text
stringlengths
18
373k
கருத்தில் வேற்றுமையா கொள்கையில் வேற்றுமையாக என்று சிந்தித்தாலே போதும் இரு தரப்பாரிடையிலும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பதும் ஏன் மாறுபாடு என்பதும் தெளிவாகிவிடும் ஆனால் இந்த அரசியல்வாதிகள் நானும் ஓர் அரசியல்வாதி என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன் மட்டும் ஏனோ அந்த இடத்திற்குப் போவதில்லை கருத்து வேற்றுமை என்ற இடத்திலிருந்து தொடங்கி கொள்கை வேறுபாடு என்ற முடிவில் கொண்டு செல்லத்தான் விரும்புவார்கள் எனக்கேற்படுத்தப்பட்ட சோதனையும் வேதனையும் தனிப்பட்ட ஒரு தனி மனிதனுக்குத் தரப்பட்டவையல்ல அமரர் அண்ணாவின் கொள்கைக்கு ஏற்படுத்தப்பட்ட அக்னிப் பரீட்சை ஆகும் உங்கள் கருத்துக்களை பகிர எம் ஜி ஆர் சுயசரிதை கண்ணதாசன் பதிப்பகம் மன்னிக்கவும் பிரதிகள் மட்டுமே உள்ளன நான் ஏன் பிறந்தேன் பாகம் ஆசிரியர் எம் ஜி ஆர் விலை ரூ புத்தகம் பற்றி ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் சொன்னவர் அண்ணா செய்தவர் எம் ஜி ஆர் கருத்தில் வேற்றுமையா கொள்கையில் வேற்றுமையாக என்று சிந்தித்தாலே போதும் இரு தரப்பாரிடையிலும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பதும் ஏன் மாறுபாடு என்பதும் தெளிவாகிவிடும் ஆனால் இந்த அரசியல்வாதிகள் நானும் ஓர் அரசியல்வாதி என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன் மட்டும் ஏனோ அந்த இடத்திற்குப் போவதில்லை கருத்து வேற்றுமை என்ற இடத்திலிருந்து தொடங்கி கொள்கை வேறுபாடு என்ற முடிவில் கொண்டு செல்லத்தான் விரும்புவார்கள் எனக்கேற்படுத்தப்பட்ட சோதனையும் வேதனையும் தனிப்பட்ட ஒரு தனி மனிதனுக்குத் தரப்பட்டவையல்ல அமரர் அண்ணாவின் கொள்கைக்கு ஏற்படுத்தப்பட்ட அக்னிப் பரீட்சை ஆகும் தமிழ்ப் புத்தகங்கள் எழுத்தாளர்கள் பதிப்பகங்கள்
உலகில் தோன்றிய அனைத்து உயிர்களும் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அறிவினைக் கொண்டு தன்னளவில் சிந்திக்கும் ஆற்றல் உடையன இந்த வரிசையில் பரிணாமம் அடைந்த ஆதி மனிதனும் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அறிவினைக் கொண்டு சிந்திக்கத் துவங்குகின்றான் தனக்குத் தோன்றிய சிந்தனையின் மூலம் உருவாகிய கருத்தை முதலில் தானே தன்னிடம் ஒரு மொழி மூலம் தனக்குள்ளேயே தெரிவிக்கின்றான் இதுவே தொடர்பியல் என்றழைக்கப்படுகிறது பிறகு தன்னோடு இருக்கும் மற்ற மனிதர்களிடம் அதைப் பகிர்கிறான் மனிதரல்லாத தான் வளர்த்துப் பழகும் உயிரினங்களிடம் உரையாடி அந்த உரையாடல் மூலமும் கூறுகிறான் அவனிடம் பழகி வளரும் உயிரினங்களும் அவன் தெரிவித்ததைத் தான் உணர்ந்து கொண்டதைத் தனது மொழியில் அவனுக்குத் தெரிவிக்கின்றன தனது சிந்தனையை கருத்தை நாளடைவில் அவன் ஒரு சிறிய கூட்டத்திற்கோ அல்லது ஒரு பெரும் கூட்டத்திற்கோ வழங்குகிறான் இங்கு தனக்குத் தெரிந்ததை சில நேரம் நேரடியான கருத்துகளாகவும் சில நேரம் அதைக் கதைகளாகவும் திரித்துக் கூறுகிறான் அந்தக் கதைகள் சில நேரம் கற்பனையின்றி உண்மையாக இருக்கவும் கூடும் சில நேரம் கற்பனையான புனைவாகவும் இருக்கக் கூடும் எது எவ்வாறாக இருப்பினும் அவனது கருத்தை அல்லது கதையைக் கேட்பவர்கள் மனம் அவன் கூறும் முறையில் கவனம் பெறுகிறது பொதுவாகத் தொடர்பியலில் சில ஆய்வுகள் மூலம் உருவான கோட்பாடுகளின் படி கீழ் காணும் வகைகள் உள்ளன தனக்குள் தோன்றிய கருத்தைக் குறித்துத் தானே சிந்தித்து உரையாடுதல் தனக்குள் தோன்றிய கருத்தைக் குறித்து இன்னுமொரு சக மனிதரிடம் உரையாடுதல் தனக்குள் தோன்றிய கருத்தைக் குறித்து மனிதரல்லாத உயிரினத்துடன் தனித்துவமான மொழியுடன் உரையாடுதல் தனக்குள் தோன்றிய கருத்தைக் குறித்து ஒரு சிறிய கூட்டத்தினருடன் உரையாடுதல் தனக்குள் தோன்றிய கருத்தைக் குறித்து ஒரு பெருங்கூட்டத்தினருடன் உரையாடுதல் தனது சிந்தனையில் தோன்றியதைக் கருத்தாக மட்டுமே கூறுபவர் ஒரு வகை என்றால் அதைப் புனைவாக்கி கதையாகக் கூறுவோரும் உளர் என்று பார்த்தோம் கதையாக உருவாக்கி சொல்வதைக் கலையாக்குவதால் அவர் கதை சொல்லும் கதை சொல்லியாக கலைஞராக மாறுகிறார் இந்த நிலையில் மேற்கூறியத் தொடர்பியலின் வகைகள் உள்ளது போலத் தொடர்பியலை இன்னுமொரு வகையில் அணுகலாம் அதில் மிக முக்கியமானது எனும் வகை அதாவது அனுப்புநர் கருத்து தகவல் ஊடகம் பெறுநர் தனது கருத்தை நேரடியாகக் கூறுபவர்களுக்கு தாம் என்ன கூறுகிறோம் அதை எப்படிக் கூறுகிறோம் எந்த ஊடகத்தின் வழியே யாருக்கு கூறுகிறோம் என்பது மிகவும் முக்கியம் அந்த ஊடகம் பற்றிய புரிதல் இருந்தால்தான் தனது கருத்து தன்னிடமிருந்து அந்த ஊடகத்தின் மூலம் சென்று கருத்தினைப் பெறுபவரைச் சரியாகச் சென்றடையும் இதே பார்வை கருத்தைக் கலையினுள் நுழைத்துக் கூறும் கலைஞர்களுக்கும் வேறொரு வகையில் முக்கியமானதாகப் படுகிறது இங்கு ஊடகம் என்பது எந்தக் கலை வடிவத்தில் கூறப்படுவது என்பதாகும் உதாரணமாக ஒரு ஓவியன் தனது கருத்தை வண்ணங்களாலும் கோடுகளாலும் தான் வரைவதின் மூலம் அதாவது ஓவியம் எனும் காட்சி ஊடகத்தின் வழி பெருநரைச் சென்றடைவதைக் கூறலாம் இதையே ஒரு கதை சொல்லி தனது கருத்தை தான் சொல்லும் கதையின் வழியே வாய்மொழியின் மூலம் செவி வழி கேட்டல் எனும் ஊடகத்தின் வழி பெருநரைச் சென்றடைவதைக் கூறலாம் இறுதியாக ஒரு எழுத்தாளன் தனது கருத்தை தான் எழுதும் கவிதை வழியே சிறுகதையின் வழியே புதினத்தின் வழியே வாசிப்பு எனும் ஊடகத்தின் வழி பெருநரைச் சென்றடைவதையும் கூறலாம் இப்படியாக ஓவியம் கதை சொல்லுதல் இசை சிற்பம் நாடகம் இலக்கியம் புகைப்படம் என்று எண்ணற்ற கலை வடிவங்கள் உள்ளன இந்தக் கலை வடிவங்கள் எவ்வளவு முக்கியமானதோ அது போலவே மிகவும் முக்கியமான ஆழமான தாக்கத்தைத் தரும் கலை வடிவம் சினிமா ஓவியமும் புகைப்படமும் அசையாத ஒரு பிம்பத்தினைக் கொண்ட கலை வடிவங்கள் ஆனால் சினிமா என்பது அசையும் காட்சிகளை அசையும் பிம்பங்களைக் கொண்ட கலை வடிவம் இந்த சினிமாவில் அசைவு என்பதே பிரதானச் செயல் ஒன்று சட்டகம் அசைய வேண்டும் அல்லது சட்டகத்தினுள் இருக்கும் கதாபாத்திரங்கள் அசைய வேண்டும் இப்படி இரண்டும் ஒன்றுக்கொன்றோ ஒன்றல்லது இன்னொன்றோ அசைவு பெற காட்சிகள் உயிர் பெறும் நாம் குறிப்பிட்ட ஓவியம் கதை சொல்லுதல் இசை சிற்பம் நாடகம் இலக்கியம் புகைப்படம் என்ற அனைத்துக் கலை வடிவங்களும் ஒன்றாகப் பிணைந்து கூட்டுக்கலையாகும் வாய்ப்பையும் சினிமா உருவாக்குகின்றது கூட்டுக்கலையே ஆனாலும் சினிமாவின் மொழி என்பது அசையும் காட்சிகளால் அசையும் பிம்பத்தினால் ஒரு கருத்தைக் கூறுவது அதாவது மேலே குறிப்பிட்டது போல ஒரு அனுப்புனர் ஒரு கதையின் வழி தனது கருத்தைக் காட்சி ஊடகத்தின் மீது பெருநருக்கு அனுப்புவது இந்தக் கருத்தைக் கலையின் வழி பார்க்கும்போது உள்ளடக்கம் என்று கூறலாம் ஒரு தகவல் கருத்து கதையை பெருநருக்கு வழங்கும் அனுப்புநருக்கு படைப்பாளிக்கு என்ன சொல்கிறோம் அதை எப்படிச் சொல்கிறோம் என்ற புரிதல் அவசியமாகிறது என்ன சொல்கிறோம் என்பது உள்ளடக்கமாகவும் அதை எப்படிச் சொல்கிறோம் என்பது வடிவமாகவும் அமைகிறது இந்த சினிமா எனும் கலையில் வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் தொடர்ந்து பேசி வந்த ஒரு முக்கிய இயக்குநர் பாலு மகேந்திரா விரைந்து பரபரப்பாக ஓடோடி இயங்கிக்கொண்டிருக்கும் மனிதனுக்குக் கலையும் இலக்கியமுமே நிதானத்தையும் அதனூடே ஒரு ஆழ்ந்த மௌனத்தையும் பெற்றுத் தருகிறது இன்றைய சமூக ஊடகங்களின் தாக்கங்கள் பெருகிவிட்ட சூழலில் எப்பொழுதும் ஏதோ ஒரு வகையில் மனிதனின் மனம் கிளர்ச்சியூட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது மனிதனுக்கு நிதானமும் மௌனமும் எட்டாக்கனியாகின்றது எப்பொழுதும் ஏதோ ஒரு உணர்ச்சியின் பால் சிக்கிக்கொண்டிருக்கும் அவனை அந்த மௌனமே அந்த நிதானமே உணர்ச்சியின் பிடியில் இருந்து வெளிக்கொணரச் செய்து அவனை சமநிலைக்குக் கொண்டு வருகிறது அவன் சமநிலைக்கு வந்ததும் சிந்திக்கத் துவங்குகிறான் இந்த நிதானத்தை மௌனத்தை இலக்கியம் செய்து கொண்டிருப்பது போல் நல்ல சினிமாவில் உள்ள மௌனம் செய்யும் அதைத்தான் பாலு மகேந்திரா செய்ய முயற்சித்தார் பாலு மகேந்திராவின் வருகைக்குப் பின்னரே தமிழ் சினிமாவில் அடர் மௌனத்தின் குரல் உரக்கக் கேட்டது அது வரை வசனங்களால் பார்வையாளனுக்கு தனது கருத்தை வானொலி நாடகம் போல பிரச்சாரமாக்கிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவில் சினிமாவைக் கல்வியாக அணுகி அதன் திரைமொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பார்வையாளனுக்கு நாமே எல்லாவற்றையும் வசனங்களால் விளக்கத் தேவையில்லை அந்தக் காட்சியைப் பார்த்தே அவனால் சிந்தித்து உணர்ந்து விட முடியும் என்று முயற்சித்தார் பாலு பூனே திரைப்பட கல்லூரியின் ஒளிப்பதிவுத் துறையில் மூன்று வருடப் படிப்பை ல் முடித்து உதவி ஒளிப்பதிவாளராக யாரிடமும் வேலை பார்க்காமல் ல் ஒளிப்பதிவாளராகத் தன் பயணத்தை அவர் துவக்குகிறார் முதல் படம் மேனன் இயக்கிய பணிமுடக்கு எனும் மலையாள மொழிப்படம் ல் ராமு காரியத்தின் இயக்கத்தில் வெளிவந்த நெல்லு திரைப்படத்திற்கு கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது பெறுகிறார் முதல் வரை ஐந்து வருடங்கள் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார் இந்த ஐந்து வருடங்களுக்குள் பெரும்பாலான மலையாளப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியதால் மூன்று முறை கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதைப் பெறுகிறார் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆந்திர அரசின் விருதும் இரண்டு முறைப் பெறுகிறார் ஐந்து வருடங்களில் படங்ளுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிவிட்டு ல் தமது முதல் படமான கோகிலா எனும் கன்னட மொழித் திரைப்படத்தினைத் துவக்கும் பணியில் இறங்குகிறார் அதன் கதை திரைக்கதை உரையாடல் இயக்கம் ஒளிப்பதிவு மற்றும் படத் தொகுப்பு ஆகியவற்றை அவரே செய்கிறார் சலீல் செளத்ரி இசையமைக்கிறார் சிறந்த திரைக்கதையாளருக்கான கர்னாடக அரசின் விருதும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதும் கோகிலா படத்திற்காக அவர் பெறுகிறார் கோகிலா கன்னட மொழியிலேயே சென்னையில் நாட்கள் ஓடி வியாபார வெற்றியைப் பெறுகிறது கோகிலாவை அடுத்து ஒரு தமிழ்ப் படம் செய்ய விரும்பியவர் தமது இயக்கத்தில் வரும் முதல் தமிழ்ப் படத்தில் தமது சிறு வயது பால்யத்தைப் பதிவு செய்வதென்று முடிவு செய்கிறார் அழியாத கோலங்கள் ஆரம்பமாகிறது இந்தச் சமயத்தில் தமிழ் சினிமாவில் வசனகர்த்தாவாக இருந்த மகேந்திரன் அவர் இயக்க இருக்கும் முதல் படத்திற்க்கு ஒளிப்பதிவு செய்யவேண்டும் என்று பாலு மகேந்திராவை அணுகிக் கேட்கிறார் கல்கியில் வெளிவந்த உமா சந்திரனின் முள்ளும் மலரும் என்ற நாவலைத் தான் மகேந்திரன் படமாக்க விரும்புவதாகவும் தெரிவிக்கின்றார் இயல்பிலேயே தீவிர இலக்கிய வாசிப்பாளராக இருந்த பாலு மகேந்திரா படித்தது புனே திரைப்படப் பள்ளியில் அதனாலேயே ஒரு எழுத்து வடிவத்தில் உள்ள ஒரு படைப்பை எப்படிக் காட்சி வடிவமாக உருவாக்க வேண்டும் என்ற அடிப்படைப் பயிற்சியை அவர் பெற முடிந்தது அதுமட்டுமல்லாமல் அங்கிருந்து வெளியே வந்த அவர் பணியாற்றிய சில மலையாளப் படங்களும் இலக்கியத்தில் இருந்து எடுத்தாளப்பட்டது சினிமா எனும் கலையின் வடிவத்தை நன்கு உணர்ந்தவருக்கு இலக்கியத்தைச் சார்ந்தோருடன் சேர்ந்து பணி புரியும் நல்வாய்ப்பும் கிடைக்கிறது சினிமாவையும் இலக்கியத்தையும் எந்தப் புள்ளியில் இணைப்பது எங்கு வெவ்வேறாகப் பிரிப்பது என்ற நுண்ணியப் புரிதலை அவர் தரிசிக்கிறார் அண்ணன் தங்கை உறவை உணர்வு பூர்வமாகச் சொன்ன நாவல் முள்ளும் மலரும் அதைக் கல்கியில் வெளியான போதே அவர் வாசித்திருக்கிறார் மகேந்திரனுக்கு இது முதல் படம் வசனகர்த்தாவான அவர் அதற்கு முன் உதவி இயக்குனராகப் பணியாற்றியோ அல்லது ஒரு திரைப்படப் பள்ளியில் பயின்றோ திரைப்பட இயக்கத்தைக் கற்றவரல்ல எனவே அவரது முதல் படத்தின் ஒளிப்பதிவாளர் என்ற வகையில் அவரது பொறுப்பும் ஈடுபாடும் அதிகரிக்கிறது முள்ளும் மலரும் ஒளிப்பதிவாளராக மட்டும் இல்லாமல் அதன் உருவாக்கத்தின் எல்லா நிலைகளிலும் தன்னை அர்ப்பணிக்கின்றார் முள்ளும் மலரும் திரைப்படத்தில் ஒரு காட்சி வெகு தூரத்தில் ஒரு வண்டி வருகிறது என்ன வண்டி யார் வருகிறார்கள் என்று வள்ளி பார்க்கிறாள் வெகு தூரத்தில் இருந்த வண்டி அருகே வருகிறது தனது காளி அண்ணன்தான் வருகிறான் என்பதை உணர்ந்து சிரிக்கிறாள் அண்ணன் வரும் வண்டியை நோக்கி ஓடுகிறாள் வண்டியும் அவளது திசை நோக்கி விரைகிறது வண்டியைக் குமரன் ஓட்ட காளி பக்கத்தில் அமர்ந்திருக்கிறான் மீண்டும் வள்ளி வண்டியை நோக்கி ஓடுகிறாள் வண்டி வந்து நிற்கிறது மீண்டும் வள்ளி ஓடுகிறாள் நிற்கும் வண்டி அருகே காளி இறங்கி நிற்கிறான் அதே சட்டகத்தில் அவனை நோக்கி வள்ளி ஓடுகிறாள் இப்பொழுது இடமிருந்து வலமாக காளி வள்ளியை நோக்கி நடந்து வருகிறான் வள்ளி காளியை நோக்கி வலமிருந்து இடமாக ஓடி வருகிறாள் சட்டகத்தின் மத்தியில் இருவரும் வந்து நிற்கின்றனர் காளியின் முகத்தில் புன்னகை ஒரு குழப்பத்திற்குப் பிறகு பிறக்கிறது வள்ளியின் முகத்திலும் ஒரு நிம்மதியான புன்னகை பிறக்கிறது காளியின் முகத்தில் புன்னகை மறையத் துவங்கி கண்களில் கண்ணீர் துவங்குகிறது வள்ளியும் ஒரு குழந்தை போல் தலை சாய்த்துப் புன்னகைக்கிறாள் காளியின் கண்களில் கண்ணீர் வந்தாலும் புன்னகைக்க முயல்கிறான் காளியை வள்ளி தனது கரங்கள் கொண்டு கட்டி அணைத்துக்கொள்கிறாள் வள்ளியைத் தனது கைகள் கொண்டு அணைக்க முடியாத காளியின் முகத்தில் வருத்தம் அதனோடு அவளது வலது கையைப் பார்க்கிறான் காளியைத் தனது இரு கரத்தால் கட்டி அணைத்த படி மகிழ்ந்து இருக்கும் வள்ளிக்கு இப்பொழுது ஒரு சிறிய தடுமாற்றம் காளியின் முகத்திலும் ஒரு தடுமாற்றம் வள்ளி காளியின் இடது கரத்தினைத் தடவித் தேடுகிறாள் மகிழ்ச்சி முகத்தில் முழுவதுமாக மறைந்து குழப்பமும் கேள்வியும் மிஞ்சுகிறது வருத்தத்துடன் காளியின் முகம் காளியை குழப்பத்துடன் பார்த்துக்கொண்டே இடது தோள் மீது கிடக்கும் சால்வயை நீக்கிப் பார்க்கிறாள் வள்ளி சால்வை கீழே விழுந்ததும் இடது கை இல்லாத காளி நிற்கிறான் இல்லாத அந்தக் கையைப் பார்த்து திகைத்து அழத்துவங்குகிறாள் வள்ளி இப்பொழுது இறுதியாக தனது ஒற்றைக் கரம் கொண்டே அவளை மார்போடு தலை சாய்த்து என்னடாச்சு ஒன்னுமில்லடா ஒன்னுமில்லடா என்று காளி வள்ளியை ஆற்றுப்படுத்துகிறான் இந்தக் காட்சியில் எங்கெங்கு என்று எந்த ஷாட் வைக்க வேண்டுமென்றத் தெளிவான காரணத்துடன் ஷாட் வைக்கப்பட்டிருக்கும் காரணங்கள் ஏதுமற்று ஒரு ஷாட் அமையக்கூடாது என்பார் பாலு ல் அவரது கவனம் எப்போதும் இருக்கும் யதார்த்த இயல்பு வாழ்க்கையில் இப்படி ஒரு சூழல் நடக்கும் பொழுது நிச்சயம் இப்படி வார்த்தைகளற்று நாம் கிடப்பது கிடையாது நிச்சயம் அழுது தீர்ப்போம் பல வார்த்தைகள் கொண்டு கதறுவோம் ஆனால் வாழ்க்கையை அப்படியே தத்ரூபமாகக் கண்ணாடி போலக் காட்டுவது கலையல்ல எடுத்துக்கொண்ட கலை வடிவத்தின் வழி அந்த சட்டகத்தினுள் உலவும் கதாபாத்திரங்களின் வாழ்க்கை எவ்வாறு சிருஷ்டிக்கப்படுகிறது என்பதே கேள்வி மேலே கூறிய சூழல் காட்சி வடிவத்தின் மூலம் எப்படி பார்வையாளனுக்கு ஒரு கலை அனுபவத்தைத் தருகிறது என்று அறிந்தோம் வெறும் ஒளிப்பதிவாளராக மட்டுமே பாலு மகேந்திரா இந்தப் படத்தில் பணியாற்றவில்லை என்பது இந்தக் காட்சியின் மூலம் புலனாகிறது இந்தச் சுதந்திரத்தை அவருக்கு அளித்த மகேந்திரனும் பாராட்டுக்குரியவர் இந்தக் காட்சியில் பார்வையாளனுக்குக் கடத்தப் பட வேண்டிய உணர்வை நடிப்பும் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் தனது பணியைச் சிறப்புறச் செய்து கடத்தினாலும் இதில் இசையின் பங்களிப்பும் மிகவும் அதிகம் மனிதனின் மனதை உணர்வு ரீதியில் உருகச் செய்வதில் இசைக்குப் பிரதான இடமுண்டு இசையை ஒரு காட்சிக்கு உபயோகிப்பது என்பது கத்தியின் மீது நடப்பதைப் போன்றது ஏனெனில் சற்று அதிகமாக இசையை உபயோகித்தால் அது சினிமா என்னும் கூட்டுக்கலை அனுபவத்தைக் கலைத்துவிடும் திரைப்படத்தில் அதன் திரைக்கதையே மிக முக்கியமான அம்சம் அதன் தேவையை ஒட்டியே எல்லாம் இருக்க வேண்டும் திரைக்கதையின் தேவைக்கு அப்பாற்பட்டு தன்னிச்சையாகச் செயல்படும் இசையோ ஒளிப்பதிவோ ஒலி அமைப்போ நடிப்போ அல்லது வேறு எதுவோ தனக்குத் தானே கவன ஈர்ப்பைக் கோரி நிற்குமே தவிர சம்பந்தப்பட்ட படத்தோடு ஒட்டாது என்று பாலு மகேந்திரா கூறியிருக்கிறார் திரைப்படங்களை இசையால் நிரப்பி வழிந்து போகும் காலகட்டத்தில் இசையை எப்படி சினிமாவுக்கான கலையாகக் கோர்ப்பது என்ற ஆழ்ந்த தெளிவு அவரிடம் இருந்தது இசை மட்டுமல்ல ஒளிப்பதிவு ஒலி அமைப்பு நடிப்பு படத்தொகுப்பு காட்சியின் வண்ணம் என எல்லாவற்றையும் பற்றிய கல்வி சார்ந்த அணுகுமுறை அவரிடம் இருந்தது பாலு மகேந்திரா அவர்களது என்ற உத்தியை இன்றும் பல இயக்குனர்கள் பின்பற்றுகிறார்கள் ஆனால் அவர்கள் பாடல் காட்சிகளில் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள் பாலு மகேந்திரா பாடல்களில் மட்டுமில்லாமல் கதையில் வரும் சம்பவங்களையே இயன்றவரை காண்பியல் மொழியில் எப்படிக் கூறலாம் என்று முயற்சித்தவர் அழியாத கோலங்கள் வீடு சந்தியா ராகம் போன்ற படங்களில் அதை நாம் பல இடங்களில் கவனிக்க இயலும் அவர் இருபதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இருந்தாலும் குறைந்தபட்ச சமரசங்களுடன் தான் இயக்கிய தன் மனதுக்கு நெருக்கமான படங்கள் என்று வீடு மற்றும் சந்தியா ராகம் படங்களை அவர் குறிப்பிடுவது யாவரும் அறிந்ததே சந்தியா ராகத்தில் ஒரு காட்சி துளசியின் சிறுமி வள்ளி துளசி மாடத்திற்கு தண்ணீர் கொண்டு வந்து உயரம் எட்டாமல் பாதங்களை உயர்த்தி நீரூற்றுவாள் அது வரை ல் இருக்கும் அவள் பாதங்களை உயர்த்தும் அந்த ஒரு நொடிக்கு மட்டும் சட்டென அவள் இரு பாதங்களுக்கு வைத்திருப்பார் இது போல காட்சிகளில் ஒரு கவித்துவத்தையும் பாலு மகேந்திராவால் உருவாக்க முடிந்தது இதே சந்தியா ராகம் திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் சொக்கலிங்கம் தனது மருமகளுக்கு குழந்தை பிறந்துள்ளது என்று அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வருவார் தனது மருமகள் துளசி எங்கிருக்கிறார் என்று மருத்துவரிடம் விசாரிக்கும் அந்தக் காட்சியில் ஒரு புல்லாங்குழல் மட்டுமே சன்னமாக மென்மையாகப் பின்னணியில் இசைந்து கொண்டிருக்கும் அதுவும் துளசியின் அருகில் சென்றதும் அந்தப் புல்லாங்குழலும் மௌனமாகிவிடும் குழந்தையைப் பார்த்துவிட்டு ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்று தெரிந்துகொள்ள குழந்தையின் அடிவயிற்றின் கீழே துணியை விலக்கிப் பார்ப்பார் பார்த்ததும் அவர் சிரிப்பார் துளசியும் சிரிப்பாள் ஆனால் அது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்று பார்வையாளர்களுக்குக் காட்டப்படுவதில்லை மகிழ்ந்த சொக்கலிங்கம் தன் ஆள்காட்டி விரலைக் குழந்தையிடம் நீட்ட அந்தக் குழந்தைத் தன் அனைத்துப் பிஞ்சு விரல்களையும் குவித்து அவரது ஆள்காட்டி விரலைப் பிடிக்கத் திரைப்படம் முடிகிறது இந்தக் காட்சியில் இசைக்கோர்ப்பு எதுவும் இல்லாமேலேயே குருவிகளின் கீச்சொலிகளை பின்ணனி ஒலி அமைப்பாகக் கோர்த்துப் படத்தினை நிறைவு செய்வார் பொதுவாக இதற்கு முந்தைய காட்சிக்கு இசை சேர்க்காமல் இந்தக் காட்சிக்கு இசை சேர்த்து படத்தினை நிறைவு செய்வது வழமையான ஒன்று ஆனால் சினிமா எனும் காண்பியல் மொழியின் தன்மையை உணர்ந்து இந்தக் காட்சியை இப்படி முடிப்பது பாலு மகேந்திராவால் சாத்தியப்பட்டது வீடு திரைப்படத்தி லும் இது போலப் பல உதாரணங்களை நம்மால் காண இயலும் ஒவ்வொரு ஷாட்டிலும் நாம் கற்றுக்கொள்ள நிறைய அடுக்குகள் உள்ளன எடுத்துக்காட்டாக சுதாவிடம் வீட்டு கான்ட்ராக்டரால் சிமெண்ட் மூட்டைக் களவு போகிறது என்று பேசும் காட்சி முதல் காட்சியில் மங்காவிடம் சுதா சிமெண்ட் மூட்டை திருடப்படுவதாகக் கூறும் பொழுது கேமிரா கோணங்களில் பெரிய மாற்றம் எதுவும் இல்லாமல் அவர்களது கண்களுக்கு நேராகத்தான் ல் இருக்கும் ஆனால் சுதா வாட்ச்மேனிடமும் காண்ட்ராக்டரிடமும் சண்டை போடும் பொழுது நீங்கலாம் எப்படி சம்பாதிக்கிறேன்னு எங்களுக்குத் தெரியாதா பெருசா கண்ணகி வேஷம் போடறியே என்று காண்ட்ராக்டர் கூறிய அந்தக்கணத்தில் மங்கா பெரும் கோபம் கொள்கிறாள் என்ன மட்டும் மாட்டி வுட்டுறாத கண்ணு பொயப்பு பூடும் என்று கான்ட்ராக்ட்ருக்காக பயந்து கூறியவள்தான் இபொழுது அவளுக்காக கான்ட்ராக்டரிடமே சினம் கொள்ளத்துவங்குகிறாள் கேமிரா ல் இருந்து சற்றே இறங்கி ல் அவளைக் காட்டுகின்றது விஸ்வரூபம் எடுக்கும் மங்காவை பார்வையாளர்கள் அண்ணாந்து பார்க்கின்றார்கள் ஒரு எளியவள் உயர்ந்த மனுஷியாக உயர்கிறாள் என்பதை ஒரு சிறிய கேமிரா கோணம் மாற்றிக் காட்டுகிறது பின்னணி இசை ஏதும் இல்லாமலேயே இந்தக் காட்சிக்குக் கிடைக்க வேண்டியதொரு தாக்கம் சிலிர்ப்புடன் கிடைக்கின்றது மற்ற சினிமாக்களிலும் ஒரு கதாபாத்திரத்தை மிகையாகக் காட்டவேண்டுமெனில் இல் தான் காட்டுவார்கள் ஆனாலும் அந்தக்குறிப்பிட்ட கோணம் பார்வையாளர்களுக்கு அந்தக் கதாபாத்திரத்தை மிகையாகக் காட்டுவது வெளிப்படையாகத் தெரியும் வண்ணம் வைக்கப்பட்டிருக்கும் ஆனால் இந்தக் காட்சியில் அந்தக்கோணம் கீழிலிருந்து வைக்கப்பட்டதே பார்வையாளர்கள் அறியாவண்ணம் பாலு காட்சிப்படுத்திருப்பார் ஒரு கதை திரைக்கதையாக மாறி அது சினிமாவாக உருமாறும் தருணமிது அழகியல் மட்டுமல்லாமல் தனக்குள்ள நெருக்கடியான அரசியல் சூழலிலும் பாலு மகேந்திரா தனது படைப்பின் மூலம் பேசிய அரசியலும் முக்கியமானது ஆண் பெண் உறவுச் சிக்கல்கள் பெண் அரசியல் என்று அவர் கதைகள் பேசின குறிப்பாக வீடு திரைப்படத்தில் வரும் மையக் கதாபாத்திரமான சுதாவின் நிலத்தை அரசின் குடிநீர் வாரியம் கைப்பற்றி அவர்கள் வீடு கட்டுவதைத் தடுத்து நிறுத்தி அரசு அதிகாரி உங்களுக்கு ஒரு தொகைய கொடுத்துட்டு அரசாங்கம் எடுத்துக்கும் என்று அமைதியாக வந்து தகவல் கொடுப்பார் இறுதியாக என்ன செய்வதென்றுத் தெரியாமல் சுதாவும் அவளது காதலன் கோபியும் பஞ்சாயத்து அலுவலகத்தில் அமர்ந்திருப்பார்கள் எளியவர்கள் மீது அரசு நடத்தும் பயங்கரவாதத்தின் வீரியத்தை அறிய அந்த ஒற்றை பிம்பம் போதும் இன்று திரைப்படங்கள் கொண்டாட்டத்திற்கும் கேளிக்கைக்கும் மட்டுமே உரியதாக மாறிவிட்ட சூழலில் தனக்கு மிகவும் பிடித்த நடிகரின் படத்தை முதல்நாள் முதல்காட்சி பார்க்கும்பொழுது உணர்ச்சியின் மிகுதியில் திரையரங்கின் வெளியே வந்து அந்தப் பேரன்பின் மிகுதியில் என்ன பேசுவேதென்று தெரியாமல் தன்னை மறந்து கொண்டாடித் தீர்க்கிறான் அவனில் பொங்கும் மிகுதியான உணர்ச்சிகள் அவனுள் சிறிது சிறிதாய் அமிழ்ந்த பின் தணிந்த பின் நீண்ட நேரம் கழித்து நிதானத்திற்கு வருகிறான் அதுவரை அவனுள் மறைந்திருக்கும் சிந்திக்கும் ஆற்றல் துளிர்க்கத் துவங்குகிறது அவன் கொண்டாடித் தீர்த்த படைப்பின் மீது கேள்விகள் பிறக்கிறது உணர்ச்சி வசப்பட்ட மனிதனாக இருந்தால் கேள்விகள் பிறந்தாலும் அவனுக்குப் பிடித்த நடிகனுக்காக அதைக் கேட்காமல் கடந்து செல்வான் ஆனால் ஒரு தேர்ந்த கலை படைப்பு என்பது அதன் கலை வடிவம் உள்ளடக்கம் குறித்து சிந்திக்க வைத்தால் அதன் மீது கேள்வி எழுந்தால் அது தான் பார்வையாளனையும் அடுத்த தளத்திற்கு நகர்த்தும் அவன் நகர்வது மட்டுமல்லாமல் அவனது கேள்விகளால் அவனது விமர்சனத்தால் அந்தப் படைப்பை உருவாக்கிய கலைஞனும் அடுத்த தளத்திற்கு நகர்வான் இது போன்ற சிந்தனைகளும் கேள்விகளும் விமர்சனங்களுமே பாலு மகேந்திரா தனது படைப்பின் மூலம் நிகழவேண்டும் என்று விரும்பினார் அதாவது இன் படி மூலம் க்கும் கருத்துகள் பரிமாற்றம் நடந்து ம் நகர்த்தப்பட வேண்டும் எழுத்தாளர் ச தமிழ்ச்செல்வன் அவர்களுடன் நடந்த ஒரு உரையாடலில் இலக்கியத்தில் இருந்து ஒரு நல்ல சினிமா எப்படி உருவாகிறது என்கிற கேள்விக்கு ஒரு நல்ல சிறுகதையோ நாவலோ அதை ஒரு மலர் மாலையாக நினைத்துக் கொண்டால் அதில் உள்ள எழுத்துகள் அல்லது சொற்களை எடுத்துவிட்டு அந்த நாரிலேயே காட்சிகளைக் கோர்ப்பேன் என்கிறார் பாலுமகேந்திரா நிச்சயம் சினிமா என்றால் அங்கு காட்சிகள் தான் முக்கியம் அதனால் இது ஒரு சாதாரண பதில் தானே என்று கடந்து விட முடியாது எப்படி ஒரு எழுத்தின் வலிமை அவ்வெழுத்துகள் கூடும் சொற்களின் வலிமை அச்சொற்கள் உருவாக்கும் வாக்கியத்தின் வலிமையை ஒரு எழுத்தாளன் நன்கு அறியக் கூடுமோ அதுபோல தனது க்ளோஸ் அப் மிட் ஷாட் வைட் ஷாட் பேனிங் டில்டிங் ஷாட்ஸ் லாங் ஷாட் அவைகளின் வலிமையை சினிமாவை காட்சி ஊடகமாக நன்கு உணர்ந்த இயக்குனர் அறிவார் பாலுமகேந்திரா எனும் கலைஞனுக்கு அந்தப் புரிதல் ஆழமாக உள்ளது இதழ் உள்ளடக்கம் மனிதர்கள் கோணங்களின் உண்மை அகிலன் லோகநாதன் யோஜிம்போ மெய்காப்பாளன் அகிலன் லோகநாதன் க்றிஸ்டோபர் கென்வொர்தி கதாபாத்திரம் கேமராவின் நகர்வை தீர்மானித்தல் தமிழில் தீஷா தியோ ஆஞ்சலோபொலோஸின் சினிமா அழகியல் யமுனா ராஜேந்திரன் அம்சவள்ளி உரையாடல் தொகுப்பு தினேஷ் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஸ்கார் வெற்றி சிறந்தப் படத்திற்கான ஆஸ்கார் விருதினை வென்ற முதல் படம் மூன்லைட் தமிழில் ம ரெங்கநாதன் டெல் டோரோவின் படங்கள் இடைநிறுத்தப்பட்ட வாழ்வின் தொடர்ச்சி யமுனா ராஜேந்திரன் அம்சவள்ளி உரையாடல் அம்சவள்ளி கினோ க்றிஸ்டோபர் கென்வொர்தி பதற்றத்தை அதிகரித்தல் தமிழில் தீஷா செய்திகளை பெற குழுசேரவும் பொறுப்பாசிரியர் எஸ் தினேஷ் உதவி ஆசிரியர் ரமேஷ் பெருமாள் பேசாமொழி பதிப்பகம் முந்தைய இதழ்கள் எதிர் வினைகள் பதிப்பித்த நூல்கள் நூல் விற்பனை கினோ கேமரா உயரத்தில் மாற்றம் மரியாவும் ஆட்டுக்குட்டியும் பெண்களின் தனித்து ஒதுங்கும் தனிமைப் போராட்டம் சமபாலீர்ப்பாளர் படங்கள் எடுப்பதில் உள்ள இடர்கள் கினோ அத்தியாயம் மூன்று அதிகாரத்திற்கான போராட்டங்கள் டைட்டன் சமூகக் கட்டமைப்பிற்கு அப்பால் மனிதநேயம் இருக்கிறதா பாலஸ்தீன சினிமா கடைசி எல்லைகளுக்கு அப்பால் நாங்கள் எங்கே செல்வோம் உலகைக் குலுக்கிய ரஷ்யப் புரட்சி ரெட்ஸ் யமுனா ராஜேந்திரனுடன் அம்சவள்ளி உரையாடல்
நாட்கள் நகர மழை காரணமாக பள்ளி விடுமுறை என அறிவிக்க ஜீவன்க்கு தவிர்க்க முடியாமல் வெளியூர் செல்லவேண்டிய வேலை இருப்பதால் ராமுவிடம் சொல்லிவிட்டு ஜீவாவை ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டான் மதியம் மணி வரை ஜீவா ஜீவி இருவரும் விளையாடிகொண்டிருந்தனர் பின் வாணி வந்து உடன் இருந்துவிட்டு சற்று நேரத்தில் ஜீவன் வந்துவிடுவான் என்பதால் ராமுவிடம் ஜீவாவை விட்டுவிட்டு ஜீவியை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாள் அவர்கள் சென்றபின் மழையில் ஜீவா விளையாட ராமு அவனை ஒரு வழியாக சமாளித்து உள்ளே அழைத்து வருவதற்குள் அவன் நன்றாக நினைந்துவிட்டான் மாலை ஏழு மணி ஆகியும் ஜீவன் வராமல் இருக்க ஜீவாவிற்கு காய்ச்சல் அடிக்க ராமு ஜீவனிற்கு கால் செய்தார் அவன் எடுக்காமல் போக என்ன செய்வது என புரியாமல் இவரோ விழித்துக்கொண்டிருக்க நிரு ராமுவிற்கு கால் செய்தாள் ஆ அப்பா ஜீவா என்ன பண்றான் சாப்பிட்டானா அவங்க அப்பா வந்திட்டாங்க தானே என விசாரிக்க ராமு அம்மாடி நல்லவேளைமா நீ போன் பண்ண ஜீவன் தம்பி இன்னும் வீட்டுக்கு வரல அவங்களுக்கு ஏதோ வேலைபோல போன் போட்டும் எடுக்கல ஜீவாக்கு உடம்பு சரி இல்லை சாயந்தரம் மழைல நினைஞ்சுட்டான் காய்ச்சலா இருக்கு இப்போவும் மழை பெய்யுது எப்படி ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறதுன்னு தான் தெரியாம முழிச்சிட்டு இருந்தேன்மா என அவர் கூறியதும் நிரு நான் உடனே அங்க வரேன்பா எந்த பிலோர் டோர் நம்பர் சொல்லுங்க நான் வரவரைக்கும் நீங்க ஜீவா கூட இருங்க என்றவள் வாணியிடம் கூறிவிட்டு ஜீவிதாவிடம் நீ ஆண்ட்டிகூட சமத்தா இருக்கனும் நான் போயி ஜீவாவ பாத்துட்டு வரேன் என்றவள் விரைந்து சென்றாள் ஜீவாவின் வீட்டை தட்ட ராமு திறந்ததும் எந்த அறை என கேட்டதும் ஓடிச்சென்று அவனை மடியில் ஏந்தினாள் ஜீவா என்ன மா என்ன பண்ணுது என அவள் தொட்டுப்பார்க்க அவனோ பாதி சுயநினைவில் அம்மா எனக்கு உடம்பெல்லாம் வலிக்கிது கண்ணு எரியுதுமா என்கூட இருங்க போகாதீங்க மா என அவளது இடுப்பை கட்டிக்கொண்டான் அவளோ சரிடா மா அம்மா உன்கூட இருக்கேன் ஹாஸ்பிடல் மட்டும் போயிட்டு வரலாம் என அவனை சமாதானப்படுத்தியவள் சற்றும் தாமதிக்காமல் வண்டிக்கு சொல்லிவிட்டு ராமுவிடம் அவனோட ஸ்வெட்டர் மட்டும் எடுத்து கொடுங்கப்பா நீங்க கதவை பூட்டிட்டு வாங்க நான் ஜீவாவை தூக்கிட்டு கீழ போறேன் வண்டி வந்திடும் என்றவள் துரிதமாக சென்றாள் அவனுக்கு வீசிங் வந்துவிட முற்றிலுமாக நிரு பதட்டமாகினாள் மருத்துவமனையில் அவனுக்கு டிரீட்மென்ட் பார்க்கும் போதும் இவளது கையை ஜீவாவும் விடவில்லை இவளும் சிறிதும் நகரவில்லை அவளின் பதட்டம் நெருக்கம் அனைவரும் அவள் தான் பெற்ற தாய் என எண்ணும் அளவிற்கு இருந்தது டாக்டர் வந்ததும் இவள் பதட்டமாக மேடம் என் பையனுக்கு என்னாச்சு நான் பாக்கலாமா என அவரோ ஒண்ணுமில்லமா கொஞ்சம் வீக்கா இருக்கான் ஃப்பீவர் அதோட வீசிங் வந்ததால ரொம்ப டையர்டு ஆகிட்டான் அதனால ட்ரிப்ஸ் போட்டிருக்கு இந்த ஒரு பாட்டில் முடிஞ்சதும் கூட்டிட்டு போயிட்டு கொஞ்சம் சாப்பிட வெச்சு தூங்க வெச்சுடுங்க டேப்லெட் மட்டும் நாள் எடுத்துக்கட்டும் என அனுப்பி வைத்தார் ஜீவாவை சென்று பார்த்தவளுக்கு கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை அது ஏன் வருகிறது என்ற பதிலும் இல்லை இருப்பினும் அவனது தலையை வருடி கொடுத்தவள் அவனுடனே இருந்தாள் சற்று பொறுத்து கிளம்பியதும் காரில் வீட்டிற்கு செல்லும் வழியிலும் ஜீவாவை தன் மடியிலேயே வைத்துக்கொண்டாள் ஜீவாவும் மா மா என அனத்திகொண்டே இருக்க நிரு சேலையை எடுத்து அவனுக்கு போர்த்திவிட்டு தன் கைக்குள்ளேயே வைத்துக்கொண்டாள் உடன் சென்று ராமுவிற்கே அவளை கண்டு பாவமாக இருந்தது ராமு அம்மாடி நீ வருத்தப்படாத மா ஜீவாக்கு சீக்கிரம் சரி ஆகிடும் நிரு சீக்கிரம் சரி ஆகிடணும் பாவம்பா பையன் எப்படி வாடிபோய்ட்டான் ஜீவாவை இப்டி பாக்க எனக்கு கஷ்டமா இருக்கு என புலம்பிகொண்டே தட்டிக்கொடுத்தாள் பின் ஜீவா என்கூடவே இருக்கட்டும் அவனை நான் பாத்துக்கறேன் நீங்களும் எங்ககூடவே வந்துடுங்க ஜீவாவோட அப்பா கால் பண்ணதுக்கு அப்புறம் நீங்க அங்க போய்க்கோங்கபா என்றாள் வாணியிடம் சொல்லிவிட்டு வீட்டிற்க்கு வந்ததும் ஜீவிதா ஓடி வர நிரு ஜீவி மா ஜீவாக்கு காய்ச்சல் சோ இன்னைக்கு அம்மா நம்ம ரூம்ல அவனை வெச்சு பாத்துக்கறேன் நீ சமத்தா வாணி ஆண்ட்டி கூட போயி தூங்குங்க சரியா ஜீவி நானும் ஜீவாகூட இருக்கேன்மா என்றாள் பாவமாக நிரு கூட இருந்தா உங்களுக்கும் காய்ச்சல் வந்துடும் அப்புறம் நாளைக்கு ஜீவா சரி ஆனதும் யார்கூட விளையாடுவான் சொல்லு என பேசி அவளை வாணியுடன் அனுப்பிவைத்தாள் ராமுவை ஹாலில் படுத்துக்கொள்ள அனைத்தும் எடுத்து கொடுத்துவிட்டு ஜீவாவிற்கு கஞ்சி செய்து அவனுக்கு கொஞ்சம் ஊட்டிவிட்டாள் அவ்வப்போது காய்ச்சல் குறைய ஈரத்துணியில் பத்து போட மாத்திரை தர என அவள் ஜீவாவை கவனித்துக்கொண்டே இருந்தாள் ராமு இவை அனைத்தையும் கவனித்துக்கொண்டே உறங்கிவிட்டார் விடியும் வேளையில் அவள் அடுத்தடுத்து வேலைகளை செய்துகொண்டிருக்க ராமு அம்மாடி நிரு நீ என்ன பண்ணிட்டு இருக்க என்னை எழுப்பிருக்கலாம்ல நீ தூங்கினியா இல்லையா என வினவ அவளோ புன்னகையுடன் இருக்கட்டும்பா நீங்களும் பாவம் நைட்டு தூங்காம முழுச்சிட்டுகுழந்தைங்க மட்டுமில்ல பா வயசானவங்களும் நேரா நேரத்துக்கு நல்லா தூங்கணும் அதான் உங்களை எழுப்பாம விட்டுட்டேன் குழந்தைகளுக்கு சாப்பிட ரெடி பண்ணிட்டேன் நமக்கு பண்ணிட்டு இருக்கேன் உணவு உண்ணும் போது இவள் ஜீவாவிற்கு ஊட்டிவிட ராமு ஜீவாவோட பெத்த அம்மா இருந்திருந்தா கூட இவளோ பாத்திருப்பாங்களா பதறுவாங்களானு தெரில நேத்து நீ ஆஸ்பத்திரில அழுதத பாத்ததும் ரொம்ப சங்கடமா போச்சுமா என அவர் கூறியதும் தான் நிருவிற்கு முன்தினம் முதல் தான் தன் நிதானத்தில் இல்லாமல் மிகவும் உணர்ச்சிவசப்படுவதும் அதன் காரணம் புரியாமல் தவிப்பதும் உரைத்தது அப்டியே அமைதியாகிவிட்டாள் ராமுவிற்கு ஜீவன் கால் செய்து பேசி விஷயம் அறிந்ததும் வீட்டிற்கு உடனே வருகிறேன் என கூறினான் ஆனால் என்ன நினைத்தாலோ நிரு இல்லைப்பா ஜீவாக்கு இப்போ ஓரளவுக்கு சரி ஆகிடுச்சு நீங்க அவனை வீட்டுக்கு கூட்டிட்டு போயி ரெஸ்ட் எடுக்க வைங்க ஜீவாவோட அப்பாவும் பாவம் வேலை முடிச்சிட்டு இப்போதான் வராரு அவரை இங்க அங்கன்னு அலைய வெக்க வேண்டாம் நானும் வேலைக்கு கிளம்புறேன் என்றாள் ராமுவும் எதுவும் தவறாக எண்ணாமல் அதுவும் சரி தான் மா ஜீவன் தம்பியும் பாவம்தான் எதுக்கு அலைச்சல் என ஜீவாவை அழைத்துக்கொண்டு சென்றார் வாணி அவர்கள் சென்றதும் நிரு உனக்கு என்னாச்சு காலைல தான் பேங்க் லீவு போடுறேன்னு சொன்ன இப்போ போறேங்கிற என்றவள் அவளது கலங்கிய கண்ணீரை பார்த்து பதறினாள் ஹே நிரு ஏன் அழுகற ஜீவாக்கு ஒன்னும் இல்ல அவன் சரி ஆகிட்டான் நீ ஏன் அவன் விஷயத்துல இவளோ எமோஷனல் ஆகுற நிரு அது தெரியாம தான் அழுகை வருது வாணி உன் பையன் நியாபகம் வந்திடிச்சா விடுமா அவனும் நல்லாதான் இருப்பான் நிரு ஜீவா அன்னைக்கு பேசுனத்துக்கு அப்புறம் உண்மையாவே எனக்கு ஒரு தடவ கூட என் பையன் என்ன பண்ணுவானோ எப்படி இருப்பானோன்னு தோணவேயில்லை ஜீவா தான் என் பையங்கிற மாதிரியே எனக்கு தோணஆரம்பிச்சிடிச்சு ஆனா இன்னைக்கு காலைல ராமு அப்பா சொன்னாரே அப்போதான் எனக்கு புரியுது நான் அவன் அம்மா இல்லை அவன் அப்டி பாக்குறான் கூப்படறான் அவ்ளோதான்னு இது எத்தனை நாளைக்கு நிலைச்சிருக்கு சொல்லு நான் இவளோ எமோஷனல் ஆகுறது அவன் வாழ்க்கைல எனக்கு ஒரு உரிமையை எதிர்பார்த்திருவேனோன்னு பயமா இருக்கு ஜீவா எதுவும் சொல்லமாட்டான் ஆனா அத அவங்க குடும்பத்துல ஏத்துக்கணும்ல அப்புறம் அவனை விட்டு விலக சொன்னாலும் என்னால அத பண்ணமுடியாது பாசம் காட்டி விலகி இருக்கறது ரொம்ப கொடுமையான விஷயம் அத நான் அவனுக்கு பண்ணக்கூடாது அத நினைச்சுக்கூட பாக்கமுடில அதான் கொஞ்சம் விலகி இருக்கறது நல்லதுனு யோசிச்சேன் என்றவள் பெருமூச்சுடன் நகர்ந்துவிட்டாள் வாணியும் யோசித்துகொண்டே நகர்ந்துவிட்டாள் ஜீவன் வந்ததும் ஜீவாவை சென்று பார்க்க நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான் காய்ச்சல் இல்லை பின் ஆசுவாசமாக வெளியே வந்தவனிடம் ராமு இப்போ அலுப்புல தான் தம்பி ஜீவா தூங்குறாப்பல நேத்து இருந்ததுக்கு காய்ச்சல் இல்லை எல்லாமே அந்த பொண்ணு தான் பாத்துக்கிச்சு என நடந்த அனைத்தையும் கூறினார் விஷயம் அறிந்து வந்த வாசுவிடமும் ராமு மீண்டும் ஒரு முறை சளைக்காமல் நிருவை பற்றி புகழாரம் பாடினார் மீண்டும் வருவாயா இனி எந்தன் உயிரும் உனதே புத்தகம் நித்யாவின் யாரோ இவள் ஹஷாஸ்ரீயின் மீண்டும் வருவாயா ஹஷாஸ்ரீயின் மீண்டும் வருவாயா மீண்டும் வருவாயா ஜீவன் அவனுக்கு உணவு மாத்திரை எடுத்துக்கொண்டு உள்ளே சென்று அவனை எழுப்பி சாப்பிட சொல்ல ஜீவா உறக்கத்தில் இருந்து தெளியாமல் வேண்டா நிரு மா எனக்கு தூக்கமா வருது என கூற ஜீவன் டேய் செல்லம் ஹஷாஸ்ரீயின் மீண்டும் வருவாயா ஹஷாஸ்ரீயின் மீண்டும் வருவாயா மீண்டும் வருவாயா பள்ளி விட்டு வெளியே வர குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் சிலர் பள்ளி பேருந்தில் சிலர் என கிளம்பிக்கொண்டிருந்தனர் வாட்ச்மேன் மற்றும் சில ஆசிரியைகள் உடன் இருந்து அனுப்பி வைத்தனர் ஜீவா ஜீவிதா இருவரும் கூட்டிச்செல்ல ஆள் ஹஷாஸ்ரீயின் மீண்டும் வருவாயா ஹஷாஸ்ரீயின் மீண்டும் வருவாயா மீண்டும் வருவாயா விஜய் கூறியது போல என்றும் தன் புன்னகை மறையா முகத்தோட வலம் வந்த நேத்ரா எதிர்பார்த்த அந்த காலமும் வந்தது மாதங்கள் கடக்க மீண்டும் அவன் இவளை தேடி வந்தான் பெரியர்வர்கள் அனைவரும் மனதார படைப்பாளர்கள் கவனத்திற்கு தமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும் இனி எந்தன் உயிரும் உனதே இனி எந்தன் உயிரும் உனதே தமிழ் மதுராவின் செம்பருத்தி விரைவில் தமிழ் மதுராவின் கோடை காலக் காற்றே தமிழ் மதுராவின் கோடை காலக் காற்றே அறிவிப்பு ஆடியோ நாவல் எழுத்தாளர்கள் உதயசகியின் கண்ட நாள் முதலாய் சுகன்யா பாலாஜியின் காற்றெல்லாம் உன் வாசம் சுதியின் உயிரே ஏன் பிரிந்தாய் மோகன் கிருட்டிணமூர்த்தி யாழ் சத்யா கல்யாணக் கனவுகள் யாழ் சத்யாவின் நாகன்யா யாழ்வெண்பா சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி வேந்தர் மரபு வாணிப்ரியாவின் குறுக்கு சிறுத்தவளே ஹஷாஸ்ரீ என்னை உன்னுள் கண்டெடுத்தேன் வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் கட்டுரை ஆன்மீகம் கவிதை பயணங்கள் முடிவதில்லை விமர்சனம் கதை மதுரம் கதைகள் காயத்திரியின் தேன்மொழி குறுநாவல் சிறுகதைகள் புறநானூற்றுக் கதைகள் தொடர்கள் காதலினால் அல்ல சுகமதியின் இதயம் தழுவும் உறவே நித்யாவின் யாரோ இவள் யஷ்தவியின் அனல் மேலே பனித்துளி யஷ்தவியின் இரவாக நீ நிலவாக நான் ஹஷாஸ்ரீயின் மீண்டும் வருவாயா முழுகதைகள் குழந்தைகள் கதைகள் தமிழமுது தமிழ் க்ளாசிக் நாவல்கள் அறிஞர் அண்ணாவின் குமரிக்கோட்டம் ஆப்பிள் பசி ஆர் சண்முகசுந்தரம் நாகம்மாள் ஊரார் கபாடபுரம் கல்கியின் ஒற்றை ரோஜா கள்வனின் காதலி நா பார்த்தசாரதியின் துளசி மாடம் பார்த்திபன் கனவு மதுராந்தகியின் காதல் ரங்கோன் ராதா ராஜம் கிருஷ்ணனின் புதிய சிறகுகள் தமிழ் மதுரா அத்தை மகனே என் அத்தானே இனி எந்தன் உயிரும் உனதே உன்னிடம் மயங்குகிறேன் உன்னையே எண்ணியே வாழ்கிறேன் உள்ளம் குழையுதடி கிளியே என்னை கொண்டாட பிறந்தவளே ஓகே என் கள்வனின் மடியில் காதல் வரம் தமிழ் மதுராவின் கடவுள் அமைத்த மேடை தமிழ் மதுராவின் கோடை காலக் காற்றே தமிழ் மதுராவின் சித்ராங்கதா நிலவு ஒரு பெண்ணாகி பூவெல்லாம் உன் வாசம் மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் யாரோ இவன் என் காதலன் தமிழ் மதுராவின் கோடை கா தமிழ் மதுராவின் கோடை கா என்னைக் கொண்டாடப் பிறந்தவளே தமிழ் மதுராவின் கோடை கா தமிழ் மதுராவின் கோடை கா
ஆதவனின் மென்னொளியில் மின்னிக் கொண்டிருந்தது நதி கங்கையின் பரப்பை கிழித்துக் கொண்டு படகு கரையிலிருந்து விலகி நீருக்குள் செல்லத் தொடங்கியது நதியில் ததும்பிய நீர் சீரான தாளத்தில் க்ளக் க்ளக் எனப் படகை அறைந்து எதையோ சொல்லிக் கொண்டே வந்தது பரிசல்களும் சுற்றுலாப் படகுகளும் சோம்பேறித்தனமாக நகர நான் அமர்ந்திருந்த பயணியர் படகு இரைச்சலையும் புகையையும் கக்கியபடி வேகமாக முன்னேறியது முன்னேற்றம் என்பதே இலக்கு என்ற ஒன்றிருக்கும் போது தான் அர்த்தப்படும் அதுவும் ஒரேமாதிரியான இலக்கு பரிசலில் ஒற்றையாளாய் அமர்ந்து பயணிப்பவனுக்கும் எருமைப்பாலில் தயாரான இனிப்புப் பேடாவை மரத்தேக்கரண்டியில் அள்ளியுண்டபடி சுற்றுலாப் படகில் அமர்ந்திருக்கும் கூட்டத்திற்கும் ஒரேமாதிரியான நோக்கம் இருக்க வாய்ப்பில்லை நான் பரிசலில் ஏறியிருக்க வேண்டும் என்றெண்ணிக் கொண்டேன் பரிசலில் துடுப்பு போடாமல் நீரின் சுழலோடு சுற்றிச் சுழல்வதாக எண்ணிக் கொள்வதே பரவசமாக இருந்தது மூங்கிலை வளைத்து கூடாரமாக்கி அதன் மீது பாய்க்கூரையிட்டு வெயிலை மறைத்த இயந்திரப் படகுகள் இரைச்சலும் புகையுமாக நீரை பீய்ச்சிக் கொண்டு பயணிகளோடு கங்கையை அளைந்தன சாரு மதராசி என்று பேச்சைத் தொடங்கினான் அந்தப் படகோட்டி படகில் ஏறும்வரை பணத்துக்காக என்னிடம் சண்டையிட்டவன் கேட்ட பணத்தை தருவதாக ஒப்புக் கொண்டதும் எல்லாமே மாறியிருந்தது நீர்பரப்பின் மீது பறந்து கொண்டிருந்த சிற்றுயிர்களை பார்த்தபடியே ஆமோதிப்பாக தலையசைத்தேன் ஏதோ கேட்டதை எங்கோ பார்த்தபடி தவிர்த்தேன் நதி எழுப்பும் சிற்றலைகளைப் போல பேசுவதில் தீராத விருப்பம் கொண்டவன் போலும் ஜெய் கங்கா ஜெய் கங்கா ஜெய் ஜெய் கங்கா அமிர்தவர்ஷினி கங்கா மாதா என்று பாடிக்கொண்டே வந்த பஜனைக் கூட்டத்தைக் கடந்தபோது ஏதோ ஒன்று உள்ளத்தை நெகிழ்த்த கையைத் தாழ்த்தி நீரை அள்ளினேன் எதிர்பார்த்ததை விட சில்லிப்பு இமயமுடியிலிருந்த பனியை நீராக அள்ளிக் கொண்டு வந்து கடலில் சேர்த்து விடும் புனிதமான நீர்க்கோடு அலை எழும்பல்களைத் தொட்டுக் கொண்டே வந்தபோது எங்கோ யாரோ செலுத்தியிருந்த பூசனைப்பூக்கள் கையில் தட்டுப்பட்டு நழுவியோடின நீரில் எழும் குமிழிகள் அஸ்ஸியாற்றிலிருந்து வெளியேறிய இராசாயனக் கழிவுகளாக இருக்க வேண்டும் நீங்க தமிழ் ஆளா என்றார் படகில் வந்தவர் ஆச்சர்யத்துடன் புருவம் துாக்கி ஆம் என்றேன் எங்கே என்றார் திருச்சி அங்க காவிரி இங்க கங்கை என்றார் அதற்குள் அந்தப் படகோட்டி ஏதோ சொல்ல இந்த இடத்தில ஆழம் அதிகமாக இருக்குங்கிறார் என்று மொழிபெயர்த்தார் இந்நேரம் மாமா இருந்திருந்தால் தம்பீ கைய தண்ணீல வைக்காதப்பா என்று மாய்ந்திருப்பார் தான் கேள்விப்பட்ட விஷயங்களைத் தொடர்புபடுத்துவார் முதலைங்க ஆளுங்கள உள்ள இழுத்துப் போட்டுடும் எட்டு வயசு பொம்பளப் புள்ள இப்டித்தான் கைய தண்ணீல அளஞ்சுக்கிட்டே போயிருந்துருக்கு எங்க மாமா கங்கைல தான் மொதலை அந்தப் புள்ளையோட கைய எட்டிப்புடிச்சு கவ்விடுச்சு பரிசல்ல இருந்த பெத்தவங்க அய்யோ அய்யோன்னு அலறிக்கிட்டு இந்தப் பக்கம் இழுக்க முதலை அந்தப் புள்ளய தண்ணீல இழுக்க கடவுளே அய்ய்ய்யோ அப்றம் என்னாச்சு என்னாவும் முதலைக்கு முன்னாடி பூஞ்ச மனுசனால என்ன பண்ண முடியும் மொத்த ஒடம்பையும் அது தண்ணிக்குள்ள இழுத்து போட்டுக்குச்சு கடைசில அந்தப்புள்ள வெரல்ல போட்டுருந்த அரைபவுனு மோதிரம் அவங்கம்மா கையில உருவிக்கிட்டு நின்னுடுச்சு என்பார் படகு மணிகர்ணிகா படித்துறையை நெருங்கிக் கொண்டிருந்தது அணையா சிதைகளிலிருந்து சுழன்று எழுந்த புகையைக் கண்ட நொடியில் எழுந்த உணர்வுகளை சொற்களாக்கவியலாமல் பார்த்துக் கொண்டேயிருந்தேன் படகு நபர் என் முதுகைத் தட்டி அதெல்லாமே தங்கற விடுதிங்க தான் என்றார் என் முதுகுப் பையை பார்த்திருக்க வேண்டும் அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் சிறிதும் பெரிதுமான பழமையான கட்டிடங்கள் ஏதேதோ பெயர்ப்பலகைகளைத் தாங்கி நின்றிருந்தன ராஜபுதன மன்னர்கள் கட்டிய சிவந்த அரண்மனைகள் நீரிலிருந்து புறப்பட்டன போல் எழுந்திருக்க காவி வண்ணமிட்ட படிக்கட்டுகள் நீரில் முளைத்து நிலத்தில் பாவி நின்றன படிக்கட்டுகளில் மக்கள் மிதப்பது போல் அலைந்தனர் பறவைகள் பயமேதுமின்றி நீரிலிருந்து கொத்திய மீன்களை படிகளில் வைத்து உண்டன பரிசல்கள் வட்டவட்டமாக கரையொதுங்கி இருந்தன பயணிகள் காலிப் படகுகளை நோக்கி முண்டினர் படகிலிருந்தவர்கள் கூச்சலும் இரைச்சலுமாக இறங்குவதற்குத் தயாராகினர் நான் நீரையள்ளி முகத்தில் வழிய விட்டுக் கொண்டேன் என்னுடன் வந்தவர் நீத்தார் சடங்கு செய்ய வேண்டி குடும்பத்தோடு வந்திருக்க வேண்டும் கையோடு பூசைப்பொருட்கள் அடங்கிய பைகளை எடுத்து வந்திருந்தனர் அதுவரை படகோட்டியுடன் கதைத்துக் கொண்டு வந்தவர் கரையேறியதும் குடும்பத் தலைவராக மாறி கத்திக் கொண்டிருந்தார் அழகேசு மாமாவுக்கு கத்தவே தெரியாது தம்பீ என்பார் மென்மையாக அக்காவின் இறப்புக்குப் பிறகு மென்தன்மை இன்னும் கூடிப்போனது நான் பையும்கையுமாக நின்றபோது நாசியில் அறைந்த பூவின் மணத்தை முன்பு எப்போதோ நெருக்கமாக உணர்ந்திருக்கிறேன் ஆம் அம்மாவின் சடலத்துக்கு தீமூட்டிய என்னை ஈர உடலோடு சேர்த்து தன்னுடன் அணைத்துக் கொண்டபோது பிணத்தின் மாலைகளிலிருந்து எழுந்த செவந்திப்பூ வாசனை மாமாவிடம் தொற்றியிருந்தது அப்போது நான் பதினோராவது வகுப்பிலிருந்தேன் கிளம்பும்போது அம்மாச்சி மாமாவை உசுப்பி விட தம்பிய நாங்க கூட்டீட்டு போறோம் என்றார் அப்பாவிடம் அவன வுட்டா எனக்கு யாரிருக்கா என்றபோது அப்பா வழக்கம் போல குடித்திருந்தார் அதான் பாட்டிலிருக்கே வார்த்தைகளை வாயசைவின்றி உச்சரித்துக் கொண்டார் பொங்கலுக்கு பொறந்த பொண்ணுக்கு படையல் போடணும் என்றபடி மூன்று மாதங்கள் கழித்து எங்களை அழைப்பதற்காக மாமா வந்தபோது அப்பாவுக்குத் திருமணமாகியிருந்தது படித்துறையில் மனிதர்களுக்கு இணையாக எருமைகளும் இருந்தன அவை சிறிதும் பயமின்றி சனக்கூட்டத்துக்கு மத்தியில் ஊழ்கத்தில் ஆழ்ந்தவை போல நின்றிருந்தன கீழ்த்தாடையில் மட்டும் லேசான அசைவு எப்போதாவது நாசித் துளைகளைத் துழாவுவது போல அவற்றின் வயலட் நிற நாக்கு எவ்வி மேலெழுந்து சுழலும் காசியின் குறுகிய சந்துகளிலிருந்து அவை பெருகி வந்திருக்கலாம் ஒருவர் படுக்கலாம் இருவர் அமரலாம் மூவர் நிற்கலாம் என்று ஆழ்வார் பாடியதைப் போல அந்தக் குறுகலான சந்துப்பாதைகளில் அதிகபட்சம் ஒரு எருமையுடன் ஒரு மனிதனும் ஒரு இருசக்கர வாகனமும் செல்ல முடியும் இரண்டு எருமைகள் சேர்ந்தாற்போல வந்துவிட்டால் வீடுகளின் வாசற்படிகளில் ஏறித்தான் கடக்க வேண்டும் காலத்துக்கும் தனக்கும் சம்பந்தமில்லாதவை போல அவை மெல்லமெல்ல நடந்து சந்துகளை கடந்து கொண்டேயிருந்தன எனக்குத்தான் எருமைகளைக் கடப்பதற்கு தயக்கமாக இருந்தது ஆனால் உருவுக்கு சம்பந்தமேயில்லாத சாத்வீகமான கண்கள் வெயிலில் பளபளக்கும் கரும்பங்கொல்லைகளின் அடர்பச்சைத் தாள்களை நினைவுறுத்தும் கண்கள் சிநேகம் கொள்ள வைப்பவை பொறுமையானவை இத்தனை பொறுமை கூடாது என்பார் அழகேசன் மாமா ஆனால் அவருக்குத்தான் பொறுமை அதிகம் என்பாள் அம்மாச்சி பார்க்கும் போதெல்லாம் கண் கலங்குவார் மகனுக்கு பெண் பார்த்து சலித்துப் போய்விட்டது என்பார் இறந்துபோன மகள் மீதான துக்கத்தைப் பெருமூச்சாக விடுத்து நீயாது காலகாலத்தில கல்யாணத்த பண்ணிடுப்பா என்பார் இடுப்பிலிருக்கும் முந்தானையை உதறிவிட்டு சொருகிக் கொள்ளும்போது அதிலிருந்து மாட்டுத் தொழுவ வாடையும் பால் வீச்சமும் எழும் சித்தியிடம் எழும் வாசம் நகரத்தனமானது சித்தியின் சிவந்த நிறம் அவர் பெற்ற அகிலாவுக்குக் கூட வாய்க்கவில்லை அங்கிருந்து கிளம்பும் ஒவ்வொரு முறையும் அந்த பசப்பி என்ன சொல்றா என்பார் அம்மாச்சி அவர் இறந்து கிடந்தபோது கூட அப்படி கேட்பதாகவே எண்ணிக் கொண்டேன் நான் சிதை ஒன்றின் அருகே சென்றேன் வாட்டசாட்டமான உடல் ஒன்று எரிந்து கொண்டிருந்தது அப்பாவும் இதுபோல ஓங்குதாங்கான வடிவு கொண்டவர்தான் குடி அவரை அழித்திருந்தது அவர் இறந்தபோது பத்து வருடப் பணியாண்டுகள் மீதமிருந்தன ஆனால் கூடா நட்போடு சேர்ந்து கையாடல் வரைக்கும் போயிருந்ததால் பணியிடத்தில் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு இறப்புக்கான சலுகைகளும் பணப்பயன்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன ஆங்காங்கே சிதைகள் எரிந்து கொண்டிருந்தன அருகில் சம்சாவும் சூடான தேநீரும் விற்றுக் கொண்டிருந்தனர் குச்சி ஐஸின் குச்சிகளும் பாப்கார்ன் பைகளும் சிதறிக் கிடந்தன நீர்க்கடன்கள் செய்த குப்பைகள் கால்களில் தட்டுப்பட்டன என் கையைப் பற்றி யாரோ இழுக்க திரும்பிப் பார்த்தேன் காவியுடை தரித்திருந்த சாமி ஒருவர் உடலெங்கும் திருநீறு பூசியிருந்தார் நீள்முடி சடைகளாக தொங்கியது நெகிழித் தட்டில் வைத்து விற்கப்பட்ட சுருள் சப்பாத்திகளை வாங்கித் தருமாறு அதிகாரத் தோரணையில் கேட்டார் சிதையைப் பார்க்கும் ஆர்வத்தில் சட்டைப் பையிலிருந்த பணத்தை எடுத்து நீட்டி வாங்கிக் கொள்ளுமாறு சொன்னேன் அவர் பதில் கூறாமல் நகர்ந்து போய்விட்டார் மிக லேசான துாறல் விழ அதற்கே உடல் நடுங்கியது சிதையிலிருந்த உடலின் நடுப்பகுதி வெந்து உள்ளிருக்கும் நீர் கசிந்துவடிய அதை அனல் தன் நாக்குகளைக் கொண்டு ஆவேசமாக மடித்து உள்ளே தள்ளிக் கொண்டது எரியூட்டி அந்தப் பிணத்தை அப்படியே இரண்டாக மடித்துப் போட்டு சிதையில் தள்ளி விட்டுவிட்டு அடுத்த பிணத்தை நோக்கி கவனத்தைத் திருப்பினார் அப்பாவின் நீர்க்கடனை முடித்து விட்டு வந்தபோது அழகேசு மாமா கண்டித்து சொன்னார் தம்பிய நா கூட்டீட்டு போயி படிக்க வச்சிக்கிறேன் நான் கல்லுாரி காலத்திலிருந்தேன் அப்பாவின் வீடு பெரியதாகவும் மதிப்பு கூடியதாகவும் இருந்த பழைய காலத்து வீடு நாளபின்ன வீடு வாசல்ன்னு எதுக்கும் வந்து நிக்கற வேலை வச்சுக்க கூடாது என்று சித்தியின் பிறந்த வீட்டில் நிபந்தனை விதிக்க மாமா உடனே சம்மதம் என்றார் சபையில வச்சு பேசியாச்சு ஒரு சொல்லு மீற மாட்டோம் என்றார் கிளம்பிய நேரத்தில் சித்தி அழுதபோது நான் மாமாவின் பிடியிலிருந்து என் கையை விலக்கிக் கொண்டேன் மிதிவண்டியில் நெடுக்குவாட்டாக பிணத்தைக் கட்டிவைத்து எடுத்து வந்த கும்பல் ஒன்று பிணத்தை அவிழ்த்து சிதைக்கருகே வைத்தது இந்த கோஷ்டியை நான் ஏற்கனவே சந்து ஒன்றுக்குள் வைத்து பார்த்திருந்தேன் பிணம் கட்டியிருந்த மிதிவண்டியை இருவர் பிடித்துக் கொள்ள மீதமானவர்கள் அங்கிருந்த கடையில் தேநீர் அருந்தினர் நான் நிகழ்வின் அசாதாரணத்தில் கட்டுண்டு நின்று விட்டேன் தேநீர் அருந்தியவர்கள் வண்டியைப் பிடித்துக் கொள்ள மீதமிருவரும் தேநீர் கடைக்குள் நுழைந்தனர் அன்று மாமா பொறுமையிழந்து கத்தினார் கெடந்து சாவுடா எங்கக்கா சாவும்போது கூட ஒங்கப்பனை நம்பல எம்புள்ளைய பாத்துக்கன்னு எங்கிட்ட தான் கையடிச்சு சத்தியம் வாங்குச்சு மூணு வருசம் தாங்குனாரா ஒங்கப்பன் தான் சொமக்க வேண்டியதை ஒந்தலையில எறக்கி வச்சிட்டு சொகமா போயி சேந்தாச்சு பாக்றேன் எல்லாத்தையும் கரையேத்திட்டு நீ எப்போ கரையேறுவேன்னு பாக்றேன் அப்பா இருக்கும்போது மாமாவும் அவரும் அத்தனை ஒட்டுறவாக இருந்ததில்லை விடுமுறைகளில் அம்மாச்சி வீட்டுக்கு தன் இருசக்கர வாகனத்தில் என்னை அழைத்து வரும்போது ரெண்டு நாள்ல வந்துருணும் என்று அதட்டலாகச் சொல்லி விட்டு கிளம்பி விடுவார் அங்கு தங்கியிருக்கும் இரண்டு நாட்களும் எனக்கு சாப்பாடு தடபுடலாக இருக்கும் தோட்டத்தில் சுற்றியலைந்த கோழி கறிகளாக குழம்பில் மிதக்க அதை மாமாவே அள்ளியள்ளி இலையை நிரப்புவார் மூன்றாம்நாள் காலையில் டிவிஎஸ் ல் காலை ஊன்றிக்கொண்டு நிற்கும் அப்பாவிடம் கொடுத்தனுப்புவதற்காக ஆட்டுக்காலை வாட்டுவதும் உப்புக்கண்டம் கோப்பதுமாக இருப்பார் ஆனால் அப்பா வரும் நேரத்தில் எங்காவது சென்று விடுவார் அப்பாவுக்கு நிற்கும் போதே கால்கள் நடுக்கும் குடி கொடுத்த பரிசு சிதைகளிலிருந்து எழுந்த புகை விண்ணை நோக்கிச் சுழன்றது நீ கையளித்த உயிர்களை நாங்கள் திருப்பியளித்து விட்டோம் அதற்கு அக்னியே சாட்சி கங்கையே சாட்சி விண் தாம் எடுத்துக் கொள்ளும் உயிர்களை வாரிசுக்காக பரிதவிக்கும் வேண்டுதல்களில் நிரப்பி விடுவதால் தான் சின்னஞ்சிறு உயிர்கள் பிறந்து கொண்டே இருக்கின்றன போலும் சிதைக்கருகே கொண்டு வரப்பட்ட முதிர்ந்த பெண்ணுடல் குறுகி சிறுத்திருந்தது எவ்வித உணர்வுமற்ற வெற்று முகம் சாவுக்காக காசியில் காத்திருந்து உயிரை விட்டிருக்க வேண்டும் இன்று கானேறுதல் என்ற ஒன்றில்லாத நிலையில் முதிர்ந்த வயதிலும் மனம் லௌகீகத்துக்குள் நுழைந்து இன்னும் இன்னுமென எதையோ விழைகிறது தனக்குக் கிடைத்தவைகளின் போதாமைகளை ஆராய்கிறது வெறுப்பும் கசப்பும் ஏக்கமும் கொள்கிறது வாழ்தலின் இன்பத்தை அனுபவிக்க எண்ணங்கொண்டு மாயையில் ஆழ்கிறது அதுவெழுப்பும் வெறுமையில் சிக்கி விருப்பமின்றி இறந்து போதல் நிகழ்ந்து விடுகிறது அது கல்யாண சாவாம் பிறந்து இருந்து வாழ்ந்து நிறைந்து அடங்கும் வழக்கமான நியதியில் வாழ்தலின்பத்தை எது அளிக்கிறது நிறைந்து என்ற இடத்தில் எழும் சிக்கல்கள் லௌகீகத்தால் தீர்த்து வைக்கவியலாது இங்கு அலையும் கூட்டத்தில் அதைப் புறந்தள்ளியவர்கள் இருக்கக்கூடும் அத்தனை துாரம் கத்தி விட்டு போன அழகேசு மாமா அப்பாவின் வாரிசுரிமை வேலையை எனக்கு பெற்றுத் தரும் முயற்சியில் தீவிரமாக அலைந்து கொண்டிருந்தார் அப்பா தனக்கு இரண்டாவது திருமணம் நடந்ததை அதிகாரப்பூர்வமாக பதியவில்லை என்பது தெரிய வந்தபோது மாமாவின் வேகம் இரண்டு மடங்காகி விட்டது இதொண்ணாவது விட்டு வச்சானே ஒங்கப்பன் என்றார் ஆத்திரமாக என்னை இழுத்துக் கொண்டு ஓடும் அவரைப் புதிதாகப் பார்த்தேன் நரைக்கத் தொடங்கும் வயது அவருக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பம் இருக்கவில்லை தனக்கான துணையை ஆதரவை பக்கபலத்தை என்னிடம் தேடிக் கொண்டிருக்கிறாரோ அப்பாவின் மீதும் அவர் நண்பர்கள் மீதும் படிந்திருந்த குற்றச்சாட்டு நீதிமன்றத்தின் வழியாக எப்படியோ தீர்க்கப்பட்டதும் பணப்பயன்கள் வருவதற்கான நேரம் கனியத் தொடங்கியது இந்த பணம் கெடைச்சதைப் பத்தி ஒங்க வீட்ல மூச்சு வுடாதே என்று சொல்லிவிட்டு போனார் அதை வங்கியின் நிலைவைப்பில் செலுத்தி விட்டு வீட்டுக்கு வந்தபோது வாசலில் அமர்ந்திருந்த சித்தியிடம் அதைச் சொல்லி விட்டேன் வங்கியின் நிலைவைப்பு உடைக்கப்பட்டு அந்தப் பணம் சித்தியின் பெயருக்கு மாற்றப்பட்டதை அறிந்ததும் மாமா பல்லைக் கடித்துக்கொண்டு நீ அந்த பொம்பளைய வச்சிருக்கடா என்று கத்தினார் சிதைகளுக்கருகே சாமியார்கள் கஞ்சா சிலும்பிகளுடன் குளிர்காய்ந்து கொண்டிருந்தனர் உடல்கள் எரிந்து கொண்டிருந்தன உள்ளம் எங்கிருப்பினும் உடல் காலத்திற்குள் வந்தாக வேண்டும் கருத்துகளாக நிற்பவைகள் அனுபவமென்று மாறாதவை எண்ணமென்று தோன்றாதவை சொற்களென்று ஆகாதவை அனைத்தும் உடலிலிருந்து வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தன நீர்க்கடன் செலுத்தியவர்கள் அன்னதானம் செய்ய அதை நானும் கைநீட்டிப் பெற்றுக் கொண்டேன் சாமியார்களுக்கு வெல்லம் நிறைந்த பைகளை ஒருவர் அளித்துக் கொண்டிருந்தார் அப்பாவின் அரசலுவலகத்திலிருந்து என் கல்விச் சான்றிதழ்களைக் கோரி கடிதம் வந்திருப்பதாக என்னை ரகசியமாக வெளியே அழைத்துச் சென்று சேதி சொன்னார் அழகேசு மாமா வேலைக்கான உத்தரவை பெற்றுக்கொண்ட போது அவர் மகிழ்ந்திருப்பதை அவரின் உடலசைவுகளே காட்டின வீட்டுக்குச் சென்றபோது அம்மாச்சி நீர்த்துளிர்த்த கண்களோடு நல்லாருப்பா ஒங்கம்மா இருந்தா அவ்ளோ சந்தோசப்பட்டுருப்பா என்றார் உட்கார்த்தி வைத்துப் பரிமாறினாள் நான் வீடு திரும்பிய போது சித்தி தட்டு எடுத்து வைத்தாள் சம்பளம் வந்ததும் மாதமாதம் அவளிடம் கொடுத்து விடச் சொன்னாள் உன் சம்பளத்தை வாங்கி ஒனக்கே பிச்சை போடுறாளாக்கும் அம்மாச்சியும் மாமாவும் கோபம் கொண்டனர் ஆனால் பிச்சையெடுக்கும் இடத்திலெல்லாம் நான் இல்லை வாரிசுரிமையில் கிடைத்த வேலையை பயன்படுத்திக் கொண்டு படிப்படியாக இன்று அதிகாரி என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறேன் வேலைநிமித்தம் அனுப்பிய வடமாநில பயிற்சியில் உடல்நிலை சரியில்லை என்பதாகக் காரணம் கூறி காசிக்கு வந்தது எனக்கே ஆச்சர்யம்தான் ஆனால் இதேபோல முன்பொரு முறை சென்றிருக்கிறேன் அது நண்பனின் வீட்டுக்கு அது கேரளத்திலிருந்தது யானை கொட்டிலுடன் கூடிய பெரிய வீடு எனக்கு அம்மாச்சியின் வீட்டுத் தொழுவத்தில் கட்டிக்கிடக்கும் பசுவின் நினைவு வந்தது சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த யானையை கண்ட பார்வைக்கு பசு சிறு கொசுபோல தோன்றியது மூன்று பாகன்கள் உடனிருந்தனர் உணவை பெரும் உருண்டையாக்கி அதன் வாயினுள் எறிந்த பூஞ்சையான பாகனின் சொல்லுக்கு அது நில்லென்றும் செல்லென்றுமாக கட்டுப்பட்டது சங்கிலியை வெற்றுச் சடங்கென்பதை அது உணர்ந்திருக்கலாம் அது அன்னமிடுபவருக்கு ஆற்றும் அறம் அல்லது அறிதலின் தருணமொன்று அதற்கு நிகழாமலிருக்கலாம் மழை சற்று வலுத்தாலும் யாரும் அதனைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை நான் வேகங்கொண்டவனைப் போல ஒவ்வொரு சிதையாகச் சென்று பார்க்கத் தொடங்கினேன் எரிந்து முடித்த பிணமொன்றின் சாம்பல் மீது மழைநீர் இறங்கியதில் அதன் எலும்புகள் புடைத்து நின்றன பால்தெளிப்பு சடங்கின்போது மாமாவின் எலும்புகளைப் பொறுக்கி வைத்திருந்தனர் வாரிசற்ற அவரின் சிதைக்கு நான்தான் தீயிட்டிருந்தேன் எனக்குச் சட்டென்று அங்கிருந்து கிளம்பி விடும் எண்ணம் ஏற்பட்டது ஏற்பட்ட கணத்திலேயே அது தீவிரப்பட நான் காலிப் படகொன்றில் ஏறி பேரம் ஏதுமின்றி அமர்ந்து பயணத்தைத் தொடங்கினேன் கங்கை ஆழத்தில் வெண்ணிறமான உருளைக் கற்களுக்கு மேலே மாலையொளியின் கூசும் ஒளியலைவுகளுடன் ஓடிக்கொண்டிருந்தது இதழ் கலைச்செல்வி சின்னச் சின்ன அசைவுகளின் கதைகள் கத்திக்காரன் சிறுகதைத் தொகுப்பு மய்யத்தாங்கரையில் ஒரு மரிக்கொழுந்து படைப்புகளைத் தேட அதிகம் வாசிக்கப்பட்டவை தஸ்தாயேவ்ஸ்கியின் கலைத்தன்மை பி கே பாலகிருஷ்ணன் நீர்மேல் ஆடிய வேட்டை நாடகம் ஹெர்மன் மெல்வில்லின் நிரபராதம் அல்லேலூயாவும் எளிய தமிழ்ப்பிள்ளைகளும் தொடர்புடைய பதிவுகள் நிகழ முடியாத திரைப்பட விழாவின் கதை கொலம்பியா கொரோனா பயணக்குறிப்புகள் லீனா மணிமேகலை ஆர் இருள் துணையாகி அசைவளி அலைக்குமே வைக்கம் போராட்டம் சில உதிரிக் குறிப்புகள் நாம் எதனால் வாசிப்பதில்லை தமிழ்ச் சிறுகதை இன்று கலையும் வண்ணங்களும் மறையும் காட்சிகளும் கிருஷ்ணமூர்த்தியின் கதைகள் படைப்புகள் படைப்புகள் தமிழ் கட்டுரை கவிதை குறுநாவல் சிறுகதை தலையங்கம் திரைப்படக் கலை நாவல் பகுதி பொது மதிப்புரை மொழிபெயர்ப்பு முந்தைய இதழ்கள் முந்தைய இதழ்கள் எழுத்தாளர்கள் அனீஷ் கிருஷ்ணன் நாயர் அகிலா அத்தியா அரவிந்தன் கண்ணையன் அருண் நரசிம்மன் அழகிய மணவாளன் அழகுநிலா அழகேச பாண்டியன் அனோஜன் பாலகிருஷ்ணன் ஆசை ஆத்மார்த்தி ஆர் அபிலாஷ் ஆர் ஸ்ரீனிவாசன் ஆர்த்தி தன்ராஜ் இசை இரா குப்புசாமி இராசேந்திர சோழன் இல சுபத்ரா இளங்கோவன் முத்தையா இறை ச இராசேந்திரன் எம் கே மணி எம் கோபாலகிருஷ்ணன் எஸ் ஆனந்த் எஸ் கயல் எஸ் சிவக்குமார் ஐ கிருத்திகா க மோகனரங்கன் கணியன் பாலன் கண்ணகன் கண்மணி குணசேகரன் கரு ஆறுமுகத்தமிழன் கலைச்செல்வி கார்குழலி கார்த்திக் திலகன் கார்த்திக் நேத்தா கார்த்திக் பாலசுப்ரமணியன் கால சுப்ரமணியம் குணா கந்தசாமி குணா கவியழகன் குமாரநந்தன் கே என் செந்தில் கே ஜே அசோக்குமார் கோ கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் சசிகலா பாபு சயந்தன் சரவணன் சந்திரன் சர்வோத்தமன் சடகோபன் சி சரவணகார்த்திகேயன் சித்துராஜ் பொன்ராஜ் சு வேணுகோபால் சுதாகர் சுநீல் கிருஷ்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் செங்கதிர் செந்தில் ஜெகன்நாதன் செந்தில்குமார் செல்வேந்திரன் டாக்டர் வே ராகவன் டாக்டர் ஜி ராமானுஜம் த கண்ணன் தபசி தர்மு பிரசாத் தாமரை கண்ணன் தென்றல் சிவகுமார் நம்பி கிருஷ்ணன் நவீனா அமரன் நவீன்குமார் நாஞ்சில் நாடன் ப தெய்வீகன் பன்னீர் செல்வம் வேல்மயில் பா திருச்செந்தாழை பாதசாரி பாமயன் பாலசுப்பிரமணியம் முத்துசாமி பாலசுப்ரமணியன் பொன்ராஜ் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு பொன்முகலி போகன் சங்கர் மகுடேசுவரன் மயிலன் ஜி சின்னப்பன் மருதன் மனோஜ் பாலசுப்ரமணியன் மா கலைச்செல்வன் மாற்கு மானசீகன் முகம்மது ரியாஸ் மைதிலி மோகன ரவிச்சந்திரன் யூமா வாசுகி ரா செந்தில்குமார் ரா கிரிதரன் ராம் முரளி ராஜ சுந்தரராஜன் ராஜன் குறை ராஜேந்திரன் லதா அருணாச்சலம் லீனா மணிமேகலை லோகேஷ் ரகுராமன் வண்ணதாசன் வி அமலன் ஸ்டேன்லி விலாசினி விஜயராகவன் விஷ்வக்சேனன் வெ சுரேஷ் வெண்பா கீதாயன் ஜான் சுந்தர் ஜான்ஸி ராணி ஜெ பிரான்சிஸ் கிருபா ஜெயமோகன் ஷாலின் மரியா லாரன்ஸ் ஸ்டாலின் ராஜாங்கம் ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் மோகனரங்கன் ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் ஹரீஷ் கணபதி
தமிழர்களின் தொல்லியல் அருங்காட்சியகத்திற்கு பூமிபூஜை செய்யப்பட்டது எதற்காக என்று கேள்வி எழுப்பி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது இது குறித்து தமுஎகசவின் மாநிலத்தலைவர் பொ மதுக்கூர் இராமலிங்கம் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆதிச்சநல்லூர் புளியங்குளம் பகுதியில் ஒன்றிய அரசின் தொல்லியல்துறை கையகப்படுத்தியுள்ள தொல்லியல் அகழ்வாய்வுக் களத்தில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைப்பதற்கான தொடக்க நிகழ்வு அன்று நடத்தப்பட்டுள்ளது தொல்லியல் ஆய்வாளரும் திருச்சி மண்டல தொல்லியல் கண்காணிப்பாளருமான அருள்ராஜ் என்பவரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு புரோகிதர்களை வைத்து குறிப்பிட்டதொரு மதச்சார்பான சடங்குகளுடன் கூடிய பூஜையாக நடத்தப்பட்டுள்ளதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன மதச்சார்பற்ற அரசமைப்புச் சட்டத்தின் கீழ் பணியாற்றும் ஓர் ஊழியராகிய அவர் அரசு நிகழ்வை இவ்வாறு மதச்சார்பான பூஜையாக நடத்தியுள்ளது அரசமைப்புச் சட்டத்திற்கும் நடத்தைவிதிகளுக்கும் புறம்பானது என தமுஎகச வன்மையாக கண்டிக்கிறது நவராத்திரி கர்ப்பா நடனத்தில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய தடை விஷ்வ ஹிந்து பரிஷத் ஆரியக் கடவுள்களும் வேதமயப்பட்ட சடங்குகளும் சமஸ்கிருத மந்திரங்களும் தோன்றுவதற்கு நெடுங்காலத்திற்கு முன்பே நிலைபெற்று உச்சத்தில் இருந்த தமிழர்களின் பண்பாட்டுத் தொன்மையை அவமதிக்கும் வகையில் இந்தப் பூஜை நடத்தப்பட்டுள்ளமைக்கு தமிழ்நாடு அரசும் தனது கண்டனத்தைத் தெரிவிக்குமாறு தமுஎகச கேட்டுக்கொள்கிறது என்று மாநிலத்தலைவர் பொ மதுக்கூர் இராமலிங்கம் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க உங்கள் பங்களிப்பு அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும் உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது மாத சந்தா ஆண்டு சந்தா ஒருமுறை சந்தா அகழ்வாய்வுதமிழ்நாடுதமுஎகசதொல்லியல்முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மற்ற சில பதிவுகள் டெல்லி எல்லை என்ன பாகிஸ்தான் எல்லையா அனுமதி மறுக்கப்பட்ட எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்கப்பட்ட கிரிஜா வைத்தியநாதன் தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம் செங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வுக்கு பின்னால் பாஜக இருக்கிறது முதல் தடுப்பை உடைத்த விவசாயி சத்னம் சிங் பன்னு குற்றச்சாட்டு அதிகம் படிக்கப்பட்டவை எம் பிக்கள் இடைநீக்கம் உத்தரவை திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடருமென எதிர்க்கட்சியினர் அறிவிப்பு மனித உரிமை செயல்பாட்டாளர் குர்ரம் பர்வேசு மீதுள்ள உபா வழக்கை திரும்பப் பெறுக வைகோ இல் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை ஒன்றிய அமைச்சர் தகவல் தடுப்பூசி செலுத்தாதவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் இலவச சிகிச்சை இல்லை கேரள முதலமைச்சர் அறிவிப்பு தூய்மைப் பணியாளர்களை கண்ணியமான முறையில் நடத்துக சென்னை மாநகராட்சிக்கு சிபிஎம் வேண்டுகோள் இதையும் படிங்க மனித உரிமை செயல்பாட்டாளர் குர்ரம் பர்வேசு மீதுள்ள உபா வழக்கை திரும்பப் பெறுக வைகோ திருமாவளவன் உள்ளிட்டோர் கூட்டறிக்கை தூய்மைப் பணியாளர்களை கண்ணியமான முறையில் நடத்துக சென்னை மாநகராட்சிக்கு சிபிஎம் வேண்டுகோள் இஸ்லாமியர்களை காவல்நிலையத்தில் சித்தரவதை செய்த காவல்துறை நடவடிக்கை எடுக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு போராட்டத்தில் விவசாயிகள் உயிரிழந்ததாக தரவுகள் இல்லை ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் தகவல் பாஜகவின் சர்வாதிகார ஆட்சியில் உத்தரபிரதேச மாநிலம் அச்சத்தில் வாழ்கிறது சத்தீஸ்கர் முதலமைச்சர் கருத்து எங்களுடைய மிசோ மொழி தெரிந்தவரை தலைமைச் செயலாளராக்குங்கள் மிசோரம் முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் கல்வி நிலையங்களில் தொடரும் பாலியல் அத்துமீறல் புகார்கள் கல்லூரி பேராசிரியர் கைது எம் பிக்கள் இடைநீக்கம் உத்தரவை திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடருமென எதிர்க்கட்சியினர் அறிவிப்பு நீட் தேர்வு பாதிப்பைக் கண்டறிய ஏதேனும் ஆய்வு செய்தீர்களா திமுகவின் கேள்வியும் ஒன்றிய அரசின் பதிலும்
எழுத்தாளர் சிறப்புப் பார்வை நேர்காணல் சாதனையாளர் நலம்வாழ சிறுகதை அன்புள்ள சிநேகிதியே முன்னோடி பயணம் சின்னக்கதை சமயம் சினிமா சினிமா இளந்தென்றல் கதிரவனை கேளுங்கள் ஹரிமொழி நிகழ்வுகள் மேலோர் வாழ்வில் மேலும் ஆசிரியர் பக்கம் மாயாபஜார் இலக்கியம் முன்னோடி நிதி அறிவோம் அன்புள்ள சிநேகிதியே நலம்வாழ அமெரிக்க அனுபவம் புழக்கடைப்பக்கம் குறுக்கெழுத்துப்புதிர் கதிரவனை கேளுங்கள் சிறுகதை தமிழக அரசியல் சமயம் ஜோக்ஸ் பொது சினிமா சினிமா எழுத்தாளர் இளந்தென்றல் நிகழ்வுகள் நேர்காணல் வாசகர் கடிதம் கவிதைப்பந்தல் விளையாட்டு விசயம் வார்த்தை சிறகினிலே முன்னோடி பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை மதுசூதனன் தெ அக்டோபர் தமிழ் இலக்கியப் புலமையாளரான பேரா வையாபுரிப்பிள்ளை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பெரும் புகழ் பெற்று விளங்கிய புலமையாளர்களுள் அறுவரை உயர்த்திச் சொல்லுவார் சி வை தாமோதரம் பிள்ளை வி கனகசபைப்பிள்ளை மாயூரம் வேதநாயகம் பிள்ளை பூண்டி அரங்கநாத முதலியார் இராஜமய்யர் பெ சுந்தரம் பிள்ளை ஆகியோரே அவர்கள் இவ்வறுவரும் ஆங்கிலம் கற்று மேனாட்டுக் கலைப் பண்பிலும் அறிவுத்துறையிலும் திளைத்துத் தம் மொழியாகிய தமிழ் மொழிக்கு ஒவ்வொரு வகையிலே வளம் சேர்த்தவர்கள் தமிழின் சிந்தனை முறையிலும் ஆய்வு முறையிலும் புதிய புதிய சாத்தியப்பாடுகளின் ஊடுபாவுக்கும் செழுமைக்கும் காரணமானவர்கள் இன்னொரு விதத்தில் தமிழாராய்ச்சியின் அறிவு நிலைப்பட்ட ஆய்வுப் பெருக்கத் துக்கும் அதன் திசைப்படுத்தலுக்கும் காரணமாக இருந்தவர்கள் அத்தகையவர் களுள் ஒருவரான பெ சுந்தரம் பிள்ளை குறித்து இக்கட்டுரை கவனத்தைக் குவிக்கிறது சுந்தரம் பிள்ளை ஏப்ரல் ம் தேதியன்று ஆலப்புழையில் பிறந்தார் அங்கே தனது ஆரம்பக் கல்வியைக் கற்றபின் திருவனந்தபுரம் வந்து அங்குள்ள உயர்தரப் பள்ளியில் படித்தார் ல் பி ஏ பட்டம் பெற்றார் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே உடன் பயிலும் மாணவர்களுடன் விளையாட்டுகளில் ஈடுபடாமல் ஒதுங்கியிருப் பாராம் ஆனால் எப்போதும் எதையாவது படித்துக்கொண்டிருப்பார் அறிவுத் தேடலிலும் ஆராய்ச்சிப் பாதையிலும் அவர் மனம் ஈடுபட்டது தொடர்ந்த தேடல் அவருக்குள் இயங்கிய புலமையாளரை வெளிப்படுத்தியது ம் ஆண்டில் தத்துவத்துறையில் எம் ஏ பட்டம் பெற்றார் ஆண்டுகளில் சட்டக்கல்வி பயின்றார் ம் ஆண்டில் தான் பயின்ற திருவனந்தபுரம் அரசர் கல்லூரியிலேயே ஆசிரியர் பணி ஆற்றும் வாய்ப்பு சுந்தரம் பிள்ளைக்குக் கிட்டியது அங்கு வரலாறு தத்துவம் உள்ளிட்ட பாடங்களைக் கற்பித்து வந்தார் மாணவர் விரும்பிய ஆசிரியராக விளங்கினார் தாம் மறுநாள் கற்பிக்கும் பாடங்களை முதல் நாளிலேயே நன்கு படித்து ஆயத்தம் செய்து கொண்டுதான் வகுப்பறைக்குச் செல்வார் ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியே சந்தித்துப் படிக்க ஊக்குவிப்பார் அவர்தம் ஐயங்களை மகிழ்வோடு ஏற்று நீக்குவார் சுந்தரம்பிள்ளையின் பெயர் திருவனந்த புரம் எங்கும் நன்முறையில் பரவலாயிற்று நல்லாசிரியப் பண்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்த இவரை மாணவர்கள் நேசிக்கத் தொடங்கினார்கள் ஆனால் இவரோ தொடர்ந்து கற்றல் தேடல் ஆய்வு சார்ந்து செயல்படும் ஒருவராகவும் தன்னை வளர்த்துக் கொண்டார் சமூக மட்டங்களில் சுந்தரம்பிள்ளைக்குத் தனியான மவுசு இருந்தது மதிப்பும் மரியாதையும் கற்றோர் மட்டங்களிலும் நிலைத்தது தமிழ்ப் பணியில் தன்னைக் கரைத்து மேலெழுந்தார் திருநெல்வேலியில் இருந்த பொழுது எழுதத்தொடங்கிய மனோன்மணீயம் நாடகம் நூற்றொகை விளக்கம் ஆகிய வற்றைத் திருவனந்தபுரத்தில் செம்மையாக எழுதி முடித்தார் திருவிதாங்கூர்ப் பகுதி களில் இருக்கும் பழைய திருக்கோயில்களில் பாழடைந்து பாதுகாப்பற்றுக் கிடந்த கல்வெட்டுக்களைத் தம்பொருட் செலவிலேயே சென்று ஆராய்ச்சி செய்தார் இவ்வாறு சுந்தரம்பிள்ளை பணியாற்றி வரும் பொழுது ம் ஆண்டிறுதியில் மேதகு விசாகம் திருநாள் மாமன்னர் இவர்தம் கல்விப் பெருமையை நன்குணர்ந்து தன் அரண்மனையிலேயே பிறவகை சிராஸ்தர் எனும் உயர் பதிவியை வழங்கி மகிழ்ந்தார் இப்பதவி திவான் பதவிக்கான படிக்கட்டாகும் முதல் வரை இப்பொறுப்பில் தன் இயல்புக்கு மாறாய்ப் பணியாற்றி வந்தார் அப்போது சட்டக்கல்லூரியில் பயின்று வந்தார் அதுவரை அத்துறைப் பட்டம் பெறவில்லை அப்போது அரசர் கல்லூரித் தலைவர் திரு ராசு தம் தாய்நாடு செல்ல நேர்ந்த பொழுது டாக்டர் ஹார்வி வகித்து வந்த தத்துவப் பேராசிரியர் பணிக்கு சுந்தரம்பிள்ளையே பொருத்தமானவர் என்று முடிவு செய்து ல் வழங்கிச் சென்றார் சுந்தரம்பிள்ளை அப்பதவியைப் பெற்ற நாள் முதல் இறுதிக் காலம் வரையில் அதிலேயே நிலைத்து விட்டார் வரலாறு கல்வெட்டியல் தொல்லியல் மொழியியல் தத்துவம் இலக்கியம் கலை என பல்துறை அறிவுசார் புலங்களுடன் ஏற்பட்ட ஊடாட்டம் இவரது புலமைப் பரிமாணம் பலவாறு சிறப்புற்று விளங்கக் காரணமாயிற்று இவரது தொல்லியல் ஆய்வுத் திறனைப் பாராட்டி இங்கிலாந்தில் உள்ள ராயல் ஏஷியாடிக் கழகம் தங்கள் நிறுவனத்தின் உறுப்பினராக இவரை நியமித்துப் பெருமைப்படுத்தியது பின்னர் லண்டன் வரலாற்று ஆராய்ச்சிக் கழகம் என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது தென்னிந்திய வரலாற்றில் இவர் செய்த சாதனைகளைக் கவனத்தில் கொண்டு அன்றைய ஆங்கிலேய அரசு ராவ்பகதூர் என்ற பட்டத்தை வழங்கியது இத்தகைய சிறப்புகள் ஒருபுறமிருக்க இவர் இயற்றிய காலக்கணிப்பு இரணகீர்த்தியின் நடுகல்லும் வேணாட்டு வேந்தர்களின் காலக்கணிப்பும் தமிழ்த்தாய் வாழ்த்தும் இவர் கல்வியின் ஆராய்ச்சியின் பயன்கள் அன்றோ சுந்தரம் பிள்ளையின் மனோன்மணீயம் நாடக நூல் தமிழைப் புதியதொரு துறைக்குத் திசை திருப்பிவிட்டது குறிப்பாக தமிழ் திராவிட மீட்பு வாதங்களில் தொடக்க கால முன்னோடிகளில் ஒருவராக சுந்தரம் பிள்ளை மேலெழுகிறார் மனோன்மணீயம் நூலில் இவர் எழுதிய தமிழ் வாழ்த்துப் பாடல் இதற்கு சான்றாகும் நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக்கு எழில் ஒழுகும் சீராரும் வதனம் எனத் திகழ்பரத கண்டமிதில் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பம் உற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே பல்லுயிரும் பல உலகும் படைத்தளித்துத் துடைக்கினும் ஓர் எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பது போல் கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன் உதிரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடினும் ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையாஉன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே இப்பாடல் பல்வேறு துறைகளில் அவர் பெற்றிருந்த கூர்ந்த அறிவினைப் பறைசாற்றி நிற்கிறது புவியியல் தத்துவவியல் மொழியியல் வரலாற்றியல் தொல்லியல் ஆகிய பல்துறைசார் அறிஞர் என்பதை அவர் இயற்றிய இந்தப் பாடல் சுட்டுகிறது பழைய தமிழ் இலக்கிய நூல்களிலே கடவுள் வணக்கம் அல்லது கடவுள் வாழ்த்து இன்றியமையாத ஓர் உறுப்பாக இருந்தது இதனைத் தளமாகக் கொண்டே கடவுள் வாழ்த்து இலக்கிய மரபில் இடம் பெறுவது தவிர்க்க முடியாதாயிற்று தண்டியலங்காரம் பெரும் காப்பியத்தின் இலக்கணங்களைச் சொல்லுமிடத்து வாழ்த்து வணக்கம் உருபொருளிவற்றினொன் றேற்புடைத்தாகி முன்வரவியன்று அமையும் என்கிறது அதாவது வாழ்த்துதல் தெய்வம் வணங்குதல் உரைக்கும் பொருளுணர்த்தல் என்னும் மூன்றினுள் ஏற்புடையவொன்று முதலில் வரவேண்டும் என விதிக்கிறது சான்றோர் செய்யுள்களை ஆராயும் பொழுது அவற்றைப் பாடிய புலவர்கள் பாடத் தொடங்குமுன் கடவுளை வழிபட்டனர் என்பதற்குப் பல சான்றுகள் உள இருப்பினும் காலந்தோறும் கடவுள் வாழ்ந்து மாற்றத்துக்கு உள்ளாகி வந்திருக்கிறது இலக்கிய வழி வரலாறு நின்று பார்க்கும் பொழுது இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம் இந்த இலக்கிய ஓட்டத்தில் மாற்றமடைந்து வரும் கடவுள் வாழ்த்துக்கு முற்றிலும் மாறான புதிய திருப்பத்தை உண்டாக்கியவருள் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை முதன்மையானவர் தாம் எழுதிய மனோன்மணீயம் எனும் நாடகக் காப்பியத்தில் கடவுள் வாழ்த்தின் முக்கியமான பகுதியாகத் தமிழ்க் கடவுள் வாழ்த்துக் கூறினார் இது கடவுள் வாழ்த்தில் ஒரு பெரும் மாற்றத்தையே உருவாக்கி விட்டது இப்பாடல்களில் இலக்கிய நயம் ஒருபுறமிருக்க இவற்றில் கூறப்படும் கருத்துகள் அக்காலத்து தேசிய உணர்வின் ஊற்றுகளாக வெளிப்பட்டது தமிழ் திராவிட மீட்புக்கான கருத்துநிலைத் தளத்தை வழங்கியது பழைய கடவுள் வாழ்த்து முறை மாற்றத்துக்கு உள்ளாகி வந்த வேளையில் சுந்தரம் பிள்ளை நிகழ்த்திய புதுமை தமிழைத் தெய்வமாக்கி நூன்முகத்தில் அதற்கு வாழ்த்துப் பாடியது ஆகும் இது புதுமை மட்டுமல்ல புரட்சியும் கூட களில் மனோன்மணீயம் நாடக நூல் கல்லூரிகளில் முதன்முதலாகப் பாடநூலாக வைக்கப்பட்டது அதைவிட நீராரும் கடலுடுத்த என்னும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் இசைக்க வேண்டுமெனத் தமிழக அரசு பொதுத் துறையின் மூலம் களில் ஆணை பிறப்பித்து இன்றுவரை நடைமுறைப்படுத்தி வருவதையும் காணலாம் சுந்தரம் பிள்ளை காலத்துக்குப் பின்னர் தமிழ்மொழி சார்ந்த இயக்கங்களுக்கு உந்து சக்தியாகவும் திராவிட அரசியல் வேரூன்ற நீராகவும் தமிழர்களுக்குக் கிளர்ச்சி ஊட்டுவதாகவும் தமிழ்க் கடவுள் வாழ்ந்து அமைந்தது அமர் சோனார் பங்களா என்ற தாகூரின் வங்க தேசிய கீதம் போல் தமிழ் மக்களுக்கு ஓர் ஒப்பற்ற தேசியப்பாடல் சுந்தரம்பிள்ளையின் பாடல் தான் சுந்தரம்பிள்ளை ஒரு புதிய முறை ஆய்வு முயற்சியில் ஈடுபட்டு ஆய்வு நெறிமுறைகளை உருவாக்கும் வகையிலும் செயற்பட்டார் இங்கு தமிழ் இலக்கிய வரலாற்றில் சில மைல்கற்கள் அல்லது திருஞான சம்பந்தரின் காலம் என்னும் நூல் குறிப்பிடத்தக்கது இது ல் நூல் வடிவம் பெற்று முதற் பதிப்பாக வெளிவந்தது மார்ச் ம் நாள் இந்நூல் மறுஅச்சு கண்டது திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சியில் சமுதாய அணுகு முறை முலப்படிவ அணுகுமுறை இருந்தமை தெளிவாகிறது என பின்வந்த ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள் இதன் ஆய்வு நுட்பங்கள் அணுகுமுறைகள் இலக்கிய ஆய்வுப் பரப்பில் புதிய தன்மைகளை வெளிப்படுத்தியது எனலாம் பின்னர் தமிழ் இலக்கிய வரலாற்றில் கால ஆராய்ச்சி அறிவு நிலைப்பட்ட பல்துறைச் சங்கம ஆய்வுச் செல்நெறியாகப் பரிணமிப்பதற்குக் கூடச் சுந்தரம்பிள்ளையின் ஆராய்ச்சி மனப் பான்மை ஆராய்ச்சி நோக்கு ஓர் அடிப் படைக் கருத்தியல் தளத்தை வழங்கியது இதனாலேயே அறிஞர் கா சு பிள்ளை மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை இக்காலத் தமிழ் ஆராய்ச்சிக்கு அடிப்படை கோலியவர் தமிழும் தமிழரும் ஆரிய வகுப்பு முறையுட்படாத தனிப் பெருமை உடைமையை நிலைநாட்டித் தமிழ்ப் புலவர் கண்ணைத் திறந்தவர் தமிழாராய்ச்சிக் குறைபாடுகளுடைய ஐரோப்பிய ஆரியப் புலவருடைய தப்புக் கொள்கைகளைக் கண்டொதுக்கித் தமிழ் வரலாற்றின் உண்மையை விளக்கும் பொருட்டு இவரியற்றிய நூல் திருஞானசம்பந்தர் கால நிச்சயமென்னும் ஆங்கிலக் கட்டுரையாகும் என்று கா சு பிள்ளை தனது இலக்கிய வரலாறு இரண்டாம் பகுதியில் குறிப்பிட்டுச் சொல்வது நோக்கத்தக்கது ல் கால்டுவெல் பாதிரியாரின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூல் வெளிவந்தது இந்நூல் முதல் நடைபெற்று வரும் தமிழாராய்ச்சியின் வளர்ச்சியின் செல்நெறிப் போக்கில் மிகுந்த செல்வாக்கு செலுத்தத் தொடங்கியது திராவிடம் சார்ந்த சிந்தனைப்பள்ளி அனைத்தையும் ஊடுருவித் தாக்கம் செலுத்தும் கருத்துநிலைப் பாய்ச்சல் வேரூன்றக் காரணமாயிற்று இதன் தாக்கத் துக்கு சுந்தரம் பிள்ளையும் உட்பட்டார் குறிப்பாக திராவிட மொழிக்குடும்பத்தைப் பற்றியும் அதன் தொன்மையைப் பற்றியும் அது வட மொழியினின்றும் முற்றிலும் வேறுபட்டிருப்பதைப் பற்றியும் கால்டுவெல் கூறியவையே சுந்தரம்பிள்ளையின் நோக்குக்கும் சிந்தனைக்கும் மூலமாயின அத்துடன் பாதிரியாரின் மொழியியற் கருத்துக்களுடன் சமூகக் கருத்துக்கள் சிலவும் கூட அவரது கண்ணோட்டத்தில் தாக்கம் செலுத்தியது பிராம்மண எதிர்ப்பு ஆரிய திராவிடப் போராட்டம் திராவிடத் தேசியம் சமஸ்கிருத எதிர்ப்பு போன்ற வற்றுக்கான தர்க்கப் பின்புலம் கருத்தியல் நியாயப்பாடு என்பவற்றையும் பெற்றுக் கொண்டார் கால்டுவெல் தனது நூலில் வரும் திராவிட இலக்கியங்களின் பழைமை பற்றிய அதிகாரத்தில் தமிழ் இலக்கியத்தின் வரலாறு எனச் சிலவற்றைக் குறிப் பிட்டுள்ளார் அவ்வாறு எழுதும்பொழுது அவற்றுள் தமிழ் இலக்கியங்களுள் கி பி பத்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை எவையும் இல்லை என்றும் திருஞான சம்பந்தர் பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும் கூறியிருந்தார் இவ்வாறு கால்டுவெல் கூறிய கருத்தையே மேனாட்டு அறிஞர்கள் பலர் முடிவான கருத்தாக எடுத்துத் தமது கட்டுரைகளில் எழுதி வந்தார்கள் கி பி எட்டாம் நூற்றாண்டு வரை தமிழ் மக்கள் இலக்கிய முடையோராய் இருக்கவில்லை தமிழ் இலக்கியம் சமஸ்கிருத நூல்களின் திட்ட வட்டமான பிரதியாகவே இருந்தது என்ற கலாநிதி பர்னலின் கருத்து பிரித்தானியக் கலைக் களஞ்சியக் கட்டுரை ஒன்றினுள் புகுந்துள்ளது சுந்தரம்பிள்ளை இப்பிரச்சினையை முக்கியமாகக் கொண்டு இக்கருத்துக்கு தனது வன்மையான எதிர்ப்பினை எடுத்துக் கூறியள்ளார் சம்பந்தர் காலம் சம்பந்தமாக நிலவும் குழப்பத்தை விட அதிகமான ஒரு குழறுபடி நிலையைக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாதென்பது நிச்சயம் திரு டெயிலர் கூன் பாண்டியனையும் அவன் கூனை மாற்றிய சம்பந்தனையும் ஏறத்தாழ கி மு க்குரியவர்கள் என்கின்றார் ஆனால் கலாநிதி கால்டுவெல்லோ அவன் கி பி ல் ஆட்சி புரிந்தவன் என்கின்றார் இவ்வாறாகச் சம்பந்தரை கிறித்துவுக்கு முன்னும் பின்னும் வரும் வது வருடத்துக்குரியவர் என மிகுந்த அலட்சியத்துடன் கூறக் கூடுவது சாத்திய மாகிறது இது நிச்சயமாக ஒரு நூதனமாகும் வரலாறு முழுவதிலும் இதைப்போன்ற ஒன்றைக் காண முடியுமோ என என்னால் நிச்சயமாகக் கூறமுடியவில்லை உண்மையில் தென்னிந்திய வரலாற்றுக் காலவரிசை அறிவு இனித்தான் தொடங்க வேண்டியுள்ளது போலும் இவ்வாறு தனது திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சியில் குறிப்பிட்டுள்ளார் மேலும் தமிழ் இலக்கியங்களில் காலத்தை நிர்ணயிப்பதில் நடைபெற்ற விவாதத்தில் ஆய்வுத்திறன் முறைமையில் தமிழ் இலக்கிய வரலாற்றிலே சுந்தரம் பிள்ளை ஒரு முன்னோடியாகவே உள்ளார் திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சியைப் பொருத்தவரையில் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் ஆய்வுத்திறன் குறித்த பேரா ந வேலுசாமி மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை என்னும் நூலில் குறிப்பிடுவது கவனத்துக்குரியது தருக்க முறையிலான ஒப்பிட்டாய்வு இலக்கிய மரபு தழுவிய நிலையில் பொருள்கோள் காணுதல் ஐயத்திற்கிடமான இடங்களைச் சுட்டுதல் பிறமொழி பிறநாட்டார் கருத்துகளை ஏற்றல் மறுத்தல் பல்துறை அறிவாற்றலைப் பயன்படுத்தல் ஆகிய திறன்களைக் கொண்டிருந்த மையால் திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சியைப் பிற்காலத்தில் வந்த பலர் செய்த போதிலும் சுந்தரம் பிள்ளையின் கருத்துகளே வலுப்பெற்றன தமிழ் இலக்கியத்தின் வரலாற்று எழுத்துகள் முழுவதிலும் பிள்ளையின் பங்களிப்பு ஒரு மைல்கல்லாக அமைந்தமை குறிப்பிடத் தக்கது நாம் இன்னும் விரிவாகச் சுந்தரம் பிள்ளையின் புலமை மரபை ஆராய்ச்சி திறன்களை விரிவாக வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம் சமுக அரசியல் தேவைகளுக்கு இலக்கியத்தையும் இலக்கிய வரலாற்றையும் வேண்டி ஒரு முறையியலை நமக்கு அடையாளம் காட்டிய முன்னோடி பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை ஏப்பிரல் வரை வாழ்ந்து நாற்பத்திரண்டு குறை ஆயுளில் நிறை வாழ்வு வாழ்ந்த ஆராய்ச்சிப் பெருந்தகை திராவிட எழுச்சியும் தமிழ் உணர்ச்சியும் தமிழ்ப் பிரக்ஞையும் தொடர்ந்து காலமாற்றங்களுக் கேற்ப மேலெழும் பொழுது அவை புதிய பொருள்கோடல் சார்ந்து மையம் கொள்ளும் பொழுது பேராசிரியர் சுந்தரம் பிள்ளை ஒரு மைல்கல்லாகவே இருப்பார்
பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம் உங்கள் ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள் இணைப்பு கொடுக்க இணையத் தமிழ் உலகம் க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள ஐ செய்து உங்கள் தளம் ல் செய்யவும் க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள ஐ செய்து உங்கள் தளம் ல் செய்யவும் க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள ஐ செய்து உங்கள் தளம் ல் செய்யவும்
இந்திய கிரிக்கெட் அணியை கட்டமைத்ததில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் பங்கு அளப்பரியது என பலர் கூறி வரும் நிலையில் அணியை கட்டமைத்ததில் அவருக்கு எந்தவித பங்கும் இல்லை என்று கூறி புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் சுரேஷ் ரெய்னா கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா அவரது வாழ்க்கை வரலாற்றை ஒரு புத்தகமா எழுதியுள்ளார் பிலீவ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புத்தகம் தற்போது விற்பனையில் உள்ளது இந்த புத்தகத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தற்போதைய தலைவராகவும் உள்ள சவுரவ் கங்குலியைப் பற்றி குறிப்பிட்டு எழுதியுள்ளார் இதில் இந்திய அணியை கட்டமைத்ததில் சவுரவ் கங்குலிக்கு எந்தவித பங்கும் இல்லை என்று கூறியுள்ள ரெய்னா கங்குலி ஒரு கேப்டனாக செயல்பட்டு அணியில் தாக்கத்தை ஏற்படுத்தினார் என்றும் அணியை கட்டமைத்தது உண்மையில் ராகுல் டிராவிட் தான் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார் மேலும் சவுரவ் கங்குலி தலைமையில் பல இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடித்து இருந்தாலும் ராகுல் டிராவிட் தலைமையில் தான் அவர்கள் முதிர்ச்சியடைந்த வீரர்களாக உருவெடுத்தார்கள் இந்திய அணிக்காக விளையாடுவதை டிராவிட் எப்போதுமே ஒரு கௌரவாகமே நினைத்து வந்தார் அவரது தலைமையின் கீழ் விளையாடிய மஹேந்திர சிங் தோணி முனாஃப் பட்டேல் யுவராஜ் சிங் இர்பான் பதான் போன்ற வீரர்களுக்கு அவர் ஊக்கமளித்ததால் தான் எதிர்காலத்தில் அவர்கள் அனைவரும் மிகப்பெரிய வீரர்களாக திகழ்ந்தார்கள் என்று அந்த புத்தகத்தில் ரெய்னா குறிப்பிட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியை கட்டமைத்தததில் முக்கிய பங்காற்றியதோடு ம் ஆண்டுகளில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தவித்த இந்திய அணியை மீட்டது இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்கியது என பல வழிகளில் அணியின் தரத்தை உயர்த்த உழைத்திருந்தார் கங்குலி இந்த நிலையில் கங்குலியை பற்றிய சுரேஷ் ரெய்னாவின் இந்த கருத்து கிரிக்கெட் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
வளர்ந்த நாடுகள் நிதி மற்றும் பசுமைத் தொழில்நுட்பங்களை வளரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் அவை உமிழ்வைக் குறைக்கவும் சுத்தமான உற்பத்தி செயல்முறைகளுக்கு மாறவும் உதவ வேண்டும் என்று பல்வேறு பங்குதாரர்கள் கூறுகின்றனர் மும்பை எஃகு சிமென்ட் மற்றும் உரங்கள் அனைத்தும் வளரும் நாடுகளின் முக்கிய ஏற்றுமதிகள் அவற்றின் உற்பத்தி மிகவும் மாசுபடுத்துகிறது வளரும் நாடுகளில் இந்தத் தொழிற்சாலைகள் வெளியிடும் உமிழ்வைத் தண்டிக்க பணக்கார நாடுகள் கார்பன் எல்லை வரியை விதிக்க வேண்டுமா பசுமையான தொழில்நுட்பங்களைப் பின்பற்ற ஊக்குவிக்க வேண்டுமா அல்லது வளரும் நாடுகளின் மீது செலவுகளை மட்டும் சுமத்தி இந்தத் தொழில்களை பசுமையாக்க பணமோ தொழில்நுட்பமோ இல்லாமல் அவர்களைத் தவிக்கவிடுமா பாரிஸ் ஒப்பந்தத்தின் வது பிரிவின் கீழ் கார்பன் சந்தைகள் தொடர்பான விதிகள் குறித்து உலகத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தும் அமைப்புகளின் தற்போதைய வது மாநாட்டில் இது போன்ற கேள்விகள் விவாதிக்கப்படுகின்றன இந்த விதிகள் கார்பன் உமிழ்வுகளின் விலையை நிர்ணயிக்கும் மற்றும் கார்பன் வரவுகளின் சர்வதேச விற்பனையை அனுமதிக்கும் கார்பன் எல்லை வரி என்பது வளர்ந்த நாடுகள் பரிந்துரைத்த கார்பன் விலை நிர்ணய கருவிகளில் ஒன்றாகும் ஆனால் இந்தியா போன்ற வளரும் பொருளாதாரங்களுக்கு சுத்தமான மாற்று வழிகளை மாற்றுவதற்குத் தேவையான நிதி மற்றும் தொழில்நுட்பத்தை அணுக பணக்கார நாடுகள் உதவாத வரையில் கார்பன் அடர்த்தியான எஃகு மற்றும் சிமென்ட் போன்ற பொருட்களின் ஏற்றுமதிக்கு அபராதம் விதிக்கும் கார்பன் எல்லை வரி நியாயமற்றது என்று நிபுணர்கள் கூறுகின்றனர் இது வளரும் நாடுகளில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை பாதிக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் சர்வதேச வர்த்தகத்தை கார்பன் நீக்கம் செய்தல் உலகளாவிய வர்த்தகத்தில் கார்பன் நீக்கம் செய்வது ஏன் இன்றியமையாததாக மாறியது இல் வெளியிடப்பட்ட பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆய்வு அறிக்கையின்படி ஆம் ஆண்டில் உலகளாவிய கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தில் சர்வதேச வர்த்தகத்துடன் தொடர்புடையது இந்த உமிழ்வுகள் ஏழு தொழில்களின் ஏற்றுமதியில் குவிந்துள்ளன அவை சுரங்கம் மற்றும் ஆற்றல் உற்பத்தி பொருட்களை பிரித்தெடுத்தல் ஜவுளி மற்றும் ஆடை பொருட்கள் இரசாயனங்கள் மற்றும் உலோகம் அல்லாத கனிம பொருட்கள் கணினிகள் மின்னணு மற்றும் மின் உபகரணங்கள் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்கனவே கார்பன் வரி விதிக்கப்பட்டுள்ளது உதாரணமாக ஐரோப்பிய ஒன்றியம் ஒரு உமிழ்வு வர்த்தக அமைப்பை கொண்டுள்ளது அங்கு தொழில்துறை அலகுகளுக்கான பசுமை இல்ல வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் அவற்றின் உமிழ்வைக் கட்டுப்படுத்தத் தவறியவர்கள் தீவிரமான குறைப்பு செய்தவர்களிடம் இருந்து அலவன்ஸ் வாங்கலாம் இருப்பினும் உள்நாட்டு கார்பன் வரி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையில் வேறுபடுகிறது உதாரணமாக ஸ்வீடனின் கார்பன் வரி ஒரு மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்சைடுக்கு சுமார் ரூ செலவாகும் சுவிட்சர்லாந்து ரூ வசூலிக்கிறது ஏழை நாடுகளுக்கு சுமை கார்பன் வரி என்பது ஒரு பொருளை உற்பத்தி செய்யும் போது கார்பன் அடிப்படையிலான எரிபொருளை எரிக்க விதிக்கப்படும் கட்டணமாகும் ஒரு நாடு கார்பன் மிகுந்த பொருட்களை விற்கும் போது இறக்குமதி செய்யும் நாட்டின் எல்லையில் வரி விதிக்கப்படுகிறது ஜூலை இல் ஐரோப்பிய யூனியன் வரும் ஆம் ஆண்டுக்குள் பசுமை இல்ல வாயு உமிழ்வை குறைந்தது குறைக்கும் அதன் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக கார்பன் தீவிரமுள்ள பொருட்களின் இறக்குமதியின் மீது எல்லை வரியை விதித்தது ஆனால் இந்த நடவடிக்கையை இந்தியா பிரேசில் தென்னாப்பிரிக்கா மற்றும் சீனா நாடுகள் பாரபட்சமானது என்று விமர்சிக்கப்பட்டன ஐரோப்பிய யூனியன் இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தகப் பங்காளியாகும் மேலும் ஆம் ஆண்டில் பில்லியன் பில்லியன் மதிப்புள்ள பொருட்களின் வர்த்தகம் செய்தது இது இந்தியாவின் மொத்த உலக வர்த்தகத்தில் ஆகும் ஐரோப்பிய யூனியனில் இந்தியத் தயாரிப்புப் பொருட்களின் விலையை அதிகரிப்பதன் மூலம் இந்த வரி இந்தியப் பொருட்களை வாங்குபவர்களின் ஈர்ப்பை குறைக்கும் மற்றும் தேவையைக் குறைக்கும் என்று ஜூலை கட்டுரையில் தெரிவித்தோம் வளர்ந்த நாடுகளால் விதிக்கப்பட்ட கார்பன் எல்லை வரி பற்றிய யோசனை அக்டோபரில் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டிற்கான ஐ னா மாநாட்டால் விமர்சிக்கப்பட்டது இது வளரும் பொருளாதார நாடுகளுக்கு சுமையாகும் அவை இன்னும் நிலக்கரியையே பெரிதும் நம்பியுள்ளன அவற்றின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துகின்றன மற்றும் காலநிலை நடவடிக்கைக்கான பட்ஜெட்டைக் கட்டுப்படுத்துகின்றன வரி விதிக்கப்பட்ட நாடுகள் ஏற்றுமதியின் மீது விதிக்கப்படும் வரிகளால் கணிசமான வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும் அவற்றின் போட்டித்தன்மையை இழக்க நேரிடும் மற்றும் மோசமான உற்பத்தி திறன் கொண்ட நிகர இறக்குமதியாளர்களாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று அறிக்கை கூறுகிறது ஆம் ஆண்டில் வளரும் நாடுகளின் ஏற்றுமதி வரி வருவாய் பில்லியன் ஆகும் கார்பன் வரியின் நன்மைகள் ஐரோப்பிய யூனியனின் அனுபவம் காட்டியுள்ளபடி உள்நாட்டு கார்பன் வரி உலக அளவில் விதிக்கப்பட்டதற்கு மாறாக ஒரு சிக்கலைக் கொண்டுள்ளது இது கார்பன் கசிவுக்கு வழிவகுக்கிறது இதன் பொருள் சில வணிகங்கள் ஐரோப்பிய யூனியனுக்குள் செயல்படுவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதைக் கருத்தில் கொண்டு அவை மிகவும் தளர்வான உமிழ்வு வரம்புகளைக் கொண்ட நாடுகளுக்கு இடம் பெயர்கின்றன இதை சமாளிக்க ஐரோப்பிய யூனியன் கார்பன் வரியை எல்லை தாண்டிய வர்த்தகத்திற்கு நீட்டிக்க பரிந்துரைத்தது ஏனெனில் இது நாடுகள் தங்கள் போட்டி விளிம்பில் வைத்திருக்க அனுமதிக்கும் உலக வங்கியின் கூற்றுப்படி கார்பன் எல்லை வரியின் வலிமையானது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சேதத்தைத் தணிப்பதற்கான சுமையை உண்மையில் அதற்குப் பொறுப்பான சந்தையாளர்களுக்கு மாற்றும் திறன் ஆகும் இது உற்பத்தியாளர்களை தூய்மையான தொழில்நுட்பங்களையும் சந்தை புதுமைகளையும் பின்பற்ற ஊக்குவிக்கும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகளாவிய பொருளாதாரத்தில் உற்பத்தி மற்றும் நுகரப்படும் உமிழ்வுகள் உள்ளன என்று கொள்கை ஆராய்ச்சி மையத்தின் அமன் ஸ்ரீவாஸ்தவா கூறினார் வரியானது உமிழ்வுகளின் சரியான தோற்றத்தைக் குறிக்கும் மற்றும் ஏற்றுமதி செய்யப்பட்ட உமிழ்வுகளின் நிகழ்வுகளைக் குறைக்கும் கார்பன் எல்லை வரியின் தீமைகள் கார்பன் எல்லை வரியானது வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளால் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தரநிலைகளை கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது இது பாரிஸ் ஒப்பந்தத்தில் உள்ள பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்பு கொள்கையை மீறுகிறது என்று அக்டோபர் அறிக்கை கூறியது காலநிலை நெருக்கடிகளின் தாக்கங்களால் அதிகம் பாதிக்கப்படும் ஏழை நாடுகளை விட பணக்கார நாடுகள் வரலாற்று ரீதியாக அதிக கார்பனை வெளியேற்றியுள்ளன என்ற உண்மையை இந்தக் கொள்கை ஒப்புக்கொள்கிறது மற்றும் ஈடுசெய்கிறது வளரும் நாடுகளுக்கு நாம் முன்பு கூறியது போல் கார்பன் வர்த்தக வரி பல ஆபத்துக்களைக் கொண்டுள்ளது ஜூலை அறிக்கையின்படி முக்கிய எஃகு மற்றும் சிமென்ட் ஏற்றுமதியாளர்களைப் போலவே பொருளாதார கட்டமைப்புகள் ஆற்றல் தீவிர செயல்பாடுகளைச் சார்ந்து இருக்கும் நாடுகளில் சர்வதேச சந்தைகளில் உள்ள போட்டித் தீமைகள் வேலை இழப்பை ஏற்படுத்தலாம் என்றது இந்த அறிக்கையானது வளரும் நாடுகளில் ஐரோப்பாவின் கார்பன் எல்லை வரியின் தாக்கங்களை ஆய்வு செய்தது ஐரோப்பிய யூனியனின் கார்பன் எல்லை வரியுடன் வளரும் நாடுகள் உட்பட நாடுகள் தங்கள் சொந்த உள்நாட்டு நுகர்வுக்குக் கூட பங்களிக்காத உமிழ்வுகளுக்கு வரி விதிக்கப்படுகின்றன இது வர்த்தகம் மற்றும் பிற காலநிலை சமபங்கு கவலைகளுக்கு கூடுதலாக அநீதியின் ஒரு அங்கத்தை சேர்க்கிறது என்று கொள்கை ஆராய்ச்சி மையத்தின் ஸ்ரீவஸ்தவா கூறினார் கார்பன் எல்லை வரி எப்படி இருக்கும் என்பதற்கான நெறிமுறைகள் எதுவும் இதுவரை இல்லை ஆனால் அவை வளரும் பொருளாதாரங்களின் தேவைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர் வளரும் நாடுகள் ஏற்கனவே தங்கள் உமிழ்வைக் குறைக்கும் பணக்கார நாடுகளின் தோல்வியாலும் நிதிக் கடமைகளுக்கு ஏற்ப வாழத் தவறியதாலும் பாதிக்கப்பட்டுள்ளன என்று நிதி அமைப்புகளில் காலநிலை நெருக்கடியின் தாக்கம் குறித்து செயல்படும் பெங்களூருவை சேர்ந்த க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசன்ஸ் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் பெர்னாண்டஸ் கூறினார் வளரும் நாடுகளில் ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பைப் பாதிக்கும் கார்பன் எல்லை வரி காயத்தில் உப்பைத் தேய்க்கும் செயல் என்றார் கடந்த ஆம் ஆண்டு அக்டோபரில் நாங்கள் தெரிவித்தபடி வளர்ந்த நாடுகள் ஆம் ஆண்டிற்குள் பில்லியன் வருடாந்திர காலநிலை நிதியை வளரும் நாடுகளுக்கு வழங்குவதாக உறுதியளித்தன ஆனால் வாக்குறுதியளிக்கப்பட்ட பில்லியன் டாலர்களில் மட்டுமே வளர்ந்த நாடுகளால் சராசரியாக மற்றும் க்கு இடையில் வழங்கப்பட்டுள்ளது மற்றும் இதில் பெரும்பாலானவை அதிக தொகையுள்ள கடன்களாக உள்ளன மாற்று அணுகுமுறைகள் கார்பன் வரி விதிப்பில் அனைவருக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறை சமமாக இருக்காது என்று கொள்கை ஆராய்ச்சி மையத்தின் ஸ்ரீவஸ்தவா கூறினார் போட்டியைக் கையாள்வதில் நாடுகள் வெவ்வேறு திறன்களைக் கொண்டுள்ளன அக்டோபர் அறிக்கை வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளுக்கு மிகவும் சமமானதாக இருக்கும் வேறுபட்ட அணுகுமுறையையும் பரிந்துரைத்துள்ளது இதற்கு வளர்ந்த நாடுகள் சுத்தமான தொழில்நுட்பத்தை இன்னும் அணுகக்கூடியதாக மாற்ற வேண்டும் உதாரணமாக அறிவுசார் சொத்துரிமை அல்லது காப்புரிமைகளை நீக்குதல் அல்லது ஏழை நாடுகளுக்கு ஆதாரம் பெறுவதற்கான அதிகரிக்கும் செலவை ஈடுகட்ட நிதியுதவி வழங்குதல் என்று அறிக்கை கூறுகிறது நாடுகளும் போக்கு காட்டும் கார்பன் வரி முறையை உருவாக்கலாம் என்று காலநிலை ஆபத்து ஹொரைஸனின் பெர்னாண்டஸ் கூறினார் உதாரணமாக வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது படிப்படியான உமிழ்வு குறைப்பு இலக்குகளை அமைக்கலாம் அதன் அடிப்படையில் அவை நிதிக்கான அணுகலை வழங்க முடியும் மலிவான சோலார் பேனல்கள் பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பம் மற்றும் கடல் அலைகளில் இருந்து ஆற்றலைப் பிரித்தெடுக்கும் முறைகள் போன்ற புதிய தூய்மையான தொழில்நுட்பங்கள் காலநிலை நடவடிக்கைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் ஏனெனில் உலகளாவிய உமிழ்வை தற்போதுள்ள தொழில்நுட்பங்களுடன் உறுதிப்படுத்த முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர் பெரும்பாலான தொழில்நுட்ப வளர்ச்சிகள் நிகழும் வளர்ந்த நாடுகளில் காப்புரிமைகள் புதுமைகளை ஊக்குவிக்கப் பயன்படுத்தப்படுகின்றன ஆனால் இவை ஏழைப் பொருளாதாரங்களுக்கு கட்டுப்படியாகாத வகையில் முடிவடைகின்றன உதாரணமாக பசுமை ஹைட்ரஜன் அடிப்படையிலான எஃகு ஏற்கனவே ஆர்சிலர் மிட்டல் மற்றும் போன்ற ஐரோப்பிய நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு வருகிறது என்று செப்டம்பர் கட்டுரையில் நாங்கள் தெரிவித்தோம் ஆனால் இந்தியாவில் இந்த மாற்றத்தை பொருளாதார ரீதியில் போட்டித்தன்மையுடனும் வணிக ரீதியாகவும் சாத்தியமானதாக மாற்றுவது சவாலாக உள்ளது ஐரோப்பிய யூனியனின் கார்பன் வரி குறித்த கருத்து அறிவதற்காக வர்த்தக மற்றும் வர்த்தக அமைச்சகத்தை நவம்பர் அன்று அணுகினோம் பதில் கிடைக்கும் போது இக்கட்டுரையை புதுப்பிப்போம் உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம் கருத்துகளை என்ற முகவரிக்கு அனுப்பலாம் மொழி இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு
