text
stringlengths
57
183k
கீதமஞ்சரி: அன்பாயொரு விளிப்பு அம்மாவென வருமோ\nவல்லமை படக்கவிதைப் போட்டியில் வெகு நாட்களுக்குப் பிறகு கலந்துகொண்டேன். சில படக்காட்சிகள் பார்த்தவுடனேயே உள்ளத்தை ஊடுருவி உலுக்கிவிடும். அப்படியான ஒரு படம்தான் படக்கவிதைப்போட்டி – 213-ல் இடம்பெற்றது. புகைப்படக்கலைஞர் நித்தி ஆனந்த் அவர்கள் எடுத்துள்ள இப்படத்தை தோழி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவு செய்திருந்தார்.\nஒரு முதியவளின் தனிமை, யாரையோ எதிர்பார்த்து ஏமாற்றமும் துளி நம்பிக்கையுமாய் வாசல் அமர்ந்திருக்கும் கோலம் என பார்த்தவுடனேயே மனம் பிசைந்துவிட்டது. அக்காட்சிக்கான அத்தனைக் கவிதைகளிலும் அந்த உணர்வைக் காண முடிந்தது. பங்குபெற்ற கவிதைகளுள் என்னுடைய கவிதை சென்ற வாரத்தின் சிறப்புக்கவிதையாக வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி அவர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவருக்கும் வல்லமை குழுவினர்க்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.\nஅன்பாயொரு விளிப்பு அம்மாவென வருமோ?\nமுன்னால் வந்து முகங்காட்டிப் போகுமோ?\nகவிதை குறித்து மேகலா ராமமூர்த்தி அவர்களின் வரிகள்.\nPosted by கீதமஞ்சரி at 08:30\nLabels: கவிதை, போட்டி, வல்லமை, வாழ்க்கை\nகோமதி அரசு 27/5/19 12:45\nகவிதை படித்து முடித்ததும் விழிகளை ஈரமாக்குவது உண்மை.\nகீதமஞ்சரி 29/5/19 17:41\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம். இன்று பல முதியவர்களின் நிலை இப்படிதானே உள்ளது.\nகரந்தை ஜெயக்குமார் 27/5/19 16:20\nகீதமஞ்சரி 29/5/19 17:42\nG.M Balasubramaniam 27/5/19 19:44\nஎங்கள் ப்ளாகில் ஒரு முதியவரின் படம் போட்டு அதற்காக பல சிறுகதைகள் வந்தனகொடிது கொடிது தனிமை கொடிது என்றே தோன்றியது\nகீதமஞ்சரி 29/5/19 17:43\nசிலகாலமாக வலைப்பக்கம் அவ்வளவாக வரவில்லை. அதனால் எங்கள் ப்ளாக்கில் வந்த பதிவைக் கவனிக்கவில்லை.\nதனிமையை நாமாக தேடிக்கொண்டால் இனிக்கும். தானே அமைந்தால் துயரம்தான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.\nஞா கலையரசி 27/5/19 23:17\nநெகிழ்ச்சியான கவிதை. சிறந்த கவிஞர் எனப் பாராட்டு பெற்றமைக்கு வாழ்த்துகள் கீதா!\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அக்கா.\nThulasidharan V Thillaiakathu 29/5/19 19:48\nமனதை நெகிழ்த்திய கவிதை! ரசித்தேன்.\nநீங்கள் சிறந்தக் கவிஞர் ! படைப்பாளி என்பதில் ஐயமே இல்லை..\nகீதமஞ்சரி 31/5/19 06:00\nராமலக்ஷ்மி 31/5/19 12:09\nபடத்தைப் பார்த்ததும் ஏற்படுகிற சோக உணர்வை, தங்கள் வரிகளால் மேலும் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். சிறப்புக் கவிதையாக தேர்வானதற்கு நல்வாழ்த்துகள். புகைப்படக் கலைஞருக்கும் வல்லமை குழுவினருக்கும் நன்றி.\nகீதமஞ்சரி 3/6/19 11:29\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி. வல்லமை தளம் வாசிக்க முடிகிறது. கருத்திட இயலவில்லையே. ஒரு வாரமாகவே இந்தப் பிரச்சனை இருக்கிறது. எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை.
எனக்கு கவலையில்லை.. கவர்ச்சி புகைப்பட எதிர்ப்புக்கு ரைசா பதிலடி – மின்முரசு\nஎனக்கு கவலையில்லை.. கவர்ச்சி புகைப்பட எதிர்ப்புக்கு ரைசா பதிலடி\nபுகைப்படத்திற்கு கமெண்ட் செய்வதை விடுத்து கல்வி போன்ற ஏராளமான விஷயங்களில் அக்கறை செலுத்துங்கள் என்று நடிகை ரைசா சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.\nபிக்பாஸ் மூலம் புகழ் பெற்றவர் நடிகை ரைசா. ‘வேலை இல்லாத பட்டதாரி’, ‘பியார் பிரேமா காதல்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளார். சமீபத்தில் முகப்பொலிவு சிகிச்சை எடுக்க சென்றிருந்தார் ரைசா. அப்போது மருத்துவர் பைரவி என்பவர் தவறான சிகிச்சை அளித்ததாக கூறி முகம் வீங்கிய நிலையில் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.\nஇதையடுத்து நீண்ட நாட்கள் சமூக வலைத்தள பக்கம் வராத ரைசா கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்ளாடை அணியாமல் சட்டை பட்டன்களை திறந்துவிட்டபடி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் மிகுதியாக பகிரப்பட்டது. இதை பார்த்த ரசிகர்கள் கலாச்சாரத்துக்கு எதிரான இந்த மாதிரியான புகைப்படங்கள் சமூகத்திற்கே அழுக்கு என கண்டப்படி கமெண்ட் செய்திருந்தனர்.\nஇதனால் கோபமான ரைசா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், இந்த விஷயத்தில் நீங்கள் வெறுப்பை உமிழ்ந்தால் நீங்கள் எதிர்மறை எண்ணங்களால் கொண்டவர் என்று அர்த்தம். இதே எண்ணங்களுடன் வாழ்ந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ முடியாது. எதிர்மறை எண்ணங்கள் வாழ்க்கையில் அதே சிந்தனையோடு எடுத்து செல்லும். பொதுவாக இதுபோன்ற கமெண்ட்களை படிப்பதில்லை. நடிகை ஒருவர் பிகினி அணிவது சாதாரண விஷயம். இதற்கு கமெண்ட் செய்வதை விடுத்து கல்வி போன்ற ஏராளமான விஷயங்களில் அக்கறை செலுத்துங்கள். எனக்கு விருப்பமானதை உடுத்துவதாகவும், மற்றவர்களை பற்றி எனக்கு கவலையில்லை என ரைசா பதிலடி கொடுத்துள்ளார்.
என் மகனுக்கு சமீபத்தில் சிறு வாகன விபத்து ஏற்பட்டது. இருவரிடம் ஜோதிடம் கேட்டதற்கு ராகு பகவானுக்காக வெவ்வேறு விதமான தோஷப் பரிகாரங்களை செய்திடச் சொன்னார்கள். மருந்தியல் படித்து வரும் அவனது எதிர்காலம் சிறக்க உரிய பரிகாரம் சொல்லுங்கள். கவிதா கேசவன், பெரியாம்பட்டி.\n8/9/2017 2:41:34 PM\nரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, கும்ப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தில் தற்போது ராகு தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. ஆறாம் பாவத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரனோடு ராகு இணைந்திருப்பது சற்று பலவீனமான நிலை ஆகும். ராகு தசை முடிகின்றவரை எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம். 24 வயது வரை தனியாக வண்டி வாகனங்களை இயக்குவதோ, அநாவசியமாக நண்பர்களுடன் இணைந்து ஊர் சுற்றுவதோ கூடாது. வாகன விபத்து என்றில்லை, ஆறாம் இடத்தில் இணைந்துள்ள கிரகங்களால் அநாவசியமான பிரச்சினைகள் தேடி வரக் கூடும்.\nவீண் வம்பு, வழக்கில் சிக்கும் வாய்ப்பு உள்ளதால் உங்கள் மகனை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது நல்லது. மருந்தியல் சார்ந்த படிப்புகள் அவருடைய எதிர்காலத்திற்கு மிகவும் உதவிகரமாக அமையும். உங்கள் மகனுக்கு 24 வயது முடியும் வரை பிரதி தமிழ் மாதப் பிறப்பு நாளில் அருகிலுள்ள மாரியம்மன் ஆலயத்தில் அபிஷேக ஆராதனை செய்வதை வழக்கமாகக் கொள்ளுங்கள். ராகு பகவானுக்கு உரிய கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி தினமும் காலையில் உங்கள் பிள்ளையை பூஜையறையில் வழிபட்டு வரச் சொல்லுங்கள்.\n“அர்த்தகாயம் மஹாவீர்யம் சந்த்ராதித்யவி\nசிம்ஹிகா கர்ப்பசம்பூதம் தம் ராகும் ப்ரண\nRokini star, Rishabh Rasi, in your son's birthday born in Kumbhaknagar The sixth sin is associated with the sun, the sun, the rag, the rack is slightly
பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட நடிகர் எஸ்.வி.சேகர் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.\nபெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட விவகாரத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.\nதமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித் பெண் பத்திரிக்கையாளர் ஒருவரின் கன்னத்தில் தட்டியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்த விவகாரம் தொடர்பாகவும் அந்த பெண் பத்திரிக்கையாளர் குறித்தும் நடிகரும், பா.ஜ.கவைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் அவதூறான கருத்தை பதிவிட்டிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அந்த சர்ச்சைக்குரிய பதிவை எஸ்.வி.சேகர் நீக்கினார். இது தொடர்பாக அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.\nவழக்கு விசாரணைக்காக கைது செய்யப்படலாம் என்ற நிலையில் எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கில், முன் ஜாமின் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமின் வழங்க மறுத்துவிட்டது. அவரை போலீசார் கைது செய்யலாம் என்று உயர் நீதிமன்றம் கூறியும் அவர் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அவர் போலீஸ் பாதுகாப்புடன் வலம் வந்துகொண்டிருக்கிறார். தொடர்ந்து, உச்ச நீதிமன்றமும் அவரது முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக எஸ்.வி.சேகர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டது.\nஅதன்படி, எஸ்.வி.சேகர் இன்று காலை 10 மணிக்கு எழும்பூர் நீதிமன்றத்திற்கு வந்தார். அவரை கைது செய்யக்கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தியிருந்த நிலையில், இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். எஸ்.வி.சேகர் ஆஜராவதையொட்டி எழும்பூர் நீதிமன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
அமெரிக்காவிலிருந்து இயற்கை விவசாயத்துக்கு! – பசுமை தமிழகம்\nஅமெரிக்காவிலிருந்து இயற்கை விவசாயத்துக்கு!\n“இயற்கை வேளாண்மைக்காக அமெரிக்க வீட்டையும் வேலையையும் துறந்து விட்டோம். ரூ. 80 லட்சம் மதிப்புள்ள வீடு, இரண்டு கார் என சொகுசு வாழ்க்கையைக் கைவிட்டதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. புதிதாகச் சாதிக்கப் போகிறோம் என்ற சிந்தனையே எங்களிடம் மேலோங்கி இருந்தது” ஹேமாவும் தேவ்குமாரும் பேசும்போது எழும் ஆச்சரியத்தைச் சுலபமாக ஒதுக்கி வைக்க முடியவில்லை.\nஇன்ஜினீயரிங் படிப்பு, ஐ.டி.கம்பெனியில் வேலை, கை நிறையச் சம்பளம் – இதுதான் இன்றைய இளைய தலைமுறையினர் பலருடைய கனவு, விருப்பம், லட்சியம் எல்லாமே. அவர்களிடமிருந்து வித்தியாசப்படுகிறார்கள் ஹேமாவும் தேவ்குமாரும். அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து, அங்கேயே சொந்த வீட்டில் குடியேறியிருந்தார்கள் ஹேமாவும் தேவ்குமாரும். அவை எல்லாவற்றையும் துறந்துவிட்டுத் திருத்தணி அருகே ஐந்து ஏக்கர் நிலத்தில் இன்றைக்குக் காய்கறி விவசாயம் செய்துவருகிறார்கள் இருவரும்.\nதிருச்சி ஆர்.இ.சி.யில் (இன்றைய என்.ஐ.டி.) ஹேமாவும் தேவ்குமாரும் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படித்தபோது காதலித்து, பின்னர் திருமணம் செய்துகொண்டனர். சென்னையில் ஹேமாவுக்கும் பெங்களூரில் தேவ்குமாருக்கும், ஐ.டி. கம்பெனியில் தலா மூன்று ஆண்டுகள் வேலை. பின்னர் அமெரிக்க ஐ.டி. கம்பெனிக்கு இடம்பெயர்ந்தார்கள். அங்கே சொந்த வீடு வாங்கினார்கள். 13 ஆண்டுகள் உருண்டோடின. அபினவ் (12), அபர்ணா (10) என இரண்டு குழந்தைகள்.\nசத்தான உணவு தேடி\nகுழந்தைகளுக்குச் சத்தான உணவு கொடுப்பதற்காக இணையத்தில் தேடியபோதுதான் இயற்கை விவசாயம் குறித்த அறிமுகம் ஹேமாவுக்குக் கிடைத்தது. அமெரிக்காவில் இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களை வாங்கிப் பயன்படுத்தினர். ஒருகட்டத்தில் குழந்தைகளின் நலனுக்காக வேலையைத் துறந்துவிட்ட ஹேமா, வீட்டிலேயே தோட்டம் போடுவதற்கான பயிற்சியைப் பெற்றார்.\n“அமெரிக்காவில் மக்காச்சோளத்துக்கு அரசு மானியம் கொடுப்பதால், அதை அதிகமாக விளைவித்து, அனைத்து உணவுப் பொருட்களிலும் உட்பொருளாகச் சேர்க்கும் நிலை இருந்தது. அதனால் பல நோய்கள் உருவாவதும் தெரியவந்தது. செயற்கை உரம், பூச்சிக்கொல்லியே நோய்களுக்குக் காரணம் எனத் தெரிந்ததால், இயற்கை விவசாயம் குறித்துத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். இணையத்தின் வழியாகவும் புத்தகங்களின் வழியாகவும் இது தொடர்பாக நிறைய படித்தேன்.\nநம்மால் ஆனதைச் செய்வோம்\nஅப்போதுதான், இயற்கைப் பேரழிவுக்குப் புவி வெப்பமயமாதல்தான் காரணம் என்பதை நானும் கணவரும் உணர்ந்துகொண்டோம். அதுபற்றி வெறுமனே பேசிக்கொண்டே இருக்காமல், நம்மால் ஆனதைச் செய்ய வேண்டும் என நினைத்தோம். இந்தியாவுக்குத் திரும்பி இயற்கை விவசாயம் செய்யலாம் என முடிவெடுத்தோம்.\nஇயற்கை விவசாயத்துக்குத் தமிழ்நாடுதான் ஏற்ற இடம் என முடிவெடுத்தோம். `நல்ல சுற்றுச்சூழலில் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழப் போகிறோம்’ என்று குழந்தைகளுக்குச் சொல்லிப் புரியவைத்தோம்.\nஇருவரும் வேலையை விட்டுவிட்டதால் வருமானம் இல்லை. தேவைகளைக் குறைத்துக்கொண்டோம். அமெரிக்காவில் அதிகபட்சம் அரை மணி நேரம் மட்டுமே குழந்தைகளுடன் கணவர் இருக்க முடிந்தது. இப்போது நாங்கள் நான்கு பேரும் எப்போதும் சேர்ந்தே இருப்பதால், மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்த வாழ்க்கையில் கிடைக்கும் சந்தோஷமே அலாதிதான்” என்கிறார் ஹேமா.\nஇந்தத் தம்பதிக்கு விவசாயப் பின்புலம் சுத்தமாகக் கிடையாது. தேவ்குமாரினுடையது ஆசிரியர் குடும்பம். ஹேமாவின் தந்தை திருச்சி `பெல்’ தொழிற்சாலையில் தரக் கட்டுப்பாட்டு மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.\n“தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, ஓசூர், கோவை, சேலம், சென்னை ஆகிய இடங்களில் இயற்கை விவசாயம் செய்வோரை நேரில் சந்தித்துப் பலவற்றைக் கற்றுக்கொண்டோம். மத்தியப் பிரதேசம், உத்தராஞ்சல், ராஜஸ்தான் எனப் பல வட மாநிலங்களுக்குச் சென்று இயற்கை விவசாயம் குறித்த தகவல்களை ஓராண்டுக்குத் திரட்டினோம்.\nஇயற்கை விவசாயத்தின் அடிப்படை அறிவு கிடைத்தது. நிலம் வாங்கும் முயற்சியில் நிறைய ஏமாற்றங்கள் இருந்தன. திருத்தணியை அடுத்துள்ள பள்ளிப்பட்டு அருகே அத்திமாஞ்சேரிபேட்டை கிராமத்தில் நிலத்தை வாங்கினோம்” என்றார் தேவ்குமார்.\n“மலையடிவாரத்தில் நாங்கள் வாங்கிய ஐந்து ஏக்கர் நிலம், தரிசு பூமி. முன்பு மானாவாரி பயிர் சாகுபடி செய்யப்பட்டு, பின்னர் தரிசாக விடப்பட்டது, அதில் வேலியிட்டோம்.\nநீராதாரத்துக்காக 36 அடி ஆழத்தில் கிணறு வெட்டினோம். கடந்த டிசம்பரில் பெய்த மழையில் கிணறு நிரம்பியது. இயற்கை விவசாயத்துக்கு மண் வளம் அவசியம். நைட்ரஜன் வாயு மண்ணில் கலந்து மண் வளமாவதற்காகப் புங்கை மரம், காட்டு வாகை, ஈட்டி, அகத்தி, யானைக்குன்றிமணி, புரசு, முருங்கை, கொடுக்காய்புளி, வில்வம் உள்பட 500 மரங்களை நட்டுள்ளோம்.\nதண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் மூலம் மரங்களின் வேருக்கு நேரடியாகத் தண்ணீர் பாய்ச்சும் உத்தியைச் செயல்படுத்துகிறோம். மழை நீர் சேகரிப்புக்காகச் சிறிய குளம். உயர்த்தப்பட்ட படுக்கை அமைப்பில் பூசணிக்காய், வாழைக்காய், அகத்தி கீரை, பசலைக் கீரையை விளைவிக்கிறோம். அக்கம்பக்கத்தினரே இப்போது எங்களுடைய வாடிக்கையாளர்கள்.\nஉரத்துக்கு இலைதழை, செடிகொடிகளை குவியலாக மூடாக்காகப்போட்டு மட்கச் செய்து இயற்கை உரம் கிடைக்கச் செய்கிறோம். குறைவான தண்ணீர் மூலம் காய்கறி, மானாவாரி பயிர்களைச் சாகுபடி செய்கிறோம். அடுத்தாகப் பழ வகைகளை உற்பத்தி செய்வது இலக்கு. புவி வெப்பமயமாவதைத் தடுக்க எங்களால் முடிந்த அளவுக்கு உயிர்பன்மயத்துக்குத் தேவையானவற்றைச் செய்வதே முதன்மை நோக்கம்” என்றார் ஹேமா.\nகிணறு வெட்ட பட்டபாடு\nஹேமா – தேவ்குமார் தம்பதி தங்கள் நிலத்தில் கிணறு வெட்ட முடிவெடுத்தபோது, அக்கம்பக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அது மட்டுமில்லாமல் கிணறுக்குப் பதிலாக ஆழ்துளை கிணறு போட்டால் அதிக ஆழம் போட முடியும், தண்ணீரும் போதுமான அளவு கிடைக்கும் என்றும் யோசனை தெரிவித்தனர். ஆனால், தரைக் கிணற்றின் பயன்பாட்டை உணர்ந்த இவர்கள், கிணறு வெட்டுவதில் உறுதியாக இருந்து 45 நாள் போராட்டத்துக்குப் பிறகு 36 அடி ஆழக் கிணற்றை வெட்டி முடித்தனர்.\nஒரு நிலம் முழுவதும் நெல் அல்லது கரும்பு போன்ற பயிர்களைப் பயிரிட்டால், அது `மோனோ கல்சர்’ எனப்படுகிறது. இதனால், அயல் மகரந்தச் சேர்க்கை தடைபடுகிறது. காடுகளில் இருப்பதுபோல பலவகையான மரங்கள், செடி-கொடிகள், பல்வேறு உயிரினங்கள், மூலிகைத் தாவரங்கள் போன்றவை இருந்தால் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதுடன், உயிர்பன்மயமும் நீடிக்கும் என்கிறார் ஹேமா.\nசூரிய ஒளி மின்சாரம் பயிர்களுக்கு தண்ணீர் →\n← மா மரத்தில் போரான் சத்துக் குறைபாடு
இப்படி3நாட்கள் தொடர்ந்து செய்து குடித்து வந்தால், தொப்பை குறைவதைக் காணலாம். | Tamil National News\nHome தலைப்புச் செய்திகள் இப்படி3நாட்கள் தொடர்ந்து செய்து குடித்து வந்தால், தொப்பை குறைவதைக் காணலாம்.\nஇப்படி3நாட்கள் தொடர்ந்து செய்து குடித்து வந்தால், தொப்பை குறைவதைக் காணலாம்.\non: April 25, 2016 In: தலைப்புச் செய்திகள், மருத்துவம்No Comments\nநீங்கள் உடுத்தும் ஜீன்ஸ் எப்போதும் புதிது போன்று இருக்க வேண்டுமா?\nவாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு விழா.(Photos)
கிரிக்கெட்டில் ஓரினச்சேர்க்கை சர்ச்சை – வெளியானது கேப்ரியலின் பேச்சு !\n303 ரன்கள் இலக்கு,3விக்கெட் இழப்பு! வெற்றி பெறுமா இலங்கை\n44 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவு – முழுமையாக ஏற்ற சேவாக் !\nபரபரப்பான டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி! தென்னாப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வி
வளர்ப்பு பற்றின குறும்படம்.. சம்யுக்தா வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?? - The Subeditor Tamil\nby Mahadevan CM, Nov 30, 2020, 12:49 PM IST\nநீங்க நல்லவரா? கெட்டவரா? என்ற கேள்வியுடன் ஆரம்பித்தார். ஆனா கடைசி வரைக்கும் இது யாருக்குனே தெரியாம போச்சு. கெட்டவனுக்கு நல்லவன் கெட்டவன், நல்லவனுக்கு கெட்டவன் நல்லவன்... இதை சொல்லிட்டு புரிஞ்சுதானா வேற கேட்டாரு. இன்னிக்கு குழப்பனும்னே வந்துருக்கீங்கனு நல்லா புரியுது ஆண்டவரே.\nகால் செண்டர் டாஸ்க்ல சோம்-கேப்பி உரையாடல் நல்லாருந்ததா பாராட்டினார். ரம்யா-ரமேஷ் இருவருக்குமே பாராட்டு கிடைச்சுது. சனம்-சாம் உரையாடல் பத்தின பேச்சு வந்த போது, கேள்விக்கு பதில் சொன்னாலும் திருப்தி இல்லைனு சனம் சொன்னாங்க. "கலீஜ்" என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லி, அது போன்ற வார்த்தைகள் வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.\nதனிப்பட்ட உரையாடலை எடுத்து பொதுவுல போட்டு உடைச்சு பிரச்சினை பண்றதை சனம் வழக்கமாவே வச்சுருக்காங்க. "முட்டாள் மாதிரி பேசாதே" னு நாம பேச்சு வாக்குல சொல்லுவோம். அதை எடுத்துட்டு போய் "அவன் என்னை முட்டாள்னு சொல்லிட்டான்" னு பொதுவுல குற்றம் சொல்ல முடியும். முட்டாள் என்று ஒருவரை திட்டுவதும் தவறு தான். ஆனா நாம பேசும் போது அப்படியான அர்த்தத்தில் சொல்லிருக்க மாட்டோம். பேச்சு வாக்குல சொல்ற வார்த்தைகளை எடுத்து சண்டை போட ஆரம்பிச்சா, அதுக்கு முடிவே இல்லை.\nஇதுல இன்னொரு முக்கியமான விஷயம் சனம், சம்யுக்தா ரெண்டு பேருக்குமே மொழிப் பிரச்சினை இருக்கு. சொல்லப்பட்ட பல வார்த்தைகளுக்கான அர்த்தத்தை பின்னாடி தான் கேட்டு தெரிஞ்சுக்கறாங்க சனம். அந்த வார்த்தைக்கான அர்த்தம் தனியா சொல்லும்போது , அது வேற மாதிரி இருக்கு. உடனே என்னை பார்த்து அப்படி சொல்லிட்டாங்கனு பிரச்சினை வந்துருது. தறுதலை வார்த்தையும் அப்படித்தான் வந்தது. அடிமைகள் டாஸ்க்ல இதே பிரச்சினை வந்தது.\nவேற ஒரு இடத்துல, வேற ஒரு காண்டக்ஸ்ட்ல சொல்லப்பட்ட ஒரு வார்த்தை, தனியா அர்த்தம் எடுத்து பார்க்கக் கூடாது. இங்க சனம் பார்க்கவேண்டியது, அந்த வார்த்தையை பயன்படுத்தினவங்க உள்நோக்கத்தோட பயன்படுத்தினாங்களானு பார்க்கனும். அதை இங்க யாருமே பார்க்கறதில்லை. போன் பேசும் போது ரியோ சொன்னதும் அந்த மாதிரி தான். அவரோட நோக்கம் சனம்-அனிதாவோட ப்ரெண்ட்ஷிப்பை பாராட்டுவது தான். ஆனா அதை புரிஞ்சுக்காம "நீ எப்படி அப்படி சொல்லலாம்னு" சண்டைக்கு போறதை தான் சனம் இங்க தொடர்ந்து செய்யறாங்க. இதை யாராவது எடுத்து சொன்னா பரவால்ல. மத்தபடி அப்படியான வார்த்தைகளை எடுத்து சண்டை போட்டு மைலேஜ் ஏத்திக்கறது தான் ஸ்ட்ராட்டஜினா, அதுக்கு நாம எதுவும் சொல்ல முடியாது.\n"வளர்ப்பு" பத்தி சம்யுக்தா சொன்னது விவாவதத்துக்கு வந்தது. அதுக்கு முன்னாடி சம்யுக்தாவை பத்தி பேசும் போது அவரோட தாய்மையை இழிவு படுத்தி பேசினதா ஆரி மேல ஒரு குற்றச்சாட்டு வச்சுருந்தாங்க. அதுக்கு விளக்கம் கொடுக்கபட்டது. ஆரி பேசின அந்த க்ளிப் மட்டும் ஒளிபரபப்பட்டது. ஆனா அதுக்கு முன்னாடியே "ஆரி அப்படி எதுவும் பேசலைனு"கமல் சார் தன்னோட தீர்ப்பை சொல்லிட்டாரு. ,அந்த காட்சி ஒளிபரப்பாவதற்கு முன்னாடி அவர் சொன்ன ஒரு வாக்கியத்தை இங்க கோடிட்டு காட்ட விரும்புகிறேன். " இன்னொரு உயிரை காப்பாற்றும் பொறுப்பும், உணர்வும், அனுபவமும் உள்ள உங்களுக்கு ஏன் இந்த அளவு மெச்சூரிட்டி இல்லை, என்பது தான்". இது கமல் சார் சொன்ன வார்த்தைகள். இதுக்கும் யாராவது பொழிப்புரை சொன்னால் நன்று.\nசம்யுக்தாவோட மெச்சூரிட்டி பத்தி தான் சொல்ல வந்தேன் என்பது ஆரியோட வாதம்.3வாரத்துக்கு முன்னாடி நடந்த மிகப்பெரிய வாக்குவாதத்துல, கோபத்துல சொல்லப்பட்ட ஒரு வார்த்தையை எடுத்து, அதுக்கு ஒரு அர்த்தம் கொடுத்து, விளக்கி சொல்ல இப்படி ஒரு உதாரணத்தை பயன்படுத்திருக்காரு ஆரி. ஆக்சுவலா இதை உதாரணம்னு சொல்ல முடியுமானு தெரியலை.\nரெண்டு பேரை நீங்க ஒப்பீடு செய்யும் போது ஒருத்தரை தாழ்த்தியும், ஒருவரை உயர்த்தியும் தான் சொல்ல முடியும். ஆனா இங்க இருவரையும் உயர்த்தி சொன்னதா சொல்றாரு ஆரி. உயர்த்தி சொல்வதற்கு எதற்கு ஒப்பீடு என்பது தான் இங்க கேள்வி. இலக்கணம் தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கனும்.\nஆரி பேசினதை ஏன் டிவில ஒளிபரப்பலைங்கறது முக்கியமான கேள்வி. ஆரி பேசின அன்னிக்கே சாம் இதை குறிப்பிட்டு பேசி அழறாங்க. ஆனா சாம் -அர்ச்சனா கான்வோ மட்டும் தான் அன்சீன்ல காமிக்கறாங்க. அடுத்த நாள் ஒளிபரப்பின் போது, முந்தின நாள் நடந்த விஷயங்களை க்ளிப்பிங்ஸா போடுவாங்க. அப்படித்தான் ஆரி பேசினது காட்டப்பட்டது. சாம் இதை ஒரு குற்றச்சாட்டா வச்சதுக்கு அப்புறமும் எடிட்டிங்கல, ஆரி பேசினது மட்டும் கட் ஆகிருக்கு.\nஎந்த ஒரு விஷயமும் நடக்கும் போது பார்த்தால் அதோட இம்பாக்ட் வேற இங்க அன்சீன்ஸ் பார்க்காதவங்க தான் அதிகம். அப்படி இருக்கும் போது ஆரி-சாம் இருவரும் பரஸ்பரம் வைத்த குற்றச்சாட்டுக்கு, சாம் பக்கம் எந்த ஆதாரமும் இல்லாம போய்டுது. சாம் சொன்னதை யாரும் பெருசா எடுத்துக்கவே இல்லை. இந்த சீசன்ல இந்த மாதிரி நிறைய முக்கியமான விஷயங்கள் காட்டப்படுவதே இல்லை. "You are unfit to the house" அப்படினு நிஷாவை பார்த்து ஆரி சொன்னதும் டிவில வரலை. ஆனா அதுக்கப்புறம் நிஷா மத்தவங்க கிட்ட பேசி வருத்தப்படறது மட்டும் காட்டப்படுது.\nநிஷாவை திட்டினது காட்டப்பட்டுருந்தா அது ஆரி மேல கோபமாகவும், நிஷா மேல பரிதாப உணர்ச்சியும் ஆடியன்ஸ்க்கு வந்துருக்கும். இது போன்ற விஷயங்களும் ஆட்டத்தை மாற்றவல்லது. இந்த சீசன்ல விளையாடற எல்லாருக்கும் அபிமானிகள் இருப்பாங்க. அதே மாதிரி வெறுப்பாளர்ளும் இருப்பாங்க. ஆரியோட வெறுப்பாளார்கள் நிஷாவுக்கு ஓட்டு போடுவதும், சம்யுக்தா, பாலா வெறுப்பாளர்கள் ஆரிக்கு ஒட்டு போடுவதும் தான் வோட்டிங்ல நடக்கும். அப்படியான ஓட்டுகள் தான் ஆட்டத்தை மாற்றும். சில சம்பவங்கள் மட்டும் மறைக்கப்படும் போது இந்த சமநிலை பாதிக்கப்படுகிறது என்பது தான் என்னுடைய குற்றச்சாட்டு.\nஅதுவும் இந்த சீசன்ல ஒத்த வார்த்தைக்கு பல மணி நேர சண்டை போடும் போது, நேரடியான ஒரு ஸ்டேட்மெண்ட் காட்டப்படாம போனது தவறு.\nஇதற்கு சரியான உதாரணம் ஒன்று காட்ட வேண்டுமென்றால் பாலா-சனம்-தறுதலை விவகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.\nசம்பவத்திற்கு முன் தினம் இரவு பாலாவும், சனமும் பேசிக் கொள்கிறார்கள்.\nபாலாவின் பின்புறத்தில் செல்லமாக உதைக்கிறார் சனம்.\nமறுநாள காலை டாஸ்க் நடக்கும் போது அவர்களுக்கு இடையேயான உரையாடல்.\nஅதற்கு பிறகு தறுதலை என்கிற வார்த்தைக்கு அர்த்தம் கேட்கும் சனம்.\nஅதன் பிறகு தான் சண்டை நடக்கிறது.\nஇத்தனைக்கு பிறகு சண்டை நடக்கும் போது நம்மால் சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது. பாலாவின், வாதம், சனமின் வாதம் இரண்டுக்குமே சாட்சியாக நாம் பார்த்த காட்சிகள் இருக்கிறது. நான் எப்போதும் சொல்வதைப் போல் ஒரு பிரச்சினை நடக்கிறது என்றால், அதற்கு முன்னால் நடந்த சம்பவங்கள், அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் இரண்டையுமே வைத்து தான் ஸ்டாண்ட் எடுக்க வேண்டும்.\nசனம் பெட்ரூமுக்குள்ள இருக்கும் போது பாலா வந்து தறுதலைனு3தடவை கத்திட்டு உள்ள வருவாரு. அந்த காட்சி கொடுத்த இம்பாக்ட் தான் சனம்க்கு கிடைத்த ஆதரவு. அதுவே அந்த காட்சி நமக்கு காட்டப்படாம, சனம் அதை விவரிக்கறா மாதிரி காட்டிருந்தா நாம இதே உணர்ச்சிகளை காட்டிருப்போமா? அது தான் நிஷாவுக்கு நடந்தது.\nஇது போன்ற சம்பவங்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றும் வல்லமை கொண்டவை. அந்த தறுதலை பிரச்சினையை ஆரி யூஸ் பண்றாரு, சனம்க்கு சிம்பதி கிடைக்குது, ஆரி, சனம் நட்பு உருவாகுது. இப்படி சங்கிலி தொடரான நிகழ்வுகள் நிறைய நடந்தது. நேத்து கமல் சார் சொன்னதும் இதான். அனிதா டாப்பிள் கார்ட் வாங்கலேன்னா ஆட்டமே மாறிருக்கும். இந்த சம்பவங்களை மக்களுக்கு காட்சிபடுத்தாத விஜய் டிவிக்கு கண்டனங்கள்.\nஇந்த ரெண்டு சம்பவத்திலும் ஆரி சம்பந்தபட்டிருப்பது தற்செயலான் விஷயம்னு என்றே நம்புவோம்.\nசோம், சனம், நிஷா மூவரும் சேவ் செய்யப்பட்டு சாம் மற்றும் ரமேஷ் மட்டும் இறுதில இருந்தாங்க. நிஷா சேவ் ஆனதுக்கு ஆனந்த கண்ணிர் விட்டாங்க அர்ச்சனா. கடைசியா சம்யுக்தா தான் எவிக்ட் ஆனது. ரொம்பவும் ஸ்ட்ராங்க பெண்ணா தன்னை காட்டிகிட்டாலும், சம்யுக்தா மனம் நெகிழ்ந்து அழுத தருணங்களும் உண்டு. அவர் பையனை நினைச்சு அழுதது தான் அதிகம். இந்த வீட்டுக்குள்ள நடந்த பிரச்சினைகளுக்காக அவர் கண்ணிர் விட்டது ரொம்பவே குறைவு. அதனால வெளியே போகும் போதும் அழாம தான் போனாங்க. உங்க எல்லாரையும் நான் மிஸ் பண்ணுவேன்னு சொன்ன போது தான் அவங்க கண்கலங்கினாங்க. பாலாஜியும் அழுதது எதிர்பார்க்காதது.