text
stringlengths
8
614k
வாங்கரி மாத்தாய் , ஏப்ரல் 1, 1940 செப்டம்பர் 25, 2011 கென்யாவைச் சேர்ந்த அரசியல்வாதியும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆவார். 1991 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பணிக்காக வழங்கப்படும் கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதைப் பெற்றார். 2004ஆம் ஆண்டு பேண்தகு வளர்ச்சி, அமைதிப் பணிகளுக்காக அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றார். இவர் காடுகளைக்காக்க பசுமை பட்டை இயக்கம் என்ற ஒன்றைத்துவக்கினார். இவரது பொன்மொழிகள் நீங்கள் ஒரு குழியைத் தோண்டவில்லை என்றால், அதில் ஒரு செடியை நடவில்லை என்றால், அதற்குத் தண்ணீர் ஊற்றி அதைக் காப்பாற்றவில்லை என்றால் நீங்கள் எதுவுமே செய்யவில்லை என்றுதான் பொருள் வெளி இணைப்புகள் குறிப்புகள் பகுப்பு அரசியல்வாதிகள் பகுப்பு நோபல் பரிசு வென்றவர்கள் பகுப்பு 1940 பிறப்புக்கள் பகுப்பு 2011 இறப்புக்கள்
லீனா ஹார்ன் , 30, சூன் 1917 9, மே 2010 என்பவர் ஒரு அமெரிக்க ஜாஸ் பாடகி, நடனக் கலைஞர், நடிகை, சமூக செயற்பாட்டாளர் ஆவார். இவர் நான்கு முறை கிராமி விருது பெற்றுள்ளார். இவரது பொன்மொழிகள் உங்களை முடக்குவது நீங்கள் சுமந்து செல்லும் சுமையல்ல, அதை நீங்கள் சுமந்து செல்லும் விதம்தான். வெளி இணைப்புகள் குறிப்புகள் பகுப்பு அமெரிக்கர்கள் பகுப்பு அமெரிக்க நடிகர்கள் பகுப்பு 1917 பிறப்புக்கள் பகுப்பு 2010 இறப்புக்கள்
கோரெட்டா ஸ்கட் கிங் , 27, ஏப்ரல் 1927 30, சனவரி 2006 என்பவர் ஒரு அமெரிக்க எழுத்தாளர், சமூகப் போராளி மற்றும் மார்டின் லூதர் கிங் ஜூனியரின் மனைவி ஆவா் இவரது பொன்மொழிகள் வெறுப்பு என்பது சுமக்கவே முடியாத சுமை. வெறுக்கப்படுபவரைவிட வெறுப்பவரையே அது மிகுதியாக்க் காயப்படுத்துகிறது. வெளி இணைப்புகள் குறிப்புகள் பகுப்பு அமெரிக்கர்கள் பகுப்பு 1927 பிறப்புக்கள் பகுப்பு 2006 இறப்புக்கள் பகுப்பு எழுத்தாளர்கள்
கேத்தரின் டான்ஹாம் , என்றும் அழைக்கப்பட்டார். 22, சூன் 1909 21,மே 2006 என்பவர் அமெரிக்க நடனக் கலைஞர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் ஆவார். இவரது பொன்மொழிகள் அவள் முயன்றாள் என்ற வாசகங்கள் என் கல்லறையில் இடம்பெற வேண்டும் என்றுதான் துவக்கத்தில் விரும்பினேன். தற்போதோ அவள் சாதித்துவிட்டாள் என்ற வாசகங்களே இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறேன். வெளி இணைப்புகள் குறிப்புகள் பகுப்பு அமெரிக்கர்கள் பகுப்பு எழுத்தாளர்கள் பகுப்பு 1909 பிறப்புக்கள் பகுப்பு 2006 இறப்புக்கள்
ஹாரியெட் டப்மன் அ ஹேரியட் டப்மேன் 1822 மார்ச்சு 10, 1913 அமெரிக்க நாட்டில் அடிமை முறை சில பகுதிகளில் நடைமுறையில் இருந்த சமயம், அவர்களை அடிமைகளாக நடத்தாதப் பகுதிக்கு இடம்பெயரச் செய்ய உதவிய சமூக சேவகி. இவர் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர். அமெரிக்க நாட்டில் அடிமைமுறையை ஒழித்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவரது பொன் மொழிகள் ஆயிரம் அடிமைகளை நான் விடுவித்திருக்கிறேன். மேலும் ஆயிரம் பேரை என்னால் விடுவித்திருக்க முடியும், தாங்கள் அடிமையாக இருப்பதை மட்டும் அவர்கள் அறிந்திருப்பார்களானாள். வெளி இணைப்புகள் குறிப்புகள் பகுப்பு அமெரிக்கர்கள் பகுப்பு 1822 பிறப்புக்கள் பகுப்பு 1913 இறப்புக்கள்
ஷிர்லே சிஷோம் , 30, நவம்பர் 1924 1, சனவரி 2005 என்பவர் அமெரிக்க அரசியல்வாதி, கல்வியாளர், எழுத்தாளர் ஆவார். இவரது பொன்மொழிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு ஓரத்தில் நின்றபடி முனகிக்கொண்டும், பலம்பிக்கொண்டும் இருப்பதன் மூலம் எந்த முன்னேற்றத்தையும் உங்களால் ஏற்படுத்த முடியாது. உங்கள் எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுப்பதால் மட்டுமே முன்னேற்றத்தை உங்களால் ஏற்படுத்த முடியும். வெளி இணைப்புகள் குறிப்பு பகுப்பு அமெரிக்கர்கள்
மேரி மெக்லட் பெதுன் , 10, சூன் 1875 18, மே 1955 என்பவர் அமெரிக்க அரசியல் பெண் தலைவர், கல்வியாளர், சமூகப்போராளி ஆவார். இவரது பொன்மொழிகள் மனித ஆன்மாவில் முதலீடு செய்யுங்கள், யாருக்குத் தெரியும், பட்டை தீட்டப்படாத வைரமாகக்கூட அது இருக்கலாம். வெளி இணைப்புகள் இவரது பொன்மொழிகள் பகுப்பு அமெரிக்கர்கள்
றோசா பாக்ஸ் தமிழ் நாட்டு வழக்கு ரோசா பார்க்ஸ் , பெப்ரவரி 4, 1913 அக்டோபர் 24, 2005 ஒர் ஆபிரிக்க அமெரிக்க குடியுரிமைகள் செயற்பாட்டாளர். நவீன குடியுரிமை இயக்கத்தின் தாய் என ஐக்கிய அமெரிக்க காங்கிரசால் அழைக்கப்பட்டவர். 1955 டிசம்பர் 1 இல் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது ஒரு வெள்ளைக்காரப் பயணிக்காக ஆசனத்தைத் தர மறுத்தார். இதற்காகக் கைது செய்யப்பட்டார். இந்நிகழ்ச்சி இனப் பாகுபாட்டுக்கு எதிரான இயக்கத்தைத் தோற்றுவித்தது. இவரது பொன்மொழிகள் தான் விடுதலை பெற்று, அதன் வழியாக எல்லா மக்களும் விடுதலை பெற வேண்டும் என்று விரும்பிய ஒருவராக நினைவுகூரப்படுவதையே நான் விரும்புகிறேன். வெளி இணைப்புகள் மேற்கோள்கள் பகுப்பு அமெரிக்கர்கள் பகுப்பு 1913 பிறப்புக்கள் பகுப்பு 2005 இறப்புக்கள்
டோனி ராபின்ஸ் பிறப்பு 29, பெப்ரவரி 1960 என்பவர் ஒரு அமெரிக்க தொழிலதிபர், எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் கொடையாளர். மெய்யியலாளர் ஆவார். இவர் தனது சுய முன்னேற்ற புத்தகங்கள் மற்றும் கருத்தரங்குகளின் வாயிலாக புகழ்பெற்றவராக அறியப்படுகிறார். 2007 ஆம் ஆண்டில், புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் இதழின் பிரபலங்கள் 100 பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றது. இவரது பொன்மொழிகள் இலக்குகளை அமைத்துக்கொள்வதே புலனாகாதவற்றையும் புலப்படக்கூடியதாக மாற்றுவதற்கான முதல்படி உங்களால் மேற்கொள்ளப்பட்ட ஒரு புதிய செயல்பாடு என்ற உண்மையின் மூலமாகவே ஒரு உண்மையான முடிவு அளவிடப்படுகிறது. நீங்கள் முடிவெடுக்கும் தருணங்களிலேயே உங்களது விதி வடிவம் பெறுகின்றது. உங்களது கற்பனை மற்றும் அர்ப்பணிப்பு மட்டுமே உங்கள் தாக்கத்திற்கான எல்லை. எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால், உண்மையில் உங்களால் எதுவும் தீர்மானிக்கப் படவில்லை. உங்கள் முடிவுகளில் உறுதியாக இருங்கள் ஆனால், உங்கள் அணுகுமுறையில் நெகிழ்வாக இருங்கள். வெற்றிகரமான மக்கள் சிறந்த கேள்விகளை கேட்கிறார்கள், அதன்மூலம் அவர்கள் சிறந்த பதில்களைப் பெறுகிறார்கள். மகிழ்ச்சி மற்றும் துன்பம் ஆகியவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வதே வெற்றிக்கான இரகசியம். தோல்வி என்பதைப் போன்ற விஷயம் எதுவுமில்லை. முடிவுகள் மட்டுமே உள்ளன. பெருந்திரளான, உறுதியான செயல்பாட்டினை மேற்கொள்வதே வெற்றிக்கான பாதை. அர்ப்பணிப்பு இல்லாமல் எவ்வித நிரந்தர வெற்றியும் இல்லை. என்ன நடந்தாலும், பொறுப்பினை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆர்வத்துடன் வாழ்க்கையை வாழுங்கள். எப்போதுமே வழி உள்ளது நீங்கள் உறுதியாக இருந்தால். பேரார்வமே மேதைகளின் தோற்றமாக உள்ளது. என்ன நடந்தாலும், பொறுப்பினை ஏற்றுக் கொள்ளுங்கள். பகுப்பு அமெரிக்கர்கள் பகுப்பு 1960 பிறப்புக்கள் பகுப்பு எழுத்தாளர்கள்
அனுஷ்கா 7 நவம்பர் 1981 ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார்.. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மட்டும் நடித்துவருகிறார். இவர் நடித்த சில திரைப்படங்கள் மளையாளத்திலும், இந்தியிலும் மொழி மாற்றம் செய்து திரையிடப்பட்டுள்ளது.. மேற்கோள்கள் சினிமா.. பெண்களுக்கு பாதுகாப்பான தொழில் நபர் குறித்த மேற்கோள்கள் சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு நடிகர்கள் பகுப்பு 1981 பிறப்புக்கள் பகுப்பு தமிழ் திரைப்பட நடிகர்கள்
காஜல் அகர்வால் பிறப்பு 19 சூன், 1985 ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இந்தித் திரைப்படமான கியூன்..! ஹோ கயா நாவில் 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். பின்னர், 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு 2008ஆம் ஆண்டு இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. மேற்கோள்கள் சினிமாவில் பெண்களை கிளாமராக பயன்படுத்தவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. நபர் குறித்த மேற்கோள்கள் வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு 1985 பிறப்புக்கள் பகுப்பு நடிகர்கள் பகுப்பு தமிழ் திரைப்பட நடிகர்கள்
உசைன் போல்ட் என்கிற உசேன் செயிண்ட் லியோ போல்ட் . , பிறப்பு ஆகத்து 21, 1986 யமேக்காவில் பிறந்த தடகள ஆட்டக்காரர். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 9.69 நொடி நேரத்தில் 100 மீட்டர் விரைவோட்டத்தை ஓடி உலகச் சாதனை பெற்றார். அத்துடன் 200 மீ ஓட்டம் 19.30 வினாடி போட்டியிலும் ஒலிம்பிக் மற்றும் உலக சாதனைகளைப் புரிந்தவர் தன் நாட்டு சக வீரர்களுடன் இணைந்து 4 100 மீ தொடரோட்டத்தில் 37.10 வினாடிகளில் ஓடி சாதனை புரிந்தார். இவை அனைத்தையும் போல்ட்டு 2008 பெய்ஜிங் கோடை ஒலிம்பிக்கில் நிகழ்த்தினார்.2003இல் 200 மீட்டர் விரைவோட்டத்திலும் உலக இளையோர் சாதனை படைத்தார். ஒலிம்பிக்கின் மூன்று விரைவோட்டப் பந்தயங்களின் 100 மீ, 200 மீ மற்றும் 4 100 மீ நடப்பு முதன்மை வீரன் சாம்பியன் , ஒன்பது முறை உலக முதன்மை வீரன், ஒலிம்பிக் விரைவோட்டப் பந்தையங்களில் ஆறு தங்கப் பதக்கங்களை வென்ற முதல் வீரர், இம்மூன்று விரைவோட்டப் பந்தயங்களின் நடப்பு உலக சாதனைகளின் சொந்தக்காரர் எனப் பல சிறப்புகள் போல்ட்டைச் சாறும். இவரது பொன்மொழிகள் என்னைப் பொருத்தவரை, நான் என்ன செய்யவேண்டுமோ அதிலே கவனம் செலுத்துகிறேன். திரும்ப திரும்பச் செய்வது என்பது மற்ற எதேயும்விட கடினமானச் செயல் நான் எடுத்துக்காட்டாக வாழ்வதற்கு முயற்சிக்கிறேன். என்னைவிட சிறப்பாக தொடங்குபவர்கள் இருக்கிறார்கள் ஆனால், நான் வலிமையாக நிறைவு செய்பவன். என்னால் என்ன செய்யமுடியும் என்பது எனக்கு தெரியும் அதனால், மற்றவர்களின் கருத்து மற்றும் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலை இல்லை. எந்தவிதமான வழியிலும் தொல்வியடைவதை நான் விரும்பவில்லை. வரலாற்றில் நான் இடம்பெற வேண்டுமென்றால், என் இலக்கினை நான் அடையவேண்டும். சில நேரங்களில் உங்களைச்சுற்றி என்ன நடக்கின்றது என்பதை நீங்கள் கவனிப்பதில்லை. பய்தயத்தைப் பற்றி அதிகமாக சிந்தித்தால், நீங்கள் அதை சிறிதளவு இழக்க நேரிடலாம். உங்களுக்கான நல்ல நாட்கள் மற்றும் மோசமான தாட்கள் ஆகிய இரண்டுமே இருக்கவேண்டும். வெளி இணைப்புக்கள் மேற்கோள்கள் பகுப்பு விளையாட்டு வீரர்கள் பகுப்பு 1986 பிறப்புக்கள்
மேரி க்யூரி ஆங்கிலம் , போலந்து மொழி , நவம்பர் 7, 1867 ஜூலை 4, 1934 1 புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்த இவர் பின்னர் பிரான்சில் வசித்தார். இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே 1903 2 , 1911 3 ஆம் ஆண்டுகளில் பெற்றார். இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர் ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டு பிடித்தார். அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார். இவரது கருத்துக்கள் மனிதர்கள் செத்துக் கொண்டிருக்கும்போது, பதக்கங்களால் என்ன பயன்? என்னுடைய நோபல் பதக்கங்களையும் போர் நிதிக்குக் கொடுத்துவிட்டேன். நபர் குறித்த மேற்கோள்கள் நோபல் பரிசு பெற்ற மேடம் க்யூரி அம்மையாரிடம் எனக்கு ஏற்பட்ட பழக்கத்தை ஓர் அதிருஷ்டமாக நம்பினேன், அவரது மனோதிடம், ஆராய்ச்சியில் இருந்த தணியாத ஆர்வம், விடாமுயற்சி, எடுத்த செயலைத் தொடர்ந்து ஆற்றும் திறமைகளால்தான் அவரால் மிகச்சிறந்த விஞ்ஞானியாக விளங்க முடிந்தது. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மேற்கோள்கள் பகுப்பு அறிவியலாளர்கள் பகுப்பு 1867 பிறப்புக்கள் பகுப்பு 1934 இறப்புக்கள்
ஆலிஸ் வாக்கர் பிப்பிரவரி 9, 1944 என்பவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர, போர் எதிர்பாளரும், சமூக செயற்பாட்டாளரும் ஆவார். இவர் புதினம், சிறுகதைகள், கவிதைகள் எனப் பல தளங்களில் எழுதிப் புலிட்சர் பரிசு பெற்ற பெண்மணி ஆவார். எழுத்தில் மட்டுமல்லாது சமூக அக்கறையுடன் செயல்படும் பெண்ணியவாதியாகவும் பொதுநலவாதியாகவும் கருதப்படுகிறார். இவரது கருத்துகள் பூமி ஓர் அற்புதமான கிரகம், ஆண்களின் பேராசையாலும், அதிகாரப் போட்டியாலும் போர்கள் மூலம் அழிக்கப்பட்டு வருகிறது. வெளி இணைப்புக்கள் மேற்கோள்கள் பகுப்பு அமெரிக்கர்கள் பகுப்பு பெண்ணியவாதிகள் பகுப்பு 1944 பிறப்புக்கள்
ஜோடி வில்லியம்ஸ் , அக்டோபர் 9, 1950 தனிநபர்குறி மிதிவெடிகளுக்கு எதிராகவும், மனித உரிமைகளுக்காகவும் குறிப்பாகப் பெண்களுடையது போராடியதற்காகவும் இன்றைய உலகில் பாதுகாப்பு குறித்த புதிய புரிதலை உருவாக்கியதற்காகவும் அறியப்படும் அமெரிக்க அரசியல் செயற்பாட்டாளர் ஆவார். இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு 1997ஆம் ஆண்டில் தனிநபர்குறி மிதிவெடிகளை கண்ணி வெடி அகற்றியமைக்காகவும் தடை செய்தமைக்காகவும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரது கருத்துகள் வலுவான நிலையில் இருக்கும் ஒரு நாடு, பிற நாடுகளின் மீது எந்தக் காரணத்தைச் சொல்லிக்கொண்டும் போரில் இறங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. போர் என்பது வல்லரசுகள் நிகழ்த்தும் ஆயுத வணிகம். மனித வாழ்வில் மோசமான நிகழ்வு. வெளி இணைப்புக்கள் மேற்கோள்கள் பகுப்பு நோபல் பரிசு வென்றவர்கள்
லேமா குபோவீ , பிறப்பு 1 பிப்ரவரி 1972 2003ஆம் ஆண்டு லைபீரியாவில் மூண்ட உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வர பாடுபட்ட ஓர் ஆப்பிரிக்க அமைதிப் போராளி. எல்லன் ஜான்சன் சர்லீஃப், தவகேல் கர்மனுடன் ஆகியோருடன் இணைந்து 2011ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றார். இவரின் கருத்துகள் போரினால் களைத்துவிட்டோம், ஓடுவதில் களைத்துவிட்டோம், உணவு கேட்டுக் களைத்துவிட்டோம், பாலியல் பலாத்காரங்களைக் கண்டு களைத்துவிட்டோம் எதிர்கால குழந்தைகளாவது போர்களற்ற உலகில் வாழ வேண்டுமானால் பெண்களே ஒன்று சேர்வோம் போராடுவோம். வெளி இணைப்புக்கள் மேற்கோள்கள் பகுப்பு நோபல் பரிசு வென்றவர்கள் பகுப்பு 1972 பிறப்புக்கள்
ஆன் பிராங்க் 1929 சூன் 12 1945 சனவரி 6 1 இரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு யூதச் சிறுமி. இவர் தான் எழுதிய நாட்குறிப்புகளுக்காக அறியப்படுகிறார். இரண்டாம் உலகப்போரின் போது செர்மனியின் நாசிப்படைகளால் யூதர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டு வந்ததால் இவர்களது குடும்பம் ஒரு மறைவிடத்தில் இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்தது. பின்னர் அடையாளம் தெரியாத ஒருவரால் காட்டிக்கொடுக்கப்பட்டு இவர்கள் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர். அங்கு இச்சிறுமி இறந்து விட்டார். மறைந்து வாழ்ந்த போது இவர் எழுதிய நாட்குறிப்புகள், இவர் இறந்த பின் இவரது தந்தையால் நூலாக வெளியிடப்பட்டது. இந்நூல் இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் யூதர்கள் பட்ட அவலங்களை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. இவரின் வரிகள் இனத்தின் பெயரால் எந்த மனிதரும் இனி சாகக்கூடாது, எந்தக் காரணத்துக்காகவும் இந்தப் பூமியில் போர் நிகழக்கூடாது போர்களில் உயிர் இழந்த கடைசி மனிதர்களாக நாங்கள் இருக்க வேண்டும். வெளி இணைப்புக்கள் மேற்கோள்கள் பகுப்பு செர்மனியர்கள் பகுப்பு எழுத்தாளர்கள் பகுப்பு 1929 பிறப்புக்கள் பகுப்பு 1945 இறப்புக்கள்
எமிலி கிரீன் பால்ச் ஜனவரி 8, 1867 ஜனவரி 9, 1961 ஓர் அமெரிக்கப் பேராசிரியரும், பொருளாதார வல்லுநரும், எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளரும், பெண் உரிமைப் போராளியும் ஆவார். 1946 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவரது கருத்துக்கள் இரண்டாம் உலகப் போர் கொடூரமானது, நீண்ட போர் மனதை காயப்படுத்திவிட்டது. என்னால் இட்லரின் செயல்களை தடுத்து நிறுத்த இயலவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்காவது உதவ இயன்றதே. வெளி இணைப்புக்கள் மேற்கோள்கள் பகுப்பு நோபல் பரிசு வென்றவர்கள் பகுப்பு 1867 பிறப்புக்கள் பகுப்பு 1961 இறப்புக்கள் பகுப்பு அமெரிக்கர்கள் பகுப்பு பெண்ணியவாதிகள்
ஐரெனா செண்டலர் 15 பிப்ரவரி 1910 12 மே 2008 என்பவர் ஒரு போலந்து செவிலியர். இவர் இட்லரின் வதை முகாமில் இருந்து 2500 குழந்தைகளைக் காப்பாற்றியதற்காக அறியப்படுகிறார். இவரின் கருத்துகள் இரண்டாம் உலகப்போருக்குப் பின், மனித இனம் பாடம் கற்றுக்கொண்டிருக்கும் என நினைத்தேன், ஆனால் போர்களைத் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனையானது. அன்பும் சகிப்புத்தன்மையும் பணிவும் இருந்தால் இந்த உலகம் மேன்மையடையும். மேற்கோள்கள் பகுப்பு செவிலியர்கள் பகுப்பு 1910 பிறப்புக்கள் பகுப்பு 2008 இறப்புக்கள்
ஜோன் பயாஸ் பிறப்பு, 1941 சனவரி 9 என்பவர் ஒரு அமெரிக்க நாட்டுப்புறப் பாடகர், பாடலாசிரியர் போர் எதிர்ப்பாளர் ஆவார். இவரது கருத்துகள் வியட்நாம் போருக்கு அமெரிக்கா ஆதரவு அளித்ததை எதிர்த்து வரி கட்டமறுத்த என்னைக் கைது செய்தனர். அமைதியைத் தொந்தரவு செய்ததற்காக நான் சிறை சென்றேன். உண்மையில் நான் போரைத்தான் தொந்தரவு செய்தேன். மேற்கோள்கள் பகுப்பு அமெரிக்கர்கள் பகுப்பு பாடகர்கள் பகுப்பு பாடலாசிரியர்கள் பகுப்பு 1941 பிறப்புக்கள்
ஃப்ரான்ஸ்வா த்ருஃபோ பிரெஞ்சு . . 6 பெப்ரவரி 1932 21 அக்டோபர் 1984 என்பவர் பிரெஞ்சு திரைப்பட இயக்குநராவார். இவரின் பொன்மொழிகள் காதலைப் பொருத்தவரை பெண்கள்தான் நிபுணர்கள், ஆண்களெல்லாம் கற்றுக்குட்டிகள். மேற்கோள்கள் பகுப்பு திரைப்படக் கலைஞர் பகுப்பு பிரான்சியர்கள் பகுப்பு 1932 பிறப்புக்கள் பகுப்பு 1984 இறப்புக்கள்
காதல் என்பது உயிரினங்களுக்கிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு, அன்பு, அக்கறை கலந்த ஒர் உணர்வு, சேர்ந்து வாழவேண்டும் என்ற ஒரு ஆசை ஆகும். காதல் பொன்மொழிகள் மேற்கோள்கள் காதல், நெஞ்சில் ஒரு பொறியாகத்தான் இருக்கிறது ஆனால் நாவிலோ அது பெரும் காவியமாய் இருக்கிறது. லாங்க்பெல்லொ காதலே! உலகத்தில் உள்ள இன்பங்களும் உனக்கு ஈடாகாது என்பதை ஒப்புக் கொள்கிறேன். நீயும் நீ தரும் துன்பங்களுக்கு எல்லையே இல்லை என்பதை ஒப்புக் கொள். சார்லவால் உங்கள் இதயத்தில் என்னை முத்திரையாகப் பதியுங்கள். உங்கள் கையில் என்னை முத்திரையாகக் குத்துங்கள். அன்பு, மரணத்தைப் போல் வலிமையானது. இணைபிரியாத நேசம், கல்லறையைப் போல் விடாப்பிடியானது. அன்பின் ஜுவாலை கொழுந்துவிட்டு எரிகிற தீ ஜுவாலை, அது யா வின் ஜுவாலை. பாய்ந்து வரும் வெள்ளம்கூட அன்பின் ஜுவாலையை அணைக்க முடியாது. ஓடிவரும் நதிகள்கூட அன்பை அடித்துச் செல்ல முடியாது. ஒருவன் அன்பை விலைக்கு வாங்க தன் செல்வத்தைக் கொட்டிக் கொடுத்தாலும், அந்தச் செல்வம் அடியோடு ஒதுக்கித்தள்ளப்படும். விவிலியம் உன்னதப்பாட்டு 8 6, 7 வாழ்க்கை என்பது ஒரு மலர் காதல் என்பது அதிலே ஊறும் தேன். விக்டர் ஹியூகோ உண்மையைச் சொன்னால் காதலுக்கும் நியாயத்திற்கும் இப்பொழுதெல்லாம் உறவு அதிகமில்லை. சேக்சுபியர் இந்த உலகத்தில் நான் யாரோ ஒருவன் என நினைக்காதே யாரோ ஒருத்திக்கு நீயே உலகமாக இருக்க முடியும். பில் வில்சன் அன்பு பொறுமையும் கருணையும் உள்ளது. அன்பு பொறாமைப்படாது, பெருமையடிக்காது, தலைக்கனம் அடையாது, கேவலமாக நடந்துகொள்ளாது, சுயநலமாக நடந்துகொள்ளாது, எரிச்சல் அடையாது, தீங்கை கணக்கு வைக்காது, அநீதியைக் குறித்து சந்தோஷப்படாமல் உண்மையைக் குறித்து சந்தோஷப்படும். எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும், எல்லாவற்றையும் நம்பும், எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும், எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும். அன்பு ஒருபோதும் ஒழியாது. விவிலியம் 1 கொரிந்தியர் 13 4 8 காதல், இருமல், புகை இவற்றை மூடி மறைப்பது கஷ்டம். பெஞ்சமின் பிராங்க்ளின் காதல், சாளரம் வழியாகப் புகுந்து, கதவு வழியாக வெளியே செல்லும். வில்லியம் கேம்டன் இன்பத்தில் இனியதும் துன்பத்தில் கொடியதும் காதல். பெய்லி. மனிதன் கண்டுபிடிப்புகளுள் மிகவும் மோசமானவை இரண்டு. ஒன்று காதல் இன்னொன்று வெடி மருந்து. ஏ.மொருவா காதல் பயிர் உயரியது, அது கண்களுக்குள் வளர்கிறது . எப்.பிளெட்செர் காதல் மிக அபாயமான உள நோய். பிளாட்டோ பலத்தை பலவீனம் அடக்கி ஆளும் வினோதம் தான் காதல். கபிலர் காதலைப் பொருத்தவரை பெண்கள்தான் நிபுணர்கள், ஆண்களெல்லாம் கற்றுக்குட்டிகள். ஃப்ரான்ஸ்வா த்ருஃபோ காதல், மக்களின் இதயங்களிலே சிறகடித்துப் பறக்கும் போது, அதைக் கட்டி வைக்கவோ அதன் இறக்கைகளைப் பிணைத்துப் பிடித்து வைக்கவோ முயலுபவர்களைத் தான் அது பெரும் சித்திரவதைக்கு உள்ளாக்குகிறது. நிக்கோலோ மாக்கியவெல்லி சிறு குழந்தையைப் போலவும், அடிக்கொரு நினைப்புமாகவும் உள்ள அந்தக் காதல், அவர்கள் கண்களையும், இருதயங்களையும் அவர்களுடைய முதுகெலும்பையுங்கூடப் பிடுங்கியெடுத்து விடுகிறது. நிக்கோலோ மாக்கியவெல்லி காதலை விரும்பி, அதன் போக்குப்படி யெல்லாம் போகவிட்டு விடுபவர்களும் இருக்கிறார்கள். அது தங்களை விட்டு பறந்து போகும் போது அவர்கள் அதைப்போக விட்டுவிடுகிறார்கள். அது திரும்பி வரும்போது அதை மறுபடியும் ஆனந்தத்துடன் வரவேற்றுக் கொள்கிறார்கள். நிக்கோலோ மாக்கியவெல்லி காம உணர்ச்சிக்குக் கண்ணில்லாமல் இருக்கலாம் காதலுக்குக் கண்ணில்லை என்பது பொய்யும். அவதூறானதுமாகும். டேவிஸ் மனிதனின் வாழ்க்கையில் காதல் ஒரு பகுதிதான். ஆனால், ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அதுவே முழுமையுமாகும். பைரன் காதல், கண்களால் காண்பதில்லை, மனத்தால் பார்க்கின்றது. ஷேக்ஸ்பியர் பழமொழிகள் காதலும் காபியும் சூடாயிருந்தால் தான் ருசி. செர்மானியப் பழமொழி காதலுக்கு கண் உண்டு ஆனால் பார்ப்பதுதான் இல்லை. செர்மானியப் பழமொழி அந்தக் காலம் முதல் மாறாமல் இருப்பது நீரின் ஓட்டமும் காதலின் போக்கும் தான். சப்பான் பழமொழி காதலால் வீரனானோர் பலர் மூடரானோர் அவர்களை விட அதிகம். சுவீடன் பழமொழி தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை காதல் வந்துவிட்டால் அழகு தேவையில்லை. ஆப்கானிசுதான் பழமொழி காதல் வந்துவிட்டால் கழுதைகளும் நடனமாடும். பிரான்சு பழமொழி அழகிகள் எல்லாரும் காதலிக்கப்படுவதில்லை காதலிக்கப்படுகிற ஒவ்வொருத்தியும் அழகிதான். ஆங்கிலப் பழமொழி குறிப்புகள் பகுப்பு உணர்வுகள்