மும்பை கோவிட் தொற்றுநோய் என்பது ஒருதலைமுறையில் இருந்து இன்னொன்று வாழ்க்கையை மாற்றக்கூடியது இந்த பிரச்சினையில் இருந்து விடுபட நிலையான வழி தடுப்பூசிதான் என்று யேல் இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த் இயக்குனர் சாட் பி ஓமர் கூறுகிறார் அவர் யேல் ஸ்கூல் ஆஃப் மெடிசின் தொற்று நோய்கள் மற்றும் யேல் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் தொற்றுநோயியல் பேராசிரியராக உள்ளார் அவர் டெட் எக்ஸ் கேட்வே என்ற வெபினாரின் ஒரு பகுதியாக கோவிட் க்கு மத்தியில் மீள்வறதற்கான தடுப்பூசி முறையின் பரிணாமம் என்ற தலைப்பிலான சிறு விளக்கக்காட்சியில் தற்போதைய முன்னுதாரணம் நம்பகமான தடுப்பூசியை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை சுருக்கிவிட்டது ஆனால் அவற்றைத் தவிர்த்துவிடவில்லை என்றார் மற்றொரு கண்டுபிடிப்பு சோதனைகள் செய்யப்படுவதால் உற்பத்தியில் முதலீடு செய்வது மதிப்புக்குரியது என்று உற்பத்தியாளர்கள் சொந்தமாக அல்லது அரசு மற்றும் கொடை தரும் நிறுவனங்களின் முதலீடுகள் என்று முடிவு செய்துள்ளனர் கோவிட் முதல் கட்டம் மற்றும் கட்ட மருத்துவச்சோதனைகளுக்கு தடுப்பூசிக்காக பேரும் மூன்று பேர் வரையறுக்கப்பட்ட பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்பட்ட நிலையில் இங்கே சில கேள்விகள் எழுப்பப்படுகின்றன இந்த தடுப்பூசிகளை வழங்குவதில் ஏற்படும் ஆபத்துகள் என்ன தடுப்பூசிகளின் விநியோகம் விநியோக மற்றும் நிர்வகித்தலுக்கு நாடுகள் எவ்வாறு தயாராகின்றன இவை அனைத்தையும் மற்ற தடுப்பூசி தடுக்கக்கூடிய நோய்களில் என்ன உட்படுத்துகிறது என்பதாகும் விவாதத்தில் இருந்து திருத்தப்பட்ட பகுதிகள் இந்த அளவில் நாங்கள் வயது வந்தோருக்கான தடுப்பூசி போடுவது இதுவே முதல் முறை என்று நீங்கள் சொன்னீர்கள் அதை விரிவாகக் கூற முடியுமா வயது வந்தோருக்கான தடுப்பூசிகள் உள்ளன சில நாடுகள் அதைச் செய்கின்றன ஆனால் இந்த கட்டத்தில் இல்லை பெரும்பாலும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சில கர்ப்பிணிகளிடம் நாடுகள் இதைச் செய்கின்றன காய்ச்சல் மிகவும் பொதுவானது முதியோருக்கு பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி உள்ளது மற்றும் பல்வேறு நாடுகள் தனியார் துறைகல் இதைச் செய்கின்றன ஒரே உலகமாக பெரியம்மை ஒழிப்பு திட்டத்தில் நாம் அதைச் செய்தோம் ஆனால் அது இலக்கு வைத்து நடந்தது கோவிட் வைரஸ் பாதித்தவர்களை பார்த்து அவர்களை சுற்றி பாதுகாப்பு வளையத்தை உருவாக்குவதன் மூலம் பரவலை கட்டுப்படுத்துவீர்கள் ஆனால் பல பெரியவர்களை உள்ளடக்கிய ஒரு வெகுஜன தடுப்பூசி முன்னோடியில்லாதது குறிப்பாக சமீபத்திய வரலாற்றில் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளின் ஆற்றல் குறைவாக உள்ளதா பெரியவர்களுக்கு இது அதிகமாக இருக்கிறதா அந்தக் கணக்கில் ஏதேனும் வர்த்தகம் அல்லது கவலைப்படும் அம்சம் உள்ளதா குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளின் ஆற்றலும் செயல்திறனும் மற்றும் உருவாக்கப்பட்டது குழந்தைகளுக்கு மிகவும் வலுவானது முதியவர்கள் சில சமயங்களில் நோயெதிர்ப்பு முதிர்ச்சி போன்ற பல்வேறு காரணங்களால் குறைந்த மறுமொழியை கொண்டுள்ளனர் என்பது கவலைக்குரியது அங்கு சில செல்கள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் கூறுகளும் வேலை செய்யாது இந்த சோதனைகளில் நாம் தேடும் விஷயங்களில் இதுவும் ஒன்றாகும் மேலும் ஏராளமான வயதானவர்கள் சோதனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் ஏனெனில் இந்த வைரஸ் அவர்களை அளவுக்கு மீறி பாதிக்கிறது வெளிப்படையாக இது தொடர்பாக இங்கே பந்தயமே நடக்கிறது அவை இலாபங்களை கருதி இயக்கப்படுகிறது நாம் தேர்வு செய்ய வேண்டிய பந்தயம் மற்றும் நமக்குள்ள அபாயங்களுக்கு இடையில் ஒரு சமநிலையை எவ்வாறு கண்டுபிடிப்பது சில வழிகளில் சமநிலை என்னவாக இருக்க வேண்டும் என்று யார் தீர்மானிக்கிறார்கள் அதை தீர்மானிப்பது பாரம்பரியமாக அரசின் பங்கு ஆனால் அமெரிக்காவில் வரவிருக்கும் தேர்தலின் காரணமாக இது சுவாரஸ்யமாகி இருக்கிறது நடைமுறைகளை நன்கு ஏற்ற ஒழுங்குமுறை முகமைகளை நம்பியுள்ளது உலகம் முழுவதும் நாங்கள் உரிமம் பெற்ற முதல் தடுப்பூசி இதுவல்ல ஒழுங்குமுறை முகவர் நிலையங்கள் நிலையான நடைமுறைகளைக் கொண்டுள்ளன செய்யப்பட வேண்டியவை அடிப்படையில் நீங்கள் முன்பே குறிப்பிட்ட எழுதப்பட்ட நெறிமுறை உள்ளது அரசின் அழுத்தம் இருந்தாலும் நன்கு ஏற்கப்பட்ட நடைமுறைகளை ஒழுங்குமுறை ஏஜென்சிகள் நம்பியிருப்பதால் மற்றவர்கள் இந்த செயல்முறையின் உண்மைத்தன்மையைப் பார்த்து கருத்துத் தெரிவிக்கலாம் ஆனால் அதில் ஒரு பெடல் உள்ளது அதனால் எல்லோரும் வேகமாக மிதித்து நகர்கிறார்கள் வரலாற்றில் நாம் கண்ட எந்தவொரு அல்லது பிற தடுப்பூசி அறிமுகத்தைவிட இது மிக விரைவானது என்று நம்புகிறேன் விஷயங்களை விரைவுபடுத்த முயற்சிக்கும்போது அவை பின்னுக்குத் தள்ளப்படுகின்றன எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எஃப் டி ஏ மிகத்தெளிவாகவும் ஓசையுடனும் வெளிவந்துள்ளது அக்டோபர் ஆம் தேதி அவர்கள் ஆலோசனைக் குழுவின் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர் அங்கு தரவு ஒரு வழியிலோ அல்லது வேறு வழியிலோ விவரங்கள் வழங்கப்படும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் ரஷ்யர்கள் ஒரு தடுப்பூசிக்கு ஒப்புதல் அல்லது பதிவு செய்ததாகக் கூறி வெளியே வந்தபோது கணிசமான பின்னடைவும் இருந்தது அந்த தடுப்பூசி உலகளவில் பயன்படுத்தப்படவில்லை இது உலக சுகாதார அமைப்பால் முன்னரே அங்கீகரிக்கப்படவில்லை சமநிலையை நாம் இப்படித்தான் கண்டுபிடிப்போம் சில நிறுவனங்கள் முன்னோக்கி தள்ள ஒரு உள்ளுணர்வு இருக்கும் பின்னர் நீங்கள் இந்த பரிசோதனைகள் மற்றும் நிலுவைகளை வைத்திருக்கிறீர்கள் வெளிப்படைத்தன்மைக்கான இந்த அழைப்பை எதிர்கொண்டு நாம் அதே பழைய நடைமுறையை வேகமாக நாம் செய்கிறோம் என்றாலும் பயன்படுத்துகிறோம் அடுத்த வார தொடக்கத்தில் அமெரிக்காவின் முக்கிய மருந்து நிறுவனங்கள் பத்திரிகை வெளியீடுகளில் இருந்து தரவு வெளியிடுவதை நிறுத்துவதாக உறுதிமொழி அளிக்கும் கதை இருந்தது அவர்கள் அவற்றை வெளியிட்டாலும் அதை முழு வெளிப்பாட்டுடன் செய்வார்கள் எடுத்துக்காட்டாக அறிவியல் கட்டுரை வெளியீட்டை பயன்படுத்துவார்கள் பிரதான செயல்முறைகளைப் பயன்படுத்தி அனைத்து முடிவுகளையும் எடுக்க அவர்கள் உறுதியளிப்பார்கள் இது ஒரு நல்ல அறிகுறி அதற்கு நாம் அவர்களைப் பிடிக்க வேண்டும் தடுப்பூசி பயன்படுத்த அவசர ஒப்புதல் பெறுவதற்கான வாய்ப்புகள் என்ன இது ஒழுங்குமுறை அமைப்பின் முன்னுதாரணத்தையும் சட்டத்தையும் சார்ந்துள்ளது முன்பே குறிப்பிடப்பட்ட விதிகள் உள்ளன முழு ஒப்புதலும் உரிமமும் தடுப்பூசியின் செயல்திறனை சரிபார்க்க மட்டுமல்லாமல் உற்பத்தி போன்ற பிற நடவடிக்கைகளையும் சார்ந்துள்ளது அவ்வகையான விஷயங்கள் பொதுவாக அவசர காலங்களில் விரைவுபடுத்தப்படுவதில்லை ஏனென்றால் இது அடிப்படை உறுதியான முன்னுதாரணம் அவர்களில் பெரும்பாலோரை குறைந்தபட்சம் அமெரிக்காவில் ஐரோப்பியர்கள் இதை சற்று வித்தியாசமாகச் செய்யலாம் நான் காண்கிறேன் இது விஞ்ஞான சமூகத்தால் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் கூட ஒருவித அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும் ஆனால் அது எவ்வாறு செய்யப்படுகிறது என்பது மிகவும் முக்கியமானது இது எப் டி ஏ வுக்கான ஆலோசனைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் செய்யப்படுகிறதா உடனடியாக கிடைக்கக்கூடிய மற்றும் வெளிப்படையான தரவுகளின் அடிப்படையில் இது செய்யப்படுகிறதா அது முக்கியம் பொதுவில் முழு உரிமச் செயல்முறை என்பது நேரம் எடுக்கும் அத்துடன் அது செயல்முறைக்கு இன்னும் ஆறு மாதங்களாகும் அதிகாரத்துவ தாமதம் மட்டுமல்ல அதற்கு குறிப்பிட்ட படிகள் தேவை என் கணிப்பு என்னவென்றால் ஆரம்ப கட்டத்தில் இது அவசரகால பயன்பாட்டு அங்கீகாரமாக இருக்கக்கூடும் வெளிப்படையாக அது உறுதியாக இல்லை ஆனால் விஷயங்கள் உருவாகி வருகின்றன ஒரு புத்திசாலித்தனமான தடுப்பூசியை உருவாக்கி அதை சாதாரண நபரிடம் கொண்டு செல்ல எவ்வளவு நேரம் ஆகும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளில் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை காணலாம் செயல்திறனில் வழக்கமாக இந்த சோதனைகள் நிகழ்வு மாதிரி அளவுகளை அடிப்படையாகக் கொண்டவை உதாரணமாக நோய்த்தொற்றுகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறீர்கள் எனவே அதன் அடிப்படையில் நீங்கள் அதைப் பெறுவதற்கு நிறைய பேர் காத்திருக்கலாம் அல்லது ஒரு டன் மக்களை விரைவாக நியமிக்கிறீர்கள் அவர்களுக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்படும் பின்னர் நீங்கள் காத்திருக்க வேண்டும் சிலர் துரதிர்ஷ்டவசமாக நோய்த்தொற்று மற்றும் நோய்த்தாக்கம் இல்லாத குழுவில் நோய் பெறக்கூடும் மற்றவர்கள் இரட்டை சோதனையில் பாதுகாக்கப்படுவார்கள் அதற்கு நேரம் தேவை ஆனால் பாதுகாப்பு பின்தொடர்தலைக் காண இரண்டு மாதங்கள் தேவைப்படுகின்றன ஏனென்றால் பெரும்பாலான பாதுகாப்பு நிகழ்வுகள் உண்மையில் முதல் இரண்டு மாதங்களுக்குள் நிகழ்கின்றன அந்த அறிகுறிகள் என்னவாக இருக்கும் ஒரு மாதமாக தடுப்பூசி நமது கையில் இருப்பதாகச் சொல்லலாம் நான் அதை போட்டுக்கொண்டால் எதிர்மறையாக அல்லது தலைகீழாக என்ன இருக்கிறது இந்த செயல்பாடுகள் மேலே குறிப்பிட்டுள்ளவை அரசியல்வாதிகள் என்ன சொன்னாலும் பரவலாக தடுப்பூசி அல்லது பிரதான தயாரிப்புகளுக்கு ஒரு மாதத்திற்குள் கிடைக்க வாய்ப்பில்லை என்று பொருள் ஆனால் ஒரு தடுப்பூசி கிடைக்கக்கூடிய அல்லது அங்கீகரிக்கப்பட்ட அவசரகால பயன்பாட்டின் கீழ் அல்லது முழு உரிமத்தின் கீழ் ஆண்டு இறுதிக்குள் என்பது கற்பனை அல்ல இது ஒரு தெளிவான வாய்ப்பு ஆம் ஆண்டின் முற்பகுதியில் அதிக வாய்ப்பு உள்ளது நீங்கள் தேடும் பொருட்களுக்கு அடிப்படையில் சில நிபந்தனைகள் உள்ளன மேலும் இந்த சோதனைகளில் உள்ளவர்கள் அவர்கள் வெளிப்படுத்தும் ஆரம்ப அறிகுறிகளைக் கூட கண்டறிந்து தீவிரமாக பின்பற்றப்படுகிறது முதலில் நோய் என்னவென்று காண்கிறீர்கள் அந்த வகையான நோய்க்குறிகளைப் பாருங்கள் இதில் பாதகமான நிகழ்வுகள் உள்ளன குய்லின் பாரே அறிகுறி போன்ற சில தன்னுடல் தாக்க நிலைமைகள் உள்ளன ஆன்டிபாடி சார்பு மேம்பாடு என்பது நீங்கள் கவனிக்கும் மற்றொரு நிகழ்வு இது அரிதானது ஆனால் சில நோய்களிடம் நடக்கிறது சோதனையில் உங்களுக்கு நிபந்தனைகள் உள்ளன ஆனால் ஒரு பரிசோதனை முடிந்ததும் நீங்கள் மன அமைதியுடன் தடுப்பூசியைப் பெறலாம் முக்கிய நிறுவனங்கள் பாதுகாப்பானவை மற்றும் செயல்திறன் மிக்கவை என்று சொல்வதற்கு முன்பு குறிப்பிட்ட காலத்திற்கு காத்திருக்க இதுவே காரணம் அத்தகைய நோயாளிகளுக்கு வைரஸ் மிக ஆபத்தானது என்று கருதப்படுவதால் தடுப்பூசி இணை நோயாளிகளை மோசமாக பாதிக்காது இணை நோயுள்ள குழுக்களை விகிதாசாரமாக பாதிக்கும் பிற வைரஸ்களில் கூட ஒரு தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் நிறைய நன்மைகளைக் கொண்டுள்ளது என்பதை கண்டறிந்துள்ளோம் தடுப்பூசிகள் மற்றும் இயற்கை தொற்றுநோய்கள் ஒரே மாதிரியான நோயெதிர்ப்பு பாதைகளில் சிலவற்றைப் பயன்படுத்தினாலும் அவை ஒரே மாதிரியாக இல்லை வீரியம் குறைந்த வைரஸ் தடுப்பூசிகள் கூட ஒரு நோய்க்கிருமி பலவீனமடையும் ஆனால் உயிருடன் இருக்கும் நோய் திறனை கொண்டிருக்காது நோயின் லேசான வடிவத்தை கூட ஏற்படுத்தாமல் நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறீர்கள் தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படுகின்றன எனவே இப்போது அது கவலையல்ல எனவே தான் மீண்டும் கட்ட பரிசோதனைகளை கட்டுப்படுத்தப்பட்ட முறையில் செய்கிறோம் இதனால் சாத்தியமான பாதகமான விளைவுகளை நாம் அடையாளம் காண்கிறோம் மேலும் தடுப்பூசி உரிமம் பெற்ற பிறகு எந்த ஆச்சரியமும் ஏற்படாது நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு வயது வந்தோருக்கான தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அல்லது அவை கடும் பக்க விளைவுகளை எதிர்கொள்ளாது என்பதை உறுதிப்படுத்த பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் இருக்குமா நம்மிடம் தரவுகள் இருக்கும் மற்ற தடுப்பூசிகளிலிருந்து வழக்கமாக நீண்டகால நோய்கள் உள்ளவர்களுக்கு கூட தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்படுகின்றன என்பதை நாங்கள் அறிவோம் எடுத்துக்காட்டாக சில நாடுகளில் காய்ச்சல் தடுப்பூசிகள் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன அவர்களுக்கு சமமற்ற பாதகமான நிகழ்வுகள் இல்லை இது என் கவலையை குறைக்கும் நமக்கு தனிச்சோதனைகள் தேவையில்லை சந்தைப்படுத்தலுக்கு பிந்தைய கண்காணிப்பில் அவை சேர்க்கப்படும் பிந்தைய சந்தைப்படுத்தல் கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படும் புள்ளிவிவர நுட்பங்கள் விரைவான மதிப்பீட்டு புள்ளிவிவர நுட்பங்கள் அதாவது நீங்கள் ஒரு முடிவை மிக விரைவாகப் பெறுவீர்கள் என்பது பொருள் நீண்ட காலத்திற்கு என்ன மாதிரியான பக்க விளைவுகள் தோன்றக்கூடும் நாம் கவலைப்படும் தீவிர பக்கவிளைவுகள் பெரும்பாலானவை சோதனைகளில் அடையாளம் காணப்படுபவை நமக்கு தெரியாத அரிதான பக்க விளைவுகள் இருக்கலாம் ஆனால் அவை மிகவும் அரிதானவை ஆபத்து பலன்கள் இன்னும் நன்மைக்கு சாதகமாகவே உள்ளன எனவே சில தன்னுணர்வு தாக்க நோய் நிகழ்வுகளை ஒத்த விஷயங்களை நாம் தேடுவோம் இது நோயைப் போலவே தோற்றமளிக்கும் ஆனால் லேசான வடிவத்தில் இருக்கும் சில பின்விளைவுகளை தேடுகிறோம் ஆனால் ம் கட்டம் முடிந்ததும் அது வழக்கமான நடைமுறைகளை மேற்கொண்டால் ஆபத்து பலன் விகிதம் தடுப்பூசிக்கு ஆதரவாக இருப்பதாக மக்கள் நியாயமான முறையில் நம்பலாம் கோவிட் தொற்றில் என்ன நிகழ்கிறது என்பதனால் அல்ல என்று நீங்கள் சொல்வது கடந்த காலங்களில் உங்கள் அனுபவமும் தடுப்பூசிகளைப் பற்றிய புரிதலும் காரணமாக அவை பல தசாப்தங்களாக வளர்ச்சியில் உள்ளன என்பது சரியானதா சரி தசாப்த வளர்ச்சி ஒரு டன் அனுபவம் ஒரு புதிய நோய்க்கிருமியுடன் கூட நினைவில் கொள்ளுங்கள் இந்த கொரோனா வைரஸ் புதியது ஆனால் வைரஸ்கள் பற்றி நாம் சிறிது நேரமே அறிந்திருக்கிறோம் நாம் பொதுவாக கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பயன்படுத்த மாட்டோம் ஆனால் அவற்றில் சிலவற்றை புரிந்துகொள்கிறோம் ஒரு கொரோனா வைரஸ் பரவலை நம்மில் பலர் எதிர்பார்த்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது அது பற்றிய திரைப்படங்களும் இருந்தன இது துரதிர்ஷ்டவசமானது தெரியாத நிறைய விஷயங்கள் உள்ளன ஆனால் விஷயங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றி அறியப்பட்ட பல விஷயங்கள் உள்ளன இது நிகழ்தகவுகளின் விளையாட்டு சோதனைகளில் முந்தைய எந்தவொரு அசம்பாவித நிகழ்வுகளையும் நாம் பிடிக்க வாய்ப்புள்ளது என்று நிகழ்தகவுகள் கூறுகின்றன சந்தைப்படுத்தலுக்கு பிந்தைய கண்காணிப்புக்கு அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன அமெரிக்கா எழுந்து நின்றது ஐரோப்பியர்கள் அதைச் செய்திருக்கிறார்கள் உலக சுகாதார அமைப்பு குழுவுடன் இணைந்து மற்ற நாடுகளைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன் அதைச் செய்வது மிகவும் அவசியமாக இருக்கும் பாதகமான நிகழ்வுகளை தொடர்ந்து கண்காணித்தல் நீங்கள் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும்போது கருவிற்கு டெரடோஜெனிக் விளைவுகள் எந்தவிதமான அசம்பாவிதங்கள் நேராமல் தடுப்பது எப்படி அதற்கான யோசனை கர்ப்பிணிகளில் கட்டுப்படுத்தப்பட்ட வழியில் பரிசோதனைகள் செய்வதாகும் நாம் நிறைய கற்றுக்கொண்டோம் நான் செய்யும் நிறைய வேலைகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் பரிசோதனைகள் தான் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான உபகரணங்களை நாம் கையாண்டுள்ளோம் ஆரம்பகால சோதனைகளின் கீழ் அவர்கள் வர வேண்டும் எச் என் தொற்றுநோய்களில் கர்ப்பிணிப் பெண்கள் முன்னுரிமை பெற்ற குழுவாக இருந்தனர் இங்கே கோவிட் விஷயத்தில் அவர்கள் முதன்மை முன்னுரிமை அல்ல ஏனென்றால் மற்ற குழுக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன சோதனைகளில் அந்த விஷயங்களைப் பார்ப்போம் அது நமக்கு சொல்லும் பின்னர் சந்தைப்படுத்தலுக்குப் பிந்தைய கண்காணிப்பு இருக்கும் ஆனால் தடுப்பூசிகளின் வகையைப் பொறுத்து சில விஷயங்களும் உள்ளன கருக்குலைக்கும் விளைவுகளுக்கு கர்ப்பிணிப் பெண்களுக்கு நேரடி விழிப்புணர்வு தடுப்பூசிகளை வழங்குவதில் நாம் மிக கவனமாக இருக்கிறோம் இது ஒரு எம் ஆர் என் ஏ மற்றும் பிற தடுப்பூசிகள் என்றால் எந்த கருச்சிதைவு விளைவுகளுக்கும் வாய்ப்பு மிகக் குறைவு ஆய்வக அடிப்படையிலான இனப்பெருக்க நச்சுத்தன்மையையும் நாம் செய்கிறோம் கர்ப்பிணிகளிடம் பரிசோதனைகளைத் தொடங்குவதற்கான நம்பிக்கையைத் தரும் மற்ற தரவு இதுவாகும் இந்த சோதனைகளுக்கு கர்ப்பிணி பெண்கள் பதிவு செய்கிறார்களா இந்த கட்டத்தில் பெரும்பாலான சோதனைகள் கர்ப்பிணிப் பெண்கள் தவிர்த்து வருகின்றனர் ஆனால் ஒருவழி அல்லது வேறு வழியில்லாமல் கர்ப்பிணிகளுக்கு தனித்தனியாக சோதனைகள் இருக்க வேண்டும் இந்த சோதனைகளில் என்ன நடக்கிறது என்பது மற்றவர்களை விட மிக நெருக்கமாக இருக்கிறது என்பதை அறிய நீங்கள் தரவைப் பார்க்கிறீர்கள் என்பது உறுதியாகிறது ஒரு தடுப்பூசி என்பது உண்மையில் இருக்கிறதா அதற்கான அறிகுறிகள் நன்றாக உள்ளன முதலாவதாக நோயெதிர்ப்பு ரீதியாக தடுப்பூசி மூலம் நீங்கள் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டலாம் என்ற கொள்கை நிறுவப்பட்டுள்ளது இது பயனுள்ளதா என்பது கட்டம் சோதனைகள் க்கான கேள்வி பாதுகாப்பிற்கான ஆரம்ப கட்ட அளவிலான சான்றுகள் உள்ளன கொஞ்சம் காயப்படுத்த முதல் சில தடுப்பூசிகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும் ஒரு சிலருக்கு சில காய்ச்சல்களைக் கொடுங்கள் நல்ல செய்தி என்னவென்றால் அது நீண்ட கால அல்லது பெரிய பக்க விளைவுகளுடன் பொருந்தாது ஒரு சிலருக்கு ஒரு காயம் வந்தபின் காய்ச்சல் வருவதை நாங்கள் காண்கிறோம் ஆனால் மற்ற நல்ல செய்தி இது தடுப்பூசிக்கு தடுப்பூசி வரை மாறுபடும் ஆரம்பகால சோதனை தகவல்கள் நீங்கள் பாராசிட்டமால் எடுத்துக் கொண்டால் அந்த அறிகுறிகள் குறைக்கப்படுகின்றன இவை உடனடி நாம் எதிர்வினை என்று அழைக்கிறோம் அவை நீண்ட கால நோய் அறிகுறி இல்லாத நிகழ்வுகள் ஆனால் சற்று முன்னதாகவே காயப்படுத்துகின்றன பிற விஷயம் என்னவெனில் ஆரம்பத்தில் தடுப்பூசி திட்டங்கள் ஒற்றை டோஸ் தடுப்பூசிகளை முயற்சித்தன அவை எதிர்காலத்தில் வரக்கூடும் ஆனால் வாக்குறுதி தரும் முன்னணி தயாரிப்புகளுக்கு இரண்டு அளவு தடுப்பூசி தேவைப்படலாம் நான் திரும்பி வருவதற்கான மற்றொரு நல்ல அறிகுறி என்னவெனில் பல வகையான தயாரிப்புகள் உள்ளன சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன மறுகூட்டல் எம்ஆர்என்ஏ அல்லது நோய் சார்ந்த அதாவது பழைய பள்ளி விஷயங்கள் நேரடி விழிப்புணர்வு தடுப்பூசிகள் போன்றவை வாக்குறுதியை காட்டியுள்ளன நிறைய இருப்பு கொண்ட துறைகளை போலவே உங்கள் சவால்களையும் பாதுகாக்கிறீர்கள் உங்கள் ஆபத்தை கூட நீங்கள் வெளியேற்றுகிறீர்கள் நீங்கள் ஒரு தடுப்பூசியை எடுத்துக் கொண்டாலும் தடுப்பூசி மேம்பாட்டு திட்டத்தில் அவற்றில் ஒன்று வெற்றிபெற வேண்டும் தடுப்பூசிகளின் வகைகள் ஆதாரம் நீல் ஹால்சி யேல் இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த் எய்ட்ஸ் நோய்க்கு எந்தவொரு தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை கோவிட் வேறுபட்டதா எய்ட்ஸ் வைரஸ் காரணமாக நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கிறது வைரஸின் தன்மை என்னவென்றால் ஆன்டிபாடிகளுக்கான ஆன்டிஜென் இலக்குகள் மற்றும் உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு ஒரு வகையில் மறைக்கப்பட்டவை அல்லது எளிதில் அணுக முடியாதவை மேலும் பிற காரணிகளும் உள்ளன தடுப்பூசி உருவாக்கத்திற்கு எதிராக எச் ஐ வி மிக மிகக்கடினம் இது கோவிட் அந்த வகையான வைரஸ் அல்ல ஆரம்ப அறிகுறிகள் அந்த அறிகுறிகள் மிகவும் ஊக்கமளிப்பதாகக் கூறுகின்றன மறுசீரமைப்பு செய்திகள் இருந்தபோதிலும் இயற்கை தொற்றுநோய்க்குப் பிறகு நாம் கண்டது ஒட்டுமொத்தமாக மிகவும் ஊக்கமளிக்கிறது மறுசீரமைப்புகளில் அவற்றில் சில முதலாவது விஷயத்தில் வேறுபட்ட திரிபு மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன ஒரு தடுப்பூசி வேலை செய்யும் என்று நினைக்கிறீர்களா அல்லது வெவ்வேறு விகாரங்களை குறிவைத்து பல தடுப்பூசிகள் நமக்கு தேவையா இயற்கையான தொற்றுக்குப் பிறகும் நோய் எதிர்ப்பு சக்தி செயல்படுவது இதுதான் எனக்கு காய்ச்சல் வந்தால் அல்லது எனக்கு வேறு ஏதேனும் நோய் வந்தால் பெரும்பாலான மக்கள் இயற்கை தொற்றுநோய்க்குப் பிறகு பாதுகாக்கப்படுவார்கள் அதைச் செய்யாத சில வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் உள்ளன எச் ஐ வி அதை செய்யாது ஆனால் அவர்களில் பெரும்பாலோருக்கு பாதுகாப்பு இருக்கிறது ஆனால் சிலர் இதை இயற்கையான நிகழ்வாகப் பெறவில்லை அதைத்தான் நாம் காண்கிறோம் வரவிருக்கும் சில வழக்குகள் உண்மையான மறுசீரமைப்புகளாக அடையாளம் காணப்படுகின்றன சில நேரங்களில் தடுப்பூசிகள் இயற்கையை விட சிறப்பாக செய்ய முடியும் தடுப்பூசிகள் ஒரே மறுசீரமைப்பு வீதத்தைக் கொண்டிருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை அவை குறைந்த மறுசீரமைப்பைக் கொண்டிருக்கலாம் செயல்திறன் என்பது இதுதான் செயல்திறன் என்றால் மக்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்றால் பாதி மக்களே பாதுகாக்கப்படுவார்கள் இது செயல்திறனின் மறுமொழிக்கான எளிமையான பதிப்பாகும் இரண்டாவதாக நாம் பார்த்த விகாரங்கள் ஒவ்வொரு விகாரத்தையும் குறிவைப்பதில் முக்கியமாக அக்கறை கொள்ளும் அளவுக்கு வேறுபட்டவை அல்ல ஆனால் காத்திருந்து கவனிப்போம் இப்போது கொரோனா வைரஸ்களின் பொதுவாக போக்கு ஒரு பெரிய கவலைக்குரியதல்ல ஜெய் இசட் பொழிப்புரைக்கு தடுப்பூசியில் நமக்கு சிக்கல்கள் உள்ளன அவை அவற்றில் ஒன்றல்ல எனவே இவை நாம் கவனித்துக் கொண்டிருக்கும் விஷயங்கள் இது முழு விஷயத்தையும் உயர்த்தப் போவதில்லை ஆனால் என்ன நடக்கிறது என்பது வளர்ந்து வரும் தரவுகளின் அடிப்படையில் பரிந்துரைகளை மாற்றுவோம் தடுப்பூசி செயல்படுகிறதா இல்லையா என்று சொல்லும் விஷயம் இதுவல்ல இந்த நபர்களுக்கு பல அளவுகளைக் கொடுங்கள் அல்லது இதைச் செய்யுங்கள் மற்றும் தடுப்பூசிக்குச் செய்யலாம் அல்லது வெவ்வேறு தடுப்பூசி தயாரிப்புகளுக்கு இடையில் ஒப்பிடலாம் தடுப்பூசி ஒரு பிராந்தியத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்படுமா அல்லது உலகளவில் பொருந்தக்கூடிய ஒரு அளவில் இருக்குமா இது தடுப்பூசியைப் பொறுத்தது தட்டம்மை அல்லது வேறு சிலவற்றுக்கு தடுப்பூசிகள் அனைவருக்கும் ஒரு தடுப்பூசி மட்டுமே எடுத்துக்கொள்கிறோம் இன்ஃப்ளூயன்ஸா போன்ற தடுப்பூசிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளத்தால் குறைந்தது மற்றும் பருவத்தால் அது பிறழ் விகிதத்தைப் பொறுத்தது இதுவரை நாம் பார்த்தவற்றில் இருந்து மற்றும் பிற கொரோனா வைரஸ்களிலிருந்து நமக்குத் தெரிந்தவை ஒரு உலகளாவிய தடுப்பூசி நியாயமான மூலோபாயமாக இருக்கக்கூடும் விஷயங்கள் வேறுவிதமாக வெளிவந்தால் அது கவனிக்கப்படாது என்று நாம் உறுதியாக நம்பலாம் இதுவரை ஒரு தடுப்பூசிக்கு தரவு ஊக்கமளிக்கிறது நீங்கள் வெவ்வேறு தயாரிப்புகளைக் கொண்டிருக்கலாம் எனினும் தடுப்பூசியில் புவியியல் விகாரங்கள் கிடையாது ஒரு தடுப்பூசியானது கோவிட் க்கு வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்குமா அல்லது இன்ஃப்ளூயன்ஸா போன்ற வருடாந்திர கையாளுகை நமக்குத் தேவையா கொரோனா வைரஸ்கள் மற்றும் அந்த தளங்களில் சிலவற்றை பற்றி நமக்குத் தெரிந்திருப்பதால் இது வருடந்தோறும் தரக்கூடியதாக இருக்க வாய்ப்பில்லை ஆனால் அது வாழ்நாள் முழுவதும் இருக்குமா என்பதும் நமக்கு தெரியாது அந்த தடுப்பூசிகள் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பை அளிக்கிறதா என்பதை அறிய பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் இந்த விஷயங்கள் தான் ஆராய்ச்சியாளர்களை என்னைப் போல நீண்ட காலத்திற்கு வேலை செய்கின்றன தடுப்பூசி விநியோகம் எத்தகைய குறிக்கோளாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் பணக்கார நாடுகள் ஆரம்பத்தில் தடுப்பூசிகளை வாங்குவதால் வளரும் நாடுகளுக்கான தேவையை யார் பூர்த்தி செய்வார்கள் வளரும் நாடுகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் ஆண்டுகளுக்கு முந்தைய குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகள் அல்ல இந்திய உற்பத்தியாளர்கள் அளவைப் பொறுத்தவரை உலகின் மிகப்பெரிய வினியோகஸ்தர்கள் அது பல நாடுகளுக்கு அதிக அதிகாரம் அளிக்கிறது எனவே உற்பத்தி முதலியவற்றில் ஆரம்ப முதலீடுகள் சமநிலையை மாற்றிவிட்டன ஆரோக்கியமான சந்தை விகிதங்களில் கூட உற்பத்தியாளர்கள் வளரும் நாடுகளில் இவை உற்பத்தியை இயக்கும் சந்தை சக்திகள் பலனைக் காண்கிறார்கள் என்பதை உறுதிசெய்கிறார்கள் பல நாடுகளும் அதை செய்வதற்கான திறனைக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை எனவே கோவாக்ஸ் முன்முயற்சி என்பது தொற்றுநோய்க்கான தயாரிப்பு கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணி ஒத்துழைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது முன்னர் தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்புக்கான உலகளாவிய கூட்டணி மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆராய்ச்சி மற்றும் வரிசைப்படுத்தலுக்கு கோடி டாலர் தேவைப்படும் என்று கூறினார் அவர்கள் இதைக் கேட்டார்கள் உலகின் பெரும்பாலான நாடுகள் ஆரம்ப ஆர்வத்தை வெளிப்படுத்தின பின்னர் அவர்கள் உறுதியான பொறுப்புகளை கேட்டார்கள் இது ஒரு ராபின்ஹுட் வகையான ஒரு மாதிரி அதிக வருவாய் உள்ள நாடுகள் அதிக ஆனால் இன்னும் நல்ல விலையை கொண்டிருக்கின்றன ஆனால் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளை போலவே குறைந்த விலையையும் கொடுக்கவில்லை இது குறைந்த வருவாய் கொண்ட நாடுகளின் தடுப்பூசி அணுகலுக்கு மானியம் அளிக்கிறது மேலும் கருணை மற்றும் உதவி மூலம் இடைவெளிகள் நிரப்பப்படுகின்றன இது ஒரு முறை மீண்டும் ஒன்பது தயாரிப்புகளில் தடுப்பூசி பரிசோதனையாளர்கள் அதன் சவால்களைக் கட்டுப்படுத்துகிறது உயர் வருவாய் நாடுகள் க்கும் மேற்பட்ட வந்துள்ளன ஐரோப்பா அதைச் செய்துள்ளது அமெரிக்கா இதற்கு பூஜ்ஜியம் டாலர் என்ற நிலையை கொண்டது சில பெரிய நாடுகள் இதில் பணத்தை வைக்கவில்லை அது கவலைக்குரியது எனவே வாய்ப்புகள் நியாயமானவை ஆனால் அங்கு சரியாக இல்லை ஒரு உலகளாவிய சமூகமாக இவ்வகையான விஷயத்தில் பணத்தை செலுத்த அரசுகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு நாம் ஆதரிக்க வேண்டும் அது விஷயங்களை சமமாக்கும் பெரும்பாலான நாடுகள் இதேபோன்ற விநியோகத்தைப் பின்பற்றுமா அல்லது தடுப்பூசியை வெளியேற்றுமா ஒவ்வொரு நாட்டுக்கும் வெவ்வேறு முன்னுரிமை அளவு இருக்கும் நான் உலக சுகாதார அமைப்பின் தரப்பில் வேலை செய்கிறேன் உலகளாவிய கருத்தாய்வுகளின் கண்ணோட்டத்தில் தீர்மானிக்கும் குழுவில் நான் பணியாற்றுகிறேன் எடுத்துக்காட்டாக மாதங்களுக்குள் பெரும்பாலான மக்கள்தொகைக்கு மில்லியனுக்கும் அதிகமான அளவுகள் கிடைக்கும் என்று அமெரிக்காவிற்குள் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது ஒரு சமமான விநியோகச்சூழ்நிலையில் கூட இது முழு உலகிற்கும் தடுப்பூசிகள் கிடைப்பது பற்றிய யதார்த்தமான எதிர்பார்ப்பு அல்ல எனவே அங்கு மாற்றங்கள் இருக்கும் தொடக்க காட்சிகள் என்னவெனில் முதல் ஆண்டில் மக்கள் தொகையில் தடுப்பூசிகள் கிடைக்கின்றன ஆனால் நல்ல மற்றும் துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால் இந்த நோயின் சுமை சில குழுக்களால் விகிதாசாரமாக சுமக்கப்படுகிறது எனவே நீங்கள் அந்தக் குழுக்களை உள்ளடக்கியிருந்தால் உங்களது பொருளாதாரம் போன்றவற்றைத் திறக்கலாம் எனவே ஒவ்வொரு நாடும் வெவ்வேறு உத்திகளை கொண்டிருக்கும் ஆனால் கவனம் பரிமாற்றத்தைக் குறைப்பதன் மூலம் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதாக இருக்கும் மேலும் இரண்டும் சமநிலையில் இருக்கும் பெரும்பாலான நாடுகளின் திட்டங்களில் சுகாதாரத் தொழிலாளர்கள் முக்கியமாக இடம்பெற வாய்ப்புள்ளது ஐ ஜி ஜி நோயெதிர்ப்பு திறன் உள்ளவர்களுக்கு தடுப்பூசி தேவையில்லை ஆனால் ஐ ஜி ஜி பரிசோதனையின் விலை இந்தியாவில் ஒரு தடுப்பூசியின் விலையை விட அதிகம் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் சுமார் டாலர் அவர்களின் தடுப்பூசி வெற்றிகரமாக இருந்தால் இதை நாம் எவ்வாறு சமாளிப்பது ஆலோசனைக் குழுக்களாக ஐ ஜி ஜி நேர்மறை உள்ளவர்கள் விலக்கப்படுவார்கள் என்று நாம் முடிவு செய்யவில்லை ஏனெனில் நேர்மறை என்பது அவை பாதுகாக்கப்படுகின்றன என்று அர்த்தமல்ல தொடர்பு பாதுகாப்பு குறித்து அதாவது ஒரு குறிப்பிட்ட வகை அல்லது நோயெதிர்ப்பு நிலை பற்றிய கருத்து உள்ளது நாம் அதை அடையாளம் காணவில்லை பரிசோதனைகளில் அதை அடையாளம் காண்போம் செயல்திறனை நாம் நிறுவியவுடன் உண்மையான பாதுகாப்புடன் எந்த அளவிலான நோயெதிர்ப்பு மறுமொழி தொடர்புடையது எந்த வகையான நோயெதிர்ப்பு ஆகியவற்றை நாம் அடிக்கடி ஆராய்வோம் அந்த உயிரிச்சுட்டுவை நாம் ஆய்வு செய்கிறோம் பின்னர் முன்பே இருக்கும் நோயொதிர்ப்பு உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதன் பாதுகாப்பு அம்சத்தைப் பார்க்கிறோம் அவர்களுக்கு தடுப்பூசி போடவில்லை சில சோதனைகள் இந்த இரண்டாம் பகுப்பாய்வு போன்றவற்றை செய்யும் எனவே இந்த தருணத்தில் ஐ ஜி ஜி எதிர்மறை நபர்களுக்கு மட்டுமே நாம் அதைக் கட்டுப்படுத்துவது சாத்தியமல்ல ஏனெனில் அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்களா என்பது தெரியாது பெரும்பாலான தடுப்பூசிகளுக்கும் நாம் அதை செய்கிறோம் பிற தடுப்பூசிகளுக்கு நாம் மக்களை பரிசோதிப்பதில்லை ஏனென்றால் அங்கு இயற்கை தொற்று உள்ளது சிலர் சந்தேகத்திற்கு இடமின்றி அதற்கு எதிராக கொண்டுள்ளனர் ஆனால் செலவு பலன் விகிதம் வெளியே சென்று அனைவருக்கும் தடுப்பூசி போடுவது போன்றதாகும் தடுப்பூசி பற்றிய அறிவிப்பு சரியானதா என்று உங்களுக்கு எப்படித் தெரியும் நோயெதிர்ப்பு தடுப்பூசிகள் உள்ளன அது ஒரு பெரிய இயக்கம் நமது அமைப்பில் அதிக இரைச்சல் உள்ளது துரதிர்ஷ்டவசமாக தடுப்பூசியில் ஒரே இரவில் நிபுணர்களாக மாற மக்களுக்கு இது உதவவில்லை நோய் எதிர்ப்பு சக்தியில் மற்றும் எடுத்துக்காட்டாக தொற்றுநோயியல் துறையில் மக்கள் ஒரே இரவில் நிபுணர்களாக மாறினர் என்பதை நாம் ஆரம்பத்திலேயே கூறினோம் அது இப்போது தடுப்பூசிகளுடன் நடக்கிறது தங்கள் சொந்தத்துறைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நல்ல அர்த்தமுள்ள மருத்துவர்கள் கூட தற்போது இவ்வகையான விஷயங்களை ஆராய்ந்து வருகின்றனர் டிவியில் பேசும் நிபுணர்களைப் பற்றி நான் பேசுகிறேன் அவர்கள் பிற துறைகளில் நிபுணர்களாக உள்ளனர் இது மிகவும் சிறப்பு வாய்ந்த புரிதல் மற்றும் அறிவு பொது மக்களுக்கு இரைச்சலில் இருந்து சமிக்கையை வடிகட்ட ஒரு வழி ஜனவரி க்கு முன்னர் தடுப்பூசி வேலைகளைச் செய்த வரலாற்றை யாராவது கொண்டிருக்கிறார்களா என்று பார்ப்பது அவர்கள்தான் நீங்கள் கேட்க வேண்டியவர்கள் இது அமெச்சூர் நேரம் அல்ல ஒரு புதிய பந்து அறிமுகப்படுத்தப்பட்ட டெஸ்ட் போட்டியின் கடைசி இன்னிங் இதுவாகும் புதிய பந்து புதிய கொரோனா வைரஸ் முந்தைய நான்கரை நாட்களுக்கு களம் அல்லது தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது எனவே முன்பு இருந்த நிபுணத்துவத்தில் கவனம் செலுத்துங்கள் ஒரே இரவில் பெறப்பட்ட நிபுணத்துவத்துவதில் அல்ல நோயெதிர்ப்பு திறன் போன்றவற்றில் பரவலான முதல்படி ஒரு முக்கிய செயல்முறையைக் கொண்டிருக்க வேண்டும் அதனால்தான் விஞ்ஞானிகள் அரசுகளையும் ஒழுங்குமுறை அதிகாரிகளையும் இந்த செயல்முறையை விரைவுபடுத்த வலியுறுத்துகின்றனர் எனினும் பிரதான செயல்முறையைப் பின்பற்றுங்கள் நான் வெளியே தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்று சொல்வதற்கான காரணம் அதற்கான அறிவியல் தரவு எனக்குத் தெரியும் அதன் பிறகு தகவல்தொடர்பு அணுகுமுறைகள் உருவாக்கப்படுகின்றன உண்மையிலேயே ஆனால் திறம்பட தொடர்பு கொள்வதற்கான உலக சுகாதார அமைப்பின் செயல்பாட்டில் நான் ஈடுபட்டுள்ளேன் இது பொதுவாக சிறியது தடுப்பூசி ஒரு வகையில் நம்மை இயல்பான பாதையில் கொண்டு செல்ல முடியுமா அல்லது குணமடைய நாம் காத்திருக்க வேண்டுமா அல்லது அனைவரின் கலவையா ஒரு பிணைப்பு இருக்க வேண்டும் ஆனால் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு தடுப்பூசிகள் ஒரு முக்கிய கருவியாகும் அத்துடன் இயல்பானதாக இருக்கும் புதிய இயல்பு இருக்கும் ஒருவேளை மேற்கத்திய நாடுகள் தங்களது நமஸ்தேயின் பதிப்பை வாழ்த்துக்களுக்காக மாற்றியமைக்கும் ஏனென்றால் மக்கள் கைகுலுக்க அதிக வெறுப்புடன் இருப்பார்கள் ஆனால் அது சாதாரணமாக இருக்கும் இது சற்று வித்தியாசமாக இருக்கும் ஆனால் பாட்டி திருமணங்களில் கலந்து கொள்ள முடியும் மற்றும் பல நடக்கும் எனவே நீங்கள் இயல்பாக எப்போது மற்றும் நடந்துகொண்டிருக்கும் அனைத்து வேலைகளையும் பற்றிய உங்கள் புரிதலின் அடிப்படையில் சிந்திக்கிறீர்கள் எப்போது நாம் புதிய இயல்புக்குள் நுழையலாம் காலண்டர் நேர அடிப்படையில் நான் எதையும் சொல்ல முடியாது ஆனால் முதல் உரிமம் பெற்ற தடுப்பூசியின் தொடக்கத்தில் இருந்துதான் சொல்ல முடியும் ஏனெனில் இது தொடர்ச்சியான நிகழ்வுகளைத் தொடங்குகிறது முதலாவது அங்கீகரிக்கப்பட்ட அல்லது உரிமம் பெற்ற தடுப்பூசியின் தொடக்கத்தில் இருந்து மாதங்களுக்குள் குறிப்பாக கோவாக்ஸுக்குத் தேவையான பணம் கிடைத்தால் உலகளவில் நமக்கு கணிசமான அளவு இயல்புநிலை இருக்கும் ஆனால் அது சரியானதாக இருக்காது மொத்தம் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் இது கடந்த கால விஷயமாக இருக்காது வைரஸ் நம்முடன் இருக்கும் ஆனால் அது நன்கு கட்டுப்படுத்தப்பட்ட வைரஸாக இருக்கக்கூடும் அவை போய்விடும் என்று நாம் நம்புகிறோம் மேலும் அறிகுறிகள் நன்றாக இருக்கும் உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம் கருத்துகளை என்ற முகவரிக்கு அனுப்பலாம் மொழி இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு கோவிந்த்ராஜ் எதிராஜ் தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடக பத்திரிகையாளர் இவர் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் வணிகத்துறை பற்றி செய்திக்கட்டுரைகள் எழுதி வெளியிட்டு வந்துள்ளார் அவர் ஒரு ஊடக நிர்வாகி மற்றும் தொழில்முனைவோரும் கூட இந்தியாஸ்பெண்ட் ஃபேக்ட் செக்கர் மற்றும் பூம் உள்ளிட்ட பொதுநலன் சார்ந்த ஊடக முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் அவற்றின் மூலம் இந்தியாவிலும் உலகெங்கிலும் இணையத்தில் செய்திகளின் வெளிப்படைத்தன்மை துல்லியம் மற்றும் ஒருமைப்பாட்டை சார்ந்து செய்தி வெளியிட்டு பாதுகாக்கிறார் இதற்கு முன்பாக ப்ளூம்பெர்க் டி வி இந்தியாவின் நிறுவன ஆசிரியர் பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தித்தாளின் எடிட்டர் நியூமீடியா மற்றும் சி என் பி சி டிவி தி எகனாமிக் டைம்ஸ் மற்றும் முன்னணி வணிக இதழ்களில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தார் வணிக பொருளாதாரம் மற்றும் நிதிச்சந்தைகள் இந்திய தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் ஆகியவற்றில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து தொகுத்து வழங்குகிறார் பூம் இந்தியாஸ்பெண்ட் மற்றும் ஃபேக்ட் செக்கர் ஆகியவற்றுக்கான தலைமைத்துவத்தின் அங்கீகாரமாக கோவிந்த்ராஜ் மெக்நல்டி பரிசு பெற்றவர் அவர் ஆனந்தா ஆஸ்பனின் இந்தியத்தலைமை முன்முயற்சி மற்றும் ஆஸ்பென் குளோபல் லீடர்ஷிப் நெட்வொர்க்கின் தொடக்க வகுப்பின் சக உறுப்பினராகவும் பிஎம்டபிள்யூ பொறுப்பு தலைவர்கள் விருதை வென்றுள்ளார்
ஒன்றாக ஐஸ்கிரீம் சாப்பிடலாம் பி வி சிந்துக்கு ஊக்கமளித்த பிரதமர் மோடி விளையாட்டு தமிழ் மழை பிக்பாஸ் கிரைம் பெண்குயின் கார்னர் தமிழ்நாடு சினிமா ராசிபலன் லைஃப்ஸ்டைல் விளையாட்டு இந்தியா உலகம் வணிகம் ஆன்மிகம் தமிழ்நாடு சினிமா ராசிபலன் லைஃப்ஸ்டைல் விளையாட்டு இந்தியா உலகம் வணிகம் ஆன்மிகம் மீம்ஸ் டெக் ஆட்டோ வேலை கல்வி ஆல்பம் வீடியோ மீம்ஸ் டெக் ஆட்டோ வேலை கல்வி ஆல்பம் வீடியோ உங்கள் மாவட்டத்தைத் தேர்வுசெய்க கோயம்புத்தூர் மதுரை திருச்சி தேனி ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் கன்னியாகுமரி நாமக்கல் தஞ்சாவூர் புதுக்கோட்டை வெற்றிக்கு பின் உங்களுடன் சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவேன் பி வி சிந்துவுக்கு ஊக்கம் அளித்த பிரதமர் மோடி வெற்றிக்கு பின் உங்களுடன் சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவேன் பி வி சிந்துவுக்கு ஊக்கம் அளித்த பிரதமர் மோடி பிரதமர் கலந்துரையாடல் கடுமையாக உழையுங்கள் நிச்சயம் மீண்டும் வெற்றி பெறுவீர்கள் என்று வாழ்த்திய மோடி நீங்கள் வெற்றிபெற்ற பின்னர் நான் உங்களை சந்திக்கும்போது இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிடலாம் என்று பி வி சிந்துவிடம் தெரிவித்தார் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர் வீராங்கனைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார் ம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில்கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்தது எனினும் கொரோனா பரவல் காரணமாக போட்டி ஒத்தி வைக்கப்பட்டது அதன்படி டோக்கியோ நகரில் வரும் ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் இதில் இந்தியா சார்பில் வீரர் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர் இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர் வீராங்கனைகளுடன் பிரதமர் நரேந்திர்மோடி இன்று கலந்துரையாடினார் அப்போது வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரியிடம் கலந்துரையாடிய மோடி பாரிஸில் உங்களுடைய வெற்றி தடத்துக்கு பின்னர் நாடே உங்களை பற்றி பேசிக் கொண்டிருக்கிறது தற்போது உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக உள்ளீர்கள் உங்களுடைய பயணம் சிறப்பு வாய்ந்தது என்று பாராட்டினார் குத்துசண்டை வீராங்கனை மேரிகோமிடம் உங்களுக்கு பிடித்த குத்துசண்டை வீரர் யார் என மோடி வினாவினார் அதற்கு முகமது அலியை தனக்கு பிடிக்கும் என்றும் அவரை பார்த்து ஊக்கமடைந்து குத்துசண்டை போட்டியை தேர்வு செய்ததாக மேரி கோம் பதிலளித்தார் இதையும் படிங்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு நடுவராக முதன்முறையாக இந்தியர் தேர்வு இதேபோல் பாட்மிண்டன் வீராங்கனை பி வி சிந்துவிடம் பேசிய மோடி உங்கள் பயிற்சியாளர் தற்போது ஐஸ்கிரீம சாப்பிட உங்களை அனுமதிக்கிறாரா என நகைச்சுவையாக கேட்டார் அதற்கு தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருவதால் உணவு விசயத்தில் கட்டுப்பாடாக இருப்பதாகவும் அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிடுவதில்லை என்றும் பி வி சிந்து தெரிவித்தார் மேலும் படிக்க நிறவெறிக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுபடவேண்டும் பால் போக்பா அப்போது கடுமையாக உழையுங்கள் நிச்சயம் மீண்டும் வெற்றி பெறுவீர்கள் என்று வாழ்த்திய மோடி நீங்கள் வெற்றிபெற்ற பின்னர் நான் உங்களை சந்திக்கும்போது இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிடலாம் என்று தெரிவித்தார் இதேபோல் மேலும் பல்வேறு வீரர் வீராங்கனைகளுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக மோடி பேசினார் கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ் தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் புகைப்படம் வெற்றிக்கு பின் உங்களுடன் சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவேன் பி வி சிந்துவுக்கு ஊக்கம் அளித்த பிரதமர் மோடி அக்சர் படேல் ரவீந்திரா ஜடேஜா அஸ்வின் பகிர்ந்த படத்தின் சுவாரஸ்யம் தென் ஆப்பிரிக்கா தொடரில் புஜாரா ரஹானேவுக்கு கல்தா ட்ராவிட் சூசகம் லெஜண்ட் முத்தையா முரளிதரனை நெருங்கும் மேஜிக் அஸ்வின் சபாஷ் விராட் கோலி வந்த பிறகு இத்தனை வெற்றிகளா சாதனைத் துளிகள் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அசைக்க முடியா நம்பர் இடத்தில் இந்தியா இன்வின்சிபிள் இந்தியா உள்நாட்டில் புலி இப்போது வெளிநாட்டிலும்தான் மும்பை டெஸ்ட் ஒருதலைபட்சமாக முடிந்து விட்டது ராகுல் திராவிட் வருத்தம் நிமிடங்களில் முடிந்தது நியூசிலாந்து மிகப்பெரிய வெற்றியுடன் தொடரை வென்றது இந்தியா கடந்த தொடரில் இந்திய பவுலர்கள் என்னை படுத்தி எடுத்து விட்டனர் ஸ்டீவ் ஸ்மித் ஒப்புதல் உலக இறுதி சுற்று பேட்மிண்டன் பிவி சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார் உலக இறுதி சுற்று பேட்மிண்டன் இந்தியாவின் பி வி சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
கல்விச் சீர்திருத்தங்கள் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு பக்க வரிசைப்படுத்தல் மறுப்பு பதிப்புரிமை கல்விச் சீர்திருத்தங்கள் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
இலக்கியப் படைப்பாளிகளுக்கும் அறிஞர்களுக்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு இலக்கியப்படைப்பாளி வாழ்நாள் முழுக்க தனக்கான நினைவுச்சின்னங்களைத்தான் உருவாக்குகிறான் என்று சுந்தர ராமசாமி ஒரு கட்டுரையில் சொல்கிறார் அந்நினைவுச்சின்னமும் அழிந்துபோகுமென்றால் அவன் நல்ல படைப்பாளி அல்ல என்றே பொருள் அது ஆழமான ஆக்கம் என்றால் அதற்கு எப்படியும் வாசகர்கள் தேடிவருவார்கள் ஆனால் அறிஞர்களின் நிலை அது அல்ல ஓர் அறிவியக்கத்தில் திருப்புமுனைகளை உருவாக்கியவர்கள் முன்னோடியான பார்வைகளை உருவாக்கியவர்கள் அடிக்கடி நினைவுகூரப்படுகிறார்கள் எஞ்சியோர் ஒரு பெரும்பரப்பின் பகுதியாக மாறிவிடுகிறார்கள் அந்த அறிவியக்கத்தின் பகுதிகள் அவர்கள் ஆனால் தனித்து அறியப்படுவது மிக அரிது பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய அறிவியக்கங்கள் நான்கு ஒன்று தமிழியக்கம் இரண்டு சைவமறுமலர்ச்சி இயக்கம் மூன்றாவதாக தலித் இயக்கத்தை சொல்லலாம் நான்காவதாக திராவிடக் கருத்தியக்கம் சைவ மறுமலர்ச்சி இயக்கம் ஞானியார் சுவாமிகள் பாம்பன்சுவாமிகள் ஜே எம் நல்லுச்சாமிப்பிள்ளை ஆறுமுகநாவலர் ஆகிய நால்வரை முன்னோடிகளாகக் கொண்டது தலித் இயக்கம் அயோத்திதாச பண்டிதர் இரட்டைமலை சீனிவாசன் எம் சி ராஜா ஆகியோரை முன்னோடிகளாகக் கொண்டது திராவிட இயக்கம் ஈ வே ராமசாமி அவர்களிடமிருந்து தொடங்குவது இவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை ஒன்றை ஒன்று சார்ந்து வளர்ந்தவை ஒரு தளத்தின் அறிஞரை நாம் இன்னொரு தளத்திற்கும் பொருத்திக்காட்டமுடியும் இவற்றில் ஆற்றல்கொண்டதும் ஆழ்ந்த பாதிப்பை உருவாக்கியதும் தமிழியக்கமே தமிழ்ப்பதிப்பியக்கம் தனித்தமிழ் இயக்கம் தமிழிசை இயக்கம் என்னும் மூன்று பகுதிகள் கொண்டது தமிழியக்கம் தமிழியக்கமும் சைவமறுமலர்ச்சியும் இணையாக கொண்டும் கொடுத்தும் வளர்ந்தன பின்னர் தமிழியக்கம் நேரடியாகவே திராவிட இயக்கத்தால் எடுத்தாளப்பட்டது ஒப்புநோக்க விலகி நிற்பதும் மிக விரைவிலேயே விசையழிந்து மறைந்ததும் தலித் இயக்கமே அது மீண்டும் தொடங்குவதற்கு ஐம்பதாண்டுகால இடைவெளி இருந்தது தமிழியக்க முன்னோடிகளையே பொதுவாக இன்று தமிழறிஞர்கள் என்னும் பொதுப்பெயரால் சுட்டுகிறோம் தமிழியக்கம் அதன் வெற்றிகளை பண்பாட்டுக்கு அளித்துவிட்டு இன்று வலுவிழந்து வரலாறாக ஆகிவிட்டிருக்கிறது மாபெரும் தமிழறிஞர்கள் என இன்று எவரையும் சுட்டும்நிலை இல்லை இருப்பவர்கள்கூட சென்றகாலத்தின் நிழல்நீட்சிகள்தான் ஆகவே இன்று நாம் பெரும்பாலான தமிழறிஞர்களை மறந்துவிட்டிருக்கிறோம் நேற்றைய வரலாற்றின் பகுதிகளாகவே அவர்களை கருதுகிறோம் உ வே சாமிநாதய்யர் மறைமலை அடிகள் போன்ற சிலர் மட்டுமே இன்று நினைவுக்கு வருகிறார்கள் அவர்கள் தமிழ்ப் பதிப்பியக்கம் தனித்தமிழியக்கம் போன்றவற்றின் முன்னோடிகள் என்பதனால் எஞ்சியவர்களை அரிதாக பாடநூல்களில் காண்கிறோம் அவர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும்போது கேள்விப்படுகிறோம் எஞ்சியோரை நாம் அறிவதே இல்லை ஆனால் பண்பாடு என்பது நினைவுகூர்தல் நினைவில் நிறுத்தல் வழியாகவே வாழ்கிறது தமிழ் மரபு என்பது அதை மெல்லமெல்ல கட்டமைத்த அறிஞர்கள் இன்றி தொகுத்துக்கொள்ளப்பட இயலாத ஒன்று அ கா பெருமாள் அவர்களின் இந்நூல் சென்றகாலத் தமிழறிஞர்களைப்பற்றிய சுருக்கமான வாழ்க்கைக்குறிப்புகளால் ஆனது ஆனால் வெறும் தகவல்களாக இல்லாமல் ஆர்வமூட்டும் வாழ்க்கைச்சித்திரங்களாக இவற்றை எழுதியிருக்கிறார் அ கா பெருமாள் பத்தாண்டுகளுக்கு முன் தமிழினி மாத இதழில் தொடராக வெளிவந்தவை இவை இப்போதுதான் நூல்வடிவம் கொள்கின்றன சி வை தாமோதரம்பிள்ளை சே ப நரசிம்மலு நாயுடு மனோன்மணியம் சுந்தரனார் வெள்ளக்கால் ப சுப்ரமணிய முதலியார் ஜே எம் நல்லுச்சாமிப்பிள்ளை பின்னத்தூர் அ நாராயணசாமி அய்யர் செல்வக்கேசவராய முதலியார் அரசன் சண்முகனார் எல் டி சண்முகனார் பரிதிமாற்கலைஞர் பா வே மாணிக்க நாயகர் வ உ சிதம்பரனார் மறைமலை அடிகள் கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை சி கே சுப்ரமணிய முதலியார் மு இராகவையங்கார் கே என் சிவராஜபிள்ளை நாவலர் சோமசுந்தர பாரதியார் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் வ வே சு அய்யர் தமிழவேள் உமா மகேஸ்வரனார் வ சு செங்கல்வராய பிள்ளை ந மு வெங்கடசாமி நாட்டார் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எஸ் வையாபுரிப்பிள்ளை பி ஸ்ரீ ஆச்சார்யா தி வை சதாசிவப் பண்டாரத்தார் சுவாமி விபுலானந்தர் ஆண்டி சுப்ரமணியம் வ சுப்பையா பிள்ளை யோகி சுத்தானந்த பாரதி தேவநேயப் பாவாணர் அ சிதம்பரநாதன் செட்டியார் கி வா ஜெகன்னாதன் கா அப்பாத்துரை மா இராசமாணிக்கனார் பெரியசாமித்தூரன் ஆ முத்துசிவன் புலவர் கா கோவிந்தன் வ சுப மாணிக்கம் என்னும் நாற்பது தமிழறிஞர்களைப் பற்றிய குறிப்புகள் இந்நூலில் உள்ளன இப்பட்டியலே ஒருவகை பார்வையை அளிக்கிறது இதில் பெரும்பாலும் பிள்ளைவாள்களும் முதலியார்களும்தான் இருக்கிறார்கள் அய்யர்களும் அய்யங்கார்களும் குறைவு இது அன்றைய தமிழியக்கத்தின் பண்பாட்டு உள்ளடக்கத்தை சுட்டுவது இதில் தொடர்ச்சியாக பிற்பாடு பேசப்பட்டவர்களின் பெயர்களில் இருந்து சாதியொட்டு பின்னாளில் அகற்றப்பட்டுள்ளது பேசப்படாதவர்கள் அந்நாளில் வெளிவந்த அவர்களின் நூல்களில் இருந்ததுபோலவே இப்போதும் சாதிப்பெயர்களுடன் சுட்டப்படுகிறார்கள் இந்நூலில் ஈழத்துத் தமிழறிஞர்களை அ கா பெருமாள் சுட்டவில்லை முழுமையான ஒரு தொகுப்பை நிகழ்த்தமுடியாமலாகலாம் முக்கியமானவர்கள் விடுபடக்கூடும் என்னும் அச்சம் காரணமாக இருக்கலாம் ஆறுமுகநாவலரில் இருந்து தனிநாயகம் அடிகளார் வரையிலான ஈழத்து அறிஞர்களின் வரலாற்றுச் சுருக்கத்தை இன்னொருவர் எழுதலாம் ஆனால் விபுலானந்தர் இந்நூலில் இருக்கிறார் வாசித்துச்செல்கையில் பல செய்திகள் வியப்பும் திகைப்பும் ஊட்டுவன வாழ்நாளெல்லாம் தமிழ் நாடகவியலைப் பற்றி பேசிய பேரறிஞர் ஆண்டி சுப்ரமணியத்தை நான் இந்நூல் வழியாகவே கேள்விப்படுகிறேன் தமிழ் நூல்களின் காலவரையறை மற்றும் தொகுப்பில் பெரும்பங்காற்றியவரான கே என் சிவராஜபிள்ளையும் ஆண்டி சுப்ரமணியமும் ஒரே ஊரில் பிறந்தவர்கள் நாகர்கோயில் அருகே இன்றும் சிற்றூராகக் கருதப்படும் பீமனேரி அக்காலத்திலேயே ஆண்டி சுப்ரமணியம் ஐரோப்பிய நாடகவியலை ஆழ்ந்து கற்றிருக்கிறார் தொடர்ச்சியாக எழுதியிருக்கிறார் ஆனால் அன்றைய கல்வித்துறை அவருடைய நூல்களை முற்றாகவே அழியவிட்டது சென்னை பல்கலைக்கு பிரசுரத்திற்காக என்றபேரில் அவர் சமர்ப்பித்த நாடகவியல் கலைக்களஞ்சியம் துணைத்தலைப்புக்கள் கொண்டிருந்தது அதை அவர்கள் பலகாலம் வைத்திருந்து செல்லரித்து அழியவிட்டுவிட்டார்கள் அது தமிழியக்கமும் செல்லரிக்க ஆரம்பித்ததன் குறியீடு உலகின் வேறெந்த சூழலிலாவது ஒரு பல்கலைகழகம் இப்படி ஒரு அக்கறையின்மையை காட்டுமா என்று தெரியவில்லை அன்றும் இன்றும் தமிழ்ச்சூழல் மாறவில்லை என்பதை செல்வக்கேசவராய முதலியார் சொல்லும் வரி காட்டுகிறது பண்டைத்தமிழ்ப் பனுவல்களை பதிப்பிப்பது என்றால் கையிலுள்ள பொருளைக்கொண்டுபோய் நட்டாற்றில் வலிய எறிந்துவிட்டு வெறுங்கையை வீசிக்கொண்டு வீடுபோய் சேர்வதே முடிவான பொருள் என்பது உணர்ந்து எச்சரிக்கையாக இருப்பார்க்கு இன்னலொன்றும் இல்லை சென்ற காலத்தைப் பற்றிய கனவுகளை எழுப்புகின்றன இதில் வரும் செய்திகள் பி ஸ்ரீ ஆச்சாரியா பற்றிய குறிப்பில் திருநெல்வேலி முத்தையாபிள்ளையின் புத்தகக்கடையில் மாலைநேரத்தில் அவர் நண்பர்களுடன் கூடுவதுண்டு என்றும் அந்தச் சபை கடைச்சங்கம் எனப்பட்டது என்றும் ஒரு வரி வருகிறது அந்த கடையைப் புனைந்து உள்ளத்தில் எழுப்பச்செய்கிறது சட்டென்று அந்த ஆளுமைகளின் தனித்தன்மைகள் நோக்கியும் செல்கிறது அ கா பெருமாளின் பார்வை பி ஸ்ரீ நன்றாகவே சம்பாதித்தார் ஆனால் மாபெரும் செலவாளி க நா சு போலவே காபியில் போதை கொண்டவர் என்று வரும் வரி வழியாக அவரை அருகில் பார்த்த உணர்வு உருவாகிறது தமிழ்ப்பேரறிஞர் கே என் சிவராஜபிள்ளை காவல்துறை உயரதிகாரியாக திருவிதாங்கூர் அரசில் பணியாற்றியவர் ஒரு கொலைவழக்கில் நேர்மையாக இருந்தமையால் வேலையை விடவேண்டியிருந்தது என்னும் செய்தி ஒரு முழு வாழ்க்கை வரலாற்றுக்குரியது பின்னர் விறகுக்கடை நடத்தியிருக்கிறார் அது நஷ்டத்தில் முடிய பீமனேரியிலும் நாகர்கோயிலிலும் வாழ்ந்திருக்கிறார் அக்காலத்தில் கன்யாகுமரிக்கு வரும் தமிழறிஞர்கள் அனைவருமே கவிமணியைச் சென்று சந்தித்திருக்கிறார்கள் எவருமே கே என் சிவராஜபிள்ளையை சந்தித்ததில்லை என்கிறார் அ கா பெருமாள் அதற்குக் காரணம் தமிழ்ச்சங்கம் என்பது கற்பனையே என அவர் எழுதியதுதான் என ஊகிக்கிறார் கற்பனைகொண்ட ஓர் எழுத்தாளன் சிறுகதைகளாக எழுதித்தள்ளவேண்டிய அளவுக்கு வாழ்க்கைச் சித்திரங்கள் ஒற்றைவரிகளாக இறைந்துகிடக்கும் நூல் இது தமிழ்ச்சொற்பிறப்பியல் அகரமுதலி தயாரிக்க உதவிகோரி திருப்பனந்தாள் ஆதீனம் செல்லும் தேவநேயப் பாவாணருக்கு அங்கே நிகழ்ந்த சிறுமை ஓர் உதாரணம் பிராமணப் பந்தி முழுமையாக முடிந்தபின் மாலை மூன்று மணிக்கு அவருக்கு உணவளிக்கப்படுகிறது மடாதிபதியை அவர் சந்திக்கையில் அருகே உ வே சாமிநாதய்யர் இருக்கிறார் ஏற்கனவே தேவநேயப் பாவாணரை நன்கறிந்தவர் என்றாலும் உ வே சாமிநாதய்யர் அவரை தனக்குத் தெரியாது என்று சொல்லிவிடுகிறார் புண்பட்டு உளக்கொதிப்புடன் தேவநேயப் பாவாணர் திரும்பிச்செல்கிறார் உ வே சாவின் இணையற்ற பங்களிப்பைப் பற்றிச் சொல்லும் அதே ஆய்வுநோக்குடன் இதையும் சொல்லிச் செல்கிறார் அ கா பெருமாள் இன்னொரு உதாரணம் திருநெல்வேலியைச் சேர்ந்த சொர்ணம் பிள்ளை என்பவர் இன்னிலை என்னும் நூலின் சுவடியை வ உ சியிடம் கொடுத்து அது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று என்று சொல்லியிருக்கிறார் அதற்கு வ உ சி பெரும்பணமும் கொடுத்திருக்கிறார் வ உ சி அதை பதிப்பித்தபின்னர் மயிலை சீனி வெங்கடசாமி மு அருணாச்சலம் போன்றவர்கள் அது போலிநூல் என நிறுவினர் அந்தச் சுவடி பழஞ்சுவடிபோல போலியாக தயாரிக்கப்பட்டது இந்த சொர்ணம் பிள்ளை அனந்தராம அய்யரை ஏமாற்றி கைந்நிலை என்னும் நூலையும் பதினென்கீழ்க்கணக்கு என பதிப்பிக்கச் செய்திருக்கிறார் பின்னர் அது கண்டுபிடிக்கப்பட்டது இன்றைய நோக்கில் அந்த சொர்ணம் பிள்ளை சாதாரணமானவர் அல்ல அவரும் பெரிய தமிழறிஞர்தான் தமிழறிஞர்களுக்கே சந்தேகம் வராதபடி அவர் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை எழுதியிருக்கிறார் போலிச்சுவடி செய்வதிலும் தேர்ந்திருக்கிறார் தமிழாய்வுச்சூழலை நன்கு அறிந்து அன்றைய பதிப்புவெறியை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் உண்மையில் இன்றிருக்கும் பழந்தமிழ் நூல்களில் நாம் இன்னமும் கண்டுபிடிக்காத சொர்ணம் பிள்ளையின் கைவரிசைகள் உள்ளனவா எனக்கென்னவோ இன்னா நாற்பது இனியவை நாற்பது மேல் ஓர் ஐயம் நம் சூழலில் ஓர் அலையென எழுந்து நாம் இன்று சிந்திக்கும் முறையை வடிவமைத்து மறைந்துபோன ஒரு மாபெரும் அறிவியக்கத்தை அதன் சிற்பிகளின் ஆளுமைகள் வழியாக சித்தரிக்கும் முக்கியமான நூல் இது முந்தைய கட்டுரைமனிதர்களுடனும் அப்பாலும் அடுத்த கட்டுரை வெண்முரசு நூல் இருபது கார்கடல் தொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் எழுதுவதை பயில்தல் ஈராறுகால் கொண்டெழும் புரவி குமரித்துறைவி விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் முதல்நூல் குமரித்துறைவி அச்சுநூல் ஜன்னல் சிறுமி லோகமாதேவி அறிவின் பரவல் கடிதம் அறியப்படாத தீவின் கதை உஷாதீபன் மனிதர்கள் சிறுகதைத் தொகுதி நா கிருஷ்ணமூர்த்தி வாசிப்பனுபவம் உஷாதீபன் மகாஸ்வேதா தேவியின் காட்டில் உரிமை கா சிவா யுவன் சந்திரசேகரின் கானல் நதி அனங்கன் கீழைத் தத்துவம் எளிதாக கன்னித்தீவு வெண்முரசு இசை வெளியீடு வெண்முரசு நூல்கள் வாங்க விஷ்ணுபுரம் பதிப்பகம் முந்தைய பதிவுகள் சில விஷ்ணுபுரம்விழா விருந்தினர்கள் கடிதங்கள் மத்தகம் கடிதம் விழா இன்னும் சில எட்டுகள் ராஜ் கௌதமன் பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும் கடலூர் சீனு ஸ்ரீரங்க வின் முதலில்லாததும் முடிவில்லாததும் ஆழிசூழ் உலகு ராகவேந்திரன் கவி சிறுகதை மணி எம் கே மணி வெண்முரசு நூல் ஆறு வெண்முகில் நகரம் சிறுகதை கவிதைப் போட்டி முந்தைய பதிவுகள் முந்தைய பதிவுகள் வெண்முரசு விவாதங்கள் பதிவுகளின் டைரி கட்டுரை வகைகள் கட்டுரை வகைகள் ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் நகைச்சுவை நேர்காணல் நேர்காணல் மற்றும் பேட்டிகள் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு ஒலிவடிவம் வெண்முரசு வாசகர் கடிதம் வெண்முரசு வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை விவாத இணையதளங்கள் வெண்முரசு விவாதங்கள் விஷ்ணுபுரம் கொற்றவை பின் தொடரும் நிழலின் குரல் பனிமனிதன் காடு ஏழாம் உலகம் அறம் வெள்ளையானை குருநித்யா விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சொல்புதிது குழுமம் எழுத்தாளர் ஜெயமோகன் தொடர்புக்கு இணையதள நிர்வாகி ஆசிரியரை தொடர்பு கொள்ள பதிவுகளை உடனடியாக பெற எழுத்தாளர் ஜெயமோகன் அச்சு ஊடகம் தொலைக்காட்சி இ புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்
பெண்களின் மனதிற்குள் என்ன இருக்கிறது தமிழில் காண்க முகப்பு சிறப்பு சிகிச்சைகள் எங்களைப்பற்றி தொடர்பு கொள்க பெண்களின் மனதிற்குள் என்ன இருக்கிறது பெண்களின் மனதிற்குள் என்ன இருக்கிறது தனது மனதிற்குள் எதைத்தான் பூட்டி வைத்திருக்கிறாள் என்று ஆய்வு செய்தார் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ என்பவர் தனது ஆய்வின் முடிவில் பெண்கள் உண்மையிலேயே விரும்புபவை எவை என்பதை ஒரு பட்டியலே வெளியிட்டார் அதில் இடம்பிடித்த முக்கிய விஷயங்கள் இங்கே உங்கள் பார்வைக்கும் கீ கொடுத்த பொம்மை மாதிரி எடுத்ததற்கெல்லாம் ஆட்டம் போடுபவளாக பெண்ணை பயன்படுத்தக்கூடாது அதேபோல் அதிகம் பேசாதே என்று கட்டுப்படுத்தவும் கூடாது தான் விரும்புகிறவன் சிறந்த ஆண் மகனாக எல்லோராலும் பாராட்டப்படக் கூடியவனாக இருக்க வேண்டும் என்று எல்லாப் பெண்களுமே பேராசைப்படுகிறார்கள் அதிலும் தனித்திறன் பெற்ற ஆண்களை பெண்களுக்கு ரொம்பவும் பிடிக்கும் காலையில் வேலைக்கு புறப்படும் ஆண் அந்த பொருள் எங்கே இது எங்கே என்றெல்லாம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது அதேநேரம் பொறுப்பாக கேள்விகள் கேட்டால் அதற்குரிய செயலை பொறுப்பாக செய்ய எல்லா பெண்களும் தயாராகவே இருக்கிறார்களாம் விடுமுறை நாட்களில் தங்கள் விருப்பம்போல் ஓய்வெடுக்க வேண்டும் என்பது பெண்களின் பேராசை என்றுகூட சொல்லலாம் அன்றையதினம் இன்று ஏதாவது விசேஷமாக செய்யலாமே என்று வற்புறுத்தக்கூடாது எந்தவொரு வேலையையும் நின்று நிதானமாக செய்யத்தான் எல்லாப் பெண் களுக்கும் பிடிக்கும் அவசரம் அவசர மாக அதைச் செய்வதில் அவர் களுக்கு உடன்பாடு இல்லை திடீரென்று குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் அதற்கு காரண மாக மனைவியை குற்றம் சொல்லக் கூடாது குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு கணவன் மனைவி இருவருக் குமே உண்டு எந்தவொரு முடிவை கணவன் எடுத் தாலும் அதில் மனைவியின் பங்களிப்பும் இருக்க வேண்டும் முடிவு எடுக்கும் விஷயத்தில் மனைவியை புறந் தள்ளக் கூடாது ஒரு குடும்பத்தில் கணவனிடம் மட்டுமே குடும்ப வருமானம் இருக்கக் கூடாது மனைவியிடமும் கொஞ்சம் பணம் இருக்க வேண்டும் அப்போதுதான் மற்றவர்கள் தன்னை மதிப்பார்கள் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைக்கிறாள் படுக்கையறையில் போர் அடிக்கும் விதமாக கணவன் செயல்படக்கூடாது எதைச் செய்தாலும் எதைச் சொன்னாலும் புதுமையாக வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பது பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு அதிகம் பேசுவதில் பெண்களுக்கு எப்போதும் ஆர்வம் உண்டு அதனால் செல்போனில் அவர்கள் நீண்ட நேரம் அரட்டை அடித்தாலும் கண்டு கொள்ளக்கூடாது அய்யோ பில் அதிகமாகி விடும் என்று சொன்னால் அவர்கள் எரிச்சல் ஆகிவிடுவார்கள் அதனால் அவர்களை மனம்போல் பேச விட்டுவிட வேண்டும் வீட்டிலேயே அடைந்து கிடக்க எந்தவொரு பெண்ணும் ஆர்வம் காட்ட மாட்டாள் வாரத்திற்கு ஒரு முறை பக்கத்தில் உள்ள பார்க் பீச் ஓட்டல் தியேட்டருக்கோ வருடத்திற்கு ஒருமுறையாவது வெளி சுற்றுலாவுக்கோ அழைத்துச் செல்ல வேண்டும் கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லாப் பெண்களிடமும் உள்ளது அந்த வேலையை கணவன் தேடித் தந்தால் அவர்கள் மிகவும் மகிழ்வார்கள் இப்போதெல்லாம் இடுப்பு சிறுத்த பெண்களைத்தான் ஆண்கள் விரும்புகிறார்கள் சிலநேரங்களில் எதிர்பாராதவிதமாக பெண்களது உடம்பு பெருத்துவிட்டால் அதற்காக அவர்களை இன்னும் வருத்தத்திற்குள்ளாக்கக் கூடாது இடை குறைக்கும் முயற்சிக்கு கணவர் தரப்பில் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார்கள் இப்படி பெண்களின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றினாலே போதும் அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி எப்போதும் நிறைந்திருக்கும் என்கிறார் ஆய்வாளர் பேகோ சிறப்பு சிகிச்சைகள் முகப்பருக்கள் புழுவெட்டு ஆஸ்த்துமா ஹெப்படைட்டிஸ் கல்லீரல் வீக்கம் ஹெர்பிஸ் அக்கி முடி உதிர்தல் சோரியாசிஸ் மீன் செதில்படை எக்சிமா கரப்பான் படை மருக்கள் மூட்டுவலி லிச்சன் பிளானஸ் வெண் புள்ளிகள் கருப்பை கட்டிகள் சினைப்பை கட்டிகள் மாதவிடாய் நிற்றல் குழந்தையின்மை வெள்ளைப்படுதல் ஆண்மைக்குறைபாடு பாலியல் பிரச்சனைகள் உளவியல் ஆலோசனைகள் மன அழுத்தம் மன கவலை விந்தனு குறைபாடு சைனசைட்டிஸ் ஒவ்வாமை அலர்ஜி ஒற்றை தலைவலி டான்ஸிலைட்டிஸ் வயிற்றுப்புண் வயிறு கோளாறுகள் மலச்சிக்கல் மூலம் குடல்புண் சுய இன்பம் உடலுறவில் வலி உடலுறவில் விருப்பமின்மை மருத்துவ தகவல்கள் கொழுப்பை குறைக்கும் உணவுகள் சுய மார்பக பரிசோதனை
டிவிஎஸ் எமரால்ட் ஸ் ஏட்ரியம் சார்பில் க்ரீன் ஏக்கர்ஸ் திட்டத்தில் மாதம் ஒன்றுக்கு வீடுகள் விற்பனை தென்னிந்தியாவில் தடம் பதிக்கும் ஆர்டியம் அகாடமி இந்தியா முழுவதும் கல்லூரிகளில் இருந்து சிறப்பு பொறியாளர்களை தொழில்துறைக்கு தயார்படுத்துகிறது வெர்ட்டுஸா அரசு மலர் இனப்பெருக்க மருத்துவத்துறை மற்றும் ஒருங்கிணைந்த மகளிர் மையத்தை பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் தமிழச்சி தங்கபாண்டியன் திறந்து வைக்கிறார் அப்போலோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட மிட்ரா கிளிப் பொருத்துதல் சிகிச்சை வயது விவசாயி ஒருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது அவர் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக நாட்கள் காத்திருந்தவர்
டிவிஎஸ் எமரால்ட் ஸ் ஏட்ரியம் சார்பில் க்ரீன் ஏக்கர்ஸ் திட்டத்தில் மாதம் ஒன்றுக்கு வீடுகள் விற்பனை தென்னிந்தியாவில் தடம் பதிக்கும் ஆர்டியம் அகாடமி இந்தியா முழுவதும் கல்லூரிகளில் இருந்து சிறப்பு பொறியாளர்களை தொழில்துறைக்கு தயார்படுத்துகிறது வெர்ட்டுஸா அரசு மலர் இனப்பெருக்க மருத்துவத்துறை மற்றும் ஒருங்கிணைந்த மகளிர் மையத்தை பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் தமிழச்சி தங்கபாண்டியன் திறந்து வைக்கிறார் அப்போலோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட மிட்ரா கிளிப் பொருத்துதல் சிகிச்சை வயது விவசாயி ஒருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது அவர் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக நாட்கள் காத்திருந்தவர்
இலங்கைத் தீவு இரு தேசங்கள் கொண்டதென்பதை சிறீலங்கா அரசாங்கம் உணர்ந்ததும் தமிழீழத் தனி அரசே தமிழ் மக்களுக்கான ஒரே தீர்வு என்பதனை தமிழ் மக்கள் தமது ஆன்மாவில் உரம் ஏற்றிக் கொண்டதுமான நாள் யூலை ஆகும் தமிழீழ மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசாங்கம் ம் ஆண்டு மேற்கொண்ட யூலை இன அழிப்புப்போர் நடைபெற்று இந்த வருடத்துடன் ஆண்டுகள் ஓடிவிட்டன தொடர்ச்சியாக ஒரு வார காலம் மேற்கொண்ட இன சுத்திகரிப்பு நடவடிக்கையில் க்கு மேற்பட்ட தமிழ் மகக்ள் படுகொலை செய்யப்பட்டும் சொத்துக்கள் அழிக்கப்பட்டும் சூறையாடப்பட்டும் பெரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர் மேலும் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட விடுதலைப் போராளிகளும் மக்களும் படு கொலை செய்யப்பட்டதுடன் தமிழ் மக்கள் தென்னிலங்கையிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர் விரட்டியடிக்கப்பட்ட தமிழ் மக்கள் எமது தாயக பிரதேசமான வட கிழக்கு பகுதியில்அடைக்கலம் புகுந்தனர் தமிழ் மக்களுக்கான தாயகம் வட கிழக்கு பிரதேசம்தான் என்பதனை இந்நடவடிக்கையின் மூலம் சிங்கள அரசிற்கு நிரூபித்ததால் தமிழ் மக்களின் தாயக விடுதலைப் போராட்டம் மேலும் வலுப்பெறுவதற்கு இச்சந்தர்ப்பம் வழிசமைத்தது ஆகவே இந்த வலி சுமந்த நாட்களை எதிர்வரும் அன்று உலகம் முழுவதும் நினைவுகொள்ளும் அதேவேளை நோர்வேயிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெறவுள்ளது
கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்
கடந்த பதிப்பான மரணத்திற்கு அப்பால் ஓர் அலசல் எழுதியபோது நண்பர் சுரேஷ் அவர்கள் மறுஜென்மம் பற்றிய கேள்வியை எழுப்பியிருந்தார் அவரது சந்தேகங்களை நான் அப்பொழுதே பதிலுரையில் தெளிவுபடுத்தி விட்டேன் இருப்பினும் அதனையே பதிவிட்டு அனைவருக்கும் தெரியப் படுத்தலாம் என்ற நல்ல நோக்கத்தின் விடை தான் இந்த பதிவு அடுத்த பதிவிற்கு நல்ல தொடக்கமும் அவரே கொடுத்துவிட்டார் மறுஜென்மம் அல்லது மறுபிறப்பு என்பது பரவலாக இந்து பவுத்தம் இஸ்லாம் ஆகிய மதங்களில் தீவிர நம்பிக்கை உள்ளது ஆனால் கிருஸ்தவ மதத்தில் மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை சிறிது குறைவாகவே உள்ளது அனைத்து மதங்களையும் விட இந்து மற்றும் பவுத்த மாதத்தில்தான் மறுபிறப்பு என்பதை ஆணித்தரமாக நம்புகின்றனர் இந்து மதத்தைப் பொருத்தவரை மறுபிறப்பு ஒரு வலி தரக்கூடிய நிகழ்வாகவே கருதுகிறார்கள் ஒருவனது பாவங்கள் கழிந்து புண்ணியம் கிடைக்கும் வரை அவன் மறு பிறப்பு எடுத்துக் கொண்டே இருப்பான் என்பது இந்து மக்கள் நம்பிக்கை அதனால் தான் அவர்கள் தங்கள் பாவங்களை போக்க கங்கை ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தளங்களில் மூழ்கி தங்கள் பாவங்களை கங்கையோடு அனுப்பிவிட்டு இவன் தன் பாவங்களை துறந்ததோடு இல்லாமல் மறு பிறப்பு என்ற பாவங்களையும் துறந்துவிடுகிறான் இது இவர்களது நம்பிக்கை நமக்கு தற்பொழுது ஒரு கேள்வி எழும் கங்கை ஏன் நமது பாவங்களைக் கழுவ வேண்டும் என்பதுதான் அது அவளும் ஒரு பாவத்தை செய்து விடுவாள் அது யாதெனில் ஒரு மாபெரும் சக்தி வாய்ந்த முனிவர் தன்னை வணங்காமல் சிவன் விஷ்ணு பிரம்மாவையே வணங்குகிறாரே என்ற பொறாமையில் அவருடன் இவர் பகைமையை வளர்த்துக் கொள்வாள் அப்பொழுது அந்த மாமுனி இவளின் திமிரினை அடக்குகிறேன் என்று பெரும் வேள்வி செய்வார் இவர் மந்திரங்களை உச்சரிக்கும் பொழுதே தேவி அந்த முனிவரைக் கொன்று விடுவாள் இந்த பாதி மந்திரத்தில் பிறந்த அந்த அசுரனை இவளால் அழிக்க இயலாது அவனை இவள் விழுங்கி விடுவாள் அப்பொழுது அவனது விழம் ஆனது இவள் உடல் எங்கும் பரவி விடும் அப்பொழுது சிவ பெருமான் அவர்கள் இவளுக்கு சாப விமோச்சனம் அளிப்பார் நீ கங்கையாக வற்றாத ஜீவ நதியாக ஓடு எப்பொழுது மானிடர்களின் பாவங்களால் உனது நஞ்சு தீர்கிறதோ அப்பொழுது உன் பாவங்கள் விலகி நீ என்னை வந்து சேர்வாய் என்று கூறிவிடுவார் அதனால்தான் அவள் இன்னும் நமது பாவங்கள் மட்டும் இல்லாமல் தொழிற்சாலைகள் மற்றும் நகரங்களின் கழிவுகளையும் சுமந்து செல்கிறாள் இப்படியே சென்றால் அவள் விரைவில் சாபம் நீங்கி நம்மை விட்டு விரைவில் சென்றி விடுவாள் புத்த மதத்தில் அவர்களது மன்னராக கருதப் படுபவர் தலாய் லாமா இவர் அவளோகிதரின் வரிசையில் மறுபிரப்பாக வருபவராக அனைவரும் நம்புகின்றனர் தற்போதைய தலாய் லாமா இறந்தால் அடுத்த ஏழு நாட்களுக்குள் புதிய தலாய் லாமாவை அவர்கள் தேர்ந்தெடுத்து விடுவார்கள் மகாபாரதத்தில் கூட கர்ணன் முன் பிறப்பில் அசுரனாக இருந்தவன் தான் அவனுக்கு சூர்யபகவானின் பூரண அருள் இருந்ததனால் அவன் பல சக்திகளுடனும் நல்ல உள்ளத்துடனும் மறு பிறப்பில் மகாகர்ணனாக பிறந்தான் என்பது வரலாறு இதுவரை நாம் ஆன்மிகம் துனையில் மறுபிறப்பு என்பதை ஆராய்ந்தோம் இனி நாம் அறிவியல் என்ன கூறுகிறது என்று பார்ப்போம் அறிவியல் வழியின் துனையில் நாம் மறு பிறப்பு என்பதை நாம் தேடினால் ஐத் தவிர்த்து மறு பிறப்பு என்பதை நம்மால் விளக்க முடியாது ஏனெனில் இவர் மறுபிறப்பை அந்த அளவிற்கு தேடி அலசி ஆராய்ந்துள்ளார் இந்த மனிதர் மறுஜென்மத்தை பற்றி ஆராய்ந்து இந்தியா இலங்கை தென் அமேரிக்கா வட அமேரிக்கா ஆப்பிரிக்கா அலாஸ்கா என்று யார் யாரெல்லாம் மறு பிறப்பு சிந்தனை உள்ளது என்று கூறுகிறார்களோ அவர்களையெல்லாம் இந்த அசாதாரண மனிதர் சந்தித்தார் அவர்கள் கூறுவதை இவர் பதிவும் செய்தும் கொண்டார் இப்படி அவர் கடந்த தொலைவு எவ்வளவு தெரியுமா இந்த ஐந்து வருட கால இடைவெளியில் மட்டும் அவர் சுமார் மைல் கல்தொலைவு பயணம் செய்தார் இவர் தன் வாழ்வில் எப்படியாவது மறுபிறப்பு என்பதை அறிவியல் ரீதியாக மெய்ப்பித்து விடவேண்டும் என்று உறுதியாக இருந்தார் இந்த மாமனிதர் தனது வாழ்வில் மறுபிறப்பு பற்றிய சிந்தனை உடையவர்களான பேரை சந்தித்து அவர்கள் கூறியதைப் பதிவிட்டு கோப்புகளாகவும் சேகரித்து வைத்தார் அவர்கள் பதிவுகள் எல்லாவற்றையும் என்ற கேள்வி பதில் முறையில் சேகரித்து வைத்தார் இவர் மறுஜென்மம் என்பதை உறுதியாக நம்பியதன் விளைவால் ஒரு காரியம் செய்தார் அது என்ன என்கிறீர்களா கேட்டால் ஆச்சர்யப் பட்டுப் போவீர்கள் அவர் ஒரு மாபெரும் இரும்புப் பெட்டியை உருவாக்கினார் அதன் கடவுச்சொல்லை அவருக்கு மட்டும் தெரிந்த மாதிரி உருவாக்கி அவர் சேகரித்த பலதகவல்களை அதனுள் இட்டு பூட்டி விட்டார் நண்பர்கள் அந்த பெட்டி சாதாரண பெட்டி என்று நினைத்துவிட வேண்டாம் அது என்ற எந்திரம் மூலம் அந்த பெட்டியின் பூட்டை இணைத்துவிட்டார் இந்த பூட்டை திறக்க ஒரு சொற்றொடர் வேண்டும் அந்த சொற்றொடர் அவருக்கு மட்டுமே தெரியும் நான் எனது அடுத்த பிறப்பில் இந்த பூட்டை நிச்சயம் திறப்பேன் அதுவரை அனைவரும் பொறுத்து இருங்கள் என்று கூறி அவர் இறந்து விட்டார் எப்பொழுது அந்த இரும்புப் பேழை திறக்கப் படுகிறதோ அப்பொழுதுதான் மறுஜென்மம் உலகத்திற்கு நிரூபிக்கப் படும் கடந்த வருடங்களாக அந்தப் பெட்டி பூட்டியே உள்ளது அது திறந்தால் தான் நாம் அனைவருக்கும் பதில் கிடைக்கும் பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் கருத்துரையிட்டுச் செல்லுங்கள் உபயோகமாக இருந்தால் பின்வரும் ஏதேனும் ஒரு பட்டையின் மூலம் வாக்களித்துவிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே தளிர் சுரேஷ் ஆச்சர்யமான தகவல் சிறப்பான பதிவு நன்றி வெற்றிவேல் தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி ஐயா திண்டுக்கல் தனபாலன் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் இதைப் பற்றி நிறைய எழுதலாம் சுருக்கமாக மனிதனாக வாழ இந்த ஒரு பிறவியே போதாதா தன்னை முழுமையாக அறிந்தவர்கள் எல்லாம் பிறவா வரம் வேண்டும் என்று சொல்லி சென்று விட்டார்களே திருநாவுக்கரசரை தவிர அவர் சொல்லியது வேறு திருவள்ளுவர் குறள் எண் இல் பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார் இறைவன் அடிசேரா தார் பொருள் இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களே பிறவிப் பெருங்கடலைக் கடப்பார்கள் சேராதவர்களால் கடக்க இயலாது இந்த ஐந்து வருட கால இடைவெளியில் மைல் கடந்த அவர்கள் ஒரு வேளை பிறவிப் பெருங்கடலைக் கடந்தவரோ அப்படி இருந்தால் அந்தப் பூட்டு பூட்டியே இருக்கும் அது திறந்தாள் தான் என்பதை அது திறந்தால் தான் என்று மாற்றவும் நன்றி வெற்றிவேல் வருகைக்கும் கருத்துரைத்ததர்க்கும் மிக்க நன்றி நண்பரே எழுத்துப் பிழைக்கு நான் மிகவும் வருந்துகிறேன் தாங்கள் கூறிய பிழையை நான் சரி செய்து விட்டேன் எப்படித்தான் எழுதினாலும் சில நேரங்களில் சில பிழைகள் வந்துவிடுகிறது தாங்கள் கூறுவது மிகவும் சரிதான் நண்பரே அவர் ஒருவேளை பிறவிப் பெருங்கடலை கடந்திருக்கலாம் அப்படிக் கடந்திருந்தால் அவரால் திரும்பி வர இயலாது அவர் தான் செய்த ஆராய்ச்சிகளின் முடிவுகளின்படி தான் நிச்சயம் மீண்டும் வருவோம் என்று அவர் உறுதியாக நம்பினார் அவருக்கு திருவள்ளுவர் கூறியது பற்றியோ மதங்களின் கருத்துகளோ அவருக்கு ஏதும் தெரியாது அவர் முழுக்க முழுக்க தன் ஆராய்ச்சிகளின் முடிவுகளையும் தன் கருத்துகளையுமே முழுவதுமாக நம்பினார் அதன் விளைவாகத்தான் அவர் அந்த பேழையை விட்டுச் சென்றுள்ளார் நம் கையில் என்ன இருக்கிறது நமக்கு முன்னால் சென்ற சான்றோர்களின் கருத்துகளையே நாம் ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது நண்பரே நாம் இறந்த பிறகு கண்டிப்பாக பார்க்கப் போகிறோம் தானே அதுவரை நமக்கு கடவுள் இட்டப் பணிகளை நாம் செவ்வனே செய்துவிட்டுச் செல்ல்வோம் ஆன்மிகம் துனையில் அறிவியல் வழியின் துனையில் என்பதை துணை என்றால் சரிதானே நண்பரே வணக்கம் சொந்தமே இப்பிறப்பு போதும் ஆனாலும் அறிவுபூர்வமான பதிவு சீக்கிரம் அவர் வந்து சொன்ன பிறகாவது நம்மவர் திருந்தட்டும் என்னைக்கேட்டால் தனபாலன் அண்ணா சொன்னது போல் முழுதாய் நிறைவாய் றேர்மையாய் இப்போதே வாழ்ந்துவிடுவோம் சந்திப்போம் சொந்தமே வெற்றிவேல் தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே தாங்கள் கூறுவது மிகவும் சரிதான் நண்பரே இப்பிறப்பின் நமது பாவங்களை போக்க இன்னும் ஆயிரம் ஜென்மம் தேவைப்படும் இதில் கடவுள் நமக்கு இன்னொரு பிரப்பினையும் கொடுத்து விட்டால் அதன் பாவங்களைக் கழுவ நமக்கு காலம் போதாது மேலும் இப்பிறப்பில் நான் சந்திக்கும் தோல்வி துரோகம் வலி தவிப்பு என இவற்றையே என்னால் தாங்க இயலவில்லையே இதில் இன்னொரு பிறப்பா கடவுளே வேண்டவே வேண்டாம் ஆதலால் இப்பிறப்பிலே நாம் நல்ல செயல்களை செய்துவிட்டு முக்தி அடைவதே நல்லதும் அறிவார்ந்த செயலும் கூட நண்பரே ஆத்மா மிகவும் புதியதும் ஆச்சரியதுமான தகவல் நண்பா ஆனாலும் என்னுடைய கருத்துப்படி மறு பிறப்பு என்பது ஒன்று இறுக்கிறது அது இந்த பூவுலகில் நடைபெறாது அந்த மறுபின்போது தான் நாம் நமது எதிர்கால வாழ்க்கையான சொர்க்கம் அல்லது நரகத்தை தெரிவு செய்ய வேண்டியிருக்கிறது இந்த பூமில் நாம் செய்த செயல்களுக்கு ஏற்ற மாதிரிதான் நம்முடைய மறுவாழ்வு தீர்மானிக்கப் படுகிறது அதிக நன்மை செய்தவர் அதற்குறிய பயனையும் தீமை கெடுதி செய்தவர் அதற்குறிய பயனையும் அடைந்து கொள்வார்கள் ஒரு போது இறப்பவர்கள் மறு பிறப்பாக இந்த பூமிக்குத் திரும்புவது கிடையாது மேலும் அவர் கொடுத்த ரகசிய குறீயீடுகளை இந்த தொழிநுட்ப உலகில் இலகுவாக அறிந்துவிட முடியும் அதனை வைத்து நாம் மறுபிறப்பினை அறிய முடியாது நிலவிலே ஹோட்டல் அமைக்கும் முயற்சியில் தற்போதைய அறிவியில் விஞ்ஞானிக்கு இதுவொரு பெறிய விடயமல்ல விரைவில் அந்த குறியீட்டை கண்டு பிடிப்பார்கள் என நினைக்கிறேன் வெற்றிவேல் வணக்கம் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே அறிவியல் மிகவும் வளர்ந்து விட்டது ஆனால் அவர் தனது பேழையை பெட்டியை விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் வைத்துவிட்டுச் சென்றுள்ளார் ஆகவே நாம் நம்பலாம் நம் கையில் என்ன இருக்கிறது காலம் தான் இந்த விஷயத்தில் பதில் கூற வேண்டும் மறு பிறப்பு பற்றி தங்கள் கருத்துகளை என்னால் ஏற்றுக்கொள்வதற்கும் இல்லை மறுப்பதற்கும் இல்லை சான்றோர்கள் கூறிய கருத்துகளை நான் தங்கள் முன் விவாவத்திற்க்கு வைத்துள்ளேன் அவ்வளவுதான் நண்பரே தாங்கள் கூறியபடி நாம் இறப்பிற்குப் பின் பூமிக்கு வர மாட்டோம் என்றாள் வேறு நாம் எங்கு செல்வோம் மரணத்திற்கு அப்பால் திகில் வெற்றிவேல் இதில் திகிலடையும் அளவிற்கு என்ன இருக்கிறது நண்பரே சிறு விவாதம் தானே ஆராய்ச்சியாளர் மீண்டும் மனிதபிறவி எடுக்காததே காரணம் அடுத்தபிறவி என்பது அவரவர் பாவபுண்ணியத்திற்கு ஏற்ப நடைபெறுகிறது இதுதான் உண்மை வெற்றிவேல் சில முறை இலக்கியத்தில் வந்த மறுபிறப்பு பல வருடங்கள் கழித்துதான் நிகந்துள்ளது அந்த வரிசையில் வருடங்கள் என்பது வெறும் சிறு காலம் தான் நண்பா பொறுத்திருப்போம் ஒருவேளை அவர் முக்தி அடைந்திருந்தாலும் அடைந்திருக்கலாம் ஆனால் அவர் முழுக்க முழுக்க தன் ஆராய்ச்சிகளின் முடிவுகளையும் தன் கருத்துகளையுமே முழுவதுமாக நம்பினார் அதன் விளைவாகத்தான் அவர் அந்த பேழையை விட்டுச் சென்றுள்ளார் அவரது நம்பிக்கையை நாம் பொறுத்திருந்துதான் நாம் பார்க்க வேண்டும் அ ஹாஜாமைதீன் மறுஜென்மம் அல்லது மறுபிறப்பு என்பது பரவலாக இந்து பவுத்தம் இஸ்லாம் ஆகிய மதங்களில் தீவிர நம்பிக்கை உள்ளது ஆனால் கிருஸ்தவ மதத்தில் மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை சிறிது குறைவாகவே உள்ளது அன்பு சகோதரரே இஸ்லாத்தில் மறுஜென்மம் என்ற நம்பிக்கையே கிடையாது மரணத்திற்குப் பின் அவரவர்களின் நன்மை தீமைக்கு ஏற்ப சொர்கத்திலோ நரகத்திலோ நித்திய வாழ்க்கை உண்டு என்பதுதான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை இஸ்லாத்தில் மறுஜென்மம் என தாங்கள் தவறாக விளங்கி இருக்கின்றீர்கள் என கருதுகின்றேன் மறுஜென்மத்தைப் பொறுத்த வரை இஸ்லாமும் கிருஸ்தவமும் ஒரே கொள்கையை கொண்டுள்ளது என்றும் அன்புடன் அ ஹாஜாமைதீன் வெற்றிவேல் சரி நண்பரே தவறுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கு ஒரு முஸ்லிம் பெரியவர் தங்கள் நபிகள் அவர்கள் போன்று சில மகான் மீண்டும் மீண்டும் வெவ்வேறு பிறப்பில் பிறந்தனர் அவர் கூறிய பெயரை நான் மறந்து விட்டேன் என்று கூறினார் அந்த வரிசையில் பிறந்தவர் தான் ஏசு என்றும் எனக்கு கூறினார் அவர் கூறியதைக் கேட்டுதான் நான் இஸ்லாமில் மறு பிறப்பை நம்புகின்றனர் என்று கூறினேன் நண்பரே சேகர் இஸ்லாம் கிறிஸ்துவம் இதிலே எனக்க ஏகப்பட்ட சந்தேகங்கள் உள்ளன அதை பிறகு கேட்டு கொள்கிறேன் மறுபிறப்பு என்று இந்துக்கள் தான் அதிகமாக தம்பட்டம் அடித்து கொள்கிறார்கள் ஆதாரமாக நிறைய ஓலைசிவடிகளை காட்டுகின்றனர் முடிவில்லா தொடர்கதை இது வெற்றிவேல் கண்டிப்பாக இது தொடர்கதை தான் நண்பரே பாப்போம் எப்போது இந்த தொடர் கதைக்கு முடிவு கிடைக்கும் என்று நண்பரே வணக்கம் இங்கு எனது சில கருத்துக்களையும் படித்துத் தெரிந்து கொண்ட விஷயங்களையும் விவரிக்க விரும்புகிறேன் இந்த கருத்துக்கள் முழுக்க முழுக்க விவரிக்கவே தவிர விவாதம் செய்ய அல்ல இந்த கருத்துக்கள் யாருடைய மதத்தையோ அல்லது கருத்துக்களையோ புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் துளியும் எனக்குக் கிடையாது என்பதை அழுத்தமாக உங்கள் அனைவருக்கும் பணிவுடன் தெரியப்படுத்திக் கொள்கிறேன் மறுஜென்மம் என்பது மிகப் பெரிய ஒரு சப்ஜெக்ட் அது ஆன்மீகம் மகான்கள் மறுஜென்மம் மற்றும் மதம் இவை நான்கும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது முதலில் எனக்குத் தெரிந்த மதத்தைப் பற்றிக் கூறுகின்றேன் பிறகு மற்ற மதங்களைப் பற்றிக் கூறுகின்றேன் மற்ற மதங்களைப் பற்றிய எனது கருத்துக்கள் துல்லியமாக இல்லாமல் இருக்கலாம் முதலில் இந்து மதம் இதில் கடவுள்கள் வரிசையில் மகாவிஷ்ணுவிற்கு அவதாரங்கள் இதில் எனக்குத் தெரிந்தவரை ராமரும் கிருஷ்ணரும் மனிதர்களாக பிறந்தவர்கள் இந்த அவதாரம் இல்லாமல் இன்னும் சில அவதாரங்கள் மனிதர்களாக பிறந்து இருந்தாலும் அவர்களைப் பற்றி இங்கு ஏதும் கூறப் போவதில்லை ஸ்ரீராமனைக் காட்டுக்கு அனுப்பும் வரத்தை கைகேயி கேட்கும் போது ஸ்ரீராமரைப் பற்றி தசரதன் விவரிக்கும் வார்த்தை மனித உருவில் இருக்கும் கடவுள் ஸ்ரீராமன் அவனையா காட்டுக்கு அனுப்புவது என்று கேட்கிறார் ஸ்ரீராமரையும் ஸ்ரீகிருஷ்ணரையும் ஏழுமலையானையும் மஹாவிஷ்ணுவையும் வணங்குபவர்கள் அனைவரும் அவர்களை அறியாமலேயே மறுஜென்மத்தை ஏற்றுக் கொள்கிறார்கள் மஹாவிஷ்ணுவிற்கும் ஸ்ரீகிருஷ்ணருக்கும் ஒரே ஆயுதம் அது சக்ராயுதம் மஹாபாரதத்தை எடுத்துக் கொண்டால் பீஷ்மரை பழிவாங்க ஒரு பெண் அலியாக மறுபிறவி எடுப்பாள் இது போல் பல கதைகள் மஹாபாரத்தில் உண்டு ராமாயணத்தை எடுத்துக் கொண்டால் ஸ்ரீராமருக்கு ஒரு தாரம்தான் அதனால் ஸ்ரீராமரை மணக்க விரும்பும் சீதையால்லாத மற்ற பெண்களிடம் ஸ்ரீராமர் என்ன சொல்கிறார் என்றால் எனது இந்த பிறவியானது உதாரண புருஷனாக வாழ்ந்து காட்டுவதற்காக எடுத்த பிறவி அதனால் இந்த பிறவியில் நான் ஏகபத்தினி விரதன் நீங்கள் எனது அடுத்த அவதாரமான கிருஷ்ணாவதாரத்தில் என்னை அடையலாம் என்று கூறுகிறார் பட்டினத்தார் கதை உங்களுக்குத் தெரியுமா அது அடுத்த பின்னூட்டத்தில் அன்புடன் பாலாஜி சுந்தர் வெற்றிவேல் நமது இந்து மத புராணக் கதைகள் அனைத்திலும் மறு பிறப்பு பற்றிய தகவல்கள் ஏராளமாக நிறைந்துள்ளது நண்பரே அனைத்தும் மறு பிறப்பிற்க்கான ஆதாரக் கதைகள் தான் தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே பட்டினத்தார் கதை உங்களுக்குத் தெரியுமா பட்டினத்தார் என்ற மிகப் பெரிய வணிகருக்கு வெகுகாலமாக குழந்தை பக்கியம் இல்லாமல் இருக்கின்றது இவர் சிவ பக்தர் பல வருடமாக இறைவனிடம் ஒரு குழந்தை பாக்கியம் அருள வேண்டி பிள்ளைத் தவம் இருக்கின்றனர் பல வருடம் கழித்து ஒரு குழந்தை பிறக்கிறது அக் குழந்தை மிகவும் சிறந்த அறிவுடன் விளங்குகிறது இளம் பருவத்திலேயே வணிகம் செய்ய கப்பலில் கடல் கடந்து சென்று திரும்புகிறான் மகன் ஆர்வமிகுதியில் மகன் என்ன வியாபாரம் செய்து வந்திருக்கிறான் என்று பார்க்க பட்டினத்தார் கப்பலுக்கு செல்கிறார் பல மூட்டைகள் மகன் வாங்கி வந்திருக்கிறான் என்று தெரிகிறது ஒரு மூட்டையில் இருந்து உருண்டையாக இருக்கும் பொருளை எடுத்துப் பார்க்கிறார் அது அனைத்தும் ஒன்றுக்கும் உதவாத மாட்டுச் சாண உருண்டைகள் கடுங் கோபத்துடன் வீடு திரும்பி மகனுக்காக காத்திருக்கிறார் மகன் வருகிறான் பட்டினத்தார் தன் கோபத்தையெல்லாம் மகனின் மேலே காட்டி கடும் வார்த்தைகளால் திட்டிவிடுகிறார் மகன் வருத்தத்துடன் வீட்டை விட்டு வெளியேறுகிறான் கப்பலில் வந்த மூட்டைகள் எல்லாவற்றையும் வேலைக்காரர்கள் தூக்கிவந்து வீட்டில் பத்திரமாக அடுக்கி விட்டு செல்கின்றார்கள் சிறிது நேரத்தில் யாரோ ஒருவர் ஒரு சிறிய மரத்தாலான கைக்கு அடக்கமான பெட்டி ஒன்றை கொடுத்துக் செல்கிறார் பட்டினத்தார் பெட்டியை திறந்து பார்த்தால் அதனுள்ளே காதில்லாத ஒரு ஊசி இருக்கிறது கூடவே ஒரு ஓலையில் காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்ற வாசகம் இருக்கிறது அதே சமயத்தில் பட்டினத்தாருக்கு திடீரென்று மனதில் மின்னல் அடித்தால் போன்ற ஒரு உணர்வு வருகிறது ஓடிப் போய் மூட்டையிலுள்ள ஒரு உருண்டையை எடுத்து வெளிச்சத்தில் வைத்து உடைத்துப் பார்க்கிறார் உள்ளே அரிய விலை மதிப்பு மிக்க ஆபரணக் கற்கள் இருக்கின்றது மொத்த மதிப்பும் பல சந்ததிக்கு வரும் அளவு மதிப்பு உள்ளது பைத்தியம் பிடித்தவர் போல மகன் சென்ற திசையில் ஓடுகிறார் எங்கு தேடியும் மகனைக் காணவில்லை தான் வணங்கும் ஈசனே தனக்கு மகனாக பிறந்திருக்கிறார் தம்முடைய அவசரத்தினால் மகனை இழந்துவிட்டோம் என்று உணர்கிறார் எங்கு தேடியும் மகன் கிடைக்கவில்லை இதன் பிறகு துறவறம் மேற்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார் இறைவனை நினைத்து முக்தி வேண்டி ஊர் ஊராக செல்கிறார் வழியில் பத்ரகிரி என்னும் மன்னனை சந்திக்கிறார் பல சுவாரசியமான சம்பவங்களுக்குப் பிறகு பத்ரகிரி மன்னன் நாட்டைத்துறந்து பட்டினத்தாரின் சிஷ்யனாகிறார் இருவரும் பல ஊர்களுக்கு செல்கிறார்கள் பட்டினத்தார் ஒரு மரத்தின் கீழே உள்ள திண்ணையில் தங்கி இருக்க பத்ரகிரியார் ஊருக்குள் போய் பிச்சையெடுத்து வந்து பட்டினத்தாருக்கு கொடுத்து பின் தானும் உண்டு பின் மிச்சமாவதை கீழே கொட்ட அதை ஒரு பெண் நாய் தின்று பத்ரகிரியாருடனேயே வாழ்ந்து வருகிறது நமக்கு வேண்டிய கதை இனிதான் வருகிறது வெற்றிவேல் பட்டினத்தார் கதைகளை கேட்டிருக்கிறேன் ஆனால் இவ்வளவு தெளிவாக தாங்கள் கூறக் கேட்டுதான் கேட்கிறேன் ஒரு அழகான கதையைக் கூறி வருகை தந்து எமது பதிவை சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே நமக்கு வேண்டிய கதை இனிதான் வருகிறது ஒரு நாள் மரத்தடியில் தூங்கும் பத்ரகிரியாரை சில வழிப்போக்கர்கள் அய்யா சம்சாரியே எழுந்திரும் என்று கூறி எழுப்புகிறார்கள் தூக்கத்திலிருந்து விழித்து எழும் பத்ரகிரி நான் ஒரு சன்யாசி என்னை ஏன் சம்சாரி என்று அழைக்கிறீர்கள் என்று கேட்கிறார் அதற்கு வழிபோக்கர்களும் சற்று தொலைவில் உள்ள மரத்தின் கீழே படுத்திருக்கும் பட்டினத்தாரைக் காட்டி அந்த சன்யாசியிடம் வழி கேட்டோம் அதற்கு அவர் நானோ சன்யாசி இந்த ஊரையோ அல்லது வழியையோ எனக்குத் தெரியாது அதோ ஒரு சம்சாரி படுத்திருக்கிறானே அவனை போய் கேளுங்கள் என்று கூறி உங்களை கை காட்டினார் அதனாலேயே உங்களை சம்சாரி என்று அழைத்தோம் என்று கூறுகிறார்கள் இதனால் கோபமுற்ற பத்ரகிரியார் நேராக பட்டினத்தாரிடம் சென்று ஒரு நாட்டிற்கு மன்னனாக இருந்தும் அதையெல்லாம் உதறி விட்டு சன்யாசியாக மாறிவிட்ட என்னை ஏன் சம்சாரி என்று கூறினீர்கள் என்று கேட்கிறார் அதற்கு பட்டினத்தார் சொல்கிறார் என்னுடைய உடமையாக இந்த கோவனத்தைத் தவிர ஏதும் இல்லை ஆனால் உனக்கோ பிச்சை எடுக்கவும் தூங்கும் போது தலையில் வைத்துக் கொள்ளவும் ஒரு திருவோடு உள்ளது மேலும் நீ போடும் மிச்சத்தைத் தின்று உன்னுடனே பந்தமாக இந்த நாயும் உள்ளது எனக்கோ ஏதும் இல்லை உனக்கோ உடமையாக திருவோடும் உறவாக நாயும் உள்ளது அதனால் நீ சம்சாரிதானே என்று கூறி சிரிக்கிறார் ஒரு தேசத்தின் மன்னன் என்ற பதவியை துறந்தும் பிச்சையெடுத்து வாழ்ந்தும் இந்த திருவோடும் நாயும் சன்யாசி நிலைக்குப் போவதை கெடுத்துவிட்டதே என்று பத்ரகிரிக்கு வந்த ஆத்திரத்தில் திருவோடை எடுத்து நாயின் மேல் வீசி எறிகிறார் திருவோடு நாயின் மண்டையில் பட்டு நாயின் உயிரை பலி வாங்கிவிடுகிறது சன்யாசிகளின் மிச்ச சோற்றை உண்ட காரணத்தால் நாய் புண்ணிய நிலை பெற்று அந்த புண்ணிய நிலையின் காரணமாக ஒரு மன்னனின் மகளாக பிறக்கிறது நாயாக இருந்து இளவரசியாக பிறந்த பெண்ணுக்கு திருமண வயது வந்ததும் மன்னன் திருமண ஏற்பாட்டை செய்கிறார் இளவரசிக்கு தான் போன ஜென்மத்தில் நாயாக இருந்து புண்ணிய பலனால் இளவரசியாக பிறந்த பூர்வஜென்ம விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது உடனே இளவரசி தன் தந்தையிடம் சென்று தான் மணந்தால் தன்னிடம் அன்பாக இருந்து உணவளித்த பத்ரகிரியையே மணப்பேன் என்று பூர்வஜென்ம விஷத்தைக் கூறுகிறாள் மன்னனும் இதையெல்லாம் கேட்டு ஆச்சர்யப் பட்டு தன் தேசத்தையும் சேனையையும் பாதியாக பிரித்து பெரும் செல்வத்துடன் இளவரசியை பத்ரகிரியாரைத் தேடி ஒப்படைக்கும்படி படையுடன் அனுப்பிவிடுகிறான் இளவரசியும் பத்ரகிரியார் இருக்கும் இடத்தை தேடி வந்து வருடங்களுக்கு முன் திருவோட்டால் அடிபட்டு இறந்த நாய் நான்தான் நான் இப்போது உங்களை மணக்க வந்திருக்கிறேன் என்று பத்ரகிரியாரிடம் சொல்கிறாள் பத்ரகிரி பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகிறார் தேசத்தை துறந்து வந்தாலும் பெண்ணும் பொன்னும் மண்ணும் தன்னை விட மாட்டேன் என்கிறதே என்று பட்டினத்தாரிடம் மிகவும் மனம் வருந்தி கூறுகிறார் பின் இறைவனை நினைத்து மனக் கஷ்டத்துடன் ஒரு பாடல் பாடுகிறார் உடனே ஒரு ஒளி தோன்றுகிறது அந்த ஒளியில் பத்ரகிரியாரும் இளவரசியும் ஐக்கியமாகிவிடுகிறார்கள் இது கண்டு பட்டினத்தார் தனக்கு முக்தி கிடைக்கவில்லையே என மிகவும் வருந்தி ஒரு பாடல் பாட அசரீரியாக ஒரு குரல் கேட்கிறது அது பட்டினத்தானே வருந்தாதே கரும்பு எங்கு கசக்கிறதோ அங்கு உனக்கு முக்தி என்று அசரீரி கூறுகிறது அதனாலேயே பட்டினத்தார் கரும்புடன் காட்சியளிக்கிறார் ஒவ்வொரு ஊரிலும் கரும்பைக் கடித்து கசக்க வில்லையென்றால் அங்கு தனக்கு முக்தி இல்லை என்று அடுத்த ஊர் சென்று விடுவார் கரும்பு திருவெற்றியூரில் கசக்கிறது பட்டினத்தார் அங்கு முக்தி அடைகிறார் அந்த மகானின் சமாதி திருவொற்றியூரில் இருக்கிறது அன்புடன் பாலாஜி சுந்தர் வெற்றிவேல் நான் மணலி திருவெற்றியூரில் தான் தங்கப் போகிறேன் நண்பரே கண்டிப்பாக சென்று அந்த மகானை தரிப்பேன் என்று நம்புகிறேன் ஏசு கிறிஸ்துவின் பெற்றோர் யூதர்கள் ஏசுவும் யூதர் ஏசு தோற்றுவித்த மதமே கிறிஸ்துவம் உலகின் தொன்மையான மதங்களில் யூத மதமும் ஒன்று ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் மோசஸ் அவரது வாழ்க்கைக்கும் ஜீசஸின் வாழ்க்கைக்கும் நிறைய ஒற்றுமை இருக்கும் மோசஸைப் போல யூத மதத்தில் பல மகான்கள் பிறந்துள்ளனர் அந்த வரிசைகளில் ஏசுவும் ஒருவர் முகமது நபியும் ஒருவர் என்று மறைந்த திரு வலம்புரி ஜான் அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் கூறக் கேட்டிருக்கிறேன் வலம்புரி ஜான் அவர்கள் கிறிஸ்துவத்தைச் சேர்ந்தாலும் அவர் அனைத்து மதங்களையும் அவற்றின் தத்துவங்களையும் மதிப்பவர் பைபிளில் பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு என்று இரு வகை உண்டு பழைய ஏற்பாட்டில் வரும் சில சம்பவங்களும் கதைகளும் பெயர்களும் இஸ்லாத்துடன் இணைந்த கதைகளுடன் தொடர்புள்ளது போலவே இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் படித்ததில்லை ஒரு யோகியின் சுயசரிதை என்று ஒரு புத்தகம் உள்ளது இந்த புத்தகம் இந்த நூற்றாண்டின் உலகத்திலேயே சிறந்த முதன்மையான புத்தகங்களில் ஒன்று இந்த புத்தகம் யோகோதா சத்சங்கத்தினால் வெளியிடப் படுகிறது இந்த புத்தகத்தில் வருட வயதுள்ள பாபா என்ற மகானைப் பற்றியும் அவரது சிஷ்யர்களைப் பற்றியும் எழுதப் பட்டுள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாபா திரைப்படத்தில் காட்டப்படும் பாபா இவர்தான் இந்த புத்தகத்தில் மறுஜென்மம் பற்றியும் பிறவியற்ற நிலை பற்றியும் இறப்புக்குப் பின் அந்த பிறவியற்ற நிலையிலும் இந்த நம்முடைய உலகத்தில் எப்படி மனித உருவத்தில் மகான்கள் எப்படி சிஷ்யர்களுக்கும் பக்தர்களுக்கும் காட்சி அளிக்கிறார்கள் என்பது பற்றியும் வேறெந்த புத்தகத்தை விடவும் விளக்கமாக தமிழில் விவரிக்கப் பட்டு உள்ளது சர் ஐசக் நியூட்டன் அவருடைய புவியியல் கோட்பாடுகளையும் இன்னும் பல இயற்பியல் கணித கோட்பாடுகளையும் வருடத்திற்கு முன் எழுதினார் அவைகளையெல்லாம் படித்து அதை நம்புகின்றோம் இந்த புவியியல் கோட்பாட்டை நாம் செயலில் தான் பார்க்க முடியுமே தவிர அதாவது பூமியின் புவியீர்ப்பு விசையை நாம் உணரத்தான் முடியும் புயியீர்ப்பு விசையினது தாக்கத்தை அது எப்படி அனைத்து பொருட்களிலும் நீக்கமற வியாபித்துள்ளது என்பதை உணரத்தான் முடியுமே தவிர இதுதான் ஒரு கிலோ புளி என்று காட்டுவது போல புவியீர்ப்பு விசையை காட்ட முடியாது பூமியை விட்டு மேலே மேலே போனால் புவியீர்ப்பு விசை இருக்காதே என்று கூறினாலும் அங்கும் நீங்கள் ஈர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டுதான் இருப்பீர்கள் இங்கு இருந்தால் பூமியின் ஈர்ப்பு மேலே போனால் சூரியனின் ஈர்ப்பு என்னுடைய முடிவான தீர்மாணம் ஈர்ப்பு விசையும் இறைவனும் ஒன்றே இது போல் வேறு அறிஞர்கள் யாராவது சொல்லியிருக்கிறார்களா என்று தெரியாது ஈர்ப்பு விசையும் இறைவனும் முழு பிரபஞ்சமும் அங்கிங்கெனாதபடி நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் ஒருவேளை இப்படிக்கூட இருக்கலாம் அதாவது ஈர்ப்புவிசைதான் இறைவனோ வெற்றிவேல் நமது விவாதம் மறுஜென்மத்தில் ஆரம்பித்து தற்பொழுது கடவுள் யார் என்று வந்து விட்டது நான் சில தகவல்களை பதிவு மிகவும் நீண்டு விட்டால் படிப்பதற்கு மலைப்பார்கள் என்று பதிவிடவில்லை எனக்கு யூதர்களைப் பற்றி அந்த அளவிற்குத் தெரியாது அனைத்தும் புதிய