\nசாம் ரொம்பவும் புத்திசாலியான பெண். வாழ்க்கையில வெற்றிகளை பார்த்தவங்க தான். அதுக்காக அவங்களுக்கு எந்த பிரச்சினையுமே கிடையாதுனு அர்த்தம் இல்லை. தன்னோட வேதனைகளை, வலிகளை, தோல்விகளை மறைச்சுட்டு பாசிட்டிவ் சைட் மட்டும் நமக்கு காட்டினாங்கனு நினைக்கிறேன். அவங்களோட தன்னம்பிக்கையும், மன உறுதியும் நன்றாகவே வெளிப்பட்டதுனு தான் சொல்லனும். இந்த வீட்ல அவர் தொடர்ச்சியா டார்கெட் செய்யபட்ட போதும் சரி, அவருடைய தகுதி கேள்விக்குள்ளாக்கப்பட்டு கேரக்டரை அசிங்கபடுத்தின போது சரி, அவங்க அதுக்காக கலங்கவே இல்லை. முக்கியமா அழவே இல்லை. பொதுவாகவே பெண்கள் அழுதே காரியம் சாதித்துக் கொள்வார்கள்னு ஒரு பிம்பம் இருக்கு. அது இந்த தலைமுறை பெண்களுக்கு பொருந்தாது. நிஷா, அனிதா, அர்ச்சனா3பேரும் தொட்டதுக்கெல்லாம் கண்ணிர் விடும் போது அந்த வீட்ல ஸ்ட்ராங்கான பெண்களா இருக்கறது சம்யுக்தா, ரம்யா, ஷிவானி, சனம் தான்.\nதன் மேல் வைக்கபட்ட குற்றச்சாட்டுகளை, தனக்கு நிகழ்த்தப்பட்ட அவமானங்களை தனக்கு சாதகமா பயன்படுத்திக்கவே இல்லை. மிக முக்கியமாக கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி அடுத்தவர்களிடம் சண்டைக்கு போகல. அதை வச்சு ஸ்கோர் செய்யனும், மைலேஜ் ஏத்தனும்னு அவங்க நினைச்சதே இல்லை.\nஆனா சம்யுக்தா மேல மேட்டிமைத்தனமா நடந்துக்கறதா குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதுக்கான ஆதாரமா வளர்ப்பு சரியில்லைனு அவங்க பேசின விஷயம் சொல்லப்பட்டது. வளர்ப்பு பத்தி அவங்க பேசினது "provoking" அடிப்படையில தான் வரும். "ஆம்பிளையா இருந்தா செய்டா" னு ஆரி பேசின போது அதுக்கு காரணம் பாலாவோட செய்கைகள் தான் provoking. இதை தான் கமல் சாரும் சொன்னாரு. ஒருத்தரை மாத்தி ஒருத்தர் ப்ரவோக் பண்ணிக்காதீங்கனு அவங்களுக்கு அட்வைஸ் கொடுத்தாரு.\nசண்டை நடக்கும் போது, கோபம் வரும் போது எதிராளி தன்னை அவமானபடுத்திய போது கோபத்தில் சொல்லும் வார்த்தைகள் தான். இங்க பாலா, ரியோ ரெண்டு பேருமே கெட்ட வார்த்தைகள் பேசறாங்க. அப்படியான ஒரு எதிர்வினையாக தான் சம்யுக்தா பேசினதையும் நான் பார்க்கிறேன். ஆரி பேசியதற்கான எதிர்வினை தான் சாம் பேசினது. அவங்க பேசின வார்த்தை தவறுங்கறதுல எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனா அது மேட்டிமைத்தனம் இல்லங்கறது தான் என்னோட வாதம்.\nஅவங்க அப்படி நடந்துக்கலைனு அந்த வீட்டுக்குள்ள இருந்தே உதாரணம் காட்ட முடியும். வேல்முருகன் கூட பேசவே இல்லைனு சொன்னாங்க. ஆனா அவரோட சேர்ந்து பேஷன் ஷோ டாஸ்க்ல பர்பார்ம் செஞ்சுருக்காங்க சம்யுக்தா. அது டாஸ்க்கா இருந்தாலும் முழு ஈடுபாட்டோட தான் பண்ணிருந்தாங்க. நிஷா கூட அவங்க விலகியே இருக்காங்கனு குற்றச்சாட்டு சொன்னதும் உண்மையில்லை. எவிக்‌ஷன் டாப்பிள் ப்ரீ டாஸ்க்ல நிஷா அழுதுட்டு இருந்த போது அவங்களை கூட்டிட்டு வந்தது சாம் தான். கமல் சார் முன்னாடி நிஷாவோட திறமையை சிலாகிச்சு பேசிட்டு தான் போனாங்க. இங்க வேல்முருகன், நிஷா உதாரணம் எதுக்குன்னா, அவங்க பேரை சொல்லித்தான் இந்த குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுது.\nஇவங்க இல்லாம ஆஜித்தோட அவங்களுக்கான உறவு. அம்மா இல்லாத குறையை சம்யுக்தாகிட்ட பார்க்கறதா ஆஜித் சொன்ன விஷயம் பொய்யா இருக்க முடியாது. ஆஜித்தோட கண்ணிரே அதுக்கு சாட்சி. அதுல கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம், அந்த உறவை எங்கேயும் அவங்க காட்சிபடுத்தலை. உங்களுக்கே தெரியும் இந்த மாதிரி விஷயங்களை விஜய் டிவி எப்படி ப்ரமோட் செய்வாங்கன்னு. ஆனா அப்படி ஒரு விஷயமே இல்லாம இயல்பா இருந்தது கூட சம்யுக்தாவுக்கு மைனஸ் ஆகிருக்கலாம்.\nஎல்லாத்துக்கும் மேல போன வாரம் இந்த வீட்ல யார் இருக்கனும்ங்கற கேள்விக்கு சனம், அனிதா, ஆரியை தவிர மீதி 10 பேரும் சம்யுக்தா பேரை தான் சொன்னாங்க. அந்தளவு வீட்ல இருக்கறவங்களோட அன்பா இருந்திருக்காங்க. மேட்டிமைதனத்தோட இருக்காங்கறது உண்மையா இருந்தா அது வீட்ல உள்ளவங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சுருக்கும். அதனால அவங்க மேல வைக்கப்படும் குற்றச்சாட்டு பொய்யானது.\nவெளியே வந்து கமல் சார் கிட்ட பேசும் போதும் பாசிட்டிவா பேசிட்டு போனாங்க. ஆனா அவங்க போகும் போது ஹவுஸ்மேட்ஸை பார்க்காம அனுப்பி வச்சுதுக்கான காரணம் என்னனு தான் தெரியல. ரம்யாவுக்கு கிடைத்த ஸ்பெஷல் பவர் மூலம் தான் சம்யுக்தா வெளியே தெரிந்தார். ஆனால் அதுவே அவருக்கு வில்லனாகி போனது. இறுதியில் அனிதாவுக்கு கிடைத்த ஒரு ஸ்பெஷல் பவர் தான் அவருடைய வெளியேற்றத்திற்கு காரணமாக அமைந்து விட்டது.\nமொத்தத்துல இந்த வாரம் கமல் சார் எபிசோட் ரொம்பவுமே ஏமாற்றமா இருந்தது. வழக்கமான அவரோட ஷார்ப் இல்லை. ஆரி விட்டுக்கொடுத்த பிரச்சினைல ரியோவோட கருத்தே கேக்கலை. காதல் கண்ணை மறைக்குதுனு பேசினவர், அன்பா, காதலானு ஆரி கேட்ட கேள்வியை பத்தி ஒரு வார்த்தை கூட கேக்கலை. என்ன பிரச்சினைனு தெரியலை. சில வார்த்தைகள் உச்சரிப்பும் ரொம்ப குழறலா இருந்தது.\nவிட்டுக்கொடுக்கும் விஷயத்துல தன்னோட கருத்தை பதிவு செய்யாத ரியோ பெரிய தப்பு செஞ்சுட்டதா தான் தோணுது. அவர் கை கூட தூக்கலை. இந்த பிரச்சினை பாலா எழுப்பினப்போ கூட, அதுக்கு சம்பந்தம் இல்லேனு சொன்னாரு ரியோ. அதே மாதிரி ரியோ கேப்டன்ஷிப் ரேட்டிங் போது சனம் பேசினது ரொம்பவே அதீதம். அன்னிக்கு நடந்த சாதாரண விஷயங்களை கூட குற்றச்சாட்டா சொல்றது தேவையே இல்லாதது. ஒரு கேப்டனா முடிவெடுத்தேன்னு ரியோ சொன்னது திமிர்ங்கறா மாதிரி சனம் சொன்ன போது வெறும் ரியாக்சன் மட்டும் கொடுத்துட்டு இருந்தார் ரியோ. கேப்டன்ங்கற அதிகாரத்தை பயன்படுத்துவது எப்படி திமிர் ஆகும். அதை அப்பவே கண்டிச்சு பேசிருக்கனும்.\nஇந்த வீட்டுக்குள்ள இருக்க ஒவ்வொருத்தரும் என்னவெல்லாமோ செய்யறாங்க. சின்ன வாய்ப்பு கிடைச்சாலும் அடுத்தவங்களை காலி செய்யனும்னு நினைக்கறாங்க. ஆனா ரியோவுக்கு வெளியே போகறதை பத்தின கவலை இல்லாததால எல்லாற்றையும் ரொம்ப ஈசியா எடுத்துக்கறாரு.\nநிகழ்ச்சி முடிஞ்சதுக்கு அப்புறம் ஆரியும், அர்ச்சனாவும் பேசிக்கறாங்க. சாம் பிரச்சினைக்கு. ஆரி எப்பவும் போல தன்னிலை விளக்கம் கொடுத்துட்டு இருந்ததா உங்களுக்கு தெரியும். ஆனா அவர் அதை செய்யலை. நாமினேஷன் நடக்கும் போது முதல் ஆளா வந்து பேசி மத்தவங்க மைண்ட் செட் பண்ணுவான்னு பாலா மேல ஒரு குற்றச்சாட்டு சொன்னாரு ஆரி. ஆக்சுவலா ஆரி தான் இப்ப மைண்ட் செட் பண்ணிட்டு இருக்காரு. அதாவது தன்னுடைய அடுத்த டார்கெட்டான ரம்யாவுக்கு எதிரான மனநிலையை மத்தவங்க மனசுல விதைக்கற வேலை. முந்தாநேத்து ரமேஷ் கிட்ட, நேத்திக்கு அர்ச்சனா கிட்ட.\nரம்யா ஸ்ட்ராங் கண்டஸ்டண்ட்னு எல்லாருமே சொல்லிருக்காங்க. அவங்க அப்படி இல்லைனு ப்ரூப் செய்யறது தான் ஆரியோட அடுத்த கட்ட பணி. இதை பத்தி அடுத்தடுத்த நாட்கள்ல விரிவா பார்ப்போம்.\nஇறுதியா இந்த வார கமல் சார் எபிசோட் ரெண்டுமே அட்டகாசம்னு சனம் சர்டிபிகேட் கொடுக்கறாங்க. எதையுமே லேட்டாவே புரிஞ்சுக்கற சனம்க்கு புரிஞ்ச விஷயம் எனக்கு புரியலைங்கற போது கஷ்டமா இருக்கு ப்ரெண்ட்ஸ்.\nநீ எதுக்கு பிக் பாஸ் வந்த.. ஷிவானியின் தாயார் ஆவேசம்..!
Sakthi Vikatan - 23 May 2017 - சர்ப்பதோஷம் நீக்கும் காளத்தீஸ்வரர்! | Kattankulathur Sri Kalatheeswarar Temple - Sakthi Vikatan - Vikatan\nகாளத்தீஸ்வரர் ஆலயம் - காட்டாங்கொளத்தூர்பா.ஜெயவேல் - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்\nபின்னர் பூமிக்கு வந்து யோகம் மேற்கொள்ளத் திருவுள்ளம் கொண்ட ஈசன், தாம் யோகம் செய்வதற்கு ஏற்ற இடத்தைப் பூமியில் தேர்வு செய்வதற்காக, தம் கழுத்தில் இருந்த நாகத்தை அனுப்பினார். நாகம் அடையாளம் காட்டிய ஐந்து இடங்களில் முதலாவது தலம் காளஹஸ்தி. இரண்டாவது தலம் காட்டாங் குளத்தூர். மற்றவை திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், கீழப்பெரும் பள்ளம் ஆகிய தலங்கள் என்கின்றன ஞானநூல்கள்.\nநாகம் அடையாளம் காட்டிய தலங்களில் ஒன்றான காட்டாங் குளத்தூரில் ஐயன் காளத்தீஸ்வரர் என்னும் திருப்பெயருடனும், அம்பிகை ஞானாம்பிகையாகவும் அருளும் ஆலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பாக, பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது. தெற்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் ஐயன் கிழக்கு நோக்கி அருள்கிறார். இங்குள்ள சிவலிங்கத் திருமேனி சுயம்பு வாகத் தோன்றியதாகவும், மகரிஷி அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இங்கு அருளும் ஈசன் சுயம்பு மூர்த்தம் என்பதாலும், அதிக சக்தி கொண்டவர் என்பதாலும், இந்தப் பெருமானை நந்திதேவர் நேராகப் பார்த்து வழிபடாமல், சுவரில் உள்ள ஒரு துவாரத்தின் வழியாகத் தரிசித்து வழிபடுகிறார். இந்த நந்திதேவர் `ஆபரண நந்தி' என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறார். நந்திதேவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், வீட்டில் ஆபரணங்கள் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nதிருவண்ணாமலை தலத்தில் அருணாசலேஸ்வரரை வழிபட்டுத் திரும்பிய ராகுவும் கேதுவும் ஓர் இரவு இங்கே தங்கி ஈசனை வழிபட்டதாக ஐதீகம். அதற்கேற்ப இந்தக் கோயிலில் ராகுவும் கேதுவும் ஒருவர் பின் ஒருவர் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். மேலும் நவகிரகங்கள் ஒரே இடத்தில் இல்லாமல் தனித்தனியாக அமைந்திருப்பது சிறப்பம்சம்.\nதனிச் சந்நிதியில் தெற்கு நோக்கி அருளும் ஸ்ரீஞானாம்பிகை சிறந்த வரப்பிரசாதியாகத் திகழ்கிறாள்.ஆலயத்தை வலம் வரும்போது, வலம்புரி விநாயகர், குரு பகவான், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மன், சண்டிகேஸ்வரர், விஷ்ணுதுர்கை ஆகியோரைத் தரிசிக்கலாம். பிரதோஷம், சஷ்டி, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி போன்ற தினங்கள் விசேஷமாகக் கொண்டாடப் படுகின்றன. சித்ரா பௌர்ணமி நாளில் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. ராகு - கேது, குரு, சனிப் பெயர்ச்சிகளின்போது சிறப்புப் பரிகாரப் பூஜைகள் நடைபெறுகின்றன.\nகாஞ்சிபுரம் மாவட்டம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கூடுவாஞ்சேரி - பொத்தேரிக்கு அடுத்துள்ளது காட்டாங்குளத்தூர். இங்குள்ள ரயில் அல்லது பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் போதும். நடந்து செல்லும் தொலைவிலேயே அமைந்துள்ளது காளத்தீஸ்வரர் ஆலயம். இங்கு, சனிக்கிழமைதோறும் நிகழும் சர்ப்பதோஷ நிவர்த்தி பூஜையில் கலந்துகொண்டு வழிபட்டால் சர்ப்பதோஷங்கள் நீங்கும். அதேபோல் தினமும் நடைபெறும் பள்ளியறை பூஜை வைபவத்தைத் தரிசிக்க, குழந்தை வரம் வாய்க்கும் என்பது நம்பிக்கை.\nகலைநயம் மிளிரும் பதினாறு கால் மண்டபம்\nஇந்த ஆலயத்தில் உள்ள பதினாறு கால் மண்டபத்தின் ஒவ்வொரு தூணிலும் பல்லவர்களுக்கே உரித்தான அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. நரசிம்மர், ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர், தில்லை காளி, காஞ்சி காமாட்சி, கருடன் மீது அமர்ந்திருக்கும் பெருமாள் ஆகிய தூண் சிற்பங்களை மிக அற்புதமாக வடித்திருக்கிறார்கள்.\nஇந்த மண்டபத்தின் இடப்புறம் கால பகவான், சூரிய பகவான், சனீஸ்வரர், பக்த ஆஞ்சநேயர் ஆகியோர் இருக்கிறார்கள். மண்டபத்தின் வலப்புறம் தேவியரோடு அருள்கிறார் சுப்ரமணியர். பொதுவாக முருகப் பெருமானின் வலப்புறம் நோக்கி இருக்கும் மயில், இந்த ஆலயத்தில் இடப்பக்கம் திரும்பி நிற்பது விசேஷ அம்சம் என்கிறார்கள்!
Tamil Boggboss Season5Akshara KIss To Varun Controversy Troll\nஅக்ஷரா கொடுத்த முத்தம்… இது மட்டும் தப்பு இல்லையா?\nTamil Biggboss Update : கயிற்றை விட்டு எழுந்து செல்லும்போது அக்ஷரா தான் சாய்ந்து தூங்கிகொண்டிருந்த வருணுக்கு முத்தம்கொடுத்துவிட்டு சென்றார்.\nDecember 22, 2021 7:01:05 pm\nTamil Biggboss Season5Update :விஜய்டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. நிகழ்ச்சி முடிய இன்னும்3வாரங்களே மீதமுள்ள நிலையில், போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வரும் படலம் தொடங்கியுள்ளது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் போட்டியாளர்களுக்குள் கடுமையான மோதலும் ஏற்பட்டுள்ள நிலையில், ஒரு சிலர் சர்ச்சைகளிலும் சிக்கி வருகினறனர்.\nஇதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நடிகர் சஞ்சீவ், அமீர் ஆகியோர் தங்களின் வாழ்வியலைப்பற்றி பேசினர். இதற்கிடையே அமீர் பாவனி பின்னால் சுற்றுவது அவர் தம்பி என அழைத்தும் அவரை காதலிக்கிறேன் என்று என்று கூறியது என அமீர் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அதிலும் கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பான எபிசோட்டில் இரவு நேரத்தில் அமீர் பாவனிக்கு முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.\nஇந்த விவகரத்தில் முதலில் முத்தம் கொடுத்த அமீரை வறுத்தெடுத்த நெட்டிசன்கள் அதற்கு அடுத்து பாவனி அமீரை தடுக்காதது ஏன் என்று கேள்வி கேட்க தொடங்கினர். மேலும் தம்பி என அழைத்தும் அமீர் தன்னிடம் நெருக்கி பழக பாவனி அனுமதிப்பது ஏன் என்று கேட்டு வருகின்றனர். மேலும் அமீர் முத்தம் கொடுத்த காட்சி குறித்து தொகுப்பாளர் கமல்ஹாசன் எதுவும் கேட்காதது ஏன் என்றும், அபிநய் விவகாரம் குறித்த அவ்வளவு பேசிய கமல் இந்த முத்த விவகாரம் குறித்து வாயை திறக்காதது ஏன் என்று கேட்டு வருகினறனர்.\nஇந்த சர்ச்சை தற்போது தீயாய் பரவி வரும் நிலையில், தற்போது அடுத்த முத்த சர்ச்சை வெடித்துள்ளது கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியான எபிசோட்டில், கேப்டன்சி டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் கயிற்றை யாரும் விடக்கூடாது என்ற நிலையில், அனைவரும் கயிற்றை பிடித்துக்கொண்டு சோபாவில் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து தூங்கிக்கொண்டிருந்தது. அப்போது கயிற்றை விட்டு எழுந்து செல்லும்போது அக்ஷரா தான் சாய்ந்து தூங்கிகொண்டிருந்த வருணுக்கு முத்தம்கொடுத்துவிட்டு சென்றார்.\nஅப்போது வருணும் இந்த முத்தத்திற்கு ரியாக்ஷன்கொடுப்பது போல சிரித்த முகத்துடன் இருந்தார். இந்த காட்சியை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அக்ஷராவை திட்டி தீர்த்து வருகின்றனார். ஆனால் ஒரு சிலர் நணபர் என்ற முறையில் அக்ஷரா முத்தம் கொடுத்திருப்பார் என்று சப்போர்ட் வாங்கினாலும், அமீர் ஏன் நட்பு ரீதியாக முத்தம் கொடுத்திருக்க கூடாது என்று கேட்டு வருகின்றனர். அமீர் முத்தம் கொடுத்தது தவறு என்றால் அதே அக்ஷரா செய்தால் சரியா என்று கேட்டு வருகின்றனர்.\nWeb Title: Tamil boggboss season5akshara kiss to varun controversy troll\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையைவிட இவங்க ரொம்ப அழகா? – காவ்யா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்குக் கொடூர தண்டனை – ஊர்மக்களின் மூடநம்பிக்கை !\nபீகார் மாநிலத்தில் பாலியல் வல்லுறவுக்கு ஆளான சிறுமி ஒருவருக்கு ஊர் பஞ்சாயத்தினர் கொடூரமான தண்டனைக் கொடுத்துள்ளது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. பீஹார் மாநிலம் கயா பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார் அந்த 14 வயது சிறுமி. இவர் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள மறைவானப் பகுதிக்கு இயற்கை உபாதைகளைக் கழிக்க சென்றுள்ளார். அப்போது அவரை கட்டாயமாக வாயைப் பொத்து தூக்கிச்சென்ற கும்பல், அவரை அருகில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் அடைத்து\nBy Karthik Kumar Wed, 28 Aug 2019\nபீகார் மாநிலத்தில் பாலியல் வல்லுறவுக்கு ஆளான சிறுமி ஒருவருக்கு ஊர் பஞ்சாயத்தினர் கொடூரமான தண்டனைக் கொடுத்துள்ளது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.\nபீஹார் மாநிலம் கயா பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார் அந்த 14 வயது சிறுமி. இவர் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள மறைவானப் பகுதிக்கு இயற்கை உபாதைகளைக் கழிக்க சென்றுள்ளார். அப்போது அவரை கட்டாயமாக வாயைப் பொத்து தூக்கிச்சென்ற கும்பல், அவரை அருகில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் அடைத்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.\nஅடுத்த நாள் காலை பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வந்த அதிகாரிகள் அங்கே சிறுமி சீரழிக்கப்பட்டு கிடந்ததைப் பார்த்துள்ளனர். அதன் பின் சிறுமியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு பஞ்சாயத்து கூடியுள்ளது. அந்த பஞ்சாயத்தில் அந்த பெண்ணை சீரழித்த வாலிபர்களை தேடி கண்டுபிடித்து தண்டனை தருவதற்குப் பதிலாக பாதிக்கப்பட்ட சிறுமியை நீ கலங்கமாகிவிட்டாய் எனக் கூறி, மொட்டை அடித்து ஊர்வலம் அழைத்துச் சென்று அசிங்கப்படுத்தியுள்ளனர்.\nஇதைப் பற்றி அந்த சிறுமியின் தாயார் போலிஸில் புகாரளிக்க போலிஸார் பலாத்காரம் செய்த இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். மேலும் மற்றவர்களை தேடும் பணியில் துரிதமாக உள்ளனர்.
#IndiaFightsCorona மதுரை மக்களை துரத்தும் கொரோனா வைரஸ்... பாதிப்பு 84-ஆக உயர்வு\nமதுரையில் முதல் முறையாக அண்ணா நகரை சேர்ந்த கட்டுமான ஒப்பந்ததாரருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவரை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் உட்பட மதுரையில் அடுத்தடுத்து பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. பின்னர் சில நாட்களாக மதுரை மாநகராட்சியில் கொரோனா தொற்றே கண்டறியப்படாத நிலை காணப்பட்டது.\nஏப்ரல் 22-ம் தேதிக்கு பின்னர் மதுரையில் கொரோனா வைரஸ் தொற்று வேகம் காட்ட தொடங்கியது. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.\nஅரசு தரப்பில், அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டு கொண்டாலும் பொதுமக்கள் அதனை கடைபிடிப்பது இல்லை. காய்கறி மார்க்கெட், இறைச்சி, மீன் கடைகளில் மக்கள் அதிகமாக கூடினர். சிலர் தங்கள் பகுதியில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்காமல், வேறு பகுதிகளுக்கு சென்றனர். பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால், கொரோனா சமூக பரவலாக மாறி விடுமோ என்ற அச்சம் எழுந்தது.\nமதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 79 பேர் சிகிச்சை பெற்றனர். இவர்களில் 40 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில்2தினங்களாக புதியதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று மதுரையில் மேலும்5பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என அரசு தெரிவித்தது.\nமதுரை புது விளாங்குடி பகுதியைச் சேர்ந்த 29 வயது பிரசவமான பெண்ணுக்கும், கீழ அனுப்பானடி பகுதியை சேர்ந்த 33 வயது பெண்ணுக்கும், கரிசல்குளம் பகுதியை சேர்ந்த 31 வயது ஆண் ஒருவருக்கும் ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து இவர்களுக்கு பரவியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 42 வயது பெண் சுகாதார பணியாளர். இவருக்கும் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனா வார்டில் பணிபுரியும் இவருக்கு, அங்கு சிகிச்சை பெறும் கொரோனா நோயாளியிடம் இருந்து நோய்த்தொற்று பரவியதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.\nமற்றொருவர் 26 வயதுடைய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த வீரர் ஆவார். இவர்களுடன் தொடர்பில் இருந்த சிலருக்கும் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84-ஆக உயர்ந்து உள்ளது. சிலருக்கு யாரிடம் இருந்து தொற்று பரவியது என்பதை உறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மதுரையில் கொரோனா சமூக பரவல் நிலையை அடைந்துவிட்டதோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.\nமதுரையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருகிறார்களா? என்பதை போலீசார் உதவியுடன் ‘ட்ரோன்’ கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வீடு, வீடாக கபசுரக் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைகளுக்கு வரும் புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது மாநகராட்சி ஆணையர் விசாகன் கூறியுள்ளார்.\nகொரோனா ஒழிப்புக்கு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். எனவே, இனி வரும் நாட்களில் அரசின் வழிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். இல்லையென்றால் வீட்டிற்குள் இன்னும் பல நாட்கள் முடங்கி கிடக்க வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுவிடும்.\nPrevious post:#IndiaFightsCorona இந்தியாவில் பாதிப்பு 35 ஆயிரத்தை கடந்தது, பலி எண்ணிக்கை 1,147 ஆக உயர்வு; மாநிலம் வாரியாக பாதிப்பு விபரம்:-\nNext post:#IndiaFightsCorona கொரோனா நோயாளி இல்லாத மாவட்டமாக மாறும் நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி…
Aval Vikatan - 10 May 2022 - வினா நூறு... கனா நூறு... விடை ஒன்று! -4-உயர் பதவிகள் உங்களுக்கும் சாத்தியமே... | job-searching-from-social-media-4 - Vikatan\nசீதாவும், குமாரும் ஒரு நிறுவனத்தில் ஒரே நேரத்தில் வேலைக்குச் சேர்ந்தவர்கள். பத்து வருட அனுபவத்துக்குப் பிறகும் குமாருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்புகளும் உயர் பதவியும் சீதாவுக்கு மறுக்கப்பட்டன, பெண் என்ற காரணத்தால்.. ‘பெண்கள் எமோஷனல் ஆனவர்கள்’, ‘குடும்ப கமிட் மென்ட் அதிகம்’ என்று அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் பல. இதுபோன்ற முன்முடிவுகளைப் புறந்தள்ளிவிட்டு உங்கள் துறையில் உச்சம் தொடுவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறார் மகேந்திரா வேர்ல்டு சிட்டி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பாரதி.\n“குடும்பம், குழந்தை, அலுவலகம் போன்ற கமிட்மென்ட்டுகளையும் சுமக்க வேண்டியதால் பெண்களுக்கு கரியரை மட்டும் இலக்காகக் கொண்டு செயல்பட முடிவதில்லை. அதனால்தான் பெண் களுக்கு உயர் பதவிகள் எளிதில் வாய்ப்ப தில்லை. ஆனாலும் இதை மிக எளிதாகக் கையாள முடியும்.\nகுடும்ப பொறுப்புகளையும், அலுவலக பொறுப்புகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்துசெய்வது அவசியம். ‘நானே செய்தால்தான் எனக்கு திருப்தி’ என்ற எண்ணம் தேவையில்லை.\nபொறுப்புகளை பகிர்ந்துகொள்வதில் குடும்பத்தாருக்கு சிக்கல் இருந்தால், உங்கள் ஊதியத்தில் பத்து சதவிகிதத்தை ஒதுக்கி, வீட்டு வேலைகள், சமையல் வேலைகள் செய்ய ஒருவரை பணி அமர்த்தி, ஸ்ட்ரெஸ் ஃப்ரீயாக இருங்கள். குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை, அவர்களின் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என நினைத்தால், ஹோம் டியூஷனுக்கு ஏற்பாடு செய்யுங்கள். கிடைக்கும் சில மணி நேரத்தை குழந்தை களுடன் மகிழ்ச்சியாகச் செலவிடுங்கள்.\n‘‘பெண்களுக்கு இது தெரியாது’, இதற்கு சரிப்பட்டு வர மாட்டார்கள்’ என்ற விமர்சனங்களைத் தவிர்க்க, வேலையில் அப்டேட் ஆக வேண்டியது அவசியம்.\nஉங்களுக்கு தலைவராக இருப்பவர் மட்டுமன்றி உயர் பதவியில் இருப்பவர் களிடமும் உங்களின் திறமைகளை வெளிப்படுத்துங்கள். சின்ன வாய்ப்பையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nகோபம், சந்தோஷம் எல்லாவற்றையும் சரியாகக் கையாளத் தெரிந்துகொள்ளுங்கள். அதே நேரம் உங்களுக்குக் கீழ் பணிபுரியும் ஓர் ஆண், ஒரு பணியை முழுமையாகச் செய்ய வில்லை என்றால், அதற்காக கோபத்தை வெளிப்படுத்துவதில் தவறில்லை, உங்களின் கோபம், உங்கள் துறையை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும்.\nஅலுவலகத்தில் அழுவது உங்களை பலவீன மானவராகக் காட்டும். ஆளுக்கோர் அறிவுரை சொல்வார்கள். அதைத் தவிர்க்கவும்.\nஅலுவலகத்தில் மற்றவர்களைப் பார்த்து எதையும் ஃபாலோ செய்யாதீர்கள். நீங்களே சுயமாக முடிவெடுங்கள்.\nபெண் என்கிற காரணத்துக்காக பிறர் இரக்கப்பட வேண்டும் என்று நினைக்காதீர்கள். ‘ஆணுக்கிங்கே இளைப்பில்லை காண்’ என்பதை எப்போதும் துணிந்து வெளிப்படுத்திக் கொண்டே இருங்கள்.\nகுடும்பம், குழந்தை, அலுவலகம் என்று 360 டிகிரியில் சுழலும் பெண்கள் எந்த ஒரு முடிவை எடுக்கும் முன்பும், பல கோணங்களில் ஆராய்வதால் முடிவு எடுக்க தாமதம் ஆகலாம். ஆனால் அந்த முடிவு தவறாகாது என்பதை உங்கள் ஆட்டிட்யூட் மூலம் வெளிப்படுத்துங்கள்.\nஉயர் பதவியில் இருந்தாலும், சில நேரங்களில் உங்கள் பதவிக்குக் கீழ் இருப்பவர்களின் ஐடியாக்கள், கருத்து களைக் கேட்டுக் கொள்ளலாம். ஆனால் இறுதியாகத் தீர்மானிப்பது நீங்களாகத்தான் இருக்க வேண்டும்.\nஉங்களுக்கு எவ்வளவு நெருங்கிய நண்பர் களாக இருந்தாலும், ஆவணங்களில் கையெ ழுத்து போடும் முன்பும், அலுவலக அறிவிப்பு களைத் தெரிவிக்கும் முன்பும் கவனமாக இருங்கள். வாய்மொழியாக இல்லாமல் எல்லா வற்றையும் மெயில் மூலம் பதிவிடுவது நல்லது.\nபண்பில் ஆட்டிட்யூட் காட்ட வேண்டாம். தோழமை உணர்வுடன் தட்டிக்கொடுத்து எல்லோரிடமும் வேலை வாங்குங்கள்.\n* நெருங்கிய நட்பு வட்டத்திடம்கூட, உங்களின் பர்சனல் விஷயங்களை அலுவலகத்தில் பகிராதீர்கள்.\n* மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவது,தேவையில்லாத விமர்சனங் களைப் பகிர்வது போன்றவை வேண்டாம்.\n* யாரிடமும் எமோஷனலாக கனெக்ட் ஆகாதீர்கள்.\n* ஊதியப் பாகுபாடு நிகழும்போது, துணிந்து எதிர்த்துக் கேள்வி கேளுங்கள்.\n* மற்றவர்களின் நெகட்டிவ் விமர்சனங்களை மனதில் ஏற்றிக்கொள்ளாதீர்கள்.