ஜார்ஜ் திமோதி குளூனி , பிறப்பு மே 6, 1961 என்பவர் ஒரு அமெரிக்க நடிகர், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், மற்றும் திரைப்பட எழுத்தாளர். குளூனி வணிக ரீதியாக அபாயகரமான திட்டகளுக்குப் பின்னால், பெரிய செலவிலான வெற்றிப் படங்களில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக வேலை செய்வதுடன், சமூக மற்றும் நடுநிலையான அரசியல் கோட்பாளராகவும் தனது செயல்பாடுகளை சமநிலைப்படுத்திக் கொண்டார். இவரது கருத்துகள் நிச்சயம் இது மிகவும் அநியாயம் 20 வயது இளைஞர்களுக்கு ஜோடியாக 60 வயது நடிகைகளைத் திரைப்படங்களில் நம்மால் காண முடிவதே இல்லை. மேற்கோள்கள் பகுப்பு அமெரிக்க நடிகர்கள் பகுப்பு 1961 பிறப்புக்கள்
திரைப்படம் அல்லது நகரும் படம் என்பது படிமங்களின் வரிசைகள் திரையில் நகரும் போது ஃபை தோற்றப்பாட்டின் படி ஒரு உண்மையான நாடகக் காட்சி நடைபெறுவது போன்ற ஒரு தோற்றம் செய்யக்கூடிய திரைப்படலம் ஆகும். திரைப்படத்தை நகரும் ஒளிப்படக் கருவி மூலம் ஒளிப்படத்தின் காட்சியை பதிவு செய்வதன் மூலமோ, இயக்கமூட்டல் தொழினுட்பத்தினால் வரைபடங்கள் அல்லது உருவ மாதிரிகளை ஒளிப்பதிவு செய்வதன் மூலமோ, சிஜிஐ மற்றும் கணினி இயக்கமூட்டல் மூலமோ, இவைகளில் பலவற்றை ஒன்றாக பயன்படுத்துவதன் மூலமோ, விசுவல் எவக்ட்ஸ் மூலமோ உருவாக்குகின்றனர். திரைப்படத்தின் ஒரு திடமான பொருள் என்னவென்றால் அது எண்ணங்கள், கதைகள், உணர்வுகள், அழகு அல்லது வெளி ஆகியவற்றை ஒரு உணர்ச்சி பெருக்குடன் பதிவு செய்யப்பட்ட காட்சிப்படமாக தரும் ஒரு கலை ஆகும். திரைப்படம் பற்றிய கருத்துகள் நிச்சயம் இது மிகவும் அநியாயம் 20 வயது இளைஞர்களுக்கு ஜோடியாக 60 வயது நடிகைகளைத் திரைப்படங்களில் நம்மால் காண முடிவதே இல்லை. ஜார்ஜ் குளூனி இருபது ஆண்டுகளாக சினிமாவை ஒழிக்க வேண்டும் என்று பாடுபட்டு வருகிறேன். இதுவரை நான் 5 அல்லது 6 சினிமாதான் பார்த்திருப்பேன். அதுவும் நூறு ரூபாய் எனக்குக் கட்டணம் கொடுத்தால்தான் போவேன். பெரியார் 1 2 1967 மேற்கோள்கள் பகுப்பு திரைப்படங்கள்
ஜோசப் கொன்ராட் அல்லது ஜோசஃப் கான்ராட் , டிசம்பர் 3, 1857 ஆகஸ்ட் 3, 1924 ஒரு ஆங்கில எழுத்தாளர். தற்கால உக்ரைனில் ஒரு போலந்தியக் குடும்பத்தில் பிறந்த கொன்ராட் பின்னர் பிரிட்டானியக் குடியுரிமை பெற்றார். தனது இருபது வயதுக்குப் பின்னரே ஆங்கில மொழியைக் கற்ற கொன்ராட், ஆங்கிலத்தில் பெரும் எழுத்தாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரது கருத்துகள் கலைஞன் பேசுவது நம் அறிவோடன்று, மனத்தில், நாம் தேடாமல் கிடைத்த அம்சமொன்றுண்டு. அதனாலேயே அது அழியாதது. அந்த அம்சத்தோடு தான் கலைஞன் பேசுவான். அன்பு அழகு அச்சரியம் ஆநந்தம் இந்த உணர்ச்சியே அது. பெண்ணாக இருப்பதென்பது மிகமிக கடினமான விசயம், ஆண்களைச் சமாளிப்பதே முதன்மையான காரியமாக இருப்பதால். மனிதன் ஒரு தொழிலாளி. அவன் அப்படியில்லையானால், அவன் எதுவுமில்லாதவன். குறிப்புகள் பகுப்பு எழுத்தாளர்கள் பகுப்பு 1857 பிறப்புக்கள் பகுப்பு 1924 இறப்புக்கள்
கிர்க்கெகார்டு 5 மே 1813 11 நவம்பர் 1855 என்பவர் டேனிய மெய்யியலாளர், கவிஞர் ஆவார். இவரது கருத்துகள் பெண்கள்தான் திண்மை ஆண்கள் வெறும் பிரதிபளிப்பே. மேற்கோள்கள் பகுப்பு மெய்யியலாளர்கள் பகுப்பு 1813 பிறப்புக்கள் பகுப்பு 1855 இறப்புக்கள்
வேயின் டையர் , மே 10, 1940 ஆகத்து 29, 2015 ஓர் அமெரிக்க மெய்யியலாளர், சுயமேம்பாடு நூல்களின் ஆசிரியர், சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர். நீங்கள் தவறிழைக்கும் பகுதி என்னும் இவருடைய முதல் நூல் 35 மில்லியன் படிகள் விற்று விற்பனையில் எப்பொழுதுமில்லாத சாதனை புரிந்துள்ளது. இவரின் கருத்துக்கள் உங்களுடைய பங்கேற்பு இல்லாமல் முரண்பாடுகளால் தொடர்ந்து செயல்பட முடியாது. ஒன்றைப்பற்றி எதுவுமே தெரியாமல் அதை நிராகரிப்பதே அறியாமையின் உயர்ந்த வடிவம். நீங்கள் மற்றவர்களை மதிப்பீடு செய்யும்போது, நீங்கள் அவர்களை வரையரை செய்யவில்லை நீங்கள் உங்களை வரையறுக்கிறீர்கள். இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றிற்கும் ஒரு நோக்கம் உள்ளது. நாம் என்ன நினைக்கிறோம் என்பதே, நமக்கு என்ன நடக்கும் என்பதை தீர்மாணிக்கிறது. வெற்றிகரமான மக்கள் பணம் சம்பாதிக்கிறார்கள் பணம் சம்பாதிக்கும் மக்கள் வெற்றிகரமானவர்களாக ஆவதில்லை. தூய நிபந்தனையற்ற அன்பைவிட சொர்கத்திலோ அல்லது பூமியிலோ அதிக சக்தி ஒன்றுமில்லை. எதிர்காலம் யாருக்கும் உறுதியளிக்கப்பட்டதல்ல இப்பொழுதே செயல்படத் தொடங்கு. நம்மால் மேற்கொள்ளப்பட்ட தேர்வுகளின் மொத்த தொகையே நம் வாழ்க்கை. எதிரானவை எல்லாம் உங்களை பலவீனப்படுத்துகிறது சாதகமானவை எல்லாம் உங்களை பலப்படுத்துகிறது. நீங்கள் அணியும் இறுதி ஆடையில், உங்களுக்கு பை எதுவும் தேவைப்படாது. உங்கள் கற்பனை உங்களுடையது மற்றும் உங்களுடையது மட்டுமே என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அற்புதங்கள் கணப்பொழுதில் வரக்கூடியவை அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கவேண்டும். மேற்கோள்கள் பகுப்பு மெய்யியலாளர்கள் பகுப்பு அமெரிக்கர்கள் பகுப்பு எழுத்தாளர்கள் பகுப்பு 1940 பிறப்புக்கள் பகுப்பு 2015 இறப்புக்கள்
வில் ரோஜர்ஸ் " " , 4, நவம்பர் 1879 15, ஆகத்து 1935 என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த மேடை மற்றும் திரைப்பட நடிகர், நகைச்சுவை கலைஞர், பத்திரிகை கட்டுரையாளர், சமூக ஆர்வலர், எழுபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட செய்தித்தாள் கட்டுரைகள் இவரது படைப்புகளில் அடங்கும். அக்காலத்தில் அதிக சம்பளம் பெறும் ஹாலிவுட் திரை நட்சத்திரமாக விளங்கினார். தனது அணுகுமுறையால் உலகின் பிரபலமான நடிகர்கள் மற்றும் ஆசிரியர்களில் ஒருவராக அறியப்பட்டார். 1935 ஆம் ஆண்டு வடக்கு அலாஸ்காவில் ஏற்பட்ட ஒரு வானூர்தி விபத்தில் உயிரிழந்தார். இவரது கருத்துகள் மற்றவர்களின் உரிமைகளை அங்கீகரிக்க கற்றுக்கொள்ளும் வரை, ஒருபோதும் நாம் உண்மையான நாகரிகத்தைப் பெறப்போவதில்லை. உங்களால் முடிந்த சிறந்ததை செய்யுங்கள், வாழ்க்கையை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நான் நகைச்சுவைகள் எழுதுவதில்லை. அரசாங்கத்தின் செயல்பாடுகளைக் கவனித்து, அதை செய்திகளாக வெளியிடுகிறேன் அவ்வளவுதான். நல்ல தீர்ப்பு அனுபவத்திலிருந்து வருகின்றது, அதிகப்படியான அனுபவம் மோசமான தீர்ப்பிலிருந்தே வருகின்றது. நீங்கள் வெற்றிகரமாக இருக்கவேண்டுமென்றால், அது எளிதானதே. செய்வதை அறிந்து செய், செய்வதை விரும்பி செய், செய்வதை நம்பிக்கையோடு செய். ஒரு மனிதன் இரண்டு வழிகளில் மட்டுமே கற்றுக்கொள்கிறான் ஒன்று படிப்பதன் மூலமாக, மற்றொன்று புத்திசாலிகளுடன் இணைந்திருப்பதன் மூலமாக. எல்லாமே மாறிக்கொண்டிருக்கிறது. மக்கள் நகைச்சுவையாளர்களை தீவிரமாகவும், அரசியல்வாதிகளை வேடிக்கையாகவும் எடுத்துக்கொள்கிறார்கள். எல்லாமே வேடிக்கைதான், அது வேறு யாருக்கோ நடக்கின்றவரை. அவரவர் துறையை தவிர, அனைவரும் அறியாமையில் உள்ளனர். அரசியல் மிகவும் விலை உயர்ந்ததாக மாறிவிட்டது, அதில் தோல்வியடைவதற்கு கூட நிறைய பணம் தேவைப்படுகின்றது. பிறர் தம்மைப்பற்றிப் பேசுவதையே நான் எப்பொழுதும் கேட்க விரும்புகிறேன். அப்பொழுதுதான் நான் சதா நல்ல விஷயங்களை மட்டுமே கேட்க முடிகிறது. மேற்கோள்கள் பகுப்பு அமெரிக்க நடிகர்கள்
சிறிமாவோ ரத்வத்தை டயஸ் பண்டாரநாயக்கா ஏப்ரல் 17, 1916 அக்டோபர் 10, 2000 இலங்கையின் ஓர் அரசியல்வாதியாவார். இவர் இலங்கையின் பிரதம மந்திரியாக மூன்று முறை, 1960 1965, 1970 1977 மற்றும் 1994 2000 ஆகிய காலப்பகுதிகளில் பதவியில் இருந்தவர். இவரே உலகிலேயே முதலாவது பெண் பிரதமருமாவார். இவரது கருத்துகள் என் எதிரிகளின் சதிதான் என் என்னை மேலும் பலப்படுத்துவதுடன் திரும்பிப் போராடுவதில் உறுதியாகவும் இருக்கச் செய்கிறது. தோல்வியைக் கண்டு பயந்து ஓடும் நபரல்ல நான் மேற்கோள்கள் பகுப்பு அரசியல்வாதிகள் பகுப்பு இலங்கையர்கள்
மரீயா கொரசோன் "கோரி" அக்கினோ " " , ஜனவரி 25, 1933 ஆகஸ்ட் 1, 2009 என்பவர் பிலிப்பைன்சின் அரசியல்வாதியும், மக்களாட்சி, அமைதி, பெண்ணுரிமை போன்றவற்றிற்கு குரல் கொடுத்தவரும் ஆவார். இவர் பிலிப்பைன்சின் 11வது குடியரசுத் தலைவராக சனாதிபதி 1986 முதல் 1992 வரை பணியாற்றினார். அத்துடன் பிலிப்பைன்சின் முதலாவது பெண் சனாதிபதியும் ஆசிய நாடொன்றின் முதலாவது பெண் சனாதிபதியும் ஆவார். இவரது கருத்துகள் அர்தமற்ற வாழ்க்கையை வாழ்வதைவிட அர்த்தமுள்ள மரணத்தை நான் தழுவிக்கொள்வேன். மேற்கோள்கள் பகுப்பு அரசியல் தலைவர்கள்
மேகவாதி சுகர்னோபுத்ரி பிறப்பு 1947 சனவரி 23 இந்தோனேசியாவின் முன்னாள் பெண் அதிபர் மற்றும் இந்தோனேசியாவின் முதல் அதிபரான சுனர்னோவின் மகளாவார். இவரின் கருத்துகள் நம் மக்களை ஊக்குவிக்க விரும்புகிறேன். தங்கள் உரிமைகளைப் புரிந்துகொள்ளும் தூணிவு அவர்களுக்கு ஏற்படுவதற்கும் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவதற்கும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புகிறேன். மேற்கோள்கள் பகுப்பு அரசியல் தலைவர்கள்
பெனசீர் பூட்டோ 21 ஜூன் 1953 27 டிசம்பர் 2007 , பாகிஸ்தானில் மத்திய இடது அரசியல் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்த ஒரு பாகிஸ்தான் அரசியல்வாதியாவார்.பூட்டோ, ஒரு முஸ்லீம் அரசை தலைமை தாங்கி நடத்தி செல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். அவர் பாகிஸ்தானின் பிரதம மந்திரியாக இருமுறை 1988 1990 1993 1996 பதவி வகித்தார்.அவர் பாகிஸ்தானின் முதல் மற்றும் இன்று வரையிலும் ஒரே பெண் பிரதம மந்திரியாவார். இவரது கருத்துகள் ஒரு பெண் தலைவராக வித்தியாசமான ஒரு தலைமைத்துவத்தை நான் கொண்டு வந்திருப்பதாகக் கருதுகிறேன். ஒரு பெண்ணாக, பெண்களின் பிரச்சினைகள், மக்கள் தொகை வளர்ச்சியைக் குறைப்பது போன்றவற்றின் மீது நான் அதிக அக்கறை கொண்டிருக்கிறேன். அரசியலில் நுழைந்தபோது கூடுதல் பரிமாணம் ஒன்றுடன்தான் நுழைந்தேன். தாய் என்கிற பரிணாமம் அது. மேற்கோள்கள் பகுப்பு அரசியல்வாதிகள்
பார்க் குன் ஹே பிறப்பு 2 பெப்ரவரி 1952 தென் கொரியாவின் 11 வது மற்றும் தற்போதைய அதிபராவார். இவரே வட கிழக்காசியாவின் முதல் பெண் அதிபர் ஆவார். இவரது கருத்துகள் தினமும் சாப்பாட்டுத் தட்டில் உணவு எப்படியாவது இருக்கவேண்டுமே என்ற கவலை ஒருவருக்கும் ஏற்படாத ஒரு நாட்டை நான் உருவாக்குவேன். குறிப்புகள் பகுப்பு அரசியல் தலைவர்கள்
இந்திரா காந்தி இந்திரா பிரியதர்சினி காந்தி இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரின் கருத்துகள் இரண்டு வகையானவர்கள் இருக்கிறார்கள், காரியங்களைச் செய்பவர்கள் முதல் வகை அதற்கான அங்கீகாரத்தை எடுத்துக்கொள்பவர்கள் இரண்டாம் வகை முதல் வகையில் இடம்பிடிக்க முயற்சி செய்யுங்கள். அங்கேதான் போட்டி குறைவு. நான் கொள்கையில் மிகவும் நிலைபெற்றிருப்பவள். என் சொந்தக் காலில், சொந்தத் தத்துவத்தில் வலிமையுடன் நான் நிற்பேன். இதைவிட்டு நான் என்றுமே பிறர் தயவை நாடி, அடுத்தவர் காலில் நிற்பவள் அல்ல. குறிப்பாக எந்த மகானும், எந்தக் கடவுளும் எனக்குக் கை கொடுத்து உதவ வேண்டும் என்ற அவசியம் இல்லை. யாரையும் மகானாக எண்ணி குருவாக ஏற்று அவர் காட்டும் வழியில் போய் மோட்சம் அடைய வேண்டும் என்பது என் விருப்பம் அன்று. இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை ஆண்களே எதிர்க்கிறார்கள். அதனால் அந்தத் திட்டம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. மேலும், பழங்காலந் தொட்டு திருமணங்களில் வாழ்த்துகிறவர்கள் ஏராளமான குழந்தைகளைப் பெறும்படி வாழ்த்தி வருகிறார்கள். அந்தப் பழக்கம் இன்னமும் நீடிக்கிறது. மக்கள் செல்வம் தான் பெரிய செல்வம் என்ற எண்ணம் இன்னமும் நீடித்து வருகிறது. குடும்பக் கட்டுப்பாடு திட்டம் வெற்றி பெறாததற்கு அதுவும் ஒரு காரணம். இந்தியா விடுதலை பெற்ற பிறகு நம் கல்விமுறையை அடியோடு மாற்றாமல் போனது நாம் செய்த மிகப் பெரிய தவறுகளில் ஒன்று. கல்விப் பயிற்சி என்பது வகுப்பு அறையில் பெறும் பயிற்சியுடன் நின்று விடாது. வாழ் நாட்கள் பூராவும் கல்வி கற்க வேண்டும். நூல்களிலிருந்து மத்திரமின்றி நம்மைச் சுற்றிலும் வெளி நாடுகளிலும் நடக்கும் சம்பவங்களிலிருந்தும் விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். 5 1 1973 நான் முழுமையாக நேருஜியைப் பின்பற்றுவதாகவோ, காந்திஜியைப் பின்பற்றுவதாகவோ, சொல்லவில்லை இப்போது காலம் மாறிவிட்டது. மக்களின் அபிலாஷைகளைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிருக்கிறது. ஆனல் இந்த நாடு காந்திஜியின் லட்சியங்கள் கொள்கைகள் அடிப்படையில் தான் இயங்கும். அவற்றை நாம் மறந்து விடவில்லை. 7 1 1975 இந்திய சமுதாயத்திற்கு ஒரு புதிய பாதையை வகுத்துக் கொடுக்கச் சிறந்த முயற்சி செய்தவர் என்று, நூறு ஆண்டுகளுக்குப் பிறகு சரித்திர நூல்கள் எழுத விரும்புவோர் என்னைப் பற்றிக் குறிப்பிட் வேண்டும் என்பதே என் ஆசை. 4 9 1 973 அரசியலே மோசமானது என்று சில தத்துவ மேதைகள் கூறுகிறார்கள். அரசியல் மோசமானது அல்ல. அரசியலை மக்கள்தான் மோசமாக ஆக்குகிறார்கள். தனிப்பட்டவர்களின் கருத்துக்கள் தனிப்பட்டவர்களின் முன்னேற்றம் ஆகியவையே அரசியல் என்று நாம் ஆக்கிவிட்டோம். ஆனல் உண்மையில் அரசியல் என்பது மக்களின் பொருளாதார சமுதாய நிலையை உயர்த்துவதற்கான பெரியதொரு இயக்கமாகும். 16 9 1970 சுயேட்சை வேட்பாளர்கள் என்று கூறப்படுகிறவர்கள், அரசியல் கட்சிகளிலிருந்து மட்டுமல்லாமல், தங்கள் நாட்டிலிருந்தும், அதன் கொள்கைகளில் இருந்தும் ஒதுங்கி நிற்கின்றவர்கள். 8 2 1969 குறிப்புகள்கள் பகுப்பு அரசியல் தலைவர்கள் பகுப்பு இந்தியப் பிரதமர்கள்
பிள்ளை அல்லது குழந்தைப் பருவம் என்ற சொல் பொதுவாக, மனிதரில் பிறப்புக்கும், பருவம் அடைவதற்கும் இடைப்பட்ட இளம் வயதினரைக் குறிக்கும். இது ஆண், பெண் ஆகிய இரு பாலருக்கும் பொதுவான பெயராக இருக்கிறது. குழந்தைகள் குறித்த மேற்கோள்கள் குழந்தைகளுக்குக் கதைகளைக் கதைகளாகச் சொல்லிக் கொடுங்கள், புராணங்களை புராணங்களாகச் சொல்லிக் கொடுங்கள், ஒருபோதும் அவற்றை உண்மை என்று சொல்லிக் கொடுக்காதீர்கள். ஹைபேஷா குழந்தைகளுக்கு மனிதாபிமானத்தைக் கற்றுக் கொடுங்கள், அதுதான் இந்த அற்புதமான உலகைக் காப்பாற்றும். ஆலிஸ் வாக்கர் கட்டளைகளைவிட வழிகாட்டுதலும், அக்கறையும்தான் குழந்தைக்குத் தேவை. ஆன் சல்லிவன் ஹெலன் கெல்லரின் ஆசிரியர் கணிதத்தைப் பார்த்து ஏன் குழந்தைகள் அஞ்சுகிறார்கள், ஏனென்றால் அதை ஒரு பாடமாக தவறான விதத்தில் அதை அணுகுவதால்தான். சகுந்தலா தேவி கணித மேதை உங்கள் குழந்தையுடன் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பது முக்கியமல்ல அன்பையும், சிரத்தையையும் எப்படி காட்டுகிறீர்கள் என்பதே முக்கியம். மார்கரெட் தாட்சார் கடவுள் உலகத்துக்கு அளித்த அழகான பரிசு குழந்தை. அன்னை தெரசா பொறுப்புகளும் சுதந்திரத்திற்கான இறக்கைகளும்தான் நாம் குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டிய உன்னதமான பரிசுகள். மரியா மாண்டிசேரி கல்வியாளர் மேற்கோள்கள் பகுப்பு குழந்தைப் பருவம்
டெசுமான்ட் பைலோ டுட்டு , பிறப்பு அக்டோபர் 7, 1931 2021 ஓர் தென்னாபிரிக்க செயல்திறனாளரும் ஓய்வுபெற்ற ஆங்கிலிக்க திருச்சபைப் பேராயரும் ஆவார். 1980களில் இனவொதுக்கலுக்கு எதிரான நிலை எடுத்ததால் உலகெங்கும் அறியப்பட்டார். தென்னாபிரிக்காவின் கேப் டவுன் பேராயராகவும் தென்னாபிரிக்க மாநில திருச்சபை பிரைமேட்டாகவும் பணியாற்றிய முதல் கறுப்பினத்தவராவார். 1984 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, 2007 ஆம் ஆண்டு காந்தி அமைதி பரிசு உட்பட பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது பேச்சுகளும் போதனைகளும் பல புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. இவரின் மேற்கோள்கள் நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடைய சிறிதளவு நல்ல செயலை செய்யுங்கள். உங்களுக்கான குடும்பத்தை நீங்கள் தேர்வு செய்யாதீர்கள். நீங்கள் அவர்களுக்கு எப்படியோ, அதுபோலவே அவர்களும் உங்களுக்கான கடவுளின் பரிசு. மன்னிப்பானது புதிய தொடக்கம் உருவாவதற்கு உங்களால் வழங்கப்பட்ட மற்றொரு வாய்ப்பு. நாம் ஒவ்வொருவரும் நன்மை, அன்பு மற்றும் கருணை ஆகியவற்றிற்காகப் படைக்கப்பட்டிருக்கிறோம். கடவுள் மட்டுமே சிரிக்க முடியும் ஏனென்றால், கடவுளால் மட்டுமே அடுத்தது என்ன என்பதை உணர முடியும். இறைவனுடைய இல்லத்தில் வெறுப்புக்கு இடம் கிடையாது. குழந்தையின் முகத்தை நாம் எப்பொழுது பார்க்கின்றோமோ, அப்போது நாம் எதிர்காலம் பற்றி சிந்திக்கின்றோம். மன்னிப்பு என்ற ஒன்று இல்லாமல், எதிர்காலம் என்ற ஒன்று இல்லை. ஒவ்வொரு குழந்தைக்கும் மிகச்சிறந்த கல்வியைக் கொடுப்பது நம்முடைய தார்மீக கடமை. நீங்கள் அதிகம் வெறுக்கும் நபருடன் பேசும்போது அமைதி கிடைக்கின்றது. கடவுளுடைய குடும்பத்தில் வெளியாட்களோ, எதிரிகளோ கிடையாது. பகுப்பு நோபல் பரிசு வென்றவர்கள்
செரீனா ஜமீக்கா வில்லியம்ஸ் , பிறப்பு செப்டம்பர் 26, 1981 முன்னாள் முதல் நிலை அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை ஆவார். 30 கிராண்ட் சிலாம் பட்டங்கள் வென்ற செரீனா, வீனஸ் வில்லியம்ஸின் தங்கை ஆவார். இவரது மேற்கோள்கள் நான் அழுவதில்லை, அது கொஞ்சம் கடினம்தான். என் வாழ்நாள் முழுவதும் போராடி இருக்கிறேன். அப்படி ஒரு போராட்டத்தின் மூலமே எப்படி வெற்றி பெறுவது என்பதையும் கற்றுக்கொண்டேன். இனி நான் புன்னகைத்துக்கொண்டே இருப்பேன். மேற்கோள்கள் பகுப்பு விளையாட்டு வீரர்கள்
ஸ்ரெஃபி கிராஃப் அல்லது ஸ்டெபி கிராப் பிறப்பு ஜூன் 14, 1969 முன்னாள் டென்னிஸ் வீராங்கனை. ஜேர்மனியைச் சேர்ந்தவரான இவர் டென்னிஸ் வரலாற்றில் மிகக் குறிப்பிடத்தக்கவர்களுள் ஒருவர். 22 தனிநபர் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர். 1988 இல் எல்லா நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்றதோடு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் வென்றவர். இவரின் மேற்கோள்கள் நீங்கள் இரண்டுமுறை தோல்வியை சந்திக்கும்போதுதான், வெற்றி எவ்வளவு கடினம் என்பதை உணர்வீர்கள். மேற்கோள்கள் பகுப்பு விளையாட்டு வீரர்கள்
வீனஸ் வில்லியம்ஸ் , பிறப்பு ஜூன் 17, 1980, கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை. ஒலிம்பிக் தங்கப்பதக்கமும் பெற்றவராவார். இவரின் மேற்கோள்கள் தோல்விதான் உங்களை உத்வேகப்படுத்தும். வெற்றி உங்கள் தவறுகளைப் பார்க்கவிடாது, மற்றவர்களையும் எடுத்துச் சொல்ல விடாது. மேற்கோள்கள் பகுப்பு விளையாட்டு வீரர்கள்
மார்ட்டினா நவரத்திலோவா செக் பிறப்பு ஒக்ரோபர் 18, 1956 ஒரு குறிப்பிடத்தக்க டென்னிஸ் வீராங்கனை ஆவார். செக்கோசிலோவாக்கியாவில் பிறந்த இவர் 1981 இல் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். மொத்தம் 18 தனிநபர் கிராண்ட் சிலாம் பட்டங்களையும் 40 இரட்டையர் பெருவெற்றித் தொடர்களை கிராண்ட் சிலாம் பட்டங்களையும் வென்றவர். விம்பிள்டன் பட்டங்களை ஒன்பது தடவை வென்ற சாதனைக்குரியவர். இவரது மேற்கோள்கள் டென்னிஸ் பந்துக்கு என் வயது தெரியாது, நான் ஆணா பெண்ணா என்று தெரியாது, விளையாட்டு எப்பொழுதும் தடைகளைத் தகர்த்தெறிந்துவிடுகிறது. மேற்கோள்கள் பகுப்பு விளையாட்டு வீரர்கள்
சானியா மிர்சா பிறப்பு நவம்பர் 15,1986,மும்பை 1 ஒரு இந்திய டென்னிஸ் விளையாட்டு வீரராவார். இவர் 2003ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை மகளிர் டென்னிசு சங்கத்தால் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை என தரவரிசைப்படுத்தப்பட்டார். 2004ம் ஆண்டு இவருக்கு இந்திய அரசால் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. இவரது மேற்கோள்கள் ஆடை என்பது என் தனிப்பட்ட விசயம். ஒவ்வொரு முறை ஆடை அணியும்போதும், அடுத்த மூன்று நாட்களுக்குப் போகப் பொருளாக அது இருக்குமோ என்று பயமாக இருக்கிறது. மேற்கோள்கள் பகுப்பு விளையாட்டு வீரர்கள்
மரியா சரபோவா உருசியம் . , பி. ஏப்ரல் 19, 1987 ஒரு ரஷ்ய டென்னிஸ் விளையாட்டு வீரராவார். இவர் அமெரிக்கவில் நிரந்தரமாக தங்கும் வாய்ப்பு பெற்றவர். செப்டம்பர் 10, 2012 நிலவரப்படி இவர் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையாவார். இவரின் மேற்கோள்கள் என் வேர்களைப் பற்றித் தெரியும் என்பதால் நான் கடந்துவந்த பாதையை மறக்கமாட்டேன். மேற்கோள்கள் பகுப்பு விளையாட்டு வீரர்கள் பகுப்பு 1987 பிறப்புக்கள்
மார்டினா ஹிங்கிஸ் , பிறப்பு செப்டம்பர் 30, 1980 ஒரு ஓய்வு பெற்ற சுவிஸ் தொழில்முறை பெண் டென்னிஸ் விளையாட்டு வீரர். மேலும் உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரராக 209 வாரங்கள் இருந்தார். இவரது மேற்கோள்கள் சக வீராங்கனைகளுக்குச் சமமான உடல் தகுதியோ, திறனோ என்னிடம் இல்லை. அதனால் என் புத்தி மூலமே அவர்களை வெல்ல வேண்டும். மேற்கோள்கள் பகுப்பு விளையாட்டு வீரர்கள்
ஸ்டீவ் ஜொப்ஸ் தமிழக வழக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் , பிறப்பு பெப்ரவரி 24, 1955 அக்டோபர் 5, 2011 ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை ஆட்சியரும், கணினித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமையாளரும் ஆவார். இவர் 1985 ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டரசு, அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை செய்யும் அந்நாட்டின் தலையாய பரிசாகிய தொழில்நுட்பத்துக்கும் புதுமையாக்கத்துக்குமான பதக்கத்தை வென்றார். இவர் 1976 இல் ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். இவரது மேற்கோள்கள் நீங்கள் செய்கின்ற வேலைதான் உங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை நிரப்பப் போகின்றது. இது தொழில்நுட்பத்தின் மீதான நம்பிக்கை அல்ல. மக்களின் மீதான நம்பிக்கை. உங்களது இதயம் மற்றும் உள்ளுணர்வைப் பின்பற்றத் தேவையான தைரியத்தைக் கொண்டிருங்கள். உங்களது வேலையில் மனப்பூர்வமாக திருப்தியடைவதற்கான ஒரே வழி, செய்கின்ற வேலையை மனதார நேசித்து செய்வதே. உங்களுக்கான நேரம் குறைவானது, எனவே வேறொருவரின் வாழ்க்கையை வாழ்ந்து அதை வீணடிக்க வேண்டாம். வடிவமைப்பு என்பது வெறுமனே பார்ப்பது மற்றும் உணர்வது அல்ல. வடிவமைப்பு என்பது செயல்பாட்டில் உள்ளது. உலகின் மிகச்சிறந்த சாதனங்களை உருவாக்குவதே எங்களது இலக்கு, மிகப்பெரியவற்றை அல்ல. தேவைப்படுவதை நீங்கள் இன்னும் பெறவில்லை என்றால், தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருங்கள். ஓய்ந்துவிடாதீர்கள். வணிகத்தில் மிகப்பெரிய விஷயங்கள் ஒரு நபரால் செய்யப்பட்டவை அல்ல. அவை, பலரால் உருவான குழுக்களின் மூலம் நிகழ்த்தப்பட்டவை. வயதான மக்கள் இது என்ன? என்று கேட்கிறார்கள். ஆனால், சிறுவனோ இதைக்கொண்டு நான் என்ன செய்ய முடியும்? என்று கேட்கிறான். கல்லறையில் பெரும் பணக்காரனாக இருப்பது எனக்கு ஒரு விஷயமே இல்லை. இரவு உறங்கச்செல்லும் போது, இன்று ஒரு அற்புதமான விஷயத்தை செய்துவிட்டோம் என்று சொல்வதே பெரிய விஷயம். பகுப்பு அமெரிக்கர்கள் பகுப்பு 1955 பிறப்புக்கள் பகுப்பு 2011 இறப்புக்கள் பகுப்பு இறந்த நபர்கள்
பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறி அல்லது பெறப்பட்ட மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டறிகுறி என்பது எச்.ஐ.வி எனப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பாற்றல் குறைப்பு செய்யும் திறன் கொண்ட தீ நுண்மத்தால் வைரசால் ஏற்படுகிற ஒரு நோயாகும். இந்த நோய்குறித்த மேற்கோள்கள் எனக்கு எச்ஐவி பாசிட்டிவ், அற்புதமான நண்பர்கள், அன்பான பெற்றோரின் ஆதரவால் வாழ்க்கையை எளிதாக்கிக்கொண்டேன் ஜி. வாலஸ், வெள்ளிப்பதக்கம் வென்ற ஆத்திரேலிய ஒலிம்பிக் வீர்ர். எச்ஐவி பாசிட்டிவ் மனிதர்கள் தைரியமாகத் தங்கள் அனுபவங்களைப் பகிரும்போதுதான் எயிட்சுக்கு எதிரான போராட்டம் வலுவடையும். அலெக்ஸ் கார்னர், எச்ஐவி போராளி எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுடன் கைகளைக் குலுக்குங்கள், கட்டி அணையுங்கள். இவைதான் அவர்களுக்குச் சிறந்த மருந்து. இளவரசி டயானா எச்ஐவி எயிட்ஸ் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான கடவுளின் தூதராக இருப்பதில் மகிழ்ச்சி மேஜிக் ஜான்சன், அமெரிக்க கூடைப்பந்து வீரர் எச்ஐவி குறித்த அறியாமையால் எந்த ஓர் உயிரையும் இழந்துவிடக்கூடாது. எலிசபெத் டெயிலர், ஹாலிவுட் நடிகை எச்ஐவி மறைக்கப்படவேண்டியது அல்ல, ஏனென்றால் மற்ற நோய்களைப்போல அதுவும் ஒரு நோய்தான் நெல்சன் மண்டேலா மேற்கோள் தி இந்து பெண் இன்று இணைப்பு 2016, திசம்பர் 4 பகுப்பு நோய்கள்
எமிலி டிக்கின்சன் , டிசம்பர் 10, 1830 மே 15, 1886 ஒரு அமெரிக்கப் பெண் கவிஞர் ஆவார். ஆங்கிலக் கவிதையுலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். இவர் ஐக்கிய அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது மேற்கோள்கள் ஒரு மனிதன் என்ன செய்கிறான் என்பதே அவனது நடத்தை. மாறாக, அவன் என்ன நினைக்கிறான், உணர்கிறான் அல்லது நம்புகிறான் என்பதல்ல. எதுவுமே சொல்லாமலிருப்பது... சில நேரங்களில் அதிகமானவற்றை சொல்கின்றது. தோல்விக்கு எல்லையை முடிவு செய். ஆனால், எல்லையற்ற முயற்சியைக் கொண்டிரு. உங்களது மூளையானது இந்த ஆகாயத்தை விட பறந்து விரிந்த ஒன்று. மன வலிமையை மேம்படுத்திக்கொள்ள மக்களுக்கு கடினமான தருணங்கள் தேவைப்படுகின்றன. எப்பொழுது விடியல் வருமென்று அறியாமல், ஒவ்வொரு கதவாக நான் திறக்கிறேன். தனது சமூகத்தைத் தானே தேர்ந்தெடுக்கிறது ஆன்மா. அழிவில்லாத மற்றும் என்றென்றும் நிலைத்திருக்கும் விஷயமாக உள்ளது அன்பு. அமுதத்தின் சுவையை அறிந்துகொள்ள, வறுமையை அனுபவித்திருக்க வேண்டும். நடந்து முடிந்தவை எல்லாம் ஒதுக்கப்பட வேண்டிய விஷயங்கள் அல்ல. ஒருபோதும் மீண்டும் திரும்ப வராத ஒன்றே, வாழ்க்கையை இனிமையானதாக மாற்றுகின்றது. உண்மையே எனது தேசம். பகுப்பு கவிஞர்கள் பகுப்பு அமெரிக்கர்கள் பகுப்பு எழுத்தாளர்கள்
இலரி டயான் ரோட்டம் கிளின்டன் ஹிலாரி கிளின்டன் ஹிலாரி கிளிண்டன் ஐக்கிய அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர். அதற்கு முன்னால் அமெரிக்க செனட் சபை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2008இல் அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியின் தலைவராக தேர்வதற்கு வேட்பாளராக போட்டியிட்டு இரண்டாம் இடத்தில் வந்தார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் 42ஆவது குடியரசுத் தலைவரான பில் கிளின்டனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 1993 முதல் 2001 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் "முதல் சீமாட்டி" என்னும் பட்டத்துடன் இருந்தார். அமெரிக்க வரலாற்றில், ஒரு பெரிய அரசியல் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வான முதல் பெண்மணி இவராவார். இவரின் மேற்கோள்கள் வாக்களித்தல் என்பது ஒவ்வொரு குடிமகனின் அரும்பெரும் உரிமையாக உள்ளது. என்னால் என்ன செய்யப்பட்டது என்பதைப் பொருத்து மக்களால் என்னை மதிப்பிட முடியும். உலகத்தின் சவால்களை எந்த நாடும் தனியாக சமாளிக்க முடியாது. குழந்தையின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நபர் பெற்றோர்களே. ஜனநாயகத்துக்கான மாற்றம் நிகழும்போது, போராட்டங்களுக்கு முடிவு என்பதில்லை. கடினமான மனிதர்கள் கடினமான முடிவுகளையே தேர்ந்தெடுக் கிறார்கள். நேற்றைய தினம் போன்று வேறு ஒரு தினம் இருக்கப் போவதில்லை. மீண்டும் கதவைத் திறந்து முன்னோக்கிச் செல்வதற்கான ஒரு வழி மன்னிப்பு. நியாயமான விளையாட்டிற்கும், விளையாடப்படும் விளையாட்டிற்கும் இடையே வேறுபாடு உள்ளது. உங்களுக்கு நீங்கள் உண்மையானவராக இருக்க வேண்டியது அவசியம். மனித உரிமைகளே, பெண்களின் உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகளே மனித உரிமைகள். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் உரிமைகளானது 21 ஆம் நூற்றாண்டின் முடிவுபெறாத செயல்பாடு என்பதை நான் நம்புகிறேன். பகுப்பு அரசியல்வாதிகள் பகுப்பு அமெரிக்கர்கள்
சுற்றுச்சூழல் என்பது குறிப்பிட்ட ஒரு பொருளை அல்லது உயிரினத்தைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழலைச் சிறப்பாகக் குறிக்கின்றது. சுற்றுச்சூழல் போராளிகளின் மேற்கோள்கள் பூமிக்குப் பிரச்சினைகளைக் கொடுக்கும் மனிதர்கள்தான், பிரச்சினைகளுக்கான தீர்வையும் கொடுக்க வேண்டும். ஜூலியா பட்டர்பிளை ஹில், அமெரிக்கா பகுத்தறிவு, விடாமுயற்சி, காரியத்தில் உறுதி, பொறுமை இருந்தால் உலகத்தை மாற்றலாம். லோயில் கிப்ஸ், அமெரிக்கா நீங்கள் தோள்களில் சுமந்து செலவதற்கு உலகம் வரைபடமல்ல, உலகம்தான் உங்களைச் சுமந்துகொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வந்தனா சிவா, இந்தியா பல்வேறு விதங்களில் பூமியைச் சிதைத்து வருகிறோம் இதைப் புரிந்துகொண்டு, அக்கறையோடு உடனே பாதுகாப்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும். ஜேன் குட்டால், இங்கிலாந்து மனிதன் இயற்கையின் ஒரு பகுதியாக இருந்துகொண்டு, இயற்கைமீதே போர் தொடுத்தால், அவன்மீது போர் தொடுக்கிறான் என்று அர்த்தம். ரோச்சல் கார்சன், அமெரிக்கா. மேற்கோள்கள் பகுப்பு கருப்பொருட்கள்
ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதற்குச் செய்யும் முதலாவது காரியத்தை முதலடி என்கிறாேம். மேற்கோள்கள் உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு.உனது துணிவிலேயே அறிவும்,ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன. கோதி நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை.முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு. மார்டின் லூதர் கிங். செய்ய முடியும் என்று நம்பு. ஒன்றைச் செய்ய முடியும் என்று நீ முழுதாய் நம்பும்போது,உன் மனம் அதைச் செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும்.ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை,அந்தக் காரியத்தை முடிக்கும் வழியையும் காட்டுகிறது. டாக்டர். டேவிட் செவார்ட்சு நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும் முட்கள் இல்லை டிக்கன்சன் சான்றுகள் . . பகுப்பு கருப்பொருட்கள்
தளரா மனம் கொண்டு வெற்றி பெறுபவர்கள் வெற்றியாளர்கள். மேற்கோள்கள் சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான். நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் நம்மையறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும் மூலகாரணமாகவும் இருக்கிறார். வெற்றியாளர்கள் முடிவுகளை விரைவில் எடுக்கிறார்கள் அப்படி எடுத்த முடிவுகளை மிக மெதுவாகவே மாற்றுகிறார்கள். தோல்வியுறுபவர்களோ, முடிவுகளை மிக மெதுவாக எடுக்கிறார்கள் அப்படி எடுத்த முடிவுகளை அடிக்கடியும், மிக விரைவாகவும் மாற்றுகிறார்கள். நெப்போலியன் ஹில். அன்றாட வாழ்வின் சாதாரன விசயங்களையும், அசாதாரன முறையில் செய்யும்போது உலகின் கவனத்தை உன் மீது திருப்ப முடியும். ஜோர்ஜ் வொசிங்டன். வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே. என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய். செய்வதை விரும்பிச் செய். செய்வதை நம்பிக்கையோடு செய். வில் ரொகெர்சு. பலரும், தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து, தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள் அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில், அவர்களே உருவாக்குகிறார்கள். ஜோர்ஜ் பெர்னாட் ஷா. வெற்றி என்பது, லட்சியத்தைப் படிப்படியாகப் புரிந்து கொள்வது நைட்டிங்கேல் தளராத இதயம் உள்ளவனுக்கு, இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை புக்கன்ஸ் சான்றுகள் . . பகுப்பு நபர்கள்
வேலை என்பது ஒரு குறிக்கோளை அல்லது பலனை அடைவதற்கான தொடர்ச்சியான முயற்சி. உழைப்பு என்பது ஒரு பணியில் செலவிடப்படும் முயற்சி. மாபெரும் லட்சியத்தையும், வெற்றியில் நம்பிக்கையையும், வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்! அம்பேத்கர் வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள் 1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள். 2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். 3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள். வில்லியம் ஷேக்ஸ்பியர் வாழ்க்கையில் முன்னேற,குன்றாத உழைப்பு,குறையாத முயற்சி,வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை இம்மூன்றும் இருந்தால் போதும் தாமஸ் ஆல்வா எடிசன் உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை தீமையையும் விரட்டுகிறது. வால்டேர் உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும்,மதிப்புகளுக்கும் மூலம். கார்ல் மார்க்ஸ். உன்னுடைய வாழ்க்கைக்கு மூச்சு எவ்வளவு அவசியமோ , அப்படியேதான் உழைப்பும். உழைப்பின்றி ஜீவிப்பதில் உற்சாகமில்லை. ஹாலி ஒரு மனிதனின் தலைசிறந்த நண்பர்கள் அவனுடைய பத்து விரல்கள். ராபர்ட் கோலியர் உழைப்பு நாம் உயிர் வாழ்வதற்கான தெய்விகச் சட்டம், ஓய்ந்திருத்தல் துரோகமும், தற்கொலையுமாகும். மாஜினி வேலை செய்யாமல் இந்த உலகில் எந்த மனிதனும் வாழக்கூடாது என்று ஆண்டவன் விரும்புகிறான். அதே போல. ஒவ்வொரு மனிதனும் தன் வேலையில் இன்புற்றிருக்கவேண்டும் என்றும் அவன் விரும்புகிறான் என்றே எனக்குத் தோன்றுகிறது. ரஸ்கின் உழைப்பில்லாமல் எதுவும் செழிப்பதில்லை. ஸாஃபாகிளிஸ் தெய்வ நம்பிக்கைக்கு அடுத்தது உழைப்பில் நம்பிக்கை. போவீ உழைப்பு மூன்று பெருந்தீமைகளை நம்மிடமிருந்து நீக்குகின்றது. தொந்தரவு, தீயொழுக்கம், தரித்திரம். வால்டேர் செல்வத்தை உண்டாக்குவது உழைப்பு எல்லா விஷயங்களையும் இயக்குவது அதுவே. டேனியல் வெப்ஸ்டர் கடுமையான உழைப்பைத் தவிர வெற்றிக்கு இரகசியம் வேறு எனக்குத் தெரியாது. இ. டர்னர் வாழ்நாள் முழுவதும் உழைத்தால்தான் ஒரு துறையில் உன்னத நிலையை அடைய முடியும், அதற்குத் குறைந்த விலையில் அந்நிலையை வாங்க முடியாது. ஜான்ஸன் தன் வேலையைக் கண்டுகொண்ட மனிதன் பாக்கியசாலி. உலகிலே ஓர் அசுரன் இருக்கிறான். அவன்தான் சோம்பலுள்ள மனிதன். கார்லைல் கவிதை எழுதுவதில் எவ்வளவு பெருமை உள்ளதோ, அதே அளவு, நிலத்தை உழுவதிலும் உளது என்பதைத் தெரிந்து கொள்ளாத எந்தச் சமூகமும் செழிப்படையாது. பீட்டி சுறுசுறுப்புடன் எல்லாவற்றையும் செய்கிறவனுக்கு, எல்லாக் கதவுகளும் திறந்திருக்கும். எமர்சன் திறமைதான் ஏழையின் மூலதனம். எமர்சன் சுறுசுறுப்பாய் உள்ள மனிதன், எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பான். ஹென்றி போர்டு உழைப்பின் முக்கிய பலன் இலாபமன்று இலாபம் ஒரு உப பலமே. உழைப்பின் முக்கிய பலன் மனக்களிப்பே. ஹென்றி போர்டு மனித சமூகத்திற்கு உண்மையாக நன்மை செய்ய வேண்டுமென்று ஒருவன் விரும்பினால், அவன் மனிதர்களை அவர்களுடைய வேலையின்மூலமாகவே அணுகவேண்டும். ஹென்றி ஃபோர்ட் துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே நல்லது. நீ நினைத்தால், விண் மீனையும் விழுங்கிவிட முடியும். இதுவே உன் உண்மை பலம். மூட நம்பிக்கைகளை உதரித் தள்ளிவிட்டுத் தைரியமாகச் செயல்படு! சுவாமி விவேகானந்தர் கடுமையான உழைப்பின்றி மகத்தான காரியங்களைச் சாதிக்க முடியாது. பயந்து பயந்து புழுவைப்போல் மடிவதை விட, கடமை எனும் களத்திலே போரிட்டு உயிர் துறப்பது மேலானது. சுவாமி விவேகானந்தர் எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை. சுவாமி விவேகானந்தர் எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான். சுவாமி விவேகானந்தர் பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும், துன்பமாகவும் அமைகிறது. பலவீனம் மரணத்திற்கு ஒப்பானது வலிமையே மகிழ்ச்சிகரமான வாழ்க்கை சுவாமி விவேகானந்தர் முதியவர்கள் தமக்கு இன்னும் எஞ்சிய காலத்தை நினைத்துக்கொண்டு உழைக்கிறார்கள். இளைஞர்கள் ஊழிக்காலத்திற்கும் உழைக்கிறார்கள். ஜவகர்லால் நேரு 1928 திசம்பர் 12ஆம் நாள் பூனாவில் நடைபெற்ற பம்பாய் மாகாண இளைஞர் மாநாட்டுத் தலைமை உரையிலிருந்து. எனக்கு வேலையில் பிரியம் அது என்னைக் கவர்ந்துவிடுகின்றது. நான் அமர்ந்துகொண்டு மணிக்கணக்காக வேலை செய்வதைப் பார்த்துக்கொண்டேயிருப்பேன். ஜே. கே, ஜெரோம் நிலையான கருத்துடன் இருத்தல் என்பது என்னுடைய இலட்சிய வாக்கியம். முதலில் யோக்கியதை, பிறகு சுறுசுறுப்பு. பிறகு நிலையான கருத்துக்கொள்ளல். ஆண்ட்ரூ கார்னேகி எனக்கு அன்பும் வேலையும் கொடுங்கள் இந்த இரண்டும் போதும். வில்லியம் மாரிஸ் மனிதன் ஒரு தொழிலாளி. அவன் அப்படியில்லையானால், அவன் எதுவுமில்லாதவன். ஜோஸஃப் கான்ராட் முதலாளிகளால் தொழிலாளி நசுக்கப்படாமலிருக்கவும் தொழிலாளரால் மூலதனம் போட்டவர்களுக்கு இடையூறில்லாமலிருக்கவும். தொழிலாளரே தொழிலாளரை அடக்காமலும். முதலாளிகளே முதலாளிகளை நசுக்காமலும் இருக்கும் நிலையை உண்டாக்க வேண்டுமென்ற முறையில், நாம் வேலை செய்து கொண்டிருக்கிறோம். ஜான் டி ராக்ஃபெல்லர் சான்றுகள் . . பகுப்பு கருப்பொருட்கள்
ஹென்றி போர்டு ஜூலை 30, 1863 ஏப்ரல் 7, 1947 ஃபோர்ட் மோட்டார் கம்பனியின் அமெரிக்க நிறுவனரும், தற்காலப் பெரும்படித் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருத்துகை ஒழுங்குமுறையின் தந்தை எனக் கருதப்படுபவரும் ஆவார். மேற்கோள்கள் சுறுசுறுப்பாய் உள்ள மனிதன், எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பான். உழைப்பின் முக்கிய பலன் இலாபமன்று இலாபம் ஒரு உப பலமே. உழைப்பின் முக்கிய பலன் மனக் களிப்பே. நான் சீர்திருத்தக்காரனல்ல. தற்போது உலகில் சீர்திருத்தஞ் செய்வதிலும், சீர்திருத்தக்காரர்களின் வேலையிலும் அதிக கவனஞ் செலுக்கப்பட்டு வருகிறது. சீர்திருத்தக்காரரில் இருவகை வர்க்கம் இருக்கிறது. இரண்டு பேரும் பெரிய உபத்திரவம்தான். சீர்த்திருத்தஞ் செய்வதாக வெளி கிளம்புகின்றவர்கள் எல்லாவற்றையும் தகர்க்க வேண்டு மென்கிறார்கள். வீட்டின் படி சிறியதாயிருக்கிறதென்று வீட்டையே இடித்துத் தள்ள வேண்டுமென்று இவர்கள் சொல்லுவார்கள். படியை மட்டும் பெரிதாகச் செய்யலாமென்ற யோசனையே இவர்கள் மூளைக்கு எட்டாது. இவர்களுக்குத் தாங்கள் என்ன செய்கிரறோம் என்பதே புலப்படுகிறதில்லே. அனுபவம் என்பதே இவர்களுக்குக்கிடையாது. அனுபவத்தில் தென்படும் உண்மைகள் இவர்களுடைய கண்களுக்குத்தெரியாது. சட்டம் ஒரு போதும் ஆக்கவேலை எதுவும் செய்வதில்லை. போர்கள், போர்களை வழிக்க முடியாது என்பது எனக்கு இப்பொழுது தெரியும். மனித சமூகத்திற்கு உண்மையாக நன்மை செய்ய வேண்டுமென்று ஒருவன் விரும்பினால், அவன் மனிதர்களை அவர்களுடைய வேலையின்மூலமாகவே அணுகவேண்டும். சான்றுகள் . . பகுப்பு 1863 பிறப்புக்கள் பகுப்பு 1947 இறப்புக்கள் பகுப்பு இறந்த நபர்கள்
தன்னம்பிக்கை என்பது தன்னால் ஒரு குறிப்பிட்ட செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என்று மனதில் நம்பிக்கை கொள்வது. பயம், தோல்வி, முயற்சியின்மை, மன அழுத்தம், துயரம் போன்றவற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அதிலிருந்து மீண்டு வாழ்வில் வெற்றி பெற அவருக்கு நம்பிக்கையை ஊட்டுவது தன்னம்பிக்கையளிப்பது ஆகும். மேற்கோள்கள் எனது துணிவுடைய இளைஞர்களே நீங்கள் அனைவரும் பெரும் பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். வானத்தில் முழங்கும் இடிக்கும் அஞ்சவேண்டாம். நிமிர்ந்து நின்று வேலை செய்யுங்கள். சுவாமி விவேகானந்தர் செய்து முடிக்கப்படும் மாபெரும் சாதனைகள் அனைத்தும் செய்ய முடியாதவைகள் என்று முதலில் பலரால் நிராகரிக்கப் பட்டவைதாம். கார்லைல் உறுதி கொண்டவர்கள் தாழ்ந்ததாக சரித்திரம் இல்லை உயர்ந்து விளங்கினார்கள் என்பதற்கு மட்டுமே சான்று உண்டு. தமிழ்வாணன் வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவனுக்குத் தன்னம்பிக்கை வேண்டும். கீட்ஸ் "நீங்கள் உங்களை நம்ப வேண்டும். அதுதான் வாழ்வின் ரகசியம். நான் அனாதை விடுதியில் இருந்த போதும், உணவுக்காக தெருக்களில் சுற்றித் திரிந்த போதும், என்னை நான் உலகின் மிகச் சிறந்த நடிகனாகவே எண்ணிக் கொள்வேன்" சார்லி சாப்ளின் நாம் இன்று என்ன நிலையில் இருக்கிறோமோ, அந்நிலையை நமக்கு அளித்தது நமது எண்ணங்கள்தான். நமது இன்றைய நிலை நமது எண்ணங்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது. புத்த பகவான் தனக்குத்தானே உதவிக்கொள்ளாமல் எவனாலும் அடுத்தவனுக்கு உதவ முடியாது என்பது உலகின் மிக அழகிய இயல்புகளில் ஒன்று. எமர்சன் தாங்கள் வெல்லலாம் என்று நம்புகிறவர்களே வெற்றி அடைய முடியும். வர்கில் நானே செய்துகொள்ளக்கூடிய காரியம் எதையும் நான் மற்ற எவரையும் செய்யச் சொல்லக்கூடாது என்று நான் எப்பொழுதும் நம்பி வருகிறேன். மாண்டெஸ்கியு எவரை வேண்டுமானாலும் ஐயுறலாம். ஆனால், உன்னை நீயே ஐயுறக்கூடாது. போவீ தன்னுடைய இன்பத்திற்குத் தேவையான ஒவ்வொன்றையும். மற்றவர்கள் சார்பில்லாமல் தானே அமைத்துக்கொள்ளும் மனிதன், இன்பமாக வாழ்வதற்குத் தலைசிறந்த வழியைக் கடைப் பிடிக்கிறான்.இவனே நிதானமான தேவையுள்ளவன் ஆண்மையும் அறிவும் உள்ளவன். பிளேட்டோ நான் மெதுவாக நடப்பவன். ஆனால் ஒருபோதும் பின் வாங்குவதில்லை. ஆபிரகாம் லிங்கன். நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை, முழு படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படி ஏறு. மார்டின் லூதர் கிங் பழமொழிகள் கவிதைகள் காயப்படாத மூங்கில் புல்லாங்குழல் ஆகாது... வலிபடாத வாழ்வில் வசந்தங்கள் நுழையாது! துடியாய்த் துடி சாதிக்க! படியாய்ப் படி வாதிக்க! மரம் குடைய கோடாலி கொண்டுபோவதில்லை மரங்கொத்தி... அவனவன் கையில் ஆயிரம் ஆயுதம் கவிஞர் பா.விஜய் குறிப்புகள் வெளியிணைப்புக்கள் . . தன்னம்பிக்கை 20 . . 2016 15 119832 . . . 57549 . பகுப்பு கருப்பொருட்கள்
வாழ்க்கை அல்லது வாழ்வது என்பது பிறப்புக்ககும் இறப்புக்கும் இடையிலான காலம் ஆகும். மேற்கோள்கள் வாழ்வு என்ற ஆடையில் எப்பொழுதும் இரண்டு வகை நூல்கள் இருந்தே தீரும். அவை நன்மை, தீமையே! வில்லியம் ஷேக்ஸ்பியர் வாழ்க்கையைப் பற்றியே மக்கள் இன்றுவரை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. பிறகு எப்படி இவர்கள் மரணத்தைப் பற்றிப் புரிந்து கொள்வார்கள்? கான்பூசியசு வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்துவரும் என்று வரட்டு வேதாந்தம் பேசிக் கொண்டே காலம் தள்ளக் கூடாது. விரக்தியாக வாழ்பவன், வாழவே தகுதியற்றவனாவான். எதிலும் சுவைஞன் உள்ளம் பெற வேண்டும். அந்த மனம் அமைந்தால் தான் வாழ்க்கையின் தெளிவு, மெலிவு, நெளிவு, வளைவுகளை நன்குணர்ந்து அவற்றை அதனதன் சுவைகளுக்கு ஏற்றாற்போல மகிழ்ச்சியுடன் வாழ்வதே சிறப்பான வாழ்க்கை. வாழ்க்கை கானல் நீர், அர்த்தமற்றது, இன்பமில்லாதது என்று வேதாந்தம் பேசுபவன், இந்த உலகில் வாழவே தகுதியற்றவனாவான். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வாழ்க்கையில் ஒரு வெறி ஏற்பட்டால்தான் பிடிப்புடன் முன்னேறி வாழமுடியும் அதைச் சமயம் கொடுக்கிறது. அது சொல்லுகிற மோஷத்தைக் கொடுக்காவிட்டாலும் இது போதும். அந்த மோஷத்தை விட மேலானது. புதுமைப்பித்தன் வாழ்க்கை வேதனையுமில்லை. இன்பமுமில்லை என்பதை நினைவில வைத்துக்கொள் இது கவனமாக நடக்க வேண்டிய தொழில் அதில் தைரியத்துடனும், தன்னலத்தியாக புத்தியுடனும் இயங்க வேண்டும். டி. டாக்குவில்லி வெறுமே வாழ்வது அவசியமில்லை. அதற்கப்பாலும் முன்னேறி நம் பெயரைத் துலங்கச் செய்ய வேண்டும். இது அவசியம். ஜி. டி. அனன்ஸியோ ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும் ஒரு தேவதைக் கதை அதை எழுதிய விரல்கள் ஆண்டவனுடையவை. ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்ஸன் கொஞ்சம் வேலை, கொஞ்சம் உறக்கம், கொஞ்சம் காதல் எல்லாம் முடிந்துவிடுகின்றன. மேரி ராபர்ட்ஸ் ரைன்ஹார்ட் ஓர் இலையின் மேலுள்ள பனித்துளிபோல உனது வாழ்க்கை காலத்தின் விளிம்புகளில் நடனமாடிக்கொண்டிருக்கட்டும். இரவீந்திரநாத் தாகூர் தனக்குப்பின்னால் பெருமையையும், புகழையும் நிறுத்திவிட்டுச் செல்பவன் இறந்தவனில்லை. ஆனால், உயிரோடிருக்கும் பொழுது பழி சுமந்திருப்பவனே இறந்தவனாவான். டியெக் வாழ்க்கையின் இறுதியில் மறுபடி வாழ்க்கை யாத்திரையைத் தொடங்குவதற்கு யார்தான் விரும்புவர்? திருமதி மெயின்டெனன் நம் வேலை முடிகிறவரை நாம் நித்தியமானவர்களே. ஒயிட்ஃபீல்ட் நாம் நம் செயல்களில் வாழ்கிறோம். ஆண்டுகளில் அன்று சிந்தனைகளில் வாழ்கிறோம். மூச்சிடுவதில் அன்று உணர்ச்சிகளில் வாழ்கிறோம். கடிகாரம் காட்டும் மணிகளில் அன்று. நேரத்தை நாம் இதயத் துடிப்புகளைக்கொண்டு கணக்கிட வேண்டும். எவன் மிக அதிகமாகச் சிந்தனை செய்கிறானோ, தலைசிறந்த செயல்களைச் செய்கிறானோ அவனே அதிகமாக வாழ்பவனாவான். பெய்லி வாழ்க்கையைக் காதலிக்கவும் வேண்டாம். வெறுக்கவும் வேண்டாம் அது எவ்வளவு காலம் நீண்டிருக்க வேண்டும் அல்லது குறைந்திருக்க வேண்டும் என்பதை இறைவனுக்கு விட்டுவிடுங்கள். மில்டன் வாழ்க்கையின் உண்மையான குறிக்கோள் அழிவில்லாத வாழ்க்கையை அறிந்துகொள்வதாகும். பென் வாழ்க்கையின் இலட்சியம் இறைவனைப் போன்றிருந்தால், இறைவனைப் பின்பற்றும் ஆன்மா அவனைப் போலவே இருக்கும். சாக்ரடிஸ் பழமொழிகள் உலகம் எப்படி இருக்கிறதோ அப்படியே கொள்ளுங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று பாராதீர்கள். செர்மானிய பழமொழி குறிப்புகள் வெளியிணைப்புக்கள் பகுப்பு கருப்பொருட்கள்