தகவல்கள் மிக்க நன்றி நண்பரே தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பரே ஒரு கிலோ புளி என்பதும் புவீஈர்ப்பு விசையின் விளைவே அளவே புவீயீர்ப்பு விசை இல்லை என்றால் எப்படி அளப்பது தான் இருக்கும் மறுபிறப்பைப் பற்றிக் கூற இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றது இப்போதே எனது பின்னூட்டம் உங்கள் பதிவின் அளவை தாண்டிவிட்டது வெற்றிவேல் தங்கள் கருத்துகள் அனைத்தும் வரவேற்கப்படுகிறது நண்பரே உண்மைதான் தங்கள் பின்னூட்டம் எனது பதிவைவிட அதிகமாகிவிட்டது சிகரம் பாரதி என்னக்குன்னா மறுபிறப்புல சுத்தமா நம்பிக்கை கிடையாது இந்தப் பிறவியை முடிந்தவரை முழுமையாய் வாழ்ந்துவிட்டுப் போவோம் அதுதான் நமக்கெல்லாம் நல்லது தங்கள் தளத்தில் சில எழுத்துப் பிழைகள் உள்ளன திருத்திக் கொள்ளுங்கள் சந்திப்போம் தோழரே வெற்றிவேல் தங்கள் எண்ணமும் சரிதான் தோழி இப்பிறப்பிலே முடிந்தவரை வாழ்ந்துவிட வேண்டும் எழுத்துப் பிழைகள் இருப்பது எனக்கும் தெரியும் தோழி வருத்தம் தான் முடிந்த வரை பிழையில்லாமல் தான் முயற்சி செய்கிறேன் எப்படியோ சில பிழைகள் வந்துவிடுகிறது வருகைக்கும் தவறை சுட்டிக் காட்டியதற்கும் மிக்க நன்றி தோழி சிந்திப்போம் சிகரம் பாரதி தாங்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த எனது கல்யாண வைபோகம் பாகம் ஐந்து வந்து விட்டது தங்கள் கருத்தை அறிய ஆவலாய் உள்ளேன் வெற்றிவேல் படித்து விட்டேன் நண்பரே கருத்துரையும் வழங்கி விட்டேன் ஹேமா மறுபிறப்புப் பற்றி நம்பிக்கை இல்லாவிட்டாலும் வாழ்வில் தவறிய சில விஷயங்களுக்காவே மறுபிறப்பென்று ஒன்றிருந்தால் வேண்டும் என நினைத்துக்கொள்வேன் பூட்டுத் திறக்குமா வெற்றிவேல் கண்டிப்பாக தோழி நம் வாழ்வில் நாம் தவறவிட்ட சில நிகழ்வுகளை மீட்பதற்க்காகவேணும் மறு பிறப்பு என ஒன்று இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் அதுவும் அந்த பிறப்பில் நம் இந்த பிறப்பின் நினைவுகளுடன் இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் நம் சிறு தவறுகள் அனைத்தையும் நம்மால் திருத்திக் கொள்ள முடியும் நடக்குமா பூட்டு திறப்பது நம் கையில் இல்லையே அந்த மனிதர் திரும்பி வருவதாகக் கூறி சென்றுள்ளார் காத்திருந்துதான் பார்க்க வேண்டும் மறு ஜென்மம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஒரு டாக்டரின் குறிப்பைப் படித்த நினைவை இங்கு கூறுகின்றேன் இது வருடத்திற்கும் முன்பு மறுஜென்மத்தை பற்றிய எனது தேடலில் கிடைத்த விவரம் ஆதாரம் ஏதும் என் கையில் இல்லை இந்த சம்பவம் இந்திய சுதந்திரத்திற்கு முன்பு நடந்த விஷயம் வட நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து ஒரு வீட்டைச் சேர்ந்த சிலர் ரயிலில் வேறு ஒரு ஊருக்கு ஏதே விஷயமாக சென்று திரும்பிக் கொண்டிருந்தனர் அப்போது அவர்களோடு அவர்கள் பெண் குழந்தையும் பயணம் செய்தது அந்த ரயில் ஒரு ஊரைக் கடக்கும் போது அந்த சிறுமி அந்த ஊர் தன்னுடையது என்றும் அந்த ஊரில் தனக்கு வேண்டப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறியது குழந்தை ஏதோ பிதற்றுகிறது என்று பெரியவர்கள் கண்டு கொள்ளவில்லை ஆனால் ஊர் போய் சேர்ந்தும் குழந்தையின் பிதற்றல் நிற்கவில்லை வரிசையாக பல பெயர்களை கூற ஆரம்பித்தது பல நபர்களின் பெயர்களை அவர்களின் பதவியோடும் தனக்கு குழந்தைகள் இருக்கிறார்கள் என்றும் அந்த குழந்தை தன்னுடைய பூர்வ ஜென்ம கதைகளை வரிசையாக கூறவே பெரியவர்களும் இதை என்ன என்று தீர்மானமாக விசாரித்துவிடுவது என்று அந்த அடுத்த ஊருக்கு போய் விசாரிக்கிறார்கள் அங்கு குழந்தை சொன்ன அத்தனை நபர்களும் அந்த குழந்தை தன்னுடைய சொந்தங்கள் என்று கூறியவர்களும் இருந்தார்கள் இந்த விஷயம் ஆச்சரியமான ஒன்றாக இருந்தாலும் இரண்டு ஊர்க்காரர்களும் இதை ஒரு சோதனை மூலமாக கண்டறிய தீர்மானித்தார்கள் அந்த பெண் குழந்தையின் பூர்வ ஜென்ம ஊரைச் சேர்ந்த இரண்டு நபர்களை இந்த குழந்தையை பார்க்க வரச் செய்தார்கள் ஆனால் இரண்டு பேருடைய பெயர்களையும் மாற்றி சொல்லுமாறு முன் ஏற்பாடு செய்தனர் அந்த ஆள் மாறாட்டம் செய்யப்பட்ட இருவரும் ஒரு நாள் அந்த குழந்தையை பார்க்க வந்தனர் ஆனால் அவர்களின் திட்டப்படி குழத்தையை ஏமாற்ற முடியவில்லை குழந்தை இருவரின் சரியான பெயரை தெரிவித்ததுடன் உங்களுக்கு என்ன ஆயிற்று ஏன் என்னை குழப்புகிறீர்கள் என்றும் கேட்டது இப்போது வந்த இருவரும் திரும்பி சென்றனர் பின்னர் அந்த குழந்தை யாரை ரத்த சம்பந்த சொந்தங்கள் என்று கூரியதோ அவர்களே குழந்தையை பார்க்க வந்தனர் அந்த குழந்தையும் போன ஜென்மத்தில் தன்னுடைய மூத்த மகன் இவன் இளைய மகன் இவன் என்று சரியாக சொல்லியது இது நடந்த போது அந்த குழந்தைக்கு வயதோ அல்லது வயதோ ஆனால் அந்த குழந்தை தனது பூர்வ ஜென்மத்து மகன்களை அவன் இவன் வாடா என்று ஒருமையிலேயே அழைத்தது ஆனால் அது தனது போன ஜென்மத்து கணவனைக் கண்டதும் ஒரு வெட்கமும் நாணமும் அதன் முகத்தில் ஒரு பெரிய பெண்ணுக்கு வருவது போல வெளிப்பட்டது கணவனைக் கண்டதும் தலையை குனிந்து கொண்டே பேசியது பிறகு மறுபடியும் இந்த குழந்தையை அதன் பூர்வ ஜென்ம வீட்டிற்கு கூட்டிப் போனார்கள் வீட்டிற்குள் நுழைந்ததுமே அந்தக் குழந்தை கேட்டது இது யாருடைய வீடு ஏன் இங்கே இருக்கிறீர்கள் என்று அப்போதும் யாருக்கும் நம்பிக்கை வரவில்லை ஹைலைட்டே இனிதான் ஹைலைட்டே இனிதான் இப்போது அந்த பெண் குழந்தையின் பூர்வ ஜென்ம கணவர் அந்த குழந்தையிடம் ஒரு கேள்வி கேட்டார் அது தனக்கும் தன் மனைவிக்கும் மட்டுமே தெரிந்த விஷயம் ஏதாவது ஒன்றை சொன்னால் மட்டுமே தன்னால் வந்திருப்பது மறுஜென்மம் எடுத்த தன் மனைவி என்று நம்ப முடியும் என்று சொன்னார் உடனே அந்த பெண் குழந்தை எழுந்து அந்த வீட்டை விட்டு வெளியெ செல்ல ஆரம்பித்தது அனைவரும் விவகாரம் அவ்வளவுதான் என்று நினைத்தனர் அந்த குழந்தையின் பின்னேயே சில பேர்கள் சென்றனர் வெளியே சென்ற அந்த பெண் குழந்தை தூரத்தில் இருந்த ஒரு சிதிலமடைந்த வீட்டை தேடிச் சென்று அந்த இடிந்திருந்த வீட்டின் சுவரில் இருந்த ஒரு மறைவான பொந்தில் கையை விட்டு அதில் இருந்து சில தங்கக் காசுகளை எடுத்து வந்து தனது பூர்வ ஜென்ம கணவன் கையில் கொடுத்தது பிறகு அதன் விளக்கத்தை அந்த வயாதான கணவனே விவரித்தார் தானும் தன் மனைவி மட்டும் தனியாக இருந்த ஒரு சந்தர்ப்பத்தில் இந்த காசுகளை தான் தன் மனைவியிடம் கொடுத்ததாகவும் மனைவி அதை மறைத்து வைத்ததாகவும் இது தங்கள் இருவரைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது என்றும் மறைந்திருந்த அந்த காசுகளை தாமே மறந்து விட்டதாகவும் தம் மனைவி இறந்த பின் சில வருடங்கள் கழித்து பழைய வீடு இடிந்து விழுந்ததால் அனைவரும் இப்போது புதிய வீட்டிற்கு மாறிவிட்டதாகவும் வந்திருப்பது உண்மையிலேயே தனது மனைவிதான் என்றும் அனைவருக்கும் கூறினார் அது மட்டுமல்ல இது இத்துடன் நிற்கவில்லை குழந்தை யாரை தன் மகன்கள் என்று கூறியதோ அவர்களுக்கே வயதிருக்கும் கணவனுக்கோ க்கு மேல் இருக்கும் குழந்தையோ தனது கணவனோடு வாழவேண்டும் என்று கேட்டது ஆனால் அது சாத்தியம் இல்லை என்று அவரவர் தமது ஊருக்கு திரும்பினர் குழந்தைக்கு பூர்வ ஜென்ம ஞாபகம் வந்ததால் அதன் குழந்தை பருவமே சிக்கலாக ஆனது கல்லூரி படிப்பையும் முடித்தது ஆனால் போன ஜென்ம வாழ்க்கையும் இந்த ஜென்ம வாழ்க்கையும் ஒன்றை ஒன்று சந்திக்க முடியாமல் அந்த பெண் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி கடுமையான மனநிலை பாதிப்பு ஏற்பட்டது அதன் பின் அதற்கு தகுந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு நல்ல நிலைக்கு வந்தது ஆனால் கல்யாணம் செய்துகொள்ள மறுத்தார் அந்த பெண் உளவியல் சிகிச்சைக்குப் பிறகு தன்னுடைய பழைய வாழ்க்கை சம்பவங்கள் மறக்கப்பட்டு திருமணம் செய்து கொண்டு வேறு வாழ்க்கையை வாழ்ந்தார் பூர்வ ஜென்ம ஞாபகம் என்பது ஒரு வரமல்ல அது ஒரு சுமை சாபம் இல்லையென்றால் கடவுள் அதை மறை பொருளாக அடுத்தடுத்த ஜென்மங்களில் நினைவில் தொடர முடியாதவாறு ஏற்படுத்தி இருக்க மாட்டார் யோசித்துப் பாருங்கள் இந்த வாழ்க்கையின் நினைவுகளையே நம்மால் சில சமயங்களில் சுமக்க முடிவதில்லை மேலே சொன்ன சம்பவம் ஒரு முந்தய ஜென்ம நினைவுகள் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது என்று பார்த்தால் ஒவ்வொருவருக்கும் இருந்த பல ஜென்ம நினைவுகள் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் அதனால் மறு ஜென்மத்தைப் பொறுத்தவரையில் மறதி என்பது ஒரு வரப்பிரசாதமே பூர்வ ஜென்ம ஞாபகம் கூடு விட்டு கூடு பாயும் முறையில் வாழ்ந்தால் மட்டுமே உதவியாக இருக்கும் வெற்றிவேல் நான் கேள்விப்படாத தகவல் நண்பா பூர்வ ஜென்ம நினைவுகள் என்பது கண்டிப்பாக ஒரு சுமைதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது பல விஷயங்களை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி அருணா செல்வம் அதிகம் யோசிக்கத் துாண்டும் பதிவு அலசல் தொடரட்டும் வெற்றிவேல் தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே அலசல் கண்டிப்பாக தொடர்ந்துகொண்டே இருக்கும் பூட்டு திறக்காது நன்றி ஜோசப் வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் வெற்றிவேல் தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே பூட்டு திறப்பது என்பது நமது கையில் இல்லை நண்பரே அனைத்தும் அவன் செயல் தங்கள் பதிலிலிருந்து தங்களுக்கு மறு பிறப்பில் நம்பிக்கை இல்லை என்று தெளிவாக தெரிகிறது வணக்கம் இங்கு இன்னுமொரு விஷயத்தை கூற வேண்டும் ஒவ்வொருவரும் உயிர் பிரியும் நேரத்தில் யாரை நினைத்தபடி இறக்கிறார்களோ எதை நினைத்தபடி இறக்கிறார்களோ அதுவாகவே மீண்டும் பிறக்கிறார்கள் ஆனால் அவரவர் கர்மவினைக்கு ஏற்ப மகளை நினைத்தபடி இறப்பவன் பெண்ணாகக் பிறக்கலாம் மகனை நினைத்தபடி இறக்கும் தாய் ஆணாக பிறக்கலாம் இப்படி ஒரு சாத்தியம் இருக்கிறது பூட்டை பூட்டியவர் உயிரை விடும்போது மீண்டும் பிறந்து அந்த பூட்டை திறக்க வேண்டும் என்று தீவிரமாக நினைத்தபடி இறந்திருந்தால் நிச்சயம் மறுபடி பிறந்து அந்த பூட்டை திறப்பார் இதில் உள்ள சிக்கல் எண்ணவென்றால் அவர் எண்ணத்தின் தீவிரம் மற்றும் மறுபிறவியை கரெட்டாக செய்து இருந்தால் மட்டுமே உங்கள் எண்ணத்தை நீங்கள் கரெக்ட்டாக செய்தால் நீங்கள் இந்த பிறவியிலேயே நீங்கள் நினைத்தை எல்லாம் அடைய முடியும் இதைத்தான் அனைத்து உளவியல் தத்துவ ஞானிகளும் சொல்கிறார்கள் செய்வது என்றால் கார் வேண்டும் என்று நினைப்பது ஒரு எண்ணம் ஆனால் அது சரியான இலக்கினை நோக்கி குறி பார்க்கப்படாத எண்ணம் இந்த ப்ராண்ட் கார் இந்த விலை இன்ன கலர் என்று ஆசைப்படுவது செய்யப்பட்ட எண்ணம் நண்பர்களுக்கு இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன் சரி இப்போது நான் ரோல்ஸ் ராய்ஸின் கோடி விலையுள்ள காரை செய்து எண்ணிவிட்டேன் ஏன் எனக்கு அது கிடைக்கவில்லை என்று கேட்டீர்கள் என்றால் என்ன தான் தீவிரமாக நாம் நம் ஆசைகளை செய்து எண்ணினாலும் இன்று நீங்கள் எண்ணீய எண்ணம் ஒரு விதைதான் அந்த விதை முளைத்து ஆலமரமாக வளர்வது போல உங்கள் எண்ணமும் முளைத்து முதலில் உங்களை அந்த கோடி விலையுள்ள காரை வாங்கும் தகுதி உள்ளவராக மாற்றிய பின்னரே உங்களால் அந்த காரை அடைய முடியும் நாம் எதை அடைய ஆசைப்படுகிறேம் என்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட அந்த ஆசை கனவுகளை அடைய நாம் நம்மை எவ்வளவு மாற்றிக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியமானது நம்மில் ஒரு மாற்றம் ஏற்படாமல் நாம்மால் நாம் நினைப்பதை அடைய முடியாது பூட்டை பூட்டியவர் மீண்டும் பிறந்திருக்கலாம் திறக்கும் வழியும் தெரிந்திருக்கலாம் ஆனால் அவர் அந்த பூட்டை திறந்தால் சந்திக்க நேரும் பிரச்சனைகளையும் ஆபத்துக்களையும் நினைத்தே அதை செய்யாமல் விட்டு இருக்கலாம் உதாரணத்திற்கு இறைதூதர் ஜீசஸ் இன்று மீண்டும் பிறந்திருந்து வாடிக்கனுக்குள்ளே போக முயற்சி செய்தால் என்ன நடக்கும் பகவான் கிருஷ்ணர் மீண்டும் பிறந்து திருப்பதிக்கோ பண்டரிபுரத்திற்கோ சென்றால் என்ன நடக்கும் நண்பர்கள் யோசித்துப் பாருங்கள் வெற்றிவேல் யோசித்தால் நடக்கப்போவதை நினைத்து வியப்பாகத்தான் உள்ளது நண்பரே தாங்கள் எனக்கு மறு பிறப்பு பற்றிய தகவல்களை மேலும் கூறி என்னை ஒரு முடிவுக்கு வர வைத்துவிட்டீர் நண்பரே தெளிவாகிவிட்டேன் நண்பரே என்ன முடிவுக்கு வந்தீர்கள் என்ன தெளிவு பெற்றீர்கள் என்று இங்கே பகிர்ந்து கொண்டால் நானும் மற்ற நண்பர்களும் தெளிவு பெறுவோம் செய்வீர்களா அன்புடன் பாலாஜி சுந்தர் வெற்றிவேல் இதனை எழுதும் போது ஒரு தெளிவில்லாமல் தான் எழுதினேன் ஆனால் இப்போது தங்கள் பதிலைப் பார்த்தோது ஒரு முடிவுக்கு வந்துள்ளேன் அதாவது மறு பிறப்பு உண்டு என்பதே ஆனால் அது அனைவருக்கும் வாய்க்கிறதா என்றால் சந்தேகம் தான் மறு ஜென்மமானது கடந்தகால நினைவுகள் இல்லாமல் இருக்கும் என்பதே அதுதான் நல்லதும் கூட நாம் செய்யும் காரியங்களுக்கு ஏற்ப்பவே நமக்கு எதிர்காலமும் மறு பிறப்பும் ஏற்ப்படுகிறது என்பதும் தங்கள் மேலான கருத்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே தங்கள்பின்னூட்டங்கள் இன்னும் பல பதிவுகள் போடும் அளவிற்கு நீண்டுவிட்டது தங்கள் வரவு எனக்கு மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தி விட்டது மிகச் சரியாக சொன்னீர்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தெளிவு பெற்றேன் பிரிவோம் சந்திப்போம் அன்புடன் பாலாஜி சுந்தர் வெற்றிவேல் நாம் பிரிய வேண்டாம் நண்பா எப்போதுமே இணைந்திருப்போம் அதுதான் சாலச்சிறந்தது இந்த பிறப்பு பிறந்து விட்டோம் இதனை முழுமையாக்குவோம் மற்றவர் நம் இறப்பிற்கு பின் எத்தனை நாள் நினைக்கப் போகிறார்கள் என்பது தான் இறப்பின் பின் நாம் விட்டுச் செல்லும் அடையாளம் எனவே நாம் செய்ய நினைத்த உதவிகள் சொல்ல மறந்த நன்றிகள் கேட்க எண்ணிய மன்னிப்புகள் சொல்ல நினைத்த அன்பான வார்த்தைகள் கொடுக்க மனமில்லா மன்னிப்புகள் நினைத்தவுடன் உடனே செய்து விட வேண்டும் ஏனெனில் அதற்கான சந்தர்ப்பம் நமக்கு கிடைக்காமலே கூட போய் விடலாம் நம் சின்ன புன்சிரிப்பு அன்பான அணுகுமுறை கனிவான வார்த்தை பிரச்சனைக்கு செவி மடுத்தல் உண்மையான வாழ்த்து சின்ன கரிசனம் ஆகியவை ஒரு வாழ்வையே மாற்றும் என்பது பல நேரங்களில் நமக்கு புரிவதில்லை ஒரு ஆங்கில மேற்கோளின் தமிழாக்கம் இது என் பகிர்வில் வாழ்வின் தேடல் மரணத்திற்குப் பின் எனும் பதிவில் எழுதியுள்ளேன் முடிந்தால் பதிவைப் படியுங்கள் வெற்றிவேல் தாங்கள் மிகவும் அருமையாக கூறியுள்ளீர்கள் தோழி மேற்கோளும் அபாரம் இன்றே நாம் செய்ய நினைத்ததை செய்து விடுவோம் கண்டிப்பாக தங்கள் பதிப்பை நான் படிக்கிறேன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி தொடர்ந்து வருகை தந்து எமை சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் வெற்றிவேல் தாங்கள் தளத்தில் என்னால் மரணத்திற்கும் பின் என்ற பதிவைக் காண வில்லை தோழி இணைப்பைக் கொடுத்தீர்கள் என்றால் மகிழ்வேன்
பதிவின் சுருக்கம் கடோத்கசனுக்கும் அலம்புசனுக்கும் இடையில் ஏற்பட்ட போர் மாயைகளைப் பயன்படுத்திப் போரிட்ட ராட்சசர்கள் அந்த ராட்சசர்களுக்கிடையில் நடைபெற்ற போரில் தலையிட்ட பாண்டவ வீரர்கள் தன் தேரில் இருந்து அலம்புசனின் தேருக்குப் பறந்து சென்ற கடோத்கசன் அலம்புசன் கொல்லப்பட்டது சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்னான் பீமனிடம் இருந்து தப்பி ஓடிய அலம்புசன் களத்தின் மற்றொரு பகுதியில் போரில் அச்சமற்று உலவினான் இப்படி அவன் அலம்புசன் போரில் அச்சமற்று உலவி கொண்டிருந்த போது ஹிடிம்பையின் மகன் கடோத்கசன் அவனை நோக்கி மூர்க்கமாக விரைந்து கூரிய கணைகளால் அவனைத் துளைத்தான் ராட்சசர்களில் சிங்கங்களான அவ்விருவருக்கிடையில் நடைபெற்ற போரானது மிகப் பயங்கரமாக மாறியது பழங்காலத்தின் சக்ரனையும் இந்திரனையும் சம்பரனையும் போல அவ்விருவரும் மாயைகளை இருப்புக்கு அழைத்தனர் சினத்தால் தூண்டப்பட்ட அலம்புசன் கடோத்கசனைத் தாக்கினான் உண்மையில் ஓ தலைவா திருதராஷ்டிரரே பழங்காலத்தில் ராமனுக்கும் ராவணனுக்கும் இடையில் நடைபெற்றதற்கு ஒப்பாக ராட்சசர்களில் முதன்மையான அவ்விருவருக்கும் இடையிலான மோதல் இருந்தது கடோத்கசன் இருபது நாராசங்களால் அலம்புசனின் மார்பைத் துளைத்து மீண்டும் மீண்டும் ஒரு சிங்கத்தைப் போல முழங்கினான் ஓ மன்னா சிரித்துக் கொண்டே அலம்புசனும் வெல்லப்படாத ஹிடிம்பையின் மகனை கடோத்கசனை மீண்டும் மீண்டும் துளைத்து மொத்த ஆகாயத்தையும் நிறைக்கும்படி மகிழ்ச்சியால் உரத்த முழக்கங்களை இட்டான் பிறகு பெரும் வலிமை கொண்டவர்களும் ராட்சசர்களில் முதன்மையானவர்களுமான அவ்விருவரும் சினத்தால் நிறைந்தனர் தங்கள் மாய சக்திகளை வெளிப்படுத்தியபடி தங்களுக்குள் போரிட்டுக்கொண்ட அவர்களில் ஒருவராலும் தங்களில் மற்றவன் மேல் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை அவர்கள் ஒவ்வொருவரும் நூறு மாயைகளை உண்டாக்கி மற்றவனை மலைக்கச் செய்தனர் மாயைகளை உண்டாக்குவதில் சாதித்தவர்களான அவ்விருவரில் ஓ மன்னா கடோத்கசன் வெளிப்படுத்திய மாயைகள் அனைத்தும் அப்போரில் அது போன்றே மாயைகளை உண்டாக்கிய அலம்புசனால் அழிக்கப்பட்டன மாயைகளை உண்டாக்குவதில் சாதித்தவனான ராட்சச இளவரசன் அலம்புசன் அப்படிப் போரிடுவதைக் கண்ட பாண்டவர்கள் கவலையால் நிறைந்து அவனைச் சுற்றி தேர்வீரர்களில் முதன்மையானோர் பலரை நிற்கச் செய்தனர் ஓ ஏகாதிபதி திருதராஷ்டிரரே பீமசேனனும் பிறர் அனைவரும் அவனை அலம்புசனை எதிர்த்துக் சினத்துடன் விரைந்தனர் ஓ ஐயா எண்ணற்ற தேர்களால் அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் சுற்றி வளைத்த அவர்கள் காட்டில் மனிதர்கள் கொள்ளிக்கட்டைகளுடன் ஒரு யானையைச் சூழ்ந்து கொள்வதைப் போல அனைத்துப் பக்கங்களிலும் கணைகளால் அவனை அடைத்தனர் அவனோ அலம்புசனோ தன் ஆயுதங்களின் மாயையால் அந்தக் கணை மழையைக் கலங்கடித்து காட்டுத்தீயில் இருந்து விடுபட்ட யானையைப் போல அந்தத் தேர்களின் நெருக்கத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டான் அப்போது இந்திரனின் வஜ்ரத்துக்கு ஒப்பான நாணொலியைக் கொண்ட தன் பயங்கர வில்லை வளைத்த அவன் அலம்புசன் வாயுத் தேவனின் மகனை பீமனை இருபத்தைந்து கணைகளாலும் பீமனின் மகனை கடோத்கசனை ஐந்தாலும் யுதிஷ்டிரனை மூன்றாலும் சகாதேவனை ஏழாலும் நகுலனை எழுபத்துமூன்றாலும் திரௌபதி மகன்கள் ஐவரில் ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளாலும் துளைத்து உரத்த முழக்கம் செய்தான் பிறகு பீமசேனன் ஒன்பது கணைகளாலும் சகாதேவன் ஐந்தாலும் பதிலுக்கு அவனைத் துளைத்தனர் யுதிஷ்டிரன் அந்த ராட்சசனை அலம்புசனை ஒரு நூறு கணைகளால் துளைத்தான் நகுலன் அவனை மூன்று கணைகளால் துளைத்தான் ஹிடிம்பையின் மகன் கடோத்கசன் ஐநூறு கணைகளால் அவனை அலம்புசனைத் துளைத்தான் அந்த வலிமைமிக்க வீரன் கடோத்கசன் எழுபது கணைகளால் மீண்டும் ஒரு முறை அலம்புசனைத் துளைத்து உரக்க முழங்கினான் ஓ மன்னா கடோத்கசனின் அந்த உரத்த முழக்கத்தால் மலைகள் காடுகள் மரங்கள் மற்றும் நீர்நிலைகளுடன் கூடிய பூமாதேவி நடுங்கினாள் பெரும் வில்லாளிகளும் வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அவர்களால் அனைத்துப் பக்கங்களிலும் ஆழத் துளைக்கப்பட்ட அலம்புசன் பதிலுக்கு அவர்கள் ஒவ்வொருவரையும் ஐந்து கணைகளால் துளைத்தான் அப்போது ஓ பாரதர்களில் தலைவரே திருதராஷ்டிரரே ராட்சசனான அந்த ஹிடிம்பையின் மகன் கடோத்கசன் அந்தப் போரில் கோபக்கார ராட்சசனான மற்றொருவனை அலம்புசனை பல கணைகளால் துளைத்தான் ஆழத் துளைக்கப்பட்டவனும் ராட்சசர்களில் வலிமைமிக்க இளவரசனுமான அந்த அலம்புசன் தங்கச் சிறகுகள் கொண்டவையும் கல்லில் கூராக்கப்பட்டவையுமான கணக்கிலடங்காக் கணைகளை விரைவாக ஏவினான் முற்றிலும் நேராக இருந்த அந்தக் கணைகள் அனைத்தும் மலைச்சிகரத்திற்குள் நுழையும் பெரும்பலங்கொண்ட கோபக்காரப் பாம்புகளைப் போலக் கடோத்கசனின் உடலுக்குள் நுழைந்தன அப்போது துயரத்தால் நிறைந்த பாண்டவர்களும் ஹிடிம்பையின் மகனான கடோத்கசனும் ஓ மன்னா தங்கள் எதிரியின் மீது அனைத்துப் பக்கங்களில் இருந்து கூரிய கணை மேகங்களை ஏவினர் வெற்றியை விரும்பிய பாண்டவர்களால் அந்தப் போரில் இப்படித் தாக்கப்பட்ட அலம்புசன் அழிவுடையவனே ஆகையால் அவனுக்கு அலம்புசனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை அப்போது போரில் மகிழ்பவனான வலிமைமிக்கப் பீமசேனன் மகன் கடோத்கசன் அலம்புசனின் அந்நிலையைக் கண்டு அவனுடைய அழிவில் தன் இதயத்தை நிறுத்தினான் அவன் கடோத்கசன் எரிந்த மலைச்சிகரத்திற்கோ சிதறிப்போன கறுத்த மைக்குவியலுக்கோ ஒப்பாக இருந்த அந்த ராட்சச இளவரசனுடைய அலம்புசனுடைய தேரை நோக்கி மிக மூர்க்கமாக விரைந்தான் கோபத்தால் தூண்டப்பட்ட ஹிடிம்பையின் மகன் கடோத்கசன் தன் தேரில் இருந்து அலம்புசனின் தேருக்குப் பறந்து சென்று பின்னவனை அலம்புசனைப் பிடித்தான் பிறகு அவன் கடோத்சகசன் கருடன் பாம்பொன்றைத் தூக்குவது போல அவனை அலம்புசனைத் தேரில் இருந்து தூக்கினான் இப்படித் தன் கரங்களால் அவனை அலம்புசனை இழுத்த அவன் கடோத்கசன் மீண்டும் மீண்டும் சுழற்றத் தொடங்கி ஒரு மனிதன் பானையொன்றைப் பாறை மீது வீசித் துண்டுகளாக நொறுக்குவதைப் போல அவனைப் பூமியில் வீசிச் சிதறச் செய்தான் பலம் சுறுசுறுப்பு பெரும் ஆற்றல் ஆகியவற்றைக் கொண்ட அந்தப் பீமசேனன் மகன் கடோத்கசன் போரில் கோபத்தால் தூண்டப்பட்டுத் துருப்புகள் அனைத்தின் அச்சத்தையும் தூண்டினான் இவ்வாறு அச்சந்தரும் ராட்சசனான அலம்புசன் அங்கங்கள் அனைத்தும் உடைக்கப்பட்டு எலும்புகள் துண்டு துண்டாகப் போகும்படி வீரக் கடோத்கசனால் கொல்லப்பட்டது நெடிய சால மரம் ஒன்று காற்றால் வேரோடு சாய்க்கப்பட்டதற்கு ஒப்பாக இருந்தது அந்த இரவு உலாவியின் அலம்புசனின் படுகொலையால் பார்த்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர் அவர்கள் சிங்க முழக்கங்களைச் செய்தபடி தங்கள் ஆடைகளை அசைத்தனர் எனினும் ஓ ஏகாதிபதி ராட்சசர்களில் வலிமைமிக்க இளவரசனான அலம்புசன் கொல்லப்பட்டு நொறுங்கிய மலை போலக் கிடப்பதைக் கண்ட துணிச்சல்மிக்க உமது வீரர்கள் ஓ என்றும் ஐயோ என்றும் கதறினர் ஆவல் கொண்ட மனிதர்கள் மேலும் எரிய முடியாத கரித்துண்டைப் போல பூமியில் ஆதரவற்றுக் கிடக்கும் அந்த ராட்சசனைக் காணச் சென்றனர் அப்போது வலிமைமிக்க உயிரினங்களில் முதன்மையானவனும் ராட்சசனுமான கடோத்கசன் இப்படித் தன் எதிரியைக் கொன்றதும் அசுரன் வலனைக் கொன்ற வாசவனை இந்திரனைப் போல உரக்க முழங்கினான் மிகக் கடினமான சாதனையைச் செய்த கடோத்கசன் தன் தந்தைமாராலும் தன் உறவினர்களாலும் மிகவும் புகழப்பட்டான் உண்மையில் அலம்புசக் கனியொன்றைப் போல அந்த அலம்புசனை வீழ்த்திய அவன் கடோத்கசன் தன் நண்பர்களோடு சேர்ந்து மிகவும் மகிச்சியடைந்தான் அங்கே பாண்டவப் படையில் பல்வேறு வகைகளிலான கணைகளின் ஒலிகளாலும் சங்கொலிகளாலும் பெரும் ஆரவாரம் எழுந்தது அவ்வொலியைக் கேட்ட கௌரவர்களும் பதிலுக்கு உரத்த முழக்கங்களைச் செய்து அதன் எதிரொலிகளால் முழுப் பூமியையும் நிறைத்தனர் என்றான் சஞ்சயன் இந்தப் பகுதியைப் பொறுத்தவரை கங்குலியின் பதிப்பும் மன்மதநாததத்தரின் பதிப்பும் வரிகளாலும் வர்ணனைகளாலும் ஒத்துப் போகின்றன வேறொரு பதிப்பில் முற்றிலும் வேறு வகையில் அதிக விவரங்களைக் கொண்ட வர்ணனைகளும் அதிக வரிகளும் இருக்கின்றன ஆங்கிலத்தில் அலம்புசன் கடோத்கசன் துரோண பர்வம் ஜயத்ரதவத பர்வம் மஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள் அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் அரவான் இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன் நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித் பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன் பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர் தேடுக முழுமஹாபாரதம் அச்சு நூல் தொகுப்பு விலைக்கு வாங்க படத்தைச் சொடுக்கவும் நள தமயந்தி கிண்டில் மின்நூல் விலைக்கு வாங்க படத்தைச் சொடுக்கவும் வழிபாட்டுத் துதிகள் ஆதி பர்வம் அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி உதங்கர் நாகத் துதி உதங்கர் இந்திரத் துதி அக்னியைத் துதித்த பிரம்மன் கருடனைத் துதித்த தேவர்கள் இந்திரனைத் துதித்த கத்ரு துரோண பர்வம் சிவனைத் துதித்த கிருஷ்ணனும் அர்ஜுனனும் கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன் சிவனைத் துதித்த நாராயணன் சிவனைத் துதித்த பிரம்மன் கர்ண பர்வம் சிவனைத் துதித்த தேவர்கள் சிவனைத் துதித்த பிரம்மன் முன்னுரை என்னுரை கங்குலியின் முன்னுரை தமிழாக்கம் பிரதாப் சந்திர ராய் சாந்திபர்வ அறிக்கை தமிழாக்கம் பிரதாப் சந்திர ராய் அநுசாஸனபர்வ அறிக்கை தமிழாக்கம் சுந்தரி பாலா ராய் அஸ்வமேதபர்வ அறிக்கை தமிழாக்கம் ஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை சிவஸஹஸ்ரநாமம் விஷ்ணுஸஹஸ்ரநாமம் கிண்டில் மின்நூல்கள் வரைபடங்கள் குல மற்றும் நில வரைபடங்கள் மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம் மகாபாரத வரைபடங்கள் இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி அருஞ்சொற்பொருள் மஹாபாரதம் கால அட்டவணை மஹாபாரதச் சிறுகதைகள் பெயர்க்காரணங்கள் பெயர்கள் வியாசர் அர்ஜுனன் சகுந்தலை பீஷ்மர் பாண்டு கடோத்கஜன் பரதன் திரௌபதி திலோத்தமை குந்தி சியவணன் உபபர்வங்கள் முழுமஹாபாரத உபபர்வங்கள் படங்களின் மூலம் படங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும் காப்புரிமை செ அருட்செல்வப்பேரரசன் இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை வேறு எவ்வகையிலோ விதத்திலோ இணையத்திலும் பிற ஊடகங்களிலும் பகிரவும் வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்
பதிவின் சுருக்கம் சாத்யகியிடம் சோமதத்தனின் பேச்சு சாத்யகியின் ஆண்மைநிறைந்த மறுமொழி சோமதத்தனுக்கும் சாத்யகிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் மயங்கி விழுந்த சோமதத்தனைச் சுமந்து சென்ற அவனது தேரோட்டி சாத்யகியைக் கொல்ல விரைந்த துரோணர் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்னான் பிராயத்தில் அமர்ந்திருந்த பிராயோபவேசம் செய்த தன் மகன் பூரிஸ்ரவஸ் சாத்யகியால் கொல்லப்பட்ட பிறகு சினத்தால் நிறைந்த சோமதத்தன் சாத்யகியிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான் ஓ சாத்வதா சாத்யகி உயர் ஆன்ம தேவர்களால் விதிக்கப்பட்ட க்ஷத்திரியக் கடமைகளைக் கைவிட்டுக் கள்வர்களின் நடைமுறையை ஏன் நீ கைக்கொண்டாய் க்ஷத்திரியக் கடமைகளை நோற்பவனும் விவேகியுமான ஒருவன் போரில் இருந்து திரும்புபவனையோ பின்வாங்குபவனையோ ஆதரவற்றவனையோ தன் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டவனையோ இடத்தை வேண்டுபவனையோ போரில் தாக்குவானா உண்மையில் ஓ சாத்யகி விருஷ்ணிகளில் வலிமையும் சக்தியும் கொண்ட பிரத்யும்னனும் நீயும் பெரும் தேர்வீரர்களில் முதன்மையானவர்கள் என்று புகழ்பெற்றவர்கள் அப்படியிருக்கையில் பிராயத்தில் அமர்ந்தவனும் பார்த்தனால் அர்ஜுனனால் தன் கரம் வெட்டப்பட்டவனுமான ஒருவனிடம் பாவம் நிறுந்த கொடூரமாக ஏன் நீ நடந்து கொண்டாய் ஓ தீய நடத்தை கொண்டவனே உனது அந்தச் செயலின் விளைவை இப்போது போரில் பெறுவாயாக ஓ இழிந்தவனே சாத்யகி என் ஆற்றலை வெளிப்படுத்தும் நான் சிறகு படைத்த கணையொன்றால் உன் தலையை இன்று வெட்டப் போகிறேன் ஓ சாத்வதா சாத்யகி என்னிரு மகன்கள் மீதும் எனக்குப் பிடித்த எதன் மீதும் என் புண்ணியச் செயல்கள் அனைத்தின் மீதும் ஆணையாகச் சொல்கிறேன் ஓ விருஷ்ணி குலத்தில் இழிந்தவனே சாத்யகி இன்றிரவு கடப்பதற்குள் பிருதையின் குந்தியின் மகனான ஜிஷ்ணு அர்ஜுனன் உன்னைக் காக்கவில்லையெனில் வீரத்தில் செருக்குக் கொண்ட உன்னை உன் மகன்கள் தம்பி ஆகியோரோடு சேர்த்துக் கொல்லாதிருந்தால் நான் பயங்கர நரகத்திற்குள் மூழ்குவேனாக என்றான் சோமதத்தன் இவ்வார்த்தைகளைச் சொன்னவனும் வலிமைமிக்கவனுமான சோமதத்தன் சினத்தால் நிறைந்து தன் சங்கை உரக்க முழங்கி சிங்க முழக்கம் செய்தான் அப்போது தாமரை இதழ்களைப் போன்ற கண்களையும் சிங்கம் போன்ற பற்களையும் பெரும் பலத்தையும் கொண்ட சாத்யகி சினத்தால் நிறைந்து சோமதத்தனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான் ஓ குரு குலத்தவரே சோமதத்தரே உம்மோடு போரிட்டாலும் பிறரோடு போரிட்டாலும் என் இதயத்தில் கிஞ்சிற்றும் நான் அச்சத்தை உணர்வதில்லை ஓ குரு குலத்தவரே சோமதத்தரே துருப்புகள் அனைத்தாலும் பாதுகாக்கப்பட்டு நீர் என்னோடு போரிட்டாலும் உம்மால் எந்த வலியையும் நான் அடையமாட்டேன் நான் எப்போதும் க்ஷத்திரிய நடைமுறைகளேயே பயில்பவனாவேன் எனவே போர்மணம் கொண்ட வார்த்தைகள் அல்லது நல்லோரை அவமதிக்கும் பேச்சுகள் ஆகியவற்றால் மட்டுமே உம்மால் என்னை அச்சுறுத்த முடியாது நீர் இன்று என்னோடு போரிட விரும்பினால் ஓ மன்னா சோமதத்தரே கூரிய கணைகளால் கொடூரமாக என்னைத் தாக்குவீராக நானும் உம்மைத் தாக்குவேன் ஓ மன்னா சோமதத்தரே உமது மகனும் வலிமைமிக்கத் தேர்வீரனுமான பூரிஸ்ரவஸ் கொல்லப்பட்டான் சலனும் விருஷசேனனும் என்னால் நசுக்கப்பட்டனர் உமது மகன்களுடனும் சொந்தங்களுடனும் கூடிய உம்மையும்கூட இன்று நான் கொல்வேன் ஓ கௌரவரே சோமதத்தரே பெரும் பலங்கொண்டவர் நீரென்பதால் போரில் உறுதியோடு இருப்பீராக வேறொரு பதிப்பில் வீரனும் மகாரதனுமான உனது புத்திரனான பூரிஸ்ரவஸ் கொல்லப்பட்டான் பிராதாவினுடைய பிரிவின் துக்கத்தால் பீடிக்கப்பட்ட சலனும் கொல்லப்பட்டான் என்று இருக்கிறது விருஷசேனன் பற்றிய குறிப்பேதும் இல்லை மன்மதநாததத்தரின் பதிப்பில் வீரர்களான சலனும் விருஷசேனனும் கொல்லப்பட்டனர் என்று இருக்கிறது கொடை புலனடக்கம் இதயத் தூய்மை கருணை பணிவு நுண்ணறிவு மன்னிக்கும் தன்மை பொறுமை ஆகியவற்றையும் அழிவில்லாத அனைத்தையும் கொண்டவரும் முரசை முரசு கொடியில் கொண்டவருமான மன்னர் யுதிஷ்டிரரின் சக்தியால் நீர் ஏற்கனவே கொல்லப்பட்டவரே நீர் கர்ணனோடும் சுபலனின் மகனோடும் சகுனியோடும் சேர்ந்து அழிவையே அடைவீர் கிருஷ்ணனின் பாதங்களின் மீதும் என் நற்செயல்கள் அனைத்தின் மீதும் ஆணையிட்டுச் சொல்கிறேன் சினத்தால் நிறையும் நான் உம்மையும் உமது மகன்களையும் என் கணைகளால் போரில் கொல்வேன் போரைவிட்டு ஓடிவிட்டால் மட்டுமே நீர் பாதுகாப்பாக இருக்கலாம் என்றான் சாத்யகி கோபத்தால் சிவந்த கண்களுடன் ஒருவரோடொருவர் இப்படிப் பேசிக் கொண்டவர்களான அந்த மனிதர்களில் முதன்மையானோர் சோமதத்தனும் சாத்யகியும் தங்கள் கணைகளை ஒருவரின் மீதொருவர் ஏவத் தொடங்கினர் அப்போது துரியோதனன் ஆயிரம் தேர்களுடனும் பத்தாயிரம் குதிரைகளுடனும் வந்து சோமதத்தனைச் சூழ்ந்து நின்றான் சினத்தால் நிறைந்த சகுனியும் அனைத்து ஆயுதங்களையும் தரித்துக் கொண்டு இந்திரனுக்கு நிகரான ஆற்றலைக் கொண்ட தன் மகன்கள் பேரர்கள் மற்றும் தன் சகோதரர்கள் சூழ அதையே செய்தான் சோமதத்தனைச் சூழ்ந்து நின்றான் வயதால் இளமையுடையவனும் வஜ்ரத்தைப் போன்ற உடலைக் கொண்டவனும் ஞானம் கொண்டவனுமான உமது மைத்துனன் சகுனி முதன்மையான தீரம் கொண்ட நூறாயிரம் ஒரு லட்சம் குதிரைகளைத் தன்னிடம் கொண்டிருந்தான் அவற்றுடனேயே அவன் சகுனி வலிமைமிக்க வில்லாளியான சோமதத்தனைச் சூழ்ந்து நின்றான் அந்த வலிமைமிக்கப் போர்வீரர்களால் பாதுகாக்கப்பட்ட சோமதத்தன் கணை மேகங்களால் சாத்யகியை மறைத்தான் நேரான கணைகளின் மேகங்களால் இப்படி மறைக்கப்பட்ட சாத்யகியைக் கண்ட திருஷ்டத்யும்னன் ஒரு பெரும் படையின் துணையுடனும் சினத்துடனும் அவனை சாத்யகியை நோக்கிச் சென்றான் அப்போது ஓ மன்னா திருதராஷ்டிரரே ஒன்றையொன்று தாக்கிக் கொண்ட அந்தப் பெரும் படைகள் இரண்டிலும் எழுந்த பேரோலியானது பயங்கரச் சூறாவளியால் சீற்றத்துடன் தாக்கப்பட்டும் பெருங்கடல்களுக்கு ஒப்பாக இருந்தது அப்போது சோமதத்தன் ஒன்பது கணைகளால் சாத்யகியைத் துளைத்தான் பதிலுக்குச் சாத்யகி ஒன்பது கணைகளாலேயே குரு போர்வீரர்களில் முதன்மையான அவனை சோமதத்தனைத் துளைத்தான் வலிமைமிக்கவனும் உறுதிமிக்கவனுமான அந்த வில்லாளியால் சாத்யகியால் ஆழத் துளைக்கப்பட்ட சோமதத்தன் மயக்கத்தால் உணர்வுகளை இழந்து தன் தேர்த்தட்டில் அமர்ந்தான் அவன் சோமதத்தன் உணர்வுகளை இழந்ததைக் கண்ட அவனது சாரதி பெரும் தேர்வீரனான அந்தச் சோமதத்தனைப் போரில் இருந்து வெளியே பெரும் வேகத்துடன் சுமந்து சென்றான் யுயுதானனின் சாத்யகியின் கணைகளால் பீடிக்கப்பட்ட சோமதத்தன் தனது உணர்வுகளை இழந்ததைக் கண்ட துரோணர் அந்த யது வீரனை சாத்யகியைக் கொல்லும் விருப்பத்தால் பெரும் வேகத்துடன் விரைந்து சென்றார் ஆசான் துரோணர் முன்னேறுவதைக் கண்டவர்களும் யுதிஷ்டிரனின் தலைமையில் இருந்தவர்களுமான பாண்டவ வீரர்கள் பலர் யது குலத்தைத் தழைக்க வைப்பவனான அந்தச் சிறப்புமிக்கவனை சாத்யகியைக் காக்கும் விருப்பத்தால் அவனைச் சூழ்ந்து கொண்டனர் என்றான் சஞ்சயன் துரோண பர்வம் பகுதி அ ல் வரும் மொத்த சுலோகங்கள் ஆங்கிலத்தில் கடோத்கசவத பர்வம் சாத்யகி சோமதத்தன் துரோண பர்வம் துரோணர் மஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள் அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் அரவான் இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன் நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித் பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன் பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர் தேடுக முழுமஹாபாரதம் அச்சு நூல் தொகுப்பு விலைக்கு வாங்க படத்தைச் சொடுக்கவும் நள தமயந்தி கிண்டில் மின்நூல் விலைக்கு வாங்க படத்தைச் சொடுக்கவும் வழிபாட்டுத் துதிகள் ஆதி பர்வம் அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி உதங்கர் நாகத் துதி உதங்கர் இந்திரத் துதி அக்னியைத் துதித்த பிரம்மன் கருடனைத் துதித்த தேவர்கள் இந்திரனைத் துதித்த கத்ரு துரோண பர்வம் சிவனைத் துதித்த கிருஷ்ணனும் அர்ஜுனனும் கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன் சிவனைத் துதித்த நாராயணன் சிவனைத் துதித்த பிரம்மன் கர்ண பர்வம் சிவனைத் துதித்த தேவர்கள் சிவனைத் துதித்த பிரம்மன் முன்னுரை என்னுரை கங்குலியின் முன்னுரை தமிழாக்கம் பிரதாப் சந்திர ராய் சாந்திபர்வ அறிக்கை தமிழாக்கம் பிரதாப் சந்திர ராய் அநுசாஸனபர்வ அறிக்கை தமிழாக்கம் சுந்தரி பாலா ராய் அஸ்வமேதபர்வ அறிக்கை தமிழாக்கம் ஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை சிவஸஹஸ்ரநாமம் விஷ்ணுஸஹஸ்ரநாமம் கிண்டில் மின்நூல்கள் வரைபடங்கள் குல மற்றும் நில வரைபடங்கள் மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம் மகாபாரத வரைபடங்கள் இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி அருஞ்சொற்பொருள் மஹாபாரதம் கால அட்டவணை மஹாபாரதச் சிறுகதைகள் பெயர்க்காரணங்கள் பெயர்கள் வியாசர் அர்ஜுனன் சகுந்தலை பீஷ்மர் பாண்டு கடோத்கஜன் பரதன் திரௌபதி திலோத்தமை குந்தி சியவணன் உபபர்வங்கள் முழுமஹாபாரத உபபர்வங்கள் படங்களின் மூலம் படங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும் காப்புரிமை செ அருட்செல்வப்பேரரசன் இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை வேறு எவ்வகையிலோ விதத்திலோ இணையத்திலும் பிற ஊடகங்களிலும் பகிரவும் வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்
நாடு முழுவதும் செப்டம்பர் ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் சுமார் ஆயிரம் மாணவர்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாக இந்தத் தேர்வை எழுத உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன இந்த ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கையை தேசிய தேர்வு முகமை தள்ளுபடி செய்துவிட்டது இதுகுறித்த வழக்கிலும் நீட் தேர்வை நடத்தலாம் என்று நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது இதனையடுத்து செப்டம்பர் ஆம் தேதி நீட் தேர்வும் செப்டம்பர் முதல் ஆறாம் தேதி வரை ஜே ஈ ஈமெயின் தேர்வும் நடைபெற உள்ளது இந்த தேர்வை தமிழகத்தில் இருந்து சுமார் ஒரு லட்சத்து ஆயிரம் பேர் மட்டுமே எழுத உள்ளனர் கடந்த ஆண்டு நீட் தேர்வை ஒரு லட்சத்து ஆயிரம் பேர் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல் இந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த ஆயிரம் பேர் மட்டுமே ஜே ஈ ஈ தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது நீட் மட்டும் ஜே ஈ ஈ தேர்வுக்காக நாடு முழுவதும் சுமார் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
தனியுரிமை கொள்கை விதிமுறைகள் நிபந்தனைகள் தனியுரிமைக் கொள்கை எங்களைப் பற்றி எங்களை தொடர்பு கொள்ள
ஹைட்ராலிக் சிஸ்டம் தரமற்ற ஹைட்ராலிக் உபகரணங்கள் செயல்பாட்டு முன்னெச்சரிக்கைகள் மற்றும் பராமரிப்பு விஷயங்கள் தற்காப்பு நடவடிக்கைகள் மென்மையாகவும் மென்மையாகவும் இருக்க இயந்திர வேலை இயந்திர செயல்பாடு கடினமானதைத் தவிர்க்க வேண்டும் இல்லையெனில் அது தவிர்க்க முடியாமல் அதிர்ச்சி சுமையை உருவாக்கும் இதனால் இயந்திர தோல்வி அடிக்கடி சேவை வாழ்க்கையை வெகுவாகக் குறைக்கும் ஒருபுறம் உருவாகும் தாக்க சுமை ஒருபுறம் ஆரம்ப உடைகள் எலும்பு முறிவு உடைந்தவை ஒருபுறம் ஹைட்ராலிக் அமைப்பு தாக்க அழுத்தத்தை உருவாக்குவதற்கான இயந்திர அமைப்பு அழுத்தத்தின் தாக்கம் ஹைட்ராலிக் கூறுகள் எண்ணெய் முத்திரை மற்றும் உயர் அழுத்த குழாய் மூட்டுகள் மற்றும் குழாய் எண்ணெய் கசிவு அல்லது வெடிக்கும் குழாயின் முன்கூட்டிய தோல்வி வழிதல் வால்வு அடிக்கடி நடவடிக்கை எண்ணெய் வெப்பநிலை உயர்வு நான் ஒரு புதிய அலகு வாங்கிய திணி அகழ்வாராய்ச்சி வைத்திருக்கிறேன் ஒவ்வொரு முதல் நாட்களுக்கு ஒருமுறை இயங்குகிறது டூமென் குழாய் கசிந்து அல்லது வெடிக்கும் குழாய் உண்மையான பொருட்களின் சீரற்ற இறக்குமதி சோதனையின் தரம் ஒரு சிக்கல் அல்ல தள கண்காணிப்பின் மூலம் வாளி கதவு திறந்திருப்பதைக் காணலாம் தொகுதியின் வலுவான தாக்கம் பெட்டியால் ஏற்படும் கதவு மூடப்பட்டபோது மூடப்பட்டது சுமைகளின் தாக்கத்தை தவிர்க்க இயக்க நடைமுறைகளை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டிய அவசியம் ஹைட்ராலிக் வால்வு திறப்பு மற்றும் மூடல் மிக வேகமாக இருக்க முடியாது வேலை சாதன கூறுகளை ஒரு வலுவான தாக்கத்தின் தீவிர நிலைக்குத் தவிர்க்க எந்த தாக்கமும் ஹைட்ராலிக் உபகரணங்கள் வேலை சாதனத்தைப் பயன்படுத்த முடியாது அகழ்வாராய்ச்சி வாளி நசுக்குவதன் நோக்கத்தை அடைய பொருளை வன்முறையில் பாதிக்கிறது ஒரு குறிப்பிடத்தக்க கேள்வியும் உள்ளது ஆபரேட்டர் சீராக இருக்க விரும்புகிறார் ஒவ்வொரு உபகரண இயக்க முறைமையின் இலவச அனுமதியிலும் உள்ள வேறுபாடு காரணமாக இணைக்கும் பகுதிகளின் உடைகளின் அளவு வேறுபட்டது மற்றும் இடைவெளி வேறுபட்டது இயந்திரத்தின் அளவு மற்றும் ஹைட்ராலிக் அமைப்பு வேறுபட்டது இந்த காரணிகள் சாதனங்களின் ஆளுமையை தருகின்றன சாதனத்திற்கு ஏற்ப நல்ல தனிப்பட்ட பழக்கங்களை வளர்த்துக் கொள்வதற்காக ஒரு நீண்ட செயல்பாட்டிற்குப் பிறகு சாதனத்தின் ஆளுமைக்கு ஏற்றவாறு கவனமாக ஆராயவும் அவற்றின் கையாளுதலை மாற்றவும் மட்டுமே சாதன ஆபரேட்டரைப் பயன்படுத்தவும் பொது இயந்திரத் தொழில் நிலையான இயந்திர அமைப்பை வலியுறுத்தியது இது ஒரு காரணியாகும் ஹைட்ராலிக் அமைப்பு குழிவுறுதல் மற்றும் வழிதல் சத்தம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் ஹைட்ராலிக் பம்ப் மற்றும் நிவாரண வால்வின் குரலில் செயல்பாடு எப்போதும் கவனம் செலுத்த வேண்டும் பம்ப் குழிவுறுதல் சத்தம் தோன்றினால் வெளியேற்றத்தை அகற்ற முடியாது பயன்பாட்டிற்கு முன் சரிசெய்தலுக்கான காரணங்களை அடையாளம் காண வேண்டும் ஒரு ஆக்சுவேட்டர் சுமை இல்லாமல் இயங்க மெதுவாக இருந்தால் மற்றும் ஓவர்ஃப்ளோ வால்வு வழிதல் உடன் இருந்தால் அது உடனடியாக மூடப்பட வேண்டும் ஷிப்ட் முறையை கண்டிப்பாக செயல்படுத்துதல் இயக்கி இயந்திரத்தைத் தள்ளும்போது ஓட்டுநரின் பாதுகாப்பைச் சரிபார்த்து சரியான எண்ணெய் அளவைச் சரிபார்க்க வேண்டும் கணினி கசிந்தது இணைப்பு தளர்வானது பிஸ்டன் தடி மற்றும் ஹைட்ராலிக் குழாய் நொறுக்கப்பட்டன ஹைட்ராலிக் பம்ப் குறைந்த அழுத்த எண்ணெய் குழாய் இணைப்பு நம்பகமானது எரிபொருள் தொட்டி எண்ணெய் நிலை சரியானது மற்றும் பல ஹைட்ராலிக் அமைப்பு ஆய்வின் வாரிசு முன்னுரிமைகள் வளிமண்டல எரிபொருள் தொட்டி எரிபொருள் தொட்டி வென்ட்டையும் சரிபார்த்து சுத்தம் செய்கிறது அதன் சீராக இருக்க எரிபொருள் தொட்டி வெற்றிடத்தால் ஏற்படும் அடைப்பைத் தடுக்க இதன் விளைவாக ஹைட்ராலிக் எண்ணெய் பம்ப் சேதமடைவது கடினம் பொருத்தமான எண்ணெய் வெப்பநிலையை பராமரிக்க ஹைட்ராலிக் சிஸ்டம் இயக்க வெப்பநிலை பொதுவாக க்கு இடையில் கட்டுப்படுத்தப்படுகிறது பொருத்தமானது ஆபத்தான வெப்பநிலை ஹைட்ராலிக் சிஸ்டம் எண்ணெய் வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும் எண்ணெயின் பாகுத்தன்மை குறைகிறது கசிவை ஏற்படுத்த எளிதானது செயல்திறன் குறைகிறது இயந்திர உடைகளை குறைக்க மசகு எண்ணெய் பட வலிமை உருவாக்கப்பட்ட கார்பைடு மற்றும் சில்ட் எண்ணெய் ஆக்சிஜனேற்றம் எண்ணெய் தரத்தை துரிதப்படுத்தியது எண்ணெய் முத்திரை உயர் அழுத்தம் குழாய் ஆரம்ப வயதான வெப்பநிலை மிக அதிகமாக இருப்பதைத் தவிர்ப்பதற்காக நீண்ட கால சுமை வேண்டாம் ரேடியேட்டர் வெப்ப மூழ்கி எண்ணெய் மாசுபடுவதில்லை வெப்பச் சிதறலின் தூசி ஒட்டுதல் விளைவுகளைத் தடுக்க கவனம் செலுத்துங்கள் வெப்பத்தை எளிதாக்குவதற்காக போதுமான எரிபொருள் எண்ணெய் சுழற்சியை பராமரிக்க நண்பகலில் அதிக வெப்பநிலையைத் தவிர்க்கவும் எண்ணெய் வெப்பநிலை மிகக் குறைவு எண்ணெய் பாகுத்தன்மை மோசமான இயக்கம் எதிர்ப்பு குறைந்த செயல்திறன் எண்ணெய் வெப்பநிலை க்குக் கீழே இருக்கும்போது கூர்மையான திருப்பம் ஹைட்ராலிக் மோட்டார் வால்வுகள் குழாய்கள் மற்றும் பலவற்றை எளிதில் சேதப்படுத்தும் இந்த நேரத்தில் செயல்பாட்டை சூடேற்ற வேண்டும் இயந்திரத்தைத் தொடங்க வேண்டும் சுமை இல்லாத செயலற்ற நிமிடங்கள் இயந்திர வேகத்தை மேம்படுத்துவதற்கான வேகத் தூண்டுதல் எந்தவொரு செயலின் இயக்க கைப்பிடி அகழ்வாராய்ச்சி ஜாங் டூ போன்றவை நிலை வழிதல் வெப்பநிலை மூலம் ஹைட்ராலிக் எண்ணெயை உருவாக்க நிமிடங்கள் எண்ணெய் வெப்பநிலை குறைவாக இருந்தால் நீங்கள் சூடான இயங்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் ஹைட்ராலிக் தொட்டி அழுத்தம் மற்றும் எண்ணெய் கட்டுப்பாடு எரிபொருள் தொட்டி அழுத்தத்திற்கு கவனம் செலுத்துவதற்கான வேலையில் உள்ள அழுத்தம் தொட்டி ஏற்பாடுகளின் எல்லைக்குள் சீரற்ற கையேட்டில் அழுத்தத்தை பராமரிக்க வேண்டும் அழுத்தம் மிகக் குறைவு எண்ணெய் பம்ப் எண்ணெயை சேதப்படுத்துவது எளிதானது அல்ல அழுத்தம் அதிகமாக உள்ளது ஹைட்ராலிக் சிஸ்டம் எண்ணெய் கசிவை ஏற்படுத்தும் இது குறைந்த அழுத்த எண்ணெய் குழாய் வெடிக்கும் எண்ணெயை சரிசெய்து மாற்றிய பின் கணினியில் காற்றை வெளியேற்றிய பின் சீரற்ற அறிவுறுத்தல் கையேடு படி எண்ணெய் அளவை சரிபார்க்கவும் இயந்திரத்தை தட்டையான இடத்தில் நிறுத்தவும் சுடர் நிமிடத்திற்குப் பிறகு மீண்டும் எண்ணெய் அளவை சரிபார்க்கவும் சேர்க்க ஹைட்ராலிக் அமைப்பு கவனம் தேவைப்படும் பிற விஷயங்கள் ஹைட்ராலிக் சிலிண்டர்கள் பிஸ்டன் தண்டுகள் ஹைட்ராலிக் குழாய் மற்றும் பிற கூறுகளுக்கு எதிராக கல்லில் இருந்து பறப்பதைத் தடுக்கும் நடவடிக்கை பிஸ்டன் கம்பியில் ஒரு சிறிய வெற்றி இருந்தால் பிஸ்டன் தடி முத்திரை சாதனத்திற்கு சேதம் ஏற்படாமல் தடுக்க அரைக்கும் விளிம்பில் ஒரு சிறிய துண்டு எண்ணெயைப் பயன்படுத்துவது அவசியம் எண்ணெய் அல்லாத விஷயத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் ஹைட்ராலிக் பம்ப் உலர்ந்த அரைத்தல் மற்றும் சேதத்தைத் தடுக்க தொடங்குவதற்கு முன் எண்ணெயில் உள்ள ஹைட்ராலிக் பம்பிற்கு மணி நேரத்திற்கும் மேலான சாதனங்களில் தொடர்ந்து நிறுத்தப்படுதல் பராமரிப்பு விஷயங்கள் வழக்கமான பராமரிப்பு முன்னெச்சரிக்கைகள் தற்போது பொறியியல் இயந்திரங்களின் சில ஹைட்ராலிக் அமைப்புகள் அறிவார்ந்த சாதனங்களுடன் பொருத்தப்பட்டுள்ளன அவை ஹைட்ராலிக் அமைப்பின் சில மறைக்கப்பட்ட தவறுகளுக்கு சில எச்சரிக்கை செயல்பாடுகளைக் கொண்டுள்ளன ஆனால் அவற்றின் கண்காணிப்பு நோக்கம் மற்றும் அளவிற்கு சில வரம்புகள் உள்ளன எனவே ஹைட்ராலிக் அமைப்பின் ஆய்வு மற்றும் பராமரிப்பு கண்காணிப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும் ஹைட்ராலிக் அமைப்பு பற்றி நீங்கள் மேலும் அறிய விரும்பினால் தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும் தகவல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி எங்களை தொடர்பு கொள்ள வது மாடி கிழக்கு புதிய உலக மத்திய கட்டிடம் எண் ஜாங்ஷான் சாலை ஷிஜியாஜுவாங் ஹெபே மாகாணம் சீனா ஷிஜியாஜுவாங் ஹெபே
எனக்கு மிகவும் பிடித்தது தமிழ் நாவல் சிறு கதை கட்டுரை என பல புத்தகங்களைப் படிப்பது அப்படி நான் தேடிப் படிக்கும் புத்தகங்களைப் பற்றிய சிறு குறிப்பு இந்த வலைப் பூவிற்கு வரும் நண்பர்களுக்காக தகழி சிவசங்கரன் பிள்ளை மலையாள நாவல் இலக்கியத்தில் தனக்கென ஒரு தனிப் பாதையை வகுத்துக் கொண்டு க்கும் பேற்பட்ட நாவல்கள் க்கும் மேற்பட்ட சிறுகதைகள் கட்டுரைகள் சுயசரிதம் என தனது பங்களிப்பை அளித்தவர் இவர் கேரளா சாகித்ய அகாடமி விருது ஞானபீட விருது இலக்கிய விருது என பல விருதுகளைப் பெற்றிருக்கிறார் இவருடைய நாவல்கள் ஆங்கிலம் மற்றும் பல இந்திய மொழிகளில் மொழி பெயர்கப்பட்டுள்ளது அப்படியொரு தகழியின் நாவலை தமிழில் சிவன் என்பவர் மொழிபெயர்த்துள்ளார் திநகர் வேங்கட நாராயணா சாலையிலுள்ள திருமகள் நிலையம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்கள் உறவின் எல்லை சிவன் வெளியீடு திருமகள் நிலையம் சித்தாள் வேலை செய்யும் செல்லப்பன் யூனியன் தொழிற் சங்கமென தனது வருமானத்தைச் செலவு செய்து வீட்டிற்கு பணம் கொடுக்காமலும் நண்பர்களுடன் மதுபானம் குடித்து ஊதாரியாகவும் திரிகிறான் மேலும் தனது மனைவி பவானிக்கு அவனுடைய நண்பனான கோபாலுடன் கள்ளத் தொடர்பு இருப்பதாக சந்தேகப் படுகிறான் சந்தேகத்தால் பவானியை வேலைக்குப் போகக்கூடாது என அடிக்கிறான் இந்த ஊதாரித்தனமும் சந்தேகமுமே பவானி கோபாலுடன் தவறான உறவு கொள்ளக் காரணமாகிறது யூனியன் விஷயமாக இவன் வேறு ஊருக்குச் சென்று தலை மறைவாக இருக்கும்போது பவானியின் கள்ள உறவு ஆரம்பமாகி தொடர்கிறது செல்லப்பா தலை மறைவாக பிரபாகரன் என்ற பெயரில் வாழும் போது பார்வதி என்ற பெண்ணிடமும் அவளுடைய குடும்பத்தாரிடமும் சிநேகம் உண்டாகிறது தான் திருமணமானவன் என்ற உண்மையைக் கூறாததால் பார்வதிக்கு செல்லப்பாவின் மீது காதல் உண்டாகிறது பவானியின் கள்ளத்தொடர்பு உண்மையெனத் தெரிய வரும் போது மனமுடைந்து தலை மறைவாக இருந்த பார்வதியின் வீட்டைவிட்டு வெளியேறி நடந்தே வேறு ஊருக்குச் சென்றுவிடுகிறான் அங்கு ஒரு கம்பெனியின் முன்பு ஆர்பாட்டம் நடப்பதால் நான்கு நாட்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ளாமல் வேடிக்கைப் பார்க்கிறான் அப்பொழுது ஹம்சா என்பவனது நட்பு கிடைக்கிறது ஒளரோஸ் என்பவன் தான் முதலாளி என்பதும் அவனுடைய ரௌடித்தனமும் செல்லப்பாவிற்கு தெரியவருகிறது ஐந்தாவது நாள் சில குண்டர்களின் அடாத செயலால் செல்லப்பா சண்டைக்குப் போகவே போலீசால் கைது செய்யப் பட்டு சிறையிலடைக்கப் படுகிறான் சிறையில் தனது மனைவியின் கள்ளக் காதலன் கோபாலினை சந்திக்கிறான் கோபால் செல்லப்பாவிடம் மன்னிப்பு கேட்கிறான் செல்லப்பன் எதுவும் பேசாமல் இருந்துவிடுகிறான் அவர்களது வாழ்க்கையிலிருந்து செல்லப்பா விலகி விடுகிறான் ஜெயிலிலிருந்து வெளிவந்ததும் நேராக ஹம்சாவின் கடைக்குப் போகிறான் அங்கு கடை நாசமாகி இருக்கிறது விசாரித்ததில் செல்லப்பாவிடம் கொண்ட சிநேகத்தால் ஹம்சா கம்பெனி முதலாளி ஒளரோசால் வஞ்சிக்கப்பட்டது தெரிய வருகிறது தலைவருக்கான தேர்தலில் ஒளரோசை எதிர்த்து செல்லப்பாவின் நண்பன் கோபி போட்டியிடுகிறான் தேர்தலன்று ஓளரோசின் ஆட்கள் செய்த சதியால் கோபி தோற்கிறான் இதற்கு மேலும் பொறுக்க முடியாமல் செல்லப்பா ஒளரோசை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போகிறான் நீதிபதி அவனுக்கு தூக்குதண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறார் தீர்ப்பு நாளன்று அவனுடைய பிரேதத்தை வாங்க மனைவி என்ற முறையில் பவானியும் கோபாலும் புறப்படுகிறார்கள் ஆனால் அதற்கு முன்பே விடிய விடிய மத்திய சிறைச்சாலையின் வெளியில் ஹம்சா காத்திருப்பதாக கதை முடிகிறது வாழ்க்கையின் விளிம்பு நிலையிலுள்ள மக்களின் உறவு முறைகளையும் வாழ்க்கையின் பிடிப்பிற்காக உருவாகும் கள்ள உறவுகளையும் அழகாக நாவலாக்கியுள்ளார் ஆனால் தகழியின் ஆகச்சிறந்த படைப்பு என்றெல்லாம் கூற முடியாது சிக்கலில்லாத கதை படிப்பதற்கு பொறுமை வேண்டும் நாவல் புதினம் மொழிபெயர்ப்பு நல்லாயிருக்கு ஒரு எழுத்தாளனுக்கு ஒரு வாசகன் இதை விட ஒரு பெரிய துரோகம் செய்துவிட முடியாது நீங்கள் ஒரு புதினத்தை படித்து ரசித்தீர்கள் என்றால் அந்த புதினத்தை பற்றி மட்டுமே எழுதவேண்டும் இவ்வாறு கதையை சுருக்கி எழுதிவிட்டால் அந்த புத்தகத்த வாங்கி படிக்க எப்படி ஆர்வம் வரும் தயவு செய்து உங்கள் அனுபவத்தை எழுதுங்கள் கதையை எழுதாதீர்கள் நன்றி நீங்கள் சொல்வது சரிதான் பெரும்பாலும் புத்தக அறிமுகம் மற்றும் கிடைக்கும் இடத்தை தெரியப்படுத்தவே இந்தப் பதிவை எழுதுகிறேன்
ஒன்று கவினின் காதல் பஞ்சாயத்து இன்னொன்று வழக்கம்போல் மற்றவர் மீது மீரா சுமத்தும் அபாண்ட குற்றச்சாட்டு இதில் மீராவின் பிரச்சனையை அவரை வீட்டை விட்டு வெளியேற்றினால் மட்டுமே தீர்க்க முடியும் எனவே இன்றைய நிகழ்ச்சியில் கவினின் காதல் பஞ்சாயத்து ஓடும் போல் தெரிகிறது சற்றுமுன் வெளியான முதல் புரமோ வீடியோவில் மாத்தி மாத்தி பேசறது அடிமாறுவது இந்த வீட்டில் சகஜமாகிவிட்டது என்றும் ஆனால் இதெல்லாம் பதவி மோகத்திற்காக இல்லை என்றும் ஒருவிதமான மோகம் என்றும் தமிழில் சொல்வதென்றால் ஃபீலிங்ஸ் என்று கமல் பேசுகிறார் மேலும் நினைத்தாலே இனிக்கும் என்று கூறி ஒரு சாக்லேட்டையும் காண்பிக்கின்றார் இந்த வாரம் ஒரே ஒரு சாக்லேட்டினால்தான் கவின் சாக்சி லாஸ்லியாவுக்கு இடையே பிரச்சனை எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது எனவே இன்றும் நாளையும் கவினின் காதல் பஞ்சாயத்தும் மீராவுக்கான குறும்படமும் இருந்தால் இரண்டு நாட்களின் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இருந்து மீள்விக்கப்பட்டது
நகைச்சுவை நிறைந்த இந்தப்படத்தில் தந்தை மகனுக்கிடையேயான உறவு குறித்து அழகாக காட்டப்பட்டுள்ளதாவும் சந்தானத்தின் நடிப்பு மிகவும் பேசப்படும் என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள் இந்தப்படத்தை ஆர் கே என்டர்டெயின்மென்ட் சார்பில் சி ரமேஷ் குமார் தயாரிக்க ஆர் ஸ்ரீநிவாச ராவ் இயக்கியுள்ளார் திரையரங்குகளில் நவம்பர் மாதம் வெளியாகவுள்ள இந்தப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலர்ஸ் டிவி வாங்கியுள்ளது சந்தானம் படங்களுக்கு மக்களிடையே இருக்கும் வரவேற்பை கருத்தில் கொண்டு மிகப்பெரிய விலைக்கு சபாபதி தொலைக்காட்சி உரிமையை கலர்ஸ் டிவி வாங்கியுள்ளது எம் எஸ் பாஸ்கர் பிரீதி வர்மா சாயாஜி ஷிண்டே சுவாமிநாதன் காமெடி பஜார் மாறன் உள்ளிட்டோர் சபாபதி படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் மேலும் இந்தப்படத்தில் விஜய் டிவி புகழும் சந்தானத்துடன் இணைந்து நடித்துள்ளார் சாம் சி எஸ் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் நேத்திக்கு சென்ச்சார் ஆன இந்த சபாபதி படத்துக்கு சர்டிபிகேட் கிடைச்சிருக்குது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட வீரவணக்கம் ஆல்பம் பாடல் சினேகா வெங்கட் பிரபு நடிப்பில் உருவாகும் குழந்தைகளுக்கான திரைப்படம் ஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது
ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன் ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன் உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும் இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்
ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன் ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன் உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும் இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்
குரானின் பாதுகாப்பு குறித்து எழுதப்பட்டிருந்த இரண்டு கட்டுரைகளுக்கும் நண்பர் ஒன்றாக பதிலளிக்க முயன்றிருக்கிறார் நண்பரின் மறுப்புக்குள் புகுமுன் அவர் முரண்பாடு என குறிப்பிட்ட ஒன்றை சரி செய்துவிடலாம் இறுதி செய்யப்பட்ட குரானின் காலத்தை தவறுதலாக முகம்மது இறந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு கால் நூற்றாண்டுக்குப் பிறகு என்று குறிப்பிட்டிருந்தேன் அது தவறானது தான் ஆண்டுகளுக்குப்பிறகு என்பதே சரியானது பதினைந்து ஆண்டுகள் என்பதையும் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தாலும் ஆண்டுகள் என எழுதியிருப்பது என்னுடைய கவனக்குறைவினால் நேர்ந்தது தான் பிரச்சனை என்று வந்துவிட்டால் ஒப்பிட்டுப்பார்க்க முகம்மது முன்னின்று தொகுத்த குரான் இன்று இல்லை அழிக்கப்பட்டுவிட்டது என நான் குறிப்பிட்டிருந்ததை என்னுடைய அறியாமை என நண்பர் குறிப்பிட்டிருக்கிறார் இது குறித்து நண்பருக்கு அறியாமை ஏதும் இல்லை என்பதில் அவர் உறுதியுடன் இருப்பாராயின் முகம்மது முன்னின்று தொகுத்த குரான் எங்கிருக்கிறது என்பதை தெரிவிக்கட்டும் இதுகுறித்து நான் கட்டுரையில் இப்படி குறிப்பிட்டிருந்தேன் முகம்மதின் மரணத்திற்குப்பிறகான ஆண்டுகளில் குரான் மாறவில்லை என்பதற்கு அப்போது இருந்தவர்கள் நேர்மையானவர்கள் இறை பக்தியுள்ளவர்கள் எனவே தவறு செய்திருக்க மாட்டார்கள் என்று நம்பு வதை தவிர வேறு ஆதாரம் இருக்கிறதா ஆனால் நண்பர் மீண்டும் அவரின் நம்பிக்கையையே பதிலாக கூறியிருக்கிறார் எங்கள் நம்பிக்கை என்று முடித்துவிட்டால் அதில் கேள்வி எழுப்ப ஒன்றுமில்லை ஆனால் அதுதான் சரியானது அதுமட்டுமே சரியானது எனும் போது தான் அதில் கேள்விகள் எழுப்பவும் ஐயப்படவும் தேவை எழுகிறது இது ஏதோ நமக்கு புரியவில்லை என்பதுபோல் எண்ணிக்கொண்டு எடுத்துக்காட்டு கூறியிருக்கிறார் ஆனால் இதில் புரியாமல் நின்று கொண்டிருப்பது யார் ஒரு எழுத்தாளர் சில கதைகளை எழுதுகிறார் அவரின் காலத்திற்குப் பிறகு அவை தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்படுகிறது நூலாக வெளிவந்தபின் கவனமாக கையெழுத்துப் பிரதி எரித்து அழிக்கப்படுகிறது ஆனால் எழுத்தாளருக்கு மிக நெருங்கியவர் ஒருவர் அவர் எழுதியது பதினோரு கதைகள் அவர் உயிருடன் இருக்கும் வரையில் பதினோரு கதைகளும் படிக்கப்பட்டு வந்தன என்கிறார் மற்றொருவரோ அவரின் கதைகளை படித்த ஒருவர்தான் தொகுத்தார் எனவே பத்து கதைகள் தான் என்கிறார் இந்த இரண்டில் எது சரியானது என்பதற்கு வெறும் நம்பிக்கை மட்டும் போதுமா வேறு ஆதாரங்கள் வேண்டாமா பொதுவாக குரான் தொகுக்கப்பட்டதற்கு கூறப்படும் காரணங்களிலேயே சில குழப்பங்கள் இருக்கின்றன குரானைப் பாதுகாப்பது என்னுடைய பொறுப்பு என்று அந்த குரானிலேயே அல்லா உறுதிகூறுகிறான் அதை அனைத்து முஸ்லீம்களும் நம்புகின்றனர் ஆனால் முகம்மது தன்னுடைய முயற்சியிலேயே அதாவது மனித முயற்சியிலேயே குரானை பாதுகாக்க முயற்சிக்கிறார் தொழுகையின்போது குரான் வசனங்களை ஓதுவதற்கு ஏற்பாடு செய்ததும் அந்த நேரத்து வசதிகளின்படி எழுதி வைத்ததும் மனித முயற்சியினால்தான் ஒருவேளை அல்லா பாதுகாப்பேன் என்று உறுதியளித்தது முகம்மதுவின் இந்த மனித முயற்சியைத்தான் என்றால் தொகுப்பதற்கு கூறப்படும் காரணமான மனனம் செய்தவர்கள் இறந்துவிட்டார்கள் என்பது அல்லாவின் உறுதிமொழிக்கு மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட மதிப்பேதும் இல்லை என முகம்மதின் தோழர்கள் கருதினார்கள் என பொருள் வருகிறது மற்றொரு பக்கம் முகம்மது ஏற்பாடு செய்து எழுதிவைத்திருந்த குரான் வசனங்கள் இருக்கும்போது மனனம் செய்திருந்தவர்கள் இறந்துவிட்டனர் எனும் காரணமே மாற்றுக் குறைவானாதாக ஆகிவிடுகிறது அபூபக்கர் காலத்தில் தொகுக்கப்பட்ட குரான் இருக்கும்போது உஸ்மான் மீண்டும் தொகுக்க வேண்டிய அவசியமென்ன பல இடங்களுக்கும் அனுப்பிவைக்க வேண்டுமென்றால் அபுபக்கர் தொகுத்த குரானையே படிகள் எடுத்து அனுப்பியிருக்க முடியும் எனும் நிலையில் உஸ்மான் மீண்டும் தொகுக்க முற்பட்டது ஏன் வெறுமனே அத்தியாயங்களை வரிசைப்படுத்துதல் எனும் காரணத்தை முகம்மது ஏற்பாடு செய்து தொகுத்த குரானும் அழிக்கப்பட்டிருக்கிறது என்பதோடு பொருத்திப் பார்த்தால் போதுமானதாக இல்லை அடுத்து எழுதுகோல் காகிதம் மை குறித்து நண்பரின் மறுப்பைப் பார்த்தால் நான் கேட்டது ஒரு கோணத்திலும் அவர் மறுத்திருப்பது வேறொரு கோணத்திலும் இருக்கிறது நான் கேட்டிருப்பது என்ன வேத வசனங்கள் இறங்கும் போது அதை பாதுகாப்பதற்கு முகம்மது எழுதிவைக்கச் சொன்னபோது பேரீத்தம் மட்டைகளிலும் எலும்புகளிலும் எழுதிவைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அதே காலகட்டத்தில் இறங்கிய வசனமோ எழுதுகோலையும் மையையும் பற்றி பேசுகிறது இந்த முரண்பாட்டை சுட்டித்தான் இந்த வசனம் ஏன் இடைச் செருகலாக இருக்கக்கூடாது எனும் பொருளில் ஐயம் எழுப்பப்பட்டிருக்கிறது இதற்கு நண்பரின் மறுப்பு என்ன முகம்மது காலத்தில் மை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தான் ஆம் முகம்மதின் கடைசி காலகட்டத்தில் எழுதப்பட்ட கடிதங்கள் மையைப் பயன்படுத்தி எழுதப்பட்டிருக்கின்றன ஆனால் அவை மதீனாவில் இஸ்லாமிய அரசு அமைந்தபிறகு மேற்படி வசனமோ மக்கீ வசனம் அதாவது மக்காவில் இறங்கிய வசனம் வெளிப்படையாக கேட்டால் நடப்பில் மட்டைகளில் எழுதிக்கொண்டிருந்தபோது கனவு வசனங்கள் மையை பயன்படுத்தி எழுதச் சொல்வது எப்படி அடுத்து குரானின் பாதுகாப்பில் மிகப்பெரிய கேள்வியை கேள்வியை எழுப்பியிருக்கும் ஒரு ஹதீஸ் ஆதாரபூர்வமான ஹதீஸ் தொகுப்பான முஸ்லீமில் இடம்பெற்றிருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தேன் முகம்மதுவிற்கு மிகவும் விருப்பமான மனைவியான ஆய்சாவினால் அறிவிக்கப்பட்டிருக்கும் அந்த ஹதீஸ் முகம்மது இருக்கும்வரை அந்த வசனம் குரானில் ஓதப்பட்டு வந்தது என்பதையும் பின்னர் நீக்கப்பட்டுவிட்டது என்பதையும் தெளிவாகவே விளக்குகிறது ஆனால் நண்பரோ இது ஆதாரபூர்வமற்ற ஹதீஸ் எனவே இதற்கு பதில் கூறுவது தேவையற்றது என்று கடந்து செல்கிறார் முஸ்லீமில் இடம்பெற்றிருக்கும் ஒரு ஹதீஸை ஆதாரமற்றது என யார் தீர்ப்பளித்தது எந்த அடிப்படையில் இது ஆதாரமற்ற ஹதீஸ் புஹாரியிலும் முஸ்லீமிலும் இடம்பெற்றிருக்கும் ஆதாரமற்ற ஹதீஸ்களின் பட்டியலை தந்தால் பரிசீலிப்பதற்கு ஏதுவாக இருக்கும் பிரச்சனை எழுந்தவுடன் அதாரமற்றது என போகிறபோக்கில் சொல்லிச் செல்வது நேர்மையானவர்களின் செயல் அல்ல தவிரவும் இது தொடர்பான மேலதிகவிபரங்களை அடுத்த தொடரில் எதிர்பாருங்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் ஆனால் இதுவரை அந்த ஹதீஸ் குறித்த விளக்கம் எதையும் அவர் அளிக்கவில்லை அடுத்து நான் எழுதியிருந்தவைகளில் முரண்பாடு என சிலவற்றைச் சுட்டியிருக்கிறார் அவற்றில் முதலாவது இதுதான் மெய்யான குரான் என பல விதங்களில் உலவத்தொடங்கியது எப்போது இதில் அபூபக்கர் காலத்திலா உஸ்மானின் காலத்திலா என்று நுணுகிப் பார்க்கும் அளவுக்கு இதில் பொருள் வேறுபாடு ஒன்றுமில்லை மனனம் செய்தவர்கள் குறைந்துவிட்டார்கள் என்பதால் முதல்முறையும் வேறுபாடுகள் வந்துவிட்டன என்பதால் இரண்டாம் முறையும் தொகுக்கப்பட்டது என்றால் முதல் முறை தொகுக்கப்பட்டபோதே முகம்மது ஏற்பாட்டில் தொகுக்கப்பட்ட குரான் இருந்திருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவே முகம்மதுவின் மரணத்திற்கு பின் என பொதுவாக எழுதுவது போதுமானது அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் இன்று பெரிய மசூதியாக பாதுகாக்கப்படுகிறது இதுவும் நுணுகிப் பார்க்கும் அளவுக்கு பெரிய வேறுபாடுகள் இல்லாதது முதலிலிருந்தே மசூதியாக்கப்பட்டாலும் பிறகு விரிவாக்கத்தில் உள்வாங்கப்பட்டாலும் இது இஸ்லாத்திற்கு தேவையில்லாதது என்று விலக்கப்படவில்லையே மட்டுமல்லாது இது எதற்காக கூறப்பட்டது என்பதை பார்க்க வேண்டாமா முகம்மது அடக்கம் செய்த இடம் பாதுகாக்கப்படுகிறது அவர் அணிந்திருந்த செருப்பு பாதுகாக்கப்படுகிறது அவர் பயன்படுத்திய வாளுறை பாதுகாக்கப்படுகிறது ஆனால் அவர் முன்னின்று தொகுத்த குரான் மட்டும் எரிக்கப்பட்டுவிட்டது அந்த குரானை விடவா செருப்பும் மற்றவையும் முக்கியமாய் ஆகிவிட்டது அல்லது செருப்பும் வாளுறையும் குரானைவிட இஸ்லாத்திற்கு நெருக்கமானதா இன்றைய குரான் பிரதிகளுக்கிடையில் வசன எண்களில் வித்தியாசம் இல்லையா இருக்கிறது ஜான் டிரஸ்ட் வெளியீட்டுக்கும் பிஜே வெளியீட்டுக்கும் இடையில் வசன எண்களில் வித்தியாசம் இருக்கிறது வசன எண்கள் அடையாளத்திற்குத்தான் என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை இப்போது வசன எண்களும் வரிசையும் அவசியமானதல்ல எனக்கூறும் நண்பர் தான் வரிசை சரியாக இருக்காது என்பதால் முகம்மதின் முயற்சியிலான குரான் அழிக்கப்பட்டதையும் சரிகாண்கிறார் கடைசியாக தவறுகள் நிறைந்துள்ள கம்யூனிசத்தில் என்றொரு உருவத்தையும் காட்டுகிறார் கம்யூனிசத்தில் தவறுகள் நிறைந்திருக்கிறது என்பது நண்பரின் நம்பிக்கை என்றால் அதில் குறுக்கிடுவதற்கு ஒன்றுமில்லை ஏனென்றால் அவரின் நம்பிக்கை சரியாக இருக்க வேண்டும் என அவசியமில்லை மாறாக அது சரியானது என அவர் நினைத்தால் கம்யூனிசத்தின் தவறுகள் குறித்து ஒரு தனிப்பதிவு எழுதட்டும் பதிலளிக்க நாம் தயார் இதுவரை செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் ௧ செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் ௨ செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் ௩ செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் ௪ செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் ௫ மின்னூலாக தரவிறக்க பகிர்க ஏற்றப்படுகின்றது செங்கொடி செங்கொடி எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும் செங்கொடி செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் மத ம்குறிச்சொல்லிடப்பட்டது அல்லா இஸ்லாம் இஹ்சாஸ் கம்யூனிசம் குரான் குர் ஆன் செங்கொடி நபி பாதுகாப்பு மதம் முகம்மது முந்தைய மே நாளில் சூளுரை ஏற்போம் அடுத்து நொய்டா விவசாயிகளும் ராகுலின் போராட்டமும் செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் ௬ சொல்கிறார் பிப இல் ஒரு எழுத்தாளர் சில கதைகளை எழுதுகிறார் அவரின் காலத்திற்குப் பிறகு அவை தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்படுகிறது வெறும் நம்பிக்கை மட்டும் போதுமா வேறு ஆதாரங்கள் வேண்டாமா உங்கள் எழுத்தாளருடன் இருந்தவர்கள் இரண்டு பேர் மட்டுமே அந்த கதைகளை தினசரி யாரும் படிக்க வில்லை அவற்றினை மனனம் செய்வது கடமையாக கொள்ளவில்லை ஒரு எழுத்தை கூட மாற்றினால் அது இமாலாயத் தவறு என்று அந்த கதை எழுத்தாளர் காலத்தில் யாரும் பொருட் கொள்ளவில்லை இது ஒருபுறம் இருக்க மற்றவர் பத்து கதைகள்தான் என்றதும் முதலாமனவர் அவர் பதினோராவது கதையை தெரிந்தவர்களை அழைத்து தன்னுடைய அந்த பதினோராவது கதையை அந்த எழுத்தாளர் சொன்னதை கேட்டதை அவர்கள் மூலம் நிருபிக்கிறார் அந்த பதினோராவது கதை சொல்லப்பட காலத்தில் பத்து கதை காரர் ஊரில் இல்லாமல் வெளியூர் சென்றதையும் அதனால் அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதையும் அவர் தொகுத்த பதினொன்றும் எழுத்தாளருக்கு உரியது தான் என்று நிருபணம் ஆகிறது சொல்கிறார் பிப இல் அதை பாதுகாப்பதற்கு முகம்மது எழுதிவைக்கச் சொன்னபோது பேரீத்தம் மட்டைகளிலும் எலும்புகளிலும் எழுதிவைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அதே காலகட்டத்தில் இறங்கிய வசனமோ எழுதுகோலையும் மையையும் பற்றி பேசுகிறது இந்த முரண்பாட்டை சுட்டித்தான் இந்த வசனம் ஏன் இடைச் செருகலாக இருக்கக்கூடாது பேரித்த மட்டைகளிலும் எலும்புகளிலும் மையை பயன்படுத்தி எழுது கோலைக் கொண்டு எழுதி இருப்பார்கள் என்று தான் இங்கு அர்த்தம் கொள்ள வேண்டும் இதில் முரண்பட ஒன்றும் இல்லை இல்லாத முரண்பாட்டை தேடி செங்கொடி அலைய வேணாம் சொல்கிறார் முப இல் குரானா இல்லை குரான்களா சொல்கிறார் பிப இல் இந்த இடுகைக்கான மறுப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது பார்க்க வால்பையன் சொல்கிறார் முப இல் விவாதத்தை அறியும் பொருட்டு சொல்கிறார் பிப இல் விவாதத்தை அறியும் பொருட்டு சொல்கிறார் பிப இல் தைரியமாக இஸ்லாமின் ஓட்டைகளை எடுத்துரைக்கும் சென்கொடிக்கு சல்யூட் சொல்கிறார் பிப இல் சில கேள்விகள் குரான் என்பது வஹி இறைச்செய்தி யா ஆம் இல்லை இது இறை தூத்ர்களுக்கு மட்டுமே வருமா ஆம் இல்லை குரான் என்பது அக்கால அரபிகளின் பயன்பாட்டில் இருந்த வார்த்தையா குரான் புத்தகத்தில் வரும் குரான் என்னும் வர்த்தை ஒவ்வொரு முறையும் இறங்கிய வஹியை குறிக்கிறதா ஆம் இல்லை அரபி மொழியில் முதலில் எழுதப்பட்ட புத்தகம் குரானா ஆம் இல்லை குரான் ஐ விளக்க் பயன்படும் அரபி இலக்கணம் குரானுக்கு பிறகே தோன்றியது சரி தவறு உலகில் உள்ள பழைமையான் குரான் பிரதிகள் எவை அனைத்து பழைய பிரதிகளும் ஒரே எழுத்துருவில் எழுதப்பட்டு உள்ளதா ஆம் இல்லை பழைய குரான் பிரதிகளும் இப்போதைய குரானும் ஒப்பிட்டால் ஒன்றாக இருக்குமா ஆம் இல்லை இப்போது உலகில் உள்ளஅனைத்து குரான்களும் அட்சரம் பிசகாமல் ஒரே மாதிரி உள்ளனவா ஆம் இல்லை தொடரும் சொல்கிறார் பிப இல் ஆடு குரான் வசனத்தை தின்று விட்டது திருமதி ஆயிசா முகமது அதாகப்பட்டது விபசாரத்திற்கு கல்லெறிந்து கொள்வதும் ரஜ்கி இன்னொரு விவகாரமான வசனமும் இறங்கியதாகவும் இந்த ஹதிது கூறுகின்றது பொதுவாக இது ஹார்லிக்ஸ் அருந்தாத சக்திய்ற்ற ஹதிது என்று நண்பர்கள் கூறுவர் இது அவர்கள் பாணி என்றாலும் கீழ்க்காணும் ஹதிதில் கல்லெறிந்து கொல்வது அல்லாவின் சட்டம் என்று திரு முகமது கூறி கல்லெறி தண்டனை நிறைவேற்றுகிறார் அபூ ஹுரைரா ரலி மற்றும் ஸைத் இப்னு காலித் அல் ஜுஹைனீ ரலி ஆகியோர் அறிவித்தார்கள் கிராமவாசிகளில் ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து இறைத்தூதர் அவர்களே அல்லாஹ்வின் சட்டத்தின் படியே நீங்கள் எனக்குத் தீர்ப்பளிக்கும் படி நான் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார் அவரை விட விளக்கமுடையவராக இருந்த அவரின் எதிரி ஆம் எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள் என்று கூறினார் என்னை ப் பேச அனுமதியுங்கள் என்று கிராமவாசி கூற நபி ஸல் அவர்கள் சொல் என்று கூறினார்கள அவர் என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தான் அப்போது இவரின் மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான் என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்று விடவேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது எனவே நான் இந்த தண்டனையிலிருந்து அவனைக் காப்பாற்றுவதற்காக அவனுக்காக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையாகத் தந்தேன் பிறகு அறிஞர்களிடம் நான் விசாரித்தபோது என் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தலும் தான் தண்டனையாகத் தரப்பட வேண்டும் என்றும் இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி ந்து கொல்லும் தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்றும் என்னிடம் தெரிவித்தனர் என்று கூறினார் இதைக் கேட்ட இறைத்தூதர் ஸல் அவர்கள் என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டத்தின் படியே தீர்ப்பளிக்கிறேன் அடிமைப் பெண்ணும் ஆடுகளும் உன்னிடமே திருப்பித் தரப்பட வேண்டும் உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலம் நாடு கடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும் என்று கூறிவிட்டு அருகிலிருந்த உனைஸ் இப்னு ளஹ்ஹாக் ரலி அவர்களை நோக்கி உனைஸே நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று அவள் தன் விபசாரக் குற்றத்தை ஒப்புக் கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுங்கள் என்று கூறினார்கள் அவ்வாறே உனைஸ் அவர்கள் அவளிடம் சென்று விசாரிக்க அவளும் அவளிடம் சென்று விசாரிக்க அவளும் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டாள் இறைத்தூதர் ஸல் அவர்கள் அவளைக் கல்லெறிந்து கொன்று விடும்படி உத்தரவிட அவ்வாறே அவள் கல்லெறிந்து கொல்லப்பட்டாள் கல்லெறிந்து கொலவது அல்லாவின் சட்டமா ஆம் இல்லை அல்லாவின் சட்டம் குரானில் இருக்க வேண்டுமா ஆம் இல்லை அப்போது குரானில் சொல்லாத இறைசெய்த்யும் உண்டா அதாவது குரானின் மீதி செய்திகலை வேறு புத்தகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாமா திரு பி ஜே கூறுகிறார் ஆம் என்று திரு பி ஜேதான் குரானில் கூறாத இறைசெய்தி உண்டு என்று கூறுவதை கேளுங்கள் குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ இவ்வசனத்தில் இறைவன் தான் இதை எனக்கு அறிவித்துத் தந்தான் என்று நபிகள் நாயகம் ஸல் ஒரு செய்தியைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கும் அவர்களின் மனைவிக்கும் இடையே நடந்த உரையாடலை அல்லாஹ் இங்கு எடுத்துக் காட்டுகிறான் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இரகசியமாக ஒரு செய்தியைத் தமது மனைவியிடம் கூறினார்கள் அந்த மனைவியோ இரகசியத்தைப் பேணாமல் மற்றொருவருக்குச் சொல்லி விடுகிறார் யாருக்கும் தெரியாத இந்த விஷயம் நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்குத் தெரிந்து அந்த மனைவியிடம் விசாரிக்கிறார்கள் உங்களுக்கு இதை யார் சொன்னார் என்று அந்த மனைவி கேட்ட போது நபிகள் நாயகம் ஸல் அளித்த பதில் தான் இந்த இடத்தில் கவனிக்கத் தக்கது அனைத்தையும் அறிந்த நன்றாகவே அறிந்த அல்லாஹ் தான் இதை எனக்கு அறிவித்துக் கொடுத்தான் என்பது தான் நபிகள் நாயகம் ஸல் அளித்த விடை அதாவது உங்கள் மனைவி உங்கள் இரகசியத்தைப் பேணாமல் இன்னொரு வரிடம் சொல்லி விட்டார் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து விடுகிறான் குர்ஆன் மட்டும் தான் இறைச் செய்தி குர்ஆன் அல்லாத வேறு இறைச் செய்தி கிடையாது என்று கூறுவோரின் கருத்துப்படி அல்லாஹ் அறிவித்துக் கொடுத்த அந்தச் செய்தி குர்ஆனில் இடம் பெற்றிருக்க வேண்டும் உங்கள் மனைவி இப்படிச் செய்து விட்டார் எனக் கூறும் ஒரு வசனமும் குர்ஆனில் இல்லை அதாவது அந்தச் செய்தியை குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ மூலம் அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருந்தால் மட்டுமே இவ்வசனம் உண்மையாகும் குர்ஆன் தவிர வேறு இறைச் செய்தி கிடையாது என்ற கருத்து முற்றிலும் தவறானது என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது இதில் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும் இந்த வசனத்தில் மார்க்க சம்பந்தமான எந்தச் சட்டமும் இல்லை மனிதர்களுக்கு உரிய எந்த அறிவுரையும் இதில் இல்லை கணவன் மனைவிக்கு இடையே நடந்த உரையாடல் தான் இது அவர்கள் பேசிக் கொண்ட இரகசியமும் மார்க்க சம்பந்தப்பட்டது அல்ல ஏனெனில் மார்க்க சம்பந்தமான எதையும் இரகசியமாக வைத்துக் கொள்ள அனுமதி இல்லை அது அனைவருக்கும் பொதுவானது முஸ்லிம் சமுதாயத்துக்கோ மற்றவர்களுக்கோ பயனில்லாத இந்த விஷயத்தைக் குர்ஆனில் அல்லாஹ் ஏன் இடம் பெறச் செய்ய வேண்டும் பயனற்ற எதையும் அல்லாஹ் குர்ஆனில் நிச்சயம் கூற மாட்டான் குர்ஆன் அல்லாத வேறு வஹீ கிடையாது என்று கூறும் கூட்டம் பிற்காலத்தில் உண்டாகும் என்பது படைத்த இறைவனுக்கு நன்கு தெரியும் குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் உண்டு என்பதைச் சொல்வதற்காகவே அல்லாஹ் இதை அருளியது போல் அமைந்துள்ளது சொல்கிறார் முப இல் மே மாலை சில கேள்விகள் குரான் என்பது வஹியா இது இறை தூத்ர்களுக்கு மட்டுமே வருமா குரான் அக்கால அரபிகளின் பயன்பாட்டில் இருந்த வார்த்தையா குரான் புத்தகத்தில் வரும் குரான் என்னும் வர்த்தை ஒவ்வொரு முறையும் இறங்கிய வஹியை குறிக்கிறதா அரபி மொழியில் முதலில் எழுதப்பட்ட புத்தகம் குரானா குரான் ஐ விளக்க் பயன்படும் அரபி இலக்கணம் குரானுக்கு பிறகே தோன்றியது உலகில் உள்ள பழைமையான் குரான் பிரதிகள் எவை அனைத்து பழைய பிரதிகளும் ஒரே எழுத்துருவில் எழுதப்பட்டு உள்ளதா பழைய குரான் பிரதிகளும் இப்போதைய குரானும் ஒப்பிட்டால் ஒன்றாக இருக்குமா இப்போது உலகில் உள்ளஅனைத்து குரான்களும் அட்சரம் பிசகாமல் ஒரே மாதிரி உள்ளனவா சொல்கிறார் பிப இல் மே மாலை கல்லெறிந்து கொலவது சட்டமா சட்டம் குரானில் இருக்க வேண்டுமா அப்போது குரானில் சொல்லாத இறைசெய்த்யும் உண்டா சொல்கிறார் பிப இல் குர்ஆன் தவிர வேறு இறைச் செய்தி கிடையாது என்ற கருத்து முற்றிலும் தவறானது என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது தூதர் மரியம் மற்றும் தேனீக்கும் வஹீ அறிவிக்கப்பட்டது அந்தச்செய்தியும் குரானில் இடம்பெறுகிறது பெற்ற வஹீயை தூதரோ மரியமோ தேனீயோ தனிப்புத்தகம் போட்டுவிடவில்லை குர்ஆன் அல்லாத வேறு வஹீ கிடையாது என்று கூறும் கூட்டம் பிற்காலத்தில் உண்டாகும் என்பது படைத்த இறைவனுக்கு நன்கு தெரியும் குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் உண்டு என்பதைச் சொல்வதற்காகவே அல்லாஹ் இதை அருளியது போல் அமைந்துள்ளது அப்ப நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டியிருக்கும் வஹீ வரும் அனைவருக்கும் ஆனால் வஹீயெலாம் குர்ஆன் ஆகா சொல்கிறார் பிப இல் இப்னு அப்பாஸ் ரலி அறிவித்தார் அப்போது உமர் ரலி அவர்கள் சொற்பொழிவு மேடை மிம்பர் மீது அமர்ந்தார்கள் பாங்கு சொல்பவர் பாங்கு சொல்லி மெளனமானதும் உமர் ரலி அவர்கள் எழுந்து இறைவனை அவனுக்குத் தகுதியான பண்புகளைக் கூறி புகழ்ந்தார்கள் பிறகு நான் இன்று எதைச் சொல்ல வேண்டுமென்று ஏற்படுத்தப்பட்டுள்ளதோ அதை நான் உங்களுக்குச் சொல்லவிருக்கிறேன் இது என் இறப்புக்கு சமீபத்திய பேச்சாக இருக்கக்கூடும் உறுதியாக எனக்குத் தெரியாது இதை கேட்டு விளங்கி நினைவில் நிறுத்திக் கொள்கிறவர் தம் வாகனம் செல்லும் இடங்களிலெல்லாம் இதை எடுத்துரைக்கட்டும் இதை ச் சரியாக விளங்க முடியாது என அஞ்சுகிற அவர் மட்டுமல்ல் வேறு யாரும் என் மீது பொய்யுரைப்பதை நான் அனுமதிக்கமாட்டேன் என்று கூறிவிட்டுப் பின்வருமாறு பேசினார்கள் நிச்சயமாக அல்லாஹ் முஹம்மத் ஸல் அவர்களை சத்திய மார்க்க த்துடன் அனுப்பினான் மேலும் அவர்களுக்கு குர்ஆன் எனும் வேதத்தையும் அருளினான் அல்லாஹ் அருளிய வேதத் தீல் கல்லெறி தண்டனை ரஜ்கி குறித்த வசனம் இருந்தது அதை நாங்கள் ஓதியிருக்கிறோம் அதைப் புரிந்து மனனமிட்டுமிருக்கிறோம் இறைத்தூதர் ஸல் அவர்கள் மண முடித்தவர் விபச்சாரம் புரிந்தால் அவருக்குக் கல்லெறி தண்டனை ரஜ்கி நிறைவேற்றியுள்ளார்கள் அவர்களுக்குப் பிறகு நாங்களும் அந்தத் தண்டனையை நிறைவேற்றியுள்ளோம் காலப்போக்கில் மக்களில் சிலர் அல்லாஹ்வின் மீதாணையாக இறைவேதத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை நாங்கள் காணவில்லை என்று கூறி இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழி தவறிவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன் மணமுடித்த ஆணோ பெண்ணோ விபசாரம் புரிந்து அதற்கு சாட்சி இருந்தாலோ கர்ப்பம் உண்டானாலோ ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது இறை வேதத்தில் உள்ளதாகும் பிறகு நாங்கள் ஓதிவந்த இறைவேதத்தில் இதையும் ஓதி வந்தோம் உங்களுடைய உண்மையான தந்தையரைப் புறக்கணித்து விட்டு வேறொரு வரை தந்தையாக்கிவிடவேண்டாம் அவ்வாறு உங்கள் தந்தையரைப் புறக்கணிப்பது நன்றி சொல்லலாகும் அறிந்துகொள்ளுங்கள் வால்பையன் சொல்கிறார் பிப இல் குரானில் சொல்லாத இறைசெய்த்யும் உண்டா முகமதுவிற்கு முன் வந்த தூதர்களும் அல்லாவால் அனுப்பப்பட்டவர்கள் என சொல்கிறார்கள் ஆனால் குரானை விட வேறு இறைசெய்தி இல்லை என்கிறார்கள் சரியான குழப்பவாதிகளா இருக்காங்களே சொல்கிறார் பிப இல் வால்பையன் மே மாலை குரானில் சொல்லாத இறைசெய்த்யும் உண்டா முகமதுவிற்கு முன் வந்த தூதர்களும் அல்லாவால் அனுப்பப்பட்டவர்கள் என சொல்கிறார்கள் ஆனால் குரானை விட வேறு இறைசெய்தி இல்லை என்கிறார்கள் சரியான குழப்பவாதிகளா இருக்காங்களே தோழரே முஹமதுக்கு முன் சென்ற நன்னெறியாளர்களின் செய்தி யையும் உள்ளடக்கிய கடைசி ஏற்பாடு தான் குரான் ஆகும் சொல்கிறார் முப இல் வஹீ என்றால் என்ன இறைவன் தான் இதை எனக்கு அறிவித்துத் தந்தான் மனதின் உள்ளுணர்வு பீஜேயின் விளக்கம் குர்ஆன் மட்டும் தான் இறைச் செய்தி குர்ஆன் அல்லாத வேறு இறைச் செய்தி கிடையாது என்று கூறுவோரின் கருத்துப்படி அல்லாஹ் அறிவித்துக் கொடுத்த அந்தச் செய்தி குர்ஆனில் இடம் பெற்றிருக்க வேண்டும் உங்கள் மனைவி இப்படிச் செய்து விட்டார் எனக் கூறும் ஒரு வசனமும் குர்ஆனில் இல்லை அதாவது அந்தச் செய்தியை குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ மூலம் அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருந்தால் மட்டுமே இவ்வசனம் உண்மையாகும் பீஜேயின் முடிவு ஆக குரான் மட்டும் போதாது பீஜேயின் விளக்கம் குர்ஆன் தவிர வேறு இறைச் செய்தி கிடையாது என்ற கருத்து முற்றிலும் தவறானது என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது இதில் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும் இந்த வசனத்தில் மார்க்க சம்பந்தமான எந்தச் சட்டமும் இல்லை மனிதர்களுக்கு உரிய எந்த அறிவுரையும் இதில் இல்லை கணவன் மனைவிக்கு இடையே நடந்த உரையாடல் தான் இது அவர்கள் பேசிக் கொண்ட இரகசியமும் மார்க்க சம்பந்தப்பட்டது அல்ல ஏனெனில் மார்க்க சம்பந்தமான எதையும் இரகசியமாக வைத்துக் கொள்ள அனுமதி இல்லை அது அனைவருக்கும் பொதுவானது முஸ்லிம் சமுதாயத்துக்கோ மற்றவர்களுக்கோ பயனில்லாத இந்த விஷயத்தைக் குர்ஆனில் அல்லாஹ் ஏன் இடம் பெறச் செய்ய வேண்டும் பயனற்ற எதையும் அல்லாஹ் குர்ஆனில் நிச்சயம் கூற மாட்டான் பயனில்லாத இந்த விஷயத்தைக் குர்ஆனில் அல்லாஹ் ஏன் இடம் பெறச் செய்ய வேண்டும் பீஜேயின் முடிவு பயனில்லாத இந்த விஷயத்தைக் குர்ஆனில் அல்லாஹ் ஏன் இடம் பெறச் செய்ய வேண்டும் ஆகவே குரான் மட்டும் போதும் முஹமதுக்கு வழங்கப்பட்ட செய்திகளை தேட ஸஹீஹுல் புஹாரி முஸ்லிம் ஆதமுக்கு வழங்கப்பட்ட செய்திகளை தேட ஸஹீஹுல் ஆதம் மரியத்திற்கு வழங்கப்பட்ட செய்திகளை தேட ஸஹீஹுல் மரியம் தேனீக்கு வழங்கப்பட்ட செய்திகளை தேட ஸஹீஹுந்நம்ல் மியாவ் சொல்கிறார் முப இல் உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி மின்னஞ்சல் கட்டாயமானது பெயர் கட்டாயமானது இணையத்தளம் மாற்று மாற்று மாற்று மாற்று நிராகரி புதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து நேயர் விருப்பம் முஸ்லிம்களை நம்ப வைத்து கழுத்தறுத்த திமுக வேள்பாரி நூலகம் மீளும் வரலாறு அறியப்படாத நந்தன் கதை காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் பூமி உருண்டை என யார் சொன்னது அல்லாவா மனிதனா திமுக வை ஆதரிக்கிறதா பு ஜ அல்லாவின் பார்வையில் பெண்கள் புர்கா அல்லாவின் பார்வையில் பெண்கள் விவாரத்து வால்காவிலிருந்து கங்கை வரை மே தி செ பு விய வெ ச ஞா ஏப் ஜூன் எந்த ஆண்டு மாத பதிவுகள் வேண்டும் எந்த ஆண்டு மாத பதிவுகள் வேண்டும் மாதத்தை தேர்வுசெய்க திசெம்பர் நவம்பர் செப்ரெம்பர் ஓகஸ்ட் ஜூலை ஜூன் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி திசெம்பர் நவம்பர் ஒக்ரோபர் செப்ரெம்பர் ஓகஸ்ட் ஜூலை ஜூன் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி திசெம்பர் நவம்பர் ஒக்ரோபர் செப்ரெம்பர் ஓகஸ்ட் ஜூலை பிப்ரவரி நவம்பர் ஒக்ரோபர் செப்ரெம்பர் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி திசெம்பர் நவம்பர் ஒக்ரோபர் செப்ரெம்பர் ஓகஸ்ட் ஜூலை ஜூன் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி திசெம்பர் நவம்பர் ஒக்ரோபர் செப்ரெம்பர் ஓகஸ்ட் ஜூலை ஜூன் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி திசெம்பர் நவம்பர் ஒக்ரோபர் செப்ரெம்பர் ஓகஸ்ட் ஜூலை ஜூன் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி திசெம்பர் நவம்பர் ஒக்ரோபர் ஜூன் மே மார்ச் பிப்ரவரி ஜனவரி திசெம்பர் நவம்பர் ஒக்ரோபர் செப்ரெம்பர் ஓகஸ்ட் ஜூன் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி திசெம்பர் நவம்பர் ஒக்ரோபர் செப்ரெம்பர் ஓகஸ்ட் ஜூலை ஜூன் மே ஏப்ரல் மார்ச் ஜனவரி திசெம்பர் நவம்பர் ஒக்ரோபர் செப்ரெம்பர் ஓகஸ்ட் ஜூலை ஜூன் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி திசெம்பர் நவம்பர் ஒக்ரோபர் செப்ரெம்பர் ஓகஸ்ட் ஜூலை ஜூன் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி திசெம்பர் நவம்பர் ஒக்ரோபர் செப்ரெம்பர் ஓகஸ்ட் ஜூலை ஜூன் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி திசெம்பர் நவம்பர் பதிவுகளை தேடுவதற்கு இதற்காகத் தேடு அஞ்சலில் வேண்டுவோர்க்கு இதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள் மின்னஞ்சல் முகவ ரி சொடுக்கவும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள மின்னஞ்சல் முகவரி இதுவரை இதுவரை மாதத்தை தேர்வுசெய்க திசெம்பர் நவம்பர் செப்ரெம்பர் ஓகஸ்ட் ஜூலை ஜூன் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி திசெம்பர் நவம்பர் ஒக்ரோபர் செப்ரெம்பர் ஓகஸ்ட் ஜூலை ஜூன் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி திசெம்பர் நவம்பர் ஒக்ரோபர் செப்ரெம்பர் ஓகஸ்ட் ஜூலை பிப்ரவரி நவம்பர் ஒக்ரோபர் செப்ரெம்பர் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி திசெம்பர் நவம்பர் ஒக்ரோபர் செப்ரெம்பர் ஓகஸ்ட் ஜூலை ஜூன் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி திசெம்பர் நவம்பர் ஒக்ரோபர் செப்ரெம்பர் ஓகஸ்ட் ஜூலை ஜூன் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி திசெம்பர் நவம்பர் ஒக்ரோபர் செப்ரெம்பர் ஓகஸ்ட் ஜூலை ஜூன் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி திசெம்பர் நவம்பர் ஒக்ரோபர் ஜூன் மே மார்ச் பிப்ரவரி ஜனவரி திசெம்பர் நவம்பர் ஒக்ரோபர் செப்ரெம்பர் ஓகஸ்ட் ஜூன் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி திசெம்பர் நவம்பர் ஒக்ரோபர் செப்ரெம்பர் ஓகஸ்ட் ஜூலை ஜூன் மே ஏப்ரல் மார்ச் ஜனவரி திசெம்பர் நவம்பர் ஒக்ரோபர் செப்ரெம்பர் ஓகஸ்ட் ஜூலை ஜூன் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி திசெம்பர் நவம்பர் ஒக்ரோபர் செப்ரெம்பர் ஓகஸ்ட் ஜூலை ஜூன் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி திசெம்பர் நவம்பர் ஒக்ரோபர் செப்ரெம்பர் ஓகஸ்ட் ஜூலை ஜூன் மே ஏப்ரல் மார்ச் பிப்ரவரி ஜனவரி திசெம்பர் நவம்பர் அண்மைய பின்னூட்டங்கள் ராம்குமார் கொலை வழக்கு இல் செங்கொடி இஸ்லாம் கற்பனைக் கோட்டையின் இல் செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளி இல் பூமி உருண்டை என யார் சொன்னது இல் நான் இந்து அல்ல நீங்கள் இல் வீரமணி இந்திய சமுதாய வரலாற்றில் இல் செங்கொடி இந்திய சமுதாய வரலாற்றில் இல் நாங்கள் தூக்கில் தொங்கி விடட்ட இல் கலைஞர் கடந்த தடங்கள் இல் செங்கொடி கலைஞர் கடந்த தடங்கள் இல் பெயர் கட்டாயமானது காட்டுமிராண்டித் துறை இல் செங்கொடி காட்டுமிராண்டித் துறை இல் கெல்டுகள் மற்றும் ஜெர்மானியர்க இல் செங்கொடி கெல்டுகள் மற்றும் ஜெர்மானியர்க இல் வலிப்போக்கன் பொதுத்துறை ஆய்வறிக்கை இல் வருகைப் பதிவேடு பார்வைகள் செங்கொடி காணொளியில் புதியது ஜியோ கட்டண உயர்வு ஏன் பி எஸ் என் எல் தொழிலாளர் சங்க தலைவர் செல்லப்பா அளித்த செவ்வி ல் புதியது நவ கொண்டாடும் தகுதி வேண்டும் நூலகத்தில் புதியது பெண்களின் அந்தரங்கம் நப்பின்னை நூல் பதிவிறக்கம் தேர்வு செய்க அசை படங்கள் அரச பயங்கரவாதம் அறிமுகம் அறிவிப்பு இடம் இந்தியா தில்லி உலகம் அமெரிக்கா பாகிஸ்தான் தமிழ்நாடு உணர்வு மறுப்புரை உள்ளடக்கம் அம்பேத்கர் மரணம் அரசியல் இந்திய பாகிஸ்தான் போர் ஈழம் கட்டுரை கம்யூனிசம் காணொளி குறு உரை சமூகம் செய்தி தில்லி சலோ நாட்காட்டி நூல் தொடர் நூல் வெளியீடு பார்ப்பனியம் பொருளாதாரம் முதலாளித்துவம் வரலாறு விவாதம் எதிர்ப்பதிவு கடையநல்லூர் கட்டுரை அரசியல் உக்ரைன் உலகம் கம்யூனிசம் சிறப்பு நாட்கள் மருத்துவம் மொழிபெயர்ப்பு தி குயிண்ட் கதை கம்யூனிசம் அர நீலகண்டன் மக்களியம் கல்வி கவிதை துரை சண்முகம் மனுஷ்யபுத்திரன் காணொளி கேட்பொலி பேச்சு பாடல் காலண்டர் கேள்வி பதில் கொரோனா சிந்து சமவெளி செய்தி இந்தியா உலகம் தமிழ்நாடு ஜி எஸ் டி ஜெயமோகன் வன்முறை தலைப்பு ஆசீவகம் ஆணவக் கொலை இடஒதுக்கீடு ஊடகம் ஏழ்வர் விடுதலை காவல்துறை கொரோன சுங்கச் சாவடி சுற்றுச் சூழல் ஜனநாயகம் தமிழ் திராவிடம் திருவள்ளுவர் தேர்தல் நீதிமன்றம் பட்டினிக் குறியீடு பாஜக பெட்ரோல் பெண்ணியம் போராட்டம் மதச்சார்பு மின்னணு பொருளாதாரம் லெமூரியா வங்கி வரலாறு விவசாயிகள் போராட்டம் ஸ்டெர்லைட் திரைப்பட மதிப்புரை தொடர் ஸ்டெர்லைட் நியாயவிலை பொருட்கள் நீட் நூல்கள் வெளியீடுகள் இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் ஒலி நூல் கம்யூனிஸ்டின் உருவாக்கம் குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் வரலாறு நெடுங்கதை நாவல் பாதையின் முடிவில் படங்கள் பண்பாடு புதிய ஜனநாயகம் பெரியார் பொதுத்துறை நிறுவனங்கள் மத ம் இந்து மதம் இஸ்லாம் இஸ்லாம் கற்பனைக்கோட்டை எது சைத்தானின் படை செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் விவாதம் முகநூல் நறுக்குகள் முழக்கம் வடிவம் அறிவிப்பு எதிர்ப்பதிவு கட்டுரை காணொளி குற்றுரை மறுப்புரை வெளிப்பதிவு வரலாறு விவசாயம் வெளிப்பதிவு ஆனந்த விகடன் ஊடாட்டம் கீற்று தமிழ் இந்து தி நியூஸ் மினிட் தீக்கதிர் பகிரி வாட்ஸாப் புதிய ஜனநாயகம் மருதையன் முகநூல் மெய்ப்பொருள் யூ டியூப் ரூரல் இந்தியா வலையொளியில் புதியது எது சைத்தானின் படை கம்யூனிசம் இஸ்லாம் குறித்த ஓர் ஒப்பீடு இன்னும் தேடலாமே இதற்காகத் தேடு வெளியேறும் முன் நண்பர்களே அனைவருக்கும் அனைத்தின் மீதும் ஒரு கருத்து இருக்கும் இருக்க வேண்டும் இத்தளம் குறித்தும் இங்கு பகிரப்படும் இடுகைகள் குறித்தும் உங்களுக்கு ஏற்பாகவோ மறுப்பாகவோ ஒரு கருத்து இருக்கலாம் அக்கருத்து எவ்வாறாக இருந்தாலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம் அவை ஒருபோதும் தடுக்கப்படாது அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் எனும் இந்த என்னுடைய மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள்
அறிவுஅறிவு என்ற அறிவும் அனாதி அறிவுக்கு அறிவாம் பதியும் அனாதி அறிவினைக் கட்டிய பாசம் அனாதி அறிவு பதியில் பிறப்பறுந் தானே பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப் பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டு பசுத்தன்மை நீக்கிஅப் பாசம் அறுத்தால் பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே கிடக்கின்ற வாறே கிளர்பயன் மூன்று நடக்கின்ற ஞானத்தை நாடோறும் நோக்கித் தொடக்குஒன்றும் இன்றித் தொழுமின் தொழுதால் குடக்குன்றில் இட்ட விளக்கது வாமே பாசம்செய் தானைப் படர்சடை நந்தியை நேசம்செய்து ஆங்கே நினைப்பர் நினைத்தலும் கூசம் செய்து உன்னிக் குறிக்கொள்வது எவ்வண்ணம் வாசம்செய் பாசத்துள் வைக்கின்ற வாறே விட்ட விடம்ஏறா வாறுபோல் வேறாகி விட்ட பசுபாசம் மெய்கண்டோன் மேவுறான் சுட்டிய கேவலம் காணும் சகலத்தைச் சுட்டு நனவில் அதீதத்துள் தோன்றுமே நாடும் பதியுடன் நற்பசு பாசமும் நீடுமாம் நித்தன் நிலையறி வார்இல்லை நீடிய நித்தம் பசுபாச நீக்கமும் நாடிய சைவர்க்கு நந்தி அளித்ததே ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம் ஆய பசுவும் அடலே றெனநிற்கும் ஆய பலிபீடம் ஆகுநற் பாசமாம் ஆய அரனிலை ஆய்ந்துகொள் வார்கட்கே பதிபசு பாசம் பயில்வியா நித்தம் பதிபசு பாசம் பகர்வோர்க்கு ஆறாக்கிப் பதிபசு பாசத்தைப் பற்றற நீக்கும் பதிபசு பாசம் பயில நிலாவே பதியும் பசுவொடு பாசமும் மேலைக் கதியும் பசுபாச நீக்கமும் காட்டி மதிதந்த ஆனந்த மாநந்தி காணும் துதிதந்து வைத்தனன் சுத்தசை வத்திலே அறிந்தணு மூன்றுமே யாங்கணும் ஆகும் அறிந்தணு மூன்றுமே யாங்கணும் ஆக அறிந்த அனாதி வியாத்தனும் ஆவன் அறிந்த பதிபடைப் பான்அங்கு அவற்றையே படைப்புஆதி யாவது பரம்சிவம் சத்தி இடைப்பால் உயிர்கட்கு அடைத்துஇவை தூங்கல் படைப்பாதி சூக்கத்தைத் தற்பரன் செய்ய படைப்பாதி தூய மலம்அப் பரத்திலே ஆகிய சூக்கத்தை அவ்விந்து நாதமும் ஆகிய சத்தி சிவபர மேல்ஐந்தால் ஆகிய சூக்கத்தில் ஐங்கரு மம்செய்வோன் ஆகிய தூயஈ சானனும் ஆமே மேவும் பரசிவம் மேற்சத்தி நாதமும் மேவும் பரவிந்து ஐம்முகன் வேறுஈசன் மேவும் உருத்திரன் மால்வேதா மேதினி ஆகும் படிபடைப் போன்அர னாமே படைப்பும் அளிப்பும் பயில்இளைப் பாற்றும் துடைப்பும் மறைப்பும்முன் தோன்ற அருளும் சடத்தை விடுத்த அருளும் சகலத்து அடைத்த அனாதியை ஐந்தென லாமே ஆறாறு குண்டலி தன்னின் அகத்திட்டு வேறாகு மாயையின் முப்பால் மிகுத்திட்டுஅங்கு ஈறாம் கருவி இவற்றால் வகுத்திட்டு வேறாம் பதிபசு பாசம்வீ டாகுமே வீட்கும் பதிபசு பாசமும் மீதுற ஆட்கும் இருவினை ஆங்குஅவற் றால் உணர்ந்து ஆட்கு நரக சுவர்க்கத்தில் தானிட்டு நாட்குற நான்தங்கு நற்பாசம் நண்ணுமே நண்ணிய பாசத்தில் நான்எனல் ஆணவம் பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன் கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள் அண்ணல் அடிசேர் உபாயமது ஆகுமே ஆகும் உபாயமே யன்றி அழுக்கற்று மோக மறச்சுத்தன் ஆதற்கு மூலமே ஆகும் அறுவை அழுக்கேற்றி ஏற்றல்போல் ஆகுவ தெல்லாம் அருட்பாச மாகுமே பாசம் பயிலுயிர் தானே பரமுதல் பாசம் பயிலுயிர் தானே பசுவென்ப பாசம் பயிலப் பதிபர மாதலால் பாசம் பயிலப் பதிபசு வாகுமே அத்தத்தில் உத்தரம் கேட்ட அருந்தவர் அத்தத்தில் உத்தர மாகும் அருள்மேனி அத்தத்தி னாலே அணையப் பிடித்தலும் அத்தத்தில் தம்மை அடைந்து நின்றாரே
கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவை நியமித்ததிலும் சதி உள்ளதோ தெரியாது என முன்னாள் அமைச்சரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் இரு தமிழர்களும் மோதி விரோத மனத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அழைப்பு விடுத்தார்களோ தெரியாது என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில் எங்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் குரல் கொடுப்பேன் வடக்கு மீனவர்கள் பிரச்சனை என்பது பெரும் பிரச்சனை அவர்கள் ஏற்கனவே துன்பத்தை சந்தித்தவர்கள் யுத்தத்தை நாம் விரும்பவில்லை யுத்தத்தை செய்தவர்களிடம் தர்க்க ரீதியிலான கருத்து இருந்தது வடக்கு மீனவர்களின் பிரச்சனைக்கு உள்ள தடையை அகற்ற வேண்டும் இந்திய மீனவர்கள் வருட காலமாக இலங்கை கடல் வளத்தை பயன்படுத்துகின்றனர் இதனால் இந்தியாவில் தற்போது இலங்கை வளத்தை பயன்படுத்திய ஓர் தலைமுறையே உருவாகி விட்டது இந்தியாவில் கூட மாநிலம் மாறி வேறு மாநிலத்தில் மீன்பிடிக்க முடியாத நிலையில் இலங்கை எல்லைக்குள் வருவதும் பிரச்சினைக்குரிய விடயம் இதற்கு இலங்கை மீனவர்களிற்கு பாரிய கப்பல்களை வழங்கி ஊக்குவிக்க வேண்டும் கடற்றொழில் அமைச்சராக டக்ளசை நியமித்ததிலும் சதி உள்ளதோ தெரியாது இரு தமிழர்களும் மோதி விரோத மனத்துடன் வாழ டக்ளஸிற்கு அழைப்பு விடுத்தார்களோ தெரியாது இதனை வெறும் மீனவர்கள் பிரச்சனையாக மட்டும் அல்ல தமிழர்களின் பிரச்சனையாக பார்க்க வேண்டும் என அரசியல் தலைவர்களை கோர விரும்புகிறேன் என்றார் கேசரி உள்நாடு உள்நாடு உள்நாடு தங்க விலை எவ்வாறு யாரால் நிர்ணயிக்கப்படுகிறது தங்க விலை என்பது எந்த தனிப்பட்ட நபர் அல்லது அமைப்பால் அல்லது நகை கடையால் நிர்ணயிக்கப்படுவதல்ல அதாவது தங்கத்தின் விலை என்பது வழியாகவே வலி இல்லாமல் தற்கொலை செய்துகொள்ள நவீன இயந்திரம் கண்டுபிடிப்பு ஒப்புதல் அளித்துள்ள சுவிட்சர்லாந்து அரசு இயந்திரமயமாகிவிட்ட இந்த உலகில் மனிதனின் ஒவ்வொரு தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு இயந்திரங்களை கண்டுபிடிப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை ஆனால் ம இலங்கையில் இன்று முதல் மின் வெட்டு செயலிழந்துள்ள நுரைச்சோலை அனல் மின் நிலையம் முழுமையாக வழமைக்கு திரும்பும் வரை நாட்டின் சில பகுதிகளில் இன்று முதல் இரவு வேளையில் ஒரு மணித்திய இன்றும் நாளையும் மின் துண்டிப்பு இன்றும் நாளையும் மாலை மணி முதல் இரவு மணி வரை தினசரி ஒரு மணி நேர மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நா தனுஜா வெளிநாடுகளில் பணி புரியும் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் பணத்தில் கடந்த மாதத்தில் மாத்திரம் சுமார் மில்லியன் டொலர் வீழ்ச் இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ள பிரியந்த குமாரவின் சடலம் பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலம் சியல்கோட்டில் சித்திரவதைக்குட்படுத்தி எரித்து கொலை செய்யப்பட்ட இலங்கை முகாமையாளர் பிரியந்த குமாரவின் சடலம் இன்று