யானைகளின் வருகை 144: அங்குசப் பணியாளன் ஆன கதை | யானைகளின் வருகை 144: அங்குசப் பணியாளன் ஆன கதை - hindutamil.in\nPublished : 16 Mar 2018 15:26 pm\nPublished : 16 Mar 2018 03:26 PM\nயானைகளின் வருகை 144: அங்குசப் பணியாளன் ஆன கதை\nரமேஷ் பேடியின் 'யானை: காடுகளின் அரசன்' என்ற இந்த நூலை மட்டும் கிட்டத்தட்ட ஏழெட்டு முறை படித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் காட்டு யானைகளை தரிசித்து அல்ல, ஸ்பரிசித்து பார்த்த தன்மை மட்டுமல்ல, அவற்றுடன் வாழ்ந்து பார்த்த அனுபவமே இதிலிருந்து கிடைக்கிறது. அவற்றிலிருந்து நமக்கு ஏற்படும் யானை அனுபவங்களை பொருத்திப் பார்க்கவும் வாய்ப்பு ஏற்படுகிறது.\nஇன்றைக்கு யானை மற்றும் வனவிலங்குகள் ஆராய்ச்சியாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள் இந்தப் புத்தகத்தைக் குறிப்பிடாமலே, இதில் உள்ள தகவல்களை ஏராளமாக எடுத்து தங்கள் நூல்களில் பயன்படுத்துவதையும் காண்கிறேன்.\nசமீபத்தில் எழுத்தாளர் சு.வேணுகோபால் எழுதி வெளி வந்திருக்கும் வலசை என்கிற நாவலிலும் சரி, அதற்கு முன்பு ராமன் சுகுமார் எழுதி வெளியிட்டிருந்த, 'என்றென்றும் யானைகள்' என்ற ஆய்வு நூலிலும் ஆகட்டும் இதன் நெடி சற்று தூக்கலாகவே காண நேரிட்டது. சு.வேணுகோபாலின் நூல் யானைகள் குறித்த புனைவு இலக்கியம். எனவே அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஆனால் ராமன் சுகுமாருடையது ஆய்வு நூல். அதில் சில நெருடல்களும் வெளிப்பட்டிருப்பதை காண்கிறேன்.\nராமன் சுகுமார் 1980களில் சத்திய மங்கலம் காடுகளின் இண்டு இடுக்குகளில் எல்லாம் சுற்றியலைந்து தரவுகள் சேகரித்து வெளியுலகுக்கு சொன்ன சூழலியாளர். யானைகளின் இயல்பு, மனிதருக்கும், யானைகளுக்கும் இடையேயுள்ள மோதல்கள். சூழலையும், யானைகளையும் காக்க வேண்டிய தேவை பற்றிய தேவையையும் போகிற போக்கில் சொல்லி செல்கிறார். விலங்கியல், தாவரவியல் பட்டம் பெற சென்னை லயோலா மற்றும் விவேகானந்தா கல்லூரியிலும் படித்த இவர், 1979ல் இயற்கை பற்றிய முனைவர் பட்ட ஆய்வாளனாக பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயன்ஸில் சேர்ந்திருக்கிறார்.\nசிறுவயதிலிருந்தே இருந்த இயற்கையின் மீதான நேசம் இவரிடம் விரிவடைந்து பெரிய பாலூட்டிகள் பற்றிய ஆய்வு செய்வதே விருப்பமாக மாறியது. அதில் இந்தியாவில் முதன்முதலாக மாதவ் காட்கில் பெரும் முயற்சி எடுத்து நவீன இயற்கையியல் படிப்பை அங்கே அறிமுகம் செய்திருந்தார். அதில் தனக்கான ஆய்வுத் தலைப்பை தேர்ந்தெடுக்க அவருடன் பலவாறாக யோசித்திருக்கிறார்.\nஅப்போது, மனிதர்கள்-யானைகள் மோதல் பற்றி ஆய்வு செய்வதில் உள்ள பிரச்சினைகளை பற்றி மாதவ் காட்கில் கூறியிருக்கிறார். அது இவருக்கு ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. காட்டை ஒட்டிய பகுதிகளில் சிறு விவசாயிகளின் விளைநிலங்களில் யானைகள் புகுந்து சூறையாடுவதையும், கோபமடைந்த விவசாயிகள் விஷமிட்டுக் கொல்வதையும், தந்தங்களுக்காக வனக் கொள்ளையர்கள் வேட்டையாடுவதையும் பற்றி அவர் விரிவாக பேசியதில், 'இது பற்றி ஆய்வு நடத்துவது புதுமையானது. அவசியமானது. நீண்டகாலத்திற்கு யானைகள் மனிதர்களால் அழிக்கப்படாமல் வாழ வேண்டுமானால் அதற்கு இந்த ஆய்வு உதவும்!' என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.\nஇந்தக் காலகட்டத்தில் AESA (ஆசிய யானைகள் சிறப்புக்குழு), IUCN ஆகியவை தமது முதல் திட்டத்தை முதுமலையில் தொடங்கியிருக்கிறது. அதன் தலைவராக இருந்த ஜே.சி.டேனியல் இந்தியாவில் யானைகள் தொடர்பான ஆய்வுக்கு நிதி பெறும் வாய்ப்பு உண்டு என மாதவ் காட்கிலுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கு WWF நிதி வழங்க முன் வந்திருக்கிறது. அதை முன்னிட்டு ராமன் சுகுமார் யானைகள் மனிதர்கள் மோதல் குறித்த முன் வரைவைத் தயார் செய்து அவர்களுக்கு அனுப்பியிருக்கிறார். அதையடுத்து AESA-ன் ஆலோசனைக்கூட்டம் பெங்களூருவில் நடந்திருக்கிறது.\nஅதற்கு முன்பாக தென்னிந்தியக் காடுகளில் யானைகள் எண்ணிக்கை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இப்படி தென்னிந்தியா முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருப்பது முதலாவது முறையாக இருக்க, அதில் சத்தியமங்கலம் காடுகளில் மட்டும் 1268 யானைகள் உள்ளதான விஷயம் பலரையும் சந்தேகிக்க வைத்திருக்கிறது.\nபலர் அதை ஏற்கவே மறுத்துள்ளனர். ஈரோடு வனப்பகுதி இத்தனை யானைகளை தாங்காது. புகழ்பெற்ற முதுமலை வனத்திலேயே வெறும் 446 யானைகளே உள்ளன. எப்படி அவ்வளவு புகழ்மிக்க வனச் சரணாலயத்திலேயே குறைவான எண்ணிக்கையில் யானைகள் இருக்கும்போது சாதாரண வனத்தில் அவ்வளவு யானைகள் இருக்க முடியும் என்பதே கேள்வியாக இருந்தது. என்றாலும் முதுமலை எவ்வளவு புகழ்பெற்றதாக இருந்தாலும் அதன் பரப்பளவு வெறும் 321 சதுர கிலோமீட்டர்களே என்பதையும், சத்தியமங்கலம் காடுகள் 2467 சதுர கிலோமீட்டர்கள் பரந்துபட்ட வனம் என்பதையும் அவர்கள் உணரவில்லை.\nசத்தியமங்கலத்தின் கிழக்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் விவசாய நிலமும் அதிகம், எனவே மனிதர்-யானைகள் மோதலும் அங்கே மிக அதிகம் என்பதால் அதுவே தன் ஆய்வுக்கு உகந்த இடம் என தேர்ந்தெடுத்திருக்கிறார். இதையெல்லாம் இவரே தன் நூலில் விரிவாக, விவரமாக குறிப்பிட்டு செல்கிறார்.\n1980 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரு பழைய ஜீப்பில் புறப்பட்ட இவரின் ஆய்வு பத்தாண்டுகள் முதுமலை தொடங்கி சத்தியமங்கலம் காடுகளுக்குள் அங்கிங்கெணாதபடி பயணிக்கிறது.\nயானைகளை பற்றி மட்டுமல்ல, மற்ற விலங்கினங்களை பற்றியும், அதை சார்ந்த வாழ்கிற மனிதர்களைப் பற்றியும் ஒரு அல்ட்ரா ஸ்கேன் ரிப்போர்ட்டை நம்மிடம் தருகிறது. (இத்தொடரின் அத்தியாயம்:21ல் சொல்லப்பட்ட 'வீரப்பனுக்கு முன்பே செவ்வி கவுண்டர் என்பவர் யானை வேட்டையாடிகளை ஊக்குவிக்கும் பின்புலமாக இருந்திருக்கிறார்!' என்ற தகவல்களுக்கு இவரது நூலைதான் மேற்கோள் காட்டியிருந்தேன்)\nராமன் சுகுமார் தன் நூலின் ஆரம்பத்திலேயே மதம் பிடித்த இளம் வயது யானையைப் பற்றி ஒரு சிறுகதை போல் இப்படி வடிக்கிறார்:\n''பிலிகிரி என்ன செய்வது என்று புரியாமல் மேலும் கீழும் அலைந்து கொண்டிருந்தது. 16 வயதேயான ஆண் யானை பிலிகிரியிடம் இத்தகைய மாற்றம் உண்டாவது ஒன்றும் புதிதில்லை. எல்லா யானைகளும் இந்த வயதில் சந்திக்கக்கூடிய மாற்றம்தான். பிலிகிரியின் உடல் முழுவதும் ஒரு வேகம். நெற்றிப் பொட்டில் விண், விண் என்று வலி. உடல் முழுவதும் ரத்தம் குபு, குபுவென பொங்கி ஓடும் உணர்வு. ஆம் பிலிகிரிக்கு முதன் முதலாக மதம் பிடிக்கத் தொடங்கியுள்ளது. 1983 ஜனவரி 19 அன்று பிலிகிரி ரங்கா மலையில் கயத்ததே வரகுடி குட்டையருகே முதன்முதலாக பிலிகிரியை இத்தகைய மதம் வடியும் நிலையில் கண்டேன். அவன் தண்ணீரில் மீண்டும், மீண்டும் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தான். துதிக்கையால் நீரை அலைந்தான். உறிஞ்சிப் பீய்சசி அடித்தான். இடவலமாக உடலை வேகமாக ஆட்டினான். குட்டையையே கலக்கிக் கொண்டிருந்தான். பின் திடீரென மூழ்கித் தன் தந்தத்தால் குட்டையின் அடியிலிருந்த சேற்றைத் தோண்டி தண்ணீருக்கு மேல் அள்ளி விசிறினான். இளமைக்கே உரிய மதம் வடிவதை அனுபவித்து பிலிகிரி திளைத்துக் கொண்டிருந்தான்'' என நீள்கிறது அந்தக் காட்சி.\nஇப்படியாக கதை போல் நீளும் இவரது ஆய்வில் யானைகள் குறித்த வரலாற்றுப் பார்வையும் சொல்லப்படுகிறது. அவர் சொல்கிறார்:\n''ஒரு காலத்தில் மன்னர்களை சுமந்து வலம் வந்து ராஜகவுரவத்தின் சின்னமானது யானைகள். வழிபடும் தெய்வமெனப் பணிந்த மனிதன், மறுபுறம் அவற்றைக் கொன்று பசியாறினான். பின் அதன் தந்தங்கள் மதிப்பு மிக்க பொருளான பின் பொருளுடமைச் சமூகத்தில் அவை காசுக்காக வேட்டையாடப்பட்டன. மன்னர்கள் எதிரிகளை அச்சுறுத்தும் படையாக்கிப் போரிட்டனர். மன்னர்களை மகிழ்விக்கும் பரிசுப் பொருளாகவும் யானைகள் மாறின. சிந்து சமவெளி நாகரிகம் கூறும் முத்திரைகளில் மாடு மட்டுமல்ல, யானையும் கூட காணப்படுகிறது. அதன் முதுகிலிருந்து ஒரு கோடு வரையப்பட்டுள்ளதைக் கொண்டு ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் கேரிங்டன் அது அம்பாரியின் ஒரு கயிறு என்கிறார்.\nஆனால் வரலாற்று ஆய்வாளர் டி.கே.லாகிரி செளத்ரி அப்படி இருக்க முடியாது என்கிறார். எனினும் சிந்து சமவெளி நாகரிக காலத்தில் திராவிடர்கள் யானைகளைத் தமது உதவிக்கென பயன்படுத்தியிருக்கக் கூடும் என்பது உறுதி. ராமாயணம் ராமனுக்கு எதிராக தென்னிந்தியத் திராவிட மன்னன் ராவணன் யானைப் படையுடன் போரிட்டான் என்கிறது.\nதிராவிடர்கள் யானைகளை குழி வெட்டிப் பிடித்திருக்கக் கூடும். அதே முறைதான் சமீபகாலம் வரை கிட்டாவ் என்ற யானை பிடிப்பு முறையாக தென்னகத்தில் பயன்பட்டு வந்தது. கிமு 1500-ல் மேற்காசியாவிலிருந்து வந்த ஆரியர்கள் சிந்து சமவெளி நோக்கி வந்திருக்கக் கூடும். வலுவிழந்த சிந்து சமவெளி திராவிடர்கள் தெற்கு நோக்கி நகர்ந்தனர். யானைகளைப் படையாக பயன்படுத்தும் கலையை கற்ற ஆரியர்கள், யானைப் படை வலிமை கொண்டு கங்கை சமவெளி முழுமையும் தமது ஆளுகைக்கு உட்படுத்தினார்கள். யானைகளை விரட்டி ஏற்கெனவே அமைக்கப்பட்ட குழிகளில் விழ வைத்து, பழக்கப்படுத்த யானைகள் (கும்கிகள்) கொண்டு பயிற்றுவிக்கும் முறை வழமை பெற்றது.\nமாபெரும் யானைகள் சிறிய மனிதனின் கையிலிருந்த சின்ன இரும்பு ஊசிக்கு (அங்குசம்) பயந்து பணியும் பணியாளன் ஆனது!'' இவ்வாறு நீளும் அவரின் ஆய்வின் வெளிப்பாடு 16-ம் நூற்றாண்டில் பிஹாரில் வாழ்ந்த பாசுப்பியா என்ற முனிவர் எழுதிய கஜசாஸ்திரம் நூலைப் பற்றி சொல்கிறது.\nநியமன எம்எல்ஏக்கள் தொடர்பாக நீதிமன்ற அதிகாரபூர்வ நகல் கிடைத்த பிறகே முடிவு: புதுச்சேரி...\nஅதிகரிக்கும் குற்றங்கள்: பெண்களை மதிக்கத் தவறுகிறோமா?
கொரோனா-இந்தியாவில் பலி 273-ஆக உயர்வு | Swadesamithiran\nபுதுதில்லி, ஏப்ரல் 12:கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 273-ஆக உயர்ந்துள்ளது.\nநாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் வேகம் மெல்ல அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க பல மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டித்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாட்டில் மகாராஷ்டிர மாநிலமே முன்னிலையில் உள்ளது. அங்கு இதுவரை 1500 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 110 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇரண்டாவதாக தமிழகம்: அடுத்ததாக தமிழகத்தில் 969 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இறந்தோர் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது. மூன்றாவது இடத்தில் தில்லி உள்ளது. இங்கு 900-க்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.\nமத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,356 ஆக உயர்ந்துள்ளது. 716 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nவிரைவில் பொது போக்குவரத்து- நிதின் கட்காரி\nNext story கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதி வர்த்தகம்\nPrevious story கபசுர குடிநீர் கொரோனாவை தடுக்குமா?
அர்ணாப் விவாத நிகழ்ச்சியில் ஸ்மிரிதி இராணியிடம் கமல் திணறியதற்கான காரணம்!\nடிசம்பர் 24, 2018\t960\nரிபப்ளிக் டிவியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் கமல்ஹாசன் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணியிடம் பல சூழ்நிலைகளில் திணறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும், மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணியும் கலந்து கொண்ட விவாத நிகழ்ச்சி ஒன்றை அர்ணாப் கோஸ்வாமி தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் எப்போதும் இல்லாத அளவுக்கு கமல் பல சூழ்நிலைகளில் திணறினார்.\nபாஜகவை இந்துத்தவா கட்சி என்று வர்ணித்தபோது, ஸ்மிரிதி இராணி இந்துத்வா கட்சிதான் முஸ்லிம் அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கி அழகு பார்த்தது என்று பதிலடி கொடுத்தார்.\nதேசிய கீதம் விசயத்தில் ஏன் திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிபரப்பப்பட வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார் கமல். அதற்கு பதிலடி கொடுத்த ஸ்மிரிதி இராணி தேசிய கீதத்திற்கு எதிரானவர்கள் நீங்கள் என்று தெரிவித்தபோது கமல் கொஞ்சம் எமோஷனலாகி எழுந்துவிட்டார்.\nஆனால் இதனை பார்த்து அர்ணாப் கோஸ்வாமி இந்த மேடையை நாடக மேடையாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.\nஎப்போது முன்னேற்பாட்டுடன் போகும் கமல் இந்நிகழ்ச்சிக்கு சரிவர தயார் நிலையில் இல்லாமல் போனதே திணறலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.\nஇந்த விவாத நிகழ்ச்சியில் பல சூழ்நிலைகளில் கமல் பல்ப் வாங்கியதை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக கமல் தீர ஆராய்ந்து பேசக் கூடியவர் ஆனால் இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து திணறியதனால் பலர் அதிருப்தி அடைந்தனர் என்பதுதான் உண்மை.\nகுடிபோதையில் ஸ்மிரிதி இரானியின் காரை விரட்டி வந்தவர் துரத்தி பிடிப்பு! ...\nஉடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா - ஸ்மிரிதி இராணி அதிர்ச்சி! ...\n« புதிய தேசிய நீரோட்டத்திற்கான தூர்வாரும் பணி! வளைகுடா நாடுகளில் அதிகரிக்கும் இந்தியர்களின் இள வயது மரணங்கள் »\nபாஜக தொண்டர் கொலை - மூன்று பேர் மீது சந்தேகம்!\nதிமுகவுக்கு அடுத்த நிலையில் நாங்கதான் - மக்கள் நீதி மய்யம்!
உங்க வீட்டுல டி.வி ரிமோட் யார் கையில இருக்கு?.டி.வி ரிமோட் யார் கையில இருக்கோ அவங்க தான் அந்த வீட்டோட பவர்புல் ஆளு. எங்க வீட்டல என் மகள் கையில் தான் அதிக நேரம் இருக்கும். அடுத்து என் மனைவி, அடுத்து அம்மா, அடுத்து தான் என்னோட கைக்கு வரும். மனைவி,அம்மா நாடகம் பார்பார்கள், ஆனா நான் நீயூஸ்சேன்ல்,டிஸ்கவரி, காமடி சேனல், ஆங்கில சேனல்கள் என் மாற்றி மாற்றி பார்பேன்.... இப்படி அடிக்கடி சேனல் மாற்ற காரணம் என்ன? சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் புக் படிச்சேன் அதில் கிடைத்த சில தகவல்களை உங்களுக்காக....\nசுஜாதா சொன்ன காரணங்கள் உண்மைதானா? நண்பர்களே...\nஅப்படியா? ஆச்சர்யமான சுஜாதா அவர்களின் அலசல். பகிர்தலுக்கு நன்றி செல்வன்.\n18 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 1:31
Ananda Vikatan - 23 May 2012 - ஒரு வருட ஜெ. ஆட்சியின் டாப் 10... ஃப்ளாப் 10... | one year jayalalitha's regime 10 good points and 10 bad points - Vikatan\n• தி.மு.க. ஆட்சியில் அதிகாரம், போலீஸைப் பயன்படுத்தி அடித்துப் பிடுங் கப்பட்ட நிலங்களை மீட்க எடுத்த முயற்சி கள், இன்றைய நில அபகரிப்பு மனிதர் களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்தது. வருமானத்துக்கு அதிகமாக, அடித்துப் பிடித்துச் சொத்து சேர்த்த தி.மு.க. மந்திரிகளின் வீட்டுக்குள் லஞ்ச ஒழிப்புத் துறை யைவிட்டு ரெய்டுகள் நடத்தியதும், அதற் கெனத் தனி நீதிமன்றம் அமைக்க முயற்சித் ததும் அனைத்துத் தரப்பினராலும் வரவேற் கப்பட்டது.\n• சசிகலா குடும்பத்தின் ஆக்டோபஸ் கரங்கள் வெட்டி எறியப்பட்டன. ஜெ. பதவி ஏற்ற மே மாதம் முதல் சசி டிஸ்மிஸ் செய்யப்பட்ட டிசம்பர் மாதம் வரை, இந்தக் குடும்ப உறுப்பினர்கள் செய்த காரியங்களுக்குத் தடை விழாமல் இருந்திருந்தால், 3-வது ஆண்டு விழாவின்போது தமிழ்நாடே தனியார் சிலருக்குச் சொந்தமாகி இருந்துஇருக்கும். இந்தக் கும்பலுக்குத் தடுப்பணை விழுந்தது எல்லோரும் வரவேற்பது.\n• இரண்டு விஷயங்களில் ஜெ. சிறப்புக் கவனம் செலுத்தினார். ஒன்று, மதுரையை அடாவடி மனிதர்களின் ஆதிக்கத்தில் இருந்து மீட்பதில் உறுதி காட்டியது. இரண்டாவது, அ.தி.மு.க-வினர் சிலருக்கே பிடிக்காதது. ஆனால், ஜெ. தயக்கம் இல்லாமல் செய்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை முறைகேடு இல்லாத தேர்வு அமைப்பாக மாற்ற அவர் எடுத்த முயற்சிகள் இளைஞர்களுக்கு நம்பிக்கை கொடுத்தன.\n• மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது வேறு. அண்டிப் பிழைப்பது வேறு. பாதகமான காரியங்கள் நடந்தாலும் ஒரு மாநில அரசு சுயாட்சி உரிமைகொண்ட தாகச் செயல்பட வேண்டும் என்பதை நடைமுறையில் காட்டிய தைரியம் ஜெயலலிதாவின் தனித்தன்மையை உறுதிப் படுத்துகிறது.\n• ஈழத் தமிழர் விவகாரத்தில் கடந்த காலத்தில் இன விரோத நிலைப்பாடுகளை எடுத்தாலும், ஆட்சியைப் பிடித்த பிறகு கொண்டுவந்த தீர்மானங்கள், விடுத்த அறிக்கைகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் முதல்வரின் செல்வாக்கை அதிகரித்து உள்ளது.\n• தினமும் தலைமைச் செயலகம் வருவது, அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் கலந்துரையாடுவது, முக்கியப் பிரச்னைகள்பற்றி அடிக்கடி ஆலோசிப்பது போன்றவை பழைய ஜெயலலிதாவைவிட இன்றைய ஜெ. உற்சாகமானவர் என்றே காட்டுகிறது. சட்டப் பேரவை நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்று விவாதங்களில் கலந்துகொண்டு வாத வல்லுநராகவும் திகழ்கிறார்.\n• தி.மு.க. ஆட்சியில் பல அமைச்சர்கள் தலைகால் புரியாமல் ஆடினார்கள். அந்தச் சூழ்நிலை இப்போது இல்லை. ஆளும் கட்சியினர் காவல் நிலையங்களுக்குச் சென்று கட்டப்பஞ்சாயத்து செய்வதும் குறைந்துவருகிறது. 'பதவியை வைத்து ஆடினால், அம்மா ஆப்பு அடித்துவிடுவார்’ என்ற அசரீரிக் குரல் கேட்பதே தப்பைக் குறைக்கிறது.\n• வெண்மைப் புரட்சிக்கு வித்திடும் வகையில், கறவை மாடுகள், ஆடுகள் வழங் கியதும், ஏழைப் பெண்களின் திருமணத் துக்கு தாலிக்குத் தங்கம் வழங்கியதும் கிராமப்புற மக்களுக்கு நல்ல உதவியாக அமைந்து இருக்கிறது.\n• கல்வித் துறையிலும் சிறப்புக் கவனம் செலுத்தினார் ஜெ. பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்குவதில் தொடங்கி, 55 ஆயிரம் ஆசிரியர் நியமனம் வரை நடந்தால்... தமிழகப் பள்ளிக் கல்வி செழிக்கும்.\n• தன்னுடைய இலக்கு இதுதான் என்பதை வரையறுத்து 'விஷன் 2023’ வெளியிட்டார் முதல்வர். தன்னுடைய எண்ணங்களை அடுத்த 10 ஆண்டுகளுக்கு உரியதாக சொன்ன தன்னம்பிக்கை அனை வராலும் பின்பற்றத்தக்கது.\n• சென்ற தி.மு.க. ஆட்சியில் எகிறி வந்த விலைவாசி, கடந்த ஆண்டு ஏகத்துக்கும் ஏறியது. விலைவாசியைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கையில் இல்லை என்ற மெத்தனம் ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. இதைத் தடுக்க முயற்சிக்காத ஜெ., பால் விலையையும் பஸ் கட்டணத்தையும் தன் பங்குக்கு ஏற்றிவைத்தார்.\n• மின் வெட்டு முழுமையாக இல்லாத தமிழ்நாட்டை எப்போது பார்க்க முடியும் எனத் தெரியவில்லை. இதற்கான திட்டமிடுதல்களில் ஜெயலலிதா முழுக் கவனம் செலுத்தியதாகவும் தெரியவில்லை.6முதல் 8 மணி நேரம் வரை மின் வெட்டு இருந்ததும்... இன்னும் பல இடங்களில் இருப்பதும் வேதனையானது.\nடின் பொதுச் சொத்தான மணல், பட்டப்பகலில் கொள்ளை அடிக் கப்படுகிறது. என்ன சட்டதிட்டப்படி, யார் எடுக்கிறார், எவ்வளவுக்கு விற்கிறார் என்ற வரைமுறையே இல்லாமல் பூட்டு உடைக்கப்பட்ட வீடாக ஆறுகள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. இதுபற்றியவெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.\n• கருணாநிதி கொண்டுவந்தவை என்பதற்காக, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தையும் தலைமைச் செயலகத்தையும் மருத்துவமனை ஆக்க முயற்சித்தார். சமச்சீர்க் கல்வியை என்ன செய்தேனும் ஒழிக்க முயற்சித்தார். செம்மொழி நூலகம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.\n• மூன்று தமிழர் தூக்கு, கூடங்குளம் எனப் பல முடிவுகளை மாற்றிக்கொண்டே இருந்தார். அதிகாரிகளும் அமைச்சர்களும் முதல் ஆறு மாதத்தில் பந்தாடப்பட்டே வந்தார்கள். 'எடுத்த முடிவில் எப்போதும் தெளிவானவர்’ என்ற பெயரை ஜெ. இழந்தார்.\n• ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், சட்டம் - ஒழுங்கு சரியாக இருக்கும் என்ற நினைப்பில் மண் விழுந்தது. குற்றம் நடக்காத நாளே இல்லை எனலாம். இதற்கு முக்கியக் காரணம், போலீஸ் - குற்றவாளிகள் இடையிலான நட்புதான். இந்தக் கண்ணியை உடைக்காமல், நாட்டில் அமைதியை ஏற்படுத்த முடியாது.\n• அப்பழுக்கற்ற அரசாங்கம் நடக்கிறது என்று சொல்ல முடியவில்லை. கடந்த ஆட்சியைவிட கமிஷன் சதவிகிதம் உயர்த் திய அமைச்சர்களும் இருக்கிறார்கள். கான்ட்ராக்ட் மனிதர்களின் நடமாட்டமும் தலைமைச் செயலகத்தில் அதிகம். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே புரோக்கர்களாக மாறிய அவலமும் தொடர்கிறது.\n• சசிகலாவைக் கட்சியைவிட்டு நீக்கியபோது உயர்ந்த இமேஜ், அவரை மறுபடியும் சேர்த்துக்கொண்டபோது சரிந்தது. 'சசிகலா செய்தது எதுவும் எனக்குத் தெரியாது’ என்று ஜெ. சொன்ன வாதத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை.\n• சட்டப் பேரவையில் அளவுக்கு மீறி அம்மா புகழ் பாடும் ஜால்ரா சத்தமே கேட்கிறது. ஆளும் கட்சியை விமர்சித்துப் பேச எதிர்க் கட்சிகளை அனுமதிப்பது இல்லை. அமைச்சர்கள் முதல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் வரை அனைவருமே தங்கள் சொந்த அம்மாவைக்கூட இத்தனை தடவை 'அம்மா’ என்று அழைத்திருப்பார்களா என்ற சந்தேகமே எழுகிறது.\n• முதல்வர் மீது மரியாதை இருக்கலாம். பக்திகூட இருக்கலாம். பயம் இருந்தால், அது அவருக்கேகூடப் பயன்படாது. அதுவும் சில அமைச்சர், அதிகாரிகளுக்கு மரண பயமே இருக்கிறது. இத்தகைய மனிதர்களை வைத்து ஜெயலலிதாவால் நல்லாட்சி தரவே முடியாது. நெகிழ்வுத்தன்மை உள்ளவராக ஜெயலலிதா தன்னை மாற்றிக்கொண்டால் மட்டுமே வெற்றியைத் தக்கவைக்க முடியும்.
தனியார் பள்ளி துவங்க தடை : அமைச்சரிடம் ஆசிரியர்கள் மனு.\nஅனைத்து அரசு பள்ளிகளிலும், 'வை - பை' வசதியுடன் கணினி வகுப்புகள் துவங்கப்பட வேண்டும்' என, பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜனிடம், தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்சங்கத்தின் சார்பில், அதன் தலைவர், சாமி.சத்தியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள், நேற்று அமைச்சரை சந்தித்து, மனு அளித்தனர்.மனு விபரம்:தமிழக மாணவர்கள், உயர்கல்வியில் அனைத்து வாய்ப்புகளையும் பெற, ஆறாம் வகுப்பு முதல் பிளஸ்2வரையில், சி.பி.எஸ்.இ.,க்கு இணையான பாடத்திட்டம் கொண்டுவர வேண்டும். அனைத்து மாவட்ட அரசு பள்ளிகளிலும், வகுப்புகள் முறையாக நடக்கிறதா என்பதை, தனி அதிகாரிகள்நியமித்து, கண்காணிக்க வேண்டும். அரசு நலத்திட்ட பணிகளில், ஆசிரியர்கள் அதிக நேரம் செலவிடுவதால், கற்பித்தல் பணிகள் பாதிக்கின்றன. எனவே, 10 பள்ளிகளுக்கு, ஒரு தொடர்பு அலுவலர் நியமித்து, நலத் திட்ட பணிகளை ஒப்படைக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள, 4,250 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கணினி வசதி இல்லாத பள்ளிகளை கண்டறிந்து, வை - பை வசதியுடன் கூடிய கணினி மற்றும் இணையதள வகுப்புகள் துவங்க வேண்டும். அரசு பள்ளிகளை சிறப்பாக செயல்பட வைப்பதுடன், வருங்காலத்தில் புதிதாகதனியார் பள்ளிகள் துவங்க அனுமதிக்கக் கூடாது. இவ்வாறுமனுவில் கூறப்பட்டுள்ளது.
Singapore Archives - TAMIL SPORTS NEWS\nPranitha P4months ago\n(world biggest airline introduced) சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அக்டோபர் 11ஆம் திகதியில் இருந்து உலகின் மிக நீண்ட விமானச் சேவையை நியூயார்க்கிற்கு வழங்கவுள்ளது. மேலும் , சிங்கப்பூருக்கும் நியூயோர்க்கின் Newark Liberty அனைத்துலக விமான நிலையத்திற்கும் இடையே இப் புதிய சேவை இடம்பெறும். மற்றும், 16,700 ...\n(cockroaches mouse closed shops) சிங்கப்பூர் பிளாசாவில் உள்ள Toast Box கடையின் சேவை இரண்டு வாரத்துக்கு மூடபட்டுள்ளது. அதற்குக் காரணம் கரப்பான் பூச்சி, எலி தொல்லைகள் ஆகும் .இன்றிலிருந்து , அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை கடைகள் மூடப்படும் . மேலும் , தேசியச் ...\n(28,000 worth drug confiscation) சிங்கப்பூரில் , மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, போதைப்பொருள் குற்றவாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் நால்வரைக் கைதுசெய்துள்ளனர். அதிகாரிகள் பறிமுதல் செய்த போதைப்பொருட்களின் மதிப்பு 28,000 வெள்ளிக்கும் மேல் என மதிப்பிடப்படுகிறது. சந்தேக நபர்களில் ஒருவரான 36 வயதுப் பெண், ஜூரோங் ...