அன்னை அல்லது தாய் அல்லது அம்மா . மேற்கோள்கள் ஈன்ற தாயிற்கு ஒப்பாக இவ்வுலகில் எதுவுமே இல்லை. நான்மணிக்கடிகை உயர்ந்த பதவிகளையும் மேலான அந்தஸ்தினையும் ஒருவன் வகிக்க முடியும் ஆனால் தாயின் இடத்தை மட்டும் யாராலும் வகிக்க முடியாது. மெர்சாப் தாயார் எவ்வளவு உற்சாகமாக அறிவு புகட்ட விரும்புகிறாளோ அவ்வளவு உற்சாகமாக குழந்தையும் அதை ஏற்கவிருக்கும். எமெர்சன் தாயின் அன்பை வெளியிட உலகத்தில் எந்த மொழியிலும் போதிய வார்த்தைகள் இல்லை. கோபீன் நீ எப்படி இருக்கவேண்டும் என்று தான் உன் அப்பா சொல்வார் நீ எப்படி இருக்கிறாய் என்று சொல்வது உன் அம்மாதான். பீட்டர் டேவிசன் மிகவும் மரியாதைக்குரியவர் அன்னையே மிகவும் கசப்பானது தனிமையே மிகவும் துயரமானது மரணமே. வில்ப்ரெட் பங்க் நீ மேன்மையடைய விரும்பினால் உன் தாய் தந்தையர்கள் சொல்கேட்டு நடப்பதுடன் அவர்களையும் காப்பாற்றவேண்டும். திருவள்ளுவர் உலகம் அனைத்தையும் ஒரு தட்டிலும், என் தாயை மறு தட்டிலும் வைத்து நிறுததால், உலகின் தட்டுத்தான் மேலேயிருக்கும். லாங்டேல் பிரபு அன்னையின் இதயமே குழந்தையின் பள்ளிக்கூடம். பீச்சர் அன்னையின் மடியிலிருந்துகொண்டு முதல் முறையாகக் கேட்ட கதைகள் முழுதும் மறக்கப்பெறுவதில்லை. வாழ்க்கைப் பாதையில் கொடுமையான வெப்பத்தால் வெந்து தவிக்கும் நமக்கு இது ஒன்றே வற்றாத நீரூற்று. ரஃபீனி தாயின் நற்குணங்களும். தந்தையின் பாவங்களும் குழந்தைக்கு வந்து சேரும் என்று எங்காவது எழுதி வைத்தல் நலம். டிக்கன்ஸ் குழந்தையின் எதிர்காலக் கதி எப்பொழுதும் தாயில் வேலையால் அமைகின்றது. நெப்போலியன் ஃபிரான்ஸ் நல்ல தாய்மார்களைப் பெற்றிருந்தால் அவள் நல்ல பிள்ளைாளையும் அடைவாள். நெப்போலியன் நான் இப்பொழுதுள்ள நிலைமைக்கும். இனி அடைய நம்பிக் கொண்டிருப்பதற்கும், நான் என் தெய்விகத் தாய்க்கே கடமைப்பட்டிருக்கிறேன். லிங்கன் சமூகத்தின் எதிர்காலம் தாய்மார்களின் கைகளில் இருக்கின்றது. டிபூஃபோர்ட் "ஃபிரான்ஸ் தேசத்து இளைஞர்கள் நல்ல முறையில் கல்விப் பயிற்சி பெறுவதற்கு என்ன தேவை? என்று நெப்போலியன் ஒரு சமயம் வினவினார். "நல்ல தாய்மார்கள் என்று பதில் வந்தது. சக்கரவர்த்தி அதை ஆர்வத்துடன் மனத்தில் வாங்கிக் கொண்டு ஒரே வார்த்தையில் இதோ ஒரு கல்வித் திட்டமே அமைந்திருக்கின்றது' என்று கூறினார். ஆபட் தாய்மார்கள் உருவாக்கிய முறையிலேதான் மனிதர்கள் இருப்பார்கள். முரட்டுத் துணிகளை நெய்யும் தறியில் காஷ்மீரப் பட்டை எதிர்பார்ப்பதும், பொறியியல் நிபுணரிடம் கவிதையை எதிர்பார்ப்பதும், தரகுக்காரனிடம் புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பை எதிர்பார்ப்பதும் வீணாகும். எமர்ஸன் மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம். உலக நீதி பழமொழிகள் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். தமிழ் பழமொழி தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. தமிழ் பழமொழி உங்களது அன்பை மனைவியிடம் காட்டுங்கள் உங்களது ரகசியங்களை தாயிடம் கூறுங்கள். அயர்லாந்து பழமொழி குறிப்புகள் வெளியிணைப்புக்கள் . . அம்மா 20 பகுப்பு குடும்பம்
செய்ந்நன்றி எனப்படுவது ஒருவர் தனக்கு செய்த உதவியை மறவாமல் இருக்கும் ஒரு சிறந்த பண்பாகும். மேற்கோள்கள் கடவுள் இன்று உங்களுக்கு 86,400 விநாடிகளைப் பரிசாக வழங்கியுள்ளார். இதில் ஒரு விநாடியை நன்றி சொல்ல பயன்படுத்தினீர்களா? வில்லியம் ஆர்தர் வார்டு ஆண்டவனுக்கு இரண்டு உறைவிடங்கள் உண்டு. ஒன்று சொர்க்கம் மற்றொன்று நன்றியுள்ள மனிதனின் இதயம். ஐசக் வால்டன் நன்மை செய்தவர்க்கு நன்மை செய்யாதிருப்பது மனித குணத்திற்கு விரோதம். நன்மை செய்தவர்க்குத் தீமை செய்வது பேய்க் குணமாகும். ஸெனீக்கா நன்றி செய்தாயா அதைப்பற்றிப் பேசற்க. நன்றி பெற்றாயா அதைப்பற்றிப் பேசுக. ஸெனீக்கா நான் நன்றியோடு இருக்க வேண்டும் என்று உறுதியாக எண்ணினால், அவ்வாறே இருப்பேன் ஸெனீகா செய்நன்றி செலுத்த அதிகமாய் ஆத்திரப்படுவதும் செய்நன்றியைக் கொலை செய்வதில் ஒருவகையாகும். ரோஷிவக்கல்டு பெற்ற நன்றியை மறப்பவனும், பிறரிடம் மறைப்பவனும், கைம்மாறு செய்யாதவனும் செய்நன்றி கொல்லும் பாதகர்கள் இவர்களில் பெரிய பாதகன் நன்றியை மறப்பவன். ஸிஸரோ நன்றியறியாமையில் சகல இழிதகைமைகளும் அடங்கும். இதர துர்க் குணங்களோடன்றி அது ஒரு பொழுதும் தனியாகக் காணப்படுவதுமில்லை. புல்லர் நன்றியறியாமை ஒருவித பலவீனமே. பல முடையவர் நன்றியறியாதிருக்க நான் பார்த்ததில்லை. கதே நன்றியறிதலைப் போன்ற இன்பகரமான மனோதர்மம் வேறொன்றுமில்லை. இதர அறங்களை அனுஷ்டிப்பதில் கஷ்டம் உண்டு. இதிலோ அணுவளவு கஷ்டமும் கிடையாது. அடிஸன் நண்பர்களின் உதவியை நாம் மிகைப்படுத்திக் கூறுவதற்குக் காரணம் நம்முடைய நன்றியறிவுடைமையன்று. நம்முடைய தகுதியைப் பிறர்க்கு அறிவிக்க வேண்டுமென்ற ஆசையேயாகும். ரோஷிவக்கல்டு சரியாய் மெச்சக் கற்றுக்கொள். வாழ்வின் பேரின்பம் அதுவே. பெரியோர் மெச்சுபவைகளைக்கவனி அவர்கள் பெரிய விஷயங்களையே மெச்சுவர் தாழ்ந்தோரே இழிவான விஷயங்களை மெச்சவும் வணங்கவும் செய்வர். தாக்கரே வீசு, குளிர்காற்றே! வீசு. மனிதனுடைய நன்றியறியாமைப் போல நீ அவ்வளவு அன்பற்றவன் அல்ல உன் மூச்சு சீறினாலும் உன் பற்கள் கூரியதாயில்லை. ஷேக்ஸ்பியர் ஆண்ட்வனே எனக்கு உயிர் அளித்ததுபோல், நன்றி நிறைந்த இதயத்தையும் அளிப்பாயாக. ஷேக்ஸ்பியர் நன்றியறிதல் என்பது அதிக கவனமாய் உண்டாக்க வேண்டிய பயிராகும். அதைக் கீழோரிடைக் காண முடியாது. ஜான்சன் என்னுடைய அகவாழ்வும், புறவாழ்வும் என்னுடைய இனத்தாரின் இறந்தவரும், இருப்பவரும் உழைப்பினலேயே ஆக்கப்பட்டிருக்கின்றன என்பதை நான் நாள்தோறும் உணர்கிறேன். பிறர் உழைப்பால் நான் எவ்வளவு நன்மையைப் பெற்றாேனோ, அத்துணை நன்மையை நான் பிறருக்குச் செய்ய எவ்வளவு உழைக்க வேண்டும். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நன்றி என்பது கடவுள் அருளிய நன்மையின் நினைவு மட்டும் அன்று இதயம்கலந்த வணக்கமும் ஆகும். என். பி. வில்லிஸ் உன்னதமான இதயங்களில் நன்றியறிதல் ஒரு பெரிய உண்ர்ச்சியின் ஆர்வத்தைக் கொண்டிருக்கும். பாயின்ஸலாட் புரம்பொருளைப்பற்றிய நன்றியுள்ள கருத்து, தானே.ஒரு பிரார்த்தனையாகும். லெஸ்னிஸின் நன்றியறிதலை மிகச்சிறந்த பண்பாகப் போற்றுகிறார்கள். ஆனால், செயலில் அதை விட்டுவிடுகிறார்கள். பேச்சுக்கு அது அணி, உண்மை வாழ்க்கைக்கு அது அவதூறாகத் தோன்றுகிறது ஃபோர்னே பழமொழிகள் உப்பிட்டவரை உள்ளளவும் நினை. தமிழ் பழமொழி நன்றியுள்ள மனிதன் எது சொன்னாலும் நம்பலாம். அவன் துரோகம் செய்யமாட்டான். ஸ்பெயின் பழமொழி நன்றியறிதல் அறங்களில் குறைந்தது. நன்றியறியாமை மறங்களில் கொடியது. குறிப்புகள் வெளியிணைப்புக்கள் பகுப்பு உணர்வுகள் பகுப்பு நல்லொழுக்கங்கள்
உதவி செய்தல் அல்லது உதவுதல் என்பது ஒரு சிறந்த பண்பாகும். மேற்கோள்கள் தலைசிறந்த செயல்கள் எவை? ஒரு மனிதப் பிறவியின் மனத்தில் மகிழ்ச்சி ஊட்டுவது நலிந்தோர்க்கு உதவுவது வேதனைப் படுவோரின் வேதனையை தணிப்பது புன்பட்டோருக்கு செய்ப்பட்ட அநீதிகளைக் களைவது. லபல் யாருடைய கை வாங்குவதற்கு நீள்கிறதோ அவன் மிக தாழ்ந்தவன் யாருடைய கை கொடுப்பதற்கு நீள்கிறதோ அவன் மிக உயர்ந்தவன். சுவாமி விவேகானந்தர் அன்பு செய், உதவி செய், உன்னால் முடிந்ததை செய், ஆனால் நிபந்தனை ஏற்படுத்தாதே. சுவாமி விவேகானந்தர் நான் எல்லா உதவிகளுக்கும் என்னையே நம்புகிறேன். கவிஞர் வர்ஜில் உதவி செய்யும் உள்ளம் உள்ளவனுக்குத் தான் குற்றம் சொல்ல உரிமையுண்டு. ஆபிரகாம் லிங்கன் நண்பர்கள் இருப்பது நல்லது. ஆனால் அவர்களின் உதவியை நாடுவது நல்லதல்ல. பெர்னார்ட்ஷா பிறர் உன் விளக்கை உபயோகித்துக் கொள்ளட்டும் அதிலுள்ள நெய்யை கொடுத்துவிட மட்டும் சம்மதியாதே. மேட்டர்லிங்க் துன்பத்தைக் கண்டு இரங்குதல் மனித இயல்பு அதை நீக்குதல் தெய்வீகம். சிட்னி உடனே கொடுத்தவன் இரு மடங்கு கொடுத்தவன் ஆகிறான். சைரஸ் துருப்பிடித்து அழிவதை விட தேய்ந்து அழிவது சிறந்தது. ரிச்சர்ட் கம்பர்டேன்ட் மனிதர்கள் தங்கள் ஆற்றலைப் பயன்படுத்தாமல் பிறர் உதவியை எதிர்பார்த்து நிற்கிறார்கள். மாண்டெயின் உபகாரம் செய்வதற்கு செலவு ஒன்றுமில்லை. ஆனால் அதைக் கொடுத்து அனைத்தும் வாங்கலாம். மாண்டேகு நீ ஒருவனிடத்தில் உதவியாகப் பெறக்கூடியதை எக்காரணத்தை முன்னிட்டும் உரிமையாகக் கேட்காதே. ஜே.சி.காலின்ஸ் தீங்கு செய்யும் வாய்ப்பு நாளுக்கு நூறு முறை வரும் நன்மை செய்யும் வாய்ப்பு ஆண்டு ஒரு முறை தான் வரும். வால்டேர் வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது, அது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும். தந்தை பெரியார் "உதவி செய்க" என்பதே உலகின் உயர்ந்த ஆதி விதி. அதுவே வாழ்வுக்கு மறுபெயர். மரணத்துக்கு மறுபெயர் "பிரிந்திரு" என்பதே. ரஸ்கின் விளக்கு ஏற்றுவது விளக்குக்கு வெளிச்சம் தருவதற்காக வன்று. அதுபோல் ஆண்டவன் அருளிய நம் நற்குணங்கள் பிறர்க்கு நன்மை தராவிடில் இருந்தும் இல்லாதனபோல் தான். ஷேக்ஸ்பியர் கீழே கிடப்பவனை மேலே தூக்கிவிட்டால் போதாது. பின்னும் அவனுக்கு உதவி செய்ய வேண்டும். ஷேக்ஸ்பியர் பிறர் பாரத்தைத் தாங்கிக் கைகொடுத்தால் நம் பாரம் கனம் குறையும். ஆவ்பரி உபகாரமானது செய்த சேவையில் அடங்காது. செய்தவனுடைய நோக்கத்திலேயே அடங்கும். ஸெனீக்கா உண்மையாளர்க்கு உதவியின் மதிப்பு உதவுவார் மதிப்பளவே யாகும். டெனிஸன் பிறர் செய்த உபகாரம் அதிகமாக உன் கையில் தங்கவிடாமல் பார்த்துக்கொள், ஜாக்கிரதை. எமர்ஸன் நம் விளக்கை ஏற்ற பிறன் விளக்குக்குச் செல்லுதல் நலமே. ஆனால் நம் விளக்கை ஏற்றாமல் அவன் விளக்கருகே அதிக நேரம் தாமதித்தல் நலமேயன்று. ப்ளுட்டார்க் பெறுபவன் மதிக்குமளவே பெறுகின்ற உதவியின் மதிப்பாகும். பப்ளியஸ் ஸைரஸ் கெட்டவன் கொடை நன்மை கொடுப்பதில்லை. யுரிப்பிடீஸ் பிறர் உன் விளக்கை உபயோகித்துக் கொள்ளட்டும். ஆனால் உன் விளக்கு சிறிதேயாயினும் அதிலுள்ள நெய்யைக் கொடுத்துவிட மட்டும் சம்மதிக்காதே. மேட்டர்லிங்க் அதிகமாக நேசிப்பவன் அதிகமாக உதவி செய்பவன். அக்கம்பிஸ் உனக்கு நீயே உதவி செய்து கொள். ஒவ்வொருவரும் உனக்கு உதவி செய்வார்கள்! நிக்கோலோ மாக்கியவெல்லி உலகில் ஒருவன் நிலை தாழ்ந்திருந்தால், அவனுக்கு ஓர் உபதேசம் அளிப்பதைவிட ஒரு பலம் உதவி செய்வது மேலாகும். புல்வெர் உனக்கு நீயே உதவிக்கொண்டால், கடவுளும் உனக்கு உதவி செய்வார். பலர் உழைப்பில் பங்கெடுத்துக்கொண்டால், வேலை எளிதாகி விடும். ஹோமர் பழமொழிகள் மணிக்கணக்கில் போதனை செய்வதை விட ஒரு கணப்பொழுது உதவி புரிதலே நலம். சீனப் பழமொழி குறிப்புகள் வெளியிணைப்புக்கள் பகுப்பு கருப்பொருட்கள்
கடமை அல்லது பணி மேற்கோள்கள் கடமை உணர்ச்சியே உங்கள் நேர்மையான வாழ்வுக்கு சூத்திரம். ஃகென்றி ஃபோர்ட் செய்யாமல் விட்ட ஒவ்வொரு கடமையும் புதிதாக ஏழு கடமைகளுடன் திரும்ப வரும். இங்க்ஃசுவே கடமை தெளிவாக இருக்கிறபோது தாமதம் செய்வது அறிவீனம் மட்டுமல்ல, ஆபத்தும் கூட கடமை தெளிவாக இல்லாதபோது தாமதம் செய்வது விவேகம் மட்டுமல்ல, பாதுகாப்பானதும் கூட. த்ரையன் எட்வார்ட்ஸ் கடமைக்கான அடிப்படைக் கொள்கை சரியாக இல்லாவிட்டால் செயலும் சரியானதாக இருக்க முடியாது. டி.எட்வர்ட்ஸ் கடமையைச் செய்துவிட்டேன் அதற்காகக் கடவுளைத் துதிக்கிறேன். செல்ஸன் உன் கடமையைச்செய்ய முயல்க அப்பொழுது உன் தகுதியை உடனே அறிந்துகொள்வாய். கதே உனக்கு மிகவும் அருகிலுள்ள கடமையைச் செய். கதே கடமையை நிறைவேற்ற அன்பு, தைரியம் என்று இரண்டு வழிக்காட்டிகள் உள. இரண்டும் ஒன்று கூடிவிட்டால் ஒருநாளும் வழி தவறுவதில்லை. அனடோல் பிரான்ஸ் சாந்தம், குதூகலம் இவையே அறங்களின் முன்னணியில் நிற்பன. இவையே பரிபூர்ணமான கடமைகள் ஆவன. ஆர். எல். ஸ்டீவன்ஸன் பிறர்க்கு நான் செய்ய வேண்டிய கடமை யாது? அவரை நல்லவராக்குவதா? நான் ஒருவனைத்தான் நல்லவனாக்க வேண்டும். அவன் நானே. பிறர்க்குச் சந்தோஷம் அளிப்பதே அவர்க்கு நான் செய்யக்கூடிய கடமையாகும். ஆர். எல். ஸ்டீவன்ஸன் நல்லவனும் ஞானியும் சில சமயங்களில் உலகத்தைக் கோபிக்கலாம், சில சமயங்களில் அதற்காக வருந்தலாம். ஆனால் உலகில் தன் கடமையைச் செய்பவன் எவனும் அதனிடம் ஒருபொழுதும் அதிருப்தி கொள்வதில்லை என்பது மட்டும் நிச்சயம். ஸதே செய்ய இயலாததில் சினங்கொள்வது ஏன்? செய்ய இயன்றதைச் செய்வோமாக. ரொமெய்ன் ரோலண்டு உலக அரங்கில், 'இன்ன வேஷதாரியாகத்தான் நடிப்போம்' என்று கூற இயலாது. கொடுத்தவேலையைத் திறம்படச்செய்து முடிப்பதே நமது கடன். எபிக்டெட்டஸ் செய்ய வேண்டியதைச் செய்ய முயல்க முயன்றால் செய்யவேண்டியது இது என்பதில் சந்தேகம் ஏற்படாது. ஆவ்பரி கெட்ட காலம் வந்தால் எப்படிச் சகிப்பது என்பது குறித்து, நல்ல காலத்தில் சிந்தனை செய்வது மாந்தர் கடன். டெரன்ஸ் இன்று உன்னால் கூடியமட்டும் நன்றாய்ச் செய், நாளை அதனினும் நன்றாய்ச் செய்யும் ஆற்றல் நீ பெறக் கூடும். நியூட்டன் அறமே ஆற்றல் என்று நம்புவோமாக. அந்த நம்பிக்கையுடன் நாம் அறிந்த கடமையை ஆற்றத் துணிவோமாக. ஆபிரகாம் லிங்கன் உன் கடமையைத் தைரியமாய்ச் செய்துவிட்டால் நீ அடையும் பலன் யாது? அதைச் செய்ததையே பலனாய் அடைவாய். செயலே பலனாகும். ஸெனீக்கா சுயநலத்திலுள்ள நன்மை யாது? மனிதர் கடமையைக் கடனாகவும், உரிமையை வரவாகவும் ஆக்கிவிட்டனர் வியாபாரம் என்றும் வியாபாரமே! கடனின்றி வாழ விரும்பினால் உரிமைகளைத் துறக்க வேண்டும். பால் ரிச்சர்டு ஒருபொழுதும் தவறு செய்யாதவன் ஒன்றும் செய்யமாட்டான். ஆவ்பரி ஒன்றும் செய்யாது காத்திருப்பவரும் ஊழியம் செய்பவரே மீல்டன் உனக்குத் தெரிந்தவற்றை யெல்லாம் நன்றாக அனுஷ்டிக்க முயல்க. அங்ங்ணம் செய்தால் நீ அறிய விரும்பும் மறைபொருள்களை யெல்லாம் சரியான காலத்தில் தெரிந்து கொள்வாய். செம்பிராண்ட் தானே செய்யக்கூடியது எதையும் பிறர் செய்ய விடலாகாது. இப்ஸன் நான் எப்போதும் என் வரையில் எனது கடமையைச் செய்பவன். மற்றவர்கள் பதிலுக்கு உதவி செய்கிறார்களா என்பதை எதிர்பார்க்காதவன். இராஜாஜி 5 3.1962 தொலைவிலே மங்கலாகத் தெரிவதைக் காண்பது நம் கடமையன்று, நம் கண் முன்பு உள்ளதைச் செய்வதே நம் மேலான கடமை. கார்லைல் நமது வாழ்க்கை பெருங்கடமைகளுக்காக அளிக்கப் பெற்றுள்ளது. சுயநலத்திற்காக அன்று குறிக்கோளில்லாத கனவுகளில் வீணாகக் கழிப்பதற்காக அன்று நம்மை அபிவிருத்தி செய்துகொண்டு, மனித சமூகத்திற்குத் தொண்டு செய்வதற்காக. ஆப்ரே டி. வீர் மனிதனின் கடமை தெளிவானது. சுருக்கமானது. அதில் இரண்டு விஷயங்களே உள்ளன. கடவுளுக்காக அவன் செய்ய வேண்டிய கடமை. இதை ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும் அண்டை வீட்டுக்காரருக்கு அவன் செய்ய, வேண்டிய கடமை, தனக்கு மற்றவர் செய்ய வேண்டுமென்று விரும்புவதை அவனே செய்ய வேண்டும். தாமஸ் பெயின் நம் கடமையைச் செய்வதில் நாம் அதைச் செய்வதைக் கற்றுக் கொள்கிறோம். இ. பி. புஸே செய்யாமல் விட்டுள்ள ஒவ்வொரு கடமையும் புதிதாக ஏழு கடமைகளுடன் திரும்ப வரும். சார்ல்ஸ் இங்ஸ்லே கடமைகள் நம்முடையவை. நிகழ்ச்சிகள் கடவுளுடையவை. ஸெஸில் கடமையில்லாத ஒரு கணங்கூட இல்லை. ஸிஸரோ வெளியிணைப்புக்கள் மேற்கோள்கள் பகுப்பு நன்நெறிகள்
ஆபிரி டிரேக் கிரஹாம் பிறப்பு அக்டோபர், 24 1986 , இவர் ஒரு கனடிய ராப் பாடகர், பாடலாசிரியர் மற்றும் நடிகர் ஆவார். மேற்கோள்கள் நான் தவறுகளைச் செய்யவே பிறந்தேன், சரியானவற்றை போலியாக செய்வதற்காக அல்ல. சான்றுகள் பகுப்பு 1986 பிறப்புக்கள் பகுப்பு வாழும் நபர்கள்
வெற்றிலையின் சிறப்புகள் வெற்றிலை என்பது கொடி வகையைச் சேர்ந்தது.செரிமானத்திற்கும் மருத்துவப் பொருளாகவும் பயன்படுகிறது. அரசன் முதல் ஆண்டி வரை உபயோகிக்கும் பொருள் உண்டென்றால் அது வெற்றிலையே.உண்டைதச் செறிக்கக் கண்டதைப் பேசும் திண்ணைப் பேச்சாளர்களிலிருந்து, உடுத்தத் துணியற்ற பஞ்ஞைப் பண்டாரங்கள் வரை வெற்றிலை போடுவதை ஒரு வழக்கமாகக்கொண்டு இருக்கிறார்கள். வருமுன் காக்கும் மூலிகை சிறையில் அடைபட்டுக் கிடப்போருக்கு மலேரியா போன்ற கொடிய காய்ச்சல் வராமல் தடுக்கும் பொருட்டு நெதர்லாந்து அரசாங்கம் கைதிகளுக்கு வெற்றிலை கொடுத்து வந்தது. சமாதானத் துாதுவன் வெற்றிலை ஏதாவது ஒரு செய்தியைப் பற்றி பேசும் போது அல்லது ஒப்பந்தம் செய்து கொள்ளும் இருவர், முடிவில் தங்களுக்குள் வெற்றிைலை மாற்றிக் கொள்ளும் பழக்கம் நம் நாட்டில் உள்ளது. வெற்றிலையின் பண்புகள் வெற்றிலையானது அதன் நிறத்தாலும், மனத்தாலும் , கார்ப்புச் சுவையின் பேதத்தாலும் மூன்று வகைப்படும். அதிகக் காரமும் மணமும் கறுப்பு நிறம் இல்லாதது "வெற்றிலை".கருமையும் காரமும் மிகுந்தது "கைமாறு வெற்றிலை ". கற்புர மணமும் சிறுகாரமும் கூடியது "கற்புற வெற்றிலை. பாரதி கண்ட தாம்புலம் "கங்கை நதிப்புரத்து கோதுமைபண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம் " என்று பாரதியார் பண்ட மாற்று முறைக்கு வெற்றிலை பயன்பட்டதை அறிகிறோம். வெற்றிலை போடும் விதம் "மேற்றிலையும் கீழ்க்காம்பும் வெந்நரம்பும் வெண்பல்லைத் தீர்த்தாமல் வெற்றிலைையத் தின்றாக்கால் மாற்றதரை வெல்லப்போர் செய்யும் விறல் நெடுமோ லாயிடினும் செல்லப் போய் நிற்கும் திரு காலை பிளவதிகம் கட்டுச்சி நீறதிகம் மாலை இலையதிகம் வாணுதலே சாலவே ஆம்போது நீரிறக்க லாகாது சொன்னேன் கேள் தாம்புலங் கொள்வார் தமக்கு" வெற்றிலையின் நுனியையும் காம்பையும் கிள்ளி முதுகு நரம்பை எடுத்து விட வேண்டும். பல் துலக்கும் முன்பு தாம்புலம் தரித்தலாகாது. காலையில் பாக்கு மிகுதியாகவும்,பிற்பகலில் சுண்ணாம்பு மிகுதியாகவும், மாலையில் வெற்றிலை மிகுதியாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். வெற்றிலையின் மருத்துவக் குணம் வெற்றிலையானது செறிமானத்திற்கு உதவுகிறது. தேள் கடிக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இருமலுக்கு மருந்தாகவும் னயன்படுகிறது.தலைவலிக்கு மருந்தாகப் பயன்படுகிறது. தீக்காயத்திற்கு மருந்தாகப் பயன்படுகிறது. மலச்சிக்கலுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. ஆயுர் வேத மருந்து தயாரித்தலுக்கும் சித்த மருத்துவத்திலும் பயன்படுகிறது. தலைவலி, தீப்புண்கள் போன்றவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகிறது .
உலக சமாதானத்திற்கான தடுப்புச்சுவரானது மனித மனங்களிலிருந்து எழுப்பப்பட வேண்டுமேயல்லாமல் இரண்டு நிலப்பரப்புகளுக்கிடையே அல்ல. பகுப்பு அமைதி
நூலின் பெயர் வெளியிடப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட ஆண்டு என்பது ஆசிரியர் இன் நூலாகும். மேற்கோள்கள் மேற்கோள்... . பக்கம் , வாக்கியம் குறிப்புக்கள் மேற்கோள்... . பக்கம் , வாக்கியம் குறிப்புக்கள் தமிழல்லா மேற்கோள்... தமிழ் மொழிபெயர்ப்பு பக்கம் அல்லது , வாக்கியம் குறிப்புக்கள் வெளியிணைப்புகள் வலை குறிப்பு வலை குறிப்பு 2 பகுப்பு இலக்கியங்கள்
குறள் 314 இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் திருவள்ளுவர் உரை பரிமேலழகர் உரை இன்னா செய்தாரை ஒறுத்தல் தமக்கு இன்னாதவற்றைச் செய்தாரைத் துறந்தார் ஒறுத்தலாவது அவர் நாண நல் நயம் செய்துவிடல் அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல். மறவாவழிப் பின்னும் வந்து கிளைக்கும் ஆகலின் , மறக்கற்பால ஆயின. அவரை வெல்லும் உபாயம் கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் செற்றம் பற்றிச் செய்தல் விலக்கப்பட்டது. குன்றக்குடி அடிகளார் உரை தமக்குத் தீங்கு செய்தாரை தண்டிக்கும் முறையாவது தீமை செய்தவர் வெட்கப்படும் அளவுக்கு நன்மையைச் செய்வதுடன், அவர் செய்த தீமையையும் தாம் செய்த நன்மையையும் மறந்து விடுதலாகும். பிறர் செய்த தீமையை நினைப்பதால் பகைமை உணர்வும், தாம் செய்த நன்மையை நினைப்பதால் தன் முனைப்பும் துளிர்க்கும் அதனால் மறந்து விடுக என்கிறார். உளவியல் அடிப்படையில் ஒருவரைத் திருத்த, உடன்பாட்டு முறையிலே அணுகுதல் வேண்டும். பழிவாங்கும் உணர்வில் நின்ற ஒருவனை, "ஒறுத்தல், நாண" என்ற சொற்களின் வழி, பழி வாங்குதலுக்கு உடன்பட்டு நிற்பார் போலக் காட்டி அவன் வெகுளியைத் தணிய வைத்தப் பின், நன்னயம் செய்யும் நெறியில் ஆற்றுப்படுத்தும் வழிபடுத்தும் நிலையில் இக்குறள் அமைந்திருப்பது அறிக. மேலும் படிக மேற்கோள் பகுப்பு திருக்குறள்
குறள் 1 பால் அறத்துப்பால் இயல் பாயிரம் இயல் அதிகாரம் கடவுள் வாழ்த்து குறள் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு விளக்கம் எழுத்துக்கள் எல்லாம் அகரம் என்னும் ஒலி எழுத்தை முதலாகக் கொண்டுள்ளன. அது போல, உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் ஆதியாகிய கடவுளை முதலாகக் கொண்டுள்ளன. மேற்கோள் பகுப்பு திருக்குறள்
இறப்பு அல்லது மரணம் என்பது உலகில் பிறந்த எல்லா உயிரினங்களுக்கும் நிகழும் ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது. ஒரு புத்திசாலியால் தனது வாழ்க்கையின் இறுதிநாளையும் வளமாக எதிர்கால வாழ்க்கையாக மாற்றிவைக்க முடியும். கன்பூசியஸ் நம் எதிரிகளும் நண்பர்களும் நம் கண் முன்பே ஊர்ந்து சென்றுவிடுகின்றனர். நாமும் மரிக்க வேண்டிய பொதுவான சட்டத்திற்கு அடங்கியவர்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. விரைவிலே நாம் போய்ச் சேருமிடத்தில் நம்முடைய கதி நிரந்தரமாக உறுதி செய்யப்படும். ஜான்ஸன் மரணம் வாழ்வின் சிகரம் மரணம் இல்லையென்றால், வாழ்வது வாழ்வாகாது. மூடர்கள்கூடச் சாகவே விரும்புவர். யங் நல்லவர்கள் முன்னதாக இறந்துவிடுகின்றனர் கோடை காலத்துப் புழுதி போல உலர்ந்த இதயங்களையுடையவர்கள் விளக்கில் திரி தீருகிறவரை எரிந்துகொண்டிருப்பார்கள். வோர்ட்ஸ்வொர்த் மரணம் இயற்கையானது மிகவும் அவசியமானது பிரபஞ்சத்தில் எங்குமுள்ளது. இததகையதை இறைவன் மனித சமூகத்திற்குத் தீமையாக அமைத்திருக்கவே முடியாது. ஸ்விஃப்ட் மரணம் நமக்கு வேண்டியவர் ஒருவர்மீது கை வைக்கும் பொழுதுதான். மரணத்தைப்பற்றி முதன் முதலாக நாம் உணர்ந்து கொள்கிறோம். திருமதி டி ஸ்டேல் மனிதர்கள் வாழ்க்கையைத் தாங்கியிருக்க வேண்டும் என்பதற்காகத் தெய்வங்கள் மரணத்தின் இன்பத்தை அவர்கள் உணர முடியாதபடி மறைத்து வைக்கின்றன. லூகான் ஒருவன் வெற்றி வீரனாகவோ, அரசனாகவோ, நீதிபதியாகவோ வாழ்ந்திருக்கலாம் ஆனால், அவன் மனிதனாகவே மரிக்க வேண்டும். டேனியல் வெப்ஸ்டர் உன்னை மரணம் எங்கும் எதிர்பார்த்திருக்கிறது. ஆதலால், நீ தன்னறிவோடு அதை எங்கும் பார்த்திரு. குவார்லெஸ் சாக்ரடிஸ் ஒரு தத்துவ ஞானியைப் போல இறந்தார். ஏசு கிறிஸ்து ஒரு தெய்வத்தைப் போல உயிர் நீத்தார். ரூஸோ''' உறங்குவது போலும் சாக்காடு, உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு. திருவள்ளுவர் நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ் வுலகு. திருவள்ளுவர் மேற்கோள்கள் பகுப்பு இறந்த நபர்கள்
1 ஒழுக்கமும் இடைவிடாமுயற்சித்தலும் உயர்வைத் தரும். 2 கடந்த காலத்தைப் பற்றி சிந்திப்பவன் கவலையில் இருப்பான்,எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பவன் எதிர்பார்ப்பில் இருப்பான், நிகழ்காலத்தைப் பற்றி சிந்திப்பவனே நிம்மதியுடன் இருப்பான்.3 மரணமே வாழ்க்கையின் இறுதியல்ல மனிதநேயம் இருந்தால் மரணத்தையும் வெல்லலாம்.4 தன்னைத் திருத்துபவனே தரணியைத் திருத்துவான்.