சீனாவில் கடந்த ஆண்டுகள் காணாத மழை போ் பலி முகப்பு யாழ் செய்தி புலனாய்வு சமூக சீர்கேடு உள்ளூர் சர்வதேசம் கனேடிய செய்திகள் சுவிஸ் செய்திகள் பிரித்தானியா இந்திய செய்திகள் சினிமா கிசுகிசு வீடியோ ஏனையவை வவுனியா மட்டக்களப்பு விளையாட்டு மருத்துவம் நிகழ்வுகள் நம்மவர் படைப்பு பல்சுவை வேலைவாய்ப்பு தொடர்பு விளம்பர சேவை தொடர்புகளுக்கு முகப்பு யாழ் செய்தி புலனாய்வு சமூக சீர்கேடு உள்ளூர் சர்வதேசம் கனேடிய செய்திகள் சுவிஸ் செய்திகள் பிரித்தானியா இந்திய செய்திகள் சினிமா கிசுகிசு வீடியோ ஏனையவை வவுனியா மட்டக்களப்பு விளையாட்டு மருத்துவம் நிகழ்வுகள் நம்மவர் படைப்பு பல்சுவை வேலைவாய்ப்பு தொடர்பு சர்வதேச செய்தி சீனாவில் கடந்த ஆண்டுகள் காணாத மழை போ் பலி சீனாவில் கடந்த ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ரயில் பயணிகள் உள்பட போ் பலியாகினா் இதுகுறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான குளோபல் டைமஸ் நாளிதழ் தெரிவித்துள்ளதாவது ஹெனான் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் பலத்த மழை பெய்து வந்தது இது கடந்த ஆண்டுகளில் மிக அதிகபட்ச மழை அளவாகும் இந்த மழையால் மாகாணத்தில் கோடி போ் பாதிக்கப்பட்டனா் ஆபத்து நிறைந்த பகுதியிலிருந்து லட்சம் போ் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனா் இந்த மழைக்கு இதுவரை போ் பலியாகியுள்ளனா் இதுதவிர வெள்ளத்தில் போ் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது உயிரிழந்தவா்களில் போ் சுரங்க ரயிலில் பயணம் செய்தவா்கள் ஆவா் என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது உயிரிழந்த ரயில் பணிகளும் அவா்கள் ரயிலில் சென்றுகொண்டிருந்த சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானதாக ஹாங்காங்கைச் சோ்ந்த சௌத் சைனா மாா்னிங் போஸ்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது இந்தச் சம்பவத்தில் மேலும் போ் காயமடைந்ததாக அந்த நாளிதழ் கூறியுள்ளது இதுதவிர மழையில் சுவா் இடிந்து விழுந்ததால் போ் உயிரிழந்தனா் இந்த வெள்ளம் காரணமாக கோடி போ் வசிக்கும் மாகாணத் தலைநகா் ஷெங்ஷூவில் பொது இடங்களும் சுரங்க ரயில் பாதைகளும் நீரில் மூழ்கின அந்த நகரின் ஆம் எண் சுரங்க ரயில் பாதைக்குள் மழை நீா் புகுந்தது இதில் ஏராளமான ரயில் பயணிகள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ராணுவம் வரவழைப்பு கடும் மழையால் பாதிக்கப்பட்ட ஹெனான் மாகாணம் மற்றும் தலைநகா் ஷெங்ஷூவில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது அந்தப் பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அதிபா் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளாா் சீன ராணுவம் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில் பெருமழையின் விளைவாக யீசுவான் பகுதியில் உள்ள அணையில் மீட்டா் நீளத்துக்கு விரிசல் ஏற்பட்டுள்ளது அந்த அணை எப்போது வேண்டுமானாலும் உடையக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை மட்டும் ஷெங்ஷூ நகரில் சராசரியாக மி மீ மழை பெய்ததாக அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது சீனாவின் பாரம்பரியச் சின்னங்கள் நிறைந்த ஹெனான் மாகாணம் தொழில் மற்றும் வேளாண் மையமாகத் திகழ்ந்து வருகிறது தற்போதைய கனமழையால் அந்த மாகாணத்தில் அமைந்துள்ள ஷாவ்லின் பௌத்த கோயில் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன மழை வெள்ளம் காரணமாக அந்த மாகாணத்தில் சாலைகள் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து முடங்கியுள்ளது அந்தப் பகுதியில் இயங்கி வரும் க்கும் மேற்பட்ட பேருந்து சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது சுரங்க ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன ஷெங்ஷூ நகர விமான நிலையம் வந்து செல்வதாக இருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டன மீட்புப் பணிகளில் ராணுவத்தினா் மட்டுமன்றி காவல்துறையினா் தீயணைப்பு வீரா்கள் உள்ளூா் பணியாளா்கள் ஆகியோா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்று சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன
கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் சூரிய சக்தியால் இயங்கும் மின்மோட்டார்கள் அமைக்க சதவீத மானியத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே அறிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு சூரிய சக்தியால் இயங்கும் மின்மோட்டார் அமைக்கும் திட்டம் ல் அமல்படுத்தப்பட்டது இத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் ஆகிய குதிரைத்திறன் கொண்ட மின் கட்டமைப்புடன் இணைக்கப்படாத சூரிய மின் சக்தி நீர் பம்புகள் அமைப்பதற்கு விவசாயிகளிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன இதில் தமிழக அரசின் சதவீத மானியம் மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் சதவீத மானியம் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் சதவீத மானியம் ஆகியவற்றுடன் விவசாயிகளின் பங்களிப்பாக சதவீதம் என்ற அடிப்படையில் மூலதனம் இருக்கும் இத்திட்டத்தின் கீழ் காலக்கட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ கோடியே லட்சம் மானியத்தில் சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன கடந்த ஆண்டுகளாக சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் விவசாயிகளுக்கு சதவீதமாக இருந்த மானியம் நிகழாண்டு முதல் சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் ஏற்கெனவே இலவச விவசாய மின் இணைப்பு பெற்றிருந்தால் அதை துண்டிப்பதற்கு விருப்ப கடிதம் வழங்க வேண்டும் இலவச மின் இணைப்பு விண்ணப்பித்திருந்தால் அதற்கான ரசீத தங்களது விண்ணப்பங்களுடன் இணைத்து வாபஸ் கடிதம் அனுப்ப வேண்டும் திறந்தவெளி கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர் எடுக்க விரும்பினால் வேளாண் பொறியியல் துறையால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை தேர்வு செய்து மானிய உதவியுடன் சூரிய சக்தி பம்புசெட் அமைத்துக் கொள்ளலாம் இதற்கான விண்ணப்பத்தை விவசாயிகள் சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் அதை பூர்த்தி செய்து கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆதார் அட்டையின் நகல் சிட்டா அடங்கல் நகல் புல வரைபட நகல் ஆகிய ஆவணங்களை இணைத்து வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் வேளாண்மைப் பொறியியல் துறை தொழிற்பேட்டை கோணம் நாகர்கோவில் உதவி செயற்பொறியாளர் வேளாண்மைப் பொறியியல் துறை மேட்டுக்கடை தக்கலை ஆகிய முகவரிகளில் விண்ணப்பிக்கலாம் மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்கள் நாகர்கோவில் தக்கலை ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது நன்றி அக்ரி டாக்டர் சொட்டுநீர் பாசனத்திற்கு கூடுதல் மானியம் சதவீத மானியத்தில் பருத்தி அறுவடை இயந்திரம் சூரியசக்தி மின்மோட்டார் அமைக்க மானியம் குமரி மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு கரும்பு சொட்டு நீர் பாசனத்திற்கு கூடுதல் மானியம் தார்ப்பாய்களுக்கு மானியம் விவசாயிகள் கவனத்திற்கு மாவுப்பூச்சிக்கு எதிரி உலக விவசாயிகளுக்கு நண்பன் சின்ன வெங்காயத்திற்கான விலை முன்னறிவிப்பு ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் பருத்திக்கான விலை முன்னறிவிப்பு அதிக வருமானம் வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர் இயற்கை பூச்சி விரட்டி எண்ணெய் வித்துக்களுக்கான விலை முன்னறிவுப்பு எள் ஏப் இல் வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் கரும்பு சாகுபடி குருத்துப்புழு கரும்பு சொட்டு நீர் பாசனத்திற்கு கூடுதல் மானியம் கரும்புத் தோகையை உரமாக்கலாம் மகசூலை அதிகரிக்கலாம் கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய் குறைந்த செலவில் கோடை கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின் சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் தக்காளி தண்டுப்புழு கட்டுப்பாடு தமிழர்வேளாண்நாட்காட்டி தார்ப்பாய்களுக்கு மானியம் விவசாயிகள் கவனத்திற்கு தென்னை மரத்திற்கான சிறந்த நீர் மேலாண்மை முறை இதுதான் விளக்கும் வேளாண் அதிகாரி பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் ஜூன் பயிற்சிகள் ஜுலை பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் பூச்சி பூச்சி கட்டுப்பாட்டில் பொறிகளின் பங்கு வேளாண் பேராசிரியர்கள் விளக்கம் மக்கச்சோளத்திக்கான இடைக்கால விலை முன்னறிவிப்பு மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மாடி தோட்டம் டிப்ஸ் மானாவாரிக்கு ஏற்ற பருத்தி ரகங்கள் மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மாவுப்பூச்சிக்கு எதிரி உலக விவசாயிகளுக்கு நண்பன் மிளகாயை பயிர் விளைச்சலை அதிகரிக்கும் பயிர் பூஸ்டர்கள்
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கணினி அலுவலர்கள் பணி உருவாக்கப்பட்டு கணினி அறிவியல் படித்தவர்கள் நியமிக்கப்படுவார்கள் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் அறிவு மேலோங்கி இவ் வையம் தழைக்க தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கணினி அலுவலர்கள் பணி உருவாக்கப்பட்டு கணினி அறிவியல் படித்தவர்கள் நியமிக்கப்படுவார்கள் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கணினி அலுவலர்கள் பணி உருவாக்கப்பட்டு கணினி அறிவியல் படித்தவர்கள் நியமிக்கப்படுவார்கள் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கணினி அலுவலர்கள் பணி உருவாக்கப்பட்டு கணினி அறிவியல் படித்தவர்கள் நியமிக்கப்படுவார்கள் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தேசிய கல்வி மேலாண்மை மற்றும் திட்டமிடல் பல்கலைக்கழகமும் தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககமும் இணைந்து தமிழகத்தில் உள்ள மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும்மாநில அளவிலான கருத்தரங்கை நடத்தின இந்த நாள் கருத்தரங்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது இதில் கல்வி மேலாண்மை மற்றும் திட்டமிடல் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டன இந்தக் கருத்தரங்கைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட கருத்தரங்கு செப்டம்பர் மாதம் ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர் முதல் கட்ட கருத்தரங்கை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்து பேசியது தமிழகத்தில் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளின் வகுப்பறைகளிலேயே உதவி கல்வி அலுவலர்களுக்கு அலுவலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது அதேபோல கல்வித்துறை அலுவலர்களுக்கு பணியிட மாற்றம் வெளிப்படையாக விரைவில் நடத்தப்படும் மேலும் கல்வி அலுவலர்களுக்குபுதிய வாகனங்கள் வழங்கப்படும் மாணவர்களின் செயல்பாடுகளை பெற்றோர்கள் சுலபமாக தெரிந்துகொள்ள ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படும் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது அந்தப் பள்ளிகளில் கணினி அலுவலர்கள் பணி உருவாக்கப்பட்டு கணினி அறிவியல் படித்தவர்கள் நியமிக்கப்படுவார்கள் பின் செய்தியாளர்களிடம் பள்ளிகளில் யோகாபயிற்சி வழங்குவது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியாருக்கு வழங்கும் நிதி ஆயோக் பரிந்துரைதொடர்பான எந்த கடிதமும் வரவில்லை அவ்வாறு கடிதம் வந்தால் முதல்வர் அமைச்சர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்றார் அடுத்த வாரம் தாக்கலாகிறது பாடத்திட்ட வரைவு அறிக்கை க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் அருகில் உள்ள மற்ற அரசு பள்ளிகளுடன் இணைக்கப்படுகின்றன
மற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள் அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும் புது கட்டளை விதியை இணை மற்றும் அல்லது அல்ல சேமகம் உயர்மட்ட விவரணம் முடிவுகளை இதன் படி வடிகட்டுக விவரிப்பு மட்டம் சேர்வு உருப்படி ஆம் இல்லை உதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது உயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும் திகதி வரிசை ஒழுங்குப் படி வடிகட்டுக ஆரம்பம் முடிவு மேற்படிவான துல்லியமான அச்சு முன்காட்சி ஆல் வகைப்படுத்துக ஆரம்பத் திகதி திகதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது தலைப்பு பொருத்தம் இயைபு அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி முடிவு திகதி திசை நோக்கம் ஏவுரை ஏறுமுகமான ஏறுநிரை இறங்குமுகமான நகல்நினைவி இணை
மற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள் அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும் புது கட்டளை விதியை இணை மற்றும் அல்லது அல்ல சேமகம் உயர்மட்ட விவரணம் முடிவுகளை இதன் படி வடிகட்டுக விவரிப்பு மட்டம் சேர்வு உருப்படி ஆம் இல்லை உதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது உயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும் திகதி வரிசை ஒழுங்குப் படி வடிகட்டுக ஆரம்பம் முடிவு மேற்படிவான துல்லியமான
தில்லியில் செப்டம்பர் அன்று நடைபெற்ற இலக்கியச் சந்திப்பு கூட்டத்தில் இலங்கை எழுத்தாளர் சேரனின் உயிர் கொல்லும் வார்த்தைகள் நூலுக்கான மதிப்புரை அடையாளம் என்ற சாதாரணச் சொல்லை ஒரு மனிதனுடன் பொருத்திப் பார்க்கும்போது அது வித்தியாசமான பரிமாணங்களைப் பெறுகிறது அவனது இந்த அடையாளத்தை அவன் பெரும்பாலும் உணர்வதில்லை மார்பு வலி ஏற்படும்போது மட்டும் இதயத்தின் துடிப்பு தெரிவதுபோல மூக்கு அடைத்துக் கொண்டிருக்கும்போது மட்டுமே மூச்சின் இயக்கத்தை உணர்வது போல இந்த மனித அடையாளமும் சில சமயங்களில் மட்டுமே அவனால் உணரப்படுகிறது பெரும்பாலும் தெரியாமலே இருக்கிறது ஆனால் இந்த அடையாளத்தை அவன் உணராமல் இருந்தாலும் மற்றவர்கள் எப்போதுமே அவனை அந்த அடையாளத்துடன் இணைத்தே பார்க்கிறார்கள் அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த அடையாளம் அவனுடன் ஒட்டிக்கொண்டே இருக்கிறது பல சமயங்களில் இந்த அடையாளம் அவனுக்கு உதவியாக அமைகிறது என்றாலும் பாதகமான சூழல்களை ஏற்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களையும் இந்த அடையாளம் அவனுக்கு ஏற்படுத்துகிறது ஒவ்வொரு மனிதனையும் மற்றவர்கள் எப்படி அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதற்கு ஓரளவுக்கு அவனுடைய பெயர் மொழி இனம் மதம் சாதி கட்சிச் சார்பு அரசியல் கொள்கை உலகாயத விஷயங்களின் அவனுக்கு இருக்கும் கருத்துகள் போன்ற காரணங்களே முக்கியக் காரணிகளாக அமைகின்றன என்றாலும் அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவன் வெறுத்தாலும் வெறுக்காவிட்டாலும் அவன் ஏற்பதாக இருந்தாலும் எதிர்ப்பதாக இருந்தாலும் மற்றவர்கள் அவரவர் கருத்தோட்டத்தையும் வாழ்நிலையையும் பொறுத்துத்தான் அந்த அடையாளத்தை அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள் இதில் அவன் செய்யக்கூடியது மிகக் கொஞ்சம் என்றுகூடச் சொல்ல முடியாது அவன் கையில் எதுவுமே இல்லை என்றுதான் சொல்ல முடியும் ஏனென்றால் இந்த அடையாளப்படுத்தல் எந்த முகாந்திரமும் இன்றி தானே துவங்கி விடுகிறது எந்தவொரு மனிதனையும் முழுதாக அறியாமலே அவனுடன் பேசாமலே அவனுடன் பழகாமலே அவன் கொண்டிருக்கிற கருத்துகள் பற்றிய அரிச்சுவடிகூடத் தெரியாமலே நாம் மற்றவர்களை அடையாளப்படுத்தி விடுகிறோம் நாமும் இப்படி மற்றவர்களால் அடையாளம் காணப்படுகிறோம் ஆதிகாலம் தொட்டு இந்த அடையாளப்படுத்தல் இருந்திருக்கலாம் ஆனால் இன்றைய அடையாளப்படுத்தல் புதிய பரிமாணங்களை எட்டியிருக்கிறது விபரீதமான விளைவுகளைக் கொண்டதாகவும் ஆகியிருக்கிறது மதவாதத்தை முளையிலேயே கிள்ளி எறிவதற்கான வாய்ப்புகளை நம் நாடு பயன்படுத்திக் கொள்ளாத நிலையிலும் தனிநபர் நம்பிக்கை என்ற அளவுக்குள் இருக்க வேண்டிய மதத்தை சமூக வாழ்வில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக மாற்றுவதற்கு மதம் வெற்றிகரமான வழி என்று பலமுறை நிரூபிக்கப்பட்டு விட்ட நிலையிலும் இந்த அடையாளப்படுத்தலை மதவாதம் எவ்வாறு தவறாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதைப் பற்றிய விளக்கங்கள் இங்கு அதிகம் தேவையில்லை சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் கோவை நகரிலும் குஜராத்திலும் அடையாளப்படுத்தப்பட்ட கடைகளும் மக்களும் மட்டுமே தாக்கப்பட்டதை சுலபமான உதாரணமாகக் கொள்ளலாம் எந்தவொரு கண்டுபிடிப்பையும் புதிய தொழில்நுட்பத்தையும் தவறான நோக்கத்தில் பயன்படுத்துவதில் வல்லவர்கக்கு இவையெல்லாம் இந்தப் புதிய அடையாளப்படுத்தலுக்கும் உதவியாய் இருக்கின்றன இந்தத் தொழில்நுட்பங்கள் இல்லாவிட்டாலும் அடையாளப்படுத்தல் நிகழ்ந்தே தீரும் என்றாலும் இவை அடையாளப்படுத்தலை விரைவுபடுத்தியுள்ளன எளிதாக்கியுள்ளன உதாரணமாக கணினியைப் பயன்படுத்தி மொத்த வாக்காளர் பட்டியலிலிருந்து சில நிமிட நேரத்தில் குறிப்பிட்ட மதத்தை அல்லது இனத்தை அல்லது சாதியைச் சேர்ந்தவர்கள் யார் என்பதைப் பட்டியலிட்டு விட முடியும் அவர்களின் ஜாதகம் தவிர அனைத்து விவரங்களையும் திரட்டிவிட முடியும் அடையாளப்படுத்தலில் தொழில்நுட்பத்தின் பங்கைப் பற்றிப் பேசுவதில் இப்போது விவாதிக்கப்படும் விஷயத்திலிருந்து திசைதிரும்பிவிடக்கூடிய ஆபத்து இருப்பதால் இத்தோடு இதை நிறுத்திக் கொள்ளலாம் பனிப்போர் முடிவும் சோவியத் சிதறலும் ரஷ்ய பொருளாதாரச் சரிவும் அமைத்துக் கொடுத்த ஒற்றை ஏகாதிபத்திய ஆற்றலைப் பயன்படுத்தி எண்ணெய் வளம் மிக்க மத்தியக் கிழக்கு நாடுகளில் தன் ஆதிக்கத்தை அப்பட்டமாக நிலைநாட்டிக் கொள்ம் அமெரிக்காவின் முயற்சியால் விளைந்த செப்டம்பர் சம்பவத்துக்குப் பிறகு இந்த அடையாளப்படுத்தல் சர்வதேச அளவில் மற்றொரு பரிமாணம் பெற்றிருக்கிறது மத்தியக் கிழக்கு நாடுகள் என்று அடையாளப்படுத்துவதுகூடத் தவறு என்று சிலர் கூறுகிறார்கள் தூரக்கிழக்கு நாடுகள் மத்தியக் கிழக்கு நாடுகள் என்று குறிப்பிடுவதே மேற்கு நாடுகளை மையமாக வைத்துக் கொண்டுதான் எனவே இத்தகைய சொற்களை ஏற்க மறுப்பவர்கள் இருக்கிறார்கள் இது தனியாக விவாதிக்க வேண்டிய விஷயம் ஆக இனம் சார்ந்த அடையாளப்படுத்தல் இன்று உலகளாவிய என்று சொல்ல முடியாவிட்டாலும் பலநாடுகள் தழுவிய பரிமாணத்தைப் பெற்றிருக்கிறது இவையெல்லாம் நிகழ்வதற்குப் பல ஆண்டுகள் முன்பாகவே ஒரு இனம் குறிப்பான அடையாளத்தைப் பெற்றுவிட்டது அதுதான் ஈழத் தமிழினம் அறுபதுகளில் துவங்கிய இனப்பிரச்சினை பலவாறாக வளர்ச்சியும் மாற்றங்களும் பெற்று அந்த இனத்தையே மாற்றி விட்டிருக்கிறது தமிழர் என்று ஒரு இனம்தான் இருக்க முடியும் ஈழத் தமிழினம் என அதைத் தனி இனமாகக் கூற முடியுமா என்று ஒரு கேள்வி எழுகிறது இங்கே ஈழத் தமிழினம் என்று குறிப்பிடப்படுவது தமிழினத்திலிருந்து தனித்துப் பிரித்துக் காட்டுவதற்கு அல்ல தொப்புள்கொடி உறவு தாய் பிள்ளை உறவு என்று எப்படி மார்தட்டிக் கொண்டாலும் எதார்த்தம் வேறாக இருக்கிறது இனமானத் தமிழர்கள் அதிகமாக வாழும் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களையும் நூறாண்டுகளுக்கு முன் புலம்பெயர்ந்து இலங்கை சென்று இன்னும் காலூன்ற முடியாமல் புலம் பெயர்ந்துகொண்டே இருக்கும் தமிழர்களையும் ஒரே இனம் என்று அடையாளப்படுத்த என்னால் இயலவில்லை தமிழகத் தமிழினம் திரைப்படங்களில் மட்டுமே பார்த்துக கொண்டிருக்கும் துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் விமான குண்டுமழைகளையும் ஈழத் தமிழினம் அன்றாடம் நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு முழுக்கப் பாதயாத்திரை நடத்தி முன்னறிவிப்புக் கொடுத்து பெரிய பெரிய பேனர்களால் விளம்பரம் செய்து இலங்கைக்குப் படகில் போகப்போவதாக நாடகம் காட்டிக் கொண்டிருக்கிறது தமிழகத் தமிழினம் எந்த அறிவிப்பும் இல்லாமல் இருப்பதை எல்லாம் கைவிட்டு இரவோடு இரவாக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கள்ளத்தோணி ஏறி நிறைவேறாக் கனவுகடன் புலம் பெயர்வது ஈழத் தமிழினம் குக்கிராமத்துக் குப்பாயியின் குழந்தையும் மம்மி டாடி என்று பேச ஆங்கிலப்பள்ளிகக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது தமிழகத் தமிழினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் தீவைத்துக் கொத்தப்பட்ட பின்னும் உலகளாவிய முறையில் இணையத் தமிழில் பல சோதனைகளை மேற்கொண்டுள்ளது ஈழத் தமிழினம் இந்த இரண்டு இனங்களையும் ஒரே தமிழினம் என்று என்னால் அடையாளப்படுத்த முடியாது இதை இத்துடன் நிறுத்திவிட்டு மீண்டும் ஈழத் தமிழர் என்ற பிரச்சினைக்குப் போவோம் அறுபதுகளில் ஈழத் தமிழர் பிரச்சினையாக இருந்தது பிறகு ஈழத் தமிழரே பிரச்சினை என்றாகி விட்டதற்கு பல நாடுகள் பல அரசியல் கட்சிகள் பல அரசியல் கட்சித் தலைவர்கள் பல இயக்கத் தலைவர்கள் காரணமாக இருந்ததுடன் இந்த அடையாளப்படுத்தலும் ஒரு காரணம் இந்தியாவில் இந்துத்துவவாதிகள் அவர்கள் என்று இஸ்லாமியரை அடையாளப்படுத்துவதுபோல ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் அனைவரையுமே அவர்கள் என்று அமெரிக்கா அடையாளப்படுத்துவதுபோல இன்று தீவிரப்பட்ட பிரச்சினையாக இல்லாமல் முப்பதாண்டுகளாக இந்த அடையாளம் ஈழத் தமிழர்களை வாட்டிக் கொண்டிருக்கிறது இன்று இந்து போன்ற சில பத்திரிகைகளில் மட்டுமே ஆழமான கட்டுரைகளில் விமர்சிக்கப்படும் நாம் அவர்கள் என்ற கருத்தோட்டத்தின் பாதிப்பை ஈழத் தமிழர்கள் பல பத்தாண்டுகளாகவே அனுபவித்து வருகிறார்கள் இதிலும் குறிப்பாக ஈழத் தமிழர் என்றாலே புலிகள் என்ற அடையாளப்படுத்தலாக மாறிவிட்டதுதான் விந்தை இதுபோலவே சர்வதேச அளவில் ஈழத் தமிழர் என்றாலே புலிகள் என்ற கருத்து உருவானால் அதில் வியப்பதற்கு ஏதுமில்லை அவர்களுக்கு இலங்கை இனப்பிரச்சினை புலம்பெயர்ந்த தமிழர் ஈழத்தமிழர் ஈழ இயக்கம் போன்ற வரலாறுகள் தெரிந்திருக்க நியாயமில்லை ஆனால் இந்தியாவின் வடபகுதியில் இருப்பவர்கள் தெற்கே உள்ள தமிழும் தெலுங்கும் மலையாளமும் கன்னடமும் எல்லாமே மதராசிதான் என்றே அடையாளப்படுத்துவதுபோல இந்தியாவில் உள்ள படித்த வர்க்கத்தினர்கூட ஈழத் தமிழர் எவரையும் புலிகள் என்று மட்டும் அடையாளப்படுத்துவதைப் புரிந்து கொள்ள முடியவில்லை இதுவும் ஒருவகையில் இனஆதிக்க மொழியாதிக்க உணர்வின் வெளிப்பாடாகவும் இருக்கிறது எது எப்படியிருந்தாலும் ஈழத்தமிழர் எவரும் புலியாக அடையாளம் காணப்படும் அபாயம் தொடர்ந்தே வந்திருக்கிறது இதனால் ஏற்படும் வேதனையை அனுபவித்தவர் மட்டுமே உணர முடியும் அதுவும் தொப்புள்கொடி உறவு உள்ள நாட்டில் இந்த அடையாளப்படுத்தலின் வேதனை அனுபவிக்கப்படுமானால் அந்த வேதனை இன்னும் அதிகமாக இருக்கும் சேரனின் இந்த நூலில் உள்ள ஒரு கட்டுரை அங்கதச்சுவையுடன் எழுதப்பட்டிருக்கிறது என்றாலும் அதன்பின்னே ஒளிந்துள்ள வேதனையை உணர முடிகிறது இந்த நூலில் சர்வதேசப் பிரச்சினைகள் பலவும் அலசப்பட்டுள்ளன என்றாலும் குறிப்பாக இந்த ஒரு அனுபவக்கட்டுரை அவர் அனுபவித்த வேதனையை நானே அனுபவித்ததாக உணரச் செய்தது நேபாளத்தில் சர்வதேச மன்னிப்புச் சபை ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் நடத்திய ஒரு மாநாட்டில் பங்கேற்க சேரன் கோல்கத்தா வழியாகச் செல்ல நேர்கிறது கோல்கத்தா விமான நிலையத்தில் அவர் எதிர்கொண்ட சிக்கல்தான் இந்த அனுபவம் கட்டுரையின் இறுதியில் எழுதுகிறார் யாருக்காவது நேபாளம் பூடான் திம்பு என்ற போகிற உத்தேசம் இருந்தால் சிங்கப்பூர் பாங்காக் ஊடாகச் செல்லவும் பயணம் தொலைவு பணமும் அதிகம் எனினும் புண்ணிய பாரதத்தினால் புண்படாமல் போய்ச் சேருவீர்கள் இந்தச் சொற்றொடரின் அங்கதத்தைப் புரிந்து சிரிக்க வேண்டும் ஆனால் சிரிப்பு வரமறுக்கிறது அடையாளப்படுத்தலின் முழுஅர்த்தம் அங்கே புரிகிறது தமிழர் அனைவரும் புலிகள் என்று அடையாளம் காணப்படுவது ஒருபுறம் இருக்க சார்புநிலை எடுக்காத ஈழத் தமிழர்கள் எவரும் புலிகளின் எதிரிகளாக புலிகளால் அடையாளம் காணப்படும் அபாயமும் ஈழத் தமிழர்களுக்கு உண்டு மற்ற அடையாளப்படுத்தல்களைவிட இந்த அடையாளப்படுத்தலுக்குக் கொடுக்கும் விலை மிக உயர்ந்த விலையாக இருக்கும் புலிகளின் அகராதியே வேறு என்பதை அண்மை வரலாற்றை அறிந்த நாம் விவாதிக்க வேண்டியதில்லை எனவேதான் இன்னொரு கட்டுரையில் ஒன்றல்ல பல கட்டுரைகளில் புலிகள்மீதான பார்வை வெளிப்படும்போது சேரனின் நேர்மை வெளிப்படுகிறது சேரனின் நண்பர் சபாலிங்கம் பாரிஸ் நகரில் சுட்டுக்கொல்லப்படுகிறார் புலிகளின் மறுப்பாளர்கள் ஈழத்தில்தான் இருக்க வேண்டும் என்பதில்லை பத்மநாபா இருந்த சென்னை என்றாலும் சரி சபாலிங்கம் இருந்த பாரிசானாலும் சரி புலிகளால் அடையாளம் காணப்பட்டவர்களின் கதி அதோ கதிதான் இந்தப் படுகொலைக்கு புலிகள்தான் காரணம் என்று தனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்று சேரன் குறிப்பிட்டாலும் கேள்விகளுக்கு அப்பாலான ஒரு தலைமைப் பீடமும் நம்பிக்கையும் தலைவர்மீதான விசுவாசத்தையும் தவிர வேறெதையுமே கருதாத ஒரு விடுதலைப்பட்டாளமும் அது எவ்வளவு சாமர்த்தியம் மிக்கதாக இருந்தாலும் அது உண்மையான விடுதலையைப் பெற்றுத் தந்துவிடப் போவதில்லை இது வரலாற்றின் துயரம் துயரத்தின் வரலாறு பேனா முனையை துப்பாக்கிக் குண்டுகளால் சிதைப்பதுதான் மாவீரம் என்பது எங்கடைய கருத்தியலாக மாறி விட்டால் எங்கடைய தேசத்தின் கல்லறைக்குள் ஒரு எலும்புக்கூடுகூட மிஞ்சாது என்கிற வாசகங்கள் ஈழப்போராட்டத்தின் திசைவழியைக் கண்டு வேதனைப்படுகிற ஒரு மனதின் குரல்கள் ஈழத் தமிழர்களையே முஸ்லீம்கள் மற்றவர்கள் என்று புலிகள் அடையாளப்படுத்துவதை ஈழத்தின் தேசியத் தற்கொலை என்ற கட்டுரை விவரிக்கிறது பாலஸ்தீனத்தை ஒப்பிட்டுக்காட்டும் சேரன் வடக்கிலிருந்து முஸ்லீம் மக்களை விரட்டியடிப்பது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு குறுக்குவழி என்று யாராவது நினைத்தால் அதைவிட மூடத்தனம் வேறு ஒன்றுமில்லை ஈழத்தின் தேசியத் தற்கொலைதான் இது முஸ்லிம் மக்களை அடித்துத் துரத்தி விட்டு உருவாக்கப்படும் ஈழம் இஸ்ரேலாகத்தான் இருக்குமே தவிர ஈழமாக இருக்க முடியாது என்கிறார் தமிழ்த் தேசியவாதத்தில் நோய்க்கூறாகப் பரவி வரும் முஸ்லிம் எதிர்ப்பையும் ஆக்ரோஷமாக எதிர்க்க வேண்டும் என்கிறார் தேசியவாதத்தின் எல்லைகள் என்கிற கட்டுரை இன அடையாளப்படுத்தலை விவாதிக்கிறது தேசியவாதத்தின் பொதுவானதும் குறிப்பானதுமான வரலாற்றுப் பாடங்கள் சுட்டுவது என்னவென்றால் தேசியவாதம் மற்றவர்களை அல்லது வெளியார்கள் என்று தான் உருவகிப்பவர்களை விரட்டுகிறது அல்லது கொல்கிறது யார் இந்த வெளியார்கள் என்பது காலத்துக்கும் அரசியல் சமூக வரலாற்றுத் தேவைகளுக்கும் ஏற்ப உருவகித்துக் கொள்ளப்படுவது வழக்கம் சிங்கள பௌத்த தேசியவாதத்திற்கு தமிழர்கள் முஸ்லிம்கள் மலையாளிகள் அனைவரும் வெளியார் இந்துத் தேசியவாதிகளுக்கு முஸ்லீம்கள் வெளியார் ஈழத் தமிழ் தேசியவாதத்திற்கு இப்போதைக்கு முஸ்லீம்கள் வெளியார் இத்தகைய வெளியார் என்ற உருவகிப்பும் வெளியார் நீக்கமும் தேசிய வாதங்களுக்கு அடிப்படையிலேயே ஒரு ஜனநாயக இயல்பைத் தருகின்றன இன்னொரு தளத்தில் தன்னுடைய இருப்பையும் உன்னதத்தையும் வலியுறுத்த எல்லாத் தேசியவாதங்களும் கடந்துபோன பொற்காலங்களின் வரலாற்று இலக்கிய கலாச்சார மேன்மைகளிலிருந்து தமக்குத் தேவையான தமது இன்றைய அரசியலுக்குச் சாதகமான விவரங்களையும் அம்சங்களையும் மட்டுமே பொறுக்கி எடுத்துத் தமது அடையாளத்தை நிறுவுகின்றன என்று தேசியவாதப் பிரச்சினையை சர்வதேச வரலாறுகளை ஒப்பிட்டுச் சுட்டிக்காட்டுகிறது இக்கட்டுரை இதற்கு மிகச்சிறந்த உதாரணம் இப்போது எழுப்பப்பட்டுள்ள ராமர் சேது பிரச்சினை ஆட்சியில் இருந்தபோது சேதுசமுத்திரம் திட்டத்தை எந்தக் கட்சி அங்கீகரித்ததோ அதே கட்சி இப்போது முழுக்கரணம் அடித்து திட்டத்தை எதிர்க்கிற விந்தை இத்தகைய தேசியவாதத்தினால் மட்டுமே சாத்தியம் விடுதலையும் தேசிய விடுதலையும் எங்கடைய புரிந்துகொள்ளலின்படி சமத்துவம் சுதந்திரம் மானுடம் ஆகிய விழுமியங்களின் மேல் கட்டப்படுவது இந்த சமத்துவம் இனத்துவ சமத்துவம் மட்டுமல்ல பொருளாதார சமத்துவம் பால் அடிப்படையிலான சமத்துவம் போன்ற அனைத்தையும் உள்ளடக்க வேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்துகிறது ஆனால் இது நிறைவேறுமா என்கிற ஐயப்பாடுடன்தான் கட்டுரை முடிகிறது வதைமுகாம்கள் எழுப்புகிற கேள்விகள் என்னும் கட்டுரை நாஜி கொலை முகாம்களைப் பற்றி விளக்கிவிட்டு நீங்களே சிந்திக்க வேண்டும் என்ற வேண்டுகோடன் முடிகிறது நாஜிகனின் கொலை முகாம்கள் வரலாற்றின் ஒருபக்கமாக ஆவணங்களுக்குள் சென்று விட்டது என்று நாம் அமைதி கொள்ள முடியாது பல்வேறு வடிவங்களிலும் பல்வேறு அரசியலுக்கூடாகவும் இத்தகைய பயங்கரங்களின் கூறுகள் மேலெழுவதை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வளர்ந்துவரும் நவ நாஜிகளிலும் இன்று பர்க்கிறோம நிறவெறியும் இனவெறியும் இன்னொருமுறை மனிதகுல அழிப்புகளுக்குக் காரணமாகாது என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை நீங்கள் பயப்படுகிறீர்கள் பயப்படுவதில் அர்த்தமில்லை மனிதநேயம் எங்கிருந்து ஆரம்பமாகிறது என யோசித்துப் பாருங்கள் உங்கள் அயலவர்களை உண்மையாக இதயபூர்வமாக உங்களால் நேசிக்க முடிகிறதா என்று உங்கள் மனச்சாட்சியைக் கேட்டுப் பாருங்கள் என்கிறார் சேரன் சேரன் நிச்சயம் வன்முறைவாதி அல்ல என்றாலும் காந்தியவாதி என்றும் கருதிவிட இயலாது ஆனால் இங்கே தேசியவாதத்துக்கு மருந்தாக அவர் குறிப்பிடுகிற வழி உண்மையில் பயன்தரக் கூடியதுதானா என்பதில் அவருக்கும் சந்தேகமாகத்தான் இருக்கும் இறுதிவரிகள் சாத்தியப்பாட்டில் ஐயத்தை எழுப்புவன என்றாலும் இக்கட்டுரையும் ஆழமானது விரிவானது மகாகவியின் மகனான சேரன் கவிதையின் மூலம் அறிமுகமாகி பிறகு பத்திரிகைகளில் கட்டுரைகளும் எழுதினார் இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் முதல் வரையான காலகட்டத்தில் எழுதப்பட்டவை கருத்துச் சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கும் இவரது ஒரு கட்டுரை உயிர் கொல்லும் வார்த்தைகள் என்ற தலைப்பில் அமைந்துள்ளது செல்வி என்பவருக்கு எழுதப்பட்ட கடிதமாக அது இருக்கிறது இலங்கையில் புலிகளால் கடத்திச் செல்லப்பட்ட கவிஞர் செல்வியைத்தான் இவர் குறிப்பிடுகிறார் என்று எண்ணுகிறேன் எங்கடைய வார்த்தைகள் உயிர் கொல்லும் வார்த்தைகள் என்று அவர்கள் கருதினால் கருதட்டும் உயிர் கொல்வது அல்ல எங்கடைய வேலை வார்த்தைகளுக்கு உயிர் கொடுப்பதே எங்கள் வேலை விரைவில் சந்திக்க முடியும் என்று நம்புகிறேன் என்று முடிக்கிறார் இவர் சந்திக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்த அந்த செல்வி இல் புலிகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று நினைவு அமைதி வழி விமர்சனம் என்றாலும் சரி ஆயுதமேந்திய எதிர்ப்பானாலும் சரி புலிகள் தமக்கு வேண்டாதவர் என்று அடையாளம் கண்டவர்கள் எங்கே இருந்தாலும் அவர்களை ஒழித்துக் கட்டுவதில் குறியாக இருப்பவர்கள் இவர்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழ்ப் பத்திரிகையாளர்களும் தமிழ்க் கவிஞர்களும் தலைவர்களும் ஏராளம் கனடாவுக்குப் புலம் பெயர்ந்துவிட்டார் சேரன் யார்க் பல்கலையில் சமூகவியல் ஆசிரியராக இருக்கிறார் இந்த நூல் சேரனே குறிப்பிடுவதுபோல நான்கு தளங்களில் இயங்குகிறது கருத்துச் சுதந்திரம் ஒன்று தேசியவாதம் அடையாளங்கள் எழுப்புற சிக்கல்கள் இரண்டாவது போராட்டங்களும் அதற்கான வழிமுறைகளும் என்பது மூன்றாவது அறம்சார்ந்த அணுகுமுறை என்பது நான்காவது தளம் நியாயமான வழிமுறைகள்தான் நியாயமான முடிவுகளுக்கும் இட்டுச் செல்லும் என்று போராட்ட வழிமுறைகள் பற்றிய இவரது கூற்று காந்தியின் என்பதோடு நெருங்கி நிற்கிறது தமிழ் சுற்றுச்சூழல் சோசலிசம் உலகமயமாக்கம் ஈழத் தமிழர் பிரச்சினை கஷ்மீர் மனித உரிமைகள் என பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் இருக்கின்றன பல கட்டுரைகளில் இடுக்கண் வருங்கால் நகுக என்பதை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் சேரன் வேதனை தரக்கூடிய சில கட்டுரைகளையும்கூட அங்கதச் சுவையுடன் இவரால் தர முடிந்திருக்கிறது ஏ கே இலிருந்து பேஸ்பால் மட்டை வரை என்கிற கட்டுரை ஆயுதப் போராளிகளையும் காய்ச்சுகிறது ஈழத்தைவிட்டு மேலை நாடுகளுக்குப் பறந்தோடிவிட்டவர்களைக் காய்ச்சுகிறது ஆயுதபாணிகளை மட்டுமல்ல நிராயுதபாணிகளையும் குழந்தைகளையும் சுட்டுவீழ்த்துகிற வீரம் எங்களுடையது வீரமும் களத்தே விட்டுவிட்டு பாஸ்போர்ட்டையும் மலசல கூடத்தில் வீசிவிட்டு வெறுங்கையோடு கனடா புக்க வீரத் தமிழ் மறவர்கள் பலர் ஏ கே க்குப் பதில் பேஸ்பால் மட்டைகளை ஆயுதமாகத் தரித்திருப்பதுதான் இன்றைய அவல நிலை இந்த வீரத்தைப் பற்றி எழுதிக்கிழிக்க என்ன இருக்கிறது வெல்பேர் காசில் தூள் கிளப்புகிறது வீரம் என்று முடிகிறது வெல்பேர் காசு என்று இவர் சுருக்கமாக எழுதியிருப்பது எத்தனை பேருக்குப் புரியும் என்று தெரியவில்லை வெளிநாட்டில் தஞ்சம் புகுந்த அகதிகளுக்கு இங்கிலாந்து கனடா நெதர்லாந்து போன்ற நாடுகள் தற்காலிக இருப்பிடமும் செலவுக்குப் பண உதவியும் தருவார்கள் இதை வெல்பேர் நிதி என்பார்கள் குடியுரிமை கிடைக்கும் வரை அல்லது தஞ்சம் அனுமதிக்கப்படும் வரை இருப்பிடம் உணவு போக்குவரத்து எல்லாவற்றுக்கும் அரசின் உதவி கிடைக்கும் இதை வாங்கி திருப்தியாகச் சாப்பிட்டுக்கொண்டு அங்கேயே இருந்து கொண்டு வீரம் பேசுபவர்களைச் சாடுவதாகவும் சொல்லலாம் அந்த வெல்பேர் காசில் ஒரு பகுதி கட்டாயமாக புலிகளால் வசூலிக்கப்பட்டு அது இலங்கையில் ஆயுதங்களுக்குப் பயன்படுவதைக் குறிப்பிடுவதாகவும் சொல்லலாம் எல்லாமே வெல்பேர் காசு என்பது புரிந்தவனுக்கு மட்டுமே இதுவும் புரியும் சென்றிடுவீர் எட்டுத் திக்கும் என்கிற கட்டுரையில் புலம்பெயர்ந்து உலகெலாம் பரவியிருக்கிற தமிழர்களை எட்டுத் திக்கும் சென்றாயிற்று கொலைச் செல்வங்களுக்குப் பதில் கலைச் செல்வங்களைக் கொண்டு வந்துசேருங்களேன் தயவுசெய்து என்று வேண்டுகிறார் பல்லவ புராணம் என்று ஒரு கட்டுரை தமிழ்ப் பத்திரிகையாளர்களை நகைச்சுவையாகச் சாடுகிறது இவர் புதுவைக் கல்லூரியில் பேராசிரிய நண்பரை சந்திக்கப் போயிருந்தாராம் அப்போது அங்கே வருகிறார் ஒரு தமிழ்ப் பத்திரிகையாளர் இவர் இலங்கைக் கவிஞர் என்று தெரிந்ததும் தன் பத்திரிகைக்கு ஒரு கவிதை கேட்கிறார் இவர் தயங்க கடைசியாக பத்திரிகயாளர் கூறுகிறார் நானே ஒரு நாலுவரி எழுதி உங்க பேரில போட்டுடட்டுமா தமிழ்ப் பத்திரிகையாளர்களை இதைவிட மோசமாக சாட முடியாது சிந்தனையைத் தூண்டும் இக்கட்டுரைத் தொகுப்பை காலச்சுவடு வெளியிட்டுள்ளது விலை ரூபாய் நூலில் உள்ள கட்டுரைகள் அனைத்துமே ஆழமானவை விவாதத்துக்கு உரியவை இவற்றைப் படித்துப் புரிந்து கொள்ளும் அளவுக்கு தமிழ் வாசக வட்டம் விரிவடைய வேண்டும் என்பதே என் ஆவல் பதிவர் புதியவன் பக்கம் வருக இணைக புதியவன் என்னைப் பற்றி என்னைப் பற்றி புதியவன் பக்கம் பதிவுகள் அடையாளம் ஆட்டக்களத்தில் இந்தியா ஒரு மீள்பார்வை வாசகர் விருப்பம் இந்தியாவிடமிருந்து அல்ல இந்தியாவில் விடுதலை வேண்டும் ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தேசத்துரோக கோஷம் எழுப்பியதாக திரிக்கப்பட்ட வீடியோக்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டு நாட்கள் ச நான் ஏன் நாத்திகன் பகத் சிங் நான் ஏன் நாத்திகன் பகத் சிங் ஒரு புதிய கேள்வி எழுந்திருக்கிறது எல்லாம் வல்ல எங்கும் நிறைந்திருக்கிற எல்லாம் அறிந்த கடவு தமிழ் இலக்கியத்தில் அறிவியல் தில்லித் தமிழ்ச் சங்கத்தில் அன்று நடைபெற இருந்த கருத்தரங்கில் இருவர் வர இயலவில்லை என்பதால் நான் பேச ஒப்புக்கொண்டேன் நண்பர் த மோடி சொல்லாத விஷயங்கள் என்பவர் என்ற வலைதளத்தில் என்ற தலைப்பில் கண்ணதாசன் ஒரு கவிஞன் ஒரு பார்வை சில கோணங்கள் நாக வேணுகோபாலன் கண்ணதாசன் பிறப்பு ஜூன் மறைவு அக்டோபர் இக்கட்டுரை எழுதிய நாக வேணுகோபாலன் நாகப்பட்டினத் புகை உயிருக்குப் பகை அனுபவக் கட்டுரைத் தொடர் பகுதி அப்பா ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டவர் ஆயுளில் பெரும்பகுதி ஆசிரியராக பள்ளிக்கூடத்தில் தொண்டைதீரக் கத்தி அப்துல் ரகுமான் என்ற கவி ஆளுமை தில்லிகை இலக்கிய வட்டத்தில் அன்று நிகழ்த்திய உரை இது கவிஞர் அப்துல் ரகுமான் நினைவில் நடத்தப்படும் கூட்டம்தான் இஸ்லாமிய கவர்னரும் அவரது அதிகாரங்களும் இந்தியாவுக்கு குடியரசுத் தலைவர் இருப்பது போல மாநிலத்துக்கு கவர்னர் ஆனால் குடியரசுத் தலைவர் மக்கள் பிரதிநிதிகளால் தேர்வு செய்யப்படுகிறார நூல் நூலகம் கல்வி மனித இனமும் இப்பூவுலகின் எல்லா உயிர்களைப் போன்ற மற்றொரு உயிரினம்தான் ஆயினும் மற்ற உயிரினங்களுக்கும் மனித இனத்துக்கும் முக்கிய வேறுபாடு உண ஸ்போக்கன் இங்கிலீஷ் திங்கள்கிழமை வானொலி நிலையத்துக்குச் செல்வதற்காக வழக்கம்போல பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தேன் வழக்கம்போல கையில் ஸ்கிரிப்டும் ஒரு புத்தகமும் சுவைப்போர் தேடல் தில்லிப் பதிவர்கள் ஒரு தத்துவக் குறிப்பு நட்பாஸ் அவரும் நானும் தொடர் பகுதி நான்கு ஆச்சி ஆச்சி இதுவும் பெண்ணியம் உயிரோடை பின்னல் சித்திரங்கள் எம் ஏ சுசீலா கையளவு மண் உளியின் வலி கோவை தில்லி வண்ணங்களின் சங்கமம் சந்தனார் மவுனத்தின் மரணம் சிறு முயற்சி மொழியே நம் அடையாளம் வாசகர் விருப்பம் அப்துல் ரகுமான் என்ற கவி ஆளுமை தில்லிகை இலக்கிய வட்டத்தில் அன்று நிகழ்த்திய உரை இது கவிஞர் அப்துல் ரகுமான் நினைவில் நடத்தப்படும் கூட்டம்தான் இஸ்லாமிய ஈரோடு தமிழன்பனுடன் நேர்காணல் அண்மையில் தமிழன்பனின் பிறந்தநாளை முன்னிட்டு ஆங்கில ஹிண்டு நாளிதழில் ஒரு கட்டுரை வந்திருந்தது அதைப் பார்த்ததும் இல் தமிழன்பனுக்கு நூல் நூலகம் கல்வி மனித இனமும் இப்பூவுலகின் எல்லா உயிர்களைப் போன்ற மற்றொரு உயிரினம்தான் ஆயினும் மற்ற உயிரினங்களுக்கும் மனித இனத்துக்கும் முக்கிய வேறுபாடு உண நான் ஏன் நாத்திகன் பகத் சிங் நான் ஏன் நாத்திகன் பகத் சிங் ஒரு புதிய கேள்வி எழுந்திருக்கிறது எல்லாம் வல்ல எங்கும் நிறைந்திருக்கிற எல்லாம் அறிந்த கடவு வெறும் சோற்றுக்கே வந்ததிங்கே பஞ்சம் நண்பர்களுக்கு வணக்கம் கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நம் அனைவரின் வாழ்க்கையையும் புரட்டிப்போட்டு விட்டது நடுத்தர வர்க்கம் எ
நல்லெண்ணெய் குளியலின் மூலம் மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு முடி அடர்த்தியாகவும் இருக்கும் உடல் சூட்டை தணிக்கும் நல்லெண்ணெய் கொண்டு வாரம் ஒருமுறை தலைக்கு மசாஜ் செய்து குளித்தால் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் வெளியேறும் பளிச் பற்களுக்கு தினமும் காலையில் நல்லெண்ணெயால் ஆயில் புல்லிங் செய்ய வேண்டும் அதாவது வாயில் சிறிது நல்லெண்ணெய்யை ஊற்றி ஐந்து முதல் நிமிடங்கள் வரை கொப்பளிக்க வேண்டும் ஆரோக்கியமான இதயம் தூக்கமின்மையால் அவஸ்தைப்படுபவர்கள் வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபட்டு நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம் கண்களுக்கு நல்லது கம்ப்யூட்டர் முன்பு நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால் கண்கள் சிவப்பாகி அதன் ஆரோக்கியம் பாழாகும் எனவே வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்வதன் மூலம் பார்வை மற்றும் கண்களின் ஆரோக்கியம் மேம்படும் புற்றுநோய் நல்லெண்ணெயில் மக்னீசியத்துடன் பைட்டேட் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் நிறைந்து உள்ளதால் அதனை உணவில் சேர்க்கும் போது உடலில் தங்கியிருக்கும் புற்றுநோய் செல்களை அழித்து புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம் சரும பராமரிப்பு நல்லெண்ணெயில் துத்தநாகம் நிறைவாக உள்ளது இது சருமத்துக்கு மிகவும் அவசியமான தாதுஉப்பு இது சருமத்தின் நெகிழ்ந்து கொடுத்து பழைய நிலைக்குத் திரும்ப உதவும் தன்மையை கொடுக்கிறது சருமத்தை மென்மையாக்குகிறது உடல் ரிலாக்ஸ் பொலிவான சருமம் நிம்மதியான தூக்கம் வலுவான எலும்புகள் முக்கிய குறிப்புகள் குறிப்பு ஆயில் மசாஜ் வாதம் இடுப்பு முழங்கால்வலி மூட்டுவலி போன்ற பிரச்னை இருப்பவர்கள் ஆயில் மசாஜ் செய்து குளிப்பது நல்லது சைனஸ் சளித்தொல்லை இருப்பவர்கள் கடைகளில் கிடைக்கக்கூடிய சுக்குத் தைலத்தை வாங்கி தேய்த்துக் குளிக்கலாம் அருகம்புல் தைலம் வெட்டிவேர் தைலம் போன்றவையும் குளியலுக்கு உகந்தது குளித்து முடித்தவுடன் தலையை நன்றாக ஈரம் போகத் துவட்டிவிட வேண்டும் குறிப்பு உண்ணக் கூடாது பழங்கள் மோர் தயிர் பால் குளிர் பானங்கள் ஐஸ்கிரீம் போன்ற எந்தக் குளிர்ச்சியான பொருட்களையும் எண்ணெய் தேய்துக் குளித்த நாளில் உண்ணக் கூடாது குறிப்பு தவறான கருத்து பொதுவாகவே எண்ணெய் தேய்த்துக் குளித்த தினத்தில் தம்பதியர் உடலுறவில் ஈடுபடக் கூடாது என்ற கருத்து நிலவுகிறது இது முற்றிலும் தவறான கருத்தாகும் ஆனால் அன்றைய தினம் உச்சி வெயிலில் எங்கும் செல்லக் கூடாது வெளிச்சம் படும்படி வெளியில் அமர்ந்திருக்கலாம் குறிப்பு ஆயுர்வேத முறை பாரம்பரியமாக மேற்கொள்ளும் ஒரு செயல் தான் வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுப்பது இது ஒருவகையான ஆயுர்வேத முறை அதிலும் நல்லெண்ணெய் பயன்படுத்தி தான் எண்ணெய் குளியல் எடுக்க வேண்டுமென்ற ஐதீகம் உள்ளது குறிப்பு சமீபத்திய ஆய்வுகள் நம்முடி வளர்ச்சிக்கு உதவுதல் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதித்தன்மைக்கு உதவுதல் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல் இதயத் துடிப்பை சீராக்குதல் மனப்பதற்றத்தைத் தவிர்த்தல் புற்றுநோய் செல்களை அழித்தல் உடல் முழுமைக்குமான ஆரோக்கியத் தீர்வை வழங்குவதில் நல்லெண்ணெய்க்கு நிகர் வேறு ஏதும் இல்லை என்று சொல்லலாம்
தேர்தல் பிரச்சாரங்களில் பார்த்து பேச வேண்டும் இல்லை என்றால் ஈரை பேனாக்கி பேனை பெருமாள் ஆக்கி விடுவார்கள் அந்த வகையில் தற்போது திமுக சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது தமிழக முதல்வர் குறித்து ஆ ராசா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது தமிழகத்தில் வருகிற ஏப்ரல் ஆம் தேதி தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ ஜெயலலிதா மு கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெறும் முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும் தேர்தல் நெருங்க இருப்பதால் பல்வேறு கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இப்படி ஒரு நிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ ராசா சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது முதல்வர் பழனிசாமி குறித்து பேசியவை புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது இந்த பிரச்சாரத்தின் போது திமுக தலைவர் ஸ்டாலினை புகழ்ந்தும் முதலைச்சர் எடப்பாடி பழனிசாமியை இழிவாக பேசினார் முறைப்படி பெண் பார்த்து நிச்சயம் செய்து திருமணம் நடத்தி சாந்தி முகூர்த்தம் நடத்தி நாட்கள் கழித்து சுகப் பிரசவத்தில் பிறந்தவர் ஸ்டாலின் நல்ல உறவில் ஆரோக்கியமாக சுகப் பிரசவத்தில் பிறந்த குழந்தை ஸ்டாலின் கள்ள உறவில் பிறந்த குறை பிரசவம் எடப்பாடி அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவு படுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது இதை எல்லோருமே மனதிலே வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரும் விரும்பிய சமூகநீதி ஆகும் கனிமொழி குறை பிரசவ குழந்தையை காப்பாற்ற டெல்லியில் இருந்து மோடி என்ற டாக்டர் வருகிறார் என்று பேசி இருந்தார் ஆ ராசாவின் இந்த பேச்சை அதிமுக மற்றும் பா ஜ க கட்சியை சேர்ந்த பலர் கண்டித்தனர் இப்படி ஒரு நிலையில் பிரச்சாரத்தின் போது அவதூறாக பேசுவதை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் பிரச்சாரத்தில் ஈடுபடும்போது கட்சியினர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணியக் குறைவான சொற்களை வெளிப்படுத்திடக் கூடாது அப்படிப்பட்ட சொற்கள் உதிர்த்திடுவதைக் கண்டிப்பாகத் தவிர்த்திட வேண்டும் என்பதையும் அத்தகைய பேச்சுகளைக் கட்சித் தலைமை ஒருபோதும் ஏற்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் விளம்பரம் தி மு க வினரின் பேச்சுகளைத் திரித்து வெட்டி ஒட்டி தவறான பொருள்படும்படி செய்து வெற்றியைத் தடுக்க நினைத்து மூக்குடைபட்டவர்கள் இப்போதும் தோல்வி பயத்தால் அதே பாணியை மேற்கொண்டிருக்கிறார்கள் தி மு க வினர் சொற்களை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும் கண்ணியக் குறைவை தலைமை ஏற்காது திமுக கூட்டணியின் வெற்றி உறுதியாகவும் வலிமையாகவும் மக்களால் தீர்மானிக்கப்பட்டுவிட்ட நிலையில் கட்சியினரின் பேச்சுகளைத் திரித்து வெட்டி ஒட்டி தவறான பொருள்படும்படி செய்து வெற்றியைத் தடுக்க நினைத்து மூக்குடைபட்டவர்கள் இப்போதும் தோல்வி பயத்தால் மீண்டும் அதே பாணியை மேற்கொண்டிருக்கிறார்கள் அவர்களது எண்ணம் ஈடேறாத வகையில் கவனத்துடன் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் எனக் கட்சியினரைக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் ஸ்டாலின் ஆ ராசா தேர்தல் அது ஸ்க்ரிப்ட்ல இல்லாத வசனம் தான் தன் படத்தில் தந்தை குறித்து அறியாமல் பேசியுள்ள சிவகார்த்திகேயன் வீடியோ இதோ எவ்ளோ வலி இந்த மனசனுக்குள்ள லோ நெக் ஜாக்கெட்டில் மல்லு ஆன்டி போல படு கிளாமரில் மாளுமா லேட்டஸ்ட் புகைப்படங்கள் அரசியல் விஜய் மட்டும் அரசியலுக்கு வந்தால் திருமாவளவன் ஓபன் டால்க் இத நீங்க எதிர்பார்த்திருக்க மாடீங்க அரசியல் பா ஜ க வானதி சீனிவாசனின் மகன் பயணித்த கார் கவிழ்ந்து விபத்து என்ன நடந்தது அரசியல் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பத்மபிரியா விலகல் காரணம் இது தானாம் அவங்க வாங்கிய ஓட்டு எவ்ளோ தெரியுமா எல்லாம் போச்சே சமூக வலைத்தளம் டேக் மேகம் அஜித் கமல் சமந்தா சர்கார் சிம்பு சிவகார்த்திகேயன் சூர்யா ஜூலி நயன்தாரா பாண்டியன் ஸ்டோர்ஸ் பிக் பாஸ் மாஸ்டர் மீரா மிதுன் மெர்சல் ரஜினி லாஸ்லியா வனிதா விஜய் விஜய் சேதுபதி
பயணங்களில் ஹோட்டலில் கிடைக்கும் உணவுகளை நாம் சாப்பிடலாம் ஆனால் அதே உணவுகளைக் குழந்தைக்குக் கொடுக்க முடியுமா நிச்சயம் முடியாது இந்தச் சமயங்களில் நமக்கு பெரிதும் கைகொடுக்கும் உணவுகள் இன்ஸ்டன்ட் மிக்ஸ் இதையே கடையில் வாங்கினால் அதில் என்ன கெமிக்கல்ஸ் கலந்திருக்குமோ என அச்சம் ஏற்படும் அதையே பாதுகாப்பான முறையில் நீங்கள் செய்தால் நிச்சயம் உங்கள் குழந்தைக்கு இதைத் தைரியமாகக் கொடுக்க முடியும்தானே குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள் ஆர்கானிக் செர்டிஃ பைடு லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ் ஆரோக்கியத்தைத் தந்து உங்களின் அவசர தேவைக்கும் உதவும் இந்த இன்ஸ்டன்ட் கிச்சடி மிக்ஸை எப்படிச் செய்வது எனப் பார்க்கலாமா கிச்சடி மிக்ஸ் செய்ய குறைவான நேரமே தேவைப்படும் அதுவும் இந்த கிச்சடி மிக்ஸை நீங்கள் சமைக்காமலே பயன்படுத்தலாம் இதை தயாரிக்கும் முறையும் வெகு சுலபம்தான் பயணத்தின் போது இதில் சிறிது வெந்நீரை கலந்தால் போதும் உங்கள் குழந்தைக்கான உணவுத் தயாராகிவிடும் பாதுகாப்பான ஆரோக்கியம் நிறைந்த உணவு உடனடியாக ரெடியாகிவிடும் இன்ஸ்டன்ட் கிச்சடி மிக்ஸ் ரெசிப்பி தேவையானவை அரிசி கிராம் பாசிப்பருப்பு கிராம் மிளகு முதல் சுவைக்கேற்ப சீரகம் கால் டீஸ்பூன் பெருங்காயம் ஒரு சிட்டிகை தேவையெனில் செய்முறை அரிசி மற்றும் பாசிப்பருப்பை எடுத்து நன்றாகக் கழுவிய பின் அவற்றை வெயிலில் காய வைக்கவும் வாணலியில் அரிசியைச் சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள் அரிசியின் நிறம் மாறி மினுமினுப்பாகும் வரை அரிசியை வறுக்கவும் அதாவது படத்தில் உள்ளது போல நன்றாகப் பொரிந்து வரும் வரை வறுக்கவும் பின்னர் பாசிப் பருப்பு மிளகு சீரகம் பெருங்காயம் ஆகியவற்றைக் கலந்து நன்றாக வறுக்கவும் பின் ஆறவைத்து இவற்றைப் பொடியாக்கி கொள்ளுங்கள் இந்தப் பொடியை நன்றாக சல்லடையில் சலித்து எடுத்துகொள்ளவும் இதைக் காற்றுப்புகாத டப்பாவில் வைத்து மிதமான அல்லது குளிர்ச்சியான இடத்தில் வைக்கவும் குழந்தைகளுக்கு இன்ஸ்டன்ட் கிச்சடியைச் செய்வது எப்படி நான்கு டேபிள்ஸ்பூன் இன்ஸ்டன்ட் மிக்ஸை எடுத்துக்கொள்ளுங்கள் தேவையைப் பொறுத்து நீங்கள் அளவை அதிகரித்துக் கொள்ளலாம் மில்லி அளவு தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைக்கவும் அதை இன்ஸ்டன்ட் பொடியில் கொட்டி மூடிப்போட்டு ஐந்து நிமிடங்கள் வரை காத்திருக்கவும் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு இதனை கட்டி இல்லாமல் நன்றாகக் கிளறிக்கொள்ளவும் சுவைக்காக சிறிதளவு நெய்யைச் சேர்த்துக்கொள்ளலாம் அவ்வளவுதான் சுவைமிக்க ஆரோக்கியமுள்ள இன்ஸ்டன்ட் கிச்சடி தயார் இதில் மாவுச்சத்து புரதச்சத்து ஆகியவை உள்ளதால் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் வயிறு நிறைந்த உணர்வைத் தரும் இதில் உள்ள மிளகு சீரகம் குழந்தையின் செரிமானத்துக்கு உதவும் இந்த ஈஸி ஹெல்த்தி உணவைச் செய்து பாருங்கள் குழந்தைக்குக் கொடுங்கள் வீட்டில் இதைச் செய்வதற்கு உங்களுக்கு நேரமில்லையா கவலையே வேண்டாம் எங்களிடம் கிடைக்கும் இயற்கையான முறையில் சுத்தமாக தயாரிக்கப்பட்ட இன்ஸ்டன்ட் கிச்சடி மிக்ஸ் வாங்கி பயன்படுத்துங்கள் இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல் ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க மேலும் படிக்க இன்ஸ்டன்ட் கேழ்வரகு கஞ்சி மிக்ஸ் பயணத்துக்கு சிறந்த கம்பு பவுடர் மிக்ஸ் ரெசிபி ஹோம்மேட் செர்லாக் ஹெல்த் மிக்ஸ் ஆப்பிள் கிச்சடி பார்லி வெஜிடபிள் கிச்சடி மாத குழந்தைகளுக்கான டேஸ்டி தயிர் கிச்சடி இன்ஸ்டன்ட் ஃபுட் மிக்ஸ் கிச்சடி பயணம் போது சாப்பிடுவது இன்ஸ்டன்ட் கிச்சடி மிக்ஸ் ஈ ஸ்டோருக்கு வாங்க நான் ஹேமா அல்லது டாக்டர் மம்மி இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள் புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன் மேலும் படிக்க
அணு குறித்து அறிவியல் ஆர்வம் காட்டியது சில நூறு வருடங்களாகத்தான் எண்ட்றாலும் நம் முன்னோர்கள் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே அணுவைப் பற்றி அறிந்திருந்தனர் முதலில் நம் முன்னோர்கள் சொன்னதையும் பிறகு இன்றைய விஞ்ஞானம் சொல்வதையும் அணு திருமூலர் தலையங்கம் ஒரே சுகாதாரம் உலகின் குருவாகும் சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற ஜி மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஒரே பூமி ஒரே சுகாதாரம் ஆரோக்கியம் என்பதை வலியுறுத்தி பேசியுள்ளார் இதை அவர் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஜி மாநாட்டிலும் வலியுறுத்தியிருந்தார் வசுதேவ குடும்பம் உலகமே
பரிசுத்த பைபிளை உறுதிப்படுத்தும் குர் ஆன் பரிசுத்த பைபிளை உறுதிப்படுத்தும் குர் ஆன் வசனங்களின் பட்டியல் தொகுத்தவர் சாம் ஷமான் பரிசுத்த பைபிளை குர் ஆன் எப்படி நோக்குகிறது என்பதைப் பற்றி அதிகமாக நாம் எழுதியுள்ளோம் அவைகளை இங்கு சொடுக்கி படிக்கலாம் நாம் அனேக கட்டுரைகளை எழுதியுள்ளோம் மேலும் இஸ்லாமியர்களோடு அனேக விவாதங்களில் பங்கு பெற்று குர் ஆன் எப்படி பரிசுத்த பைபிளை நோக்குகிறது உறுதிப்படுத்துகிறது மேலும் கனப்படுத்துகிறது என்பதை விளக்கியுள்ளோம் தற்காலத்தில் பைபிள் பற்றி இஸ்லாமியர்கள் கருதுவது போல குர் ஆனோ அல்லது ஆரம்பகால இஸ்லாமியர்களோ கருதவில்லை அதாவது பைபிள் பாதுகாக்கப்படவில்லை என்றோ அல்லது தீர்க்கதரிசிகள் மற்றும் இறைத்தூதர்களின் உண்மையான செய்தியை பைபிள் கொண்டு இருக்கவில்லை என்றோ குர் ஆன் கூறுவதில்லை இந்த கட்டுரையில் நாம் என்ன செய்யப்போகிறோம் என்றால் குர் ஆன் எந்தெந்த வசனங்களில் வெளிப்படையாக முந்தைய தீர்க்கதரிசிகள் மூலமாக கொடுக்கப்பட்ட முந்தைய வேதங்களை உறுதிப்படுத்துகிறதோ அந்த வசனங்களை தொகுத்து கொடுக்கிறோம் இந்த பட்டியலின் மூலமாக வாசகர்களுக்கு நன்மை உண்டாகும் அதாவது எப்படி குர் ஆன் பரிசுத்த பைபிளை உறுதிப்படுத்துகிறது என்ற தலைப்பில் இஸ்லாமியர்களோடு உரையாடும் போது ஒரு கோர்வையான வசன பட்டியலின் இந்த தொகுப்பு அவர்களுக்கு உபயோகமாக இருக்கும் இந்த கட்டுரையில் நாம் முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியிட்ட குர் ஆன் தமிழாக்கத்திலிருந்து வசனங்களை குறிப்பிடுகிறோம் இன்னும் நான் இறக்கிய வேதத் தை நம்புங்கள் இது உங்களிடம் உள்ள வேதத் தை மெய்ப்பிக்கின்றது நீங்கள் அதை ஏற்க மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம் மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள் இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி ஒழுகி வருவீர்களாக குர் ஆன் அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய இந்த குர்ஆன் என்ற வேதம் அவர்களிடம் வந்தது இ ந்த குர்ஆன் வருவ தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக இந்த குர்ஆன் மூலமே அல்லாஹ்விடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள் இவ்வாறு முன்பே அவர்கள் அறிந்து வைத்திருந்த வேதமான து அவர்களிடம் வந்த போது அதை நிராகரிக்கின்றார்கள் இப்படி நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது குர் ஆன் அல்லாஹ் இறக்கி வைத்த திருக்குர்ஆன் மீது ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு சொல்லப்பட்டால் எங்கள் மீது இறக்கப்பட்டதன் மீதுதான் நம்பிக்கை கொள்வோம் என்று கூறுகிறார்கள் அதற்கு பின்னால் உள்ளவற்றை நிராகரிக்கிறார்கள் ஆனால் இதுவோ குர்ஆன் அவர்களிடம் இருப்பதை உண்மைப் படுத்துகிறது நீங்கள் உண்மை விசுவாசிகளாக இருந்தால் ஏன் அல்லாஹ்வின் முந்திய நபிமார்களை நீங்கள் கொலை செய்தீர்கள் என்று அவர்களிடம் நபியே நீர் கேட்பீராக குர் ஆன் யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ அவன் அல்லாஹ்வுக்கும் விரோதியாவான் என்று நபியே நீர் கூறும் நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் குர்ஆனை இறக்கி வைக்கிறார் அது தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது இன்னும் அது வழிகாட்டியாகவும் நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது குர் ஆன் அவர்களிடம் உள்ள வேதத் தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது வேதம் வழங்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வேதத்தைத் தாங்கள் ஏதும் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள் குர் ஆன் நபியே முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் படிப்படியாக அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான் இது இதற்கு முன்னாலுள்ள வேதங்களை உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான் குர் ஆன் நினைவு கூருங்கள் நபிமார் கள் மூலமாக அல்லாஹ் உங்கள் முன்னோர் களிடம் உறுதிமொழி வாங்கியபோது நான் உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கொடுத்திருக்கின்றேன் பின்னர் உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ரஸூல் இறைதூதர் வருவார் நீங்கள் அவர்மீது திடமாக ஈமான் கொண்டு அவருக்கு உறுதியாக உதவி செய்வீர்களாக எனக் கூறினான் நீங்கள் இதை உறுதிப்படுத்துகிறீர்களா என்னுடைய இந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்படுகிறீர்களா என்றும் கேட்டான் நாங்கள் அதனை ஏற்று உறுதிப்படுத்துகிறோம் என்று கூறினார்கள் அதற்கு அல்லாஹ் நீங்கள் சாட்சியாக இருங்கள் நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் ஒருவனாக இருக்கிறேன் என்று கூறினான் குர் ஆன் வேதம் வழங்கப்பட்டவர்களே நாம் உங்கள் முகங்களை மாற்றி அவற்றைப் பின்புறமாகத் திருப்பிவிடுவதற்கு முன்னே அல்லது சனிக்கிழமையில் வரம்பு மீறிய அஸ்ஹாபுஸ் ஸப்து என்றோரை நாம் சபித்த பிரகாரம் சபிக்கும் முன்னே உங்களிடமுள்ள வேதத் தை உண்மையாக்கி அருளப் பெற்ற இ வ்வேதத் தை குர்ஆனை நம்புங்கள் அல்லாஹ்வின் கட்டளை நிறைவேற்றப்பட்டே தீரும் குர் ஆன் மேலும் நபியே முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம் இது தனக்கு முன்னிருந்த ஒவ்வொரு வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது எனவே அல்லாஹ் அருள் செய்த சட்ட திட்டத் தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக உமக்கு வந்த உண்மையை விட்டும் விலகி அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம் உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும் வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம் அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம் ஆனால் அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே இவ்வாறு செய்திருக்கிறான் எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள் நீங்கள் யாவரும் அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத ன் உண்மையி னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான் குர் ஆன் இந்த வேதத்தை அபிவிருத்தி நிறைந்ததாகவும் இதற்குமுன் வந்த வேதங்களை மெய்ப்படுத்துவதாகவும் நாம் இறக்கி வைத்துள்ளோம் இதைக்கொண்டு நீர் நகரங்களின் தாயாகிய மக்காவில் உள்ளவர்களையும் அதனைச் சுற்றியுள்ளவர்களையும் எச்சரிக்கை செய்வதற்காகவும் நாம் இதனை அருளினோம் எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இதை நம்புவார்கள் இன்னும் அவர்கள் தொழுகையைப் பேணுவார்கள் குர் ஆன் இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று அல்லாஹ்வே அதை அருளினான் அன்றியும் அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது ஆகவே இது அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய ரப்பிடமிருந்து வந்தது என்பதில் சந்தேகமேயில்லை குர் ஆன் நிச்சயமாக அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு நல்ல படிப்பினை இருக்கிறது இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை மாறாக இதற்கு முன் உள்ள வேதத் தையும் இது உண்மையாக்கி வைக்கிறது ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும் நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும் ரஹ்மத்தாகவும் இருக்கிறது குர் ஆன் நபியே நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்துள்ள இவ்வேதம் உண்மையானதாகவும் தனக்கு முன்னால் உள்ள வேதத் தை மெய்ப்பிப்தும் ஆகும் நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை நன்குணர்ந்தவன் பார்த்துக் கொண்டிருப்பவன் குர் ஆன் அப்படியல்ல அவர் சத்தியத்தையே கொண்டு வந்திருக்கிறார் அன்றியும் தமக்கு முன்னர் வந்த தூதர்களையும் உண்மைப்படுத்துகிறார் குர் ஆன் இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் நேர்வழி காட்டியாகவும் ரஹ்மத்தாகவும் இருந்தது குர்ஆனாகிய இவ்வேதம் முந்தைய வேதங்களை மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும் இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது குர் ஆன் ஜின்கள் கூறினார்கள் எங்களுடைய சமூகத்தார்களே நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம் அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கின்றது அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மை படுத்துகிறது அது உண்மையின் பக்கமும் நேரான மார்க்கத்தின் பாலும் யாவருக்கும் வழி காட்டுகின்றது குர் ஆன் முந்தைய வேதங்கள் பற்றி குர் ஆனின் நிலைப்பாடு மேற்கண்ட வசனங்களில் வெளிப்படையாக தெரிகிறது குர் ஆன் ஆக்கியோன் தன்னுடைய காலத்தில் வாழ்ந்த யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடம் இருந்த வேதமானது உண்மையான இறைவனின் வார்த்தையாகும் என்று நம்புகிறார் மேலும் அந்த இறைவனின் வார்த்தையாகிய பரிசுத்த வேதாகமம் பாதுக்காக்கப்பட்டுள்ளது அதனை உறுதிப்படுத்துவதே குர் ஆனின் வேலையாகும் என்றும் அவர் நம்புகிறார் எந்த ஒரு நபர் பரிசுத்த பைபிள் மற்றும் குர் ஆனை படிப்பாரோ அவர் குர் ஆனின் வேலை பைபிளை உறுதிப்படுத்துவதே என்பதை அறிந்துக்கொள்வார் இதுவரை நாம் கண்ட விவரங்களின் மூலம் கிடைக்கும் முடிவு என்னவென்றால் குர அன் என்பது ஒரு இறைவனின் வேதமல்ல என்பதாகும் அதாவது எந்த வேலைக்காக குர் ஆன் அனுப்பப்பட்டதோ அந்த வேலையை செய்வதில் முந்தைய வேதங்களை உறுதிப்படுத்துதல் குர் ஆன் தோல்வி அடைந்துவிட்டது மேலும் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் குர் ஆன் தனக்குத் தானே குற்றப்படுத்திவிட்டது அதாவது பைபிள் இறைவனின் வேதம் என்று ஒரு பக்கம் பறைசாற்றுகிறது அதே நேரத்தில் அதே பைபிளின் அடிப்படை கோட்பாடுகளுக்கு சத்தியங்களுக்கு எதிராக தன்னிடம் வசனங்களையும் கொண்டுள்ளது இது தான் தன் மீது தானே மண்ணை வாரி இறைத்துக் கொள்வதாகும்
முகப்பு அழகு உடலிலேயே பாதங்கள் தான் அதிக வறட்சி அடையும் பகுதி ஏனெனில் பாதங்களில் எண்ணெய் சுரப்பிகளே இல்லை எனவே உடலின் நாம் எந்த பகுதிக்கு பராமரிப்புக்களைக் கொடுக்கிறோமோ இல்லையோ பாதங்களுக்கு தவறாமல் சரியான பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் பாதங்களில் வலிமிக்க வெடிப்புக்களை சந்திக்க நேரிடும் உங்கள் குதிகாலில் வெடிப்புக்கள் அதிகமாக இருந்தால் அந்த வெடிப்புக்கள் மிகவும் வலிமிக்கதாக இருந்தால் அதைப் போக்க ஒருசில இயற்கை வழிகள் உள்ளன அந்த வழிகளை தினமும் பின்பற்றி வந்தால் குதிகால் வெடிப்பு விரைவில் காணாமல் போய்விடும் பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மௌத் வாஷ் ஆம் நீங்கள் வாய் கொப்பளிக்க வைத்திருக்கும் மௌத் வாஷ் குதிகால் வெடிப்பைப் போக்கும் ஏனெனில் மௌத் வாஷில் உள்ள உட்பொருட்கள் பாக்டீரியாக்களை அழிப்பதோடு சரும வறட்சியைப் போக்கி ஈரப்பதமூட்டும் அதற்கு ஒரு பகுதி மௌத் வாஷில் பகுதி நீர் குதிகால் வெடிப்பைப் போக்கும் இயற்கை வழிகள் குளிர்காலத்துல உங்கள வாட்டிவதைக்கும் ஜலதோஷம் வருவதற்கு முன்னே தடுக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா முகப்பு உடல்நலம் குளிக்காலம் என்றாலே சளி இருமல் ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் ஏற்படும் என்ற பயம் பெரும்பாலும் அனைவருக்கும் இருக்கும் குளிக்காலம் தொடங்கி விட்டதால் ஜலதோஷம் அதிகமாக உள்ளது மூக்கு ஒழுகுதல் தலைவலி உடல்வலி மற்றும் தொண்டை வலி ஆகியவை நமது அன்றாட பணிகளைச் செய்வதில் மிகவும் சங்கடமாக இருக்கும் மேலும் நாம் செய்ய விரும்புவது படுக்கையில் சுருண்டு சிறிது சூடான பானத்தைப் பருகுவதுதான் அதற்கு மேல் குளிர்ந்த காற்று இந்த அறிகுறிகளை இன்னும் மோசமாக்குகிறது பல நாட்களுக்கு நம் அன்றாட வேலைகளை செய்ய விடாமல் இது தடுக்கிறது நோய்வாய்ப்பட்டு நாள் முழுவதும் படுக்கையில் இருப்பதை யாரும் விரும்புவதில்லை எனவே மூக்கடைப்புக்கு நிவாரணம் பெற மாத்திரைகள் மற்றும் நீராவி எடுத்துக்கொள்வதை விட சளி தொடங்கும் முன்பே அதை நிறுத்துவது நல்லது இந்த குளிர்காலத்தில் ஜலதோஷம் வராமல் தடுக்கவும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவும் சில குறிப்புகள் பற்றி இக்கட்டுரையில் குளிர்காலத்தில் ஜலதோஷத்தை தடுப்பது எப்படி ஜலதோஷம் ஜலதோஷத்தை முடி ரொம்ப வறண்டு இருக்குதா எண்ணெய் தடவ பிடிக்கலையா அப்ப இத யூஸ் பண்ணுங்க முகப்பு அழகு உடலிலேயே சருமம் தான் மிகப்பெரிய உறுப்பு இந்த சருமம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருப்பதற்கு எப்படி போதுமான ஈரப்பதம் தேவையோ அதேப் போல் தான் தலைமுடிக்கும் ஈரப்பதம் அவசியமான ஒன்று ஒருவரது தலைமுடியில் போதுமான ஈரப்பதம் இல்லாவிட்டால் முடி வறண்டு உடைய ஆரம்பித்துவிடும் அது தலைமுடிக்கு போதுமான ஈரப்பதம் இருந்தால் முடியில் ஏற்படும் சிக்கல் குறைந்து தலைமுடி ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும் தலைமுடிக்கு தேவையான ஈரப்பதமானது எண்ணெய் பூசுவதன் மூலம் பெறப்படுகிறது பொதுவாக தலைமுடிக்கு நாம் தேங்காய் எண்ணெயை தினமும் பயன்படுத்துவோம் ஆனால் தற்போதைய தலைமுறையினர் தங்களின் தலைக்கு எண்ணெய் பூச விரும்புவதில்லை சொல்லப்போனால் எண்ணெய் கூட தலைமுடிக்கு நன்மையுடன் தீமையையும் உண்டாக்குகின்றன எப்படியென்றால் எண்ணெய் தலைமுடியில் ஊடுருவுவதற்கு பதிலாக மயிர்கால்களில் அடைப்பை உண்டாக்குகின்றன எனவே தலைமுடியின் வறட்சியைத் தடுக்க எண்ணெய்க்கு பதிலாக பின்வரும் சில பொருட்களைக் ரெட் கலர் லிப்ஸ்டிக்கை இப்படியெல்லாம் கூட யூஸ் பண்ணலாமா இத்தன நாளா இது தெரியாம போச்சே முகப்பு அழகு பெண்களாக பிறந்த அனைவருக்குமே லிப்ஸ்டிக் என்பது பிடிக்க தான் செய்யும் லிப்ஸ்டிக்கில் எத்தனையோ நிறங்கள் உள்ளன ஆனால் அவை அனைத்திலுமே சற்று கம்பீரமாக அழகாக தனித்துவமாக தெரியும் நிறம் என்றால் சிவப்பு நிற லிப்ஸ்டிக் தான் பார்ட்டி ஆகட்டும் ஆஃபீஸ் மீட்டிங் ஆகட்டும் கோயில் விஷேசம் என அனைத்து விதமான உடை அலங்காரத்திற்கும் மேட்சிங் ஆக இருப்பது சிவப்பு நிற லிப்ஸ்டிக் உடைக்கு ஏற்ற நிறத்தில் லிப்ஸடிக் இல்லாவிட்டால் கூட சிவப்பு நிறம் போட்டால் வித்தியாசம் எதுவும் தெரியாது சரி இந்த சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை உதட்டில் போடுவதற்கு மட்டும் தான் பயன்படுத்த முடியாமா என்ன இந்த கேள்விக்கு இல்லை என்பதே பதில் பலருக்கு லிப்ஸ்டிக்கை வேறு எப்படியெல்லாம் உபயோக்கிலாம் என்ற யுக்தி தெரியாமல் இருக்கலாம் அவர்களுக்காகவே இந்த கட்டுரை பதிவிடப்படுகிறது போகும் எல்லா இடங்களுக்கும் எல்லா மேக்கப் பொருட்களையும் எடுத்து செல்ல முடியாது அல்லவா அந்த மாதிரியான தருணங்களில் இந்த யுக்திகளை சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை வேறு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் பற்களில் உள்ள மஞ்சள் கறை போகணுமா அதுக்கு இந்த பொருளை இப்படி யூஸ் பண்ணுங்க போதும் முகப்பு அழகு அழகு பராமரிப்பு என்று வரும் போது கடைகளில் விற்கப்படும் பொருட்களை வைத்து மட்டுமே சரும அழகை அதிகரித்துவிட முடியும் என்பதில்லை நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒவ்வொரு பொருட்களும் சரும ஆரோக்கியத்தையும் அழகையும் மேம்படுத்தக்கூடியவை இதுவரை நாம் மஞ்சள் தூள் பட்டை தூள் தயிர் தக்காளி உருளைக்கிழங்கு போன்ற சமையலறைப் பொருட்களை வைத்து தான் சருமத்திற்கு பராமரிப்புக் கொடுத்து அழகை மேம்படுத்தி வந்தோம் கொரோனா தடுப்பூசி போட்ட நாளில் இந்த விஷயங்களை கட்டாயம் ஃபாலோ பண்ணணுமாம் அது என்னென்ன ஆனால் நாம் உணவின் சுவைக்காக சேர்க்கப்படும் உப்பைக் கொண்டு பல அழகு பிரச்சனைகளைப் போக்கி நம் அழகை கூட்டலாம் என்பது தெரியுமா கீழே சருமத்தை மட்மின்றி முடி நகம் என ஒட்டுமொத்த உடல் அழகையும் மேம்படுத்த உப்பை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என கொடுக்கப்பட்டுள்ளது அதைப் படித்து தெரிந்து மேற்கொண்டு உங்கள் அழகையும் மேம்படுத்திக் கொள்ளுங்கள் பேஸ்புக்கில் எங்களது அழகு பராமரிப்பில் உப்பு உப்பின் முகம் மற்றும் முடியில் உள்ள ஹோலி கலரைப் போக்கும் சில எளிய வழிகள் முகப்பு அழகு ஒவ்வொரு ஆண்டும் ஹோலிப் பண்டிகை அன்று ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகள் வண்ண நீரை தெளித்து விளையாடுவது வழக்கம் அதே சமயம் ஹோலி பண்டிகை நமது சருமத்திற்கும் கூந்தலுக்கும் பெரும் சேதம் ஏற்படுத்தும் காலமாகவும் கூறலாம் வண்ணமயமான பொடிகளைத் தூவி விளையாடுவது சந்தோஷமாக இருந்தாலும் அதனால் பலருக்கு அலர்ஜிகள் ஏற்படக்கூடும் ஏனெனில் இந்த பொடிகளில் தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் இருக்கின்றன நீங்கள் வண்ணப் பொடிகளைத் தூவி நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஹோலி பண்டிகையைக் கொண்டாடினீர்களா உங்கள் சருமத்தில் உள்ள ஹோலி கலரைப் போக்க வெறும் சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் மட்டும் போதாது ஹோலி வண்ண பொடிகளால் சருமத்தில் எவ்வித அழற்சியும் தலைமுடி சம்பந்தமான பிரச்சனைகளும் வராமல் இருக்க வேறு சில இயற்கை வழிகளையும் பின்பற்ற வேண்டும் கீழே சருமம் மற்றும் முடியில் உள்ள ஹோலி கலர் பொடியைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன பற்களில் உள்ள மஞ்சள் கறை முகம் உங்களுக்கு தலைமுடி அதிகமா கொட்டுதா இந்த உணவுகள சாப்பிட்டா இனிமே முடி கொட்டாதாம் முகப்பு அழகு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் இன்றைய முக்கிய பிரச்சனையாக இருப்பது முடி உதிர்தல் அதிகப்படியான முடி உதிர்தல் மிகவும் பாதுகாப்பற்ற விஷயம் என்பதை மறுப்பதற்கில்லை முன்கூட்டிய வழுக்கை அல்லது அதிகப்படியான முடி உதிர்தலுக்கு பல காரணங்கள் உள்ளன ஒரு நாளைக்கு முடிகளை இழப்பது என்பது முற்றிலும் சாதாரணமானது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள் ஆனால் காலப்போக்கில் நிலை மோசமாகி அதிகமாய் உதிர்ந்தால் என்ன செய்வது மாறிவரும் பருவம் அல்லது மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை உணவுக் குறைபாடு அல்லது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை ஆகியவற்றைக் குறைகூறுகிறோம் முடி உதிர்தல் எவரையும் நம்பிக்கையற்ற தன்மைக்கு விடக்கூடும் ஆனால் உணவை மாற்றியமைப்பதன் மூலமும் இழந்த ஊட்டச்சத்துக்களை நிரப்புவதற்கும் முடி வளர்ச்சியை புதுப்பிப்பதற்கும் ஊட்டச்சத்து நிறைந்த சூப்பர்ஃபுட்களைச் சேர்ப்பதன் மூலம் இதை மாற்றியமைக்க முடியும் என்று நாம் சொன்னால் என்ன செய்வீர்கள் முடி உதிர்வதை எளிதில் முடி உதிர்வதை உடனடியாக நிறுத்த என்ன உங்க தலைமுடியில் வெடிப்பு ஏற்பட்டு முடி வளராம இருக்கா அப்ப இது செய்யுங்க உங்க முடி வேகமா வளரும் முகப்பு அழகு கருமையான பளபளப்பான நீண்ட கூந்தல் இருப்பது யாருக்கு தான் பிடிக்காது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முடியை விரும்புவார்கள் ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு பிறகு உங்கள் முடியில் கிளை பாய்ந்ததை போல் கீழ்முடியில் பிளவு காணப்படும் இது முடியின் வளர்ச்சியை தடுக்கிறது மற்றும் முடியின் அழகையும் சீர்குலைக்கிறது முடி பிளவு முனைகள் ஒரு தொடர்ச்சியான பிரச்சினை இதற்கான காரணங்கள் சூரிய வெளிப்பாடு செயற்கை ஷாம்பூக்கள் செயற்கையாக முடியை பராமரிப்பது நேராக்குதல் சாயங்கள் மற்றும் ப்ளீச்ச்கள் போன்றவை ஏராளமாக இருக்கலாம் இவை அனைத்தும் முடியை உலர்த்தி உங்கள் முடியில் உள்ள அமினோ அமிலங்களை சேதப்படுத்தும் ஸ்டைலிங் போது உலர்ந்த மற்றும் சேதமடைந்த முடி எளிதில் உடைகிறது உங்கள் தலைமுடி வேகமாக வளரவில்லை என்று நீங்கள் நினைத்தால் முனைகள் பிளவுபடுவது ஒரு காரணமாக இருக்கலாம் பிளவு முனைகளை குணப்படுத்த சில எளிய குறிப்புகள் உள்ளன சூடான கருவிகள் அல்லது ரசாயனங்கள் தலைமுடியில் வியர்வை நாற்றம் அதிகம் வீசுதா இதோ அதைப் போக்கும் சில நேச்சுரல் ஹேர் பெர்ஃப்யூம்கள் முகப்பு அழகு தலைமுடி ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருந்தால் மட்டும் போதாது நல்ல மணத்துடனும் இருக்க வேண்டும் பொதுவாக தலைமுடிக்கு என்று இயற்கை வாசனை உள்ளது ஆனால் வியர்வையினால் இந்த வாசனை போய் தலையில் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கிறது ஒருவர் வியர்வை நாற்றத்துடன் இருந்தால் அவர்களது அருகில் செல்லவே சங்கடமாக இருக்கும் இப்படி ஒருவர் தன் அருகில் சங்கடத்துடன் வருவதை நிச்சயம் யாரும் விரும்பமாட்டோம் எப்படி நமது உடலில் வீசும் வியர்வை நாற்றத்தை மறைக்க பெர்ஃப்யூம்கள் உள்ளதோ அதேப் போல் தலைமுடியில் வீசும் துர்நாற்றத்தை மறைக்கவும் ஹேர் பெர்ஃப்யூம்கள் உள்ளன ஆனால் கெமிக்கல் கலந்த ஹேர் பெர்ஃப்யூம்களைப் பயன்படுத்த பலரும் யோசிப்போம் ஏற்கனவே தலைமுடி உதிரும் வேளையில் கெமிக்கல் கலந்த மற்ற பொருட்கள் தலைக்கு பயன்படுத்த யாருக்கு தான் பயம் இருக்காது ஆகவே தமிழ் போல்ட்ஸ்கை அற்புதமான நேச்சுரல் ஹேர் பெர்ஃப்யூம்களை கீழே கொடுத்துள்ளது இந்த பெர்ஃப்யூம்களைப் பயன்படுத்தினால் தலைமுடி நேச்சுரல் ஹேர் பெர்ஃப்யூம்கள்
அறிமுக இயக்குனர் சந்துரு இயக்க பிரேம்குமார் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் ஜெய் வி டி வி கணேஷ் மற்றும் சத்தியன் நடித்திருக்கிறார்கள் காத்திருந்தாய் அன்பே முதல் முறை கேட்கும்போது வசீகரிக்கின்ற பாடல் இது காதல் தன்னுள் அரும்பியிருப்பதை உணரும் காதலி எவ்வாறு காதல் செய்யலாம் என அதை விவரிக்க காதலனும் அதையேற்றுத் தலையாட்டுகிறான் சின்மயி நிவாஸ் மற்றும் அபய் பாட வைரமுத்து வரிகளைக் கொடுத்திருக்கிறார் பாடலின் துளி அவள் பூக்களை திறக்குது காற்று புலங்களை திறக்குது காதல் உடைந்தது மறைந்தது ஊடல் காதல் செய்வோம் அவன் அடி பெண்ணே உன் வழி எல்லாம் நான் இருந்தேன் இனி நீ போகின்ற வழியாக நான் இருப்பேன் நெஞ்சாங்குளி ஏங்குதடி தொலைதூரத்தில் காதலன் பிரிவை எண்ணி ஏங்குகிறான் அவளும் இவனின் பிரிவால் தவிக்கிறாள் காதலால் மீண்டும் சேருவேன் எனப் பாடுகிறான் கார்த்திக் மற்றும் பூஜா வைத்தியநாதன் இணைந்து பாடியிருக்கிறார்கள் இதுவும் வைரமுத்துவின் கைவண்ணமே இந்தப் பாடலுக்கு இரண்டு வடிவங்கள் இருக்கின்றன ஆல்பத்தில் இரண்டும் வசீகரிக்கும் வகையாகத்தானிருக்கின்றன அதுவும் கார்த்திக்கின் குரல் கச்சிதப் பொருத்தம் பாடலின் துளி என் இரவை எல்லாம் கொளுத்தி அதை எல்லாத் திசையிலும் செலுத்தி நான் உயிரோடுள்ளதை உணர்த்தி உயிர் நீப்பேன் உன்னை மலர்த்தி வாரக் கடைசி வந்தாச்சு வாங்க வெளிநாட்டுக்காரன் மாதிரி பார்ட்டி கொண்டாடலாம் என அழைக்கிறார் மதன் கார்க்கி விஜய் பிரகாஷ் மற்றும் சயனோரா பிலிப் பாடியிருக்கிறார்கள் டெக்னோ இசையின் தாக்கத்தில் பாடல் தடதடத்து நம்மையும் ஆட்டம் போட வைக்கிறது பாடலின் துளி நீ அமெரிக்க டாலரில் செலவழி ஜமேய்கனை போல் இங்க ஆடு நீ ஐ ஐரிஷை போல் இப்ப நீ குடி நீ இந்தியப் பெண்களை காதலி வா வா வாழ்க்கை ஒரு குவாட்டர் போதையில் புலரும் ஒரு தத்துவப் பாடல் கானா பாலா எழுதி அவரே பாடியுமிருக்கிறார் பாடலின் ஆரம்பம் சற்று சலிப்பூட்டினாலும் போகப் போக ரசிக்க வைக்கிறது ஆரம்ப குவாட்டர் வரிகளை தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் சில ஜாலி தத்துவங்களும் இதில் உள்ளடக்கம் சற்றே கதையும்கூட சொல்கிறது முன்னோட்டக் காட்சிகளைப் பார்த்தவர்களுக்கு இது புரியக் கூடும் நவீன சரஸ்வதி சபதம் வெல்லும் திரைச்சாரல் ஜோதிடம் கேளுங்கள் இயற்கை உலகம் சூரியா அரசியல் அறிவியல் அழகியல் ஆன்மீகம் உடல்நலம் உலக நடப்பு உள்முகம் கதை கருவூலம் கவிதை கைமணம் கைமருந்து கைவேலை சுயமுன்னேற்றம் சுவடுகள் செய்திகள் ஜோதிடம் தமிழாய்வு திரைச்சாரல் தொடர் நகைச்சுவை நேர்காணல் பூஞ்சிட்டு மாணவர் சோலை ராசிபலன் விளையாட்டு ஸ்பெஷல்ஸ் நடராஜன் அ சங்குகணேஷ் அனாமிகா அனாமிகா பிரித்திமா அனிதா அம்மு அப்துல் கையூம் அமர்நாத் அமுதன் டேனியல் அம்பிகா அரவிந்த் சந்திரா அரிமா இளங்கண்ணன் அரிமா இளங்கண்ணன் அருணா அருண் பாலாஜி அழ வள்ளியப்பா ஆங்கரை பைரவி ஆத்மனுடன் நிலா ஆர் ஈஸ்வரன் ஆர் கல்பகம் ஆர் கே தெரெஸா இ பு ஞானப்பிரகாசன் இன்னம்பூரான் இரமேஷ் இரமேஷ் ஆனந்த் இரா திருப்பதி இராம வயிரவன் இல ஷைலபதி ஈரோடு தமிழன்பன் ஈஸ்வரம் உஷாதீபன் எட்டையபுரம் சீதாலட்சுமி என் கணேசன் என் வி சுப்பராமன் எம் எஸ் உதயமூர்த்தி எஸ் எம் ஜுனைத் ஹஸனீ எஸ் ராமகிருஷ்ணன் எஸ் ஷங்கரநாராயணன் ஏ கோவிந்தராஜன் ஏ ஏ ஹெச் கே கோரி ஒளியவன் கணேஷ் கண்ணபிரான் கனகசபை தர்ஷினி கலா கலையரசி கல்கி களந்தை பீர்முகம்மது கவிதா பிரகாஷ் கா ந கல்யாணசுந்தரம் கா சு ஸ்ரீனிவாசன் கா ந கல்யாணசுந்தரம் காயத்ரி காயத்ரி பாலசுப்ரமணியன் காயத்ரி பாலாஜி காயத்ரி மாதவன் காயத்ரி வெங்கட் கார்த்திகேயன் கிரிஜா மணாளன் கிருத்தி கிருத்திகா செந்தில்நாதன் கிருஷ்ணன் கிளியனூர் இஸ்மத் கீதா மதிவாணன் கீதா விஸ்வகுமார் கு திவ்யபிரபா கு நித்யானந்தன் குமரகுரு கோமதி நடராஜன் கொ மா கோ இளங்கோ கோ வெங்கடேசன் கோ வினோதினி கோகுலப்பிரியா ராம்குமார் க்ருஷாங்கினி ச சரவணன் ச நாகராஜன் சக்தி சக்திதாசன் சங்கரன் சங்கரம் சிவ சிங்கரம் சசிபிரியா சந்தானம் சுவாமிநாதன் சந்தியா கிரிதர் சமுத்ரா மனோகர் சரித்திரபாலன் சாதனா சாந்தா பத்மநாபன் சித்ரா சித்ரா பாலு சிராஜ் சிவா சீனு சு ஆனந்தவேல் சுகிதா சுசிதா சுந்தரராஜன் முத்து சுபஸ்ரீஸ்ரீராம் சுபஸ்ரீஸ்ரீராம் சுப்ரபாரதிமணியன் சுரேசுகுமாரன் சுரேஷ் சுரேஷ் சுரேஷ் குமரேசன் சூரியகலா சூரியா சூர்ய மைந்தன் சூர்யகுமாரன் சூர்யா நடராஜன் செந்தில் செல்லூர் கண்ணன் செல்வராணி முத்துவேல் சேயோன் யாழ்வேந்தன் சைலபதி சொ ஞானசம்பந்தன் சோமா சோமா ஜ ப ர ஜனனி பாலா ஜனார்தனன் ஜன்பத் ஜம்புநாதன் ஜான் பீ பெனடிக்ட் ஜார்ஜ் பீட்டர் ராஜ் ஜெயந்தி சங்கர் ஜேம்ஸ் ஞானேந்திரன் ஜோ ஜோதி பிரகாஷ் ஞானயோகி டாக்டர் ப இசக்கி டாக்டர் அலர்மேலு ரிஷி டாக்டர் பூவண்ணன் டாக்டர் விஜயராகவன் டி எஸ் கிருக்ஷ்ணமூர்த்தி டி எஸ் ஜம்புநாதன் டி எஸ் பத்மநாபன் டி எஸ் வெங்கடரமணி டி வி சுவாமிநாதன் தமிழ்த்தேனீ தமிழ்நம்பி தி சு பா திசுபா திரு திருஞானம் முருகேசன் திலீபன் துரை சதீஷ் தெனு ஸ்வரம் தேனப்பன் தேவி ராஜன் தௌஃபிக் அலி ந முருகேச பாண்டியன் நட்சத்ரன் நம்பி பா நரேன் நர்மதா நவநீ நவின் நவிஷ் செந்தில்குமார் நவீனன் பங்கசபவனம் நா பார்த்தசாரதி நா விச்வநாதன் நாகரீக கோமாளி நாகினி நாகை வை ராமஸ்வாமி நாஞ்சில் வேணு நிரந்தரி ஷண்முகம் நிலா நிலா குழு நிலாக்கடல்வன் நெல்லை முத்துவேல் நெல்லை விவேகநந்தா ப மதியழகன் பகவான் சிவக்குமார் பனசை நடராஜன் பரணி பவனம் பவள சங்கரி பாகம்பிரியாள் பாரதி பாலமுருகன் தஷிணாமூர்த்தி பி எஸ் பி லதா பிரபஞ்சன் பிரபாகரன் பிரபு பிருந்தா பிரேமா சுரேந்திரநாத் புதியவன் புரசை மகி புவனா முரளி புஷ்பா புஹாரி பெ நாயகி பெஞ்சமின் லெபோ பெஞ்சமின் லெபோ பெளமன் ரசிகன் பொ செல்வம் வைஸ்யா கல்லூரி முதல்வர் பொட்கொடி கார்த்திகேயன் ப்ரியா ப்ரீத்தி ம ந ராமசாமி மகாகவி பாரதியார் மகாதேவன் மகுடதீபன் மடிபாக்கம் ரவி மணிகண்டன் மாரியப்பன் மதியழகன் சுப்பையா மதுமிதா மனோவி மன்னை பாசந்தி மயிலரசு மயிலை சீனி வேங்கடசாமி மலர்விழி மாமதயானை மாயன் மாயாண்டி சந்திரசேகரன் மார்கண்டேயன் மு கோபி சரபோஜி மு குருமூர்த்தி மு கோபி சரபோஜி மு சுகந்தி முகில் தினா முத்து விஜயன் முனைவர் பெ லோகநாதன் முருக கவி மேகலா மோ உமா மகேஸ்வரி யஷ் ரஜனா ரஜினி பெத்துராஜா ரவி ரவி உமா ரவிசந்திரன் ரா மகேந்திரன் ராகவேந்திரன் ராகினி ராஜம் கிருஷ்ணன் ராஜூ சரவணன் ராஜேஷ்குமார் ராஜேஸ்வரன் ராமகிருஷ்ணன் சின்னசாமி ராம்பிரசாத் ரிஷபன் ரிஷி ரிஷி சேது ரிஷிகுமார் ரூசோ ரேவதி ரோஜாகுமார் லக்ஷ்மி வைரம் லட்சுமி பாட்டி லதா ராமன் லஷ்மி கிருஷ்ணன் லாவன்யன் குணாலன் லேனா பழ லோ கார்த்திகேசன் வசந்தி சுப்ரமணியன் வாணி ரமேஷ் வாஸந்தி விசா விசாலம் விஜயா ராமமூர்த்தி விஜய் அழகரசன் விஜய்கங்கா விஜி வெங்கட் வித்யா வித்யா சுப்ரமணியம் விமலா ரமணி வீ ஜெயந்தி வீராசாமி காசிநாதன் வெண்பா வே பத்மாவதி வே பத்மாவதி வேணி வை கோபாலகிருஷ்ணன் வை கோபாலகிருஷ்ணன் வைத்தி வைத்தியநாதன் சுவாமிநாதன் ஷகிலாதேவி ஜி ஷக்தி ஷன்னரா ஷாலினி ஷித்யா ஸ்ரீ ஸ்ரீ் ஆண்டாள் ஸ்வர்ணா ஹரணி ஹீலர் பாஸ்கர் ஹெச் தவ்பீக் அலி ஹேமமாலினி ஹேமமாலினி சுந்தரம் ஹேமலதா ராஜாராம் ஹேமா ஹேமா மனோஜ் நாய்கள் ஜாக்கிரதை இசை விமர்சனம் காவிய தலைவன் இசை விமர்சனம் ஐ இசை விமர்சனம் மெட்ராஸ் இசை விமர்சனம் யான் இசை விமர்சனம் மீகாமன் இசை விமர்சனம் விடியும் முன் திரை விமர்சனம் வில்லா இசை விமர்சனம் உலகம் அறிவியல் சுயமுன்னேற்றம் உடல்நலம் உலக நடப்பு அரசியல் கலை ஆன்மீகம் அழகியல் கைமணம் ஜோதிடம் ராசிபலன் புனைவு கதை கவிதை தொடர் உள்முகம் பல்சுவை ஸ்பெஷல்ஸ் நகைச்சுவை திரைச்சாரல் பூஞ்சிட்டு தமிழ் தமிழாய்வு நேர்காணல் மாணவர் சோலை விளையாட்டு சோலை கைமருந்து கைவேலை கருவூலம் சுவடுகள்