Tamil Nadu is the safest state in this corona epidemic is spreading say UP workers\n“தமிழ்நாடுதான் பாதுகாப்பானது.. எங்கள் மாநிலத்தில் சுகாதார கட்டமைப்பே இல்லை” : உ.பி தொழிலாளர்கள் கருத்து!\nகொரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், தமிழ்நாடுதான் மிகவும் பாதுகாப்பான மாநிலம் என புலம்பெயர் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nUpdated on : 21 May 2021, 11:20 AM\nஇந்தியாவில் கொரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தினந்தோறும் பதிவாகும் உயிரிழப்பு எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகுறிப்பாக உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், குஜராத், உத்தரகாண்ட், டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆக்சிஜன், படுக்கை வசதிகளுக்கு கடும் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதால் சுகாதார கட்டமைப்பே கேள்விக்குறியாகியுள்ளது.\nஇந்நிலையில், தமிழகத்தில் இருக்கும் வட மாநிலத் தொழிலாளர்கள் இந்த பெருந்தொற்று நேரத்தில் தமிழகத்தில் இருப்பதுதான் தங்களுக்குப் பாதுகாப்பு எனத் தெரிவித்துள்ளனர். அதிலும் பா.ஜ.க ஆளும் மாநிலமான உத்தர பிரதேச தொழிலாளர்களே இந்த கருத்தை அதிகமாகத் தெரிவித்துள்ளனர்.\nஉத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதியான கோராக்பூரை சேர்ந்த பல ஆயிரம் கூலித் தொழிலாளர்கள் சென்னையின் அம்பத்தூர், அண்ணாநகர், ராமவரம் பகுதிகளில் தங்கியுள்ளனர். கொரோனா தொற்று வேகமாகப் பரவரும் நிலையில், தாங்கள் தமிழ்நாட்டில் தங்கியிருப்பதுதான் பாதுகாப்பானது என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும், தமிழ்நாட்டில் மருத்துவ உட்கட்டமைப்பு சிறப்பாக இருப்பதே இதற்குக் காரணம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது தமிழ்நாட்டில் எங்களது வேலைக்கான கச்சாப்பொருட்கள் தட்டுப்பாடு மட்டுமே உள்ளது. ஊருக்குச் செல்ல எந்த அவசியமும் இல்லை என்றும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகோராக்பூரில் இரண்டு மருத்துவமனைகள் மட்டுமே உள்ளன. இதனால் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்த கொரோனா தொற்றால் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார்கள் என அவர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.\n“காணாமல் போன தமிழக மீனவர்களை உடனடியாக மீட்டுத்தர வேண்டும்”: ராஜ்நாத் சிங்-கிடம் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்!
Tamil Cine Talk – விஜய் டிவிக்கு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்..!\nவிஜய் டிவிக்கு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்..!\n‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என்கிற வார்த்தையை வைத்து கேலி, கிண்டல் செய்யும் நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்று விஜய் டிவிக்கு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வக்கீல் நோட்டிஸ் அனுப்பியிருக்கிறாராம்..!\nஅன்பிற்கு இனிய பத்திரிக்கை ஊடக நண்பர்களே,\nவிஜய் தொலைகாட்சியில் ‘அது இது எது’ நிகழ்ச்சியின் சிரிச்சா போச்சு பகுதியில், நான் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் பேசிய, ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என்ற வசனத்தை,தொடர்ந்து என்னை பரிகாசம் செய்யும் வகையிலும், என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் ஒளிபரப்பியதற்காக சட்டபடி என்னுடைய கண்டனத்தை தெரிவித்து, எனது வழக்கறிஞர் மூலம் விஜய் தொலைகாட்சிக்கு சட்ட அறிக்கையை அனுப்பியுள்ளேன்.\nமுதல்முறையாக அது ஒளிபரப்பப்பட்டபொழுது அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வேடிக்கையாகவே எடுத்துக் கொண்டேன். இன்னும் சொல்லப் போனால் பெரிதும் பிரபலமாகவே, அந்த வசனத்தையே தலைப்பாக வைத்து சில தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி நடத்த நான் பேச்சு வார்த்தை செய்தேன். அதில் இதற்கு காரணமான விஜய் தொலைக்காட்சியும் அடங்கும்.\nஇருந்த சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி சுவராசியமான நிகழ்ச்சியின் மூலம் சமூகம் சார்ந்த பிரச்சனைகளை அலச வேண்டும் என்பதே எனது முதல் நோக்கமாக இருந்தது. ஆனால்தொடர்ந்து இதே வசனம் பல்வேறு திரைப்படங்களிலும், வேறு வேறு நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது.\nஇது மட்டுமல்லாமல் மிக உச்சமாக ‘ரஜினிமுருகன்’ திரைப்படத்தில், இதே வசனத்தை பல்லவியாக வைத்து பாடலும் உருவாகி இருக்கிறது. இது போன்ற காரணங்களால் நானும் என் குடும்பத்தினரும் பொது இடங்களிலும் சமூக வலைதளங்களிலும் பல்வேறு பின் விளைவுகளையும், விரும்பத்தகாத சூழலையும் சந்திக்க நேர்ந்தது.\nஇப்படிபட்ட தொடர் பிரச்சனைகளால் இந்த வசனம் எந்த சூழலில் சொல்லப்பட்டது..? எதற்காக சொல்லப்பட்டது..? என்பதை மிக வலியோடு ஒரு வீடியோ பதிவின் மூலம் சமூக வலைதளத்தில் வெளியிட்டேன். அதன் பிறகு சிறிது சிறிதாக இந்த பிரச்சனைகள் குறையத் தொடங்கின.\nஇப்படிபட்ட சூழலில் இப்பிரச்சனையை மீண்டும் தூண்டும் வகையில் விஜய் தொலைக்காட்சி மறுபடியும் ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா-பகுதி2’ என்ற ஒரு விளம்பர ப்ரோமோவை வெளியிட்டது. இதை மிக எதேச்சையாகத்தான் கடந்த அக்டோபர் 1-ம் தேதியன்று நான் பார்க்க நேர்ந்தது. இது மீண்டும் எனக்கு விரும்பத்தகாத வகையிலும்அத்து மீறுவதாகவும் இருக்கிறது.\nமீண்டும் இந்தப் பிரச்சனையை ஆரம்பத்தில் இருந்து என்னால் சந்திக்கவோ, விளக்கவோ எனக்கிருந்த பரபரப்பான வேலைகளும், உடல்நிலையும் இடம் கொடுக்கவில்லை. விஜய் தொலைகாட்சியின் பொது மேலாளர் திரு.ஸ்ரீராம் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் எனது எதிர்ப்பை பதிவு செய்து இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டாம் என்று தெரிவித்து இருந்தேன். ஆனால் அதற்கு எந்த பதிலும் வரவில்லை. இதன் காரணமாக நான் கமிஷ்னரை அணுகி புகார் அளித்தேன். இது குற்றவியல் வழக்கு சார்ந்தது அல்ல என்பதால் அவர்கள் என்னை நீதிமன்றம் மூலம் சட்டப்பூர்வமாக இதை அணுகுமாறு கூறினார்கள்.\nஇதனை தொடர்ந்து எனது வழக்கறிஞர் மூலமாக அறிக்கை அனுப்பி உள்ளேன். அதற்கும் பதில் வரவில்லை என்றால் விஜய் தொலைக்காட்சி மீது மானநஷ்ட வழக்கு தொடர வேண்டிய சூழல் ஏற்படும்..\nபின் குறிப்பு : ஒரு பிரபல வார இதழ் விஜய் தொலைக்காட்சியிடம் பேசியபொழுது மட்டும்தான் இது குறித்து அவர்கள் பதில் அளித்தார்கள். முதல் முறை ஒளிபரப்பபட்டதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் நாங்கள் மறுபடியும் செய்தோம் என்று அவர்கள் தரப்பினை நியாயப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு முறை அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதற்காக மறுபடியும் மறுபடியும் செய்து எல்லை மீறுவது எந்த விதத்தில் நியாயம்…?\nஇன்னொரு பதிலும் அளித்து இருக்கிறார்கள்.\nநிகழ்ச்சியை ஒளிபரப்பும் முன்பாக நாங்கள் ‘இந்த நிகழ்ச்சி யார்மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் ஒளிபரப்பபடவில்லை’ என்று குறிப்பு போடுகிறாமே என்றார்கள். அப்படி பார்த்தால் இப்படியொரு குறிப்பை போட்டுவிட்டு யாரை வேண்டுமாலும், எப்படி வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம் என்று சொல்கிறார்களா?\nஒரு தனி நபராக இருந்து கொண்டு தொலைக்காட்சி நிறுவனத்திடம் அதிலும் செல்வாக்கு மிகுந்த ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திடம் போராடுவது கடினம்தான். ஆனால் அதைப் பற்றியோ அல்லது இறுதி முடிவுகளை பற்றியோ நான் கவலைப்படவில்லை. என்னுடைய சுய கௌரவத்தை பாதுகாத்துக் கொள்ள நான் போராடுவேன்.\nஅனைவருடைய ஒத்துழைப்பிற்கும் நன்றி\nactress lakshmi ramakrishan slider vijay tv நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் விஜய் டிவி\nPrevious Post‘முண்டாசுப்பட்டி’ இயக்குநர் ராம் இயக்கும் புதிய படம் Next Postநடிகை அசினுக்கு நவம்பர் 26-ம் தேதி கல்யாணம்..!
இந்தியாவின் நம்பர்-1 பணக்கார கட்சி திமுக! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon\nஇந்தியாவின் நம்பர்-1 பணக்கார கட்சி திமுக!\nநாட்டில் உள்ள மாநில கட்சிகளிலேயே அதிக வருவாய் பெற்ற மாநிலக்கட்சியாக முதலிடத்தில் உள்ளது தமிழகத்தை சேர்ந்த திராவிட முன்னேற்றக்கழகம்.\nமுதல் இடத்தை பிடித்த திமுக இந்தியாவின் பணக்கார கட்சி என்ற பெருமையை தட்டிச்சென்றுள்ளது. அதிமுக இரண்டாவது இடத்துக்கு தள்ளியுள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி மூன்றாவது இடத்திலும் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடில்லியைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பான, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு நாடு முழுவதும் உள்ள மாநில அரசியல் கட்சிகளின் வருவாய் மற்றும் செலவு குறித்து ஆய்வு மேற்கொண்டது.\nஅதன்படி கடந்த 2015 – 16 நிதிஆண்டில் அதிக வருவாய் பெற்ற மாநிலக் கட்சிகள் மற்றும் அதிகம் செலவழிக்காத மாநிலக் கட்சிகள் எவை என்பது குறித்து பட்டியல் வெளியிட்டுள்ளது.\nஅதில் நாட்டில் அதிக வருவாய் பெற்றுள்ள கட்சிகளில் முதல் இரண்டு இடத்தை தமிழகத்தை சேர்ந்த திராவிட கட்சிகளாக திமுகவும், அதிமுகவும் பிடித்துள்ளன.\nஅரசியல் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டு தங்களது கட்சியின் வரவு செலவு விவரங்களை தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்வது வழக்கம்.\nநாடு முழுவதும் மொத்தம் 47 உள்ள பதிவு செய்யப்பட்ட மாநில அரசியல் கட்சிகள் உள்ளன. இதில் 32 மாநில கட்சிகள் மட்டுமே தங்கள் கட்சியின் வரவு செலவு குறித்த தகவலை தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்துள்ளது.\nகடந்த 2015 – 16 நிதியாண்டுக்கான வரவு – செலவு கணக்கை 32 கட்சிகள் மட்டுமே தாக்கல் செய்துள்ளன. பீகாரை சேர்ந்த சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்பட 15 அரசியல் கட்சிகள் கணக்கை தாக்கல் செய்ய வில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 32 அரசியல் கட்சிகளின் மொத்த வருவாய், 221.48 கோடி ரூபாய். இதில்,110 கோடி ரூபாயை இந்த கட்சிகள் செலவிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வின்படி, நாட்டிலேயே அதிக வருவாய் பெறும் மாநில கட்சிகளில் திமுக முதலிடத்தை பிடித்துள்ளது. இதன் மொத்த வருவாய் 77.63 கோடி என்றும், இது மொத்த வருவாயில் 49 சதவிகிதத்திற்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் இரண்டாவது இடத்தை அதிமுக பிடித்துள்ளது. அதன் மொத்த வருவாய் 54.93 கோடி ரூபாய். தெலுங்கு தேசம் கட்சி 15.97 கோடி ரூபாயுடன் 3-வது இடத்தில் உள்ளது.\nஅதிகம் செலவழித்த கட்சிகளில், ஐக்கிய ஜனதா தளம் 23.46 கோடி ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளது. தெலுங்கு தேசம் கட்சி, 13.10 கோடி ரூபாயும், ஆம் ஆத்மி, 11.09 கோடி ரூபாயும் செலவழித்துள்ளன.\nஇதில், 14 கட்சிகள் வருவாயை விட அதிகமாக செலவழித்து உள்ளதாக கணக்கு காட்டியுள்ளன.\nஜார்க்கண்ட் விகார் மோர்ச்சா, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய லோக்தளம் ஆகியவை, வருவாயை விட இரண்டு மடங்கு அதிகம் செலவழித்துள்ளன.\nதி.மு.க.-அ.தி.மு.க., – ஏ.ஐ. எம்.ஐ.எம். ஆகியவை வருவாயில், 80 சதவிகித பணத்தை சேமிப்பாக வைத்துள்ளதாக தெரிவித்துள்ளன.\nமேலும், இந்த கட்சிகள் தாங்கள் பெறும் நன்கொடை குறித்து அளிக்கும் ஆதாரங்கள் அனாமதேயமாக இருப்பதாகவும், அதுகுறித்து அறிய முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது.\nரெயில் கொள்ளை: பணம் சென்னையில் கொள்ளையடிக்கப்பட்டது..? புதிய தகவல்! ஷா அறிக்கை: சொட்டுநீர் பாசனத்தை செயல்படுத்த காவிரி உயர் தொழில்நுட்ப குழு யோசனை! சீன நாளிதழில் தமிழக விவசாயிகளின் டில்லி போராட்டம்….\nTags: DMK the richest regional party in India, இந்தியாவின் நம்பர்-1 பணக்கார கட்சி திமுக!\nPrevious தமிழிசை ஆபாச கார்டூன்: விசிக செய்தி தொடர்பாளர் கைது கண்டித்து ஆர்ப்பாட்டம்!\nNext தமிழிசைக்காக பொய் சொல்லி கையெழுத்து!: பா.ஜ.க.வினர் மீது திடுக் புகார் (வீடியோ)\nகொல்கத்தா ரயில்வே தலைமை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து:4தீயணைப்பு வீரர்கள் உள்பட9பேர் உயிரிழப்பு\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3நாள் பயணமாக இன்று தமிழகம் வருகை…\nகமல் தலைமையிலான கூட்டணியில் மநீம 154 இடங்களில் போட்டி, கூட்டணி கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு…\n11 mins ago patrikai.com\nவங்கதேச 50-வது சுதந்திர தின விழாவில் மோடி பங்கேற்பு
SLvIND: சஹாருக்குக் கைகொடுத்த சிஎஸ்கே அனுபவம் - பந்தயம் விடாமல் சாதித்த இந்திய இளம் படை! | SLvIND: India seals the series after an incredible innings by Deepak Chahar - Vikatan\nSLvIND ( twitter.com/BCCI )\nதன் ஏழாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்கூட எட்ட இயலா இலக்கை எட்டும் என மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளது இந்தியா. பந்துகளை மட்டுமல்ல பேட்டையும் எங்களால் ஸ்விங் செய்ய முடியும் என அதகளம் காட்டியுள்ளது சஹார் - புவி கூட்டணி!\nஇலங்கைக்குச் சாதகமாக டாஸ் முடிய, ஆகச்சிறந்த பேட்டிங் பிட்ச் என்பதால், பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார் இலங்கை கேப்டன் ஷனகா. எந்த மாற்றமுமின்றி இந்தியா களமிறங்க, இலங்கையோ உடானாவின் இடத்தில், ரஜிதாவைச் சேர்ந்திருந்தது.\nஓப்பனர்களாக இறங்கினர் அவிஷ்கா ஃபெர்னாண்டோவும் மினோட்டும். போன போட்டியைப் போலவே, நிதானமான, வலுவான அடித்தளம் அமைக்கத் தொடங்கியது இந்த இருவரணி. டெய்ல் எண்டர்களை முடிக்கத் திணறும் இந்திய பௌலர்கள், சமீபகாலமாக, பவர் பிளே ஓவர்களில், விக்கெட்டுகளை வீழ்த்தத் திணறுகின்றனர். கூடுதலாக, மைதானமும் பெரிதாக வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கவில்லை. அதையும் மீறி விக்கெட் வீழ்த்தக் கிடைத்த இரண்டு வாய்ப்புகளை, இரண்டு முறையுமே கேட்சைத் தவறவிட்டு, மனீஷ் கோட்டை விட்டார்.\nசஹாரைப் பார்த்தாலே அடிப்போம் என்பதைப் போல், அவரை நையப் புடைத்தது இக்கூட்டணி. 8-வது ஓவரிலேயே, 'சுழலோடு தொடரலாம்' என சாஹலைக் கொண்டு வந்து, ஓப்பனர்களை அனுப்ப முயன்றார் தவான். அங்கொன்றும் இங்கொன்றுமாக பவுண்டரிகளினால் ரன்களைச் சேர்த்துக் கொண்ட இக்கூட்டணி, ரிஸ்க் எடுத்தெல்லாம் ஆடவில்லை, அதற்கு அவசியமுமில்லை. உதிரிகளிலேயே, ஒன்பது ரன்களைக் கொடுத்து, கட்டுக்கோப்பாக, பந்து வீசத் தவறியது இந்தியா. பவர்பிளேயில், 59 ரன்களை விக்கெட் இழப்பின்றி எடுத்திருந்தது, இலங்கை.\nஒரு விக்கெட்டுக்காக தவியாய்த் தவித்த இந்தியாவுக்கு, போன போட்டியில் குல்தீப் செய்ததைப் போல, ஒரே ஓவரில், மாற்றத்தைக் கொண்டு வந்தார் சஹால். போட்டியின் 14-வது ஓவரில், தான் வீசிய இரண்டே பந்துகளில், இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். நன்றாக செட்டில் ஆகி அரைசதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த மினோட் முதலில் தனது விக்கெட்டை தாரைவார்த்து வெளியேற, அதற்கடுத்த பந்திலேயே, பனுகா ராஜபக்ஷவை, ஒரு அற்புதமான டாப் ஸ்பின்னால் வந்த வேகத்தில், காலி செய்தார் சஹால்.\nஇதன்பிறகு இணைந்தது ஃபெர்னாண்டோ - தனஞ்செயா கூட்டணி. மத்திய ஓவர்களுக்குரிய இலக்கணம் மாறாமல், நிதானமாக ரன்களைக் குவித்து, விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல் ஆடியது. எனினும் அவர்களது அளவுக்கு அதிகமான டிஃபென்ஸிவ் அணுகுமுறையால், ரன்களே ஏறவில்லை. 70 பந்துகளில், அரைசதம் அடித்தார், ஃபெர்னாண்டோ. 69 பந்துகள் தாக்குப்பிடித்த இக்கூட்டணி, 47 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.\nஅரைசதம் அடித்த உற்சாகத்தில், புவனேஷ்வர் வீசிய பந்தை, ஃபெர்னாண்டோ புல் ஷாட் ஆட முயல, பந்து டாப் எட்ஜாக, அதனை மிட்விக்கெட்டில் நின்று கேட்ச் ஆக்கினார் க்ருணால். தனஞ்செயாவும் வெகுநேரம் நீடிக்கவில்லை. இரண்டாவது ஸ்பெல்லை வீச வந்த சஹார், அருமையான ஒரு நக்குல் பாலினால், தனஞ்செயாவை ஆட்டமிழக்கச் செய்தார். 32 ரன்களோடு வெளியேறினார், தனஞ்செயா.\nகிட்டத்தட்ட பாதி ஓவர்களே வீசப்பட்ட நிலையில், போட்டியின் மிச்சக் கரையைக் கடக்கும் பொறுப்பு, கேப்டன் ஷனகா மற்றும் அசலங்காவின் தோளில் விழ, எட்டு ஓவர்கள் இணைந்திருந்த இருவரும், 38 ரன்களைச் சேர்த்தனர். இதன்பிறகு, ஷனகா மற்றும் ஹசரங்காவினை, முறையே, சஹால் மற்றும் சஹார் வெளியேற்ற, 11 ஓவர்கள் மிச்சமிருந்த நிலையில், 194 ரன்களைச் சேர்த்திருந்தது, இலங்கை.\nஒருபுறம், கருணரத்னே போன போட்டியில், விட்டதில் இருந்து தொடர்வதைப் போல், கவனத்தோடு ரன்களைச் சேர்க்க ஆரம்பித்தார். இன்னொருபக்கம் அரைசதம் கடந்த அசலங்காவின் பொறுப்பான ஆட்டம் தொடர்ந்தது. போன போட்டியைப் போல, டெத் ஓவர்களில், இலங்கை ரன்களைக் குவித்து விடுமோ என்ற எண்ணம் எழ, புவனேஷ்வர், ஒரு ஆஃப் கட்டரை வீசி, அசலங்காவினை வெளியேற்றினார்.\nபுவனேஷ்வர் வீசிய இறுதி ஓவரிலும், இன்னொரு ஸ்லோ பாலினால், சமீராவின் விக்கெட் விழ, இஷான் செய்த அதிவேக ரன்அவுட்டால், சண்டகன் வெளியேறினார். எனினும், கடைசிவரை ஆட்டமிழக்காமல், 33 பந்துகளில், 44 ரன்களைச் சேர்த்த கருணரத்னேயால், 275 ரன்களைக் குவித்தது இலங்கை.\nஇரண்டு பேட்ஸ்மேன்கள் அரைசதமடிக்க, மேலும் மூன்று பேட்ஸ்மேன்கள், 30+ ஸ்கோரைச் சேர்ந்திருக்க, 275 ரன்களோடு முடித்தது இலங்கை. இந்தியாவோ, 2019-க்கு பிறகு, பவர்பிளே ஓவர்களில், விக்கெட் எடுக்கத் தவறுவதையும், டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்குவதையும், பகுதி நேர வேலையாகச் செய்து வருகிறது.\n287 ரன்களை இதற்கு முன்னதாக இந்தியாவே இங்கே வெற்றிகரமாக சேஸ் செய்துள்ளதால், அதையே இன்றும் இந்தியா நிகழ்த்திக் காட்டி, பதிலடி கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு, தொடங்கியது போட்டியின் இரண்டாவது பாதி.\nஓப்பனர்கள் ப்ரித்வியும், தவானும் முதல் இரு ஓவர்களில், தலா மூன்று பவுண்டரிகளை அடித்து நொறுக்கி படையெடுப்பைத் தொடங்கினர். சுதாரித்த ஷனகா, ப்ரித்வியின் பலவீனமான ஸ்பின்னைக் கொண்டுவர முடிவு செய்து, ஹசரங்காவை மூன்றாவது ஓவரிலேயே இறக்கினார். எதிர்பார்த்தது உடனே நடந்தது. போன போட்டியைப் போலவே, ப்ரித்வி ஷா விஷயத்தில், சுழல்பந்து, தனது காரியத்தை பக்குவமாய்ச் செய்தது. இஷான் உள்ளே வந்தார்.\nகடந்த போட்டியில் அடக்கி வாசித்த தவான், இம்முறை போட்டியை, தன் கையில் எடுத்துக் கொண்டு, அடித்தாடிக் கொண்டிருக்க, பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷானோ, நான்காவது பந்திலேயே போல்டாகி வெளியேறினார். டி20 ஆடும் அணுகுமுறையோடே, ப்ரித்வியும், இஷானும் ஆடுவது எல்லாப் போட்டிகளிலும் கைகொடுக்காது என்னும் உண்மையை உரக்கச் சொன்னது போல இருந்தது அவர்களது விக்கெட்டுகள். ஃபியர்லெஸ் கிரிக்கெட் ஆடலாம். ஆனால், கேர்லெஸ் கிரிக்கெட் கூடவே கூடாது என்பதை இந்தியா புரிந்து கொண்டாலும், அதற்கு விலையாக, இரண்டு விக்கெட்டுகளை, ஐந்தே ஓவர்களுக்குள் பறிகொடுத்திருந்தது.\nதவான் - மனீஷ் கூட்டணி, விக்கெட்டுக்கு மட்டுமே முன்னுரிமை, ரன்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என ஆமை வேகத்தில் ஆடத் தொடங்க, பவர்பிளே முடிவில், 60 ரன்கள் வந்திருந்தது. எனினும், ஹசரங்கா மற்றும் சண்டகனைக் கொண்டு இருபுறமும் ஷனகா தாக்குதலைத் தொடங்க, அதில் முதலில் சிக்கியது தவான். ஸ்டம்ப் லைனில், துல்லியமாக வீசப்பட்ட பந்தை, தடுத்தாட முயன்ற தவான் எல்பிடபிள்யூவில் வெளியேற, 12 ஓவர்களில்,3விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை இந்தியாவின் மீது அழுத்தத்தை ஏற்றியது.\nஅந்த கனத்தை சற்றே குறைக்க முயன்றது, மனீஷ் - சூர்யக்குமார் கூட்டணி. ஏபிடி வில்லியர்ஸின் பிரதி பிம்பமாக சூர்யக்குமார் ஆடத் தொடங்க, மனீஷும் போன போட்டியைப்போல, பந்துகளை வீணடிக்காமல் தனது ஆட்டத்தின் வேகத்தை சற்றே கூட்டினார். நீடித்தது 32 பந்துகளேதான் என்றாலும், 50 ரன்களைக் குவித்த இந்த பார்ட்னர்ஷிப், இந்திய ரசிகர்களை சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ள உதவியது. குறிப்பாக, சூர்யகுமாரின் ஒவ்வொரு ஷாட்டும், மிகச் சிறப்பாக இருந்தது.\nஇப்படியே நகர்ந்தால், வெற்றி எட்டக்கூடியது என நினைத்த இந்தியத் தரப்பின் ஆசைக்கு அணை கட்ட, ஷனகா கேப்டன் ஸ்பெல்லை வீசினார். ஒரே ஓவரில், அடுத்தடுத்த விக்கெட்டுகளாக, செட்டில் ஆன மனீஷ் மற்றும் ஆபத்தான ஹர்திக் பாண்டியாவையும் வெளியேற்றினார்.\nஐந்து விக்கெட்டை இழந்திருந்தாலும், அச்சமயம் கூட, 32 ஓவர்களில், 160 ரன்கள் தேவை என இந்தியாவுக்கு நெருங்கி விடக் கூடியதாகவே இருக்க, சூர்யக்குமாரும், க்ருணால் பாண்டியாவும் இணைந்து, பொறுப்பாக ஆடினர். ஒன்பது ஓவர்களில் 44 ரன்களைச் சேர்த்த இந்தக் கூட்டணிதான், இந்தியாவின் கடைசி நம்பிக்கையாக இருக்க, சூர்யக்குமாரின் விக்கெட்டை வீழ்த்திய சண்டகன், இலங்கையின் பக்கம் போட்டியை மறுபடி திசை திருப்பினார்.\nஅடுத்து இணைந்த க்ருணாலும் - சஹாரும் விடுவதாக இல்லை.9ஓவர்கள் வரை தாக்குப் பிடித்து ஆடிய இந்தக் கூட்டணியை, க்ருணாலின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், ஹசரங்கா முறிக்க, இலங்கையின் வெற்றி ஏறத்தாழ உறுதி ஆனதாக, 'கேம் ஓவர்' என்று ஆனந்தக் கூத்தாடியது இலங்கை.\nஆனால், அது இந்தியாவின் தோல்வியின் தொடக்கப்புள்ளி அல்ல, வெற்றியின் ஆரம்பம். பத்து ஓவர்களில், 67 ரன்கள் தேவை என வந்து நின்றது போட்டி. எட்டக்கூடிய ஸ்கோர்தான் எனினும், விக்கெட்கள் இல்லை இந்தியாவின் வசம். எப்படி நகரப் போகிறது தொடரும் ஓவர்கள் என நினைக்கையில், கொஞ்சமும் தளராமல் ஆடத் தொடங்கினர், சஹாரும், புவனேஷ்வரும். 'எதுவும் முடிந்து விடவில்லை' என சொல்லாமல் சொன்னது, அவர்களது அணுகுமுறை.\nஇலங்கையும் விட்டுத் தருவதாக இவ்லை, இவர்களும் விடுவதாக இல்லை. குறிப்பாக, சஹார்ர், இமாலயப் பொறுமையோடு ஆடி, அரைசதம் கடந்ததோடு, இலங்கைக்கு நெருக்கடி தந்து கொண்டே இருந்தார்.\nஇளவேனில் வாலறிவன்: ஒலிம்பிக்கில் தமிழகத்தின் முதல் தங்கம் ரெடி!\nஇறுதியாக,5ஓவர்களில், 31 ரன்கள்தான் தேவை என்றாலும், ஒரு விக்கெட் போட்டியை எப்படி வேண்டுமானாலும் மாற்றும் என்பதால், பதற்றம் அதிகரிக்க, எந்தப் பக்கமும் திரும்பும் நிலையிலேயே போட்டி இருந்தது. ஹசரங்கா இரண்டு ரன்களைத் தந்து, இந்தியாவை இக்கட்டுக்கு நகர்த்த, அடுத்து வந்த சமீராவின் ஓவரில் வட்டியும் முதலுமாக, 13 ரன்களை இந்தியா சேர்க்க, மறுபடியும் ஹசரங்காவினைக் கொண்டு, விட்டதைப் பிடிக்க முயன்றது இலங்கை... பதிலடி தந்தது இந்தியா!\n7 பந்துகளில்7ரன்கள் தேவை என்ற நிலையில், புவனேஷ்வர் அடித்த ஒரு பவுண்டரி, இந்தியாவின் வெற்றியை, கிட்டத்தட்ட உறுதி செய்து விட, கடைசி ஓவரின் முதல் பந்திலேயே, பவுண்டரியாக வின்னிங் ஷாட் அடித்த சஹார், மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வெல்ல வைத்தார். 2-0 என தொடரை வென்றது இந்தியா. இலங்கைக்கு எதிராக இது இந்தியாவின் தொடர்ச்சியான ஒன்பதாவது ஒருநாள் தொடர் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.\nசிஎஸ்கே அனுபவம் கைகொடுக்க, சஹாரின் அற்புதமான ஆட்டத்தால், முடிந்தது கதை என நினைத்த இடத்திலிருந்து, விடாது போராடி, வெற்றியைச் சுவைத்திருக்கிறது இந்தியா. 'ஆஸ்திரேலியா தொடரின் பார்ட் 2' என்பது போல், கடைசித் துளி நம்பிக்கை மிச்சமிருக்கும் வரை, இயலாதது எதுவுமில்லை என நிரூபித்திருக்கிறது இந்திய அணி.