பத்தாயிரம் உதைமுறைகளைத் கற்று அதில் பயிற்சி பெற்றுள்ள ஒருவனுக்கு நான் அஞ்சவில்லை ஆனால் ஒரே உதைமுறையினைப் பத்தாயிரம் முறை பயிற்சி செய்துள்ள ஒருவனுக்கு நான் அஞ்சுகிறேன்
1 நிலம் பெயரினும் நின் சொல் பெயரல் இரும்பிடர்த்தலையர் 2 பிறர்க்கு நன்மை செய்தல் இயலாவிடினும் தீமை செய்யாது இருங்கள் அதுவே மக்களை நல்வழிப்படுத்தும். நரிவெருவுத்தலையார் 3 யாதும் ஊரே யாவரும் கேளிர் கணியன் பூங்குன்றனார் 4 தீதும் நன்றும் பிறர் தர வாரா. கணியன் பூங்குன்றனார் 4 கிடைத்தற்கரிய உணவான அமிழ்தமே கிடைத்தாலும்கூட அதனைப் பிறரோடு பகிர்ந்து உண். இளம்பெருவழுதி 5 மக்களை வருத்தாமல் வரி வாங்குகன்ற முறைமை வேண்டும். மிகச் சிறிய நிலம் ஆனாலும்கூட அதில் விளைந்த நெற்கதிர்களைக் குற்றி அரிசியாக்கி பின் அவற்றைச் சோறு ஆக்கி சிறு சிறு கவளமாக உருட்டி யானைக்கு உணவாக அளித்தால் மிகச்சிறு நிலத்தில் விளைந்த நெல் யானைக்கு பல நாள்களுக்கு உணவாகும் அவ்வாறன்றி யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வரி வசூலிக்கலாம் என்கின்ற நிலை ஒரு நாட்டில் உருவானால் அது எப்படிப்பட்டது எனில் நன்றாக முற்றிய நெற்கதிர்கள் விளைந்துள்ள நூறு வேலி எனும் பெரும் நிலப்பரப்பே ஆயினும் யானை தனக்குரிய உணவை தானே உண்டுகொள்ளட்டும் என்று அனுமதித்தால் யானை உணவாக உட்கொள்கின்ற நெற்கதிர்களை விடவும் அதன் காலில் மிதிபட்டு அழிகின்ற நெற்கதிர்களே மிகுதியானதாகயிருக்கும். பிசிராந்தையார் இன்னும் தொடரும்
இந்தியத் தாய் இந்தி, சமசுகிருதம் பாரத மாதா , , மதர் இந்தியா, அல்லது பாரதாம்பா சமசுகிருதம் என்பது இந்தியாவை அன்னை வடிவாக உருவகப்படுத்தி பாவித்தலைக் குறிக்கும். ஏதோ ஒன்றின் காரணமாக நாட்டை நபராக அடையாளப்படுத்துவதாகும். இந்தியப் பண்பாட்டின் அனைத்து பெண் கடவுளரின் குணங்களை ஒன்றிணைத்து, குறிப்பாக துர்க்கையின் வடிவத்தை ஒத்து உருவாக்கபட்டவளாவார். பொதுவாக இந்திய அன்னை காவி வண்ண அல்லது மூவண்ண புடவை அணிந்து இந்தியத் தேசியக் கொடியை ஏந்தியவாறு அமைக்கப்படுகிறார் சில நேரங்களில் சிங்கத்துடன் காட்டப்படுகின்றார். பாரதமாதா குறித்து நேரு இந்த நாட்டை பாரத மாதா என்கிறோம். பாரத மாதா அழகான, ஆனாதரவான தாயாக, அவளுடைய கூந்தல் பூமியைத் தொடுவதாகச் சில ஓவியங்கலில் தீட்டியுள்ளனர். அது பாரத மாதவின் உண்மையான தோற்றமல்ல. பாரதமாத வாழ்க பாரதமாதா வாழ்க என்று நாம் கூறும் மாதா யார். ஓவியங்களில் தீட்டப்பட்டிருக்கின்ற கற்பனையான மாதா அல்ல, இந்திய நிலப்பரப்பும் அல்ல, இந்திய மக்களைத்தான் வாழ்க என்று சொல்லுகிறோம். 1936 செபடம்பர் 16ஆம் நாள் எழுதிய ஒரு கட்டுரை மேற்கோள்கள் பகுப்பு கருப்பொருட்கள்
அரசியல்வாதி என்பவர் அரசியலில் ஈடுபட்ட ஒரு நபர். கட்சி தொண்டர்கள், தலைவர்கள், செல்வாக்காளர்கள், செயற்பாட்டாளர்கள் என பலதரப்பட்டவர்களுக்கு அரசியல்வாதி என்ற அடையாளம் பொருந்தும். நபர் குறித்த மேற்கோள்கள் அரசியல்வாதி எல்லா விசயங்களைப் பற்றியும் பேச விரும்புகிறார். அவர் தனக்குத் தெரிந்ததைக் காட்டிலும் அதிகமான அறிவுள்ளவரைப்போல எப்பொழுதும் பாசாங்கு செய்கிறார் ஜவகர்லால் நேரு சான்றுகள் பகுப்பு நபர்கள்
சிறைச்சாலை என்பது குற்றம் சுமத்தப்பட்டவரையும் குற்றவாளிகளையும் அடைத்து வைக்கும் இடமாகும். இங்கு அரசு சட்ட விதிகளின்படி இவர்கள் தடுத்து வைக்கப்படுவர். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவ உதவி, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். குற்றவாளிகள் தங்களது குற்றத்திற்கான தண்டனையாக சமூகத்திலிருந்து பிரித்து வைக்கும் நோக்குடன் இங்கு தடுத்து வைக்கப்படுவர். சிறைச்சாலை குறித்த கூற்றுகள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுகின்ற, சிறையில் அடைக்கப்படுகின்ற நபர்கள் பிழைத்துக்கொண்டால், ஏன் உயிரோடு இருக்கிறேன் என வேதனைப்படுவார்கள். ஆனால் இலக்கியவாதி அந்த நாட்களை தன் வாழ்க்கையிலேயே மிகவும் இனிமையானவை என கருதுவான் ஜவகர்லால் நேரு மொகலாயர்கள் தங்களுடைய ஞாபகார்த்தமாக தாஜ்மகாலைத் தவிர வேறெதையும் வைத்துவிட்டுப் போகாமல் போனலும், நான் அவர்களுக்காக நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறேன். ஆனல் பிரிட்டிஷார் தங்களுடைய அரசாட்சி முடிந்தபின் என்ன வைத்துவிட்டுப் போவார்கள் என்றால், சிறைச்சாலையைத் தவிர வேறொன்றுமில்லை சுபாஷ் சந்திர போஸ் 20 5 1928, பம்பாயில் சான்றுகள் பகுப்பு இடங்கள்
இந்திய தேசிய காங்கிரஸ் காங்கிரஸ் கட்சி அல்லது காங்கிரஸ் என்றும் அழைக்கப்படுகிறது, சுருக்கமாக '''' இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். 1885ல் தொடங்கப்பட்ட இக்கட்சி, இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது. காங்கிரஸ் குறித்த பிறர் கருத்துகள் காங்கிரஸ் அரசியல் ஜனநாயகத்தை ஆதரிக்கிறது என்பதைத் தவிர விரிவாகப் பதிலளிக்க இயலாது. இதற்குமேல் எந்த முடிவும் செய்யப்படவில்லை. இன்று நிலவுகின்ற அமைப்பில் எவ்விதமான மாற்றத்தையும் செய்வதற்கு அது விரும்பவில்லை என்பது இதன் பெரும்படியான அர்த்தம். ஜவகர்லால் நேரு நேரு அல்மாரா சிறையிலிருந்தபோது 1935 ஆகத்து 6ஆம் நாள் எழுதிய பாய் பரமானந்தும் சுயராஜ்யமும்'' என்ற கட்டுரையில் சான்றுகள் பகுப்பு இந்திய தேசிய காங்கிரஸ்
திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க., ஆகத்து 26, 1883 செப்டம்பர் 17, 1953 அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். நாடு நாடு என்பது ஓர் எல்லைக்கு உட்பட்ட வெறும் நிலப்பரப்பு மட்டுமன்று. நிலத்தின் இயற்கைத் தன்மையினினின்றும் முகிழ்ந்த வாழ்க்கை. அரசு, கலவி, தொழில், நாகரிகம் முதலியனவும் சேர்ந்த ஒன்றே நாடு என்பது. மொழி நாட்டைப் பண்படுத்தும் கருவிகள் பல. அவைகளுள் சிறந்தது மொழி. ஆதலால், நாட்டவர்க்கு மொழிப்பற்று இன்றியமையாதது. நாடு என்பது மொழியை அடிப்படையாகக் கொண்டது. அம்மொழியை வஞ்சிப்பது பிறந்த நாட்டை வஞ்சிப்பதாகும். ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டின் மொழி நிலையைப் பொறுத்தே நிற்கும். கல்வி மக்கள் உடலுக்கு உணவு எத்தகையதோ அத்தகைத்து மகள் அறிவிற்குக் கல்வி. மனிதன் அறியாமையைக் கல்வி அறிவை விளக்கி அவனது வாழ்வை நேர்மையில் செலுத்தவல்லது கல்வி. கல்வி என்பது வெறும் ஏட்டுப் படிப்பு மட்டுமன்று. பட்டம் பதவிகளைக் குறிக்கொண்டு படித்தலும் கல்வியாகாது. கல்வி என்பது அறியாமையை நீக்கி அறிவை விளங்கச் செய்வது. நாம் தமிழ் மக்கள். நாம் நமது தாய்மொழி வாயிலாகக் கல்வி கற்றலே சிறப்பு. அதுவே இயற்கை முறை. இளமைப் பருவம் இளமைப் பருவம் கல்விக்கெனக் கொடுக்கப்படுவது. அப்பருவத்தை வேறு வழியில் செலவழிப்பது இயற்கைக்கு மாறுபட்டு நடப்பதாகும். இளமையை மாறுபட்ட வழியில் கழிப்பவன் வாழ்வு முற்றிலும் இடர்ப்பட்டுக்கொண்டே போகும். எதையும் இளமையிலேயே பயிலல் வேண்டும். வாழ்வெனும் மரத்துக்கு இளமைப் பயிற்சி வேர் போன்றது. ஒருவனது வாழ்வுக்கு இளமை அடிப்படை. ஈ. வெ. இராமசாமி சுயமரியாதை இயக்கத்திற்கு நாயக்கர் அவர்கள் தந்தையாவார். நான் தாயாவேன். நாங்களிருவரும் மாயவரம் சமரச சன்மார்க்கக் கூட்டத்தில் சேர்ந்து பெற்ற பிள்ளேயே சுயமரியாதையாகும். அக்குழந்தைத் தாயுடன் வாழாது இதுகாறும் தந்தையுடன் சேர்ந்து வாழ்கிறது. அதன் வளர்ச்சியைக் கண்டு யான் பெருமகிழ்ச்சியடைகிறேன். மாணாக்கர் மாணாக்கர் என்னுஞ்சொல் விழுமிய பொருளுடையது. பின்வாழ்விற்கு வேண்டப்படும் மாண் பொருளை ஆக்குதற்கு வேண்டப்படும் மாண் பொருளை ஆக்குதற்கு ஒழுக்கநெறி நிற்போர் மாணாக்கராவார். மாணாக்கருலகிற்கு முதல் வேண்டற்பாலது ஒழுக்கம். ஒழுக்கம் கல்வி அறிவிற்கு அடிப்படை. ஒழுங்கை மாணாக்கர் உறுதியாகக் கடைப்பிடித்து ஒழுகுவாரானால் வருங்காலத்தில் நாடே நன்னிலை எய்தும். பள்ளியில் படித்துவருங்கால் மாணாக்கர் வேறு துறைகளில் கருத்துச் செலுத்தலாகாதென்று யான் அவர்க்கு அறிவு கொளுத்துவதை எனது கடமைகளில் ஒன்றாகக் கொண்டுள்ளேன். சுற்றுலா மாணாக்கர் ஓய்ந்த வேளைகளில்தரை வழியாலோ கடல் வழியாலோ சென்று பல பகுதிகளைப் பார்த்தல் வேண்டும் பல மக்களோடு பழகல் வேண்டும் உலக இயல்களை நன்கு தெளிதல் வேண்டும். இச்சொலவால் அவர் இயற்கைக் கல்வியறிவு பெறுதல் கூடும். மாணாக்கர் வாழ்விற்கு இச் செலவு மிக இன்றியமையாதது. உணவு உணவு முறைகள் பெரிதும்கவனிக்கற்பாலன. முதலாவது, வேளை நாழியின்றிச் சாப்பிடுவதை நிறுத்தல் நல்லது. பசித் தோற்றம் இல்லாதபோது எக்காரணம்பற்றியும் உணவு கொள்ளளாகாது. மீதூண் கொள்வது அறியாமை. நோய்க்கும் அகால மரணத்துக்கும் அடிகோல்வது மீதூணாகும். முன்னே உண்டது செரிப்பதற்குள், மேலே உண்டு சுமை சுமத்திக் கொண்டிருத்தல், ஈரலுக்குச் சவலை ஏற்படுத்தும் பின்னே மற்றப் பேருறுப்புகட்குக் கேடு நிகழும். அதனால், பிணியும் அகால மரணமும் நேரும். உடை உடையிலும் மனிதன் எளிய உடை அணியவே பயிறல் வேண்டும். சுமை சுமையாக உடையணிவது தவறு. அச்சுமை உடல் வளத்தை நாளடைவில் குலைத்துவிடும். நாட்டின் இயற்கை வளத்துக்கேற்ற உடைதரித்தல் அறிவுடமை. எளிய உணவும் எளிய உடையும் மனித வாழ்வை பண்படுத்தும் இயல்பின. உடற்பயிற்சி உடற்பயிற்சிக்குரிய நேரம் காலையும் மாலையுமாகும். இருவேளை செய்ய இயலாதோர் காலையில் மட்டும் செய்வது நலம். காலையில் இயலாதோர் மாலையில் ஆற்றலாம். காலை நேரம் மிக உரியது. வியர்வை சொட்டச்சொட்டப் பயிற்சி செய்து, பின்னைச் சிறிது நேரம் தாழ்ந்து நீராடுதல் வேண்டும். குளித்தல் ஊற்று நீரில் நாடோறுங் காலையில் திலை முழுகல் வேண்டும். மூழ்குதற்குத் தண்ணீரே சால்புடைத்து. நரம்புகட்குத் திண்மையும் உரமும் ஊட்டும் நீர்மை தண்ணீருக்குண்டு. நறுந்தண்ணீர் கிடையாவிடத்து வெந்நீரில் மூழ்குவது நலம். வெந்ரையும் தண்ணீரையும் கலந்து முழ்கல் நலன் பயப்பதாகாது. உறக்கம் உறக்கம் நல்லுடலுக்கு அறிகுறி. அதன் குலைவு நோயுடலுக்கு அறிகுறி. பகல் விழிப்பும் இரவில் உறக்கமும் வாழ்க்கைக்குத் தேவை. முகத்தை மூடி உறங்குதல் கூடாது. பெண்நலன் பெண் தாயாகலான் பெண்ணலன் பெரிதும் ஓம்பப்பெறல் வேண்டும். பெண்ணலன் ஓம்பப்படாத இடத்தில் வேறு எவ்வித நலனும் நிலவல் அரிது. ஒரு நாட்டுக்கு நலன் அந்நாட்டுப் பெண் மக்கள் நிலையைப் பொறுத்தே நிற்கும். ஒரு நாட்டின் நாகரிகம் அந்நாட்டின் பெண் மக்கள் நிலையைப் பொறுத்து நிற்கிறதென்பது எவரும் ஏற்கத்தக்க உண்மை. பெண்மக்கள் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி, இடுக்கணுமின்றிப் பிறப்புரிமை இன்பத்தை எங்கே நுகர்கிறார்களோ அல்கேயுள்ள ஆண்மக்கள் நாகரிக நுட்பம் உணர்ந்தவர்களாகிறார்கள். அந்நாடே நாகரிகம் பெற்றதாகும். சாதி பிறப்பில் தீண்டமை கருதுவது கொடுமை வண்கண் அநாகரிகம். தீண்டாமை கொண்ட நாடு பொலிவிழத்தல் திண்ணம். சத்தென்னும் செம்பொருளை உன்னுதற்கும் போற்றுதற்கும் உரிய இடமாகக் கோயில்கள் கட்டப்பட்டன. நாளடைவில் அக்கோயில்களிலும் சாதிப்பேய் நுழைந்துவிட்டது. ஒரு கூட்டத்தார் இங்கும், மற்றாெரு கூட்டத்தார் உங்கும், இன்னொரு கூட்டத்தார் அங்கும் நின்று கடவுளை வழிபட வேண்டுமாம். கடவுள் முன்னிலையிலுமா உயர்வு தாழ்வு? கடவுளை மரம், செடி, கொடி, பாம்பு, சிலந்தி, யானை முதலியன பூசித்ததாகப் புராணங்கள் புகல்கின்றன. கடவுளின் உருவங்களின் மீது ஈக்கள் மொய்க்கின்றன. பல்லிகள் ஓடுகின்றன. இவைகட்கெல்லாம் இறைவனைத் தொடும் உரிமையிருக்கும்போது, ஆறறிவுடைய மனிதனுக்கா அவ்வுரிமையில்லை. சாதியார் கொடுமை என்னே! என்னே! 7 5 1927 மாயவரம் சமரச சன்மார்க்க மாநாட்டில் நபர் குறித்த மேற்கோள்கள் பெரியார் திரு. வி. க. அவர்கள், மற்றவர்கள் அவரைப் பார்த்து நடந்துகொள்ளவேண்டிய பல பண்புகள் உடையவர். அவர் வாழ்ந்த விததமும் அவர் ஆற்றிய தொண்டும் நாம் பின்பற்றக்கூடியதான முறையில் அமைந்துள்ளன. ஈ. வெ. இராமசாமி என்னை பல நூல்கள் எழுதிய ஆசிரியன் என்று போற்றிப் பேசினார்கள். ஆனால், நூலாசிரியன் என்பதைவிட திரு.வி.க.வின் சிஷ்யன் என்பதால்தான் எனக்குப் பெருமை. திரு.வி.க பிளேட்டோ ஆனால் நான் அரிஸ்டாட்டில் அல்லன். வெ. சாமிநாத சர்மா சான்றுகள் பகுப்பு தமிழறிஞர்கள் பகுப்பு தமிழ் எழுத்தாளர்கள் பகுப்பு 1883 பிறப்புக்கள் பகுப்பு 1859 இறப்புக்கள்
மொழி என்பது சிக்கலான தொடர்பாடல் முறைமைகளைப் பெறுவதற்கும் பயன்படுத்துவதற்குமான வல்லமை ஆகும். குறிப்பாக இது இதற்கான மனித வல்லமையைக் குறிக்கும். தனியான ஒரு மொழி மேற்குறித்த முறைமை ஒன்றுக்கான ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இது ஒரு தொகுதி குறியீடுகளையும், அவற்றை முறையாகக் கையாளுவதற்கான விதிமுறைகளையும் உள்ளடக்குகிறது. மேற்கோள்கள் நாட்டைப் பண்படுத்தும் கருவிகள் பல. அவைகளுள் சிறந்தது மொழி. ஆதலால், நாட்டவர்க்கு மொழிப்பற்று இன்றியமையாதது. திரு. வி. கலியாணசுந்தரனார் நாடு என்பது மொழியை அடிப்படையாகக் கொண்டது. அம்மொழியை வஞ்சிப்பது பிறந்த நாட்டை வஞ்சிப்பதாகும். திரு. வி. கலியாணசுந்தரனார் ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டின் மொழி நிலையைப் பொறுத்தே நிற்கும். திரு. வி. கலியாணசுந்தரனார் ஒரு கருத்து அணிந்துகொள்ளும் உடை மொழியாகும். ஜான்ஸன் கருத்தைத் தெரிவிக்கும் கருவியாக இருப்பதுடன், மொழி சிந்தனை செய்வதற்கும் உதவியான திறம் படைத்த பெரிய கருவியாகவும் விளங்குகின்றது. ஸர் எக்டேவி நம் கருத்துகளை மறைத்துக்கொள்ளவும் சொற்கள் பயன்படுகின்றன. வால்டர் அந்நிய மொழிகளை அறியாத மனிதன் தன் சொந்த மொழியையும் அறியான். கதே பேச்சு என்ற வியாபாரத்தில் தங்க நாணயங்களையும் வெள்ளி நாணயங்களையுமே உபயோகியுங்கள். ஜோபர்ட் மொழி ஒரு புனிதமான பொருள். அது வாழ்க்கையிலிருந்து வளர்ந்து வருவது. வாழ்க்கையின் வேதனைகள். இன்பங்கள். அதன் தேவைகள். அயர்வுகள் ஆகியவற்றில் அது உருவாகின்றது. ஒவ்வொரு மொழியும் அதைப் பேசி வரும் மக்களுடைய ஆன்மா எழுந்தருளியிருக்கும் ஆலயமாகும். ஆ. வே. ஹோம்ஸ் சான்றுகள் பகுப்பு மொழிகள் பகுப்பு சமூகவியல்
மாணவன் அல்லது மாணவி என்பவர் ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள பள்ளி, கல்லூரிகளில் பயில்பவர் ஆவார். மாணாக்கர் என்னுஞ்சொல் விழுமிய பொருளுடையது. பின்வாழ்விற்கு வேண்டப்படும் மாண் பொருளை ஆக்குதற்கு வேண்டப்படும் மாண் பொருளை ஆக்குதற்கு ஒழுக்கநெறி நிற்போர் மாணாக்கராவார். மாணாக்கருலகிற்கு முதல் வேண்டற்பாலது ஒழுக்கம். ஒழுக்கம் கல்வி அறிவிற்கு அடிப்படை. திரு. வி. கலியாணசுந்தரனார் ஒழுங்கை மாணாக்கர் உறுதியாகக் கடைப்பிடித்து ஒழுகுவாரானால் வருங்காலத்தில் நாடே நன்னிலை எய்தும். பள்ளியில் படித்துவருங்கால் மாணாக்கர் வேறு துறைகளில் கருத்துச் செலுத்தலாகாதென்று யான் அவர்க்கு அறிவு கொளுத்துவதை எனது கடமைகளில் ஒன்றாகக் கொண்டுள்ளேன். திரு. வி. கலியாணசுந்தரனார் சான்றுகள் பகுப்பு கல்வியியல் பகுப்பு தொழில் அடிப்படையில் நபர்கள்
சுற்றுலா என்பது தமது வழமையான இருப்பிடங்களை விட்டு வேற்று இடங்களைக் கண்டு களிக்க பயணித்தலே ஆகும். உலக சுற்றுலா அமைப்பின் சொற்பொருள் விளக்கத்தின்படி ஒரு பயணத்தை சுற்றுலா என வகைப்படுத்த ஒருவர் தமது "வழமையான சுற்றுச்சூழலைவிட்டு வேற்று இடத்திற்கு ஒய்வு, அலுவல் மற்ற ஏனைய நோக்குடன் மேற்கொள்ளும் பயணம் ஆகும். மாணாக்கர் ஓய்ந்த வேளைகளில்தரை வழியாலோ கடல் வழியாலோ சென்று பல பகுதிகளைப் பார்த்தல் வேண்டும் பல மக்களோடு பழகல் வேண்டும் உலக இயல்களை நன்கு தெளிதல் வேண்டும். இச்சொலவால் அவர் இயற்கைக் கல்வியறிவு பெறுதல் கூடும். மாணாக்கர் வாழ்விற்கு இச் செலவு மிக இன்றியமையாதது. திரு. வி. கலியாணசுந்தரனார் சான்றுகள் பகுப்பு சமூகவியல்
உணவு என்பது ஒர் உயிரினத்திற்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதற்காக உண்ணப்படும் எந்தவொரு பொருளையும் குறிக்கும் உணவு முறைகள் பெரிதும்கவனிக்கற்பாலன. முதலாவது, வேளை நாழியின்றிச் சாப்பிடுவதை நிறுத்தல் நல்லது. பசித் தோற்றம் இல்லாதபோது எக்காரணம்பற்றியும் உணவு கொள்ளளாகாது. திரு. வி. கலியாணசுந்தரனார் மீதூண் கொள்வது அறியாமை. நோய்க்கும் அகால மரணத்துக்கும் அடிகோல்வது மீதூணாகும். முன்னே உண்டது செரிப்பதற்குள், மேலே உண்டு சுமை சுமத்திக் கொண்டிருத்தல், ஈரலுக்குச் சவலை ஏற்படுத்தும் பின்னே மற்றப் பேருறுப்புகட்குக் கேடு நிகழும். அதனால், பிணியும் அகால மரணமும் நேரும். திரு. வி. கலியாணசுந்தரனார் சாப்பாடு உயிர் வாழ்வதற்கு அவசியந்தான். ஆனால் வாழ்க்கை வேறு உயிர் வாழ்தல் வேறு. வாழ்க்கை ஓர் அநுபவம். சிலர் உலகம் முழுவதையுமே சாப்பாட்டு கடையாக மதித்து விடுகிறார்கள். புதுமைப்பித்தன் சுவையுள்ள முறையில் மக்கள் சமைக்கத் தெரிந்திருப்பதால், இயற்கையான தேவைக்கு மேல் அவர்கள் இருமடங்கு அதிகமாக உண்கின்றனர். ஃபிராங்லின் சாதாரண எளிய உணவுதான் தலைசிறந்தது. அதிக உணவு வகைகள் அதிக நோய்களைக் கொண்டுவருகின்றன. பிளினி சிங்கத்திற்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு போதும், மனிதனுக்கும் அந்த அளவே போதும். ஜி. ஃபார்டைஸ் உடலைத் திடமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் உபவாசத்தையும். நடையையும் மேற்கொள்ளவும் ஆன்மாவைத் திடமாக வைத்துக்கொள்ள உபவாசத்தையும் பிரார்த்தனையையும் மேற்கொள்ளவும். நடை உடலுக்குப் பயிற்சியளிக்கும். பிரார்த்தனை. ஆன்மாவுக்குப் பழிற்சியளிக்கும் உபவாசம். இரண்டையும் சுத்தமாக்கும். குவார்லேஸ் மருந்தைவிட உணவு வகை மேலானது. ஒவ்வொருவனும் தானே தனக்கு மருத்துவனாயிருக்க வேண்டும். இயற்கைக்கு நாம் உதவியாக இருக்க வேண்டுமேயன்றி அதைக் கட்டாயப்படுத்தக்கூடாது. உன் உடலுக்கு எது ஒத்து வருகிறது என்று அனுபவத்தில் தெரிந்துள்ளாயோ அதை அளவோடு உண்ண வேண்டும். நம் உடல் சீரணித்துக் கொள்ளக் கூடியதைத் தவிர வேறு எதுவும் நல்லதன்று. ஜீரண சக்தி அளிப்பது எது? உடற்பயிற்சி. உடலுக்கு வலிமையளிப்பது எது? உறக்கம். தீராத தீமைகளையும் குறைப்பது எது? பொறுமை. வால்டேர் சான்றுகள் பகுப்பு உணவு வகைகளும் பானங்களும்
மனித உடலுக்கு மேல் அதனை மூடுவதற்காக அணிபவற்றை உடை , , எனலாம். உடை அணிதல் மனிதருக்கே உரிய தனிச் சிறப்பு. உலகில் வாழும் ஏறத்தாழ எல்லா மனித சமுதாயங்களுமே உடைகளை உடுத்துகின்றனர் என்பதுடன், இன்று மனிதரின் மிகவும் அடிப்படையான மூன்று தேவைகளுள் உடையும் ஒன்றாகக் கொள்ளப்படுகிறது. ஏனைய இரண்டும் உணவு, உறையுள் என்பன. மேற்கோள்கள் உடையிலும் மனிதன் எளிய உடை அணியவே பயிறல் வேண்டும். சுமை சுமையாக உடையணிவது தவறு. அச்சுமை உடல் வளத்தை நாளடைவில் குலைத்துவிடும். நாட்டின் இயற்கை வளத்துக்கேற்ற உடைதரித்தல் அறிவுடமை. திரு. வி. கலியாணசுந்தரனார் எளிய உணவும் எளிய உடையும் மனித வாழ்வை பண்படுத்தும் இயல்பின. நம் நாட்டில் உழவுத் தொழிலும் நெசவுத் தொழிலும் மிகப் பெரிய தொழில்களாகும். உழவுத் தொழில் உயிர் பிரச்சனை. நெசவுத் தொழில் மானப் பிரச்னை. உண்ணுவதை உனக்காக உண்ணு உடுத்துவதைப் பிறருக்காக உடுத்து என்கிறார்கள். உண்மையிலேயே நாம் பிறருக்காகத்தான் உடுத்துகிறோம். இரா. நெடுஞ்செழியன் ஒரு பெண்ணுக்கு மிகவும் அழகான பொருள் புடவைதான். அதிக அளவு கெளரவமான பொருளும் அதுதான். மரியா தெரேசா 15 12 1964 புராதன போர்பன் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி வெளியே நாகரிகமான உடை அணிந்துகொள்வது நமக்கு அவசியமில்லாவிட்டாலும். மற்றவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகும் மூடனை அது மேலும் வெறுக்கச் செய்வதாயிருப்பினும், நமது மதிப்பை அதிகப்படுத்துவதாகும். டேவிட் பால் பிரௌன் உனது திருப்திக்காக உணவருந்து. ஆனால், பிறருடைய திருப்திக்காக உடை அணிந்துகொள். ஃபிராங்கலின் கிரீடந்தரித்த சக்கரவர்த்திக்குரிய மரியாதையில் பாதிகூட வெறும் தொப்பியணிந்த சக்கரவர்த்திக்குக் கிடைக்காது. கோல்டு ஸ்மித் உடை விஷயங்களில் நான் ஒருவருக்குச் சொல்லக்கூடியது இதுதான் புது மாதிரியான உடைகள் அணிவதற்கு நீங்கள் முதல்வராக நிற்க வேண்டாம் அப்படி அணியாதவர்களுள் கடைசியாகவும் நிற்க வேண்டாம். வீட்டு இன்பங்களும் வசதிகளும் தீர்ந்து போகும் அளவுக்கு நாம் உடைகளுக்காகத் தியாகம் செய்கிறோம். கௌப்பர் பழமொழிகள் உடல், ஆன்மாவின் மேல் தோடு, உடை அந்தத் தோட்டின் மேலுள்ள உமி. ஆனால், உமி அதனுள் என்ன இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவது. பழ வழக்கு ஆள் பாதி ஆடை பாதி சான்றுகள் பகுப்பு சமூகவியல் பகுப்பு உடைகள்
