெடுக்கும் செய்தியைக்கூட தெரிவிப்பதில்லை,யூதர்களையும், எதிரிகளையும் கொடுமைப்படுத்துவதில் காட்டிய ஆர்வத்தில் பாதிகூட தன் சிப்பாய்களின் மீது கவனம் செலுத்தவில்லை. ரஷ்யாவின் மீது ஜெர்மனி படையடுத்தபோது அங்கு குளிர் காலம் துவங்கியிருந்தது. ஹிட்லர் தன் சிப்பாய்களுக்குக் கம்பளி போன்ற அத்தியாவசிய பொருட்களைக்கூட கொடுக்க மனம் இல்லை. தலைமை தளபதிகளாக இருந்தவர்கள் யார் சொல்லும் கேட்டு நடக்கும் நிலையில் இல்லை. ஜெர்மனி வீரர்களால் குளிரில் தன் மனதையும், உடலையும் பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை. 1942 முதல் 1943 வரை நடந்த ரஷ்யா ஜெர்மனி போரில் 25 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டார்கள் எனப் பிபிசி [BBC] தெறிவித்தது. 1943 ஜூலை 5ல் துவங்கிய போரிலிருந்து துவண்டுபோயிருந்த ரஷ்யா செப்டம்பர் 25-ல் சோவியத்தின் சுமுலினிக் (Smolensk) என்ற நகரையும், நவம்பர் 6-ல் கேவிஎ (Kive) என்ற நகரையும், 1944 ஜனவரி 27ல் லெனின் கிராட் நகரையும் ஜெர்மனியிடமிருந்து மீட்டது. பின்னர் ஆபரேசன் பேக்ரசன் (Bagration) மூலம் ஜெர்மனியை அதிரடியாகத் தாக்கியது. ஜூலை 22ல் மிட்ச்ஸ் நகரம் விடுவிக்கப்பட்டது. ஜூலை 24ல் போலந்தின் மக்டனக் நகரமும் ரஷ்யாவின் படைகள் கைப்பற்றியது. ஆகையால் அச்சு நாடுகளின் முன்னேற்றமும் தடைப்பட்டது, மற்றும் அவர்கள் கனவும் தகர்ந்தது. நேச நாடுகள் முன்னேற்றம் (1943–44) 1943ம் ஆண்டு மே மாதம் கவுடால்கேனல் பிரச்சாரத்தின் (Guadalcanal Campaign) நேச படைகள் ஜப்பான் அணிக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இதில் முதன்மையானது மே 1943ல் அலூசியன் தீவுகளில் (Aleutians) நேச படைகள் ஜப்பன் படைகள் அகற்ற அனுப்பப்பட்டனர். இதன் தொடர்ச்சியாகப் பசுப்பிக்கடல் பகுதில் இருந்த ரசுல் தீவுகள் (Rabaul), மார்சல் தீவுகள் (Marshall Islands), மேற்க்கு ஆஸ்திரேலியா அருகில் உள்ள கில்பர்ட் தீவுகள் (Gilbert Islands) போன்ற பல தீவுக்கூட்டங்களைக் கைப்பற்ற படைகள் விரைந்தன. 1944 மார்ச் இறுதியில் நேச நாடுகளின் நோக்கங்கள் நிறைவு பெற்றதுடன் கூடுதலாகக் கரோலின் தீவுகளும் கைப்பற்றப்பட்டது. அதே ஆண்டு ஏப்ரல் மாதம் மேற்க்கு நியூ கினி படையேடுப்பு துவங்கியது. 1943 கோடை மற்றும் வசந்த காலங்களில் மத்திய ரஷ்யாவில் பெரிய தாக்குதல்களுக்கு ஜேர்மனியர்கள் ஆயத்தமானார்கள். குர்ஷ்க் (Battle of Kursk) என்னும் இடத்தில் ஜூலை 1943 4 அன்று ஜெர்மன் படைகள் தாக்குதல் நடத்தின. ஆனால் அந்த சூழ்நிலை சரியில்லாததால் படைகளின் ஹிட்லர் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. அந்த மாதம் (ஜூலை 9) முசோலினி கைது செய்து வெளியேற்றப்பட்டார். 1943 நவம்பர் மாதம் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில், ஜோசப் ஸ்டாலின் சீனக் குடியரசு பகுதியான கெய்ரோவில் சந்தித்தார். நேச நாடுகள் வெற்றியை நோக்கி (1944) 1944ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி மேற்க்கு போர் முனையில் நடந்த சண்டையில் பெல்ஜியம் நாட்டின் துறைமுக நகரமான ஆண்ட்வெர்ப் எனும் இடத்தில் ஜெர்மனி தனது கடைசி பெரும் முயற்சி எடுத்து தோழ்வியைத் தழுவியது.[10] இந்த வெற்றியின் காரணமாக பெரும் முயற்சி எடுக்காமலேயே நேச படைகள் முன்னேறின.[10] மேற்கத்திய படைகள் ஜெர்மனின் கூட்டுப்படைகளைச் சுற்றிவளைத்து தாக்கி வெற்றிகண்டது. இந்த நிகழ்வின் மூலம் இத்தாலி நாட்டின் படைகளிடம் போரின் போக்கில் தேக்க நிலை காணப்பட்டது. 1945ம் ஆண்டின் மத்தியப்பகுதியில் சோவியத் படையும் ஜெர்மன் படையும் ஓடர் (Oder river) ஆற்றில் மோதிக்கொண்டன. இந்த சண்டையின் மூலம் போலந்தும் தாக்கப்பட்டு கிழக்கு பிரஷ்யாவை நேச நாடுகள் கைப்பற்றின.[11] 1945ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி அமெரிக்கா, இங்கிலாந்து, சோவியத் போன்ற நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடி கருங்கடல் பகுதியில் யால்ட்டா மாநாட்டில் கலந்து ஆலோசனை செய்தார்கள். இந்த மாநாட்டில் ஜெர்மனியின் ஆக்கிரமிப்பை அகற்ற சோவியத் ஒன்றியம் ஜப்பானுக்கு எதிரான போரின் குதிக்க தயாரானது.[12] 1945ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐரோப்பிய ஆறான ரைன் ஆறு மூடப்பட்டபோது பால்டிக் கடல் தெற்கு கரை பகுதியில் ஜெர்மனியின் ஆதரவு படைகள் சைலேசியா மற்றும் போமெரேனியா மீது படையெடுப்பு நடத்தியது. அந்த வருடம் மார்ச் மாதம் நேச நாடுகளின் படைகளைச் சூழ்ந்து வடக்கில் ஜெர்மனியின் ரோம்கன் (Remagen) நகர் பகுதியிலும் தெற்கிலும் முற்றுகையிட்டன. அப்போது சோவியத் யூனியன் வியன்னா வரை முன்னேறியது.[13] ஏப்ரல் மாத துவக்கத்தில் சோவியத் படைகளும் போலந்து படைகளும் இத்தாலியின் பகுதிகளையும், மேற்கு ஜெர்மனியின் பெர்லின் பகுதியையும் குறுக்காக தாக்க ஆரம்பித்தார்கள். அதே ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி சோவியத் படைகளும் அமெரிக்க படைகளும் ஜெர்மனியில் ஓடும் எல்பா ஆற்றில் வைத்து சேர்ந்து கொண்டன. 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெர்மனியின் பாராளுமன்றக் கட்டிடமும் அந்த நாட்டின் பாரம்பரிய மாளிகையுமான ரெய்டாக் கைப்பற்றப்பட்டது.[14] இந்த காலகட்டத்தில் ஏராளமான முக்கியப்பொறுப்பில் இருந்த அதிகாரிகளின் மாற்றம் நடந்தது. அமெரிக்க குடியரசுத்தலைவர் தியொடோர் ரோசவெல்ட் ஏப்ரல் 12ம் தேதி மரணமடைந்ததால் ஹாரி எஸ். ட்ரூமன் பதவி ஏற்றார். 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி இத்தாலிய எதிர்ப்பு இயக்கத்தால் முசோலினி கொல்லப்பட்டார்.[15] இரண்டு நாட்கள் கழித்து ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் (Death of Adolf Hitler) தற்கொலை செய்துகொண்டார்.[16] ஜெர்மனியின் படைகள் ஏப்ரல் மாதம் 29ம் தேதி சரணடைவதாக ஒப்புக்கொண்டு (kamerad). மே மாதம் 7ம் தேதி ஜெர்மனி எந்த நிபந்தனையுமின்றி சரணடைந்தது,அதனால் இந்த ஒப்பந்தம் 8ம் தேதி நடைமுறைக்கு வந்தது.[17] அதன் பின்னரும் மே மாதம் 11ம் தேதி வரை ஜெர்மன் இராணுவ குழு மையம் செக் நாட்டின் பராகுவே நகரில் முகாமிட்டிருப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.[18] 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பசுபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள பிலிபைன்ஸ் நாட்டின் லெய்டி (Leyte) தீவிலிருந்து அமெரிக்க-பிலிபைன்ஸ் படைகளின் கூட்டு முயற்சியுடன் மற்ற படைகளை வெளியேற்றக்கோரப்பட்டது. 1945ம் ஆண்டு மார்ச் மாதம் பிலிபைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவை கைப்பற்ற லுசான் (Luzon) என்ற இடத்தில் படைகள் குவிக்கப்பட்டன. மணிலாவை கைப்பற்றும் வரை லுசான் (Luzon), மாண்டனோ (Mindanao) போன்ற இடங்களில் சண்டை நடந்து கொண்டு இருந்தது.[19] மார்ச் மாதம் 9ம் தேதி இரவு அமெரிக்க விமானப்படை விமானம் போயிங் B-29 சூப்பர்ஃபோர்ட்ரெஸ் தீயை உமிளும் அணுக்குண்டை ஜப்பானின் நகரின் மீது போட்டு கொஞ்ச நேரத்தில் 100,000 மக்களை கொன்று குவித்தது. அமெரிக்க-இங்கிலாந்தின் கூட்டு தாக்குதலால் அடுத்த ஐந்து மாதங்களில் ஜப்பானில் 66 நகரங்களில் பொதுமக்கள் 3,50,000 முதல் 5,00,000 பேர் தீக்கிரையாகி இறந்தனர்.[20] 1945ம் ஆண்டு மே மாதம் ஆஸ்திரலிய படைகள் இந்தோனேசியா, மலேசியா, புரூணை, போன்ற நாடுகளின் ஆட்சியின் கீழ் இருந்த போர்னியோ தீவில் உள்ள எண்ணெய் வயல்களை கைப்பற்ற தீவிரம் காட்டின. மார்ச் மாதத்தில் அமெரிக்கா, பிரித்தானியா, சீனா போன்ற கூட்டுப்படைகள் வடக்கு பர்மாவில் ஜப்பான் படைகளைத் தோற்கடித்தன. பின்னர் பிரித்தானியா படைகள் மியான்மர் நாட்டின் தலைநகரான ரங்னை அடைய மே மாதம் 3ம் தேதி ஆனது.[21] 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 மற்றும் 7ம் தேதிகளில் மேற்கு ஹுனான் போரில் சீன படைகள் எதிர் தாக்குதல் நடத்தத் துவங்கின. அமெரிக்க படைகள் மார்ச் மாதம் இமோஜீமாவையும் ஜூன் மாத இறுதியில் ஒகினவாவையும் ஜப்பானை கைப்பற்றி முன்னேறிக் கொண்டிருந்தது.[22] அமெரிக்கப்படைகள் ஜப்பானை அழித்துக்கொண்டிருந்த அதே வேளையில் நேச நாடுகளின் நீர்மூழ்கிக்கப்பல்கள் ஜப்பானுக்கு எந்த நாட்டின் உதவியும் கிடைக்க விடாமல் தடுத்துக்கொண்டிருந்தது.[23] 1945ம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நேச நாடுகளின் தலைவர்கள் ஜெர்மனியின் போட்ஸ்டாம் நகரின் சந்தித்தார்கள். அப்போது எந்த விதமான நிபந்தனையுமின்றி சரணடைவதாக ஒப்பந்தம் (Potsdam Agreement)[24] செய்ய உறுதியளிக்கப்பட்டது. அதே வேளையில் ஐக்கிய ராஜ்யம் பொது தேர்தலை சந்தித்தது அதில் கிளமெண்ட் அட்லீ வெற்றிபெற்றார். இரண்டாம் உலகப்போரின் தலைவராக கருத்தப்பட்ட வின்ஸ்டன் சர்ச்சில் தோழ்வியடைந்தார்.[25] ஜப்பான் நாடு 1945ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி செய்துகொண்ட ஒப்பந்ததை மீறுவது கண்டு அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து ஆகஸ்ட் மாத துவக்கத்தில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி போன்ற நகரங்களில் அடுத்தடுத்து அணுக்குண்டு மழைபொழிந்தது. 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சரணடைய ஒப்புக்கொண்டு, செப்டம்பர் மாதம் 2ம் தேதி நேசப்படைகளின் கப்பலான மிசோரியில் வைத்து சண்டைமுடி கையோப்பம் இட்டு சரண்டைந்தனர். இரஷ்யாவின் செஞ்சேனை கூரில் தீவுகளைப் கைப்பற்றியது.[26][27][28] 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ம் ஜப்பான் போரை விடுத்து சரணடைய ஒப்புக்கொண்டது, ஆனால் இறுதியாக செப்டம்பர் 2, 1945 அன்று அமெரிக்க போர் கப்பல் யுஎஸ்எஸ் மிசோரி கப்பலில் வைத்து சரணடைந்தனர்.[26][27][28][29] அச்சு நாடுகள் வீழ்ச்சி - நேச நாடுகள் வெற்றி (1944–45) இவற்றையும் பார்க்க முதலாம் உலகப் போர் அன்சாக் நாள் 11.11.11. நூற்றாண்டு நினைவு மேற்கோள்கள் வெளியிணைப்புக்கள் Atlas of the World Battle Fronts (July 1943 to August 1945) * பகுப்பு:போரியல்
இரண்டாம் உலகப் போர் எப்போது முடிந்தது?
1945
2,570
tamil
715de8bbe
கண்டம் (() (Continent) எனப்படுவது தொடர்ச்சியான மிகப்பெரிய நிலப்பரப்பைக் குறிக்கும். புவி ஏழு கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை எந்தவொரு குறிப்பிட்ட காரணங்களால் அன்றி மரபுசார்ந்தே அடையாளப்படுத்தபடுகின்றன. மிகப் பெரியதிலிருந்து சிறியதாக இவை: ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அன்டார்க்டிக்கா, ஐரோப்பா, மற்றும் ஆத்திரேலியா ஆகும்.[1] நிலவியல் படிப்பில் கண்டங்கள் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்புகள் மூலமாக விவரிக்கப்படுகின்றன. முன்னதாகக் கண்டப்பெயர்ச்சி என அறியப்பட்ட கண்டங்களின் நகர்வுகளையும் மோதல்களையும் பிரிகைகளையும் ஆய்வுறும் துறையே தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு கல்வியாகும். வரையறைகளும் செயல்பாடுகளும் மரபுப்படி, "கண்டங்கள் பெரும் நீர்பரப்புகளால் பிரிக்கப்பட்ட, பெரிய, தொடர்ச்சியான, தனித்த நிலத்தொகுதிகளாகும்."[2] பொதுவாக மரபுப்படி அறியப்படும் ஏழு கண்டங்கள் அனைத்துமே நீர்பரப்புகளால் பிரிக்கப்பட்ட தனித்த நிலப்பரப்புகள் அல்ல. "பெரிய" என்ற அளவுகோள் தன்னிச்சையான வகைப்பாடாகும்: புறப்பரப்பளவுள்ள கிறீன்லாந்து உலகின் மிகப்பெரும் தீவாகக் கருதப்படுகிறது; ஆனால் புவிப்பரப்பளவுள்ள ஆத்திரேலியா ஓர் கண்டமாகக் கருதப்படுகிறது. அதேபோல, தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற அளவுகோலும் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டு கண்டத் திட்டுகளும் பெருங்கடல் தீவுகளும் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன; வடக்கு, தெற்கு அமெரிக்க கண்டங்களும் இக்கோட்பாட்டிற்கு முரணாக அமைந்துள்ளன. ஐரோவாசியாவும் ஆபிரிக்காவும் எந்தவொரு இயற்கையான நீர்ப்பரப்பாலும் பிரிக்கப்படாதபோதும் இரண்டு கண்டங்களாகக் கருதப்படுகின்றன. தொடர்ச்சியான நிலப்பகுதியான ஐரோப்பாவும் ஆசியாவும் இரு கண்டங்களாகப் பிரிக்கப்படும்போது இந்த முரண் இன்னும் தெளிவாகிறது. புவியின் நிலப்பகுதிகள் ஒரே தொடர்ச்சியான உலகப் பெருங்கடலால் சூழப்பட்டிருக்க இதுவம் பல பெருங்கடல்களாகக் கண்டங்களாலும் பிற புவியியல் அளவீடுகளாலும் பிரிக்கப்பட்டுள்ளது.[3][4] கண்டங்கள் சிலநேரங்களில் முதன்மை நிலப்பரப்புகளிலிருந்தும் விரிவுபடுத்தப்பட்டு உலகின் அனைத்து நிலப்பகுதிகளும் ஏதேனும் ஒரு கண்டத்தின் அங்கமாகக் கொள்ளப்படுகிறது.[5] கண்டங்களின் பரப்புக்கள் கண்டம் என்பதன் குறுகிய பொருளாகத் தொடர்ச்சியான[6] நிலப்பரப்பாக அல்லது பெருநிலப்பகுதியாக கொள்ளலாம்; கண்டத்தின் எல்லைகளாகக் கடற்கரைகளும் நில எல்லைகளும் அமைந்தன. இந்தக் கோட்பாட்டின்படி ஐரோப்பிய கண்டம் (சிலநேரங்களில் "தி கான்டினெட்") என்பது ஐரோப்பிய பெருநிலப்பகுதியைக் குறிப்பிடுவதாக அமைந்தது; இதில் தீவுகளான பெரிய பிரித்தானியா, அயர்லாந்து, ஐசுலாந்து போன்றவை நீக்கப்பட்டன. அதேபோல ஆத்திரேலியக் கண்டம் என்ற சொல் ஆத்திரேலியப் பெருநிலப்பகுதியை மட்டுமே குறிக்க தாசுமேனியா , நியூ கினி போன்ற தீவுகள் விலக்கப்பட்டன. இக்கோட்பாட்டின் தொடர்ச்சியாக, ஐக்கிய அமெரிக்கக் கண்டம் என்ற சொல்லாட்சி வட அமெரிக்காவின் மத்தியில் தொடர்ச்சியாக உள்ள 48 மாநிலங்களையும் (கனடாவால் பிரிக்கப்பட்டுள்ள) வடமேற்கிலுள்ள அலாஸ்காவையும் மட்டுமே உள்ளடக்கி அமைதிப் பெருங்கடலில் உள்ள ஹவாய் தீவை விலக்கி வரையறுக்கிறது. நிலவியல் அல்லது புவியியல் அணுகுமுறையில், கண்டம் தொடர்ச்சியான நிலப்பகுதியைத் தவிர ஆழமற்ற நீரில் மூழ்கிய அண்மைப்பகுதிகளையும் (கண்டத் திட்டு)[7] அப்பரப்பிலுள்ள தீவுகளையும் (கண்டத் தீவுகள்), உள்ளடக்குகிறது;இவையும் கண்டத்தின் கட்டமைப்பின் அங்கமாக விளங்குகின்றன.[8] இதன்படி கடற்கரைகள் கடலின் ஏற்றத்தாழ்வுகளால் மாறிவருவதால், கடலோர கண்டப்படுகையே உண்மையான எல்லையாகும்.[9] இந்த அணுகுமுறைப்படி பெரிய பிரித்தானியாவின் தீவுகளும் அயர்லாந்தும் ஐரோப்பாவின் அங்கமே; ஆத்திரேலியாவும் நியூ கினியும் இணைந்து ஒரே கண்டமே. பண்பாட்டுக் கூறுகளின்படி, கண்டத்தின் எல்லை கண்டப்படுகைகளையும் கடந்து தீவுகளையும் கண்டத் துண்டுகளையும் உள்ளடக்குகிறது.இதன்படி, ஐசுலாந்து ஐரோப்பாவின் அங்கமாகவும் மடகாசுகர் ஆபிரிக்காவின் அங்கமாகவும் கருதப்படுகிறது. இக்கோட்பாட்டையே மேலும் விரிவுபடுத்தி, சில புவியியலாளர்கள் ஆஸ்திரேலேசிய புவிப்பொறையுடன் அமைதிப் பெருங்கடலில் உள்ள தீவுகளையும் ஒன்றிணைத்து ஓசியானியா எனக் குறிப்பிடலாயினர். இது புவியின் அனைத்துப்பரப்பையும் கண்டங்களாகவும் கண்டம் போன்ற நிலத்தொகுதிகளாகவும் பிரிக்க வழி செய்கிறது.[10] கண்டங்கள் பிரிப்பு ஒவ்வொரு கண்டமும் தனித்த நிலப்பகுதியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை கோட்பாட்டிலிருந்து பொதுவாகத் தன்னிச்சையான, வரலாற்று மரபுகளால் விலக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஏழு கண்டங்களில் ஆத்திரேலியாவும் அன்டார்க்டிக்காவும் மட்டுமே மற்ற கண்டங்களிலிருந்து தனித்து உள்ளன. பல கண்டங்கள் முற்றிலும் தனித்த பகுதிகளாக வரையறுக்கப்படவில்லை; " ஏறக்குறைய தனித்த நிலப்பரப்புகளாக"பிரிக்கப்பட்டுள்ளன.[11] ஆசியாவும் ஆபிரிக்காவும் சூயஸ் குறுநிலத்தால் இணைக்கப்பட்டுள்ளன; வடக்கு, தெற்கு அமெரிக்காக்கள் பனாமா குறுநிலத்தால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு குறுநிலங்களுமே (isthmus) அவை இணைக்கும் பெருநிலப்பகுதிகளை விட மிகக் குறுகியவை. இவற்றின் குறுக்காகச் செயற்கையான நீர்வழிகள் ( முறையே சூயஸ் , பனாமா கால்வாய்கள்) இந்த நிலப்பரப்புகளைப் பிரிக்கின்றன. எந்தவொரு கடலும் பிரிக்காத ஐரோவாசியாவை ஆசியா என்றும் ஐரோப்பா என்றும் பிரிப்பது பிறழ்வு ஆகும். ஐரோவாசியாவை ஒரே கண்டமாக ஏற்றுக்கொண்டால் உலகில் ஆறு கண்டங்களாகப் பிரிக்கலாம். இந்த அணுகுமுறை நிலவியலிலும் புவியியலிலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஐரோவாசியாவை ஐரோப்பா என்றும் ஆசியா என்றும் பிரிப்பது ஐரோப்பிய மையவாதத்தின் எச்சமாகக் கருதப்படுகிறது: "நிலப்பரப்பு, பண்பாடு மற்றும் வரலாற்று பன்முகத்தில், சீன மக்கள் குடியரசும் இந்தியாவும் முழுமையான ஐரோப்பிய நிலப்பரப்பிற்கு ஒத்தது; எந்தவொரு தனி ஐரோப்பிய நாட்டிற்கும் அல்ல. ஒரு சிறந்த மாற்றாக (அப்போதுகூட முழுமையற்ற) பிரான்சை, முழுமையான இந்தியாவுடன் அல்லாது, உத்தரப் பிரதேசம் போன்ற ஒரு இந்திய மாநிலத்துடன் ஒப்பிடுவதே சரியானதாகும்."[12] இருப்பினும், வரலாற்று, பண்பாட்டுக் காரணங்களுக்காக, ஐரோப்பாவை தனி கண்டமாகப் பல வகைப்படுத்தல்களிலும் கருதப்படுகிறது. ஏழு கண்டங்கள் கோட்பாட்டில் வட அமெரிக்காவும் தென் அமெரிக்காவும் தனி கண்டங்களாகக் கருதப்படுகின்றன. இருப்பினும் அவற்றை ஒரே கண்டமாக, அமெரிக்காவாகவும் பார்க்கலாம். இந்தப் பார்வை இரண்டாம் உலகப் போர் வரை ஐக்கிய அமெரிக்காவில் நிலவியது; சில ஆசிய ஆறு கண்ட கோட்பாடுகளிலும் இது கடைபிடிக்கப்படுகிறது.[13] மேலும் எசுப்பானியா, போர்த்துக்கல் மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில், இவை ஒரே கண்டமாகக் கருதப்படுகின்றன. இந்தப் பயன்பாட்டை அமெரிக்க நாடுகளின் அமைப்பு போன்ற பெயர்களில் காணலாம். 19வது நூற்றாண்டிலிருந்து சிலர் "அமெரிக்காக்கள்" என்ற சொல்லாக்கத்தை பயன்படுத்துகின்றனர். கண்டங்களைத் தனித்த நிலப்பகுதிகளாக வரையறுத்து அனைத்து தொடர்ச்சியான நிலப்பகுதிகளையும் ஒன்றிணைத்தால், ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா அடங்கிய ஒற்றை நிலப்பகுதி ஆப்பிரிக்க-யூரேசியா என்றழைக்கப்படுகிறது. இதன்படி நான்கு கண்டங்கள் உள்ளன: ஆப்பிரிக்க-யூரேசியா, அமெரிக்கா, அன்டார்ட்டிகா மற்றும் ஆத்திரேலியா. பனி யுகத்தில், கடல்மட்டம் தாழ்ந்திருந்தபோது பல கண்டப்படுகைகள் உலர்நிலமாக, நிலப்பாலங்களாக வெளிப்பட்டன; அக்காலத்தில் ஆத்திரேலியா (கண்டம்) ஒரே தொடர்சியான நிலப்பகுதியாக இருந்தது. அதேபோல அமெரிக்காக்களும் ஆபிரிக்க-யூரேசியாவும் பெரிங் பாலத்தால் இணைக்கப்பட்டிருந்தன. பெரிய பிரித்தானியா போன்ற பிற தீவுகளும் தங்கள் கண்டத்தின் பெருநிலப்பகுதிகளுடன் இணைந்திருந்தன. அக்காலத்தில் மூன்று கண்டங்களே இருந்தன: ஆபிரிக்க-யூரேசிய-அமெரிக்கா, அன்டார்ட்டிகா, ஆத்திரேலியா-நியூ கினியா. கண்டங்களின் எண்ணிக்கை பலவேறு முறைகளில் கண்டங்கள்பிரிக்கப்படுகின்றன: ஏழு கண்டங்களக்ச் சீன மக்கள் குடியரசு, இந்தியா, மேற்கு ஐரோப்பாவின் சிலபகுதிகள் மற்றும் பெரும்பாலான ஆங்கிலமொழி பேசும் நாடுகளில் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அமெரிக்காவை ஒரே கண்டமாகக் கொண்ட ஆறு கண்டங்கள் வடிவம் எசுப்பானிய மொழி பேசும் நாடுகளிலும்[24] கிரீசு போன்ற சில ஐரோப்பிய நாடுகளிலும் (சிலவற்றில் மனித நடமாட்டம் இல்லாத அன்டார்க்டிக்காவை தவிர்த்து ஐந்தாகவும்) கற்றுக் கொடுக்கப்படுகிறது.[18] மனித நடமாட்டம் இல்லாத அன்டார்க்டிக்காவைத் தவிர்த்த ஐந்து கண்ட வடிவத்தைப் பன்னாட்டு ஒலிம்பிக் குழு ஏற்றுக்கொண்டு[16][17] ஒலிம்பிக் சின்னங்கள்#ஒலிம்பிக் சின்னத்தில் ஐந்து வளையங்களைக் கொண்டுள்ளது.[25] ஆத்திரேலியாவையும் அடுத்துள்ள பசிபிக் மற்றும் அமைதிப் பெருங்கடல் தீவுகளையும் குறிக்க சிலநேரங்களில் ஓசியானியா அல்லது ஆஸ்திரலேசியா என்ற சொற்பயன்பாட்டையும் காணலாம். இப்பயன்பாட்டை கனடா [20] இத்தாலி, கிரேக்கம் (நாடு)[18] மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகள், போர்த்துக்கல், எசுப்பானியா நாட்டு பாடப்புத்தகங்களில் காணலாம். பரப்பளவும் மக்கட்தொகையும் கீழ்வரும் அட்டவணையில் ஒவ்வொரு கண்டத்தின் பரப்பளவும் மக்கள்தொகையும் தொகுக்கப்பட்டுள்ளது.[26] எல்லாக் கண்டங்களும் சேர்த்து மொத்தப் பரப்பளவு 148,647,000 ச.கி.மீ. இது உலகின் பரப்பில் ஏறத்தாழ 29.1 சதவிகிதம் ஆகும். மேற்சான்றுகள் வெளி இணைப்புகள் * பகுப்பு:மேற்கோள் வழு-Defined multiple times
உலகின் இரண்டாவது பெரிய கண்டம் எது?
ஆப்பிரிக்கா
252
tamil
67b7f2604
பூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி ஆகும். இவை மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் சைவ உணவையும் உண்கின்றன. பூனைகள் பண்டைய எகிப்தில் வழிபாட்டு விலங்குகளாக இருந்து வந்ததால், அவைகளை பொதுவாக வீட்டில் வளர்த்து வணங்கினர். பூனைகள் இறந்தால் அதற்கும் பிரமிடுகள் கட்டி, சில எலிகளையும் பாடம் செய்து எகிப்தியர்கள் புதைத்துள்ளனர். அரசர்களுடன் அவர்களது பூனைகளுக்கும் பிரமிடுகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டது. உடற்கூறியல் பூனைகள் பொதுவாக 2.5 லிருந்து 7 கிலோகிராம் வரை (5.5–16 இறாத்தல்) எடை கொண்டவையாக இருக்கின்றன. சிறிய அளவிலான பூனைகள் 1.8 கிலோ கிராமுக்குக் (4.0 இறாத்தல்) குறைவாகக் காணப்படும். மெய்னீ கூன் (Maine Coon) போன்ற சிலவகைப் பூனையினங்கள் எப்போதாவது 11 கிலோகிராமுக்கும் கூடுதலாக வளர்கின்றன. உலக சாதனையாக 21 கிலோகிராம் எடையுடைய பூனைகளும் இருந்திருக்கின்றன. அதேபோல உலகிலேயே மிகச்சிறிய வயதான பூனையின் எடை கிட்டத்தட்ட 1 கிலோவாக இருந்துள்ளது [2] [3].பெரல் பூனைகள் அவை உட்கொள்ளும் குறையளவு உணவுகளால் எடை குறைந்தும் மெலிந்தும் காணப்படும் [3] . போஸ்டன் பகுதியில் சராசரி ஆண் பெரல் பூனையின் எடை 4 கிலோகிராம். சராசரி பெண் பெரல் பூனையின் (Feral cats) எடை 3 கிலோகிராம் [4] . பூனைகளின் சராசரி உயரம் 23 முதல் 25 செ.மீ (9-10 அங்குலம்) மற்றும் தலை/உடல் நீளம் 46 செ.மீ (18 அங்குலம்) ஆகும். பொதுவாக ஆண் பூனைகள் பெண் பூனைகளை விட பெரிதாகக் காணப்படும். பூனையின் வால் சராரியாக 30 செ.மீ (12 இங்குலம்) நீளமுடையதாக இருக்கும்[5]. பூனைகளுக்கு 30 முள்ளந்தண்டு எலும்புகள் உண்டு (மனிதனுக்கு 33). நுண்ணிய கேள்விப்புலனைக் கொண்ட பூனைகளின் காதுகளில் 32 தசை நார்கள் காணப்படுகிறது. பூனைகளின் அதிகூடிய சத்த அதிர்வுகள் 64 கிலோஹேர்ட்ஸ்.நாளாந்தம் 12-16 மணி நேரம் உறங்கும். சாதாரணமாக உடல் வெப்பநிலை, 38 - 39 °C (101 - 102.2 °F) வரை காணப்படும். பூனைகள் விரைவான இனப்பெருக்க விகிதம் கொண்டவை. மிதக்கும் விலா எலும்புகளால் பூனையின் முன்னங்கால்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் தம் தலை நுழையும் எந்த சிறிய இடத்திலும் பூனைகளின் உடல் நுழையும். முன்னங்கால்களிலில் ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் நான்கு நகங்களும் பூனைகள் கொண்டு இருக்கும். பூனைகள் நடக்கும் போது ஓசை கடத்தாமலிருக்கும் வகையில் மெத்தை போன்ற பாத அமைப்பை பெற்றுள்ளது. நுகரும் புலன், மனிதனை விட 14 மடங்கு அதிகம். பூனைகளின் நாக்கில் இனிப்புச் சுவையை அறியும் நுகர்மொட்டுகள் இல்லாததால், பூனைகளால் இனிப்புச் சுவையை அறிய இயலாது. மரபணு மற்றத்தினால் இத்திறனை பூனைகள் இழந்துவிட்டன. மற்ற சுவைகளை பூனைகள் அறியும். பூனைகள் இரு மாதங்கள் வரை தமது குட்டிகளை சுமக்கும். ஒரு பூனை தமது வாழ்நாளில் 150 குட்டிகள் வரை ஈனும். வழக்கமான பாலூட்டிகளிலிருந்து பூனையின் மண்டையோடு மாறுபட்டுள்ளது. மிகப்பெரிய கண்டாங்கு குழிகளும் (eye sockets) பலமான மற்றும் சிறப்புவாய்ந்த தாடைகளும் பூனையை மற்ற விலங்குகளிலிருந்து வேறுபடுத்துகிறது[6]:35 . தாடையிலுள்ள 35 பற்களும் இறையுணவை கொள்ளும் வகையிலும் மாமிசத்தைக் துண்டாக்கிக் கிழிக்கும் வகையிலும் தகவமைந்துள்ளன. இரண்டு நீளமான கோரைப்பற்களால் இரையின் கழுத்தில் மரணத்தை விளைவிக்கக்கூடிய அழுத்தம் மிகுந்த கடியினை முதுகெலும்புகள் மற்றும் தண்டுவடத்தில் ஏற்படுத்தி துண்டித்து அதனை துளைக்கும் அளவுக்கு சேதத்தை உண்டாக்குகிறது. இதனால் இறை மீளமுடியாத பக்கவாதத்தால் நிலைகுலைந்து இறக்க நேரிடுகிறது[7].மற்ற பூனையினங்களைக் காட்டிலும் வீட்டுப் பூனைகளுக்கு குறுகிய இடைவெளி கொண்ட கோரைப்பற்கள் காணப்படுகிறது. இவ்வமைப்பு அது விரும்பி உண்ணும் மிகச்சிறிய முதுகெலும்பு கொண்ட கொறிக்கும் விலங்குகள் (rodents) விலங்குகளை லாவகமாகப் பிடிக்க உதவுகிறது[7] . முன்கடைவாய்ப்பல் மற்றும் முதல் கடைவாய்ப்பல் இரண்டும் இணைந்து வாயின் இருபுறமும் சோடியாக அமைந்து மாமிசத்தை துண்டு துண்டாக கத்தரிக்கோல் போன்று நறுக்குகின்ற பணியைச் செய்கின்றன. பூனைகள் உணவூட்டத்தில் திறமையானதாக உள்ளன. அவற்றால் பூனைகள் 'சிறிய கடைவாய்ப்பற்களால் உணவை மெல்லும் முடியாது என்பதால் இவ்வகையான பற்கள் அமைப்பும் ஊட்டமுறையும் இன்றியமையாததாக இருக்கின்றன, பூனைகள் பெரும்பாலும் உணவினை மென்று திண்பதற்குப் தகுதியானவை அல்ல[6]:37. ஆரோக்கியம் சமீபத்திய ஆண்டுகளில் பூனைகளின் சராசரி ஆயுட்காலம் உயர்ந்துள்ளது. 1980 களின் முற்பகுதியில், இது ஏழு ஆண்டுகள்,1995 இல் 9.4 ஆண்டுகள் உயர்ந்து, 2014 இல் 12-15 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. எனினும் பூனைகள் 30 வயது வரை உயிர்வாழ்ந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. உலகின் வயதான பூனை, க்ரீம் பஃப், 38 வயதில் இறந்தது. வியாதிகள் தொற்று நோய்கள், ஒட்டுண்ணிகள், காயங்கள் மற்றும் நாட்பட்ட நோய் உள்ளிட்ட பல வகையான சுகாதார பிரச்சினைகள் பூனைகளை பாதிக்கலாம். பல நோய்களுக்கு தடுப்பூசிகள் கிடைக்கின்றன, மேலும் உள்நாட்டு பூனைகளுக்கு வழக்கமாக புழுக்கள் மற்றும் பறவைகள் போன்ற ஒட்டுண்ணிகளை அகற்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ராடென்டிசைடு, பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் போன்ற வெளிப்படையான ஆபத்துக்களுக்கு கூடுதலாக, பூனைகள் தங்கள் மனித பாதுகாப்பாளர்களால் பாதுகாப்பாக கருதப்படுகிற பல இரசாயன விஷத்தால் பாதிக்கப்படலாம்.பூனைகளில் நச்சுத்தன்மையினால் பாதிக்கபடக் காரணம் மிகவும் பொதுவான இரசாயனங்களான எலி பாஷானம் முதலியவை அதற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். உணர்வுகள் பூனைகள் சிறந்த இரவுப்பார்வையைக் கொண்டுள்ளன. குறைந்த அளவிலான ஒளியை டபீட்டம் லூசிடம் என்ற இமைப்பானது கண்ணின் விழித்திகை்குப் பின்னால் குவிப்பதால் குறைந்த அல்லது மங்கலான ஒளியிலும் துள்ளியமான பார்வைத்திறன் கொண்டுள்ளன [8]. இவை மனிதனுக்குப் பார்க்கத் தேவைப்படும் ஒளியில் ஆறில் ஒரு பங்கு ஒளியிலேயே பார்க்கக்கூடிய திறன் படைத்தவை. பூனைகள் சிறந்த கேட்கும் திறனைக் கொண்டுள்ளதுடன் அவற்றால் பரந்த அளவிலான மீத்திறன் கொண்ட ஒலிகளையும் கேட்க முடியும். இவற்றால் மனிதன், நாய் என்பவற்றை விட உயர் சுருதியினாலான ஒலிகளைத் தெளிவாகக் கேட்க முடியும்[9][10]. பூனை வளர்ப்பு பூனைகள் 10,000 ஆண்டுகளாக மனிதனால் பழக்கப்படுத்தப்படுவதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். முதன் முதலில் ஆப்ரிக்கர்களே பூனைகளை பழக்கப்படுத்தினர். ஆரம்பத்தில் எலிகள் உண்பதற்காகவே பூனைகள் பழக்கப்படுத்தப்பட்டன. பின்னர் அவை மனிதனுடன் பழகும் விதத்தினால் ஈர்க்கப்பட்டு வளர்க்கத் தொடங்கியுள்ளனர். இயல்பு பூனைகள் இயல்பாக மாமிசப்பட்சிகள் ஆகும். சிறிய வகை பாலூட்டிகளை வேட்டையாடுவதில் கைத்தேர்ந்தவை. சிறிய தூரம் மட்டுமே வேகமாக இரையை விரட்டிச் சென்று துரத்தும் திறன் பெற்றவை. பூனைகள் தனிமை விரும்பிகளாகும். எனவே நாய்கள், சிங்கங்கள் போல் அல்லாமல், புலிகள், சிறுத்தைகளைப் போல இனத்துடனும், மனிதர்களிடமும் தனித்தே இருக்கும். நாய்கள் போன்று சிறப்புக் கவனங்களை பூனைகள் எதிர்பார்ப்பதில்லை. பூனைகள் அதிகம் விளையாடும் திறன் பெற்றவை. அவை விளையாடுவதே அவற்றை வேட்டைக்காரர்களாக மாற்றுகிறது. பழகும் முறை பூனைகள் வெகுவாக மனிதனிடம் பழகக்கூடியவை. தனது அன்பினை வெளிப்படுத்த வாலை ஆட்டி, உரசி தெரியப்படுத்தும். பெயர் சொல்லி அழைத்தால், கொஞ்சினால், சிரித்தால் புரிந்து கொள்ளும் திறன் பூனைகளுக்கு உண்டு. தம்மை வளர்ப்போரின் அருகே அடிக்கடி வந்து படுத்துக் கொள்வதும் உண்டு. வகைகள் பூனைகளில் இரண்டு வகைகள் உள்ளன. அவை காட்டுப்பூனை, மற்றும் வீட்டுப்பூனை என்பனவாகும். காட்டுப்பூனை என்பது மாமிசம் மட்டுமே உண்ணும். வீட்டில் வளர்க்கப்படும் வீட்டுப்பூனையானது சைவ உணவையும் உண்ணும். பொதுவாக அனைத்து ஆண் பூனைகளும் டாம் என்று அழைக்கப்படுகின்றன, அனைத்து பெண் பூனைகளும் ராணி என்று அழைக்கப்படுகின்றன. பூனைக் குட்டிகள் கிட்டன், கிட்டி, புசிகேட் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன. சுத்தம் பூனைகள் மிகுந்த தன்சுத்தம் உடையவையாகும். பூனைகள் தனது ரோமங்களை நக்கி முழுமையாக சுத்தம் செய்யும். சுத்தம் செய்யும் போது நாக்கில் ஒட்டிக் கொண்டு வரும் ரோமங்களை பந்து போல் வாயில் எடுக்கும் திறன் பெற்றவை பூனைகளாகும். தன்சுத்தம் செய்யும் பூனை தன்சுத்தம் செய்யும் பூனை கடிக்கும் பூனை உணவு பூனைகள் மாமிசப் பட்சிகளாகும். வீட்டில் உள்ள பூனைகளுக்கு உணவு சரியான விகிதாச்சாரத்தில் கிடைக்கப் பெற வேண்டும். நாய்கள் உண்ணும் உணவை பூனைகள் சாப்பிடுமேயானால் அதன் பார்வை குறைபடும். புகழ் பெற்றவர்களின் பூனைகள் நபிகள் நாயகம் பூனைகளை வளர்த்து வந்தார். போப் xvi பெனிடிக் பூனையை தன் சகோதரன் போல் வளர்த்துள்ளார். எர்லைட் ஹெர்மிங்வே என்னும் அமெரிக்க கவிஞர் மரபணு குறைபாடுடைய பூனைகளை வள்ர்த்துள்ளார்.அதனால் மரபணு குறைபாடுடைய பூனைகளுக்கு ஹெர்மிங்வே பூனைகள் என்று கூறுவது வழக்கம் ஆனது. முன்னால் அமெரிக்க ஜனாதிபதியான பில்கின்டன் சாக்ஸ் என்று ஒரு பூனை வளர்த்து வந்தார். ஜனாதிபதியின் பிரத்தியேக அறை, பத்திரிக்கையாளர் அறை என எங்கும் செல்லும் வசதியையும் அது பெற்றிருந்தது. மேற்கோள்கள் வெளியிணைப்புகள் The dictionary definition of kitty at Wiktionary Data related to Cat at Wikispecies Media related to CatWarning: Commons link does not match Wikidata– please check (this message is shown only in preview) at Wikimedia Commons Animal Care at Wikibooks Quotations related to Main Page at Wikiquote for Felis catus – Cat articles View the in Ensembl பகுப்பு:பூனைகள் பகுப்பு:பாலூட்டிகள் பகுப்பு:பூனைப் பேரினம்
பூனையின் சராசரி ஆயுட்காலம் என்ன?
12-15
3,784
tamil
ec0f8c13d
திராவிட முன்னேற்றக் கழகம் (தி. மு. க., Dravida Munnetra Kazhagam) தமிழ்நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். தந்தை பெரியார் என அழைக்கப்படும் ஈ. வெ. இராமசாமியால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்திலிருந்து கா. ந. அண்ணாதுரையும், வேறு சில தலைவர்களும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 7, பவளக்காரத் தெரு, ஜார்ஜ் டவுன், சென்னையில் செப்டம்பர் 17, 1949இல் [4] கூடி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்குவது என்று முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 18 மாலை 4 மணிக்கு ராயபுரம் ராபின்சன் பூங்காவில் பேரணி நடத்தப்பட்டது. அக்கட்சியின் முதல் பொதுச்செயலராக திரு.அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடி, திமுகவின் கொடியாகத் தேர்வு செய்யப்பட்டது. வரலாறு 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் தி.மு.க. பங்கேற்கவில்லை. “திராவிடர்களின் கருத்தையறியாமலும் திராவிடர்களின் ஜீவாதார உரிமைக்கு ஊறு செய்யும் வகையிலும் ஒரே கட்சியரின் எதேச்சாதிகார முறைப்படியும் தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தை தி.மு.க. கண்டிப்பதன் அறிகுறியாக தேர்தலில் தி.மு.க. தனது வேட்பாளர்களை நிறுத்தவில்லை” என்று அக்கட்சி அறிவித்தது. இருப்பினும் “ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய திராவிட இன மொழிவழி மாநிலங்களை உள்ளடக்கிய தனியாட்சி பெற்ற திராவிட நாடு” கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளர்களை ஆதரிப்பதாக அக்கட்சி அறிவித்தது. 1953 சூலை 14, 15இல் அன்றைய முதல்வர் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்துக்கு எதிர்ப்பு, “டால்மியாபுரம்” பெயரை “கல்லக்குடி” என பெயர் மாற்றக்கோரி போராட்டம், தமிழ்நாட்டு மக்களை ‘நான்சென்ஸ்’ என நேரு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம் ஆகிய மும்முனைப் போராட்டங்களை தி.மு.க. நடத்தியது. 1956 மே 17, 18, 19, 20 தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. 2ஆவது மாநில மாநாட்டில் தேர்தலில் பங்கேற்பது என அக்கட்சி முடிவெடுத்தது. எந்த ஒரு மாநிலமும் எப்பொழுது வேண்டுமானாலும் இந்திய யூனியனில் இருந்து பிரிந்து சென்று தனித்து இயங்கும் உரிமையை தானே பெற்றிருக்க அரசியல் அமைப்பு “திருத்தம் வேண்டும்” என்று அத்தேர்தலில் தி.மு.க. கூறியது. மொத்தம் 112 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களில் அக்கட்சி வென்றது. 1958 மார்ச் 2இல் தி.மு.க. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு “உதயசூரியன்” தேர்தல் சின்னமாக ஒதுக்கப்பட்டது. 1959இல் நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தலில் 90 இடங்களில் வென்ற தி.மு.க. முதன்முறையாக மாநகராட்சி மேயர் பொறுப்பேற்றது. ஏப்ரல் 19, 1961இல் அக்கட்சியிலிருந்து ஈ.வெ.கி. சம்பத் வெளியேறி தமிழ்த் தேசியக் கட்சியை உருவாக்கினார். இது தி.மு.க.வில் ஏற்பட்ட முதல் பிளவு. இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக 1961இல் திமுக பேரணி நடத்தியது. 1962இல் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் “திராவிட நாடு” விடுதலை கோரிக்கையை முன் வைத்து பிரச்சாரம் செய்தது தி.மு.க. இராஜாஜியின் சுதந்திராக் கட்சி, முஸ்லீம் லீக் ஆகியவற்றுடன் இணைந்து போட்டியிட்ட தி.மு.க. 50 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் அக்கட்சிப் பொதுச்செயலாளர் அண்ணாதுரை, காஞ்சிபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் தோல்வியுற்றார். 1963இல் “பிரிவினை” பேசுவோர் தேர்தலில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் “பிரிவினைத் தடுப்புச் சட்ட மசோதா”-வை இந்திய அரசு அறிவித்தது. இதையடுத்து 1963 சூன் 8, 9, 10 தியதிகளில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் முக்கியக் கொள்கையான “திராவிட நாடு” விடுதலை கோரிக்கையில் மாற்றம் செய்யப்பட்டது. “தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய நான்கு மொழிவழி மாநிலங்களும் இந்திய அரசுரிமை, ஒருமைத் தன்மை, அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்குள் இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்களைப் பெற்று நெருங்கிய திராவிடக் கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது” என்று அக்கட்சியின் ‘குறிக்கோள்’ பகுதியில் மாற்றம் செய்யப்பட்டது. அதே ஆண்டில் நவம்பர் 17இல் இந்தியை, இந்தி பேசாத மக்களின் மீது இந்தியை திணிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 17-ஐ எரிப்பதாக தி.மு.க. அறிவித்தது. 1965 சனவரி 26 முதல் இந்தி கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து “சனவரி 26-இந்திய குடியரசு நாளை” துக்கநாளாக அறிவித்து கிளர்ச்சி நடத்தியது தி.மு.க. தி.மு.க.வினர் ஆட்சி செய்த காலமும் சில நிகழ்வுகளும் 1967-ல் நடைபெற்ற மூன்றாவது தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தி.மு.க. 138 இடங்களை வென்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. 1967 மார்ச் 6-ல் அக்கட்சிப் பொதுச்செயலாளர் அண்ணாதுரை தமிழ்நாட்டின் முதல்வரானார்.[5] அவர் 1969 பிப்ரவரி 3 வரை (மறையும் வரை) மட்டுமே ஆட்சியிலிருந்த போதும் சென்னை மாநிலத்தை “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்தது (1969 சனவரி 14); தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கையாக இரு மொழித் திட்டத்தை அறிவித்தது (1968 சனவரி 23-ல்). தாலி, சாதி, புரோகிதர் ஆகியவை இல்லாமல் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் சட்டம் ஆகியவற்றை நிறைவேற்றினார் அண்ணா. அண்ணா மறைந்தபின் அக்கட்சியில் 1969 சூலை 26 முதல் முதன்முறையாக ‘தலைவர் பதவி’ உருவாக்கப்பட்டது. அண்ணாவிற்கு பிறகு அண்ணாதுரை 1969 பிப்ரவரி 3ஆம் நாள் மறைந்ததை அடுத்து, அண்ணா அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே தி.மு.க சார்பில் அடுத்த முதல்வர் யார் என்பதில் கருணாநிதிக்கும், கல்வியமைச்சர் இரா. நெடுஞ்செழியனுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. பெரியார் தலையிட்டு சமரசம் ஏற்படுத்தி கருணாநிதியை போட்டியின்றி முதல்வராக்க முயற்சி செய்தும் நெடுஞ்செழியன் சம்மதிக்கவில்லை. பின்னர் கருணாநிதி சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் நெடுஞ்செழியன் அமைச்சரவையில் இருந்து விலகிக்கொண்டார். மு. கருணாநிதி, தமிழ்நாட்டு முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.[6] 1969- சூன் மாதத்தில் மு. கருணாநிதி தி.மு.க. தலைவராகவும், இரா. நெடுஞ்செழியன் பொதுச்செயலராகவும் தேர்வுசெய்யப்பட்டனர். 1971இல் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் 203 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 184 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்தது. திமுகவின் இந்த மாபெரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிச் சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. மு. கருணாநிதி, 2ஆவது முறையாக முதல்வர் பொறுப்பேற்றார். 1972 அக்டோபர் 14இல் கட்சிப் பொருளாளராக இருந்த நடிகர் எம்.ஜி.ஆர் தி.மு.க.விலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். தி.மு.க.வில் ஏற்பட்ட மிகப் பெரிய பிளவாக இது கருதப்பட்டது. 1974 ஏப்ரல் 20இல் ‘மாநில சுயாட்சி’ கோரும் தீர்மானத்தை தி.மு.க. அமைச்சரவை சட்டப் பேரவையில் நிறைவேற்றியது. 1975 சூன் 25இல் இந்திய அரசால் அவசரநிலை அறிவிக்கப்பட்டதையடுத்து 1976 ஜனவரி 31-ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 1976 முதல் 1976 வரை ஆட்சிப் பொறுப்பிலிருந்த தி.மு.க.வின் செயல்பாடுகளில் அனைத்து சாதியினர் அர்ச்சகராதல் சட்டம் (1971 சனவரி 12), அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டும் (1970) ஆகியவை முக்கியமானவையாகும். 1977 சூலை 4இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. 230 இடங்களில் போட்டியிட்டு 48 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக அமைந்தது. 1976 அவசரநிலை காலத்தில் அதிக பாதிப்புக்குள்ளானது தி.மு.க.. 1976 முதல் 1980 வரை அமைந்த நிலையற்ற மத்திய அரசுகளால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்தில் கொண்டும், நெருக்காடி கால நடவடிக்கைகளுக்காக, இந்திராகாந்தி அவர்கள் சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் திமுகவிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாலும், 1980இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் தி.மு.க. போட்டியிட்டது. நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் 16 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 16 இடங்களிலும் சட்டப் பேரவையில் 114 இடங்களில் போட்டியிட்டு 38 இடங்களிலும் வென்றது. 1976 முதல் 1989 வரை 13 ஆண்டு காலம் அண்ணா தி.மு.க. ஆளுங்கட்சியாகவும், தி.மு.க. எதிர்க்கட்சியாகவும் செயல்பட்டன. எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. தமிழீழத் தமிழர் போராட்டம், ஆதரவு இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றில் தீவிர ஈடுபாடு காட்டியது. 1983 ஆகத்து 10-ல் தமிழீழத் தமிழர் பிரச்சினையில் இந்திய, தமிழ்நாடு அரசுகளின் நிலைப்பாட்டைக் கண்டித்து தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, பொதுச் செயலர் பேராசிரியர் க. அன்பழகன் ஆகியோர் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். 1984-ல் நடைபெற்ற தேர்தலிலும் தி.மு.க. 24 இடங்களை மட்டும் பெற்று எதிர்க்கட்சியாக இருந்தது. இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக 1986 டிசம்பர் 9-ல் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். 1987 திசம்பர் 24-ல் எம்.ஜி.ஆர் மறைந்ததையடுத்து நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 203 இடங்களில் போட்டியிட்டு 151 இடங்களை வென்ற திமுக 1991 சனவரி 30 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. 1989 திசம்பர் 29-ல் பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கும் சட்டத்தை தி.மு.க. அரசு நிறைவேற்றியது. இந்திய அரசின் ரகசியங்களை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு திமுக அரசு தெரிவிப்பதாகக் கூறி தி.மு.க. அரசு 1991-ல் பதவி நீக்கம் செய்யப்பட்டது. 1991 மே 21-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இறந்தபோது நடைபெற்ற தேர்தலில் 174 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 2 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. 1991 முதல் 1996 வரை நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் (அக்கட்சியின்) ‘முரசொலி’ ஏடு ஒடுக்குமுறைக்குள்ளானது. 1993 அக்டோபர், 11-ல் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வை. கோபால்சாமி நீக்கப்பட்டார். இதையடுத்து, தி.மு.க.வில் 2-வது பெரிய பிளவு உருவானது. 1995-ல் தமிழீழத் தமிழர்களுக்கான ஆதரவுப் பேரணியை திமுக நடத்தியது. 1996 ஏப்ரல் 27-ல் நடைபெற்ற தேர்தலில் 166 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. “மெட்ராஸ்” என்று ஆங்கிலத்தில் சென்னை அழைக்கப்படுவதை “சென்னை” என்றே ஆங்கிலத்திலும் எழுத வேண்டும்; வாகன பதிவு எண்கள், விளம்பரப் பலகைகள், கோவில்கள் ஆகியவற்றில் தமிழை நடைமுறைப்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 2017 சனவரியில் செயல் தலைவர் பதவியில் மு. க. இசுதாலின் செயல்படுவார் என கருணாநிதி அறிவித்தார்.[7][8] மாநாடுகள் மாநில மாநாடுகள் திமுக. பல்வேறு மாநில மாநாடுகளை நடத்தியிருக்கிறது. அவை: முதல் மாநில மாநாடு 1951ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 13, 14, 15, 16ஆம் நாள்களில் சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ.திடலில் க. நா. அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. [9] இரண்டாவது மாநில மாநாடு 1956ஆம் ஆண்டு மே மாதம் 17, 18, 19, 20ஆம் நாள்களில் திருச்சி பந்தயத்திடலில் இரா. நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது. [10] பத்தாவது மாநில மாநாடு 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 15, 16 ஆம் நாள்களில் திருச்சியில் மு. கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. [11]. இம்மாநாடு திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிராட்டியூர் அருகே நடைபெற்றது. [12] மாவட்ட மாநாடுகள் திருச்சி மாவட்டம் திருச்சி மாவட்ட இரண்டாவது திமுக மாநாடு 26-4-1953ஆம் நாள் லால்குடி பாண்டியனார் அரங்கில் நடைபெற்றது, மாநாட்டிற்கு ஈ.வெ.கி.சம்பத் தலைமை வகித்தார்; மாநாட்டை கே. ஏ. மதியழகன் திறந்து வைத்தார். அண்ணாதுரை, இரா. நெடுஞ்செழியன், மு.கருணாநிதி, என்.எஸ்.இளங்கோ, எஸ்.கே.சாமி, ஏ.வி.பி. ஆசைத்தம்பி, க. அன்பழகன், என்.வி.நடராசன், இராசு-தங்கப்பழம், தில்லை வில்லாளன், அரங்கண்ணல், தாமரைச்செல்வன், இளம்வழுதி, கண்ணதாசன், சத்தியவாணி முத்து, பூங்கோதை, அருண்மொழி ஆகியோர் உரையாற்றினர். நாடாளுமன்றத் தேர்தல்களில் தி.மு.க. 1967-ல் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. முதன்முறையாகப் போட்டியிட்டது. போட்டியிட்ட 25 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதேபோல் 1971-ல் 23 இடங்கள், 77-ல் 19, 80-ல் 16, 84-ல் 27, 89-ல் 31, 91-ல் 29, 96-ல் 17, 98-ல் 6 இடங்களை திமுக பெற்றது. 1989-ல் இந்தியாவில் உருவான தேசிய முன்னணியில் முக்கியப் பங்கு வகித்த திமுக அம்முன்னணி அமைத்த அமைச்சரவையிலும் பங்கேற்றது. 1996-ல் உருவான ஐக்கிய முன்னணி அமைச்சரவையிலும் திமுக பங்கேற்றது. புதுவை, காரைக்கால், கருநாடகம், ஆந்திரம், மும்பை, அந்தமான் ஆகிய மாநிலங்களில் இக்கட்சிக்கு கிளைகள் உண்டு. திமுக.வின் அதிகாரப்பூர்வ ஏடாக ‘முரசொலி’ வெளிவந்து கொண்டிருக்கிறது. இக்கட்சியின் சார்பில் இந்திய மக்களவையில் 1998 ஆம் ஆண்டு 6 பேர், மாநிலங்களவையில் 7 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். பின்னர் 1999 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 18 இடங்களில் போட்டியிட்டு 11 உறுப்பினர்களை பெற்றது. இந்த தேர்தலில் திமுக, தனது அடிப்படை கொள்கைகளுக்கு எதிரான பாரதிய ஜனதாவுடனும் தன்னிடமிருந்து வெளியேறி புதிய கட்சியை உருவாக்கிய மதிமுகவுடனும் தேர்தல் உடன்பாடு வைத்தது. 2001 ஆம் ஆண்டுத் தேர்தலில் திமுக, பாரதிய ஜனதா, தலித் அமைப்புகளுடன் தேர்தலை சந்தித்து தோல்வியை எதிர்கொண்டது. 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க உள்ளிட்ட ஏழு கட்சிகளுடன் தி.மு.க கூட்டணி அமைத்து வரலாறு காணாத விதமாக போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது. இதன் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய மந்திரிகளாக பொறுப்பேற்றனர். மத்திய ஆட்சியில் பல முக்கிய முடிவுகளை எடுக்கும் சக்தியாக தி.மு.க உருவானது. 15ஆவது மக்களவைத் தேர்தல் ஐக்கிய முன்னணியின் அங்கமான திமுக தமிழகத்தில் 21 தொகுதிகளில் போட்டியிட்டு பின்வரும் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றது. [13]அதன் விபரம் [14] சிறீபெரும்புதூர் - த. ரா. பாலு தருமபுரி - தாமரைச்செல்வன் நாமக்கல் - காந்தி செல்வன் நீலகிரி (தனி) - ஆ. ராசா மதுரை - மு.க. அழகிரி கன்னியாகுமரி - ஹெலன் டேவிட்சன் தூத்துக்குடி - செயதுரை திருவண்ணாமலை- வேணுகோபால் நாகப்பட்டனம் (தனி)- ஏ.கே.எசு. விஜயன் அரக்கோணம் - செகத்ரட்சகன் வட சென்னை - டி.கே.எசு. இளங்கோவன் மத்திய சென்னை - தயாநிதி மாறன் கள்ளக்குறிச்சி - ஆதிசங்கர் கிருஷ்ணகிரி - சுகவனம் பெரம்பலூர் - நெப்போலியன் தஞ்சாவூர் - எஸ். எஸ். பழனிமாணிக்கம் இராமநாதபுரம் - ஜே. கே. ரித்தீசு 16ஆவது மக்களவைத் தேர்தல் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் தி.மு.க. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோற்றது. இதன் மூலம் மக்களவையில் தி.மு.க. உறுப்பினர்கள் ஒருவர்கூட இல்லாத சூழ்நிலை உருவானது. 2016 சட்டமன்ற தேர்தல் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.[15] 89 தொகுதிகளில் வெற்றிபெற்று பிரதான எதிர் கட்சியாக உள்ளது. வெளியீடுகள் சட்டதிட்டங்கள், 1952 [17] தீர்மானங்கள், 1952 [18] நம்நாடு என்னும் நாளிதழ் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இதழாக 1953 சூன் 15 முதல் அண்ணாதுரையை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்தது. [19] The Answer என்னும் ஆங்கில வெளியீடு. 15-சூன் -1953ஆம் நாள் நடைபெற்ற மும்முனைப்போராட்டத்தில் சென்னையில் கைதுசெய்யப்பட்ட கா. ந. அண்ணாதுரை, இரா. நெடுஞ்செழியன், ஈ. வெ. கி. சம்பத், என். வி. நடராசன், கே. ஏ. மதியழகன் ஆகியோர் நீதிமன்றத்தில் தந்த வாக்குமூலங்கள். [20] மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:திராவிட முன்னேற்றக் கழகம் பகுப்பு:இந்திய அரசியல் கட்சிகள் பகுப்பு:தமிழ்நாட்டு திராவிட அமைப்புகள் பகுப்பு:1949இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள் பகுப்பு:மு. கருணாநிதி
இந்தியாவில் திமுக அரசியல் கட்சி எப்போது நிறுவப்பட்டது?
1949
351
tamil
d0f6b4894
சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும் சி.வி.இராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில் இந்தியாவில், தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராபள்ளிக்கு அருகில் அமைந்த திருவானைக்காவல் எனும் ஊரில் பிறந்தார். இந்தியாவிலேயே முழுமையாகப் படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும். வாழ்க்கை சந்திரசேகர வெங்கட்ராமன் தந்தையார், இரா. சந்திரசேகர் ஐயர் ஒரு ஆசிரியர். தன் தந்தை விசாகப்பட்டினத்தில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றியதால் வெங்கட்ராமன் அங்கேயே தன் பள்ளி படிப்பை முடித்தார். அவர் 1904 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் தன்னுடைய B A பட்டப்படிப்பை சிறப்பு தகுதியுடன் முடித்தார். வெங்கட்ராமன் தன் முதுகலை பட்டப்படிப்பை அதே கல்லூரியில் தொடர்ந்தார். 1907 ஆம் ஆண்டு ஜனவரியில் M A பட்டப்படிப்பு தேர்வில் எல்லாப் பாடங்களிலும் சாதனை மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1907ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிதித்துறை தேர்வு எழுதி அதில் முதிலிடம் பெற்றார். 1907ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கொல்கத்தாவில் உள்ள கணக்குத் துறை தலைமை அலுவலராக தனது வாழ்க்கையைத் துவங்கினார். சி. வி. இராமன் அவர்கள் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907ல் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார். என்றாலும் பணியின் கூடவே கொல்கத்தாவில் உள்ள மருத்துவர் மகேந்திரலால் சர்க்காரால் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் (Indian Association for the Cultivation of Science), ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி (செய்முறை) ஆய்வுகள் நடத்தி வந்தார். பின்னர் 1917ல் கொல்கத்தாப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த பாலித் பீட இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்தார். கொல்கத்தாவிலே 15 ஆண்டுகள் கழித்த பிறகு, இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (Indian Institute of Science) 15 ஆண்டுகள் கழித்தார். அதன் பின் அவராகவே நிறுவிய இராமன் ஆய்வுக்கழகத்தில் (Raman Research Insitute) இயக்குநராக கடைசி நாட்கள் வரை பணியாற்றி வந்தார். இவர் நவம்பர் 21, 1970ல் இவ்வுலகில் இருந்து பிரிந்தார். அறிவியலுக்கு இவருடைய ஆக்கப்பணிகள் சி. வி. இராமன் 1926ல் இந்திய இயற்பியல் ஆய்விதழ் (Indian Journal of Physics) என்னும் அறிவியல் இதழை நிறுவி அதன் தொகுப்பாசிரியராகவும் பணிபுரிந்தார். இந்திய அறிவியல் அறிவுக்கழகத்தைத் (Indian Science Academy) ஆரம்பித்து, பின்னர் தானே அதன் தலைவராகவும் தொடக்கம் முதலாக இருந்து பணியாற்றினார். அதனுடைய அறிவியல் நடப்புகளை வெளியீடு செய்வதிலும் முன் நின்றார். அதுமட்டும் அல்ல இவர் பெங்களூரில் இன்றைய அறிவியல் கழகம் (Current Science Association) என்னும் கழகத்தைத் தொடக்கி, அதன் தலைவராகவும் பணி புரிந்து, அக்கழகத்தின் வழி புகழ் பெற்ற கரன்ட் சயன்ஸ் (Current Science) என்னும் ஒர் அறிவியல் ஆய்விதழையும் நிறுவினார். அறிவியல் ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் இந்திய இயற்பியல் ஆய்விதழில் (Indian J. Physics) இவர் ‘வெ’ப்ருவரி 28, 1928 ல் ஒரு புதிய ஒளிர்ப்பாடு (கதிர்வீச்சு) A new Radiation என்னும் தலைப்பில் தம் ஆய்வுக்கண்டுபிடிப்புகளின் கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்ணனுடன் சேர்ந்து அதன் முடிவுகளை வெளியிட்டார். இப்புது அறிவியல் ஒளி விளைவுதான் இவருக்கு நோபல் பரிசு பெறவும் தன் பெயரால் ஒரு அறிவியல் விளைவு பெயர் பெறவும் வழி வகுத்தது. இவர் இந்திய ஆய்விதழில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வயலின் (பிடில்) , மிருதங்கம் போன்ற இசைக்கருவிகள் பற்றியும் நன்கு ஆய்வு செய்து புதுக் கண்டுபிடிப்புகள் செய்துள்ளார். பகலில் வான் ஏன் நீல நிறமாக இருக்கின்றது என்பது பற்றியும் இவர் விளக்கியிருக்கிறார். இவருடைய உடன்பிறந்தாரின் மகனான சுப்பிரமணியன் சந்திரசேகரரும் நோபல் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்புகள் இவருக்கு லண்டனிலுள்ள ராயல் சொசைட்டியின் ஃபெல்லோசிப் 1924 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசு இவருக்கு 1929 ஆம் ஆண்டில் "நைட் ஹுட்" எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. 1929ல் ஆண்டில் இங்கிலாந்து அரசியாரால் சர் பட்டம் அளிக்கப் பட்டது.[1] இத்தாலி நாட்டின் உயர்பதக்கமான "மேட்யூச்சி" பதக்கம் வழங்கப்பட்டது. மைசூர் அரசர் "ராஜ்சபாபூசன்" பட்டத்தை 1935 ஆம் ஆண்டில் வழங்கினார். பிலிடெல்பியா நிறுவனத்தின் "பிராங்க்ளின்" பதக்கம் 1941 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னா விருது 1954 ஆம் ஆண்டில் அவருடைய வாழ்நாளிலேயே அளிக்கப்பட்டது. 1957 ஆம் ஆண்டில் அகில "உலக லெனின் பரிசு" அளிக்கப்பட்டது. இவற்றையும் பார்க்க இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் மேற்கோள்கள் உசாத்துணைகள் இயற்பியல் மேல்நிலை இரண்டாமாண்டு தொகுதி- 1 தமிழ் நாட்டுப் பாடநூல் கழகம் FUNDAMENTALS OF MOLECULAR SPECTROSCOPY, CN Banwell, Tata Mc Grow Hill Publishing Company Limited (1988) வெளி இணைப்புகள் -விகடன் பகுப்பு:1888 பிறப்புகள் பகுப்பு:தமிழ் அறிவியலாளர்கள் பகுப்பு:நோபல் இயற்பியற் பரிசு பெற்றவர்கள் பகுப்பு:இந்திய அறிவியலாளர்கள் பகுப்பு:இந்திய இயற்பியலாளர்கள் பகுப்பு:நோபல் பரிசு பெற்ற தமிழர்கள் பகுப்பு:நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் பகுப்பு:திருச்சி மாவட்ட நபர்கள் பகுப்பு:லெனின் அமைதிப் பரிசு பெற்றவர்கள் பகுப்பு:1970 இறப்புகள்
இந்திய அறிவியல் அறிஞர் சர் சந்திரசேகர வெங்கட ராமன் எப்போது பிறந்தார்?
நவம்பர் 7 ஆம் நாள், 1888
630
tamil
41f1a49bb
மலேசியா (Malaysia), தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு கூட்டாட்சி அரசியல்சட்ட முடியாட்சியுள்ள ஒரு நாடாகும். 13 மாநிலங்களையும் மூன்று நடுவண் மண்டலங்களையும் கொண்டுள்ள மலேசியா, தென்சீனக் கடலினால் மலேசியத் தீபகற்பம், கிழக்கு மலேசியா (மலேசிய போர்னியோ) என இரண்டு பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மலேசியத் தீபகற்பம் வடக்கே தாய்லாந்துடன் நில, மற்றும் கடல் எல்லையையும், தெற்கே சிங்கப்பூர், வடகிழக்கே வியட்நாம், மேற்கே இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் கடல் எல்லைகளையும் கொண்டுள்ளது. கிழக்கு மலேசியா புரூணையுடனும், இந்தோனேசியாவுடனும் நில, மற்றும் கடல் எல்லைகளையும், பிலிப்பீன்சு, வியட்நாம் ஆகியவற்றுடன் நில எல்லைகளையும் கொண்டுள்ளது. மலேசியாவின் தலைநகரும், மிகப்பெரிய நகரமும் கோலாலம்பூர் ஆகும். புத்ராஜாயா நடுவண் அரசின் நிருவாகத் தலைநகராகும். 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்டுள்ள மலேசியா உலகின் 44-வது மக்களடர்த்தி கூடிய நாடாகும். ஐரோவாசியாக் கண்டத்தின் தென்முனையான தாஞ்சுங் பியாய் மலேசியாவில் அமைந்துள்ளது. வெப்ப வலயத்தில் அமைந்துள்ள மலேசியா 17 பெரும்பல்வகைமை நாடுகளில் ஒன்றான மலேசியாவில் இனப்பெருக்க உயிரினங்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளன. மலேசியாவின் மொத்த பரப்பளவு 329,847 சதுர கிலோமீட்டர்கள் (127,350 சதுர மைல்கள்). தீபகற்ப மலேசியாவின் மக்கள் தொகை மட்டும் 20 மில்லியன். தற்போது மலேசியாவின் மக்கள் தொகை 2.5 கோடி. இவர்களில் பெரும்பான்மையினர் மலாய் மக்கள். இவர்களுக்கு அடுத்து சீனர்களும் இந்தியர்களும் கூடுதலாக வாழ்கின்றனர். பெரும்பான்மையான மலேசிய மக்கள் இஸ்லாமைப் பின்பற்றுகிறார்கள். இஸ்லாமே மலேசியாவின் தேசிய சமயமும் ஆகும். மலாய் மொழி தேசிய மொழியாகும். 1957ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்திடமிருந்து விடுதலை பெற்றது. இப்போது மலேசியாவின் மன்னராக ஐந்தாம் முகம்மது ஆட்சியில் உள்ளார். இருபதாம் நூற்றாண்டில் கூடுதலான பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தது. 2018 மே 9 இல்நடைபெற்ற 14ஆவது பொதுத்தேர்தலுக்குப் பின் மகாதீர் பின் முகம்மது மலேசியாவின் 7வது பிரதமராக 10ஆம் திகதி மே மதம் 2018 பதவியேற்றார்.[12] வரலாறு வரலாற்றுக்கு முந்தைய காலம் வரலாற்றுக்கு முந்தைய காலச் சான்றுகள் மலேசியாவில் அதிகமாகக் கிடைத்திருக்கின்றன. 2 லட்சம் வருடங்களுக்கு முந்தைய கல்லாயுதங்கள் புகித் ஜாவாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மலேசியாவின் சரவாக்கில் அமைந்துள்ள நியா குகைகளில் 40000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித எச்சங்கள் காணப்படுகின்றன. பூர்வகுடி செமாங் இனத்தவர்களின் மூதாதையர்கள் சுமார் 40000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆப்பிரிக்கர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மலேசியத் தீபகற்பத்தின் மிக முந்தைய எலும்புக்கூடான பேராக் மனிதன் 11000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இது லெங்கோங் எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்ப காலம் கி.மு. முதல் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் வந்த வணிகர்களும் குடியேற்றக்காரர்களும் வணிகத் துறைமுகங்களையும் நகரங்களையும் உருவாக்கினர். பிற்பகுதியில் மலேசியா ஸ்ரீ விஜயப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்திருக்கிறது.11ம் நூற்றாண்டில் சோழ அரசன் இராஜேந்திர சோழன் கடாரம் எனப்படும் இடத்தைப் போரில் வென்றதற்கான வரலாற்று ஆதாரங்கள் காணப்படுகின்றன. அடுத்த 20 வருடங்களில் சுமத்திரா மற்றும் மலாயாத் தீபகற்பத்தில் சோழர்களால் தொடர்ச்சியான படையெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. சோழர்களின் வருகையும் போர்களும் ஸ்ரீவிஜய ஆட்சியை வலுவிழக்கச்செய்தது. சுல்தான்கள் பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திலிருந்து பல்வேறு சுல்தான்கள் ஆட்சி புரிந்தார்கள். ஸ்ரீ விஜயப் பேரரசின் இளவரசனான பரமேஸ்வரன் மலாயத் தீபகற்பத்தின் முதல் சுதந்திர இராச்சியமாகக் கருதப்படும் மலாக்கா சுல்தானியத்தை நிறுவினான். பரமேஸ்வரன் முஸ்லிமாக மதம் மாறினான். இக்கால கட்டத்தில் இஸ்லாமிய சமயம் தீவிரமாகப் பரவியது. மேலும் இக்காலப் பகுதியில் மலாக்கா முக்கிய வாணிப மையமாகவும் விளங்கியது. ஐரோப்பிய குடியேற்ற ஆட்சிகள் 1511ல் மலாக்கா போர்த்துக்கீசர் வசமானது. பின் 1641ல் ஒல்லாந்தர்களால் (இடச்சுக்காரரால்) கைப்பற்றப்பட்டது. 1786ல் கெடாவின் சுல்தான் பினாங்கைப் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனிக்கு குத்தகைக்குக் கொடுத்தார். இதனால் பிரித்தானியப் பேரரசு மலாயாவில் காலூன்றியது. பிரித்தானியர் 1819ல் சிங்கப்பூரைக் கைப்பற்றினர். மேலும் 1824ல் ஆங்கில-டச்சு ஒப்பந்தப்படி மலாக்காவையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். 1826 -இல் பிரித்தானியர் பினாங்கு, மலாக்கா, சிங்கப்பூர், லபுவன் தீவுகள் ஆகியவற்றை நேரடியாகத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததன் மூலம் அவற்றைத் தமது முடிக்குரிய குடியேற்ற நாடாக்கினர். இரண்டாம் உலகப்போரின் போது 1943–1945 வரை சப்பான் ஆட்சி செலுத்தியது. இக்காலப்பகுதியில் இனப்பிரச்சினைகள் உருவாகியதோடு தேசியவாதமும் மேலோங்கியது. போருக்குப்பின் மீண்டும் பிரித்தானியா அதிகாரத்திற்கு வந்தது. மேலும் பிரித்தானியா மலாயாவின் நிருவாகத்தை ஒருங்கிணைத்து அதனை மலாயக் கூட்டமைப்பு என்ற ஒரே முடிக்குரிய குடியேற்ற நாடாக்கியது. எனினும் மலாயர் இதனை எதிர்த்தனர். மேலும் மலாயப் பொதுவுடைமைக் (கம்யூனிஸ்ட்டுக்) கட்சியின் தலைமையில் ஒன்றிணைந்த போராளிகள் பிரித்தானியப் படைகளுக்கெதிராகக் கொரில்லாப் போர் தொடுத்தனர். சமகாலம் 1957 ஆகஸ்ட் 31 அன்று விடுதலை அடைந்த மலேசியா 1963 ஆம் ஆண்டு மலேசிய கூட்டரசு எனப்படும் தற்கால மலேசிய நாடாக உருவாகியது. 1965ஆம் ஆண்டு சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து தனிநாடாகியது. 1969ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரத்திற்குப் பிறகு பூமிபுத்திரா எனப்படும் பூர்வகுடிமக்களுக்கு பொருளாதார வளர்ச்சியில் சம பங்கு வழங்கும் நோக்கோடு சர்ச்சைக்குட்பட்ட புதிய பொருளாதார கொள்கை கொண்டுவரப்பட்டது. சமீப காலங்களில் சிறுபான்மை இந்தியர்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 2007இலும் பெப்ரவரி 2008 இலும் பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடிப் போராட முயன்றபோது காவற்துறையினரால் கண்ணீர் புகை குண்டு வீசிக் கலைக்கப்பட்டனர். ஆட்சிப்பிரிவுகள் மலேசியா 13 மாநிலங்கள் மற்றும் மூன்று கூட்டாட்சிப் பகுதிகளின் கூட்டமைப்பாகும். இவை இரண்டு பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தீபகற்ப மலேசியாவில் 11 மாநிலங்களும் இரண்டு கூட்டாட்சிப்பகுதிகளும் கிழக்கு மலேசியாவில் இரண்டு மாநிலங்களும் ஒரு கூட்டாட்சிப் பகுதியும் உள்ளன. மாநிலங்களின் ஆளுகை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்குள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதோடு கூட்டாட்சிப் பகுதிகளின் நிர்வாகத்தை மத்திய அரசாங்கம் மேற்கொள்கிறது.[13] 13 மாநிலங்களும் வரலாற்று முறையான மலாய் இராச்சியங்களை மையமாகக் கொண்டவை. தீபகற்ப மலேசியாவிலுள்ள 11 மாநிலங்களில் 9 அவற்றின் பரம்பரை ஆட்சியாளர்களால் ஆளப்படுவதோடு, அவை மலாய் மாநிலங்கள் எனவும் அறியப்படுகின்றன. இவற்றின் மன்னர் ஒன்பது ஆட்சியாளர்களின் சபையொன்றிலிருந்து அவர்கள் மூலமாகவே ஐந்தாண்டுப் பதவிக்காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.[14] ஒவ்வொரு மாநிலமும் மாநிலச் சட்டவாக்கச் சபை எனப்படும் ஒற்றைச் சபையைக் கொண்டுள்ளன. கிழக்கு மலேசியாவிலுள்ள மாநிலங்கள்(சபா மற்றும் சரவாக்) தமக்கெனத் தனியான குடிவரவுக் கொள்கைகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளன.[15] இதன்படி மலேசியாவின் ஏனைய பகுதிகள்(தீபகற்ப மலேசியா) குடிவரவுச் சட்டங்களின் கீழ் வெளிநாடுகளாகக் கருதப்படுகின்றன.[16] ஒவ்வொரு மாநிலமும் மாவட்டங்களாகவும், மாவட்டங்கள் மேலும் முகிம்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. சபாவிலும் சரவாக்கிலும் மாவட்டங்கள், பிரிவுகளாகக் கூட்டமாக்கப்பட்டுள்ளன.[17] எல்லா மாநிலங்களுக்கும் சீரான நீதியை வழங்குவதற்காக மலேசியப் பாராளுமன்றம் நிலம், இஸ்லாமிய சமயம், உள்ளூராட்சி போன்ற பிரிவுகளில் எழும் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. மேலும் மாநிலமொன்றின் வேண்டுகோளின் பேரில் அம்மாநில நிர்வாகத்தில் தலையீடு செய்யவும் அதிகாரம் உண்டு. சில நிலம் தொடர்பான சட்டங்களைத் தவிர, மாநிலங்களுக்குள் நிகழும் பிரச்சினைகளை அம்மாநிலங்களே கவனிக்கின்றன. நாட்டின் சட்டத்துக்கு அமைவாக, இஸ்லாமிய மதம் தொடர்பற்ற பிரச்சினைகள் மலேசிய ஒப்பந்தத்தைப் பேணும் வகையில் தேசிய மட்டத்திலேயே நிர்வகிக்கப்படுகின்றன.[18] புவியியல் மலேசியா 3,29,847 சதுர கிலோமீட்டர்கள் மொத்த நிலப்பரப்பைக் கொண்டு 67வது பெரிய நாடாக விளங்குகிறது. இதனுடன் நில எல்லைகளை மேற்கு மலேசியாவில் தாய்லாந்தும் கிழக்கு மலேசியாவில் இந்தோனேசியாவும் புருணையும் பகிர்கின்றன.[19]சிங்கப்பூருடன் ஓர் குறுகிய தரைப்பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளது. கடல்சார் எல்லையை வியட்நாமுடனும் [20] பிலிப்பைன்சுடனும் பகிர்கிறது.[21] நில எல்லைகள் பெரும்பாலும் பெரிலிசு ஆறு, கோலோக் ஆறு மற்றும் பகலயன் கால்வாய் போன்ற புவியிடக் கூறுக்களால் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால் கடல்சார் எல்லைகள் இன்றும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.[19] சரவாக் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கும் புருணை மலேசியாவினால் முழுதும் சூழப்பட்டுள்ளது[22]. ஆசிய நிலப்பகுதியிலும் மலாய் தீவுக்கூட்டங்களிலும் ஆட்சிப்பகுதி கொண்ட ஒரே நாடாக மலேசியா இலங்குகிறது.[23] ஜொகூர் மாநிலத்தின் தெற்குக் கடைசியில் உள்ள டான்ஜுங் பியாய், ஆசியாக் கண்டத்தின் தெற்கு முனையாக உள்ளது.[24] சுமாத்திராவிற்கும் மலேசியத் தீபகற்பத்திற்கும் இடையில் உள்ள உலகின் 40 சதவீத சரக்குகள் செல்லும் மலாக்கா நீரிணை உலக வர்த்தகத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.[25] பொருளியல் மலேசியா பொதுவாகத் திறநிலை மற்றும் அரசுசார் பொருளாதார நாடாகவும் புதியதாகத் தொழில்மயமான சந்தைப் பொருளாதார நாடாகவும் விளங்குகிறது.[26][27] பொருளியல் செயல்பாடுகளில் பேரளவு பொருளாதாரத் திட்டங்கள்மூலம் முக்கிய பங்காற்றும் அரசு தனது பங்காற்றலை படிப்படியாகக் குறைத்து வருகிறது. ஆசிய நாடுகளில் சிறந்த பொருளியல் தரவுக்கூற்றுகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ள மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1957 முதல் 2005 வரை ஆண்டுக்கு ஏறத்தாழ 6.5 % உயர்ந்து வந்துள்ளது.[14] 2010இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி அமெரிக்க டாலரில் $414,400பில்லியனாக இருந்தது; இது ஆசியான் நாடுகளில் 3வது மிகப்பெரிய மதிப்பாகும். உலகளவில் மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 29வதாக உள்ளது.[28] மக்கள் தொகையியல் 2010 கணக்கெடுப்பின்படி மலேசிய மக்கள் தொகை 28,334,135 ஆகும்[3]. இது உலகளவில் 43வது மக்கள் தொகை அதிகமுள்ள நாடாக அறியப்பட்டுள்ளது. இந்நாட்டில் பல இனக் குழுக்கள் வாழ்கின்றன. மலாய் இனக் குழுவினர் 50.4 %ம், மலாய் இனமல்லாத மற்ற பூமிபுத்திராக்கள் 11 விழுக்காடும் உள்ளனர் [19] . மலேசிய சட்டப்படி மலாய் இனத்தவர்கள் அனைவரும் முசுலிம்கள் ஆவர். அவர்கள் மலாய் இன பண்பாட்டைப் பின்பற்றுபவர்கள். மலாய் இன மக்களே மலேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்துபவர்கள். பூமிபுத்திரா என்ற தகுதி மலாய் இனம் அல்லாத தாய், கெமர், சாம் மக்களுக்கும் சபா, சரவாக் மாநில பழங்குடி மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. சரவாக் மாநில மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மலாய் இனமல்லாத பூமிபுத்திராக்கள் ஆவர். சபா மாநிலத்தில் மூன்றுக்கு இரண்டு பேர் மலாய் இனமல்லாத பூமிபுத்திராக்கள் ஆவர்[19]. மலேசிய தீபகற்பத்தில் தொல்குடி மக்கள் சிறிய அளவில் வாழ்கிறார்கள். யார் பூமிபுத்திரா என்பதை வரையறுக்கும் சட்டம் மாநிலத்துக் மாநிலம் வேறுபடும். மலேசியா மக்கள் தொகையில் சீன வம்சாவளியினர் 23.7 விழுக்காடும் இந்திய வம்சாவளியினர் 7.1 விழுக்காடும் உள்ளனர் [19] . இவர்களுக்குப் பூமிபுத்திரர்கள் என்ற தகுதி கிடையாது. சீனர்கள் மலேசிய வணிகத்தில் செல்வாக்கு செலுத்துகின்றனர். 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெருவாரியான இந்தியர்கள் மலேசியாவுக்கு பிரித்தானியர்களால் தோட்ட வேலை செய்ய அழைத்து வரப்பட்டனர் [29]. இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் ஆவர் [30] . மலேசியாவில் பிறந்தால் மட்டும் ஒருவர் மலேசியக் குடியுரிமை பெறமுடியாது. வெளிநாட்டில் இருந்தாலும் இரண்டு மலேசியர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்படும். மலேசியா இரட்டை குடியுரிமை வழங்குவதில்லை [31]. கிழக்கு மலேசியா மற்றும் மேற்கு மலேசியாவில் இருப்பவர்களுக்குக் குடியுரிமையில் சிறிய வேறுபாடு உண்டு. இது குடி நுழைவு வசதிக்காக ஏற்படுத்தப்பட்டது. சமயம் மலேசிய நாட்டின் அதிகாரபூர்வமான சமயமாக இசுலாம் [32] இருந்தபோதிலும் மற்ற சமயங்களை சுதந்திரமாகப் பின்பற்றச் சட்டம் அனுமதிக்கிறது. தோராயமாக 61.3% பேர் இசுலாம் சமயத்தையும் 19.8% பேர் புத்த சமயத்தையும் 9.2% பேர் கிறித்தவ சமயத்தையும் 6.3% பேர் இந்து சமயத்தையும் 1.3 பேர் தாவோ சமயம், கன்பூசிய சமயம் மற்ற சீன சமயங்களையும் [33] 0.7% பேர் எச் சமயத்தையும் சாராதவர்களாகவும் 1.4% பேர் மற்ற சமயங்களைப் பின்பற்றுவர்களாகவும் உள்ளனர் [33]. சட்டப்படி மலாய் இனத்தவர்கள் அனைவரும் முசுலிம்கள் ஆவர் [32]. 2010 மக்கள் தொகை கணக்கின் படி சீன வம்சத்தவர்களில் 83.6% பேர் பௌத்த சமயத்தையும் 3.4 % பேர் தாவோ சமயத்தையும் 11.1% பேர் கிறுத்துவ சமயத்தையும் சிறிய அளவில் இசுலாம் சமயத்தையும் பின்பற்றுகிறார்கள். இந்திய வம்சத்தவர்களில் 86.2% பேர் இந்து சமயத்தையும் 6.0% பேர் கிறுத்துவ சமயத்தையும் 4.1% பேர் இசுலாம் சமயத்தையும் பின்பற்றுகிறார்கள். மலாய் இனம் அல்லாத பூமிபுத்திரர்களில் 46.5% பேர் கிறுத்துவ சமயத்தையும் 40.4% பேர் இசுலாம் சமயத்தையும் பின்பற்றுகிறார்கள் [33]. முசுலிம்களின் சமயம் தொடர்பான சிக்கல்களைச் சரியா நீதிமன்றங்கள் தீர்மானிக்கின்றன. குறிப்பாக மணமுறிவு, திருமணம், வாரிசு உரிமை, மத மாற்றம், மதத்திலிருந்து விலகல் போன்றவற்றை அது விசாரிக்கும். குற்ற வழக்குகளும் உரிமையியல் குடிசார் வழக்குகளும் இதன் வரம்புக்குள் வராது. முசுலிம் அல்லாதவர்களின் சிக்கல்கள் சரியா நீதிமன்ற வரம்புக்குள் வராது. உரிமையியல் நீதிமன்றங்கள் இசுலாம் தொடர்பான வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் அவற்றைச் சரியா நீதிமன்றங்களிடம் அனுப்பிவிடும் [34]. மொழி மலேசியாவின் அதிகாரபூர்வ மொழி மலேசிய மொழி ஆகும். இது மலாய் மொழியின் தரப்படுத்தப்பட்ட வடிவமாகும். ஆங்கிலம் நிர்வாக மொழியாகப் பயன்படுத்தப்பட்டது. 1969இல் நடந்த கலவரத்துக்குப் பின் மலேசிய மொழி முதன்மைப்படுத்தப்பட்டது [35] . ஆங்கிலம் இரண்டாவது மொழியாகத் தொடர்ந்து உள்ளது. பொதுப் பள்ளிக்கூடங்களில் கணிதம், அறிவியல் போன்றவற்றைப் பயிற்றுவிக்கும் மொழியாகவும் ஆங்கிலம் உள்ளது [36][37]. பிரித்தானிய ஆங்கிலத்திலிருந்து தருவிக்கப்பட்ட மலேசிய ஆங்கிலம் வணிகத்தில் பெரும்பாலும் பயன்படுத்தபடுகிறது. மேங்கிலிசும் வணிகத்தில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. மேங்கிலிசு என்பது மலாய், சீனம், தமிழ் கலந்த கொச்சைபடுத்தப்பட்ட ஆங்கிலம் ஆகும் [38][39]. மலேசியாவில் 137 மொழிகள் பேசப்படுகின்றன [40] இவற்றில் தீபகற்ப மலேசியாவில் 41 மொழிகள் பேசப்படுகின்றன.[41] கிழக்கு மலேசியாவில் உள்ள பழங்குடியின மக்கள் மலாய் மொழி அல்லாத தங்களின் மொழியைப் பேசுகின்றனர். இதை எளிதில் மலாய் அல்ல என்பதை உணரமுடியும். சரவாக் மாநில மக்கள் இபான் மொழியையும் சபா மக்கள் டுசுனிக் மொழியையும் பேசுகின்றனர் [42]. மலேசியாவிலுள்ள சீனர்கள் தென் சீனத்தின் பல வட்டார மொழிகளைப் பேசுகின்றனர். கண்டோனீசு, மாண்டரின், ஓக்கியன், கேசிய மொழி போன்றவை அவற்றுள் சில. தமிழர்கள் தமிழ் பேசுகின்றனர். தமிழர்களே இங்குள்ள இந்தியர்களில் பெரும்பான்மையினர் ஆவர். பண்பாடு மலேசியாவில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த, பல்வேறு பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட மற்றும் பல்வேறு மொழிபேசும் மக்கள் உள்ளனர். இப்பகுதியின் துவக்கநிலை பண்பாடு இங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள், இங்கு இடம் பெயர்ந்த மலாய் இனத்தவரால் உருவானது. வெளிநாட்டு வணிகம் துவங்கிய வரலாற்றுக்காலத்திலேயே சீனர் மற்றும் தமிழர் பண்பாட்டுத் தாக்கங்கள் ஏற்பட்டன. பாரசீகர், அராபியர் மற்றும் பிரித்தானியர் பண்பாட்டுத் தாக்கங்களைப் பின்னதாக உள்வாங்கியது. அரசமைப்பு, சமூக உடன்பாடு போன்றவை காரணமாக இனச் சிறுபான்மையினரின் பண்பாடு தன்வயமாகவில்லை.[43] 1971இல் மலேசிய அரசு "தேசிய பண்பாட்டுக் கொள்கை"யை அறிவித்தது; இதன்படி மலேசியப் பண்பாடு பழங்குடியினரின் பண்பாட்டின்படி அமையும் என்றும் பிற பண்பாடுகளிலிருந்து பொருத்தமானக் கூறுகளை உள்வாங்கும் என்றும் இசுலாம் பெரும் பங்கு வகிக்கும் என்றும் வரையறுத்தது.[44] மேலும் மலாய் மொழியே மற்ற மொழிகளை விடப் பரப்பப்படும் எனக் கூறியது.[45] இவ்வாறான அரசின் தலையீட்டை மலாய் அல்லாத சிறுபான்மையினர் தங்கள் பண்பாட்டுச் சுதந்தரத்தைக் குறைப்பதாக எதிர்த்தனர். சீனர்களின் சங்கங்களும் இந்தியச் சங்கங்களும் தங்கள் எதிர்ப்பை அரசுக்குத் தெரிவிக்கும் வகையில் மனு ஒன்றை அளித்தனர்.[44] மலேசியாவிற்கும் அண்டை நாடுகளுக்கும் இடையே (குறிப்பாக இந்தோனேசியா) பண்பாட்டுச் சண்டைகள் ஏற்பட்டுள்ளன. இரண்டு நாடுகளுக்கும் ஒன்றையொத்த பாரம்பரியமும் வழைமையான பழக்கங்களும் உள்ளன. இருப்பினும் உணவுப் பொருள்களிலிருந்து மலேசியாவின் நாட்டுப்பண் வரை பல பிணக்குகள் எழுந்துள்ளன.[46] இந்தப் பிணக்குகளைக் குறைக்க இரு நாட்டு அரசுகளும் பலமுறை முயன்றுள்ளன.[47] மலேசியப் புலி மலேசியாவின் தேசிய விலங்காகும். விளையாட்டு மலேசியாவில் பரவலாக விளையாடப்படுபவையாகக் காற்பந்தாட்டம், இறகுப்பந்தாட்டம், வளைதடிப் பந்தாட்டம், பௌல்ஸ், டென்னிசு, ஸ்குவாஷ், தற்காப்புக் கலைகள், குதிரையேற்றம், பாய்மரப் படகோட்டம், மற்றும் ஸ்கேட் பலகையோட்டம் ஆகியன .[48] இறகுப்பந்தாட்ட போட்டிகள் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கின்றன; 1948ஆம் ஆண்டு முதல் தாமசு கோப்பையைத் தக்க வைத்துள்ள மூன்று நாடுகளில் ஒன்றாக மலேசியா விளங்குகிறது.[49] மலேசிய புல்தரை பௌல்ஸ் கூட்டமைப்பு 1997இல் பதிவு செய்யப்பட்டது.[50] பிரித்தானிய படைத்துறை அதிகாரிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்குவாஷ் விளையாட்டில் முதல் போட்டி 1939இல் நடத்தப்பட்டது. ஸ்குவாஷ் பந்தடி மட்டைச் சங்கம் சூன் 25, 1972இல் உருவானது.[51] மலேசியா தென்கிழக்கு ஆசியாவிற்கான ஓர் கால்பந்துக் கூட்டிணைவைப் பரிந்துரைத்துள்ளது.[52] ஆகத்து 2010இல் மலேசியாவின் ஆடவர் வளைதடிப் பந்தாட்ட அணி உலகத் தரவரிசையில் 15வதாக இருந்தது.[53] கோலாலம்பூரில் உள்ள மெர்டெக்கா விளையாட்டரங்கில் வளைதடிப் பந்தாட்ட உலகக் கிண்ணத்தின் மூன்றாவது மற்றும் பத்தாவது போட்டிகள் நடத்தப்பட்டன.[54] மலேசியாவில் பார்முலா 1 தடம்– செபாங் பன்னாட்டு சுற்றுகை உள்ளது. 310.408 kilometres (192.88mi) தொலைவுள்ள இச்சுற்றுகையில் முதல் கிராண்ட் ப்ரீ போட்டி 1999இல் நடந்தது.[55] 1953இல் உருவான மலேயா ஒலிம்பிக் குழுவிற்கு பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் அங்கீகாரம் 1954இல் கிடைத்தது. மலேசியா 1956 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்கேற்றது. 1964இல் இக்குழுவிற்கு மலேசியா ஒலிம்பிக் குழு என மறுபெயரிடப்பட்டது. துவங்கிய காலத்திலிருந்து ஒன்றைத் தவிர அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளது. 1972ஆம் ஆண்டில் மியூனிக்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு மிக உயர்ந்தளவில் பங்கேற்பாளர்களை(57) அனுப்பி உள்ளது.[56] மலேசிய போட்டியாளர்கள் ஒலிம்பிக்கில் இதுவரை நான்கு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்; இவை அனைத்துமே இறகுப்பந்தாட்டத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.[57] பொதுநலவாய விளையாட்டுக்களில் 1950 முதல் மலாயா என்றும் 1966 முதல் மலேசியா என்றும் பங்கெடுத்து வந்துள்ளது. 1998இல் இந்த விளையாட்டுக்கள் கோலாலம்பூரில் நடத்தப்பட்டன.[58] தற்காப்புக் கலைகளில் மலேசியாவில் சிலாட் மற்றும் டோமோய் என்னும் இரு வகைகள் பயிலப்படுகின்றன. ஊடகம் மலேசியாவின் முதன்மை செய்தித்தாள்கள் அரசுடமை அல்லது ஆளும் கூட்டணியிலுள்ள கட்சிகளின் உடமையாக உள்ளன.[59] இருப்பினும் சில பெரிய எதிர்க்கட்சிகளும் நாளிதழ்களின் உரிமையாளர்களாக உள்ளனர்.[60] நாட்டின் இரு பகுதிகளிலிருந்து வெளியாகும் ஊடகங்களிடையே பிளவு உள்ளது. தீபகற்ப ஊடகங்கள் கிழக்குப் பகுதி செய்திகளுக்குக் குறைந்த முன்னுரிமை வழங்குகின்றனர்; அப்பகுதியை தீபகற்ப மலேசியாவின் குடியேற்றப் பகுதியாகக் காண்கின்றனர்.[61] மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே வளரும் சிக்கல்களுக்கு ஊடகங்கள் குறை சொல்லப்படுகின்றன. இந்தோனேசியர்களைக் குறித்து தாழ்வான கருத்து நிலவவும் அவர்களே காரணமாக்கப் படுகின்றனர்.[62] மலேசியாவில் மலாய், சீனம் மற்றும் தமிழ் நாளிதழ்கள் வெளியாகின்றன.[61] ஊடகச் சுதந்திரம் மிகக் குறைவாக உள்ள காரணத்தால் அரசிற்கு பொறுப்புடைமை குறைவாக உள்ளது.[63] அரசு தேர்தல்களுக்கு முன்னர் எதிர்கட்சி நாளிதழ்களை அடக்க முயன்றுள்ளது.[60] 2007இல் எதிர்க்கட்சித் தலைவர்களின் பேச்சுக்களை ஒளிபரப்ப வேண்டாமென்று அனைத்து தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களுக்கு ஆணையிடப்பட்டன;[64] இதனை எதிர்க்கட்சியான சனநாயக செயல் கட்சி கண்டித்துள்ளது.[65] சபாவில் ஒன்றைத் தவிர அனைத்து நாளிதழ்களும் தனியார் வசமுள்ளன. இப்பகுதியே மலேசியாவில் மிகவும் சுதந்திரமான ஊடகங்கள் இருக்குமிடமாகும்.[61] அச்சகங்கள் மற்றும் வெளியீடுகள் சட்டம் போன்றவை கருத்துச் சுதந்திரத்திற்கு தடங்கலாக இருப்பதாகச் சுட்டப்படுகிறது.[66] உள்கட்டமைப்பு மலேசியாவின் உள்கட்டமைப்பு ஆசிய நாடுகளிலேயே மிகவும் மேம்படுத்தப்பட்ட ஒன்றாக விளங்குகிறது.[67] 4.7மில்லியன் நிலைத்த இடத் தொலைபேசி இணைப்புகளையும் 30மில்லியன் நகர்பேசி இணைப்புக்களையும் கொண்டுள்ள இதன் தொலைத்தொடர்பு பிணையம் தென்கிழக்கு ஆசியாவில் சிங்கப்பூருக்கு அடுத்த நிலையில் உள்ளது.[68][69] மலேசிய நாட்டில் ஏழு பன்னாட்டு வணிகம் புரியும் துறைமுகங்கள் உள்ளன; முக்கியமான துறைமுகமாகக் கிளாங் துறைமுகம் உள்ளது. 200 தொழிற் பேட்டைகளும் டெக்னாலஜி பார்க், மலேசியா மற்றும் குலிம் ஹ-டெக் பார்க் போன்ற சிறப்பு கட்டமைப்புக்களும் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கின்றன.[48] 95% மக்களுக்குத் தூய குடிநீர் வழங்கப்படுகிறது.குடிமைவாத காலங்களில் பொருளியல் தாக்கமுள்ள நகரங்களிலும் பாதுகாப்பிற்கு வழிகோலும் இடங்களிலுமே மேம்பாட்டு கட்டமைப்புக்கள் உருவாகியிருந்தன. விடுதலைக்குப் பின்னதாக ஊரகப் பகுதிகளின் வளர்ச்சியைக் குவியப்படுத்தி வளர்ச்சித் திட்டங்கள் தீட்டப்பட்டபோதும் அவை இன்னமும் தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளை விடப் பின்தங்கி உள்ளன.[70] தொலைத்தொடர்பு சேவைகளும் நகரப்பகுதிகளில் சிறப்பாக இருந்தபோதும் உள்நாட்டுப் பகுதிகளில் அணுக்கம் குறைவாகவே உள்ளது.[68] மலேசியாவில் தொலைவிற்கு சாலைகள் இடப்பட்டுள்ளன; இவற்றில் தொலைவு விரைவுச்சாலைகளாகும்.[19] நாட்டின் மிக நீண்ட நெடுஞ்சாலையாக விளங்கும் வடக்கு-தெற்கு விரைவுச்சாலை,தாய்லாந்தின் எல்லை முதல் சிங்கப்பூர் வரை 800 kilometres (497mi) தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மலேசியாவில் சாலைகள் நன்கு அமைக்கப்படாததுடன் தீபகற்ப மலேசியச் சாலைகளைப் போல் இல்லாது அவற்றின் தரமும் குறைந்த நிலையில் உள்ளன.[71] மலேசியாவில் 38 நன்கு பாவப்பட்ட நிலையங்கள் உட்பட 118 வானூர்தி நிலையங்கள் உள்ளன. நாட்டின் அரசுசார் மலேசியா ஏயர்லைன்சுடன் மேலும் இரு வான்பயண சேவை நிறுவனங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு வான்பயணச் சேவைகளை நல்குகின்றன. தொடர்வண்டிச் சேவைகள் அரசுமயமாக்கப்பட்டுள்ளது; 1,849 kilometres (1,149mi) தொலைவிற்கு சேவை அளிக்கின்றன.[19] கோலாலம்பூர் போன்ற சில நகரங்களில் ஒப்புநோக்கில் குறைந்த செலவான உயரத்தில் செல்லும் இலகு தொடருந்து போக்குவரத்து அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.[72] ஆசியான் விரைவுத் தொடருந்து (Asean Rail Express) கோலாலம்பூரை பாங்காக்குடன் இணைக்கும் தொடர்வண்டிச் சேவையாகும். இச்சேவை மூலம் எதிர்காலத்தில் சிங்கப்பூரையும் சீனாவையும் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.[67] வழமையாக, மலேசியாவின் ஆற்றல் உற்பத்தி பாறைஎண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை நம்பியே உள்ளது.[73] நாட்டின் மின் உற்பத்தித் திறன் 13 GW ஆக உள்ளது.[74] இன்னமும் 33 ஆண்டுகளுக்கான இயற்கை எரிவாயு இருப்பும் 19 ஆண்டுகளுக்கான எண்ணெய் இருப்புமே உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களைப் பயன்படுத்த அரசு முயன்று வருகிறது.[73] 16 சதவீதம் நீர்மின்நிலையங்கள் மூலமும் மற்ற 84 சதவீதம் அனல்மின் நிலையங்கள் மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.[74] எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் அரசுடமை நிறுவனமான பெட்ரோனாசு பெரும்பங்கு வகிக்கிறது.[75] மின்சார ஆணையம் சட்டம், 2001இன்படி மலேசிய ஆற்றல் ஆணையம் (Energy Commission of Malaysia) தீபகற்ப மற்றும் சாபாவில் ஆற்றல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி வருகிறது.[76] மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:தென்கிழக்கு ஆசிய நாடுகள் பகுப்பு:முன்னாள் பிரித்தானியக் குடியேற்றங்கள் பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
மலேசியாவில் பேசப்படும் மொழி எது?
மலேசிய
0
tamil
3d205a22a
இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி. இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் ஜனவரி 19 1966 இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980 ல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984 இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார். இவர் ஒரு சிறந்த அரசியல் திட்டமிடலாளரும், சிந்தனையாளரும் ஆவார். அரசியல் அதிகாரத்துக்கான அசாதாரண பற்றை அவர் கொண்டிருந்தார். ஆணாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இந்திய சமுதாயத்தில், ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் தன்மைகளுக்கு மாறாக வலுவான அதிகார பலத்துடன் மிகவுயர்ந்த பதவியிலிருந்து நாட்டை வழி நடத்தினார். ஒரு பிரதம மந்திரியாக, அவருக்குக் கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் பயன்படுத்தி தனது பலத்தையும் அதிகாரத்தையும் வலுப்படுத்திக் கொண்டார். அவருக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, வலு குறைந்த அமைச்சரவைகளை அமைத்துக் கொண்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். இந்திய தேசிய காங்கிரசிலிருந்த பலம் மிக்க முதிர்ந்த தலைவர்களை ஓரங்கட்டினார். இதன் ஒரு அங்கமாக 1969 இல் குடியரசுத் தலைவர் நியமனத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து ஆளும் கட்சியாக இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுபட்டது. இந்திரா காங்கிரஸ் என்று அழைக்கப்பட்ட, இவருடைய தலைமையில் அமைந்த பிரிவு மிகுந்த பலத்துடன் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தது. 1971 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அச்சமயத்தில், மேற்கு, கிழக்குப் பாகிஸ்தான்களுக்கு இடையில் ஏற்பட்ட பிணக்கில், கிழக்குப் பாகிஸ்தானின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாகப் பாகிஸ்தானுடன் போரைத் தொடங்கி, கிழக்குப் பாகிஸ்தானுக்குள் படைகளை அனுப்பினார். இந்த வெற்றிகரமான நடவடிக்கையினால் கிழக்குப் பாகிஸ்தான், பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்காளதேசம் என்ற தனி நாடாகியது. 1975 இல் அவசர நிலையை அறிவித்த இந்திரா காந்தி, அரசியல் சட்டத்தின் 352 ஆவது விதியை பயன்படுத்தி தனக்கான அதிகாரங்களை அதிகப்படுத்திக் கொண்டதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயற்சித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டார். 19 மாதங்கள் நீடித்த இந்த நெருக்கடி நிலைமை இந்திரா காந்தியின் செல்வாக்கை பெருமளவு பாதித்தது. எனினும் தனது செல்வாக்கை பிழையாக மதிப்பீடு செய்த இவர், தேர்தலை நடத்திப் பெருந் தோல்வியைத் தழுவினார். இவரது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைந்தார். இவருக்கு வாரிசாக வளர்க்கப்படுவதாகச் சொல்லப்பட்ட இவரது இரண்டாவது மகனான சஞ்சய் காந்தியும் தோல்வியைத் தழுவினார். எனினும் இவரது கட்சிக்கு மாற்றாகப் பதவியில் அமர்ந்த பல கட்சிக் கூட்டணி, உட்பூசல்கள் காரணமாக அதன் முழுப் பதவிக்காலத்தையும் நிறைவு செய்ய முடியாமல் மூன்று ஆண்டுகளில் கவிழ்ந்தது. இவ்வாறு எதிர்க்கட்சிகளின் இயலாத்தன்மை வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டதனால், அடுத்து நடைபெற்ற தேர்தலில் இந்திராவையே மக்கள் மீண்டும் தெரிவு செய்தனர். இந்திரா தனது முன்னைய தவறுகளிலிருந்து பாடம் படித்துக்கொண்டார். அவருடைய இரண்டாவது ஆட்சிக்காலம் மிதமான அதிகாரத்துவம் கொண்டதாகவே அமைந்தது. எனினும் இவரது இந்த ஆட்சிக்காலம் சுமுகமானதாக அமையவில்லை. இக்காலத்தில் இவருக்கு வாரிசாக வரக்கூடியவரென எதிர்பார்க்கப்பட்ட சஞ்சய் காந்தி தானே செலுத்திய விமானத்தில் விழுந்து நொறுங்கியதில் காலமானார். சீக்கியத் தீவிரவாதம் வளர்ந்துவந்தது. சமய மற்றும் தீவிரவாதத் தலைவராக இருந்த ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேயின் அதிகரித்து வந்த செல்வாக்கு இந்திய ஒருமைப்பாட்டுக்குச் சவாலாக அமையுமென இந்தியத் தலைவர்கள் அஞ்சினார்கள். இந்திரா படையை அனுப்பித் தீவிரவாதிகளை ஒடுக்க எண்ணினார். சீக்கியர்களின் புனிதக் கோயிலான பொற் கோயிலுக்குள் ஆயுதங்களுடன் ஒளிந்திருப்பதாகக் கருதப்பட்ட தீவிரவாதிகளையும், அவர்களின் தலைவரையும் பிடிக்க இராணுவம் பொற்கோயிலுக்குள் புக அனுமதி வழங்கினார். தொடர்ந்து இடம்பெற்ற படை நடவடிக்கைகள் இந்திராவை சீக்கியர்களின் கோபத்துக்கு ஆளாக்கியது. இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 31, 1984 இல் சீக்கியர்களான, அவரது சொந்தப் பாதுகாவலர் இருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இளமை இந்திரா பிரியதர்சினி 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் காசுமீரி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்த ஜவஹர்லால் நேருவிற்கும், கமலா நேருவுக்கும் ஒரே குழந்தையாக பிறந்தார். இந்திராவின் தாத்தா மோதிலால் நேரு இந்தியாவின் உத்திரபிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் ஒரு செல்வவளம் மிக்க வழக்கறிஞர் ஆவார். காந்திக்கு முந்தைய காலத்தில் இந்திய தேசிய காங்கிரசில் மோதிலால் நேரு மிக முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். இந்திராவின் தந்தை ஜவஹர்லால் நேரு நன்கு படித்தவரும், இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவருமாவார். இந்திய சுதந்திர போராட்டத்தின் ஒரு புகழ்பெற்ற தலைவரும் ஆவார். இந்திரா பிறந்ததிருந்த காலத்தில், காந்தியின் தலைமையில் இந்திய சுதந்திர போராட்டத்தில் நேரு நுழைந்தார். நோயாளியும், நேரு வீட்டுப்பொருட்களில் இருந்து விலகி இருந்த தமது தாய் கமலா நேருவின் முழு கவனிப்பில் வளர்ந்த இந்திரா, வலுவான பாதுகாப்பு உள்ளுணர்வையும், ஒரு தனிப்பட்ட பண்பையும் வளர்த்துக் கொண்டார். இவரின் தாத்தாவும், தந்தையும் தொடர்ச்சியாக தேசிய அரசியலில் சிக்கிக் கொண்டிருந்ததால், அதுவும் இவரின் உன்னிப்பான பிரச்சனைகளுடன் ஒன்றி கலந்தது. விஜயலட்சுமி பண்டிட் உட்பட, தந்தையின் சகோதரிகளுடன் இவர் முரண்பாடுகளைக் கொண்டிருந்தார். இது அரசியல் உலகிலும் தொடர்ந்தது. நேருவின் சுயவரலாற்று நூலில், விடுதலையை நோக்கி என்ற பகுதியில், தாம் சிறையில் இருந்த போது காவலர்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்ததாகவும், தன் மீது அரசாங்கம் விதித்திருந்த அபராதங்களுக்காக சில நாற்காலிகளை எடுத்துச் சென்றதாக அவர் எழுதுகிறார். "இந்த தொடர்ச்சியான நாசப்படுத்தும் செயல்முறைகள், என் நான்கு வயது மகளான இந்திராவை மிகவும் பாதித்தது. மேலும் அவள் காவலரை எதிர்த்தாள், அத்துடன் அவளின் வலுவான எதிர்ப்பையும் தெரிவித்தாள். அந்த ஆரம்பகட்ட உணர்வுகள் பொதுவாக காவல் படை குறித்த அவளின் எதிர்கால கண்ணோட்டத்தை மாற்றியமைக்கக் கூடும் என்று நான் அஞ்சினேன்." என்று குறிப்பிட்டுள்ளார். இந்திரா இளம் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக வானரசேனா என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இவ்வானரசேனா அமைப்பு போராட்டங்கள் மற்றும் கொடி அணிவகுப்புகள் ஆகியன நடத்தியதன் மூலமாகவும், காங்கிரஸ் அரசியல்வாதிகளின் உணர்வுப்பூர்வமான வெளியீடுகளை மற்றும் தடைவிதிக்கப்பட்டவைகளை வினியோகித்ததன் மூலமாகவும் இந்திய சுதந்திர போராட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சிறு பங்கை வகித்தது. ஐரோப்பாவில் கல்வி 1936இல், இந்திராவின் அன்னை கமலா நேரு, ஒரு நீண்ட போராட்டத்திற்கு பின்னர் இறுதியாக காசநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அந்த சமயத்தில் இந்திராவிற்கு 18 வயது. இந்திரா தனது இளமைப்பருவத்தில் ஒருபோதும் ஒரு நிலையான குடும்ப வாழ்க்கையை அனுபவிக்கவில்லை. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், சோமெர்வெல்லி கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது, அதாவது 1930களின் பிற்பகுதியில், இலண்டனை மையமாக கொண்ட தீவிர சுதந்திரத்திற்கு ஆதரவான இந்திய குழுவின் உறுப்பினரானார்.[1] 1940களின் தொடக்கத்தில், தீராத நுரையீரல் நோயிலிருந்து மீண்டு வர இந்திரா சுவிட்சர்லாந்தில் வீட்டு ஓய்வில் நேரத்தை செலவிட்டார். அவரின் குழந்தைப்பருவத்திலிருந்தே தனது தந்தையுடன் கடிதம் மூலம் கொண்டிருந்த உறவைப் போலவே, தற்போதும் தந்தையுடன் நீண்ட கடிதங்கள் மூலம் அவரின் தொலைதூர உறவையும் தக்க வைத்துக்கொண்டிருந்தார். அவர்கள் அரசியல் குறித்தும் கடிதங்கள் மூலம் விவாதித்தார்கள். [2] ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் அவர் வாழ்ந்த ஆண்டுகளில், அரசியலில் செயல்பட்டு வந்த பெரோஸ் காந்தி என்ற ஒரு பார்சி இளைஞரை சந்தித்தார்.[3] பெரோஸ் காந்தியுடன் திருமணம் இந்திரா மற்றும் பெரோஸ் காந்தி இந்தியாவிற்கு திரும்பிய போது, அவர்கள் காதலர்களாக இருந்தார்கள். மருத்துவர்களின் ஆலோசனைகளுக்கு இடையில், திருமணம் செய்து கொள்ளவும் தீர்மானித்தார்கள்.[4] பெரோசின் திறந்த மனப்பான்மை, நகைச்சுவை உணர்வு மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை இந்திராவிற்கு பிடித்திருந்தது. இவ்வளவு விரைவாக அவர் மகள் திருமணம் செய்து கொள்வதை நேரு விரும்பவில்லை. மேலும் அவர்களின் காதல் உறவை பிரிக்க மகாத்மா காந்தியின் உதவியையும் நாடினார். காதலில் இருந்த இந்திரா மிகவும் பிடிவாதமாக இருந்தார். 1942 மார்ச்சில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.[5] பெரோசும் , இந்திராவும் இருவருமே இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர்களாக இருந்தனர். 1942ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் அவர்கள் பங்கெடுத்த போது, இருவருமே கைது செய்யப்பட்டார்கள்.[6] சுதந்திரத்திற்கு பின்னர், தேர்தலில் களம் இறங்கிய பெரோஸ் , உத்திர பிரதேசத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜீவ் காந்தி மற்றும் சஞ்சய் காந்தி ஆகிய இரண்டு மகன்கள் பிறந்த பின்னர், ஏதோ சில கருத்து வேறுபாடுகளால் 1958 வரை அந்த தம்பதியினர் பிரிந்து வாழ்ந்தார்கள். பெரோஸ் மாரடைப்பால் பாதிக்கப்பட்டபோது, அவர்களின் உடைந்த திருமண வாழ்வு மீண்டுமிணைந்தது. ஆனால் 1960 செப்டம்பரில் பெரோஸ் மரணமடைந்தார். அரசியல் ஈடுபாடு இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் 1959 மற்றும் 1960ன் போது, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்காக நின்ற இந்திரா காந்தி அதில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் பதவிகாலம் குறிப்பிடத்தக்கதாக அமையவில்லை. தந்தையின் பிரதிநிதியாக நடிக்க வேண்டி இருந்தது. இந்திரா 1960இல் நடைபெற்ற தேர்தலில் ஓர் இடத்திற்கும் போட்டியிடவில்லை. தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் 1964 மே 27இல் நேரு மரணமடைந்தார், புதிய பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரியின் வலியுறுத்தலின் பேரில் இந்திய தேர்தல்களில் போட்டியிட்டு, உடனடியாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதன் மூலம் இந்திய அமைச்சரவையிலும் பங்கெடுத்தார்.[7] இந்தி மொழி பேசாத மாநிலமான தமிழ்நாட்டில் இந்தி தேசிய மொழியாக ஆக்கப்பட்டதன் காரணமாக எழுந்த போராட்டங்கள் கார்ணமாக இந்திரா மெட்ராஸ் விரைந்தார். அங்கு அரசாங்க அதிகாரிகளுடன் பேசிய அவர், சமுதாய தலைவர்களின் கோபத்தை மட்டுப்படுத்தியதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளின் மறுகட்டுமான முயற்சிகளையும் பார்வையிட்டார். தாங்கள் காட்டத் தவறிய இதுபோன்ற முனைவால், லால்பகதூர் சாஸ்திரியும், பிற மூத்த அமைச்சர்களும் வியப்படைந்தார்கள். அமைச்சர் இந்திரா காந்தியின் நடவடிக்கைகள் சாஸ்திரியைக் குறிவைத்தோ அல்லது அவரின் சொந்த அரசியல் முன்னேற்றங்களையோ நோக்கமாக கொண்டிருக்கவில்லை. அறிவிக்கப்பட்ட வகையில் அவர் அவரின் அமைச்சக செயல்பாடுகளில் ஒவ்வொரு நாளும் ஆர்வமில்லாமல் இருந்தார், ஆனால் ஊடக ஆர்வலராகவும், அரசியல் மற்றும் தனிச்சிறப்பை உருவாக்குவதிலும் அவர் தனித்திறன் பெற்றிருந்தார். "திருமதி. இந்திராகாந்திக்கும் அவரின் போட்டியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்ச்சியான போராட்டங்களின் போது, பல மாநிலங்களில் இருந்த மத்திய காங்கிரஸ் [கட்சி] தலைமைகள் மற்றும் மாநில காங்கிரஸ் [கட்சி] அமைப்புகளில் இருந்த மேல் சாதித் தலைவர்களை மாற்றி பிற்பட்ட சாதியினரை அவர்களுக்கு மாற்றாக இருத்தவும், இதன் மூலம் மாநில காங்கிரஸிலும், எதிர்கட்சியிலும் இருந்த போட்டியாளர்களைத் தோற்கடிக்கவும், பிந்தைய சாதியினரின் ஓட்டுக்களை ஒருங்கிணைக்கவும் முனைந்தது. இந்த தலையீடுகளால் ஏற்பட்ட விளைவுகள், (இவற்றில் சில வெறுமனே சமூக முன்னேற்றமாகவும் உணரப்பட்டது), பொதுவாக இன பிராந்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகளைத் தீவிரப்படுத்தியது...."[8] இந்தியா-பாகிஸ்தான் போர் 1965ல் இந்திய-பாக்கிஸ்தான் போர் நடந்து கொண்டிருந்த போது, இந்திரா காந்தி ஸ்ரீநகர் பிராந்திய எல்லைகளில் ஓய்வெடுத்து கொண்டிருந்தார். பாகிஸ்தான் போராளிகள் நகரத்திற்கு மிக நெருக்கமாக ஊடுறுவி இருந்ததாக இராணுவத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்த போதிலும், அவர் ஜம்முவிற்கோ அல்லது டெல்லிக்கோச் செல்ல மறுத்துவிட்டார். மாறாக, உள்ளூர் அரசாங்கத்தை கூட்டியதுடன், ஊடக கவனத்தையும் ஈர்த்தார். பாகிஸ்தானின் தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது, 1966 ஜனவரியில் தாஸ்கண்ட் என்ற இடத்தில் உருசியாவின் முன்னிலையில், தலைமை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி பாகிஸ்தானின் அயூப் கானுடன் ஓர் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். இதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு பின்னர், சாஸ்திரி மாரடைப்பால் காலமானார்.[9] பின்னர், மொரார்ஜி தேசாயின் எதிர்ப்பு இருந்த போதினும், இந்திரா காந்தியை தலைமை அமைச்சராக ஆக்குவதில் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் கே. காமராஜ் ஒரு கருவியாக இருந்தார். மொரார்ஜி தேசாய் பின்னர் காங்கிரஸ் பாராளுமன்ற கட்சி உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டார், இதில் இந்திரா காந்தி 355 க்கு 169 வாக்குகள் பெற்று மொரார்ஜி தேசாயியைத் தோற்கடித்து இந்தியாவின் ஐந்தாவது தலைமை அமைச்சராகவும் அப்பதவியைப் பெறும் முதல் பெண்மணியாகவும் ஆனார். தலைமை அமைச்சர் முதல் பதவிகாலம் 1966ல் இந்திரா காந்தி தலைமை அமைச்சரான போது, காந்தியின் தலைமையிலான பொதுவுடைமைவாதிகள் மற்றும் மொரார்ஜி தேசாய் தலைமையிலான பழமைவாதிகள் என காங்கிரஸ் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்திருந்தது. ராம் மனோகர் லோகியா 'செவிட்டு பொம்மை' என்ற அர்த்தத்தில் குங்கி குடியா என்று இந்திராவை அழைத்தார்.[10] இந்த உட்பூசல்கள் 1967 தேர்தல்களில் எதிரொளித்தது, இத்தேர்தலில் காங்கிரஸ் 545மக்களவை இடங்களில் 297 இடங்களை வென்று 60 இடங்களுக்கு மிகக் குறைந்த வாக்கு வேறுபாட்டில் தோல்வியடைந்தது. இந்திரா மொரார்ஜி தேசாயை இந்தியாவின் துணை பிரதம மந்திரியாகவும், நிதி மந்திரியாகவும் நியமிக்க வேண்டிதாயிற்று. 1969இல், தேசாயுடனான அவரின் பல ஒத்துழையாமைக்குப் பின், இந்திய தேசிய காங்கிரஸ் உடைந்தது. அதற்கடுத்த இரண்டு ஆண்டுகள் அவர் பொதுவுடைமைவாதிகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவில் ஆட்சி புரிந்தார். அதே ஆண்டில், 1969 ஜூலையில் அவர் வங்கிகளை தேசியமயமாக்கினார். 1971ல் பாகிஸ்தானுடனான யுத்தம் பாகிஸ்தான் இராணுவம் கிழக்கு பாகிஸ்தானின் உள்நாட்டு மக்களுக்கு எதிராக பரந்தளவிலான அட்டூழியங்களை நடத்தியது.[11][12] கணக்கிடப்பட்ட வகையில் 10 மில்லியன் அகதிகள் இந்தியாவிற்கு வந்தனர், இதனால் நாட்டில் நிதி தட்டுப்பாடும், உறுதியற்ற நிலையும் ஏற்பட்டது. அகதிகள் பிரச்சனையைத் தீர்க்க, கிழக்கு பாகிஸ்தானியர்கள் அவர்களின் சுதந்திரத்தை அடைய உதவும் வகையில், இந்திரா காந்தி பாகிஸ்தான் மீது போர் அறிவி்த்தார். ரிச்சர்ட் நிக்சன் தலைமையிலான அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவளித்ததுடன் போர் தொடுத்ததற்காக இந்தியாவை எச்சரி்க்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அவையில் தீர்மானமும் நிறைவேற்றியது. நிக்சன் தனிப்பட்ட வகையில் இந்திராவை வெறுத்தார். நிக்சன் அவரின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஹென்றி கிஸ்சென்கருடனான இரகசிய உரையாடலில் (தற்போது அரசுத்துறையால் இது வெளியிடப்பட்டுள்ளது) இந்திராவை "சூனியக்காரி" என்றும் "தந்திர நரி" என்றும் குறிப்பிட்டிருந்தார். [13]. இந்திரா நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். இது ஐக்கிய நாடுகள் அவையில் அரசியல் ஆதரவு மற்றும் ஒரு சோவியத் வீட்டோ அதிகாரம் கிடைக்க வழி வகுத்தது. 1971 பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்றது, பங்களாதேஷ் உருவானது. வெளிநாட்டு கொள்கை இந்திரா பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதி சுல்பிகார் அலி பூட்டோவை ஒரு வாரகால மாநாட்டிற்கு சிம்லாவிற்கு வர அழைப்பு விடுத்தார். பேச்சு வார்த்தைகளின் பல-தோல்விகளுக்குப் பின்னர், இரண்டு நாட்டு தலைவர்களும் இறுதியில் சிம்லா உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். இது இரு நாடுகளும் காஷ்மீர் பிரச்சனையை பேச்சுவார்த்தைகள் மற்றும் அமைதி வழியில் தீர்ப்பதில் உடன்பட்டிருந்தது. நிக்சனின் மீதான அவரின் வெறுப்பால், அமெரிக்காவுடனான இந்திராவின் உறவுகள் விலகியிருந்தது. அதே வேளையில் சோவியத் ஒன்றியத்துடனான உறவுகள் நெருக்கமாக வளர்ந்தன. இந்தியா பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை ஒரு நிரந்தர எல்லையாக உருவாக்காததற்காக இந்திராகாந்தி சிலரால் விமர்சிக்கப்பட்டார், சில விமர்சகர்கள், பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலான காஷ்மீர் பாகிஸ்தானிலிருந்து பிரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூட கூறினார்கள். இப்பகுதியின் 93,000 போர்க்கைதிகள் இந்திய கட்டுப்பாட்டின்கீழ் இருந்தனர். ஆனால் இந்த உடன்படிக்கை உடனடியாக ஐக்கிய நாடுகள் அவை மற்றும் மூன்றாம் நாடுகளின் குறுக்கீடுகளை நீக்கியது, அத்துடன் பாகிஸ்தான் உடனடியாக எதிர்காலத்தில் ஒரு பெரிய தாக்குதலைத் தொடுப்பதற்கான விருப்பத்தையும் பெருமளவில் குறைத்தது. ஒரு முக்கிய பிரச்சனையில் பூட்டோ முழுமையாக சரணடைய வேண்டும் என்று கோராமல், பாகிஸ்தான் உறுதிபெறவும், சராசரி நிலையடையவும் இந்திரா அனுமதித்தார்.பல தொடர்புகள் ஆண்டுகளாக உறைந்து (மூடப்பட்டு) போயிருந்தாலும் கூட, வர்த்தக உறவுகளும் சராசரி நிலைக்குக் கொண்டு வரப்பட்டன. ரூபாய் மறுமதிப்பீடு 1960களின் இறுதிப்பகுதியில், வணிகத்தை அதிகரிக்க இந்திராவின் நிர்வாகம் இந்திய ரூபாய் மதிப்பில் அமெரிக்க டாலரின் அடிப்படையில் 4லிருந்து 7க்கு 40% மறுமதிப்பீடு செய்ய ஆணையிட்டது. அணு ஆயுதங்கள் திட்டம் சீனாவின் மக்கள் குடியரசிடம் இருந்து வந்த அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு பிரதிபலிப்பாகவும், அணுசக்தி அதிகாரங்களிடமிருந்து இந்தியாவின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பு நலன்களைச் சுதந்திரமாக வைத்திருக்கவும் 1967ல் ஒரு தேசிய அணுசக்தி திட்டம் தொடங்கப்பட்டது. 1974ல், மறைமுகமாக "சிரிக்கும் புத்தர்" என்ற இரகசிய சொல்லுடன், ராஜஸ்தானில் பொக்ரான் என்ற இடத்தில் இந்தியா வெற்றிகரமாக ஒரு நிலத்தடி அணுச்சோதனை நடத்தியது. இந்த சோதனை அமைதி நோக்கம் கொண்டது தான் என்ற அறிவிப்புடன், இந்தியா உலகின் இளம் அணுசக்தி அதிகாரமாக உருவானது. பசுமை புரட்சி 1960களில் இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு விவசாய கண்டுபிடிப்பு திட்டங்கள் மற்றும் கூடுதல் அரசு உதவியானது, இந்தியாவின் கடுமையான நிலவி வந்த உணவுப் பற்றாக்குறையை நீக்கியது. கோதுமை, அரிசி, பருத்தி மற்றும் பால் ஆகியவற்றின் கூடுதல் உற்பத்திக்கு வழிகோலியது. நிக்சன் தலைமையிலான அமெரிக்காவிடம் இருந்து உணவுப்பொருள் மானியத்தைப் பெறுவதற்கு பதிலாக, இந்தியா ஒரு உணவு ஏற்றுமதியாளராக மாறியது. அதன் வணிகமுறையிலான பயிர் உற்பத்தியுடன் கூடிய இந்த சாதனை "பசுமை புரட்சி" என்று கூறப்பட்டது. அதே வேளையில், குறிப்பாக இளம் குழந்தைக்களுக்கு இருந்த ஊட்டச்சத்துக் குறைபாட்டை, எதிர்த்து போராட உதவும் வகையில், பால் மற்றும் முட்டை உற்பத்தியில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றங்கள் வெண்மை புரட்சி எனப்பட்டது. 'உணவு பாதுகாப்பு' என்று அழைக்கப்பட்ட திட்டம், 1975 வரையிலான ஆண்டுகளில் இந்திரா காந்திக்கு உதவியாக இருந்தது.[14] 1960களின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட, மாவட்ட வேளாண் விரிவாக்க திட்டத்திற்கு அளிக்கப்பட்ட பெயர் தான் பசுமை புரட்சி. இது ஏராளமான, விலைமதிப்பற்ற தானியங்களை நகர்புறவாசிகளுக்கு உறுதியளித்தது. இவர்களின் ஆதரவை காந்தி உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளுமே மிகவும் நாடியிருந்தார்.[15] இந்த திட்டம் நான்கு முன்னுரையைக் கொண்டிருந்தது: புதிய வகை விதைகள், இந்திய வேளாண்மையில் இரசாயனமாக்கலின் தேவையை ஏற்றுக்கொள்வது, அதாவது உரங்கள், பூச்சிகொல்லிகள், களை கொல்லிகள் மற்றும் இதர பிற புதிய மற்றும் மேம்பட்ட தற்போதிருக்கும் விதை வகைகளை விரிவு செய்ய தேசிய மற்றும் சர்வதேசிய கூட்டுறவிற்கு பொருப்பு உயர்கல்வி கல்லூரிகளில் விஞ்ஞான, வேளாண் பயிலகங்களை விரிவு செய்வதற்கான திட்டம்.[16] சுமார் பத்து ஆண்டுகளை நிலைத்திருந்த பின்னர், இறுதியாக கோதுமை உற்பத்தியை சுமார் மும்மடங்காக்கவும், ஒரு குறைந்தளவிலான ஆனால் குறிப்பிடத்தக்க அரிசி உற்பத்தி உயர்வையும் இந்த திட்டம் கொண்டு வந்தது. தினை, கிராம்பு மற்றும் பருவெட்டான தானியங்கள் போன்ற தானியங்களின் விளைச்சலில் சிறிதும் உயர்வு ஏற்படவில்லை. உண்மையில், இவை அறிவிக்கப்பட்ட வகையில் நிலையான விளைச்சலைத் தக்க வைத்திருந்தன. 1971 தேர்தல் வெற்றியும், இரண்டாவது பதவி காலமும் (1971–1975) 1971ஆம் ஆண்டு பொது தேர்தலில் சிறப்பான வெற்றிக்குப் பின்னர் இந்திராவின் அரசாங்கம் முக்கிய பிரச்சனைகளை சந்தித்தது. காங்கிரஸ் கட்சியின் உள் கட்டமைப்பு அதன் எண்ணிலடங்கா பிளவுகளைத் தொடர்ந்து, கட்சி இந்திராவின் முழுமையான கட்டுப்பாட்டில் வந்தது. கரீபி ஹட்டாவோ (வறுமையை விரட்டு) என்பது தான் இந்திரா காந்தியின் 1971ஆம் ஆண்டு கருத்துருவாக இருந்தது. இந்த பிரச்சாரமும், அதனுடன் சேர்த்து முன்வைக்கப்பட்ட வறுமை ஒழிப்பு திட்டங்களும், கிராமப்புற மற்றும் நகர்புற ஏழைகளின் அடிப்படையில், இந்திராவுக்கு ஒரு சுதந்திரமான தேசிய ஆதரவைப் பெற்றுத் தந்தது. இதனால் மாநிலத்திலும், உள்நாட்டு அரசாங்கத்திலும் இரண்டிலும் செல்வாக்கு பெற்றிருந்த கிராமப்புற சாதிகளும், நகர்புற பெருமக்களும் அரசியலில் செல்வாக்கு பெறுவதைத் தவிர்க்கும்படி செய்தது. மேலும், முன்னர் குரல்கொடுக்க முடியாத ஏழைகள் இறுதியில் அரசியல் செல்வாக்கிலும், அரசியல் வலுவிலும் அவர்களின் பங்கிற்கு ஆதாயம் பெற்றார்கள். உள்ளூரில் மட்டும் செயல்படுத்தப்பட்ட போதினும், வறுமையை விரட்டு எனும் கொள்கை மூலம் உருவாக்கப்பட்ட திட்டங்கள் புது டெல்லியாலும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியாலும் நிதி உதவி வழங்கப்பட்டு, விரிவு செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டன, அதற்கென ஊழியர்களும் நியமிக்கப்பட்டார்கள். "புதிய மற்றும் பரந்த ஆதரவு வளங்களை... நாடு முழுவதும் செலவிட்டு இத்திட்டத்தை வெற்றிபெறச் செய்யவேண்டுமென்ற முனைப்பை இந்த திட்டங்கள் அளித்தது."[17]. வறுமையை ஒழிப்பதில் கரீபி ஹட்டாவோ திட்டத்தின் தோல்வியை கல்வி ஆய்வாளர்களும், வரலாற்றாளர்களும் தற்போது ஒத்து கொள்கிறார்கள். அதாவது பொருளாதார முன்னேற்றத்திற்காக மொத்த நிதியில் சுமார் 4 சதவீதம் ஒதுக்கப்பட்டு மூன்று வறுமை ஒழிப்பு தி்ட்டங்களுக்கு அளி்க்கப்பட்டது. இதில் சிறிதளவு கூட மதிப்புமிக்க அளவில் ஒருபோதும் 'ஏழைகளிலும் ஏழைகளுக்கு' சென்று சேரவில்லை. மாறாக, இந்த திட்டத்தின் வெறும் கூச்சல்கள், இந்திரா காந்தியின் மறு-தேர்வுக்கு மக்களின் ஆதரவைத் திரட்டப் பயன்படுத்தப்பட்டது. ஊழல் குற்றச்சாட்டுகளும், தேர்தல் முறைகேடு பற்றிய தீ்ர்ப்பும் 1971 ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ராஜ் நரேன் என்பவர் இந்திரா மீது தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கொன்றைத் பதிவு செய்தார். ராஜ் நரேன், இந்திராகாந்திக்கு இணையாக, சுதந்திரத்திற்கு பிந்தைய இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்தினார். இவருக்கு எதிராக இந்திரா எப்போதும் போராடி வந்தார். அரசாங்க வளங்களைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய பல பெரிய மற்றும் சிறிய சம்பவங்களை குறித்து குற்றஞ்சாட்டி இருந்தார்.[18] 1971 பாராளுமன்ற தேர்தலில் எதிர்தரப்பாளரை இந்திரா காந்தி தோற்கடித்திருந்தார். வழக்கின் போது தம் வாதத்திற்கு ஆதாரங்கள் அளித்த இந்திராகாந்தி, நேர்மையற்ற தேர்தல் நடவடிக்கைகள், அதிகபடியான தேர்தல் செலவுகள் மற்றும் அரசு இயந்திரங்கள் மற்றும் அதிகாரிகளை கட்சி நலனுக்கு பயன்படுத்தியது ஆகியவற்றிற்காக குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டார். அவருக்கு எதிராக பெரும் ஊழல் குற்றங்களை நீதிபதி நிராகரித்தார். ராஜ் நரேனால் கொண்டு வரப்பட்ட இவ்வழக்கில் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் அந்த தீர்ப்பு வழங்கப்பட்ட்டது. 1975 ஜூன் 12ல், முறைகேடுகளின் அடித்தளத்தில் மக்களவைக்கான தேர்தலில் இந்திராகாந்தியின் தேர்வு அமைந்திருப்பதாக அலஹாபாத் உயர்நீதிமன்றம் அறிவி்த்தது. நீதிபதி சின்கா அந்த தீர்ப்பை வழங்கி இருந்தார். (1971ல் ராஜ் நரேனுக்கு எதிராக இந்திரா தேர்தல் முறைகேடுகள் செய்தார் என்று தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர், 1977 பாராளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் இந்திராவை தோற்கடித்தார்) , இதனால் பாராளுமன்றப் பதவியில் இருந்து இந்திரா நீக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் தடை விதித்தது. தலைமை அமைச்சரானவர் மக்களவையில் (இந்திய பாராளுமன்றத்தில் கீழ்சபை) அல்லது மாநிலங்களவையில் (பாராளுமன்றத்தின் மேல்சபை) ஓர் உறுப்பினராக இருக்க வேண்டும். இவ்வாறு, இந்த முடிவு அவரை பதவியில் இருந்து இறக்கியது. ஆனால் பதவித் துறப்பு செய்வதற்கான வலியுறுத்தல்களை நிராகரித்த இந்திராகாந்தி, உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான திட்டங்களை அறிவித்தார். நீதிமன்றத்தின் உத்தரவால் பாராளுமன்றத்தின் கீழ்சபையான மக்களவையில் இருந்து நீ்க்கப்படவிருந்த போதிலும், இந்த தீர்ப்பு தமது பதவிக்கு குழிபறிக்காது என்று இந்திரா குறிப்பிட்டார். அவர் கூறுகையில், "எங்களின் அரசாங்கம் சுத்தமாக இல்லை என்று நிறைய பேச்சுக்கள் இருக்கின்றன, ஆனால் எங்களின் அனுபவத்தில் {எதிர்} கட்சிகள் அரசாங்கங்கள் உருவாக்கினால் நிலைமை மேலும் படு மோசமாக இருக்கும்" என்றார். அனைத்து கட்சிகளும் பயன்படுத்திய அதே முறையைத் தான் தேர்தல் பிரச்சார நிதிக்காக அவரின் காங்கிரஸ் கட்சியும் பின்பற்றியது என்று கூறி அவர் விமர்சனங்களை நிராகரித்தார். இந்திரா கட்சியின் ஆதரவைத் தக்க வைத்திருந்தார், அது அவருக்கு ஆதரவாக ஓர் அறிக்கை வெளியிட்டது. தீர்ப்பு குறித்த செய்திகள் பரவியவுடன், அவரின் வீட்டின் முன் ஒன்று திரண்ட நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் தங்களின் பற்றுறுதியை வலியுறுத்தினார்கள். இந்திராகாந்தியின் தீர்ப்பு அவரின் அரசியல் வாழ்க்கையைப் பாதிக்காது என்று இந்திய உயர்மட்ட ஆணையாளர் பி.கே. நேரு தெரிவித்தார். "திருமதி. இந்திராகாந்தி நாட்டில் இன்னமும் தொடர்ந்து ஆதரவை பெற்றிருக்கிறார்," என்று அவர் தெரிவித்தார். "இந்திய வாக்காளர்கள் முடிவெடுத்தாலொழிய இந்திய பிரதம மந்திரி அவர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என்று நான் நம்புகிறேன்" என்றார். போராட்டங்களும், உள்நாட்டுக் கலகங்களும் இந்திரா அவரின் முடிவை அறிவித்த போதும், "அவர் தமது கடைசி மூச்சு"[19] உள்ளவரை மக்களுக்கான சேவையைத் தொடர இருப்பதாக அறிவித்த போதும், எதிர்கட்சிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் அந்த சூழ்நிலைகளில் இருந்து அரசியல் மூலதனத்தைப் பெற விருப்பம் கொண்டார்கள், அவர்கள் அவரின் இராஜினாமாவை வலியுறுத்தி பெருந்திரளான பேரணியை நடத்தினார்கள். பல மாநிலங்களி்ல் சங்கங்கள் மற்றும் எதிர்ப்பாளர்களின் வேலைநிறுத்தங்கள் வாழ்க்கையையே நிலைதடுமாற வைத்தது. இந்த போராட்டத்தை வலுப்படுத்த, ஆய்தமற்ற பொதுமக்களின் கூட்டங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த கேட்டுக் கொள்ளப்பட்டால், அந்த உத்திரவுகளுக்கு கீழ்படிய வேண்டாம் என்று ஜெய பிரகாஷ் நாராயண் காவலரைக் கேட்டுக் கொண்டார். இந்திராவின் அரசாங்கத்திடமிருந்து தெளிந்திருந்த பொதுமக்களின் மயக்கமும், மோசமான பொருளாதாரக் காலமும் ஒன்றிணைந்தன. அவரின் ராஜினாமாவை வலியுறுத்தி டெல்லியில் அவரின் வீட்டின் முன்பாகவும், பாராளுமன்ற கட்டிடத்தைச் சுற்றியும் பெருமளவிலான எதிர்ப்பாளர்களின் கூட்டங்கள் சுற்றி வளைத்தன. இந்திரா ஏற்கனவே அதிகாரத்துவத்திற்காகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். அவரின் வலுவான பாராளுமன்ற பெரும்பான்மையைப் பயன்படுத்தி, அவரின் ஆளும் காங்கிரஸ் கட்சி அரசியல் அமைப்பில் திருத்தம் கொண்டு வந்திருந்தது. அது மத்திய அரசுக்கு ஆதரவாக மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே அதிகாரப்பகிர்வை மாற்றியது. எதிர்கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்கள் சட்ட "ஒழுங்கின்றியும், காட்டுமிராண்டித்தனமாக" இருப்பதாகவும் கூறி அரசியல் அமைப்பின் 356வது பிரிவின்கீழ் அவர் இரண்டு முறை ஜனநாதிபதி ஆட்சியைக் கொண்டு வந்து கட்டுப்பாட்டை பறித்தார். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளும், நிர்வாக சேவையாளர்களும் இந்திராவின் மிக நெருங்கிய அரசியல் ஆலோசகராக இருந்த சஞ்சய் காந்தியின் அதிகரித்து வந்த செல்வாக்கி்ல் சீற்றம் கொண்டார்கள். இந்திரா பதவி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர், இந்திராவின் ஆலோசகராக இருந்த பி. என். அக்சருக்கு மாற்றாக சஞ்சய்காந்தி நியமிக்கப்பட்டிருந்தார். அதிகாரப் பதவியைப் பயன்படுத்துவதற்கான அவரின் புதிய போக்குக்கிற்கான எதிரொலியாக பொதுமக்கள் தலைவர்களும், ஜெய பிரகாஷ் நாராயண், சத்யேந்திர நாத் சின்ஹா மற்றும் ஆச்சார்ய கிருபாளனி போன்ற முன்னாள் சுதந்திர போராட்ட வீரர்கள் இந்திராவுக்கும், அவரின் அரசாங்கத்திற்கும் எதிராகப் பேசிக் கொண்டு நாடு முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டனர். நாட்டின் அவசரகால நிலை (1975–1977) தேர்தல் முறைகேடு குறித்து அவர் மீதான தீர்ப்புக்கு எதிராக இந்திரா ஒரு மேல்முறையீடு செய்தார். மேலும் ஜனநாயகத்திற்கு இடையூறு செய்வதற்கான திட்டம் இருப்பதாக கூறி, அவர் முரண்பாடாக அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்தினார். சுமார் 20 மத்திய மந்திரிகள் உட்பட, ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்திய ஊடகம் தணிக்கை செய்யப்பட்டது. 1975 ஆகஸ்ட் மாதம், எதிர்கட்சியினரை ஆயுதந்தாங்கிய வலுமையுடன் பாராளுமன்றத்திற்கு வெளியே கொண்டு சென்றதுடன், பலரை கைது செய்த நிலையில், அவரின் ஊழல் குற்றங்களில் இருந்து விடுவிக்க மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. எதிர்ப்புப் போராட்டங்களில் பங்குபெற்ற பெரும்பாலான எதிர்கட்சியினரை கைது செய்ய உத்தரவிட்டதன் மூலம் இந்திராகாந்தி ஆணையைத் தக்க வைக்கும் முயற்சியி்ல் இருந்தார். பின்னர் அலஹாபாத் உயர்நீதி மன்ற முடிவைத் தொடர்ந்து ஏற்பட்ட ஒழுங்கின்மை மற்றும் சட்டமுறையின்மையால் குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது, நாட்டில் அவசரகால நிலையை அறிவிக்க வேண்டும் என்று இந்திராவின் அமைச்சரவையும், அரசாங்கமும் கேட்டுக் கொண்டது. அதன்படி, 1975 ஜூன் 26ல் அரசியல் அமைப்பு 352 பிரிவின் அடிப்படையில் உள்நாட்டு ஒழுங்கின்மையின் காரணமாக நாட்டில் அவசரகால நிலையை குடியரசுத் தலைவர் அறிவித்தார். சில மாதங்களுக்கு உள்ளாகவே, எதிர்கட்சிகளின் ஆட்சியில் இருந்த குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களிலும் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் மொத்த நாடும் மத்திய ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது.[20] ஊரடங்குச் சட்டங்கள் ஏற்படுத்த காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. குடிமக்கள் காலவரம்பின்றிக் காவலில் வைக்கப்பட்டார்கள். செய்திகள் மற்றும் ஊடகங்களின் அனைத்து வெளியீடுகளும் கணிசமான அளவிற்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தால் தணிக்கை செய்யப்பட்டன. தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் இந்தர் குமார் குஜ்ரால் அவரின் பணியில் சஞ்சய் காந்தியின் தலையீட்டிற்கு எதிராக பதவியைத் துறந்தார். பிற்காலத்தில் இந்தர் குமார் குஜ்ரால் இந்தியாவின் தலைமை அமைச்சராகப் பதவி வகித்தார். இறுதியாக, நடைபெறவிருந்த சட்டமன்றத் தேர்தல்கள் காலவரம்பின்றி தள்ளி வைக்கப்பட்டன. இத்துடன் மாநில ஆளுநரின் பரிந்துரையுடன் மாநில அரசாங்கங்களைக் கலைக்கலாம் என்ற அரசியல் அமைப்பு பிரிவைப் பயன்படுத்தி, எதிர்கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் நீ்க்கப்பட்டன. தனக்கு அதிக அதிகாரங்களைப் பெற அவசரகால சட்டங்களை இந்திரா பயன்படுத்தினார். "வலுவான முதலமைச்சர்களி்ன் கட்டுப்பாட்டிலும், அவர்களின் அரசியல் கட்சிகளுடனும் மற்றும் மாநில கட்சி அமைப்புகளுடனும் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்பிய அவர் தந்தையைப் (நேரு) போலில்லாமல், சுதந்திரமான அடித்தளத்தைக் கொண்டிருந்த ஒவ்வொரு காங்கிரஸ் முதலமைச்சரையும் திருமதி. காந்தி வெளியேற்றினார். மேலும் அவருக்கு தனிப்பட்ட வகையில் ஆதரவான அமைச்சர்களை அவர்களுக்கு மாற்றாக நியமித்தார்...இவ்வாறு இருந்தும், மாநிலங்களில் ஸ்திரமின்மையைத் தக்க வைக்க முடியவில்லை..."[21] தீர்ப்பின்படி ஆட்சி தீர்ப்பாய ஆட்சியை அனுமதிக்கும் வகையில், பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய அவசியமற்ற ஆணைகளை குடியரசுத் தலைவர் அஹ்மத் வெளியிடுமாறு அவர் செய்தார் என்றும் இந்திரா மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. அதே வேளையில், ஆயிரக்கணக்கான அரசியல் செயல்வீரர்களின் கைது மற்றும் காவல் உட்பட கருத்துவேறுபாடுகளை நீக்கும் ஒரு பிரச்சாரத்தை இந்திராவின் அரசாங்கம் கையில் எடுத்தது. ஜக் மோகன் கண்காணிப்பில் (இவர் பின்னர் டெல்லியின் துணை கவர்னராக ஆக்கப்பட்டார்) டெல்லியின் ஜமா மஸ்ஜித்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த சேரிகளை அகற்றும் முனைப்பில் சஞ்சய் கருவியாக இருந்தார். இந்த நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடிழந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இது நாட்டின் தலைநகரத்தில் இருந்த அந்த பகுதி சமூகத்திடையே சினமூட்டியதுடன், ஆயிரக்கணக்கான தந்தையர்களின் விதைநாளத்தில் கட்டாயமாக செய்யப்பட்ட குடும்ப கட்டுப்பாடு திட்டம் ஆகியவையும் மக்களிடையே எரிச்சலூட்டின. இவை பெரும்பாலும் மோசமாக நிர்வகிக்கப்பட்டன. தேர்தல்கள் அவசரகால நிலையை இரண்டு முறை விரிவாக்கியதற்குப் பின்னர், 1977ல் அவரின் ஆட்சியை நியாயப்படுத்த வாக்காளர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்திராகாந்தி தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். கடுமையாக தணிக்கை செய்யப்பட்ட பத்திரிக்கைகள் அவரை பற்றி என்ன எழுத வேண்டுமென நினைத்தாரோ அதனை எழுதின. அதை படித்ததன் மூலம் அவரின் செல்வாக்கை ஒட்டுமொத்தமாகத் தவறாகக் கணித்தார். எந்த விஷயத்திலும், அவர் ஜனதா கட்சியால் எதிர்க்கப்பட்டார். "ஜனநாயகம் மற்றும் சர்வாதிகாரத்திற்கு" இடையில் ஒரு நல்ல ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு இந்தியாவிற்கான கடைசி வாய்ப்பு தான் இந்த தேர்தல் என்று அவரின் நீண்டகால எதிர்க்கட்சியான ஜனதா, அதன் தலைமையான மொரார்ஜி தேசாயுடனும் ஆன்மீக வழிகாட்டியான ஜெய் பிரகாஷ் நாராயண் உடனும் சேர்ந்து அறிவித்தது. இத்தேர்தலில் இந்திராவின் காங்கிரஸ் கட்சி கடுமையான் தோல்வியைத் தழுவியது. இந்திரா மற்றும் சஞ்சய் இருவரும் அவர்களின் தொகுதியில் தோல்வியடைந்தார்கள். அத்துடன் காங்கிரஸ் (அதற்கு முந்தைய மக்களவையில் 350 இடங்களுடன் ஒப்பிடுகையில்) 153 இடங்களை மட்டுமே கைப்பற்றியது, அதில் 92 இடங்கள் தெற்கில் இருந்து கிடைத்தவையாகும். நீக்கம், கைது மற்றும் மறுபிரவேசம் 1969இல் இந்திய அரசியல் அமைப்பிற்கான தேர்வாக, மொரார்ஜி தேசாய் தலைமை அமைச்சராகவும், நீலம் சஞ்சீவி ரெட்டி குடியரசுத் தலைவராகவும் பதவியேற்றார்கள். 1978 இடைதேர்தலில் வெற்றி பெறும் வரையில் இந்திரா காந்தி அவரை அவரே, பணியோ, வருமானமோ அல்லது இருப்பிடமோ இல்லாமல் இருப்பதாகக் கண்டார். 1977 தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் உடைந்தது. ஜகஜீவன் ராம், பஹூகுணா மற்றும் நந்தினி சத்பதி போன்ற இந்திராவின் மிக முக்கியமான முன்னாள் ஆதாரவாளர் பிரிந்து வெளியேறினார்கள். அவர்கள் மூவரும் இந்திராவிற்கு மிக நெருக்கமாக இருந்தார்கள், ஆனால் சஞ்சய்காந்தியால் உருவாக்கப்பட்ட சூழ்நிலைகள் மற்றும் அரசியல் தந்திரத்தால் வலுக்கட்டாயப்படுத்தப்பட்டார்கள். சஞ்சய் இந்திராவின் செல்வாக்கைச் சிதைக்க விரும்பம் கொண்டிருந்தார் என்று பின்னர் வதந்தி ஏற்பட்டது. அப்போது அதிகாரப்பூர்வ எதிர்கட்சியாக இருந்த போதிலும், காங்கிரஸ் (இந்திரா) கட்சி பாராளுமன்றத்தில் வெகு சிறிய குழுவாக இருந்தது. பல்வேறு கூட்டணிப் பூசல்களுக்கு இடையில் ஆட்சி புரிய முடியாமல், ஜனதா அரசாங்கத்தின் உள்நாட்டு மந்திரி சௌத்ரி சரண் சிங், பல குற்றச்சாட்டுக்களுக்காக இந்திரா மற்றும் சஞ்சய் காந்தியை கைது செய்ய உத்தரவிட்டார். இதில் எந்த குற்றச்சாட்டையும் இந்திய நீதிமன்றத்தில் எளிதாக நிரூபிக்க முடியவில்லை. கைது என்றால் இந்திரா தானாகவே பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்படுவார் என்பதை குறிக்கிறது. எவ்வாறிருப்பினும், இந்த வழிமுறை பேரழிவுமிக்க வகையில் திருப்பி அடித்தது. அவரின் கைது மற்றும் நீண்ட கால வழக்குகள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவரை ஒரு கொடுங்கோலராக பார்த்த மக்களிடையே அவருக்கு பெரியளவில் அனுதாபத்தைப் பெற்று தந்தது. இந்திரா (அல்லது "அந்த பெண்மணி", பலரால் இவ்வாறு தான் அழைக்கப்பட்டார்) மீதான வெறுப்பின் காரணமாக மட்டுமே ஜனதா கூட்டணி ஒன்றுபட்டிருந்தது. பொதுவில் சிறுபான்மையுடன், அரசாங்கம் உட்பூசல்களில் சிக்கி்க் கொண்டிருந்தது. இந்த சூழ்நிலையை இந்திரா அவரின் ஆதாயத்திற்காகப் பயன்படுத்த முடிந்தது. மறைமுகமாக அவசரகால நிலையின் போது செய்த "தவறுகளுக்காக" வருத்தம் தெரிவி்த்து, மீண்டும் அவர் அறிக்கைகள் அளிக்கத் தொடங்கினார். 1979 ஜூனில் மொரார்ஜி தேசாய் பதவித் துறப்பு செய்தார், சரண் சிங் அரசாங்கத்திற்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் என்று இந்திரா உறுதி அளித்ததைத் தொடர்ந்து ரெட்டியால் சரண் சிங் தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்திரா ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர், அவர் அவரின் ஆரம்பநிலை ஆதரவைத் திரும்ப பெற்றார், 1979 குளிர்காலத்தில் ஜனாதிபதி ரெட்டி பாராளுமன்றத்தைக் கலைத்தார். அதை தொடர்ந்து வந்த ஜனவரியில் நடத்தப்பட்ட தேர்தல்களில், காங்கிரஸ் அதிக பெரும்பான்மையுடன் ஆட்சிக்குத் திரும்பியது. 1980களில், இந்திரா காந்தியின் அரசாங்கம் விடுதலைப்புலிகளிற்கும், இலங்கையில் இருந்த பிற தமிழ் போராளிகள் குழுக்களுக்கும் பணம், ஆயுதம் மற்றும் இராணுவப் பயிற்சிகளை அளித்தது. [22] மூன்றாம் பதவி காலம் செலாவணி நெருக்கடி 1980களின் தொடக்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு 7ல் இருந்து 12ஆக 40 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததை இந்திராவின் நிர்வாகம் தடுத்து நிறுத்துவதில் தோல்வியுற்றது. பஞ்சாப் நடவடிக்கை இந்திரா காந்தியின் பிந்தைய ஆண்டுகள் பஞ்சாப் பிரச்சனைகளுடன் தொல்லையில் இருந்தது. பஞ்சாபில் சீக்கியத் தீவிரவாதம் வளர்ந்து வந்தது. சமய மற்றும் தீவிரவாதத் தலைவராக இருந்த ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேயின் அதிகரித்து வந்த செல்வாக்கு இந்திய ஒருமைப்பாட்டுக்குச் சவாலாக அமையுமென இந்தியத் தலைவர்கள் அஞ்சினார்கள். இந்திரா படையை அனுப்பித் தீவிரவாதிகளை ஒடுக்க எண்ணினார். 1984 ஜூனில், ஜர்னையில் சிங் பிந்தரன்வாலாவின் சிக்கிய சுந்திர போராட்டக் காலிஸ்தான் பிரிவினைவாத குழு, சிக்கியர்களின் புனிதத்தளமான பொற்கோயிலுக்குள் முகாமிட்டிருந்தது.[23] இதனைத் தீர்க்க ஆபரேசன் புளூஸ்டார் என்ற நடவடிக்கை இந்திரா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது. சீக்கியர்களின் புனிதக் கோயிலான பொற் கோயிலுக்குள் ஆயுதங்களுடன் ஒளிந்திருப்பதாகக் கருதப்பட்ட தீவிரவாதிகளையும், அவர்களின் தலைவரையும் பிடிக்க இராணுவம் பொற்கோயிலுக்குள் புக அனுமதி வழங்கினார். பொற்கோயிலுக்குள் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இருந்த போதினும், அந்த நேரத்தில் இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். இந்திரா காந்தியின் இந்த நடவடிக்கை சர்வதேச ஊடகத்தால் பெரிதும் கண்டனத்திற்குள்ளானது. பாதிக்கப்பட்ட இராணுவ மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கையில் அரசாங்க எண்ணிக்கையும், அரசு சார்பற்ற எண்ணிக்கையும் வேறுபடுகிறது. நான்கு அதிகாரிகள், 79 வீரர்கள் மற்றும் 492 சிக்கியர்கள் என்று அரசாங்கம் கணக்கிட்டது; அரசுசாரா கணக்கீடு இதை விட அதிகமாக இருந்தது. ஒருவேளை 500 அல்லது அதற்கு மேலான துருப்புகளும், துப்பாக்கி சூட்டில் சிக்கி கொண்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 3,000 சிக்கியர்களும் இருந்திருக்கலாம்.[24] உண்மையான ஆவணங்கள் இல்லாததால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குறித்த துல்லியமான விபரங்கள் சர்ச்சைக்குரியதாக இருந்தது. தாக்குதல் நடத்தப்பட்ட நேரம் மற்றும் முறையும் பரவலாக விமர்சிக்கப்பட்டன. இதைப் பயன்படுத்தி பெரும்பாலான விமர்சனங்கள் சிக்கியர்கள் மீதான ஒரு தனிப்பட்ட தாக்குதல் என்பதாக இந்திரா காந்திக்கு எதிராகத் திருப்பி விடப்பட்டது. சிக்கியர்களின் சுதந்திரம் பற்றிய யோசனைகளையும், காலிஸ்தான் என்றழைக்கப்படும் ஒரு பிரிவினைவாத அரசை உருவாக்குவதற்கான யோசனையையும் போதித்தன் மூலம் "விரோதத்தை" வளர்த்து வந்த பயங்கரவாதி பிந்தரன்வாலேயை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் என்று கூறி அதை அவர் நியாயப்படுத்தினார். படுகொலை தொடர்ந்து இடம்பெற்ற படை நடவடிக்கைகள் இந்திராவை சீக்கியர்களின் கோபத்துக்கு ஆளாக்கியது. இதன் தொடர்ச்சியாக, சீக்கியர்களான, அவரது சொந்தப் பாதுகாவலர் இருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திரா காந்திக்கு எண்ணிலடங்கா காவலர்கள் இருந்தனர். அவர்களில் இருவர் சத்வந்த் சிங் மற்றும் பீண்ட் சிங், இருவருமே சீக்கியர்கள். அவர்கள் 1984 அக்டோபர் 31ஆம் தேதி, புதுடெல்லியில் உள்ள எண் 1, சப்தர்ஜங் சாலையில் இருந்த தலைமை அமைச்சரின் வீட்டுத் தோட்டத்தில் தங்களின் சேவை ஆயுதங்களால் இந்திரா காந்தியைப் படுகொலை செய்தனர். ஐரிஷ் தொலைக்காட்சிக்காக பிரிட்டிஷ் நடிகர் பீட்டர் உஸ்தினோவ்வால் ஓர் ஆவணப்படத்திற்கு பேட்டி அளிப்பதற்காக, இந்திரா சத்வந்த் மற்றும் பீண்ட்டின் காவலில் இருந்த விக்கெட் கேட்டைக் கடந்து சென்றார். அந்த சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக கிடைத்த தகவலின்படி, பீண்ட் சிங் அவரின் பக்கவாட்டு ஆயுதத்தால் அவரை மூன்று முறை சுட்டார், சத்வந்த் சிங் ஒரு ஸ்டென் சப்மெஷின் துப்பாக்கியால் 30 ரவுண்டுகள்[25] சுட்டார். அவரின் பிற காவலாளிகளால் பீ்ண்ட் சிங் சுட்டு கொல்லப்பட்டார், சத்வந்த் சிங் சுடப்பட்டு, கைது செய்யப்பட்டார். இந்திரா அவரின் அரசாங்கக மகிழுந்தில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் போது வழியில் உயிர் துறந்தார், ஆனால் பல மணி நேரங்களுக்கு அவர் இறந்ததாக அறிவிக்கப்படவில்லை. அவர் அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞான பயிலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார், அங்கு அவரை மருத்துவர்கள் சோதனை செய்தனர். அந்த சமயத்தில் 29 உள் சென்று வெளியேறிய காயங்கள் இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்தது, சில அறிக்கைகள் அவரின் உடலில் இருந்து 31 குண்டுகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தது. அவர் ராஜ்காட்டிற்கு அருகில் நவம்பர் 3ஆம் தேதி எரியூட்டப்பட்டார். அவரின் இறப்புக்கு பின்னர், புதுடெல்லியைச் சுற்றி வளைத்த இந்திரா காந்தியின் மதிப்பிற்கு பாத்திரமான காங்கிரஸ் அரசியல்வாதிகளால் அதிருப்தி உட்பிரிவுகள் உருவாக்கப்பட்டது. காந்தியின் நண்பரும், சுயசரிதையாளருமான புபுல் ஜெயகர் இந்திராவின் பதட்டத்தையும், ஆப்ரேஷன் ப்ளூஸ்டாரின் விளைவாக என்ன நடக்கும் என்பது குறித்த அவரின் முன்னெச்சரிக்கையும் வெளிப்படுத்தி காட்டினார். சொந்த வாழ்க்கை நேரு-காந்தி குடும்பம் தொடக்கத்தில் சஞ்சய் அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிசாக இருந்தார்; ஆனால் ஒரு விமான விபத்தில் அவர் இறந்த பின்னர், விருப்பமற்றிருந்த ராஜீவ்காந்தியை, விமான ஓட்டியாக இருந்த அவரின் வேலையை விட்டுவிட்டு, 1981 பிப்ரவரியில் அரசியலில் நுழையுமாறு இந்திரா வலியுறுத்தினார். இந்திரா காந்தியின் மரணத்திற்கு பின்னர், ராஜீவ் காந்தி தலைமை அமைச்சரானார். 1991 மே மாதத்தில், அவரும் படுகொலை செய்யப்பட்டார், அவர் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றபோது தமிழீழ விடுதலை புலிகளின் மனித வெடிகுண்டினால் கொல்லப்பட்டார். ராஜீவின் மனைவி சோனியா காந்தி, 2004 மக்களவை தேர்தல்களில் ஓர் ஆச்சரியமூட்டும் தேர்தல் வெற்றிக்குப் பின் ஐக்கிய முன்னேற்ற கூட்டணியைத் தலையேற்று நடத்தினார். சோனியா காந்தி இந்தியத் தலைமை அமைச்சராகப் பதவியை ஏற்கும் வாய்ப்பை மறுத்துவிட்டார், ஆனால் காங்கிரஸ் அரசியல் இயந்திரங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கிறார்; முன்னாள் நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் தற்போது இந்திய அமைச்சரவைக்குத் தலைமையேற்றுள்ளார். ராஜீவின் குழந்தைகளான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வாத்ராவும் அரசியலில் இறங்கியுள்ளனர். சஞ்சய் காந்தியின் விதவை மனைவி மேனகா காந்தியும் (சஞ்சையின் மரணத்திற்கு பின்னர், இந்திராவிடமிருந்து பிரிந்து வந்த இவர், அனைவராலும் அறியப்பட்ட வகையில் பிரதம மந்திரியின் வீட்டிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்)[26], சஞ்சயின் மகன் வருண் காந்தியும் முக்கிய எதிர்கட்சியான பிஜேபி கட்சியின் உறுப்பினர்களாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். முரண்பாடுகள் மறைந்த இந்திய பிரதம மந்திரி இந்திரா காந்தி, 1970களில் உத்தியோகப்பூர்வமாக இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஆண்கள் தங்களை கருத்தடை செய்து கொள்ள வேண்டும் என்ற ஒரு கட்டாய கருத்தடைத் திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் திருமணம் ஆகாத பல இளைஞர்கள், அரசியல் எதிர்ப்பாளர்கள் மற்றும் அறியாமையிலிருந்த ஆண்களும் கருத்தடை செய்யப்பட்டதாக நம்பப்பட்டது. இந்தியாவில் இந்த திட்டம் இன்றும் நினைவு கூறப்படுவதுடன் விமர்சிக்கப்படுகிறது. மேலும் குடும்ப கட்டுப்பாடு மீது பொதுமக்களுக்கு ஒரு தவறான வெறுப்பை உருவாக்குவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இது அரசின் திட்டங்களை பல ஆண்டுகளுக்கு பாதிப்பிற்குள்ளாக்கியது.[27] இவற்றையும் பார்க்கவும் இந்தியப் பிரதமர்கள் பிரபல இந்தியர்களின் பட்டியல் கூடுதல் வாசிப்பு வேத் மெஹ்தா, குடும்ப விவகாரம்: மூன்று பிரதம மந்திரிகளின் கீழ் இந்தியா (1982) ஐஎஸ்பிஎன் 0-19-503118-0 புப்புல் ஜெயகார், இந்திரா காந்தி: ஓர் உன்னத வாழ்க்கை வரலாறு (1992) ஐஎஸ்பிஎன் 9780679424796 கேத்ரீன் பிரான்க், இந்திரா: இந்திரா நேருவின் வாழ்க்கை ஐஎஸ்பிஎன் 0-395-73097-X ராமாச்சந்திரா குஹா, காந்திக்கு பின்னர் இந்திரா: உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் வரலாறு (2007) ஐஎஸ்பிஎன் 978-0-06-019881-7 மேற்கோள்கள் வெளி இணைப்புகள் | இந்தியத் தலைமை அமைச்சர் 1980–1984 | Succeededby ராஜீவ் காந்தி |-hjtjg |- |Precededby பாமுலபர்தி வேங்கட நரசிம்ம ராவ் | இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் 1984–1984 | Succeededby ராஜீவ் காந்தி |- |} பகுப்பு:இந்திய பிரதம மந்திரிகள் பகுப்பு:இந்திய தேசிய காங்கிரஸ் பகுப்பு:பாரத ரத்னா விருது பெற்றவர்கள் பகுப்பு:1917 பிறப்புகள் பகுப்பு:1984 இறப்புகள் பகுப்பு:நேரு-காந்தி குடும்பம் பகுப்பு:அரசியலில் இந்திய பெண்கள் பகுப்பு:இந்திய இந்துக்கள் பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு:கொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்கள் பகுப்பு:இந்தியப் பிரதமர்கள் பகுப்பு:வரலாற்றில் பெண்கள் பகுப்பு:இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள் பகுப்பு:இந்திய நிதியமைச்சர்கள் பகுப்பு:லெனின் அமைதிப் பரிசு பெற்றவர்கள் பகுப்பு:இந்தியாவில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள் பகுப்பு:பெண் அரசுத் தலைவர்கள் பகுப்பு:4வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
இந்திராகாந்தி எப்போது பிறந்தார்?