கர்ப்பகாலத்தில் பாரசிடமால் மருந்து சாப்பிட்டால் குழந்தையின் உடல் நலத்துக்குகேடு: ஆய்வில் புதிய தகவல் - Tamil Beauty Tips\nby nathan December 17, 2017 January 30, 2016 0573\nவலி நிவாரண மருந்தாக ‘பாரசிடமால்’ மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்தக் கூடாது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.\nலண்டனில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழக நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற் கொண்டனர். கர்ப்பமாக இருந்த எலிகளுக்கு ‘பாரசிடமால்’ மருந்துகள் வழங்கப்பட்டன. அதை தொடர்ந்து அவற்றுக்கு பிறந்த பெண் எலிகளுக்கு சிறிய கருப்பைகளும், அதில் இருந்து குறைந்த அளவிலான கரு முட்டைகளும் உற்பத்தியாகின.\nஅதன் மூலம் குறைந்த அளவிலேயே அவை குட்டிகளை ஈன்றன. அதே நேரத்தில் பிறந்த ஆண் எலிகளின் விந்தணுவில் குறைந்த அளவிலான ‘செல்’கள் இருந்தன. இதனால் சரிவர இனப்பெருக்கம் நடைபெறவில்லை.\nமார்பகத் தொற்று -தெரிந்துகொள்வோமா?\nnathan April 24, 2022 April 24, 2022\nnathan January 30, 2016 September 1, 2018\nnathan December 8, 2017 May 20, 2017\nnathan February 10, 2017 July 1, 2016\nnathan February 6, 2018 November 12, 2015\nமார்பக அளவுகள் தான் தாய்ப்பால் சுரப்பை நிர்ணயிக்குமா?\nnathan January 3, 2018 May 25, 2017\nnathan November 26, 2016 June 13, 2015\nnathan November 20, 2017 October 13, 2016
பண்ணையாரும் பத்மினியும் - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.\nவிமர்சனம் பட காட்சிகள் (16) சினி விழா (4) செய்திகள்\nஇயக்குனர்: அருண் குமார்\n15 பிப், 2014 - 14:11 IST\nதினமலர் விமர்சனம் » பண்ணையாரும் பத்மினியும்\nரசிகன் குரல் : துளசி மேடத்துக்கு, இந்தப் படம் இன்னொரு சங்கராபரணம் மாப்ளே!\nஅந்த ஊருக்கே அவர் தான் எல்லாம். நாட்டில் எந்த விஞ்ஞானக்கண்டுபிடிப்பு வந்தாலும் அவர் வீட்டில் தான் முதல்ல வரும். ஊர் மக்கள் ரேடியோ, டி.வி, போன் எல்லாம் அவர் வீட்டில் தான் முதன் முதலா பார்க்குறாங்க. அப்பேர்ப்பட்ட பண்ணையார் வீட்டில் அவர் சொந்தக்காரர் மூலம் அப்போதைக்கு பத்மினி ( கார்) யைப்பார்த்துக்குங்கன்னு விட்டுட்டுப்போறார்.\nபண்ணையார்க்கு ஒரே குஷி, பெருமிதம். ஆனா அவருக்கு கார் ஓட்டத்தெரியாது. இதுக்காகவே அவர் ஒரு டிரைவரை வெச்சுக்கறார். ஊர் மக்களுக்கு ஒரு நல்லது கெட்டதுன்னா அந்த கார்ல தான் போறாங்க, வர்றாங்க. பொதுவா கார் ஓனரை விட கார் டிரைவருங்களுக்குத்தான் கார் அதிகம் யூஸ் ஆகும். அந்த தியரி படி டிரைவரும் தன் காதலியைக்கவர அந்த காரை யூஸ் பண்ணிக்கறாரு.\nபண்ணையாரோட மனைவிக்கு கார்ல போக உள்ளூர ஆசை. ஆனா வெளில காட்டிக்கலை. கார் டிரைவர் ஓட்டுனா எல்லாம் உக்கார மாட்டேன், நீங்களே ஓட்டிப்பழகுங்கன்னு சொல்றாங்க. அவரும் பழகறாரு. இப்படி சந்தோசமாப்போய்ட்டிருந்த வாழ்க்கைல விதி பண்ணையார் மகள் வடிவத்துல வந்து சிரிக்குது. தாய் வீட்டில் எது கிடைச்சாலும் சுருட்டிட்டுப்போகும் நல்ல குடும்பத்துப்பொண்ணான பண்ணையார் மகள் நைசா பத்மினி காரையும் லவட்டிக்குது. அதனால சோகத்தில் மூழ்கும் பண்ணையார் என்ன ஆனார் ? மனைவி ஆசை நிறைவேறுச்சா ? என்பது மீதிக்கதை .\nஆர்ப்பாட்டமே இல்லாத, மிகத்தெளிவான ஒரு நதியின் ஓட்டம் போல மிக அழகான திரைக்கதை. 8 நிமிடக்குறும்படத்தை 128 நிமிட முழுப்படமாக எடுக்க இயக்குநர் எவ்வளவு மெனக்கெட்டிருப்பார் என்பது தெளிவாகத்தெரிகிறது . பிரமாதப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் , வாழ்த்துகள்.\nஜெயப்பிரகாஷ் தான் பண்ணையார் ரோல். அருமையான நடிப்பு. ஓவர் ஆக்டிங்க் சிறிதும் இல்லாமல் மிக இயல்பான நடிப்பு. காரைப்பார்த்து பெருமிதப்படும்போது, காரைத்துடைக்கும்போது கூட கவனமாக, மெதுவாகச்செய்வது, கார் ஓட்ட துடிப்பது , மகளிடம் மென்மையாகப்பேசுவது என சுத்தி சுத்தி சிக்சர்களாக விளாசுகிறார்.\nஅவருக்கு ஜோடியாக துளசி. குயிலியின் கண்கள், சரண்யா பொன்வண்ணன் பாணியில் அமைந்த அழகிய நடிப்பு. இவரும் அவருக்கு இணையாக பட்டையைக்கிளப்பி இருக்கார். கிழவா என அவர் முன்னால நையாண்டி செய்தாலும் உள்ளூர அவர் மீது இருக்கும் காதல் வெளிக்காட்டும் மர்மப்புன்னகை கொள்ளை அழகு. வயோதிகக்காதலின் அழகிய கவிதையை படிப்பது போல் இருக்கு\nவிஜய் சேதுபதி தான் டிரைவர். பல வெற்றிப்படங்கள் கொடுத்த ஹீரோ எப்படி தலைக்கணம் இல்லாமல் சாதா கேரக்டரில் கூட சைன் பண்ண முடியும் என்பதற்கு முன்னோடியாகத்திகழ்கிறார். இவருக்கு படத்தில் முக்கியத்துவம் கம்மி என்றாலும் திரைக்கதையின் நலன் கருதி இவர் அடக்கி வாசித்திருப்பது , இதில் நடிக்க ஒத்துக்கொண்டது பாராட்டத்தக்கது . கார் ஓட்ட பண்ணையார் கற்றுக்கொண்டால் தன்னைக்கழட்டி விட்டுடுவாரோ என்ற பதட்டம் அவர் முகத்தில் லேசாகத்தோன்றி மறைவது நுணுக்கமான நடிப்பு\nஅவர் கூடவே வரும் பீடை எனும் கேரக்டர் கவுண்டமணிக்கு செந்தில் மாதிரி. அவர் வாயில் யார் விழுந்தாலும் அவர் ஊ ஊ ஊ தான் , செம காமெடியான காட்சிகள் படம் முழுக்க .\nநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் . பனங்கிழங்கை வேக வைத்து பிளந்தது போன்ற மாநிறம் முகம், கிராமத்துக்கேரக்டருக்கு அழகாகப்பொருந்துகிறார் . விழிகளாலேயே அவர் பேசி விடுவதால் வசன உச்சரிப்புகளில் செய்யும் சில தவறுகள் கவனிக்கப்படாமலேயே போகிறது . அவர் சிரிக்கும்போது தெரியும் கீழ் வரிசைப்பல் சந்து கூட அழகுதான்\nபண்ணையாரின் மகளாக வருபவர் நீலிமா ராணி, பஸ் டிரைவர், கண்டக்டர் உட்பட பல துணைப்பாத்திரங்கள் நிறைவாகச்செய்து இருக்காங்க. கெஸ்ட் ரோல்ல புன்னகை இளவரசி சினேகா, அட்ட கத்தி தினேஷ் குட் .\nபாடல் காட்சிகள் , ஒளிப்பதிவு . இசை , பின்னணி இசை எல்லாமே சராசரிக்கும் மேல் . குறிப்பாக எங்க ஊரு வண்டி இது பாட்டு , பேசுகிறேன் பேசுகிறேன் காதல் மொழி , பேசாமல் பேசுவது உன் கண் விழி பாட்டு , உனக்காகப்பொறந்தேனே பாட்டு என3செம ஹிட் பாட்டு\nசி.பி.கமெண்ட் - பண்ணையாரும் பத்மினியும் - கிளாசிக்கல் மூவி - கமர்ஷியல் ஹிட் கடினம். லாஜிக்கல் மிஸ்டேக் அதிகம்.பெண்களுக்கு பிடிக்கும். ஏ செண்ட்டரில் ஓடும்.\nபண்ணையாரும் பத்மினியும் - பட காட்சிகள் ↓\nபண்ணையாரும் பத்மினியும் - சினி விழா ↓\nபண்ணையாரும் பத்மினியும் தொடர்புடைய செய்திகள் ↓\nதெலுங்கு பேசும் பண்ணையாரும் பத்மினியும்
ரூ.15,000 குறைவாக உள்ள ஜென்5இன்ச் திரை மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 22-ம் தேதி, ஏப்ரல்-மாதம்-2021 வரையிலான சுமார்0புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ. விலையில் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் போன் விற்பனை செய்யப்படுகிறது. , மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஜென்5இன்ச் திரை மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\n5 Inch x Rs. 699 - Rs. 15,000 x ஜென் x Launched x
என் சம்பாத்தியத்தில் என் பெற்றோருக்கு உதவக் கூடாதா? தடுக்கும் கணவர், வலுக்கும் விரிசல்! #PennDiary | A woman shares how husband obstruct to help her parents - penn diary - Vikatan\nஎன் பெற்றோர் தந்த கல்வியால், சுதந்திரத்தால், தைரியத்தால், தன்னம்பிக்கையால் இன்று நல்ல சம்பளம் வாங்கும் நான், அதில் அவர்களுக்கான என் கடமையை செய்யக் கூடாது என்று கூறுவதை எப்படி என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்?\nநான் கிராமத்துப் பெண். அப்பா, அருகில் உள்ள நகரத்தில் இருக்கும் ஆலையில் வேலைபார்க்கிறார். அம்மா வயல் வேலைகளுக்குச் செல்வார். வீட்டில் இருந்த இரண்டு பசுக்களும் வாழ்வாதாரத்துக்கு உதவின. மாதக் கடைசியில் கையில் காசில்லாமல் திணறும் மிடில் க்ளாஸ் வாழ்க்கை என்றாலும், சந்தோஷத்துக்குக் குறைவில்லை. நானும் தம்பியும் அரசுப் பள்ளியில் படித்தோம். எனக்கும் அவனுக்கும்7வருடங்கள் வித்தியாசம். `எப்படியாச்சும் நல்லா படிச்சிடுங்க... நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்துடும்...' என்று சொல்லியே எங்களைப் படிக்கவைத்தார்கள் எங்கள் பெற்றோர்.\nநான் ப்ளஸ் டூவில் நல்ல மார்க் எடுக்க, ஒரு நல்ல பொறியியல் கல்லூரியில் எனக்கு இடம் கிடைத்தது. ஒவ்வொரு வருடமும் எனக்கு ஃபீஸ், ஹாஸ்டல் ஃபீஸ் கட்ட ஏற்படும் பணப் பற்றாக்குறையை எப்படியோ சமாளித்துவிடுவார் என் அப்பா. `அதப்பத்தி எல்லாம் நீ கவலைப்படாத... நல்லா படி... நீயும் தம்பியும் சம்பாதிச்சதும் நம்ம நிலைமை மாறிடும்' என்று மந்திரம்போல சொல்லிக்கொண்டே இருப்பார் அம்மா. அந்த வைராக்கியத்துடனேயே படித்த எனக்கு, படிப்பை முடித்த உடனேயே ஒரு நல்ல நிறுவனத்தில் வேலைகிடைத்தது. என் முயற்சியால், அடுத்த வருடமே சென்னையில் ஒரு எம்.என்.சியில் இன்னும் அதிக சம்பளத்தில் வேலைக்கு மாறினேன். மாதம் கிட்டத்தட்ட 40,000 சம்பளம். அதை என் கைகளில் வாங்கியபோது, இந்த 55 வயதில் என் அப்பா பெறும் அவரின் ஐந்து மாத சம்பளத் தொகை, என் ஒரு மாத சம்பளமா என்றுதான் என் கண்களில் நீர் ஓடியது.\nஅப்பாவுக்கும் அம்மாவுக்கும் அவ்வளவு பெருமை, மகிழ்ச்சி. `உன் தம்பியும் இப்படி கரை சேர்ந்துட்டா போதும் எங்களுக்கு...' என்று எதிர்காலத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டார்கள். தங்கள் வாழ்க்கையின் இனிமையான அந்திமக் காலத்தை நோக்கியபடி இருந்தார்கள். இன்னொரு பக்கம், அதே மில் வேலை, அதே மாடு என்று ஓடிக்கொண்டிருந்தார்கள் இருவரும். இந்நிலையில்தான், சொந்தத்தில் இருந்து வந்து என்னை பெண் கேட்டார்கள். என் பெற்றோருக்கும் அந்த சம்பந்தம் பிடித்திருந்தது. என் விருப்பத்தையும் கேட்டுவிட்டு, இதுவரையிலான தங்கள் சேமிப்பில் அவர்கள் சிறுகச் சிறுகச் சேர்ந்து வைத்திருந்த நகை 30 பவுனுடன், திருமணச் செலவுகளுக்கு மூன்று லட்சம் கடன் வாங்கி, திருமணத்தை முடித்தனர்.\nதிருமணம் முடிந்து எட்டு மாதங்கள் ஆகின்றன. அப்பா வேலைபார்த்து வந்த ஆலை, கொரோனா பொதுமுடக்கத்தால் பெரும் நஷ்டத்தை சந்திக்க, இப்போது அறிவிப்பின்றி மூடப்பட்டுள்ளது. எனவே அப்பாவின் வருமானம் நின்றுபோயுள்ளது. தம்பி பொறியியல் இரண்டாம் வருடம் படிக்கிறான். அவனுக்கு காலேஜ் ஃபீஸ் கட்ட வேண்டும். என் அப்பாவுக்கு நான் இப்போது பொருளாதார பலம் கொடுக்க வேண்டியது என் கடமை. ஆனால், என் கணவர் `நீ உன் பெற்றோருக்கு உதவக் கூடாது. அப்படியே உதவ வேண்டும் என்று நினைத்தாலும் அந்தத் தொகையை என்னிடம் சொல்லி, நான் ஒப்புதல் கொடுத்தால்தான் கொடுக்க வேண்டும். மேலும், இது இக்கட்டான சூழலுக்கான உதவியாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, மாதம் மாதம் பணம் கொடுப்பது எல்லாம் கூடாது...' என்றார். இதை முன்னிட்டு அவருக்கும் எனக்கும் பெரும் விவாதம், சண்டை என்று சென்றுகொண்டிருக்கின்றன நாள்கள்.\nஎன் கணவர், என் பெற்றோரின் நிலையை நன்கு அறிவார். என்னை அவர்கள் அரும்பாடுபட்டு படிக்கவைத்த அவஸ்தைகளையும் நான் ஏற்கெனவே அவரிடம் கூறியுள்ளேன். அப்படி இருந்தும், `உன் படிப்பை முடிக்கிற வரை அவங்க சமாளிச்ச மாதிரி, உன் தம்பி படிப்பை முடிக்கிற வரை அவங்களா எப்படியோ சமாளிச்சுக்குவாங்க. அப்புறம் உன் தம்பி அவங்களைப் பார்த்துப்பான். நீ கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்ட பொம்பளப் புள்ள, உன்கிட்ட பணம் வாங்குறது அவங்களுக்குத்தான் அவமானம்' என்றெல்லாம் ஆணாதிக்க சமூகத்தின் அசல் பிரநிதியாகப் பேச, அதிர்ந்துவிட்டேன் நான்.\nஎன் பெற்றோர்கள் என்னையும், தம்பியையும் ஒரே போல்தான் வளர்த்திருக்கிறார்கள். எங்களுக்கு சொத்து எதுவும் இல்லை, ஆண்பிள்ளையான என் தம்பி எடுத்துக்கொள்ள. ஆனால், என் கல்யாணத்துக்கு வாங்கிய கடனைத்தான் வைத்திருக்கிறார்கள் என் பெற்றோர் அவனுக்காக. அதை அடைக்கும் பொறுப்பு அவனுக்குத்தான் கைமாற்றப்படும். சொல்லப்போனால், என் பெற்றோரின் 20 வருட சேமிப்பு முழுவதையும் எனக்குத்தான் 30 பவுன் நகையாகப் போட்டார்கள். அப்படி எதுவும் கொடுக்கப்படப் போவதில்லை என் தம்பிக்கு. கூடவே, என் பெற்றோரை இறுதிவரை என் தம்பி மட்டுமே பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படித்தான், மிடில் க்ளாஸ் குடும்பங்களில் பிறந்த ஆண் பிள்ளைகளின் தலையிலும், தோளிலும், நெஞ்சிலும் பாரமேற்றுகிறது இந்தச் சமுதாயம்.\nஆனால், என் பெற்றோர் தந்த கல்வியால், சுதந்திரத்தால், தைரியத்தால், தன்னம்பிக்கையால் இன்று நல்ல சம்பளம் வாங்கும் நான், அதில் அவர்களுக்கான என் கடமையை செய்யக் கூடாது என்று கூறுவதை எப்படி என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்? `நான் பொண்ணு... அதனாலேயே எனக்குப் பெற்றோர் மீது எந்தப் பொறுப்பும் இருக்கத் தேவையில்லை. நீ பையன்... என்ன ஆனாலும் அவங்க உன் பொறுப்புத்தான்' என்று பெண்கள் தங்கள் சகோதரர்களிடம் பொறுப்பை கைமாற்றிவிடுவது சரியா?\nகணவரோ நிலைமையை உணர்வதைவிட விவாதத்தை வளர்ப்பதிலேயே இருக்கிறார். `என் அக்காவும்தான் நல்லா சம்பாதிக்கிறாங்க. அதுக்காக, என் அக்காவை கல்யாணம் பண்ணிக் கொடுத்ததுக்கு அப்புறம், அவங்ககிட்ட இருந்து எங்க வீட்டுல பணம் எதிர்பார்க்குறோமா? சொல்லப்போனா, பையனான என்கிட்ட இருந்தே அவங்க எதிர்பார்க்கிறதில்லையே' என்கிறார்.\n`உண்மைதான். ஆனா உங்க அக்காகிட்டயோ, உங்ககிட்டயோ எதிர்பார்க்குற அளவுல உங்க குடும்பம் இல்ல. உங்க அப்பா கவர்மென்ட் ஆபீஸர். வீடு, நிலம், சொத்து, பென்ஷன்னு நல்ல நிலைமையில இருக்கீங்க. இதுவே, ஒருவேளை நீங்க கஷ்டப்படுற சூழல்ல இருந்தா, அதுக்கு உதவுற கடமை உங்க அக்காவுக்கும்தான் இருக்கு. அந்தத் தவிப்பு எல்லாம் என்னை மாதிரி மிடில் க்ளாஸ் பொண்ணுங்களுக்குத்தான் புரியும், தெரியும். அதேபோல, ஒருவேளை உங்க உதவி நாளைக்கு உங்க பெற்றோருக்குத் தேவைப்பட்டாலும் அதை உங்க கடமையா செய்வீங்களே தவிர, என்னை மாதிரி இப்படி விளக்கம் கொடுத்திட்டு இருக்கிற அவசியமெல்லாம் உங்களுக்கு வரப்போறதில்லயே...' என்று எவ்வளவு விளக்கிச் சொன்னாலும், என் கணவர் எதையும் காதில் வாங்குவதில்லை.\n`நான் சுயநலவாதிதான். நாம ரெண்டு பேரும் வேலைக்குப் போறோம், சீக்கிரம் லோன் போட்டு சொந்த வீடு, கார்னு வாழ்க்கையில முன்னேறும் வழியைப் பார்க்கணும். உன் பெற்றோருக்கு காசு, தம்பிக்கு ஃபீஸுனு எல்லாம் கொடுக்குறது எனக்குப் பிடிக்கல' என்கிறார் கறாராக. இந்தப் பிரச்னையால் எனக்கும் என் கணவருக்கும் இடையில் விவாதங்களும், விரிசலும் அதிகமாகிக்கொண்டே வருகிறது.\nஉண்மையில், இந்தச் சூழலில்கூட என் பெற்றோர் என்னிடம் எதுவுமே எதிர்பார்ப்பதில்லை. `நீ உன் வாழ்க்கையைப் பாரு, நாங்க சமாளிச்சுக்குறோம்...' என்றுதான் சொல்கிறார்கள். இப்போது தம்பிக்கு ஃபீஸ் கட்ட வீட்டில் நின்ற இரண்டு பசுக்களில் ஒன்றை விற்றதை நான் அறிய நேர்ந்தபோது, இயலாமையில் துடிக்கிறேன். குற்றஉணர்வுக்கு ஆளாகிறேன். கணவருக்குத் தெரியாமல் என் பிறந்த வீட்டுக்கு நான் பணம் கொடுப்பது பெரிய காரியம் இல்லை. ஆனால், என் கடமையை நான் செய்ய எதற்குக் குறுக்கு வழி என்று கோபமாக வருகிறது. கணவரை மீறிக் கொடுக்க முடிவெடுத்தால், இவர் அதைப் பற்றி என் பிறந்த வீட்டினரிடமே பேசிவிட்டால், அதனால் அவர்களுக்கு ஏற்படும் காயத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது.\nபெண்களுக்குத்தான் எத்தனை பாடுகள்? மகள்கள் பெற்றோருக்கு ஒரு பிள்ளையாகக் கடமையாற்றுவதை தடுக்கும் இந்தத் திருமண அமைப்பை என்னவென்று நோவது? ஆணாதிக்கவாதிகளை எப்படித் திருத்துவது? என் கணவருக்கு எப்படி புரியவைப்பது?
வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு ஏற்காடு ஏரியில் படர்ந்து கிடக்கும் ஆகாய தாமரை-படகுகள் கவிழ்ந்து விபத்து ஏற்படும் அபாயம் | Dinakaran\nவெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு ஏற்காடு ஏரியில் படர்ந்து கிடக்கும் ஆகாய தாமரை-படகுகள் கவிழ்ந்து விபத்து ஏற்படும் அபாயம்\nசேலம் : ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு ஆண்டு முழுவதும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த6மாதங்களாக ஏற்காடு சுற்றுலா தலம் முடங்கிக்கிடந்தது. தற்போது. சுற்றுலா பயணிகள் வந்துச் செல்ல இருந்த தடை நீங்கியதால், வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.\nஇதன்காரணமாக ஏற்காட்டில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை பார்க்க முடிகிறது. ஏற்காடு ஏரி படகு இல்லமும் திறக்கப்பட்டுள்ளது. அங்கு, சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். ஆனால், ஏரியில் பெரும்பாலான இடத்தில் ஆகாய தாமரை படர்ந்து நிரம்பிக் கிடக்கிறது. இதனால், நடுவில் குறைந்த அளவில் மட்டுமே தண்ணீர் வெளியில் தெரிகிறது. அந்த பகுதியில் மட்டும் படகுகளை இயக்க முடிகிறது.\nசில நேரங்களில் மிதி படகு எடுத்துச் செல்லும் சுற்றுலா பயணிகள், ஆகாய தாமரைக்குள் சிக்கிக் கொள்கின்றனர். மோட்டார் படகுகளும், மிக ஆபத்தான முறைvயில் ஆகாய தாமரை கிடக்கும் இடத்தில் திரும்புகின்றன. இதனால், இந்த படகுகள் கவிழ்ந்து சுற்றுலா பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.\nஎனவே ஏரியில் நிரம்பிக் கிடக்கும் ஆகாய தாமரையை சுற்றுலாத்துறையும், உள்ளாட்சி நிர்வாகமும் அகற்றிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், ‘‘ஏரியின் பாதியளவிற்கு மேல் ஆகாய தாமரை தான் நிரம்பி காட்சியளிக்கிறது. தண்ணீர் தெரியும் இடத்தில் ஆனந்தமாக சுற்றி வருகிறோம். இருப்பினும் ஓரமாக செல்லும்போது, மிகவும் பயமாக இருக்கிறது. அதனால், ஆகாய தாமரையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.
`பா.ம.க-வுடன் கூட்டணி வைப்பது ஜெயலலிதாவுக்குச் செய்யும் துரோகம்!’ - தகித்த தினகரன் | TTV Dinakaran slams ADMK for PMK alliance\n`பா.ம.க-வுடன் கூட்டணி வைப்பது ஜெயலலிதாவுக்குச் செய்யும் துரோகம்!’ - தகித்த தினகரன்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மக்கள் சந்திப்புப் பயணம் கடலூர் மாவட்டத்தில் நடைபெறுகிறது. அங்கு டிடிவி தினகரன்4நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் முதற் கட்டமாக கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் மக்களைச் சந்தித்து பேசினார்.\nஅப்பொழுது அவர் பேசியதாவது, ``ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டக் கூடாது எனப் பலமுறை அறிக்கை விட்டவர் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். அதோடு ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது சிறை சென்றவர், குற்றவாளி எனவும் கூறிவந்தார். அ.தி.மு.க-வின்2ஆண்டு ஆட்சி, ஊழல் ஆட்சி எனவும், அது தொடர்பாக கவர்னரைச் சந்தித்து ஊழல் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியவர்.\nஇவ்வாறு செய்தவர்களுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்திருப்பது, ஜெயலலிதாவுக்குச் செய்யும் துரோகம். இனி அந்த அரசு ஜெயலலிதா அரசு எனக் கூறுவதை நிறுத்திகொள்ள வேண்டும். அ.தி.மு.க அரசு மானம்கெட்ட அரசு என விமர்சித்த ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர்கள் தற்போது கூட்டணி வைத்து இருக்கிறார்களே யார் மானம்கெட்டவர்கள் என விளக்க வேண்டும். ராமதாஸ் அவர்கள் சமூகநீதி போராளி என்று கூறுகிறார்கள் உண்மையிலே சமூகநீதி போராளி ஜெயலலிதா அவர்கள் தான்’’ இவ்வாறு பேசினார். இதைத் தொடர்ந்து அவர் விருத்தாசலத்திலும் கட்சியினருடன் பேசினார். இன்றும் நாளையும் தொடர்ந்து அவர் கடலூர் மாவட்டத்தில் மக்கள் சந்திப்புக் கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.
வெண்முரசு விவாதங்கள்: புதுக்காடு\nஇன்று புதுவை வெண் முரசு கூடுகை . இந்த புதுக்காடு அத்யாயம் முழுக்க குழந்தை பிறப்புகளின் வரிசை .புதுவை நண்பர் மணி மாறனுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது . ஆகவே இன்றைய கலந்துரையாடலின் முடிவில் , எனது இறுதி சொல்லாக ,வெண் முரசின் ,மழைப்பாடல் நாவலின் புதுக்காடு பகுதியை மட்டும் ,தினமும் காலை குளித்து முடித்து ,உண்பதற்கு முன் பூஜை அறையில் அமர்ந்து ,பெண்கள் [ஆண்களும் செய்யலாம் ] பக்தியுடன் பாராயணம் செய்தால் ,அவர்களுக்கு நன்மக்கட் பேறு அமையும் என உறுதி அளிக்கலாம் என முடிவு செய்துள்ளேன் .\nபோரில் மூழ்கிக் கிடப்பதால் , இந்த அத்யாயத்தின் ஒவ்வொரு சித்தரிப்பும் பல்வேறு அர்த்த சாத்தியங்களை அளிக்கின்றன .குறிப்பாக குந்தி குடும்பம் காணும் வன நெருப்பு . நெருப்பு மட்டுமே என்ன விதமாக எல்லாம் வெண் முரசில் தொழில்படுகிறது என்று வாசிப்பதே தனி அனுபவமாக இறுக்கும் என நினைக்கிறேன் . அம்பை சென்று விழும் நெருப்பு துவங்கி , திரௌபதியின் தந்தை காணும் நெருப்பு தொடர்ந்து , அரக்கு மாளிகை தொட்டு இன்று ஆத்மா நெருப்பாக ,உடலே சிதையாக நின்றெரியும் சாத்யகி வரை எத்தனை விதமான நெருப்பின் சித்தரிப்புகள் .\nஇன்று கண்ட பலா ஹஸ்வர் அன்று திருதா ,பீஷ்மர் யுத்தத்துக்கு முன்பாக எழுப்பிய வினாக்கள் எல்லாம் ,இன்று குருஷேத்ரத்தில் நிகழ்ந்தேரிக்கொண்டு இருக்கிறது . நகுல சகாதேவர்களை பிரிக்கவே இயலாமல் கட்டி வைத்திருக்கும் கண்ணி எது என இன்றைய போரில் சகுனி வியக்கிறான் . அவன் வியப்புக்கு விடை இந்த புதிய காடு பகுதி யில் கண்டேன் . குந்தி பயன்படுத்திக்கொள்ள ஐந்து மந்திரம் வைத்திருக்கிறாள் .அதில் நாலை பயன்படுத்தி விட்டு மிச்சம் ஒன்றை மாதரிக்கு அளிக்கிறாள் .\nகனகன்,காஞ்சனன் இருவரையும் பிரிக்க முடியாது . மாதரி கொண்ட ஒற்றை மந்திரத்தையும் பிரிக்க முடியாது .நகுல சகாதேவர்களையும் பிரிக்க முடியாது .\nஒரு திடுக்கிடலுடன் குந்தி பீமனை குறித்து சொல்லும் சொல்லை வாசித்தேன் . எந்த அன்னையும் தனது மைந்தன் குறித்து வெளியே சொல்ல விரும்பாத ஒரு சொல் .கிட்ட தட்ட ஒரு சாபம் போல பீமன் மேல் வந்து விழுந்த சொல் .குலாந்தகன் . அவள் அவனுக்கு ஊட்டிய முலைப்பாலில் ஒரு துளி அந்த விஷம் கலந்தே இருக்கும் . பின்னர் பீமன் அருந்தும் விஷம் எல்லாம் இதற்க்கு முன் ஒன்றுமே இல்லை . குலாந்தகன் ...குலாந்தகன் ..பாவம் பீமன் .\nபாண்டு அர்ஜுனனை அள்ளி அணைத்த பின் அடி மனதிலிருந்து மகிழ்ச்சி பொங்க கூவுகிறான் ''.இனி இவர்கள் பாண்டவர்கள் .பாண்டவர் குலம்.குலம் எத்தனை இனிமை தரும் சொல்...''\nபாண்டுவின் மகிழ்ச்சி .குந்தி அவன் அருகில் நின்று கண்ட மகிழ்ச்சி . பாண்டுவின் அந்த சொல்லுக்கு உயிர் கொடுக்கவே இத்தனை உயிர் பலிகள் . நல்ல வேளை பாண்டு அந்த வனத்தை விட்டு வெளியே வர நேர வில்லை . .\nPosted by ஜெயமோகன் at Friday, October 26, 2018
யாழ்.போதனா வைத்தியசாலையில் புதிய 'சீ.ரி. ஸ்கானர்' - Marumoli.com\nயாழ் போதனா வைத்தியசாலையில் அண்மையில் நிறுவப்பட்ட 160-வெட்டுக்களைத் தரும் ஸ்கானர்.\n160 வெட்டுக்களைத் தரும் சீ.ரீ.ஸ்கானர் யாழ் போதனா வைத்தியசாலையில் அக்டோபர் 12, 2019 அன்று சம்பிரதாயபூர்வமாகக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டது\nயாழ். போதனா வைத்தியசாலை,சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு, வட-மாகாணத்திலுள்ள மூன்றாவது நிலைப் பராமரிப்பு (tertiary care) மருத்துவ சேவைகளை வழங்கும் வைத்திய நிலையமாகும். , இதர முதலாம் நிலைப் பராமரிப்பு (primary care), இரண்டாம் நிலைப் பராமரிப்பு (secondary care) சேவைகளை வழங்கும் மருத்துவ நிலையங்கள், சிறப்பு மருத்துவ சேவைகள் தேவைப்படும் நோயாளிகளை இங்கு தான் அனுப்புகிறார்கள். வடமாகாணம் முழுவதுக்கும் உள்ள ஒரே மூன்றாம் நிலை வைத்தியசாலை இதுவாகும். யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலுமுள்ள நோயாளிகள் சிறப்பு மருத்துவத் தேவைகளுக்கு இங்குதான் வருகிறார்கள்.\nமருத்துவ தீவிர சிகிச்சைப் பிரிவு (Medical Intensive Care Unit (MICU)), இருதய சிகிச்சைப் பிரிவு (Coronary Care Unit (CCU)) ஆகியவற்றுடன் சேர்த்து 1280 நோயாளிகளைப் பராமரிக்க வல்ல இடவசதிகளை இவ் வைத்தியசாலை கொண்டிருக்கிறது. இதை விட, அறுவைத் தீவிர சிகிச்சைப் பிரிவு (Surgical Intensive Care Unit (SICU)), மகப்பேற்று தீவிர சிகிச்சைப் பிரிவு (Obstetric Intensive Care Unit (Obs ICU)), அகால குழந்தை சிகிச்சைப் பிரிவு (Pre-mature Baby Unit (PBU)) ஆகிய சிறப்புத் தேவைகளுக்கான பிரிவுகளும் இங்குண்டு.\nஒரு நாளைக்கு 800 வெளி நோயாளர்களும் (Outpatients), 1100 உட்தங்கும் நோயாளிகளும் (Inward Patients), 1270 சிகிச்சையக நோயாளிகளும் (Clinic Patients), 73 பாரிய அறுவைச் சிகிச்சைகளும் இங்கு நிகழ்த்தப்படுகின்றன.\nஇங்குள்ள கதிரியக்கப் பிரிவில்3கதிரியக்க ஆலோசகர்களும்* (Consultant Radiologists),4மருத்துவ அதிகாரிகளும் பணி புரிகிறார்கள் (*நோயாளிகளின் எக்ஸ்றே, அல்ட்ராசவுண்ட் பிம்பங்களைப் பார்த்து நோயறிகுறிகளை இனம் கண்டு தெரிவிக்கும் வைத்தியர்கள்).\nஇதற்கு முன்னர் இங்கு இரண்டு சீ.ரீ. ஸ்கானர்களே இந்த வைத்தியசாலையில் இருந்தன. இவை 2012 ம் ஆண்டு நிறுவப்பட்டவை. ஒவ்வொரு மாதமும் 1200 ஸ்கான்கள் இங்கு செய்யப்படுகின்றன. இந்த ஸ்கானர்கள் 16 வெட்டுக்களைச் (scans) செய்வன. இவை அடிக்கடி பழுதுபடுவதால் னோயாளிகளுக்கு சிறப்பான சேவைகளைச் செய்வதில் வைத்தியசாலை நிர்வாகம் சிரமப்பட்டு வந்தது.\nசீ.ரீ.ஸ்கானர்கள் உடலை அறுவை செய்யாமலே உள்ளிருக்கும் உறுப்புகளை எக்ஸ்றே கதிர்களினால் ஊடறுத்து அதன் உட்பாகங்களை விம்பமாகத் திரையில் காட்டுபவை. ஒரு நிமிடத்தில் இவை எத்தனை தடவை ஊடறுத்து விம்பங்களை உருவாக்குகின்றனவோ அந்தளவுக்கு விம்பங்கள் துல்லியமாகின்றன. உள்ளுறுப்புக்களில் நிகழும் மாற்றங்களை அவதானித்து கதிரியக்க ஆலோசகர்கள் (Consultant Radiologists) நோயைக் கண்டுபிடிக்கிறார்கள்\nவவுனியா மாவட்டம் இங்கிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கிருந்து இங்கு கொண்டுவரப்படும் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சைகளை வழங்க நிர்வாகம் பெரும் சிரமப்பட்டு வந்தது. தடைப்படாத சேவைகளை வழங்க வேண்டுமென்றால் குறைந்தது3ஸ்கானர்களேனும் இந்த வைத்தியசாலைக்குத் தேவை.\nயாழ். போதனா வைத்தியசாலை சீ.ரீ.ஸ்கானர் ஆரம்ப நிகழ்வில் மருத்துவர் சத்தியமூர்த்தி\nவிபத்து அவசர சிகிச்சைப் பிரிவொன்று சமீபத்தில் இந்த வைத்தியசாலையில் உருவாக்கப்பட்டது. இற்காக 160 வெட்டுக்களைத் தரும் ஸ்கானர் ஒன்றை நிர்வாகம் சமீபத்தில் நிறுவியுள்ளது. அதன் விலை 112 மில்லியன் இலங்க ரூபாய்கள். இதற்கான பணத்தில் 77 மில்லியன் ரூபாய்களை, ஐக்கிய இராச்சியத்தில் வாழும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சில நல்லுள்ளங்கள் தானமாகாக் கொடுத்துள்ளன. மீதியையும் வேறு பலரிடமிருந்து தானமாகப் பெற்று இவ் விடயத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி அவர்கள். யாழ் போதனா வைத்தியசாலை உட்பட நாடெங்கிலுமுள்ள மருத்துவப் பணிகளுக்கு அமெரிக்காவில் இருக்கும் அனைத்துலக மருத்துவ நல அமைப்பு மிக நீண்டகாலாமாக ஆதரவு தந்துவருவது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஸ்கானர் பாவனையின் சம்பிரதாய ஆரம்ப நிகழ்வு அக்டோபர் 12ம் திகதி வைத்தியசாலையில் நிகழ்ந்தேறியது.\nகீல்வாதத்திற்குப் (Arthritis) பாவிக்கும் மருந்து க...\nPrevious Postயாழ்.போதனா வைத்தியசாலை ஸ்கானர் விவகாரம் – உண்மை என்ன? | வைத்தியர் சத்தியமூர்த்தி\nயாழ்.போதனா வைத்தியசாலை ஸ்கானர் விவகாரம் – உண்மை என்ன? | வைத்தியர் சத்தியமூர்த்தி
2027-இல் நிச்சயம் இந்தியா வல்லரசாகும் – படவிழாவில் ஹிப்ஹாப் ஆதி பேச்சு..!! : Athirady Cinema News\n2027-இல் நிச்சயம் இந்தியா வல்லரசாகும் – படவிழாவில் ஹிப்ஹாப் ஆதி பேச்சு..!!\nவையம் மீடியாஸ்” சார்பில் தயாரிப்பாளர் வி.பி.விஜி தயாரித்து, இயக்கியிருக்கும் படம் “எழுமின்”. தற்காப்பு கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற இப்படத்தில் விவேக், தேவயானி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள்.\nஇப்படத்தின் இசை வெளியீட்டு விழா பலநூறு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் தற்காப்பு கலைஞர்கள் மத்தியில் நடைபெற்றது.\nஇந்த விழாவில் “செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்” திரு. கடம்பூர் ராஜு, “விளையாட்டு துறை அமைச்சர்” திரு. பாலகிருஷ்ண ரெட்டி, நடிகர்கள் விவேக், ஆரி, “ஹிப்-ஹாப்” ஆதி, இசையமைப்பாளர்கள் டி.இமான், ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர்கள் மயில்சாமி, பிரேம்குமார், உதயா, மற்றும் தயாரிப்பாளரும், இயக்குநருமாகிய வி.பி.விஜி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.