உடற்பயிற்சி என்பது உடல் நிலையும் நலத்தையும் மேம்படுத்தும் உடல் செயற்பாடுகள் ஆகும். உடற் பயிற்சி ஒரு நபரின் உடல்நலத்தைப் பாதுகாப்பதுடன் நோயாளியின் உடல்நிலையை சீராக்குகிறது. உடற் பயிற்சி இயன்முறைமருத்துவம்த்தில் பெரும்பங்கு வகிக்கிறது. நடத்தல், ஓடுதல், நீந்துதல், பனிச் சறுக்கல், மிதிவண்டி ஓட்டுதல், விளையாடுதல், நடனம் ஆடுதல், யோகாசனம் செய்தல், உடலுழைப்பு என எல்லாம் உடற் பயிற்சிகளே. மேற்கோள்கள் உடற்பயிற்சிக்குரிய நேரம் காலையும் மாலையுமாகும். இருவேளை செய்ய இயலாதோர் காலையில் மட்டும் செய்வது நலம். காலையில் இயலாதோர் மாலையில் ஆற்றலாம். காலை நேரம் மிக உரியது. திரு. வி. கலியாணசுந்தரனார் வியர்வை சொட்டச்சொட்டப் பயிற்சி செய்து, பின்னைச் சிறிது நேரம் தாழ்ந்து நீராடுதல் வேண்டும். திரு. வி. கலியாணசுந்தரனார் அறிவாளிகள் உடல் நலத்திற்காக உடற்பயிற்சியையே நாடுவார்கள். விளையாட்டு மைதானங்களில் ஆரோக்கியம் விலையில்லாமல் கிடைக்கும். வைத்தியரிடம் பணம் கொடுத்துக் குமட்டலான மருந்தை வாங்கிக் குடிப்பதைவிட இது மேலானது டிரைடன் உழைப்பதே உழைப்பின் பயன் என்று சொல்லத்தக்க முறையில் அமைந்துள்ளது மனிதனின் உடல். ஜான்ஸன் உடற்பயிற்சி என்பது களைப்புண்டாகாதபடி உழைத்தல் என்று நான் கருதுகிறேன். ஜான்ஸன் அதிக உழைப்பால் நலிவடைந்த உடல்களைவிட உழைப்பில்லாமல், அயர்ந்து, சோம்பிக் கிடப்பதால் அதிக உடல்கள் பாழாகியுள்ளன. டாக்டர் ரஷ் உடற்பயிற்சியால் நெஞ்சு விரிகின்றது. உறுப்புகள் பயிற்சி பெறுகின்றன. குத்துச்சண்டை செய்வதன் பயன் கிடைக்கின்றது. ஆனால், அதில் கிடைக்கும் குத்துகளும் இல்லை. அடிஸன் சான்றுகள் பகுப்பு நலம்
குளித்தல் என்பது உடலை நீரினால் கழுவுதல் ஆகும். உடல் சுத்தத்தைப் பேண பல மனிதர்கள் அன்றாடம் குளித்தலை வழக்கமாக கொண்டிருக்கின்றார்கள். சமய, மருத்துவ, புத்துணர்ச்சி, மகிழ்ச்சித் தேவைகளுக்காகவும் மனிதர்கள் குளிக்கின்றனர், மேற்கோள்கள் ஊற்று நீரில் நாடோறுங் காலையில் திலை முழுகல் வேண்டும். மூழ்குதற்குத் தண்ணீரே சால்புடைத்து. நரம்புகட்குத் திண்மையும் உரமும் ஊட்டும் நீர்மை தண்ணீருக்குண்டு. நறுந்தண்ணீர் கிடையாவிடத்து வெந்நீரில் மூழ்குவது நலம். வெந்ரையும் தண்ணீரையும் கலந்து முழ்கல் நலன் பயப்பதாகாது. திரு. வி. கலியாணசுந்தரனார் அதிகாலையில் குளித்தல் பொன்மயமான ஒரு பழக்கம். ஃபிராங்க்லின் சான்றுகள் பகுப்பு சமூகவியல்
200 200 தூங்கும் பனி மந்தி தூக்கம், உறக்கம் அல்லது நித்திரை என்பது மனிதர்களும் விலங்குகளும் ஓய்வு கொள்ளும் ஒரு இயல்பான நிலை. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, ஈருடக உயிரினங்கள், மீன்கள் என பல தரப்பட்ட உயிரினங்களின் தொடர்ந்த இயக்கத்துக்கு நித்திரை உயிர்வாழுவதற்கு அவசியமாகும். பொதுவாக உயிரினங்கள் படுத்து, கண்களை மூடி துயில் கொள்ளும். மேற்கோள்கள் தூக்கம் என்பது மிகச்சிறந்த தியானம் ஆகும். டென்சின் கியாட்சோ கடின உழைப்பும், லேசான மனமும் , எதையும் எதிர்கொள்ளும் துணிவும் உள்ளவர்களுக்குத் தூக்கம் எட்டாக்கனி அல்ல கிட்டா மருந்தல்ல. கி. வீரமணி தூக்கம் நம்மை குளுமைப்படுத்தும் ஒரு மாமருந்து புத்துணர்ச்சியைத் தரும் ஊக்க மருந்து. உறக்கம் நல்லுடலுக்கு அறிகுறி. அதன் குலைவு நோயுடலுக்கு அறிகுறி. பகல் விழிப்பும் இரவில் உறக்கமும் வாழ்க்கைக்குத் தேவை. முகத்தை மூடி உறங்குதல் கூடாது. திரு. வி. கலியாணசுந்தரனார் குழந்தையைத் தொட்டிலில் போட்டு ஆட்டுவதால் குழந்தை தூங்குவது உண்மைதான். ஆனால், அதற்குக் காரணம் நல்ல தூக்கம் ஏற்பட்டதால் அல்ல. மனம் மயக்கமும் சோம்பலும் அடைவதால் குழந்தை தூங்க ஆரம்பிக்கிறது. தொட்டிவில் இட்டு ஆட்டுவதால் குழந்தையின் மூளையும் ரத்த ஒட்டமும் பாதிக்கப்படுகிறது. இதை வெளிநாடுகளுக்குச் சென்று சுற்றுப் பயணம் செய்து வந்ததின் முடிவில் நான் உணர்ந்து கொண்டேன். மேதி நவாஸ் ஜங் குஜராத் முன்னாள் ஆளுநர் 18 3 1963 பகல் முழுவதும் வீணாக அலைந்து திரிந்தபின், உறக்கம் மறுநாள் காலைக்காக நம்மை ஓய்வெடுக்கச் செய்கின்றது. யங் நடுநிசிக்கு முன்பு ஒரு மணி நேர உறக்கம். பின்னால் இரண்டு மணி நேரம் உறங்குவதற்கு ஈடாகும். ஃபீல்டிங் மென்மையான உறக்கம் மரணத்தின் போலி ஷேக்ஸ்பியர் துயில்தான் நமது வளர்ப்புத்தாய். ஷேக்ஸ்பியர் களைப்பு கல்லின் மேலும் குறட்டை விடும். அமைதியில்லாத சோம்பலுக்குத் தண்டனையும் உறுத்தும். ஷேக்ஸ்பியர் உறக்கமே! வீடற்றவர்களுக்கு நீதான் வீடு நண்பரற்றவர்கள் உன்னையே நண்பனாகக் கொள்கின்றனர். இ. எலியட் வேதனைக்கு எளிதான மருந்து தூக்கம். அது மரணத்தைப் போல எல்லாவற்றையும் செய்யும், ஆனால், கொல்லாது டோன் ஓய்வு எவ்வளவு இன்பமான விஷயம் கட்டிலே எனக்குச் சொகுசாக உள்ளது. உலகிலுள்ள மகுடங்கள் எல்லாம் கிடைப்பதாயினும், இதை அவைகளுக்கு ஈடாகக் கொடுக்க மாட்டேன். நெப்போலியன் முன்னதாகப் படுத்து. முன்னதாக எழுந்தால், மனிதனுக்கு உடல் நலமும், செல்வமும் அறிவும் பெருகும். ஃபிராங்க்லின் பழமொழிகள் தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை காதல் வந்துவிட்டால் அழகு தேவையில்லை. ஆப்கானிசுதான் பழமொழி சான்றுகள் பகுப்பு கருப்பொருட்கள்
தீண்டாமை ஒரு சமூகக் குழுவினரை ஏனைய சமூகக் குழுவினரோடு சம உரிமையோடு தொடர்புகளைப் பேணுவதைத் தடுக்கும் ஒரு சமூக முறைமையாகும். சமூகத்தின் பொது விதிகளுக்குள் வரையறுக்க முடியாதவர்கள் வழமையாக தீண்டாமைக்குட்படுத்தப்படுகின்றனர். இந்தியாவில் பொதுவாக பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர்கள் இதற்கு ஆளாகின்றனர். மேற்கோள்கள் தீண்டாமை என்பதே சாதி காரணமாக ஏற்பட்டதே தவிர, அதற்கு வேறு காரணமே ஆதாரமே இல்லை. சாதியை வைத்துக்கொண்டு தீண்டாமை ஒழிய வேண்டும் என்பது சிறிதும் அறிவுடைமையாகாது. ஈ. வெ. இராமசாமி சாதி பேதம் ஒழிவதாலும், மேல் சாதி கீழ் சாதி ஒழிவதாலும், ஒழிய வேண்டும் என்று கேட்பதாலும் ஒரு தேசியம் கெட்டுப் போகுமானால், சுயராச்சியம் வருவது தடைப்பட்டு போகுமானால் அப்படிப்பட்ட தேசியமும் சுயராச்சியமும் ஒழிந்து நாசமாய்ப் போவது மேல். ஈ. வெ. இராமசாமி பிறப்பில் தீண்டமை கருதுவது கொடுமை வண்கண் அநாகரிகம். திரு. வி. கலியாணசுந்தரனார் தீண்டாமை கொண்ட நாடு பொலிவிழத்தல் திண்ணம். திரு. வி. கலியாணசுந்தரனார் தீண்டாமை என்பது நமது சமூகத்தில் ஒரு மாசு. தீண்டாமை ஒரு விஷப் பாம்பு. அதைக் கொன்றாக வேண்டும். இராசகோபாலாச்சாரி தோழர்களே! தீண்டாமை விலக்கு என்று வெறும் கூச்சலிட வேண்டாம். ஒவ்வொரு சேரியிலும் நுழையுங்கள் மூடபக்தியால் வரும் கேட்டைத் தெரிவியுங்கள். சேரியிலுள்ள அழுக்கு, மலம், சேறு, பள்ளம், மேடு முதலிய அசுத்தங்களைப் போக்குங்கள். சேரிக் குழந்தைகளைக் கழுவிச் சுத்தமாக்குங்கள், தெருக்களைப் பெருக்குங்கள். குடியரசு தமிழன் சண்டமாருதம் முதலிய பத்திரிகைகளைக் கிராமத்தில் வகிக்கச் சொல்லுங்கள். மந்திர தந்திரங்கள், பூஜை, நைவேத்தியங்கள் இவைகள் பாமர மக்களை மயக்கி ஆளச் செய்துவரும் உபாயங்கள், நீங்கள் அவர்கள் கண்களைத் திறகச் செய்யுங்கள். ஒலி பெருக்கிகளையும், இன்பக் காட்சிகளையும் சேரியில் அனுதினமும் கேட்கவும் செய்யுங்கள். இதைவிட மேலான வேலைகள் உலகில் உள்ளனவா? ம. சிங்காரவேலர் பி.ஏ. பி. எல் 1932 ல் சென்னையில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் சான்றுகள் பகுப்பு சாதி எதிர்ப்பாளர்கள் பகுப்பு சமூகம்
வெ. சாமிநாத சர்மா 17 செப்டம்பர் 1895 7 சனவரி 1978 தமிழறிஞர், அறிவியல் தமிழின் முன்னோடி, பன்மொழி அறிஞர் எனப் பல ஆளுமை கொண்டவர். "பிளாட்டோவின் அரசியல்", "சமுதாய ஒப்பந்தம்", கார்ல் மார்க்ஸ், "புதிய சீனா", பிரபஞ்ச தத்துவம் என்று அரசறிவியல் தலைப்புகளில் விரிவாக எழுதியுள்ளார். இவரது மேற்கோள்கள் வாழ்க்கை வசதிகளை ஓரளவு பெற்றிருப்பவர்கள், நிரந்தர வருவாயுள்ளவர்கள், இப்படிபட்டவர்களுக்குத்தான் அதைரியமும், அவநம்பிக்கையும் உண்டாகின்றன. உடலை ஓடித்து அன்றாட ஜீவனத்தை நடத்துபவர்கள், இப்படி அதைரியமோ, அவநம்பிக்கையோ கொள்வதில்லை. இந்தியர்களில் பெரும்பாலோருக்குச் சுத்த உணர்ச்சி என்பது மிகவும் குறைவு என மேனாட்டார் சிலர் குறை கூறுவார்களானால் அதை நான் வெட்கத்துடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். தம்மைப் பொறுத்தமட்டில் சுத்தமாயிருக்க வேண்டும் மென்று நினைகிகறார்களே தவிர, சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. குடிதண்ணீரில் கால் கழுவுவதும், கண்ட இடத்தில் எச்சில் துப்புவதும், குப்பைக் கூளங்களை அக்கம் பக்கத்திலேயே வீசியெறிவதும் அநேகருக்கு சர்வ சாதாரணப் பழக்கங்களாயிருக்கின்றன. இதில் தென்னாட்டவரைக் காட்டிலும் வட நாட்டவரைப் பெரிய குற்றிவாளிகளென்று சொல்ல வேண்டும். இவரைக் குறித்து பிறர் உலகத்து அறிவையெல்லாம் ஒன்று திரட்டி தமிழனின் மூளையில் ஏற்றி, உன்னதமான தமிழர்களை உற்பத்தி செய்ய இதுவரை யாராவது முயன்று இருக்கிறார்களா? எனக்கு அன்றும் இன்றும் ஒரே பெயர்தான் ஞாபகத்தில் நிற்கிறது. அதுதான் திரு. வெ. சாமிநாத சர்மா. நான் பெற்ற பொது அறிவியல் இருபது சதவீதம் திரு. சாமிநாத சர்மாவின் நூல்கள் தந்தவையே. கண்ணதாசன் ஆங்கிலத்தில் போதிய பயிற்சியில்லாத தமிழர்களும், ஆங்கிலமே தெரியாத தமிழர்களும் மேலைநாட்டுத் தத்துவ சாஸ்திரத்தையும், அரசியில் சாஸ்திரத்தையும் அத்துடன் பல அரசியல் ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளையும் தெரிந்து கொள்ள உதவிய பேருபகாரிகளில் முதன்மையாக இருப்பவர் வெ. சாமிநாத சர்மா ஆவா். கு. அழகிரிசாமி முதறிஞர் வெ. சாமிநாத சர்மா சர்மா என்னும் பெயர் இன்று பண்பட்ட அரசியில்வாதிகள் வணங்கிப் போற்றிப் புகழத்தக்கப் பெயர். அவர்கள் மற்க்க முடியாத பெயர். ருஷ்ய வரலாற்றையும், சீனப் புரட்சியையும், கார்ல் மார்க்ஸையும் தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தியவர். எழுத்தாளர் விக்கரமன் சான்றுகள் பகுப்பு தமிழறிஞர்கள் பகுப்பு 1895 பிறப்புக்கள் பகுப்பு 1978 இறப்புக்கள்
அறம் அல்லது ஒழுக்கநெறி என்பது ஒருவர் சமூகத்தில் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது தொடர்பான பார்வைகளை குறிக்கிறது. இதை நல்லவை, தீயவை என்பன தொடர்பில் ஒரு சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தைகளின் தொகுப்பு எனலாம். அறம் குறித்த மேற்கோள்கள் மனத்தில் குற்றமான நோக்கமே இல்லாமல் செய்கின்ற நல்ல செயல்கள் தான் அறம் அந்த அறம் தன்னலம் உடையதாக இருந்தால், அது வெறும் ஆடம்பரம், அறமன்று திருக்குறள் அறமே ஆற்றல்! அதை நாம் நம்புவோம்! அந்த நம்பிக்கையால் நாம் அறிந்த கடமைகளைச் செய்யத் துணிக! ஆப்பிரகாம் லிங்கன் அறத்தின் வழி நில்! அஞ்சவேண்டாம்! உன் லட்சியமெல்லாம் உன் தேசத்தை உன் கடவுளை உண்மையைப் பற்றியதாகவே இருக்கட்டும். அங்ஙனமாயின் நீ வீழ்ந்து விட்டாலும் பாக்கியம் பெற்றுத் தியாகியாகவே வீழ்வாய். வில்லியம் ஷேக்ஸ்பியர் மனிதர் கவனமாய் வடித்து எடுப்பின், தீமையிலும் நன்மை தெளியலாம். வில்லியம் ஷேக்ஸ்பியர் மனத்தைத் தவிர குறையுள்ளது இயற்கையில் வேறு கிடையாது. அன்பில்லாதவரே அங்கவீனர். அறமே அழகு. அழகான மறம் முலாம் பூசிய சூனியப் பேழையாகும். வில்லியம் ஷேக்ஸ்பியர் மனிதனால் இயல்வதெல்லாம் இயற்றத் துணிவேன் அதற்கு அதிகம் செய்யத் துணிபவன் மனிதன் அல்லன். வில்லியம் ஷேக்ஸ்பியர் அறத்தின் இலட்சணம் அறியாதவரே, 'அறம் செய்தோம், கூலி எங்கே?' என்று இரைந்து கொண்டிருப்பர். மாரிஸ் மாட்டர்லிங்க் அதர்மம் அணியும் ஆடை ஐஸ்வரியம் தர்மம் தரிப்பது தரித்திரம். தியோக்னீஸ் பிறர்க்கு நன்மை செய்பவன் தனக்கும் நன்மை தேடிக்கொள்கிறான். ஸெனீக்கா குளிர் மிகுதிதான். கந்தை உடைதான்! ஆனால் என் ஒழுக்கம் எனக்கு உஷ்ணம் தரும். ஜான் டிரைடன் அறிவு மட்டும் கூறும் வழியில் செல்லற்க. ஆன்மா முழுவதும் ஆணையிடும் வழியில் செல்க. லியோ டால்ஸ்டாய் அறத்திற்குத் தலைசிறந்த வெகுமதி அதனிடத்திலேயே கிடைக்கும் மறத்திற்குத் தலைசிறந்த தண்டனையும் அதனிடத்திலேயே கிடைக்கும். பழமொழி அறம் தன்னில் தானே அடையும் வெகுமதியை விட அதிகமான வெகுமதியை வெளியில் பெற முடியாது. அதுபோல் மறமும் தன்னில் தானே அடையும் தண்டனையைவிட அதிகமான தண்டனையை வெளியில் பெற முடியாது. பிரான்சிஸ் பேக்கன் பேரின்ப வீட்டை அடையும் நெறி துறவறம் அன்று அனவரதமும் அறச்செயல் ஆற்றுவதேயாகும். ஸ்வீடன் பர்க் ஒருபொழுதும் துன்பமாக மாறாத பொருள் ஒன்று உண்டு நாம் செய்யும் நற்செயலே அது. மாரிஸ் மாட்டர்லிங்க் நல்ல விஷயங்கள் தீய விஷயங்கள் என்று பிரிக்க முடியாது. நாம் அவற்றின் வசப்படாமல், அவை நம் வசம் வந்துவிட்டால் எல்லாம் நல்ல விஷயங்களே. எட்வர்டு கார்ப்பெண்டர் எல்லா நல்ல காரியமும் பேச்சும் பணம் பெறாமல் செய்யப்பட வேண்டும் என்பதே இறைவன் திருவுளம் என்பது தெளிவு. ஜான் ரஸ்கின் என்ன செய்யலாம் என்று வக்கீல் கூறுவது விஷயம் அன்று என்ன செய்யவேண்டும் என்று அறிவும், அறமும், அன்பும் கூறுவதே விஷயம். பர்க் அற வாழ்வின் அளவுகோல் விசேஷ முயற்சிகள் அல்ல தினசரி வாழ்க்கையேயாகும். பாஸ்கல் விரும்ப வேண்டியவற்றை விரும்பவும், வெறுக்கத் தகுந்தவற்றை வெறுக்கவும் செய்யுமாறு நன்னெறியில் செலுத்தப்படும் அன்பே அறமாகும். ஸெயின்ட் அகஸ்டைன் நாம் அறநெறியில் நிற்கும் ஒவ்வொரு சமயத்திலும் ஏதேனும் இன்பம் அதிகரியாவிட்டால், ஏதேனும் துன்பம் குறைந்திருக்கும் என்பது உறுதி. பென்தம் அறம் இதுவென்று அறியாமலும், விரும்பியதைச் செய்ய முடியாமலும் இருந்தாலும், அறத்தில் ஆசை கொள்வதால் தீமையை எதிர்க்கும் தெய்வீக சக்தியில் நாமும் ஓர் அம்சமாவோம். ஜார்ஜ் எலியட் நமது உணர்ச்சியின் தன்மை, விசாலம் ஆகிய இரண்டின் அளவே நமது ஒழுக்கமாகும். ஜார்ஜ் எலியட் நான் எனக்காக மட்டுமே உள்ள ஆசைகளை வைத்துக்கொள்ளாதிருக்க முயலுகின்றேன். ஏனெனில், அவை பிறருக்கு பயவா திருக்கலாம். தவிர இப்போழுதே அவை என்னிடம் அதிகமாக இருக்கின்றன. ஜார்ஜ் எலியட் நமது நன்மையை அடையத் தவறிவிட்டாலும் பிறர் நன்மை இருக்கவே செய்கின்றது. அதற்காக முயலுதல் தக்கதே. ஜார்ஜ் எலியட் நம்மை நாம் வெல்லாதவரை அறம் எதுவும் இல்லை உழைப்பு வேண்டாத செயல் எதுவும் ம்தித்தற்கு உரியதன்று டிமெஸ்டர் கடவுள் ஆன்மாவைப் புழுதியில் புதைத்திருப்பதெல்லாம் அதன் மூலம் தவறினூடே உண்மைக்கும், குற்றத்தினூடே அறத்திற்கும், துன்பத்தினூடே இன்பத்திற்கும் வழி திறந்து செல்வதற்காகவேயாகும். எங்கல் தீய நெறியில் செல்லாதிருக்க எப்பொழுதும் எச்சரிக்கையாயிருப்பதை விட, நல்ல விஷயங்களில் மனதை ஈடுபடுத்தி அதன் மூலம் தீய நெறியின் நினைவே எழாதிருக்கச் செய்வதே நலம். பித்தாகோரஸ் நல்லொழுக்கம் மட்டுமே புயலுக்கு அசையாமல், உறுதியாய் நிற்கும் என்பது இறைவனின் சட்டம். பிதாகோரஸ் அற வாழ்வில் ஆசையுள்ளவன் சத்தியத்தைச் சார்ந்து நிற்கும் பொழுதுதான் அவன் துக்கம் தொலைகிறது அதற்கு முன்னால் அன்று. பிளேட்டோ நன்மை ஒரு நல்ல வைத்தியன். ஆனால், தீமை சில சமயங்களில் அதைவிட மிக நல்ல வைத்தியன். எமர்ஸன் நம்மில் உயர்ந்தோரிடமும் எவ்வளவோ தீமை இருக்கின்றது நம்மில் தாழ்ந்தோரிடமும் எவ்வளவோ நன்மை இருக்கின்றது. ஆகையால் பிறரைப் பற்றிப் பேச நம்மில் எவர்க்கும் தகுதி இருப்பது அரிது. ராக்பெல்லர்க்கு உகந்த கவி இருதயத்தைப் பெருக்கி அலங்கரித்துக் காலியாக வைத்திருப்பது என்பது நாம் விரும்பினாலும் கூட முடியாத காரியம். நாம் தயாராக்குவது நன்மை குடிபுகவா, தீமை குடிபுகவா என்பதே கேள்வி. கிப்சன் நமது செயலின் விளைவுகளை நாம் ஏற்றுக்கொள்ளும் முறையே நமது ஆன்மாவின் உயர்வை அளக்குங் கோலாகும். ஜான் மார்லி பல துன்பங்களுக்குப் பிறப்பிடமென்று நான் நகரத்தின் களியாட்டிடங்களை விட்டுவிட்டாலும், இன்னும் என்னை விட்டுவிட மட்டும் கற்றுக்கொள்ளவில்லை. செயின்ட் பேஸில் ஒரு புல் முளைத்த இடத்தில் இரண்டு புல் முளைக்கவும், ஒரு கதிர் விளைந்த இடத்தில் இரண்டு கதிர் விளையவும் செய்பவனே இராஜீயவாதிகள் அனைவரிலும் தேசத்திற்கு அதிக உபயோகமான ஊழியம் செய்தவனாவான். அவனே மனித வர்க்கத்தால் அதிகமாகப் போற்றப்படத் தகுந்தவனு மாவான். ஸ்விப்ட் தான் அறத்தில் நிற்பதால் பிறர் அடையும் சாந்தியும் சந்தோஷமும் இவ்வளவென்று கணித்தல் அநேகமாக இயலாத காரியமாகும். அக்கம்பிஸ் தன்னெறி அதிகக் கரடு முரடென்றாவது, அதிக கஷ்டமென்றாவது கூறப்படக் காணோம். கூறப்பட்டிருப்ப தெல்லாம் அது குறுகியது என்றும், கண்டு பிடிக்கக் கடினமானது என்றுமே. ஆவ்பரி ஒருவனுக்கு ஆகாரம் அளிப்பதைவிட அதை அவனே தேடிக்கொள்ள வழி காட்டுவதே முக்கியம். ஒருவனுக்கு உதவி செய்வதைவிட அவன் பிறர்க்கு உதவி செய்யக் கற்றுக்கொடுப்பதே நலம். ஆவ்பரி குற்றமான காரியம் செய்யக் கூசவேண்டியது அவசியமே ஆனால், பிறர் குறை கூறுவாரோ என்று அளவுகடந்த ஜாக்கிரதை அமைத்துக்கொள்பவன் அன்புடையவனாக இருக்கலாம் உயர்ந்தோனாகமட்டும் இருக்க முடியாது. ப்ளூட்டார்க் நன்றாய் எழுதப்பட்ட ஜீவிய சரிதம் நன்றாய் வாழப்பட்ட ஜீவியத்தைப் போலவே அரியதாகும். தாமஸ் கார்லைல் மனிதனைப் பூரணமாக்க வேண்டிய குணங்கள் எவை? கலங்காத அறிவு, அன்பு நிறைந்த நெஞ்சு, நீதியான தீர்மானம், ஆரோக்கிய உடல், கலங்காத அறிவு இல்லாவிடில் அவசரமாய் முடிவு செய்துவிடுவோம். அன்பு நிறைந்த நெஞ்சு இல்லாவிடில் சுயநலமுள்ளவராயிருப்போம். நல்லெண்ணம் இருப்பினும் நீதியான தீர்மானம் இல்லாவிடில் நன்மை உண்டாவதினும் தீமையே உண்டாகும். உடற்சுகம் இல்லாவிடில் ஒன்றும் செய்யமுடியாது. ஆவ்பரி ஆன்மாவில் உலகின் கறை படியாமல் உனது நற்குணத்தால் தூய்மையாக வைத்துக்கொள்ளவும். பெய்லி ஆரோக்கியமில்லாமல் நீ சுகமாக வாழ முடியுமானால் ஒழுக்கமில்லாமல் இன்பமாக வாழவும் முடியும். பார் நல்லொழுக்கம் என்பது போர்நிலை, அதில் வசிப்பதற்கு நா நம்மையே எதிர்த்துப் போராடிக்கொண்டேயிருக்க வேண்டும். ரூஸோ அறம் எனப்படுவது நாம் நமக்கும். நம்முடன் வாழும் மக்களுக்கும், இறைவனுக்கும். அவர்களுடன் கொண்டுள்ள உறவுகளுக்குத் தக்கபடி நம் கடமையைச் செய்வதாகும், அக்கடமை நமது பகுத்தறிவாலும் இறைவனுடைய வெளிப் பாடுகளாலும், இறைவனாலும் நமக்கு அறிவுறுத்தப் படுகின்றன. ஏ. அலெக்சாண்டர் ஒரு மனிதனுடைய பண்பை அவனுடைய அசாதாரண முயற்சிகளைக்கொண்டு அளவிட வேண்டாம். அவனுடைய தினசரி நடத்தையைக்கொண்டே பார்க்க வேண்டும். பாஸ்கல் எல்லோரும் தர்மத்திற்குத் தலை வணங்குவார்கள். ஆனால் பிறகு விலகிப் போய்விடுவார்கள். டிஃபினோட்' நல்லவன் நிச்சயமாக மேலும் நல்லவனாவான். தீயவன் அவ்வாறே மேலும் தீயவனாவான் ஏனெனில், பண்பு. தீமை காலம் ஆகிய மூன்றும் ஒரு பொழுதும் அமைதியா நிற்பதில்லை. கோல்ட்டன் எந்த மனிதனும் அறவினையைச் செய்ய விரும்பும் போதுதான் அவன் விருப்பப்படி செய்யலாம், மற்ற விஷயங்களில் அவனுடைய இஸ்டிடப்படி நடக்க உரிமை கிடையாது. ஸி. சிம்மன்ஸ் நன்மை என்பது செயலில் காணும் அன்பு. ஜே. ஹாமில்டன் ஏதாவது ஒரு கொள்கைக்காக வாழுங்கள். நன்மையைச் செய்யுங்கள் காலத்தின் புயல்கள் அழிக்க முடியாத நினைவுச் சின்னங்களை உங்களுக்குப் பின்னால் விட்டுச் செல்லுங்கள். சால்மர்ஸ் உன் செயல்கள் மாய்ந்து ஒழிந்து போவதில்லை. நல்ல செயல் எதுவும் நித்தியமான வாழ்வுக்குரிய விதையாகும். பெர்னார்டு மனிதர்களுக்கு நன்மையைச் செய்வதில் மனிதர்கள் அநேகமாகத் தெய்வங்களுக்கு நிகராக ஆகின்றனர். வேறு எதிலும் இப்படி ஆக முடியாது. ஸிஸெரோ பணக்காரனாயிருந்து தர்மம் செய்யாதவன் அயோக்கியன், அவன் மூடன் என்பதையும் எளிதில் நிரூபித்துவிடலாம். ஃபீல்டிங் நாம் சேர்த்து வைக்கும் உண்மையான சொத்துகள் நம்முடைய தர்மங்கள்தாம். நாம் எவ்வளவு கொடுக்கிறோமோ அந்த அளவுக்கே ஆதாயம் பெறுகிறோம். ஸிம்ஸ் நல்ல செயல் ஒவ்வொன்றும் தர்மமாகும். உன் சகோதரனைக் கண்டால் புன்னகை செய்தல் தர்மம் உன்னுடன் வாழ்பவன் ஒருவனை நற்செயல்கள் புரியும்படி தூண்டுதல் தானம் செய்வதற்கு ஈடாகும் வழிதவறியவனை நீ வழியில் கொண்டு சேர்த்தல் தர்மம். குருடர்களுக்கு நீ செய்யும் உதவி தர்மம், சாலையில் கிடக்கும் கற்களையும், முட்களையும் நீ நீக்குதல் தர்மம். தாகமுள்ளவருக்குத் தண்ணீர் அளித்தல் தர்மம். மறுமையில் ஒரு மனிதனுக்கு உண்மையான செல்வம், இவ்வுலகில் அவன் தன் சகோதர மனிதனுக்குச் செய்யும் நன்மைதான். அவன் இறந்த பிறகு அவன் என்ன சொத்து வைத்துவிட்டுப் போயிருக்கிறான்? என்று மக்கள் கேட்பார்கள். ஆனால், அவன் என்ன நற்செயல்களைத் தான், வருமுன்னால் அனுப்பியிருக்கிறான்?' என்றே தேவதூதர்கள் கேட்பார்கள். முகம்மது நபி மற்றொருவனுக்கு நன்மை செய்வதில் ஒருவன் தனக்கும் நன்மை செய்துகொள்கிறான். முடிவான பயனில் மட்டுமன்றி அந்தச் செயலிலேயே நன்மை இருக்கின்றது. நன்மையைக் செய்கிறோம் என்ற எண்ணம் போதிய சன்மானமாகும். ஸெனீகா துயரத்தைக் கண்டு இரங்குதல் மனித கபாவம், அதை நீக்குதல். தெய்விகமாகும். ஏ மான் வாழ்ந்தவர்களைக் கொல்லுவதும், உற்ற நண்பர்களுக்குத் துரோகம் புரிவதும், நேர்மையில்லாமல் நடப்பதும், இரக்கமில்லாமல் இருப்பதும், மதாபிமானமற்ற செயலும் அறநெறியென்று சொல்லப்பட மாட்டாது. இந்த வழிகளால் ஒருவன் அதிகார பதவி அடையலாம். ஆனால் புகழ் அடைய முடியாது. நிக்கோலோ மாக்கியவெல்லி மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் ஆகுல நீர பிற. திருவள்ளுவர் அழுக்காறு, அவா. வெகுளி. இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். திருவள்ளுவர் ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும் வாய் எல்லாம் செயல். திருவள்ளுவர் இன்றுகொல். அன்றுகொல், என்றுகொல் என்னாதுபின்றையே நின்றது கூற்றம் என்றுஎண்ணி ஒருவுமின் தீயவை. ஒல்லும் வகையான் மருவுமின் மாண் பார் அறம். நாலடியார் இன்சொல் விளைநிலமா, ஈதலே வித்தாக வன்சொல் களை கட்டு, வாய்மை எருஅட்டி, அன்புநீர் பாய்ச்சி, அறக்கதிர் ஈன்றன் ஓர் பைங்கூழ் சிறுகாலைச் செய். அறநெறிச்சாரம் அறிவது அறிந்தார் அறத்தின் வழுவார் நெறிதலை நின்றுறு ஒழுகுவார். அறநெறிச்சாரம் தருமத்தை ஒருநாளும் மறக்கவேண்டாம். உலகநீதி குறிப்புகள் பகுப்பு அறம்