1917ஆம் ஆண்டு நவம்பர் 19
3,971
tamil
e6bd3cf2c
மலேசியா (Malaysia), தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு கூட்டாட்சி அரசியல்சட்ட முடியாட்சியுள்ள ஒரு நாடாகும். 13 மாநிலங்களையும் மூன்று நடுவண் மண்டலங்களையும் கொண்டுள்ள மலேசியா, தென்சீனக் கடலினால் மலேசியத் தீபகற்பம், கிழக்கு மலேசியா (மலேசிய போர்னியோ) என இரண்டு பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மலேசியத் தீபகற்பம் வடக்கே தாய்லாந்துடன் நில, மற்றும் கடல் எல்லையையும், தெற்கே சிங்கப்பூர், வடகிழக்கே வியட்நாம், மேற்கே இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் கடல் எல்லைகளையும் கொண்டுள்ளது. கிழக்கு மலேசியா புரூணையுடனும், இந்தோனேசியாவுடனும் நில, மற்றும் கடல் எல்லைகளையும், பிலிப்பீன்சு, வியட்நாம் ஆகியவற்றுடன் நில எல்லைகளையும் கொண்டுள்ளது. மலேசியாவின் தலைநகரும், மிகப்பெரிய நகரமும் கோலாலம்பூர் ஆகும். புத்ராஜாயா நடுவண் அரசின் நிருவாகத் தலைநகராகும். 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்டுள்ள மலேசியா உலகின் 44-வது மக்களடர்த்தி கூடிய நாடாகும். ஐரோவாசியாக் கண்டத்தின் தென்முனையான தாஞ்சுங் பியாய் மலேசியாவில் அமைந்துள்ளது. வெப்ப வலயத்தில் அமைந்துள்ள மலேசியா 17 பெரும்பல்வகைமை நாடுகளில் ஒன்றான மலேசியாவில் இனப்பெருக்க உயிரினங்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளன. மலேசியாவின் மொத்த பரப்பளவு 329,847 சதுர கிலோமீட்டர்கள் (127,350 சதுர மைல்கள்). தீபகற்ப மலேசியாவின் மக்கள் தொகை மட்டும் 20 மில்லியன். தற்போது மலேசியாவின் மக்கள் தொகை 2.5 கோடி. இவர்களில் பெரும்பான்மையினர் மலாய் மக்கள். இவர்களுக்கு அடுத்து சீனர்களும் இந்தியர்களும் கூடுதலாக வாழ்கின்றனர். பெரும்பான்மையான மலேசிய மக்கள் இஸ்லாமைப் பின்பற்றுகிறார்கள். இஸ்லாமே மலேசியாவின் தேசிய சமயமும் ஆகும். மலாய் மொழி தேசிய மொழியாகும். 1957ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்திடமிருந்து விடுதலை பெற்றது. இப்போது மலேசியாவின் மன்னராக ஐந்தாம் முகம்மது ஆட்சியில் உள்ளார். இருபதாம் நூற்றாண்டில் கூடுதலான பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தது. 2018 மே 9 இல்நடைபெற்ற 14ஆவது பொதுத்தேர்தலுக்குப் பின் மகாதீர் பின் முகம்மது மலேசியாவின் 7வது பிரதமராக 10ஆம் திகதி மே மதம் 2018 பதவியேற்றார்.[12] வரலாறு வரலாற்றுக்கு முந்தைய காலம் வரலாற்றுக்கு முந்தைய காலச் சான்றுகள் மலேசியாவில் அதிகமாகக் கிடைத்திருக்கின்றன. 2 லட்சம் வருடங்களுக்கு முந்தைய கல்லாயுதங்கள் புகித் ஜாவாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மலேசியாவின் சரவாக்கில் அமைந்துள்ள நியா குகைகளில் 40000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித எச்சங்கள் காணப்படுகின்றன. பூர்வகுடி செமாங் இனத்தவர்களின் மூதாதையர்கள் சுமார் 40000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆப்பிரிக்கர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மலேசியத் தீபகற்பத்தின் மிக முந்தைய எலும்புக்கூடான பேராக் மனிதன் 11000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இது லெங்கோங் எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்ப காலம் கி.மு. முதல் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் வந்த வணிகர்களும் குடியேற்றக்காரர்களும் வணிகத் துறைமுகங்களையும் நகரங்களையும் உருவாக்கினர். பிற்பகுதியில் மலேசியா ஸ்ரீ விஜயப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்திருக்கிறது.11ம் நூற்றாண்டில் சோழ அரசன் இராஜேந்திர சோழன் கடாரம் எனப்படும் இடத்தைப் போரில் வென்றதற்கான வரலாற்று ஆதாரங்கள் காணப்படுகின்றன. அடுத்த 20 வருடங்களில் சுமத்திரா மற்றும் மலாயாத் தீபகற்பத்தில் சோழர்களால் தொடர்ச்சியான படையெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. சோழர்களின் வருகையும் போர்களும் ஸ்ரீவிஜய ஆட்சியை வலுவிழக்கச்செய்தது. சுல்தான்கள் பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திலிருந்து பல்வேறு சுல்தான்கள் ஆட்சி புரிந்தார்கள். ஸ்ரீ விஜயப் பேரரசின் இளவரசனான பரமேஸ்வரன் மலாயத் தீபகற்பத்தின் முதல் சுதந்திர இராச்சியமாகக் கருதப்படும் மலாக்கா சுல்தானியத்தை நிறுவினான். பரமேஸ்வரன் முஸ்லிமாக மதம் மாறினான். இக்கால கட்டத்தில் இஸ்லாமிய சமயம் தீவிரமாகப் பரவியது. மேலும் இக்காலப் பகுதியில் மலாக்கா முக்கிய வாணிப மையமாகவும் விளங்கியது. ஐரோப்பிய குடியேற்ற ஆட்சிகள் 1511ல் மலாக்கா போர்த்துக்கீசர் வசமானது. பின் 1641ல் ஒல்லாந்தர்களால் (இடச்சுக்காரரால்) கைப்பற்றப்பட்டது. 1786ல் கெடாவின் சுல்தான் பினாங்கைப் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனிக்கு குத்தகைக்குக் கொடுத்தார். இதனால் பிரித்தானியப் பேரரசு மலாயாவில் காலூன்றியது. பிரித்தானியர் 1819ல் சிங்கப்பூரைக் கைப்பற்றினர். மேலும் 1824ல் ஆங்கில-டச்சு ஒப்பந்தப்படி மலாக்காவையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். 1826 -இல் பிரித்தானியர் பினாங்கு, மலாக்கா, சிங்கப்பூர், லபுவன் தீவுகள் ஆகியவற்றை நேரடியாகத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததன் மூலம் அவற்றைத் தமது முடிக்குரிய குடியேற்ற நாடாக்கினர். இரண்டாம் உலகப்போரின் போது 1943–1945 வரை சப்பான் ஆட்சி செலுத்தியது. இக்காலப்பகுதியில் இனப்பிரச்சினைகள் உருவாகியதோடு தேசியவாதமும் மேலோங்கியது. போருக்குப்பின் மீண்டும் பிரித்தானியா அதிகாரத்திற்கு வந்தது. மேலும் பிரித்தானியா மலாயாவின் நிருவாகத்தை ஒருங்கிணைத்து அதனை மலாயக் கூட்டமைப்பு என்ற ஒரே முடிக்குரிய குடியேற்ற நாடாக்கியது. எனினும் மலாயர் இதனை எதிர்த்தனர். மேலும் மலாயப் பொதுவுடைமைக் (கம்யூனிஸ்ட்டுக்) கட்சியின் தலைமையில் ஒன்றிணைந்த போராளிகள் பிரித்தானியப் படைகளுக்கெதிராகக் கொரில்லாப் போர் தொடுத்தனர். சமகாலம் 1957 ஆகஸ்ட் 31 அன்று விடுதலை அடைந்த மலேசியா 1963 ஆம் ஆண்டு மலேசிய கூட்டரசு எனப்படும் தற்கால மலேசிய நாடாக உருவாகியது. 1965ஆம் ஆண்டு சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து தனிநாடாகியது. 1969ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரத்திற்குப் பிறகு பூமிபுத்திரா எனப்படும் பூர்வகுடிமக்களுக்கு பொருளாதார வளர்ச்சியில் சம பங்கு வழங்கும் நோக்கோடு சர்ச்சைக்குட்பட்ட புதிய பொருளாதார கொள்கை கொண்டுவரப்பட்டது. சமீப காலங்களில் சிறுபான்மை இந்தியர்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 2007இலும் பெப்ரவரி 2008 இலும் பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடிப் போராட முயன்றபோது காவற்துறையினரால் கண்ணீர் புகை குண்டு வீசிக் கலைக்கப்பட்டனர். ஆட்சிப்பிரிவுகள் மலேசியா 13 மாநிலங்கள் மற்றும் மூன்று கூட்டாட்சிப் பகுதிகளின் கூட்டமைப்பாகும். இவை இரண்டு பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தீபகற்ப மலேசியாவில் 11 மாநிலங்களும் இரண்டு கூட்டாட்சிப்பகுதிகளும் கிழக்கு மலேசியாவில் இரண்டு மாநிலங்களும் ஒரு கூட்டாட்சிப் பகுதியும் உள்ளன. மாநிலங்களின் ஆளுகை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்குள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதோடு கூட்டாட்சிப் பகுதிகளின் நிர்வாகத்தை மத்திய அரசாங்கம் மேற்கொள்கிறது.[13] 13 மாநிலங்களும் வரலாற்று முறையான மலாய் இராச்சியங்களை மையமாகக் கொண்டவை. தீபகற்ப மலேசியாவிலுள்ள 11 மாநிலங்களில் 9 அவற்றின் பரம்பரை ஆட்சியாளர்களால் ஆளப்படுவதோடு, அவை மலாய் மாநிலங்கள் எனவும் அறியப்படுகின்றன. இவற்றின் மன்னர் ஒன்பது ஆட்சியாளர்களின் சபையொன்றிலிருந்து அவர்கள் மூலமாகவே ஐந்தாண்டுப் பதவிக்காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.[14] ஒவ்வொரு மாநிலமும் மாநிலச் சட்டவாக்கச் சபை எனப்படும் ஒற்றைச் சபையைக் கொண்டுள்ளன. கிழக்கு மலேசியாவிலுள்ள மாநிலங்கள்(சபா மற்றும் சரவாக்) தமக்கெனத் தனியான குடிவரவுக் கொள்கைகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளன.[15] இதன்படி மலேசியாவின் ஏனைய பகுதிகள்(தீபகற்ப மலேசியா) குடிவரவுச் சட்டங்களின் கீழ் வெளிநாடுகளாகக் கருதப்படுகின்றன.[16] ஒவ்வொரு மாநிலமும் மாவட்டங்களாகவும், மாவட்டங்கள் மேலும் முகிம்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. சபாவிலும் சரவாக்கிலும் மாவட்டங்கள், பிரிவுகளாகக் கூட்டமாக்கப்பட்டுள்ளன.[17] எல்லா மாநிலங்களுக்கும் சீரான நீதியை வழங்குவதற்காக மலேசியப் பாராளுமன்றம் நிலம், இஸ்லாமிய சமயம், உள்ளூராட்சி போன்ற பிரிவுகளில் எழும் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. மேலும் மாநிலமொன்றின் வேண்டுகோளின் பேரில் அம்மாநில நிர்வாகத்தில் தலையீடு செய்யவும் அதிகாரம் உண்டு. சில நிலம் தொடர்பான சட்டங்களைத் தவிர, மாநிலங்களுக்குள் நிகழும் பிரச்சினைகளை அம்மாநிலங்களே கவனிக்கின்றன. நாட்டின் சட்டத்துக்கு அமைவாக, இஸ்லாமிய மதம் தொடர்பற்ற பிரச்சினைகள் மலேசிய ஒப்பந்தத்தைப் பேணும் வகையில் தேசிய மட்டத்திலேயே நிர்வகிக்கப்படுகின்றன.[18] புவியியல் மலேசியா 3,29,847 சதுர கிலோமீட்டர்கள் மொத்த நிலப்பரப்பைக் கொண்டு 67வது பெரிய நாடாக விளங்குகிறது. இதனுடன் நில எல்லைகளை மேற்கு மலேசியாவில் தாய்லாந்தும் கிழக்கு மலேசியாவில் இந்தோனேசியாவும் புருணையும் பகிர்கின்றன.[19]சிங்கப்பூருடன் ஓர் குறுகிய தரைப்பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளது. கடல்சார் எல்லையை வியட்நாமுடனும் [20] பிலிப்பைன்சுடனும் பகிர்கிறது.[21] நில எல்லைகள் பெரும்பாலும் பெரிலிசு ஆறு, கோலோக் ஆறு மற்றும் பகலயன் கால்வாய் போன்ற புவியிடக் கூறுக்களால் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால் கடல்சார் எல்லைகள் இன்றும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.[19] சரவாக் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கும் புருணை மலேசியாவினால் முழுதும் சூழப்பட்டுள்ளது[22]. ஆசிய நிலப்பகுதியிலும் மலாய் தீவுக்கூட்டங்களிலும் ஆட்சிப்பகுதி கொண்ட ஒரே நாடாக மலேசியா இலங்குகிறது.[23] ஜொகூர் மாநிலத்தின் தெற்குக் கடைசியில் உள்ள டான்ஜுங் பியாய், ஆசியாக் கண்டத்தின் தெற்கு முனையாக உள்ளது.[24] சுமாத்திராவிற்கும் மலேசியத் தீபகற்பத்திற்கும் இடையில் உள்ள உலகின் 40 சதவீத சரக்குகள் செல்லும் மலாக்கா நீரிணை உலக வர்த்தகத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.[25] பொருளியல் மலேசியா பொதுவாகத் திறநிலை மற்றும் அரசுசார் பொருளாதார நாடாகவும் புதியதாகத் தொழில்மயமான சந்தைப் பொருளாதார நாடாகவும் விளங்குகிறது.[26][27] பொருளியல் செயல்பாடுகளில் பேரளவு பொருளாதாரத் திட்டங்கள்மூலம் முக்கிய பங்காற்றும் அரசு தனது பங்காற்றலை படிப்படியாகக் குறைத்து வருகிறது. ஆசிய நாடுகளில் சிறந்த பொருளியல் தரவுக்கூற்றுகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ள மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1957 முதல் 2005 வரை ஆண்டுக்கு ஏறத்தாழ 6.5 % உயர்ந்து வந்துள்ளது.[14] 2010இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி அமெரிக்க டாலரில் $414,400பில்லியனாக இருந்தது; இது ஆசியான் நாடுகளில் 3வது மிகப்பெரிய மதிப்பாகும். உலகளவில் மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 29வதாக உள்ளது.[28] மக்கள் தொகையியல் 2010 கணக்கெடுப்பின்படி மலேசிய மக்கள் தொகை 28,334,135 ஆகும்[3]. இது உலகளவில் 43வது மக்கள் தொகை அதிகமுள்ள நாடாக அறியப்பட்டுள்ளது. இந்நாட்டில் பல இனக் குழுக்கள் வாழ்கின்றன. மலாய் இனக் குழுவினர் 50.4 %ம், மலாய் இனமல்லாத மற்ற பூமிபுத்திராக்கள் 11 விழுக்காடும் உள்ளனர் [19] . மலேசிய சட்டப்படி மலாய் இனத்தவர்கள் அனைவரும் முசுலிம்கள் ஆவர். அவர்கள் மலாய் இன பண்பாட்டைப் பின்பற்றுபவர்கள். மலாய் இன மக்களே மலேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்துபவர்கள். பூமிபுத்திரா என்ற தகுதி மலாய் இனம் அல்லாத தாய், கெமர், சாம் மக்களுக்கும் சபா, சரவாக் மாநில பழங்குடி மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. சரவாக் மாநில மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மலாய் இனமல்லாத பூமிபுத்திராக்கள் ஆவர். சபா மாநிலத்தில் மூன்றுக்கு இரண்டு பேர் மலாய் இனமல்லாத பூமிபுத்திராக்கள் ஆவர்[19]. மலேசிய தீபகற்பத்தில் தொல்குடி மக்கள் சிறிய அளவில் வாழ்கிறார்கள். யார் பூமிபுத்திரா என்பதை வரையறுக்கும் சட்டம் மாநிலத்துக் மாநிலம் வேறுபடும். மலேசியா மக்கள் தொகையில் சீன வம்சாவளியினர் 23.7 விழுக்காடும் இந்திய வம்சாவளியினர் 7.1 விழுக்காடும் உள்ளனர் [19] . இவர்களுக்குப் பூமிபுத்திரர்கள் என்ற தகுதி கிடையாது. சீனர்கள் மலேசிய வணிகத்தில் செல்வாக்கு செலுத்துகின்றனர். 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெருவாரியான இந்தியர்கள் மலேசியாவுக்கு பிரித்தானியர்களால் தோட்ட வேலை செய்ய அழைத்து வரப்பட்டனர் [29]. இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் ஆவர் [30] . மலேசியாவில் பிறந்தால் மட்டும் ஒருவர் மலேசியக் குடியுரிமை பெறமுடியாது. வெளிநாட்டில் இருந்தாலும் இரண்டு மலேசியர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்படும். மலேசியா இரட்டை குடியுரிமை வழங்குவதில்லை [31]. கிழக்கு மலேசியா மற்றும் மேற்கு மலேசியாவில் இருப்பவர்களுக்குக் குடியுரிமையில் சிறிய வேறுபாடு உண்டு. இது குடி நுழைவு வசதிக்காக ஏற்படுத்தப்பட்டது. சமயம் மலேசிய நாட்டின் அதிகாரபூர்வமான சமயமாக இசுலாம் [32] இருந்தபோதிலும் மற்ற சமயங்களை சுதந்திரமாகப் பின்பற்றச் சட்டம் அனுமதிக்கிறது. தோராயமாக 61.3% பேர் இசுலாம் சமயத்தையும் 19.8% பேர் புத்த சமயத்தையும் 9.2% பேர் கிறித்தவ சமயத்தையும் 6.3% பேர் இந்து சமயத்தையும் 1.3 பேர் தாவோ சமயம், கன்பூசிய சமயம் மற்ற சீன சமயங்களையும் [33] 0.7% பேர் எச் சமயத்தையும் சாராதவர்களாகவும் 1.4% பேர் மற்ற சமயங்களைப் பின்பற்றுவர்களாகவும் உள்ளனர் [33]. சட்டப்படி மலாய் இனத்தவர்கள் அனைவரும் முசுலிம்கள் ஆவர் [32]. 2010 மக்கள் தொகை கணக்கின் படி சீன வம்சத்தவர்களில் 83.6% பேர் பௌத்த சமயத்தையும் 3.4 % பேர் தாவோ சமயத்தையும் 11.1% பேர் கிறுத்துவ சமயத்தையும் சிறிய அளவில் இசுலாம் சமயத்தையும் பின்பற்றுகிறார்கள். இந்திய வம்சத்தவர்களில் 86.2% பேர் இந்து சமயத்தையும் 6.0% பேர் கிறுத்துவ சமயத்தையும் 4.1% பேர் இசுலாம் சமயத்தையும் பின்பற்றுகிறார்கள். மலாய் இனம் அல்லாத பூமிபுத்திரர்களில் 46.5% பேர் கிறுத்துவ சமயத்தையும் 40.4% பேர் இசுலாம் சமயத்தையும் பின்பற்றுகிறார்கள் [33]. முசுலிம்களின் சமயம் தொடர்பான சிக்கல்களைச் சரியா நீதிமன்றங்கள் தீர்மானிக்கின்றன. குறிப்பாக மணமுறிவு, திருமணம், வாரிசு உரிமை, மத மாற்றம், மதத்திலிருந்து விலகல் போன்றவற்றை அது விசாரிக்கும். குற்ற வழக்குகளும் உரிமையியல் குடிசார் வழக்குகளும் இதன் வரம்புக்குள் வராது. முசுலிம் அல்லாதவர்களின் சிக்கல்கள் சரியா நீதிமன்ற வரம்புக்குள் வராது. உரிமையியல் நீதிமன்றங்கள் இசுலாம் தொடர்பான வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் அவற்றைச் சரியா நீதிமன்றங்களிடம் அனுப்பிவிடும் [34]. மொழி மலேசியாவின் அதிகாரபூர்வ மொழி மலேசிய மொழி ஆகும். இது மலாய் மொழியின் தரப்படுத்தப்பட்ட வடிவமாகும். ஆங்கிலம் நிர்வாக மொழியாகப் பயன்படுத்தப்பட்டது. 1969இல் நடந்த கலவரத்துக்குப் பின் மலேசிய மொழி முதன்மைப்படுத்தப்பட்டது [35] . ஆங்கிலம் இரண்டாவது மொழியாகத் தொடர்ந்து உள்ளது. பொதுப் பள்ளிக்கூடங்களில் கணிதம், அறிவியல் போன்றவற்றைப் பயிற்றுவிக்கும் மொழியாகவும் ஆங்கிலம் உள்ளது [36][37]. பிரித்தானிய ஆங்கிலத்திலிருந்து தருவிக்கப்பட்ட மலேசிய ஆங்கிலம் வணிகத்தில் பெரும்பாலும் பயன்படுத்தபடுகிறது. மேங்கிலிசும் வணிகத்தில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. மேங்கிலிசு என்பது மலாய், சீனம், தமிழ் கலந்த கொச்சைபடுத்தப்பட்ட ஆங்கிலம் ஆகும் [38][39]. மலேசியாவில் 137 மொழிகள் பேசப்படுகின்றன [40] இவற்றில் தீபகற்ப மலேசியாவில் 41 மொழிகள் பேசப்படுகின்றன.[41] கிழக்கு மலேசியாவில் உள்ள பழங்குடியின மக்கள் மலாய் மொழி அல்லாத தங்களின் மொழியைப் பேசுகின்றனர். இதை எளிதில் மலாய் அல்ல என்பதை உணரமுடியும். சரவாக் மாநில மக்கள் இபான் மொழியையும் சபா மக்கள் டுசுனிக் மொழியையும் பேசுகின்றனர் [42]. மலேசியாவிலுள்ள சீனர்கள் தென் சீனத்தின் பல வட்டார மொழிகளைப் பேசுகின்றனர். கண்டோனீசு, மாண்டரின், ஓக்கியன், கேசிய மொழி போன்றவை அவற்றுள் சில. தமிழர்கள் தமிழ் பேசுகின்றனர். தமிழர்களே இங்குள்ள இந்தியர்களில் பெரும்பான்மையினர் ஆவர். பண்பாடு மலேசியாவில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த, பல்வேறு பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட மற்றும் பல்வேறு மொழிபேசும் மக்கள் உள்ளனர். இப்பகுதியின் துவக்கநிலை பண்பாடு இங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள், இங்கு இடம் பெயர்ந்த மலாய் இனத்தவரால் உருவானது. வெளிநாட்டு வணிகம் துவங்கிய வரலாற்றுக்காலத்திலேயே சீனர் மற்றும் தமிழர் பண்பாட்டுத் தாக்கங்கள் ஏற்பட்டன. பாரசீகர், அராபியர் மற்றும் பிரித்தானியர் பண்பாட்டுத் தாக்கங்களைப் பின்னதாக உள்வாங்கியது. அரசமைப்பு, சமூக உடன்பாடு போன்றவை காரணமாக இனச் சிறுபான்மையினரின் பண்பாடு தன்வயமாகவில்லை.[43] 1971இல் மலேசிய அரசு "தேசிய பண்பாட்டுக் கொள்கை"யை அறிவித்தது; இதன்படி மலேசியப் பண்பாடு பழங்குடியினரின் பண்பாட்டின்படி அமையும் என்றும் பிற பண்பாடுகளிலிருந்து பொருத்தமானக் கூறுகளை உள்வாங்கும் என்றும் இசுலாம் பெரும் பங்கு வகிக்கும் என்றும் வரையறுத்தது.[44] மேலும் மலாய் மொழியே மற்ற மொழிகளை விடப் பரப்பப்படும் எனக் கூறியது.[45] இவ்வாறான அரசின் தலையீட்டை மலாய் அல்லாத சிறுபான்மையினர் தங்கள் பண்பாட்டுச் சுதந்தரத்தைக் குறைப்பதாக எதிர்த்தனர். சீனர்களின் சங்கங்களும் இந்தியச் சங்கங்களும் தங்கள் எதிர்ப்பை அரசுக்குத் தெரிவிக்கும் வகையில் மனு ஒன்றை அளித்தனர்.[44] மலேசியாவிற்கும் அண்டை நாடுகளுக்கும் இடையே (குறிப்பாக இந்தோனேசியா) பண்பாட்டுச் சண்டைகள் ஏற்பட்டுள்ளன. இரண்டு நாடுகளுக்கும் ஒன்றையொத்த பாரம்பரியமும் வழைமையான பழக்கங்களும் உள்ளன. இருப்பினும் உணவுப் பொருள்களிலிருந்து மலேசியாவின் நாட்டுப்பண் வரை பல பிணக்குகள் எழுந்துள்ளன.[46] இந்தப் பிணக்குகளைக் குறைக்க இரு நாட்டு அரசுகளும் பலமுறை முயன்றுள்ளன.[47] மலேசியப் புலி மலேசியாவின் தேசிய விலங்காகும். விளையாட்டு மலேசியாவில் பரவலாக விளையாடப்படுபவையாகக் காற்பந்தாட்டம், இறகுப்பந்தாட்டம், வளைதடிப் பந்தாட்டம், பௌல்ஸ், டென்னிசு, ஸ்குவாஷ், தற்காப்புக் கலைகள், குதிரையேற்றம், பாய்மரப் படகோட்டம், மற்றும் ஸ்கேட் பலகையோட்டம் ஆகியன .[48] இறகுப்பந்தாட்ட போட்டிகள் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கின்றன; 1948ஆம் ஆண்டு முதல் தாமசு கோப்பையைத் தக்க வைத்துள்ள மூன்று நாடுகளில் ஒன்றாக மலேசியா விளங்குகிறது.[49] மலேசிய புல்தரை பௌல்ஸ் கூட்டமைப்பு 1997இல் பதிவு செய்யப்பட்டது.[50] பிரித்தானிய படைத்துறை அதிகாரிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்குவாஷ் விளையாட்டில் முதல் போட்டி 1939இல் நடத்தப்பட்டது. ஸ்குவாஷ் பந்தடி மட்டைச் சங்கம் சூன் 25, 1972இல் உருவானது.[51] மலேசியா தென்கிழக்கு ஆசியாவிற்கான ஓர் கால்பந்துக் கூட்டிணைவைப் பரிந்துரைத்துள்ளது.[52] ஆகத்து 2010இல் மலேசியாவின் ஆடவர் வளைதடிப் பந்தாட்ட அணி உலகத் தரவரிசையில் 15வதாக இருந்தது.[53] கோலாலம்பூரில் உள்ள மெர்டெக்கா விளையாட்டரங்கில் வளைதடிப் பந்தாட்ட உலகக் கிண்ணத்தின் மூன்றாவது மற்றும் பத்தாவது போட்டிகள் நடத்தப்பட்டன.[54] மலேசியாவில் பார்முலா 1 தடம்– செபாங் பன்னாட்டு சுற்றுகை உள்ளது. 310.408 kilometres (192.88mi) தொலைவுள்ள இச்சுற்றுகையில் முதல் கிராண்ட் ப்ரீ போட்டி 1999இல் நடந்தது.[55] 1953இல் உருவான மலேயா ஒலிம்பிக் குழுவிற்கு பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் அங்கீகாரம் 1954இல் கிடைத்தது. மலேசியா 1956 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்கேற்றது. 1964இல் இக்குழுவிற்கு மலேசியா ஒலிம்பிக் குழு என மறுபெயரிடப்பட்டது. துவங்கிய காலத்திலிருந்து ஒன்றைத் தவிர அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளது. 1972ஆம் ஆண்டில் மியூனிக்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு மிக உயர்ந்தளவில் பங்கேற்பாளர்களை(57) அனுப்பி உள்ளது.[56] மலேசிய போட்டியாளர்கள் ஒலிம்பிக்கில் இதுவரை நான்கு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்; இவை அனைத்துமே இறகுப்பந்தாட்டத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.[57] பொதுநலவாய விளையாட்டுக்களில் 1950 முதல் மலாயா என்றும் 1966 முதல் மலேசியா என்றும் பங்கெடுத்து வந்துள்ளது. 1998இல் இந்த விளையாட்டுக்கள் கோலாலம்பூரில் நடத்தப்பட்டன.[58] தற்காப்புக் கலைகளில் மலேசியாவில் சிலாட் மற்றும் டோமோய் என்னும் இரு வகைகள் பயிலப்படுகின்றன. ஊடகம் மலேசியாவின் முதன்மை செய்தித்தாள்கள் அரசுடமை அல்லது ஆளும் கூட்டணியிலுள்ள கட்சிகளின் உடமையாக உள்ளன.[59] இருப்பினும் சில பெரிய எதிர்க்கட்சிகளும் நாளிதழ்களின் உரிமையாளர்களாக உள்ளனர்.[60] நாட்டின் இரு பகுதிகளிலிருந்து வெளியாகும் ஊடகங்களிடையே பிளவு உள்ளது. தீபகற்ப ஊடகங்கள் கிழக்குப் பகுதி செய்திகளுக்குக் குறைந்த முன்னுரிமை வழங்குகின்றனர்; அப்பகுதியை தீபகற்ப மலேசியாவின் குடியேற்றப் பகுதியாகக் காண்கின்றனர்.[61] மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே வளரும் சிக்கல்களுக்கு ஊடகங்கள் குறை சொல்லப்படுகின்றன. இந்தோனேசியர்களைக் குறித்து தாழ்வான கருத்து நிலவவும் அவர்களே காரணமாக்கப் படுகின்றனர்.[62] மலேசியாவில் மலாய், சீனம் மற்றும் தமிழ் நாளிதழ்கள் வெளியாகின்றன.[61] ஊடகச் சுதந்திரம் மிகக் குறைவாக உள்ள காரணத்தால் அரசிற்கு பொறுப்புடைமை குறைவாக உள்ளது.[63] அரசு தேர்தல்களுக்கு முன்னர் எதிர்கட்சி நாளிதழ்களை அடக்க முயன்றுள்ளது.[60] 2007இல் எதிர்க்கட்சித் தலைவர்களின் பேச்சுக்களை ஒளிபரப்ப வேண்டாமென்று அனைத்து தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களுக்கு ஆணையிடப்பட்டன;[64] இதனை எதிர்க்கட்சியான சனநாயக செயல் கட்சி கண்டித்துள்ளது.[65] சபாவில் ஒன்றைத் தவிர அனைத்து நாளிதழ்களும் தனியார் வசமுள்ளன. இப்பகுதியே மலேசியாவில் மிகவும் சுதந்திரமான ஊடகங்கள் இருக்குமிடமாகும்.[61] அச்சகங்கள் மற்றும் வெளியீடுகள் சட்டம் போன்றவை கருத்துச் சுதந்திரத்திற்கு தடங்கலாக இருப்பதாகச் சுட்டப்படுகிறது.[66] உள்கட்டமைப்பு மலேசியாவின் உள்கட்டமைப்பு ஆசிய நாடுகளிலேயே மிகவும் மேம்படுத்தப்பட்ட ஒன்றாக விளங்குகிறது.[67] 4.7மில்லியன் நிலைத்த இடத் தொலைபேசி இணைப்புகளையும் 30மில்லியன் நகர்பேசி இணைப்புக்களையும் கொண்டுள்ள இதன் தொலைத்தொடர்பு பிணையம் தென்கிழக்கு ஆசியாவில் சிங்கப்பூருக்கு அடுத்த நிலையில் உள்ளது.[68][69] மலேசிய நாட்டில் ஏழு பன்னாட்டு வணிகம் புரியும் துறைமுகங்கள் உள்ளன; முக்கியமான துறைமுகமாகக் கிளாங் துறைமுகம் உள்ளது. 200 தொழிற் பேட்டைகளும் டெக்னாலஜி பார்க், மலேசியா மற்றும் குலிம் ஹ-டெக் பார்க் போன்ற சிறப்பு கட்டமைப்புக்களும் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கின்றன.[48] 95% மக்களுக்குத் தூய குடிநீர் வழங்கப்படுகிறது.குடிமைவாத காலங்களில் பொருளியல் தாக்கமுள்ள நகரங்களிலும் பாதுகாப்பிற்கு வழிகோலும் இடங்களிலுமே மேம்பாட்டு கட்டமைப்புக்கள் உருவாகியிருந்தன. விடுதலைக்குப் பின்னதாக ஊரகப் பகுதிகளின் வளர்ச்சியைக் குவியப்படுத்தி வளர்ச்சித் திட்டங்கள் தீட்டப்பட்டபோதும் அவை இன்னமும் தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளை விடப் பின்தங்கி உள்ளன.[70] தொலைத்தொடர்பு சேவைகளும் நகரப்பகுதிகளில் சிறப்பாக இருந்தபோதும் உள்நாட்டுப் பகுதிகளில் அணுக்கம் குறைவாகவே உள்ளது.[68] மலேசியாவில் தொலைவிற்கு சாலைகள் இடப்பட்டுள்ளன; இவற்றில் தொலைவு விரைவுச்சாலைகளாகும்.[19] நாட்டின் மிக நீண்ட நெடுஞ்சாலையாக விளங்கும் வடக்கு-தெற்கு விரைவுச்சாலை,தாய்லாந்தின் எல்லை முதல் சிங்கப்பூர் வரை தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மலேசியாவில் சாலைகள் நன்கு அமைக்கப்படாததுடன் தீபகற்ப மலேசியச் சாலைகளைப் போல் இல்லாது அவற்றின் தரமும் குறைந்த நிலையில் உள்ளன.[71] மலேசியாவில் 38 நன்கு பாவப்பட்ட நிலையங்கள் உட்பட 118 வானூர்தி நிலையங்கள் உள்ளன. நாட்டின் அரசுசார் மலேசியா ஏயர்லைன்சுடன் மேலும் இரு வான்பயண சேவை நிறுவனங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு வான்பயணச் சேவைகளை நல்குகின்றன. தொடர்வண்டிச் சேவைகள் அரசுமயமாக்கப்பட்டுள்ளது; தொலைவிற்கு சேவை அளிக்கின்றன.[19] கோலாலம்பூர் போன்ற சில நகரங்களில் ஒப்புநோக்கில் குறைந்த செலவான உயரத்தில் செல்லும் இலகு தொடருந்து போக்குவரத்து அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.[72] ஆசியான் விரைவுத் தொடருந்து (Asean Rail Express) கோலாலம்பூரை பாங்காக்குடன் இணைக்கும் தொடர்வண்டிச் சேவையாகும். இச்சேவை மூலம் எதிர்காலத்தில் சிங்கப்பூரையும் சீனாவையும் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.[67] வழமையாக, மலேசியாவின் ஆற்றல் உற்பத்தி பாறைஎண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை நம்பியே உள்ளது.[73] நாட்டின் மின் உற்பத்தித் திறன் 13 GW ஆக உள்ளது.[74] இன்னமும் 33 ஆண்டுகளுக்கான இயற்கை எரிவாயு இருப்பும் 19 ஆண்டுகளுக்கான எண்ணெய் இருப்புமே உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களைப் பயன்படுத்த அரசு முயன்று வருகிறது.[73] 16 சதவீதம் நீர்மின்நிலையங்கள் மூலமும் மற்ற 84 சதவீதம் அனல்மின் நிலையங்கள் மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.[74] எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் அரசுடமை நிறுவனமான பெட்ரோனாசு பெரும்பங்கு வகிக்கிறது.[75] மின்சார ஆணையம் சட்டம், 2001இன்படி மலேசிய ஆற்றல் ஆணையம் (Energy Commission of Malaysia) தீபகற்ப மற்றும் சாபாவில் ஆற்றல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி வருகிறது.[76] மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:தென்கிழக்கு ஆசிய நாடுகள் பகுப்பு:முன்னாள் பிரித்தானியக் குடியேற்றங்கள் பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
மலேசியா நகரத்தின் தலைநகரம் எது?
கோலாலம்பூர்
659
tamil
593858717
தில்லி அல்லது டெல்லி (Delhi, இந்தி: दिल्ली, பஞ்சாபி: ਦਿੱਲੀ, உருது: دلی) இந்தியாவில் உள்ள இரண்டாம் மிகப்பெரிய மாநகரமாகும். இது தேசிய தலைநகரப் பகுதியில் உள்ள மூன்று நகரங்களுள் ஒன்றாகும். மற்ற இரண்டு நகரங்கள் புது தில்லி மற்றும் தில்லி கண்டோன்மென்ட் ஆகியனவாகும். இத் தேசிய தலைநகரப் பகுதி 11 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகின் எட்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகவும் விளங்குகிறது. இது நடுவண் அரசினால் நிர்வாகம் செய்யப்படுகின்றது. வட இந்தியாவில் உள்ள யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந் நகரம் நீண்ட காலம் தொடர்ச்சியாக மக்கள் குடியிருப்புப் பகுதியாக விளங்கி வருகின்றது. கி.மு. ஆறாம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் இருந்தே இப் பகுதியில் மக்கள் வாழ்ந்து வருவதற்கான தொல்லியல் சான்றுகள் காணப்படுகின்றன. தில்லி சுல்தானகத்தின் எழுச்சிக்குப் பின்னர், வடமேற்கு இந்தியாவுக்கும், சிந்து-கங்கைச் சமவெளிக்கும் இடையிலான வணிகப் பாதையில் அமைந்த முக்கியமான அரசியல், பண்பாட்டு வணிக நகரமாக இந் நகரம் உருவானது. இங்கே, பெருமளவிலான பழங்காலத்தைச் சேர்ந்தனவும், மத்திய காலத்தைச் சேர்ந்தனவுமான நினைவுச் சின்னங்களும், தொல்லியல் களங்களும் அமைந்துள்ளன. 1639 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசர் சாஜகான் மதிலால் சூழப்பட்ட நகரமொன்றை இங்கே அமைத்தார். இது 1649 தொடக்கம் 1857 ஆம் ஆண்டுவரை முகலாயப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது. 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின்னர், கல்கத்தாவே (இன்றைய கொல்கத்தா) அவர்களது தலைமையிடமாக இருந்தது. கம்பனியின் ஆட்சியிலும் பின்னர் சில காலம் பிரித்தானிய அரசின் கீழும் இந்நிலை நீடித்தது. 1911 ஆம் ஆண்டில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் தலைநகரத்தை தில்லிக்கே மாற்றும் அறிவிப்பை விடுத்தார். 1920களில், பழைய தில்லி நகருக்குத் தெற்கே புது தில்லி எனப் பெயர்பெற்ற புதிய தலைநகரம் அமைக்கப்பட்டது. 1947ல் இந்தியா விடுதலை பெற்ற பின்னர் இதுவே தலைநகராகவும், அரசின் இருப்பிடமாகவும் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து மக்கள் குடிபெயர்ந்ததால் தில்லி ஒரு பல்லின மக்கள் வாழும் நகரமானது. இங்கு வாழ்வோரின் உயர்ந்த சராசரி வருமானமும், தில்லியின் விரைவான வளர்ச்சி, நகராக்கம் என்பனவும் நகரைப் பெருமளவு மாற்றியமைத்தன. இன்று இது இந்தியாவின் முக்கியமான பண்பாட்டு, அரசியல், வணிக மையமாக விளங்குகின்றது. பெயர் தில்லி என்னும் பெயர்த் தோற்றம் பற்றித் தெளிவு இல்லை. எனினும், இப்பெயர் ஏற்பட்டதற்கான பல காரணங்கள் கூறப்படுகின்றன. மௌரிய வம்சத்தைச் சேர்ந்த டில்லு அல்லது டிலு எனப் பெயர் கொண்ட மன்னனால் கி.மு. 50 ஆம் ஆண்டில் இப்பகுதியில் அமைக்கப்பட்ட நகருக்குத் அவனது பெயரைத் தழுவி இடப்பட்ட பெயர் தில்லி ஆனதாகப் பெரும்பாலானவர்கள் நம்புகின்றனர். இங்கே அரசர் தாவா என்பவரால் நிறுவப்பட்ட இரும்புத் தூண் ஒன்றின் அத்திவாரம் உறுதியற்றதாக இருந்ததாகவும் இதனைக் குறித்து நகரம், இந்தி / பிராகிருத மொழிகளில் தளர்வு என்னும் பொருள்படும் டிலி என்று அழைக்கப்பட்டதாகவும் இதிலிருந்து தில்லி என்னும் பெயர் ஏற்பட்டது என்பதும் இன்னொரு சாரார் கருத்து. ராஜபுத்திர அரசர்கள் காலத்தில் இப்பகுதியில் புழங்கிய நாணயம் தெஹ்லிவால் எனப்பட்டது. சில ஆய்வாளர்கள் இப்பெயர் வாயிற்படி என்னும் பொருள் கொண்ட தெஹ்லீஸ் அல்லது தெஹாலி என்னும் சொற்களிலிருந்து பெறப்பட்டதாகக் கருதுகின்றனர். இந்து-கங்கைச் சமவெளிப் பகுதிக்கு ஒரு வாயிலாகத் தொழிற்பட்டதாலேயே இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர். இந்நகரின் தொடக்ககாலப் பெயர் தில்லிக்கா என்பது வேறு சிலருடைய கருத்து. வரலாறு இதுவரை கிடைத்துள்ள தொல்லியல் சான்றுகளின்படி தில்லியிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் கி.மு. இரண்டாவது ஆயிரவாண்டுகளிலும் அதற்கு முன்னரும் குடியேற்றங்கள் இருந்ததாகத் தெரிகிறது. புகழ்பெற்ற இந்திய இதிகாசமான மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களின் தலைநகரமான இந்திரப்பிரஸ்தம் இப் பகுதியிலேயே அமைந்திருந்ததாக நம்பப்படுகிறது. மௌரியப் பேரரசுக் காலத்தில் (கி.மு. 300) இக் குடியேற்றங்கள் வளர்ச்சியடைந்தன. ஏழு முக்கிய நகரங்களின் எச்சங்களை தில்லிப் பகுதியில் கண்டறிந்துள்ளனர். தொமாரா மரபினர் கி.பி 736ல் லால் காட் என்னும் நகரத்தை நிறுவினர். சௌகான் ராஜபுத்திரர் அல்லது ஆஜ்மெர் என அழைக்கப்படுவோர் 1180ல் லால் காட் நகரைக் கைப்பற்றி அதன் பெயரை கிலா ராய் பித்தோரா எனப் பெயர் மாற்றினர். சௌகான் அரசர் மூன்றாம் பிரிதிவிராஜை 1192 ஆம் ஆண்டில் ஆப்கானியரான முகம்மத் கோரி தோற்கடித்தார். 1206 ஆம் ஆண்டில் குலாம் மரபைத் தொடக்கி வைத்த குதுப்-உத்-தீன் ஐபாக் தில்லி சுல்தானகத்தை நிறுவினார். குதுப்-உத்-தீன், குதுப் மினாரையும், குவாத் அல் இஸ்லாம் எனப்படும் இந்தியாவின் மிகப் பழைய பள்ளிவாசலையும் கட்டுவித்தார். குலாம் மரபினர் ஆட்சி வீழ்ச்சியுற்ற பின்னர் கில்ஜி, துக்ளக், சய்யித், லோடி ஆகிய துருக்கியையும், நடு ஆசியாவையும் சேர்ந்த மரபினர் ஒருவர் பின் ஒருவராக ஆட்சி செய்தனர். இவர்கள் தில்லியில் உள்ள ஏழு நகரங்களுள் அடங்கும் பல கோட்டைகளையும், நகரப் பகுதிகளையும் அமைத்தனர். தில்லியின் முஸ்லிம் சுல்தான்கள் தமது இந்துக் குடிமக்களிடம் தாராளமாக நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டிக்கொண்டு திமூர் லெங்க் எனப்படுவோர் 1398ல் இந்தியாவுக்குள் நுழைந்தனர். தில்லிக்குள் புகுந்த அவர்கள் அதனை அழித்தனர். தில்லி சுல்தான்களின் காலத்தில் தில்லி, சூபியத்தின் முக்கிய மையமாக விளங்கியது. 1526 ஆம் ஆண்டில், சாகிருத்தீன் பாபர், முதலாம் பானிப்பட் போரில், லோடி மரபின் கடைசி சுல்தானை வென்று முகலாயப் பேரரசை நிறுவினார். தில்லி, ஆக்ரா, லாகூர் ஆகியவை இப் பேரரசின் தலைநகரங்களாக விளங்கின. முகலாயப் பேரரசு, 16 ஆம் நூற்றாண்டில் நடுப்பகுதியில் ஷேர் ஷா சூரி என்பவரின் ஐந்து ஆண்டு கால ஆட்சி நீங்கலாக, வட இந்தியாவில் மூன்று நூற்றாண்டுகள் நிலை பெற்றிருந்தது. பேரரசர் அக்பர் தலைநகரை ஆக்ராவில் இருந்து தில்லிக்கு மாற்றினார். இன்று, பழைய தில்லி என்று பொதுவாக அழைக்கப்படும் தில்லியின் ஏழாவது நகரை அமைத்தவர் பேரரசர் சாஜகான் ஆவார். அப்போது அந் நகருக்கு பேரரசரின் பெயரைத் தழுவி சாஜகானாபாத் எனப் பெயரிடப்பட்டது. 1638 ஆம் ஆண்டிலிருந்து பழைய தில்லி முகலாயப் பேரரசின் தலைநகராக இருந்தது. 1739 பெப்ரவரி மாதம், நாதர் ஷா, கர்னால் போரில் முகலாயப் படைகளை வென்று தில்லியைக் கைப்பற்றினார். இவர் தில்லியைக் கொள்ளையிட்டு மயிலணை உட்பட்ட பல விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்றார். 1761ல் இடம் பெற்ற மூன்றாம் பானிப்பட் போருக்குப் பின், அகமத் ஷா அப்தாலி தில்லியைக் கைப்பற்றினார். 1803 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் நாள், தளபதி லேக் என்பாரின் தலைமையிலான பிரித்தானியப் படைகள் தில்லிப் போரில் மராட்டியரைத் தோற்கடித்து நகரைக் கைப்பற்றின. 1857 ஆம் ஆண்டின் இந்தியக் கலகத்துக்குப் பின், தில்லி பிரித்தானியரின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதற்குச் சிறிது காலத்தின் பின், கல்கத்தா, பிரித்தானிய இந்தியாவின் தலைநகரானது. தில்லி, பஞ்சாப் மாகாணத்தின் ஒரு மாவட்டம் ஆனது. 1911 ஆம் ஆண்டில், தில்லி பிரித்தானிய இந்தியாவின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அரசின் கட்டிடங்களை அமைப்பதற்காக, பிரித்தானியக் கட்டிடக்கலைஞரான எட்வின் லூட்யென் (Edwin Lutyens) என்பவரின் தலைமையிலான குழு, புதிய அரசியல், நிர்வாகத் தலைநகருக்கான வடிவமைப்பைத் தொடங்கியது. புது தில்லி எனப்பட்ட இப் புதிய நகரம் பிரித்தானிய இந்தியாவின் தலைநகர் ஆனது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் இதுவே தலைநகராகத் தொடர்ந்தது. இந்தியப் பிரிவினையின் போது ஏராளமான முஸ்லிம்கள் தில்லியிலிருந்து பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்த அதே வேளை மேற்குப் பஞ்சாப், சிந்து ஆகிய மாகாணங்களில் இருந்து, பெருமளவு இந்துக்களும், சீக்கியரும் தில்லிக்குக் குடி பெயர்ந்தனர். இந்திய அரசியலமைப்பு (அறுபத்தொன்பதாவது திருத்தம்) சட்டம், 1991, தில்லி ஒன்றிய ஆட்சிப்பகுதியை (Union Territory of Delhi), தில்லி தேசிய தலைநகரப் பகுதியாக முறைப்படி அறிவித்தது. இச் சட்டத்தின்படி, இப் பகுதிக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய சட்டசபை ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பகைமை உணர்வினாலும், காஷ்மீர் தொடர்பான பிணக்கினாலும், தில்லிக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்து வருகிறது. டிசம்பர் 2001ல், இந்திய நாடாளுமன்றக் கட்டிடம் காஷ்மீர் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானது. ஆறு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்ட இத் தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கு இருந்ததாக இந்தியா கருதியது. தொடர்ந்து அக்டோபர் 2005 ஆம் ஆண்டில், இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 62 குடிமக்களும், செப்டெம்பர் 2008 இல் நிகழ்ந்த இது போன்ற இன்னொரு தாக்குதலில் 30 குடிமக்களும் கொல்லப்பட்டனர். மக்கள் தொகையியல் 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தில்லி மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 16,787,941 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 2.50% மக்களும், நகரப்புறங்களில் 97.50% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 21.21% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 8,987,326 ஆண்களும் மற்றும் 7,800,615 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 868 பெண்கள் வீதம் உள்ளனர். 1,483 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 11,320 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 86.21 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 90.94 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 80.76 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2,012,454 ஆக உள்ளது. [1] சமயம் இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 13,712,100 (81.68 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 2,158,684 (12.86 %) ஆகவும், ஆகவும் கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 146,093 (0.87 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 570,581 (3.40 %) ஆகவும் , சமண சமய மக்கள் தொகை 166,231 (0.99 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 18,449 (0.11 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 2,197 (0.01 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 13,606 (0.08 %) ஆகவும் உள்ளது. மொழிகள் இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது, பஞ்சாபி மற்றும் அனைத்து இந்திய மாநிலங்களின் ஆட்சி மொழிகளும் பேசப்படுகிறது. அரசியல் தில்லி மாநிலம் எழுபது சட்டமன்ற உறுப்பினர்களையும், இரண்டு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளையும், இரண்டு நாடாளுமன்ற மாநிலங்குகளவை தொகுதிகளையும் கொண்டுள்ளது.[2] புவியியலும் தட்பவெப்பநிலையும் தில்லி தேசிய தலைநகரப் பகுதி, 1,484 ச.கிமீ (573 ச.மைல்) பரப்பளவு கொண்டது. இதில் 783 ச.கிமீ (302 ச.மைல்) பரப்பளவு கொண்ட பகுதி நாட்டுப்புறப் பகுதியாகவும், 700 ச.கிமீ (270 ச.மைல்) பகுதி நகர்ப்புறப் பகுதியாகவும் உள்ளது. தில்லி தேசிய தலைநகரப் பகுதியின் மிகக் கூடிய நீளம் 51.9 கிமீ (32 மைல்), அகலம் 48.48 கிமீ (30 மைல்). இப் பகுதியில் மூன்று உள்ளாட்சி அமைப்புக்கள் உள்ளன. இவை தில்லி முனிசிப்பல் கார்ப்பரேசன் (1,397.3 ச.கிமீ அல்லது 540 ச.மை), புது தில்லி முனிசிப்பல் கமிட்டி (42.7 ச.கிமீ அல்லது 16 ச.மை), தில்லி கன்டோன்மென்ட் சபை (43 ச.கிமீ அல்லது 17 ச.மை) என்பனவாகும். தில்லி வட இந்தியாவில் அமைவிடத்தில் உள்ளது. இது கிழக்கில் உத்தரப் பிரதேசத்தையும்; மேற்கு, வடக்கு, தெற்குத் திசைகளில் அரியானாவையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. தில்லி ஏறத்தாழ முழுமையாக கங்கைச் சமவெளியில் அமைந்துள்ளது. தில்லியின் முக்கியமான இரண்டு புவியியல் அம்சங்கள் யமுனை வெள்ளச் சமவெளியும், தில்லி முகடும் ஆகும். தாழ்நில யமுனை வெள்ளச் சமவெளி வேளாண்மைக்கு உகந்த வண்டல் மண்ணை வழங்குகிறது. எனினும் இச் சமவெளி தொடர்ச்சியான வெள்ளப் பெருக்குகளுக்கு உள்ளாகிறது. 318 மீட்டர் (1,043 அடி) வரையான உயரத்தை எட்டும் முகடு, இப் பகுதியின் மிக முக்கியமான அம்சமாக விளங்குகிறது. இது தெற்கே ஆரவல்லி மலைத்தொடரில் இருந்து தொடங்கி நகரின் மேற்கு, வடகிழக்கு, வடமேற்குப் பகுதிகளைச் சுற்றிச் செல்கிறது. இந்துக்களால் புனிதமானதாகக் கருதப்படும் யமுனை ஆறு மட்டுமே தில்லி ஊடாகச் செல்லும் முக்கியமான ஒரே ஆறு ஆகும். புது தில்லி உட்பட்ட நகரின் பெரும்பாலான பகுதிகள் யமுனையின் மேற்குப் பகுதியிலேயே அமைந்துள்ளன. நகர்ப்புறப் பகுதியான சாஹ்தாரா ஆற்றின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. தில்லி புவிநடுக்க வலயம்-4 இல் அமைந்துள்ளதால் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்காக வாய்ப்பு உண்டு. தில்லி கண்டத் தட்பவெப்பநிலை கொண்டது. கோடை, மாரி காலங்களுக்கிடையே அதிக வெப்பநிலை வேறுபாடு காணப்படுகின்றது. ஏப்ரல் தொடக்கத்துக்கும், அக்டோபர் நடுப் பகுதிக்கும் இடையே நீண்ட கோடை காலமும்; இடையே பருவப்பெயர்ச்சிக் காற்றுக் காலமும் நிலவுகின்றன. அக்டோபர் பின் பகுதியில் தொடங்கும் மாரிகாலம், ஜனவரியில் உயர் நிலை அடைகிறது. இக் காலத்தில் கடுமையான மூடுபனியும் காணப்படும். வெப்பநிலை −0.6 °ச (30.9 °ப) தொடக்கம் 47 °ச (117 °ப) வரை மாறுபடும். ஆண்டுக்கான சராசரி வெப்பநிலை 25 °ச (77 °ப) ஆக இருக்க, மாதத்துக்கான சராசரி வெப்பநிலை 13 °ச – 32 °ச (56 °ப – 90 °ப) இடையே மாறுபடுகின்றது. ஆண்டுக்கான சராசரி மழைவீழ்ச்சி 714 மிமீ (28.1 அங்குலம்). இதில் பெரும்பான்மையும் ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் பருவப் பெயர்ச்சிக் காற்றுக் காலத்தில் பெய்கிறது. போக்குவரத்து வான்வழி இங்கிருந்து ஆண்டுதோறும் 37 மில்லியன் மக்கள் வான்வழியாக பயணிக்கின்றனர்.[4] சாலைவழி தில்லியில் கீழ்க்காணும் சாலைகள் உள்ளன. உள்வட்டச் சாலைகள் வெளிவட்டச் சாலைகள் தில்லி - குர்கான் விரைவுவழிச்சாலை தேசிய நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலை - 1 தேசிய நெடுஞ்சாலை - 2 தேசிய நெடுஞ்சாலை - 8 தேசிய நெடுஞ்சாலை - 10 இரயில்வே இந்திய இரயில்வே தில்லியில் இருந்தும், மற்ற இடங்களில் இருந்து தில்லிக்கும் தொடர்வண்டிகளை இயக்குகிறது. தில்லி மாநிலத்தில் உள்ள தொடர்வண்டி நிலையங்கள் வடக்கு ரயில்வேயின் கட்டுப்பாடில் உள்ளது. தில்லியில் புது தில்லி, தில்லி சந்திப்பு, ஹசரத் நிசாமுதீன், ஆனந்து விகார் முனையம், தில்லி சராய் ரோகில்லா ஆகிய ஐந்து இடங்களில் தொடர்வண்டி நிலையங்கள் உள்ளன.[5] தில்லி மெட்ரோ ரயில் திட்டத்தின் மூலம் தில்லியின் சுற்றுப்பகுதிகளுக்கு உள்ளூர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த தொடர்வண்டிகளின் மூலம் தில்லியின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கும், பரிதாபாது, குர்கான், நொய்டா, காசியாபாத் ஆகிய நகரங்களுக்கும் பயணிக்கலாம்.[6] மேற்கோள்கள் வெளியிணைப்புகள் பகுப்பு:இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள் பகுப்பு:இந்திய ஊர்களும் நகரங்களும் பகுப்பு:தில்லி
இந்தியாவின் தலைநகரம் எது?
புது தில்லி
206
tamil
7443be1a7
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக அல்லது அண்ணா திமுக) என்பது தென்னிந்தியாவின் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செயல்படும் அரசியல் கட்சி ஆகும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய அரசியல் கட்சியாகவும் இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது. திமுகவிலிருந்து விலகிய பின்னர் எம். ஜி. இராமச்சந்திரன் இக்கட்சியைத் தோற்றுவித்தார். அவர் மறைவிற்குப் பிறகு அதிமுக ஜானகி மற்றும் ஜெயலலிதா அணிகளாகப் பிரிந்தது. பிறகு இரு அணிகளும் இணைந்து ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. இக்கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) மற்றும் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்தின் முதல்வர்களாக பதவி வகித்திருக்கிறார்கள். தற்போது (2017 முதல்) சட்டமன்ற தலைவராக ௭டப்பாடி கே. பழனிசாமி (முதல்வர்) பதவியில் உள்ளார். வரலாறு சி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப்பின் மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். அக்காலத்தில் கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். கணக்கு கேட்டதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். புதியக் கட்சி தொடங்க விரும்பிய எம்.ஜி.ஆர் அப்போது அனகாபுத்தூர் இராமலிங்கம் என்பவர், ‘அதிமுக’ என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். அப்போது, ‘ஒரு சாதாரணத் தொண்டன் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்’ என அறிவித்ததுடன் இராமலிங்கத்துக்கு மேல்சபை உறுப்பினர் (எம்.எல்.சி.) பதவியும் அளித்தார்.[1] இக்கட்சி பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர். காலம் எம்.ஜி.ஆரால் 1972இல் தொடங்கப்பட்ட அ.தி.மு.க. தனது முதல் தேர்தலை 1973-ல் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலின்போது சந்தித்தது. இத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[2] அதைத் தொடர்ந்து 1977-ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்), அனைத்திந்திய பார்வார்டு பிளாக், இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுப் பெரும்பாலான இடங்களில் வெற்றி கண்டது.[3] நான்குமுனைப் போட்டியில் தி.மு.க. மொத்தமிருந்த 234 இடங்களில் வெறும் 48 இடங்களை மட்டுமே பெற்றது. எம்.ஜி.ஆர்-ஐப் போலவே என்.டி. இராமராவ்வும் திரைப்பட உலகில் இருந்து அரசியலுக்கு வந்து ஆந்திர தேர்தலில் வெற்றிபெற்றார். எம்.ஜி.ஆர் ஒருமுறை மருத்துவமனையில் இருந்த போது பிரசாரத்திற்கே செல்லாமல் தேர்தலில் வெற்றி பெற்றார். கொடியின் வரலாறு அதிமுகவின் துவக்க கால கொடியாக தாமரையும் அதன் பின்னால் கருப்பு சிவப்பு இருந்தது. [4] மதுரையில் ஜான்சி ராணி பூங்காவில் மகோரா அவர்களால் 1972 ஆம் ஆண்டு ஏற்றப்பட்டது. எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கப் போவதாக செய்தியை அறிந்த எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் தாமரை படமிட்ட கொடியை கட்சி கொடியாக தங்கள் வீடுகளிலும், குடிசைகளிலும் ஏற்றினார்கள். அதன் பிறகு எம்.ஜி.ஆர், அண்ணாவின் புகைப்படங்களை ஆய்வு செய்து அதில் சிறப்பாக இருந்த அண்ணாவின் படமொன்றினை தேர்வு செய்தார். அதில் அண்ணா ஆணையிடுவதைப் போல தோற்றமளிப்பார். இந்தப் படத்தினை அண்ணா தோற்றுவித்த தி.மு.கவின் சிகப்பு கருப்பு கொடியோடு இணைத்து அண்ணா தி.மு.கவின் தற்போதைய கொடியமைப்பினை எம்.ஜி.ஆர் உருவாக்கினார். எம்ஜிஆரின் வழிகாட்டுதலோடு நடிகர் பாண்டு அதிமுக கொடியை உருவாக்கினார்.[5][6] பெயர் மாற்றம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று எம்.ஜி.ஆர் மாற்றினார். இதற்கு கட்சிக்குள் சிலர் ஏற்கவில்லை என்றாலும், பின் எம்.ஜி.ஆர் பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தப் பின் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். எம்.ஜி.ஆரின் மறைவும் ஜெயலலிதா காலமும் தமிழக முதல்வராக இருந்த எம். ஜி. இராமச்சந்திரன் திசம்பர் 24, 1987 அன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பின் யார் முதல்வராவது என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சர்ச்சை எழுந்தது. ஆர். எம். வீரப்பனின் ஆதரவுடன் எம்ஜியாரின் மனைவி ஜானகி இராமச்சந்திரன் முதல்வரானார். ஆனால் அதை கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஜெ. ஜெயலலிதா ஏற்கவில்லை. 132 சட்ட மன்ற உறுப்பினர்கள் கொண்ட அதிமுகவில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர், மற்றவர்கள் ஜானகியை ஆதரித்தனர். எட்டாவது சட்டமன்றத்தின் பேரவைத் தலைவர் பி. எச். பாண்டியனும் ஜானகியை ஆதரித்தார். புதிய அரசின் மீது சனவரி 26, 1988 இல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. திமுக, இந்திரா காங்கிரசு உள்ளிட்ட எதிர்கட்சிகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களுக்கும் ஜானகி ஆதரவு உறுப்பினர்களுக்கும் இடையே சட்டமன்றத்தில சச்சரவு ஏற்பட்டது. அவைத் தலைவர் ஜெயலலிதா தரப்பு உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றி, வெறும் 111 உறுப்பினர்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். ஜானகி இராமச்சந்திரன் அதில் வெற்றி பெற்றார். ஆனால் சட்டசபையில் நடந்த கலவரம் காரணமாக ஜனவரி 30, 1988 ஆம் ஆண்டு ஜானகி ஆட்சியைக் கலைத்தது மத்திய அரசு. சனவரி 21, 1989 இல் 232 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 69.69 % வாக்குகள் பதிவாகின. மருங்காபுரி மற்றும் மதுரை கிழக்கு ஆகிய இரு தொகுதிகளுக்கு நிருவாக காரணங்களால் தேர்தல் நடைபெறவில்லை; இருமாதங்கள் கழித்து மார்ச்சு 11 ஆம் நாள் நடைபெற்றது. இதற்குள் அதிமுக கட்சி ஒண்றிணைந்து விட்டதால், மீண்டும் அதற்கு “இரட்டை இலை” சின்னம் ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதா தலைமையிலான அக்கட்சியே இரு தொகுதிகளிலும் வென்றது.[7] பின்பு செயலலிதா தலைமையில் 1991, 2002, 2011, 2016 தேர்தல்களில் செயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்தது. 2014 மக்களவை தேர்தலையும் 2016 சட்டம்ன்ற தேர்தலையும் கூட்டணி இல்லாமல் சந்தித்து வெற்றி கண்டது. ஜெயலலிதா மறைவு அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதலமைச்சராக பதவியிலிருக்கும்போது 5 டிசம்பர் 2016 அன்று காலமானார். ஜெயலலிதா மறைந்த நாளின் இரவினையடுத்து, 6 டிசம்பர் 2016 அன்று அதிகாலை 1 மணிவாக்கில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது.[8] அதற்குப் பின்னர் 29 டிசம்பர் 2016 அன்று அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடி அதிமுக கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக வி. கே. சசிகலாவை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தனர்.[9][10][11] 5 பிப்ரவரி 2017 அன்று அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12][13] இதனையடுத்து பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.[14] விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர், அடுத்த ஏற்பாடுகள் முடிவடையும்வரை பன்னீர்செல்வமே முதல்வராக தொடர்வார் என்று அறிவித்தார். 7 பிப்ரவரி 2017 அன்று செய்தியாளர்களை சந்தித்த பொறுப்பு முதல்வர் பன்னீர்செல்வம், தன்னை கட்டாயப்படுத்தியதால் பதவி விலகல் கடிதத்தை தான் அளித்ததாக தெரிவித்தார்.[15] இதனைத் தொடர்ந்து, அதிமுகவின் பொருளாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா அறிவித்தார். இதனால் பன்னீர்செல்வம், சசிகலா என இரு அணிகளாக அதிமுக பிரிந்தது. ஓ.பி.எஸ் அணியில் மதுசூதனன், மாஃபா பாண்டியராஜன், பொன்னையன், செம்மலை ஆகியோர் இணைந்தனர். இதனால் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனைவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் சசிகலா நீக்கினார். பிறகு சசிகலா தன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அணி மாறாமல் இருப்பதற்காக அவர்களை கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைத்தார். தன்னிடம் போதிய ஆதரவு எம்.எல்.ஏக்கள் இருப்பதால் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சசிகலா. ஆனால் அவர் மீது உச்சநீதிமன்றத்தல் சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் இருந்ததால் ஆளுநர் தொடர்ந்து அமைதி காத்து வந்தார். பிறகு அந்த வழக்கில் சசிகலா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டதால் அவர் சிறை செல்ல நேர்ந்தது. அவர் சிறை செல்லும் முன்பு ஆலோசனை கூட்டம் நடத்தி எடப்பாடி க. பழனிசாமியை சட்டமன்றக் குழுத்தலைவராகவும் டி.டி.வி. தினகரனை துணை பொதுச்செயலாளராகவும் நியமித்தார். பிறகு 124 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்றார். அ.தி.மு.க வின் வெற்றி,தோல்விகள். எம்.ஜி.ஆர்க்கு பின் திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஆட்சிசெய்துகொண்டு வருகின்றன. தமிழ்நாடு வேட்பாளர்கள் பட்டியல், வெற்றிபெற்ற வாக்குகள் மக்களவை 15ஆவது மக்களவை 15ஆவது மக்களவைக்கு அதிமுக 23 தொகுதிகளில் போட்டியிட்டு பின்வரும் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது.[17] திருவள்ளூர் (தனி), தென் சென்னை, விழுப்புரம் (தனி), சேலம், திருப்பூர், பொள்ளாச்சி, கரூர், திருச்சி, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. 16ஆவது மக்களவை 16 ஆவது மக்களவைக்கு அதிமுக 39 தொகுதிகளில் போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது.[18] தருமபுரியில் பாமகவின் அன்புமணியும், கன்னியாகுமரியில் பாசகவின் பொன். இராதா கிருட்டிணனும் வென்றனர். சட்டசபை புதுச்சேரி சின்னம் முடக்கம் அதிமுகவில் உள்ள சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இரு அணிகளும் உரிமை கோரியதால், ராதாகிருட்டிணன் நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது. அதேபோல், அதிமுக என்ற பெயரையும் பயன்படுத்த தடை விதித்தது.[19] பன்னீர் செல்வம் அணிக்கு இரட்டை விளக்கு உள்ள மின்கம்ப சின்னத்தையும், சசிகலா அணிக்கு தொப்பி சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. பன்னீர் செல்வம் அணிக்கு அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரையும், சசிகலா அணிக்கு அதிமுக அம்மா என்ற பெயரையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. பணப்பட்டுவாடா காரணத்தால் ஆர் கே. நகர் தேர்தல் நிறுத்தப்பட்டது. ஆகத்து மாதம் இறுதியில் எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வம் அணிகள் இணைந்தன மற்றும் தினகரன் தனி அணியாக செயல்பட்டார். கட்சியில் பெரும்பான்மை இருந்ததால் அதிமுக கட்சி மற்றும் சின்னம் எடப்பாடி கே. பழனிச்சாமி-பன்னீர் செல்வம் அணிக்கு ஒதுக்கப்பட்டது.[20] மேற்கோள்கள் பகுப்பு:இந்திய அரசியல் கட்சிகள் பகுப்பு:தமிழக அரசியல் கட்சிகள் பகுப்பு:தமிழ்நாட்டு திராவிட அமைப்புகள் பகுப்பு:1972இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள் பகுப்பு:எம். ஜி. ஆர் பகுப்பு:ஜெயலலிதா பகுப்பு:அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அதிமுக அரசியல் கட்சி எப்போது நிறுவப்பட்டது?
1972
1,473
tamil
c04e23e52
தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்றவை இந்தியாவிலுள்ள சில முக்கியமான மாநகரங்களாகும். போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் மாசு, தண்ணீர் பற்றாக்குறை போன்றவை இந்நகரங்கள் சந்திக்கும் பொதுவான இடையூறுகளாகும். இவற்றுள் மும்பை நாட்டின் பொருளாதாரத் தலைநகரமாக விளங்குகிறது. சென்னை, பெங்களூர் தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னணியில் விளங்குகின்றன. மும்பை மும்பை (மராத்தி: मुंबई, Mumbaī , ஐபிஏ:[ˈmʊm.bəi]), முன்னர் பம்பாயாக இருந்த மும்பை இந்திய மாநிலமான மகாராட்டிராவின் தலைநகரமாகும். இந்தியாவின் மிகப்பெரிய நகரமான இந்த நகரம், ஏறத்தாழ 14 மில்லியன் மக்களுடன் உலகின் மிக மக்கள்தொகை நிறைந்த நகரங்களில் இரண்டாவதாக விளங்குகிறது.[1] நவி மும்பை மற்றும் தாணே ஆகிய அருகிலுள்ள புறநகரங்களுடன், ஏறத்தாழ 19 மில்லியன் மக்களுடன் மும்பை ஐக்கிய நாடுகள் அவையின் உலக நகரமயமாக்கல் திட்ட அறிக்கையின்படி உலகின் மிகப்பெரிய நகர்புற திரட்சிகளில் உலகின் நான்காவது மிகப்பெரிய நகர திரட்சியாக உள்ளது .[2] இந்தியாவின் கொங்கண் கடற்கரையில் அமைந்துள்ள மும்பை, ஓர் ஆழமான இயற்கை துறைமுகம். இந்தியா கையாளும் கடல்வழி சரக்கு வணிகத்தில் மும்பை துறைமுகம் ஏறத்தாழ 60% பங்களிக்கிறது.[3] தில்லி தில்லி (இந்தி: दिल्ली, பஞ்சாபி: ਦਿੱਲੀ, உருது: دلی) இந்தியாவில் உள்ள இரண்டாம் மிகப்பெரிய மாநகரமாகும். இது நாட்டுத் தலைநகரப் பகுதியில் உள்ள மூன்று நகரங்களுள் ஒன்றாகும். மற்ற இரண்டு நகரங்கள் புது தில்லி மற்றும் தில்லி கண்டோன்மென்ட் ஆகியனவாகும். இத் தேசிய தலைநகரப் பகுதி 11 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகின் எட்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகவும் விளங்குகிறது. இது நடுவண் அரசினால் நிர்வாகம் செய்யப்படுகின்றது. கொல்கத்தா கொல்கத்தா (Bengali: কলকাতা) (முன்பு கல்கத்தா) இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் தலைநகரும், பரப்பளவில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமும் ஆகும்.[4]. இந்நகர் இந்தியாவின் கிழக்கு பகுதியில் பாயும் ஊக்லி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.[5] கொல்கத்தா நகரின் புற நகர் பகுதிகளையும் கணக்கில் கொண்டால் இந்நகரின் மக்கள் தொகை சுமார் 1.5 கோடி ஆகும். எனவே, இந்நகர் இந்தியாவின் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகராக கருதப்படுகிறது. மேலும், இந்நகர் பரப்பளவின் அடிப்படையில் உலக அளவில் எட்டாவது மிகப் பெரிய நகரமாகும் .[6] சென்னை சென்னை (chennai) தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் (Madras) என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை, கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைப்படத்துறையின் தாயகம் ஆகும். பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன. பெங்களூரு பெங்களூரூ (கன்னடம்:ಬೆಂಗಳೂರು,) கர்நாடக மாநிலத்தின் தலைநகராகும். கர்நாடகாவின் தென்கிழக்கு பகுதியில் தக்காண பீடபூமியில் அமைந்துள்ள பெங்களூரு, மக்கள்தொகையில் இந்தியாவின் மூன்றாவது பெருநகரமாகவும்[7] நகர்ப்புற மக்கள்தொகை அடர்த்தியில் ஐந்தாவது பெரியதாகவும் திகழ்கிறது. நவீன பெங்களூரின் சிற்பியாக பலர் கருதும் கெம்பெ கவுடா இந்த இடத்தில் ஒரு செங்கல்-கலவை கோட்டையைக் கட்டி இதனை விஜயநகர சாம்ராச்சிய பிராந்தியமாக நிறுவிய 1537 ஆம் ஆண்டு முதல் தான் இந்நகரத்தின் நவீன வரலாறானது துவங்குவதாக பலர் கருதுகின்றனர். பிரித்தானிய ஆட்சியின் போது, இது தென்னிந்தியாவில் காலனி ஆட்சி மையமாக ஆனது. ஐதராபாத் ஐதராபாத் (Telugu: హైదరాబాద్, Urdu: حیدرآباد‎) தெற்கு இந்தியாவில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் மிகையான மக்கள்தொகையுடன் கூடிய தலைநகரம் ஆகும். இந்நகரம் "முத்துக்களின் நகரம்" என்றும் நிஜாம்களின் நகரம் என்றும் புகழ்பெற்றது. ஐதராபாத்தின் மக்கள் தொகை 4 மில்லியனுக்கும் மேற்பட்டதாகும்.நகரத்தின் பரப்பளவு, மக்கள் தொகை, வளர்ச்சி ஆகியவற்றின் தாக்கத்தின் அடிப்படையில் ஹைதராபாத் A-1 நகரம் என்று வகைப்பட்டுள்ளது.[8] அகமதாபாத் புனே முன்னதாக புனாவாடி அல்லது புண்ய-நகரி அல்லது பூனா என்றறியப்படும் புனே Marathi: पुणे)இந்தியாவின் ஒன்பதாவது மிகப்பெரிய நகரம் என்பதுடன், மும்பைக்கு அடுத்து மகாராஷ்டிராவிலேயே மிகப்பெரிய நகரமாகும். முல்லா மற்றும் முத்தா ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள புனே நகரம் புனே மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகரகமாகும். [9] இன்று, நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் ஏழு பல்கலைக்கழகங்களுடன் புனே கல்வி வசதிவாய்ப்புகள் கொண்ட நகரமாக அறியப்படுகிறது[10] அத்துடன் புனே நகரம் பாரம்பரிய இசை, விளையாட்டுக்கள், இலக்கியம், அயல்நாட்டு மொழியைக் கற்பித்தல், நிர்வாகம், பொருளாதாரம் மற்றும் சமூக அறிவியல் ஆய்வு போன்ற பல்வேறு கலாச்சார செயல்பாடுகளுக்காகவும் நன்கறியப்படும் நகரமாக உள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மற்றும் வேலை வாய்ப்புக்கள் இந்தியா முழுவதிலுமிருந்து புலம்பெயர்பவர்களையும் மாணவர்களையும் கவர்கிறது, அத்துடன் மத்திய கிழக்கு, ஈரான், கிழக்கு ஐரோப்பா, தென்கிழக்காசியா ஆகிவற்றிலிருந்து வரும் மாணவர்களையும் கவர்வதால் இது பல சமூகங்கள் மற்றும் பல கலாச்சாரங்கள் உள்ள நகரமாக விளங்குகிறது. இந்த நகரம் மோசமான பொதுப் போக்குவரத்து வசதியைக் கொண்டிருப்பதால் பெரும்பாலான மக்கள் தங்களது சொந்த வாகனங்களையே (பெரும்பாலும் இருசக்கர வாகனங்கள்) பயன்படுத்துகின்றனர். மேற்கோள்கள் பகுப்பு:இந்திய ஊர்களும் நகரங்களும்
இந்தியாவில் எத்தனை பெருநகரங்கள் உள்ளன?
தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஹைதராபாத்
0
tamil
653d88af2
ஜெர்மனி (Germany, [ˈdʒɜːmənɪ]), அல்லது ஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு (German: Bundesrepublik Deutschland, IPA:[ˈbʊndəsʁepuˌbliːk ˈdɔʏtʃlant]), என்பது நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இதன் வடக்கே வட கடல், டென்மார்க், பால்ட்டிக் கடல்; கிழக்கே போலந்து, செக் குடியரசு; தெற்கே ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து; மேற்கே பிரான்ஸ், லக்சம்பேர்க், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியன எல்லைகளாக உள்ளன. ஜெர்மனியின் பரப்பளவு 357,021கிமீ². 82 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகூடிய மக்கள்தொகை கொண்ட உறுப்பு நாடாகவும், மூன்றாவது அதிகம் புலம் பெயர்ந்த மக்களைக் கொண்டதாகவும் திகழ்கிறது[1]. ஜெர்மனி கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனி என இரண்டு பகுதிகளாக 1949 ஆம் ஆண்டு முதல் 3.அக்டோபர்,1990 வரை இருந்தது. கிழக்கு-ஜெர்மனிக்கு கிழக்கு-பெர்லின் தலைநகரமாகவும் மேற்கு-ஜெர்மனிக்கு பான்(Bonn) தலைநகரமாகவும் இருந்தன. மேற்கு-பெர்லினை கிழக்கு-பெர்லின் மற்றும் கிழக்கு-ஜெர்மனியில் இருந்து பிரிக்க 1961 இல் பெர்லின் சுவர் கட்டப்பட்டது. 1989 இல் அச்சுவர் உடைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட ஜெர்மனிக்கு பெர்லின் தலைநகரம் ஆனது. ஜெர்மனி இப்போது 16 மாநிலங்களை (Länder) கொண்ட ஒரு கூட்டாட்சி நாடாளுமன்றக் குடியரசாகும். இதன் தலைநகரம் பெர்லின். இதுவே இந்நாட்டின் பெரிய நகரமும் ஆகும். ஜெர்மானியா என அறியப்பட்ட பிரதேசத்தில் கி.பி. 100க்கு முன்னரே ஜெர்மானிக் மக்கள் குடியேறியமைக்கு ஆதாரங்கள் உள்ளன. குடிப்பெயர்வுக் காலப்பகுதியில், ஜெர்மானிக் குழுக்கள் மேலும் தென்பகுதிக்குப் பரவியதோடு ஐரோப்பாவெங்கும் வெற்றிகரமான ராச்சியங்களை ஏற்படுத்தினர். 10ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஜெர்மனியப் பகுதிகள் புனித உரோமப் பேரரசின் மையப்பகுதிகளாக இருந்தன.[2] 16ம் நூற்றாண்டில் வடக்கு ஜெர்மன் பகுதிகள் புரட்டஸ்தாந்து சீர்திருத்தத்தின் மத்திய நிலையமாக விளங்கியது. எனினும், தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகள் ரோமன் கத்தோலிக்கப் பகுதிகளாகவே இருந்தன. இதன் காரணமாக முப்பதாண்டுப் போர் ஏற்பட்டதோடு, கத்தோலிக்க்- புரட்டஸ்தாந்து பிரிவினையின் ஆரம்பமாகவும் அமைந்தது. அன்றிலிருந்து இன்றுவரை, ஜெர்மானிய சமுதாயத்தின் பண்பைத் தீர்மானிப்பதாகவும் இது இருந்து வருகிறது.[3] நெப்போலியப் போர்களின் போது, ஜெர்மானியப் பகுதிகளில் நாட்டுப் பற்று எழுச்சிபெற்றது. இதன் மூலம்,1871இல், புருசியாவைத் தலைமையாகக் கொண்டு, பெரும்பாலான ஜெர்மானியப் பகுதிகள் ஜெர்மன் பேரரசாக எழுச்சி பெற்றன. 1918-1919 ஜெர்மானியப் புரட்சி மற்றும் முதல் உலகப் போரில் சரணடைவு என்பவற்றைத் தொடர்ந்து, 1918 இல், பாராளுமன்ற வைமார் குடியரசு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அதன் சில பகுதிகள் வெர்செயில்ஸ் உடன்படிக்கையின்படி பிரித்தெடுக்கப்பட்டன. இக்காலப்பகுதியில், விஞ்ஞான மற்றும் கலைத் துறைகளில், பல முன்னேற்றங்களை அடைந்திருந்தாலும், பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக 1933 இல் மூன்றாவது முடியாட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் பின்பு நாட்டில் நாசிசக் கொள்கைகள் பரவின. இதனால் இரண்டாம் உலகப்போரும் மூண்டது. 1945 இன் பின், ஜெர்மனி நேச நாடுகளால் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவை கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனி என அழைக்கப்பட்டன. 1990 இல் ஜெர்மனி மீண்டும் ஒன்றிணைந்தது. 1957ல் ஐரோப்பிய சமூகத்தை உருவாக்குவதில் ஜெர்மனியும் பங்கு கொண்டது. இது 1993ல், ஐரோப்பிய ஒன்றியமாக மாறியது. இது சென்ஜென் பகுதியின் ஒரு பகுதியாகவும், 1999இலிருந்து, யூரோ பகுதியின் ஒரு உறுப்பினராகவும் ஆனது. ஜெர்மனி, ஐக்கிய நாடுகள், நேட்டோ, G8, G20, பொருளாதார ஒத்துழைப்புக்கும் அபிவிருத்திக்கான அமைப்பு மற்றும் ஐரோப்பியச் சம்மேளனம் ஆகியவற்றில் அங்கத்துவம் பெற்றுள்ளது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கான, 2011-2012 காலப்பகுதிக்கான தற்காலிக உறுப்பினராகவும் உள்ளது. ஜெர்மனி, உத்தேச மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி, உலகின் நான்காவது பாரிய பொருளாதார நாடாகவும், கொள்வனவுச் சக்தி அடிப்படையில், ஐந்தாம் இடத்திலும் உள்ளது. ஜெர்மனி உலகின் மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளராகவும், மூன்றாவது பெரிய இறக்குமதியாளராகவும் உள்ளது. இது ஒரு உயர் வாழ்க்கைத்தரம் கொண்ட நாடாகவும், சமூகப் பாதுகாப்புடைய நாடாகவும் காணப்படுகிறது. ஜெர்மனி உலகின் மிகப் பழைமை வாய்ந்த சுகாதாரப் பராமரிப்பு முறைமையையும் கொண்டுள்ளது. ஜெர்மனியில் பல சிறந்த தத்துவஞானிகள், இசையமைப்பாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் வாழ்ந்துள்ளனர். மேலும், இதன் கலாச்சார மற்றும் அரசியல் வரலாறும் சிறப்பானதாகும். சொற்பிறப்பியல் ஜெர்மனி என்ற ஆங்கிலச் சொல் இலத்தீனிய ஜெர்மானியா என்பதிலிருந்து வந்துள்ளது; ரைன் ஆற்றுக்கு கிழக்கில் வசித்த மக்களைக் குறிப்பிட யூலியசு சீசர் இச்சொல்லைப் பயன்படுத்தினார்.[4] குறிப்பாக, கால் இனத்தவர்கள் , இவர்களை ஜெர்மனி என அழைத்து வந்தனர். இதிலிருந்தே உரோமானியர்கள் ரைன் ஆற்றுக்கு கிழக்கேயும் தானூப் ஆற்றுக்கு வடக்கேயும் வாழ்ந்த மக்களைக் குறிக்க ஜெர்மனி என்ற பெயரைப் பயன்படுத்த துவங்கினர்.[5] இடாய்ச்சு சொல்லான இடாய்ச்சுலாந்து, *தியொடொ என்ற தொன்மைய செருமானிய வேரிலிருந்து வந்ததாகும்; இதன் பொருள் "மக்கள், இனம், நாடு" என்பதாக அமையும். இது ஜெர்மானிய மக்களின் பொதுமொழி</i>யைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்ட பரந்த சொல்லாக இருந்தது. இது குறிப்பாக செருமனி மொழியையோ மக்களையோ குறிப்பிடவில்லை. முதன்முதலாக இச்சொல் பயன்படுத்தப்பட்டபோது (பிந்தைய 8-ஆம் நூற்றாண்டு) இது மெர்சியா இராச்சியத்தின் மொழியைக் குறிப்பதாயிருந்தது; உண்மையில் அந்த மொழி பண்டைய ஆங்கிலம் ஆகும்.[6] பிற்பாடு பல்வேறு இனங்களும் தங்களுக்கான தனி அடையாளத்தை நிலைநிறுத்த முற்பட்டனர்; பிரித்தானியத் தீவிலிருந்தவர்கள் ஆங்கிலோ-சாக்சன் மக்கள், ஆங்கில்கள் பின்னர் ஆங்கிலேயர் எனப்பட்டனர். இவர்கள் தொன்மைய செருமனியின் அறிஞர்களால் "பவேரியர்கள்", "சாக்சன்கள்" அல்லது "இசுவாபியர்கள் " எனப் பிரித்தறியப்பட்டனர்.[7] இச்சொற்கள் பெரும் நிலப்பகுதிகளை ஆண்ட உள்ளக ஆட்சியாளர்களைக் கொண்டு உருவாகின.[8]புனித உரோமைப் பேரரசு உடைபட்டபோது, இத்தகைய தனி அடையாளங்கள் மறைந்து அவரவர் பேச்சுவழக்கில் *தியுடொ என்ற சொல் அடிப்படையில் இதுவரை பெயரிடப்படாத செருமானிய இனக்குழுக்கள் அழைக்கப்பட்டன. இவ்வாறு 13-ம் நூற்றாண்டில் தியுடிக்சுலாந்து (டாய்ச்சுலாந்து, செருமனி) புழக்கத்திற்கு வந்தது.[9][10] வரலாறு வரலாற்றுக்கு முந்தையக் காலம் 1907இல் கண்டெடுக்கப்பட்ட மாயுவர் 1 தாடையெலும்பு செருமனியில் 600,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொன்மையான மக்கள் வாழ்ந்துள்ளனர் எனக் காட்டுகிறது.[11] உலகில் மிகவும் பழைமையான முழுமையான வேட்டைக்கருவிகள் செருமனியில் இசோனின்கென் என்னுமிடத்தில் 1995இல் கண்டுபிடிக்கப்பட்டன; 380,000 ஆண்டுகள் பழைமையான 6-7.5 அடி நீளமுள்ள மூன்று மர எறிவேல்கள் கிடைத்தன.[12] செருமனியில் உள்ள நியாண்டர் பள்ளத்தாக்கில் (பள்ளத்தாக்கு செருமானிய மொழியில் தால் எனப்படும்) முதல்மனித தொல்லுயிர் எச்சம் கிடைக்கப்பெற்றது; 1856இல் இது புதிய மனித இனமாக நியண்டர்தால் மனிதன் என அங்கீகரிக்கப்பட்டது. இந்த நியாண்டர்தால் தொல்லுயிர் எச்சங்கள் 40,000 ஆண்டுகள் பழைமையானதாக மதிப்பிடப்படுகின்றது. இதேயளவு பழைமையான சான்றுகள் உல்ம் என்னும் ஊருக்கு அருகிலுள்ள சுவாபியன் யுரா குகைகளிலும் கிடைத்துள்ளன; 42,000 ஆண்டுகள் பழைமையான பறவையின் எலும்பு, பெரும் தந்தங்களிலான புல்லாங்குழல்கள் கண்டறியப்பட்டுள்ளன; இவையே உலகின் மிகவும் தொன்மையான இசைக்கருவிகளாகும்.[13] 40,000 ஆண்டுக்கு முந்தைய பனிக்கால சிற்பமான சிங்க மனிதன் உலகின் முதல் கலைவடிவமாக கருதப்படுகிறது.[14] ஜெர்மானிக் குழுக்களும் ஃபிராங்கியப் பேரரசும் ஜெர்மானிக் குழுக்கள், நோர்டிக் வெண்கலக் காலம் அல்லது ரோமானியருக்கு முந்திய இரும்புக் காலத்திலிருந்தே காணப்பட்டமைக்குச் சான்றுகள் உண்டு. அவர்கள் தெற்கு ஸ்கண்டினேவியா மற்றும் வடக்கு ஜெர்மனியிலிருந்து கி.மு. 1ம் நூற்றாண்டிலிருந்து தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு நோக்கிப் பரவத் தொடங்கினர். இதன் மூலம் கவுலின் செல்டிக் குழுக்கள், ஈரானியர்கள் மற்றும் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் காணப்பட்ட பால்டிக் மற்றும் ஸ்லாவிக் குழுக்களுடனும் தொடர்பு கொண்டனர்.[15] அகஸ்டசின் கீழ், ரோமானியத் தளபதியான பப்லியஸ் குயின்டிலியஸ் வரஸ் ஜெர்மானியாவைக் கைப்பற்றினான் (அண்ணளவாக ரைனிலிருந்து யூரல் மலைத்தொடர் வரையிலான பகுதி). கி.பி. 9ல், வரசினால் வழிநடத்தப்பட்ட மூன்று ரோமப் படைப்பிரிவுகள், செருஸ்கன் தலைவரான ஆர்மினியசினால் தோற்கடிக்கப்பட்டன. டாசியஸ் ஜெர்மானியா என்ற நூலை எழுதிய காலப்பகுதியான கி.பி.100ல், ஜெர்மானியக் குழுக்கள், தற்கால கெர்மனியின் பெரும்பாலான பகுதிகளான, ரைன் மற்றும் டன்யூப் நதிக்கரையோரமாகக் குடியேறினர் (லைம்ஸ் ஜெர்மானிகஸ்). எனினும், ஆஸ்திரியா, தெற்கு பவேரியா மற்றும் மேற்கு ரைன்லாந்து என்பன ரோமானிய மாகாணங்களாகவே இருந்தன.[16] 3ம் நூற்றாண்டில், அலெமனி, ஃபிராங்க்குகள், சட்டி, சாக்சன்கள், ஃபிரிசி, சிகம்ப்ரி மற்றும் துரிங்கி போன்ற பல மேற்கு ஜெர்மானிக் குழுக்கள் எழுச்சி பெற்றன. 260களில், ஜெர்மானிக் மக்களில் பலர் ரோமானியக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தனர்.[17] 375ல் ஹன்களின் படையெடுப்பு மற்றும் 395ல் ரோமப் பேரரசின் வீழ்ச்சி ஆகியன காரணமாக ஜெர்மானிக் குழுக்கள் மேலும் தென்மேற்காக நகர்ந்தன. இதேவேளை, சில பாரிய குழுக்கள் உருவாகி, சிறிய ஜெர்மானிக் குழுக்களைப் பிரதியீடு செய்தன. பாரிய பகுதிகள் (மெரோவின்கியன் காலப்பகுதியிலிருந்து இவை ஆஸ்திரேசியா என அறியப்பட்டன.) ஃபிராங்குகளால் கைப்பற்றப்பட்டன. மேலும் வடக்கு ஜெர்மனி சாக்சன்களாலும், ஸ்லாவுகளாலும் ஆளப்பட்டது.[16] புனித உரோமப் பேரரசு டிசெம்பர் 25, 800ல் ஃபிராங்கிய மன்னனான சார்லமக்னே பேரரசராக முடிசூட்டப் பட்டார். இவர் கரோலிங்கியப் பேரரசை உருவாக்கினார். 843ல் இது பிரிக்கப்பட்டது.[18] இதன் கிழக்குப் பகுதியில் புனித உரோமப் பேரரசு உருவாக்கப்பட்டது. இது வடக்கே எய்டர் ஆற்றிலிருந்து, தெற்கே மத்தியதரைக் கடல் வரையும் பரந்திருந்தது.[18] ஒட்டோனியப் பேரரசர்களின் ஆட்சியின் கீழ்(919–1024), பல பாரிய அரசுகள் ஒன்றிணைந்தன. 962ல் இப்பகுதிகளின் புனித உரோமப் பேரரசராக ஜெர்மானிய மன்னர் முடிசூட்டப்பட்டார். சாலியன் பேரரசர்களின் காலத்தில் (1024–1125), புனித உரோமப் பேரரசு வட இத்தாலியையும் பர்கண்டியையும் உள்வாங்கிக் கொண்டது. ஹொஹென்ஸ்டாஃபென் பேரரசர்களின் ஆட்சியின் கீழ்(1138–1254), ஜெர்மானிய இளவரசர்கள் தமது ஆதிக்கத்தை, ஸ்லாவுகள் வசித்த தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நிறுவிக் கொண்டனர். இதன்மூலம் இப்பகுதிகளிலும், மேலும் கிழக்குப் பகுதிகளிலும் ஜெர்மானியக் குடியேற்றங்களை ஏற்படுத்தினர் (ஓஸ்ட்சீட்லங்). வட ஜெர்மானிய நகரங்கள் வளமிக்க நகரங்களாக வளர்ச்சி பெற்றதோடு, ஹன்சியாட்டிக் லீக்கிலும் அங்கத்துவம் பெற்றன.[19] 1315ல் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தினாலும், 1348-50ல் இடம்பெற்ற கறுப்பு இறப்பினாலும் ஜெர்மனியின் சனத்தொகை வீழ்ச்சியடைந்தது.[20] 1356ல் எழுதப்பட்ட கோல்டன் புல் எனும் அரசாணை பேரரசின் அடிப்படை யாப்பாகக் காணப்பட்டது. இதில் ஏழு சக்திமிக்க சிற்றரசுகள் மற்றும் ஆயர் ஆட்சிப் பகுதிகளை ஆண்டோர் மூலம் நடத்தப்படும் தேர்தல் மூலம் பேரரசரைத் தெரிவுசெய்யும் முறை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.[21] 1517ல் மார்ட்டின் லூதர் தனது தொண்ணூற்றைந்து வாசகங்கள் அடங்கிய ஆய்வுக் கட்டுரையை விற்றன்பேர்க்கில் பிரசுரித்தார். இதன்மூலம், ரோமன் கத்தோலிக்க திருச்சபையை எதிர்த்த அவர் புரட்டஸ்தாந்து சீர்திருத்தத்தையும் ஆரம்பித்தார். 1530ன் பின் ஒரு தனியான லூதரன் திருச்சபை பல ஜெர்மானியப் பகுதிகளில் உத்தியோகபூர்வ சமயமாக உருவானது. சமய முரண்பாடு காரணமாக முப்பதாண்டுப் போர் (1618–1648) ஆரம்பமானது இது ஜெர்மானியப் பகுதிகளின் அழிவுக்கும் காரணமானது.[22] ஜெர்மானியப் பகுதிகளின் சனத்தொகை 30%த்தால் குறைவடைந்தது.[23] வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் (1648), ஜெர்மானியப் பகுதிகளில் இடம்பெற்ற சமயப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. எனினும் ஜெர்மானியப் பேரரசு பல்வேறு சுதந்திர சிற்றரசுகளாகப் பிரிந்தது. 18ம் நூற்றாண்டில், புனித உரோமப் பேரரசில் இவ்வாறான 1,800 பகுதிகள் காணப்பட்டன.[24] 1740இலிருந்து, ஆஸ்திரிய ஹப்ஸ்பர்க் முடியரசினதும், பிரசிய ராச்சியத்தினதும் இரட்டை ஆட்சி ஜெர்மானிய வரலாற்றில் முக்கிய இடம் பெற்றது. 1806ல் நெப்போலியப் போர்கள் காரணமாக இவ்வாட்சி அகற்றப்பட்டது.[25] செருமனிக் கூட்டமைப்பும் பேரரசும் முதலாம் நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பிறகு 1814இல் கூடிய வியன்னா மாநாடு செருமானியக் கூட்டமைப்பை (Deutscher Bund) நிறுவியது; இது இறையாண்மையுடைய 39 அரசுகளின் நெகிழ்வான கூட்டணியாகும். ஐரோப்பிய மீளமைப்பு அரசியலுக்கு உடன்படாததால் செருமனியில் முற்போக்குவாத இயக்கங்கள் வெளிவரத் தலைப்பட்டன. ஆஸ்திரிய அரசியல்வாதி மெட்டர்னிக்கின் அடக்குமுறைகள் இந்த எதிர்ப்புக்களை வலுவாக்கின. செருமானிய அரசுகள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட சோல்பெரைன் என்ற சுங்க ஒன்றியம், அவற்றிடையே பொருளியல் ஒற்றுமைக்கு வழிகோலியது.[26]பிரெஞ்சுப் புரட்சியின் தேசிய முற்போக்கு கருத்துருக்கள் பலரிடையே, குறிப்பாக இளம் செருமானியரிடையே, ஆதரவு பெறத் தொடங்கின. மே 1832இல் நடந்த ஆம்பாக் விழா செருமன் ஒற்றுமைக்கும் விடுதலைக்கும் மக்களாட்சிக்கும் ஆதரவான முதன்மை நிகழ்வாகும். ஐரோப்பாவில் நிகழ்ந்த தொடர் புரட்சிகளின் விளைவாக, செருமனியிலும் பொதுமக்களும் அறிஞர்களும் 1848ஆம் ஆண்டுப் புரட்சிகளைத் தொடங்கினர். பிரசியாவின் நான்காம் பிரெடெரிக் வில்லியத்திற்கு, மிகுந்த குறைவான அதிகாரங்களுடன், பேரரசர் பதவி அளிக்க முன்வந்தனர்; இதனை ஏற்க மறுத்த பிரெடெரிக் வில்லியம் ஓர் அரசியலமைப்பை முன்மொழிந்தார். இது எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஏற்புடையதாக இல்லை.[27] பிரசிய மன்னர் முதலாம் வில்லியமிற்கும் முற்போக்கான நாடாளுமன்றத்திற்கும் இடையே 1862ஆம் ஆண்டு படைத்துறை சீர்திருத்தங்கள் குறித்து கருத்து வேறுபாடு எழுந்தது. மன்னர் பிஸ்மார்க்கை புதிய தலைமை அமைச்சராக நியமித்தார். 1864இல் பிஸ்மார்க் டென்மார்க் போரில் வெற்றி கண்டார். தொடர்ந்து 1866இல் ஆஸ்திரோ-பிரசியப் போரில் இவரடைந்த வெற்றி வட செருமன் கூட்டமைப்பை நிறுவத் துணை நின்றது. முன்பு செருமானிய விவகாரங்களில் முன்னிலை வகித்த ஆஸ்திரியா இக்கூட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. 1871இல் பிரான்சு தோல்வி கண்டபோது வெர்சாய் அரண்மனையில் 1871இல் செருமன் பேரரசு அறிவிக்கப்பட்டது; ஆஸ்திரியா தவிர்த்த அனைத்து பகுதிகளும் இதில் உள்ளடங்கின. புதிய நாட்டின் மூன்றில் இருபங்கு நிலப்பகுதியும் மக்கள்தொகையும் கொண்ட பிரசியா ஆதிக்கமிகுந்த அங்கமாக விளங்கியது; ஓயென்சொலார்ன் பரம்பரையைச் சேர்ந்த பிரசிய அரசர் அதன் பேரரசராக ஆட்சி செய்தார், பெர்லின் அதன் தலைநகரமாக விளங்கியது.[27] செருமானிய ஒருங்கிணைப்பிற்குப் பிந்தைய காலகட்டத்தில் பிஸ்மார்க்கின் வெளியுறவுக் கொள்கைகள் செருமனியின் நிலையை, பெரும் வளரும் நாடாக, நிலைநிறுத்தியது. பிரான்சுடன் போர் தவிர்ப்பு உடன்பாடு கண்டார். 1884ஆம் ஆண்டு பெர்லின் மாநாட்டின்படி கமரூன் போன்ற செருமனியின் குடியேற்றப்பகுதிகளுக்கு புதிய பேரரசு உரிமை கொண்டாடியது.[28] செருமனியின் இரண்டாம் வில்லியமின் கீழ், மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போலவே, ஆதிக்கவாதத்தை முன்னெடுத்ததால் அண்டைநாடுகளுடனான உறவில் விரிசல் கண்டது. பிஸ்மார்க் கண்ட பல உடன்பாடுகள் புதுப்பிக்கப்படவில்லை; புதிய கூட்டணிகளில் செருமனி இடம்பெறவில்லை.[29] சூன் 28, 1914இல் ஆஸ்திரியாவின் இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட் கொலையுண்டதை அடுத்து முதல் உலகப் போர் துவங்கியது. மைய சக்திகளில் அங்கமாகவிருந்த செருமனி நேசநாடுகளிடம் தோற்றது. இந்தப் போரில், ஏறத்தாழ இரண்டு மில்லியன் செருமானிய படைவீரர்கள் மடிந்தனர்.[30] நவம்பர் 1918இல் செருமன் புரட்சி வெடித்தது; பேரரசர் இரண்டாம் வில்லியமும் அனைத்து செருமானிய அரசுகளும் பதவி துறந்தனர். நவம்பர் 11இல் ஏற்பட்ட சமரசம் போரை முடிவுக்குக் கொணர்ந்தது. சூன் 1919இல் செருமன் வெர்சாய் உடன்பாட்டில் ஒப்பிட்டது. செருமானியர்கள் இந்த உடன்படிக்கை தங்களுக்கு அவமானகரமாகவும் நீதிபிறழ்ந்ததாகவும் உணர்ந்தனர். இதுவே பின்னாளில் இட்லர் மேலோங்க அடிப்படையாக அமைந்ததாக சில வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.[31][32][33][34] வீமர் குடியரசும் மூன்றாம் இராய்க்கும் செருமன் புரட்சியின் துவக்கத்தில் செருமனி தன்னை குடியரசாக அறிவித்துக் கொண்டது. இருப்பினும், அதிகாரப் பகிர்விற்கான போராட்டம் தொடர்ந்தது; இடதுசாரி பொதுவுடைமை பவேரியாவில் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆகத்து 11, 1919இல் புரட்சி முடிவுக்கு வந்தபோது செருமனியின் குடியரசுத் தலைவராக இருந்த பிரெடிரிக் எபெர்ட்டு மக்களாட்சிக்கான வைமார் அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.[35] இதன் ஆட்சிக்காலத்தில் பெல்ஜிய, பிரான்சிய ஆக்கிரமிப்புகள், விலைவாசி ஏற்றத்தைத் தொடர்ந்து 1922-23இல் மீயுயர் ஏற்றம், கடன் சீரமைப்புத் திட்டம், 1924இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நாணயம், தேசிய தன்னம்பிக்கை வளர்ச்சி, கலை ஆக்கங்கள், முற்போக்கான பண்பாடு மற்றும் பொருளியல் வளர்ச்சியை செருமனி எதிர்கொண்டது. இருப்பினும் பொருளியல்நிலை நிலையில்லாமலும் அரசியல்நிலை கிளர்ச்சிகள் நிறைந்ததாகவும் இருந்தன. 1924 முதல் 1929 வரையிலான செருமனி "பகுதி நிலைபெற்ற" செருமனியாக வரலாற்றாளர் டேவிட் வில்லியம்சன் கூறுகிறார்.[36] இது 1929இல் ஏற்பட்ட பெரும் பொருளியல் வீழ்ச்சியால் சீரழிந்தது. கூட்டமைப்பிற்கு 1930இல் நடந்த தேர்தல்களில் நாட்சி கட்சி 18% வாக்குகளையே பெற்றது. எந்தக் கூட்டணியும் அரசமைக்க இயலாதநிலையில் அரசுத்தலைவர் எயின்ரிக் புருன்னிங் வீமர் அரசியலமைப்பின் 48ஆம் பிரிவின்படி தம்மை நெருக்கடிநிலை அதிகாரங்களுடன் நாடாளுமன்ற ஒப்புதலின்றி ஆள அனுமதிக்குமாறு நாட்டுத்தலைவர் பவுல் ஃபொன் இன்டென்பெர்கை வேண்டினார். இதனை ஏற்றுக்கொண்ட பிறகு ஆட்சி செய்த புருன்னிங் பெரும் பொருளியல் வீழ்ச்சியின் தாக்கத்தை குறைக்க பெரும் சிக்கன நடவடிக்கைகளில் இறங்கினார். இது வேலையற்றோர் எண்ணிக்கையை கூட்டியதுடன் சமூக சேவை வசதிகளையும் குறைத்தது. 1932இல் கிட்டத்தட்ட 30% செருமானிய தொழிலாளர்கள் வேலையின்றித் தவித்தனர்.[38] அந்தாண்டு நடந்த சிறப்புத் தேர்தலில் நாட்சி கட்சி 37% வாக்குகளைப் பெற்றது;இருந்தும் கூட்டணி சேர்த்து ஆட்சி அமைக்க இயலவில்லை. பல்வேறு மாற்று அமைச்சரவைகளை சோதித்து தோல்வியுற்ற பவுல் பொன் இன்டனெபெர்கு சனவரி 30, 1933இல் இட்லரை அரசுத்தலைவராக நியமித்தார்.[39] பெப்ரவரி 27, 1933இல் செருமானிய நாடாளுமன்றக் கட்டிடம் தீக்கிரையானது; இந்நிலையில் வழங்கப்பட்ட இராய்க்சுடாக் தீ தீர்ப்பாணை</i>யின்படி அடிப்படை குடிம உரிமைகள் இடைநீக்கம் செய்யப்பட்டு இட்லருக்கு]] எல்லையற்ற சட்டமியற்றும் அதிகாரம் வழங்கப்பட்டது. இட்லர் முழுமையும் மையப்படுத்தப்பட்ட சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தினார். செருமனியின் முதல் செறிவக முகாம்களை பெப்ரவரி 1933இல் நிறுவினார். செப்டம்பர் 1933இல் நடத்தப்பட்ட பொதுக் கருத்துக்கணிப்பில் உலக நாடுகள் சங்கத்திலிருந்து விலக செருமனி வாக்களித்தது. இட்லர் படைத்துறையை வலுப்படுத்தத் தொடங்கினார்.[40] பற்றாக்குறை நிதியைப் பயன்படுத்தி இட்லர் பல்லாயிரக் கணக்கான செருமானியர்களை பொதுத்துறை திட்டங்களில் வேலைக்கமர்த்தினார். ஆகத்து 1934இல் படைத்துறை வீரர்கள் நாட்டின் தளபதிக்கல்லாது இட்லருக்கு தனிப்பட்ட முறையில் விசுவாச உறுதிமொழி எடுக்கும் சட்டத்தை அமைச்சரவை இயற்றியது.[41] 1934இல் நடந்த பொது வாக்கெடுப்பில் 90% வாக்குகள் பெற்று அரசுத்தலைவர் பதவியும் நாட்டுத்தலைவர் பதவியும் ஒன்றிணைக்கப்பட்டது [42] 1935இல் படைத்துறையில் பணியாற்றுவது கட்டாயமாக்கப்பட்டது; வெர்சாய் உடன்பாட்டிலிருந்து விலகிக் கொண்டது; யூதர்களையும் மற்றக் குழுக்களையும் இலக்கு வைத்து நுரெம்பர்கு சட்டங்கள் இயற்றப்பட்டன. 1935இல் நேசப்படைகள் கையகப்படுத்தியிருந்த சார் பகுதியை செருமனி மீட்டது; 1936இல் வெர்சாய் உடன்பாட்டின்படி தடை செய்யப்பட்டிருந்த ரைன்லாந்திற்குள் துருப்புக்களை அனுப்பியது.[43] 1938இல் ஆசுதிரியா கையகப்படுத்தப்பட்டது; செப்டம்பர் 1939இல் செக்கோசிலோவாக்கியாவைக் கைப்பற்றியது. பின்னர் போலந்து படையெடுப்பு நடத்துமுகமாக மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது. செப்டம்பர் 1, 1939இல் போலந்து படையெடுப்பு நடைபெற்றது; சோவியத் செஞ்சேனையுடன் போலந்தைக் கைப்பறியது. இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து ஐக்கிய இராச்சியமும் பிரான்சும் செருமனி மீது போர் தொடுத்து இரண்டாம் உலகப் போர் தொடங்கியது.[44] சூலை 22, 1940இல் பிரான்சின் பெரும்பகுதியை செருமனி கைப்பற்றியபின்னர் பிரான்சு செருமனியுடன் சமரசம் செய்து கொண்டது. பிரித்தானியர்கள் 1940இல் பிரிட்டன் சண்டை என்றறியப்பட்ட செருமனியின் தாக்குதல்களை முறியடித்தனர். சூன் 22, 1941இல் செருமனி மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தத்தை மீறி சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்தனர். அச்சமயத்தில் செருமனியும் மற்ற அச்சு நாடுகளும் ஐரோப்பாவின் பெரும்பகுதியையும் வடக்கு ஆப்பிரிக்காவையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. 1943 துவக்கத்தில் சுடாலின்கிராட் சண்டையை அடுத்து சோவியத் ஒன்றியத்திலிருந்து மீளத் துவங்கினர்.[44] செப்டம்பர் 1943இல் செருமனியின் கூட்டாளி இத்தாலி சரண்டைந்தது; இதனால் இத்தாலியிலிருந்த நேசப்படையினருடன் போரிட கூடுதல் துருப்புக்கள் வேண்டியிருந்தது. பிரான்சில் டி-டே படையிறக்கம் போரின் மேற்கு முனையை திறந்தது; செருமனியின் எதிர்த் தாக்குதல்களுக்கிடையே நேசப்படைகள் 1945இல் செருமனிக்குள் நுழைந்தன. பெர்லின் சண்டையையும் இட்லரின் மரணத்தையும் அடுத்து செருமானியப் படை மே 8, 1945இல் சரணடைந்தது.[45] மனித வரலாற்றின் குருதிமிக்க போராக விளங்கிய இந்த உலகப்போரில் ஐரோப்பாவில் மட்டும் 40 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர்;[46] செருமன் படையில் மட்டும் 3.25 மில்லியன் முதல் 5.3 மில்லியன் வீரர்கள் இறந்து பட்டனர்.[47] 1 முதல் 3 மில்லியன் செருமானிய குடிமக்கள் மடிந்தனர்.[48][49] சிறுபான்மையர், அரசியல், சமய எதிர்ப்பாளர்களை இலக்காக கொண்டு இயற்றப்பட்ட நாட்சி ஆட்சி கொள்கைகள் பின்னதாக பெரும் இன அழிப்பு என அறியப்பட்டன. இந்த இனவழிப்பில் 6 மில்லியன் யூதர்கள், 220,000இலிருந்து 1,500,000 வரையான ரோமானி மக்கள், 275,000 மனநலம்/உடல்நலம் இல்லாதவர்கள், ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள், ஆயிரக்கணக்கான தற்பால்சேர்க்கையினர், நூறாயிரக்கணக்கான அரசியல் அல்லது சமய மாற்றுக்கருத்துக் கொண்டவர்கள் உள்ளிட்ட 10 மில்லியன் குடிமக்கள் அழிக்கப்பட்டனர்.[50] தவிர ஆறு மில்லியன் உக்ரைனியர் மற்றும் போலந்துக்காரர்களும் 2.8 மில்லியனாக மதிப்பிடப்படும் சோவியத் போர்க்கைதிகளும் நாட்சி ஆட்சியில் உயிரிழந்தனர். போரில் தோல்வியடைந்ததால் செருமனி நிலப்பகுதிகளை இழந்ததோடன்றி செருமனியின் கிழக்குப் பகுதிகளிலிருந்தும் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளிலிருந்தும் பல மில்லியன் செருமானிய இனத்தினர் வெளியேற்றப்பட்டனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சில நாட்சிகள் பெரும் இன அழிப்பு போன்ற குற்றங்களுக்காக நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தில் குற்ற விசாரணை செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டனர்.[51] கிழக்கு, மேற்கு ஜெர்மனிகள் செருமனி சரண்டைந்த பிறகு செருமனியின் மிஞ்சியிருந்த பகுதிகளையும் பெர்லினையும் இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள் நான்கு இராணுவ ஆக்கிரமிப்பு மண்டலங்களாகப் பிரித்துக் கொண்டன. இந்த மண்டலங்களில் கிழக்குப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 6.5 மில்லியனுக்கும் கூடுதலான செருமானிய இன மக்கள் குடியேற்றப்பட்டனர்.[52] பிரான்சு, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை ஒன்றிணைத்து மே 23, 1949இல் செருமானியக் கூட்டு மக்களாட்சியாக (Bundesrepublik Deutschland) நிறுவப்பட்டது; அக்டோபர் 7, 1949இல் சோவியத் பகுதி ஜெர்மன் சனநாயகக் குடியரசாக(GDR) (Deutsche Demokratische Republik) அறிவிக்கப்பட்டது. இவை முறைசாராது "மேற்கு ஜெர்மனி" என்றும் "கிழக்கு ஜெர்மனி" என்றும் அழைக்கப்பட்டன. கிழக்கு ஜெர்மனிக்கு கிழக்கு பெர்லின் தலைநகராயிற்று; மேற்கு ஜெர்மனிக்கு பான் தற்காலிகத் தலைநகராயிற்று.[53] செருமானியக் கூட்டு மக்களாட்சிக்கு மார்ஷல் திட்டத்தின் கீழான மீள்கட்டமைப்பு உதவிகள் வழங்கப்பட்டன. மேற்கு செருமனி, மக்களாட்சி குடியரசாக சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய அமெரிக்கா, பிரான்சு, ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்து செயல்பட்டது. 1949இல் இதன் முதல் அரசுத்தலைவராக (சான்சுலர்) கொன்ராடு அடேனார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1963 வரை இப்பதவியில் நீடித்தார். மேற்கு செருமனி 1955இல் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்புடன் இணைந்தது. கிழக்கு செருமனி கிழக்கத்திய திரளணி நாடாக சோவியத் ஒன்றியத்தின் அரசியல் மற்றும் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டது. கிழக்கு செருமனி மக்களாட்சியாக தன்னை அறிவித்துக் கொண்டாலும் பொதுவுடமையாளர்களின் செருமானிய சோசியலிச ஒற்றுமைக் கட்சியைச் சேர்ந்த பொலிட்பீரோ உறுப்பினர்களிடமே அரசியல் அதிகாரம் இருந்தது.[54] சோவியத்-பாணி திட்டமிட்ட பொருளாதாரம் அமைக்கப்பட்டது; கிழக்கு செருமனி பின்னாளில் காம்கான் நாடாக இணைந்தது.[55] 1961இல் கிழக்கு செருமானியர்கள் மேற்கு செருமனிக்கு தப்பிச் செல்வதைத் தடுக்குமாறு பெர்லின் சுவர் கட்டப்பட்டது. இது பனிப்போரின் ஓர் அடையாளமாக விளங்கியது.[27] எனவே போலந்திலும் அங்கேரியிலும் ஏற்பட்ட மக்களாட்சி மாற்றங்களை அடுத்து 1989இல் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டபோது பொதுவுடமையின் வீழ்ச்சி, செருமானிய மீளிணைவு மற்றும் டை வென்டே (திருப்பம்) அடையாளமாகக் கருதப்படுகிறது. செப்டம்பர் 12, 1990இல் இரண்டு+நான்கு உடன்பாடு காணப்பட்டு நான்கு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளும் ஒன்றிணைக்கப்பட்டு செருமனிக்கு முழுமையான இறையாண்மை கிட்டியது. அக்டோபர் 3, 1990இல் செருமானிய மீளிணைவு ஏற்பட இது வழிவகுத்தது.[27] செருமானிய மீளிணைவும் ஐரோப்பிய ஒன்றியமும் மார்ச்சு 10, 1994இல் இயற்றப்பட்ட பெர்லின்/பான் சட்டப்படி பெர்லின் ஒன்றுபட்ட செருமனிக்கு மீண்டும் தலைநகராயிற்று; பான் நகருக்கு தனிப்பட்ட நிலையாக Bundesstadt (கூட்டு நகரம்) என்ற தகுதி வழங்கப்பட்டது. சில அமைச்சரகங்கள் இங்கு இயங்குகின்றன.[56] அரசு இடமாற்றம் 1999இல் முழுமையடைந்தது.[57] மீளிணைவிற்குப் பிறகு செருமனி ஐரோப்பிய ஒன்றியத்திலும் நாடோவிலும் முனைப்பான பங்காற்றி வருகின்றது. 1999இல் யூகோசுலோவியாவில் அரசியல் சிக்கல் ஏற்பட்டபோது அமைதிகாப்புப் படையை அனுப்பியது. தாலிபான்களுக்கு எதிராக ஆப்கானித்தானிற்கு பாதுகாப்பு வழங்க நாடோவின் முயற்சிகளில் இணைந்து தனது படைகளை அனுப்பியது.[58] இவை பாதுகாப்புப் படைகளை நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற செருமானியச் சட்டங்களுக்கு புறம்பானதால் சர்ச்சைகளுக்கு உள்ளாகி உள்ளது.[59] 2005இல் அங்கெலா மேர்க்கெல் செருமனியின் முதல் பெண் அரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[27] புவியியல் செருமனி மேற்கு மற்றும் நடு ஐரோப்பாவில் அமைந்துள்ளது. இதன் பெரும்பாலான பகுதிகள் அகலக்கோடுகள் 47°, 55° வ ஆகியவற்றுக்கு இடையிலும், நெடுங்கோடுகள் 5°, 16° கி ஆகியவற்றுக்கும் இடையில் அமைந்துள்ளது. 357,021 ச.கிமீ (137,847 ச.மைல்) பரப்பளவு கொண்ட இந்நாட்டில் 349,223 ச.கிமீ (134,836 ச.மைல்) நிலப் பரப்பும், 7,798 ச.கிமீ (3,011 ச.மைல்) நீர்ப் பரப்பும் ஆகும். பரப்பளவின் அடிப்படையில் ஐரோப்பாவின் 7 ஆவது பெரிய நாடாகவும், உலகின் 62 ஆவது பெரிய நாடாகவும் செருமனி விளங்குகிறது. உயரம், அதி கூடிய அளவாகத் தெற்கில் ஆல்ப்சு மலைப்பகுதியில் தொடங்கி வடமேற்கில் வடகடல் கரையோரம் வரையும், வடகிழக்கில் பால்டிக் கடல் கரையோரம் வரையும் குறைகிறது. நடு செருமனியின் காடுகளைக் கொண்ட மேட்டு நிலங்களிலும், வட செருமனியின் தாழ் நிலப் பகுதியிலும் பெரிய ஆறுகளான ரைன், தன்யூப், எல்பே போன்றன ஓடுகின்றன. அல்பைன் பகுதியில் பனியாறுகள் காணப்படினும், தற்போது உருகி இல்லாது போகும் நிலை காணப்படுகிறது. இரும்புத் தாது, நிலக்கரி, பொட்டாசு, மரம், லிக்னைட்டு, யுரேனியம், செப்பு, இயற்கை வளிமம், உப்பு, நிக்கல், விளைநிலங்கள், நீர் என்பன செருமனியின் குறிப்பிடத்தக்க இயற்கை வளங்கள். தட்ப வெப்பம் செருமனியின் பெரும்பாலான பகுதிகளில், ஈரலிப்பான மேற்குக் காற்று முதன்மை பெறும் மிதவெப்பப் பருவகாலத் தட்பவெப்ப நிலை காணப்படுகின்றது. உயிரிப்பல்வகைமை செருமனிக்கு உட்பட்ட பகுதிகளை இரண்டு சூழல்மண்டலங்களாகப் பிரிக்கலாம். இவை, ஐரோப்பிய-நடுநிலக்கடல் மலைசார் கலப்புக் காடுகளும், வடகிழக்கு-அத்திலாந்திய அடுக்கக் கடல்சார் பகுதிகளும் ஆகும். 2008 ஆம் ஆண்டு நிலவரப்படி, செருமனியின் நிலப்பகுதியின் 34% விளை நிலங்களாகவும், 30.1% காடுகளாகவும் உள்ளன. 13.4% மட்டுமே நிரந்தரமான புல்வெளிகள். 11.8% குடியிருப்புக்களும், சாலைகளுமாக உள்ளன. நடு ஐரோப்பாவுக்குப் பொதுவான தாவரங்களும் விலங்குகளுமே இங்கும் காணப்படுகின்றன. செருமனியின் காடுகளின் மூன்றில் ஒரு பகுதி "பீச்", "ஆக்" போன்ற இலையுதிர் மரங்களால் ஆனவை. மீள்காடாக்க முயற்சிகளினால் ஊசியிலை மரங்கள் அதிகமாகி வருகின்றன. உயர் மலைப் பகுதிகளில், "இசுப்புரூசு", "ஃபர்" மரங்கள் அதிக அளவில் உள்ளன. மணற் பகுதிகளில் "பைன்", "லார்ச்" போன்ற மர வகைகள் காணப்படுகின்றன. பல வகையான பெரணிச் செடிகள், பூஞ்செடிகள், பூசணங்கள், பாசிகள் என்பனவும் உள்ளன. இங்குள்ள காட்டு விலங்குகளுள், மான், காட்டுப்பன்றி, நரி, பாட்கர், முயல் போன்ற வகைகள் அடங்கும். குறைந்த அளவில் நீரெலிகளும் உள்ளன. செருமனியின் மாநிலங்கள் நோட்றைன் - வெஸ்ட்ஃபாலன் அதிக மக்கள்தொகை-அடர்த்தி கொண்டது. ஹெஸன் மாநிலத்தில் உள்ள ஃபிரான்க்ஃபர்ட் ஜெர்மனியின் வர்த்தக தலைநகரமாகும். தேசிய விமான சேவையான 'லுஃப்ரான்சாஸா'வின் தலைமைச்செயலகம் மற்றும் விமான கிடங்கும் இங்குதான் உள்ளன. இசையமைப்பாளர் பித்தோவன் பானில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மன் மொழி ஜெர்மனியில் அதிகம் பேசப்படும் மொழி ஜெர்மன் ஆகும். இதுவே தேசிய மொழியும் ஆகும். இது ஆங்கிலம் போன்ற எழுத்துக்களைக் கொண்டிருந்தாலும் மிகவும் வேறுபட்ட ஒலி உடையதாகும் [60]. கூடுதலாக ä,ö,ü,ß போன்ற எழுத்துக்களும் உள்ளன. இவ்வெழுத்துகளுக்கு மேல் இருக்கும் புள்ளிக்கு 'உம்-லௌட்' (umlaut) என்று பெயர். பெயர்சொற்களுக்கு பால் (ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால் எனும்) அடிப்படையில் டெயர் ('der'- ஆண்பால்), டீ ('die' - பெண்பால்), டாஸ் ( 'das' - ஒன்றன்பால்) எனும் அடைமொழி சேர்க்கப்படுகின்றது. இந்தியாவில் ஜெர்மன் மொழி பயிற்றுவிக்கும் நிறுவனங்கள் உள்ளன. ஜெர்மனியின் புகழ்பெற்ற கோத்தே-இன்ஸ்டிட்யூட் (Goethe-Institute) இந்தியாவின் பத்து பெரிய நகரங்களில் ஜெர்மன் மொழி வகுப்புகள் நடத்தி வருகின்றது[61]. முக்கிய ஆறுகள் ஜெர்மனியில் பல முக்கிய நதிகள் உள்ளன. இவற்றுள் மிக நீளமான ரைன் ஆறு 1232 கி.மீ. நீளம் கொண்டது. எல்பா மற்றும் தன்யூப் ஆகியன ரைனிற்க்கு அடுத்த பெரிய நதிகளாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீர்வழி போக்குவரத்திற்கு இவ்வாறுகள் உதவுகின்றன. பொருளியல் நிலை செருமனியின் சமூகச் சந்தைப் பொருளாதாரம் மிகவுயர் திறனுடைய தொழிலாளர்களையும் பெரும் மூலதனப் பங்குகளையும், மிகக் குறைந்த நிலையில் ஊழலையும்,[63] மிக உயர்ந்த புத்தாக்கத் தூண்டலையும் கொண்டதாக விளங்குகிறது.[64] ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய, செல்வாக்குள்ள தேசிய பொருளாதாரமான செருமனி உலகில் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நான்காவதாகவும்[65] மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் ஐந்தாவதாகவும் உள்ளது.[66] 2011இல் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிநிலை அறிக்கையில் நிகர பங்களிப்பாளர்களில் பெரும் நாடாக செருமனி இருந்துள்ளது.[67] மொத்த உற்பத்தியில் ஏறத்தாழ 71% சேவைத்துறையிலும் 28% தொழிலுற்பத்தியிலும் 1% வேளாண்மையிலும் கிடைக்கின்றது.[68] தேசிய வேலையில்லாதோர் விழுக்காடு அலுவல்முறையாக ஏப்ரல் 2014இல் 6.8% ஆக இருந்தது.[69] இதில் முழுநேர வேலைத் தேடும் பகுதிநேர ஊழியரும் அடங்கி உள்ளனர்.[70] ஐரோப்பிய நாடுகளிடையே நெருங்கிய பொருளாதார, அரசியல் ஒற்றுமைக்கு செருமனி முயன்று வருகின்றது. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களுக்கிடையேயான உடன்பாடுகள் மற்றும் ஐ.ஒ. சட்டங்களுக்கேற்ப இதன் வணிகக் கொள்கைகள் வரையறுக்கப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பொது நாணயம், ஐரோ, செருமனியில் சனவரி 1, 2002இல் அறிமுகப்படுத்தப்பட்டது.[71][72] செருமனியின் நாணயஞ்சார் கொள்கைகளை ஐரோப்பிய நடுவண் வங்கி தீர்மானிக்கின்றது. செருமானிய மீளிணைவின் இருபதாண்டுகளுக்குப் பிறகும் வாழ்க்கைத்தரமும் தனிநபர் வருமானமும் முந்தைய மேற்கு செருமனிப் பகுதிகளில் முந்தைய கிழக்கு செருமனிப் பகுதிகளை விடக் கூடுதலாக உள்ளது.[73] கிழக்கு செருமனியின் நவீனமயமாக்கலும் ஒன்றிணைப்பும் நீண்டநாள் செயற்பாடாக உள்ளது; 2019 வரை நீடிக்கும் என மதிப்பிடப்படுகின்றது. மேற்கிலிருந்து கிழக்கிற்கு ஆண்டுக்கு ஏறத்தாழ $80பில்லியன் பரிமாறப்படுகின்றது.[74] சனவரி 2009 இல் செருமானிய அரசு பொருளியல் நிலையைத் தூண்டும் விதமாகவும் நலிந்த துறைகளைக் காப்பாற்றவும் €50பில்லியன் திட்டம் அறிவித்துள்ளது.[75] உலகில் நடக்கும் முன்னணி வணிக விழாக்களில் மூன்றில் இரண்டு செருமனியில் நடக்கின்றன.[76] 2010ஆம் ஆண்டில் வருமானத்தின் அடிப்படையில், பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட, உலகின் முதல் 500 பெரிய நிறுவனங்களில் (பார்ச்சூன் குளோபல் 500) 37 செருமனியைத் தலைமையிடமாகக் கொண்டவை. செருமனியின் மிகவும் அறியப்பட்ட வணிக நிறுவனங்கள்: மெர்சிடிஸ்-பென்ஸ், பி.எம்.டபிள்யூ, எஸ்ஏபி, சீமென்ஸ், போல்க்ஸ்வேகன், அடிடாசு, ஆடி, அலையன்ஸ், போர்ஷ், பேயர், போஸ்ச், மற்றும் நிவியா.[77] செருமனியின் சிறு,குறு நிறுவனங்கள் அவற்றின் சிறப்புத்திறனுக்காக அறியப்பட்டவை. தங்கள் துறையில் தனிச்சிறப்பு பெற்றுள்ள இத்தகைய 1000 நிறுவனங்கள் மறைந்துள்ள வாகையாளர்களாக மதிப்பிடப்படுகின்றனர்.[78] புகழ் பெற்ற ஜெர்மானியர்கள் ஐன்ஸ்டீன் பிளாங்க் கெப்ளர் டீசல் போஸ்ச் பாரன்ஹட் சீமன்ஸ் கார்ல் பென்சு கார்ல் மார்க்சு பிரெட்ரிக் ஏங்கல்ஸ் அலெக்ஸாண்டர் ஃபான் ஹம்போல்ட் போன்றோர் ஜெர்மனியில் பிறந்த சில அறிஞர்களாவர். காஸ்பர் டேவிட் பிரடெரிக் மைக்கேல் ஷுமக்கர் பிரபல கார் பந்தய வீரர் ஆவார். பீத்தோவன் புகழ் பெற்ற செவ்வியல் இசையமைப்பாளர் ஆவார். பொறிஸ் பெக்கர் (Boris Becker) (சிறந்த ரெனிஸ் வீரன்) ஸ்ரெஃபி கிராஃப் (Steffi Graf)(சிறந்த ரெனிஸ் வீராங்கனை) உணவு செருமானியர்களின் உணவுப்பழக்கம் பிராந்தியத்துக்குப் பிராந்தியம் வேறுபடுகிறது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு விதமான உணவை தமது பிரத்தியேக உணவாக வைத்திருக்கிறார்கள். ஆனால் எல்லோருமே உணவுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எந்த உணவையும் வீணாக்க மாட்டார்கள். இரண்டாவது உலக மகாயுத்தத்தின் போதும், அதன் பின்னும் அவர்கள் அனுபவித்த வறுமையும், பட்டினியும் அதற்கான காரணமாகக் கருதப்படுகிறது. இறைச்சி, மீன், முட்டை, மரக்கறி என்று எல்லாவிதமான உணவுகளும் இவர்களது சமையலில் இடம்பெறும். சமைப்பதில் பலவிதமான முறைகளை வைத்திருக்கிறார்கள். உணவில் எல்லாச் சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டுமென்பதிலும் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். பால், பாலாடைக் கட்டி, பழங்கள் போன்றவற்றையும் அதிகளவு கவனம் செலுத்தி உண்கிறார்கள். வடக்கு செருமானியர் உருளைக்கிழங்கைப் பிரதான உணவாகக் கொண்டுள்ளார்கள். உருளைக்கிழங்கை அவித்து, பொரித்து, வறுத்து, வெதுப்பி என்று பலவித முறைகளில் செய்து அதற்கு இறைச்சியோ, மீனோ சேர்த்து உண்கிறார்கள். தெற்கு செருமானியர் நூடில்ஸ், ஸ்பெற்சிலே(நூடில்ஸ்வகையில் பிரத்தியேகமான ஒன்று) க்னொய்டெல் போன்றவற்றைப் பிரதான உணவாகக் கொள்கிறார்கள். இவர்களிடம் ஏறத்தாழ 300 வகையான பாண் வகைகள் (Bread) உள்ளன. பாணை பெரும்பாலும் மாலை உணவாகவும், காலை உணவாகவும் பயன்படுத்துகிறார்கள். மாலையில் பாணுக்கு இடையில் மரக்கறிகள், இறைச்சித்துண்டங்கள், வூஸ்ற், சீஸ் போன்றவற்றை வைத்துச் சாப்பிடுகிறார்கள். இதை இரவுப்பாண் (Abendbrot) என்பார்கள். காலையில் பெரும்பாலும் பாணை வெண்ணெய், ஜாமுடன் சாப்பிடுவார்கள். கூடவே மரக்கறித் துண்டுகள், பாலாடைக் கட்டி போன்றவைகளையும் சேர்த்துக் கொள்வார்கள். காலை உணவில் கண்டிப்பாக ஒரு கிண்ணம் தோடம்பழச் சாறு சேர்த்துக் கொள்வார்கள். குழந்தைகளுக்குக் கண்டிப்பாக ஒரு கிண்ணம் பால் கொடுக்கப்படும். காலை உணவில் தானியவகைகள் கொண்ட Cereal என்னும் உணவும் பிரதான உணவாகக் கொள்ளப்படுகிறது. வூஸ்ட் எனப்படும் உணவு வகை அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. துருக்கி நாட்டு உணவு வகையான கேபாப் ஜெர்மன் மக்களிடையே மிகுந்த வரவேற்பபைப் பெற்றுள்ளது. இத்தாலி உணவான பிற்ஸா, பாஸ்தா, லசாணியா போன்ற உணவு வகைகளும் இங்கு விரும்பப் படுகின்றன. இந்திய மற்றும் சீன உணவங்காடிகளும் இங்குள்ளன. ஜெர்மனியில் கோயில்கள் ஜெர்மனியில் அதிகமானோர் கிறித்தவத்தைப் பின்பற்றினாலும் மற்ற மதங்களும் இங்கு ஆதரிக்கப்படுகின்றன. ஜெர்மனியின் நோட்றைன் - வெஸ்ட்ஃபாலன் மாநிலத்தில் உள்ள ஹம் என்னும் ஊரில் கோபுரத்தோடு கூடிய அம்மன் கோயில் உள்ளது [79]. ஜெர்மனியின் பல ஊர்களில் கோயில்கள் இருந்தாலும்,கோபுர அமைப்போடு இருப்பதால் ஜெர்மனியின் மற்ற மாநிலங்களில் இருந்தும் மக்கள் அதிக அளவில் ஹம்மில் இருக்கும் கோயிலுக்கு வருகின்றனர். ஜெர்மனியில் கல்வி வாய்ப்புகள் ஜெர்மனியின் பல நகரங்களில் பல்கலைக்கழங்கள் உள்ளன [80]. அயல் நாடுகளில் இருந்து வந்து இங்கு படிக்க விரும்பும் மாணவர்கள் எனும் இணையதளத்திலிருந்து விபரங்களை அறியலாம். இவற்றையும் பார்க்கவும் செருமனி தேசிய காற்பந்து அணி பிரான்சு ஜெர்மனி உறவு செருமானிய உயிரியலாளர் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:ஐரோப்பிய நாடுகள் பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
ஜெர்மனி நாட்டின் தலைநகரம் எது?
பெர்லின்
735
tamil
c487d3d09
இந்தியக் கணிதவியல் வரலாற்றில் இரண்டு ஆரியபட்டா</b>க்கள் புகழ் பெற்றுள்ளார்கள். இவர்களுள் ஐந்தாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்த ஆரியபட்டாவைப் பற்றியது இக் கட்டுரை. பிற்காலத்தில் வாழ்ந்த இரண்டாம் ஆரியபட்டா என்பவரிடம் இருந்து வேறுபடுத்துவதற்காக இவரை முதலாம் ஆரியபட்டா அல்லது மூத்த ஆரியபட்டா எனவும் அழைப்பது உண்டு. ஆரியபட்டா (Āryabhaṭa; வடமொழி: आर्यभटः, கிபி 476 ~ 550) என்பவர் இந்தியக் கணிதவியலின் செந்நெறிக் காலத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற கணிதவியலாளரும், இந்திய வானியலாளர்களுள் முதன்மையானவரும் ஆவார். அவருடைய மிகவும் புகழ் பெற்ற பணிகள் ஆர்யபட்டீய (கிபி 499, 23 வயதில்) மற்றும் ஆரிய-சித்தாந்தம் ஆகும். முதலாம் ஆரியபட்டாவின் பிறப்பிடத்தைச் சரியாகத் தீர்மானிக்கத்தக்க வகையில் சான்றுகள் எதுவும் அகப்படவில்லை. எனினும் இவர் குசுமபுர என்னும் இடத்துக்குச் சென்று அங்கே உயர்கல்வி கற்றதாகவும், அங்கே வாழ்ந்ததாகவும் அறியப்படுகின்றது. இவருடைய நூலுக்கு உரையெழுதிய பாஸ்கரர், இவ்விடம், இன்றைய பாட்னாவான பாடலிபுத்திரமே என்கிறார். ஆரியபட்டா எழுதிய நூல்களுள், ஆரியபட்டீயம், ஆரியபட்ட சித்தாந்தம் என்பவை முக்கியமானவை. இயற்கணிதத்தைச் சார்ந்து முதன்முதலில் உலகில் எழுதப்பட்ட நூல் இந்தியாவில் ஆரியபட்டாவால் 5ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இது பீஜகணிதம் என்று பெயர்கொண்டது. பாடல் வடிவில் அமைந்துள்ள ஆரியபட்டீயம், கணிதவியல், வானியல் என்பன தொடர்பான கண்டுபிடிப்புக்கள் பலவற்றைக் கொண்டுள்ளது. தொடர்ந்த பல நூற்றாண்டுகளிலும் இந்தியக் கணிதவியலில் இந்நூல் செல்வாக்குச் செலுத்தியது. மிகச் சுருக்க வடிவில் இருந்த இந்நூலுக்கு, விரிவான உரைகளை இவரது மாணவரான முதலாம் பாஸ்கரரும்; 15 ஆம் நூற்றாண்டில், ஆரியபட்டீய பாஷ்யம் என்ற பெயரில் நீலகண்ட சோமயாஜி என்பவரும் எழுதியுள்ளனர். வாழ்க்கை வரலாறு ஆர்யபட்டா பிறந்த வருடத்தைப் பற்றி தெளிவாக ஆர்யபட்டியாவில் கூறி இருந்தாலும், அவர் எந்த இடத்தில் பிறந்தார் என்பது அறிஞர்களுக்கு இடையே ஒரு புரியாத புதிராக இன்றும் இருந்து வருகிறது. சிலர் அவர் நர்மதா மற்றும் கோதாவரி நதிகளுக்கிடையே இருந்த அஷமாக என்ற ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தெலுங்கானா வட்டாரத்தில் பிறந்ததாகவும், ஆனால் முந்திய புத்தமத உரைகள் அஷ்மாகவை இன்னும் தெற்கு வசமாக தக்ஷிணபதத்தி</i>ல் அதாவது தக்காணப் பீடபூமியிலும், மற்றும் இதர உரைகள் அஷமாக -வில் அலெக்சாந்தருடன் போர் புரிந்ததாகவும் விளக்கி உள்ளன, அப்படி இருந்தால் அது இன்னும் வடக்கு நோக்கி இருந்து இருக்கும்.[1] சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வு ஆர்யபட்டா கேரளாவில் உள்ள சமரவட்டம் என்ற இடத்தைச் சார்ந்தவர் என்று கூறி உள்ளது. (10N51, 75E45). இந்த ஆய்வு அஷமாக என்பது ஸ்ராவணபெலகோல என்ற ஜெயின் மதத்தினர் வாழ்ந்து வந்த இடமான ஒரே கல்லில் செய்த சிற்பங்கள் பல நிறைந்த சுற்றி இருக்கும் இடங்கள் அஷமாக என்ற பெயர் உள்ள நாடாக அது கற்பிதம் கொண்டுள்ளது. சமரவட்டம் என்ற இடம் ஜெயின் மதத்தினரின் தொன்மை வாய்ந்த ராஜா பரதாவின் பெயரில் நிறுவிய பாரதப்புழா நதியின் அருகாமையில் உள்ள ஒரு ஜெயின் மதத்தினரின் குடியிருப்பின் ஒரு பாகமாக தெளிவு செய்கிறது. ஆர்யபட்டா கூட யுகங்களைக் குறிப்பிடும் போது, ராஜா பரதரை சுட்டிக் காட்டி இருக்கிறார் - தாசகிடிகா என்ற நூலில் ஐந்தாம் கவிதை வரியில் பாரத வருடங்கள்-பாரத ராஜாவிற்குப் பின் எத்தனை வருடங்கள் கழிந்த பிறகு நிகழ்ச்சிகள் நடந்தன என்று. அந்த நாட்களில் குசுமபுர என்ற இடத்தில் ஒரு புகழ் பெற்ற பல்கலைக் கழகம் இருந்தது, ஜெயின் மதத்தினர் இங்கே முடிவுகள் எடுக்கும் செல்வாக்குடன் வாழ்ந்தார்கள் மற்றும் ஆர்யபட்டாவின் பணிகள் குசுமபுராவை சென்றடைந்து நல்ல பாராட்டுக்கள் பெற்றிருக்கலாம்.[2][3] எனினும், ஏதோ ஒரு நேரத்தில், அவர் மேல் படிப்புக்காக குசுமபுராவிற்கு சென்றார் மற்றும் அங்கே சில நாட்களுக்கு வசித்தார் என்பது ஓரளவு உறுதியாகும்.[4]பாஸ்கர I (கி பி 629) குசுமபுராவைப் பாடலிபுத்ராவாக அடையாளம் கண்டுள்ளார். (நவீன பட்னா). குப்தப் பேரரசு, முடிவு பெறும் தறுவாயில் அங்கே அவர் வசித்தார், அந்த சமயமானது இந்தியாவின் பொற்காலமாகக் கருதப்படுகிறது, அப்போது புத்தகுப்தா மற்றும் இதர சிறிய ராஜாக்கள் ஆண்டு வந்த காலம், அதாவது விஷ்ணுகுப்தா என்பவரின் ஆட்சிக்கு முன்னதாக; அப்போது ஏற்கனவே வடகிழக்கு மாகாணங்கள் ஹண் இனத்தினரின் தாக்குதலுக்கு உட்பட்டு இருந்தது. ஆர்யபட்டியத்தில் ஆர்யபட்டா "லங்கா "என்று பல முறை குறிப்பிட்டுள்ளார், ஆனால் அவருடைய "லங்கா" என்பது ஒரு கற்பனை வாதமாகும், அது பூமத்திய ரேகையில் உஜ்ஜையனி நாட்டின் நிலநிரைக்கோடிற்கு சமமாக உள்ள ஒரு புள்ளியிடத்தை குறிப்பது ஆகும். படைப்புகள் ஆர்யபட்டா கணிதம் மற்றும் வானவியல் சார்ந்த பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார், அவையில் சில தொலைந்து போயின. அவருடைய பெரும் பணியான, ஆர்யபட்டீய, கணிதம் மற்றும் வானவியலுக்கான ஒரு பெரியநூற்சுருக்கம். இந்திய கணித இலக்கியத்தில் பல முறை பயன்படுத்திய, மேலும் நவீன காலத்திலும் பயன்பெறக் கூடியதாக விளங்குகிறது. ஆர்யபட்டீயவின் கணித பாகம் எண்கணிதம், அட்சரகணிதம், தல கோணவியல் மற்றும் உருண்ட கோணவியல் அடங்கியது. மேலும் அவற்றில் தொடரும் பின்னங்கள், இருபடிச்சமன்பாடு, அடுக்குத் தொடர்களின் கூட்டும் முறை மற்றும் சைன் கோணங்களுக்கான அட்டவணை அடங்கும். ஆர்யா -சித்தாந்த, என்ற தொலைந்து போன வானியல் கணிதம் கொண்ட படைப்பு, ஆர்யபட்டாவுடன் வாழ்ந்தவரான வராஹமிஹிரா, என்பவரின் படைப்புக்களில் இருந்தும், மற்றும் அதற்குப் பின்னால் வந்த கணிதயியலாளர்கள் மற்றும் தொடர்விளக்க உரையாளர்களின் படைப்புகளில் இருந்தும், அவற்றில் பிரம்மகுப்தா மற்றும் பாஸ்கரா I ஆகியோர் அடங்குவர், தெரிய வருகிறது. இந்தப் படைப்பானது பழமை வாய்ந்த சூரிய சித்தாந்தத்தை தழுவியதாக தெரிகிறது, மேலும் அது நள்ளிரவை-நாளை-கணக்கில் கொள்கிறது, ஆனால் அதற்கு எதிர்மறையாக ஆர்யபட்டீயவில் சூரிய உதயம் கணக்கில் கொண்டுள்ளது. இதில் பலவகையான வானவியல் ஆராய்ச்சிக்கான கருவிகளைப் பற்றி விவரித்துள்ளது, அவை க்னோமொன் என்ற கருவி (சங்கு -யந்திரம்{ /1}), ஒரு நிழற்க் கருவியான (சாயா -யந்திரம்), கோணங்களை அளக்கும் கருவிகளாக இருக்கலாம், அரை வட்டம் மற்றும் வட்டமான (தனுர் -யந்திரம் / சக்ர -யந்திரம்), ஒரு உருளை வடிவம் கொண்ட வடி யஸ்தி -யந்திரம், ஒரு குடை போன்ற கருவியான சத்ர -யந்திரம், மற்றும் தண்ணீர் கடிகாரங்கள் இரு விதமானவை, அம்பு போன்றதும் மற்றும் உருளை வடிவத்தில்.[1] போன்றவை அரபு மொழி பெயர்ப்பின் காரணமாக மூன்றாவதான ஒரு ஆர்யபட்டாவின் உரையும் கிடைத்துள்ளது, அது அல் ந்த்ப் அல்லது அல்-நந்ப், என்ற தலைப்புடன் கூடியது, ஆனால் அதன் சமஸ்க்ரி்த பெயர் தெரிய வரவில்லை. இது ஒன்பதாம் நூற்றாண்டை சார்ந்ததாக இருந்திருக்கலாம். இதைப் பற்றி பெர்சியன் நாட்டு அறிஞர் மற்றும் இந்தியத் தொடர்வரலாறுகளை எழுதிய அபூ ரெஹான் அல்-பிரூனி[1] குறிப்பிட்டு இருக்கிறார். ஆர்யபட்டீயம் ஆர்யபட்டாவின் படைப்பைப் பற்றி நேரடி விவரங்களை ஆர்யபட்டீயத்தில் இருந்து தான் அறிந்து கொள்ள முடியும். ஆர்யபட்டீயம் என்ற பெயர் அமைந்ததற்கு காரணம் பின்னர் வந்த தொடர் விளக்க உரையாளர்கள் தான், ஆர்யபட்டா அவராகவே அதற்கு பெயர் சூடி இருக்க வாய்ப்பில்லை; அவர் சீடன் பாஸ்கர I அதை அஷ்மகதந்த்ரா அல்லது அஷ்மகா எழுதிய உரை என்று பரிந்து உரைத்திருக்கிறார். எப்பொழுதாவது அதை ஆர்ய-ஷடாஸ் -அஷ்டா{/0} என்றும் கூறுவர், இல, ஆர்யபட்டாவின் 108, அவை உரையில் உள்ள கவிதை வரிகளை குறிக்கும். அது மிகவும் சொற்செறிவு நிறைந்த சூத்ரா இலக்கிய நடையில் எழுதியது, அதன் ஒவ்வொரு வரியும் ஒரு சிக்கலான முறையை எளிதில் மனப் பாடம் செய்யும் வகையில் அமைந்துள்ளது. அதனால், அதன் உட்பொருளை விளக்கம் செய்தது தொடர் விளக்க உரையாளர்களே. அதன் முழு உரையும் 108 கவிதை வரிகளைக் கொண்டுள்ளது மேலும் கூடுதலாக அறிமுகவுரையாக 13 வரிகளும், இவை அனைத்தும் நான்கு பதங்கள் அல்லது அத்தியாயங்கள் கொண்டதாகும். கிடிகபதம்: (13 கவிதை வரிகள்) பெரிய அளவில் காலத்தைக் குறிப்பவை - கல்ப, மன்வந்தர, யுகா, இவை யாவும் ஒரு தற்கால அண்டவியலை அறிமுகப்படுத்துகிறது அது அதற்கு முன்னர் எழுதிய உரைகளான லகாதாவின் வேதாங்க ஜ்யோதிசத்தை வேறுபடுத்தி உள்ளது. (சி ஏ . முதல் நூற்றாண்டு கி.மு). இதில் சைன் கோணங்களின் (ஜ்யா), அட்டவணை ஒரே வரியில் அடங்கி உள்ளது. ஒரு மகாயுகத்தில், ஏற்படக்கூடிய கிரகங்களைச் சார்ந்த சுழற்சிகளுக்கு 4.32 மில்லியன் ஆண்டுகள் என்று வரையறுக்கப் பெற்றது. கணிதபதம் (33 கவிதை வரிகள்), அளவை இயலைச் சார்ந்தது (க்ஷேத்திர வ்யவஹாரா), எண்கணிதம் மற்றும் கேத்திரகணிதத்துக்குரிய விருத்தி, க்னோமொன் / நிழல்கள் (ஷங்கு -சாயா ), எளிதான , இருபடிச் சமன்பாடு (இருபடிய), ஒருங்கமைச் சமன்பாடுகள் (ஒருங்கமை) மற்றும் டையோபாண்டைனின் சமன்பாடுகள் (தேறப்பெறாத சமன்பாடுகள் (குட்டக) காலக்ரியப்பதம் (25 வரிகள்): காலத்தின் வெவ்வேறு அளவுகோல்கள் தொகுதி அலகு போன்ற பிரிவுகள் மற்றும் கிரகங்களின் இருப்பிட நிலைகளை ஒரு குறிப்பிட்ட நாள் அன்று அறிந்து கொள்ளும் விதம். இடைப்படு மாதங்களை கணித்தலுக்கான (அதிகமாக ), க்ஷய-திதி முறைகள். ஏழு நாட்கள் கொண்ட வாரத்தையும், வாரத்தின் பெயர்களையும் விவரிக்கிறது. கோலபதம் (50 வரிகள் ): வானக் கோளத்தின் கேத்திரகணித /திரிகோணகணித பாங்குகள், ஞாயிற்றின் தோற்றப்பாதை (நீள்வட்டம்) , வானநடுவரை, கணு, புவியின் ஆகாரம், பகல் மற்றும் இரவுகளுக்கான காரணங்கள், இராசியின் அடையாளங்களை கீழ்வானத்தில் எழுதல் போன்றவை மற்றும் அவற்றின் சிறப்புக்கூறுகள். கூடுதலாக, சில பதிப்புகளின் கடைசியில் சில கோலோபோன் (அச்சகம்) (பிற இணைப்புகளைச்) சேர்த்துள்ளனர், அவை படைப்பின் குணாதிசயங்களை மெச்சுபவையாக இருக்கும். ஆர்யபட்டீயா கணிதவியல் மற்றும் வானவியலில் பல புதுமைகளை கவிதை நயத்துடன் புகுத்தியது, அவை பல நூற்றாண்டுகளாக பயனுள்ளதாக செல்வாக்குடன் அமைந்துள்ளன. மிக சுருக்கமாக இருக்கும் இந்த உரையினை அவரது சீடரான பாஸ்கரா I தனது தொடர்விளக்க விளக்க உரையாடல்களிலும்,(பாஷயா, பா. 600) மேலும் நீலகந்த சோமையாஜி தனது உரையான ஆர்யபட்டீய பாஷ்யாவிலும், விவரமாக எடுத்து உரைத்துள்ளனர்.(1465). கணிதம் இடப்பெறுமான முறை மற்றும் சூன்யம். எண்கள் சார்ந்த இடப்பெறுமான முறை, முதன் முதலாக மூன்றாம் நூற்றாண்டின் பக்ஷலி கையெழுத்துப்படியில் எழுதியது, அவருடைய பணியில் தெளிவாக படுத்தினார்.[5]; அவர் அதற்கான குறியீடுகளைப் பயன் படுத்தவில்லை என்றாலும், ஆனால் பிரான்ஸ் நாட்டு கணிதயியலாளர் ஆன ஜியோர்ஜாஸ் ஈப்ராஹ் ஆர்யபட்டாவின் படைப்பில் சூன்யத்தை பற்றியதான அறிவாற்றல் உள்ளடக்கமாக காணப் படுவதாகவும், அதை இடப் பெறுமான முறையில் இதை பத்து என்ற எண்ணின் அதிக மதிப்பீடுகளாக சக்தியாக கொண்டு அதற்கான குணகம் சூன்யமாகவும் கருதப்பட்டிருந்தது அதன் படியாகும் என்று விளக்கி உள்ளார்.[6] எனினும், ஆர்யபட்டா பிராஹ்மி எண்களைப் பயன்படுத்தவில்லை; வேதிக சமயத்தில் இருந்து , நிலவிய சமஸ்க்ரி்த பாரம்பரிய முறையில், அட்சரங்களைப் பயன்படுத்தினார், மற்றும் அளவுகளைப் பெறுவதற்கு (சைன் அட்டவணைகளைப் போல) நினைவுக்குறியீட்டு வடிவங்களைப் பயன்படுத்தினார்.[7]. பை என்பது ஒரு விகிதமுறா எண் ஆர்யபட்டா பை π {\displaystyle \pi } என்ற எழுத்தினை தோராயமாக மதிப்பிட்டார், மேலும் பை π {\displaystyle \pi } என்பது ஒரு விகிதமுறா எண் என்ற முடிவிற்கு வந்தார். ஆர்யபட்டீயம் (gaṇitapāda 10) இரண்டாம் பாகத்தில், அவர் எழுதுகிறார்: chaturadhikam śatamaśṭaguṇam dvāśaśṭistathā sahasrāṇām ' Ayutadvayaviśkambhasyāsanno vrîttapariṇahaḥ. '' "நூறோடு நாலைக் கூட்டு , அதை எட்டால் பெருக்கு மேலும் பிறகு 62,000 த்தை அதனுடன் கூட்டு. இந்த விதி முறையில் 20000 விட்டம் கொண்ட ஒரு வட்டத்தின் சுற்றளவைக் கண்டறியலாம்." இது என்ன சொல்கிறது என்றால், ஒரு வட்டத்தின் சுற்றளவு மற்றும் அதன் விட்டத்தின் விகிதாச்சாரம் ((4+100)×8+62000)/20000 = 3.1416, இந்த விடை ஆனது ஐந்து பொருளுடைய இலக்கங்களுக்கு துல்லியமாக பொருந்தும். ஆர்யபட்டா ஆசன்ன (நெருங்குகிறது) என்ற வார்த்தையை பயன் படுத்தினார், அது கடைசி வார்த்தைக்கு முன்னால் இடம் பெற்றிருக்கும், அதன் மூலம் இது தோராயமானதாகவும், ஆனால் அதன் மதிப்பு அளவுக்கிணங்காததும் ஆகும் (அல்லது விகிதமுறாத எண்). இது சரியானால் , அது மிகவும் மதிநுட்பமிகு உளநிலையைக் காட்டுகிறது, ஏன் என்றால் யூரோப்பில் பை என்ற எண்ணின் அளவுக்கிணங்கா தன்மையை 1761 ஆண்டில் தான் ஜோதன்ன் ஹென்றிச் லம்பேர்ட் (லம்பேர்ட்)) என்பவர் கண்டறிந்தார்.[8]. ஆர்யபட்டீயா அரபு மொழி பெயர்பிற்குப் பிறகு (சிஏ. 820 கி.பி.) இந்த தோராயத்தை பற்றி அல்-க்வாரிழ்மி யின் அட்சரக்கணிதம் புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளது.[1]. அளவியல் மற்றும் கோணவியல் கணிதபதம் 6 -ல் , ஆர்யபட்டா ஒரு முக்கோணத்தின் பரப்பளவை இவ்வாறு அளக்கிறார் த்ரிபுஜாச்ய பலஷரிரம் சமதளகோடி புஜர்தசம்வர்க அதன் பொருளானது: ஒரு முக்கோணத்திற்கு, அதன் செங்குத்துடன் அரைப் பக்கத்தை பெருக்கினால் அதன் பரப்பளவு கிட்டும்.[9] ஆர்யபட்டா சைன் என்ற கருத்துப்படிவத்தை தனது படைப்பான அர்த-ஜ்ய</i>வில் விளக்கி இருக்கிறார். நேர்ச்சரியாக, அது "பாதி-நாண்" என்ற பொருள் படும். எளிதாக இருப்பதற்கு , மக்கள் அதை ' ஜ்யா' என்று கூற தொடங்கினர். அரபிக் எழுத்தாளர்கள் அவருடைய படைப்புகளை சம்ச்க்ரி்தத்தில் இருந்து அரபு மொழி பெயர்த்த போது, அவர்கள் அதை ஜிபா என்றழைத்தனர் (ஒலிப்புமுறையில் ஒப்புமை கொண்டதால்). எனினும், அரபு மொழி எழுத்துக்களில், உயிரெழுத்துக்கள் மருவியதால் அது ஜப் என்று சுருங்கியது. பிறகு வந்த எழுத்தாளர்கள் ஜப் என்பது ஜிபா என்ற சொல்லின் சுருக்கம் என்று அறிந்து கொண்டு, அதை ஜியாப், என்று திரும்ப பதிலிடுத்தார்கள், அதன் பொருளானது "சிறுகுடா" அல்லது "விரிகுடா" ஆகும் (அரபு மொழி, வெறும் நுட்பச்சொல்லாக அது இருக்கிறது, ஜிபா என்பது ஒரு பொருளும் இல்லாத சொல்லாகும்). பிறகு 12 ஆம் நூற்றாண்டில், க்றேமொனா நகரத்து க்தேரர்டோ இப்பகுப்புகளை அரபு மொழியிலிருந்து லத்தீன் மொழிக்கு மொழி பெயர்த்த போது, அவர் அரபு மொழி சொல்லான ஜியாப் பை அதன் எதிப்பிரதி லத்தீன் சொல்லான, சைனஸ் என்ற சொல்லை மாற்றி புகுத்தினார். (அதன் பொருளும் "சிறு குடா" அல்லது "விரிகுடா"வை குறிப்பதாகும்). அதற்கு பிறகு,சைனஸ் என்பது "சைன் ஆக ஆங்கிலத்தில் மாறி அமைந்தது.[10] தேறப்பெறாத சமன்பாடுகள் பண்டைய காலத்தில் இருந்தே இந்திய கணிதயியலாளர்களுக்கு அதிக ஆர்வத்தைத் தூண்டியது ax + b =cy போன்ற சம்னபாடுகளுக்கு விடைகளைக் கண்டுபிடிப்பது ஆகும், இதனை டையோபாண்டைனின் சமன்பாடுகள் என்று கூறுவர். இதோ ஒரு எடுத்துக்காட்டு பாஸ்கராவின் ஆர்யபட்டீயவைப் பற்றிக் கூறிய விளக்க உரை: எட்டால் வகுத்தால் மீதி 5 வரக்கூடியதும்; ஒன்பதால் வகுத்தால் 4 வரக்கூடியதும்; மற்றும் ஏழால் வகுத்தால் மீதி 1 வரக்கூடியதுமான எண்ணைக் கண்டுபிடிப்பது. அதாவது N = 8x+5 = 9y+4 = 7z+1 என்று வரும் எண்ணைக் கண்டு பிடி. N என்ற பதத்திற்கு மிகக் குறைவான மதிப்பீடு 85 ஆகும். பொதுவாக, டையோபாண்டைனின் சமன்பாடுகள் கடினமானதாகக் காணப்படும். இது போன்ற சமன்பாடுகள் பண்டைய வேதிக் இலக்கிய உரையான சுலப சூத்திரங்களில் விரிவாக உரைக்கப்பெற்றது, மிகவும் பழைமையான பாகங்கள் கிமு 800 ஆண்டுகளாக இருக்கலாம். இதற்கு விடை காணும் ஆர்யபட்டாவின் முறையானது kuṭṭaka (कुट्टक) குட்டக் முறை என்று அழைக்கப்பெற்றது. குட்டக் என்றால் பொடியாக்குவது, அதாவது சிறு துண்டுகளாக அதை உடைப்பது மேலும் அதற்கான அசல் காரணிகளை எழுதுவதற்கு ஒரு மீள்சுருள் நெறி முறை தேவைப்பட்டது. இன்று இந்த மீள்சுருள் நெறிமுறை, பாஸ்கர கிபி 621 ஆம் ஆண்டில் காண்பித்தது போல முதல்வரிசை டையோபாண்டைனின் சமன்பாடுகளின் விடையைக் கண்டுபிடிக்க உதவும் நியம முறையாகும், மேலும் இதனை ஆர்யபட்டா நெறிமுறை (ஆர்யபட்டா அல்கோரிதம்) என்று அழைக்கிறார்கள்.[11] டையோபாண்டைனின் சமன்பாடு கிர்ப்டோலோஜி, இரகசிய தகவல் பரிமாற்றம், ரகசியமாக வைத்தல் தொழிலுக்கு பயன்பாடுள்ளதாகும், மேலும் 2006 ஆர் எஸ் ஏ மாநாடு கூட்டத்தில் குட்டக முறை மற்றும் பண்டைய முறைகள் சுலப சூத்திரங்கள் பரிசீலிக்கப்பட்டன. அட்ச்சர கணிதம் ஆர்யபட்டீய வில் ஆர்யபட்டா சதுர மற்றும் கனசதுர தொடர் கணிதம் சார்ந்த தொடருக்கான கூட்டு விடையை மிக நளினமாக வடிவமைத்தார்: }[12] 1 2 + 2 2 + ⋯ + n 2 = n ( n + 1 ) ( 2 n + 1 ) 6 {\displaystyle 1^{2}+2^{2}+\cdots +n^{2}={n(n+1)(2n+1) \over 6}} மற்றும் 1 3 + 2 3 + ⋯ + n 3 = ( 1 + 2 + ⋯ + n ) 2 {\displaystyle 1^{3}+2^{3}+\cdots +n^{3}=(1+2+\cdots +n)^{2}} வானியல் ஆர்யபட்டாவின் வானியல் முறையானது அவுதயகா முறை என்று அழைக்கப்பெற்றது. (நாட்களின் கணக்கெடுப்பானது காலை உதயம், லங்காவில், நிலநடுக்கோட்டில் விடியல் ஏற்படும் போது). அவர் வானவியல் பற்றி பின்னர் எழுதிய நூல்கள், அவர் இரண்டாவது ஒரு மாதிரியை முன்மொழிந்தார், அந்த மாதிரியான (அர்த-ராத்ரிக, நள்ளிரவு சார்ந்த), தொலைந்து விட்டது, ஆனால் அவற்றில் சில பாகங்களைப் பிராமகுப்தாவின் காந்தகாட்யகா வை பற்றிய கலந்துரையாடல் மூலம் திரும்பவும் புனரமைக்கலாம். சில பதிவேடுகளில் அவர் வானுலக நகர்வினைப் புவியின் சுழற்சியின் காரணமாக ஏற்படுவதாக குறித்துக் காட்டுகிறார்.மேலும் இவர் கோள்களின் சுற்றுப்பாதையை நீள்வட்ட வடிவம் என்று கணித்தார் சூரிய மண்டல இயக்கம். ஆர்யபட்டா புவி தன் அச்சினை ஒட்டி சுழன்று வருவதாக நம்பினார். இதனை ஒரு கருத்தை வெளியிடும் பொழுது காணலாம், லங்காவை குறிப்பிடும் போது, நட்சத்திரங்களின் நகற்சியை புவி சுழற்சியால் ஏற்படும் சார்பு இயக்கம் என்று விவரித்துள்ளார்: ஒரு மனிதன் தனது படகில் முன்னோக்கி செல்லும் போது, அவனைச் சுற்றி இருக்கும் அசையாத பொருட்கள் பின் நோக்கி நகருவதைப் போல தோற்றம் அளிக்கும், அதைப் போலவே அசையாமல் இருக்கும் நட்சத்திரங்கள் லங்காவில் இருந்து பார்க்கும் போது, (அதாவது பூ மத்திய ரேகை) நுண்மையான மேற்கு நோக்கி செல்வது போல காட்சி அளிக்கும். [அச்சலாணி பாணி சமபஷ்சிமகாணி - கோலபதம்.9]' ஆனால் அதற்குப் பின் வரும் வரிகள் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் உண்மையான, நகர்ச்சியைப் பற்றி விவரிக்கிறது: “அவை எழுவதற்கும் மறைவதற்கும் ஆன காரணம் அவற்றின் கதிர்வம் அடங்கிய வட்டமானது மேலும் அதனுடன் கிரகங்களின் சலனம், திசையன் சார்பான காற்றால் இயக்கப் படுவதால், லங்காவில் தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும்”. லங்கா (இல. ஸ்ரீ லங்கா) ஆனது இங்கே பூ மத்திய ரேகையில் உள்ள ஒரு அடையாள புள்ளி ஆகும், அதனை அடையாள உச்ச நெடுங்கோடுக்கு சமமாக வானியல் கணிப்புகளுக்காக எடுத்துக் கொண்டதாகும். ஆர்யபட்டா சூரிய மண்டலத்தின் புவிமையத் தோற்றம் கொண்ட மாதிரியை விளக்கி உள்ளார். அதில் சூரியன் மற்றும் சந்திரன் இரண்டுமே மேல்வட்டம், நீள்வட்டங்களில் தாங்கி செல்லப்படுகிறது, மேலும் அவை முறைப்படி வரும் போது புவியைச் சுற்றி வருகிறது. இந்த மாதிரியில், இது பைதாமகாசித்தாந்தாவிலும் (சி ஏ. கிபி 425), கிரகங்களின் நகர்ச்சி ஒவ்வொன்றும் இரு நீள்வட்டங்களால் முறைப் படுகிறது, ஒரு சின்ன மந்த (மெல்ல செல்லும்) நீள்வட்டம் மற்றும் ஒரு சீக்ர (விரைவான) நீள்வட்டம்.[13] புவியில் இருந்து கிரகங்களுக்கான தூரத்தை வைத்து கிரகங்களை வரிசைப் படுத்தினால், அவை: சந்திரன், புதன், வெள்ளி, சூரியன், செவ்வாய்., வியாழன் , சனி மற்றும் கதிர்வங்கள் [1]. கிரகங்களின் இடம் மற்றும் காலம் ஒரே சீராக நகரும் ஒப்புடன் நோக்கத்தக்க புள்ளியுடன் கணிக்கப்பெற்றது, அவை புதன் மற்றும் வெள்ளியைப் பொறுத்தவரை, சூரியனின் சராசரி வேகத்தைப் போல புவியை சுற்றி வருவதாகவும் செவ்வாய், வியாழன் மற்றும் சனி அவை குறிப்பிட்ட வேகத்தில் புவியைச் சுற்றி வருகின்றன, ஒவ்வொரு கிரகமும் தனிப்பிரதியாக வான வீதியில் சலித்துக் கொண்டே இருக்கின்றன. வானியல் சார்ந்த மிக்க வரலாற்றாசிரியர்கள் இந்த இரு நீள்வட்ட மாதிரியினை ப்டோளேமிக்கு முன் ஆன கிரேக்க வானியலாக கருதுகின்றனர்..[14] ஆர்யபட்டாவின் இன்னொரு மாதிரியில், அதாவது சீக்த்ரோக்கா, சூரியனுடன் ஒத்த அதன் அடிப்படை காலமானது, சில வரலாற்றாசிரியர்களால் ஞாயிற்றுமையமான மாதிரியாக காணலாம்.[15] கிரகணங்கள். சந்திரன் மற்றும் கிரகங்கள் சூரிய ஒளியை பிரதிபலிக்கும் போது மின்னுகிறதாக அவர் சொல்கிறார். அண்டப் பிறப்பியலில் கிரகணங்களைப் பற்றி நிலவி வந்த போலி ராகு கேது கிரகங்களால் கிரகணம் ஏற்படுகிறது என்ற நிலைக்கு பதிலாக, அவர் கிரகணங்கள் புவியாலும், புவியின் மேலும் விழும் நிழல்களால் ஏற்படுவதாக விளக்குகிறார். அப்படியாக சந்திர கிரகணம் சந்திரன் பூமியின் நிழலில் வரும் பொழுது ஏற்படுகிறது (வரி கோல.37), மேலும் பூமியின் நிழலின் அளவு மற்றும் அதன் ஆதிக்கத்தில் வரும் பரப்பளவு ஆகியவற்றைப் பற்றி விரிவாக விவரிக்கிறார். (வரிகள் கோல 38-48), மேலும் அதற்கான கணிப்பு மற்றும் கிரகணத்தில் அடங்கிய பாகத்தின் அளவையும் தெரிவிக்கிறார். அவருக்குப் பின் வந்த இந்திய விஞ்ஞானிகள் இந்த கணிப்பு முறையை மேலும் மேம்பாடு செய்தனர், ஆனால் அவருடைய முறைகளே அதன் கருவாக திகழ்கிறது. இந்த கணிப்புக்கான மேற்கோள் சூத்திரம் மிகவும் துல்லியமாக இருந்தது, மேலும் 18 ஆம் நூற்றாண்டின் விஞ்ஞானியான குயில்லாமே லே ஜென்டில், பாண்டிச்சேரிக்கு வந்த பொது, 1765-08-30 அன்று நடந்த சந்திர கிரகணத்தின் கால அளவு, இந்திய கணிப்பு முறைப்படி சோதித்துப் பார்த்த போது 41 நொடிகள் குறைவாகவும், அவருடைய அட்டவணை முறைப்படி (அறிவியல் அறிஞர்|டோபியாஸ் மேயர், 1752) பார்க்கையில் 68 நொடிகள் அதிகமாகவும் ஆக கண்டது.[1]. ஆர்யபட்டாவின் கணிப்பின் படி புவியின் பரி்தி் அல்லது வட்டத்தின் சுற்றளவு, பரிதி|சுற்றளவு 39,968.0582 கிலோ மீட்டர்கள் ஆக கணக்கிட்டது, இது உண்மையான நீளமான 40,075.0167 கிலோ மீட்டர்களை விட 0.2% விழுக்காடு மட்டுமே குறைவாக இருந்தது. இந்த கணிப்பின் தோராயமானது குறிப்பிடத்தக்க மேம்பாட்டுடன் கூடியது, ஏன் என்றால் அதற்கு முந்தைய கிரேக்க கணிதயியலாளர் ஆன, ஏரதொஸ்தெநெஸ் (சி. 200 கி.மு.), அவருடைய கணிப்பில் நவீன அளவுகொல்களின் அலகு பயன் படுத்தப் படவில்லை ஆனால் அவருடைய மதிப்பீடு 5-10% வரை பிழை உள்ளதாக இருந்தது.[16][17] மீன்வழிக் காலவட்டம் நூதன ஆங்கில நேரத்தின் அலகுகளைக் கொண்டு கணக்கிட்டுப் பார்த்தால், ஆர்யபட்டாவின் மீன்வழி் சுழற்சிக்கான கணிப்பு (நட்சத்திரங்களின் இடத்தை பொருத்தியதாக கொண்டு புவியின் சுழற்சியை கணக்கிடுதல்) 23 மணிகள் 56 நிமிடங்கள் மற்றும் 4.1 நொடிகள் ஆக இருந்தது; தற்போதைய நவீன பெறுமதி ஆனது 23:56:4.091. அதே போல், மின்வழி ஆண்டு (மீன்வழி் வருடத்திற்கான) அவருடைய மதிப்பீடு 365 நாட்கள் 6 மணிகள் 12 நிமிடங்கள் 30 நொடிகள், அதில் உள்ள பிழையானது ஆண்டொன்றிற்கு 3 நிமிடங்கள் 20 நொடிகள் மட்டுமே. மீன்வழிக் காலவட்டத்தைப் பற்றி மிக்கவாறும் அன்றைய அனைத்து இதர வானியல் முறைகளிலும் தெரிந்தே இருந்தது, ஆனால் அந்த கால கட்டத்தில் அவருடைய கணிப்பே மிகவும் துல்லியமாக இருந்தது. ஞாயிற்றுமை மையம் ஆர்யபட்டா புவி தனது அச்சினை மையமாக கொண்டு சுழன்று கொண்டிருப்பதாகவும், மேலும் அவருடைய கிரகங்களின் மேல்வட்டங்களுடன் கூடிய மாதிரி் தனிமங்கள்,அதே வேகத்தில் சூரியனை சுற்றி வருகிறது என்றும் உரிமைப் படுத்தியுள்ளார். அதனால் ஆர்யபட்டாவின் கணிப்புகள் அவருடைய ஞாயிற்றுமை மையம் கொண்ட மாதிரியின் அடிப்படையில் கிரகங்கள் சூரியனை மையமாக கொண்டு சுற்றி வருவதை கருத்தில் கொண்டு இயக்கியதாக இருக்கலாம்.[18][19] இந்த ஞாயிற்றுமை மைய மொழி பெயர்ப்புக்கு எதிர்ப்புரைத் தெரிவித்து வெளி வந்த ஒரு விமர்சனம் பி. எல்.வான் தேர் வேர்டேன் அவர்களின் புத்தகம் "இந்தியாவின் கிரகங்கள் கோட்பாட்டினை முழுதும் தவறாக புரிந்து கொண்டு, [அது] ஆர்யபட்டாவின் விளக்கங்களின் ஒவ்வொரு வரியையும் சுவையற்ற மறுப்புகளை தெரிவிக்கிறது,"[20] இருந்தாலும் சிலர் ஆர்யபட்டாவின் முறை அதற்கு முன்னதாக தெரியப்படாத ஒருவரின் ஞாயிற்றுமை மைய முறையைச் சார்ந்திருக்கலாம் என்று ஏற்றுக் கொண்டும் இருக்கிறார்கள்.[21] அவர் கிரகங்களின் பாதை நீள்வட்டத்துக்கு உரியதாக ஆராய்ந்து இருக்கலாம், இதற்கான முக்கிய ஆதாரங்கள் எதுவும் குறிப்பிடப் படவில்லை.[22]சமோஸ் நாட்டின் அரிஸ்டர்சுஸ் (கி.மு 3 ஆம் நூற்றாண்டு ) மேலும் பொண்ட்ச நகரத்து ஹெரச்ளிதேஸ் (4 ஆம் நூற்றாண்டு கி.மு.) இருவரும் ஞாயிற்றுமை மைய தத்துவத்தினை அறிந்து செயல்பட்டதாக கூறினாலும், பண்டைய இந்திய நாட்டில் அறிந்த கிரேக்க வானியல் ஆன பாலிச சித்தாந்த தில் (அலேக்சாந்திரியாவின் பால் என்பவராக இருந்து இருக்கலாம்) ஞாயிற்றுமை மைய தத்துவத்தைக் குறிப்பிடவில்லை. மரபுரிமைப் பேறு இந்திய மரபு சார்ந்த ஆர்யபட்டாவின் படைப்புகள் மிகவும் செல்வாக்குடையது, மேலும் அவை மொழிபயர்ப்புகள் மூலம் பல அண்டை நாடுகளின் கலாசாரத்தைப் பிரதீபலித்தது. இஸ்லாமிய பொற்காலத்தில் இதன் அரபு மொழி மொழி பெயர்ப்பு (ப. 820), மிகவும் செல்வாக்குடன் கூடியது. அவர் படைப்புகளால் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றி அல்- க்வரிழ்மி மேற்கோள் காட்டி உள்ளார், மேலும் அவரைப் பற்றி பத்தாம் நூற்றாண்டின் அரபு அறிஞர் ஆன அல்-பிருனி கூறி உள்ளார், ஆர்யபட்டாவின் சீடர்கள் புவியானது அதன் அச்சை மையமாக கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறது என்று நம்பி வந்தனர். அவர் சைன்(ஜ்ய) மற்றும் கோசைன் (கோஜ்ய), வெர்சைன் (உக்ரமஜ்ய) மற்றும் தலை கீழான சைன் (ஒட்க்ரம் ஜய), போன்ற வைகளை வரையறுத்தார், மேலும் அவற்றின் அடிப்படையில் கோணவியல் கணிதம் பிறந்தது. அவர் தான் முதன் முதலாக சைன் மற்றும் வெர்சைன் (1 - கோஸ் எக்ஸ்) அட்டவணைகளை, சுட்டிக் குறிப்பிடு செய்தவர்; 0°இருந்து 90° வரை, 3.75° இடை வேளைகளைக் கொண்டு, நான்கு பதின்பகுப்பு வரை மிகச்சரியாக குறித்து வைத்தார். நிஜம் என்ன என்றால், புதிதாக சூட்டிய பெயர்களான "சைன் " மற்றும் "கோசைன் ", ஆர்யபட்டா அறிமுகப்படுத்திய சொற்களான ஜ்ய மற்றும் கொஜ்ய</i>வுடன் சற்றும் பொருந்தவில்லை. அவற்றை ஜிபா மற்றும் கொஜிபா என்று அரபு மொழி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு இருந்தது. அவற்றை கிரேமோன நாட்டு கேரர்து என்பவர் அரபு வடிவவியல் உரையை லத்தீன் மொழிக்கு மொழிபெயர்த்த போது; அவர் ஜிபா என்ற சொல்லை அரபு சொல்லான ஜைப் எனத் தவறாகப் புரிந்துகொண்டார், அதன் அர்த்தம் "துணியில் ஒரு மடிப்பு" என்பதாகும், ல.சினுஸ் (சி .1150)[23]. ஆர்யபட்டாவின் வானவியல் கணித முறைகளும் மிகவும் செல்வாக்கு பெற்றவை ஆகும். கோணவியல் பட்டியல்கள்களுடன், இஸ்லாமியர் உலகமும் இவற்றை பரவலாக பயன்படுத்தி வந்தனர்,மேலும் அவற்றை (ஜிஜ் எனப்படும்) பல அரபு மொழி வானியல் அட்டவணைகளில் பயன் படுத்தினர். குறிப்பாக, அல்-அண்டளுஸ் (ஸ்பெயின் நாட்டு அரபு) விஞ்ஞானி அல்- சர்கலி (11 ஆம் நூற்றாண்டு), தனது பணிகளில் பயன்படுத்திய வானியல் அட்டவணைகள் லத்தீன் மொழியில் டோலேடோவின் அட்டவணைகளாக மொழி பெயர்க்கப் பட்டன (12 ஆம் நூற்றாண்டு), மற்றும் அவை பிரித்தானியர்களால் பல நூற்றாண்டுகளுக்கு பயன்படுத்தப்பட்ட மிகவும் துல்லியமான இடை வெளிக்கால அட்டவணைகளாக அமைந்தது. ஆர்யபட்டா மற்றும் அவர் சீடர்கள் பயன்படுத்திய நாள்காட்டி கணிப்புகளை இந்தியாவில் தொடர்சியாக பஞ்சாங்கம் கணிப்பதற்காக , அதாவது ஹிந்துக்களின் நாள்காட்டி அல்லது காலண்டர் பயன்படுத்தி வந்தனர். இவை இஸ்லாமிய உலகத்தினரும் பயன்படுத்தினர் மற்றும் இதை அடிப்படையாகக் கொண்ட ஜலாலி நாள்காட்டியை, 1073 ஆண்டில் ஒமர் கய்யாம் [24] மற்றும் பலர் அடங்கிய வானியல் வல்லுனர்கள் அறிமுகப்படுத்தினர், இவற்றின் பதிப்புகளை (1925 ஆம் ஆண்டில் சிறு திருத்தங்கள் செய்தது) அடிப்படையாகக் கொண்ட தேசீய நாட்காட்டிகள் இன்றும் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பயன்பட்டு வருகின்றன. ஜலாலி நாட்காட்டி ஆனது ஆர்யபட்டா உரைந்த முறையைப் போலவே(மற்றும் முந்திய சித்தாந்த முறை நாட்காட்டிகளைப் போல) சூரியனின் நிஜமான இடைவழியைப் பொறுத்தே தேதிகளை முடிவு செய்கிறது. இது போன்ற நாட்குறிப்புகளுக்கு இடைவெளிக் காலம் தேதிகளைக் கணக்கிடுவதற்காக தேவைப்படுகிறது. தேதிகளைக் கணிப்பது கொஞ்சம் கடினமாக இருந்தாலும், கிரெகோரியன் நாட்க்காட்டி முறையை விட ஜலாலி நாட்காட்டி முறையில் பருவ மாற்றங்களால் ஏற்பட்ட தவறுகள் குறைவாகக் காணப்படுகின்றன. இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் அவர் பெயரில் ஆர்யபட்டா என அழைக்கப்பட்டது. சந்திரனில் காணப்படும் ஒரு கிண்னக்குழி அவரை கௌரவிக்கும் முறையில் ஆர்யபட்டா என்று பெயரிடப்பட்டது. வானியல், வான்பௌதிகவியல் மற்றும் வளிமண்டலத்திற்குரிய அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, ஒரு நிறுவனம் இந்தியாவில் நைனிதால் அருகே ஆர்யபட்டா ரிசெர்ச் இன்ஸ்டிடுட் ஒப் ஒப்செர்வேஷனல் சைன்செஸ் (ஏ அற ஐ ஈ எஸ் ) நிறுவப் பட்டுள்ளது. பள்ளிக் கூடங்களுக்கை இடையே ஆன ஆர்யபட்டா கணிதப் போட்டி அவர் பெயரில் நடத்தப் படுகிறது.[25] பசில்லுஸ் ஆர்யபட்டா, என்ற பெயரில் ஐ எஸ் ஆர் ஒ நிறுவன விஞானிகள் 2009 ஆம் ஆண்டில் கண்டு பிடித்த பாக்டீரியாக்களுக்கு (நுண்ணுயிரிகள்) பெயர் வைத்துள்ளனர்.[26] கூடுதல் பார்வைக்கு Āryabhaṭa numeration ஆர்யபட்டீய இவற்றையும் பார்க்கவும் ஆரியபட்டா (செய்மதி) குறிப்புகள் இதர குறிப்புகள் CS1 maint: discouraged parameter (link) வால்டேர் ஐகேனே கிளார்க் , Āryabhaṭīya Āryabhaṭa, கணிதம் மற்றும் வானியல் சம்பந்தப் பட்ட ஒரு பண்டைய இந்தியனின் படைப்பு , சிகாகோ பல்கலைக் கழக அச்சகம் (1930); மறுபதிப்பு: கேச்சிங்கேர் பதிப்பகம் (2006), ஐ எஸ் பி என் 978-1425485993. கக, சுபாஷ் சி . (இரண்டாயிரம்.)'இந்தியன் வானியலின் பிறப்பு மற்றும் முன்னதான மேம்பாடு '. இன் சுக்லா , கிருபா ஷங்கர். ஆர்யபட்டா: இந்தியன் கணிதயியலாளர் மற்றும் வானியல் வல்லுநர். புது டெல்லி: இந்திய தேசீய அறிவியல் நிறுவனம், 1976. புற இணைப்புகள் ஹிந்துஸ்தான் டைம்ஸ் கதை சொல்லும் அறிவியல் பத்தி , நவ 2004 பகுப்பு:476 பிறப்புகள் பகுப்பு:550 இறப்புகள் பகுப்பு:இந்தியக் கணிதவியலாளர்கள் பகுப்பு:இந்திய வானியலாளர்கள் பகுப்பு:கூகுள் தமிழாக்கம்-நபர்கள்
நீலகண்ட சோமயாஜி எந்த நாட்டை சேர்ந்த கணிதவியலாளர்?