கிறிஸ்தவன் கத்தோலிக்கன் என்ற முறையில் இந்துப்பெண்ணை திருமணம் செய்து கொண்டவன் என்ற முறையில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்ற வகையில் இப்போ நான் மதத்தால் கிறிஸ்தவன் சண்டமாருதன் நல்ல உதாரணம் ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளீர்கள் தாம் இந்து என்பதை இந்திய இந்துத்துவம் ஒருபோதும் ஏற்றதும் இல்லை இனிமேலும் ஏற்கப்போவதில்லை என்பதை இவர்கள் உணரப்போவதில்லை ஒரு இந்தியப் பார்ப்பனனு புங்கையூரன் திரி அழகாக நகர்கின்றது பல விடயங்கள் வரலாறுகள் அனைத்தும் அலசப்படுகின்றன பலவற்றை அறியக்கூடியதாகவும் உள்ளது எல்லா மதங்களிலும் பலங்களும் பலவீனங்களும் உண்டு ஏனெனில் அனைத்து மதங்களுமே மனித வ இசைக்கலைஞன் இசைக்கலைஞன் கருத்துக்கள பார்வையாளர்கள் கனடா இசை வேலை யாழ்களம் புத்தகம் படிக்காமல் இருப்பது தொ கா பார்ப்பது தொ பேசியில் அலட்டாமல் இருப்பது ரகுநாதன் அதற்காக கடவுளைத் தொழாமல் இருக்க வேண்டியதில்லை அதை ஒரு சிறந்த தியானப் பயிற்சி போல் செய்யலாம் மனதை ஒருநிலைப்படுத்தும்போது மூளையின் செயற்பாட்டுத்திறன் அதிகரிக்கிறது அதற்காக இப்படித்தான் தியானம் செய்யவேண்டும் என்கிற விதிமுறைகள் ஏதுமில்லை கருத்துக்கள உறவுகள் ஈசன் ஈசன் கருத்துக்கள உறவுகள் கருத்துக்கள உறவுகள் ரகுநாதன் ஏன் இந்த சிங்களம் தமிழ் என்று மொழிச்சண்டை நாம் எல்லாருமே சிங்களத்தைப் பேசி சிங்களவராய் மாறி இருக்கலாமே சிங்களம் தமிழ் இரன்டுமே சும்மா சப்தங்கள் தானே துளசி துளசி கருத்துக்கள பார்வையாளர்கள் கடலுக்கடியில் இயற்கையை ரசித்தல் கதைப்புத்தகம் வாசித்தல் ஒரு பாதிரியார் தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு கிறிஸ்தவ மதம் பற்றி சொல்லி கொடுக்கவில்லை என்றால் அவர் கிறிஸ்தவத்தை நம்பவில்லை என்றே நான் பொருள் கொள்கிறேன் கிறிஸ்தவ மதத்தை முழுமையாக நம்பி அதுதான் முழுமுதல் கடவுள் என்ற பின்பே ஒருவன் பாதிரி ஆகிறான் அதுதான் முழுமை என்று நம்பியவன் அதுதான் மனித வாழ்வை மேம்படுத்தும் என முழுமையாக நம்பியவன் சக மனிதர் எலோரும் கிறிஸ்தவத்தை பின்பற்றி சொர்கத்தை எட்ட வேண்டும் என்றே விரும்புவான் அப்படி இல்லாத பட்சத்தில் அவனுடைய பாதிரி என்ற நிலை கேள்விக்கு உள்ளாக்க பட வேண்டும் தேவாலயத்திலேயே வந்து நிற்கும் ஒரு சிறுவனை அவன் கிறிஸ்தவன் ஆக்கவில்லை என்றால் அது பெருத்த அயோக்கியத்தனம் தான் மட்டுமே சொர்கத்தை அடைய வேண்டும் என்ற சுய நிலை சிந்தனை இத்தனை இந்து கோவில் உள்ள நாட்டில் போரால் பதிக்க பட்ட சிறுவர்களை கூட்டி சென்று விடுவதற்கு என்று ஒரு இந்து கோவில் ஏன் இல்லை ஏன் தேவாலயத்தில் கொண்டு சென்று விடுகிறீர்கள் இதனை பெரிய நல்லூர் கோவிலில் சிறுவர்களை பராமரிக்க இடவசதி இல்லையா அல்லது மன வசதி இல்லையா எங்களிலும் எமது மதத்திலும் சேறை வாரி பூசி திரிந்து கொண்டு அடுத்தவன் பற்றி கதைக்க என்ன இருக்கிறது கிறிஸ்த்தவம் புனிதம் இல்லை தமிழர் மீது திணிக்க பட்ட ஒரு அடாவடி தனம் ஆனால் எம்மீது அழுக்கை சுமந்துகொண்டு அடுத்தவனை பற்றி பேச ஏதும் இல்லை எமது மதத்தில் உள்ள குறைகளை நீக்கினால் யாரும் ஏன் அங்கு போக போகிறான் போவதற்கு வீதியை போட்டு விடுவதே நாங்கள்தான் பின்பு போனவர்களை அன்போடு அரவணைக்கிறார்கள் என்றால் எப்படி அது ஒரு குற்றமா கிறிஸ்தவ மதம் பற்றி சொல்லிக்கொடுக்க வேண்டாம் என்று யார் சொன்னது எதற்காக மதம் மாற்றுவான் என்று தான் கேட்கிறேன் அந்த பிள்ளைகள் சிறு பிள்ளைகளாக இருப்பதால் விரும்பி மதம் மாறியிருக்க மாட்டார்கள் கட்டாய மதமாற்றம் என்பது அந்த பிள்ளைகளை உளவியல் ரீதியாக பாதிக்கக்கூடியது ஒரு மதத்தை தலைமையாக கொண்டு தான் உதவி செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை போரில் பாதிக்கப்பட்டவர்களை நீ சைவமா கோவிலுக்கு போ கிறிஸ்தவமா தேவாலயத்துக்கு போ என்று கூறி உதவி செய்வதென்பது மதத்தை பிரதிநிதிப்படுத்துவது போன்றது அந்த பிள்ளையை யார் தேவாலாயத்தில் கொண்டு போய் விட்டார்களோ தெரியாது அழைத்து சென்றவர்கள் அந்த பிள்ளையை சைவமா கிறிஸ்தவமா என கேட்டு விட்டு அழைத்து சென்றிருப்பார்கள் என்றுமில்லை அல்லது தேவாலயத்தினரே அந்த பிள்ளையை அழைத்து சென்றும் இருக்கலாம் என்னமோ தேவாலயத்தில் தனிய கிறிஸ்தவர்களின் பணத்தில் உதவி செய்வது போல் கதைக்கிறீர்கள் வெளிநாட்டிலுள்ள சைவ சமயத்தவர் பலர் தேவாலயங்களின் மூலம் பண உதவி செய்கிறார்கள் அதை வாங்குகிறார்கள் தானே இங்கு ஒரு மதம் நல்லதா கெட்டதா என்பதல்ல விவாதம் மதமாற்றுவது சரியா பிழையா என்பது தான் விவாதம் கட்டாய மதமாற்றல்களில் மற்றவர்கள் ஈடுபடுவதால் தான் அவர்கள் மேல் விமர்சனம் வைக்கிறோமே தவிர இயேசு நல்லவரா கெட்டவரா என்று அவர்கள் மதத்தை பற்றி இங்கு நான் எதுவும் எழுதவில்லை கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் ரஞ்சித் கருத்துக்கள உறவுகள் கருத்துக்கள உறவுகள் ரகுநாதன் ஏன் இந்த சிங்களம் தமிழ் என்று மொழிச்சண்டை நாம் எல்லாருமே சிங்களத்தைப் பேசி சிங்களவராய் மாறி இருக்கலாமே சிங்களம் தமிழ் இரன்டுமே சும்மா சப்தங்கள் தானே அது முடியாது ஈசன் நாங்கள் எங்களில் இதுவரை லட்சத்துக்கும் அதிகமான மக்களைப் பலிகொடுத்துவிட்டோம் கொன்றவர்களுடன் சேர்ந்திருப்பதென்பது முடியாது கருத்துக்கள உறவுகள் ஈசன் ஈசன் கருத்துக்கள உறவுகள் கருத்துக்கள உறவுகள் அது முடியாது ஈசன் நாங்கள் எங்களில் இதுவரை லட்சத்துக்கும் அதிகமான மக்களைப் பலிகொடுத்துவிட்டோம் கொன்றவர்களுடன் சேர்ந்திருப்பதென்பது முடியாது அதே போல் கிறிஸ்தவமும் இஸ்லாமும் பரஸ்பரம் கடும் ஒவ்வாமை கொண்டவை ஆனால் இந்துக்களாகிய நாம் மற்ற மதங்களை அழிக்க முனைவதில்லை இங்கே கடவுளுக்காக இந்துக்கள் சண்டை போடப்போவதில்லை எம்மை விடுங்கள் என்பதே எம்முடைய வாதம் மதம் என்பது எம்முடைய அடையாளம் மதம் எமது வாழ்க்கை முறை மதம் எமது வரலாறு மதம் எமது கலாச்சாரம் மதமே எமது மொழியின் ஊற்று இத்தனையையும் எம்மால் தொலைக்க முடியாது இத்தனையையும் தொலைத்து என்னால் ஒரு வேற்று இனத்தவரை யேசுவை வணங்க முடியாது என் பெருமை என் மதத்தை பற்றி இருப்பதில் இருக்கிறது ஒரு வேற்று இனத்தவன் என்னை ஒரு தனித்துவமான கலாச்சார வரலாறு இல்லாத ஒரு பிலிப்பினோவையோ அல்லது கிறீஸ்தவ பெயர் வைத்த ஆபிரிக்கனையோ அல்லது ஆங்கிலப் பெயர் வைத்த சீனனையோ பார்பது போல் பார்க்க முடியாது இங்கே நான் என்பது என் இனத்தின் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகால பெருமை மிக்க வரலாறுகளின் திரட்டு கிறீஸ்தவனாக மதம் மாறி வெள்ளை இனம் எம்மை ஆண்டார்கள் அவர்கள் போ என்றார்கள் நான் ஆம் என்றேன் என்று தலையாட்டி அவர்கள் மதத்தையும் அவர்கள் பெயரையும் எனக்கும் என் சந்ததிக்கும் வைத்து அடிமை வாழ்க்கை வாழ்ந்த வரலாற்றைக் காவும் ஒரு புண்ணாக்கு அல்ல நாம் நாமாக இருப்போம் நீங்கள் நீங்களாக இருங்கள் கருத்துக்கள உறவுகள் விசுகு விசுகு கருத்துக்கள உறவுகள் ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம் எதுவானாலும் ஈழத்தை நோக்கியே கருத்துக்கள உறவுகள் அதே போல் கிறிஸ்தவமும் இஸ்லாமும் பரஸ்பரம் கடும் ஒவ்வாமை கொண்டவை ஆனால் இந்துக்களாகிய நாம் மற்ற மதங்களை அழிக்க முனைவதில்லை இங்கே கடவுளுக்காக இந்துக்கள் சண்டை போடப்போவதில்லை எம்மை விடுங்கள் என்பதே எம்முடைய வாதம் மதம் என்பது எம்முடைய அடையாளம் மதம் எமது வாழ்க்கை முறை மதம் எமது வரலாறு மதம் எமது கலாச்சாரம் மதமே எமது மொழியின் ஊற்று இத்தனையையும் எம்மால் தொலைக்க முடியாது இத்தனையையும் தொலைத்து என்னால் ஒரு வேற்று இனத்தவரை யேசுவை வணங்க முடியாது என் பெருமை என் மதத்தை பற்றி இருப்பதில் இருக்கிறது ஒரு வேற்று இனத்தவன் என்னை ஒரு தனித்துவமான கலாச்சார வரலாறு இல்லாத ஒரு பிலிப்பினோவையோ அல்லது கிறீஸ்தவ பெயர் வைத்த ஆபிரிக்கனையோ அல்லது ஆங்கிலப் பெயர் வைத்த சீனனையோ பார்பது போல் பார்க்க முடியாது இங்கே நான் என்பது என் இனத்தின் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகால பெருமை மிக்க வரலாறுகளின் திரட்டு கிறீஸ்தவனாக மதம் மாறி வெள்ளை இனம் எம்மை ஆண்டார்கள் அவர்கள் போ என்றார்கள் நான் ஆம் என்றேன் என்று தலையாட்டி அவர்கள் மதத்தையும் அவர்கள் பெயரையும் எனக்கும் என் சந்ததிக்கும் வைத்து அடிமை வாழ்க்கை வாழ்ந்த வரலாற்றைக் காவும் ஒரு புண்ணாக்கு அல்ல நாம் நாமாக இருப்போம் நீங்கள் நீங்களாக இருங்கள் ஈசனின் இந்த கோபம் பிடித்திருக்கு கனகாலம் இதை ஈசனிடமிருந்து பார்த்து கருத்துக்கள உறுப்பினர்கள் கருத்துக்கள உறுப்பினர்கள் பிறேமன் ஜேர்மனி ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல கருத்துக்கள உறுப்பினர்கள் அது உங்களுடைய சொந்த அனுபவம் தாம் வணங்கும் கடவுளின் பெயரால் துன்புறுத்தபட்டு வீதியில் திரியும் மனிதர்களை நான் கண்டிருக்கிறேன் இது எனது சொந்த அனுபவம் இந்த அடாவடி தனங்களை மதம் என்று சொல்லி மழுப்பிவிட முடியாது இந்த கொடூரங்களை மதம் என்று மூடிவிட்டு இனியும் கும்பிட்டு கொண்டு இருக்க முடியாது இந்துமதம் என்ற சாக்கடை சிறுவயதில் எனது சக மாணவிகளாக இருந்தவர்களை சாதி என்று சொல்லி அவர்களுக்கு செய்த அநியாங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன் துன்பம் தாங்காது படிப்பை முறித்து வீடுகளில் தங்கியவர்களை நேரில் கண்டு இருக்கிறேன் இந்த சாதி வெறி பிடித்த பேயை எனது சமூகத்தில் இருந்து விரட்டி அடிப்பது என்பது வள்ளியை மணம் முடித்த முருகனுக்கு செய்யும் ஒரு சிறு தொண்டு என்று எண்ணுகிறேன் சாதி அடக்குமுறைகளை மதத்துள் புதைக்காதீர்கள் இந்து சமயம் இப்படித்தான் இரு என்று மனிதர்களை பலாத்காரப்படுத்தவில்லை மாதா மாதம் இவ்வளவு கட்டணம் செலுத்து என்றோ கட்டாயம் தீட்சை கேள் என்றோ வற்புறுத்தவில்லை இதைத்தான் படி என்றுகூட கூறவில்லை ஆக விரும்பினால் வா என்னும் போக்கிலேயே உள்ளது மதங்களை அரசியல்வாதிகளும் சாதாரண மனிதர்களும் தங்களது சுயலாபங்களுக்கு கையில் எடுத்ததற்கு மதங்களை குறை கூற முடியாது கிழக்கு ஐரோப்பா ரஷ்ய கொம்மியூனிச வீழ்ச்சிக்கும் முக்கிய காரணம் அரசியல் சார்பான மதங்களின் அவை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஊடுருவல்தான் ஆக மனிதனின் தவறுகளுக்கு மதத்தை குற்றம் கூற முடியாது ஆதித்ய இளம்பிறையன் ஆதித்ய இளம்பிறையன் கருத்துக்கள பார்வையாளர்கள் தமிழ் தேசம் தமிழ் காதல் வீரம் பணத்திற்காகவும் சமூக அங்கீகாரத்திர்க்காகவும் இங்கே மத மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது இனிமேலும் நடக்கும் காரணம் களையப்படாதவரை மதம் என்பது எம்முடைய அடையாளம் ஆம் இந்த மதம்தான் எம் மீது சாதிய கட்டமைப்புகளை அமிழ்த்துகிறது இந்த மதத்தின் பெயரில்தான் மனுஸ்மிருதி உருவாக்கப்பட்டது அதன் பெயரிலேயே நாம் அடிமைப்படுத்தப்படுகிறோம் அதன் பெயரிலேயே எனது பாட்டன் முப்பாட்டன் மிக கடுமையாக துன்புறுத்தப்பட்டார்கள் அதன் பெயரிலேயே எமக்கு சமூக நீதி மறுக்கபப்டுகிறது நான் இந்து என்று சொல்லிக் கொண்டிருக்கும் வரையில் கீதை இருக்கும் கீதையில் சொல்லப்பட்ட வர்ணாசிரம் இருக்கும் அதன் பெயரால் நான் மீண்டும் துன்புறுத்தப்படலாம் வேறு எங்கும் சாதிப் பாகுபாடு இருக்கிறதோ இல்லையோ சுரண்டல் இருக்கிறதோ இல்லையோ தெரியாது அதைப் பற்றிய கவலையும் எனக்கு இல்லை ஆனால் இங்கு இருக்கிறது அதுவும் மிக கடுமையாக இருக்கிறது சாதியின் பெயரால் சிதைக்கப்படுகிறார்கள் வறுமையின் பெயலால் வதைக்கபப்டுகிறார்கள் சமூக நீதி பெறவும் வறுமையிலிருந்து விடுபடவும் யாரவது உதவ மாட்டார்களா என்று எதிர்பார்க்கிறார்கள் சில பேர் வருகிறார்கள் அவர்கள் அடையாளத்தை மற்றக் கோருகிறார்கள் இந்த அடையாளத்தை மாற்றுவதன் மூலம் அவர்களுக்கு வறுமையில் இருந்து தப்பிக்க ஒரு வழி தெரிகிறது தனது தலைமுறைக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை கொடுக்கலாம் என்று தோன்றுகிறது மாறுவது என முடிவு கொண்டு மாறுகிறார்கள் ஏனெனில் இந்த அடையாளம் நல்ல வாழ்வைத் தரவில்லை வசதியை தரவில்லை இதனால் யாருக்கு என்ன கோபம் இவ்வளவு காலம் நான் சுரண்டப்படும்போது குரல் கொடுத்தார்களா இல்லை வதைக்கப்படும்பொது வாழ்வு கொடுத்தார்களா இல்லை அப்புறம் இன்ன இப்பொழுது ஏன் அடிமை எண்ணிக்கை ஒன்று குறைகிறதே என்று வருத்தமா பணத்திற்காகவும் சமூக அங்கீகாரத்திர்க்காகவும் இங்கே மத மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது இனிமேலும் நடக்கும் காரணம் களையப்படாதவரை கருத்துக்கள உறவுகள் கருத்துக்கள உறவுகள் கருத்துக்கள உறவுகள் கருப்பு தோல் மக்களின் வெள்ளை மயக்கம் இது தமிழர்களுக்கு நிச்சயமாய் பொருந்தும் உத்தியோகபூர்வ வீடியோவை பாருங்கோ தூயவன் தூயவன் கருத்துக்கள பார்வையாளர்கள் யாழ்களம் கத்தோலிக்கம் பற்றி வெள்ளையடிக்க முயல்பவர்களுக்கு ஒரு விடயம் கத்தோலிக்கம் எப்படிப் பரப்பப்பட்டது ஈழத்தில் என்பதை வரலாற்றில் மறைக்க முடியாது என நினைக்கின்றேன் ஈழத்தில் உள்ள பெரும்பாலான இந்துக்கோவில்களை இடித்துத் தானே கத்தோலிக்கம் பரப்பப்பட்டது பலருடைய கிணறுகளில் கோவில் விக்கிரகங்கள் முதல் சைவ அடையாளங்கள் ஒளித்து வைக்கப்பட்டன அப்படி ஒரு செயலைத் தான் போத்துக்கேயரும் ஒல்லாந்தரும் நடத்தி மதப் பிரச்சாரம் செய்தனர் அப்படியிருக்கும்போது எம்மை ஆதிக்கம் செலுத்த வந்தவர்களின் பின்னால் போய்விட்டு அதற்கு நன்றாகத் தான் வெள்ளை அடிக்கின்றீர்கள் இதைப் பற்றிக் கதை்ததால் சாத்தான் மதவாதம் அது இது என்பார்கள் செய்தவர்கள் தப்பில்லை செய்ததைச் சொன்னால் மட்டும் தப்பு ஆகுமா சில வருடங்களுக்கு முன்பு ஒரு விடயம் பற்றி அறிந்து கொண்டேன் அது உண்மையானதா இருக்குமா என்று தெரியவில்லை கிழக்கில் வற்றாப்பளை அம்மன் போல மேற்கில் இருந்த அம்மன் கோவில் மீது தான் மடுத் தேவாலயம் கட்டப்பட்டதாக அதற்கு எந்த ஆதாரமும் சொன்னவரால் சொல்லப்படவில்லை என்பதால் அதைப் பெரிசாக எடுத்துக் கொள்ளவில்லை யாரிடமாவது அது பற்றி ஏதும் தகவல் உண்டா தூயவன் தூயவன் கருத்துக்கள பார்வையாளர்கள் யாழ்களம் இதே வேளை இந்து மதத்தில் மீளாய்வு என்பது அவசியம் ஒரு விடுதலைப் போராட்டமாகட்டும் ஒரு சீர்திருத்தமாகட்டும் மீளாய்வு செய்யாது விடின் அழிந்துவிடும் பாதிரிமார்களின் குழந்தைகளோடு பாலியல் வன்முறைகளை வத்திக்கான் கண்டு கொள்ளாது விடுவது போன்றே சில சாமிகளின் பாலியல் நடவடிக்கைகளை நாங்கள் கண்டு கொள்ளாது விடுவதுமாகும் குறித்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் குப்பைகளுக்கு மத்தியில் இருந்தால் குப்பைகள் போலவே எல்லாமே தோன்றும் அடுத்தது சாதி சாதி என்பது எப்படி நீக்கலாம் என்பதை ப் பெரிய தத்துவஞானிகள் தான் பதில் சொல்ல வேஷ்டும் சாதிப் பிரச்சனை சாதிப் பிரச்சனை என்று சத்தமிடுகின்றார்களே தவிர அதை நீக்குவதற்கு வழி சொன்னால் நன்றாக இருக்கும் இது வரை என் வாழ்வில் நான் என் நண்பர்கள் பழகியவர்கள் எவரிடமும் சாதி பற்றி அறியவோ அது பற்றிக் கதைக்கவோ நினைத்ததில்லை அப்படி நினைத்து யார் கூடவும் பழகியதில்லை எதிர்வரும் காலத்திலும் அப்படித் தான் இருப்பேன் திருமணம் என்பதிலும் அப்படியே இருக்க முயற்சி செய்வேன் இது தான் ஒரு தனிமனிதனாக என்னால் முடியக்கூடிய ஒரு விடயம் கருத்துக்கள உறவுகள் கருத்துக்கள உறவுகள் கருத்துக்கள உறவுகள் கத்தோலிக்கம் பற்றி வெள்ளையடிக்க முயல்பவர்களுக்கு ஒரு விடயம் கத்தோலிக்கம் எப்படிப் பரப்பப்பட்டது ஈழத்தில் என்பதை வரலாற்றில் மறைக்க முடியாது என நினைக்கின்றேன் ஈழத்தில் உள்ள பெரும்பாலான இந்துக்கோவில்களை இடித்துத் தானே கத்தோலிக்கம் பரப்பப்பட்டது பலருடைய கிணறுகளில் கோவில் விக்கிரகங்கள் முதல் சைவ அடையாளங்கள் ஒளித்து வைக்கப்பட்டன அப்படி ஒரு செயலைத் தான் போத்துக்கேயரும் ஒல்லாந்தரும் நடத்தி மதப் பிரச்சாரம் செய்தனர் அப்படியிருக்கும்போது எம்மை ஆதிக்கம் செலுத்த வந்தவர்களின் பின்னால் போய்விட்டு அதற்கு நன்றாகத் தான் வெள்ளை அடிக்கின்றீர்கள் இதைப் பற்றிக் கதை்ததால் சாத்தான் மதவாதம் அது இது என்பார்கள் செய்தவர்கள் தப்பில்லை செய்ததைச் சொன்னால் மட்டும் தப்பு ஆகுமா சில வருடங்களுக்கு முன்பு ஒரு விடயம் பற்றி அறிந்து கொண்டேன் அது உண்மையானதா இருக்குமா என்று தெரியவில்லை கிழக்கில் வற்றாப்பளை அம்மன் போல மேற்கில் இருந்த அம்மன் கோவில் மீது தான் மடுத் தேவாலயம் கட்டப்பட்டதாக அதற்கு எந்த ஆதாரமும் சொன்னவரால் சொல்லப்படவில்லை என்பதால் அதைப் பெரிசாக எடுத்துக் கொள்ளவில்லை யாரிடமாவது அது பற்றி ஏதும் தகவல் உண்டா அநெகமாக ஐரோப்பா முழுக்க இந்த கதைதான் லண்டன் சென் போல்ஸ் கூட பேகன் ஆலயத்திமீதுதான் கட்டப்பட்டுள்ளது ஆனால் வருவோர் போவோர் மீது கட்டுப்பாடுகள் இல்லை ஏழைகளுக்கு உதவ ஆயிரம் திட்டங்கள் செயல்பாடுகள் ஆனால் சைவ ஆலயங்களின் மீது கட்டப்பட்ட இந்து கோவில்களுக்கு மிக சமீபகாலம் வரை ஆரிய சாதிகள் மட்டும்தான் போகலாம் இன்று கூட ஒருவருக்கும் ஒரு உதவியும் செய்வதில்லை பிகு நான் பிறப்பால் சைவன் இன்று எனது சமயம் டைசம் தூயவன் தூயவன் கருத்துக்கள பார்வையாளர்கள் யாழ்களம் ஏழைகளுக்கு உதவ என்பது வேறு ஆள்பிடிக்க என்பது வேறு நீங்கள் சுயமாக ஒரு உணர்வோடு முடிவுக்கு வந்து எந்த மதத்தையும் பின்பற்றுங்கள் ஆனால் ஆள்பிடிப்பவர்களின் பணத்துக்காகப் போகாதீர்கள் அவ்வளவு தான் சிலர் தாங்கள் புதுமையானவர்கள் என்று காட்டவும் சில மதம் பின்பற்றுவர்கள் எனவும் அறிந்துள்ளேன் இசைக்கலைஞன் இசைக்கலைஞன் கருத்துக்கள பார்வையாளர்கள் கனடா இசை வேலை யாழ்களம் புத்தகம் படிக்காமல் இருப்பது தொ கா பார்ப்பது தொ பேசியில் அலட்டாமல் இருப்பது பனங்காய் குறிப்பிட்ட மதம் ஆ சண்டமாருதன் சண்டமாருதன் கருத்துக்கள பார்வையாளர்கள் ஈழத்தில் இந்துத்துவம் என்பது யாழ்பாண மேட்டுக்குடிகள் வலிந்திழுத்த சாக்கடை இரண்டே தெரிவுகள் தான் ஒன்று இந்துவாய் இருத்தல் இல்லையேல் தமிழனாய் இருத்தல் இந்துவாயும் தமிழனாயும் கடசிவரை இருக்கமுடியாது இந்துதுவ வாதியாய் இருந்துகொண்டு தமிழனாய் இருப்பதென்பது சுத்த கோமாளித்தனம் இந்துத்துவ வததியாய் இருந்த தமிழ்த்தேசீயம் பற்றி கற்பனையும் பண்ண முடியாத தமிழ்த்தேசீயத்திற்கு முதல் விரோதியே இந்துத்துவம் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை இங்கே பலரது தேசீய முகங்கள் கிழிந்து தொங்குகின்றது இந்துத்துவத்தின் அடிப்படையே தேசீய இனங்களை சாதீயம் ஏற்றதாழ்வுகள் ஊடாக சிதைப்பதே ஆகும் இந்தியாவில் அதுவே காலாகாலமாக நடந்துவருகின்றது இந்துத்துவம் இருக்கும் வரை ஒன்றுபட்ட சமூகம் ஒன்றுபட்ட தேசீய இனம் என்ற பேச்சுக்கே இடமில்லை இந்துமதத்துக்குள் ஒரு தேசீய இனம் உருவாவதை இந்துத்துவம் எக்காலத்திலும் அனுமதிக்காது அதற்கான அடிப்படையும் இல்லை ஈழத்தில் ஒரு தேசீய இனம் உருவாவது என்பதுக்கு இந்திய இந்துத்துவம் தலைகீழாய் நின்றாலும் அனுமதிக்காது சிங்களம் ஒரு தேசீய இனம் என்பது அது பௌத்தம் சர்ந்து இருப்பதால் நாளை இஸ்லாமியத் தமிழர்கள் ஒரு தேசீய அலகாக மாறக்கூடும் அதற்கும் அவர்கள் இஸ்லாமியர்களாக இருப்பது காரணமாகும் ஆனால் இந்துக்கள் என்பவர்கள் கடசவரை ஒரு தேசீய இனமாக முடியவே முடியாது ஏனெனில் தேசீய இனக் கட்டமைப்புகளை சிதைக்க ஏற்பாடு செய்யப்பட்டதே இந்துத்துவம் பேரருசுகள் அழிந்தது எழுச்சிகள் அத்தனையும் தோல்விகண்டது வரலாறு முழுக்க தமிழன் வாழ்வு அடிமைத் தடத்திலேயே உள்ளது இதற்கு இந்துத்துவமே அடிப்படைக் காரணம் இந்துத்துவம் விரும்கின்றவன் தமிழீழம் என்ற கனவுக்கும் தகுதியற்றவன் இந்துத்துவம் என்பது தேசீய இனங்கள் தற்கொலை செய்வதற்கான தூக்குக் கயிறு அதற்குள் தலையை கொடுப்பதும் விடுவதும் அவனவன் அறிவைப் பொறுத்தது கருத்துக்கள உறவுகள் வாலி வாலி கருத்துக்கள உறவுகள் பெண்மையின் மென்மை அழகு அறிவு அன்பு கருத்துக்கள உறவுகள் ஈழத்தில் இந்துத்துவம் என்பது யாழ்பாண மேட்டுக்குடிகள் வலிந்திழுத்த சாக்கடை இரண்டே தெரிவுகள் தான் ஒன்று இந்துவாய் இருத்தல் இல்லையேல் தமிழனாய் இருத்தல் இந்துவாயும் தமிழனாயும் கடசிவரை இருக்கமுடியாது இந்துதுவ வாதியாய் இருந்துகொண்டு தமிழனாய் இருப்பதென்பது சுத்த கோமாளித்தனம் இந்துத்துவ வததியாய் இருந்த தமிழ்த்தேசீயம் பற்றி கற்பனையும் பண்ண முடியாத தமிழ்த்தேசீயத்திற்கு முதல் விரோதியே இந்துத்துவம் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை இங்கே பலரது தேசீய முகங்கள் கிழிந்து தொங்குகின்றது இந்துத்துவத்தின் அடிப்படையே தேசீய இனங்களை சாதீயம் ஏற்றதாழ்வுகள் ஊடாக சிதைப்பதே ஆகும் இந்தியாவில் அதுவே காலாகாலமாக நடந்துவருகின்றது இந்துத்துவம் இருக்கும் வரை ஒன்றுபட்ட சமூகம் ஒன்றுபட்ட தேசீய இனம் என்ற பேச்சுக்கே இடமில்லை இந்துமதத்துக்குள் ஒரு தேசீய இனம் உருவாவதை இந்துத்துவம் எக்காலத்திலும் அனுமதிக்காது அதற்கான அடிப்படையும் இல்லை ஈழத்தில் ஒரு தேசீய இனம் உருவாவது என்பதுக்கு இந்திய இந்துத்துவம் தலைகீழாய் நின்றாலும் அனுமதிக்காது சிங்களம் ஒரு தேசீய இனம் என்பது அது பௌத்தம் சர்ந்து இருப்பதால் நாளை இஸ்லாமியத் தமிழர்கள் ஒரு தேசீய அலகாக மாறக்கூடும் அதற்கும் அவர்கள் இஸ்லாமியர்களாக இருப்பது காரணமாகும் ஆனால் இந்துக்கள் என்பவர்கள் கடசவரை ஒரு தேசீய இனமாக முடியவே முடியாது ஏனெனில் தேசீய இனக் கட்டமைப்புகளை சிதைக்க ஏற்பாடு செய்யப்பட்டதே இந்துத்துவம் பேரருசுகள் அழிந்தது எழுச்சிகள் அத்தனையும் தோல்விகண்டது வரலாறு முழுக்க தமிழன் வாழ்வு அடிமைத் தடத்திலேயே உள்ளது இதற்கு இந்துத்துவமே அடிப்படைக் காரணம் இந்துத்துவம் விரும்கின்றவன் தமிழீழம் என்ற கனவுக்கும் தகுதியற்றவன் இந்துத்துவம் என்பது தேசீய இனங்கள் தற்கொலை செய்வதற்கான தூக்குக் கயிறு அதற்குள் தலையை கொடுப்பதும் விடுவதும் அவனவன் அறிவைப் பொறுத்தது இந்தக் கருத்துடன் முற்றும் உடன்படுகின்றேன் இல்லை இல்லை என்று மூடிமறைப்பதால் பூசினிக்காய் முழுவதும் சோற்றுக்குள் மறைந்துவிடாது தூயவன் தூயவன் கருத்துக்கள பார்வையாளர்கள் யாழ்களம் சாண்டமருதன் வழக்கம் போல புசத்துகின்றார் இந்தியா ஒரு தேசமாக மாற்றம் பெற்றது ஐரோப்பியர் வருகைக்குப் பிற்பாடு என்ற ஒரு அடிப்படை அறிவு இல்லாத ஒருவரோடு விவாதம் செய்வது என்பது ஒரு முட்டாள்தனமான செயலாகவே உணர்கின்றேன் அதற்கு ஆமாம் போடும் கூட்டம் வேறு அதற்கு முதல் பிரிந்திருந்த அரசர்கள் மொழிவாரியான இனமாகப் போராடவில்லை ஆனால் இந்துக்களாக இருந்ததற்காக ஒரே தேசமாக நினைத்து வாழவில்லை இஸ்லாமை இவர் பின்பற்றுகின்றார் யாரோ எழுதியிருந்தனர் பிடித்திருந்தால் சுன்னத் செய்யுங்கள் இங்கு வந்து சொறியாதீர்கள் யாழ்அன்பு யாழ்அன்பு கருத்துக்கள பார்வையாளர்கள் இசை அரசியல் தமிழினத் துரோகிகளை கருவறுப்போம் இங்கு ஒரு மதம் நல்லதா கெட்டதா என்பதல்ல விவாதம் மதமாற்றுவது சரியா பிழையா என்பது தான் விவாதம் கட்டாய மதமாற்றல்களில் மற்றவர்கள் ஈடுபடுவதால் தான் அவர்கள் மேல் விமர்சனம் வைக்கிறோமே தவிர இயேசு நல்லவரா கெட்டவரா என்று அவர்கள் மதத்தை பற்றி இங்கு நான் எதுவும் எழுதவில்லை கருத்துக்கள உறவுகள் வாலி வாலி கருத்துக்கள உறவுகள் பெண்மையின் மென்மை அழகு அறிவு அன்பு கருத்துக்கள உறவுகள் கற்பனைகளில் கதைபுனைந்தால் அகில இந்திய விருதுகளுக்கு அனுப்பலாம் தூயவன் தூயவன் கருத்துக்கள பார்வையாளர்கள் யாழ்களம் இல்லாடடில் மெக்காவுக்குச் சிலரை அனுப்பலாம் கருத்துக்கள உறவுகள் வாலி வாலி கருத்துக்கள உறவுகள் பெண்மையின் மென்மை அழகு அறிவு அன்பு கருத்துக்கள உறவுகள் நான் குளித்துச் சுத்தமாகவில்லை என்றால் அடுத்த வீட்டுக்காரனும் குளிக்காமல் அசுத்தமாகத்தானே இருக்கிறான் கருத்துக்கள உறவுகள் கற்பகதரு கற்பகதரு கருத்துக்கள உறவுகள் கருத்துக்கள உறவுகள் கத்தோலிக்க கிறீஸ்தவ மதங்களும் இசுலாமிய மதமும் ஆதிக்க வணிக நோக்கங்களுக்காக உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன இந்து மதம் இந்தியா போன்ற நாடுகளின் உள்ளூர் அரசியல்வாதிகளால் அரசியல் பலம்பெற பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்து மதம் ஆதிக்க வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தப் படாத காரணத்தால் தீவிர மதமாற்றத்தை இந்து மதம் செய்யவில்லை இந்து தீவிரவாதத்தை முன்வைத்து பதவிக்கு வந்த நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராவது மிக அதிக அளவில் எதிர்பார்க்கப்படும் இன்றைய நிலையில் சிவ் சேனா இலங்கையில் உருவாக்கபடுவது இலங்கையில் மனித உரிமை விடயங்களில் அமெரிக்க ஐரோப்பிய ஆதரவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை செய்யும் கத்தோலிக்க கிறீஸ்தவ மதத் தலைவர்கள் அஞ்சி ஒதுங்க வழிவகுக்கும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்துக்களை முதன்மைபடுத்தும் தீர்வை தீவிரமாக அமுல்படுத்த முயலலாம் இவ்வாறான நிலை உருவானால் தமிழ் கத்தோலிக்கர் மற்றும் கிறீஸ்தவர்கள் முஸ்லிம்கள் போல இலங்கை அரசை ஆதரித்து அதன் ஆட்சி அமைப்பை ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகலாம் போர் முடிந்த ஆரம்ப காலத்தில் யாழ்ப்பாண கத்தோலிக்க ஆயர் இலங்கை அரசை தீவிரமாக ஆதரித்து வந்ததை இவ்விடத்தில் நினைவு கூரூவது பொருத்தமானதாகும் சண்டமாருதன் சண்டமாருதன் கருத்துக்கள பார்வையாளர்கள் சாண்டமருதன் வழக்கம் போல புசத்துகின்றார் இந்தியா ஒரு தேசமாக மாற்றம் பெற்றது ஐரோப்பியர் வருகைக்குப் பிற்பாடு என்ற ஒரு அடிப்படை அறிவு இல்லாத ஒருவரோடு விவாதம் செய்வது என்பது ஒரு முட்டாள்தனமான செயலாகவே உணர்கின்றேன் அதற்கு ஆமாம் போடும் கூட்டம் வேறு அதற்கு முதல் பிரிந்திருந்த அரசர்கள் மொழிவாரியான இனமாகப் போராடவில்லை ஆனால் இந்துக்களாக இருந்ததற்காக ஒரே தேசமாக நினைத்து வாழவில்லை இஸ்லாமை இவர் பின்பற்றுகின்றார் யாரோ எழுதியிருந்தனர் பிடித்திருந்தால் சுன்னத் செய்யுங்கள் இங்கு வந்து சொறியாதீர்கள் இந்திய ஒரு தேசமாக மாற்றம் பெற்றது குறித்த அறிவில் குழறுபடி வருவதற்கு எதுவும் இல்லை அதே இந்தியா பார்ப்பன இந்துத்துவா அதிகாரவர்க்கத்திடம் கைமறியதும் அது ஈழத்தமிழர்களை என்னும் பதம் பார்த்துக்கொண்டிருப்பதும் தான் உங்களுக்குப் புரியவில்லை இந்துத்தவ அடிப்படையயே சூழ்ச்சிகள் ஊடாக கட்டமைப்புகள் இனங்கள் சமூகங்களை சிதைத்து தமது அதிகாரத்தை தக்கவைப்பது இது ஒன்றும் புதிதில்லை சமண பௌத்தங்களை அழித்ததில் தொடங்கி சோழ சேர பாண்டிய அரசுகளை அழித்தது ஈடாக பின்னர் ஈழத்தை பொறுத்தவரை இயக்க மோதல்களை பின்னணியில் நின்று தூண்டிவிட்டு சுடுகாடாக்கியதுவரை சாதீய சமூகங்கள் தீண்டாமை வருணாசிரமதர்மம் என இந்திய இனங்களை சிதைத்து தனது புத்திசாலித்தனத்தால் இன்றும் அதிகாரவரக்கமாக இருப்பதின் நீட்சியே இந்துத்தவம் இந்துத்தவம் ஒரு விசம் மேல டாஸ் என்பவரின் கருத்தில் இஸ்லாமியர்களை வெளியேற்றுவோம் என்ற மதவெறி இருக்கின்றது இதை விட தமிழன் ஒரு இனமாக முடியாது என்பதற்கு என்ன சான்று வேணும் இந்த மதவாத சமுதாயப் பின்னணிதான் இஸ்லாமியத் தமிழருக்கும் எமக்குமான பிரச்சனை இந்தப்பிரச்சனையோடு உலக அரங்கில் இது இனப்பிரச்சனை இல்லை பயங்கரவாம் என ஆரம்பிக்கப்பட்ட அணுகுமுறை முள்ளிவாய்க்காலில் வந்து முடிந்தது இந்துத்துவா பின்னணி எமது போராட்டத்திலேயே தராளாமாக தனது விசத்தை கக்கியுள்ளது என்பதற்கு வெளிப்படையான சான்று இது இன்று ஆரம்பிக்கப்படும் இந்துத்துவா என்பதும் சிவசேனா என்பதும் கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான விரிசலின் ஆரம்பம் தமிழினம் என்பதில் இருந்து இஸ்லாமியர்களை பிரித்தாயிற்று இனி கிறிஸ்தவர்களை ஆரம்ப்பின்கின்றனர் இறுதியில் மிஞ்சப்போவது நல்லூரை கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் நாலுபேர்தான் அவர்களுக்கு ஒரு தமிழீழத்தை இந்த உலகின் எந்த மடயன் அங்கீகரிப்பான் தமிழீழம் என்ற தேசீய இனம் உருவாவதற்கு பிரதான தடைக்கல் இந்துத்துவம் என்பதற்கு எத்தனையோ அழிவுகள் காரணங்கள் சான்றாக உள்ளது அதை ஆதரிப்பவன் எப்படி ஒரு தேசீயவாதியாக இருக்கமுடியும் நாளுக்கு நாள் ஈழத்தமிழர்களின் இன ஒற்றுமை என்பது கற்பனைக்கு எட்டாத தூரத்துக்கு தள்ளப்படுகின்றது மதவாதமாக பிரதேசவாதமா அது என்னும் விரைவுபடுத்தப்படுகின்றது பிரதேசவாதத்தை தூக்கிப்பிடித்த கருணா துரோகி என்றால் மதவாதத்தை தூக்கிப்பிடிப்பவன் தியாகியா ஏற்கனவே இந்தக் களத்தில் பதிவு செய்துள்ளேன் கருணாவை விட மோசமான துரோகிகிள் இருக்கின்றார்கள் என்று ஏனெனில் எனக்கு மையவாதத்தின் குணம் நன்கு தெரியும் மையவாதம் சாதீய மதவெறியுடன் சம்மந்மப்பட்டது அது இனத்தை பிழந்துதள்ளும் அதையே தான் இங்கு பலர் செய்கின்றனர் இங்கே பல கருத்துக்களின் முன்னால் கருணாவின் துரோகம் கூட சிறுத்துக்கொண்டு போகின்றது காரணம் பிரதேசவாதப் பிழவுகள் முனைந்தால் சரிசெய்யக் கூடியது ஆனால் மதவாதப்பிழவுகளை சரிசெய்வதென்பது அவ்வளவு எளிதல்ல அவரவர் கற்பனையில் என்னை கிறிஸ்தவன் முஸ்லீம் அல்லது எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் எனக்கு அதைப்பற்றி எந்தக் கவலையும் இல்லை நான் யார் என்று எனக்குத் தெரியும் எனது நோக்கம் அதிக எண்ண ஓட்டங்கள் கருத்துக்களை வெளிக்கொண்டுவருவது அவ்வளவுதான் சண்டமாருதன் சண்டமாருதன் கருத்துக்கள பார்வையாளர்கள் அதே போல் கிறிஸ்தவமும் இஸ்லாமும் பரஸ்பரம் கடும் ஒவ்வாமை கொண்டவை ஆனால் இந்துக்களாகிய நாம் மற்ற மதங்களை அழிக்க முனைவதில்லை இங்கே கடவுளுக்காக இந்துக்கள் சண்டை போடப்போவதில்லை எம்மை விடுங்கள் என்பதே எம்முடைய வாதம் மதம் என்பது எம்முடைய அடையாளம் மதம் எமது வாழ்க்கை முறை மதம் எமது வரலாறு மதம் எமது கலாச்சாரம் மதமே எமது மொழியின் ஊற்று இத்தனையையும் எம்மால் தொலைக்க முடியாது இத்தனையையும் தொலைத்து என்னால் ஒரு வேற்று இனத்தவரை யேசுவை வணங்க முடியாது என் பெருமை என் மதத்தை பற்றி இருப்பதில் இருக்கிறது ஒரு வேற்று இனத்தவன் என்னை ஒரு தனித்துவமான கலாச்சார வரலாறு இல்லாத ஒரு பிலிப்பினோவையோ அல்லது கிறீஸ்தவ பெயர் வைத்த ஆபிரிக்கனையோ அல்லது ஆங்கிலப் பெயர் வைத்த சீனனையோ பார்பது போல் பார்க்க முடியாது இங்கே நான் என்பது என் இனத்தின் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகால பெருமை மிக்க வரலாறுகளின் திரட்டு கிறீஸ்தவனாக மதம் மாறி வெள்ளை இனம் எம்மை ஆண்டார்கள் அவர்கள் போ என்றார்கள் நான் ஆம் என்றேன் என்று தலையாட்டி அவர்கள் மதத்தையும் அவர்கள் பெயரையும் எனக்கும் என் சந்ததிக்கும் வைத்து அடிமை வாழ்க்கை வாழ்ந்த வரலாற்றைக் காவும் ஒரு புண்ணாக்கு அல்ல நாம் நாமாக இருப்போம் நீங்கள் நீங்களாக இருங்கள் மதமே மொழியின் ஊற்று என்றால் சமணத்தையும் பௌத்தததையும் தான் ஆதரிக்கவேண்டுமே தவிர தமிழை நீச பாசை என்று தீட்டு நீக்கும் முறை கொண்ட இந்துத்துவத்தை எப்படி ஆதரிப்பது மதமே எமது கலாச்சாரம் என்பதால் அதற்குள் சாதீயமும் ஏற்றதாழ்வுகளும் தக்கவைக்கப்படுகின்றது அது இருக்கும் வரை ஒருவனை ஒருவன் ஏற்றும் ஜனநாயகப் பண்பு வராவே வராது இவை சாத்தியப்படாத போத இன ஒற்றுமை என்பத எக்காலத்திலும் சாத்தியம் இல்லை என்று ஒருவனுக்கு தான் வாழ்ந்த நிலத்தை விட மதம் தேசீய அடயாளமாகின்றதோ அதன் பிறகு அவனுக்கு நாடு அவசியம் இல்லை மதத்தை காவிக்கொண்டு உலகின் எந்த மூலையில் வேண்டுமானாலும் வாழமுடியும் புலம்பெயர் தமிழர்களின் கோயில்களும் தேசீயமும் இதே வழிகாட்டலில் தான் நாடக்கின்றது அவனுக்கு தேசம் நாலம் பட்சம் ஆன்மீகம் வேறு மதம் வேறு நீங்கள் ஆன்மீகத்தை தொலைக்கும் மதவாதிகளா உருவெடுத்துள்ளீர்கள் அதற்கு விலையாக தேசம் தேசீயம் நாடு என்பதை கொடுகின்றீர்கள் தமிழ்சூரியன் மல்லையூரன் துளசி தமிழ்சூரியன் கிறிஸ்தவன் கத்தோலிக்கன் என்ற முறையில் இந்துப்பெண்ணை திருமணம் செய்து கொண்டவன் என்ற முறையில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்ற வகையில் இப்போ நான் மதத்தால் கிறிஸ்தவன் சண்டமாருதன் நல்ல உதாரணம் ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளீர்கள் தாம் இந்து என்பதை இந்திய இந்துத்துவம் ஒருபோதும் ஏற்றதும் இல்லை இனிமேலும் ஏற்கப்போவதில்லை என்பதை இவர்கள் உணரப்போவதில்லை ஒரு இந்தியப் பார்ப்பனனு புங்கையூரன் திரி அழகாக நகர்கின்றது பல விடயங்கள் வரலாறுகள் அனைத்தும் அலசப்படுகின்றன பலவற்றை அறியக்கூடியதாகவும் உள்ளது எல்லா மதங்களிலும் பலங்களும் பலவீனங்களும் உண்டு ஏனெனில் அனைத்து மதங்களுமே மனித வ கருத்துக்களம் குமாரசாமியின்ரை வேஸ்ற் பேஸ்ற் புக் குமாரசாமி தொடங்கப்பட்டது சைக்கிளும் நானும் தொடங்கப்பட்டது வடமாராட்சியில் கரையொதுங்கிய சடலங்களில் ஒன்றை சிம்பன்சி குரங்கு என புதைப்பு கிருபன் தொடங்கப்பட்டது இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த கெலிக்கொப்டர் விபத்து பேர் உயிரிழப்பு கிருபன் தொடங்கப்பட்டது பங்கு கிரிப்டோ வர்த்தகம் வா பங்கு ஒரு கை பார்க்கலாம் தொடங்கப்பட்டது குமாரசாமியின்ரை வேஸ்ற் பேஸ்ற் புக் நல்லவர்க்கு பொருள் எதற்கு நாடி வரும் புகழ் எதற்கு சைக்கிளும் நானும் அப்போது ரலி சைக்கிளுக்கு சமனாக ரட்ச் என்ற சைக்கிளும் இருந்தது ரீகல் என்ற சைக்கிளும் ஞாபகம் வருது வளவன் வடமாராட்சியில் கரையொதுங்கிய சடலங்களில் ஒன்றை சிம்பன்சி குரங்கு என புதைப்பு ஊடகங்கள் ஏனிவற்றை ஆய்வுசெய்து வெளிப்படுத்தாமல் இருக்கின்றன பலத்த ஐயத்துக்குரியனவாகவே உள்ளன இதனை உள்ளூராட்சிமன்றுகள் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரையானோர் அக்கறையோடு அவதானிக்க வேண்டாமா இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த கெலிக்கொப்டர் விபத்து பேர் உயிரிழப்பு அவலச்சாவுகள் கவலைக்குரியனதான் ஆனால் உத்தரவிடுவோர் தப்பித்துவிட நிறைவேற்றுவோர் பலியாவதே நடைபெறுகிறது மோடி அமிர்சாவின் கூட்டுக்கர்மா அவர்களது பாசாவில் அவர்களது தளபதியை பலிவாங்கிவிட்டதுபோலும் பங்கு கிரிப்டோ வர்த்தகம் வா பங்கு ஒரு கை பார்க்கலாம் ம் புரிகிறது எப்போதும் அணைப்பில் இருந்தால் சுகம் உள்ள இருக்கும் வண்டுமுருகன் வடிவேலருக்கு கடலிலேயே ஜாமீன் இல்லை என்று சொன்னது போல இருக்கு கடஞ்சா நீங்கள் வாசி பேசுவது கசாப்பு கடைக்காரர் ஆடு எவ்வளவு கிலோ தேறும் என்று பார்ப்பது போல நான் நிணைப்பது யாவா ஒரு நாளைக்கு மலைப்பாம்பு ஒருநாளுக்கு இன்னும் பல போடுற முதல் ஒரு மாதம் முதல் மூன்று மாத பயிற்சி உங்கள் முயற்சி தவறு என்று சொல்லவில்லை நீங்கள் சொன்னதே எனது பார்வையை சொல்லி உங்கள் கருத்தை கேட்கிறேன் முக்கியமாக இந்த திரியில் அடியேன் ஒரு மாணவன்
வெய்யில் உக்கிரமாயிருந்தது கத்திரி வெய்யில் ஆரம்பித்திருந்தது வட இந்திய வெய்யில் டெல்லி வெய்யில் எனக்கூடச் சொல்லலாம் நம்மூர் வெய்யிலைக்காட்டிலும் சற்றுக் கூடுதல்தான் சும்மா அமர்ந்திருந்தாலும் உடம்பில் எண்ணெய் ஊற்றிவிட்டது போன்ற ஒரு பிசுபிசுப்பு வந்துகொண்டேயிருக்கும் வற்றாத ஆறுபோல யுவராஜ் ஜான்ஸி வந்து சில வாரங்கள்தான் ஆகியிருந்தது பள்ளிக்கூடத்தில் ஜான்ஸிராணி லச்சுமிபாய் பற்றிப் படிக்கும்பொழுது மனதில் பெரும்மனக்கிளர்ச்சி உருவாகி வந்தது உண்மைதான் ஆனால் இப்போது இங்கு அடித்துக் கொண்டிருக்கும் வெய்யில் அந்த உணர்ச்சிகளையே வென்று விடும் போல மஞ்சள் பூத்தது போல் ஊரேல்லாம் மஞ்சள்நிற உடை உடுத்தியிருந்தது வெய்யிலோடுத்திரியும் ஊரிலிருந்து வந்திருந்தாலும் ஜான்ஸியில் அடிக்கும் வெய்யில் அவனுள் எரிச்சலான எண்ணங்களைத் தந்து கொண்டிருந்தது லெப்ட் ரைட் லெப்ட் ரைட் அட்டேன்ஸன் என ப்ரேட் கிரவுண்டிலிருந்து தொடர்ந்து பலத்த சப்தம் வந்து கொண்டேயிருந்தது இராணுவ வீரர்களின் பூட்ஸ் சப்தத்தால் வேம்புவும் அரசுவும் புளிய மரங்களும் நிறைந்திருந்த ப்ரேட் கிரவுண்ட் பகுதியில் பறவைகள் கூச்சலிட்டுக் பறந்து கொண்டிருந்தன ல் கென்டோன்மெண்ட் ஆரம்பித்ததிலிருந்து இங்கு பூட்ஸ் சப்தம் கேட்டுக் கொண்டுதானுள்ளது இந்தப் பறவைகளும் இப்படித்தான் கீச்சொலிகளை எழுப்பிக் கொண்டே தலைமுறை தலைமுறையாய் வாழ்ந்து மறைந்து கொண்டிருக்கின்றன கரும்பச்சை வண்ண நிறத்திலிருக்கும் அவனது பேண்ட் பாக்கெட்டிலிருக்கும் வெள்ளை நிறக் கைக்குட்டையை எடுத்து நெற்றியில் வழிந்தோடும் வியர்வையை துடைத்துக்கொண்டான் கைகளெல்லாம் இன்சாஸ் துப்பாக்கியைப்பிடித்து பிடித்து காய்ந்துபோயிருந்தது சவ்தான் என சுபேதார்மேஜர் காமாண்டிங் ஆபிஸரின் ஜீப்பை தொலைதூரத்தில் பார்த்துவிட்டு கத்தினார் அவர் முன்பு நூறு பேர்களும் அப்படியே ஆடாமல் அசையாமல் ஒரு கையில் துப்பாக்கியும் மற்றொரு கையை உடம்போடு ஒட்டியவாறு மூச்சுசப்தம் மட்டும் கேட்கும் பேரமைதியோடு நின்றிருந்தார்கள் ஜீப் அருகில்வந்ததும் மீண்டும் சலாமிதேகா சலாமிசஸ் எனக் கத்தினார் வலது கையின் பக்கவாட்டிலிருந்த துப்பாக்கியை முகத்திற்கு நேர் கொண்டுவந்து இடது காலைத் தூக்கி வலதுகாலின் பக்கத்தில் ஒட்டியவாறு வைத்து தாங்கிப் பிடித்திருந்தார்கள் ஜவான்கள் ஜீப் கடந்து சென்ற சில விநாடிகள் கழித்து பகல்சஸ் என்றார் மீண்டும் துப்பாக்கியை பழைய நிலைக்கே கொண்டுவந்தார்கள் ஜவான்கள் பின் விஸ்ராம் என்றார் சுபேதார்மேஜர் கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டுவிட்டு சில கணங்கள் கழித்து விடுவித்தால் உண்டாகும் சுகம் யுவராஜிற்கு அப்போது இருந்தது மீண்டும் கைக்குட்டையை எடுத்து முகத்தில் வழிந்தோடிக் கொண்டிருந்த வியர்வையை துடைத்துக்கொண்டான் பக்கத்தில் அஸ்ஸாமைச் சேர்ந்த நண்பன் சர்க்கார் அவனைப் பார்த்துப் புன்னகைத்தான் யுவராஜிற்கு மிகவும் நெருக்கமான நண்பனாகயிருந்தான் சர்க்கார் ஜபல்பூரில் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த காலத்தில் பூத்த நட்பு மழைக்கால நாளொன்றில் மழையில் நனைந்து கொண்டு சென்ற யுவராஜிற்கு தன் மழைக்கோட் கொடுத்து ஆதரவு தந்தான் சர்க்கார் ஹிந்தி மொழி அறியாத அக்காலத்தில் அவன் செய்த உதவியில் தாயின் கரிசனத்தைக் கண்டான் யுவராஜ் அன்றிலிருந்து இருவரும் தோழர்களாயினர் ஒரு வருடகாலப் பயிற்சிக்குப்பின் ஜான்ஸிக்கு போஸ்டிங் இருவரும் ஒன்றாகச் செல்லப் போகிறோம் எனத் தெரிந்த நாளில் ஹேக் வெட்டி பிறந்த நாள் போல் கொண்டாடினார்கள் ஜான்ஸி என்ற பெயரைக் கேட்டதும் அதிக உற்சாகமாயிருந்த யுவராஜின் ரகசியத்தை சர்க்கார் மட்டும் அறிந்திருந்தான் அஸ்ஸாமைச் சேர்ந்தவர்கள் பொதுவாக கள்ளம் கபடமற்ற மனிதர்களாகவே அதிகம் தெரிகின்றனர் அவர்கள் எப்போதும் அன்பை அனைவரிடமும் காட்டுபவர்களாகவும் ஒரு முறை பழகிவிட்டால் கடைசிவரை தோழமையை காப்பாற்றுவார்களென சர்க்கார் வழியாக அறிந்து கொண்டான் யுவராஜ் ஜான்ஸியில் தனிமை சூழ்ந்த பறவைகளின் சப்தமற்ற நிசப்தமான இரவுகளில் நீண்ட நேரம் ப்ரேட் கிரவுண்ட்டில் அமர்ந்து பேசிக்கொள்வார்கள் யுவராஜ் எனக்கு சகோதரி இருக்கா நீ அவளைக் கட்டிக்க உன்னப்பத்தி சர்மிளாக்கிட்ட நிறையச் சொல்லொயிருக்கேன் நாமச் சேர்ந்தெடுத்த போட்டோக்களை வாட்சப்புல அனுப்பினேன் உன்ன ரொம்ப புடுச்சிருக்குன்னா எனச் சொல்லி அமைதியானான் சர்க்கார் யுவராஜ் சிறு புன்னகைசெய்துவிட்டு உன் தங்கச்சிக்கு சாம்பார் வைக்கத் தெரியுமா மெதுவடைச் செய்யத் தெரியுமா கோலம்போடத் தெரியுமா இதெல்லாம் தெரிஞ்சிருந்தாதான் கட்டுக்குவேன் எனச்சிரித்தான் சர்க்கார் அவளுக்கு நீதான் எல்லாம் செய்து கொடுக்க வேண்டும் எனச் சொல்லிச் சிரித்தான் நட்சத்திரங்கள் கண்சிமிட்டிக்கொண்டே அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தது இரவில் தனித்திருக்கும்பொழுது பழைய நினைவுகளில் மூழ்கிப்போவான் யுவராஜ் ஒரு முறை ஜான்ஸி கென்டோன்மெண்ட்டின் மந்திர்கிரவுண்ட் பகுதியில் காவல்பார்த்துக் கொண்டிருந்த பொழுது இரவை ரம்மியமாக்கி பறந்து சென்றுகொண்டிருந்தது அழகிய மஞ்சள் வண்ண மின்மினிப்பூச்சி அந்த மின்மினிப்பூச்சியை பார்த்தபொழுது நீண்ட காலத்திற்கு முன் அம்மாவோடு இருந்த நினைவு அவன் மனதில் வந்து சென்றது தனது கேசத்தை கோதிக்கொண்டே அம்மா சொன்ன அந்த ஆதரவான வார்த்தை ஏனோ இப்போது அவனுக்கு தேவையாய் இருந்தது நீ பட்டாளத்துக்கு போகப்போறேன்னு சொல்றப்ப நாட்டக்காப்பாத்த நம்ம புள்ளயும் போகுதேன்னு சந்தோசமா இருந்தாலும் அம்மாவுக்கு நீ ஒரே புள்ள நீ போனயின்னா நான் என்ன பண்ணுவேன் என நினைக்குறப்ப பயமா இருக்குப்பா அதெல்லாம் ஒன்னுமில்லம்மா வந்துருவேன் நானும் நாட்டுக்காக ஏதாவது செய்யனுமில்ல நம்ம நாட்டுக்குள்ளேயே வந்து சுட்டுட்டு போறாங்க அவங்கள விடக்கூடாது பட்டாளத்துக்குப் போனாதான் அவங்கள சுட்டுத்தள்ள முடியும் அரசமரத்துக்கு கீழே புத்தர் சிலையிருந்தது மஞ்சள்வெளிச்சத்தில் புத்தர் மேலும் அழகாய்த் தெரிந்தார் யாரோ தொலை தூரத்தில் அடிக்கும் விசில் சப்தம் கேட்டது அவனும் பட்டாளத்தில் சேர்ந்தவனாகத்தான் இருப்பான் தூங்காமல் விழித்திருக்க அவனுக்கு அவனே செய்யும் சம்பாஷனைதான் இது தன் கழுத்தில் கட்டியிருக்கும் விசிலை எடுத்து யுவராஜும் சப்தம்செய்தான் கரட்டிலிருந்து ஏதோதோ விலங்குகளின் சப்தம் வந்து கொண்டிருந்தது விடிந்ததும் தம்ளரை எடுத்து மெஸ்ஸுக்கு செனறான் தமிழ்க்காரர்தான் குக்காக இருந்தார் அவர் போடுகுற டீ தான் நன்றாக இருக்கும் தேயிலையை நன்றாக கொதிக்கவைத்து இஞ்சியைக் கொஞ்சம் தட்டிப் போட்டு பின் பாலை ஊற்றித் தயாரிப்பார் டீ நல்ல நிறத்துடன் நறுமணம் சேர்ந்து சுவையாக இருக்கும் சர்க்கார் வந்தான் தேரேக்கு பத்தாகே கியா என்னத் தெரியுமா எனக் கேட்கிறான் எனப் புரியாத விளிகளோடு கியாகே என்றான் யுவராஜ் அவனுக்குப் பக்கத்திலிருந்த கணேசன் அண்ணன்தான் சொன்னார் தம்பி ஒன்னைய கமாண்டிங் ஆபிஸர் வீட்டுக்கு அனுப்பப் போறதா சி கெச் எம் கம்பெனியில் இருக்கும் ஜவான்களை கண்கானிப்பவர் அமரேந்தர் சிங் சொல்லிக்கிட்டிருக்கார் போ என்னான்னு கேளு எனக் கூறிவிட்டு கையில் வெள்ளையடிக்கும் பிரஸோடு கடந்து சென்றார் யுவராஜிற்கு ஒரே படபடப்பாய் இருந்தது கமாண்டிங் ஆபிஸர் ரொம்ப நல்லவர்தான் பீஹாரைச் சேர்ந்தவர் ஆஜானுபாகவானத் தோற்றம் நல்லச் சிவப்பு மூக்கு நீண்டு அழகாக இருக்கும் ஒரு சாயலில் நடிகர் அரவிந்த்சாமி போல் இருப்பார் விடுமுறை போகும்போது மட்டும்தான் அவரிடம் பேசியுள்ளான் யுவராஜ் மற்றபடி அவரைப் பற்றி எதுவும் அதிகம் தெரியாது புதிதாய் வந்த சோல்ஜர்களில் நன்றாக வேலை செய்பவனும் டிசிப்ளினான பையனாக வேண்டும் எனக் கூறியபடியால் சி கெச் எம் அமரேந்தர் சிங் யுவராஜை தேர்ந்தெடுத்தார் யுவராஜ் அவசரமாக தன் பேக்கைத் திறந்து துணிகளை மடித்துவைத்தான் என்ன கேட்கமுடியும் இவர்களிடம் பட்டாளத்தில் போ என்று சொன்னால் போய்தான் ஆகவேண்டும் அவனது கண்ணில் அரக்குநிற தடித்த அட்டை போட்ட டைரி தட்டுப்பட்டது டைரியைத் திறந்து பக்கங்களைப் புரட்டினான் ஜபல்பூரில் இருந்தபொழுது எழுதியது ஜான்ஸி போஸ்ட்டிங் போகவேண்டும் எனத் தெரிந்த நாளில் மிகவும் உற்சாகமாய் இருந்தான் ஜான்ஸி என்ற பெயர்தான் அதற்குக் காரணம் தன் கிராமத்தில் இருக்கும் மாமன் மகள் ஜான்ஸியின் நினைவுகளை மனதில் எப்போதும் பசுமையாய் வைத்திருந்தான் படிக்கும் காலத்திலிருந்தே ஜான்ஸியின் மீது பிரியமாய் இருந்தான் ஜான்ஸிக்கு டிசம்பர் பூக்கள் மிகவும் பிடிக்கும் என்பதற்காகவே தன் வீட்டில் டிசம்பர் பூச்செடியை வளர்த்தான் யுவராஜ் ஜான்ஸியிடம் அதிகம் அவன் பேசியதில்லை எப்போதும் அவள் சர்ச்சிற்கு செல்லும்போது அவளையே பார்த்துக்கொண்டிருப்பான் ஜான்ஸி ஒரு முறைப் பார்த்து புன்னகைத்துவிட்டுச் செல்வாள் அவள் சென்ற பின் அவள் அமர்ந்த டெஸ்கிலேயே அமர்ந்து பிரார்த்திப்பான் ஜான்ஸி அவனைக் கடந்துபோகும் பொழுதெல்லாம் எம்மோடு தங்கும் ஆண்டவரே என்னோடு பேசும் என் இயேசுவே என்ற பாடலை முணுமுணுப்பான் பட்டாளத்துக்கு வந்த பிறகு அவள் நினைவுகளே இவனுக்கு போதுமானதாக இருந்தது ஜான்ஸியின் நினைவுகள் வரும்பொழுது தனது டைரியில் கவிதைகளாக எழுதிவைத்திருந்தான் ஒவ்வொரு முறையும் அவன் எழுதிய கவிதையை சர்க்காரிடம் மொழிபெய்ர்த்துச் சொல்வான் அபிதக் நகிகயா என சி கெச் எம் அமரேந்தர் சிங் அதிகாரமான கரகரத்த குரலில் கேட்டார் ஜெயின் சார் எனச் சொல்லிக்கொண்டே டைரியை மூடிவைத்தான் ஜாராவும் சார் எனக்கூறிக்கொண்டே தனது படுக்கையை வேகமாக சுருட்டி எடுத்துக் கொண்டான் வெய்யில் ஏறியிருந்தது கம்பெனியை ஒட்டிய சுவரில் மஞ்சள் அரளிப்பூக்கள் பூத்திருந்தது கமாண்டிங் ஆபிஸரின் வீட்டிற்கு பணிக்கு வந்து ஒரு மாதம் ஆகியிருந்தது இப்போது மழைக்காலம் ஆரம்பமாகிவிட்டது மழைக்கோட் எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டியுள்ளது எப்போது மழை வரும் எனச் சொல்ல முடியாது திடீரென்று குளிர்காற்று வீசி மழைக்கொட்டிவிடும் அதிகாலையில் மரங்களும் பூச்செடிகளும் மழையில் குளித்து முடித்த இளம்பெண் போல் அழகாயிருந்தன ஹாலிங் பெல் ஒலித்தது சாட்ஸ் அணிந்த பாப் கட்டிங் செய்து கொண்ட கமாண்டிங் ஆபிஸரின் மனைவி மிக எரிச்சலாக திட்டிக் கொண்டே அது சரியில்லை இது சரியில்லை எனச் சொல்லிச் சென்றாள் இது வழக்கமாக நடக்கும் நிகழ்வுதான் இங்கு எல்லோரும் அவர்களுக்கு வேலைக்காரர்கள் மட்டும்தான் ஜவான்கள் இல்லை நாட்டைக் காக்க போராடும் போர்வீரர்கள் இல்லை சில தினங்களுக்கு முன்பு ஜான்ஸிராணிக் கோட்டைக்கு போய்விட்டு வந்த யுவராஜை வெளுத்து வாங்கிவிட்டாள் கமாண்டிங் ஆபிஸரின் மனைவி என்ற மரியாதைக்காகவே அங்கு பணிபுரியும் அனைவரும் அமைதியாய் இருந்தனர் யுவராஜும் கூட சர்க்கார் எப்போதாவது வந்து போய் கொண்டிருப்பான் இப்போது அவனும் இல்லை சர்க்காரை ஹெட்குவாட்டருக்கு அனுப்பியிருந்தார்கள் இங்கிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவு கைப்பேசியில் நேரம் கிடைக்கும் போது பேசுவான் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லையென ஸ்டெல்லா அக்கா போன் செய்து சொன்னார் பயப்படாத உடனே வரத்தேவையில்லை சித்திரைப் பொங்கலை அனுசரிச்சு வந்தாப் போதும் அப்பத்தான உன் பிரண்ட்ஸ் எல்லாம் வருவாங்க அம்மாவுக்கு ஒன்னுமில்ல நாங்க பாத்துக்கிறோம் ஜான்ஸிக்கு வர்ர ஞாயிறு கல்யாணம் யாரோ கூடப் படிக்கிறப் பையனாம் கல்யாணம் முடிஞ்ச கையோட வெளிநாடு போறாங்கலாம் அந்தப் பையனோட மாமா அங்க வரச் சொல்லிட்டாராம் சரி உடம்ப பாத்துக்க எனச் சொல்லி ஸ்டெல்லா அக்கா வைக்கவும் யுவராஜிற்கு ஏனோ இப்போது சர்க்கார் கூட இருந்தால் ஆறுதலாக இருக்கும் என எண்ணினான் சர்ச்சில் திருமணத்தின்போது பாடும் மங்களம் செழிக்க கிருபை அருளும் மங்கள நாதனே என்ற பாடலை சப்தமாகப் பாடினான் ஜன்னலுக்கு வெளியே மழைத் தூரிக் கொண்டிருந்தது முற்றும் தீக்கதிர் இதழில் ஜான்ஸி சிறுகதை பற்றிய விமர்சனம் வந்துள்ளது தேவராஜ் விட்டலனின் ஜான் ஸி ச சுப்பாராவின் மெல்லுவதற்குக் கொஞ்சம் அவல் இரண்டும் தொலைக் காட்சித் தொடர்களில் வரும் எப்பிசோட்கள் போல் படிக்கும் போது அடுத்து என்ன என்ற ஆர்வத்தைத் தூண்டுகின்றன ஜான்ஸி என்ற ஊரையும் பெண்ணின் பெயரையும் இணைத்துப் பார்க்கிற யுவராஜ் எண்ணப்படி பயிற்சிக்கு ஊர் கிடைத்தாலும் வாழ்க்கைத் துணையாக அந்தப் பெண்கிடைக்காமல் போகிற ஏமாற்றத்தைச் சொல்கிறது இருப்பினும் அதனை ஏற்றுக் கொள்ளுகிற மனப்பக்குவம் தான் கதையின் கருவாகிறது பதிவுகள் பாதை காட்டும் புத்தகங்கள் சிறுகதைகள் கவிதைகள் நாட்குறிப்புகள் பத்திகள் திரைப்படங்கள் குறும்படங்கள் உலக சினிமா பயணம் இதழ் ஜே ஷாஜஹான் படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் நேசம் சேவல் கட்டு ம தவசி மாரியப்பன் கண்மாய்களின் கதை சூல் சோ தர்மன் கண்மாய்களின் கதை சூல் சோ தர்மன் தொகுப்புகள் தொகுப்புகள்
சில நாட்களுக்கு முன்பாக பிரகாஷ் தொடர்பு கொண்டிருந்தார் பிரகாஷ் ராஜமாணிக்கம் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வசிக்கிறார் நாமக்கல் பக்கம் சொந்த ஊர் புதிய வீடு கட்டியிருக்கிறார் புதுமனை புகுவிழா விழாவுக்குத்தான் அழைக்கிறார் என்று நினைத்தால் மூன்றாம் நதி நூற்றைம்பது பிரதிகள் வேண்டும் என்றார் ஆச்சரியமாக இருந்தது நல்லா யோசிச்சுட்டீங்களா என்ற போது தீர்க்கமாக யோசித்துவிட்டதாகச் சொன்னார் விருந்துக்கு வருகிறவர்களுக்கு ஆளுக்கு ஒரு பிரதி தருவதற்காகக் கேட்டிருக்கிறார் அவர்கள் மீது ஜென்மப் பகை இருக்கும் போலிருக்கிறது பழி தீர்ப்பதற்காகக் கொடுக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன் பிரகாஷூக்கு நன்றி பிரதிகளை வாங்கியவர்கள் வாசித்தவர்கள் விமர்சனங்கள் அனுப்பியவர்கள் என அத்தனை பேருக்கும் நன்றி பதிப்பாளருக்கு ஏக சந்தோஷம் அச்சிட்ட அத்தனை பிரதிகளும் விற்றாகிவிட்டது பதிப்பாளரிடம் பிரதிகள் இல்லை லிண்ட்சே லோஹன் மாரியப்பனும் காலி இனி அச்சிட்டால் அது நான்காம் பதிப்பு மசால் தோசை ரூபாயும் தீர்ந்துவிட்டது இரண்டாம் பதிப்புக்குத் தயார் இப்பொழுது மூன்றாம் நதியும் இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது மூன்று புத்தகங்களின் மறுபதிப்புகளையும் விரைவில் கொண்டு வருவதாகச் சொல்லியிருக்கிறார் அவரை விடவும் எனக்கு சந்தோஷம் ஒவ்வொரு புத்தகம் வெளிவரும் போதும் வித்துடுமா என்று சந்தேகம் வராமல் இருந்ததில்லை ஆனானப்பட்ட ரஜினிக்கே படம் ஓடுமா என்று கவாத்து வாங்குகிறது திரையரங்குகளை மொத்தமாக அமுக்கி வெற்றி வெற்றி என்று அறிவிக்கிறார்கள் நமக்கு பயம் வராமல் இருக்குமா விற்காவிட்டால் ஒன்றும் குறைந்துவிடாதுதான் ஆனால் அடுத்த புக்குக்கு வேற பதிப்பாளரை பார்த்துக்குங்க என்று சொல்லிவிடுவார்களோ என்ற குழப்பம்தான் அப்படிச் சொல்லிவிட்டால் இப்படியொரு இனாவானா பதிப்பாளருக்கு எங்கே போவது அடுத்த நாவலை எழுதச் சொல்லியிருக்கிறார் ஆரம்பித்திருக்கிறேன் வெள்ளாஞ்செட்டி என்று நாவலுக்குத் தலைப்பு வெள்ளாஞ்செட்டி என்பது ஒருவரின் பெயர் எங்கள் வீட்டில் குடியிருக்கிறார் வெளியூர்வாசி முப்பதாண்டுகளுக்கு முன்பாக குடி வந்தவர் அக்கம்பக்கத்து ஜமீன்களில் எல்லாம் வேலை செய்திருக்கிறார் அவரிடம் ஊர்ப்பட்ட கதைகள் இருக்கின்றன அவரிடம் அவரிடம் பேசிப் பேசி சேகரித்து வைத்திருக்கிறேன் அப்படியே கதையாக மாற்றாமல் வேறு சில நகாசு வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது சமீபமாக உள்ளூரில் என்னை கவனிக்கிறார்கள் என்பதால் பாத்திரங்களின் பெயர்களை எல்லாம் மாற்றித்தான் எழுத வேண்டும் இல்லையென்றால் வாயை உடைத்துக் கொள்ள வேண்டியிருக்கும் தோராயமான வடிவம் ஒன்று மண்டைக்குள் உருண்டு கொண்டிருக்கிறது பிடித்து எழுதிவிட்டால் போதும் இணையத்தில் எழுதினாலும் கூட புத்தகமாக வெளிவருவதில் ஒரு சந்தோஷம் இருக்கிறது நம் எழுத்துக்கு கவனமும் மரியாதையும் இருக்கிறதா என்பதை புத்தகமாக்கமும் அதன் விற்பனையும்தான் சுட்டிக்காட்டுகின்றன விற்பனையின் வேகம் எண்ணிக்கை போன்றவற்றைப் பற்றி கவனம் கொள்வது பாப்புலிஸத்தில் சேர்த்தி என்பார்கள் எழுதுகிறவன் விற்பனை குறித்து கவனம் கொள்ளக் கூடாது என்றெல்லாம் பேசுவார்கள் என்னைப் பொறுத்தவரையில் அப்படியெல்லாம் எதுவுமில்லை புத்தகத்தை வாங்குகிறார்கள் என்றால் நாம் எழுதுவதை மதிக்கிறார்கள் என்று அர்த்தம் இன்றைக்கு ஆயிரம் பிரதிகள் விற்றால் நாளைக்கு இரண்டாயிரம் பிரதிகள் விற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறு எதுவுமில்லை அப்படியொரு ஆசையை உள்ளூர வைத்துக் கொண்டு வெளியில் நடிப்பதுதான் தேவையில்லாத வேலை எழுத்து பதிப்பு விற்பனை எழுத்தாளன் என்பதெல்லாம் ஒன்றுக்குள் ஒன்றுதான் இன்றைக்கு நிறையப் பேர் வாசிக்கிறார்கள் பல தளங்களில் தேடிக் கொண்டிருக்கிறார்கள் சுவாரஸியமாக இருந்தால் வாசிக்கிறார்கள் வாசிப்பின் வழியாக எதையாவது தெரிந்து கொள்ள முடியுமா என்று தேடுகிறவர்களும் அதிகம் என்றைக்கும் இல்லாததையும் விட இன்றைக்கு புத்தக விற்பனை கொடி கட்டுகிறது என்பதுதான் உண்மை ஆனால் இன்றும் கல்கியும் சாண்டில்யனும் சுஜாதாவும்தான் டாப் செல்லர்கள் யோசிக்க நிறைய இருக்கிறது முன்பு இருந்ததைவிடவும் எழுத்தாளர்களின் பெயர் மிக எளிதில் சமூகத்தில் பரிச்சயமாகிவிடுகிறது ஆயினும் விற்பனை என்று வந்துவிட்டால் நொண்டியடிக்கிறது எந்தப் பதிப்பாளரும் இதை மறுக்கப் போவதில்லை என்ன காரணம் என்றால் நிறைய காரணங்களை அடுக்கக் கூடும் இன்றைக்கு அச்சு ஊடகங்களில் எழுத்தாளர்களுக்கான இடம் அருகியிருக்கிறது பிற எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது அவரவருக்கு தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்வதில்தான் மொத்த கவனமும் இருக்கிறது தாம் மட்டுமே எழுத்தாளன் என்ற மனநிலையிலேயே முக்கால்வாசிப் பேர் இருக்கிறார்கள் ஒரு எழுத்தாளன் இன்னொரு புத்தகத்தை நேர்மையாக அறிமுகப்படுத்தி எழுதினால் பத்து பேராவது வாங்குவார்கள் இருபது எழுத்தாளர்கள் ஒரு புத்தகத்தைப் பற்றி பேசினாலே விற்பனை அதகளப்படும் அத்தனை புத்தகங்களைப் பற்றியும் பேச முடியாதுதான் ஆனால் முக்கியமான புத்தகங்கள் குறித்தாவது பேசலாம் அல்லவா எங்கே பேசுகிறார்கள் புத்தகங்கள் பற்றிய சில தரவுகளைத் தேடிக் கொண்டிருந்தேன் அமெரிக்காவில் அச்சிடப்பட்ட புத்தகங்களில் வெறும் தான் ஐந்தாயிரம் பிரதிகளுக்கு மேல் விற்கின்றனவாம் அங்கேயும் அச்சிடப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகமானாலும் விற்பனையின் எண்ணிக்கை சரிந்து கொண்டுதான் இருக்கிறதாம் கிட்டத்தட்ட எல்லா பக்கமும் இப்படித்தான் போலிருக்கிறது நாம் மட்டும்தான் விற்பனையான புத்தகங்களை மட்டும் தொங்கிக் கொண்டு அய்யகோ ஹாரிபாட்டர் அளவுக்கு தமிழ்நாட்டில் எந்தப் புத்தகமும் விற்கலையே என்று பேசிக் கொண்டிருக்கிறோமோ என்று குழப்பமாக இருக்கிறது சரி இருக்கட்டும் எப்படியோ விற்றுவிடுகிறது மகிழ்ச்சியாக இருக்கிறது அப்படியே இருக்கட்டும் எதற்கு குழப்பமெல்லாம் எதிர் சப்தங்கள் விஜயன் நல்ல விசயம் புதுமனை புகுவிழாக்கு புத்தகங்கள் வாம உங்களின் மூன்றாம் நதி புத்தகத்தை என்னால் படிக்கவே முடியவில்லை முதல் பக்கத்தைப் படித்ததும் முடிவு இப்படித்தான் செல்லும் என்று எளிதில் யூகித்து விட்டேன் உங்களின் எழுத்து ஒரு விதமான சோக போதையை உருவாக்குகிறது மாற்றிக் கொள்ளுங்கள் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் கொண்டாட்டமானது அவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை வாழ்க்கையை வெகு எளிதாக எடுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விடும் எதார்த்தப் போக்கில் வாழ்பவர்கள் ஆனால் அவர்களின் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க எந்த எழுத்தாளர்களும் விரும்புவதில்லை ஆனால் வெளியிருந்து பார்த்து தன்னைச் சுற்றி நடக்கும் ஒரு சில சம்பவங்களை வைத்துக் கொண்டு எழுத்தினை புனைந்து விடுகிறார்கள் இது சுத்த அபத்தம் அந்த அபத்தத்தின் விளைவே மூன்றாம் நதி எனத் தோன்றுகிறது வேறு வழியில்லை அருவி போல கொட்டும் உங்கள் எழுத்து வேறு வகை உச்சத்தைத் தொட வேண்டுமென்று தான் எழுதுகிறேன் உங்கள் புத்தகத்தை விமர்சிப்பதால் கவனம் கிடைக்கும் என்று நினைப்பவனல்ல அந்தக் கவனங்கள் எனக்கு எந்த வித நன்மையையும் செய்து விடப்போவதில்லை என்பது உண்மை ஆகவே வாம சேக்காளி லிண்ட்சே லோஹன் மாரியப்பனும் காலி இனி அச்சிட்டால் அது நான்காம் பதிப்பு மசால் தோசை ரூபாயும் தீர்ந்துவிட்டது இரண்டாம் பதிப்புக்குத் தயார் இப்பொழுது மூன்றாம் நதியும் இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது மூன்று புத்தகங்களின் மறுபதிப்புகளையும் விரைவில் கொண்டு வருவதாகச் சொல்லியிருக்கிறார் யோவ் என்னய்யா சொல்லுத பொய்யி கிய்யி புளுகலியே புது வீட்டுக்கு போனா கவித புத்தகமா சில்லறை இல்லன்னு பிஸ்கட் பாக்கட்ட கொடுத்த மாதிரி எங்க இனிமே கவித புத்தகங்கள் கொடுத்திடுவாங்களோன்னு பயமா இருக்கு விளையாட்டுக்குத்தான் கேள்வியும் பதிலும் தொடர்புக்கு விவரங்கள் இணைப்பில் இருக்கின்றன நிசப்தம் ஆண்ட்ராய்ட் நிசப்தம் கல்வி உதவிக்கான விண்ணப்பம் விண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால் கூரியரில் அனுப்பி வைக்கவும் அறக்கட்டளை பேச்சு மற்றும் நேர்காணல்கள் அறக்கட்டளை தன்னார்வலர்கள் அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம் இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்
ரஜினி செம ரகளை பண்ணியிருக்கார் பா இரஞ்சித் பகிரும் ரகசியங்கள் செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் கனமழை அப்டேட்ஸ் ஆன்லைன் தொடர்கள் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் ராசி காலண்டர் மேலும் மெனுவில் ஆனந்த விகடன் தலையங்கம் யாருடைய தவறு கார்ட்டூன் ஹலோ வாசகர்களே சினிமா ரஜினி செம ரகளை பண்ணியிருக்கார் பா இரஞ்சித் பகிரும் ரகசியங்கள் மாஸ்டரா நான் சின்னப் பையன் சார் இப்பெல்லாம் வித்தியாசமா எதுவும் யோசிக்கிறதில்லை கடவுள் கொடுத்த வரம் தேவரகொண்டாவின் தாக்கம் தமிழ் சினிமாவிலும் இருக்கும் பிட்ஸ் பிரேக் பேட்டி கட்டுரைகள் கோலியாத்தை வீழ்த்திய கில்லிகள் நேர் கோணல் டெனிம் டேட்டிங் தெர்ல மிஸ் புக்மார்க் தொடர்கள் அன்பும் அறமும் சர்வைவா தெய்வத்தான் ஆகாதெனினும் பிச்சைக்காரங்கன்னு யாரையும் சொல்ல வேணாம்னே சோறு முக்கியம் பாஸ் கலாய் கவிதைகள் பணம் பழகலாம் வின்னிங் இன்னிங்ஸ் என்னுள் மையம் கொண்ட புயல் கமல்ஹாசன் நீட்டுக்கு ஆதரவு இல்லை வீரயுக நாயகன் வேள்பாரி விகடன் பிரஸ்மீட் பிரச்னைகளைச் சொல்ல நல்ல தலைவன் இல்லை விஜய் சேதுபதி இன்பாக்ஸ் வலைபாயுதே கதைகள் கண்ணன் சிறுகதை கவிதைகள் சொல்வனம் ஹ்யூமர் ஜோக்ஸ் ஜோக்ஸ் நாளை மறுநாள் நமதே ரஜினி செம ரகளை பண்ணியிருக்கார் பா இரஞ்சித் பகிரும் ரகசியங்கள் எம் குணாதமிழ்ப்பிரபா ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் ரஜினி செம ரகளை பண்ணியிருக்கார் பா இரஞ்சித் பகிரும் ரகசியங்கள் எம் குணா தமிழ்ப்பிரபா உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற இன்ஸ்டால் விகடன் ஆப் பிரீமியம் ஸ்டோரி டீஸர் சிறப்பா வந்திருக்கு ப்ரோ பாக்குறீங்களா அன்போடு கேட்கிறார் இயக்குநர் பா இரஞ்சித் ரஜினியுடன் இரண்டாவது இன்னிங்ஸையும் வெற்றிகரமாக முடித்துவிட்ட திருப்தி அவரது முகத்தில் தெரிகிறது டீஸரைப் பார்த்துவிட்டு இரஞ்சித்துடன் நடத்திய உரையாடல் இங்கே கபாலி முடிச்சதுக்கு அப்புறம் என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டிருந்தப்ப அப்பா உங்களை மீட் பண்ண நினைக்கிறார் ன்னு சௌந்தர்யா சொன்னாங்க சாரை மீட் பண்ணேன் கபாலி கொடுத்த புத்துணர்ச்சியில நான் இன்னும் எட்டுப் படம் பண்ற அளவுக்கு எனர்ஜியா இருக்கேன் டைரக்டர் சார் திரும்பவும் நாம சேர்ந்து படம் பண்ணலாம் னு சொன்னவர் கபாலி இரண்டாம் பாகமே பண்ணலாமா ன்னு கேட்டார் சரி சார் னு சொல்லி அதுக்காக வொர்க் பண்ணேன் ஆனா இந்தக் கபாலி கதை வேற ஒரு களத்துல பயணிக்கணும்னு சார்கிட்ட சொல்லிட்டு மும்பைக்குக் கிளம்பிட்டேன் அங்க இருக்கிற கேங்ஸ்டர்களைப் பத்தி தெரிஞ்சிக்க நிழல் உலக தாதாக்களைச் சந்திச்சேன் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியை முழுசா ஆராய்ச்சி பண்ணேன் மும்பைத் தெருக்கள்ல சும்மா சுத்திட்டிருந்தேன் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நகரம் எங்க போனாலும் பெரிய பெரிய கட்டடங்கள் அதன் காலடியில சுற்றி இருக்கிற குடிசைப்பகுதிகள் இதெல்லாம் பாக்குறப்ப அது எனக்கு வேறொரு புரிதலையும் பார்வையையும் கொடுத்தது கேங்ஸ்டர் கதையை விட்டுட்டு அந்த மக்களோட வாழ்க்கையையும் அவங்க பிரச்னையையும் பதிவு பண்ணணும்னு நினைச்சேன் அவங்க சந்திக்கிற பிரச்னை இந்தியப் பெருநகரங்கள்ல வாழ்கிற எல்லா விளிம்புநிலை மக்களுக்கான பிரச்னையாகவும் இருந்தது அதன் அடிப்படையில அங்க இருக்கிற தமிழ் மக்களோட தொடர்ந்து உரையாடினேன் அந்த பாதிப்புல முற்றிலும் வேறொரு கதையை உருவாக்கிட்டு சார்கிட்ட போனேன் அதுதான் காலா கபாலி இரண்டாம் பாகத்துக்காகக் காத்திருந்த ரஜினி காலா கதையைக் கேட்டுட்டு என்ன சொன்னார் கள்ல மும்பையில் வாழ்ந்த ரௌடிகள் அவங்களுக்குள்ள இருக்கிற மோதல்கள்னு கேங்ஸ்டர் கதையைத்தான் எழுதிட்டு வருவேன்னு சார் எதிர்பார்த்தார் ஆனா நான் கொண்டுபோனது ஒரு எமோஷனல் குடும்பத்தலைவனோட கதை ஒரு அப்பா அவருக்கு நான்கு மகன்கள் கணவன் மனைவி காதல் பேரன் பேத்திகள் வயதான நண்பர்கள் இப்டின்னு கதை சொல்லிட்டுப் போறப்போ சார் தலையாட்டி சிரிச்சுக்கிட்டே இப்படி ஒண்ணை நான் எதிர்பார்க்கவே இல்லையே டைரக்டர் சார் ஆனா நல்லா இருக்கு மேல சொல்லுங்க ன்னு தாடியைத் தடவிக்கிட்டே கேக்க ஆரம்பிச்சதும் எனக்கு அவ்ளோ சந்தோஷம் ஏன்னா இந்தக் கதையை அவர் ஏத்துக்குவாரான்னு ரொம்பத் தயங்கினேன் எப்படி இரண்டாவது படமும் ரஜினி உங்களுக்குக் கொடுத்தார்னு சிலபேர் கேக்குறாங்க ஒருவாட்டி நானே சார்கிட்ட அதைக் கேட்டேன் உங்க வொர்க் உங்ககிட்ட இருக்கிற நேர்மை இது ரெண்டுதான் உங்களோட படம் பண்ண வெச்சது இனியும் வைக்கும் னு சொன்னார் அவரோட நம்பிக்கையைக் காப்பாத்தியிருக்கேன்னு நம்புறேன் காலா பெயர்க் காரணம் என்ன படத்துல கரிகாலன் அவருடைய பேர் அதுல காலன் அப்டிங்கிற பேரைத்தான் சுருக்கிக் காலான்னு வெச்சிருக்கோம் திருநெல்வேலி மாவட்டத்துல வழிபடப்படுற சிறுதெய்வங்கள்ல காலா சாமியும் ஒருத்தர் ரஜினி சார் அந்த மாவட்டத்தைச் சார்ந்தவராக நெல்லைத் தமிழ் பேசுபவராக இருப்பதால் இந்தப் பேர் பொருத்தமா இருந்துச்சு அதே நேரத்துல இந்தி மொழியில காலான்னா கறுப்புன்னு அர்த்தம் கறுப்பு என்பது உழைக்கும் மக்களின் வண்ணம் படத்துலேயும் கறுப்பு நிறம் ஒரு குறியீடா பயன்படுத்தப்பட்டுருக்கிறதால காலாங்கிற பெயர் பலவகையில இந்தக் கதைக்குத் தொடர்புடையதா இருக்கும்னு அதை டைட்டிலா வெச்சோம் காலா எங்களுடைய கதைதான் என்று சிலர் சொல்கிறார்களே இது எந்தத் தனிநபரின் கதையும் இல்ல தனிநபரைப்பற்றிய கதையும் இல்ல மக்களின் வாழ்வியலைப் பற்றிப் பேசுற படம் அதுவும் தாராவி குறிப்பிட்ட மக்களின் கலாசாரத்தை மட்டும் பிரதிபலிக்கிற பகுதி கிடையாது பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த மராத்தி இந்தி நெல்லைத் தமிழ் தெலுங்குன்னு பல்வேறு மொழிகள் பேசுற சாதியடையாளங்களை வலுவாக முன்னிறுத்துகிற பல்வேறு இனக்குழுக்கள் வாழுற பகுதி திருநெல்வேலில இருக்கிற தமிழர்கள் பெரும்பான்மையாக அங்க இருக்காங்க இந்த எல்லாத் தரப்பினரையும் மையமா வெச்சு கற்பனையைக் கலந்து நானா எழுதினதுதான் காலா சொல்லப்போனா இந்தக் காலா கதாபாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷன் எங்க தாத்தாதான் அவர் பேர் பஞ்சாட்சாரம் எங்க ஊர்ல முக்கியமான ஆள் தான் வாழ்ந்த நிலத்தின் மீது ரொம்பப் பற்றுதலோட இருந்தவர் எங்க குடும்பம் குழந்தைங்ககிட்ட அவர் நண்பர்கள்கிட்ட அவ்ளோ அன்பா இருப்பார் ஊர்ல ஜனங்களுக்கு ஒரு பிரச்னைன்னா அந்த வயசுலயும் எதுக்கும் பயப்படாம முன்னாடிபோய் நிப்பார் ஒரு பிரமிப்பான மனுஷனான அவரைப் பாத்துதான் வளர்ந்தேன் காலா கதாபாத்திரத்தை அவரை அடிப்படையா வெச்சுத்தான் உருவாக்குனேன் தயாரிப்பாளர் தனுஷுடன் பணிபுரிந்த அனுபவம் சொல்லுங்க அட்டகத்தி கதை எழுதிட்டு தனுஷை அணுகலாம்னுதான் இருந்தேன் அந்தச் சூழல்ல முடியலை காலா கதையை ரஜினி சார் ஓகே பண்ணதும் தனுஷை மீட் பண்ணி கதை சொல்லச் சொன்னார் தனுஷ் தீவிரமான ரஜினி ரசிகர் கதையைக் கேட்கக் கேட்க செம்மையா என்ஜாய் பண்ணார் எந்தெந்தக் காட்சிகள்ல ரசிகர்கள் ரசிப்பாங்கன்னு சொல்லி எக்சைட் ஆனார் இந்தப் படத்தை இவ்ளோ சீக்கிரம் எடுத்து முடிச்சு ரசிகர்கள்கிட்ட கொண்டு சேர்க்கிறோம்னா தயாரிப்பாளர் தனுஷ் அவர்களோட ஒத்துழைப்பு மிக முக்கியமானது கபாலி யில் ரஜினி நடிப்பு பல பரிமாணங்களை உள்ளடக்கி இருந்தது காலா வில் எப்படி காலா வில் இன்னும் அதிகமாகவே எதிர்பார்க்கலாம் கபாலி ல ஆரம்பம் முதலே தன் கடந்த கால நினைவுகளைச் சுமந்துகிட்டு ஒருவிதமான சோர்வுடனும் இறுக்கத்துடனும் விரக்தி மனநிலையிலேயே கபாலி கடைசிவரை இருப்பார் ஆனா இதுல ரஜினி சார் காலா சேட்டுங்கிற கதாபாத்திரத்துல ரகளை பண்ணியிருக்கார் அடிப்படையில் காலா ரொம்பப் பிடிவாதமான ஆள் யார் எதிரே நின்னாலும் தனக்கும் தன் மக்களுக்கும் இதுதான் தேவைன்னா அதுல ரொம்ப உறுதியா நின்னு போராடுற ஒரு மனிதன் இன்னொரு பக்கம் தன் மனைவியோட ரொமான்ஸ் மகன்கள்கிட்ட தன் காதல் கதைகளைப் பேசி நெகிழுறது பேரப்பிள்ளைகளோட கிரிக்கெட் ஃபுட்பால் விளையாடுறது ஊர்மக்களை வழிநடத்துற தலைவன் எதிரிகள் கிட்ட காட்டுற மூர்க்கம்னு ரஜினிசார் செம சூப்பரா நடிச்சிருக்கார் படப்பிடிப்புக்கு வெளிய அவர் சாதாரணமா எப்படிப் பேசுவாரோ அவரோட உடல்மொழி எப்படி இருக்குமோ அதைத்தான் திரையில் கொண்டு வந்திருக்கார் ஒரு மனுஷனுக்குள்ள இருக்கிற ஒட்டுமொத்த எமோஷனையும் காலா சேட்டுகிட்ட பார்க்கலாம் ரஜினிசார் ரொம்ப இயல்பா நடிச்ச படங்கள்ல காலா வுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கும் ஸ்டைலுக்கு மட்டுமல்லாம அவருடைய நடிப்புக்குன்னு ஒரு இடம் இருக்கில்ல அது இந்தப் படத்துல முழுமையடைஞ்சிருக்குன்னு நினைக்கிறேன் கபாலி படத்தில் ரஜினியின் மனைவியாக ராதிகா ஆப்தே கலக்கியிருப்பாங்க இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடி யார் காலாவின் மனைவியாக செல்விங்கிற கதாபாத்திரத்தில் ஈஸ்வரிராவ் நடிச்சிருக்காங்க ரொம்ப எமோஷனலான கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும் ஏன்னா அந்தச் செல்வியை எல்லா வீடுகளிலும் பொருத்திப் பார்த்துக்கலாம் சகிப்புத்தன்மையுடன் ஒரு குடும்பத்தை நிர்வாகம் செய்ற கணவனையும் நான்கு மகன்களையும் மருமகள்களையும் பேரப்பிள்ளைகளையும் கட்டி மேய்க்கிற ஒரு பெண்மணி கபாலி யைப் பற்றி நியாயமாகச் சொல்லப்பட்ட விமர்சனங்களை முன்வைத்து சில விஷயங்கள்ல வேலை பண்ணியிருக்கோம் அதுல ஒண்ணு கபாலியில் வில்லன் கதாபாத்திரம் இன்னும் வலுவா இருந்திருக்கலாம் கிற விமர்சனம் அந்த வகையில் காலா வில் வில்லனாக நானா படேகர் ரஜினி சாரும் நானாஜியும் போட்டி போட்டு நடிச்சிருக்காங்க காலாவுக்கு நண்பனா வாலியப்பன்ங்கிற கேரக்டர்ல சமுத்திரக்கனி நடிச்சிருக்கார் அஞ்சலி பாட்டில் சம்பத் அருள்தாஸ் சாயாஜி ஷிண்டே வத்திக்குச்சி திலீபன்னு நிறைய கதாபாத்திரங்கள் அவங்க இயல்பா எப்படிப் பேசிப் பழகுவாங்களோ அந்த உடல்மொழியைத்தான் எல்லோருடைய நடிப்புலயும் கொண்டு வந்திருக்கோம் இவங்க தவிர படத்துல முக்கியமான கேரெக்டர்ல ஹூமா குரேஷி நடிச்சிருக்காங்க கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர் எனக்கு ரொம்பப் பிடிச்ச நிறையவாட்டி பார்த்த படம் அந்தப் படத்துலதான் ஹூமா குரேஷியைப் பார்த்தேன் காலா படத்துல சரினாங்கிற கதாபாத்திரத்துக்கு அவங்க கரெக்ட்டா இருப்பாங்கன்னு தோணுச்சு கதையில ரஜினிசார்க்கும் அவங்களுக்கும் உள்ள உறவு ரொம்பவே சுவாரஸ்யமானது காலா பெரும்பாலும் செட் போட்டு எடுக்கப்பட்ட படம் என்பதால் உண்மைக்கு எந்த அளவு நெருக்கமாக இருக்கும் இதுவரையிலான என்னுடைய படங்கள் லைவ் லொகேஷனில் எடுக்கப்பட்டவைதான் ரஜினி சாரைக் கூட்டிட்டு வந்து தாராவிலதான் ஷூட் பண்ணோம் படப்பிடிப்பு நடக்கிற இடத்தைச் சுற்றி ராத்திரி பகல்னு மக்கள் கூட்டம் கட்டுப்படுத்த முடியாதபடி இருந்தது ஆனாலும் தாராவியிலேயே எடுத்தாக வேண்டிய காட்சிகள்ல நான் உறுதியா இருந்தேன் அதனடிப்படையில் நாலுநாள் ரஜினிசார் தொடர்பான காட்சிகள் எடுத்துட்டு அப்புறம் பதினைந்துநாள் அங்க ஷூட் பண்ணோம் சென்னைக்கு வந்து தாராவி மாதிரி செட் போட்டோம் தாராவி எப்படி இருக்கோ மும்பையில இருக்கிற ஸ்லம்ஸ் எப்படி இருக்கோ அதேமாதிரியான டூல்ஸ் மெட்டீரியல்ஸ வெச்சு கோடி ரூபாய் செலவுல ஒரு ஊரையே கிட்டத்தட்ட உருவாக்கியிருக்கோம் எது செட் எது ரியல் தாராவின்னு பார்வையாளர்களால எளிதில கணிக்க முடியாத மாதிரி கலை இயக்குநர் ராமலிங்கம் வேலை பண்ணியிருக்கார் உண்மைத்தன்மையுடனும் அதேசமயம் கலைநயத்துடனும் அவர் செஞ்ச வேலை இந்தப் படத்துக்கு மிகப்பெரிய பலம் படம் ரியலிஸ்டிக்கா இருக்குன்னா அதுக்கு இன்னொரு முக்கிய பலம் ஒளிப்பதிவாளர் முரளி ரஜினியின் அரசியல் பிரவேசத்தை மையமாக வைத்து காலாவில் வசனங்கள் எழுதப்பட்டுள்ளதா காலா கதையை ரஜினிசாரிடம் சொல்லும்போதிலிருந்து படப்பிடிப்பு நடந்து முடியும்வரை அவருக்கு அரசியலில் களமிறங்கணும்ங்கிற ஆர்வம் இருந்த மாதிரி எனக்குத் தெரியல அரசியலுக்கு வருவேன்னு அவர் அறிவிக்கிறதுக்கு முன்னாடியே எழுதப்பட்டு படமாக்கப்பட்டிருக்கிற ஒரு படம் இது அவருடைய அரசியல் நுழைவை இந்தப் படம் வலுப்படுத்தினால் அது ஒரு தற்செயல் நிகழ்வுதான் படத்தின் இசை பாடல்கள் எப்படி வந்திருக்கிறது கபிலன் உமாதேவி அருண்ராஜா காமராஜ் பாடல்கள் எழுதியிருக்காங்க இவங்க தவிர்த்து கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் வில் பாடல்கள் பாடிய அறிவு ஒரு பாட்டு எழுதியிருக்கார் காதல் பாடல் குடும்பப் பாடல் ரஜினி சார் ரசிகர்களுக்கான பாடல்னு எல்லாவிதமான உணர்வுகளையும் இசைவடிவங்கள்ல கொண்டு வர்ற தருணங்கள் படத்தில் உண்டு புதுவிதமான சில இசைக்கருவிகளை வெச்சு சந்தோஷ் பண்ணியிருக்கிற மியூசிக் அதகளமா இருக்கும் மெட்ராஸ்ல இருக்கிற விளிம்புநிலை மக்களுக்கு கானா பாடல்கள் மாதிரி பாம்பே விளிம்புநிலை மக்கள் ராப் ராக் வகைப் பாடல்களை அதிகமாக பாடுவாங்க முதல்பாடலே அப்படியொரு பாடல்தான் மெட்ராஸ் படத்துல டான்ஸ் குரூப் இருந்த மாதிரி இதுல ராப் குரூப் இருக்கு கதையில் சில முக்கியமான இடங்கள்ல அவங்களைப் பயன்படுத்தியிருக்கேன் ஒரு வாழ்க்கைமுறையை அதன் அசலான அடிப்படைகளுடன் கொண்டு சேர்க்கிற முயற்சிகள்தான் இவை எல்லாமே அடுத்த படத்துக்கான கதை களம் முடிவு பண்ணிட்டீங்களா கதை எழுதி முடிச்சாச்சு இன்னும் மற்ற விஷயங்கள் முடிவு பண்ணலை ஆனால் என்னுடைய எல்லாப் படங்களும் அரசியல் படமாகத்தான் இருக்கும்ங்கிறதுல யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்
தமிழகத்தில் தனியார் தொலைக்காட்சிகளின் மேல் குறிப்பாக அந்த அழுவாச்சித் தொடர்களின் மேல் மக்களுக்கிருந்த மாளாக்காதல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியிருப்பது போல் தெரிகிறது ஓரிரு தொடர்களைத் தவிர மற்ற பல நூற்றுக்கணக்கான உம்மணாமூஞ்சித் தொடர்கள் காண்போரில்லாமல் விண்ணில் வீணாவதாக உள்ளூர் டி ஆர் பி அறிக்கைகள் சொல்கின்றன கூடிய சீக்கிரம் மக்கள் முற்றிலும் இந்தப் பிசாசின் பிடியிலிருந்து விடுபட்டு பழையபடி புஸ்தகம் படிக்க வந்துவிடுவார்கள் என்று என்னைச் சேர்த்து பலபேர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள் இங்கே வேள்வி பலனளிக்கிற நேரத்தில் அசுரர் வந்து அசிங்கம் பண்ணுவார்களாமே அந்தக்காலத்தில் அந்தமாதிரி இன்னொரு புதிய பூதம் புறப்பட்டுப் புளியைக் கரைக்கிறது எஃப் எம் ரேடியோக்கள் மிகக் குறுகிய காலத்தில் இந்தத் தனியார் ரேடியோக்கள் தமிழகத்தில் பெற்றிருக்கும் பாப்புலாரிடியும் செல்வாக்கும் வியப்பூட்டுகின்றன இன்று ஒரு தகவலும் உழவர்களூக்கு ஒரு வார்த்தையும் அரங்கிசையும் கேட்கிற நூற்றாண்டுகண்ட புண்யாத்மாக்கள் அப்படியே தான் இருக்கிறார்கள் ஆனால் ஆயிரக்கணக்கான புதிய ரேடியோ நேயர்கள் குறிப்பாக இளைய தலைமுறையினர் முளைத்து ஒரு நாளைக்கு மணிநேரம் எஃப் எம் கேட்பதை ஓர் அப்யாசம் மாதிரி மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள் இவர்கள் செத்தாலும் ஆல் இந்தியா ரேடியோவின் அரசாங்க ஒலிபரப்பைக் கேட்பதில்லை பரிசுத்தமான பண்பலை நேயர்கள் அப்படி என்ன தான் இருக்கிறது இதில் என்று ஒரு முழு நாள் அலறவிட்டுக் கேட்டுப்பார்த்தேன் வெறும் சினிமாப்பாட்டு அரைமணிக்கொரு அறிவிப்பாளர் மாறுகிறார் ஆனால் ஒழுகும் அன்பில் குறைச்சலில்லை நேயர் விருப்பம்பொங்கத் தான் விரும்பிய பாடலை மட்டுமல்லாமல் தன் நண்பர்கள் பெற்றோர் பங்காளிகள் பகையாளிகள் பெயர்களையும் பட்டியலிட இவர்கள் அனுமதிக்கிறார்கள் உங்களோட பேசறதுல ரொம்ப சந்தோசமா இருக்குது சார் என்னால நம்பவே முடியல சார் ரெண்டுநாளா லைன் கடெய்க்கலெ சார் உங்க வாய்ஸ் சூப்பர் மேடம் நான் கொருக்குப் பேட்டைலேருந்து குப்புசாமி பேசறேங்க ஆல்தோட்ட பூபதி பாட்ட கண்டிப்பா போடுங்க மேடம் அந்தப் பாட்டை அயனாவரத்துல இருக்கற என் அத்தைப் பொண்ணு தனலச்சுமிக்கு டெடிகேட் பண்றேங்க நல்ல கதை இல்லை யாரோ எழுதிய பாடல் யாரோ இசையமைத்து யாரோ பாடி யாரோ நடித்து யாரோ விற்று சம்பாதித்துக்கொண்டிருக்கிற சரக்கைத் தூக்கி அயனாவரம் தனலட்சுமிக்கு சமர்ப்பணம் செய்யும் பரம பக்தர்கள் நிறைந்த புண்ணிய பூமியை நினைத்தாலே புல்லரிக்கிறது இதைக்கூட சகித்துக்கொள்ளமுடிகிறது இந்தப் பண்பலைக் குட்டிச்சாத்தான்களில் புதிய ஏற்பாடு ஒன்று பண்ணியிருக்கிறார்கள் முற்றிலும் காதலர்களுக்கான நேரமாம் அதிலும் பாட்டுதான் என்றாலும் பங்குபெறும் நேயர் கண்டிப்பாக ஒரு காதலராகவோ அல்லது காதலியாகவோ இருந்தாகவேண்டும் இல்லாவிட்டால் யாராவது அவரது நண்பரேனும் காதலித்துத் தொலைத்திருக்கவேண்டும் வணக்கங்க உங்க பேரு என்ன தொலைபேசும் நேயர் தன் பெயரைச் சொன்னதும் சொல்லுங்க நீங்க யாரையாவது காதலிக்கிறீங்களா ஆமாங்க என் காதலர் பிரகாஷ் அவர் புரசைவாக்கத்துல இருக்கார் ஆஹாங் அப்றம் என்ன பண்னிட்டிருக்கீங்க மேடம் உங்க காதலர் உங்ககிட்ட அன்பா நடந்துப்பாரா ரெண்டுபேரும் பேசிக்கறதில்லைங்க ஐயோ என்னாச்சு அவருக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தை நான் செஞ்சிட்டேன் அதுலேருந்து பேசறதில்லை அவர் அடடா ரொம்ப வருத்தப்படறீங்களா ஆமா சார் ரொம்ப மனசு வலிக்குது தெரியாம செஞ்சிட்டேன் இந்த ப்ரோக்ராம் மூலமா அவர்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன் பிரகாஷ் இனிமே உங்களுக்குப் பிடிக்காத எதையும் செய்யமாட்டேன் ரொம்ப தேங்ஸ் சார் காதல் சடுகுடுலேருந்து ஒரு பாட்டுப் போடுங்க மேற்சொன்ன சம்பாஷணைக்குப் பின் ஒரு பாடல் ஒலிக்கிறது இந்த அபத்தத்தைக் கேட்டு ரசிக்கும் நேயர் சிகாமணிகள் புல்லரித்துப் போய் விரல் தேயத் தாமும் தொலைபேசியில் முயற்சி செய்யத் தொடங்குகிறார்கள் கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க என்று ராகம்பாடி நாளெல்லாம் டப்பாங்குத்துப் பாடல்களால் காற்றை மாசுபடுத்தத் தொடங்கியிருக்கும் இந்தப் பண்பலைப் பரமாத்மாக்கள் ஒரு வகையில் தொலைக்காட்சித் தொடர்தயாரிப்பாளர்களைக் காட்டிலும் கலாசாரத் தீவிரவாதிகளாயிருக்கிறார்கள் ஏனெனில் தமிழ்நாட்டில் தொலைக்காட்சி நுழையாத பகுதிகள் இன்னும் நிறைய இருக்கின்றன பொருளாதார ரீதியில் வளர்ச்சியே காணாத நூற்றுக்கணக்கான கிராமங்களை ஒரு பத்திரிகையாளனாக நேரில் பார்த்திருக்கிறேன் கோயமுத்தூரிலிருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு மலைகிராமத்துக்கு ஒரு முறை போயிருந்தேன் வாக்காளர் பட்டியலில் பெயரே இல்லாத சுமார் பேரை உள்ளடக்கிய சிறு பிராந்தியம் அது பள்ளிக்கூட வாசனை அறியாத ஐம்பது குழந்தைகளும் எழுதப்படிக்கத்தெரியாத ஏனைய பெரியவர்களும் நிறைந்த கிராமம் அந்த ஆதிவாசி கிராமத்தினரின் ஒரே பொழுதுபோக்கு டிரான்ஸிஸ்டர் ரேடியோவில் என்னென்ன கேட்பீர்கள் என்று கேட்டேன் செய்திகள் விவசாய நிகழ்ச்சிகள் தொடங்கி திரைப்படப் பாடல்கள்வரை எல்லாவற்றையுமே கேட்கிறவர்களாகவே அவர்கள் இருந்தார்கள் ஓரிருவர் சிரமப்பட்டு சென்னை வானொலியைத் தேடிப்பிடித்து தென்கச்சி சுவாமிநாதனின் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியைக் கேட்கிறவர்களாக இருந்தார்கள் கேரள ஒலிபரப்பின் அடிப்படைக் கல்வி நிகழ்ச்சி மூலம் மலையாளம் ஒழுங்காகப் பேசக்கற்றுக்கொண்டோம் என்று பலபேர் சொன்னார்கள் இந்த ஆர்வத்தை ஒழுங்குபடுத்தலாமே என்று யோசித்தபடி சென்னை வந்தேன் மறுமுறை அங்கே போகநேர்ந்தபோது நான் நினைத்தை ஒரு ஆதிவாசி இளைஞரே செயல்படுத்தத் தொடங்கியிருந்தார் வயதுவந்தோர் கல்வித் துறை ஏதோ உதவியிருக்கிறது அவர்களுக்குப் பெரிய எழுத்துப் பாடப்புத்தகங்களும் ஒரு கரும்பலகையும் ஓர் ஓய்வு பெற்ற ஆசிரியரும் கிடைத்திருந்தார் அந்தப் பகுதி இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ரேடியோ க்ளப் மாதிரி ஒரு அமைப்பை உண்டாக்கி ஸ்பீக்கரில் வானொலி நிகழ்ச்சிகளையும் சைட் டிஷ்ஷாகக் கொஞ்சம் கல்வியும் சேர்த்துப் புகட்டத் தொடங்கியிருந்தார்கள் பார்ப்பதற்கே சந்தோஷமாக இருந்தது இப்போது அந்த கிராமம் நினைவுக்கு வருகிறது அவர்கள் நிச்சயம் சென்னை வானொலி அல்லது கோவை வானொலியின் உருப்படியான நிகழ்ச்சிகளை இன்னும் கேட்டுக்கொண்டிருப்பார்களா தெரியவில்லை கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க என்று நாள் முழுக்க அலறும் நாலாந்தரத் தமிழ் சினிமாப் பாடல்களில் ஐக்கியமாகியிருக்கக்கூடும் தனியார் ரேடியோக்கள் என்பதால் வெறும் சினிமாப் பாடல்களைக்கூட கொஞ்சம் ஜிகினா சேர்த்து ரசிக்கும்விதமான பேக்கேஜில் ஒலிபரப்புகிறார்கள் நேயர்களுடன் நேரடியாகப் பேசுவதில் பல நுணுக்கங்கள் கடைபிடிக்கிறார்கள் ஏழெட்டுப் பிறவிகளில் தொடர்ந்து நண்பர்களாக இருந்தவர்கள் மாதிரி அப்படியொரு அன்னியோன்னியத்தை பேசும் முதல் சொல்லிலேயே காண்பித்துவிடுகிறார்கள் மேலும் விருப்பமான பாடல்கள் திரைக்கு வந்திருக்கும் பாடல்கள் வரப்போகிற பாடல்கள் காதல் பாடல்கள் க்ளாசிக் பாடல்கள் சோகப் பாடல்கள் பழைய பாடல்கள் புதிய பாடல்கள் நடுவாந்தரப் பாடல்கள் இளைய ராஜா ஹிட்ஸ் ரகுமான் ஹிட்ஸ் தேவா ஹிட்ஸ் கே பி சுந்தராம்பாள் ஹிட்ஸ் இதுவும் திகட்டிப் போகும் என்பதில் சந்தேகமில்லை ஆனால் வேறு ஒரு சாத்தான் வந்து தொலைக்குமே பாடல்களைத்தவிர ரேடியோவில் ஒலிபரப்ப வேறு எதற்கும் தகுதி கிடையாது என்று இவர்கள் எதனைக்கொண்டு முடிவுக்கு வந்தார்கள் என்று கண்டுபிடிக்கவேண்டும் அல்லது பாடல்கள் தவிர வேறு எதையும் யாரும் கேட்பதில்லை என்று இவர்களுக்கு யார் சொன்னது என்றாவது தெரியவேண்டும் தமிழர்களைப் பொறுத்த அளவில் டெக்னாலஜியை நாரடிப்பதில் டிவிக்கு நிகரில்லை என்று இனிமேல் சொல்லமுடியாது ரேடியோ எஃப் எம் முன்னாடி வந்துவிட்டது வெளிவரவிருக்கும் கிலோபைட் கட்டுரைத் தொகுதியிலிருந்து விடியும் நாவல் அரசூர் வம்சம் அத்தியாயம் பதினேழு டிகிரி செல்ஸியஸ் வேர்களைத் தேடி பயணக் குறிப்புகள் கோயில் விளையாட்டு கேட்டுக்கிட்டே இருங்க வாரபலன் ஜூலை ஸ்ட்ரீக்கர் தமிழுருது மகாத்மா விவரணப்படம் புலிச்சவத்தில் கால்பதிக்கும் வேட்டைக்காரர்கள் கடிதங்கள் இறையியல் பன்மையும் உயிரிப்பன்மையும் பிரம்மமாகும் ஏசு கிறிஸ்து நூல் பகிர்தல் ஆலன் வாட்ஸின் அன்னை பசுமைப் பார்வைகள் சுற்றுச்சூழல் அரசியல் கேள்வி தமிழன் அறிவைத் தடுத்தாரா பெரியார் நேற்று இல்லாத மாற்றம் ஊனம் வாழ்க்கை சந்தோஷமான முட்டாளாய் முற்றுமென்றொரு ஆசை மனமா மத்தளமா ஒற்றுப்பிழை விசுவரூப தரிசனம் அகில உலகில் அணு உலை அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன அறிவியல் மேதைகள் சர் ஹம்ப்ரி டேவி வாழ்க்கையும் கனவுகளும் கஷ்டமான பத்து கட்டளைகள் தவிக்கிறாள் தமிழ் அன்னை தமிழாக்கம் கலையும் படைப்பு மனமும் விமரிசன விபரீதங்கள் தாவியலையும் மனம் எனக்குப் பிடித்த கதைகள் இந்திரா பார்த்தசாரதியின் நாசகாரக்கும்பல் உணர்வும் உப்பும் குறிப்புகள் சில ஜூலை காட்கில் வோல்வோ பரிசு மறைமலையடிகள் நூலகம் மேரி கல்டோர் உலக சிவில் சமூகம் ஒரு தலைப்பு இரு கவிதை நெஞ்சினிலே குப்பைத் தொட்டியில் ஓர் அனார்க்கலி உழவன் மொய் கம்பனும் கட்டுத்தறியும் ஹைக்கூ அந்த காந்தி நாளும் வந்திடாதோ கூடு விட்டு கூடு மனம் தளராதே உன்னால் முடியும் தம்பி விடியும் நாவல் அரசூர் வம்சம் அத்தியாயம் பதினேழு டிகிரி செல்ஸியஸ் வேர்களைத் தேடி பயணக் குறிப்புகள் கோயில் விளையாட்டு கேட்டுக்கிட்டே இருங்க வாரபலன் ஜூலை ஸ்ட்ரீக்கர் தமிழுருது மகாத்மா விவரணப்படம் புலிச்சவத்தில் கால்பதிக்கும் வேட்டைக்காரர்கள் கடிதங்கள் இறையியல் பன்மையும் உயிரிப்பன்மையும் பிரம்மமாகும் ஏசு கிறிஸ்து நூல் பகிர்தல் ஆலன் வாட்ஸின் அன்னை பசுமைப் பார்வைகள் சுற்றுச்சூழல் அரசியல் கேள்வி தமிழன் அறிவைத் தடுத்தாரா பெரியார் நேற்று இல்லாத மாற்றம் ஊனம் வாழ்க்கை சந்தோஷமான முட்டாளாய் முற்றுமென்றொரு ஆசை மனமா மத்தளமா ஒற்றுப்பிழை விசுவரூப தரிசனம் அகில உலகில் அணு உலை அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன அறிவியல் மேதைகள் சர் ஹம்ப்ரி டேவி வாழ்க்கையும் கனவுகளும் கஷ்டமான பத்து கட்டளைகள் தவிக்கிறாள் தமிழ் அன்னை தமிழாக்கம் கலையும் படைப்பு மனமும் விமரிசன விபரீதங்கள் தாவியலையும் மனம் எனக்குப் பிடித்த கதைகள் இந்திரா பார்த்தசாரதியின் நாசகாரக்கும்பல் உணர்வும் உப்பும் குறிப்புகள் சில ஜூலை காட்கில் வோல்வோ பரிசு மறைமலையடிகள் நூலகம் மேரி கல்டோர் உலக சிவில் சமூகம் ஒரு தலைப்பு இரு கவிதை நெஞ்சினிலே குப்பைத் தொட்டியில் ஓர் அனார்க்கலி உழவன் மொய் கம்பனும் கட்டுத்தறியும் ஹைக்கூ அந்த காந்தி நாளும் வந்திடாதோ கூடு விட்டு கூடு திண்ணை பற்றி திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை உங்கள் படைப்புகளை க்கு அனுப்புங்கள் ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம் புதிய திண்ணை படைப்புகள் இல் உள்ளன தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள் சமஸ்கிருதம் தொடர் முழுவதும் இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்ய அரசியலும் சமூகமும் அறிவிப்புகள் அறிவியலும் தொழில்நுட்பமும் இலக்கிய கட்டுரைகள் கதைகள் கலைகள் கவிதைகள் நகைச்சுவை மாத கணக்கில் மாத கணக்கில்
அதில் ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு அங்கீகாரம் தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது மக்களுக்குத் தரமான ஓட்டுநர் பயிற்சி அளிப்பதற்காக ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு இருக்க வேண்டிய வசதிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைக் கொண்டுவர மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது மேலும் இந்த மையங்களில் வெற்றிகரமாகப் பயிற்சியை முடிக்கும் ஓட்டுநர்கள் ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும்போது ஓட்டுநர் பரிசோதனையில் கலந்து கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் இந்த நடவடிக்கை போக்குவரத்துத் துறையில் சிறப்புப் பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் கிடைக்க உதவும் இது அவர்களின் திறனை அதிகரிப்பதோடு சாலை விபத்துக்களையும் குறைக்கும் பொது மக்களிடம் இருந்து ஆலோசனை பெறுவதற்காக இந்த வரைவு அறிவிப்பு சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது ஆலோசனைகள் பெற்ற பின்பு இது முறைப்படி வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளது மத்திய அரசின் இந்த திட்டம் நடைமுறைக்கு என்ன நடக்கும் என்று மக்களிடையே கேள்வி எழுகிறது ஓட்டுநர் உரிமம் பெற ஏற்கனவே இருக்கும் நடைமுறைகள் என்ன பொதுவாக ஓட்டுநர் உரிமம் பெற வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் வயது நிரம்பியவர்கள் க்கு அதிகமான கியர் வாகனங்கள் ஓட்டுவதற்கு விண்ணப்பிக்கலாம் வயதுடையவர்கள் க்கு கீழ் உள்ள கியர் இல்லாத வாகனங்கள் ஓட்ட விண்ணப்பிக்க முடியும் இதற்கு முகவரி ஆதார சான்று வேண்டும் அத்துடன் வயது ஆதார சான்று மற்றும் புகைப்படங்கள் தேவைப்படுகிறது முதலில் பழகுநர் உரிமம் பெற வேண்டும் அது ஆறு மாதங்களுக்கு மட்டும் வழங்கப்படும் இந்த உரிமத்தைக் கொண்டு ஆறு மாதங்களுக்குள் ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும் ஒருவேளை அதைத் தவறவிட்டால் மீண்டும் பழகுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் கோப்பு படம் ஓட்டுநர் உரிமத்திற்குச் செல்கையில் அங்கிருக்கும் அதிகாரி உங்களின் வாகனம் ஓட்டும் திறனைப் பரிசோதிப்பார் இருசக்கர வாகன ஓட்டிகளை போட அறிவுறுத்துவார் நான்கு சக்கர வாகனத்திற்கு காரில் அதிகாரி ஏறிக்கொள்வார் அவர் நீங்கள் வாகனத்தை இயக்கும் விதத்தைக் கண்காணிப்பார் அதாவது வேகத்திற்கு ஏற்ப கியர் மாற்றுவது பிரேக் பிடிப்பது ஆக்ஸிலேட்டர் பயன்படுத்துவது சிக்னலில் வாகனத்தை எப்படி நிறுத்துகிறீர்கள் என்று அனைத்தையும் கண்காணிப்பார் அதன்பின் எழுத்துத் தேர்வு நடைபெறும் இதில் நீங்கள் சாலையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளைப் பற்றியே கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும் அதனைத் தொடர்ந்து கண்கள் பரிசோதனை செய்யப்படும் இந்த தேர்வுகள் அனைத்திலும் வெற்றிபெற்ற பின்னரே உங்களுக்கான ஓட்டுநர் உரிமத்திற்கு ஒப்புதல் வழங்கப்படும் புதிய வரைமுறை புதிய ஓட்டுநர் உரிமத்திற்கான வரைமுறையில் இது முற்றிலும் மாறுபடுகிறது நீங்கள் பயிற்சிபெறும் மையத்திற்கு நேரடியாகச் சென்று பயிற்சி பெற்றுவிட்டால் உங்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் ஒருவேளை அந்த மையத்தின் கட்டுப்பாடுகளின்படி தேர்வுகள் ஏதேனும் நடத்தப்படலாம் மத்திய அரசின் புதிய நடைமுறை குறித்து தோழன் அமைப்பைச் சேர்ந்த இராதாகிருஷ்ணன் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது இந்த நடைமுறை மிகவும் தவறானது தற்போது அரசின் கட்டுப்பாட்டுக்குள் ஓட்டுநர் பயிற்சி வழங்கப்படவில்லை தனியாரிடமே பலரும் ஓட்டுநர் பயிற்சி எடுத்து வருகின்றனர் தனியாரிடம் பயிற்சி எடுத்த பலரும் முறையாகக் கற்றுக்கொள்ளாமல் உரிமம் பெற்றுச் செல்கின்றனர் அவர்கள் தனியாரிடம் கற்றுக்கொள்ளட்டும் ஆனால் அவர்களுக்கு உரிமம் கொடுக்கும்போது அரசு கண்காணிக்க வேண்டும் அவ்வாறு கண்காணிக்கவில்லை என்றால் அடுத்தடுத்து விபத்துக்களைச் சந்திக்க வாய்ப்புள்ளது இராதாகிருஷ்ணன் அதிகம் விபத்து ஏற்படுத்திய நபருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கிய அதிகாரியைக் கண்காணித்து பதவியில் பின்னடைவு வழங்கக் கோரிக்கை வைத்துள்ளோம் இதன் மூலம் சரியாக வாகனம் ஓட்ட தெரியாத நபர்கள் சாலையில் வருவது குறைந்துவிடும் ஆனால் தற்போது செயல்படுத்தத் திட்டமிட்டுள்ள நடைமுறை மிகவும் தவறானது இதனால் வாகன உற்பத்தியும் வியாபாரமும் தான் அதிகரிக்கும் பெரிய பெரிய நிறுவனங்கள் வாகனம் ஓட்ட நன்றாகக் கற்றுத்தருகிறோம் வாகனத்தில் விபத்தைக் குறைக்க கற்றுத் தருகிறோம் என்று வழிமுறைகளைக் கூறுவர் இது அரசாங்கத்தால் கண்காணிக்கப்படுமா என்றால் நிச்சயம் நடக்காது இதன் மூலம் சிறிய சிறிய ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் முற்றிலும் பாதிக்கப்படும் மத்திய அரசு கொண்டுவரும் சட்டத்தைக் கடைப்பிடிக்கும் பெரிய நிறுவனங்களை நோக்கி அனைவரும் செல்ல நேரிடும் இதனால் ஊழலுக்கே வழிவகுக்கும் என்று தெரிவித்தார் சென்னை ஆவடி விமானப்படை பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு தமிழ்நாடு சீருடை பணியாளர் ரிசல்ட் வெளியிடபட்டுள்ளது அரசு வேலைவாய்ப்பு அரசு வேலை வாய்ப்பு அரசு வேலைவாய்ப்பு ஆரோக்கியம் ஆரோக்கியம் உடல்நல குறிப்புகள் உடல் ஆரோக்கியம் உடல்நல குறிப்பு உடல் நல குறிப்புகள் உடல் நலம்
மாயமான ஸ்மார்ட்போன் மாறி மாறிப் பேசிய கனகராஜ் சகோதரர்கள் கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம் செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் கனமழை அப்டேட்ஸ் ஆன்லைன் தொடர்கள் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் ராசி காலண்டர் மேலும் மெனுவில் மாயமான ஸ்மார்ட்போன் மாறி மாறிப் பேசிய கனகராஜ் சகோதரர்கள் கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம் குருபிரசாத்நவீன் இளங்கோவன்சதீஸ் ராமசாமி தி விஜய்க தனசேகரன்கே அருண் ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் கனகராஜ் சகோதரர்கள் கைது கொடநாடு வழக்கில் கனகராஜிடமிருந்த சாட்சியங்களை அழித்ததாக அவரின் சகோதரர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர் உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற இன்ஸ்டால் விகடன் ஆப் கொடநாடு கொலை கொள்ளைச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் நெருங்கிவிட்டன அ தி மு க ஆட்சியில் முடித்துவைக்கப்பட்ட இந்த வழக்கு தி மு க ஆட்சியில் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது இதையடுத்து யாரும் எதிர்பாராதவிதமாக கனகராஜின் உடன் பிறந்த சகோதரர் தனபால் சித்தி மகன் ரமேஷ் ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர் கனகராஜ் மூன்று மணி நேரம் யாருக்காகக் காத்திருந்தார் கனகராஜ் அதிரவைக்கும் கொடநாடு மர்மங்கள் கொடநாடு மர்மங்களைத் தேடி என்ற பகுதியில் இந்த வழக்கு சம்பந்தப்பட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று ஜூ வி டீம் விசாரித்தது அதில் கனகராஜின் குடும்பத்தினர் மீது அவரின் மனைவி கலைவாணி போலீஸில் சொல்லியிருந்த புகார் குறித்து ஜூ வி இதழில் வெளியிட்டிருந்தோம் விபத்து நடந்தபோது கனகராஜிடமிருந்து சாதாரண பட்டன் போன் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாக கனகராஜின் சகோதரர்கள் கூறிவந்தனர் கனகராஜிடம் ஒரு ஸ்மார்ட்போன் இருக்கிறது ஸ்மார்ட்போன் கோப்புப் படம் விபத்து நடந்த அன்றைய தினம் காலை வீட்டிலிருந்து புறப்பட்டபோதுகூட கனகராஜ் ஸ்மார்ட்போன் வைத்திருந்தார் விபத்துக்குப் பிறகு அந்த போன் போலீஸாரிடமும் சிக்கவில்லை கனகராஜின் மனைவியிடமும் செல்லவில்லை கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் அந்த போனில் இருந்துதான் கனகராஜ் வி வி ஐ பி ஒருவருடன் எடுத்த படத்தை வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவருக்கு அனுப்பியிருக்கிறார் இப்படி இந்த வழக்கு தொடர்பான பல ரகசியங்கள் அதில் இருக்கின்றன அந்த போன் குறித்து கனகராஜ் குடும்பத்துக்கு தெரிந்திருப்பதாகவும் கொடநாடு மர்மங்களைத் தேடி கனகராஜின் கடைசி நிமிடங்கள் சாட்சிகளின் பகீர் தகவல் பகுதி தனபால் அது குறித்து கலைவாணி கேட்டபோது அவனே போயிட்டான் உனக்கென்ன என்று மிரட்டியதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியானது இது தொடர்பாக போலீஸார் தனபாலிடமும் ரமேஷிடமும் விசாரணை நடத்திவந்தனர் இவர்களுக்கு எதிராகத் திரட்டப்பட்ட ஆதாரங்கள் தகவல்களின் அடிப்படையில் தனபால் ரமேஷ் ஆகிய இரண்டு பேரையும் தனிப்படை போலீஸார் அதிரடியாகக் கைதுசெய்தனர் சேலம் ஆத்தூரிலிருந்து இருவரையும் நீலகிரி மாவட்டம் சோலூர் மட்டம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த தனிப்படையினர் தனபால் ரமேஷ் இருவர் மீதும் சாட்சியங்களை மறைத்தல் சாட்சிகளை அழித்தல் சாட்சி சொல்லவிடாமல் தடுத்தல் உடபட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர் பின்னர் ஊட்டியிலுள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அவர்களை போலீஸார் ஆஜர்படுத்தினர் வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் பாபா இருவரையும் வருகிற ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார் தெளிவான புரிதல்கள் விரிவான அலசல்கள் சுவாரஸ்யமான படைப்புகள் குருபிரசாத் குரலற்றவர்களின் குரல் நவீன் இளங்கோவன் சதீஸ் ராமசாமி தி விஜய் க தனசேகரன் விகடன் குழுமத்தில் கடந்த ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன் இதற்க்கு முன் ராக பணிபுரிந்துவந்தேன் வேளாண்மை சார்ந்த புகைப்படங்கள் எடுப்பது மற்றும் ஆவண படங்கள் எடுக்க பிடிக்கும் கே அருண்
நவீன இலங்கைத் தமிழ்க் கவிஞர்களில் என்னை மிகவும் கவர்ந்த கவிஞர்களிலொருவர் கவிஞர் வ ஐ ச ஜெயபாலன் கவிஞர் என்று அறியப்பட்டாலும் இவர் கவிதை கதை கட்டுரையென இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தடம் பதித்த எழுத்தாளர்களிலொருவர் சிறப்பான சொற்களைத் தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டி கவிதைகளைப் படைக்கும் பலர் விடும் முக்கிய தவறு அவர்கள் தம் உணர்வுகளைக் கவிதைகளாக்குவதில்லை தம் அறிவினை புலமையினை வெளிப்படுத்தவே கவிதைகள் எழுதுகின்றார்கள் உணர்வுகளின் வெளிப்பாடாக அவர்கள்தம் கவிதைகள் இல்லாததனால்தான் அவர்கள்தம் கவிதைகள் வாசகர்களின் இதயங்களைத் தொட்டு அவர்கள்தம் இதயங்களில் இடம் பிடிப்பதில்லை இவர்கள் தம் மேதாவித்தனத்தை வெளிப்படுத்தும் சாதனமாகக் கவிதையெழுதுதலைப் பார்க்கும் போக்கினைக் கைவிட வேண்டும் இவ்விதம் கவிதை எழுதுபவர்களுக்கும் அன்று தம் மேதாவிலாசத்தைக் காட்ட மரபுச்சூத்திரத்துக்குள் கவிதைகள் படைத்தவர்களுக்குமிடையில் வித்தியாசமில்லை சிறந்த மரபுக் கவிஞர்கள் உள்ளனர் அவர்கள்தம் கவிதைகளை நான் இங்கு குறிப்பிடவில்லை மரபுக்கவிதையின் எதிரியும் நானல்லன் மரபுக்கவிதை படைப்பதாக எண்ணித் தம் புலமையினை வெளிக்காட்டுவதற்காகக் கவிதைகள் படைத்தவர்களையே குறிப்பிடுகின்றேன் அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குப் பதில் புலமையினை வெளிப்படுத்தியவர்கள் அவர்கள் அவர்களைப்போன்றே இன்று வாழும் கவிஞர்கள் பலர் உள்ளனர் இவர்கள் புலமையினைக் காட்ட எழுதும் கவிதைகளைக் குறிப்பிடுகின்றேன் இவர்கள் தம் வாழ்க்கை அனுபவங்கள் விளைவாக எழுந்த எழக்கூடிய உணர்வுகளை வெளிப்படுத்தும் சாதனமாகக் கவிதையினைக் கருத வேண்டும் அவ்விதம் கருதியே கவிதைகளை எழுத வேண்டும் அவ்விதம் எழுதினால் இவர்கள்தம் கவிதைகளும் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் இவ்விடயத்தில் கவிஞர் வ ஐ ச ஜெயபாலன் வித்தியாசமானவர் தன் வாழ்க்கை அனுபவங்கள் தந்த உணர்வுகளையே கவிதைகளாகப் படைக்கின்றார் அதனால்தான் அவற்றைக் கேட்கையில்யே சிந்தையில் இன்பம் பொங்குகின்றது எம்மை அவரது கவிதை வரிகள் ஈர்க்கின்றன அவரது புகழ்பெற்ற கவிதைகளிலொன்று இலையுதிர்கால நினைவுகள் முக்கியமான புகலிட அனுபவங்களை விபரிக்கும் கவிதை கனவு தமிழகம் சஞ்சிகையின் இலங்கைச் சிறப்பிதழ் ஆகஸ்ட் மலரில் வெளியான கவிதை இக்கவிதையில் வரும் படிமங்கள் உருவகங்கள் மற்றும் உவமைகள் என்னை மிகவும் கவர்ந்தவை காற்றுக் குதிரைகள் வானிலோர் அகதியான சூரியன் புது அகதி போல் தரையிறங்கும் பழுத்த பேர்ச் இலை வாழ்விழந்து வசதி பெருக்குகின்ற மனிதச் சருகுகள் ஓயாது இலை உதிர்க்கும் முதுமரமான தாய் நாடு காற்றில் விதிக் குரங்கு கிழித்தெறியும் பஞ்சுத் தலையணையான புகலிடத் தமிழ்க் குடும்பங்கள் இவ்விதம் படிமங்கள் மலிந்த நல்லதொரு கவிதை இலையுதிர்கால நினைவுகள் கவிதையில் வரும் மக்பை என்னும் காக்கையினப் பறவை குளிர்காலம் வந்தபோதும் ஏனைய துருவப் பறவைகளைப்போல் வெப்ப நாடுகள் நாடி மிண்டும் பறக்கவில்லை கவிஞனோ தன் உயிர் காப்பதற்காக வெப்ப நாட்டிகிருந்து துருவத்துக்கு ஓடி வந்துள்ளான் ஆனால் மக்பை பறவையோ குளிர் வந்தபோதும் ஏனைய பறவைகளைப்போல் வெப்பநாடுகள் நோக்கிப் படையெடுக்காமல் இருக்குமிடத்திலேயே வாழுமொரு பறவை அதனால்தான் அப்பறவை இழிவாகக் கவிஞனை நோக்குகின்றது இக்கவிதையில் வரும் பின்வரும் வரிகள் என்னை மட்டுமல்ல பலரையும் கவர்ந்தவை யாழ்நகரில் என் பையன் கொழும்பில் என் பெண்டாட்டி வன்னியில் என் தந்தை தள்ளாத வயதினிலே தமிழ்நாட்டில் என் அம்மா சுற்றம் பிராங்போட்டில் ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில் நானோ வழிதவறி அலாஸ்க்கா வந்துவிட்ட ஒட்டகம்போல் ஒஸ்லோவில் பாட்டனார் பண்படுத்தி பழமரங்கள் நாட்டி வைத்த தோப்பை அழியவிட்டு தொலை தேசம் வந்தவன் நான் என்னுடைய பேரனுக்காய் எவன் வைப்பான் பழத் தோட்டம் கனவு இலங்கைச் சிறப்பிதழை வாசிக்க கவிஞர் வ ஐ ச ஜெயபாலனின் வசந்த காலம் சுதந்திரமடைந்த இலங்கையில் தென்னிலங்கையில் நிகழ்ந்த முதல் புரட்சி இல் நடைபெற்ற ரோகண விஜேவீரா தலைமையிலான ஜேவியினரின் சேகுவேராப் புரட்சி என்று கூறப்பட்ட புரட்சி புரட்சி தோல்வியில் முடிந்தாலும் முக்கியமானதொரு நிகழ்வு ஆயிரக்கணக்கில் சிங்கள இளைஞர்களைப் பலியெடுத்த புரட்சி அப்புரட்சியின் குறியீடுகளிலொன்றாக நிற்பது கதிர்காம அழகி மன்னம்பெரியின் மரணம் இல் நடைபெற்ற யுத்தத்தின் குறீயீடுகளிலொன்றாக எவ்விதம் இசைப்பிரியாவின் மரணம் உள்ளதோ அத்தகையது மன்னம்பெரியாவின் மரணம் மன்னம்பெரியாவின் மரணத்துக்குப் பின்னர் நீதி கிடைத்தது இசைப்பிரியாவின் மரணத்துக்கு இன்னும் கிடைக்கவில்லை ஜேவியினரின் புரட்சி நடைபெற்ற காலத்தில் நான் எட்டாம் வகுப்பு மாணவனாக யாழ் இந்துக் கல்லூரியில் சேர்ந்திருந்தேன் உடனடியாக விடுமுறை விட்டார்கள் நீண்டகால விடுமுறை உடனடியாக வவுனியா திரும்பி விட்டேன் அப்பொழுது வவுனியாவில் வசித்துக் கொண்டிருந்தோம் முதன் முதலாக இராணுவத்தினரைச் சுழல் துப்பாக்கிகளுடன் கண்டது அப்போதுதான் யாழ் நகரசபை மைதானத்தில் வந்திறங்கும் இந்தியக் ஹெலிகாப்டர்களைப் பார்த்திருக்கின்றேன் அவற்றிலிருந்து மடுக்கந்தைப் பகுதியில் மறைந்திருந்த போராளிகள் மீது குண்டுகள் போடுவார்கள் காற்றினூடு அவ்வோசை கேட்பதுண்டு நாம் எண்ணுவதுண்டு நினைவிலுள்ளது புரட்சி தோற்று நாளுக்குநாள் சரணடையும் இளைஞர்களைப்பற்றிய விபரங்களைத் தாங்கிப் பத்திரிகைகள் வெளிவந்துகொண்டிருந்தன வாசித்திருக்கின்றோம் அப்புரட்சியினைப்பற்றி கவிஞர் ஜெயபாலன் தனது வசந்த காலம் கவிதையினைப் பகிர்ந்திருந்தார் அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன் அக்கவிதையில் வரும் பின்வரும் வரிகள் இலங்கைத் தமிழர்களின் ஆயுதபோராட்டக் காலகட்டத்தினை நினைவுக்குக் கொண்டு வந்தன எனினும் இலங்கைத் தீவில் சிங்களக் கிராமப் புறங்களில் மட்டும் இளைஞர்கள் சில பேர் ஒருவரை ஒருவர் இரகசியமாகத் தட்டி எழுப்பினர் நீண்ட நீண்ட இரவுகள் விழித்து இருளில் தூங்கும் மக்களுக்காக மலைகளை அகற்றும் பரம ரகசியம் பேசிக் கொண்டனர் திடீரென அந்த வசந்த நாட்களில் தெருக்கள் தோறும் துப்பாக்கிச் சன்னதம் குடியானவரைத் திடுக்கிட வைத்தது வீதி மருங்கெலாம் இரத்தப் பூக்கள் வசந்த காலம் வ ஐ ச ஜெயபாலன் காடுகள் பூத்தன குயில்கள் பாடின எந்த வசந்தமும் போலவே இனிதாய் எழுபத் தொன்றிலும் வசந்தம் வந்தது இராமன் ஆளினும் இராவணன் ஆளினும் ஊர் ஊராக என்றும் போலவே எந்த ஓரு பெரிய சவால்களுமின்றி அதே அதே பெரிய குடும்ப ஆதிக்கம் அந்த வசந்த நாளிலும் தொடர்ந்தது சேற்றில் உழல்வதை இயல்பாய்க் கொள்ளும் எருமைகள் போலச் சொரணைகள் செத்த விதியே என்னும் கிராமியப் பண்பை அந்த வசந்த நாட்களில் புதிதாய் எந்த ஓர் விசயமும் உடலுப்பிடவில்லை எந்த வசந்த நாட்களும் போலவே அந்த வசந்த நாட்களும் நடந்தன எனினும் எனினும் இலங்கைத் தீவில் சிங்களக் கிராமப் புறங்களில் மட்டும் இளைஞர்கள் சில பேர் ஒருவரை ஒருவர் இரகசியமாகத் தட்டி எழுப்பினர் நீண்ட நீண்ட இரவுகள் விழித்து இருளில் தூங்கும் மக்களுக்காக மலைகளை அகற்றும் பரம ரகசியம் பேசிக் கொண்டனர் திடீரென அந்த வசந்த நாட்களில் தெருக்கள் தோறும் துப்பாக்கிச் சன்னதம் குடியானவரைத் திடுக்கிட வைத்தது வீதி மருங்கெலாம் இரத்தப் பூக்கள் இருண்ட அந்தக் கிராமங்கள் தோறும் எத்தனை எத்தனை இள ஞாயிறுகள் கரிசல் மண்ணுள் புதைக்கப்பட்டன குயில்கள் பாட திருமண ஊர்வலம் போல வந்த எழுபத் தொன்றின் வசந்த காலம் ஆந்தைகள் அலற மரண ஊர்வலமாகக் கழிந்தது எங்கள் கிராமங்கள் மண்வளம் மிகுந்தவை எதைப் புதைத்தாலும் தோப்பாய் நிறையும் இந்த மின் அஞ்சல் முகவரி இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
கூடங்குளம் அணு உலையை இன்று முற்றுகையிடப் போவதாக கூடங்குளம் போராட்டக் குழு அறிவித்திருந்தது எப்படியேனும் இதை தடுக்கவேண்டும் என்ற நோக்கில் சுமார் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர் போராட்டக் குழுவினர் கூடியிருந்த இடிந்தகரையிலிருந்து கூடங்குளத்திற்கு வரும் அதனை சாலைகளையும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் கூடங்குளம் மார்க்கத்தில் செல்லும் அத்தனை அரசுப் பேருந்துகளும் நிறுத்தப் பட்டன ஆனால் காவல் துறையினர் சற்றும் எதிர் பாரத வகையில் போராட்டக் காரர்கள் சுமார் பேர் கடற்கரை வழியாக சென்று பகல் மணியளவில் அணுமின் நிலையத்தை முற்றுகையிட்டனர் இதை சற்றும் எதிர்பார்க்காத காவல் துறையினரும் கலெக்டர் உள்ளிட்டோரும் கால் நடையாக சென்று போராட்டக் குழுவினர் முற்றுகையிட்டுள்ள பகுதிக்கு சென்றனர் முற்றுகை பகுதிக்குள் எந்த வாகனமும் நுழைய முடியாது போராட்டக் குழுவினருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது முற்றுகை நீடிக்கிறது கூடல் பாலா பிற்பகல் இதை மின்னஞ்சல் செய்க இல் பகிர் இல் பகிர் இல் பகிர் அணு உலை கூடங்குளம் கருத்துகள் நாஞ்சில் மனோ சொன்னது முற்பகல் செப்டம்பர் நாஞ்சில் மனோ சொன்னது முற்பகல் செப்டம்பர் பெயரில்லா சொன்னது டெல்லியிலும் சென்னையிலும் உட்கார்ந்து கொண்டு ஊர் சொத்தை கொள்ளை அடித்து ஊளைச்சதை சேர்க்கும் பட்டாளங்களுக்கு அழிவு காலம் நெருங்கிவிட்டது இந்த போராட்டம் இம்மாமக்களின் மறுபக்கத்தை இவர்களுக்கு காட்டும் ஒட்டு வாங்கிய பின் முதுகில் குத்தும் ஊழல் பெருச்சாளியும் முந்தானையில் மறைந்து முதுகெலும்பு தொலைத்த கோழை சிங் கமும் இன்னும் எத்தனை பேரை கொல்லப்போகின்றன இப்படை தோற்கின் எப்படை வெல்லும் பிற்பகல் செப்டம்பர் பலசரக்கு சொன்னது ஒரு குடியரசு நாட்டில் அற வழியில் போராடினால் இப்படியா செய்வது ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுபட மத்திய அரசிடம் தமிழ் மக்களை பணயமாக வைத்து விட்டார் இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்த மக்களை நம்ப வைத்து கழுத்தறுப்பது நியாயமா பிற்பகல் செப்டம்பர் பலசரக்கு சொன்னது இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது பிற்பகல் செப்டம்பர் பலசரக்கு சொன்னது மனித உரிமைக்கு அர்த்தம் தெரியுமா இந்த ஆளும் மா க்களுக்கு பிற்பகல் செப்டம்பர் சொன்னது நம்பிக்கை அடிப்படையில் நம் கழுத்தை அறுக்கும் இரண்டு அரசுக்கும் நாம் முடிவு கட்டுவோம் விரைவில் உலை வைத்து உண்டு வாழும் நமக்கு அணு உலையும் வேண்டாம் இப்படிப்பட்ட அநீதி அரசும் வேண்டாம்
தனிப்பட்ட மற்றும் வணிக வெற்றியின் ஒரு முக்கிய உறுப்பு என்னால் முடியாது மற்றும் நான் முடியாது என்பதற்கு இடையில் சரியாக வேறுபடுத்தும் திறன் என்று நான் முழுமையாக நம்புகிறேன் ஒரு விதியாக யாராவது ஏதாவது செய்ய முடியாதபோது அவர் அல்லது அவள் இல்லாததால் தான் திறன் அதை செய்ய யாராவது ஏதாவது செய்ய மாட்டார்கள் ஏனெனில் அவர் அல்லது அவள் இல்லாததால் விருப்பம் அதை செய்ய இங்கே ஒரு அடிப்படை உதாரணம் என்னால் இந்த வேலையைச் செய்ய முடியாது இதன் பொருள் தற்போது இந்த பணியை நிறைவேற்றுவதற்கான திறமை உங்களிடம் இல்லை நான் இந்த வேலையை செய்ய மாட்டேன் இதன் பொருள் என்னவென்றால் நீங்கள் விரும்பினால் கூட இந்த பணியை நிறைவேற்ற வேண்டாம் என்று முடிவு செய்துள்ளீர்கள் அந்த வேறுபாடு மிகவும் தெளிவாகத் தெரிந்தாலும் இந்த உலகில் தோற்றவர்கள் பெரும்பாலும் என்னால் முடியாது என்று சொல்லும்போது என்னால் முடியாது என்று கூறுகிறார்கள் நான் முடியாது என் வேலையை விட்டுவிட்டு எனது சொந்த தொழிலைத் தொடங்குங்கள் நான் முடியாது தினமும் காலையில் குளிர் அழைப்புகளை மேற்கொள்ளுங்கள் நான் முடியாது புகைபிடிப்பதை நிறுத்து இது மிகவும் கடினம் தோல்வியுற்றவர்கள் என்னால் முடியாது என்பதற்கு மாற்றாக என்னால் முடியாது ஏனெனில் அது அவர்களை கொக்கி விட்டு விடுகிறது செயல்பாடு அவர்களால் செய்ய முடியாத ஒன்று என்பதால் அவர்கள் அதைச் செய்வார்கள் என்று நியாயமான முறையில் எதிர்பார்க்க முடியாது எனவே அவர்களின் தோல்வி உண்மையில் அவர்களின் தவறு அல்ல ஓ உண்மையில் இதற்கு மாறாக உலகில் வென்றவர்கள் மிகவும் துல்லியமானவர்கள் அவர்கள் ஒரு திறனை மேம்படுத்த வேண்டும் என்பதற்கான சமிக்ஞையாக என்னால் முடியாது என்பதைப் பயன்படுத்துகிறார்கள் மேலும் அவர்கள் ஒரு முடிவை எடுத்த ஒரு அறிக்கையாக நான் மாட்டேன் என்று பயன்படுத்துகிறார்கள் நான் முடியாது இந்த வணிக மாதிரியை வேலை செய்யுங்கள் எனவே அதை எவ்வாறு மாற்றுவது என்பதை நான் கண்டுபிடிக்க வேண்டும் நான் முடியாது வாடிக்கையாளர்கள் ஏன் வாங்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் எனவே நான் என்ன தவறு செய்கிறேன் என்று அவர்களிடம் கேட்கப் போகிறேன் நான் மாட்டேன் மோசமான உடல்நலம் எனக்கு வெற்றி பெறுவது கடினம் என்பதால் நான் வடிவத்திலிருந்து வெளியேறட்டும் என்னால் முடியாது மற்றும் நான் முடியாது என்பதைப் பயன்படுத்துவதன் மூலம் வெற்றியாளர்கள் சாக்குகளைச் சொல்வதை விட அவர்களின் செயல்களுக்குப் பொறுப்பேற்கிறார்கள் அவர்கள் மிகவும் வெற்றிகரமாக இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம் இந்த இடுகையை நீங்கள் விரும்பினால் பதிவு செய்க இலவச விற்பனை மூல செய்திமடல் பரிந்துரைக்கப்படுகிறது நிக் வுஜிக் பயோ சுயசரிதை இல் உங்களை சிறந்தவர்களாக மாற்றும் ஆவணப்படங்கள் வளருங்கள் கிறிஸ்டினா டோசி பயோ சுயசரிதை சுவாரசியமான கட்டுரைகள் டிஃப்பனி ஹதீஷ் பயோ சுயசரிதை கேம்பியன் மர்பி பயோ சுயசரிதை கிறிஸ்டின் எப்சோல் பயோ சுயசரிதை அவளுடைய வாழ்க்கை கதை குரா ஸ்டீபன்ஸ் ஆங்கில நடிகர் டோபி ஸ்டீபன்ஸ் மற்றும் நியூசிலாந்து நடிகை அண்ணா லூயிஸ் ப்ளோமேன் ஆகியோரின் இளைய மகள் பொழுதுபோக்கு எடையுள்ள போர்வைகளுக்குப் பின்னால் உள்ள அறிவியல் மற்றும் இறுதியாக சிறிது தூங்குவதற்கு ஒன்றை எவ்வாறு தேர்வு செய்வது