ஹென்ரிக் இப்சன் ஹென்ரிக் இப்சன் , மார்ச் 20, 1828 மே 23, 1906 நவீன நாடக இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படுபவர். நோர்வேயைச் சேர்ந்த இவர் நாடகாசிரியரும்,கவிஞரும் ஆவார். இவரது மேற்கோள்கள் அன்பு அன்பு என்பதைப் போல, பொய்யும் புலையும் நிறைந்த மொழி, வேறு எதுவும் கிடையாது. இலட்சியம் ஒருவன் பிறர் லட்சியத்திற்காக இறக்க முடியும். ஆனால் அவன் வாழ்வதானால் தன் லட்சியத்திற்காகவே வாழ வேண்டும். கடமை தானே செய்யக்கூடியது எதையும் பிறர் செய்ய விடலாகாது. கவிதை கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே யாவான். கண்ணுள்ளவன் கவிஞன். சொற்கள் ஆயிரம் சொற்கள் சேர்ந்தாலும், ஒரு செயலைப் போல் மனங்களில் பதிவதில்லை. தனிமை தன்னந் தனியாய் நிற்பவனைவிட அதிகச் சக்தி வாய்ந்தவன் உலகில் கிடையாது. நூலாசிரியர் நல்ல விஷயம் என்று எண்ணி நான் பாடுவதில்லை. என் மனோநிலைமை அல்லது என் வாழ்வில் ஏற்பட்ட சம்பவம், அதுவே என் பாடல்களுக்கு உற்பத்தி மூலம். மேற்கோள்கள் பகுப்பு கவிஞர்கள் பகுப்பு 1828 பிறப்புக்கள் பகுப்பு 1906 இறப்புக்கள்
ஜான் ரஸ்கின் 8 பிப்ரவரி 1819 20 சனவரி 1900 விக்டோரியா காலத்தில் இங்கிலாந்தில் வாழ்ந்த பிரபல ஆங்கில எழுத்தாளர், கலை விமர்சகர், ஓவியர், சமூக சிந்தனையார், கொடை வள்ளல் ஆவார். கட்டுரைகள், கவிதைகள், விரிவுரைகள், ஓவியங்கள், கையேடுகள் மற்றும் கடிதங்கள் ஆகியன இவரது படைப்புகளில் அடங்கும். லண்டன் கிங்ஸ் கல்லூரி மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். மேற்கோள்கள் அன்பு பெருந்தன்மையைக் காண்பதிலே, மற்றவர்களுக்கு அன்பு காட்டுவதிலே அதற்கேற்ப மன நெகிழ்வூட்டும் செயல்களைச் செய்து காட்டி மகிழ்ச்சி காண்பதே அன்பு என்ற கருணையின் அழகாகும். அன்பும், நம்பிக்கையுமே ஓர் ஆன்மாவுக்குரிய தாய்ப்பால். அன்பு முக்கியமாக வளர்வது ஒருவருக்கு ஒருவர் வழங்கிடும் ஈகை என்ற தத்துவ உணர்விலேதான். அறம் எல்லா நல்ல காரியமும் பேச்சும் பணம் பெறாமல் செய்யப்பட வேண்டும் என்பதே இறைவன் திருவுளம் என்பது தெளிவு. அறிவு ஞானத்தின் முதல் வேலை தன்னை அறிதல் அன்பின் முதல் வேலை தனக்குத் தான் போதுமானதாயிருத்தல். கூடிய மட்டும் துன்பம் விளையாமல் தடுத்துக் கொள்வதும், தடுக்கமுடியாத துன்பத்தைக் கூடிய மட்டும் பயன்படுத்திக் கொள்வதுமே அறிவு ஆகும். அறிவின் முதல் பாடம் ஐஸ்வரியத்தை வெறுப்பது அன்பின் முதல் பாடம் ஐஸ்வரியத்தை அனைவருக்குமாகச் செய்வது. தன்னலமின்மையும் நாணமுமே மெய்ஞ்ஞானத்தின் இலட்சணம். அறிவிலி இடத்தையும் காலத்தையும் குறுக்க விரும்புகிறான். அறிஞனோ அவற்றை நீட்டவே விரும்புகிறான். யோசனை செய்யாதிருக்கக்கூடிய இடம் மரண சயனம் ஒன்றே. ஆனால் யோசனை செய்வதை அந்த இடத்திற்காக ஒருபொழுதும் விட்டுவைக்கக் கூடாது. சாக்கடை நீரில் குப்பையைக் காண்பதா, அல்லது வானத்தைக் காண்பதா? உன் இஷ்டம். மெய்ஞ்ஞானம் கடவுளிடம் அடக்கத்தையும், ஜீவர்களிடம் அன்பையும், தன்னிடம் அறிவையும் உண்டாக்கும். ஒரு பிராணி வாழ்வதைக் கண்டு நீ ஆனந்திக்கும் அளவே நீ அதை அறிய முடியும். வேறு வழியில் முடியாது. ஆன்மா உழைப்பை மட்டுமே விற்கலாம். ஒருநாளும் ஆன்மாவை விற்கலாகாது. இசை அழகான உடையும் சத்தான உணவும் நல்ல இசையும் வாழ்வின் ஊற்றாகவும் அறத்தின் சாதனமாகவும் ஆக்கப் பெற்றவை. ஆனால் சாத்தான் அவற்றைக் குற்றம், அலங்கோலம், மரணம் ஆகியவற்றின் சாதனங்களாகச் செய்துவிடுகிறான். இலட்சியம் எந்த மனிதனையும் முற்றச் சோதிப்பது, இவனுக்கு எது பிரியம்? என்னும் கேள்வியே. முடிவில் பிரதானமானது நாம் எண்ணுவது எது, அறிவது எது, நம்புவது எது என்பதல்ல. நாம் செய்வது எது என்பதொன்றே பிரதானமான தாகும். இளமை வழக்கங்கள். நம்பிக்கைகள். உறுதிகளை அமைக்க வேண்டிய பருவம் இளமை, ஈகை ஈகையைச் செய்யும் போது விளையும் பயன் குறித்து நன்மை செய்யவோ, இன்பம் அளிக்கவோ இருக்கின்ற மன ஆசைதான், அதன் பொழிவு அதாவது சாறு, அதாவது சாரம் என்பது மட்டும் உறுதி. உண்மை அன்பு சில குறைகளையும், அறிவு சில பிழைகளையும் பொருட்படுத்தா. ஆனால், உண்மை எந்த அவமானத்தையும் மன்னிக்காது எந்தக் குறையையும் பொறுக்காது. உண்மை பேசல் அழகாய் எழுதுவதை ஒக்கும். பழகப் பழகவே கைகூடும். ஆசையைவிடப் பழக்கத்தையே பொறுத்ததாகும். ஏன் உண்மையாய் நடக்க வேண்டும்? இந்தக் கேள்வி மூலமே இகழ் தேடிவிட்டாய் 'மனிதனாயிருப்பதால்' என்பதே அதற்கு மறுமொழி. உதவி "உதவி செய்க" என்பதே உலகின் உயர்ந்த ஆதி விதி. அதுவே வாழ்வுக்கு மறுபெயர். மரணத்துக்கு மறுபெயர் "பிரிந்திரு" என்பதே. உழைப்பு வேலை செய்யாமல் இந்த உலகில் எந்த மனிதனும் வாழக்கூடாது என்று ஆண்டவன் விரும்புகிறான். அதே போல. ஒவ்வொரு மனிதனும் தன் வேலையில் இன்புற்றிருக்கவேண்டும் என்றும் அவன் விரும்புகிறான் என்றே எனக்குத் தோன்றுகிறது. கல்வி கல்வி என்பது தெரியாததைத் தெரியச் செய்வதன்று ஒழுக்கத்தை ஒழுக செய்வதே யாகும். மிருதுவாக மரம் இழைக்க, நேரான கோடு கிழிக்க, கோணாத சுவர் எழுப்பக் கற்றுக் கொள்ளட்டும். அப்படியானால் எந்த மனிதனும் எந்தக் காலத்திலும் கற்பிக்க இயலாத அத்தனை விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். எண்ணையும் எழுத்தையும் கற்றுக் கொடுத்து, எண்ணை மறத்துக்கும் எழுத்தைக் காமத்துக்கும் உபயோகிக்க விட்டுவிடுவது கல்வி யாகாது. ஆக்கைக்கும் ஆன்மாவுக்கும் பரிபூரணமான பயிற்சி தந்து அவற்றை அடக்கியாளக் கற்பிப்பதே கல்வி. கல்வியின் லட்சியம் நல்ல காரியங்களைச் செய்யக் கற்றுக் கொடுப்பதன்று நல்ல காரியங்களைச் செய்வதில் ஆசையும் ஆநந்தமும் உண்டாக்குவதேயாகும். கல்வியின் லட்சியம் விஷயங்களை அறிவது அன்று, வேலைக்கு அடிகோலுவது மன்று, சான்றோனாகவும் அறிஞனாகவும் செய்வதேயாகும். சரியான வழியில் சந்தோஷம் அடையச் செய்யாத கல்வி எல்லாம் வீணேயாகும். நடை எழுதவும் இசை பாடவும் உருவந்தீட்டவும் முழு வல்லமை பெற்றபொழுதே கல்வி முற்றுப் பெறும். ஜீவராசிகள் அனைத்திடமும் அன்பு செய்யத் துண்டுவதே உண்மையான கல்வி. ஆனந்தம் அளிப்பதும் அதுவே. குழந்தைகளை முதலில் 'மனிதர்' ஆக்குங்கள். பின்னால் 'மதானுஷ்டானிகள்' ஆக்காலம். குழந்தையை எத்தகைய வழ்விற்குத் தயார் செய்ய வேண்டும் என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ளாவிட்டால் ஆசிரியன் எவனும் கல்வி அபிவிருத்தி செய்ய முடியாது. பொய்க் கல்வி பெருமை பேசும் மெய்க் கல்வி தாழ்ச்சி சொல்லும். மக்கள் அறியாதவைகளைத் தெரிந்துகொள்ளும்படி கற்பிப்பது கல்வியின் பொருளாகாது. அவர்கள் நடையை மாற்றிச் செம்மையாக நடந்துகொள்ளும்படி கற்பிப்பதேயாகும். கலை உயர்ந்த கலைகள் அனைத்தும் கடவுளின் வேலையில் மனிதனுக்குரிய மகிழ்ச்சியை வெளிக் காட்டுகின்றன. கலையில் நன்மையானவையெல்லாம் ஓர் ஆன்மா மற்றொன்றுக்கு வெளியிடுவதாகும். அதன் அருமை அதை வெளியிடுபவரின் பெருமையைப் பொறுத்தது. ரஸ்கின் கவிதை உயர்ந்த லட்சியங்களுக்காக உத்தம புருஷர்கள் அனுபவிக்கும் இன்பத்தையேனும் துன்பத்தையேனும் உணர்ச்சி உண்டாக்கும் சிறந்த முறையில் வெளியிடுவதே உண்மையான கவிகள். களவு மனிதன் செய்யக்கூடிய தீய செயல்களில் எல்லாம் முற்றிலும் தீயதும், சற்றும் மன்னிக்க முடியாததும் களவு ஒன்றே. தீய செயல் குறித்துத் தெய்வத்தின் முன் நாணாமல், மனிதன் முன் நாணக் கற்றுக்கொள். அப்பொழுதே விமோசனம் ஆரம்பமாகும். சமயமும் நம்பிக்கையும் முக்கியமான விஷயங்களில் சமயத்தை இரண்டாவதாகக் கருதுவது அதைப் பொருட்படுத்துவதாகாது. எவன் கடவுளுக்கு இரண்டாவது இடத்தை அளிக்கிறானோ அவன் இடமே அளிக்காதவனாவான். செல்வம் பணமே வாழ்வின் லட்சியமானால் அது தீய வழியிலேயே தேடவும் செலவிடவும் படும். இருவிதத்திலும் வாழ்வு பாழே. கற்றோரும், அறிஞரும், வீரரும் பணத்தை வாழ்வின் லட்சியமாகக் கொள்ளுதல் என்பது ஒருநாளும் முடியாத காரியம். பணத்தைத் தீயவழியில் இழப்பது குற்றம். ஆனால் தீயவழியில் தேடுவது அதைவிடப் பெரிய குற்றம். தீயவழியில் செலவிடுவதோ எல்லாவற்றிலும் பெரிய குற்றம். ஒருவன் பணத்தைத் தன் தேவைக்கு அதிகமாகத் தேடவும் தனவந்தன் என்ற பெயரோடு சாகவும் விரும்பினால், அது அவனுக்கும் அவன் சந்ததியார்க்கும் சாபமாகவே முடியும். உள்ளத்தில் லாப ஆசை இருக்கும் வரை கடவுள் ராஜ்யத்தைப் பற்றிய உண்மையான அறிவு உண்டாக முடியாது. எந்த மனிதனும் யோக்கியமான முறையில் வாழ்வதற்கு வேண்டிய பணத்தைத் தேடமுடியுமே யன்றி ஏராளமான பணத்தைக் குவித்து விட முடியாது. அதிர்ஷ்டதேவதை அநேகர்க்கு அளவுக்கு அதிகமாக அருள்வதாகக் கூறுவர். ஆனால் அவளோ யார்க்கும் போதுமான அளவுகூட ஒருபொழுதும் அளிப்பதில்லை. பணம் வாழ்வின் லட்சியமாக ஆகிவிட்டால் அது தவறான வழியிலேதான் தேடப்படும் தவறான வழியிலே தான் செலவழிக்கப்படும். அது தேடும்பொழுதும் செலவு செய்யும்பொழுதும் தீமையே பயக்கும். தேவைக்குப் போதுமான பணமிருந்தும் செல்வன் என்ற பெயருடன் சாக விரும்பிப் பணத்தைத் தேடுபவன் பணத்தையே வாழ்வின் லட்சியமாகக் கொண்டவன் ஆவான். துறவு இந்த உலகில் மூன்று விதத் துறவுகள் அறிவையும் இன்பத்தையும் சமயத்துக்காக வெறுத்தால் சமயத்துறவு அதிகாரத்துக்காக வெறுத்தால் போர்த்துறவு பணத்துக்காக வெறுத்தால் பணத்துறவு. இக்காலத்தில் காணப்படும் துறவு மூன்றாவதே. ரஸ்கின் நரகம் நான் நரகம் உண்டென்று நம்ப மட்டும் செய்யவில்லை. நரகம் உண்டென்று அறியவும் செய்பவன். அது மட்டுமா? நரகத்துக்கு அஞ்சி அறநெறி நிற்பவர் யாவரும் நரகத்தில் கால் வைத்துவிட்டவரே என்பதையும் அறிவேன்.' நல்லதும் கெட்டதும் நன்மை தீமையினின்று பிறவாவிடினும் அது தீமையை எதிர்ப்பதிலேயே அடையக்கூடிய அபிவிருத்தி அனைத்தை யும் அடையும். நாகரிகம் நாகரிகம் உடையவர் யார்? தமக்கு உடை செய்யவும் வயிறு நிரப்பவும் உடலை அலங்கரிக்கவும் அடிமைகள் உடையார் நாகரிகம் இல்லாதவர். தம் அத்யாவசியமான தேவைகளைப் பூர்த்தி செய்யமட்டும் சேவகர் வைத்துக் கொண்டு அவர்க்கும் சுகவாழ்வு அளிப்பவரே நாகரிகம் உடையவர். நூல்கள் வாசிக்கத் தகுந்த நூல் வாங்கவும் தகுந்ததே. நூற் சுவை சுவையின் தூய்மைக்கு உறைகல் எது வெனில் தூய விஷயங்கள் சிலவற்றிலன்றி அனைத்திலும் சுவை காண்பதுவே. நற்சுவை கற்பிப்பதே நல்லொழுக்கம் அமையச் செய்வதாகும். பல தொழில் அடிக்கடி மாறுபவர்கள் மிகவும் பலவீனமான மனம் படைத்தவர்களாயும், மிகவும் கடின இதயம் பெற்றவர்களாயும் இருப்பார்கள் என்பதைக் கண்டுகொள்ளலாம். பேரறிவாளர் பார்வையிலேயே விசேடத் திறமையுடன் பாாக்கும் உயர்ந்த ஆற்றலே பேரறிவு. பொய்மை எதற்காகவும் நாம் பொய் பேசாதிருக்க வேண்டும். ஒன்று. தீமையில்லாத பொய் என்றும், மற்றொன்று. மனமாரச் சொன்னதன்று என்றும் எஎண்ண வேண்டாம். அவை அனைத்தையும் வெளியே தள்ளிவிடுங்டுங்கள். அவை சாதாரணமாயும் தற்செயலாயும் ஏற்பட்டிருருக்கலாம். ஆனால், அவை புகை படிந்த ஆபாசங்கள் நம் இதயங்களில் அவை ஒட்டியிராமல் கத்தமாக வெளியேற்றிவிட வேண்டும். அவைகளுள் எது பெரிது. எது மிகவும் மோசமானது என்று கவலையே வேண்டியதில்லை. மகிழ்ச்சி திடமான, ஆரோக்கியமுள்ள மனிதனுக்குக் கன்னங்களில் நிறம் எப்படிச் சிவந்திருக்குமோ, அது போலவே இதயத்திலும் இயற்கையாக மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எங்கெங்கு வழக்கமாகச் சோகம் படர்ந்துள்ளதோ அங்கெல்லாம் காற்று கெட்டிருக்க வேண்டும். அல்லது அளவுக்கதிகமாகக் கடுமையான வேலையிருக்க வேண்டும் அல்லது தவறான பழக்க வழக்கங்கள் இருக்க வேண்டும். மன உறுதியின்மை அடிக்கடி மாறுதலை விரும்பும் மனிதர்கள் மனவலிமையற்றவர்கள். ஆனால், அவர்கள் கடின இதயம் படைத்தவர்கள். வறுமை எவன் பாக்கியசாலி? மண் குடிசையில் இருந்து கொண்டு மாளிகையைக் கண்டுலயித்து நிற்பவனே. மாளிகையில் வாழ்ந்தும் அதைக் கண்டுலயித்து நிற்க கொடுத்து வைக்காதவன் பாக்கியசாலி அல்லன். குறிப்புகள் பகுப்பு எழுத்தாளர்கள் பகுப்பு ஆங்கிலேயர்கள் பகுப்பு 1819 பிறப்புக்கள் பகுப்பு 1900 இறப்புக்கள்
ஜான் டிரைடன் என்பவர் கி.பி.1631 1700 என்பவர் ஒரு சிறந்த ஆங்கிலக் கவிஞர். மேற்கோள்கள் அதிர்ஷ்டம் அதிர்ஷ்டதேவி அருள் செய்தால் அறிவிலிகளைத் தவிர வேறு யாரும் அவளுடன் கொஞ்சிக் குலாவமாட்டார்கள். அன்பு அன்பு உண்டு, இரக்கம் இல்லை என்று கண்கட்டுவித்தைக் காட்டமுடியுமா? ஏனென்றால், அன்பும், இரக்கமும் இரட்டைக் குழந்தைகளே. அறம் குளிர் மிகுதிதான். கந்தை உடைதான்! ஆனால் என் ஒழுக்கம் எனக்கு உஷ்ணம் தரும். இறைமறுப்பு நல்லோர் வருந்தல் தீயோர் வாழ்தல் இவையே நிரீச்வர வாதத்துக்குக் காரணம். உண்மை உண்மையின் முகம் அவ்வளவு அழகு தோற்றம், அவ்வளவு கம்பீரம் அதைப் பார்த்தால் போதும் நேசியாமல் இருக்க முடியாது. களவு ஓடைகள் சேர்ந்து நதிகள், நதிகள் சேர்ந்து கடல். அதுபோலவே தீய வழக்கங்கள் அறியா அளவாகக் கூடி வளர்ந்துவிடும். பாவம் ஓடைகள் சேர்ந்து நதிகள், நதிகள் சேர்ந்து கடல். அதுபோலவே தீய வழக்கங்கள் அறியா அளவாகக் கூடி வளர்ந்துவிடும். குறிப்புகள் பகுப்பு ஆங்கிலேயர்கள் பகுப்பு கவிஞர்கள் பகுப்பு 1631 பிறப்புகள் பகுப்பு 1700 இறப்புகள்
பிரான்சிஸ் பேக்கன் , 22 ஜனவரி 1561 9 ஏப்ரல் 1626 ஆங்கில மெய்யிலாளர். பல ஆண்டுகள் முன்னணி அரசியல் தலைவராக விளங்கிய அறிவியலாளர், வழக்கறிஞர், சட்ட நிபுணர், ஆசிரியர் மற்றும் அறிவியல் முறை முன்னோடி ஆவார். அறிவியலும் தொழில் நுட்பமும் இந்த உலகை அடியோடு மாற்றிவிடும் என்பதை உணர்ந்த முதலாவது தத்துவ ஞானி. அறிவியல் ஆராய்ச்சிகளை தீவிரமாக ஆதரித்த முதல் தத்துவஞானியும் ஆவார். மேற்கோள்கள் அதிர்ஷ்டம் அதிர்ஷ்டத்தை வார்க்கும் அச்சு அவனவன் கையிலேயே இருந்துகொண்டிருக்கிறது. அதிர்ஷ்டம் ஒரு சந்தையை ஒக்கும். அங்கே பலசமயங்களில் சிறிதுநேரம் காத்திருந்தால் விலைகள் இறங்குவதுண்டு. அரசன் அரசர்க்கு வேண்டிய நீதிகள் எல்லாம் இவைகளில் அடங்கி யுள்ளன. நீ ஒரு மனிதன் என்பதை நினைவில் வைத்துக்கொள் நீ ஆண்டவனின் பிரதிநிதி என்பதையும் நினைவில் வைத்திரு. அழகு அழகின் சிறந்த பகுதி என்பது எந்தச் சித்திரமும் வெளிப்படுத்த முடியாத ஒன்று. அறம் அறம் தன்னில் தானே அடையும் வெகுமதியை விட அதிகமான வெகுமதியை வெளியில் பெற முடியாது. அதுபோல் மறமும் தன்னில் தானே அடையும் தண்டனையைவிட அதிகமான தண்டனையை வெளியில் பெற முடியாது. அறிவாற்றல் நாம் மரிக்கும்வரை நமது அறிவாற்றலைப் பயன்படுத்திக் கொள்வதில் ஆண்டவர் வரையறை எதுவும் விதிக்கவில்லை. அறிவுடைமை அறிவுடைமையால் வரும் இன்பமும் மகிழ்ச்சியும் இயற்கையில் கிடைக்கும் மற்றவைகளைவிட மிகவும் மேலானவை. மற்ற இன்பங்களிளெல்லாம் தெவிட்டுதல் உண்டு. இதில் தெவிட்டுதலே இல்லை, மற்றவைகளில் புதுமைதான் இன்பமளித்ததே தவிர அவைகளின் தன்மை அன்று. தெவிட்டுதலால், காம விகாரமுற்றவர்கள் துறவிகளா வதையும். பேராசையுள்ள அரசர்கள் வெறுப்புற்று வருந்துவதையும் நாம் காண்கிறோம். ஆனால், அறிவுடைமையில் தெவிட்டுதலில்லை. அதைப்ப்ற்றிய திருப்தியும் ஆவலும் எளிதில் மாறிமாறி ஏற்படுகின்றன. அன்பு அன்பு ஆன்மாவின் பெருந்தன்மை. அந்த பெருந்தன்மையை நாம் என்னென்ன வேளைகளில் எத்தனை முறை எதிரொலிக்கின்றோம் என்ற அளவைப் பொறுத்து உணர்ச்சியின் பெருக்கம் தான் அன்பு. ஆலோசனை நல்ல ஆலோசனைமட்டும் சொல்பவன் ஒரு கையால் கட்டடம் கட்டுகிறான். நல்ல ஆலோசனையுடன் தன் நடத்தையையும் மாதிரியாகக் காட்டுபவன் இரு கைகளால் கட்டுகிறான் நல்ல முறையில் கண்டித்துவிட்டுத் தனது தவறான நடத்தையைக் காட்டுபவன் ஒரு கையால் கட்டியதை மறு கையால் உடைப்பவனாவான். இறைமறுப்பு தத்துவ ஞானம் சிறிதே பெற்றால் நிரீச்வரவாதியாக்கும் ஆழ்ந்ததாகப்பெற்றால் ஈச்வரவாதியாக்கும். கடவுள் தன்னை நிரூபிக்க ஒருநாளும் அற்புதங்கள் காட்டுவதில்லை. அவருடைய சாதாரண சிருஷ்டிகளே போதும். நாத்திகம், வாழ்க்கையைக்காட்டிலும் இதயத்திலேயே உள்ளது. சொற்பமான தத்துவஞானம் மனிதர்களின் மனங்களை நாத்திகத்தின்பால் செலுத்தும் ஆனால், ஆழ்ந்த ஞானம் அம் மனங்களைச் சமயத்தின்பால் செலுத்தும். பேக்கன் இயற்கை இயற்கைக்குக் கீழ்ப்படிவதன் மூலம் அவளை ஆட்சி செய்ய முடியும். இலக்கியம் குடும்பத்தின் இலக்கியத்தைக் கட்டுப்படுத்த எனக்கு அதிகாரமிருந்தால், நான் இராஜ்யத்தின் நன்மையையும் சமயத்தில் நன்மையையும் பாதுகாக்க முடியும். கட்டிடக்கலை வீடுகள் வசிப்பதற்காகக் கட்டப்படுகின்றன. பார்வைக்காக மட்டுமன்று. ஆதலால், அவை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதைவிட பயனையே அதிகம் கவனிக்க வேண்டும் இரண்டும் சேர்ந்து அமைவதானால் நல்லதுதான். கபடம் தீயோன் ஒருவன் துறந்த ஞானி போல நடிக்கும் பொழுது மேலும் மோசமாகிறான். குடிப்பழக்கம் குடிவெறியைப் போல், எல்லாப் படைகளும் சேர்ந்து மனித சங்கத்தினருள் அத்தனை பேர்களை அழித்ததில்லை அத்தனை சொத்துகளைப் பாழாக்கியதில்லை. சமூகம் நமக்குள்ளே இயங்கும் தெய்வத்தன்மை இல்லாவிட்டால், மனித சமூகத்திற்கு என்ன மதிப்பு இருக்கும்? சிக்கனம் ஒரு மனிதனுடைய சாதாரணச் செலவுகள் அவனுடைய வருவாயில் பாதியளவு மட்டும் இருக்க வேண்டும். அவன் செல்வனாக விளங்க வேண்டுமானால், மூன்றில் ஒரு பகுதியே செலவழிக்க வேண்டும். சோம்பல் வில்லை அதிகமாக வளைத்தால் ஒடிந்துவிடும் மனத்தை வளைக்காமலே விட்டிருந்தால் அதுவும் ஒடிந்துவிடும். தத்துவ ஞானம் தத்துவ ஞானத்தை மேலெழுந்தால் போலக் கற்றால், அது ஐயங்களை எழுப்பும் தீர்க்கமாக ஆராய்ந்தால் ஐயங்களை நீக்கும். நூல்கள் சில நூல்களைச் சுவைத்தால் போதும், சில நூல்கள் விழுங்கவும் வேண்டும். ஆனால், வெகு சில நூல்களே மென்று ஜீரணிக்கத் தகுந்தவை. நேரம் தக்க சமயத்தைத் தேடிக்கொள்வது நேரத்தைக் காத்துக் கொள்வதாகும். படித்தல் படித்தல் விஷயங்கள் நிறைந்த மனிதனாகச் செய்யும். சம்பாஷித்தல் எந்தச் சமயத்திலும் பேசத்தக்க மனிதனாகச் செய்யும். எழுதுதல் எதிலும் திட்டமான கருத்துக்கள் உள்ள மனிதனாகச் செய்யும். படிப்பின் நோக்கம் ஆட்சேபம் செய்தலும், ஆராயாது நம்பிக்கை கொள்ளுதலும், வாதம் செய்தலும் அல்ல. ஆய்ந்து சீர்துக்கித் தீர்மானித்தலே. படிப்பு இன்பமாகும். அணியாகும். திறமையாகும். பணம் பணம் உரத்தைப் போன்றது. அதை நன்றாகச் சிதறுவதைத் தவிர அதனால் வேறு பயனில்லை. பழிவாங்குதல் பழிவாங்குவதில் கருத்துள்ளவன் பிறர் தந்த புண்ணை ஆறவிடுவதில்லை. புகழ் புகழ் நெருப்பைப் போன்றது. அதை மூட்டிவிட்டால் பிறகு காப்பது எளிது. ஆனால், அதை மூட்டுவது கடினம். வீடுபேறு மனிதனுடைய மனம் அன்பில் இயங்குமானால், உண்மையில் சுழலுமானால், கடவுளிடம் ஓய்வு காணுமானால், அப்பொழுது சுவர்க்கத்தை இப்பூமியிலேயே கண்டு விடலாம். மதம் புனிதமான விஷயங்களை உணர்ச்சியின்றிக் கையாளும் வேஷதாரிகளே பெரிய நாஸ்திகர். அவர்களுக்கு இறுதியில் சூடு போடுதல் அவசியம். குறிப்புகள் பகுப்பு மெய்யியலாளர்கள் பகுப்பு ஆங்கிலேயர்கள் பகுப்பு 1561 பிறப்புகள் பகுப்பு 1626 இறப்புகள்