இந்திய
0
tamil
e944bda7b
மதுரை (ஆங்கிலம்: Madurai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் மதுரை, மக்கள் தொகை அடிப்படையிலும்[5], நகர்ப்புற பரவல் அடிப்படையிலும் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும் பத்து இலட்சத்துக்கு மேல் மக்கட்தொகைக் கொண்ட இந்திய மாநகரங்களின் பட்டியலில் 31ஆவது பெரிய நகரம் ஆகும்.[6] வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம் இங்கு அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் மதுரை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்திய துணைக்கண்டத்தில் தொன்மையான வரலாற்றைக் கொண்ட மதுரை நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, தொடர்ந்து மக்கள் வசித்து வரும் உலகின் சில நகரங்களுள் ஒன்று[7]. பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கிய மதுரை தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. சங்க காலம் எனக் குறிக்கப்படும் கி.மு. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் தமிழ் மொழி அறிஞர்களைக் கொண்டு மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் மதுரை.[8] மௌரியப் பேரரசின் அமைச்சர் கௌடில்யர் (கிமு 370 – கிமு 283), கிரேக்க தூதர் மெகஸ்தெனஸ் (350 கிமு – 290 கிமு) ஆகியோரின் குறிப்புக்களில் மதுரை குறிப்பிடப்பட்டுள்ளது. மரபுச் சின்னமாகப் பார்க்கப்படும் மதுரை நகரம் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. சங்ககாலப் பாண்டியர், இடைக்காலச் சோழர்கள், பிற்கால சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள், மதுரை சுல்தானகம், விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர்கள், கர்நாடக இராச்சியம், ஆங்கிலேயர்கள் போன்றோர் மதுரையை ஆண்டுள்ளனர். நகரத்தில் பல வரலாற்று நினைவிடங்கள் அமைந்துள்ளன. மீனாட்சியம்மன் கோவில், திருமலை நாயக்கர் அரண்மனை போன்றவை அவற்றில் புகழ் பெற்றவை. நகரில் ஆண்டு முழுவதும் பல கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. சித்திரைத் திருவிழா என்று பொதுவாக அழைக்கப்படும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் ஆண்டுதோறும் 10 நாட்கள் கொண்டாடப்படும் நகரின் முக்கிய விழாவாகும். பத்து இலட்சம் பேராற் கண்டுகளிக்கப்படும் சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. நகரின் ஒருபகுதியான அவனியாபுரம் பகுதியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் ஏறுதழுவல், நகரின் அருகே உள்ள அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நடைபெறும் ஏறுதழுவல் நிகழ்ச்சிகள் பெயர் பெற்ற நிகழ்வுகளாகும். மதுரை தென் தமிழகத்தின் முக்கிய தொழிற்றுறை மையமாகவும் கல்வி மையமாகவும் திகழ்கிறது. இரப்பர், இரசாயனம், கிரானைட் போன்ற உற்பத்தித் தொழில்கள் மதுரையில் நடைபெறுகின்றன[9]. தகவல் தொழில்நுட்பத் துறையில் இரண்டாம் அடுக்கு நகரமாகப் பட்டியலிடப்பட்டுள்ள மதுரையில் சில பன்னாட்டு, உள்நாட்டு மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்துள்ளன. மதுரை மருத்துவக்கல்லூரி, ஓமியோபதி மருத்துவக் கல்லூரி,[10] மதுரை சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் போன்ற கல்வி நிலையங்கள் நகரில் அமைந்துள்ளன[11]. நகர நிர்வாகம் 1971 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மாநகராட்சி அமைப்பின் மூலம் நடைபெறுகிறது. இது சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய மாநகராட்சி ஆகும். மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளையும் உள்ளது. இது இந்தியாவில் மாநிலத் தலைநகரங்களுக்கு வெளியில் உள்ள நீதிமன்றங்களில் ஒன்றாகும். மதுரையில் பன்னாட்டுச் சேவைகளை வழங்கும் வானூர்தி நிலையமும், தென் மாவட்டங்களில் பெரிய தொடர்வண்டி நிலையமும் அமைந்துள்ளது. முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளால் மதுரை நகரம் இணைக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தென்னிந்தியாவின் மாசில்லா மாநகரமாக மதுரை மாநகர் தெரிவு செய்யப்பட்டது.[12]. மதுரை 147.99 கி.மீ.2 பரப்பளவு கொண்டது. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் முதற்கட்டத் தகவலின் படி மதுரை நகரில் 1,017,865 பேர் வசிக்கின்றனர்[13]. மதுரையின் எல்லைகளாக பழமொழிகளில்.. மதுரைக்கு எல்லைக் கோடு. சீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடா மான், வாடா மலை, காயா பாறை, பாடா குயில் இவை அனைத்தும் மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக் குறிக்கும் எல்லை ஊர்கள். சீறா நாகம் - நாகமலை கறவா பசு - பசுமலை பிளிறா யானை - யானைமலை முட்டா காளை - திருப்பாலை ஓடா மான் - சிலைமான் வாடா மலை - அழகர்மலை காயா பாறை - வாடிப்பட்டி பாடா குயில் - குயில்குடி பெயர்க் காரணம் இந்நகரம் மதுரை, கூடல், மல்லிகை மாநகர், நான்மாடக்கூடல், திரு ஆலவாய் போன்ற பல்வேறு பெயர்களால் குறிக்கப்படுகிறது. மருதத் துறை &gt; மதுரை; மருத மரங்கள் மிகுதியாகவிருந்ததால் மருதத் துறை என்பது மருவி மதுரை என ஆனது என ஒரு கருத்தும், (வையை ஆற்றங்கரையில் மருத மரங்கள் மிகுதி).[14][15][16] இந்துக் கடவுள் சிவனின் தலையிலிருந்து பொழிந்த மதுரத்தால்(இனிப்பு) இப்பெயர் பெற்றது என மற்றொரு கருத்தும் நிலவுகிறது.[17] 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பட்ட திருவிளையாடற் புராணத்தில் மதுரையின் பல்வேறு பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.[17][18] கூடல் என்ற பெயர் மதுரையில் இருந்த மூன்று தமிழ்ச் சங்கங்களையும், நான்மாடக்கூடல் என்ற பெயர் மதுரையைச் சூழ்ந்துள்ள நான்கு கோயில் கோபுரங்களையும் குறிக்கிறது.[17] சிவனடியார்கள் மதுரையைத் திரு ஆலவாய் எனக் குறிப்பிடுகின்றனர்.[17][19] தமிழகக் கல்வெட்டியலாளர் ஐராவதம் மகாதேவன் அவர்களின் குறிப்பின் படி, கி.மு. 2 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ்ப் பிராமி கல்வெட்டு ஒன்று மதிரை எனக் குறிக்கிறது. இதற்கு மதிலால் சூழப்பட்ட நகரம் என்பது பொருள்.[20]. வரலாறு கி. மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து மதுரையில் மக்கள் வசித்து வருவதற்கான தரவுகள் கிடைத்துள்ளன. இலங்கையில் கி. மு. 570 ஆம் ஆண்டில் தம்பபன்னி இராச்சியத்தைத் தோற்றுவித்த விசயன் மதுராபுரியைச் சேர்ந்த பாண்டிய இளவரசியை மணந்ததாக இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சம் குறிப்பிடுகிறது. இங்கே மதுராபுரி எனக் குறிப்பிடப்படுவது பண்டைய மதுரையையே. கி.மு 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பயணியான மெகசுதனிசு தனது குறிப்புகளில் "மதுரா" எனக் குறிப்பிடப்படுவதிலிருந்து, அவர் மதுரைக்கு வந்து இருக்கலாம் என அறியப்படுகிறது.[21][17] இருப்பினும் சில அறிஞர்கள் "மதுரா" எனக் குறிப்பிடுவது மௌரியப் பேரரசில் புகழ் பெற்ற வடஇந்திய நகரமான மதுரா என்கின்றனர்.[22] மேலும் சாணக்கியர் எழுதிய [23] அர்த்தசாத்திரத்திலும் மதுரை பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.[17] தமிழின் பழமையான இலக்கியங்களான நற்றிணை, திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, புறநானூறு, அகநானூறு ஆகிய நூல்களில் மதுரை குறித்து கூறப்பட்டுள்ளது. சில இடங்களில் "கூடல்" என்றும் சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூறு முதலிய நூல்களில் "மதுரை" என்றும் மதுரை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. சங்ககாலத்தில் நான்மாடக்கூடல் எனப் போற்றப்பட்டது [24] மதுரையைத் தமிழ்கெழு கூடல் எனப் புறநானூறு குறிப்பிடுகிறது. தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை என்று சிறுபாணாற்றுப்படையில், நல்லூர் நத்தத்தனாரும் மதுரையைப் பற்றி குறிப்பிடுகின்றார்[25]. ஓங்குசீர் மதுரை, மதுரை மூதூர் மாநகர், தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை, மாண்புடை மரபின் மதுரை, வானவர் உறையும் மதுரை, பதிவெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர் எனப் பல்வேறு அடைமொழிகளால் தான் எழுதிய சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளும் மதுரையைச் சிறப்பிக்கிறார். இவை தவிர கிரேக்க, உரோமானிய வாரலாற்றிலும் மதுரை பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. உரோமானிய வரலாற்றாய்வாளர்களான இளைய பிளினி (61– c. 112 கிபி), தாலமி (c. 90– c. கிபி 168), கிரேக்க புவியுலாளரான இசுட்ராபோ (64/63 கிமு– c. 24 கிபி),[26] மதுரை பற்றி குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக செங்கடல் செலவில் மதுரை பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. [18] சங்க காலத்தில் பாண்டியர் ஆளுகையின் கீழ் மதுரை இருந்தது சங்க இலக்கியங்கள் மூலம் அறிய வருகிறது. சங்க காலத்துக்குப் பின், களப்பிரர் ஆளுகையின் கீழ் வந்த மதுரை கிபி 590 பாண்டியர்களால் மீண்டும் கைப்பற்றப்பட்டது.[27][28] ஆனால், 9 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், பாண்டியர்கள் சோழர்களிடம் தோல்வியுற்றனர். இதனால் சோழர்களின் ஆளுகையின் கீழ் வந்த [29] மதுரையானது, 13 ஆம் நூற்றாண்டில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு இரண்டாம் பாண்டியப் பேரரசு உருவாக்கப்படும் வரை சோழர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.[29] முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்(கிபி1268– 1308) மறைவுக்குப் பின் மதுரை தில்லி சுல்த்தானகத்தின் கீழ் வந்தது.[29] பின் தில்லி சுல்தானகத்திலிருந்து பிரிந்து மதுரை சுல்தானகம் தனி இராச்சியமாக இயங்கியது. பின் கி.பி.1378 இல் விஜயநகரப் பேரரசுடன் இணைக்கப்பட்டது.[30] கிபி 1559 இல் விசய நகரப் பேரரசிடமிருந்து நாயக்கர்கள் தன்னாட்சி பெற்றனர். [30] பின் 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், கிபி 1736 இல் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் வரும் வரை மதுரையானது சந்தா சாகிப்(கிபி 1740– 1754), ஆற்காடு நவாப் மற்றும் மருதநாயகம் (கிபி 1725– 1764) ஆகியோரால் மீண்டும் மீண்டும் பலமுறை கைப்பற்றப்பட்டது.[17] பின் 1801 இல், மதுரை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டின் கீழ், சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. [31][32] அவர்கள் ஆட்சியின் தொடக்க கால கட்டங்களில் ஆங்கில அரசு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நன்கொடை வழங்கியதுடன் திருவிழாக்களிலும் பங்கு பெற்றது.[33] 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் மதுரை நகரானது அரசியல், தொழிற்றுறை நகராக வளர்ந்ததுடன் அப்போதைய மதுரை மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்கியது. [33] 1837 ஆம் ஆண்டில், கோவிலைச் சுற்றி இருந்த கோட்டையானது அகற்றபட்டு, [34] அகழி நிலத்தப்பட்டது. கிடைத்த இடிபாடுகள் மற்றும் பொருட்களைக் கொண்டு, புதிய தெருக்களான வெளி, மாரட், பெருமாள் மேசுதிரி வீதிகள் அமைக்கப்பட்டன.[35] கிபி 1836 இல் மதுரை நகராட்சியாகத் மாற்றப்பட்டது.[36] நகராட்சியாக மாற்றப்பட்ட போது, ஆங்கில அரசானது மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்துதலிலும் வரி வசூலிப்பதிலும் சில சிக்கல்களைச் சந்தித்தது.[37] எனவே, கிபி 1880 மற்றும் 1885 மதுரை நகரமும், மாவட்டமும் மறு அளவீடு செய்யப்பட்டது பின்னர் நிர்வாக வசதிக்காக 5 நகராட்சிகள், 6 தாலுகாக்கள் மற்றும் இரண்டு மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன.[37] நகரில் காவல் நிலையங்கள் எழுப்பப்பட்டு மதுரையைத் தலைமையிடமாகக் மாவட்டக் காவல் துறை ஆணையர் பதவியும் ஏற்படுத்தப்பட்டது.[37] 1921 செப்டெம்பர் 26 ஆம் நாள், மதுரையில் அரையாடை அணிந்து வேலை செய்து கொண்டிருந்த விவாசாயிகளைக் கண்டு, இந்திய தேசியத் தலைவரான காந்தி முதன் முறையாக அரையாடையை அணிந்தார்.[38] 1939 இல் மதுரையில் ஆலய நுழைவுப் போராட்டத்தை மேற்கொண்ட தனது நண்பர் வைத்தியநாதையரைக் காப்பாற்றும் பொருட்டு அப்போதைய சென்னை மாகாண பிரதமர் இராசகோபாலாச்சாரி தலைமையிலான அரசு ஆலய நுழைவு உறுதிப்படுத்தலும் பாதுகாப்பும் சட்டத்தை இயற்றி நாடார்களும் தலித்துகளும் ஆலயம் நுழைவதற்கான தடையை நீக்கியது.[39][40] நகரமைப்பு பண்டைய மதுரை நகரத்தின் புவியியல் மற்றும் வழிபாட்டு மையமாக விளங்கிய மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி மதுரை நகரமானது கட்டப்பட்டுள்ளது.[41] நகரமானது பொது மையத்தைக் கொண்ட நான்கு நாற்கர வடிவமுடைய தெருக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[41] இந்த அமைப்பானது மதுரையை ஆண்ட நாயக்கர்களின் முதல் நாயக்கரான விசுவநாத நாயக்கரால் (கி. பி. 1159–64) சதுர மண்டல முறையில் கட்டப்பட்டதாகும். இந்த தெருக்கள் அவற்றில் திருவிழாக்கள் கொண்டாடப்படும் தமிழ் மாதங்களின் பெயர்களால் ஆடி, சித்திரை, ஆவணி - மூல, மாசி வீதிகள் என தற்போதும் அழைக்கப்படுகின்றன.[41] கோயில் பிரகாரத்திலும் அதனைச் சுற்றி அமைந்துள்ள தெருக்களிலும் திருவிழாக்களானது கொண்டாடப்படுவதுடன், தேரோட்டமும் நடைபெறுகிறது. [42] நகர மையமும், அதனைச் சூழ்ந்துள்ள தெருக்களும் தாமரை மலர் மற்றும் அதன் இதழ் போன்ற தோற்றம் கொண்டதாக பழைய இலக்கியங்கள் கூறுகின்றன.[18] நகரத்தின் அச்சானது காந்த ஊசிகளின் அச்சுடன் பொருந்தும் வண்ணம் அமைந்து, கோவிலின் நான்கு வாசல்களும் அதன் முனைகள் போல் உள்ளன. இந்த அமைப்பில் உயர்சாதியினர் கோவிலுக்கு அருகிலுள்ள தெருக்களிலும், ஏழை மற்றும் பிற்பட்ட படிநிலை மக்கள் தொலைவிலுள்ள தெருக்களிலும் குடியிருந்தனர். பின் 19 ஆன் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் வருகை, தொழில் துறை வளர்ச்சி மற்றும் நகரமயாமாதல் காரணமாக மதுரை நகரின் அமைப்பில் மாறுதல்கள் (கோட்டைச் சுவர் அக்கற்றப்பட்டு புதிய தெருக்கள் உருவாதல்) ஏற்பட்டு தற்போது அனைத்து படிநிலை மக்களும் ஒன்றிணைந்து வாழுகின்றனர். மதுரையின் கிழக்கு குடவரை கோவில் குன்னத்துார்(திருக்குன்றத்துார்) அமைந்துள்ளது. மாற வர்ம சுந்தரபாண்டியன் மற்றும் பலர் சிவலிங்க திருமேனியை மலையை குடைந்து உருவாக்கி உள்ளனர். இது கி.பி 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இது மதுரையிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது. புவியியல் மற்றும் பருவநிலை இவ்வூரின் அமைவிடம்<style about="#mwt78" data-mw='{"parts":[{"template":{"target":{"wt":"coor d","href":"./Template:Coor_d"},"params":{"1":{"wt":"9.93"},"2":{"wt":"N"},"3":{"wt":"78.12"},"4":{"wt":"E"},"5":{"wt":""}},"i":0}}]}' data-mw-deduplicate="TemplateStyles:r994658806" data-parsoid='{"pi":[[{"k":"1"},{"k":"2"},{"k":"3"},{"k":"4"},{"k":"5"}]],"dsr":[19899,19925]}' typeof="mw:Extension/templatestyles mw:Transclusion">.mw-parser-output .geo-default,.mw-parser-output .geo-dms,.mw-parser-output .geo-dec{display:inline}.mw-parser-output .geo-nondefault,.mw-parser-output .geo-multi-punct{display:none}.mw-parser-output .longitude,.mw-parser-output .latitude{white-space:nowrap} ஆகும்.[43][44] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 101மீட்டர் உயரத்தில் வளமான வைகை ஆற்றின் சமவெளியில் அமைந்துள்ளது. வைகை ஆறு நகரின் வடமேற்கு-தென்கிழக்காக ஒடி நகரை ஏறக்குறைய இரு சமபகுதிகளாகப் பிறிக்கிறது. நகரின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் சிறுமலை மற்றும் நாகமலைக் குன்றுகளும், வடகிழக்கே யானைமலைக் குன்றும் அமைந்துள்ளன. மதுரையைச் சூழ்ந்துள்ள நிலங்களில் பெரியாறு அணை பாசனம் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. மதுரை மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து தென்கிழக்கு திசையில் அமைந்துள்ளது. மதுரையைச் சூழ்ந்துள்ள பகுதிகள் தென்னிந்தியச் சமவெளிகள் போன்று சிறு சிறு குன்றுகள் காணப்படுகின்றன. மணலின் தன்மையைப் பொருத்த வரையில் மதுரையின் மையப்பகுதி களிமண்ணும், புறநகர்பகுதிகள் செம்மண் மற்றும் கரிசல் மண்ணும் கொண்டுள்ளன. நெல் அதிகம் பயிரிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து பயறு வகைகள், சிறு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பு ஆகியவை பயிரிடப்படுகின்றன. ஆண்டின் எட்டு மாதங்களுக்கு மதுரையில் வறண்ட மற்றும் வெப்பமான வானிலை நிலவுகிறது.[45] அருகிலுள்ள திண்டுக்கல் மற்றும் மதுரையில் பிப்ரவரி மற்றும் மார்ச்சு மாதங்களில் குளிர் காற்று வீசுகிறது.[45] மார்ச்சிலிருந்து சூலை வரை அதிக வெப்பமான மாதங்களாகும்.[45] ஆகசுட்டிலிருந்து அக்டோபர் வரை மிதமான வானிலையும், நவம்பரிலிருந்து பிப்ரவரி மாதம் வரை இடி மற்றும் கனமழையுடன் மிதமான குளிரும் காணப்படுகிறது.[45] மதுரையில் மூடுபனியானது குளிர்காலங்களில் மிக மிகக் குறைவாகவே ஏற்படுகிறது.[45] கடல் மற்றும் மலையிலிருந்து சம தொலைவில் அமைந்துள்ளதால் வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழையால் சம விளைவுகளே ஏற்படுகிறது. இருப்பினும் அக்டோபரிலிருந்து திசம்பர் வரை வீசும் வடகிழக்கு பருவமழையால் அதிக மழைப்பொழிவைப் பெறுகிறது.[45] மதுரை மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு 85.76செ. மீ.[46] கோடைகாலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 40°செ, குறைந்தபட்ச வெப்பநிலை 26.3°செ, இருப்பினும் சாதாரணமாக வெப்பநிலையானது 42°செ வரை உயரும்.[47] நகரமயமாதல், வாகனப் பெருக்கம் மற்றும் தொழில்மயமாதல் காரணமாக மதுரையின் வளிமண்டல வெப்பநிலை உயர்ந்துள்ளது, இந்திய வானியலாய்வுத் துறையிடம் உள்ள 62 ஆண்டுகால தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது.[47] 2001–2010 வரையான பத்தாண்டுகளில் அதிகபட்ச வெப்பநிலையான 42°செ 2004 மற்றும் 2010 என இருமுறை பதிவாகியுள்ளது.[47] மக்கள் வகைப்பாடு Historical populationYearPop.±%1951361,781—1961424,810+17.4%1971549,114+29.3%1981820,891+49.5%1991940,989+14.6%2001928,869−1.3%20111,017,865+9.6%Source: 1951 – 1981:[48] 1991:[49] 2001:[50] 2011:[51] 2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி மதுரையின் மொத்த மக்கள் தொகை 10,17,865 ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 999 பெண்கள், இது தேசிய சராசரியான 929 ஐ விட மிக அதிகம் ஆகும். [52] இதில் 1,00,324 பேர் ஆறு வயதிற்கும் கீழானவர்கள். இவர்களில் ஆண்கள் 51,485 மற்றும் பெண்கள் 48,389. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் எண்ணிக்கை முறையே 6.27% மற்றும் 0.31% ஆகும். நகரின் சராசரி கல்வியறிவு தேசிய சராசரியான 72.99% ஐ ஒப்பிடும் போது, அதை விட அதிகமாக 81.95% உள்ளது. [53] 1,224 விவசாயிகள், 2,178 முதன்மை வேளாண் தொழிலாளர்கள், 11,282 குடிசைத் தொழிலகங்கள், 3,48,849 பிற தொழிலாளர்கள், 27,782 குறு தொழிலாளர்கள், 388 குறு விவசாயிகள், 616 குறு வேளாண் தொழிலாளர்கள், 1,611 சிறு குடிசைத்தொழிலாளர்கள் மற்றும் 25,167 பிற குறு தொழிலாளர்கள் என மொத்தம் 3,91,315 தொழிலாளர்கள் உள்ளனர். [53] மதுரை மாநகரரானது 14,62,420 மக்களுடன் தமிழக அளவில் மூன்றாவது பெரிய மற்றும் இந்திய அளவில் 31 வது பெரிய மாநகரம் ஆகும் (Metropolitan City).[54][4] 2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 8,73,601 (85.83%) ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 86,886 (8.54%), கிருஸ்துவர்கள் 52,737 (5.18%), மதம் குறிப்பிடாதோர் 3,002 (0.29%), சமணர்கள் 1,324, சீக்கியர்கள் 164, புத்த மதத்தினர் 74, மற்றவர்கள் 77 என்ற எண்ணிக்கையில் இருக்கின்றனர். [55] தமிழ் மொழி அதிக அளவில் பேசப்படும் மொழியாகும்.[17][56][57] சௌராட்டிரம் கி. பி. 16 ஆம் நூற்றாண்டில் மதுரைக்கு இடம் பெயர்ந்த சௌராட்டிரர்களால் பேசப்படுகிறது.[58] ரோமன் கத்தோலிக்க கிறித்தவர்கள், ரோமன் கத்தோலிக்க மதுரை டையோசிசுடனும்,[59] புரோசுடண்டு கிறித்தவர்கள் தென்னிந்திய திருச்சபையின் மதுரை – இராமநாதபுரம் திருமண்டலத்தில் இணைந்துள்ளனர். [60] 2001 இல் குடிசை வாழ் மக்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 32.6 சதவீதமாகும். இது தேசிய சராசரியான 15.05% விட மிக அதிகம்.[61] (படத்திலிருந்து) 1971–1981 இல் 50% வரை மக்கள் தொகை வளர்ச்சி வீதம் அதிகரிப்பிற்கு 1974 ஆல் மதுரை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 13 பஞ்சாயத்துகள் மதுரையுடன் இணைக்கப்பட்டதே காரணமாகும். 1981 மற்றும் 2001 இல் மக்கள் தொகை வீதம் குறைவிற்கு மதுரை மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, 184 இல் திண்டுக்கல் மற்றும் 1997 இல் தேனி மாவட்டம் உருவாக்கபட்டதே காரணமாகும். கூட்டாக ஆண்டு வளர்ச்சி வீதம் 1971–1981 இல் 4.10 சதவீதமும், 1991–2004 இல் 1.27 சதவீதமும் குறைந்துள்ளது. ஆட்சி மற்றும் அரசியல் மாநகராட்சி மேயர்ராசன் செல்லப்பாஆணையாளர் ஆர். நந்தகோபால்துணை மேயர்கே. திரவியம்[62]சட்டமன்ற உறுப்பினர்கள்மதுரை மத்திதியாகராஜன் [63]மதுரை கிழக்குமூர்த்தி [64]மதுரை வடக்குவி. வி. ராஜன் செல்லப்பா [65]மதுரை தெற்குஎஸ். எஸ். சரவணன்[66]மதுரை மேற்குசெல்லூர் ராசு[67]நாடாளுமன்ற உறுப்பினர்மதுரை மக்களவைத் தொகுதிஆர் கோபாலகிருஷ்ணன் நகரமைப்புச் சட்டம் 1865 இன் படி, மதுரை 1866 ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் நகராட்சியாக ஆக்கப்பட்டது.[36] பின் ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் நடத்தப்பட்டு நகராட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்(1891 மற்றும் 1896 தவிர). அப்போது இந்திய சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற காரணத்தால், ஒவ்வொரு ஆண்டும் இந்திய தேசிய காங்கிரசே வெற்றி பெற்று வந்தது.[68] மதுரை மாநகராட்சி சட்டம், 1971 இன் படி,[69] மே 1, 1971 முதல் மாநகராட்சியாக மேம்பாடு செய்யப்பட்டது.[70] மதுரை தமிழகத்தின் இரண்டாவது பழைய மாநகராட்சியாகும்.[70] மாநகராட்சியானது நிர்வாகத்திற்காக 6 துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை: பொது, பொறியியல், வருவாய், பொது சுகாதாரம், நகரத் திட்டமிடல் மற்றும் கணினிப் பிரிவு.[71] இந்தத் துறைகள் அனைத்தும் மதுரை மாநகராட்சி ஆணையாளரின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவரே மாநகராட்சியின் ஒட்டுமொத்த செயல்பாட்டின் தலைவராக உள்ளார்.[71] இது தவிர சட்டமியற்றும் அதிகாரம் மாநகராட்சி உறுப்பினர்கள் வசம் உள்ளது. மாநகராட்சியின் 100 வார்டுகளிலிருந்து ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு உறுப்பினர் என 100 உறுப்பினர்கள் மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாநகர் மன்றத்தின் தலைவராக மேயர் செயல்படுகிறார். இவருக்கு உதவியாக துணைமேயரும் உள்ளார். இது தவிர மாநகராட்சி நிர்வாக வசதிக்காக மண்டலங்களாப் பிரிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி அலுவலகம் தல்லாகுளம் அருகே செயல்பட்டு வருகின்றது. மதுரை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளது. மதுரை நகரானது ஐந்து சட்டமன்றத் தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது தவிர மதுரை மக்களைவைத் தொகுதியும் உள்ளது. இவற்றிற்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது.[72] சட்டம் ஒழுங்கு தமிழக காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மதுரை நகரமானது தனி காவல் துறை மாவட்டமாக உள்ளது.[73] மதுரை மாநகர் காவல் துறையில், தல்லாகுளம், அண்ணா நகர், திலகர் திடல், டவுண்[73] என நான்கு பிரிவுகளுடன் மொத்தம் 27 காவல் நிலையங்களும் உள்ளன.[74] மாநகர் காவல் துறைத் தலைவராக காவல் துறை ஆணையாளர் உள்ளார். புறநகர் பகுதிகளில் சட்டம் ஒழுங்கானது மதுரை மாவட்டக் காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.[75] இது தவிர சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளையும் உள்ளது. இது மாநிலத் தலைநகருக்கு வெளியில் இருக்கும் வெகு சில உயர் நீதி மன்றங்களுள் ஒன்று. இது சூலை 2004 முதல் செயல்பட்டு வருகிறது.[76] போக்குவரத்து சாலைப் போக்குவரத்து தேசிய நெடுஞ்சாலை 7 (வாரணாசி-பெங்களூரு-கன்னியாகுமரி), தேசிய நெடுஞ்சாலை 49 (கொச்சி-தனுஷ்கோடி), தேசிய நெடுஞ்சாலை 45B (திருச்சிராப்பள்ளி-தூத்துக்குடி ), தேசிய நெடுஞ்சாலை 208 (இந்தியா) திருமங்கலம் – கொல்லம் ஆகியவை மதுரை வழிச் செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளாகும்.[77] இது தவிர மாநில நெடுஞ்சாலைகளான மா. நெ – 33, மா. நெ – 72, மா. நெ – 72ஏ, மா. நெ – 73 மற்றும் மா. நெ – 73ஏ ஆகியவையும் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வண்ணம் உள்ளன.[78] தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை வட்டங்களுள் மதுரையும் ஒன்றாகும்.[78] இது தவிர மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) இயங்கி வருகிறது. இதன் மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.[79] மதுரையில் மூன்று முக்கியப் பேருந்து முனையங்கள் உள்ளன. அவை மாட்டுத்தாவணி ஒருகிணைந்த பேருந்து முனையம்(MIBT), ஆரப்பாளையம் ஆகிய இரண்டும் புறநகர் பேருந்து முனையங்களாகவும், பெரியார் பேருந்து நிலையம் நகர் பேருந்து நிலையமாகவும் உள்ளது.[80] அரசால் இயக்கப்படும் நகர் பேருந்துகள் தவிர 236 பதிவு பெற்ற தனியார் சிற்றுந்துகளும், 12,754 பதிவு பெற்ற தானிகளும் உள்ளன. [81] தொடருந்து மதுரை சந்திப்பு தென் தமிழகத்தின் முக்கிய இரயில் நிலையமாக உள்ளது. இதனைத் தலைமையிடமாகக் கொண்டு தென்னக இரயில்வேயின் மதுரை இரயில்வே கோட்டம் செயல்படுகிறது. [82] இது சென்னையை அடுத்து அதிக வருமானம் தரக் கூடிய கோட்டமாக உள்ளது. மதுரையிலிருந்து நாட்டின் மற்ற முக்கிய நகரங்களான மும்பை, சென்னை, பெங்களூர், டெல்லி, ஜெய்ப்பூர், ஐதராபாத், விசாகப்பட்டினம், கொல்லம், கோவை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, ராமேசுவரம், கன்னியாகுமரி போன்றவற்றை இணைக்கும் வண்ணம் நேரடி தொடருந்து சேவைகளும் உள்ளன.[83] மதுரையானது நாட்டின் பிற பகுதிகளுடன் தொடருந்து சேவைகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.[83] மதுரையில் மாநில அரசினால் அறிவிக்கப்பட்ட மோனோ ரயில் சேவை திட்டமிடல் கட்டத்தில் உள்ளது. [84] விமானம் மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் தமிழகத்தின் முக்கிய விமான நிலையங்களுள் ஒன்றாகும். இது நகரின் மையத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[85] இங்கிருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கு உளநாட்டு விமானச் சேவையும் மற்றும் பன்னாட்டு விமானங்கள் இலங்கை, மலேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இயக்கப்படுகிறது.[86] விமான நிறுவனங்களான ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், மிகின் லங்கா, ஸ்பைஸ் ஜெட் ஆகியவற்றால் விமான சேவைகள் விளங்கப்படுகிறது. மதுரை விமான நிலையம் 5.2 இலட்சம் பயணிகளை ஏப்ரல் 2011 முதல் மார்ச்சு 2014 காலகட்டத்தில் கையாண்டுள்ளது. கல்வி மதுரை பல நூற்றாண்டுகளாக தமிழ் கலாச்சாரம், இலக்கியம், இசை, நடனம் மற்றம் பல கலைகளைக் கற்பிக்கும் மையமாக விளங்கியது. மதுரையை மையமாகக் கொண்டு மூன்று தமிழ்ச் சங்கங்கள் இயங்கி வந்துள்ளன.[87] சங்க இலக்கியங்கள் பல இங்கு தான் அரங்கேற்றப்பட்டன எனவும் நம்பப்படுகிறது.[26] மதுரைத் தமிழ்ச் சங்கம் மற்றும் உலகத் தமிழ்ச் சங்கம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் ஆய்வுக்கும் செயல்படுகிறது. சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம் பழந்தமிழர்களின் மேன்மையை படம் பிடித்து காட்டுகிறது. மதுரையின் பழமையான கல்லூரி, 1881 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அமெரிக்கன் கல்லூரி ஆகும்.[88] நகரின் முதல் பெண்கள் கல்லூரியாக 1948 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட டோக் பெருமாட்டி கல்லூரி உள்ளது. இவை தவிர, தியாகராசர் கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1949), மதுரைக் கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1889), பாத்திமா கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1953), தியாகராசர் மேலாண்மைக் கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1962), நாட்டின் பழமையான மேலாண்மைப்பள்ளிகளுள் ஒன்று மற்றும் சௌராஷ்டிரா கல்லூரி,சௌராட்டிர மேல்நிலைப் பள்ளி, வக்பு வாரியக் கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1964),சரசுவதி நாராயணன் கல்லூரி(துவங்கப்பட்ட ஆண்டு 1966) ஆகியவை நகரின் பழமையான கல்வி நிலையங்களில் குறிப்பிடத்தக்கவை. மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் (ஆரம்ப காலங்களில் மதுரைப் பல்கலைக்கழகம்) 1966 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட, ஒரு மாநிலப் பல்கலைக் கழகமாகும். இதனுடன் மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலுள்ள 109 க்கும் மேலான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் 47 (தன்னாட்சி, அரசு உதவி, சுயநிதி, உறுப்பு கல்லூரி மற்றும் மாலை நேரக் கல்லூரிகள் உட்பட) பல்கலைக்கழகத்தால் ஏற்பு பெறப்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன. இது தவிர ஏழு பல் தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் 5 தொழிற்பயிற்சிப் பள்ளிகள்(ஐடிஐ) மதுரையில் உள்ளன. இவற்றுள் அரசு தொழிற்பயிற்சிப் பள்ளி, தமிழ்நாடு பல்தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மகளிர் பல்தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை குறிப்பிடத்தக்கன.[10] மதுரை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, திருமங்கலம் என இரு மருத்துவக் கல்வி நிலையங்களும், 11 துணை மருத்துவக் கல்வி நிலையங்களும் மதுரையில் உள்ளன.[10] அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற ஏழு பொறியியல் கல்வி நிலையங்கள் மதுரையில் உள்ளன. இதில் தியாகராஜர் பொறியியல் கல்லூரி பழமையானதாகும்.[10] இது தவிர மதுரையைச் சுற்றிலும் பல சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. 1979 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட மதுரை சட்டக்கல்லூரி, தமிழகத்தில் உள்ள ஏழு அரசு சட்டக் கல்லூரிகளுள் ஒன்றாகும். இது தமிழ்நாடு அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[10] இவை தவிர மதுரை நகரில் மூன்று ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், இரு இசைக் கல்லூரிகள், மூன்று மேலாண்மைக் கல்லூரிகள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன.[10] 1965 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் (தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்தது) தென் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வேளாண்மைக் கல்லூரி ஆகும். இதனுடன் மனையியல் கல்லூரி ஒன்றும் உள்ளது. மதுரை நகரில் சுமார் 369 ஆரம்ப, இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. வழிபாட்டிடங்கள் மதுரையில் பல கோவில்கள் இருப்பதால், இது கோவில் நகரம் என அழைக்கப்படுகிறது. மதுரையின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் மீனாட்சியம்மன் கோவில், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்துக் கோவிலாகும். இது வைகையாற்றின் தெற்கில் அமைந்துள்ளது. கோவில் கட்டிடமானது 45-50 மீ உயரம் கொண்ட பல்வேறு கோபுரங்களைக் கொண்டுள்ளது. இதில் தெற்கு கோபுரம் 51.9 மீ (170 அடி) உயரத்துடன் மிக உயரமானதாகும். கருப்ப கிரகத்தின் மேல் இரண்டு தங்க விமானங்களும் அமைந்துள்ளன. பண்டைய தமிழ் இலக்கியங்களில் இக்கோவில் பற்றி குறிப்பிடப்படுவது இதன் பழமைக்குச் சான்றாகும். கோவிலின் தற்போதைய அமைப்பானது கிபி 1623 இலிருந்து 1655 க்குள் கட்டப்பட்டதாகும். [41] தினசரி 15,000 பேர்களும், வெள்ளிக்கிழமைகளில் 25,000 பேர் வரையும் கோவிலைப் பார்வையிடுகின்றனர். சுமார் 33,000 சிற்பங்கள் வரை கோவிலில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. புதிய உலக அதிசயங்களுக்கான முதல் முப்பது பரிந்துரைகளில் இக்கோவிலும் இடம் பெற்றிருந்தது. நகரினுள் அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் கோவிலில் சிவாலயங்களில் காணப்படுவது போன்று நவக்கிரகங்கள் அமைந்துள்ளன. மதுரையிலிருந்து 21 கிமீ தொலைவில் சோலைமலை அடிவாரத்தில் அழகர் கோவில் அமைந்துள்ளது. சோலை மலையின் மேல் முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றான பழமுதிர்ச்சோலை அமைந்துள்ளது. காசிமார் பெரிய பள்ளிவாசல் நகரின் பழமையான முசுலிம் வழிபாட்டுத் தலம் ஆகும். இப்பள்ளிவாசல் 13 ஆம் நூற்றாண்டில் குலசேகரப் பாண்டியனிடமிருந்து தானமாகப் பெற்ற நிலத்தில், ஓமனில் இருந்து வந்த காசி சையது தாசுத்தீன் அவர்களின் மேற்பார்வையில் கட்டப்பட்டது.[89] சையது தாசுதீனின் வழித்தோன்றல்களே மதுரை நகரின் காசிகளாக தமிழக அரசால் நியமிக்கப்படுகின்றனர்.[90] மதுரை அசரத்தின் தர்காவான மதுரை மக்பரா இப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ளது. முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றான திருப்பரங்குன்றம், மதுரையிலிருந்து எட்டு கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மீனாட்சியம்மன் கோவிலை அடுத்து திருப்பரங்குன்றம் அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவர்கிறது.[91] மேலும் மலைக் குன்றின் மீது அசரத்து சுல்தான் சிக்கந்தர் பாதுசாவின் தர்காவும் அமைந்துள்ளது.[92] கோரிப்பாளையம் தர்காவானது கோரிப்பாளையத்தில் அமைந்துள்ளது. கோர் என்ற பாரசீக வார்த்தைக்கு கல்லறை என்பது பொருள். [92] இங்கு அசரத்து சுல்தான் அலாவுத்தீன் பாதுசா, அசரத்து சுல்தான் சம்சுத்தீன் பாதுசா மற்றும் அசரத்து சுல்தான் அபிபுத்தீன் பாதுசா ஆகியோரின் கல்லறைகள் உள்ளது. புனித மரியன்னை தேவாலயமானது கத்தோலிக்க திருச்சபை மதுரை உயர்மறை மாவட்டத்தின் தலைமையிடமாக உள்ளது.[93] கலாச்சாரம், சுற்றுலா மற்றும் கொண்டாட்டங்கள் மதுரை நகரமானது இரவிலும் செயல்பாட்டில் இருப்பதால் "தூங்கா நகரம்" என பரவலாக அறியப்படுகிறது.[94] மதுரை அதிக அளவு சுற்றுலா பயணிகளைக் கவரும் நகரங்களுள் ஒன்று. 2010 ஆம் ஆண்டில் மட்டும் 91,00,000 சுற்றுலா பயணிகள் மதுரை நகருக்கு வருகை தந்துள்ளனர். இவர்களில் 5,24,000 வெளிநாட்டினரும் அடக்கம்.[95] மருத்துவச் சுற்றுலாப் பயணிகளும் தற்போது மதுரைக்கு பெருமளவு வருகின்றனர்.[96] இந்தோ சரசானிக் பாணியில் கட்டப்பட்ட திருமலை நாயக்கர் மகால் சுற்றுலாப் பயணிகளைப் பெருதும் கவர்கிறது. இது தமிழக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தேசிய நினைவுச் சின்னம் ஆகும். இங்கு தமிழக தொல்லியல் துறையால் திருமலை நாயக்கர் மற்றும் மகாலின் வரலாற்றைக் கூறும் ஒலி - ஒளிக் காட்சிகளும் மாலையில் காட்டப்படுகின்றன. இராணி மங்கம்மாளின் அரண்மனை புதுப்பிக்கப்பட்டு, தற்போது காந்தி அருங்காட்சியமாகச் செயல்படுகிறது. இது நாட்டிலுள்ள ஐந்து காந்தி நினைவு அருங்காட்சியகங்களுள் ஒன்று. இங்கு நாதுராம் கோட்சேவால் கொல்லப்பட்டபோது காந்தி அணிந்திருந்த இரத்தக் கறை படிந்த ஆடை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[97] இவ்வருங்காட்சியத்தை பார்வையிட்டதே தனது நிறவெறிக்கெதிரான அமைதி வழிப் போராட்டத்துக்கு தூண்டுதலாக இருந்தது என மார்டின் லூதர் கிங் குறிப்பிட்டுள்ளார்.[98] தல்லாகுளத்தில் அமைந்துள்ள சூழலியல் பூங்கா விளக்கு மற்றும் ஒளியிழைக் கம்பிகளால் அலங்கரிக்கப்பட்ட மரங்கள் மற்றும் நீர்ச் சுனைகளைக் கொண்டுள்ளது(மாலை நேரத்தில் மட்டும் அனுமதி).[99] தமுக்கம் மைதானம் மற்றும் காந்தி அருங்காட்சியகத்துக்கு இடையே அமைந்துள்ள இராசாசி பூங்காவை விடுமுறை நாட்களில் 5000 பேர் வரையும் வேலை நாட்களில் 2000 – 3000 பேர் வரையும் பார்வையிடுகின்றனர். [100] இது தவிர மதுரை – திண்டுக்கல் சாலையில் பரவை அருகே அதிசயம் பொழுதுபோக்கு பூங்காவும் உள்ளது. இது தவிர செயற்கை இழை மைதானம், நீச்சல் குளம் கொண்ட எம். ஜி. ஆர். ரேசு கோர்சு மைதானமும் உள்ளது.[101] இங்கு பல்வேறு தேசிய விளையாட்டுப் போட்டிகளும், பன்னாட்டு கபாடி போட்டிகளும் நடைபெறுகின்றன.[102][103] "ஜில் ஜில் ஜிகர்தண்டா" என்று உள்ளூர் கடைக்காரர்களால் அழைக்கப்படும் சீனப் பாசி கலந்த ஒரு வகைக் குளிர்பானம் மதுரைக்கு வரும் வெளியூர் சுற்றுலாப்பயணிகள் விரும்பி அருந்தும் குளிர்பானமாக உள்ளது. மதுரை நகரில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரைத் திருவிழா, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குதல், தேரோட்டம் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும். ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகும் முழுவதிலுமிருந்து பல இலட்சம் சுற்றுலா பயணிளைக் கவர்கிறது. இதை ஒட்டி திருக்கல்யாணம், தேரோட்டம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.[104] செப்டம்பர் மாதம் நடைபெறும் ஆவணிமூல விழாவில் சிவனின் அறுபத்து நான்கு திருவிளாயாடல்களும் நடத்தப்படுகின்றன. அது தை மாதம் முழு நிலவு நாளில் கொண்டாடப்படும் தெப்பத்திருவிழாவில் அலங்கரிக்கப்பட கடவுள் சிலைகள் தெப்பதில் வைத்து விடப்படுகின்றன.{{sfn|Tourism in Madurai} அதுபோல் பொங்கல் திருநாளை ஒட்டி மதுரை சுற்று வட்டார கிராமங்களில் ஏறுதழுவுதல் (ஜல்லிக்கட்டு) நடைபெறுகிறது. இவை தவிர கோரிப்பாளையம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா, தெற்குவாசல் புனித மேரி தேவாலயத்தில் கொண்டாடப்படும் கிறித்துமசு விழா போன்றவை நகரின் பிற முக்கியத் திருவிழாக்கள்.[105][106][92] இது தவிர மதுரையை மையமாகக் கொண்டு பல திரைப்படப் படப்பிடிப்புகளும் நடைபெறுகின்றன. ஊடகம் மற்றும் பிற சேவைகள் நகரில் பல்வேறு வானொலி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசு நிறுவனமான அனைத்திந்திய வானொலி, [107] தனியார் நிறுவனங்களான  ரேடியோ சிட்டி ,சூரியன் எப். எம்,[108] ரேடியோ மிர்ச்சி, ஹலோ எப். எம் ஆகியன குறிப்பிடத்தக்கவை. தினமலர், தினகரன், தமிழ் முரசு, தினத்தந்தி, தினமணி, ஆகிய காலை நாளிதழ்களும், மாலை மலர், தமிழ் முரசு போன்ற மாலை நாளிதழ்களும், தி இந்து, தி நியூ இந்தியன் எக்சுபிரசு, டெக்கான் கிரானிக்கிள், டைம்ஸ் ஆப் இந்தியா ஆகிய ஆங்கில செய்தித்தாள்களும் மதுரையில் பதிப்புகளைக் கொண்டுள்ளன. பல்வேறு வகையான நிறுவனங்கள் தொலைக்காட்சி இணைப்பை வழங்குகின்றன. மதுரை நகரின் மின்சேவையானது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மதுரையானது தமிழநாடு மின்சார வாரியத்தின் மதுரை வட்டாரத்தின் தலைமையிடமாக உள்ளது. மதுரை நகர் மற்றும் புற நகர் பகுதிகள் மதுரை மாநகர மின்பகிர்மான வட்டத்தின் கீழ் உள்ளது. இது மேலும் ஆறு துணைப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மதுரை நகரில் குடிநீரானது மதுரை மாநகராட்சி மூலம் விநியோகிக்கப்படுகிறது. 2010–2011 காலகட்டத்தில் 87,091 இணைப்புகளுக்கு 950.6 இலட்சம் இலிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி சுகாதாரத் துறை மூலம் சுமார் 400 மெட்ரிக் இடன்கள் அளவு கழிவுகள் சேகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. மழைநீரைச் சேகரிப்பதற்காக சாலையின் ஓரங்களில் மழைநீர் சேகரிப்பு கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை நகரின் முக்கிய பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் முதல் முதலில் 1924 ஆம் ஆண்டு பிரிட்டிசு ஆட்சியின் கீழ் அமைக்கப்பட்டன. பின் 1959 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் விரிவாக்கப்பட்டன. 2011 ஆம் ஆண்டின் சவகர்லால் நேரு தேசிய ஊரக புதுப்பிப்பு திட்டம் மூலம் நகரின் 90 விழுக்காடு பகுதிகள் பாதாள சாக்கடை திட்டத்தில் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. மதுரை நகரானது, பி.எசு.என்.எலின் மதுரை தொலைத் தொடர்பு வட்டத்தின் தலைமையிடமாக உள்ளது. உலகளாவிய நடமாடும் தகவல் தொடர்புகள் திட்டம் (GSM) மற்றும் சிடிஎம்ஏ இணைப்புகளும் மதுரை நகரில் கிடைக்கின்றன். இது தவிர அகலப்பாட்டைஇணைய இணைப்புகளும் கிடைக்கப் பெறுகிறது. பாரத்து சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் அழைப்பாளர் தெரிவு வகை இணைப்பான நெட்ஒன் இணைப்பும் உள்ளது. மதுரை நகரில் 2007, திசம்பர் 17 இல் இருந்து கடவுச் சீட்டு அலுவலகம் இயங்கி வருகிறது. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகியவை இதன் ஆளுகையின் கீழ் உள்ளன. நகரில் தென் மாவட்டங்களில் பெரிய மருத்துவமனையான அரசு இராசாசி மருத்துவமனையும் உள்ளது.[109] பிரச்சினைகள் ஒவ்வொருநாளும் பெருகிவரும் இருசக்கர வாகனங்கள், மகிழுந்துகள் போன்றவற்றின் காரணமாக நகருக்கு ஏற்பட்டுள்ள புதிய சவால்கள், முறைப்படுத்தப்படாத போக்குவரத்து விதிகள், வைகை ஆற்றில் கலந்துவிடப்படும் பல்வேறு விதமான மாசுபட்ட திட மற்றும் திரவக் கழிவுகள், சாலைகளின் ஓரங்களில் தீயநாற்றத்தை ஏற்படுத்தும் குப்பைகள் மற்றும் சாக்கடைகள் எனப் பல சவால்களை மதுரை நகரம் எதிர்கொண்டு வருகிறது. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மதுரை நகர் கடந்த சில ஆண்டுகளாக சந்தித்து வரும் மிக முக்கிய பிரச்சினையாக வைகை ஆறு மாசுபடுவதைக் குறிப்பிடலாம். மதுரை நகரின் முக்கிய சாக்கடைகள், சிறு தொழிற்சாலைகளின் கழிவுநீர் போன்றவை வைகை ஆற்றில் கலக்கப்படுவதால் வைகை ஆறு மாசடைந்து காணப்படுகிறது. இது தவிர வைகையின் இரு கரைகளிலும் உள்ள மக்கள் குப்பைகளை அதிக அளவில் வைகை ஆற்றுக்குள் கொட்டுவதாலும் ஆறு மாசடைகிறது. இவற்றைப் பற்றி உள்ளூர் நாளிதழ்கள் சுட்டிக்காட்டுவதும், மாநகராட்சி நிர்வாகம் தற்காலிக நடவடிக்கை எடுப்பதும் மதுரையில் வழமையாக நடக்கும் நிகழ்வுகள். வைகையாற்றில் கழிவுகள் மக்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் சாக்கடை நீர், ஆற்றின் கரையோரம் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர் மற்றும் நகரின் பல இடங்களில் சேகரிக்கப்படும் மனிதக் கழிவுகள் முதலியன வைகை ஆற்றில நேரடியாக கலந்து விடப்படுகின்றன. இவை தவிர இறைச்சிக் கடை கழிவுகள் முதலிய திடக்கழிவுகளும் ஆற்றுக்குள் கொட்டப்படுகின்றன. இதனால் வைகை ஆறு மாசடைந்து வருகிறது. இதன் உச்சகட்டமாக சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்திற்கு மிக அருகில் பந்தல்குடி கண்மாய் நீர் வைகையாற்றில் கலக்கும் இடம் தற்போது சாக்கடை கலக்கும் இடமாக மாறிவிட்டது. எனவே வருடத்தின் பெருவாரியான நாட்களில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடமும் மாசடைந்து காணப்படுகிறது. போக்குவரத்து பிரச்சினைகள் நீண்ட காலத்திற்கு முன்பு வடிவைக்கப்பட்ட நகரின் சில பிரதான சாலைகள் வளர்ந்து வரும் வாகனப் போக்குவரத்தை சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. சிம்மக்கல், கோரிப்பாளையம், காளவாசல், பழங்காநத்தம், காமராஜர் சாலை போன்ற இடங்களில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. இதனை மனதில் வைத்து வழிமொழியப்பட்ட பறக்கும் சாலைகள் திட்டம் இன்னும் திட்ட அளவிலேயே இருக்கின்றது. ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் மதுரை நகருக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் ஒதுக்கப்பட்டது. இருப்பினும் நெரிசலைக் குறைக்கும் வகையில் புதிய பாலங்கள் எதுவும் இன்னும் அமைக்கப்படவில்லை. சென்னையை அடுத்து மதுரை மற்றும் கோயம்புத்தூர் போன்ற நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று சமீபத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு மெட்ரோ ரயில் போக்குவரத்து மதுரை நகருக்கு கிடைக்குமாயின் தற்போதைய போக்குவரத்துப் பிரச்சினை பெரும்பகுதி குறைக்கப்படும். இதனையும் காண்க புதுமண்டபம் திருமலை நாயக்கர் அரண்மனை காந்தி அருங்காட்சியகம் சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம் அடிக்குறிப்புகள் உசாத்துணைகள் CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: ref duplicates default (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) வெளி இணைப்புகள் பகுப்பு:தமிழ்நாட்டிலுள்ள மாநகரங்கள் பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் பகுப்பு:மதுரை மாவட்டம் பகுப்பு:மதுரை
தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மதுரை மாவட்டத்தின் பரப்பளவு என்ன?
147.99 கி.மீ
3,175
tamil
c500edbe8
ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் (பிறப்பு ஜூன் 4, 1946, நெல்லூர் மாவட்டம், மெட்ராஸ் மாகாணம் தற்போது ஆந்திரப் பிரதேசம்) புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இசைப் பாடகர் ஆவார். எஸ். பி. பி (S.P.B) என்ற முன்னெழுத்துகளால் பரவலாக அறியப்படுகிறார். 1966இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்படங்களில் பாடத் தொடங்கினார். 1966 முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். திரைப்பட பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர். இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் வழங்கியது.[2] இவருக்கு 2016 ஆம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது.[3][4][5][6] தொடக்கம் 1960களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையிசை உலகில் அறிமுகமான எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னணிப் பாடகராக உள்ளார்.[7][8][9][10][11] இவர் தமிழில் முதலில் பாடியது ஹோட்டல் ரம்பா திரைப்படத்தில் மெல்லிசை மன்னர்௭ம்.௭ஸ்.வி இசையில் எல். ஆர். ஈஸ்வரியோடு இணைந்து அத்தானோடு இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு ௭ன்ற பாடலைப் பாடினார்.[12] ௭திர்பாராத நிலையில் ஹோட்டல் ரம்பா திரைப்படம் வெளியிடப்படவில்லை. அடுத்ததாக சாந்தி நிலையம் படத்தில் வரும் இயற்கையெனும் இளையகன்னி என்ற பாடலைப் பாடினார் . ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண் திரைப்படத்தில் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் வெளிவந்தது.[13][14][15] சாதனைகள் நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.[16][17][18] ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். எஸ். பி. பி. முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. பிலிம்பேர் விருதினை ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார். மேலும் இவர் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றார். இவர் 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார்.[19][20] எஸ் பி பி எந்த பாடகரும் செய்யாத சாதனைகளை இந்திய திரையிசையில் செய்திருக்கிறார். இவர் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி கர்நாடகா, பெங்களூரில் உள்ள பதிவரங்கில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை கன்னட மொழி இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக பாடி சாதனை செய்துள்ளார். மேலும் தமிழ் மொழியில் 19 பாடல்களையும் (ஒரேநாளில்), இந்தி மொழியில் 16 பாடல்களையும் (6மணி நேரத்தில்) பாடி சாதனை செய்திருக்கிறார். இவைகளெல்லாம் இவருடைய குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.[21][22] ஆரம்ப கால வாழ்க்கை பாலசுப்பிரமணியம் எஸ் பி சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக கொணடம்பேட்டை, நெல்லூர் மாவட்டம், ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை எஸ் பி சம்பமூர்த்தி ஹரிஹத கலைஞர் ஆவார். இவர் உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் இருக்கின்றனர். இவர்களில் எஸ். பி. சைலஜா, கிரிஜா[23] இளைய தங்கைகள் ஆவார். சைலஜா 5000க்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய மொழிகளில் பாடியுள்ளார்.[24][25] பாலசுப்பிரமணியம் இசை ஆர்வத்தை இளவயதிலேயே வளர்த்து, தன் தந்தை ஹரிஹதத்தை வாசிக்கும் பொழுது கவனித்து, கற்று, இசை கருவிகளை வாசிக்கவும் தேர்ச்சி பெற்றார். அதில் குறிப்பிடத்தக்க கருவிகள் என்றால் ஹார்மோனியம் மற்றும் புல்லாங்குழல் ஆகும். இவர் பொறியாளர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரி, அனன்டபூரில் மாணவனாக சேர்ந்தார். டைப்பாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னையில் உள்ள வேறொரு கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவருடைய ஆசையோ பாடகனாக வேண்டும் என்பது ஆனால் இவருடைய தந்தையின் ஆசையோ தன் மகன் பொறியாளன் ஆக வேண்டும் என்றிருந்தது. கல்லூரியில் படிக்கும் போதே பல இசை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார். 1964 ஆம் ஆண்டு அமெட்டூர் பாடகர்கள் ஏற்பாடு செய்திருந்த சென்னை மையமாக கொண்ட தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் எஸ் பி பி முதல் பரிசு பெற்றார். ஆரம்பகாலத்தில் மெல்லிசைக் குழு ஒன்று நடத்தி வந்தார்.இதில் பங்கு பெற்றவர்களில் குறிப்பாக இளையராஜா (ஹிட்டார் பிறகு ஹார்மோனியம்), அனிருதா (ஹார்மோனியம்), பாஸ்கர் (percussion) மற்றும் கங்கை அமரன் (ஹிட்டார்) ஆகியோராவர். இவர்களோடு சேர்ந்து எஸ் பி பி இசை நிகழ்ச்சிகளையும் நாடககச்சேரிகளில் பாடல்கள் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். எஸ் பி கோதண்டபானி மற்றும் கண்டசாலா நடுவராக இருந்து பங்குபெற்ற பாட்டுப்போட்டியில் எஸ் பி பி சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[26] அடிக்கடி இசையமைப்பாளர்களை சந்திப்பதும், பாட வாய்ப்பு கேட்பதுமாக இருந்த எஸ் பி பிக்கு முதல் போட்டி பாடல் பி. பி. ஸ்ரீனிவாஸ் பாடிய நிலவே என்னிடம் நெருங்காதே என்ற பாடலாகும்.[27] குடும்ப வாழ்க்கை பாலசுப்பிரமணியம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி பெயர் சாவித்ரி,மகள் பல்லவி, மகன் எஸ். பி. பி. சரண், சரண் சிறந்த பின்னணி பாடகர், நடிகர், சின்னத்திரை தொடர் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு வளர்ந்து வருகிறார்.[28][29] திரையிசை வரலாறு (1960-1970) எஸ் பி பிக்கு முதல் அரங்கேற்ற படம் எஸ். பி. கோதண்டபானி இசையமைத்த தெலுங்கு திரைப்படம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ரமணா (15,திசம்பர், 1966), இத்திரைப்படத்தில் ராவே காவ்ய சுமபாலா ஜவராலா பாடலை பி. சுசீலா மற்றும் பி. பி. ஸ்ரீனிவாஸோடு இணைந்து பாடினார். அரங்கேற்ற பாடலுக்கு பிறகு வெறும் எட்டு நாட்களில் கன்னடம் மொழிப்பாடலை 1966இல் "நகரே அதே ஸ்வர்க" என்ற திரைப்படத்தில், கன்னட நகைச்சுவை நடிகர் டி. ஆர். நரசிம்மராஜுக்கு மாமரவில்லோ கோகிலே ௭ல்லோ பாடலைப் பாடினார். இவர் முதன் முதலில் தமிழ் மொழியில் பாடியது, 1969 ஆம் ஆண்டு ஹோட்டல் ரம்பா திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் ௭ல். ஆர். ஈஸ்வரியோடு இணைந்து அத்தானோடு இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு ௭ன்ற பாடலைப் பாடினார். ௭திர்பாராத நிலையில் ஹோட்டல் ரம்பா திரைப்படம் வெளியிடப்படவில்லை.[12] அடுத்ததாக ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்த சாந்தி நிலையம் திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன் இயற்றிய பாடலை எம். எஸ். விஸ்வநாதன் இசையில் இயற்கையெனும் இளையக்கன்னி பாடலைப் பாடினார்.அதற்குப்பிறகு எம். ஜி. ராமச்சந்திரன் நடித்த அடிமைப் பெண் திரைப்படத்தில் ஆயிரம் நிலவே பாடலையும் பாடினார். மலையாள திரையுலகிற்கு இசையமைப்பாளர் ஜி. தேவராஜன் என்பவரால் கடல்பாலம் என்ற திரைப்படத்தில் "இ கடலும் மறு கடலும்" பாடலை பாடியதன் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். இவர் இந்திய திரையிசையில் செழுமையான வாழ்க்கையை மிக கடின உழைப்பால் உருவாக்கிக் கொண்டார்.[30] இவர் 1970 களில் இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் இணைந்து தமிழ் மற்றும் மலையாள மொழிப்பாடல்களைப் பாடியுள்ளார்.[31][32] தமிழ் திரைப்பட நடிகர்களான எம். ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் என பல நடிகர்களுக்கு 1970களில் பின்னணி பாடியுள்ளார்.[33] இவர் அப்பொழுது பிரபலமாக இருந்த பின்னணிப்பாடகிகளான பி. சுசீலா, எஸ். ஜானகி, வாணி ஜெயராம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இவர்களோடு பல ஜோடிப்பாடல்களை பாடியுள்ளார்.[34] தென்னிந்திய திரையிசையில் வெற்றி கூட்டணியான இளையராஜா, எஸ். பி. பி , எஸ். ஜானகி கூட்டணி 1970களின் கடைசியில் உருவானது.[35][36] 1980-உலகளாவிய வெற்றி எஸ் பி பாலசுப்பிரமண்யம் 1979 இல் வெளிவந்த சங்கராபரணம் திரைப்படப் பாடல்கள் பாடியதன் மூலம் உலகளவில் பிரபலமானார். சங்கராபரணம் தெலுங்கு திரையுலகில் சிறந்த திரைப்படமாக திகழ்கிறது. இத்திரைப்படம் இயக்குனர் கே. விஸ்வநாத்தால் இயக்கப்பட்டது. கே விஸ்வநாத் எஸ் பி பிக்கு பெரியப்பா மகன் ஆவார். இத்திரைப்படத்தின் பாடல்கள் திரையிசை திலகம் கே. வி. மகாதேவனால் கர்நாடக சங்கீதத்தை கொண்டு உருவாக்கப்பட்டது. எஸ் பி பி முறையாக கர்நாடக சங்கீதம் கற்கவில்லை என்றாலும் கேள்வி ஞானத்தை வைத்து சங்கராபரணம் படப்பாடல்களை பாடினார். இத்திரைப்படத்திற்காக இவர் முதல் தேசிய விருதும் பெற்றார்.[37]. இவருக்கு கிடைத்த அடுத்த தேசிய விருது ஏக் தூஜே கே லியே (1981) இந்தி மொழி திரைப்படம் இது இவருடைய முதல் இந்தி திரைப்படம் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரால் எடுக்கப்பட்டது.[38] எஸ் பி பாலசுப்பிரமணியம் தமிழ் திரைப்படங்களுக்கு நிறைய பாடல்களை பாடினார் குறிப்பாக இளையராஜாவின் இசையில் எஸ். ஜானகியோடு இணைந்து ஜோடிப்பாடல்களையும், தனித்தும், சக பின்னணிப்பாடகர்கள் மற்றும் பாடககிகளுடன் சேர்ந்து பல பாடல்களைப் பாடியிருக்கிறார்.[39][40][41] தமிழ் திரையிசையில் இளையராஜா, எஸ் பி பி, எஸ். ஜானகி இம்மூன்று பேரின் வெற்றிப்பாடல்கள் நிறைய உள்ளன. 1983 ஆம் ஆண்டு வெளிவந்த சகார சங்கமம் (தெலுங்கு திரைப்படம்) கிளாசிக்கல் இசையில் அமைத்ததனால் இளையராஜாவுக்கும் எஸ் பி பிக்கும் இந்திய தேசிய விருது கிடைத்தது. 1988 ஆம் ஆண்டு ருத்ரவீணா (தெலுங்கு) திரைப்படத்திற்காக மீண்டும் இவ்விருவருக்கும் இந்திய தேசிய விருது கிடைத்தது. இளையராஜா மட்டுமல்லாது இடைக்காலத்தில் இசையமைத்த எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் பின்னணி பாடியிருக்கிறார்.[42] 1989 ஆம் ஆண்டிலிருந்து எஸ் பி பி பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு பின்னணி பாடிவந்தார். அதிலும் மைனே பியார் க்யா மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இத்திரைப்படத்தில் எல்லா பாடல்களையும் பாடியுள்ளார். எல்லா பாடல்களும் வெற்றி பெற்றது மட்டுமல்லாது தில் தீவானா பாடல் சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருதினையும் இவருக்கு வாங்கி கொடுத்தது. இவர் அடுத்த தலைமுறைக்கும் காதல் ரசனையோடு சல்மான் கான் திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். சல்மான் கான் நடித்த ஹம் ஆப்கே ஹே ஹான் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை குவித்தது இப்படத்தில் லதா மங்கேஷ்கர் உடன் எஸ் பி பி பாடிய திதி தேரா தேவர் தீவானா பாடல் மிகவும் பிரபலமானது இப்பாடலுக்காக லதா மங்கேஷ்கர் பிலிம்பேர் விருது சிறப்பு விருது பெற்றார். இவைகளெல்லாம் பாலசுப்பிரமணியம் ஒரு மிகப்பெரிய இந்தியப் பின்னணிப்பாடகர் என்பதை எடுத்துகாட்டுகிறது.[43][44][45] 1990களில் ௭ஸ் பி பாலசுப்பிரமணியம்1990களில் இசையமைப்பாளர்களான தேவா, வித்யாசாகர், எம். எம். கீரவாணி , எஸ். ஏ. ராஜ்குமார், பரத்வாஜ் போன்றோரின் இசையில் நிறைய பாடல்களைப் பாடினார்.[46] ஆனால் மிகப்பெரிய வெற்றி என்று சொன்னால் அது ஏ. ஆர். ரகுமான் இசையில் பாடிய பாடல்களாகும். ஏ ஆர் ரகுமானின் இசை அரங்கேற்ற படம் ரோஜா இதில் எஸ் பி பி மூன்று பாடல்களைப் பாடினார். ரோஜா திரைப்படத்திற்கு பிறகு நிறைய பாடல்களை ஏ ஆர் ரகுமானின் இசையில் நீண்ட காலமாகவும் பாடிவருகிறார். புதிய முகம் திரைப்படத்தில் "ஜுலை மாதம் வந்தால்" பாடலை அனுபமாவோடு பாடினார். அனுபமாவிற்கு அப்பாடல் அரங்கேற்ற பாடலாகும். கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் "மானூத்து மந்தையிலே மாங்குட்டி" பாடல் நாட்டுப்புற நடையில் வித்தியாசமாகப் பாடினார். டூயட் படத்தில் ஏறத்தாழ எல்லா பாடல்களையும் பாடினார். மின்சார கனவு படத்தில் தங்கத்தாமரை மகளே பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான இந்திய தேசிய விருது எஸ் பி பிக்கு 1996 ஆம் ஆண்டு கிடைத்தது. இதுதான் இவருக்கு கிடைத்த ஆறாவது தேசிய விருதாகும். பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர் அம்சலேகாவின் இசையில் கன்னட திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார். பிரேமலோக திரைப்படத்திற்குப் பிறகு நிறைய பாடல்களை அம்சலேகாவின் இசையில் பாடினார்.இவருடைய ஐந்தாவது தேசிய விருது அம்சலேகாவின் இசையில் பாடியதற்காக கிடைத்தது. கனயோகி பஞ்சக்சரி காவயி (1995) திரைப்படத்தில் உமண்டு குமண்டு பாடலுக்காக, சிறந்த பின்னணிப் பாடகருக்கான இந்திய தேசிய விருது அம்சலேகாவின் ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் இசையில் பாடியதன் மூலம் பெற்றார். 2000ஆம் ஆண்டிற்கு பிறகு எஸ் பி பி 2000ஆம் ஆண்டிற்கு பிறகு இளைய தலைமுறை இசையமைப்பாளர்களான யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ்,டி. இமான், ஜி. வி. பிரகாஷ்குமார், நிவாஸ் கே. பிரசன்னா, அனிருத் ரவிச்சந்திரன் போன்றோரின் இசையமைப்பில் பாடிக்கொண்டிருக்கிறார்.[47][48][49] எஸ் பி பி 2013 ஆம் ஆண்டு வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தில் நடிகர் சாருக்கானுக்காக விஷால்-சேகரின் இசையில் "நிக்கல் நா சாயி சென்னை எக்ஸ்பிரஸ்" தலைப்பு பாடலை பாடியுள்ளார். இப்பாடல் பதினைந்து வருடங்களுக்கு பிறகு இவர் இந்தி திரையிசையில் பாடியதாகும்.[50] பாலசுப்பிரமணியம் 2015ஆம் ஆண்டு சனவரி மாதம் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஆந்திரமாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.[51] இவர் மதங்களை கடந்து பக்திப்பாடல்கள் பல பாடியுள்ளார் இதற்காக 2015ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் "ஹரிவராசனம்" விருது பெற்றுள்ளார்[52][53][54] பின்னணிக்குரல், இசையமைப்பு, நடிப்பு எஸ் பி பி நடிகர் கமல்ஹாசனுக்கு 120 தெலுங்கு திரைப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.[55] கமல் நடித்த தமிழ் திரைப்படம் மன்மத லீலை தெலுங்கில் மனமத லீலா என மொழிமாற்றம் செய்யப்பட்டது அதன்மூலம் எஸ். பி. பி தொடர்ந்து பல நடிகர்களுக்கு பின்னணிக்குரல் கொடுத்துள்ளார் குறிப்பாக கமல்ஹாசன், ரசினிகாந்த், சல்மான் கான், கே. பாக்யராஜ், மோகன், அணில்கபூர், கிரிஸ் கர்ணாட், ஜெமினி கணேசன், அர்ஜுன் சர்சா, நாகேஷ், கார்த்திக் மற்றும் ரகுவரன் ஆகியோருக்கு பல்வேறு மொழிப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.[56] நடிகர் கமலஹாசனுக்கு குரல் ஒன்றிய பின்னணி கொடுப்பவராக திகழ்கிறார். கமல் நடித்த தசாவதாரம் திரைப்படத்தை தெலுங்கில் மாற்றிய போது மொத்தமுள்ள பத்து கதாபாத்திரங்களில் ஏழு கதாபாத்திரங்களுக்கு (பெண் கதாப்பாத்திரம் உட்பட) பின்னணி கொடுத்துள்ளார். இவர் சிறந்த பின்னணிக்குரல் கொடுப்பவருக்கான நந்தி விருதினை அன்னமயா மற்றும் ஸ்ரீ சாய் மகிமா திரைப்படத்திற்கும் பெற்றுள்ளார். 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ ராம ராஜ்ஜியம் (தமிழ்) படத்திற்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்காக பின்னணிக்குரல் கொடுத்துள்ளார். பாலசுப்பிரமணியம் தென்னிந்திய மொழிகளில் எழுபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.[57][58] தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி இந்நான்கு மொழிகளில் நாற்பத்தைந்து திரைப்படத்திற்கு மேல் இசையமைத்துள்ளார்.[59][60][61]. [62] பெற்ற விருதுகள் இந்திய தேசிய விருதுகள் திரைப்பட பட்டியல் நடித்த திரைப்படங்கள் இசையமைத்த திரைப்படங்கள் பின்னணிக்குரல் தந்த திரைப்படங்கள் (இதுவொரு முழுமையான பட்டியல் அல்ல) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மேற்கோள்கள் பகுப்பு:திரைப்படப் பாடகர்கள் பகுப்பு:திரைப்பட நடிகர்கள் பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள் பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகர்கள் பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகர்கள் பகுப்பு:இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்கள் பகுப்பு:தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள் பகுப்பு:தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் பகுப்பு:1946 பிறப்புகள் பகுப்பு:வாழும் நபர்கள் பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள் பகுப்பு:நந்தி விருதுகள் பகுப்பு:பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள் பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் பகுப்பு:தெலுங்கு மக்கள்
எஸ். பி. பாலசுப்பிரமணியம் எங்கு பிறந்தார்?
நெல்லூர் மாவட்டம், மெட்ராஸ் மாகாணம் தற்போது ஆந்திரப் பிரதேசம்
60
tamil
d3de7b845
சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) இந்தியாவில் பிறந்த கணித மேதை. இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914 ஆண்டுக்கும் 1918 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும் (number theory), செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் 1997 இல் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.[1] பிறப்பு குடந்தை சாரங்கபாணி தெருவில் வாழ்ந்த சீனிவாசனுக்கும் கோமளத்திற்கும் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 22 ஆம் நாள் ஈரோட்டில் பிறந்தவர் இராமானுசன். இவர் பெற்றோருக்கு இவருக்குப் பின்னர் மூன்று குழந்தைகள் பிறந்து ஓரிரு ஆண்டுகளிலேயே இறந்துபோயினர்.இவர் பிறந்து மூன்று ஆண்டுகள் வரை பேசும் திறன் இல்லாமல் இருந்தார்.[2] இராமானுஜனின் தந்தையாரும் தந்தைவழிப் பாட்டனாரும் துணிக் கடைகளில் எழுத்தராகப் பணியாற்றி வந்தனர். தாய்வழிப் பாட்டனாரும் ஈரோட்டு முனிசீப்பு அறமன்றத்தில் அமீனாக வேலை பார்த்தவர். ஆகவே இவர் எளிய குடும்பத்தில், ஏழ்மையான நிலையில் இருந்தார். கல்வி இராமானுசம் தாய்வழி தாத்தா வேலைபார்த்த கடை 1891 ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்திற்கு இடம்மாறியதால், இவர் குடும்பமும் காஞ்சிபுரம் வந்தது. 1892ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்தில் இருந்த தொடக்கப்பள்ளி ஒன்றில் இராமானுசன் தொடக்கக் கல்வியைப் பெறத் தொடங்கினார். 1894 ஆம் ஆண்டில் அவர் தெலுங்கு வழி கல்விக்கு மாற்றப்பட்ட சில நாள்களிலேயே அவரது குடும்பம் கும்பகோணத்திற்கு இடம்பெயர்ந்தது. அங்கு கல்யாணம் தொடக்கப் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார். 1897 ஆம் ஆண்டில் மாவட்டத்திலேயே முதலிடம் பெற்று தொடக்கக்கல்வியை நிறைவு செய்தார்.[2] 1897 ஆம் ஆண்டில் கும்பகோணம் நகர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். அவ்வாண்டிலிருந்து முறையாகக் கணிதம் கற்கத் தொடங்கினார்.[2] கணக்கியலர் கணிதக் குறியீடுகளின் காடுகளில் புகுந்து திறம்பட வினையாற்றி வெளியே வெற்றியுடன் வரக்கூடிய கணித இயலாளரைக் கணக்கியலர் (algorist) என்பர். முழுக்கணித வரலாற்றிலும் கணக்கியலர்கள் என்று மூன்றே பேரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். கணக்கியலருக்கு புதுப்புதுக் கணிதச் சிக்கல்களை கணக்கிட்டு விடுவிப்பதே இயல்பு. அவர் கையாளும் உத்திகள் முன்பின் வழக்கமில்லாததாக இருக்கும். வெறும் மாறிகளிருக்குமிடத்தில் சார்புகளைப் பொறுத்தி சிக்கலை இன்னும் கடினமாக்குவது போல் தோன்றும் அளவுக்கு பெரிதாக்கி, அரிய மேதைகளெல்லாம் செய்யமுடியாததை செய்து முடிப்பர். தூய கணிதம் கட்டாயமாக வேண்டும் ஒருங்கல் (convergence), இருப்பு (existence), முதலிய கட்டுப்பாடுகளைப் பொருட்படுத்தாமல் அவர்களுடைய உள்ளுணர்வின் போக்கிலேயே வானத்தில் பறந்து பிரச்சினையின் இருண்ட பாகங்களுக்கு சரியானபடி வெளிச்சம் தெரியச் செய்துவிடுவர். சில சமயம் தவறுதலான விடைக்கே சென்றிருந்தாலும் அவர் காட்டிய வெளிச்சம் இதர கணித இயலருக்கு புதுப் பாதைகளை வகுத்து கணித முன்னேற்றத்திற்கு முன்னோடியாகி விடும் விந்தையையும் வரலாறு சொல்லும். இப்படியெல்லாம் இருந்தவர் தான் இந்திய மேதைக் கணக்கியலர் சீனிவாச இராமானுஜன். கற்பிக்கப்படாத மேதை மற்ற இரு கணக்கியலர்கள் லியோனார்டு ஆய்லர் (1707–1783) மற்றும் கார்ல் குஸ்டாவ் ஜாகோபி (1804–1851). ஆனால் இவ்விருவருக்கும் கல்லூரிப் படிப்பின் முழு வலுவும் ஆழமான அடித்தளமாக இருந்தது. இராமானுஜனுக்கோ முறையான கல்லூரிப் படிப்பிற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. எவரும் அவரை திருத்திக் கற்பிக்கும் முன்னமேயே அவர் ஒரு பெரிய கணித வல்லுனர் ஆகிவிட்டார். ஒருவேளை அப்படிக் கற்பிக்கப் படாதிருந்ததால் தான் அவரால் அவ்வளவு சாதிக்க முடிந்ததோ என்னமோ? அப்படி திருத்தப்பட்டிருந்தால் அவர் கணிதத்தில் எடுத்துவைத்த அடிகள் ஒவ்வொன்றும் அவரை தயக்கப்படவும் செய்து பின்னுக்கு இழுத்திருக்கலாம். ஆய்லருடனோ அல்லது ஜாகோபியுடனோ, ஏன், எந்தக் கணித வல்லுனருடனோ அவரை ஒப்பிட்டாலும் அவரை ‘படிக்காதவர்’ என்றே கூறவேண்டும். தன்னால், தானே கற்பித்துக் கொண்ட மேதை அவர். 18, 19 வது நூற்றாண்டுகளில் அடுக்கு அடுக்காக உலகை மேவிய கணிதம் யாவும் அவர் வழியில் தட்டுப்படாமலே அவரால் உலகிலுள்ள அத்தனை கணித இயலர்களுக்கும் புதிதாகச் சொல்வதற்கு எவ்வளவோ இருந்தது. இருபதாவது நூற்றாண்டில் ஒரு விண்மீன் போல் அவர் திடீரென்று தோன்றியதும், உலகில் அப்பொழுது மேன்மையானதென்றுப் பெயர் பெற்றிருந்த பல பல்கலைக் கழகங்களில் முறைப்படி அவருடைய ஆராய்ச்சிக் கருத்துக்கள் அரங்கேறியதும் ஒரு சுவையான பரபரப்புக் கணித வரலாறு. குறிப்பாக அது இந்திய தேசத்திற்குச் சிறந்த பெருமையைத் தந்தது. இவ்வளவிருந்தும், ஒரு சில சம்பவங்களின் திருப்பங்களன்றி அவரை இக்கணித உலகம் அறவே இழந்திருக்கவும் கூடும் என்பதும் உண்மையே. பள்ளிப் பருவத்திலேயே கணித ஆய்வு பழமையில் ஊறியிருந்த தென்னிந்திய பிராம்மண குடும்பத்தில் அவர் பிறந்தார். பத்து வயதிற்குள்ளேயே இச்சிறுவனுடைய கணித வல்லமையும் நினைவாற்றலும் ஆசிரியர்களுக்கு ஒரு புதிராக இருந்தது. ஆரம்பப் பள்ளியின் கடைசித் தேர்வில் மாவட்டத்திலேயே முதலாவதாகத் தேறியதால் அவனுக்கு கும்பகோணம் டவுன் மேல்நிலைப் பள்ளியில் அரைச்சம்பளக் கல்விச் சலுகை கிடைத்தது. 12வது வயதில் லோனி எழுதிய முக்கோணவியல் (Trigonometry) என்ற பாட புத்தகத்தை கல்லூரியில் இளங்கலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த தன் அண்டை வீட்டு மாணவனிடமிருந்து கடன் வாங்கி படிக்கத் தொடங்கினான். தன்னைவிட 7, 8 வயது சிறியவனான இப்பள்ளி மாணவன் இக்கல்லூரிப் பாடபுத்தகத்தை ஒரே வாசிப்பில் முடித்ததோடு மட்டுமல்லாமல் அதிலிருந்த எல்லா கணக்குகளையும் தானே போட்டு முடித்து விட்டான் என்றதும் அந்தக் கல்லூரி மாணவனுக்கு ஒரே வியப்பு. முக்கோணவியல் என்ற பெயர் இருந்தாலும் அப்புத்தகத்தில் சில உயர் கணித விஷயங்கள், உதாரணமாக, பகுவியலில் (Analysis) கூறப்படும் தொடர் வினை (Continuous processes) களைப் பற்றிய விஷயங்கள், அடுக்குக்குறிச் சார்பு (exponential function), கலப்பு மாறியின் மடக்கை (logarithm of a complex variable), மிகைபரவளைவுச் சார்புகள் (hyperbolic functions) முடிவிலாத் தொடர்கள் மற்றும் பெருக்கீடுகள் (infinite series and products) இதைப்போன்ற கணிதத்தின் உயர்தரப் பொருள்களெல்லாம் பாடத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டிருந்தன. இவைகளைப் பற்றி அப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்தது துல்லியக் குறைவாகத்தான் இருந்ததென்றாலும் அப்புத்தகம் தான் சிறுவன் இராமானுஜனுக்கும் இவ்வுயர் கணிதப் பொருள்களுக்கும் ஏற்பட்ட முதல் நட்பு. இதைவிட ஒரு தரமான புத்தகம் அவன் கையில் கிடைக்காதது விதியின் விளையாட்டு போலும். விட்டேகருடைய ‘தற்காலப்பகுவியல்’ (Modern Analysis) உலகத்தில் அப்பொழுதுதான் வந்துவிட்டிருந்தது ஆனால் கும்பகோணம் வரையில் வரவில்லை. பிராம்விச்சுடைய முடிவிலாத்தொடர்கள் (Infinite Series), கார்ஸ்லா வுடைய ஃபோரியர் தொடரும் தொகையீடுகளும் (Fourier Series and Integrals), பியர்பாயிண்டுடைய மெய்மாறிச் சார்புகளின் கோட்பாடு (Theory of functions of a real variable), ஜிப்ஸனுடைய நுண்கணிதம் (Calculus) ஆகியவைகள் அப்பொழுதுதான் எழுதப்பட்டுக் கொண்டிருந்த காலம். இவையெல்லாம் இராமானுஜனுக்குக் கிடைத்திருந்தால் கணித உலகின் வரலாறே மாறியிருக்குமா இருக்காதா என்பதில் இன்றும் கணித இயலர்களுக் கிடையில் மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. இராமானுஜனுடைய ஆய்வுக்குறிப்பேடுகள் ("நோட்புக்குகள்") சிறுவன் இராமானுஜன் லோனியின் முக்கோணவியலையும் கார் என்பவருடைய தொகையையும் (Carr’s Synopsis) ஆர்வத்துடன் படித்துக் கொண்டிருந்தான். தூய கணிதத்தின் அடிமட்டத் தேற்றத் தொகை என்று பெயர்கொண்ட அந்தப்புத்தகம், சிறுவன் இராமானுஜனுடைய வாழ்க்கையில் வந்ததால் தனக்கென்று வரலாற்றில் ஒரு அழியாத இடத்தைப் பெற்றுக் கொண்டது. அப்புத்தகத்தின் உட்பொருள் அவனை அப்படியே ஈர்த்து, அவனுடைய சக்திகளெல்லாவற்றையும் உசுப்பி விட்டது . அப்படியொன்றும் அது பெரிய நூலோ அல்லது பொருள் பொதிந்ததோ அல்ல. அதில் ஏறக்குறைய 6000 தேற்றங்கள் இருந்தன. பாதிக்கு சரியான நிறுவல்கள் இல்லை; இருந்தவையும் நிறைவற்றதாகவே இருந்தது. இராமானுஜனுக்கு இதெல்லாம் ஒரு தவிர்க்கமுடியாத, எனினும் சுவையான, சவாலாக அமைந்தன. அதிலிருந்த ஒவ்வொரு தேற்றத்திற்கும் சிறுவன் தன் மூளையில் தோன்றிய நிறுவல்களை ஒரு குறிப்பேட்டில் (நோட்புக்கில்) எழுதி வந்தான். இவ்வாய்வில் அவனுக்கே புதிய தேற்றங்களும் தோன்றத் தொடங்கின. எல்லாவற்றையும் எழுதினான். இப்படியே 16 வயதுக்குள் கணித இயலர் என்ற தகுதியை தனக்குள் அடைந்து விட்டான். ஆனால் அவனை உலகம் கணித இயலராகப் பார்க்க இன்னும் பத்து ஆண்டுகள் தேவைப்பட்டன. இளமையும் கல்வியும் 1903 டிசம்பரில் சென்னைப் பல்கலையின் மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதன் காரணமாக கும்பகோணம் அரசுக் கல்லூரியில் F.A. (இந்தக்காலத்து 11, 12 வது) வகுப்பிற்கு ‘சுப்பிரமணியம் உபகாரச்சம்பளம்’ பெற்றான். அவன் கற்க வேண்டியிருந்த பாடங்கள் ஆங்கிலம், கணிதம், உடற்செயலியல், ரோமானிய கிரேக்க வரலாறு, மற்றும் வடமொழி. ஆனால் கணிதம் தான் அவனுடைய காலத்தையும் சக்தியையும் விழுங்கிக்கொண்டது. கணிதம் தவிர மீத மெல்லாவற்றிலும் தேர்வில் தோல்வியே கண்டான். உபகாரச் சம்பளத்தை இழந்தான். கும்பகோணத்தை விட்டு எங்கோ ஆந்திர மண்ணில் தன்னை இழந்து சுற்றித் திரிந்தான். ஓராண்டு காலம் கழித்துத் திரும்பி கும்பகோணம் அரசுக் கல்லூரிக்கே வந்து சேர்ந்தான். ஆனால் 1905 டிசம்பர் தேர்வுக்கு வேண்டியிருந்த உள்ளமைச் சான்று (attendance certificate) கிடைக்காததால் தேர்வு எழுத முடியவில்லை. கும்பகோணம் கல்லூரியும் அத்துடன் அவனை இழந்தது.பின்னர் இவர் பச்சையப்பா கல்லூரியிலும் கல்வி கற்றார். இங்கு எஸ்.பி.சிங்காரவேலு முதலியாரிடம் கணிதம் கற்றார். இருவரும் சேர்ந்து விவாதித்து விடை காண்பார்கள்.[ எஸ்.பி.சிங்காரவேலு முதலியார் சுவாமி விவேகானந்தரின் சென்னை சீடர்களில் ஒருவர். இவரை ’கிடி’ என்று செல்லமாக அழைப்பது சுவாமி விவேகானந்தரின் வழக்கம்]. இன்றும் சென்னை பச்சையப்பா கல்லூரியில் கணிதத்தில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ’எஸ்.பி.சிங்காரவேலு முதலியார்’ பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.[3] 1907-11 இல் படைப்பு வெள்ளம் மோசமான உடல்நிலை காரணமாக கும்பகோணம் திரும்ப வேண்டியிருந்தபோது, தனது நோட்டு புத்தகங்களை தன் வகுப்புத் தோழரிடம் கொடுத்து, ஒருவேளை தான் இறந்து விட்டால், சிங்காரவேலு முதலியார் அல்லது எட்வர்டு பி.ரோஸ் (Edward B. Ross) அல்லது மெட்ராஸ் கிரிஸ்டியன் காலேஜுக்கு கொடுத்துவிடும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.[4] ஆனால் அவனுடைய ‘நோட்புக்குகள்’ அவனை இழக்கவில்லை. சென்னை பல்கலைக் கழகத்தின் முதல் நூலகத் தலைவராக இருந்த பேராசிரியர் எஸ். ஆர். ரங்கனாதன் எழுதுகிறார் (அவரே ஒரு கணித வல்லுனரும் கூட): “உள்ளிருந்து அவனை ஒரு ஜோதி ஊக்குவித்த வண்ணம் இருந்தது. கணித ஆய்வுகள் அவனுக்கு தெவிட்டாததாகவும் தவிர்க்க முடியாததாகவும் இருந்தது. F.A.தேர்வு கூட தேறமுடிய வில்லையே என்ற ஏக்கம் அவனுடைய கணித ஊக்கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. வேலையில்லாமல் வளய வருவதும் அவனுடைய ஆய்வுகளின் தரத்தையோ அளவுகளையோ குறைக்கவில்லை. சூழ்நிலை, பொருளாதாரம், சமூக கௌரவம் ஒன்றும் அவனுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. அவன் மனதிலும் கையிலும் இருந்ததெல்லாம் விந்தைச்சதுரங்கள் (Magic Squares) , தொடர் பின்னம் (Continued Fractions), பகா எண்களும் கலப்பு எண்களும் (Prime and Composite Numbers), எண் பிரிவினைகள் (Number Partitions), நீள்வட்டத் தொகையீடுகள் (Elliptic Integrals), மிகைப்பெருக்கத் தொடர் (hypergeometric series), இவையும், மற்றும் இவையொத்த மற்ற உயர்தர கணிதப்பொருள்கள் தாம். இவைகளைப் பற்றிய அவனுடைய கண்டுபிடிப்புகளை யெல்லாம் தன்னுடைய மூன்று நோட்புக்குகளில் எழுதினான். நிறுவல்கள் அநேகமாக எழுதப்படவில்லை. தற்காலத்தில் இந்த நோட்புக்குகளின் நகல்கள் (212, 352, 33 பக்கங்கள் கொண்டவை) டாடா அடிப்படை ஆய்வுக் கழகம், சென்னைப்பல்கலைக் கழகம், ஸர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை ஆகிய மூன்று அமைப்புகளின் ஒத்துழைப்பினால் பிரசுரிக்கப் பட்டிருக்கின்றன. 1985இலிருந்து 2005 வரையில், ப்ரூஸ் பர்ண்ட் என்பவருடைய விரிவான குறிப்புகளுடன் ஐந்து புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. அவைகளில் 3542 தேற்றங்கள் இருக்கின்றனவென்றும், ஏறக்குறைய 2000க்கும் மேற்பட்ட தேற்றங்கள் அவர் வாழ்ந்த காலத்திற்கு முன்னால் கணித உலகிற்குத் தெரியாத தேற்றங்கள் தான் என்றும் சொல்கிறார் ப்ரூஸ் பர்ண்ட்.[ கலங்கரை வெளிச்சத் தொடர் சீனிவாச இராமானுஜன் தனது 22வது வயதில் ஒன்பதே வயது நிரம்பியிருந்த ஜானகியைக் கைப்பிடித்தார். 1910இல் இந்தியக்கணிதக் கழகத்தைப்பற்றி கேள்விப்பட்டார். இதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர்தான் இக்கழகம் இணை ஆட்சியராக இருந்த பேராசிரியர் வி. ராமஸ்வாமி அய்யர் என்பவரால் துவக்கப்பட்டிருந்தது. இராமானுஜன் அவரது உதவியை நாடி திருக்கோவிலூருக்கு ஓடினார். இராமானுஜன் என்ற மேதையை உலகுக்கு அறிவிக்கும் கலங்கரை வெளிச்சத் தொடர் சங்கிலியில் முதல் வளையமாக இருந்தவர் இந்த ராமஸ்வாமி அய்யர் தான். அவருடைய அறிமுகத்தில் பேராசிரியர் சேஷு அய்யர் அணுகப்பட்டார். அவர் நெல்லூர் மாவட்ட ஆட்சியராக இருந்த திவான் பகதூர் ஆர். ராமச்சந்திரராவிடம் அனுப்பினார். டிசம்பர் 1910 இல் முதலில் நடந்த சந்திப்பில் வள்ளல் ராமச்சந்திர ராவினுடைய மனதைத் தொட்ட போதிலும் இராமானுஜனின் மேதை அவருடைய அறிவைத் தொடவில்லை. அடுத்த முறை சந்தித்தபோது இராமானுஜன் தன்னுடைய கண்டுபிடிப்புகளில் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவைகளை மாத்திரம் காட்டினார். அவைகளிலிருந்து அவர் இராமானுஜன் கணிதத்தில் சாதனை செய்யக்கூடியவர் என்று அறிந்து கொண்டு இராமானுஜனுடைய செலவுகளைச் சிறிது காலத்திற்கு தானே ஏற்று நடத்தி வந்தார். இராமானுஜன் இவ்வேற்பாட்டை நெடுநாள் வைத்துக் கொள்வதில் விருப்பமில்லாமல் சென்னை துறைமுக அலுவலகத்தில் ஒரு எழுத்தர் வேலையை ஏற்றுக் கொண்டார். ஆனால் கணிதத்தில் அவருடைய ஈடுபாடும் ஆராய்ச்சியும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 1911 இல் இந்தியக்கணிதக் கழகத்தின் ஆய்வுப் பத்திரிகையில் (Journal) இராமானுஜனின் முதல் ஆய்வுக்கட்டுரை பிரசுரிக்கப்பட்டது. இதற்குள்ளாக, சென்னை துறைமுக அலுவலகத்தின் தலைவரான ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங் என்பவரும் இராமானுஜத்தைப் பற்றி கேள்விப்பட்டு அவரைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினார். துறைமுக அலுவலகத்தில் ஓர் எழுத்தர் கணிதத்தில் சாதனைகள் புரிந்து வருகிறார் என்ற செய்தி பரவலாக சென்னை கல்விக் கூடங்களில் பேசப்படத் துவங்கியது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் அவருக்கு ஒரு நிலையான உதவிச் சம்பளம் வாங்கித் தந்துவிட பல பேர் முயன்றனர். இந்த முயற்சியில் சம்பந்தப்பட்டவர்கள் ராமச்சந்திர ராவ், சென்னை பொறியியல் கல்லூரிப் பேரா. சி.எஸ்.டீ. க்ரிஃப்பித், லண்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேரா. எம். ஜி.எம். ஹில், முனைவர் கில்பர்ட் வாக்கர் (தலைவர், இந்திய வானிலைத்துறை), பேரா.பி. ஹனுமந்த ராவ் (தலைவர், சென்னை பல்கலைக் கழகத்தின் பாட மையம்), மற்றும் நீதிபதி பி. ஆர். சுந்தரம் அய்யர். இந்த முயற்சிக்கெல்லாம் பயன் கிடைத்தது. மே 1, 1913 முதல் இராமானுஜன் (அவரது 26வது வயதில்) சென்னை பல்கலைக் கழகத்தில் மாதம் ரூ.75 சம்பளத்துடன் ஆராய்ச்சியாளராக நியமிக்கப்பட்டார். அன்று தொடங்கி அவருடைய குறுகிய ஆயுள் முடிய அவருக்கு இந்த ஆராய்ச்சி தான் தொழில். பேரா. ஜி. ஹெச். ஹார்டி 1913 ஜனவரியில் பேரா. சேஷு அய்யரும் அவருடன் இன்னும் சிலரும் சேர்ந்து இராமானுஜனை கேம்பிரிட்ஜ் இல் பேராசிரியராக இருந்த ஜி. ஹெச். ஹார்டிக்கு கடிதம் எழுதவைத்தனர். இராமானுஜனும் கடிதத்தை எழுதி அதற்கு ஒரு சேர்ப்பாக அவருடைய சொந்தக் கண்டுபிடிப்பாக 120 தேற்றங்களையும் (நிறுவல் எதுவும் இல்லாமல்) அனுப்பித்தார். இக்கடிதம் கிடைத்தவுடன் பேரா. ஹார்டியின் முதல் எண்ணம் அக்கடிதம் குப்பையில் போடப்படவேண்டியது என்பதுதான். ஆனால் அன்று மாலை அவரும் இன்னொரு பேரா. லிட்டில்வுட்டும் சேர்ந்து அதை மறுபடியும் படித்துப் பார்த்த பொழுது, அது அவர்கள் இருவரையும் தீவிர ஆலோசனையில் ஆழ்த்தியது. அதில் பல தேற்றங்கள் அவர்களுக்கு புதிதாகவே இருந்தன. ஓரிரண்டு தவறான தேற்றங்களும் இருந்தன. புதிதாக இருந்தவைக்கு நிறுவல்கள் கொடுக்கப் படாமலிருந்ததால் அவர்களே அவைகளை நிறுவப் பார்த்தார்கள். சிலவற்றை அவர்களால் நிறுவ முடிந்தது. சிலவற்றிற்கு நிறுவலுக்காக என்ன செய்யவேண்டும் என்பதை அவர்களால் ஊகிக்க முடிந்தது. ஆனால் பல தேற்றங்களை அவர்கள் அணுகவும் முடியவில்லை, அவைகளை ஏதோ பிதற்றல் என்று ஒதுக்கவும் முடியவில்லை. உலகத்திலேயே எண் கோட்பாட்டில் பிரமாணமாக எடுத்துக் கொள்ளப் பட்டவர்களான அவர்களாலேயே அத்தேற்றங்களின் உண்மையைப் பற்றி ஒன்றுமே சொல்ல முடியாத நிலையில், இரு வல்லுனர்களும் அன்றே தீர்மானித்து விட்டனர் ‘இந்த இராமானுஜனை கேம்பிரிட்ஜுக்கு கொண்டுவந்துவிட வேண்டும்’ என்று. அத்தீர்மானம் கணிதத்தில் வரலாறு படைத்த தீர்மானம். ஆனாலும் இராமானுஜனால் உடனே நாடு விட்டு நாடு வர முடியவில்லை. பழமையான பண்புகளில் ஊறியிருந்த அவரது குடும்பச் சூழலின் பாதிப்பை மீறி நாட்டை விட்டுப் புறப்பட்டது மார்ச் 1914இல்தான். நான்கு பொன்னான ஆண்டுகள் கேம்பிரிட்ஜில் ஹார்டியுடன் கூட இருந்த நான்கு ஆண்டுகளும் (1914–1918) இராமானுஜனுக்கு மட்டுமல்ல பேராசிரியர் ஹார்டிக்குமே பொன்னான ஆண்டுகள் தாம். இதை ஹார்டியே சொல்கிறார். பிற்காலத்தில், இராமானுஜன் யாருமே எதிர்பார்க்காத 32 வயதிலேயே மரணமடைந்த பிறகு ஹார்டி அவரைப் பற்றி சொல்லும்போது ‘இங்கு வருவதற்கு முன்னால் அவர் என்ன புத்தகம் படித்திருந்தார், இன்னின்ன புத்தகங்களைப் பார்த்திருந்தாரா இல்லையா என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. நான் கேட்டிருந்தால் ஒருவேளை சொல்லி யிருப்பாரோ என்னமோ. ஆனால் ஒவ்வொருநாள் நான் அவருக்கு காலை வணக்கம் சொல்லும்போதும் அவர் எனக்கு ஐந்தாறு புதுத் தேற்றங்களை காட்ட ஆயத்தமாயிருந்ததால் எனக்கு வேறு எதையுமே பேச வாய்ப்புமில்லை. அதைப் படித்திருக்கிறாயா, இதைப் படித்திருக்கிறாயா என்று கேட்பதும் பொருத்த மில்லாமலிருந்தது’. இராமானுஜனுடைய படைப்பாற்றல் அவ்வளவு வேகமாக இருந்தது. இருந்தாலும் பேரா. ஹார்டி இராமானுஜனுக்கு சில தேவையான விஷயங்களை சொல்லிக் கொடுக்கத்தான் செய்தார். காரணம், இராமானுஜன் அவையில்லாமல் மாற்று வழிகளுக்காக நேரத்தை செலவழித்து விடுவாரோ என்ற பயம்தான். ஆனால் ஹார்டியே பின்னால் சொல்கிறார் ‘நான் அவருக்குத் தெரியவேண்டியவை என்று சொல்லிக் கொடுத்தது சரிதானா என்று தெரியவில்லை. ஏனென்றால் நான் சொல்லிக்கொடுத்ததால் அவருடைய மேதை பரிமளிப்பதை தடை செய்திருக்கவும் கூடுமல்லவா?’. இன்னமும் சொல்கிறார்: ‘நான் அவருக்கு சொல்லிக்கொடுத்ததுதான் சரி என்று வைத்துக்கொண்டாலும், ஒன்று மாத்திரம் உண்மை. அவர் என்னிடமிருந்து கற்றதை விட நான் அவரிடமிருந்து கற்றது தான் அதிகம்’. இந்நான்கு ஆண்டுகளில் இராமானுஜன் 27 ஆய்வுக்கட்டுரைகள் பிரசுரித்தார். அவைகளில் 7 கட்டுரைகள் ஹார்டியுடன் கூட்டாக எழுதியவை. 1918 இல் F.R.S. (Fellow of the royal Society) என்ற கௌரவம் அவருக்குக்கொடுக்கப்பட்டது. அதே ஆண்டு ட்ரினிடி கல்லூரியின் ஃபெல்லோவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த இரண்டு கௌரவங்களையுமே பெற்ற முதல் இந்தியர் அவர்தான். சென்னைப் பல்கலைக்கழகமும் அதன் சார்பில் ராமானுஜனுக்காக ஒரு நிலையான ஏற்பாட்டைச்செய்தது. அவர் அதுவரை பெற்றுக்கொண்டிருந்த வெளிநாட்டு உபகாரச்சம்பளம் முடியும் நாளான ஏப்ரல் 1, 1919 இலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு அவருக்கு ஆண்டுக்கு £250 நிபந்தனையற்ற சலுகை தருவதாக ஏற்பாடு செய்தது. புதிதாக கல்வி இயக்குனராகப் பதவியேற்றிருந்த பேரா. லிட்டில்ஹெய்ல்ஸ் அப்பொழுதுதான் மும்பையில் நடந்திருந்த இந்திய கணிதக்கழகத்தின் ஆண்டு மகாநாட்டிலிருந்து திரும்பி வந்திருந்தார். அம்மகாநாட்டில் இராமானுஜனுடைய சாதனைகளைப் போற்றித் தீர்மானங்கள் நிறைவேறியிருந்தன. பேரா. லிட்டில்ஹெய்ல்ஸும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியர் பதவி ஒன்று உண்டாக்குவதற்காகவும் அந்தப் பதவிக்கு இராமானுஜனுக்கு அழைப்பு விடுப்பதற்கும் பல்கலைக் கழகத்தை கேட்டுக்கொள்ளப் போவதாகவும் அறிவித்தார். ஆனால் காலச்சக்கரம் வேறு விதமாகச் சுழன்றது. ஒரே ஒரு இராமானுஜன் கணிதத்துளி இராமானுஜனுடைய கணிதமேதையை எடுத்துக்காட்டுவதற்காக ஒரு சின்னஞ்சிறு துளியை கீழே காண்போம். முனைவர் பி.சி. மஹலனொபிஸ் என்பவர் நேரு காலத்தில் இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்களைத் தீட்டியவர். அவர் இராமானுஜன் கேம்பிரிட்ஜில் வசித்த காலத்தில் அவரும் அங்கு படித்துக் கொண்டிருந்தார். இராமானுஜனுடைய நண்பர். இருவரும் அடிக்கடி சந்திப்பதுண்டு. ஒருநாள் இராமானுஜன் அவரை தன் விடுதிக்கு மதிய உணவருந்த கூப்பிட்டிருந்தார். இராமானுஜன் சமையல் அடுப்பருகில் வேலையில் ஈடுபட்டிருந்ததால், வந்தவர் இருக்கையில் அமர்ந்து ஸ்டிராண்ட் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தார். அதனில் ஒரு கணிதப் புதிர் இருந்தது. அப்பொழுது முதலாவது உலகப்போர் நடந்துகொண்டிருந்த சமயம். “பாரிஸ் நகரில் ஒரே தெருவில் இரண்டு வீடுகளில் இரண்டு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டனர்; வீட்டு கதவிலக்கங்கள் தெரியவில்லை, ஆனால் இரண்டு இலக்கங்களினூடே ஒரு கணிதத் தொடர்பு இருக்கிறது, கதவிலக்கங்கள் என்னவாக இருக்கும்?” இதுதான் புதிர். சிறிது நேரம் யோசித்ததில் மஹலனோபிஸ்சுக்கு விடை புரிந்துவிட்டது. அவர் பரபரப்புடன் அதை இராமானுஜனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பப் பட்டார். இராமானுஜன் சாம்பாரை கலக்கிவிட்டுக் கொண்டே, ‘சொல்லுங்கள் கேட்போம்’ என்றார். மஹலனோபிஸ் பிர்ச்சினையை எடுத்துரைத்தார். அவர் தன் விடையைச் சொல்லுமுன்பே இராமானுஜன், ‘சரி, இந்த தொடர் பின்னத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்’ என்று ஒரு தொடர் பின்னத்தைக் கூறி அதுதான் விடை என்றார். இது நமக்குப் புரிவதற்கு ஸ்டிராண்ட் பத்திரிகையில் இருந்த புதிரின் விபரம் தான் என்ன என்று தெரியவேண்டும். ஆனால் அவ்விபரம் கிடைக்கவில்லை. இருந்தாலும் இராமானுஜனின் மின்னல்வேக விடையைப் புரிந்து கொள்வதற்கு நாமாகவே அப்பத்திரிகைப் புதிர் என்ன மாதிரியில் இருந்திருக்கும் என்று ஊகிக்கலாம். இரண்டு கதவிலக்கங்களைக் கண்டுபிடிப்பது தான் பிரச்சினை. கதவிலக்கங்களை x, y என்று அழைப்போம். அவைகளுக்குள் இருந்த தொடர்பையும் நாம் இப்படி வைத்துக் கொள்ளலாம்: x 2 − 10 y 2 = + 1 o r − 1 {\displaystyle x^{2}-10y^{2}=+1or-1} மஹலனோபிஸ் இதைப் பார்த்ததும் ஓரிரண்டு எண்களைப் பொருத்திப் பார்த்தார். x = 3, y = 1 என்ற விடை கிடைத்தது, கிடைத்தவுடன் இராமானுஜனுக்கு சொல்லத் தொடங்கிவிட்டார். ஆனால் இராமானுஜன் பிர்ச்சினையைக் கேட்டவுடனேயே, சாம்பாரைக் கலக்கிக்கொண்டே, இதன் விடை ஒரு தொடர் பின்னத்தில் இருக்கிறது என்று கீழ்வரும் தொடர் பின்னத்தை சொன்னார்: 3 + 1 6 + 1 6 + 1 6 + 1 6 + ⋯ {\displaystyle 3+{\cfrac {1}{6+{\cfrac {1}{6+{\cfrac {1}{6+{\cfrac {1}{6+\dotsb }}}}}}}}} இதன் பொருளை இராமானுஜனே விளக்கினார். இத்தொடர்பின்னத்தின் ஒவ்வொரு ஒருங்கும் ஒவ்வொருவிடையாகும். முதலாவது ஒருங்கு 3/1. x = 3, y = 1 என்பது முதல் விடை. இராமானுஜனுடைய் தொடர்பின்னவிடை அந்தத்தெருவில் முடிவிலாத எண்ணிக்கையில் வீடுகள் இருப்பதாக வைத்துக்கொண்டு, மஹலனொபிஸின் ஒரே விடைக்கு பதிலாக முடிவுறா எண்ணிக்கையில், தொடர்ந்து பல சரியான விடைகள் கொடுக்கின்றன. ஆக, மேற்படி தொடர்பின்னத்தின் 2வது ஒருங்கு 3 + 1/6 = 19/6. x =19, y = 6 இரண்டாவது விடை. 19 2 − 10 ∗ 6 2 = 361 − 360 = 1 {\displaystyle 19^{2}-10*6^{2}=361-360=1} மூன்றாவது ஒருங்கு: 3 + 1 6 + 1 6 {\displaystyle 3+{\cfrac {1}{6+{\cfrac {1}{6}}}}} இது கொடுக்கும் விடை: x = 117, y = 37 இதுவும் ஒரு சரியான விடைதான். நான்காவது ஒருங்கு 721/228. x = 721 y = 228. இப்படியே போகிறது இராமானுஜனின் தொடர்பின்ன விடை. இராமானுஜனுடைய மேதைமை அவர் பிரச்சினையைக் கேட்டவுடனேயே இதற்கு விடை முடிவுறா தொடர்பின்னம் தான் என்று கண்டு கொண்டு அத்தொடர் பின்னத்தையும் உடனே கொடுத்தது தான். இன்னொரு நோட்புக்கின் அற்புதம் துரதிருஷ்டவசமாக இராமானுஜன் இங்கிலாந்தில் ஐந்தாவது ஆண்டை மருத்துவ விடுதிகளில் கழிக்கவேண்டி ஏற்பட்டது. ஏப்ரல் 1919 இல் இந்தியா திரும்பினார். தீராத வியாதியும் கூடவே வந்தது. ஆனால் அவருடைய மனதில் ஓடிக்கொண்டிருந்த கணிதப் பிரச்சினைகளின் ஓட்டம் நிற்கவே இல்லை. இப்படித்தான் உண்டாயிற்று “இராமானுஜத்தின் தொலைந்துபோன நோட்புக்”. அது 1976இல் கண்டுபிடிக்கப்பட்டு 1987 இல் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புதையலில் 600 அற்புதமான தேற்றங்கள் இருக்கின்றன. ஆனால் அநேகமாக வெகு உயர்மட்டத்திலிருந்த “Mock Theta functions” என்பவைகளைப் பற்றியது இராமானுஜன் 1919–20 இல் செய்த ஆராய்ச்சிகள். ஆக, இராமானுஜன் கணித உலகிற்காக விட்டுப்போனது: • மூன்று நோட்புக்குகள் • சென்னைப் பல்கலைக் கழகத்திற்காக கொடுக்கப்பட்ட மூன்று காலாண்டு அறிக்கைப் பத்திரங்கள் (1913–1914) • 138 பக்கங்கள் கொண்ட தொலைந்து போன நோட்புக் • கணித இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட 32 ஆய்வுக்கட்டுரைகள் இராமானுஜனின் உள்ளுணர்விலிருந்து உதயமான இக்கணிதச் சொத்து உலகின் நான்கு மூலைகளிலுள்ள கணித வல்லுனர்களையும் ஆயிரக்கணக்கான மாணவர்களையும் ஈர்த்து இருபதாவது நூற்றாண்டின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று என்று பெயர் எடுத்துவிட்டது. பால் ஏர்டோசு என்ற புகழ்பெற்ற கணித மேதை-வல்லுனர் பேரா. ஹார்டி சொன்னதாகச் சொல்கிறார்: ‘நாம் எல்லா கணித இயலர்களையும் அவர்களுடைய மேதைக்குத் தகுந்தாற்போல் வரிசைப்படுத்தி சூன்யத்திலிருந்து 100 வரை மதிப்பெண் கொடுத்தால் எனக்கு 25ம், லிட்டில்வுட்டுக்கு 30ம், ஹில்பர்ட்டுக்கு 80ம் இராமானுஜனுக்கு 100ம் கொடுக்க வேண்டி வரும்’. சிறப்புக்கள் 1918 ஆம் ஆண்டில் லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினர் ஆனார் (எஃப்.ஆர்.எஸ் பட்டம்). கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியின் ஃபெல்லோசிப் இவருக்குக் கிடைத்தது. ராமானுஜன் ஆய்வுகளில் "தியரி ஆஃப் ஈகுவேசன்ஸ்", "தியரி ஆஃப் நம்பர்ஸ்", "டெஃபினிட் இன்ட்டக்ரல்ஸ்", "தியரி ஆஃப் பார்டிஷன்ஸ்", "எலிப்டிக் ஃபங்ஷன்ஸ் அண்ட் கண்டினியூடு ஃப்ராக்சன்ஸ்" எனும் நிலைப்பாடுகள் மிகச் சிறந்தவைகளாகக் கருதப்படுகின்றன. இவருடைய "மாக் தீட்டா ஃபங்சன்ஸ்" எனும் ஆராய்ச்சி முடிவுகள் சிறப்பான ஒன்றாகும். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் இவரது மரணத்துக்குப் பின் இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது. இவற்றையும் பார்க்கவும் இராமானுசன் கணிதத்துளிகள் உசாத் துணை நூல்கள் Collected Papers of Srinivasa Ramanujan ISBN 0-8218-2076-1 The Man Who Knew Infinity: A Life of the Genius Ramanujan by Robert Kanigel ISBN 0-671-75061-5 Srinivasa Ramanujan: A biographical sketch and a glimpse of his work. V. Krishnamurthy. J. Indian Inst.Sc. pp11–24. Ramanujan Special Issue 1987 சான்றடைவு பகுப்பு:இராமானுசன் பகுப்பு:1887 பிறப்புகள் பகுப்பு:1920 இறப்புகள் பகுப்பு:இந்தியக் கணிதவியலாளர்கள் பகுப்பு:ஈரோடு மாவட்ட நபர்கள் பகுப்பு:மேற்கோள் வழு-Defined multiple times பகுப்பு:இந்திய அறிவியலாளர்கள்
ராமானுஜம் எங்கு பிறந்தார்?
ஈரோட்டில்
898
tamil
ec2871c3f
சிங்கம் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது. தமிழில் ஆண் சிங்கத்தை அரிமா என்றும், பெண் சிங்கத்தை சிம்மம் என்றும் கூறுவது வழக்கம். குற்றாலக் குறவஞ்சியில் ஆளி என்ற சொல்லையும் அரிமாக்களைக் குறிக்க ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார்.[2] ஏறுகளின் கழுத்தில் பிடரி இருப்பது சிறப்பாகும். பிடரியை உளை என்றும் உளை மயிர் என்றும் கூறுவதுண்டு. அரிமா பூனைப் பேரினத்தைச் சேர்ந்தது. பூனைப் பேரினத்திலேயே, புலிக்கு (வரிப்புலிக்கு) அடுத்தாற்போல இருக்கும் பெரிய விலங்கு. ஆண் சிங்கம் 150-250 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். பெண் சிங்கம் 120-150 கிலோ கிராம் எடை கொண்டதாக இருக்கும். இவ்விலங்கு இன்று ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள காடுகளில் மட்டுமே காணப்படுகின்றது. வாழிடமும் இயல்புகளும் சிங்கம் அடர்ந்த காடுகளை விரும்பாமல் அடர்த்தி குறைந்த இலையுதிர்க்காடுகளில் வாழ்வதையே விரும்பும். சிங்கங்கள் நல்ல கேட்கும் திறன் கொண்டவை மேலும் இதன் கர்ஜனை சுமார் 8 கிலோமீட்டர் (5 மைல்கள்) வரை கேட்கும் திறன் கொண்டது[3]. பூனை இனத்தில் உள்ள விலங்குகளில் சிங்கம் கூட்டமாக வாழும் இயல்புடையது. மான், பன்றி முதலான விலங்குகளை வேட்டையாடி உண்ணும். பெரும்பாலும் பெண் சிங்கங்களே வேட்டையாடும். வேட்டையாடிய விலங்குகளை முழுவதுமாக உண்ணாமல் எலும்பு அதனையொட்டிய சதைப்பகுதிகளை அப்படியே விட்டுவிடும். அதனால் மற்ற விலங்குகள் (ஓநாய், கழுதைப் புலி முதலானவை) எஞ்சியவற்றை உண்டு வாழ்கின்றன. நன்கு உண்ட சிங்கம் வேட்டைக்குப் பின்னர் பல நாட்களுக்கு வேட்டையாடுவதில்லை. ஆண் சிங்கங்கள் தன் கூட்டத்துக்கு என்று ஒரு எல்லையை உருவாக்கி வைத்துக் கொள்ளும். இதனை தன் வட்டத்தில் மலம், மூத்திரம் கழிப்பதன் மூலமும் கர்ஜிப்பது மூலமும் தன் நகத்தால் மரங்களில் கீரியும் இது தன் எல்லை என மற்ற சிங்ககளுக்கும் பெரிய வகை ஊனுண்ணிகளுக்கும் தெரிவிக்கிறது. அவ்வாறு இருக்கையில் அருகில் இரை வரினும் பொதுவாக அவற்றைத் தாக்காது. 1990களில் சிங்கங்களின் எண்ணிக்கை 100,000 வாக்கில் இருந்தும் இன்று ஏறத்தாழ 16,000-30,000 வரை தான் உள்ளனவாகக் கணித்துள்ளார்கள். சிங்கங்களின் வாழ்நாள் பொதுவாக பத்திலிருந்து பதிநான்கு ஆண்டுகள் வரை இருக்கும். ஆண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 12 வருடங்களும் பெண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 16 வருடங்களும் ஆகும். உடற்கூற்றின் படி இரு பாலிங்களும் ஆயுட்காலத்தில் சர்வ வல்லமை படைத்திருந்தாலும், ஒரு கூட்டத்தில் ஒரு வயது முதிர்ந்த ஆண் சிங்கமே இருக்க வேண்டும் என்பதால் தலைவனான ஆண் சிங்கம் 10 வயது வருவதற்குள்ளாகவே அக்குழுவில் உள்ள மற்ற இளைய சிங்கத்தோடு சண்டையிட்டு இறக்கவோ அதிக காயத்திற்குள்ளதாகவோ ஆக்கப்படுகிறது. மேலும் கூட்டத்தில் இருந்து விரட்டப்படும் போது தன் வயது முதிர்ச்சியாலும், நகங்களும் பற்களும் கூர்மை இழப்பதாலும் வேட்டையாடுவதற்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன. இதனால் அதிக ஊட்டம் அளிக்கக் கூடிய கொம்புடைய உயிரிகளையோ மற்ற பெரிய விலங்குகளையோ வேட்டையாட முடியாமல் போகிறது. இத்தனை வலிமை இழந்த சிங்கம் மிகவும் ஒல்லியாகவும் பலவீனமாகவும் இருப்பதால் வேட்டையாடப்படும் எளிய விலங்குகளாலேயே சில சமயங்கள் கொல்லப்படுகின்றன. ஆனால் பெண் சிங்கம் வயது முதிர்ச்சி அடைந்தாலும் கூட்டத்தில் ஒன்றாகவே இருக்கும். இதன் காரணத்தாலேயே ஆண் சிங்கம் பெண் சிங்கத்தை விட சராசரி ஆயுட்காலத்தை குறைவாகக் கொண்டுள்ளது. கூட்டம் சிங்கக் கூட்டத்தின் தலைவனோ தலைவியோ கூட்டத்தின் ஒரு அங்கத்தினராகவே இருக்க வேண்டும். ஒரு கூட்டத்தில் பொதுவாக ஐந்து ஆறு வயதுவந்த பெண் சிங்கங்களும், ஒரு வயது வந்த ஆணும் சில குட்டிகளும் இருக்கும். கூட்டத்தின் அமைப்பில் பெண் சிங்கங்களே அதிக முக்கியத்துவத்தை பெறுகின்றன. ஒரு கூட்டத்தில் இருக்கும் பெண் சிங்கங்கள் எல்லாம் நெருங்கிய உறவினர்களாகவே இருக்கும். இந்த அமைப்பில் விதிவிலக்குகள் குறைவாகவே உண்டு. கலப்பு இனங்கள் சிங்கப்புலி அல்லது லைகர் (Liger) என்பது ஆண் சிங்கம் (Panthera leo) மற்றும் பெண் புலி (Panthera tigris) இவைகளுக்கிடையே ஒரு கலப்பினச் சேர்க்கை மூலம் உருவாகிய கலப்பு உயிரினமாகும். இவ்வினத்தின் பெற்றோர்கள் பந்தேரா எனும் ஒரே பேரினத்தைச் சேர்ந்தவை, ஆனால் அவற்றின் இனங்களோ வேறுபட்டவையாக உள்ளது. அறியப்பட்ட அனைத்து பூனைகுடும்பங்களுக்கிடையே உருவத்தில் பெரிதானதாக சிங்கப்புலி உள்ளது. கிட்டத்தட்ட இவற்றைப்போலவே கலப்பினச்சேர்க்கை மூலம் தோன்றிய புலிச்சிங்கம் எனும் விலங்கில் இருந்து சிங்கப்புலி வேறுபட்டுள்ளது. ஆண் புலியும் பெண் சிங்கமும் இணைந்த கலப்பினமே புலிச்சிங்கம் ஆகும். சிங்கப்புலிகள் நீச்சல் புரிவதை விரும்புகின்றன; இது புலியின் ஒரு பண்பு ஆகும், அதேவேளையில் கூடிப் பழகும் இயல்பு மிக்கவையாக உள்ளன; இந்தப்பண்பு சிங்கத்துக்கு உரித்ததாகும். கேர்க்குலிசு எனும் சிங்கப்புலி உலகிலேயே மிகப்பெரிய, வாழும் பூனை என்று கின்னசுச் சாதனை நூலில் இடம்பெற்றுள்ளது. வழக்காறுகள் பொதுவாக சிங்கத்தை காட்டின் அரசன் எனக் கூறுகின்றனர், எனினும் வரலாற்றில் புலிக்கும் சிங்கத்திற்கும் இடையிலான போர்களில் புலியே பெருமளவில் வெற்றிபெற்றுள்ளது. அண்மையில் அங்கோரா விலங்குப் பூங்காவில் ஒரு புலி ஒரே அடியில் சிங்கத்தை கொன்றுவிட்டது. இது 2011 மார்ச்சில் நிகழ்ந்தது.[4] ஆனால் தொன்மங்கள் அனைத்திலும் சிங்கமே அதிகம் வல்லமை உடையதாய் காட்டப்படுகின்றன. ஊடகங்களில் கூறப்படுவது போல் சிங்கம் தனித்து வேட்டையாடாது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கூட்டமாகவே சிங்கம் வேட்டையாடும். ஒரு கூட்டத்தின் தலைவனாக இருந்த ஆண் சிங்கம் ஒரு இளைய ஆண் சிங்கத்தால் அடித்து விரட்டப்பட்ட போது மட்டுமே தனியாக இருக்கும் வழக்கத்தைக் கொண்டது. அப்போது அச்சிங்கம் கிழப்பருவத்தை எட்டியதால் அவற்றின் வேட்டையாடும் திறன் குறைந்திருப்பதுடன் வேறு விலங்குகள் வேட்டையாடிப் தின்றது போக மீதி இருந்த உணவையே உட்கொள்கிறது. மேலும் பார்க்க மலையரிமா மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Media related to சிங்கம்Warning: Commons link does not match Wikidata– please check (this message is shown only in preview) at Wikimedia Commons Cite journal requires |journal= (help) : Video of a pack of lions fighting against a crocodile and buffaloes over a kill. Example of a fund and its projects about the research and conservation of the lion. Has conducted field research on lions and published peer-reviewed scientific articles. Description article பகுப்பு:பூனைப் பேரினம் * பகுப்பு:காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள்
சிங்கத்தின் சராசரி ஆயுட்காலம் என்ன?
ஆண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 12 வருடங்களும் பெண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 16 வருடங்களும் ஆகும்
1,914
tamil
bf3ec014b
இந்தோனேசியா (Indonesia), அதிகாரபூர்வமாக இந்தோனேசியக் குடியரசு (Republic of Indonesia) என அழைக்கப்படுவது 17,508 தீவுகளாலான தென் கிழக்காசிய, மற்றும் ஓசியானிய நாடாகும்.[1] 33 மாகாணங்களைக் கொண்ட இந்நாட்டில் 238 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதனால் உலகில் மக்கள் தொகை கூடிய நாடுகளில் இந்தோனேசியா நான்காவது இடத்தில் உள்ளது. இது மக்களால் தெரிவு செய்யப்பட்ட சட்டசபையையும், சனாதிபதியையும் கொண்ட ஒரு குடியரசு. சக்கார்த்தா இந்த நாட்டின் தலைநகரம். பப்புவா நியூ கினி, கிழக்குத் திமோர், மலேசியா என்னும் நாடுகள் இதன் எல்லைகளில் உள்ளன. சிங்கப்பூர், பிலிப்பீன்சு, ஆத்திரேலியா என்னும் நாடுகளும், இந்தியாவின் ஆட்சிக்கு உட்பட்ட அந்தமான் நிக்கோபார் தீவுகளும் இந்தோனேசியாவுக்கு அயலில் உள்ளன. உலகில் மிகக் கூடிய முஸ்லிம் மக்களைக் கொண்ட நாடு இந்தோனேசியாவே. தென்கிழக்கு ஆசிய நாடுகள் கழகத்தின் தொடக்க உறுப்பு நாடான இந்தோனேசியா, குழு-20 முக்கிய பொருளாதாரங்கள் அமைப்பின் உறுப்பு நாடாகவும் உள்ளது. இந்தோனேசியப் பொருளாதாரம், பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் உலகின் பதினாறாவது இடத்திலும், வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் 15 ஆவது இடத்திலும் உள்ளது. இந்தோனேசியத் தீவுகள், குறிப்பாக சாவகம் 500,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒமோ இரக்டசு மனிதர்களின் வாழ்விடமாக இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஏழாம் நூற்றாண்டில் இருந்தாவது, இந்தோனேசியத் தீவுக்கூட்டம் முக்கியமான ஒரு வணிகப் பகுதியாக இருந்துவருகிறது. முதலில் சிறீவிசய இராச்சியமும், பின்னர் மசாபாகித்தும் இந்தியாவுடனும் சீனாவுடனும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தன. இப்பிரதேசம் சீனாவுக்கான வணிகப் பாதையில் அமைந்திருப்பதால் வாசனைப் பொருள் வாணிபத்தில் முன்னோங்கிக் காணப்பட்டது. இப்பகுதியை ஆண்ட உள்ளூர் ஆட்சியாளர்கள் பொதுக் காலத்தின் தொடக்க நூற்றாண்டுகளிலிருந்தே பிற பண்பாட்டு, சமய, அரசியல் மாதிரிகளை உள்வாங்கி வந்தனர். இதனால், இப்பிரதேசத்தில் இந்து மற்றும் பௌத்த இராச்சியங்கள் செழித்திருந்தன. மத்திய காலத்தில் இப்பிரதேசம் இஸ்லாமிய ஆதிக்கத்துக்குள்ளானது. இந்நாட்டின் இயற்கை வளங்களால் கவரப்பட்ட வெளிநாட்டு வல்லரசுகள் இந்தோனேசிய வரலாற்றில் செல்வாக்குச் செலுத்தின. கண்டுபிடிப்புக் காலம் என வழங்கப்பட்ட காலத்தில், மலுக்குத் தீவுகளின் வாசனைப் பொருள் வணிகத்தின் தனியுரிமைக்காக ஐரோப்பிய வல்லரசுகள் போட்டியிட்டதுடன், கிறித்தவ மதத்தையும் இப்பகுதியில் அறிமுகப்படுத்தின. இப்பிரதேசம் சுமார் மூன்றரை நூற்றாண்டுகள் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் கீழ் நெதர்லாந்தின் காலனித்துவப் பிரதேசமாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின் போது சிறிது காலம் யப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்த நாடு 1945 இல் தனது விடுதலையை பிரகடனப்படுத்தியது. ஒன்றுபட்ட சுதந்திர இந்தோனேசியா 1949 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் அவை 1953 இல் அங்கீகரித்தது. பெயர் இந்தோனேசியா என்ற பெயர் கிரேக்க மொழியில் இந்தியா எனப் பொருள்படும் இந்துஸ் (indus) மற்றும் தீவுகள் எனப் பொருள்படும் நேசோஸ் (nesos) என்ற பதங்களின் இணைப்பாகும். விடுதலைபெற்ற இந்தோனேசியா உருவாவதற்குப் பல காலங்களுக்கு முன்னரே, 18 ஆம் நூற்றாண்டில் இப் பெயர் தோன்றியது. 1850 ஆம் ஆண்டில் சார்ச் விண்சர் ஏர்ல் என்னும் ஆங்கிலேய இனவியலாளர், இந்தியத் தீவுக்கூட்டம், அல்லது மலாயத் தீவுக்கூட்டம் என அழைக்கப்பட்ட இப்பகுதியின் மக்களுக்கு இந்துனேசியர் அல்லது மலாயுனேசியர் என்னும் பெயர்களை முன்மொழிந்தார். இதே வெளியீட்டில், அவருடைய மாணவரான சேம்சு ரிச்சார்ட்சன் லோகன் என்பவர் இந்தியத் தீவுக்கூட்டம் என்பதற்கு ஒத்த பொருளில் இந்தோனேசியா என்னும் சொல்லைப் பயன்படுத்தினார். ஒல்லாந்த அறிஞர்கள் தமது நூல்களில் இந்தோனேசியா என்ப பெயரைப் பயன்படுத்துவதற்குத் தயக்கம் காட்டினர். அவர்கள், மலாயத் தீவுக்கூட்டம் (Maleische Archipel), நெதர்லாந்துக் கிழக்கிந்தியா, இண்டீ, கிழக்கு, "இன்சுலிந்தே" போன்ற பெயர்களைப் பயன்படுத்தினர். 1900க்குப் பின்னர் இந்தோனேசியா என்னும் பெயர் நெதர்லாந்துக்கு வெளியே பொதுவான பயன்பாட்டுக்கு வந்தது. இந்தோனேசியத் தேசியவாதக் குழுக்கள் ஒரு அரசியல் வெளிப்பாடாக இந்தப் பெயரைப் பயன்படுத்தினர். பெர்லின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அடொல்ப் பசுட்டியன் என்பார் தான் எழுதிய இந்தோனேசியா அல்லது மலாயத் தீவுக் கூட்டங்களின் தீவுகள், 1884–1894 (Indonesien oder die Inseln des Malayischen Archipels, 1884–1894) என்னும் நூல் மூலமாக இப்பெயரைப் பரவலாக அறிமுகப்படுத்தினார். சுவார்டி சூர்யனின்கிராட் என்பவர் 1913 ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் இந்தோனேசிக் பேர்சு-பியூரோ என்னும் பெயரில் ஒரு பத்திரிகைப் பணியகம் ஒன்றைத் தொடங்கியதன் மூலம், இப்பெயரைப் பயன்படுத்திய முதல் இந்தோனேசிய அறிஞர் ஆனார். வரலாறு கண்டெடுக்கப்பட்ட புதை படிவங்களும், கருவிகளின் எச்சங்களும், இந்தோனேசியத் தீவுக்கூட்டங்களில், 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து 35,000 ஆண்டுகளுக்கு முன்புவரை, சாவா மனிதன் என அழைக்கப்படும் ஓமோ இரெக்டசுக்கள் வாழ்ந்தனர் என்பதைக் காட்டுகின்றன.[3][4][5] ஓமோ சப்பியன்கள் 45,000 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதிக்கு வந்தனர்.[6] 42,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மக்கள் பெருமளவில் பெரிய ஆழ்கடல் மீன்களைப் பிடித்து உணவாகக் கொண்டனர் என்பதற்கும், அதனால், உயரளவான கடலோடும் திறமை இவர்களுக்கு இருந்தது என்பதற்கும், இதன் மூலம் ஆழ்கடலைக் கடந்து ஆசுத்திரேலியாவையும் பிற தீவுகளையும் எட்டக்கூடிய அளவு தொழில்நுட்பம் இவர்களிடம் இருந்தது என்பதற்கும் 2011 ஆம் ஆண்டில் சான்றுகள் கிடைத்துள்ளன.[7] தற்கால இந்தோனேசியாவில் பெரும்பான்மையாக வாழும் ஆசுத்திரோனேசிய மக்கள் தாய்வானில் இருந்து தென்கிழக்கு ஆசியாவுக்குள் குடியேறியவர்கள்.[8] கிமு 2000 அளவில் வந்த இவர்கள், இத்தீவுக்கூட்டங்களூடாகப் பரவிய போது, முன்னர் குடியேறியிருந்த மெலனீசிய மக்களை தூர கிழக்குப் பகுதிகளுக்குள் முடக்கினர். வேளாண்மைக்கான சிறப்பான நிலைமைகளும், கிமு 8 ஆம் நூற்றாண்டிலேயே ஈரநில நெற் பயிர்ச்செய்கையில் இவர்கள் பெற்றிருந்த திறமையும்,[9] கி.பி. முதலாம் நூற்றாண்டில் ஊர்களும், நகரங்களும், சிறிய இராச்சியங்களும் தோன்றக் காரணமாகின. கடற்பாதையில் இந்தோனேசியாவின் முக்கிய அமைவிடம், தீவுகளுக்கு இடையிலான வணிகத்தையும், கிறித்துவுக்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே காணப்பட்ட இந்திய, சீன இராச்சியங்களுடனான தொடர்புகள் உள்ளிட்ட பன்னாட்டு வணிகத்தையும் ஊக்குவித்தது.[10] அப்போதிருந்து அடிப்படையில் வணிகமே இந்தோனேசிய வரலாற்றைத் தீர்மானிக்கும் காரணியாகச் செயற்பட்டது.[11][12] கிபி 7 ஆம் நூற்றாண்டில் இருந்து வணிக வளர்ச்சியினாலும், அதனுடன் வந்த பௌத்த, இந்து சமயங்களின் செல்வாக்கினாலும், சிறீவிசய இராச்சியம் சிறப்புற்று விளங்கியது.[13][14] 8 ஆம் 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பௌத்த மதம் சார்ந்த சைலேந்திர வம்சமும், இந்து மத மத்தாராம்ம் வம்சமும் சாவாவின் உட்பகுதிகளில் சிறப்புற விளங்கிப் பின்னர் வீழ்ச்சியடைந்தன. மேற்படி வம்ச ஆட்சிகளின் வளத்துக்குச் சான்றாக மிகப்பெரிய சமய நினைவுச் சின்னங்களான சைலேந்திர வம்சத்தின் போரோபுதூரையும், மத்தாராம் வம்சத்தின் பிராம்பானானையும் அவை விட்டுச் சென்றுள்ளன. இந்து இராச்சியமான மாசாபாகித் கிழக்கு சாவகத்தில் 13 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. கஜா மடா என்னும் தளபதியின் கீழ் இந்த இராச்சியத்தின் செல்வாக்கு இந்தோனேசியாவின் பெரும்பாலான பகுதிகளில் பரவியிருந்தது.[15] இசுலாமியக் காலத்தின் தொடக்கப் பகுதியிலேயே முசுலிம் வணிகர்கள் தென்கிழக்கு ஆசியாவின் ஊடாகப் பயணம் செய்திருந்த போதிலும், 13 ஆம் நூற்றாண்டில் வடக்கு சுமாத்திராவில் இருந்தே இந்தோனேசியாவில் இசுலாத்தைத் தழுவிய மக்கள் வாழ்ந்ததற்கான முதல் சான்றுகள் கிடைக்கின்றன.[16] பிற இந்தோனேசியப் பகுதிகள் படிப்படியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டன. 16 ஆம் நூற்றாண்டின் முடிவில் சுமாத்திராவிலும், சாவகத்திலும் இஸ்லாமே முதன்மை மதமாக விளங்கியது. இஸ்லாம் இப்பகுதிகளில் ஏற்கனவே பெரும்பாலும் இருந்த பண்பாட்டு சமயச் செல்வாக்குகளோடு கலந்தே இருந்தது. இது இந்தோனேசியாவில், சிறப்பாக சாவகத்தில், கைக்கொள்ளப்படும் இசுலாமியப் பண்பாட்டு வடிவம் உருவாகக் காரணம் ஆகியது.[17] 1512 ஆம் ஆண்டில் போத்துக்கேய வணிகர்கள் பிரான்சிசுக்கோ செராவோ தலைமையில், மலுக்கு பகுதியில், சாதிக்காய், கராம்பு, வால்மிளகு போன்ற வணிகப் பொருட்களின் வணிகத்தில் தனியுரிமை பெற்றுக்கொள்ள முயன்றனர். அப்போதே இந்தோனேசிய மக்களுக்கு ஐரோப்பியருடனான முறையான தொடர்பு ஏற்பட்டது.[18] போத்துக்கேயரைத் தொடர்ந்து ஒல்லாந்தரும், ஆங்கிலேயரும் வந்தனர். 1602 இல் இடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியை நிறுவிய ஒல்லாந்தர் முதன்மையான ஐரோப்பிய வல்லரசு ஆகினர். முறிவு நிலை எய்தியதைத் தொடர்ந்து, 1800 இல் இடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டு இடச்சுக் கிழக்கிந்தியப் பகுதிகள் நெதர்லாந்து அரசின் குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டன.[19] நிருவாகப் பிரிவு இந்தோனேசியாவில் 34 மாகாணங்கள் உள்ளன. அவற்றுள் ஐந்து சிறப்பு தகுதிநிலையை பெற்றவையாகும். ஜகார்த்தா, அச்சே, பப்புவா, மேற்கு பப்புவா, யோக்யகார்த்தா என்பவை அந்த ஐந்து சிறப்பு மாகாணங்களாகும். இவற்றின் சட்ட மன்றங்கள் மற்ற மாகாணங்களின் சட்ட மன்றங்களை விட அதிக அதிகாரங்களை கொண்டுள்ளன. அச்சே மாகாணம் இசுலாமிய சட்டத்தின் மாதிரியை 2003 இல் இங்கு அறிமுகப்படுத்தியது [20]. இச்சட்டம் வேறு எந்த மாகாணத்திலும் கிடையாது. இந்தோனேசிய விடுதலைப்போரில் யோக்யகார்த்தா கொடுத்த தீவிர பங்களிப்பால் 1950 இல் அதற்கு சிறப்பு தகுதி கொடுக்கப்பட்டது. பப்புவாவிற்கு சிறப்பு தகுதி 2001 இல் கொடுக்கப்பட்டது. 2003 பிப்பரவரி அன்று இது பப்புவாகவும் மேற்கு பப்புவாகவும் பிரிக்கப்பட்டன [21][22] . ஜகார்த்தா நாட்டு தலைநகரானதால் அதற்கு சிறப்பு தகுதி வழங்கப்பட்டது. சுமாத்திரா தீவில் 10 மாகாணங்கள் உள்ளன, சாவகத்தீவில் 6 மாகாணங்கள் உள்ளன, போர்னியோ தீவில் 5 மாகாணங்கள் உள்ளன, சுலாவெசி தீவில் 6 மாகாணங்கள் உள்ளன, மலுக்கு தீவில் 2 மாகாணங்கள் உள்ளன, மேற்கு நியு கினி தீவில் 2 மாகாணங்கள் உள்ளன, சுண்டா தீவுகளில் (தென்கிழக்கு தீவுகள்) 3 மாகாணங்கள் உள்ளன. பெங்கா-பெலித்துங் ஜம்பி தெற்கு சுமாத்திரா பெங்குலு லம்புங் பந்தன் ஜகார்த்தா மேற்குச் சாவகம் நடுச் சாவகம் யோக்யகார்த்தா (சிறப்பு மாகாணம்) கிழக்குச் சாவகம் பாலி மேற்கு பப்புவா பப்புவா (இந்தோனேசியா) மக்கள் தொகையியல் 2010 ஆம் ஆண்டு கணக்கெடுக்கின் படி இந்தோனேசியாவின் மக்கள் தொகை 237.6 மில்லியன்[23]. இதில் 58% மக்கள் சாவகத் தீவில் வாழ்கின்றனர் [23]. 2020 இல் மக்கள் தொகை 265 மில்லியன் ஆகவும் 2050 இல் 306 மில்லியன் ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு 300 தனித்தன்மை வாய்ந்த இனக்குழுக்கள் உள்ளன, 742 வகையான மொழிகள் பேசப்படுகின்றன [24][25]. பெரும்பாலான இந்தோனேசிய மக்கள் ஆத்திரனேசிய மொழிக்குடும்பம் சார்ந்தவர்கள். இவர்கள் மூலம் தைவானாக இருக்கலாம் என கருதப்படுகிறது. மற்றொரு பெரும் குழு மேலனேசியர்கள். இவர்கள் இந்தோனேசியாவின் கிழக்குப்பகுதியில் வாழ்கின்றனர் [26]. இந்நாட்டின் பெரிய இனக்குழு சாவகத்தவர்கள் ஆவர் அவர்கள் மக்கள் தொகையில் 42% உள்ளனர். இவர்களே நாட்டின் அரசியலிலும் பண்பாட்டிலும் செல்வாக்கு செலுத்துபவர்கள் [27]. சுண்டா இனத்தினர், மலாயர், மதுராவினர் ஆகியோர் மற்ற பெரிய இனக்குழுக்களாகும் [28]. சீன இந்தோனேசியர்கள் மக்கள் தொகையில் 3-4% உள்ளனர் .[29]. நாட்டின் பெரும்பாலான தனியார் தொழிற்றுறைகள் இவர்கள் வசம் உள்ளன [30][31]. இதனால் சீனர்கள் மீது மற்றவர்கள் வெறுப்பு கொண்டு, அவர்களுக்கு எதிராக கலவரங்களும் நடந்துள்ளன.[32][33][34]. இந்தோனேசியம் இதன் தேசிய மொழியாகும். இது மலாய் மொழியை ஒத்தது. ஜொகூர் சுல்தானகத்தில் பேசப்பட்ட மலாய் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இந்தோனேசிய மொழி நாட்டின் பள்ளிகள் அனைத்திலும் கற்பிக்கப்படுகிறது. இதுவே நாட்டின் வணிகத்திலும் அரசியலிலும் ஊடகங்களிலும் கற்பித்தலிலும் பயன்படும் மொழியாகும். எனவே இது நாட்டின் அனைத்து மக்களாலும் பேசப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இந்தோனேசிய மொழியுடன் உள்ளூர் மொழி ஒன்றையும் பேசுகின்றனர். அவற்றுள் சாவகம் (மொழி) அதிகம் பேசப்படும் மொழியாகும். 2.7 மில்லியன் மக்கள் தொகையுடைய பப்புவா நியூ கினியில் 270 இற்கு மேற்பட்ட பப்புவா மொழிகள், ஆத்திரனேசிய மொழிகளை பேசுகின்றனர் [35]. இந்தோனேசியாவின் மக்களில் பெரும்பான்மையோர் இசுலாமிய சமயத்தை பின்பற்றினாலும் இது இசுலாமிய நாடு அல்ல. மதச் சுதந்திரம் இந்தோனேசிய அரசியலமைப்பில் உள்ளது [36]. அரசாங்கம் இசுலாம், பௌத்தம், இந்து, ரோமன் கத்தோலிகம், சீர்திருத்த கிறித்தவம், கன்பூசியம் ஆகிய 6 சமயங்களை மட்டுமே அதிகாரப்பூர்வமாக அங்கிகரித்துள்ளது [37]. 2010 ஆம் ஆண்டு கணக்கின் படி 87.2% மக்கள் இசுலாம் சமயத்தை பின்பற்றுகின்றனர் .[38] . பெரும்பான்மையான இசுலாமியர்கள் சுன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள். 9% மக்கள் கிறித்துவத்தையும் 3% மக்கள் இந்து சமயத்தையும் 2% மக்கள் பௌத்தத்தையும் பின்பற்றுகிறார்கள். பெரும்பாலான இந்தோனேசிய இந்துக்கள் பாலி தீவைச்சார்ந்தவர்கள் [39]. பௌத்த சமயத்தை பின்பற்றுபவர்கள் சீனர்கள் [40]. தற்போது இந்து பௌத்த சமயங்களை சிறுபான்மையினர் பின்பற்றினாலும் இவற்றின் தாக்கம் இந்தோனேசியப் பண்பாட்டில் அதிகம். இசுலாம் சமயம் 13 ஆம் நூற்றாண்டில் வடக்கு சுமாத்திரா தீவு மக்களால் முதலில் ஏற்கப்பட்டது. பின்னர் 16 ஆம் நூற்றாண்டு அளவில் நாட்டின் பெரும்பான்மை சமயமாக மாறியது [41]. கத்தோலிகம் போர்த்துகீசியர்களால் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது[42][43]. சீர்திருத்த கிறித்தவம் ஒல்லாந்தர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது [44][45][46]. புவியியல் இந்தோனேசியா 17,508 தீவுகளை உடையது. இதில் 6,000 தீவுகளில் மக்கள் வாழ்கிறார்கள் .[47]. இவற்றின் தீவுகள் நிலநடுக்கோட்டுக்கு இரு புறமும் உள்ளன. போர்னியோ, சுமாத்திரா, சாவகம், நியூ கினி, சுலாவெசி என்பவை பெரிய தீவுகளாகும். இது போர்னியோ தீவில் மலேசியாவுடனும் புரூணையுடனும், நியு கினி தீவில் பப்புவா நியூ கினியுடனும் திமோர் தீவில் கிழக்கு திமோர் நாட்டுடனும் நில எல்லைகளை கொண்டுள்ளது. சிங்கப்பூர், பிலிப்பீன்சு, ஆஸ்திரலேசியா, பலாவு போன்றவற்றுடன் கடல் எல்லைகளை கொண்டுள்ளது. இந்தோனேசியாவின் தலைநகரும் மிகப்பெரிய நகருமான ஜகார்த்தா சாவகம் தீவில் உள்ளது. ஜகார்த்தா மாநகரே உலகின் இரண்டாவது மிகப் பெரிய நகரமாகக் கருதப்படுகிறது. இதன் பரப்பளவு 1,919,440 சதுர கிமீ ஆகும். நிலப்பரப்பை மட்டும் கணக்கில் கொண்டால் இது உலகின் 16 ஆவது பெரிய நாடாகும் [48]. இந்நாட்டின் மக்களடர்த்தி சதுர கிமீக்கு சராசரியாக 134. சாவகத் தீவு உலகின் அதிகளவு மக்களை கொண்டதாகும் [49]. இதன் மக்களடர்த்தி சதுர கிமீக்கு சராசரியாக 940. இந்தோனேசியா எரிமலை வளையத்தைச் சேர்ந்த நாடாகும். இங்கு 150 உயிருள்ள எரிமலைகள் உள்ளன[50]. பொருளாதாரம் தனியார் துறையும் அரசு துறையும் கலந்த பொருளாதாரம் இந்தோனேசியாவினுடையது.[51]. தென்கிழக்கு ஆசியாவிலேயே இந்தோனேசியா பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகும். இது ஜி-20 இன் உறுப்பினர்[52] . இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2012 ஆண்டில் 928,274 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது .[53]. 2010 ஆம் ஆண்டு கணக்குப்படி தொழில் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 46.4% பங்கும், சேவைத்துறை 37.1% பங்கும், வேளாண்மை 16.5% பங்கும் வகிக்கின்றன. 2010 இல் இருந்து சேவைத்துறை மற்ற துறைகளை விட அதிக அளவில் மக்களை பணியில் அமர்த்தியுள்ளது இது மொத்த பணியாளர்களில் 48.9% ஆகும்., விவசாயத்துறை 38.3% பணியாளர்களையும் தொழில் துறை 12.8% பணியாளர்களையும் கொண்டுள்ளது [54]. பெருமளவில் ஜப்பான் (17.28%) சிங்கப்பூர்(11.29%) ஐக்கிய அமெரிக்கா (10.81%) சீனா (7.62%) ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. சிங்கப்பூர் (24.96%) சீனா (12.52%) ஜப்பான் (8.92%) ஆகிய நாடுகளிலிருந்து பெருமளவில் இறக்குமதி செய்கிறது. இங்கு பாறை எண்ணெய், இயற்கை எரிவளி, செப்பு, வெள்ளீயம் போன்ற இயற்கை வளங்கள் அதிகமுள்ளன. உலகின் இரண்டாவது மிகப்பெரிய இயற்கை எரிவாயு வளம் சுமாத்திராவின் வடக்கில் அச்சே பகுதியில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா ஓப்பெக் அமைப்பில் 1962 ஆம் ஆண்டு இணைந்தது. பாறை எண்ணெய் ஏற்றமதியாளர் என்ற நிலையிலிருந்து இறக்குமதியாளர் என்ற நிலைக்கு வந்ததால் மே 2008 இல் இவ்வமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தது.[55] செப்டம்பர் 2008 இல் இந்தோனேசியாவின் விலகலை ஓப்பெக் உறுதிசெய்தது. 1997-98 காலப்பகுதியில் நிகழ்ந்த ஆசிய பொருளாதார நெருக்கடியில் இந்தோனேசியா கடுமையாக பாதிக்கப்பட்டது. பெருமளவிலான மூலதனம் நாட்டை விட்டு எதிர்பாராமல் வெளியேறியதால் இந்தோனேசிய நாணயம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இப்பொருளாதார நெருக்கடி அரசியலிலும் எதிரொலித்ததால் 1998 இல் நாட்டின் அதிபர் சுகர்த்தோ பதவி விலகினார் [56]. காட்சிகள் இந்தோனேசியா மத்திய ஜகார்த்தாவிலுள்ள தேசிய அருங்காட்சியகம் தேசிய நினைவுச்சின்னம் மத்திய சகார்த்தாவில் அமைந்துள்ள உயரமான கட்டிடம்(Wisma 46) Jalan Thamrin, the main avenue in Central Jakarta புகைவண்டி நிலையம் (மத்திய சகார்த்தா) 1,00,000 பார்வையாளர்கள் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானம். இந்தோனேசிய வரைபடம். இந்தோனேசிய மாகாணங்கள். மிகவும் பிரபலமான தெரு. யோகார்த்தா நகரில் ஓடும் பேருந்து சேவை. இந்தோனேசியாவில் கிடைக்கும் பிரபலமான உணவு வகை. ஐ.நா சபையின் பொது அமைதிகாக்கும் குழுவில் இந்தோனேசியாவின் படைவீரர்கள் B-25 Mitchell bombers of the AURI in the 1950s A Javanese engineer closes one of the gun bay doors on a Dutch Buffalo, January 1942. GE U20C in இந்தோனேசியா, #CC201-05 GE U20C "Full-Width Cabin" in Indonesia, #CC203-22 GE U20C full computer control locomotive in Indonesia, #CC204-06 குறிப்புகள் மேலும் பார்க்க இந்தோனேசியாத் தமிழர் போரோபுதூர் வெளியிணைப்புகள் பகுப்பு:இந்தோனேசியா பகுப்பு:தென்கிழக்கு ஆசிய நாடுகள் பகுப்பு:தீவு நாடுகள் பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
இந்தோனேசியாவின் தலைநகரம் எது
சக்கார்த்தா
402
tamil
4301ae869
தாமசு ஆல்வா எடிசன் (பெப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931) ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். 1880 ல் எடிசன் அறிவியல் சார்ந்த இதழ் ஒன்றைத் தொடங்கியவர். இது 1900-ஆம் ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for the Advancement of Science) இதழானது. தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவற்றுள் பெரும்பாலானவை இவரால் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல; முன்னைய உரிமங்களில் ஏற்படுத்திய சீரமைப்புக்களாகும். இவையும் பெரும்பாலும் இவரது பெருமளவிலான ஊழியர்களால் செய்யப்பட்டவை. இக்கண்டு பிடிப்புக்களுக்கான பெருமையில் மற்றவர்களுக்குரிய பங்கைக் கொடுக்காதமைக்காக எடிசன் அடிக்கடி விமர்சிக்கப்ப்ட்டார். இருந்தாலும், எடிசன் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் உரிமங்களைப் பெற்றார். எடிசன் நம்பிக்கை நிதியம் (Edison Trust) எனப் பொதுவாக அறியப்பட்ட, ஒன்பது முதன்மையான திரைப்படக் கலையகங்களின் கூட்டமைப்பான அசையும் பட உரிம நிறுவனத்தை (Motion Picture Patent Company) ஆரம்பித்தார். இளமை பவன் 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் நாள் அரியலூரில் என்னும் ஊரில் பிறந்தார். பவனின் பெற்றோர் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள். தந்தை ரவி ஓர் இந்தியர்ர; தாயார் சோபனா பரம்பரையில் வந்த காடூர் பெண். அவர் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. இவர்களுக்கு எடிசன் ஏழாவதாகவும் கடைசியாகவும் பிறந்தார். பின்னர் எடிசனின் குடும்பம் மிச்சிகனிலுள்ள ஊரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது கேட்கும் திறன் பாதித்திருந்தது அப்பிறவிப் பெருங் குறை அவரது பிற்கால நடையுடைப் பழக்கங்களை மிகவும் பாதித்ததோடு, அநேகப் புதுப் படைப்புகளுக்கும் காரணமாகவும் இருந்தது! 1840 இல் தந்தை சாமுவெல் எடிசன் மிலானில் ஒரு சாதாரண மர வியாபாரத்தைத் தொடங்கினார். பின்பு மிஸ்சிகன் போர்ட் ஹூரனில் கலங்கரைவிளக்கக் காப்பாளராகவும் , கிராடியட் கோட்டை ராணுவத் தளத்தின் தச்சராகவும் சாமுவெல் வேலை பார்த்தார். கல்வி தாமஸ் எடிசன், சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலில் கஷ்டப்பட்டுத் தாமதமாக, எட்டரை வயதில்தான் போர்ட் ஹூரன் பள்ளிக்குச் சென்றார். மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு நாள் 'மூளைக் கோளாறு உள்ளவன் ' என்று ஆசிரியர் திட்டியதால் அவரது பள்ளிப் படிப்பு முடிந்தது! எனவே, அவரின் தாயார் பள்ளியிலிருந்து தாமசை விலக்கிவிட்டுத் தானே அவருக்கு பாடங்கள் சொல்லிக் கொடுத்தார். பள்ளிக்கூட ஆசிரியரான தாயிடம் மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே, எடிசன் கல்வி கற்றார். படித்தல் எழுதுதல் மற்றும் எண்கணிதப் பயிற்சியோடு பைபிளையும், பழங்கதைகளைப் படிக்குமாறு தாமசின் தந்தை சாமுவேல் ஊக்கப்படுத்தினார். ஒவ்வொரு கதையை முடிக்கும் போதும் பத்து செண்ட்டுகளை அளிப்பதன் மூலம். விரைவில் தாமசு பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். கவிதைகளைப் படிப்பதிலும் பாடுவதிலும் அவருக்கு விருப்பம் அதிகமாயிருந்தது. நூலகத்திற்குச் சென்று அவருக்குத் தேவையான குறிப்புதவி நூலை அவரே எடுக்கக் கற்றுக்கொண்டபோது அவருக்கு வயது 11. தனது ஏழாவது வயது முதல் சூழ்நிலைச் சாதனங்களின் மேல் எடிசனுக்கு ஆர்வம் மிகுந்தது. ஒன்பது வயதில் ரிச்சர்டு பார்க்கர் (Richard Parker) எழுதிய 'இயற்கைச் சோதனைத் தத்துவம் ' (Natural &amp; Experimental Philosophy) என்ற நூலைப் படித்து முடித்தார். பதிமூன்றாம் வயதில் தாமஸ் பைன் [Thomas Paine] எழுதிய ஆக்க நூல்களையும், ஐசக் நியூட்டன் இயற்றிய 'கோட்பாடு ' என்னும் நூலையும் ஆழ்ந்து படித்தார். தனது 21 ஆம் வயதில், மைக்கேல் பாரடேயின் செய்தித்தாளில் இருந்த 'மின்சக்தியின் பயிற்சி ஆராய்ச்சிகள் ' பகுதியை ஒருவரி விடாது ஆழ்ந்து படித்து முடித்தார். இவை அவரது வாழ்க்கையில் ஒரு பெருத்த மாறுதலை உண்டாக்கியது! செய்கை முறையில், சோதனைகள் புரிந்து படைக்கும் திறனை எடிசனுக்கு அவை அடிப்படை ஆக்கின. கணித அறிவும் அறிவியல்இயற்பாடு எதுவும் முறையாகக் கற்காத எடிசன், சோதனைகள் மூலம் மட்டிலுமே திரும்பத் திரும்ப முயன்று, பல அரிய தொழில்நுட்பக் கருவிகளைப் படைத்தார். பணி 1860களின் தொடக்கத்தில் எடிசனுக்கு இரயில் நிலையத்தில் தந்தி இயக்கும் வேலை கிடைத்தது; அதிவேகத் தந்தி இயக்குதலுக்குப் பேர்பெற்றவர் தாமசு. அவரது முதல் கண்டுபிடிப்புகள் மின்தந்தி போன்ற தந்தி தொடர்பான கருவிகளே - பின்னர் வெசுடன் யூனியன் அலுவலகத்தில் வேலை. வேலைக்கிடையில் தன் ஆய்வுகளைத் தொடர்ந்து வந்தார் எடிசன். ஆனால் ஒரு முறை காரீய-அமில சேமக்கலனை வைத்திருந்த போது அதிலிருந்த கந்தக அமிலம் வெளியில் கொட்டி, பவனின் முதலாளி இருந்த அறைக்குள் பாய்ந்தது; அவரது வேலை பறிபோனது. அதன் பின்னர் இரயில்நிலையத்தில் நொறுக்குகளும் மிட்டாய்களும் விற்றார். சில காலம் பன்றி வெட்டினார்; காய்கறி வணிகம் செய்தார். இரயில் வண்டியின் ஒரு பெட்டியை அச்சகமாக மாற்றி அதிலிருந்தபடியே 1862-இல் ”த வீக்லி எரால்டு” என்ற வாரப் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார்; அதுவும், அக்டோபர் 28, 1868 அன்று (மின் வாக்குப்பதிவி) முதல் காப்புரிமைக்கு விண்ணப்பித்தார். ஆய்வுகள் முழுநேரக் கண்டுபிடிப்பாளராகத் தன் வாழ்க்கையை நடத்தும் பொருட்டு தாமசு நியூ செர்சியிலுள்ள நெவார்க்கிற்குச் சென்றார். நியூ செர்சியிலுள்ள மென்லோ பூங்கா என்ற இடத்தில் தன் ஆய்வகத்தை அமைத்தார் எடிசன். பங்குச்சந்தைப் புள்ளிகளை தொடராகப் பதிவேற்றும் துடிநாடா, மேம்படுத்தப்பட்ட தந்திக்கருவிகள் ஆகிய கருவிகளை உருவாக்கினார். ஆனால் எடிசனுக்குப் பெயர் பெற்றுத்தந்த கருவி 1877-இல் அவர் ஆக்கிய ஒலிவரைவியே. அதன் பிறகே “மென்லோ பூங்காவின் மேதை” என்ற பட்டம் அவருக்கு வழங்கலாயிற்று. தானாக இயங்கும் தந்திக்குறிப் பதிவுக் கருவி 1859 இல் எடிசன் தன் பன்னிரண்டாம் வயதில் பள்ளிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு, டெட்ராய்ட்-போர்ட் ஹூரன் புகைவண்டி நிலையத்தில் செய்தித் தாள் விற்கும் பையனாக வேலையில் சேர்ந்தார். அப்போது டெட்ராய்ட் மத்திய புகைவண்டி நிலையம், தந்திப் பதிவு ஏற்பாடு மூலம், ரயில் போக்குவரத்தைக் கண்காணிக்க முயன்று கொண்டிருந்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, வேலைக்கு மனுப் போட்டு, 1863 இல் டெலகிராஃப் பயிற்சியில் நுழைந்தார். தந்திச் செய்திகள் புள்ளி மற்றும் கோடுகளாகப் பதிவானதால், அவரது காது கேளாமைத் தன்மை வேலையை எந்த விதத்திலேயும் பாதிக்கவில்லை! பதிவானப் புள்ளிக் கோடுகளை அந்த காலத்தில் ஒருவர் படித்துப் புரிந்துதான், ஆங்கி லத்தில் மாற்றிக் கையால் எழுத வேண்டும். அதே பணியை ஆறு வருடங்கள் எடிசன் அமெரிக்காவில் தெற்கு, நடுமேற்குப் பகுதிகளில், நியூ இங்கிலாந்தில், மற்றும் கனடாவில் செய்து வந்தார். அப்போது இவ்வேலையை எளிதாக்கும் தந்திக் கருவியைச் செப்பனிட்டு தன் முதல் ஆக்கத் திறமையைக் காட்டினார். 1869 இல் தன் 22 ஆம் வயதில் 'இரட்டைத் தந்தி அடிப்புச் சாதனத்தைப் ' பதிவுக் கருவியுடன் இணைத்து, இரண்டு செய்திகளை ஒரே சமயத்தில், ஒரே கம்பியில் அனுப்பிக் காட்டினார். அத்துடன் தந்தியின் மின்குறிகளைத் தானாக மாற்றிச் சொற்களாய்ப் பதிவு செய்யவும் அமைத்துக் காட்டினார் . எடிசன் தனது தந்தி வேலையை விட்டுவிட்டு, முழு நேர ஆக்கப்பணிக்கு, நியூயார்க் நகருக்குச் சென்றார். அங்கு "பிராங்க் போப்" என்பவருடன் கூட்டாகச் சேர்ந்து, 'எடிசன் உலகப் பதிப்பி ' (Edison Universal Stock Printer), மற்றும் வேறு பதிக்கும் கருவிகளையும் உருவாக்கினார். 1870-1875 ஆண்டுகளில் நியூ ஜெர்ஸி நியூ ஆர்க், வெஸ்ட்டர்ன் யூனியனில் தானியங்கித் தந்தி (Automatic Telegraph) ஏற்பாட்டைச் செப்பனிட்டார். இரசாயன இயக்கத்தில் ஓடிய அந்தக்கருவி மின்குறி அனுப்புதலை மிகவும் சிக்கலாக்கியது. அதைச் சீர்ப்படுத்த முற்பட்ட எடிசன் தன், இரசாயன அறிவை உயர்த்த வேண்டியதாயிற்று. அந்த ஆராய்ச்சி விளைவில், மின்சாரப் பேனா (Electric Pen), பிரதி எடுப்பி (Mimeograph) போன்ற சாதனங்கள் உருவாகின. மேலும் அந்த பட்டறிவே, எடிசன் இசைத்தட்டு (கிராமஃபோன்) (Phonograph) கண்டுபிடிக்கவும் ஏதுவாயிற்று. எடிசன் புதிய கருவிகளைக் கண்டு பிடிக்க முனையும் போது, வேறு பல அரிய கருவிகளும் இடையில் தோன்றின. அவற்றுள் ஒன்று 'கரி அனுப்பி '(Carbon Transmitter) என்னும் சாதனம். முதல் ஒலிவரைவி கண்டுபிடிப்பு 1877 இல் எதிர்பாராதவாறு, எடிசன் கண்டு பிடித்தவற்றிலே, தொழில்நுட்ப முன்னோடிச் சாதனம், ஒலிவரைவி (கிராமஃபோன்) ஆகும். பிரான்சு நாட்டைச் சேர்ந்த லியான் ஸ்காட் 'ஒவ்வொரு ஒலியையும் ஒரு தகடு மீது பதிவு செய்ய முடிந்தால், அவை சுருக்கெழுத்து போல் தனித்துவ உருவில் அமையும் ' என்ற கோட்பாடை ஒரு நூலில் எழுதியிருந்தார். அதுதான் ஒலி மின்வடிவாய் எழுதும், ஒலிவரைவு (Phonography) எனப்பட்டது. அக் கோட்பாடை நிரூபித்துக் காட்ட, எடிசன் ஓர் ஊசியைத் தன் கரியனுப்பியுடன் சேர்த்து, ஒலிச்சுவடுகள் பாரபின் தாளில் பதியுமாறு செய்தார். அவர் வியக்கும்படி, ஒலிச் சுவடுகள் கண்ணுக்குத் தெரியாத வடிவில், கிறுக்கப் பட்டு நுணுக்கமாகத் தாளில் வரையப்பட்டிருந்தன. பிறகு ஊசியை ஒலிச் சுவடின் மீது உரசி, அதைப் ஒலிபெருக்கி மூலம் கேட்டதில், பதியப் பட்ட ஓசை மீண்டும் காதில் ஒலித்தது! எடிசன் அடுத்து ஓர் உருளை மீது தகரத் தாளைச் சுற்றி ஒலிச் சுவடைப் பதிவு செய்து காட்டினார். 1877 டிசம்பரில் அதற்கு எடிசன், தகரத்தாள் ஒலிவரைவி [Tinfoil Phonograph] என்னும் பெயரிட்டார். ஆனால் இவரது ஒலிவரைவி ஆய்வுக் கூடத்திலிருந்து வர்த்தகத் துறைக்கு வர பத்தாண்டுகள் ஆயின. மின்குமிழி, மின்சக்தி சேமிப்புக்கலன் கண்டுபிடிப்பு எடிசன் காலத்தில் வாயு விளக்குகள்தான் வீதிக் கம்பங்களில் பயன்படுத்தப்பட்டன. ஐம்பது ஆண்டுகளாக 'மின்சார விளக்கு ' பலருக்குக் கனவாகவும், முயலும் படைப்பாளிப் பொறியாளர்களுக்குத் தோல்வியாகவும் இருந்து வந்தது! அப்போதுதான் விஞ்ஞானிகள் 'மின்வீச்சு விளக்கு ' தொடர்பாக பல ஆய்வுகள் செய்து வந்தனர். 1878 ஜூலை மாதம் 29 ஆம் தேதி சூரிய கிரகணத்தின் போது, ராக்கி மலைத்தொடர் மீது சில ஆராய்ச்சிகள் செய்ய பல அமெரிக்க விஞ்ஞானிகள் சென்றிருந்தனர். கிரகணத்தின் போது 'சூரிய வெளிக்கனல்' எழுப்பிய வெப்ப வேறுபாட்டை அளக்க, அவர்களுக்கு ஒரு கருவி தேவைப்பட்டது. எடிசன் ஒரு கரிப் பொட்டுச் [Carbon Button] சாதனத்தைப் பயன்படுத்தி 'நுண்ணுனர் மானி ' என்னும் கருவியைச் செய்து கொடுத்தார். அக்கருவி மூலம் கம்பியில் ஓடும் மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்தலாம். அம்முறையைப் பயன்படுத்தி மின்சார விளக்கு ஒன்றைத் தயாரிக்க அப்போது எடிசனுக்கு ஓர் ஆர்வமேற்பட்டது. எடிசனின் மின்விளக்கு குறித்த ஆய்வுகளுக்கு, 'எடிசன் மின்சார விளக்குக் கம்பெனியை ' துவங்கிய ஜெ.பி. மார்கன் குழுவினர் முன் பணமாக 30,000 டாலர் தொகையை அளித்தார்கள். 1878 டிசம்பரில், பிரின்ஸ்டன் பல்கலைக் கழக அறிவியல் பட்டதாரி, 26 வயதான ஃபிரான்சிஸ் அப்டன் (Francis Upton) எடிசன் ஆய்வுக் குழுவில் சேர்ந்தார். எடிசனுக்குத் தெரியாத கணித, பெளதிக அறிவியல் நுணுக்கங்கள் யாவும், இளைஞர் ஃபிரான்சிஸ் மூலம் எடிசனுக்குக் கிடைத்தது. மின்தடை மிகுதியாய் உள்ள உலோகக் கம்பி ஒன்றை மின்விளக்கிற்கு எடிசன் முதலில் உபயோகித்தார். மின்சார அணிச் சுற்றில் செல்லும் மின்னோட்டம் மிகுதியாக இருந்ததால், மின் வீச்சு விளக்கு ஒன்றில் பழுது ஏற்பட்டால், எல்லா விளக்குகளும் அணைந்து போயின. எடிசன் மின் விளக்குகளை இணைச் சுற்றில் பிணைத்து, மின்னோட்ட அளவைக் குறைத்ததால், ஒரு விளக்கில் ஏற்படும் பழுது மற்ற விளக்குகளைப் பாதிக்கவில்லை. எடிசன் குழுவினர், பிளாட்டினம் கம்பியைச் சுருளைச் வெற்றிடக் குமிழி ஒன்றில் உபயோகித்துக், கட்டுப்படுத்திய மின்னோட்டத்தில் ஒளிர வைத்து, முதல் மின்விளக்கை உருவாக்கினார்கள். 1881 ஜனவரியில் முதல் 'மின் விளக்கொளி அமைப்பு ' வணிகமாக்கும் துறை ஏற்பாடு, நியூ யார்க் 'ஹிந்த் &amp; கெட்சம் ' அச்சக மாளிகையில் நடந்தது. நியூ யார்க் கீழ் மன்ஹாட்டனில் அமைந்த, உலகின் முதல் வர்த்தக 'மத்திய மின்சார நிறுவனம் ', எடிசனின் நேரடிப் பார்வையில் நிறுவப்பட்டது. அது 1882 செப்டம்பர் முதல் இயங்க ஆரம்பித்தது. பின்னர் மின்விளக்கு அமைப்பு வளர்ச்சி அடைந்து, பின் பெரிய உணவு விடுதிகள், அரங்க மேடைகள், வாணிபத் துறைகள், கடைகள் என அனைத்து இடங்களிலும் மின்குமிழி ஒளி வீச, ஆக்க மேதை எடிசனின் புகழ் உலகெங்கும் பரவியது. மின்சார மோட்டார் இதற்கு இடையில் 1879 இல் எடிசன், அப்டன் இருவரும் முதல் மின்சார சேமிப்புக்கலனை உண்டாக்க போதிய ஆய்வுகள் செய்து முடித்தார்கள். இயந்திர ஆற்றலால் ஓட்டினால் மின்சார சேமிப்புக்கலனில் மின்னழுத்தம் [Voltage] உண்டாகி, கம்பி முனையில் மின்திறம் [Electric Power] கிடைக்கிறது. எதிர்மறையாக மின்சார சேமிப்புக்கலனின் முனைகளில், மின்னழுத்தம் செலுத்தினால், அதே கருவி இயந்திர சக்தியைத் தரும் மின்சார மோட்டார் [Electric Motor] ஆனதை எடிசன் நிரூபித்துக் காட்டினார். இதுவும் அவரது முதல் சாதனை ஆகும். எடிசன் விளைவு விளக்கு எரியும் போது, வெற்றிட மின்குமிழிச் [Vacuum Bulb] சுருள் கம்பியின் நேர்முனையில் [Positive Pole] ஒருவித நீல நிறவொளி [Blue Glow] சூழ்ந்து கொண்டிருந்தது. 1883 இல் எடிசன் மின்குமிழியைப் பதிவு செய்தபோது, அந் நிகழ்ச்சிக்கு 'எடிசன் விளைவு ' [Edison Effect] என்று பெயர் கொடுத்தனர். பதினைந்து ஆண்டுகள் கழித்து 1898 இல் ஜெ. ஜெ. தாம்சன் முதன் முதல் 'எதிர் மின்னணுத் துகளைக் ' [Electron] கண்டுபிடித்தார். அதன் பின்னரே அறிவியலறிஞர்கள் எடிசன் விளைவுக்கு விளக்கம் தந்தனர். அதாவது எலக்ட்ரான்கள் சூடான முனையிலிருந்து குளிர்ச்சியான முனைக்கு வெப்பவியல் வீச்சால் [Thermionic Emission] பயணமாகும் போது, நேர்முனையில் அப்படி ஒரு நீல நிறவொளி எழுகிறது! அதுவே பின்னால் 'எலக்ட்ரான் குமிழி ' [Electron Tube] தோன்ற வழி வகுத்து 'மின்னியல் தொழிற் துறைக்கு' இது அடிகோலியது. நியூயார்க் நகரமும் மின்விளக்குகளும் அக்காலத்தில் தாம் வசித்து வந்த நியூயார்க் நகரின் வீடுகளிலும் வீதிகளிலும் மின்சார விளக்குகள் ஒளிவீச வேண்டும் என்பது எடிசனின் ஆசை. ஆனால் கேஸ் மற்றும் எண்ணெய் விளக்குகளை மட்டும் உபயோகித்துக் கொண்டிருந்த காலத்தில் அவரது ஆசை நிறைவேறும் என்பதை அவரைத் தவிர மற்ற விஞ்ஞானிகள் உட்பட யாரும் நம்பவில்லை. விஞ்ஞானிகள் எடிசனுக்கு எதிராகத் தங்கள் கருத்துகள் மூன்றை ஆணித்தரமாகக் கூறினர். 1. மின்சாரத்தைப் பல இடங்களுக்கு வினியோகிக்க முடியாது. 2. அப்படியே முடிந்தாலும் ஒவ்வொருவரும் எந்த அளவுக்கு அதைப் பயன்படுத்துவார்கள் என்பதைக் கணிக்க முடியாது. 3. மின்சார விளக்கு கேஸ் லைட் போல மலிவானதல்ல. அக்காலகட்டத்தில் அறிவியல் அந்த அளவே வளர்ந்திருந்ததால் அவர்கள் கூறியதில் உண்மை இருந்தது. வழிகள் இல்லாவிட்டால் அவை உருவாக்கப்பட வேண்டும் என்பது எடிசனின் சித்தாந்தம். அவர் தமது ஆராய்ச்சிக்கு உதவும் ஒவ்வொரு புத்தகத்தையும், கட்டுரையையும் விடாமல் படித்தார். இருநூறு நோட்டுகளில், 40,000-த்திற்கும் மேற்பட்ட பக்கங்களில், தம் கருத்துகளையும் வரைபடங்களையும் பதித்து ஆராய்ந்தார். கடைசியில் அவர் கனவு நனவாகியது. உலகிலேயே மின்விளக்குகளால் ஒளி பெற்ற முதல் நகரம் என்ற பெருமையை நியூயார்க் நகரம் பெற்றது. பத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும் அவரைப் பாராட்ட ஓடோடிச் சென்றபோது அவர் தமது ஆராய்ச்சிக்கூடத்தில் வேறோர் ஆராய்ச்சியை ஆரம்பித்திருந்தார். அவரது மகத்தான ஆராய்ச்சி வெற்றி குறித்து பத்திரிகையாளர்கள் கருத்து கேட்டபோது அவர் புன்னகையுடன் சொன்னார்: நேற்றைய கண்டுபிடிப்பு பற்றிப் பேசி இன்றைய நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை.” எடிசனின் வெற்றியில் ஒரு சதவீதம் அறிவு, 99 சதவீதம் உழைப்பு” என்ற பொன்மொழி பிரசித்தமானது திரைப்பட படப்பிடிப்புக் கருவி கிராம போன் ஒலித்தட்டு ஆய்வில் வெற்றி பெற்ற எடிசன் அடுத்து, 1880 களில் திரைப்பட படப்பிடிப்புக் கருவி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். எடிசன் நகரும் திரைப்பட படப்பிடிப்புக் கருவியை உருவாக்க, அதுவரை வெளிவந்த ஆய்வு முயற்சிகளையும், தன் கீழ் பணியாற்றும் நிபுணர்களின் ஆக்கங்களையும் பயன் படுத்திக் கொண்டார். இந்த எண்ணம் எடிசனுக்கு பத்தாண்டுகளாக இருந்திருக்கிறது. அதைப் பற்றி ஒரு சமயம் எடிசன் கூறியது: 'கற்பனையில் எனக்கு இது முன்பே உதயமானதுதான். போனோகிராஃப் எப்படிக் காதுக்கு இசை விருந்தளிக்கிறதோ, அது போல் 'நகரும் படம் ' மனிதர் கண்ணுக்கு விருந்தளிக்கச் செய்ய முடியும். போனோகிராஃப் ஒலி நுணுக்கத்தை திரைப்பட படப்பிடிப்புக் கருவியுடன் இணைத்துப் 'பேசும் படம் ' என்னால் தயாரிக்க முடியும் ' . முதல் நகரும் படம் வெளிவரப் உதவியாக இருந்தவர், எடிசனுக்கு உதவியாளராகச் சேர்ந்த, W.K.L. டிக்ஸன் என்பவராவார். 1888 இல் எடிசன் முதலில் படைத்த திரைப்பட படப்பிடிப்புக் கருவி கினெட்டாஸ்கோப் [Kinetoscope]. ஆனால் படம் யாவும் அதில் சற்று மங்கலாகத்தான் தெரிந்தன. 1889 இல் பிரிட்டனில் வாழ்ந்த ஃபிரீஸ்-கிரீன் என்பவர் ஒருவிதப் பதிவு நாடாவைப் பயன் படுத்தி உருவப் படங்களைப் பதித்தார். அதே நாடாவை சில வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் ஜார்ஜ் ஈஸ்ட்மன் உபயோகித்து ஓளிப் படங்களை அந்த நாடாவிலே எடுக்கும்படி செய்தார். முதல் முறையாக, எடிசன் கினெடாஸ்கோப் படப்பிடிப்புக் கருவியை விரிவாக்கி, ஐம்பது அடி நீளமுள்ள படச் சுருளை, மின்சார மோட்டார் மூலம் சுற்ற வைத்து, உருப்பெருக்கியின் வழியாகப் பேசும் படங்களை வெள்ளித் திரையில் காட்டிக் களிக்கச் செய்தார். அந்த திரைப்பட படப்பிடிப்புக் கருவியை எடிசன் 1891 இல் அமெரிக்காவில் பதிவு செய்தார். மறைவு ஆக்க மேதை எடிசன் தன் 84 ஆம் வயதில், 1931 அக்டோபர் 18 ஆம் தேதி நியூஜெர்சியில் உள்ள வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் எடிசனின் உடல் அடக்கத்தின் போது அமெரிக்காவெங்கும் மின்விளக்குகளை, ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார். அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 9:59 மணிக்கு அவரது உடல் அடக்கமானது. அக்டோபர் 21 ஆம் தேதி மாலை நியூ யார்க்கில் 'சுதந்திர தேவி சிலையின்'(Statue of Liberty) கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது! பிராட்வே விளக்குகள், வீதியில் பயணப் போக்கு விளக்குகளைத் தவிர மற்ற எல்லா விளக்குகளும் ஒளியிழந்தன. சிகாகோ, டென்வர் போன்ற முக்கியமான இடங்களிலும் விளக்குகள் அணைக்கப்பட்டன. உசாத்துணை வெளி இணைப்புகள் , சி. ஜெயபாரதன் - - பகுப்பு:அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர்கள் பகுப்பு:புத்தியற்றுநர் பகுப்பு:மின் பொறியியலாளர்கள் பகுப்பு:1847 பிறப்புகள் பகுப்பு:1931 இறப்புகள் பகுப்பு:காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள் பகுப்பு:ஆங்கில அமெரிக்கர்கள்
செ. செ. தாம்சன் எங்கு கல்வி கற்றார்?
போர்ட் ஹூரன்
2,159
tamil
914cd633c
புவியின் வளிமண்டலம் என்பது பூமியின் ஈர்ப்புச் சக்தியினால் அதனைச் சூழ்ந்து இருக்கும்படி அமைந்துள்ள பல்வேறு வாயுக்களின் படலமாகும். இது ஐந்தில் நான்கு பங்கு நைட்ரஜனையும், ஐந்தில் ஒரு பங்கு ஆக்ஸிஜனையும் மிகக் குறைந்த அளவில் கரியமில வாயு உட்பட்ட மேலும் பல வாயுக்களையும் கொண்டுள்ளது. சூரியக் கதிர்வீச்சிலிருக்கும் புறஊதாக் கதிர்களை உறிஞ்சிக் கொள்வதன் மூலமும், பகல், இரவு நேரங்களுக்கு இடையேயான வெப்பநிலை வேறுபாடுகளைக் குறைப்பதன் மூலமும் வளிமண்டலம் பூமியில் உயிர் வாழ்வைக் காத்து வருகிறது. வளிமண்டலத்துக்குச் சடுதியாக முடிவடையும் ஒரு எல்லை கிடையாது. வளிமண்டலத்தின் அடர்த்தி படிப்படியாகக் குறைந்து வந்து இல்லாமல் போய் விடுகிறது. வளிமண்டலத்துக்கும், ஆகாய வெளிக்கும் இடையே வரையறுக்கப்பட்ட எல்லை எதுவும் இல்லை. வளிமண்டலத்தின் முக்கால் பகுதித் திணிவு புவியின் மேற்பரப்பிலிருந்து 11 கிலோமீட்டர் தூரத்துக்குள் அடங்கியுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 80.5 கி.மீட்டர்களுக்கு மேல் செல்லும் எவரும் விண்வெளிவீரர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். விண்வெளியிலிருந்து திரும்பும் போது வளிமண்டலத்தின் பாதிப்புப் புலப்படத் தொடங்குமிடம் 120 கிமீ உயரத்தில் உள்ளதாகவும் கருதப்படுகிறது. 100 கிமீ உயரத்திலுள்ள கர்மான் கோடு எனப்படும் கோடும் வளிமண்டலத்துக்கும் விண்வெளிக்கும் இடையிலான எல்லையாகக் கருதப்படுவதுண்டு. ஆக்கும் கூறுகள் புவியின் வளிமண்டலம் நைதரசன் மற்றும் ஒக்சிஜன் ஆகியவற்றையே கூடுதலாகக் கொண்டுள்ளது. இதனைத் தவிர ஆர்கன், காபனீரொட்சைட்டு, நீராவி மற்றும் பல வாயுக்கள் புவியின் வளிமண்டலத்தை ஆக்குகின்றன. வளிமண்டலப் படைகள் புவியின் வளிமண்டலமானது ஐந்து படைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன அடிவளிமண்டலம் (Troposphere) படைமண்டலம் (Stratosphere) இடை மண்டலம் (mesosphere) வெப்ப வளிமண்டலம் (thermosphere) புறவளி மண்டலம் (exosphere) அடிவளிமண்டலம் அடிவளிமண்டலம் (Troposphere) என்பது புவியின் வளிமண்டலத்தின் மிகவும் கீழேயுள்ள அடுக்கு ஆகும். வளிமண்டலத்தின் மொத்தத் திணிவின் 75 வீதமும்; நீராவி, தொங்கல் நிலையில் உள்ள தூசித் துணிக்கைகள் ஆகியவற்றின் 99 வீதமும் அடிவளிமண்டலத்திலேயே உள்ளன. இந்த அடுக்கில் வெப்பச்சுற்றுத் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் உள்ளது. நிலநடுக்கோட்டுப் பகுதியில் அடிவளிமண்டலத்தின் சராசரித் தடிப்பு சுமார் 17 கிலோமீட்டர் (10 மைல்கள்) ஆகும். வெப்பவலயப் பகுதிகளில் இதன் தடிப்பு 20 கிலோமீட்டர் (12 மைல்கள்) அளவுக்குப் பரந்துள்ளது. துருவப் பகுதிகளில் கோடையில் 7 கிலோமீட்டர் (4 மைல்கள்) அளவாகக் காணப்படும் இதன் தடிப்பு மாரி காலங்களில் தெளிவற்றதாக உள்ளது. படைமண்டலம் படைமண்டலம் (Stratosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் இரண்டாவதாக உள்ள அடுக்கு ஆகும். இது அடிவளிமண்டலத்திற்கும் இடை மண்டலத்திற்கும் நடுவே காணப்படுகின்றது.இதிலேயே ஓசோன் படலம் காணப்படுகின்றது இடை மண்டலம் இடை மண்டலம் (mesosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் மூன்றாவதாக உள்ள அடுக்கு ஆகும். இது படை மண்டலத்திற்கும் வெப்ப மண்டலத்திற்கும் நடுவே காணப்படுகின்றது. வெப்ப வளிமண்டலம் வெப்ப வளிமண்டலம் (thermosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் நான்காவதாக உள்ள அடுக்கு ஆகும். இது இடை மண்டலத்திற்கும் புறவளி மண்டலத்திற்கும் நடுவே காணப்படுகின்றது. புறவளி மண்டலம் புறவளி மண்டலம் (exosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் ஐந்தாவதாக உள்ள அடுக்கு ஆகும். வெப்பநிலையும் வளிமண்டலப் படலங்களும் வளிமண்டல வெப்பநிலை புவி மேற்பரப்பிலிருந்தான உயரத்துடன் வேறுபடுகின்றது; வெப்பநிலைக்கும், உயரத்துக்கும் இடையிலான கணிதத் தொடர்பும் வெவ்வேறு வளிமண்டலப் படலங்களிடையே வேறுபடுகின்றது: அடிவளிமண்டலம்/ மாறன் மண்டலம் (troposphere): மேற்பரப்பிலிருந்து 7 கிமீ தொடக்கம் 17 கிமீ வரை, அகலாங்குகள் மற்றும் காலநிலை சார்ந்த காரணிகளைப் பொறுத்து உயரத்துடன் வெப்பநிலை குறைவடைகின்றது. வளியிலுள்ள வாயுக்களில் 90% காணப்படும் படைமண்டலம்/மீவளிமண்டலம் (Stratosphere): அடிவளிமண்டலத்துக்கு மேல் 50 கி.மீ வரை உயரம் அதிகரிக்க வெப்பநிலை கூடுகின்றது. ஓசோன் படை இம்மண்டலத்தில் காணப்படும். இடை மண்டலம் (mesosphere): 50 கி.மீட்டரிலிருந்து 80 - 85 கிமீ வரையான பகுதிக்குள் உயரம் அதிகரிக்க வெப்பநிலை குறைகின்றது. வெப்ப வளிமண்டலம் (thermosphere): 80 - 85 கிமீ முதல் 640+ கிமீ வரை வெப்பநிலை உயரத்துடன் அதிகரிக்கின்றது. வானொலி அலைகள் இம்மண்டலத்தில் தெறிப்படைந்து பூமியை அடையும் செய்மதிகள் இம்மண்டலத்திலேயே அதிகளவில் காணப்படும். புறவளி மண்டலம் (exosphere) மேற்படி பகுதிகளுக்கிடையான எல்லைகள் அடிவளி எல்லை (tropopause), அடுக்கெல்லை (stratopause), இடையெல்லை (mesopause) எனப்படுகின்றன. பூமியின் மேற்பரப்பில் வளிமண்டலத்தின் சராசரி வெப்பநிலை 14°C ஆகும். அழுத்தம் முதன்மைக் கட்டுரை: வளிமண்டல அழுத்தம் வளிமண்டல அழுத்தம் என்பது வளியின் நிறையின் நேரடியான விளைவாகும். புவி மேற்பரப்பின் மேலுள்ள வளியின் அளவும் அதன் நிறையும் இடத்துக்கு இடமும், நேரத்தை ஒட்டியும் வேறுபடுவதன் காரணமாக வளியமுக்கமும் இடத்தையும் நேரத்தையும் பொறுத்து வேறுபடுகின்றது. சுமார் 5 கிமீ உயரத்தில் வளிமண்டல அழுத்தம் ~50% வீழ்ச்சியடைகின்றது. (இன்னொரு வகையில் கூறுவதானால் சுமார் வளிமண்டலத் திணிவின் 50% கீழுள்ள 5 கிமீக்குள் அடங்கி விடுகின்றது). கடல் மட்டத்தில் சராசரி வளி அமுக்கம் சுமார் 101.3 கிலோபாஸ்கல்கள் (ஏறத்தாழ சதுர அங்குலத்துக்கு 14.7 இறாத்தல்கள்) ஆகும். ஆய்வுகள் வளிமண்டலத்தில் கார்பன்டைஆக்சைடின் அளவு 400 மில்லியனில் ஒரு பகுதிகளாக அதிகரித்துள்ளதாக மௌனா லோவ கண்காணிப்பகத்தில் உள்ள நேசனல் ஓசோனிக் அன்டு அட்மாஸ்பியரிக் அட்மினிஸ்டிரேசனின் அறிவியலாளர்கள் மே 9, 2013 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.[1] உசாத்துணைகள் , by J. Vercheval (viewed 1 Apr 2005) இவற்றையும் பார்க்கவும் வளி புவி வெப்ப நிலை அதிகரிப்பு அடிவளிமண்டலம் வெப்ப வலயம் மேற்கோள்கள் வெளியிணைப்புகள் பகுப்பு:வளிமண்டலம் பகுப்பு:சூழல் மண்டலம் பகுப்பு:புவி பகுப்பு:புவியின் கட்டமைப்பு பகுப்பு:புவியின் வளிமண்டலம்
வளிமண்டலத்தில் எத்தனை அடுக்குகள் உள்ளன?
ஐந்து
1,416
tamil
767506ee1
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (Indian Space Research Organization, ISRO, இஸ்ரோ) இந்திய அரசின் முதன்மை தேசிய விண்வெளி முகமை ஆகும். பெங்களூரில் தலைமைப் பணியகம் கொண்ட இசுரோ 1969 இல் உருவாக்கப்பட்டது. தற்போது 16,000 ஊழியர்கள் இசுரோவில் பணியாற்றுகின்றனர். ஏறத்தாழ 41 பில்லியன் ரூபாய் செலவில் செயலாற்றப்படுகிறது. இந்திய அரசின் விண்வெளித்துறையின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் இசுரோவிற்கு ஏ.எஸ்.கிரண்குமார் தற்போது தலைவராக உள்ளார். இசுரோ உலகின் மிகப்பெரும் விண்வெளி ஆய்வு மையங்களில் ஆறாவதாக உள்ளது. இதன் முதன்மை நோக்கமாக விண்வெளித் தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும் அவற்றை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவதும் ஆகும்.[1] இசுரோ தனது நிறுவனக் காலத்திலிருந்து தொடர்ந்து பல சாதனைகளைக் கண்டு வந்துள்ளது. 1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள், ஆரியபட்டா இசுரோவால் அமைக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தால் விண்ணேற்றப்பட்டது. 1980இல் இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட ஏவுகலம் (எஸ். எல். வி-3) மூலமாக முதல் செயற்கைக் கோள், ரோகினியை விண்ணேற்றியது. தொடர்ந்து செயற்கைக் கோள்களை முனையச் சுற்றுப்பாதைகளில் ஏவத்தக்க முனையத் துணைக்கோள் ஏவுகலம் (PSLV) மற்றும் புவிநிலைச் சுற்றுப்பாதைகளில் ஏவத் தக்க ஜி. எஸ். எல். வி என்ற இரு ஏவுகலங்களை வடிவமைத்துக் காட்டியது. இந்த ஏவுகலங்கள் மூலம் பல தொலைதொடர்பு செயற்கை கோள்களையும் புவி கூர்நோக்கு செயற்கைக்கோள்களையும் இஃச்ரோ ஏவியுள்ளது. இதன் உச்சக்கட்டமாக 2008ஆம் ஆண்டில் நிலவை நோக்கிய இந்தியாவின் முதல் பயணமாக சந்திரயான்-1 ஏவப்பட்டது. கடந்த ஆண்டுகளில் இசுரோ இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமன்றி பிறநாட்டு வாடிக்கையாளர்களுக்கும் விண்வெளி/ செயற்கைக் கோள் தொடர்புடைய செயல்பாடுகளை ஆற்றி வருகிறது. தனது ஏவுகலங்களையும் ஏவுமிடங்களையும் தனது செயற்கைக்கோள் ஏவுதிறனுக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளது. புவியியைவு செயற்கைக் கோள் ஏவுகலத்தை (ஜி.எஸ்.எல்.வி) மேம்படுத்தி முழுமையும் இந்தியப் பொருட்களால் கட்டமைப்பதும் மனிதரியக்கு விண்வெளித் திட்டங்கள், மேலும் பல நிலவு புத்தாய்வுகள் மற்றும் கோளிடை ஆய்வுக்கருவிகள் செயல்படுத்துவதையும் எதிர்காலத் திட்டங்களாகக் கொண்டுள்ளது. தனது பல்வேறு பணிகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் குவியப்படுத்திய மையங்களை நாடெங்கும் கொண்டுள்ளது. பன்னாட்டு விண்வெளிச் சமூகத்துடன் பல இருவழி மற்றும் பல்வழி உடன்பாடுகளைக் கண்டு கூட்டுறவாகச் செயல்படுகிறது. குறிக்கோள் இசுரோவின் (இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்) குறிக்கோளானது விண்வெளி தொழில் நூட்பங்களையும் அதன் பயன்பாடுகளையும் உருவாக்குவதன் மூலம் நாட்டுக்கு தேவையான பணிகளை நிறைவேற்றுதலாகும். துவக்க காலம் இந்தியாவின் விண்வெளி ஆய்வின் வரலாறு 1920களில் கொல்கத்தாவில் அறிவியலார் சிசிர் குமார் மித்திராவின் செயல்பாடுகளில் துவங்கியதாகக் கொள்ளலாம்; மித்திரா தரையளாவிய வானொலி அலைகள்மூலம் அயனி வெளியை ஆய்வு செய்யச் சோதனைகளை நிகழ்த்தினார்.[2] பின்னர், இந்திய அறிவியலாளர்கள் சி. வி. ராமன் , மேக்நாத் சாகா போன்றோர் விண்வெளி அறிவியலுக்குப் பயனாகும் அறிவியல் கொள்கைகளை அளித்து வந்தனர்.[2] இருப்பினும் 1945ஆம் ஆண்டிற்குப் பின்னரே இத்துறையில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.[2] இத்தகைய அமைப்புசார் ஆய்வுகளுக்கு இரு இந்திய அறிவியலாளர்கள் வழி நடத்தினர்: விக்கிரம் சாராபாய்— அகமதாபாத்தில் அமைந்துள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை நிறுவியவர்—மற்றும் ஹோமி ஜெஹாங்கீர் பாபா, 1945இல் டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தை நிறுவன இயக்குனராகத் துவக்கியவர்.[2] விண்வெளித் துறையில் துவக்கத்தில் அண்டக் கதிரியக்கம், உயர்வெளி மற்றும் காற்றுவெளி சோதனைக் கருவிகள், கோலார் சுரங்கங்களில் துகள் சோதனைகள் மற்றும் உயர் வளிமண்டலம் போன்றவற்றில் சோதனைகள் நடத்தப்பட்டன.[3] ஆராய்ச்சி ஆய்வகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியிடங்களில் நிகழ்ந்த ஆய்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டன.[3][4] 1950இல் இந்திய அரசில் புதியதாக உருவாக்கப்பட்ட அணு ஆற்றல் துறைக்கு ஓமி பாபா செயலாளராகப் பொறுப்பேற்ற பின்னரே இத்துறையில் ஆய்வுக்கு அரசு ஆதரவு கிட்டியது.[4] அணுவாற்றல் துறை இந்தியாவெங்கும் விண்வெளி ஆராய்ச்சிக்கு நிதியுதவி வழங்கியது.[5] 1823இல் கொலாபாவில் துவங்கப்பட்ட வானாய்வு நிலையத்தில் புவியின் காந்தப் புலம்குறித்து ஆயப்பட்டு வந்தது. வானிலையியலில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் மதிப்புமிக்க தகவல்கள் திரட்டப்பட்டன. 1954ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநில வானாய்வு மையம் நிறுவப்பட்டது.[4] 1957ஆம் ஆண்டில் ஆந்திராவில் ஐதராபாத்தில் ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் ரங்க்பூர் வானாய்வு மையம் நிறுவப்பட்டது.[4] இந்த இரு மையங்களும் ஐக்கிய அமெரிக்காவின் தொழில்நுட்ப உதவி மற்றும் அறிவியல் கூட்டுறவுடன் இயங்கின.[4] விண்வெளித்துறை வளர்ச்சிக்குத் தொழில்நுட்ப ஆதரவாளராக விளங்கிய அந்நாள் இந்தியப் பிரதமர் சவகர்லால் நேருவின் பங்கும் இருந்தது[5] 1957இல் சோவியத் ஒன்றியம் வெற்றிகரமாக இசுப்புட்னிக் 1ஐ விண்ணில் செலுத்தியதும் மற்ற நாட்டவரும் விண்வெளி ஆராய்ச்சிகள் நடத்த தூண்டுதலாக அமைந்தது.[5] 1962ஆம் ஆண்டில் விக்கிரம் சாராபாய் தலைமையில் இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக்கானக் குழு (INCOSPAR) அமைக்கப்பட்டது.[5] 1969ஆம் ஆண்டில் இக்குழுவிற்கு மாற்றாக இஃச்ரோ நிறுவப்பட்டது. ஏவுகலத் தொகுதி புவிசார் அரசியல் மற்றும் பொருளியல் காரணங்களுக்காக 1960களிலும் 1970களிலும் தனது சொந்தமான ஏவுகலங்களைத் தயாரிக்க இந்தியா உந்தப்பட்டது. 1960-70 காலகட்டங்களில் முதல்நிலையாக ஆய்வு விறிசுகளை வெற்றிகரமாக இயக்கியபிறகு 1980களில் துணைக்கோள் ஏவுகலங்களை வடிவமைத்துக் கட்டமைக்கும் திட்டங்கள் உருவாகின. இவற்றிற்கான முழுமையான இயக்கத்திற்கான ஆதரவு கட்டமைப்பும் உருவாக்கப்பட்டது.[6] எஸ்.எல்.வி-3,மேம்பட்ட துணைக்கோள் ஏவுகலங்களை அடுத்து முனையத் துணைக்கோள் ஏவுகலம் (PSLV) மற்றும் புவியிணக்க துணைக்கோள் ஏவுகலம் (GSLV) தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. செயற்கைக்கோள் ஏவுகலம் (SLV) நிலை: நிறுத்தப்பட்டது இதன் ஆங்கிலச் சுருக்கமான எஸ்.எல்.வி அல்லது எஸ்.எல்.வி-3 என அறியப்படும் செயற்கைக்கோள் ஏவுகலம் ஓர் நான்கு கட்ட திட எரிபொருள் இலகு ஏவுகலம். 500கிமீ தொலைவு ஏறவும் 40 கிலோ ஏற்புச்சுமை கொண்டு செல்லவும் வடிவமைக்கப்பட்டது.[7] முதல் ஏவல் 1979இலும் அடுத்த ஆண்டு இருமுறையும் இறுதி ஏவல் 1983இலும் நிகழ்ந்தன. இந்த நான்கில் இரண்டே வெற்றிகரமாக அமைந்தன.[8] மேம்பட்ட செயற்கைக்கோள் ஏவுகலம் (ASLV) நிலை: நிறுத்தப்பட்டது இந்த ஏவுகலம் ஐந்து நிலை திட எரிபொருள் விறிசு ஆகும்; இதனால் 150 கிலோ செயற்கைக்கோளைத் தாழ் புவி சுற்றுப்பாதையில் ஏவ இயலும். இதன் வடிவமைப்பு எஸ்.எல்.வியை அடியொற்றி இருந்தது.[9] முதல் ஏவல் 1987இலும், 1988,1992,1994 களில் மூன்று ஏவல்களும் நிகழ்ந்தன; இரண்டு ஏவல்களே வெற்றி பெற்றன.[8] முனையத் துணைக்கோள் ஏவுகலம் (PSLV) நிலை: இயக்கத்தில் பி. எஸ்.எல்.வி என்ற ஆங்கிலச் சுருக்கத்தால் பரவலாக அறியப்படும் முனையத் துணைக்கோள் ஏவுகலம் இந்திய தொலையுணர்வு துணைக்கோள்களை சூரிய இணைவு சுற்றுப்பாதைகளில் ஏவிட வடிவமைக்கப்பட்ட மீளப்பாவிக்கமுடியாத (இழக்கத்தக்கதொரு) ஏவு அமைப்பாகும். இதற்கு முன்னர் இந்தச் செயற்கைக்கோள்கள் உருசியாவிலிருந்து விண்ணேற்றப்பட்டு வந்தன. இந்த ஏவுகலங்களால் சிறு துணைக்கோள்களை புவிநிலை மாற்று சுற்றுப்பாதைக்கு ஏவ முடியும். இந்த ஏவுகலத்தால் 30 விண்கலங்கள் (14 இந்திய விண்கலங்களும் 16 வெளிநாட்டு விண்கலங்களும்) விண்ணேற்றப் பட்டுள்ளன.[10] ஏப்ரல் 2008இல் இது ஒரே ஏவலில் 10 துணைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏற்றி அதுவரை இருந்த உருசிய சாதனையை முறியடித்தது.[11] சூலை 15, 2011 அன்று ப.எஸ்.எல்.வி தனது 18வது தொடர்ந்த ஏவல்பணியை வெற்றிகரமாகச் செய்து முடித்தது. இதன் 19 ஏவல்களில் செப்டம்பர் 1993 முதல் பயணம் மட்டுமே தோல்வியில் முடிந்தது.[12] புவியிணக்க துணைக்கோள் ஏவுகலம் (GSLV) நிலை: இயக்கத்தில் ஜி.எஸ்.எல்.வி ஒரு டெல்டா-II வகை செயற்கைக்கோள் ஏவு கலம். இது ஒரு மீளப்பாவிக்க இயலாத அமைப்பு (இழக்கத்தக்கதொரு ஏவு அமைப்பு). இந்தத் திட்டம் இன்சாட் வகை செயற்கைக்கோள்களைப் புவிநிலை சுற்றுப்பாதையில் செலுத்திடவும் வெளிநாட்டு விறிசுகளை நாடவேண்டிய தேவையைக் குறைக்கவும் செயல்படுத்தப்பட்டது.இதனால் 5 டன் எடையுள்ள ஏற்புச்சுமையை தாழ் புவி சுற்றுப்பாதையில் இட முடியும். இத்திட்டத்திற்கு ஒரு பின்னடைவாகத் திசம்பர் 25, 2010இல் ஜிசாட்-5பி சுமந்தவண்ணம் சென்ற ஜி.எஸ்.எல்.வி கட்டுப்பாட்டு அமைப்பு தவறியதால் முன்னரே திட்டமிட்டபடி பாதுகாப்பாகத் தானே வெடித்துச் சிதறியது.[13] புவியிணக்க துணைக்கோள் ஏவுகலம் மார்க்-III (GSLV III) நிலை: இயக்கத்தில் புவியிணக்க துணைக்கோள் ஏவுகலம் மார்க்-III முன்நு நிலைகள் கொண்ட விண்வெளிக்கலன் ஆகும். இதன் மூலம் மிகு எடையுள்ள செயற்கைக்கோள்களைப் புவிநிலை சுற்றுப்பாதையில் செலுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இது ஜி. எஸ். எல். விக்கு அடுத்தத் தலைமுறையாக இருப்பினும் இதன் வடிவமைப்பை அதனை ஒட்டி இருக்கவில்லை. இதன் முதல் ஏவுதல் 2012ஆம் ஆண்டில் வெற்றி பேற்று, மேலும் இரு முறை இயக்கப்பட்டுள்ளது. தற்போது இது பயன்பாட்டு நிலையை அடைந்துள்ளது. இந்தியாவின் மனித விண்வெளி திட்டத்திற்கு இந்த விண்கலனையே பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.[14][15] மறுபயன்பாட்டு ஏவுகலம் விண்வெளிச் செலுத்துவாகனச் செலவுகளைக் குறைக்கும் பொருட்டு மறுபயன்பாட்டிற்கு உதவும் செலுத்துகலன்களை (Reusable Launch Vehicl) வடிவமைக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. இதற்கான முதற்சோதனை 2015 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.[16][17] புவி கூர்நோக்கு மற்றும் தொலைதொடர்பு செயற்கைக்கோள்கள் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா சோவியத் ஒன்றியத்தால் ஏப்ரல் 19 , 1975 அன்று விண்ணில் ஏவப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரோகினி வகை செயற்கைக்கோள்களை இந்தியாவிலேயே தயாரித்து ஏவுதலும் நிகழ்ந்தது. தற்போது இஃச்ரோ பல்வகையான புவி கூர்நோக்கு செயற்கைக்கோள்களை இயக்கி வருகிறது. இன்சாட் தொடர் இன்சாட் என்று பரவலாக அறியப்படும் இந்திய தேசிய செயற்கைக்கோள் தொகுதி திட்டம் பல்நோக்கு புவிநிலை செயற்கைக்கோள்களின் தொடராகும். இது தொலைத்தொடர்பு, ஒலி/ஒளி பரப்பு, வானிலையியல் மற்றும் தேடிக் காப்பாற்று (search-and-rescue) தேவைகளுக்காகத் திட்டமிடப்பட்டது. 1983ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்தத் திட்டம் ஆசியா-பசிபிக் வலயத்திலேயே மிகப்பெரும் உள்நாட்டு செய்மதி தொலைதொடர்பு அமைப்பாக விளங்குகிறது. இதனை ஓர் கூட்டு முயற்சியாக இந்திய அரசின் விண்வெளித் துறை, தொலைத்தொடர்புத் துறை, இந்திய வானிலையியல் துறைகளும் அனைத்திந்திய வானொலி, தூர்தர்சன் நிறுவனங்களும் இயக்குகின்றன; இவற்றை ஒருங்கிணைக்க நடுவண் அரசுச் செயலர்கள் நிலையில் இன்சாட் ஒருங்கிணைப்பு குழு அமைக்கபட்டுள்ளது. இந்திய தொலையுணர்வு செயற்கைக்கோள் தொடர் இந்திய தொலை உணர்வுச் செயற்கைக்கோள்கள் (IRS) இசுரோவினால் வடிவமைக்கட்டு, கட்டப்பட்டு, ஏவப்பட்டு, இயக்கப்படும் புவி கூர்நோக்கு செயற்கைக்கோள் தொடராகும். இவற்றால் நாட்டிற்கு தொலை உணர்வுச் சேவைகள் கிட்டுகின்றன. உலகிலேயே குடிசார் பயன்பாட்டிற்காக இயக்கப்படும் மிகப்பெரிய தொலையுணர்வு துணைக்கோள்த் தொகுதியாக விளங்குகிறது. துவக்கத்தில் இவை 1 (A,B,C,D) எனப் பெயரிடப்பட்டிருந்தாலும் அண்மைக் காலத்தில் இவற்றின் பயன்பாடுகளை ஒட்டி (ஓசியன்சாட், கார்ட்டோசாட், ரிசோர்சுசாட்) பெயரிடப்படுகின்றன. கதிரலைக் கும்பா படிம செயற்கைக்கோள்கள் இசுரோ தற்போது இரண்டு ஒற்றுக் கோள்கள் என விளையாட்டாக அழைக்கப்படும் கதிரலைக் கும்பா படிம செயற்கைக்கோள்களை இயக்குகிறது. ஏப்ரல் 26, 2012 அன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி மூலமாக ரிசாட்-1 (RISAT-1) விண்ணேற்றப்பட்டது. இது சி-அலைக்கற்றையில் இயங்கும் சின்தெடிக் அபெர்சர் ரேடார் ஏற்புச்சுமையைக் கொண்டுள்ளது. இதன் மூலம் துல்லியமான மிகு இடப் பிரிதிறன் கொண்ட படிமங்களைப் பெற இயலும்.[18].இதற்கு முன்னரே 2009இல் இசுரேலிடமிருந்து $110 மில்லியன் செலவில் பெறப்பட்டு ஏவப்பட்ட ரிசாட்-2 வையும் இயக்குகிறது.[18] மற்ற செயற்கைக்கோள்கள் இவற்றைத் தவிர இசுரோ சில புவிநிலை செயற்கைக்கோள்களைச் சோதனையோட்டமாக ஏவியுள்ளது. இவை ஜிசாட் தொடர் என்று அழைக்கப்படுகின்றன. வானிலைக்காக மட்டுமே பயன்படுமாறு முதல் வானிலை செயற்கைக்கோளை (கல்பனா-1) [19] முனையத் துணைக்கோள் ஏவுகலம் மூலமாகச் செப்டம்பர் 12, 2002இல் விண்ணேற்றியது.[20][21] புவிக்கப்பால் ஆராய்தல் புவியின் சுற்றுப்பாதையைத் தாண்டி இந்தியாவின் முதல் தேடலாக சந்திரயான்-1 அமைந்தது. நிலா|நிலவுக்கான விண்கலமான இது நவம்பர் 8, 2008 அன்று நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. இதனைத் தொடர்ந்து சந்திரயான்-2 ஏவவும் செவ்வாய் கோளிற்கு ஆளில்லா கலங்களை இயக்கவும் புவி அண்மித்த விண்கற்கள் மற்றும் வால் வெள்ளிகளை துழாவும் ஆய்வுக்கலங்களை செலுத்தவும் திட்டமிட்டுள்ளது. மையங்கள் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைமையகம் பெங்களூரில் உள்ள அந்தரிக்ஷ் பவனில் (இந்தி: அந்தரிக்ஷ் = விண்வெளி, பவன் = மாளிகை) இயங்குகிறது. ஆய்வு மையங்கள் சோதனை மையங்கள் கட்டமைப்பு மற்றும் ஏவல் மையங்கள் சுவடு தொடரல் மற்றும் கட்டளை மையங்கள் மனிதவள மேம்பாடு வணிகக்கிளை உலகளாவிய ஒத்துழைப்பு இசுரோ தொடங்கப்பெற்ற காலத்திலிருந்து பல்வேறு நாடுகள் இசுரோவிற்கு பலவகைகளில் ஒத்துழைப்பை நல்கி வருகின்றன. இசுரோ மற்றும் விண்வெளித் துறையும் பல்வேறு நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துகொண்டுள்ளன. அவைகளாவன:- Canada Egypt ஐரோப்பிய ஒன்றியம் France Germany Hungary Israel | Italy Japan Kazakhstan Netherlands Norway Russia Sweden Ukraine United Kingdom United States தற்போதைய திட்டங்களும் சாதனைகளும் இந்திய விண்வெளி ஆய்வு மையமானது, விண்வெளிக்கு செல்லும் கருவிகள், விண்வெளிப் பறப்பு, போன்றவை மட்டுமில்லாமல் மேலும் சில திட்டங்களையும் மேற்கொண்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்கது, கூகிள் எர்த் திட்டத்திற்கு போட்டியாகவும், அதிநவீன வசதிகளுடன் இந்தியாவின் பாதுகாப்புக் காரணங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இத்திட்டத்தின் வாயிலாக முப்பரிமாண படங்களையும் மிகத்துல்லியமாகப் காணலாம். இத்திட்டத்தின் வாயிலாக, இந்தியாவின் எந்த நிலப்பரப்பையும் தெட்டத்தெளிவாகப் பார்க்க முடியும். அதன் துல்லிய அளவு, 10 மீட்டர் முதல் 55 மீட்டர் உயரம் வரை. இதன் மூலம் சாலையில் உள்ள ஒரு வாகனத்தைக் கூட இந்த இணையதளம் மூலம் பார்க்க முடியும். ஆனால், தீவிரவாதிகள், தேச துரோகிகளுக்கு உதவிடும் வகையில் இந்த இணையதளம் அமைந்துவிடக் கூடாது என்பதற்காக, பாதுகாப்பு பகுதிகள், ராணுவ சம்பந்தப்பட்ட இடங்கள், முக்கிய இடங்கள் ஆகியவை குறிப்பிட்ட அளவுக்கு மேல் துல்லியமாகப் பார்க்க முடியாது. இதில் உள்ள காட்சிகள் 2008-ம் ஆண்டுக்கு முன் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்திய செயற்கைக்கோள்கள் CARTOSAT-1, CARTOSAT - 2 ஆகியவை மூலம் முப்பரிமாணத்தில் படம் பிடிக்கப்பட்டவையாகும். 2012 க்கு பிறகு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 60 ஏவுதலை திட்டமிட்டுள்ளதால், இசுரோ தற்போது மூன்றாவது ஏவுதளத்தை அமைக்கப்போவதாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.[26] 12 சனவரி 2018 இல் இசுரோ தனது 100 ஆவது செயற்கைக்கோளை அனுப்பி சாதனை படைத்துள்ளது.[27] காட்சியகம் NASA+ISRO,1974 ஆரியபட்டா,19.04.1975 இசுரோ பணியாள் ஒப்பீடு: எஸ்.எல்.வி, ஏ. எஸ். எல். வி, பீ.எஸ்.எல்.வி, ஜி. எஸ். எல். வி, ஜி. எஸ். எல். வி மார்க் III இவற்றையும் பார்க்கவும் இந்திய தேசிய செயற்கைக்கோள் தொகுதி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு தேசிய விண்பயண அறிவியல் மற்றும் விண்வெளி மேலாண்மை நிறுவனம் மேற்கோள்கள் உசாத்துணைகள் Bhaskaranarayana etc. (2007), "Applications of space communication", Current Science, 93 (12): 1737-1746, Bangalore: Indian Academy of Sciences. Burleson, D. (2005), "India", Space Programs Outside the United States: All Exploration and Research Efforts, Country by Country, pp.136–146, United States of America: McFarland &amp; Company, ISBN 0-7864-1852-4. Daniel, R.R. (1992), "Space Science in India", Indian Journal of History of Science, 27 (4): 485-499, New Delhi: Indian National Science Academy. Gupta, S.C. etc. (2007), "Evolution of Indian launch vehicle technologies", Current Science, 93 (12): 1697-1714, Bangalore: Indian Academy of Sciences. "India in Space", Science &amp; Technology edited by N.N. Ojha, pp.110–143, New Delhi: Chronicle Books. Mistry, Dinshaw (2006), "Space Program", Encyclopedia of India (vol. 4) edited by Stanley Wolpert, pp.93–95, Thomson Gale, ISBN 0-684-31353-7. Narasimha, R. (2002), "Satish Dhawan", Current Science, 82 (2): 222-225, Bangalore: Indian Academy of Sciences. Sen, Nirupa (2003), "Indian success stories in use of Space tools for social development", Current Science, 84 (4): 489-490, Bangalore: Indian Academy of Sciences. "Space Research", Science and Technology in India edited by R.K. Suri and Kalapana Rajaram, pp.411–448, New Delhi: Spectrum, ISBN 81-7930-294-6. மேலும் அறிய [ISRO plans human colony on moon]; by Bibhu Ranjan Mishra in Bangalore; 18 December 2007; Rediff India Abroad (Rediff.com) The Economics of India's Space Programme, by U.Sankar, Oxford University Press, New Delhi, 2007, ISBN.13:978-0-19-568345-5 வெளி இணைப்புகள் பகுப்பு:விண்வெளி நிறுவனங்கள் பகுப்பு:இந்திய அரசு அமைப்புகள் பகுப்பு:இந்திய அரசு பகுப்பு:இந்திரா காந்தி அமைதிப் பரிசு பெற்றவர்கள்
இஸ்ரோவின் தலைமையகம் எங்கு உள்ளது?