"மிதமான" உணவு... "இதமான" பயிற்சி!'' : -ஃபிட்னெஸ் அனன்யா - விதை2விருட்சம்\nநாடோடிகள்’ நல்லம்மாவை மனசு மறக்குமா? சீடை, முறுக்கு, வடை என எந்நேரமும் தாவணி போட்ட மினி கிரைண்டராக\nசிணுங்கினாரே… அதே அனன்யா தான்!\n‘ஃபிட்னெஸ் பக்கங்களில் பப்ளி மாஸ் பாப்பா அனன்யாவா?’ என்று ஆச்சர் யப்படுபவர்களே… ‘எப்படி இருந்தவர் இப்படி ஆகி ட்டார்’ என்று வியப்பூட்டும் வேக த்தில் உடல் எடையைக் குறை த்திருக்கிறார் அனன்யா.\n”ஒண்ணு, ரெண்டு இல்லை… 12 கிலோ வெயிட் குறைச்சேன். வா யைக் கட்டி, வயித்தைக் கட்டின்னு சொல்வாங்களே… அது எவ்வளவு கஷ்டம்னு இந்த ரெண்டு மூணு மாசத்துல அனுபவிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன்!”-கன்னக் குழிகள் கபடி ஆட, சிரிக்கிறார் அனன்யா.\n”மலையாளத்தில் ‘பாசிட்டிவ்’ படத்தில் நான் அறிமுகமான ச\nமயமே, உடம்போட ஷேப் பே தெரியாம கொழுக்மொ ழுக்னு இரு ப்பேன். கலகல ன்னு எப்பவும் அரட்டையடிச் சுட்டே இருப்பதால், அந்த கேரக்டர் எனக்கு செட் ஆகு ம்னு நடிக்கவெச்சாங்க. அந் தப் படம் பார்த்துட்டுதான் ‘நாடோடிகள்’ படத்துக்காக சமுத்திரக்கனி சார் கூப்பிட் டார். கோடம்பாக்கத்தில் அறி முக மாகும் சந் தோஷ த்தில் என் போட்டோ ஆல்பத் தை கனி சாருக்கு அனுப்பி னேன். அதுல தஸ்ஸு புஸ்ஸு னு நான் பப்ளிமாஸா இருந்த தைப் பார்த்துட்டு, அவருக்கு மயக்கமே வந்துடுச்சாம். ‘என க்கு குண்டான ஜோடின்னு சொன்னீங்க. ஆனா, இவ் வளவு குண்டுன்னு சொல்ல லையே’ ன்னு சசிகுமார் சாரு ம் ரகளை பண்ணிட்டாராம். இது கேள்விப்பட்டதும் எனக்கு சங்டமா ஆயிருச்சு. ஜிம்ல வொர்க் அவுட் பண்ண ஆர ம்பிச்சேன். அப்புறம் கொஞ்ச நாளுக்கு அப்புறம் என் நண்பர் ஒருத்தர், ‘இப்போ அனன்யாவை நேர்ல பாருங்\nக’ன்னு சொல்லி, கனி சாரை கன்வின்ஸ் பண்ணி யிருக்கார். நான் நேர்ல போய் நின்னதும் என்னை ஆச்சர்யமாப் பார்த்தவர், ‘உடம் பைக் குறைக்க, கூட்ட கேரளாவில் எதுவும் மந்திரம் கத்துக்கொடுக்கிறாங்களா?’ன்னு சிரிச்சார். ‘நாடோடிகள்’ படத்தில் நடிக்கத் தேர்வானேன்.\nஎன்னோட பயிற்சியாளர் தாம்சன் சொன் னபடி ‘பாசிட்டிவ்’ படத் துக்குப் பிறகு, ‘நாடோ டிகள்’ படத்துக்காக 10 கிலோ எடை குறைச் சேன். இப்போ, 12 கிலோ எடை குறைச்சிருக்கேன். எப்பிடி?” என்று புருவ ங்களை மட்டும் பாலே ஆடவைத்து விசாரிப் பவர், அதற் காகத் தான் மேற்கொண்ட வழிமுறைகளைப் பட்டியல் இட்டார்.\n”நொறுக்குத் தீனிகளுக்குத் தடா போட்டதுதான் முதலும் முக்கிய\nமுமான காரணம். அதோட ஜிம், யோகான்னு ரொம்ப வரு ஷம் சொகுசா இருந்த உட ம்பைப் படுத்தி எடுத்துட்டேன். ஆனா, நானே எதிர்பார்க்காத அளவுக்கு வெயிட் குறை ஞ்சது எனக்கே ஆச்சர்ய மான விஷயம்!” என்கிறார் ஜிம்முக்குள் நுழைந்தபடியே.\n”ஜிம்ல எல்லாப் பயிற்சிகளையும் பண்ணுவேன். ஒவ்வொரு\nநாளும் வெவ்வேறு விதமான பயிற்சிகள் பண்ணுவதால், சீக் கிரம் டயர்ட் ஆக மாட்டே ன். ஷூட்டிங் இல்லாத நாட் களில், அதி காலை சூரிய நமஸ் காரம் நிச்சயம். நல்லா சாப்பிடுற காலத் தில்கூட நான் இவ்வளவு பயிற்சிகள் பண்ணியது இல்லை. ‘நீச்சல் கத்துக்கிட்டா, உடம்பை எப் பவுமே ஸ்லிம்மா வெச்சு க்கலாம்’னு அம்மாவும் அப்பாவும் சொல்றாங்க. அவங்க ரெண்டு பேருக்குமே நீச்சல் தெரியும். ஆனா, எனக்குத் தண்ணி ன்னா பயம். இப்போ தான் பயம் விலகி… கத்துட்டு இருக்கேன். நிஜத் திலும் நான் ‘நாடோடிகள்’ நல்லம்மா மாதிரிதான்.\nஏதாவது நொறுக்குத் தீனியை அரைச்சுக்கிட்டே இருப்பேன்.\nஆனா, இப்போ ரெண்டு வரு ஷமா எண்ணெய்ப் பதார்த்த ங்களை அடியோடு நிறுத் திட்டேன். கொழுப்பு மிகுந்த எந்த உணவுக்கும் என் மெனு வில் இடம் இல்லை. அதே மாதிரி, டயட் இருக் கணு ம்னு முடிவு பண்ணதுமே, நான் செஞ்ச முதல் வேலை, அரிசிச் சாப்பாட்டை நிறுத் திய துதான். சாதத்தைத் தொட்டு ஒரு வருஷத்துக்கு மேல் ஆச்சு. காலையில் பழங்கள், மதியம் அரிசி தவி ர்த்த உணவுகள், ராத்திரி பச் சைக் காய்கறிகள் அல்லது ஜூஸ்னு ரொம்ப சிம்பிள் மெனு. உணவு வி ஷயத்தில் கட்டு ப்பாடா இருந் தாலே, உடம்பு ஒழுங்குக்கு வந்துடும். ‘பசியோடு உட்கார்ந்து பசி யோடு எழணும்’கிறது உடம்பைக் குறைக்க நினைக்கிற வங்க நல்லா மனசுல ஏத்திக்க வேண்டிய விஷயம்!”\n”நேரம் கிடைக்கிறப்ப, பியூட்டி பார்லர் போவேன். முகத்தை அடிக்\nகடி தண்ணி யில் கழுவுவேன். வித விதமான க்ரீ ம் களைப் பயன் படு த்த மாட்டேன். ஷூ ட்டிங் இல்லா த நாட்களில் தேங் காய் எண் ணெயை முகத் தில் தடவி கொஞ்ச நேரம் கழி ச்சுக் கழுவு வேன். முகத்தைப் பொறுத்தமட்டில், எண்ணெய் பிசுபிசுப்பும் இரு க்கக் கூடாது. அதே நேரம், வறட்சியாகவும் இருக்கக் கூடா து. காயாவும் இல்லாம, பழமாவும் இல்லாத பப்பாளியை அரைவெட்டுக் காய்னு சொல் வாங்க. நம்ம முகம் அந்த மாதிரி தான் இருக்கணும்!”\nநேற்று பப்ளிமாஸ்… இப்போ பப்பாளிமாஸா?!\nPosted in அழகு குறிப்பு, உடற்பயிற்சி செய்ய‍, சினிமா செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nTagged Actress, Ananya, Fitness, gym, Tamil language, ஃபிட்னெஸ், அனன்யா, சீடை, நல்லம்மாவை மனசு மறக்குமா?, நாடோடிகள், முறுக்கு, வடை\nPrevபாகிஸ்தானிலும் சாகும் வரை உண்ணாவிரதம் : ஹசாரேவின் உண்ணாவிரதத்தால் ஈர்க்கப்பட்ட பாகிஸ்தானி அறிவிப்பு\nNextபுத்திசாலி தவளையும் முட்டாள் தவளையும்
அமெரிக்காவில் தொப்பியுடன் திரியும் புறாக்கள் | Virakesari.lk\nPublished by T. Saranya on 2019-12-11 14:43:17\nஅமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் சிறிய கௌபோய் தொப்பி அணிந்த புறாக்கள் பறந்து திரிகின்றன. இதனை சிலர் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.\nடிராபிகானா அவென்யூ மற்றும் மேரிலேண்ட் பகுதிகளில் காணப்படும் சில புறாக்கள் சிவப்பு நிறத்தில் குட்டி தொப்பியை அணிந்துள்ளன.\nஇதுகுறித்து லாஸ் வேகாஸ் நகரைச் சேர்ந்த புறாக்கள் மீட்பு ஆர்வலர் கூறுகையில் ‘தொப்பி அணிந்த புறாக்களை பார்க்க முதலில் அழகாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ஆனால் அவற்றின் தலையில் எவ்வாறு தொப்பி வந்தது? அதற்கான காரணம் என்ன? போன்ற கேள்விகள் எழுந்தன.\nஅந்த தொப்பிகள் புறாக்களின் தலையில் பசை மூலம் ஒட்டப்பட்டிருந்தால் அவை துன்புறுத்தப்பட்டிருக்கலாம். இதை யார் செய்திருப்பார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இதே போன்ற புறாக்கள் எங்கு தென்பட்டாலும் எங்களை தொடர்பு கொள்ளுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்’ என தெரிவித்தார்.\nஅமெரிக்கா தொப்பி புறாக்கள் Pigeons Cowboy Hats\n2020-01-08 16:26:23 அமெரிக்கா சோளம் corn\nதாக்கப்பட்ட பல்கலைகழக மாணவர்களிற்கு ஆதரவு வெளியிட்ட தீபிகா படுகோன்-டுவிட்டரில் பாராட்டுகள்\nபலர் இது துணிச்சலான நடவடிக்கை என தீபிகா படுகோனிற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்\n2020-01-08 15:38:55 தீபிகா படுகோன்
e-Gulden இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் e-Gulden மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\ne-Gulden இன் இன்றைய சந்தை மூலதனம் 1 850 183 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\n+733 823 $ (+65.73%)\nவழங்கப்பட்ட அனைத்து e-Gulden கிரிப்டோ நாணயங்களின் மொத்த அளவு காட்டப்பட்டுள்ளது. கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சந்தைகளில் கிரிப்டோகரன்சி e-Gulden இன் வர்த்தகத்தின் அடிப்படையில், e-Gulden இன் மூலதனத்தை நீங்கள் மதிப்பீடு செய்யலாம். e-Gulden எங்கள் வலைத்தளத்தில் இன்றைய குறிப்புக்கான மூலதனமாக்கல். e-Gulden capitalization = 1 850 183 US டாலர்கள்.\nவணிகத்தின் e-Gulden அளவு\nஇன்று e-Gulden வர்த்தகத்தின் அளவு 1 663 அமெரிக்க டாலர்கள் .\n+1 663 $ (+0%)\ne-Gulden வர்த்தக அளவுகள் இன்று = 1 663 அமெரிக்க டாலர்கள். e-Gulden வர்த்தகம் பல்வேறு கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நடைபெறுகிறது. e-Gulden உண்மையான நேரத்தில் பல கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் வர்த்தகம் நடைபெறுகிறது, e-Gulden இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறோம். e-Gulden அமெரிக்க டாலர்களில் ஒரு நாளைக்கு மூலதனம் வளர்ந்து வருகிறது.\ne-Gulden சந்தை தொப்பி விளக்கப்படம்\nவாரத்தில், e-Gulden மூலதனமாக்கல் 72.55% ஆல் மாற்றப்பட்டுள்ளது. 0% மாதத்திற்கு - e-Gulden இன் சந்தை மூலதனத்தில் மாற்றம். e-Gulden ஆண்டிற்கான மூலதன மாற்றம் 98.82%. இன்று, e-Gulden மூலதனம் 1 850 183 அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.\ne-Gulden மூலதன வரலாறு\ne-Gulden இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான e-Gulden கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\n25/03/2020 1 850 183 $\n05/12/2019 1 116 360 $\n04/12/2019 1 109 666 $\n03/12/2019 1 132 348 $\n01/12/2019 1 083 918 $\n30/11/2019 1 060 612 $\n29/11/2019 1 072 248 $\ne-Gulden தொகுதி விளக்கப்படம்\ne-Gulden தொகுதி வரலாறு தரவு\ne-Gulden வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை e-Gulden க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\n25/03/2020 1 663 $\ne-Gulden அமெரிக்க டாலர்களில் மூலதனம் இப்போது 25/03/2020. 05/12/2019 இல் e-Gulden இன் சந்தை மூலதனம் 1 116 360 அமெரிக்க டாலர்கள். 04/12/2019 e-Gulden மூலதனம் 1 109 666 அமெரிக்க டாலர்கள். e-Gulden மூலதனம் 1 132 348 03/12/2019 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம்.\n01/12/2019 e-Gulden மூலதனம் 1 083 918 அமெரிக்க டாலர்கள். e-Gulden மூலதனம் 1 060 612 30/11/2019 இல் அமெரிக்க டாலர்களுக்கு சமம். 29/11/2019 e-Gulden மூலதனம் 1 072 248 அமெரிக்க டாலர்கள்.
ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மஸ்டாங் காருக்கு நேர்ந்த கோரம்... பணத்திற்காக நடத்தப்பட்ட வேட்டையா...? அதிர்ச்சி தகவல்! - Tamil DriveSpark\nUpdated: Monday, July 29, 2019, 20:56 [IST]\nஅசாம் மாநிலத்தின் முதல் மஸ்டாங் என அழைக்கப்பட்ட கார், கோர விபத்தைச் சந்தித்துள்ளது. இந்த விபத்துகுறித்து பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்தியாவில் தற்போது மழைக் காலம் ஆரம்பித்துள்ளது. இதுபோன்ற, காலத்தில் பயணம் மேற்கொள்வது மகிழ்ச்சியான பயண அனுபவத்தை வழங்கினால், சற்று கவனத்துடன் செல்ல வேண்டியது அவசியமாக இருக்கின்றது. ஏனென்றால், மழைக் கால பயணமானது, சற்று கவனம் சிதறினாலும், மிகப் பெரிய பின்விளைவுகளில் நம்மை சிக்க வைத்துவிடும்.\nஇந்நிலையில், இத்தகைய ஆபத்தான சூழலில்தான் ஃபோர்டு நிறுவனத்தின் விலையுயர்ந்த மஸ்டாங் கார் ஒன்று சிக்கியுள்ளது. இந்த கார், ஆன் ரோடில், ரூ. 80 லட்சத்திற்கும் அதிகமான விலையில் இந்தியாவில் விற்பனையாகி வருகின்றது.\nதற்போது, விபத்தில் சிக்கியிருக்கும் மஸ்டாங் கார்தான், அசாம் மாநிலத்தின் முதல் மஸ்டாங் என கூறப்படுகின்றது. இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை. அதேசமயம், அசாம் மாநிலத்தில் ஃபோர்டு மஸ்டாங் காருக்கான டீலர்ஷிப் இன்னும் தொடங்கப்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றன. இதன்காரணமாகவே, விபத்தில் சிக்கியிருக்கும் மஸ்டாங் அம்மாநிலத்தின் முதல் மாடல் என கூறப்படுகின்றது.\nஇந்த மஸ்டாங் காரை அதன் உரிமையாளர் உத்தரபிரேதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கவுதம் புத் ஃபோர்டு டீலர் மூலம் வாங்கியுள்ளார். இன்னும் பதிவெண் பெறப்படாதநிலையில், அந்த காரை அதன் உரிமையாளர், தற்காலிக பதிவெண் கொண்டு இயக்கி வந்துள்ளார்.\nஇந்த கார் சில நாட்களுக்கு முன்பு வாங்கியதை உறுதி செய்யும் வகையில், ஃபோர்டு மஸ்டாங் கார்குறித்த குறித்த வீடியோவை கவுஹாத்தி டைம்ஸ் என்ற ஆங்கில செய்தி தளம் தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தது.\nஇந்நிலையில், இந்த கார் இந்த வாரத்தின் ஆரம்பத்தில் விபத்து ஒன்றில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு, இந்த கார் ஷில்லாங் செல்லும் வழியான அசாம் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் விபத்தைச் சந்தித்துள்ளது.\nஇந்த விபத்தானது, மழை பொழிவின்போது ஏற்பட்ட மண் சரிவின்மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாருக்கும் எந்தவிதமான தீங்கும் நேரவில்லை என கூறப்படுகின்றது.\nகார் விபத்திற்குள்ளான புகைப்படத்தை தி ஷில்லாங் கேங் என்ற பேஸ்புக் பக்கம் வெளியிட்டுள்ளது.\nமேலும், இந்த கார் விபத்தில் சிக்க மற்றுமொரு காரணமும் கூறப்படுகின்றது. அந்தவகையில், கவுகாத்தி உள்ள சில சமூக விரோதிகள் பணத்திற்காக, சாலையில் எண்ணெய்யை ஊற்றிவிடுவதாகவும், அந்த எண்ணெய்யால் விபத்தைச் சந்திக்கும் கார்களை மீட்டு கொடுக்க ரூ.5ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்வதாக தகவல் தெரிவிக்கின்றன.\nபொதுவாக, மழைக் காலத்தில் வாகனங்களை சாலையில் இயக்குவது என்பது மிகவும் சவாலான ஒன்று. அதிலும், அசாம், கவுஹாத்தி போன்ற மலைப் பகுதிகளில் பயணிப்பது என்பது மிகவும் ஆபத்தானது. இங்கு மழை மற்றும் குளிர் காலங்களில் எதிர்புறத்தில் வரும் வாகனங்களை மறைக்கின்ற அளவிற்கு மூடு பனியும், மழையின் வேகமும் இருக்கும்.\nஇத்தகைய சூழலில் சமூக விரோதிகள் சிலரின் இந்த ஆபத்தான செயலால், அது மேலும் ஆபத்து நிறைந்ததாக மாறிவிடுகின்றது.\nதற்போது, விபத்தில் சிக்கிய ஃபோர்டு மஸ்டாங் கார், இதுபோன்ற சமூக விரோதிகளின் வலையில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகின்றது. இருப்பினும், இதுகுறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் வெளியாகவில்லை. மேலும், சம்பவம் குறித்த வழக்கு பதிவு செய்த போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nFord Mustang Crash In Assam Days After Delivery. Read In Tamil.
விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன்.! | Samsung Galaxy A02 May Launching Soon in India - Tamil Gizbot\n| Updated: Thursday, June 17, 2021, 18:06 [IST]\nசாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான்\nசாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் Infinity-V டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் 1560 x 720 பிக்சல்கள் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.\nஇந்த புதிய ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.\nசாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.\nஇந்த புதிய கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் எம்டி6739 குவாட்-கோர் எஸ்ஒசி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.\nசாம்சங் கேலக்ஸி ஏ02 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்காது. மேலும் 7.75 வாட் சார்ஜிங் ஆதரவு,கைரேகை சென்சார் வசதி உட்பட பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.\n4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.1, 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய கேலக்ஸி ஏ02 மாடல். குறிப்பாக இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்.\nஅதேபோல் சாம்சங் இந்த ஆண்டு பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மற்ற நிறுவனங்களை விட தனித்துவமான அம்சங்களை கொண்டு சாம்சங் ஸ்மார்ட்போன்கள் வெளிவருவதால் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.\nSamsung Galaxy A02 May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
மக்களையே மறந்து ஜனாதிபதி செயற்படுகின்றார்! | Mukadu\nமக்களையே மறந்து ஜனாதிபதி செயற்படுகின்றார்!\nPosted by editor2 on December 13, 2018 at 10:41 am\nஇலங்கை நாட்டு மக்களையே மறந்து செயற்படுகின்ற ஜனாதிபதி தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையில் அக்கறை செலுத்துவார் என்று ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.\nஇரவோடு இரவாக பெருந்தோட்ட கம்பனி உரிமையார்களை பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதி முன்வைத்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை. சில வேளை அதற்காக ஒரு வர்த்தமாணி அறிவித்தலை கூட வெளியிடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் கூட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற பெருந்தோட்ட கம்பனிகள் தங்களுடைய பொறுப்பில் இருந்து வெளியேற முடியாது. அது அவர்கள் தொழிலாளர்களுக்கு செய்கின்ற மாபெரும் துரோகம் என அவர் தெரிவித்துள்ளார்.\nஇன்று (13) அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகுறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக முக்கிய பங்கு வகிப்பது பெருந்தோட்ட கம்பனிகள்.\nஎனவே அவர்கள் ஒருபோதும் அதில் இருந்து வெளியேற முடியாது. அவர்களுக்கு ஒரு பெரிய பொறுப்பு இருக்கின்றது. ஏனென்றால் கடந்த பல வருடங்களாக தோட்டங்களின் இலாபங்களை முழுமையாக பெற்றுக் கொண்டு தோட்டங்களை காடுகளாக்கியது மட்டுமல்லாமல் தோட்டங்களில் இருந்த மதிப்புமிக்க மரங்களை எல்லாம் வெட்டி விற்பனை செய்துவிட்டு தோட்ட தொழிலாளர்களுக்கு முறையான சம்பள உயர்வை வழங்காமல் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இவ்வாறு தொழிலார்களை மோசமான நிலைமைக்கு இட்டுச் சென்று மக்களை சீரடிக்கின்ற நிலையை பெருந்தோட்ட கம்பனிகள் உருவாக்கி வருகின்றன.\nதோழிலாளர்கள் தங்களுடைய உயிரை பணயம் வைத்து தொழில் செய்கின்றார்கள். ஆனால் அவர்களுடைய எந்த ஒரு விடயத்திலும் அக்கறை செலுத்துவதில்லை.\nகுளவி கொட்டினாலோ அல்லது வேறு அனர்த்தங்கள் நடந்தாலோ பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைகளுக்கு எடுத்து செய்வதற்கு வாகன வசதிகள் கூட செய்து கொடுப்பதில்லை.\nஆனால் தொழிலாளர்கள் பறிக்கின்ற கொழுந்தின் மூலமாகவே தங்களுடைய அனைத்து சுகபோகங்களையும் அனுபவித்து வருகின்றார்கள். எனவே தொழிலாளர்களை பாதுகாக்கின்ற பொறுப்பு பெருந்தோட்ட கம்பனிகளுக்கு இருக்கின்றது.\nவேலை நிறுத்த போராட்டம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் இருந்த தொழிலாளர்கள் இன்று அந்த தோல்வியின் காரணமாக செய்வதறியாது இருக்கின்றார்கள்.\nஇன்றும் கூட ஒரு சில தோட்டங்களில் வேலைக்கு செல்வதும் ஒரு சில தோட்டங்கள் வேலை நிறுத்தத்தில் தொடர்ந்து இடுபடுவதும் என தொழிலாளர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து செயற்படுகின்றார்கள்.\nபணி பகிஸ்கரிப்பிற்கு அழைப்பு விடுத்த தொழிற்சங்கங்கள் அனைத்து தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடி ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தால் அது வெற்றிபெற்றிருக்கும் அல்லது நேரடியாகவே தோட்ட தொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களுடைய கருத்துக்களை கேட்டறிந்து கொண்டு அவர்கள் எதிர்பார்க்கின்ற தொகை எது என்பதை கேட்டறிந்து அதற்கேற்ப பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தொகைக்கு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டிருக்கலாம்.\nஇன்றைய நிலையில் அடுத்த மாதம் சம்பளம் நிலுவைத் தொகை இவை அனைத்தும் கேள்விக்குறியாக மாறியிருப்பதாகவும் அவர் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.\nரணில் – சம்பந்தன் உடன்படிக்கை போலியானது!