இப்பக்கத்தை இணைத்தவை பக்கம் பெயர்வெளி அனைத்து முதன்மை பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு வடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை இணைப்புகள் மறை வழிமாற்றுகளை மறை மலையக தமிழரின் புலம்பெயர்வும் இலக்கிய ஆக்கமும் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது முந்திய அடுத்த பக்கங்களைப் பார் நூலகம் இணைப்புக்கள் முந்திய அடுத்த பக்கங்களைப் பார் சிறப்பு மலையக தமிழரின் புலம்பெயர்வும் இலக்கிய ஆக்கமும் இருந்து மீள்விக்கப்பட்டது
ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோ ய் வருவ தற்கான வாய்ப்பை தடுப்ப தோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் கூட்டுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கி றார்கள் மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு இந்த பீன்ஸ் பெரிதும் உதவியாக இருப்ப தாக தெரிவிக்கிறார்கள் மருத்துவர் கள் இந்த பீன்ஸில் கார்போஹைட்ரேட் மெதுவாக இரத்தத்தில் கரைவதால் அது இரத்த த்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்வதை த் தடுத்து தேக ஆரோக் கியத்திற்கு வழிவகை செய்கிறது இது விதை விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல தெரிந்து கொள்ளுங்கள் மரு த்துவ ம் விழிப்புணர்வு ஃப்ளேவோனாய்டு இந்த பீன்ஸை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் கார்போஹைட்ரேட் நோய் எதிர்ப்பு சக்தி பீன்ஸ் புற்றுநோ ய் ஒரு பெண்ணுக்கு ஆணின்மீது காதல் அதிகரிக்கும்போது விரும்பிச் செய்யும் அந்த ஏழு செயல்கள் முருங்கைக்காய் சாம்பார் வைத்து சோற்றில் ஊற்றி பிசைந்து சாப்பிட்டு வந்தால் சங்கு அரிய தகவல் அதிசயங்கள் அதிர வைக்கும் காட்சிகளும் பதற வைக்கும் செய்திகளும் அரசியல் அழகு குறிப்பு ஆசிரியர் பக்க ம் ஆவிகள் இல்லையடி பாப்பா எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே சென்னையில் ஒரு நாள் பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும் தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா நோட்டா ஜெயித்தால் பாரதி காணாத புதுமைப்பெண்கள் பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் ஆன்மிகம் ப கவத் கீதை முழுத் தொகுப்பு ஆன்மீக பாடல்கள் இசை கர்நாடக இசை ராக மழை இணையதள முகவரிகள் இதழ்கள் உரத்த சிந்தனை சட்ட த்தமிழ் சத்தியபூமி தமிழ்ப்பணி புது வரவு விதைவிருட்சம் ஸ்ரீ முருக விஜயம் இவரைப் பற்றி சில வரிகள் உங்கள் இடம் உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் உடற்பயிற்சி செய்ய உடலுறவு உடை உடுத்துதல் உரத்த சிந்தனை மாத இதழ் எந்திரவியல் கடி வேண்டுமா கட்டுரைகள் கணிணி கைப்பேசி தொழில் நுட்பங்கள் கணிணி கைப்பேசி தொழில் நுட்பங்கள் கணிணி தளம் கதை நீதிக்கதைகள் கலைகள் கல்வி அறிவியல் ஆயிரம் ஆரம்பக் கல்வி தேர்வு முடிவுகள் கல்வெட்டு காமசூத்திரம் கார்ட்டூன்கள் குறுந்தகவல் கைபேசி கொஞ்சம் யோசிங்கப்பா கோரிக்கைகளும் வேண்டுகோள்களும் சட்ட விதிகள் குற்ற ங்களும் சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் சட்டத்தில் உள்ள குறைபாடுகள் சட்டம் நீதிமன்ற செய்திகள் புலனாய்வு சமையல் குறிப்புகள் உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் சிந்தனைகள் பழமொழிகள் வாழ்வியல் விதைகள் சினிமா செய்திகள் என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் சினிமா சினிமா காட்சிகள் ப டங்கள் சின்ன த்திரை செய்திகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குறும்படங்கள் பொருள் புதைந்த பாடல்கள் வீடியோ ஆடியோ ம ழலைகளுக்காக மேடை நாடகங்கள் சிறுகதை சுனாமி ஓரு பார்வை சுற்றுலா செயல்முறைகள் செய்திகள் அத்துமீறல்களும் காணாமல் போன தை வரை பற்றிய அறிவிப்பு கோரிக்கைகளும் ஜோதிடம் புத்தாண்டு இராசி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி தங்க நகை தந்தை பெரியார் தனித்திறன் மேடை தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் படைப்புக்கள் தமிழ் அறிவோம் தமிழ்ப்புதையல் தற்காப்பு கலைகள் தலையங்கம் தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு தியானம் திருமண சடங்குகள் திருமணத் தகவல் மையம் திரை வசனங்கள் திரை விமர்சனம் தெரிந்து கொள்ளுங்கள் அலகீடு மாற்றி கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் கேள்விகளும் பதில்களும் நாட்குறிப்பேடு விடைகானா வினாக்களும் வினா இல்லா விடைகளும் ஹலோ பிரதர் தேர்தல் செய்திகள் நகைச்சுவை ந மது இந்தியா நினைவலைகள் நேர்காணல்கள் சிறப்பு நேர்காணல்கள் பகுத்தறிவு படம் சொல்லும் செய்தி படைப்புகள் ம ரபுக் கவிதைகள் பார்வையாளர்கள் கவனத்திற்கு பாலியல் மரு த்துவ ம் பிரபலங்கள் ஆற்றிய உரைகளும் சொற்பொழிவுகளும் பிராணிகள் பறவைகள் பிற இதழ்களிலிருந்து புதிர்கள் புதுக்கவிதைகள் புத்தகம் புலன் விசாரணைகளும் பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் மரு த்துவ ம் அறுவை சிகிச்சைகள் நேரடி காட்சிகளுடன் குழந்தை வளர்ப்பு நேரடி காட்சி விளக்கங்களுடன் பரிசோதனைகள் முதலுதவிகள் மறைக்கப்பட்ட சரித்திரங்கள் வஞ்சிக்கப்ப ட்ட மாவீரர்கள் ம லரும் நினைவுகள் ம லர்களின் மகிமை முதலிரவு மேஜிக் காட்சிகள் யோகாசனம் வ ரலாறு படைத்தோரின் வரலாறு வ ரலாற்று சுவடுகள் வரி விதிப்புக்களும் வரிச்சலுகைகளும் வர்த்த கம் வணிகம் வாகனம் வாக்களி வானிலை வி தை வி வி விண்வெளி விதை விருட்சம் எனது பொன்மொழிகள் விளம்பர விமர்சனம் விளையாட்டு செய்திகள் விழிப்புணர்வு வீடியோ வீட்டு மனைகள் வேலைவாய்ப்பு சுயதொழில் வேளாண்மை தலைப்புச் செய்திகள் மச்சம் பல அரிய தகவல்கள் நாட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் விபரீதத்தின் உச்ச ம் மரணம் அனுப்பிய தூதுவன் க பம் ஓரலசல் அன்புடன் அந்தரங்கம் சகுந்தலா கோபிநாத் இக்கடிதமும் இதற்கான பதிலும் பெற்றோருக்கான எச்சரிக்கை மணி த பாக்கியராஜ் புல எண் என்றால் என்ன ரெட்டை ஜடை போடுவது எப்ப டி செய்முறை காட்சி வீடியோ பஜாஜ் டிஸ்கவரி நவீன டெக்னாலஜி பைக் எண்களின் தமிழ் வடிவ ஓலிகளை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்
தங்கம் விலை கடந்த சில நாட்களாக பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது இந்தநிலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து கடந்த மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு பவுன் ரூ ஆயிரத்தை கடந்துள்ளது அதன்படி நேற்று விராட் கோலிக்கு நடந்தது என்ன விளையாட்டு சர்வதேச டி கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐ சி சி வெளியிட்டுள்ளது இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் முதலிடம் பிடித்துள்ளார் இங்கிலாந்தின் டேவிட் மலான் வது சிறுநீரக பிரச்சனை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வௌியேறினார் சினி செய்திகள் பிக்பாஸ் வது சீசன் தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது நாடியா அபிஷேக் சின்ன பொண்ணு ஸ்ருதி என பேர் இதுவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார்கள் இடையில் என்ன காரணம் தெரியவில்லை நமீதா மாரிமுத்து வெளியேறிவிட்டார் இந்த வாரம் யார் நிகழ்ச்சியில் நாட்டை விட்டு வௌியேறிய கோடி போ் உலகம் போா் காரணமாக தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறுபவா்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் இந்த ஆண்டு கோடியாக உயரும் என்று ஐ நா அகதிகள் நல ஆணையா் ஃபிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளாா் கடந்த ஆண்டில் கோடியாக இருந்த எண்ணிக்கை ஆப்பிரிக்க பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை மீண்டும் குற்றச்சாட்டு இந்தியா மகளிருக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக உத்தர பிரதேசம் உருவாகிவிட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா குற்றம்சாட்டியுள்ளாா் உத்தர பிரதேச தலைநகா் லக்னௌவில் அலுவலகங்கள் உள்ள பாபு பவனில் பெண் அதிகாரி ஒருவா் ஒப்பந்தப் பணியாளரால் பாலியல் கோடி வசூலித்த படங்கள் புதிய சாதனை சினி செய்திகள் தொடர்ச்சியாக ஒன்பது படங்கள் ஒவ்வொன்றும் குறைந்தது ரூ கோடி வசூல் இந்தச் சாதனையை எந்தவொரு இந்திய இயக்குநராவது நிகழ்த்தியதுண்டா பாலிவுட் பற்றி தெரிந்தவர்களுக்கு விடை தெரிந்திருக்கும் ரோஹித் ஷெட்டி சிம்பா என்கிற சூப்பர் ஹிட் படத்துக்கு முதலிரவில் என்ன செய்வார்கள் ஆச்சர்யப்படுத்திய நடிகை சினி செய்திகள் லவ் யூ ரச்சூ என்கிற கன்னடப் படத்தில் நடித்துள்ளார் நடிகை ரச்சிதா ராம் முதல் கன்னடப் படங்களில் நடித்து வரும் ரச்சிதா லவ் யூ ரச்சூ படத்தில் அஜய் ராவுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்துள்ளார் இந்நிலையில் இப்படம் தொடர்பான செய்தியாளர் ஜெய் பீம் சர்ச்சை சூர்யா கடிதம் சினி செய்திகள் ஜெய் பீம் திரைப்படம் தொடர்பான சர்ச்சைக் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியிருந்த நிலையில் நடிகர் சூர்யா அதற்குப் பதில் கடிதம் எழுதியுள்ளார் நடிகர் சூர்யா நடித்து தயாரித்திருந்த ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம் ஒலிப்பதிவு ஒலிப்பதிவு வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே உன் வண்ணம் உன் எண்ணம் எல்லாமே என் சொந்தம் இதயம் முழுதும் எனது வசம்
மற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள் அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும் புது கட்டளை விதியை இணை மற்றும் அல்லது அல்ல சேமகம் உயர்மட்ட விவரணம் முடிவுகளை இதன் படி வடிகட்டுக விவரிப்பு மட்டம் சேர்வு உருப்படி ஆம் இல்லை உதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது உயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும் திகதி வரிசை ஒழுங்குப் படி வடிகட்டுக ஆரம்பம் முடிவு மேற்படிவான துல்லியமான
நீங்கள் இருப்பது இங்கே வலைமனை தொடர்பாடல் மற்றும் ஊடகம் தபால் சேவை வெளிநாடுகளிலிருந்து மொத்தமாக கொண்டுவரப்படும் புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகள் போன்றவற்றைப் பெற்றுக்கொள்ளல் கேள்வி விடை வகை முழு விபரம் வெளிநாடுகளிலிருந்து மொத்தமாக கொண்டுவரப்படும் புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகள் போன்றவற்றைப் பெற்றுக்கொள்ளல் தகைமைகள் இலங்கை பிரசைகளிற்கும் இந்த நாட்டிற்கு வந்துள்ள எந்தவொரு வெளிநாட்டவருக்கும் இந்த சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இடம் கருமபீடம் மற்றும் நேரங்கள் விண்ணப்பப் படிவமொன்று இல்லை எனினும் பொதி வெளிநாட்டு மொத்த பிரிவிற்கு கிடைத்த தினத்திற்கு மறுநாள் இந்தப் பிரிவால் பதிவுத் தபால் மூலம் அறிவித்தலொன்று உரியவருக்கு அனுப்பப்படும் அறிவித்தல் இணைக்கப்பட்டுள்ளது விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம் கட்டணம் அறவிடப்பட மாட்டாது சமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் அறிவித்தல் வெளியிடப்பட்ட தினத்திற்கு அடுத்த நாளிலிருந்து கடமை நாட்களிற்குள் மு ப மணி முதல் மணி வரை மட்டும் சேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம் வெளிநாட்டு மொத்தப் பொதியொன்றிற்கு தபால் கட்டணமாக ரூபாவூம் சுங்க வரி இருந்தால் அந்தக் கட்டணமும் அறிவித்தலில் குறிப்பிட்ட தினம் கடந்திருந்தால் களஞ்சிய கட்டணமாக ஒரு பொதிக்கு ஒரு நாளைக்கு ரூபா வீதமும் அறவிடப்படும் சேவையைப் பெற்றுக்கொடுக்க எடுக்கும் காலம் சாதாரண மற்றும் முன்னுரிமை சேவை அறிவித்தல் பொதி உரிமையாளரிற்கு கிடைத்து இந்த இடத்திற்கு சமர்ப்பித்ததன் பின்னர் சுமார் நிமிடங்கள் அளவில செலவாகும் உறுதிப்படுத்த தேவையான ஆவணங்கள் பொதி உரிமையாளாரிற்கு அனுப்பப்பட்ட அறிவித்தலின் மூலப் பிரதி தேசிய அடையாள அட்டை விமானக் கடவவுச் சீட்டு தபால் அடையாள அட்டை சேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள் பதவி பெயர் பிரிவு தொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல் உதவி அத்தியட்சகர் டப் எம் குணசிங்க வெளிநாட்டுத் தபால் விதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் கடித உரியாளியினால் பொறுப்பளிக்கப்பட்ட இன்னொருவருக்கு பொருட்கள் ஒப்படைக்கப்படும் உரிமையை பொறுப்பளிக்கும் பத்திரம் அறிவித்தலின் கீழ் கழசஅ யூ யின் கீழ் காட்டப்படும் இந்தப் பிரிவிற்கு வர முடியாத ஒருவருக்கு தனக்கு மிக அருகிலுள்ள இலங்கையில் எந்தவொரு பிரதான தபால் அலுவலகத்திற்கும் வரவழைத்துக் கொள்ள முடியும் சுங்க விடுவிப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ள கண்டி மற்றும் காலி பிரதேசங்களிற்கு அருகிலுள்ள முகவரியயுடையவர்களுக்கான மொத்தப் பொதிகள் அந்தக் அலுவலகங்களிற்கு அனுப்பப்படும் மாதிரி விண்ணப்பப் படிவம் மாதிரி படிவமொன்றை இணைக்கவும் இணைக்கப்பட்டுள்ளது பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவும் மாதிரிப் பத்திரம் வெளிநாட்டில் மொத்தப் பொதி உரிமையாளர்களிற்கு அனுப்பப்படும் அறிவித்தல் மாதிரிப் பத்திரம் கண்டி மத்திய மாகாணம் காலி தென் மாகாணம் என்பவற்றிற்கு அனுப்பப்படும் அறிவித்தல் மாதிரிப் பத்திரம் பொதியை இந்த இடத்திற்கு வந்து பெற்றுக்கொள்ள முடியாத பொதி உரிமையாளர்களிற்கு உரிய முகவரிக்கு அருகிலுள்ள தபால் அலுவலகத்திற்கு வரவழைத்துக் கொள்ளும் மாதிரிப் பத்திரம் மாதிரிப் பத்திரம் இந்தஇலக்கம் இல் குறிப்பிட்டுள்ளதன் பிரகாரம் பொதியை பயண முடிவு அலுவலகத்திற்கு வரவழைத்துக் கொள்வதாயின் ஆம் இலக்கத்தின் மூலம் காட்டப்படும் படிவமும் அனுப்பப்படும் மாதிரிப் பத்திரம் சுங்கக் கட்டணம் விதிக்கப்பட்டால் ஆம் இலக்க இளஞ்சிவப்பு மாதிரியையும் இணைத்தல் வேண்டும்
சட்டப் பேரவை இடைத்தோ்தல் பிரசாரத்தின்போது வளா்ச்சிப் பணிகள் தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையாவுக்கு கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை சவால் விடுத்துள்ளாா் கா்நாடகத்தில் சிந்தகி ஹானகல் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு அக் ஆம் தேதி இடைத்தோ்தல் நடக்க இருக்கிறது இந்தத் தோ்தலில் பாஜக காங்கிரஸ் மஜத இடையே கடும் போட்டி காணப்படுகிறது இருதொகுதிகளிலும் பாஜக காங்கிரஸ் மஜதவின் முன்னணித் தலைவா்கள் முகாமிட்டுள்ளதால் பிரசாரம் சூடுபிடித்துள்ளது இந்நிலையில் ஹானகல் தொகுதியில் இடைத்தோ்தல் பிரசாரத்துக்காக ஹுப்பள்ளிக்கு சனிக்கிழமை வந்த கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை செய்தியாளா்களிடம் கூறியதாவது ஹானகல் தொகுதி வளா்ச்சி தொடா்பாக பொதுமேடையில் விவாதிக்க எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா எனக்கு சவால் விட்டுள்ளாா் சட்டப் பேரவை நமக்கு கிடைத்துள்ள பொதுத்தளமாகும் அங்கு கடந்த காலத்திலும் விவாதம் நடத்தியுள்ளோம் எதிா்காலத்திலும் விவாதம் நடத்துவோம் சித்தராமையா வாா்த்தையில் தோரணம் கட்டிக்கொண்டிருக்கிறாா் அவருடைய வாா்த்தை விளையாட்டோடு ஈடு கொடுக்க நாங்களும் தயாராக இருக்கிறோம் அதற்கு முன்பாக ஹானகல் தொகுதியை சித்தராமையா முழுமையாக சுற்றிப் பாா்க்க வேண்டும் அப்போதுதான் பாஜக ஆட்சியில் ஹானகல் தொகுதியில் மேற்கொண்டுள்ள வளா்ச்சிப் பணிகள் அவருக்கு தெரியவரும் எந்தெந்தத் தொகுதியில் என்னென்ன திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் என்ற பட்டியலை ஏற்கெனவே வெளியிட்டுள்ளேன் அந்த இடங்களுக்கு நேரில் சென்று வளா்ச்சிப் பணிகளை சித்தராமையா காண வேண்டும் அவரது ஆதரவாளா்களின் பேச்சை கேட்டுக்கொண்டு வாய்க்கு வந்தவாறு கருத்துகளை கூறக் கூடாது என சித்தராமையாவை கேட்டுக்கொள்கிறேன் என்றாா் ஹுப்பள்ளி ஒமைக்ரான் தீநுண்மி மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியாவுடன் கா்நாடக முதல்வா் ஆலோசனை பெங்களூரில் ஒமைக்ரான் தீநுண்மியால் இருவா் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய அரசு மேக்கேதாட்டு திட்டத்துக்கு அனுமதி அளிக்காத வரை தமிழக நதி இணைப்புத் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது ஒமைக்ரான் தீநுண்மி பாதிப்பு கண்டறிந்துள்ளதால் யாரும் அச்சப்பட தேவையில்லை அமைச்சா் கே சுதாகா் துவாரகா மடத்தின் பீடாதிபதியுடன் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திப்பு காணொலி விசாரணையில் அரை நிா்வாணமாக காட்சி அளித்தவருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் இன்று குடிநீா் குறைதீா் முகாம் மாணவா் பேருந்து அட்டை செல்லுபடி காலம் நீட்டிப்பு மு க ஸ்டாலின்சென்னைசென்னைஒமைக் ரான்பள்ளி விடுமுறை பிரதமா் நரேந்திர மோடிதேசிய கல்விக் கொள்கைநோரோ தொற்றுநாட்டுப்பற்று ருத்ர தாண்டவம் யுவன் ஷங்கர் ராஜா
நடிகர் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்தார் ஆனால் தற்பொழுது அவர் மிகப்பெரிய உயரத்தை எட்டிப் பிடித்திருக்கிறார் இந்த இடத்தை அவ்வளவு அவ்வளவு சுலபமாக சிவகார்த்திகேயன் அடைந்து விடவில்லை என்பதுதான் உண்மை பல போராட்டங்கள் கஷ்டங்களை தாண்டி தான் இந்த வளர்ச்சியை அடைந்துள்ளார் மெரினா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் பிரபலமடைந்தார் சினிமா விமர்சனம் ஓ மணப்பெண்ணே இந்தப்படம் சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று சொன்னால் மிகையாகாது தொடர்ந்து ரஜினிமுருகன் வேலைக்காரன் ஹீரோ மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முடித்தார் அதோடு எஸ்கே புரொடக்ஷன் என்ற தனது நிறுவனம் மூலம் பல படங்களையும் தயாரித்தார் ஆனால் அதுவே அவருக்கு பின்னாளில் பெரிய பிரச்சனையாக உருவாகியது இவர் தயாரிப்பில் வெளிவந்த படங்களின் தோல்வி காரணமாக மிகப்பெரிய கடன் கடன் பிரச்சனையில் சிவகார்த்திகேயன் சிக்கி விட்டார் இப்படி ஒரு நிலையில் தான் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படம் வெளியானது அனைவரும் எதிர்பார்த்த வகையில் டாக்டர் படம் முதல் நாளில் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது வளர்ந்து வரும் இளம் நடிகரின் படத்திற்கு இந்தளவு வரவேற்பார் என போலிவுட்டு அதிசயத்தை நின்றது ஏனென்றால் தற்பொழுது குறைவு காரணமாக தியேட்டர்களில் சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அஜித்தின் கடைசி படங்களின் வசூல் நிலவரம் டாக்டர் வசூல் சாதனை தற்போது சிவகார்த்திகேயன் வரலாற்றிலேயே அதிக அளவில் வசூல் செய்த சாதனையை டாக்டர் படம் அடைந்துள்ளது உலகம் முழுவதும் திரையிடப்பட்ட டாக்டர் படம் சுமார் கோடி அளவு வசூல் செய்திருப்பதாக அறிவித்தார்கள் இதற்கு முன்னால் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படம் சுமார் கோடி ரூபாய் வசூல் செய்து அதன் பின்னர் நம்ம வீட்டுப்பிள்ளை படமும் அதே அளவுக்கு ரூபாய் கோடி வசூல் செய்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது தற்பொழுது டாக்டர் படம் தமிழகத்தில் மட்டும் ரூபாய் கோடியும் உலகம் முழுவதும் கோடியும் ஆக மொத்தம் கோடி வசூல் செய்து உள்ளது இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரஜினி விஜய் அஜித் அதன்பின் சிவகார்த்திகேயன் ஒரு மாஸ் நடிகராக உயர்ந்து விட்டார் படத்தின் மொத்த வசூலையும் கேட்டு டாக்டர் படத்தில் பணிபுரிந்த அனைவரும் அளவற்ற மகிழ்ச்சியில் உள்ளனர் இந்தப்படம் சிவகார்த்திகேயனின் அசுர வளர்ச்சிக்கு ஒரு உதாரணம்
நிலம் வைத்திருப்பவர்கள் தான் விவசாயிகள் என்பதில்லை வீட்டு மாடியில் கூட தோட்டம் அமைத்து விவசாயம் செய்யலாம் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கலாம் காளான் வளர்ப்பு அசோலா வளர்ப்பு ஆடு மாடு வளர்ப்பை இணைத்து பண்ணை திட்ட மாதிரியை உருவாக்கலாம் இதை செயல்படுத்துவதற்கு க்கு அடி அளவு காளான் குடில் இரண்டு சிமென்ட் தொட்டிகள் இரண்டு இளம் ஆடுகள் நான்கு கோழிகள் மாடியில் செடி வளர்க்க தேவையான பைகள் நாள் ஒன்றுக்கு லிட்டர் தண்ணீர் தேவைப்படும் காளான் குடிலின் ஈரப்பதத்தை தக்கவைக்க நாள் ஒன்றுக்கு லிட்டர் தண்ணீர் தெளிக்க வேண்டும் இதில் லிட்டர் தண்ணீரை சுழற்சி முறையில் மீண்டும் பெற்று செடிகளுக்கு பாய்ச்சலாம் சிறிதளவு சூப்பர் பாஸ்பேட் பொட்டாஷ் உரங்களை ஆட்டுச் சாணத்துடன் கலந்து அசோலா வளர்க்கலாம் அதை அறுவடை செய்து ஆடு கோழிகளுக்கு தீவனமாக தரலாம் செடிகளுக்கு உரமாகவும் பயன்படுத்தலாம் அசோலாவை தீவனத்துடன் கலந்து ஆட்டுக்கு தரலாம் கோழிகளில் இருந்து முட்டை இறைச்சி பெறலாம் ஆயிரம் சதுர அடி இடமிருந்தால் மாடியை ஒருங்கிணைந்த பண்ணை தோட்டமாக மாற்றலாம் பகிரவும் பசுமை விவசாயம் என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்
தலை சுற்றலை வெர்ட்டைகோ என்று ஆங்கில மருத்துவம் கூறும் எது தலை சுற்றல் என்பதில் சிறு குழப்பம் நிலவுகிறது ஒரு செய்தி அல்லது சம்பவம் குழப்பமாக இருந்தாலும் அதையும் தலையே சுற்றுகிறது என்றும் கூறுவோம் அது மருத்துவம் தொடர்பு இல்லாதது அதுபோன்று நம் அனைவருக்கும் எப்போதாவது தலை சுற்றல் உண்டாகியிருக்கலாம் மயக்கம் பித்தம் கிறுகிறுப்பு கிறக்கம் என்றெல்லாம் தலை சுற்றலைக் கூறுவதுண்டு தலைச் சுற்றல் இருவகையானது முதல் வகையில் நாம் சுற்றுவதான உணர்வு இரண்டாவது நம்மைச் சுற்றியுள்ளவை சுற்றுவது போன்ற உணர்வு தலைச் சுற்றல் பொதுவாக காதில் பிரச்னை இருந்தால் ஏற்படும் பூமியின் ஈர்ப்புச் சக்திக்கு ஏற்ப நேராக நிற்பதற்கும் கீழே விழுந்துவிடாமல் நடப்பதற்கும் காதுகளில் உள்ள வெஸ்டிபுலார் உறுப்பு பயன்படுகிறது அதில் பிரச்னை உண்டானால் தலைச் சுற்றல் உண்டாகும் இதுபோன்று பின்வரும் காரணங்களாலும் தலைச் சுற்றல் உண்டாகும் இதை மிதமான அவ்வப்போது தோன்றும் தலைச் சுற்றல் எனலாம் இதில் நுண்ணிய கால்சியம் பொடிகள் உள் காதின் குழாய்களில் படிந்துவிடுவதால் உண்டாகிறது நாம் விழுந்து விடாமல் நடந்து செல்வதற்கு உள் காது முக்கியமானது அங்கிருந்து நரம்புகள் மூளைக்கு செய்தி அனுப்புகின்றன அதன் மூலமே நம்முடைய தலையையும் உடலையும் பூமியின் ஈர்ப்புச் சக்திக்கு இணங்க நிமிர்ந்து நடக்கிறோம் உட்காருவதும் படுப்பதும் எழுவதும் எல்லாம் இதனால்தான் இதில் கோளாறு உண்டானால் தலைச் சுற்றல் உண்டாகும் இந்த பிரச்னை வயது காரணமாகவும் உண்டாகலாம் மெனியர் நோய் இதில் உள் காதில் நீர் தேக்கமுற்று காதினுள் நிலவும் சமமான அழுத்தத்தில் மாற்றத்தை உண்டாக்கும் இதனால் தலைச் சுற்றல் காதில் ஓசை காது கேளாமை போன்ற அறிகுறிகள் தென்படும் காதுக்குள் நரம்பு அழற்சி பெரும்பாலும் வைரஸ் கிருமிகளின் தாக்குதலால் இது உண்டாகிறது இதில் உள் காதில் வைரஸ் தொற்று உண்டாகி நரம்புகளைத் தாக்குவதால் உடல் சமமான நிலையில் இருப்பது பாதிப்புக்கு உள்ளாகிறது அதனால் தலைச் சுற்றும் காது வலியும் உண்டாகிறது இவை தவிர வேறு சில காரணங்களாலும் தலைச் சுற்றல் உண்டாகலாம் அவை வருமாறு விபத்து தலையில் அல்லது கழுத்தில் அடி மூளையில் கட்டி சில மருந்து வகைகள் காது நரம்புகளைப் பாதிப்புக்கு உள்ளாக்கும் ஒற்றைத்தலைவலி அறிகுறிகள் சுற்றும் உணர்வு தள்ளுதல் போன்ற உணர்வு அசைவது போன்ற உணர்வு நிற்பதில் நடப்பதில் தடுமாற்றம் ஒரு பக்கமாக இழுப்பது குமட்டல் கண்களில் அசைவு தலைவலி வியர்வை காதில் தொடர்ந்து ஒலி காது கேளாமை இத்தகைய அறிகுறிகள் சில நிமிடங்கள் முதல் சில மணிநேரம் வரை தொடர்ந்து பின்பு இல்லாமல் போய் மீண்டும் உண்டாகலாம் சிகிச்சை முறைகள் தலைச் சுற்றல் உண்டாவதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை தருவதுதான் முறை சில சமயங்களில் தலைச் சுற்றல் தானாக மறைந்துவிடும் மூளை வேறு வழிகளில் காதால் உண்டான பிரச்னைக்கு ஈடு தரும் வகையில் செயல்படும் அதனால் தலைச் சுற்றல் குறைந்துவிடும் காது நரம்புகளுக்கு பயிற்சி முறை இதன் மூலம் காதிலிருந்து மூளைக்கு செல்லும் தகவல்கள் சரியாகலாம் இதில் தலையையும் கழுத்தையும் சில கோணங்களில் திருப்பி பயிற்சி தருவதின் மூலம் காத்து குழாய்களில் அடைபட்டுள்ள கால்சியம் வெளியேற்றப்படுகிறது மருந்துகள் தலைச் கற்றலுக்கு சில மருந்துகள் தரலாம் அதோடு கிருமிகள் காரணம் என்றால் அதற்கு எண்டிபையாட்டிக் மருந்தும் ஸ்டீராய்டு மருந்துகளும் தரலாம் அறுவை சிகிச்சை மூளைக் கட்டிகள் காரணம் எனில் அவற்றை அகற்ற அறுவைச் சிகிச்சை தேவைப்படும் முடிந்தது சுந்தரி காண்டம் ஜிகினா மோகினி ஜில் ஜில் சுந்தரி சாரல் விருது பெற்ற விழா மேடையில் விக்ரமாதித்யன் நிகழ்த்திய ஏற்புரை செப்டம்பர் திரும்பிப்பார்க்கின்றேன் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஐரோப்பிய செர்ன் அணு உடைப்பு யந்திரம் பிரபஞ்ச அடிப்படைச் சீரமைப்பை உறுதிப்படுத்துகிறது அவன் அவள் அது இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள் பொன்னியின் செல்வன் படக்கதை தொடுவானம் ஊர் செல்லும் உற்சாகம் ஜிமாவின் கைபேசி திரு கு சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது கடலோடி கழுகு விலை போகும் நம்பிக்கை வளவ துரையனின் வலையில் மீன்கள் ஒரு பார்வை பூனைகள் முற்றத்துக்கரடி அகளங்கன் சிறுகதைகள் குரு அரவிந்தன் பாராட்டு விழாவும் நூல் வெளியீடும் கூடுவிட்டுக் கூடு தாண்டுதல் லாந்தர் விளக்கும் காட்டேரி பாதையும் மாயா சுந்தரி காண்டம் ஜிகினா மோகினி ஜில் ஜில் சுந்தரி மருத்துவக் கட்டுரை தலை சுற்றல் சாரல் விருது பெற்ற விழா மேடையில் விக்ரமாதித்யன் நிகழ்த்திய ஏற்புரை தாக்க தாக்க திரைப்பட விமர்சனம் சுந்தரி காண்டம் ஜிகினா மோகினி ஜில் ஜில் சுந்தரி திண்ணை பற்றி திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை உங்கள் படைப்புகளை க்கு அனுப்புங்கள் ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம் பழைய திண்ணை படைப்புகள் இல் உள்ளன தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள் சமஸ்கிருதம் தொடர் முழுவதும் இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்ய ட்விட்டரில் பின் தொடர இதழ்கள் அக்டோபர் ஆகஸ்ட் ஏப்ரல் ஏப்ரல் செப்டம்பர் செப்டம்பர் ஜனவரி ஜூன் ஜூலை ஜூலை டிசம்பர் டிசம்பர் நவம்பர் நவம்பர் பெப்ருவரி மார்ச் மார்ச் அக்டோபர் ஆகஸ்ட் ஏப்ரல் செப்டம்பர் ஜனவரி ஜனவரி ஜூன் ஜூன் ஜூலை ஜூலை டிசம்பர் நவம்பர் நவம்பர் பெப்ருவரி பெப்ருவரி மார்ச் மார்ச் மே மே அக்டோபர் அக்டோபர் ஆகஸ்ட் ஆகஸ்ட் ஏப்ரல் செப்டம்பர் செப்டம்பர் ஜனவரி ஜூன் ஜூலை டிசம்பர் டிசம்பர் நவம்பர் நவம்பர் பெப்ருவரி மார்ச் மார்ச் அக்டோபர் ஆகஸ்ட் ஆகஸ்ட் ஏப்ரல் ஏப்ரல் செப்டம்பர் ஜனவரி ஜனவரி ஜூன் ஜூன் ஜூலை ஜூலை நவம்பர் பிப்ரவரி பெப்ருவரி மார்ச் மே மே மே அக்டோபர் அக்டோபர் ஆகஸ்ட் ஏப்ரல் செப்டம்பர் செப்டம்பர் ஜனவரி ஜனவரி ஜூன் ஜூலை டிசம்பர் டிசம்பர் நவம்பர் நவம்பர் மார்ச் மே மே அக்டோபர் அக்டோபர் ஆகஸ்ட் ஆகஸ்ட் ஏப்ரல் ஏப்ரல் செப்டம்பர் ஜனவரி ஜூன் ஜூன் ஜூலை ஜூலை டிசம்பர் நவம்பர் பெப்ருவரி பெப்ருவரி மார்ச் மே அக்டோபர் ஆகஸ்ட் ஏப்ரல் ஏப்ரல் செப்டம்பர் செப்டம்பர் ஜனவரி ஜனவரி ஜூன் ஜூலை ஜூலை டிசம்பர் டிசம்பர் நவம்பர் நவம்பர் பெப்ருவரி மார்ச் மார்ச் மே மே அக்டோபர் அக்டோபர் ஆகஸ்ட் ஆகஸ்ட் ஏப்ரல் செப்டம்பர் செப்டம்பர் ஜூன் ஜூன் ஜூலை டிசம்பர் டிசம்பர் நவம்பர் பெப்ருவரி பெப்ருவரி மார்ச் மே அக்டோபர் ஆகஸ்ட் ஏப்ரல் செப்டம்பர் ஜனவரி ஜனவரி ஜூன் ஜூன் ஜூலை டிசம்பர் நவம்பர் நவம்பர் பிப்ரவரி பெப்ருவரி மார்ச் மார்ச் மே மே அக்டோபர் அக்டோபர் ஆகஸ்ட் ஆகஸ்ட் ஏப்ரல் செப்டம்பர் செப்டம்பர் ஜனவரி ஜூன் ஜூலை டிசம்பர் டிசம்பர் நவம்பர் நவம்பர் பெப்ருவரி மார்ச் மார்ச் மே அக்டோபர் ஆகஸ்ட் ஆகஸ்ட் ஏப்ரல் ஏப்ரல் செப்டம்பர் ஜனவரி ஜனவரி ஜூன் ஜூலை ஜூலை நவம்பர் பிப்ரவரி பெப்ருவரி மார்ச் மே மே அக்டோபர் அக்டோபர் ஆகஸ்ட் ஆகஸ்ட் ஏப்ரல் செப்டம்பர் செப்டம்பர் ஜூன் ஜூன் ஜூலை டிசம்பர் டிசம்பர் நவம்பர் பெப்ருவரி பெப்ருவரி மார்ச் மே அக்டோபர் அக்டோபர் ஆகஸ்ட் ஏப்ரல் செப்டம்பர் செப்டம்பர் ஜனவரி ஜனவரி ஜூன் ஜூன் ஜூலை டிசம்பர் டிசம்பர் நவம்பர் நவம்பர் மார்ச் மே மே அக்டோபர் அக்டோபர் ஆகஸ்ட் ஆகஸ்ட் ஏப்ரல் செப்டம்பர் ஜனவரி ஜூன் ஜூன் ஜூலை ஜூலை டிசம்பர் நவம்பர் பெப்ருவரி பெப்ருவரி மார்ச் மே அக்டோபர் ஆகஸ்ட் ஏப்ரல் ஏப்ரல் செப்டம்பர் செப்டம்பர் ஜனவரி ஜனவரி ஜூன் ஜூலை ஜூலை டிசம்பர் டிசம்பர் நவம்பர் நவம்பர் பெப்ருவரி மார்ச் மார்ச் மே மே அக்டோபர் அக்டோபர் ஆகஸ்ட் ஆகஸ்ட் ஏப்ரல் செப்டம்பர் செப்டம்பர் ஜூன் ஜூன் ஜூலை டிசம்பர் டிசம்பர் நவம்பர் பெப்ருவரி பெப்ருவரி மார்ச் மே அக்டோபர் ஆகஸ்ட் ஏப்ரல் செப்டம்பர் ஜனவரி ஜனவரி ஜூன் ஜூன் ஜூலை ஜூலை டிசம்பர் நவம்பர் நவம்பர் பிப்ரவரி பெப்ருவரி மார்ச் மார்ச் மே மே அக்டோபர் அக்டோபர் ஆகஸ்ட் ஆகஸ்ட் செப்டம்பர் செப்டம்பர் ஜனவரி ஜூன் ஜூலை டிசம்பர் டிசம்பர் நவம்பர் பெப்ருவரி மார்ச் மார்ச் மே அக்டோபர் ஆகஸ்ட் ஆகஸ்ட் ஏப்ரல் ஏப்ரல் செப்டம்பர் ஜனவரி ஜனவரி ஜூன் ஜூலை ஜூலை நவம்பர் பிப்ரவரி பெப்ருவரி மார்ச் மே மே அக்டோபர் அக்டோபர் ஆகஸ்ட் ஏப்ரல் செப்டம்பர் செப்டம்பர் ஜனவரி ஜனவரி ஜூன் ஜூன் ஜூலை டிசம்பர் டிசம்பர் நவம்பர் நவம்பர் மே மே மார்ச் அக்டோபர் ஆகஸ்ட் ஆகஸ்ட் ஏப்ரல் ஏப்ரல் செப்டம்பர் ஜனவரி ஜூன் ஜூன் ஜூலை டிசம்பர் நவம்பர் பெப்ருவரி பெப்ருவரி மார்ச் மே அக்டோபர் அக்டோபர் ஆகஸ்ட் ஏப்ரல் ஏப்ரல் செப்டம்பர் செப்டம்பர் ஜனவரி ஜனவரி ஜூன் ஜூலை ஜூலை டிசம்பர் டிசம்பர் நவம்பர் நவம்பர் மார்ச் மார்ச் மே மே அக்டோபர் ஆகஸ்ட் ஏப்ரல் செப்டம்பர் ஜனவரி ஜனவரி ஜூன் ஜூன் ஜூலை டிசம்பர் நவம்பர் நவம்பர் பிப்ரவரி பெப்ருவரி மார்ச் மார்ச் மார்ச் மே மே அக்டோபர் அக்டோபர் ஆகஸ்ட் ஆகஸ்ட் ஏப்ரல் செப்டம்பர் செப்டம்பர் ஜூன் ஜூன் ஜூலை டிசம்பர் டிசம்பர் நவம்பர் மார்ச் மே அக்டோபர் ஆகஸ்ட் ஜனவரி ஜனவரி ஜூலை ஜூலை டிசம்பர் மார்ச் மார்ச் மே மே அக்டோபர் அக்டோபர் ஆகஸ்ட் ஆகஸ்ட் செப்டம்பர் செப்டம்பர் ஜனவரி ஜூன் ஜூலை ஜூலை டிசம்பர் டிசம்பர் நவம்பர் நவம்பர் பெப்ருவரி மார்ச் மே அக்டோபர் ஆகஸ்ட் ஆகஸ்ட் ஏப்ரல் ஏப்ரல் செப்டம்பர் ஜனவரி ஜனவரி ஜூன் ஜூன் ஜூலை ஜூலை நவம்பர் பிப்ரவரி பெப்ருவரி மார்ச் மே மே அக்டோபர் அக்டோபர் ஆகஸ்ட் ஏப்ரல் செப்டம்பர் செப்டம்பர் ஜனவரி ஜனவரி ஜூன் ஜூலை டிசம்பர் டிசம்பர் நவம்பர் நவம்பர் மார்ச் மே மே அக்டோபர் அக்டோபர் ஆகஸ்ட் ஆகஸ்ட் ஏப்ரல் ஏப்ரல் செப்டம்பர் ஜனவரி ஜூன் ஜூன் ஜூலை ஜூலை டிசம்பர் நவம்பர் பெப்ருவரி பெப்ருவரி மார்ச் மே அக்டோபர் ஆகஸ்ட் ஏப்ரல் ஏப்ரல் செப்டம்பர் செப்டம்பர் ஜனவரி ஜனவரி ஜூன் ஜூலை ஜூலை டிசம்பர் டிசம்பர் நவம்பர் நவம்பர் பெப்ருவரி மார்ச் மார்ச் மே அக்டோபர் அக்டோபர் ஆகஸ்ட் ஆகஸ்ட் ஏப்ரல் செப்டம்பர் செப்டம்பர் ஜூன் ஜூன் ஜூலை டிசம்பர் டிசம்பர் நவம்பர் பெப்ருவரி பெப்ருவரி மார்ச் மே திரும்பிப்பார்க்கின்றேன் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஐரோப்பிய செர்ன் அணு உடைப்பு யந்திரம் பிரபஞ்ச அடிப்படைச் சீரமைப்பை உறுதிப்படுத்துகிறது அவன் அவள் அது இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள் பொன்னியின் செல்வன் படக்கதை தொடுவானம் ஊர் செல்லும் உற்சாகம் ஜிமாவின் கைபேசி திரு கு சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது கடலோடி கழுகு விலை போகும் நம்பிக்கை வளவ துரையனின் வலையில் மீன்கள் ஒரு பார்வை பூனைகள் முற்றத்துக்கரடி அகளங்கன் சிறுகதைகள் குரு அரவிந்தன் பாராட்டு விழாவும் நூல் வெளியீடும் கூடுவிட்டுக் கூடு தாண்டுதல் லாந்தர் விளக்கும் காட்டேரி பாதையும் மாயா சுந்தரி காண்டம் ஜிகினா மோகினி ஜில் ஜில் சுந்தரி மருத்துவக் கட்டுரை தலை சுற்றல் சாரல் விருது பெற்ற விழா மேடையில் விக்ரமாதித்யன் நிகழ்த்திய ஏற்புரை பின்னூட்டங்கள் இலக்கியம் படைக்கும் கவிஞர்கள் இலக்கியம் படிக்க வேண்டுமா முகங்கள் இரயில் பயணங்களில் சிறை கழட்டல் முகங்கள் இரயில் பயணங்களில் முகங்கள் இரயில் பயணங்களில் நெய்தல் வெளி தமிழ்நாடு கடற்கரை எழுத்தாளர்கள் வாசகர் சந்திப்பு என் பயணத்தின் முடிவு சிறை கழட்டல் வெப்ப யுகக் கீதை சுரேஷ் ராஜகோபால் கவிதையும் ரசனையும் சுரேஷ் ராஜகோபாலின் என்பா கவிதைகள் ஸ்ரீதர் திருமந்திர சிந்தனைகள் பெருவுடையாரின் மூலமும் ஸ்ரீஅரவிந்தரின் குறிப்பும் நாமென்ன செய்யலாம் பூமிக்கு திருமந்திர சிந்தனைகள் பார்ப்பானும் வெறித்தோடும் பசுக்களும் திருமந்திர சிந்தனைகள் பார்ப்பானும் வெறித்தோடும் பசுக்களும் மலர்களின் துயரம் கவிஞர் வைதீஸ்வரனின் புதிய நூல் குறித்து பாரதி தரிசனம் யாழ்ப்பாணத்திலிருந்து மாஸ்கோ வரையில் சாணி யுகம் மீளுது ஜெர்மனி தூய செயற்கை கெரோசின் ஜெட் விமான எரித்திரவம் தயாரிக்கும் உலக முதன்மையான தொழிற்சாலை நிறுவகம் கனேரித் தீவில் திடீரென எழுந்த தீக்குழம்பு எரிமலைக் காட்சி ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் ஒரு எதிர்வினை பாகம்
மோளிபள்ளி ஊராட்சி தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எலச்சிப்பாளையம் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த ஊராட்சி திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும் இந்த ஊராட்சி மொத்தம் ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது இவற்றில் இருந்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர் ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை ஆகும் இவர்களில் பெண்கள் பேரும் ஆண்கள் பேரும் உள்ளனர் அடிப்படை வசதிகள் தொகு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது அடிப்படை வசதிகள் எண்ணிக்கை குடிநீர் இணைப்புகள் சிறு மின்விசைக் குழாய்கள் கைக்குழாய்கள் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் உள்ளாட்சிக் கட்டடங்கள் உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் ஊரணிகள் அல்லது குளங்கள் விளையாட்டு மையங்கள் சந்தைகள் ஊராட்சி ஒன்றியச் சாலைகள் ஊராட்சிச் சாலைகள் பேருந்து நிலையங்கள் சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் சிற்றூர்கள் தொகு இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல் மூப்பன்காடு பொன்னி மேடு காமராஜ் நகர் சின்ன மோளிபள்ளி மாச்சம்பாளையம் மோளிபள்ளி மோர்காளிபாளையம் மோளிபள்ளி நாடார் தெரு சின்னன்னம்பாளையம் சான்றுகள் தொகு தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு தமிழ்நாடு அரசு பார்த்த நாள் நவம்பர் தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு தமிழ்நாடு அரசு பார்த்த நாள் நவம்பர் தமிழக ஊராட்சிகளின் பட்டியல் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை பார்த்த நாள் நவம்பர் எலச்சிப்பாளையம் வட்டார வரைபடம் தேசிய தகவலியல் மையம் தமிழ்நாடு மூல முகவரியிலிருந்து அன்று பரணிடப்பட்டது பார்த்த நாள் நவம்பர் தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம் தமிழ் இணையக் கல்விக்கழகம் பார்த்த நாள் நவம்பர் தமிழக சிற்றூர்களின் பட்டியல் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை பார்த்த நாள் நவம்பர் பா உ தொ நாமக்கல் மாவட்ட ஊராட்சிகள் இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் வடுகம் சிங்களாந்தபுரம் பொன்குறிச்சி பி முனியப்பம்பாளையம் பி ஆயீபாளையம் முத்துகாளிப்பட்டி முருங்கப்பட்டி மோளபாளையம் மலையாம்பட்டி எம் கோனேரிபட்டி குருக்கபுரம் கூனவேலம்பட்டி கனகபொம்மம்பட்டி காக்காவேரி கவுண்டம்பாளையம் சந்திரசேகராபுரம் போடிநாய்க்கன்பட்டி அரசப்பாளையம் அனைப்பாளையம் ஆர் கொமாரப்பாளையம் எருமைப்பட்டி ஊராட்சி ஒன்றியம் வராகூர் வரதராஜபுரம் வாழவந்தி வடவாத்தூர் திப்ரமாதேவி சிவாநாய்க்கன்பட்டி செவிந்திபட்டி ரெட்டிபட்டி புதுக்கோட்டை பொட்டிரெட்டிபட்டி பெருமாபட்டி பவித்ரம் புதூர் பவித்ரம் பழையபாளையம் முட்டன்செட்டி முத்துகாபட்டி மேட்டுபட்டி கோணங்கிபட்டி கொடிக்கால்புதூர் காவக்காரன்பட்டி தேவராயபுரம் பொம்மசமுத்ரம் போடிநாய்க்கன்பட்டி அழங்காநத்தம் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம் உஞ்சனை தொண்டிபட்டி சக்திநாய்க்கன்பாளையம் புத்தூர் கிழக்கு புஞ்சைபுதுப்பாளையம் புள்ளாகவுண்டம்பட்டி போக்கம்பாளையம் பெரியமணலி நல்லிபாளையம் முசிறி மோளிபள்ளி மாவுரெட்டிபட்டி மருக்காலம்பட்டி மண்டகபாளையம் மானத்தி லத்துவாடி குப்பாண்டபாளையம் கூத்தம்பூண்டி கொன்னையார் கோக்கலை கிளாப்பாளையம் இலுப்புலி இளநகர் சின்னமணலி பொம்மம்பட்டி அக்கலாம்பட்டி அகரம் கவுண்டம்பாளையம் கவுண்டம்பாளையம் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் ஜமீன் இளம்பள்ளி வடகரையாத்தூர் திடுமல் தி கவுண்டம்பாளையம் சுள்ளிபாளையம் சோழசிறாமணி சிறுநல்லிக்கோயில் சேளூர் பிலிக்கல்பாளையம் பெருங்குறிச்சி பெரியசோளிபாளையம் குரும்பலமகாதேவி குப்பிரிக்காபாளையம் கொத்தமங்கலம் கோப்பணம்பாளையம் கொந்தளம் கபிலகுறிச்சி இருக்கூர் அனங்கூர் ஏ குன்னத்தூர் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் வாழவந்தி நாடு வளப்பூர் நாடு திருப்புளி நாடு திண்ணனூர் நாடு சேலூர் நாடு பெரக்கரை நாடு குண்டூர் நாடு குண்டுனி நாடு எடப்புளி நாடு தேவானூர் நாடு சித்தூர் நாடு பைல் நாடு அரியூர் நாடு ஆலத்தூர் நாடு சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் வாழவந்திகோம்பை உத்திரகிடிக்காவல் துத்திக்குளம் பொட்டணம் பெரியகுளம் பள்ளிப்பட்டி பச்சுடையாம்பட்டி நடுகோம்பை மேலப்பட்டி கொண்டமநாய்க்கன்பட்டி கல்குறிச்சி பொம்மசமுத்திரம் பேளூக்குறிச்சி அக்கியம்பட்டி திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் வட்டூர் வரகூராம்பட்டி தோக்கவாடி திருமங்கலம் தண்ணீர்பந்தல்பாளையம் டி புதுப்பாளையம் டி கைலாசம்பாளையம் டி கவுண்டம்பாளையம் சிறுமொளசி எஸ் இறையமங்கலம் புதுபுளியம்பட்டி பிரிதி பட்லூர் ஒ இராஜாபாளையம் மொளசி மோடமங்கலம் கருவேப்பம்பட்டி கருமாபுரம் ஏமப்பள்ளி தேவனாங்குறிச்சி சித்தாளந்தூர் சிக்கநாய்க்கன்பாளையம் அனிமூர் ஆண்டிபாளையம் ஆனங்கூர் ஏ இறையமங்கலம் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் வடுகமுனியப்பம்பாளையம் ஊனாந்தாங்கல் தொப்பப்பட்டி திம்மநாய்க்கன்பட்டி டி ஜேடர்பாளையம் பெருமாகவுண்டம்பாளையம் பெரப்பன்சோலை பச்சுடையாம்பாளையம் ஆயில்பட்டி நாவல்பட்டி நாரைகிணறு முள்ளுகுறிச்சி மூலப்பள்ளிப்பட்டி மூலக்குறிச்சி மத்துருட்டு மங்களபுரம் கார்கூடல்பட்டி ஈஸ்வரமூர்த்திபாளையம் நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் விட்டாமநாய்க்கன்பட்டி வெட்டம்பாடி வீசாணம் வசந்தபுரம் வள்ளிபுரம் வரகூராம்பட்டி தொட்டிபட்டி திண்டமங்கலம் தாளிகை சிவியாம்பாளையம் சிங்கிலிபட்டி சிலுவம்பட்டி ரெங்கப்பநாய்க்கன்பாளையம் ராசம்பாளையம் பெரியகவுண்டம்பாளையம் நரவலூர் மரூர்பட்டி மாரப்பநாய்க்கன்பட்டி கோணூர் கீரம்பூர் கீழ்சாத்தம்பூர் காதப்பள்ளி எர்ணாபுரம் ஆவல்நாய்க்கன்பட்டி அணியார் பரமத்தி ஊராட்சி ஒன்றியம் வில்லிபாளையம் வீரணம்பாளையம் சுங்ககாரம்பட்டி சித்தாம்பூண்டி செருக்கலை சீராப்பள்ளி இராமதேவம் பிராந்தகம் பில்லூர் பிள்ளைகளத்தூர் நல்லூர் நடந்தை மேல்சாத்தம்பூர் மணிக்கநத்தம் மணியனூர் குன்னமலை கூடச்சேரி கோலாரம் கோதூர் இருட்டணை பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் தட்டான்குட்டை சௌதாபுரம் சமயசங்கிலி அக்ரஹாரம் புதுப்பாளையம் அக்ரஹாரம் பாதரை பாப்பம்பாளையம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பல்லக்காபாளையம் ஓடப்பள்ளி அக்ரஹாரம் குப்பாண்டபாளையம் கொக்கராயன்பேட்டை களியனூர் அக்ரஹாரம் களியனூர் காடச்சநல்லூர் இலந்தக்குட்டை புதுசத்திரம் ஊராட்சி ஒன்றியம் திருமலைப்பட்டி தாத்தையங்கார்பட்டி தத்தாத்திரிபுரம் தாளம்பாடி செல்லப்பம்பட்டி சர்க்கார்நாட்டாமங்கலம் சர்க்கார் உடுப்பம் பாப்பிநாய்க்கன்பட்டி பாச்சல் நவணி தோட்டகூர்பட்டி மின்னாம்பள்ளி லக்கபுரம் காரைக்குறிச்சி புதூர் காரைக்குறிச்சி கரடிப்பட்டி கண்ணூர்பட்டி கல்யாணி கலங்காணி கதிராநல்லூர் எலூர் ஏ கே சமுத்திரம் மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் வண்டிநத்தம் செண்பகமாதேவி சர்க்கார் மாமுண்டி சப்பையாபுரம் இராமாபுரம் பிள்ளாநத்தம் பருத்திப்பள்ளி பாலமேடு நாகர்பாளையம் முஞ்சனூர் மொரங்கம் மின்னாம்பள்ளி மரப்பரை மங்கலம் மாமுண்டி அக்ரஹாரம் மல்லசமுத்திரம் மேல்முகம் குப்பிச்சிபாளையம் கோட்டப்பாளையம் கூத்தாநத்தம் கொளங்கொண்டை கருங்கல்பட்டி அக்ரஹாரம் கருமனூர் கல்லுபாளையம் இருகாலூர் புதுப்பாளையம் பள்ளகுழி அக்ரஹாரம் பள்ளகுழி அவினாசிபட்டி மோகனூர் ஊராட்சி ஒன்றியம் வலையப்பட்டி தோளூர் செங்கப்பள்ளி எஸ் வாழவந்தி ராசிபாளையம் பேட்டப்பாளையம் பெரமாண்டபாளையம் பரளி ஒருவந்தூர் ஓலப்பாளையம் நஞ்சை இடயார் என் புதுப்பட்டி மணப்பள்ளி மடகாசம்பட்டி லத்துவாடி குமாரபாளையம் கோமாரிப்பாளையம் கலிபாளையம் கே புதுப்பாளையம் சின்னபெத்தாம்பட்டி அரூர் அரியூர் அரசநத்தம் அனியாபுரம் ஆண்டாபுரம் வென்னாந்தூர் ஊராட்சிஒன்றியம் தொட்டியவலசு தொட்டியப்பட்டி தேங்கல்பாளையம் செம்மாண்டப்பட்டி ஆர் புதுப்பாளையம் பொன்பரப்பிப்பட்டி பல்லவநாய்க்கன்பட்டி பழந்தின்னிப்பட்டி ஓ சௌதாபுரம் நெம்பர் கொமாரபாளையம் நடுப்பட்டி நாச்சிப்பட்டி மூளக்காடு மின்னக்கல் மாட்டுவேலம்பட்டி மதியம்பட்டி குட்டலாடம்பட்டி கீழூர் கட்டநாச்சம்பட்டி கல்லாங்குளம் அனந்தகவுண்டம்பாளையம் அலவாய்ப்பட்டி ஆலாம்பட்டி அக்கரைப்பட்டி மோளிபள்ளி ஊராட்சி இருந்து மீள்விக்கப்பட்டது பகுப்பு நாமக்கல் மாவட்ட ஊராட்சிகள் மறைக்கப்பட்ட பகுப்பு த இ க ஊராட்சித் திட்டம் வழிசெலுத்தல் பட்டி சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள் புகுபதிகை செய்யப்படவில்லை இந்த ஐபி க்கான பேச்சு பங்களிப்புக்கள் புதிய கணக்கை உருவாக்கு புகுபதிகை பெயர்வெளிகள் கட்டுரை உரையாடல் மாறிகள் பார்வைகள் படிக்கவும் தொகு வரலாற்றைக் காட்டவும் மேலும் தேடுக வழிசெலுத்தல் முதற் பக்கம் அண்மைய மாற்றங்கள் உதவி கோருக புதிய கட்டுரை எழுதுக தேர்ந்தெடுத்த கட்டுரைகள் ஏதாவது ஒரு கட்டுரை தமிழில் எழுத ஆலமரத்தடி சென்ற மாதப் புள்ளிவிவரம் உதவி உதவி ஆவணங்கள் புதுப்பயனர் உதவி தமிழ் விக்கிமீடியத் திட்டங்கள் விக்சனரி விக்கிசெய்திகள் விக்கிமூலம் விக்கிநூல்கள் விக்கிமேற்கோள் பொதுவகம் விக்கித்தரவு பிற விக்கிப்பீடியர் வலைவாசல் நன்கொடைகள் நடப்பு நிகழ்வுகள் கருவிப் பெட்டி இப்பக்கத்தை இணைத்தவை தொடர்பான மாற்றங்கள் கோப்பைப் பதிவேற்று சிறப்புப் பக்கங்கள் நிலையான இணைப்பு இப்பக்கத்தின் தகவல் குறுந்தொடுப்பு இக்கட்டுரையை மேற்கோள் காட்டு விக்கித்தரவுஉருப்படி அச்சு ஏற்றுமதி ஒரு புத்தகம் உருவாக்கு என தகவலிறக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிப்பு மற்ற மொழிகளில் இப்பக்கத்தைக் கடைசியாக ஆகத்து மணிக்குத் திருத்தினோம் அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்
அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்
கோவை மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு ஆர் எஸ் புரத்தில் பள்ளி முற்றுகை போராட்டம் உலக செய்தி விளையாட்டு தமிழகம் சினிமா அரசியல் உடல்நலம் வாழ்க்கை முறை வர்த்தகம் தொழில்நுட்பம் விளையாட்டு கோவை மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு ஆர் எஸ் புரத்தில் பள்ளி முற்றுகை போராட்டம் பள்ளி மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு அனைத்து ஜனநாயக முற்போக்கு இயக்கத்தினர் கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் அந்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர் இந்த நிலையில் மாணவியின் உயிர் இழப்புக்கு நீதி கேட்டு பள்ளியின் முன்புறம் அனைத்து ஜனநாயக முற்போக்கு இயக்கத்தினர் முற்றுகையில் ஈடுபட்டனர் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிய அனைத்து ஜனநாயக முற்போக்கு இயக்கத்தினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர் முன்னதாக கோயம்புத்தூரில் ஆர் எஸ் புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை உறவினர்கள் குற்றச்சாட்டு கோவை கோட்டை மேடு பெருமாள் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் மகுடேஸ்வரனின் வயது மகள் பொன் தாரணி ம் வகுப்பு வரை ஆர் எஸ் புரம் பகுதியில் சின்மயா வித்யாலயா என்ற தனியார் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்த பொன் தாரணி அப்பள்ளியில் படிக்க விரும்பவில்லை எனக்கூறி அம்மணியம்மாள் பள்ளிக்கு மாறினார் அந்த பள்ளியில் ம் வகுப்பு படித்து வந்தார் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டின் உட்புறமாக தாழிட்ட மாணவி பொன் தாரணி மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் மகளின் தற்கொலை குறித்து உக்கடம் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர் இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணைசெய்து வருகின்றனர் இதனிடையே மாணவி பொன் தாரணி தற்கொலைக்கு பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லையே காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர் பெண் எஸ் பி க்குப் பாலியல் தொல்லை வழக்கு பெண் எஸ் பி நேரில் ஆஜராகி சாட்சியம் ஆயிரம் கி மீ பயணித்து நியூசிலாந்து சென்ற அண்டார்டிகாவின் அரிய பென்குயின் படங்கள் விளையாட்டு இப்படியும் ஒரு சாதனை நாளில் கோடி நிமிடம் ஓடியதாம் அரண்மனை விளையாட்டு திமுக இளைஞர் அணி இணையதளம் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் விளையாட்டு தள்ளு தள்ளு தள்ளு ஓடாத விமானத்தை தள்ளிய பயணிகள் வைரல் வீடியோ விளையாட்டு இப்படியும் ஒரு சாதனை நாளில் கோடி நிமிடம் ஓடியதாம் அரண்மனை விளையாட்டு திமுக இளைஞர் அணி இணையதளம் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் விளையாட்டு தள்ளு தள்ளு தள்ளு ஓடாத விமானத்தை தள்ளிய பயணிகள் வைரல் வீடியோ விளையாட்டு மதுரையில் உடல்நலக்குறைவால் புத்தக தாத்தா காலமானார்
ஞாநி வீட்டில் கேணி சந்திப்பு இந்த முறை எழுத்தாளர் கருக்கு பாமா பகிர்தலுக்கு வந்திருந்தார் எழுத தொடங்கிய சூழல் தங்கள் மக்கள் அதை எதிர்கொண்ட விதம் தலீத் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்று அழகாக பகிர்ந்தார் வாசகர்களின் கேள்விகளுக்கும் சளைக்காமல் பதிலளித்தார் முன்னதாக பாமாவின் சாமியாட்டம் சிறுகதை ஓரங்க நாடகமாக நடித்துக் காட்டப்பட்டது அதுதான் நிகழ்வின் ஹைலைட் கூத்துப்பட்டறையில் பயின்ற வினோதினி அசுர அவதாரம் எடுத்தார் மெல்ல பக்கத்து வீட்டுக்காரியைப் பற்றி பேசும் அவர் மெல்ல அவள் வீட்டு பிரச்சனைக்குக்குள் நுழைகிறார் குடகூலி வாங்கும் பருத்த உடம்புக்காரியை கொஞ்சம் பகடியும் செய்கிறார் இதற்கு நடுவில் தன் வீட்டு வேலைகளும் கை ஓயாமல் செய்து கொண்டிருக்கிறார் அன்னலட்சுமிதான் கதைநாயகி அவள் புருஷன் குடிகாரன் பெயர் வேங்கபுலி பெரிய வீரன்லாம் இல்லை உதார் பார்ட்டி ரெண்டு பொட்டை புள்ளைங்க இந்த கதையை வினோதினி நேட்டிவிட்டி கொஞ்சமும் குறையாமல் உடல் மொழியின் இயல்பு மாறாமல் செய்து காட்டினார் நடித்து என்ற வார்த்தையை நான் உபயோகிக்க விரும்பவில்லை கடைசியில் அன்னலட்சுமி ஓங்காரமாக உச்சபட்ச ஒலி எழுப்பி சாமியாடும் காட்சியை அவர் கண்முன் நிறுத்தியபோது கூட்டத்தினர் நிமிடங்களுக்கு விடாமல் கைதட்டினார்கள் ஞாநி சார் இது போன்ற நிகழ்வுகளை அடிக்கடி நடத்துங்கள் நொடிக்கொரு முறை சுறா விளம்பரம் படம் பப்படம் ஆகிவிட்டாலும் கழக வாரிசின் படம் இல்லையா வெட்கம் கெட்டத்தனமாய் இருகிறது சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் பெருமையுடன் வழங்கும் என்று வேறு போட்டுக் கொள்கிறார்கள் ஒரு குப்பையை பெருமையுடன் வழங்க இவர்களால் மட்டுமே முடியும் நிற்க விஜய்க்கு பேசின சம்பளத்தில் கணிசமாக வெட்டு விழுந்து விட்டது பெப்பே காட்டி விட்டார்களாம் அடுத்து சிங்கம் தில்லாலங்கடி என்று வரிசையாக சன் பிக்சர்ஸ் படங்கள் வரவிருக்கிறது கழகத்தின் வாரிசுகள் சினிமாவை சுத்தமாக அழிக்க ஆரம்பித்து விட்டார்கள் அந்த குடும்பத்தை தவிர வேறு யாரும் சினிமாவே எடுக்க முடியாத நிலை வந்தே விட்டது வாழ்க வளர்க கலைஞர் டிவியிலும் பெண்சிங்கத்தின் தொல்லை தாங்க முடியவில்லை இவர்களை வன்கொடுமை சட்டத்தில் உள்ளே தள்ளினால் என்ன சென்ற வாரம் வள்ளுவர் கோட்டத்தை சுற்றி போலிஸ் மயம் தலைவர் மீண்டும் எத்தனைவாது முறை பெண்சிங்கம் படம் பார்க்க வந்திருக்கிறார் இந்த வருடம் தமிழக அரசின் சிறந்த படம் அதுதான் போலிருக்கிறது சமீபத்தில் டெல்லிக்கு பெரியார் மையத்தை தலைவர் திறந்து வைத்தார் மணிக்கு விழா இவர் ஆறு மணிக்குத்தான் வந்திருக்கிறார் காரணம் ராகுகாலமாம் பகுத்தறிவு சூரியன் வெங்காயம் மரம் தாவும் வேலையில் மீண்டும் மரம்வெட்டித்தலைவர் புத்திரனுக்கு பதவி நீட்டிப்பு வேண்டுமே உப்பே சேர்த்துக்க மாட்டாங்க போலிருக்கு ஒரு கோமாளி முகமூடியும் குல்லாவும் வாங்கி மாட்டிக்கங்கப்பா என்ன ஒரு ஹஸ்கி வாய்ஸ் கொஞ்சம் ஆண்மை கலந்த பெண் குரல் ஹலோ எஃப்ம்மில் தீபா வெங்கட் காலை சும்மா என்றொரு நிகழ்ச்சி வித்தியாசமான கான்செப்ட்களில் கலக்குகிறார் தீபா மனதிற்கு நெருக்கமாக உரையாடுகிறார் எனக்கு ஒரு முறை வாய்ப்பு கிடைத்தது சொல்லாமல் விட்டு விட்டேன் எதை என்று கேட்காதீர்கள் நல்ல டான்சரும் பாடகியும் கூட தீபாவின் பரம ரசிகனாகி விட்டேன் ஒரு முறை நேரில் பார்த்து ஆட்டோகிராப் வாங்கணும் அடுத்த விளம்பரத்துக்கு மாடலாக்கி விட்டால் கொஞ்சம் நேரிலும் ஜொள்ளலாம் சுஜாதா விருதுகளில் சாருவின் பேச்சு கொஞ்சம் ஓவர்தான் அநியாயத்துக்கு மனுஷ்யபுத்திரனுக்கு சொம்படிக்கிறார் சாரு என்னமோ உயிர்மைதான் சுஜாதாவை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது என்கிற ரேஞ்சில் இருந்தது அவரது பேச்சு படித்ததை அப்படியே இணையத்திலேற்றும் ஒருவருக்கு சிறந்த இணையத்திற்கான விருது கிடைத்திருக்கிறது அப்படி ஒன்றும் செம்மையான விமர்சனமும் அதில் இல்லை என்று எனக்கு பட்டது மாற்று கருத்து இருக்கலாம் பேராசிரியர் ஞானசம்பந்தனின் பேச்சில் கண்ணில் நீரே வந்து விட்டது சிரித்து சிரித்து ஒரிஜினல் சுஜாதாவின் பேச்சு எளிமையாக இருந்தது நெகிழ்ச்சியாக வும் கூட சுஜாதா என்கிற மந்திரம் எவ்வளவு வலிமை என்பதற்கு வந்திருந்த கூட்டமே சாட்சி அன்று இரவு அவர் நிச்சயம் உறங்கியிருக்க மாட்டார் என்று நினைக்கிறேன் கொஞ்சம் ஜால்ரா சத்தங்களை தவிர நல்லதொரு நிகழ்வு ஆனால் அங்கு போனதற்கு இன்னும் ஒரு காரணமும் உண்டு வேண்டாம் சில ரசனைகள் ரகசியமானவை அட்சயத்ருதியை அன்று தங்கம் வாங்கினால்தான் குடும்பமே விளங்கும் என்ற ரேஞ்சுக்கு விளம்பரங்கள் தூள் பறத்துகின்றன சமீபத்தில் நான் எடுத்த ஒரு விளம்பரமும் உள்ளடக்கி படத்தை காண்க நகை கடைகாரர்கள்தான் விளங்குவார்கள் கேதான் தேசாய் வீட்டில் டன் கணக்கில் தங்கம் பிடிபட்டதே எந்த அட்சய த்ருதியையன்று தங்கம் வாங்க ஆரம்பித்திருப்பார் திகாரில் மனு போட்டுத்தான் கேட்க வேண்டும் எனக்கு பிடித்த ஊர் பாண்டிச்சேரிதான் என்று ஒரு நண்பர் சொன்னார் அட காரைக் காலும் பிடிக்கும் சார் ஆனால் உண்மையில் எனக்கு மிகவும் பிடித்த ஊர் தஞ்சாவூர்தான் வேண்டுமென்றால் பாண்டியை மிகவும் குடித்த ஊர் என்று வைத்துக் கொள்ளலாம் டிஸ்கி கவுஜை சில கேள்விகளுக்கான பதில்களில் ஒளிந்திருக்கும் கேள்விகளுக்கு ஏனோ பதிலே கிடைப்பதில்லை மணிஜி ஏனோ பதிலே கிடைக்காத கேள்விகளுக்குள் ஒளிந்திருக்கும் பதில்களுக்கு சில பதில்களுக்கான கேள்விகள் கை சுளுக்கிக் கொண்டது அப்புறம் வரேன் சங்கர் லேகா செய்வது விமர்சனம் அல்ல அறிமுகம் என்பது என் எண்ணம் வாசிப்பு அனுபவம் என்பதை உணர்வு சார்ந்த நிலை தாண்டி விவரிக்க முடியாமல் திண்டாடும் என் பார்வையில் அது தகுதியான விருதே சங்கர் இங்க ஒருத்தரு விமர்சனம் பண்றேன்னு சொல்லிட்டு புத்தகத்தை விட பெருசா ஒண்ணு எழுதியிருக்காரு படிச்சீங்களா வணக்கம் நண்பரே இதென்ன மானிட்டர் பக்கங்களின் நீட்சியா அல்லது அதன் வேறு படிமமா என்பதை சற்று தயை கூர்ந்து விளக்கவும் மேலும் பெரியார் மையம் என்று கூறிப்பிட்டுள்ளீர் அதை கலைஞர் தொலைக்காட்சியில் மய்யம் என்று விளித்ததாக கண்டேன் இரண்டும் சரியே என்கிறது இலக்கியவாதிகளின் தரப்பு அட்சயத் திரிதியை அன்று தங்கம் வாங்குவது இப்போது அவுட் ஆஃப் பேஸனாகிவிட்டதாம் ஒன்லி பிளாட்டினம்தானாம் வெள்ளைக் கலர் ஜிங்குச்சா உங்களுக்கு மட்டும் புரியறமாதிரி ஒரு சமன்பாடு சொல்கிறேன் தீபாவெங்கட் விஜயசாந்தி அது உமாவா வாசிப்பு அனுபவம் என்பதை உணர்வு சார்ந்த நிலை தாண்டி விவரிக்க முடியாமல் இவ்வரிகளுக்கு எங்கேனும் கோனார் நோட்ஸ் கிடைக்குமா மறத்தமிழன் மணிஜி ஜு வி படித்த திருப்தி நல்ல விளாசல் சங்கர் ராஜு கோனார் பாவம் விட்டிடுங்க மணிஜி சொல்லுவாரு கேட்டுக்குங்க மணிஜி ராஜீ என்கிற டக்ளஸ் உனக்கு தெரியாததா மணிஜி மறுபடியும் ராஜீ எலேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் மணிஜி பாலா சார் அது உம்மா மணிஜி என் சுந்தரி என்று சொன்னால் புரியுமா ராதாகிருஷ்ணன் சென்னை வெயிலை விட செம சூடா இருக்கே ம்ம்ம் ஆனால் அங்கு போனதற்கு இன்னும் ஒரு காரணமும் உண்டு வேண்டாம் சில ரசனைகள் ரகசியமானவை எனக்குத் தெரியும் அந்த காரணம் நேரில் சந்தித்த போது பல முறை அன்று உங்களை அறியாமல் சொன்னீர்கள் இரும்புத்திரை அந்த விழாவிற்கு போனதின் நான் ரகசியம் சொல்லட்டுமா நானும் கொஞ்சம் பேசட்டுமா நேசமித்ரன் ஏனோ பதிலே கிடைக்காத கேள்விகளுக்குள் ஒளிந்திருக்கும் பதில்களுக்கு சில பதில்களுக்கான கேள்விகள் அண்ணே இடுகை சைட் டிஷ் காரம் அங்கங்கே சின்ன வெங்காயம் அபி அப்பா என்ன ஒரு ஹஸ்கி வாய்ஸ் கொஞ்சம் ஆண்மை கலந்த பெண் குரல் ஹலோ எஃப்ம்மில் தீபா வெங்கட் காலை சும்மா என்றொரு நிகழ்ச்சி வித்தியாசமான கான்செப்ட்களில் கலக்குகிறார் தீபா மனதிற்கு நெருக்கமாக உரையாடுகிறார் எனக்கு ஒரு முறை வாய்ப்பு கிடைத்தது சொல்லாமல் விட்டு விட்டேன் எதை என்று கேட்காதீர்கள் நல்ல டான்சரும் பாடகியும் கூட தீபாவின் பரம ரசிகனாகி விட்டேன் ஒரு முறை நேரில் பார்த்து ஆட்டோகிராப் வாங்கணும் அடுத்த விளம்பரத்துக்கு மாடலாக்கி விட்டால் கொஞ்சம் நேரிலும் ஜொள்ளலாம் வேண்டாம் மணிஜி விட்டுடுங்க வலிக்குது அழுதுடுவேன் இது என் ஏரியா உள்ள வராதீங்க ஆனால் உண்மையில் எனக்கு மிகவும் பிடித்த ஊர் தஞ்சாவூர்தான் நம்ம ஊரு ஊருதான் இப்படிக்கு தஞ்சாவூர் மாவட்டத்துக்காரன் ஒரு குப்பையை பெருமையுடன் வழங்க இவர்களால் மட்டுமே முடியும் வால்பையன் மரம் தாவும் வேலையில் மீண்டும் மரம்வெட்டித்தலைவர் புத்திரனுக்கு பதவி நீட்டிப்பு வேண்டுமே உப்பே சேர்த்துக்க மாட்டாங்க போலிருக்கு ஒரு கோமாளி முகமூடியும் குல்லாவும் வாங்கி மாட்டிக்கங்கப்பா கொஞ்சம் கூட வெக்கமில்லாம இந்த அரசியல்வாதிங்க இருக்குறாங்களே வீட்ல பொண்டாட்டிங்கெல்லாம் மதிப்பாங்களா இவங்கள பா ராஜாராம் கோவில் திருவிழாவிற்கு டொனேசன் வாங்க வந்தேன் கோபமா இருக்கீங்க போல டைரக்டர் நான் கொஞ்சம் பேசிக்கிரட்டுமா ன்னு உமா கேட்பது போல் இருக்கு மணிஜி புகைப் படத்தில் விடுங்க ஸ்வாமி பேசட்டும் மனசில் எவ்வளவு இருக்கோ உண்மைத்தமிழன் அண்ணே உங்களுடைய பொங்கித் தீர்த்தலுக்கு என்னுடைய ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன் நீங்க விளம்பரப் படம் எடுப்பீங்கன்னு தெரியும் அதுக்காக போட்டோவை போட்டு ஆதாரத்தை காட்டணுமா சங்கர் மணிஜி நாம் ஏன் அங்க போனோம்னு வெளியிட்டிருராதீங்க போட்டி ஜாஸ்தியாயிரும் அகநாழிகை சில ரசனைகள் ரகசியமானவை மணிஜி என்னோடு போட்டியிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன் அட்சயத்ருதியை அன்று தங்கம் வாங்கினால்தான் குடும்பமே விளங்கும் என்ற ரேஞ்சுக்கு விளம்பரங்கள் தூள் பறத்துகின்றன சமீபத்தில் நான் எடுத்த ஒரு விளம்பரமும் உள்ளடக்கி படத்தை காண்க நகை கடைகாரர்கள்தான் விளங்குவார்கள் கேதான் தேசாய் வீட்டில் டன் கணக்கில் தங்கம் பிடிபட்டதே எந்த அட்சய த்ருதியையன்று தங்கம் வாங்க ஆரம்பித்திருப்பார் திகாரில் மனு போட்டுத்தான் கேட்க வேண்டும் இன்னும் கொஞ்சம் சத்தமா சொல்லனும் நல்ல விமர்சனம் என்ன சொன்னேன் இந்த பொண்ணு இவ்வளவு ஃபீல் பண்ணுது ஏம்பா அது என்னவெனா பில் பண்ணிட்டு போவட்டும் இந்த மாதிரி ஏதாவது சொல்லறச்சே என்னையும் கூப்பிடுப்பா வந்து பார்க்கின்றேன் பத்மா அந்த புகைபடத்தில நீங்களா மணி ஜி தீபா வெங்கட்டை சொல்றீங்களே ராணி முகர்ஜி வாய்ஸ் எப்பிடி செம இல்ல சில கேள்விகளுக்கான பதில்களில் ஒளிந்திருக்கும் கேள்விகளுக்கு ஏனோ பதிலே கிடைப்பதில்லை சரி சரி சரியே சூப்பரா எழுதி இருக்கீங்க பாராட்டுக்கள் என்ன சொன்னேன் இந்த பொண்ணு இவ்வளவு ஃபீல் பண்ணுது எங்களுக்கு தெரியாதா என்ன ஆனால் அங்கு போனதற்கு இன்னும் ஒரு காரணமும் உண்டு வேண்டாம் சில ரசனைகள் ரகசியமானவை அவங்க யாரு வழக்கம் போல எல்லாம் சுவாரசியம் மணிக்கு விழா இவர் ஆறு மணிக்குத்தான் வந்திருக்கிறார் காரணம் ராகுகாலமாம் பகுத்தறிவு சூரியன் வெங்காயம் சும்மா இந்தப்பத்திரிகைக்காரங்க மாதிரி நேர்ல பாத்தமாதிரியே பேசக்கூடாது என்ன தல கலைஞர் இல்லாத செய்தியே வராதுபோல இருக்கு உங்க பதிவு எனது வலைத்தளம் மாற்றப்பட்டு உள்ளது நேரம் இருப்பின் வந்துசெல்லவும் மணிஜி வித்யா தென்னமரக்குடி எண்ணெய் அனுப்பவா சங்கர் நீங்க சொன்னால் சரியாகத்தான் இருக்கும் லாம் டக்ளஸ் அடி பின்னி விட்ருவேன் பாலா சார் நிச்சயம் உமா இல்லை ததபா மோகன் உலக்ஸ் நன்றி நான் சொன்னது எப்ப நன்றி மறத்தமிழன் நன்றி டிவிஆர் சார் நன்றி அரவிந்த் நன்றி நேசமித்ரா அபி அப்பா இது அநியாயம் அடுத்த வாட்டி தீபா கிட்டயே கேட்றலாமா வாங்க அஹமத் வால் நன்றி பாரா சீக்கிரம் முகம் காட்டு நன்றி சித்ரா உத அண்ணே ஒரு விளம்பரம்தான் வாசு டீலா நோ டீலா நன்றி மலர் ஜாக்கி அடுத்தவாட்டி கண்டிப்பா ஆதி நன்றி வாங்க பத்மாஜீ காவேரி அது ஒரு பெரிய ரகசியம் இல்லை ததபா கேபிள் அது எல்லாருக்கும் புடிக்கும் செந்தில் வாங்க நன்றி ரொமியோ நன்றி உங்க பிளாக் படிக்கிறேனே எறும்பு ஆனால் அங்கு போனதற்கு இன்னும் ஒரு காரணமும் உண்டு வேண்டாம் சில ரசனைகள் ரகசியமானவை வீட்டில் உள்ள தமிழச்சிக்கு தெரிஞ்சா பிரச்சினை ஆயிடும் நான் உங்க மனைவிய சொன்னேன் முதல் பத்தி அருமையாக இருந்தது மணி படித்ததை அப்படியே இணையத்திலேற்றும் ஒருவருக்கு சிறந்த இணையத்திற்கான விருது கிடைத்திருக்கிறது அப்படி ஒன்றும் செம்மையான விமர்சனமும் அதில் இல்லை என்று எனக்கு பட்டது படித்த புத்தகம் சுவாரஸ்யமாக இருப்பின் அதை லேகா நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள் விமர்சனமாக அவர் ஏழுதுவதாக எனக்குத் தெரியவில்லை தீவிர வாசகியின் பகிர்வாகத் தான் எனக்குப் படுகிறது நிறைய பேர் எழுதி பாதியில் விட்டுவிடுகிறார்கள் அவருடைய தொடர் முயற்சிகு கிடைத்த நல்ல விருதாகத்தான் எனக்குப் படுகிறது காஞ்சி முரளி விளம்பரக்காரன் தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு நானும் வடை பெறுகிறேன் கழிவிறக்கம் மானிட்டர் பக்கங்கள் முகம் தெரியாத என் காதலா திருப்பள்ளியெழுச்சி ஜெயலலிதா வருகை மசால்வடையும் ஒரு காதல் கதையும் மெழுகு நதி பேசிக் கொண்டிருக்கிறார்கள் அன்புள்ள அம்மா கவிதைப்போட்டி முடிவுகள் கதை சொல்லிகள் கூடையில் என்ன பூ குஷ்பூ சத்யா வசு மற்றும் நான் நானும் கொஞ்சம் பேசுகிறேன் கை அரிக்குதே என்ன பண்றது ராஜாதீ ராஜ யாரங்கே கொஞ்சம் ராவா கருநாகம் தண்டோரா விருதுகள் பகிர்வு மில்லி ஊத்தி கொஞ்சமா தண்ணி கலந்து அஞ்சலி அனுபவம் அஞ்சலி கண்ணதாசன் அஞ்சலி கும்பகோணம் குழந்தைகளுக்கு அப்படித்தான் அப்பளம் துப்பாக்கி பாப்பாத்தி அம்மா சும்மா மொக்கை அரசியல் அரசியல் எளக்கியம் அரசியல் நகைச்சுவை அவள் இளம் மனைவி அழகு கதிர் ரம்யா அப்துல்லா ராமலட்சுமி தொடர் அழைப்பு அழைப்பு மழை அறிமுகம் அனர்த்தம் அனுபவக்கதைகள் மீள்பதிவு அனுபவக்கதைகள் அனுபவக்கதைகள் அனுபவக்கதைகள் அனுபவக்கதைகள் அனுபவக்கதைகள் அனுபவக்கதைகள் அனுபவக்கதைகள் அனுபவக்கதைகள் அனுபவக்கதைகள் அனுபவக்கதைகள் அனுபவக்கதைகள் அனுபவம் அனுபவம் நகைச்சுவை அனுபவம் நந்தலாலா பகிர்வு அனுபவம் பொது அன்பு அத்தை அரசியல் ஆற்காட்டார் பேட்டி இடுகை இடர்கை படர்கை இட்லி குஷ்பு நப்பாசை இனிமை உடை உயிரோடை சிறுகதை எந்திரன் எளக்கியம் எளக்கியம் எளக்கியம் கவுஜை அரசியல் வாசனை கற்பூரம் கற்பு களவு ஒப்பாரி ஒப்பாரி அழுகாச்சி ஒரு தரம் ரெண்டு தரம் மூணு தரம் ஒரு வாக்காளனின் வாக்குமூலம் ஒன்று இரண்டு பெண்டு கடன் நகைச்சுவை கண்ணாடி முன்னாடி பின்னாடி கவிதை கவிதை காட்சி கவிதையாமில்லே கழுதை தவிடு புண்ணாக்கு காந்தி அஞ்சலி கிளி அனுபவம் லாரி கு பு ட்டி கதை குறும்படம் ஸ்கிரிப்ட் குற்றாலம் பயணம் கூட்டாஞ்சோறு கூட்டாஞ்சோறு கையா காதா கொழுப்பு அரசியல் சங்கு பால் டண்டனக்கா சனி மணி பிணி சாத்தான் சாரு பகிர்வு சாரு சந்திப்பு சிலை விலை கலை சிவன் சிறுகதை சினிமா அனுபவங்கள் சினிமா பொது சினிமா விமர்சனம் சுகந்தம் சும்மா கொஞ்சம் சுயசொறிதல் எ ள கியம் சுயதம்பட்டம் மொக்கை செம்மொழி மாங்கனி கொடநாடு விருதகிரி செருப்படி முதல் ஜேப்படி வரை சேஷூ நினைவுகள் அஞ்சலி சைக்கிள் சொற்சித்திரம் புனைவு வாய்தா சிவசம்போ சோகம் டமால் டுமீல் மொக்கை டயானா அஞ்சலி தகவல்கள் தண்டோரா சங்கவி எறும்பு பலாப்பட்டறை தமிழா தமிழா தற்பெருமை விளம்பரம் தனிமை தாய்லாந்து பயணம் அனுபவம் திமிரு கொழுப்பு நகைச்சுவை தீர்ப்புகள் வள்ளுவர் உலகம் துகில் துப்பாக்கி பாப்பாத்தி தேர்தல் திருமா ஈழம் தொடர் இடர் சங்கிலி நகச்சுவை புனைவு நகைச்சுவை நகைச்சுவை பதிவர் கலைஞர் நகைச்சுவை புனைவு நடை நன்றி ஒப்புதல் விளக்கம் நாட்டுநடப்பு நாட்டுநடப்பு அரசியல் நாட்டுநடப்பு புனைவு நாய் குருவி நான் நிகழ்வு புனைவு நிகழ்வு விபத்து நிலா நீ பகிர்வு வேண்டுகோள் பட்டு பாரம்பரியம் விளம்பரக்காரன் பதிவர் குழுமம் பதிவர் கூடல் நண்பர்கள் வட்டம் பதிவர் சந்திப்பு பா ரா பகிர்வு பார்வை சார்லி பாவனை பிரஷர் அனுபவம் பீரு ரெமோ கிஸ்ரா புத்தகம் சாரு பகிர்வு புனைவு புனைவு நகைச்சுவை புனைவு அனர்த்தம் புனைவு அனுபவகதை புனைவு நகைச்சுவை புனைவு மொக்கை பைத்தியக்காரன் அனுஜன்யா ஆதி மொக்கை பொது பொய்யாண்டி நையாண்டி மந்திரப்புன்னகை மனசு உரையாடல் சிறுகதை போட்டிக்காக மானிட்டர் மானிட்டர் வாசிப்பு அனுபவம் மீள் டெஸ்டிங் முகில் மொக்கை மொக்கை ஊக்கை அல்லக்கை மொக்கை எளக்கியம் மொக்கை மகாமொக்கை ரண்டி ஜர்கண்டி ஏமூண்டி ராகம் ராகவன் பகிர்வு ராமதாசு ரவுசு புனைவு ரீமா ரீமிக்ஸ் ரீமிக்ஸ் ஒப்பாரி ரீமேக் மொக்கை வசந்தம் வண்டி வலைப் பதிவர் நல வாரியம் வலைப்பூ வாசிப்பு விபரீதம் விகடன் விமர்சனம் விமர்சனம் விளம்பரம் பகிர்வு விளம்பரம் சுயதம்பட்டம் தற்பெருமை பீற்றிக்கொள்ளுதல் வீண்வம்பு வெட்டிவேலை நாட்டுநடப்பு ஜ்யோவ்ராம் அனுஜன்யா வாசு பா ரா உண்மத்தமிழன் கேபிள் ஸ்மைல் குறும்படம்
எழுத்தாளர் சிறப்புப் பார்வை நேர்காணல் சாதனையாளர் நலம்வாழ சிறுகதை அன்புள்ள சிநேகிதியே முன்னோடி பயணம் சின்னக்கதை சமயம் சினிமா சினிமா இளந்தென்றல் கதிரவனை கேளுங்கள் ஹரிமொழி நிகழ்வுகள் மேலோர் வாழ்வில் மேலும் ஆசிரியர் பக்கம் சிறப்புப் பார்வை மாயாபஜார் நூல் அறிமுகம் இலக்கியம் முன்னோடி அன்புள்ள சிநேகிதியே கலி காலம் புழக்கடைப்பக்கம் குறுக்கெழுத்துப்புதிர் வார்த்தை சிறகினிலே சிறுகதை தமிழக அரசியல் சமயம் கவிதைப்பந்தல் பொது சினிமா சினிமா எழுத்தாளர் இளந்தென்றல் நிகழ்வுகள் நேர்காணல் வாசகர் கடிதம் ஜோக்ஸ் இலக்கியம் நீர் காட்டில் ஓடி ஒளிந்தீர் பெரியண்ணன் சந்திரசேகரன் செப்டம்பர் சென்ற கட்டுரையில் கிட்கிந்தையில் சுக்கிரீவன் சீதையின் நகைகளைக் காட்டவும் இராமன் வழியில் செல்லும் பெண்களை வேற்றோர் விலக்கி வற்புறுத்தினால் அதைப் பார்க்கும் ஆடவர் தமக்குப் புண்பட்டாலும் கடுமையாகத் தாக்கி உயிரையே இழப்பார்கள் நானோ என்னையே நம்பியிருந்த சீதையின் துயரைப் போக்காமல் இருக்கிறேனே என்று புலம்பியதைக் கண்டோம் அது பெண் சீண்டலைத் தடுக்க இராமன் கூறும் நெறியையும் காட்டுவதாகவும் உணர்ந்தோம் இப்போது நாம் பாலை பாடிய கடுங்கோ என்னும் சேரமாமன்னன் நற்றிணையில் நவிலும் ஒரு காட்சி இராமன் சொன்னதற்கு இலக்கியமாகத் திகழ்வதைக் காண்போம் தலைவியும் தலைவனும் காதலிக்கிறார்கள் ஆனால் தலைவியின் வீட்டார் அதை அறியாமல் அவளுக்கு வேறொருவனை மணமுடிக்க முயல்கிறார்கள் தன் கற்புக்குக் கேடு நேராமல் இருக்கத் தலைவி தலைவனுடன் போகி மணந்துகொள்ள இசைகிறாள் வீட்டாரிடம் சொல்லாமல் அவள் தோழி அவளைத் தலைவனுடன் அனுப்பி வைக்கிறாள் இருவரும் காட்டு வழியில் செல்கின்றார்கள் அந்தக் காட்டில் கோங்க மரங்கள் மிகுதி கோங்க மரத்துப் பூவின் இதழ்கள் சிறியனவாக இருக்கும் இதழ்கள் சில பூக்கள் போல் தடித்து இல்லாமல் சன்னமாக இருக்கும் குடை போல் வளைந்தும் இருக்கும் கோங்க மரம் பூக்கும் பருவம் அதனால் பூக்கள் உதிர்ந்து நிலத்தில் பரவிக் கிடக்கின்றன அந்தக் காட்சிதான் என்ன அழகு விடியும் வைகறைப் பொழுதில் வானத்தில் மின்னும் விண்மீன்கள் போல் பார்ப்போர் நினையத் தோன்றுகின்றன காடு அழகு கொள்கிறது அந்தக் காட்டு வழியும் அதனால் இனிய பூநாற்றம் நாறுகின்றது புல்இதழ்க் கோங்கின் மெல்லிதழ்க் குடைப்பூ வைகுறு மீனின் நினையத் தோன்றிப் புறவணி கொண்ட பூநாறு கடத்திடை நற்றிணை புல் சிறிய வைகு விடியல் மீனின் விண்மீன்போல் புறவு காடு அணி கொண்ட அழகு கொண்ட கடம் வழி அந்தக் காட்சியையும் நறிய பூநாற்றத்தையும் சுவைத்துக்கொண்டே செல்கிறார்கள் தலைவனும் தலைவியும் அந்தக் கடத்திலே காட்டுத் தடத்திலே அப்போது கிடின் என்ற ஓசை அந்தக் கிடின் என இடிக்கும் ஓசை மரங்கள் நடுவே கிளம்புகின்றது அது கனமான உலோகத்தால் ஆன பொருள்கள் மோதும் ஓசையல்லவா ஆம் காட்டு மறவர்கள் தம் தோள்களில் அணியும் வீரவளையங்களின் தொடிகள் ஓசை அவர்களில் சிலர் காட்டு வழியில் செல்வோரை மறித்துக் கொள்ளை யடிக்கும் தொழிலை மேற்கொண்டவர்கள் அவர்கள் கூர்மை பொருந்திய அம்பினால் கொல்லும் கொலைவினையைச் செய்பவர்கள் அந்தக் கொடியவர்கள் அஞ்சாது அவனைத் தாக்க முனைகின்றார்கள் தலைவனும் தலைவியைக் காக்கும் பொருட்டுக் கடும்போர் விளைத்து அவர்களை நீக்குகின்றான் பிறகு இருவரும் தங்கள் போக்கைத் தொடர்கிறார்கள் மீன்போல் மின்னும் பூக்களையும் பூமணத்தையும் இன்னும் சுவைத்துச் செல்கிறார்கள் பிறகு மீண்டும் வழியில் சலசலப்பு பின்னால் இருந்து கேட்கிறது அவர்கள் திரும்பிப் பார்க்கிறார்கள் தலைவி பின்னால் வரும் ஆட்களைப் பார்த்து இவனிடம் ஏதோ சொல்லத் தலை திருப்புகிறாள் அவனோ ஓடி ஒளிந்து விட்டான் என்னடா இது சற்று முன்தான் கொடிய மறவர் படையை எதிர்நின்று போராடி விலக்கிய அவன் ஏன் இப்படி ஓடி ஒளிய வேண்டும் அதுவும் இந்தக் கானகத்தின் நடுவே அதுவும் தன் தலைவியைக் கைவிட்டுவிட்டு அவளைக் காதலிக்கும் போது அவள் நலங்களைப் புனைந்துரைக்கையில் நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மெல்லியள் யாம் வீழ்பவள் திருக்குறள் காமத்துப்பால் நல் நீரை நல்ல குணமுடையாய் நின்னினும் உன்னை விடவும் மெல்லியள் மெல்லியவள் வீழ் விரும்பு காதலி யாம் வீழ்பவள் யாம் விரும்புபவள் என்று அனிச்சப்பூவிற்குப் பொறாமை ஊட்டுமாறு அவள் மென்மையைப் பாராட்டியவன் அந்த மெல்லிய பெண்ணை இப்படிக் காட்டுவழியில் விட்டு ஓடி ஒளிவதா ஆனால் அவளுக்கு அந்த ஐயம் தோன்றவில்லை அவள் சிரிக்கிறாள் ஏன் சலசலக்கப் பின்னால் வந்தவர்கள் எதிரிகள் அல்லர் அவர்கள் தன் வீட்டார் அவர்கள் இருவரையும் தேடிக் கொணர்ந்து தாங்களே மணமுடிக்கப் பின் வந்தவர்கள் அவர்கள் கையில் தலைவியின் சேமத்திற்கு குறைவில்லை அல்லவா எனவே மணமான பிறகு ஒருநாள் இல்வாழ்க்கையின் போது தலைவன் பொருளீட்ட அவளைப் பிரிய வேண்டியதைச் சொல்லும்போது தலைவி யின் தோழி அந்த ஓடி ஒளிந்த நிகழ்ச்சியை நினவு படுத்திச் சொல்கிறாள் அந்த நிகழ்ச்சி இன்று நடந்தது போல் எம் கண்ணில் சுழல்கின்றது என்று அன்றை அனைய ஆகி இன்றும் எம் கண்ணுள் போலச் சுழலும் மாதோ புல்இதழ்க் கோங்கின் மெல்லிதழ்க் குடைப்பூ வைகுறு மீனின் நினையத் தோன்றிப் புறவணி கொண்ட பூநாறு கடத்திடைக் கிடின்என இடிக்கும் கோல்தொடி மறவர் வடிநவில் அம்பின் வினையர் அஞ்சாது அமரிடை உறுதர நீக்கிநீர் எமரிடை உறுதர ஒளித்த காடே நற்றிணை பாலை பாடிய கடுங்கோ பாடியது அன்றை அனைய அன்றையவை போன்றன கண்ணுள் போல கண்ணுக்குள் நடப்பது போல வடி கூர்மை நவில் பொருந்து வினையைர் வினைசெய்வோர் அமர் போர் உறுதர இருக்க எமர் எம்மவர் எம் வீட்டார்
உலகில் வங்குரோத்தடைந்துள்ள நாடுகளின் பட்டியலில் இலைங்கை முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பதாக தெரிவிக்கிறார் சமகி ஜன பல வேகய நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு கொரோனாவைக் காரணம் காட்டுவது முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என தெரிவிக்கின்ற அவர் ஏற்றுமதி இறக்குமதி உட்பட அரசின் கொள்கை முரண்பாடுகளால் ஏற்பட்டுள்ள விளைவுகளே இன்றைய நிலையென நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்திருந்த போதிலும் வாக்குகளுடன் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெற்று ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது இஷாலினி தன்னைத் தானே எரியூட்டியதாக வாக்குமூலம் ரிசாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த மலையகத்தைச் சேர்ந்த இஷாலினி தன்னை அசாத் கைது செய்யப்பட்டது தெரியாது பிரதமர் தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பயங்கரவாத தடுப்புச ஜனாஸா எரிப்பு பத்து நாடுகளிலிருந்து இம்ரான் கானுக்கு கடிதம் இலங்கையில் தொடரும் கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தலையீட்டை நாடி உலகின் பத்து நாடுகளில் இயங்கி வ ஞானசாரவுக்கு சொகுசு வாகனம் பரிசு அபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் போராட்டத்திலிருந்து ஒதுங்கிக் கொண்ட பொது பல சேனாவின் ஞானசாரவுக்கு சொகுசு வாகனம் ஒன்று பரிசாகக் கிடைத் காரால் மோதி ஊழியர்களை மிரட்டிய நசீர் அஹமது ஏறாவூரில் தனது தொழிற்சாலையில் பணி புரிந்து மாதக் கணக்கில் ஊதியம் வழங்கப்படாததனால் போராட்டத்தில் குதித்த ஊழியர்களை நாடாளுமன்ற உறுப்பினர்
லண்டனில் வாழ்ந்து வரும் கலைஞை மேடை நாடகத்துறையில் வருடங்களாக இடைவிடாது தொடர்ந்து இயங்கிவரும் ஈழத்து பெண் கலைஞர் இவர் நடிகையாக மட்டுமல்லாது பிரான்ஸ் சில் வாழ்ந்து வரும் ஊடகவியலாளர் ஆய்வாளர் திரு திருமதி ஜஸ்ரின் தம்பதிகள் தங்கள் திருமணநாள்தன்னை இன்று பிள்ளைகள் உற்றார் பாடகி பிரதா கந்தப்பு அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார் இளம் பாடகி பிரதா கந்தப்பு சிறந்து வரும் ஓர் ஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார் இவர் இளம் தாளவாத்திக்கலைஞராக ஈழத்தின் அற்புதமான மூத்த பாடகி பார்வதி சிவபாதம் அம்மா உணர்வுகளை உயிரோட்டாமாய் எங்கள் பாடல்களில் தந்த குரலுக்கு எங்கள் யேர்மனி விற்றன் நகரில் வாழ்ந்துவரும் பாடகர் விஜயன் அவர்கள் இன்று பிறந்தநாள் தன்னை மணைவி குடும்பத்தினர் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் முல்லைத்தீவில் வாழ்ந்துவரும் திருமதி குமாரு யோகேஸ் புனிதா தம்பதியினர் இன்று தங்கள் திருமணநாளை மகன் நெடுஞ்செழியன் மகள் மகிழினி உற்றார் யேர்மனி லுடன் சயிற்றில் வாாழ்ந்து வரும் சக்கிவேல் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினர் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் கலையுலக சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞர் கலைப்பரிதி இன்று பிறந்தநாள் தன்னை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் கலையுலக நண்பர்களுடன் அனைவரும்வாழ்த்தும் இன் வாழ்த்துக்கள் தாளவாத்தியக்கலைஞர் சிவரூபன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து யேர்மனி ஓபகௌசன் நகரில் வாழ்ந்து வரும் வாழ்த்துக்கள் சிறுப்பிட்டிநெற் ஆனைக்கோட்டை எஸ் ரி எஸ் நிலாவரை இணையம் எஸ் ரி எஸ் ஈழம் தமிழ் இது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம் உங்கள் களம் இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள் எம்மவர் கலைசிறக்க வலுத்தரும் வளம் தரும் இணையம் இது இணைந்தால் பலம்தரும் எம்மவர் படைப்புக்கு பாலமாகும் எஸ் ரி எஸ் தமிழ் மாத அட்டவணை பல்துறை கலைஞைஆனந்தராணி பாலேந்திரா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி ஜஸ்ரின் தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்துக்கள் பாடகி பிரதா கந்தப்பு அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து இளம் கலைஞர் பாரத் சிவநேசனின்பிறந்தநாள் வாழ்த்து மூத்த பாடகி பார்வதி அவர்களுக்கு சர்வதேச விருது கிடைத்திருக்கிறது முகப்பு தமிழ் ஆலய நிகழ்வுகள் ஈழத்துக்கலைஞர்கள் எம்மைபற்றி கதைகள் கலைஞர்கள் சங்கமம் கலைநிகழ்வுகள் கவிதைகள் குறும்படங்கள் கௌரவிப்புகள் சந்திப்புவேளை நேர்காணல் பாடுவோர் பாடவரலாம் வாழ்த்துக்கள் வெளியீடுகள்
லங்காசிறி மனிதன் சினிமா விஜய் டிவி நடிகை மைனா நந்தினியின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா இதோ பாருங்க பிரபலங்கள் விளம்பரம் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமானவர் மைனா நந்தினி இதன்பின் கலக்கப்போவது யாரு கலக்கப்போவது யாரு சாபியன்க்ஸ் நிகழ்ச்சிகளில் நடுவராக பணிபுரிந்தார் நடிகை நந்தினி சின்னத்திரை சீரியல் நடிகர் யோகேஷ் என்பவரை காதலித்த திருமணம் செய்துகொண்டார் இவர்கள் இருவருக்கும் தற்போது அழகிய ஆண் குழந்தை உள்ளது இவர் தமிழில் வெளியான வம்சம் கேடி பில்லா கில்லாடி ரங்கா நம்ம வீட்டு பிள்ளை அரண்மனை உள்ளிட்ட பல படங்ககளில் நடித்துள்ளார் மேலும் தற்போது தனது கணவர் யோகேஷுடன் இணைந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார் நந்தினி இந்நிலையில் நடிகை நந்தினி தற்போது வசித்து வரும் அழகிய வீட்டின் புகைப்படங்கள் இணைந்து வெளியாகியுள்ளது இதோ அந்த புகைப்படங்கள் மேலும் பிரபலங்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும் உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு உள்நாட்டு அரசியல் சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள் தளத்தைப் பார்வையிட முக்கிய செய்திகள் பிரபலமானவை ஏனைய செய்திகள் கிரீன் டீயை தெரிந்து கூட இந்த நேரத்தில் குடித்து விடாதீங்க உயிருக்கே உலைவைக்கும் ஆபத்து இதுவரை சிம்புவின் மாநாடு படம் வசூல் இவ்வளவு கோடியா தெறிக்கவிடும் வசூல் சாதனை வங்கக் கடலில் உருவாகிறது புதிய புயல் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை லொஸ்லியாவா இது உடல் எடையை குறைத்து எலும்பும் தோலுமாக வெளியிட்ட புகைப்படம் தனுசுக்கு ஏழரை சனி முடிவு இனி நல்ல காலம் பிறந்தாச்சு யாருக்கெல்லாம் கோடி நன்மைகள் கிடைக்கும் உங்க முடி வேகமாக நீளமா வளரனுமா இந்த பொருட்களை பயன்படுத்தினாலே போதும் வெறும் வயிற்றில் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க விஷம் சாப்பிடுவதற்கு சமமாம் புதிய கார் வாங்கிய நடிகர் விஜய் சேதுபதி மாஸான புகைப்படம் வைரல் அமாவாசை நாளில் நிகழும் சூரிய கிரகணம் லட்சுமி தேவியினால் செல்வத்தை பெறப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா இன்றைய ராசிப்பலன் பயங்கரமாக மோதிக் கொண்ட பிரியங்கா தாமரை கடும் அதிர்ச்சியில் சக போட்டியாளர்கள் போட்டியாளர்களின் ஒயாத சண்டை சஞ்சீவ் கூறிய ஒற்றை வார்த்தை ஷாக்கில் பிக்பாஸ் வீடு கோலிக்கு பயம் காட்டும் பிசிசிஐ குஷியில் இருக்கும் சீனியர் வீரர் கிரிக்கெட் போட்டி கே எல் ராகுல் ரஷீத் கானுக்கு ஓராண்டு தடை நடப்பது என்ன ஏலத்தில் இவரை வாங்க சென்னை அணி பெரு முயற்சி எடுக்கும் காசி விஸ்வநாதன் உறுதி மகனை கவ்விக் கொண்டு சென்ற சிறுத்தை புலி அடுத்த நொடியே தாய் செய்த காரியம் நெஞ்சை கலங்கவைக்கும் சம்பவம்
வணக்கம் அக்டோபரின் வண்ண இதழ்கள் இரண்டுமே தக தகப்பதை ரசித்துக் கொண்டே இதை டைப்புகிறேன் லக்கி லூக் எப்போதும் போலவே கலரில் கலக்குகிறாரெனில் ஜேசன் ப்ரைஸ் ஒரு என்றுதான் சொல்ல வேண்டும் ரொம்பவே வித்தியாசமான கதைக் களம் மட்டுமன்றி கலரிங்கிலும் ஒரு அதகளம் காத்துள்ளது நமக்கு இந்த பாணி வர்ணங்களுக்கு முழு நியாயம் செய்திடும் பொருட்டு பிரத்யேகமானதொரு ல் சிகப்பு மை மட்டும் அவசியப்பட்டது இறக்குமதி செய்யப்பட இங்க் வகைகளை விற்பனை செய்யும் நிறுவனத்தைப் பிடித்து அந்தச் சிகப்பையும் வாங்கி விட்டதால் எழுதப்பட்ட விதி கண்களுக்கொரு விருந்தாக அமைந்திருப்பதை அடுத்த சில நாட்களில் பார்த்திடவிருக்கிறீர்கள் ஏற்கனவே ஸ்பைடரார் அச்சாகித் தயாராகி விட்டார் என்பதால் திங்கட்கிழமை பொழுதினில் தற்செயலாய் ஒரு ஹீரோ மாத்திரமே பிரிண்ட் காணக் காத்திருப்பார் வியாழன் மாலை பிரதிகள் நான்கு அட்டவணை உங்களைத் தேடித் புறப்படும் அன்றிரவே இங்கே நமது பதிவிலும் அட்டவணையினை வலையேற்றம் செய்து விடுவோம் என்பதால் சில வாரங்களாக நீடித்து வந்ததொரு சன்னமான சஸ்பென்ஸுக்கு மங்களம் பாடி விடும் வேளை நெருங்கிவிட்டது அட இதுக்குத் தான் இத்தனை பில்டப்பா ஒய் என்ற கேள்விகளும் எழலாம் அடடே ன் நாட்கள் ரம்யமாய் அமையும் போலுள்ளதே என்ற ஆச்சர்யக் குறிகளும் எழலாம் என்பதால் இரண்டையுமே சமாளிக்குமொரு ஜென் நிலை ஏதேனும் சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்குமா என்று தேடித் கொண்டிருக்கிறேன் பற்றாக்குறைக்கு அட்டவணையோடு அதன் பின்னணி பற்றிய வழக்கமான மெகா விளக்கவுரையினையும் இப்போதே மண்டைக்குள் தயாரித்துக் கொண்டு வருவதால் ஆபீஸிலும் வீட்டிலும் உள்ள மோட்டுவளைகள் எனது பிரியத்துக்கு உகந்த காட்சிப் பொருட்களாய் ஆகி வருகின்றன உள்ளூர் கருப்பசாமி கோவிலுக்கோ அருகிலுள்ள தர்காவுக்கோ கூட்டிப் போய் எனக்கு மந்திரித்துத் தாயத்துக் கட்ட யாரேனும் தயாராகும் முன்பாக அந்த உரையினை முடித்து விட்டால் தேவலை என்று தோன்றுகிறது சாவகாசமாய் ன் அட்டவணையினைக் கையில் ஏந்திப் புரட்டும் இந்த நொடியினில் இதன் உருவாக்கத்துக்கு ஏன்டாப்பா இத்தனை அலம்பல் என்ற கேள்வி என் முன்னே தலைகாட்டி நிற்கிறது அட்டவணையின் புது வரவுகளையோ சந்தா ன் கதைகளையே யூகிக்க வாய்ப்புகள் சொற்பம் என்பதைத் தாண்டி நமது ரெகுலர்களின் பட்டியலை நிச்சயமாய் டயபாலிக் அகில் கூடப் போட்டிருப்பான் ஆனால் இதற்கேன் இத்தனை சிந்தனை அவசியமானது அண்ணாச்சி என்று என்னை நானே இப்போது கேட்டுக் கொண்டால் ஹி ஹி என்று ஒருகாலத்தில் பளீர் வெள்ளையாயிருந்த முத்துப் பற்களை மாத்திரமே காட்சிப் பொருட்களாய் முன்னிறுத்த முடிகிறது ஆஞ்சநேயர் வாலின் நீளத்துக்குப் போட்டியாய் நமது நாயகர்களின் பட்டியல் இருக்கும் போது மடியினில் இடம் யாருக்கு மனதினில் இடம் யாருக்கு என்ற சிந்தனைகளே நேரத்தை முக்கியமாய் விழுங்கியுள்ளது புரிகிறது எது எப்படியோ வெள்ளிக்கிழமைகளில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்களின் ரிசல்ட்டையே அன்றைக்கே அறிய சாத்தியமாகிவிட்ட இந்நாட்களில் நமது வெள்ளி ரிலீசுக்கு உங்கள் மதிப்பெண்கள் என்னவாக இருக்குமோ என்பதுதான் எங்களது மில்லியன் டாலர் கேள்வி ஏதோ பார்த்து அனுசரித்துக் கரைசேர்த்து விடுங்க பாஸ் டெம்போ வாடகைலாம் ரொம்பவே கூடிப் போச்சு சார் நீங்க உரக்கப் புலம்புறீங்க நான் உள்ளாற புலம்புறேன் வேற்றுமை அவ்வளவே போதுமிந்த அட்டவணை ஆலாபனை என்பதால் நடப்புக்குத் திரும்புவோமே நமது வலைப்பக்கத்திற்கு இத்தாலியில் எத்தனை ரெகுலர் பார்வையாளர்கள் உள்ளனர் என்பதைக் கடந்த வாரம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது என்று போனெல்லி தம் ஹோம் பேஜில் நமது இதழ்களைப் பற்றிப் போட்டது ஒருபக்கமிருக்க அங்குள்ள டெக்ஸ் ரசிகர்கள் மட்டுமன்றி டைலன் டாக் ரசிகர் மன்றத்தினரும் சுறுசுறுப்பாகி விட்டனர் தங்கள் ஆதர்ஷ நாயகர் உள்ளார் என்ற ஒரே காரணத்துக்காக ஈரோட்டில் இத்தாலி இதழில் டை டா ரசிகர்கள் இதுவரை இதழ்கள் வாங்கி விட்டனர் டெக்ஸ் ரசிகர்களோ நமது பதிவிலுள்ள அட்டைப்படங்களைப் பார்த்து அவற்றை இணைத்தனுப்பி இதில் அதில் என்று ஆர்டர் செய்துவருகின்றனர் இது பற்றாதென பெல்ஜியத்தில் உள்ள ரோஜர் ரசிகர்கள் ல் நாம் வெளியிட்ட ரோஜர் கதைகள் உள்ளனவா என்ற கேள்வியோடு துவங்கி தற்போதைய வண்ண இதழ்கள் இரண்டிலும் தலா பிரதிகள் வாங்கியுள்ளனர் காமிக்ஸ் காதலுக்கும் சேகரிப்பு ஆர்வங்களுக்கும் மொழி ஒரு தடையே ஆகாது போலும் புரட்டிப் புரட்டிப் பார்ப்பதைத் தாண்டி வேறேதும் சாத்தியமில்லை என்றாலும் அந்த குட்டியான சந்தோஷத்திற்காகவே சிலபல ஆயிரங்களை செலவிடும் ஆர்வங்களை என்னவென்பது அங்கே ஆயிரங்கள் செலவிடும் ஆர்வலர்கள் ஒருபக்கமெனில் நான் அதற்குச் சிறிதும் சளைத்தவனல்லவே என்று தொடர்ச்சியாய் நிரூபித்து வருகிறார் நமது நண்பர் ஒருவர் அவரது பணியிடம் ஓமான் நாட்டினில் மஸ்கட் துவக்க நாட்கள் முதலாய்த் தீவிர வாசகர் முதலான நமது மறுவருகையினில் ஒரு நம்ப முடியாப் பங்கெடுத்து வருபவர் யெஸ் கடந்த ஆண்டுகளாய் ஒவ்வொரு மாதத்து இதழ்களிலும் பிரதிகள் வாங்கிடுகிறார் அதனில் செட் எல்லோருக்கும் போலவே ஏர் மெயிலில் பிரயாணிக்கும் இரண்டாவது செட்டோ ஒவ்வொரு மாதமும் சுமார் ரூபாய் செலவினில் கூரியரில் பறக்கின்றது மஸ்கட் நோக்கி ஆண்டொன்றுக்குத் தோராயமான கூரியர் செலவுக்கே ரூ செலவிடும் இந்தக் காமிக்ஸ் காதலை என்னவென்பது சமீபமாய் நமது முந்தைய கிட்டங்கியொன்று மராமத்தின் பொருட்டு காலி செய்யப்பட சிலபல சுவாரஸ்யமான முந்தைய இதழ்கள் கண்ணில்பட்டன அவற்றை இன்றைக்குப் பகலில் புரட்டிக் கொண்டிருந்த போது ஏகப்பட்ட மலரும் நினைவுகள் படையெடுத்தன சிங்கத்தின் சிறு வயதில் ஒரு பக்கம் ஓடினாலும் அங்கே குறிப்பிட்ட சில மைல்கல் இதழ்களைத் தாண்டி மற்றவையின் மீது பார்வைகளைச் செலுத்தப் பொறுமை இருப்பதில்லை ஜிகினாப் பூச்சில்லா சிலபல நாயகர்களின் கதைகளை பெரிதாய் நான் சிலாகித்ததில்லை அங்கும் எங்கும் வரும் நாட்களில் மாதத்தில் ஏதேனுமொரு வாகான வேளையினில் வெளிச்ச வட்டமறியா நாயகர்கள் இதழ்களை பற்றி இங்கே எழுதிடலாமென்று நினைத்தேன் என் கையில் சிக்கிய முதல் இதழ் முத்து காமிக்சின் ஆகாயக் கல்லறை செம குட்டியான பாக்கெட் சைசில் ரூ விலையில் ல் வெளியாகியிருக்கக் கூடிய இதழ் வெளியீடு நம்பர் என்பதைத் தாண்டி வேறெந்த அடையாளமும் இல்லையென்பதால் மங்கிவரும் எனது நினைவுகளை மட்டுமே நம்பி யூகம் செய்திருக்கிறேன் முத்து காமிக்சின் பொறுப்பு என் கைக்கு வந்த பிற்பாடு தயாரான இதழே என்பதால் நிச்சயம் ஐ இது தாண்டியிருக்காது பக்கங்கள் நியூஸ்பிரிண்ட்டில் அச்சின்றிப் பின்பக்கம் காலியாகக் காட்சி தருமொரு மெலிதான ராப்பர் காமிக்ஸ்டைம் வாசகர் கடிதம் என்று மருந்துக்கு கூட ஏதுமிலா அட்டை டு அட்டை கதை என்ற பாணி என சகலத்தையும் குறு குறுவென்று பார்வையிட்டேன் பக்கங்கள் வீதம் இரு முழுநீளக் கதைகள் உள்ளே இடம்பிடித்திருக்க அவையிரண்டுமே ஏஜெண்ட் ஜான் சில்வரின் ஆக்ஷன் சாகசங்கள் சரக்குகளை வளித்துத் துடைத்துக் கொண்டிருந்த நாட்களவை மாயாவி ஸ்பைடர் ஜானி நீரோ போன்ற வெயிட் பார்ட்டிக்களின் கதைகள் கிட்டத்தட்ட காலி என்றான நிலையில் கிடைத்த அடுத்தநிலை நாயகர்களின் கதைகளை பயன்படுத்தி வந்தோம் அவர்களுள் ஒருவர் தான் ஜான் சில்வர் என்று நம்மால் பெயர்மாற்றம் கண்ட பாவப்பட்ட மனுஷன் ஒரு பைலட் மேலதிகாரிகளின் குளறுபடியால் ஒரு சோதனையோட்டப் பணி சொதப்பலாய் முடிந்துபோக சுலபமான பலிகடாவாவது ஜான் சில்வர் தான் அவரது பைலட் லைசன்ஸ் ரத்தாகிப் போக எங்களுக்கு இந்தக் காரியத்தை முடித்துக் கொடு உனது லைசென்ஸை மீட்டுத் தருகிறோம் என்று சொல்லியே உளவுத் துறை அவரைக் கொண்டு காரியம் சாதிக்கிறது இதுதான் கதைக் களம் அழகான சித்திரங்களோடு விறுவிறுப்பாய்ப் பலகதைகள் என்ற தொகுப்பினில் வெளியாகியிருந்தது எனக்கு ரொம்பவே பிடித்ததொரு தொடருது சுவாரஸ்யமான இந்தத் தொடருக்கும் இந்த நாயகருக்கும் எங்களது நகரோடு ஏதோவொரு பூர்வ பந்தம் உண்டோ என்னவோ தெரியாது ஆனால் மனுஷன் எங்கள் ஊரில் மட்டும் பதிப்பகங்களின் கைகளில் உலா போயுள்ளார் விபரீத விளையாட்டு ரவுடிக் கும்பல் என்று கதைகளோடு களில் முத்து காமிக்ஸில் இவர் தலைகாட்டிய போது ஆசாமியின் பெயர் ஜான் ஹேவக் தானா ஜான் சில்வர் என்று பெயர் மாற்றியது பின்னாட்களில் அடியேன்தானா போன்ற கல்வெட்டில் பதிக்க வேண்டிய வரலாற்றுத் தகவல்கள் என்னிடமில்லை ஆனால் கதைப் பஞ்சமென்று போட்ட கதைகளையே மறுபதிப்பிட்டுக் கொண்டிருந்த நாட்களில் கூட இந்த நாயகரின் நினைவு அந்நாட்களது முத்து காமிக்ஸ் நிர்வாகத்தில் யாருக்குமே வந்திராது போனது ஏன் என்பது தான் புதிரே முத்து காமிக்ஸ் இவரைத் தமிழ் பேச வைத்ததெனில் செல்சன்ஸ் காமிக்ஸ் என்ற பெயரில் சிவகாசியிலிருந்து சிலகாலம் மட்டுமே வெளியானதொரு ஆங்கில காமிக்ஸிலும் இவர் தலைகாட்டினார் மூன்றாவதாய் ஜான் நடமாடியது மேத்தா காமிக்ஸ் என்ற இன்னொரு சிவகாசித் தயாரிப்பினில் நாம் லயன் காமிக்ஸ் துவங்கிய அதே தருணத்தில் அங்கே சென்று அடைக்கலமாகியிருந்த முல்லை தங்கராசன் பதிப்பகத் துறைக்குப் புதியவர்களை கொண்டு இந்த இதழினை ஆரம்பித்திருந்தார் நமது ஓவியர் டைப்செட்டிங் ஆட்கள் டெஸ்பாட்ச் பிரிவினர் என சகல ஆட்களையும் லவட்டிச் சென்றது மட்டுமன்றி டில்லியில் இருந்த ஏஜெண்ட் மூலமாக ஜான் ஹேவக் கதையின் உரிமைகளையும் தேற்றி இருந்தார் எனக்கு காதில் புகை வண்டி வண்டியாய் வெளியான நாட்களவை இதில் கொடுமை என்னவென்றால் மேத்தா நிறுவனத்தின் இளைய மகன் எனது பள்ளி நண்பர் இன்று வரைக்கும் தொடரும் ஆண்டு நட்பு எங்களது அவரோ அந்நேரம் கல்லூரியில் இருக்க சிவகாசியில் அவரது தந்தையும் மூத்த சகோதரரும் அச்சுக்கூடம் நடத்தி வந்தனர் அவர்களை எப்படியோ காமிக்ஸ் துறைக்குள் மு த இழுத்து வந்திட ஜான் ஹேவக் தனது மூன்றாம் சிவகாசி இன்னிங்சைத் தொடங்கியது இப்படித் தான் நமது ஏஜெண்ட்கள் தொடர்புகள் என சகலத்தையும் பயன்படுத்தி அதே ரூட் பிடித்து மேத்தா பிரதிகளையும் விற்பனை செய்திட மு த முயன்று ஆரம்பத்தில் அதனில் வெற்றியும் கண்டார் தான் ஆனால் ராணி காமிக்ஸ் எனும் புயல் மார்கெட்டில் சுழற்றியடித்த அந்த நாட்களில் எவ்வித ம் இல்லாது ஒரே தொடரின் நாயகரின் கதைகளை போட்டுக் கொண்டே போனதாலோ என்னவோ அந்த முயற்சி அதிக காலம் தொடர்ந்திடவில்லை சீக்கிரமே மூடுவிழா நடந்துவிடுமென்ற நிலை நெருங்கிய பொழுது மு த நமக்குத் தூது விட்டார் மீண்டும் தாய்க் கழகத்தில் ஐக்கியமாகிடும் ஆர்வத்தில் ஆனால் அந்நேரத்திற்குள் ஒரு மாதிரியாய் நமது லயன் காமிக்ஸ் காலூன்றியிருக்க நான் குறுக்கே படுத்து விட்டேன் இந்த இணைப்புப் படலத்துக்குத் தடையாக பணியாட்கள் வியாபாரத் தொடர்புகள் என சகலத்தையும் இங்கிருந்து கிளப்பிப் போயிருந்தாரென்ற அதிருப்தி எனது தந்தைக்கும் இருந்ததாலோ என்னவோ நான் வைத்த சக்கையை மீறி அவரும் எதுவும் செய்திடவில்லை கிடைத்த அடுத்த முதல் வாய்ப்பின் போது டில்லிக்குப் பயணமானவன் ஜான் ஹேவக்கின் உரிமைகளை வாங்குவதில் குறியாக இருந்தேன் அந்தக் கொள்முதலின் பலனே ஆகாயக் கல்லறை வாங்கி சில ஆண்டுகள் மேஜையினில் முடங்கியே கிடந்தன தான் இவை பிரான்க்கோ பெல்ஜிய படையெடுப்பின் காரணமாய் ஆனால் இன்னொருமுறை இந்த உரிமைகளை கோட்டை விட்டிடக் கூடாதென்ற வேகத்தில் பணம் முடங்கினாலும் பரவாயில்லை என்று தீர்மானித்தேன் பின்னாட்களில் பொறுப்பு என்னிடம் வந்தான வேளையில் ஜான் சில்வர் ரொம்பவே கைகொடுத்தார் என்பதை மறக்க இயலாது நாயகரே ஒரு லார்கோ வின்ச் ஜேம்ஸ் பாண்ட் ரேஞ்சுக்கு தடாலடி செய்பவரும் அல்லதான் பூப்போட்ட அண்டராயர்கள் இவருக்குப் பொருந்தாது ஆனால் கனகச்சிதமான சாகச வீரர் இவர் இவரை நினைக்கும் போதெல்லாம் ஆரம்ப நாட்களது சடுகுடுக்களும் ஞாபகத்துக்கு வருமென்பதால் எனக்கு இவர் மீது கொஞ்சம் பிரியம் ஜாஸ்தியே இன்னமும் வெளியிடாது நாம் வைத்திருக்கும் இவரது சாகசங்கள் இரண்டோ மூன்றோ உள்ளன வேளை பிறப்பின் அவற்றை வெளிச்சம் பார்க்க அனுமதிப்போமா அக்டோபர் இறுதியில் வெளியாகவுள்ள தொடரின் ஆல்பம் ஜாலி ஜாலி சேலம் விஜயராகவன் வாழ்த்துக்கள் பரணி அட்டவணை இந்த வார இறுதியில் வர இருப்பது ஜாலியோ ஜாலி அதே நேரம் கடந்த வாரம் எங்கள் நாட்டில் பெங்களூர் நடந்த கலவரத்தினால் இன்று வரை வாகன போக்குவரத்து சரி வர இல்லை கொரியர் சர்விஸ் சரிவர இயங்கவில்லை கடந்த வாரம் எனது வீட்டில் இருந்து கொரியரில் அனுப்பிய பார்சல் நாட்கள் கழித்துதான் கிடைத்தது எனவே இந்த மாத புத்தகம்கள் கைகளில் கிடைப்பதற்கு தாமதம் ஆகலாம் என்பதை பெங்களூர் நண்பர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ளவும் கவேரிய வேன நிங்களே வைச்சுகுங்க காமிக்ஸ் ஸ மட்டும் சரியான நேரத்துக்கு வர வழிவிடுங்க கர்நாடகா மக்களே பேக் ஐடி எனக்கு வாழ்த்த வயதில்லாத தால் வணக்குறேங்க மகேந்திரன் பரமசிவம் பேக் ஐடி பயம்முறுதாதிங்க கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச பொன்ராஜ் கால்வின் வாக்ஸ் யார் தெரியுமா சேலம் விஜயராகவன் ஜேசன் ஜேனட் சண்டை உடனடியாக ரசிக்க தக்கது மேலும் இத்தனை கொலைகள் செய்த பவுண்டேசன் ஆட்களை ஜேசன் ஏதும் செய்யாத மர்மம் என்ன என்பதும் சுவாரசியமான ஒன்றே இன்னமும் இந்த மே ப்ளவர் சுற்று நிறைய பாகங்கள் வரும் என்பது உறுதி நானும் வந்தேன் செந்தில் சத்யா செந்தில் மாதேஷ் ரொம்ப நாட்களாக ஆளையே கணோம் நலமா சேலம் விஜயராகவன் நலமா செந்தில் மாதேஷ் சார் நலம் நண்பர்களே நாடலும் அதுவே நன்றி நலம் நண்பர்களே நாடலும் அதுவே நன்றி அருமையான ஐந்தாமிடம் அப்பிடீன்னு போட்டுட்டுப் பாத்தா பரவால்லைங்கிற மாதிரிப் பத்தாமிடம் கம்பம் ஜெய்கணேஷ் நடு இரவு வணக்கம் செந்தில் சத்யா வணக்கம் ஆசிரியர் நண்பர்களே நள்ளிரவு கேள்வி மாடஸ்டிக்கு மடியிலா அல்லது மனதிலா இடம் சார் அட்டவணைக்கு முன்னே சின்னதாய் கோடிட்டு உறுதி செய்யுங்களேன் மாடஸ்டி வெங்கடேஸ்வரன் ராவணன் இனியன் மடியில்தான் நண்பரே காமிக்ஸால் நான் காமிக்ஸுக்காக நான் என்று வாழும் நமது எடிட்டர் நிச்சயமாக கைவிடமாட்டார் சேலம் விஜயராகவன் இளவரசிக்கு இடம் இல்லாத அட்டவணையை அன்பின் ஆசிரியர் ஒருநாளும் வெளியிடமாட்டார் இனியரே இடம் ஆ அல்லது ஆ என்பதே கேள்வி மாடஸ்டி வெங்கடேஸ்வரன் சேலம் இரவு கழுவாருக்கு வாயில் லட்டு கொடுங்க இந்த ஆண்டு லட்டுடன் நிச்சயமாக வருவேன் நண்பரே இந்த ஆண்டு லட்டுடன் நிச்சயம் வருவேன் நண்பரே ஏன் எங்கு எப்போது லட்டுடன் போகப்போகிறீர்கள் எனதெரிந்து கொள்ளலாமா சார் ரெகுலர் சந்தாவில் ஒன்றும் கழுகு மலைக் கோட்டை ஆக இரண்டு இடம் தான் இளவரசிக்கு அடுத்த ஆண்டு கிடைக்குமென தோன்றுகிறது ஒன்றே ஒன்று கூடினால் நன்றாக இருக்கும் தங்கள் ஆதரவிற்கு நன்றி நண்பரே சேலம் டெக்ஸ் ஜி பேக் ஐடி இன்னும் இளவரசியை நம்பினு கீர இன்னா தல ஜான் ஹேவக்கின் சாகசங்கள் இரண்டோ மூன்றோ உள்ளன வேளை பிறப்பின் அவற்றை வெளிச்சம் பார்க்க அனுமதிப்போமா நிச்சயமாக