. பெங்களூரில்
126
tamil
52942fb09
சர்தார் வல்லப்பாய் படேல் (ஆகத்து 10, 1875 - டிசம்பர் 15, 1950) (Sardar Vallabhbhai Jhaverbhai Patel, குஜராத்தி: વલ્લભભાઈ પટેલ, இந்தி: सरदार वल्लभभाई पटेल) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். குஜராத் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார்.[1] சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லப்பாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டார். வாழ்க்கை வரலாறு சர்தா வல்லபாய் படேல் லேவா படேல் சமூகத்திலிருந்து ஒரு குஜராத்தி குடும்பத்தில் பிறந்தார். சர்தார் வல்லபாய் படேலின் சொந்த ஊர் கரம்சாத் ஆகும். இவருக்கு சோமாபாய், நர்சிபாய் மற்றும் விதால்பாய் பட்டேல் என்ற மூன்று அண்ணன்களும், காசிபாய் என்ற தம்பியும் தைபா என்ற தங்கையும் உடன் பிறந்தவர்கள் ஆவார். அவரது தந்தை சுவாமிநாராயணனின் சம்ப்ரதாயின் ஒரு பக்தராக இருந்தார். அவரது தந்தை 20 கிமீ தொலைவில் உள்ள சுவாமிநாராயண் கோயிலுக்கு நடந்தே அழைத்துச் செல்வார். அது அவரது உடலை கட்டுகோப்பாகவும் வலிமையாகவும் உருவாக்க உதவியது. படேல் தனது 22 வயதில் தன்னுடைய மெட்ரிக்குலேசன் கல்வியில் தேர்ச்சி அடைந்தார். பட்டேல் தனக்குள்ளாகவே வழக்கறிஞர் ஆக வேண்டும் என தீர்மானித்து இங்கிலாந்து சென்று வழக்குரைஞர் படிப்பு படித்தார். அவர் மற்ற வழக்குரைஞர்களின் புத்தகங்களை வாங்கி படித்து இரண்டு ஆண்டுகளில் தேர்ச்சி அடைந்தார். சாதனைகள் சோமநாதபுரம் கோயிலை கே. எம். முன்ஷியுடன் இணைந்து மீண்டும் எழுப்ப காரணமாக இருந்தவர். அகமதாபாத்தில் வக்கீல் தொழில் நடத்தியபோது உள்ளூர் மக்களின் பிரச்சினைகளுக்கு உதவி, பிரபலமானார். 1917-ம் ஆண்டு மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார். சுதேசி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது காந்திஜியின் உரையைக் கேட்டவர், வக்கீல் தொழிலை உதறி சுதேசி இயக்கத்தில் இணைந்தார். • குஜராத்தில் கேடா என்ற இடத்தில் பயங்கர பஞ்சம். ஆங்கிலேய அரசிடம் வரி விலக்கு கேட்டு விவசாயிகள் போரா டினர். அரசு பணியாததால் காந்தி, படேல் தலைமையில் வரிகொடாமைப் போராட்டம் வெடித்தது. அரசு பணிந்தது. வரி ரத்தானது. படேலின் முதல் வெற்றி இது! • பார்டோலி என்ற இடத்தில் விவசாயிகள் நலன் காக்க நடைபெற்ற மற்றொரு சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் படேலுக்கு வெற்றி கிடைத்தது. அப்போதிருந்து மக்களால் ‘சர்தார்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். அதன் பிறகு போராட்டங்களும் சிறைவாசமும் அவருக்கு வாடிக்கையாகிப் போனது. • வட்டமேஜை மாநாட்டு தோல்விக்குப் பிறகு காந்தி, படேல் கைது செய்யப்பட்டனர். எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது இருவருக்கும் நெருக்கம் வளர்ந்தது. • சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்டார். இந்திய விவசாயிகளின் ஆன்மாவாக கருதப்பட்டார். நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் பணியாற்றினார். • நாடு முழுவதும் ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்துகொண்டிருந்த 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்ததுதான் உள்துறை அமைச்சராக அவர் ஆற்றிய முதல் பணி. வி.பி.மேனனுடன் இணைந்து அகண்ட பாரதத்தை அமைத்தார். • அகண்ட பாரதம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. அந்த இலக்குக்காக சகல வழிகளையும் பின்பற்றினார். சர்ச்சைகள், எதிர்ப்புகள் எழுந்தாலும் இரும்பு மனிதராக நின்று சமாளித்தார். • 75-ம் வயதில் இறந்தார். 1991-ல் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஒற்றுமைக்கான சிலை இவருடைய நினைவாக குஜராத் மாநிலத்தில் ஓடும் நர்மதா நதிக்கரையில், பட்டேலின் 143 வது பிறந்த நாளில் ஒற்றுமைக்கான சிலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.[2] இதுவே உலகின் மிக உயரமான சிலையாகும் (182 அடி). மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு:இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் பகுப்பு:1875 பிறப்புகள் பகுப்பு:1950 இறப்புகள் பகுப்பு:குஜராத் மக்கள் பகுப்பு:1ஆவது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு:காந்தியவாதிகள் பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
சர்தார் வல்லப்பாய் படேல் எப்போது இறந்தார்?
டிசம்பர் 15, 1950
44
tamil
eaa4b6fec
நெல் அல்லது அரிசி (ஒலிப்பு) (rice) என்பது புல் வகையை சேர்ந்த ஒரு தாவரமாகும். இது தென்கிழக்காசியாவில் தோன்றியது. இது ஈரநிலங்களில் வளரக்கூடியது. நெற்பயிர் சராசரியாக ஐந்து மாதங்கள் வரை வளரக் கூடிய ஓர் ஆண்டுத் தாவரமாகும். இப்பயிரின் விதையின் உமி என அழைக்கப்படும் மேலுறை நீக்கப்பட்ட பின் உணவாகப் பயன்படுத்தப் படுகிறது. இவ்வாறு மேலுறை நீக்கப்பட்ட விதை அரிசி என்று அழைக்கப்படுகிறது. ஆனால், அரிசிக்கு முளைக்கும் திறன் கிடையாது. நெல், சோளம், கோதுமைக்கு அடுத்து அதிகம் பயிரிடப்படும் தானியம் ஆகும். வரலாறு உலகில் முதன் முதலாக ஆசிய நெல் (Oryza sativa), ஆப்பிரிக்க நெல் (Oryza glaberimma) என இரு இன நெற்பயிர்கள் பயிரிடப்பட்டன. ஆசியாவில் நெல் சாகுபடி கி.மு 4500க்கு முன்பாகவே பல நாடுகளில் ஒரே சமயத்தில் துவங்கியதாகக் கருதப்படுகிறது. மேற்கூறிய இருவகை நெல் இனங்களின் பொதுவான முன்னோடி காட்டு நெல் இனம் Oryza rufipogan ஆகும். ஆசிய நெல் சிற்றினம் இமயமலை அடிவாரத்தில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இந்தியப்பகுதியில் Oryza sativa var. indica வும், சீனப்பகுதியில் Oryza sativa var. japonica வும் தோன்றின. இந்தியாவில், ஔவையார் மற்றும் பல பழம்பெரும் புலவர்கள் பாடிய நெல் மற்றும் அரிசி பற்றிய பாடல்கள் பல உள்ளன. நெல் விளையும் பகுதிகளில், நெல் நடுதல், அறுவடை போன்ற காலத்தையொட்டி பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. நெல் பற்றிய சில சமஸ்கிருத குறிப்புகளும் உள்ளன. சீனாவில், விவசாயம், நெல் ஆகிய இரண்டையும் குறிக்கும் சொல் ஒன்றே (XXX) ஆகும். ஆப்பிரிக்காவில் நெல் சுமார் கி.மு 1500 முதல் பயிரிடப்பட்டு வருகிறது. கி.மு 1500 – 800 ஆம் ஆண்டுகளில், நைகர் நதித்துவாரத்தில் பயிரிடப்பட்டு, பின் செனெகல் நாடு வரை பரவியது. எனினும், இதன் சாகுபடி மேற்கொண்டு பரவவில்லை. அரேபியர்களால் கி.பி 7 – 11 ஆம் நூற்றாண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆசிய நெல் இனங்கள் பயிரிடப்பட்டன. ஜப்பானில் நெற்பயிர் சீனாவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது என ஒரு சாரார் கருதுகின்றனர். ஆனால், ஜப்பானியர்கள் முன்னாளில் நீளமான தண்டுடைய, நீரில் வளரும் நெற்பயிர்களை படகில் சென்று அறுவடை செய்ததாக சில குறிப்புகளும் உள்ளன. உலர்நில (மானாவாரி) நெல் சாகுபடி கி.மு 1000 ஆம் ஆண்டு ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னாளில், கி.மு 300 இல் தற்கால நீர்நில சாகுபடி முறை யாயோய் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆசிய நெல் இனம் மத்திய கிழக்கு நாடுகளிலும் மத்திய தரைக்கடல் பகுதிகளிலும் சுமார் கி.மு 800 இல் பயிரிடத் துவங்கப்பட்டது. மவுரியர்கள் நெற்பயிரை ஸ்பெயின் நாட்டுக்கு அறிமுகப்படுத்தினர். 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நெல் இத்தாலி, பிரான்ஸ் நாடுகளுக்கும் பின்னர் எல்லா கண்டங்களுக்கும் பரவியது. 1694இல் அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில், மடகாஸ்கரிலிருந்து நெல் அறிமுகமானது. புயலால் பாதிப்படைந்து 'சார்ல்ஸ்டன்' என்ற துறைமுகத்துக்கு வந்த கப்பலின் தலைவர் ஒரு நெல் மூட்டையை அங்குள்ள விவசாயிகளுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். அவர்கள் அதனை பயிரிடத் தொடங்கினர். தென் அமெரிக்காவில் நெல் 18ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. முந்தைய அமெரிக்காவின் தென் கரோலினா, ஜார்ஜியா மாகாணங்கள், மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட கறுப்பின அடிமைகள் மூலம் நெல் பயிர் செய்து மிக அதிக இலாபம் ஈட்டினர். இவ்வடிமைகளுக்கு முன்னமே நெல் பயிர் பற்றிய அறிவு இருந்ததால், அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டனர். நில முதலாளிகள் அடிமைகளிடமிருந்து பாத்தி கட்டுதல், நீர் தேக்குதல் போன்ற உத்திகளை தெரிந்து கொண்டனர். முதலில் அமெரிக்காவில், நெல் கையால் (மர உலக்கை கொண்டு) குத்தப்பட்டு, பின் கூடைகளில் புடைக்கப்பட்டு அரிசி பிரித்தெடுக்கப்பட்டது. இவ்வுத்திகளும் ஆப்பிரிக்க அடிமைகளே அறிமுகப்படுத்தினர். பின்னர் 1787 இல், நீரால் இயங்கும் அரிசி அரவை இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு நெல் சாகுபடி நல்ல இலாபம் ஈட்டியது. 20ஆம் நூற்றாண்டில், அமெரிக்க உள்னாட்டு போருக்குப் பின் அடிமைகள் இல்லாமையால் நெல் சாகுபடி குறைந்து விட்டது. சங்கப்பாடல்களில் சங்க இலக்கியங்களில் நெல் பற்றிய பின்வரும் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன: நன்செய் நிலத்தில் விளையும் நெல்லை வெண்ணெல் [1] என்பர். புன்செய் நிலத்தில் வானம் பார்த்த பயிராக விளைந்த நெல் ஐவன வெண்ணெல் [2] எனப்படும். அண்மைக்காலம் வரையில் இதனைப் பச்சைமலைப் புனக்காட்டில் விளைவித்தனர். பண்டைய சேமிப்பு முறை மற்றும் நெற்களஞ்சியங்கள் அறுவடை செய்யப்பட்ட நெல்லைப் பாதுகாப்பாக சேமித்து வைக்க பெரிய மண் பானைகள், பத்தாயம் அல்லது குதிர் எனும் மரப்பலகைகளால் செய்யப்பட்ட அமைப்பு மற்றும் செங்கற்கள் கொண்டு அமைக்கப்பட்ட நெற்களஞ்சியங்கள் ஆகியவை பண்டைய நாட்களில் இருந்தன.[3] 600 ஆண்டு பழைமையான நெற்களஞ்சியங்கள் பல இந்துத் திருக்கோயில்களில் அமைந்துள்ளன. திருவரங்கம், திருஆனைக்கா, திருவரங்கம் கோயில்(திருக்கோயிலூர் அருகில்), அழகர்கோயில், தஞ்சாவூர், பாபநாசம், திருப்பாலத்துறை திருக்கோயில்களில் இத்தகைய நெற்களஞ்சியங்கள் உள்ளன.[3] பாரம்பரிய நெல் வகைகள் இந்தியாவில் 200000 மேற்பட்ட நெல் வகைகள் இருந்துள்ளதாக அறியப்படுகிறது.[4] தமிழக பாரம்பரிய நெல் வகைகள் வாடன் சம்பா முடுவு முழுங்கி களர் சம்பா குள்ள்க்கார் நவரை குழிவெடிச்சான் கார் அன்னமழகி இலுப்பைப்பூ சம்பா மாப்பிள்ளைச் சம்பா கருங்குறுவை கல்லுண்டை கருடன் சம்பா. பனங்காட்டு குடவாழை சீரக சம்பா வாசனை சீரக சம்பா விஷ்ணுபோகம்[5] கைவரை சம்பா அறுபதாம் குறுவை பூங்கார் காட்டு யானம் தேங்காய்ப்பூ சம்பா கிச்சடி சம்பா நெய் கிச்சி பாரம்பரிய நெல் வகைகள் காக்கும் முயற்சிகள் நமது நெல்லைக் காப்போம் அமைப்பு பாரம்பரிய நெல் வகைகள் காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆண்டு தோறும் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 27 ஆயிரம் விவசாயிகளுக்குப் பாரம்பரிய நெல் வகைகளை விநியோகித்துள்ளார்கள் என அறியப்படுகிறது.[6] உளுந்தூர்பேட்டை, ஸ்ரீசாரதா ஆசிரமம், ‘அக்ஷய க்ருஷி கேந்திரா’ (வேளாண்மை மையம்) பாரம்பரிய நெல் வகைகளில் 150 வகைகளை சேகரித்து, பெண்விவசாயிகளுக்கு பாரம்பரிய விதைநெல் வழங்கி பாரம்பரிய நெல் விதைகளைப் பாதுகாத்து வருகின்றது.[7][8][9][10] கர்நாடகத்தைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி ஸ்ரீனிவாசமூர்த்தி, இயற்கை விவசாய முறையின் உதவியுடன் பாரம்பரியமான 200 நெல் வகைகளைப் புதுப்பித்துள்ளார்.[11] நட்வர் சாரங்கி எனும் ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்தின் நரிசு கிராமத்தின் ஓய்வுபெற்ற பள்ளித் தலைமையாசிரியர் 360 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு, பாதுகாத்துள்ளார்.[12] ஊட்டச்சத்து உற்பத்தி உலக நெல் உற்பத்தி 1960 ஆம் ஆண்டில் 20 கோடி டன்களிலிருந்து சீராக உயர்ந்து 2004 இல் 60 கோடி டன்களாய் இருந்தது. அரிசி உற்பத்தி நெல் அளவில் சராசரியாக 68% ஆகும். 2004இல் சீனா (31%), இந்தியா (20%) மற்றும் இந்தோனேசியா (9%) நாடுகள் உலக நெல் உற்பத்தியில் முன்னிலை வகித்தன. உலக அளவில் மிக சிறிதளவே (உற்பத்தியில் 6%) நெல் ஏற்றுமதி ஆகிறது. ஏற்றுமதியில், தாய்லாந்து (26%), வியட்நாம் (15%), அமெரிக்கா (11%) ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. இந்தோனேசியா, வங்கதேசம், பிரேசில்,இந்தியா ஆகிய நாடுகள் அதிக அளவில நெல் இறக்குமதி செய்கின்றன. தமிழ்நாட்டில் தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டிணம் மாவட்டங்களில் நெல் அதிக அளவில் விளைகிறது. நெல் சாகுபடி உலகில் பெரும்பாலான மக்களின் அன்றாட உணவான அரிசி நெற்பயிரிலிருந்தே கிடைக்கிறது. உலகில் அதிகம் உண்ணப்படும் தானியம் அரிசியே ஆகும். உலகில், சோளத்திற்கும், கோதுமைக்கும் அடுத்ததாக, அதிகம் பயிரிடப்படுவது நெல்லே ஆகும். நெற்பயிர் மலிவாக வேலையாட்களும், அதிக மழையோ மற்ற நீராதாரங்களோ உள்ள பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. அதிக அளவில் மனித உழைப்பும், நீரும் நெல் பயிரிட தேவைப்படுகின்றன. இருப்பினும், மலைசாரல்களிலும் நெல் பயிரிடப்படுகிறது. ஆசியாவில் தோன்றினாலும், தொன்றுதொட்டே செய்யப்பட்ட நெல் வணிகத்தின் மூலம், அது உலகெங்கும் பயிரிடப்படுகிறது. நெற்பயிர் நீர் தேங்கிய பாத்திகளில் வளர்க்கப்படுகிறது. ஒரு சில நாடுகளில், சுமார் 15 செ.மீ நீர் தேக்கப்படுவதால், சில நாடுகளில் நெல்லுடன் மீன்களும் வளர்க்கப்படுகின்றன. நெற்பாத்திகள் நீர் தேக்கி வளர்க்கப்படுவதால், இயற்கையாகவே களைசெடிகள் குறைவாக இருக்கும். மண், தட்பவெப்பம் விதைத்தல், நடுதல் நீராதாரத்தைப் பொருத்து நெல் 'உலர்நில முறை' அல்லது 'நீர்நில முறை' ஆகிய முறைகளில் பயிரிடப்படுகிறது. உலர்நில முறையில், விதைகள் நேரடியாக விளைநிலத்தில் விதைக்கப்பட்டு, பின் முளைத்தலுக்கேற்ப அதிகப்படியான நெல் நாற்றுக்கள் களையப்படுகின்றன. நீர்நில முறையில், நெல் விதைகள் நாற்றங்கால் எனப்படும் சிறு நிலத்தில் விதைக்கப்பட்டு நாற்றுக்கள் பின்னர் விளை நிலத்தில் சரியான இடைவெளியில் நடப்படுகின்றன. இம்முறைகளின் பெயர் குறிப்பிடுவது போல, நீர்நில முறைக்கு அதிக நீர் தேவை. ந்நீர் நில முறையிலும் நேரடி விதைப்பு மூலம் நெல் விதைக்கப்பட்டு பின்னர் முளைத்தலுக்கேற்ப, அதிகமாக முளைத்த இடத்திலுள்ள நாற்றுகள் குறைவாக முளைத்த இடங்களில் நடப்படுகிறது. நாற்றங்கால் அமைத்தல் நீர் நில நெல் சாகுபடியில் நாற்றங்கால் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக, ஒரு ஏக்கர் நிலத்திற்கு, ஒரு சென்ட் (அதாவது, நடவுவயல் பரப்பில் 10%) நாற்றங்கால் தேவை. நடவுக்கு ஒரு மாதம் முன்பாக நாற்றங்கால் தயார் செய்யப்படுகிறது. நாற்றங்கால் நில மண் கட்டிகளின்றி நன்றாக தூளாகும் வரை உழுது, நீர் பாய்ச்சப்படுகிறது. சில விவசாயிகள், உழுவதற்கு சில நாட்கள் முன், நிலத்தில் நீர் பாய்ச்சுகின்றனர். இது களை விதைகளை முளைக்கச்செய்கிறது. பின்னர் உழும்போது, களைச்செடிகள் நிலத்தில் புதைக்கப்படுவதால் களை நிர்வாகம் குறைகிறது. ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு சுமார் 200 கிலோ மாட்டுச்சாண உரமிட்டு மீன்டும் ஈரநிலம் உழப்படுகிறது. பின், ஓரங்களில் வடிகால் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு, நடுவில் சற்றே மேடாக ஆனால் சமமாக இருக்குமாறு நிலம் சமன் செய்யப்படுகிறது. அடியுரமாக, 5- 10 கிலோ தழைச்சத்து (நைட்ரஜன்), 2 கிலோ உயிர்ச்சத்து (பாஸ்பரஸ்), 5 கிலோ மணிச்சத்து (பொட்டாசியம்), 3- 4 கிலோ சிங்க் சல்ஃபேட் (Zinc sulphate) இடப்படுகிறது. பின், ஒரு சென்ட் நாற்றங்காலூகு, 10- 12 கிலோ விதை சீராக தூவப்படுகிறது. சில நாடுகளில், விதைத்தபின் நாற்றங்கால் வாழை இலைகள் கொண்டு மூடப்படுகிறது. விதைத்த 5 நாட்களில், தேவைப்பட்டால் கை களையெடுப்போ, களைக்கொல்லியோ தெளிக்கப்படுகின்றன. இரும்பு சத்தின்றி நாற்றுகள் மஞ்சளானால், 2% ஃபெரஸ் சல்ஃபேட் (Ferrous suphate) தெளிக்கப்படுகிறது. நாற்று பறிக்க 10 நாட்களுக்கு முன் (விதைத்து சுமார் 3 வாரங்களில்), மேலுரமாக 1- 2 கிலோ தழைச்சத்து இடப்படுகிறது. விதை தேர்வு செய்தல் பொதுவாக, விவசாயிகள் முந்தைய பருவத்திலிருந்தோ மற்ற விவசாயிகளிடமிருந்தோ விதைகளைப் பெறுகின்றனர். அறுவடைக்கு முன், நிலத்தின் நல்ல பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு, பிற இரகங்களோ, களைகளோ நீக்கப்படுகின்றன. அறுவடைக்குப்பின், விதைக்கான நெல், கையால் போரடிக்கப்பட்டு (செடியிலிருந்து விதை உதிர்த்தல்), உலர்த்தி, காற்றில் தூற்றப்படுகிறது. பின்னர் விதைகள் பாதுகாப்பாக, பூச்சி தாக்குதலை தடுக்க நொச்சி இலைகள் அல்லது வேப்பிலைகள் கலந்து வைக்கப்படுகின்றன. விதைக்குமுன், நீரில் இடப்பட்டு மூழ்கும் விதைகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றன. நடவு வயல் தயாரிப்பு நாற்றங்காலில் 3 – 4 வாரங்கள் வளர்ந்தபின் நாற்றுகள் பறிக்கப்பட்டு கட்டப்படுகின்றன. நாற்று வளர்ச்சியை பொறுத்து நாற்றாங்காலில் இருபது நாட்களிலிருந்து அதிகபட்சமாக 35 நாட்கள் வரை நாற்று வளர்க்கப்படுகிறது. இவை பின் சுமார் 5 செ.மீ நீர் தேங்கிய நடவு வயலில் நடப்படுகின்றன. நாற்றுக்கள் குறுவையில் 15 X 10 செ.மீ இடைவெளியும், தாளடியில் 20 X 10 செ.மீ இடைவெளியும் விட்டு நடப்படுகின்றன. ஒவ்வொரு முறை நீர் அளவு குறைந்து நிலம் தெரியும்போதும், நீர் பாய்ச்சி 5 செ. மீ நீர் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படுகிறது. தேவையான தழைச்சத்து பிரித்து உரமாக இடப்படுகிறது. நட்ட ஐந்தாம் நாள் களைக்கொல்லி உபயோகித்தோ அல்லது 15 ஆம் நாள் கைகளாலோ களைகள் நீக்கப்படுகின்றன. தமிழக கிராமப்புறங்களில் நடவுப்பணி காலத்தில் அதற்கென உள்ள மக்களால் நடவு மேற்கொள்ளப்படுகிறது. சமீபகாலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடவு இயந்திரங்கள் சில இடங்களில் நல்ல பயனை கொடுத்தாலும் பெரும்பாலான விவசாயிகள் நடவுப்பணிக்கு விவசயக்கூலிகளை வைத்தே நடவு மேற்கொள்கின்றனர். இயந்திரங்களின் பயன்பாடு தமிழகத்தில் இதுவரை பரவலாகவில்லை. தமிழகத்தின் சில மாவட்டங்களில் நடவு சமயத்தில் குலவை இட்டு நடவுப்பணிகளை தொடங்குவது வழக்கத்தில் உள்ளது. திருத்திய நெல் சாகுபடி உலக நெல்லாராய்ச்சி நிறுவனம் (International Rice Research Institute, IRRI) மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆகியவை 'திருத்திய நெல் சாகுபடி' முறையை அறிமுகம் செய்துள்ளன. இதன் நோக்கம், நெல்லுக்கான நீர் தேவை, விதையளவு, தழைச்சத்து உரப்பயன்பாடு மற்றும் களை வளர்ச்சி யை குறைப்பதும், இதன் மூலம் அதிக விளைச்சலும், இலாபமும் பெறச்செய்வதும் ஆகும். இம்முறைப்படி, பாய் நாற்றஙகால் நடவு வயலின் மிக அருகிலேயே அமைக்கப்படுகிறது. விவசாயிகளைப் பொருத்த வரை நெல் இரகங்கள் பயிரிடும் காலம், முற்றும் காலம், கண்டுபிடிக்கப்பட்ட ஆராய்ச்சி நிலையம் ஆகிவற்றைப் பொருத்து வகைப்படுத்தப்படுகின்றன.இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் அரிசி நிறத்தைப் பொருத்து வெள்ளை, கருப்பு அல்லது சிகப்பு என நெல் இரகங்கள் உள்ளன. ஆப்பிரிக்கா போன்ற வறண்ட நிலப்பகுதிகளுக்கான அதிக விளைச்சல் தரக்கூடிய நெல் இரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை 'ஆப்பிரிக்காவுக்கான புதிய நெல்' (New Rice for Africa; XXX) என அழைக்கப்படுகின்றன. இவை மேற்கு ஆப்பிரிக்காவில் உணவுப் பஞ்சமில்லாதிருக்க உதவும் என நம்பப்படுகிறது. அரிசிகள் நுகர்வோரைப் பொருத்தவரை நெல் இரகங்கள் பெரும்பாலும் அவற்றிலிருந்து கிடைக்கும் அரிசியின் வடிவத்தாலும், குணத்தினாலும் வகைப்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இந்தியாவில் நீளமான, மணமுடைய 'பாஸ்மதி' அரிசி, நீளமான, சன்னமான 'பாட்னா' அரிசி, குட்டையான 'மசூரி' அரிசி ஆகிய இரகங்கள் பயிரிடப்படுகின்றன. தென்னிந்தியாவில், நீளமான சன்ன இரக 'பொன்னி' அரிசி பிரபலமானது. ஈரான் நாட்டில், ஹஷேமியுடனும் மிகவும் பிரபலமான நெல் இரகங்களை ஒன்றாகும்.[18] புழுங்கல் அரிசி தென் மற்றும் கிழக்கிந்தியாவில் அறுவடைக்குப்பின் நெல் நீரில் வேகவைத்து, உலர்த்தி, ஆலையில் அரைத்து அரிசியாக்கப்படுகிறது. இவ்வகை அரிசி 'புழுங்கல்' அரிசி என்று அழைக்கப்படுகிறது. கடின நெல் இரகங்களே இதற்கு உகந்தவை. புழுங்கல் அரிசி ஆலையில் தீட்டப்படும்போது, பல சத்துக்களை இழப்பதில்லை; எளிதில் செரிமாணம் ஆகக்கூடியது. ஆனால், வேக வைக்கப்பட்டதால், ஒரு வினோதமான வாசம் உடையதாய் இருக்கும். புழுங்கல் அரிசி தென்னிந்தியாவில் 'இட்லி' தயாரிக்கவும், உழைக்கும் வர்க்கத்தினரால் உணவுக்கும் பயன் படுத்தப்படுகிறது. பச்சரிசி அறுவடையான நெல்லை,வேக வைக்காமல், நேரடியாக ஆலையில் அரைப்பதால் கிடைக்கும் அரிசியைப் பச்சரிசி என்பர்.இவ்வித அரிசியை விரும்பி உண்ணுவோரும் உண்டு. செறிமானத்திறனில் இடைஞ்சல் வருவதாகச் சொல்லி, பலர் உண்ணுவதில்லை. மல்லிகை அரிசி தாய்லாந்தின் 'மல்லிகை' அரிசி (Thai Jasmine rice) நீள அரிசி வகை ஆகும். இவ்வகை நீல அரிசியில் அமைலோபெக்டின் குறைவாக இருப்பதால், வேகவைக்கப்படும்போது, ஒட்டும் தன்மை குறைவாக இருக்கும். சீனாவிலும், ஜப்பானிலும் பெரும்பாலும், குட்டையான ஒட்டும் தன்மை அதிகமுள்ள அரிசி இரகங்களே பயன்படுத்தப்படுகின்றன. சீன உணவகங்களில் நீளமான சற்றே ஒட்டும் தன்மையுள்ள அரிசி பயன்படுத்தப்படுகிறது. மணமுடைய அரிசி மணமுடைய அரிசி இரகங்கள் இயற்கையாகவே ஒரே மாதிரியான மாறாத மணம் கொண்டவை. இந்திய இரகங்களான 'பாஸ்மதி', 'பாட்னா' ஆகிய இரகங்கள் உலக அளவில் குறிப்பிடத்தக்கவை. அமெரிக்காவில் 'டெக்ஸ்மதி' என்ற பெயரில் விற்கப்பட்ட ஒரு மண அரிசி இரகம் 'காப்புரிமை' சமப்ந்தமான ஒரு பெரிய சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இது அமெரிக்க நீள அரிசியையும், பாஸ்மதியையும் கொண்டு உருவாக்கிய கலப்பின அரிசியாகும். நெல் மரபணு ஆராய்ச்சி நெல் தாவரத்தின் மரபணு வரைபடம் (en:gene map - எந்த மரபணு எந்த நிறப்புரியில், எந்த மரபணு இருக்கையில் உள்ளது என்பதைக் காட்டும் வரைபடம்) அறியப்பட்டுள்ளது. இவ்வரைபடம் முழுமையாக அறியப்பட்ட முதல் உயர் உயிரினம் என்ற சிறப்பு நெல்லையே சாரும். மேலும், புல் வகைத் தாவரங்களின் மாதிரியாக இண்டிக்கா (indica), ஜப்போனிக்கா (japonica) என்னும் இரு பயிரிடும் நெல் வகைகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றின் மொத்த மரபணுத்தொகையிலுள்ள மரபணு வரிசை (gene sequence) முற்றிலும் அறியப்பட்டு, 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.[19] அரிசியில் உயிர்ச்சத்து ஏ சத்தை அதிகரிக்க, உயிர்ச்சத்து ஏ க்கு முன்னோடியான பீட்டா கரோட்டீன் அதிகம் கொண்ட 'தங்க அரிசி' என்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல் இரகம் அறிவியலாளர்களால் உருவாக்கப்பட்டு, தொடர்ந்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகிறது[20]. மனித உடலில் இந்த பீட்டா கரோட்டீன் உயிர்ச்சத்து ஏ யாக மாற்றப்படக் கூடியது.[21] இது தேவையான அளவு பீட்டா-கரோட்டினை தருமா என்பதும், மரபணு மாற்று உணவு பாதுகாப்பானவை தானா என்பதும் பற்றிய சர்ச்சை தொடர்ந்து வருகிறது. நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள் நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள்[22] நெற்பேன் நெல் குருத்துப் பூச்சி நெல் இலைச் சுருட்டுப் புழு நெல் ஆனைக் கொம்பன் ஈ நெல் தத்துப் பூச்சிகள் கதிர் நாவாய்ப் பூச்சி அடிக்குறிப்பு இணைய இணைப்புகள் at Curlie at the Wayback Machine(archived October 21, 2010) by Isbel Diaz Torres, Havana Times, June 16, 2010 Unknown parameter |lastauthoramp= ignored (|name-list-style= suggested) (help); CS1 maint: discouraged parameter (link) பகுப்பு:தமிழ் பொங்கல் பகுப்பு:காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள் பகுப்பு:தமிழ்நாட்டில் வேளாண்மை
நெல் தாவரத்தின் அறிவியல் பெயர் என்ன?
Oryza sativa
528
tamil
099f3a0d3
பாக்டீரியா (இலங்கை வழக்கு: பற்றீரியா, ஆங்கிலம்: Bacteria) என அழைக்கப்படுபவை நிலைக்கருவிலி பிரிவைச் சேர்ந்த நுண்ணுயிரிகளில் மிகப்பெரிய ஆட்களத்தில் உள்ள உயிரினங்கள் ஆகும். பொதுவாகச் சொல்வதென்றால் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர் வகைகளில் ஒரு பிரிவுக்கு பாக்டிரியாக்கள் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது எனக் கூறலாம். பாக்டீரியா என்னும் சொல் கிரேக்கச் சொல்லாகிய βακτήριον, (baktērion, பா'க்டீரியொன்) என்பதில் இருந்து வந்தது (இது βακτρον என்பதன் சுருக்கம் என்கிறது ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகரமுதலி). பாக்டீரியாக்களே உலகில் மிகவும் அதிகமாக உள்ள உயிரினம் ஆகும். மண், நீர், புவியின் ஆழமான மேலோட்டுப் பகுதி, கரிமப் பொருட்கள், தாவரங்கள் விலங்குகளின் உடல்கள் என்று அனைத்து இடங்களிலும் வாழும். சில வகை பாக்டீரியாக்கள் உயிரிகளுக்கு உகந்ததல்லாத சூழல் எனக் கருதப்படும் வெந்நீரூற்றுக்கள், கதிரியக்க கழிவுகள்[2] போன்றவற்றிலும் வாழும் தன்மை கொண்டனவாக உள்ளன. இவை பிற உயிரினங்களுடன் கூட்டுயிரிகளாகவும் வாழும் திறனைக் கொண்டவையாக இருக்கின்றன. பெரும்பாலான பாக்டீரியாக்கள் ஒரு கலம் மட்டும் கொண்டதாகவும் நுண்ணோக்கியில் மட்டும் பார்க்க வல்லதாகவும் உள்ளன. இவை உயிரணுக் கரு அற்று, பச்சையவுருமணிகள், இழைமணிகள் போன்ற கல நுண்ணுறுப்புக்கள் ஏதுமின்றி மிக எளிய கல அமைப்பை கொண்டுள்ளன. இவை கோளவுரு, கோலுரு, சுருளியுரு போன்ற பல்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன. தாவரங்கள், பூஞ்சைகள் போல் பாக்டீரியாக்களும் வழக்கமாக கலச்சுவரைக் கொண்டிருந்தாலும் அவற்றின் அடக்கக்கூறுகள் மாறுபட்டவையாகும். பெரும்பாலானவை நகரிழைகள் துணை கொண்டு ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்கின்றன. எனினும், இவை பிறகுழுக்கள் பயன்படுத்தும் நகரிழைகளில் இருந்து வேறுபட்டவை.பாக்டீரியாக்களில் மனிதனுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய கொடிய பாக்டீரியாக்களும் உள்ளன. மனித உடலில், மனித உயிரணுக்களை விட 10 மடங்கிற்கு அதிகமாகவே பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. தோலும், குடலுமே மிக அதிகளவில் பாக்டீரியாக்களைக் கொண்ட உடல் பகுதிகளாகும்.[3]. மனித உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை காரணமாக, இவற்றில் அநேகமானவை உடலுக்குத் தீங்கு விளைவிக்காத நிலையிலேயே இருக்கும். ஒரு சில நன்மை பயக்கும் பாக்டீரியாக்களாகவும் இருக்கும். அதேவேளை சில பாக்டீரியாக்கள் நோய்க்காரணிகளாகத் தொழிற்பட்டு, தொற்றுநோய் விளைக்கும் நுண்ணுயிரிகளாகவும் இருக்கும். நோய் விளைக்கும் நுண்ணுயிரிகளில் அநேகமானவை பாக்டீரியாக்களாகும். ஊட்டச்சத்து மீள்சுழற்சியிலும் (nutrient cycles) பாக்டீரியாக்கள் மிக முக்கிய பங்காற்றி, தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற உதவுகின்றன. வரலாறு 1676 இல், முதன் முதலாக தானாகவே தயாரித்த ஒற்றை வில்லை நுணுக்குக்காட்டியினூடாக (single-lens microscope), பாக்டீரியாவை அவதானித்தவர் அன்டன் வான் லீவன்ஃகூக் என்பவராவார்[4]. அவர் தான் அவதானித்ததை "animalcules" எனப் பெயரிட்டு, Royal Society க்கு பல கடிதங்கள் மூலம் தெரியப்படுத்தினார்[5][6][7]. பின்னர், 1838 இல் கிறிஸ்டியன் கொட்பிரைட் எகிரன்பெர்க் (Christian Gottfried Ehrenberg) என்பவரே பாக்டீரியா என்ற சொல்லைப் பாவித்தார்[8]. உருவவியல் இவற்றுள் பல மிகச்சிறிய அளவுடையதாகும்; வழக்கமாக 0.5-5.0µm நீளம் இருக்கும். எனினும் Thiomargarita namibiensis, Epulopiscium fishelsoni போன்றவை கிட்டத்தட்ட 0.5 மி.மீ அளவு வளரக்கூடியதாகவும், வெறும் கண்களால் பார்க்கக் கூடியதாகவும் இருக்கும்[9]. பாக்டீரியாக்களின் உருவம் அநேகமாக கோளவடிவிலோ, கோல் வடிவிலோ இருக்கும். கோள வடிவானவை கோளவுரு நுண்ணுயிர் (கொக்கசு - Coccus) எனவும், கோல் வடிவானவை கோலுரு நுண்ணுயிர் (பசிலசு - Bacillus) எனவும் அழைக்கப்படும். சில இவற்றிலிருந்து சிறிது வேறுபட்ட வடிவங்களிலோ, சுருளி வடிவிலேயோ காணப்படும். வேறும் சில மிக நுண்ணியவையாகவும், கலச்சுவர் அற்றதாகவும் இருக்கும். அவை மிகுநுண்ணுயிர் (மைக்கோபிளாசுமா - Mycoplasma) என அழைக்கப்படும். இந்த மிகுநுண்ணுயிரானது அதி பெரிய வைரசின் அளவில், கிட்டத்தட்ட 0.3µm பருமனையுடைய, மிகவும் சிறிய பாக்டீரியாவாகும்[10]. கலக் கட்டமைப்பு பக்டீரியக் கலங்கள் உலகில் மிகச்சிறிய கலங்களை ஆக்கின்றன. இவை பொதுவாக மைக்ரோமீற்றரில் அளவிடப்படும் வீச்சில் காணப்படுகின்றன. எனினும் இவை கலத்தினுள் பல்வேறு கட்டமைப்புக்களைக் கொண்டுள்ளன. மெய்க்கருவுயிரி கலத்துக்கு ஒப்பிடக்கூடியளவுக்குச் சிக்கலான அனுசேபத்தைக் கொண்டுள்ளன. பொதுவாக மெய்க்கருவுயிரிக் கலங்களின் பத்திலொரு பகுதியின் அளவிலேயே இவை காணப்படுகின்றன. பாக்டீரியக் கலங்கள் ஏனைய அனைத்துக் கலவகைகளைப் போல பொஸ்போலிப்பிட்டு மென்சவ்வால் சூழப்பட்டுள்ளன. பொதுவாக இவற்றில் மெய்க்கருவுயிரிகளில் காணப்படுவது போல மென்சவ்வால் சூழப்பட்ட புன்னங்கங்கள் காணப்படுவதில்லை. பாக்டீரியாக்களில் மென்சவ்வால் சூழப்பட்ட கருவோ, இழைமணியோ, பச்சையுருமணியோ காணப்படுவதில்லை. எனவே இவை அர்க்கியாக்களுடன் இணைந்து நிலைக்கருவிலி கல ஒழுங்கமைப்பைக் காட்டுகின்றன. ஒளித்தொகுப்பில் ஈடுபடும் பாக்டீரியாக்களில் ஒளித்தொகுப்புப் புடகங்கள்/ தைலக்கொய்ட் மென்சவ்வு எனப்படும் கலத்தக மென்சவ்வுக் கட்டமைப்பு காணப்படுகின்றது. ஏனைய பக்டீரியாக்களிலும் இதற்கு ஒப்பான கலத்தக மென்சவ்வுகள் காணப்படுகின்றன. ஆனால் டி.என்.ஏயைச் சூழ எந்தவொரு மென்சவ்வும் காணப்படுவதில்லை. பாக்டீரியாக்களில் திட்டமான கரு காணப்படுவதில்லை. டி.என்.ஏ சுயாதீனமாகக் கலத்தின் குழியவுருவில் வளைய நிறமூர்த்தம்/ வளைய டி.என்.ஏயாகக் காணப்படும். டி.என்.ஏயுடன் ஹிஸ்டோன் புரதம் சேர்ந்து மெய்க்கருவுயிரிகளை ஒத்த நிறமூர்த்தக் கட்டமைப்பை உருவாக்குவதில்லை. பாக்டீரியாக்களில் மெய்க்கருவுயிரிகளினதை விடச் சிறிய இரைபோசோம் காணப்படுகின்றது. இவை 70S வகை இரைபோசோம்களாகும். பாக்டீரியாக்களில் கிளைக்கோஜன் போன்ற சேதனச் சேர்வைகளின் உணவொதுக்குகளும் காணப்படுகின்றது. சயனோபாக்டீரியாக்களில் ஆக்சிசன் வாயுவைச் சேமிக்கும் வாயுச் சேமிப்புகளும் உள்ளது. சேமித்துள்ள ஆக்சிசன் வாயுவைப் பயன்படுத்தி சயனோபாக்டீரியாக்களால் நீரில் மிதக்கக்கூடியதாக உள்ளது. பாக்டீரியாக்களின் கலச்சுவர் மிகவும் தனித்துவமானது. பாக்டீரியக் கலச்சுவரைக் கொண்டே அவை ஏனைய உயிரினங்களிலிருந்து பிரித்தறியப்படுவதுடன் அவற்றினுள்ளும் வகைப்படுத்தப்படுகின்றன. அனைத்து பக்டீரியாக்களிலும் பெப்டிடோகிளைக்கனாலான (peptidoglycan) கலச்சுவர் காணப்படுகின்றது. கலச்சுவரின் கட்டமைப்பு வேறுபாட்டால் பாக்டீரியாக்களின் இரு வகைகளும் கிராம் சாயமேற்றலுக்கு வெவ்வேறு விளைவைக் கொடுக்கின்றன. கிராம் நேர் பக்டீரியாக்களில் தடிப்பான பெப்டிடோகிளைக்கன் கலச்சுவர் உள்ளது. கிராம் எதிர் பாக்டீரியாக்களில் மெல்லிய பெப்டிடோகிளைக்கன் கலச்சுவரும் அதற்கு வெளியே இலிப்போ-பல்சக்கரைட்டு மென்சவ்வும் காணப்படுகின்றன. இனப்பெருக்கம் பாக்டீரியாக்கள் பிரதானமாக இருகூற்றுப் பிளவு மூலம் இனம்பெருகுகின்றன. இதன் போது பாக்டீரியாவின் டி.என்.ஏ இரட்டிப்படைந்து இரு வளைய டி.என்.ஏக்கள் உருவாக்கப்படும். இதன் பின் மிக எளிமையாக கலம் இரண்டாக பிளக்கப்படுகின்றது. இவ்விருகூற்றுப் பிளவு கலம் ஓரளவுக்கு வளர்ச்சியடைந்த பின்னரே நடைபெறும். சரியானளவுக்குப் போசணை வழங்கப்பட்டால் அல்லது தற்போசணை பாக்டீரியா ஆயின் சரியான வளர்ச்சி நிபந்தனைகள் காணப்பட்டால் பாக்டீரியாக்கள் மிக வேகமாக இரட்டிப்படைகின்றன. இருகூற்றுப் பிளவு மிகவும் எளிமையான இனப்பெருக்க முறையென்பதால் பாக்டீரியாக்களின் இனப்பெருக்க வேகம் மிக அதிகமாகும். எனினும் இயற்கையில் உணவுத் தட்டுப்பாடு, போட்டி காரணமாக பாக்டீரியாக்கள் அவ்வளவு வேகமாக இனம்பெருகுவதில்லை. சக்தி மூலமும் அனுசேபமும் பக்டீரியாக்களில் அனுசேப முறையில் மிகப்பாரியளவான பல்வகைமை காணப்படுகின்றது. இதனாலேயே கடலின் அடிப்பகுதி முதல் நாம் உண்ணும் உணவிலும், எம் குடலிலும் மேலும் நாம் அவதானிக்கும் அனைத்து இடங்களிலும் பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. சில தற்போசணிகளாகவும், சில பிறபோசணிகளாகவும் உள்ளன. சில தம் சக்திக்காக சூரிய ஒளியையும், சில இரசாயனங்களையும், சில சேதனச் சேர்வைகளையும் நம்பியுள்ளன. பல பக்டீரியாக்களின் டி.என்.ஏயில் மிகவும் சிக்கலான உயிரிரசாயனச் செயன்முறைகளை நிகழ்த்துவதற்கான பாரம்பரியத் தகவல் சேமிக்கப்பட்டுள்ளது. எனவே இவற்றை தயிருற்பத்தி, சேதனப் பசளை உற்பத்தி, பாற்கட்டி உற்பத்தி, சூழல் மாசுக்களை நீக்கல், செம்பு,தங்கம் போன்ற உலோகங்களைப் பிரித்தெடுத்தல் போன்ற பல்வேறு கைத்தொழில் உற்பத்திகளில் பயன்படுத்த முடியும். இவ்வனைத்து உபயோகங்களுக்கும் பாக்டீரியாக்களில் உள்ள அனுசேபப் பல்வகைமையே காரணமாகும். கைத்தொழில் ரீதியிலான பயன்கள் பல்வேறு உணவு மற்றும் குடிபான உற்பத்திகள் பக்டீரியாக்களின் செயற்பாட்டால் உற்பத்தி செய்யப்படுகின்றன. பாலுற்பத்திப் பொருட்களான தயிர், யோகர்ட், பாற்கட்டி, சீஸ் போன்றவை பாக்டீரியாக்களின் நொதித்தல் செயற்பாடு மூலமே சாத்தியமாகின்றன. வினாகிரி உற்பத்தியில் Acetobactor பாக்டீரியா பயன்படுத்தப்படுகின்றது. சில பாக்டீரியாக்களால் ஐதரோகார்பன்களையும் பிரிகையடையச் செய்ய முடியும். எனவே சமுத்திரங்களில் கப்பல்கள் மூழ்குவதால் ஏற்படும் மசகெண்ணைக் கசிவை நீக்க பாக்டீரியாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில பாக்டீரியாக்களை பூச்சிகொல்லிகளாகவும் பயன்படுத்த முடியும். இரசாயன் பூச்சிகொல்லிகளால் சூழற்சமநிலை பாதிக்கப்படும் ஆனால் அவற்றிற்குப் பதிலீடாக பாக்டீரியாக்களைப் பயன்படுத்தினால் உயர் விளைச்சல் கிடைப்பதுடன் சூழற்சமநிலையும் பேணப்படுதல் பக்டீரியாக்களின் குறிப்பிடத்தக்க நன்மையாகும். Bacillus thuringiensis எனும் மண்ணிலுள்ள பாக்டீரியாவே பரவலாகப் பயன்படுத்தப்படும் பூச்சிகொல்லி பாக்டீரியாவாகும். தங்கம் உருவாக்கக்கூடிய பாக்டீரியா கியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ் (Cupriavidus metallidurans) மற்றும் டெல்ப்டியா அசிடோவரன்சு (Delftia acidovarans) போன்ற சிலவகைப் பக்டீரியாக்கள் நீர்ம நிலையில் உள்ள தங்க குளோரைடு என்ற பயனற்ற, நச்சுத்தன்மையான சேர்மத்தை தங்க நானோ துணிக்கைகளாக மாற்றவல்லன என்று சில ஆய்வுகளில் அறியப்பட்டுள்ளது.[11] மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரியல் துறை விஞ்ஞானிகள் கியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ் தூய 24 காரட் தங்கத்தை உருவாக்க கூடியன என்று கண்டறிந்துள்ளனர்.[12] இவை தங்கக் குளோரைடை தமது உயிரணுவில் எடுத்துக்கொண்டு அவற்றை நானோ தங்கத்துகள்களாக உருமாற்றி வெளிவிடுகின்றன. ஆய்வின் போது ஆய்வுகூடத்தில் ஒரு வாரம் கழித்து பார்த்த போது தங்க குளோரைடு, திடத் தங்கமாக (தங்கக் கட்டி) மாறியிருந்தது [13] [14] பக்டீரியாவால் ஏற்படும் நோய்கள் பாக்டீரியாக்கள் மனிதர்களின் பிரதான நோய்க்காரணிகளாகும். எனினும் இதுவரை அறியப்பட்ட பக்டீரிய இனங்களில் அனேகமானவை நோயைத் தோற்றுவிப்பதில்லை. பல பக்டீரிய இனங்கள் மனிதர்களின் குடலிலும், தோலிலும் ஒரு விதத் தீங்கும் புரியாமல்/ ஒன்றியவாழிகளாக வாழ்கின்றன. ஏற்பு வலி, நெருப்புக் காய்ச்சல், டிப்தீரியா, குடற் காய்ச்சல், கொலரா, தொழு நோய், சிபிலிஸ், காச நோய், உணவு நஞ்சாதல் போன்ற உயிராபத்தைத் தோற்றுவிக்கும் நோய்கள் பாக்டீரியாக்களால் தோற்றுவிக்கப்படுகின்றன. விலங்கு வேளான்மை மற்றும் விவசாயத்திலும் பக்டீரியாக்களால் ஏற்படும் நோய்கள் பாரிய சேதத்தையும் நட்டத்தையும் தோற்றுவிக்கின்றன. இவற்றினால் ஏற்படும் சேதத்தை/ நோய்களைத் தடுப்பதற்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தினால் பாக்டீரியாக்கள் அவற்றிற்கு எதிர்ப்புத்தன்மையை உருவாக்கிக் கொள்கின்றன. இதனாலேயே தகுந்த மருந்துகள் காணப்பட்டாலும் பாக்டீரிய நோய்கள் முற்றாக அழிக்கப்படவில்லை. நோயேற்படுத்தும் பாக்டீரியாக்கள் நேரடியாக இழையங்களை உணவுக்காகத் தாக்குவதாலும், உணவுக்காகப் போட்டியிடுவதாலும், நஞ்சைச் சுரப்பதாலும் நோயைத் தோற்றுவிக்கின்றன. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:பாக்டீரியாக்கள்
பாக்டீரியா எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
1676
2,246
tamil
f907ebc91
மும்பை (Marathi: मुंबई Mumbaī , ஐபிஏ:[ˈmʊm.bəi]), முன்னர் பம்பாயாக இருந்த மும்பை இந்திய மாநிலமான மகாராட்டிராவின் தலைநகரமாகும். இந்தியாவின் மிகப்பெரிய நகரமான இந்த நகரம், ஏறத்தாழ 14 மில்லியன் மக்களுடன் உலகின் மிக அதிக மக்கள்தொகை நிறைந்த நகரங்களில் இரண்டாவதாக விளங்குகிறது.[1] நவி மும்பை மற்றும் தாணே ஆகிய அருகிலுள்ள புறநகரங்களுடன், ஏறத்தாழ 19 மில்லியன் மக்களுடன் மும்பை ஐக்கிய நாடுகள் அவையின் உலக நகரமயமாக்கல் திட்ட அறிக்கையின்படி உலகின் மிகப்பெரிய நகர்ப்புற திரட்சிகளில் உலகின் நான்காவது மிகப்பெரிய நகர திரட்சியாக உள்ளது .[2] இந்தியாவின் கொங்கண் கடற்கரையில் அமைந்துள்ள மும்பை, ஓர் ஆழமான இயற்கை துறைமுகம். இந்தியா கையாளும் கடல்வழி சரக்கு வணிகத்தில் மும்பை துறைமுகம் ஏறத்தாழ 60% பங்களிக்கிறது.[3] கிமு மூன்றாம் நூற்றாண்டில், மௌரியப் பேரரசு மும்பையின் ஏழு தீவுகளை இந்து மற்றும் புத்த பண்பாட்டின் மையமாக மாற்றியது. பின்னர், போர்ச்சுகீசியர்களும் அவர்களைத் தொடர்ந்து பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனமும் குடியேறுவதற்கு முன்னர் அந்த தீவுகள் வெற்றிபெற்ற உள்நாட்டு பேரரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. அவை ஒருங்கிணைக்கப்பட்டு, இந்நகரம் பம்பாய் என்று பெயரிடப்பட்டது. 18ஆம் நூற்றாண்டின் நடுவில், இது ஒரு முக்கிய வணிக நகரமாக உருவானது. 19ஆம் நூற்றாண்டின் போது பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சி நிலைகள் இந்நகரை பெருமைப்படுத்தின. 20ஆம் நூற்றாண்டின் போது, இது இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு வலிமையான தளமாகவும், ரௌல்த் சத்தியாகிரகத்தின் மற்றும் அரசரின் இந்திய கப்பற்படை கலகத்தின் வரலாற்று மையமாகவும் இது விளங்கியது. 1947ல் இந்தியா விடுதலை பெற்ற போது, இந்நகரம் பம்பாய் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. 1960ல், சம்யுக்தா மகாராட்டிரா போராட்டத்தைத் தொடர்ந்து, பம்பாயை தலைநகரமாக கொண்டு மகாராட்டிரம் என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. 1996ல், பம்பாய் மும்பை என்று பெயர் மாற்றப்பட்டது.[4] இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்[5] 5% பங்களித்தும், தொழில்துறை உற்பத்தியில் 25% பங்களித்தும், இந்தியாவின் பொருளாதாரத்திற்கு கடல்வழி வாணிபத்தில் 40 விழுக்காடும், மூலதன பரிமாற்றத்தில் 70 விழுக்காடும் அளித்து இந்தியாவின் வணிக மையமாக மும்பை விளங்குகிறது.[6] இந்திய ரிசர்வ் வங்கி, மும்பை பங்குச்சந்தை, இந்திய தேசிய பங்குச்சந்தை போன்ற முதன்மை நிதி அமைப்புகளுக்கு மையமாக விளங்கும் மும்பை, பல்வேறு இந்திய நிறுவனங்களின் மற்றும் கணக்கிடுதற்கரிய பன்னாட்டு நிறுவனங்களின் பெருநிறுவன தலைமையிடமாகவும் இது விளங்குகிறது. இந்நகரம் பாலிவுட் என்றழைக்கப்படும் இந்தி திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொழில்துறையையும் உட்கொண்டிருக்கிறது. மும்பையின் வியாபார வாய்ப்புகளும், ஒரு சிறந்த வாழ்க்கை தரத்தை அளிக்கக்கூடிய எதிர்பார்ப்புகளும் இந்தியாவின் பிற மாநில மக்களையும் ஈர்க்க கூடியதாக உள்ளது, இதன் விளைவாக, இது இந்நகரை பல்வேறு சமூகங்கள் மற்றும் பண்பாட்டுக் கலவையாக மாற்றியுள்ளது. பெயர் வரலாறு மும்பை என்ற பெயர் ஓர் ஆகுபெயராகும், மும்பா அல்லது மகா-அம்பா (புனிதப் பெண் தெய்வமான மும்பாதேவியின் பெயர்) மற்றும் மராத்தியில் "அம்மா" என்பதற்கான ஆய் என்பதில் இருந்து பெயராய்வியல் வகையில் தருவிக்கப்பட்டது.[7] 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் வந்திறங்கிய பகுதியை, மொம்பாய் , மொம்பே , மொம்பேன் , மொம்பேம் மற்றும் பொம்பாய் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு, இறுதியில் பொம்பாய்ம் (இது தற்போதைய போர்ச்சுகீசியத்தில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது) என்ற எழுத்து வடிவத்தைப் பெற்ற போது தான், முந்தைய பெயரான பம்பாய் என்பது தோன்றியது.[8] 17ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் உடைமையாக்கிய பின்னர், போர்ச்சுகீசிய பொம்பாய்ம் என்பதில் இருந்து பம்பாய் என்று ஆங்கில வடிவத்திற்கு மாற்றப்பட்டதாக நம்பப்பட்டது.[9] மராத்தி மற்றும் குஜராத்தி பேசுபவர்களால் இந்நகரம் மும்பை அல்லது மம்பை என்றும், ஹிந்தி, பெர்சியன் மற்றும் உருதுவில் பம்பாய் என்றும் அறியப்பட்டது. இன்றும் கூட சில வேளைகளில் இது அதன் பழைய பெயர்களான காக்காமுச்சி மற்றும் கலாஜூன்க்ஜா போன்ற பெயர்களால் குறிக்கப்படுகிறது.[10][11] 1996ல் பெயர் அலுவல்ப்பூர்வமாக அதன் மராத்தி உச்சரிப்பிற்கு ஏற்ப மும்பை என்று மாற்றப்பட்டது.[12] காலனிய அமைப்புகளின் பெயர்களை அவற்றின் வரலாற்று ரீதியான உள்ளூர் பெயர்களுக்கு மாற்றுவது என்ற கொள்கையின் அடிப்படையில் இது மாற்றப்படுகிறது.[13] பாரம்பரிய ஆங்கில பெயரான Bombay என்பது, "நல்ல வளைகுடா" என்ற ஒரு போர்ச்சுகீசிய சொல்லில் இருந்து பெறப்பட்டது என்று ஒரு பரவலான விளக்கத்தைக் கொண்டிருக்கிறது. bom (masc.) என்பது போர்ச்சுகீசியத்தில் "நல்ல" என்றும், ஆங்கிலத்தில் "bay" என்ற வார்த்தை, போர்ச்சுகீசியத்தில் baía (பழைய உச்சரிப்புகளில் fem., bahia )என்ற வார்த்தைக்கு இணையானது என்ற உண்மையின் அடிப்படையில் இது அமைந்துள்ளது. "நல்ல வளைகுடா" என்பதற்கான பொதுவான போர்ச்சுகீசிய சொல் boa bahia என்பதாகும், இன்னும் தெளிவாக கூறுவதானால் bom bahia என்பது இலக்கண முறைப்படி தவறு.எவ்வாறிருப்பினும், 16ஆம் நூற்றாண்டு போர்ச்சுகீசியத்தில் "சிறிய வளைகுடா" என்பதற்கு baim (masc) என்ற வடிவத்தைக் கண்டறிய முடிகிறது.[9] போர்ச்சுகீசிய பெயராய்வான Bombaim மிற்கு பல்வேறு வகையான மூலங்களை பிற ஆதாரங்கள் கொண்டிருக்கின்றன. José Pedro Machado's Dicionário Onomástico Etimológico da Língua Portuguesa ("போர்ச்சுகீஸ் டிக்சனரி ஆப் ஓனோமாஸ்டிக்ஸ் அண்டு எடிமோலொஜி") 1516 முதல், அவ்விடத்திற்கான முதல் போர்ச்சுகீசிய குறிப்பீடு என்னவாக இருந்திருக்கும் என்பதை, Benamajambu அல்லுத Tena-Maiambu [14] என்று குறிப்பிடுகிறது, Maiambu என்பது இந்து பெண் தெய்வமான மும்பா-தேவியைக் குறிப்பதாக தெரிகிறது என்று இது குறிப்பிடுகிறது. இதற்காகவே இவ்விடம் மராத்தியில் (மும்பை) பெயரிடப்பட்டுள்ளது. அதே நூற்றாண்டில், எழுத்துக்கள் Mombayn (1525)[15] என்றும், Mombaim (1563) என்றும் உருவாகி இருப்பதாக தெரிகிறது.[16] காஸ்பர் கோரியாவால் அவரின் Lendas da Índiaல் (லெஜெண்ட்ஸ் ஆப் இந்தியா)[17], இறுதி வடிவமான Bombaim 16 நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாகிறது என்று குறிப்பிடுகிறார். போர்ச்சுகீசிய பெயராய்வின் ஒரு பகுதியாக பெயர்ச்சொல் (bahia , "bay") இருந்ததைக் குறிப்பிட்டும், ஆங்கிலேயர்களால் தலைமையேற்கப்பட்ட அந்த இடத்தில் ஒரு வளைகுடா இருந்ததைப் போர்ச்சுகீசிய ஆதாரங்கள் குறிப்பிட்டு காட்டுவதை எடுத்துக்காட்டியும், இதனால் ஆங்கிலத்தில் கூறப்படும் Bombay என்பது போர்ச்சுகீசியத்தில் இருந்து பெறப்பட்டது என்று உறுதியாக வலியுறுத்துவதன் மூலம் இந்த "Bom Bahia" பகுப்பாய்வை ஜெ.பி. மசாடோ நிராகரிப்பதாக தெரிகிறது.[18] வரலாறு ஒரு காலத்தில் பம்பாய் தீவு, பரேல், மச்சாகாவ், மாஃகிம், கொலாபா, வோர்லி மற்றும் கிழவித் தீவு (ஓல்டு வுமன் தீவு) (லிட்டில் கொலாபா என்றும் அறியப்படும் )[9] ஆகிய ஏழு தீவுகள் கூட்டமாக இருந்த இடத்தில் மும்பை அமைந்துள்ளது. பிரிட்டிஷ் நில ஆய்வாளர் டோட்டினால் 1939ல், வடக்கு மும்பையின் கண்டிவாலிக்கு அருகில் பிளைஸ்டோசின் வண்டல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தீவுகளில் கற்காலத்தில் இருந்து மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று அவர் தெரிவிக்கிறார்.[19] முதல் குடியானவர்கள் ஒரு மீனவ சமூகமான கோலிகள் என்று அழைக்கப்படுபவர்கள் இருந்தார்கள். கிறிஸ்துவிற்கு முன்னர் காலத்திய மூன்றாம் நூற்றாண்டில், மௌரியப் பேரரசின் பகுதியாக இருந்த இந்த தீவுகள், மகதத்தின் பௌத்தப் பேரரசரான அசோகரால் ஆளப்பட்டது.[20] இத் தீவுக்கூட்டங்கள் கி.பி.150ல் கிரேக்க புவியாய்விலர் தொலமியால் ஹெப்டானீசியா (பண்டைய கிரேக்கத்தில் ஏழு தீவுகளின் கூட்டம் ) என்று அறியப்பட்டன.[9] பின்னர், 810 முதல் 1260 வரை சில்ஹாரா பரம்பரையால் ஆளப்படுவதற்கு முன்னர், கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற்கும் கிறிஸ்துவ சகாப்தத்தின் ஒன்பதாம் நூற்றாண்டிற்கும் இடையில் இந்த தீவுகள் சுதந்திர அரசாட்சிகளான சாதவாகனர்கள், அப்ஃகியர்கள், வாகாடகர்கள், காலச்சூரியர்கள், கொன்கன் மௌரியர்கள், சாளுக்கியர்கள் மற்றும் ராட்டிரகூடர்கள் போன்றவர்களின் கட்டுப்பாட்டில் வந்தது.[21] 13 நூற்றாண்டின் பிற்பகுதியில் மஹிகாவதியை (தற்போது மாஃகிம் என்றழைக்கப்படுவது) தலைமையிடமாக கொண்டு அப்பகுதியில் ராசா பீம்தேவ் தமது ஆட்சியை நிறுவினார்.[22][23] அவர் சௌராட்டிரா மற்றும் டெக்கானில் இருந்து பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களை மாஃகிக்காவதியில்(மாகிம்) குடியமர்த்த அழைத்து வந்தார்.[24] குஜராத்தின் முஸ்லீம் ஆட்சியாளர்கள் 1348ல் இத்தீவுகளை அவர்களுடன் சேர்த்து கொண்டார்கள்.[21] பின்னர் அவர்கள் 1391 முதல் 1534 வரை குசராத் சுல்தான்களின் ஆட்சியில் கொண்டு வரப்பட்டார்கள்.[25][26][27] 1429 முதல் 1431 வரை, இந்த தீவுகள் குஜராத் சுல்தான்களுக்கும், டெக்கானின் பாமினி சுல்தான்களுக்கும் இடையிலான சண்டைகளுக்கு ஆதாரமாக இருந்தது.[25] 1491 முதல் 1494 வரை, இந்த தீவுகள், பாமினி சுல்தானிய ராச்சியத்தின் ஒரு சிறப்புமனிதரான பகாதூர் கான் கிலானியால் பல கடற்கொள்ளைகளால் பாதிக்கப்பட்டது.[28] முகலாயப் பேரரசின் உமாயூன், குசராத் சுல்தானிய பேரரசின் சுல்தான் பகதூர் சா ஆகியோரிடம் வளர்ந்து வந்த அதிகார உணர்வானது, 1534 டிசம்பர் 23ல் போர்ச்சுகீசிய குடியேற்றக்காரர்களுடன் பேசின் உடன்படிக்கை செய்து கொள்ள கட்டாயப்படுத்தியது. அந்த உடன்படிக்கையின்படி, பம்பாயின் ஏழு தீவுகளும், அருகில் இருந்த மூலோபாய நகரான பேசினும், அதை சார்ந்திருந்தவையும் போர்ச்சுகீசியர்களுக்கு அளிக்கப்பட்டது. இந்த பிரதேசங்கள் பின்னர் 1535 அக்டோபர் 25ல் திருப்பி அளிக்கப்பட்டன. போர்ச்சுகீசியர்கள் பம்பாயில் தங்களின் ரோமன் கத்தோலிக்க மத ஒழுக்கங்களுக்கு அடித்தளமிடுவதிலும், வளர்ப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள். மாகிமில் உள்ள புனித மிக்கேல் தேவாலயம், ஆந்திரியில் உள்ள புனித யோவான் பாப்டிசுட்டு தேவாலயம், பாந்த்ராவில் உள்ள புனித ஆண்ட்ரூ தேவாலயம் போன்ற பழமை வாய்ந்த சில தேவாலயங்கள் போர்ச்சுகீசிய காலத்தில் உருவக்கப்பட்டவையாகும்.[29] 1661 மே மாதத்தில், இங்கிலாந்தின் இரண்டாம் சார்லஸூக்கும், போர்ச்சுகல்லின் அரசர் நான்காம் சானின் மகள் பிரகன்சாவின் கத்தரீனுக்கும் ஏற்பட்ட திருமண ஒப்பந்தத்தில் சார்லஸிற்கான கேத்ரினின் வரதட்சணையாக இந்த தீவுகள் பிரித்தானியப் பேரரசிற்கு வழங்கப்பட்டது.[30][31] இந்த தீவுகள், 1668 மார்ச் 27ன் ராயல் மசோதாவால் ஆண்டுக்கு £10 என்ற அடிப்படையில் 1668ல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் ஏலத்தில் எடுத்து கொண்டது.[32] 1661ல் 10,000ஆக இருந்த மக்கள்தொகை 1675ல் 60,000ஆக விரைவாக அதிகரித்தது.[33] 1687ல், பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் அதன் தலைமையிடத்தை சூரத்தில் இருந்து பம்பாய்க்கு மாற்றியது.இறுதியாக இந்நகரம் பம்பாய் பிரசிடெண்சியின் தலைமையிடமாக மாறியது.[34] மாற்றத்தைத் தொடர்ந்து, இந்தியாவின் அனைத்து நிறுவனங்களின் தலைமையிடமாக பம்பாய் உருவாக்கப்பட்டது.[35] 17 நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் முகலாயர்களின் தாக்குதல்களால் இந்த தீவுகள் மிகவும் பாதிக்கப்பட்டன.[36] 1782 முதல், அனைத்து ஏழு தீவுகளையும் ஒரே ஒருங்கிணைப்பில் கொண்டு வரும் நோக்கில், இந்நகரம் பெரியளவிலான கட்டுமான பொறியியல் திட்டங்களுடன் மறுவடிவம் பெற்றது. ஹார்ன்பி வெல்லார்டு என்று அறியப்பட்ட இந்த திட்டம், 1784ல் முடிக்கப்பட்டது.[37] 1853 ஏப்ரல் 16ல், பம்பாய்க்கும் அதன் அருகில் இருக்கும் தானேவுக்கும் இடையில் இந்தியாவின் முதல் பயண ரயில்பாதை ஏற்படுத்தப்பட்டது.[38] அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தின் (1861–1865) போது, இந்நகரம் உலகின் முக்கிய பருத்தி வியாபார சந்தையாக விளங்கியது, இதனால் ஏற்பட்ட பொருளாதார அபிவிருத்தி, நகரத்தின் வளர்ச்சியையும் கணிசமாக உயர்த்தியது.[39] 1869ல் திறக்கப்பட்ட சுயஸ் கால்வாய், அரேபிய கடலில் உள்ள மிகப்பெரிய கடற்துறைமுகங்களில் ஒன்றாக பம்பாயை மாற்றியது.[40] 1896 செப்டம்பரில், பம்பாய் ஒரு கொடூரமான பிளேக் தொற்றுநோயால் தாக்கப்பட்டு, அதில் வாரத்திற்கு 1,900 மக்கள் இறந்ததாக கணக்கிடப்பட்டது.[41] சுமார் 850,000 மக்கள் பம்பாயை விட்டு வெளியேறினார்கள். ஜவுளித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது.[42] பம்பாய் பிரசிடெண்சியின் தலைநகரம் என்ற வகையில் 1942ல் வெள்ளையனே வெளியேறு போராட்டம் மற்றும் 1946ல் ராயல் இந்திய கப்பற்படை கலகம் ஆகியவற்றுடன் இந்திய சுதந்திர போராட்டத்திற்கும் பம்பாய் பிரதான சாட்சியாக இருந்தது.[43][44] 1947ல் இந்திய சுதந்திரத்திற்கு பின்னர், பம்பாய் ராஜதானி ஆட்சியின் பிரதேசம் இந்தியாவால் கைப்பற்றப்பட்டு பம்பாய் மாநிலம் என்று மறுகட்டுமானம் செய்யப்பட்டது. இந்திய பிரதேசத்தில் முந்தைய அரசாட்சி மாநிலங்கள் பல சேர்ந்த பின்னர் அவை பம்பாய் மாநிலத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டன, இதனால் பம்பாய் மாநிலத்தின் பரப்பளவும் அதிகரித்தது. அதை தொடர்ந்து, இந்நகரம் பம்பாய் மாநிலத்தின் தலைநகராக மாறியது.[45] 1950 ஏப்ரலில், பம்பாய் புறநகர்கள் மற்றும் பம்பாய் நகரம் ஆகியவற்றின் இணைப்புடன் பரந்த பம்பாய் மாவட்டம் உயிர் பெற்றது.[46] 1955 மக்களவை விவாதத்தில், இந்நகரம் ஒரு தன்னாட்சி நகர-மாநிலமாக அமைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.[47] 1956ல், பம்பாயை தலைநகராக கொண்டு மஹாராஷ்டிரா-குஜராத் என்கிற இருதரப்பு மாநிலம் அமைக்க மாநிலங்களின் மறுசீரமைப்பு குழு பரிந்துரைத்தது. முன்னனி குஜராத்திய தொழில்துறையினரைக் கொண்ட ஓர் ஆலோசனை குழுவான பம்பாய் குடிமக்கள் குழு பம்பாயின் சுயாட்சியைக் கோரியது.[48] 1957 தேர்தல்களில், இந்த கோரிக்கைகளை எதிர்த்த சம்யுக்த மஹாராஷ்டிர இயக்கம், பம்பாயை மஹாராஷ்டிராவின் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.[49] இந்த இயக்கத்தின் போராட்டங்களைத் தொடர்ந்து (இதில் 105 மக்கள் போலீசால் கொல்லப்பட்டனர்), 1960 மே 1ல் பம்பாய் மாநிலம் மொழிவாரியாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது.[50] பம்பாய் மாநிலத்தின் குஜராத்தி பேசிய பகுதிகள் குஜராத் மாநிலமாக பிரிக்கப்பட்டது.[51] பம்பாயை தலைநகராக கொண்டு மராத்தி பேசிய பம்பாய் மாகாணத்தின் பகுதிகள், மத்திய மாகாணங்கள் மற்றும் பெரரில் இருந்து எட்டு மாவட்டங்கள், ஐதராபாத் மாநிலத்தில் இருந்து ஐந்து மாவட்டங்கள் மற்றும் அவர்களுக்கு இடையில் இணைந்திருந்த பல அரசாட்சி மாநிலங்களும் இணைக்கப்பட்டு மஹாராஷ்டிரா மாநிலம் உருவாக்கப்பட்டது.[52] 1992-93ல் ஏற்பட்ட ஹிந்து-முஸ்லீம் கலகங்கள், நகரத்தின் பாதுகாப்பான ஜவுளித்துறையை கிழித்து போட்டது. அதில் 1,000த்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.[53] 1993 மார்ச் 12ல், இஸ்லாமிய தீவிரவாதிகள் மற்றும் பம்பாய் நிழலுகத்தால் நகரத்தின் முக்கிய பல பகுதிகளில் வெடிக்க செய்யப்பட்ட 13 தொடர் குண்டுவெடிப்புகளில் 257 பேர் கொல்லப்பட்டனர், 700 பேர் காயமடைந்தனர்.[54] 2006ல், நகர பயண ரயில்களில் ஏழு குண்டுகள் வெடித்ததில், 209 பேர் கொல்லப்பட்டனர், 700க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.[55] 2008 நவம்பர் 26ல் இருந்து 2008 நவம்பர் 29 வரை ஆயுதந்தாங்கிய துப்பாக்கியாளர்களால் 10 ஒருங்கிணைந்த தொடர் பயங்கரவாத தாக்குதல்களில் 164 பேர் கொல்லப்பட்டனர், 308 பேர் காயமடைந்தனர், மேலும் பல முக்கிய கட்டிடங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது.[56] புவியியல் மும்பை, கொங்கண் என்றழைக்கப்படும் கடற்கரை பகுதியான இந்தியாவின் மேற்கத்திய கடற்கரையில் உள்ள உல்லாசு ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. அது சால்செட்டெ தீவிலும், பகுதியாக தாணே மாவட்டத்திலும் அமைந்துள்ளது.[9] நகரத்தின் பல பகுதிகள், இல் இருந்து வரையிலான உயரத்துடன், கடல்மட்டத்தை விட சற்றே மேல்மட்டத்தில் அமைந்துள்ளது.[57] இந்நகரம் ஏறத்தாழ ,[58] உயரத்தைக் கொண்டிருக்கிறது. வடக்கு மும்பை மலைப்பகுதிகளால் ஆனது, நகரத்தின் உயரமான பகுதியான 450m (1,476ft) சால்செட்டெ தீவில் உள்ளது.[59] மும்பை பெருநகரம் 603km2 (233sqmi) என்கிற மொத்த பரப்பளவில் விரிந்துள்ளது.[60] சஞ்சய் காந்தி தேசிய பூங்கா (போர்வில்லி தேசிய பூங்கா) மும்பையின் புறநகர் மாவட்டத்தில் ஒரு பகுதியாகவும், தானே மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் அமைந்துள்ளது, அது 103.09km2 (39.80sqmi)[137] வரையிலான பகுதியில் விரிந்துள்ளது.[61] பாட்சா அணைக்கு அப்பாற்பட்டு, விகார், கீழ் வைட்டர்னா, மேல் வைட்டர்னா, துளசி, தான்சா மற்றும் பவாய் போன்ற அங்கு ஆறு முக்கிய ஏரிகள் உள்ளன. இவற்றில் இருந்தே நகரத்திற்கு குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது.[62][63] துளசி ஏரி மற்றும் விகார் ஏரி இரண்டும் மாநகர எல்லைக்குள் போரிவில்லி தேசிய பூங்காவில் அமைந்துள்ளன.[64] நகர எல்லைக்குள் அமைந்துள்ள பவாய் ஏரியின் வினியோகம் விவசாயம் மற்றும் தொழில்துறை பயன்பாட்டிற்காக மட்டும் பயன்படுத்தப்படுகிறது.[65] தகிசார் ஆறு, போயின்சார் (அல்லது போய்சார்) மற்றும் ஒசிவாரா (அல்லது ஒகிவாரா) ஆகிய மூன்று சிறிய ஆறுகளும் பூங்காவிற்கு உள்ளிருந்தே உருவாகின்றன. மாசு நிறைந்த மீதி ஆறு துளசி ஆறில் இருந்து உருவாகி, விகார் மற்றும் பவாய் ஏரிகளில் நிரம்பிய மீத நீருடன் கலக்கிறது.[66] நகரத்தின் கடற்கரை பகுதி பல சமவெளிகள் மற்றும் மேடுபள்ளங்களுடன் ஏற்ற இறக்கங்களைக் கொண்டுள்ளது. அது கிழக்கில் தாணே கிரீக்கில் இருந்து மேற்கு முகப்பில் மத் மார்வே வரை நீண்டுள்ளது. [67] சால்செட்டின் கிழக்கு கடற்கரை பெருமளவிலான சதுப்புநிலக் காடுகள் மற்றும் உயிரிமாற்றீட்டு வளங்களையும் கொண்டுள்ளது. மேற்கத்திய கடற்கரையில் பெருமளவில் வண்டலும், பாறைகளும் நிரம்பியுள்ளன.[68] கடல் அருகில் இருக்கும் காரணத்தால், நகர பகுதியில் இருக்கும் மண் வளமான வண்டல்மண்ணாக உள்ளது. புறநகர் பகுதிகளில், மண் மேற்புரம் பெருமளவில் வண்டல்கள் மற்றும் கரிசல்களால் நிரம்பியுள்ளது. அப்பிராந்தியத்தின் அடிமட்ட பாறைகள், கருப்பு டெக்கான் திடக்குழம்பு கலவையால் ஆனவை. அவற்றின் அமில மற்றும் அடிப்படை மாறிகள் கிறிட்டேசியஸூக்கு பிந்தைய மற்றும் யூசினின் ஆரம்ப காலத்தியவை ஆகும்.[66] மும்பை ஒரு நிலஅதிர்வுக்குரிய மண்டலத்தில் அமைந்துள்ளது.[69] அதன் சுற்றுவட்டத்தில் மூன்று அபாயக் கோடுகளைக் கொண்டுள்ளது. இந்த பகுதி ஒரு நிலஅதிர்வுக்குரிய மூன்றாம் மண்டல பகுதி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது, அதாவது 6.5 ரிக்டர் அளவு வரையிலான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பது இதன் பொருளாகும்.7}[70] தட்ப வெப்பநிலை பூமத்தியரேகை பகுதியிலும் மற்றும் அரேபிய கடலுக்கு அருகில் இருப்பதால், ஈரப்பதமான பருவநிலை மற்றும் உலர்ந்த பருவநிலை ஆகிய இரண்டு முக்கிய பருவநிலைகளை மும்பை பெறுகிறது. மார்ச் மற்றும் அக்டோபருக்கு இடைப்பட்ட ஈரப்பதமான பருவநிலையில் அதிகளவிலான ஈரப்பதமும், மேற்பட்ட வெப்பநிலையும் நிலவும். ஜூன் மற்றும் செப்டம்பருக்கு இடையில், நகரையே பாழாக்கும் மழைகாலமாக இருக்கும். அம்மாதங்களுக்கு இடையில் தான் நகரத்தின் ஆண்டு மழையளவான கிடைக்கிறது, சராசரி அளவான ஜூலையில் ஒரே மாதத்தில் பூர்த்தி செய்யப்படுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச ஆண்டு மழையளவாக 1954ல் என்ற அளவு பதிவு செய்யப்பட்டது.[66] ஒருநாள் அதிகபட்ச மழையளவு 2005 ஜூலை 26ல் பதிவு செய்யப்பட்டது.[71] நவம்பர் மற்றும் பிப்ரவரிக்கு இடைப்பட்ட உலர்வு காலமானது, மிதமான ஈரப்பதம் மற்றும் மிதமான குளிர்ச்சி பொருந்திய காலநிலையாக விளங்குகிறது. வடக்கிலிருந்து வரும் குளிர்ந்த காற்றால் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் இதமான குளிர் தென்றல் கிடைக்கிறது.[72] தினசரி குறைந்தபட்சம் உடன், ஓர் ஆண்டில் ஜனவரி மாதமே மிக குளிர்ச்சி மிக்க மாதமாக இருக்கிறது.[73] ஆண்டு வெப்பநிலைகள் உயர்ந்தளவாக 38°C (100°F) லிருந்து குறைந்தபட்சமாக 12°C (54°F) வரை மாறுபடுகிறது.[72] இதுவரையிலான அதிகபட்ச அளவு 43.3°C (109.9°F) மற்றும் குறைந்தபட்ச அளவு 7.4°C (45.3°F) ஆகும்.[74] பொருளாதாரம் இந்தியாவின் மிகப்பெரிய நகரமான மும்பை, நாட்டின் நிதித்துறை தலைமையிடமாக கருதப்படுகிறது.[75] இந்தியாவின் முக்கிய பொருளாதார மையமாக திகழும் இது, மொத்த நிறுவன வேலைவாய்ப்பில் 10 சதவீதமும், மொத்த வருமான வரி வசூலில் 40 சதவீதமும், மொத்த சுங்கவரி வசூலில் 60 சதவீதமும், மொத்த மத்திய கலால் வரி வசூலில் 20 சதவீதமும், இந்திய வெளிநாட்டு வர்த்தகம் 40 சதவீதமும் மற்றும் பெருநிறுவன வரிகளில் ₹40 billion (US$560million) பங்கு வகிக்கிறது.[76] மும்பையின் ஓர் ஆண்டுக்கான தனிநபர் வருமானம் ₹48,954 (US$690) ஆகும். இது தேசிய சராசரியை விட ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகமாகும்.[77] பாரத ஸ்டேட் வங்கி, எல்ஐசி, டாடா குழுமம், கோத்ரேஜ் மற்றும் ரிலையன்ஸ் உட்பட இந்தியாவின் எண்ணற்ற பல பெருநிறுவனங்களும், பார்ச்சூன் குளோபல் 500 நிறுவனங்களில் ஐந்தும் மும்பையில் அமைந்துள்ளன.[78] பல்வேறு வெளிநாட்டு வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இந்த பகுதிகளில் கிளைகளைக் கொண்டுள்ளன, இதில் சர்வதேச வர்த்தக மையம் (மும்பை) மிக முக்கியமான ஒன்றாகும்.[79] 1980 வரை, ஜவுளித்துறை ஆலைகள் மற்றும் கடல் துறைமுகத்திற்காகவே மட்டுமே மும்பை பெருமளவில் சிறப்பு பெற்று விளங்கியது, ஆனால் அதன் பின்னர் பொறியியல், வைரம் மெருகூட்டல், ஆரோக்கியகவனிப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை உள்ளடக்க திருப்பி விடப்பட்டுள்ளது.[80] நகரத்தின் தொழிலாளர்களில் மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் பெரும் சதவீதத்தில் உள்ளனர். மும்பை பெருமளவிலான தொழிற்திறனற்ற மற்றும் சிறிதே தொழில்திறன் பெற்ற தொழிலாளர்களையும் பெருமளவில் கொண்டுள்ளது. இவர்கள் தெருவியாபாரிகளாகவும், டாக்சி ஓட்டுனர்களாகவும், மெக்கானிக்குகளாகவும் மற்றும் நீல காலர் பணிகளில் இருப்பவர்களாகவும் தங்கள் வாழ்க்கைக்காக சம்பாதிக்கிறார்கள்.[81] துறைமுகம் மற்றும் கப்பல் தொழில்துறையானது, இந்தியாவில் உள்ள மிக பழமை வாய்ந்த மற்றும் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான மும்பை துறைமுகத்துடன் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது.[82] மத்திய மும்பையில் உள்ள தாரவியில், ஒரு பெரிய மறுசுழற்சி தொழிற்துறை உள்ளது, இது நகரத்தின் பிற பகுதிகளில் இருந்தும் கழிவுகளை மறுசுழற்சி செய்து வருகிறது. இந்த மாவட்டம் 15,000 ஒரே-அறை தொழிற்சாலைகளைக் கொண்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.[83] இந்தியாவின் முக்கிய தொலைக்காட்சி மற்றும் செயற்கோள் வலையமைப்புகளின் பெரும்பான்மையும், அத்துடன் அவற்றின் முக்கிய பிரசுரங்களும் மும்பையைத் தலைமையிடமாக கொண்டுள்ளன. இந்தி திரைப்பட தொழிற்துறையின் மையமான பாலிவுட், இந்தியாவில் அதிகளவிலான படங்கள் தயாரிப்பு துறையாகவும், உலகின் மிகப்பெரியவற்றில் ஒன்றாகவும் விளங்குகிறது.[84][85][86] இந்தியாவின் மீதப்பகுதிகளுடன், வர்த்தக தலைமையிடமான மும்மை, 1991ன் தாராளமயமாக்கலில் இருந்தும், 90களின் மத்தியில் ஏற்பட்ட நிதி வளர்ச்சியில் இருந்தும், 2000த்தில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்பம், ஏற்றுமதி, சேவைகள் மற்றும் அவுட்சோர்சிங் வளர்ச்சியில் இருந்தும் ஒரு பெரிய பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது.[87] உலகளாவிய மையங்களுக்கான 2008 வர்த்தக குறியீட்டில் மும்பை 48வது இடத்தைப் பிடித்துள்ளது.[88] 2008 ஏப்ரலில், போர்ப்ஸ் இதழால்[89] வெளியிடப்பட்ட "பில்லினியர்களின் முதல் பத்து நகரங்கள்" பட்டியலில் மும்பை ஏழாவது இடத்தைப் பிடித்தது, ஆனால் பில்லினியர்களின் சராசரி வளங்களில், இந்த பத்து நகரங்களில் மும்பை உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது.[90] நகர நிர்வாகம் மும்பை இரண்டு முக்கிய பிராந்தியங்களைக் கொண்டுள்ளது: நகரம் மற்றும் புறநகரம். இவை மஹாராஷ்டிராவின் இரண்டு தனித்தனி மாவட்டங்களை உருவாக்குகின்றன.[91] நகர பகுதி பொதுவாக தீவு நகரம் என்றும் குறிக்கப்படுகிறது.[92] தீவு நகரம் மற்றும் புறநகரங்கள் இரண்டும் ஒட்டுமொத்தமாக இணைந்த நிலையில் மும்பை, பிரஹன் மும்பை முனிசிப்பல் கார்ப்பரேஷனினால் (உத்தியோகப்பூர்வமாக பம்பாய் முனிசிப்பல் கார்ப்பரேஷன்)[93], மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஓர் ஐஏஎஸ் அதிகாரியான முனிசிப்பல் கமிஷனரின் அதிகாரத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.[94] இருபத்தி நான்கு முனிசிப்பல் வார்டுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 227 நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 227 கவுன்சிலர்களையும், ஐந்து நியமிக்கப்பட்ட கவுன்சிலர்களையும் மற்றும் ஒரு மேயரையும் (இவரின் பாத்திரம் பெரும்பாலும் விழா சார்ந்து இருக்கும்) கார்ப்பரேஷன் கொண்டிருக்கிறது.[95][96] மேயர் சுபா ராவுல், முனிசிப்பல் கமிஷனர் ஜெய்ராஜ் பதக் மற்றும் ஷெரீப், இந்து ஷாஹனி ஆகியோரால் மும்பை தலைமையெடுக்கப்பட்டுள்ளது. மாநகரத்தின் நகர மற்றும் உள்கட்டமைப்பு தேவைகளுக்கு BMC பொறுப்பேற்கிறது.[97] ஓர் உதவி முனிசிப்பல் கமிஷனர் ஒவ்வொரு வார்டின் நிர்வாகத்தையும் கண்காணிப்பார்.[94] பெரும்பாலும் அனைத்து மாநில அரசியல் கட்சிகளும் கவுன்சிலர் தேர்தல்களில் தங்களின் வேட்பாளர்களை நிறுத்துவார்கள். மும்பை மாநகர பகுதி 7 முனிசிப்பல் கார்ப்பரேஷன்கள் மற்றும் 13 முனிசிப்பல் கவுன்சில்களைக் கொண்டுள்ளது. BMCக்கு கூடுதலாக, இது தானே, கல்யாண்-டோம்பிவலி, நவி மும்பை, மிரா-பயந்தர், பெவண்டி-நிஜாம்பூர் மற்றும் உல்ஹாஸ்நகர் முனிசிப்பல் கார்ப்பரேஷன்களையும் உள்ளடக்கி உள்ளது.[98] பரந்த மும்பை மஹாராஷ்டிராவில் இரண்டு மாவட்டங்களை உருவாக்குகிறது. ஒவ்வொன்றும் மாவட்ட ஆணையரின் கட்டுப்பாட்டின் கீழ் வரும்.[99] சொத்து ஆவணங்கள் மற்றும் மத்திய அரசிற்கான வருவாய் ஆவணங்கள் ஆகியவற்றிற்கு பொருப்பான மாவட்ட ஆணையர்கள் நகரத்தில் நடத்தப்படும் தேசிய தேர்தல்களையும் கண்காணிப்பார்கள்.[100][101] ஓர் ஐபிஎஸ் அதிகாரியான போலீஸ் கமிஷனர் ஒருவர் மும்பை போலீஸ் துறைக்கு தலைமை வகிப்பார். மும்பை போலீஸ் மாநிலத்தின் உள்துறை இலாக்காவின் கீழ் வருகிறார்.[102] துணை போலீஸ் கமிஷனர்களின் தலைமையில் நகரம் ஏழு போலீஸ் மண்டலங்களாகவும், பதினேழு போக்குவரத்து போலீஸ் மண்டலங்களாகவும்[103] பிரிக்கப்பட்டுள்ளது.[104] போக்குவரத்து போலீஸ் என்பது மும்பை போலீஸ் துறையின் கீழ் பாதி-தன்னாட்சி பெற்ற சுய அமைப்பாக செயல்படுகிறது. மும்பை தீயணைப்பு துறை முதன்மை தீயணைப்பு அதிகாரியின் தலைமையின் கீழ் செயல்படுகிறது. இவரின் கீழ் நான்கு துணை முதன்மை தீயணைப்பு அதிகாரிகளும், ஆறு பிராந்திய அதிகாரிகளும் இருக்கிறார்கள்.[103] பம்பாய் உயர்நீதிமன்றத்தின் இருப்பிடமாகவும் மும்பை விளங்குகிறது. பம்பாய் உயர்நீதிமன்றம் மஹாராஷ்டிரா, கோவா மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளான தமன் மற்றும் தியூ மற்றும் தாத்ரா மற்றும் நகர் அவேலி ஆகியவற்றின் சட்ட பிரச்சனைகளைக் கவனிக்கிறது.[105] இரண்டு கீழ் நீதிமன்றங்களான, உள்ளூர் விஷயங்களுக்கான சிறு பிரச்சனை நீதிமன்றம் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கான குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றையும் மும்பை கொண்டிருக்கிறது.[106] நகரத்தில் பயங்கரவாதத்தைத் தூண்டிவிடும் மற்றும் அதற்கான நடவடிக்கைகளில் இறங்கும் மக்களுக்கான ஒரு சிறப்பு தடா (பயங்கரவாத மற்றும் சீர்கேட்டு நடவடிக்கைகள்) நீதிமன்றமும் மும்பையும் உள்ளது.[107] போக்குவரத்து மும்பை புறநகர் ரயில்வே, [[பம்பாய் மின்சார வினியோகம் போக்குவரத்து|BEST]] பேருந்துகள், டாக்சிகள், ஆட்டோ ரிக்சாக்கள், படகு சவாரி மற்றும் விமான போக்குவரத்து ஆகியவை மும்பையில் உள்ள பொது போக்குவரத்து அமைப்புமுறையில் உள்ளடங்கி உள்ளன.[108] கருப்பு மற்றும் மஞ்சள் நிற மீட்டர் பொருத்தப்பட்ட டாக்சிகள் மாநகரம் முழுவதும் பயணிக்கின்றன.[109] ஆட்டோரிக்சாக்கள் மும்பையின் புறநகர் பகுதிகளில் மட்டும் இயங்குகின்றன.[110] இயற்கை எரிவாயுவில் இயங்கும் டாக்சிகளும், ஆட்டோரிக்சாக்களும் வாடகை போக்குவரத்தின் மிக பொதுவான வடிவங்களாக உள்ளன.[111] இந்திய தேசிய நெடுஞ்சாலை முறையின் தேசிய நெடுஞ்சாலை 3, தேசிய நெடுஞ்சாலை 4 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 8 ஆகியவற்றால் மும்பை பயன்பெற்று வருகிறது.[112] மும்பை-வோடோதரா விரைவு நெடுஞ்சாலை கட்டப்பட்டு வரும் நிலையில்,[113] மும்பை-புணே விரைவு நெடுஞ்சாலை தான் இந்தியாவில் இதுவரை கட்டப்படாத வகையிலான முதல் விரைவு நெடுஞ்சாலை ஆகும்.[114] மும்பை இரண்டு ரெயில்வே மண்டலங்களின் தலைமையிடமாக விளங்குகிறது: சத்ரபதி சிவாஜி டெர்மினஸை[108] மையமாக கொண்ட மத்திய ரெயில்வே மற்றும் சர்ச்கேட்டிற்கு அருகில் தலைமையிடத்தைக் கொண்ட மேற்கத்திய ரெயில்வே.[115] நகர போக்குவரத்தின் முதுகெலும்பாக விளங்கும் மும்பையின் புறநகர் ரெயில்வே, வடக்கு-தெற்கு திசையில் நகரத்தின் நீளத்திற்கு மூன்று தனித்தனி வலையமைப்புகளைக் கொண்டுள்ளது.[81] ஓர் தரையடி மற்றும் மேற்புற விரைவு போக்குவரத்து முறையான மும்பை மெட்ரோ தற்போது கட்டமைக்கப்பட்டு வருகிறது.[116] மும்பை மோனோரெயில் முடிக்கப்படும் போது, அது ஜேகப் வட்டத்தில் இருந்து வடாலா வரை ஓடும்.[117] இந்திய ரெயில்வேயினால் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் மும்பையுடன் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளன. சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், தாதர், லோக்மானிய திலகர் டெர்மினஸ், மும்பை சென்ட்ரல், பாந்த்ரா டெர்மினஸ் மற்றும் ஆந்த்ரி ஆகிய இடங்களில் இருந்து ரெயில்கள் புறப்படுகின்றன.[118] மும்பையின் புறநகர் ரெயில் போக்குவரத்து நாளொன்றுக்கு 6.3 மில்லியன் மக்களை ஏற்றி செல்கிறது.[119] BESTயினால் ஓட்டப்படும் பொதுபோக்குவரத்து பேருந்துகள் மாநகரத்தின் பெரும் பகுதிகளை இணைக்கின்றன. அத்துடன் நவி மும்பை, மிரா-பயந்தர் மற்றும் தானே ஆகியவற்றின் சில பகுதிகளையும் இணைக்கின்றன.[120] நீண்ட தூர பயணங்களுக்கு ரெயில் கட்டணங்கள் குறைவாக இருப்பதால்,[81] பேருந்துகள் குறுகிய தூர பயணங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.[121] BEST 340க்கும் மேலான வழித்தடத்தில் 4.5 மில்லியன் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மொத்தம் 4,037 பேருந்துகளை இயக்குகிறது. தனித்தட்டு, இரட்டைத்தட்டு, வெஸ்டிபுள், தாழ்தரை, ஊனமுற்றோருக்கான பேருந்து, குளிர்சாதன பேருந்து மற்றும் யூரோ iii விதிகளுக்கு பொருத்திய இயற்கை எரிவாயு பேருந்துகள் ஆகிய வகைகளை இந்த பேருந்து சேவை கொண்டுள்ளது.[122] நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு உதவும் MSRTC பேருந்துகள், மஹாராஷ்டிரா மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் மும்பையை இணைக்கின்றன.[123][124] மும்பையிலுள்ள பல சுற்றுலா தளங்களைச் சுற்றிக்காட்ட மும்பை தர்ஷன் எனும் சுற்றுலா பேருந்துகள் இருக்கின்றன.[125] மார்ச் 2009 முதல் ஏழு தடங்களில் பேருந்துகள் ஓடும் வகையில் மும்பை முழுவதும் BRTS தடங்கள் திட்டமிடப்பட்டுள்ளது.[126] மும்பையின் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் முக்கிய விமான போக்குவரத்து மையமாகவும், இந்தியாவின் ஓய்வில்லாத விமான நிலையங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.[127] ஜூஹூ விமான இறங்குதளம் இந்தியாவின் முதல் விமானநிலையமாகும். தற்போது இது பிளையிங் கிளப் மற்றும் ஹெலிபோர்ட் வசதியை அளிக்கிறது.[128] கோப்ரா-பவில் பகுதியில் உருவாக்க திட்டமிடப்பட்டிருக்கும் நவி மும்பை சர்வதேச விமானநிலையத்திற்கு அரசாங்கத்தால் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதுடன், தற்போது இருக்கும் விமான நிலையத்தின் அதிகரித்து வரும் போக்குவரத்து சுமையைக் குறைக்கவும் உதவும்.[129] அதன் பிரத்யேக இட அமைவுடன், உலகின் சிறந்த இயற்கை துறைமுகங்களில் ஒன்றாக மும்பை விளங்குகிறது.[130] இது நாட்டின் பயணிகள் போக்குவரத்தில் 60 சதவீதத்தையும், இந்திய சரக்கு கையாள்கையில் பெரும்பாகத்தையும் கையாள்கிறது.[3] இது இந்திய கப்பற்படைக்கு ஒரு முக்கிய தளமாக விளங்குகிறது, மேலும் மேற்கத்திய கப்பற்படையின் பிரிவின் தலைமையிடமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.[131] படகுகள் மூலமான படகு சவாரி இந்த பகுதிகளில் உள்ள தீவுகளையும், கடல்களையும் அணுக உதவுகிறது.[132] பிற பயனுள்ள சேவைகள் BMC 6 ஏரிகளில் இருந்து நகரத்திற்கு குடிநீர் வினியோகம் செய்கிறது.[133][134] இதன் பெரும்பகுதி துள்சி மற்றும் விஹார் ஏரிகளில் இருந்து வருகிறது.[64] தான்சா ஏரி மேற்கத்திய புறநகர்களுக்கும், மேற்கத்திய ரெயில்வேயுடன் தீவு நகரத்தின் ஒரு பகுதிகளுக்கும் தண்ணீர் வினியோகிக்கிறது.[135] ஆசியாவின் மிகப்பெரிய குடிநீர் சுத்திகரிப்பு ஆலையான பன்ந்தப்பில்[135] சுத்திகரிக்கப்படுகிறது.[136] இந்தியாவின் முதல் நிலத்தடி குடிநீர் குழாய் மும்பையில் உருவாக்கப்பட்டுள்ளது.[137] ஏறத்தாழ மும்பையின் அனைத்து தினசரி கழிவும் சேர்த்தால் 7,800 மெட்ரிக் டன்னாகும், இதில் 40 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள்9}[324] வடமேற்கில் உள்ள கோரை, வடகிழக்கில் உள்ள முலுண்ட் மற்றும் கிழக்கில் உள்ள தியோனர் ஆகியவற்றின் நிலங்களில் குவிக்க கொண்டு செல்லப்படுகின்றன.[138] வோர்லி மற்றும் பாந்த்ராவில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது, இது முறையே பாந்த்ரா மற்றும் வோர்லியில் உள்ள மற்றும் ஆகிய இரண்டு பிரத்யேக கடல்வழி வெளிதடுப்புகளில் வெளியேற்றப்படுகின்றன.[139] பிரிஹன்மும்பை மின் வினியோகம் மற்றும் போக்குவரத்து (BEST) தீவு நகரம் எடுக்கும் 3,216 GWh[140] மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. மேலும் ரிலையன்ஸ் எனர்ஜி, டாட்டா பவர் மற்றும் மஹாவிட்ரானினால் (மஹாராஷ்டிரா மாநில மின்சார வினியோக நிறுவனம்) புறநகர்களுக்கு மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. உற்பத்திதிறனை விட மின்சார நுகர்வு அதிவேகமாக வளர்ந்து வருகிறது.[141] 2000 வரை பிக்சட் லைன் மற்றும் செல்லுலர் சேவைகளை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் மட்டுமே கொண்டிருந்த அரசுத்துறையான எம்டிஎன்எல், மிகப்பெரிய தொலைபேசி சேவை அளிக்கும் நிறுவனமாக விளங்குகிறது. இது பிக்சட் லைன் மற்றும் மொபைல் டபிள்யூஎல்எல் சேவைகளையும் வழங்குகிறது.[142] செல்போன் கவரேஜ் மிக சிறப்பாக உள்ளது, இதில் வோடாபோன் எஸ்ஸார், ஏர்டெல், எம்டிஎன்எல், பிபிஎல் குழுமம், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஐடியா செல்லுலார் மற்றும் டாடா இன்டிகாம் ஆகியவை முக்கிய சேவை அளிப்பு நிறுவனங்களாக உள்ளன. ஜிஎஸ்எம் மற்றும் சிடிஎம்ஏ ஆகிய இரண்டு சேவைகளும் நகரில் வழங்கப்படுகின்றன.[143] எம்டிஎன்எல் மற்றும் ஏர்டெல் இரண்டும் பிராட்பேண்ட் சேவையும் வழங்குகின்றன.[144][145] மக்கள்தொகை கணக்கியல் 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மும்பையின் மக்கள்தொகை 11,914,398[147], 2008ல் சர்வதேச இதழால் வெளியிடப்பட்ட கணக்கீடுகளின்படி, மும்பையின் மக்கள்தொகை 13,662,885[148] ஆகவும், மும்பை மாநகர பகுதி மட்டும் 20,870,764[149] ஆகவும் இருந்தது. மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு சுமார் 22,000 நபர்களாக கணக்கிடப்பட்டுள்ளது. 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, BMC நிர்வாகத்தின் கீழ் உள்ள பரந்த மும்பையில் படித்தவர்களின் விகிதம் 77.45[150] சதவீதமாக இருக்கிறது, இது தேசிய சராசரியான 64.8[151] சதவீதத்தை விட அதிகமாகும். தீவு நகரில் பாலின விகிதம் 774ஆகவும் (ஆயிரம் ஆண்களுக்கு 774 பெண்கள்), புறநகரங்களில் 826 ஆகவும், ஒட்டுமொத்தமாக பரந்த மும்பையில் 811ஆகவும் இருந்தது[150]. இந்த எண்ணிக்கைகள் அனைத்தும் தேசிய சராசரியான 1,000 ஆண்களுக்கு 933 பெண்கள் என்பதை விட குறைவாகும்.[152] இந்துக்கள் (67.39%), முஸ்லீம்கள் (18.56%), பௌத்தர்கள் (5.22%), ஜெயின் (3.99%) மற்றும் கிறித்தவர் (3.72%) உள்ளிட்டவர்கள் மும்பையில் மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இவர்களுடன் சீக்கியர்களும் மற்றும் பார்சியர்களும் மீதமிருக்கும் மக்கள்தொகையில் அடங்கியுள்ளனர்.[153] மொழி/இன அடிப்படையிலான மக்கள்தொகையியல்: மராத்தியர் (53%), குஜராத்தியர்கள் (22%), வட இந்தியர்கள் (17%), தமிழர்கள் (3%), சிந்திகள் (3%), துளுவர்கள்/கன்னடர் (2%) மற்றும் பிறர்.[154] இந்த பிரத்தியேக கலாச்சார கலவையானது, 1600களில் இருந்து இந்தியா முழுவதிலும் இருந்து மக்கள் குடிபெயர்ந்ததால் ஏற்பட்டதாகும்.[155] போர்ச்சுகீசியர்களால் மதம் மாற்றப்பட்ட மராத்தி பேசும் கிழக்கு இந்திய கத்தோலிக்கர்கள் தான் தாய்நாட்டு கிறித்தவர்கள் ஆவார்கள்.[156] இந்தியாவிலுள்ள பிற மாநகரங்களைப் போலவே மும்பையும் அதிகளவிலான பன்மொழியாளர்களைக் கொண்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் உத்தியோகப்பூர்வ மொழியான மராத்தி, பரவலாக பேசப்படுகிறது. இந்தி, குஜராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகியவை பேசப்படும் பிற மொழிகளாகும்.[157] பம்பையா என்று வழங்கப்படும் பேச்சுவழக்கு இந்தியானது, மராத்தி, இந்தி, இந்திய ஆங்கிலம் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட பிற வார்த்தைகளின் கலவையாக தெருக்களில் பேசப்படுகிறது. ஆங்கிலம் பெருமளவில் பேசப்படுகிறது, மேலும் நகரத்தின் வெள்ளை காலர் பணிக்குழுக்கள் மத்தியில் இது முதன்மை மொழியாக இருக்கிறது.[158] வளரும் நாடுகளில் உள்ள விரைவாக வளரும் பல நகரங்களில் காணப்படும் முக்கிய நகரமய பிரச்சனைகளில் மும்பையும் பாதிக்கப்படுகிறது: பெருமளவிலான மக்களிடையே நிலவும் பரவலான வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை, பொது சுகாதாரமின்மை மற்றும் நகர்புற நிர்வாகம் மற்றும் கல்வித்தரமின்மை ஆகியவை. உயர்மதிப்பில் கிடைத்திருக்கும் இடத்தில், மும்பை வாழ்மக்கள் பொதுவாக தடைபட்ட, அதிக செலவிலான, பொதுவாக பணியிடங்களில் இருந்து வெகு தூரத்தில் வசிக்கிறார்கள். இதனால் நெரிசல் மிகுந்த போக்குவரத்தில் அல்லது தடைகள் மிகுந்த சாலையில் நீண்டதூரம் பிரயாணிக்க வேண்டியுள்ளது.[159] 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மும்பை மக்களில் 54.1 சதவீதத்தினர் சேரிகளில் வாழ்கிறார்கள்.[160] ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய சேரியான[161] தாரவி, மத்திய மும்பையில் அமைந்துள்ளது. அதில் 800,000 மக்கள் வசிக்கிறார்கள்.[162] சேரிகளும் கூட சுற்றுலா கவர்ச்சிகளாக மும்பையில் வளர்ந்து வருகின்றன.[163][164][165] 1991-2001 வரையிலான தசாப்தத்தில் மஹாராஷ்டிராவிற்கு வெளியில் இருந்து மும்பைக்கு புலம்பெயர்ந்தோர்களின் எண்ணிக்கை 1.12 மில்லியனாக இருந்தது. இது மும்பையின் மொத்த மக்கள்தொகையை 54.8 சதவீதம் நிகர கூடுதல்களுக்கு வழிவகுத்தது.[166] 2007ல், மும்பையில் குற்ற விகிதம் (இந்திய பெனல் கோட்டின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றங்கள்) 1,00,000 மக்களுக்கு 186.2 ஆக இருந்தது. இது தேசிய சராசரியான 175.1 என்ற அளவை விட சற்றே அதிகமாகும், ஆனால் ஒரு நாட்டில் ஒரு மில்லியனுக்கு அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் 312.3 என்ற சராசரி குற்ற விகிதத்தை விட சற்றே குறைவாகும்.[167] இந்நகரத்தின் முக்கிய சிறைச்சாலை ஆர்தர் சாலையில் உள்ளது.[168] மக்களும், கலாச்சாரமும் மும்பை வாழ்மக்கள் தங்களைத் தாங்களே மும்பைக்கர் , மும்பையைட் அல்லது பாம்பேயைட் என்று அழைக்கின்றனர். மும்பையின் புறநகர் மக்கள் தெற்கில் அமைந்துள்ள முக்கிய வர்த்தக மாவட்டத்திற்கு பயணிக்க கணிசமான நேரத்தை செலவிடுகின்ற போதிலும், பெரும்பாலான மக்கள் மும்பையின் ரெயில் அல்லது பேருந்து போக்குவரத்து அமைப்பிற்கு அருகிலேயே வசிக்கிறார்கள்.[80] சில பிரத்யேக உணவு வகைகளில் தன்சக், {2கிச்ரி{/2}, போம்லி படாட்டா பாஜி,காமாக் காக்ரி, சொலாசி கடி,மின் வேலா கர்ரி மற்றும் கரீட் பம்பாய் டக் ஆகியவை உள்ளடங்கும்.[169] சாலையோர திண்பண்டங்களில் கிடைக்கும் உணவு வகைகளில் வடா பாவ், பானிபூரி, பாவ் பாஜி மற்றும் பேல்பூரி ஆகியவை கிடைக்கின்றன.[170] இந்நகரம் பல சிறிய தென்னிந்திய, பஞ்சாபி மற்றும் சீன உணவு வகைகள் அளிக்கும் உணவுவிடுதிகளையும் கொண்டுள்ளது.[171] மும்பை இந்திய சினிமாவின்[172] பிறப்பிடமாக விளங்குகிறது—தாதாசாகேப் பால்கே மௌன படங்களுக்கு அடிக்கல் நாட்டினார், இதை தொடர்ந்து மராத்தி பேசும் படங்கள் வந்தன—இங்கு பழைய திரைப்பட ஒளிபரப்பு 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொடங்கியது.[173] பாலிவுட், மராத்தி மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களை வெளியிடும் பெரும் எண்ணிக்கையிலான திரையரங்கங்களும் மும்பையில் உள்ளன. உலகின் மிகப்பெரிய ஐமேக்ஸ் டோம் தியேட்டர் வடாலாவிற்கு அருகில் உள்ளது.[174] மும்பை சர்வதேச திரைப்பட விழா[175], பிலிம்பேர் விருதுகளுக்கான விழா, இந்திப்பட தொழில்துறையில் பழைய மற்றும் சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கும் விழா ஆகியவை மும்பையில் நடத்தப்படுகின்றன.[176] பிரித்தானியர் ஆட்சியின் போது உருவாக்கப்பட்ட பெரும்பாலான சிறந்த திரையரங்க குழுக்கள் 1950களில் கலைக்கப்பட்டு விட்டதற்கு இடையிலும், மராத்தி, இந்தி, ஆங்கிலம் மற்றும் பிற பிராந்திய மொழிகளில் ஒரு வெற்றிகரமான திரையரங்க இயக்க பாரம்பரியத்தை மும்பை உருவாக்கி வருகிறது.[177][178] அரசாங்க ஆதரவிலான கலை அரங்குகள் மற்றும் தனியார் வர்த்தக அரங்கங்கள் இரண்டிலும் சமகாலத்திய கலைகள் நன்கு வெளிப்படுகின்றன. ஜஹாங்கீர் கலையரங்கம் மற்றும் நவீன கலைகளுக்கான தேசிய கலையரங்கம் ஆகியவை அரசு ஆதரவிலான கலையரங்கங்களாகும்.[179] 1833ல் உருவாக்கப்பட்ட ஆசியாடிக் சொசைட்டி ஆப் பாம்பே என்பது நகரத்தில் இருக்கும் மிகப் பழமை வாய்ந்த பொது நூலகமாகும்.[180] சத்ரபதி சிவாஜி மஹாராஜ் வாஸ்து சங்க்ரஹாலியா (உத்தியோகப்பூர்வ தி பிரின்ஸ் ஆப் வேல்ஸ் மியூசியம்) என்பது இந்திய வரலாற்றின் அரியான பண்டைய காட்சிப்பொருள்களைக் கொண்ட தெற்கு மும்பையில் உள்ள ஒரு புதிய கண்காட்சி சாலையாகும்.[181] ஒரு பூங்காவையும் கொண்ட ஜிஜாமதா உத்யான் (உத்தியோகப்பூர்வ விக்டோரியா கார்டன்ஸ்) என்று பெயரிடப்பட்ட மிருக காட்சிசாலையையும் மும்பைக் கொண்டிருக்கிறது.10}[419] சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் மற்றும் எலிபண்டா குகைகள் ஆகிய இரண்டு பாரம்பரிய யுனெஸ்கோ இடங்களை மும்பை கொண்டுள்ளது.[182] நரிமன் பாயிண்ட், கிர்ஹாம் சௌபாத்தி, ஜூஹூ பீச் மற்றும் மரைன் டிரைவ் ஆகியவை நகரத்தின் பிற பிரபல சுற்றுலா தளங்களாகும்.[183][184] ஓர் தீம் பார்க் மற்றும் புத்துணர்வூட்டும் இடமாக விளங்கும் எஸ்செல் வோல்டு, கோரய் கடற்கரைக்கு அண்மையில் அமைந்துள்ளது.[185][186] ஆசியாவின் மிகப்பெரிய தீம் வாட்டர் பார்க்கான வாட்டர் கிங்டம் என்பது இந்நகரில் அமைந்துள்ளது.[187] மும்பை வாழ் மக்கள் மேற்கத்திய மற்றும் இந்திய விழாக்களைக் கொண்டாடுகிறார்கள். தீபாவளி, ஹோலி, ஈத், கிறிஸ்துமஸ், நவராத்திரி, புனித வெள்ளி, தசரா, மொஹரம், விநாயக சதுர்த்தி, துர்க்கா பூஜை மற்றும் மகா சிவராத்திரி ஆகியவை நகரத்தின் சில பிரபல விழாக்கள் ஆகும்.[188] இசை, நடனம், தியேட்டர் மற்றும் திரைப்பட துறைகளில் கலைஞர்களின் படைப்புகளை உள்ளடக்கிய காலா கோடா கலை விழா என்பது ஓர் உலக கலைகளின் கண்காட்சியாகும்.[189] ஒரு வாரம் காலம் கொண்டாடப்படும் பாந்த்ரா திருவிழா என்பது எல்லா மக்களாலும் கொண்டாடப்படுகிறது. மும்பையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பான்கங்கா டேங்க்கில் மஹாராஷ்டிரா சுற்றுலா அபிவிருத்தி கழகத்தால் ( MTDC) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பான்கங்கா விழா என்ற இரண்டு நாள் விழா ஏற்பாடு செய்யப்படுகிறது.[190] எலிபெண்டா தீவுகளி்ல் ஒவ்வொரு பிப்ரவரி மாதமும் கொண்டாடப்படும் எலிபெண்டா விழாவானது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இத்தீவுக்கு வரும் கலைஞர்களுடன் பாரம்பரிய இந்திய நடனம் மற்றும் இசைக்காக அர்பணிக்கப்படுகிறது.[191] மும்பை பின்வரும் நகரங்களுடன் துணை நகர உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளது:[97] யோகோஹாமா, ஜப்பான். [192] லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா[193] இலண்டன், இங்கிலாந்து. பெர்லின், ஜெர்மனி. ஸ்டுட்கார்ட், ஜெர்மனி.[194] சென் பீட்டர்ஸ்பேர்க், ரஷ்யா. ஊடகங்கள் மும்பையில் பல்வேறு பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் மற்றும் ரேடியோ நிலையங்களும் உள்ளன. டைம்ஸ் ஆஃப் இந்தியா , மிட் டே , ஹிந்துஸ்தான் டைம்ஸ் , டிஎன்ஏ மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் உட்பட பிரபல ஆங்கில செய்தி பத்திரிக்கைகள் மும்பையில் பிரசுரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. மாராத்திய செய்தி பத்திரிக்கைகளில் லோக்சத்தா , லோக்மத் மற்றும் மஹாராஷ்டிரா டைம்ஸ் ஆகியவை உள்ளடங்கும். பிற இந்திய மொழிகளிலும் செய்தி இதழ்கள் வெளியாகின்றன.[195] ஆசியாவின் மிகப் பழமைவாய்ந்த பாம்பே சமாச்சார் பத்திரிக்கையின் தலைமை இடமாகவும் மும்பை விளங்குகிறது. இப்பத்திரிக்கை 1822ல் இருந்து குஜராத்தி மொழியில் பிரசுரிக்கப்பட்டு வருகிறது.[196] முதல் மராத்திய செய்தி பத்திரிக்கையான பாம்பே தர்பன் , 1832ல் மும்பையில் பால்சாஸ்திரி ஜம்பேகரினால் தோற்றுவிக்கப்பட்டது.[197] கட்டண தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒன்றின் மூலமாகவோ அல்லது உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி சேவையளிப்போர் மூலமாகவோ பல்வேறு இந்திய மற்றும் சர்வதேச தொலைக்காட்சி சேனல்களை மும்பையில் காணலாம். பல்வேறு செய்தி சேனல்கள் மற்றும் அச்சு பிரசுரங்கள் பெருமளவில் இருப்பதால், இந்த மாநகரம் பல்வேறு சர்வதேச ஊடக பெருநிறுவனங்களின் மையமாக விளங்குகிறது. தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையான தூர்தர்ஷன் இரண்டு இலவச சேனல்களை வழங்குகிறது[198], அதே வேளை மூன்று முக்கிய கேபிள் வலையமைப்புகள் பெரும்பாலான வீடுகளுக்கு சேவை வழங்குகின்றன.[199] ஈஎஸ்பிஎன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜீ மராத்தி, ஈடிவி மராத்தி, டிடி சாஹ்யாத்ரி, மீ மராத்தி, ஜீ டாக்கிஸ், ஜீ டிவி, ஸ்டார் பிளஸ் ஆகியவற்றுடன் ஸ்டார் மஜ்ஹா போன்ற புதிய சேனல்களும் மிக பிரபலமாக உள்ளன. மும்பை மற்றும் மஹாராஷ்டிராவிற்காக மட்டும் முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட செய்தி அலைவரிசைகளில் ஸ்டார் மஜ்ஹா, ஜீ 24 டாஸ் மற்றும் சஹாரா சாமே மும்பை போன்றவை உள்ளடங்கும். செயற்கோள் தொலைக்காட்சி (டிடிஎச்), அதன் உயர்ந்த நிறுவும் செலவுகளால் இன்னும் பெருந்திரளான வரவேற்பைப் பெறவில்லை.[200] டிஷ் டிவி மற்றும் டாடா ஸ்கை போன்றவை மும்பையின் முக்கிய டிடிஎச் பொழுதுபோக்கு சேவைகளாக உள்ளன.[201] பண்பலை வரிசையில் ஒன்பது ரேடியோ சேவைகளுடனும், ஏஎம் வரிசையில் மூன்று அனைத்திந்திய வானொலி ஒலிபரப்புகளும் சேர்த்து மொத்தம் பன்னிரெண்டு ரேடியோ ஒலிபரப்புகள் மும்பையில் இயங்கி வருகின்றன.[202] மேலும் வோல்டுஸ்பேஸ், சைரெஸ் மற்றும் எக்ஸ்எம் போன்ற வர்த்தக ஒலிபரப்பு சேவை அளிப்போர்களும் மும்பையில் உள்ளனர்.[203] மத்திய அரசாங்கத்தால் 2006ல் தொடங்கப்பட்ட கன்டிஷனல் அக்சஸ் சிஸ்டம், அதற்கிணையான ஒளிபரப்பு சேவையான டைரக்டு-டூ-ஹோம் தொழில்நுட்பத்தின் போட்டியால் சரியான வரவேற்பை பெறவில்லை.[204] மும்பையை மையமாக கொண்டுள்ள இந்தி திரைப்படத்துறையான பாலிவுட், ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 150-200 திரைப்படங்களைத் தயாரிக்கிறது.[205] பாலிவுட் என்ற பெயர் பம்பாய் மற்றும் ஹாலிவுட் என்பதின் இணைப்புச் சொல்லாகும். 2000 ஆண்டுகளில், பாலிவுட் வெளிநாடுகளில் நல்ல வளர்ச்சியைக் கண்டது. இது தரம், ஒளிப்பதவி மற்றும் புதிய கதைகளிலும், அத்துடன் சிறப்பு தோற்றங்கள் மற்றும் அனிமேஷன் போன்ற தொழில்நுட்ப அபிவிருத்திகளிலும் திரைப்பட தயாரிப்பைப் புதிய உயரத்திற்கு இட்டு சென்றது.[206] திரைப்பட நகரம் உட்பட கோரேகாவ்வில் உள்ள ஸ்டூடியோக்கள், பெரும்பாலான திரைப்பட அரங்கங்களுக்கான இடமாக இருந்தன.[207] மராத்திய திரைப்பட தொழில்துறையும் மும்பையை மையமாக கொண்டே செயல்பட்டு வருகிறது.[208] மும்பையில் தமிழ்நாட்டு மக்கள் அதிக அளவில் பல வருடங்களாக வசித்து வருவதால், அவர்கள் மும்பை நகர செய்திகளை தங்கள் தாய்மொழியில் தெரிந்துக்கொள்வதற்காக தினகரன், தினத்தந்தி உள்ளிட்ட பல்வேறு தமிழ் நாளிதழ்கள் மும்பையிலேயே அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. கல்வி மும்பையில் உள்ள பள்ளிகள் "முனிசிப்பல் பள்ளிகள்" (BMCஆல் நடத்தப்படுபவை)[209] அல்லது தனியார் பள்ளிகளாகவே உள்ளன. இவை சில விதயங்களில் அரசிடமிருந்து நிதி உதவிகளைப் பெறுகின்றன[210]. இந்தப் பள்ளிகள் மகாராஷ்டிரா மாநில வாரியமான MSBSHSE, இந்திய பள்ளி சான்றிதழ் பரீட்சைக்கான அனைத்திந்திய கழகம் (CISCE) அல்லது இடைநிலை கல்விக்கான மத்திய ஆணையம் (CBSE) ஆகியவற்றில் ஏதோவொன்றால் அங்கீகரிக்கப்படுகின்றன[211]. மராத்தி அல்லது ஆங்கிலம் பொதுவான பயிற்று மொழியாக உள்ளது. அரசால் நடத்தப்படும் பொது பள்ளிகள் பல்வேறு வசதிகளில் பின்தங்கி உள்ளன, ஆனால் தனியார் பள்ளிகளின் பெரும் செலவுகளை ஏற்க முடியாத ஏழைகளுக்கு இது மட்டுமே ஒரு வாய்ப்பாக உள்ளன.[212]. 10+2+3/4 திட்டத்தின் கீழ், மாணவ, மாணவியர் பத்தாண்டு கால பள்ளிப்படிப்பை முடிக்கின்றனர்[213]. பின்னர் அவர்கள் இரண்டு ஆண்டு ஜூனியர் கல்லூரியில் சேர்கின்றனர். அங்கு அவர்கள் கலை, வர்த்தகம் அல்லது விஞ்ஞானம் ஆகிய மூன்றில் ஒரு துறையைத் தேர்ந்தெடுக்கின்றனர். இதை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட துறையில் ஒரு பொதுவான பட்டப்படிப்பு தொடரப்படுகிறது அல்லது சட்டம், பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற உத்தியோக படிப்பு தொடரப்படுகிறது.[214]. பட்டப்படிப்புகளின் எண்ணிக்கையின் அடிப்படையி்ல் உலகின் மிகப் பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான மும்பை பல்கலைக்கழகத்தின் கீழ் பெரும்பாலான கல்லூரிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன[215]. இந்தியாவின் முக்கிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பள்ளிகளான இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை[216], வீர்மாதா ஜிஜாபாய் தொழில்நுட்ப பயிலகம் (VJTI)[217] மற்றும் யூனிவர்சி்ட்டி இன்ஸ்டியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி (UICT) மற்றும் SNDT பெண்கள் பல்கலைக்கழகம் ஆகியவை மும்பையில் உள்ள பிற தன்னாட்சி பல்கலைக்கழகங்களாகும்[218]. மேலாண்மை கல்விக்கான ஜம்னாலால் பஜாஜ் பயிலகம் (JBIMS), கே. ஜெ. சோமைய்யா இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ் அண்டு ரிசர்ச் (SIMSR), எஸ். பி. ஜெயின் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்டு ரிசர்ச் ஆகியவையும் மற்றும் பல பிற மேலாண்மை பள்ளிகளும் கூட மும்பையை மையமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன[219]. இந்தியாவின் மிக பழமையான சட்டம் மற்றும் வர்த்தக கல்லூரிகளான முறையே அரசு சட்டக்கல்லூரி மற்றும் சிடென்ஹாம் கல்லூரியும் மும்பையில் அமைந்துள்ளன[220][221]. சர் ஜெ. ஜெ. ஸ்கூல் ஆப் ஆர்ட் என்பது மும்பையின் மிகப் பழமையான கலை பயிலகமாகும்[222]. அடிப்படை ஆராய்ச்சிக்கான டாடா பயிலகம் (TIFR), மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) ஆகிய இரண்டு முக்கிய ஆராய்ச்சி பயிலகங்களும் மும்பையில் அமைந்துள்ளன[223]. டிராம்பேயில் உள்ள தன் ஆலையில் 40 மெகாவாட் அணு ஆராய்ச்சி உலையான சைரஸ் அணு உலையை (CIRUS) BARC இயக்குகிறது[224]. விளையாட்டு கிரிக்கெட் , (நாட்டிலும்) நகரத்திலும் மிகப் பிரபலமான விளையாட்டாக இருக்கிறது.[225] மைதானங்களின் பற்றாக்குறையால், எங்கும் அது பல்வேறு மாற்றப்பட்ட வடிவங்களில் (பொதுவாக அது கல்லி கிரிக்கெட் என்று குறிப்பிடப்படுகிறது) விளையாடப்படுகிறது. இந்திய துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் (BCCI) இருப்பிடமாகவும் மும்பை விளங்குகிறது.[226] இந்நகரின் சார்பாக ரஞ்சிக் கோப்பையில் மும்பை கிரிக்கெட் அணி பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அத்துடன் எந்த குழுவும் வெல்லாத அளவிற்கு, அது 38 முறை ரஞ்சிக் கோப்பையை வென்றுள்ளது.[227] இந்நகரம் இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ்களாலும், இந்திய கிரிக்கெட் லீக்கில் மும்பை சேம்ப்களாலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. இந்நகரில் வங்காடே மைதானம் மற்றும் பிராபோர்ன் மைதானம் எனும் இரண்டு சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன.[228] மும்பையில் இருந்து வந்த தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் சச்சின் டெண்டுல்கர்[229] மற்றும் சுனில் கவாஸ்கர் உள்ளடங்குவார்கள்.[230] கால்பந்தாட்டமும் (சாக்கர்) இந்நகரத்தின் பிற பிரபல விளையாட்டுக்களில் ஒன்றாக விளங்குகிறது. FIFA உலக கோப்பையின் போது மும்பையில் பரவலாக பார்க்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாகும்.[231] ஐ-லீக்கில், மும்பை FC,[232] மகேந்திரா யுனைடெட்[233] மற்றும் ஏர்-இந்தியா ஆகிய மூன்று அணிகளால் மும்பை பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.[234] கிரிக்கெட்டின் எழுச்சியால், பீல்டு ஹாக்கி தன் பிரபலத்தன்மையை இழந்துவிட்டிருக்கிறது.[235] மும்பை மராத்திய வீரர்களின் மையமாகவும் விளங்குகிறது, மகாராஷ்டிராவில் உள்ள வெகு சில அணிகளில் ஒன்றான இது ப்ரீமியர் ஹாக்கி லீக்கில் (PHL) போட்டியிடுகிறது.[236] ஒவ்வொரு பிப்ரவரியிலும், மகாலக்ஷ்மி ரேஸ்கோர்சில் மும்பை டெர்பி போட்டிகளை நடத்துகிறது. மும்பையில் உள்ள டர்ஃப் கிளப்பில் பிப்ரவரியில் மெக்டொவல்ஸின் டெர்பி போட்டியும் நடத்தப்படுகிறது.[237] சமீபத்திய ஆண்டுகளில் பார்முலா 1 ரேசிங் மீதான ஆர்வமும் அதிகரித்து வருகிறது,[238] 2008ல், போர்ஸ் இந்தியா F1 அணியின் கார் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டது.[239] 2004 மார்ச்சில், மும்பை கிராண்ட் பிரிக்ஸ், F1 பவர்போட் உலக சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இருந்தது.[240] 2004ல், இந்திய மக்களிடையே விளையாட்டு ஒழுக்கத்தைக் கொண்டு வர ஓர் உடன்படிக்கை மூலம் வருடாந்திர மும்பை மாரத்தான் - உருவாக்கப்பட்டது.[241] 2006 முதல், ஏடிபி வோல்டு டூரின் ஓர் சர்வதேச சுற்றுத் தொடரான தி கிங்பிஷர் ஏர்லைன்ஸ் டென்னிஸ் ஓபனிலும் மும்பை களமிறங்கியது.[242] காட்சியகம் மேலாண்மைக் கட்டிடம் பட்டமளிப்பு மேடை மும்பைபல்கலைக்கழகம் மும்பை தொடருந்தகம் 1929 1929 விரைவு அஞ்சல் வண்டி உடற்கல்வி நூலகம். முதற் இளங்கோமான் மேற்கோள்கள் புற இணைப்புகள் பகுப்பு:மும்பை பகுப்பு:இந்தியாவின் மெட்ரோ நகரங்கள் பகுப்பு:மகாராட்டிரத்திலுள்ள மாநகரங்கள்
மும்பை நகரத்தின் பரப்பளவு என்ன?
603km2
13,167
tamil
6fc07dbd9
ஜெயமோகன் (Jeyamohan), பிறப்பு: 22 ஏப்ரல் 1962) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார். மிகப் பரவலான கவனத்தை ஈர்த்த புதினங்களை எழுதியுள்ளார். இவரது புனைவுகளில் மனித மனதின் அசாதாரணமான ஆழங்களும் நுட்பங்களும் வெளிப்படும். வாழ்க்கைக் குறிப்புகள்[1] ஜெயமோகனின் தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. இவருடைய தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. ஜெயமோகன் 1962 ஏப்ரல் 22 ஆம் தேதி மலையாள நாயர் குடும்பத்தில் பிறந்தார்[2]. இவர் சிறு வயதில் பத்மநாபபுரத்திலும் கன்னியாகுமரி அருகே கொட்டாரம் ஊரிலும், பின்னர், முழுக்கோடுவிலும் தொடக்கப்பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் பதினொன்று வகுப்பு வரை அருமனை நெடியசாலை அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தார். 1978 ல் பள்ளிப்படிப்பு முடித்து, முழுக்காட்டில் இருந்தபொழுது மலையாளப் புதினங்களுக்கு அறிமுகம் ஆனார். பின்னர் 1980ல் நாகர்கோயில் பயோனியர் குமாரசாமிக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படிப்பில் சேர்ந்தார். ஆனால் 1982 இல் கல்லூரிப் படிப்பை முடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இவருடைய நெருங்கிய நண்பர் ராதாகிருஷ்ணன் என்பவரின் தற்கொலையால் மன அமைதி இழந்தார். அக்காலகட்டத்தில் குமரி மாவட்டத்தில் வேரூன்றிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொடர்பினால் ஆன்மிக நூல்களில் நாட்டம் ஏற்பட்டது என்று ஜெயமோகன் கூறுகிறார். இவருக்குத் துறவியாக வேண்டுமென்ற கனவும் உருவாகியது. இருவருடங்கள் பலவாறாக அலைந்தும், திருவண்ணாமலை, பழனி, காசி ஆகிய ஊர்களில் இருந்தும், பல சில்லறைவேலைகள் செய்தும் வாழ்க்கை நடத்தியுள்ளார். 1984ல் கேரளத்தில் காசர்கோடு தொலைபேசி நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலைக்குச் சேர்ந்தார். அப்பொழுது தொழிற்சங்கத்தின் பெரிய கம்யூனில் தங்கியிருந்தார். அச்சமயம் இடதுசாரி இயக்கங்களின் மீது ஆர்வமும் அவற்றிற்கு பங்களிக்கவும் வாய்ப்புகள் ஏற்பட்டது. அங்கிருந்த நூலகங்களில் தொடர்ச்சியாக வாசிக்க ஆரம்பித்த இவர், இலக்கிய, கோட்பாட்டு விவாதங்களில் ஈடுபடும் பக்குவம் பெற்றார். இக்காலகட்டத்தில் இவருடைய பெற்றோரின் தற்கொலையால் மிகவும் நிம்மதியிழந்து தீவிரமாக அலைச்சலுக்கு ஆளானார். இவர் 1991 ஆம் ஆண்டு ஆகஸ்டில் அருண்மொழி நங்கை என்னும் வாசகியை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இரண்டு குழந்தைகள், ஒரு ஆண், ஒரு பெண் . ஜெயமோகன் 2010 வரை பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்லில் பணியாற்றினார். நாகர்கோயிலில் வசிக்கிறார். எழுத்துலக அறிமுகம் அம்மா விசாலாட்சி அவர்களுக்கு தன்னை எழுத்தாளன் ஆக்கிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது என்கிறார் ஜெயமோகன்,இலக்கிய வாசகியான அவர் மூலம் வாசிப்பு ஆர்வம் வந்தது , 12 வயது முதலே ரத்னபாலா போன்ற பத்திரிக்கைகளில் எழுத துவங்கினார். 1985ல் எழுத்தாளர் சுந்தர ராமசாமி அறிமுகமானார். அவர் ஜெயமோகனை இலக்கியத்துக்குள் ஆற்றுப்படுத்தினார். அவரை எழுதலாம் என்று தூண்டி ஊக்கமூட்டினார். இவருடைய எழுத்துக்கள் அதிகமும் அவருக்கே திருப்பி அனுப்பப்பட்டன. தான் ஒரு மனநோயாளிக்குரிய தீவிரத்துடன் எழுதினேன் என்கிறார்[3]. ’கைதி’ என்ற கவிதை 1987ல் கட்டைக்காடு ராஜகோபாலன் நடத்திவந்த கொல்லிப்பாவை இதழில் வெளியாயிற்று. 1987 ல் கணையாழியில் நதி அசோகமித்திரனின் சிறு குறிப்புடன் வெளியாயிற்று. அது இவருடைய எழுத்துக்கு ஒரு தொடக்கம். தொடர்ந்து நிகழ் இதழில் படுகை, போதி முதலிய கதைகள் வந்து கவனிக்கப்பட்டன. 1988ல் எழுதிய ரப்பர் என்னும் புதினத்தை 1990ல் அகிலன் நினைவுப்போட்டிக்காக சுருக்கி அனுப்பி, அதற்கான விருதைப் பெற்றார். தாகம் என்னும் தலைப்பில் தமிழ் புத்தகாலயம் இந்நூலை வெளியிட்டுள்ளது. 1998 முதல் 2004 வரை "சொல்புதிது" என்ற சிற்றிதழை நண்பர்களுடன் இணைந்து நடத்தினார். நாராயணகுருவின் மரபில் வந்த குரு நித்ய சைதன்ய யதியுடனான தொடர்பு மூலம் ஆன்மிகமான ஈடுபாடு அடைந்தார். மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மாவை தன் ஆசிரியராகவும் முன்னோடியாகவும் குறிப்பிடுகிறார். ஜெயமோகன் மலையாளத்திலும் எழுதுகிறார். மாத்ருபூமி, பாஷாபோஷினி இதழ்களில் இவர் எழுதிய கட்டுரைகள் கரன்ட் புக்ஸ் பதிப்பாக நெடும்பாதையோரம் என்ற பேரில் வெளியாகியுள்ளன. தமிழில் நூறுநாற்காலிகள் என்ற பெயரில் எழுதிய கதையின் மொழிபெயர்ப்பு நூறு சிம்ஹாசனங்கள் என்ற பெயரில் மலையாளத்தில் வெளிவந்துள்ளது அமைப்புகள் ஜெயமோகனின் வாசகர்கள் இணைந்து விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் என்னும் இலக்கிய அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். 2010 முதல் ஆண்டுதோறும் சிறந்த மூத்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பிக்கிறது இவ்வமைப்பு. விருதுவிழா இலக்கியக்கூடலாக கோவையில் நிகழ்கிறது. விஷ்ணுபுரம் விருது தமிழின் முக்கியமான விருதாகக் கருதப்படுகிறது. அவரது புகழ்மிக்க நாவலான விஷ்ணுபுரம் பெயரால் அமைந்தது இவ்விருது குருநித்யா ஆய்வரங்கம் என்னும் அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் இலக்கியச் சந்திப்புகளை ஊட்டியில் நிகழ்த்திவருகிறார்கள் ஜெயமோகனின் வாசகர்கள். திரைப்படங்கள் திரைப்படத்துறையிலும் பணியாற்றி வருகிறார். தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்[4]. 2006இல் வெளிவந்த கஸ்தூரிமான் இவர் திரைக்கதை எழுதிய முதல் படம். கஸ்தூரிமான் தமிழ் 2005 நான் கடவுள் தமிழ் 2008 அங்காடித்தெரு தமிழ் 2010 நீர்ப்பறவை தமிழ் 2012 ஒழிமுறி மலையாளம் 2012 கடல் தமிழ் 2013 ஆறு மெழுகுவர்த்திகள் தமிழ் 2013 காஞ்சி மலையாளம் 2013 காவியத்தலைவன் தமிழ் 2014 நாக்குபெண்டா நாக்கு டாக்கு மலையாளம் 2014 ஒன் பை டூ மலையாளம் 2014 பாபநாசம் தமிழ் 2015 எந்திரன் 2.0 தமிழ் தயாரிப்பில் விருதுகள் 1990 ஆண்டு அகிலன் நினைவுப்போட்டிப் பரிசைப் பெற்றார். 1992 ஆம் ஆண்டுக்கான கதா[5] விருதைப் பெற்றார். 1994 ஆம் ஆண்டுக்கான சம்ஸ்கிருதி சம்மான்[6] தேசியவிருது பெற்றுள்ளார். 2008 ஆம் ஆண்டு பாவலர் விருது பெற்றார் 2010 ஆம் ஆண்டு முதல் இவரது படைப்பான விஷ்ணுபுரம் பெயரால் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது ஒன்றை அளிக்கிறது. 2011 ஆம் ஆண்டு அறம் சிறுகதைத் தொகுதிக்காக முகம் விருது பெற்றார் 2012 சிறந்ததிரைக்கதைக்கான கேரளா ஃபிலிம் கிரிட்டிக்ஸ் விருது ஒழிமுறி 2012- சிறந்த திரைக்கதைக்கான டீ ஏ ஷாஹித் விருது ஒழிமுறி 2014- கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிய இயல் விருது[7] புதினங்கள் ரப்பர் விஷ்ணுபுரம்[8] (கவிதா பதிப்பகம்) பின் தொடரும் நிழலின் குரல் (தமிழினி பதிப்பகம்) பனிமனிதன் - சிறுவர் புதினம் கன்னியாகுமரி[9] கொற்றவை (புதினம்) (தமிழினி பதிப்பகம்) காடு ஏழாம் உலகம்[10][11][12][13] அனல்காற்று இரவு[14] உலோகம்[15] கன்னிநிலம் வெள்ளையானை[16][17] மகாபாரதத்தின் தமிழ் நாவல் வடிவம் வெண்முரசு முதற்கனல் - வெண்முரசு நாவல் வரிசை, முதல் புதினம். மழைப்பாடல் - வெண்முரசு நாவல் வரிசை, இரண்டாம் புதினம். வண்ணக்கடல் - வெண்முரசு நாவல் வரிசை, மூன்றாம் புதினம். நீலம் - வெண்முரசு நாவல் வரிசை. நான்காம் புதினம். பிரயாகை - வெண்முரசு நாவல் வரிசை. ஐந்தாம் புதினம். வெண்முகில் நகரம் - வெண்முரசு நாவல் வரிசை, ஆறாம் புதினம். இந்திரநீலம் - வெண்முரசு நாவல் வரிசை, ஏழாம் புதினம். காண்டீபம் - வெண்முரசு நாவல் வரிசை, எட்டாம் புதினம். வெய்யோன் - வெண்முரசு நாவல் வரிசை, ஒன்பதாம் புதினம். பன்னிரு படைக்களம் - வெண்முரசு நாவல் வரிசை, பத்தாம் புதினம். சொல்வளர்காடு - வெண்முரசு நாவல் வரிசை, பதினொன்றாம் புதினம். கிராதம் - வெண்முரசு நாவல் வரிசை, பன்னிரண்டாம் புதினம். நீர்க்கோலம் - வெண்முரசு நாவல் வரிசை, பதின்மூன்றாம் புதினம். மாமலர் - வெண்முரசு நாவல் வரிசை, பதினாங்காம் புதினம். எழுதழல் - வெண்முரசு நாவல் வரிசை, பதினாங்காம் புதினம். குருதிச்சாரல் - வெண்முரசு நாவல் வரிசை, பதினாறாம் புதினம். சிறுகதை நூல்கள் மண் (கவிதா பதிப்பகம்) ஆயிரங்கால் மண்டபம் (கவிதா பதிப்பகம்) திசைகளின் நடுவே (கவிதா பதிப்பகம்) கூந்தல்(கவிதா பதிப்பகம்) ஜெயமோகன் சிறுகதைகள் (கிழக்கு பதிப்பகம்) ஜெயமோகன் குறுநாவல்கள் (கிழக்கு பதிப்பகம்) பேய்க்கதைகளும் தேவதைக் கதைகளும்(நிழல்வெளிக்கதைகள்) (நவீனத் திகில்கதைகள்) (கிழக்கு பதிப்பகம்) ஊமைச்செந்நாய்" (உயிர்மை பதிப்பகம்) ”அறம்” [சிறுகதைகள்] (வம்சி பதிப்பகம்) வெண்கடல் [வம்சி பதிப்பகம்] ஈராறுகால்கொண்டெழும்புரவி [சொல்புதிது பதிப்பகம்] அறிவியல் சிறுகதைகள் விசும்பு (அறிவியல் சிறுகதைகள்)(கிழக்கு பதிப்பகம்) அரசியல் சாட்சிமொழி (உயிர்மை பதிப்பகம்) இன்றைய காந்தி (காந்திய விவாதங்கள்)(தமிழினி பதிப்பகம்) அண்ணா ஹசாரே -ஊழலுக்கு எதிரான போராட்டம் (கிழக்கு பதிப்பகம்) வாழ்க்கை வரலாறு முன்சுவடுகள் (உயிர்மை பதிப்பகம்) கமண்டலநதி நாஞ்சில் நாடன் (தமிழினி பதிப்பகம்) கடைத்தெருவின் கலைஞன் ஆ. மாதவன் (தமிழினி பதிப்பகம்) நினைவின் நதியில் (சுந்தர ராமசாமி பற்றி) (உயிர்மை பதிப்பகம்) பூக்கும் கருவேலம் [பூமணியின் படைப்புலகம்] தமிழினி பதிப்பகம் லோகி [ஏ கே லோகிததாஸ் நினைவு [உயிர்மை பதிப்பகம்] இவர்கள் இருந்தார்கள் [நற்றிணைப்பதிப்பகம்] ஒளியாலானது [தேவதேவன் படைப்புலகம்] காப்பியம் கொற்றவை (காப்பியம்) (தமிழினி பதிப்பகம்) நாடகம் வடக்குமுகம் (நாடகங்கள்) (தமிழினி பதிப்பகம்) வரலாறு கொடுங்கோளூர் கண்ணகி (வரலாற்றுநூல், மொழியாக்கம்) (தமிழினி பதிப்பகம்) இலக்கியத் திறனாய்வு இலக்கிய முன்னோடிகள் (ஏழு இலக்கிய விமரிசன நூல்கள்) [தமிழினி], முதற்சுவடு, கனவுகள் இலட்சியங்கள், சென்றதும் நின்றதும், மண்ணும் மரபும், அமர்தல் அலைதல், நவீனத்துவத்தின் முகங்கள், கரிப்பும் சிரிப்பும் உள்ளுணர்வின் தடத்தில்... (கவிதை விமரிசனம்) [தமிழினி], நாவல் (விமரிசனம்) [நற்றிணை] நவீனத்துவத்திற்குப் பின் தமிழ் கவிதை -தேவதேவனை முன்வைத்து [தமிழினி], ஆழ்நதியைத்தேடி (இலக்கிய விவாதம்) நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் [நற்றிணை] இலக்கிய உரையாடல்கள் (நேர்காணல்கள்) [எனி இண்டியன்] ஈழ இலக்கியம் ஒரு விமரிசனப்பார்வை, [எனி இண்டியன்] புதிய காலம் -இலக்கிய விமரிசனம், [உயிர்மை] மேற்குச் சாளரம் மேலை இலக்கிய அறிமுகம், [உயிர்மை] எழுதும் கலை - இலக்கிய எழுத்துக்கு அறிமுகம் [தமிழினி], கண்ணீரைப் பின் தொடர்தல்-இருபத்திரண்டு இந்திய நாவல்கள் குறித்த அறிமுகம். [உயிர்மை] இலக்கிய முன்னோடிகள் [நற்றினை பதிப்பகம்] பழந்தமிழ் இலக்கியம் சங்க சித்திரங்கள் (பண்டை இலக்கியம்) மொழியாக்கம் தற்கால மலையாளக் கவிதைகள் (மொழிபெயர்ப்பு) இன்றைய மலையாளக் கவிதைகள் (மொழிபெயர்ப்பு) சமீபத்திய மலையாளக் கவிதைகள் (மொழிபெயர்ப்பு) அனுபவம் வாழ்விலே ஒருமுறை (அனுபவக் கட்டுரைகள்) [உயிர்மை பதிப்பகம்] இன்றுபெற்றவை (நாட்குறிப்புகள்)[உயிர்மை பதிப்பகம்] புல்வெளிதேசம் (பயணக்கட்டுரை)[உயிர்மை பதிப்பகம்] நிகழ்தல் (அனுபவக்குறிப்புகள்)[உயிர்மை பதிப்பகம்] நாளும்பொழுதும் அனுபவக்குறிப்புகள் [நற்றிணைபதிப்பகம்] முகங்களின் தேசம் (பயணக்கட்டுரை)[சூரியன் பதிப்பகம்] தத்துவமும் ஆன்மீகமும் சிலுவையின் பெயரால் (ஆன்மீகம்) [உயிர்மை] இந்தியஞானம் (ஆன்மீகம்) [தமிழ்னி] இந்துஞான மரபில் ஆறுதரிசனங்கள் (தத்துவம்) [கிழக்கு] இந்துமதம் சில விவாதங்கள் [சொல்புதிது] பண்பாடு எதிர்முகம் (இணையவிவாதங்கள்) தமிழினி பதிப்பகம் பண்படுதல் (பண்பாட்டுக்கட்டுரைகள்) உயிர்மைபதிப்பகம் தன்னுரைகள் (மேடை உரைகள்) உயிர்மைப்பதிப்பகம் எழுதியனைக் கண்டுபிடித்தல் [இலக்கிய உரையாடல்கள்] கயல்கவின் பதிப்பகம் பொன்னிறப்பாதை [சொல்புதிது பதிப்பகம்] விதிசமைப்பவர்கள் [கயல்கவின் பதிப்பகம்] ஆகவேகொலைபுரிக [கயல்கவின் பதிப்பகம்] பொது நலம் (உடல்நலக்கட்டுரைகள்) இணையத்தில் படிக்க மேற்கோள்கள் வெளி இணைப்புகள் - எழுத்தாளரின் இணையத்தளம் writer jeyamohan's works translation in English * இணையத்தில் ஜெயமோகன் படைப்புகள் பகுப்பு:1962 பிறப்புகள் பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள் பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள் பகுப்பு:அறிவியல் தமிழ் எழுத்தாளர்கள் பகுப்பு:தமிழ் கலைச்சொல் அறிஞர் பகுப்பு:மலையாளம்-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட நபர்கள் பகுப்பு:இயல் விருது பெற்றவர்கள் பகுப்பு:வாழும் நபர்கள்
எழுத்தாளர் ஜெயமோகனின் சொந்த ஊர் எது?
குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு
359
tamil
221526dfb
{{IPA}}, formats symbols of the International Phonetic Alphabet {{PUA}}, marks characters from the Private Use Area that should be retained {{transl}}, generic romanization {{script}}, scripts in Unicode navigation box {{unichar}}, formats a Unicode character description {{Unicode templates}}, a navbox linking to multiple Unicode templates{{Template disambiguation}} should never be transcluded in the main namespace.) இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்று. இது கிழக்கில் தமிழ் நாட்டையும், வடக்கில் கர்நாடகத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. மேற்கில் அரபுக் கடல் உள்ளது. மலையாளம் கேரளாவின் முதன்மையான மொழியாகும். தமிழ் பேசுவோரும் அதிகமாக காணப்படுகினறனர். கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரம். பிற குறிப்பிடத்தக்க நகரங்கள் கொச்சி,கோழிக்கோடு திருச்சூர் மற்றும் கோட்டயம் ஆகும். இந்திய மாநிலங்களில் கல்வியறிவு (எழுத்தறிவு) விகிதத்தில் கேரளம் முதலிடம் வகிக்கிறது. பெயர்க் காரணம் கேரளா என்ற சொல், தமிழ்ச் சொல்லான “சேரளம்” (மலைச் சரிவு) அல்லது சேர நாடு என்பதிலிருந்து தோன்றியது என்பது அறிஞர்களின் கூற்று.[9][10] இன்றைய கேரளா, வரலாற்று காலத்தில் “சேர நாடு” என்று அழைக்கப்பட்டு வந்தது. 3ஆம் நூற்றாண்டு பேரரசர் அசோகரின் கல்வெட்டில் கேரளா - “கேரளபுத்திரர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[11] மேலும், ரோமானிய வணிகன் பெரிபுளீஸின் நிலவரைபடத்தில், இன்றைய கேரளப் பகுதியை சேரபுத்ரா என்று குறிப்பிடுகின்றார். கேரள மக்கள் மலையாளிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.[12] மலையில் (மேற்கு தொடர்ச்சி மலைகள்) வாழ்பவர்கள் என்பது அதன் பொருள் ஆகும். சிறப்புகள் 5 ஏப்ரல் 1957ல் ஜனநாயக முறைப்படி, ஆசியாவிலேயே முதன் முதலாக கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த முதல் மாநிலம் ஆதி சங்கரர் (கி.பி.788-820) பிறந்த இடம் காலடி இந்திய செவ்வியல் நடன வடிவம் "கதகளி"யின் பிறப்பிடம் இரப்பர் உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி மாநிலம் இந்தியாவின் நறுமணத் தோட்டம் களரிப்பயிற்று தற்காப்புக் கலையின் பிறப்பிடம் இந்தியாவின் முதல் டிஜிட்டல் மாநிலம்[13] வளைகுடா நாடுகளில் பணி புரியும் இந்தியர்களில் கேரள மாநிலத்தவர்கள் அதிகமாக உள்ளனர். அதனால் வெளிநாட்டு செலாவணி கேரளத்திற்கு கூடுதலாக கிடைக்கிறது. புவியமைப்பு 38,852 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தின் கிழக்கே மேற்கு தொடர்ச்சி மலைகள்; மேற்கில் அரபிக் கடல்; தென்கிழக்கில் தமிழ்நாடு; வடகிழக்கில் கர்நாடகம் எல்லைகளாக அமைந்துள்ளது. ஆறுகள் நெய்யாறு, பம்பை, மணிமலை, பெரியாறு, பாரதப்புழை, சித்தாறு மற்றும் மூவாற்றுப்புழை ஆகியவை கேரளத்தின் முக்கிய ஆறுகள். வரலாறு பரசுராமரின் கோடரி கடலைப் பிளந்த தால் தோன்றிய நாடு கேரளம் என்பது புராணக் கதை.இதனை பார்க்கவ சேத்திரம் என்றும் பரசுராம சேத்திரம் என்றும் வழங்குகின்றனர்.[14] போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என பல ஐரோப்பியர் கேரளத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டினர். 1947வாக்கில் கேரளம் திருவிதாங்கூர், கொச்சி மற்றும் மலபார் என மூன்று சமஸ்தானங்களாக இருந்தது. மலபார் சீரமைப்புச் சட்டம் 1956ன் படி, திருவிதாங்கூர், கொச்சி மற்றும் மலபார் பகுதிகள் இணைக்கப்பட்டு, நவம்பர் 1956ல் இன்றைய கேரளம் உதயமானது. பொருளாதாரம் விவசாயம் முக்கிய தொழில். உணவுப் பொருள் சாகுபடியை விட பணப்பயிர் சாகுபடி அதிகரித்து வருகிறது. பாரம்பரிய தொழில்களான கைத்தறி, கயிறு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு போன்ற தொழில்களும் சிறப்பாக நடைபெறுகிறது. ஆட்சிப் பிரிவுகள் கேரளம் பதினான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருவன: காசர்கோடு கண்ணூர் வயநாடு கோழிக்கோடு மலைப்புரம் பாலக்காடு திருச்சூர் எர்ணாகுளம் இடுக்கி ஆலப்புழா கோட்டயம் பத்தனம்திட்டா கொல்லம் திருவனந்தபுரம் கேரளத்தில் 63 வட்டங்களும், 1634 வருவாய் ஊராட்சிகளும், 978 ஊராட்சிகளும் ஐந்து நகராட்சிகளும் உள்ளன. அரசியல் இது இருபது மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[15] கேரள சட்டமன்றத்திற்காக, கேரளத்தை 140 தொகுதிகளாகப் பிரித்துள்ளனர்.[15] மக்கள் தொகையியல் 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கேரளா மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 33,406,061 ஆக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 4.91% விகிதம் ஆக உயர்துள்ளது. மக்கள்தொகையில் ஆண்கள் 16,027,412 மற்றும் பெண்கள் 17,378,649 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1084 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 860 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 94.00% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 96.11% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 92.07% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3,472,955 ஆக உள்ளது.[16] சமயம் இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 18,282,492 (54.73 %) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 8,873,472 (26.56 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 6,141,269 (18.38 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள்தொகை 3,814 (0.01 %) ஆகவும், சமண சமய மக்கள்தொகை 4,489 (0.01 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 4,752 (0.01 %) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 7,618 (0.02 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 88,155 (0.26 %) ஆகவும் உள்ளது. மொழி இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான மலையாத்துடன், தமிழ், கன்னடம், உருது மற்றும் கொங்கணி மொழிகள் பேசப்படுகிறது. கலைகள் கூடியாட்டம், கதகளி, கேரள நடனம், மோகினியாட்டம், தெய்யம், துள்ளல் ஆகியவை கேரளத்தின் நாட்டிய வகைகளாகும். வர்மக்கலை, களரி போன்ற தற்காப்புக் கலைகளும் கேரளத்திலிருந்து தோன்றியவையே. செண்டை மேளம் புகழ் பெற்றது. சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்கள் சுற்றுலா தலங்கள் தேக்கடி, பெரியார் தேசியப் பூங்கா, மூணார், வயநாடு, ஆலப்புழாவின் கட்டு வள்ளம்,கொச்சி மற்றும் கொல்லம்.[17] ஆன்மிக தலங்கள் சபரிமலை, ஆற்றுக்கால் பகவதி கோவில், சோட்டானிக்கரை பகவதி கோயில், ஆறு அய்யப்பன் கோயில்கள்,மீன்குளத்தி பகவதி கோயில்,குருவாயூர் குருவாயூரப்பன் கோயில், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் மற்றும் மங்கலதேவி கண்ணகி கோவில் ஆகும். வைணவத் திருத்தலங்கள் 108 வைணவத் திருத்தலங்களில் 11 வைணவத் திருத்தலங்கள் கேரளத்தில் அமைந்துள்ளது. அவைகள்: திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில், திருவனந்தபுரம் மாவட்டம் திருக்கடித்தானம், கோட்டயம் மாவட்டம் திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில், எர்ணாகுளம் மாவட்டம் திருமூழிக்களம், எர்ணாகுளம் மாவட்டம் திருப்புலியூர், ஆலப்புழா மாவட்டம் திருச்செங்குன்றூர், ஆலப்புழா மாவட்டம் திருவண்வண்டூர், ஆலப்புழா மாவட்டம் திருவல்லவாழ், பத்தனம்திட்டா மாவட்டம் திருவாறன்விளை, பத்தனம்திட்டா மாவட்டம் திருவித்துவக்கோடு, திருச்சூர் மாவட்டம் திருநாவாய், மலப்புறம் மாவட்டம் விழாக்கள் ஓணம் மற்றும் விஷு கேரளத்தின் முக்கிய பண்டிகைகளாகும். கிறிஸ்துமஸும் ரமலான் பெருநாளும் இங்கு கொண்டாட படுகிறது. மேலும் திருச்சூர் பூரம் திருவிழா, பெண்களின் ஐயப்பன் கோயில் எனப்படும் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில் மகம் திருவிழா, மகர விளக்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. இறைச்சி கேரள மாநிலத்தின் கால்நடை பராமரிப்புத் துறையின் தகவல்படி 2009–2010 ஆண்டில் மட்டும் 61 லட்சம் பசு உட்பட்ட கால்நடைகள் தமிழகம் மூலம் கேரளாவிற்கு இறைச்சிக்காகக் கொண்டு வரப்பட்டன. 18 லட்சம் கால்நடைகள் சோதனையை மீறிக் கடத்தப்பட்டவை.[18] மேலும் பார்க்க கேரள அரசு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் (தமிழில்) பகுப்பு:கேரளம்bs
கேரள மாநிலத்தின் பரப்பளவு என்ன?
38,852
1,959
tamil
a99eb55e9
கர்நாடகா (Karnāṭaka) என்பது இந்தியாவின் தென் பகுதியில் உள்ள ஒரு மாநிலமாகும். மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் இம் மாநிலம் நவம்பர் 1,1956 அன்று உருவாக்கப்பட்டது. மைசூர் மாநிலம் என்று அழைக்கப்பட்டு வந்த இம் மாநிலம் 1973 -இல் கர்நாடகா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கருநாடக மாநிலமானது மேற்கில் அரபிப் பெருங்கடலையும் வட மேற்கில் கோவாவையும், வடக்கில் மகாராஷ்டிராவையும், கிழக்கில் ஆந்திரப் பிரதேசத்தையும், தென் கிழக்கில் தமிழ்நாட்டையும், தென் மேற்கில் கேரளாவையும், எல்லைகளாகக் கொண்டுள்ளது. இம் மாநிலம் 74,122 சதுர மைல்கள், அதாவது 191,976 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் 5.83% ஆகும். 30 மாவட்டங்களைக் கொண்டுள்ள இம் மாநிலம் பரப்பளவில் இந்தியாவின் எட்டாவது மிகப் பெரிய மாநிலமாகத் திகழ்வதுடன் மக்கள்தொகையில் இந்திய அளவில் ஒன்பதாவது இடத்தையும் கொண்டுள்ளது. கன்னடம் ஆட்சி மொழியாகவும் பெருமளவு பேசப்படும் மொழியாகவும் உள்ளது. கருநாடகம் என்ற பெயருக்கு பல வித சொல்லிலக்கணம் பரிந்துரைக்கப்பட்டாலும், 'கரு' மற்றும் 'நாடு' என்ற கன்னட வார்த்தைகளில் இருந்துதான் அது உருவாக்கப்பட்டுள்ளது என்பது பொதுவான கருத்து. இந்த வார்த்தைகளின் பொருள் மேட்டு நிலம் என்பதாகும். ஆங்கிலேயர்கள் இம் மாநிலத்தை கர்நாடிக் என்றும் சில சமயங்களில் கர்நாடக் என்றும் குறிப்பிட்டனர். பழங் கற்கால பாரம்பரியத்தைக் கொண்டுள்ள கருநாடகம், புராதன மற்றும் மத்திய கால இந்தியாவின் சில வலிமை வாய்ந்த பேரரசுகளின் தாயகமாகவும் திகழ்ந்துள்ளது. இப் பேரரசுகளால் ஆதரிக்கப்பட்ட தத்துவ ஞானிகளும், இசை வல்லுநர்களும் சமய, பொருளாதார மற்றும் இலக்கிய இயக்கங்களைத் தொடங்கினர். அவை இன்றுவரை நிலைத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவிலேயே கன்னட மொழி எழுத்தாளர்கள்தான் அதிக அளவில் ஞானபீட விருது பெற்றுள்ளார்கள். மாநிலத் தலைநகராக விளங்கும் பெங்களூரு, இந்தியா சந்தித்து வரும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் முன்னோடியாக உள்ளது. வரலாறு கருநாடக வரலாற்றை அப்பகுதியில் கிடைத்துள்ள கைக் கோடரிகள் மற்றும் இதர கண்டுபிடிப்புகள் மூலம் பழங்கற்கால கைக் கோடரி கலாச்சாரத்துடன் அதற்கு இருந்துள்ள தொடர்பை அறிந்துகொள்ள முடிகிறது. புதிய கற்காலக் கலாச்சாரத்தின் சான்றுகளும் இம்மாநிலத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.[8][9] பண்டைய சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தின் எச்சமான ஹரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் கருநாடகத் தங்க சுரங்களைச் சார்ந்ததாக அறியப்படுவதன் மூலம் கருநாடக பகுதி பண்டைய காலம் தொட்டே வாணிபம், கலாச்சாரம் ஆகியவற்றில் முன்னேறி இருப்பது தெரிய வருகிறது. பொது வழக்க சகாப்தத்திற்கு 3 நூற்றாண்டுகளுக்கு முன்னதாக, கருநாடகத்தின் பெரும் பகுதி, பேரரசர் அசோகரின் மௌரிய ஆட்சிக்கு உட்படு முன், நந்தா பேரரசின் கீழ் இருந்தது. நான்கு நூற்றாண்டுகள் தொடர்ந்த சதவாகன ஆட்சி பெருமளவு கருநாடகத்தை அவர்களின் அதிகாரத்தின் கீழ் கொள்ள உதவி புரிந்தது. சாதவாகனர்களின் ஆட்சி இறக்கம் கருநாடகத்தை அடிச்சார்ந்த, முதல் அரசநாடுகளான கடம்பர்கள் மற்றும் மேலைக் கங்க வழியினரும் வளர வழி வகுத்தது. அதுவே, அப்பகுதி பக்கச் சார்பற்ற அரசியல் உருபொருளாக புகுந்து அடையாளம் காணவும் வழி வகுத்தது. மௌரிய சர்மாவால் தொடங்கப்பட்ட கடம்ப வம்சம், பனவாசியை தலைநகராக கொண்டது.[10][11] அது போல், மேலைக் கங்கர் மரபினர், தாலகாட்டை தலைநகராக கொண்டு அமைக்கப் பட்டது.[12][13] கடம்பர், சாளுக்கியர் கடம்பர் வம்சத்தைச் சார்ந்த முதலாவது கன்னடம் மொழியை நிர்வாக மொழியாகப் பயன்படுத்தினர் என்பது கால்மிதி கல்வெட்டு மூலமாகவும் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த செப்பு நாணயங்கள் மூலமாகவும் அறியலாம் [14][15] இவ்வம்சத்தைத் தொடர்ந்து சாளுக்கியர் வலிமை பெற்று ஆட்சியைக் கைப்பற்றினர். தக்காணத்தை முழுவதுமாக ஆட்சிக்குள் கொண்டு வந்த சாளுக்கியர் கருநாடகத்தை முழுவதும் இணைத்த பெருமை பெற்றவர்கள்.[16][17][18][19][20][21] சாளுக்கியர் கட்டிடக் கலை, கன்னட இலக்கியம், இசை ஆகியவற்றை பெரிதும் வளர்த்தனர்.[22][23] விசயநகரப் பேரரசு, இசுலாமியர் ஆட்சி 1565ஆம் ஆண்டு, கருநாடகம் மட்டுமல்லாது தென் இந்தியா முழுவதும் முக்கிய அரசியல் மாற்றத்தைச் சந்தித்தது. பல நூற்றாண்டுகளாக வலிமை பெற்று திகழ்ந்த விசயநகரப் பேரரசு இசுலாமிய சுல்தானகத்துடன் தோல்வியைத் தழுவியது. பின் பிஜபூர் சுல்தானகத்திடம் ஆட்சி சிறிது காலம் இருந்து, பின் மொகலாயர்களிடம் 17ஆம் நூற்றாண்டு இடம் மாறியது சுல்தானகத்தின் ஆட்சிகளின் போது உருது மற்றும் பாரசீக இலக்கியங்களும் வளர்க்கப்பட்டன. இதைத் தொடர்ந்து வடக்கு கருநாடகம் ஐதராபாத் நிசாமாலும் தெற்கு கர்நாடகம் மைசூர் உடையார்களாளும், ஆளப்பட்டது. மைசூர் அரசரான இரண்டாம் கிருட்டிணராச உடையார் மரணத்தைத் தொடர்ந்து, தளபதியான ஹைதர் அலி ஆட்சியைக் கைப்பற்றினார். ஆங்கிலேயருடன் பல போர்களில் வெற்றி கொண்ட அவரைத் தொடர்ந்து அவரது மகன் திப்பு சுல்தான் ஆட்சிப் பொறுப்பேற்று ஆங்கிலேயரை எதிர்த்தார். ஆங்கிலேயருடனான நான்காவது போரிற் திப்பு சுல்தான் மரணம் அடைந்ததன் மூலம் மைசூர் அரசு ஆங்கிலேய அரசுடன் 1799 இல் ஒருங்கிணைக்கப்பட்டது. புவியமைப்பு கருநாடகத்தின் மேற்கில் அரபிக் கடலும், வடமேற்கில் கோவாவும், வடக்கில் மகாராஷ்டிரமும், கிழக்கில் ஆந்திரப் பிரதேசமும், தென்கிழக்கில் தமிழகமும், தென்மேற்கில் கேரளமும் அமைந்துள்ளன. கருநாடகத்தில் பெரும்பாலும் மலைப் பகுதிகளே காணப்படுகிறது. கருநாடக மாநிலத்தின் தென் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. காவிரி ஆறு கருநாடகத்தில் தொடங்குகிறது. இம் மாநிலம் 3 முக்கிய நிலப்பகுதிகளைக் கொண்டுள்ளது கரவாளி கடற்கரை நிலப்பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான மலைப்பாங்கான மலைநாடு நிலப்பகுதி மற்றும் தக்காண பீடபூமியின் பாயலுசீமா சமவெளி. மாநிலத்தின் பெரும்பகுதி பாயலுசீமா சமவெளியின் வரண்ட நிலப்பகுதியாகும். பெயர் [24]. கருநாடகத்தில் பாயும் ஆறுகளாவன: காவேரி, துங்கபத்ரா, கிருஷ்ணா ஆறு மற்றும் சரவதி . கருநாடகத்தில் நான்கு பருவகாலங்கள் உணரப்படுகின்றன. குளிர்காலம் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களிலும், கோடைக்காலம் மார்ச் மற்றும் மே மாதங்களிலும், பருவக்காற்று காலம் ஜுன் முதல் செப்டம்பர் வரையிலும்,பருவக்காற்று கடைக்காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் உணரப்படுகின்றது.. மாவட்டங்கள் 1,91,791 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கர்நாடக மாநிலம் 30 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 30 மாவட்டங்கள், பெங்களூர், பெல்காம், குல்பர்கா, மைசூர் ஆகிய நான்கு ஆட்சிப்பிரிவுகளுள் அடங்கும். பெங்களூர் ஆட்சிப்பிரிவு பெங்களூர் மாவட்டம் பெங்களூரு ஊரக மாவட்டம் சித்ரதுர்கா மாவட்டம் தாவண்கரே மாவட்டம் கோலார் மாவட்டம் ஷிமோகா மாவட்டம் தும்கூர் மாவட்டம் பெல்காம் ஆட்சிப்பிரிவு பாகல்கோட் மாவட்டம் பெல்காம் மாவட்டம் பிஜப்பூர் மாவட்டம் தார்வாட் மாவட்டம் கதக் மாவட்டம் ஹவேரி மாவட்டம் உத்தர கன்னடம் மாவட்டம் குல்பர்கா ஆட்சிப்பிரிவு பெல்லாரி மாவட்டம் பீதர் மாவட்டம் கொப்பல் மாவட்டம் ராய்ச்சூர் மாவட்டம் மைசூர் ஆட்சிப்பிரிவு சிக்மகளூர் மாவட்டம் சாமராசநகர் மாவட்டம் தெற்கு கன்னடம் மாவட்டம் ஹாசன் மாவட்டம் குடகு மாவட்டம் மாண்டியா மாவட்டம் மைசூர் மாவட்டம் உடுப்பி மாவட்டம் மக்கள் தொகையியல் 2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கருநாடகத்தின் மொத்த மக்கள் தொகை 61,095,297 ஆக உள்ளது. அதில் 30,966,657 ஆண்களும்; 30,128,640 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 973 பெண்கள் வீதம் உள்ளனர். 2001 ஆண்டின் மக்கள் தொகையுடன் ஒப்புநோக்கும்போது மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.60% உயர்ந்துள்ளது. மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 319 நபர்கள் வீதம் உள்ளனர். நகரப்புறங்களில் 38.67% மக்களும், மக்கள் கிராமப்புறங்களிலும் 61.33% வாழ்கின்றனர். சராசரி கல்வியறிவு 75.36% ஆகவும், ஆண்களின் கல்வியறிவு 82.47 % ஆகவும், பெண்களின் கல்வியறிவு 68.08% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,161,033 ஆக உள்ளது.[25] சமயம் ஆறு கோடியே பதினொன்று இலட்சம் மக்கள்தொகை கொண்ட கருநாடக மாநிலத்தில் 51,317,472 (84.00 %) மக்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுபவராகவும், 7,893,065 (12.92%) இசுலாம் சமயத்தைப் பின்பற்றுபவராகவும், 1,142,647 (1.87%) கிறித்தவ சமயத்தைப் பின்பற்றுபவராகவும், 440,280 (0.72%) சமண சமயத்தைப் பின்பற்றுபவராகவும், 95,710 (0.16%) பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவராகவும், 28,773 (0.05%) சீக்கியம்|சீக்கிய சமயத்தைப்]] பின்பற்றுபவராகவும் உள்ளனர். பிற சமயத்தை பின்பற்றுவர்கள் எண்ணிக்கை 11,263 (0.02 %) ஆக உள்ளது. சமயம் குறிப்பிடாதவர்கள் எண்ணிக்கை 166,087 (0.27%) ஆக உள்ளது. மொழிகள் கர்நாடகா மாநிலத்தில் கன்னட மொழி அலுவல் மொழியாகவும் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழியாகவும் உள்ளது. சுமார் 64.75% மக்கள் இம்மொழியை பேசுகின்றனர். இது தவிர, தமிழ், மராத்தி, கொங்கனி, மலையாளம், துளு, பஞ்சாபி, உருது மற்றும் இந்தி ஆகிய மொழிகளும் பேசப்படுகின்றன. பண்பாடு பொருளாதாரம் கடந்த ஆண்டு கருநாடகத்தின் உள்மாநில உற்பத்தி சுமார் ரூ. 2152.82 பில்லியன் ($ 51.25 billion) என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் வேகமாக பொருளாதார வளர்ச்சி பெறும் மாநிலங்களில் ஒன்றாக கருநாடகம் கருதப்படுகிறது.[26] இம்மாநிலத்தின் 2007–2008 ஆண்டுகளுக்கான உள்மாநில உற்பத்தி வளர்ச்சி விகிதம் சுமார் 7% .[27] 2004-05 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கருநாடக மாநிலத்தின் பங்களிப்பு சுமார் 5.2% சதவிதமாக இருந்தது [28] கருநாடகம் கடந்த பத்தாண்டுகளில் மிகப்பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது. பத்தாண்டுகளில் உள்மாநில உற்பத்தி 56.2% சதவிகிதமும், தனி நபர் உள்மாநில உற்பத்தி 43.9% சதவிகிதமும் வளர்ந்துள்ளது.[29] 2006–2007 ஆம் ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ. 78.097 பில்லியன் ($ 1.7255 பில்லியன்) கருநாடகம் அன்னிய நேரடி முதலிடாக பெற்று இந்திய மாநிலங்களில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.[30] 2004ஆம் ஆண்டின் முடிவில், கருநாடகத்தில் வேலையில்லாதவர் விகிதம் 4.94% . இது தேசிய சராசரியான 5.99% விட குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.[31] கருநாடகத்தின் தலைநகரமான பெங்களூர் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரமாக கருதப்படுகிறது. கருநாடகத்தில் தங்கச் சுரங்கங்கள் அமைந்துள்ளன. கருநாடகம் மிகப்பெரிய பொதுத் துறை தொழிலகங்களின் மையமாக விளங்குகிறது. இந்துஸ்தான் வானூர்தியல் நிறுவனம் (Hindustan Aeronautics Limited) , தேசிய விண்வெளி ஆய்வகங்கள்( National Aerospace Laboratories), பாரத மிகுமின் தொழிலகம் (Bharat Heavy Electricals Limited) , இந்திய தொலைப்பேசி தொழிலகங்கள்(Indian Telephone Industries), இந்துஸ்தான் மெஷின் டுல்ஸ்(Hindustan Machine Tool), இந்திய மற்றும் பன்னாட்டு கணிப்பொறி நிறுவனங்கள் பெங்களூரு நகரில் உள்ளன. இந்திய அறிவியல் கழகம் மற்றும் இஸ்ரோ போன்ற அறிவியல் மையங்கள் பெங்களூருவில் அமைந்துள்ளது. சுற்றுலா மற்றும் வழிப்பாட்டுத் தலங்கள் கர்நாடக மாநில முக்கிய சுற்றுலா தலங்களும் கோயில்களும்; மைசூர் அரண்மனை, ஜோக் அருவி, சிவசமுத்திரம் அருவி, ஹம்பி, ஹளேபீடு, பாதமி குகைக் கோயில்கள், பந்திப்பூர் தேசியப் பூங்கா, பன்னேருகட்டா தேசியப் பூங்கா, அன்ஷி தேசியப் பூங்கா, சரவணபெலகுளா, அமிர்தேஸ்வரர் கோயில், உடுப்பி கிருஷ்ணர் கோயில், மேல்கோட்டை செல்வநாராயணர் கோயில், முருகன் கோயில், கேசவர் கோவில், சென்னகேசவர் கோயில், சென்னகேசவர் கோயில், பேளூர், மூகாம்பிகை கோயில், விருபாட்சர் கோயில், ஹோய்சாலேஸ்வரர் கோவில், திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில், முருதீசுவரா கோயில், சாமுண்டீசுவரி கோயில் மற்றும் தர்மஸ்தால கோயில் ஆகும். இவற்றையும் பாக்க மேற்கோள்கள் வெளி இணைப்பு பகுப்பு:கர்நாடகம் பகுப்பு:இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்
கர்நாடக மாநிலத்தின் பரப்பளவு என்ன?
