text
stringlengths
16
178
அஃகமும்‌ காசும்‌ சிக்கெனத்‌ தேடு.
அஃகம்‌ சுருக்கேல்‌.
அகங்கையிற்‌ போட்டுப்‌ புறங்கையை நக்கலாமா?
அகட விகடமாய்ப்‌ பேசுகிறான்‌.
அகதிக்கு ஆகாசமே துணை.
அகதிக்குத்‌ தெய்வமே துணை.
அகதி சொல்‌ அம்பலம்‌ ஏறாது.
அகதி தலையிற்‌ பொழுது விடிந்தது.
அகதி பெறுவது பெண்பிள்ளை, அதுவும்‌ வெள்ளிபூராடம்‌.
அகதியைப்‌ பருதி கேட்கிறதா?
அகத்தி ஆயிரம்‌ காய்த்தாலும்‌ புறத்தி புறத்தியே.
அகத்தின்‌ அழகு முகத்தில்‌ தெரியும்‌.
அகத்துக்‌ கழகு ஆமுடையான்‌.
அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துச்சனி, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம்‌ இடத்து ராஜா.
அகப்பட்டுக்கொள்வேன்‌ என்றோ கள்ளன்‌ களவெடுக்‌கிறது?
அகப்பை குறைந்தால்‌ கொழுப்பெல்லா மடங்கும்‌.
அகப்பை பிடித்தவன்‌ தன்னவனானால்‌, அடிப்பந்தியில்‌ இருந்தாலென்ன, கடைப்பந்தியில்‌ இருந்தாலென்ன?
அகம்‌ ஏறச்‌ சுகம்‌ ஏறும்‌.
அகம்‌ மலிந்தால்‌ அஞ்சும்‌ மலியும்‌.
அகம்‌ குறைந்தால்‌ அஞ்சும்‌ குறையும்‌.
அகம்‌ மலிந்தால்‌ எல்லாம்‌ மலியும்‌, அகம்‌ குறைந்தால்‌ எல்லாம்‌ குறையும்‌.
அகல இருந்தால்‌ நிகள உறவு, கிட்டவந்தால்‌ முட்டப்‌ பகை.
அகல இருந்தால்‌ பகையும்‌ உறவாம்‌.
அகல இருந்தால்‌ புகல உறவு.
அகல இருந்து செடியைக்‌ காக்கிறது.
அகல உழுகிறதைவிட ஆழ உழுகிறது சிலாக்கியம்‌.
அகல்வட்டம்‌ பகல்‌ மழை.
அகவிலை அறியாதவன்‌ துக்கம்‌ அறியான்‌.
அகழிலே விழுந்த முதலைக்கு அதுவே வைகுண்டம்‌.
அகா நாக்காய்ப்‌ பேசுகிறான்‌.
அகாரியத்தில்‌ பகீரதப்‌ பிரயத்தனம்‌ பண்ணுறது.
அகிருத்தியம்‌ செய்கிறவன்‌ முகத்தில்‌ விழிக்கிறதா?
அகிலுந்‌ திகிலுமாக.
அகோர தபச விபரீத சோரன்‌.
அகோர தபசி விபரீத நிபுணன்‌.
அக்கச்சி உடைமை அரிசி தங்கச்சி உடைமை தவிடா?
அக்கரைப்பாகலுக்கு இக்கரைக்‌ கொழுகொம்பு.
அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
அக்கறை தீர்ந்தால்‌ அக்காள்‌ முகடு குக்கா.
அக்கன்னா அரியன்னா, நோக்குவந்த விதியென்ன?
அக்காடு வெட்டிப்‌ பருத்தி விதைக்கிறேன்‌ என்றால்‌, அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான்‌ பிள்ளை; அதற்கு அப்பன்‌ கைகால்‌ பட்டுக்‌ கிழியப்போகிறது மடித்துப்‌ பெட்டியிலேவை யென்கிறான்‌.
அக்காடு வெட்டிப்‌ பருத்தி விதைத்தால்‌, அப்பா முழச்‌ சிற்றாடை என்கிறதாம்‌ பெண்‌.
அக்காள்‌ இருக்கிறவரையில்‌ மச்சான்‌ உறவு.
அக்காள்‌ உண்டானால்‌, மச்சான்‌ உண்டு.
அக்காள்‌ உறவும்‌ மச்சான்‌ பகையுமா?
அக்காளைக்‌ கொண்டால்‌, தங்கையை முறைகேட்பானேன்‌?
அக்காள்‌ தான்‌ கூடப்பிறந்தான்‌, மச்சானும்‌ கூடப்பிறந்‌தானா?
அக்காளைப்பழித்துத்‌ தங்கை அபசாரியானாள்‌.
அக்காளைப்பழித்துத்‌ தங்கை மோசம்போனான்‌.
அக்கியானம்‌ தொலைந்தால்‌ அவிழ்தம்‌ பலிக்கும்‌.
அக்கிராரத்தில்‌ பிறந்தாலும்‌, நாய்‌ வேதம்‌ அறியுமா?
அக்கிராரத்துக்கு ஒரு ஆடு செத்தால்‌ ஆளுக்கு ஒரு மயிர்‌.
அக்கிராரத்து நாய்‌ பிரதிஷ்டைக்கு அழுததுபோல.
அக்கிராரத்து நாய்க்கு அகவிலை தெரியுமா?
அக்கினிதேவனுக்கு அபிஷேகம்‌ செய்ததுபோல்‌ இருக்கிறான்‌.
அக்கனிப்பந்தலிலே வெண்ணெய்ப்பதுமை ஆடுமா?