சாா் ஜேடர்பாளையம் சரவணகுமார் கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச பொன்ராஜ் ஐான் சில்வர் ஐ கல்லறையிலிருந்து துயில்ழெப்பி மீட்டு வாருங்கள் பரிதாபத்திற்க்குரிய ஐீவன் ஆக இருப்பாா் வேலை முடிந்தும் கூட இவருடைய லைசென்ஸை குடுக்க மாட்டாா்கள் உளவுத்துறையில் நீங்கள் குறிப்பிட்ட மாதிாி அவருடைய ஆக்ஷன் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று அப்படியே அந்த சில பல இதழ்கள் திருப்பூா் க்கு பாா்சல் அணுப்புங்கள் சாா் வணக்கம் சார் ஜான் சில்வர் கதைகளை வெளியிட தயங்க வேண்டாம் அவருடைய எல்லா கதைகளும் ஹிட் கதைகள் தான் இன்னும் அல்லது கதைகள் தான் பாக்கி உள்ளன என்பதை நம்ப முடியவில்லை மேத்தா காமிக்ஸில் நிறைய கதைகள் படித்ததாக ஞயாபகம் செந்தில் சத்யா மனித வேட்டை போன்ற சூப்பர் ஹிட் கொடுத்த ஜான் சில்வருக்கு கண்டிப்பாக இன்னொரு வாய்ப்பு தருவதில் தப்பில்லை பைலட் ஆக்குகிறேன் என்று சொல்லியே ஜான் சில்வரை எல்லா வேலைகளும் வாங்கி விட்டு கடைசியாக அவரை ஏமாற்றும் போது கஷ்டப்படுவது ஜான் சில்வர் மட்டுமல்ல நாமும்தான் சார் நான் ஜான்சில்வரை மறக்க வில்லலை தங்களது காமிக்ஸ் சில் நிறைய வெளிறு வந்த காரிக்கனுக்கே இடமில்லலை என்று கூறும் பொழுது மேத்தா காமிஸ் ல் வெளிவந்த அதுவும் முல்லை தங்கராசன் அவர்களால் வெளியிடபட்ட இவருக்கு எங்கே இடமிருக்கும் என்றுதான் நான் ஞாபகபடுத்தவில்லை எனது மனஸ்தாபம் ஜான் சில்வரோடு அல்லவே கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச பொன்ராஜ் அதுவும் ஆசிரியரை குறைகூற ிதை கருவியாக வைத்த அந்த கர்த்தாவுக்காக ாசிரியர் மனம் திறக்கிறார் முத்து காமிக்ஸ்ல் ஜான் சில்வர் விபரீத விளையாட்டு ரவுடிக்கும்பல் ஆகாயக்கல்லறை மரண ஒத்திகை இரத்தப்பாதை யுத்த வியாபாரி மனித வேட்டை கொலை வள்ளல் பட்டியல் உதவி கலீல் ஜி ஜான் சில்வர் இன் மிச்சம் உள்ள கதைகளையும் தைரியமாக வெளியிடலாம் சார் அப்படியே இல் வரவிருக்கும் கால்வின் வாக்ஸ் இன் முன் கதையினையும் வெளியிட்டால் பேறு பெற்றவனாவேன் கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச பொன்ராஜ் பேரைக்கேட்டா சும்மா அதிருதில்ல ல் கு வாய்ப்பு எப்படின்னு அதிகாலை வணக்கம் அந்த காலத்தில் சிறு வயதில் காமிஸ் வந்தவுடன் பைசா பைசா என சேர்த்து வைத்திருந்ததை கொடுத்து காமிக்ஸ் வாங்கி அதனை பாடப்புத்தகங்களுக்குள் வைத்துவீட்டுக்குத் தெரியாமல் படிக்கும் பொழுது அம்மாவிடம் மாட்டிக் கொண்டு அடிவாங்கியது ஞாபகம் வருகிறது சிறு வயதில் இருந்த ஆர்வம் இன்றும் எனக்கு குறையவில்லலை லார்கோ எப்படி தீடீர் பணக்காரர் ஆனாரோ அதே பொன்று தான் ஜானி நீரோ வும் ஆனார் நீரோவுக்கு ஏற்பட்ட இடஞ்சலைப் போன்றே லார்கோவிற்கும் ஆரம்பத்தில் தொந்தரவுகள் ஏற்பட்டன ஜானி ஆரம்ப காலத்தில்ல உளவுத்துறையில் பத்தோடு பதினனொன்றாக பணிபுரியும் காலத்தில் ஒரு பெரிய சமுதாய விரோதிகளை வளைத்து பிடிக்க முக்கியமானவர்களுடன் ஆலோசித்து சமூக விரோதிகள் ஒன்று கூடும் இடத்தில் மாறு வேடங்களில் அனைவரும் கண்காணித்து அவர்கள் ஒரு கட்டிடத்திற்குள் சென்று குழுமியவுடன் இவர்களும் உள்ளே நுழைவார்கள் ஆனால் சமூக விரோதிகள் அனைவரும் இவர்களுக்கு வலைவிரித்து கட்டிடத்தில் ஆங்காங்கே வெடிகளை வைத்துவிட்டு அவர்கள் அனைவரும் தப்பித்து வெளியேறி இருப்பார்கள் இந்நிகழ்வில் உளவுத்துறைக்கு பலத்த அடிவிழுந்து விடும் ஜானிதான் எதிரிகளுக்கு தகவல் கொடுத்தவர் என்று கருதுவார்கள் முடிவில் உண்மை தெரியவரும் அருமை சுவாரசியமாக உள்ளது நன்றி இக்கதையினை மறுபதிப்பு செய்ய ஆசிரியரை வலியுறுத்தலாம் இந்த கதையின் பெயர் ஜானி லண்டன் ஜானியை வில்லனாக கரனல் ஜாக்கப்பையே நம்ப வைத்த கரடுமுரடான வில்லனுடன் க்ளைமேக்ஸில் பனிமலையுச்சியில் மோதும் சூப்பரான க்ளைமேக்ஸ் இதே போல் ஜானி ஜப்பானும் கதையின் இறுதிவரை சாமுராய் வேடமிட்ட கொலைகாரன் யாரென தெரியாதவகையில் கதை நகரும் இன்னும் தங்க விரல் மர்மம் கொலைக்கரம் மைக்ரோ அலைவரிசை என நல்ல ஜானி கதைகள் நல்ல ஓவியங்களுடன் காத்து நிற்கின்றன மறுபதிப்பு காணவேண்டிய ஜானி கதைகள் இவை அனைத்தின் மீது ஆசிரியரின் கவனம் திரும்பட்டும் இக்கதையினை மறுபதிப்பு செய்ய ஆசிரியரை வலியுறுத்தலாம் கவலையே வேண்டாம் அத்தனை ஜானி கதைகளும் நிச்சயம் மறுபதிப்பாகிடும் பூப்போட்ட டிராயர்கள் ஏகமாய் ஸ்டாக் உள்ளன கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச பொன்ராஜ் ஆசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி அனைவருக்கும் முதலில் காலை வணக்கம் நன்றி கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச பொன்ராஜ் மேத்தா நிறுவனத்திற்கும் முத்து காமிக்ஸுக்கும் தொழில்முறை உறவும் கூட உண்டு அவர்களது முதல் அச்சு இயந்திரம் அந்நாட்களில் நம்மிடம் வாங்கப்பட்டதே சின்னதொரு நகரம்தான் என்பதால் எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம் சேலம் விஜயராகவன் வணக்கம் சார் வணக்கம் நட்பூஸ் வியாழன் மாலை பிரதிகள் நான்கு அட்டவணை உங்களைத் தேடித் புறப்படும் அன்றிரவே இங்கே நமது பதிவிலும் அட்டவணையினை வலையேற்றம் செய்து விடுவோம் இந்த வார்த்த கேக்க ஒரு வருசம் காத்திருந்தோம் வியாழன் இரவு வலைப்பதிவு அதிகம் எதிர்பார்க்கப்படும் பதிவாக இருக்க போகிறது நிறைய கள் அன்று உடைய போவது உறுதி மாடஸ்டி வெங்கடேஸ்வரன் சேலம் டெக்ஸ் நேற்று நீங்கள் கூறியபடியே வியாழனே அனுப்பப்படுகிறது சந்தா அறிவிப்பும் வெளியிடப்படுகிறது நல்ல எடிட்டரின் மனவோட்டத்தை தெரிந்து வைத்து இருக்கீங்க வெரிகுட் அப்படியே மாடஸ்டி விஷயத்திலும் நீங்கள் கணித்தது நடக்கட்டும் மறுபடியுமா எனக்கே ஞாபக மறதி வந்திடிச்சு ஷ்ப்பா அருமையான பதிவு அன்பு ஆசிரியரே ஜான் சில்வர் கதைகள் சிறிதும் போரடிக்காதவை இன்றும் நிச்சயம் வெற்றி பெறும் ஒரு வேண்டுகோள் ஒரே ஒரு முறையாவது அந்த பழைய லயன் போல பாக்கெட் சைஸில் முயன்று பாருங்களேன் ப்ளீஸ் மாடஸ்டி வெங்கடேஸ்வரன் பாட்சா சார் பொடி எழத்துக்கள் தற்போது கண்ணுக்கு தெரிவதில்லை நண்பரே என்னைப்போன் வயதுடையவர்களுக்கு இதே பிரச்சினைதான் நம் வட்டத்தில் வயதுடையவர்களே அதிகம் தயவு செய்து பாக்கெட்ட சைஸ் போடுமாறு ஆசிரியரை வலியுறுத்த வேண்டாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் தான் நண்பர்களே ஏதோ ஒரு ஏக்கம் ஹூம்ம் ஏற்கனவே சார் எங்களை கிழடுகள் தகடுகள் என கலாய்த்திருக்கிறார் இதில் நாம கண்ணாடி மாட்டியிருக்குற விஷயம் வேற தெரிஞ்சிடுச்சி இப்போ மாடஸ்டி வெங்கடேஸ்வரன் ஹாஹாஹா தற்போது மாடஸ்டியின் கழுகுமலைக்கோட்டை பாக்கெட் சைசில்தான் வருகிறது ஆனால் பெரிய எழத்துக்கள் என்று உறுதி அளித்துள்ளார் நமக்கு புத்தகத்தின் சைசில் பிரச்சினைகள் இல்லை பொடி எழத்துக்கள்தான் பிரச்சினை என்னிடம் உள்ள பாக்கெட் சைஸ் புத்தகங்களை மாடஸ்டி தவிர எழ் அண்ணன் மகனுக்கு கொடுக்கலாம் என்று நினைத்துள்ளேன் செந்தில் சத்யா மாடஸ்டி சார் நான் உங்கள் அண்ணன் மகனாக இருந்திருக்க கூடாதா ஆர்டின் உள்ளேன் ஐயா மாடஸ்டி வெங்கடேஸ்வரன் கும்பிடறேன் சாமியோவ் மாடஸ்டி வெங்கடேஸ்வரன் ஆகாய கல்லறை புத்தகம் கிடைத்தது எடிட்டர் சார் முன்பு வாசகர்களை தாராளமாய் குடோனுக்குள் அனுமதி அளித்து அதனால் நிறைய கசப்பான அனுபவங்கள் ஏற்ப்ட்டதால் வாசகர்களுக்கு அனுமதி இல்லை என்று கேள்விப்பட்டேன் தற்போது எப்படி ஏனென்றால் உங்கள் பணியாளர்களை பொறுத்தவரை காமிக்ஸ் என்பது செவ்விந்தியர்களை பொருத்த மட்டிலும் தங்கம் ஒரு மஞ்சள் உலோகம் மட்டுமே அதுபோலத்த்தான் அவர்களுக்கு என்னை அனுமதித்தால் நிச்சயமாக உங்கள் லிஸ்டில் வராத டைட்டில் குறைந்த பட்சம் மேல் தேற்றிவிடுவேன் அனுமதி கிடைக்குமா சார் மாடஸ்டி வெங்கடேஸ்வரன் இல்லை சார் தற்போதைய மெயின் குடவுணில் இதழ்கள் மட்டுமே இருப்பில் இருக்கும் அங்கு நம் பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதியுண்டு நான் குறிப்பிடும் இந்தப் பழைய இடத்தினில் அந்நாட்களது நெகட்டிவ்கள் பழைய ஆர்ட்ஒர்க் என்ற குவியலுக்குள் ஏதேனும் முந்தய இதழ்கள் கிடக்கும் அந்தப் பக்கம் நானே ஆடிக்கொரு முறைதான் போவதுண்டு இந்த முறை டாபிக் ஒன்றும் இல்லையே அட்டவணை பற்றி இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பற்றி சொல்வார் என்று எதிர் பார்த்தேன் ஆனால் லெப்டில் இன்டிகேட்டரை போட்டு ரைட்டில் சென்றதை என்னவென்று சொல்வது பிரமாதம் அதிலும் ஜான் சில்வரை நோக்கி சென்றது மிக அழகான கதை தொகுப்பு இத்தனை காலம் கழித்து இப்படி யொரு கேள்வியா இந்நேரம் வெளியிட்டு இருக்க வேண்டாமா ஏன் தாமதம் அடுத்த ஆண்டே ஏதேனும் ஒரு சந்து பொந்து பார்த்து நுழைத்து விட வேண்டியதுதான் பிறகு வேண்டுக்கோள் அடுத்த முறை பராமத்து வேளை இருந்தால் எனக்கு மட்டும் ரகசியமாக தெரிவிக்கவும் ஹீ ஹீ நன்றி நானும் கூட வரேன் வாருங்கள் சேர்ந்தே முடிப்போம் வேலையை என்ன நண்பரே நான் சொல்வது கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச பொன்ராஜ் சார் சந்தா உண்டா கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச பொன்ராஜ் அட இன்னமும் எழுத்துக்கள் பாக்கியுள்ளனவே சார் கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச பொன்ராஜ் எனக்கு காதில் புகை வண்டி வண்டியாய் வெளியான நாட்களவை ஹீ ஹீ ஹீ முல்லை தங்கராசன் குறித்து மிக அதிகமாகப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் சார் ஜான் ஹாவோக் திறமையான நாயகன் ஜென்டிலான அவர் கதைகள் நிச்சயம் வெற்றிக் கொடி நாட்டும் பாக்கியுள்ள கதைகளையும் வெளியிடுங்கள் சார் கால்வின் வாக்சுக்கும் கதையா ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் அட்டவணையை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் ஜான் சில்வர் மீண்டும் உயிருட்டும் நாளும் வந்திடாதோ அவர் அந்நாட்களில் இரும்புக்கை மாயாவிக்கு போட்டி போட்டு கொண்டு கவர்ந்த நாயகர் மறுபதிப்புக்களிலய் ஆவது ஒரு வாய்ப்பு கொடுங்கள் சார் மர்மம் கால்வின் வாக்ஸ் உடன் தீபாவளி ஸ்பெஷல் தயாராகி வரும் என நம்புகிறேன் ஆனாலும் இது டூ மச் இல்லையா ஆசிரியர் அவர்களுக்கு நமது இதழ்களின் பின்புறம் நடிகர் நடிகைகள் தேசத் தலைவர்கள் வேண்டாம் அவர்களின் படங்கள் இருந்தால் வாங்க நினைத்தவர்கள் கூட வாங்கமால் சென்று விடுவார்கள் விளையாட்டு வீரர்கள் போன்றவர்கள் படங்களை போட்டு உள்ளே அவர்களைப் பற்றி ஒரு பக்கச் செய்தி ஏதேனும் வந்தால் புத்தகம் வாங்குபவர்களின் எண்ணிக்கை கூட வாய்ப்புள்ளது இதில் எனக்கு கூட உடன்பாடு இல்லை ஆனால் விற்பனை சிறக்கும் என்றால் செய்யலாமே நன்றி விரல்நுனியில் உலகமே காத்துக் கிடக்கும் இந்த யுகத்தில் இவையெல்லாம் வேலைக்கு ஆகாது நண்பரே சேலம் விஜயராகவன் வெள்ளி ரிலீசுக்கு உங்கள் மதிப்பெண்கள் என்னவாக இருக்குமோ என்பதுதான் எங்களது மில்லியன் டாலர் கேள்வி க்கு இப்பவே கொடுத்து விடுகிறேன் சார் சேலம் விஜயராகவன் விஜயன் சார் ஜான் சில்வர் கதைகளை இதுவரை படித்து இல்லை தற்போது நண்பர்கள் அனைவரும் இவரின் கதைகள் நன்றாக இருக்கும் என சொல்லவதை கேட்கும் போது எனக்கும் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் வந்து விட்டது இவரின் கதைகளை மறுபதிப்பு அல்லது புதிய கதைகளை வரும் காலம்களில் வெளி இட்டால் சந்தோஷபடுவேன் சினிமா கதாநாயகன் என்றால் பத்து பேரை ஒரே நேரத்தில் அடித்தது வீழ்த்துவான் அதுமாதிரி இல்லாமல் ஜான்சில்வர் போன்ற எதாதர்தமான கதாநாயகனை கதைகளில் பார்க்கும் பொழுது எனக்கு ஒருவித ஈ ப்பு திருப்தி உள்ளது சினிமா கதாநாயகன் என்றால் பத்து பேரை ஒரே நேரத்தில் அடித்தது வீழ்த்துவான் அதுமாதிரி இல்லாமல் ஜான்சில்வர் போன்ற எதாதர்தமான கதாநாயகனை கதைகளில் பார்க்கும் பொழுது எனக்கு ஒருவித ஈ ப்பு திருப்தி உள்ளது நிஜமே அதுமட்டுமன்றி ஒவ்வொரு கதை முடிவிலும் நாயகன் மீது ஒருவிதப் பரிதாபம் எழுவது கண்கூடு நார்மல் வாழ்கைக்குத் திரும்பிட அனுமதியுங்களேன் என சில்வர் ஒவ்வொருமுறை கோருவதும் அவரை நமக்கு நெருக்கமானவராக்கிடுதோ கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச பொன்ராஜ் பரணி ஜான் சில்வர் மறுபடியும் வருகின்றாரா அருமை அருமை அவருடைய கதைகள் அளவில் சிறியவை என்பதால் மும்மூணு கதைகளாய்ப் போட்டுத் தாக்குங்கள் ஹேய் போட்டு தாக்கு போட்டு தாக்கு அளவில் சிறியவை என்பதால் மும்மூணு கதைகளாய்ப் போட்டுத் தாக்குங்கள் இதனை சந்தோசமாக வழி மொழிகிறேன் ஜான் சில்வர் சார்லி ரிப்கெர்பி விங்கமான்டர் ஜார்ஜ் காரிகன் இவர்கள் எல்லோரும் இணைந்த ஒரே குண்டு புத்தகம் முத்து மினி காமிக்ஸ் சைசில் ஏற்கனவே ஜான் சில்வர் மீது ஆசிரியரின் பார்வை விழுந்து விட்டது தரமான ஓவியங்களுடன் வெளிவந்த ரிப்கெர்பி கதைகளின் மீதும் காரிக்கன் கதைகளின் மீதும் ஆசிரியரின் கடைகண் பார்வை விழட்டும் எனக்கென்னமோ காமிக்ஸ் அட்டவணையில் ஜான் சில்வரும் இடம்பெற்றிருப்பார் என்றே நினைக்க தோன்றுகிறது கரெக்டுதானே விஜயன் சார் குருவி உட்கார்ந்துள்ளது சார் பனம்பழம் விழவும் செய்யலாம் இல்லாதும் போகலாம் கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச பொன்ராஜ் எல்லா ஐஆனி பனம்பழங்களும் விழட்டுமே சார் சேலம் விஜயராகவன் சார் நீங்க உரக்கப் புலம்புறீங்க நான் உள்ளாற புலம்புறேன் வேற்றுமை அவ்வளவே ஹா ஹா நண்பர்களுக்கும் எடிட்டர்களுக்கும் ஞாயிறு வணக்கம் ஜான் சில்வரை கூட்டணியில் சேர்த்துக்கிட்டு அடுத்த வருசம் போல ஒரு க்ளாசிக் டிடெக்டிவ் ஸ்பெஷல் ஏற்பாடு பண்ணினா நாங்க வேணாம்னா சொல்லப்போறோம் எடிட்டர் சமூகம் யோசிக்கணும் அட்டவணைக்காண்டி இன்னும் சிலபல நாட்கள் காத்திருக்கணுமா ஹூம் அந்த ஃபெவிக்கால் பெரியசாமியை நினைச்சாலே கிர்ர்ர்ர்ர்ர் கேப்ஷன் போட்டிக்காண்டி உம்ம்மா ம்ம்ப்ப் ப்பச்சக் ஒற்றை ஜடை அம்முணி ம்ப்ப் ம்ப்ப் மேற்கண்ட கேப்ஷனைப் பாராட்டி பழைய குடோனில் கண்டெடுக்கப்பட்ட அந்த ஜான் சில்வர் புத்தகம் ஒன்று சுவீட்டுடன் அனுப்பி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஹிஹி போட்டிக்காண்டியோ லூட்டிக்காண்டியோ இல்லாதும் கடமைக்காண்டி எழுதப்படும் கேப்ஷன்களுக்கு கடமை கண்ணாயிரம் என்ற கவுரவப் பட்டம் மட்டுமே உண்டு ஆஹா கேப்ஷன் எழுதுபவர்கள் இனி எனக்கு இன்னொரு பேர் இருக்குன்னு பெருமையாக சொல்லிக்கலாம் அனைவருக்கும் வணக்கம் கப்பட்ட எதிர்பார்ப்போடு இருக்கும் வேளையில் ஒரு கிலாஸ் படத்தை ன் வெளியிட்டீ ர்கள் என்று தெரியவில்லை எனினும் என்னுடைய கோபித்த பாராட்டு இது போல இன்னும் ரா ள பாராட்டு வாங்க வாழ்த்துக்கள் யப்பா ஓவியரும் கதாசிரியரும் நம்ம ளுக்கு இன்னும் என்னென்ன தகளங்களைத் திட்டமிட்டு வைத்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு கோடி காட்ட இந்த ர்ட்ஒர்க் என்று வைத்துக் கொள்ளுங்களேன் நான் குடிச்சுட்டு வல்லேன்னு இப்பவாச்சும் நம்புறியா பச்சக் உங்கப்பா பெவிகால் கம்பெனி ஓனரோ பசை நல்லா வேலை செய்யுதே இது கேப்ஷன் போட்டிக்கென்றால் அடிக்கவருவார்கள் என்பதால் ச்ச்சும்மா விளையாட்டுக்கு போல் மாறுவேடம் பூண்டிருப்பவர் நம்ம ஃபெவிகால் பெரியசாமியேதான் அவரின் மைண்ட்வாய்ஸ் ஃபெவிகால் பெ சா அட்டவணை கேட்டு சிவகாசிக்கே வந்து தொல்லை கொடுக்கும் இம்சை அரசர்களிடமிருந்து தப்பிக்க வாயில் ஃபெவிகால் பூசி போல் வேஷம்போட்ட நான் ஞாபகமில்லாமல் இந்த பெண்ணிடம் ரொமான்ஸ் பண்ணினது வம்பா போச்சே சீனியர் எடிட்டர் வரும் நேரம் பார்த்து இப்படி ரெண்டுபேர் வாயும் பிரிக்க முடியாமல் ஒட்டிக் கிடுச்சே ஒற்றைப் பின்னல் ஓவியத்தின் மைண்ட்வாய்ஸ் பாவி மனுஷா நானும் உன்னைப்போல ஆணேதான் இப்படி பெண் வேஷம்போட்டு ரொமான்ஸ் பண்ணியாச்சும் அட்டவணையை வாங்கிடலாம்னு பாத்தாக்கா நீ ஃபெவிகால் பூச்சுன்னு சொன்னதெல்லாம் சும்மான்னு நெனச்சா உண்மையிலே பூசியிருக்கியே நெலம இவ்வளவு மோசமா பூடுச்சே ஹா ஹா ஹா செம்ம சூப்பர் சார் எடிட்டர் சார் அடுத்த ஆண்டுக்கான ட்ரைலர் புத்தகம் சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதை இம்முறை மாற்ற முடியுமா என்று பார்க்க வேண்டுகிறேன் அது புத்தகம் வாங்கும் அனைவருக்கும் கிடைக்க வேண்டியது மிக முக்கியம் அடுத்த மாத நான்கு புத்தகங்களில் டெக்ஸ் எல்லாராலும் நேசிக்கப்படுபவர் என்பதனால் கடைகளுக்கு அனுப்பும் பிரதியில் டெக்ஸ் புத்தகத்துடன் பின் அடித்து ட்ரைலர் புத்தகத்தை வழங்கினால் நல்லது தனியே உள்ளே வைத்து அனுப்பினால் கடைக்காரர் ஞாபகமாக கொடுத்தால்தான் உண்டு அல்லது தவறிப்போகவும் வாய்ப்புள்ளதால் டெக்ஸ் புத்தகத்துடன் பின் அடிக்கப்பட்டு வழங்கிட வேண்டுகிறேன் கடந்த ஆண்டுகளுமே சந்தாதாரர்கள் மாத்திரமின்றி கடைகளில் வாங்குவோருக்கும் அட்டவணைகள் வழங்கியுள்ளோம் ஆனால் அதைக் கடைக்காரர்கள் தந்தார்களா இல்லையா என்பது தெரியவில்லை அட்டவணை ஒரு சைஸ் டெக்ஸ் இதழ் வேறொரு சைஸ் எனும் போது உள்ளே வைத்துப் பின் அடிப்பது சிரமம் தனி இதழாய் எப்போதும் போலவே அனுப்புவோம் அக்டோபர் இதழ்களுடன் கடைகளில் பெற்றுக் கொள்ளுங்கள் என அட்டையிலும் ஒரு குறிப்பிருக்கும் நிறைய பேருக்கு கிடைக்கவில்லை என ஏற்கனவே கேள்விபட்டுள்ளேன் சார் முதல் நமது காமிக்ஸை வாசிக்கும் நண்பர் ஒருவர் தற்சமயம் சென்னையில் வசிக்கிறார் அவர் நமது இதழ்களைப் கடையில் மட்டுமே வாங்குபவர் அவருக்கு ம் ஆண்டிற்கான அட்டவணையை சென்ற வாரம் நான் காட்டியபிறகே தெரிகிறது பின் அடிக்க வாய்ப்பில்லாததால் டெக்ஸ் புத்தகத்தை மட்டும் மெல்லிய பாலிதீன் கவரில் போட்டு அதனுடன் ட்ரைலர் புத்தகத்தை வைத்து அனுப்பலாமே சார் வார இதழ்கள் கூட சமயத்தில் இலவசங்களை வழங்குகையில் இம்முறையை பின்பற்றுகின்றன கடைகளுக்கு அனுப்பும் பிரதிகளுக்கு மட்டும் இம்முறையை செய்யலாமே சார் ஒரு சதவிகிதம் பேரை இதனால் சந்தாவிற்குள் நுழைக்க முடிந்தால் நல்லதுதானே சார் இது ஒரு வேண்டுகோள் மட்டுமே சார் ஆகாயக் கல்லறை அட்டைப்படத்தில் ஏஜென்ட் ஜான் சில்வர் ஏன் பாவாடைக்கு பெல்ட் கட்டியிருக்கார்னு தெரியலையே ஏதாச்சும் மாறுவேடத்துல போயி துப்பறியறாரோ என்னவோ ஒரு அசப்புல பார்த்தா பீர் பேரலுக்குள்ள மாட்டிக்கிட்ட மாதிரியும் இருக்கு ஜான் சில்வர் ஒரு விமானம் ஓட்டுபவர் என்பதால் பாராசூட்டிலேயே பேண்ட் தைத்து போட்டிருக்கிறார் அவசரத்துக்கு விமானத்திலிருந்து அப்படியே குதித்து விடலாம் இல்லையா பாவாடைகாந்த் ஸ்டைல் அன்றைக்கு நடைமுறையில் இருந்ததோ என்னவோ நமது ஓவியரிடம்தான் கேட்டுப் பார்க்க வேண்டும் ஜான் சில்வர் ஏன் பாவாடைக்கு பெல்ட் கட்டியிருக்கார்னு தெரியலையே மாடஸ்டி வெங்கடேஸ்வரன் எடிட்டரின் மலரும் நினைவுகள் என்றுமே சந்தோஷம்தான் மாடஸ்டி வெங்கடேஸ்வரன் ஓவர் செண்டிமெண்ட் சீன்லாம் தமிழ் சினிமாக்களிலேயே இப்போது வேலைக்கு ஆவதில்லை எனும் பொழுது நாமும் அதனைக் குறைத்துக் கொள்வது நல்லது என்று சிலபல காலம் முன்பாகவே தீர்மானித்து விட்டேன் சார் ஆனால் எப்போதாவது அதற்கொரு விதிவிலக்கு அமைந்தால் தவறில்லை என்று தோன்றியது மாடஸ்டி வெங்கடேஸ்வரன் உங்கள் மலரும் நினைவுகள் என்றுமே போரடித்தது இல்லை காமிக்ஸ் மீது உள்ள அபரிதமான ஆர்வம் காரணமாகவும் உங்கள் நினைவுகள் எப்போதும் காமிக்ஸை சார்ந்து இருப்பதால் திகட்டுவதே இல்லை மேலும் தொலைதொடரபுகள் இல்லாத காலகட்டத்தில் தன்னந்தனியே தனித்தீவில் மாட்டிக்கொண்ட காமிக்ஸ் ரசனை உணர்வுக்கு உங்களது ஹாட்லைன் மட்டுமே கலங்கரை விளக்காக இருந்தது மேலும் சிறு வயதில் மிக பிராமாண்டமாக தெரிந்த லயன் முத்து நிறுவனம் எனது மூத்த சகோதரர் வயதுடைய ஒருவரால் உருவாக்கப்பட்டது திறம்பட நடத்தப்பட்டது என்பதை தெரிந்துகொள்ளும்போது ஆச்சர்யங்களுக்கும் வியப்புகளுக்கும் எல்லையே இல்லை அது இன்றளவும் கொஞ்சம் கூட குறைந்ததாக எனக்கு தோன்றவில்லை மாடஸ்டி வெங்கடேஸ்வரன் நமது தலைவரும் செயலாளரும் சி சி வ வரவில்லை என்றால் ஏன் கொதித்து எழகிறார்கள் என்று இப்போதுதான் லேட்டாக புரிகிறது நான் ஒரு ட்யூப்லைட் நீங்கள் திகிலில் இருண்ட ஞாயிறு போன்ற திகில் தொடரை ஆரம்பித்த வேகத்திலே அப்படியே விட்டது சித்திரம் வரைவது எப்படி காமிக்ஸ் உருவானது எப்படி என்று அழகாய் விளக்கிய கட்டுரை எப்படி நின்றது என்று தெரியவில்லை கொடூர வனத்தில் டெக்ஸில் வந்த ஆஸ்டர்லிட்ஜ் நாசி முகாம் பற்றி எழதியது நைல் நதிபோல் கடைசியில் காணமல் போய்விட்டது வடிவேல் வின்னர் படத்தில் கூறுவரே ஓப்பனிங் எலிலாம் நல்லாத்தான் இருக்கு பினிஷிங் சரியில்லையேப்பா என்பது மாதிரி ஆகாமல் சி சி வ தொடருக்கு இந்த அவப்பெயர் வரமல் பார்த்துக்கொள்வது உங்கள் பொறுப்பு நான் ல் கல்லூரி படிப்புக்காக மதுரை சென்றபோது காமிக்ஸ் படிப்பதை விட்டேன் அதன் பின் படிப்பு வேலை கல்யாணம் குழந்தை என்று வாழ்க்கை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு கரை ஒதுங்கிய போது ல் மீள் வருகை அதுவரை எனக்கு காமிக்ஸ் இருண்ட காலம்தான் என் வயதுடைய அனைவரும் என் சூழ்நிலையில் இருந்துருக்கக்கூடும் எது எப்படியோ சிங்கத்தின் சிறுவயதில் ஆரமித்த கெத்தில் எப்படிச்சென்றதோ அப்படியே இன்றுவரை நடந்ததை உங்கள் பார்வையில் சொல்லி சிறப்பாக கொண்டு செல்ல வேண்டியது உங்கள் பொறுப்பு திரிசங்கு சொர்ங்கம் இனி எந்த தொடருக்கும் வேண்டாவ் விஜயன் சார் ஒரு பழைய விண்ணப்பம் இனிமேலாவது மாதம் மற்றும் வருடத்தினை புத்தகங்களில் போடலாமே முன்பு தேதி போடதற்கான காரணத்தை சொல்லி இருந்தீர்கள் ஆனால் தற்பொழுது நிலைமை மாறியுள்ளதால் பரிசிலீக்கலாமே எப்போதும் படிக்கலாம் என்பதே நமது இதழ்களின் தனித்தன்மை கடைகளில் நமது இதழ்களை ஸ்டாக் வைத்திருந்து விற்றிடும் விற்பனையாளர்களும் இதன்காரணமாய் அந்தந்த மாதமே விற்காத இதழ்களைத் திருப்பி அனுப்பாது தைரியமாய்க் கையில் வைத்துள்ளனர் விற்றும் வருகின்றனர் தேதி மாதம் என்று குறிப்பிடத் துவங்கினால் பழசை புறம்தள்ளக் கூடும் வாய்ப்புகளுண்டு எனும் போது நாமே நமக்கான வாயில்களை அடைத்துக் கொள்வானேன் முன்பு சில புத்தகங்களில் ஹாட் லைனுடன் வருடம் குறிப்பிடப்பட்டிருப்பதுண்டு அதுபோல எங்காவது உள்ளே ஓரிடத்தில் சிறிய அளவில் சட்டென்று தெரியா வகையில் பின்னாட்களின் தேடலுக்காக வருடம் மாதம் குறிப்பிடலாமே மாடஸ்டி வெங்கடேஸ்வரன் பல வருடங்களுக்கு முன் ஐம்பது வயது மதிக்கதக்க சீனியர் காமிக்ஸ் வாசகர் ஒருவர் அவருக்கு சொந்தமாகும் காமிக்ஸ் புத்தகத்தின் முதல் பக்கத்தில் அவரது கையொப்பத்துடன் அன்றைய தேதி மாதம் வருடங்களையும் தெளிவாக எழதினார் அவருடைய செயல் எனக்கு மிகவும் பிடித்து போய்விட்டது அன்றைய நாளில் இருந்து நானும் அப்படியே சீனியர் வாசகரின் வழிமுறையை பின்பற்றி வருகிறேன் எப்போதும் படிக்கலாம் என்பதே நமது இதழ்களின் தனித்தன்மை கடைகளில் நமது இதழ்களை ஸ்டாக் வைத்திருந்து விற்றிடும் விற்பனையாளர்களும் இதன்காரணமாய் அந்தந்த மாதமே விற்காத இதழ்களைத் திருப்பி அனுப்பாது தைரியமாய்க் கையில் வைத்துள்ளனர் விற்றும் வருகின்றனர் ஆசிரியர் அவர்களுக்கு சென்றப்பதிவில் ஒரு நண்பருக்கு பதில் சொன்னபோது சந்தா கட்ட முடியாதவர்களையும் சேர்த்து எது செய்தாலும் என்றீர்கள் உங்கள் நல்ல மனதிற்கு சிரம் தாழ்த்தி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் ஆனால் வலி இல்லாமல் உயிர் ஏது துன்பம் இல்லாமல் இன்பம் ஏது எல்லோரும் பயன் பெற ஒரு யோசனை பிடித்து இருந்தால் செயல் படுத்தலாமே அறிவிப்பு ஜனவரி இதழுடன் வரும் ஆல்பத்தை பத்திரப்படுத்தி சென்ற நூற்றாண்டில் செய்தது போல் ஒவ்வொரு மாதமும் ஏதேனும் புத்தகங்களில் வரும் ஹீரோக்களின் படங்களை மொத்தம் ஹீரோ ஒட்டி அனுப்புங்கள் ஆசிரியருக்கு பக்கங்களை சேதப்படுத்தாமல் ஹீரோ படங்களை கொடுக்கவும் ல் மினிலயனில் வந்த அலிபாபா முஸ்தபா கலர் கலெக்ஷன் அல்லது சுஸ்கி விஸ்கி கலர் கலெக்ஷன் அல்லது பாக்கெட் சைஸில் வந்த கலர் கலெக்ஷன் இப்படி ஏதாவது ஒன்றில் ஹீரோக்கள் படங்களை அனுப்பியவர்களுக்கு விலையில் அதில் சந்தா செலுத்தியவர்கள் இருந்தால் இதில் உங்கள் தரப்பில் நஷ்டம் வராமல் என்ன செய்ய முடியுமோ பார்த்து செய்யுங்கள் ஒரு நல்ல முடிவாக எடுத்து காமிக்ஸை இன்னும் சிறந்த வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வீர்கள் என்று ஆசைப் படுகிறேன் நன்றி சென்ற நூற்றாண்டுச் சமாச்சாரம் என்று நீங்களே சொல்லி விட்டீர்களே சார் அதனை இன்றைய தருணத்துக்குப் பொருத்திப் பார்ப்பானேன் அன்றைக்கு அரைநிஜார் அணிந்திருந்தோர் இன்றைக்கு அரை சதம் நோக்கிப் பயணிக்கும் அணியில் உள்ளனர் இன்றைய தலைமுறையோ இந்த ஜிகினா வேலைகளுக்கு மயங்கும் என்று மெய்யாகவே எதிர்பார்க்கிறீர்களா அந்த காலகட்டத்தைக் கடந்து ரொம்பத் தொலைவு பயணித்துவிட்டோம் அல்லவா அதுமட்டுமன்றி என்றெல்லாம் நான் வாக்குறுதி அளித்தால் ஈமு கோழிப்பண்ணை கதையாகிப் போய்விடும் கவலை வேண்டாம் சின்னதொரு ஏற்பாடு இந்தாண்டு நடைமுறைக்கு வருகிறது சந்தாதாரர்களை கெளரவிக்கும் விதமாய் ஆசிரியர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சேலம் விஜயராகவன் கவலை வேண்டாம் சின்னதொரு ஏற்பாடு இந்தாண்டு நடைமுறைக்கு வருகிறது சந்தாதாரர்களை கெளரவிக்கும் விதமாய் உய் உய் உய் இதுவும் இன்னொரு சஸ்பென்சா எத்தன செந்தில் சத்யா ஆசிரியரே சூப்பர் செந்தில் சத்யா சந்தாதாரரை கெளரவிக்கும் விதமாய் வரவேற்கிறேன் சார் ஆஹா அடுத்த வாரம் முழுவதும் எனது யூனிட்ட்டின் ஆடிட் பொருட்டு ஒரு வித ஒரு பக்கம் இன்னொரு பக்கம் நமது குறித்த ம்ம்ம் சென்றப்பதிவில் சொல்லப்பட்ட ரூ பரிசுப்போட்டி ஆல்பம் நினைவுகள் ம் ஆண்டு ஆசிரியர் ரூ பரிசுப் போட்டியை எமனுக்கு எமன் இதழில் அறிவித்திருந்தார் வழக்கம் போல முதலில் காமிக்ஸை எனக்கு அறிமுகம் செய்திட்ட என் நண்பன் புத்தகம் வாங்கி அதில் இணைக்கப்பட்ட குட்டி ஆல்பத்தை என்னிடம் காட்டி வெறுப்பேத்த நானும் என் அம்மாவிடம் ரூ காசு வாங்கி இந்த இதழை எப்படியோ வாங்கினேன் எப்படியும் போட்டியில் கலந்து கொள்வது என தீர்மானித்து ஒவ்வொரு படமாக ஒட்டவும் செய்தேன் மாதங்கள் கடந்தன எல்லா இதழ்களும் வாங்க இயலவில்லை என்றாலும் எப்படியும் எல்லா படத்தையும் கலெக்ட் செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஒருபுறம் இருந்தாலும் மறுபக்கம் ம் ஆண்டு தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட ஈடுசெய்ய இயலா இழப்பு காமிக்ஸ் சேகரிப்பை சற்று மட்டுப்படுத்தியது என்றாலும் கடகடவென்று போட்டியும் முடிந்து விரைவில் பரிசு பெற்றோர் விபரமும் வந்தது என் நண்பனும் அனுப்பியிருப்பான் என்று நினைக்கிறேன் ஆனால் வெற்றி பெற்றது பேர் மாத்திரமே அதில் ஒருவர் எங்கள் அயனாவரம் பகுதியை சேர்ந்த சக்தி என்பவர் அப்போது ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் பொதுவாக அப்போதே காமிக்ஸ் படிப்பவரை அவ்வளவு சுலபமாக பார்த்திட இயலாது எனவே அந்த சக்தியை தேடி விலாசத்தில் குறிப்பிட்டுள்ள அயனாவரம் மேட்டுத்தெருவெல்லாம் தேடினேன் சக்தியை கண்டுபிடிக்க முடியவில்லை சில மாதங்கள் பிறகு வேறு ஒரு நண்பன் தன் வீட்டில் குடியிருக்கும் காமிக்ஸ் சேகரிப்பாளர் சக்தியை பற்றி என்னிடம் சொல்ல எனக்கோ போட்டியில் வெற்றி பெற்ற சக்தியாகத் தானிருக்கவேண்டும் என தோன்றியது அந்த சக்தியை சந்தித்த போது அது ஊர்ஜிதமானது போட்டியில் தான் வென்றது உண்மைதான் என்றும் ஆனால் பரிசு தொகை அதுவரை தன்னை வந்து சேரவில்லை என்றும் சொன்னார் என்னைப்போலவே சக்தியும் தந்தையை இழந்தவர் என்றும் தன் ஏழைத்தாய் வீட்டு வேலை செய்து தன்னை படிக்க வைக்கிறார் என்றும் தானும் அவ்வப்போது பகுதிநேரமாக வேலை செய்கிறார் என்பதும் அவர் மூலமாக சொல்ல கேட்டேன் தன்னுடைய ஓட்டு வீட்டிற்குள் கூப்பிட்டு ஒரு இரும்பு பெட்டியை திறந்து தன் காமிக்ஸ் சேகரிப்பை காண்பித்தார் வாயடைத்து தான் போனேன் லயன் திகில் மினி லயன் முத்து என எல்லா புத்தகமும் அட்டைப்படத்தோடு இருந்தது விலைக்கு கிடைக்குமா என்று கேட்டேன் திட்டவட்டமாக கிடையாது என்றார் வேண்டுமானால் பண்ணிக்கலாம் என்றார் அந்த சமயத்தில் சதிவலை புத்தகம் மிகவும் அரிதான ஒரு கலெக்டர் புத்தகமாகயிருந்தது அது அவரிடம் பிரதிகள் இருந்தது என் நல்ல நேரம் ஆனால் க்காக நான் புத்தகங்கள் டிராகன் நகரம் உட்பட என நினைக்கிறேன் கொடுக்க வேண்டும் கறாராக சொன்னார் இப்படித்தான் முதல் முதலாக டென்னிஸ் துப்பறிவாளர் ஜான் மாஸ்டரின் முதல் சாகசமான சதி வலை யை வாங்கினேன் ஆசிரியர் போட்டி எனக்கு நேரிடையாக நன்மை பயக்காவிட்டாலும் இப்படி சக்தி மூலமாக ஒரு புத்தகம் கிடைக்க வழி செய்திட்டது அதன் பிறகு அந்த சக்தியை சில முறை பாத்திருக்கிறேன் என்றாலும் ஒரு கட்டத்தில் தொடர்பு முற்றிலும் அறுந்து போய்விட்டது என் நண்பன் சொன்னான் அந்த சக்தி பின்பு மேலும் பணத்திற்காக மிகவும் சிரமப்பட்டு தன் படிப்பை தொடர தன் முழு சேகரிப்பையும் விற்றுவிட்டதாக சொன்னான் அது உண்மைதான் என்று பின்பு எனக்கும் தெரிந்தது சக்தியின் ஒரு புத்தகமான எமனோடு ஒரு யுத்தம் வது ஆண்டு மலர் சக்தியின் பெயர் உடன் அழகாக பைண்டு செய்யப்பட்ட புத்தகம் எனக்கு ஒரு பழைய கடையில் விலைக்கு கிடைத்தது வெறும் காமிக்ஸ் புத்தகம் தான் ஆனால் பெற்றுக்கொள்ள எத்தனையோ பிரயத்தனம் செய்தும் ஒரு கட்டத்தில் சூழ்நிலை காரணமாக இழக்க நேரிடும் போது எவ்வளவு வேதனை தரும் என்று நண்பனிடம் கொடுத்து வைத்த க்கும் மேற்பட்ட இதழ்களை இழந்திட்ட எனக்கும் தெரியும் சக்திப்போல என்னைப்போல காமிக்ஸ் சேகரிப்புகளை இழந்தவர்கள் நிறையப்பேர் லிஸ்டில் இருப்பார்கள் அதனால் தான் தங்களின் இள வயதின் உணர்வுக்காக அதே பழைய சித்திரதரத்தோடு அதே அட்டைப்படத்தோடு மறுபதிப்பு வாசகர்கள் கேட்கிறார்கள் ஆனால் அந்த வேண்டு கோளின் பின்னே எத்தனை சோகமான இழப்புகள் இருக்குமென யாருக்கும் தெரியாது யாரும் மொக்கை கதைகளை மறுபதிப்பாக கேட்கவில்லையே இன்றைக்கு பழைய இதழ்களின் விலைகள் எவரும் வாங்கமுடியாத அளவுக்கு தறிகெட்டு போய்விட்டது மறுப்பதிப்பு மாத்திரமே அவர்களுக்கு முன் நிற்கும் ஓரே சாய்ஸ் சேலம் விஜயராகவன் அட்டகாசம் உதய் லேட்டா காமிக்ஸ் உலகம் வந்த என்னை போன்ற நண்பர்கள் உங்களுடன் பயணித்த உணர்வு தொடருங்கள் அவ்வப்போது நண்பரே வலியுடன் கூடிய உங்களின் சிறு வயது ஞாபகங்கள் அருமையாக உள்ளது நானும் காமிக்ஸ் சேகரிப்பை சிறு வயதினில் இழந்தவன்தான் அந்த வலி என்னால் புரிந்து கொள்ள முடிகிறது வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள் விஜயராகவன் நண்பர்கள் விருப்பம் போல நிச்சயம் என் அனுபவத்தை போர் அடிக்காமல் பகிரவே விரும்புகிறேன் நன்றிகள் திருச்செல்வம் பிரபாநாத் நண்பரே நானும் அவ்வப்போது மற்றவர்கள் அனுபவம் அறிந்த போது என்னை விட காமிக்ஸ் இழந்தவர்களே அதிகம் என புரிந்து கொண்டேன் நம்மில் அநேகர் புதிய கதைகளை விட பழைவற்றில் தான் புதையல்களை அதிகம் தேடுகிறோம் உண்மைதானே நண்பர் உதய் அவர்களே உங்கள் நினைவுகள் எனது பழைய நினைவுகளையும் கிளறி விட்டது எனக்கும் இதே போல சில அனுபவங்கள் கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச பொன்ராஜ் நான் படிக்க ஆரம்பித்தது அப்பறம் தான் முதலில் படித்தது கன்னி திவில் மாயாவி அல்லது ராணி கமிக்ஸ் வந்த ரிவால்வர் ரிட்டா வா என்று தெளிவாக தெரியவில்லை ஆரம்ப காலத்தில் லயன் முத்து காமிக்ஸ் திருச்சி சரியாக கிடைக்கவில்லை எப்பொழுதாவது எதாவது ஓரு கடையில் தொங்கும் காமிக்ஸ் பார்த்து வங்கினால்தான் உண்டு அதே கடையில் மறுபடியும் அடுத்த மாதம் காமிக்ஸ் வராது அப்படி எப்பொழுதாவது வங்கி சேர்த்த காமிக்ஸ் கலெக்ஷன் இன்று ஒன்று கூட இல்லை தங்க கல்லறை மட்டும் பூதம் பாதுகாக்க கிற மாதிரி இன்றும் பாதுகாத்து வருகிறேன் பரணிதரன் மிக்க நன்றி ஆசிரியர் சென்ற பதிவில் இதை பற்றி சொன்னதால் பால்யத்து நினைவுகளை பகிர்ந்து கொண்டேன் உங்கள் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன் பொன்ராஜ் மிக்க நன்றி சதீஷ் படித்தமைக்கு மிக்க நன்றி கணேஷ் நானும் உங்களை போன்றே தான் வெகு சொற்ப சேமிப்பே கைவசம் வைத்துள்ளேன் பரணிதரன் மிக்க நன்றி ஆசிரியர் சென்ற பதிவில் இதை பற்றி சொன்னதால் பால்யத்து நினைவுகளை பகிர்ந்து கொண்டேன் உங்கள் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன் உதய் சார் எனது அனுபவத்தை எல்லாம் ஏற்கனவே இங்கு ஆரம்பத்திலியே பகிர்ந்து தள்ளி விட்டேன் எனது ஆனாலும் சரி எனது அனுபவத்தை அறிந்து கொள்ள தான் வேண்டுமெனில் நானே மறந்து போன என்ற தளத்தில் சென்றால் அறிந்து கொள்ளலாம் சேலம் விஜயராகவன் என்ற தளத்தில் சென்றால் அறிந்து கொள்ளலாம் என்ன உங்களுக்கு தனி தளமா அதில் மலரும் நினைவுகளா சூப்பரு கடுவன் பூனை என்ற பட்டபெயருடன் அமேசான் காட்ல ன் ராணி காமிக்ஸ் கதை ஒன்றின் வில்லன் தன் மாளிகை நடக்கும் கார்னிவல் விருந்தில் கலந்துகொள்ள ஜேம்சுக்கும் அவர் காதலிக்கும் அழைப்பு அனுப்பி இருப்பான் பத்திரிகை நிருபராக இருப்பார் கார்னிவல் கூட்டாளியை தேர்ந்தெடுக்க பொம்மை துப்பாக்கியில் சுடுவாங்க ன் காதலிக்குரிய எண் ஐ ஜேம்ஸ் சுட அது வீழாது வில்லலன் சொல்வான் ஒரு பத்திரிகை நிருபரால் சரிவர சுட இயலாதுதான் மறுமுறை சுடுங்கள் என உடனே தன் கோட்டில் உள்ள கைத்துப்பாக்கியை எடுத்து குறிதவறாது அந்த நம்பரை சுடுவார் வியந்துபோன வில்லன் என்ன பத்திரிகை நிருபரின் கையில் துப்பாக்கியா அதுவும் குறிதவறாது சுடுகிறாரா என பேசுவான் அந்த வில்லன் பூனை நிலையில் இப்போது நாங்கள் நாங்களும் பழைய காமிக்ஸ் படித்து இருக்கம்ல செந்தில் சத்யா கதையின் பெயர் சீன உளவாளி டெக்ஸ் தனிதளமா ன்னு ஷட்டரை சாத்தி பல வருசமாகி இப்ப கேக்குறீங்களே க்கும் நண்பர் செந்தில் சத்யா தாங்களும் நமது நட்பு வட்டாரங்களும் அங்கு நலமா நான் இங்கு நலமே இந்த வாரமாவது நமது நட்புகளை சந்திக்க வந்து விடுவேன் என்றே நம்புகிறேன் என்றென்றும் அன்புடன் நானே சுரேஷ் ஸ்பைடர் படை சைத்தான் சாம்ராஜ்யம் டெக்ஸ் மறு பதிப்பில் சேர்த்து விடுங்கள் கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச பொன்ராஜ் சார் ஜேசனுக்காக பிரத்யேக மை மேலும் ஆர்வத்தை கிளப்புகிறது சென்றவார பக்கமே அதகளபடுத்திய நிலையில் இந்தவார ம் இன்னும் ஐந்தேநாட்கள் அடுத்தவருடம் முழுதும் நம் கையில் ஸ்பைடர் சோப்ரா சோப்புக்குமிழிகள் கள் பின்னோக்கினாலும் மகிழ்ச்சி முன்னோக்கினாலும் மகிழ்ச்சி பிரான்ஞ் ஜானியின் கதை விமான ோட்டிகள் மேல் ஆர்வம் பிறக்க காரணம் அதிலும்ஜானி பைலட் லைசென்ஸை மீட்க மாட்டாரா என ேங்கிய நாட்கள் அதிகம் நீங்க ஏதோ ஏமாற்றியது போல கதை கிளப்பியவர்களுக்கான பதில் சூரியன் சூரியன்தான் கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச பொன்ராஜ் ஜானியின் கதைகளை உடனடையாக களமிறக்குங்கள் பழய கதைகளை மீட்க முடிந்தால் அட்டகாசம் அசோக் காமிக்ஸ் ஜானி கதைகள் இல்லாமல் வீழ்ந்ததும் காரணம் சார் ஜேசனுக்காக பிரத்யேக மை மேலும் ஆர்வத்தை கிளப்புகிறது சென்றவார பக்கமே அதகளபடுத்திய நிலையில் ஜான் சில்வரின் ரவுடி கும்பல் நான் படித்த அல்லது பார்த்த போது என் வயது அந்த புத்தகம் இப்பொழுது என்னிடம் இல்லை ஆனால் அதன் படம் சிலது என் ஆழ் மனதில் பதிந்து இருக்கிறது ரவுடி கும்பல் காமிக்ஸில் ஜான் சில்வர் தான் நாயகன் என்று எனக்கு எடிட்டர் சார் சொன்னவுடன் தான் தெரிய வந்தது எனக்கு தெரிந்து அதில் ஒரு ஊரே ஜான் சில்வரை போட்டு தள்ள அலையும் அவர்களிடம் இருந்து அவர் எப்படி தப்பிப்பார் என்பது தான் கதை என்று நினைக்கிறேன் இந்த கதையின் மறுபதிப்பு வந்தால் பட்டாசு என்று நினைக்கிறேன் பசுபதி ல் மீதமுள்ள கதைகளையும் வெளியிடுங்கள் சிம்பா பசுபதி ல் மீதமுள்ள கதைகளையும் வெளியிடுங்கள் நண்பர்களே நான் இதுவரையில் வந்த லயன் மற்றும் முத்து புத்தகங்களின் பட்டியல் ஒன்று தயார் செய்து வருகிறேன் என்னிடம் இல்லாத புத்தகங்களின் தேடும் வேட்டையில் ஈடு பட்டு வருகிறேன் கோவை புத்தக விழாவில் ஒரு புத்தகங்களை அள்ளி வந்து இருக்கிறேன் இருப்பினும் விடு பட்டு போன கதைகள் ஏராளம் லயன் காமிக்ஸின் வது இதழிலில் இருந்து கதைகளின் பட்டியல் தேவை அதே போல் முத்துவின் முதல் பதிப்பில் இருந்து தற்போது வெளிவந்த புத்தகம் வரை இருக்கும் பட்டியல் தேவை அது வெளிவந்த வருடம் மற்றும் மாதம் தேவை யாரிடமாவது இருந்தால் பட்டியலை வெளியிடுமாறு கேட்டு கொள்கிறேன் நன்றி நண்பரே நண்பர் கலீல் அவர்களின் முதலை பட்டாளம் என்ற தளத்தில் நமது அனைத்து காமிக்ஸ் இதழ்களின் அட்டவனைகளும் உள்ளன நன்றி பரணீதரன் நீங்கள் கொடுத்த தகவல் மிகவும் உதவியாக உள்ளது ஜான் சில்வரை மிகவும் உற்சாகத்துடன் வரவேற்கிறேன் மனிதவேட்டையில் பைனாகுலரில் பார்த்து உதட்டசைவை வைத்தே உரையாடலை தெரிந்து கொள்ளும் அந்த மொட்டைத்தலை வில்லன் இன்னும் ஞாபகத்தில் ஆசிரியர் அவர்களுக்கு மாயாவி இரும்புகையில் உள் ள ஆயுதங்களுடன் மட்டுமே சாகசம் புரிந்த கதைகள் வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பினைப் பெற்றது அவருக்கு செப்பு தலைகவசம் மற்றும் ஆடையுடன் வெளிவந்த கதைகள் அவ்வளவு வரவேற்பினை பெறவில்லை ஸ்பைடர் கதைகள் ஆரம்ப முதல் கடைசிவரை நன்றாக போய்கொண்டிருந்தன ஆனால் ஆர்ச்சியின் கதைகள் ஆரம்ப கட்டத்தில் பெற்ற வரவேற்பினை பின்னர் பெறவில்லை காரணம் படங்கள் சொதப்பலாக இருந்ததுதான் மும்மூர்த்திகளை தாண்டி மற்ற படைப்புக்கள் வெற்றி பெறுவது சிறிது கடினமாகத்தான் இருந்தது அதை தாண்டி ஸ்பைடர் மற்றும் மாடஸ்ட்டி வெற்றி மிகவும் மதிப்பு வாய்ந்ததுதான் சார் நீங்க உரக்கப் புலம்புறீங்க நான் உள்ளாற புலம்புறேன் வேற்றுமை அவ்வளவே யே கலக்கி எடுத்து வருகிறீர்கள் இனி வரும் நாளை சொல்லவும் வேண்டுமா சார் ஓர் அழகான சிங்கத்தின் சிறு வயதில் ஒரு பகுதியை படித்த மகிழ்ச்சியை அள்ளி தந்தது இந்த பதிவு மிக்க நன்றி சார் ஜான் சில்வர் எனக்கும் மிக மிக பிடித்த ஹீரோ ஒவ்வோர் கதை முடிவிலும் அவர் சோகமாக செல்ல அந்த உளவு துறை அதிகாரிகள் மீது அவ்வளவு கோபம் ஏற்படும் அவரின் சாகஸம் கை வசம் இருந்தால் கண்டிப்பாக ல் கூட இடம் கொடுங்கள் சார் வரவேற்க காத்திருக்கிறோம் ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் வாட்ஸ் அப் இல்லா காரணத்தால் சில நாட்களாய் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கும் சேந்தம்பட்டி நண்பர்களுக்கும் எனது பணிவான இரவு வணக்கங்கள் மாடஸ்டி வெங்கடேஸ்வரன் தலைவரே வருக வருக புது உயிருடன் சாரி பெயருடன் வரவேற்ற மாடஸ்தி மடிப்பாக்கம் அவர்களுக்கு பதில் வணக்கம் ஆசிரியர் அவர்களுக்கு நான் பழைய கதாநாயகர்களின் புகழினைப் பற்றியே புலம்பிக் கொண்டு இருக்கிறேன் என்று சலித்துக் கொள்ள வேண்டாம் புதிய நாயகர்களை பற்றி மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்து அதில் கோடு மின்னல் இலலை என்று தாங்களே அறிவித்து விட்டீர்கள் அவர்களில் என்னை கவர்ந்தவர்களில் உடைந்த மூக்கர் மற்றும் தன்னை மறந்தவர் இருவரும் அதற்கு காரணம் தாங்கள் தெரிவித்ததைப் போன்று அவர்களின் மேலுள்ள அனுதாபம்தான் காரணமோ உங்களுக்கு இரும்புக்கை மாயாவியைத் தெரியுமா காமிக்ஸ் விரும்பிகள் அனைவருக்கும் இந்த தினத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் இதுவரை அதெல்லாம் வாசிச்சதில்லையே பாஸ் என்போர்கள் அடுத்து எங்காவது காமிக்ஸ் புத்தகத்தைக் கண்டால் உடனடியாக வாங்கிப் படித்துப் பாருங்கள் உங்களையே மறக்கச் செய்துவிடும் சுவாரசியமான தனி உலகம் பாஸ் அது காமிக்ஸ் பயணம் தொடர்கிறது பார்ட் பழக்கடையில் சென்று விசாரித்த போது நண்பர் ஒருவர் கொடுத்து விற்கச் சொன்னதாகவும் நல்ல நிலையில் உள்ள புக் மடங்கும் அட்டை இல்லாதது மடங்கும் சிறிது சேதாரம் உள்ளது மடங்கும் விலை என்றார் என்னிடமும் நண்பர்களிடம் இருந்த காசை கொண்டு எனது வது இன்னிங்ஸை துவங்கினேன் ன் தலைவாங்கியை கொடுத்து வாங்கியதன் மூலம் அந்த கடையில் ராணி காமிக்ஸ் தான் அதிகம் இருந்தது நமது இதழ்கள் விற்று விட்டதாகவும் புக் தான் உள்ளது என்றார் அவரிடம் சொல்லி அனைத்தையும் எடுத்து வைக்கச் சொன்னதும் ஒரு வாரத்திற்குள் அனைத்தையும் வாங்கியதும் அதற்காக அந்த கடைக்காரருக்கு டிப்ஸ் கொடுத்ததும் நன்றாக ஞாபகம் உள்ளது அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ராணி காமிக்ஸீம் வாங்கினேன் இந்த வது இன்னிங்ஸீல் லயன் முத்து திகில் மினிலயன் இதுதான் என் முதல் அது முடிந்த பிறகு வேண்டுமானால் அடுத்தது என்ற தீர்மானம் ராணி காமிக்ஸ் க்கு பயன்படுத்தலாம் என்று வாங்கினேன் காமிக்ஸ் சேகரிப்பு காரைக்காலை சுற்றியுள்ள பகுதியில் மீண்டும் எனது தேடலை துவங்கினேன் ஆனால் முன்னர் மாதிரி அதில் அந்த அளவு வெற்றி கிட்டவில்லை யோசித்தேன் கிணற்று தவளையாக இருப்பது இனி வேலைக்குச் செல்லாது வெளியே செல்வது என்று முடிவு செய்தேன் சனி கிழமைகளில் நண்பனின் வீட்டிற்கு படிக்க செல்வதாக முகவரில்லா நண்பன் வாழ்க கூறி சாப்பாட்டை அவனை கொடுக்கச் சொல்லி விட்டு காரைக்காலை விட்டு தனியே வெளியே சென்றேன் ஆசிரியர் போல் ஜெர்மனியோ இத்தாலியோஅல்ல தஞ்சாவூர் திருச்சி கும்பகோணம் இங்கே எல்லாம் சைக்கிளில் நான் சுற்றாத பழைய புத்தக இரும்பு கடை கிடையாது பலன் பூஜ்யம் என்றும் சொல்ல முடியாது ஆனால் கொடுத்த நேரத்திற்கும் பணத்திற்கும் அது பூஜ்யம் மாதிரி தான் செலவு செய்தால் என்னிடம் உள்ள புக் தான் கிடைத்ததே தவிர புதிதாக எதுவும் கிடைப்பது அரிது இருந்த போதிலும் முயற்சியை கை விடுவதாக இல்லை இந்த தேடல் இப்படியே சென்றது வருடமாக மாடஸ்டி வெங்கடேஸ்வரன் ஆரம்பத்தில் மும்மூர்த்திகள் அவர்களுக்கு பின்னால் அவர்களுடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று நினைத்தோம் ஆனால் ஸ்பைடரும் ஆர்ச்சியும் வந்து கலக்கினார்கள் அதற்கு அப்புறம் யாரும் இல்லை என்றிருந்தபோது டெக்ஸும் டைகரும் வந்து அதகளம் புரிந்தனர் டைகர் இடத்தை யாராலும் நிரப்ப வாய்பில்லை என்று நினைத்தபோது சென்ற வருடம் வாம்மா மின்னல் என்றபடி பௌன்சர் வந்து சென்றுவிட்டார் இனி லார்கோ ஷெல்டனுக்கு அப்புறம் ஒரே இருட்ட இருக்குதே அதிரடியாக யாரை வைத்து சமாளிக்க போகிறாரோ ஆனாலும் ஏதாவது செய்வார் அது யார் என்று நண்பர்களால் யூகிக்க முடிகிறதா எனக்கு தெரியவில்லை பகலிலேயே எனக்கு பசு மாடு தெரியாது இரவில் எருமை மாடா தெரியப்போகிறது சேலம் விஜயராகவன் அது யார் என்று நண்பர்களால் யூகிக்க முடிகிறதா படிப்பது ரசிப்பது மட்டுமே நம் வேலை நமக்கெல்லாம் எது தேவைன்னு ஆசிரியருக்கு நன்கு தெரியும் முன்பை விட அதிகம் கருத்துக்களை நாம் சொல்வதால் நம் அனைவரின் ரசனை அவருக்கு பிங்கர் டிப்ல இருக்கும் முடிவெடுக்கும் வேலை அவருக்கு படித்து முடிக்கும் வேலை நமக்கு நாளை நமதே ம்நமதே ரஜினி யை போல் ரூட்டை மாற்றினால் தான் வெற்றி காண முடியும் என்பதை உணர்ந்தேன் ஒரு வெள்ளை பேப்பரில் தேவை விற்பனை என்று விளம்பரம் போல் எழுதி அதில் ஜெராக்ஸ் எடுத்து புத்தகங்களில் வரும் வாசகர்களின் முகவரிக்கு போஸ்ட் செய்தேன் இதை படிப்பவர்களில் சிலருக்கு அந்த கடிதம் வந்து இருக்கலாம் ஞாபகம் வருகிறதா வாரத்திற்கு பிறகு ஒவ்வொன்றாக பதில் வர ஆரம்பித்தது புத்தகம் அனுப்பி வை உனக்கு வேண்டியதை அனுப்புகிறேன் என்ற ரீதியில் மீண்டும் ஏமாற தொடங்கினேன் ஒரு சிலர் நியாயமாக நடந்தனர் பலர் அடெங்கப்பா பெரிய தில்லாலங்கடி அதிலும் மதுரையை சேர்ந்த நண்பர் புத்தகத்தை பெற்று கொண்டு திருப்பதி மலையையே நெற்றியில் இட்டார் மீண்டும் தொடர்ந்தேன் ஆனால் இம்முறை கடிதத்தில் கடைசியாக சில வார்த்தைகளை சேர்த்தேன் மனசாட்சிக்கு பயந்தவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள் ப்ளீஸ் என்று என் காமிக்ஸ் பயணத்தில் எத்தனையோ மனிதர்களை சந்தித்து உள்ளேன் அதில் நான் மிகவும் நேசிக்கும் நல் முத்துக்களில் ஒன்று பதில் கடிதம் போட்டதுவுடன் எனது அணுகுமுறை பிடித்ததால் இலவசமாக புத்தகத்தை அனுப்பி வைத்தார் அவர்தான் சென்னை யை சேர்ந்த என் அருமை நண்பர் முருகன் அவர்கள் முதுகில் குத்தியது நண்பனாக இருந்தால் செத்தாலும் சொல்ல கூடாது அதுவே என் நண்பனின் கை என் தோளில் இருந்தால் கவலைகள் என் காலடியில் அப்படி பட்ட நண்பரை குறிப்பிடாமல் சென்றால் எப்படி அவருடன் ஏற்பட்ட நட்பையும் இன்னொரு முத்தைப் பற்றியும் தொடரும் பயணத்தில் பார்க்கலாம் நண்பர்களே செந்தில் சத்யா ஆர்டின் காமிக்ஸ் கூறும் நல்லுலகின் அதிமுக்கிய கனவான்கள் அனைவருக்கும் அடியேனின் வணக்கங்கள் ரெண்டுமூணு வாரங்களா எடிட்டரோட பதிவை மாத்திரம் அவசரஅவசரமா படிச்சிட்டு போட்டதோடு சரி எந்த ஒரு கமெண்ட்டையும் படிக்கவேயில்லை அதாவது எங்க தலைவர் ஸ்டைல்ல சொல்லணும்னா இங்க நான் ஒரே பிசி எட்டாந்தேதி சேலத்துல மாநாடு ஒன்பதாந்தேதி ஊட்டீல ஊர்வலம் பத்தாந்தேதி நான் எங்க இருப்பேன்னு எனக்கே தெரியலையே ரேஞ்சுக்கு பிஷியோ பிஷ்ஷ்ஷி நான் போய் கடந்த நாலைஞ்சு பதிவுகளுல இருக்குற எல்லா கமெண்ட்ஸையும் படிச்சுட்டு அட்டவணை ரிலீஸ் ஆகுறதுக்குள்ள வந்திடுறேன் வந்திடுவேன் ஓடின் தெய்வமும் புனித மானிடோவும் அருள் புரிந்தால் அதாவது கமெண்ட்ஸ் அதிகமா இல்லேன்னா சீக்கிரமே வந்திடுவேன் இல்லையில்ல பொறுமையாவே வா சீக்கிரம் வந்து மட்டும் நீ என்னெத்தை செஞ்சுடப்போறே ங்கிற உங்க மைண்ட் வாய்ஸையும் நான் கேட்ச் பண்ணிட்டேன் அப்படியெல்லாம் சுளுவா நண்பர்களை நிம்மதியா இருக்க விட்டுடுவேனா என்ன போன ஸ்பீடுல திரும்பி வருவேன் ஓ கிட் ஆர்ட்டின் சார் நீங்களும் இப்போது என்னை போலவே பிஸியோ பிஸி ஆயிட்டீங்களா மகிழ்ச்சி நெக்ஸ்ட் சிங்கப்பூர் சின்ன தாவணி பஸ் ஸ்டேண்டில் சந்திப்போம் ஜான் சில்வர் காமிக்ஸ் உலகின் என் ஆதர்ஷ நாயகர்களில் ஒருவர் சிறு வயதில் என்பெயருடன் ஜான் ஸ்பைடர் என்று சேர்த்துக்கொண்டு சுற்றித் திரிந்தேன் இவரது அனைத்து கதைகளும் சூப்பராக இருக்கும் அதிலும் முத்து காமிக்ஸில் வந்த இந்த ஆகாய கல்லறை ஆஹா என்ன ஒரு அருமையான தலைப்பு இவர் கதைகளில் ஒரு ஸ்பெஷல் அது என்னவென்று என்னைவிட நன்றாக எழுதக்கூடிய நண்பர்கள் யாரவது எழுதினால் நன்றாக இருக்கும் இவர் மீண்டு ம் வருவது குறித்து மகிழ்ச்சி அடையும் பலரில் நானும் ஒருவன் ஜான் ஸ்பைடர் இத பாருடா இது கூட நல்லா இருக்கே சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ஜான் சில்வர் என்ற பெயரின் காரணம் ஜான் சில்வர் என்பதை எப்படி சில்வர் என மாற்றம் செய்தீங்க கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச பொன்ராஜ் உங்களுக்கு அறிவோ அறிவுன எல்லோரும் மாயாவி ஜானி நீரோ டெக்ஸ் மாடஸ்ட்டி மற்றும் ஸ்பைடா் என்று சிலாகித்து எழுதுகிறாா்கள் ஆனால் மு்மமூா்த்திகளில் ஒரு ஜோடி லாரன்ஸ் மற்றும் டேவிட் இருவரும் அ கொ தீ க த்திற்கு எதிராக ஏகப்பட்ட போராட்டங்களை நிகழ்த்தியுள்ளாா்கள் அதிலும் ஆரம்ப காலக்கட்டத்தில் முதலில் ஒரு சிறு சாகசம் அதனைத் தொடாந்து வேறு ஒரு சாகசம் என்று கதைகள் ஒரு வித தனி பாணியில் பயணிக்கும் அதன் பிறகு மற்ற கதைகளைப் போலவே மாறிவிட்டது இரும்புக்கை மாயவிற்கு செப்பு உடை மற்றும் தலைகவசத்தினை மாட்டி அழகுபாா்த்த படைப்பாளிகள் அதே போன்று டேவிட்டிற்கு அளப்பறிய உடல் வலுவும் லாரன்ஸ் க்கு அளபறிய மன திறனு்ம் அளித்தாா்கள் ஆனால் ஜானி நீரோவிற்கு ஒன்று வழங்கவில்லை டேவிட் லாரன்ஸ் உடன் சோ்ந்துதான் சாகசம் புாிவாா் சிறைகைதிகள் மற்றும் பனிக் கடலில் பயங்கர எாிமலை இரண்டிலும் அவரது தனித்தன்மை தொியவரும் அதுவும் திடமான டேவிட் சிறைக் கைதிகளில்இளகுவான மனம் உள்ளவராக சித்தாித்திருப்பாா்கள் இவா்கள் இருவரும் அழிவு கொள்ளை தீமை கழுகத்திற்கு எதிராக போராட்டங்கள் அனைத்துமே சிறப்பாக இருக்கும் மாயாவியும் அ கொ தீ க த்திற்கு எதிராக போராட்த்தில் இறங்கியிருப்பாா் மாயாவிற்கு தலைவா் நிழற்படைத் தலைவா் ஜானிநீரோவிற்கு தலைவா் கா்னல் ஜேக்கப் ஆனால் லாரன்ஸ் டேவிட் க்கோ தலைவா் என்று ஒருவா் இல்லாமல் ஒரு அமைப்பினை உருவாக்கிக இருப்பாா்கள் அது பின்னா் செம்மலா் என சில கதைகளில் வரும் ஆன்லைனில் வாங்கிட ஒரு அட்டவணைத் திருவிழா ஒரு அட்டவணையின் கதை ஒரு வெள்ளி ரிலீஸ் அக்டோபரை நோக்கி பெருமூச்சே மிச்சம் ஒரு ஒப்பித்தல் படலம் ஞாயிறு ரமணா பாணியினில் நண்பர்களே வணக்கம் புது வருஷமும் புலர்ந்து மூன்று வாரங்களும் ஓட்டமெடுத்து விட்டாச்சு முன்னணியில் நிற்போருக்கு நம்பிக்கைகளோடு தடுப்பூசி கடைசி க்வாட்டர் நண்பர்களே வணக்கம் செப்டெம்பரின் முக்கால்வாசி கடந்து சென்றிருக்க ஆண்டின் கடைசிக் க்வாட்டர் நம் முன்னே கடைசிக் க்வாட்டர் சின்னச் சின்ன ஆசைகள் நண்பர்களே வணக்கம் சான் பிரான்சிஸ்கோவுக்கும் லாஸ் ஏஞ்சலீசுக்கும் மத்தியில் ஒன்றரை நாட்களாய்த் தெறிக்கும் பயணங்களில் இங்கே ஒரே பிசி
சாகாவின் புதிய மில்லியன் பயணக் கப்பல் ஸ்பிரிட் ஆஃப் டிஸ்கவரி டோவரில் பயணிக்கிறது அங்கு டச்சஸ் ஆஃப் கார்ன்வால் பெயரிடப்படும் பயணம் முக்கிய வகைகள் அரிய பொழுதுபோக்கு மக்கள் அரிய நகைச்சுவை வரலாறு அரிய விலங்குகள் பாப் கலாச்சாரம் அரிய செய்தி அனைத்து செய்திகளும் மற்றவை அரிய வாழ்க்கை கட்டுக்கதை அல்லது உண்மை இடங்கள் சாகாவின் புதிய மில்லியன் பயணக் கப்பல் ஸ்பிரிட் ஆஃப் டிஸ்கவரி டோவரில் பயணிக்கிறது அங்கு டச்சஸ் ஆஃப் கார்ன்வால் பெயரிடப்படும் முக்கிய பயணம் சாகாவின் புதிய மில்லியன் பயணக் கப்பல் ஸ்பிரிட் ஆஃப் டிஸ்கவரி டோவரில் பயணிக்கிறது அங்கு டச்சஸ் ஆஃப் கார்ன்வால் பெயரிடப்படும் பயணம் இன் புதிய ஸ்பிரிட் ஆஃப் டிஸ்கவரி பயணக் கப்பல் டோவரில் சென்றது பெயரிடும் விழாவை டச்சஸ் ஆஃப் கார்ன்வால் நடத்துகிறார் ராயல் ஜூலை அன்று விழாவை நடத்துவார் ஒரு தசாப்தத்தில் டோவரில் செய்யப்பட்ட முதல் பெயரிடும் நிகழ்வு ஸ்பிரிட் ஆஃப் டிஸ்கவரிக்கு அடுத்த வாரம் கார்ன்வால் டச்சஸ் பெயரிடுவார்கடன் பிஏ பத்திரிகை சங்கம் அடி மீட்டர் கப்பல் பின்னர் ஜூலை அன்று பிரிட்டிஷ் தீவுகளைச் சுற்றிப் பயணிக்கத் தொடங்கும் இரண்டாவது சாகா கப்பல் ஸ்பிரிட் ஆஃப் அட்வென்ச்சர் இல் தொடங்கப்படும் இது இரண்டு கப்பல்களில் மில்லியன் முதலீட்டில் ஒரு பகுதியாகும் ஸ்பிரிட் ஆஃப் டிஸ்கவரி இந்த ஆண்டு பயணிகளுடன் பயணிக்கும் ஒவ்வொருவரும் பால்கனி காட்சியுடன் ஒரு கேபினில் தங்க முடியும் வடிவமைப்பு அலங்காரம் மற்றும் உணவருந்தும் போது கப்பல்கள் தங்களை தனியாக பிரிட்டிஷ் என்று அழைத்துக் கொள்கின்றன ஏறக்குறைய சதவீத கேபின்கள் ஒற்றைப் பயணிகளுக்காக உருவாக்கப்பட்டவை சில புதிய ஆன் போர்டு வசதிகள் மற்றும் அம்சங்களில் மேலே உள்ள வாட்டர் ஸ்பா மற்றும் ஜூல்ஸ் ஹாலண்டுடன் இணைந்துள்ள இசை அரங்கம் ஆகியவை அடங்கும் அறைகளில் சதவீதம் தனி பயணிகளுக்கான அறைகளாக இருக்கும் புதிய கப்பலில் பயணிகள் வரை பயணம் செய்யலாம்கடன் அனைத்து அறைகளிலும் பால்கனி கேபின்கள் உள்ளன நிறைய உணவு மற்றும் பானங்கள் பிரிட்டனில் இருந்து பெறப்படுகின்றன கப்பலில் பிரிட்டிஷ் கலைஞர்களின் க்கும் மேற்பட்ட கலைப்படைப்புகள் உள்ளன கப்பலில் உள்ள உணவு மற்றும் பானங்களில் பெரும்பாலானவை உள்நாட்டில் இருந்து பெறப்படுகின்றன பாதிக்கு மேல் டெவோன் மற்றும் ஸ்காட்லாந்தில் இருந்து பாலாடைக்கட்டிகள் உள்ளன அதே சமயம் இறைச்சிகள் மற்றும் பீர்கள் ஐச் சுற்றியுள்ளன சாகா டிராவல் தலைமை நிர்வாக அதிகாரி ராபின் ஷா புதிய கப்பலை பிரிட்டனின் கடலில் உள்ள முதல் பூட்டிக் ஹோட்டல் என்று அழைத்தார் கப்பல்கள் வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்றன ஒவ்வொரு துறைமுகத்திலும் என்ன பார்க்க வேண்டும் அல்லது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த ஏதேனும் கேள்விகள் அல்லது ஆலோசனைகளுடன் பயணிகளுக்கான புதிய வரவேற்பு சேவையுடன் ஸ்பிரிட் ஆஃப் டிஸ்கவரி கப்பல்கள் ஒரு நபருக்கு இலிருந்து தொடங்கும் நோர்போக் மற்றும் நெதர்லாந்தைச் சுற்றி நான்கு இரவு பயணத்திற்கு மற்றொரு சாகா கப்பல் சாகா சபையர் பக்கவாட்டு காரில் ஓட்டுவது மற்றும் மதேரா வழியாக பயணிக்கும்போது உள்ளூர் திராட்சைத் தோட்டங்களில் குடிப்பது போன்ற சிறந்த அனுபவத்தை வழங்குகிறது தங்கள் அடுத்த பயணத்தில் பணத்தை மிச்சப்படுத்த விரும்பும் பிரித்தானியர்கள் பழைய கப்பலை முன்பதிவு செய்ய வேண்டும் அது புதுப்பிக்கப்பட்டது புத்தம் புதிய கப்பல் அல்ல இது பெரும்பாலும் மலிவானதாக இருக்கலாம் ஆனால் இன்னும் தூய்மையான மற்றும் நவீன உள்துறை மற்றும் அனுபவமாக இருக்கும் வகைகள் அரிய பொழுதுபோக்கு மக்கள் அரிய நகைச்சுவை வரலாறு அரிய விலங்குகள் பாப் கலாச்சாரம் பிரபல பதிவுகள் என்ஹெச்எஸ் ஊழியர் பற்றாக்குறையுடன் போராடுவதால் உயிர் காக்கும் புற்றுநோய் சிகிச்சை ரேஷன் செய்யப்படுகிறது செய்தி ஆரோக்கியம் அமேசானில் ப்ளேஹவுஸ் தோன்றியது மற்றும் விமர்சகர்கள் உதவ முடியாது ஆனால் அதை கேலி செய்கிறார்கள் அரிய நகைச்சுவை ஊழியர்கள் கடைசி நிமிட உடன்பாட்டை எட்டியதால் மிகப்பெரிய ஸ்பானிஷ் விமான நிலைய வேலைநிறுத்தம் நிறுத்தப்பட்டது பயணம் இல் நீங்கள் வாங்கக்கூடிய சிறந்த நீர்ப்புகா சைக்கிள் ஓட்டுதல் ஜாக்கெட் சூரியன் தேர்ந்தெடுக்கிறது புதிய உட்புற நீர் பூங்கா டெர்பிஷயரில் ஸ்லைடுகள் ஸ்விம் அப் பார் மற்றும் மிதக்கும் லாட்ஜ்களுடன் திறக்கப்படும்
இயக்குநர் சாய் செல்வா நடிகர் மைக்கேல் தங்கத்துரை நடிகை ஜிஷ்னு மேனன் வார்டு டீஸர் வார்டு திரைப்படம் வார்டு படத்தின் திகில் பரபரப்பு சஸ்பென்ஸ் கலந்த டீஸர்
கொங் கொங் விவகாரம் சீனாவுக்கும் மேற்குலகத்திற்குமிடையிலான அடுத்த கட்ட மேதலுக்கான பாதை வேல்ஸ் இல் இருந்து அருஸ் முகப்பு செய்திகள் ஆய்வுகள் நிகழ்வுகள் காணொளிகள் வார இதழ்கள் நேர்காணல்கள் ஆசிரியர் தலையங்கம் முகப்பு செய்திகள் ஆய்வுகள் நிகழ்வுகள் காணொளிகள் வார இதழ்கள் நேர்காணல்கள் ஆசிரியர் தலையங்கம் அண்மைச் செய்திகள் தீவகத்தில் அமைக்கப்படும் சூரிய சக்தி மின் திட்டத்தை இடைநிறுத்தியது சீனா இந்திய இழுவைப்படகுகளின் அத்து மீறிய வருகைக்கு எதிராக மன்னாரில் போராட்டம் கிழக்கு பல்கலை ஊழியர் சங்கம் மௌன தொழிற்சங்கப் போராட்டம் சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கு ஜேர்மன் உதவவேண்டும் யாழ் மாநகர முதல்வர் அவுஸ்திரேலிய அரசால் ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதிகள் விடுதலை ஆய்வுகள் கொங் கொங் விவகாரம் சீனாவுக்கும் மேற்குலகத்திற்குமிடையிலான அடுத்த கட்ட மேதலுக்கான பாதை வேல்ஸ் கொங் கொங் விவகாரம் சீனாவுக்கும் மேற்குலகத்திற்குமிடையிலான அடுத்த கட்ட மேதலுக்கான பாதை வேல்ஸ் இல் இருந்து அருஸ் கோவிட் விவகாரம் அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையிலான மோதலை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது கொங் கொங் விவகாரம் அதனை மேலும் சிக்கலாக்கியுள்ளது பிரித்தானியாவின் ஆட்சியின் கீழ் இருந்த கொங் கொங் நாடு சீனாவிடம் ஆம் ஆண்டு கையளிக்கப்பட்டபோது ஒரு நாடு இரு நிர்வாகம் என்ற ஒப்பத்தத்தின் அடிப்படையில் கையளிக்கப்பட்டிருந்தது சீனாவின் கீழ் இருக்கும் இந்த நிர்வாகமானது வருடங்கள் மட்டுமே செல்லுபடியானது அதன் பின்னர் தனிநாடாக பிரிந்து செல்ல கொங் கொங் உரித்துடையது எனினும் சீனா அதனை அனுமதிக்குமா என்ற அச்சம் அமெரிக்காவுக்கு உண்டு எனினும் தாய்வானுக்கு அண்மையில் தென்சீனக் கடலின் முக்கிய கேந்திரப் புள்ளியில் அமைந்துள்ள கொங் கொங்கை தனிநாடாக மாற்றுவதன் மூலம் சீனாவின் கொல்லைப்புறத்தில் ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்த மேற்குலகம் விரும்புகின்றது எனவே தான் அங்கு உள்ள அமைப்புக்களை ஊக்குவித்து தனிநாட்டுக் கோரிக்கையை வலுப்படுத்திவருகின்றன ஆனால் இந்த நகர்வைக் கட்டுப்படுத்த சீனா தனது நடவக்கைகளை காலத்திற்கு காலம் இறுக்கிவந்தாலும் தற்போது மிகவும் தீவிரமான நடவடிக்கையில் அது இறங்கியுள்ளது அதன் வெளிப்பாடுதான் கடந்த மாதம் ஆம் நாள் கொண்டுவரப்பட்ட புதிய பாதுகாப்புச் சட்டமாகும் இந்த சட்டத்தின் பிரகாரம் பிரிவினையை கோருவது பயங்கரவாத நடவடிக்கைகள் வெளிநாடுகளுடன் அல்லது அமைப்புக்களுடன் சட்டவிரோத தொடர்புகளை பேணுவது என்பன தடைசெய்யப்பட்டுள்ளது சீனாவின் இந்த சட்டம் அமெரிக்காவின் திட்டத்திற்கு பலத்த அடியாக வீழ்ந்ததால் அமெரிக்கா உட்பட மேற்குலகம் அதிக சினமடைந்துள்ளன கொங் கொங் இல் ஜனநாயகம் வேண்டும் என குரல்கொடுத்துவரும் அமைப்புக்களும் கடந்த ஆம் நாள் கொங் கொங்கில் இந்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தன இந்த ஆர்ப்பாட்டத்தில் தனிநாட்டுக் கோரிக்கைக்கான கொடியை தாங்கியவர் உட்பட பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் சீனாவின் புதிய சட்டமானது கொங் கொங்கில் உள்ளவர்களின் நடவடிக்கையை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கையை மேற்கொள்வதற்கான உத்தரவை கொங் கொங் அரசுக்கு வழங்கும் அதிகாரம் கொண்டது சீனாவின் நடவடிக்கை என்பது ஒரு நாடு ஒரு நிர்வாகம் என்ற அடிப்படையை கொண்டது என அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளதுடன் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்திய சீனா அதிகாரிகளுடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கொங் கொள் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கும் சட்டமூலத்தையும் அமெரிக்காவின் காங்கிரஸ் சபை நிறைவேற்றியுள்ளது சீனாவுக்கு எதிராக தனது எதிர்ப்பை தெரிவித்த பிரித்தானியா பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கொங் கொங்கில் உள்ள மில்லியன் பிரித்தானிய கடவுச்சீட்டுள்ள மக்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கவும் முன்வந்துள்ளார் பிரித்தானியா மற்றும் அமெரிக்காவின் நடவடிக்கை தொடர்பில் சினமடைந்துள்ள சீனா தகுந்த பதிலடி வழங்கப்படும் என எச்சரித்துள்ளதுடன் தனக்கு ஆதரவான நாடுகளையும் கியூபா தலைமையில் தயார்படுத்தியுள்ளது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சீனாவின் பாதுகாப்புச் சட்டத்தை ஆதரரித்து அறிக்கை வெளியிட்டுள்ள கியூபா அதற்கு ஆதரவாக நாடுகளையும் அணிதிரட்டியுள்ளது அதில் ஆபிரிக்க நாடுகள் உள்ளன பிரித்தானியாவின் சீனாவுக்கு எதிராக நடவடிக்கைக்கு ஆதரவாக நாடுகளே கையை தூக்கியுள்ளன அவற்றில் பல ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகள் ஐரோப்பிய நாடுகளிலும் பல அரை மனதுடன் தான் ஆதரவு தந்துள்ளதாக அனைத்துலக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது அதாவது கடந்த வருடங்களில் ஆபிரிக்காவில் உள்ள பல நாடுகளை பிரித்தானியா சீனாவிடம் இழந்துள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது கியூபாவின் நடவடிக்கை என்பது உலக ஒழுங்கில் ஏற்பட்டுள்ள பிரிவினையை தெளிவாக்கட்டுகின்ற அதேசமயம் ஆசியப் பிரந்தியத்தில் ஆயுதப்போட்டியியையும் விரிவுபடுத்தியுள்ளது தனது பாதுகாப்பு செலவீனத்திற்கு மேலும் பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது அவுஸ்திரேலியா நீண்டதூர ஏவுகணைகள் சைபர் தாக்குதல் பாதுகாப்பு பொறிமுறைகள் என்பவற்றை மேம்படுத்தப்போவதாக தெரிவித்துள்ள அவுஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்கொட் மொறிசன் அமெரிக்க கடற்படையிடம் இருந்து கப்பல்களை தாக்கி அழிக்கும் நீண்டதூர ஏவுகணைகளையும் கொள்வனவு செய்யப்போவதாக தெரிவித்துள்ளார் அதன் பெறுமதி மில்லியன் டொலர்களாகும் அவுஸ்திரேலியாவின் இந்த நடவக்கை என்பது இந்திய பசுபிக் பிராந்தியத்தில் உருவாகியுள்ள போர் பதற்றத்தின் அறிகுறியாகும் என அவுஸ்திரேலியா தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தலைவர் றோறி மெட்கவ் தெரிவித்துள்ளார் சீனாவின் தற்போதைய நடவடிக்கையை தொடர்ந்து கொங் கொங்கில் இயங்கிவந்த இற்கு மேற்பட்ட அமைப்புக்கள் தாம் தமது அமைப்பை கலைத்துள்ளதாக தெரிவித்துள்ளன இந்த அமைப்புக்கள் தனநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து ஜனநாயகப் போராட்டங்களை மேற்கொண்டுவந்தவையாகும் இதனிடையே ஆம் ஆண்டு வூகான் நகரத்தில் ஏற்பட்ட கலவரத்தை தனது கடுமையான நடவடிக்கைகள் மூலம் அடக்கிய செங் ஜன்ஜியாங் என்பவரை சீனா தற்போது கொங் கொங் இன் புதிய பாதுகாப்புத் துறை தலைவராக நியமித்துள்ளது அதாவது சீனாவுக்கும் மேற்குலகத்திற்கும் இடையிலான முரன்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் உலக ஒழுங்கிலும் இரு தரப்புக்கும் ஆதரவான அணிகள் உருவாகி வருகின்றன ஆசியப் பிராந்தியத்தை மையமாகக் கொண்டு உருவாகிவரும் இந்த முனைவாக்கம் ஆசியாவில் உள்ள பல நாடுகளின் தலைவிதிகளை மாற்றி எழுதும் வல்லமை கொண்டதாகவே எதிர்காலத்தில் இருக்கப்போகின்றது அங்கு ஒரு அமைதி ஏற்படுவது என்பது விரைவில் சாத்தியமற்றது என்பதையே அண்மைய சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன அதற்கு சிறந்த மற்றுமொரு உதாரணமாகவே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் இடம்பெற்ற அண்மைய மோதல்களும் அமைந்திருந்தன எனவே சிறீலங்கா அரசின் நிலையும் ஒரு மிகவும் நெருக்கடியான கட்டத்திற்குள் தான் எதிர்காலத்தில் தள்ளப்படும் சாத்தியங்கள் உள்ளன அதன் விளைவுகள் என்ன என்பதை தமிழ் தரப்புக்கள் நன்கு ஆய்வு செய்து அதற்கு ஏற்ப தம்மை தயார்ப்படுத்துவது தற்போதைய தேவையாகின்றது தமிழ் தேசிய பரப்பில் சிறுபான்மை என்ற பதத்தை பயன்படுத்தாதீர் நேரு குணரெட்ணம் இயக்கச்சி பகுதியில் குண்டுவெடிப்பில் காயமடைந்தவர் மரணம் ஆர்த்தி செய்திகள் தீவகத்தில் அமைக்கப்படும் சூரிய சக்தி மின் திட்டத்தை இடைநிறுத்தியது சீனா செய்திகள் இந்திய இழுவைப்படகுகளின் அத்து மீறிய வருகைக்கு எதிராக மன்னாரில் போராட்டம் செய்திகள் கிழக்கு பல்கலை ஊழியர் சங்கம் மௌன தொழிற்சங்கப் போராட்டம் இணைந்திருங்கள் அதிகம் பார்க்கப்பட்டவை ஆய்வுகள் நந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் சேது செய்திகள் பறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள் சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல் செய்திகள் இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது நேர்காணல் பேராசிரியர் சி பத்மநாதன் ஆய்வுகள் இறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை அருண்மொழி இலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும் ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும் தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்
நடிகர் இயக்குனர் சுந்தர் சி நடித்துள்ள படங்களில் இது ஒரு வித்தியாசமான படம் கம்பீர முறுக்கு மீசையுடன் போலீஸ் அதிகாரியாக வரும் சுந்தர் சியின் பார்வை அபாரம் இருட்டு தமிழ் திரைப்பட விமர்சனம் நடிகர்கள் சுந்தர் சி சாக்ஷி சவுத்ரி தன்ஷிகா விமலாராமன் யோகி பாபு மற்றும் பலர் தயாரிப்பு ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்ட்மென்ட் இயக்கம் வி இசட் துரை இசை கிரிஷ் வெளியான நாள் டிசம்பர் நேரம் மணிநேரம் நிமிடம் ரேட்டிங் இருளும் தனிமையும் உங்களை பயமுறுத்துமானால் இந்த இருட்டு நிச்சயம் மிரட்டும் இஸ்லாமிய மக்களும் அவர்களின் நம்பிக்கைகளும் எனச்சொல்லி பின்னப்பட்டிருக்கும் கதை ஒலிக்கும் மந்திரங்களும் தனித்துவமான இசையும் காட்சிக்கு காட்சி அச்சம் விதைக்கின்றன முன்னொரு காலத்தில் துாக்கிலிடப்பட்டவர்களின் ஆன்மாக்களால் சிஹாபுரா ஹள்ளி மக்களுக்கு பேராபத்து வர காவல் அதிகாரியாக காப்பாற்ற வருகிறார் சுந்தர் சி வருபவர் நிச்சயம் தெய்வீக பிறவியாகத் தான் இருக்க வேண்டும் அதை உறுதிப்படுத்தும் விதத்தில் அவர் உடலில் ஒரு மச்சமும் இருக்க வேண்டும் எனும் மரபுப்படி அவரும் அப்படியே இருக்க துஷ்ட சக்திகள் மீதான சம்ஹாரம் துவங்குகிறது மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பின்னும் ஒலிக்கும் பாடல்கள் வெளிச்சத்தில் மறைந்து இருட்டில் புலப்படும் உருவங்கள் கதவை வெறி கொண்டு உலுக்கும் ஓசைகள் பயத்திற்கு இடையிலான காதல் முத்தங்கள் இருள் மழை இடி அலறல் என திகில் கதைக்கு தேவையான அத்தனை உருப்படிகளும் திரைக்கதையில் உண்டு இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த ஆன்மாவோட சக்தி பலமடங்கு அதிகரிக்கப் போகுது இவ்வசனமும் அது சார்ந்த காட்சியும் காலம் காலமாக திகில் படங்களில் பயன்படுத்தப்படுகிறது என்றாலும் முதன்முறையாக பார்ப்பது போல் நம் மனம் பதற்றம் கொள்வது துரை வி இசட்டின் இயக்கத்திற்கான வெற்றி கிராபிக்ஸ் பாம்பும் மீனும் பார்வைக்கு உறுத்துகின்றன பச்சை வண்ணத்தில் எரியும் நெருப்பை பார்த்து சார் அது பச்சை கலர்ல எரியுது சார் அது நிச்சயம் சாதாரண தீயா இருக்காது சார் என்றபடி வி டி வி கணேஷ் பதறுகிறார் இப்படியான ஒருசில காயங்களை கழுவி விட்டால் இருட்டு பயம் ஊட்டுகிறது இருட்டு காளான் செம திகில் இருட்டு சினிமா விமர்சனம்
நிகழ்ச்சிகள் ஒலியோடை கிறிஸ்து பிறப்பு விழா பாடல்களை உருவாக்கும் போட்டியில் கலந்துகொள்வோரைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை சிறந்ததோர் உலகம் பற்றி ஒன்றிணைந்து கனவு காண்போம் திருத்தந்தை சமுதாயப்பணியில் நம்மை முன்னிறுத்திச் செயல்பட மன உறுதியும் படைப்பாற்றல் திறனும் முக்கியமானவை கிறிஸ்டோபர் பிரான்சிஸ் வத்திக்கான் செய்திகள் கிறிஸ்து பிறப்பு விழா மற்றும் அதன் மதிப்பீடுகள் குறித்த பாடல்களை உருவாக்கும் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளோர் மற்றும் அதில் கலந்துகொள்வோரை இத்திங்கள் காலை வத்திக்கானில் சந்தித்து தன் வாழ்த்துக்களை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ் என்ற திருப்பீட அமைப்பும் என்ற அமைப்பும் இணைந்து ஏற்பாடுச் செய்துள்ள இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் இளையோரை நவம்பர் திங்கள் காலையில் சந்தித்த திருத்தந்தை இப்போட்டிக்கு ஏற்பாடு செய்தவர்கள் அதில் பங்குபெறும் இளையோர் மற்றும் இவ்விளையோருக்கு ஊக்கமளிக்கும் பல்வேறு குழுக்களுக்கு தன் வாழ்த்துக்களை வெளியிட்டார் கிறிஸ்து பிறப்பு மற்றும் அதன் மறையுண்மைக்கு நம்மை இட்டுச்செல்லும் திருவருகைக் காலத்தின் முகப்பில் இருக்கும் நாம் பெருந்தொற்றின் காரணமாக இக்கொண்டாட்டங்களின் ஒளி மங்கிப்போயிருந்தாலும் கருணை மற்றும் கனிவின் விழாவாக இருக்கும் கிறிஸ்து பிறப்பின் காலத்தில் நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்வோம் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ் உறுதியான அன்பின் பல்வேறு செயல்பாடுகளைப் பகிர்வதில் கிறிஸ்துப் பிறப்பு விழா தன் ஒளியைக் கொண்டுள்ளது என இளையோரிடம் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இதே உணர்வுடன் திருஅவை உடன்பிறந்த நிலையை உள்ளடக்கிய மனிதகுலத்தை கட்டியெழுப்புவதற்கு உதவி வருகிறது என எடுத்துரைத்தார் சமுதாயப் பணியில் நம்மை முன்னிறுத்திச் செயல்பட மன உறுதியும் படைப்பாற்றல் திறனும் முக்கியமானவை என்பதையும் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை கிறிஸ்து பிறப்பு விழாவுக்கென எழுதப்படும் பாடல்கள் மனிதகுல வளர்ச்சிக்கு உரமூட்டுவதாக சிறந்ததோர் உலகம் பற்றி ஒன்றிணைந்து கனவு காண உதவுவதாக இருக்கட்டும் என வாழ்த்தினார் இவ்வுலகின் செல்வங்கள் வெறுமையாக இருந்து வெறுமையையே உருவாக்குகின்றன என்பதால் நம் பொதுவான இல்லமாகிய இவ்வுலகின் அனைத்துப் படைப்புக்களின் மற்றும் வரலாற்றின் அழகோடு இணைந்து இறைவனின் மகிமையைப் புகழ்ந்து பாடுவோம் என்ற அழைப்பை விடுத்து தன் உரையை நிறைவுசெய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்
முழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ தி மு கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி பி ஐ சி பி எம்தி மு கபா ஜ கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் தீர்ப்புகள்போலீசு பிரிட்டிஷால் உருவாக்கப்பட்ட கங்காணி பதவியே ஆளுநர் பதவி விவசாயிகள் போராட்டம் வெற்றி சாதனையும் கற்றுக்கொள்ள வேண்டியவையும் பருவநிலை மாற்றமும் முதலாளித்துவ அரசுகளின் மாநாடும் மூழ்கியது சென்னை அதிமுக கொள்ளைக் கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய் கருத்தாடல் முழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர் பெண்கள் முழுக் கால்ச்சட்டை பேண்ட் அணிந்த போராட்ட வரலாறு சிந்துஜா பெண்ணின் உடல் அதிகாரம் செலுத்துவதற்கானதல்ல ஆடை அவமதிப்பதற்கானதல்ல பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறையும் நிறப் பாகுபாடும் ரோந்து போலீசு கையில் துப்பாக்கி வழங்கலாமா கருத்துக் கணிப்பு சமூகம் முழுவதும்அறிவியல் தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் இளைஞர்விளையாட்டு நம் எதிர்ப்புணர்வை மடைமாற்றும் வடிகால் கிராம தெய்வங்களைப் பற்றிய கதைப்பாடல்கள் நா வானமாமலை ஆங்கிலேயர் காலத்திய நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் நா வானமாமலை காந்தியைக் கொன்ற துப்பாக்கி யாருடையது வீடியோ உழவர் படை ஒன்று நீ கட்டிடு தருமபுரி மக்கள் அதிகாரம் பாடல் கலை என்பது கலைக்காக அல்ல மக்களுக்காக தோழர் கதிரவன் வீடியோ என் வீட்டில் உப்பு இப்போது சிவப்பு நிறமாக தெரிகிறது தோழர் ஸ்ரீரசா பறிபோகும் கூலித் தொழிலாளர்களின் உரிமைகள் லஜபதிராய் வீடியோ உப்பிட்டவரை ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி பாகம் வீடியோ களம் முழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம் எழுவர் விடுதலை இஸ்லாமிய கைதிகள் விடுதலைக்கு அநீதி இழைக்கும் திமுக அரசு நவம்பர் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் மக்கள் அதிகாரம் பங்கேற்பு விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு பணிந்தது பாசிச மோடி அரசு மக்கள் அதிகாரம் ஜம்புக்கல் மலையை மணல் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்போம் புதிய ஜனநாயகம் முழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார் இல்லம் தேடிவரும் கல்வி கல்வியில் நடத்தப்படும் கரசேவை உ பி லக்கிம்பூர் கேரி படுகொலை காவி பாசிஸ்டுகளின் சதி வரியில்லா புகலிடங்கள் முதலாளித்துவத்தின் கள்ளக் குழந்தை இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாகும் அசாம் இதர முழுவதும் கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா அமெரிக்கா ஜனநாயகத்தை தூக்கிப் பிடித்த போது கேலிச் சித்திரங்கள் விவசாயிகள் மீதான மோடியின் ஒடுக்குமுறையை உலகம் மறக்காது கருத்துப்படங்கள் மாட்டுக்கு ஆம்புலன்ஸ் மனிதனுக்கு குப்பை வண்டி அரங்கேறும் இந்துராஷ்டிரம் கருத்துப்படம் மோடி விவசாயிகளுக்கு புரியவைக்க முயற்சித்த போது கருத்துப்படம் சந்தா முகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் கர்நாடக கரசேவையும் எடியூரப்பாவின் நிர்வாணபிஷேகமும் மறுகாலனியாக்கம்ஊழல்இதரகேலிச் சித்திரங்கள்கட்சிகள்பா ஜ க கர்நாடக கரசேவையும் எடியூரப்பாவின் நிர்வாணபிஷேகமும் வினவு நல்லொழுக்க சீலர்களும் உண்மையைத் தவிர வேறு எதையும் பேசி அறியாதவர்களும் நமது பாரம்பரியமிக்க ஹிந்து தர்மத்தின் காவலர்களும் சாட்சாத் ஸ்ரீராமபிரானின் கலியுக அவதாரமுமான சங்க பரிவாரின் காக்கி டவுசர் கர்நாடகத்தில் கந்தல் கந்தலாக கிழிந்து தொங்குகிறது குமாரசாமியின் தலைமையில் ரத யாத்திரை கிளம்பிய பாரதிய ஜனதா எம் எல் ஏக்கள் மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் தேசமெல்லாம் சுற்றியபின் கடைசியில் இராவணன் ஆட்சிதான் இது கருணாநிதி பற்றிய வேதாந்தியின் வர்ணனை எங்கள் உயிருக்குப் பாதுகாப்பு என்று சென்னையில் சரணடைந்தது குறித்த வரலாறு வாசகர்கள் அறிந்ததே ஆரண்ய காண்டம் கிஷ்கிந்தா காண்டம் சுந்தர காண்டம் எல்லாம் நடந்து யுத்த காண்டமும் நேற்று முடிந்து விட்டது பட்டாபிஷேகம்தான் பாதியில் தொங்கிக் கொண்டிருக்கிறது பாரதிய ஜனதாவை ஆதரிக்கும் என் ஆர் ஐ அம்பிகள் இந்த காண்டத்தை என்று புரிந்து கொண்டு எங்களை ஹிந்து விரோதிகளாக சித்தரிக்கும் அபாயம் இருப்பதால் இது சமஸ்கிருத காண்டம் என்று தெளிவு படுத்திவிட்டு விசயத்துக்கு வருகிறோம் நேற்று கர்நாடக சட்டமன்றத்தில் சட்டையைக் கிழித்துக் கொண்டு எம் எல் ஏக்கள் நிற்கும் காட்சியை ஒளிபரப்பிய ஆங்கில சானல்கள் கான்ஸ்டிடியூசனல் கிரைசஸ் என்று அதனை வர்ணித்தன சட்டை கிழிந்ததனால் அரசியல் சட்டமே கிழிந்து விடுவதில்லை அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்று கவுண்டமணி சொல்வது நம் காதில் விழுகிறது இருப்பினும் மேற்படி சட்டை கிழிந்த எம் எல் ஏக்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதுதான் இப்போது பிரச்சினை முன்னொரு காலத்தில் அயோத்தி மாநகரத்தில் பாப்ரி மஸ்ஜித் என்றொரு கட்டிடம் இருந்தது டிசம்பர் அன்று அதனை சங்கபரிவாரம் இடித்துத் தள்ளியவுடன் அந்த இடத்துக்கு சர்ச்சைக்குரிய இடம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது மேற்படி சர்ச்சைக்குரிய இடம் ராமன் பிறந்த இடம் என்று ஹிந்துக்கள் அதாவது பாரதிய ஜனதா நம்புவதால் அதை அவர்கள் பெயருக்கு எழுதி போன மாதம் தீர்ப்பளித்தது அலகாபாத் உயர்நீதிமன்றம் டிசம்பர் போலவே அக்டோபர் ம் இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாள் நேற்று அதிகாலை மணிக்கு பாரதிய ஜனதா எம் எல் ஏக்களையும் எடியூரப்பா அரசை முன்னர் ஆதரித்த சுயேச்சை எம் எல் ஏக்களையும் பதவி நீக்கம் செய்தார் சபாநாயகர் அதிகாலை மணிக்கு சட்டமன்றம் கூடிவிட்டதோ என்று வாசகர்கள் எண்ண வேண்டாம் அவாளுக்கு தேவைப்படும்போது சட்டசபை அதிகாலையில் கூடும் உயர்நீதிமன்றம் நடுராத்திரியிலும் பெயில் கொடுக்கும் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே இப்போது இந்த பேருடைய ஸ்திதி என்ன என்பது குறித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது அரசியல் சட்டப்புலியும் முன்னாள் அட்டார்னி ஜெனரலுமான சோலி சோரப்ஜியை இறக்கியிருக்கிறது பாரதிய ஜனதா நேற்று இரண்டரை மணிநேரம் விவாதம் நடந்ததாம் இன்று காலை முதல் நீதிமன்றத்தில் விவாதம் நடக்கிறது அந்த பேரும் தலா கோடி வாங்கிவிட்டார்கள் அவர்கள் என் அரசுக்கு எதிராகத்தான் வாக்களித்திருப்பார்கள் என்பது என் நம்பிக்கை அதனால் அவர்களை இடித்து விட்டேன் என்கிறார் எடியூரப்பா பணம் வாங்கினோமா இல்லையா என்பது பிரச்சினை இல்லை கட்சிக் கொறடாவை மீறி வாக்களிக்காத போது எந்த ஆதாரத்தின் அடிப்படையில் எங்களை இடித்தீர்கள் என்பது பாரதிய ஜனதா எம் எல் ஏக்களின் கேள்வி சுயேச்சை எம் எல் ஏக்களின் வாதம் இன்னும் சுவையானது நாங்கள் கோவிலும் அல்ல மசூதியும் அல்ல எந்தக் கட்சி வேண்டுமானாலும் கட்டிடம் கட்டக் கூடிய காலி மனையே நாங்கள் காலி மனையை சபாநாயகர் எப்படி இடிக்க முடியும் என்பது அவர்களுடைய கேள்வி இந்த பேரையும் ஓட்டுப் போட அனுமதித்து தன்னுடைய ஆட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்க எடியூரப்பா தயாராக இல்லை டிசம்பர் அன்று கடப்பாரை சேவை நடத்தி பாபர் மசூதியை சர்ச்சைக்குரிய இடமாக மாற்றியதைப் போலவே குரல் வாக்கெடுப்பு நடத்தி இடிபாடுகளின் மேல் ராம் லல்லாவை நிற்க வைத்து டென்டு அடித்து இதுதான் கோயில் என்று இரண்டு விரலைக் காட்டி விட்டார் எடியூரப்பா இப்போது நீதிமன்றம் என்ன செய்யும் ஹிந்து சமுதாயத்தின் பிரதிநிதியான எடியூரப்பாவின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து ராமஜென்ம பூமியை அவருக்கு எழுதிக் கொடுக்குமா அல்லது வழங்கும் சான்றாதாரங்களைப் பரிசீலிக்குமா இதுதான் இந்தியா தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் அரசியல் சட்ட நெருக்கடி இன்றைக்கு இப்பிரச்சினை குறித்து தலையங்கம் எழுதியிருக்கிறது தினமணி தனது அரசுக்குப் பெரும்பான்மை பலம் இல்லை என்பதும் பாஜக உறுப்பினர்கள் பேரும் சுயேச்சை உறுப்பினர்கள் பேரும் எதிரணியில் சேர்ந்து விட்டார்கள் என்பதும் தெரிந்த பிறகும் முதல்வர் எடியூரப்பா பதவியில் நீடிக்க ஏன் பிரம்மப் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டும் துணிந்து சட்டப்பேரவையை சந்தித்து வாக்கெடுப்பு நடத்தி வெற்றியோ தோல்வியோ துணிவுடன் எதிர்கொண்டிருந்தால் அவரது மதிப்பும் மரியாதையும் இமயமாக உயர்ந்திருக்குமே என்று தினமணி அங்கலாய்த்திருக்கிறது என்ன செய்வது பாபர் மசூதியில்தான் ராமர் பிறந்தார் என்பதை விவாதம் நடத்தி ஆதாரபூர்வமாக நீரூபித்திருந்தால் அத்வானியின் மதிப்பும்தான் இமயமாக உயர்ந்திருக்கும் ஆனால் டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்க முடியுமா அதற்காகவல்லவோ கடப்பாரையைக் கையில் எடுத்தார் அத்வானி எடியூரப்பாவின் மதிப்பு இமயம் போல உயர்ந்திருக்குமாம் போன வருசம் நவம்பர் மாதம் ரெட்டி சகோதரர்களிடம் சிக்கி தொலைக்காட்சி காமெராக்களின் முன்னால் கண்ணீர் விட்டு அழுதாரே எடியூரப்பா அன்றே தனது பதவியை ராஜினாமா செய்திருந்தால் அவருடைய மதிப்பு கிரானைட் மலையை விட இரண்டு அங்குலம் அதிகமாகவே உயர்ந்திருக்கும் அது எடியூரப்பாவுக்கு தெரியாதா என்ன இருப்பினும் மதிப்பு என்ற சொல்லுக்கு என்ன பொருள் பொருள் என்ற சொல்லுக்கு என்ன பொருள் இவையல்லவோ எடியூரப்பாவும் ஹிந்து சமூஹமும் எதிர்கொள்ளும் தத்துவஞானக் கேள்விகள் இந்த பிரம்ம விசாரங்களுக்கான விடைகள் ரெட்டியோபநிஷத் தில் அல்லவோ கொட்டிக் கிடக்கின்றன இராம பிரானே தேசிய நாயகன் ஹிந்து கலாச்சாரமே இந்தியக் கலாச்சாரம் ஹிந்து தர்மம்தான் ஜனநாயக பூர்வமானது என்பவையெல்லாம் சங்கபரிவாரத்தின் நம்பிக்கைகள் நேற்றைய குரல் வாக்கெடுப்பில் தனது ஆட்சி வெற்றி பெற்றுவிட்டது என்பதும்கூட எடியூரப்பாவின் நம்பிக்கைதான் பேருடைய ஸ்திதி சர்ச்சைக்குரியது என்றும் நேற்றைய குரல் வாக்கெடுப்பில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றுவிட்டது என்பதும் அத்வானி சுஷ்மா சுவராஜ் ரவி சங்கர் பிரசாத் அசோக் சிங்கால் இல கணேசன் பொன் இராதாகிருஷ்ணன் போன்றவர்கள் அடங்கிய பெரும்பான்மை ஹிந்து சமூஹம் மற்றும் ஹிந்து சமூஹத்தை வழிநடத்துகின்ற ஹிந்து தர்ம சன்ஸாத் தின் வசிஷ்டர்கள் ஆகியோர் அனைவரது நம்பிக்கை இந்த நம்பிக்கை இந்திய அரசியல் சட்டத்தின் ஆவது பிரிவின்கீழ் வருகிறது ஆவது பிரிவு என்பது மத நம்பிக்கை தொடர்பான அரசியல் சட்டப்பிரிவு ஹிந்துக்களின் நம்பிக்கை குறித்தெல்லாம் நீதிமன்றம் விசாரிக்க முடியுமா என்ன பாபர் மசூதி தொடர்பான டைட்டில் சூட்டில் பட்டா பாத்தியதையையெல்லாம் தூக்கிக் கடாசிவிட்டு ஹிந்துக்களின் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பு வழங்கியதே அலகாபாத் உயர்நீதிமன்றம் அதுதான் இனி ஹிந்துக்கள் தொடர்பான எல்லா வழக்குகளுக்கும் வழிகாட்டி விசாரிப்பதென்றால் அரசியல் சட்டத்தின் ஆவது பிரிவின் கீழ் கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த விசாரணையை நடத்தட்டும் அப்போதுதான் இந்த அரசியல் சட்ட நெருக்கடியிலிருந்து இந்தியா மீள முடியும் இந்திய அரசியல் ஹிந்து தர்மத்தினால் வழிநடத்தப்பட்டால் மட்டும்தான் நாட்டில் நல்லொழுக்கத்தையும் நிலைநாட்ட முடியும் ரெட்டி பிரதர்ஸ் வாழ்க நல்லொழுக்கம் வாழ்க குரல் ஓட்டு வாழ்க ஜெய் ஸ்ரீராம் வினவுடன் இணையுங்கள் வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற பேஸ்புக்கில் வினவு வினவை டிவிட்டரில் தொடர்க இன்ட்லியில் வினவை தொடர கூகிள் பஸ் ஸில் வினவை தொடர்க தொடர்புடைய பதிவுகள் கடப்பாறையேவ ஜெயதே அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு அயோத்தி தீர்ப்பு கார்டூன்ஸ் இராமன் தேசிய நாயகனா தேசிய வில்லனா அயோக்கியா தீர்ப்பும் வரலாறும் அசுரன் இந்திய நீதித்துறையா பார்ப்பன படித்துறையா பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் சுரங்கத் தொழில் மாஃபியாகள் நீதித்துறையை ஆள்கிறது இந்து மனச்சாட்சி குண்டு வைக்கும் இந்து தீவிரவாதிகள் முசுலீம் பிணந்திண்ணும் மோடி அரசு லவ் ஜிகாத் ஆர் எஸ் எஸ் இன் அண்டப்புளுகும் அல்லக்கையான நீதிமன்றமும் வந்தே மாதரம் அமர்நாத் சோம்நாத் கர்நாடக கரசேவையும் எடியூரப்பாவின் நிர்வாணபிஷேகமும் வினவு நமது பாரம்பரியமிக்க ஹிந்து தர்மத்தின் காவலர்களும் சாட்சாத் ஸ்ரீராமபிரானின் கலியுக அவதாரமுமான சங்க பரிவாரின் காக்கி டவுசர் கர்நாடகத்தில் கந்தல் கந்தலாக கிழிந்து தொங்குகிறது பதில் உமா பதில் நாம் ரசிக்கிறோமோ இல்லையோ எடியூரப்பா கடந்த வாரம் முழுவதும் ஆலயம் ஆலயமாக சுற்றி வந்தார் அந்த பலன் அவருக்கு கிடைத்து விட்டது எப்படியும் இன்னும் ஆறு மாதம் ஆட்சி நீடிக்கும் பதில் கர்நாடக கரசேவையும் எடியூரப்பாவின் நிர்வாணபிஷேகமும் வினவு வினவு ஏழர ஏழர எடியூரப்ப்ப்ப்பா சூப்பர் பதிவு சூப்பர் கார்டூன் பதில் போதெம்கின் செமையாக இடித்து ரைக்கிற காமெடிக் கடப்பாரைப் பதிவு பதில் விந்தைமனிதன் ஜனநாயகக் கோவணம் கிழிஞ்சி தொங்குது பதில் பதில் பதில் சர்ச்சைக்குரிய இடம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது மேற்படி சர்ச்சைக்குரிய இடம் ராமன் பிறந்த இடம் என்று ஹிந்துக்கள் அதாவது பாரதிய ஜனதா நம்புவதால் அதை அவர்கள் பெயருக்கு எழுதி போன மாதம் தீர்ப்பளித்தது அலகாபாத் உயர்நீதிமன்றம் அலகாபாத் நீதிமன்ற ம் இஸ்லாமியர்களுக்கும் சேர்த்து தான் பாகப்பிரிவினை செய்து தந்திருக்கிறது நீங்கள் எடியூரப்பாவை பற்றி பேசுவதானால் அவரைப் பற்றி மட்டும் பேசவும் தேவை இல்லாது மத நம்பிக்கைககளைப் பற்றி பேசும் வேலை வேண்டாம் இங்கு நான் சொன்னது உங்க ளுக்கு பின்னூட்டம் இட்ட உங்கள் ஜால்ராக்களுக்கும் பொருந்தும் பதில் கிருத்திகன் நான் ஜால்ரா இல்லை ஆனால் அந்தப் பாகப்பிரிவினை கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் பதில் ஜார்ஜூ புஸ் அருமையான பதிவு வினவு இந்த நாடகத்தை இதவிட அம்பலப்படுத்த வழியிருக்கான்னு தெரியல இப்ப மெஜாரிடிக்கு ம் தேதிவரைக்கும் டைம் கொடுத்திருக்காரு கவர்னர் ஆனா நீக்கிய எம் எல் ஏ பற்றிய தீர்ப்பை நீதிமன்றம் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்திருக்கு உருப்படுமா இது பதில் ஊரான் அய்யா வெங்கட்டு அது என்னங்க மத நம்பிக்கை விளக்கம் கொடுத்தீங்கன்னா விவாதிக்கலாமே ஒடுக்கப்பட்ட மக்களில் தொடங்கி பார்ப்பான் வரைக்கும் மத நம்பிக்கை ஒன்னுதானா இல்லை வேறு வேறா என்பது விளங்கும் ஊரான் பதில் மத நம்பிக்கை என்பது ஏழையாக இருந்தாலும் சரி பணக்காரனாக இருந்தாலும் சரி எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் யாராக இருந்தாலும் ஒன்று தான் கடவுளைப் போல உம்மைப் போன்றார் தங்களை தாங்களே ஒரு பெரிய அறிவு ஜீவியாக எண்ணிக்கொண்டு முட்டாள் தனமாக சில கவர்ச்சிகரமான மற்றவர்களுக்கு புரியாத வார்த்தைகளைக் கொட்டி உளருவதை நம்பி ஏமாறும் மக்கள் என்று திருந்துகிறார்களோ அன்று தான் நாடு உருப்படும் பதில் பதில் அன்பு அருமையான பதிவு எதிர்த்தரப்பான காங்கிரஸ் மஜத ஆகியோரையும் ஒரு வாங்கு வாங்கியிருந்தால் முழுமை அடைந்திருக்கும் என நினைக்கிறேன் இப்போ பிரச்சினை என்னன்னா ஒரு பக்கம் விலைபோகும் எம்எல்ஏக்களைக் கொண்டக் கட்சி பாஜக இன்னொரு பக்கம் அவர்களை விலைக்கு வாங்கும் கட்சிகள் காங்கிரஸ் மஜத ரெண்டு பக்கமுமே சரி இல்ல மக்கள் அடுத்த தடவை யாரை நம்புறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்காங்க பதில் பதில் தனி மனித மதம் போன்றவற்றின் மீதான தாக்குதல்களை நிறுத்துங்கள் அனைவருக்கும் பொதுவாக இருங்கள் எங்கே அமர்ந்து கொண்டு கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையினை விமர்சிப்பது ஆபத்தில்முடியுக்கூடும் பதில் திப்பு மிரட்டலா பதில் பதில் நண்பன் மத நம்பிக்கையை விமர்சிக்கக் கூடாதாம் ம் ம் ம் ம் ம் ம் அப்புறம் நண்பர்களே நீங்கள் செத்தவுடன் உங்கள் மனைவியை உடன்கட்டை ஏறச் சொல்வார்கள் ஆர் எஸ் எஸ் அம்பிகள் செய்யலாமா உங்கள் குழந்தைக்கு வயதில் திருமணம் செய்யச் சொல்வார்கள் செய்யலாமா அந்த குழந்தை மருமகன் இறந்து விட்டால் உங்கள் குழந்தையை மொட்டை அடித்து மூலையில் உட்கார வைப்பார்கள் செய்யலாமா இன்னும் எல்லாம் நம்பிக்கைதானே பதில் நண்பரே முதலில் மத நம்பிக்கைக்கும் மூட ந ம்பிக்கைக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்துக் கொள்ளுங்கள் இறைவன் உண்டு ராமனோ யேசுவோ அல்லது அல்லாவோ அவன் பாதம் பணிவோம் என்று நம்புவது அதற்கு ஒரு மார்க்கத்தை தேர்ந்து எடுத்து அதில் ஈடுபடுவது என்பது மத நம்பிக்கை சமூகத்திற்க்கும் மனிதத்திற்க்கும் தனது முட்டாள் தனத்தால் ஊறு செய்யும் நம்பிக்கைகள் மூட ந ம்பிக்கைகள் நீங்கள் குறிப்பிட்டவை அது போன்ற மூட நம்பிக்கைகளே இது போன்ற மூட நம்பிக்கைகளில் என்க்கும் உடன்பாடு இல்லை இந்த நிலை மாற வேண்டும் என்பதே எனது அவா பதில் பதில் மதநம்பிக்கை வேறு மூடநம்பிக்கை வேறு இந்த மத யானைகளிடம் மிதிபட்டு மக்கள் நாசமாகிப் போகிறார்களே என்ற தெளிவோடும் தீர்வோடும் சிந்தித்து எழுதப்படும் இதுபோன்ற கட்டுரைகள் எங்கே மக்களை தெளிய வைத்துவிடுமோ என்ற அச்சத்தில்தான் வெங்கட் போன்ற மூட நம்பிக்கையில் பற்றில்லாத சில அறிவுக் குடிமகன்கள் பதட்டத்துடன் இடுகையிட வந்துவிடுகின்றார்கள் நல்ல நகைச்சுவை உணர்வோடு இடப்பட்ட பதிவு வினவுக்கு பாராட்டுகள் பதில் பதிலை ரத்து செய்க உங்கள் மறுமொழியை பதிவு செய்க உங்கள் பெயரைப் பதிவு செய்க நீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க முகப்பு அறிமுகம் மின் நூல்கள் தொகுப்புகள் தொடர்புக்கு வினவை ஆதரியுங்கள்
முழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ தி மு கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி பி ஐ சி பி எம்தி மு கபா ஜ கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் தீர்ப்புகள்போலீசு பிரிட்டிஷால் உருவாக்கப்பட்ட கங்காணி பதவியே ஆளுநர் பதவி விவசாயிகள் போராட்டம் வெற்றி சாதனையும் கற்றுக்கொள்ள வேண்டியவையும் பருவநிலை மாற்றமும் முதலாளித்துவ அரசுகளின் மாநாடும் மூழ்கியது சென்னை அதிமுக கொள்ளைக் கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய் கருத்தாடல் முழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர் பெண்கள் முழுக் கால்ச்சட்டை பேண்ட் அணிந்த போராட்ட வரலாறு சிந்துஜா பெண்ணின் உடல் அதிகாரம் செலுத்துவதற்கானதல்ல ஆடை அவமதிப்பதற்கானதல்ல பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறையும் நிறப் பாகுபாடும் ரோந்து போலீசு கையில் துப்பாக்கி வழங்கலாமா கருத்துக் கணிப்பு சமூகம் முழுவதும்அறிவியல் தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் இளைஞர்விளையாட்டு நம் எதிர்ப்புணர்வை மடைமாற்றும் வடிகால் கிராம தெய்வங்களைப் பற்றிய கதைப்பாடல்கள் நா வானமாமலை ஆங்கிலேயர் காலத்திய நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் நா வானமாமலை காந்தியைக் கொன்ற துப்பாக்கி யாருடையது வீடியோ உழவர் படை ஒன்று நீ கட்டிடு தருமபுரி மக்கள் அதிகாரம் பாடல் கலை என்பது கலைக்காக அல்ல மக்களுக்காக தோழர் கதிரவன் வீடியோ என் வீட்டில் உப்பு இப்போது சிவப்பு நிறமாக தெரிகிறது தோழர் ஸ்ரீரசா பறிபோகும் கூலித் தொழிலாளர்களின் உரிமைகள் லஜபதிராய் வீடியோ உப்பிட்டவரை ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி பாகம் வீடியோ களம் முழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம் எழுவர் விடுதலை இஸ்லாமிய கைதிகள் விடுதலைக்கு அநீதி இழைக்கும் திமுக அரசு நவம்பர் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் மக்கள் அதிகாரம் பங்கேற்பு விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு பணிந்தது பாசிச மோடி அரசு மக்கள் அதிகாரம் ஜம்புக்கல் மலையை மணல் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்போம் புதிய ஜனநாயகம் முழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார் இல்லம் தேடிவரும் கல்வி கல்வியில் நடத்தப்படும் கரசேவை உ பி லக்கிம்பூர் கேரி படுகொலை காவி பாசிஸ்டுகளின் சதி வரியில்லா புகலிடங்கள் முதலாளித்துவத்தின் கள்ளக் குழந்தை இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாகும் அசாம் இதர முழுவதும் கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா அமெரிக்கா ஜனநாயகத்தை தூக்கிப் பிடித்த போது கேலிச் சித்திரங்கள் விவசாயிகள் மீதான மோடியின் ஒடுக்குமுறையை உலகம் மறக்காது கருத்துப்படங்கள் மாட்டுக்கு ஆம்புலன்ஸ் மனிதனுக்கு குப்பை வண்டி அரங்கேறும் இந்துராஷ்டிரம் கருத்துப்படம் மோடி விவசாயிகளுக்கு புரியவைக்க முயற்சித்த போது கருத்துப்படம் சந்தா முகப்பு வாழ்க்கை காதல் பாலியல் ரேப் ஸ்வயம்சேவக் ராகவ்ஜி வாழ்க்கை காதல் பாலியல் போலி ஜனநாயகம் சட்டமன்றம் கட்சிகள் பா ஜ க பார்ப்பனிய பாசிசம் பார்ப்பன இந்து மதம் ரேப் ஸ்வயம்சேவக் ராகவ்ஜி வினவு பாரதீய ஜனதா கட்சி என்கிற பெயர் ஒன்றே போதும் தரம் எளிதில் விளங்கும் இந்தப் பெயரைக் கேட்டதும் பலருக்கும் பலதும் நினைவுக்கு வரலாம் சிலருக்கு காக்கி காவி ரத்தம் கடப்பாறை போன்ற வஸ்துக்களும் சிலருக்கு ஊழல் திருட்டு கொள்ளை பிட்டுப்படங்கள் போன்ற கந்தாயங்களும் நினைவுக்கு வரக்கூடும் மொத்தத்தில் நாட்டு மக்கள் எவருக்கும் இந்தப் பெயர் மரியாதையான எதையும் நினைவூட்டும் படிக்கு அவர்கள் கட்சி நடத்தியதில்லை நாங்கள் இதை மிகைப்படுத்திச் சொல்லவில்லை அந்தக் காலத்திலிருந்து எடுத்துக் கொள்ளுங்கள் பாரதிய ஜனதாவின் அப்பனான ஆர் எஸ் எஸ் அமைப்பு வெள்ளைக்காரனின் அடிவருடி இயக்கம் அதன் நிறுவனர் ஹெட்கேவார் வெள்ளைக்காரனுக்கு ஆள்காட்டி வேலைபார்த்தவர் என்பது வரலாற்றில் அழிக்கமுடியாத எழுத்தில் எழுதப்பட்டுள்ளது இவர்களின் ஆள்காட்டி வரலாறு என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் மராட்டியத்தைச் சேர்ந்த சித்பவன் பார்ப்பனர்களின் வெள்ளை அடிவருடித்தனத்தில் வேர்கொண்டிருக்கிறது பாஜகவை தெரிந்து கொள்ளுங்கள் நாம் சமகாலத்துக்கு வருவோம் கடந்த இரு பத்தாண்டுகளில் அமுலாக்கப்பட்டு வரும் புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக தேசத்தின் வளங்கள் ஒவ்வொன்றாய்க் கூறு போட்டு விற்கப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே இதிலும் ஒரு புதிய உயரத்தைத் தொட்ட கட்சி பாரதிய ஜனதா உலகில் எங்குமே இல்லாத நடைமுறையாக பொதுத்துறைகளைத் தனியாருக்கு விற்பதற்காகவே தனியே ஒரு அமைச்சரவையை அமைத்து அமைச்சர் ஒருவரைப் பொறுப்பாக நியமித்து தனது விசுவாசத்தை நிரூபித்த கட்சி பாரதிய ஜனதா இந்த விசயத்தில் பழம் தின்று கொட்டை போட்ட காங்கிரசே மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு பெர்பாமன்ஸ் காட்டியிருக்கிறார்கள் இப்படி ஏகாதிபத்திய சேவைக்கு அடியாட்களைத் தயாரிப்பதற்காகவே ஆர் எஸ் எஸ் இயக்கத்தை நடத்தி வருகிறார்கள் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் பயிற்சி முறைகளில் தேறி வருபவர்கள் தான் பாரதிய ஜனதாவின் தலைமைப் பதவிகளை அலங்கரிக்க முடியும் ஆர் எஸ் எஸ் பயிற்சி முறைகள் என்பவை சாமானியப்பட்டவை அல்ல என்பதை வாசகர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் கடுமையான உடற்பயிற்சிகளோடு புண்ணிய பாரத தேசத்தின் பழைய புராணங்களிலும் சனாதன தத்துவங்களிலும் இந்து ஞானமரபிலும் ஆழமான பயிற்சிகளை வழங்குகிறார்கள் அந்த வகையில் புராண புருஷர்கள் தான் இன்றைய பாரதிய ஜனதா தலைவர்களின் வழிகாட்டிகள் என்று சொன்னால் அது மிகையாகாது இவ்வாறு கடுமையான பயிற்சிகளில் தேறிவரும் பாரதிய ஜனதா தலைவர்கள் களத்தில் தகத்தகாய சூரியர்களாய் மிளிர்வதை நாடு அவ்வப்போது கண்டு களித்து வருகிறது நினைவூட்டலுக்காக சில சம்பவங்களை மட்டும் பார்ப்போம் பாலாறும் தேனாறும் பாய்ந்தோடும் குஜராத் மாநிலத்தில் கடந்த ம் ஆண்டு மார்ச் மாதம் குஜராத் சட்டசபையில் நிதிநிலை அறிக்கையின் மேல் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் போது பத்திரிகையாளர் ஜனக் தாவேயின் கவனத்தை சவுத்ரி மற்றும் பரத்வாஜ் என்கிற இரண்டு பா ஜ க எம் எல் ஏக்கள் கவர்ந்துள்ளனர் கையில் ஐ பேட் கருவியை வைத்து எதைப் பற்றியோ மும்முரமாக விவாதித்துக் கொண்டிருந்த இரண்டு எம் எல் ஏக்களையும் கூர்ந்து கவனித்துள்ளார் ஜனக் அப்போது தான் விசயம் விளங்கியுள்ளது அதாவது நடந்து கொண்டிருக்கும் விவாதங்களின் சூட்டைத் தணிப்பதற்காக இவ்விரண்டு எம் எல் ஏக்களும் நீலப் படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் காவி நாயகர்கள் நீலத்திற்கும் இரசிகர்களாக இருப்பதில் ஆச்சரியமில்லை ஆபாசப் படம் என்பது பாரதத்தின் ஞான மரபின் ஆழ அகலங்களை அறியாத சிறுவர்களான நமது புரிதலுக்காக உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தை என்பதை நினைவில் கொள்க இந்துக் கோயில் சுற்றுச் சுவர்களில் தானே அந்தக்கால டைம்பாஸ் பத்திரிகையே அச்சடிக்கப்பட்டுள்ளது போகட்டும் குஜராத் பாரதிய ஜனதாவின் சாதனைகளை அதே சமயத்தில் கருநாடக பாரதிய ஜனதா விஞ்சிய சம்பவமும் நடந்தது எடியூரப்பாவையே இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த கிளையாயிற்றே கருநாடக பா ஜ க கிளை குஜராத்தில் எம் எல் ஏக்கள் என்றால் கருநாடகத்தில் அமைச்சர்கள் அதுவும் மூன்று அமைச்சர்கள் பாட்டில் கிருஷ்ணா மற்றும் லக்ஸ்மன் ஆகிய மூன்று அமைச்சர்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கருநாடக சட்டசபையில் அமர்ந்து மன அமைதிக்காக பிட்டுப்படங்கள் பார்த்த சம்பவம் பாரதத் தாயின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லைப் பொருத்துவதாக அமைந்தது இதைத் தான் ஆர் எஸ் எஸ் வாலாக்கள் தங்களது தினசரி பிரார்த்தனையின் இறுதி வரியாகச் சொல்கிறார்கள் பரம் வைபவன்யே துமே தத்ஸ்வராஷ்ட்ரம் அதாவது பாரதத் தாயே உன்னை இந்த உலகில் பரம வைபவமான நிலைக்கு உயர்த்துவேன் ராகவ்ஜி பாரதத் தாயின் புகழ் பட்டொளி வீசிப் பறக்கச் செய்யும் இந்த புண்ணிய காரியத்தில் கடந்த காலங்களில் எத்தனையோ பேர் ஈடுபட்டு இருக்கிறார்கள் பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் சஞ்செய் ஜோஷியின் சி டியையும் உமா பாரதி கோவிந்தாச்சார்யாவின் துறவுக் காதலையும் நன்றி கெட்ட இந்த நாடு வேண்டுமானால் மறந்திருக்கலாம் ஸ்வயம் சேவகர்களால் மறக்க முடியாது இவ்வாறான புண்ணிய காரியங்களைப் பட்டியலிடத் துவங்கினால் அதற்கு இந்தப் பூமிப் பந்தின் மேலிருக்கும் மரங்களையெல்லாம் காகிதமாக்கி கடல் நீரையெல்லாம் மையாக்கினாலும் முடியாது அப்படியும் மீறி முயற்சிக்க வேண்டுமானால் பட்டியல் எழுதப்படும் காகிதம் பறந்து போகாமல் பிடித்துக் கொள்ள நிலவுக்கு நான்கு ஸ்வயம் சேவகர்களை அனுப்ப வேண்டியிருக்கும் நீளம் அதிகமாயிற்றே சரி இருக்கட்டும் சார் எதுக்கு இந்தப் பழைய பெருமைகளையெல்லாம் இப்போ பேசிக்கிட்டு என்று நீங்கள் கேட்பது புரிகிறது இந்த ஆர் எஸ் எஸ் தீரர்களின் வரிசையில் தற்போது இன்னுமொருவர் சேர்ந்துள்ளார் அவரை அறிமுகம் செய்வதற்கான பீடிகை தான் இது மத்திய பிரதேச மாநில பாரதிய ஜனதா அரசின் நிதி மந்திரியாக இருந்தவர் ராகவ்ஜி வயது இளைஞர் இவரது வேலைக்கார இளைஞர் தன்னை ராகவ்ஜி ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தியதாகவும் பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்தியதாகவும் காவல் துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார் தனது புகாருக்கு ஆதாரமாக சி டி ஒன்றையும் அளித்துள்ளார் சம்பந்தப்பட்ட சி டியைப் பார்த்த சி என் என் ஐபிஎன் ராகவ்ஜி மாத்திரமின்றி அவரது சகாக்களும் அந்த இளைஞரைத் துன்புறுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கிறது விவகாரம் வெடித்த பின் கதவைத் திறந்தால் கேமரா வரும் என்கிற பௌதீக விதியைக் கூட அறியாத அப்பாவியான ராகவ்ஜியை பாரதிய ஜனதா ராஜினாமா செய்ய வைத்துள்ளது சி டியில் கண்டுள்ள செயல் குற்றமா அல்லது செயலுக்கு கட்டாயப்படுத்தியது குற்றமா என்று இன்னும் பாரதிய ஜனதா மேலிடம் தெளிவு படுத்தவில்லை என்பதையும் நாங்கள் குறிப்பிட்டு விடுகிறோம் நடுநிலைமை முக்கியமாயிற்றே ஸவ்யம் சேவகர்கள் அடுத்து பாலியல் வன்முறையில் ஆண் பெண்ணை வன்புணர்ச்சி செய்வதுதான் நமது பொதுப்புத்தியில் உறைந்திருக்கிறது ஆனால் ஒரு ஆண் அதுவும் வயதான ஆண் ஒரு இளவயது ஆணை வன்புணர்ச்சி செய்யலாம் என்று பாலியல் குறித்த நமது ரெடிமேடு பிற்போக்கு சிந்தனைகளை ராகவ்ஜி அடித்து தகர்த்திருக்கிறார் அந்த வகையில் பின்நவீனத்துவவாதிகள் இவருக்கு கடமைப்பட்டிருக்கிறார்கள் பாலியல் சிந்தனை குறித்த கலகம் அதுவும் ஒரு காவிக் கட்சியிடம் இருந்து வருகிறது என்றால் அது அடையள அரசியலின் வெற்றியல்லவா போகட்டும் நாட்டில் பல்வேறு பிரச்சினைகளின் அடிப்படையில் பல்வேறு கட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன ஆனால் உலகிலேயே புராணங்களின் அடிப்படையில் கட்சி நடத்துவது பாரதிய ஜனதா மட்டுமே அவ்வாறிருக்க பாரத புண்ணிய தேசத்தின் புராணங்களில் சொல்லப்படாத எதையும் ராகவ்ஜி புதிதாக செய்து விடவில்லை என்பது எமது துணிபு ஐயப்பனை தெய்வமாகக் கொண்டிருக்கும் தேசத்தில் ராகவ்ஜி மட்டும் என்ன பெரிய பாவம் செய்து விட்டார் என்று தீர்மானிக்கும் உரிமையை உங்களிடமே விட்டு விடுகிறோம் தினசரி சூரிய நமஸ்காரத்தாலும் குத்துச் சண்டை பயிற்சிகளாலும் ஸ்வயம்சேவகர்களின் உடலைத் தயார்படுத்தும் ஆர் எஸ் எஸ் அவர்களின் மனதுக்கு இந்திரன் தொடங்கி சந்திரனில் தொடர்ந்து சிரீ கிருஷ்ணர் வரையிலான உத்தம புருஷர்களின் கதைகளின் மூலம் உரமூட்டுகிறது இவ்வாறு புடம் போடப்பட்டு பாரதிய ஜனதாவின் தலைவர்களாக உயரும் ஸ்வயம்சேவகர்கள் தாங்கள் செவிவழியாகக் கற்றுக் கொண்ட பாடங்களை செயல்வழியாக பரீட்சித்துப் பார்ப்பதில் தர்க்க மீறல் ஏதும் இருப்பதாக எமது சிறுமூளைக்குத் தெரியவில்லை அப்படியிருக்கும் போது அமைச்சர் ராகவ்ஜி தனது வயதில் நிகழ்த்தியிருக்கும் இந்த சாதனையைக் கொண்டாடாமல் அவரை ராஜினாமா செய்ய வைத்ததன் காரணம் எங்களுக்குப் புரியவில்லை உங்களுக்குப் புரிகிறதா அடுத்து ஆட்சியைப் பிடித்து விடுவோம் என்று பா ஜ க உறுதியாகச் சொல்லி வருகிறது ஒரு வேளை அவர்கள் அப்படி ஆட்சியைப் பிடித்து விட்டால் ஊடகங்களுக்கும் இரசிகர்களுக்கும் சென்சேஷன் செய்திகளுக்கு கொண்டாட்டம்தான் பிட்டுப்படங்களையும் பலான காட்சிகளையும் நீலக் காட்சிகளையும் மஞ்சள் எழுத்துக்களையும் தேடிப்பிடித்து அறிய வேண்டிய தொல்லையை காவிக் கட்சி தரவே தராது ஏனெனில் அது பாரதிய ஜனதா கட்சி மட்டுமல்ல பலான கட்சியும் கூட தமிழரசன் வினவு தொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும் குஜராத் தெருவோர இறைச்சி உணவுக் கடைகளுக்குத் தடை பல்கலை பாடத்தில் சாவர்க்கர் கோல்வால்கர் நூல்களை அனுமதிப்பது ஜனநாயகமா சொமாட்டோ மட்டுமல்ல வங்கி முதல் இரயில்வே வரை அனைத்திலும் இந்தி திணிப்பு மறுமொழிகள் இப்படி பாரதீய ஜனதா கட்சீன்னா கண்ணுல விளக்கெண்ணெய் ஊத்தீட்டு முழு இந்தியாவையும் தேடுரியே இந்து முன்னணியின் மாநில செயலாளர் சு வெள்ளையப்பனின் கொலையைப் பற்றீ வாயே தொறக்கலீயே அது என்ன அமேரிக்காவிலா நடந்தது பதில் சம்பூகன் நான் இப்படி பாரதீய ஜனதா கட்சீன்னா கண்ணுல விளக்கெண்ணெய் ஊத்தீட்டு முழு இந்தியாவையும் தேடுரியே அதுவும் உட்கட்சிபூசலால் வந்த விளைவுதானே ஐயா சும்மா வாயை கிளாறதே அதையும் அப்புறம் டீடைலா எழுதி விடுவார் பதில் யோவ் பொய்யா காவி நிறக்கண்ணா சொந்த பிரச்சனையோ அல்லது கட்சியின் உள் குத்தோ அவன தட்டிட்டாங்க இதை ஏன் பொது பிரச்சனையாக பார்க்கின்றிர்கள் கொய்ய சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக பார்த்தல் அது ஜெயா அரசின் போலீஸ் சரியாக வேலை செய்யவில்லை என்று சொல்ல வேண்டியதுதானே பதில் வெள்ளையன் பத்தியும் கூடவே கட்டப்பஞ்சாயத்துக்கு அடிபட்டவனுக்காக பந்து கள்ளக்காதலில் கொலையுண்டவனுக்காக பந்துனு எல்லாம் பந்து நடத்தும் காலிகள் மன்னிக்கவும் காவிகள் குறித்தும் வினவு எழுதாம போனது மனவருத்தமே பதில் இந்த விவகாரம் வெளியில் வந்ததையடுத்து மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் அமைச்சர் ராகவ்ஜியை ராஜினாமா செய்ய உத்தரவிட்டார் இதையடுத்து அவர் தனது நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் இதைத் தொடர்ந்து பாஜகவில் இருந்தும் ராகவ்ஜி நீக்கப்பட்டார் இந் நிலையில் இந்த விவகாரத்தில் கைதாகாமல் தப்பிக்க ராகவ்ஜி முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார் ஆனால் இந்த மனுவை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது இதையடுத்து வேறு வழியின்றி தங்களது கட்சியின் மூத்த தலைவரைாக இருந்தவரையே பாஜக பதில் பதில் பதில் காவி சொம்பு வாருங்கள் காவி சொம்புகளே வந்து சொம்படித்து செல்லுங்கள் ஏற்கனவே மேலே இரண்டு சொம்பு அடித்தாகி விட்டது பதில் ஒருவர் செய்த தவருக்காக ஒரு கட்சியவெ குற்றம் சொல்ல கூடாது நண்பர்களே பதில் பாரத புண்ணிய தேசத்தின் புராணங்களில் சொல்லப்படாத எதையும் புதிதாக செய்து விடவில்லை பதில் ஆமாச்சு சீனா கம்யூனிஸ்டு கட்சியின் ரயில்வே அமைச்சரின் ஊழல் கண்டுபிடிக்கப்ட்ட போதே இப்படியொரு பதிவை வினவு இட்டிருக்கிறதா பொதுவுடைமை வாதிகளில் அவர் ஊழல் செய்யவில்லையா இப்படியே பேசிக் கொண்டிருந்தால் எங்கும் போய் முடியாது ஏதோ செய்ய நினைத்து தவறுகிறவர்களைக் கவிழ்க்கிறது கிடைத்த எல்லாரையும் வசைபாடுவது என்பதை விட்டு வினவு குழு முன்னுதாரணமாய் செய்து காட்டுவது தான் என்ன பழித்தே வாழப் பழகியவர்கள் வினவு குழு என்ற எண்ணமே என் மனதில் நிலைபெற்று வருகிறது வினவின் ஆக்கப்பூர்வமான பணிகள் என்று முன்னிருத்துபவை யாவை அடிக்கடி அவற்றையே வாசிக்க விரும்புகிறேன் சேர் வாரிப் பூசும் செய்திகளை அல்ல உங்கள் செயல்களை பற்றி அதிகம் அறிந்து கொள்ள வேண்டும் வாசிக்க வருபவர்கள் சலிப்பு தட்டுகிறது பதில் தம்பி நீ இப்போதான் வினவை வாசிக்க தொடங்கியிருகேன்னு நினைக்கிறேன் பழைய பதிவுகளை ஒருமுறை வாசிக்கவும் அப்போது தெரியும் சீனா ரொம்ப நாள் முன்னாடியே முதலாளிகளுக்கு சொம்பு தூக்க ஆரம்பித்துவிட்டதென்பது இது சும்மா தொட்டுக்க பதில் ஆமாச்சு அந்த பதிவு வாசிச்சிருக்கேன் மாவோ விஷயங்களெல்லாம் வெளி வராம தடுக்கறதும் இதே போலி கம்யூஸ்டு கட்சிதான் பாக்ஸ்கானை மெட்ராஸ்ல பார்த்துத் தேடினேன் சைனாக்கு கொண்டு விட்டுது வந்தால் தான் தெரியும் மாவோவின் மறுபக்கம் அதுவரை வினவின் மாவோ புகழே அரைகுறை ஆதாரங்களால் கட்டியெழுப்பட்டவையாவே கருதணும் பதில் அது ஒண்னுமில்லன்னே வகுத்தெரிச்சல் உங்க கொள்கை என்னன்னு கேளுங்களேன் பதிலே சொல்ல மாட்டானுங்க அடுத்தவன் பொரணிய விடிய விடிய பேசுவானுங்க பதில் எல்லா கட்சிகளிலும் எல்லா மதத்தினரிடையேயும் யோக்கியர்களும் யோக்கியர் போன்ற வேடதாரிகளும் உள்ளனர் மக்கள் அடையாளம் கண்டுகொள்ளத்தான் தாமதமாகிறது கைதேர்ந்த கயவர்கள் கூட மாட்டிகொள்கிறவரை நல்லவர் தான் வேறு வழி பதில் நல்ல வேளை ஐயப்பன் கதை படிச்சாரு இத்தோட போச்சு அனுமார் கதை படிச்சிருந்தா லங்கையை எரிச்சிருப்பாரு பெரிய பிரச்சனை ஆயிருக்கும் பதில் அப்ப அமலா பால் நீட்சயம் ப ஜ கா வில் சேர வாய் ப்புண்டு பதில் ஆமாச்சு பதிலை ரத்து செய்க உங்கள் மறுமொழியை பதிவு செய்க உங்கள் பெயரைப் பதிவு செய்க நீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க அங்காடி மக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா மின்னிதழ் எழுகிறது புதிய இந்தியா புதிய ஜனநாயகம் பிப்ரவரி மின்னிதழ் அயோத்தி தீர்ப்பு சுப்ரீம் கரசேவை மன்றம் மின்னிதழ் அண்மை பதிவுகள் நம் எதிர்ப்புணர்வை மடைமாற்றும் வடிகால் மதுரை காளாங்கரை ஆக்கிரமிப்பு பெரும் துயரத்தில் மக்கள் வீடியோ மாற்றுச் சான்றிதழில் தனி முத்திரை ஏழை மாணவர்களை ஒடுக்கும் நவீன மனுநீதி பெண்கள் முழுக் கால்ச்சட்டை பேண்ட் அணிந்த போராட்ட வரலாறு சிந்துஜா இந்தியாவில் இறைச்சி உணவு உண்பவர்கள் சதவிதம் பேர் மருத்துவ பணியாளர்கள் பணி நீக்கம் நன்றி மறந்த திமுக அரசு மக்கள் போராட்டக்களத்தில் புது மொட்டுக்கள் இளம் தோழர்களின் அனுபவம் பிரம்மஸ்ரீ கிரிமினல்கள் பா ஜ கவின் பொங்கல் பரிசு கேலிச்சித்திரம் ஜாலியன் வாலாபாக் நினைவிடம் கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை நீ என்ன சாதி விபச்சார கேசில் தள்ளுவேன் போலீஸ் அட்டூழியம் உடனே போயிருந்தா பல பேரைக் காப்பாத்தி இருக்கலாம் தூத்தூர் மக்கள் வீடியோ கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க இங்க நல்ல பிரியாணி எங்க கிடைக்கும் தூத்துக்குடி தேவர் சாதி வெறியை எதிர்த்த தோழர் அரிராகவன் கைது வினவின் பக்கம் முகப்பு அறிமுகம் மின் நூல்கள் தொகுப்புகள் தொடர்புக்கு வினவை ஆதரியுங்கள்
உக என்னை அனுப்பினவரை அறியா தபடியினாலே அவ ர்கள ள என நாமததினிமிததமே ப்படிப்பட்ட யாவையும் உங்களுக்குசசெயவார்கள உஉ தானவ நது அவர்களுக்குசசொலலாதிரு நதேனா ல அவர்களுக்குப்பாவ முணடாயிருக்கமாட்டாது பொழுது அவர்கள் தங்கள் பாவத்திற்காகப்போக்குசசொ லல இடமிலலை உங என னைப்பகைக்கிறவன எனபிதாவையும பகைக றன பாவ தாவினிய உச மற்றொருவன செய்யாத கிரியைகளை நான அவர்க ளுககுளளே செய்யாதிரு நதேனானால் அவர்களுக முணடாயிருக்கமாட்டாது அவைகளை அவர்களகண்டிருந என்னையும் என பிதாவையுமபகைக்கிறார்கள உரு நிமிததமில்லாமல் எனனைப் பகைத்தார்களெனறு அவர்களுடைய ஈத்தில் எழுதியிருக்கிறவாக்கிய ம நிறை வேறத்தக்கதாக இப்படிசசெயகிறார்கள் ததிலிருநது நான உங்களுக்கு அனுப் பப்படுபவருமாயப் பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவரு மாயிருககிறசததிய ஆவியாகிய தேற கிறவர்வருமபொழு து அவர் என்னைக் குறித துச சாட்சி கொடுப்பார் உஎ நீங்களும் ஆதி முதல என னுடனே கூட இருந்தபடி யாற்சாட்சிகொடுப்பீர்கள யசு அதிகாரம் க சீஷர்களுக்குவருந்துன்பங்களை ககுறிததும ந கிறி ஸ்துதாம பிதாவினிடத்திற போய்ப்பரிசுத்த ஆவியை அனுப்புவதைககுறிததும் அ அநத ஆவியின் கரியை யைக் குறித தும உய சீஷருக்கு வருந துக்கத்தையுஞ சநதோஷததையுங்குறித துஞசொலலியது நீங்களவழுவாதபடிக்கு உங்களுடனே சொ னனேன உ அவர்கள உங்களைசசெப ஆலய ததிற்குப்புறமபாககு வார்கள் அதுவுமல்லாமல் உங்களைக் கொலை செய்கிறவனெ வனோ அவன பராபரனுக்கு ஆரா தனை செய்கிறேனெனறு நினைக்குங்கால மவரும் ங அவர்கள பிதாவையும் என்னையும் அறியாதபடியினா லே இப்படிப்பட்டவைகளை ச செய்வார்கள ச அநதககாலம் வருமபொழுது பொழுது உங்களுக்குசசொனனதை நீங்கள நினைக்குமட்டிக களை உங்களுடனே சொனனேன நான தானே உங்களுடனே கூட இருந்தபடியினாலே நான வைகளை ஆர மடத்திலே வைகளை உங்க நான வை லாருவ பழுது நான என்னை அனுப்பினவரிடத்திற்கு போகிறேன எங்கே போகிறீரென றுஉங்களிலொ எனனிடத்திறகேளாமல கா நான வைகளை உங்களுக்குசசொனனதினாலே துக கம நிறைந்த இருதயமுள்ளவர்களாயிருக்கிறீர்கள எ நான உங்க ககுச சத்திய ததைச சொலலுகிறேன நானபோகிறது உங்களுக்குப் பிரயோசன மாயி யிருக்கும் எப்படியெனில நானபோகாதிருநதால அநதத்தேற்றுகிற வர் உங்களிடத்தில்வாரார் போவேனேயாகில் அவரை உங் களிடத்திற்கு அனுப்புவேன அ அவர்வந்து பாவததையும நீ தியையும நியாயத்தீர்ப பையுங் குறித்து உலகத்தாருக்கு மெய்யறிவைக் கொடுப் பார் அவர்கள எனனிடத்தில் விசுவாசமாயிராதபடியினா லே பாவததைக் குறிததும் ய நீங்கள் இனி என்னைக்காணாதபடிக்கு நான எனபிதா வினிடத்திற்குப்போகிறபடியினாலே நீதியைககுறிதது ம க இவவுலகததினபிரபு நியாயத்தீர்ப்பு அடைந்தட்டி பினாலே நிபாய த தீர்பபைக் குறித்துமே அறிவைககொபெ பார் யஉ நான இனனும அநேகங்காரியங்களை உங்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது நீங்கள் அவைகளை இப்பொழு துசகிக்கமாட்டீர்கள யக சததிய ஆவியானவர் வருமபொழுது சகலசததிய ததி லேயும உங்களை நடத்துவார் அவர் தமமுடைய சுயமாய்ப் பேசாமல் தாமகேள்விப்படுபவைகளெவைகளோ அவைக் னைப்பேசி இனிவருங்காரியங்களையும் உங்களுக்கு அறிவிப் பார் யசு அவர் என னுடையதிலே எடுத்து உங்களுக்கு அறி விப்பதால் அவர் என்னுடைய மகிமையை விளங்கப்பண ணுவார் யாரு பிதாவி னுடையவைகளயாவும என அதினாலே அவர் என னுடையதிலெடுத்து உங்களுககறிவி பபாாெனறுசொனனேன யசு நான பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே சற றுக்காலமானபினபு நீங்கள் என்னைக் காணாம மலிருப்பீர்கள் மறுபடியுஞசற்றுக்கால மானபினபு என்னைக்காணபீர்க களெ னறும் அவர் சொனன பொழுது யஎ அவருடைய சீஷரிற் சிலர் தங்களுக கொண்டதாவது சற்றுக்காலமான பின்பு என்னைக்காணாம் லிருப்பீர்களெனறும் மறுபடியுஞ சற்றுக்காலமான னபு என்னைக் காண்பீர்களெனறும தான பிதாவினிடத்திற்போகி னுடையவைகள் ளளே பேசிக
இனப்பெருக்க கட்டமைப்பு தொடர்பான பற்றிய பொதுவான கட்டுக்கதைகள் ஒரு அறிவியல் அணுகுமுறை ஆசிய வங்கி மற்றும் நிதி விருதுகள் இல் சிறந்த சந்தைப்படுத்தல் மற்றும் இலச்சினை அணுகுமுறைக்காக அங்கீகரிக்கப்பட்ட
அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்
எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து எல்லா ம் நான் யூஸ் பண்ணிருக்கேன் நான் சின்ன பையனா இருக்கும் போது பக்கத்துல போய் உட்காந்த பக்கத்துல அப்படினு சொல்லி ஒரு ஆகும் அதுல இந்த மறக்கவே முடியாது அதுக்கு அப்புறம் அப்படினு இன்னொரு விட்டாங்க அதுல நிறைய இருக்கும் அதெல்லாம் விளையாடும் போது மஜாவா இருக்கும் பலவிதம் அதுக்கு அப்புறம் ரொம்ப வருஷம் கழிச்சு நான் பத்தாவது படிக்கும் போது ல இருந்து ஒரு கொடுத்தாங்க அதுல போட்டு கொடுத்தாங்க அது ல மாஸா யூஸ் பண்ணதுலையே வேற மாதிரி இருந்துச்சு அத அப்படியே லைட்டா குடுத்து மாத்தி பேஸ் பண்ணி நாம யூஸ் பண்ற ல இருக்க மாதிரி பண்ணி கொண்டுவந்தாங்க அதுல என்ன பஞ்சாயத்துனு தெரியல அதுல அப்படியே பண்ணி ல கொண்டு வந்தாங்க அத நிறைய பேர் யூஸ் பண்ணிட்டும் இருப்பிங்க அதுலையும் லைட்டா பண்ணி கொண்டுவந்தாங்க இவளோ வருசமா நாம எல்லாரும் அதான் யூஸ் பண்ணிட்டு இருக்கோம் அதுக்கு அப்புறம் புது வரும் வரும்னு எதிர்பார்த்துக்கிட்டே இருந்தோம் இப்போ பண்ணிட்டாங்க இதுல என்னென்ன புது இருக்கு எண்ணலாம் பண்ணிருக்காங்க யார் யாரெல்லாம் இந்த பண்ண முடியும் அதுக்கான என்னனு கம்ப்ளீட்டா பின் வருமாறு பார்ப்போம் இவ்வளவு வருசமா ல ஓவ்வொரு க்கும் லைட்டா தான் இருக்கும் பல வருஷம் கழிச்சு வர நாள நிறைய பண்ணிருக்காங்க அதுல புது அது பார்க்க கொஞ்சம் அ தான் இருக்கு அ சென்டர்க்கு கொண்டு வந்துட்டாங்க ல இருந்து க்கு கொண்டு வந்துட்டாங்க இந்த ல நாம அ யூஸ் பண்ண அதுபோக நாம ஏதாவது பண்ணியிருந்தா எல்லாமே ஆகுது இந்த பார்க்க கொஞ்சம் புதுசா இருக்கு இதுல அப்படின்ற ல நம்ம மட்டும் இல்லாம நம்ம ல ஏதும் பன்னிருந்தாலும் பண்ணியிருந்தா அதையும் தேடி கண்டுபிடிக்க முடியுமாம் நம்மோட அதையும் பண்ணி வச்சிருந்தா அதுல இருக்க வையும் பண்ணி கண்டுபுடிச்சுக்க முடியும் புது நம்ம எந்த பன்னாலுமே அதோட வந்து நல்ல ல மாத்திட்டாங்க இது எல்லாத்தையும் பண்ணி இந்த கொண்டு வந்துருக்காங்க இதை தவிர நாம என்ன பன்னாலுமே அதோட பார்க்க நல்லார்க்கு கொண்டு வந்துருக்காங்க ரொம்ப பண்ணி கொண்டு வந்திருக்காங்க கொண்டு வந்துருக்காங்க முன்னலாம் பார்த்தீங்கன்னா எங்க என்ன இருக்குனு தெரியாது வரும் ல ஆனா அப்படி இல்லாம ஒரே ரொம்ப பண்ணி என்ன பண்ணாலும் அ பண்ற மாதிரி பண்ணிருக்காங்க பார்க்க நல்லா இருக்கு ல மாதிரி நம்ம ல ல பன்னா நிறைய வரும் பார்த்துருக்கீங்களா அந்த மாதிரி நிறைய பண்ணி கொண்டு வந்துருக்காங்க நிறைய ல பார்க்குறது நாளும் பார்க்க முடியும்னு முழுக்க முழுக்க பண்ண மாதிரி காமிக்குறாங்க ஆனா லைட்டா தான் பன்னிருக்காங்க அதுவே அ தான் இருக்கு இதுக்கு அப்புறம் எனக்கு இது வந்துச்சுனா நல்லா இருக்கும்னு தொன்றது புது நம்மகிட்ட இருந்தாலுமே ரொம்ப ரொம்ப அ தான் எல்லாமே ஆகும் அந்த பார்க்கறதுக்கு அந்தளவுக்கு எல்லாம் சிறப்பா இருக்காது புது கொண்டுவராங்க இதுல எக்கசெக்கமான இருக்கு இருக்கு நம்மளோட இந்த மாதிரி நாம யூஸ் பண்ற அ லையே அ இருக்கு தனியா எல்லாம் பண்ண வேணாம் இனிமே எல்லாத்தையுமே அ பண்ணிக்கலாம் அத வந்து அ ல பண்றதுக்கும் இல்ல பண்றதுக்கும் நிறைய விசியங்களை கொண்டுவர போறோம்னு சொல்லிருக்காங்க இந்த லையே அப்படினு ஒரு இருக்கு இதுல நாம அ படம் பார்குறதா இருந்தாலும் படங்களை பண்ணி பார்குறதுனாலும் பார்த்துக்கலாம் இது எங்க இருந்து அப்படியே ஆட்டைய போட்டு கொண்டு வந்துருக்காங்கன்னு நிறைய பேருக்கு தெரிஞ்சுருக்கும் ஆனா இங்க என்ன அப்படினா அ பண்ற கூட உங்களால பண்ணிக்க முடியும் இதுக்காக ஓட பண்ணி கூட பண்ணி வச்சுருக்காங்க நம்ம ல அதிகமா பண்ற எதுவா இருந்தாலும் அ பண்ணி நமனால பண்ணிக்க முடியும் க்கு பண்றதுன்னா அ நம்ம ல பண்ணி பண்ணலாம் இந்த மாதிரி நிறைய ல பண்ணப்படும் அப்படினு சொல்லிருக்காங்க ஆனா இதை என்ன தப்பா புரிஞ்சுக்கிட்டாங்கன்னா ல அ பண்ணலாம்னு அதுக்கு என்ன கொடுத்துருக்காங்க அப்படினா நாங்க கூட பன்னிருக்கோம் அப்புறம் பன்னா மட்டும் தான் பண்ண முடியும்னு சொல்லிருக்காங்க என்னை கேட்டீங்கன்னா இந்த லலாம் அ குடுப்பாங்கள அந்த மாதிரி அ பண்ணி பண்ணிக்கோங்கனு கொடுத்துருந்தா இன்னும் மாஸா இருந்துருக்கும் அப்புறம் இந்த ல எனக்கு ரொம்ப புடிச்ச விஷியம் என்னன்னா நாம ஒரு பண்றோம்னா அத பண்ணி ஓரமா இங்குட்டு அங்குட்டு னு வச்சுட்டு இருப்போம் இப்போ அப்படி எல்லாம் இல்லாம பண்ற இடத்துல னு தனித்தனியா பிரிச்சுக்க முடியும் அப்படி பிரிச்சுட்டோம்னா அதுவே ஆகிக்கும் இதுல பார்த்தீங்கன்னா நான் பண்றேன் பன்றேனா நான் இந்த அ பன்னா எடுத்துட்டா அ ஆர்டர் பண்ணி ஒரே ல வந்துரும் இதுக்கு அப்புறம் அப்படினு பார்த்தீங்கன்னா இல்ல இல்ல இவங்களோட அப்படின்ற அந்த அ அ கொடுக்குறாங்க அத வந்து கூட நாம பண்ணி வச்சுட்டோம்னா நமக்கு ஏதாவது வந்தா அத பண்றது இல்ல பண்றது எல்லாமே அ பண்ணிக்கலாம் ஒரே ல பண்ணிக்கலாம் இதுக்கு பதில் இந்த அந்த மாதிரி குடுத்தாங்கனா ஓட பண்றதுக்கு அ இருக்கும் ஆனா கண்டிப்பா அதல்லாம் பண்ணமாட்டாங்க இந்த மாதிரி ஒரு அந்த லையே குடுத்துருக்காங்க அ ல காக நிறைய கொடுத்துருக்காங்க ன்ற இருக்கு இது என்னென்ன ல இருக்க ஒரு அ க்கு மாத்தி கொடுப்போம் இன்னும் அ அ எல்லாம் பார்க்க நல்லா இருக்கும்னு சொன்னாங்க பண்ணி குடுத்துருக்காங்க நிறைய கூட பண்ணி நிறைய கொண்டு வரப்போறாங்களாம் ல நிறைய இருக்க வாய்ப்பு இருக்குனு சொல்லிருக்காங்க பண்ண முடியுமா இப்ப இந்த யாரெல்லாம் பண்ண முடியும் அதுக்கு என்ன னு பார்த்தீங்கன்னா இருக்கணும் முன்னாடி எல்லாம் இருந்தா கூட பண்ண முடியும் ஆனா இங்க கண்டிப்பா வேணும்னு சொல்லிருக்காங்க கண்டிப்பா தான் பண்ண முடியும்னு சொல்லிருக்காங்க ஒரு நல்ல வச்சிருக்கீங்க ஆனா இல்ல தான் நான் பண்றேன் அப்படினா பண்ண முடியாது அப்படினு சொல்லிருக்காங்க இது இப்போதைக்கு ல ஏதாவது கொண்டு வருவாங்களானு பண்ணி தான் பார்க்கணும் கண்டிப்பா இருக்கணுமாம் எந்த லையும் இந்த மாதிரி பண்ணி சொன்னது இல்ல இப்போ அ போன ஒரு என்னென்னா இது பண்ணாக்கூட நீங்க அ க்கு உங்களால ஆயிக்க முடியும்ன்ற மாதிரி சொன்னாங்க அனால் அது உண்மை கிடையாதுனு அ சொல்லிருக்காங்க ல அதுக்கு ஏதும் கொண்டு வருவங்களானு தெரியல இப்போதைக்கு நீங்க பண்ணனும்னா நீங்க வாங்கிருந்திங்கனா அ உங்களால பண்ணிக்க முடியும் அது தான் புதுசா வாங்குறீங்கன்னா அது காசுதான் அப்படினு சொல்லிருக்காங்க அதுக்கான எவளோ எப்போ எல்லாம் சொல்லல ஒரு வரும் அதுல எந்த இருக்காது அது வேணா பன்னிக்கோங்கன்னு சொல்லிருக்காங்க இந்த உங்க க்கு ஆகுமா அதுக்கான உங்க க்கு இருக்கா இல்லையா னு பண்ண என்ற பண்ணி ரன் குடுத்தீங்கனா உங்க ல பண்ண முடியுமா முடியாதா என்று சொல்லும் இதுல ஒரு என்னென்னா னு ஒரு இருந்தா தான் உங்க ல பண்ண முடியும் இல்லாட்டி முடியாதுனு சொல்லிருக்காங்க இது என்னனா அப்படின்ற ஒரு தான் எனக்கு என்னமோ எத்தனை ல இந்த இருக்கும்னு தெரியல புதுசா வாங்குறதுல வேணா இருக்கலாம் இந்த தனியா வாங்கினா ரூபாய் இருக்கும் அ என்ன சொல்ல வரங்கன்னா புது வாங்கினீங்கனா அ பண்ணலாம் பழசுல நீங்க பண்ணனும்னா மேல சொன்ன எல்லாம் பண்ணா தான் பண்ணமுடியும் இது தான் இதுல இருக்கக்கூடிய ஒரு சில பிரச்சனைகள் நான் என்ன சொல்ல வரேன்னா புதுசா அ பண்ணனும்னு நினைக்குறவங்க வாங்கி விண்டோஸ் பண்ணி பண்ணுங்க அப்படி இல்லாட்டி வரைக்கும் குடுக்க போறாங்க என்ன நடக்குதுன்னு பண்ணி பார்க்கலாம் யாருமே இந்த எல்லாம் பண்ணவேணாம் அதுல நிறைய இருக்கலாம் வரட்டும் அது வரைக்கும் பண்ணுவோம் நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் உங்கள் லோகன் பேருக்கு வேலை ரெடி எங்கு தெரியுமா
அன்னுார் அன்னுார் அருகே ஊருக்குள் புலி வந்ததாக வெளியான தகவலையடுத்து வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் அன்னுார் அருகே ஆம்போதியில் நேற்று முன்தினம் ஊரை ஒட்டிய ஓடை பள்ளத்தில் ஒரு புலி சென்றதாக விவசாயி ஒருவரும் தொழிலாளர்கள் இருவரும் பதற்றத்துடன் தெரிவித்தனர் போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சிறுமுகை வனச்சரகர் செந்தில்குமார் முழு செய்தியை படிக்க செய்யவும் அன்னுார் அன்னுார் அருகே ஊருக்குள் புலி வந்ததாக வெளியான தகவலையடுத்து வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் அன்னுார் அருகே ஆம்போதியில் நேற்று முன்தினம் ஊரை ஒட்டிய ஓடை பள்ளத்தில் ஒரு புலி சென்றதாக விவசாயி ஒருவரும் தொழிலாளர்கள் இருவரும் பதற்றத்துடன் தெரிவித்தனர் போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சிறுமுகை வனச்சரகர் செந்தில்குமார் தலைமையில் வனக்காவலர்களும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையிலான போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று நான்கு மணி நேரம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் விவசாயி கூறிய இடத்தில் கால் தடத்தை ஆய்வு செய்தனர் பின்னர் வனச்சரகர் செந்தில்குமார் கூறுகையில் கால் தடத்தில் நகம் தெரிகிறது புலியின் கால் நகம் பதியாது இது காட்டுப்பூனை அல்லது நாயாக இருக்கலாம் எனினும் புலி இருப்பது போட்டோ அல்லது வீடியோ வாயிலாக உறுதி செய்யப்பட்டால் தகவல் தெரிவிக்கும்படி கூறியுள்ளோம் என்றார் இந்நிலையில் நேற்று காலை மீண்டும் ஆம்போதியில் தெற்குப் பகுதியில் கல்குவாரியில் புலி வந்ததாக தகவல் பரவியது இதையடுத்து பொதுமக்கள் நேற்று ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துசெல்லவில்லை குழந்தைகளை வெளியில் அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருந்தனர் வனத்துறை மற்றும் போலீசார் ஆம்போதி மற்றும் அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சியில் தேடுதல் வேட்டை நடத்தி அச்சத்தை போக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் அன்னுார் அன்னுார் அருகே ஊருக்குள் புலி வந்ததாக வெளியான தகவலையடுத்து வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் அன்னுார் அருகே ஆம்போதியில் நேற்று முன்தினம் ஊரை ஒட்டிய ஓடை ஊடக தர்மம் உங்கள் கரங்களில் சமரசத்துக்கு இடமளிக்காமல் அதிகாரத்துக்கு அடிபணியாமல் நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி அதுவே நீங்கள் விரும்பி வா நே சிக்கும் தினமலர் இணையதளத்துக்கும் ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே ஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள் உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள் உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம் நன்றி தினமலர் இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு ஐ தவிருங்கள் உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் முருகன் கோவில்களில் நாளை சூரசம்ஹார விழா முந்தய நல்ல எண்ணம்நல்ல விளைவு தரும் அடுத்து பொது முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம் அவதூறான வார்த்தைகளுக் கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா ங்கள் விரும்புகிறோம் அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம் வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி டப்படுகின்றன இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும் எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம் இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம் உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம் முந்தய முருகன் கோவில்களில் நாளை சூரசம்ஹார விழா அடுத்து நல்ல எண்ணம்நல்ல விளைவு தரும் சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
தாம்பரம் கடப்பேரி சிட்லப்பாக்கம் வது மெயின் தெரு நீதிபதி காலனி பாலவிநாயகர் கோவில் தெரு மீனாட்சி தெரு பெரியார் தெரு வது முதல் வது குறுக்கு தெரு அய்யப்பா தெரு எஸ் பி ஐ காலனி காந்தி தெரு வது வது குறுக்கு தெரு அண்ணா தெரு நேரு தெரு பல்லாவரம் ரோடு இந்திரா காந்தி ரோடு ஒலிம்பியா கோபுரம் மாரியம்மன் கோவில் தெரு மற்றும் முழு செய்தியை படிக்க செய்யவும் தாம்பரம் கடப்பேரி சிட்லப்பாக்கம் வது மெயின் தெரு நீதிபதி காலனி பாலவிநாயகர் கோவில் தெரு மீனாட்சி தெரு பெரியார் தெரு வது முதல் வது குறுக்கு தெரு அய்யப்பா தெரு எஸ் பி ஐ காலனி காந்தி தெரு வது வது குறுக்கு தெரு அண்ணா தெரு நேரு தெரு பல்லாவரம் ரோடு இந்திரா காந்தி ரோடு ஒலிம்பியா கோபுரம் மாரியம்மன் கோவில் தெரு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகில் தாம்பரம் கடப்பேரி சிட்லப்பாக்கம் வது மெயின் தெரு நீதிபதி காலனி பாலவிநாயகர் கோவில் தெரு மீனாட்சி தெரு பெரியார் தெரு வது முதல் வது ஊடக தர்மம் உங்கள் கரங்களில் சமரசத்துக்கு இடமளிக்காமல் அதிகாரத்துக்கு அடிபணியாமல் நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி அதுவே நீங்கள் விரும்பி வா நே சிக்கும் தினமலர் இணையதளத்துக்கும் ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே ஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள் உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள் உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம் நன்றி தினமலர் இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு ஐ தவிருங்கள் உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் புழல் உபரி கால்வாயில் சடலமாக மிதந்தவர் யார் முந்தய சிறந்த ஆளுமைக்கான விருது ஹேமமாலினிக்கு அறிவிப்பு அடுத்து பொது முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம் அவதூறான வார்த்தைகளுக் கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா ங்கள் விரும்புகிறோம் அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம் வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி டப்படுகின்றன இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும் எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம் இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம் உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம் முந்தய புழல் உபரி கால்வாயில் சடலமாக மிதந்தவர் யார் அடுத்து சிறந்த ஆளுமைக்கான விருது ஹேமமாலினிக்கு அறிவிப்பு சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
கடலுார் தென் பெண்ணையாற்றில் நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடற்கரை மற்றும் ஆற்றங்கரையோரம் உள்ள இறால் பண்ணைகள் தண்ணீரில் மூழ்கியதால் பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தொடர் மழை பெய்கிறது அதனால் தென் பெண்ணையாற்றில் ஒரு வாரமாக ஆயிரம் கன அடி தண்ணீர் சென்றது கடந்த தினங்களாக கனமழை பெய்து தண்ணீர் வரத்து முழு செய்தியை படிக்க செய்யவும் கடலுார் தென் பெண்ணையாற்றில் நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடற்கரை மற்றும் ஆற்றங்கரையோரம் உள்ள இறால் பண்ணைகள் தண்ணீரில் மூழ்கியதால் பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தொடர் மழை பெய்கிறது அதனால் தென் பெண்ணையாற்றில் ஒரு வாரமாக ஆயிரம் கன அடி தண்ணீர் சென்றது கடந்த தினங்களாக கனமழை பெய்து தண்ணீர் வரத்து அதிகரித்தது இந்நிலையில் நேற்று திருக்கோவிலுார் அணைக்கட்டில் இருந்து லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது அதனால் லட்சம் கன அடி தண்ணீர் பெண்ணையாற்றில் பெருக்கெடுத்து இரு கரை தொட்டு ஓடியது இதனால் கடற்கரையோரம் ஆற்றங்கரையோரம் இருந்த இறால் பண்ணைகள் தண்ணீரில் மூழ்கின குண்டு உப்பலவாடி சுபா உப்பலவாடி நாணமேடு ஆகிய பகுதிகளில் இருந்த க்கும் மேற்பட்ட குட்டைகளில் இருந்த இறால்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன அத்துடன் ஏரேட்டர்கள் பிவிசி பைப்புகள் உட்பட பல பொருட்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன இதனால் இறால் பண்ணை உரிமையாளர்களுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது கடலுார் தென் பெண்ணையாற்றில் நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடற்கரை மற்றும் ஆற்றங்கரையோரம் உள்ள இறால் பண்ணைகள் தண்ணீரில் மூழ்கியதால் பல லட்சம் இழப்பு ஊடக தர்மம் உங்கள் கரங்களில் சமரசத்துக்கு இடமளிக்காமல் அதிகாரத்துக்கு அடிபணியாமல் நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி அதுவே நீங்கள் விரும்பி வா நே சிக்கும் தினமலர் இணையதளத்துக்கும் ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே ஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள் உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள் உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம் நன்றி தினமலர் இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு ஐ தவிருங்கள் உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து பேர் உயிர் தப்பினர் முந்தய வெள்ளத்தில் சிக்கிய வாலிபர் பனைமரம் மீது ஏறி தப்பினார் அடுத்து சம்பவம் முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம் அவதூறான வார்த்தைகளுக் கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா ங்கள் விரும்புகிறோம் அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம் வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி டப்படுகின்றன இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும் எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம் இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம் உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம் முந்தய வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து பேர் உயிர் தப்பினர் அடுத்து வெள்ளத்தில் சிக்கிய வாலிபர் பனைமரம் மீது ஏறி தப்பினார் சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
தெரு நாய்களால் வாகன ஓட்டிகளுக்கு சிக்கல்கட்டட கழிவுகளை அகற்றணும்மாநகராட்சி வது வார்டுக்கு உட்பட்ட மாச்சம்பாளையம் ரயில்வே பொங்காளிகோனார் வீதியில் சாலையை ஆக்கிரமித்து குவிக்கப்பட்டுள்ள கட்டட இடிபாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது பறக்கும் துாசியால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது ராஜ்மோகன் ரயில்வே பொங்காளிகோனார் வீதி தெருநாய்கள் முழு செய்தியை படிக்க செய்யவும் தெரு நாய்களால் வாகன ஓட்டிகளுக்கு சிக்கல் கட்டட கழிவுகளை அகற்றணும்மாநகராட்சி வது வார்டுக்கு உட்பட்ட மாச்சம்பாளையம் ரயில்வே பொங்காளிகோனார் வீதியில் சாலையை ஆக்கிரமித்து குவிக்கப்பட்டுள்ள கட்டட இடிபாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது பறக்கும் துாசியால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது ராஜ்மோகன் ரயில்வே பொங்காளிகோனார் வீதி தெருநாய்கள் தொல்லை மாநகராட்சி வது வார்டுக்குட்பட்ட கணபதி மாநகர் கொங்கு நகரில் தெருநாய்கள் தொல்லையால் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கிருஷ்ணமூர்த்தி கொங்கு நகர் தண்ணீர் வீண் வடவள்ளி கல்வீரம்பாளையம் நால்வர் நகர் பகுதியில் கடந்த நாட்களுக்கு மேலாக குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வெளியேறி வருகிறது புவனேஸ்குமார் கல்வீரம்பாயம் சாலை மோசம்போத்தனுார் செட்டிபாளையம் சாலை மிகவும் மோசமாக உள்ளது பத்ரிநாத் ஜி டி டேங்க் குப்பையால் சுகாதார கேடு இருகூர் மாணிக்கம் நகர் பகுதியில் சரிவர குப்பை அள்ளப்படாமல் உள்ளது மலைபோல் தேங்கி கிடக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது ஸ்ரீசாய் மாணிக்கம் நகர் தெருவிளக்கு பிரச்னைமாநகராட்சி வது வார்டுக்குட்பட்ட தீபா மில் மெயின் ரோட்டில் மால்பரோ கம்பெனியின் முன் தெரு விளக்குகள் எரிவதில்லை இதனால் இரவு நேரங்களில் சாலையை கடக்க பொதுமக்கள் அச்சப்படுகின்றனர் ரவீந்திரராஜ் பி எம் ஆர் லே அவுட் துர்நாற்றம் வீசுதுவெள்ளக்கிணர் பிரிவு வது வார்டுக்கு உட்பட்ட வி கே வி அபார்ட்மென்ட் குடியிருப்பு பகுதியில் நாட்களாக குப்பை எடுக்காமல் துர்நாற்றம் வீசுகிறது மணிகன்டன் வெள்ளக்கிணர் பிரிவு சாலையில் ஓடும் தண்ணீர்மாநகராட்சி வது வார்டுக்குட்பட்ட காமராஜர் ரோடு நான்கு முக்கு சந்திப்பில் ஒரு மாதத்திற்கும் மேலாக குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் ஓடிக் கொண்டிருக்கிறது தேவராஜ் காமராஜர் ரோடு சாலை மோசம்சரவணம்பட்டி விமல் ஜோதி பள்ளி அருகே உள்ள சாலை சிதிலமடைந்து படுமோசமாக காட்சியளிக்கிறது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு சாலையை சீரமைக்க வேண்டும் அருண் சரவணம்பட்டி சுவிட்ச் பழுதுசிட்ரா காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள மின்விளக்குகளின் கன்ட்ரோல் சுவிட்ச் பழனிசாமி காலனியின் முதல் வீதியில் உள்ளது தற்போது இந்த ஆட்டோமெட்டிக் சுவிட்ச் வேலை செய்யாமல் உள்ளது நடராஜன் காளப்பட்டி தெரு நாய்களால் வாகன ஓட்டிகளுக்கு சிக்கல்கட்டட கழிவுகளை அகற்றணும்மாநகராட்சி வது வார்டுக்கு உட்பட்ட மாச்சம்பாளையம் ரயில்வே பொங்காளிகோனார் வீதியில் சாலையை ஆக்கிரமித்து ஊடக தர்மம் உங்கள் கரங்களில் சமரசத்துக்கு இடமளிக்காமல் அதிகாரத்துக்கு அடிபணியாமல் நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி அதுவே நீங்கள் விரும்பி வா நே சிக்கும் தினமலர் இணையதளத்துக்கும் ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே ஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள் உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள் உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம் நன்றி தினமலர் இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு ஐ தவிருங்கள் உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் முன்னறிவிப்பில்லாமல் பஸ்கள் நிறுத்தப்படுவதால் மக்கள் பாதிப்பு முந்தய விபத்தை ஏற்படுத்தும் குடிநீர் திட்ட பள்ளம் அடுத்து பிரச்னைகள் முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம் அவதூறான வார்த்தைகளுக் கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா ங்கள் விரும்புகிறோம் அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம் வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி டப்படுகின்றன இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும் எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம் இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம் உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம் முந்தய முன்னறிவிப்பில்லாமல் பஸ்கள் நிறுத்தப்படுவதால் மக்கள் பாதிப்பு அடுத்து விபத்தை ஏற்படுத்தும் குடிநீர் திட்ட பள்ளம் சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
முதுகுளத்துார் முதுகுளத்துார் மற்றும்அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள்களை எடுத்தல் உரமிடுதல் உள்ளிட்ட பணிகளில் தீவிரம்காட்டி வருகின்றனர் முதுகுளத்துார் அருகே சித்திரங்குடி கிராமத்தில் நெற்பயிர்க்கு போதுமானதண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகும் நிலையில் விவசாயிகள் சிரமப்பட்டனர் இதனையடுத்து வரத்துகால்வாயில் செல்லும் தண்ணீரை மோட்டார் மூலம் முழு செய்தியை படிக்க செய்யவும் முதுகுளத்துார் முதுகுளத்துார் மற்றும்அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள்களை எடுத்தல் உரமிடுதல் உள்ளிட்ட பணிகளில் தீவிரம்காட்டி வருகின்றனர் முதுகுளத்துார் அருகே சித்திரங்குடி கிராமத்தில் நெற்பயிர்க்கு போதுமானதண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகும் நிலையில் விவசாயிகள் சிரமப்பட்டனர் இதனையடுத்து வரத்துகால்வாயில் செல்லும் தண்ணீரை மோட்டார் மூலம் விவசாயத்திற்கு பாய்ச்சுகின்றனர் முதுகுளத்துார் முதுகுளத்துார் மற்றும்அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள்களை எடுத்தல் உரமிடுதல் உள்ளிட்ட பணிகளில் தீவிரம்காட்டி வருகின்றனர் முதுகுளத்துார் அருகே ஊடக தர்மம் உங்கள் கரங்களில் சமரசத்துக்கு இடமளிக்காமல் அதிகாரத்துக்கு அடிபணியாமல் நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு விளம்பர வருவாயே உயிர்நாடி அதுவே நீங்கள் விரும்பி வா நே சிக்கும் தினமலர் இணையதளத்துக்கும் ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே ஆட்பிளாக்கர் உபயோகிப்பதை தவிர்த்து துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள் உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள் உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம் நன்றி தினமலர் இங்கு வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன போடுவதன் மூலம் பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு ஐ தவிருங்கள் உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் பவுர்ணமி வழிபாடு முந்தய யூரியாவுடன் உரங்கள் வாங்க வலியுறுத்தல் விவசாயிகள் குற்றச்சாட்டு அடுத்து பொது முதல் பக்கம் தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள் உங்கள் கருத்தைப் பதிவு செய்ய கருத்து விதிமுறை வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம் அவதூறான வார்த்தைகளுக் கோ ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா ங்கள் விரும்புகிறோம் அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம் வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி டப்படுகின்றன இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும் எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம் இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம் உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம் முந்தய பவுர்ணமி வழிபாடு அடுத்து யூரியாவுடன் உரங்கள் வாங்க வலியுறுத்தல் விவசாயிகள் குற்றச்சாட்டு சினிமா கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் கோயில் வீடியோ திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா வர்த்தகம் விளையாட்டு புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
திருவள்ளூர் அருகே உள்ள வல்லூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் தேசிய அனல்மின் நிலையத்தில் அலகுகளில் மொத்தம் ஆயிரத்து மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது இந்நிலையில் மூன்றாவது அலகின் ஜெனரேட்டர் பிரிவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து காரணமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான டர்பைன் மற்றும் ஜெனரேட்டர் ஆகியவை எரிந்து நாசமாயின இதையடுத்து சம்பவ இடத்துக்கு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர் தீவிபத்து காரணமாக மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது வல்லூர் அனல்மின் நிலையத்தில் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியாகிறது இதனிடையே ஆவது அலகில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் தமிழகம் தமிழகம் கருத்துகள் இல்லை இதற்கு குழுசேர் கருத்துரைகளை இடு ஆன்மிகம் ஆன்மீகம் ஃபேஸ்புக் டெலிகிராம் புகைப்படங்கள் புகைப்படங்கள் பிரபலமான செய்திகள் உடுமலை வனப் பகுதியில் பலத்த மழை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு அமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத் மத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள் மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா பாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின் சீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம் உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது ஹாங்காங் சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான கிலோமீ தைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது ஆனால் தற்போத புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் வார விடுமுறையையொட்டி புதுச்சேரி பாரடைஸ் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர் புதுச்சேரியி இந்தியா சீனா மோதல் ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க கல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள் மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம் இன்றைக்கு தமிழகத்தில முகிலன் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான் என்ற புகார் ஒன்று போதும் ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார புதிய மத்திய அமைச்சர்கள் யார் உத்தேசப் பட்டியல் உள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி தலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் உச்சநீதிமன்றம் நாட்டின் தலைமை நீதிபதியும் ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த
எஸ் பி ஐ வங்கிகளில் போலி முகவரிகளை கொடுத்து கணக்கை தொடங்கி உள்ள வடமாநில கொள்ளையர்கள் துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது கோப்புப்படம் சென்னை தமிழகம் முழுவதும் எஸ் பி ஐ வங்கி ஏ டி எம் களில் வடமாநில கொள்ளையர்கள் நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பான தகவல்கள் நேற்று முன்தினம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள எஸ் பி ஐ ஏ டி எம் மையங்களில் பணம் செலுத்தும் எந்திரங்களில் இருந்து கொள்ளையர்கள் நூதன முறையில் பணத்தை எடுத்து இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் சென்னை கீழ்ப்பாக்கம் அழகப்பா ரோட்டில் உள்ள எஸ் பி ஐ ஏ டி எம் மையத்தில் ரூ லட்சத்து ஆயிரம் கொள்ளை போனது தி நகர் வடக்கு உஸ்மான் ரோட்டில் உள்ள எஸ் பி ஐ ஏ டி எம் மையத்தில் ரூ ஆயிரம் பணம் திருடப்பட்டுள்ளது கடந்த ந்தேதி இந்த வங்கி ஏ டி எம் மையத்துக்குள் புகுந்த பேர் பணம் செலுத்தும் எந்திரத்தில் இருந்து இந்த பணத்தை எடுத்துள்ளனர் இதே போன்று ராமாபுரம் வள்ளுவர் சாலையில் உள்ள ஏ டி எம் மையத்தில் ரூ லட்சத்து ஆயிரமும் வடபழனி அடி சாலையில் உள்ள ஏ டி எம் மையத்தில் ரூ ஆயிரமும் அடுத்தடுத்து கொள்ளை போனது தரமணியில் உள்ள ஏ டி எம் மையத்தில் ரூ லட்சமும் வேளச்சேரியில் ரூ லட்சமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது விருகம்பாக்கம் சின்மயா நகர் ஏ டி எம் மையத்தில் ரூ ஆயிரம் பணம் பறிபோனது சென்னையில் மட்டும் இதுபோன்று எஸ் பி ஐ ஏ டி எம் மையங்களில் கொள்ளையர்கள் பணத்தை திருடி இருப்பது தெரியவந்தது தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இதே போன்று பணம் திருடப்பட்டு இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது எஸ் பி ஐ வங்கிகளில் போலி முகவரிகளை கொடுத்து கணக்கை தொடங்கி உள்ள வடமாநில கொள்ளையர்கள் இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது இப்படி திருடப்பட்ட பணம் அனைத்தும் வங்கியின் பணமாகும் பணம் செலுத்தும் எந்திரத்தில் ஏ டி எம் கார்டை செலுத்தி அதில் இருந்து பணம் எடுத்ததும் சில வினாடிகள் பணம் வெளியில் வரும் பகுதிகளில் கைகளால் பிடித்து வைத்திருப்பதன் மூலம் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்படும் பணம் வெளியில் செல்லாதது போன்று காட்டும் தொழில்நுட்பம் ஏ டி எம் மில் உள்ளது இதனையே கொள்ளையர்கள் கண்டுபிடித்து நூதன கொள்ளையில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளனர் இதையும் படியுங்கள் வங்கி ஏடிஎம்களில் நூதன கொள்ளை முக்கிய குற்றவாளி கைது இதையடுத்து நேற்று எஸ் பி ஐ வங்கியின் சென்னை மண்டல தலைமை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் போலீஸ் கமி ஷனர் சங்கர் ஜிவாலை சந்தித்து புகார் அளித்தார் அப்போது பணம் செலுத்தும் எந்திரத்தில் உள்ள தொழில் நுட்ப பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது உடனடியாக பணம் செலுத்தும் மையத்தில் பணம் எடுப்பதற்கு தடையும் விதிக்கப்பட்டது இந்த கொள்ளை சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது உடனடியாக அவர்கள் கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்கினர் அப்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது சென்னையில் பல இடங்களில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக முதலில் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது இதையடுத்து உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர் இந்த நிலையில் வங்கி ஏ டி எம் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படையினர் நேற்று இரவே அரியானா புறப்பட்டு சென்றனர் இன்று காலை அரியானாவில் முக்கிய கொள்ளையர்கள் பேர் பிடிபட்டனர் மேலும் பேர் டெல்லியில் சிக்கியதாக கூறப்படுகிறது பிடிபட்ட அனைவரையும் அரியானாவில் ஒரே இடத்தில் வைத்து சென்னை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் இந்த வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது சென்னையில் உள்ள ஏ டி எம் மைய கேமராவில் பதிவான பேரின் உருவங்களை வைத்து விசாரணை நடத்தப்பட்டது இதில் அவர்கள் யார் என்பது அடையாளம் தெரிந்தது அதனை வைத்து போலீசார் அரியானா மற்றும் டெல்லிக்கு சென்று கொள்ளையர்களை சுற்றி வளைத்துள்ளனர் சென்னையில் நடந்த ஏ டி எம் கொள்ளை சம்பவங்களில் பேர் ஈடுபட்டு இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது இவர்கள் பேரும் தனித்தனியாக குழுவாக பிரிந்து சென்று ஏ டி எம் மையங்களில் கைவரிசை காட்டி உள்ளனர் நேற்று முன்தினம் வரையில் ரூ லட்சம் அளவுக்கு தமிழகம் முழுவதும் ஏ டி எம் மையங்களில் கொள்ளை நடந்துள்ளது இந்த நிலையில் நேற்று பெரியமேட்டில் இருக்கும் ஏ டி எம் மையத்தில் ரூ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது இதன் மூலம் இதுவரை ரூ லட்சத்தை ஏ டி எம் மையங்களில் சுருட்டி உள்ளனர் ரூ கோடி வரையில் கொள்ளையர்கள் திருடி இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது வங்கி ஏடிஎம்களில் கொள்ளை வங்கி ஏடிஎம்களில் கொள்ளை பற்றிய செய்திகள் இதுவரை ஏடிஎம் கொள்ளை வழக்கு கைதான நஜீம் உசேனுக்கு நாள் நீதிமன்ற காவல் ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் ஒரு கொள்ளையன் கைது பெரியமேடு எஸ்பிஐ வங்கி ஏ டி எம் மையத்தில் ரூ லட்சத்தை திருடிய கொள்ளையர்கள் மேலும் மாவட்டச்செய்திகள் அதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது அடியை எட்டிய முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் அடி உயர்த்த நடவடிக்கை அமைச்சர் துரைமுருகன் டிசம்பர் ந்தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்கக் கூடாது அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அந்தக் காலத்தில் வாழ்க்கையை ஒழுங்குபடுத்த அமைக்கப்பட்ட சட்டங்களால் இன்று விசாலமடைந்தது சிக்கலடைந்திருக்கும் வாழ்க்கை முறையை எவ்வாறு நிர்வகிக்க முடியும் இவ்விரண்டு வாழ்க்கை முறையும் ஒன்றின் சுமையை இன்னொன்று எவ்வாறு தனது தோளில் சுமக்க முடியும் இதுதான் இரு யுகங்கள் வித்தியாசமானதாகத் தென்பட்டால் அதன் கருத்து அவற்றினது வாழ்க்கையின் பொதுவான நிலைகள் வித்தியாசமடைந்துள்ளது என்பதல்ல மாறாக சில குறிப்பிட்ட விடயங்கள் வித்தியாசமடைந்துள்ளன என்பதுதான் வேறு வார்த்தையில் கூறுவதாயின் வாழ்க்கையில் மனிதனுக்கு உணவு தெவைப்படுகின்றது உடை உறையுள் போக்குவரத்துச் சாதனங்களும் வசதிகளும் வாழ்வதற்கு ஒரு சமூகம் பாலியல் உறவுகள் வர்த்தக தொழில் நுட்ப செயல் முறை உறவுகள் என்பனவும் வாழ்க்கையில் தேவைப்படுகின்றன இவை மாற்ற முடியாத பொதுவான தேவைகள் மனிதனுக்கு ஒரு மனிதன் என்ற வகையிலும் அவனுடைய மனித வாழ்வின் இயற்கையான கட்டமைப்பு உள்ளவரைக்கும் அவனுக்கு இவை தேவைப்படுகின்றன இந்த எல்லா விடயங்களிலும் ஆதிகால மனிதன் தற்கால மனிதனில் இருந்து வித்தமியாசப்பட்டுக் காணப்படவில்லை நவீன உபாயங்கள் அவற்றினிடையே பிரிவினை இன்றி இயற்கையோடு இசைந்ததாக இருப்பின் இஸ்லாம் அதனோடு ஒத்துப் போகின்றது ஆனால் அவை படைப்பின் அடிப்படைச் சட்டங்களுக்கு முரணாக இருப்பின் அது நவீன காலத்துக்கு உரியதாயினும் சரி ஆதிகாலத்துக்கு உரியதாயினும் சரி இஸ்லாம் அதனை ஏற்றுக் கொள்வதில்லை இஸ்லாமிய சமூகத்தில் மாற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் உரிய வழி மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் தேவையான எல்லா அத்தியவசியமான வழிகளையும் கொண்டதே இஸ்லாமிய வழி என்பது உண்மையாகும் மேலும் இஸ்லாமியச் சமூகம் பொறாமைப்படும் அளவுக்கு அதிஷ்டமானதாகும் ஆனால் இது நம்பிக்கையில் சுதந்திரம் இல்லாத விசாலமான ஒரு ஒழுங்கு முறையாகும் இது சமூகத்தை மந்தமாக்குகின்றது எல்லா மாற்றங்களையும் வளர்ச்சியையும் இது சமூகத்தை மந்தமாக்குகின்றது எல்லா மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் தடை செய்கின்றது என்று சிலர் கூறலாம் படிப்படியான வளர்ச்சிக்கு ஒரு விடயத்தை மையமாகக் கொண்ட எதிர் எதிரான சக்திகளின் தொடர்களும் பிணக்குகளும் அவசியமாகின்றது அப்போதுதான் குறுக்கம் முடிவு என்பவற்றின் முடிவாக புதியவை உருவாக்கப்படும் அது அந்த பிணக்குகளின் முடிவாக மறைந்து போன அவை உறுவாகியவற்றின் குறைபாடுகளில் இருந்து விடுபடும் ஆகவே நாம் இஸ்லாம் அதன் குறைபாடுகளையும் மாறானவைகளையும் அகற்றி மேலும் குறிப்பாக எதிர் நம்பிக்கைகளில் இருந்து முழுமையாக விடுபட்டுவிட்டது எனக் கூறினால் அந்தக் கூற்றுக்கு அவசியமாகத் தேவைப்படுவது இஸ்லாம் உறுவாக்கிய சமூகம் பரிணாம வளர்ச்சிப் பாதையில் இருந்து தடுக்கப்படும் என்பதாகும் தர்க்கரீதியான உலகாதாய வாதத்தினால் உரிமை கோரப்படுவதும் இதுவே சிலர் குறிப்பிட்ட விடயத்திலிருந்து ஆச்சரியப்படத்தக்க வகையில் வழிதவறியுள்ளனர் மனித நம்பிக்கைகளும் போதனைகளும் இரண்டு வகையானவை உலகாயத வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக அமர்த்தப்பட்டுள்ள கைத்தொழில் தொழில் நுட்ப விஞ்ஞானங்களும் இயற்கை கணித விஞ்ஞானங்கள் போன்ற மனித இன நலன்களுக்கானவையும் இதில் அடங்கும் இந்த விஞ்ஞானங்களும் தொழிநுட்பங்களும் மற்றும் இது போன்றவையும் மாற்றக் கூடியவை என்ற ஒரே வகுப்பில் சேறுகின்றன மேலும் இவை மாற்ம் அடைகின்ற அளவுக்கு குறைபாடுகள் நீங்கி பூரணமாகின்றன இந்த வகையில் இதற்கு ஏற்ப சமூக வாழ்வும் முன்னேற்றமடைகின்றது இன்னொரு வகையான போதனை மாற்றங்களும் உட்படாதவை ஒரு வகையில் தெய்வீகப் போதனைகளே பரிபூரணமாக இருந்த போதிலும் அவை பரிணாம வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் உட்பட்ட போதிலும் அவற்றின் மூலாதாரத்தைப் பொறுத்தமட்டில் அவற்றுக்கு தீர்க்கமான நியாயமான மாற்றமுடியாத ஒரு வடிவம் உள்ளன இந்தப் போதனைகள் சமூகத்தைப் பொதுவாக மட்டுமே பாதிக்கின்றன ஆகவே இந்தக் கருத்துக்களும் போதனைகளும் சஞசலமின்றி நிலைத்திருக்குமானால் அது சமூகத்தை அதன் பரிமான வளர்ச்சியில்ருந்து தடுக்காது நிலையான பொது சட்டங்கள் பல சமூக முன்னேற்றத்துக்கு தடையின்றி இருப்பதை நாம் அவதானிக்கலாம் உதாரணத்துக்கு மனிதன் தனது ஆயளைக் காப்பாற்றிக் கொள்ள உழைக்க வேண்டும் என்பது எல்லா மனிதர்களுக்கும் அவசியமான பொதுவிதியாகும் இன்னொரு உதாரணம் ஒரு செயல் ஒரு நன்மையைப் பெற்றுக் கொள்வதற்காகவே இருக்க வேண்டும் மேலும் இன்னொன்று ஒரு மனிதன் சமூகத்தில் வாழ வேண்டியது அவசியம் என்பதாகும் அல்லது பிரபஞ்சம் உண்மையிலேயே இருசக்கின்றது அது கற்பனையோ மாயையோ அல்ல என்று நாம் கூறலாம் அல்லது மனிதனுக்கு அங்கங்கள் உண்டு சக்திகளும் உபாயஙகளும் உள்ளன அல்லது ஏனைய நிலையான கருத்துக்களிலும் போதனைகளிலும் அவற்றின் நிலையான தன்மையும் தேக்கமற்றதன்மையும் சமூகத்தின் உறுதியையும் மந்தமற்ற நிலைமையினையும் பாதிப்பதில்லை நிலையான சமய போதனைகள் ஒரே வகையினைச் சார்ந்தவை உதாரணத்துக்கு நாம் இவ்வாறு கூறலாம் பிரபஞ்சத்துக்கு ஒரு இறைவனே இருக்கின்றான் சந்தோஷத்தின் எல்லா வழிமுறைகளையும் உள்ளடக்கிய தெய்வீகப் போதனையே இறைவன் மக்களுக்கு அனுப்பியுள்ளான் இது நபித்துவத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது இறைவன் ஒரு தினத்தில் எல்லா படைப்பினங்களையும் அவற்றின் செயல்களுக்காக கணக்குக் கேட்க ஒன்று திரட்டுவான் இஸ்லாம் அதன் சமூகத்தை அமைத்து அதன் எல்லா விடயங்களிலும் பாதுகாப்பினை அமைத்திருப்பதும் இந்த ஒரு வார்த்தையில் தான் இந்தச் சொல்லில் மறுப்பும் உறுதி மொழியும் வெளிப்படுமானால் மேலும் சாதக பாதகமான கருத்துக்கள் மோதிக் கொண்டு அதன் பெறுபேறு மூன்றாவது கோட்பாடு ஒன்றின் மூலம் உறுவானால் அதன் விளைவு சமூகத்தில் அழிவாகவே இருக்கும் மனித சமூகத்துக்கு முன்னேற்றப் பாதையில் ஒன்றே ஒன்றுதான் தேவைப்படுகின்றது அது இயற்கை நலன்களை உபயோகிப்பதில் நாள்தோரும் மாற்றங்களுக்கு உட்பட்டு பரிபூரணத்தை அடைந்து கொள்வதாகும் இந்த மாற்றமும் வளர்ச்சியும் தொடர்ச்சியான விஞ்ஞான ஆய்வுகள் மூலம் செய்முறை விஞ்ஞானத்தின் நிலையான பிரயோகத்தின் மூலமும் பாதுகாக்கப்படுகின்றது இந்த விடயம் ஒரு போதும் இஸ்லாத்தால் பரிசோதிக்கப்படாத தொன்றாகும் இன்னொரு விடயம் சமூக நிர்வாக முறையும் சமூகங்கிளல் காணப்படுகின்ற முறைமைகளும் எப்போதுமே மாற்றங்களுக்கு உட்பட்டவை உதாரணத்திற்கு எசேச்சதிகாரம் ஜனநாயகம் ஆனது ஜனநாயகம் கம்யூனிஸமானது இந்த மாற்றங்கள் ஒரே ஒரு காரணத்தால் தான் அவசியமாகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும் அதாவது இந்த முறைமைகள் எல்லாம் குறைபாடுகள் உள்ளவை அவை ஒன்றுமே மனிதனால் விரும்பப்படும் சமூகப் பரிபூரணத்துவத்துக்கு சமமானவை அல்ல மேலும் அவற்றால் அந்த பரிபூரணத்தை வழங்கவும் முடியாது இந்த மாற்றங்கள் குறைபாடுகளிலிருந்து பூரணத்துவத்தை நோக்கி போக வேண்டும் என்பதல்ல இந்த ஒழுங்கு முறைகளுக் இ டையில் ஒரு வித்தியாசம் இருக்குமானால் அது சரியானதுக்கும் தவறானதுக்கும் இடையில் உள்ள வித்தியாசமாகத்தான் இருக்கும் பூரணத்துவத்துக்கும் பூரணத்துவமற்றதற்கும் இடையிலான வித்தியாசமாக இருக்காது இவ்வாராக சமூக ஒழுங்கு முறை ஸ்தாபிக்கப்பட்டால் முறையான கல்வி எனும் பாதையின் கீழ் மக்கள் வாழ்ந்தால் நன்மை பயக்கக் கூடிய காரியங்களைப் படித்துக் கொண்டால் நன்மைகளையே செய்தால் இந்த வழியில் சந்தோஷத்தை நோக்கி நகர்ந்தால் கொள்கை எனும் படிக்கட்டுகளில் ஏறி பூரணத்துவத்தை நோக்கி செயல்பட்டால் ஒவ் வொரு நாளும் சந்தோஷத்தைக் கண்டு அதனை விருத்தி செய்து கொண்டால் சமூக மரபுகளையும் வாழ்க்கை முறையையும் மாற்றி அமைப்பதற்கான அவசியம் தான் என்ன இத்தகைய மக்களுக்கு ஏற்கனவே தம்மிடம் இருப்பதை விட மேலதிகமாகத் தேவைப்படுவதுதான் என்ன மாற்றங்களே தேவைப்படாத சந்தர்ப்பங்களில் கூட மனிதனுக்கு எல்லா வகையிலும் மாற்றங்கள் தேவை என்பதை தெளிவான சிந்தனையுள்ள ஒரு மனிதன் ஊர்ஜிதப்படுத்தமாட்டான் நீங்கள் குறிப்பிட்ட இவை எதற்குமே மாற்றங்கள் தேவையில்லை நம்பிக்கை பொது ஒழுக்கம் போன்ற விடயங்கள் அவசியமாக மாற்றப்பட வேண்டியவை மாற்றத்துக்குள்ளான நிலைமைகள் வித்தியாசமான சூழல்கள் என்பவற்றோடு இவையும் மாற்றத்துக்கு உட்பட வேண்டும் பண்டைய கால கருத்துக்களை விட வித்தியாசமான கருத்துக்கள் தற்காலத்தவர்க ளிடம் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது இது போலவே அவர் வாழும் வித்தியாசமான பிராந்தியங்களுடன் அவர்களின் எண்ணங்களும் வித்தியாசப்படுகின்றன துருவ பிரதேசத்திலும் வெப்பவலயத்திலும் உள்ள வாழ்க்கை நிலை போல மேலும் பல்வேறு வாழ்க்கை நிலைமைகள் அவர்களின் எண்ணங்களிலும் கண்ணோட்டங்களிலும் செல்வாக்கு செலுத்துகின்றன ஒருவர் எஜமானனாக இருக்கின்றார் மற்றவர் சேவகனாக இருக்கின்றார் ஒருவர் கூடாரத்தில் வாழ்கின்றார் இன்னொருவர் பிரஜையாகவும் இருக்கின்றார் ஒருவர் செல்வந்தனாகவும் மற்றவர் ஏழையாகவும் இருக்கின்றார் ஒருவரிடம் பணம் இருக்கின்றது மற்றவரிடம் இது இல்லை இந்த வித்தியாசங்கள் எல்லாம் மனிதனின் சிந்தனையைப் பாதிக்கின்றன ஆகவே அவை வித்தியாசமான காரணிகளாலும் காலப்பகுதிகளாலும் மாற்றமடைகின்றன இந்த விடயத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை என ஒரு வாசகர் கூறினால் அதற்குரிய பதில் இதுதான் இந்த விடயங்கள் யாவும் விஞ்ஞானம் மனிதக் கண்ணோட்டம் என்பவற்றோடு சம்பந்தப்பட்டுள்ளன இந்தக் கொள்கைக்கு அவசியமானது சரியும் பிழையும் நன்மையும் தீமையும் மேலதிக விவகாரங்களின் வரிசைக் கோவையில் அமைய வேண்டுமே அன்றி உண்மை யதார்த்தம் என்பவற்றின் வரிசைக் கோவையாக இருக்கக் கூடாது இந்த கோட்பாட்டின்படி பொதுக் கொள்கை ரீதியான அறிவு இந்த மூலாதாரத்துடனும் மீள உயிர்ப்பித்தலோடும் இணைக்கப்பட்டுள்ளன அது பேல் பொது செயல்முறைக் கண்ணோட்டம் சமூகம் மனிதனுக்கு பிரயோசனமானது அல்லது நியாயம் சிறந்தது என்ற கருத்துக்கள மாறும் சூழ்நிலை காலம் என்பவற்றோடு மாற்றமடையக் கூடிய பொதுவான விதிமுறைகளாகும் பொதுவாக கூறும் போது இந்தக் கொள்கையை பொதுத்தன்மை அந்தஸ்தோடு பேசுவது தவறானதாகும் இது பற்றி பல இடங்களில் நாம் விவரமாகக் கலந்துரையாடி உள்ளோம் சுருங்கக் கூறின் இந்தக் கொள்கை ஒரே வகையான பொதுக் கண்ணோட்டத்தின் பொதுவான கொள்கை ரீதியான விடயங்களை உள்ளடக்கவில்லை இந்தக் கொள்கையின் பொதுத் தன்மையின் சந்தேகத்தைக் காட்ட இப்படிக் கூறுவதே போதுமானதாகும் அதாவது அது பொதுத் தன்மையைக் கொண்டிருந்தால் மேலும் முழுமையான நிலையான பொதுக் கொள்கையைக் கொண்டிருந்தால் தனித்துவமான தொடர்புபற்ற ஒரு பிரேரணை எம்மிடம் இருந்திருக்கும் என்பதே அதன் கருத்தாகும் அவ்வாராயின் அதே கொள்கை அதுவே பொதுவானதாகவும் மாறுதல் இல்லாததாகவும் இருந்திருக்கும் அது ஒரு பொதுவான பிரேரணையாக இல்லாவிட்டாலும் கூட தற்செயலானதாக மீண்டும் எம்மிடம் தனித்துவமான ஒரு பிரேரணை இருக்க வேண்டும் என்றே கூறுகின்றது அதாவது நாம் தனித்துவமான ஒரு முறையில் இந்தக் கொள்கை பொதுவானதல்ல என்று கூறவேண்டும் எந்த வகையிலும் இந்தக் கொள்கையின் பொதுத்தன்மை செல்லுபடியற்றதும் பயனற்றதும் ஆகும் வேறு விதமாகக் கூறின் எல்லாக் கருத்துக்களும் நம்பிக்கைகளும் ஒரு நாள் மாற வேண்டும் என்ற கருத்து உன்மையாயின் இந்தக் கண்ணோட்டம் கூட மாறவே வேண்டும் மேல் சொன்ன கருத்து மாறுமாயின் அதன் கருத்து எல்லாக் கருத்துக்களும் நம்பிக்கைகளும் ஒரு நாள் மாற வேண்டும் என்ற அவசியமில்லை ஆனால் அதன் ஒரு பகுதி மட்டும் மாற்ற முடியாது தற்போதைய வாழ்க்கையில் மகிழ்ச்சியை சமயம் உத்தரவாதம் செய்யுமா சிலர் இப்படிக் கூறலாம் குர்ஆன் இரக்கப்பட்ட வேளையில் இருந்த மனித நாட்டங்களை எல்லாம் இஸ்லாம் எதிர்த்தது என்பது உண்மையே மேலும் இந்தக் காரணத்தால் தான் உண்மையான மகிழ்ச்சியையும் வாழ்க்கையின் எல்லா உயர்வுகளையும் நோக்கி இட்டுச் செல்லக் கூடியதாகவும் இருந்தது ஆனால் காலங்களின் ஓட்டம் வாழ்க்கை முறை மாறிவிட்டது கலாசார மற்றும் நவநாகரிகத் தின் விஞ்ஞான தொழிநுட்ப வாழ்க்கை என்பவற்றுக்கும் நூற்றாண்டுகளுக்கு முந்திய வாழ்க்கை முறைக்கும் இடையில் எவ்வித ஒற்றுமையும் காணப்படவில்லை அன்றைய வாழ்க்கைமுறை இயற்கையின் ஆதாரப் பொருள்களோடு திருப்தியடைந்தது மனிதன் தனது நீண்ட கடின முயற்சிகளின் விளைவாகவே இத்தகைய முன்னேற்றகரமான அந்தஸ்தையும் வளர்ச்சியையும் அடைந்துள்ளான் இதனை பல நூற்றாண்டுகளுக்கு முன்னைய சூழ்நிலையோடு ஒப்பிடுவதானது முழுக்க முழுக்க மாற்றமான இரு வகை களை ஒப்பிடுவது போன்றதாகும் அந்தக் காலத்தில் வாழ்க்கையை ஒழுங்குபடுத்த அமைக்கப்பட்ட சட்டங்களால் இன்று விசாலமடைந்தது சிக்கலடைந்திருக்கும் வாழ்க்கை முறையை எவ்வாறு நிர்வகிக்க முடியும் இவ்விரண்டு வாழ்க்கை முறையும் ஒன்றின் சுமையை இன்னொன்று எவ்வாறு தனது தோளில் சுமக்க முடியும் இதற்குரிய பதில் இதுதான் இரு யுகங்கள் வித்தியாசமானதாகத் தென்பட்டால் அதன் கருத்து அவற்றினது வாழ்க்கையின் பொதுவான நிலைகள் வித்தியாசமடைந்துள்ளது என்பதல்ல மாறாக சில குறிப்பிட்ட விடயங்கள் வித்தியாசமடைந்துள்ளன என்பதுதான் வேறு வார்த்தையில் கூறுவதாயின் வாழ்க்கையில் மனிதனுக்கு உணவு தெவைப்படுகின்றது உடை உறையுள் போக்குவரத்துச் சாதனங்களும் வசதிகளும் வாழ்வதற்கு ஒரு சமூகம் பாலியல் உறவுகள் வர்த்தக தொழில் நுட்ப செயல் முறை உறவுகள் என்பனவும் வாழ்க்கையில் தேவைப்படுகின்றன இவை மாற்ற முடியாத பொதுவான தேவைகள் மனிதனுக்கு ஒரு மனிதன் என்ற வகையிலும் அவனுடைய மனித வாழ்வின் இயற்கையான கட்டமைப்பு உள்ளவரைக்கும் அவனுக்கு இவை தேவைப்படுகின்றன இந்த எல்லா விடயங்களிலும் ஆதிகால மனிதன் தற்கால மனிதனில் இருந்து வித்தமியாசப்பட்டுக் காணப்படவில்லை இந்த தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்ட உபாயங்களிலேயே வித்தியாசம் உள்ளது படிப்படியாக அவன் தெரிந்து கொண்ட தேவைகளிலும் அவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவன் கற்றுக் கொண்ட வழிகளிலுமே வித்தியாசங்கள் உள்ளன இந்த விடயத்தை விவரிக்க ஆதிகால மனிதன் பழங்களின் மூலமாகவும் தான் தேடிக் கொண்ட இறைச்சி போன்ற ஏனைய உணவுகளின் மூலமாகவும் இலகுவாக தனது பசியைத் தீர்த்துக் கொண்டான் ஆனால் இன்று மனிதன் ஆயிரக் கணக்கான வித்தியாசமான பண்டங்களைத் தயாரிக்கின்றான் அவனுடைய புத்திசாதுரியம் ஆற்றல் மிகு சிந்தனை என்பவற்றைக் கொண்டு ஒவ்வொன்றும் வித்தியாசமான பண்புகளையும் சுவையினையும் திறதினையும் மனத்தினையும் கொண்டதாகவும் இன்னும் விவரிக்க முடியாத விஷேடமான பண்புகளைக் கொண்டதாகவும் தயாரிக்கின்றான் உணவினைப் பொறுத்தமட்டில் இரண்டு வகையான வாழ்க்கை முறையிலும் எல்லா வகையான வித்தியாசங்களும் அப்பால் மனிதன் தனது பசியைத்தீர்த்துக் கொள்ளவே உணவைத் தயாரிக்கின்றான் என்பதில் எவ்வித வித்தியாசமும் இல்லை உடை உறையுள் ஆகியவற்றிலும் இதே நிலைதான் உணவு உடை உறையுள் மற்றும் வாழ்க்கையின் ஏனைய தேவைகளைப் பொறுத்த மடடில் இந்தப் பொதுவான நம்பிக்கைகள் மனித வாழ்வின் முதல் நாளில் இருந்தே இருந்து வந்துள்ளதையும வேறுபட்ட காலப்பகுதிகளில் அது மாற்றங்களுக்கு உட்படவில்லை என்பதையும் நீங்கள் காணலாம் மேலும் அதுபோலவே முதலாவது நம்பிக்கை நம்பிக்கையின் முன்னேற்றகரமான கடைசிக் கட்டத்தோடு ஒத்திருக்குமானால் இயற்கையின் அழைப்புக்கு ஏற்பவும் மகிழ்ச்சியைப் பாதுகாப்பதற்குமாகவே திட்டமிடப்பட்டுள்ள இஸ்லாத்தின் பொதுச் சட்டங்கள் வாழ்க்கையின் ஓர் உபாயத்தை இன்னொன்றால் ஈடுசெய்வதற்காக அவற்றை இல்லாதொழித்து விடவில்லை என்பதையும் காணலாம் நவீன உபாயங்கள் அவற்றினிடையே பிரிவினை இன்றி இயற்கையோடு இசைந்ததாக இருப்பின் இஸ்லாம் அதனோடு ஒத்துப் போகின்றது ஆனால் அவை படைப்பின் அடிப்படைச் சட்டங்களுக்கு முரணாக இருப்பின் அது நவீன காலத்துக்கு உரியதாயினும் சரி ஆதிகாலத்துக்கு உரியதாயினும் சரி இஸ்லாம் அதனை ஏற்றுக் கொள்வதில்லை செல்வ அந்தஸ்து பாதுகாப்பு விதிகள் தொலைத்தொடர்பு சாதனங்களின் வசதி நெருங்கிய தொடர்புகள் நகரம் ஒன்றினை நிர்வகிப்பதற்கான விதிமுறைகள் போன்றவை வித்தியாசமான காலப்பகுதிகளுக்கு சொந்தமானவையாகவும் விரைவாக மாறுகின்றவையாகவும் உள்ள தற்செயலாக நடக்கின்ற சம்பவங்களாகும் இவை எல்லாமே இஸ்லாமிய சமூகத்தில் அல்லது அரசாங்க விவகாரங்களுக்கான பொறுப்பில் ஓர் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன இந்த இஸ்லாமிய அதிகாரி அல்லது ஆளுனர் தனது இராச்சியத்துக்குள் ஒரு வீட்டின் எஜமான் தனது வீட்டு விவகாரங்களை முடிவு செய்து நிர்வகிப்பது போலவே செயல்படுகின்றார் ஒரு முஸ்லிம் சமூகத்தின் உள்ளார்ந்த வெளிவாரியான எல்லா விடயங்களிலும் முடிவு செய்யும் உரிமை இஸ்லாமிய சமூக அதிகாரிக்கு உண்டு ஒரு முஸ்லிம் அதிகாரிக்கு யுத்தம் சமாதானம் தொடர்பாக முடிவு செய்யும் உரிமை உண்டு நிதி நிதி சம்பந்தமற்ற விடயங்களிலும் அவர் முடிவு செய்யலாம் அவருடைய முடிவு முஸ்லிம்களுடன் கலந்தாலோசனை செய்தபின் சமூகத்தின் நன்மையைக் கருதியதாக இருக்க வேண்டும் இறைவன் கூறுகின்றான் சகல காரியங்களும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும் பின்னர் அவைபற்றி நீர் முடிவு கட்டினால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்தும் அத்தியாயம் இவை மக்களோடு தொடர்புடைய விடயங்கள் எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் எடுக்கப்படும் இந்த தற்செயலான முடிவுகளும் விதிகளும் மாற்றத்துக்குரிய உபாயங்களுடனும் மாற்றமடையும் மேலும் சில வேளைகளில் அவை வெளிவரும் சில வேளைகளில் அவை மறைந்துவிடும் இந்த மாற்றத்துக்குரிய விதிமுறைகள் வேதத்தையும் மரபுகளையும் உள்ளடக்கிய பொதுவான தெய்வீக விதிகளில் இருந்தும் வித்தியாசமானவை இவற்றை செல்லுபடியற்றதாக்க முடியாது இவை பற்றி இன்னும் பல விடயங்கள் கூறலாம் இருந்தாலும் இப்போதைக்கு இது போதுமானதாகும் இஸ்லாம் ஆய்வுக்கட்டுரைகள் இமாம் கஸ்ஸாலி ரஹ் இம்மை மறுமை இஸ்லாத்தை தழுவியோர் கட்டுரைகள் குர்ஆனும் விஞ்ஞானமும் குர்ஆன் கேள்வி பதில் சொற்பொழிவுகள் ஜகாத் தொழுகை நூல்கள் நோன்பு வரலாறு ஹஜ் ஹதீஸ் ஹஸீனா அம்மா பக்கங்கள் துஆ க்கள் ஷிர்க் இணை வைப்பு கட்டுரைகள் முஹம்மது அலி அப்துர் ரஹ்மான் உமரி அரசியல் உடல் நலம் எச்சரிக்கை கதைகள் கதையல்ல நிஜம் கல்வி கவிதைகள் குண நலன்கள் சட்டங்கள் சமூக அக்கரை நாட்டு நடப்பு பொது பொருளாதாரம் விஞ்ஞானம் குடும்பம் முஹம்மது அலீ ஆண் பெண் பாலியல் ஆண்கள் இல்லறம் குழந்தைகள் செய்திகள் பெண்கள் பெற்றோர் உறவினர் செய்திகள் இந்தியா உலகம் ஒரு வரி கல்வி தமிழ் நாடு முக்கிய நிகழ்வுகள்
பொய்ப்பிரசாரம் செய்யும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு மற்றும் வடக்கு ஊடகங்கள் மீது சீறிப் பாய்ந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு ஊடகங்கள் எப்பவும் உண்மையை எழுதவேண்டும் ஆனால் இங்கு ஊடகங்கள் நாங்கள் கூறுவனவற்றைத் திரித்து எழுதுகின்றார்கள் தென்னிலங்கையில் ஓர் ஊடகம் நான் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தெளிவாகத் தெரிவித்தேன் புதிய அரசமைப்பில் ஈடுபடும்போது எமக்குத் தமிழீழக் கனவு இருக்கக்கூடாது இதயசுத்தியுடன் மனதுக்குள்ளே ஓர் எண்ணத்தை வைத்துக்கொண்டு செயற்படக்கூடாது சிங்கள மக்கள் எங்களை முழுமையாக நம்பவேண்டும் என்றேன் இந்த ஊடகம் சுமந்திரனின் உரைக்கு முன்னால் வைக்கப்பட்ட மைக்கைத் தட்டிக் காட்டி கூறுகின்றார் நான் சொன்ன அந்த விடயத்தை அப்படியே தலைகீழாக மாற்றி புதிய அரசமைப்பில் தனிநாட்டுக்கான தமிழீழத்துக்கான கோரிக்கையும் உண்டு என்று செய்தி சிங்களத்தில் வெளியிட்டுள்ளது அவ்வாறு செயற்படும் ஊடகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும் இதனால்தான் இவற்றைக் கறுப்பு ஊடகங்கள் என்றேன் தென்னிலங்கை அரசியல் வாதிகள் மக்களைக் குழப்புவதற்காக ஒவ்வொரு பொய் பிரசாரங்களை மேற்கொள்கின்றார்கள் புதிய அரமைப்பு வந்தால் நாடு ஆகப் பிழவுபடப்போகின்றது என்றுகூடக் கூறுகின்றார்கள் ஊடகங்களும் அவர்களுக்கேற்றாற்போல் மக்களைக் குழப்பும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன உண்மையைக் கூறவேண்டும் நான் தேர்தலுக்கு முன்னர் கஜேந்திரகுமாருடன் நடந்த விவாதத்தில் சொன்னேன் புதிய அரசமைப்பில் சமஷ்டி இருக்காது அதிலுள்ள குணாம்சங்கள்தான் இருக்கும் என்று இன்று அதைத்தான் அப்ப என்னால் கூறப்பட்டவற்றைத்தான் புதிய அரசமைப்பில் கொண்டுவந்துள்ளோம் என்றார்
பி காம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் என்னும் படிப்பில் பலர் சமீப காலமாக விரும்பிச் சேருகின்றனர் இதைப் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு எப்படி உள்ளது ஐ ஐ எம் படிப்புகளுக்கான கேட் தேர்வு அறிவிப்பு பி ஏ பொருளாதாரம் படித்து விட்டு பின் அஞ்சல் வழியில் எம் ஏ பொது நிர்வாகம் படித்துள்ளேன் நான் யு ஜி சி நெட் தேர்வில் பொருளாதாரத்தை பாடமாக எழுத முடியுமா பி எஸ்சி பயோடெக்னாலஜி படிக்கும் எனது மகள் அடுத்ததாக எம் பி ஏ படிக்க முடியுமா படித்தால் வேலை வாய்ப்புகள் கிடைக்குமா ஜி ஆர் இ தேர்வு பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறேன் இத்தேர்வு பற்றிய தகவல்களைத் தரவும் மேலும் ஆசிரியர்கள் தேவை உதவி பேராசிரியர்கள் தேவை உதவி பேராசிரியர்கள் தேவை பேராசிரியர் இணை பேராசிரியர் உதவி பேராசிரியர் தேவை ஆசிரியர்கள் தேவை
படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாடு அரசு இந்தியா உள்ளடக்கத்திற்குச் செல்ல தமிழ்நாடு அரசு தேடுக தேடுக தள வரைபடம் அணுகல் இணைப்புகள் எழுத்துரு அளவினை அதிகரிக்க இயல்பான எழுத்துரு அளவு எழுத்துரு அளவினைக் குறைக்க உயர் மாறுபாடு இயல்பான மாறுபாடு தமிழ் கிருஷ்ணகிரி மாவட்டம் பட்டி நிலைமாற்று மேலும் பல முகப்பு மாவட்டம் பற்றி மாவட்டம் ஓர் பார்வை வரலாறு பதவியும் பெயரும் நிர்வாக அமைப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருவாய் நிர்வாகம் வளர்ச்சித்துறை உள்ளாட்சி அமைப்புகள் மாவட்ட வரைபடம் நீர்நிலைகள் மின்னாளுமை துறைகள் விவசாய துறை சுகாதாரம் தொழில் துறை கிராமப்புற வளர்ச்சி பட்டு வளர்ச்சித்துறை மற்ற துறைகள் தேர்தல் விவர தொகுப்பு தொடர்புகளின் தொகுப்பு உதவி தொலைபேசி எண் பேரிடர் மேலாண்மை பொது பயன்பாடுகள் கல்லூரிகள் மின்சாரம் நகராட்சிகள் மருத்துவமனைகள் கல்லூரிகள் காவல் நிலையம் மின்சாரம் அரசு சாரா நிறுவனங்கள் சுற்றுலா கிருஷ்ணகிரி வந்து சேரும் பயண வழி சுற்றுலாத் தலங்கள் நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள் பரிசுத்த இடங்கள் புகழ்பெற்ற பிரபலங்கள் நினைவுச் சின்னங்கள் சுற்றுலா தகவல்கள் ஆவணங்கள் அறிவிப்பு நிகழ்வுகள் அறிவிப்புகள் ஆட்சேர்ப்பு ஒப்பந்தப்புள்ளிகள் சேவைகள் திட்டங்கள் ஊடக தொகுப்பு ஊடக வெளியீடுகள் புகைப்பட தொகுப்பு தகவல் பெறும் உரிமை சட்டம் மூடு முகப்பு திட்டங்கள் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் அச்சிடுக படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் துறை தொழில் துறை தமிழ்நாடு அரசு வேலையில்லாத இளைஞர்களுக்கு குறிப்பாக சமுதாயம் மற்றும் பொருளாதார ரீதியில் நலிவுற்ற பிரிவு மக்கள் உற்பத்தி சேவை மற்றும் வியாபார நிறுவனங்கள் அமைத்து சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது திட்டத்தின் பயன் பெறுவதற்கான தகுதிகள் ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் குறைந்தபட்ச வயது வரம்பு வயதிற்கு மேல் இருக்க வேண்டும் அதிகபட்சமாக வயது வரை பொது பிரிவினருக்கும் வயது வரை சிறப்பு பயனாளிகளான மகளிர் பட்டியலினத்தோர் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது திட்டத்தின் பயனை பெறுவதற்கான நடைமுறைகள் இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ இலட்சம் வரையிலும் சேவை சார்ந்த தொழில்கள் துவங்க அதிகபட்சமாக ரூ இலட்சம் வரையிலும் வியாபாரம் சார்ந்த தொழில்கள் துவங்க அதிகபட்சமாக ரூ இலட்சம் வரையிலும் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது திட்ட மதிப்பிட்டில் அதிகபட்சமாக ரூ லட்சம் மானியம் அளிக்கப்படும் பொது பயனாளி தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் செலுத்த வேண்டும் சிறப்பு பிரிவு பயனாளிகள் திட்ட மதிப்பீட்டில் செலுத்த வேண்டும இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடைய பயனாளிகள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மேலும் விபரங்களுக்கு பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் சிட்கோ தொழிற்பேட்டை கிருஷ்ணகிரி தொலைபேசி எண் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது பயனாளி ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் குறைந்தபட்ச வயது வரம்பு வயதிற்கு மேல் இருக்க வேண்டும் அதிகபட்சமாக வயது வரை பொது பிரிவினருக்கும் வயது வரை சிறப்பு பயனாளிகளான மகளிர் பட்டியலினத்தோர் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது பயன்கள் இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ இலட்சம் வரையிலும் சேவை சார்ந்த தொழில்கள் துவங்க அதிகபட்சமாக ரூ இலட்சம் வரையிலும் வியாபாரம் சார்ந்த தொழில்கள் துவங்க அதிகபட்சமாக ரூ இலட்சம் வரையிலும் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது திட்ட மதிப்பிட்டில் அதிகபட்சமாக ரூ லட்சம் மானியம் அளிக்கப்படும் பொது பயனாளி தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் செலுத்த வேண்டும் சிறப்பு பிரிவு பயனாளிகள் திட்ட மதிப்பீட்டில் செலுத்த வேண்டும இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடைய பயனாளிகள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணையதள கொள்கைகள் உதவி தொடர்பு கொள்ள கருத்து கேட்பு பொருளடக்க உரிமை மாவட்ட நிர்வாகம் கிருஷ்ணகிரி இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்
வேலூர் மேம்பாலம் அருகே கொட்டுகின்றனர் பாலாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் குப்பைகள் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் மாவட்டம் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி படங்கள் அறிவியல் ஸ்பெஷல் தமிழகம் வேலூர் மேம்பாலம் அருகே கொட்டுகின்றனர் பாலாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் குப்பைகள் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை வேலூர் வேலூர் வேலூர் பழைய பாலாற்று மேம்பாலம் அருகே அதிகளவு குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது இதை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது வேலூர் விருதம்பட்டு பகுதியில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை பாலாற்றில் பழைய மேம்பாலம் உள்ளது இந்த பாலாற்றின் மேம்பாலத்திற்கு அடியில் விருதம்பட்டு பகுதியில் உள்ள சில தனியார் நிறுவனங்கள் மற்றும் கடைக்காரர்கள் தங்கள் பகுதியில் சேரும் குப்பைகள் கட்டிட கழிவுகள் இறைச்சி கழிவுகள் உள்ளிட்டவற்றை கொட்டி வருகின்றனர் மேலும் தினந்தோறும் அப்பகுதிகளை சேர்ந்த சிலர் குப்பைகளை வாகனங்களில் எடுத்து வந்து கொட்டுவதால் அந்த பகுதி குப்பை மேடாக காட்சி அளிக்கிறது இதனால் அந்த பகுதியில் தூர்நாற்றம் வீசுகிறது இதற்கிடையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் அந்த கழிவுகள் பாலாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படுகிறது இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நிலத்தடிநீர் மாசடையும் நிலையும் உருவாகி உள்ளது பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை பொதுமக்கள் ஆர்வர்த்துடன் வந்து கண்டுக்களிக்க வருகின்றனர் ஆனால் தூர்நாற்றம் காரணமாக அங்கு நின்று கூட பார்க்க முடியாமல் ஓட்டம் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவே மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை பாலாற்றில் கொட்டும் நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது வேதா இல்லம் எங்களுக்கு கோவில் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து அதிமுக மேல்முறையீடு செய்யும் வேதனையில் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு இந்தியா டுடே வழங்கிய மூன்று விருதுகளை முதல்வர் மு க ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார் அமைச்சர் மதிவேந்தன் வெள்ளத்தை கட்டுப்படுத்த உரிய கட்டமைப்பை அனைத்து அரசுகளும் ஏற்படுத்த வேண்டும் ஆளுநர் தமிழிசை வெள்ளத்தை கட்டுப்படுத்த உரிய கட்டமைப்பை அனைத்து அரசுகளும் ஏற்படுத்த வேண்டும் ஆளுநர் தமிழிசை மழை நீர் வடிகாலில் அடைப்பு வெள்ளத்தில் மிதக்கும் ரயில்வே குடியிருப்பு பராமரிப்பு இல்லாததால் வீடுகள் சேதம் விளைநிலங்களில் விளையாடும் காட்டுயானைகள் விவசாயப்பணிக்கு செல்ல வேண்டாம் கொடைக்கானல் விவசாயிகளுக்கு கோரிக்கை அரியாறு கரை உடைந்து திருச்சி மாநகருக்குள் புகுந்தது வெள்ளநீர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேர் விடுதலைபற்றிய அரசு நிலைப்பாட்டில் மாற்றமில்லை வழக்கறிஞர் தகவல் விராலிமலை பகுதியில் விவசாய நிலத்திற்குள் வெள்ளநீர் புகுந்ததால் நெற்பயிர்கள் சேதம் நார்த்தாமலை காப்புக் காடுகள் சுற்றுலாதளமாக மாற்றப்படுமா சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு ராணிப்பேட்டை மாவட்டத்தில் வது மெகா தடுப்பூசி முகாம் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணி கொட்டும் மழையிலும் கலெக்டர் ஆய்வு பொதுமக்களை பாதுகாத்திடும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் அரியலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுறுத்தல் ஆண்டுகளுக்கு முன் உயரமாக கட்டப்பட்ட புதிய மதகால் ஏக்கர் நடவு பாதிக்கும் நிலை வீடுகளை மழைநீர் சூழும் அபாயம் அரியலூர் அருகே நெற்பயிரை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்த ட்ரோன் கருவி அறிமுகம் போக்குவரத்துக்காக சாலையாக பயன்படுத்திய வரத்து வாய்க்கால் வெள்ளநீரால் மீண்டும் வரத்து வாய்க்காலானது கரூர் பூ மார்க்கெட் சாலையில் சுற்றித்திரியும் வெள்ளாடுகள் போக்குவரத்துக்கு இடையூறு வல்லாகுளத்துபாளையம் காலனி மக்களுக்கான மயானத்திற்கு அடிப்படை வசதி செய்த தர கோரிக்கை அரவக்குறிச்சி அருகே கொத்தப்பாளையம் தடுப்பணையை மூழ்கடித்து செல்லும் தண்ணீர் கரையோர மக்களுக்கு தண்டோராபோட்டு எச்சரிக்கை பாபநாசத்தில் கீழே சாய்ந்து விழும் ஆபத்தான மின்கம்பம் உடனே மாற்றம் பாலியல் வழக்கில் திண்டுக்கல் செவிலியர் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனுக்கு டிச ம் தேதி வரை நீதிமன்ற காவல்
கடற்படையினரால் வெள்ள நிலைமைகளை வெற்றிகரமாக சமாளிக்கும் நோக்கத்தில் பேரழிவு மேலாண்மை பயிற்சி திட்டமொன்று ஏப்ரல் ஆம் திகதி முதல் ஆம் திகதி வரை கிங் ஆற்றுப் பகுதியில் நடத்தப்பட்டது கடற்படை விரைவான நடவடிக்கை படகு படைப்பிரிவின் விரைவான பதில் மீட்பு மற்றும் நிவாரண அலகு ஆகியவற்றின் பயிற்றுவிப்பாளர்களால் இரண்டு கட்டங்களில் நடத்தப்பட்ட இந்த பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் மூலம் உயிர்காக்கும் நுட்பங்கள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தி துன்பத்தில் உள்ளவர்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது மற்றும் மீட்புக்குப் பிறகு அடிப்படை முதலுதவி குறித்த தத்துவார்த்த மற்றும் நடைமுறை அறிவு வழங்கப்பட்டது மேலும் இந்த பயிற்சித் திட்டத்தின் மூலம் சிறிய கைவினை கையாளுதல் மற்றும் நீச்சல் நுட்பங்கள் பற்றிய விரிவான அறிவையும் வழங்கப்பட்டது தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேராவின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட இந்த பயிற்சி திட்டத்திற்கு தெற்கு கடற்படை கட்டளையின் அனைத்து நிருவனங்களும் பிரதிநிதித்துவப்படுத்தி கடற்படை உறுப்பினர்கள் காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மையத்தில் இணைக்கப்பட்ட இராணுவ உறுப்பினர்கள் மற்றும் காலி பொலிஸ் பிரிவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் உட்பட பயிற்சியாளர்கள் குழு பங்கேற்றது எங்களை தொடர்புக்கொள்ள கடற்படைத் தலைமயைகம் கொழும்பு தொ பே இல தொடர்புடைய இணைப்புகள் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சகம் இலங்கை ராணுவம் இலங்கை விமானப்படை
இக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள் நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே ஒவ்வொரு பிறபொருளெதிரியும் குறிப்பிட்ட ஒரு பிறபொருளெதிரியாக்கியுடன் பூட்டும் சாவியும் பிணைவதுபோல் பிணையும் பிறபொருளெதிரி என்பது முதுகெலும்பிகளில் உடலினுள்ளே வரும் பாக்டீரியா தீ நுண்மம் அல்லது வைரசு போன்ற நோயை உருவாக்கும் வெளிப் பொருட்களை அடையாளம்கண்டு அவற்றை அழிக்கவோ அல்லது செயலற்றதாகவோ ஆக்குவதற்காக நோய் எதிர்ப்பாற்றல் முறைமையால் பயன்படுத்தப்படும் குருதியிலும் வேறு உடல் திரவங்களிலும் காணப்படும் ஒரு வகைப் புரதம் ஆகும் இது என சுருக்கமாகச் சொல்லப்படும் எனவும் அழைக்கப்படும் வகைப் புரதமாகும் இவை இரத்த வெள்ளையணுக்களின் ஒரு விசேட பிரிவான பிளாசுமா உயிரணு எனப்படும் இரத்த திரவவிழைய உயிரணுக்களால் உருவாக்கப்படும் இந்த மூலக்கூறின் பொதுவான அடிப்படை அமைப்பானது இரண்டு பாரமான சங்கிலிகளையும் இரண்டு பாரமற்ற இலகுவான சங்கிலிகளையும் கொண்டிருக்கும் பல வேறுபட்ட பாரமான சங்கிலிகளையும் அதனால் பல வேறுபட்ட பிறபொருளெதிரிகளையும் உடல் கொண்டிருக்கும் பாரமான சங்கிலிகளீன் அமைப்பைப் பொறுத்து இவை வெவ்வேறு குழுக்களாக வகுக்கப்படும் பிறபொருளெதிரிகளின் பொதுவான அமைப்பு ஒன்றாக இருப்பினும் பிறபொருளெதிரியாக்கிகளுடன் பிணையும் பகுதியான சங்கிலிகளின் நுனிப்பகுதியின் அமைப்பு ஒவ்வொரு தனி பிறபொருளெதிரியிலும் தனித்துவமானதாக வேறுபட்டு இருக்கும் அதனால் ஒவ்வொரு பிறபொருளெதிரியாக்கிக்குமான பிறபொருளெதிரி ஒவ்வொன்றும் தனித்துவமான விசேட அமைப்பைக் கொண்டிருக்கும் இதனால் ஒவ்வொரு உடலிலும் மில்லியன்கள் அளவில் ஒன்றிலிருந்து ஒன்று முற்றாக வேறுபட்ட பிறபொருளெதிரிகள் காணப்படும் ஒரு குறிப்பிட்ட பிறபொருளெதிரி குறிப்பிட்ட பிறபொருளெதிரியாக்கியுடன் மட்டுமே பிணையும் அடிக்குறிப்புகள்தொகு பப்மெட் பன்னாட்டுத் தரப்புத்தக எண்
பூதி விக்கிரம கேசரி முதலாம் பராந்தக சோழன் முதல் சுந்தர சோழன் வரையிலான காலங்களில் கொடும்பாளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை ஆண்ட இருக்குவேளிர் குலத்தை சேர்ந்த சிற்றரசர் ஆவார் இவர் முதலாம் பராந்தக சோழன் மற்றும் சுந்தர சோழன் காலங்களில் போரில் சோழப் படைகளுக்கு தலைமைவகித்துள்ளார் மூவர் கோவில் இவருடைய இயற்பெயர் பூதி என்பதாகும் போர் திறமையால் விக்ரம கேசரி என்று வழங்கப்பட்டுள்ளான் தென்னவன் இளங்கோவேள் என்றும் அழைக்கப்பட்டிருப்பதாக கல்வெட்டுகளின் மூலம் தெரிகிறது பொருளடக்கம் கொடும்பாளூர் வேளிர் வம்சம் குடும்பம் போர்களில் பங்களிப்புகள் நூல்கள் மேற்கோள்கள் இவற்றையும் பார்க்கவும் கொடும்பாளூர் வேளிர் வம்சம்தொகு கொடும்பாளூர் வம்சம் தொன்றுத் தொட்ட இருங்கோவேள் வம்சமாக கருதப்படுகிறது சிலப்பதிகாரத்தின் காலத்திலிருந்தே கொடும்பாளூர் நகரம் கொடும்பை என்ற பெயருடன் புகழ் பெற்றிருந்திருக்கிறது இருக்குவேளிர் குலத்தின் முக்கிய நகரமாக இருந்த இது பழங்காலத்தில் இருக்குவேளூர் என்ற பெயர் கொண்டிருந்திருக்கிறது இந்த சிற்றரசர்கள் வம்சம் பிற்கால பல்லவர் ஆட்சியின் தொடக்க காலத்திலும் கொடும்பாளூர் பகுதியை ஆட்சி புரிந்து வந்துள்ளனர் பல்லவ அரசன் முதலாம் நரசிம்மவர்மன் கி பி ல் வாதாபி நகர் மீது படையெடுத்த பொழுது கொடும்பாளூர் வம்சத்தை சேர்ந்த செம்பியன் வளவன் என்பவன் பல்லவனுக்கு உதவியாக போர்ப் புரிந்தான் என்று குறிப்புகள் உள்ளன காண்க கல்கியின் சிவகாமி சபதம் மேலும் கொடும்பாளூர் மூவர் கோவிலில் காணப்படும் கல்வெட்டுக்களில் பரதுர்கமர்த்தனன் என்ற கொடும்பாளூர் வமிசத்தைச் சேர்ந்த சிற்றரசர் பெருமை மிக்க வாதாபியை வென்றவன் என்று காணப்படுகிறது இந்த சான்றுகள் பிற்கால பல்லவர்களுடனான இவர்களது தொடர்பை தெரியப்படுத்துகிறது கொடும்பாளூர் இருக்குவேளிர்களுக்கும் பல்லவர்களூக்குக் கீழே சிற்றரசர்களாக இருந்த முத்தரையர்களுக்கும் பெண் எடுத்துப் பெண் கொடுக்கும் சொந்தம் இருந்திருக்கின்றது எட்டு மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளிள் பாண்டியர்கள் மற்றும் பல்லவர்களின் ஆதிக்க போட்டிகள் சோழ மண்டலத்தில் அதிகரித்தன ஆகவே இருக்குவேளிர்கள் மெல்ல பலத்தை அதிகரித்துக் கொண்டுவந்த சோழர்களுடன் நட்புறவு கொண்டனர் ஒன்பதாம் நூற்றாண்டில் திருப்புறம்பியத்தில் நடைபெற்ற போரில் சோழர்கள் பல்லவர்கள் உதவியுடன் பாண்டியர்களை முறியடித்த பிறகு கொடும்பாளூர் அரசர்கள் சோழ அரசுடன் தம்மை இணைத்துக் கொண்டனர் அதன்பிறகு கொடும்பாளூர் வேளிர் வம்சம் திருமண உறவுகள் மூலம் சோழ அரசுடன் தமது உறவை வலுப்படுத்திக் கொண்டனர் முதலாம் ஆதித்த சோழனின் மற்றொரு மகனாகிய கன்னர தேவன் கொடும்பாளூர் வமிசத்தைச் சேர்ந்த பூதிமாதேவ அடிகள் என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தான் பூதி விக்கிரம கேசரி முதலாம் பராந்தக சோழனின் இரு மகளிரில் ஒருவரான அனுபமாதேவி என்பவரை திருமணம் செய்திருந்தான் கொடும்பாளூர் வமிசத்தைச் சேர்ந்த தென்னவன் இளங்கோவேள் என்பவரின் மகள் பூதி ஆதிக்க பிடாரி என்பவளைப் முதலாம் பராந்தகனின் மக்களில் ஒருவனான அரிகுலகேசரி திருமணம் செய்திருந்தான் சுந்தர சோழன் உத்தம சோழன் மற்றும் முதலாம் இராஜராஜ சோழன் காலங்களில் கொடும்பாளூர் வேளிர் சோழ அரசியலில் மிகப்பெரிய பதவிகளில் இருந்துள்ளனர் சுந்தர சோழர் காலத்தில் நடைபெற்ற ஈழ படையெடுப்பின் பொழுது கொடும்பாளூர் பூதி விக்கிரம கேசரிக்கு தம்பி முறை உடைய பராந்தகன் சிறிய வேளான் சோழப்படைகளுக்கு தலைமையேற்றுச் சென்று போரில் மரணமடைந்து ஈழத்துப் பட்ட பராந்தக சிறிய வேளான் என்றுப் பட்டம் பெற்றான் பூதி விக்கிரம கேசரி வீரபாண்டியனுடன் நடந்த போரில் சோழப்படைகளுக்கு ஆதித்த கரிகாலனுடன் தலைமையேற்று சென்று போரில் வெற்றி பெற்றார் குடும்பம்தொகு பூதி விக்கிரம கேசரி சோழ மன்னனின் மகளான அனுபமையை மணந்தவர் கொடும்பாளூரை ஆண்ட சமராபிராமன் என்பவரின் மகன் கற்றளி மற்றும் வரகுணை என்று இருமனைவிகளும் பராந்தகவர்மன் ஆதித்தய வர்மன் என்று இரண்டு மகன்கள் இவருக்கு இருந்ததையும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன போர்களில் பங்களிப்புகள்தொகு முதலாம் பராந்தக சோழன் கி பி ல் மதுரையை கைப்பற்றுவதற்கு முன் கொடும்பாளூர் அரசனான விக்கிரமகேசரியுடனான போரில் மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் வெற்றி பெற்றான் முதலாம் பராந்தக சோழன் கி பி ல் மதுரையை கைப்பற்றிய போரிலும் அதன்பிறகு ஈழ மன்னன் ஐந்தாம் காசியப்பன் கி பி களில் பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்ட வெள்ளூர் போரிலும் இவர் சோழப்படைகளுக்கு கீழப்பழுவூர்த் தலைவர்களான பழுவேட்டரையர்களுடன் இணைந்து தலைமையேற்று சென்று போரில் வெற்றி பெற்றார் கொடும்பாளூர் மூவர் கோவிலில் காணப்படும் கல்வெட்டுக்களில் அவன் பல்லவனோடு போரிட்டு அந்தப் படையினர் குருதியால் காவிரி நீரை செந்நீராக்கியவன் என்று பொருள்படும் பல்லவஸ்ய த்வஜின்யா என்ற சொற்தொடர்கள் அபராஜிதவர்ம பல்லவனுடன் சோழர்களுக்கு ஏற்பட்ட போரையும் அதில் பூதி விக்கிரம கேசரியின் பங்களிப்பையும் தெரிவிக்கிறது ஆனால் வீரோ வீரபாண்ட்யம் வ்யஜயத ஸமரே வஞ்சிவேளந்தகோ அபூத் வ்ருத்தம் என்ற சொற்தொடர்கள் போரில் வீரபாண்டியனை வென்ற வீரன் என்று பொருட்படுகிறது இது பூதி விக்கிரம கேசரி வீரபாண்டியனுடன் நடந்த போரில் வெற்றி பெற்றார் என்று தெரிவிக்கிறது இதனையே சதாசிவ பண்டாரத்தார் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார் மேலும் எழுத்தியலின் அடிப்படையில் இக்கல்வெட்டுக்களை கண்டராதித்யனின் காலத்திற்கு முன்பு கொண்டு செல்லவியலவில்லை ஆகவே பல்லவஸ்ய என்பதற்குப் பதிலாக வல்லபஸ்ய என்றிருந்தால் ராஷ்ட்ரகூட படையெடுப்பைக் குறிப்பதாகக் கொள்ளலாம் என்று பேரா நீலகண்ட சாஸ்த்ரியார் குறிப்பிடுகிறார் நூல்கள்தொகு பூதி விக்கிரம கேசரியைக் கதைபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள் பொன்னியின் செல்வன் கல்கி வரலாறு குறிப்பிடும் பூதி விக்கிரம கேசரியை ஒரு முக்கிய கதாபாத்திரமாக இப்புதினம் கொண்டுள்ளது மேற்கோள்கள்தொகு வடமொழி கல்வெட்டுக்கள் சங்கரநாராயணன் க பிற்கால சோழர் வரலாறு தி வை சதாசிவ பண்டாரத்தார் பக்கங்கள் பிற்கால சோழர் வரலாறு தி வை சதாசிவ பண்டாரத்தார் பக்கங்கள் பிற்கால சோழர் வரலாறு தி வை சதாசிவ பண்டாரத்தார் பக்கங்கள் பொன்னியின் செல்வன் கல்கி பிற்கால சோழர் வரலாறு தி வை சதாசிவ பண்டாரத்தார் பக்கம் பிற்கால சோழர் வரலாறு தி வை சதாசிவ பண்டாரத்தார் பக்கங்கள் சோழர்கள் பேரா நீலகண்ட சாஸ்த்ரியார் பிற்கால சோழர் வரலாறு தி வை சதாசிவ பண்டாரத்தார் பக்கம் மூன்றாம் இராசசிம்மன் முதலாம் பராந்தக சோழன் இவற்றையும் பார்க்கவும்தொகு இருக்குவேள் அரசர்கள் பூதி விக்கிரம கேசரி இருந்து மீள்விக்கப்பட்டது