74,122
507
tamil
15726238f
யமுனை ஆறு வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். உத்தராஞ்சல் மாநிலத்தில் இமய மலையில் அமைந்துள்ள யமுனோத்ரி தொடங்கும் இந்த ஆறு, தில்லி, ஹரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக ஓடி, உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது. யமுனோத்ரியிலிருந்து அலகாபாத் வரை 1370 கிமீ இவ்வாறு ஓடுகிறது. தில்லி, மதுரா, ஆக்ரா ஆகிய நகரங்கள் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றான தாஜ் மஹால் யமுனையின் கரையில் அமைந்துள்ளது. யமுனை சிலநேரங்களில் ஜமுனா அல்லது ஜம்னா என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு நீளமான நதி ஆகும். இது கங்கை நதியின் இரண்டாவது பொிய கிளை நதியாகும். இக் கிளை நதியானது யமுனோத்ரி என்ற பனிக்கட்டி மலையிலிருந்து உருவாகிறது. இந்நதி இந்தியாவில் உத்ரகாண்ட் ம மாநிலத்தில் கீழ் இமாச்சல மலைப் பகுதியில் உள்ள தென்மேற்கு சாிவில் உள்ள பாந்தர்பூஞ்ச் சிகரத்தில் இருந்து 6387 மீட்டர் உயரத்திலிருந்து உருவாகிறது. இந்த நதியின் மொத்தப் பயணத் தொலைவு 1,376 கிலோ மீட்டர் ஆகும். கங்கை ஆற்றுப் படுகையில் 40.02% நிலப்பகுதியில் இந்நதி பாய்கிறது. இது கங்கை ஆற்றுடன் அலகாபாத்தில் திாிவேணி என்ற இடத்தில் கலப்பதற்கு முன்னதாக கங்கையும் யமுனையும் கலக்கும் இடமான திாிவேணி சங்கமத்தில் 12 வருடத்திற்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறுகிறது. இந்த நதிதான் இந்தியாவிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்படுகிறது. ஆனால் இது நோிடையாக கடலில் கலப்பதில்லை. இது உத்ரகாண்ட், இமாச்சலப்பிரதேசம், ஹாியானா மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற பல மாநிலங்களைக் கடந்து செல்கிறது. முதலில் உத்ரகாண்ட் அதன் பிறகு டெல்லியைக் கடந்து, அதன் பொிய கிளை நதியான டானுடன் கலக்கிறது. சாம்பல் நதி யமுனையின் மிக நீளமான கிளை நதியாகும். இந்நதி சிந்து, பெட்வா, கென் போன்ற ஆற்றுப் படுகையைக் கொண்டிருக்கிறது. கங்கை - யமுனை சமவெளிப் பகுதிக்கும், இந்திய - கங்கைச் சமவெளிப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்நதி மிக செழிப்பான, வளமான பகுதியை உருவாக்குகிறது. 57 மில்லியன் மக்கள் யமுனை நதியால் பயன்பெறுகிறார்கள். இந்த நதி வருடத்திற்கு 10000 கன சதுர இலக்கங்கோடி மீட்டர் தூரம் பயணம் செய்கிறது. இந்த நதி பாசனத்திற்காக 96% பயன்படுத்தப்படுகிறது. டெல்லியின் 70% தண்ணீர்த் தேவை யமனை நதி நீரால் தீர்க்கப்படுகிறது. இந்து மதத்தில் கங்கையைப் போலவே யமுனை நதியும் போற்றி வணங்கப்படுகிறது. இந்து புராணக் கதைகளின்படி யமுனை நதி சூாிய கடவுளின் மகளாகவும், மரணத்தை அளிக்கும் கடவுள் யமனின் தங்கையாகவும் கருதப்படுகிறது. புராணக் கதைகளின்படி யமுனை யாமினாட் எனவும் கருதப்படுகிறது. யமுனை நதியில் நீராடினால் ஒருவர் மரணத்தின் பிடியிலிருந்து விடுபடலாம் என்று நம்பப்படுகிறது. இமாச்சலத்திலிருந்து டெல்லியில் உள்ள விசிராபாத் என்ற இடம் வரை யமுனையின் நீரானது சுத்தமாகவுள்ளது. விசிராபாத் அணைக்கட்டிற்கும் ஓக்லா அணைக்கட்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் 15 இடங்களில் வடிகால் வாயிலாக கழிவு நீ்ர் ஆற்றில் கலந்து ஆற்றை அசுத்தமாக்குகின்றன. வீட்டுக் கழிவுகள், நகராட்சி கழிவுகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் ஆகிய மூன்று முக்கியக் கழிவுகளால் யமுனை நதி அசுத்தப்படுத்தப்படுகிறது. மூலம் (தொகு) யமுனை நதியின் மூலமானது யமுனோத்ரி என்ற பனிக்கட்டி மலையிலிருந்து உருவாகிறது. ஹாித்துவாாின் வடக்கில் உத்ரகாண்ட் மாநிலத்தில், உத்ரகாசி மாவட்டத்தில் கீழ் இமாலயத்தின் தென்கிழக்குச் சாிவில் பாந்தர்பூஞ்ச் சிகரத்திலிருந்து 6387 மீ உயரத்திலிருந்து இது உருவாகிறது. யமுனை நதி கடவுளாகக் கருதப்படுவதால் யமுனைக்கு அர்ப்பணிப்பதற்காக யமுனோத்ரி கோயில் கட்டப்பட்டது. இந்து மதத்தில் யமுனோத்ரி கோயில் புனிதத் தளமாக கருதப்படுகிறது. இக்கோயிலை ஒட்டி 13 கி.மீ. தூரத்திற்கு நடைபாதை உள்ளது. இப்பாதை ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ள "மார்க்கண்டேய" தீர்த்தத்துக்கு செல்கிறது. இங்குதான் முனிவர் மார்க்கண்டேயர், மார்க்கண்டேய புராணத்தை எழுதினார். இவ்விடத்தில் இருந்து யமுனை தெற்கில் பாய்கிறது. கீழ் இமாச்சலம் மற்றும் சிவாலிக் மலைத் தொடர் வழியாக 200 கி.மீ. தூரத்திற்கு தெற்கு நோக்கி பாய்கிறது. இந்த ஆற்றுப் படுகையில் மண்ணியல் அமைப்புகளான செங்குத்தான பாறைகளில், பள்ளத்தாக்குப் பகுதிகள் மற்றும் ஓடைகள் அமைந்துள்ளன. இந்நதியின் நீர் பாயும் மொத்தப் பரப்பளவு 2320 சதுர கி.மீ. ஆகும். இப்பகுதி இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. யமுனையின் முக்கியக் கிளை நதிகளான டான்ஸ், ஹாி-கி-துன் பள்ளத்தாக்கிலிருந்து உருவாகிறது. இது டேராடூனில் கால்சி நதியுடன் இணைந்த பிறகு இதன் கொள்ளளவு யமுனை நதியை விட அதிகமாகும். இந்நதியின் வடிகால் பகுதிகள் இமாச்சலத்தில் உள்ள கிாி-சட்லெஜ் நீ்ர்ப்பிடிப்புப் பகுதிகளும், கார்வாலில் உள்ள யமுனை - பிலிங்னா நீர்ப்பிடிப்புப் பகுதிக்கும் இடையில் அமைந்துள்ளது. சிம்லாவின் தெற்குப் பகுதியும் இந்நதி நீர் பாயும் பகுதியில் அடங்கும். யமுனை நதிப் பள்ளத்தாக்கில் மிக உயரமான பகுதி காலாநாக், இது 6387 மீட்டர் உயரமுடையது. யமுனையின் மற்ற கிளை நதிகளான கிாி, ரிஷிகங்கா, ஹனுமன் கங்கா மற்றும் பாட்டா ஆகியவை யமுனை நதி பள்ளத்தாக்கின் மேல்நீர்ப்பிடிப்புப் பகுதியில் பாய்கின்றன. இங்கிருந்து யமனை நதி டேராடூனின் அருகில் உள்ள டாக் பாதாில் உள்ள டூன் பள்ளத்தாக்குப் பகுதியில் கீழ்நோக்கிப் பாய்கிறது. டாக் பாதர் அணைக்கட்டிலிருந்து நீர், மின்சாரம் எடுப்பதற்காக கால்வாய்க்கு பிாித்து விடப்படுகிறது. சீக்கிய புனித யாத்திரை நகரான போயன்டா சாகிப்பை கடந்து சென்ற பிறகு, ஹாியானாவில் உள்ள யமுனா மாவட்டத்தில் உள்ள தேஜ்வாலாவை அடைகிறது. இங்கு 1873-ல் ஒரு அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து இரண்டு முக்கிய கால்வாய்களான மேற்கு யமுனைக்கால்வாய், கிழக்கு யமுனைக் கால்வாய், கிழக்கு யமுனைக் கால்வாய் உருவாகின்றன. உத்திரபிரதேசம் மற்றும் ஹாியானா ஆகிய இரு மாநிலங்களுக்கு் இக்கால்வாய் யமுனா நகர், கார்னல் மற்று பானிபட் ஆகிய நகரங்களைக் கடந்து கைதர்பூர் சுத்திகாிப்பு ஆலையை அடைகிறது. இங்கிருந்து டெல்லிக்கு நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. யமுனா நகர் மற்றும் பானிபட் ஆகிய நகரங்களில் இருந்து கழிவு நீர் இக்கால்வாயில் கலக்கிறது. 224 கிலோ மீட்டர் கடந்து பல்லா கிராமத்தை அடைந்தபிறகு யமுனை நதியில் சிறு ஓடைகளில் அவ்வப்போது வருகின்ற நீர் கலக்கிறது. வறட்சிக் காலங்களில் இந்த நதி தேஷ்வா முதல் டெல்லி வரை வறண்டு இருக்கும். யமுனை நதி இமாச்சலப்பிரதேசம், உத்ரகாண்ட் மற்றும் அாியானா, டெல்லி, உத்தரபிரதேசம் ஆகியமாநிலங்களுக்கு இடையே எல்லையாக உள்ளது. இந்நதி கங்கை நதிக்கு இணையாக இந்து - கங்கைச் சமவெளி வரை பாய்கிறது. உலகிலேயே மிகப் பொிய வளமான பகுதியான இந்து - கங்கை சமவெளிப் பகுதிக்குப் பிறகு இரு நதிகளும் இணையாகப் பாய்கின்றன. கங்கை - யமுனை சமவெளிப்பகுதி 69,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது. இந்தச் சமவெளிப் பகுதியில் மூன்றில் ஒரு பங்கு விவசாயத்திற்கு பெயர் பெற்றது. பெட்வா நதி== மத்தியப் பிரதேச மாநிலம் ஓசங்காபாதுக்கு வடக்கில் உருவாகி, வட கிழக்காகப் பாய்ந்து, மால்வா பீடபூமி வழியாக உத்தரப்பிரதேச மாநிலம் அமீர்பூர் அருகில் யமுனையில் கலக்கிறது பெட்வா நதி.[1] கென் நதி கென் நதி மத்தியப் பிரதேசம் ஜபல்பூர் அருகில் உருவாகி உத்தரப் பிரதேசம் பதேபூர் அருகில் யமுனையில் கலக்கிறது.[1] யமுனா மேற்கோள்கள் பகுப்பு:இந்திய ஆறுகள் பகுப்பு:இந்து தொன்மவியல் ஆறுகள்
இந்தியாவில் உள்ள யமுனை நதியின் நீளம் என்ன?
1370
273
tamil
ca8620cb5
தமிழகத்தில் குறிப்பிடத்தக்க அளவு ஏரிகள் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 39,202 ஏரிகள் உள்ளன. இவற்றுள் 13,710 ஏரிகள் நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. மாநிலத்தில் 5.40இலட்சம் எக்டேர் ஏரிகள் மூலம் நீர்ப்பாசன வசதி பெறுகிறது[1]. செய்திகளில் தமிழ் நாட்டில் 1,000 ஏக்கர் பரப்புக்கு மேல் உள்ள 100 ஏரிகளில் முதற்கட்டமாக 25 ஏரிகளை ரூ.25 கோடியில் புனரமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.[2] சென்னை சுற்றி உள்ள ஏரிகளின் பட்டியல் செங்குன்றம் ஏரி புழல் ஏரி செம்பரம்பாக்கம் ஏரி செங்கல்பட்டு ஏரி மதுராந்தகம் ஏரி பூண்டி ஏரி சோழவரம் ஏரி பழவேற்காடு ஏரி கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி வெலிங்டன் ஏரி வாலாஜா ஏரி கிருட்டிணகிரி மாவட்டம் ராமநாயக்கன் ஏரி கோவை மாவட்டம் உக்கடம் பெரியகுளம் வாலாங்குளம் சிங்காநல்லூர் குளம் சூலூர்க் குளம் முத்தண்ணன் குளம் குறிச்சி குளம் செல்வசிந்தாமணி குளம் சேலம் மாவட்டம் மூக்கனேரி எமரால்டு ஏரி ஆட்டையாம்பட்டி ஏரி பனமரத்துப்பட்டி ஏரி ஈரோடு மாவட்டம் கெட்டிசமுத்திரம் ஏரி (அந்தியூர்) பெரிய ஏரி (அந்தியூர்) வேம்பத்தி ஏாி அரியலூர் மாவட்டம் கரைவெட்டி ஏரி சுக்கிரன் ஏரி நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஏரி கொடைக்கானல் ஏரி திண்டுக்கல் மாவட்டம் பேரிஜம் ஏரி கொடைக்கானல் ஏரி மேற்கோள்கள் *
தமிழ்நாட்டில் எத்தனை ஏரிகள் உள்ளன?
39,202
69
tamil
04c73b09e
பரவலாக நேட்டோ (NATO) என அறியப்படும் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு (North Atlantic Treaty Organization) என்பது, 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் நாள் வட அத்திலாந்திய ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம் உருவான ஒரு இராணுவக் கூட்டணி ஆகும். இதன் தலைமையகம் பெல்ஜியத்தின் தலைநகரமான பிரசல்சில் உள்ளது. வெளியார் தாக்குதலுக்கு எதிராக பரஸ்பர பாதுகாப்பு உதவி வழங்குவதற்கு இதிலுள்ள உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் இணங்கியதன் மூலம் இவ்வமைப்பு ஒரு கூட்டுப் பாதுகாப்பு முறையைக் கொண்டுள்ளது. இதன் முதல் சில ஆண்டுகள் இது ஒரு அரசியல் கூட்டணியாகவே செயல்பட்டது. ஆனாலும், கொரியப் போர் இதன் உறுப்பு நாடுகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து இரண்டு ஐக்கிய அமெரிக்கத் தளபதிகளின் கீழ் ஒன்றிணைந்த படைக் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. இக் கூட்டணியின் முதல் செயலாளர் நாயகமான லார்ட் இஸ்மே என்பவரின் புகழ் பெற்ற கூற்றின்படி, இவ்வமைப்பின் நோக்கம், ரஷ்யர்களை வெளியிலும், அமெரிக்கர்களை உள்ளேயும், ஜேர்மானியர்களைக் கீழேயும் வைத்திருப்பதாகும். பனிப்போர்க் காலம் முழுவதும், ஐக்கிய அமெரிக்காவினதும், ஐரோப்பிய நாடுகளினதும் தொடர்புகளின் பலம் குறித்த ஐயம் நிலவி வந்ததுடன், சோவியத் ஒன்றியத்தின் தாக்குதலுக்கு எதிராக "நாட்டோ" கூட்டணியினர் வழங்கக்கூடிய பாதுகாப்புக் குறித்த கவலைகளும் இருந்தன. இது பிரான்சின் அணுவாயுதத் திட்டத்தின் உருவாக்கத்துக்கும், 1966 இல் பிரான்ஸ் நாட்டோவின் இராணுவக் கட்டமைப்பிலிருந்து விலகுவதற்கும் வழிகோலியது. பங்குபற்றும் நாடுகள் வட_அத்திலாந்திய_ஒப்பந்த_அமைப்பில் பங்குபற்றும் ஐரோப்பிய நாடுகள்சர்வதேச ரீதியில் வட_அத்திலாந்திய_ஒப்பந்த_அமைப்பில் பங்குபற்றும் நாடுகள் மேற்கோள்கள் பகுப்பு:பன்னாட்டு இராணுவக் கூட்டணிகள்
நேட்டோ எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
1949
113
tamil
7c2376ac1
ஆக்சிசன் அல்லது ஒட்சிசன் (Oxygen), நாம் வாழும் நில உலகத்தில் யாவற்றினும் மிக அதிகமாகக் கிடைக்கும் தனிம வேதிப் பொருள். வேதியியலில் இதற்கான குறியீடு O ஆகும். ஓர் ஆக்சிசன் அணுவின் கருவினுள்ளே 8 நேர்மின்னிகளும் அதற்கு இணையாக கருவைச்சுற்றி 8 எதிர்மின்னிகளும் பல்வேறு சுழல் பாதைகளில் சுழன்றும் வருகின்றன. எனவே ஆக்சிசனின் அணு எண்8. ஆகும். அணுக்கருவினுள் நேர்மின்னிகள் அன்றி 8 நொதுமிகளும் (நியூட்ரான்களும்) உள்ளன. இது தனிம அட்டவணையில் நெடுங்குழு 16 தனிமங்கள் குழுவின் அங்கமாகும். உயரிய வினையாற்றும் அலோக தனிமமும் ஆக்சிசனேற்றியுமான ஆக்சிசன் பெரும்பாலான தனிமங்களுடன் எளிதாக சேர்மங்களை (குறிப்பாக ஆக்சைடுகளை) உருவாக்குகின்றது.[1] திணிவின் அடிப்படையில், அண்டத்தில் மிகவும் செழுமையாக உள்ள வேதித் தனிமங்களில் நீரியம், ஈலியம் அடுத்து மூன்றாவதாக உள்ளது.[2] திட்ட வெப்ப அழுத்தத்தில், இத்தனிமத்தின் இரு அணுக்கள் பிணைந்து டையாக்சிசன் என்ற ஈரணு மூலக்கூற்று வளிமமாக விளங்குகின்றது; இந்நிலையில் இதற்கு வண்ணம், வாசனை, சுவை எதுவும் இல்லை. இந்நிலையின் வேதியியல் குறியீடு O 2 ஆகும். வளி மண்டலக் காற்றில் நைட்ரசனுக்கு அடுத்து செழிப்புற்றிருப்பது ஆக்சிசன். இது பெரும்பாலும் பிற தனிமங்களோடு இணைந்த நிலையிலேயே நில உலகத்தில் கிடைக்கின்றது. இதன் செழுமை (பரும அளவில்) 20.95 விழுக்காடு.[3][4][5] நீர் மண்டலப் பகுதியில் ஆக்சிசனின் செழுமை (எடை அளவில்) 85.89 விழுக்காடு.[3] பூமியின் மேலோட்டுப் பகுதியில் கிடைக்கும் கனிமங்களில் ஆக்சைடாகக் கிடைக்கிறது.[6] அந்த வகையில் இதன் செழுமை (எடை அளவில்) 49.13 விழுக்காடு.[7] மனித உடலில் 3 ல் 2 பங்கும், நீரில் பத்தில் 9 பங்கும் ஆக்சிசனாகும். வாழும் உயிரினங்களில் காணப்படும் புரதங்கள், கருவமிலங்கள், கார்போவைதரேட்டுக்கள், கொழுப்புக்கள் போன்ற கரிம மூலக்கூறுகளில் ஆக்சிசன் உள்ளது; அதேபோல, விலங்குகளின் கூடுகள், பற்கள், எலும்புகள் ஆகியவற்றில் உள்ள முக்கிய அனங்கக சேர்மங்களிலும் ஆக்சிசன் உள்ளது. மேலும் உயிரினங்களின் திணிவில், பெரும்பகுதி நீராக இருப்பதால் (காட்டாக மனித உடலில் மூன்றில் இரண்டு பங்கு நீராகும்) ஆக்சிசன் இருக்கின்றது. ஆக்சிசன் தனிமத்தை நீலப்பச்சைப்பாசி, பாசி மற்றும் தாவரங்கள் உருவாக்குகின்றன; அனைத்துயிர் உயிரணு ஆற்றல் பரிமாற்றங்களிலும் ஆக்சிசன் பயன்படுத்தப்படுகின்றது. நில உருண்டையின் காற்று மண்டலத்தில் உள்ள வளிமங்களில் முக்கியமான இரண்டு வளிமங்களில் ஆக்சிசன் ஒன்றாகும் (மற்றது நைட்ரசன்). உயிரினங்களின் உயிர்வாழ்வுக்கும் மிக இன்றியமையாது தேவைப்படுவது இந்த ஆக்சிசன். இதனால் இது உயிர்வளி என்றும் பிராணவாயு என்றும் அழைக்கப்படுகிறது. எனினும், நிலவுருண்டையின் வரலாற்றில் தொல்பழங்காலத்தில் ( சுமார் 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்) இருந்த உயிரினங்களுக்கு ஆக்சிசன் ஒரு நச்சுப் பொருளாக இருந்தது. அன்றிருந்த உயிரினங்களுக்கு ஆக்சிசன் தேவை இல்லாமல் இருந்தன. ஆனால் சில வகையான நுண்ணுயிரிகளின் நுண்ணுடலின் இயக்கத்தின் விளைவால் ஆக்சிசன் வெளிவிடப்பட்டது. இப்படி ஆக்சிசன் அதிகம் வெளியிடப்பட்டதால் அன்றிருந்த உயிரினங்கள் மாய்ந்தன என்றும் அறிஞர்கள் கருதுகின்றார்கள்[8],[9] பிற்காலத்தில் நில உலகத்தில் ஆக்சிசனின் அளவு கூடியதற்குக் காரணம், ஒளிச்சேர்க்கை வழி ஆற்றல் பெற்று ஆக்சிசனை வெளிவிடும் நுண்ணுயிர்களின் இயக்கத்தால்தான்[10] (பார்க்க: ஒளிச்சேர்க்கை நுண்ணுயிரிகள்). இவ்வகையான ஒளிச்சேர்க்கை நுண்ணுயிரிகளும் பாசி போன்ற எளிய நிலைத்திணை வகைகளும்தான் நிலவுலகில் உள்ள ஆக்சிசனில் முக்கால் பங்கை (3/4) ஆக்கித்தருகின்றன.[11] [12] மீதமுள்ள கால் பங்கை (1/4) மரஞ்செடிகொடி வகைகள் ஆக்குகின்றன.[13] கார்பன் டை ஆக்சைடு + நீர் + சூரியஒளி → மாப்பொருள் + ஆக்சிசன்.[14] பெரும்பாலான உயிரினங்கள் மூச்சு விடும்போது ஆக்சிசன் பயன்படுத்தப்படுவதால் அவை உயிர்வாழத் மிகத் தேவையான ஒன்றாக விளங்குகிறது. இருப்பினும் மிகவும் வீரியமான வேதிவினையாற்றும் இத்தனிமம் தனிநிலையில் நிலைத்தில்லாமையால் புவியின் வளிமண்டலத்தில் கிடைப்பதற்கு சில உயிரினங்கள் சூரிய ஒளியைப் பயன்படுத்தி தொடர்ந்து ஒளித்தொகுத்தல் வினையாற்றி நீரிலிருந்து மீளுருவாக்க வேண்டியுள்ளது. ஆக்சிசனின் மற்றொரு தனிமப் புறவேற்றுருவான ஓசோன் (O 3) புற ஊதாக் கதிர் வீச்சை உள்வாங்கிக் கொள்வதன் விளைவாக மீயுயரத்தில் உள்ள கமழிப் படலம் உலகத்தை புற ஊதாக் கதிர் தாக்குதலிலிருந்து காக்கின்றது. ஆனால் புவியின் தரையருகே ஓசோன் ஓர் மாசுபொருளாக விளங்குகிறது. இதனினும் உயரத்தில் உள்ள பூமியின் தாழ் வட்டப்பாதை உயரங்களில், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலுள்ள ஆக்சிசன் அணுக்கள் விண்கலங்களின் அரிப்பிற்கு காரணமாகின்றன.[15] நீர்மநிலை காற்றை பகுதிபடக் காய்ச்சி வடிப்பு, செயோலைற்றுகளைப் பயன்படுத்தி அழுத்த-சுழற்சி மூலம் காற்றிலிருந்து ஆக்சனை செறிவுறுத்தல், நீரின் மின்னாற்பகுப்பு மற்றும் பிற முறைகளில் தொழில்முறையில் ஆக்சிசன் தயாரிக்கப்படுகிறது. இது எஃகு, நெகிழி, துணி தயாரிப்பு, இரும்பு மற்றும் பிற உலோகங்களை ஆக்சி-எரிபொருள் பற்ற வைத்தல், வெட்டுதல், ஏவூர்தி உந்துகை, ஆக்சிசன் சிகிட்சை போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றது. தவிரவும் வானூர்தி, நீர்மூழ்கிக் கப்பல், மனித விண்வெளிப்பறப்பு மற்றும் தாவுதலிலும் உயிர்தாங்கி அமைப்பாக பயன்படுத்தப்படுகின்றது. ஆக்சிசனை 1773 அல்லது அதற்கு முன்பாகவே உப்சாலாவில் கார்ல் வில்லியம் சீலேயும், 1774இல் சோசப்பு பிரீசிட்லியும் தனித்தனியே கண்டறிந்தனர்; இருப்பினும் பிரீசிட்லியே தனது கண்டுபிடிப்பை முதலில் பதிப்பித்ததால் அவருக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. ஆக்சிசன் என்ற பெயர் 1777இல் அந்துவான் இலவாசியேயால் கொடுக்கப்பட்டது.[16] தோற்றம் பூமியின் உயிர்க்கோளத்தில் உள்ள காற்று, கடல் மற்றும் நிலம் ஆகியவற்றில் மிக அதிகமான நிறை அளவில் காணப்படும் வேதியியல் தனிமம் ஆக்சிசன் ஆகும். ஐதரசன் மற்றும் ஈலியம் வாயுக்களை அடுத்து பிரபஞ்சத்தில் மூன்றாவது மிக அதிகமான அளவில் காணப்படும் வேதியியல் தனிமமும் ஆக்சிசன் ஆகும்[2]. சூரியனின் நிறையில் 0.9% ஆக்சிசனாகும்[3]. புவியின் மேற்பரப்பு அதன் நிறையளவில் 49.2% சிலிக்கன் டையாக்சைடு போன்ற ஆக்சைடு சேர்மங்களாக காணப்படுகிறது [7] . பூமியின் மேற்பரப்பில் அதிகமாகக் கிடைக்கும் தனிமங்களில் ஆக்சிசனும் ஒன்றாகும். உலகத்தில் காணப்படும் கடல்கள் அனைத்திலும் காணப்படும் பொருள்களின் நிறையில் 88.8% ஆக்சிசன் பகுதிப்பொருளாக உள்ளது[3]. பூமியின் வளிமண்டலத்தில் ஆக்சிசன் வாயு இரண்டாவது மிக பொதுவான பகுதிக்கூறு ஆகும், இதன் கன அளவில் 20.8% மற்றும் அதன் மொத்த நிறையில் 23.1% ஆக்சிசன் ஆகும். (சில 1015 டன்கள்) [3][4][lower-alpha 1]. வளிமண்டலத்தில் ஆக்சிசன் வாயு மிகவும் உயர்ந்த செறிவைக் கொண்டிருப்பதால், சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில் பூமி அசாதாரணமான கிரகமாகக் கருதப்படுகிறது. செவ்வாய் கிரகம் அதன் கன அளவில் 0.1% ஆக்சிசனைக் கொண்டுள்ளது. வெள்ளி கிரகத்தில் இதைவிடக் குறைவான அளவிலும் ஆக்சிசன் காணப்படுகிறது. ஆக்சிசனைக் கொண்டுள்ள கார்பன் டை ஆக்சைடு போன்ற மூலக்கூறுகளின் மீது புற ஊதா கதிர்கள் வினைபுரிந்த காரணத்தால் இக்கிரகங்களைச் சூழ்ந்துள்ள ஆக்சிசன் வாயு தோன்றியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆக்சிசன் சுழற்சியின் விளைவாகவே பூமியில் அதிகப்படியான ஆக்சிசன் அடர்த்தி காணப்படுகிறது. பூமிக்குள்ளும் பூமியிலுள்ள மூன்று முக்கிய களஞ்ச்சியங்களான வளிமண்டலம், உயிர்க்கோளம், கற்கோளத்திலும் ஆக்சிசன் வாயுவின் இயக்கத்தினை இந்த உயிர்வேதியியல் சுழற்சி விவரிக்கிறது. ஆக்சிசன் சுழற்சி நடைபெறுவதற்கான முக்கியமான காரணியாக ஒளிச்சேர்க்கை திகழ்கிறது. இந்த நவீன வளிமண்டலம் உருவாவதற்கு ஒளிச்சேர்க்கையும் ஆக்சிசன் சுழற்சியுமே முக்கிய காரணிகளாகும். ஒளிச்சேர்க்கையினால் ஆக்சிசன் வளிமண்டலத்தில் வெளிவிடப்படுகிறது. சுவாசித்தல், சிதைவு மற்றும் எரிதல் செயல்முறைகள் ஆக்சிசனை வளிமண்டலத்தில் இருந்து நீக்குகின்றன. இப்போதிருக்கும் நிலையில் ஆக்சிசன் உற்பத்தியும் ஆக்சிசன் பயன்பாடும் சம் விகிதத்தில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக நீர் நிலைகளின் கரைசல்களில் இருந்தும் தனி ஆக்சிசன் தோன்றுகிறது. தாழ்வெப்ப நிலைகளில் அதிகரிக்கும் ஆக்சிசனின் கரைதிறன் கடல்சார் வாழ்க்கையுடன் மிக முக்கியமான தொடர்பைக் கொண்டுள்ளது. உயிர்வாழ்வன அடர்த்தியாக துருவக்கடல்களில் காணப்படுவதற்கு அங்கு ஆக்சிசன் அளவு அதிகமாகக் காணப்படுவதே காரணமாகும். நைட்ரேட்டு அல்லது பாசுப்பேட்டு போன்ற தாவர நுண்ணுயிரிகளால் மாசடைந்த நீரில் பூஞ்சைகள் வளர்ந்து தூர்ந்துபோவதால் நீர்ப்பகுதிகளில் ஆக்சிசன் அளவு குறைகிறது. தண்ணீரின் உயிர்வேதியியல் தேவையை கணக்கில் எடுத்துக் கொண்டு விஞ்ஞானிகள் தண்ணீரின் தரத்தை இறுதி செய்கிறார்கள். அல்லது தண்ணீர் அதன் பழைய நிலையை அடைய எவ்வளவு ஆக்சிசன் தேவைப்படுகிறது என்பதைக் கணக்கிட்டும் தண்ணீரின் தரத்தை அவர்கள் முடிவு செய்கிறார்கள். வரலாறு ஆக்சிசன் கண்டுபிடிப்பு காரல் வில்லெம் சீலெ காரல் வில்லெம் சீலெ (C. W. Scheele) என்ற சுவீடன் நாட்டு வேதியியலார் 1774 ல் குளோரின் மற்றும் மாங்கனீசைக் கண்டுபிடித்தார். 1778 ல் மாலிப்பிடினத்தைக் கண்டுபிடித்தார். 1772 ல் இவர் ஆக்சிசனை அறிந்திருந்தார். சூடாக்குவதன் மூலம் மேர்க்கூரிக்கு ஆக்சைடு, பல்வேறு நைத்திரேட்டுக்கள் போன்ற கனிமச் சேர்மங்களைப் பகுத்து இவர் ஆக்சிசனை உற்பத்தி செய்து காட்டினார். ஆக்சிசனின் சில முக்கியமான வேதியியல் பண்புகளையும் கண்டறிந்து தெரிவித்தார்.[3][17][17][18] அக்காலத்தில், எரிவதற்கு உதவுவதாக அறியப்பட்ட ஒரே பொருள் இதுவே என்பதால் இதை "தீ வளி" என சீலெ அழைத்தார். இக்கண்டுபிடிப்புத் தொடர்பாக வளியும் தீயும் தொடர்பான நூல் என்னும் தலைப்பிட்ட ஆய்வுக்கட்டுரை ஒன்றையும் எழுதி, 1775 ஆம் ஆண்டு பதிப்பாளருக்கு அனுப்பினார். ஆனால் இது 1777 ஆம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டது. இவருடைய இக்கண்டுபிடிப்பு 1774 ல் இங்கிலாந்து நாட்டின் வேதியியலாரான சோசப்பு பிரீசிட்லி ஆக்சிசனைக் கண்டுபிடித்ததாக வெளியிட்ட பின்னரே[17][18] கால தாமதமாக வெளியிடப்பட்டதால் கண்டுபிடிப்பின் பெருமையையை இவரால் பெறமுடியவில்லை.[19] சோசப்பு பிரீசிட்லி சோசப்பு பிரீசிட்லி பாதரச ஆக்சைடைச் சூடுபடுத்தி அதிலிருந்து வெளியேறும் வளிமம் எரியும் மெழுகுவர்த்தியை மேலும் பிரகாசமாக எரியத் தூண்டுவதாகக் கண்டார்.[3][17][18][20][21] அத்துடன் இவ்வளிமத்தைச் சுவாசித்த எலிகள் சுறுசுறுப்பாக இயங்குவதையும் நீண்ட நாட்கள் வாழ்வதையும் அவர் கவனித்தார். தானும் அவ்வளிமத்தைச் சுவாசித்த பின்னர், என்னுடைய சுவாசப்பை, வழமையான வழியைச் சுவாசிப்பதைக் காட்டிலும் வேறுபட்ட உணர்வு எதையும் பெறவில்லை என்றாலும், அதன் பின்னர் சிறிது நேரம் என்னுடைய மார்பு இலகுவாக இருப்பதாக நான் உணர்ந்தேன் என எழுதினார். சோசப்பு பிரீசிட்லி, தனது கண்டுபிடிப்பை 1775 ஆம் ஆண்டில் மேலும் வளி தொடர்பான கண்டுபிடிப்புக்கள் பற்றிய விபரங்கள் (An Account of Further Discoveries in Air) என்னும் தலைப்பிட்ட கட்டுரை ஒன்றின் மூலம் வெளியிட்டார். இக்கட்டுரை, பல்வேறு வகையான வளிகள் தொடர்பான சோதனைகளும் கவனிப்புக்களும் என்னும் அவரது நூலின் இரண்டாம் தொகுதியில் வெளியானது. பிரான்சு நாட்டவரான பெயர் பெற்ற வேதியியலாளர் அந்துவான் லோரென்ட் இலவாசியே (Antoine Laurent Lavoisier) என்பவரும் தனியாக ஆக்சிசனைக் கண்டுபிடித்தாதாகக் கருதப்பட்டது. ஆனால், பிரீசுட்லி 1774 அக்டோபரில் இலவாசியேயைச் சந்தித்துத் தனது சோதனைகள் பற்றியும் அதை அவர் எவ்வாறு உற்பத்தி செய்தார் என்பது குறித்தும் கூறியுள்ளார். சீலெயும் தனது கண்டுபிடிப்புப் பற்றி 1774 செப்டெம்பரில் இலவோசியேக்குக் கடிதம் எழுதியுள்ளார். இவ்வாறான கடிதம் ஒன்றைப் பெற்றுக்கொண்டதை இலவோசியே ஏற்றுக்கொண்டதில்லை. ஆனால், சீலெ இறந்த பின்னர் அவரது உடமைகளுக்குள் இக்கடிதத்தின் படி ஒன்று கிடைத்தது. இலவோசியேயின் பங்களிப்பு சர்ச்சைக்கு இடமில்லாத இலவோசியேயின் பங்களிப்பு, முதன் முதலாக ஒட்சியேற்றம் தொடர்பில் போதிய கணியம் சார் சோதனைகளைச் செய்ததும், எரிதல் எவ்வாறு நடைபெறுகின்றது என்பது குறித்துச் சரியான விளக்கம் கொடுத்ததும் ஆகும்.[3] இச் சோதனைகளையும் இதுபோன்ற பிற சோதனைகளையும் பயன்படுத்தி, 1774 ஆம் ஆண்டு முதல் புளோசித்தன் கோட்பாட்டைப் பிழை என நிறுவுவதில் ஈடுபட்டதுடன், சோசப்பு பிரீசிட்லி, சீலெயும் கண்டுபிடித்த பொருள் ஒரு வேதியியல் தனிமம் என்பதையும் நிறுவினார். 18 நூற்றாண்டின் தொடக்கத்தில் அந்துவான் இலவாசியே அவர்கள் தவறுதலாக எல்லா காடியில் இருந்து தோன்றும் வளிமம் என்று எண்ணி “காடியிலிருந்து உண்டாவது” என்று பொருள்படும் கிரேக்க மொழி வழிப் பெற்ற பெயராக “ஆக்சிசன்” என்பதனைச் சூட்டினார்.[16][19] கிரேக்க மொழியில் ஆக்சிஸ் என்றால் அமிலம் என்றும் "ஜென்" என்றால் உற்பத்தி செய்தல் என்றும் பொருள்.[16] உற்பத்தி செய்தால் பாதரச ஆக்சைடு மட்டுமின்றி வெள்ளி, தங்கம், பிளாட்டினம் இவற்றின் ஆக்சைடுகளை சூடுபடுத்தியும் ஆக்சிசனைப் பெறலாம். எனினும் பெரும்பாலான உலோக ஆக்சைடுகள் சூடுபடுத்தும் போது ஆக்சிசனை வெளியேற்றுவதில்லை. மாங்கனீசு டை ஆக்சைடு, பேரியம் பெராக்சைடு செவ்வீயம் போன்ற உயர் ஆக்சைடுகளைச் சூடுபடுத்தியும் ஆக்சிசனைப் பெறலாம். மாங்கனீசு டை ஆக்சைடை அடர்மிகு கந்தக அமிலத்தில் இட்டு சூடுபடுத்த உடனடியாக ஆக்சிசன் வெளியேறுகிறது. அமிலமிட்ட நீரை மின்னாற் பகுக்க ஆக்சிசன் நேர் மின் வாயில் வெளியேறுகிறது. ஆக்சிசனின் பண்புகள் ஆக்சிசன் நிறம் மணம் சுவையற்ற ஒரு வளிமம் .நீர்ம வடிவில் உள்ள ஆக்சிசன் ஒளி ஊடுருவும் நீல நிறத்தில் இருக்கும். சிறிதளவு நிலைப்பெறா காந்தத்தன்மை (paramagnetic) உடையது. காந்தப் புலனுக்கு உட்படுத்தினால் நீர்ம ஆக்சிசன், காந்த முனைகளுக்கு இடையே, இழுப்புண்டு முனைகளை இணைத்து நிற்கும். உறைந்து திண்மமாகச் சுருங்கும் போது வெளிர் நீல நிறத்தைப் பெறுகிறது. இது காற்றை விடச் சற்று கனமானது. நீரில் ஓரளவு கரையக்கூடியது. நீரில் கரைந்த ஆக்சிசன் நீர் வாழ் உயிரினங்களின் சுவாசித்தலுக்கும், வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிசன் நிலத்தில் வாழும் விலங்கினங்களுக்கும் மனிதர்களுக்கும் சுவாசித்தலுக்கும் இன்றியமையாததாய் உள்ளது. உடலுக்குள் சத்துப் பொருட்களை எரித்து ஆற்றலைப் பெறுவதற்கும், உயிர் வேதியல் சார்ந்த பல வினைகளை ஏற்படுத்துவதற்கும் இந்த ஆக்சிசன் தேவை. ஹிமோகுளோபின் (Haemoglobin) என்ற பெரிய புரத (Protein) மூலக்கூறுகள் ஆக்சிசனை நுரையீரலிலிருந்து உயிர்ச் செல்களுக்கு எடுத்துச் செல்கிறது ஒரு ஹிமோகுளோபினில் 574 அமினோ அமிலங்கள் இணைந்துள்ளன. ஆக்சிசனை எடுத்துச் செல்லும் போது ஹிமோகுளோபின் சென்னிறமாகவும், ஆக்சிசனை திசுக்களுக்குக் கொடுத்த பின் ஆக்சிசன் இல்லா ஹிமோகுளோபின் நீல நிறமாகவும் இருக்கும்.[22] பொதுவாக இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள் வட்டத் தட்டு வடிவில் இருக்கும். சிலருக்கு ஹிமோகுளோபினில் உள்ள அமினோ அமிலங்கள் குறைபாடுடன் இருக்கும். இது சிவப்பணு மூலக்கூறின் வடிவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி பிறை வடிவத் தோற்றத்தைத் தரும். இந்த உருமாறிய சிவப்பணுக்கள் ஆக்சிசன் பரிமாற்றத்தில் தீங்களிக்கவல்ல பாதிப்பை உண்டாக்கும்.[4] இதையே பிறைவடிவச் செல் இரத்தச் சோகை (Sickle cell anemia) என்பர். சீர்தரம் செய்யப்பட்ட அழுத்த வெப்ப நிலைகளில் ஆக்சிசன் ஈரணு (O2) மூலக்கூறு வடிவில் காணப்படுகின்றது.[23] வளிம நிலையில் ஆக்சிசன் நிறமற்ற ஒரு பொருள். நீரில் கரைவது மிகவும் குறைவே. ஆக்சிசனின் ஈரணு மூலக்கூற்றின் ( O2) பிணைப்பின் நீளம் 121 பி.மீ (pm) ஆகும். பிணைப்பின் வலுவாற்றல் (bond energy) 498 kJ/mol.[24]. ஆக்சிசனின் இயைபு எண் (valency )2.[25] 'O' என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய ஆக்சிசனின் அணு எண் 8, அணு எடை 15.9994. இதன் அடர்த்தி 1.33 கிகி /கமீ. இதன் உறை நிலையும் கொதி நிலையும் முறையே 54.75 ,90.18 K ஆகும். வேதியியலில் ஆக்சிசன் ஒரு வினைதிறமிக்க தனிமமாகும். மந்த வளிமம் தவிர்த்த பிற மாழைகள் (உலோகங்கள்), மாழையிலிகளுடன் (அலோகங்களுடன்) நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இணைகிறது. இவை ஆக்சிசனுடன் கூடுவதையே எரிதல் என்கிறோம். தங்கமும், பிளாட்டினமும் ஆக்சிசனில் எரிவதில்லை. என்றாலும் அவற்றின் ஆக்சைடுகள் நேரடியில்லாத வழியில் தோன்றுகின்றன. தாவரங்கள் தங்களுக்குத் தேவையான சத்துப் பொருட்களை ஒளிச் சேர்க்கை(Photo synthesis) மூலம் உற்பத்தி செய்து கொள்கின்றன.[26] வளிமண்டலத்திலுள்ள கார்பன் டை ஆக்சைடை தாவரத்தின் இலைகள் உறிஞ்ச, நிலத்தடி நீரை வேர்கள் உறிஞ்ச, இவை சேர்ந்து இசுட்டார்ச்சு(Starch) எனும் சக்கரைப் பொருளாக மாறுகிறது. இதற்குத் தேவையான ஆற்றலைத் தாவரங்கள் பச்சையம் (Chlorophyl) என்ற நிறமிகளால் (Pigments) ஒளிச் சேர்க்கையின் போது 400 -700 நானோ மீட்டர் நெடுக்கையில் சூரிய ஆற்றலை உட்கவர்ந்து பெறுகிறது.[27] ஒளிச் சேர்க்கையின் போது வெளிப்படும் ஆக்சிசன் வளிமண்டலத்தில் சேருகிறது.[10] எனவே விலங்கினங்களின் மூச்சுவிடுதலுக்குத் தேவையான ஆக்சிசன் தடையின்றிக் கிடைக்க இது வழி செய்கிறது. இதனால் வளிமண்டலத்தில் ஆக்சிசன் மட்டுமின்றி கார்பன்-டை-ஆக்சைடும் ஒரு சம நிலையில் இருக்கிறது. மாற்றுரு பொதுவாகக் காணப்படும் உரு ஈரணு வடிவம்தான்.[28] மூவணு வடிவம் ஒரோவொருக்கால் சிறிதளவே காணப்படும். மூன்று ஆக்சிசன் அணுக்களால் ஆன மூலக்கூறு ஓசோன் எனப்படும்.[29] இது நீர் மூலக்கூறு போல நேரியலற்றதாக (non-linear) இருக்கிறது. இள நீல நிறமுடைய நச்சு வளிமமான இது மூக்கைத் துளைக்கிற கார நெடியுடையது.புற ஊதாக்கதிர்களால் வளிமண்டலத்தின் மிக உயரமான இடங்களில் தொடர்ந்து உருவாகிக்கொண்டு இருக்கும்.[16] வெப்ப இயங்கியல் முறைகளின் படி இந்த மூவணு ஆக்சிசன் உறுதிநிலைப்பெறா வடிவம். ஆக்சிசன் வழியாக மின்னிறக்கம் செய்யும் போது இது உண்டாகிறது. அதனால் இது நெடுஞ்சாலைகளில் உள்ள உயர் மின் கம்பங்கள், இருப்புப் பாதை நிலையங்களில் உள்ள உயர் மின்னழுத்த மோட்டார்களுக்கு அருகாமையில் உருவாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.[22] வளி மண்டலத்தில் மின்னல் என்பது மின்னிறக்கமே. மின்னல் ஏற்படும்போது வளிமண்டலத்தில் ஓசோன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஓசோன் மிகவும் வினைத்திறன் மிக்க ஒரு வேதிச் சேர்மம். இரப்பர், நூலிழைகள், போன்றவற்றை எளிதாகச் சிதைக்கும். ஓசோன் செறிவு மிக்க காற்றைச் சுவாசித்தால் நுரையீரல் பாதிக்கப்படுகிறது.[22] வளிமண்டலத்தின் அடிப்பகுதியில் ஓசோனை உற்பத்தி செய்யும் மூலங்கள் நைட்ரசன் டை ஆக்சைடின் ஒளி வேதியியல் சிதைவாகும். நைட்ரசன் டை ஆக்சைடு தானியங்கு வண்டிகள் உமிழும் கழிவுகளிலிருந்து பெறப்படுகிறது. இதை தீங்கிழைக்கும் ஓசோன் என்பர்.[30] ஆனால் வளிமண்டலத்தின் உயரடுக்குகளில் 15-50 கிமீ உயரங்களில் ஓசோன் செரிவுற்றுள்ளது. இந்த ஓசோன் படலம் உலகில் வாழும் உயிரினங்களுக்கு ஒரு பாதுகாப்புக் கவசம் போலச் செயல்படுகிறது. சூரிய ஒளியோடு சேர்ந்து வரும் தீங்கிழைக்க வல்ல புற ஊதாக் கதிர்களை இந்த ஓசோன் படலம் உட்கவர்ந்து கொள்வதால் அவை பூமியின் நிலப்பரப்பை எட்டுவதில்லை. மிக அண்மையில், உடலின் இயல்பான தடுப்பாற்றல் முறையின் இயக்கத்தால் நுண்ணுயிரிகளைக் கொல்ல இந்த மூவணு ஓசோன் உருவாகின்றது என்று கண்டுள்ளனர்.[31] நீர்ம நிலையிலும் திண்ம நிலையிலும் உள்ள ஓசோன் சற்று கூடிய நீல நிறமாக இருக்கும். இவ்வடிவங்களும் உறுதிநிலை கொள்ளா வடிவங்கள்தாம். சில நேரங்களில் வெடிக்கவும் செய்யும்.ஓ4 என்ற டெட்ரா ஆக்சிசன் என்பதை 2001-ல் கண்டறிந்துள்ளனர்.[32][33] இயற்பியல் இயல்புகள் ஆக்சிசன், நைதரசனிலும் கூடுதலாக நீரில் கரையக் கூடியது. வளியில் ஆக்சிசனும், நைதரசனும் 1:4 என்னும் விகிதத்தில் இருக்க நீரில் ஒரு ஆக்சிசன் மூலக்கூறுக்கு இரண்டு நைதரசன் மூலக்கூறே காணப்படுகின்றது. ஆக்சிசனின் நீரில் கரையும் தன்மை வெப்பநிலையில் தங்கியுள்ளது. 20°C யில் கரைவதிலும் (7.6 மிகி·லீ−1) 0°C யில் இரண்டு மடங்கு (14.6 மிகி·லீ−1) ஆக்சிசன் நீரில் கரைகின்றது.[20][21] 25°C யிலும் 1 வளிமண்டல அழுத்தத்திலும், நன்னீர் ஒரு லீட்டருக்கு 6.04 மில்லிலீட்டர் ஆக்சிசன் காணப்படும். ஆனால் கடல் நீரில் லீட்டருக்கு 4.95 மில்லிலீட்டர் ஆக்சிசனே காணப்படுகின்றது.[34] 5°C யில் கரையும் தன்மை அதிகரித்து நன்னீரில் 9.0 மில்லிலீட்டரும், கடல் நீரில் லீட்டருக்கு 7,2 மில்லிலீட்டரும் கரைகின்றது. ஆக்சிசன் 90.20 கெல்வின் (−182.95 °செ, −297.31 °பா) வெப்பநிலையில் நீர்மமாக ஒடுங்குகிறது. 54.36 கெல்வின் (−218.79 °செ, −361.82 °பா) வெப்பநிலையில் திண்மமாக உறைகிறது.[35] ஆக்சிசன் நீர்மமும், திண்மமும் இளம் வான்-நீல நிறம் கொண்ட தெளிவான பொருட்கள்.[36] நீர்ம வளியைப் பகுதிபடக் காய்ச்சிவடித்தல் (fractional distillation) முறை மூலம் தூய ஆக்சிசன் பெறப்படுகின்றது. நீர்ம நைதரசனைக் குளிர்விப்பானாகப் (coolant) பயன்படுத்தி வளியை நீர்ம நிலைக்கு ஒருக்குவதன் மூலமும் ஆக்சிசனைப் பெறமுடியும். ஆக்சிசன் தாக்குதிறன் கூடிய பொருளாதலால் இதை எரியக் கூடிய பொருட்களிலிருந்து வேறாக வைத்திருக்க வேண்டும்.[37] ஓரிடத்தான்களும், விண்மீன்சார் தோற்றமும் இயற்கையில் காணப்படும் ஆக்சிசன் மூன்று உறுதியான ஓரிடத்தான்களின் கலவையாகும் இவை 16O, 17O, and 18O என்பன.[38] இவற்றுள் 16O ஓரிடத்தானே மொத்த அளவில் 99.762% ஆகும். ஆக்சிசன் ஓரிடத்தான்களின் திணிவெண்கள் 12 தொடக்கம் 28 வரை வேறுபடுகின்றது. பெரும்பாலான 16O விண்மீன்களில் இடம்பெற்ற ஈலியச் சேர்க்கையின் (helium fusion) போது உருவானவை. ஒரு பகுதி நியான் எரிதல் முறையாலும் உருவானது.[39] 17O, காபன், நைதரசன், ஆக்சிசன் வட்டத்தின்போது ஐதரசன் எரிந்து ஈலியம் ஆகும்போது உருவாகிறது. இதனால் இந்த ஓரிடத்தான் விண்மீன்களில் ஐதரசன் எரியும் வலயங்களில் காணப்படுகின்றது.[39] ஆக்சிசனின் 14 கதிரியக்க ஓரிடத்தான்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றுள் 15O உறுதி கூடியது. இதன் அரைவாழ்வுக் காலம் 122.24 நொடிகள். 14O 70.606 நொடிகள் அரைவாழ்வுக் காலம் கொண்டது. எஞ்சிய கதிரியக்க ஓரிடத்தான்கள் எல்லாமே 27 செக்கன்களிலும் குறைவான அரைவாழ்வுக் காலம் கொண்டவை. அவற்றிலும் பெரும்பாலானவை 83 மில்லி நொடிகளிலும் குறைவான அரைவாழ்வுக் காலத்தோடு கூடியவை. 16O இலும் நிறை குறைவான ஓரிடத்தான்களின் மிகப் பொதுவான சிதைவு முறை எதிர்மின்னிப் பிடிப்பு (electron capture) முறை ஆகும்.[40][41][42] இம்முறையில் ஓரிடத்தான்கள் நைதரசனாக மாறுகின்றன.[38] 18O இலும் நிறை கூடிய ஓரிடத்தான்களின் பொதுவான சிதைவு முறை பீட்டா சிதைவு (beta decay) முறை ஆகும். இம்முறையில் ஓரிடத்தான்கள் புளோரினாக மாறுகின்றன இருப்பு புவியின் உயிர்க் கோளம், வளி, கடல், நிலம் ஆகியவற்றில் மிகவும் அதிக அளவில் காணப்படும் வேதியியல் தனிமம் ஆக்சிசன் ஆகும். அண்டத்திலும், ஐதரசன், ஈலியம் ஆகியவற்றுக்கு அடுத்து அதிக அளவில் இருக்கும் தனிமம் ஆக்சிசனே. சூரியனின் திணிவின் 0.9% ஆக்சிசனாக உள்ளது. திணிவின் அடிப்படையில் புவி மேலோட்டின் 49.2% ஆக்சிசன் ஆக இருப்பதுடன், உலகின் பெருங்கடல்களில் இது 88.8% ஆகவும் உள்ளது. புவியின் வளிமண்டலத்தில், கனவளவின் அடிப்படையில் 20.8% ஐயும், திணிவு அடிப்படையில் 20.8% ஐயும் (ஏறத்தாழ 1015 தொன்கள்) கொண்ட ஆக்சிசன் அதன் இரண்டாவது முக்கிய கூறாக உள்ளது. சூரிய மண்டலத்தில் உள்ள பிற கோள்களுடன் ஒப்பிடும்போது, புவியின் வளிமண்டலத்தில் இவ்வளவு அதிகமான ஆக்சிசன் இருப்பது வழமைக்கு மாறானது. செவ்வாய், வெள்ளி ஆகிய கோள்களின் வளிமண்டலங்களில் மிகவும் குறைவான ஆக்சிசனே காணப்படுகின்றது. இவ்வாறு உள்ள ஆக்சிசனும் புறவூதாக் கதிர்கள் காபனீரொட்சைடு போன்ற ஆக்சிசனைக் கொண்ட மூலக்கூறுகளைத் தாக்குவதாலேயே உருவாகின்றது. ஆக்சிசன் வட்டத்தின் காரணத்தினாலேயே புவியில் ஆக்சிசன் வளிமம் வழமைக்கு மாறாக அதிக அளவில் காணப்படுகிறது. இந்த உயிர்ப்புவிவேதியியல் வட்டம் புவியில் அதன் மூன்று முக்கியமான கொள்ளிடங்களான வளிமண்டலம், உயிர்க்கோளம், பாறைக்கோளம் ஆகியவற்றுக்கு உள்ளேயும் அவற்றுக்கு இடையிலும் ஆக்சிசனின் நகர்வுகளை விளக்குகிறது. தொழில்முறை தயாரிப்பு தொழிற்சாலை பயன்பாடுகளுக்காக காற்றிலிருந்து ஆண்டுக்கு 100மில்லியன்டன் O 2 பிரித்தெடுக்கப்படுகிறது; ஆக்சிசன் தயாரிப்பிற்கு முதன்மையாக இரண்டு செய்முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.[19] மிகவும் வழமையான செய்முறை நீர்மநிலையிலுள்ள காற்றிலிருந்து பகுதிபடக் காய்ச்சி பல்வேறு அங்கங்களை வடித்திறக்குவதாகும்; ஆவிநிலையில் வடித்திறக்கப்பட O 2 நீர்மநிலையில் அடியில் தங்கியிருக்கும்.[19] O 2 வளிமம் தயாரிக்க மற்ற முதன்மையான செய்முறை உலர்ந்த, தூய்மையான காற்றை சோடி செயோலைற்று மூலக்கூற்று சல்லடைகளாலான படுகை மீது செலுத்துவதாகும்; செயோலைற்று சல்லடை நைத்திரசனை உள்வாங்கிக் கொள்ள வெளியே 90%முதல்93% வரை தூய்மையான O 2 கிடைக்கிறது.[19] அதேநேரத்தில், மற்ற சல்லடைப் படுகையில் காற்றழத்தத்தைக் குறைப்பதால் நைத்திரசன் விடுவிக்கப்படுகிறது; காற்றுச் செலுத்துகையை திசை மாற்றி இதன் வழியே செலுத்தப்படுகிறது. இவ்வாறு சில சுழற்சிகளுக்குப் பிறகு இரண்டு பக்கத்திலிருந்தும் ஆக்சின் தொடர்ந்து கிடைக்கிறது. இந்தச் செய்முறை அமுக்க மாறி உள்வாங்கல் எனப்படுகின்றது. ஆக்சிசன் வளிமம் இத்தகைய கடுங்குளிர் தொழினுட்பம் தேவைப்படாத வழிகளில் தயாரிப்பது வளர்ந்து வருகின்றது.[44] ஆக்சிசன் வளிமத்தை நீரின் மின்னாற்பகுப்பு மூலமாகவும் தயாரிக்கவியலும். நேரோட்ட மின்சாரம் பயன்படுத்தப்பட வேண்டும்: அலையோட்டம் பயன்படுத்தப்பட்டால் ஒவ்வொரு பக்கத்திலும் ஆக்சிசனும் ஐதரசனும் !:2 என்ற விகிதத்தில் சேகரிக்கப்பட்டு வெடிக்கக் கூடும். இதேபோன்ற மற்றொரு செய்முறை ஆக்சைடுகளிலிருந்தும் ஆக்சோ-அமிலங்களிலிலிருந்தும் மின்வினையூக்கி O 2 வெளியேறுவதாகும். மின்சாரதிற்கு மாற்றாக வேதி வினையூக்கிகளையும் பயன்படுத்தலாம். நீர்மூழ்கிக் கப்பல்களில் வாழ்வாதார அமைப்புகளில் பயன்படுத்தப்படும் ஆக்சிசன் வர்த்திகள் இத்தகையன. இதே கோட்பாடு வணிகமய வானூர்திகளிலும் அமுக்கநிலை குறைவு நெருக்கடிகளின்போது பயனாகின்றது. மற்றொரு முறை சிர்கோனியம் டையாக்சைடு சுட்டாங்கல் மென்றகடுகளில் உயரிய அழுத்தம் மூலமாகவோ மின்னோட்டம் மூலமாகவோ காற்றை கரைய கட்டாயப்படுத்துவதாகும்; இதன் மூலம் கிட்டத்தட்ட தூய்மையான O 2 வளிமம் கிடைக்கிறது.[45] சேமிப்பு ஆக்சிசனை உயரழுத்த ஆக்சிசன் கொள்கலன்களிலும் கடுங்குளிரக கிடங்குகளிலும் வேதியச் சேர்மங்களிலும் சேமிக்கலாம். பொருளியல் காரணங்களுக்காக சிறப்பான காப்பிட்ட கொள்கலன்களில் ஆக்சிசன் நீர்ம நிலையில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது; ஒரு லிட்டர் நீர்மநிலை ஆக்சிசன் வளிமண்டல அழுத்தத்தில் வெப்பநிலையில் உள்ள வளிமநிலையில் 840லிட்டர்கள் ஆக்சிசனுக்கு ஈடானதாகும்.[19] இத்தகைய கொள்கலன்களில் எடுத்துச் செல்லப்பட்டு திரளான நீர்மநிலை ஆக்சிசன் மருத்துவமனைகள், மற்ற நிறுவனங்களின் வெளியே உள்ள சேமிப்புக் கிடங்குகளுக்கு மாற்றப்படுகிறது. நீர்ம ஆக்சிசன் வெப்பப் பரிமாற்றிகள் வழியாக செலுத்தப்படும்போது கடுங்குளிரிலுள்ள ஆக்சிசன் வளிமமாக மாற்றப்படுகிறது; அழுத்தப்பட்ட ஆக்சிசனாக சேமிக்கவும் எடுத்துச் செல்லவும் சிறிய உருளைகலன்களும் பயன்படுத்தப்படுகின்றது. இது ஆக்சி-எரிபொருள் பற்றவைப்பு, மருத்துவப் பயன்பாடுகளுக்கு ஓரிடத்திலிருந்து எளிதாக எடுத்துச் செல்லுமாறு அமைக்கப்பட்டுள்ளன.[19] கரிமச் சேர்மங்களில் ஆக்சிசன் மிக முக்கியமான கரிமச்சேர்மங்களின் வகைப்பாடுகள் அனைத்திலும் ஆக்சிசன் ஒரு பகுதிப்பொருளாக உள்ளது. இங்கு R என்பது ஒரு கரிமவேதியியல் குழுவாகும். ஆல்ககால்கள் (R-OH); ஈதர்கள் (R-O-R); கீட்டோன்கள் (R-CO-R); ஆல்டிகைடுகள் (R-CO-H); கார்பாக்சிலிக் அமிலங்கள் (R-COOH); எசுத்தர்கள் (R-COO-R); அமில நீரிலிகள் (R-CO-O-CO-R); மற்றும் அமைடுகள் (R-C(O)-NR2) போன்ற அனைத்து கரிமச் சேர்மங்க்களிலும் ஆக்சிசன் காணப்படுகிறது. மிக முக்கியமான கரிமக் கரைப்பான்களான அசிட்டோன், மெத்தனால், எத்தனால், ஐசோபுரோப்பனால், பியூரான், டெட்ரா ஐதரோபியூரான், டை எத்தில் ஈதர், டையாக்சேன், அசிட்டிக் அமிலம் மற்றும் பார்மிக் அமிலம் உள்ளிட்ட கரைப்பான்களிலும் ஆக்சிசன் காணப்படுகிறது. ஆக்சிசனின் பயன்கள் மருத்துவம் நன்கு வளர்ச்சியடைந்த ஒரு மனிதன் சாதாரணமாக சுவாசிக்கும்போது (மூச்சினை உள்ளிழுத்து மீண்டும் வெளிவிடுவது ) ஒரு நிமிடத்திற்கு 1.8 கிராம் முதல் 2.4 கிராம் வரை ஆக்சிசன் தேவைப்படுகிறது.[46] இதன்படி ஒவ்வொரு ஆண்டும் மனித மூலம் உள்ளிழுக்கப்பட்டு ஆக்சிசன் 6 பில்லியன் டன்கள்களுக்கும் அதிமாகும்.[47] மூச்சியக்கத்தின்போது முதன்மை நோக்கமே காற்றிலிருந்து ஆக்சிசனை உளவாங்குவது ஆகும்; எனவே மருத்துவத்தில் நிரவலுக்காக ஆக்சிசன் கொடுக்கப்படுகிறது. இதனால் நோயாளியின் குருதிநாளங்களில் ஆக்சிசனின் அளவு கூடுவது மட்டுமன்றி இரண்டாம்நிலை தாக்கமாக நோய்வாய்ப்பட்ட பல்வேறு நுரையீரல்களில் குருதியோட்டத்திற்கான தடையை குறைக்கிறது; இதயத்தின் வேலைப்பளுவை குறைக்கிறது. நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், நுரையீரல் அழற்சி, சில இதயநோய்கள் (இதயத் திறனிழப்பு), மூச்சுப்பை தமனி அழுத்தத்தை கூட்டுகின்ற சில நோய்கள், மற்றும் ஆக்சிசன் வளிமத்தை ஏற்கவும் பயன்படுத்தவும் கூடிய உடலின் திறனை தாக்கும் எந்தவொரு நோய்க்கும் ஆக்சிசன் சிகிட்சை பயன்படுத்தப்படுகின்றது.[48] ஆக்சிசன் சிகிட்சையை மருத்துவமனைகளைலோ நோயாளியின் வீட்டிலோ பயன்படுத்துமாறு எளிதாக எடுத்துச்செல்லத்தக்க கருவிகள் வந்துள்ளன. ஆக்சிசன் கூடாரங்கள் ஒருகாலத்தில் பயன்படுத்தப்பட்டன; தற்காலத்தில் பெரும்பாலும் ஆக்சிசன் முகமூடிகள் அல்லது மூக்குக் குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.[49] உயரழுத்த ஆக்சிசன் சிகிட்சையில் சிறப்பான ஆக்சிசன் அறைகள் பயன்படுத்தப்படுகின்றன; இங்கு நோயாளியைச் சுற்றி, சிலநேரங்களில் மருத்துவப் பணியாளருக்கும், உயர்ந்த அழுத்தத்தில் ஆக்சிசன் வழங்கப்படுகிறது.[50] இத்தகைய சிகிட்சை கார்பனோரொக்சைட்டு நச்சு, வளிம திசு அழுகல், மற்றும் அமுக்கநீக்க நோய்மை போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகின்றது.[51] நுரையீரல்களில் கூடிய அழுத்தத்திலான O 2 செறிவு கார்பனோரொக்சைட்டு வளிமத்தை குருதிவளிக்காவிகளிலிருந்து வெளியேற்ற உதவுகின்றது.[52][53] ஆக்சிசன் வளிமம் திசு அழுகலை உண்டாக்குகின்ற காற்றின்றிவாழும் நுண்ணுயிரிகளுக்கு நச்சாக அமைவதால் உயர் அழுத்தத்திலுள்ள ஆக்சிசன் அவற்றை கொல்கின்றது.[54][55] ஆழ்நீர் மூழ்கிகள் மூழ்கித் திரும்புகையில் சரியாக அமுக்கநீக்க செய்முறைகளை கடைபிடிக்காவிட்டால் அவர்களுக்கு அமுக்கநீக்க நோய்மை ஏற்படுகின்றது; அவர்களது உடலில் கரைந்துள்ள வளிமங்கள், பொதுவாக நைத்திரசன், ஈலியம், கொப்புளங்களாக குருதியில் வெளியேறும். இவர்களுக்கும் உயரழுத்தத்திலுள்ள ஆக்சிசன் இந்நோய் சிகிட்சைக்கு உதவியாக உள்ளது.[48][56][57] மருத்துவக் காரணங்களுக்காக இயக்கமுறை காற்றூட்டம் தேவைப்படும் நோயாளிகளுக்கு, காற்றில் காணப்படும் ஆக்சிசனின் செறிவான 21%ஐவிடக் கூடுதலான செறிவில் ஆக்சிசன் வழங்கப்படுகிறது. பாசிட்ரான் உமிழ்பு தளகதிர்படயியலில் 15O ஓரிடத்தான் சோதனை முயற்சியாக பயன்படுத்தப்பட்டது.[58] வாழ்வாதார அமைப்புகளிலும் பொழுதுபோக்கு விளையாட்டுக்களிலும் இயல்பாக வாழும் சூழலை விட்டு வேறுபட்ட சூழல்களில் பணிபுரிவோருக்கு ஆக்சிசன் ஊட்டம் தேவையாக இருக்கிறது.[59] மலை ஏறுபவர்கள்,[60] விமானங்களில் பயணிப்போர், கடலுக்கடியில் ஆராய்ச்சி செய்வோர், விண்வெளி[61] மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் பணி புரிவோர்,[62][63] சுரங்கங்களில் வேலை செய்வோர், நோயாளிகள் போன்றவர்களுக்குத் சுவாசித்தலுக்குத் தேவையான ஆக்சிசனை வழங்க ஆக்சிசனூட்டம் பயன்தருகிறது.[48][49][50][64] நீர்ம ஆக்சிசனை கரிப் பொடியுடன் கலக்க அது ஒரு வெடிப் பொருளாகின்றது. சின்னக் குப்பியில் சோடியம் குளோரேட்டையும் இரும்புத் துருவல்களையும் போட்டு விமானத்தின் ஒவ்வொரு இருக்கைக்கு அருகாமையிலும் வைத்திருப்பார்கள். ஏதாவது ஒரு காரணத்தின் பொருட்டு ஆக்சிசன் தேவை ஏற்பட்டால் புறத் தூண்டுதல் மூலம் வெடிக்கச் செய்து இரு வேதிப் பொருட்களையும் கலக்க வைத்து, ஆக்சிசனை உற்பத்தி செய்கின்றார்கள். இன்றைக்கு ஆக்சிசனை ஓரிடத்தில் உற்பத்தி செய்து, குழாய் மூலம் ஒவ்வொரு இருக்கைக்கும் அனுப்புகின்றார்கள். மருத்துவ மனைகளில் செயற்கைச் சுவாசத்திற்கு ஆக்சிசன் கலந்த வளிமங்கள் பயன்தருகின்றன. அமோனியா, மெதனால், எதிலின் ஆக்சைடு போன்ற வளிமங்களின் தொகுப்பாக்க முறையில் ஆக்சிசன் பயன்படுகிறது. தொழிற்சாலைகளில் வணிகமுறையில் தயாரிக்கப்படும் ஆக்சிசனில் 55% இரும்புத்தாதுவிலிருந்து எஃகை உருக்கியெடுக்கப் பயன்படுத்தப்படுகின்றது.[45] இந்தச் செய்முறையில், உயரழுத்த ஈட்டி மூலமாக O 2 உருகிய இரும்பின் மீது செலுத்தப்படுகின்றது; இது கந்தக மாசுகளையும் மிகுதியான கரிமத்தையும் அவற்றின் ஆக்சைடுகளாக, முறையே , வெளியேற்றுகின்றது. இந்த வேதிவினைகள் வெப்பம் விடு வினைகளாதலால் வெப்பநிலை 1,700°Cக்கு உயர்கின்றது.[45] தயாரிக்கப்படும் ஆக்சிசனில் அடுத்த 25% வேதித் தொழிலில் பயன்படுத்தப்படுகின்றது.[45] எத்திலீன் O 2 உடன் வேதிவினையாற்றி எத்திலீன் ஆக்சைடு உருவாக்கப்படுகின்றது; இதிலிருந்து எத்திலீன் கிளைக்கால் உருவாக்கப்படுகின்றது; இது பல உறைவுதவிர்ப்பி மற்றும் நெகிழி மற்றும் துணிப் பொருட்களுக்கு தயாரிப்பு மூலமாக விளங்குகின்றது.[45] மீதமுள்ள 20% வணிகமுறை ஆக்சிசன் மருத்துவப் பயன்பாடுகளுக்கும் உலோகங்களை வெட்டவும், பற்றவைத்து ஒட்டவும் ஏவூர்தி எரிபொருளாகவும் நன்னீராக்கலிலும் பயன்படுத்தப்படுகின்றது.[45] ஆக்சிசன் – அசிடிலின் வளிமங்களை ஊதி எரியச்செய்து உலோகங்களை வெட்டவும், பற்றவைத்து ஒட்டவும் பயன்படுத்துகிறார்கள். இது 3300 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலை வரை தரவல்லது. ஆக்சிசன்-நைட்ரசன் எரி வளிமங்கள் பிளாட்டினம், சிலிகா போன்றவைகளுக்குப் பயன்தருகிறது. இது 2400 சென்டிகிரேடு வரை வெப்பநிலை தரவல்லது. 60செமீ தடித்த உலோகம் ஆக்சி-அசிடிலின் தீச்சுடர் மூலம் சுடவைக்கப்படுகின்றது; இதன்மீது O 2 ஓடையை செலுத்தி விரைவாக வெட்டப்படுகின்றது.[65] பிற பயன்கள் ஆக்ஸிஜனேற்ற வினைக்குத் தேவையான ஆக்சிசனைத் தரக்கூடிய பொருளை ஆக்ஸிமம் (Oxidant) என்பர். ஏவுகணைகளில் எரிபொருள் எரிவதற்குத் தேவையான ஆக்சிசனை வழங்கும் பொருளையும் ஆக்ஸிமம் என்பர். பொதுவாக ஏவுகணை, ஏவூர்திகளில் நீர்ம ஆக்சிசன், ஐதரசன் பெராக்சைடு அல்லது நைட்ரிக் அமிலம் ஆக்சிமம் ஆகக் கொள்ளப்படுகின்றன. உடலில் வளர் சிதை மாற்ற வினைகள் நடைபெறும் போதும் நுண்ணுயிரிகளுக்கு எதிராகத் தற்காப்பு செய்யும் போதும் தனித்த பகுதி மூலக்கூறுகள் (free radicals) உற்பத்தி செய்யப்படுகின்றன. மாசற்ற சுற்றுச் சூழலுக்கு அதிகம் இலக்காகும் போதும், புற ஊதக் கதிர்களின் தாக்குதலுக்கு ஆளாகும் போதும், புகைக்கும் போதும், நோய்வாய்ப்பட்டிருக்கும் போதும் தனித்த வீரியமான பகுதி மூலக்கூறுகளின் அளவு உடலில் அதிகரிக்கிறது. இதை அப்படியே விட்டுவிட்டால் இந்த நிலையற்ற தீமை பயக்கும் வேதிப் பொருள், இதய நோய், புற்று நோய்களைத் தூண்டுகிறது. இதைச் சரிக்கட்ட உடலுக்குத் தேவைப் படுவது எதிர் ஆக்சிமம் (anti oxidant) ஆகும். உடல் இயற்கையாகவே எதிர் ஆக்சிமங்களை உற்பத்தி செய்கிறது. என்றாலும் இயல்பு மீறிய சூழ்நிலைகளில் அவை போதாமல் போய்விடுகின்றன. அதனால் எதிர் ஆக்சிமம் கொண்ட உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.வைட்டமின் E,வைட்டமின் C,கரோட்டீன் என்ற வைட்டமின் A, தனிமங்களுள் செலினியம், செம்பு, துத்தநாகம், திராட்சைப் பழத்திலுள்ள பிளாவோனாய்டு (flavonoids) எதிர் ஆக்சிமம் பண்பைக் கொண்டுள்ளன. பாதுகாப்பும் கவனமும் என்.எப்.பி.ஏ 704 சீர்தரம் அழுத்தத்திலுள்ள ஆக்சிசன் உடல்நலத்திற்கு தீங்கில்லாததாகவும் எரியாததாகவும் வினையாற்றாததாகவும் ஆனால் ஆக்சிகரணியாக மதிப்பிட்டுள்ளது. செறிந்த ஆவியால் உயராக்சிசன் (hyperoxia) ஏற்படத் தீவாய்ப்பு, கடுங்குளிர் நீர்மங்களின் பொதுவான தீங்கான தோலுறைவு ஆகிய காரணங்களால் குளிரூட்டப்பட்ட நீர்ம ஆக்சிசனுக்கு (LOX) தீங்கு மதிப்பாக 3 தரப்பட்டுள்ளது; மற்ற மதிப்பீடுகள் அழுத்தப்பட்ட வளிமத்திற்குரியவையேயாம். நச்சியல்பு வளிம ஆக்சிசன் (O 2) உயர்ந்த பகுதியழுத்தங்களில் நச்சுத்தன்மை கொண்டதாக உள்ளது; வலிப்புகளும் பிற நலக்கேடுகளும் ஏற்படுகின்றன.[62][lower-alpha 2][67] 50 கிலோபாசுக்கல்களுக்கு(kPa) கூடிய பகுதியழுத்தங்களில் ஆக்சிசன் நச்சுமை ஏற்படுகிறது; இது சீர்தர அழுத்தத்தில் ஏறத்தாழ 50% ஆக்சிசன் அடக்கம் அல்லது வழமையான கடல்மட்ட O 2 பகுதி அழுத்தமான 21kPaக்கு 2.5 மடங்காகும். துவக்கத்தில், குறைப்பிரசவ மழலையர் O 2-கூடிய காற்றுள்ள அடைப்பெட்டிகளில் வைக்கப்பட்டனர்; உயரிய ஆக்சிசனால் சில குழந்தைகளுக்கு கண் குருடானதால் தற்போது இச்செயல்முறை கைவிடப்பட்டுள்ளது.[20] குறைந்த அழுத்தத்தில் பயன்படுத்துவதால் விண்வெளியில் தூய ஆக்சிசனை சுவாசிப்பது தீங்கானதல்ல.[68]&gt;[69] விண்வெளியுடைகளில் சுவாசிக்கும் காற்றில் O 2 பகுதி அழுத்தம் 30kPa (வழமையை விட 1.4 மடங்கு) ஆக உள்ளது; இது விண்ணோடியின் தமனிகளில் உள்ள ஆக்சிசன் பகுதி அழுத்தம் கடல்மட்டத்தில் இருப்பதை விட சற்றே கூடுதலாகும். ஆழ்கடல் இசுகூபா மூழ்கலிலும் தரைவழி சுவாசாதார மூழ்கலிலும் நுரையீரல்களிலும் மைய நரம்பு மண்டலத்திலும் ஆக்சிசன் நச்சுமை ஏற்படக்கூடும்.[20][62] பகுதி அழுத்தம் 60kPa விடக் கூடுதலான O 2 உள்ள காற்றுக்கலவையை தொடர்ந்து சுவாசிப்பதால் நிரந்தர நுரையீரல் இழைமப்பெருக்கம் ஏற்படும்.[70] 160kPa விடக் கூடுதலான பகுதியழுத்தம் தசைவலிப்புகளுக்கு வழிவகுக்கும்; இது மூழ்குவோருக்கு உயிருக்கே ஆபத்தாக முடியும்.[70][71][72][73] எரிதலும் பிற இடையூறுகளும் செறிவான ஆக்சிசன் விரைவாக தீப்பிடிக்க உதவுகின்றது. ஆக்சிசனேற்றிகளும் எரிமங்களும் அருகருகே இருந்தால் நெருப்பு மற்றும் வெடித்தல் நிகழும் இடையூறுகள் உள்ளன. இருப்பினும் எரிதலைத் தூண்ட, வெப்பம், தீப்பொறி போன்றதோர் தீப்பற்றுதல் நிகழ்வு தேவை.[74] ஆக்சிசன் எரிபொருளல்ல, ஆனால் ஆக்சிசனேற்றியாகும். இத்தகைய தீவாய்ப்புகள் ஆக்சிசனின் சேர்மங்களான, பெராக்சைடு, குளோரேட்டுக்கள், நைத்திரேட்டுகள், பெர்குளோரேட்டுக்கள், மற்றும் குரோமேற்று மற்றும் இருகுரோமேற்றுகளிலும் உண்டு; இவை நெருப்புக்கு வேண்டிய ஆக்சிசனை வழங்கக் கூடியவை. செறிந்த O 2 விரைவாகவும் ஆற்றலுடனும் தீப்பிடிக்க உதவுகிறது.[74] வளிம அல்லது நீர்ம ஆக்சிசனை சேகரிக்கவும் செலுத்தவும் பயனாகும் எஃகு குழாய்களும் சேகரிப்பு கலன்களும் எரிபொருளாக செயற்படும். எனவே ஆக்சிசனுக்கான அமைப்புக்களின் வடிவமைக்கவும் தயாரிக்கவும் சிறப்பான பயிற்சி தேவை; தீப்பற்றும் வாய்ப்புகள் குறைக்கப்பட வேண்டும்.[74] மரம், பெட்ரோ வேதிப் பொருட்கள், அசுபால்ட்டு போன்ற கரிமப் பொருட்களில் நீர்மநிலை ஆக்சிசன் சிந்தி அவை நனைந்தால் பின்னெப்போதும் ஏற்படும் இயக்க மோதல்களின்போது வெடிக்கின்ற அபாயம் உண்டு.[74] மற்ற கடுங்குளிர் நீர்மங்களைப் போலவே மனித உடற் பகுதியுடன் தொடர்பேற்பட்டால் தோலுக்கும் கண்களுக்கும் தோலுறைவு ஏற்படும். இவற்றையும் பார்க்கவும் நெபுலியம் ஆக்சிசன் சேர்வைகள் ஆக்சிசன் உணரி கரைந்த ஆக்சிசனுக்கான விங்கிளர் சோதனை ஒக்சைட்டுகள் குறிப்புகள் மேற்கோள்கள் புற இணைப்புகள் at The Periodic Table of Videos (University of Nottingham) on In Our Time at the BBC பகுப்பு:தனிமங்கள் பகுப்பு:குறை மாழைகள் பகுப்பு:உலோகப்போலிகள் பகுப்பு:ஆக்சிசனேற்றிகள் பகுப்பு:காற்கோசென்கள் பகுப்பு:ஈரணு அலோகங்கள்
ஆக்ஸிஜனைக் கண்டுபிடித்தவர் யார்?
காரல் வில்லெம் சீலெ
7,468
tamil
a45957eba
சீனா (China) என்று பொதுவாக அழைக்கப்படும் சீன மக்கள் குடியரசு கிழக்காசியாவிலுள்ள நாடாகும். ஆசியாவிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடான சீனா உலகில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாகப் பரப்பளவின்படி மூன்றாவது பெரிய நாடாகும். 1,306,313,812 மக்கள் வாழும் சீனா, உலகில் சனத்தொகை கூடிய நாடுகளில் முதலிடம் வகிக்கிறது. சீனப் பெருஞ்சுவர் இந்நாட்டின் இயலுமையையும் தொன்மையையும் கூறி நிற்கிறது. சீனாவின் தலைநகர் பீஜிங் ஆகும். அந்நாட்டின் வர்த்தகத் தலைநகராகச் சாங்காய் உள்ளது. உலகின் மிகப் பழைய நாகரிகங்களில் ஒன்றான பண்டைய சீன நாகரிகம், வட சீனச் சமவெளியூடாகப் பாயும் மஞ்சள் ஆற்றங்கரையில் உருவாகி வளர்ந்தது. இந்நாடு நாலாயிரம் ஆண்டுகளாக, சியா வம்சம் (Xia) தொடக்கம் சிங் வம்சம் (Qing) வரையான அரச வம்சங்களால் ஆளப்பட்டு வந்தது. இது 1911 ஆம் ஆண்டில் சீனக் குடியரசு உருவாக்கப்பட்டதுடன் முடிவடைந்தது. 20 ஆம் நூற்றாண்டின் முதல் அரைப் பகுதியில், ஒற்றுமை இன்மையும், உள்நாட்டுப் போர்களும், சீனாவை இரண்டு முக்கியமான அரசியல் குழுக்களாகப் பிரித்தன. ஒரு குழு, தேசியவாதிகளான குவோமிந்தாங், மற்றது சீனப் பொதுவுடமைக் கட்சி. 1949 ஆம் ஆண்டில் சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றிபெற்று சீனத் தலை நிலத்தில் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதுடன், முக்கியமான பிணக்குகள் முடிவடைந்தன. தேசியவாதிகளின் சீனக் குடியரசின் அரசு தாய்வான் தீவுக்குள் அடங்கிக் கொண்டது. இவ்விரு பிரிவினருக்கும் இடையிலான, பிணக்குகள் இன்றும் தொடர்ந்து வருகின்றன. இவை முக்கியமாக இறைமை, தாய்வானின் அரசியல் அங்கீகாரம் என்பன தொடர்பானவையாகும். இன்று மக்கள் சீனக் குடியரசு உலகின் மிகமுக்கியமான நாடும், வளர்ந்துவரும் வல்லரசும் ஆகும். சீனா, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிலையான உறுப்புரிமையைக் கொண்டுள்ளதுடன், உலக வணிக நிறுவனம், ஆசியா-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனம், கிழக்காசிய உச்சிமாநாடு, சாங்காய் ஒத்துழைப்பு நிறுவனம், ஆகியவற்றிலும் உறுப்பினராக உள்ளது. இது ஒரு அணுவாயுத நாடாக இருப்பதுடன், உலகின் மிகப்பெரிய, நிலையான பாதுகாப்புப் படையையும் கொண்டுள்ளது. பாதுகாப்புக்கான செலவினத்தைப் பொறுத்தவரை சீனா உலகில் நான்காவது இடத்தை வகிக்கின்றது. மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவின் அடிப்படையில் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் சீனாவும் ஒன்று. பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் சீனா உலகில் நான்காவது இடத்திலும், வாங்கு திறன் அடிப்படையில் உலகில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. அத்துடன் ஏற்றுமதி அளவில் உலகின் இரண்டாவது இடத்திலும், இறக்குமதியில் மூன்றாவது இடத்திலும் மக்கள் சீனக் குடியரசு உள்ளது. 1978 ஆம் ஆண்டில் சந்தையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்ட பின்னர் 53% ஆக இருந்த வறுமை வீதம் (poverty rate) 2001 ஆம் ஆண்டில் 8% ஆகக் குறைந்துள்ளது. எனினும் சீனா வேறு பல பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்கி உள்ளது. மக்கள்தொகையில் வேகமாக அதிகரித்து வரும் வயதானவர்களின் வீதம், நகர்ப்புறங்களுக்கும், நாட்டுப்புறங்களுக்குமிடையில் விரிவடைந்துவரும் வருமான இடைவெளி, சூழல் தரங்குறைதல் என்பன இத்தகைய பிரச்சினைகளுள் சிலவாகும். வரலாறு ஐரோப்பியா நாடுகளில் நாகரிகம் தோன்று முன்பே சீனாவில் சிறந்த நாகரிகம் ஒன்று காணப்பட்டது. இங்கு Chopsticks மூலம் உணவு உட்கொள்ளும் வழக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சீனாவில் உள்நாட்டுப் போர் நடந்தது. பொதுவுடமைவாதிகள் வெற்றிபெற்றுப் போர் முடிவுக்கு வந்து, தேசியவாதிகள் தாய்வானுக்குப் பின்வாங்கியதும், சீன மக்கள் குடியரசின் அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளதாகத் தலைவர் மா சே துங் 1949 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் நாளன்று தியென் ஆன் மென் வாயிற்கோபுரத்தில் அறிவித்தார். முன்நோக்கிய பெரும் பாய்ச்சல் (Great Leap Forward) எனப்பட்ட திட்டத்தின் காரணமாகத் தொடர்ச்சியான பல பொருளாதாரத் தோல்விகள் ஏற்பட்டமையால், மாவோ சே துங் தனது தலைமைப் பதவியிலிருந்து இறங்கினார். லியூ ஷாவோக்கி அவரைத் தொடர்ந்து பதவியேற்றார். மாவோவுக்குத் தொடர்ந்தும் கட்சியில் பெருஞ் செல்வாக்கு இருந்துவந்தாலும் அவர் பொருளாதார அலுவல்களின் அன்றாட மேலாண்மை தொடர்பான விடயங்களிலிருந்து விலகியே இருந்தார். இவ்விடயங்கள், லியூ சாவோக்கி, டெங் சியாவோபிங் ஆகியோரின் பொறுப்பில் இருந்தது. 1966 ஆம் ஆண்டில், மாவோவும் அவரது கூட்டாளிகளும் கலாச்சாரப் புரட்சியைத் தொடக்கி வைத்தனர் இது பத்தாண்டுகள் கழித்து மாவோ இறக்கும்வரை தொடர்ந்தது. கட்சிக்குள் நிலவிய பதவிப் போட்டியினாலும், சோவியத் ஒன்றியத்தின் மீது ஏற்பட்ட பயத்தினாலும் ஊக்குவிக்கப்பட்ட இக் கலாச்சாரப் புரட்சி சமுதாயத்தில் குழப்பநிலையை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. 1972 ஆம் ஆண்டில், சீனாவுக்கும், சோவியத் ஒன்றியத்துக்கும் இடையிலான பிளவு அதன் உச்சத்தை எட்டியபோது, மாவோவும், பிரதமர் சூ என்லாயும் அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சனை பெய்ஜிங்கில் சந்தித்து அந்நாட்டுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். அதே ஆண்டில், தாய்வானில் இயங்கிவந்த சீனக் குடியரசுக்கு வழங்கப்பட்டிருந்த சீனாவுக்கான ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்புரிமையும், அதன் பாதுகாப்புச் சபைக்கான நிலையான உறுப்புரிமையும், மக்கள் சீனக் குடியரசுக்கு வழங்கப்பட்டது. 1976 ஆம் ஆண்டில் மாவோ காலமானதும், கலாச்சாரப் புரட்சியின்போது இடம்பெற்ற அட்டூழியங்களுக்காகக் குற்றம் சுமத்தி நால்வர் குழு (Gang of Four) என அழைக்கப்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டதுடன், மாவோவின் வாரிசு எனக் கருதப்பட்ட ஹுவா குவோபெங்கிடமிருந்து டெங் சியாவோபெங் பதவியைக் கைப்பற்றினார். டென் சியாவோ பெங் தான் நேரடியாகக் கட்சித் தலைவர் பதவியையோ அல்லது நாட்டின் தலைவர் பதவியையோ வகிக்காவிட்டாலும், கட்சிக்குள் அவருக்கிருந்த செல்வாக்கினால், குறிப்பிடத்தக்க அளவிலான பொருளாதாரச் சீர்திருத்தங்களை நோக்கி நாட்டை வழிநடத்தினார். தொடர்ந்து பொதுவுடமைக் கட்சி, தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் அரசாங்கம் கொண்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதுடன், கம்யூன்களையும் கலைத்துவிட்டது. பல குடியானவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நிலங்களையும் பெற்றார்கள். இவ்வாறான மேம்பட்ட ஊக்குவிப்புகளினால், வேளாண்மை உற்பத்திகள் பெருமளவு அதிகரித்தன. இந்த நிலைமைகள், சீனா திட்டமிட்ட பொருளாதார முறையிலிருந்து, கலப்புப் பொருளாதார முறைக்கு மாறும் சூழ்நிலையைக் குறித்தன. புவியியல் சீனா ஆசிய கண்டத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நாடாகும். சீனாவின் கிழக்கில் வட கொரியாவும் வடக்கில் மங்கோலியாவும் உள்ளன. வடகிழக்கில் ரஷ்யா, வட மேற்கில் கசக்ஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. மேற்கிலும் தென் மேற்கிலும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளும் தெற்கில் மியன்மர், லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகளும் உள்ளன. கடலுக்கப்பால் கிழக்கிலும் தென்கிழக்கிலும் தென் கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், புருனை, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் உள்ளன. சீனாவின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு மலைப்பாங்கான நிலமாகும். உலகின் மிகவுயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரம் சீனா உரிமைக்கோரும் திபெத் மற்றும் நேபாள எல்லையில் அமைந்துள்ளது. இமய மலைத்தொடர், சீன-இந்திய எல்லையில் உள்ளது. இதுதவிர குன்லன், தியென் சான், தாங்குலா, சின்லின், பெரும் சிங் ஆன் லின், தைய்ஹான், சிலியென், ஹென்துவான் என்பவை சீனாவின் முக்கிய மலைகளாகும். சீனாவில் 1500க்கும் அதிகமான ஆறுகள் பாய்கின்றன. இவற்றுள் யாங்சி ஆறு அசியாவில் மிக நீளமானதும், உலகில் மூன்றாவது நீளமான நதியுமாகும். மஞ்சள் ஆறுயும் ஒரு முக்கிய நதியாகும். யாங்சி, மஞ்சள், ஹெலுங், முத்து, லியௌ, ஹைய் எனற நதிகள் சினாவின் கிழக்கு நோக்கிப் பாய்ந்து பசிப்பிக் சமுத்திரத்தில் கலக்கின்றன. இந்தியாவில் பிரம்மபுத்ரா என்று அழைக்கப்படும் 'யாலு சாங்பு நதி' இந்து சமுத்திரத்தில் உள்ள வங்காள விரிகுடாவில் கலக்கின்றது. அர்சிஸ் ஆறு வடக்கு நோக்கிப் பாய்ந்து ஆர்டிக் சமுத்திரத்தில் கலக்கிறது. அரசியல் மக்கள் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் மக்கள் வாழும் சீனாவில் 56 வகை இன மக்கள் உள்ளனர், இவர்களுள் 93% ஹன் இனத்தவர். பௌத்தம், டாவோயிசம், இஸ்லாம், கத்தோலிக்க திருச்சபை, சீர்திருத்தத் திருச்சபை ஆகிய மத நம்பிக்கைகளைப் பின்பற்றும் மக்கள் சீனாவில் உள்ளனர். சீன நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாகப் பல குடும்ப நலத்திட்டங்களை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியது. இவற்றில் முக்கியமானது ஒரு தம்பதியினருக்கு ஒரு குழந்தை திட்டம். முதல் குழந்தை பெண் குழந்தையாக வாய்த்தாலோ, தம்பதியினர் கிராமப்புறத்தில் வசித்தாலோ இரண்டாவது குழந்தையைப் பெறலாம். உண்மையில் இத்திட்டம் மக்கள் தொகை வளர்ச்சியை நன்கு கட்டுப்படுத்தினாலும், 117 ஆண்களுக்கு 100 பெண்கள் என்ற பால் விகித நிலை ஏற்பட்டுள்ளது. சீன மொழி இந்நாட்டில் பேசப்படும் மொழியும் அதிகாரப்பூர்வ மொழியும் ஆகும். இம்மொழியை அடிப்படையாகக் கொண்ட பல வட்டார மொழிகள் சீனாவில் பேசப்படுகிறது. இதில் ஒன்றான மாண்டரின் சீன மொழி, உலகில் அதிக மக்கள் பேசும் மொழி என்ற சிறப்பைக் கொண்டுள்ளது. பொருளாதாரம் 1949 முதல் சீனா பொதுவுடமைத் தத்துவத்தைக் கடைபிடித்து வரும் நாடாகும். 1980 ஆம் ஆண்டு முதல் சீர்த்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பு கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பின், சீனாவின் பொருளாதாரம் ஆண்டுக்குச் சராசரியாக 9% வேகத்துடன் வளர்ந்து வருகின்றது. சீனா உலகில் பாறை எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்யும் நாடாகும்[14] சுற்றுலாத்துறை சுற்றுலாவுக்கு புகழ்பெற்றிராத சீனா அத்துறையில் வளர்ச்சி கண்டுவருகிறது. இதற்கு அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் பொருளாதார சீர்த்திருத்தங்களே முக்கியக் காரணமாகத் திகழ்கிறது. மார்ச் – ஏப்ரல் மற்றும் செப்டம்பர் – அக்டோபர் வரையுமான மாதங்கள் சீனச் சுற்றுலாவிற்கு சிறந்தது. பகல் பொழுதில் 20 முதல் 30 பாகை செல்சியஸ் இருக்கும் அதேவேலை இரவு நேரங்களில் வெப்பநிலை குறைவாகக் காணப்படும். சீன புத்தாண்டு போன்ற முக்கிய பண்டிகைகளைத் தவிர்ப்பது நல்லது. இந்தச் சமயங்களில் தங்கும் அறை கிடைப்பதும் பயணம் செய்வதும் கடினம். முக்கிய விழாக்கள் சீன புத்தாண்டு – இவ்விழா பெரும்பாலும் பிப்ரவரி மாதத்தில் கொண்டாடப்படும். அதிகாரபூர்வமாக மூன்று நாட்கள் நீடிக்கும், ஆனால் பெரும்பாலோர் ஒரு வாரம் வரை இவ்விழாவை கொண்டாடுவர். பட்டாசு (வெடி) சப்தங்களும், வாண வேடிக்கைகளும் காணப்படும். இலாந்தர் பண்டிகை இது வர்ணமயமான விழாவாகும். வருடத்தின் முதல் பௌர்ணமியிலிருந்து 15 நாட்கள் கழித்து வரும் நாளில் கொண்டாடப்படும் இவ்விழா புத்தாண்டு கொண்டாட்டங்களின் முடிவைக் குறிக்கிறது. சீனாவின் பிரபலமான சிங்க நடனம் இந்தக் காலங்களில் நடைபெறும். சீனாவில் இத்தினம் ஒரு பொது விடுமுறையல்ல. சிங் மிங் ஏப்ரலில் நடக்கும், சீனக் குடும்பங்கள் மறைந்த தங்கள் உறவினர்களின் கல்லறையைச் சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி. டிராகன் படகு திருவிழா ஜூன் மாதத்தில் ஹாங்காங்கில் நடப்பது. 'வுட் யுவான்' என்ற கவிஞரைக் கௌரவிக்கும் முகமாக இந்தத் திருவிழா நடைபெற்று வருகிறது. குழுக்களாகப் படகு செலுத்தும் போட்டி இவ்விழாவின் ஒரு அங்கமாக நடைபெறுவது வழக்கமாகும். படகு குழுவைச் சேர்ந்த அனைவரும் ஒரே சமயத்தில் துடுப்பை வீசிப் படகைச் செலுத்தும் காட்சி கண்ணைப்பறிக்கும். பல வெளிநாட்டுக் குழுக்களும் இப்போட்டியில் பங்குபற்றுவது வழக்கமாகும். Footnotes உசாத்துணை வெளி இணைப்புகள் Overviews from பீப்புள்ஸ் டெய்லி from UCB Libraries GovPubs at Curlie 's பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் entry by Yiching Wu from International Futures . PBS Online NewsHour. ஒக்டோபர் 2005. Government —Authorized government portal site to China Studies . Minxin Pei (2006). IFRI Proliferation Papers. No. 15. Travel (CNTO) Maps Wikimedia Atlas of the People's Republic of China Coordinates: * பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
சீனா நாடு எப்போது நிறுவப்பட்டது?
1949
993
tamil
116d01a4c
இந்தியக் குடியரசிற்கு பல தேசிய சின்னங்கள் உள்ளன தேசிய சின்னம் இந்தியாவின் தேசிய சின்னத்தில் [சாரநாத்] உள்ள அசோகத்தூணில் இருந்து எடுக்கப்பட்ட [அசோகச்சக்கரம்] ஆகும். இதில் நான்முகச் சிங்கமும், தேசிய சின்னத்தில் வலது பக்கம் காளையும், இடது பக்கம் குதிரையும் இருக்கும், மேலும் காளை நாட்டின் கடின உழைப்பு மற்றும் உறுதியையும், குதிரை ஆற்றல் மற்றும் வேகத்தையும் குறிப்பிடத்தக்கது. இதன் பீடத்தின் கீழே வாய்மையே வெல்லும் என்னும் பொருள்கொண்ட ”சத்ய மேவ ஜயதே” என்ற வார்த்தைகள் கொண்ட தேவநாகரி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது இந்திய தேசிய சின்னமாக 1950 ம் ஆண்டு சனவரி 26 ல் இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[1] |- பயன்பாடு தேசிய சின்னம் அமைச்சர்கள் பயன்படுத்தும் எழுதுதாள்களில் நீல வண்ணத்திலும், அதிகாரிகள் பயன்படுத்தும் எழுதுதாள்களில் சிவப்பு வண்ணத்திலும் அச்சிடப்பட வேண்டும். மக்களவை உறுப்பினர்கள் பச்சை வண்ணத்திலும், மாநிலங்களவை உறுப்பினர்கள் சிவப்பு வண்ணத்திலும் தேசிய சின்னத்தை பயன்படுத்த வேண்டும். தேசிய சின்னங்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். இந்திய தேசிய சின்னங்களை அவமதிப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். தேசியக் கொடி கடும் காவி, கடும் பச்சை, மத்தியில் தூய வெண்மை ஆகிய மூன்று நிறங்களும் அடங்கிய மூவர;ணக் கொடியே இந்தியாவின் தேசியக் கொடி. வெண்பட்டையின் நடுவே கடல் நீல வண்ணம் கொண்ட 24 அரும்புக் கால்களை உடைய அசோக சக்கரம் ஒன்று உள்ளது.காவி நிறம் தைரியம் மற்றும் தியாகத்தையும்,வெண்மை நிறம் உண்மை மற்றும் அமைதியையும், பச்சை நிறம் நம்பிக்கை மற்றும் வீரத்தையும் குறிப்பதாக கற்பிக்கப்பட்டது. மூவர்ண கொடியை அரசியல் நிர்ணய சபை 1947 ஜூலை 22 ல் ஒருமித்த கருத்துடன் அங்கீகரித்தது.[2] ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிங்களி வெங்கைய்யா என்பவர் தேசிய கொடியை வடிவமைத்தார். தேசிய கீதம் இந்திய அரசியமைப்பு குழு 1950 ஜனவரி 24 ல் ”ஜன கண மன ” பாடலை நாட்டின் தேசிய கீதமாக அங்கிகரித்தது.[3] 1911 டிசம்பர் 27ல் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலாகப் பாடப்பட்டது. 1912ல் தாகூரின் ”தத்துவ போதினி” பத்திரிக்கையில் பாரத விதாதா என்னும் தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டது. இந்த பாடலை ஏறக்குறைய 52 விநாடிகளில் பாடிமுடிக்க வேண்டும். தேசியப் பாடல் தேசிய கீதத்தை விட வந்தே மாதரம் எனத் தொடங்கும் தேசியப்பாடல் பழமையானது. 1882 ல் பங்கிம் சந்திரனின் ”ஆனந்த மட்” நூல் வெளியானது. எனவே இதற்கு முன்பே இது எழுதப்பட்டிருக்க வேண்டும்.1896 ல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இது முதன்முதலாகப் பாடப்பட்டது. இதற்கு இசையமைத்தவர் இரவீந்திர நாத் தாகூர்.[4] |- தேசியப் பாடலின் ஸ்ரீஅரவிந்தரின் ஆங்கில மொழிப்பெயர்ப்பின் தமிழ் பொருள். அம்மா நான் வணங்குகிறேன். இனிய நீர்ப் பெருக்கினை, இன் கனி வளத்தினை, தனி நறுமலயத் தண்காற் சிறப்பினை, பைந்நிறப் படினம் பரவிய வடிவினை வணங்குகிறேன். வெண்ணிலாக் கதிர் மகிழ்விரித்திடும் இரவின் மலர் மணிப் பூந்திகழ் மரன் பல செறிந்தனை, குறுநகையின் செலார் குலவிய மாண்பினை , நல்குவை இன்பம், வரம் பல நல்குவை அம்மா வணங்குகிறேன். தேசிய நாட்காட்டி சக வருட நாட்காட்டி 1957 ஆண்டு மார்ச் 22 முதல் தேசிய நாட்காட்டியாக அங்கீகரிக்கப்பட்டது. சக ஆண்டு 365 நாள்களை கொண்டது. சாதாரண ஆண்டில் சைத்ரா முதல் தேதி மார்ச் 22 ஆகும். லீப் வருடத்தில் முதல் தேதி மார்ச் 21 ஆகும். தேசிய நாள்காட்டி சக ஆண்டு 1879 ல் சைத்ரா முதல் நாளில் தொடங்கியது.[5] தேசிய விலங்கு ஊன் உண்ணும் விலங்குகளில் கவர்ச்சியும், கம்பீரமும் மிகுந்த புலி இந்தியாவின் தேசிய விலங்கு ஆகும். 1972 ல் புலி இந்தியாவின் தேசிய விலங்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. தேசிய விலங்கை கொல்வது சட்டப்படி குற்றம் ஆகும். எனவே அவற்றை பாதுகாக்க வேண்டும். 2001 ல் புலிகளின் எண்ணிக்கை 3642 ஆக இருந்தது.ஆனால் இப்போது 1411 ஆக குறைந்துள்ளது. 1973ல் தொடங்கப்பட்ட புலிகள் பாதுகாப்புத் திட்டம் ஒரு முழுமையான சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டமாகும்.[6] தேசிய நீர் விலங்கு இந்திய தேசிய நீர் விலங்கு நன்னீரில் வாழும் டால்பின் ஆகும்.[7] இந்தியாவின் கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதியில் வாழும் கங்கை டால்பின் புனிதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது. இவை சுத்தாமான நீரில் மட்டுமே வாழக்கூடியவை ஆகும். தேசியப் பறவை இந்தியாவில் உள்ள இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பறவைகளில் மிக கவர்ச்சியான மயிலே இந்தியாவின் தேசிய பறவை ஆகும். 1963 ல் மயில் இந்தியாவின் தேசியப் பறவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. மயிலைப் பற்றிய குறிப்புகள் ஆதிநூலான ரிக் வேதத்தில் உள்ளன. இது 2500 மீட்டர் உயரமான பகுதிகளிலும் காணப்படும். [8] தேசிய மொழி அரசியல் சட்டத்தின் பிரிவு 343 (1) ன் படி இந்தி மொழியே நாட்டின் அதிகார பூர்வமான மொழி. இத்துடன் ஆங்கிலத்தையும் அதிகாரபூர்வமாக பயன்படுத்தவும் அரசியலமைப்புச் சட்டம் அனுமதித்துள்ளது. அரசியல் சட்டத்தின் எட்டாம் அட்டவணைப் படி தற்போது இந்தி, தமிழ், மலையாளம், வங்காளி, அசாமி, தெலுங்கு,மராத்தி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, குஜராத்தி, காஷ்மீரி, உருது, கன்னடம், கொங்கணி, மணிப்புரி, நேப்பாளி, தோஹ்ரி, போடோ, சந்தாலி, மைதிலி என்னும் 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. தேசிய மரம் இந்தியாவின் இலையுதிர்காடுகளில் காணப்படும் ஆலமரம் தேசிய மரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[9] தேசிய நதி 2008 ஆம் ஆண்டு இந்தியாவின் தேசிய நதியாக கங்கை அறிவிக்கப்பட்டது. கங்கை இந்தியாவின் நீளமான நதி ஆகும். இமாலயத்தின் கங்கோத்ரி பனிப்படிவுகளில் இது உற்பத்தி ஆகும்போது இது பாகீரதி என்று அழைக்கப்படுகிறது.[10] பிற சின்னங்கள் தேசிய மலர்: தாமரை[11] தேசியக் கனி: மாம்பழம்[12] தேசிய விளையாட்டு: ஹாக்கி மேற்கோள்கள் உசாத்துணை மனோரமா இயர் புக் - 2009 வெளி இணைப்புகள் knowindia.gov.in - Govt. of India Official website. பகுப்பு:இந்திய தேசியச் சின்னங்கள்
இந்திய நாட்டின் தேசிய விலங்கு எது?
புலி
3,013
tamil
378299f0e
பொதுவாக மக்பெத் என அழைக்கப்படும் த ட்ரேஜடி ஆஃப் மக்பெத் என்பது வில்லியம் ஷேக்ஸ்பியரின் நாடகமாகும். அது மன்னரைக் கொலைச் செய்தல் மற்றும் அதன் விளைவு ஆகியவற்றைப் பற்றிய நாடகமாகும். இது ஷேக்ஸ்பியரின் சிறிய துன்பியல் படைப்பாகும். அது 1603 மற்றும் 1607 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதென நம்பப்படுகிறது. சைமன் ஃபோர்மன் (Simon Forman) க்ளோப் தியேட்டரில் இது போன்ற நாடகத்தைப் பார்த்ததாகப் பதிவு செய்ததன் மூலம் இந்த நாடகம் நிகழ்த்தப்பட்டதற்கான பழைய சான்று 1611 ஆம் ஆண்டு ஏப்ரலில் கிடைக்கிறது. அது ஃபோலியோ ஆஃப் என்று 1623 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது. இது ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான அழைப்புப் புத்தகத்திலிருந்து வந்திருக்கலாம். துன்பியலுக்கான ஷேக்ஸ்பியரின் ஆதாரங்கள், ஷேக்ஸ்பியர் மற்றும் அவரது சமகாலத்தவர்களிடையே பிரபலமான, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்தின் வரலாறுப் புத்தகமான ஹோலின்ஷெட்'ஸ் க்ரானிக்கில்ஸ் (1587) (Holinshed's Chronicles)என்னும் புத்தகத்தில் உள்ள, மக்பெத், மக்டஃப் மற்றும் டங்கன் ஆகியவற்றின் சான்றுகளாகும். அரங்கிற்குப் பின்புல உலகில், சிலர் இந்த நாடகம் சபிக்கப்பட்டது என்றும் அது பிரபலமாகாது எனவும், அல்லது அது ஸ்காட்லாந்து நாடகம் எனவும் நம்பினர். நூற்றாண்டுகளாக, இந்த நாடகம் மக்பெத் மற்றும் லேடி மக்பெத் கதாப்பாத்திரத்தில் நடிக்க மிகப் பெரிய நடிகர்களில் சிலரைக் கவர்ந்தது. இந்த நாடகம் திரைப்படமாகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சியாகவும், ஓப்பெராவாகவும், நாவல்களாகவும், நகைச்சுவைப் புத்தகங்களாகவும் இன்னும் பிற ஊடக வடிவங்களிலும் தழுவிப் படைக்கப்பட்டது. கதாப்பாத்திரங்கள் டங்கன் – ஸ்காட்லாந்து மன்னர் மால்கம் – டங்கனின் மூத்த மகன் டோனல்பெயின் – டங்கனின் இளைய மகன் மக்பெத் – டங்கன் மன்னன் இராணுவத்தில் ஒரு ஜெனரல், முதலில் க்ளெயிம்ஸின் தானேவாகவும் பின்னர் கவ்டாரின் தானேவாகவும் பின்னர் ஸ்காட்லாந்து மன்னராகவும் இருந்தவர். லேடி மக்பெத் – மக்பெத்தின் மனைவி மற்றும் பின்னாளில் ஸ்காட்லாந்தின் அரசி பேங்க்வோ – மக்பெத்தின் நண்பன் மற்றும் டங்கன் மன்னனின் இராணுவத்தில் ஜெனரல் ஃப்ளீன்ஸ் – பேங்க்வோவின் மகன் மக்டஃப் – ஃபைஃபின் தானே லேடி மக்டஃப் – மக்டஃபின் மனைவி மக்டஃபின் மகன் ரோஸ் , லென்னாக்ஸ் , ஆங்கஸ் , மெண்டெயித் , கெயித்னெஸ் – ஸ்காட்லாந்து தானேக்கள் சிவார்டு – நார்தம்பர்லேண்டின் ஏர்ல், இங்கிலிஷ் படைகளின் ஜெனரல் யங் சிவார்டு – சிவார்டின் மகன் செய்ட்டன் – மக்பத்தின் பணியாள் மற்றும் துணையாள் ஹெக்கட்டீ – விட்ச்க்ராஃப்டின் தலைமை மந்திரவாதி/பெண் கடவுள் மூன்று மந்திரவாதிகள் – மக்பத் மன்னனாகவும் பேங்க்வொவின் குழந்தைகள் மன்னர்களாகவும் ஆவார்கள் என்று முன்னுரைப்பவர்கள். மூன்று கொலைகாரர்கள் காவலாளி (அல்லது தூதுவன்) – மக்பத்தின் இல்லத்தின் வாயிற்காவலன் ஸ்காட்லாந்து மருத்துவர் – லேடி மக்பத்தின் மருத்துவர் த ஜெண்டில்வுமன் – லேடி மக்பெத்தின் கவனிப்பாளர் கதைச் சுருக்கம் நாடகத்தின் முதல் காட்சி இடி மின்னலுடன் தொடங்குகிறது, அப்போது மூன்று மந்திரவாதிகளும், தாங்கள் அடுத்ததாக மக்பத்தைச் சந்திக்க வேண்டும் என முடிவெடுக்கின்றனர். அடுத்த காட்சியில், காயமடைந்த கேப்டன், ஸ்காட்லாந்தின் டங்கன் (Duncan) மன்னரிடம், க்ளெயின்சின் தானேவான அவரது ஜெனரல் மக்பத் மற்றும் பேங்க்வோ ஆகியோர் தேசத் துரோகியான மேக்டொன்வால்டினால் தலைமையேற்று நடத்தப்பட்ட நார்வே மற்றும் அயர்லாந்தின் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தனர் எனக் கூறுகிறார். மன்னரின் உறவினரான மக்பத், அவனது வீரம் மற்றும் போரிடும் ஆற்றலுக்காக மிகவும் பாராட்டப்படுகிறான். காட்சி மாறுகிறது, மக்பத் மற்றும் பேங்க்வோ (Banquo) வருகிறார்கள், வானிலை மற்றும் அவர்களது வெற்றி பற்றி அவர்கள் பேசிக்கொண்டு வருகிறார்கள் ("இது சுத்தமாகச் சரியில்லை, நான் இது வரை பார்த்திராத அழகான நாளாக உள்ளது"). அவர்கள் ஒரு நிலப்பகுதியின் வழியே சென்றுகொண்டிருக்கும் போது, மூன்று மந்திரவாதிகளும் வருகின்றனர், அவர்கள் குறிகூறலின் மூலம், அவர்களை வாழ்த்தக் காத்திருந்தனர். முதலில் அவர்களுக்கு சவால் விட்டது பேங்க்வோ தான் எனினும், அவர்கள் மக்பத்தைச் சந்தித்தனர். முதல் மந்திரவாதி மக்பத்தை, "க்ளெயிம்சின்" தானே (Thane of Glamis) என்று பாராட்டுகிறார், இரண்டாவது மந்திரவாதி "கவ்டாரின் தானே " (Thane of Cawdor) என்றும் மூன்றாமவர், அவன் "இனி மன்னராக இருக்கப்போவதாக " அறிவிக்கிறார். மக்பத் வாயடைத்து நிற்கிறான், அதனால் பேங்க்வோ அவர்களை எதிர்கொள்கிறான். மந்திரவாதிகள் பேங்க்வோவிடம், அவன் மன்னனாக ஆகாவிட்டாலும் அவன் பல மன்னர்களுக்குத் தந்தையாவான் எனக் கூறுகின்றனர். இந்த முன்னுரைத்தல்களைக் கேட்டு இருவரும் வியந்தபோது, அந்த மந்திரவாதிகள் மறைந்து விடுகின்றனர். மன்னரின் தூதுவரும் மற்றொரு தானேவுமான ரோஸ் வந்து மக்பத் கவ்டாரின் தானேவாக நியமிக்கப்பட்டதை அறிவிக்கிறான். முதல் முன்னுரைத்தல் இவ்வாறு நிறைவேறுகிறது. உடனே, மக்பத் மன்னராகும் ஆசையைப் பெறுகிறான். மக்பத் அவனது மனைவிக்கு, இந்த மந்திரவாதிகளின் முன்னுரைத்தல் பற்றி கடிதம் எழுதுகிறான். டங்கன், இன்வெர்னஸிலுள்ள மக்பத்தின் கோட்டையில் தங்க முடிவு செய்யும்போது, லேடி மக்பத் அவனைக் கொன்று அந்தப் பதவியை தனது கணவனுக்குப் பெற்றுத் தர ஒரு திட்டம் போடுகிறாள். இந்தக் கொலையை மக்பத் எதிர்த்த போதும், லேடி மக்பத் பின்னர் அவனது மனிதாபிமானத்தைக் கேள்விக்குள்ளாக்கி, தன்னுடைய திட்டத்தின்படி நடக்க அவனை ஒப்புக்கொள்ளச் செய்கிறாள். மன்னர் வரும் அந்த இரவு மக்பத் டங்கனைக் கொல்கிறான். இந்த உண்மை பார்வையாளர்களுக்குத் தெரியாது, ஆனால் பின்னர் லேடி மக்பத்துக்குப் பதவி கிடைக்க வேண்டும் என்பதைக் கேட்டு மக்பத் அதிர்ச்சியில் உறைந்து போகிறான். அவளது திட்டத்தின் படி, தூங்கிக் கொண்டிருக்கும் டங்கனின் பணியாளர்களின் மீது, இரத்தக் கறை படிந்த கத்தியை போட்டு, அவர்கள் தான் கொலை செய்தனர் என்று நம்பும்படி செய்கிறாள். அடுத்த நாள் விடியலின் போது, ஸ்காட்லாந்தின் லெனாக்ஸ் என்னும் ஸ்காட்லாந்து சான்றோரும் ஃபைஃபின் ராயல் தானேவான மக்டஃபும் வருகிறார்கள்.[1] ஒரு பணியாள் நுழைவாயிலைத் திறக்க, மக்பத் அவர்களை மன்னரின் அறைக்கு அழைத்துச் செல்கிறான், அங்கே மக்டஃப் டங்கனின் சடலத்தைக் காண்கிறான். மக்பத், மிகவும் கோபப்பட்டவனாக நடித்து, பாதுகாவலர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் என கூறும் முன்பே அவர்களைக் கொன்றுவிடுகிறான். மக்டஃப் உடனே மக்பட்தை சந்தேகிக்கிறான், ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. உயிருக்கு பயந்து, டங்கனின் மகன்கள் ஓடிவிடுகிறார்கள், மால்கம் இங்கிலாந்துக்கும் அவனது சகோதரன் டொனால்ட்பெயின் (Donalbain) அயர்லாந்துக்கும் சென்றுவிடுகின்றனர். உரிமையுள்ள வாரிசுகள் ஓடிவிட்டதால், அவர்கள் மேல் அனைவருக்கும் சந்தேகம் உண்டாகிறது, மக்பத் மன்னரின் உறவினராக இருந்ததால், ஸ்காட்லாந்தின் மன்னன் என்னும் பதவியைத் தனதாக்கிக் கொள்கிறான். மக்பத் வெற்றி பெற்றாலும், பேங்க்வோவைப் பற்றிய முன்னுரைத்தலை நினைத்து நிம்மதியிழந்தான். அதனால், மக்பத் அவனை தனது ராஜ விருந்துக்கு அழைத்தும் பேங்க்வோ மற்றும் அவனது இளைய மகனான ஃப்ளீன்ஸ் ஆகியோர் அன்றிரவு அங்கு தங்குவார்கள் என்பதைக் கண்டுகொள்கிறான். அவர்களைக் கொல்ல மக்பத் இருவரைப் பணியமர்த்துகிறான். புரியாத புதிர் போல, கொலைக்கு முன்பு பூங்காவில் மூன்றாவதாக ஒரு கொலையாளி தோன்றுகிறான். கொலைகாரர்கள் பேங்க்வோவைக் கொன்றுவிடுகிறார்கள், ஆனால் ஃப்ளீன்ஸ் தப்பித்துவிடுகிறான். அந்த விருந்தில், பேங்க்வோவின் ஆவி வந்து மக்பத்தின் இடத்தில் அமர்கிறது. அந்த உருவத்தை மக்பத்தால் மட்டுமே பார்க்க முடிந்தது; மக்பத்தின் மனைவி வெறுத்துப்போய் அனைவரையும் வெளியேற ஆணையிடும் வரை, வெறும் நாற்காலி மீது மக்பத் மிரண்டு போய் கோபம் கொண்டதையும் வெறித்துப் பார்த்ததையும் கண்டு மற்றவர்கள் பயந்துபோனார்கள். அமைதியிழந்த மக்பத் மீண்டும் மந்திரவாதிகளைக் காணச் சென்றான். அவர்கள் மேலும் மூன்று எச்சரிக்கைகள் மற்றும் முன்னுரைத்தல்களுடன் மூன்று ஆவிகளைத் தயார் செய்கின்றனர், அது அவனிடம் "மக்டஃப் குறித்து எச்சரிக்கையாக இரு " எனக் கூறின, ஆனால் "பெண்ணுக்கு பிறக்காத யாரும் மக்பத்தைத் தாக்க மாட்டார்கள் " என்றும் "கிரேட் பிர்னேம் காடு முதல் டன்சினேன் மலை வரை எது எதிர்த்து வந்தாலும் அவனைத் தோற்கடிக்க முடியாது " என்றும் கூறின. மக்டஃப் இங்கிலாந்திற்கு நாடு கடத்தப்பட்டிருக்கையில், மக்பத் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கிறான்; மக்டஃபின் மனைவி மற்றும் அவர்களது இளங்குழந்தைகள் உட்பட மக்டஃபின் அரண்மனையில் உள்ள அனைவரையும் கொல்கிறான். லேடி மக்பத் தானும் தனது கணவனும் சேர்ந்து செய்த குற்றங்களால் மனம் வெடிக்கிறாள். அவள் தூக்கத்தில் நடந்து தனது கைகளில் இருப்பதகாக அவள் நினைக்கும் கற்பனையான இரத்தக் கறைகளைக் கழுவ முயற்சிக்கிறாள், அப்போது அவளுக்குத் தெரிந்து பயங்கர விஷயங்களைப் பற்றியெல்லாம் பேசுகிறாள். இங்கிலாந்தில், மால்கம் மற்றும் மக்டஃபுக்கு ரோஸ் "உங்கள் அரண்மனை சூறையாடப்பட்டது, உங்கள் மனைவிகளும் குழந்தைகளும் மிருகங்களைப் போலக் கொல்லப்பட்டனர்" என்று அறிவிக்கிறார். மக்பத் இந்நிலையில் ஒரு சர்வாதிகாரி போலத் தோன்றுகிறான், அவனது தானேக்களில் பலர் அவனுக்கு எதிரியாகின்றனர். மால்கம் ஒரு இராணுவப் படையைக் கொண்டுள்ளான், அவனுடன் மக்டஃப் மற்றும் இங்கிலிஷ்மென் சிவார்டு (மூத்தவர்), நார்தம்பர்லேண்டின் எர்ல் ஆகியோரும் துணையாக இணைந்து டன்சினேன் அரண்மனையை நோக்கிப் படையெடுக்கின்றனர். பிர்னேம் காட்டில் மறைந்திருந்த போது, வீரகள் தங்களை மறைத்துக்கொள்ள மரக் கிளைகளை வெட்டி எடுத்துச்செல்லும்படி ஆணையிடப்பட்ட போது, மந்திரவாதிகளின் மூன்றாம் முன்னுரைத்தலும் நடந்தது. அதே நேரத்தில், மக்பத் அவனது மனைவியின் மரணத்தின் நினைவால் (அதற்கான காரணம் தெரியமலே உள்ளது, அவளைப் பற்றி மால்கம் இறுதியாகக் குறிப்பிட்டது தெரிந்ததால் அவள் தற்கொலை செய்துகொண்டதாகக் கருதப்படுகிறது," தானாகவே தன் கையாலேயே தனது வாழ்வை முடித்துக்கொண்டாள் என்றும் கூறப்பட்டது") தனக்குத் தானே பேசிக்கொள்கிறான் ("நாளை, நாளை, மேலும் நாளை "). இளம் சிவார்டின் கொலையிலும் மக்டஃப் மற்றும் மக்பத்தின் நேருக்கு நேரான மோதலிலும் இந்தப் போர் முடிகிறது. மக்பத், பெண்ணுக்குப் பிறக்காத யாராலும் அவனைக் கொல்ல முடியாது என்பதால், தான் மக்டஃபைக் கண்டு பயப்பட ஒரு காரணமும் இல்லை கூறுகிறான். மக்டஃப், தான் "தனது தாயின் கருப்பை நேரம் தவறி கிழிந்ததிலிருந்து" (அதாவது அறுவை சிகிச்சை மூலம் பிறந்ததாக) பிறந்ததாகவும், அதனால் "பெண்ணுக்குப் பிறந்தவன் அல்ல " என்றும் கூறுகிறான். மக்பத் மந்திரவாதிகளின் முன்னுரைத்தலைத் தவறாகப் புரிந்துகொண்டதை உணர்ந்தான், ஆனால் நேரம் கடந்துவிட்டிருந்தது. மக்டஃப் மக்பத்தின் தலையைத் துண்டித்து மேடைக்கு வெளியே வீசி, மந்திரவாதிகளின் மூன்றாவது முன்னுரைத்தலை நிறைவேற்றுகிறான். ஃப்ளீன்ஸுக்கு பதிலாக மால்கமுக்கே முடிசூட்டப்படுகிறது எனினும், பேங்க்வோவைப் பற்றிய மந்திரவாதிகளின் முன்னுரைத்தலான, "நீ குழந்தை பெறக்கூடாது ", என்ற வசனம் ஷேக்ஸ்பியரின் ரசிகர்களிடையே காலம் கடந்து நிற்பதாகும், ஏனெனில் இங்கிலாதின் முதலாம் ஜேம்ஸ் மன்னரும் (ஸ்காட்லாந்தின் ஆறாம் ஜேம்ஸ் மன்னரும்) பேங்க்வோவின் வம்சாவழியாகக் கருதப்படுகின்றனர். மூலங்கள் மக்பத் நாடகம் ஷேக்ஸ்பியரின் ஆண்டனி அண்ட் க்ளியோபாட்ரா நாடகத்துடன் ஒப்பிடப்பட்டுள்ளது. ஆண்டனி மக்பத் ஆகிய இரண்டுமே பழையதிலிருந்து புதிய உலகைத் தேடிய கதாப்பாத்திரங்களே. இருவருமே அரச பதவிக்காக சண்டையிட்டனர், அந்தப் பதவியை அடைய 'சாபத்தை' அடைந்தனர். ஆண்டனியின் சாபம் அக்டோவியஸும் (Octavius) மக்பத்தின் சாபம் பேங்க்வோவும் ஆக இருந்தனர். ஒரு நிலையில், மக்பத் தன்னை ஆண்டனியுடன் ஒப்பிடுகிறான், அவன் கூறுகிறான், "பேங்க்வோவுக்குக் கீழ் / எனது மேதைமை கண்டிக்கப்பட்டது, மார்க் ஆண்டனியின் மேதைமை சீசரால் கண்டிக்கப்பட்டதாகக் கூறுவார்களே, அது போல." இறுதியில், இரு நாடகங்களிலும் ஆற்றல் மிக்க பெண் கதாப்பாத்திரங்கள் உள்ளன: க்ளியோபாட்ரா மற்றும் லேடி மக்பத்.[2] ஷேக்ஸ்பியர் இந்தக் கதையை ஹோலின்ஷெட்'ஸ் க்ரானிக்கில்ஸின் பல கதைகளிலிருந்து தருவித்துள்ளார், அது பிரிட்டிஷ் தீவுகளின் பிரபலமான வரலாற்றுப் புத்தகமாகும். இது ஷேக்ஸ்பியர் மற்றும் அவரது சமகாலத்தவரிடையே மிகவும் பிரபலமானதாகும். க்ரானிக்கில்ஸில் (Chronicles), டோன்வால்டு என்னும் ஒரு மனிதன் மந்திரவாதிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததால், அவனது குடும்பத்தினர் பலரும் அவனது மன்னர் டஃபாலால் கொல்லப்பட்டிருப்பதை அறிகிறான். அவனது மனைவியின் வற்புறுத்தலால், அவனும் அவனது பணியாட்களும் சேர்ந்து மன்னரை அவனது வீட்டிலேயே வைத்துக் கொல்கின்றனர். "க்ரானிக்கில்ஸில்", டங்கன் மன்னனின் திறமையின்மையால், மக்பத் அரசாங்கத்தை நடத்த முடியாமல் போராடுவதாகக் காண்பிக்கப்பட்டது. அவனும் பேங்க்வோவும் மூன்று மந்திரவாதிகளைச் சந்திக்கின்றனர், இதுபோலவே, ஷேக்ஸ்பியரின் படைப்பில் மூன்று மந்திரவாதிகள் முன்னுரைத்தல்களை வழங்குவர். மக்பத் மற்றும் பேங்க்வோ இருவருமே தங்கள் மனைவியர்களின் வற்புறுத்தலால் டங்கனைக் கொலை செய்யத் திட்டமிடுவர். மக்பத் மக்டஃப் மற்றும் மால்கம் ஆகியோரால் வீழ்த்தப்படும் முன்பு வரை நீண்ட பத்தாண்டு கால ஆட்சியைக் கொண்டிருந்தான். இந்த இரண்டு படைப்புகளிலும் ஒன்றுபோலுள்ள அம்சங்கள் பல இருப்பது தெளிவு. இருப்பினும், சில சான்றோர்கள் ஜார்ஜ் புச்சனின் (George Buchanan) ரெரம் ஸ்காட்டிகேரம் ஹிஸ்டோரியா (Rerum Scoticarum Historia), ஷேக்ஸ்பியரின் படைப்புடன் மிகவும் நெருக்கமாகப் பொருந்துவதாகக் கருதுகின்றனர். புச்சனின், படைப்பு ஷேக்ஸ்பியரின் காலத்தில் இலத்தீனில் கிடைத்தது.[3] இந்தக் கதையின் வேறு பதிப்புகளிலும், மக்பத் மன்னரை மக்பத்தின் அரண்மனையிலேயே கொல்வதைப் போல நிகழ்வுகள் இல்லை. சான்றோர்கள், மக்பத்தின் குற்றத்தை விருந்தோம்பலில் நடக்கும் மோசமான வன்முறையாகக் காண்பிக்க ஷேக்ஸ்பியர் சேர்த்துள்ளார் என இந்த மாற்றத்தைக் குறித்துக் கருதுகின்றனர். அந்த காலத்தில் இதே போன்ற பொதுவாக அமைந்திருந்த இந்தக் கதையின் பதிப்புகளில், டங்கன் அரண்மனையில் கொல்லப்படுவதற்கு மாறாக இன்வெர்னஸில் மறைந்திருந்து தாக்கப்பட்டு கொல்லப்படுவதாக இடம்பெறும். ஷேக்ஸ்பியர் டோன்வால்டின் கதையையும் டஃப் மன்னரின் கதையையும் கலந்து பயன்படுத்தியுள்ளார், இதுவே இக்கதையின் குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.[4] ஷேக்ஸ்பியர் மற்றொரு தெரியக்கூடிய மாற்றத்தையும் செய்துள்ளார். க்ரானிக்கில்ஸில் , பேங்க்வோ டங்கன் மன்னனைக் கொல்லும் மக்பத்தின் திட்டத்தில் துணைபோகும் ஒருவனாவான். இதனைத் தொடர்ந்து கிடைக்கும் வெற்றியில், மன்னர் பதவி மால்கமுக்குக் கிடைக்காமல் மக்பத்துக்கே கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதிலும் அவன் முக்கியப் பங்கு வகிக்கிறான்.[5] ஷேக்ஸ்பியரின் காலத்தில் பேங்க்வோ ஸ்டார்ட் மன்னர் முதலாம் ஜேம்சின் நேரடி வம்சாவழியாகக் கருதப்பட்டார்.[6][7] வரலாற்று ஆதாரங்களில் சித்தரிக்கப்பட்டுள்ள பேங்க்வோவுக்கும் ஷேக்ஸ்பியரின் பேங்க்வோவுக்கும் அதிக வேறுபாடு இருந்தது. விமர்சகர்கள் இந்த மாற்றத்திற்கு பல காரணங்களை முன்மொழிந்தனர். முதலாவது, ஒரு மன்னரின் வம்சாவழியைக் கொலைகாரனாகக் காண்பிப்பது சிக்கலானது. இரண்டாவதாக, கொலைக்கு துணையாளியாக இருக்க மற்றொரு நாடகக் கதாப்பாத்திரம் தேவையில்லை என்பதால் பேங்க்வோவின் கதாப்பாத்திரத்தை ஷேக்ஸ்பியர் சிறிது மாற்றியிருக்கலாம்; இருப்பினும் பல கல்வியாளர்கள் விவாதித்த மக்பத்தின் கதாப்பாத்திரத்திற்கான வேறுபட்ட குணத்தை வழங்குவது அவசியமானது, அதை பேங்க்வோ கதாப்பாத்திரம் பூர்த்தி செய்தது.[5] பேங்க்வோவைப் பற்றி எழுதிய அந்தக் காலத்தைச் சேர்ந்த ஜீன் டே ஸ்கெலாண்ட்ரே போன்ற பிற ஆசிரியர்கள், தமது ஸ்டார்ட்டைடில் பேங்க்வோவை கொலைகாரனாகக் காண்பிக்காமல் நல்லவனாக சித்தரித்து வரலாற்றை மாற்றியுள்ளனர், இதற்கும் அநேகமாக முன்னர் கூறப்பட்ட அதே காரணங்களே இருக்கலாம்.[8] தேதியும் உரையும் பிற்கால மறுஆய்வுகளின் குறிப்பிடத்தக்க ஆதாரங்களின் காரணமாக மக்பத்தின் காலத்தைத் துல்லியமாக அறிய முடியவில்லை. பல கல்வியாளர்கள் இது எழுதப்பட்டது 1603 மற்றும் 1606 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலமாக இருக்கலாம் என ஊகிக்கின்றனர்.[9][10] இந்த நாடகம் ஜேம்ஸ் மன்னரின் முன்னோர்களையும் 1603 ஆம் ஆண்டில் மன்னர் பதவிக்கான ஸ்டார்ட் வாரிசுரிமையையும் (ஜேம்ஸ் மன்னர் பேங்க்வோவின் வம்சாவழியாக நம்பப்படுகிறார்)[11] கொண்டாடும் வகையில் அமைந்திருப்பதால், அவர்கள் 1603 ஆம் ஆண்டுக்கு முன்பான காலத்தில் இந்த நாடகம் எழுதப்பட்டிருக்க வாய்ப்பில்லை எனக் கூறுகின்றனர்; மேலும் மந்திரவாதிகள் மக்பத்துக்கு காண்பிக்கும், எட்டு மன்னர்களின் அணிவகுப்பு காட்சி IV இல் இடம்பெறும், அது ஜேம்ஸ் மன்னருக்கான நிரப்பு அம்சமாகும். பிற ஆசிரியர்கள் 1605–6 என்ற மிகவும் குறிப்பிட்ட தேதியை ஊகித்துள்ளனர், இதற்கு சாத்தியக்கூறுள்ள கன்பௌடர் ப்ளாட் பற்றிய குறிப்புகள் மற்றும் அதன் விளைவான வழக்குகள் ஆகியவை காரணங்களாக இருக்கலாம். குறிப்பாக த வாயிற்காவலனின் உரையில் (நிகழ்ச்சி II, காட்சி III, வரிகள் 1-21), 1606 ஆம் ஆண்டின் வசந்தகாலத்தில் நடைபெற்ற ஜேசுட் ஹென்றி கார்னட்டின் வழக்குகளைப் பற்றிய குறிப்புகள் காணப்படலாம்; "ஈக்விகேட்டர்" (வரி 8) என்பது கார்னட்டின் "ஈக்விகேஷன்" படையையும் [காண்க: உள ஏற்பின்மைத் தத்துவம்] மற்றும் "ஃபார்மர்" (4) கார்னட்டின் கூட்டணிகளில் ஒன்றையும் குறிக்கலாம்.[12] இருப்பினும், "ஃபார்மர்" (farmer) என்பது பொதுவான சொல்லாகும், மேலும் "தட்டிக்கழித்தல்" என்பதும் 1583 ஆம் ஆண்டு கருத்துகளின் எலிசபெத் மகாராணியின் தலைமை கவுன்சிலர் லார்டு பர்க்ளேவின் படைப்புகளில் காணப்பட்டதும் ஆகும். மேலும் அது ஸ்பானிய ப்ரிலேட்டான மார்ட்டின் அஸ்பில்க்யூட்டாவின் 1584 ஆம் ஆண்டின் தட்டிக்கழித்தல் தத்துவத்திலும் காணப்பட்டதாகும், அது 1590களில் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து முழுதும் பிரபலமானது[13] கல்வியாளர்கள், 1605 ஆம் ஆண்டின் கோடைக்காலத்தில் ஆக்ஸ்ஃபோர்டில் ஜேம்ஸ் மன்னர் கண்ட ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியையும் குறிப்பிடுகின்றனர், அதில் அபார சக்தி கொண்ட சகோதரிகளைப் போன்ற மூன்று "குறிசொல்பவர்கள்" இடம்பெறுகின்றனர்; கெர்மோட் ஷேக்ஸ்பியர் இதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம் எனக் கருதுவதாகக் கூறி, இதை அபார சக்தி கொண்ட சகோதரிகளுக்கு இதைப் பயன்படுத்தியிருக்கலாம் என்கிறார்.[14] இருப்பினும், நியூ கேம்ப்ரிட்ஜ் பதிப்பில் ஏ. ஆர். ப்ரான்மல்லர் (A. R. Braunmuller) 1605-6 ஆம் ஆண்டு விவாதங்கள் முடிவுக்கு வராமல் இருப்பதைக் கண்டறிகிறார், மேலும் 1603 ஆம் ஆண்டிற்கு முந்தைய காலத்திற்காக மட்டுமே வாதிடுகிறார்.[15] "1607 ஆம் ஆண்டில் நாடகம் இருந்ததற்கான போதிய தெளிவான ஊகங்கள் இருக்கின்றன" என கெர்மோட் குறிப்பிடுவதால், இந்த நாடகம் 1607 ஆம் ஆண்டிற்குப் பிறகு எந்தக் காலத்திலும் எழுதப்பட்டிருப்பதாகக் கருதப்படவில்லை.[14] இந்நாடகம் நிகழ்த்தப்பட்டதற்கான மிகப் பழைய பதிவு, 1611 ஆம் ஆண்டு ஏப்ரல் ஆக உள்ளது, அப்போது சைமன் ஃபோர்மான் அதை க்ளோப் தியேட்டரில் பார்த்ததாகப் பதிவு செய்துள்ளார்.[16] மக்பத் முதன்முதலில் 1623 ஆம் ஆண்டின் ஃபர்ஸ்ட் ஃபோலியோவில் அச்சிடப்பட்டது மேலும் இதன் உரைக்கான ஒரே மூலமாக ஃபோலியோ மட்டுமே உள்ளது. இப்போதுள்ள உரையானது அதற்கடுத்து வந்தவர்களால் எளிதாக மாற்றப்பட்டுள்ளது. இதில் தாமஸ் மிடில்டனின் நாடகமான த விட்ச்சிலிருந்து (The Witch) (1615) இரண்டு பாடல்களைச் சேர்த்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்; மிடில்டன் மந்திரவாதிகள் மற்றும் ஹெக்கட்டி ஆகிய இரு கதாப்பாத்திரங்கள் வருகின்ற கூடுதல் காட்சிகளைச் சேர்த்திருப்பதாகத் தெரிகிறது. ஏனெனில் இந்த இரு காட்சிகள் பார்வையாளர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன. 1869 ஆம் ஆண்டின் க்ளேரெண்டன் பதிப்புகள் காலத்திலிருந்து உள்ள இந்த மறுபடைப்புகள், நிகழ்ச்சி III, காட்சி v முழுவதும் மற்றும் நிகழ்ச்சி IV, காட்சி I இன் ஒரு பகுதி ஆகியவற்றைக் கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது, அவை தற்கால உரைகளில் பெரும்பாலும் குறிப்பிடப்பட்டுள்ளன.[17] இந்த அடிப்படையில், பல கல்வியாளர்கள் ஹெக்கட்டி தெய்வம் இழிவாகக் காட்டப்படும் அனைத்து மூன்று இடைநிகழ்ச்சிகளையும் நிராகரிக்கின்றனர். ஹெக்கட்டி உள்ளடக்கத்திலும், நாடகமானது பெரும்பாலும் சிறிதாகவே உள்ளது, மேலும் இதனால் ஃபோலியோ உரையானது, நிகழ்ச்சிக்காக குறிப்பிடத்தக்க அளவு வெட்டிச் சுருக்கப்பட்ட அழைப்புப் புத்தகத்திலிருந்து வந்திருக்கலாம், அல்லது அதைப் பயன்படுத்தியவரே உரையை வெட்டிச் சுருக்கியிருக்கலாம். கருப்பொருள்களும் மூலக்கருத்துகளும் மக்பத் ஷேக்ஸ்பியரின் துன்பியல்களில் குறிப்பிட்ட வழிகளில் ஒரு ஒழுங்கற்றவனாவான். இது மிகவும் சுருக்கமானது: ஒத்தெல்லோ (Othello) மற்றும் கிங் லியர் (King Lea) ஆகியவற்றை விட ஆயிரம் வரிகள் குறைவானது, மேலும் சிறிதளவே ஹேம்லெட் (Hamlet) டைப் போன்று நீளத்தில் பாதிக்கும் சிறிதளவே கொண்டதாகும். பெறப்பட்ட பதிப்பானது அதிகமாக வெட்டிச் சுருக்கப்பட்ட மூலம் அல்லது ஒரு வேளை அழைப்புப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கலாம் என்ற கருத்தைப் இந்த சுருக்கம் பல விமர்சகர்களுக்கு பரிந்துரைத்துள்ளது. இந்த சுருக்கமானது பிற வழக்கத்திற்கு மாறான அம்சங்களுடனும் தொடர்புடையதாக உள்ளது: "நடிப்புக்காக சுருக்கப்பட்டது" போலத் தோன்றும் முதல் நாடகப் பகுதியின் முதல் காட்சி; ஒப்பீட்டில் மக்பத்தைத் தவிர்த்த பிற கதாப்பாத்திரங்களின் எளிமைத் தன்மை; ஷேக்ஸ்பியரின் பிற துன்பியல் கதாநாயகர்களுடன் ஒப்பிடுகையில் மக்பத்தின் வேறுபட்ட தன்மை. கதாப்பாத்திரத்தின் துன்பியலாக குறைந்தபட்சம் அலெக்சாண்டர் போப் மற்றும் சாம்வேல் ஜான்சன் ஆகியோரின் நாள்களிலிருந்து நாடகத்தின் பகுப்பாய்வானது, மக்பத்தின் குறிக்கோளைப் பற்றிய கேள்வியையே மையமாகக் கொண்டுள்ளது. பொதுவாக அதிக ஆதிக்கம் செலுத்தும் சிறப்பம்சமாகக் காணப்படுகிறது அது கதாப்பாத்திரத்தை வரையறுப்பதாக உள்ளது. மக்பத் தனது மிக மதிப்பு மிக்க வீரத்திற்காக பெருமை மிக்கவனாக இருந்தாலும் அவன் மிகவும் தீய குணம் படைத்தவன் என்று ஜான்சன் கூறினார். இந்தக் கருத்தானது விமர்சன இலக்கியத்தில் மீண்டும் மீண்டும் வருகிறது. மூன்றாம் ரிச்சர்டு போல, ஆனால் கதாப்பாத்திரத்தின் முரண்பட்ட விதத்தில் மகிழ்ச்சிமிக்க ஆர்வம் தோன்றும் குணத்துடன் மக்பத் தனது விதியான தோல்வியை அடையும் வரையில் இரத்தக் கறையுடனே செல்கிறான். கென்னித் மூயிர் எழுதியது போல, "மக்பத்திற்கு கொலையைப் பற்றிய இயற்சார்வு நிலை இல்லை; அந்தக் கொலையானது மன்னர் பதவியை அடைவதில் தோல்வியடைவதை விட மிகவும் சிறிய பாவமாகத் தோன்றுமாறு ஒரு அதீத குறிக்கோளைக் கொண்டிருக்கிறான். இ.இ. ஸ்டால் போன்ற சில விமர்சகர்கள் இந்த குணாதிசியத்தை, செனேக்கான் அல்லது இடைக்கால மரபிலிருந்து வந்த பின்னமைத்தல் என விளக்குகின்றனர். ஷேக்ஸ்பியரின் ரசிகர்கள் இந்தக் கண்ணோட்டத்தில் வில்லன்கள் முழுவதுமாக கெட்டவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்த்தனர், மேலும் செனேக்கான் பாணி, தீய அரசாட்சி நடத்துவதைத் தடுப்பதோடு, கிட்டத்தட்ட அது அவசியம் என அமைத்தது. இன்னும் பிற விமர்சகர்களுக்கு, மக்பத்தின் நோக்கம் பற்றிய கேள்விக்கான பதிலை அறிவது எளிதான காரியமாக இருக்காது. எடுத்துக்காட்டுக்கு ராபர்ட் ப்ரிட்ஜஸ் ஒரு முரண்பாட்டைக் கண்டுணர்ந்தார்: டங்கனின் கொலையானது குற்றம் செய்வதற்கு போதியதாக இருக்க வாய்ப்பில்லை என்றாகும் முன்பே அந்தக் கதாப்பாத்திரம் அது போன்ற ஒரு பயங்கரத்தை வெளிப்படுத்த முடியும். பல விமர்சகர்களுக்கு முதல் நாடகப் பகுதியில் மக்பத்தின் நோக்கங்கள் தெளிவற்றதாகவும் போதாதது போலவும் தோன்றின. ஜான் டோவெர் வில்சன் ஒரு கருத்தைக் கூறினார் ஷேக்ஸ்பியரின் உண்மையான உரையில் கூடுதல் காட்சி அல்லது காட்சிகள் இருந்தன, அதில் கணவனும் மனைவியும் அவர்களது திட்டத்தைப் பற்றி கலந்தாலோசிப்பார்கள். இந்தப் புரிதல் விளக்கமானது முழுவதுமாக நிரூபிக்கக்கூடியதாக இல்லை; இருப்பினும், மக்பத்தின் குறிக்கோளான ஊக்குவிக்கும் பாத்திரமானது உலகளவில் அறியப்பட்டதாகும். அவனது குறிக்கோளால் அவன் செய்த தீய செயல்கள், அவனை தொடர்ந்து அதிகரிக்கும் தீய செயல்களின் சிக்கலில் அவனை சிக்க வைத்தன, அது அவனே பின்வருமாறு உணருமளவிற்கு இருந்தது: “நான் இரத்தத்தில் இருக்கிறேன்/மிக ஆழத்தில் மூழ்கி இருக்கிறேன், நான் இன்னும் இப்பாதையில் தொடர்ந்து செல்ல வேண்டுமா,/இனி இப்பாதையில் செல்வதைப் போலவே திரும்பி மீண்டு செல்வதும் கடினமே.” நீதி அமைப்பின் துன்பியலாக மக்பத் குறிக்கோளின் அழிவுமிக்க விளைவுகள் அவனோடு மட்டும் நின்றுவிடுவனவாக இல்லை. கிட்டத்தட்ட கொலை நடந்த நேரத்திலிருந்தே, நாடகம் ஸ்காட்லாந்தை, இயற்கை அமைப்புகளின் நேரெதிர் மாற்றங்களால் அதிர்ச்சிக்குள்ளாகும் ஒரு நாடாகவே சித்தரிக்கிறது. ஷேக்ஸ்பியர் ஒரு மிகப் பெரும் இருத்தல் சங்கிலியமைப்புக்கான குறிப்பாக, மனதில் கொண்டிருந்திருக்கலாம் இருப்பினும் நாடகத்தின் சீற்றங்களின் படங்கள் பெரும்பாலும் சிறப்பாக இல்லை. அதனால் அவை புத்தி சார்ந்த வாசிப்புகளை ஆதரிக்கும் வகையில் போதியதாக இல்லை. அவர், மன்னர்களுக்குள்ள தெய்வீக உரிமையைப் பற்றிய ஜேம்ஸின் நம்பிக்கையைப் விரிவாகப் போற்றும் நோக்கத்தையும் கொண்டிருக்கலாம், இருப்பினும் இந்தக் கருதுகோளானது ஹென்றி என். பாலினால் மிகவும் அதிகமாக விரிவாக்கப்பட்டது. அது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை இருப்பினும், ஜூலியஸ் சீசரில் உள்ளது போலவே அரசியல் சூழலில் மகிழ்ச்சியின்மை போன்ற அம்சங்கள், பொருளுலகில் அதிகமாக பிரதிபலிக்கப்பட்டு பெருக்கவும் செய்யப்பட்டது. அதிக முறை சித்தரிக்கப்பட்ட இயற்கை அமைப்பின் நேரெதிர்மாற்றம் தூக்கமாகும். மக்பத்துக்கு “கொலையுண்ட தூக்கம்” இருப்பதாக மக்பத் அறிவிப்பது, சொல்லப்படாமல் லேடி மக்பத்தின் தூக்கத்தில் நடக்கும் குறைபாட்டின் போது பிரதிபலிக்கிறது. மக்பத்தின் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இடைக்கால துன்பியலுக்கு கடன்பட்ட தன்மையானது பெரும்பாலும் குறிப்பாக, நீதி அமைப்பின் அம்சங்களிலான நாடகத்தின் போக்கில் குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது. க்ளின் விக்க்ஹேம், ஒரு வாயிற்காவலாளியைக் கொண்டு கிறிஸ்தவகால நாடகத்தை ஒரு நரக வேதனையுடன் இணைக்கிறார். நாடகத்தில், “ஆச்சாரமான கிறிஸ்தவ துன்பியலின்” நோக்கில், அவ்வப்போது அது ஒப்புக்கொண்டதைக் காட்டிலும் அதிக அளவு சிக்கலான மனோபாவம் உள்ளது என ஹோவார்ட் ஃபெல்பெரின் வாதிடுகிறார்; அவர் இடைக்கால புனித நாடகத்திற்குள்ளமைந்த நாடகங்களுக்கும் இடையே உள்ள தொடர்புகளைக் கண்டறிந்தார். இருபாலரது அம்சம் கொண்ட கருப்பொருள், பெரும்பாலும் குறைபாடு கருப்பொருளின் சிறப்பான அம்சமாகக் கருதப்படுகிறது. இரு பாலருக்கும் பொதுவான பங்குகளை மாற்றிப் பயன்படுத்தியது மிகவும் பிரபலமாக மந்திரவாதிகள் மற்றும் முதல் நாடகப் பகுதியில் லேடி மக்பத் தோன்றுவது போல் அமைக்கப்பட்டது, ஆகியற்றுடன் பெரும்பாலும் தொடர்புடையதாக உள்ளது. இது போன்ற நேரெதிர் மாற்றங்களிலான ஷேக்ஸ்பியரின் இரக்கத்தின் அளவு எவ்வளவாக இருப்பினும், நாடகமானது இயல்பான பால் மதிப்புகளுக்கே திரும்புகிறது அவ்வாறே முடிகிறது. ஜேனட் ஆடல்மேன் போன்ற சில பெண்ணிய உளவியல் பகுப்பாய்வு விமர்சகர்கள் நாடகத்தில் பாலின பங்குகள் ஈடுபடுத்தல் விதத்தை, இயற்கை அமைப்பின் பெரிய கருப்பொருளுடன் தொடர்புடையதாக்குகின்றனர். இந்தக் கருத்தின் அடிப்படையில், மக்பத் அவனது நீதியமைப்பின் வன்முறைக்காக இயற்கையின் சுழற்சியிலிருந்து நீக்கப்பட்டு தண்டிக்கப்படுகிறான் (பெண்ணாக உருவகப்படுத்தப்பட்டது); இயற்கையும் (பிர்னேம் காட்டின் பகுதியில் உள்ளது போல்) நீதியமைப்பின் மீட்டலின் ஒரு பகுதியாகவே உள்ளது. கவிதையியல் துன்பியலாக இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி விமர்சகர்கள் நாடகத்தின் விமர்சனத்தில், பாத்திரத்தின் ஆய்வின் மீது அதிகமாகச் சார்ந்திருத்தலாகக் கருதியவற்றுக்கு எதிராக பதில் வினையளித்தனர். இந்த சார்புத் தன்மையானது அதிகபட்சமாக ஆண்ட்ரியூ செசில் ப்ரேட்லியுடன் (Andrew Cecil Bradley) தொடர்புடையதாகக் கருதப்பட்டாலும், இது ஷேக்ஸியரின் பெண் கதாப்பாத்திரங்களின் நாடகத்திற்கு முந்தைய வாழ்க்கையைப் பற்றிய துல்லியமான, கற்பனைத்தனமானதாகக் கூட இருக்கும் என்ற விளக்கத்தை அளித்த மேரி கவ்டன் க்ளார்க்கின் (Mary Cowden Clarke) காலத்திலேயே தெளிவாக உள்ளது. எடுத்துக்காட்டுக்கு அவர், முதல் நாடகப் பகுதியில் காண்பிக்கப்படும் குழந்தை லேடி மக்பத் ஒரு முட்டாள்தனமான இராணுவ நடவடிக்கையில் இறப்பதாகக் காண்பிக்கப்படுவதைக் கூறுகிறார். சூனியம் மற்றும் தீமை நாடகத்தில், மூன்று மந்திரவாதிகள் இருள், குழப்பம் மற்றும் முரண்பாடு ஆகியவற்றைக் குறிக்கின்றனர், அதே நேரம் அவர்களின் பாத்திரம் தூதுவர்களாகவும் சாட்சிகளாகவும் இருக்கிறது.[18] அவர்கள் இருப்பது துரோகத்தையும் துன்பம் நிகழ இருப்பதையும் வெளிப்படுத்துகிறது. ஷேக்ஸ்பியரின் நாளில், மந்திரவாதிகள் கலகக்காரர்களை விட மோசமானவர்களாகக் கருதப்பட்டனர், “மிகவும் பிரபலமான துரோகி மற்றும் கலகக்காரனாக இருக்கக்கூடிய”[19] அவர்கள் அரசியல் துரோகிகள் மட்டுமின்றி, ஆன்மீக துரோகிகளும் ஆவர். அவர்களினால் உருவாகும் குழப்பங்களில் பெரும்பாலும், யதார்த்தத்திற்கும் அதீத சக்தி இயல்புக்கும், நாடகத்தின் எல்லைகளினூடே பயணிக்கத்தக்க அவர்களின் திறனிலிருந்தே உருவாகின்றன. அவர்கள் விதியைக் கட்டுப்படுத்துபவர்களா அல்லது வெறுமென அதன் தூதுவர்களா என்பது தெளிவாகத் தெரியாதபடி அவர்கள் இரு உலகங்களிலுமே ஆழமாக நிலைபெற்றுள்ளனர். அவர்கள் தர்க்கத்தை மீறுகின்றனர், யதார்த்த உலகின் விதிகளுக்கு அவர்கள் உட்பட்டிருக்கவில்லை.[20] முதல் நாடகப் பகுதியில் மந்திரவாதிகளின் வரிகள்: “வானிலை மோசமானது, மோசமானது குறைவானதே: மூடுபனிக்கும் மாசுபட்ட காற்றுக்கும் இடையே மாறிக்கொண்டிருக்கிறது” என்ற வரிகள், ஒரு குழப்ப உணர்வை உருவாக்குவதன் மூலம் நாடகத்தின் மீதப் பகுதிக்கான ஒரு தொனியை அமைப்பதாகக் அவ்வப்போது கூறப்படுகிறது. உண்மையில், நாடகமானது தீமை நன்மை என்றும் நன்மையானது தீமை என்றும் காண்பிக்கப்படும் விதமான சூழ்நிலைகளால் நிரம்பியுள்ளது. “இரட்டிப்பாக்குங்கள், பணியையும் சிக்கலையும் இரட்டிப்பாக்குங்கள்” (பெரும்பாலும் பொருளை இழக்கும் வகையில் புரிந்துகொள்ளப்படுவது) என்ற வரி, மந்திரவாதிகளின் நோக்கத்தைத் தெளிவாகத் தெரியப்படுத்துகின்றன: அவர்கள் தங்களைச் சுற்றி வாழ்பவர்களுக்கு துன்பத்தை மட்டுமே உருவாக்க முயற்சிக்கின்றனர்.[21] மந்திரவாதிகள் மக்பத்திற்கு, டங்கன் மன்னனைக் கொல்லுமாறு நேரடியாக அறிவுரைக்கவில்லை, அவர்கள் மக்பத்திடம் அவன் மன்னனாகக் கூடியவன் என்று சொல்வதன் மூலம் ஒரு நுண்ணிய உந்துதலை ஏற்படுத்துகின்றனர் இந்த எண்ணத்தை அவனது மனதில் உருவாக்குவதன் மூலம், அவர்கள் அவனது அழிவிற்கான பாதையில் அவனை சிறப்பாக வழி நடத்துகின்றனர். இது ஷேக்ஸ்பியரின் காலத்தில் ஆவிகள் பயன்படுத்தியதாகப் பலர் நம்பும், இவ்வகை உந்துதலைப் பின்பற்றுகிறது. முதலில் அவர்கள் வாதிட்டு, ஒரு எண்ணம் மனிதனின் மனதில் செலுத்தப்படுகிறது, பின்னர் அவன் அதை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம். மக்பத் ஏற்றுக்கொள்கிறான், பேங்க்வோ நிராகரிக்கிறான்.[21] நீதிக்கதையாக ஜே.ஏ. ப்ரியண்ட் ஜூனியரின் கருத்துப்படி, மக்பத் கதையை ஒரு நீதிக்கதையாகவும் புரிந்துகொள்ள முடியும், குறிப்பாக வேதாகமத்தின் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் பகுதிகளுக்கான நீதிக்கதையாக புரிந்துகொள்ளலாம். ஷேக்ஸ்பியரின் கிறிஸ்தவ கண்ணோட்டத்திலிருந்து: "அதை ஒருவர் வரலாறாகவோ அல்லது துன்பியலாகவோ எவ்வாறு கருதினாலும், மக்பத் குறிப்பாக ஒரு கிறிஸ்தவன். ஒருவர் ரிச்மண்ட் நோபிள் செய்ததைப் போல, வேதாகம நீதிக்கதைகளைக் காணலாம்; மேலும் ஆராய்கையில், மிஸ் ஜேன் எச். ஜேக் செய்ததைப் போல, ஷேக்ஸ்பியரின் கதைக்கும் பழைய ஏற்பாட்டின் சால் மற்றும் ஜெஸெபெல் கதைகளுக்கும் இடையே உள்ள ஒத்த அம்சங்களை ஆய்வு செய்யலாம்; அல்லது இடைக்கால இறையியல் கண்ணோட்டத்திலிருந்து மக்பத்தின் வீழ்ச்சியின் வளர்ச்சியை டபள்யூ.சி. கர்ரியைப் போல ஆய்வு செய்யலாம்."[22][23] ப்ரியண்ட், டங்கனின் கொலைக்கும் இயேசுவின் கொலைக்கும் ஆழமான ஒத்த அம்சங்கள் உள்ளதா என ஆராய்கிறார், ஆனால் சாதாரணமாகப் பார்க்கும் ஒரு பார்வையாளருக்கு, பிற வேதாகம நீதிக் கருத்துகள் இருப்பது தெளிவாகத் தெரியும். மக்பத்தின் வீழ்ச்சி ஆதியாகமம் 3 இல் உள்ள மனிதனின் வீழ்ச்சியைப் போலவே உள்ளது, மேலும் அவன் மீண்டும் மந்திரவாதிகளிடம் அறிவுரைக்காக வருவது, 1 சாமுவேல் 28 இல் உள்ள சால் மன்னனின் கதையைப் போலவே உள்ளது.[24][25] இதனால் ஷேக்ஸ்பியரின் ரசிகர்கள் ஊக்கமடைந்திருக்கலாம், மேலும் இந்த நாடகத்திற்கும் வேதாகமத்திற்கும் இடையே உள்ள இணையான அம்சங்களைப் பற்றிய மேற்படி விசாரணை, ஷேக்ஸ்பியர் இந்த நாடகத்தினை எழுதியதற்கான நோக்கத்தைப் பற்றிய கருத்துகளையும் வழங்கும். மூடநம்பிக்கை மற்றும் "த ஸ்காட்டிஷ் ப்ளே" இன்றுள்ள பலர் ஒரு படைப்பின் துரதிருஷ்டத்தினை தற்செயலான நிகழ்வினால் ஆனது என விளக்கமளிக்கும் நிலையில், நடிகர்கள் மற்றும் அரங்கத்தின் பிற நபர்கள் அரங்கத்திற்குள், மக்பத் என்ற பெயரைக் குறிப்பது, துரதிருஷ்டமானது எனக் கருதினர். அவர்கள் மூடநம்பிக்கையினால் அதை த ஸ்காட்டிஷ் ப்ளே|த ஸ்காட்டிஷ் ப்ளே அல்லது "மேக்பீ" (MacBee) என்றும் அல்லது நாடகத்தையல்லாமல் கதாப்பாத்திரத்தைக் குறிப்பிடும் போது, "திரு. மற்றும் திருமதி எம்" அல்லது "த ஸ்காட்டிஷ் கிங்" (The Scottish King) என்றே குறிப்பிட்டனர். ஷேக்ஸ்பியர் இந்த நாடகத்தின் உரையில் மந்திரவாதிகளின் உண்மையான மந்திரங்களைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது, இதனால் கோபமடைந்த மந்திரவாதிகள் நாடகத்திற்கு சாபமளித்துள்ளனர் என நம்பப்பட்டதே இதற்குக் காரணமாகும். இதனால் ஓர் அரங்கத்தினுள் நாடகத்தின் பெயர் தயாரிப்பினை தோல்வியில் முடிவடையச் செய்யும், மேலும் ஒரு வேளை நடிப்பவர்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் அல்லது மரணம் விளைவிக்கும் என நம்பப்பட்டது. இந்த மூடநம்பிக்கையைச் சுற்றி மிகப் பெரிய கதைகள் உருவாயின. விபத்துகள், துரதிருஷ்டங்கள் மற்றும் மரணங்கள் பற்றிய எண்ணற்ற கதைகள் உருவாயின, சோதனையாக, அனைத்தும் மக்பத் நாடகத்தின் நிகழ்த்துதலின் போதே நடைபெற்றன (அல்லது அந்தப் பெயரைக் கூறிய நடிகர்களால்).[26] போராட்டத்தில் இருந்த அரங்கங்கள் அல்லது நிறுவனங்கள் துவளும் தங்கள் அதிருஷ்டங்களைக் காத்துக்கொள்ளும் முயற்சியில் அவ்வப்போது இந்தப் பிரபலமான 'ப்ளாக்பஸ்டரைப்' (blockbuster) பயன்படுத்தினர் என்பது, இந்த மூடநம்பிக்கைக்கான மாற்று விளக்கமாகும். இருப்பினும் நீண்ட காலமாக மோசமாக நடந்துவரும் வணிகத்தின் போக்கை மாற்றி அமைப்பதற்கு ஒரு ஒற்றைத் தயாரிப்பைப் பயன்படுத்துவது மிகவும் கடினமாகும். அதனால், ஒரு அரங்கம் மூடப்படுவதற்கு முன்பு கடைசியாக நிகழ்த்தப்பட்ட நாடகம் மக்பத் ஆகும். இதனால் மக்பத் ஒரு 'துரதிருஷ்டமான' நாடகம் என்ற கருத்து வளர்ந்தது. ஆஸ்டர் ப்ளேஸ் கலகம், இந்த மூடநம்பிக்கைக்கு மேலும் மெருகேற்றிய குறிப்பிடும்படியான நிகழ்ச்சியாகும். இந்த கலகங்களின் காரணம் மக்பத் நாடகத்தின் இரண்டு நிகழ்த்துதலுக்கிடையே இருந்த முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருந்ததால், இதற்கும் அந்த சாபமே காரணமாக இருக்கலாம் என்றும் பெரும்பாலும் கருதப்பட்டது. அரங்க நிறுவனங்கள் மக்பத்தை நடிகர்கள் இல்லாதபட்சத்தில், உண்மையில் நிகழ்த்தப்பட இருந்த நிகழ்ச்சியை நடத்த முடியாது போகும்பட்சத்தில் சமாளிப்பு நாடகமாக மக்பத்தைப் பயன்படுத்தின என்பது இந்த மூடநம்பிக்கைக்கு மற்றொரு விளக்கமாகும். இந்த நாடகத்திற்கு குறைவான நடிகர்களே (நடிகர்களுக்கான கதாப்பாத்திரங்களின் இரட்டிக்கும் நிலையில்) தேவை என்பதும் நடிகர்கள் மனப்பாடம் செய்வதற்கு குறைவான உரையே இருந்ததுமே இதற்கான காரணமாகும். ஏதேனும் நிகழ்ச்சிகள் நடத்தும் முன்பு துரதிருஷ்டவசமாக ஏதேனும் நடந்தால், அப்போது பயன்படுத்துவதற்காக அரங்க நிறுவனங்கள் "மக்பத்" நாடகத்தைத் தயாராக வைத்திருந்தன. நடிகரைப் பொறுத்து இந்த சாபத்தை விரட்ட பல முறைகள் உள்ளன. அதில் ஒன்று மைக்கேல் யார்க்கின் முறையாகும், உடனடியாக அந்தப் பெயரை உச்சரித்த நபர்களுடன் மேடை அமைந்துள்ள கட்டடத்தை விட்டு வெளியேறி, மூன்று முறை நடந்து விட்டு அவர்களின் இடது தோளில் காரி உமிழ்ந்துவிட்டு, ஒரு கெட்டவார்த்தையைச் சொல்லிவிட்டு பின்னர் அழைப்பு வரும்வரை காத்திருப்பது அவரது முறையாகும்.[27] அந்த இடத்திலேயே கூடுமானவரை வேகமாக சுழல்வது, சில நேரங்களில் தோளில் காரி உமிழ்ந்து, கெட்ட வார்த்தை ஒன்றைக் கூறி சுழல்வதும் இது போன்ற ஒரு பழக்கமாகும். அறையை விட்டு வெளியேறி, மூன்று முறை கதவைத் தட்டி மீண்டும் அழைக்கப்பட்டு உள்ளே வந்து ஹேம்லெட் டின் ஒரு வரியைக் கூறுவது மற்றொரு பிரபலமான "சடங்கு" ஆகும். த மெர்ச்சண்ட் ஆஃப் வெனிஸிலிருந்து ஒரு வரியை ஒப்புவித்து, அது அதிருஷ்டமான நாடகம் என நினைத்துக்கொள்வது இன்னுமொரு சடங்காகும்.[28] நிகழ்த்துதல் வரலாறு ஷேக்ஸ்பியரின் காலம் ஃபோர்மான் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டத்தைத் தவிர்த்து, ஷேக்ஸ்பியரின் காலத்தில் நாடகம் நிகழ்த்தப்பட்டதற்கான பதிவுகள் எதுவும் இல்லை. ஸ்காட்லாந்து கருப்பொருளின் காரணமாக இந்த நாடகம் சில நேரங்களில் ஜேம்ஸ் மன்னருக்காக எழுதப்பட்டிருக்கலாம், ஒரு வேளை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது இருப்பினும், இந்தக் கருத்தை வெளி ஆதாரங்கள் எதுவும் ஆதரிக்கவில்லை. நாடகத்தின் வீரம் மற்றும் அதன் மேடை நிகழ்த்தலின் சில குறிப்பிட்ட அம்சங்கள் (எடுத்துக்காட்டுக்கு, இரவு நேரக் காட்சிகள் அதிகமாக இருந்ததும் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான மேடைக்கு வெளியே இருந்து உருவாக்கப்படும் ஒலிகள் சேர்ப்பதும்), இப்போதுள்ள உரையானது உள்ளே நிகழ்த்தப்படுவதற்காக மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை மன்னரின் ஆட்கள் 1608 ஆம் ஆண்டில் கைப்பற்றிய ப்ளேக்ஃப்ரியார்ஸ் அரங்கத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கலாம்.[29] மறுசீரமைப்பும் 18 ஆம் நூற்றாண்டும் மறுசீரமைப்பில், சர் வில்லியம் டேவனண்ட் மக்பத் தின் நாடகத்தனமான "ஓப்பெராவின் அம்சம் கொண்ட" தழுவலான படைப்பை உருவாக்கினார், அதில் "அனைத்து பாடல்கள் மற்றும் நடனங்களும் இடம்பெற்றன" மேலும் "மந்திரவாதிகள் பறத்தல்" போன்ற சிறுப்பு விளைவுகளும் (ஜான் டவ்னஸ், ரொசியஸ் அஞ்சலிகானஸ் , 1708) (John Downes, Roscius Anglicanus) இடம்பெற்றன. டேவனண்ட்டின் மறு உருவாக்கமானது, லேடி மக்டஃபின் பாத்திரத்தை, லேடி மக்பத்தின் கருப்பொருள் ரீதியான மாறுபாடாக உருவாக்கியதன் மூலம் மேலும் மேம்படுத்தியது. 1667 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 அன்று சாம்வேல் பெப்பிஸ், தனது முதல் படைப்பான டெய்ரியில், டேவனண்டின் மக்பத் நாடகம் "மேடைக் கான நாடகங்களில் சிறந்தவற்றில் ஒன்றாகும். மேலும் அதில் நான் பார்த்ததிலேயே பல வகையான நடனமும் இசையும் இடம்பெற்றிருந்தது" என்றார். டேவனண்டின் படைப்பு, அடுத்த நூற்றாண்டின் மத்தியப் பகுதி வரை மேடைகளை ஆக்கிரமித்திருந்தது. இதுவே ஜேம்ஸ் குயின் போன்ற பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரபலமான மக்பத்கள் பயன்படுத்திய படைப்பாகும். க்ரேட் மக்பத் என நினைவில் நின்ற சார்லஸ் மேக்லின், 1773 ஆம் ஆண்டு கோவண்ட் கார்டனில் நிகழ்த்தப்பட்ட நிகழ்ச்சிகளில் நடிப்புக்கு பிரபலமானவராவார். அந்த நிகழ்த்துதலின் போது கலகங்கள் வெடித்தன அந்தக் கலகங்கள் மேக்லினுக்கும் கேரிக் மற்றும் வில்லியம் ஸ்மித்துக்கும் இடையே ஏற்பட்ட போட்டிக்குத் தொடர்பாக உருவானவையாகும். மேக்லின் ஸ்காட்லாந்து உடையில் நடித்திருந்தார், ஆனால் அதற்கு முன்பு மக்பத்திற்கு இங்கிலிஷ் ப்ரிகேடியர் உடையே அணிவிக்கப்பட்டிருக்கும் மேக்லின் அதை மாற்றினார்; அவர் கேரிக்கின் இறப்பு வசனத்தை நீக்கினார், லேடி பம்க்டஃபின் பங்கை மேலும் குறைத்தார். நாடகத்திற்கு மதிப்பு மிக்க விமர்சனங்கள் கிடைத்தன. இருப்பினும், ஜியார்ஜ் ஸ்டீவன்சன் மாக்லின் (அப்போது எண்பது வயதுக்கு மேல் இருந்தார்) அந்தப் பாத்திரத்திற்கு சரியாகப் பொருந்தவில்லை என்பதைக் குறிப்பிட்டார். கேரிக்குப் பிறகு, பதினெட்டாம் நூற்றாண்டில் மிகவும் பிரபலமான மக்பத் ஜான் ஃபிலிப் கெம்பலாவார்; அவர் மிகவும் பிரபலமாக அந்தப் பாத்திரத்தில் தனது சகோதரி சாரா சிடான்ஸுடன் நடித்தார், அவரது லேடி மக்பத் பாத்திரம் மிகவும் சிறந்ததாக பரவலாகக் கருதப்பட்டதாகும். கெம்பல் தொடர்ந்து அதே யதார்த்த உடையணிவிப்பு மற்றும் மேக்லினின் படைப்புக் குறித்த ஷேக்ஸ்பியரின் மொழி ஆகியவற்றை நோக்கிய போக்கைப் பயன்படுத்தினார்; அவர் நாடகத்தின் ஸ்காட்லாந்து உடையைக் கொண்டு தொடர்ச்சியாக சோதனைகளைச் செய்துவந்தார் என வால்டர் ஸ்காட் கூறுகிறார். கெம்பலின் புரிதல் விளக்கத்திற்கான மறுமொழி பிரிந்திருந்தது; இருப்பினும் சிடான்ஸ் எதைப்பற்றியும் பொருட்படுத்தப்படாமல் பாராட்டப்பட்டார். ஐந்தாவது நாடகப் பகுதியில் இடம்பெறும் அவரது "தூக்கத்தில் நடக்கும்" காட்சியிலான நடிப்பு மிகவும் குறிப்பாகப் பேசப்பட்டது; லே ஹண்ட் அதை "மிக உயர்ந்தது" எனக் குறிப்பிட்டார். கெம்பல்-சிடான்ஸ் இருவரின் நடிப்பே முதலில் மிகவும் பரவலாக பிரபலமான படைப்புகளாகும், அதில் லேடி மக்பத்தின் வில்லத்தனம் மிகவும் ஆழமாகவும் மக்பத்தை விடவும் மிகவும் ஆற்றல் வாய்ந்ததாகவும் காண்பிக்கப்பட்டிருந்தது. பேங்க்வோவின் ஆவி மேடையில் தோன்றாதபடி அமைக்கப்பட்ட முதல் படைப்பும் அதுவே ஆகும். கெம்பலின் மக்பத் கதாப்பாத்திரம் சில விமர்சகர்களுக்கு, தேக்ஸ்பியரின் உரைக்குப் பொருத்தமற்ற வகையில் மிகவும் அதிக சிறந்த நடத்தையுடனும் நாகரிகமாகவும் அமைந்திருப்பதாகத் தோன்றியது. அவரின் வழிவந்த லண்டனின் முன்னணி நடிகர் எட்மன் கீன், உணர்ச்சிவயப்பட்ட பழக்கத்திற்காக அதிகம் விமர்சிக்கப்பட்டார், குறிப்பாக ஐந்தாவது நாடகப் பகுதியில். கீனின் மக்பத் நாடகம், உலகளவில் பாராட்டப்படவில்லை; எடுத்துக்காட்டுக்கு வில்லியம் ஹாஸ்லிட் கீனின் மக்பத் அவரது மூன்றாம் ரிச்சர்டைப் போலவே இருந்ததாகப் புகார் கூறினார். கீன் பிற பாத்திரங்களில் செய்ததைப் போலவே அவரது மக்பத்தின் மன வீழ்ச்சியின் முக்கியக் கூறாக அவரது ஆற்றல் மிக்க தன்மையைப் பயன்படுத்திக் கொண்டார். அவர் கெம்பலின் மக்பத் ஒரு நல்லவன் என வலியுறுத்தும் அழுத்தத்தை மாற்றி, அதற்கு மாறாக அவனை, குற்ற உணர்ச்சியாலும் பயத்தாலும் இடிந்து நொறுங்கிப்போகும் இரக்கமற்ற அரசியல்வாதியாகக் காண்பித்தார். இருப்பினும் கீன் காட்சியிலும் ஆடையிலும் இருந்த பகட்டின் போக்கை மாற்றவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டு அடுத்த மக்பத், பிரபலமான லண்டன் நடிகர் வில்லியம் சார்லஸ் மேக்ரெடி ஆவார். கீனின் விமர்சனத்தைப் போலவே பலதரப்பட்ட விமர்சனங்களைப் பெற்றார். மேக்ரெடி 1820 ஆம் ஆண்டு கோவட் கார்டனில் ஒரு பாத்திரத்தில் அறிமுகமானார். ஹாஸ்லிட் குறிப்பிட்டபடி, மேக்ரெடியின் கதாப்பாத்திரத்தின் அவதானிப்பு முழுக்க உளவியல் ரீதியானது; மந்திரவாதிகள் அவர்களது அபார சக்திகள் முழுவதையும் இழந்துவிடுகிறார்கள் மக்பத்தின் வீழ்ச்சியானது முழுக்க முழுக்க அவனது குணத்தில் இருந்த முரண்பாட்டினாலேயே விளைவதாகிறது. மேக்ரெடின் மிகவும் பிரபலமான லேடி மக்பத், ஹெலினா ஃபாசிட் (Helena Faucit) ஆவார், அவர் தனது 20 வயதுகளில் ஒரு பயங்கரமான பாத்திரத்தில் அறிமுகமானார், ஆனால் பின்னர் சிடான்ஸின் புரிதல் விளக்கத்தைப் போலில்லாத புரிதல் விளக்கத்திலான பாத்திரத்தில், சமகாலத்திய பெண்ணியல் நடத்தைகளின் நம்பிக்கைகளுடன் இணக்கமாக இருந்ததற்காக மிகவும் பாராட்டப்பட்டார். மேக்ரெடி அமெரிக்காவுக்கு மீண்டும் சென்ற பின்னர், அவர் அந்தப் பாத்திரத்தில் தொடர்ந்து நடித்தார்; 1849 ஆம் ஆண்டுஅமெரிக்க நடிகர் எட்வின் ஃபாரஸ்ட்டுடன் போட்டியில் ஈடுபட்டார், எட்வினின் ஆதரவாளர் ஒருவர் மேக்ரெடியினை நோக்கி அஸ்டர் ப்ளேஸில் சீறொலியை எழுப்பினார் இதனால் ஏற்பட்ட கலகமே அஸ்டர் ப்ளேஸ் கலகம் (Astor Place Riot) எனப்படுகிறது. இடைக்கால நுற்றாண்டின் இரண்டு மிகப் பிரபலமான மக்பத்துகள் சாம்வேல் ஃபெல்ப்ஸ் மற்றும் சார்லஸ் கீன் ஆகியோராவர். அவர்கள் இருவரும் பலதரப்பட்ட விமர்சனங்களையும் பிரபலமான வெற்றியையும் பெற்றனர். இருவருமே கதாப்பாத்திரத்தின் புரிதல் விளக்கத்தில், மேடை நடிப்பிலான பிற குறிப்பிட்ட அம்சங்களுக்காக பிரபலமானதை விடக் குறைவாகவே பிரபலமானார்கள். சேட்லர்'ஸ் வெல்ஸ் தியேட்டரில், ஃபெல்ப்ஸ் கிட்டத்தட்ட ஷேக்ஸ்பியரின் உண்மையான உரை முழுவதையும் பயன்படுத்தினார். அவர் வாயிற்காவலர் காட்சியின் முதல் பாதியை மீண்டும் பயன்படுத்தினார், அது டேவனாண்ட் காலத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டு வந்த காட்சியாகும்; இரண்டாம் பாதி அதன் நகைச்சுவைக்காக புறக்கணிக்கப்பட்டபடியே விடப்பட்டது. அவர் சேர்க்கப்பட்ட இசையை விட்டுவிட்டார், ஃபொலியோவில் இருந்த அளவுக்கு, மந்திரவாதிகளின் பாத்திரத்தைக் குறைத்தார். குறிப்பிடத்தக்க விதத்தில் மக்பத்தின் இறப்பைப் பொறுத்தவரை, அவர் ஃபோலியோ அம்சத்திற்கே திரும்பினார்.[30] இந்த முடிவுகளில் அனைத்துமே விக்டோரிய காலச் சூழலில் வெற்றிபெறவில்லை, மேலும் ஃபெல்ப்ஸ், 1844 ஆம் ஆண்டு முதல் 1861 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் தனது ஆறுக்கும் மேற்பட்ட படைப்புகளில், ஷேக்ஸ்பியர் மற்றும் டேவனாண்டின் பல்வேறு சேர்க்கைகளைப் பயன்படுத்தி சோதனை முயற்சிகளைச் செய்தார். அவரது மிகவும் வெற்றிகரமான லேடி மக்பத் இஸபெல்லா க்ளின் ஆவார். அவரது நடிப்புத் திறமை, சிடான்சுக்குக் கிடைத்த விமர்சனங்களை நினைவூட்டின. 1850 ஆம் ஆண்டுக்குப் பிறகு ப்ரின்சஸ் தியேட்டரிலான கீனின் நாடகங்களில் இருந்த மிகச் சிறந்த அம்சம் ஆடையமைப்புகளில் துல்லியத் தன்மையே ஆகும். கீன் நவீன நகைச்சுவை நாடகத்தில் அவரது பெரிய வெற்றியைப் பெற்றார் மேலும் அவர் எலிசபெத் தொடர்பான பாத்திரங்களுக்குப் போதிய அளவு பாதிக்கும் தன்மை கொண்டிருக்கவில்லை எனப் பரவலாகக் கருதப்பட்டது. இருப்பினும், ரசிகர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை; 1853 ஆம் ஆண்டில் ஒரு நாடகம் இருபது வாரங்கள் ஓடியது. முன் கணிப்பின்படி, இந்தப் பயன்பாட்டின் ஒரு பகுதியானது கீனின் வரலாற்று துல்லியத்தன்மைக்கு பிரசித்தி பெற்றதாகும். அவரது தயாரிப்புகளில், அல்லார்டைஸ் நைக்கல் குறிப்பிடுவது போல் "தாவரவியல் கூட வரலாற்றின் படி சரியாக உள்ளது". லண்டனில் உள்ள லைசியம் தியேட்டரில் 1875 ஆம் ஆண்டில் இந்தப் பாத்திரத்திலான ஹென்றி இர்விங்கின் முதல் முயற்சி தோல்வியடைந்தது. சிட்னி ஃப்ரன்சிஸ் பேட்மேன் தயாரிப்பில், கேட் ஜோசஃபின் பேட்மேனுடனான நடிப்பில், இர்விங் தனது மேலாளர் ஹெஸேகியா லிந்திகம் பேட்மேனின் மரணத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இந்தத் தயாரிப்பு எண்பது நிகழ்த்துதல்களை அடைந்தாலும், அவரது மக்பத் ஹேம்லெட்டுடன் ஒப்பிடுகையில் தாழ்வாகவே தீர்மானிக்கப்பட்டது. லெசியத்தில் எல்லன் டெர்ரிக்கு எதிரான அவரது அடுத்த கட்டுரை 1888 ஆம் ஆண்டில் சிறப்பாக வந்தது, 150 நிகழ்த்துதல்களைக் கொண்டிருந்தது.[31] ஹெர்மான் க்ளெயினின் உந்துதலால், இர்விங் ஆர்த்தர் சுல்லிவேனை அந்தப் படைப்புக்கான துணை இசையின் இசைக்கோர்வையை எழுதுமாறு செய்தார்.[32] ப்ராம் ஸ்டாக்கர் போன்ற நண்பர்கள் அவரது "உலவியல்" படிப்பை எதிர்த்தனர், அவர்கள் அதை நாடகம் தொடங்குவதற்கு முன்பாக மக்பத் டங்கனைக் கொல்வதாகக் கனவு காண்கிறான் என்ற கருத்தின் அடிப்படையில் எதிர்க்கின்றனர். அவனது எதிர்ப்பாளர்களில், ஹென்றி ஜேம்ஸ் உட்பட பலர் ஓரளவுள்ள முழுமையான வார்த்தை மாற்றங்களை (லேடி மக்பத்தின் மரணத்தின் போதான பேச்சில், "should have" க்கு பதிலாக "would have") எதிர்க்கின்றனர், மேலும் கதாப்பாத்திரத்தின் "நரம்புத்தளர்ச்சி உள்ள" மற்றும் "சிக்கலான தேவைமிக்க" அம்சங்களையும் எதிர்க்கின்றனர்.[33] இருபதாம் நூற்றாண்டு முதல் தற்போது வரை பேரி வின்செண்ட் ஜேக்சன் நவீன-ஆடை அணிவிப்பைக் கொண்ட செல்வாக்கு பெற்ற படைப்பை, பிர்மிங்காம் ரெப்பர்ச்சரியில் 1928 ஆம் ஆண்டு மேடையில் நிகழ்த்தினார்; அந்தப் படைப்பு லண்டன் வரை சென்று, லண்டன் ராயல் கோர்ட் தியேட்டரில் நிகழ்த்தப்பட்டது. அது பலதரப்பட்ட விமர்சனங்களைப் பெற்றது; எரிக் மேச்சுரின் மக்பத்துக்கு போதிய திறனற்றவராகத் தீர்மானிக்கப்பட்டார், மேரி மெர்ராலின் வேம்பிஷ் லேடி பிடித்ததாக விமர்சிக்கப்பட்டது. த டைம்ஸ் இதழ் அதை "துன்பமான தோல்வி" எனத் தீர்மானித்தாலும், சார்லஸ் கீன் படைப்பில் அதிகமாக இருந்த காட்சியியல் மற்றும் பழமைத் தனம் ஆகியவற்றின் போக்கை மாற்றியமைப்பதில் பெரும் பங்கு வகித்தது. இருபதாம் நூற்றாண்டில் அதிகமாக பிரபலமடைந்த படைப்புகளில், ஹார்லெமில் உள்ள லாஃபேயேட் தியேட்டரிலான ஃபெடரல் தியேட்டர் ப்ராஜக்ட்டின் நிகழ்த்துதல் முக்கியமாக இருந்தது, அது 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 முதல் ஜூன் 20 வரை நிகழ்த்தப்பட்டது. முதல் மேடைப் படைப்பில், ஆர்சன் வெல்ஸ் ஜேக் கார்ட்டர் மற்றும் எட்னா தாமஸ் ஆகியோரைக் கொண்டு இயக்கினார், அதன் அனைத்து ஆப்பிரிக்க அமெரிக்க தயாரிப்புகளிலும் கனடா லீ பேங்க்வோவின் பாத்திரத்தில் நடித்தார். வெல்ஸ் காலனீயத்திற்குப் பிந்தைய ஹய்ட்டியில் நாடகத்தை அமைத்ததால், வூடூ மக்பத் என அது பிரபலமானது. அவரது இயக்கம் பார்வையாளர்களையும் எதிர்பார்ப்பு நிலையியையும் வலியுறுத்தியது: அவரது பன்னிரண்டுவகையிலான ஆப்பிரிக்க ட்ரம்ஸ் ஒலிகள் டேவனாண்டின் மந்திரவாதிகளின் கூட்டுப்பாடலை நினைவூட்டியது. வெல்ஸ் பின்னர், அதன் திரைப்படத் தழுவலில் 1948 ஆம் ஆண்டு ஒரு பாத்திரத்தில் நடித்து இயக்கினார். லாரன்ஸ் ஆலிவர் ஓல்ட் விக் தியேட்டரில், 1929 ஆம் ஆண்டு படைப்பில் மால்கமாகவும் 1937 ஆம் ஆண்டு படைப்பில் மக்பத்தாகவும் நடித்தார், அந்த தயாரிப்பின் போது விக் தியேட்டரின் இயக்குநர் லில்லியன் பேலிஸ் அது திறக்கப்படும் முன்னாள் இரவே காலமானார். ஆலிவரின் ஒப்பனை மிகவும் தடிப்பாகவும் அந்தப் படைப்புக்காக மிகவும் ஒய்யாரமாகவும் அமைந்திருந்தது. அதை விவியென் லேய் "மக்பத் நாடகத்தின் முதல் வரியை நீங்கள் கேட்டால், முதலில் லாரியின் ஒப்பனை உங்கள் மனதில் வரும், பின்னர் பேங்க்வோ, பின்னரே லாரி வருவார்" என்று கூறினார்.[34] ஆலிவர் பின்னர் மிகவும் பிரபலமான இருபதாம் நூற்றாண்டு படைப்புகளில் ஒன்றான 1955 ஆம் ஆண்டு ஸ்ட்ராட்ஃபோர்டு-அப்பான்-ஆவனில் க்ளென் பியாம் ஷாவின் தயாரிப்பில் நடித்தார். விவியன் லேயி லேடி மக்பத்தாக நடித்தார். துணை நடிகரான ஹரால்ட் ஹாப்சன் கோபமற்ற நிலையில் காணப்படுகிறார், இதில் ஷேக்ஸ்பியரின் வெற்றிகரமான தொழில் வாழ்க்கையை நடத்திய பல நடிகர்கள் நடித்துள்ளனர்: டொனால்ட்பேயினாக அயன் ஹோல்ம், மக்டஃபாக கெயித் மைக்கெல் மற்றும் வாயிற்காவலனாக பேட்ரிக் வைமார்க் ஆகியோர் அடங்குவர். இந்த வெற்றிக்கு ஆலிவர் ஒரு முக்கியக் காரணமாவார். அவரது நடிப்பின் செறிவு, குறிப்பாக கொலைகாரர்களுடனான அவரது உரையாடல் மற்றும் பேங்க்வோவின் ஆவியை எதிர்கொள்வதிலும் எட்மண்ட் கீனை நினைவுபடுத்தும் வகையில் இருப்பதாக பல விமர்சகர்கள் கூறினர். ஆலிவரின் மூன்றாம் ரிச்சர்டின் வசூலிலான தோல்விக்குப் பிறகு வந்த திரைப்பட வடிவங்களுக்கான திட்டங்கள் பலவீனமாயின. இந்த நிகழ்த்துதலின் போதுதான், கென்னித் டைனன், ஆலிவர் வரை "மக்பத்தாக இது வரை எவரும் வெற்றிபெறவில்லை" என எளிதாகக் கூறினார். 1937 ஆம் ஆண்டு ஓல்ட் விக் தியேட்டரின் படைப்பில் ஆலிவரின் இணை நடிப்புடன், ஜுடித் ஆண்டர்சன் நாடகத்தில் சமமான வெற்றியைப் பெற்றார். அவர், மார்கரட் வெப்ஸ்டரின் இயக்கத்திலான தயாரிப்பில் உருவான, 1941 ஆம் ஆண்டு 131 முறை நிகழ்த்தப்பட்ட நாடகமான ப்ராட்வே தியேட்டரில் மாரிஸ் எவான்சுடன் லேடி மக்பத் வேடத்தில் நடித்தார். அதுவே ப்ராட்வே வரலாற்றில் நீண்டகாலம் நிகழ்த்தப்பட்ட நாடகமாகும். ஆண்டர்சன் மற்றும் எவான்ஸ் ஆகியோர் தொலைக்காட்சிக்கான இதன் பதிப்பில் இரு முறை நடித்தனர், 1954 ஆம் ஆண்டு ஒரு முறையும் 1962 ஆம் ஆண்டு மற்றொரு முறையும். அதில் மாரிஸ் 1962 ஆம் ஆண்டுத் தயாரிப்புக்கான எம்மி விருதைப் பெற்றார், ஆண்டர்சன் இரு தயாரிப்புகளுக்காகவும் விருதைப் பெற்றார். 1971 ஆம் ஆண்டில் த ட்ரேஜடி ஆஃப் மக்பத் என்னும் திரைப்படத் தழுவல், ஹக் ஹெஃப்னரால் தயாரிக்கப்பட்டது. த்ரோன் ஆஃப் ப்ளட் (குமோனோசு ஜோ) (1957) என்ற ஜப்பானிய திரைப்படத் தழுவலில், டோஷிரோ மிஃபியூன் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். மேலும் இக்கதை ஃப்யூடலிச ஜப்பானில் நடப்பதாக அமைக்கப்பட்டிருந்தது. அது நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் கிட்டத்தட்ட நாடகத்தின் திரைக்கதை எதுவுமே இல்லாமலே விமர்சகர் ஹரோல் ப்ளூம் அதை "மக்பத் தின் மிகச் சிறந்த வெற்றிகரமான திரைப்பட வடிவம்" எனக் கூறினார்.[35] ராயல் ஷேக்ஸ்பியர் கம்பெனிக்கான ட்ரெவார் நன் இயக்கிய படைப்பு மிகவும் பிரபலமான இருபதாம் நூற்றாண்டு தயாரிப்புகளில் ஒன்றாகும். அது 1976 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. நன் இந்த நாடகத்தில் நைக்கல் வில்லியம்சன் மற்றும் ஹெலென் மிர்ரென் ஆகியோரை இரண்டு ஆண்டுகள் முன்னதாகவே இயக்கினார், ஆனால் அந்தப் படைப்பு பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. 1976 ஆம் ஆண்டில், நன் த அதர் ப்ளேசில் குறைந்தபட்ச செட்டுடன் நாடகத்தை உருவாக்கினார்; கதாப்பாத்திரங்களின் உளவியல் செயல்களைக் கவனிக்கும் வகையில் இந்த சிறிய கிட்டத்தட்ட வட்ட மேடையில் நாடகத்தை அமைத்தார். தலைப்புப் பாத்திரத்தில் அயன் மெக்கெல்லன் மற்றும் லேடி மக்பத்தாக ஜூடி டென்ச் ஆகியோர் நடித்தது நல்ல வரவேற்பைப் பெற்றது. டென்ச், அவரது நடிப்புக்காக 1977 ஆம் ஆண்டு SWET சிறந்த நடிகைக்கான விருதை வென்றார், மேலும் 2004 ஆம் ஆண்டில் RSC உறுப்பினர்கள் அந்த நிறுவனத்தின் வரலாற்றிலேயே சிறந்த நடிப்பை வழங்கியவர் என வாக்களித்தனர். நன்னின் தயாரிப்பு 1977 ஆம் ஆண்டில் லண்டனுக்கு மாற்றப்பட்டது மேலும் பின்னர் தொலைக்காட்சிக்காக படமாக்கப்பட்டது. அது, ஆல்பர்ட் ஃபின்னே மக்பத்தாகவும் டோராத்தி டுட்டின் லேடி மக்பத்தாகவும் நடித்த, 1978 ஆம் ஆண்டு வெளியான பீட்டர் ஹாலின் தயாரிப்பின் மிகைப்படுத்தலாகவே இருந்தது. ஆனால் பிரபலமே அடையாத சமீபத்திய மக்பத், ஓல்ட் விக்கில் 1980 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்டது. (ப்ரையன் ஃபோர்ப்ஸின்) அந்தத் தயாரிப்பில் பீட்டர் ஓ'டூல் மற்றும் ஃப்ரான்சிஸ் டோமெல்டி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களை ஏற்றிருந்தனர். அது முதல் இரவுக் காட்சிக்கு முன்பு அரங்கத்தின் டிமோதி வெஸ்ட் என்னும் கலை இயக்குநரால் வெளிப்படையாக உரிமை கைவிடப்பட்டதாகும், விற்பனையில் சாதிக்கும் என்ற நிலையிலும் குறைவான பிரபலத் தன்மை இருந்ததே அதற்குக் காரணமாகும். விமர்சகர் ஜேக் டிங்கர் டெய்லி மெயிலில் குறிப்பிட்டது போல: "தயாரிப்பானது கதாநாயகத் தனமான நகைச்சுவையைப் போல முழுக்க முழுக்க மோசமாக இல்லை"[36] ஷேக்ஸ்பியரின் படைப்புகளில், மேடையில் மிகவும் "ஆதிக்கம் செலுத்தும் மற்றும் சவாலாக அமையும்" பாத்திரங்களில் லேடி மக்பத் ஒன்றாகக் கருதப்படுகிறது.[37] அந்தக் கதாப்பாத்திரத்தில் வெற்றிகரமாக விளங்கிய பிற நடிகைகளில், க்வென் ஃப்ரேங்கான்-டேவிஸ், க்ளெண்டா ஜேக்சன் மற்றும் ஜேன் லெப்போட்டேர் ஆகியோர் அடங்குவர். ஒரு முறை நாடகம் முரேயில் உள்ள மக்பத்தின் உண்மையான வீட்டில் நடத்தப்பட்டது அதை நேஷனல் தியேட்டர் ஆஃப் ஸ்க்லாட்லாந்து தயாரித்தது அது எல்கின் கதீட்ரலில் நிகழ்த்தப்படுவதாக இருந்தது. தொழில்முறை நடிகர்கள், நடனக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், பள்ளி சிறுவர்கள் மற்றும் ஒரு மூரேயின் ஒரு சமூகத்தினர் ஆகிய அனைவரும் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சி, ஹைலேண்ட் இயர் ஆஃப் கல்ச்சரில் (2007) ஒரு முக்கியமான நிகழ்வாக இருந்தது. அதே ஆண்டில், பேட்ரிக் ஸ்டீவர்ட் மற்றும் கேட் ஃப்ளிட்வுட் ஆகியோர் நடித்த 2007 ஆம் ஆண்டு சிச்செஸ்டர் விழாவுக்கான ருப்பர்ட் கூல்டின் தயாரிப்பானது, 1976 ஆம் ஆண்டு RSC தயாரிப்பில் நன்னின் இயக்கத்திலான தயாரிப்புக்கு போட்டியிடும் விதத்தில் அமைந்திருந்தது என்பதில் விமர்சகர்களிடையே ஒரு பொதுவான ஒப்புதல் உருவானது. அது லண்டனில் உள்ள கெயில்கட் தியேட்டருக்கு மாற்றப்பட்ட போது, டெய்லி டெலிக்ராஃபில் (Daily Telegraph) விமர்சனங்களை எழுதிவந்த சார்லஸ் ஸ்பென்சர், அவர் கண்டதிலேயே மிகச் சிறந்த மக்பத் தயாரிப்பு அதுவாகும் என எழுதினார்.[38] ஈவினிங் ஸ்டாண்டர்டு தியேட்டர் அவார்ட்ஸ் 2007 ஆம் ஆண்டு நிகழ்ச்சியில், அந்தத் தயாரிப்பு, ஸ்டீவர்ட்டுக்கு சிறந்த நடிகருக்கான விருதையும் கூல்டுக்கு சிறந்த இயக்குநருக்கான விருதையும் பெற்றுத்தந்தது.[39] அதே தயாரிப்பு அமெரிக்காவின் ப்ரூக்லின் அகாடமி ஆஃப் மியூசிக்கில் 2008 ஆம் ஆண்டில் இடம்பெற்றது, அது விற்பனையான ஓட்டத்திற்குப் பின்னர் ப்ராட்வேக்குச் சென்றது. 2003 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் தியேட்டர் கம்பெனி, மேடையிடுவதற்கு "ஸ்லீப் நோ மோர் " நாடகத்தை பன்ச்ட்ரங் லண்டனில் உள்ள த பியூஃபாய் பில்டிங்கைப் பயன்படுத்தியது அது பழைய விக்டோரிய பள்ளியாகும். அதில் ஹிட்ச்காக் த்ரில்லர் பாணியிலான மக்பத்தின் கதையாகும், அதில் பழைய ஹிட்ச்காக் திரைப்படங்களிலிருந்து எடுக்கப்பட்ட சவுண்ட் ட்ராக்குகளை இசைக்காகப் பயன்படுத்தப்பட்டது.[40] பன்ச்ட்ரங் படைப்பு தயாரிப்பை மீண்டும் நடத்தியது அது புதிய விரிவாக்கப்பட்ட பதிப்பாக உருவாக்கியது. அது மாசுச்சூயிஸ்ட்சில் உள்ள ப்ரூக்லினில் இருந்த கைவிடப்பட்ட பள்ளியில் அக்டோபர் 2009 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அது அமெரிக்கன் ரிப்பேர்ச்சரி தியேட்டருடன் இணைந்து உருவாக்கப்பட்டது.[41] 2004 ஆம் ஆண்டில் இந்திய இயக்குநர் விஷால் பரத்வாஜ் மக்பத்தின் திரைப்படத் தழுவலான மக்பூல் என்னும் திரைப்படத்தை உருவாக்கினார். தற்காலத்தில் மும்பை நிழலுகத்தில் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருந்தது. அதில் இர்ஃபான் கான், தபு, பங்கஜ் கப்பூர், ஓம் பூரி, நசிருதீன் ஷா மற்றும் பியுஷ் மிஷ்ரா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். அந்தத் திரைப்படம் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றதோடு விஷால் பரத்வாஜ் மற்றும் இர்ஃபான் கான் இருவரையும் பிரபலமாக்கியது. 2006 ஆம் ஆண்டில் ஹார்ப்பர் காலின்ஸ் மக்பத் அண்ட் சன் என்னும் புத்தகத்தை ஆஸ்திரேலிய ஆசிரியர் ஜாக்கி ஃப்ரென்ச் மூலம் வெளியிட்டார். 2008 ஆம் ஆண்டில் பெகாசஸ் புக்ஸ் நிறுவனம், அமெரிக்க ஆசிரியரான நாடக ஆசிரியரான நோவா லூக்மேன் மூலம் த ட்ரேஜடி ஆஃப் மக்பத் பார்ட் II: த சீட் ஆஃப் பேங்க்வோ, என்னும் நாடகத்தை வெளியிட்டது. அது உண்மையான மக்பத்தை விலகிய போது ஆதிக்கம் செலுத்தவும் அதன் பல இடைவெளிகளை நிரப்பவும் முயற்சித்தது. குறிப்புதவிகள் Unknown parameter |coauthors= ignored (|author= suggested) (help) குறிப்புகள் புற இணைப்புகள் நாடக நிகழ்ச்சிகள் - டிசைனின் ஷேஸ்க்பியரின் ஆதாரத்திலிருந்து ஆடியோ பதிவு ejunto.com இல் நாடகத்தின் உரை மக்பத் நேவிகேட்டர் – தேடக்கூடிய, விளக்கக் குறிப்புகளுடன் கூடிய மக்பத்தின் HTML பதிப்பு. - அடிப்படை HTML இல் முழு நாடகம். - மக்பத்தின் HTML பதிப்பு. : மக்பத் - ப்ராஜக்ட் கூட்டன்பர்க்கிலிருந்து ASCII எளிய உரை - மக்பத்தின் ஒவ்வொரு நாடகப் பகுதி - ஸ்பார்க்நோட்ஸ் - மூல உரை மற்றும் நவீன மொழிபெயர்ப்பு பக்கவாரியாக – மக்பத் தின் தேடக்கூடிய மற்றும் காட்சி எண்ணிடப்பட்ட பதிப்பு கருத்துரை - ஆய்வு வழிகாட்டி, கருப்பொருள்கள், மேற்கோள்கள், ஆசிரியர்களின் வழிகாட்டி வெப் இங்கிலிஷ் டீச்சரில் பயன்பாடு - ஸ்டீவன் க்ரீன்ப்ளாட் - உரை-அடிப்படையிலான விளையாட்டுடன் கூடிய மக்பத்தின் முழு உரை - முழு நாடகம், எவரும் கருத்துரை சேர்க்கக்கூடிய வசதியுடன் கூடியது பகுப்பு:ஷேக்ஸ்பியரின் படைப்புகள்
மக்பெத் நாடகம் எந்த ஆண்டு எழுதப்பட்டது?