அக்கினி மலையிலே கர்ப்பூரபாணம்‌ பிரயோகித்தது போல.
அக்கினியைத்தின்று கக்குகிறபிள்ளை, அல்லித்தண்டைத்‌ தின்கிறது அதிசயமா?
அக்கினியாற்‌ சுட்ட புண்‌ விஷமிக்காது.
அக்குத்‌ தொக்கு இல்லாதவனுக்குத்‌ துக்கம்‌ ஏது?
அக்குத்தொக்கில்லாதான்‌ ஆண்மையும்‌, வெட்கஞ்‌சிக்‌கல்லாதான்‌ தோஷமும்‌, மிக்கத்‌ துக்கப்படாதான்‌ வாழ்வும்‌ நாய்‌ கக்கி நக்கித்‌ தின்னத்துக்‌ கொக்கும்‌.
அங்கங்கு குறுணி அளந்துகொட்டி இருக்கிறது.
அங்கத்திலே குறைச்சலில்லை ஆட்டடா பூசாரி.
அங்கத்தை ஆற்றில்‌ அலைசொணாதா?
அங்கத்தைக்‌ கொண்டுபோய்‌ ஆற்றில்‌ அலசினாலும்‌ தோஷம்‌ இல்லை.
அங்கத்தைக்‌ கொன்று ஆற்றில்‌ சேர்க்கவொண்ணாது.
அங்காங்கு வைபோகமாயிருக்கிறான்‌, இங்கேபார்த்தால்‌ அரைக்காசு முதலும்‌ இல்லை.
அங்காடி விலையை அதிர அடிக்காதே.
அங்காடிக்காரியைச்‌ சங்கீதம்‌ பாடச்சொன்னால்‌, வெங்‌காயம்‌ கரிவேப்பிலை என்பாள்‌.
அங்காளம்மைத்‌ தெய்வம்‌ அகப்பைக்கூறு வழியாய்‌ வரும்‌.
அங்கிடு தொடுப்பிக்கு அங்கிரண்டு குட்டு, இங்கிரண்டு சொட்டு.
அங்கும்‌ இருப்பான்‌ இங்கும்‌ இருப்பான்‌, ஆக்கின சோற்றுக்குப்‌ பங்கும்‌ இருப்பான்‌.
அங்கும்‌ தப்பி இங்கும்‌ தம்பி அகப்பட்டுக்கொண்டான்‌ தும்மட்டிப்பட்டன்‌ (திம்மட்டிராயண்‌).
அங்கே போனேனோ செத்தேனோ.
அங்கேண்டி மகளே கஞ்சிக்கு அழுகிறாய்‌? இங்குவாடி காற்றாய்ப்‌ பறக்கலாம்‌.
அசத்துக்கு வாழ்க்கைப்பட்டு ஆயிரம்‌ வருஷம்‌ வாழ்‌வதைவிட சத்துக்கு வாழ்க்கைப்பட்டுச்‌ சட்டென்று தாலியறுப்பதே மேல்‌.
அசலார்‌ உடைமைக்குப்‌ பேயாய்ப்‌ பறக்கிறது.
அசலார்‌ குற்றம்போல்‌ தன்‌ குற்றம்‌ பார்த்தால்‌ தீதுண்‌டோ மன்னுயிர்க்கு?
அசலிலே பிறந்த கசுமாலம்‌.
அசலும்‌ பிசலும்‌ அறியாமல்‌ அடுத்தாரைக்‌ கெடுக்கப்‌பார்க்கிறான்‌.
அசல்‌ வாழ்ந்தால்‌ ஐந்துநாள்‌ பட்டினி கிடப்பாள்‌.
அசல்‌ வீடு வாழ்ந்தால்‌ பரதேசம்‌ போகிறதா?
அசல்‌ வீட்டான்பின்ளை ஆபத்துக்குதவுவானா?
அசல்‌ வீட்டுக்காரனுக்குப்‌ பரிந்துகொண்டு ஆமுடையானை அடித்தாளாம்‌.
அசல்‌ வீட்டுக்குப்போகிற பாம்மைப்‌ கையாலே பிடிக்கான்‌
அசல்‌ வீட்டுப்‌ பிராமணா, பாம்மைப்‌ பிடி, அல்லித்‌தண்டுபோலக்‌ குளிர்ந்திருக்கும்‌.
அசவாப்‌ பயிரும்‌, கண்டதே உறவும்‌.
அசுணமாச்‌ செவிப்‌ பறை அடுத்ததுபோலும்‌.
அசைந்துதின்கிறது மாடு அசையாமல்தின்கிறது வீடு.
அசைப்புக்கு ஆயிரம்பொன்‌ வாங்குகிறது.
அசைவிருந்தால்‌ விட்டுப்போகமாட்டான்‌.
அச்சம்‌ அற்றவன்‌ அம்பலம்‌ ஏறுவான்‌.
அச்சம்‌ ஆண்மை குலைக்கும்‌.
அச்சாணி அன்னதோர்‌ சொல்‌.
அச்சாணி இல்லாத்‌ தேர்‌ முச்சாணும்‌ ஓடாது.
அச்சிக்குப்‌ போனாலும்‌, அகப்பை அரைக்காசு.
அச்சியிலும்‌ பிச்சைக்காரன்‌ உண்டு.
அச்சியென்றால்‌ உச்சி குளிருமா? அழுவணம்‌ (ஐவணம்‌) என்றால்‌ கை சிவக்குமா?
அச்சில்லாத்‌ தேர்‌ ஓடவும்‌ ஆழுடையான்‌ இல்லாதவள்‌ பிள்ளை பெறவும்‌ கூடுமா?
அச்சு ஒன்றா வேறா?