பொய்க் குதிரை - Poik kuthirai - புதுமைப்பித்தன் நூல்கள் - Puthumaippiththan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com\n"வாழ்க்கையே பிடிப்பற்றது; வாழ்வாவது மாயம்!" என்றெல்லாம் நினைவு ஓடிக்கொண்டிருந்தது விசுவத்திற்கு; ஏனென்றால், அன்று ஆபீஸில் அவனுக்கும் சம்பளம் போடவில்லை. வீட்டிலே சாமான் கிடையாது; வாடகைக்காரன் நெருக்குகிறான். மனைவி கமலத்தின் துயரந்தேங்கிய முகம் அவன் மனக்கண் முன்பு நின்றது.\nஜனங்கள் ஏகபோகமாக, இரைச்சலாக இடித்துத் தள்ளிக் கொண்டு செல்லுகிறார்கள். ஏதோ பிரக்ஞையற்றவன் போல் நடக்கிறான், வழிவிட்டுக் கொள்ளுகிறான், நடக்கிறான் - எல்லாம் பிரக்ஞையற்று.\nரஸ்தாவில் ஒரு திருப்பம்; சற்று இருள் படர்ந்த வெளிச்சம்; பாதசாரித் திண்ணையிலே, அல்ல அதன் கீழே ஓர் ஓலைப் பாயின் சுருள்; எதேச்சையாகக் கண்கள் அதன்மீது படிகின்றன. ஓலைப் பாய்ச் சுருளா! ஓர் ஏழைக் குழந்தையின் தொட்டில்; சுருட்டிய பாயில் குழந்தை சுகமாக உறங்கியது. உறக்கமா? சீச்சி, என்ன நினைப்பு! அதன் தாயின் கஷ்டம் என்னவோ! கமலத்திற்கு ஒரு குழந்தை இருந்தால்... நினைப்பில் என்ன குதூகலம்...!\nஇந்த உற்சாகம் மற்றக் கவலைகளை மறக்கடிக்கிறது. அன்று டிராமிற்குக்கூடச் செலவழிக்காமல் கொண்டு செல்லும் அந்த ஓரணாவை வைத்துக்கொண்டு...\nகமலா, பாவம் தனியாகக் கொட்டுகொட்டென்று உட்கார்ந்திருப்பாள். நவராத்திரிக் கொலு வைக்கக் கூடாத... என்ன ஜன்மம்... என்ன பிழைப்பு... அவளுக்கு அந்தச் சிறு சந்தோஷத்தையாவது கொடுக்க முடியாத பேடி...\nபுஷ்பம்! நல்ல முல்லை, மலரும் பருவம் - கம்மென்ற வாசனை! கமலாவின் தலையில் வைத்தால் அவள் முகத்தில் வரும் புன்சிரிப்பாவது பசியை ஆற்றுமே!\nஉடனே கூடைக்காரியிடம் வேறு யோசனையில்லாது புஷ்பத்தை வாங்கிவிடுகிறான். வழி நெடுக அவள் புன்சிரிப்புத்தான்... அவன் உதட்டில் ஒரு புன்சிரிப்பு...\n"யாரது! நீங்களா?" என்று கதவைத் திறக்கிறாள் கமலம். வீடு என்ற ஹோதாவில் இருக்கும் காற்றற்ற சிறு அறையில் மேஜையிலே மங்கிய விளக்கு, துணிமணி சிதறிய கொடி, சுவரோரம் பூராவும் டிரங்குப் பெட்டியும், தட்டுமுட்டுச் சாமான்களும், படுக்கையும்.\n"கமலா! உனக்கு ஒன்று கொண்டுவந்திருக்கிறேன். என்ன, சொல் பார்ப்போம்!" என்றுகொண்டே கொடிப்பக்கம் திரும்பிச் சட்டையைக் கழற்றினான்.\nவிசுவம் அதைக் கவனிக்கவில்லை. அவசர அவசரமாக, "கமலா, இன்று சம்பளம் போடவில்லை. அதற்கென்ன நாளை போடுவார்கள். நான் உனக்கு என்ன கொண்டுவந்திருக்கிறேன், தெரியுமா?" என்றான். குரல், அவன் மனத்திலிருந்த கஷ்டத்தைப் பொருட்படுத்தாத மாதிரி பாவனை செய்து தேற்றியது.\n"என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள்?" என்று தளர்ந்த குரலில் கேட்டாள்.\n"இதோ பார்!" என்று அவள் பின்புறமிருந்துகொண்டு, அவளுக்குச் சிரிக்கும் முல்லையைக் காண்பித்துவிட்டு, அவள் தலையில் சூட்டி, அவள் தோள்களைப் பிடித்து உடலைத் திருப்பிய வண்ணம் முத்தமிட எத்தனித்தான்.\n"அசடே! அசடே! இன்றைக்கு இல்லாவிட்டால் நாளைக்கு வருகிறது. அதற்காக அழுவாளோ! மண்டூகம்!" என்றான் விசுவம்.\n"அதற்காக இல்லை!" என்றாள் கமலம். அவள் கண்கள் அவன் கண்களைச் சந்தித்தன. கண்களிலே ஒரு பரிதாபம், ஏக்கம், மகிழ்ச்சி கலந்திருந்தது.\n"தோணித்து; அழுதேன். என்னமோ அப்படி வந்தது!" என்று அவன் அதரத்தில் முத்தமிட்டாள். முத்தம் அந்த மலர்ந்த முல்லையின் ஸ்பரிசம் போலும், கனவின் நிலவு போலும் மென்மையாக இருந்தது.\nவிசுவம் அவளை அணைத்து, முகத்திலும் அதரத்திலும் முத்தமிட்டான். சோர்ந்தவள் போல் அவன் தோள்களில் சாய்ந்த அவள் மெதுவாகக் கையை நீக்கி விலக்கிவிட்டு, "சாயங்காலம் உங்கள் நண்பர் அம்பியும், லட்சுமியும் வந்திருந்தார்கள்" என்றாள்.\n"இன்றைக்குக் கொலுவுக்கு என்னைக் கூப்பிட வந்தாள். உங்களையும் நேரே வந்து அழைக்க அவரும் வந்திருந்தார். கட்டாயம் வரவேண்டுமாம்!"\n"கொலுவில் நான் எதற்கு?" என்று சிரித்தான் விசுவம்.\n"அதுமட்டுமில்லையாம், இன்னிக்கு ஒரு விருந்தாம். எல்லா நண்பர்களையும் கூப்பிட்டிருக்காளாம். அவசியம் வரணும் என்று சொன்னார்கள்!" என்றாள் கமலம்.\n"கமலா, நீயும் புறப்பட்டேன், போகலாம்" என்றான்.\n"சீ, அசடு! முகத்தைக் கழுவிவிட்டு அந்தச் சுதேசிப் புடவை வாங்கினோமே - அதுதான் வெளுப்பாகி வந்திருக்கிறதே! - அதை எடுத்துக் கட்டிக்கொள். நானும் புறப்படுகிறேன்" என்று துரிதப் படுத்தினான் விசுவம்.\n"கமலா! இங்கே வா!" என்று அவளை மடிமீதிருத்திக் கொண்டு, "கண்ணாடியில் பார்!" என்று சிரித்தான்.\n"போங்கள், உடை கசங்கிவிட்டால்?..." என்று எழுந்திருக்க முயன்றாள். அவள் எவ்வளவு விடுவித்துக்கொள்ள முயன்றும் அவன் அவள் அதரங்களை முத்தமிட்டு விட்டான்.\n"பாருங்கோ! கசங்கிவிட்டதே!" என்றாள் கமலம்.\n"அதோ, கமலா வந்துவிட்டாள்!" என்று எழுந்து ஓடினாள் லட்சுமி.\n"வாருங்கோ!" என்று சிரித்துக்கொண்டு கமலத்தின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு உள்ளே செல்ல முயன்றான்.\n"அம்பி எங்கே?" என்றான் விசுவம்.\n"அவர் மச்சில்லே இருக்கார்!" என்று கூறிவிட்டு உள்ளே இழுத்துச் சென்றுவிட்டாள் லட்சுமி.\n"அதார் விசுவமா? வாடா! ஏண்டா இவ்வளவு நேரம்? யூஸ்லெஸ் பெல்லோ! அப்படி என்ன ஆபீஸ் கேடு? வா உயர!" என்று கத்தினான் அம்பி.\nமெத்தை வராந்தாவில் நாலைந்து நாற்காலிகளிடையே பெரிய ஜமக்காளம் விரிக்கப்பட்டிருந்தது. இரண்டிலும் நண்பர்கள் உட்கார்ந்துகொண்டிருந்தனர். அம்பி மட்டும் ஒரு குழந்தையைத் தோளில் சாத்தியவண்ணம் நடந்துகொண்டு அத்துடன் விளையாடிக் கொண்டிருந்தான். விசுவம் உயர வந்ததும், "அந்தப் பயலை இங்கு கொண்டு வா!" என்றவண்ணம் நெருங்கினான்.\n"அடே, திரும்பிப் பாரடா, விஸ்வ மாமா வந்திருக்கார்! அழலாமோ? பிஸ்கோத்து வாங்கித் தருவார். அன்னிக்கித் தரலே! ஏண்டா வாங்கித் தருவாயோ இல்லையோடா?" என்று குழந்தையைச் சமாதானப்படுத்தினான்.\n"மாமா, பிஸ்கோத்து!" என்றது குழந்தை.\nஅதற்குள் கீழேயிருந்து வீணையின் தொனி கேட்க ஆரம்பித்தது. பிறகு கமலத்தின் குரல் - 'சாந்தமுலேக' என்ற தியாகராஜ கீர்த்தனம்.\n"அடே, உன் 'ஒய்ப்' (மனைவி) பாடுகிறாள்டா! கேளு!" என்று கத்திக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தான் அம்பி.\nதிடீரென்று பாட்டு பாதியில் நின்றது. "அம்மாமி கொஞ்சம் ஜலம்" என்ற தனது மனைவியின் குரல் விசுவத்தின் காதில் மட்டும் விழுந்தது. மத்தியானம் என்ன சாப்பிட்டாளோ?\n"டேய் விசுவம்! நீ அந்தக் கீர்த்தனத்தை முடி!" என்றான் அம்பி.\n"ஸார்! இந்தப் பயல் நல்லாப் பாடுவான் ஸார்! நீங்கதான் கேளுங்கோ! இல்லாவிட்டால் நான் பாட ஆரம்பித்துவிடுவேன்!" என்றான் அம்பி. அம்பியின் சங்கீத ஞானத்திலும் குரல் இனிமையிலும் அவன் நண்பர்களுக்கெல்லாம் பயம். ஏன்? கேட்கத் துர்ப்பாக்கியம் பெற்ற எல்லோருக்கும் அப்படித்தான்.\nவிசுவம் அந்தக் கீர்த்தனத்தை எடுத்துப் பாட ஆரம்பித்தான். அதைக் கீழேயிருந்த பெண்கள் கேட்டுவிட்டார்கள். உடனே கமலத்தை, 'இன்னொரு பாட்டு, இன்னொரு பாட்டு' என்றார்கள். அம்பியும் இவனைச் சும்மா விடவில்லை. கமலம் தனது கணவர் குரலைக் கேட்டவுடன், அவர் மனத்திற்குச் சாந்தியும் சந்தோஷமும் அளிக்கிறதென்று, இவர்களுக்காக அல்லாமல் அவருக்காகப் பாடினாள். எப்படியிருந்தாலும் மனித தேகந்தானே! ஆனால், களைப்பைக் காண்பிக்கவும் முடியவில்லை. மரியாதைக் குறைவல்லவா?\nஅம்பி கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, "நேரமாகிவிட்டதே! எனக்காக இல்லாவிட்டாலும் உன் நண்பர்களுக்காகவாவது கொஞ்சம் போஜனத்தைப் பற்றிக் கிருபை செய்யக் கூடாதா?" என்றான்.\n"கமலா! நீ நெய்யைப் பரிமாறு. நான் பப்படத்தைப் போடுகிறேன்!" என்றாள் லட்சுமி.\n"நான் எதற்கு?" என்றாள் கமலம்.\n"இதென்ன கூச்சம்! எடுத்துக்கொண்டு..." என்று அவள் கையில் நெய்க் கிண்ணத்தைக் கொடுத்துவிட்டு, பப்படத்தை எடுத்துக் கொண்டுவர உள்கட்டிற்குச் சென்றாள் லட்சுமி.\nஅம்பி உடனே சிரித்துக்கொண்டு, "ஊரார் வீட்டு நெய்யே! பெண்டாட்டி கையே" என்று பாட ஆரம்பித்தான்.\n"அந்தப் பழமொழி பொய்த்துப் போகாமல் ஊற்றுங்கள்!" என்று உரக்கச் சிரித்தான்.\n"என்னடா விசுவம். சுத்த அசடனாக இருக்கிறாய்! அவளுக்கு ஏதாவது டோ லக் கீலக் வாங்கக் கூடாதா? லட்சுமி போட்டிருக்கிறாள் பார்த்தாயா? அவள் முகத்திற்குச் சரியாக இருக்கும். ஏண்டி, நீ அந்தப் புடவை என்னமோ வாங்கினாயே, அதை அவாளிடம் காண்பி!" என்று அடித்து வெளுத்துக்கொண்டு போனான் அம்பி.\n"வாங்க வேண்டும் என்றுதான் உத்தேசித்திருக்கிறேன்" என்றான் அம்பி.\nவிசுவத்தின் வீட்டில் மங்கிய விளக்கு. அவன் படுக்கையில் சாய்ந்திருக்கிறான். பக்கத்தில் கமலம் உட்கார்ந்திருக்கிறாள். வெற்றிலையை மடித்துக் கொடுத்தவள், அவன் முகத்தைப் பார்த்ததும் 'கோ!'வென்று கதறிக்கொண்டு அவன் மார்பில் முகத்தை மறைத்துக் கொண்டாள். சிறைப்பட்ட துக்கம் பீரிட்டுக் கொண்டு வருவது போல் இருந்தது.\n"சீ, அசடு! ஏன் அழுகிறாய்! அம்பி ஒரு அசட்டுப் பயல். அவன் வார்த்தைக்கு ஒரு மதிப்பு வைக்கலாமா? உலகம் தெரியாமல், குடி முழுகிப் போன மாதிரி... அசடு!... அசடு!" என்று தேற்றினான்.\n"அதற்கல்ல..." என்றாள் கமலா.\n"பின் என்னவோ துக்கம்!"\n"இன்றைக்கு மனசே ஒரு நெலை கொள்ளல்லெ!"\n"சீ! நான் செய்தது முட்டாள்தனம்! கமலா!" என்று அவள் அதரத்தில் முத்தமிட்டான். கண்ணீரின் ருசி உப்பு மட்டும் கரிக்கவில்லை.\n'ஆறு கதைகள்', தொகுப்பு -1941
தலைவலி குறைய சில டிப்ஸ் --- கை மருந்துகள், | பெட்டகம்\nகற்பூரவல்லி இலையை சுத்தம் செய்து இடித்துச் சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றுடன் நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்க...\nமிளகாய், மிளகு ஆகியவற்றை எடுத்து இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியை இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடித்து அதனுடன் பால், நல்லெண்ணெய் கலந்து பதமாய் காய்ச்சி ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளித்து வரவேண்டும்.எவ்விதமான தலைவலியும் குறையும்.\nசுக்கை தோல் நீக்கி கொள்ளவும். தோல் நீக்கிய சுக்கை நன்றாக இடித்து கொள்ளவும். ஒரு மண் பாத்திரத்தில் 1 லிட்டர் தூய நீர் விட்டு கொதிக்க விட்டு சுக்கு தூளை கொட்டி மூடி5நிமிடங்கள் கழித்து கற்பூரத்தை போட்டு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். இந்த சுக்கு நீரை இளஞ்சூட்டில் தலை, முகம் ஆகியவற்றை கால, மாலை என தொடர்ந்து கழுவி வந்தால் தலைவலி குறையும்.\n10 கிராம் அளவு சுக்கை எடுத்து தோல் நீக்கி இடித்து கொள்ளவும். சம அளவு கருந்துளசி எடுத்து நன்றாக அரைத்து கொள்ளவும். ஒரு மண் பாத்திரத்தில் அரை லிட்டர் தூய நீர் விட்டு பின் கொதிக்க வைத்து கொதி வந்ததும் சுக்கு தூளையும், கருந்துளசியையும் போட்டு மூடி வைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து இறக்கி தாங்கும் அளவு இளஞ்சூட்டுடன் முகத்தை காலை, மாலை3நாட்கள் கழுவி வந்தால் தலைக்கனம் குறையும்.\nகீழாநெல்லி இலை, வேலிப்பருத்தி இலை, குப்பைமேனி இலை ஆகியவற்றை பிழிந்து சம அளவு சாறு எடுத்து நல்லெண்ணெயில் கலந்து நன்றாக காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால் ஓயாத தலைவலி, சளி, மூக்கில் நீர் வடிதல் மற்றும் மூக்கடைப்பு ஆகியவை குறையும்.\nஅதிக காய்ச்சல் காரணமாக ஏற்படும் தலைவலி குறையும்.\nமகிழம் இலைகளை உலர்த்தி காய வைத்து பொடி செய்து தலைவலி ஏற்படும் போது இந்த பொடியை மூக்கால் முகர்ந்து பார்த்து வந்தால் தலைவலி குறையும்.\nகொடிவேலி வேர்ப்ப*ட்டையை அரைத்து ப*சும்பாலில் 21 நாள்க*ள் சாப்பிட்டு வ*ந்தால் த*லைப்பாரம் குறையும்.\nஐயம்பனா இலைகளை ஆமணக்கு எண்ணெயில் வாட்டி முன் நெற்றியில் வைத்து வந்தால் தலைவலி குறையும்.\nதேவையான அளவு மிளகை எடுத்து, பாலில் அரைத்து பசும்பாலுடன் கலக்கி சிறிதளவு தலையில் தடவி வைத்திருந்து பிறகு குளித்து வந்தால் தலைவலி குறையும்.\nகருஞ்செம்பைப் பூ, சிறிது கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி சேர்த்து காய்ச்சி இளஞ்சூட்டுடன் தலையில் வைத்து அரை மணி நேரம் கழித்து குளிக்க தீராத தலைவலி குறையும்.\nகடுகுத்தூள், அரிசிமாவு இவைகளை சரிபாதியாக எடுத்து வெந்நீர் கலந்து களிபோல் கிளறி அதை நெற்றியில் பற்றுப் போட த*லைவ*லி குறையும்.\nசெவ்வந்திப் பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்.\nநெல்லிக்காயை அரை லிட்டர் சாறு எடுத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து3நாள் வெயிலில் காயவைத்து பின் தேங்காய் எண்ணெயை சேர்த்து கொதிக்க வைத்து ஆவி பிடிக்க* தலைவலி குறையும்.\nதும்பைப் பூவையும், ஒரு மிளகையும் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி, தலைபாரம், நீர்க்கோர்வை குறையும்.\nத*லைவலிக்கு இஞ்சியைத் தட்டி வலியுள்ள இடத்தில் சிறிது தடவ தலைவலி குறையும்.\nவேப்பிலையோடு மிளகு, கற்பூரம் சேர்த்து அரைத்து நெற்றியில் பூசி வர தலை வலி குறையும்.\nஅகில் கட்டையைச் சிறி சிறு துண்டுகளாக நறுக்கி 300 கிராம் அளவு எடுத்து2லிட்டர் தண்ணீரில் போட்டு ஒரு லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி ஆற வைத்து,ஒரு லிட்டர் பசும்பால், ஒரு லிட்டர் நல்லெண்ணெய் சேர்த்து மீண்டும் காய்ச்சி சுண்டும் நேரம் அதிமதுரம் தூள் 30 கிராம், தான்றிக்காய் தூள் 30 கிராம் போட்டுப் பதமாகக் காய்ச்சி வடிகட்டி தடவி வந்தால் தலைவலி குறையும்.\nமுருங்கை இலைக் கொழுந்தை,தாய்ப்பால் விட்டரைத்து நெற்றியில் பற்றுப் போட தலைச்சுற்று குறையும்.\nகிராம்பை மைப்போல் அரைத்து அதனை வெற்றிலைச்சாறுடன் குழைத்து பற்றுப்போட தலை வலி குறையும்.\nசுக்கை அரைத்து நெற்றியிலும், சிறிது தலை உச்சியிலும் பற்றுப் போட்டு வந்தால் தலைக்கனம் குறையும்.\nதாளிசப்பத்திரி இலைகளை அரைத்து நெற்றிப் பொட்டில் பூசத் தலைவலி குறையும்.\nபனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனகற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தலைவலி குறையும்.\nநொச்சி இலைகளைத் தலையணை போல அடைத்து படுத்து வந்தால் தலைவலி குறையும்.\nஅதிக வேலை செய்வதால் மற்றும் அதிக வெப்பத்தால் அடிக்கடி வரும் தலைவலி குறையும்.\nமணத்தக்காளி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குறையும்.\nகொடிப்பசலைக் கீரையை நீரில் போட்டு அலசினால் கொழகொழப்பான திரவம் கிடைக்கும். இதை தலை, நெற்றியில் தடவ தலைவலி குறையும்.\nதுலுக்க சாமந்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குறையும்.\nபருப்புக் கீரை இலைகளை அரைத்து சாறு எடுத்து நெற்றியில் பூசி வந்தால் தலைவலி குறையும்.\nமலைவேம்பு இலைகளை நன்கு அரைத்து தலையில் பற்றுப்போட்டு வந்தால் தலை வலி குறையு\nநொச்சி இலைகளை எடுத்து அதனுடன் சுக்கு சேர்த்து அரைத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குறையும்.\nபுளியாரை இலைகளுடன் பூண்டு சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பூசினால் தலைவலி குறையும்.\nபித்தத்தால் எற்படும் தலைவலி குறையும்.\nஎலுமிச்சை, திராட்சை, முருங்கை, புதினா, துளசி, கேரட், பேரீட்சை, தேன், ஆரஞ்சு, மாதுளை, பூண்டு, வெங்காயம் இவைகளை சாறு எடுத்து குடித்திட அதிக வேலையினால் ஏற்படும் தலைவலி குறையும்.\nகைப்பிடி முருங்கை இலையுடன் நாலைந்து மிளகு சேர்த்து நன்கு அரைத்து நெற்றிப்பொட்டில் பூசினால் தலைவலி குறையும்.\nஆடாதோடை இலைகளை பிழிந்து சாறு எடுத்து,அரை லிட்டர் நல்லெண்ணெயில் கால் லிட்டர் சாறு சேர்த்து ,காய்ச்சித் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைவலி குறையும்.கண்கள் குளிர்ச்சி பெறும்.\nஆதண்டை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசிட தலைவலி குறையும்\nஆடாதோடை இலை, வேர்ப்பட்டை, கண்டங் கத்திரி, இவற்றை காயவைத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் தலைவலி, தொண்டைவலி, வறட்டு இருமல் போன்றவை குறையும்.\nதுளிர் இலைகளை அரைத்து உருட்டிக் காய வைக்கவும்.பின்பு அரை லிட்டர் நல்லெண்ணெயில் அந்த உருண்டையைப் போட்டு காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.வாரம் இருமுறை இந்த எண்ணெயைத் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் நல்ல தூக்கம் வரும்.தலை வலி குறையும்.\nகுப்பைமேனி இலைகளை பறித்து அவற்றை இடித்து சாறு பிழிந்து ,சுக்கு சிறிதளவு எடுத்து நன்றாக அரைத்து இரண்டையும் கலந்து தலையில் இரண்டு பக்கத்திலும் போட்டால் தலை வலி குறையும்.\nமஞ்சள், பூண்டு, இரண்டையும் தாய்ப்பால்விட்டு அரைத்து பற்று போட தலைவலி குறையும்.\nதினசரி 15 பச்சை திராட்சையை பகல் உணவுக்கு பின் சாப்பிட்டு வர தலைவலி வராமல் தடுக்கலாம்.\nஹெல்த் ஸ்பெஷல் 585972373378320290
'நம்பிக்கை அதானே எல்லாம்'- பில்லியன் டாலர் வர்த்தகத்தை நோக்கி முன்னேறும் 'கல்யாண் ஜுவல்லர்ஸ்'\n'நம்பிக்கை அதானே எல்லாம்'- பில்லியன் டாலர் வர்த்தகத்தை நோக்கி முன்னேறும் 'கல்யாண் ஜுவல்லர்ஸ்' YS TEAM TAMIL\nApril 29, 2016 0\t0\nகேரளாவின் திருச்சூரில், கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனர்களை சந்தித்து பேசும் போது, அவர்கள் நடைமுறை சார்ந்த உறுதியான முடிவுகள் மூலம் வர்த்தகத்தை வளரச் செய்துள்ள விதம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் புரியும். இந்த முடிவுகள் சனிக்கிழமைதோறும் நிறுவனர் டி.எஸ்.கல்யாணராமன் மற்றும் அவரது மகன்கள் ராஜேஷ் கல்யாணராமன், ரமேஷ் கல்யாணராமன் ஆகியோரால் மேற்கொள்ளப்படுகின்றன. தங்கள் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்தபடி வர்த்தக காரணிகள் மற்றும், விற்பனை நிலையங்களின் செயல்பாடு பற்றி விவாதிக்கின்றனர். அடுத்த ஐந்தாண்டுகளில் வர்த்தகத்தை ரூ.20,000 கோடி அளவுக்கு விரிவாக்கம் செய்வதற்கான வழிகள் பற்றியும் விவாதிக்கின்றனர்.அவர்கள் முடிவெடுக்கும் விதத்திற்கு இதோ இரு உதாரணம்: ஏழு ஆண்டுகளுக்கு முன் நிறுவனத்தை நவீனமயமாக்க விரும்பிய போது, இந்தியா முழுவதும் தங்கள் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு மென்பொருள் தான் சரியான தீர்வு என உணர்ந்தனர். இதற்காக கியுலிக் வியூ மற்றும் ஆரக்கில் நிறுவனங்களை தொடர்பு கொண்டு தங்களுக்கான பிரத்யேக மென்பொருள் தீர்வை உருவாக்கக் கோரினர். பெரும்பாலான குடும்ப நிறுவனங்கள், குறிப்பிட்ட நிலையை எட்டியதும் வர்த்தக அந்தஸ்த்திற்காக தொழில்நுட்பத்தை நாடுவது உண்டு. ஆனால் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனர்கள், தொழில்நுட்ப தரவுகளை தங்கள் நிர்வாகிகளிடம் சரியான கேள்வி கேட்க பயன்படுத்துகின்றனர். அவர்கள் எந்த எண்ணத்தையும் காது கொடுத்து கேட்கத் தயாராக உள்ளனர். கவனத்தை ஈர்க்கும் எணணங்களை குறித்து வைத்துக்கொண்டு சனிக்கிழமை கூட்டங்களில் விவாதிக்கின்றனர். இப்போதெல்லாம், ஸ்மார்ட்போனில் மூழ்கி உள்ள நவீன வாடிக்கையாளர்களை கவர்வது குறித்து ஆலோசிக்கின்றனர். டி.எஸ்.கல்யாணராமல், கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம்\nடி.எஸ்.கல்யாணராமல், கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம்\nதுவக்கம்இருபது ஆண்டுகளுக்கு முன் கல்யாணராமன், தனது ஜவுளி வர்த்தகத்தை நகைக்கடையுடன் இணைத்தார். முதலில் ஒரு கடை தான் இருந்தது. அவரது கடையில் தங்க நகைகளை விற்கலாம் என்றும் வாடிக்கையாளர் சொன்னதைக் கேட்டு இந்த முடிவை மேற்கொண்டார். முதல் கடையில் தவறுகள் நிகழ்ந்தன. அவற்றின் மூலம் பாடங்கள் கற்றுக்கொண்டார். அவர் தருவித்திருந்த நகைகள் வாடிக்கையாளர்களை கவரவில்லை. ஊழியர்களுக்கும் அவற்றை விற்கத் தெரியவில்லை. பின்னர் அவர், சரியான நகைகளை, தானே தேர்வு செய்து, ஊழியர்களுக்கும் சிறந்த முறையில் பயிற்சி கொடுத்தார். இன்று, நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய சங்கிலித்தொடர் நகைக்கடை நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இதன் விற்றுமுதல் ரூ.10,000 கோடியாகும். டைட்டன் நிறுவனத்தின் தனிஷ்க் பிராண்டின் 180 கடைகளுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் 94 கடைகளை கொண்ட நிறுவனமாக இருக்கிறது. வேகமான வளர்ச்சி காரணமாக, நியூயார்க்கைச்சேர்ந்த தனியார் ஈக்விட்டி பண்ட் நிறுவனமான வார்பர்க் பின்கஸ், 2014 ல் குறைந்த பங்குகளுக்காக ரூ.1,200 கோடி முதலீடு செய்யத் தீர்மானித்தது. அப்போதே நிறுவனம் ரூ.9,500 கோடி அளவில் வர்த்தகம் பெற்றிருந்தது. வருவாயில் 10 சதவீதம் மொத்த லாப விகிதம் பெற்றிருந்தது.மற்ற நகைக்கடை பிராண்ட்களும் விரிவாக்கத்தில் ஈடுபட்டிருந்தாலும், கல்யாண் ஜுவல்லர்ஸ் அளவுக்கு இல்லை. ஜாய் ஆலுக்காஸ் நாடு முழுவதும் 60 கடைகளை கொண்டுள்ளது. தென்னகத்தில் 30 கடைகள் உள்ளன. நிரவ் மோடிக்கு சொந்தமான பயர்ஸ்டார் டைமண்ட்ஸ் மற்றும் எம்.பி.அகமதுக்கு சொந்தமான மலபார் ஜுவல்லர்ஸ் ஆகியவை இதே அளவு கடைகள் பெற்றுள்ளன. இவை எல்லாமே கல்யாண் ஜுவல்லர்சை நெருங்கிக் கொண்டிருந்தாலும், டி.எஸ்.கல்யாணராமன் நிகரமதிப்பில் முன்னிலையில் இருக்கிறார். ”இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்கள் பாரம்பரியமானவையாகவும், தங்கள் பிராந்தியத்திற்குள் விரிவாக்கம் செய்பவையாகவும் இருக்கின்றன. பெரிய அளவில் வளர ஒரே வழி என்பதால் இந்திய அளவில் விரிவாக்கம் செய்துள்ளோம்” என்கிறார் 64 வயதான கல்யாணராமன்.“இப்படி பெரிய அளவில் வளர்ச்சி ஏற்படும் என்று நினைக்கவில்லை” என்கிறார் செயல் இயக்குனரான ராஜேஷ். ஆனால், தனக்கும் சகோதரரர் ரமேசுக்கும் நம்பிக்கையுடன் இருக்கவும், தினமும் கற்றுக்கொள்ளவும், வர்த்தகத்திற்கான நீண்ட கால தொலைநோக்கு கொண்டிருக்கவும் தந்தை கற்றுத்தந்துள்ளார் என்கிறார் அவர். வர்த்தக வியூகம்நிறுவனம் தனது வர்த்தக திட்டத்தை நான்கு வகையாக பிரித்திருக்கிறது. ரீடைல் வியூகத்திற்காக ரூ.2,200 கோடி ஒதுக்கியுள்ளது.தயாரிப்பு: உள்ளூர் கலாச்சாரம் மற்றும் முன்னுரிமைகளுக்கு ஏற்ப நகை வடிவமைப்பு அமைகிறது. இதனால் தான் அதன் நகைகள் ஒவ்வொரு மாநில கலாச்சாரத்திற்கும் ஏற்ற வகையில் அமைகிறது. எனினும் கர்நாடகம், தமிழகம், கேரளா மற்றும் ஆந்திராவில் தங்கம் அதிகமாக இருக்கும். வட மாநிலங்களில் வைரம் உள்ளிட்ட விலை உயர்ந்த கற்களை வாங்குவது அதிகமாக இருக்கும். இருந்தாலும் இந்திய பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று வருவது அதிகரித்திருப்பதால் கற்கள் பதித்த லேசு ரக நகைகள் பிரபலமாகி வருகின்றன. வடிவமைப்புகள் அனைத்தையும் கல்யாண் ஜுவல்லர்ஸ் மேற்பார்வையில் 750 துணை ஒப்பந்ததாரர்களால், மூன்று உற்பத்தி மையங்களில் உருவாக்கப்படுகிறது. சொந்தமாக உற்பத்தி ஆலை திறக்க திட்டமிட்டுள்ளது. பெண்களின் அனைத்து வயதினருக்குமான 13 பிராண்ட்களை கொண்டுள்ளது.ரீடைல்: வாடிக்கையாளர்களை சென்றடைந்து சேவை அளிப்பதற்காக 100 நகரங்களில் 650 'மைகல்யாண்' ஸ்டோர்களை பெற்றுள்ளது. 800- 1000 சதுர அடி கொண்ட கடைகள் பல நகரங்களில் உள்ளவர்களுக்கு சேவை அளிக்கும் மினி நகை கடைகளாக செயல்படுகின்றன. அடுத்த மூன்று ஆண்டுகளில் பெரிய கடைகளின் எண்ணிக்கையை 150 ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு கடையும் 25,000 சதுர அடி கொண்டது. மேலும் சர்வதேச விரிவாக்கத்தின் கீழ் வளைகுடாவில் 20 கடைகளை கொண்டுள்ளது. ஃபிளிப்கார்ட் மூலம் சிறிய நகைகளை விற்கவும் சோதனை முறையில் முயன்று வருகிறது. “ஒவ்வொரு சந்தையின் தன்மையையும் முழுவதுமாக ஆய்வு செய்த பிறகே கடைகளை துவக்குகிறோம்” என்கிறார் செயல் இயக்குனரான ரமேஷ். குறிப்பிட்ட பகுதியில் உள்ள வருமான அளவைக் கொண்டு வர்த்தக தரவுகள் அமைவதாக அவர் சொல்கிறார். “பல இடங்களில் முறையான தரவுகள் இல்லை. இடங்களை தேர்வு செய்யும் போது ரிஸ்க் எடுக்க வேண்டும்: என்கிறார் அவர். 18 மாதங்களில் லாபம் ஈட்ட வேண்டும் எனும் இலக்கு இருப்பதாக கூறுகிறார். அதன் பெரிய கடைகளில் 80 சதவீத கடைகள் லாபமீட்டுகின்றன. மற்றவை லாப பாதையில் முன்னேறுகின்றன.நிதி: 'மைகல்யாண்' கடைகளை ஒரே தளத்தில் கொண்டு வருவதற்கான தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக சர்வதேச நிறுவன சேவையை நாடி வருகிறது. ஒவ்வொரு பெரிய கடையிலும் ரூ.40 கோடி செலவு செய்ய திட்டமிட்டுள்ளது. ஒராண்டில் 10 கடைகள் துவக்க திட்டமிட்டுள்ளது. தங்க விலைக்கு எதிரான பாதுகாப்பை பெறும் வகையில் முன்பேர சந்தையில் தேவையான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.தொழில்நுட்பம்: வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த ஸ்மார்ட்போன் நுட்பங்கள் மற்றும் வாடிக்கையாளர் தேவையை அறிய அனல்டிக்ஸ் நுட்பங்களை நாடி வருகிறது. நிறுவன சி.ஓ.ஓ சஞ்சய் ரகுராமன், “வாடிக்கையாளர்களுடன் சிறந்த முறையில் தொடர்பு கொள்ளும் வழிகளுடன் பல ஸ்டார்ட் அப்கள் எங்களை நாடுகின்றன. ஆனால் யாரையும் இன்னமும் தேர்வு செய்யவில்லை. ஸ்டார்ட் அப்கள் முதலில் எங்கள் வர்த்தகத்தை புரிந்து கொள்ள வேண்டும்” என்கிறார்.கல்யாண் ஜுவல்லர்ஸ்3பில்லியன் டாலர் வர்த்தகத்தை நோக்கி முன்னேறுகிறது. பாரம்பரிய நகைக்கடைகள் தான் அதன் போட்டியாக இருக்கிறது. அமிதாப் பச்சன் போன்ற நட்சத்திரங்களை விளம்பர தூதராக பெற்றிருந்தாலும், மற்ற நகைக்கடைகளை விட வேகமாக வளர்ந்து வருவதாலேயே இது சாத்தியமாகிறது. கல்யாண் ஜுவல்லர்ஸ் பற்றி யுவர்ஸ்டோரி எடுத்துள்ள காணொளி\nகல்யாண் ஜுவல்லர்ஸ் பற்றி யுவர்ஸ்டோரி எடுத்துள்ள காணொளி\nகேமிரா: ருக்மாங்கதா ராஜா, வீடியோ எடிட்டர்: அஞ்சலி அச்சால், தயாரிப்பு: வின்செண்ட் ஆர்த்தர்ஆக்கம்: விஷால் கிருஷ்ணா | தமிழில்: சைபர்சிம்மன்இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்தொடர்பு கட்டுரைகள்:'ஃபாஸ்ட் ட்ராக்' வளர்ச்சி : சென்னை மைந்தர்களின் உழைப்பு!முதலீட்டாளர் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையே ஒமேகாவின் வெற்றி: கோபி நடராஜன்'தோல்வியை கண்டு துவளாதீர்; அதுவே வெற்றியின் ரகசியம்': தொழில்முனைவர் ஹேமச்சந்திரன் Tags\nஉட்பிரிவு நோயாளிகள் பராமரிப்பில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவும் சென்னை ஹெலிக்சன் நிறுவனம்! YS TEAM TAMIL April 29, 2016 தன்னம்பிக்கை\nதைரியம், தன்னம்பிக்கைக் கொண்டு மதுரை மருத்துவமனையை ரூ.350 கோடி சாம்ராஜ்யமாக உயர்த்திய டாக்டர் குருஷங்கர்! YS TEAM TAMIL April 29, 2016 Stories by YS TEAM TAMIL\nதைரியம், தன்னம்பிக்கைக் கொண்டு மதுரை மருத்துவமனையை ரூ.350 கோடி சாம்ராஜ்யமாக உயர்த்திய டாக்டர் குருஷங்கர்! YS TEAM TAMIL April 29, 2016 டிஜிட்டல்\n2020-க்குள் ஆன்லைன் மூலம் ஃபேஷனில் 30 பில்லியன் டாலர்களை நுகர்வோர் செலவிடுவர்: பிசிஜி & ஃபேஸ்புக் அறிக்கை YS TEAM TAMIL April 29, 2016 தொழில்நுட்பம்\nஉட்பிரிவு நோயாளிகள் பராமரிப்பில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவும் சென்னை ஹெலிக்சன் நிறுவனம்! YS TEAM TAMIL April 29, 2016 வாவ்-வாசல்\nயூடியூப் வழியே கிராமிய சமையல்: லட்சங்களில் சம்பாதிக்கும் உலகை வசீகரிக்கும் தமிழ் 'டாடி' YS TEAM TAMIL April 29, 2016 About us
சித்த மருத்துவமும் வாழ்க்கையும் : ஒவ்வொருவரும் "ஆண்ட்ராய்ட்" வகை போன்களைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் காலம் இது. இதுபோன்ற தகவல்தொழிலநுட்ப சாதனங்களில் லேட்டஸ்ட் வசதிகளில் ஒன்று டச் ஸ்கிரீன்.\nஒவ்வொருவரும் "ஆண்ட்ராய்ட்" வகை போன்களைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் காலம் இது. இதுபோன்ற தகவல்தொழிலநுட்ப சாதனங்களில் லேட்டஸ்ட் வசதிகளில் ஒன்று டச் ஸ்கிரீன்.\nஒவ்வொருவரும் "ஆண்ட்ராய்ட்" வகை போன்களைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் காலம் இது. இதுபோன்ற தகவல்தொழிலநுட்ப சாதனங்களில் லேட்டஸ்ட் வசதிகளில் ஒன்று டச் ஸ்கிரீன். கணினி, டேப்ளட், மடிக்கணினி, அலைபேசி (computer, laptop, tablet pc, phones)இப்படி அனைத்திலுமே டச் ஸ்கீரின் எனப்படும் தொடுதிரையே பயன்பாட்டில் உள்ளது. மிகவும் மிருவானதும், நுட்பத்திறன் வாய்ந்த்துமான தொடுதிரையை சுத்தம் செய்யும் வழிமுறைகள் காண்போம். முதலில் உங்களுடைய தொடுதிரை சாதனத்தை ஸ்விட் ஆப் செய்யுங்கள். அடுத்து மிருதுவான மெல்லிய மைக்ரோபைபர் (microfiber cloth) துணியை எடுத்துக்கொள்ளுங்கள். அத்துணியைப் பயன்படுத்தி தொடுதிரையின் நடுப்பகுதியில் ஆரம்பித்து ஒரு டிஸ்க் வடிவத்தில் வட்டி வடிவமாக துடைத்தெடுக்கவும். வட்ட வடிவமாக துடைப்பதால் கீரல் விழுவதை தடுக்க முடியும். பிறகு தொடுதிரையை துடைக்கப் பயன்படுத்திய துணியின் பகுதியை தவிர்த்து, மற்ற பகுதியின் ஒரு நுனியில் பைபர் துணியை ஸ்கிரீன் கிளீனர் எனப்படும் திரவத்தில் நனைத்து தொடுதிரையை சுத்தப்படுத்துங்கள். "ஸ்கிரீன் கிளீனர் லிக்வட்"(screen cleaner liquid)டைப் பயன்படுத்துவதன் மூலம் தொடுதிரையில் உள்ள அழுக்குகள் நீங்கள் "பளிச்" சென காட்சியளிக்கும். தொடுதிரையை சுத்தம் செய்ய மற்ற வகை துணிகளையோ,வெறும் கைகளையோ பயன்படுத்த கூடாது. இதனால் தொடுதிரையில் கீரல் ஏற்படுவதோடு தொடுதிரையில் தேய்மானம் ஏற்பட்டு, மங்கலான தோற்றத்தைப் பெற்றுவிடும். விலையுயர்ந்த சாதனங்களை வாங்கிவிட்டு, அதைப் பரமரிக்க சரியான முறைகளைப் பயன்படுத்த தயங்க கூடாது. அதற்கு ஆகும் செலவு மிகவும் குறைவே. இம்முறையைப் பயன்படுத்தும்பொழுது மீண்டும் புத்தும் புதிய சாதனம்போன்று உங்களுடைய தொடுதிரைய சாதனங்கள் தோற்றமளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nPosted by 7thsens at 11:11 PM
BigUp இன்று வர்த்தக பரிமாற்றம் மற்றும் BigUp மூலதனத்தின் வரலாற்றுத் தரவுகள் கிரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகத் தொடக்க தேதி முதல்.\nBigUp இன் இன்றைய சந்தை மூலதனம் 399 அமெரிக்க டாலர்கள் ஆகும்.\nBigUp மூலதனமயமாக்கல் குறித்த தகவல் ஒரு நாளைக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது. BigUp சந்தை மூலதனம் என்பது BigUp வழங்கப்பட்ட கிரிப்டோகரன்ஸிகளின் மொத்தமாகும். BigUp இன் மூலதனமயமாக்கல் தகவல் குறிப்புக்கு மட்டுமே. BigUp சந்தை தொப்பி இன்று $ 399.\nவணிகத்தின் BigUp அளவு\nஇன்று BigUp வர்த்தகத்தின் அளவு0அமெரிக்க டாலர்கள் .\nBigUp வெவ்வேறு கிரிப்டோ பரிமாற்றங்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது. BigUp வர்த்தக விளக்கப்படம் ஒவ்வொரு நாளும் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது. BigUp பெரும்பாலான கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் நிகழ்நேர வர்த்தகத்தில், எங்கள் வலைத்தளம் BigUp இன் தினசரி வர்த்தக அளவைக் காட்டுகிறது. BigUp சந்தை தொப்பி $0அதிகரித்துள்ளது.\nBigUp சந்தை தொப்பி விளக்கப்படம்\nBigUp பல ஆண்டுகளாக ஒரு வரைபடத்தில் சந்தை மூலதனம். மாதத்தில், BigUp மூலதனமாக்கல் 0% ஆல் மாற்றப்பட்டுள்ளது. -97.07% - BigUp ஆண்டிற்கான சந்தை மூலதன மாற்றம். BigUp சந்தை தொப்பி நேற்று குறைவாக இருந்தது.\nBigUp மூலதன வரலாறு\nBigUp இன் மூலதனமாக்கம் - அனைத்து சுரங்கத் தொகையான BigUp கிரிப்டோகின்களின் மொத்த தொகை.\nBigUp தொகுதி விளக்கப்படம்\nBigUp தொகுதி வரலாறு தரவு\nBigUp வர்த்தகத்தின் அளவு - அமெரிக்க டாலர்களில் மொத்த தொகை BigUp க்ரிப்டோ-நாணயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் வாங்கி விற்கப்பட்டது.\nBigUp இன்று அமெரிக்க டாலர்களில் மூலதனம் 23/10/2019. BigUp 22/10/2019 இல் சந்தை மூலதனம் 399 அமெரிக்க டாலர்களுக்கு சமம். 21/10/2019 இல் BigUp இன் சந்தை மூலதனம் 399 அமெரிக்க டாலர்கள். BigUp இன் சந்தை மூலதனம் 399 அமெரிக்க டாலர்கள் 20/10/2019.\n19/10/2019 BigUp மூலதனம் 399 அமெரிக்க டாலர்கள். 18/10/2019 BigUp மூலதனம் 399 US டாலர்களுக்கு சமம். 17/10/2019 BigUp மூலதனம் 397 அமெரிக்க டாலர்கள்.