ஈகை என்பது கொடையிலிருந்து வேறுபட்டது ஆகும். ஈகை குறித்து திருவள்ளுர் பதில் உதவி செய்ய முடியாத ஏழைகளுக்குக் கொடுப்பதே ஈகையாகும். பிற கொடைகள் யாவும் பயன் எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மையை உடையது என்கிறார். இதிலிருந்து ஈகை என்பது வறியவர்களுக்கு பதில் உதவி எதிர்பாராது கொடுக்கும் சிறு உதவியே ஈகை எனக் கொள்ளலாம். இதை திருவள்ளுவர் கீழ் கண்ட குறளின் வழியாக உணர்த்துகிறார். மேற்கோள்கள் வறியார்க்குஒன்று ஈவதேஈகை மற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து திருவள்ளுவர் ஈகையைச் செய்யும் போது விளையும் பயன் குறித்து நன்மை செய்யவோ, இன்பம் அளிக்கவோ இருக்கின்ற மன ஆசைதான், அதன் பொழிவு அதாவது சாறு, அதாவது சாரம் என்பது மட்டும் உறுதி.ஜான் ரஸ்கின் அன்பு முக்கியமாக வளர்வது ஒருவருக்கு ஒருவர் வழங்கிடும் ஈகை என்ற தத்துவ உணர்விலேதான். ஜான் ரஸ்கின் பணம் தன்னிடம் ஆசையைப் பிறப்பிக்கும் முன் அதைப் பிறர்க்கு உதவ ஆரம்பித்துவிடு. ப்ரெளண் பிறர் துன்பம் கண்டு இரங்குதல் மனித குணம் அதை நீக்குதல் தெய்வ குணம். மான் 'ஈதல்' இதிலேயே மனிதன் கடவுளை ஒப்பான். ஸிஸரோ என்னிடம் உதவி பெற்றவன் அதை மறந்தால் அது அவன் குற்றம். ஆனால் நான் உதவி செய்யாவிட்டால் அது என் குற்றம். ஸெனீக்கா பெறுவது போலவே கொடுக்கவும் வேண்டும் சந்தோஷமாய், விரைவாய், தயக்கமின்றிக், கையைவிட்டுக் கிளம்பாத கொடையால் பயனில்லை. ஸெனீக்கா ஈத்துவக்கும் இன்பத்தையே பரிபூரணமாக அனுபவிக்க முடியும். மற்ற இன்பங்களையெல்லாம் அரை குறையாகவே. டூமாஸ் எத்தனையோ இன்பங்களைத் துய்க்கலாம், ஆனால் ஈத்துவக்கும் இன்பத்தைப்போன்றது எதுவுங்கிடையாது. கே நாம் கொடுக்கும்பொழுதுதான் நம் பணம் நம்முடையதாகும். மாக்கன்ஜி பரிபூரண மனிதருக்கும் இன்றியமையாத இரண்டு குணங்கள் அன்பும் கொடையுமே ஆகும். புல்வெர் உடைமை என்பது கடனே செல்வமே சிந்தையின் உரைகல் பொருள் வைத்திருப்பது பாவம் அதை வழங்கிய அளவே மன்னிப்பு. பால் ரிச்சர்ட் பிறர்க்கு வழங்கியதை மறத்தல் பெருந்தன்மை பேசும். காங்க்ரீவ் ஈதலாகிய ஆடம்பரத்தை அறிய ஏழையாயிருத்தல் வேண்டும். ஜார்ஜ் எலியட் கையில் வைத்துக்கொண்டே இன்று போய் நாளைவா என்று கூறாதே. விவிலியம் பெரிய கொடையே யாகிலும் அன்பின்றிக் கொடுத்தால் கொடையாகாமல் தேய்ந்து போகும். ஷேக்ஸ்பியர் கீழே விழுந்து கிட்ப்பவரைத் தூக்கி விடாதவன், எச்சரிக்கையாயிருக்கட்டும். அவன் வீழ்ந்து கிடக்கையில் எவரும் கை நீட்டி அவனைத் தூக்கமாட்டார். ஜோபெர்ட் கொடுப்பதில் ஆளைப்பற்றி அதிகம் விசாரிக்க வேண்டாம். அவன் தேவையைப்பற்றி விசாரிக்கவும். மனிதன் உதவிக்கு அருகதையாய் இல்லாவிட்டாலும், அது மனித சமூகத்திற்குத் செய்யும் உதவியாகும். குவார்லெல் ஈகையில்லாத செல்வன் ஒரு போக்கிரி. அவன் மூடன் என்பதையும் நிரூபிப்பது எளிதாயிருக்கும். ஃபீல்டிங் துன்பத்திற்காக இரங்குதல் மனித இயல்பு அதை நீக்குதல் தெய்வ இயல்பு. எச். மான் குறிப்புகள் பகுப்பு கருப்பொருட்கள் பகுப்பு நல்லொழுக்கங்கள்
பித்தாகரசு ஒரு அயோனியக் கிரேக்கக் கணிதவியலாளரும், பித்தாகரியனியம் என்னும் மத இயக்கம் ஒன்றின் நிறுவனரும் ஆவார். இவர் ஒரு சிறந்த கணிதவியலாளராகவும், அறிவியலாளராகவும் போற்றப்படுகிறார். மேற்கோள்கள் அறம் தீய நெறியில் செல்லாதிருக்க எப்பொழுதும் எச்சரிக்கையாயிருப்பதை விட, நல்ல விஷயங்களில் மனதை ஈடுபடுத்தி அதன் மூலம் தீய நெறியின் நினைவே எழாதிருக்கச் செய்வதே நலம். நல்லொழுக்கம் மட்டுமே புயலுக்கு அசையாமல், உறுதியாய் நிற்கும் என்பது இறைவனின் சட்டம். ஓய்வு மனிதன் வாழ்வாகிய இந்த மேடையில் கடவுளும் தேவர்களுமே வேலையில்லாமல் பார்வையாளர்களாக இருக்க உரிமையுள்ளவர்கள். கடினம் திறமையும் அவசியமும் ஒன்றுக்கொன்று பக்கத்தில் வாழ்கின்றன. சுயமரியாதை எல்லாவற்றிற்கும் மேலாக, உன்னை நீயே மதித்துக்கொள். செய்முறை நேர்த்தியாகச் செய்து முடிப்பதோடு உன் வேலை தீர்ந்தது. உன்னைப்பற்றிப் பேசுவதை மற்றவர்களுக்கு விட்டுவிடு. நாவடக்கம் வாள் தரும் புண்ணினும் நா தரும் புண்ணே கொடியது. வாள் தரும் புண் உடலை மட்டுமே பாதிக்கும், நா தரும் புண்ணோ ஆன்மாவையும் பாதித்துவிடும். குறிப்புகள் பகுப்பு மெய்யியலாளர்கள் பகுப்பு கிரேக்கர்கள் பகுப்பு கணிதவியலாளர்கள்
களவு அல்லது திருட்டு என்பது பிறர் பொருளை அபகரிக்கும் செயலாகும். மேற்கோள்கள் மனிதன் செய்யக்கூடிய தீய செயல்களில் எல்லாம் முற்றிலும் தீயதும், சற்றும் மன்னிக்க முடியாததும் களவு ஒன்றே. ஜான் ரஸ்கின் குறிப்புகள் பகுப்பு குற்றம்
இழான் இழாக்கு உரூசோ ஜான் ஜாக் ரூசோ, , சூன் 28, 1712 சூலை 2, 1778 ஒரு முக்கியமான பிரான்சிய மெய்யியலாளரும் அறிவொளிக் கோட்பாட்டாளரும் ஆவார். இவரது அரசியல் தத்துவம் பிரான்சியப் புரட்சியிலும், தாராண்மைவாதம், பழமைவாதம், சமூகவுடமைக் கோட்பாடுகளிலும் செல்வாக்குச் செலுத்தியது. மேற்கோள்கள் உடல் துன்பம், மனச்சான்றின் பச்சர்த்தாபம் இவ்விரண்டும் தவிர இதர துன்பங்கள் எல்லாம் வெறுங்கற்பனைகளே, உண்மையானவை அல்ல. தீச் செயல் நம்மைத் துன்புறுத்துவது, செய்த காலத்தில் அன்று. வெகு காலம் சென்று அது ஞாபகத்திற்கு வரும்பொழுதுதான். அதற்குக் காரணம் அதன் ஞாபகத்தை ஒருபொழுதும் அகற்ற முடியாததே. மனச்சாட்சி ஆன்மாவின் குரல், உணர்ச்சிகள் உடலின் குரல்கள் இவைகளுக்குள் அடிக்கடி முரண்பாடுகள் ஏற்படுவதில் வியப்பில்லை. குறிப்புகள் பகுப்பு மெய்யியலாளர்கள் பகுப்பு 1712 பிறப்புகள் பகுப்பு 1778 இறப்புக்கள் பகுப்பு எழுத்தாளர்கள்
பாவம் என்பது தீய செயல்களை சமயங்களின் பார்வையில் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல் ஆகும். இது பெரும்பாலும், மற்றவர்களைத் துன்புறுத்தும் செயலைக் குறிக்கிறது. யூதம், கிறிஸ்தவம் உள்ளிட்ட சில சமயங்களின் பார்வையில், பாவம் என்பது கடவுளின் கட்டளையை மீறும் செயலாகப் பார்க்கப்படுகிறது. மேற்கோள்கள் மனிதன் செய்யக்கூடிய தீய செயல்களில் எல்லாம் முற்றிலும் தீயதும், சற்றும் மன்னிக்க முடியாததும் களவு ஒன்றே. ரஸ்கின் தீய செயல் குறித்துத் தெய்வத்தின் முன் நாணாமல், மனிதன் முன் நாணக் கற்றுக்கொள். அப்பொழுதே விமோசனம் ஆரம்பமாகும். ரஸ்கின் தீயொழுக்கத்திற்குக் கட்டுப்பாடில்லை என்று நினைப்பது தவறு. தீயவனே எஜமானர்கள் அனைவரிலும் கொடிய எஜமானனுக்கு அடிமையாயிருக்கிறான். அக்கொடிய எஜமானன் யார்? அவனுடைய சொந்தத் தீய உணர்ச்சிகளே. ஆவ்பரி பாவம் செய்பவன் மனிதன் பாவத்துக்காக வருந்துபவன் ஞானி பாவத்துக்காகப் பெருமை கொள்பவன் சாத்தான். புல்லர் சாத்தானுடைய பந்துக்களில் ஒருவரை வீட்டுக்குக் கூட்டிச் சென்றால் போதும், அவன் குடும்பம் முழுவதுமே குடிபுகுந்துவிடும். ஆவ்பரி தீச் செயல் நம்மைத் துன்புறுத்துவது, செய்த காலத்தில் அன்று. வெகு காலம் சென்று அது ஞாபகத்திற்கு வரும்பொழுதுதான். அதற்குக் காரணம் அதன் ஞாபகத்தை ஒருபொழுதும் அகற்ற முடியாததே. இழான் இழாக்கு உரூசோ மனிதன் பிறர்க்குக் கேடு சூழ்வதில் தனக்கே கேடு சூழ்ந்துகொள்கிறான். ஹேஸியாட் ஓடைகள் சேர்ந்து நதிகள், நதிகள் சேர்ந்து கடல். அதுபோலவே தீய வழக்கங்கள் அறியா அளவாகக் கூடி வளர்ந்துவிடும். ட்ரைடன் அநேகர் தங்கள் காலத்தில் பெரும் பாகத்தைப் பிறரை அவலத்திற்கு உள்ளாக்குவதிலேயே கழிக்கின்றனர். லாபுரூயர் பாவம் என்பது இறைவனிடமிருந்து விலகிச் செல்வதாகும். லூதர் பாவம் முதலில் இனிமையாயிருக்கும், பிறகு, அது எளிதில் வளரும் பிறகு, மகிழ்ச்சி பெருகும். அப்படியே அது உறுதியாகி விடும் பின்னர் மனிதன் செய்ததற்கு வருந்த மாட்டான் ஒரே உறுதியுடனிருப்பான் மேற்கொண்டு வருந்தவே கூடாது என்று தீர்மானித்துவிடுவான் அதற்குப் பின்னால் அவன் அழிந்தவன் தான். லெய்டன் பாவம் ஒருகாலும் நிலையாக நின்றுகொண்டிருப்பதில்லை அதிலிருந்து நாம் பின்னால் திரும்பச் செல்லாவிட்டால் நாம் அதிலேயே சென்றுகொண்டிருப்போம். பார்ரோ பாவம் காலையில் மிகப் பிரகாசமாக விளங்கும். இரவில் அது இருளைப்போல் கருமையாக முடிவடையும். டால்மேஜ் தீய மனிதர்கள் அச்சத்தினால் பாவத்தை வெறுக்கின்றனர். நல்ல மனிதர்கள் நற்பண்பிலுள்ள ஆர்வத்தினால் பாவத்தை வெறுக்கின்றனர். ஜூவினால் பாவத்தைப்பற்றி அலட்சியமாயிருப்பவனிடம் கடவுளைப் பற்றிய பெரிய சிந்தனைகள் இருக்கமாட்டா. ஓவன் கடவுள் என்னை மன்னிப்பாரென்றும். மனிதர்கள் என் பாவத்தைத் தெரிந்துகொள்ளமாட்டார்கள் என்றும் எனக்கு உண்மையாகத் தெரிந்தால்கூட. நான் பாவம் செய்ய வெட்கப்படுவேன் ஏனெனில், அதில் அவ்வளவு இழிவு ஒட்டியுள்ளது. பிளேட்டோ குறிப்புகள் பகுப்பு தீயொழுக்கங்கள்
சாக்கிரட்டீசு கி.மு 470 469 கி.மு 399, பிப்ரவரி 15 ஏதென்சைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர் தத்துவஞானி ஆவார். இவரது மேற்கோள்கள் எனது தீதற்ற வாழ்வே நான் கூறும் தகுந்த எதிர்வாதமாகும். யான் யாது சொல்வதென்பதைப் பற்றிச் சற்று நினைத்தால், அசரீரி என்னைத் தடை செய்கின்றது. இதனால், நான் இறந்துபடுவது கடவுளுக்குச் சம்மதந்தானென்பது வெளியாகின்றது. இதுகாறும் குணத்திலும் அறிவிலும், ஒழுக்கத்திலும் சிறந்து, நண்பர் பலராலும் போற்றப்பட்டுத் திருப்தியுடனே காலத்தைக் கழித்து வந்தேன். எனது ஆயுள் இன்னும் பெருகுமாயின், யான் மூப்படைந்து, பார்வை குன்றி, காது கேளாது, அறிவு கெட்டுப்போய், எனது வாழ்க்கையையே வெறுத்துரைக்க நேரிடும். எதிரிகள் வேண்டுகிறபடி மரண தண்டனையை எனக்கு விதித்தார்களேயாயின், அதனால் எனக்கு அவமானமொன்றும் ஏற்படாது. அமரத்துவம் எல்லா மனிதர்களுடைய ஆன்மாக்களும் நித்தியமானவை. ஆனால், நேர்மையாளர்களின் ஆன்மாக்கள் நித்தியமாயும் தெய்விகமாயும் இருக்கின்றன. அடிமைமுறை அடிமைமுறை அக்கிரமமும் கொள்ளையுமாகும். அறிவு எல்லா உடைமைகளிலும் ஞானமே அழியாததாகும். அமிதம் மிகப்பெரிய வெள்ளமும் விரைவிலே வடிந்துவிடுகின்றது. மிகவும் கோரமான புயலும் திடீரென்று அமைதியாகி விடுகின்றது. அளவற்ற அன்பும் அவிந்து அடங்குவதில்முடிகின்றது. மிகவும் ஆழ்ந்த ஆசையும் அளவற்ற துவேஷமாக மாறுகின்றது. அவதூறு கோள் சொல்பவன் புறங்கூறுவோனுக்குச் செவி சாய்க்க வேண்டாம் அவன் மற்றவர்களின் அந்தரங்கங்களைக் கண்டுபிடித்து வெளியிடுவது போலவே உன்னிடத்தும் அடுத்த தடவை செய்வான். அழகு அழகு சிறிதுகாலம் நிலைத்திருக்கும் ஒரு கடுமையான ஆட்சி. உண்ணுதல் நான் உயிர் வாழ்வதற்காகச் சாப்பிடுகிறேன். மற்றவர்கள் சாப்பிடுவதற்காக உயிர் வாழ்கிறார்கள். கடவுள் தேவைகள் குறையும் அளவுக்கே தெய்வத்தன்மை அடைவோம். கருத்து காலியாயுள்ள தோல் பைகளைக் காற்று புடைக்கச் செய்யும் மூடர்களை அபிப்பிராயம் புடைக்கச் செய்யும். இறைவனை நான் அகத்தில் அழகுடன் விளங்க அருள்வாய் என்று வேண்டிக்கொள்கிறேன். சமூகச் செல்வாக்கு உலகை ஆட்டிவைக்க விரும்புவோன் முதலில் தன்னை இயக்கி வைத்துக்கொள்ள வேண்டும். சுறுசுறுப்பு மனிதன் தானாக உழைத்துப் பழகிக் காய்த்துப் போயிருக்க வேண்டும். இன்ப நுகர்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்திருக்கக் கூடாது. அவை உடலுக்கும் நன்மை செய்வதில்லை. மனத்தின் அறிவுக்கும் உதவுவதில்லை. செல்வம் ஒரு பணக்காரன தன் செல்வத்தால் செருக்குற்றிருக்கிறான். அவன் அந்தச் செல்வத்தை எப்படி உபயோகிக்கிறான் என்பது தெரியும்வரை, நாம் அவனைப் புகழக்கூடாது. மிகக் குறைந்ததைக்கொண்டு திருப்தியடையவனே முதன்மையான செல்வன். ஏனெனில், இயற்கையின் செல்வம் திருப்திதான். சொற்கள் உன்சொற்கள் எப்படி இருக்கின்றனவோ. அந்த அளவுக்கு உன் அன்பு மதிக்கப்பெறும் உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் இருக்கும். உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை இருக்கும். நேர்மை புறத் தோற்றத்தில் நாம் தோன்ற விரும்புவது போலவே உண்மையாகவும் இருந்துவிட வேண்டும். அதுவே உலகில் நாம் கெளரவமாக வாழ்வதற்கு ஏற்ற சுருக்கு வழி. அடிக்கடி உபயோகிக்கும் அநுபவத்தின் மூலமே மானிடப் பண்புகள் வலிமை பெறுகின்றன. கண்ணியமான புகழுக்கு எது வழியென்று சாக்ரடீஸிடம் கேட்ட பொழுது, அவர் கூறியதாவது 'நீ வெளியே எப்படித் தோன்ற விரும்புகிறாயோ அப்படி ஆகிவிடப் பயிற்சிசெய்.' நீதி நீதிக்குப் பொருத்தமாயுள்ளது சட்டங்களுக்கும் பொருத்தமாயிருக்க வேண்டும். பிதிரார்ச்சிதம் தங்கள் குழந்தைகளுக்கு அதிகமான செல்வத்தைத் தேடி வைத்து. அவர்களை ஒழுக்கமுள்ளவர்களாகப் பயிற்சி அளிக்காமல் விட்டுவிடுதல், தங்கள் குதிரைகளை உயரமாக வளர்த்து. அவைகளைப் பயன்படாமல் நிறுத்தி வைப்பது போலாகும். பிரார்த்தனை நம்முடைய பிரார்த்தனைகள் பொதுவான ஆசிகளை வேண்டியிருக்க வேண்டும். ஏனெனில், நமக்கு எவை நன்மையானவை என்பதைக் கடவுளே அறிவார். புகழ் புகழ், வீரச் செயல்களின் நறுமணம். மெய்யறிவு டெல்ஃபி ஆலயத்திலுள்ள அசரீரி, கிரேக்கர்கள் அனைவரிலும் நானே தலைசிறந்த அறிவாளியென்று கூறிற்று. ஏனெனில், கிரேக்கர்கள் அனைவரிலும் நான் ஒருவனே. எனக்கு ஒன்றும் தெரியாது என்பதை அறிந்திருக்கிறேன். வழிபாடு கடவுளிடம், இது 'வேண்டும்' என்று குறிப்பிடாமல் பொதுவாகப் பிரார்த்திப்பதே முறை. நமக்கு நன்மை எது என்பதைக் கடவுள் நன்கு அறிவார். வாழ்க்கை வாழ்க்கையின் இலட்சியம் இறைவனைப் போன்றிருந்தால், இறைவனைப் பின்பற்றும் ஆன்மா அவனைப் போலவே இருக்கும். குறிப்புகள் பகுப்பு மெய்யியலாளர்கள்
ராபர்ட் பிரவுனிங் 7 மே 1812 திசம்பர் 12, 1889 ஒரு ஆங்கில கவிஞரும் நாடக ஆசிரியருமாவார். அடக்கம் நெஞ்சில் போர் நிகழ்த்தும்பொழுதுதான் நாம் கொஞ்சமேனும் பெறுமதி அடைகின்றோம். இலட்சியம் தாழ்ந்த இலட்சியத்தில் ஜெயம் பெறுவதைவிட உயர்ந்த இலட்சியத்தில் தோல்வியுறுவதே சிலாக்கியம். கடவுள் கடவுளின் நீதி மெதுவாகத்தான் நகரும். ஆனால் ஒருபொழுதும் வழியில் தங்குவதில்லை. தவறு செய்தவனைச் சேர்ந்தேவிடும். ஆண்டவன் இலன் எனினும் அறநெறி நிற்போம் என்பவரே அவன் அடியராவர். உண்மை உண்மை உரைப்பதற்குச் சாத்தியமான ஒரே வழி கலைதான், அதுதான் கலையின் புகழும் நன்மையும் ஆகும். குறிப்புகள் பகுப்பு ஆங்கிலேயர்கள் பகுப்பு 1812 பிறப்புக்கள் பகுப்பு 1889 இறப்புக்கள்
ஆர். எல். இசுட்டீவன்சன் ஆர். எல். ஸ்டீவன்சன் என்றழைக்கப்படும் இராபர்ட் லூயிசு இசுட்டீவன்சன் , நவம்பர் 13, 1850 திசம்பர் 3, 1894 இசுக்காட்லாந்தைச் சேர்ந்த ஒரு ஆங்கில எழுத்தாளர். சாகசப்புனைவு, பயண இலக்கியம், கவிதைகள், கட்டுரைகள் எனப் பல்வேறு பாணிகளில் புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது மேற்கோள்கள் கடவுள் குழந்தை இயல்புடையவர் அதாவது எளிதில் மகிழ்பவர், அன்பு செய்பவர், பிறர்க்கும் மகிழ்வூட்டுபவர். இவர்க்கே கடவுள் ராஜ்யம். கடமை சாந்தம், குதூகலம் இவையே அறங்களின் முன்னணியில் நிற்பன. இவையே பரிபூர்ணமான கடமைகள் ஆவன. சிரிப்பு மகிழ்ச்சி பொங்கும் முகத்துடையவர் வந்தால் போதும், உடனே வீட்டில் புதியதோர் ஜோதி உதயமாகி விடும். செல்வம் ஒருவனுக்குத் தன்னைத் தவிர வேறு எது சொந்தம்? அவன் வேறு எதை அனுபவித்து ஆனந்தம் காண முடியும்? செல்வனாயிருக்க முதலாவதாக வேண்டியது நிறைந்த உள்ளம் இரண்டாவதாகவே பொருள். எதை உடையவன் என்பதன்று, எத்தகையவன் என்பதே வாழ்வின் பிரதான பிரச்னை. குறிப்புகள் பகுப்பு ஆங்கிலேயர்கள் பகுப்பு 1850 பிறப்புக்கள் பகுப்பு 1894 இறப்புக்கள்
250 250 சார்லஸ் ஸ்பிராகா பியர்ஸின் மதம் 1896 வழிபாடு என்பது ஒரு தெய்வத்தை நோக்கிய, சமய பக்தி செயலாகும். வழிபாட்டு முறையானது, முறைசாரா அல்லது முறையான குழு அல்லது ஒரு நியமிக்கப்பட்ட தலைவரால் எனத் தனித்தனியாக செய்யப்படலாம். மேற்கோள்கள் கடவுளை நோக்கி நிற்கும் ஆசையே பிரார்த்தனையின் தெளிவான லட்சியம் ஆகும். பிலிப்ஸ் புரூக்ஸ் கடவுளிடம், இது 'வேண்டும்' என்று குறிப்பிடாமல் பொதுவாகப் பிரார்த்திப்பதே முறை. நமக்கு நன்மை எது என்பதைக் கடவுள் நன்கு அறிவார். சாக்கிரட்டீசு மனிதனுடைய இதயம் ஊமையாய் இருந்தாலன்றி கடவுள் ஒருநாளும் செவிடாய் இருப்பதில்லை. குவார்ல்ஸ் கடவுளிடம் மக்கள் பிரார்த்திப்பது எல்லாம் இரண்டும் இரண்டும் நான்கு ஆகாமலிருக்க வேண்டும் என்பதே. ருஷ்யப் பழமொழி நாம் கடவுளிடம் எதை வேண்டுகிறோமோ அதையே கடவுள் நம்மிடம் வேண்டுகிறார். ஜெரிமி டெய்லர் நமக்குத் தேவையான எல்லாம் கடவுளிடம் வேண்டலாம். ஆனால், வேண்டுவதற்கெல்லாம் நாம் கவனமாய் உழைத்தல் அவசியம். ஜெரிமி டெலய்ர் 'கடவுளே! தைரியம் அருளும்' என்று பிரார்த்தித்தால், துன்பத் தீயில் தள்ளுவதே அவர் அருளும் வழி. ஸெஸி என் பிரார்த்தனைகளுக்கு எல்லாம் கடவுள் அருளவில்லை என்பதற்காக அவருக்கு வந்தனம் அளிக்குமாறு வாழ்ந்துவிட்டேன். ஜீன் இன்ஜெலோ அறியாமலே எம் எண்ணங்களில் சில கடவுள் பிரார்த்தனையாக இருப்பதுண்டு. விக்டர் ஹகோ ஒவ்வொரு புனிதமான ஆசையும் கடவுள் பிரார்த்தனையே ஆகும். ஹூக்கர் சுவர்க்கம்தான் கேட்காமலே கிடைக்கும் கடவுளோ கேட்டால்தான் கிட்டுவர். லவல் கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டிய மூன்று வரங்கள் முதலாவதாக நல்ல மனச்சான்று, இரண்டவாதாக மன ஆரோக்கியம், மூன்றாவதாகத் தேக ஆரோக்கியம். ஸெனீகா பிரார்த்தித்தால் கேட்டதைப் பெறுவோம், அல்லது கேட்டிருக்க வேண்டியதைப் பெறுவோம். லெய்ட்டன் குறிப்புகள் பகுப்பு சமயம்
பிலிப்ஸ் ப்ரூக்ஸ் 13, திசம்பர் 1835 23, சனவரி 1893 ஒரு அமெரிக்க மதகுரு மற்றும் எழுத்தாளர் ஆவார். வழிபாடு கடவுளை நோக்கி நிற்கும் ஆசையே பிரார்த்தனையின் தெளிவான லட்சியம் ஆகும். பெருமை தன் வாழ்க்கை தன் சமூகத்திற்கு உரியதென்றும் தனக்கு இறைவன் அருளியவையெல்லாம் மானிட சமூகத்திற்காக அருளியவை என்றும் ஓரளவு உணராத மனிதன் எவனும் உண்மையான பெருமையை அடைந்ததில்லை. குறிப்புகள் பகுப்பு 1893 இறப்புக்கள் பகுப்பு 1835 பிறப்புக்கள் பகுப்பு மதத் தலைவர்கள்
ஜெர்மி டெய்லர் 1613 1667 என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற எழுத்தரும், சமயத் தலைவரும் ஆவார். ஆன்மா ஆன்மா ஆளவில்லையானால், அது தோழனாயிருக்க முடியாது. அது ஆளவேண்டும், அல்லது அடிமையா யிருக்கவேண்டும் அவ்வளவே. வேறெதுவாயும் இருக்க முடியாது. இரகசியம் இரகசியம் என்பது நட்புக்குரிய கற்பு. வழிபாடு நாம் கடவுளிடம் எதை வேண்டுகிறோமோ அதையே கடவுள் நம்மிடம் வேண்டுகிறார். நமக்குத் தேவையான எல்லாம் கடவுளிடம் வேண்டலாம். ஆனால், வேண்டுவதற்கெல்லாம் நாம் கவனமாய் உழைத்தல் அவசியம். பிரார்த்தனை நாம் கடவுளிடம் எதை வேண்டிக்கொண்டாலும், நாமும் அதற்காக உழைப்போம். பொறுமையின்மை பொறுமையின்மை சிறு குளிரைப் பெரிய ஜூரமாக்கிவிடும் ஜூரத்தைப் பிளேக் ஆக்கிவிடும் அச்சத்தை ஏக்கமாக்கிவிடும். கோபத்தை வெறியாக்கிவிடும் சோகத்தைப் பெருந்துக்கமாக்கிவிடும். குறிப்புகள் பகுப்பு மதத் தலைவர்கள் பகுப்பு 1613 பிறப்புகள் பகுப்பு 1667 இறப்புகள்
வீடுபேறு அல்லது மோட்சம் என்பது மனிதர் வாழ்வில் அடைய வேண்டிய இலக்குகள் நான்கில் இறுதியானது என இந்து சமயம் சொல்கிறது. அவையாவன தர்மம் அல்லது அறம், அர்த்தம் அல்லது செல்வம், காமம் அல்லது இன்பம் மற்றும் இறுதியில் வீடுபேறு என்னும் மோட்சம் விதேக முக்தி ஆகும். மேற்கோள்கள் அன்பும் அறமும் எவ்வளவோ, சுவர்க்கமும் அவ்வளவே. பார்க்கர் சுவர்க்கத்தின் ஆசை ஒருவனைச் சுவர்க்க மயமாய் ஆக்கிவிடும். வில்லியம் ஷேக்ஸ்பியர் அறம் விரும்பு அதுவே வீடு. மில்டன் மனிதனுடைய மனம் அன்பில் இயங்குமானால், உண்மையில் சுழலுமானால், கடவுளிடம் ஓய்வு காணுமானால், அப்பொழுது சுவர்க்கத்தை இப்பூமியிலேயே கண்டு விடலாம். பேக்கன் நான் சுவர்க்கத்தில் இருக்கவேண்டுமானால், முதலில் சுவர்க்கம் என்னிடம் காணப்பட வேண்டும். ஸ்டான்போர்டு ஆன்மாவுக்கு விமோசனம் சுவர்க்கத்திலேயே என்று நடப்பவன் விமோசனம் பெறுவதில்லை. ஆனால், அன்பு நெறியில் நிற்பவனை ஆண்டவன் தானே தன் சன்னிதானத்திற்கு அழைத்துச் செல்வான். வான் டைக் சுவர்க்கத்துக்கு வெகு தூரத்தில் உள்ளது பூமி, பூமிக்கு வெகு சமீபத்தில் உள்ளது சுவர்க்கம். ஹேர் வாழ்வில் கற்க வேண்டிய கடின பாடங்களில் ஒன்றுண்டு. அதைப் பெரும்பாலோர் கற்பதில்லை. இங்கேயே நம்மைக் சூழ்ந்தே சுவர்க்கம் உளது என்பதே அந்தப் பாடம். ஜான் பரோஸ் அறநெறி பற்றிப் பேசுவதன்று, அறநெறியில் நடப்பதுவே கவர்க்கத்தில் கொண்டு சேர்க்கும். எம். ஹென்றி உயிரோடு இருக்கும்பொழுது தன் இதயத்தை சுவர்க்கத்துக்கு அனுப்பாதவன், உயிர் போனபின் சுவர்க்கத்துக்குப் போக முடியாது. பிஷப் வில்ஸன் எப்பொழுதும் நியாயம் வழங்கும் வள்ளல்கள், எப்பொழுதும் வண்மை உடைய நீதிமான்கள், இவர்கள் முன்கூட்டி அறிவியாமலே கடவுள் சன்னிதானத்துக்குப் போகலாம். பழமொழி சுவர்க்கத்தை நன்கு போற்ற வேண்டுமானால் பதினைந்து நிமிஷமாவது நரக அனுபவம் தேவை. கார்ல்டன் வாழ்க்கையில் ஒரு வெறி ஏற்பட்டால்தான் பிடிப்புடன் முன்னேறி வாழமுடியும் அதைச் சமயம் கொடுக்கிறது. அது சொல்லுகிற மோஷத்தைக் கொடுக்காவிட்டாலும் இது போதும். அந்த மோஷத்தை விட மேலானது. புதுமைப்பித்தன் மேற்கோள்கள் பகுப்பு சமயம்