1603 மற்றும் 1607
231
tamil
76fc189e8
பனை (Palmyra Palm), புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு (borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன. பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 – 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும். பனை தமிழ் நாட்டின் மாநில மரமாகும் பெயரிடல் பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு. தமிழில் உள்ள மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் புல், மரம் என்பவற்றுக்கு இடையேயான வேறுபாட்டைப் பின்வருமாறு வரையறை செய்கிறது. புறக் காழனவே புல்லெனப் படுமே (பாடல் 630) அகக் காழனவே மரமெனப் படுமே (பாடல் 631) பலவகையான பயன்களை நெடுங்காலத்துக்குத் தருவதால் பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர். பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவை 1. ஆண் பனை, 2. பெண் பனை, 3. கூந்தப்பனை, 4. தாளிப்பனை, 5. குமுதிப்பனை, 6.சாற்றுப்பனை, 7. ஈச்சம்பனை, 8. ஈழப்பனை, 9. சீமைப்பனை, 10. ஆதம்பனை, 11. திப்பிலிப்பனை, 12. உடலற்பனை, 13. கிச்சிலிப்பனை, 14. குடைப்பனை, 15. இளம்பனை 16. கூறைப்பனை, 17. இடுக்குப்பனை, 18. தாதம்பனை, 19. காந்தம்பனை, 20. பாக்குப்பனை, 21. ஈரம்பனை, 22. சீனப்பனை, 23. குண்டுப்பனை, 24. அலாம்பனை, 25. கொண்டைப்பனை, 26. ஏரிலைப்பனை, 27. ஏசறுப்பனை, 28. காட்டுப்பனை, 29. கதலிப்பனை, 30. வலியப்பனை, 31. வாதப்பனை, 32. அலகுப்பனை, 33. நிலப்பனை, 34. சனம்பனை சிற்றினங்கள் போரசசு (பனை) என்னும் பேரினத்தில் வரும் சிற்றினங்கள் போராசசு அத்தியோபம் - ஆப்பிரிக்கப் பனை மரம் (Borassus aethiopum) போ. அகேசி - மேற்கு ஆப்பிரிக்கப் பனை (Borassus akeassii – Ake Assi`s Palmyra Palm (West Africa) ) போ. ஃப்ளாபெல்லிபர் - ஆசியப் பனை (Borassus flabellifer – Asian Palmyra Palm (southern Asia and southeast Asia) ) போ. என்னியனசு - நியூ கினி பனை (Borassus heineanus – New Guinea Palmyra Palm (New Guinea) ) போ. மடகாசுகரியன்சிசு - மடகாசுகர் பனை (Borassus madagascariensis – Madagascar Palmyra Palm (Madagascar) ) போ. சாம்பிரானென்சிசு - சாம்பிரானோ பனை (மடகாசுகர்)(Borassus sambiranensis – Sambirano Palmyra Palm (Madagascar) ) காணப்படும் இடங்கள் இது ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டது எனக் கூறப்படுகிறது. ஆப்பிரிக்காவிலிருந்து மனித இனம் எங்கெங்கு இடம்பெயர்ந்ததோ அவ்விடங்களில் எல்லாம் ஆதி மனிதர்கள் பனை விதைகளை தங்களுடன் எடுத்துச் சென்றனர் எனச் சொல்லப்படுகிறது. ஏனென்றால், பனை மரங்கள் மக்கள் வாழும் பகுதிகளின் அருகிலேயே பெரும்பாலும் இருக்கிறது. இது பெரும்பாலும் அடர் காடுகளில் காண இயலாததற்கு காரணமாக இது கூறப்படுகிறது.[1] இது ஆசிய நாடுகளில்தான் பனைகள் அதிகம் காணப்படுகின்றன. தற்காலத்தில் ஆசியாவில் இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனீசியா, மியன்மார், தாய்லாந்து, வியட்நாம், சீனா போன்ற நாடுகளிலும், கொங்கோ போன்ற மேற்கு ஆபிரிக்க நாடுகளிலும் காணப்படுகின்றன. கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமம் (Kadhi and Village Industry Commission) எடுத்த கணக்கெடுக்கின்படி 10.2 கோடி பனை மரங்கள் இந்தியாவில் உள்ளன. தமிழ் நாட்டில் மட்டும் 5 கோடி பனை மரங்கள் உள்ளன.[2] இவற்றுள் 50 விழுக்காடு மரங்கள் நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் அடர்த்தியாக உள்ளன. சேலம்,நாமக்கல்,சென்னை, செங்கற்பட்டு, சிவகங்கை மாவட்டங்களில் அதிகமான அளவு நிறைந்துள்ளன. பிற மாவட்டங்களில் உள்ள மரங்களின் எண்ணிக்கை 30 லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளன. பனையின் பயன்கள் பனைமரம் உணவு மற்றும் உணவிலிப் பொருள்களை நல்குகிறது. உணவுப் பொருள்களில் பதநீர் முதன்மையானது. இதுவே கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் எனப் பல்வேறு உணவுப் பொருள்களாக வடிவம் பெறுகிறது. பனந்தும்பு, தூரிகைகள், கழிகள், பனையோலைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், மரம், மரப் பொருள்கள் ஆகியன பனையிலிருந்து பெறப்படும் உணவிலிப் பொருள்களாகும். கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமக் கணக்கின்படி ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வளவாய்ப்புடையது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், செர்மன், இத்தாலி, பெல்சியம், பிரான்சு, ஆசுதிரேலியா, சப்பான் போன்ற நாடுகளுக்கு பனைப் பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. உள் நாட்டிலே உணவிலிப் பனைப் பொருள்கள் பெரிதும் கோவா, கன்னியாகுமரி, பெல்லாரி ஆகிய இடங்களுக்கு விற்பனைக்கென அனுப்பி வைக்கப்படுகின்றன. இவற்றுள் கோவா முன்னணியில் இருக்கிறது. விவசாயம், கைத்தறிக்கு அடுத்தபடியாக பேரளவு வேலை வாய்ப்பினைக்கொண்டதாக பனைத்தொழில் விளங்குகிறது. 1985 – 86ஆம் ஆண்டில் தேசிய அளவில் 6.94 லட்சம் வேலை வாய்ப்பினையும் தமிழ் நாட்டு அளவில் 5.87 லட்சம் வேலை வாய்ப்பினையும் பனைத் தொழில் வழங்கி இருக்கிறது. இதில் பனைத் தொழிலாளர்கள் வெல்லம் காய்ச்சும் பெண்கள், தும்புக் கைவினைஞர்கள், வியாபாரிகள் ஆகியோர் அடங்குவர். இளம் மரங்கள் நீங்கலாக பனையேறத் தகுந்த எல்லா மரங்களையும் பயன்படுத்தினால் தமிழகத்தில் மட்டும் மேலும் 10 லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பினை இத்தொழில் வழங்கும். பனையின் இன்னல்கள் பனங்கருக்கு பனங்கருக்குகள், பனைமரமேறிகளுக்கு மிகுந்த ஊறு விளைவிப்பவையாகும். கூர்மையான அந்த முட்கள் போன்ற அமைவுகள், அவ்வேழை பனைமரமேறிகளுக்கு இன்னல் தருகிறது. பனங்கை பனங்கை அல்லது பனை வரிச்சல் என்பது பனை மரத்தை நீளவாக்கில் அறுத்தால் வரும் நீளமான மரக்கட்டை ஆகும். இது கட்டிடக் கூரைகளில் பயன்படுத்தப்படுகிறது. பனையேற்றம் பனையேறுதல் என்பது பருவகாலத் தொழில். ஏப்ரல் முதல் ஆகத்து மாதம் வரை இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களிலும் ஆகத்து முதல் மார்ச்சு மாதம் வரை கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை சேலம், தருமபுரி மாவட்டங்களிலும் பனையேற்றம் நிகழும். இது ஒரு பருவ காலத் தொழிலாக இருப்பதால் இம்மாவட்டங்களில் வேலை தேடி இடம்பெயருதல் பெருமளவு நிகழ்கிறது. பனையேற்றம் என்பது மரமேறுதல், பூ பக்குவம் அறிதல், சாறு சேகரித்தல் எனப் பல்வேறு திறன்களை உள்ளடக்கிய தொழில் ஆகும். மரமேற நெஞ்சப் பட்டை, இடை வார், தளை ஆகியன பயன்படுத்தப்படுகின்றன. இத்தொழில் புரியும்போது மரத்தின் சொரசொரப்பான பகுதியில் உடல் உராயும்பொழுது சிராய்ப்பு ஏற்பட்டு உடல் பொலிவிழக்கிறது. மரம் ஏறுதலின் இடரையும் துன்பத்தையும் களைய இயந்திரச் சாதனங்கள் எதுவுமில்லை. ஒரு மரம் சராசரி 36 முதல் 42 மீட்டர் வரை உயரமுடையது. எனவே ஒரு நாளைக்கு இரு முறை 30 முதல் 40 மரங்கள் ஏறுதல் என்பது பெரும் இடர் மிகுந்தது ஆகும். எனவே மிகுந்த அனுபவசாலிகளே பனைமரமேறுவர். தளைநாரைக் காலில் கட்டி பனைமரம் ஏறுவர். பனைத்தொழிலாளர் நிலை 80 விழுக்காட்டிற்கும் அதிகமான பனைத் தொழிலாளர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ்தான் வாழ்கிறார்கள். ஒரு பனைத் தொழிலாளர் நாள்தோறும் 10 முதல் 15 மணி நேரம் வரை மேற்கொள்ளும் வேலைக்கு 15 ரூபாய்கள் வரை சம்பாதிக்கிறார். எனவே ஒரு பனைத் தொழிலாளரின் குடும்ப வருமானமானது அவர் எத்தனை பனை மரங்கள் ஏறுகிறார் என்பதனையும் அவர் குடும்பத்தில் எத்தனை உழைப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதனையும் பொருத்தே அமைகிறது. பெரும்பான்மையான பனைத் தொழிலாளர்களுக்கு சொந்த மரங்களில்லை. தமிழகத்தில் உள்ள பனையேறும் குடும்பங்களில் 67.85% குடும்பங்களுக்கு சொந்த மரங்கள் கிடையாது என ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் நீங்கலாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நிலக்கிழார்கள் பனை மரங்களை குத்தகைக்கு எடுத்து பதநீர் இறக்கக் குறைந்த கூலிக்கு ஆள்களை நியமித்துக்கொள்கிறார்கள். பனஞ்சாறு உடலுக்கு நலம் தரும் நீரகம். இதில் கொழுப்பு, புரதம், கனிமங்கள், உயிர்சத்துகள், இரும்பு, எரியம், சுண்ணாம்பு, கரிநீரகி ஆகியன உள்ளன. இது சத்துள்ளது. எளிதில் செரிக்கக் கூடியது. இது எலும்புருக்கி நோயைக் குணப்படுத்தும் தன்மையுடையது என்றும் ஈரல் நோய்க்கு ஏற்ற மருந்தென்றும் கருதப்படுகிறது. 25% குறையாத பதனீர் நேரடியாகவே நுகரப்படுகிறது. மீதம் உள்ளவை வெல்லம் தயாரிக்கப் பயன்படுகின்றன. உற்பத்தி செய்யப்பட்ட வெல்லத்தின் பெரும்பகுதி உள்ளூரிலேயே விற்கப்படுகிறது. அவசரப் பணத்தேவை, சந்தைவிலையை அறியாமை, சந்தைக்குக் கொண்டு செல்ல நேரமின்மை ஆகியவற்றின் காரணமாக இடைத்தரகர்களின் சுரண்டலுக்கு ஆளாகின்றனர். பனைத்தொழில் உணவிலிப் பனைப்பொருள்களை உற்பத்தி செய்தல், சந்தையிடல் ஆகியவற்றிலும் கூடச் சிக்கல்கள் உள்ளன. போதிய முதலீடின்மை, தொழிலாளர் எண்ணிக்கைக் குறைவு ஆகியன பெரும் சிக்கல்கள் எனக் கூறப்படுகின்றன. மிகக் குறைந்த வருமானத்தையே நல்கும்நிலையில் பனைத்தொழில் இருப்பதால் தொழிலாளர்களை பெருமளவில் ஈர்க்க முடியாமல் இத்தொழில் மெல்ல மெல்ல நலிந்து கொண்டிருக்கிறது. எவ்வாறாயினும் பனைத்தொழில் பெருமளவு வேலைவாய்ப்பும்; உணவு மற்றும் உணவிலிப் பனைப் பொருள்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தேவை இருத்தல் வெள்ளிடை மலை. பனங்கற்கண்டு போன்ற மதிப்புடை உணவுப் பொருள்களை உற்பத்தி செய்தல் மூலம் முன்னைய சிக்கல்களை வினைவலிமையோடு எதிர்கொள்ள முடியும் என்பதை மார்த்தாண்டத்திலுள்ள பனைத் தொழிலாளர் மேம்பாட்டுச் சங்கம் கண்டது. பதநீரைக் கொண்டு வெல்லம் காய்ச்சுவதைக் காட்டிலும் பனங்கற்கண்டு தயாரித்தல் இலாபமுடையது என்று கண்டறியப்பட்டது. இவ்வுற்பத்தியால் பனைத்தொழிலாளர் வாழ்வும் தொழிற்றுறையின் வளர்ச்சியும் மேம்படுவது ஐயத்திற்கு இடமின்றி நிரூபனமானது. உணவிலிப் பனைப்பொருள்களை உற்பத்தி செய்யும் அலகுகளை தோற்றுவிக்கும் பணியில் கூட்டுறவுத்துறையும் தன்னார்வத் தொண்டகங்களும் தனியார்களும் ஈடுபட்டுள்ளனர். வடிவமைத்தல் பயிற்சி, உற்பத்திப் பொருள்களை பரவலாக்கல், சரியான முதலீடு, சந்தையிடல் வசதிகள் ஆகியன உணவிலிப் பொருள்களின் உற்பத்தியையும் சந்தையிடலையும் அதிகப்படுத்தியுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள பனைத் தொழிலாளர்களுக்கு பனைத் தொழில் கொண்டுள்ள வளவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு தந்து அவர்கள் வாழ்க்கையை சீர்படுத்துவதில் பனைத் தொழிலாளர் மேம்பாட்டுச் சங்கம் முன்னோடியாகத் திகழ்கிறது. காட்சியகம் ஆசிய பனைக்கூடு பனைமரத் தண்டு மேற்கு வங்காளம் ஆசியப்பனை, கொல்கத்தா. ஆப்பிரிக்கப் பனை ஆப்பிரிக்கப் பனம்பழம் ஆப்பிரிக்கப் பனை விதை பனங்கள், ஆந்திரா. கிளைப்பனை, வல்லிபுரம், இலங்கை பனங்கிழங்கு மேற்கோள்கள் இவற்றையும் பார்க்கவும் பனையிலிருந்து பெறப்படும் பயன்கள் ஆசியப் பனை வெளி இணைப்புகள் பகுப்பு:பனை
ஆசிய பனை எந்த குடும்பத்தை சேர்ந்த தாவரம்?
Palmyra Palm
5
tamil
701861590
இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி. இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் ஜனவரி 19 1966 இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980 ல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984 இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார். இவர் ஒரு சிறந்த அரசியல் திட்டமிடலாளரும், சிந்தனையாளரும் ஆவார். அரசியல் அதிகாரத்துக்கான அசாதாரண பற்றை அவர் கொண்டிருந்தார். ஆணாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இந்திய சமுதாயத்தில், ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் தன்மைகளுக்கு மாறாக வலுவான அதிகார பலத்துடன் மிகவுயர்ந்த பதவியிலிருந்து நாட்டை வழி நடத்தினார். ஒரு பிரதம மந்திரியாக, அவருக்குக் கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் பயன்படுத்தி தனது பலத்தையும் அதிகாரத்தையும் வலுப்படுத்திக் கொண்டார். அவருக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, வலு குறைந்த அமைச்சரவைகளை அமைத்துக் கொண்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். இந்திய தேசிய காங்கிரசிலிருந்த பலம் மிக்க முதிர்ந்த தலைவர்களை ஓரங்கட்டினார். இதன் ஒரு அங்கமாக 1969 இல் குடியரசுத் தலைவர் நியமனத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து ஆளும் கட்சியாக இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுபட்டது. இந்திரா காங்கிரஸ் என்று அழைக்கப்பட்ட, இவருடைய தலைமையில் அமைந்த பிரிவு மிகுந்த பலத்துடன் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தது. 1971 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அச்சமயத்தில், மேற்கு, கிழக்குப் பாகிஸ்தான்களுக்கு இடையில் ஏற்பட்ட பிணக்கில், கிழக்குப் பாகிஸ்தானின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாகப் பாகிஸ்தானுடன் போரைத் தொடங்கி, கிழக்குப் பாகிஸ்தானுக்குள் படைகளை அனுப்பினார். இந்த வெற்றிகரமான நடவடிக்கையினால் கிழக்குப் பாகிஸ்தான், பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்காளதேசம் என்ற தனி நாடாகியது. 1975 இல் அவசர நிலையை அறிவித்த இந்திரா காந்தி, அரசியல் சட்டத்தின் 352 ஆவது விதியை பயன்படுத்தி தனக்கான அதிகாரங்களை அதிகப்படுத்திக் கொண்டதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயற்சித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டார். 19 மாதங்கள் நீடித்த இந்த நெருக்கடி நிலைமை இந்திரா காந்தியின் செல்வாக்கை பெருமளவு பாதித்தது. எனினும் தனது செல்வாக்கை பிழையாக மதிப்பீடு செய்த இவர், தேர்தலை நடத்திப் பெருந் தோல்வியைத் தழுவினார். இவரது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைந்தார். இவருக்கு வாரிசாக வளர்க்கப்படுவதாகச் சொல்லப்பட்ட இவரது இரண்டாவது மகனான சஞ்சய் காந்தியும் தோல்வியைத் தழுவினார். எனினும் இவரது கட்சிக்கு மாற்றாகப் பதவியில் அமர்ந்த பல கட்சிக் கூட்டணி, உட்பூசல்கள் காரணமாக அதன் முழுப் பதவிக்காலத்தையும் நிறைவு செய்ய முடியாமல் மூன்று ஆண்டுகளில் கவிழ்ந்தது. இவ்வாறு எதிர்க்கட்சிகளின் இயலாத்தன்மை வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டதனால், அடுத்து நடைபெற்ற தேர்தலில் இந்திராவையே மக்கள் மீண்டும் தெரிவு செய்தனர். இந்திரா தனது முன்னைய தவறுகளிலிருந்து பாடம் படித்துக்கொண்டார். அவருடைய இரண்டாவது ஆட்சிக்காலம் மிதமான அதிகாரத்துவம் கொண்டதாகவே அமைந்தது. எனினும் இவரது இந்த ஆட்சிக்காலம் சுமுகமானதாக அமையவில்லை. இக்காலத்தில் இவருக்கு வாரிசாக வரக்கூடியவரென எதிர்பார்க்கப்பட்ட சஞ்சய் காந்தி தானே செலுத்திய விமானத்தில் விழுந்து நொறுங்கியதில் காலமானார். சீக்கியத் தீவிரவாதம் வளர்ந்துவந்தது. சமய மற்றும் தீவிரவாதத் தலைவராக இருந்த ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேயின் அதிகரித்து வந்த செல்வாக்கு இந்திய ஒருமைப்பாட்டுக்குச் சவாலாக அமையுமென இந்தியத் தலைவர்கள் அஞ்சினார்கள். இந்திரா படையை அனுப்பித் தீவிரவாதிகளை ஒடுக்க எண்ணினார். சீக்கியர்களின் புனிதக் கோயிலான பொற் கோயிலுக்குள் ஆயுதங்களுடன் ஒளிந்திருப்பதாகக் கருதப்பட்ட தீவிரவாதிகளையும், அவர்களின் தலைவரையும் பிடிக்க இராணுவம் பொற்கோயிலுக்குள் புக அனுமதி வழங்கினார். தொடர்ந்து இடம்பெற்ற படை நடவடிக்கைகள் இந்திராவை சீக்கியர்களின் கோபத்துக்கு ஆளாக்கியது. இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 31, 1984 இல் சீக்கியர்களான, அவரது சொந்தப் பாதுகாவலர் இருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இளமை இந்திரா பிரியதர்சினி 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் காசுமீரி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்த ஜவஹர்லால் நேருவிற்கும், கமலா நேருவுக்கும் ஒரே குழந்தையாக பிறந்தார். இந்திராவின் தாத்தா மோதிலால் நேரு இந்தியாவின் உத்திரபிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் ஒரு செல்வவளம் மிக்க வழக்கறிஞர் ஆவார். காந்திக்கு முந்தைய காலத்தில் இந்திய தேசிய காங்கிரசில் மோதிலால் நேரு மிக முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். இந்திராவின் தந்தை ஜவஹர்லால் நேரு நன்கு படித்தவரும், இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவருமாவார். இந்திய சுதந்திர போராட்டத்தின் ஒரு புகழ்பெற்ற தலைவரும் ஆவார். இந்திரா பிறந்ததிருந்த காலத்தில், காந்தியின் தலைமையில் இந்திய சுதந்திர போராட்டத்தில் நேரு நுழைந்தார். நோயாளியும், நேரு வீட்டுப்பொருட்களில் இருந்து விலகி இருந்த தமது தாய் கமலா நேருவின் முழு கவனிப்பில் வளர்ந்த இந்திரா, வலுவான பாதுகாப்பு உள்ளுணர்வையும், ஒரு தனிப்பட்ட பண்பையும் வளர்த்துக் கொண்டார். இவரின் தாத்தாவும், தந்தையும் தொடர்ச்சியாக தேசிய அரசியலில் சிக்கிக் கொண்டிருந்ததால், அதுவும் இவரின் உன்னிப்பான பிரச்சனைகளுடன் ஒன்றி கலந்தது. விஜயலட்சுமி பண்டிட் உட்பட, தந்தையின் சகோதரிகளுடன் இவர் முரண்பாடுகளைக் கொண்டிருந்தார். இது அரசியல் உலகிலும் தொடர்ந்தது. நேருவின் சுயவரலாற்று நூலில், விடுதலையை நோக்கி என்ற பகுதியில், தாம் சிறையில் இருந்த போது காவலர்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்ததாகவும், தன் மீது அரசாங்கம் விதித்திருந்த அபராதங்களுக்காக சில நாற்காலிகளை எடுத்துச் சென்றதாக அவர் எழுதுகிறார். "இந்த தொடர்ச்சியான நாசப்படுத்தும் செயல்முறைகள், என் நான்கு வயது மகளான இந்திராவை மிகவும் பாதித்தது. மேலும் அவள் காவலரை எதிர்த்தாள், அத்துடன் அவளின் வலுவான எதிர்ப்பையும் தெரிவித்தாள். அந்த ஆரம்பகட்ட உணர்வுகள் பொதுவாக காவல் படை குறித்த அவளின் எதிர்கால கண்ணோட்டத்தை மாற்றியமைக்கக் கூடும் என்று நான் அஞ்சினேன்." என்று குறிப்பிட்டுள்ளார். இந்திரா இளம் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக வானரசேனா என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இவ்வானரசேனா அமைப்பு போராட்டங்கள் மற்றும் கொடி அணிவகுப்புகள் ஆகியன நடத்தியதன் மூலமாகவும், காங்கிரஸ் அரசியல்வாதிகளின் உணர்வுப்பூர்வமான வெளியீடுகளை மற்றும் தடைவிதிக்கப்பட்டவைகளை வினியோகித்ததன் மூலமாகவும் இந்திய சுதந்திர போராட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சிறு பங்கை வகித்தது. ஐரோப்பாவில் கல்வி 1936இல், இந்திராவின் அன்னை கமலா நேரு, ஒரு நீண்ட போராட்டத்திற்கு பின்னர் இறுதியாக காசநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அந்த சமயத்தில் இந்திராவிற்கு 18 வயது. இந்திரா தனது இளமைப்பருவத்தில் ஒருபோதும் ஒரு நிலையான குடும்ப வாழ்க்கையை அனுபவிக்கவில்லை. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், சோமெர்வெல்லி கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது, அதாவது 1930களின் பிற்பகுதியில், இலண்டனை மையமாக கொண்ட தீவிர சுதந்திரத்திற்கு ஆதரவான இந்திய குழுவின் உறுப்பினரானார்.[1] 1940களின் தொடக்கத்தில், தீராத நுரையீரல் நோயிலிருந்து மீண்டு வர இந்திரா சுவிட்சர்லாந்தில் வீட்டு ஓய்வில் நேரத்தை செலவிட்டார். அவரின் குழந்தைப்பருவத்திலிருந்தே தனது தந்தையுடன் கடிதம் மூலம் கொண்டிருந்த உறவைப் போலவே, தற்போதும் தந்தையுடன் நீண்ட கடிதங்கள் மூலம் அவரின் தொலைதூர உறவையும் தக்க வைத்துக்கொண்டிருந்தார். அவர்கள் அரசியல் குறித்தும் கடிதங்கள் மூலம் விவாதித்தார்கள். [2] ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் அவர் வாழ்ந்த ஆண்டுகளில், அரசியலில் செயல்பட்டு வந்த பெரோஸ் காந்தி என்ற ஒரு பார்சி இளைஞரை சந்தித்தார்.[3] பெரோஸ் காந்தியுடன் திருமணம் இந்திரா மற்றும் பெரோஸ் காந்தி இந்தியாவிற்கு திரும்பிய போது, அவர்கள் காதலர்களாக இருந்தார்கள். மருத்துவர்களின் ஆலோசனைகளுக்கு இடையில், திருமணம் செய்து கொள்ளவும் தீர்மானித்தார்கள்.[4] பெரோசின் திறந்த மனப்பான்மை, நகைச்சுவை உணர்வு மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை இந்திராவிற்கு பிடித்திருந்தது. இவ்வளவு விரைவாக அவர் மகள் திருமணம் செய்து கொள்வதை நேரு விரும்பவில்லை. மேலும் அவர்களின் காதல் உறவை பிரிக்க மகாத்மா காந்தியின் உதவியையும் நாடினார். காதலில் இருந்த இந்திரா மிகவும் பிடிவாதமாக இருந்தார். 1942 மார்ச்சில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.[5] பெரோசும் , இந்திராவும் இருவருமே இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர்களாக இருந்தனர். 1942ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் அவர்கள் பங்கெடுத்த போது, இருவருமே கைது செய்யப்பட்டார்கள்.[6] சுதந்திரத்திற்கு பின்னர், தேர்தலில் களம் இறங்கிய பெரோஸ் , உத்திர பிரதேசத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜீவ் காந்தி மற்றும் சஞ்சய் காந்தி ஆகிய இரண்டு மகன்கள் பிறந்த பின்னர், ஏதோ சில கருத்து வேறுபாடுகளால் 1958 வரை அந்த தம்பதியினர் பிரிந்து வாழ்ந்தார்கள். பெரோஸ் மாரடைப்பால் பாதிக்கப்பட்டபோது, அவர்களின் உடைந்த திருமண வாழ்வு மீண்டுமிணைந்தது. ஆனால் 1960 செப்டம்பரில் பெரோஸ் மரணமடைந்தார். அரசியல் ஈடுபாடு இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் 1959 மற்றும் 1960ன் போது, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்காக நின்ற இந்திரா காந்தி அதில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் பதவிகாலம் குறிப்பிடத்தக்கதாக அமையவில்லை. தந்தையின் பிரதிநிதியாக நடிக்க வேண்டி இருந்தது. இந்திரா 1960இல் நடைபெற்ற தேர்தலில் ஓர் இடத்திற்கும் போட்டியிடவில்லை. தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் 1964 மே 27இல் நேரு மரணமடைந்தார், புதிய பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரியின் வலியுறுத்தலின் பேரில் இந்திய தேர்தல்களில் போட்டியிட்டு, உடனடியாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதன் மூலம் இந்திய அமைச்சரவையிலும் பங்கெடுத்தார்.[7] இந்தி மொழி பேசாத மாநிலமான தமிழ்நாட்டில் இந்தி தேசிய மொழியாக ஆக்கப்பட்டதன் காரணமாக எழுந்த போராட்டங்கள் கார்ணமாக இந்திரா மெட்ராஸ் விரைந்தார். அங்கு அரசாங்க அதிகாரிகளுடன் பேசிய அவர், சமுதாய தலைவர்களின் கோபத்தை மட்டுப்படுத்தியதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளின் மறுகட்டுமான முயற்சிகளையும் பார்வையிட்டார். தாங்கள் காட்டத் தவறிய இதுபோன்ற முனைவால், லால்பகதூர் சாஸ்திரியும், பிற மூத்த அமைச்சர்களும் வியப்படைந்தார்கள். அமைச்சர் இந்திரா காந்தியின் நடவடிக்கைகள் சாஸ்திரியைக் குறிவைத்தோ அல்லது அவரின் சொந்த அரசியல் முன்னேற்றங்களையோ நோக்கமாக கொண்டிருக்கவில்லை. அறிவிக்கப்பட்ட வகையில் அவர் அவரின் அமைச்சக செயல்பாடுகளில் ஒவ்வொரு நாளும் ஆர்வமில்லாமல் இருந்தார், ஆனால் ஊடக ஆர்வலராகவும், அரசியல் மற்றும் தனிச்சிறப்பை உருவாக்குவதிலும் அவர் தனித்திறன் பெற்றிருந்தார். "திருமதி. இந்திராகாந்திக்கும் அவரின் போட்டியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்ச்சியான போராட்டங்களின் போது, பல மாநிலங்களில் இருந்த மத்திய காங்கிரஸ் [கட்சி] தலைமைகள் மற்றும் மாநில காங்கிரஸ் [கட்சி] அமைப்புகளில் இருந்த மேல் சாதித் தலைவர்களை மாற்றி பிற்பட்ட சாதியினரை அவர்களுக்கு மாற்றாக இருத்தவும், இதன் மூலம் மாநில காங்கிரஸிலும், எதிர்கட்சியிலும் இருந்த போட்டியாளர்களைத் தோற்கடிக்கவும், பிந்தைய சாதியினரின் ஓட்டுக்களை ஒருங்கிணைக்கவும் முனைந்தது. இந்த தலையீடுகளால் ஏற்பட்ட விளைவுகள், (இவற்றில் சில வெறுமனே சமூக முன்னேற்றமாகவும் உணரப்பட்டது), பொதுவாக இன பிராந்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகளைத் தீவிரப்படுத்தியது...."[8] இந்தியா-பாகிஸ்தான் போர் 1965ல் இந்திய-பாக்கிஸ்தான் போர் நடந்து கொண்டிருந்த போது, இந்திரா காந்தி ஸ்ரீநகர் பிராந்திய எல்லைகளில் ஓய்வெடுத்து கொண்டிருந்தார். பாகிஸ்தான் போராளிகள் நகரத்திற்கு மிக நெருக்கமாக ஊடுறுவி இருந்ததாக இராணுவத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்த போதிலும், அவர் ஜம்முவிற்கோ அல்லது டெல்லிக்கோச் செல்ல மறுத்துவிட்டார். மாறாக, உள்ளூர் அரசாங்கத்தை கூட்டியதுடன், ஊடக கவனத்தையும் ஈர்த்தார். பாகிஸ்தானின் தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது, 1966 ஜனவரியில் தாஸ்கண்ட் என்ற இடத்தில் உருசியாவின் முன்னிலையில், தலைமை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி பாகிஸ்தானின் அயூப் கானுடன் ஓர் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். இதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு பின்னர், சாஸ்திரி மாரடைப்பால் காலமானார்.[9] பின்னர், மொரார்ஜி தேசாயின் எதிர்ப்பு இருந்த போதினும், இந்திரா காந்தியை தலைமை அமைச்சராக ஆக்குவதில் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் கே. காமராஜ் ஒரு கருவியாக இருந்தார். மொரார்ஜி தேசாய் பின்னர் காங்கிரஸ் பாராளுமன்ற கட்சி உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டார், இதில் இந்திரா காந்தி 355 க்கு 169 வாக்குகள் பெற்று மொரார்ஜி தேசாயியைத் தோற்கடித்து இந்தியாவின் ஐந்தாவது தலைமை அமைச்சராகவும் அப்பதவியைப் பெறும் முதல் பெண்மணியாகவும் ஆனார். தலைமை அமைச்சர் முதல் பதவிகாலம் 1966ல் இந்திரா காந்தி தலைமை அமைச்சரான போது, காந்தியின் தலைமையிலான பொதுவுடைமைவாதிகள் மற்றும் மொரார்ஜி தேசாய் தலைமையிலான பழமைவாதிகள் என காங்கிரஸ் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்திருந்தது. ராம் மனோகர் லோகியா 'செவிட்டு பொம்மை' என்ற அர்த்தத்தில் குங்கி குடியா என்று இந்திராவை அழைத்தார்.[10] இந்த உட்பூசல்கள் 1967 தேர்தல்களில் எதிரொளித்தது, இத்தேர்தலில் காங்கிரஸ் 545மக்களவை இடங்களில் 297 இடங்களை வென்று 60 இடங்களுக்கு மிகக் குறைந்த வாக்கு வேறுபாட்டில் தோல்வியடைந்தது. இந்திரா மொரார்ஜி தேசாயை இந்தியாவின் துணை பிரதம மந்திரியாகவும், நிதி மந்திரியாகவும் நியமிக்க வேண்டிதாயிற்று. 1969இல், தேசாயுடனான அவரின் பல ஒத்துழையாமைக்குப் பின், இந்திய தேசிய காங்கிரஸ் உடைந்தது. அதற்கடுத்த இரண்டு ஆண்டுகள் அவர் பொதுவுடைமைவாதிகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவில் ஆட்சி புரிந்தார். அதே ஆண்டில், 1969 ஜூலையில் அவர் வங்கிகளை தேசியமயமாக்கினார். 1971ல் பாகிஸ்தானுடனான யுத்தம் பாகிஸ்தான் இராணுவம் கிழக்கு பாகிஸ்தானின் உள்நாட்டு மக்களுக்கு எதிராக பரந்தளவிலான அட்டூழியங்களை நடத்தியது.[11][12] கணக்கிடப்பட்ட வகையில் 10 மில்லியன் அகதிகள் இந்தியாவிற்கு வந்தனர், இதனால் நாட்டில் நிதி தட்டுப்பாடும், உறுதியற்ற நிலையும் ஏற்பட்டது. அகதிகள் பிரச்சனையைத் தீர்க்க, கிழக்கு பாகிஸ்தானியர்கள் அவர்களின் சுதந்திரத்தை அடைய உதவும் வகையில், இந்திரா காந்தி பாகிஸ்தான் மீது போர் அறிவி்த்தார். ரிச்சர்ட் நிக்சன் தலைமையிலான அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவளித்ததுடன் போர் தொடுத்ததற்காக இந்தியாவை எச்சரி்க்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அவையில் தீர்மானமும் நிறைவேற்றியது. நிக்சன் தனிப்பட்ட வகையில் இந்திராவை வெறுத்தார். நிக்சன் அவரின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஹென்றி கிஸ்சென்கருடனான இரகசிய உரையாடலில் (தற்போது அரசுத்துறையால் இது வெளியிடப்பட்டுள்ளது) இந்திராவை "சூனியக்காரி" என்றும் "தந்திர நரி" என்றும் குறிப்பிட்டிருந்தார். [13]. இந்திரா நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். இது ஐக்கிய நாடுகள் அவையில் அரசியல் ஆதரவு மற்றும் ஒரு சோவியத் வீட்டோ அதிகாரம் கிடைக்க வழி வகுத்தது. 1971 பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்றது, பங்களாதேஷ் உருவானது. வெளிநாட்டு கொள்கை இந்திரா பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதி சுல்பிகார் அலி பூட்டோவை ஒரு வாரகால மாநாட்டிற்கு சிம்லாவிற்கு வர அழைப்பு விடுத்தார். பேச்சு வார்த்தைகளின் பல-தோல்விகளுக்குப் பின்னர், இரண்டு நாட்டு தலைவர்களும் இறுதியில் சிம்லா உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். இது இரு நாடுகளும் காஷ்மீர் பிரச்சனையை பேச்சுவார்த்தைகள் மற்றும் அமைதி வழியில் தீர்ப்பதில் உடன்பட்டிருந்தது. நிக்சனின் மீதான அவரின் வெறுப்பால், அமெரிக்காவுடனான இந்திராவின் உறவுகள் விலகியிருந்தது. அதே வேளையில் சோவியத் ஒன்றியத்துடனான உறவுகள் நெருக்கமாக வளர்ந்தன. இந்தியா பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை ஒரு நிரந்தர எல்லையாக உருவாக்காததற்காக இந்திராகாந்தி சிலரால் விமர்சிக்கப்பட்டார், சில விமர்சகர்கள், பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலான காஷ்மீர் பாகிஸ்தானிலிருந்து பிரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூட கூறினார்கள். இப்பகுதியின் 93,000 போர்க்கைதிகள் இந்திய கட்டுப்பாட்டின்கீழ் இருந்தனர். ஆனால் இந்த உடன்படிக்கை உடனடியாக ஐக்கிய நாடுகள் அவை மற்றும் மூன்றாம் நாடுகளின் குறுக்கீடுகளை நீக்கியது, அத்துடன் பாகிஸ்தான் உடனடியாக எதிர்காலத்தில் ஒரு பெரிய தாக்குதலைத் தொடுப்பதற்கான விருப்பத்தையும் பெருமளவில் குறைத்தது. ஒரு முக்கிய பிரச்சனையில் பூட்டோ முழுமையாக சரணடைய வேண்டும் என்று கோராமல், பாகிஸ்தான் உறுதிபெறவும், சராசரி நிலையடையவும் இந்திரா அனுமதித்தார்.பல தொடர்புகள் ஆண்டுகளாக உறைந்து (மூடப்பட்டு) போயிருந்தாலும் கூட, வர்த்தக உறவுகளும் சராசரி நிலைக்குக் கொண்டு வரப்பட்டன. ரூபாய் மறுமதிப்பீடு 1960களின் இறுதிப்பகுதியில், வணிகத்தை அதிகரிக்க இந்திராவின் நிர்வாகம் இந்திய ரூபாய் மதிப்பில் அமெரிக்க டாலரின் அடிப்படையில் 4லிருந்து 7க்கு 40% மறுமதிப்பீடு செய்ய ஆணையிட்டது. அணு ஆயுதங்கள் திட்டம் சீனாவின் மக்கள் குடியரசிடம் இருந்து வந்த அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு பிரதிபலிப்பாகவும், அணுசக்தி அதிகாரங்களிடமிருந்து இந்தியாவின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பு நலன்களைச் சுதந்திரமாக வைத்திருக்கவும் 1967ல் ஒரு தேசிய அணுசக்தி திட்டம் தொடங்கப்பட்டது. 1974ல், மறைமுகமாக "சிரிக்கும் புத்தர்" என்ற இரகசிய சொல்லுடன், ராஜஸ்தானில் பொக்ரான் என்ற இடத்தில் இந்தியா வெற்றிகரமாக ஒரு நிலத்தடி அணுச்சோதனை நடத்தியது. இந்த சோதனை அமைதி நோக்கம் கொண்டது தான் என்ற அறிவிப்புடன், இந்தியா உலகின் இளம் அணுசக்தி அதிகாரமாக உருவானது. பசுமை புரட்சி 1960களில் இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு விவசாய கண்டுபிடிப்பு திட்டங்கள் மற்றும் கூடுதல் அரசு உதவியானது, இந்தியாவின் கடுமையான நிலவி வந்த உணவுப் பற்றாக்குறையை நீக்கியது. கோதுமை, அரிசி, பருத்தி மற்றும் பால் ஆகியவற்றின் கூடுதல் உற்பத்திக்கு வழிகோலியது. நிக்சன் தலைமையிலான அமெரிக்காவிடம் இருந்து உணவுப்பொருள் மானியத்தைப் பெறுவதற்கு பதிலாக, இந்தியா ஒரு உணவு ஏற்றுமதியாளராக மாறியது. அதன் வணிகமுறையிலான பயிர் உற்பத்தியுடன் கூடிய இந்த சாதனை "பசுமை புரட்சி" என்று கூறப்பட்டது. அதே வேளையில், குறிப்பாக இளம் குழந்தைக்களுக்கு இருந்த ஊட்டச்சத்துக் குறைபாட்டை, எதிர்த்து போராட உதவும் வகையில், பால் மற்றும் முட்டை உற்பத்தியில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றங்கள் வெண்மை புரட்சி எனப்பட்டது. 'உணவு பாதுகாப்பு' என்று அழைக்கப்பட்ட திட்டம், 1975 வரையிலான ஆண்டுகளில் இந்திரா காந்திக்கு உதவியாக இருந்தது.[14] 1960களின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட, மாவட்ட வேளாண் விரிவாக்க திட்டத்திற்கு அளிக்கப்பட்ட பெயர் தான் பசுமை புரட்சி. இது ஏராளமான, விலைமதிப்பற்ற தானியங்களை நகர்புறவாசிகளுக்கு உறுதியளித்தது. இவர்களின் ஆதரவை காந்தி உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளுமே மிகவும் நாடியிருந்தார்.[15] இந்த திட்டம் நான்கு முன்னுரையைக் கொண்டிருந்தது: புதிய வகை விதைகள், இந்திய வேளாண்மையில் இரசாயனமாக்கலின் தேவையை ஏற்றுக்கொள்வது, அதாவது உரங்கள், பூச்சிகொல்லிகள், களை கொல்லிகள் மற்றும் இதர பிற புதிய மற்றும் மேம்பட்ட தற்போதிருக்கும் விதை வகைகளை விரிவு செய்ய தேசிய மற்றும் சர்வதேசிய கூட்டுறவிற்கு பொருப்பு உயர்கல்வி கல்லூரிகளில் விஞ்ஞான, வேளாண் பயிலகங்களை விரிவு செய்வதற்கான திட்டம்.[16] சுமார் பத்து ஆண்டுகளை நிலைத்திருந்த பின்னர், இறுதியாக கோதுமை உற்பத்தியை சுமார் மும்மடங்காக்கவும், ஒரு குறைந்தளவிலான ஆனால் குறிப்பிடத்தக்க அரிசி உற்பத்தி உயர்வையும் இந்த திட்டம் கொண்டு வந்தது. தினை, கிராம்பு மற்றும் பருவெட்டான தானியங்கள் போன்ற தானியங்களின் விளைச்சலில் சிறிதும் உயர்வு ஏற்படவில்லை. உண்மையில், இவை அறிவிக்கப்பட்ட வகையில் நிலையான விளைச்சலைத் தக்க வைத்திருந்தன. 1971 தேர்தல் வெற்றியும், இரண்டாவது பதவி காலமும் (1971–1975) 1971ஆம் ஆண்டு பொது தேர்தலில் சிறப்பான வெற்றிக்குப் பின்னர் இந்திராவின் அரசாங்கம் முக்கிய பிரச்சனைகளை சந்தித்தது. காங்கிரஸ் கட்சியின் உள் கட்டமைப்பு அதன் எண்ணிலடங்கா பிளவுகளைத் தொடர்ந்து, கட்சி இந்திராவின் முழுமையான கட்டுப்பாட்டில் வந்தது. கரீபி ஹட்டாவோ (வறுமையை விரட்டு) என்பது தான் இந்திரா காந்தியின் 1971ஆம் ஆண்டு கருத்துருவாக இருந்தது. இந்த பிரச்சாரமும், அதனுடன் சேர்த்து முன்வைக்கப்பட்ட வறுமை ஒழிப்பு திட்டங்களும், கிராமப்புற மற்றும் நகர்புற ஏழைகளின் அடிப்படையில், இந்திராவுக்கு ஒரு சுதந்திரமான தேசிய ஆதரவைப் பெற்றுத் தந்தது. இதனால் மாநிலத்திலும், உள்நாட்டு அரசாங்கத்திலும் இரண்டிலும் செல்வாக்கு பெற்றிருந்த கிராமப்புற சாதிகளும், நகர்புற பெருமக்களும் அரசியலில் செல்வாக்கு பெறுவதைத் தவிர்க்கும்படி செய்தது. மேலும், முன்னர் குரல்கொடுக்க முடியாத ஏழைகள் இறுதியில் அரசியல் செல்வாக்கிலும், அரசியல் வலுவிலும் அவர்களின் பங்கிற்கு ஆதாயம் பெற்றார்கள். உள்ளூரில் மட்டும் செயல்படுத்தப்பட்ட போதினும், வறுமையை விரட்டு எனும் கொள்கை மூலம் உருவாக்கப்பட்ட திட்டங்கள் புது டெல்லியாலும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியாலும் நிதி உதவி வழங்கப்பட்டு, விரிவு செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டன, அதற்கென ஊழியர்களும் நியமிக்கப்பட்டார்கள். "புதிய மற்றும் பரந்த ஆதரவு வளங்களை... நாடு முழுவதும் செலவிட்டு இத்திட்டத்தை வெற்றிபெறச் செய்யவேண்டுமென்ற முனைப்பை இந்த திட்டங்கள் அளித்தது."[17]. வறுமையை ஒழிப்பதில் கரீபி ஹட்டாவோ திட்டத்தின் தோல்வியை கல்வி ஆய்வாளர்களும், வரலாற்றாளர்களும் தற்போது ஒத்து கொள்கிறார்கள். அதாவது பொருளாதார முன்னேற்றத்திற்காக மொத்த நிதியில் சுமார் 4 சதவீதம் ஒதுக்கப்பட்டு மூன்று வறுமை ஒழிப்பு தி்ட்டங்களுக்கு அளி்க்கப்பட்டது. இதில் சிறிதளவு கூட மதிப்புமிக்க அளவில் ஒருபோதும் 'ஏழைகளிலும் ஏழைகளுக்கு' சென்று சேரவில்லை. மாறாக, இந்த திட்டத்தின் வெறும் கூச்சல்கள், இந்திரா காந்தியின் மறு-தேர்வுக்கு மக்களின் ஆதரவைத் திரட்டப் பயன்படுத்தப்பட்டது. ஊழல் குற்றச்சாட்டுகளும், தேர்தல் முறைகேடு பற்றிய தீ்ர்ப்பும் 1971 ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ராஜ் நரேன் என்பவர் இந்திரா மீது தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கொன்றைத் பதிவு செய்தார். ராஜ் நரேன், இந்திராகாந்திக்கு இணையாக, சுதந்திரத்திற்கு பிந்தைய இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்தினார். இவருக்கு எதிராக இந்திரா எப்போதும் போராடி வந்தார். அரசாங்க வளங்களைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய பல பெரிய மற்றும் சிறிய சம்பவங்களை குறித்து குற்றஞ்சாட்டி இருந்தார்.[18] 1971 பாராளுமன்ற தேர்தலில் எதிர்தரப்பாளரை இந்திரா காந்தி தோற்கடித்திருந்தார். வழக்கின் போது தம் வாதத்திற்கு ஆதாரங்கள் அளித்த இந்திராகாந்தி, நேர்மையற்ற தேர்தல் நடவடிக்கைகள், அதிகபடியான தேர்தல் செலவுகள் மற்றும் அரசு இயந்திரங்கள் மற்றும் அதிகாரிகளை கட்சி நலனுக்கு பயன்படுத்தியது ஆகியவற்றிற்காக குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டார். அவருக்கு எதிராக பெரும் ஊழல் குற்றங்களை நீதிபதி நிராகரித்தார். ராஜ் நரேனால் கொண்டு வரப்பட்ட இவ்வழக்கில் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் அந்த தீர்ப்பு வழங்கப்பட்ட்டது. 1975 ஜூன் 12ல், முறைகேடுகளின் அடித்தளத்தில் மக்களவைக்கான தேர்தலில் இந்திராகாந்தியின் தேர்வு அமைந்திருப்பதாக அலஹாபாத் உயர்நீதிமன்றம் அறிவி்த்தது. நீதிபதி சின்கா அந்த தீர்ப்பை வழங்கி இருந்தார். (1971ல் ராஜ் நரேனுக்கு எதிராக இந்திரா தேர்தல் முறைகேடுகள் செய்தார் என்று தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர், 1977 பாராளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் இந்திராவை தோற்கடித்தார்) , இதனால் பாராளுமன்றப் பதவியில் இருந்து இந்திரா நீக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் தடை விதித்தது. தலைமை அமைச்சரானவர் மக்களவையில் (இந்திய பாராளுமன்றத்தில் கீழ்சபை) அல்லது மாநிலங்களவையில் (பாராளுமன்றத்தின் மேல்சபை) ஓர் உறுப்பினராக இருக்க வேண்டும். இவ்வாறு, இந்த முடிவு அவரை பதவியில் இருந்து இறக்கியது. ஆனால் பதவித் துறப்பு செய்வதற்கான வலியுறுத்தல்களை நிராகரித்த இந்திராகாந்தி, உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான திட்டங்களை அறிவித்தார். நீதிமன்றத்தின் உத்தரவால் பாராளுமன்றத்தின் கீழ்சபையான மக்களவையில் இருந்து நீ்க்கப்படவிருந்த போதிலும், இந்த தீர்ப்பு தமது பதவிக்கு குழிபறிக்காது என்று இந்திரா குறிப்பிட்டார். அவர் கூறுகையில், "எங்களின் அரசாங்கம் சுத்தமாக இல்லை என்று நிறைய பேச்சுக்கள் இருக்கின்றன, ஆனால் எங்களின் அனுபவத்தில் {எதிர்} கட்சிகள் அரசாங்கங்கள் உருவாக்கினால் நிலைமை மேலும் படு மோசமாக இருக்கும்" என்றார். அனைத்து கட்சிகளும் பயன்படுத்திய அதே முறையைத் தான் தேர்தல் பிரச்சார நிதிக்காக அவரின் காங்கிரஸ் கட்சியும் பின்பற்றியது என்று கூறி அவர் விமர்சனங்களை நிராகரித்தார். இந்திரா கட்சியின் ஆதரவைத் தக்க வைத்திருந்தார், அது அவருக்கு ஆதரவாக ஓர் அறிக்கை வெளியிட்டது. தீர்ப்பு குறித்த செய்திகள் பரவியவுடன், அவரின் வீட்டின் முன் ஒன்று திரண்ட நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் தங்களின் பற்றுறுதியை வலியுறுத்தினார்கள். இந்திராகாந்தியின் தீர்ப்பு அவரின் அரசியல் வாழ்க்கையைப் பாதிக்காது என்று இந்திய உயர்மட்ட ஆணையாளர் பி.கே. நேரு தெரிவித்தார். "திருமதி. இந்திராகாந்தி நாட்டில் இன்னமும் தொடர்ந்து ஆதரவை பெற்றிருக்கிறார்," என்று அவர் தெரிவித்தார். "இந்திய வாக்காளர்கள் முடிவெடுத்தாலொழிய இந்திய பிரதம மந்திரி அவர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என்று நான் நம்புகிறேன்" என்றார். போராட்டங்களும், உள்நாட்டுக் கலகங்களும் இந்திரா அவரின் முடிவை அறிவித்த போதும், "அவர் தமது கடைசி மூச்சு"[19] உள்ளவரை மக்களுக்கான சேவையைத் தொடர இருப்பதாக அறிவித்த போதும், எதிர்கட்சிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் அந்த சூழ்நிலைகளில் இருந்து அரசியல் மூலதனத்தைப் பெற விருப்பம் கொண்டார்கள், அவர்கள் அவரின் இராஜினாமாவை வலியுறுத்தி பெருந்திரளான பேரணியை நடத்தினார்கள். பல மாநிலங்களி்ல் சங்கங்கள் மற்றும் எதிர்ப்பாளர்களின் வேலைநிறுத்தங்கள் வாழ்க்கையையே நிலைதடுமாற வைத்தது. இந்த போராட்டத்தை வலுப்படுத்த, ஆய்தமற்ற பொதுமக்களின் கூட்டங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த கேட்டுக் கொள்ளப்பட்டால், அந்த உத்திரவுகளுக்கு கீழ்படிய வேண்டாம் என்று ஜெய பிரகாஷ் நாராயண் காவலரைக் கேட்டுக் கொண்டார். இந்திராவின் அரசாங்கத்திடமிருந்து தெளிந்திருந்த பொதுமக்களின் மயக்கமும், மோசமான பொருளாதாரக் காலமும் ஒன்றிணைந்தன. அவரின் ராஜினாமாவை வலியுறுத்தி டெல்லியில் அவரின் வீட்டின் முன்பாகவும், பாராளுமன்ற கட்டிடத்தைச் சுற்றியும் பெருமளவிலான எதிர்ப்பாளர்களின் கூட்டங்கள் சுற்றி வளைத்தன. இந்திரா ஏற்கனவே அதிகாரத்துவத்திற்காகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். அவரின் வலுவான பாராளுமன்ற பெரும்பான்மையைப் பயன்படுத்தி, அவரின் ஆளும் காங்கிரஸ் கட்சி அரசியல் அமைப்பில் திருத்தம் கொண்டு வந்திருந்தது. அது மத்திய அரசுக்கு ஆதரவாக மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே அதிகாரப்பகிர்வை மாற்றியது. எதிர்கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்கள் சட்ட "ஒழுங்கின்றியும், காட்டுமிராண்டித்தனமாக" இருப்பதாகவும் கூறி அரசியல் அமைப்பின் 356வது பிரிவின்கீழ் அவர் இரண்டு முறை ஜனநாதிபதி ஆட்சியைக் கொண்டு வந்து கட்டுப்பாட்டை பறித்தார். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளும், நிர்வாக சேவையாளர்களும் இந்திராவின் மிக நெருங்கிய அரசியல் ஆலோசகராக இருந்த சஞ்சய் காந்தியின் அதிகரித்து வந்த செல்வாக்கி்ல் சீற்றம் கொண்டார்கள். இந்திரா பதவி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர், இந்திராவின் ஆலோசகராக இருந்த பி. என். அக்சருக்கு மாற்றாக சஞ்சய்காந்தி நியமிக்கப்பட்டிருந்தார். அதிகாரப் பதவியைப் பயன்படுத்துவதற்கான அவரின் புதிய போக்குக்கிற்கான எதிரொலியாக பொதுமக்கள் தலைவர்களும், ஜெய பிரகாஷ் நாராயண், சத்யேந்திர நாத் சின்ஹா மற்றும் ஆச்சார்ய கிருபாளனி போன்ற முன்னாள் சுதந்திர போராட்ட வீரர்கள் இந்திராவுக்கும், அவரின் அரசாங்கத்திற்கும் எதிராகப் பேசிக் கொண்டு நாடு முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டனர். நாட்டின் அவசரகால நிலை (1975–1977) தேர்தல் முறைகேடு குறித்து அவர் மீதான தீர்ப்புக்கு எதிராக இந்திரா ஒரு மேல்முறையீடு செய்தார். மேலும் ஜனநாயகத்திற்கு இடையூறு செய்வதற்கான திட்டம் இருப்பதாக கூறி, அவர் முரண்பாடாக அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்தினார். சுமார் 20 மத்திய மந்திரிகள் உட்பட, ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்திய ஊடகம் தணிக்கை செய்யப்பட்டது. 1975 ஆகஸ்ட் மாதம், எதிர்கட்சியினரை ஆயுதந்தாங்கிய வலுமையுடன் பாராளுமன்றத்திற்கு வெளியே கொண்டு சென்றதுடன், பலரை கைது செய்த நிலையில், அவரின் ஊழல் குற்றங்களில் இருந்து விடுவிக்க மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. எதிர்ப்புப் போராட்டங்களில் பங்குபெற்ற பெரும்பாலான எதிர்கட்சியினரை கைது செய்ய உத்தரவிட்டதன் மூலம் இந்திராகாந்தி ஆணையைத் தக்க வைக்கும் முயற்சியி்ல் இருந்தார். பின்னர் அலஹாபாத் உயர்நீதி மன்ற முடிவைத் தொடர்ந்து ஏற்பட்ட ஒழுங்கின்மை மற்றும் சட்டமுறையின்மையால் குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது, நாட்டில் அவசரகால நிலையை அறிவிக்க வேண்டும் என்று இந்திராவின் அமைச்சரவையும், அரசாங்கமும் கேட்டுக் கொண்டது. அதன்படி, 1975 ஜூன் 26ல் அரசியல் அமைப்பு 352 பிரிவின் அடிப்படையில் உள்நாட்டு ஒழுங்கின்மையின் காரணமாக நாட்டில் அவசரகால நிலையை குடியரசுத் தலைவர் அறிவித்தார். சில மாதங்களுக்கு உள்ளாகவே, எதிர்கட்சிகளின் ஆட்சியில் இருந்த குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களிலும் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் மொத்த நாடும் மத்திய ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது.[20] ஊரடங்குச் சட்டங்கள் ஏற்படுத்த காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. குடிமக்கள் காலவரம்பின்றிக் காவலில் வைக்கப்பட்டார்கள். செய்திகள் மற்றும் ஊடகங்களின் அனைத்து வெளியீடுகளும் கணிசமான அளவிற்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தால் தணிக்கை செய்யப்பட்டன. தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் இந்தர் குமார் குஜ்ரால் அவரின் பணியில் சஞ்சய் காந்தியின் தலையீட்டிற்கு எதிராக பதவியைத் துறந்தார். பிற்காலத்தில் இந்தர் குமார் குஜ்ரால் இந்தியாவின் தலைமை அமைச்சராகப் பதவி வகித்தார். இறுதியாக, நடைபெறவிருந்த சட்டமன்றத் தேர்தல்கள் காலவரம்பின்றி தள்ளி வைக்கப்பட்டன. இத்துடன் மாநில ஆளுநரின் பரிந்துரையுடன் மாநில அரசாங்கங்களைக் கலைக்கலாம் என்ற அரசியல் அமைப்பு பிரிவைப் பயன்படுத்தி, எதிர்கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் நீ்க்கப்பட்டன. தனக்கு அதிக அதிகாரங்களைப் பெற அவசரகால சட்டங்களை இந்திரா பயன்படுத்தினார். "வலுவான முதலமைச்சர்களி்ன் கட்டுப்பாட்டிலும், அவர்களின் அரசியல் கட்சிகளுடனும் மற்றும் மாநில கட்சி அமைப்புகளுடனும் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்பிய அவர் தந்தையைப் (நேரு) போலில்லாமல், சுதந்திரமான அடித்தளத்தைக் கொண்டிருந்த ஒவ்வொரு காங்கிரஸ் முதலமைச்சரையும் திருமதி. காந்தி வெளியேற்றினார். மேலும் அவருக்கு தனிப்பட்ட வகையில் ஆதரவான அமைச்சர்களை அவர்களுக்கு மாற்றாக நியமித்தார்...இவ்வாறு இருந்தும், மாநிலங்களில் ஸ்திரமின்மையைத் தக்க வைக்க முடியவில்லை..."[21] தீர்ப்பின்படி ஆட்சி தீர்ப்பாய ஆட்சியை அனுமதிக்கும் வகையில், பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய அவசியமற்ற ஆணைகளை குடியரசுத் தலைவர் அஹ்மத் வெளியிடுமாறு அவர் செய்தார் என்றும் இந்திரா மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. அதே வேளையில், ஆயிரக்கணக்கான அரசியல் செயல்வீரர்களின் கைது மற்றும் காவல் உட்பட கருத்துவேறுபாடுகளை நீக்கும் ஒரு பிரச்சாரத்தை இந்திராவின் அரசாங்கம் கையில் எடுத்தது. ஜக் மோகன் கண்காணிப்பில் (இவர் பின்னர் டெல்லியின் துணை கவர்னராக ஆக்கப்பட்டார்) டெல்லியின் ஜமா மஸ்ஜித்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த சேரிகளை அகற்றும் முனைப்பில் சஞ்சய் கருவியாக இருந்தார். இந்த நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடிழந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இது நாட்டின் தலைநகரத்தில் இருந்த அந்த பகுதி சமூகத்திடையே சினமூட்டியதுடன், ஆயிரக்கணக்கான தந்தையர்களின் விதைநாளத்தில் கட்டாயமாக செய்யப்பட்ட குடும்ப கட்டுப்பாடு திட்டம் ஆகியவையும் மக்களிடையே எரிச்சலூட்டின. இவை பெரும்பாலும் மோசமாக நிர்வகிக்கப்பட்டன. தேர்தல்கள் அவசரகால நிலையை இரண்டு முறை விரிவாக்கியதற்குப் பின்னர், 1977ல் அவரின் ஆட்சியை நியாயப்படுத்த வாக்காளர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்திராகாந்தி தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். கடுமையாக தணிக்கை செய்யப்பட்ட பத்திரிக்கைகள் அவரை பற்றி என்ன எழுத வேண்டுமென நினைத்தாரோ அதனை எழுதின. அதை படித்ததன் மூலம் அவரின் செல்வாக்கை ஒட்டுமொத்தமாகத் தவறாகக் கணித்தார். எந்த விஷயத்திலும், அவர் ஜனதா கட்சியால் எதிர்க்கப்பட்டார். "ஜனநாயகம் மற்றும் சர்வாதிகாரத்திற்கு" இடையில் ஒரு நல்ல ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு இந்தியாவிற்கான கடைசி வாய்ப்பு தான் இந்த தேர்தல் என்று அவரின் நீண்டகால எதிர்க்கட்சியான ஜனதா, அதன் தலைமையான மொரார்ஜி தேசாயுடனும் ஆன்மீக வழிகாட்டியான ஜெய் பிரகாஷ் நாராயண் உடனும் சேர்ந்து அறிவித்தது. இத்தேர்தலில் இந்திராவின் காங்கிரஸ் கட்சி கடுமையான் தோல்வியைத் தழுவியது. இந்திரா மற்றும் சஞ்சய் இருவரும் அவர்களின் தொகுதியில் தோல்வியடைந்தார்கள். அத்துடன் காங்கிரஸ் (அதற்கு முந்தைய மக்களவையில் 350 இடங்களுடன் ஒப்பிடுகையில்) 153 இடங்களை மட்டுமே கைப்பற்றியது, அதில் 92 இடங்கள் தெற்கில் இருந்து கிடைத்தவையாகும். நீக்கம், கைது மற்றும் மறுபிரவேசம் 1969இல் இந்திய அரசியல் அமைப்பிற்கான தேர்வாக, மொரார்ஜி தேசாய் தலைமை அமைச்சராகவும், நீலம் சஞ்சீவி ரெட்டி குடியரசுத் தலைவராகவும் பதவியேற்றார்கள். 1978 இடைதேர்தலில் வெற்றி பெறும் வரையில் இந்திரா காந்தி அவரை அவரே, பணியோ, வருமானமோ அல்லது இருப்பிடமோ இல்லாமல் இருப்பதாகக் கண்டார். 1977 தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் உடைந்தது. ஜகஜீவன் ராம், பஹூகுணா மற்றும் நந்தினி சத்பதி போன்ற இந்திராவின் மிக முக்கியமான முன்னாள் ஆதாரவாளர் பிரிந்து வெளியேறினார்கள். அவர்கள் மூவரும் இந்திராவிற்கு மிக நெருக்கமாக இருந்தார்கள், ஆனால் சஞ்சய்காந்தியால் உருவாக்கப்பட்ட சூழ்நிலைகள் மற்றும் அரசியல் தந்திரத்தால் வலுக்கட்டாயப்படுத்தப்பட்டார்கள். சஞ்சய் இந்திராவின் செல்வாக்கைச் சிதைக்க விரும்பம் கொண்டிருந்தார் என்று பின்னர் வதந்தி ஏற்பட்டது. அப்போது அதிகாரப்பூர்வ எதிர்கட்சியாக இருந்த போதிலும், காங்கிரஸ் (இந்திரா) கட்சி பாராளுமன்றத்தில் வெகு சிறிய குழுவாக இருந்தது. பல்வேறு கூட்டணிப் பூசல்களுக்கு இடையில் ஆட்சி புரிய முடியாமல், ஜனதா அரசாங்கத்தின் உள்நாட்டு மந்திரி சௌத்ரி சரண் சிங், பல குற்றச்சாட்டுக்களுக்காக இந்திரா மற்றும் சஞ்சய் காந்தியை கைது செய்ய உத்தரவிட்டார். இதில் எந்த குற்றச்சாட்டையும் இந்திய நீதிமன்றத்தில் எளிதாக நிரூபிக்க முடியவில்லை. கைது என்றால் இந்திரா தானாகவே பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்படுவார் என்பதை குறிக்கிறது. எவ்வாறிருப்பினும், இந்த வழிமுறை பேரழிவுமிக்க வகையில் திருப்பி அடித்தது. அவரின் கைது மற்றும் நீண்ட கால வழக்குகள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவரை ஒரு கொடுங்கோலராக பார்த்த மக்களிடையே அவருக்கு பெரியளவில் அனுதாபத்தைப் பெற்று தந்தது. இந்திரா (அல்லது "அந்த பெண்மணி", பலரால் இவ்வாறு தான் அழைக்கப்பட்டார்) மீதான வெறுப்பின் காரணமாக மட்டுமே ஜனதா கூட்டணி ஒன்றுபட்டிருந்தது. பொதுவில் சிறுபான்மையுடன், அரசாங்கம் உட்பூசல்களில் சிக்கி்க் கொண்டிருந்தது. இந்த சூழ்நிலையை இந்திரா அவரின் ஆதாயத்திற்காகப் பயன்படுத்த முடிந்தது. மறைமுகமாக அவசரகால நிலையின் போது செய்த "தவறுகளுக்காக" வருத்தம் தெரிவி்த்து, மீண்டும் அவர் அறிக்கைகள் அளிக்கத் தொடங்கினார். 1979 ஜூனில் மொரார்ஜி தேசாய் பதவித் துறப்பு செய்தார், சரண் சிங் அரசாங்கத்திற்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் என்று இந்திரா உறுதி அளித்ததைத் தொடர்ந்து ரெட்டியால் சரண் சிங் தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்திரா ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர், அவர் அவரின் ஆரம்பநிலை ஆதரவைத் திரும்ப பெற்றார், 1979 குளிர்காலத்தில் ஜனாதிபதி ரெட்டி பாராளுமன்றத்தைக் கலைத்தார். அதை தொடர்ந்து வந்த ஜனவரியில் நடத்தப்பட்ட தேர்தல்களில், காங்கிரஸ் அதிக பெரும்பான்மையுடன் ஆட்சிக்குத் திரும்பியது. 1980களில், இந்திரா காந்தியின் அரசாங்கம் விடுதலைப்புலிகளிற்கும், இலங்கையில் இருந்த பிற தமிழ் போராளிகள் குழுக்களுக்கும் பணம், ஆயுதம் மற்றும் இராணுவப் பயிற்சிகளை அளித்தது. [22] மூன்றாம் பதவி காலம் செலாவணி நெருக்கடி 1980களின் தொடக்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு 7ல் இருந்து 12ஆக 40 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததை இந்திராவின் நிர்வாகம் தடுத்து நிறுத்துவதில் தோல்வியுற்றது. பஞ்சாப் நடவடிக்கை இந்திரா காந்தியின் பிந்தைய ஆண்டுகள் பஞ்சாப் பிரச்சனைகளுடன் தொல்லையில் இருந்தது. பஞ்சாபில் சீக்கியத் தீவிரவாதம் வளர்ந்து வந்தது. சமய மற்றும் தீவிரவாதத் தலைவராக இருந்த ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேயின் அதிகரித்து வந்த செல்வாக்கு இந்திய ஒருமைப்பாட்டுக்குச் சவாலாக அமையுமென இந்தியத் தலைவர்கள் அஞ்சினார்கள். இந்திரா படையை அனுப்பித் தீவிரவாதிகளை ஒடுக்க எண்ணினார். 1984 ஜூனில், ஜர்னையில் சிங் பிந்தரன்வாலாவின் சிக்கிய சுந்திர போராட்டக் காலிஸ்தான் பிரிவினைவாத குழு, சிக்கியர்களின் புனிதத்தளமான பொற்கோயிலுக்குள் முகாமிட்டிருந்தது.[23] இதனைத் தீர்க்க ஆபரேசன் புளூஸ்டார் என்ற நடவடிக்கை இந்திரா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது. சீக்கியர்களின் புனிதக் கோயிலான பொற் கோயிலுக்குள் ஆயுதங்களுடன் ஒளிந்திருப்பதாகக் கருதப்பட்ட தீவிரவாதிகளையும், அவர்களின் தலைவரையும் பிடிக்க இராணுவம் பொற்கோயிலுக்குள் புக அனுமதி வழங்கினார். பொற்கோயிலுக்குள் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இருந்த போதினும், அந்த நேரத்தில் இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். இந்திரா காந்தியின் இந்த நடவடிக்கை சர்வதேச ஊடகத்தால் பெரிதும் கண்டனத்திற்குள்ளானது. பாதிக்கப்பட்ட இராணுவ மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கையில் அரசாங்க எண்ணிக்கையும், அரசு சார்பற்ற எண்ணிக்கையும் வேறுபடுகிறது. நான்கு அதிகாரிகள், 79 வீரர்கள் மற்றும் 492 சிக்கியர்கள் என்று அரசாங்கம் கணக்கிட்டது; அரசுசாரா கணக்கீடு இதை விட அதிகமாக இருந்தது. ஒருவேளை 500 அல்லது அதற்கு மேலான துருப்புகளும், துப்பாக்கி சூட்டில் சிக்கி கொண்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 3,000 சிக்கியர்களும் இருந்திருக்கலாம்.[24] உண்மையான ஆவணங்கள் இல்லாததால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குறித்த துல்லியமான விபரங்கள் சர்ச்சைக்குரியதாக இருந்தது. தாக்குதல் நடத்தப்பட்ட நேரம் மற்றும் முறையும் பரவலாக விமர்சிக்கப்பட்டன. இதைப் பயன்படுத்தி பெரும்பாலான விமர்சனங்கள் சிக்கியர்கள் மீதான ஒரு தனிப்பட்ட தாக்குதல் என்பதாக இந்திரா காந்திக்கு எதிராகத் திருப்பி விடப்பட்டது. சிக்கியர்களின் சுதந்திரம் பற்றிய யோசனைகளையும், காலிஸ்தான் என்றழைக்கப்படும் ஒரு பிரிவினைவாத அரசை உருவாக்குவதற்கான யோசனையையும் போதித்தன் மூலம் "விரோதத்தை" வளர்த்து வந்த பயங்கரவாதி பிந்தரன்வாலேயை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் என்று கூறி அதை அவர் நியாயப்படுத்தினார். படுகொலை தொடர்ந்து இடம்பெற்ற படை நடவடிக்கைகள் இந்திராவை சீக்கியர்களின் கோபத்துக்கு ஆளாக்கியது. இதன் தொடர்ச்சியாக, சீக்கியர்களான, அவரது சொந்தப் பாதுகாவலர் இருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திரா காந்திக்கு எண்ணிலடங்கா காவலர்கள் இருந்தனர். அவர்களில் இருவர் சத்வந்த் சிங் மற்றும் பீண்ட் சிங், இருவருமே சீக்கியர்கள். அவர்கள் 1984 அக்டோபர் 31ஆம் தேதி, புதுடெல்லியில் உள்ள எண் 1, சப்தர்ஜங் சாலையில் இருந்த தலைமை அமைச்சரின் வீட்டுத் தோட்டத்தில் தங்களின் சேவை ஆயுதங்களால் இந்திரா காந்தியைப் படுகொலை செய்தனர். ஐரிஷ் தொலைக்காட்சிக்காக பிரிட்டிஷ் நடிகர் பீட்டர் உஸ்தினோவ்வால் ஓர் ஆவணப்படத்திற்கு பேட்டி அளிப்பதற்காக, இந்திரா சத்வந்த் மற்றும் பீண்ட்டின் காவலில் இருந்த விக்கெட் கேட்டைக் கடந்து சென்றார். அந்த சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக கிடைத்த தகவலின்படி, பீண்ட் சிங் அவரின் பக்கவாட்டு ஆயுதத்தால் அவரை மூன்று முறை சுட்டார், சத்வந்த் சிங் ஒரு ஸ்டென் சப்மெஷின் துப்பாக்கியால் 30 ரவுண்டுகள்[25] சுட்டார். அவரின் பிற காவலாளிகளால் பீ்ண்ட் சிங் சுட்டு கொல்லப்பட்டார், சத்வந்த் சிங் சுடப்பட்டு, கைது செய்யப்பட்டார். இந்திரா அவரின் அரசாங்கக மகிழுந்தில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் போது வழியில் உயிர் துறந்தார், ஆனால் பல மணி நேரங்களுக்கு அவர் இறந்ததாக அறிவிக்கப்படவில்லை. அவர் அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞான பயிலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார், அங்கு அவரை மருத்துவர்கள் சோதனை செய்தனர். அந்த சமயத்தில் 29 உள் சென்று வெளியேறிய காயங்கள் இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்தது, சில அறிக்கைகள் அவரின் உடலில் இருந்து 31 குண்டுகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தது. அவர் ராஜ்காட்டிற்கு அருகில் நவம்பர் 3ஆம் தேதி எரியூட்டப்பட்டார். அவரின் இறப்புக்கு பின்னர், புதுடெல்லியைச் சுற்றி வளைத்த இந்திரா காந்தியின் மதிப்பிற்கு பாத்திரமான காங்கிரஸ் அரசியல்வாதிகளால் அதிருப்தி உட்பிரிவுகள் உருவாக்கப்பட்டது. காந்தியின் நண்பரும், சுயசரிதையாளருமான புபுல் ஜெயகர் இந்திராவின் பதட்டத்தையும், ஆப்ரேஷன் ப்ளூஸ்டாரின் விளைவாக என்ன நடக்கும் என்பது குறித்த அவரின் முன்னெச்சரிக்கையும் வெளிப்படுத்தி காட்டினார். சொந்த வாழ்க்கை நேரு-காந்தி குடும்பம் தொடக்கத்தில் சஞ்சய் அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிசாக இருந்தார்; ஆனால் ஒரு விமான விபத்தில் அவர் இறந்த பின்னர், விருப்பமற்றிருந்த ராஜீவ்காந்தியை, விமான ஓட்டியாக இருந்த அவரின் வேலையை விட்டுவிட்டு, 1981 பிப்ரவரியில் அரசியலில் நுழையுமாறு இந்திரா வலியுறுத்தினார். இந்திரா காந்தியின் மரணத்திற்கு பின்னர், ராஜீவ் காந்தி தலைமை அமைச்சரானார். 1991 மே மாதத்தில், அவரும் படுகொலை செய்யப்பட்டார், அவர் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றபோது தமிழீழ விடுதலை புலிகளின் மனித வெடிகுண்டினால் கொல்லப்பட்டார். ராஜீவின் மனைவி சோனியா காந்தி, 2004 மக்களவை தேர்தல்களில் ஓர் ஆச்சரியமூட்டும் தேர்தல் வெற்றிக்குப் பின் ஐக்கிய முன்னேற்ற கூட்டணியைத் தலையேற்று நடத்தினார். சோனியா காந்தி இந்தியத் தலைமை அமைச்சராகப் பதவியை ஏற்கும் வாய்ப்பை மறுத்துவிட்டார், ஆனால் காங்கிரஸ் அரசியல் இயந்திரங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கிறார்; முன்னாள் நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் தற்போது இந்திய அமைச்சரவைக்குத் தலைமையேற்றுள்ளார். ராஜீவின் குழந்தைகளான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வாத்ராவும் அரசியலில் இறங்கியுள்ளனர். சஞ்சய் காந்தியின் விதவை மனைவி மேனகா காந்தியும் (சஞ்சையின் மரணத்திற்கு பின்னர், இந்திராவிடமிருந்து பிரிந்து வந்த இவர், அனைவராலும் அறியப்பட்ட வகையில் பிரதம மந்திரியின் வீட்டிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்)[26], சஞ்சயின் மகன் வருண் காந்தியும் முக்கிய எதிர்கட்சியான பிஜேபி கட்சியின் உறுப்பினர்களாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். முரண்பாடுகள் மறைந்த இந்திய பிரதம மந்திரி இந்திரா காந்தி, 1970களில் உத்தியோகப்பூர்வமாக இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஆண்கள் தங்களை கருத்தடை செய்து கொள்ள வேண்டும் என்ற ஒரு கட்டாய கருத்தடைத் திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் திருமணம் ஆகாத பல இளைஞர்கள், அரசியல் எதிர்ப்பாளர்கள் மற்றும் அறியாமையிலிருந்த ஆண்களும் கருத்தடை செய்யப்பட்டதாக நம்பப்பட்டது. இந்தியாவில் இந்த திட்டம் இன்றும் நினைவு கூறப்படுவதுடன் விமர்சிக்கப்படுகிறது. மேலும் குடும்ப கட்டுப்பாடு மீது பொதுமக்களுக்கு ஒரு தவறான வெறுப்பை உருவாக்குவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இது அரசின் திட்டங்களை பல ஆண்டுகளுக்கு பாதிப்பிற்குள்ளாக்கியது.[27] இவற்றையும் பார்க்கவும் இந்தியப் பிரதமர்கள் பிரபல இந்தியர்களின் பட்டியல் கூடுதல் வாசிப்பு வேத் மெஹ்தா, குடும்ப விவகாரம்: மூன்று பிரதம மந்திரிகளின் கீழ் இந்தியா (1982) ஐஎஸ்பிஎன் 0-19-503118-0 புப்புல் ஜெயகார், இந்திரா காந்தி: ஓர் உன்னத வாழ்க்கை வரலாறு (1992) ஐஎஸ்பிஎன் 9780679424796 கேத்ரீன் பிரான்க், இந்திரா: இந்திரா நேருவின் வாழ்க்கை ஐஎஸ்பிஎன் 0-395-73097-X ராமாச்சந்திரா குஹா, காந்திக்கு பின்னர் இந்திரா: உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் வரலாறு (2007) ஐஎஸ்பிஎன் 978-0-06-019881-7 மேற்கோள்கள் வெளி இணைப்புகள் at Curlie hjtjg பகுப்பு:இந்திய பிரதம மந்திரிகள் பகுப்பு:இந்திய தேசிய காங்கிரஸ் பகுப்பு:பாரத ரத்னா விருது பெற்றவர்கள் பகுப்பு:1917 பிறப்புகள் பகுப்பு:1984 இறப்புகள் பகுப்பு:நேரு-காந்தி குடும்பம் பகுப்பு:அரசியலில் இந்திய பெண்கள் பகுப்பு:இந்திய இந்துக்கள் பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு:கொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்கள் பகுப்பு:இந்தியப் பிரதமர்கள் பகுப்பு:வரலாற்றில் பெண்கள் பகுப்பு:இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள் பகுப்பு:இந்திய நிதியமைச்சர்கள் பகுப்பு:லெனின் அமைதிப் பரிசு பெற்றவர்கள் பகுப்பு:இந்தியாவில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள் பகுப்பு:பெண் அரசுத் தலைவர்கள் பகுப்பு:4வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
இந்திராகாந்தி எப்போது பிறந்தார்?
1917ஆம் ஆண்டு நவம்பர் 19
3,971
tamil
c4de370c5
பிரமிடு (pyramid, Greek: πυραμίς pyramis[1]) என்பது பட்டைக்கூம்பு வடிவில் அமைந்த ஒரு கட்டிட அமைப்பு ஆகும். இதன் அடி பெரும்பாலும் சதுரமாக அமைந்திருக்கும். எனினும், இது முக்கோணம், வேறுவகைப் பல்கோணங்கள் ஆகிய வடிவங்களிலும் அமையலாம். இக் கட்டிடங்களின் நிறையில் பெரும் பகுதி அடிப்பகுதியில் அமைந்திருப்பதால், இவற்றின் புவியீர்ப்பு மையம் நிலத்துக்கு அண்மையில் அமைந்திருக்கும் இதனால், சில பழங்கால நாகரிக மக்கள் உறுதியான நினைவுச் சின்னங்களை அமைப்பதற்கு இந்த வடிவத்தைத் தேர்ந்தெடுத்தனர். பல ஆயிரம் ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய அமைப்புக்கள் பிரமிடுகளாகவே இருந்தன. முதலில் எகிப்தில் டாசுர் நக்குரோபோலிசில் உள்ள சிவப்புப் பிரமிட்டும், பின்னர் கூபுவின் பெரிய பிரமிடும் மிகப்பெரிய அமைப்புக்களாக இருந்தன. பழைய ஏழு உலக அதிசயங்களுள் இன்றும் நிலைத்திருப்பது கூபுவின் பெரிய பிரமிடு மட்டுமே. இது பெரும்பாலும் சுண்ணக்கல்லால் கட்டப்பட்டுள்ளது; சில உள்ளறைகள் சிவப்பு கிரானைட்டு கற்களால் ஆனவை. கட்டிடவியல் அதிசயம் எனப்படும் பெரி பிரமிடில் 2.5 tonnes (5,500lb) இலிருந்து 15 tonnes (33,000lb) வரை எடையுள்ள 1,300,000 கற்கள் கொண்டு 13 ஏக்கரா நிலப்பரபில் கட்டப்பட்டுள்ளது. இதன் அடி சதுரத்தின் ஒவ்வொரு பக்கமும் ஏறத்தாழ 230மீ (755அடி) நீளமுடையதாக உள்ளது.இதன் உயரம் கட்டப்பட்டபோது 146.5மீ (488அடி)யாக இருந்தது. ஆனால் உச்சியில் இருந்த வெண்ணிற துரா சுண்ணக்கற்கள் திருடப்பட்டு கெய்ரோவில் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டதால் இன்று இதன் உயரம் 137மீ (455அடி)யாக உள்ளது. இருப்பினும் இதுவே மிக உயரமான பிரமிடாக விளங்குகிறது. உலகில் கட்டப்பட்ட பிரமிடுக்களில், கனவளவு அடிப்படையில் மிகப் பெரியது மெக்சிக்கோவில் உள்ள சோலுலாவின் பெரிய பிரமிடு ஆகும். இப் பிரமிடு இன்னும் அகழப்பட்டு வருகின்றது. பிரமிடு வடிவிலான கட்டிடங்கள் எகிப்தியர், மாயர், சுமேரியர் உள்ளிட்ட பல பழம் நாகரிக மக்களால் அமைக்கப்பட்டன. பாரிசில் உள்ள லூவர் அருங்காட்சியகம் முன்பாகக் கண்ணாடியாலான பிரமிடு அமைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் நெவாடா மாநில லாஸ் வேகஸ் நகரில் லக்சர் ஓட்டல் எகிப்திய பிரமிடின் வடிவமைப்பில் கண்ணாடியால் கட்டப்பட்டுள்ளது. தொன்மையானக் கட்டிடங்கள் மெசொப்பொத்தேமியா மெசொப்பொத்தேமியர்கள் சிக்குரத்கள் எனப்பட்ட துவக்க கால பிரமிடுகளை முதன்முதலாகக் கட்டினர். இவை சூரிய வெப்பத்தில் உலர்ந்த செங்கற்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டமையால் அனைத்தும் அழிந்துபட்டன. இத்தகைய சிக்குரத்களை சுமேரியர்கள், பாபேலியர்கள், ஈலாமியர்கள், அக்காடியர்கள், மற்றும் அசிரியர்கள் அவரவர் பகுதிகளில் கட்டினர். எகிப்து எகிப்திய பிரமிடுகளே மிகவும் புகழ்பெற்றவையும் அறியப்பட்டவையும் ஆகும். செங்கல் அல்லது பாறைகளால் கட்டப்பட்ட இவற்றில் சில உலகின் மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றாக அமைந்தன. பெரும்பாலான பிரமிடுகளின் மேற்பரப்புகள் வெள்ளைநிற சுண்ணக்கற்களால் மிகவும் எதிரொளிக்குமாறு தீட்டப்பட்டிருந்தன. இதனால் தொலைவிலிருந்து பளபளப்புடன் காணப்பட்டன. முகட்டுக்கல் அல்லது சிகரம் மட்டும் கருங்கல் அல்லது எரிமலைப்பாறையால் ஆனதாகவும் தங்கம், வெள்ளி அல்லது தங்கம்,வெள்ளியின் கலப்பு உலோகத்தினால் பூசப்பட்டும் இருந்தது.[2] கி.மு 2700க்குப் பிறகு [3] கட்டத் துவங்கிய எகிப்தியர்கள் கி.மு 1700 வரை பிரமிடுகளைக் கட்டினர். மூன்றாம் வம்ச காலத்தில் யோசர் மன்னர் காலத்தில் ஆறு மஸ்தபாக்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி முதல் பிரமிடு ஒன்றை கட்டினர். எகிப்தின் பெரிய பிரமிடுகள் கிசா என்றவிடத்தில் உள்ளன. பெரும்பாலான பிரமிடுகள் நைல் ஆற்றின் மேற்குப் புறத்திலேயே கட்டப்பட்டன. 2008ஆம் ஆண்டுப்படி , இதுவரை 135 பிரமிடுகள் எகிப்தில் கண்டறியப்பட்டுள்ளன.[4][5] எகிப்தின் மிகப்பெரிய பிரமிடாகிய கிசாவின் பெரிய பிரமிட்டின் அடித்தளம் பரப்பளவில் அமைந்துள்ளது. இது பண்டைய உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது. முகட்டில் பதித்திருந்த சுண்ணக்கற்களும் கடற்சங்குகளும்[6] காலப்போக்கில் விழுந்துவிட்டன அல்லது திருடப்பட்டு கெய்ரோவில் கட்டிடங்களுக்குப் பயன்படுத்தப்பட்டன. பெரும்பாலான பிரமிடுகள் கெய்ரோவிற்கு அண்மையிலேயே உள்ளன.[7] சூடான் பிரமிடுகள் எகிப்துடனேயே அடையாளப்படுத்தப்பட்டாலும் உலகின் மிகக் கூடுதலான பிரமிடுகளை கொண்ட நாடாகச் சூடான் விளங்குகிறது. இங்கு 220 பிரமிடுகள் இன்றும் உள்ளன.[8] நுபியர்கள் சூடானின் மூன்றிடங்களில் இந்த 220 பிரமிடுகளை அமைத்துள்ளனர். நாப்பட்டா மற்றும் மெரோ அரசர்/அரசிகளின் கல்லறைக் கட்டிடங்களாக இவற்றைக் கட்டினர். இவை எகிப்திய பிரமிடுகளிலிருந்து மாறுபட்டுள்ளன. அவற்றைவிட நுபியப் பிரமிட்கள் செங்குத்தான கோணங்களில் அமைக்கப்பட்டுள்ளன.[9] சூடானில் கிமு 300 வரை பிரமிடுகள் கட்டப்பட்டு வந்தன. நைஜீரியா அபுஜாவில் சுடெ பிரமிடுகளை அங்கு வாழ்ந்த குபோ நாகரிகத்தின் கூறாகக் காணலாம். களிமண்ணால் கட்டப்பட்ட பத்து பிரமிடுகள் இங்குள்ளன. முதல் கட்ட அடிப்பகுதி 60 அடி சுற்றளவையும் 3 அடி உயரத்தையும் கொண்டுள்ளது. அடுத்தப்படியில் 45 அடி சுற்றளவில் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறான அடுக்குகள் வட்டவடிவ ஒன்றன்மேல் ஒன்றாக மேல்வரை கட்டப்பட்டுள்ளன. இவை கடவுளரின் இருப்பிடமாகவும் சிகரத்தில் அவர்கள் வசிப்பதாகவும் நம்பப்பட்டது. இதன் அடையாளமாக ஒரு கம்பு அங்கு நடப்பட்டிருந்தது. இவை ஐந்து குழுக்களாக ஒன்றுக்கொன்று இணையாகக் கட்டப்பட்டன. இவை களிமண்ணால் கட்டப்பட்டமையால் அவ்வப்போது மீளுருவாக்கம் செய்ய வேண்டியிருந்தது.[10] கிரீசு கிமு இரண்டாம் நூற்றாண்டின் புவியியலாளர் பவுசானியாசு பிரமிடுகளை ஒத்த இரு கட்டிடங்களைக் குறிப்பிடுகிறார்; இவற்றில் ஒன்று ஹெலனிக்கோன் நகரிலிருந்து 19 கிமீ (12 மைல்) தொலைவில் தென்மேற்கே இருந்ததாகவும்[11] அர்கோசு ஆட்சிக்காகப் போராடிய போர்வீரர்களின் நினைவாக இவை கட்டப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவை இரண்டுமே பிரமிடுகளை ஒத்து இருந்ததற்கான எந்தவொரு சான்றும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. இன்றளவும் காணக்கிடைக்கின்ற இரு பிரமிடு போன்ற இரு கட்டிடங்கள் ஹெலனிக்கோனிலும் லிகுரியோவிலும் உள்ளன. இவை சாய்வான சுவர்களைக் கொண்டிருந்தாலும் எவ்வகையிலும் எகிப்திய பிரமிடுகளை ஒத்திருக்கவில்லை. இவற்றின் உள்ளே பெரிய அறைகள் உள்ளன. ஹெலனிக்கோனிலுள்ள பிரமிடின் அடித்தளம் சதுரமாக இல்லாது செவ்வகமாக,12.5x14மீ, உள்ளது; இதனால் இதன் பக்கவாட்டுச் சுவர்கள் ஒரு புள்ளியில் சந்தித்திருக்க முடிந்திருக்காது.[12] இந்தியாவில் சோழர்கள் காலத்தில் தென்னிந்தியாவில் கருங்கற்களால் கட்டப்பட்ட பிரமிடு வடிவ கோபுரங்களுடன் கூடிய பல பெரும் கோவில்கள் இன்றும் சமயப் பயன்பாட்டில் உள்ளன. தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் சிறீரங்கம் வட்டத்திலுள்ள அரங்கநாதசுவாமி கோயில் ஆகியன இவற்றில் சிலவாம். 11ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பிரகதீசுவரர் கோவில் யுனெசுகோவால் உலகப் பாரம்பரியக் களமாக 1987இல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விரிவாக்கமாக 2004 ஆம் ஆண்டு கங்கை கொண்ட சோழபுரம் கோயிலும் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலும் இணைக்கப்பட்டன.[13] இந்தோனேசியா இந்தோனேசியாவின் ஆத்திரேலேசிய பாறைக் கட்டமைப்பு பண்பாட்டில் குத்துக்கல், கல் மேடைகள், கற்சிலைகளுக்கு அடுத்ததாகப் புந்தென் பெருந்தக் எனப்பட்ட மண்,கற்களாலான அடுக்கு பிரமிடு கட்டமைப்புகள் இருந்தன. இவை மேற்கு சாவாவின் குனுங் படாங் பகுதியிலும் சிசுலோக் பங்குயங்கன் பகுதிகளிலும் காண்டறியப்பட்டன. மலைகளிலும் உயர்ந்த இடங்களிலும் மூதாதையரின் ஆவி வாழ்வதாக உள்ளூர் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே இக்கற்கட்டிடங்கள் கட்டப்பட்டன. மத்திய சாவாவில் உள்ள போரோபுதூரில் 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த சமய பிரமிடு ஒன்று உள்ளது. பிந்தையக் கால சாவா கட்டமைப்புக்கள் இந்திய கட்டிடக்கலையின் தாக்கத்துடன் கட்டப்பட்டன. காட்சிக்கூடம் காப்ராவின் பிரமிடு ஷயோயெயோ கல்லறை, குஃபு, சீன மக்கள் குடியரசு இசுடாக்போர்ட் பிரமிடு, ஐக்கிய இராச்சியம் கார்லசுருஹே பிரமிடு, செருமனி அரெனா பிரமிடு , மெம்பிசு ஹனோய், வியட்நாமில் உள்ள ஹனோய் அருங்காட்சியகத்தில் தலைகீழானதொரு பிரமிடு. மெடைய்ரி செமட்ரி, நியூ ஓர்லென்ஸ் சும்மம் பிரமிடு, சால்ட் லேக் நகரம், யூட்டா சபர் பிளாசா அங்காடி மையம், புர்சா, துருக்கி சிலோவாக்கிய வானொலி கட்டிடம், பிராத்திஸ்லாவா, சிலோவாக்கியா. கசன் முற்றுகைக்கான நினைவுச்சின்னம், கசன், உருசியா. "பிரமிடு" பண்பாட்டு-மனமகிழ்வு வளாகம் கசன், உருசியா. மேற்சான்றுகள் உசாத்துணைகள் Patricia Blackwell Gary and Richard Talcott, "Stargazing in Ancient Egypt," Astronomy, June 2006, pp.62–67. Fagan, Garrett. "Archaeological Fantasies." RoutledgeFalmer. 2006 பகுப்பு:கட்டிடங்கள் பகுப்பு:பிரமிடுகள்
எகிப்து நாட்டில் எத்தனை பிரமிடுகள் உள்ளன?
135
3,099
tamil
0600263a3
மதுரை (ஆங்கிலம்: Madurai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் மதுரை, மக்கள் தொகை அடிப்படையிலும்[5], நகர்ப்புற பரவல் அடிப்படையிலும் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும் பத்து இலட்சத்துக்கு மேல் மக்கட்தொகைக் கொண்ட இந்திய மாநகரங்களின் பட்டியலில் 31ஆவது பெரிய நகரம் ஆகும்.[6] வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம் இங்கு அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் மதுரை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்திய துணைக்கண்டத்தில் தொன்மையான வரலாற்றைக் கொண்ட மதுரை நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, தொடர்ந்து மக்கள் வசித்து வரும் உலகின் சில நகரங்களுள் ஒன்று[7]. பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கிய மதுரை தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. சங்க காலம் எனக் குறிக்கப்படும் கி.மு. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் தமிழ் மொழி அறிஞர்களைக் கொண்டு மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் மதுரை.[8] மௌரியப் பேரரசின் அமைச்சர் கௌடில்யர் (கிமு 370 – கிமு 283), கிரேக்க தூதர் மெகஸ்தெனஸ் (350 கிமு – 290 கிமு) ஆகியோரின் குறிப்புக்களில் மதுரை குறிப்பிடப்பட்டுள்ளது. மரபுச் சின்னமாகப் பார்க்கப்படும் மதுரை நகரம் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. சங்ககாலப் பாண்டியர், இடைக்காலச் சோழர்கள், பிற்கால சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள், மதுரை சுல்தானகம், விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர்கள், கர்நாடக இராச்சியம், ஆங்கிலேயர்கள் போன்றோர் மதுரையை ஆண்டுள்ளனர். நகரத்தில் பல வரலாற்று நினைவிடங்கள் அமைந்துள்ளன. மீனாட்சியம்மன் கோவில், திருமலை நாயக்கர் அரண்மனை போன்றவை அவற்றில் புகழ் பெற்றவை. நகரில் ஆண்டு முழுவதும் பல கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. சித்திரைத் திருவிழா என்று பொதுவாக அழைக்கப்படும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் ஆண்டுதோறும் 10 நாட்கள் கொண்டாடப்படும் நகரின் முக்கிய விழாவாகும். பத்து இலட்சம் பேராற் கண்டுகளிக்கப்படும் சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. நகரின் ஒருபகுதியான அவனியாபுரம் பகுதியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் ஏறுதழுவல், நகரின் அருகே உள்ள அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நடைபெறும் ஏறுதழுவல் நிகழ்ச்சிகள் பெயர் பெற்ற நிகழ்வுகளாகும். மதுரை தென் தமிழகத்தின் முக்கிய தொழிற்றுறை மையமாகவும் கல்வி மையமாகவும் திகழ்கிறது. இரப்பர், இரசாயனம், கிரானைட் போன்ற உற்பத்தித் தொழில்கள் மதுரையில் நடைபெறுகின்றன[9]. தகவல் தொழில்நுட்பத் துறையில் இரண்டாம் அடுக்கு நகரமாகப் பட்டியலிடப்பட்டுள்ள மதுரையில் சில பன்னாட்டு, உள்நாட்டு மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்துள்ளன. மதுரை மருத்துவக்கல்லூரி, ஓமியோபதி மருத்துவக் கல்லூரி,[10] மதுரை சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் போன்ற கல்வி நிலையங்கள் நகரில் அமைந்துள்ளன[11]. நகர நிர்வாகம் 1971 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மாநகராட்சி அமைப்பின் மூலம் நடைபெறுகிறது. இது சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய மாநகராட்சி ஆகும். மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளையும் உள்ளது. இது இந்தியாவில் மாநிலத் தலைநகரங்களுக்கு வெளியில் உள்ள நீதிமன்றங்களில் ஒன்றாகும். மதுரையில் பன்னாட்டுச் சேவைகளை வழங்கும் வானூர்தி நிலையமும், தென் மாவட்டங்களில் பெரிய தொடர்வண்டி நிலையமும் அமைந்துள்ளது. முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளால் மதுரை நகரம் இணைக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தென்னிந்தியாவின் மாசில்லா மாநகரமாக மதுரை மாநகர் தெரிவு செய்யப்பட்டது.[12]. மதுரை 147.99 கி.மீ.2 பரப்பளவு கொண்டது. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் முதற்கட்டத் தகவலின் படி மதுரை நகரில் 1,017,865 பேர் வசிக்கின்றனர்[13]. மதுரையின் எல்லைகளாக பழமொழிகளில்.. மதுரைக்கு எல்லைக் கோடு. சீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடா மான், வாடா மலை, காயா பாறை, பாடா குயில் இவை அனைத்தும் மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக் குறிக்கும் எல்லை ஊர்கள். சீறா நாகம் - நாகமலை கறவா பசு - பசுமலை பிளிறா யானை - யானைமலை முட்டா காளை - திருப்பாலை ஓடா மான் - சிலைமான் வாடா மலை - அழகர்மலை காயா பாறை - வாடிப்பட்டி பாடா குயில் - குயில்குடி பெயர்க் காரணம் இந்நகரம் மதுரை, கூடல், மல்லிகை மாநகர், நான்மாடக்கூடல், திரு ஆலவாய் போன்ற பல்வேறு பெயர்களால் குறிக்கப்படுகிறது. மருதத் துறை &gt; மதுரை; மருத மரங்கள் மிகுதியாகவிருந்ததால் மருதத் துறை என்பது மருவி மதுரை என ஆனது என ஒரு கருத்தும், (வையை ஆற்றங்கரையில் மருத மரங்கள் மிகுதி).[14][15][16] இந்துக் கடவுள் சிவனின் தலையிலிருந்து பொழிந்த மதுரத்தால்(இனிப்பு) இப்பெயர் பெற்றது என மற்றொரு கருத்தும் நிலவுகிறது.[17] 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பட்ட திருவிளையாடற் புராணத்தில் மதுரையின் பல்வேறு பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.[17][18] கூடல் என்ற பெயர் மதுரையில் இருந்த மூன்று தமிழ்ச் சங்கங்களையும், நான்மாடக்கூடல் என்ற பெயர் மதுரையைச் சூழ்ந்துள்ள நான்கு கோயில் கோபுரங்களையும் குறிக்கிறது.[17] சிவனடியார்கள் மதுரையைத் திரு ஆலவாய் எனக் குறிப்பிடுகின்றனர்.[17][19] தமிழகக் கல்வெட்டியலாளர் ஐராவதம் மகாதேவன் அவர்களின் குறிப்பின் படி, கி.மு. 2 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ்ப் பிராமி கல்வெட்டு ஒன்று மதிரை எனக் குறிக்கிறது. இதற்கு மதிலால் சூழப்பட்ட நகரம் என்பது பொருள்.[20]. வரலாறு கி. மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து மதுரையில் மக்கள் வசித்து வருவதற்கான தரவுகள் கிடைத்துள்ளன. இலங்கையில் கி. மு. 570 ஆம் ஆண்டில் தம்பபன்னி இராச்சியத்தைத் தோற்றுவித்த விசயன் மதுராபுரியைச் சேர்ந்த பாண்டிய இளவரசியை மணந்ததாக இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சம் குறிப்பிடுகிறது. இங்கே மதுராபுரி எனக் குறிப்பிடப்படுவது பண்டைய மதுரையையே. கி.மு 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பயணியான மெகசுதனிசு தனது குறிப்புகளில் "மதுரா" எனக் குறிப்பிடப்படுவதிலிருந்து, அவர் மதுரைக்கு வந்து இருக்கலாம் என அறியப்படுகிறது.[21][17] இருப்பினும் சில அறிஞர்கள் "மதுரா" எனக் குறிப்பிடுவது மௌரியப் பேரரசில் புகழ் பெற்ற வடஇந்திய நகரமான மதுரா என்கின்றனர்.[22] மேலும் சாணக்கியர் எழுதிய அர்த்தசாத்திரத்திலும் மதுரை பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.[17] தமிழின் பழமையான இலக்கியங்களான நற்றிணை, திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, புறநானூறு, அகநானூறு ஆகிய நூல்களில் மதுரை குறித்து கூறப்பட்டுள்ளது. சில இடங்களில் "கூடல்" என்றும் சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூறு முதலிய நூல்களில் "மதுரை" என்றும் மதுரை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. சங்ககாலத்தில் நான்மாடக்கூடல் எனப் போற்றப்பட்டது [23] மதுரையைத் தமிழ்கெழு கூடல் எனப் புறநானூறு குறிப்பிடுகிறது. தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை என்று சிறுபாணாற்றுப்படையில், நல்லூர் நத்தத்தனாரும் மதுரையைப் பற்றி குறிப்பிடுகின்றார்[24]. ஓங்குசீர் மதுரை, மதுரை மூதூர் மாநகர், தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை, மாண்புடை மரபின் மதுரை, வானவர் உறையும் மதுரை, பதிவெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர் எனப் பல்வேறு அடைமொழிகளால் தான் எழுதிய சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளும் மதுரையைச் சிறப்பிக்கிறார். இவை தவிர கிரேக்க, உரோமானிய வாரலாற்றிலும் மதுரை பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. உரோமானிய வரலாற்றாய்வாளர்களான இளைய பிளினி (61– c. 112 கிபி), தாலமி (c. 90– c. கிபி 168), கிரேக்க புவியுலாளரான இசுட்ராபோ (64/63 கிமு– c. 24 கிபி),[25] மதுரை பற்றி குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக செங்கடல் செலவில் மதுரை பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. [18] சங்க காலத்தில் பாண்டியர் ஆளுகையின் கீழ் மதுரை இருந்தது சங்க இலக்கியங்கள் மூலம் அறிய வருகிறது. சங்க காலத்துக்குப் பின், களப்பிரர் ஆளுகையின் கீழ் வந்த மதுரை கிபி 590 பாண்டியர்களால் மீண்டும் கைப்பற்றப்பட்டது.[26][27] ஆனால், 9 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், பாண்டியர்கள் சோழர்களிடம் தோல்வியுற்றனர். இதனால் சோழர்களின் ஆளுகையின் கீழ் வந்த [28] மதுரையானது, 13 ஆம் நூற்றாண்டில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு இரண்டாம் பாண்டியப் பேரரசு உருவாக்கப்படும் வரை சோழர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.[28] முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்(கிபி1268– 1308) மறைவுக்குப் பின் மதுரை தில்லி சுல்த்தானகத்தின் கீழ் வந்தது.[28] பின் தில்லி சுல்தானகத்திலிருந்து பிரிந்து மதுரை சுல்தானகம் தனி இராச்சியமாக இயங்கியது. பின் கி.பி.1378 இல் விஜயநகரப் பேரரசுடன் இணைக்கப்பட்டது.[29] கிபி 1559 இல் விசய நகரப் பேரரசிடமிருந்து நாயக்கர்கள் தன்னாட்சி பெற்றனர். [29] பின் 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், கிபி 1736 இல் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் வரும் வரை மதுரையானது சந்தா சாகிப்(கிபி 1740– 1754), ஆற்காடு நவாப் மற்றும் மருதநாயகம் (கிபி 1725– 1764) ஆகியோரால் மீண்டும் மீண்டும் பலமுறை கைப்பற்றப்பட்டது.[17] பின் 1801 இல், மதுரை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டின் கீழ், சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. [30][31] அவர்கள் ஆட்சியின் தொடக்க கால கட்டங்களில் ஆங்கில அரசு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நன்கொடை வழங்கியதுடன் திருவிழாக்களிலும் பங்கு பெற்றது.[32] 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் மதுரை நகரானது அரசியல், தொழிற்றுறை நகராக வளர்ந்ததுடன் அப்போதைய மதுரை மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்கியது. [32] 1837 ஆம் ஆண்டில், கோவிலைச் சுற்றி இருந்த கோட்டையானது அகற்றபட்டு, [33] அகழி நிலத்தப்பட்டது. கிடைத்த இடிபாடுகள் மற்றும் பொருட்களைக் கொண்டு, புதிய தெருக்களான வெளி, மாரட், பெருமாள் மேசுதிரி வீதிகள் அமைக்கப்பட்டன.[34] கிபி 1836 இல் மதுரை நகராட்சியாகத் மாற்றப்பட்டது.[35] நகராட்சியாக மாற்றப்பட்ட போது, ஆங்கில அரசானது மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்துதலிலும் வரி வசூலிப்பதிலும் சில சிக்கல்களைச் சந்தித்தது.[36] எனவே, கிபி 1880 மற்றும் 1885 மதுரை நகரமும், மாவட்டமும் மறு அளவீடு செய்யப்பட்டது பின்னர் நிர்வாக வசதிக்காக 5 நகராட்சிகள், 6 தாலுகாக்கள் மற்றும் இரண்டு மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன.[36] நகரில் காவல் நிலையங்கள் எழுப்பப்பட்டு மதுரையைத் தலைமையிடமாகக் மாவட்டக் காவல் துறை ஆணையர் பதவியும் ஏற்படுத்தப்பட்டது.[36] 1921 செப்டெம்பர் 26 ஆம் நாள், மதுரையில் அரையாடை அணிந்து வேலை செய்து கொண்டிருந்த விவாசாயிகளைக் கண்டு, இந்திய தேசியத் தலைவரான காந்தி முதன் முறையாக அரையாடையை அணிந்தார். 1939 இல் மதுரையில் ஆலய நுழைவுப் போராட்டத்தை மேற்கொண்ட தனது நண்பர் வைத்தியநாதையரைக் காப்பாற்றும் பொருட்டு அப்போதைய சென்னை மாகாண பிரதமர் இராசகோபாலாச்சாரி தலைமையிலான அரசு ஆலய நுழைவு உறுதிப்படுத்தலும் பாதுகாப்பும் சட்டத்தை இயற்றி நாடார்களும் தலித்துகளும் ஆலயம் நுழைவதற்கான தடையை நீக்கியது. நகரமைப்பு பண்டைய மதுரை நகரத்தின் புவியியல் மற்றும் வழிபாட்டு மையமாக விளங்கிய மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி மதுரை நகரமானது கட்டப்பட்டுள்ளது. நகரமானது பொது மையத்தைக் கொண்ட நான்கு நாற்கர வடிவமுடைய தெருக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது மதுரையை ஆண்ட நாயக்கர்களின் முதல் நாயக்கரான விசுவநாத நாயக்கரால் (கி. பி. 1159–64) சதுர மண்டல முறையில் கட்டப்பட்டதாகும். இந்த தெருக்கள் அவற்றில் திருவிழாக்கள் கொண்டாடப்படும் தமிழ் மாதங்களின் பெயர்களால் ஆடி, சித்திரை, ஆவணி - மூல, மாசி வீதிகள் என தற்போதும் அழைக்கப்படுகின்றன. கோயில் பிரகாரத்திலும் அதனைச் சுற்றி அமைந்துள்ள தெருக்களிலும் திருவிழாக்களானது கொண்டாடப்படுவதுடன், தேரோட்டமும் நடைபெறுகிறது. நகர மையமும், அதனைச் சூழ்ந்துள்ள தெருக்களும் தாமரை மலர் மற்றும் அதன் இதழ் போன்ற தோற்றம் கொண்டதாக பழைய இலக்கியங்கள் கூறுகின்றன.[18] நகரத்தின் அச்சானது காந்த ஊசிகளின் அச்சுடன் பொருந்தும் வண்ணம் அமைந்து, கோவிலின் நான்கு வாசல்களும் அதன் முனைகள் போல் உள்ளன.[37] இந்த அமைப்பில் உயர்சாதியினர் கோவிலுக்கு அருகிலுள்ள தெருக்களிலும், ஏழை மற்றும் பிற்பட்ட படிநிலை மக்கள் தொலைவிலுள்ள தெருக்களிலும் குடியிருந்தனர்.[37] பின் 19 ஆன் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் வருகை, தொழில் துறை வளர்ச்சி மற்றும் நகரமயாமாதல் காரணமாக மதுரை நகரின் அமைப்பில் மாறுதல்கள் (கோட்டைச் சுவர் அக்கற்றப்பட்டு புதிய தெருக்கள் உருவாதல்) ஏற்பட்டு தற்போது அனைத்து படிநிலை மக்களும் ஒன்றிணைந்து வாழுகின்றனர்.[37] மதுரையின் கிழக்கு குடவரை கோவில் குன்னத்துார்(திருக்குன்றத்துார்) அமைந்துள்ளது. மாற வர்ம சுந்தரபாண்டியன் மற்றும் பலர் சிவலிங்க திருமேனியை மலையை குடைந்து உருவாக்கி உள்ளனர். இது கி.பி 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இது மதுரையிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது. புவியியல் மற்றும் பருவநிலை இவ்வூரின் அமைவிடம்<style about="#mwt78" data-mw='{"parts":[{"template":{"target":{"wt":"coor d","href":"./Template:Coor_d"},"params":{"1":{"wt":"9.93"},"2":{"wt":"N"},"3":{"wt":"78.12"},"4":{"wt":"E"},"5":{"wt":""}},"i":0}}]}' data-mw-deduplicate="TemplateStyles:r994658806" data-parsoid='{"pi":[[{"k":"1"},{"k":"2"},{"k":"3"},{"k":"4"},{"k":"5"}]],"dsr":[19899,19925]}' typeof="mw:Extension/templatestyles mw:Transclusion">.mw-parser-output .geo-default,.mw-parser-output .geo-dms,.mw-parser-output .geo-dec{display:inline}.mw-parser-output .geo-nondefault,.mw-parser-output .geo-multi-punct{display:none}.mw-parser-output .longitude,.mw-parser-output .latitude{white-space:nowrap} ஆகும்.[38][39] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 101மீட்டர் உயரத்தில் வளமான வைகை ஆற்றின் சமவெளியில் அமைந்துள்ளது. வைகை ஆறு நகரின் வடமேற்கு-தென்கிழக்காக ஒடி நகரை ஏறக்குறைய இரு சமபகுதிகளாகப் பிறிக்கிறது. நகரின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் சிறுமலை மற்றும் நாகமலைக் குன்றுகளும், வடகிழக்கே யானைமலைக் குன்றும் அமைந்துள்ளன. மதுரையைச் சூழ்ந்துள்ள நிலங்களில் பெரியாறு அணை பாசனம் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. மதுரை மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து தென்கிழக்கு திசையில் அமைந்துள்ளது. மதுரையைச் சூழ்ந்துள்ள பகுதிகள் தென்னிந்தியச் சமவெளிகள் போன்று சிறு சிறு குன்றுகள் காணப்படுகின்றன.[40] மணலின் தன்மையைப் பொருத்த வரையில் மதுரையின் மையப்பகுதி களிமண்ணும், புறநகர்பகுதிகள் செம்மண் மற்றும் கரிசல் மண்ணும் கொண்டுள்ளன.[41] நெல் அதிகம் பயிரிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து பயறு வகைகள், சிறு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பு ஆகியவை பயிரிடப்படுகின்றன.[41] ஆண்டின் எட்டு மாதங்களுக்கு மதுரையில் வறண்ட மற்றும் வெப்பமான வானிலை நிலவுகிறது.[42] அருகிலுள்ள திண்டுக்கல் மற்றும் மதுரையில் பிப்ரவரி மற்றும் மார்ச்சு மாதங்களில் குளிர் காற்று வீசுகிறது.[42] மார்ச்சிலிருந்து சூலை வரை அதிக வெப்பமான மாதங்களாகும்.[42] ஆகசுட்டிலிருந்து அக்டோபர் வரை மிதமான வானிலையும், நவம்பரிலிருந்து பிப்ரவரி மாதம் வரை இடி மற்றும் கனமழையுடன் மிதமான குளிரும் காணப்படுகிறது.[42] மதுரையில் மூடுபனியானது குளிர்காலங்களில் மிக மிகக் குறைவாகவே ஏற்படுகிறது.[42] கடல் மற்றும் மலையிலிருந்து சம தொலைவில் அமைந்துள்ளதால் வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழையால் சம விளைவுகளே ஏற்படுகிறது. இருப்பினும் அக்டோபரிலிருந்து திசம்பர் வரை வீசும் வடகிழக்கு பருவமழையால் அதிக மழைப்பொழிவைப் பெறுகிறது.[42] மதுரை மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு 85.76செ. மீ.[43] கோடைகாலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 40°செ, குறைந்தபட்ச வெப்பநிலை 26.3°செ, இருப்பினும் சாதாரணமாக வெப்பநிலையானது 42°செ வரை உயரும்.[44] நகரமயமாதல், வாகனப் பெருக்கம் மற்றும் தொழில்மயமாதல் காரணமாக மதுரையின் வளிமண்டல வெப்பநிலை உயர்ந்துள்ளது, இந்திய வானியலாய்வுத் துறையிடம் உள்ள 62 ஆண்டுகால தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது.[44] 2001–2010 வரையான பத்தாண்டுகளில் அதிகபட்ச வெப்பநிலையான 42°செ 2004 மற்றும் 2010 என இருமுறை பதிவாகியுள்ளது.[44] மக்கள் வகைப்பாடு Historical populationYearPop.±%1951361,781—1961424,810+17.4%1971549,114+29.3%1981820,891+49.5%1991940,989+14.6%2001928,869−1.3%20111,017,865+9.6%Source: 1951 – 1981:[46] 1991:[47] 2001:[48] 2011:[49] 2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி மதுரையின் மொத்த மக்கள் தொகை 10,17,865 ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 999 பெண்கள், இது தேசிய சராசரியான 929 ஐ விட மிக அதிகம் ஆகும். [50] இதில் 1,00,324 பேர் ஆறு வயதிற்கும் கீழானவர்கள். இவர்களில் ஆண்கள் 51,485 மற்றும் பெண்கள் 48,389. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் எண்ணிக்கை முறையே 6.27% மற்றும் 0.31% ஆகும். நகரின் சராசரி கல்வியறிவு தேசிய சராசரியான 72.99% ஐ ஒப்பிடும் போது, அதை விட அதிகமாக 81.95% உள்ளது. [51] 1,224 விவசாயிகள், 2,178 முதன்மை வேளாண் தொழிலாளர்கள், 11,282 குடிசைத் தொழிலகங்கள், 3,48,849 பிற தொழிலாளர்கள், 27,782 குறு தொழிலாளர்கள், 388 குறு விவசாயிகள், 616 குறு வேளாண் தொழிலாளர்கள், 1,611 சிறு குடிசைத்தொழிலாளர்கள் மற்றும் 25,167 பிற குறு தொழிலாளர்கள் என மொத்தம் 3,91,315 தொழிலாளர்கள் உள்ளனர். [51] மதுரை மாநகரரானது 14,62,420 மக்களுடன் தமிழக அளவில் மூன்றாவது பெரிய மற்றும் இந்திய அளவில் 31 வது பெரிய மாநகரம் ஆகும் (Metropolitan City).[52][4] 2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 8,73,601 (85.83%) ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 86,886 (8.54%), கிருஸ்துவர்கள் 52,737 (5.18%), மதம் குறிப்பிடாதோர் 3,002 (0.29%), சமணர்கள் 1,324, சீக்கியர்கள் 164, புத்த மதத்தினர் 74, மற்றவர்கள் 77 என்ற எண்ணிக்கையில் இருக்கின்றனர். [53] தமிழ் மொழி அதிக அளவில் பேசப்படும் மொழியாகும்.[17][54][55] சௌராட்டிரம் கி. பி. 16 ஆம் நூற்றாண்டில் மதுரைக்கு இடம் பெயர்ந்த சௌராட்டிரர்களால் பேசப்படுகிறது.[56] ரோமன் கத்தோலிக்க கிறித்தவர்கள், ரோமன் கத்தோலிக்க மதுரை டையோசிசுடனும், புரோசுடண்டு கிறித்தவர்கள் தென்னிந்திய திருச்சபையின் மதுரை – இராமநாதபுரம் திருமண்டலத்தில் இணைந்துள்ளனர். 2001 இல் குடிசை வாழ் மக்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 32.6 சதவீதமாகும். இது தேசிய சராசரியான 15.05% விட மிக அதிகம். (படத்திலிருந்து) 1971–1981 இல் 50% வரை மக்கள் தொகை வளர்ச்சி வீதம் அதிகரிப்பிற்கு 1974 ஆல் மதுரை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 13 பஞ்சாயத்துகள் மதுரையுடன் இணைக்கப்பட்டதே காரணமாகும். 1981 மற்றும் 2001 இல் மக்கள் தொகை வீதம் குறைவிற்கு மதுரை மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, 184 இல் திண்டுக்கல் மற்றும் 1997 இல் தேனி மாவட்டம் உருவாக்கபட்டதே காரணமாகும். கூட்டாக ஆண்டு வளர்ச்சி வீதம் 1971–1981 இல் 4.10 சதவீதமும், 1991–2004 இல் 1.27 சதவீதமும் குறைந்துள்ளது. ஆட்சி மற்றும் அரசியல் மாநகராட்சி மேயர்ராசன் செல்லப்பாஆணையாளர் ஆர். நந்தகோபால்துணை மேயர்கே. திரவியம்சட்டமன்ற உறுப்பினர்கள்மதுரை மத்திதியாகராஜன் [57]மதுரை கிழக்குமூர்த்தி [58]மதுரை வடக்குவி. வி. ராஜன் செல்லப்பா [59]மதுரை தெற்குஎஸ். எஸ். சரவணன்[60]மதுரை மேற்குசெல்லூர் ராசு[61]நாடாளுமன்ற உறுப்பினர்மதுரை மக்களவைத் தொகுதிஆர் கோபாலகிருஷ்ணன் நகரமைப்புச் சட்டம் 1865 இன் படி, மதுரை 1866 ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் நகராட்சியாக ஆக்கப்பட்டது.[35] பின் ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் நடத்தப்பட்டு நகராட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்(1891 மற்றும் 1896 தவிர). அப்போது இந்திய சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற காரணத்தால், ஒவ்வொரு ஆண்டும் இந்திய தேசிய காங்கிரசே வெற்றி பெற்று வந்தது. மதுரை மாநகராட்சி சட்டம், 1971 இன் படி, மே 1, 1971 முதல் மாநகராட்சியாக மேம்பாடு செய்யப்பட்டது. மதுரை தமிழகத்தின் இரண்டாவது பழைய மாநகராட்சியாகும். மாநகராட்சியானது நிர்வாகத்திற்காக 6 துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை: பொது, பொறியியல், வருவாய், பொது சுகாதாரம், நகரத் திட்டமிடல் மற்றும் கணினிப் பிரிவு. இந்தத் துறைகள் அனைத்தும் மதுரை மாநகராட்சி ஆணையாளரின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவரே மாநகராட்சியின் ஒட்டுமொத்த செயல்பாட்டின் தலைவராக உள்ளார். இது தவிர சட்டமியற்றும் அதிகாரம் மாநகராட்சி உறுப்பினர்கள் வசம் உள்ளது. மாநகராட்சியின் 100 வார்டுகளிலிருந்து ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு உறுப்பினர் என 100 உறுப்பினர்கள் மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாநகர் மன்றத்தின் தலைவராக மேயர் செயல்படுகிறார். இவருக்கு உதவியாக துணைமேயரும் உள்ளார். இது தவிர மாநகராட்சி நிர்வாக வசதிக்காக மண்டலங்களாப் பிரிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி அலுவலகம் தல்லாகுளம் அருகே செயல்பட்டு வருகின்றது. மதுரை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளது. மதுரை நகரானது ஐந்து சட்டமன்றத் தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.[62] இது தவிர மதுரை மக்களைவைத் தொகுதியும் உள்ளது. இவற்றிற்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது.[62][63] சட்டம் ஒழுங்கு தமிழக காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மதுரை நகரமானது தனி காவல் துறை மாவட்டமாக உள்ளது.[64] மதுரை மாநகர் காவல் துறையில், தல்லாகுளம், அண்ணா நகர், திலகர் திடல், டவுண்[64] என நான்கு பிரிவுகளுடன் மொத்தம் 27 காவல் நிலையங்களும் உள்ளன.[65] மாநகர் காவல் துறைத் தலைவராக காவல் துறை ஆணையாளர் உள்ளார். புறநகர் பகுதிகளில் சட்டம் ஒழுங்கானது மதுரை மாவட்டக் காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.[66] இது தவிர சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளையும் உள்ளது. இது மாநிலத் தலைநகருக்கு வெளியில் இருக்கும் வெகு சில உயர் நீதி மன்றங்களுள் ஒன்று. இது சூலை 2004 முதல் செயல்பட்டு வருகிறது.[67] போக்குவரத்து சாலைப் போக்குவரத்து தேசிய நெடுஞ்சாலை 7 (வாரணாசி-பெங்களூரு-கன்னியாகுமரி), தேசிய நெடுஞ்சாலை 49 (கொச்சி-தனுஷ்கோடி), தேசிய நெடுஞ்சாலை 45B (திருச்சிராப்பள்ளி-தூத்துக்குடி ), தேசிய நெடுஞ்சாலை 208 (இந்தியா) திருமங்கலம் – கொல்லம் ஆகியவை மதுரை வழிச் செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளாகும். இது தவிர மாநில நெடுஞ்சாலைகளான மா. நெ – 33, மா. நெ – 72, மா. நெ – 72ஏ, மா. நெ – 73 மற்றும் மா. நெ – 73ஏ ஆகியவையும் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வண்ணம் உள்ளன.[68] தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை வட்டங்களுள் மதுரையும் ஒன்றாகும்.[68] இது தவிர மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) இயங்கி வருகிறது. இதன் மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மதுரையில் மூன்று முக்கியப் பேருந்து முனையங்கள் உள்ளன. அவை மாட்டுத்தாவணி ஒருகிணைந்த பேருந்து முனையம்(MIBT), ஆரப்பாளையம் ஆகிய இரண்டும் புறநகர் பேருந்து முனையங்களாகவும், பெரியார் பேருந்து நிலையம் நகர் பேருந்து நிலையமாகவும் உள்ளது. அரசால் இயக்கப்படும் நகர் பேருந்துகள் தவிர 236 பதிவு பெற்ற தனியார் சிற்றுந்துகளும், 12,754 பதிவு பெற்ற தானிகளும் உள்ளன. தொடருந்து மதுரை சந்திப்பு தென் தமிழகத்தின் முக்கிய இரயில் நிலையமாக உள்ளது. இதனைத் தலைமையிடமாகக் கொண்டு தென்னக இரயில்வேயின் மதுரை இரயில்வே கோட்டம் செயல்படுகிறது. இது சென்னையை அடுத்து அதிக வருமானம் தரக் கூடிய கோட்டமாக உள்ளது. மதுரையிலிருந்து நாட்டின் மற்ற முக்கிய நகரங்களான மும்பை, சென்னை, பெங்களூர், டெல்லி, ஜெய்ப்பூர், ஐதராபாத், விசாகப்பட்டினம், கொல்லம், கோவை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, ராமேசுவரம், கன்னியாகுமரி போன்றவற்றை இணைக்கும் வண்ணம் நேரடி தொடருந்து சேவைகளும் உள்ளன. மதுரையானது நாட்டின் பிற பகுதிகளுடன் தொடருந்து சேவைகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மதுரையில் மாநில அரசினால் அறிவிக்கப்பட்ட மோனோ ரயில் சேவை திட்டமிடல் கட்டத்தில் உள்ளது. விமானம் மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் தமிழகத்தின் முக்கிய விமான நிலையங்களுள் ஒன்றாகும். இது நகரின் மையத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கிருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கு உளநாட்டு விமானச் சேவையும் மற்றும் பன்னாட்டு விமானங்கள் இலங்கை, மலேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இயக்கப்படுகிறது. விமான நிறுவனங்களான ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், மிகின் லங்கா, ஸ்பைஸ் ஜெட் ஆகியவற்றால் விமான சேவைகள் விளங்கப்படுகிறது. மதுரை விமான நிலையம் 5.2 இலட்சம் பயணிகளை ஏப்ரல் 2011 முதல் மார்ச்சு 2014 காலகட்டத்தில் கையாண்டுள்ளது. கல்வி மதுரை பல நூற்றாண்டுகளாக தமிழ் கலாச்சாரம், இலக்கியம், இசை, நடனம் மற்றம் பல கலைகளைக் கற்பிக்கும் மையமாக விளங்கியது.[69] மதுரையை மையமாகக் கொண்டு மூன்று தமிழ்ச் சங்கங்கள் இயங்கி வந்துள்ளன.[70] சங்க இலக்கியங்கள் பல இங்கு தான் அரங்கேற்றப்பட்டன எனவும் நம்பப்படுகிறது.[25][69][71] மதுரைத் தமிழ்ச் சங்கம் மற்றும் உலகத் தமிழ்ச் சங்கம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் ஆய்வுக்கும் செயல்படுகிறது. சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம் பழந்தமிழர்களின் மேன்மையை படம் பிடித்து காட்டுகிறது. மதுரையின் பழமையான கல்லூரி, 1881 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அமெரிக்கன் கல்லூரி ஆகும்.[72] நகரின் முதல் பெண்கள் கல்லூரியாக 1948 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட டோக் பெருமாட்டி கல்லூரி உள்ளது.[73] இவை தவிர, தியாகராசர் கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1949), மதுரைக் கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1889),[74] பாத்திமா கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1953), [75] தியாகராசர் மேலாண்மைக் கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1962), நாட்டின் பழமையான மேலாண்மைப்பள்ளிகளுள் ஒன்று மற்றும் சௌராஷ்டிரா கல்லூரி,சௌராட்டிர மேல்நிலைப் பள்ளி, வக்பு வாரியக் கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1964),சரசுவதி நாராயணன் கல்லூரி(துவங்கப்பட்ட ஆண்டு 1966) ஆகியவை நகரின் பழமையான கல்வி நிலையங்களில் குறிப்பிடத்தக்கவை. மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் (ஆரம்ப காலங்களில் மதுரைப் பல்கலைக்கழகம்) 1966 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட, ஒரு மாநிலப் பல்கலைக் கழகமாகும். இதனுடன் மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலுள்ள 109 க்கும் மேலான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன.[76] நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் 47 (தன்னாட்சி, அரசு உதவி, சுயநிதி, உறுப்பு கல்லூரி மற்றும் மாலை நேரக் கல்லூரிகள் உட்பட) பல்கலைக்கழகத்தால் ஏற்பு பெறப்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன.[77] இது தவிர ஏழு பல் தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் 5 தொழிற்பயிற்சிப் பள்ளிகள்(ஐடிஐ) மதுரையில் உள்ளன. இவற்றுள் அரசு தொழிற்பயிற்சிப் பள்ளி, தமிழ்நாடு பல்தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மகளிர் பல்தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை குறிப்பிடத்தக்கன.[10] மதுரை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, திருமங்கலம் என இரு மருத்துவக் கல்வி நிலையங்களும், 11 துணை மருத்துவக் கல்வி நிலையங்களும் மதுரையில் உள்ளன.[10] அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற ஏழு பொறியியல் கல்வி நிலையங்கள் மதுரையில் உள்ளன. இதில் தியாகராஜர் பொறியியல் கல்லூரி பழமையானதாகும்.[10] இது தவிர மதுரையைச் சுற்றிலும் பல சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. 1979 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட மதுரை சட்டக்கல்லூரி, தமிழகத்தில் உள்ள ஏழு அரசு சட்டக் கல்லூரிகளுள் ஒன்றாகும். இது தமிழ்நாடு அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[10][78] இவை தவிர மதுரை நகரில் மூன்று ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், இரு இசைக் கல்லூரிகள், மூன்று மேலாண்மைக் கல்லூரிகள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன.[10] 1965 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் (தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்தது) தென் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வேளாண்மைக் கல்லூரி ஆகும். இதனுடன் மனையியல் கல்லூரி ஒன்றும் உள்ளது.[79] மதுரை நகரில் சுமார் 369 ஆரம்ப, இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.[80] வழிபாட்டிடங்கள் மதுரையில் பல கோவில்கள் இருப்பதால், இது கோவில் நகரம் என அழைக்கப்படுகிறது. மதுரையின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் மீனாட்சியம்மன் கோவில், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்துக் கோவிலாகும். இது வைகையாற்றின் தெற்கில் அமைந்துள்ளது. கோவில் கட்டிடமானது 45-50 மீ உயரம் கொண்ட பல்வேறு கோபுரங்களைக் கொண்டுள்ளது. இதில் தெற்கு கோபுரம் 51.9 மீ (170 அடி) உயரத்துடன் மிக உயரமானதாகும். கருப்ப கிரகத்தின் மேல் இரண்டு தங்க விமானங்களும் அமைந்துள்ளன. பண்டைய தமிழ் இலக்கியங்களில் இக்கோவில் பற்றி குறிப்பிடப்படுவது இதன் பழமைக்குச் சான்றாகும். கோவிலின் தற்போதைய அமைப்பானது கிபி 1623 இலிருந்து 1655 க்குள் கட்டப்பட்டதாகும். [81] தினசரி 15,000 பேர்களும், வெள்ளிக்கிழமைகளில் 25,000 பேர் வரையும் கோவிலைப் பார்வையிடுகின்றனர். சுமார் 33,000 சிற்பங்கள் வரை கோவிலில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.[82] புதிய உலக அதிசயங்களுக்கான முதல் முப்பது பரிந்துரைகளில் இக்கோவிலும் இடம் பெற்றிருந்தது.[83] நகரினுள் அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் கோவிலில் சிவாலயங்களில் காணப்படுவது போன்று நவக்கிரகங்கள் அமைந்துள்ளன.[84][85] மதுரையிலிருந்து 21 கிமீ தொலைவில் சோலைமலை அடிவாரத்தில் அழகர் கோவில் அமைந்துள்ளது.[86] சோலை மலையின் மேல் முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றான பழமுதிர்ச்சோலை அமைந்துள்ளது.[86] காசிமார் பெரிய பள்ளிவாசல் நகரின் பழமையான முசுலிம் வழிபாட்டுத் தலம் ஆகும்.[87] இப்பள்ளிவாசல் 13 ஆம் நூற்றாண்டில் குலசேகரப் பாண்டியனிடமிருந்து தானமாகப் பெற்ற நிலத்தில், ஓமனில் இருந்து வந்த காசி சையது தாசுத்தீன் அவர்களின் மேற்பார்வையில் கட்டப்பட்டது.[88][69][87] சையது தாசுதீனின் வழித்தோன்றல்களே மதுரை நகரின் காசிகளாக தமிழக அரசால் நியமிக்கப்படுகின்றனர்.[89] மதுரை அசரத்தின் தர்காவான மதுரை மக்பரா இப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ளது.[87] முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றான திருப்பரங்குன்றம், மதுரையிலிருந்து எட்டு கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மீனாட்சியம்மன் கோவிலை அடுத்து திருப்பரங்குன்றம் அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவர்கிறது.[86][90] மேலும் மலைக் குன்றின் மீது அசரத்து சுல்தான் சிக்கந்தர் பாதுசாவின் தர்காவும் அமைந்துள்ளது.[91] கோரிப்பாளையம் தர்காவானது கோரிப்பாளையத்தில் அமைந்துள்ளது. கோர் என்ற பாரசீக வார்த்தைக்கு கல்லறை என்பது பொருள். [91] இங்கு அசரத்து சுல்தான் அலாவுத்தீன் பாதுசா, அசரத்து சுல்தான் சம்சுத்தீன் பாதுசா மற்றும் அசரத்து சுல்தான் அபிபுத்தீன் பாதுசா ஆகியோரின் கல்லறைகள் உள்ளது. புனித மரியன்னை தேவாலயமானது கத்தோலிக்க திருச்சபை மதுரை உயர்மறை மாவட்டத்தின் தலைமையிடமாக உள்ளது.[92] கலாச்சாரம், சுற்றுலா மற்றும் கொண்டாட்டங்கள் மதுரை நகரமானது இரவிலும் செயல்பாட்டில் இருப்பதால் "தூங்கா நகரம்" என பரவலாக அறியப்படுகிறது. மதுரை அதிக அளவு சுற்றுலா பயணிகளைக் கவரும் நகரங்களுள் ஒன்று. 2010 ஆம் ஆண்டில் மட்டும் 91,00,000 சுற்றுலா பயணிகள் மதுரை நகருக்கு வருகை தந்துள்ளனர். இவர்களில் 5,24,000 வெளிநாட்டினரும் அடக்கம். மருத்துவச் சுற்றுலாப் பயணிகளும் தற்போது மதுரைக்கு பெருமளவு வருகின்றனர். இந்தோ சரசானிக் பாணியில் கட்டப்பட்ட திருமலை நாயக்கர் மகால் சுற்றுலாப் பயணிகளைப் பெருதும் கவர்கிறது. இது தமிழக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தேசிய நினைவுச் சின்னம் ஆகும். இங்கு தமிழக தொல்லியல் துறையால் திருமலை நாயக்கர் மற்றும் மகாலின் வரலாற்றைக் கூறும் ஒலி - ஒளிக் காட்சிகளும் மாலையில் காட்டப்படுகின்றன.[86] இராணி மங்கம்மாளின் அரண்மனை புதுப்பிக்கப்பட்டு, தற்போது காந்தி அருங்காட்சியமாகச் செயல்படுகிறது. இது நாட்டிலுள்ள ஐந்து காந்தி நினைவு அருங்காட்சியகங்களுள் ஒன்று. இங்கு நாதுராம் கோட்சேவால் கொல்லப்பட்டபோது காந்தி அணிந்திருந்த இரத்தக் கறை படிந்த ஆடை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இவ்வருங்காட்சியத்தை பார்வையிட்டதே தனது நிறவெறிக்கெதிரான அமைதி வழிப் போராட்டத்துக்கு தூண்டுதலாக இருந்தது என மார்டின் லூதர் கிங் குறிப்பிட்டுள்ளார். தல்லாகுளத்தில் அமைந்துள்ள சூழலியல் பூங்கா விளக்கு மற்றும் ஒளியிழைக் கம்பிகளால் அலங்கரிக்கப்பட்ட மரங்கள் மற்றும் நீர்ச் சுனைகளைக் கொண்டுள்ளது(மாலை நேரத்தில் மட்டும் அனுமதி). தமுக்கம் மைதானம் மற்றும் காந்தி அருங்காட்சியகத்துக்கு இடையே அமைந்துள்ள இராசாசி பூங்காவை விடுமுறை நாட்களில் 5000 பேர் வரையும் வேலை நாட்களில் 2000 – 3000 பேர் வரையும் பார்வையிடுகின்றனர். இது தவிர மதுரை – திண்டுக்கல் சாலையில் பரவை அருகே அதிசயம் பொழுதுபோக்கு பூங்காவும் உள்ளது. இது தவிர செயற்கை இழை மைதானம், நீச்சல் குளம் கொண்ட எம். ஜி. ஆர். ரேசு கோர்சு மைதானமும் உள்ளது.[93] இங்கு பல்வேறு தேசிய விளையாட்டுப் போட்டிகளும், பன்னாட்டு கபாடி போட்டிகளும் நடைபெறுகின்றன.[94][95] "ஜில் ஜில் ஜிகர்தண்டா" என்று உள்ளூர் கடைக்காரர்களால் அழைக்கப்படும் சீனப் பாசி கலந்த ஒரு வகைக் குளிர்பானம் மதுரைக்கு வரும் வெளியூர் சுற்றுலாப்பயணிகள் விரும்பி அருந்தும் குளிர்பானமாக உள்ளது. மதுரை நகரில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரைத் திருவிழா, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குதல், தேரோட்டம் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும். ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகும் முழுவதிலுமிருந்து பல இலட்சம் சுற்றுலா பயணிளைக் கவர்கிறது. இதை ஒட்டி திருக்கல்யாணம், தேரோட்டம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.[96] செப்டம்பர் மாதம் நடைபெறும் ஆவணிமூல விழாவில் சிவனின் அறுபத்து நான்கு திருவிளாயாடல்களும் நடத்தப்படுகின்றன. அது தை மாதம் முழு நிலவு நாளில் கொண்டாடப்படும் தெப்பத்திருவிழாவில் அலங்கரிக்கப்பட கடவுள் சிலைகள் தெப்பதில் வைத்து விடப்படுகின்றன.{{sfn|Tourism in Madurai} அதுபோல் பொங்கல் திருநாளை ஒட்டி மதுரை சுற்று வட்டார கிராமங்களில் ஏறுதழுவுதல் (ஜல்லிக்கட்டு) நடைபெறுகிறது. இவை தவிர கோரிப்பாளையம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா, தெற்குவாசல் புனித மேரி தேவாலயத்தில் கொண்டாடப்படும் கிறித்துமசு விழா போன்றவை நகரின் பிற முக்கியத் திருவிழாக்கள்.[97][91] இது தவிர மதுரையை மையமாகக் கொண்டு பல திரைப்படப் படப்பிடிப்புகளும் நடைபெறுகின்றன. ஊடகம் மற்றும் பிற சேவைகள் நகரில் பல்வேறு வானொலி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசு நிறுவனமான அனைத்திந்திய வானொலி, தனியார் நிறுவனங்களான  ரேடியோ சிட்டி ,சூரியன் எப். எம், ரேடியோ மிர்ச்சி, ஹலோ எப். எம் ஆகியன குறிப்பிடத்தக்கவை. தினமலர், தினகரன், தமிழ் முரசு, தினத்தந்தி, தினமணி,[98] ஆகிய காலை நாளிதழ்களும், மாலை மலர், தமிழ் முரசு போன்ற மாலை நாளிதழ்களும், தி இந்து, [99] தி நியூ இந்தியன் எக்சுபிரசு,[98] டெக்கான் கிரானிக்கிள், டைம்ஸ் ஆப் இந்தியா ஆகிய ஆங்கில செய்தித்தாள்களும் மதுரையில் பதிப்புகளைக் கொண்டுள்ளன. பல்வேறு வகையான நிறுவனங்கள் தொலைக்காட்சி இணைப்பை வழங்குகின்றன. மதுரை நகரின் மின்சேவையானது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மதுரையானது தமிழநாடு மின்சார வாரியத்தின் மதுரை வட்டாரத்தின் தலைமையிடமாக உள்ளது. மதுரை நகர் மற்றும் புற நகர் பகுதிகள் மதுரை மாநகர மின்பகிர்மான வட்டத்தின் கீழ் உள்ளது. இது மேலும் ஆறு துணைப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மதுரை நகரில் குடிநீரானது மதுரை மாநகராட்சி மூலம் விநியோகிக்கப்படுகிறது. 2010–2011 காலகட்டத்தில் 87,091 இணைப்புகளுக்கு 950.6 இலட்சம் இலிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி சுகாதாரத் துறை மூலம் சுமார் 400 மெட்ரிக் இடன்கள் அளவு கழிவுகள் சேகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. மழைநீரைச் சேகரிப்பதற்காக சாலையின் ஓரங்களில் மழைநீர் சேகரிப்பு கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை நகரின் முக்கிய பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் முதல் முதலில் 1924 ஆம் ஆண்டு பிரிட்டிசு ஆட்சியின் கீழ் அமைக்கப்பட்டன. பின் 1959 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் விரிவாக்கப்பட்டன. 2011 ஆம் ஆண்டின் சவகர்லால் நேரு தேசிய ஊரக புதுப்பிப்பு திட்டம் மூலம் நகரின் 90 விழுக்காடு பகுதிகள் பாதாள சாக்கடை திட்டத்தில் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. மதுரை நகரானது, பி.எசு.என்.எலின் மதுரை தொலைத் தொடர்பு வட்டத்தின் தலைமையிடமாக உள்ளது. உலகளாவிய நடமாடும் தகவல் தொடர்புகள் திட்டம் (GSM) மற்றும் சிடிஎம்ஏ இணைப்புகளும் மதுரை நகரில் கிடைக்கின்றன். இது தவிர அகலப்பாட்டைஇணைய இணைப்புகளும் கிடைக்கப் பெறுகிறது. பாரத்து சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் அழைப்பாளர் தெரிவு வகை இணைப்பான நெட்ஒன் இணைப்பும் உள்ளது. மதுரை நகரில் 2007, திசம்பர் 17 இல் இருந்து கடவுச் சீட்டு அலுவலகம் இயங்கி வருகிறது. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகியவை இதன் ஆளுகையின் கீழ் உள்ளன. நகரில் தென் மாவட்டங்களில் பெரிய மருத்துவமனையான அரசு இராசாசி மருத்துவமனையும் உள்ளது. பிரச்சினைகள் ஒவ்வொருநாளும் பெருகிவரும் இருசக்கர வாகனங்கள், மகிழுந்துகள் போன்றவற்றின் காரணமாக நகருக்கு ஏற்பட்டுள்ள புதிய சவால்கள், முறைப்படுத்தப்படாத போக்குவரத்து விதிகள், வைகை ஆற்றில் கலந்துவிடப்படும் பல்வேறு விதமான மாசுபட்ட திட மற்றும் திரவக் கழிவுகள், சாலைகளின் ஓரங்களில் தீயநாற்றத்தை ஏற்படுத்தும் குப்பைகள் மற்றும் சாக்கடைகள் எனப் பல சவால்களை மதுரை நகரம் எதிர்கொண்டு வருகிறது. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மதுரை நகர் கடந்த சில ஆண்டுகளாக சந்தித்து வரும் மிக முக்கிய பிரச்சினையாக வைகை ஆறு மாசுபடுவதைக் குறிப்பிடலாம். மதுரை நகரின் முக்கிய சாக்கடைகள், சிறு தொழிற்சாலைகளின் கழிவுநீர் போன்றவை வைகை ஆற்றில் கலக்கப்படுவதால் வைகை ஆறு மாசடைந்து காணப்படுகிறது. இது தவிர வைகையின் இரு கரைகளிலும் உள்ள மக்கள் குப்பைகளை அதிக அளவில் வைகை ஆற்றுக்குள் கொட்டுவதாலும் ஆறு மாசடைகிறது. இவற்றைப் பற்றி உள்ளூர் நாளிதழ்கள் சுட்டிக்காட்டுவதும், மாநகராட்சி நிர்வாகம் தற்காலிக நடவடிக்கை எடுப்பதும் மதுரையில் வழமையாக நடக்கும் நிகழ்வுகள். வைகையாற்றில் கழிவுகள் மக்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் சாக்கடை நீர், ஆற்றின் கரையோரம் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர் மற்றும் நகரின் பல இடங்களில் சேகரிக்கப்படும் மனிதக் கழிவுகள் முதலியன வைகை ஆற்றில நேரடியாக கலந்து விடப்படுகின்றன. இவை தவிர இறைச்சிக் கடை கழிவுகள் முதலிய திடக்கழிவுகளும் ஆற்றுக்குள் கொட்டப்படுகின்றன. இதனால் வைகை ஆறு மாசடைந்து வருகிறது. இதன் உச்சகட்டமாக சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்திற்கு மிக அருகில் பந்தல்குடி கண்மாய் நீர் வைகையாற்றில் கலக்கும் இடம் தற்போது சாக்கடை கலக்கும் இடமாக மாறிவிட்டது. எனவே வருடத்தின் பெருவாரியான நாட்களில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடமும் மாசடைந்து காணப்படுகிறது. போக்குவரத்து பிரச்சினைகள் நீண்ட காலத்திற்கு முன்பு வடிவைக்கப்பட்ட நகரின் சில பிரதான சாலைகள் வளர்ந்து வரும் வாகனப் போக்குவரத்தை சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. சிம்மக்கல், கோரிப்பாளையம், காளவாசல், பழங்காநத்தம், காமராஜர் சாலை போன்ற இடங்களில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. இதனை மனதில் வைத்து வழிமொழியப்பட்ட பறக்கும் சாலைகள் திட்டம் இன்னும் திட்ட அளவிலேயே இருக்கின்றது. ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் மதுரை நகருக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் ஒதுக்கப்பட்டது. இருப்பினும் நெரிசலைக் குறைக்கும் வகையில் புதிய பாலங்கள் எதுவும் இன்னும் அமைக்கப்படவில்லை. சென்னையை அடுத்து மதுரை மற்றும் கோயம்புத்தூர் போன்ற நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று சமீபத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு மெட்ரோ ரயில் போக்குவரத்து மதுரை நகருக்கு கிடைக்குமாயின் தற்போதைய போக்குவரத்துப் பிரச்சினை பெரும்பகுதி குறைக்கப்படும். இதனையும் காண்க புதுமண்டபம் திருமலை நாயக்கர் அரண்மனை காந்தி அருங்காட்சியகம் சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம் அடிக்குறிப்புகள் உசாத்துணைகள் CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: ref duplicates default (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) வெளி இணைப்புகள் பகுப்பு:தமிழ்நாட்டிலுள்ள மாநகரங்கள் பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் பகுப்பு:மதுரை மாவட்டம் பகுப்பு:மதுரை
மதுரை மாவட்டத்தின் பரப்பளவு என்ன?
147.99 கி.மீ.
3,175
tamil
30fad9839
கர்நாடகா (Karnāṭaka) என்பது இந்தியாவின் தென் பகுதியில் உள்ள ஒரு மாநிலமாகும். மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் இம் மாநிலம் நவம்பர் 1,1956 அன்று உருவாக்கப்பட்டது. மைசூர் மாநிலம் என்று அழைக்கப்பட்டு வந்த இம் மாநிலம் 1973 -இல் கர்நாடகா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கருநாடக மாநிலமானது மேற்கில் அரபிப் பெருங்கடலையும் வட மேற்கில் கோவாவையும், வடக்கில் மகாராஷ்டிராவையும், கிழக்கில் ஆந்திரப் பிரதேசத்தையும், தென் கிழக்கில் தமிழ்நாட்டையும், தென் மேற்கில் கேரளாவையும், எல்லைகளாகக் கொண்டுள்ளது. இம் மாநிலம் 74,122 சதுர மைல்கள், அதாவது 191,976 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் 5.83% ஆகும். 30 மாவட்டங்களைக் கொண்டுள்ள இம் மாநிலம் பரப்பளவில் இந்தியாவின் எட்டாவது மிகப் பெரிய மாநிலமாகத் திகழ்வதுடன் மக்கள்தொகையில் இந்திய அளவில் ஒன்பதாவது இடத்தையும் கொண்டுள்ளது. கன்னடம் ஆட்சி மொழியாகவும் பெருமளவு பேசப்படும் மொழியாகவும் உள்ளது. கருநாடகம் என்ற பெயருக்கு பல வித சொல்லிலக்கணம் பரிந்துரைக்கப்பட்டாலும், 'கரு' மற்றும் 'நாடு' என்ற கன்னட வார்த்தைகளில் இருந்துதான் அது உருவாக்கப்பட்டுள்ளது என்பது பொதுவான கருத்து. இந்த வார்த்தைகளின் பொருள் மேட்டு நிலம் என்பதாகும். ஆங்கிலேயர்கள் இம் மாநிலத்தை கர்நாடிக் என்றும் சில சமயங்களில் கர்நாடக் என்றும் குறிப்பிட்டனர். பழங் கற்கால பாரம்பரியத்தைக் கொண்டுள்ள கருநாடகம், புராதன மற்றும் மத்திய கால இந்தியாவின் சில வலிமை வாய்ந்த பேரரசுகளின் தாயகமாகவும் திகழ்ந்துள்ளது. இப் பேரரசுகளால் ஆதரிக்கப்பட்ட தத்துவ ஞானிகளும், இசை வல்லுநர்களும் சமய, பொருளாதார மற்றும் இலக்கிய இயக்கங்களைத் தொடங்கினர். அவை இன்றுவரை நிலைத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவிலேயே கன்னட மொழி எழுத்தாளர்கள்தான் அதிக அளவில் ஞானபீட விருது பெற்றுள்ளார்கள். மாநிலத் தலைநகராக விளங்கும் பெங்களூரு, இந்தியா சந்தித்து வரும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் முன்னோடியாக உள்ளது. வரலாறு கருநாடக வரலாற்றை அப்பகுதியில் கிடைத்துள்ள கைக் கோடரிகள் மற்றும் இதர கண்டுபிடிப்புகள் மூலம் பழங்கற்கால கைக் கோடரி கலாச்சாரத்துடன் அதற்கு இருந்துள்ள தொடர்பை அறிந்துகொள்ள முடிகிறது. புதிய கற்காலக் கலாச்சாரத்தின் சான்றுகளும் இம்மாநிலத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.[8][9] பண்டைய சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தின் எச்சமான ஹரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் கருநாடகத் தங்க சுரங்களைச் சார்ந்ததாக அறியப்படுவதன் மூலம் கருநாடக பகுதி பண்டைய காலம் தொட்டே வாணிபம், கலாச்சாரம் ஆகியவற்றில் முன்னேறி இருப்பது தெரிய வருகிறது. பொது வழக்க சகாப்தத்திற்கு 3 நூற்றாண்டுகளுக்கு முன்னதாக, கருநாடகத்தின் பெரும் பகுதி, பேரரசர் அசோகரின் மௌரிய ஆட்சிக்கு உட்படு முன், நந்தா பேரரசின் கீழ் இருந்தது. நான்கு நூற்றாண்டுகள் தொடர்ந்த சதவாகன ஆட்சி பெருமளவு கருநாடகத்தை அவர்களின் அதிகாரத்தின் கீழ் கொள்ள உதவி புரிந்தது. சாதவாகனர்களின் ஆட்சி இறக்கம் கருநாடகத்தை அடிச்சார்ந்த, முதல் அரசநாடுகளான கடம்பர்கள் மற்றும் மேலைக் கங்க வழியினரும் வளர வழி வகுத்தது. அதுவே, அப்பகுதி பக்கச் சார்பற்ற அரசியல் உருபொருளாக புகுந்து அடையாளம் காணவும் வழி வகுத்தது. மௌரிய சர்மாவால் தொடங்கப்பட்ட கடம்ப வம்சம், பனவாசியை தலைநகராக கொண்டது.[10][11] அது போல், மேலைக் கங்கர் மரபினர், தாலகாட்டை தலைநகராக கொண்டு அமைக்கப் பட்டது.[12][13] கடம்பர், சாளுக்கியர் கடம்பர் வம்சத்தைச் சார்ந்த முதலாவது கன்னடம் மொழியை நிர்வாக மொழியாகப் பயன்படுத்தினர் என்பது கால்மிதி கல்வெட்டு மூலமாகவும் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த செப்பு நாணயங்கள் மூலமாகவும் அறியலாம் [14][15] இவ்வம்சத்தைத் தொடர்ந்து சாளுக்கியர் வலிமை பெற்று ஆட்சியைக் கைப்பற்றினர். தக்காணத்தை முழுவதுமாக ஆட்சிக்குள் கொண்டு வந்த சாளுக்கியர் கருநாடகத்தை முழுவதும் இணைத்த பெருமை பெற்றவர்கள்.[16][17][18][19][20][21] சாளுக்கியர் கட்டிடக் கலை, கன்னட இலக்கியம், இசை ஆகியவற்றை பெரிதும் வளர்த்தனர்.[22][23] விசயநகரப் பேரரசு, இசுலாமியர் ஆட்சி 1565ஆம் ஆண்டு, கருநாடகம் மட்டுமல்லாது தென் இந்தியா முழுவதும் முக்கிய அரசியல் மாற்றத்தைச் சந்தித்தது. பல நூற்றாண்டுகளாக வலிமை பெற்று திகழ்ந்த விசயநகரப் பேரரசு இசுலாமிய சுல்தானகத்துடன் தோல்வியைத் தழுவியது. பின் பிஜபூர் சுல்தானகத்திடம் ஆட்சி சிறிது காலம் இருந்து, பின் மொகலாயர்களிடம் 17ஆம் நூற்றாண்டு இடம் மாறியது சுல்தானகத்தின் ஆட்சிகளின் போது உருது மற்றும் பாரசீக இலக்கியங்களும் வளர்க்கப்பட்டன. இதைத் தொடர்ந்து வடக்கு கருநாடகம் ஐதராபாத் நிசாமாலும் தெற்கு கர்நாடகம் மைசூர் உடையார்களாளும், ஆளப்பட்டது. மைசூர் அரசரான இரண்டாம் கிருட்டிணராச உடையார் மரணத்தைத் தொடர்ந்து, தளபதியான ஹைதர் அலி ஆட்சியைக் கைப்பற்றினார். ஆங்கிலேயருடன் பல போர்களில் வெற்றி கொண்ட அவரைத் தொடர்ந்து அவரது மகன் திப்பு சுல்தான் ஆட்சிப் பொறுப்பேற்று ஆங்கிலேயரை எதிர்த்தார். ஆங்கிலேயருடனான நான்காவது போரிற் திப்பு சுல்தான் மரணம் அடைந்ததன் மூலம் மைசூர் அரசு ஆங்கிலேய அரசுடன் 1799 இல் ஒருங்கிணைக்கப்பட்டது. புவியமைப்பு கருநாடகத்தின் மேற்கில் அரபிக் கடலும், வடமேற்கில் கோவாவும், வடக்கில் மகாராஷ்டிரமும், கிழக்கில் ஆந்திரப் பிரதேசமும், தென்கிழக்கில் தமிழகமும், தென்மேற்கில் கேரளமும் அமைந்துள்ளன. கருநாடகத்தில் பெரும்பாலும் மலைப் பகுதிகளே காணப்படுகிறது. கருநாடக மாநிலத்தின் தென் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. காவிரி ஆறு கருநாடகத்தில் தொடங்குகிறது. இம் மாநிலம் 3 முக்கிய நிலப்பகுதிகளைக் கொண்டுள்ளது கரவாளி கடற்கரை நிலப்பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான மலைப்பாங்கான மலைநாடு நிலப்பகுதி மற்றும் தக்காண பீடபூமியின் பாயலுசீமா சமவெளி. மாநிலத்தின் பெரும்பகுதி பாயலுசீமா சமவெளியின் வரண்ட நிலப்பகுதியாகும். பெயர் [24]. கருநாடகத்தில் பாயும் ஆறுகளாவன: காவேரி, துங்கபத்ரா, கிருஷ்ணா ஆறு மற்றும் சரவதி . கருநாடகத்தில் நான்கு பருவகாலங்கள் உணரப்படுகின்றன. குளிர்காலம் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களிலும், கோடைக்காலம் மார்ச் மற்றும் மே மாதங்களிலும், பருவக்காற்று காலம் ஜுன் முதல் செப்டம்பர் வரையிலும்,பருவக்காற்று கடைக்காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் உணரப்படுகின்றது.. மாவட்டங்கள் 1,91,791 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கர்நாடக மாநிலம் 30 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 30 மாவட்டங்கள், பெங்களூர், பெல்காம், குல்பர்கா, மைசூர் ஆகிய நான்கு ஆட்சிப்பிரிவுகளுள் அடங்கும். பெங்களூர் ஆட்சிப்பிரிவு பெங்களூர் மாவட்டம் பெங்களூரு ஊரக மாவட்டம் சித்ரதுர்கா மாவட்டம் தாவண்கரே மாவட்டம் கோலார் மாவட்டம் ஷிமோகா மாவட்டம் தும்கூர் மாவட்டம் பெல்காம் ஆட்சிப்பிரிவு பாகல்கோட் மாவட்டம் பெல்காம் மாவட்டம் பிஜப்பூர் மாவட்டம் தார்வாட் மாவட்டம் கதக் மாவட்டம் ஹவேரி மாவட்டம் உத்தர கன்னடம் மாவட்டம் குல்பர்கா ஆட்சிப்பிரிவு பெல்லாரி மாவட்டம் பீதர் மாவட்டம் கொப்பல் மாவட்டம் ராய்ச்சூர் மாவட்டம் மைசூர் ஆட்சிப்பிரிவு சிக்மகளூர் மாவட்டம் சாமராசநகர் மாவட்டம் தெற்கு கன்னடம் மாவட்டம் ஹாசன் மாவட்டம் குடகு மாவட்டம் மாண்டியா மாவட்டம் மைசூர் மாவட்டம் உடுப்பி மாவட்டம் மக்கள் தொகையியல் 2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கருநாடகத்தின் மொத்த மக்கள் தொகை 61,095,297 ஆக உள்ளது. அதில் 30,966,657 ஆண்களும்; 30,128,640 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 973 பெண்கள் வீதம் உள்ளனர். 2001 ஆண்டின் மக்கள் தொகையுடன் ஒப்புநோக்கும்போது மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.60% உயர்ந்துள்ளது. மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 319 நபர்கள் வீதம் உள்ளனர். நகரப்புறங்களில் 38.67% மக்களும், மக்கள் கிராமப்புறங்களிலும் 61.33% வாழ்கின்றனர். சராசரி கல்வியறிவு 75.36% ஆகவும், ஆண்களின் கல்வியறிவு 82.47 % ஆகவும், பெண்களின் கல்வியறிவு 68.08% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,161,033 ஆக உள்ளது.[25] சமயம் ஆறு கோடியே பதினொன்று இலட்சம் மக்கள்தொகை கொண்ட கருநாடக மாநிலத்தில் 51,317,472 (84.00 %) மக்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுபவராகவும், 7,893,065 (12.92%) இசுலாம் சமயத்தைப் பின்பற்றுபவராகவும், 1,142,647 (1.87%) கிறித்தவ சமயத்தைப் பின்பற்றுபவராகவும், 440,280 (0.72%) சமண சமயத்தைப் பின்பற்றுபவராகவும், 95,710 (0.16%) பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவராகவும், 28,773 (0.05%) சீக்கியம்|சீக்கிய சமயத்தைப்]] பின்பற்றுபவராகவும் உள்ளனர். பிற சமயத்தை பின்பற்றுவர்கள் எண்ணிக்கை 11,263 (0.02 %) ஆக உள்ளது. சமயம் குறிப்பிடாதவர்கள் எண்ணிக்கை 166,087 (0.27%) ஆக உள்ளது. மொழிகள் கர்நாடகா மாநிலத்தில் கன்னட மொழி அலுவல் மொழியாகவும் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழியாகவும் உள்ளது. சுமார் 64.75% மக்கள் இம்மொழியை பேசுகின்றனர். இது தவிர, தமிழ், மராத்தி, கொங்கனி, மலையாளம், துளு, பஞ்சாபி, உருது மற்றும் இந்தி ஆகிய மொழிகளும் பேசப்படுகின்றன. பண்பாடு பொருளாதாரம் கடந்த ஆண்டு கருநாடகத்தின் உள்மாநில உற்பத்தி சுமார் ரூ. 2152.82 பில்லியன் ($ 51.25 billion) என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் வேகமாக பொருளாதார வளர்ச்சி பெறும் மாநிலங்களில் ஒன்றாக கருநாடகம் கருதப்படுகிறது.[26] இம்மாநிலத்தின் 2007–2008 ஆண்டுகளுக்கான உள்மாநில உற்பத்தி வளர்ச்சி விகிதம் சுமார் 7% .[27] 2004-05 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கருநாடக மாநிலத்தின் பங்களிப்பு சுமார் 5.2% சதவிதமாக இருந்தது [28] கருநாடகம் கடந்த பத்தாண்டுகளில் மிகப்பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது. பத்தாண்டுகளில் உள்மாநில உற்பத்தி 56.2% சதவிகிதமும், தனி நபர் உள்மாநில உற்பத்தி 43.9% சதவிகிதமும் வளர்ந்துள்ளது.[29] 2006–2007 ஆம் ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ. 78.097 பில்லியன் ($ 1.7255 பில்லியன்) கருநாடகம் அன்னிய நேரடி முதலிடாக பெற்று இந்திய மாநிலங்களில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.[30] 2004ஆம் ஆண்டின் முடிவில், கருநாடகத்தில் வேலையில்லாதவர் விகிதம் 4.94% . இது தேசிய சராசரியான 5.99% விட குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.[31] கருநாடகத்தின் தலைநகரமான பெங்களூர் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரமாக கருதப்படுகிறது. கருநாடகத்தில் தங்கச் சுரங்கங்கள் அமைந்துள்ளன. கருநாடகம் மிகப்பெரிய பொதுத் துறை தொழிலகங்களின் மையமாக விளங்குகிறது. இந்துஸ்தான் வானூர்தியல் நிறுவனம் (Hindustan Aeronautics Limited) , தேசிய விண்வெளி ஆய்வகங்கள்( National Aerospace Laboratories), பாரத மிகுமின் தொழிலகம் (Bharat Heavy Electricals Limited) , இந்திய தொலைப்பேசி தொழிலகங்கள்(Indian Telephone Industries), இந்துஸ்தான் மெஷின் டுல்ஸ்(Hindustan Machine Tool), இந்திய மற்றும் பன்னாட்டு கணிப்பொறி நிறுவனங்கள் பெங்களூரு நகரில் உள்ளன. இந்திய அறிவியல் கழகம் மற்றும் இஸ்ரோ போன்ற அறிவியல் மையங்கள் பெங்களூருவில் அமைந்துள்ளது. சுற்றுலா மற்றும் வழிப்பாட்டுத் தலங்கள் கர்நாடக மாநில முக்கிய சுற்றுலா தலங்களும் கோயில்களும்; மைசூர் அரண்மனை, ஜோக் அருவி, சிவசமுத்திரம் அருவி, ஹம்பி, ஹளேபீடு, பாதமி குகைக் கோயில்கள், பந்திப்பூர் தேசியப் பூங்கா, பன்னேருகட்டா தேசியப் பூங்கா, அன்ஷி தேசியப் பூங்கா, சரவணபெலகுளா, அமிர்தேஸ்வரர் கோயில், உடுப்பி கிருஷ்ணர் கோயில், மேல்கோட்டை செல்வநாராயணர் கோயில், முருகன் கோயில், கேசவர் கோவில், சென்னகேசவர் கோயில், சென்னகேசவர் கோயில், பேளூர், மூகாம்பிகை கோயில், விருபாட்சர் கோயில், ஹோய்சாலேஸ்வரர் கோவில், திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில், முருதீசுவரா கோயில், சாமுண்டீசுவரி கோயில் மற்றும் தர்மஸ்தால கோயில் ஆகும். இவற்றையும் பாக்க மேற்கோள்கள் வெளி இணைப்பு பகுப்பு:கர்நாடகம் பகுப்பு:இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்
கர்நாடகாவின் பழைய பெயர் என்ன?
மைசூர்
168
tamil
d441d838c
தொலைக்காட்சி (Television,TV ) என்பது ஒரு தொலைத்தொடர்பு ஊடகம் ஆகும். இதன் மூலம் ஒற்றை வண்ண (கறுப்பு-வெள்ளை) அல்லது வண்ணமிகு ஒளிதங்களைப் பரப்பவும் பெறவும் முடியும். இது காட்சியின் ஒளி, ஒலியை பதிவு செய்து ஒன்றாக இணைத்து ஒளிபரப்பப்படுகிற விதத்தில் தொகுத்துத் தருகின்றது. வழக்குமொழியில் தொலைக்காட்சி என்பது தொலைக்காட்சிப் பெட்டியையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொழினுட்பம் சார்ந்த தொலைக்காட்சி பரப்புகையையும் சூழமைவுக்கேற்ப குறிக்கலாம். தொலைவில் நிகழும் காட்சிகளைக் கொணர்ந்து காட்டுவதால் தொலைக்காட்சி எனப்படுகிறது. 1920களிலேயே தொலைக்காட்சிப் பெட்டிகள் புழக்கத்தில் வந்தமையால் இன்று வீடுகளிலும் வணிக மற்றும் பிற நிறுவனங்களிலும் தொலைக்காட்சிப் பெட்டிகள் சாதாரணமாக உள்ளன. விளம்பரங்கள், மனமகிழ்வு நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளுக்கான ஊடகமாக பெரிதும் வளர்ந்துள்ளது. 1950களிலிருந்து மக்கள் கருத்தை உருவாக்குவதில் தொலைக்காட்சி ஊடகம் முன்னிலை வகிக்கிறது.[1] ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளைத் தவிர, 1970கள் முதல் ஒளிதப் பேழைகள், சீரொளி வட்டுக்கள், டிவிடிக்கள், அண்மையில் நீலக்கதிர் வட்டுக்கள் வந்தபிறகு பதிவு செய்யப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காணவும் தொலைக்காட்சிப் பெட்டிகள் பயனாகின்றன. அண்மைக் காலங்களில் இணையத் தொலைக்காட்சி என இணையம் மூலமாகவும் தொலைக்காட்சி காணக்கூடிய வசதி வந்துள்ளது. மூடிய-மின்சுற்று தொலைக்காட்சி (CCTV) போன்ற மற்ற வகைகள் இருப்பினும் இந்த ஊடகத்தின் முதன்மைப் பயன்பாடு பரப்புகைத் தொலைக்காட்சிக்காகும். 1920களில் உருவான வானொலி ஒலிபரப்பினை ஒட்டி தொலைக்காட்சி ஒளிபரப்பும் வடிவமைக்கப்பட்டது. மிகுந்த ஆற்றல் மிக்க வானலைப் பரப்புனர்களால் ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி குறிப்பலைகள் தனிநபர் தொலைக்காட்சிப் பெட்டிகளை எட்டுகின்றன. தொலைக்காட்சி பரப்புகை அமைப்பு பொதுவாக 54–890 மெகா ஏர்ட்சு அலைக்கற்றையில் வரையறுக்கப்பட்ட அலைவரிசைகளில் ஒளிபரப்பப்படுகிறது.[2] தற்காலத்தில் பல நாடுகளிலும் ஒலிக் குறிப்பலைகள் முப்பரிமான ஒலியாகவும் சூழொலியாகவும் பரப்பப்படுகின்றன.2000 ஆம் ஆண்டு வரை தொலைக்காட்சி சேவைகள் பொதுவாக அலைமருவிய குறிப்பலைகளாக ஒளிபரப்பப்பட்டன. கடந்த பத்தாண்டுகளாக பல நாடுகளிலும் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் முற்றிலும் எண்ணிம வடிவத்திற்கு மாறி விட்டன. ஓர் வழமையான தொலைக்காட்சிப் பெட்டியில் பல மின்னணுவியல் சுற்றட்டைகள் பொருத்தப்பட்டிருக்கும்; இவற்றில் முதன்மையானவை பரப்பப்பட்ட அலைக்கற்றையிலிருந்து விரும்பிய அலைவரிசையை மட்டும் பிரித்தெடுக்கும் இசைவித்த வானலை அலைவெண் வாங்கியும் அந்த அலைவரிசையை அதே அதிர்வெண் கொண்ட உட்புற அலைவரிசையுடன் கலக்க வைத்து தொலைக்காட்சி குறிப்பலைகளைப் பெறும் கலவைக்கருவியும் ஆகும். இத்தகைய இசைவியும் கலவைக்கருவியும் இல்லாத தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒளிதக் காட்டிகள் எனப்படுகின்றன. தொலைக்காட்சி குறிப்பலைகள் பல சீர்தரங்களில் அமைந்துள்ளன. மேலும் ஒளிபரப்பு அமைப்புகளும் எண்ணிமத் தொலைக்காட்சி மற்றும் உயர் வரையறு தொலைக்காட்சி (HDTV) என முன்னேறி வருகின்றன. தொலைக்காட்சி அமைப்புகள் பொதுவாக நேரடி கண்காணிப்பு கடினமானதாகவோ ஆபத்தானதாகவோ உள்ள இடங்களில் கடுங் கண்காப்பு, தொழிற்சாலை செயல்முறைக் கட்டுப்பாடு மற்றும் ஆயுத வழிசெலுத்துமை போன்ற செயற்பாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. தொலைக்காட்சிகளின் சமூகத் தாக்கமாக சிறுவர்களின் தொலைக்காட்சிக் காணலுக்கும் கவனம்குறைந்த மிகு இயக்க பிறழ்வு (ADHD)க்கும் தொடர்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.[3] விளம்பரப்படுத்தல் தொலைக்காட்சியானது இன்று சக்திவாய்ந்த, மக்களைக்கவர்ந்திழுக்கும் சாதனமாக உள்ளமையால் விளம்பரதாரர்கள் தமது விளம்பரங்களைக் காட்சிப்படுத்த அநேகமாகத் தொலைக்கட்சிகளையே நாடுகின்றனர். பல தொலைக்காட்சிகள் விளம்பரதாரர்கள் கொடுக்கும் பணத்தின் அடிப்படையில் விளம்பரங்களைக் காட்சிப்படுத்துகின்றன. விளம்பரம் தொலைக்காட்சியின் முக்கிய வருமானங்களில் ஒன்றாகவும் உள்ளது. தொலைக்காட்சிப் பெட்டி தொலைக்காட்சிப் பெட்டி (வழக்கில் தொலைக்காட்சி, TV set, TV, அல்லது ஐக்கிய இராச்சியத்தில் "இட்டெல்லி" ) என்பது தொலைக்காட்சியை காண்பதற்கான மின்னணுவியல் கருவியாகும். இதில் அதிர்வெண் இசைவி, காண்திரை மற்றும் ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டிருக்கும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் பயனர் கருவியாக தொலைக்காட்சிப் பெட்டி விளங்குகிறது. முதல் தொலைக்காட்சிப் பெட்டிகள் 1923ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டன. துவக்கத்தில் வெற்றிடக் குழல்களையும் எதிர்முனைக் கதிர்க்குழல் காண்திரைகளையும் பயன்படுத்தினர். 1953ஆம் ஆண்டில் வண்ணத் தொலைக்காட்சிகள் அறிமுகமான பிறகு இதன் பரவல் கூடுதலானது. பல சுற்றுப்புறப் பகுதிகளிலும் வீடுகளின் கூரைகளில் தொலைக்காட்சி அலைவாங்கிகளைக் காண முடிந்தது. முதல் தலைமுறை வீட்டுக் கணினிகளின் கணித்திரையாக தொலைக்காட்சிப் பெட்டிகளே விளங்கின. தற்கால தொலைக்காட்சிப் பெட்டிகளில் நீர்மப் படிக தட்டை காண்திரைகளும், திண்மநிலை மின்சுற்றுக்களும், நுண்செயலி கட்டுப்பாடுகளும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் பல்வகையான ஒளிதக் குறிப்பலை இடைமுகங்களுடன் அமைந்துள்ளன. இதனால் தொலைக்காட்சிப் பயனர் வான்வழி இலவசமாக ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சிகளுடன் கட்டணம் செலுத்திக் காணக்கூடிய கம்பிவடம் மற்றும் செய்மதித் தொலைக்காட்சிகளையும் எண்ணிம ஒளிதக் குறுவட்டுகள் அல்லது பதிவு நாடாக்களில் பதிவு செய்யப்பட்ட ஒளிதங்களையும் காண முடிகிறது. இதே கருவி மூலம் வீட்டுப் பாதுகாப்பு அமைப்புகளின் ஒளிதங்களையும் காணலாம். காட்சித்தொழிநுட்பம் வட்டு (Disk) ஆரம்பகால கட்டத்தில் உருவங்களை உருவாக்கவும் மற்றும் உருவப்பெருக்கத்திற்கும் ஒரு சுழல் வட்டை பயன்படுத்தினர். இவை பொதுவாக குறைந்த தெளிவுத்திறன் மற்றும் திரை அளவு கொண்டிருந்தைமையால் பொதுமக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. எதிர்மின் கதிர் குழாய் (CRT) எதிர்மின்னிகளை வெளியிடும் இலத்திரன் துப்பாக்கியையும், ஒளிரும் திரையையும் கொண்ட, வெற்றிடத்தாலான ஒரு குழாயே எதிர்மின் கதிர் குழாய் ஆகும் (cathode ray tube (CRT)). எதிர்மின்னியையும் ஏனைய அணுத் துணிக்கைகளையும் கண்டறிவதில் இவ்வுபகரணத்திற்குப் பெரும்பங்கு உண்டு. இது கடந்த தசாப்தத்தில் தொலைக்காட்சியிலும், கணினித் திரையாகவும் பயன்பட்டது. தற்போது புதிய தொழில்நுட்பங்களால் இது பின்தள்ளப்பட்டாலும் சில இடங்களில் இது இன்றும் பயன்பாட்டில் உள்ளது. இலக்கமுறைத் ஒளிச்செயலாக்கம் (DLP) இலக்கமுறைத் ஒளிச்செயலாக்கம் Digital Light Processing (DLP) என்பது ஒரு வகையான ஒளிப்படக்காட்டி தொழில்நுட்பத்திலமைந்த இலக்கமுறை நுண்ணாடிக் கருவியாகும். சில இலக்கமுறைத் ஒளிச்செயலாக்கம் தொலைக்காட்சி அலை வழிப்படுத்தியைக் கொண்டிருப்பதால் அது ஒரு தொலைக்காட்சிதை் திரை போல காட்சியளிக்கும். மின்மக் காட்சிச் சட்டம் (Plasma) மின்மக் காட்சிச் சட்டம் (plasma display panel) (PDP ) என்பது பெருந்திரைத் தொலைக்காட்சிகளில் பொதுவாக 30 இஞ்சு அளவுகளில் (76 செமீ அல்லது அதற்கும் பெரியது) பயன்படுத்தப்படும் தட்டையான காட்சி சட்டம் ஆகும்.அயனியாக்கப்பட்ட வாயுக்களின் கலவையைக் கொண்ட இரண்டு கண்ணாடியின் சட்டங்களுக்கு இடையில் பல சிறிய கலங்களைக் (cells) கொண்டிருக்கிறது. இந்த செல்களில் உள்ள வாயு மின்னியல் ரீதியாக மின்மமாக மாறுகிறது. மின்மமானது புறவூதா ஒளிகளை உமிழ்கிறது. மின்மக் காட்சிகளிலிருந்து (plasma) படிக நீர்மத் திரைகள் (LCD) மாறுபட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மற்றொரு மெல்லிய எடை கொண்ட தட்டையான காட்சி வெளிப்பாடு ஆகும். அது நின்றொளிர்தல் சார்ந்ததல்ல.[4][5][6] திரவப் படிகக் காட்சி (LCD) ஒரு திரவ படிக காட்சி (LCD) என்பது உரை, படங்கள் மற்றும் அசையும் படங்கள் போன்ற தகவல்களைக் இலத்திரன் முறையில் காட்சிப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு மெல்லிய தட்டையான சட்டமாகும். இவை கணிப்பொறிகளின் கணினித்திரைகள், தொலைக்காட்சிகள், கருவிகளின் உரைகள், மற்றும் பல வகையான வானூர்தி கருவிளின் திரைகளில் பயன்படுத்தப்படுகின்றன. நுகர்வோரின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் கருவிகளாகிய ஒளிபரப்பி, விளையாட்டுக் கருவிகள், மணிக்காட்டிகள், கைக்கடிகாரங்கள், கணிப்பான்கள் மற்றும் தொலைபேசிகளிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் எளிதான கட்டமைப்பு, பெயர்திறன் மற்றும் எதிமின் கதிர் குழாய்(CRT) காட்சிகள் தொழில்நுட்பத்தை விட மிகப் பெரிய திரைகளிலும் காட்சிகளை உருவாக்கும் கட்டமைப்பு விதம் இவற்றின் மிகச் சிறந்த சிறப்புக்கூறுகளில் அடங்கும். இவற்றின் மிகக் குறைந்த மின்சாரத்தை நுகர்ந்து செயல்படும் விதத்தினால் மின்கலத்தினால்-இயக்கப்படும்} மின்னணு கருவிகளில் பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. இது, திரவ படிகங்களால் நிரப்பப்பட்டு, பிம்பங்களை உருவாக்குவதற்காக ஓர் ஒளி மூலம்(பின்னொளி) அல்லது எதிரொளிப்பியின் முன் வரிசையமைப்பில் வைக்கப்படும் பல படத்துணுக்கு அல்லது படவணுக்களாலான (Pixel), மின்னணு முறையில் ஒழுங்குபடுத்தப்பட்ட ஓர் ஒளியியல் சாதனம் ஆகும். LCD தொழில்நுட்பம் உருவாவதற்கு வழிவகுத்த முந்தைய கண்டுபிடிப்பான திரவ படிகங்களின் கண்டுபிடிப்பு சுமார் 1888 ஆம் ஆண்டு காலத்தில் நிகழ்ந்ததாக தெரியவருகிறது.[7] 2008 ஆம் ஆண்டு, உலகளாவிய LCD திரைகளுடன் கூடிய தொலைக்காட்சிகளின் விற்பனை CRT யின் விற்பனை எண்ணிக்கையை விட மிஞ்சியிருந்தது. கரிம ஒளிகாலும் இருமுனையம் (OLED) கரிம ஒளிகாலும் இருமுனையம் (OLED, organic light-emitting diode) என்பது ஒரு ஒளிகாலும் இருமுனையம் (LED), இதன் உமிழும் மின்னொளிர்வுப் பட்டை ஒரு கரிமச் சேர்வையைக் கொண்டு உருவாக்கப்பட்ட படலம் ஆகும். இச்சேர்வை மின்னூட்டம் பெறும் போது ஒளியை உமிழ்கிறது. கரிமக் குறைக்கடத்தியைக் கொண்ட இந்த மின்னொளிர்வுப் பட்டை இரு மின்முனைகளுக்கிடையில் அமைந்துள்ளது. பொதுவாக, இந்த மின்முனைகளில் ஒன்று ஒளிபுகு தன்மை கொண்டதாக இருக்கும். கரிம ஒளிகாலும் இருமுனையங்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளின் திரைகள், கணினித் திரைகள், நகர்பேசிகள், தனிநபர் எண்மத்துணைகள் போன்றவற்றில் எண்ணிமக் காட்சிகளை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன[8]. தொலைக்காட்சிப் பெட்டிகளின் விற்பனை வட அமெரிக்காவில் சராசரியாக ஏழுவருடங்களுக்கு ஒருமுறை ஒருவர் தொலைக்காட்சிப் பெட்டியொன்றை வாங்குகின்றார். ஒருவீட்டில் சராசரியாக 2.8 தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளன. 2011 ஆம் ஆண்டளவில் 48 மில்லியன் தொலைக்காட்சிப் பெட்டிகள் விற்கப்பட்டன. அவற்றின் சராசரி விற்பனைத்தொகை 460 அமெரிக்க டொலர்களாகவும் சராசரி அளவு 38 அங்குலமாகவும் உள்ளது. Note: Vendor shipments are branded shipments and exclude OEM sales for all vendors தொலைக்காட்சி பார்ப்பதன் நன்மைகள் தொலைக்காட்சி பார்ப்பதால் நாம் உலகத்தில் நடக்கும் விடயங்களை அறியலாம். தொலைக்காட்சியில் சிறுவர்கள் கல்வி சம்பந்தமானவற்றை பார்க்கலாம். நாம் தொலைக்காட்சியில் பாட்டுக்களை கேட்டு மகிழலாம். விந்தைமிகு விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால் நாளுக்கு நாள் புதிய பல கருவிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. மக்கள் வாழ்க்கையை இன்பமயமாக்குவதற்கு அவை பெரிதும் உதவுகின்றன. வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் ஆகியன விஞ்ஞானத்தின் விந்தைமிகு வெளிப்பாடுகளிற் சிலவாகும். தொலைக்காட்சிகளால் கல்வி சார்ந்த பல விடயங்களை மாணவ்ர்கள், மற்றும் ஆர்வலர்கள் கன்டு மகிழ்கிரார்கள்.சில விடயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். உலகின் மிகவும் பலராலும் பார்க்கப்படும் சிறந்த் பொழுதுபோக்குச் சாதனமாகும். தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்படும் தீமைகள் தொலைக்காட்சியை ஒருவர் மிக அருகிலிருந்தோ அல்லது தொடர்ந்து அதிக நேரமாகவோ பார்த்தால் அவர் கண் பார்வை பாதிக்கப் பட வாய்ப்புண்டு. தொலைக்காட்சியை ஒருவர் அதிகமாக பார்ப்பதால் அது கல்வி போன்ற விடயங்களிலிருந்து அவர் கவனத்தைக் குறையச்செய்து விடவும் வாய்ப்புண்டு. தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்படும் தீமைகளை தவிர்க்கும் வழிகள் தொலைக்காட்சியை பத்தடி தூரத்திற்கு பின்னிருந்து பார்க்க வேண்டும். தொலைக்காட்சியை அதிக நேரம் தொடர்ந்து பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். சான்றுகோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:ஒளியியல் பகுப்பு:ஒளி * பகுப்பு:அமெரிக்கக் கண்டுபிடிப்புகள் பகுப்பு:தொடர்பியல் பகுப்பு:செருமானியக் கண்டுபிடிப்புகள்
தொலைக்காட்சி எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
1920
515
tamil
4f99ce2e0
எம். ஜி. ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், சனவரி 17, 1917 – திசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர். எம். ஜி. சக்கரபாணிக்குத் தம்பியான இவர்,[1] தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார். காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.[2] சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார். இவர் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருதினை பெற்றவர்.[3] தனிப்பட்ட வாழ்க்கை இளமைப்பருவம் இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் (1880 - 5/08/1952) [4]) மகனாகப் பிறந்தார்.[5][6] அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் வழக்கறிஞராக கேரளாவில் பணிபுரிந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப் படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமாவார். காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். இல்லறம் முதல் திருமணம் எம்.ஜி.ஆர் முதலில் தங்கமணியை மணந்தார். பிரசவத்திற்காகத் தாய் ஊருக்குச் சென்ற தங்கமணிக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பின் தங்கமணியும் உடல்நலக் குறைவினால் இறந்தார். இரண்டாவது திருமணம் அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் எம்.ஜி.ஆர். இருவருக்கும் குழந்தைகள் இல்லை. பின்னர் சதானந்தவதி நோய்க் காரணமாக இறந்தார்.[7] மூன்றாவது திருமணம் ம. கோ. இரா. இரண்டாவது கதாநாயகனாகத் தியாகராஜ பாகவதர் தயாரித்த ராஜ முக்தி படத்தில் நடித்தார். அப்படத்தில் வைக்கம் நாராயணி ஜானகி என்னும் வி. என். ஜானகி கதாநாயகியாக நடித்தார். அவர் ம. கோ. இரா.வின் முதல் மனைவியான தங்கமணி சாயலில் இருந்தார். இதனால் ஜானகியின் மீது ம. கோ. இரா.விற்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அவ்வீர்ப்பு மோகினி படத்தில் சேர்ந்து நடித்தபொழுது இருவரும் நெருங்கிப் பழகினர். 1950 ஆம் ஆண்டில் மருதநாட்டு இளவரசி படத்தில் கதைத் தலைவனாக ம. கோ. இரா.வும் கதைத்தலைவியாக ஜானகியும் நடிக்கும்பொழுது காதலாக மாறியது. அக்காலகட்டத்தில் ம. கோ. இரா.வால் ஜானகிக்கு எழுதப்பட்ட காதற்கடிதங்கள் ஜானகியின் முதற்கணவரான கணபதிபட்டிக் கைகளில் கிடைத்தன. கணபதிபட்டிற்கும் ஜானகிக்கும் இடையில் சண்டை முற்றியது. ஜானகி நள்ளிரவொன்றில் தன் மகனுடன் தனது வீட்டைவிட்டு வெளியேறி, அப்பொழுது லாயிட்ஸ் சாலையில் (தற்பொழுது அவ்வை சண்முகம் சாலை) குடியிருந்த ம. கோ. இரா.வின் வீட்டிற்கு அடைக்கலம் தேடிவந்தார். ம. கோ. இரா. அவரைத் தனது வீட்டிற்கு எதிரே இருக்கும் தெருவில் ஒரு வீட்டில் குடிவைத்தார். கேரளாவில் ஒரு கோவிலில் சில நண்பர்கள் முன்னிலையில் ம. கோ. இரா.வும் ஜானகியும் மாலை மாற்றிக் கொண்டனர். ஜானகிக்கு மகனான அப்பு என்ற சுரேந்திரனை ம. கோ. இரா. தன் வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டார்.[8] இத்திருமணத்தை ம. கோ. இரா.வின் அண்ணனும் நடிகருமான ம. கோ. சக்ரபாணியும், குடும்ப நண்பரும் நடிகருமான சி. டி. இராஜகாந்தமும் ஏற்க மறுத்தனர். எனினும் ம. கோ. இரா.வின் இரண்டாம் மனைவி சதானந்தவதி உயிரோடு இருந்ததால் தம் திருமணத்தைப் பதிவுசெய்து கொள்ளாமலேயே ம. கோ. இரா.வும் ஜானகியும் உடனுறைந்தனர் (Lived Together). 12 ஆண்டுகள் கழித்து 1962 பிப்ரவரி 25 ஆம் நாள் சதானந்தவதி மறைந்த பின்னர் சூன் 14ஆம் நாள் ம. கோ. இரா.வும் ஜானகியும் சட்டப்படி தம் திருமணத்தைப் பதிவு செய்துகொண்டனர். இருவரும் லாயிட்சு சாலை வீட்டிலிருந்து வெளியேறி இராமவரம் தோட்டத்திற்குச் சென்று குடியேறினர்.[9] வளர்ப்பு குழந்தைகள் மூன்று திருமணங்கள் என்றாலும் எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் இல்லை.[10] எனவே ஜானகி- கணபதிபட் ஆகிய இருவருக்கும் பிறந்த அப்பு என்ற சுரேந்திரனையும் ஜானகியின் தம்பியாகிய மணி என்னும் நாராயணன் குழந்தைகளாகிய லதா (ராஜேந்திரன்), கீதா (மதுமோகன்), சுதா (கோபாலகிருஷ்ணன்). ஜானகி (சிவராமன்), தீபன் ஆகிய ஐவரையும் தன் வளர்ப்புப் பிள்ளைகளாகத் தத்தெடுத்துக் கொண்டார்.[9] கல்வி உதவி எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன் மற்றும் சினிமாவில் வலம் வந்த கோவை சரளா என்று எம்.ஜி.ஆர் 25ல் ஆனந்த விகடன் இதழ் குறிப்பிட்டுள்ளது. செல்லப் பிராணிகள் எம்.ஜி.ஆர் ராஜா-ராணி என்ற பெயர்களுடைய இரண்டு சிங்கங்களை வளர்த்தார். ராணி சிங்கம் இறந்துவிட ராஜா சிங்கமும் உடல் தளர்ந்திருந்தது. அது தனியாக இருக்க வேண்டாமென வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அளித்தார். நெடுநாட்கள் வாழ்ந்த ராஜா மறைந்த போது, அதன் உடலைத் தகுந்த ஆவணத்துடன் பெற்று, பாடம் செய்து தன் தி.நகர் வீட்டில் வைத்துக் கொண்டார். சிங்கங்களைத் தவிர எம்.ஜி.ஆர் தனது வீடு அமைந்திருந்த ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும் வளர்த்தார். இவற்றைக் கவனிக்க தனி மருத்துவரைப் பணியமர்த்தியிருந்தார்.[11] சிறுகுட்டியாக எம்.ஜி.ஆரிடம் இருந்த கரடி வளர்ந்ததும் மருத்தவரின் உதவியுடன் மூக்கில் சங்கிலி இணைக்க ஏதுவாகத் துளையிட முயன்றபோது எதிர்பாராத விதமாக இறந்துவிட்டது. இதை நடிகர் சங்கத்தின் நாளிதழில் ஒரு பேட்டியின் போது வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் எம்.ஜி.ஆர். திரைப்பட வாழ்க்கை 1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை. இச்சம்பவத்திற்குப் பின்னார் முதன் முதலாக வெளிவந்த காவல்காரன் திரைப்படமானது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971 ஆம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான ரிக்சாக்காரன் படத்தில் நடித்ததற்காகக் கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது. அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகும். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார். அரசியல் வாழ்க்கை இவர் ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். கருணாநிதியுடன் நட்பாக இருந்தார். சி. என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேறினார். 1972-இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழமாக மாறியது. முதன் முதலாகப் போட்டியிட்ட திண்டுக்கல் பகுதியில் பெரும் வெற்றி பெற்றது. திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984ல் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் எம்.ஜி.ஆர். 1984 இல் இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். மறைவிற்குப் பின் அவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவரது கட்சி 1988-இல் பிரிந்து 1989-இல் இணைந்தது. 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் 2011 முதல் இன்று வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெ. ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்திருக்கிறது. இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் திராவிடக் கட்சியில் இருந்தபோதிலும் தமிழ்நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள்.[12] இவர் இறந்து 29 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.[13] இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த பெரும் செல்வாக்கைக் காட்டுகிறது. திட்டங்கள் சத்துணவுத் திட்டம் விதவை ஆதரவற்ற பெண்களுக்குத் திருமண உதவி தாலிக்கு தங்கம் வழங்குதல் மகளிருக்கு சேவை நிலையங்கள் பணிபுரியும் பெண்களுக்குத் தங்கும் விடுதிகள் தாய் சேய் நல இல்லங்கள் இலவச சீருடை வழங்குதல் திட்டம் இலவச காலணி வழங்குதல் திட்டம் இலவச பற்பொடி வழங்குதல் திட்டம் இலவச பாடநூல் வழங்குதல் திட்டம் வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம்.[14] தமிழ் பல்கலைக் கழகம் நிறுவுதல் 1921ம் ஆண்டு தமிழ் மொழிக்கு எனத் தனியே ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய உமாமகேசுவரனார் பிறந்த தஞ்சையில், தீர்மானம் இட்ட அறுபது ஆண்டுகள் கழித்து தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவினார் எம்.ஜி.ஆர். தமிழ்மொழி, தமிழர்களின் கலை, இசை, நாடகம், ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், மொழியியல், வரலாறு, புவியியல், மெய்யியல், கடலியல், சித்த மருத்துவம், கைவினைக் கலை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழை மேம்படுத்த, தமிழர்களின் மரபுப் பெருமையைப் பரப்ப, 1981 இல் அன்று முதலமைச்சராகயிருந்த திரு.எம்.ஜி. இராமச்சந்திரன் முன் முயற்சியில் தமிழக அரசால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது. முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் 13 சூன், 1981 இல் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இப்பல்கலைக்கழகத்தின் உடனடித் தேவைக்கும், எதிர்கால விரிவாக்கத்திற்கும் 1000 ஏக்கர் நிலம் தேவை என முடிவு செய்யப்பட்டது. 1981 ஆகத்து 1 ஆம் நாள் தமிழக ஆளுநர் மூலம் “தமிழ்ப் பல்கலைக் கழக அவசரச் சட்டம் 1981” பிறப்பிக்கப்பட்டு தமிழ்ப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ் பல்கலைக் கழகத்திற்கு 972.7 ஏக்கர் நிலத்தை எம்.ஜி.ஆர் தலைமயினான அரசு கையகப்படுத்தி ஒதுக்கியது.[15] தமிழ் ஈழம் குறித்த நிலைப்பாடு இலங்கையில் இருக்கும் கண்டியில் பிறந்தமையால் தமிழ் ஈழம் குறித்தான ஆர்வமும், செயல்பாடுகளும் எம்.ஜி.ஆரிடம் அதிகம் காணப்பட்டன. ஈழத்திற்காக வெளிப்படையான ஆதரவினை எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக இருக்கும் போது தந்தார். பழ நெடுமாறன் கருத்து 1980களில் ஈழப்போராட்டம் தீவிரமடைந்த போது அதற்கு ஆதரவளித்தார் எம். ஜி. ஆர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழர்களுக்கென்று தனி நாடு அமைய வேண்டுமென்றும் அவர் விரும்பினார் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். பிரபாகரனின் தலைமையிலான புலிகளின் போராட்டத்துக்குத் தேவையான ஆயுதங்கள் வாங்க ரூ.7 கோடி சொந்தப் பணத்தை தந்தார் என நெடுமாறன் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் பற்றிப் பிரபாகரன் விடுதலைப் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் வெளிப்படையான ஆதரவு அளித்தார் எம்.ஜி.ஆர். ஆயுதம் வாங்கி இலங்கை கொண்டு சென்று தமிழ்மக்களை காப்பாற்ற, முதலில் இரண்டு கோடி ரூபாயை தந்தார். அந்த உதவி இல்லையென்றால் இந்தளவிற்கு இயக்கம் வளர்ந்திருக்க இயலாது என்று பிரபாகரன் பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் எம்.ஜி.ஆரை அண்ணன் என்றே அழைத்ததாகவும் கூறியிருக்கிறார். மத்திய அரசு விடுதலை புலிகளுக்கு நெருக்கடி கொடுத்த காலக்கட்டத்திலும், பெரிய தொகையைக் கொடுத்து உதவி செய்தார். மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றே எம்.ஜி.ஆர் தன் நிலையை பற்றிப் பிரபாகரனிடம் கூறியுள்ளார்.[16] எம்.ஜி.ஆர் உயிர் பிரிவதற்கு ஒரு வாரம் முன்புகூட ரூ. 40 லட்சம் வரை புலிகளுக்கு உதவியாக வழங்கியதாகப் பிரபாகரனே கூறியுள்ளார். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிரபாகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் ”தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்பிய மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்” என்று கூறியுள்ளார்.[17] எம்.ஜி.ஆரின் ஈழக்கனவுப் பற்றி ஆன்டன் பாலசிங்கம் 1984 ஆம் ஆண்டு அளவில் எம்.ஜி.ஆருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ஏற்பட்ட தோழமைப் பற்றி ஆன்டன் பாலசிங்கம் விடுதலை கட்டுரைத்தொகுதியில் தந்துள்ளார். "எதிர்பாராத விதமாக எம்.ஜி.ஆருக்கும் விடுதலை இயக்கத்திற்குமான உறவு மலர்ந்தது. தலைவர் பிரபாகரனின் தலைமைப் பண்பும், வீரமும் எம்.ஜி.ஆரைக் கவர்ந்தது. அது நாளடைவில் நட்பாக மாறியது." என்று விடுதலை கட்டுரைத் தொகுதியில் தந்திருக்கிறார். இயக்குனர் சீமான் நம்பிக்கை "முன்னாள் தமிழக முதல்வர் அமரர். எம்.ஜி.ஆர். போன்று ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்தவர்கள் யாருமில்லை. அவர் மட்டும் மேலும் 10 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்குத் தனி நாடு கிடைத்திருக்கும். அது நடக்காததுதான் வரலாற்று துயரம்" என்று இயக்குனரும் நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது தெரிவித்தார்.[18] எழுத்துகள் நாடோடி மன்னன் புத்தகம் எம்.ஜி.ஆர் தானே தயாரித்த நாடோடி மன்னன் திரைப்படத்தினைப் பற்றிப் புத்தகம் எழுதியுள்ளார்.[19] இந்தப் புத்தகத்தில் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரைப் பற்றியும் எழுதியுள்ள எம்.ஜி.ஆர், படத்தின் கதை, அதை தானே தயாரிக்கவேண்டிய நிலை என பல விஷயங்களை எழுதியுள்ளார். இந்தப்படம் வெளிவந்தபின் வெற்றி அடைந்தால் தாம் ஒரு மன்னன் என்றும், தோல்வியுற்றால் தாம் ஒரு நாடோடி என்றும் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருந்தார்.[20] சுயசரிதைத் தொடர் ‘நான் ஏன் பிறந்தேன்?’ - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர். அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை.[21] சிறப்பு விருதுகளும் பட்டங்களும் எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரன் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும். விருதுகள் பாரத் விருது - இந்திய அரசு அண்ணா விருது - தமிழ்நாடு அரசு பாரத ரத்னா விருது - இந்திய அரசு பத்மசிறீ விருது - இந்திய அரசு (ஏற்க மறுப்பு) சிறப்பு முனைவர் பட்டம் - அரிசோனா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (ஏற்க மறுப்பு), சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு) வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம். திரைச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும் இதயக்கனி - அறிஞர் அண்ணா புரட்சி நடிகர் - கலைஞர் மு. கருணாநிதி நடிக மன்னன் - சென்னை ரசிகர்கள் (சி.சுப்பிரமணியம் அவர்களால் வழங்கப்பட்டது.) மக்கள் நடிகர் - நாகர்கோவில் ரசிகர்கள் பல்கலை வேந்தர் - சிங்கப்பூர் ரசிகர்கள் மக்கள் கலைஞர் - காரைக்குடி ரசிகர்கள் கலை அரசர் - விழுப்புரம் முத்தமிழ்க் கலை மன்றம் கலைச்சுடர் - மதுரை தேகப்பயிற்சிக் கலை மன்றம் கலை மன்னர் - நீதிபதி ராஜமன்னார் கலை மன்னன் - சென்னை ரசிகர்கள் கலை வேந்தர் - மலேசிய ரசிகர்கள் திரை நாயகன் - சேலம் ரசிகர்கள் பொதுச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும் கொடுத்துச் சிவந்த கரம் - குடந்தை ரசிகர்கள் கலியுகக் கடவுள் - பெங்களூர் விழா நிருத்திய சக்கரவர்த்தி - இலங்கை ரசிகர்கள் பொன்மனச் செம்மல் - கிருபானந்த வாரியார் மக்கள் திலகம் - தமிழ்வாணன் வாத்தியார் - திருநெல்வேலி ரசிகர்கள் புரட்சித்தலைவர் - கே. ஏ. கிருஷ்ணசாமி இதய தெய்வம் - தமிழ்நாடு பொதுமக்கள் மக்கள் மதிவாணர் - இரா. நெடுஞ்செழியன் ஆளவந்தார் - ம. பொ. சிவஞானம் செயல்பாடுகள் 1. சனவரி 1986 அன்று அண்ணாவின் பவள விழாவின் நினைவாக அமைக்கப்பட்ட அண்ணா வளைவினை திறந்துவைத்தார் எம்.ஜி.ஆர்.[22] 7.47 லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட இது, எம்.ஜி.ஆரின் அலோசனையால் 54 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது. இந்த வளைவை ஸ்தபதி கணபதி 105 நாட்களில் கட்டி முடித்தார். எம்.ஜி.ஆர் நினைவிடங்கள் எம்.ஜி.ஆர் சமாதி தமிழ்நாடு அரசு எம். ஜி. ஆர் நினைவாகச் சென்னையில் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்துக்கு அருகில் அவரது உடல் புதைக்கப்பட்டது. அந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.ஜி.ஆரின். மார்பளவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களும், அவருடைய சில பொருட்களும் மக்களின் பார்வைக்கு தனி கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன. தாமரை மலர் விரிந்த நிலையில் இருப்பது போன்ற அமைப்பின் நடுவே அவர் உடல் வைக்கப்பட்டுள்ள சமாதி உள்ளது. சமாதியின் அருகே நினைவுத்தூண் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில், பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தொண்டர்களும் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த நினைவிடத்திற்கு வருகை தந்து தங்களின் அன்பு தலைவருக்கு மரியாதை செலுத்துகின்றனர்.[23] சென்னை கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் தினமும் அன்னதானம் வழங்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் சி. கிருஷ்ணன் (ஓமலூர்) மார்ச் 2012 பட்ஜெட் மீதான விவாதத்தின் போது கோரிக்கை விடுத்தார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஏழைகளுக்காகப் பாடுபட்டவர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் ஏழைகளுக்குக் கோவில் போன்றது. அதனால் கோவில்களில் வழங்கப்படுவதைப் போல அன்னதானம் எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் வழங்க வேண்டும் என்று கூறினார்.[24] டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் சென்னை தியாகராய நகரில் உள்ள ஆற்காடு முதலித் தெருவில் அமைந்துள்ளது டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம். எம்.ஜி.ஆர் இந்த இல்லத்தினை தனது அலுவலகமாகப் பயன்படுத்தி வந்தார். இல்லத்தின் முன்புறம் டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் எனும் அரைவட்ட வடிவிலான பெயர்ப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலையொன்று அழகிய சிறு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.ஜி.ஆர் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்திய TMX 4777 எண்ணுள்ள அம்பாசிடர் கார் வைக்கப்பட்டுள்ளது.[25] மேலும் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட பரிசு பொருள்களும், அவர் பயன்படுத்திய பொருள்களும் இந்த இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளன. அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம் திருநின்றவூர் நத்தம் மேடு கிராமத்தில் உள்ள செல்லியம்மன் சாலையில் 1800 சதுர அடி மனையில் எம்.ஜி.ஆருக்கான ஆலையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, புதுப்பேட்டையை சேர்ந்தவர் கலைவாணன் மற்றும் சாந்தி தம்பதியினர் இந்தக் கோவிலை அமைத்துப் பாதுகாவலர்களாக உள்ளார்கள். 15.08.11 அன்று எம்.ஜி.ஆர் கோவிலுக்குக் கும்பாபிசேகமும், உற்சவர் சிலைக்குப் பக்தர்கள் 108 குடங்களில் பால் அபிசேகமும் நடந்தது.[26] மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும் புகழ்பெற்ற நடிகருமான எம்.ஜி.ஆருக்கு தமிழகம் முழுவதிலும் பல ஊர்களில் கோயில்கள் உள்ளன என்று 30, மே 2011ல் வெளிவந்த நக்கீரன் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.[27] படத்தொகுப்பு எம்.ஜி.ஆர் நினைவிடம், மெரினா-சென்னை எம்.ஜி.ஆர் அன்னை சத்தியபாமாவிற்காக கட்டிய கோவில் எம்.ஜி.ஆரின் நினைவகம், சென்னை இவற்றையும் பார்க்கவும் கா. ந. அண்ணாதுரை மு. கருணாநிதி ஜெ. ஜெயலலிதா தமிழகத் திரைப்படத்துறை எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கை எம்.ஜி.ஆரின் திரைப்பட வாழ்க்கை திருச்சியைத் தலைநகராக மாற்றும் திட்டம் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு, 1967 எம். ஜி. ஆர். திரை வரலாறு ஆதாரங்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:தமிழ்நாட்டு முதலமைச்சர்கள் பகுப்பு:1917 பிறப்புகள் பகுப்பு:1987 இறப்புகள் பகுப்பு:எம். ஜி. ஆர் பகுப்பு:இந்திய நடிகர்-அரசியல்வாதிகள் பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள் பகுப்பு:நாடகக் கலைஞர்கள் பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்
நடிகர் ம. கோ. இராமச்சந்திரன் எப்போது பிறந்தார்?
சனவரி 17, 1917
99
tamil
6727e0764
பாக்கித்தான் (Pakistan, பாகிஸ்தான், (pækɨstæn அல்லது pɑːkiˈstɑːn; Urdu: پاکستان‎), அதிகாரபூர்வமாக பாக்கிஸ்தான் இசுலாமியக் குடியரசு (Urdu: اسلامی جمہوریۂ پاکستان‎), ஆசிய கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும். மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நாடுகளில் பாக்கிஸ்தானும் ஒன்று. பாக்கிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத். கராச்சி முக்கிய துறைமுகமும் தொழில் நகரமும் ஆகும். இந்திய எல்லையின் அருகில் உள்ள லாகூர் மற்றொரு முக்கிய நகரம். 180 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பாக்கிஸ்தான் ஆறாவது மிகுந்த மக்கள்தொகையுடைய நாடாகும். 796,095கிமீ2 (307,374 ச மை) பரப்பளவுள்ள இந்த நாடு இதனடிப்படையில் 36வது பெரிய நாடாக விளங்குகின்றது. தெற்கில் அரபிக்கடல் மற்றும் ஓமன் குடாவில் 1,046-kilometre (650mi) தொலைவுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது; கிழக்கில் இந்தியாவும் மேற்கில் ஆப்கானிஸ்தானும் தென்மேற்கில் ஈரானும் வடகிழக்குக் கோடியில் சீன மக்கள் குடியரசும் எல்லைகளாக அமைந்துள்ளன. வடக்கில் ஆப்கானிஸ்தானின் குறுகிய வாகான் இடைப்பகுதி</i>யால் தஜிகிஸ்தானிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. தவிரவும் தனது கடல் எல்லையை ஓமனுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. தற்போது பாக்கிஸ்தானாக அறியப்படும் பகுதியில் பல தொன்மையான நாகரிகங்கள் தழைத்துள்ளன. புதிய கற்காலத்தின் மெகெர்கரும் வெண்கல காலத்து சிந்துவெளி நாகரிகமும் குறிப்பிடத்தக்கன. இந்துக்கள், இந்தோ-கிரேக்கர்கள், முஸ்லிம்கள், துருக்கிய-மங்கோலிய மரபினர், ஆப்கானியர்கள், சீக்கியர்கள் போன்ற பல்வேறு சமய, பண்பாட்டு அரசர்கள் இங்கு ஆண்டுள்ளனர். இந்திய மௌரியப் பேரரசு, பெர்சிய அகாமனிசியப் பேரரசு, மாசிடோனியாவின் அலெக்சாந்தர், அராபிய உமையா கலீபகம், மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு மங்கோலியப் பேரரசு, முகலாயப் பேரரசு, துராணிப் பேரரசு, மராத்தியப் பேரரசு, சீக்கியப் பேரரசு மற்றும் பிரித்தானியப் பேரரசு போன்ற பல பேரரசுகளும் அரச மரபினரும் இங்கு ஆட்சி புரிந்துள்ளனர். துணைக்கண்டத்தில் நிகழ்ந்த விடுதலைப் போராட்டங்கள் மற்றும் முகமது அலி ஜின்னாவின் பாக்கிஸ்தான் இயக்கத்தினால் முஸ்லிம்களுக்கான நாடாக துணைக்கண்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை அடக்கிய பாக்கிஸ்தான் 1947ஆம் ஆண்டில் உருவாயிற்று. 1956ஆம் ஆண்டில் தனக்கான அரசியலமைப்பை ஏற்று இஸ்லாமியக் குடியரசாகும் வரை பாக்கிஸ்தான் டொமினியனாக இருந்தது. 1971ஆம் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பின்னர் கிழக்கு பாக்கிஸ்தான் பிரிந்து புதிய நாடாக வங்காளதேசம் என்ற பெயரில் உதயமானது. நான்கு மாநிலங்களும் நான்கு கூட்டாட்சி ஆட்புலங்களையும் கொண்ட பாக்கிஸ்தான் கூட்டாட்சி நாடாளுமன்ற குடியரசாகும். பல மொழிகளையும் பல இனங்களையும் இதே போன்ற பலவகை புவியியல், வனவாழ்வினங்களையும் கொண்ட பன்முக நாடாக பாக்கிஸ்தான் விளங்குகின்றது. A regional and middle power, உலகில் மிகுந்த படைத்துறையினர் கொண்ட நாடுகளில் ஏழாவதாக உள்ள பாக்கிஸ்தான் அணுவாற்றல் மற்றும் அணு ஆயுத நாடாக, பிராந்தியத்தில் செல்வாக்குள்ள நாடாக[1][2] விளங்குகின்றது; முஸ்லிம் உலகில் அணு ஆயுதம் கொண்ட ஒரே நாடாகவும் தெற்காசியாவில் இரண்டாவது நாடாகவும் விளங்குகின்றது. பகுதியும் தொழில்மயமான பொருளாதாரத்தையும், நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட வேளாண்மைத் துறையையும் கொண்டுள்ள பாக்கிஸ்தான் உலகில் 26வது பெரிய பொருளாதாரமாகவும் பெயரளவு மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் 45வது பெரிய நாடாகவும் விளங்குகின்றது. உலகில் விரைவாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது. விடுதலைக்குப் பின்னரான பாக்கிஸ்தானின் வரலாற்றில் இடையிடையேயான படைத்துறை ஆட்சியும் அரசியல் நிலைத்தத் தன்மையின்மையும் இந்தோ-பாக்கிஸ்தான் போர்களும் முக்கியப் பங்காற்றுகின்றன. மிகுமக்கட்தொகை, தீவிரவாதம், ஏழ்மை, கல்வியின்மை, ஊழல் ஆகியன நாட்டின் முதன்மைப் பிரச்சினைகளாக உள்ளன. இவற்றிற்கிடையேயும் 2012ஆம் ஆண்டில் ஹேப்பி பிளானட் குறியீட்டில் 16வதாக வந்துள்ளது.[3] ஐக்கிய நாடுகள் அவை, நாடுகளின் பொதுநலவாயம், அடுத்த பதினொரு பொருளாதாரங்கள், பொருளாதார கூட்டுறவு அமைப்பு (ECO), காபி குழு, வளரும் எட்டு (D8), கெய்ர்ன்ஸ் குழு, கியோட்டோ நெறிமுறை, அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை, ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை, இஸ்லாமிக் கூட்டுறவிற்கான அமைப்பு, சார்க் மற்றும் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது.[4] பெயர்க்காரணம் பாக்கிஸ்தான் என்று அழைக்கப்படும் உருதுச் சொல்லுக்குப் பொருள், (பாக் + ஸ்தான்) தூய்மையான நிலம் என்பதாகும். பாக் என்றால் தூய்மையான என்று பொருள்[5]. வரலாறு 1947ல் இந்தியாவை விட்டு பிரித்தானியர் வெளியேறும் சமயம் இந்தியாவிலிருந்து கிழக்கிலும் மேற்கிலும் பிரித்து இருபகுதிகளுக்கும் நடுவே இந்தியா இருக்குமாறு உருவாக்கிய நாடு பாக்கிஸ்தான். இதனால் ஏற்பட்ட பல சிக்கல்களுக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்தியாவிற்கு கிழக்கில் இருந்த பாக்கிஸ்தானில், மேற்கு பாகிஸ்தானின் அதிகாரத்தை எதிர்த்து கலகம் ஏற்பட்ட போது, இந்தியாவின் தலையீட்டால் பிரிந்து வங்காளதேசம் என தனி நாடானது. புவியியல் பாக்கிஸ்தானின் அண்மையில் இந்தியா, சீனா, ஈரான், ஆப்கானித்தான் ஆகிய நாடுகள் உள்ளன. பாக்கிஸ்தானின் தெற்கில் அரபிக்கடல் உள்ளது. இந்தியாவிற்கும் இந்து மதத்திற்கும் பெயர் காரணமான சிந்து நதியின் பெரும் பகுதி தற்போது பாக்கிஸ்தானில் ஓடுகிறது. பழங்காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் மீது மத்திய ஆசியர்கள் படையெடுக்க உதவிய கைபர் கணவாய் மற்றும் போலன் கணவாய் என்பன தற்போது பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. மக்கள் மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் ஆறாம் இடம் வகிக்கிறது. இஸ்லாமியர்களை பெரும்பான்மையினராக கொண்டு அதிக இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் இரண்டாமிடம் வகிக்கிறது. பாக்கிஸ்தானில் உள்ள மக்களில் 96.3% மக்கள் இஸ்லாமியர்கள். உருது, ஆங்கிலம் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகள். உருது அதிகம் பேரால் பேசப்படுகிறது. அதிகம் பேர் தாய்மொழியாக கொண்ட மொழி பஞ்சாபி மொழி. சிந்தி மொழியும் அதிகம் பேசப்படுகிறது. நிர்வாகப் பிரிவுகள் பாக்கிஸ்தானானது, 4 மாகாணங்கள், 1 நடுவண நிர்வாகப்பழங்குடி பிரதேசம் மற்றும் 1 தலைநகரப்பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. மாகாணங்கள்: பலூச்சிஸ்தான் கைபர் பக்தூன்க்வா (NWFP) பஞ்சாப் சிந்து பிரதேசங்கள்: இஸ்லாமாபாத் தலைநகரப்பகுதி நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள் பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரம்: ஆசாத் காஷ்மீரம் கில்கித் - பல்திஸ்தான் அரசியல் அரசில் ராணுவத்தின் தலையீடு அதிகம். பலமுறை ராணுவம் அதிகாரத்தை தன் கையிலெடுத்துக்கொண்டு ஆட்சியைக் கலைத்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் 1973ல் உருவாக்கப்பட்டது. அது படைத்துறையினரால் (ராணுவத்தால்) 1977ல் கலைக்கப்பட்டது, மீண்டும் 1985ன் இறுதியில் சில மாற்றங்களுடன் உயிர்பிக்கப்பட்டது, மீண்டும் 1999ல் கலைக்கப்பட்டது. பாக்கிஸ்தானின் படைத்துறையைச் சேர்ந்த பெர்வேஸ் முஷாரஃப் அண்மையில் அதிபராக இருந்தார். முஷாரப் - பெனாசிர் இணக்கப்பாடு ஏற்படுவதில் குழப்பநிலை நீடித்து, இறுதியில் பெனாசிர் பூட்டோ கொலை செய்யப்பட்டார். தற்பொழுது பெனாசிர் பூட்டோவின் கணவர் ஆசிஃப் அலி சர்தாரி குடியரசுத்தலைவரகாக உள்ளார். பொருளாதாரம் பாக்கிஸ்தான் வளர்ந்து வரும் நாடுகளுள் ஒன்று. பெரும்பாலும் அமெரிக்காவை நம்பியே இதன் பொருளாதாரம் உள்ளது இராணுவபலத்தை பெருக்கும் முயற்சியில் அதிகமாக செலவு செய்யப்படுவதால் தொழில் முன்னேற்றத்தில் சற்று பின்தங்கியே உள்ளது. மிகுந்த வெளிநாட்டுக் கடன்களும் உண்டு. ஆப்கனிஸ்தானிலிருந்த தாலிபான்களின் மீதான அமெரிக்க படையெடுப்பில் உதவுமுகமாக நடந்துகொண்டதால் தற்காலிகமாக இச்சிக்கல்கள் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளுக்கு ஓப்பியம் போன்ற போதைப்பொருட்கள் கடத்திச் செல்லும் வழிகளில் பாக்கிஸ்தானும் ஒன்று என்பதால் வெளியுறவுச் சிக்கல்கள் உண்டு. குறிப்புகள் வெளி இணைப்புகள் பகுப்பு:பாக்கித்தான் பகுப்பு:முன்னாள் பிரித்தானியக் குடியேற்றங்கள் பகுப்பு:தெற்காசிய நாடுகள் பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
பாக்கிஸ்தான் நாட்டின் தலைநகரம் எது?
இஸ்லாமாபாத்
283
tamil
130a2a8e3
Coordinates: இசுரேல் (Israel, Hebrew: יִשְׂרָאֵל‎; யிஸ்ராஎல்; , யிஸ்ராஎல், அலுவலக ரீதியாக இசுரேல் நாடு; [மெதிநாத் யிஸ்ராஎல்](எபிரேயம்), [தவுலத் இஸ்ராஇல்](அரபு)) என்பது மேற்கு ஆசியாவில், மத்திய தரைக்கடலின் தென்கிழக்கு கரையில் உள்ள ஒரு நாடு. இது இசுரவேல், இசுரயேல், இஸ்ரவேல், இஸ்ரயேல் எனவும் தமிழில் அழைக்கப்படுகிறது. இது வடக்கில் லெபனானுடனும், வடகிழக்கில் சிரியாவுடனும், கிழக்கில் யோர்தானுடனும் மேற்குக்கரையுடனும், தென்மேற்கில் எகிப்துடனும் காசா கரையுடனும், தெற்கில் செங்கடலில் அஃகபா குடாவுடனும் தன் எல்லைகளைக் கொண்டு, புவியியல் ரீதியாக பல மாறுபட்ட தன்மைகளைக் கொண்ட அம்சங்களை தன் சிறிய நிலப்பரப்பில் கொண்டுள்ளது.[7][8] இதன் அடிப்படை சட்டத்தின்படி, இந்நாடு யூத மற்றும் குடியாட்சி நாடாக அறிவிக்கப்பட்டு, மக்களாட்சி முறையில் நாடாளுமன்றம் அமைத்து நாட்டை ஆளுகின்றது. இது யூதர்களின் உலகிலுள்ள ஒரேயொரு தாய் நாடாகவுள்ளது.[9] 29 நவம்பர் 1947 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை பிரித்தானிய பாலஸ்தீனத்தின பிரிப்பினை நடைமுறைப்படுத்த பரிந்துரை செய்தது. 14 மே 1947 இல் உலக சீயொனிச அமைப்பின்[10] செயற்படுத்தல் தலைவர் மற்றும் இசுரேலுக்கான யூத முகவர் அமைப்பின் தலைவருமான டேவிட் பென்-குரியன் "இசுரேல் தேசத்தில் இசுரேலிய நாட்டின் உருவாக்கம், இசுரேல் நாடு எனப்படும்" என பிரகடனப்படுத்தினார். இச் சுதந்திரப் பிரகடனம் 15 மே 1948 அன்று பிரித்தானிய பலஸ்தீன கட்டளையமைப்பை நீக்கியது.[11][12][13] அடுத்த நாள் அருகிலுள்ள அரபு நாடுகள் இசுரேல் மீது படையெடுக்க இசுரேலிய படைகள் அவற்றுடன் சண்டையிட்டன.[14] அதிலிருந்து இசுரேல் அருகிலுள்ள அரபு நாடுகளுடன் சில போர்கள் ஊடாக சண்டையிட்டு வருகின்றது.[15] இதனூடாக இசுரேல் மேற்குக்கரை, சீனாய் தீபகற்பம் (1967 முதல் 1982 வரையில்), தென் லெபனானின் பகுதிகள் (1982 முதல் 2000 வரையில்), காசா கரை கோலான் குன்றுகள் என்பவற்றைக் கைப்பற்றியது. இவற்றிலிருந்து சில பகுதிகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஆயினும் மேற்குக் கரையுடனான எல்லை சர்ச்சைக்குரியது.[16][17][18][19][20] இசுரேல் சமாதான ஒப்பந்தங்களை எகிப்துடனும் யோர்தானுடனும் செய்தாலும், இதுவரை இசுரேலிய-பலத்தீன முரண்பாட்டு தீர்வுக்கான முன்னெடுப்புக்கள் சமாதானத்தை ஏற்படுத்தவில்லை. இசுரேலின் வர்த்தக மையமாக டெல் அவீவ் காணப்பட,[21] எருசலேம் நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட இடமாகவும் தலைநகராகவும் உள்ளது.[note 1][22] இசுரேலின் மக்கட்தொகை 2013 இல் 8,051,200 என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 6,045,900 பேர் யூதர்கள். அராபியர்கள் நாட்டின் இரண்டாவது பெரிய மக்கள் கூட்டமாக 1,663,400 பேர் என்ற எண்ணிக்கையில் உள்ளனர்.[2][23] இசுரேலிய அராபியர்களில் பெரும்பான்மையானவர்கள் இசுலாமியர்களாகவும், ஏனையவர்கள் கிறித்தவர்களாகவும் டூர்சுக்களாகவும் உள்ளனர். இவர்களைத்தவிர சிறுபான்மையாக மார்னோயர்கள், சமாரியர்கள், கருப்பு எபிரேய இசுரேலியர்கள்,[24] ஆர்மேனியர்கள், சிர்காசியர்கள் போன்ற இனத்தவர்களும் உள்ளனர். இசுரேல் குறிப்பிட்டளவு வெளிநாட்டு தொழிலாளர்களையும் ஆப்பிரிக்கா, ஆசியாவிலிருந்து புகலிடம் தேடியவர்களையும் கொண்டுள்ளது. இசுரேல் நாடாளுமன்ற முறை, விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை, பொது வாக்குரிமை என்பவற்றுடன் சார்பாண்மை மக்களாட்சி கொண்ட ஓர் நாடு.[25][26] இசுரேலிய அதிபர் அரசாங்கத்தின் தலைவராகவும் கெனெசெட் இசுரேலின் சட்டசபையின் சட்டமியற்றும் உறுப்பாக செயல்படுகிறது. இசுரேல் ஒரு வளர்ந்த நாடும் பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பு நாடும் ஆகும்.[27] 2012இன்படி இதன் பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் 43வது இடத்தில் உள்ளது. இசுரேல் மனித வளர்ச்சி சுட்டெண்ணின் அடிப்படையில் மத்திய கிழக்கில் உயர்வாகவும் ஆசியாவில் மூன்றாம் இடத்திலும் உள்ளது.[28] இதன் குடிமக்கள் ஆயுள் எதிர்பார்ப்பு அடிப்படையில் உலகில் அதிகம் ஆயுள் எதிர்பார்ப்பு உள்ள குடிமக்களில் உள்வாங்கப்படுகின்றனர்.[29] பெயர் 1948 இல் சுதந்திரத்தைத் தொடர்ந்து, அந்நாடு "இசுரேல் அரசு" (மெதிநாத் யிஸ்ராஎல்) என்பதை எடுத்துக் கொண்டது. இதனுடன் இசுரேல் தேசம், சீயோன், யூதேயா ஆகிய பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டன.[30] இசுரேலின் குடிமக்கள் இசுரேலியர் என அழைக்கப்படுவர் என வெளிவிவகால அமைச்சு அறிவித்தது.[31] {{IPA}}, formats symbols of the International Phonetic Alphabet {{PUA}}, marks characters from the Private Use Area that should be retained {{transl}}, generic romanization {{script}}, scripts in Unicode navigation box {{unichar}}, formats a Unicode character description {{Unicode templates}}, a navbox linking to multiple Unicode templates{{Template disambiguation}} should never be transcluded in the main namespace., Template:Unicode may refer to: {{IPA}}, formats symbols of the International Phonetic Alphabet {{PUA}}, marks characters from the Private Use Area that should be retained {{transl}}, generic romanization {{script}}, scripts in Unicode navigation box {{unichar}}, formats a Unicode character description {{Unicode templates}}, a navbox linking to multiple Unicode templates{{Template disambiguation}} should never be transcluded in the main namespace.; Greek: Ἰσραήλ இஸ்ராயல்; "கடவுளுடன் போரிட்டவர்"[33]) குறிக்கப் பயன்பட்டது. எபிரேய விவிலியத்தின்படி, அவர் கடவுளின் தூதனுடன் மல்யுத்தம் செய்து வென்ற பின் அப்பெயர் அவருக்கு கிடைத்தது.[34] யாக்கோபின் பனிரெண்டு மகன்களும் இசுரயேலரின் மூதாதையர்கள் ஆவர். இவர்கள் இசுரேலின் பனிரெண்டு குலங்கள் அல்லது இசுரயேலின் பிள்ளைகள் எனவும் அழைக்கப்படுவர். யாக்கோபும் அவர் மகன்களும் கானானில் வாழ்ந்தாலும் பஞ்சத்தின் நிமித்தம் எகிப்துக்கு செல்ல கட்டாயமாக்கப்பட்டு, அவர்களின் நான்காம் தலைமுறை மோசே வரை அங்கு வாழ்ந்தனர்.[35] மோசே தலைமையில் இசுரயேலர் கானானுக்குத் திரும்பினர். ஆரம்ப தொல்பொருளாய்வுப் பொருள் மெனெப்தா நடுகலில் "இசுரேல்" என்ற சொல்லைக் கொண்டுள்ளது. பண்டைய எகிப்தின் இந்நடுகல் கி.மு. 13ம் நூற்றாண்டைக்குரியது.[36] இது யூதம், கிறித்தவம், இசுலாம், பகாய் ஆகிய ஆபிரகாமிய சமயங்களுக்கு புனிதமாக இருப்பதால் திருநாடு எனவும் அழைக்கப்படுகிறது. இப்பகுதி யூதேயா, சமாரியா, தென் சிரியா, சிரியா பாலத்தீனா, எருசலேம் பேரரசு, இதுமேயா மாகாணம், கோலே-சிரியா, ரெட்டேனு மற்றும் கானான் உட்பட்ட பல பெயர்களால் பல நூற்றாண்டுகளிலும் அழைக்கப்பட்டுள்ளது. வரலாறு பழங்காலம் தொல்லியல் சான்றின்படி, எகிப்திய நினைவுச் சின்னமாகிய "மெனெப்தா நடுகல்" என்று குறிப்பிடப்படும் கல்லில் உள்ள ஒரு குறிப்பு முதன்முதலில் இசுரேலியல் என்ற சொல்லைக் குறிப்பிட்டது. இந்நினைவுக்கல் 10 அடி உயரம் கொண்டதாகும். இது கி.மு. 1211 ஆண்டினது என்று கணித்துள்ளனர்.[37] மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக யூதர்கள் 'இசுரேல்' என்னும் நிலத்தைத் தங்கள் தாயகமாக, புனித நிலமாக கருதி வந்துள்ளனர். தோராவின்படி, யூதர்களின் பிதாப்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களுக்கு கடவுள் நாட்டை வாக்களித்ததாக நம்புகின்றனர்.[38][39] விவிலியத்தின் அடிப்படையில், அம்மூன்று பிதாப்பிதாக்களின் காலம் கி.மு 2ம் மில்லேனியத்தின் ஆரம்பம் என கருதப்படுகின்றது.[40] முதலாவது இசுரயேல் அரசு தோராயமாக கி.மு. 11ம் நூற்றாண்டு காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. இசுரேலிய முடியாட்சியும் அரசும் சிறிதும் பெரிதுமாய் இடைவெளி விட்டு நானூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர்.[41][42][43][44] வட இசுரேலிய அரசு கி.மு 722 இல் வீழ்ச்சியுற்றது. தென் யூத அரசு அசிரிய ஆட்சி வரை நிலைத்தது. பபிலோனியா வருகையால் கி.மு. 586 இல் யூத அரசு வெற்றி கொள்ளப்பட்டது. முற்காலம் பின்னர் வந்த அசிரிய, பாபிலோனிய, பாரசீக, கிரேக்க, ரோமானிய, பைசாந்திய அரசுகளின் ஆட்சியில் சிறிதும் பெரிதுமாய் யூதர்கள் இசுரேலை விட்டு வெளியேறிவிட்டனர். இதனால் யூதர்களின் எண்ணிக்கை அங்கே மிகவும் அருகிவிட்டது. சியோனிசம் அலியா இசுரேல் அல்லது அலியா என்னும் இன்றுள்ள நாட்டின் நிலத்தில் தற்காலக் குடியேற்றம் 1881ல் தொடங்கியது. பிற நாடுகளில் சிறுபான்மையாராக வாழ்ந்து இனவேற்றுமையாலும் பிற துன்பங்களாலும் உழன்ற யூதர்கள் மோசசு ஃகெசு (Moses Hess) என்பவர் போன்ற கருத்துக்களைப் பின்பற்றி இசுரேல் நிலத்தைமீண்டும் பெறுவதற்காக சிறிது சிறிதாக நிலங்களை ஆட்டோமன் மற்றும் அரேபியர்களிடமமிருந்து வாங்கத் தொடங்கினர். தியோடோர் ஹெர்ட்சு (1860–1904) என்னும் ஆஸ்திரிய யூதர் சியோனிய இயக்கம் ஒன்றைத் தொடங்கினார் 1896ல் செருமானிய மொழியில் டெர் யூடென்ஸ்டாட் ("யூதர் நாடு) என்னும் வெளியீட்டைக் கொண்டு வந்தார். அதற்கு அடுத்த ஆண்டு முதல் உலக சியோனியப் பேரவையைக் கூட்ட உதவினார். சியோனிய இயக்கம் தொடங்கிய பின்னர் இரண்டாவது அலியா அமைக்க வழி வகுத்தது. சுமார் 40,000 யூதர்கள் 1904–1914 ஆண்டுகளில் வந்துசேர்ந்தனர். 1917ல் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் ஆர்தர் பால்ஃவோர் அவர்கள் பால்ஃவோர் பேரறிவிப்பு எனப்படும் அறிவிப்பில் யூதர்களுக்கென தாயகமாக ஒரு தனி பாலசுத்தீனம் அமைப்பதில் இசைவான நோக்குடையவர்களாக இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார். 1920ல் பாலசுத்தீனம் உலகநாடுகள் குழுமத்தில் பிரித்தானியர் ஆட்சி செலுத்தும் ஒரு நிலமாக மாறியது. முதலாம் போருக்குப் பின்னர், மூன்றாவது அலையாக 1919-1923 ஆம் ஆண்டுகளிலும், நான்காவது அலையாக 1924–1929 ஆம் ஆண்டுகளிலும், யூதர்களின் குடியேற்றம் நிகழ்ந்தது. இவை அலியா-3 என்றும் அலியா-4 என்றும் அழைக்கப்படுவன. 1929ல் நிகழ்ந்த அரேபிய கலவரங்களில் 133 யூதர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 67 பேர் எபிரோனைச் சேர்ந்தவர்கள். 1933 வாக்கில் எழத்தொடங்கிய நாசிசத்தால் ஐந்தாவது அலையாக யூதர்கள் குடியேறினர். இந்த அலியா-5 க்குப் பிறகு, 1922ல் அப்பகுதியில் இருந்த மக்கள் தொகையில் 11% யூதர்களாக இருந்தநிலை மாறி, 1940ல் யூதர்கள் மக்கள் தொகையில் 30% ஆக உயர்ந்தார்கள். நிலப்பகுதியில், 28% சியோனிச நிறுவனங்கள் வாங்கியிருந்தன. இது தவிர யூதர்கள் தனிப்பட்ட முறையிலும் நிலங்களை வாங்கியிருந்தனர். இசுரேலின் தென் பாதி வறண்ட பாலை நிலமாகவும், மக்கட்தொகை நெருக்கமற்றதாகவும் இருந்தது. இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் ஐரோப்பாவில் மிகப்பெரிய அளவில் நிகழ்ந்த இனப்படுகொலையில் ஏராளமான யூதர்கள் கொல்லப்பட்ட பின்னர், ஒப்புதலின்றி (சட்டமுரணாக) ஏராளமான வெளி நாட்டு யூதர்கள் வந்து இறங்கினர். இரண்டாம் உலகப் போரின் இறுதியில் பாலசுத்தீனத்தில் சுமார் 600,000 யூதர்கள் இருந்தனர். 1939ல், பிரித்தன் பாலஸ்தீனத்தில் யூத வந்தேறுதலை யுத்ததின் போது 75000 க்கு கட்டுப்படுத்தவும், அவர்களால் நிலம் விலைக்கு வாங்கப்படுவதை கட்டுப் படுத்தவும் திட்டமிட்டது. அது 36-39 அரபு ரகளைகளுக்கு பதிலாக இருக்கலாம். இத்திட்டம் யூதர்களாலும், சியோனிஸ்டுகளாலும், 1917 பால்பர் ஆணைக்கு எதிரான நம்பிக்கைத்துரோகமாகக் கருதப் பட்டது. அராபியர்களும் திருப்தி அடையவில்லை; ஏனெனில் அவர்கள் யூத வந்தேறுவதை முற்றிலும் தடுக்கக் கோரினர். அப்படியும், இத்திட்டத்தை பிரிட்டன் ஐநா ஒப்பாட்சி முடியும் வரை கடைப்பிடித்தது. யூதர்களின் தலைமறைவான குழுக்கள் (பாசறைகள்) பாலஸ்தீனர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே வலுவடைந்து வந்த முரண்பாடுகளாலும், பிரித்தானியரிடம் இருந்து யூதர்களுக்கான உறுதிகோள் ஏதும் வராததினாலும் யூதர்கள் தாங்களேதங்களை பாதுகாக முடிவெடுத்தனர். பால்பூர் அறிவிப்பையும் யூத தேசத்தையும் எதிர்த்த அரபு தேசீயவாதிகள், யூதர்களுக்கு எதிரான கலவரங்களை எரூசலம், ஹீப்ரான், ஜாப்பா, ஹைபாவில் தூண்டினர். 1921 யூத எதிர்ப்பு கலவரங்களை தொடர்ந்து, ஹகானா என்ற அமைப்பு தற்காப்பிற்க்காக யூதர்களால் ஆரம்பிக்கப் பட்டது. 1931, ஹகானாவிள் பிளவு ஏற்ப்பட்டு, இர்குன் அமைப்பு வெளியேரியது. இர்குன் இன்னும் தீவிர செயல் நோக்கை பின்பற்றி, யூதர்களிள் மேல் ஏற்பட்ட வன்முறைகளுக்கு பதிலடி கொடுத்து, பிரித்தானிய ஐநா ஒப்படைப்பு அரசாங்கத்தின் மீதும் தாக்கியது. இர்குனிலிருந்து இன்னும் தீவிர செயல்வாத லேஹி குழு பிளந்து வெளியேரியது. இர்குன் கொள்கைக்கு மாற்றாக, அது உலகப் போரில், பிரித்தனுடன் ஒத்துழைப்பை மறுத்தது.. இக்குழுக்கள் 1948 அரபு-இஸ்ரேலிய போர் முன், இஸ்ரேலி பாதுகாப்பு சேனை உதயத்திலும், அலியா-பெத் போன்ற இஸ்ரேலிய அகதிகள் வரவழிப்பிலும், பெரும் தாக்கம் ஏற்படுத்தின. நாடு நிறுவப்படுதல் 1947ல் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே மிகுதி பெற்று வந்த வன்முறை நிகழ்வுகளைக் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ இயலாத நிலையில், பிரிட்டன் நாடு தன் ஆட்சி உரிமையில் இருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்தது. 1947ல் உலகநாடுகளின் பேரவை (UN General Assemby), பாலசுத்தீனத்தை இருநாடுகளாகப் பிரிக்க ஒப்புதல் அளித்தது. யூதர்கள் இருக்க நிலப்பகுதியில் 55% யும், அராபியர்கள் இருக்க நிலத்தில் 45% யும் தருவதென இருந்தது. எருசலேம் நகரம் உலகநாடுகள் நிர்வகிக்கும் நகரமாக இருக்கட்டும் என்றும் முடிவு செய்தது. எருசலேமை ஈரின மக்களும் தமக்கே வேண்டும் என மிக வல்லுரிமையோடு கோருவார்கள் என்றும் அதனைத் தவிர்ப்பதற்காக இம்முடிவு என்று கூறப்பட்டது. இரு நாடுகளாகப் பிரிப்பது என்னும் திட்டத்தை உலகநாடுகளின் பேரவை நவம்பர் 29, 1947ல் ஏற்ற உடன், யூதர்களின் சார்பாக டேவிட் பென்கூரியன் (David Ben-Gurion) தற்காலிகமாக ஏற்றுக்கொண்டார், ஆனால் அரேபியர்களின் குழு (Arab League) மறுத்தது. இதைத் தொடர்ந்து அரேபியர்கள் யூதர்களின் மீதும், யூதர்கள் அரேபியர்களின் மீதும் நடத்திய தாக்குதல்களின் விளைவாகப் பரவிய உள்நாட்டுப் போர், 1948க்கான இசுரேலிய விடுதலைப்போரின் முதல் கட்டமாக அமைந்தது. பிரித்தானியரின் ஆட்சி உரிமை மே 15, 1948 பிற்பகல் 5 மணிக்கு முடிவடையும் முன்னரே, மே 14, 1948ல் இசுரேலிய நாடு தம் நாடு உருவானதை அறிவித்தது. விடுதலைப் போரும் மக்கள் திரண்டு வருவதும் இசுரேல் ராஜ்ஜியத்தின் நிர்மாணத்தின் பின், எகிப்து, சிரியா, யோர்தான், இராக் நாடுகளின் சேனைகள் போரில் கலந்து கொண்டு, 1948 அரபு-இசுரேலி போர் இரண்டாம் நிலை தொட்டது. வடக்கிலிருந்து வந்த சிரியா, லெபனான், இராக் படைகள் இசுரேல் எல்லையில் நிறுத்தப்பட்டன; யோர்தான் படைகள் கிழக்கு எருசலேமை கைப்பற்றி மேற்கு எருசலேமை முற்றுகையிட்டன. ஹகானா அப்படி ஊடுருவிய படைகளை நிறுத்தியது, இர்குன் படைகள் எகிப்து படைகளை நிறுத்தியது. 1948 ஜூனில், ஐ.நா. ஒரு மாத போர்நிறுத்த பிரகடனம் செய்தது; அச்சமயம் இசுரேல் பாதுகாப்பு படை அரசாங்க ரீதியில் தாபிக்கப் பட்டது.. பல மாத போருக்குப் பின், 1949ல், போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்ப்பட்டு, தாற்காலிக எல்லைகள் நிலைக்கப் பட்டன. இசுரேல் யோர்தான் நதிக்கு மேற்கே ஒப்பந்த பகுதிகளின் 26% நிலைத்தை அடைந்தது. யோர்தான் 'மேற்குக் கரை' என்ற யூதேயா, சமாரியா போன்ற மலைப் பிரதேசங்களை ஏற்றது. எகிப்து காசா என அழைக்கப்படும் சிறிய கடலோர நிலத்தை அடைந்தது. போர்போதும், பின்னும் இசுரேலிய பிரதான அமைச்சர் டேவிட் பென்குரியன் , பல்மாக், இர்குன், லேஹி முதலிய அமைப்புகளைக் கலைக்க உத்தரவிட்டார். ஒரு சுவீட நாட்டு தூதுவாலய ஊழியரை கொலையினால் , இர்குன்னும் லேஹியும் பயங்கர வாத அமைப்புகளாக அழைக்கப் பட்டு தடை செய்யப் பட்டன. பல அரபு மக்கள் புதிய இசுரேலிய நாட்டினிலிருந்து வெளியேரினர் அல்லது வெளியேற்றப் பட்டனர். (அகதிகள் எண்ணிக்கை 600000 ந்து 900000 ஆக கணக்கிடப் பட்டுள்ளது; ஐ.நா. கணக்கு 711000 ஆகும்.) அதே சமயம் 1000000 யூதர்கள் அரபு நாடுகளிலிருந்து துரத்தப் பட்டனர். (ஆதாரங்கள் சந்தேகத்திற்கு உரியது) யூத இன அழிப்பை (ஹோலோகாஸ்ட்) பிழைத்தவர்களும், அரபு நாடுகளிலிருந்த வந்த யூத அகதிகளும் இசுரேல் மக்கள் தொகையை ஒரே வருடத்தில் இரு மடங்காக்கினர் 1950களிலும் 1960களிலும் 1954–1955 ஆண்டுகளில் தலைமை அமைச்சராய் இருந்த மோசே சாரெட் அரசு எகிப்து மீதான குண்டுவீச்சில் தவறியதால் மதிப்பிழந்தது. 1956ல் எகிப்து நாடு பிரித்தானியரும், பிரெஞ்சுக்காரரும் அதிருப்தி அடையத்தக்க வகையில் சுயஸ் கால்வாயை (Suez Canal) நாட்டுடைமையாக்கியது. இதைதொடர்ந்து இசுரேல் இவ்விரு ஐரொப்பிய அரசாங்களுடன் மறைமுக அணி அமைத்து, எகிப்து மீது போர் தொடுத்தது. சூயஸ் முட்டுதலுக்கு பின், உலக நிர்பந்தத்தினால் இசுரேல் சைனாய் குடாவிலிருந்து வெளியேறியது. 1955ல் பென் குரியன் மீண்டும் தலைமை அமைச்சராகி 1963ல் ராஜிநாமா செய்தார். அவருக்கு பின் லீவை எஷ்கால் தலைமை அமைச்சரானார். 1961ல், 'கடைசி முடிவு' என்றழைக்கப் பட்ட யூத அழிவுத் திட்டத்தை இயக்கிய நாஜி யுத்த குற்றவாளி அடால்ப் ஐக்மனைக் கைது செய்து இசுரேலுக்குக் கொண்டுவந்து விசாரித்துத் தூக்கிலிட்டனர். ஐக்மன் இசுரேலிய வழக்கு மன்றங்களினால் தூக்கு போடப் பட்ட ஒரே நபர். மே 1967 ல், இசுரேலுக்கும், அதன் பக்க நாடுகளுக்கிடையே மறுபடியும் சூடு பிடித்தது. சிரியா, யோர்தான் எகிப்து போர் வீராப்பு பேசின; எகிப்து ஐ.நா. பார்வையாளர்களை வெளியேற்றியது. எகிப்து இசுரேலிய கப்பல்களுக்கு திராணா குடாவில் தடையிட்ட போது, அது போருக்கான அறிகுறியாகக் கருதி, இசுரேல் எகிப்தை முன்னேற்பாடாக சூன் 5ல் தாக்கியது. ஆறு நாட்கள் நீடித்த அரபு-இசுரேலிய போரில், இசுரேல் அரபுப்படைகளைத் தோற்கடித்து, விமானப்படைகளைத் தூளாக்கி வென்றது. கிழக்கு எருசலேம், மேற்குக்கரை, காசா நிலப்பட்டை, சைனாய், கோலன் சிகரங்கள் இவற்றை அரபு நாடுகளிடமிருந்து கைப்பற்றியது. 'பச்சை கோடு'-1949 கைப்பற்றப்பட்ட நிலங்களின் நிர்வாக எல்லையாயிற்று. பத்து வருடங்களுக்கு பின், எகிப்துடன் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின்படி காசாவை எகிப்துக்குக் கொடுத்தது. 1967ல், அமெரிக்க கப்பலான லிபர்ட்டி இசுரேல் விமானங்களால் தாக்கப்பட்டு 34 அமெரிக்க துருப்புகள் உயிரிழந்தனர்; பின்னர் மேற்கொண்ட ஆய்வின்படி அது கப்பலை சரியாக அடையாளம் காண முடியாமல் செய்த பிழை என உறுதியிடப்பட்டது. 1969ல். கோல்டா மேர் என்ற பெண் தலைமை அமைச்சரானார். 1970களில் 1967ன் போருக்குப் பின் 1968–1972 ஆண்டுகளில் இசுரேல், சிரியா, எகிப்து ஆகிய நாடுகளுக்கிடையே பற்பல சண்டைகள் நிகழ்ந்தன. 1970 முதலில், பாலஸ்தீன பயங்கரவாத அமைப்புகள் இசுரேல், யூத குறிகள் மீது பல தாக்குதல்களைத் தொடங்கியன. இவற்றில் முதன்மையானது, 1972 ஒலிம்பிக் விளையாட்டுகளில், பாலஸ்தீன பயங்கரவாதிகள் இசுரேல் விளையாட்டு வீர்ர்களை பிணையாக பிடித்து, அவர்களைக் கொன்றனர். பதிலுக்கு, இசுரேல் 'கடவுள் பழி' என்ற செய்கைகளினால் மொசாத் ஆட்களின் மூலம் பல பயங்கர வாதிகளை கொன்றது. அக்டோபர் 6, 1973, யோம் கிப்புர் யூத நோன்பு நாளில், எகிப்து, சிரிய படைகள் திடீரென்று, முன்னறிவிப்பன்றி தாக்கின. ஆனால், முதலில் திகிலாக்கியும், அவை 1967ல் இஸ்ரேலுலிடம் இழந்த நிலங்களை மீள்கொள்ள முடியவில்லை. போரின் பின் பல வருடங்கள் சண்டையின்றி இருந்ததால், சமாதான பேச்சுகளுக்கு உடந்தையாக இருந்தது. 1974ல், மைரின் பதவி விலகளுக்குப்பின், இட்ஷாக் ரபின் ஐந்தாவது பிரதான அமைச்சரானார். 1977 கெனெச்சட் தேர்தல்களில் 1948 லிருந்து ஆளுமணியிலிருந்த மார்ச் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியே வந்தது. மேனாசம் பெகின் தலைமையிலான புதிய லிகுட் கட்சி அரசாங்கத்தை பொறுப்பேற்றது. 1974 நவம்பரில், எகிப்து ஜனாதிபதி அன்வர் சாதத், யூத நாட்டுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம் செய்து கெனெச்சட் என்ற மக்களவைக்கு மொழி பெயர்ந்தார். இதுவே இசுரேலுக்கு ஒரு அரபு நாட்டின் முதல் ஏற்றுக்கொள்ளுதல் ஆகும். அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பித்து காம்ப் டேவிட் இழைகளுக்கு வித்திட்டது . மார்ச் 1979ல், வாஷிங்டனில், இசுரேல்-எதிப்த்து சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இசுரேல் 1967ல், எகிப்தினிடம் கைப்பற்றிய எல்லா பகுதிகளையும் திருப்பிக் கொடுத்தது. பாலஸ்தீனர்களுக்கும் சுயாட்சி படலாம் என்றும் ஒத்துக் கொள்ளப்பட்டது. 1980கள் சூலை 7 ஆம் நாள் 1981ல் இசுரேலிய வானூர்திப் படை இராக் நாட்டில் ஓசிரிக் என்னும் இடத்தில் இருந்த (அணுக்கரு உலை உள்ள) அணுக்கரு நிலையத்தைத் தாக்கியழித்தனர். இராக்கியர்கள அணுகுண்டு தயாரிப்பதைத் தடுக்கவே இம்முயற்சி என்று கூறப்பட்டது. 1982ல் இசுரேல் லெபனான் மீது தாகுதல் தொடங்கியது., இஸ்ரேல் 1975 முதல் உள்நாட்டுப் போரில் முழுகியிருந்த லெபனான் மேல் படையெடுத்தது. அதை முதலில் வடக்கிலிருக்கும் குடிகளை பாலஸ்தீனிய பயங்கரவாத தாக்குதலிருந்து காப்பாற்றவதாக சாக்கு சொல்லப் பட்டது. ஆனால் 40 கி.மீ. எல்லைக்கு வெளியே காப்பு மண்டலம் ஏற்ப்படுத்திய பின், இஸ்ரேலி படை இன்னும் வடக்கே முன்னேறி, லெபனான் தலைநகர் பெய்ரூட்டை கைப்பற்றியது. பாலஸ்தீன விடுதலை அணி லெபனானிலிருந்து வெளியேற்றப்பட்டபின், டுநீசியாவின் தலைநகர் டூனிசிக்கு புலம் பெயர்ந்தன. இந்த விளைவினால் ஆரம்பித்த லெபனான் போர்களில் சோர்வுற்ற பிரதமர் பெகின் 1983ல் ராஜிநாமா செய்து, இட்ஷாக் ஷமீருக்கு இடம் விட்டார்.. 1986ல், லெபனானிலிருந்து பெரியளவில் வெளியேறினாலும், காப்பு மண்டலம் 2000 வரை வைக்கப் பட்டது. அதையும் 2000ல், காலி செய்தது. 1980ல் அரசாங்கம் இடது-வலதுசாரிகளினிடையே மாறி மாறி ஆயிற்று. 1984ல் இடது சாரி ஷிமோன் பெரெஸ் பிரதமரானார்; 1986ல் ஷமீர் மறுபடியும் பதவியேற்றார்.. பாலஸ்தீன முதல் எழுச்சி (இண்டிபாடா) 1987ல் தொடங்கி வன்முறைகள் நிகழ்ந்தன. அதனால் ஷமீர் 1988ல், பிரதம அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படார். 1990கள் வளைகுடா யுத்தத்தில், ஒரு பங்கும் இல்லாமலேயே, ஒரு கட்சியும் சாராமலேயே, இஸ்ரேல் பல இராக்கிய ஏவுகணைகளால் அடிக்கப் பட்டு 2 குடிகள் கொல்லப்பட்டனர். 1990ல், அப்போது குலைந்த சோவியத் ஒன்றியத்திலிருந்து பேரளவு யூத வந்தேரிகள் புகுந்தனர். அவர்கள் 'மீள்வருகை நீதி'யின் படி, இஸ்ரேலிய குடிமக்கள் உரிமையை உடனே பெற்றனர். 1990-91ல், 380000 பேர் வந்து குடியிருப்பு உரிமை பெற்றனர். அவர்கள் வாக்குகளை கவர தொழிலாளர் கட்சி, வேலையில்லாமை, வீடு மூட்டப் பிரச்சினைகள் போன்றவற்றை ஆளும் லிகுத் கட்சியின் மேல் போட்டு பரப்புரை செய்தது. அதனால் வந்தேரிகள் தொழிலாளர் கட்சிக்கே 1992 தேர்தலில் ஆதரவு காட்டி வாக்கிட்டு, அக்கட்சிக்கு மக்களவையில் 61% பெரும்பான்மை உரிமையை கொடுத்தனர்.. தேர்தல் தீர்ப்பின்படி, இட்ஷாக் ரபின் பிரதம அமைச்சராகி, இடது சாரி அரசாங்கத்தை மேற்கொண்டார். தேர்தல் போது, அவர் இஸ்ரேலியர்களுக்கு தற்காப்பும், அராபிகளுடன் மொத்த சமாதானத்தையும் 9 மாதங்களுக்குள் காட்டுவதாக சூளுரைத்தார். 1993ல். அரசாங்கம் மட்றீட் சமாதான பேச்சை கைவிட்டு, நார்வே தலைநகர் ஆஸ்லோவில் பாலஸ்தீன விடுதலை அணியுடன் சமாதான சம்மதம் அளித்தது. அதனால் ஜோர்டன் இசுரேலை ஏற்றுக்கொள்ளும் இரண்டாவது அரபு நாடானது. முதலில் பெருமளவிலிருந்த சமாதான சம்மதத்தின் ஆதரவு, ஹமாஸ் போன்ற பாலஸ்தீன சம்மதத்தின் எதிரிகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்களால் கீழிறங்கியது. நவம்னர் 4, 1995ல். இகால் அமீர் என்ற யூத வெறியாளர் பிரதமர் ரபீனை சுட்டுக் கொன்றார். இக்கொலையினால் கொந்தளிப்புற்ற பொதுமக்கள், ஆஸ்லோ சம்மதத்தின் எதிரிகளின் மேல் வெறுப்பு கொண்டு, சம்மதத்தின் யூகியான ஷிமொன் பெரசுக்கு ஆதரவு காட்டத் தொடங்கினர். ஆனால் புதிய பாலஸ்தீனிய தற்கொலை சம்பவங்களாலும், பயங்கர வாதத்தை புகழ்ந்த யாச்சர் ஆராபத் மேலிருந்த எரிச்சலாலும், பெரச் ஆதரவு ஓரளவு மலிந்து, 1996 தேர்தலில் பெரெச், லிகுட் வேட்பாளர் பின்யமின் நடன்யாகு என்பவரிடம் தோற்றார். ஆஸ்லோ சம்மததின் எதிரி போல தோன்றினாலும், நடன்யாகு ஹெப்ரான் பகுதியிலிருந்து வெளியேரி, பாலஸ்தீன தேசீய மன்றத்திற்க்கு மேலும் ஆதீனம் கொடுக்குமாறு கையெழுத்திட்டர். நடன்யாகு ஆட்சிகாலத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் ஓரளவு மழுங்கின. ஆனால் 1999 தேர்தல்களில் தொழிலாளர் கட்சி எஹூத் பராக் நடன்யாகுவை பெருவித்தியாசத்தில் தோற்க்கடித்து, அடுத்த பிரதமரானார். இசுரேலின் நில நாட்டு அமைப்பு இசுரேலுக்கு வடக்கில் லெபனான், கிழக்கில் சிரியா, ஜோர்தான், மற்றும் மேற்குக் கரை, தென்மேற்கில் எகிப்து மற்றும் காசா கரை ஆகிய நாடுகளும் பகுதிகளும் அமைந்தன. மேற்கில் நடுநிலக்கடலும் தெற்கில் அக்காபா விரிகுடாவிலும் கடற்கரைகள் உள்ளன. 1967ல் நிகழ்ந்த ஆறுநாள் போரில் இசுரேல் யோர்தானைச்சேர்ந்த மேற்குக்கரை (West Bank) சிரியாவைச் சேர்ந்த கோலான் குன்றுகள் (Golan Heights), எகிப்த்தைச் சேர்ந்த காசாப் பகுதி ஆகியவற்றைக் கைப்பற்றியிருந்தது. 1982வுக்கு முன் பல படையினர்களும் குடியேற்றவர்களும் சைனைவிலிருந்து திரும்பப்பெற்றுள்ளது. மேற்குக்கரை, காசா கரை, கோலான் குன்றுகள் ஆகிய பகுதிகளின் நிலைமையை இன்று வரை முடிவு செய்யவில்லை. 1967ல் கைப்பற்றின நிலங்களை தவிர இசுரேலின் மொத்த பரப்பளவு 20,770 கிமீ² அல்லது 8,019 சதுர மைல்; (1% நீர்). இசுரேல் சட்டத்தின் படி கிழக்கு ஜெரூசலெம் மற்றும் கோலான் குன்றுகள் உட்பட மொத்த பரப்பளவு 22,145 கிமீ² அல்லது 8,550 மைல்²; ஒரு சதவீதம் கீழே நீர். இசுரேல் கட்டுப்பாட்டில் மொத்த பரப்பளவு 28,023 கிமீ² அல்லது 10,820 மைல்² (~1% நீர்). மாநகரப் பரப்பளவுகள் 2004 இசுரேல் புள்ளியியல் மையத்தின் கணக்கெடுப்பின் படி டெல் அவீவ் (மக்கள் தொகை 2,933,300), ஹைஃபா (மக்கள் தொகை 980,600), பீர்ஷெபா (மக்கள் தொகை 511,700) ஆகிய மூன்று மாநகரங்கள் இசுரேலில் உள்ளன.[45] ஜெரூசலெமும் இசுரேலின் மாநகரங்களில் சேர்த்துக் கொள்ளலாம், ஆனால் இந்நகரத்தின் எல்லைகள் உறழ்வு பட்டுள்ளது காரணமாக சரியாக மக்கள் தொகையை கணக்கெடுக்கமுடியாது. 2005 கணக்கெடுப்பின் படி அரசின் படி ஜெரூசலெம் மக்கள் தொகை 706,368 ஆகும். சில வேளைகளில் அரபு முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையான நாசரேத்தும் மாநகரமாக குறிப்பிட்டுள்ளது. . சட்ட மன்றம் இசுரேலின் ஆட்சி ஒரேயொரு சட்டமன்றத்தின் அடிப்படையில் நிகழுகின்றது. இசுரேலின் நாடாளும் சட்டமன்றத்திற்கு கெனெசெட் (Knesset ஃஈபுரு மொழியில் כנסת = கூட்டம், மன்றம், assembly) என்று பெயர். இதில் 120 கெனெசெட் உறுப்பினர்கள் (நாடாளுமன்ற உறுப்பினர்கள்) உண்டு. ஆட்சி செலுத்துவோர் இசுரேலியக் குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவர் எனினும் அதிக ஆட்சிப்பொறுப்புகளும் ஆணை மற்றும் கட்டளை இடும் உரிமையும் அற்றவர். தேர்தலில் பெரும்பானமை வெற்றி பெற்ற கட்சியின் தலைவரை தலைமை அமைச்சராய் தேர்ந்தெடுப்பது குடியரசுத் தலைவரின் முக்கியப் பொறுப்புகளில் ஒன்று. நாட்டை நடத்தும் பொறுப்பும் அதிகாரமும் தலைமை அமைச்சரைச் சேர்ந்தது. தலைமை அமைச்சர் தன் அமைச்சர் குழுவைக்கொண்டு நாட்டை நடத்துவார். மக்கள் மக்கள் வகைப்பாடு இசுரேலின் நடுவண் புள்ளியியல் துறையின் மே 2006 ஆம் ஆண்டின் கணக்குப்படி இசுரேலில் 7 மில்லியன் உள்ளனர். அவற்றில் 77% மக்கள் யூதர்கள், 18.5% அராபியர்கள், 4.3% மற்ற இனத்தவர்..[46] யூதர்களில் 68% மக்கள் இசுரேலில் பிறந்தவர்கள் (இவர்களை சபரா என்பர்), அல்லது ஐரோப்பாவில் இருந்து குடியேறியவர் (இவர்கள் ஓலிம் எனப்படுபவர்), 22% மக்கள் ஐரோப்பாவில் இருந்தும் அமெரிக்கவில் இருந்தும் வந்து குடியேறியவர், 10% ஆசியா-ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறியவர்.[47] ஆதாரங்களும் மேற்கோள்களும் குறிப்பு வெளி இணைப்புக்கள் அரசாங்கம் at the Israel Ministry of Foreign Affairs of the Israel Tourism Ministry of the Israel Central Bureau of Statistics பொது தகவல் at The Washington Post at the Jewish Virtual Library from International Futures வரைபடங்கள் விபரக்கோவை பகுப்பு:இசுரேல் பகுப்பு:முன்னாள் பிரித்தானியக் குடியேற்றங்கள் பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
இசுரேல் நாட்டின் பரப்பளவு என்ன?
20,770 கிமீ²
20,495
tamil
d8b6327f9
வில்லியம் சேக்சுபியர் (திருமுழுக்கு: 26 ஏப்ரல் 1564 - இறப்பு: 23 ஏப்ரல் 1616)[a] ஒரு ஆங்கிலக் கவிஞரும் நாடக ஆசிரியருமாவார். ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் என்றும் உலகின் மிகப் புகழ்வாய்ந்த நாடக ஆசிரியர் என்றும் இவர் குறிப்பிடப்படுகிறார்.[1] அநேக சந்தர்ப்பங்களில் இங்கிலாந்தின் தேசியக் கவிஞர் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். வாழும் அவரது படைப்புகளில் 38 நாடகங்கள்,[b] 154 செய்யுள் வரிசைகள், இரண்டு நெடும் விவரிப்பு கவிதைகள், மற்றும் பல பிற கவிதைகள் அடங்கும். அவரது நாடகங்கள் உலகில் ஒவ்வொரு பெரிய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. வருடந்தோறும் வேறு எந்த ஒரு நாடகாசிரியரின் நாடகங்களை விடவும் அதிகமாக நடத்தப்படுகிறது.[2] ஸ்ட்ராட்ஃபோர்டு-அபான்-அவான் என்கிற இடத்தில் தான் சேக்சுபியர் பிறந்தார், வளர்ந்தார். 18 வயதில், அவர் ஆனி ஹதாவேயை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள்: சுசானா, மற்றும் இரட்டையர்களான ஹேம்னட் மற்றும் ஜூடித்.1585 மற்றும் 1592 ஆம் ஆண்டுகளுக்கு இடையே, லண்டனில் ஒரு நடிகர், எழுத்தாளர் மற்றும் லார்டு சாம்பர்ளின்'ஸ் மென் என்ற நாடக நிறுவனத்தின் பங்குதார் என வெற்றிகரமாகத் தன் வாழ்க்கையைத் துவங்கினார். இந்த நாடக நிறுவனம் பின்னாளில் கிங்'ஸ் மென் நாடக நிறுவனம் என்று ஆனது. 1613 ஆம் ஆண்டு வாக்கில் அவர் ஸ்ட்ராட்போர்டில் ஓய்வுற்றதாக கருதப்படுகிறது. மூன்று வருடங்களுக்குப் பின் அங்கு அவர் மரணமெய்தினார். சேக்சுபியரின் அந்தரங்க வாழ்க்கை குறித்த சில பதிவுகளே பிழைத்திருக்கின்றன. எனவே அவரது உடல் தோற்றம், பாலின விருப்பம், மத நம்பிக்கைகள், மற்றும் அவரது படைப்புகளாகக் கூறப்படுவன மற்றவர்களால் எழுதப்பட்டதா போன்ற விடயங்களில் குறிப்பிடத்தக்க அளவு ஊகங்கள் நிலவுகின்றன.[3] சேக்சுபியர் தனது அறியப்பட்ட படைப்புகளில் அநேகமானவற்றை 1589 மற்றும் 1613 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தான் உருவாக்கினார்.[4] அவரது ஆரம்ப நாடகங்கள் முக்கியமாக நகைச்சுவை மற்றும் வரலாறுகள் என பல பிரிவுகளைத் தொட்டது. பின் சுமார் 1608 வரை அவர் துன்பியல் நாடகங்களை பிரதானமாக எழுதினார். ஹேம்லட் , கிங் லியர் , மற்றும் மெகாபெத் ஆகிய ஆங்கில மொழியின் மிகச் சிறந்த படைப்புகளாகக் கருதப்படும் சிலவும் இதில் அடங்கும். தனது இறுதிக் காலகட்ட சமயத்தில், அவர் துன்பியல்நகைச்சுவைகளை எழுதினார். இவை அரிய நிகழ்வுகளுடனான வீரக் காதல் காவியங்கள் என்றும் கூறலாம். மற்ற நாடகாசிரியர்களுடனும் இணைந்து பணியாற்றினார். அவரது நாடகங்களில் பலவும் அவரது ஆயுள்காலத்தில் பல்வேறு தரம் மற்றும் துல்லியங்களுடனான பதிப்புகளில் வெளியானது. 1623 ஆம் ஆண்டில், அவரது முன்னாள் நாடக அரங்க சகாக்களில் இருவர் ஃபர்ஸ்ட் ஃபோலியோ என்னும் அவரது நாடகப் படைப்புகளின் தொகுப்பை வெளியிட்டனர். இதில் இப்போது சேக்சுபியரது படைப்புகள் என்று அறியப்படும் நாடகப் படைப்புகளில் இரண்டைத் தவிர மற்ற அனைத்தும் அடங்கியிருந்தது. சேக்சுபியர் தனது காலத்திலேயே மதிப்புமிகுந்த கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் இருந்தார். எனினும் பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதி வரை அவரது மதிப்பு இன்றைய உயரத்தில் இருக்கவில்லை. குறிப்பாக காதல்வீரக் காவியங்கள் சேக்சுபியரின் திறமையைப் போற்றின. விக்டோரியா காலத்தவர்கள் சேக்சுபியரை மரியாதையுடன் புகழ்ந்து போற்றினர்.[5] இருபதாம் நூற்றாண்டில் அவரது படைப்புகள் பல்வேறு இயக்கங்கள் மூலமும் எடுத்தாளப் பெற்றன. அவரது நாடகங்கள் இன்று மிகவும் புகழ்மிக்கவையாக திகழ்வதோடு, உலகெங்கிலும் பன்முக கலாச்சார மற்றும் அரசியல் பொருளில் தொடர்ந்து படிக்கப்பட்டும், மறுபுரிதல் கொள்ளப்பட்டும் வருகின்றன. வாழ்க்கை ஆரம்பகால வாழ்க்கை வெற்றிகரமான கையுறை உற்பத்தியாளராகவும் அரசியல்மன்ற உறுப்பினராகவும் திகழ்ந்த ஜான் சேக்சுபியருக்கும், செல்வமிகுந்த நில அதிபரின் மகளான மேரி ஆர்டனுக்கும் மகனாக வில்லியம் சேக்சுபியர் பிறந்தார்.[6] அவரது உண்மையான பிறந்த தேதி அறியப்பட முடியவில்லை. ஆனால் மரபுவழியாக 23, ஏப்ரல், செயின்ட் ஜார்ஜ் தினத்தன்று கொண்டாடப்படுகிறது.[7] சேக்சுபியர் 23 ஏப்ரல் 1616 அன்று இறந்தார்.[8] எட்டு குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்த அவர் பிழைத்திருந்தவர்களில் மூத்தவராகத் திகழ்ந்தார்.[9] அவர் வாழ்ந்த காலத்திற்கான பதிவேடுகள் எதுவும் இல்லை என்றாலும் கூட, தனது வீட்டில் இருந்து கால் மைல் தூரத்தில் இருந்த 1553 ஆம் ஆண்டின் பட்டியலிடப்பட்ட இலவசப் பள்ளிகளில்[10] ஒன்றான ஸ்ட்ராட்போர்டில் இருக்கும் [[கிங் எட்வர்ட் VI பள்ளியில் [11] சேக்சுபியர் கல்வி பெற்றார் என்பதை அநேக வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். எலிசபெத் காலத்தில் இலக்கண பள்ளிகள் தரத்தில் வேறுபட்டதாக இருந்தன. ஆனால் பாடத்திட்டம் சட்டத்தின் மூலம் இங்கிலாந்து முழுவதும் வரையறுக்கப்பட்டதாக இருந்தது.[12] பள்ளியானது லத்தீன் இலக்கணம் மற்றும் செவ்வியலில் தீவிரக் கல்வியை வழங்கியிருக்க வேண்டும். 18 வயதில், சேக்சுபியர் 26 வயதான ஆன் ஹேதாவே திருமணம் செய்து கொண்டார்.வார்செஸ்டர் டயாசிஸ் திருச்சபை மன்றம் திருமண உரிமத்தை 27 நவம்பர் 1582 அன்று வழங்கியது. ஹதாவேயின் அண்டைவீட்டார் இருவர் உத்தரவாத பிணையை அளித்ததை தொடர்ந்து திருமணத்திற்கு ஏதும் தடை இருக்கவில்லை.[13] தம்பதிகள் திருமண ஏற்பாட்டினை சற்று துரிதமாக நடத்தியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[14] ஆனியின் கர்ப்பம் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். திருமணம் முடிந்த ஆறு மாதங்களில், அவர் சுசானா எனும் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.[15] சுமார் இரண்டு வருடங்கள் கழித்து இரட்டைக் குழந்தைகளாக மகன் ஹேம்னெட்டும் மகள் ஜூடித்தும் பிறந்தனர்.[16] ஹேம்னெட் புரியாத காரணங்களால் 11 வயதில் இறந்து போனான்.[17] இரட்டைக் குழந்தைகள் பிறந்தபின், 1592 ஆம் ஆண்டில் லண்டன் நாடக அரங்கின் ஒரு பாகமாக அவர் அறியப்படும் காலம் வரை சேக்சுபியர் குறித்த வரலாற்று குறிப்புகள் குறைவாகவே உள்ளன. இந்த இடைவெளியின் காரணமாக, 1585 மற்றும் 1592 ஆண்டுகளுக்கு இடையிலான காலத்தை சேக்சுபியரின் "தொலைந்த காலம்" என்று அறிஞர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.[18] இந்த காலகட்டம் குறித்து எழுத முற்படும் வாழ்க்கைவரலாற்று ஆசிரியர்கள் பல உறுதிப்படாத கதைகளைக் கூறுகிறார்கள். மான்வேட்டையாடியதற்கான தண்டனையில் இருந்து தப்பிக்க நகரில் இருந்து சேக்சுபியர் லண்டனுக்கு தப்பி ஓடியதாக ஸ்ட்ராட்போர்டு மேதை ஒருவர் நினைவுகூர்ந்ததை சேக்சுபியரின் வாழ்க்கைவரலாற்றை முதலில் எழுதிய ஆசிரியரான நிகோலஸ் ரோவ் தெரிவிக்கிறார்.[19] சேக்சுபியர் லண்டனில் இருந்த நாடக புரவலர்களை மனதில் கொண்டு தனது நாடக வாழ்க்கையை துவங்கினார் என்று மற்றொரு பதினெட்டாம் நூற்றாண்டு கதை கூறுகிறது.[20] சேக்சுபியர் ஒரு கிராம பள்ளிவாத்தியாராக இருந்தார் என்று ஜான் ஆப்ரி தெரிவித்தார்.[21] லங்காஷயரைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் ஹவ்டன் என்னும் கத்தோலிக்க நிலப்பிரபு சேக்சுபியரை பள்ளியாசிரியராக பணியமர்த்தியிருக்கலாம் என்று சில இருபதாம் நூற்றாண்டு அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலப்பிரபு தனது உயிலில் "வில்லியம் ஷேக் ஷாஃப்டெ" என்று ஒரு பெயரைக் குறிப்பிட்டிருந்தார்.[22] சேக்சுபியரின் மரணத்திற்கு பிந்தைய வாய்வழிச் செய்திகளைத் தவிர்த்து இத்தகைய கதைகளை உறுதிப்படுத்த எந்த ஆதாரமும் இல்லை.[23] இலண்டனும் நாடக வாழ்க்கையும் சேக்சுபியர் எப்போது எழுதத் துவங்கினார் என்று துல்லியமாகத் தெரியவில்லை. ஆனால் சமகாலத்திய குறிப்புகளும் நாடக நிகழ்ச்சிகளின் பதிவுகளும் அவரது பல நாடகங்கள் லண்டன் அரங்கில் 1592 ஆம் ஆண்டில் நிகழ்ந்திருக்கலாம் எனக் காட்டுகின்றன.[24] அப்போது நாடக ஆசிரியரான ராபர்ட் கிரீன் சேக்சுபியரை பின்வரும் வகையில் அவமதித்துப் பேசும் அளவுக்கு சேக்சுபியர் லண்டனில் போதுமான அளவு அறியப்பட்டவராயிருந்தார்: ....புதிதாய் ஒரு காகம் கிளம்பியிருக்கிறது. உங்களில் சிறந்தவர்களில் ஒருவரைப் போல தனக்கும் திறனுண்டு என்பதைப் போல வெற்று செய்யுளைக் கொண்டு அது பகட்டு செய்கிறது. முழுக்க எல்லாம்-தெரிந்த ஆசாமி யாக இது அலட்டிக் கொள்கிறது.[25] இந்த வார்த்தைகளின் துல்லியமான பொருளில் அறிஞர்கள் வேறுபடுகிறார்கள்.[26] ஆனால் கிறிஸ்டோபர் மர்லோ, தாமஸ் நஷெ மற்றும் கிரீனும் போன்ற பல்கலைக்கழக கல்வி பெற்ற எழுத்தாளர்கள் அளவுக்கு தன்னை உயர்த்தி நிறுத்திக் கொள்ள சேக்சுபியர் தனது தகுதிக்கு மீறி முயற்சிப்பதாக கிரீன் குற்றம் சாட்டுகிறார் என்பதை மட்டும் அநேகமானோர் ஒப்புக் கொள்கின்றனர்.[27][28] கிரீனின் தாக்குதல் தான் நாடக வாழ்க்கையில் சேக்சுபியர் குறித்த முதல் பதிவு பெற்ற குறிப்பாகும். அவரது தொழில்வாழ்க்கை கிரீனது கருத்துகளுக்கு கொஞ்சம் முன்னால் 1580களின் மத்தியில் ஏதோ ஒரு சமயத்தில் துவங்கியிருக்க வேண்டும் என்று வாழ்க்கைவரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.[29] 1594 ஆம் ஆண்டு முதல், சேக்சுபியரின் நாடகங்கள் லார்டு சாம்பர்லெய்ன்'ஸ் மென் குழுவினால் மட்டுமே நடத்தப்பட்டன. இது சேக்சுபியர் உள்ளிட்ட ஒரு குழுவினர் பங்குபெற்று நடத்தி வந்த ஒரு நிறுவனமாகும். இது விரைவில் லண்டனின் முன்னணி நாடக நிறுவனமானது.[30] 1603 ஆம் ஆண்டில் ராணி எலிசபெத்தின் மறைவுக்குப் பிறகு, புதிய மன்னரான முதலாம் ஜேம்ஸ் இந்நிறுவனத்திற்கு அரச உரிமத்தை வழங்கி, அதன் பெயரையும் கிங்'ஸ் மென் என்பதாக மாற்றினார்.[31] 1599 ஆம் ஆண்டில், நிறுவன உறுப்பினர்களின் ஒரு கூட்டணி தேம்ஸ் நதியின் தெற்குக் கரையில் தங்களது சொந்த நாடக அரங்கைக் கட்டியது. இதனை அவர்கள் குளோப் என்று அழைத்தனர். 1608 ஆம் ஆண்டில், இந்த கூட்டணி பிளாக்ஃபிரையர்ஸ் உள் அரங்கத்தையும் கைவசமாக்கியது. சேக்சுபியரின் சொத்து வாங்கல்கள் மற்றும் முதலீடுகள் குறித்த பதிவுகள் நிறுவனம் அவரை ஒரு பணக்காரராக்கி இருப்பதை சுட்டிக் காட்டுகின்றன.[32] 1597 ஆம் ஆண்டில், ஸ்ட்ராட்ஃபோர்டில் இரண்டாவது மிகப்பெரிய வீடான நியூ ப்ளேஸை அவர் வாங்கினார். 1605 ஆம் ஆண்டில், ஸ்ட்ராட்ஃபோர்டு திருச்சபை வருவாய் பங்கில்அவர் முதலீடு செய்தார்.[33] 1594 ஆம் ஆண்டு முதல் சேக்சுபியரின் சில நாடகங்கள் குவார்டோ பதிப்புகளாக வெளியாகின. 1598 வாக்கில், அவரது பெயர் விற்பனை அம்சமாக மாறி முகப்பு பக்கங்களில் தோன்றத் துவங்கியிருந்தது.[34] நாடக ஆசிரியராக வெற்றி பெற்ற பிறகு சேக்சுபியர் தனது சொந்த நாடகங்கள் மற்றும் பிறரது நாடகங்களில் நடிப்பதைத் தொடர்ந்தார். பென் ஜான்சன் படைப்பு களின் 1616 ஆம் ஆண்டு பதிப்பு எவரி மேன் இன் ஹிஸ் ஹியூமர் (1598) மற்றும் செஜானஸ், அவரது வீழ்ச்சி (1603) ஆகிய நாடகங்களின் நடித்தவர் பட்டியலில் சேக்சுபியரின் பெயரைக் குறிப்பிடுகிறது.[35] 1605 ஆம் ஆண்டின் ஜான்சன்'ஸ் வோல்போன் நடிகர் பட்டியலில் அவர் பெயர் இல்லாதிருப்பது, அவரது நடிப்பு வாழ்க்கை முடிவை நெருங்கியதன் அடையாளம் என்று சில அறிஞர்கள் எடுத்துக் கூறுகின்றனர்.[36] ஆயினும், 1623 ஆம் ஆண்டின் தி ஃபர்ஸ்ட் ஃபோலியோ சேக்சுபியரை "இந்த அனைத்து நாடகங்களின் பிரதான நடிகர்களில்" ஒருவர் என்று பட்டியலிடுகிறது. இவற்றில் சில வோல்போனுக்கு பிறகு தான் முதன்முறையாக அரங்கேற்றப்பட்டவை, ஆயினும் அவர் ஏற்ற பாத்திரங்கள் என்ன என்பது நமக்கு உறுதிபடத் தெரியவில்லை.[37][38] 1709 ஆம் ஆண்டில், சேக்சுபியர் ஹேம்லெட்டின் அப்பாவின் ஆவி பாத்திரத்தை ஏற்றதாக ஒரு கூற்றும் பிறந்தது.[39] அவர் அஸ் யூ லைக் இட் நாடகத்தில் ஆதாம் வேடமும் ஹென்றி V நாடகத்தில் கோரஸ் வேடமும் கூட ஏற்றிருக்கிறார் என்பதாக பிந்தைய கூற்றுகள் கூறி வந்தன,[40] ஆனால் இந்த தகவல்களின் மூலங்கள் குறித்து அறிஞர்கள் சந்தேகம் கொள்கிறார்கள்.[41] சேக்சுபியர் தனது தொழில் வாழ்க்கையின் போது தனது காலத்தை லண்டன் மற்றும் ஸ்ட்ராட்ஃபோர்டுக்கு இடையில் பிரித்துக் கொண்டார். 1596 ஆம் ஆண்டில், அவர் ஸ்ட்ராட்ஃபோர்டில் தனது குடும்ப இல்லமான நியூ ப்ளேஸை வாங்குவதற்கு ஒரு வருடம் முன்னதாக, தேம்ஸ் நதிக்கரையின் வடக்குப் பகுதியில் வசித்து வந்தார்.[42] 1599 வாக்கில், நதியைக் கடந்து சவுத்வார்க்கிற்கு நகர்ந்தார். அவரது நிறுவனம் அந்த ஆண்டில் அங்கு குளோப் தியேட்டரை கட்டியிருந்தது.[43] 1604 வாக்கில், அவர் மீண்டும் நதியின் தெற்கில் சென்று விட்டார். அங்கே அவர் கிறிஸ்டோபர் மவுண்ட்ஜாய் எனும் பெண்களின் தலையலங்காரங்கள் தயாரிப்பாளரான பிரெஞ்சு ஹயூக்னாட்டிடம் வாடகைக்கு அறைகளை அமர்த்திக் கொண்டார்.[44] பிந்தைய வருடங்களும் இறப்பும் சேக்சுபியர் தான் இறப்பதற்கு சில வருடங்களுக்கு முன்னதாக ஸ்ட்ராட்போர்டில் ஓய்வுற்றார் என்பதான கருத்தினை முதல்முதலில் வாழ்க்கைவரலாற்று ஆசிரியர் ரோவ் குறிப்பிட்டார்.[45] ஆனால் அனைத்து வேலைகளில் இருந்தும் ஓய்வு என்பது அந்த சமயத்தில் சாதாரண நிகழ்வு அல்ல.[46] சேக்சுபியர் தொடர்ந்து லண்டனுக்கு பயணம் செய்து கொண்டிருந்தார்.[45] 1612 ஆம் ஆண்டில் மவுண்ட்ஜாயின் மகளான மேரியின் திருமணம் குறித்த நீதிமன்ற வழக்கில் அவர் ஒரு சாட்சியாக அழைக்கப்பட்டார்.[47][48] 1614 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து தனது மருமகனான ஜான் ஹால் உடன் பல வாரங்கள் லண்டனில் இருந்தார்.[49] 1606-1607 காலத்துக்குப் பிறகு, சேக்சுபியர் சில நாடகங்கள் மட்டுமே எழுதினார். 1613 காலத்துக்கு பிந்தையவற்றில் எதுவும் அவர் எழுதியதாகத் தெரியவில்லை.[50] அவரது கடைசி மூன்று நாடகங்கள் கூட்டுமுயற்சிகளாக இருந்தன. அநேகமாக கிங்'ஸ் மென் குழுவுக்கு குழு நாடக ஆசிரியராக அவருக்கு பின் வந்த ஜான் பிளட்சர்,[51] உடன் சேர்ந்து உருவாக்கியதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[52] சேக்சுபியர் 23 ஏப்ரல் 1616[53] அன்று இறந்தார். அவருக்கு ஒரு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்தனர். சுசானா ஜான் ஹால் என்னும் ஒரு மருத்துவரைத் திருமணம் செய்து கொண்டார்.[54] ஜூடித் சேக்சுபியர் இறப்பதற்கு இரண்டு மாதங்கள் முன்னதாக தாமஸ் குவினி என்னும் தேறல் விற்பவரை திருமணம் செய்து கொண்டார்.[55] தனது உயிலில், சேக்சுபியர் தனது பெரிய மலைத்தோட்டத்தின் பெரும்பகுதியை தனது மூத்த மகளான சுசான்னாவுக்கு எழுதி வைத்தார்.[56] அதன் வாசகங்கள் அதனை சுசானா தனது "உடல்வழியான முதல் மகனுக்கு" வழங்க வேண்டும் என்று தெரிவித்தன.[57] குவினிஸ்க்கு மூன்று குழந்தைகள். அனைவருமே திருமணமாகாமலேயே இறந்து விட்டனர்.[58] ஹால்ஸுக்கு எலிசபெத் என்னும் ஒரு பிள்ளை இருந்தார். இவர் இருமுறை திருமணம் செய்தும் குழந்தை எதுவும் இன்றி 1670 ஆம் ஆண்டில் இறந்து, சேக்சுபியரின் நேரடி வாரிசு வரிசையை முடித்து வைத்தார்.[59] சேக்சுபியரின் உயில் அவரது மனைவி ஆனி குறித்து குறைவான இடங்களிலேயே குறிப்பிடுகிறது. அவருக்கு அநேகமாக அவரது தேயிலைத் தோட்டத்தில் மூன்றில் ஒரு பகுதி தானாக சென்று சேர்ந்திருக்க வேண்டும். ஆயினும் அவருக்கு "எனது இரண்டாவது சிறந்த படுக்கை"யை விட்டுச் செல்வதாக சேக்சுபியர் குறிப்பிட்டிருந்தார், சேக்சுபியரின் இந்த உயில்வாசகம் நிறைய ஊகங்களுக்கு இட்டுச் செல்கிறது.[60] சில அறிஞர்கள் இது ஆனியை அவமதிக்கும் வகையில் எழுதப்பட்டது என்கிறார்கள். மற்றவர்கள் இரண்டாவது சிறந்த படுக்கை என்பது திருமண படுக்கை என்பதாக இருக்க வேண்டும். எனவே முக்கியத்துவத்தில் செறிவானதாக இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.[61] இறந்த இரண்டு நாட்களுக்குப் பின் சேக்சுபியர் புதைக்கப்பட்டார்.[62] அவரது கல்லறையில் இருக்கும் கல்லில் அவரது எலும்புகளை நகர்த்துவதற்கு எதிரான சாபம் பொறிக்கப்பட்டுள்ளது: 1623 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஒரு காலத்தில், அவரது நினைவாக வடக்கு சுவரில் நினைவுச்சின்னம் ஒன்று எழுப்பப்பட்டது. அதில் அவரது பாதி உருவம் எழுதிக் கொண்டிருப்பது போல் இருந்தது. அதில் பொறிக்கப்பட்டிருக்கும் தகடு அவரை நெஸ்டர், சாக்ரடீஸ், மற்றும் வர்ஜில் உடன் ஒப்பிடுகிறது.[63][64] சேக்சுபியர் உலகெங்கிலும் உள்ள பல்வேறு சிலைகள் மற்றும் நினைவகங்களில் போற்றப்படுகிறார். நாடகங்கள் சேக்சுபியரின் எழுத்து வாழ்க்கையில் அறிஞர்கள் அடிக்கடி நான்கு காலகட்டங்களைக் குறிப்பிடுகின்றனர்.[65] 1590களின் மத்தியகாலம் வரை, ரோமானிய மற்றும் இத்தாலிய மாதிரிகளின் பாதிப்புடனான நகைச்சுவை நாடகங்களையும், காலக்கிரம மரபிலான வரலாற்று நாடகங்களையும் தான் அவர் பிரதானமாக எழுதினார் என்று பரவலாக நம்பப்படுகிறது. அவரது இரண்டாவது காலகட்டம் சுமார் 1595 வாக்கில் ரோமியோ ஜூலியட் என்னும் துன்பியல் நாடகத்துடன் தொடங்கி 1599 ஆம் ஆண்டில் ஜூலியஸ் சீசர் என்னும் துன்பியல் நாடகத்துடன் முடிந்தது. இந்த காலகட்டத்தின் போது தான், அவர் அவரின் மிகப்பெரும் படைப்புகளாகக் கருதப்படும் மிகப்பெரும் நகைச்சுவைகள் மற்றும் வரலாறுகளை எழுதினார். சுமார் 1600 ஆம் ஆண்டுக் காலம் தொடங்கி சுமார் 1608 ஆம் ஆண்டுக் காலம் வரையிலும், தனது "துன்பியல் காலகட்ட"த்தில் சேக்சுபியர் பெரும்பாலும் துன்பியலையே எழுதினார். சுமார் 1608 ஆம் ஆண்டுக் காலம் முதல் 1613 ஆம் ஆண்டுக் காலம் வரை துன்பியல்நகைச்சுவைகளை அவர் பிரதானமாக எழுதினார். சேக்சுபியரின் முதல் பதிவு செய்த படைப்புகள் ரிச்சர்டு III மற்றும் ஹென்றி VI படைப்பின் மூன்று பாகங்கள் ஆகும். இது 1590களின் ஆரம்பத்தில் வரலாற்று நாடகம் வழக்கத்தில் இருந்த ஒரு காலகட்ட சமயத்தில் எழுதப்பட்டதாகும். சேக்சுபியரின் நாடகங்கள் தேதி குறிப்பிட சிரமமானவை. ஆனால்[66] டைடஸ் ஆன்ட்ரோனிகஸ் , தி காமெடி ஆஃப் எரர்ஸ் , தி டேமிங் ஆஃப் தி ஷ்ரூ மற்றும் டூ ஜென்டில்மென் ஆஃப் வெரோனா ஆகிய நாடகங்களும் சேக்சுபியரின் ஆரம்ப காலத்தை சேர்ந்தவையாகவே இருக்க வேண்டும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.[67] அவரது முதல் வரலாற்று படைப்புகள் [68] பலவீனமான அல்லது ஊழல் ஆட்சியின் சீரழிவான விளைவுகளை நாடகப்படுத்துகின்றன. இவை ட்யூடர் வம்ச மூலங்களை நியாயப்படுத்துவதாக அமைந்திருந்ததாக பொருள்கொள்ளப்படுகிறது.[69] ஆரம்ப நாடகங்கள் பிற எலிசபெத் நாடக ஆசிரியர்கள், குறிப்பாக தாமஸ் கிட் மற்றும் கிறிஸ்டோபர் மர்லோ ஆகியோர், மற்றும் மத்தியகால நாடகங்களின் மரபுகள் மற்றும் செனகாவின் நாடகங்கள் ஆகியவற்றில் இருந்தான பாதிப்புகளைக் கொண்டிருந்தன.[70] தி காமெடி ஆஃப் எரர்ஸ் நாடகமும் செவ்வியல் மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது.[71] இரண்டு நண்பர்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஒப்புதலளிப்பது போல் தோன்றக் கூடிய டூ ஜென்டில்மென் ஆஃப் வெரோனா போலவே,[72] ஒரு ஆணால் ஒரு பெண்ணின் சுயாதீனமான மனம் முடக்கப்படுவதை சொல்லும் ஷ்ரூ வின் கதையும் சில சமயங்களில் நவீன கால விமர்சகர்களையும் இயக்குநர்களையும் பாதிக்கிறது.[73] சேக்சுபியரின் ஆரம்ப கால செவ்வியல் மற்றும் இத்தாலிய வகை நகைச்சுவை நாடகங்கள், 1590களின் மத்தியில் அவரது மிகப்பெரும் நகைச்சுவைக் காதல் காவிய சூழல்வகைக்கு வழிவிட்டது.[74][75] தி மெர்ச்சன்ட் ஆஃப் வெனிஸ் , வஞ்சகமான யூத வட்டிக்கடைக்காரரான ஷைலாக்கின் சித்தரிப்பை கொண்டிருந்தது. இது எலிசபெத்திய பார்வைகளைப் பிரதிபலித்தது ஆனால் நவீனகால பார்வையாளர்களுக்கு இது அவமதிப்பான சித்தரிப்பாக தோன்றலாம்.[76] மச் அடூ அபவுட் நத்திங் கின் நகைச்சுவை மற்றும் வார்த்தை வசனம்,[77] அஸ் யூ லைக் இட் டின் மனதை மயக்கும் கிராம அமைப்பு, மற்றும் ட்வெல்த் நைட் டின் உயிரோட்டமான ஆனந்தம் ஆகியவை சேக்சுபியரின் பெரும் நகைச்சுவை நாடக வரிசையை நிறைவு செய்கின்றன.[78] ஏறக்குறைய முழுமையாக செய்யுள் கொண்டே எழுதப்பட்ட கவிதைவயமான ரிச்சர்டு II க்கு பிறகு, சேக்சுபியர் 1590களின் பிற்பகுதியில் வரலாறுகளில் ஹென்றி IV, பகுதிகள் 1 மற்றும் 2 , மற்றும் ஹென்றி V ஆகிய உரை நகைச்சுவையை அறிமுகம் செய்தார். நகைச்சுவை காட்சிகளுக்கும் தீவிர காட்சிகளுக்கும் இடையில், உரை மற்றும் கவிதைக்கு இடையில் என அவர் நுட்பமாக திருப்பக் கூடியவர் என்பதால் அவரது பாத்திரங்கள் கூடுதல் சிக்கலானவையாகவும் நுட்பமானவையாகவும் இருந்தன. அத்துடன் அவரது முதிர்ந்த படைப்பின் விவரிப்பில் பன்முகத்தன்மையையும் இருந்தது.[79] இந்த காலகட்டத்தின் தொடக்கமும் முடிவுமாய் இரண்டு துன்பியல் நாடகங்கள் இருந்தன. ரோமியோ ஜூலியட் நாடகம் பாலியல் எண்ணம் செறிந்த பருவகால வயது, காதல் மற்றும் மரணம் இவற்றினாலான புகழ்பெற்ற காதல் வீரத் துன்பியல் நாடகம் ஆகும்;[80] மற்றும் ஜூலியஸ் சீசர் - இது சர் தாமஸ் நார்த் 1579 ஆம் ஆண்டில் எழுதிய புளூடார்க்கின் பேரலல் லைவ்ஸ் மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டது - ஒரு புதிய வகை நாடகத்தை அறிமுகம் செய்தது.[81] சேக்சுபியர் குறித்த ஆராய்ச்சி அறிஞரான ஜேம்ஸ் ஷப்ரியோ கூற்றுப்படி, ஜூலியஸ் சீசரில் "அரசியல், பாத்திரப்படைப்பு, உள்முகப்பார்வை, சமகால நிகழ்வுகள், இன்னும் எழுதுவதில் சேக்சுபியரின் சொந்த பிரதிபலிப்புகள் இவற்றின் வெவ்வேறு பரிமாணங்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொண்டிருந்தன".[82] சேக்சுபியரின் "துன்பியல் காலகட்டம்" சுமார் 1600 தொடங்கி 1608 வரை நீடித்தது,[d] மெஷர் ஃபார் மெஷர் , டிராய்லஸ் மற்றும் கிரெசிடா , மற்றும் ஆல்'ஸ் வெல் தேட் என்ட்ஸ் வெல் ஆகிய "பிரச்சினை நாடகங்கள்" என்பனவற்றையும் அவர் இதே காலத்தில் எழுதினார்.[83] சேக்சுபியரின் மகத்தான துன்பியல்கள் தான் அவரது கலையின் உச்சத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக பல விமர்சகர்கள் கருதுகின்றனர். முதலாவதன் நாயகன் ஹேம்லெட் தான் வேறு எந்த சேக்சுபியர் பாத்திரத்தை விடவும் அதிகமாக விவாதிக்கப்பட்ட ஒரு பாத்திரப் படைப்பு. குறிப்பாக "இப்படி இருப்பதா அல்லது வேண்டாமா; அது தான் கேள்வி" என்று தனக்குத் தானே அவன் கூறி கொள்ளும் மனவொலி மிகப் பிரபலமானது.[84] தனக்குத்தானே மருகிக் கொள்ளும் ஹேம்லெட் - தயக்கம் தான் இவனது மரணத் தவறு - போலல்லாமல் அடுத்து வந்த துன்பியல்களின் நாயகன்களான, ஓதெல்லோ மற்றும் கிங் லியர், அவசர முடிவுகளின் தவறுகளால் மாட்டிக் கொண்டார்கள்.[85] சேக்சுபியரின் துன்பியல்களின் கதைக்களம் பெரும்பாலும் இத்தகைய மரணத் தவறுகள் அல்லது பிழைகளின் மீது தொங்குகின்றன. இவை ஒழுங்கைப் புரட்டுவதுடன் நாயகனையும் அவன் நேசிப்பவர்களையும் சீரழிக்கின்றன.[86] ஓதெல்லோ வில், தன்னை நேசிக்கும் அப்பாவி மனைவியை தான் கொலை செய்யும் அளவுக்கு ஓதெல்லோவின் பாலியல் பொறாமையுணர்வை வில்லன் லகோ தூண்டிவிடுகிறான்.[87] கிங் லியரில் , பழைய ராஜா தனது அதிகாரங்களைத் துறப்பது என்னும் துன்பியல் தவறை செய்து விடுகிறார். இது அவரது மகளின் கொலைக்கும் கிளவ்செஸ்டர் இயர்ல் சித்திரவதை செய்யப்பட்டு குருடாக்கப்படுவதற்கும் இட்டுச் செல்லும் நிகழ்வுகளுக்குத் துவக்கமளிக்கிறது. விமர்சகரான ஃபிராங்க் கெர்மோடேயின் கூற்றுப்படி, "இந்த நாடகம் தனது நல்ல பாத்திரங்களுக்கும் சரி தனது பார்வையாளர்களுக்கும் சரி கொடூரத்தில் இருந்து எந்த நிவாரணமும் அளிப்பதில்லை.[88] சேக்சுபியரின் துன்பியல் நாடகமான மக்பெத் தில்,[89] கட்டுப்படுத்தமுடியாத ஆசை மெகாபெத் மற்றும் அவரது மனைவியான லேடி மக்பெத்தை, உரிமையுள்ள அரசரைக் கொன்று அவரது மகுடத்தை அபகரிக்கத் தூண்டுகிறது. பதிலுக்கு அவர்களது சொந்த குற்ற உணர்ச்சியே அவர்களை சீரழிக்கிறது.[90] இந்த நாடகத்தில், துன்பியல் கட்டமைப்புக்கு ஒரு அமானுடக் கூறினை சேக்சுபியர் சேர்க்கிறார். அவரது இறுதிப் பெரும் துன்பியல்களான, அந்தோனி கிளியோபாட்ரா மற்றும் கோரியாலானஸ் , ஆகியவை சேக்சுபியரின் மிகச்சிறந்த கவிதைகளில் சிலவற்றைக் கொண்டிருக்கின்றன. இவை தான் அவரது மிகவும் வெற்றிகரமான துன்பியல்களாக கவிஞர் மற்றும் விமர்சகரான டி.எஸ்.எலியட் கருதினார்.[91] தனது இறுதிக் காலகட்டத்தில் சேக்சுபியர் சிம்பிலைன் , தி வின்டர்'ஸ் டேல் மற்றும் தி டெம்பஸ்ட் ஆகிய மூன்று பெரும் நாடகங்களையும் அத்துடன் கூட்டுப்படைப்பான பெரிகிள்ஸ், பிரின்ஸ் ஆஃப் டயர் நாடகத்தையும் நிறைவு செய்தார்.[92] சேக்சுபியர் தன் பங்குக்கு வாழ்க்கையை அமைதியாகப் பார்க்கத் தொடங்கியிருந்ததற்கு இந்த நாடகங்களின் மனோநிலை மாற்றம் ஒரு சான்று என்று சில வர்ணனையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அது அந்நாளின் நாடக அரங்கு பாணியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துபவையாகவும் இருந்திருக்கலாம்.[93] அதற்குப் பின்னும் ஹென்றி VIII மற்றும் தி டூ நோபிள் கின்ஸ்மென் ஆகிய இரண்டு நாடகங்களில் சேக்சுபியர் அநேகமாக ஜான் ஃபிளெட்சர் என்கிற நாடகாசிரியருடன் இணைந்து பணியாற்றினார்.[94] நாடக நிகழ்ச்சிகள் சேக்சுபியர் தனது ஆரம்ப நாடகங்களை எந்த நிறுவனங்களுக்காக எழுதினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. டைடஸ் ஆன்ட்ரோனிகஸின் 1594 ஆம் ஆண்டுப் பதிப்பின் முகப்புப் பக்கம் இந்த நாடகம் மூன்று வெவ்வேறு நாடகக்குழுக்களால் அரங்கேற்றப்பட்டதை வெளிப்படுத்துகிறது.[95] 1592-3 பிளேக் பாதிப்புகளுக்குப் பிறகு, சேக்சுபியரின் நாடகங்கள் தேம்ஸின் வடக்கில் ஷோர்டிச்சில் உள்ள தி கர்டெயின் அரங்கில் அவரது சொந்த நிறுவனத்தாலேயே நடத்தப்பட்டன.[96] ஹென்றி IV நாடகத்தை அங்கு காண லண்டன்வாசிகள் இந்நாடகங்களுக்கு கூட்டம் கூட்டமாய் திரண்டனர்.[97] இந்த நிறுவனம் இடமுதலாளியுடன் மோதலுக்கு பிறகு, தி தியேட்டர் அரங்கை மூடிவிட்டு அதன் பலகைகளைக் கொண்டே குளோப் திரையரங்கைக் கட்டியது. தேம்ஸின் தெற்குக் கரையில் சவுத்வார்க்கில் கட்டப்பட்டதான இந்த நாடக அரங்கு தான் நடிகர்களுக்காக நடிகர்களால் எழுப்பப்பட்ட முதல் நாடக அரங்காகும்.[98] 1599 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் குளோப் திரையரங்கு திறக்கப்பட்டது. அதில் அரங்கேற்றப்பட்ட முதல் நாடகங்களில் ஒன்று ஜூலியஸ் சீசர் ஆகும். 1599 ஆம் ஆண்டுக்குப் பிந்தைய சேக்சுபியரின் மகத்தான நாடகங்களில் பலவும் குளோப் திரையரங்கிற்காக எழுதப்பட்டவையே. ஹேம்லெட் , ஓதெல்லோ மற்றும் கிங் லியர் ஆகிய நாடகங்களும் இதில் அடங்கும்.[99] லார்டு சாம்பர்ளின்'ஸ் மென் என்பது 1603 ஆம் ஆண்டில் கிங்'ஸ் மென் என்பதாக பெயர்மாற்றம் கண்டபின், புதிய அரசரான ஜேம்ஸ் உடன் அவர்கள் ஒரு சிறப்பான உறவுக்குள் நுழைந்தனர். நாடக நிகழ்ச்சிப் பதிவுகள் தெளிவின்றியே இருக்கின்றன எனினும், நவம்பர் 1, 1604 மற்றும் அக்டோபர் 31, 1605 ஆகிய காலத்துக்கு இடையே அவையில் சேக்சுபியரின் நாடகங்களில் ஏழு நடத்திக் காட்டப்பட்டதாய் தெரிகிறது. தி மெர்ச்சென்ட் ஆஃப் வெனிஸின் இரு நிகழ்ச்சிகளும் இதில் அடங்கும்.[100] 1608 ஆம் ஆண்டுக்குப் பிறகு, குளிர்காலத்தில் அவர்கள் பிளாக்ஃபிரையர்ஸ் உள்ளரங்கில் நிகழ்ச்சிகள் நடத்தினர். கோடைகாலத்தின் போது குளோப் திரையரங்கில் நடத்தினர்.[101] ஆடம்பரமான மேடையமைப்புகளுடனான ஜேகோபியன் வகை உள்புற அமைவு, விரிவான நாடக சாதனங்களை அறிமுகப்படுத்துவதற்கு சேக்சுபியரை அனுமதித்தது. உதாரணமாக, சிம்பிலைனில் ஜூபிடர் கழுகில் அமர்ந்து இடி மற்றும் மின்னல் மீது இறங்குகிறார். அவர் ஒரு மின்னலைத் தூக்கியெறிகிறார். பேய்கள் மண்டியிடுகின்றன.[102] பிரபலமான ரிச்சர்டு புர்பேஜ், வில்லியம் கெம்பெ, ஹென்றி கோன்டெல் மற்றும் ஜான் ஹெமிங்ஸ் ஆகியோர் சேக்சுபியர் நிறுவன நடிகர்களில் நன்கறியப்பட்டவர்கள் ஆவர். ரிச்சர்டு III , ஹேம்லட், ஓதெல்லோ மற்றும் கிங் லியர் உள்ளிட்ட சேக்சுபியரின் நாடகங்கள் பலவற்றின் முதல் நிகழ்ச்சிகளில் முன்னணிப் பாத்திரத்தை புர்பேஜ் தான் ஏற்றார்.[103] பிரபலமான நகைச்சுவை நடிகரான வில் கெம்பெ ரோமியோ ஜூலியட் டில் பீட்டர் எனும் வேலைக்காரன் வேடமும் மச் அடூ எபவுட் நத்திங் நாடகத்தில் டாக்பெரி பாத்திரமும் ஏற்றார்.[104] பதினாறாம் நூற்றாண்டின் திருப்பவாக்கில் அவர் இடத்தில் ராபர்ட் ஆர்மின் இடம்பெற்றார்.[105] ஹென்றி VIII "செழுமை மற்றும் கொண்டாட்டத்தின் பல அசாதாரண சூழ்நிலைகள் கொண்டு அமைக்கப்பட்டிருந்ததாக" 1613 ஆம் ஆண்டில் சர் ஹென்றி வோட்டன் பதிவு செய்தார்.[106] ஆயினும் 29 ஜூன் அன்று, ஒரு ரவை குளோப் அரங்கின் கூரையை தீக்கிரையாக்கி நாடக அரங்கை தரைமட்டமாக்கியது. சேக்சுபியரின் நாடகம் ஒன்றை துல்லியமான தேதியுடன் குறிப்பிடும் ஒரு நிகழ்வாகும் இது.[106] மூலஉரை 1623 ஆம் ஆண்டில், கிங்'ஸ் மென் குழுவில் சேக்சுபியரின் நண்பர்களாக இருந்த ஜான் ஹெமிங்க்ஸ் மற்றும் ஹென்றி கோன்டெல் ஆகிய இருவரும் ஃபர்ஸ்ட் ஃபோலியோ என்னும் சேக்சுபியர் நாடகத் தொகுப்பை வெளியிட்டனர். இது 36 மூல உரைகளைக் கொண்டது.[107] பல நாடகங்கள் ஏற்கனவே குவார்டோ - காகிதம் இருமுறை மடிக்கப்பட்டு நான்கு இதழ்களாக ஆக்கப்பட்டு உருவாக்கப்படும் புத்தகங்கள் - பதிப்புகளில் தோன்றியிருந்தன.[108] சேக்சுபியர் இந்த பதிப்புகளுக்கு ஒப்புதலளித்தற்கு எந்த ஆதாரமுமில்லை. இதனை ஃபர்ஸ்ட் ஃபோலியோ "திருடப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற நகல்கள்" என்று விவரிக்கிறது.[109] ஆல்பிரட் போலார்டு சிலவற்றை "மோசமான குவார்டோக்கள்" என்று குறிப்பிட்டார்.[110] ஒரு நாடகத்தின் பல்வேறு பதிப்புகள் வாழ்ந்தாலும் கூட, ஒவ்வொன்றும் மற்றொன்றில் இருந்து வேறுபடுவதாய் இருக்கிறது. நகலெடுப்பது அல்லது அச்செடுப்பதிலான பிழைகளில் இருந்து, நடிகர்கள் அல்லது பார்வையாளர் உறுப்பினர்களிடமிருந்தான குறிப்புகளில் இருந்து, அல்லது சேக்சுபியரின் சொந்த தாள்களில் இருந்தே கூட இந்த வேறுபாடுகள் தோன்றியிருக்கலாம்.[111][112] கவிதைகள் 1593 மற்றும் 1594 ஆம் ஆண்டில், பிளேக் நோய் பரவியதன் காரணமாக நாடக அரங்குகள் எல்லாம் மூடப்பட்டபோது, காமக் கருப்பொருளுடனான வீனஸ் அன் அடோனிஸ் மற்றும் தி ரேப் ஆஃப் லுக்ரிஸ் ஆகிய இரண்டு விவரிப்பு கவிதைகளை சேக்சுபியர் வெளியிட்டார். வீனஸ் அன் அடோனிஸில் , அப்பாவியான அடோனிஸ் வீனஸின் பாலியல் முன்னேற்றங்களை நிராகரிக்கிறார். தி ரேப் ஆஃப் லுக்ரிஸில் , கற்புடை மனைவியான லுக்ரிஸ் காமம் கொண்ட டர்குவினால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்.[113] ஓவிடின் கற்பனைக் கவிதைக் கதை களின் பாதிப்பில்,[114] இந்த கவிதைகள் கட்டுப்படுத்த முடியாத காமத்தினால் விளையும் குற்ற உணர்வையும் அறவியல் குழப்பத்தையும் காட்டுகின்றன.[115] இரண்டுமே பிரபலமானதோடு, சேக்சுபியரின் வாழ்நாள் காலத்திலேயே மறுபிரசுரம் செய்யப்பட்டன. மூன்றாவது விவரிப்பு கவிதையான, எ லவர்' ஸ் கம்ப்ளெயின்ட் டில் ஒரு இளம் பெண் தான் பாலியல் ஆசைக்கு தூண்டப்படுவது குறித்து புலம்புகிறாள். இது 1609 ஆம் ஆண்டில் செய்யுள் கவிதை வடிவில் முதல் பதிப்பு அச்சிடப்பட்டது. அநேக அறிஞர்கள் இப்போது சேக்சுபியர் தான் எ லவர்'ஸ் கம்ப்ளெயின்ட் எழுதினார் என ஒப்புக் கொள்கிறார்கள்.[116] 1599 ஆம் ஆண்டில் 138 மற்றும் 144 செய்யுள்களின் இரண்டு ஆரம்ப வரைவுகள் சேக்சுபியரின் அனுமதியின்றி அவரது பெயரைப் போட்டு தி பாசனெட் பில்கிரிமில் தோன்றின.[117] செய்யுள் கவிதைகள் செய்யுள் கவிதை கள் தான் அச்சிலேறிய சேக்சுபியரின் நாடகமல்லாத படைப்புகளில் இறுதியானவை. 154 செய்யுள் கவிதைகளில் ஒவ்வொன்றும் எப்போது தொகுக்கப்பட்டவை என்பதை அறிஞர்களால் உறுதியாகக் கூற முடியவில்லை. ஆனால் தனிப்பட்ட வாசகர்களுக்காக தனது தொழில் வாழ்க்கைக் காலம் முழுவதும் சேக்சுபியர் செய்யுள் கவிதைகளை எழுதினார் என்பதை ஆதாரங்கள் வெளிப்படுத்துகின்றன.[118] உரிய அனுமதியின்றி இரண்டு செய்யுள் கவிதைகள் 1599 தி பாஸனேட் பில்கிரிம் படைப்பில் தோன்றி விடுவதற்கு முன்பே, சேக்சுபியரின் "தனிப்பட்ட நண்பர்களுக்கான செய்யுள் கவிதைகள்" குறித்து பிரான்சிஸ் மெரிஸ் 1598 ஆம் ஆண்டில் குறிப்பு வெளியிட்டிருக்கிறார்.[119] வெளியிடப்பட்ட தொகுப்பு சேக்சுபியர் விரும்பிய வரிசையில் அமைந்தது என்பதை குறைவான ஆய்வாளர்களே நம்புகின்றனர்.[120] அவர் இரண்டு வேறுபாடான வரிசைகளை திட்டமிட்டதாகத் தோன்றுகிறது. கருப்பு நிற தோற்றத்துடனான திருமணமான பெண் ஒருவரின் கட்டுப்படுத்த முடியாத காமம் குறித்த (தி "டார்க் லேடி") என்கிற ஒரு படைப்பையும், இன்னொன்று ஒரு சிவப்பான இளம் ஆணின் மோதலுக்குட்படும் காதல் குறித்த (தி "ஃபேர் யூத்") என்னும் படைப்பையும் அவர் உருவாக்கினார். இந்த பாத்திரங்கள் உண்மையான தனிநபர்களைக் குறிக்கிறதா, அல்லது "நான்" என்று அவர்களைக் குறிப்பிடும் தொனியில், சேக்சுபியர் தன்னைத் தானே பிரதிநிதித்துவப்படுத்துகிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இந்த செய்யுள்கள் கொண்டு "சேக்சுபியர் தனது இதயத்தைத் திறந்தார்" என்று வேர்ட்ஸ்வொர்த் நம்பினார்.[121][122] காதல், பாலியல் நேசம், புனருற்பத்தி, மரணம் மற்றும் காலம் ஆகியவற்றின் மீதான ஆழமான தியானம் என்பதாக இந்த செய்யுள் கவிதை</i>களை விமர்சர்கள் புகழ்கிறார்கள்.[123] நடை சேக்சுபியரின் முதல் நாடகங்கள் அன்றைய நாளின் வழக்கமான நடையில் இருந்தன.[124] கவிதை நீண்ட, சில சமயங்களில் விரிவான உருவகம் மற்றும் கற்பனைப் புனைவுகளை சார்ந்திருந்தது. மொழி பல சமயங்களில் ஆரவாரமானதாக இருந்தது - நடிகர்கள் பேசுவதைக் காட்டிலும் முழக்கமிடும் வகையானதாக. உதாரணமாக, டைடஸ் ஆன்ட்ரோனிகஸின் மகத்தான வசனங்கள் தான் இயக்கத்தை தூக்கி நிறுத்துகின்றன என்று சில விமர்சகர்கள் கருதுகிறார்கள்.[125] ஆயினும், விரைவில் மரபான நடையை தனது சொந்த நோக்கங்களுக்கேற்ப மாற்றினார் சேக்சுபியர். ரிச்சர்டு III நாடகத்தில் ஆரம்பத்தில் வரும் மனவொலி தனது வேர்களை மத்தியகால நாடகத்தின் வைஸின் சுய பிரகடனத்தில் கொண்டுள்ளது. அதே சமயத்தில், ரிச்சர்டின் தெளிவான சுய விழிப்புணர்வு சேக்சுபியரின் முதிர்ச்சியான நாடகங்களின் மனவொலிகளில் இருந்து எடுத்துக் கொள்ளப் பார்க்கின்றன.[126] மரபான நடையில் இருந்து சுதந்திர நடைக்கான மாற்றத்தை அடையாளப்படுத்துவதாக எந்த ஒரு ஒற்றை நாடகத்தையும் குறிப்பிட முடியாது. தனது தொழில்வாழ்க்கை முழுவதிலும் சேக்சுபியர் இந்த இரண்டையும் இணைத்துப் பயன்படுத்தினார். ரோமியோ ஜூலியட் தான் நடைகளை இணைப்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.[127] 1590களின் மத்தியிலான ரோமியோ ஜூலியட் , ரிச்சர்டு II , மற்றும் எ மிட்சம்மர் நைட்'ஸ் ட்ரீம் ஆகியவற்றின் சமயத்தில், சேக்சுபியர் கூடுதல் இயல்பான கவிதைகளை எழுதத் துவங்கியிருந்தார். தனது உருவகங்கள் மற்றும் பிம்பங்களை அதிகமாக தனது நாடகத்தின் தேவைகளுக்கேற்ற வகையில் அவர் மேம்படுத்தி வந்தார். ஹேம்லெட் நாடகத்துக்குப் பின் சேக்சுபியர் தனது கவிதை நடையை மேலும் மாற்றினார். இந்த நடை கூடுதல் துரிதமானதாகவும் பன்முகப்பட்டதாகவும், அத்துடன் கட்டுமானத்தில் வழக்கமானதாக இல்லாமல் அபூர்வமாகத் தான் திருப்பமுடைய நீள்வட்ட வடிவம் கொண்டதாகவும் இருந்ததாக இலக்கிய விமர்சகரான ஏ.சி.பிராட்லி விவரிக்கிறார்.[128] தனது தொழில்வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில், இந்த விளைவுகளைச் சாதிக்க பல்வேறு நுட்பங்களை சேக்சுபியர் கையாண்டார். இரண்டாம் அடி கடந்தும் நீளும் வாக்கியம், ஒழுங்கற்ற நிறுத்தங்களும் புள்ளிகளும், மற்றும் வாக்கிய அமைப்பு மற்றும் நீளத்தில் அதிகமான மாறுபாடுகள் ஆகியவை இதில் அடங்கும்.[129] சேக்சுபியரின் கவிதை மேதாவிலாசத்தில் நாடக அரங்கு குறித்த நடைமுறை உணர்வும் சேர்ந்திருந்தது.[130] அந்த காலத்தின் அனைத்து நாடக ஆசிரியர்களையும் போலவே, பெட்ரார்க் மற்றும் ஹோலின்ஷெட் ஆகிய மூலங்களில் இருந்து கதைகளை நாடகவயமாக்கினார்.[131] ஒவ்வொரு கதைக்களத்திலும் பல்வேறு ஆர்வ மையங்கள் உருவாகுமாறு மாற்றியமைத்த அவர், பார்வையாளர்களுக்கு ஒரு விவரிப்பின் அதிகப்பட்ச சாத்தியமான பக்கங்களைக் காட்டினார். ஒரு சேக்சுபியர் நாடகம், மொழிபெயர்ப்பு, வெட்டல், மற்றும் பரவலான பொருள்கொள்ளலிலும் நாடகத்தின் மையக்கருவுக்கு எந்த இழப்பும் இன்றி இருக்க முடிந்தது இந்த வடிவமைப்பின் வலிமையாக அமைந்தது.[132] சேக்சுபியரின் தேர்ச்சி வளர்ச்சி பெற்றபோது, அவர் தனது பாத்திரங்களுக்கு தெளிவான கூடுதல் பன்முகத்தன்மையுடனான ஊக்குவிப்புகளையும் வசனங்களின் தெளிவான வடிவங்களையும் கொடுக்க முடிந்தது. ஆயினும், தனது பிற்கால நாடகங்களில் அவரது ஆரம்ப கால நடையின் அம்சங்களைப் பாதுகாத்தார். தனது பிற்கால காதல்காவியங்களில் அவர் கூடுதல் செயற்கைப்பட்ட ஒரு நடைக்குத் திட்டமிட்டு திரும்பினார்.[133][e] பாதிப்பு சேக்சுபியரின் படைப்புகள் பின்னாளில் நாடகம் மற்றும் இலக்கியத்தில் நீடித்த படிமத்தை உருவாக்கியது. குறிப்பாக, பாத்திரப்படைப்பு, கதைக்களம், மொழி ஆகியவற்றின் நாடக வகைத் திறனை அவர் விரிவுபடுத்தினார்.[134] உதாரணமாக, ரோமியோ ஜூலியட் வரையில், காதல்காவியம் என்பது துன்பியலுக்கு உகந்தவையாகக் கருதப்படவில்லை.[135] மனவொலிகள் முக்கியமாக பாத்திரங்கள் அல்லது நிகழ்வுகள் குறித்த தகவல்களை வெளிப்படுத்தவே முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வந்தன; ஆனால் சேக்சுபியர் அவற்றை பாத்திரங்களின் மனதை ஆராய பயன்படுத்தினார்.[136] அவரது படைப்புகள் பிந்தையநாள் கவிதைகளை பெருமளவு பாதித்தது.காதல்காவியக் கவிஞர்கள் சேக்சுபியர் வகை செய்யுள் நாடகங்களுக்கு புத்துயிரூட்ட முயன்றனர். ஆயினும் அது அவ்வளவு வெற்றி பெறவில்லை. கொலிரிட்ஜ் முதல் டெனிசன் வரையான அனைத்து ஆங்கில கவிதை நாடகங்களுமே "சேக்சுபியர் கதைக்கருக்களின் மெல்லிய வேறுபட்ட வடிவங்களே" என்று விமர்சகர் ஜார்ஜ் ஸ்டெயினர் விவரித்தார்.[137] தாமஸ் ஹார்டி, வில்லியம் ஃபால்க்னர், மற்றும் சார்லஸ் டிக்கன்ஸ் ஆகிய புதின எழுத்தாளர்களையும் சேக்சுபியர் பாதித்தார். டிக்கன்ஸ் அடிக்கடி சேக்சுபியரை மேற்கோளிடுவார். அவரது படைப்புகளின் தலைப்புகளில் 25 சேக்சுபியரின் படைப்புகளில் இருந்து எடுக்கப்பட்டதாகும். அமெரிக்க புதின ஆசிரியரான ஹெர்மன் மெல்விலின் மனவொலிகளில் அதிகமானவை சேக்சுபியருக்குக் கடன்பட்டவையாகும்; மோபி-டிக் கில் வரும் அவரது கேப்டன் அஹாப் பாத்திரம் சேக்சுபியரின் கிங் லியர் பாதிப்பில் உருவான தீரமிகுந்த நாயகன் ஆவார்.[138] 20,000 இசைத் துண்டுகளை சேக்சுபியரின் படைப்புகளுக்கு தொடர்புபடுத்தி அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.[139] சேக்சுபியர் பல ஓவியர்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்திருக்கிறார். வில்லியம் ப்ளேக்கின் நண்பரான சுவிட்சர்லாந்து நாட்டின் ஹென்றி ஃபுயுஸ்லி என்னும் கலைஞர் மெகாபத் தை ஜெர்மனில் மொழிபெயர்க்கவும் சென்றார்.[140] மனோவியல் ஆய்வு நிபுணரான சிக்மன்ட் பிராய்டு சேக்சுபியர் மனோதத்துவம் என்ற ஒன்றை, குறிப்பாக மனித இயல்பு குறித்த அவரது தத்துவங்களுக்கு, ஹேம்லட்டில் இருந்து வரைந்தார். சேக்சுபியரது நாளில், ஆங்கில இலக்கணமும் உச்சரிப்பும் இப்போதை விடவும் குறைந்த தரநிர்ணயத்துடன் இருந்தன. அவரது ஆங்கில பயன்பாடு நவீன ஆங்கிலத்தை வடிவமைக்க உதவின.[141] சாமுவேல் ஜான்சன் தனது எ டிக்சனரி ஆஃப் தி இங்கிலீஷ் லாங்க்வேஜ் புத்தகத்தில் வேறு எந்த ஆசிரியரை விடவும் அதிகமான அளவில் சேக்சுபியரை மேற்கோள் காட்டுகிறார்.[142] "with bated breath (மெர்ச்சென்ட் ஆஃப் வெனிஸ் ) மற்றும் "a foregone conclusion" (ஓதெல்லோ ) ஆகிய சொற்றொடர்கள் அன்றாட ஆங்கிலப் பேச்சில் தங்களது இடத்தைப் பிடித்தன.[143] விமர்சன மரியாதை தன் வாழ்நாள் காலத்தில் சேக்சுபியர் ஒருபோதும் போற்றப்பட்டதில்லை. ஆனால் அவருடைய பங்கு புகழ் அவருக்கு கிடைத்தது.[144] 1598 ஆம் ஆண்டில் மதகுருவும் எழுத்தாளருமான ஃபிரான்சிஸ் மெரெஸ் ஆங்கில எழுத்தாளர்களின் குழு ஒன்றில் சேக்சுபியர் தான் நகைச்சுவை, துன்பியல் இரண்டிலும் "மிகவும் சிறந்த" எழுத்தாளர் எனத் தனிப்படுத்திக் காட்டினார்.[145] கேம்பிரிட்ஜ் செயின்ட் ஜான் கல்லூரியில் நாடக ஆசிரியர்கள் அவரை சாசர், கோவர் மற்றும் ஸ்பென்ஸர் ஆகியோருடன் வகையிட்டனர்.[146] ஃபர்ஸ்ட் ஃபோலியோவில், பென் ஜான்சன் சேக்சுபியரை "காலத்தின் ஆன்மா" என்று அழைத்தார். முன்பொரு முறை இன்னொரு இடத்தில் "சேக்சுபியருக்கு கலை அவசியமாயிருக்கிறது" என்று அவர் ஏளனமாய் குறிப்பிட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.[147] 1660 ஆம் ஆண்டில் முடியாட்சியின் மீட்டமைவுக்கும் பதினேழாம் நூற்றாண்டின் நிறைவுக்கும் இடையே, செவ்வியல் சிந்தனைகள் உபயோகத்தில் இருந்தன. இதன் விளைவாய், அக்காலத்தின் விமர்சகர்கள் அதிகமாக சேக்சுபியரை ஜான் ஃபிளட்சர் மற்றும் பென் ஜான்சனுக்கு கீழாகத் தான் மதிப்பிட்டனர்.[148] உதாரணமாக, துன்பியலுடன் நகைச்சுவையைக் கலப்பதற்காக தாமஸ் ரைமர் சேக்சுபியரைக் கண்டித்தார். ஆயினும், கவிஞரும் விமர்சகருமான ஜான் டிரைடன் சேக்சுபியரை உயர்வாக மதித்தார். ஜான்சன் பற்றி அவர் கூறும் போது, "ஜான்சனை நான் போற்றுகிறேன், ஆனால் சேக்சுபியரை நான் நேசிக்கிறேன்" என்றார்.[149] பல தசாப்தங்களுக்கு, ரைமரின் பார்வை தான் கோலோச்சியது. ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டு காலத்தில், சேக்சுபியரின் சொந்த கருப்பொருள் பக்கம் திரும்பிய விமர்சகர்கள், அதனை அவரது இயற்கையான மேதாவித்தனம் என்பதாக வர்ணித்தனர். அவரது படைப்பின் மீதான அறிஞர் பதிப்புகள் தொடர்ந்து நிகழ்ந்தது. குறிப்பாக சாமுவேல் ஜான்சனினது பதிப்பு 1765 ஆம் ஆண்டிலும், எட்மண்ட் மலோனினது பதிப்பு 1790 ஆம் ஆண்டிலும் வெளிவந்து அவரது அதிகரித்த மரியாதைக்கு மேலும் வலு சேர்த்தன.[150] 1800 ஆம் ஆண்டு வாக்கில், அவர் உறுதிப்பட தேசியக் கவிஞராய் போற்றுதலுக்குள்ளானார்.[151] பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில், அவரது புகழ் வெளிநாடுகளிலும் பரவியது. அவருக்காக குரல்கொடுத்தவர்களில் வால்டேர், கோயத், ஸ்டென்தால் மற்றும் விக்டர் ஹியூகோ ஆகிய எழுத்தாளர்களும் அடங்குவர்.[152] காதல்காவிய சகாப்த காலத்தில், சேக்சுபியர் கவிஞரும் இலக்கிய தத்துவாசிரியருமான சாமுவேல் டெய்லர் கொலிரிட்ஜால் போற்றப்பட்டார். விமர்சகரான ஆகஸ்ட் வில்ஹெம் ஸ்க்லெகல் அவரது நாடகங்களை ஜெர்மன் காதல்காவிய பொருளில் மொழிபெயர்த்தார்.[153] பத்தொன்பதாம் நூற்றாண்டில், சேக்சுபியரின் மேதாவித்தனத்திற்கான புகழ் போற்றலின் எல்லையைத் தொட்டது.[154] "மன்னர் சேக்சுபியர்" என்று 1840 ஆம் ஆண்டில் கட்டுரையாசிரியரான தாமஸ் கார்லைல் எழுதினார்.[155] விக்டோரியா காலத்தவர்கள் அவரது நாடகங்களை பிரம்மாண்டமான அளவில் ஆடம்பர அதிசயங்களாகத் தயாரித்தனர்.[156] நாடக ஆசிரியரும் விமர்சகருமான ஜார்ஜ் பெர்னார்ட் ஷா சேக்சுபியரை தொழும் மரபினை கிண்டல் செய்தார். இப்சென் நாடகங்களின் புதிய இயல்புவாதம் சேக்சுபியரை காலத்திற்கொவ்வாததாக்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.[157] இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் கலைகளில் நவீனத்துவ புரட்சியானது, சேக்சுபியரை ஒதுக்கவில்லை. மாறாக, அவரது படைப்புகளை கலைப் பரிசோதனையின் சேவையில் பட்டியலிட்டனர். ஜெர்மனியின் வெளிப்பாட்டுவாதிகளும் மாஸ்கோவின் எதிர்காலவாதிகளும் அவரது நாடகங்களின் தயாரிப்புகளை நிறுவினர். மார்க்சிய நாடக ஆசிரியரும் இயக்குநருமான பெர்டொல்ட் பிரெச்ட் சேக்சுபியரின் பாதிப்பில் ஒரு காவிய அரங்கை வடிவமைத்தார். கவிஞரும் விமர்சகருமான டி.எஸ்.எலியட் ஷாவுக்கு எதிராக வாதிடுகையில், சேக்சுபியரின் "அடிப்படைதன்மை" தான் உண்மையில் அவரை மிகவும் நவீனமாக்குவதாகக் கூறினார்.[158] எலியட், ஜி. வில்சன் நைட் மற்றும் புதிய விமர்சனவாத பள்ளி உடன் இணைந்து, சேக்சுபியரின் படிமங்களை நெருக்கமாக கற்கும் ஒரு இயக்கத்திற்கு தலைமையேற்றனர். 1950களில், புதிய விமர்சனவாத அணுகுமுறைகளின் ஒரு அலை நவீனத்துவத்தை இடம்பெயர்த்து சேக்சுபியரின் "பின்-நவீனத்துவ" ஆய்வுகளுக்கு பாதையமைத்துக் கொடுத்தது.[159] எண்பதுகளின் வாக்கில், சேக்சுபியர் ஆய்வுகள் என்பவை கட்டமைப்புவாதம், பெண்ணியம், ஆப்பிரிக்க அமெரிக்க ஆய்வுகள், மற்றும் விந்தை ஆய்வுகளுக்கு திறந்துபட்டதாக இருந்தன.[160] சேக்சுபியர் குறித்த ஊகங்கள் படைப்பு குறித்த ஊகங்கள் சேக்சுபியர் இறந்து சுமார் 150 வருடங்களுக்கு பிறகு, அவரினுடைய சில படைப்புகள் குறித்த சந்தேகங்கள் எழத் துவங்கின.[161] ஃபிரான்சிஸ் பேகான், கிறிஸ்டோபர் மர்லோ, மற்றும் எட்வர்டு டீ வெரெ, தி யர்ல் ஆஃப் ஆக்ஸ்போர்டு ஆகியோர் உண்மைப் படைப்பாளிகளாய்க் கருதப்பட்டனர்.[162] கல்வியியலாளர் மட்டங்களில் அனைத்து மாற்று எழுத்தாளர்களுமே உலகளவில் நிராகரிக்கப்படுகின்றனர் என்றாலும், இந்த விஷயத்தில் வெகுஜன மக்களின் ஆர்வம், குறிப்பாக ஆக்ஸ்போர்டுவாத சித்தாந்தம் 21 ஆம் நூற்றாண்டிலும் தொடர்கிறது.[163] மதம் கத்தோலிக்கத்தை பின்பற்றுவது சட்டவிரோதமாக இருந்த ஒரு காலத்தில், சேக்சுபியரின் குடும்ப உறுப்பினர்கள் கத்தோலிக்கர்களாக இருந்தனர் என்று சில அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.[164] சேக்சுபியரின் தாயான, மேரி ஆர்டன், நிச்சயமாக ஒரு தயாள உள்ளமுடைய கத்தோலிக்க குடும்பத்தில் தான் பிறந்தார். உறுதியான ஆதாரமாக ஜான் சேக்சுபியர் கையெழுத்திட்ட கத்தோலிக்க விசுவாச வாக்குமூலத்தை குறிப்பிடலாம். இது 1757 ஆம் ஆண்டில் ஹென்லி தெருவில் இருந்த அவரது முன்னாள் வீட்டின் தூணில் காணப்பட்டது. ஆயினும், இப்போது இந்த ஆவணம் தொலைந்து விட்டது என்பதோடு அதன் உண்மைத்தன்மையிலும் அறிஞர்கள் வேறுபடுகிறார்கள்.[165] 1591 ஆம் ஆண்டில், "கடன் நடைமுறைக்கான பயத்தால்" ஜான் தேவாலயத்திற்கு வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது ஒரு பொதுவான கத்தோலிக்க நடைமுறையாகும்.[166] 1606 ஆம் ஆண்டில், ஸ்ட்ராட்போர்டில் நடந்த ஈஸ்டர் கூட்டத்தில் பங்குபெறத் தவறியோர் பட்டியலில் வில்லியமின் பெண் சுசானா பெயர் இருந்தது.[166] சேக்சுபியரின் நாடகங்களில் கத்தோலிக்கவாதத்திற்கு ஆதரவான எதிரான இரண்டுக்கான ஆதாரங்களையும் அறிஞர்கள் காண்கிறார்கள். ஆனால் உண்மை இருவழியிலும் நிரூபிக்க சாத்தியமானதாய் இல்லை.[167] பாலியல் விருப்பம் சேக்சுபியரின் பாலியல் விருப்பம் குறித்த சில விவரங்களே அறியக் கிடக்கின்றன. 18 வயதில், அவர் கர்ப்பமாக இருந்த 26 வயது ஆனி ஹதாவேயைத் திருமணம் செய்தார். அதன்பின் ஆறு மாதத்தில் அவர்களது முதலாவது குழந்தையான சுசானா, 26 மே 1583 அன்று பிறந்தது. ஆயினும், சேக்சுபியருக்கு ஒரு இளம் ஆண் மீது இருந்த காதலுக்கு ஆதாரமாக சேக்சுபியரின் செய்யுள் கவிதைகளை பல நூற்றாண்டுகளாக வாசகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதே பத்திகளை தீவிரமான நட்பின் வெளிப்பாடே தவிர பாலியல் நேசம் அல்ல என்று மற்றவர்கள் பார்க்கிறார்கள்.[168] அதே சமயத்தில் திருமணமான ஒரு பெண்ணைக் குறித்து எழுதப்பட்ட "டார்க் லேடி" எனப்படும் இருபத்தியாறு செய்யுள் கவிதைகள் அவரது எதிர்பாலின உறவுகளுக்கான ஆதாரமாக கொள்ளப்படுகின்றன.[169] தோற்றச் சித்திரம் சேக்சுபியரின் உடல் தோற்றம் குறித்த எந்த எழுத்துரீதியான விவரிப்பும் இல்லை. அத்துடன் அவர் ஒரு தோற்றச் சித்திரத்தை வரைய ஏற்பாடு செய்ததற்கும் எந்த ஆதாரமும் இல்லை. எனவே அவரை நன்கு ஒத்திருப்பதாக பென் ஜான்சன் ஒப்புதலளித்ததான[170] ட்ரோஷவுட் கல்வெட்டும், அவரது ஸ்ட்ராட்போர்டு நினைவுச்சின்னமும் அவரது தோற்றம் குறித்த சிறந்த சான்றாக இருக்கின்றன. பதினெட்டாம் நூற்றாண்டு முதல், அதிகாரப்பூர்வமான சேக்சுபியர் தோற்றச்சித்திரங்களுக்கான ஆர்வம் மிகுதியாய் இருந்தது. பல போலியான சித்திரங்கள், அதேபோல் தவறான சித்தரிப்புகள், மறுதீட்டல், மற்ற மனிதர்களின் சித்திரங்கள் மீது பெயர் மாற்றி எழுதுதல் ஆகிய போக்கிற்கும் இந்த தேவை இட்டுச் சென்றது.[171][172] படைப்புகளின் பட்டியல்கள் நாடகங்களின் வகைப்படுத்தல் சேக்சுபியரின் படைப்புகளில் ஃபர்ஸ்ட் ஃபோலியோவில் அச்சிடப்பட்ட 36 நாடகங்கள் அடங்கும். அவை நகைச்சுவை, வரலாறுகள் மற்றும் துன்பியல் ஆகிய அவற்றின் வகைப்படுத்தலின் படி கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.[173] சேக்சுபியர் தன் பெயரிலுள்ள நாடகங்களின் ஒவ்வொரு வார்த்தையையும் அவர் எழுதவில்லை. பல காட்சிகள் அந்த காலகட்டத்தில் ஒரு பொதுவான நடைமுறையாக இருந்த, கூட்டுழைப்பின் அடையாளங்களைக் காட்டின.[174] ஃபர்ஸ்ட் ஃபோலியோவில் இடம்பெறாத, தி டூ நோபிள் கின்ஸ்மென் மற்றும் பெரிகிள்ஸ், பிரின்ஸ் ஆஃப் டைர் ஆகியவை இப்போது படைப்புகளின் பாகமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இவற்றில் சேக்சுபியரின் பங்களிப்பு பெரிய அளவில் இருந்தது என்பதை அறிஞர்கள் ஒப்புக்கொண்டார்கள்.[175] ஃபர்ஸ்ட் ஃபோலியோவில் கவிதைப் படைப்பு எதுவும் இடம்பெறவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், எட்வர்டு டவ்டன் பிந்தைய நகைச்சுவைகளில் நான்கினை "காதல்காவியங்கள்" என்று வகைப்படுத்தினார். பல அறிஞர்கள் அவற்றை "துன்பியல்நகைச்சுவை"யினதாக வகைப்படுத்த விரும்பினாலும், அவரது வகைப்பாடு தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.[176] 1896 ஆம் ஆண்டில் ஆல்'ஸ் வெல் தேட் என்ட்ஸ் வெல், மெஷர் ஃபார் மெஷர், டிராய்லஸ் அன் கிரெஸிடா மற்றும் ஹேம்லெட் ஆகிய நான்கு நாடகங்களை "பிரச்சினை நாடகங்கள்" என்ற பதத்தை கொண்டு பிரடெரிக் எஸ்.போஸ் விவரித்தார்.[177] நாடகங்கள் கருப்பொருள் மற்றும் தொனியில் ஒற்றைத்தன்மையனவாய் இருப்பதால் அவற்றை உறுதிப்பட நகைச்சுவைகள் என்றோ துன்பியல் என்றோ வரையறுக்க முடியாது" என்று அவர் எழுதினார். எனவே இன்றைய நாடக அரங்கத்தில் இருந்து வசதியான ஒரு பதத்தை இரவல் பெற்று, அவற்றை மொத்தமாக சேக்சுபியரின் பிரச்சினை நாடகங்களாக வகைப்படுத்தலாம்.[178][179] பிற பிரச்சினை நாடகங்கள் கீழே ஒரு ‡ குறியினால் அடையாளமிடப்பட்டுள்ளன. சேக்சுபியரால் ஒரு பகுதி பங்களிப்பை மட்டுமே பெற்றிருப்பதாக நம்பப்படும் நாடகங்கள் கீழே ஒரு † குறி மூலம் குறியிடப்பட்டுள்ளன. சில சமயங்களில் அவர் எழுதியதாகக் குறிப்பிடப்படும் பிற படைப்புகள் உறுதிப்படுத்தப்படாத படைப்புகள் என்பதின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன. படைப்புகள் நகைச்சுவைகள் ஆல்'ஸ் வெல் தட் என்ட்ஸ் வெல் ‡ அஸ் யூ லைக் இட் தி காமெடி ஆஃப் எரர்ஸ் லவ்'ஸ் லேபர் லாஸ்ட் மெஷர் ஃபார் மெஷர் ‡ தி மெர்ச்சென்ட் ஆஃப் வெனிஸ் தி மெர்ரி வைவ்ஸ் ஆஃப் வின்ட்சர் எ மிட்சம்மர் நைட்'ஸ் ட்ரீம் மச் அடூ அபௌட் நத்திங் பெரிகிள்ஸ், பிரின்ஸ் ஆஃப் டைர்ஸ்* †[f] தி டேமிங் ஆப் ஷ்ரூ தி டெம்பெஸ்ட் * ட்வெல்த் நைட், ஆர் வாட் யூ வில் டூ ஜென்டில்மென் ஆஃப் வெரோனா தி டூ நோபிள் கின்ஸ்மென் *†[g] தி வின்டர்'ஸ் டேல் * வரலாறுகள் கிங் ஜோன் ரிச்சர்டு II ஹென்றி IV, பகுதி 1 ஹென்றி IV, பகுதி 2 ஹென்றி V ஹென்றி VI, பகுதி 1 † [h] ஹென்றி VI, பகுதி 2 ஹென்றி VI, பகுதி 3 ரிச்சர்டு III ஹென்றி VIII †[i] துன்பியல் ரோமியோ அன்ட் ஜூலியட் கொரியோலனஸ் டைடஸ் அன்ட்ரோனிகஸ் †[j] டிமான் ஆஃப் ஏதென்ஸ் †[k] ஜூலியஸ் சீசர் மெகாபத் † [l] ஹேம்லெட் டிராய்லஸ் அன்ட் கிரெஸிடா ‡ கிங் லியர் ஓதெல்லோ அந்தோனி அன்ட் கிளியோபாட்ரா சிம்பிளின் * கவிதைகள் சேக்சுபியரின் ஈரேழ்வரிப்பாக்கள் வீனஸ் அன் அடோனிஸ் தி ரேப் ஆஃப் லுக்ரிஸ் தி பாஸனேட் பில்கிரிம் [m] தி பீனிக்ஸ் அன்ட் தி டர்டில் எ லவர்'ஸ் கம்ப்ளெயின்ட் லாஸ்ட் பிளேஸ் லவ்'ஸ் லேபர்'ஸ் வோன் கார்டெனியோ † சேக்சுபியரின் பங்களிப்பு உறுதிப்படாதவை ஆர்டன் ஆஃப் ஃபேவர்ஷாம் தி பெர்த் ஆஃப் மெர்லின் லாக்ரின் தி லண்டன் ப்ரொடிகல் தி ப்யூரிட்டன் தி செகண்ட் மெய்டன்'ஸ் டிராஜடி சர் ஜான் ஓல்டுகேசில் தாமஸ் லார்டு கிராம்வெல் எ யார்க்‍ஷயர் டிராஜடி எட்வர்டு III சர் தாமஸ் மோர் குறிப்புகள் அ. சேக்சுபியரின் வாழ்நாள் காலத்தில் இங்கிலாந்து முழுவதும் பயன்படுத்தப்பட்டதான ஜூலியன் நாட்காட்டியை தேதிகள் பின்பற்றுகின்றன. 1582 ஆம் ஆண்டில் கத்தோலிக்க நாடுகளில் பின்பற்றப்பட்ட கிரிகோரியன் நாட்காட்டியின் கீழ், சேக்சுபியர் மே 3 அன்று இறந்தார்.[180] ஆ. துல்லியமான எண்ணிக்கை தெரியவில்லை. கூடுதல் விவரங்களுக்கு சேக்சுபியரின் கூட்டுப் படைப்புகள் மற்றும் சேக்சுபியரின் பங்களிப்பு உறுதிப்படாத படைப்புகள் பகுதியைக் காணவும். இ. Individual play dates and precise writing span are unknown. See Chronology of Shakespeare's plays for further details. ஈ. The Problem of Hamlet: A Solution (1936) இல், ஹேம்லட் 1589 ஆம் ஆண்டில் உர்-ஹேம்லட் என்கிற பெயரில் எழுதப்பட்டது, அது சேக்சுபியர் தான் என்று ஏ.எஸ். கெய்ர்ன்கிராஸ் கூறுகிறார்.[181] அநேக அறிஞர்கள் இந்த கருத்தில் உடன்படவில்லை, ஆயினும் சிலர், குறிப்பாக பீட்டர் அலெக்சாண்டர் மற்றும் எரிக் சாம்ஸ், அதேபோல் இலக்கிய விமர்சகரான ஹரோல்டு ப்ளூம்[182] ஆரம்ப தேதியிடலையே ஆதரித்தார்கள். உ. சேக்சுபியரின் 4 காலகட்ட அபிவிருத்திகள் தொடர்பான பொதுவான கருத்துக்கு மாறாக, தலைப்பு வரிசையில் ஒரு புதிய காலக்கிரம வரிசை கட்டப்பட வேண்டும் என்று கெயின்கிராஸ் யோசனை தெரிவித்தார். ஏறக்குறைய பாதி படைப்புகளுக்கு பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு 10-20 வருடங்கள் முந்தைய காலக்கணக்கை அவர் பரிந்துரைத்தார். அவரது கருத்தும் சில ஆதரவாளர்களை வென்றுள்ளது. ஊ. பல சேக்சுபியர் அறிஞர்கள் பெரிகிள்ஸ் ஜார்ஜ் வில்கின்ஸ் உடன் இணைந்து எழுதப்பட்டது என்று நம்புகிறார்கள்.[183] எ. தி டூ நோபிள் கின்ஸ்மென் ஜான் பிளெட்சர் உடன் இணைந்து எழுதப்பட்டது.[184] ஏ. ஹென்றி VI, பகுதி 1 பல படைப்பாளிகளின் கூட்டுப் படைப்பு என்பதாக பல அறிஞர்கள் கருதுகிறார்கள்; ஆனால் சிலர், உதாரணமாக மைக்கே ஹதாவே, இந்த நாடகம் முழுக்க சேக்சுபியரால் எழுதப்பட்டதே என்று நம்புகிறார்கள்.[185] ஐ. ஹென்றி VIII ஜான் பிளெட்சர் உடன் இணைந்து எழுதப்பட்டது.[186] ஒ. டைடஸ் அன்ட்ரோனிகஸ் ஜார்ஜ் பீலியுடன் இணைந்து எழுதப்பட்டதாக ஒரு வாதத்தை பிரையன் விக்கர்ஸ் வைத்திருக்கிறார்.[187] ஓ. டைமன் ஆஃப் ஏதென்ஸ் தாமஸ் மிடில்டன் உடன் இணைந்து எழுதப்பட்டது என்று பிரையன் விக்கர்ஸ் மற்றும் பல பிற சேக்சுபியர்வாதிகள் நம்புகிறார்கள். ஆனால் சில விமர்சகர்கள் உடன்படுவதில்லை.[188] ஔ. மெகாபத் உரையானது வெறுமனே பின்னர் வந்தவர்களால் மாற்றப்பட்டிருக்கிறது. தாமஸ் மிடில்டன் நாடகமான தி விட்ச் (1615) என்பதில் இருந்து இரண்டு பாடல்கள் சேர்க்கப்பட்டதை முக்கியமாகக் குறிப்பிடலாம்.[189] ஃ. 1599 ஆம் ஆண்டில் சேக்சுபியரின் பெயரில் அவரது அனுமதியின்றி வெளியான தி பாசனேட் பில்கிரிம் , அவரது ஈரேழ்வரிப்பாக்களில் இரண்டின் ஆரம்ப பதிப்புகள், லவ்'ஸ் லேபர்'ஸ் லாஸ்ட் டில் இருந்தான மூன்று பிழிவுகள், பிற கவிஞர்களால் எழுதப்பட்டதாய் அறியப்பட்ட பல கவிதைகள், மற்றும் பெயர் தெரியாதவர்களால் எழுதப்பட்டு சேக்சுபியர் எழுதியிருக்கலாம் என்பதும் மறுக்கப்பட முடியாத வகையான பதினொரு கவிதைகள் ஆகியவற்றை அடக்கியதாயிருக்கிறது.[190] 'கார்டெனியோ ஜான் பிளெட்சர் உடன் இணைந்து எழுதப்பட்டது வெளிப்படை.[191] குறிப்புகள் புற இணைப்புகள் இங்கிலாந்தின் தேசிய காப்பகத்தில் இருந்து, லத்தீன் மொழியில். பகுப்பு:ஆங்கிலக் கவிஞர்கள் பகுப்பு:நாடகாசிரியர்கள் பகுப்பு:1564 பிறப்புகள் பகுப்பு:1616 இறப்புகள் பகுப்பு:பிரித்தானியக் கவிஞர்கள் பகுப்பு:வில்லியம் சேக்சுபியர்
ஷேக்ஸ்பியர் எத்தனை நாடகங்களை எழுதினார்?
38
359
tamil
98d8542f6
மார்பகப் புற்றுநோய் அல்லது மார்புப் புற்று நோய் என்பது பெண்களுக்கே வரும் புற்று நோய்களுள் ஒன்று. (Breast cancer) என்பது மார்பகத் திசுக்களில் ஆரம்பிக்கும் புற்றுநோய்களைக் குறிக்கும், இது பெரும்பாலும் பால் சுரப்பி நாளங்களின் அல்லது அந்த குழாய்களுக்கு பாலைக் கொண்டு சேர்க்கும் நுண்ணறைகளின் உள் அடுக்குகளில் தோன்றும். நாளங்களில் உருவாகும் புற்றுநோய்களுக்கு நாள புற்றுநோய் (டக்டல் கார்சினோமாஸ்) என்று பெயர்; அதேபோல நுண்ணறைகளில் தொடங்கும் புற்றுகளுக்கு நுண்ணறை தீவிரபுற்றுநோய் (லோபுளர் கார்சினோமாஸ்) என்று பெயர். மார்பக புற்றுநோய்களில், பல வகையான நிலைகள் (நோய் பரவல்), தீவிரம், மற்றும் மரபுசார் காரணிகள் உள்ளன: இவற்றின் அடிப்படையிலேயே நோயிலிருந்து மீளுதலின் சாத்தியம் அடங்கியுள்ளது.[8] நோயுற்றவரின் வாழும் காலத்தைக் கணக்கிட கணினி மாதிரிகள் உள்ளன.[9] மிகச்சிறந்த சிகிச்சை முறைகளுடன், நோய் நீங்கி 10-ஆண்டுகாலம் வாழுவதற்கான வாய்ப்புகள் 98% முதல் 10% வரை வேறுபடுகின்றன. இந்த சிகிச்சைகளில், அறுவை, மருந்துகள் (இயக்கு நீர் மருத்துவம் (ஹார்மோன் தெரபி) மற்றும் வேதிசிகிச்சை (கீமோதெரபி)), மற்றும் கதிரியக்கம் ஆகிய சிகிச்சைகள் அடங்கும். உலகெங்கும் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில், 10.4% நிகழ்வுகள் மார்பக புற்றுநோயால் ஏற்படுகிறது, இது தோல் மேல் ஏற்படாத புற்றுநோயில் இரண்டாவது இடத்தையும் (நுரையீரல் புற்றுநோய்க்கு அடுத்ததாக) புற்றுநோயால் ஏற்படும் மரணங்களில் ஐந்தாவது பெரிய காரணமாகவும் இருக்கிறது.[10] 2004ஆம் ஆண்டில், உலகெங்கும் 519,000 மரணங்கள் மார்பக புற்றுநோயால் ஏற்பட்டது (புற்றுநோய் மரணங்களில் 7%; மொத்த மரணங்களில் 1% ).[11] மார்பக புற்றுநோயானது, ஆண்களை விட 100 மடங்கு அதிகமாக பெண்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன, அதேநேரத்தில் பிழைப்பதற்கான வாய்ப்புகள் இரண்டு பாலினங்களிலும் ஒரே மாதிரியே உள்ளன.[12][13][14] சில புற்றுநோய்கள் வளர்ச்சியடைய, ஹார்மோன்கள் (தூண்டி முட்கள்) தேவைப்படுகின்றன, அதாவது பெண்மை இயக்க நீர் (ஈஸ்ட்ரோஜன்) மற்றும் மாதவிடாய் ஒழுக்கு இயக்கி நீர் (புரோஜெஸ்டிரோன்) போன்றவை மேலும் அந்த ஹார்மோன்களுக்கான ஏற்பிகளைக் கொண்டுள்ளன. அறுவை சிகிச்சைக்கு பின்னர், அவ்வகை புற்றுநோய்கள், ஹார்மோன்களுடன் செயல்புரியும் டாமோக்சிஃபென் போன்ற மருந்துகளால் சிகிச்சையளிக்கப்படுகின்றன, மற்றும் முட்டைப்பை (ஓவரி) அல்லது வேறு இடங்களில் ஈஸ்ட்ரோஜன் உருவாவதைத் தடுக்கின்றன, இதனால் ஓவரியும் கருத்தரிக்கும் வாய்ப்புகளும் பாதிப்படையக் கூடும். அறுவை சிகிச்சைக்கு பின்னர், ஆபத்து குறைந்த, ஹார்மோனால் தூண்டப்படும் மார்பக புற்றுநோய்கள் ஹார்மோன் தெரபி மற்றும் கதிரியக்கம் ஆகியவற்றை மட்டும் கொண்டு சிகிச்சையளிக்கப்படலாம். ஹார்மோன் ஏற்பிகள் இல்லாத, அல்லது அக்குள்களில் உள்ள நிணநீர் சுரப்பிகளுக்கு பரவி விட்ட, அல்லது சில வெளிப்படையான மரபுசார் குணநலன்களைக் காட்டுகின்ற மார்பக புற்றுநோய்கள் அதிக ஆபத்தானவை, எனவே அவற்றுக்கு மிகவும் தீவிர சிகிச்சையளிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் பிரபலமான, ஒரு முக்கியமான மருந்தானது, சைக்ளோபாஸ்பமைடு உடன் டோக்சோரூபிசின் (அட்ரியாமைசின்), சிஏ என்றறியப்படுகிறது; இந்த மருந்துகள், வளரும் புற்றில் உள்ள டிஎன்ஏக்களை அழிக்கும், அதேநேரத்தில் வேகமாக வளரும் சாதாரண செல்களையும் அழிக்கக்கூடியது, இந்நிலையில் இவை தீவிரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. சிலநேரங்களில் டாக்ஸேன் மருந்து, டாகிடாக்ஸல் போன்றவை, சேர்க்கப்படுகின்றன, இதனால் இந்த மருந்தின் பெயர் CAT என்றழைக்கப்படுகிறது; டாக்ஸேன் புற்றுநோய் உயிரணுக்களில் உள்ளை மைக்ரோடியூப்லஸை அழிக்கிறது. இதே போல ஒரு சிகிச்சை முறை ஐரோப்பாவிலும் பிரபலமாகவுள்ளது, அது சைக்ளோபாஸ்மைடு, மீதோட்ரெக்சேட், மற்றும் ஃப்ளூரோசில் (CMF) ஆகியவையாகும்.[15] ட்ராஸ்டுஸூமாப் போன்ற மோனோக்ளோனால் ஆன்டிபாடிகள், HER2 உருமாற்றத்தைக் கொண்ட புற்றுநோய் உயிரணுக்களில் பயன்படுத்தப்படுகின்றன. கதிரியக்கமானது, அறுவை சிகிச்சையின்போது தவறிய புற்றுநோய் செல்களை அழிக்க பொதுவாக பயன்படுத்தப்படுகிறது, இதனால் வாழ்நாள் அதிகமாகும், ஆனாலும் இதயமானது கதிரியக்கத்தின் தாக்குதலைப் பெற்றால் அதற்கு பின்வரும் ஆண்டுகளில் இதய செயலிழப்பும் கூட ஏற்படும் வாய்ப்புண்டு.[16] நோயின் பிரிவுகள் வெவ்வேறு நிலைகளின் அடிப்படையில் மார்பக புற்றுநோயை வகைப்படுத்தலாம். இவற்றில் ஸ்டேஜ் (TNM), நோயியல் (பேத்தாலஜி), தரம் (கிரேட்), ஏற்பி நிலை மற்றும் டிஎன்ஏ சோதனையால் தீர்மானிக்கப்பட்ட மரபணுக்கள் உள்ளதா அல்லது இல்லையா என்பன அடங்கும்: புற்றுநோய் நிலை மார்பகப் புற்றுநோய்க்கான TNM வகைப்பாடு கட்டியின் அளவு (T), அது அக்குள்களில் உள்ள நிணநீர் முடிச்சுகளுக்கு (N) பரவியுள்ளதா , மற்றும் அந்த கட்டி மெட்டாடாஸ்சைஸ்ட் (M) அல்லது உடலில் மிக தூரத்தில் உள்ள பாகங்களுக்கு பரவியுள்ளதா என்பனவற்றின் அடிப்படையில் அமைந்ததாகும். பெரிய அளவு, முடிச்சுகளுக்கு பரவல், மெட்டாஸ்டாசிஸ் ஆகியவை பெரிய நிலை எண்ணையும், குறைவான சரிசெய்தல் வாய்ப்பையும் குறிக்கும். பேத்தாலஜி (நோய்க்குறியியல்) பெரும்பாலான மார்பகப் புற்றுநோய்கள் குழாய்கள் அல்லது லோப்யூல்களில் உள்ள எபிதீலியம் திசுக்களிலிருந்து உருவாகின்றன. (பிறவகை திசுக்களிலிருந்து உருவாகும், புற்றுநோய்கள் "அரியவகை" புற்றுநோய்கள் எனப்படுகின்றன.) சிடு(situ)வில் கார்சினோமா என்பது எபிதீலியல் திசுக்களில் கான்சர் செல்களின் அதிவேக வளர்ச்சியாகும், இதில் அதனை சுற்றியுள்ள திசுக்கள் பங்கேற்காது. இன்வாசிவ் கார்சினோமா என்பது சுற்றியுள்ள திசுக்களையும் தாக்கும்.[17] மிகவேகமாக பிளவடையும் திசுக்கள் விரைவாக மோசமான சரிசெய்ய முடியாத நிலைக்கு சென்றுவிடுகின்றன. கட்டியின் உயிரணுவின் (செல்லின்) வளர்ச்சியை Ki67 புரதத்தை வைத்து அளவிடலாம், இது உயிரணுவானது S கட்டத்தில் உள்ளதையும், குறிப்பிட்ட சில சிகிச்சை முறைகளின் ஏற்புத்திறனையும் காட்டும்.[18] கிரேட் (ப்ளூம்-ரிச்சர்ட்சன் கிரேட்). செல்கள் வகைப்படுத்தப்பட்டவுடன், அவை வெவ்வேறு வடிவங்களையும் தோற்றங்களையும் பெற்று, ஒரு உறுப்பின் செயல்பாட்டைத் தீர்மானிக்கின்றன. கான்சர் செல்கள் இந்த வகைப்பாட்டை இழந்து விடுகின்றன. செல்கள் ஒரு ஒழுங்கான வரிசையில் அமைந்து பால் குழாய்களை சிதைக்கின்றன. செல் பிரிதல் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. செல்லின் உட்கருக்கள் சீரற்றதாகின்றன. பேத்தாலிஜிஸ்ட்கள், இந்த செல்களை வகைப்படுத்தப்பட்டவை (குறைந்த கிரேட்), ஓரளவுக்கு வகைப்படுத்தப்பட்டவை (இடைநிலை கிரேட்) மற்றும் மோசமாக வகைப்படுத்தப்பட்டவை (அதிக கிரேட்) என்று பிரிக்கின்றனர். மோசமாக வகைப்படுத்தப்பட்ட கான்சர்களைச் சரிசெய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஏற்பி நிலை. மார்பக புற்றுநோய் செல்களின் பரப்பில் ஏற்பிகள் உள்ளன. ஹார்மோன்கள் போன்ற வேதிப்பொருட்கள் இந்த ஏற்பிகளுடன் பிணைந்து விடுகின்றன, இதனால் செல்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. மார்பக புற்றுநோய் செல்களில் பின்வரும் மூன்று முக்கிய ஏற்பிகள் இருக்கலாம் அல்லது இல்லாமலிருக்கலாம்: ஈஸ்ட்ரோஜன் ஏற்பி (ER), புரோஜெஸ்டீரான் ஏற்பி (PR), மற்றும் HER2/neu. இந்த ஏற்பிகளைக் கொண்ட செல்கள் ER பாசிட்டிவ் (ER+), ER நெகடிவ் (ER-), PR பாசிட்டிவ் (PR+), PR நெகடிவ் (PR-), HER2 பாசிட்டிவ் (HER2+), மற்றும் HER2 நெகடிவ் (HER2-) என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஏற்பிகள் எதுவுமே இல்லாத செல்கள் அடிப்படை செல்கள் அல்லது ட்ரிபிள் நெகடிவ் என்றழைக்கப்படுகின்றன. ER+ கான்சர் செல்களின் வளர்ச்சிக்கு, ஈஸ்ட்ரோஜன் தேவைப்படுகிறது, எனவே ஈஸ்ட்ரோஜனைக் குறைக்கும் மருந்துகளின் மூலமாக சிகிச்சையளிக்கப்படுகின்றன. மேலும் இவற்றை பெரும்பாலும் குணமாக்குவது எளிதானது. HER2+ கான்சர் செல்கள் ட்ராடுஸுமாப் போன்ற மருந்துகள் மற்றும் டோக்ஸோரூபிசின் மருந்தின் வீரியமிக்க அளவுகள் ஆகியவற்றால் குறைவடைகின்றன. ஆனால் பொதுவாக, HER2+ மிகக் குறைந்த குணமாதல் வாய்ப்பு கொண்டது.[19] இந்த நோய் ஏற்பிகள் இம்யுனோ ஹிஸ்டோ கெமிஸ்ட்ரியால் கண்டறியப்படுகின்றன. ஏற்பி நிலையின் மூலமாக, மார்பக புற்றுநோயானது நான்கு மூலக்கூறு நிலைகளாக பிரிக்கப்படுகிறது: (1) அடிப்படை நிலை, ER-, PR- மற்றும் HER2- (ட்ரிபிள் நெகடிவ், TN). பெரும்பாலான BRCA1 மார்பக புற்றுநோய்கள் பேசல்-லைக் TN ஆகியவை. (2) லூமினல் A, இவை ER+ மற்றும் குறைவான கிரேட் கொண்டவை (3) லூமினல் B, இவை ER+ ஆனால் பெரும்பாலும் உயர்நிலையானவை (4) HER2+, இவற்றில் பெரிதாக்கப்பட்ட ERBB2 இருக்கும்.[19] DNA மைக்ரோஅர்ரேஸ் என்பது சாதாரண செல்களையும், மார்பக புற்றுநோய் செல்களையும் ஒப்பிட்டு நூற்றுக்கணக்கான ஜீன்களில் வேறுபாட்டைக் கண்டறிந்தது, ஆனால் இவற்றில் பெரும்பாலான வேற்றுமைகளின் முக்கியத்துவம் தெரியாமலே இருக்கிறது. பல கண்டறிதல் சோதனைகள் வணிகரீதியாக சந்தைப்படுத்தப்படுகின்றன, ஆனால் அவற்றின் கண்டறிதல் திறன் மிகவும் குறைவானதே. இரண்டாம் நிலை சான்றின் மூலம் ஆதரிக்கப்படும் ஒரே சோதனையானது, ஆங்கோடைப் DX என்பதாகும், ஆனால் அது அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பால் (FDA) ஏற்றுக்கொள்ளப்படவில்லை, மேலும் அது அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் கிளினிக்கல் ஆங்கோலஜியால் சான்றளிக்கப்படவில்லை. மம்மாபிரிண்ட் என்பது எஃப்டிஏவால் ஆதரிக்கப்படுகிறது, ஆனால் அது மூன்றாம் நிலை சான்றை மட்டுமே வழங்குகிறது. இன்னும் இரண்டு சோதனைகள் மூன்றாம் நிலை சான்றைக் கொண்டுள்ளன: திரோஸ் மற்றும் மேப்க்வான்ட் டிஎக்ஸ். முதலாம் நிலை சான்றைக் கொண்டுள்ளதாக எந்த சோதனையும் உறுதி செய்யப்படவில்லை. (அதாவது ஒரு எதிர்பார்ப்புடன் கூடிய, தோராயமான கட்டுப்பாட்டு தொடர்நிகழ்வு, இதில் பங்கேற்ற நோயாளிகளுக்கு பங்கேற்காதவர்களை விட ஓரளவுக்கு நல்ல முடிவுகள் கிடைத்தன). ஒரு மதிப்பாய்வில், சோடிரவு கூறியதாவது, "HER2-பாசிட்டிவ் மற்றும் ட்ரிபிள் நெகடிவ் கட்டிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு மரபணு சோதனைகள் ஓரளவுக்கு குணமாக்குவதற்கான தகவல்களை அளிக்கின்றன, ஆனால் மருத்துவரீதியான ஆபத்துகளின் முடிவுகள் குழப்பத்தைத் தந்தால் (எ.கா., ER -இன் இடைநிலை வெளிப்பாடு மற்றும் இடைநிலை ஹிஸ்டோலாஜிக் கிரேட்), இவை கிளினிக்கல் முடிவுகளுக்கு வழிவகுக்கின்றன."[19] மார்பக புற்றுநோய் பெரும்பாலும், ஆனால் எப்போதும் அல்ல அதனுடைய ஹிஸ்டோலாஜிக்கல் தோற்றத்தின்படி வகைப்படுத்தப்படுகின்றன. அரிதான சில வகைகள் உடல்ரீதியான சோதனை கண்டுபிடிப்புகள் மூலம் வரையறுக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, வீக்கத்துடன் கூடிய மார்பக புற்றுநோய் (IBC), அதாவது ஒரு வகை டக்டல் கார்சினோமா அல்லது குழாய்களில் ஏற்படும் மாலிக்னான்ட் கான்சர் ஆனது பிறவகை கார்சினோமாக்களிலிருந்து நோய் பாதிப்படைந்த மார்பகத்தின் வீக்கமடைந்த தோற்றத்தின் மூலமாக வேறுபடுத்தி அறியப்படுகிறது.[20] எதிர்காலத்தில், சில நோய்க்குறியியல் வகைப்பாடுகள் மாறக்கூடும். குறிகளும் அறிகுறிகளும் மார்பக புற்று நோயின் போது, மார்பில் எங்காவது கட்டி அல்லது முடிச்சு இருக்கும் மார்பகப் பகுதியில் வீக்கம், சிவந்து காணப்படுதல் போன்றவை இருக்கலாம். காம்பில் வெள்ளை நிறக் கசிவு போன்ற அறிகுறிகள் இருக்கும். மார்பக புற்றுநோயை கண்டறியக்கூடிய முதல் அறிகுறியானது மார்பகத்தின் திரட்சியானது பிறத் திசுக்களிலிருந்து வேறுப்பட்டதாக இருப்பதை அறிவதாகும். ஒரு பெண் கட்டியை உணர்ந்தவுடனே 80% மார்பக புற்றுநோய்கள் கண்டறியப்பட்டு விடுகின்றன.[21] மார்பகத்தின் திரட்சி கண்ணுக்கு புலனாகும் அளவுக்கு மாறும்போது, அது பல ஆண்டுகளாக வளர்ந்து வந்திருக்கும் நிலையே ஆகும். ஆரம்பநிலை மார்பக புற்றுநோய்கள் முலை ஊடுகதிர்ப்பட சோதனை (மேமோகிராம்) மூலமாக அறியப்படுகின்றன.[22] அக்குள்களில் உள்ள நிணநீர் முடிச்சுகளில் உள்ள திரட்சிகளும்[21] மார்பக புற்றுநோயைச் சுட்டிக்காட்டக் கூடும். திரட்சியில் ஏற்படும் மாற்றம் தவிர, மார்பக புற்றுநோயின் பிற அறிகுறிகளாவன, மார்பக அளவு, வடிவம் ஆகியவற்றில் மாற்றம், தோலில் பருக்கள் தோன்றுதல், மார்பு காம்பு திரும்புதல் அல்லது ஏதேனும் ஒரு காம்பிலிருந்து தானாகவே நீர்வடிதல். மார்பக புற்றுநோய் இருக்கிறதா அல்லது இல்லையா என்று தீர்மானிப்பதில், வலியானது ("மாஸ்டோடைனியா") ஒரு நம்பகமற்ற கருவியாகும், ஆனால் இது பிற மார்பக நலக் கோளாறுகளைத் தீர்மானிக்க உதவும்.[21][22][23] டெர்மல் லிம்பாடிக்ஸ் எனப்படும் மார்பக தோல்பகுதியில் உள்ள சிறிய நிணநீர் பைகளை மார்பக புற்றுநோய் செல்கள் தாக்கும்போது, அதனுடைய வெளிப்பாடானது தோல் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும், எனவே இது வீக்கமுடைய மார்பக புற்றுநோய் ( inflammatory breast cancer- IBC) என்றழைக்கப்படுகிறது. வீக்கம் கொண்ட மார்பக புற்றுநோயின் அறிகுறிகளாவன, வலி, வீக்கம், மார்பு முழுவதும் எரிச்சல் மற்றும் சிவந்து காணப்படுதல், மேலும் ஆரஞ்சு தோலைப் போன்ற அமைப்பு மார்பகத்தின் தோல்முழுவதும் காணப்படுவது ஆகியவை ஆகும். இது பீயவ் டி' ஆரஞ்சு என்று குறிப்பிடப்படுகிறது.[21] மார்பகப் புற்றுநோயின் அறிகுறி என்று குறிப்பிடப்படும் மற்றொன்று மார்பகத்தில் பேஜட் குறைபாடு (Paget's disease of the breast) ஏற்படுவதாகும். இந்த அறிகுறியானது எக்சிமாடாய்ட் தோல் மாற்றங்களால் வெளிப்படும். அதாவது மார்பு காம்பின் தோலானது சிவந்தும், சிறிதளவு உறிந்து வருமாறும் மாறும். பேஜட் தீவிரமடையும்போது, எரிச்சல், அரிப்பு, அதிகமான உணர்திறன் மற்றும் வலி ஆகியவைக் காணப்படும். காம்பிலிருந்து கசிவு ஏதேனும் கூட ஏற்படலாம். பேஜட் இருப்பதாக கண்டறியப்பட்ட பெண்களில் ஏறத்தாழ பாதிப்பேரின் மார்பகங்களில் நிணநீர் (லிம்ப்) இருப்பதும் கண்டறியப்பட்டது.[24] சில நேரங்களில், மார்பக புற்றுநோய், மெட்டாஸ்டாடிக் (மாற்றிடமேறிய) குறைபாடாக இருக்கும், அதாவது புற்று ஏற்பட்ட இடத்திலிருந்து பிற இடங்களுக்கு பரவக்கூடும். மெட்டாஸ்டாடிக் மார்பக புற்றுநோயானது மெட்டாஸ்டாடிஸின் இருப்பிடத்தைப் பொறுத்து அறிகுறிகளை ஏற்படுத்தக் கூடும். மெட்டாஸ்டாடிஸ் உருவாகக் கூடிய பொதுவான இடங்களாவன: எலும்பு, கல்லீரல், நுரையீரல் மற்றும் மூளை ஆகியவையாகும்.[25] காரணமற்ற எடையிழப்பும் கூட, சில நேரங்களில் மார்பக புற்றுநோயின் புதிரான அறிகுறியாக கொள்ளப்படலாம், இதே போல காய்ச்சல் அல்லது குளிரும் கூட அறிகுறிகளாகக்கூடும். எலும்பு அல்லது மூட்டு வலிகள் ஆகியவையும் சில நேரங்களில் மெட்டாஸ்டாடிக் மார்பக புற்றுநோயின் பிரதிபலனாக உருவாகக்கூடும், இதே போல மஞ்சள் காமாலை அல்லது நரம்பியல் அறிகுறிகள் போன்றவையும் இதன் அறிகுறிகளாக இருக்கக்கூடும். இந்த அறிகுறிகள் "குறிப்பானவை" அல்ல, அதாவது இவை வேறு நோய்களின் அறிகுறிகளாகவும் இருக்க வாய்ப்புண்டு.[26] மார்பகக் குறைபாடுகளின் பல அறிகுறிகள், மார்பக புற்றுநோயைக் குறிப்பதில்லை. மார்பக [[வீக்கம்/0} மற்றும் கொழுப்புக் கட்டிகள் போன்ற பெனின் மார்பக நோய்|வீக்கம்/0} மற்றும் கொழுப்புக் கட்டிகள் போன்ற பெனின் மார்பக நோய்]]கள் பொதுவான மார்பகக் குறைபாடு அறிகுறிகளாகும். புதிய அறிகுறிகள் தோன்றுவதை நோயாளிகளும், அவர்களின் மருத்துவர்களும் மிகவும் கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் மார்பக புற்றுநோயின் ஆபத்து எல்லா வயதினருக்கும் பொதுவானது.[27] ஆபத்து காரணிகள் முதன்மையான ஆபத்து காரணிகளாக அறியப்பட்டவை, பாலுறவு,[28] வயது,[29] குழந்தை பெறுதல் அல்லது பாலூட்டுதல் இல்லாமை, மற்றும் உயர்ந்த ஹார்மோன் அளவுகள் ஆகியவை ஆகும்,[30][31]. 1995ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், மிகவும் விரிவான ஆபத்துக்காரணிகளே 47% நோயாளிகளுக்கு காரணமாக இருந்துள்ளன, வெறும் 5% பேர் மட்டும் மரபு வழியாக இந்த நோய்களைப் பெற்றுள்ளனர்.[32] குறிப்பாக, மார்பக புற்றுநோய் ஊடுருவு மரபணுக்களைக் கொண்ட கடத்திகளான, BRCA1 மற்றும் BRCA2 ஆகியவை, மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய்க்கான வாய்ப்பை 30-40% உயர்த்தியது, இது மரபணுவில் உள்ள புரதத்தின் எந்த பகுதி உருமாற்றம் அடைகிறது என்பதை சார்ந்துள்ளது.[33]. சமீப ஆண்டுகளில், உணவூட்டம் மற்றும் பிற நடத்தைகளால் மார்பக புற்றுநோய்க்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன என்று கண்டறிந்துள்ளனர். இந்த கூடுதல் ஆபத்து காரணிகளில், அதிக கொழுப்பு நிறைந்த உணவு,[34] ஆல்கஹால் உட்கொள்ளுதல்,[35][36] உடல்பருமன்,[37] மற்றும் புகையிலை பயன்பாடு, கதிரியக்கம் போன்ற சுற்றுச்சூழல் காரணிகள்[38], நாளமில்லா சுரப்பிகளைப் பாதிப்பது மற்றும் ஷிஃப்ட்வொர்க் போன்றவை அடங்கும்.[39] முலை ஊடுகதிர்ப்படத்தின் (மேமோகிராஃபி) மூலம் பெறப்படும் கதிரியக்கம் மிகவும் குறைவாக இருந்தாலும், தொடர்ந்து பெறப்படும்போது அது புற்றுநோயை உருவாக்கக் கூடும். மேலே குறிப்பிடப்பட்ட ஆபத்துக் காரணிகளுடன், மக்கள்தொகை பரவல் மற்றும் மருத்துவ ஆபத்துக்காரணிகளும் உள்ளன. அவையாவன: தனிநபருக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருப்பது: ஒரு மார்பில் புற்றுநோயைப் பெற்ற ஒரு பெண்ணுக்கு மற்றொரு மார்பிலும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். குடும்ப வரலாறு: ஒரு பெண்ணின் தாய், சகோதரி அல்லது மகளுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டால், அந்த பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் யாருக்காவது 40 வயதுக்கு முன்பாக மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் இந்த ஆபத்து இன்னும் அதிகம். பிற உறவுமுறைகளில் ஒருவருக்கு (தாய் அல்லது தந்தை வழி உறவினர்களுக்கு) மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருந்தாலும் இந்த ஆபத்து அதிகரிக்கும். குறிப்பிட்ட மார்பக மாற்றங்கள்: சில பெண்களின் மார்பக செல்கள் மைக்ரோஸ்கோப்பினால் பார்க்கப்படும்போது இயல்புக்கு மாறான தோற்றத்தைக் காட்டும். சிலவகை இயல்புக்கு மாறான செல்களைப் பெற்றிருத்தல், (அரியவகை ஹைப்பர்பிளாசியா மற்றும் சிடு(situ)வில் லோபுலர் கார்சினோமா [LCIS]) மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. இனம்: லத்தீன், ஆசிய அல்லது ஆப்பிரிக்க அமெரிக்க பெண்களை விட காஸ்காசியன் பெண்களிடையே மார்பக புற்று நோய் அதிகமாக கண்டறியப்பட்டது. கருக்கலைப்பு செய்வது மார்பக புற்றுநோயை ஏற்படுத்தும் என்று கண்டறியப்படவில்லை. ஆனாலும், கருக்கலைப்பினால் மார்பக புற்றுநோய் என்ற கருத்து சில கருப் பாதுகாப்பு குழுக்களால் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது.[40][41][42] சர்வதேச புற்றுநோய் ஜீனோம் கன்சோர்டியம் என்பதில் உறுப்பினராக உள்ள ஐக்கிய இராஜ்யம் (யுனைடெட் கிங்டம்) முழுமையான மார்பக புற்றுநோய் ஜீனோமைக் கண்டறியும் செயல்பாடுகளில் முன்னிலை வகிக்கிறது. உடலியக்க நோய்க்குறியியல் எல்லா புற்றுநோய்களையும் போலவே, மார்பக புற்றுநோயும், ஒரு குறைபாடுடைய மரபணு அதனுடைய சூழலுடன் தொடர்பு கொள்வதன் மூலமாக ஏற்படுகிறது. சாதாரண செல்கள் தேவையான அளவுக்கு பிளவுப்பட்டு, பின்னர் நின்றுவிடும். அவை பிற செல்களுடன் ஒட்டிக்கொண்டு, திசுக்களில் தங்கியிருக்கும். உருமாற்றத்தின் காரணமாக, செல்கள் பிளவுறுவதை நிறுத்தும் திறனை இழந்து, மற்ற செல்களுடன் ஒட்டியிருக்கும் தன்மையை இழந்து, அவற்றுக்கு சொந்தமான இடங்களில் தங்கியிருக்கும் திறனையும் இழந்து விடும்போது அவை புற்றுகளாக மாறுகின்றன. செல்கள் பிளவுறும்போது, அவற்றின் டிஎன்ஏ பொதுவாகவே பல தவறுகளுடன் நகலெடுக்கப்படுகின்றன. இந்த தவறுகளை பிழை-திருத்தும் புரதங்கள் சரிசெய்யும். p53, BRCA1 மற்றும் BRCA2 போன்ற உருமாற்றங்கள் கான்சரை ஏற்படுத்தும் என்று அறியப்பட்டுள்ளன, இவை பிழை திருத்தும் செயல்பாடுகளில்தான் இருக்கின்றன. இந்த உருமாற்றங்கள் மரபுவழியாகவோ அல்லது பிறந்தபின்னர் பெறப்பட்டதாகவோ இருக்கலாம். இவையே, பிற உருமாற்றங்களை, கட்டுப்பாடற்ற பிளவு, ஒட்டியிருக்கும் தன்மை இழப்பு மற்றும் தொலைவில் உள்ள உறுப்புகளில், மெட்டாஸ்டாடிஸ் ஆகியவற்றுக்கு காரணமாக உள்ளன என்று யூகிக்கப்படுகிறது.[38][43] சாதாரண செல்கள், அவை தேவைப்படாத நிலை ஏற்படும்போது, தற்கொலை (அபோப்டோசிஸ்) செய்து கொள்கின்றன. அதுவரை, அவை, பல புரத தொகுப்புகள் மற்றும் தடங்களால் (பாத்வே) தற்கொலையிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. இம்மாதிரியான ஒரு பாதுகாப்பு பாத்வேயானது PI3K/AKT பாத்வே ஆகும்; மற்றொன்று RAS/MEK/ERK பாத்வே ஆகும். சில நேரங்களில், இந்த பாதுகாப்பு பாத்வேக்களில் உள்ள சில ஜீன்கள் உருமாற்றம் அடைந்து இவற்றை எப்போதுமே "இயங்கிக்" கொண்டிருக்குமாறு மாற்றி விடுகின்றன, இதனால் செல்லின் தேவை இல்லாத நிலையிலும் செல் தற்கொலை செய்து கொள்ள முடியாமல் போகிறது. பிற உருமாற்றங்களுடன் இணைந்து புற்றுநோயை உருவாக்கும் படிகளில் இதுவும் ஒன்று. சாதாரணமாக, ஒரு செல்லானது தற்கொலைக்கு தயாராகும்போது PTEN புரதமானது PI3K/AKT பாத்வேயின் இயக்கத்தை நிறுத்தி விடுகிறது. சில மார்பக புற்றுநோய்களில், PTEN புரதத்தின் ஜீன் உருமாற்றம் அடைகிறது, எனவே PI3K/AKT பாத்வே "இயங்கும்" நிலையில் தங்கிவிடுகிறது, இதனால் கான்சர் செல்கள் தற்கொலை செய்து கொள்வதில்லை.[44] மார்பக புற்றுநோயை உருவாக்கும் உருமாற்றங்கள், ஈஸ்ட்ரோஜன் பயன்பாட்டோடு தொடர்புடையவை என்று ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.[45] நோய்த்தடுப்பு கவனிப்பு, மாலிக்னான்ட் செல்களை ஒருவருடைய ஆயுள் முழுவதும் நோய்த்தடுப்பு அமைப்பு நீக்கி விடும் என்ற கொள்கை.[46] இயல்புக்கு மாறான வளர்ச்சி வீதமானது [[ஸ்ட்ரோமல் செல்/0}கள் மற்றும் எபிதீலியல் செல்கள் ஆகியவற்றுக்கு இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளதையும் மாலிக்னன்ட் செல் வளர்ச்சியையும் காண்பிக்கிறது.|ஸ்ட்ரோமல் செல்/0}கள் மற்றும் எபிதீலியல் செல்கள் ஆகியவற்றுக்கு இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளதையும் வீரியம் மிக்க (மாலிக்னன்ட்) செல் வளர்ச்சியையும் காண்பிக்கிறது.[47][48]]] வளர்ந்த நாடுகளை விட குறைவாக வளர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் குறைவாக நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அமெரிக்காவில், மார்பக அல்லது கருப்பை புற்றுநோயைக் கொண்ட மக்களில் 10 முதல் 20 சதவீதம் பேர் அவர்களின் முதல் நிலை அல்லது இரண்டாம் நிலை உறவினர்களில் ஒருவருக்கு இந்த நோய்களில் ஒன்று இருப்பதாக தெரிவிக்கின்றனர். இரண்டு முக்கிய நோய் காரணி ஜீன்களில் உருமாற்றங்கள், அதாவது மார்பக புற்று தாக்கி ஜீன் 1 (breast cancer susceptibility gene 1 -BRCA1) மற்றும் மார்பக புற்று தாக்கி ஜீன் 2 (BRCA2) ஆகியவை மார்பக புற்றுநோய்க்கான ஆபத்தை வாழ்நாள் முழுவதும் 60 மற்றும் 85 சதவீதமாகவும், கருப்பை புற்றுநோய்க்கான ஆபத்தை வாழ்நாள் முழுவதற்கும் 15 மற்றும் 40 சதவீதத்துக்கு இடையிலும் கொண்டுள்ளது. ஆனாலும், இந்த ஜீன்களில் ஏற்படும் உருமாற்றங்கள், ஒட்டுமொத்த மார்பக புற்றுநோய்களில் 2 முதல் 3 சதவீதமாகவே இருக்கிறது.[49] நோய் கண்டறிதல் கண்டறிதல் நுட்பங்கள், (கீழே விரிவாக விளக்கப்படுகின்றன) கான்சரின் வாய்ப்புகளைத் தீர்மானிக்கப் பயன்படுகின்றன என்றாலும், கண்டறியப்பட்ட கட்டி, சாதாரண கட்டி போன்றவையாக இல்லாமல், புற்றுநோய்தான் என்று கண்டறிய கூடுதல் சோதனைகள் அவசியம். மருத்துவ அமைப்புகளில், மார்பக புற்றுநோயானது, மார்பக பரிசோதனையில் ஒரு "மும்மை சோதனை" மூலம் கண்டறியப்படுகிறது (பயிற்சி பெற்ற மருத்துவரின் மார்பக பரிசோதனை), மேம்மோகிராஃபி, மற்றும் நுண் ஊசி கண்டறிதல் சைட்டோலஜி ஆகியவை ஆகும். மேம்மோகிராஃபி மற்றும் கிளினிக்கல் மார்பக சோதனை ஆகிய இரண்டுமே, ஒரு கட்டி புற்றுநோய்தானா என்று அறியவும், சில நேரங்களில் பிற காயங்கள் ஏதும் உள்ளனவா என்று அறியவும் கூட பயன்படுத்தப்படுகின்றன. நுண் ஊசி கண்டறிதல் மற்றும் சைட்டோலஜி (FNAC), என்ற சோதனையை, GP இன் அலுவலகத்தில், மரத்துப்போகும் பொருளைப் பயன்படுத்தி, கட்டியிலிருந்து திரவத்தை எடுக்க முயற்சி செய்வதாகும். தெளிவான திரவமானது, கட்டி புற்றுநோயாக இல்லை என்று தெரிவிக்கும், ரத்தத்துடன் கூடிய திரவமானது புற்றுநோய் செல்கள் உள்ளனவா என்று நுண் பெருக்கி கண்ணாடி (மைக்ரோஸ்கோப்) பரிசோதனைக்கு அனுப்பப்படும். இந்த மூன்று சோதனைகளையும் ஒன்றிணைத்து, மார்பக புற்றுநோயை மிக அதிக துல்லியத்துடன் கண்டறிய பயன்படுத்தலாம். உடல் திசு ஆய்வு (பயாப்ஸி)க்கான பிற வாய்ப்புகளாவன கோர் பயாப்ஸி, இதில் மார்பகத்தின் ஒரு பகுதி நீக்கப்படும், மற்றும் துண்டித்தல் பயாப்ஸி, இதில் முழு கட்டியும் அகற்றப்படும். பிரித்தெடுக்கப்பட்ட மனித மார்பக திசு, சீரற்ற, அடர்த்தியான, வெள்ளைநிற ஸ்டெல்லட் பகுதி 2 செ.மீ விட்டம் கொண்டது, கூடவே மஞ்சள் நிற கொழுப்புநிறைந்த திசு. டக்டல் மார்பக கார்சினோமாவால் பாதிக்கப்பட்ட நிணநீர் முடிச்சு மற்றும் அதனுடன் கட்டியின் முடிச்சுக்கு வெளியேயான நீட்சி. சாதாரண மார்பகம் மற்றும் மார்பக கார்சினோமா திசுக்களின் நியூரோபிலின்-2 வெளிப்பாடு. மார்பகத்துடன் உள்ள நிணநீர் முடிச்சுகள் கண்டறிதல் மார்பக புற்றுநோய் கண்டறிதல் என்பது, ஆரோக்கியமான பெண்ணுக்கு, முன்னதாகவே மார்பக புற்றுநோய் இருக்கிறதா என்று கண்டறியும் முயற்சியாகும். முன்னதாகவே கண்டறிவதால் எளிதாக குணமாக்க முடியும் என்று நம்பப்படுகிறது. பல கண்டறிதல் சோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன, அவையாவன: மருத்துவ மற்றும் சுய மார்பக சோதனைகள், முலை ஊடுகதிர்ப் படம் (மேம்மோகிராஃபி), மரபுசார் சோதனை, செவியுணரா ஒலி அலை வரைவு (அல்ட்ராசவுண்ட்) மற்றும் காந்த அதிர்வு அலை வரைவு (மாக்னடிக் ரெசொனன்ஸ் படமெடுத்தல்). மருத்துவ அல்லது சுய மார்பக பரிசோதனை என்பதில் மார்பகத்தில் கட்டிகள் அல்லது பிற அசாதாரண மாற்றங்கள் உள்ளனவா என்று அறியப்படுகிறது. இந்த இரண்டு வகை மார்பக பரிசோதனையிலும், சிறந்த முடிவுகள் பெறப்படுகின்றன என்பதற்கு ஆராய்ச்சிப்பூர்வமான சான்றுகள் ஏதுமில்லை, ஏனெனில் கண்டறியக்கூடிய அளவுக்கு பெரிதாக கட்டி வளர்ந்திருக்கும்போது, அது முன்பே பல ஆண்டுகளாக வளர்ந்திருக்கக் கூடும், விரைவிலேயே அதனை பரிசோதனை இல்லாமலே கண்டறியலாம்.[50] மார்பக புற்றுநோய்க்கான மேமோகிராஃபிக் ஸ்கிரீனிங் எக்ஸ்-ரேக்களைப் பயன்படுத்துகின்றன, இதன் மூலம் ஏதேனும் வழக்கத்துக்கு மாறான கட்டிகள் அல்லது லம்ப்கள் உள்ளனவா என்று அறியப்படுகின்றன. 2009 ஆம் ஆண்டில் கொக்ரேன் கொலாப்ரேஷன், மேமோகிராம்கள் மார்பக புற்றுநோய்களில் பிழைக்கும் வாய்ப்பை 15 சதவீதம் வரை குறைக்கின்றன. மேலும் தேவையற்ற அறுவைசிகிச்சை மற்றும் தொல்லைகளை உருவாக்கும் என்று கூறியது. இதன் விளைவாக மேம்மோகிராஃபி சோதனைகள் நன்மை செய்வதை விடவும் தீமையைத்தான் அதிகம் செய்கின்றன என்று கூறினார்கள்.[51] ஆனாலும், பல தேசிய நிறுவனங்கள், வழக்கமான மேமோகிராஃபியைப் பரிந்துரைக்கின்றன. 50 முதல் 74 வயதான சாதாரண பெண்ணுக்கு, அமெரிக்க முன்னெச்சரிக்கை சேவைகள் அமைப்பு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை மேம்மோகிராஃபி செய்து கொள்ளுமாறு பரிந்துரைக்கிறது.[52] இந்த டாஸ்க் ஃபோர்ஸ், தேவையற்ற அறுவை சிகிச்சை மற்றும் தொல்லைகளுடன் கூடவே அடிக்கடி மேம்மோகிராம்களை எடுத்துக் கொள்வதால், சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க அளவுக்கு மார்பக புற்றுநோயின் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டுகிறது.[53] அதிகமான பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பெண்கள் போன்ற அதிக ஆபத்தில் உள்ள பெண்களுக்கு, மேம்மோகிராஃபி கண்டறிதல் சிறிய வயதிலேயே பரிந்துரைக்கப்படுகிறது, மேலும் BRCA ஜீன்கள் மற்றும் / அல்லது மாக்னடிக் ரெசொனன்ஸ் இமேஜிங் போன்ற கூடுதல் சோதனைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. நடமாடும் கண்டறிதல் சேவை மார்பக புற்றுநோயை கண்டறிய டாக்டர் கே. சாந்தா மார்பக புற்றுநோய் அமைப்பு 2012-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடமாடும் கண்டறிதல் சேவையை தொடங்கி வைத்தது. குறைந்த செலவில் மார்பக புற்றுநோயின் அறிகுறிகளை கண்டறிய மாமோகிராம் கருவிகள் பொருத்தப்பட்ட ஒரு வாகனம் தமிழ்நாடு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று இச்சேவையை வழங்கி வருகிறது. பழைய வாகனம் ஒன்றை வைத்துக்கொண்டு தொடங்கப்பட்ட இச்சேவைக்காக, ஒரு தனியார் வாகன தயாரிப்பு நிறுவனம் புதிய வாகனம் ஒன்றை நண்கொடையாக வழங்கியுள்ளது. அதன் மூலம் தொலை தூரத்திற்கு இச்சேவை வழங்கும் கருவிகளை எடுத்துச் செல்ல முடியும். தொடங்கப்பட்ட ஒரே ஆண்டில் 1000-த்துக்கும் மேற்பட்டோர் இச்சேவையை பயன்படுத்தியுள்ளனர்.[54] சிகிச்சைமுறைகள் மார்பக புற்றுநோயானது முதலில், அறுவைசிகிச்சை மூலமாகவும் பின்னர் மருந்துகள், கதிரியக்கம் அல்லது இரண்டினாலும் சிகிச்சையளிக்கப்படுகிறது. கண்டறிதல் மற்றும் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சிகிச்சைகள் அதிக தீவிரத்துடன் தரப்படுகின்றன. நல்ல முன் கண்டறிதலுடன் கூடிய ஆரம்பநிலை கான்சர்கள் (DCIS அல்லது நிலை 1 அல்லது நிலை 2) லம்பெக்டோமி மற்றும் கதிரியக்கம் ஆகியவை மூலம் மட்டுமே சிகிச்சையளிக்கப்படுகின்றன.[55] மிகவும் குறைவாக கண்டறியப்பட்ட மற்றும் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் கொண்ட பிந்தைய நிலை கான்சர்கள் அதிதீவிர கீமோதெரபி மூலமாக சிகிச்சையளிக்கப்படுகின்றன. இதில் விரும்பத்தகாத மற்றும் வாழ்வுக்கு ஆபத்தளிக்கக் கூடிய பக்க விளைவுகளும் இருக்கக்கூடும், இவை குணமாவதற்கான வாய்ப்புகள் மற்றும் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகளை குறைப்பதற்காக செய்யப்படுகின்றன. அறுவை சிகிச்சையுடன் கூடிய மருந்துகள் துணை நிலை சிகிச்சை என்று அழைக்கப்படுகின்றன. ஹார்மோன் தெரபி என்பது ஒரு வகையான துணைநிலை சிகிச்சையாகும். சில மார்பக புற்றுநோய்கள தொடர்ந்து வளர்ச்சியடைய, ஈஸ்ட்ரோஜன் தேவைப்படுகிறது. இவற்றை ஈஸ்ட்ரோஜன் ஏற்பிகள் இருப்பதை வைத்தும் (ER+) புரோஜெஸ்ட்ரான் ஏற்பிகள் (PR+) இருப்பதை வைத்தும் அறியலாம் (இவை சில நேரங்களில் மொத்தமாக ஹார்மோன் ஏற்பிகள், HR+ என்று குறிப்பிடப்படுகின்றன). ஈஸ்ட்ரோஜன் உருவாகத்தைத் தடுக்கும் அல்லது ஏற்பிகளை முடக்கும் டமோக்ஸிஃபென் அல்லது அரோமாடாஸ் இன்ஹிபிட்டர்) போன்ற மருந்துகளின் மூலமாக இந்த ER+ கான்சர்களுக்கு சிகிச்சையளிக்க முடியும். நோயின் தீவிரமான நிலைகளுக்கு சிகிச்சையளிக்க கீமோதெரபி தரப்படுகிறது. இவை பொதுவாக இணைத்து தரப்படுகின்றன. மிகப்பொதுவான சிகிச்சை முறைகளில் ஒன்று சைக்ளோபாஸ்மைடு உடன் டோக்ஸோரூபிசின் (அட்ரியாமைசின்) ஆகும், இது CA என்றழைக்கப்படுகிறது; இந்த மருந்துகள் கான்சரில் உள்ள DNA வை அழிக்கின்றன, கூடவே வேகமாக வளரும் சாதாரண செல்களையும் அழிக்கின்றன, இதனால் மிக மோசமான பக்க விளைவுகள் ஏற்படக்கூடும். டோக்சோரூபிசின் மருந்தின் மிக ஆபத்தான பக்கவிளைவு இதய தசைகள் பாதிப்படைவதாகும். டாக்டாக்சல் போன்ற டாக்ஸேன் மருந்துகள், இந்த கூட்டுமருந்துடன் சேர்க்கப்படுகின்றன, அவை CAT என்றழைக்கப்படுகின்றன; டாக்ஸேனானது, கான்சர் செல்களில் உள்ள நுண்குழாய்களைத் தாக்குகிறது. இதேபோன்ற முடிவைத் தரும் , மற்றொரு பொதுவான சிகிச்சை முறையானது, சைக்ளோபாஸ்மைடு, மீதோட்ரெக்சேட் மற்றும் ஃப்ளூரோவ்ராசில் (CMF) ஆகியவையாகும். (கீமோதெரபி என்பது பொதுவாக எந்த மருந்தையும் குறிப்பிடலாம், ஆனால் பொதுவாக பாரம்பரிய ஹார்மோன் அல்லாத சிகிச்சை முறைகளைக் குறிக்கின்றன.) மோனோக்ளோனல் ஆண்டிபாடிகள் ஆகியவை சில நேரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. சில கான்சர் செல்களின் பரப்புகளில் HER2 என்ற ஏற்பிகள் உள்ளன. இந்த ஏற்பியானது, பொதுவாக, ஒரு செல்லை பிளவுற செய்யும் வளர்ச்சி காரணியால் தூண்டப்படுகிறது. வளர்ச்சி காரணி இல்லாத நிலையில் செல்லானது வளர்வதை நிறுத்தி விடுகிறது. மார்பக புற்றுநோயில், HER2 ஏற்பியானது "இயங்கும்" நிலையில் தங்கி விடுகிறது (தொடர்ந்து தூண்டப்படுகிறது). இந்த செல் நிற்காமல் தொடர்ந்து பிளவுறுகிறது. ட்ராடுஸுமாப் (ஹெர்செப்டின்), என்ற மோனாக்ளோனல் ஆன்டிபாடி HER2 உடன் தரப்படும்போது, இந்த வகை கான்சர்களின் பிழைக்கும் வாய்ப்பை அதிகரிக்க உதவுகிறது. பிற மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் செல்லில் உள்ள பிற கான்சர் செயல்பாடுகளைத் தடுக்க பயன்படுகின்றன. ரேடியோதெரபி என்பது கட்டி இருந்த இடத்தில் அறுவை சிகிச்சைக்கு பின்னர் தரப்படுகிறது, இந்த மைக்ரோஸ்கோபிக் கட்டிகள் அறுவை சிகிச்சையிலிருந்து தப்பி விடக்கூடும் கதிரியக்க தெரபியை, வெளிப்புற கற்றை ரேடியோதெரபியாகவும் அல்லது ப்ராச்சிதெரபி (அக ரேடியோதெரபி) ஆகவும் தரப்படலாம். சரியான அளவுக்கு தரப்படும்போது, கதிரியக்கத்தால் புற்று மீண்டும் வரும் வாய்ப்பு, 50-66% குறைகிறது (1/2 - 2/3 வரை ஆபத்து குறைக்கப்படுகிறது).[56] சிகிச்சை முறைகள் தொடர்ந்து தோராயமான, கட்டுப்படுத்தப்பட்ட முயற்சிகளில் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. இந்த மதிப்பாய்வில், தனித்தனி மருந்துகள், கூட்டு மருந்துகள் மற்றும் கதிரியக்க நுட்பங்களும் ஆராயப்படுகின்றன. இதிலிருந்து தனிப்பட்ட மற்றும் தொகுப்பு மருந்துகள் ஒப்பிடப்படுகின்றன. அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் கிளினிக்கல் ஆன்கோலஜி, சான் ஆன்டானியோ ப்ரெஸ்ட் கான்சர் சிம்போசியம்,[57] மற்றும் ஸ்விட்சர்லாந்தில் உள்ள செயின்ட். காலெனில் உள்ள செயின்ட். காலென் ஆன்காலஜி கான்ஃபரன்ஸ் போன்ற அறிவியல் சந்திப்புகளில் ஆண்டுதோறும் சமீபத்திய ஆய்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.[58] இந்த ஆய்வுகள் தொழில்முறை நிபுணர்களாலும், பிற நிறுவனங்களாலும் மதிப்பாய்வு செய்யப்பட்டு, குறிப்பிட்ட சிகிச்சைக் குழுக்கள் மற்றும் ஆபத்து வகையின்படி ஒழுங்கமைக்கப்பட்டு, ஒழுங்குகளாக வரையறுக்கப்படுகின்றன. நோய் முன்கணிப்பு நோய் முன் கணிப்பு என்பது, நோயின் முடிவை முன்னரே அறிவதாகும், பொதுவாக மரணத்தின் (அல்லது பிழைப்பதன்) சதவீதம் , மற்றும் நோய் வளர்ச்சி இல்லாத வாழ்நாள் (PFS) அல்லது நோயின்றி வாழுதல் (DFS) இன் சதவீதம் ஆகியவை ஆகும். இந்த யூகங்கள் ஒத்த வகையான மார்பக புற்றுநோய் நோயாளிகளுடனான அனுபவங்களின் அடிப்படையில் செய்யப்படுகின்றன. ஒரு நோய் முன்கணிப்பு என்பது தோராயமானதே, ஏனெனில் ஒரே மாதிரியான வகைப்பாட்டைக் கொண்ட நோயாளிகளும் வெவ்வேறு கால அளவுக்கு வாழ்வதற்கு வாய்ப்புண்டு மற்றும் வகைப்பாடுகள் எப்போதும் துல்லியமாக இருக்க வாய்ப்பில்லை. 50% நோயாளிகள் வாழக்கூடிய, சராசரி மாதங்களின் (அல்லது ஆண்டுகளின்) எண்ணிக்கையை வைத்து கணக்கிடப்படுகிறது, அல்லது 1, 5, 15 மற்றும் 20 ஆண்டுகளுக்கு பின்னரும் வாழும் நோயாளிகளின் சதவீதம் மூலமாக கணக்கிடப்படுகிறது. நோய் முன்கணிப்பு சிகிச்சை முடிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் நீண்டகாலம் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புடைய நோயாளிகளுக்கு லம்பக்டோமி மற்றும் கதிரியக்கம் அல்லது ஹார்மோன் தெரபி ஆகிய குறைவான தீவிரமுடைய சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன, அதே நேரத்தில், குறைவான பிழைக்கும் வாய்ப்புடைய நோயாளிகளுக்கு தீவிர மாஸ்டெக்டோமி போன்ற அதிதீவிர சிகிச்சைகளும் அல்லது கூடுதல் கீமோதெரபி மருந்துகள் வழங்கப்படுகின்றன. ஸ்டேஜிங், கட்டி அளவு மற்றும் இருப்பிடம், கிரேட் ஆகியவை நோய் முன்கணிப்பு காரணிகளும் அடங்கியுள்ளன. இவற்றின் மூலம் நோய் முறையானதா (மெட்டாஸ்டாஸைஸ்டு, அல்லது உடலின் மற்ற பாகங்களுக்கு கடத்தப்பட்டுள்ளதா என்பது) அல்லது மீண்டும் வரக்கூடியதா மற்றும் நோயாளியின் வயது ஆகியவை அறியப்படுகின்றன. ஸ்டேஜ் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இதில் கருதப்படும் அளவு, பகுதியின் பாதிப்பு, நிணநீர் முடிச்சுகளின் நிலை மற்றும் நோய் வேறு பகுதிகளுக்கு பரவியுள்ளதா என்று அறிய உதவுகிறது. நோய் கண்டறிதலின்போது இந்த ஸ்டேஜ் அதிகமாக இருந்தால், நோயின் முடிவு அதிக மோசமாக இருக்கும். இந்த நிலையானது, நோயானது நிணநீர் முடிச்சுகளுக்கும், மார்பின் சுவர்களுக்கும், தோல் அல்லது அதைத் தாண்டி பரவியுள்ளதா என்பதையும் புற்றுநோய் செல்களின் தீவிரத்தையும் வைத்து அதிகமாகிறது. கான்சர் அல்லாத பகுதிகள் இருப்பது, இயல்பான செல்களைப் போன்ற இயக்கம் (கிரேடிங்) ஆகியவற்றைப் பொருத்து இந்த நிலையானது குறைக்கப்படுகிறது. புற்றுநோய் பரவும் நிலையில் இல்லாத வரை அளவு ஒரு முக்கிய காரணி அல்ல. மார்பகம் முழுவதும், சிட்டு டாக்டல் கார்சினோமா பரவியிருப்பது ஸ்டேஜ் ஜீரோ ஆகும். கிரேடிங் என்பது, எவ்வகையில் பயாப்ஸி செய்யப்பட்டது என்பதையும், வளர்ச்சியடைந்த செல்களின் நடத்தையையும் அடிப்படையாக கொண்டது. இயல்பான கான்சர் செல்களுக்கு நெருக்கமாக இருக்கும் வரை, அவற்றின் வளர்ச்சி மெதுவாக இருந்து, நோயின் முடிவு சிறப்பாக இருக்கும். செல்களை சரியாக வகைப்படுத்த முடியவில்லை என்றால், அவை முதிர்ச்சியடையாதவையாக தோன்றும், மற்றும் இன்னும் வேகமாக பிரிவடையும் மற்றும் அதிக வேகமாக பரவும். அதிகம் வகைப்படுத்தக்கூடியவை 1 கிரேடாகவும், மிதமானவை 2 வது கிரேடாகவும், மோசமாக அல்லது வகைப்படுத்தவே முடியாததாகவும் இருப்பதை 3 அல்லது 4 என்ற கிரேடாகவும் வகைப்படுத்தப்படுகின்றன (இவை பயன்படுத்தப்படும் அளவீட்டை அடிப்படையாக கொண்டது). மெனோபாஸுக்கு பின்பான பெண்களை விட பல காரணிகளின் காரணமாக, இளம்பெண்கள் மோசமான நோயின் முடிவைப் பெற்றுள்ளனர். ஏனெனில் அவர்களின் மார்பகங்கள், அவர்களின் மாதவிடாய் சுழற்சிகளின் காரணமாக அதிக இயக்கத்துடன் உள்ளன. அவர்கள் கைக்குழந்தைகளுக்கு பாலூட்டிக் கொண்டிருக்கலாம், மற்றும் அவர்களின் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களை அறியாதவர்களாக இருக்கின்றனர். எனவே, இளம்பெண்களுக்கு நோய் இருப்பதைக் கண்டறியப்படும்போது கூடுதலாக மேம்பட்ட நிலைகளில் இருக்கின்றனர். இளம்பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மீண்டும் வருவதற்கான ஆபத்துகள் அதிகமாக உயிரியியல் காரணங்களும் இருக்கக்கூடும்.[59] ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஏற்பிகள் கான்சர் செல்களில் இருப்பது, முன்கணிப்பு செய்ய முடியாத போது, சிகிச்சையைக் கட்டமைப்பதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த குறிப்பிட்ட ஏற்பிகளுக்கு பாசிட்டிவாக முடிவைப் பெறாத நபர்களுக்கு ஹார்மோன் தெரபிக்கு பயனளிக்காது. இதேபோன்று, HER2/neu நிலையானது சிகிச்சையின் கால அளவைத் தீர்மானிக்கிறது. HER2/neu -க்கு பாசிட்டிவாக காண்பிக்கும் கான்சர் செல்களைக் கொண்ட நோயாளிகள், தீவிரமான நோய் பாதிப்பைப் பெற்றிருப்பார்கள். அவர்களுக்கு இந்த புரதங்களைத் தாக்கும் ட்ராடுஸுமாப் என்ற மோனோக்ளோனால் ஆன்டிபாடி என்ற மருந்தின் மூலம் சிகிச்சையளிக்கப்படுகின்றன. அல்கலைன் பாஸ்பாடாஸ் உடன் சேர்ந்த, எலிவேட்டட் CA15-3 என்பது மார்பக புற்றுநோய் திரும்பி வரும் வாய்ப்புகளை அதிகரிப்பதாக காண்பிக்கப்பட்டுள்ளன.[60] தொடர்ச்சியான மார்பக புற்றுநோய்களால் தீவிரமாக பாதிக்கப்பட்ட இடது மார்பகம். உளவியல் கூறுகள் புற்றுநோய் இருப்பதாக கண்டறிதல், அதன் அறிகுறிகள், சிகிச்சை மற்றும் தொடர்புடைய சிக்கல்கள் மிகவும் தீவிரமானவை. பெரும்பாலான பெரிய மருத்துவமனைகளில், புற்றுநோய் ஆதரவு குழுக்கள் இயங்கி வருகின்றன, இவற்றின் மூலம் நோயாளிகள் புற்றுநோயிலிருந்து பிழைத்தவர்களுடன் பழகவும், அதன் தன்மைகளை உணர்ந்து கொள்ளவும் உகந்த சூழல் ஏற்படுத்தித் தரப்படுகிறது. ஆன்லைன் கான்சர் ஆதரவுக் குழுக்களும், கான்சர் நோயாளிகளுக்கு மிகவும் பயனளிக்கக் கூடியவையாக உள்ளன, குறிப்பாக, நிச்சயமின்மை, உடலழகு கெடுதல் போன்று புற்றுநோய்களில் பொதுவாக அமைந்த சிக்கல்களை சமாளிக்க உதவுகின்றன. எல்லா மார்பக புற்றுநோய் நோயாளிகளும் ஒரே மாதிரியான சுகவீனத்தை உணர மாட்டார்கள். கான்சர் கண்டறியப்பட்ட பிறகு, வயது போன்ற பல காரணிகள் நோயின் தன்மையைத் தீர்மானிக்கின்றன. ஈஸ்ட்ரோஜன் ஏற்பி பாசிட்டிவ் மார்பக புற்றுநோயைக் கொண்ட மாதவிடாய் நிறுத்தத்திற்கு (மெனோபாஸ்) முன்பான நிலையில் உள்ள பெண்களுக்கு, அவர்களின் மார்பக புற்றுநோயை குணப்படுத்த வழங்கப்படும் பல கீமோதெரபி மருந்துகளின் தூண்டுதலால் முந்தையதாகவே மெனோபாஸ் வரக்கூடும், குறிப்பாக கருப்பை செயல்பாட்டைத் தடுப்பதற்கு பயன்படுத்தப்படும் ஹார்மோன் மருந்துகள் இவற்றை உருவாக்கக் கூடும். அவர்கள் இதனை சமாளித்தே ஆக வேண்டும்.[61] மற்றொரு வகையில், ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் உள்ள காலேஜ் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தின் ஆராய்ச்சியாளர்கள், வயதான பெண்கள், இளம்பெண்களை விட நோயிலிருந்து குணமடைவதற்கு அதிக சிரமம் அடைகின்றனர் என்று கண்டறிந்துள்ளனர்.[62] 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதால், பிழைக்கும் வீதம் குறைகின்றன. எனவே மார்பக புற்றுநோயானது தொடர்ந்து வயது சார்ந்த சிக்கலாக மாறி வருகிறது. இதை சார்ந்த விரிவான ஆய்வும், வெவ்வேறு வயதை சார்ந்தவர்களுக்கு வெவ்வேறு வகையான சிகிச்சை முறைகளும் உருவாக்கப்பட வேண்டும்.[62] நோய் பரவல் உலகளாவிய அளவில், பெண்களுக்கு ஏற்படக்கூடிய புற்றுநோய்களில் தோல் புற்றுநோய்க்கு அடுத்ததாக பொதுவான புற்றுநோயாக மார்பக புற்றுநோய் இருந்து வருகிறது. இது பெண்களுக்கான புற்றுநோய்களில் 16% ஆகும்.[64] இந்த சதவீதமானது குடல் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய்களின் வீதத்தின் இருமடங்காகும். நுரையீரல் புற்றுநோயைப் போல மூன்று மடங்காகும். உலகெங்கும் பெண்களிடையே நுரையீரல் புற்றுநோயால் ஏற்படும் மரணத்தை விடவும், 25% அதிக மரணத்தை இது ஏற்படுத்துகிறது.[10] 2004 -ஆம் ஆண்டில் மட்டும், உலகெங்கும் மார்பக புற்றுநோயால் மரணமடைந்த பெண்களின் எண்ணிக்கை 519,000 ஆகும். (புற்றுநோய் மரணங்களில் 7% ஆகும் மற்றும் ஒட்டுமொத்த மரணங்களில் 1% ஆகும்).[11] 1970களுக்கு பிறகு, உலகெங்கும் மார்பக புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிமாகியுள்ளது, இதற்கு ஒருவகையில் நவீன வாழ்க்கைமுறையும் காரணமாகும்.[65][66] மார்பக புற்றுநோயின் பாதிப்பு உலகெங்கும் பரவலாக வேறுபட்டுள்ளது, குறைவாக வளர்ச்சியடைந்த நாடுகளில் குறைவாகவும், அதிக வளர்ச்சியடைந்த நாடுகளில் அதிகமாகவும் இது இருக்கிறது. பன்னிரண்டு உலக பிராந்தியங்களில், 100,000 பெண்களுக்கு வருடாந்திர வயதால்-தரநிலைப்படுத்தப்பட்ட நோய் தாக்க வீதங்கள்: கிழக்காசியாவில் 18; தென் மத்திய ஆசியாவில், 22; துணை-சஹாரா பகுதியில் 22; தென் கிழக்கு ஆசியாவில் 26; வட ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவில் 28; தென் மற்றும் மத்திய அமெரிக்காவில், 42; கிழக்கு ஐரோப்பாவில், 49; தென் ஐரோப்பாவில், 56; வட ஐரோப்பாவில், 73; ஓஷியானா, 74; மேற்கு ஐரோப்பா, 78; மற்றும் வட அமெரிக்காவில் 90.[67] மார்பக புற்றுநோயானது, வயதுடன் மிகவும் நெருக்கமான தொடர்புடையது, 40 வயதுக்கு குறைவான பெண்களில் 5% பேர் மட்டுமே மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.[68] அமெரிக்கா அமெரிக்காவில் மார்பக புற்றுநோயால் பெண்கள் பாதிக்கப்பட, 8 இல் 1 (12.5%) பெண்ணுக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அதில் 35 இல் 1 (3%) ஒருவர் மரணமடையும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.[69] ஒரு சமீபத்திய ஆய்வு இந்த கணிப்பைத் தவறு எனக்கூறியது, அதில் ஆரோக்கியமான பெண்களில் 6% பேர் மட்டுமே பாதிப்படையும் வாய்ப்புடையவர்களாக இருக்கின்றனர்.[70] அமெரிக்காவில் மார்பக புற்றுநோயின் நோய்த்தாக்க வீதம் உலகிலேயே மிகவும் அதிகமானதாகும்; வெள்ளை பெண்களில் 100,000 பேர்களில் 128.6 பேர்களுக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களில் 100,000 பேர்களில் 112.6 பேர்களுக்கும் ஏற்படுகிறது.[69][71] இதுவே பொதுவாக காணப்படும் புற்றுநோயில் இரண்டாவது இடத்திலும் (தோல் புற்றுநோய்க்கு அடுத்ததாக) புற்றுநோயால் ஏற்படும் மரணங்களில் இரண்டாவது முக்கிய காரணமாகவும் (நுரையீரல் புற்றுநோய்க்கு அடுத்ததாகவும் இருந்து வருகிறது.[69] 2007ஆம் ஆண்டில், அமெரிக்காவில் மட்டும் 40,910 மரணங்கள் மார்பக புற்றுநோயால் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (இது புற்றுநோய் மரணங்களில் 7%; ஒட்டுமொத்த மரணங்களில் 2% ஆகவும் உள்ளது).[22] இந்த எண்ணிக்கையில், 2000 புற்றுநோய் மரணங்களில், வருடம் முழுவதும் இறக்கும் 450-500 ஆண்களும் அடங்குவர்.[72] கடந்த சில ஆண்டுகளாக, அமெரிக்காவில், அமெரிக்க பூர்வீகம் கொண்டவர்கள் மற்றும் அலாஸ்கா பூர்வீகம் கொண்டவர்கள் ஆகியோரில் மார்பக புற்றுநோய் தாக்கம் மற்றும் மரண வீதங்கள் தொடர்ந்து குறைந்து வருகின்றன.[22][73] ஆனாலும், பெண்களிடையே[74] மரணம் ஏற்படுவதற்கான பொதுவான காரணமாக இதய நோய் இருந்தாலும், 2005 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் பெண்களிடையே, மார்பக புற்றுநோயே மிகவும் அஞ்சப்படும் நோயாக இருந்து வருகிறது.[75] பெண்கள் மார்பக புற்றுநோயின் ஆபத்தை ஊதி பெரிதாக்கி பயம் கொள்கின்றனர் என்று பல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.[76] இனம் சார்ந்த சீரின்மை அமெரிக்காவில் வெள்ளையின பெண்களே அதிக அளவில் மார்பக புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டாலும், கருப்பின பெண்களே அதிகமாக மரணமடைகிறார்கள் என்று பல ஆய்வுகள் தெரிவித்தன. நோய் கண்டறியப் பட்ட பின்னரும், கருப்பின பெண்கள் மிகவும் குறைவான அளவே சிகிச்சைப் பெறுகின்றனர்.[77][78][79] இந்த வேற்றுமைகளுக்கு பல காரணங்களை அறிஞர்கள் தெரிவிக்கின்றனர், அதில் கண்டறிதலுக்கான போதுமான அணுகல் இல்லாமை, மிகவும் மேம்பட்ட அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ முறைகள் குறைவாக கிடைப்பது, அல்லது சில ஆப்பிரிக்க அமெரிக்க மக்களில் நோய் ஏற்படுத்தும் சில உயிரியல் ரீதியான பண்புகள்.[80] சில ஆய்வுகளில், மார்பக புற்றுநோய்களில் காணப்படும், இனம் சார்ந்த வேற்றுமைகள், உயிரியல் சார்ந்த வேறுபாடுகளை விடவும் கலாச்சாரம் சார்ந்த வேறுபாடுகளையே சார்ந்திருக்கிறது என்று அறியப்பட்டுள்ளது.[81] உயிரியல் மற்றும் கலாச்சார ரீதியான காரணிகளின் பங்கு தொடர்பான ஆய்வு தற்போது நடந்து வருகிறது.[78][82] இங்கிலாந்து ஆண்டுக்கு, 45,000 நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர் மற்றும் 12,500 பேர் மரணமடைகின்றனர். 60% நோயாளிகள் டாமோக்சிஃபென் கொண்டு சிகிச்சையளிக்கப்படுகின்றனர். இதில் 35% பேர்களிடையே இந்த மருந்து பலனளிக்காமல் போகிறது.[83] வளரும் நாடுகள் வளரும் நாடுகள் வளர்ச்சியடையும்போது, மேற்கத்திய கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறது, இதனால் அவையும் மேற்கத்திய கலாச்சாரத்தையும் அதன் பழக்கவழக்கங்களைப் (கொழுப்பு/ஆல்கஹால் உட்கொள்ளுதல், புகைப்பிடித்தல், வாய்வழி கருத்தடை மருந்துகள், குழந்தை தாங்குதல், பாலூட்டுதல் ஆகியவற்றில் மாறும் வழக்கம், குறைந்த எண்ணிக்கையில் குழந்தைகள் போன்றவை) பின்பற்றுவதால், அங்கு உருவான பல நோய்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகளைப் பெறுகின்றனர். எடுத்துக்காட்டாக, தென் அமெரிக்கா வளர்ச்சியடைய ஆரம்பித்தவுடன் அங்கு மார்பக புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. "தென் அமெரிக்க நாடுகளைப் போன்ற அதிகம் வளராத நாடுகளில் மார்பக புற்றுநோய் என்பது மிகப்பெரிய உடல்நல சிக்கலாகும். அர்ஜெண்டினா, உருகுவே மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில், புற்றுநோய் தொடர்பான மரணங்களுக்கு இதுவே மிக முக்கிய காரணமாக உள்ளது. 2001 ஆம் ஆண்டில் மார்பக புற்றுநோயால் பாதிக்கபட்டோர் மற்றும் மரணமடைந்தோரின் எதிர்பார்க்கப்படும் எண்ணிக்கையானது முறையே தோராயமாக 70,000 மற்றும் 30,000 ஆகும்." [84] ஆனாலும், போதுமான நிதி மற்றும் ஆதாரங்கள் இல்லாததால், மார்பக புற்றுநோயால் பாதிப்படைந்தோருக்கு தொடர்ந்து சிகிச்சை கிடைப்பதில்லை. வரலாறு மனிதர்களில் கண்டறியப்பட்ட மிகவும் பழமையான புற்றுநோய்க் கட்டிகளில் மார்பக புற்றுநோயும் ஒன்றாகும். புற்றுநோயைப் பற்றிய மிகவும் பழமையான விவரணை எகிப்தில் கண்டறியப்பட்டது, அது கிமு 1600 ஐச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. எட்வின் ஸ்மித் பேப்பரஸ் 8 வகையான கட்டிகள் அல்லது புண்களை விவரிக்கிறது, இவற்றுக்கு கவுட்டரிசேஷன் முறைப்படி சிகிச்சை அளிக்கப்பட்டது."இந்த நோயைப்பற்றி எழுதுகையில், "இதற்கு ஒரு சிகிச்சையும் கிடையாது" என்றுரைத்துள்ளது.[85] பல நூற்றாண்டுகளாக, மருத்துவர்கள் இதே மாதிரியான நோய்களை, இதே முடிவுடன் எழுதி வந்தனர். இரத்த ஓட்ட மண்டலத்தைப் பற்றி சிறந்த புரிதலை 17 ஆம் நூற்றாண்டில் பெற்ற பின்னர் அவர்கள் மார்பக புற்றுநோய்க்கும் அக்குள்களில் உள்ள நிணநீர் முடிச்சுகளுக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டனர். பிரஞ்சு சர்ஜன் ஜீன் லூயிஸ் பெடிட் (1674–1750) என்பவரும் பின்னர் ஸ்காட்டிஷ் சர்ஜன் பெஞ்சமின் பெல் (1749–1806) என்பவரும் தான் முதன்முதலாக நிணநீர் முடிச்சுகள், மார்பக திசுக்கள் மற்றும் அதற்கு கீழுள்ள மார்பு தசை ஆகியவற்றை அகற்றினார்கள். இவர்களின் வெற்றிகரமான பணியானது, வில்லியம் ஸ்டிவர் ஹால்ஸ்டெட் என்பவரால் தொடரப்பட்டது, இவர் 1882ஆம் ஆண்டில் மாஸ்டெக்டோமிகளை செய்து வர தொடங்கினார். ஹால்ஸ்டெட் ரேடிகல் மாஸ்டெக்டோமி என்பதில் பெரும்பாலும் இரண்டு மார்பகங்களையும் நிணநீர் முடிச்சுகளும் கீழே இருக்கும் மார்பு தசைகளும் அகற்றப்படும். இதனால் நீண்டகாலத்துக்கு வலியும், முடங்கியிருக்கும் நிலையும் ஏற்படக்கூடும், ஆனால் இதை நீக்குவது கான்சர் மீண்டும் வராமல் தடுப்பதற்கு அவசியமாக இருந்தது.[86] 1970கள் வரையிலும் ரேடிகல் மாஸ்டெக்டோமிகள் ஒரே வழியாக இருந்து வந்தது, அப்போது மெட்டாஸ்டாஸிஸ் என்பதை விரிவாக புரிந்து கொண்டதால், கான்சர் என்பது ஒரு முறையான, அதேநேரத்தில் குறிப்பிட்ட இடம் சார்ந்த நோய் என்று அறியப்பட்டது, மேலும் ஒழுங்கமைக்கும் சில வழிமுறைகள் உருவாக்கப்பட்டு பயனைத் தந்தன. மார்பக புற்றுநோயால் இறந்த மிகப்பிரபலமான பெண்கள் பின்வருமாறு, ராணி தியோடரா, ஜஸ்டானியனின் மனைவி; ஆஸ்திரிய ராணி, பிரான்சின் 14 ஆம் லூயி மன்னரின் தாய்; மேரி வாஷிங்டன், ஜார்ஜின் தாய், மற்றும் ராச்சல் கார்சன், என்ற சுற்றுச்சூழல் ஆய்வாளர்.[87] ஜேனட் லேன்-கிளேய்போன் என்பவரால் மார்பக புற்றுநோய் பரவலைப் பற்றி, முதன்முதலாக கட்டுப்படுத்தப்பட்ட நோய் ஆய்வு செய்யப்பட்டது, அவர் பிரிட்டிஷ் உடல்நல அமைச்சகத்தினால், 1926ஆம் ஆண்டில் ஒரே பின்புலம் மற்றும் வாழ்க்கை முறையை கொண்டவர்களில் 500 மார்பக புற்றுநோய் நோயாளிகள் மற்றும் 500 கட்டுப்படுத்தப்பட்ட நோயாளிகளைப் பற்றிய ஒப்பீட்டு ஆய்வை சமர்ப்பித்தார்.[88][89] சமுதாயமும் கலாச்சாரமும் அறுவை சிகிச்சைக்கு முன்பு, இரண்டாவது கருத்துக்களை கேட்பதற்கான ஏற்பு, குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் அறுவை சிகிச்சை வழிமுறைகள், ஆதரவு குழுக்கள் மற்றும் நோயாளியின் கவனிப்பில் ஏற்பட்டுள்ள பிற முன்னேற்றங்கள் ஆகியவை ஏற்பட்டுள்ளன. இவற்றுக்கு மார்பக புற்றுநோய் ஆலோசனை இயக்கத்தின் செயல்களும் ஓரளவுக்கு காரணமாகும்.[90] அக்டோபர் மாதமானது தேசிய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக ஊடகங்களாலும், நோயிலிருந்து மீண்டவர்களாலும், நோய் பாதிப்பு கொண்டவர்கள், அதனால் இறந்தவர்களின் நண்பர்கள், குடும்பங்கள் ஆகியோரால் அனுசரிக்கப்படுகிறது.[91] புற்றுநோயுடன் போராடும் நோயாளிகளின் போராட்டத்தை நினைவு கூறும் வகையில் ஒரு பிங்க் நிற ரிப்பன் அணியப்படுகிறது.[92] மார்பக புற்றுநோயின் முன்னோடியாக அகதா ஆஃப் சிசிலி என்பவர் கூறப்படுகிறார்.[93] 1991ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், சூசன் ஜி. கோமன் என்பவர் மார்பக புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான பந்தயத்தில் அதில் பங்கேற்றவர்களுக்கு பிங்க் ரிப்பன்களை வழங்கினார்.[94] 1996ஆம் ஆண்டில் நான்சி நிக் என்பவரால் பிங்க் மற்றும் நீல நிற ரிப்பன்கள் வடிவமைக்கப்பட்டன. இவர் ஜான் டபள்யூ. நிக் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பின் நிறுவுனர் மற்றும் தலைவர் ஆவார். இந்த அமைப்பின் நோக்கம் "ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரக்கூடும்! (Men Get Breast Cancer Too!)" என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஆகும்.[95] 2009ஆம் ஆண்டில் அவுட் ஆஃப் தி ஷாடோ, ஏ மேன்ஸ் பிங்க் மற்றும் பிராண்டன் கிரீனிங் ஃபவுண்டேஷன் ஃபார் பிரெஸ்ட் கான்சர் இன் மென் ஆகிய ஆண்கள் மார்பக புற்றுநோய் ஆலோசனைக் குழுக்கள் ஒன்றாக இணைந்து அக்டோபர் மூன்றாம் வாரத்தை "ஆண் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு வாரம்" என்று அறிவித்தன.[96] முன்னெச்சரிக்கைகள் 35 வயதைக் கடந்து விட்ட பெண்களுக்கு இந்த மார்பகப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம். எனவே 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பை இறுக்கமாக அழுத்தும் உடைகளைத் தவிர்த்தல், மிதமான உடற்பயிற்சிகளை தினசரி மேற்கொள்தல், வைட்டமின் சி மற்றும் ஏ ஆகியவை சரியான விகிதத்தில் கலந்த உணவை சாப்பிடுதல், ஆண்டுக்கு ஒரு முறை மகளிர் சிறப்பு மருத்துவர்களிடம் மார்பகப் பரிசோதனை செய்து கொள்வது போன்றவை மார்பகப் புற்று நோய் வராமல் தவிர்க்க உதவும். பாட்டி, அம்மா, பெரியம்மா, சித்தி அல்லது சகோதரி என நெருங்கிய உறவினரில் எவருக்கேனும் புற்று நோயிருந்தால் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. குறிப்புதவிகள் CS1 maint: discouraged parameter (link) Italic or bold markup not allowed in: |publisher= (help); Check date values in: |date= (help)CS1 maint: discouraged parameter (link) Italic or bold markup not allowed in: |publisher= (help)CS1 maint: discouraged parameter (link) Check date values in: |date= (help)CS1 maint: discouraged parameter (link) Unknown parameter |coauthors= ignored (|author= suggested) (help); Check date values in: |date= (help)CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) பகுப்பு:புற்றுநோய்கள் பகுப்பு:மார்பக நோய்கள் பகுப்பு:கூகுள் தமிழாக்க மருத்துவக் கட்டுரைகள்
புற்றுநோய் விழிப்புணர்வுக்கு என்ன நிறம்?
பிங்க்
40,991
tamil
bd50e3092
இங்கிலாந்து ஐக்கிய இராச்சியத்திலுள்ள நான்கு நாடுகளுள் பெரியதாகும்.[3][4][5] மேற்கில் இது வேல்ஸ் நாட்டையும் வடக்கில் ஸ்காட்லாந்து நாட்டையும் நில எல்லைகளாகக் கொண்டுள்ளது. ஐரிஷ் கடலினை வட மேற்கிலும், செல்டிக் கடலைத் தென் மேற்கிலும் வடகடலைக் கிழக்கிலும் கொண்டுள்ளது. ஐரோப்பியக் கண்டத்தில் இருந்து ஆங்கிலக் கால்வாய் இங்கிலாந்தைப் பிரிக்கிறது. பெரிய பிரித்தானியாவின் தென், நடுவண் பகுதிகளைக் கொண்டிருப்பதுடன் சில்லி தீவுகள் போன்ற நூற்றுக்கும் மேலான சிறுசிறு தீவுகளையும் அடக்கி உள்ளது. ஐரோப்பாக் கண்டத்துக்கு வட மேற்கில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் லண்டன் ஆகும். இந்நாடு பத்தாம் நூற்றாண்டில் உருவானது. தற்போது இங்கிலாந்தாக அறியப்படும் பகுதியில் பிந்தைய கற்காலத்திலிருந்தே மனிதர்கள் வாழ்ந்திருக்கின்றனர். இருப்பினும் ஐந்தாவது மற்றும் ஆறாவது நூற்றாண்டுகளில் இங்கு குடிபுகுந்த செருமானிய பழங்குடிகளில் ஒன்றான ஆங்கில்களைக் கொண்டே இது ஆங்கிலேய நாடு எனப்பொருள்படும் இங்கிலாந்து என அறியப்படலாயிற்று. இங்கிலாந்து முற்றிலுமாக கிபி927இல் ஒன்றிணைக்கப்பட்டது; 15வது நூற்றாண்டிலிருந்து உலகெங்கும் சட்ட, பண்பாட்டு துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.[6] ஆங்கில மொழி, ஆங்கிலிக்கத் திருச்சபை, மற்றும் ஆங்கிலச் சட்டம்—பல நாடுகளில் நடப்பில் இருக்கும் பொதுச் சட்டத்திற்கான சட்ட அடிப்படை—இங்குதான் உருவானது. இங்கிலாந்தின் நாடாளுமன்ற முறைமை உலகின் பலநாடுகளின் அரசியலமைப்புக்களில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.[7] பிரித்தானியப் பேரரசின் மையமாக விளங்கிய இங்கிலாந்திலேயே 18ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற் புரட்சியால் உலகின் முதல் தொழில்மயமான நாடாக விளங்கியது.[8] இங்கிலாந்தின் புவிப்பரப்பு பெரும்பாலும் சிறு குன்றுகளும் சமவெளிகளாகவும் உள்ளது. இருப்பினும் வடக்கிலும் தென்மேற்கிலும் சில உயரமான மலைப்பகுதிகளைக் காணலாம். இங்கிலாந்தின் முன்னாள் தலைநகரமாக வின்செஸ்டர் இருந்தது; 1066இல் தலைநகர் இலண்டனுக்கு மாற்றப்பட்டது. இன்றைய நாள் இலண்டன் ஐக்கிய இராச்சியத்திலேயே மிகப்பெரும் நகரமாக விளங்குகிறது. இங்கிலாந்தின் மக்கள்தொகை ஏறத்தாழ 53மில்லியனாகும்; இது ஐக்கிய இராச்சியத்தின் மக்கள்தொகையில் 84% ஆகும். வேல்சு அடங்கிய இங்கிலாந்து இராச்சியம் 1707இல் ஒன்றிணைப்புச் சட்டங்கள் மூலமாக பெரிய பிரித்தானிய இராச்சியமாக இசுகாட்லாந்துடன் இணையும்வரை தனி மன்னராட்சியாக விளங்கியது.[9][10] 1801இல், பெரிய பிரித்தானியா அயர்லாந்து இராச்சியத்துடன் இணைந்து ஐக்கிய இராச்சியம் உருவானது. 1922இல், அயர்லாந்து தனிநாடாகப் பிரிந்தாலும் 1927 சட்டத்தின்படி வடக்கு அயர்லாந்தின் ஆறு கௌன்ட்டிகள் ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்து தற்போதுள்ள பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்துகளின் ஐக்கிய இராச்சியம் நிலைபெற்றது. பெயர்க் காரணம் இங்கிலாந்து "England" என்ற பெயர் பழைய ஆங்கிலத்தின் இங்கலாந்து (Englaland) என்பதில் இருந்து தோன்றியதாகும். இதற்கு ஆங்கில்களின் நிலம் என்று பொருள் [11]. ஆங்கில்கள் செருமானிய பழங்குடிகள் ஆவார்கள். இவர்கள் வரலாற்றின் இடைக்காலத்தின் போது இங்கு குடியேறினார்கள். ஆங்கில்கள் பால்டிக் கடல் பகுதியில் அமைந்த ஆங்கில் மூவலந்தீவின் இருந்து வந்தவர்கள் [12]. ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகரமுதலியின் படி இங்கிலாந்து என்ற சொல் முதலில் பிரிந்தானிய தீவின் தென் பகுதியை குறிக்க 897 ல் குறிபிடப்பட்டதாக தெரிகிறது.[13] இங்கிலாந்திற்கு அல்பியன் என்றொரு மற்றொரு பெயரும் உண்டு. ஆரம்ப காலத்தில் அல்பியன் என்ற சொல் பிரித்தானிய தீவு முழுவதையும் குறிப்பதாக இருந்தது. கிமு 4ம் நூற்றாண்டில் அரிசுடோடலியன் கார்பசு முதலில் இச்சொல்லை குறித்துள்ளார் [14] . தற்பொழுது அல்பியன் என்பது கவிதைகளில் இங்கிலாந்தை குறிக்க பயன்படுகிறது [15]. வரலாறு வரலாற்றுக்கு முந்தைய காலம் . 780,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் இங்கிலாந்தில் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. 500,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதனின் மண்டையோடு இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .[16]. தற்கால மனிதர்கள் கற்காலத்தின் இறுதியில் இங்கு இருந்தாலும் நிலையான குடியிறுப்புகள் 6,000 ஆண்டுகளுக்கு முன்பு தான் ஏற்பட்டன .[17][18]. கடைசி பனி யுகத்தின் பின்பு பெரிய உருவமுடைய மாமூத், காட்டெருது (பைசன்) முடியுடைய மூக்குக் கொம்பன் போன்ற விலங்குகள் மட்டும் தப்பி இருந்தன. 11,000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் குறைவாக இருந்த பொழுது இங்கிலாந்து இருக்கும் பெரிய தீவான பிரிட்டனும், அயர்லாந்தும் ஐரோவாசியாவுடன் இணைந்திருந்தது.[19]. 10,000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் உயர்ந்த பொழுது அயர்லாந்து தனி தீவாகவும் 8000 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டன் தனி தீவாகவும் ஐரோவாசியாவில் இருந்து பிரிந்தன. இப்பகுதியில் மிகுதியாக செப்பும் வெள்ளீயமும் கிடைத்தது அதைக்கொண்டு வெண்கலத்தால் செய்யப்பட்ட பாத்திரங்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த வெண்கலக் காலத்தின் போது ஸ்டோன் ஹெஞ்ச் போன்றவை கட்டப்பட்டன. இடைக்காலம் ஐந்தாம் நூற்றாண்டில் "ஆங்கிள்கள்" எனப்படும் ஜெர்மானிக் பழங்குடிகள் தற்போதைய இங்கிலாந்தின் நடு, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் குடியேறினர். இவர்களை ஒத்த சாக்சன்கள் எனப்படும் பிரிதொரு பழங்குடியினர் இங்கிலாந்தின் தென்பகுதியில் குடியேறினர். வரலாற்றின் இந்தக் காலகட்டம் "ஆங்க்லோ-சாக்சன்" காலகட்டம் எனப்படுகிறது. துவக்கத்தில் ஒரு ஒன்றிணைந்த நாடாக இல்லாது பல குறுமன்னர்களால் ஆளப்பட்டு வந்த இங்கிலாந்து இந்த காலகட்டத்தில் மெதுவே ஒன்றிணையத் தொடங்கியது. இந்த ஒன்றிணைவு 937இல் நிறைவடைந்து முதல் இங்கிலாந்து மன்னராக ஏதெல்சுதான் ஆட்சி ஏற்றார். இவரது காலத்தில் டென்மார்க் நாட்டவர் படையெடுத்து கிழக்கிலும் வடக்கிலும் பல பகுதிகளை கைப்பற்றி தனிநாடு உருவாக்கினர். இப்பகுதியில் உள்ள பல ஊர்களும் நகரங்களும் இன்றும் டேனிசு பெயர்களைத் தாங்கி நிற்கின்றன. பல சண்டைகளுக்குப் பிறகு வெசெக்சின் மன்னர் ஆல்பிரெட் முழுமையான இங்கிலாந்தை மீண்டும் கையகப்படுத்தி இங்கிலாந்து மன்னரானார். பழைய குறுநாடுகள் எர்ல்கள் (Earldoms) என அழைக்கப்பட்டன. மன்னர் ஆல்பிரெட்டின் மறைவிற்கு பின்னர் டென்மார்க் மன்னர் இங்கிலாந்தை ஆண்டார். எட்வர்டு மன்னரின் மறைவிற்கு பின்னர் மீண்டும் வெசக்சின் மன்னர் ஹெரால்டு இங்கிலாந்தின் மன்னரானார். ஆனால் வடக்கு பிரான்சில் நார்மண்டியின் மன்னராக இருந்த வில்லியம் ஹெரால்டு தம்மை மன்னராக்குவதாக உறுதி கொடுத்ததை மீறியதாக அவர்மீது 1066இல் ஹேஸ்டிங்ஸ் சண்டையில் போரிட்டார். இதில் வெற்றி பெற்ற வில்லியம் இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார். அடுத்த 300 ஆண்டுகளுக்கு இங்கிலாந்து பிரெஞ்சு பேசும் மன்னர்கள் ஆட்சியில் இருந்தது. (தற்போதைய அரசி, இரண்டாம் எலிசபெத் வில்லியமின் வழிவந்தவராக கருதப்படுகிறார்). 13வது நூற்றாண்டில் இங்கிலாந்து வேல்சு நாட்டை இணைத்துக் கொண்டது. இசுக்காட்லாந்தையும் கைப்பற்ற பல போர்கள் பிரான்சிற்கும் இசுகாட்லாந்திற்கும் இடையே நிகழ்ந்தவண்ணம் இருந்தன. இங்கிலாந்து உரோமன் கத்தோலிக்க கிறித்தவத்தை பின்பற்றி வந்தது. இங்கிலாந்திலிருந்த பல ஆயர்களும் திருத்தந்தையின் ஆணைகளைப் பின்பற்றினர். 1500இல் மன்னராக இருந்த ஹென்றி VIII மணமுறிவை வேண்டியபோது அதனை திருத்தந்தை மறுத்தார். இதனால் வெகுண்ட மன்னர் சீர்திருத்தத் திருச்சபையாக இங்கிலாந்து திருச்சபையை நிறுவி தமது மணமுறிவை நிறைவேற்றிக் கொண்டார். சீர்திருத்த கிறித்தவமே அலுவல்முறை சமயமாகவும் அறிவித்தார்.அடுத்த 200 ஆண்டுகளுக்கு இங்கிலாந்து அரசர் (அரசி) உரோமன் கத்தோலிக்கராக இருக்க வேண்டுமா அல்லது சீர்திருத்த கிறித்தவராக இருக்க வேண்டுமா என்ற சண்டை இருந்து வந்தது. முதலாம் எலிசபெத் ஹென்றியின் இரண்டாம் மகள். இவர் இங்கிலாந்தை 40 ஆண்டுகள் ஆண்டுவந்தார். இவருக்கு மக்கள் இல்லாமையால், இவர் மறைந்தபோது இசுக்காட்லாந்தின் ஜேம்ஸ் (இசுக்காட்லாந்து அரசி மேரியின் மகன்) 1603இல் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார். இவரே இருநாடுகளையும் அடங்கிய பகுதியை "பெரிய பிரித்தானியா" எனப் பெயரிட்டார். இவரது காலத்தில் இரு நாடுகளும் தங்களுக்கென தனித்தனி நாடாளுமன்றங்களுடனும் சட்டங்களுடனும் ஒரே மன்னரின் கீழ் தனித்தனி நாடுகளாக இருந்தன. ஜேம்சின் மகன் சார்லசும் இங்கிலாந்து நாடாளுமன்றமும் பிணக்கு கொண்டு ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டன. இதில் இசுக்காட்லாந்தும் அயர்லாந்தும் பங்கேற்றன. நாடாளுமன்றப் படையின் தலைவராக பொறுப்பேற்ற ஆலிவர் கிராம்வெல் அரசப் படைகளை தோற்கடித்தார். 1649ஆம் ஆண்டில் முதலாம் சார்லசு மன்னரின் தலையைக் கொய்து தாம் ஆட்சியாளராக (பாதுகாப்பு பிரபு) அறிவித்துக் கொண்டார். இவரது மறைவின் பின்னர் இவரது மகன் ரிச்சர்டுக்கு ஆட்சி செய்ய திறன் இல்லாதமையால் கொலையுண்ட மன்னர் சார்லசின் மகன் இரண்டாம் சார்லசை இங்கிலாந்து மன்னராக முடிசூட அழைக்கப்பட்டார். 1660இல் இரண்டாம் சார்லசு இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார். இவரை அடுத்து இவரது உடன்பிறப்பு இரண்டாம் ஜேம்ஸ் முடி சூடினார். இவர் உரோமன் கத்தோலிக்கராக இருந்தது மக்களிடையே கசப்பை ஏற்படுத்தியது. நெதர்லாந்தின் குறும்பகுதி ஒன்றின் மன்னராக இருந்த வில்லியம் (மன்னர் ஜேம்சின் மகள் மேரியின் கணவர்) இங்கிலாந்தின் மீது படையெடுத்தார். இவர் ஒரு சீர்திருத்த கிறித்தவராக இருந்ததால் மக்கள் இவரை ஆதரித்தனர். இதனால் ஜேம்சு சண்டை எதுவும் இன்றி நாட்டை விட்டு வெளியேறினார். இதனையடுத்து இங்கிலாந்தின் நாடாளுமன்றம் வில்லியத்தையும் மேரியையும் இணையாக அரசர் அரசியாக முடிசூட அழைத்தனர். மேரி இறந்தபிறகு வில்லியம் தனியே ஆண்டுவந்தார். அடுத்த மன்னராக மேரியின் உடன்பிறப்பு ஆன் பொறுப்பேற்றார். இவரது ஆட்சியில் 1707இல் இங்கிலாந்தும் இசுக்காட்லாந்தும் ஒன்றாக சட்டப்படி இணைந்தன. இரண்டு நாடாளுமன்றங்களும் இணைந்து இலண்டனில் இருந்த நாடாளுமன்றம் பிரித்தானிய நாடாளுமன்றம் என அழைக்கப்பட்டது. தற்காலம் புதியதாக உருவான பெரிய பிரித்தானிய இராச்சியத்தில் அறிவியலும் பொறியியலும் தழைத்தோங்கியது. இவை பிரித்தானியப் பேரரசை உருவாக்க உதவின. உள்நாட்டில் தொழிற்புரட்சிக்கு வித்திட்டது. இந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்தில் சமூகப்பொருளியல் மாற்றங்களும் பண்பாட்டு சீர்திருத்தங்களும் ஏற்பட்டன. வேளாண்மை, தயாரிப்பு, சுரங்கத்துறை தொழில்மயமாயின. சாலைகள், இருப்புப் பாதைகள், நீர்ப் போக்குவரத்து வசதிகள் கட்டமைக்கப்பட்டன.[20].[21][22] 1825இல் உலகின் முதல் பயணியர் நீராவி உந்து இழுத்த தொடர்வண்டி பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.[21] பிரெஞ்சுப் புரட்சியின்போது இங்கிலாந்தில் அமைதி நிலவியது. நெப்போலியப் போர்களின்போது, நெப்போலியன் இங்கிலாந்தின் தென்கிழக்கில் படையெடுக்கத் திட்டமிட்டிருந்தான். ஆனால் இத்திட்டத்தை நிறைவேறவிடாது கடலில் பிரித்தானியக் கடற்படை நெல்சனின் தலைமையிலும் தரையில் வெல்லிங்டன் பிரபுவின் தலைமையிலும் முறியடித்தன. இப்போர்களினால் இசுக்காட்லாந்தியரும் வேல்சு மக்களும் இங்கிலாந்து மக்களுடன் உணர்வுபூர்வமாக ஒன்றிணைந்து உண்மையான பிரித்தானிய நாட்டுப்பற்று உருவானது; அனைவரும் பிரித்தானியர்களாக தங்களை அடையாளப்படுத்தினர்.[23] விக்டோரியா அரசியார் காலத்தில் இலண்டன் உலகின் மக்கள்தொகை மிக்க நகரமாக வளர்ச்சியுற்றது; பிரித்தானிய பேரரசுக்குள் வணிகம் செய்வது மதிப்புமிக்கதாக இருந்தது.[24] சட்ட சீர்திருத்தங்களும் அனைவருக்கும் வாக்குரிமையும் உருவாகின.[25] கிழக்கு-நடுவண் ஐரோப்பாவில் ஏற்பட்ட அதிகாரப் போட்டிகளால் முதலாம் உலகப் போர் மூண்டது. இபோரில் பல்லாயிரம் பிரித்தானிய போர்வீரர்கள் மடிந்தனர்.[26]|group=nb}} இருபதாண்டுகள் கழித்து மீண்டும் இரண்டாம் உலகப் போர் மூண்டது. இந்தப் போரிலும் இங்கிலாந்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டது. இப்போர்களைத் தொடர்ந்து பிரித்தானியா தனது குடியேற்றப் பகுதிகளுக்கு விடுதலை வழங்கத் தொடங்கியது. தொழில்நுட்ப முன்னேற்றங்களும் ஏற்பட்டன; ஜெட் உந்துகள் வடிவமைக்கப்பட்டு போக்குவரத்து எளிதானது.[27] தனிநபர் தானுந்து பயன்பாட்டால் நகர அமைப்புக்கள் மாற்றங்களைக் காணத் தொடங்கின. 1948இல் தேசிய நலச் சேவை துவங்கப் பட்டது. இதன்மூலம் அனைவருக்கும் கட்டணமில்லா சிகிட்சை வழங்கப்படது.[28][29] இருபதாம் நூற்றாண்டில் பிற பிரித்தானியத் தீவுகளிலிருந்தும் பொதுநலவாய நாடுகளிலிருந்தும், குறிப்பாக இந்தியத் துணைக்கண்டத்திலிருந்தும், கணிசமான மக்கள் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தனர்.[30] 1970களிலிருந்து தயாரிப்புத் தொழிலில் இருந்து விலகி சேவைத்துறை தொழில்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.[31] ஐக்கிய இராச்சியத்தின் அங்கமாக இங்கிலாந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான சந்தைக் கொள்கையில் பங்கேற்கிறது. அதிகாரப் பரவல் கொள்கைகளின்படி இசுக்காட்லாந்து, வேல்சு மற்றும் வடக்கு அயர்லாந்துக்கு தன்னாட்சி தகுதி வழங்கப்பட்டுள்ளது.[32] இருப்பினும் இங்கிலாந்தும் வேல்சும் ஒரே ஆட்புலமாக விளங்குகிறது.[33] இந்த அதிகாரப் பரவலினால் ஆங்கிலம் சார்ந்த அடையாளமும் நாட்டுப்பற்றும் வலியுறுத்தப்படுகின்றன.[34][35] ஐக்கிய இராச்சியத்தில் அங்கம் பெறும் மற்ற நாடுகளுக்கு தனி நாடாளுமன்றம், அதிகாரங்கள் வழங்கப்பட்டபோதும் இங்கிலாந்து பிரித்தானிய நாடாளுமன்றத்தின் நேரடி ஆட்சியிலேயே உள்ளது. மற்றவற்றைப் போன்ற உள்நாட்டு அமைப்புகளை உருவாக்கிட ஏற்ப்பட்ட முயற்சிகள் பொது வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டன.[36] புவியியல் புவியியல்படி இங்கிலாந்து பெரிய பிரித்தானியத் தீவின் மூன்றில் இரண்டு பங்கு மத்திய,தென்பகுதிகளை உள்ளடக்கியது. கடல்கடந்த பகுதிகளாக வைட்டுத் தீவு, சில்லி தீவுகள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இதன் எல்லைகளாக ஐக்கிய இராச்சியத்தின் மற்ற இரு நாடுகள், வடக்கில் இசுக்காட்லாந்தும் மேற்கில் வேல்சும், அமைந்துள்ளன. பிரித்தானியாவின் வேறெந்த பகுதியைவிட ஐரோப்பாவிற்கு இங்கிலாந்தே அண்மையில் உள்ளது. பிரான்சிலிருந்து 34-kilometre (21mi)[37] தொலைவுள்ள கடல்பிரிவால் பிரிக்கப்பட்டுள்ளது; தற்போது இருநாடுகளும் கால்வாய் சுரங்கத்தால் பிணைக்கப் பட்டுள்ளது. இங்கிலாந்திற்கு ஐரிஷ் கடல், வடகடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலில் கடற்கரைகள் உள்ளன. தேம்சு, மெர்சி மற்றும் டைன் ஆற்று பொங்குவடித வெள்ளத்தில் முறையே இலண்டன், லிவர்ப்பூல், நியூகாசில் துறைமுகங்கள் அமைந்துள்ளன. 354 kilometres (220mi) நீளமுள்ள செவர்ன் ஆறு இங்கிலாந்தில் ஓடுகின்ற மிகநீளமான ஆறாகும்.[38] இந்த ஆறு பிரிஸ்டல் கால்வாயில் சேர்கிறது; இங்குள்ள செவர்ன் போர் பொங்குவடிதல் அலைகள் குறிப்பிடத்தக்கன. இவை 2 metres (6.6ft) வரை உயரக் கூடியவை.[39] ஆனால், இங்கிலாந்திற்குள்ளேயே ஓடும் மிக நீளமான ஆறாக தேம்சு 346 kilometres (215mi) தொலைவு ஓடுகிறது. இங்கிலாந்தில் பல ஏரிகள் உள்ளன; ஏரி மாவட்டத்தில் உள்ள வின்டர்மேர் ஏரி மிகப் பெரியதாகும்.[40] புவியியல் கூற்றில், "இங்கிலாந்தின் முதுகெலும்பு" என அறியப்படும் பெனைன்சு மலைத்தொடர் நாட்டின் மிகத் தொன்மையான மலைகளாகும்; இவற்றின் துவக்கம் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதாக கருதப்படுகிறது.[41] இவற்றின் புவியியல் கூறுகளாக மணற்கல், சுண்ணக்கல், மற்றும் நிலக்கரி உள்ளன. இத்தொடரில் மூன்று தேசியப் பூங்காக்கள், யார்க்சையர் டேல்சு, நார்த்தம்பர்லாந்து தேசியப் பூங்கா, பீக் மாவட்டம் உள்ளன. இங்கிலாந்தின் மிக உயரமான சிகரம் 978 metres (3,209ft) உயரமுள்ள இசுகாஃபெல் பைக் ஆகும்.[40] இங்கிலாந்திற்கும் இசுகாட்லாந்திற்கும் இடையே எல்லையாக செவியட் மலைகள் உள்ளன. பெனைன்சு மலைகளின் தெற்கே ஆங்கில தாழ்நிலங்களில் பசுமையான மலைக்குன்றுகள் உள்ளன. டோவரில் இவை கடலை சந்திக்குமிடத்தில் வெள்ளைநிற செங்குத்துப் பாறைகள் உள்ளன. தென்மேற்குத் தீபகற்பத்தில் உள்ள டார்ட்மோர் மற்றும் எக்சுமோர் தேசியப் பூங்காக்களாகும்.[42] காலநிலை இங்கிலாந்தில் கடலோர மிதமான காலநிலை நிலவுகிறது: வெப்பநிலை குளிர்காலத்தில் 0°Cக்கு கீழே தாழ்ந்து செல்லாமலும் கோடைகாலத்தில் க்கு மிகாமலும் உள்ளது.[43] காலநிலை ஈரப் பதத்துடன் அடிக்கடி மாறும் தன்மையுடையதாக உள்ளது.சனவரியும் பெப்ரவரியும் மிகவும் குளிர்ந்த மாதங்களாகவும் சூலை மிகவும் வெப்பமான மாதமாகவும் உள்ளன. மே, சூன்,செப்டம்பர் மற்றும் அக்டோபர் மிதமான காலநிலையுடன் உள்ளன.[43] ஆண்டு முழுவதும் பரவி மழை சமமாக பெய்கிறது. இங்கிலாந்தின் காலநிலையில் அட்லாண்டிக் பெருங்கடல் அருகாமை, புவியின் வடக்குப் பகுதியில் அமைவு மற்றும் வளைகுடா ஓடையால் கடல் வெப்பமடைதல் ஆகியன தாக்கமேற்படுத்துகின்றன.[43] மழைப்பொழிவு மேற்கில் கூடுதலாக உள்ளது.[43] இதுவரையான மிகக்கூடுதலான வெப்பநிலை ஆகத்து 10, 2003இல் 38.5|°ஆக கென்ட்டில் பதிவாகியுள்ளது;[44] மிகவும் குறைந்த வெப்பநிலை சனவரி 10, 1982இல் 26.1°Cஆக எட்ஜ்மோன்டில் பதிவாகியுள்ளது. அரசமைப்பு அரசியல் ஐக்கிய இராச்சியத்தின் அங்கமாக உள்ள இங்கிலாந்தின் அரசியல் அமைப்பு நாடாளுமன்ற முறைமையும் அரசியலமைப்பின்படியான முடியாட்சியும் அடிப்படையாகக் கொண்டது.[45] வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் அமைந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தின் கீழவையான பொதுமக்கள் அவையில் மொத்தமுள்ள 650 இடங்களில் இங்கிலாந்திற்கு 532 இடங்கள் உள்ளன.[46] ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த பிறகு இங்கிலாந்திற்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு 55 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறது.[47] 2010இல் நடந்த பொதுத்தேர்தல்களில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி இங்கிலாந்தில் பெரும்பான்மையான இடங்களில் வென்றிருந்தும் மக்கள் அவையில் பெரும்பான்மை பெறாததால் மூன்றாவதாக வந்த லிபரல் டெமக்கிராட்சுடன் கூட்டணி அமைத்து கன்சர்வேட்டிவ் கட்சியின் டேவிட் கேமரன் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.[48] இங்கிலாந்திற்கான தனி நாடாளுமன்றம் எதுவும் இல்லை; நேரடியாக ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தால் ஆளப்படுகிறது. அதிகாரப் பரவலிற்கு பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் மற்ற அங்க நாடுகளுக்கு—இசுக்காட்லாந்து, வேல்சு மற்றும் வடக்கு அயர்லாந்து —தங்கள் உள்நாட்டுப் பிரசினைகளுக்கு தீர்வுகாண தனித்தனி சட்டப்பேரவைகள் உள்ளன.இங்கிலாந்தின் பல்வேறு மண்டலங்களுக்கு இத்தகைய அதிகார பரவலை வழங்க முன்மொழியப்பட்ட திட்டம் பொதுவாக்கெடுப்பில் வடகிழக்கு இங்கிலாந்து ஏற்காததால் கைவிடப்பட்டது.[36] இதனால் இங்கிலாந்தின் உள்நாட்டு பிரச்சினைகளிலும் பிறநாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலையிட்டு வாக்களிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது; மாறாக அவர்களுடைய பிரச்சினைகளில் இங்கிலாந்தின் எம்பிக்கள் தலையிட முடியாது. இது மேற்கு லோத்தியன் வினா என குறிக்கப்படுகிறது.[49] குறிப்பாக இங்கிலாந்தில் புற்றுநோய்க்கு இலவச சிகிட்சை, முதியோருக்கு வீட்டுக் கவனிப்பு, பல்கலைக்கழக கட்டண சலுகைகள் போன்றவை இல்லாதநிலையில்[50] ஆங்கில தேசியம் வளர்ந்தோங்கி வருகிறது.[51] சட்டம் பல நூற்றாண்டுகளாக மேம்படுத்தப்பட்டு வந்துள்ள ஆங்கிலச் சட்ட முறைமையே பெரும்பான்மையான பொதுநல வாய நாடுகளிலும் [52]ஐக்கிய அமெரிக்காவிலும் (லூசியானா மட்டும் விலக்கு) நடைமுறையில் உள்ள பொதுச் சட்டத்திற்கு அடிப்படையானது. இங்கிலாந்திலும் வேல்சிலும் உள்ள நீதிமன்றங்களுக்கு மேல்நிலையில் குடிமையியல் வழக்குகளுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் உள்ளன; குற்றவியல் வழக்குகளுக்கு கிரௌன் நீதிமன்றம் உள்ளது.[53] ஐக்கிய இராச்சியத்தின் உச்ச நீதிமன்றம் குடிமையியல், குற்றவியல் இருதரப்பட்ட வழக்குகளுக்கும் இவற்றிற்கெல்லாம் உயரிய நீதிமன்றமாக அமைந்துள்ளது. அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இந்த நீதிமன்றம் 2009ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதற்கு முன்னதாக பிரபுக்கள் அவை இந்த அதிகாரங்களைக் கொண்டிருந்தது.[54] உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதன் கீழுள்ள அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்; இந்த நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை அவை ஏற்க வேண்டும்.[55] 1981க்கும் 1995க்கும் இடையே குற்றங்கள் மேலோங்கியபோதும் 1995-2006 பத்தாண்டுகளில் 42% குறைந்துள்ளன.[56] இந்தக் காலகட்டத்தில் மேற்கு ஐரோப்பாவில் மிகக் கூடுதலானோர் சிறையில் அடைக்கப்பட்ட நாடாக இங்கிலாந்து விளங்கியது.[57] நிர்வாகம் இங்கிலாந்து மத்திய காலத்தில் 39 கௌன்டிகளாக பிரிக்கப்பட்டிருந்தன. நகரமயமாக்கலை அடுத்து இவற்றின் பல இன்று சீரமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் மக்கள் இந்த மரபுவழி கௌன்டி பெயர்களை இன்றும் பயன்படுத்துகின்றனர். இருபதாம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாக சீரமைப்புக்களின்படி நாடு நான்கு நிர்வாக நிலைகளில் அமைந்துள்ளது. முதல்நிலையில் 9 மண்டலங்களாகவும் அடுத்த இரண்டாம் நிலையில் கௌன்டிகளாகவும் மூன்றாம் நிலையில் மாவட்டங்களாகவும் நான்காம் அடிமட்ட நிலையில் கோவிற்பற்றுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. நகரமயமாக்கலை ஒட்டி நகர்ப்புற கௌன்டிகள் எனவும் நகர்புறமல்லா கௌன்டிகள் எனவும் பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் சில கௌன்டிகளில் கௌன்டி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து ஒற்றை ஆட்புலம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் சிட்டி என்பதற்கும் டௌன் அல்லது டவுன் என்பதற்கும் வேறுபாடு உள்ளது. சிட்டி என்பது அரசரால் பட்டியலிடப்பட்ட நகரமாகும். வரலாற்றுப்படி இங்கு ஒரு கதீட்ரல் அமைந்திருக்கும். மற்றவை டவுன் ஆகும். காட்டாக, 2000 பேரே உள்ள வேல்சின் செயின்ட்.டேவிட் ஒரு சிட்டி ஆகும்; ஆனால் 135,600 மக்கள் வாழும் இசுடாக்போர்ட் ஒரு டவுன் ஆகும். இங்கிலாந்தின் 200,000 மக்கள்தொகை கொண்ட பத்து பெரிய நகர்புற கௌன்டிகளாவன (2001 ஐக்கிய இராச்சிய கணக்கெடுப்பின்படி): இலண்டன் (7172000) பர்மிங்காம் (1001200) செபீல்டு (520732) மான்செஸ்டர் (486,000) பிராட்போர்டு (485,000) லீட்சு (457875) லிவர்பூல் (447500) கிர்க்லீசு (அட்டர்சுபீல்டு) (394,600) பிரிஸ்டல் (393900) வேக்பீல்டு (315,000) பொருளாதாரம் சராசரி தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி £22,907 அளவிலுள்ள இங்கிலாந்தின் பொருளாதாரம் உலகில் மிகப்பெரும் பொருளாதாரங்களில் ஒன்றாகும்.[60] கலப்புப் பொருளாதாரமாகக் கருதப்பட்டாலும் பல திறந்த சந்தைப் பொருளாதார கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன. மேம்பட்ட சமூகநல கட்டமைப்புக்களையும் கொண்டுள்ளது.[61] அலுவல் நாணயமாக பவுண்டு இசுடெர்லிங் விளங்குகிறது. ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கிலாந்தின் வரிவீதம் குறைவானதே; 2009இல் தனிநபர் வரிவீதம் £37,400 வருமானம் வரை 20%ஆகவும் இதற்கு கூடிய வருமானத்திற்கு 40% ஆகவும் உள்ளது.[62] ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதாரத்தில் பெரும்பங்கு இங்கிலாந்திற்கு உள்ளது.[60] இங்கிலாந்து வேதியியல்[63] மற்றும் மருந்துத் துறைகளிலும் தொழில்நுட்பத்தில் முதன்மையான விண்வெளித்துறை, ஆயுதத் தொழிற்சாலைகள்போன்றவற்றில் முன்னணியில் உள்ளது. மென்பொருள் துறையின் தயாரிப்புத் துறையிலும் ஈடுபட்டு வருகிறது. ஐரோப்பாவின் மிகப்பெரும் பங்குச் சந்தையான இலண்டன் பங்குச் சந்தை உள்ள இலண்டன் இங்கிலாந்தின் மிகப்பெரும் நிதிய மையமாகும் — ஐரோப்பாவின் 500 பெரிய நிறுவனங்களில் 100 இலண்டனில் உள்ளன. இலண்டன் உலகின் மிகப்பெரும் நிதிய மையமாகவும் விளங்குகிறது.[64] 1694இல் இசுகாட்லாந்து வங்கியாளர் வில்லியம் பேட்டர்சன் நிறுவிய இங்கிலாந்து வங்கி ஐக்கிய இராச்சியத்தின் நடுவண் வங்கி ஆகும். இங்கிலாந்து அரசுக்கான தனியார் வங்கியாகத் துவக்கப்பட்ட இது 1946இல் தேசியமயமாக்கப்பட்டு அரசுத்துறை வங்கியாக உள்ளது.[65] இந்த வங்கியே இங்கிலாந்திலும் வேல்சிலும் நாணயத்தாள் அச்சடிக்க இயலும்; இருப்பினும் இந்த தனியுரிமை ஐக்கிய இராச்சியத்தின் பிற பகுதிகளுக்கு இல்லை. நாட்டின் நாணயக் கொள்கையை மேலாண்மை செய்யவும் வட்டி வீதத்தை நிர்ணயிக்கவும் வங்கியின் நாணயக் கொள்கை குழுவிற்கு பிரித்தானிய அரசு பொறுப்பு வழங்கி உள்ளது.[66] இங்கிலாந்து மிக்க தொழில்மயமான பொருளாதாரமாக இருந்தபோதும் 1970களுக்குப் பிறகு வழக்கமான கனரக மற்றும் தயாரிப்பு தொழில்களில் இறக்கம் ஏற்பட்டுள்ளது. சேவைசார் தொழில்கள் வலுவடைந்து வருகின்றன.[31] சுற்றுலாத்துறை குறிப்பிடத்தக்க தொழிலாக இங்கிலாந்திற்கு ஆண்டுதோறும் பல மில்லியன் பயணிகளை ஈர்க்கிறது. மருந்துகள், தானுந்துகள், பாறை எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள், வானூர்தி பொறிகள் மற்றும் மதுபான வகைகளை ஏற்றுமதி செய்கிறது. வேளாண்மை மிகவும் தானியங்கிமயமாக உள்ளது; 2% தொழிலாளர்களுடன் இத்துறை 60% உணவுத்தேவையை நிறைவு செய்கிறது.[67] வேளாண்மை உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு கால்நடைகளிலிருந்து பெறப்படுகிறது; மிகுதி பயிரிடப்படக்கூடிய தானியங்களிலிருந்து பெறப்படுகின்றன.[68] அறிவியலும் தொழில்நுட்பமும் இங்கிலாந்தை தாய்நாடாக கொண்ட விஞ்ஞானிகள், அறிவியல் அறிஞர்கள் பலர் உள்ளனர். அவர்களில் மிக முக்கியமான சிலர் சர் ஐசக் நியூட்டன், ஜே. ஜே. தாம்சன், மைக்கேல் பாரடே, ஸ்டீபன் ஹாக்கிங், சார்லஸ் டார்வின், ஆலன் டியூரிங், டிம் பேர்னேர்ஸ்-லீ. போக்குவரத்து அரசின் போக்குவரத்துத் துறை இங்கிலாந்தின் போக்குவரத்து தேவைகளை மேற்பார்வையிடும் பொறுப்பு உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளையும் பின்னிப் பிணைக்கும் மோடார்வேக்களும் நெட்சாலைகளும் கட்டமைக்கப்பட்டு உள்ளன.[70] இங்கிலாந்தில் உள்ள மிக நீளமான விரைவுச் சாலை M6 ஆகும். இது வார்விக்சையரின் ரக்பியிலிருந்து வடகிழக்கு இங்கிலாந்து வழியாக ஆங்கிலோ-இசுகாட்டிஷ் எல்லை வரைச் செல்கிறது.[70] மற்ற விரைவுச்சாலைகள்:இலண்டன் – லீட்சு (எம் 1), இலண்டனைச் சுற்றியுள்ள எம்25, மான்செஸ்டரைச் சுற்றியுள்ள எம் 60, இலண்டனிலிருந்து தென் வேல்சிற்குச் செல்லும் எம்எம் 4, லிவர்பூல் – மான்செஸ்டர் – கிழக்கு யார்க் சையர் எம்62, பர்மிங்காம் – பிரிஸ்டல் எம் 5. நாடெங்கும் பேருந்து போக்குவரத்து பரவியுள்ளது; முதன்மையான நிறுவனங்களாக தேசிய எக்ஸ்பிரெஸ், அர்ரைவா, கோ-அகெட் பேருந்து சேவைகளை இயக்குகின்றன. சிவப்பு வண்ண இரட்டை அடுக்கு பேருந்துகள் இலண்டனின் அடையாளமாகவே உள்ளன. இங்கிலாந்தின் இரண்டு நகரங்களில் விரைவு தொடர்வண்டி சேவைகள் நகர்ப்புறப் போக்குவரத்திற்காக இயக்கப்படுகின்றன; இலண்டன் அண்டர்கிரவுண்டு, டைன் அன்டு வியர் மெட்ரோ.[71] பல ஒற்றைத் தண்டூர்தி அமைப்புகள் கட்டப்பட்டுள்ளன:பிளாக்பூல் டிராம்வே, மான்செஸ்டர் மெட்ரோலிங்க், செபீல்டு சூப்பர்டிராம், மிட்லாந்து மெட்ரோ, மற்றும் தென் இலண்டனின் கிராய்டனை மையமாகக் கொண்ட டிராம்லிங்க்அவற்றில் சிலவாகும்.[71] இங்கிலாந்திலுள்ள இருப்புப் பாதை போக்குவரத்து உலகின் மிகத் தொன்மையானதாகும். 1825இல் பயணியர் தொடர்வண்டி இங்கிலாந்தில் தொடங்கியது. பிரித்தானியாவிலுள்ள 16,116 kilometres (10,014mi) இருப்புப் பாதைகளில் பெரும்பாலும் இங்கிலாந்திலேயே உள்ளன; இருப்பினும் இவற்றில் பல பாதைகள் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மூடப்பட்டு விட்டன. பிரான்சிற்கும் பெல்ஜியத்திற்கும் 1994ஆம் ஆண்டு திறக்கப்பட்ட கால்வாய் சுரங்கம் மூலம் தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன. இங்கிலாந்தின் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் போக்குவரத்துக்கான வான்வழித்தடங்கள் மிகவும் பரவலானவை. நாட்டின் பெரிய வானூர்தி நிலையமான இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம் உலகின் வேறெந்த வானூர்தி நிலையத்தை விட பன்னாட்டு பயணியர் போக்குவரத்து கூடுதலாக உள்ள ஒன்றாகும்.[72] மற்ற பெரிய வானூர்தி நிலையங்கள்: மான்செஸ்டர் வானூர்தி நிலையம், இலண்டன் இசுடான்சுடெட் வானூர்தி நிலையம், லூட்டன் வானூர்தி நிலையம்மற்றும் பர்மிங்காம் வானூர்தி நிலையம்.[69] கடல்வழிப் போக்குவரத்தில், பெரும்படகுகள் உள்ளூர் மற்றும் அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட பன்னாட்டுப் போக்குவரத்துக்காக இயக்கப்படுகின்றன.[73] இங்கிலாந்தில் மட்டும் 7,100km (4,400mi) தொலைவிற்கு நீர்வழிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.[73] இங்கிலாந்தின் தேம்ஸ் இங்கிலாந்தின் முக்கிய நீர்வழியாகும்; இதன் கழிமுகத்தில் அமைந்துள்ள தில்பரி துறைமுகம் இங்கிலாந்தில் உள்ள மூன்று துறைமுகங்களில் முதன்மையானதாகும்.[73] மக்கள் தொகையியல் 53மில்லியனுக்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட இங்கிலாந்தே ஐக்கிய இராச்சியத்தின் நாடுகளில் மிகவும் பெரியதாகும்; மொத்த மக்கள்தொகையில் இது 84% ஆகும.[2] இங்கிலாந்தை மட்டும் தனியாக கருத்தில்கொண்டால் மக்கள்தொகைப்படி இது ஐரோப்பிய ஒன்றியத்தில் நான்காவது இடத்திலும் உலகளவில் 25ஆவது இடத்திலும் உள்ளது.[74] சதுர கிமீக்கு 407 நபர்கள் உள்ள இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகவும் மக்கள் அடர்த்தி மிக்க நாடுகளில் மால்ட்டாவிற்கு அடுத்து இரண்டாவதாகும்.[75][76] . 1086இல் இரண்டு மில்லியனாக இருந்த இங்கிலாந்தின் மக்கள்தொகை[77], 1801இல் 8.3 மில்லியனாகவும் 1901இல் 30.5 மில்லியனாகவும் வளர்ந்தது. குறிப்பாக தென்கிழக்கு இங்கிலாந்தில் பொருளாதார முன்னேற்றத்தினால் ஐக்கிய இராச்சியத்தின் பிற பகுதிகளிலிருந்தும் ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் குடியேறினர்.[78] 1950களிலிருந்து பிரித்தானியக் குடியேற்றப் பகுதிகளிலிருந்து புலம்பெயர் மக்கள் வரத் துவங்கினர். இங்கிலாந்தில் 6% மக்கள் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து இடம் பெயர்ந்தவர்களாவர்.[79] மக்கள்தொகையில் 2.90% பேர் பிரித்தானிய குடியேற்றப் பகுதிகளாயிருந்த கரிபியன் மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்து வந்த கருப்பின மக்களாவர்.[79] சீனர்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர்.[79] 2007 துவக்கப்பள்ளி மாணவர்களில் 22% சிறுவர்கள் சிறுபான்மை இனப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களாகும்.[80] 1991இலிருந்து 2001 வரையிலான மக்கள்தொகை பெருக்கத்தில் 50% புலம் பெயர்ந்து குடியேறியவர்களால் ஏற்பட்டதாகும். இதனால் புதிய குடியேற்றத்தை தடுக்கவேண்டும் என்ற அரசியல் கருத்தாக்கம் வலுவடைந்து வருகிறது. கல்வி இங்கிலாந்து கல்வி துறை 3 வயது முதல் 4 வயது வரை மழலை கல்வியும் பின்னர் 4 வயது முதல் 11 வயது வரை ஆரம்ப கல்வியும் 11 வயது முதல் 16 வயது வரை இடைநிலை கல்வியும் (ஆரம்ப கல்வியும் மற்றும் இடைநிலை கல்வியும் இங்கிலாந்து நாட்டில் கட்டைய கல்வியாகும்) கட்டைய கல்வியை முடித்த பின் 2 ஆண்டு வரை கல்வியை தொடர்ந்து ஜீ. சி. எஸ். ஈ பரீட்சைக்கு தோன்ற முடியும்.பரீட்சை முடிவுகளை தொடர்ந்து கல்லூரிகளில் அனுமதியினை பெறமுடியும். இங்கிலாந்து நாட்டில் 90 மேற்பட்ட பல்கலைகழகங்கள் உள்ளன இவற்றில் உலக பிரபல்யம் அடைந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், இம்பீரியல் காலேஜ் லண்டன், ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி இங்கிலாந்து நாட்டில் தான் உள்ளது. விளையாட்டு பற்பல விளையாட்டுக்கள் இங்கிலாந்தில் காலாகாலமாக ஆடப்பட்டு வருகின்றன. இக்காலத்தில் உலகத்தில் விளையாடப்பெறும் பல விளையாட்டுக்கள் 19-ஆம் நூற்றாண்டுக் காலத்தில் இங்குதான் தோற்றுவிக்கப்பட்டு, விதிகள் நிர்ணயிக்கப்பட்டன. இங்கிலாந்தில் ஆடப்படும் அனைத்து விளையாட்டுகளினும் புகழ்பெற்று விளங்குவது கால்பந்து ஆகும். இங்கிலாந்தின் தேசிய கால்பந்து அணியின் மைதானமான வெம்ப்ளி விளையாட்டரங்கத்தில் 1966-ஆம் ஆண்டின் கால்பந்து உலகக் கோப்பையை மேற்கு செருமனியை 4-2 என்ற இலக்கு கணக்கில் வீழ்த்தி வாகை சூடியது. அவ்வருடம் மட்டுமே இங்கிலாந்து கால்பந்து உலகக் கோப்பையை நடத்தியுள்ளது, இங்கிலாந்தின் ஒரே கால்பந்து உலகக் கோப்பை வாகையும் அதுவேயாகும்.[82] இங்கிலாந்தில் செஃபீல்டு கால்பந்துக் கழகம் 1857-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது(உலகின் மிகப் பழமையான கால்பந்துக் கழகம்).[83] ஆகையால், ஃபிஃபாவினால் கழகக் கால்பந்தின் பிறப்பிடமாக இங்கிலாந்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்தின் கால்பந்துக் கூட்டமைப்பே உலகின் மிகப் பழமையான காலபந்துக் கூட்டமைப்பாகும். கால்பந்து கூட்டமைப்புக் கோப்பை மற்றும் கால்பந்துக் கூட்டிணைவு ஆகியவை முறையே உலகின் மிகப் பழமையான கால்பந்துக் கோப்பை மற்றும் கூட்டணைவுப் போட்டித் தொடர்களாகும். தற்போதைய காலகட்டத்தில் இங்கிலாந்தின் பிரீமியர் லீக் உலகின் கவர்ச்சிகரமான, புகழ்வாய்ந்த கால்பந்து கூட்டிணைவுத் தொடராகும்.[84] and amongst the elite.[85] ஐரோப்பியக் கோப்பையை (தற்போது யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு என்று அறியப்படுகின்றது) இங்கிலாந்தின் கால்பந்துக் கழகங்களான லிவர்பூல், மான்செஸ்டர் யுனைடெட், நாட்டிங்காம் ஃபாரஸ்ட், அஸ்டன் வில்லா, செல்சீ ஆகிய அணிகள் வென்றுள்ளன; மேலும் ஆர்சனல் லீட்சு யுனைடெட் ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றன.[86] துடுப்பாட்டத்தின் (மட்டைப்பந்து,கிரிக்கெட்) தாயகம் இங்கிலாந்து. மேலும் அந்நாட்டின் தேசிய விளையாட்டும் இதுவே. இங்கிலாந்து முதல் மூன்று துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளையும் (1975, 1979, 1983) அதன் பிறகு 1999-ம் ஆண்டும் நடத்தியது. பதுஅ உலக இருபது20 போட்டிகளை 2009இல் நடத்தியது. இதுவரை இங்கிலாந்து மூன்றுமுறை(1979, 1987, 1992) துடுப்பாட்ட உலகக் கிண்ண போட்டியின் இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தாலும் ஒருமுறை கூட வென்றதில்லை. இலண்டனிலுள்ள இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம் "துடுப்பாட்டத்தின் மெக்கா"எனப்படுகிறது.[87] இலண்டன் மூன்றுமுறை கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுக்களை 1908, 1948, 2012 ஆண்டுகளில் நடத்தி உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பொதுநலவாய விளையாட்டுக்களில் இங்கிலாந்து பங்கேற்கிறது. இங்கிலாந்தின் விளையாட்டுக்களை வழிநடத்தவும் நிதிகளை வழங்குவதற்கும் இசுபோர்ட் இங்கிலாந்து என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிராண்டு பிரீ தானுந்து போட்டிகள் சில்வர்சுடோன் என்றவிடத்தில் நடத்தப்படுகின்றன.[88] உலக ரக்பி யூனியன் கோப்பையை 2003ஆம் ஆண்டு இங்கிலாந்து வென்றது. 1991இல் இந்த போட்டிகளை ஏற்று நடத்திய இங்கிலாந்து மீண்டும் 2015இல் நடத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.[89] ரக்பி கால்பந்து விளையாட்டின் மற்றொரு வடிவமான ரக்பி லீக் விளையாட்டு 1895இல் அட்டர்சுபீல்டில் பிறந்தது. ரக்பி லீக்கில் இங்கிலாந்தின் அணி உலகளவில் மூன்றாவது நிலையிலும் ஐரோப்பாவில் முதல்நிலையிலும் உள்ளது. பெரிய பிரித்தானியாவின் அணி மூன்று உலகக்கோப்பைகளை வென்றபிறகு ஓய்வுபெற்றநிலையில் இங்கிலாந்தின் அணியே 2008 முதல் நாட்டு அணியாக பங்கேற்கிறது. 2013இல் நடக்கவுள்ள ரக்பி லீக் உலக்க் கோப்பை போட்டிகளை ஐக்கிய இராச்சியம் ஏற்று நடத்த உள்ளது. டென்னிசில், விம்பிள்டன் கோப்பை மிகவும் பழைமையான போட்டியாகவும் உலகின் மதிப்புமிக்க ஒன்றாகவும் விளங்குகிறது.[90][91] இங்கிலாந்தின் குறிப்பிடத்தக்க மக்கள் இங்கிலாந்தில் பலர் பெரும் புகழ் பெற்றுள்ளனர். அவர்களில் ஒருசிலர்: வில்லியம் சேக்சுபியர், மிகவும் புகழ்பெற்ற ஆங்கில நாடகாசிரியர்; சர் ஐசக் நியூட்டன், ஈர்ப்பு கோட்பாட்டைக் கண்டறிந்த அறிவியலாளர்; சார்லஸ் டிக்கின்ஸ், 19வது நூற்றாண்டின் புகழ்பெற்ற எழுத்தாளர்; சர் டிம் பேர்னேர்ஸ்-லீ, உலகளாவிய வலையைக் கண்டறிந்தவர்; பீட்டில்ஸ், இசைக்கலைஞர்கள், லிவர்பூல் நகரத்தினர்; சர் வின்ஸ்டன் சர்ச்சில், முன்னாள் பிரதமர், இரண்டாம் உலகப் போரில் நாட்டை முன்நடத்தியவர்; மன்னர் ஹென்றி VIII, 16வது நூற்றாண்டில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற மன்னர்; அரசி விக்டோரியா 19வது நூற்றாண்டின் பெரும்பகுதியும் அரசியாக விளங்கியவர்; சார்லஸ் டார்வின், புகழ்பெற்ற இயற்கையாளர், படிவளர்ச்சிக் கொள்கைக்கான ஆய்வால் அறியப்பட்டவர்; டயானா, வேல்ஸ் இளவரசி (1961–1997). குறிப்புகள் மேற்கோள்கள் பகுப்பு:ஐக்கிய இராச்சியத்தின் நாடுகள் பகுப்பு:தீவு நாடுகள்
இங்கிலாந்து நாட்டின் தலைநகரம் எது?
லண்டன்
542
tamil
6a527a3f3
1945 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் கடைசிக் கட்டங்களில் நேச நாடுகள் சப்பான் நாட்டுக்கு எதிராக அந்நாட்டு நகர்களாகிய இரோசிமா, நாகசாக்கி மீது அணுகுண்டு வீச்சு நிகழ்த்தின. இந்த இரு அணுகுண்டு வீச்சுகள் மட்டுமே இன்றுவரை போர்ச் செயல்பாட்டில் நிகழ்ந்தவை ஆகும். அமெரிக்க அரசின் அறிக்கையில், இந்த அணுகுண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அணுகுண்டை யப்பான் மீது போட்டு பேரழிவை உண்டாக்காமலிருந்திருந்தால் இரண்டாம் உலகப் போர் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும். அதன்மூலம் இதனை விட அதிகமான மக்கள் இறந்திருப்பர். பரவலாக மக்கள் சாகாமல் பார்த்துக் கொண்டது அமெரிக்கா என்று குறிப்பிட்டது. இந்தப் படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை குறித்துப் பெரும் சர்ச்சை உலகெங்கும் இன்றும் தொடர்கின்றது. இரண்டாம் உலகப் போரின் கடைசிக் கட்டங்கள் இரண்டாம் உலகமகா யுத்தத்தின் போது ஜப்பான், தானும் ஒரு வல்லரசாக மாறும் முனைப்பில் மிக உக்கிரமாகப் போரில் குதித்திருந்தது. வெற்றிபெற்றுக்கொண்டே வந்த ஜப்பான், பசிபிக் கடல் பிராந்தியத்தின் பேர்ள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க படைக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது. அதன்பின்னரே போரின் போக்கு முற்றாகத் திசைதிரும்பியது. முடிவில், அமெரிக்கா, தான் புதிதாகக் கண்டுபிடித்திருந்த அணுகுண்டுகளை வெடிக்கவைத்துப் பார்க்கும் பரிசோதனைக்கூடமாக ஜப்பானைப் பயன்படுத்திக் கொண்டது. ஹிரோஷிமா, நாகசாக்கி ஆகிய ஜப்பானிய நகரங்களின் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் மூலம் அணுகுண்டுகள் வீசியெறியப்பட்டன. சரணடைய சப்பானுக்கு இறுதி எச்சரிக்கை நேச நாடுகள் முதலில் சப்பான்மீது தீக்குண்டுகளை வீசித் தாக்குதல் நிகழ்த்தின. இதனால் பல நகரங்கள் அழிந்தன. பின்னர், தாக்குதல்களின் தீவீரம் அதிகரித்தது. ஐரோப்பிய போர்முனையில் நாசி செருமனி 1945, மே 8ஆம் நாள் தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைந்தது. அதே நாளில் "சரண் ஆவணம்" (instrument of surrender) கையெழுத்தானது. ஆனால் பசிபிக் போர்முனையில் போர் தொடர்ந்து நடந்தது. பின்னர், 1945, சூலை 26ஆம் நாள், ஐக்கிய அமெரிக்கா, சீனக் குடியரசு மற்றும் ஐக்கிய இராச்சியத்தோடு இணைந்து, "பாட்சுடம் அறிக்கை" (Potsdam Statement) வெளியிட்டது அந்த அறிக்கையில் சப்பானின் அரசு தோல்வியை ஏற்று, "நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்" என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் "உடனடி, முழு அழிவு"க்கு அணியமாக வேண்டும் கூறப்பட்டிருந்தது. அதற்குப் பத்து நாட்களுக்கு முன்னர் அணுகுண்டு வெடிப்பு சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டிருந்ததால் "உடனடி, முழு அழிவு" என்னும் சொற்கள் சப்பான் மீது நேச நாடுகள் அணுகுண்டு வீச்சு நிகழ்த்த வேண்டிய சூழ்நிலை எழலாம் என்று கடைசி எச்சரிக்கை கொடுத்தது போல் ஆயிற்று. அணுகுண்டு வீச்சு இந்த எச்சரிக்கையை சப்பான் அரசு கண்டுகொள்ளவில்லை. "மான்ஹாட்டன் செயல்திட்டம்" என்பதின் கீழ் உருவாக்கப்பட்ட இரு அணு ஆயுதங்கள் சப்பானின் மீது வீசப்பட்டன. "சிறு பையன்" (Little Boy) என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு ஹிரோஷிமா நகர்மீது 1945, ஆகத்து 6ஆம் நாளும், "பருத்த மனிதன்" (Fat Man) என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு நாகசாக்கி நகர்மீது மூன்று நாட்களுக்குப் பிறகு ஆகத்து 9ஆம் நாளும் வீசப்பட்டன. நினைத்துப் பார்க்கவும் முடியாத பேரழிவுகளை ஜப்பான் சந்திக்க நேர்ந்தது. அந்த அழிவின் சாட்சியங்கள் இன்றும் அந்த நாட்டில் நிலைத்துள்ளன. விளைவு இதுவே வரலாற்றில் முதல்முறையாக அணுகுண்டுகள் போரில் பயன்படுத்தப்பட்ட நிகழ்ச்சியாகும். இந்த இரு குண்டுவீச்சுகளின் விளைவு மிகப் பயங்கரமாக இருந்தது. குண்டுகள் வீசப்பட்ட 2-4 மாதங்களுக்குள் ஹிரோஷிமாவில் 90,000-166,000 மக்களும், நாகசாக்கியில் 60,000-80,000 மக்களும் குண்டுவெடிப்பின் காரணமாக உயிர் இழந்தார்கள். இவ்வாறு உயிர் இழந்தவர்களுள் பாதிப்பேர் இரு நகரங்களிலும் குண்டு வீசப்பட்ட முதல் நாளிலேயே கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிரோஷிமா நகரின் நலத்துறை கணிப்புப்படி, குண்டுவீச்சு நிகழ்ந்த நாளில் இறந்தோரில் 60% பேர் தீக்காயங்களாலும், 30% பேர் இடிமானங்கள் தங்கள்மேல் விழுந்ததாலும், 10% பிற காரணங்களாலும் கொல்லப்பட்டனர். குண்டுவீச்சைத் தொடர்ந்த மாதங்களில் ஏராளமான மக்கள் தீக்காயங்களின் விளைவாலும், கதிர்வீச்சு நோயாலும், வேறு காயங்களால் நோய் தீவிரமாகியும் இறந்தனர். ஐக்கிய அமெரிக்கா, குண்டுவீச்சைத் தொடர்ந்த சாவுகளுக்கு உடனடியான மற்றும் குறுகிய காலக் காரணங்களைக் கீழ்வருமாறு கணித்தது: 15-20% பேர் கதிர்வீச்சு நோயால் இறந்தனர்; 20-30% தீக்காயங்களால் இறந்தனர்; 50-60% பேர் வேறு காயங்களால் நோய் தீவிரமாகி இறந்தனர். ஹிரோஷிமாவிலும் நாகசாக்கியிலும் கொல்லப்பட்டவர்களுள் மிகப் பெரும்பான்மையோர் போர்வீரர்கள் அல்ல, சாதாரண குடிமக்களே ஆவர். ஹிரோஷிமாவில் மட்டும் இராணுவ முகாம்கள் பல இருந்தன. அணுகுண்டுகளின் பெயர்கள் ஹிரோஷிமா நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டிற்கு அமெரிக்கா வைத்த குறிப்பெயர் ”சின்னப் பையன்” (little boy) என்பதாகும். மூன்று நாட்கள் கழித்து நாகசாகி நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டிற்கு ”கொழுத்த மனிதன்” (Fat man) என்ற குறுப்பெயர் சூட்டினர். சின்னப்பையன் ‘எனோலாகே’ என்ற விமானம் ‘லிட்டில் பாய்’ என்ற அணுகுண்டை காலை 8.15 மணிக்கு இரோசிமா நகரத்தின் நட்ட நடுப்பகுதியில் போட்டது. அணுகுண்டைத் தாங்கி வந்த விமானத்தை ஓட்டிய விமானியும் படைத் தளபதியுமான ‘பால்டிப்பெட்ஸ்’ என்பவரின் தாயார் பெயர்தான் ‘எனோலாகே’ என்பதாகும். அணுகுண்டு விழுந்தவுடன் பயங்கரச் சத்தத்துடன் வெடித்து நகரத்திற்கு 2000 அடிகளுக்கும் மேல் தீப்பிழம்புகள் தெரிந்தன. 90,000 மக்கள் செத்து மடிந்தனர். மொத்தத்தில் சுமார் 16 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இருந்த அனைத்தும் முழுமையாக அழிந்தது. கட்டடங்கள் தரைமட்டமாயின. தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதால் ஜப்பானில் வேறு பகுதிகளில் வசித்தவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கூட அழிவின் வீச்சு என்ன என்பதை தொடக்கத்தில் தெரிந்து கொள்ள இயலவில்லை. ஜப்பான் இராணுவத்தின் தலைமையகம் இரோசிமா நகரத்திலுள்ள இராணுவப் பிரிவை திரும்பத் திரும்ப அழைக்க முயன்றது. மறுபக்கத்தில் எந்தப் பதிலும் கிடைக்காமல் முழு அமைதி நிலவியதால் ஜப்பான் நாட்டின் இராணுவத் தலைமையகம் குழப்பம் மேலிட்டு பதற்றமடைந்தது. ஏற்பட்ட பயங்கர பாதிப்பை ஜப்பான் தலைமை முழுமையாக உணர முடியாத காரணத்தினால் தலைமையிலிருந்து ஓர் இளம் அதிகாரி விமானத்தில் ஹிரோஷிமா சென்று அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிந்துவரப் பணிக்கப்பட்டார். அதிகாரி விமானத்தில் ஹிரோஷிமா விரைந்தார். மூன்று மணி நேரம் பறந்ததற்குப் பிறகு இன்னும் ஹிரோஷிமா சென்றடைய நூறு கிலோ மீட்டர் தூரமே இருந்த போது அவரும் அந்த விமானத்தின் பைலட்டும் வானமண்டலமே புகை கக்கும் மேக மண்டலங்களாக உருவெடுத்திருப்பதைப் பார்த்தனர். மிகுந்த சிரமப்பட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு விமானத்தை வேறு ஒரு பகுதிக்குச் செலுத்தி பத்திரமாக இறக்கினர். அந்த இளம் அதிகாரி, ஏற்பட்ட பேரழிவைப் பற்றித் திரும்பி வந்து சொன்ன பிறகுதான் உலகமே இக்கொடுமை குறித்துத் தெரிந்தது. ஹிரோஷிமா மீது குண்டு போடப்பட்டு பதினாறு மணிநேரம் கழித்து அமெரிக்க வெள்ளை மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம்தான் ஜப்பானின் தலைமையகத்திற்கு குண்டு வெடிப்பின் விபரீதம் விளங்கியது. 1950 முதல் 1990 வரை நடைபெற்ற ஆய்வில் அணுகுண்டுக் கதிர்வீச்சின் நச்சுத்தன்மை காரணமாக பல்லாயிரம் பேர் இறந்தனர் என்பது வெளிப்பட்டது. பல்லாயிரம் பேருக்கு இச்சம்பவம் நிகழ்ந்து பல்லாண்டுகளான பின்பும் சதைப் பிண்டங்களாக குழந்தைகள் பிறக்கின்றன. கை,கால், கண்,மூக்கு போன்ற உடல் பாகங்களின்றி ஊனமாகக் குழந்தைகள் பிறக்கின்றன. குண்டுமனிதன் நாகசாகி மீது போடப்பட்ட ‘ஃபேட்மேன்’ அணுகுண்டு வெடித்தவுடன் பதினெட்டு கிலோமீட்டார் உயரத்திற்கு எகிறி தீப்பிழம்பாய்த் தேரிந்தது. தீ ஜூவாலை அணைந்தவுடன் அடர்த்தியான நச்சுக் கரும்புகை மேகங்களாக உயரத்தில் உருவெடுத்து உலவின. இந்தக் குண்டு வெடிப்புகள் குறித்த ஜப்பான் நாட்டின் அறிக்கை “சமாதிகள் எழுப்பப்படாத சுடுகாடாக ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் காணப்பட்டன” என்று குறிப்பிடுகிறது. ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் அமெரிக்கா இன்னோர் அணுகுண்டைப் போடத் தயார் நிலையில் இருந்தது. மூன்று குண்டுகள் செப்டம்பரிலும், முன்று குண்டுகளை அக்டோபரிலும் போட அமெரிக்கா திட்டமிட்டது. இந்தக் குண்டுகள் அனைத்தையும் அன்றைய குடியரசுத் தலைவரின் எழுத்துப்பூர்வமான உத்தரவில்லாமல் போட இயலாது என உயர்மட்ட இராணுவ அதிகாரிகளே தங்களது அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததால் படிப்படியாக சூழல் மாற்றம் ஏற்பட்டு இத்திட்டங்களைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சப்பான் சரணடைதல் 1945, ஆகத்து 15ஆம் நாள், அதாவது, நாகசாக்கியில் அணுகுண்டு வீசப்பட்ட ஆறாம் நாள், சப்பான் போரில் தோல்வியை ஏற்று நேசநாடுகளின் முன் சரணடைந்தது. அதே ஆண்டு, செப்டம்பர் மாதம் சப்பான் "சரண் ஆவணத்தில்" (Japanese Instrument of Surrender) கையெழுத்திட்டது. இவ்வாறு இரண்டாம் உலகப் போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது. அணுகுண்டு வீச்சு அறநெறிக்கு உகந்ததா? இரண்டாம் உலகப் போருக்குப் பின் சப்பான் நாடு உலக அமைதியைப் பேண உறுதிபூண்டது. 1967இல் சப்பான் "அணு ஆயுத விலக்கு பற்றிய மூன்று தத்துவங்கள்" (Three Non-Nuclear Principles - சப்பானிய மொழியில்: Hikaku San Gensoku) என்னும் கொள்கையைத் தனக்கென்று வகுத்துக்கொண்டது. போரில் சப்பான் அணுகுண்டு அழிவைச் சந்தித்ததும் அக்கொள்கை உருவாக்கத்திற்குக் காரணமாக அமைந்தது. சப்பான் ஏற்ற மூன்று தத்துவங்கள் பின்வருமாறு: சப்பான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யாது. அணு ஆயுதங்களைக் கைவசம் கொண்டிராது. அணு ஆயுதங்கள் சப்பானுக்குள் வர இசையாது. இக்கொள்கைகள் சப்பானிய மக்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை எதிரொலித்தன. அவை நாடாளுமன்றத்தால் சட்டமாகப் பிரகடனம் செய்யப்படாவிட்டாலும், "தீர்மானங்களாக" (Resolutions) நிறைவேற்றப்பட்டன. இரண்டாம் உலகப் போரில் சப்பான் தோல்வியை ஏற்று சரணடைந்ததற்கு நேச நாடுகள் அணுகுண்டு வீசியதுதான் காரணமா என்னும் கேள்வி தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. அதுபோலவே, போர் நிகழ்கையில் நேச நாடுகள் பயங்கர அழிவுகளையும் உயிர்ச்சேதத்தையும் விளைவித்த அணுகுண்டுகளை வீசியது அறநெறிக்கு உகந்ததா என்னும் கேள்வியும் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. அணுகுண்டு வீச்சின் பின்புலம் பசிபிக் போர் 1945இல் நேச நாடுகளுக்கும் சப்பான் பேரரசுக்கும் இடையே நிகழ்ந்த போர் நான்காம் ஆண்டை எட்டியது. இரண்டாம் உலகப் போர் முடிவதற்கான அறிகுறிகளும் இருந்தபாடில்லை. மாறாக, சண்டையின் மும்முரம் அதிகரித்துக்கொண்டே போனது. இரண்டாம் உலகப் போரின் போது ஐக்கிய அமெரிக்க போர்வீரர்கள் 1.25 மில்லியன் பேர் இராணுவத் தளத்தில் இறந்தார்கள்; அவர்களுள் ஏறத்தாழ 1 மில்லியன் பேர் சூன் 1944க்கும் சூன் 1945க்கும் இடைப்பட்ட 12 மாதங்களில் இறந்தார்கள் என்பதிலிருந்து சண்டையின் மும்முரம் தெளிவாகிறது. 1944 திசம்பர் மாதத்தில் மட்டுமே செருமானிய துருப்புகள் "ஆர்டேன் தாக்குதல்" என்று அழைக்கப்படுகின்ற பல்ஜ் சண்டையில் 88,000 அமெரிக்க போர்வீரர்களைக் கொன்றுகுவித்தன. ஒரே மாதத்தில் மிக அதிகமான போர்வீரர் இறந்தது அச்சண்டையில்தான்.[2] அதே காலக்கட்டத்தில், பசிபிக் முனையில் நடந்த போரில் நேச நாடுகளின் படைகள் மரியானா தீவைகளையும் பலாவு தீவையும் கைப்பற்றிவிட்டு,[3] பிலிப்பீன்சுக்குச் சென்று,[4] அதன்பின் போர்னியோவைத் தாக்கின.[5] சப்பானின் படைகளை விட்டுவைக்கும் கொள்கை கைவிடப்பட்டது. தம் போர்வீரர்களை சண்டை நிகழ்ந்த பிற பகுதிகளுக்குக் கொண்டுபோவதற்காக, பூகேய்ன்வில், நியூ கினி, பிலிப்பீன்சு ஆகிய முனைகளில் சண்டையைத் தொடர்ந்துகொண்டிருந்த சப்பானின் படைகளைக் குறைக்கும் நோக்குடன் நேச நாடுகள் தாக்குதல்கள் நிகழ்த்தின.[6] 1945 ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க படைகள் ஓக்கினாவாவில் களமிறங்கி சூன் மாதம் வரையிலும் கடுமையான சண்டையில் ஈடுபட்டன. அக்கட்டத்தில் சப்பானிய படைகளில் பிலிப்பீன்சில் ஐந்துக்கு ஒன்று என்றிருந்த சாவு விகிதம் ஓக்கினாவாவில் இரண்டுக்கு ஒன்று என்று கணிசமாகக் குறைந்தது. [2] சப்பானை ஆக்கிரமிக்க நிகழ்ந்த தயாரிப்பு 1945, மே 8ஆம் நாள் நாசி செருமனி சரணடைந்தது. அதற்கு முன்னரே, பசிபிக் மாக்கடல் பகுதியில் மிகப் பெரிய அளவில் போர் நிகழ்த்துவதற்கும், சப்பான் நாட்டை ஆக்கிரமிப்பதற்கும் நேச நாடுகள் திட்டம் தீட்டி, தயாரிப்புகளைத் தொடங்கிவிட்டிருந்தன.[7] "வீழ்ச்சி நடவடிக்கை" (Operation Downfall) என்று பெயரிடப்பட்ட அந்தப் போர்த்திட்டம் இரு பகுதிகளாக அமைந்தது: 1) "ஒலிம்பிக் நடவடிக்கை"; 2) "மகுட நடவடிக்கை". "ஒலிம்பிக் நடவடிக்கை" 1945 அக்டோபர் மாதம் தொடங்குவதாகவும், அதன்படி ஐக்கிய அமெரிக்காவின் 6வது படைப்பிரிவு பகுதிபகுதியாகக் களமிறங்கி, சப்பானின் நான்கு பெரிய தீவுகளில் தெற்கே அமைந்த கியூஷூ என்னும் தீவின் தென்புறமாக மூன்றில் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பதாகவும் திட்டமிடப்பட்டிருந்தது. [8]அந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, 1946 மார்ச் மாதம் "மகுட நடவடிக்கை" தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, ஐக்கிய அமெரிக்காவின் முதல் படைப்பிரிவு, எட்டாம் படைப்பிரிவு, பத்தாம் படைப்பிரிவு ஆகியவை சப்பானின் நான்கு முக்கிய தீவுகளில் மிகப்பெரியதாகிய ஹொன்ஷூ தீவில் தலைநகராகிய டோக்கியோவின் அருகில் அமைந்த கான்டோ வெளி (Kantō Plain) என்னும் பகுதியை ஆக்கிரமிப்பதாகத் திட்டம் போடப்பட்டிருந்தது. ஆக்கிரமிப்புக்கான நாளைக் குறித்தபோது, "ஒலிம்பிக் நடவடிக்கை" தன் குறிக்கோளை எய்துவதற்கும், அந்த நடவடிக்கையில் ஈடுபட்ட போர்ப்படைகளை ஐரோப்பாவிலிருந்து சப்பானுக்குக் கொண்டுவருவதற்கும், சப்பான் பகுதியில் பனிபெய்கின்ற குளிர்காலம் கடப்பதற்கும் போதிய ஐந்து மாத கால இடைவெளி இடப்பட்டிருந்தது.[9] நேச நாடுகள் தன்னை ஆக்கிரமிக்க திட்டம் தீட்டியதை சப்பான் எளிதில் அறிந்துகொண்டது. அதன் நில அமைப்பு அதற்கு சாதகமாய் இருந்தது. நேச நாடுகளின் ஆக்கிரமிப்புத் திட்டத்தை சப்பான் துல்லியமாக முன்னறிந்து, அந்த ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள திட்டம் வகுத்தது. சப்பானின் போர்த்திட்டத்திற்கு "கெத்சுகோ நடவடிக்கை" (Operation Ketsugō) என்று பெயர். அதன்படி, சப்பானியர் கியூஷூ தீவைப் பாதுகாக்கும்படி தம் போர்ப்படையின் மிகப்பெரும் பகுதியைத் தயாராக அங்கு நிறுத்தினர். இதனால் தொடர் பாதுகாப்புக்கு அழைக்கக் கூடுமான படைப்பிரிவு சிறிதளவே எஞ்சியது. [10] குறிப்புகள் ஆதாரங்கள் |volume= has extra text (help)CS1 maint: ref=harv (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: ref=harv (link) |volume= has extra text (help); |issue= has extra text (help)CS1 maint: ref=harv (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: ref=harv (link) Unknown parameter |month= ignored (help); |volume= has extra text (help); |issue= has extra text (help)CS1 maint: ref=harv (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: ref=harv (link) Unknown parameter |month= ignored (help); CS1 maint: discouraged parameter (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: ref=harv (link) மேல் ஆய்வுக்கு There is an extensive body of literature concerning the bombings, the decision to use the bombs, and the surrender of Japan. The following sources provide a sampling of prominent works on this subject matter. CS1 maint: ref=harv (link) CS1 maint: ref=harv (link) More than one of |author= and |last= specified (help) வெளி இணைப்புகள் ஆவணக் காப்பகம் CS1 maint: discouraged parameter (link) நினைவு நிகழ்ச்சிகள் – video by Democracy Now! 2005 website commemorating 60th anniversary பகுப்பு:பசிபிக் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) பகுப்பு:1945 நிகழ்வுகள்
ஜப்பானில் முதல் முதலில் வீசப்பட்ட அணு குண்டின் பெயர் என்ன?
சிறு பையன்
2,493
tamil
3805630cd
தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் என்றும், தஞ்சைப் பெரிய கோயில் ("Big temple") அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் ("Peruvudayar Temple") என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும்[1] , அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. கிபி 11-ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜராஜ சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தார்.[2]. 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்தb கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன.[3] இக்கோயில் தமிழகத்தின் மிகமுக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.[4] 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.[5] அழியாத சோழர் பெருங்கோயில்கள் என்ற பெயரில் இக்கோயில், கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில், தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் ஆகிய மூன்றும் யுனெஸ்கோ நிறுவனத்தால் பொது ஊழி உலகப்பாரம்பரியக் களப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.[6] தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[7] சொல்லிலக்கணம் தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்பதன் வடமொழியாக்கமே பிரகதீசுவரர் கோயில்.[8] இக்கோயில் தஞ்சைப் பெரிய கோயில்[9], பெரிய கோயில், இராஜராஜேஸ்வரன் கோயில், இராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது. முதலாம் இராஜராஜ சோழனால் கட்டுவிக்கப்பட்ட இக்கோயில் துவக்கக் காலத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் , 17 ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. வரலாறு முதலாம் இராஜராஜ சோழன் என்றழைக்கப்பட்ட சோழ அரசன் அருள்மொழிவர்மன் கனவில் அவனுக்கிடப்பட்ட ஆணையை நிறைவேற்றும் பொருட்டு, சோழர்களின் சிறப்பின் சின்னமாக விளங்கும் தஞ்சைப் பிரகதீசுவரர் கோயிலைக் கட்டுவித்தார்.[10] இக்கோயிலின் கட்டுமான வேலைகள் முதலாம் இராஜராஜனின் 19 ஆவது ஆட்சியாண்டில் துவக்கப்பட்டு (கி.பி. 1003-1004), அவனது 25 ஆவது ஆட்சியாண்டில் முடிவுற்றது (கிபி 1009-1010).[6][11] கோயிலின் வரைதிட்டத்தில், ஆள்கூற்று முறைமை, சமச்சீர்மை வடிவவியல் விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.[12] இதைத் தொடர்ந்து அடுத்த இரு நூற்றாண்டுகள் வரை கட்டப்பட்டக் கோயில்கள், சோழர்காலத்தில் தமிழர்கள் செல்வத்திலும், கலையிலும் சிறப்புற்று விளங்கியதற்குச் சான்றாகவுள்ளன. சோழர்காலக் கட்டிடக்கலையின் புதுவித அமைப்பாக சதுரப் போதிகைகள் கொண்ட பன்முகத் தூண்கள் காணப்படுகின்றன.[13] தனித்துவமான தென்னிந்தியக் கோயில் கட்டிடக்கலைக்கும், சோழர்களின் ஆட்சி மற்றும் தென்னிந்தியாவில் தமிழர்களின் நாகரிகத்திற்கும் சான்றாக அமைந்துள்ள இக்கோயில், கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, வெண்கலச் சிலையுருவாக்கம் ஆகியவற்றில் சோழர்களின் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.[14] இடைக்காலச் சோழர்கள் கி.பி. 985 முதல் 1070 வரை சோழர் கலை உயர்வடைந்து உச்ச நிலையில் இருந்தது. இடைக்காலச் சோழர் காலத்தில் ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டன. பரந்து கிடந்த சோழப் பேரரசு எங்கும் கோயில்கள் கட்டும் பணி தொடர்ச்சியாக நடந்தது. இக்காலத்தில் எத்தனையோ சிறு கோயில்களும் கட்டப்பட்டன. பெரிய கோவில் கட்டும் எண்ணத்தின் பின் புலம் காஞ்சியில் ராஜசிம்மனால் கட்டப்பட்ட கயிலாயநாதர் கோயில் ராஜராஜனை மிகவும் கவர்ந்தது. அதே போல் ஒரு கோவிலைக் கட்ட எண்ணிய இராஜராஜன் தஞ்சையில் பெரிய கோவிலைக் கட்டினான். பெரியகோவிலின் அமைப்பு, திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள அசலேஸ்வரர் சந்நிதியின் மாதிரியைக் கொண்டு உருவானதாகவும் செய்தி உண்டு. தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி, இளங்காட்டில் இராசராசனால் கட்டப்பெற்ற செங்கல்லால் ஆன சிறிய கோயில்தான் முன் மாதிரியாகும். திருவிடைமருதூர்க் கோவிலில் உள்ள மூலவரின் பெயர் மகாலிங்கம். இராஜராஜனுக்குப் பெயருக்கு ஏற்றார் போல் அந்த விக்கிரகம் இல்லை என்று எண்ணம். பின்னாளில் பெருவுடையார் என்ற பெயருக்கு ஏற்ப லிங்கமும் கோவிலும் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இக்கோயிலைக் கட்டத் தூண்டியது என்றும் ஓர் செய்தி உண்டு. கட்டமைப்பு இக்கோயிலின் தலைமைச் சிற்பி குஞ்சர மல்லன் ராஜராஜ ராமப் பெருந்தச்சன் எனக் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயிலின் அடிப்பாகம் 5 மீட்டர் (16 அடி) உயரம் கொண்டுள்ளது.[15] ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள நந்தி 20 டன் எடையும், இரண்டு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் நீளம், இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டதாகவும்,[16] லேபாக்ஷி கோயில் நந்திக்கு அடுத்தபடியாக, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தியுமாகவும் உள்ளது.[17] முதன்மைக் கடவுளான இலிங்கம் 3.7 மீட்டர் உயரமானது. வெளிப் பிரகாரம் 240 மீ. x 125 மீ. அளவிலானது.[16] 108 பரத நாட்டிய முத்திரைகளைக் காட்டும் நடனச் சிற்பங்கள் வெளிச்சுவற்றின் மேற்பகுதியில் வடிக்கப்பட்டுள்ளன.[16] பிற்காலத்தில் பாண்டியர்களால் 13 ஆம் நூற்றாண்டில் அம்மன் சன்னிதியும் விசயநகர அரசர்களால் சுப்பிரமணியர் சன்னிதியும் கட்டப்பட்டு, மராத்திய அரசர்களால் விநாயகர் சன்னிதி புதுப்பிக்கப்பட்டது.[16] தஞ்சை நாயக்கர்களாலும் இக்கோயில் மேம்படுத்தப்பட்டுள்ளது.[18] கோயில் அமைப்பு முக்கியமான கட்டடம் 150 அடி நீளம் இருக்கிறது. மிகப் பிரம்மாண்டமான விமானம் எகிப்தியப் பிரமிடுகளைப் போல கூர்நுனிக் கோபுரமாக அமைந்து கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு ஓங்கி வளர்ந்திருக்கிறது. அக்காலத்தில் புவனேஸ்வரத்தில் கட்டப்பட்ட லிங்கராஜர் கோயிலின் உயரம் 160 அடியாகும். இராஜராஜேஸ்வரம் அதையும் மிஞ்சி விட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் பிற்காலத்தில் கட்டப்பட்டவை - முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில், அம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியன. இவை தவிர இந்த மாபெரும் கோயிலின் ஏனைய பகுதிகள் யாவும் ஒரே காலத்தவை. இவற்றினுடைய பெருமிதத் தோற்றத்தையும் ஒருங்கிணைந்த திட்டத்தின் எளிமையான இயல்பையும் பாராட்டாமல் இருக்கமுடியாது. துணைச் சார்ந்த (Axial) மண்டபங்களும், விமானமும் அர்த்த மண்டபமும் மகாமண்டபமும் பெரிய நந்தியும் அவற்றிற்கேற்ற பொருத்தமான அளவுகளையுடைய ஒரு சுற்றுச் சுவருக்குள் அடங்கியிருக்கின்றன. இச்சுவரில் கிழக்கே ஒரு கோபுரம் இருக்கிறது. மதிலை ஒட்டி உள்பக்கமாக பல தூண்களுள்ள ஒரு நீண்ட மண்டபம் செல்லுகிறது. இது 35 உட்கோயில்களை இணைக்கிறது. நான்கு திக்குகளிலும் பல இடைவெளிகளுக்கு நடுவே கேந்திரமான இடங்களில் இந்த உட்கோயில்கள் கட்டப் பெற்றிருக்கின்றன. இரண்டாவது வெளிப் பிரகாரத்தின் வாயிலாக இருந்த இடத்தில் முன் பக்கத்தில் இரண்டாவது கோபுரம் இருக்கிறது. வடிவமைப்பு எகிப்திய பிரமிடுகளின் கட்டுமான முறைக்கும் தஞ்சை மற்றும் கங்கைகொண்ட சோழபுர கோவில்களின் கட்டுமான முறைக்கும் ஒற்றுமை இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரண்டிலுமே தேர்ந்தெடுக்கப்பட்ட கற்கள் அடுக்கியும் கோர்த்தும் வைத்து கட்டப்பட்டுள்ளது. இரண்டிலுமே கோள்களின் கதிர்வீச்சுக்கள் அதன் மையப் பகுதியில் குவியுமாறு வடிவமைக்கப்படுள்ளது. புவி அதிர்வுகளினால் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. கதிர்வீச்சுக்களின் குவியலில் பாதுகாக்கப்பட்ட அரசர்களின் உடல் கெடுவதில்லை. அதுபோல, சோழ கோவில்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஆவுடை-லிங்கங்கள் தொடர்ந்து சக்தியுள்ள மையமாக புகழுடைய கோவில்களாக சிறந்து விளங்குகின்றன. விமானம் முக்கிய விமானம் உத்தம வகையைச் சார்ந்தது; ஆதலால் இது மிகச் சிறந்தது. இதை, தமிழில் மாடக்கோயில் என்றும் சொல்வார்கள். இவ்வகைக்கு முதலாவது உதாரணம் தட்சிணமேரு-கோரங்கநாதர். இது பக்கவாட்டில் 99 அடி உள்ள சதுர அடித்தளத்தில் மீது அமைந்தது. படுக்கையான பகுதி, நீண்டு துருத்திக் கொண்டிருக்கும். ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. நடுவேயுள்ள பகுதி மற்ற பகுதிகளை விடப் பெரியது. தரை மட்டத்துக்குக் கீழே இருக்கும் தளத்திலிருந்து சிகரம் வரை குடாவும் மாடமும் மாறி மாறிக் காணப்படுகின்றன. சுவரில் பதித்த தூண்கள், பீடத்தை அழகுபடுத்துகின்றன. யாளி உருவத்தால் அழுத்தப்பட்ட கபோதம் உடைய பீடத்தின் மீது, இதைவிடச் சிறிய பரப்பில் 63அடி சதுரத்தில் ஒரு உபபீடம் எழுப்பப்பட்டிருக்கிறது. மேலேயும் கீழேயும் பத்ம தளங்கள் உடையதும் அரை வட்ட வடிவத்தில் பிரம்மாண்டமானதாய் அமைந்ததுமான குமுதத்தை ஏற்றுக்கொள்ள பத்ம தளமாக, கல்வெட்டுக்களுடன் கூடிய உபானம் விளங்குகிறது. குமுதம், கிழக்கு மூலையில் குறுக்காகத் திரும்பும் போது, விளிம்பில் எண்கோணமாக வெட்டப்படுகிறது. கண்டமும் கபோதமும் நெருங்கிக் காட்டப்பட்டுள்ளன. குமுதத்திற்கு நேர் உயரத்தில் வரி விமானம் கானப்படுகிறது. வரிசையாகப் பல சிங்கங்கள், அவறின் மீது சிங்கங்களை ஓட்டுபவர் மூலைகளில் சிங்கங்களுக்குப் பதிலாக, மகரங்களும் போர் வீரர்களும் வாயைப் பிளந்து கொண்டிருக்கும் குதிரைகளும் அவற்றின் மீதேறிச் சவாரி செய்பவர்களின் உருவங்களும் உள்ளன. உள்ளுறையின் செங்குத்தான சுவர்கள் தள அமைப்பைப் பின்பற்றிய 50அடி உயரத்துக்கு எழுப்பப்பட்டுள்ள, பிரம்மாண்டமான வளைந்த பிதுக்கம் அந்தச் சுவர்களை இரண்டு மாடிகளாகப் பிரிக்கிறது. இடைச்சிக் கல் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தது. அழகி என்னும் இடையர் குல மூதாட்டி சிவத்தொண்டு செய்ய விரும்பினார். ஏழை மூதாட்டி தன்னால் இயன்ற தொண்டாக கோவில் கட்டி முடிக்கும் வரை கோவில் கட்டும் சிற்பிகளின் தாகத்தை போக்கும் பொருட்டு தினமும் அவர்களுக்கு தயிர், மோர் வழங்கி வந்தார். இதனை அறிந்த மன்னர் அருள்மொழிவர்மன் (ராஜராஜசோழன்) இடையர் குல மூதாட்டியின் சிவத்தொண்டை அனைவரும் அறியும் வண்ணம் 80டன் எடை கொண்ட கல்லில் அழகி என்று பெயர் பொறித்து, அதனை ராஜகோபுரத்தின் உச்சியில் இடம் பெற செய்தார். அந்த கல் இடைச்சிக் கல் என்று அழைக்கப்படுகிறது. அந்த கல்லின் நிழலே இறைவன் பிரகதீஸ்வரர் மேல் விழுகிறது. நந்தி மண்டபம் தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. நந்திமண்டபத்திற்கு தெற்கே உள்ள திருச்சுற்று மாளிகையில் வடதிசையை நோக்கியபடி உள்ள நந்தியே இராஜராஜனால் பெருவுடையாருக்கு எதிரே அமைக்கப்பட்டதாகும். பின்னாளில் நாயக்கர்கள் சிவலிங்கத்துக்கு இணையான பெரிய நந்தியை நிறுவினர். முதலில் அமைக்கப்பட்ட நந்தி கேரளாந்தகன், இராஜராஜன் வாயில்களுக்கு இடைப்பட்ட பகுதிக்கும் பின்னர் திருச்சுற்று மாளிகைக்கும் மாற்றப்பட்டது.[19] சந்நிதிகள் சிவலிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ள, முக்கியமான கோயிலையும், அதனோடு கூடிய மண்டபங்களையும் தவிர, சண்டிகேஸ்வரர், அம்மன், நடராஜர், வராகி, சுப்பிரமணியர், கணபதி மற்றும் கருவூர்த் தேவர் கோயில்களும், இவ் வளாகத்துள் அமைந்துள்ளன. பெருவுடையார் சந்நிதி - பிரகதீசுவரர், பெருவுடையார் என்று அழைக்கப்படும் மூலவர் சிவபெருமான் லிங்க வடிவில் உள்ளார். இந்த மூலவரை இராஜராஜ சோழன் ராஜராஜீஸ்வரமுடையார் என்ற பெயரில் வழிபட்டுள்ளார். இம்மூலவருக்கு பீடம் இல்லை. பெரியநாயகி அம்மன் சந்நிதி - இக்கோவிலின் அம்மன் பெரியநாயகியாவார். இது பாண்டியர் கால கட்டுமானம். கருவூர் சித்தர் சந்நிதி - இக்கோவிலில் கருவூர் சித்தருக்கென தனி சந்நிதி அமைந்துள்ளது. வராகி அம்மன் சந்நிதி - இது சோழர் கால கட்டுமானமாக இருக்க வேண்டும் என்றே கருதப்படுகிறது. வேறெங்கிலும் இல்லாத வகையில் இந்த திருவுருவிற்கு இரண்டு கரங்கள் மட்டுமே இருப்பது வியக்கத்தக்கது. கல்வெட்டுக்கள் இக் கோயிலின் பலவிடங்களிலும் இருக்கும் கல்வெட்டுக்கள், இக் கோயிலில் இராஜராஜன் கொண்டிருந்த தனிப்பட்ட கரிசனத்தை விளக்குவதாகக் கூறப்படுகிறது. தான் மட்டுமன்றி, அரச குடும்பத்தினரும், அரச அலுவலரும், படையினரும், பொதுமக்களும் ஆகிய எல்லோருடைய பங்களிப்பும், கோயிலின் பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் இருக்கும்படி பார்த்துக்கொண்டானெனவும் தெரிகிறது. நிதித்தேவைகளும், அரசனால் இறையிலியாகக் கொடுக்கப்பட்ட நிலங்களிலும், கிராமங்களிலிருந்தும் வரும் வருவாயினாலும், இன்னும் வேறு வழிகளிலும் பெற்றுக்கொள்ளப்பட்டது. கோவிலின் முதல் கல்வெட்டே இதற்கு சான்று. "நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்த கல்லிலே வெட்டி அருள்க...." தன்னுடைய பங்களிப்பு மட்டுமன்றி மற்ற எல்லோரின் பங்களிப்பையும் ஆவணப் படுத்தியதே வியத்தகு ஒன்று. இங்கே மன்னர் தனக்கு அடுத்தபடியாக முக்கியத்துவத்தை அக்கன் -- தன் மூத்த சகோதரியான குந்தவை தேவிக்கு அளிக்கிறார். தன்னை வளர்த்து, கனவுகளை கொடுத்தவருக்கு அவர் செய்யும் சிறப்பாகும் இது. அடுத்து பெண்கள் என்னும் சொல்லின் மூலம் அவரது பட்டத்தரசியான தந்தி சக்தி விடங்கி மற்றும் மனைவியர் கொடுத்த கொடைகளும், கொடுப்பார் கொடுத்தனவும் என்பதின் மூலம் மற்றவர் எல்லோரும் கொடுத்த கொடைகளும் பட்டியலிடப்படுகின்றன. கோயிலில் அன்றாட கருமங்களை ஒழுங்காகச் செயல்படுத்துவதற்குப், பூசகர்களும், சிற்பிகளும் தேவார ஓதுவார்களும், இசைவாணர்களும், நடனமாதர்களும், மேலும் இன்னோரன்ன பணியாட்களும் தேவைகளுக்கேற்ப நியமிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. 50 ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் கோயிலிலிருந்ததாகக் கல்வெட்டுச் சான்றுகள் பகர்கின்றன. விழாக்கள் பிரம்மோற்சவம் - ராஜராஜசோழன் பிறந்தநாள் விழா அன்னாபிஷேகம் திருவாதிரை ஆடிப்பூரம் கார்த்திகை பிரதோசம் சிவராத்திரி தேரோட்டம் தஞ்சைப் பெரிய கோயிலின் சிறப்பு இக்கோவில் விமானத்தின் உயரம் 216அடி (66மீ) உயரம் கொண்டது.[20] இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீ உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பினார். இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயில் சுமார் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும். 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அரை அடி உயரம் கொண்ட லிங்கம் ஆகியன தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான நந்தி சிலையின் உயரமும், அகலமும் முறையே: 13 அடிகள் மற்றும் 16 அடிகள் ஆகும்.[10] தமிழகத்தில் சற்றொப்ப இதே அமைப்பிலுள்ள கோயில்கள் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரர் கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயில் ஆகியவையாகும். 1010 ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. ஆயிரம் ரூபாய் நோட்டு, தபால் தலை தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954ம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி ₹ 1000 நோட்டை வெளியிட்டது. அதில் தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பிரகதீசுவரர் ஆலயத்தின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் 4வது கவர்னரான சர் பெனகல் ராமாராவ், அதில் கையெழுத்திட்டார். டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் கான்பூர் ஆகிய நகரங்களில் அந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. 5 வரிசைகளிலான எண்களில் அந்த நோட்டுகள் வெளியாகின. மும்பையில் அச்சிடப்பட்ட நோட்டுகளின் வரிசை ஆங்கில எழுத்து ஏ ஆகும். மத்திய அரசு 1995 ஆம் ஆண்டில் மாமன்னர் ராஜராஜ சோழன் உருவம் பதித்த 2 ரூபாய் தபால் தலையை வெளியிட்டது. ஆயிரமாண்டு நிறைவு விழா தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவினை தஞ்சை மாநகரில் 2010 செப்டம்பர் 25, செப்டம்பர் 26-ந் தேதி ஆகிய 2 நாட்களுக்கு சிறப்புற நடத்தப்பட்டது. மத்திய மந்திரி ஆ. ராசா பெரியகோவில் உருவம் பொறித்த 5 ரூபாய் சிறப்பு தபால் தலையை முன்னால் முதல்-அமைச்சர் மு. கருணாநிதி முன்னிலையில் வெளியிட்டார். அதை மத்திய மந்திரி ஜி.கே.வாசன் பெற்றுக்கொண்டார். சிறப்பு தபால் தலையின் மாதிரி வடிவத்தை, முன்னால் முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். பின்னர் மத்திய மந்திரி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பெரிய கோவில் மற்றும் ராஜராஜன் உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை வெளியிட, அதை மத்திய மந்திரி நாராயணசாமி பெற்றுக்கொண்டார். விழாவின் முதல் நாள் காலை முதல் நாட்டுப்புறக் கலைஞர்களின் பல்வேறு தெருவோர நிகழ்ச்சிகள் நகரின் பல பகுதிகளில் நடத்தப்பட்டது. மாலையில் தஞ்சை பெரிய கோவிலில் அனைத்திந்திய பரதநாட்டிய கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் பத்மா சுப்ரமணியத்தின் தலைமையில் ஆயிரம் நடனக்கலைஞர்கள் கலந்து கொண்ட மாபெரும் நிகழ்ச்சி இடம்பெற்றது. அந்த நடன நிகழ்ச்சிக்கு முன்பாக நாதஸ்வர இசை நிகழ்ச்சியும், நடன நிகழ்ச்சிக்குப் பின்னர் 100 ஓதுவார்களின் திருமுறை இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இரண்டாம் நாள் காலையில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கமும், தஞ்சை பெரிய கோவிலில் பொது அரங்கமும், மாலையில் தஞ்சை திலகர் திடலில் முன்னால் முதல்வர் கருணாநிதி தலைமையில் தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலை வெளியிடுதல், தஞ்சை மாநகருக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தொடங்குதல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன. வரலாற்று கண்காட்சி ஒன்றும் நடத்தப்பட்டது[21]. கருத்துகளும் உண்மைகளும் தஞ்சை பெரிய கோயிலின் கோபுர நிழனானது தரையில் விழாது என்றொரு நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது. ஆனால் இக்கோயிலின் விமான நிழல் தரையில் விழுகின்ற படியே அமைக்கப்பட்டிருக்கிறது. [22] மேலும் படங்கள் தஞ்சை பெரிய கோயில் &lt;கோயில் வலது பக்கத்தின் முன் தோற்றம் கோயில் வலது பின்பக்கத்தின் தோற்றம் கோயில் இடது பக்கத்தின் முன் தோற்றம் கோயில் விமானம் கோயில் முற்றத்தில் உள்ள அலங்கரிக்கப்பட்டத் தூண் காளை முக சிவன் (நந்தி), கலசம் பின்னணியில் (விமானம்) நந்தி மண்டபக் கூரையில் வரையப்பட்ட சுவரோவியங்கள் மேலும் பார்க்க அழியாத சோழர் பெருங்கோயில்கள் கங்கைகொண்ட சோழபுரம் ஐராவதேஸ்வரர் கோயில் தஞ்சைப் பெரிய கோயில் தேரோட்டம் உசாத்துணை • குடவாயில் பாலசுப்ரமணியன், இராஜராஜேச்சரம், சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை, மஞ்சக்குடி, திருவாரூர் மாவட்டம், 2010 • தஞ்சைப்பெரிய கோயில் சோழர் கால ஓவியங்கள், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2010 ஆதாரங்கள் வெளி இணைப்புகள் Template:தஞ்சாவூர் கோயில்கள் பகுப்பு:தமிழகத்தின் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்கள் பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள் பகுப்பு:தஞ்சாவூர் வரலாறு
பிரஹதீஸ்வரர் கோவிலைக் கட்டியவர் யார்?
முதலாம் இராஜராஜ சோழனால்
1,280
tamil
20aac3ea4
Part of a series onChristianity JesusChrist Nativity Crucifixion Resurrection BibleFoundations Old Testament New Testament Gospel Canon Church Creed New Covenant Theology God Trinity Father Son Holy Spirit Apologetics Baptism Christology History of theology Mission Salvation HistoryTradition Apostles Peter Paul Mary Early Christianity Church Fathers Constantine Councils Augustine East–West Schism Crusades Aquinas Reformation Luther DenominationsGroups Western Roman Catholic Protestant Adventist Anabaptist Anglican Baptist Evangelical Holiness Lutheran Methodist Moravian Pentecostal Quaker Reformed Eastern Eastern Catholic Eastern Orthodox Oriental Orthodox Church of the East (Nestorian) Restorationist Jehovah's Witness Latter Day Saint Iglesia ni Cristo Related topics Art Criticism Ecumenism Music Other religions Prayer Sermon Symbolism Worship Christianity portalvt கிறிஸ்தவம் (Christianity) ஓரிறைக் கொள்கையுடைய[1] சமயமாகும். நாசரேத்தூர் இயேசுவின் வாழ்வையும் அவரது போதனைகளையும் மையப்படுத்தி விவிலிய புதிய ஏற்பாட்டின்படி செயற்படுகிறது. கிறிஸ்தவர் இயேசுவை மெசியா மற்றும் கிறிஸ்து என்னும் அடைமொழிகளாலும் அழைப்பதுண்டு. இவ்விரு சொற்களின் பொருளும் “திருப்பொழிவு பெற்றவர்” (”அபிஷேகம் செய்யப்பட்டவர்”) என்பதாகும். மெசியா என்னும் சொல் எபிரேய மொழியிலிருந்தும் கிறிஸ்து என்னும் சொல் கிரேக்க மொழியிலிருந்தும் பிறந்தவை (கிரேக்கம்: Χριστός, Christos; מָשִׁיחַ, Māšîăḥ -Messiah என்ற எபிரேயச் சொல்லின் மொழிபெயர்ப்பு). சுமார் 2.4 பில்லியன் உறுப்பினர்களைக் கொண்டு (உலக மக்கள் தொகையில் 33.3%) உலகின் பெரிய சமயமாகக் காணப்படுகிறது. கிறிஸ்தவம் பல உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. இதில் கத்தோலிக்க திருச்சபை மிகப்பெரியதாகும். கிறிஸ்தவம் கி.பி. முதலாம் நூற்றாண்டில் யூத மதத்தின் உட்பிரிவாக இருந்ததாலும், யூதர்கள் எதிர்பார்த்த மீட்பர் கிறிஸ்து என கிறிஸ்தவர்கள் நம்புவதாலும் யூத புனித நூலை பழைய ஏற்பாடு என்னும் பெயரில் விவிலியத்தின் ஒரு பகுதியாக ஏற்கின்றனர். யூதம் மற்றும் இசுலாம் போலவே கிறிஸ்தவமும் தன்னை ஆபிரகாம் வழி வந்த சமய நம்பிக்கையாகக் கொள்வதால் அது ஆபிரகாமிய சமயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. நம்பிக்கை பல பிரிவுகளாக உள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் சமயத்தின் முக்கிய அங்கமாக சில நம்பிக்கைகளை ஏற்கின்றனர். அந்நம்பிக்கைகளின் அடிப்படை, கடவுளால் வெளிப்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகின்ற விவிலியத்தில் உள்ளதாக அவர்கள் கொண்டாலும், விவிலியத்தைப் புரிதலில் அவர்களிடையே கருத்து வேறுபாடுகளும் உண்டு.[2] நம்பிக்கை அறிக்கைகள் சமய நம்பிக்கைகளைக் குறித்த சுருக்கமான கொள்கைசார் அறிக்கைகள் அல்லது வாக்குமூலங்கள் நம்பிக்கை அறிக்கைகள் எனப்படுகின்றன. ஆங்கிலத்தில் கிரீட்சு (creeds) எனப்படும் இவை "நான் நம்புகிறேன்" என்று பொருள்தரும் இலத்தீன மொழி வேர்ச்சொல்லான கிரெடொ, (credo) விலிருந்து வந்துள்ளது. இந்த நம்பிக்கை அறிக்கைகள் முதலில் கிறிஸ்தவத்தில் புதிதாகப் புகுந்தோர் அறிக்கையிட வேண்டிய உரைக்கூற்றுகளாகத் தோன்றின. பின்னர் 4வது, 5வது நூற்றாண்டுகளில் எழுந்த இயேசுநாதர் ஆளுமைத்துறை பற்றிய சர்ச்சைகளின்போது விரிவாக்கப்பட்டு நம்பிக்கை அறிக்கைகளாக உருவாகின. பல சீர்திருத்தத் திருச்சபை சார்ந்தவர்கள் நம்பிக்கை அறிக்கைகளின் சில அல்லது பெரும்பகுதியுடன் உடன்பட்டாலும் முழுமையாக ஏற்பதில்லை. பாப்டிசுட்டுக்கள் "நிகழ்வுகளை உறுதிப்படுத்த ஆதாரபூர்வ வாக்குமூலங்களாக எடுத்துக்கொள்வதற்காக நம்பிக்கை அறிக்கைகள் வழங்கப்படவில்லை" எனக் கருதுகின்றனர்.[3]:ப.111 கிறிஸ்து திருச்சபை, கனடாவின் சீர்திருத்த கிறிஸ்தவத் திருச்சபை போன்ற மறுசீரமைப்பு இயக்கங்கள் நம்பிக்கை அறிக்கைகளை ஏற்பதில்லை.[4][5]:14–15[6]:123 நம்பிக்கை அறிக்கையில் அடங்கியுள்ள முதன்மை சமயக் கொள்கைகளாவன: தந்தையாம் கடவுள் உலகைப் படைத்தவர் என்பதில் நம்பிக்கை; இயேசு கிறிஸ்து கடவுளின் மகன், உலகத்தைப் பாவத்திலிருந்து மீட்க மனிதராகப் பிறந்தவர்; தூய ஆவி மனிதரைப் புனிதராக்குகின்றார். கிறிஸ்துவின் சாவு, அவர் பாதாளத்தில் இறங்கியது, உயிர்த்தெழுதல், மற்றும் விண்ணேற்றம் திருச்சபையின் புனிதமும் புனிதர்களுடனான ஒன்றிப்பும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை, உலகத் தீர்ப்பு மற்றும் இறந்தோர் உயிர்த்தெழுவர் என்னும் நம்பிக்கை. ஆரியசிற்கு எதிர்வினையாக 325 இல் நைசியாவிலும் 381 இல் கான்ஸ்டான்டிநோபிளிலும் கூடிய மன்றங்கள் நைசின் விசுவாச அறிக்கையை உருவாக்கின. இயேசு கிறிஸ்துவை ஆரியசு தந்தையாம் கடவுளுக்குக் கீழ்ப்பட்டவராகவும், கடவுளின் (தலைசிறந்த) படைப்பாகவும் மட்டும் பார்த்தாரே ஒழிய இயேசு கிறிஸ்துவைக் கடவுளுக்கு நிகரானவராகக் கருதவில்லை. எனவே இயேசு யார் என்பதை உறுதியாக வரையறுக்க வேண்டிய தேவை எழுந்தது.[7][8] 431 இல் எபெசுசில் கூடிய முதல் மன்றம் நைசீன் நம்பிக்கை அறிக்கையை ஏற்று அதை மேலும் உறுதியாக்கியது.[9] கால்செதோன் வரையறை அல்லது கால்செதோன் அறிக்கை 451 இல் உருவாக்கப்பட்டது. இந்த அறிக்கையும் இயேசு கிறிஸ்து யார் என்பதைத் துல்லியமாக வரையறுக்கும் வகையில் அமைந்தது. விவிலியத்தின் அடிப்படையில் “இயேசு கிறிஸ்து உண்மையாகவே கடவுளாகவும் உண்மையாகவே மனிதருமாக இருக்கிறார்” என்பதே கால்செதோன் வரையறையின் மையம்.[10] இதனை கிழக்கத்திய மரபுவழி திருச்சபையினர் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் கொள்கைப்படி, இயேசு கிறிஸ்துவுக்கு ஒரே இயல்புதான் உண்டு. அந்த ஒரே இயல்பில் அவருடைய இறைத்தன்மையும் மனிதத்தன்மையும் அடங்கியுள்ளன.[11] கால்செதோன் வரையறைப்படி, “இயேசு கிறிஸ்து உண்மையான கடவுளும் உண்மையான மனிதரும் ஆவார். கடவுளின் வார்த்தையான அவரில் இறைத்தன்மையும் மனிதத்தன்மையும் "குழப்பமின்றி, மாற்றமின்றி, பிளவின்றி, பிரிக்கமுடியாததாக (”without confusion, change, division or separation”) உள்ளன. ஒரே ஆளில் இரு தன்மைகளும் உள்ளன.[12] மேற்கத்திய திருச்சபையில் பயன்படுத்தப்பட்ட மற்றொரு அறிக்கையின் பெயர் ”அத்தனாசியுசு நம்பிக்கை அறிக்கை” (Athanasian Creed). புனித அத்தனாசியுசு என்பவரால் தொகுக்கப்பட்டதாக (தவறாக) கருதப்பட்ட இந்த அறிக்கை நைசின் மற்றும் கால்செதோனிய அறிக்கைகளுக்கு இணையானது; நம்பிக்கை அறிக்கையில் கூறப்பட்டவற்றை ஏற்காதோர் திருச்சபையின் உறவிலிருந்து பிரிந்தோர் ஆவர் என்னும் குறிப்பு இந்த நம்பிக்கை அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், மூவொரு கடவுள் கொள்கை இந்த அறிக்கையில் விளக்கமாகக் கூறப்படுகிறது: "நாங்கள் மூவொரு கடவுளை வழிபடுகிறோம். மும்மையில் ஒருமை, ஒருமையில் மும்மை. மூன்று ஆள்களை ஒருவரோடொருவர் குழப்புவதில்லை; ஒரே பொருளான அவர்களைப் பிரிப்பதுமில்லை.” [13] பெரும்பாலான கிறிஸ்தவர்கள், அதாவது, கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுசபை, ஓரியண்டல் மரபுசபை மற்றும் சீர்திருத்தத் திருச்சபை ஆகியவற்றின் உறுப்பினர், கிறிஸ்தவ சமயத்தின் அடிப்படைக் கொள்கைகைகளை உள்ளடக்கிய “நம்பிக்கை அறிக்கைகளை” ஏற்றுக்கொள்கின்றனர்; தொடக்ககாலத் திருச்சபையில் உருவான ஒரு நம்பிக்கை அறிக்கையையாவது ஏற்றுக்கொள்கின்றனர்.[14] பத்துக் கட்டளைகள் பத்துக் கட்டளைகள் என்பது நன்னெறி மற்றும் வழிபாடு குறித்த விவிலிய அறிவுரைத் தொகுப்புகளுள் முதன்மையானது; இது யூதம் மற்றும் பெரும்பாலான கிறிஸ்தவ சபைகளின் அறநெறிப் படிப்பினையில் மைய இடம் பெறுகிறது. பத்துக் கட்டளைகள் தொகுப்பு இரு பிரிவாக உள்ளது. முதல் பிரிவில் மூன்று கட்டளைகள், இரண்டாம் பிரிவில் ஏழு கட்டளைகள். முதல் மூன்று கட்டளைகளும் இறைவனை அன்பு செய்து வழிபடுகின்ற கடமைகளை எடுத்துக்கூறுகின்றன. எஞ்சிய ஏழு கட்டளைகளும் மனித சமூகத்தின் நலம் பேணுதல் பற்றிய கடமைகளை எடுத்துரைக்கின்றன. கட்டளை 1: உண்மையான கடவுளை நம்பி ஏற்றிடுக (போலி தெய்வங்களை ஒதுக்குதல்) 2. ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தல் ஆகாது 3. ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடி 4. உன் தந்தையையும் தாயையும் மதித்து நட 5. கொலை செய்யாதே 6. விபசாரம் செய்யாதே 7. களவு செய்யாதே 8. பொய்ச்சான்று சொல்லாதே 9. பிறர் மனைவியை விரும்பாதே 10. பிறர் உடைமையை விரும்பாதே. மேற்கூறிய பத்துக் கட்டளைகளயும் வரிசைப்படுத்துவதில் கிறிஸ்தவ சபைகளுக்கிடையே சிறு வேறுபாடுகள் உண்டு. நற்செய்திகளின்படி, கிறிஸ்து இச்சட்டங்களை இரண்டு முதன்மைக் கட்டளைகளுக்குள் அடக்குகிறார். அவை: 1) மனிதர் கடவுளைத் தம் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் அன்பு செய்ய வேண்டும். 2) மனிதர் தம்மைத் தாமே அன்புசெய்வதுபோல பிறரையும் அன்புசெய்ய வேண்டும். (காண்க: மாற்கு 12:28-31; மத்தேயு 22:34-40; லூக்கா 10:25-28). இயேசு கிறிஸ்து இயேசு கிறிஸ்து கடவுளின் மகன், கடவுளால் திருப்பொழிவு பெற்றவர் (மெசியா) என்ற நம்பிக்கை கிறிஸ்தவ சமயத்தின் மையக் கொள்கை ஆகும். உலக மக்கள் அனைவரையும் பாவத்திலிருந்து மீட்கும் பொருட்டு கடவுள் தம் மகன் இயேசுவை அபிடேகம் செய்தார் என்றும், இவ்வகையில் இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டில் முன் கூறப்பட்ட இறைவாக்குகளை நிறைவேற்றினார் எனவும் கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். மெசியா குறித்து கிறிஸ்தவர்கள் கொண்டுள்ள புரிதல் அக்கால யூதர்களின் புரிதல்களிலிருந்து வேறுபட்டுள்ளது. மனிதரின் பாவங்களைப் போக்கி, அவர்களை இறைவனோடு ஒப்புரவாக்கி, அவர்களுக்கு மீட்பையும் முடிவில்லா நிலைவாழ்வையும் வழங்கவந்தவரே இயேசு; மீட்பளிக்கின்ற அந்த இயேசுவின் சாவையும் உயிர்த்தெழுதலையும் நம்பி ஏற்றிட மக்கள் அழைக்கப்படுகிறார்கள் என்பது கிறிஸ்தவரின் நம்பிக்கை.[15] கிறிஸ்தவ வரலாற்றின் துவக்க நூற்றாண்டுகளில் இயேசுவின் தன்மை குறித்து பல இறையியல் சர்ச்சைகள் எழுந்துள்ளபோதும் கிறிஸ்தவர்கள் பொதுவாக இயேசுவை கடவுளின் அவதாரமாகவும் "உண்மையான கடவுளும் உண்மையான மனிதரும்" ஆனவராக நம்புகின்றனர். இயேசு, முழுமையும் மனிதராக இருந்தமையால் சாதாரண மனிதர் உணரும் வலிகளையும் ஆசைகளையும் உணர்ந்தார்; ஆனால் எந்த விலக்கப்பட்டச் செயலையும் (பாவம்) செய்யவில்லை. கடவுளாக உயிர்த்தெழுந்தார். விவிலியத்தின்படி, "கடவுள் இறந்தோரிடமிருந்து அவரை எழுப்பினார்",[16] அவர் விண்ணகத்திற்கு ஏறிச்சென்று "தந்தையின் வலது பக்கம் அமர்ந்தார்";[17] மற்ற மெசியா பணிகளை ஆற்றிட மீண்டும் திரும்பி இறந்தோரை உயிர்ப்பிப்பது, கடைசி தீர்ப்பு மற்றும் இறையரசை இறுதியாக நிறுவுதல் ஆகியப் பணிகளை மேற்கொள்வார். வழிபாடு 2வது நூற்றாண்டின் கிறிஸ்தவ பொதுயிட வழிபாட்டைக் குறித்து ஜஸ்டின் மார்டையர் பேரரசர் அன்டோனியசு பையசுக்கு வழங்கிய முதல் மன்னிப்புக் கோரல் உரையில் கூறியுள்ளது இன்னமும் பொருந்துகின்றது. அதன்படி இயேசு உயிர்த்தெழுந்த ஞாயிறன்று நகரத்திலுள்ள அல்லது நாட்டிலுள்ள அனைவரும் ஒன்று கூடி ஏசுவின் சீடர்கள் அல்லது தேவதூதர்களின் நினைவுக்குறிப்புக்களையும் போதனைகளையும் படிக்கக் கேட்கின்றனர்;படித்து முடித்த பிறகு கூட்டத்தலைவர் கேட்டோர் அனைவரையும் கேட்ட நல்ல விழுமியங்களை கடைபிடிக்கக் கோருகின்றார்; பிறகு அனைவரும் எழுந்து தொழுகின்றனர்; தொழுது முடிந்த பின்னர் ரொட்டி, வைன், நீர் கொணரப்படுகின்றது; கூட்டத்தலைவர் மற்றவர்களைப் போலவே தொழுது நன்றி நவில்கிறார்; அவரது நன்றி நவில்கையை ஏற்று அனைவரும் ஆமென் எனக் கூறி ஒப்புமை வழங்குகின்றனர்; நன்றி கூறப்பட்டப் பொருட்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகின்றது; வராதவர்களுக்கும் உதவிக்குருமார்களால் அனுப்பப்படுகின்றது; செல்வம் படைத்த, விருப்பம் உள்ளவர்கள் தங்களுக்கு இயன்றத் தொகையை தலைவருக்கு அளிக்கின்றனர்; இதனைக் கொண்டு அனாதைகள்,விதவைகள்,உடல்நலிந்தோர் மற்றும் உதவித் தேவைப்படுபவர்களுக்கு வேண்டியனவற்றைச் செய்கின்றார் —ஜஸ்டின் மார்டையர்[18] ஜஸ்டின் கூறியவாறே, கிறிஸ்தவர்கள் ஞாயிறன்று கூட்டு வழிபாட்டிற்காக கூடுகின்றனர்; இதற்கு வெளியேயும் வழிபாடுகள் நடத்தப்படுவதுண்டு. பழைய, புதிய ஏற்பாடுகளிலிருந்து சில பகுதிகள், குறிப்பாக நற்செய்தி விவரங்கள், தொகுக்கப்பட்டு வாசிக்கப்படுகின்றன. இவை வருடாந்திர சுழற்சியில் வருமாறு லெக்சனரி என்ற நூலாக தொகுக்கப்படுகின்றது. இவற்றிலிருந்து வழிகாட்டும் விரிவுரை, செர்மன், வழங்கப்படுகின்றது. கூட்டு விழிபாட்டின்போது பல வகையான கூட்டு செபங்கள் நடத்தப்படுகின்றன: நன்றி அறிவித்தல், ஒப்புகை, துன்புற்றோருக்காக இரங்கல் ஆகியன; மேலும் வேண்டுதல்கள் ஓதியோ, எதிர்வினை ஆற்றியோ, மவுனமாயிருந்தோ பாடியோ வெளிப்படுத்தப்படும். அடிக்கடி கிறிஸ்து கற்பித்த செபம் நடத்தப்படுகின்றது. சிலக் குழுக்கள் இந்த வழமையான திருச்சபை கட்டமைப்புக்களிலிருந்து மாறுபடுகின்றனர். பெரும் முறையொழுங்கு, சடங்குகளைப் பேணும் "உயர் திருச்சபை" என்றும் "தாழ்ந்த திருச்சபை" என்றும் சேவைகள் பிரிக்கப்படுகின்றன. இவற்றினுள்ளும் வழிபாட்டு வடிவங்களில் பல்வேறு பிரிவினைகள் உள்ளன. ஏழாம் நாள் வருகை சபையோர் சனிக்கிழமை கூடுகின்றனர்; வேறுசிலர் வாரமொருமுறை கூடுவதில்லை. பெந்தகோஸ்து சபை இயக்கம் போன்றவற்றில் திருக்கூட்டங்கள் தூய ஆவியினால் தன்னிச்சையாகத் தூண்டப்பட்டு நடத்தப்படுகின்றன; முறையான நிகழ்ச்சித் திட்டத்தை இவர்கள் வரையறுப்பதில்லை. நண்பர்களின் சமய சமூகத்தில் தூய ஆவியால் பேசத் தூண்டப்படும்வரை அமைதியாக உள்ளனர். சில சீர்திருத்தச் சபை அல்லது லூத்தரன் சேவைகள் நடனம், பல்லூடகங்களுடன் ராக், பாப் இசைக்கச்சேரிகளைப் போல அமைகின்றன. பாதிரிமார்களுக்கும் வழமையான நம்பிக்கையாளர்களுக்கும் வேறுபாடில்லாத குழுக்களில் வழிபாட்டுக் கூட்டங்களை மினிஸ்டர் அல்லது ஆசிரியர் அல்லது பேஸ்டர் நடத்துகின்றனர். மேலும் சிலருக்கு தலைமையாளர்கள் எவருமில்லாதிருப்பர். சில திருச்சபைகளில், மரபுப்படியோ கொள்கைப்படியோ, இசைக்கருவிகளில்லாத தனித்துவமான இசை (அ கேப்பெல்லா) பயன்படுத்தப்படுகின்றது. திருவருட் சாதனங்கள் "கிறிஸ்துவால் ஏற்படுத்தப்பட்டு, திருச்சபையிடம் ஒப்படைக்கப்பட்ட இறை வாழ்வில் நமக்குப் பங்களிக்கும் பயன்மிகு அருளின் அடையாளங்கள் ஆகும். வெளிப்படையாக கொண்டாடப்படும் அருட்சாதன வழிபாடுகள், அருட்சாதனங்கள் வழியாக வழங்கப்படும் அருளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன. அருட்சாதனங்களைப் பெறுவோரின் விருப்பத்துக்கு ஏற்ப, அவை அவர்களில் கனி தருகின்றன."[19] மூன்று புகுமுக அருட்சாதனங்கள், இரண்டு குணமளிக்கும் அருட்சாதனங்கள், இரண்டு பணி வாழ்வின் அருட்சாதனங்கள் என மொத்தம் ஏழு அருள்சாதனங்கள் கத்தோலிக்க திருச்சபையில் வழங்கப்படுகின்றன. சாக்ரமென்ட் என அழைக்கப்படும் இச்சொல் இலத்தீனிய வேரான சாக்ரமென்டம் என்பதிலிருந்து வந்துள்ளது; இதற்கு மர்மம் எனப் பொருள் கொள்ளலாம். எந்தச் சடங்குகள் திருவருட் சாதனங்கள் என்பதிலும் எந்த செயல்கள் திருவருட்சாதனமாக கருதப்படலாம் என்பதிலும் கிறிஸ்தவப் பிரிவுகளும் மரபுகளும் வேறுபடுகின்றன.[20] மிகவும் மரபார்ந்த வரையறையின்படி உட்புற அருளை வழங்கும் இயேசுவினால் நிறுவப்பட்ட வெளிப்புறச் சின்னமே திருவருட்சாதனமாகும். மிகப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இரு திருவருட்சாதனங்கள் திருமுழுக்கும் நற்கருணையும் ஆகும். பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் மேலும் ஐந்து திருவருட்சாதனங்களை அங்கீகரித்துள்ளனர்: உறுதி பூசுதல் ( மரபுவழி வழமையில் கிறிஸ்துவாக்கம்), குருத்துவம், ஒப்புரவு, நோயில் பூசுதல், திருமணம்.[20] நற்கருணை வழங்கும் பாதிரியார் சிசு திருமுழக்கு உட்பிரிவுகள் கிறிஸ்தவம் பல உட்பிரிவுகளையும் வழக்குகளையும் திருச்சபைகளையும் கொண்டது. இவை இடத்துக்கும் கலாச்சாரத்துக்கும் ஏற்றபடி வேறுபடும் சமயக் கோட்பாடுகளை(doctrine) கொண்டுள்ளன. 2001 ஆண்டு உலகக் கிறிஸ்தவ கலைக்களஞ்சியத்தின் படி உலகம் முழுவதும் சுமார் 33,830 கிறிஸ்தவப் பிரிவுகள் உள்ளன. சீர்த்திருத்தத்துக்குப் பிறகு கிறிஸ்தவம் பிரதான மூன்று பிரிவுகளாகப் பிரிந்ததாக கொள்ளப்படுகிறது. உரோமன் கத்தோலிக்கம் உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையானது கிறிஸ்தவத்தின் மிகப்பெரிய உட்பிரிவாகும். இது சில கிழக்கு கத்தோலிக்கத் திருச்சபைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மொத்தமாக 1.2 பில்லியன் திருமுழுக்கு பெற்ற விசுவாசிகளை கொண்டுள்ளது. கிழக்கு கிறிஸ்தவம் இது கிழக்குப்பகுதி (ஒரியன்டல்) மரபுவழி, கிழக்கு ஆசிறியன், கிழக்கு மரபுவழி (மேற்கு மரபுவழி திருச்சபை உற்பட) திருச்சபைகளைக் கொண்டுள்ளதோடு மொத்தம் 300 மில்லியன் ஞானஸ்நானம் பெற்ற விசுவாசிகளை கொண்டுள்ளது. சமய சீர்த்திருத்த வாதம் அல்லது புரடஸ்தாந்தம் இதில் பல உட்பிரிவுகள் காணப்படுகின்றன. அங்கிலிக்கன், லூதரன், Reformed, ஆவிக்குரிய(Evangelical), Charismatic, Presbyterians, Baptists, மெதோடிஸ்த, Nazarenes, Anabaptists, பெந்தகோஸ்தே போன்றவை பிரதானமானவையாகும். முதன் முதலாக 16 ஆம் நூற்றாண்டில் இச்சபைகள் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து பிரிந்தன. இவர்கள் தங்களை கிறிஸ்தவரென்றோ மீளப் பிறந்த கிறிஸ்தவரென்றோ அழைக்கின்றனர். அங்கிலிக்கன் மற்றும் புதிய-லூதரன்(Neo-Lutheranism) திருச்சபைகள் 592-650 மில்லியன் விசுவாசிகளை கொண்டுள்ளன. மற்றைய திருச்சபைகள் சுமார் 275 மில்லியன் விசுவாசிகளை கொண்டுள்ளன. ஆங்கிலிக்கம் ஆங்கிலிக்கம் என்பது கிறிஸ்தவத்தின் ஒரு முக்கியப் பிரிவு மற்றும் வரலாறுமிகு பாரம்பரியமாகும். சர்வதேச ஆங்கிலிக்க ஒன்றியத்தில் இணைந்துள்ள திருச்சபைகளின் போதனையும் உபதேசமும் ஆங்கிலிக்கம் என்னப்படலாம். இவையாவும் இங்கிலாந்து திருச்சபை, அதின் வழிப்பாடு மற்றும் தேவாலய அமைப்பைப் பின் தொடருகிறன. மக்கள்தொகையியல் ஏறத்தாழ 2.4பில்லியன் பின்பற்றுவோரை,[22][23][24][25] கத்தோலிக்கம், சீர்திருத்தத் திருச்சபை, ஓர்த்தொடாக்சு என்ற 3 முதன்மைப் பிரிவுகளில் கொண்டுள்ள கிறிஸ்தவம் உலகின் மிகப் பெரும் சமயமாகும்.[26][27] கடந்த 100 ஆண்டுகளாக உலக மக்கள்தொகையில் கிறிஸ்தவர்கள் ஏறத்தாழ 33% ஆக உள்ளனர்; அதாவது புவியில் மூன்றில் ஒருவர் கிறிஸ்தவராவார். ஆனால் இப்பரம்பலில் ஓர் பெரும் மாற்றம் மறைந்துள்ளது; வளரும் நாடுகளில் உயர்ந்து வருகையில் (ஏறத்தாழ நாளுக்கு 23,000 பேர்) வளர்ச்சியடைந்த நாடுகளில், குறிப்பாக ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும், குறைந்து வருகின்றது (ஏறத்தாழ நாளுக்கு 7,600 பேர்).[28] ஐரோப்பா, அமெரிக்காக்கள் மற்றும் தெற்கு ஆபிரிக்காவில் கிறிஸ்தவம் இன்னமும் முதன்மையான சமயமாக உள்ளது. ஆசியாவில் சியார்சியா, ஆர்மீனியா, கிழக்குத் திமோர், பிலிப்பீன்சு நாடுகளில் முதன்மையான சமயமாக உள்ளது. இருப்பினும், இது வடக்கு அமெரிக்கா, மேற்கு அமெரிக்கா[29] ஓசியானா (ஆத்திரேலியா, நியூசிலாந்து), பெரும் பிரித்தானியா உள்ளிட்ட வடக்கு ஐரோப்பா,[30] எசுக்காண்டினாவியா), பிரான்சு, செருமனி, கனடிய மாநிலங்களான ஒன்ராறியோ, பிரிட்டிசு கொலம்பியா, கியூபெக், ஆசியாவின் பகுதிகளான (குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள் -மதமாற்றங்களினால்),[31][32][33] தென்கொரியா,[34] சீனக் குடியரசு,[35] மக்காவு[36]) உள்ளிட்ட பல பகுதிகளில் குறைந்து வருகின்றது. உசாத்துணை வெளி இணைப்புகள் பகுப்பு:கிறிஸ்தவம்
கிறிஸ்தவ மதத்தில் எத்தனை குழுக்கள் உள்ளன?
3
1,553
tamil