விரைவில் உருவாகும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’- ஆனால்\nவிரைவில் உருவாகும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’- ஆனால்..!\nஇயக்குநர் பொன்ராம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்\n.கடந்த 2013-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஸ்ரீவித்யா இப்படம் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார்.\nசிவகார்த்திகேயன் திரைவாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய படமாக இருந்தது வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரக்கூடாது. அது ஒரு எபிக் படம். அதை அப்படியே விட்டுவிட வேண்டும் என சிவகார்த்திகேயன் கூறி இருந்தார்.\nஇந்நிலையில் இதுதொடர்பாக பேசிய பொன்ராம், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ வருவது உறுதி என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சிவகார்த்திகேயன் சார் மெச்சூரிட்டி ஆகிவிட்டார், அடுத்து வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ எடுப்போம். போட்றா வெடிய” என பொன்ராம் தெரிவித்துள்ளார்.
சாமானியர்களை வச்சு பிக் பாஸ் நடத்தலாமே.. மக்களுக்கு கத்துக்க நிறைய கிடைக்குமே! | Bigg Boss programme is attracted by many, but is this good or bad for us? - Tamil Oneindia\nமேலும் Bigg Boss Tamil4செய்திகள்\nbigg boss tamil4bigg boss4television vijay tv பிக் பாஸ் தமிழ்4பிக் பாஸ்4தொலைக்காட்சி விஜய் டிவி\nசென்னை: மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சி மக்களாட்சி. மக்களால் மற்றவர்களின் நலனுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சி பிக் பாஸ்.\nமாற்றம் என்பதும் ஏமாற்றம் என்பதும் நம்மிடம் இருந்தே உருவாகிறது. மாற்றம் ஏற்பட நம்மை நாமே செதுக்க வேண்டும். ஏமாற்றம் என்பது மற்றவர்களுக்காக நம்மை நாமே அழித்துக் கொள்வது. இதில் நாம் ஏமாற்றப்பட்டு மட்டுமே இருக்கிறோம்.\nநம்மை நாம் செப்பனிட நேரம் ஒதுக்காத நாம் யாருக்காகவோ நேரத்தை செலவு செய்து அவர்களுக்காக நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்கிறோம்.\nநமக்காக நாம் மட்டுமே\nநாம் எவ்வாறு வாழ்வில் முன்னேற்றம் அடையலாம் என்று யோசித்துப் பார்த்தால் யாரும் நமக்காக பாடு பட போவதில்லை. நாம் மட்டுமே நமக்காக போராட வேண்டும். இதில் மற்றவரின் வெற்றிக்காக நம்மில் பல மணி நேரத்தை செலவழித்து நமது நோக்கத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறோம். ஐந்து நிமிடம் ஆனாலும் அதில் நமக்கு என்ன லாபம் என்பதில் கவனம் தேவை.\nஇதில் ஒரு மணி நேரம் கிடைத்தால், அது நம் திறமைக்கு கிடைத்த பொக்கிஷம். நமக்காக ஒரு மணிநேரம் என்றாவது ஒதுக்கி இருப்போமா? நம்மை பற்றி சிந்தித்து இருப்போமா? நம் திறமை என்னவென்று ஆராய்ந்து இருப்போமா? நிச்சயமாக முழுமையாக நாம் நமக்காக இந்த அர்ப்பணிப்பு செய்யத் தவறி விடுகிறோம்.\nமற்றவரின் நலனுக்காக நம்மை முட்டாளாக்கி அதில் குளிர்காயும் முதலாளித்துவத்திற்கு சாமரம் வீசிக் கொண்டிருக்கும் சராசரி மனிதராக இருந்து விடுகிறோம். ஒரு கேள்வி மட்டும் அனைவரும் கேட்டுப்பாருங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து போட்டியாளர்களும் வாழ்வில் முன்னேற்றம் அடைந்தவர்கள் பிரபலமானவர்கள் இதில் எந்த சந்தேகமும் இல்லை. இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது?\nகவனம் பணம் பிரபலம்\nஅன்றாடம் நம்மைச் சுற்றி ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் நிகழ்வுகளை மக்களை கவரும் வகையில் ஒவ்வொரு விஷயத்தையும் திட்டமிட்டு நடத்தப்படும் நிகழ்ச்சி மக்களின் பார்வை முழுவதும் நிகழ்ச்சியில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தீட்டப்படுகிறது. சாதாரண மனிதனை போட்டியாளராக கொண்டுவர நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு தைரியம் கிடையாது. அவர்களின் தேவை மக்களின் கவனம். மக்களின் கவனம் → பணம் → பிரபலம். இதுதான் உள்நோக்கம்.\nஇதில் மக்கள் இல்லையென்றால் நிகழ்ச்சி ஜீரோ தான். 16 போட்டியாளர்களில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் விருப்பத்தோடு கலந்து கொள்ளச் செய்யுங்கள், குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு விடுவார்கள். தினக்கூலி செய்யும் தொழிலாளர்களை அழைத்து வாருங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள். நாட்டை பாதுகாக்க உயிர்நீத்த குடும்பத்தில் ஒருவரைக் கொண்டு வாருங்கள். சாதாரண மனிதர்கள் போட்டியாளர்களாக இருக்கும்பட்சத்தில் சமூகத்தில் சில பிரச்சனைகள் களையப்படும்.\nஎந்த ஒரு நிகழ்ச்சியானாலும் அதில் நமக்கு பொழுதுபோக்கு மட்டுமே தவிர லாபம் ஏதுமில்லை அடுத்தவரின் நடவடிக்கைகளை,வெளி உலகத் தோற்றம், உள் தோற்றம் ,என்று அடுத்தவரைப் பற்றி அதிகமாக யோசித்தும், விமர்சித்தும் நம்மில் பலர் நம் பொன்னான பொழுதை தேவையில்லாமல் கழிக்கிறோம். நம்மைப் பற்றி ஆராய்ந்து பார்த்தால் பல வகையான திறமைகள் நம்மில் இருப்பதை கண்டு கொள்ளலாம்.\nஇதுக்கு மட்டும் எப்படி நேரம் கிடைக்குது\nஎதற்கும் நேரமில்லை என்பவர்கள் கூட இதற்கு மட்டும் நேரம் ஒதுக்குகின்றனர். ஆக எல்லோராலும் நேரம் என்பது ஒதுக்க முடியும். ஆனால் அது எதற்காக என்பதை பொறுத்தே அமைகிறது.அடுத்தவர்களுக்காக நமது நேரத்தையும், பணியையும் ஒதுக்கும் நாம் நமக்காக செய்ய முன்வருவதில்லை. ஒரு மணி நேரம் வீட்டில் கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ அல்லது குழந்தைக்கோ உதவி செய்யலாம், அதில் ஒரு புரிதல் ஏற்பட வாய்ப்புள்ளது.\nதந்தையும் தாயும் கேட்பது உங்களின் பொன்னான நேரம் மட்டுமே எப்பொழுதுமே தொலைபேசியிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளிலோ மூழ்கியிருக்கும் மகனோ மகளோ தந்தை தாயின் எதிர் பார்ப்பு கூட நிவர்த்தி செய்ய முடியவில்லை. பிக்பாஸ் வீட்டில் பிரச்சினைக்கு தீர்வு சொல்லும் நாம் நம் வீட்டின் பிரச்சினைகளையும் தேவைகளையும் கண்டுகொள்வதில்லை. இதுவும் ஒரு வகையான போதைதான், நம் மூளையை சலவை செய்து, நம்மை அடிமையாக்கி, ஒருமணிநேரம் டிவி முன்பே உட்கார வைத்து, அதில் அவர்கள் லாபம் காணும் களம்.\nஇதில் நாம் இழப்பது நம் நேரம், உறவுகள், நம் திறமைகள். நிகழ்ச்சியில் பிரபலமடைந்த நபரை வைத்தே அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது காரணம் மக்களின் கவனத்தை ஈர்த்து அதில் பணம் பெற வேண்டும் என்பதே. பிரபலமானவர் மென்மேலும் பிரபலம் அடைகின்றனர் பார்த்துக் கொண்டிருக்கும் நாம் நிலைமை மாற , யாரும் அறியப்படாத நபர்களாகவே இருந்து விடுகிறோம்.\nமாற்றங்களை மற்றவர்களுக்கு கொடுத்து விட்டு ஏமாற்றத்தை மட்டுமே கையில் ஏந்திக் கொண்டு மற்றவர்களின் விசிறிகள் ஆகவே இருந்து விடுகிறோம். மாற்றத்தை கொண்டு வாருங்கள், இல்லையேல் ஏமாற்றத்தோடு வாழ்ந்துவிட்டு, ஏற்றம் இல்லாத வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும். யோசிச்சு செயல் படுங்க.\nBigg Boss programme is attracted by many, but is this good or bad for us?
வணிக அறிவாண்மை - தமிழ் விக்கிப்பீடியா\nவணிக அறிவாண்மை(Business Intelligence) என்பது தரவுகள், தகவல்களை முறைப்படுத்தி பயனர்களிடம் கொண்டு சேர்த்து, பயனர்களின் முடிவெடுக்கும் செயற்படும் ஆற்றலை வளப்படுத்த உதவும் நுட்பங்களைக் குறுக்கிறது. இதன் மூலம் வணிகத்தின் இலக்குகளை அடைய வணிக அறிவாண்மை உதவுகிறது. தரவுகளை சேகரித்தல், பகுத்தாய்தல், அறிக்கை தயாரித்தல், எதிர்வுகூறல், பகிர்ந்தல் ஆகியன வணிக அறிவாண்மையின் அடிப்படைக் கூறுகள் ஆகும்.\nஎ.கா ஒரு கணினி Order processing system ஆகும். இந்த செயலியின் ஊடாக எத்தனை பொருட்கள், யாருக்கு எப்போது விற்கப்பட்டன. யார் கூடிய பெறுமதியான வாடிக்கையாளர்கள். தற்போது எந்த Orderகள் செயற்படுத்தப்பட வேண்டி உள்ளன போன்ற தகவல்களை உடனடியாக பெறக் கூடியதாக இருக்கும். இன்னுமொரு எளிமையான எடுத்துக்காட்டு ஒரு தாபன விக்கியாகும். இந்த விக்கி ஊடாக ஊழியர்கள் தகவல்களை சேகரிக்கவும், பகிரவும் முடியும்.\nமுதன் முதலில் வணிக அறிவாண்மை(Business Intelligence) என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் 1958ல் ஐபிஎம் நிறுவனத்தை சார்ந்த ஆய்வாளர் ஹான்ஸ் பீட்டர் லுஹ்ன் என்பவர் பயன்படுத்தினார். அவர் வேபெர்ஸ்(weber's) அகராதியை மேற்கோள் காட்டி நுண்ணறிவு அல்லது அறிவாண்மை என்பது " உண்மைகளை இடைத்தொடர்புபடுத்தி ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கான செயல்பாடு" என்றார்.\n"https://ta.wikipedia.org/w/index.php?title=வணிக_அறிவாண்மை&oldid=1547148" இருந்து மீள்விக்கப்பட்டது\nLast edited on 13 நவம்பர் 2013, at 08:52\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 நவம்பர் 2013, 08:52 மணிக்குத் திருத்தினோம்.
கஸ்கட் மோட்டார் தடுப்பு தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மாற்றங்கள் > உணவு\nபெரிய தோட்டங்களின் உரிமையாளர்களுக்கு மோட்டோபாகோக்கின் முகத்தில் "சிறிய இயந்திரமயமாக்கல்" அவசியம். சந்தையில் பல பிராண்டுகள் மற்றும் மாடல்கள் அவற்றின் வடிவமைப்பில் வேறுபடுகின்றன - ஒரே மாதிரியான அலகுகள் பழுதுபார்க்கும் வெவ்வேறு பகுதிகளுக்கு தேவைப்படலாம்.\nஎனவே, பல மக்கள் உள்நாட்டு பொருட்கள், நல்ல, அவர்கள் மீது ஏராளமான விவரங்கள் வாங்க. இந்த அலகுகளில் ஒன்றைக் கவனியுங்கள் - பிரபலமான "காக்கேட்" டிரைலர், அதே நேரத்தில் அதன் வகைகளின் சரியான தொழில்நுட்ப சிறப்பியல்புகளைக் கற்றுக் கொண்டது.\nவிளக்கம், மாற்றம், குறிப்புகள்\nடிஎம் 1 இயந்திரத்துடன்\nபிரிக்ஸ் & ஸ்ட்ராட்டான் INTEK எஞ்சினுடன்\nஅறுவை சிகிச்சை அம்சங்கள்\nவாங்கிய பிறகு இயக்கப்படுகிறது\nவாகனம் ஓட்டும் டிராக்டருடன் பராமரிப்பு மற்றும் வேலை செய்தல்\nஅடிப்படை பிரச்சினைகள் மற்றும் சேவை கையேடு\nகார்பரேட்டரில் உள்ள சிக்கல்கள்\nபோதுமான சக்தி இல்லை\nஇந்த மாதிரியானது, நான்கு முக்கிய குழுக்களின் முனையங்களைப் பயன்படுத்தி கிளாசிக்கல் ஸ்கீமைக் கொண்டு கட்டப்பட்டது - சக்தி அலகு, ஒலிபரப்பு, சேஸ் மற்றும் கட்டுப்பாடுகள்.\nமோட்டார்கள் பற்றி பின்னர் பேசுங்கள். உண்மையில், "என்ஜின்களின்" தொடர்ச்சியான தொடர்ச்சியான டிராக்டரில் எந்தவொரு தொடர்ச்சியான டிராக்டரில் நிறுவப்பட்டாலும், அவை ஒவ்வொன்றும் தனி மாற்றியமைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலிபரப்பு, ஒரு கிளட்ச், ஒரு சங்கிலி அல்லது கியர் குறைப்பான் மற்றும் ஒரு நான்கு-முறை கியர்பாக்ஸ் (இரண்டு படிகள் முன்னும் பின்னுமாகவும்) கொண்டுள்ளது. இந்த முனைகளையெல்லாம் ஒரு தொகுதிக்குள் தொகுக்கலாம் அல்லது தனித்தனியாக வைக்கலாம்.\nஒழுங்காக நடைபயிற்சி டிராக்டர் மூலம் தரையில் தோண்டி எப்படி படிக்க நீங்கள் ஆலோசனை.\nகியர்பாக்ஸ் வலுவூட்டப்பட்டது - வெளியீடு தண்டு பெரிய விட்டம் தாங்கு உருளைகள் மீது நடப்படுகிறது, இது தாக்கங்கள் இருந்து பகுதி பாதுகாக்கிறது மற்றும் அதன் வாழ்க்கை அதிகரிக்கிறது. ஒரு பெல்ட் மூலம் மின்சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் வழங்கப்படுகிறது.\nஇது முக்கியம்! அலகு -5 ... +35 இன் வெப்பநிலையில் பயன்படுத்தலாம் °சூடான காலநிலையில், மோட்டார் வேகத்தை அதிகரிக்கிறது, இதன் விளைவாக பிஸ்டன் வளையங்கள் "மிதவை" செய்யலாம்.\nகியர் இயங்கும் நீங்கள் விரும்பிய மதிப்பை வெளிப்படுத்த, பாதையில் அகலத்தை சரிசெய்ய முடியும் என்ற உண்மையுடன் சாதகமாக. இல்லையெனில், அனைத்தையும் நன்கு அறிந்திருப்பது - ஒரு திடமான சட்டம், அதில் "பேக்" மற்றும் ஒரு நிலையான அச்சில் உள்ள பொதிகளுடன். சக்கரங்களைப் பொறுத்தவரை, அவை உயர் கொக்கிகள் அல்லது கடுமையான உலோகங்களோடு, வாயு அல்லது வாயு போன்றவைகளாக இருக்கலாம்.\nமேலாண்மை இது மோட்டார் சைக்கிள் வகையிலான சக்கரத்தால் தொட்டியானது, கிளட்ச், ஆற்றல் எடுப்பது மற்றும் கைப்பிடியில் வைத்திருக்கும் நெம்புகோல்களைத் தொடங்குகிறது. பரிமாற்றங்கள் சிறிது கீழே அமைந்துள்ள ஒரு நெம்புகோல் மூலம் மாற்றப்படுகிறது.ஸ்டீயரிங் தானாகவே உயரத்தில் சரிசெய்யப்படுகிறது, இது வேலைக்கு உதவுகிறது.\nநீங்கள் பார்க்க முடியும் என, எல்லாம் தெரிந்திருந்தால் மற்றும் மிகவும் நினைத்தேன். வெளியீட்டின் ஆண்டுகளில் நிறைய மாற்றியமைத்த மாதிரியான மாற்றங்களை இப்போது பார்ப்போம், மேலும் அவை எப்படி வேறுபடுகின்றன என்பதைக் கண்டறியவும்.\nஅனைத்து தயாரிக்கப்படும் "அடுக்கை" பரிமாணங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகும், இது மோட்டார்கள் பற்றி கூற முடியாது. குறியீட்டு எண் இயந்திரத்தின் வகையை குறிக்கிறது: 61 ஒரு இறக்குமதி அலகு குறிக்கிறது,6ஒரு உள்நாட்டு ஒரு குறிக்கிறது. அவற்றைப் பின்பற்றிய எண்கள் இயக்கவியலின் நோக்கம் மற்றும் பதிப்பின் நோக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.\nஉள்நாட்டு இயந்திரம் கஸ்கட் மோட்டார் தடுப்புக்கான தளமாகக் கருதப்படுகிறது - பல பிரதிகள் இந்த குறிப்பிட்ட மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும்.\nஇது ஒரு ஒற்றை உருளை நான்கு ஸ்ட்ரோக் இயந்திரமாகும், இது6லிட்டர் உருவாகிறது. ஒரு. 14 N / m ஒரு முறுக்கு கொண்டு. 317 செமீ கன சதுரம் - இறக்குமதி செய்யப்பட்டவற்றைவிட அதிக அளவு உள்ளது. 28 கிலோ உலர்ந்த எடை கொண்டது. பிளாக் மற்ற பண்புகள் இந்த மாதிரி தோற்றம்:\nஇணைப்பு - பெல்ட்;\nகியர்பாக்ஸ் - கியர்;\nஆழம் பிடிக்கவும் (மிமீ): - 300;\nமிதவை அகலம் (மிமீ) - 930;\nஎரிபொருள் - AI-80, AI-92, AI-92;\nஉனக்கு தெரியுமா? சோவியத் ஒன்றியத்தில், 1980 களில் கரும்பு தோட்டங்கள் தோன்றின. இது நாட்டின் பொருளாதாரப் பாதையில் நேரடியாக தொடர்புடையது - இதற்கு முன், பெரிய தோட்டங்களும் குடிசைகளும் "பெறப்படாத வருமானங்களின்" ஆதாரமாகக் கருதப்பட்டன, மேலும் தொழிற்சாலைகள் இந்த வகுப்பு இயந்திரங்களை டிராக்டர்களில் கவனம் செலுத்துவதில்லை.\nதொட்டியின் அளவு (எல்) - 4, 5;\nஎரிபொருள் நுகர்வு (எல் / எச்) -2க்கு மேல் இல்லை;\nபரிமாணங்கள் (மிமீ) - 1500 × 600 × 1150;\nஎடை (கிலோ) - 105.\nஇந்த அமெரிக்க "வான் வென்ட்" அதன் நம்பகத்தன்மை மற்றும் தரத்தை நிர்ணயிக்கும்.\nவேலை தொகுதி (கன சதுரம்) - 206;\nபவர் (எல். எஸ்) - 6.5;\nஉருளை விட்டம் (மிமீ) - 68;\nமுறுக்கு (N / m) - 12.6;\nமோட்டார் (கிலோ) உலர் எடை - 15.3;\nஎரிபொருள் - AI-92 மற்றும் AI-95\nதொட்டியின் அளவு (எல்) - 3.6;\nஎரிபொருள் நுகர்வு (எல் / எச்) - 1.6-1.8 வரம்பில்.\nஇந்த அம்சங்களில் மின்னணு பற்றவைப்பு அலகு மற்றும் டிகம்ப்சேர்ராரின் முன்னிலையைத் தேர்ந்தெடுக்கவும். தொடங்க - கையேடு, ஒரு lanyard பயன்படுத்தி.\nஎம்பி 61-12 "பன்னிரண்டாவது" இல் அமெரிக்க நிறுவல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக, அவர்களின் விலை அதிகமாக உள்ளது, இது சில விவசாயிகளை ஊக்கப்படுத்துகிறது. இந்த வரிசையில் பத்து திருத்தங்கள் உள்ளன. அவர்கள் அனைவரும் ஒரு பெல்ட் கிளட்ச் மற்றும் சங்கிலி கியர்.\nஆனால் அவர்களின் பணி அளவுருக்கள்:\nஆழம் பிடிக்கவும் (மிமீ) - வரை 260;\nமிதவை அகலம் (மிமீ) - முறைகள் 450, 600 மற்றும் 950 வழங்கப்படுகின்றன;\nவேகம் (கிமீ / மணி) - 13 வரை.\nகையேடு முழு குறியீட்டையும் குறிக்கிறது, இது ஒரு குறிப்பிட்ட மாற்றத்தின் அம்சங்களை "சிக்கனப்படுத்துகிறது". அனுபவமின்றி, புரிந்து கொள்ள எளிதானது அல்ல, ஆனால் இந்த பணியை ஒரு பிட் எளிதாக்குவோம்.\nஇது முக்கியம்! தொடர் 05 மற்றும் 06 பனி நீக்கம் அல்லது ஹேமக்கிங் மூலம் சிறந்த வேலை செய்வார். அவற்றின் கியர்பாக்ஸ் நீண்ட வேகத்தில் குறைந்த வேகத்தில் செயல்படுகிறது (முதல் வேகத்தில் ஊடுருவி வரும் போது).\nMB 61-12 பதவிக்குப் பிறகு எண்களின் நீண்ட வரிசையைப் பார்த்தால், சாதனத்தின் பின்வரும் நுணுக்கங்களைக் கோடுகளில் காட்டியுள்ள எண்கள் "\nவலுவூட்டப்பட்ட கியர்பாக்ஸ் (02);\nஅடிப்படை கியர்பாக்ஸ் (04). இத்தகைய நிகழ்வுகளில், வெளியீடு தண்டு என்பது ஊசி தாங்கி மீது "அமர்ந்து", மற்ற எல்லா மாற்றங்களுக்கும் வழக்கமான பந்து கிளிப்புகள் உள்ளன;\nஅதிகரித்த வேக வரம்பு (05) மற்றும் திறக்கப்பட சக்கரங்கள் (06) ஆகியவற்றுடன் வலுவூட்டப்பட்ட கியர்பாக்ஸ்;\nசக்கரங்கள் தானாக திறக்கப்படும் மற்றும் குறியீடு 07 கீழ் ஒரு வலுவூட்டப்பட்ட கியர் "பாஸ்" கார்கள்.\n"வால்" எண்கள் மூலம் எல்லாம் எளிது - "01" எப்போதும் வழக்கமான திசைமாற்றி நெடுவரிசைக்கு சுட்டிக்காட்டுகிறது, அதே நேரத்தில் "02" எப்போதும் திசைமாற்றி நெடுவரிசையை குறிக்கிறது. இந்த தரவு அனைத்தும் நீங்கள் எந்த கஸ்கட் மோட்டார் தடுப்பு தொழில்நுட்ப பண்புகள் கண்டுபிடிக்க அனுமதிக்க மட்டும், ஆனால் தேவையான உதிரி பாகங்கள் தேர்வு. இந்த குறியீடுகள் உலகளாவிய உள்ளன, அதாவது, அவர்கள் இந்த வகை அனைத்து பொருட்கள் பொருந்தும், பொருட்படுத்தாமல் இயந்திர வகை.\nஜப்பானிய மோட்டார் ரோபின்-சுபரு EX-21 உடன் மாறுபாடு. அது கூட பார்வை வேறுபடுத்தி எளிது - உருளை ஒரு கோணத்தில் அமைந்துள்ளது.\nவேலை திறன் (செ.மீ. கனஅ) - 211;\nபவர் (ஹெச்பி) - 7;\nஉருளையின் விட்டம் (மிமீ) - 67;\nமுறுக்கு (N / m) - 13.9;\nமோட்டார் (கிலோ) உலர் எடை - 16;\nஎரிபொருள் நுகர்வு (எல் / எச்) - வரை 1.85 லி.\nஉனக்கு தெரியுமா? "குள்ள" என்பது குழந்தைகள் சைக்கிளின் பெயரை மட்டும் அல்ல.இந்த வடிவமைப்பானது யா.வி.வி. வடிவமைக்கப்பட்ட ஒரு சிறிய டிராக்டரால் நடத்தப்பட்டது. Mamin. 1919 இல் தோன்றிய அவர், வெகுஜன உற்பத்தியின் கட்டத்தை அடைந்தார்.\nஸ்டார்டர் வழக்கமான தண்டு மூலம் பிரதிநிதித்துவம், ஆனால் பற்றவைப்பு டிரான்சிஸ்டர் மின்தூண்டி உள்ளது. இணைப்பு - பெல்ட். மின் அமைப்பு ஒரு உள்ளமைக்கப்பட்ட "நிரந்தர" ஜெனரேட்டர் உள்ளது. மற்ற அம்சங்கள்:\nஆழம் பிடிக்கவும் (மிமீ) - 100 முதல் 200 வரை;\nமிதவை அகலம் (மிமீ) - 900 வரை;\nவேகம் (கிமீ / மணி) - வரை 13;\nஇங்கே, தொழில்முறை ஹோண்டா GX-200 மோட்டார் "இதயம்" என்று செயல்படுகிறது. அவரது ஆதரவில் வாதங்கள் மத்தியில் - பொருத்தம் மற்றும் சட்டசபை உயர்ந்த தரம், நல்ல திறன் மற்றும் வள விவரங்கள். கழித்து, ஒருவேளை, ஒரே ஒரு - உயர் விலை.\nஇடப்பெயர்வு (cm3) - 196;\nபவர் (ஹெச்பி) -6.5-7;\nசிலிண்டரின் விட்டம் (மிமீ) -68;\nமுறுக்கு (N / m) -13.2;\nமோட்டார் (கிலோ) -16;\nஎரிபொருள்- AI-92 மற்றும் AI-95\nதொட்டியின் அளவு (எல்) -3.1;\n1.7 லிட்டர் எரிபொருள் நுகர்வு (எல் / எச்).\nஇந்த தொடர் அனைத்து அலகுகள் சக்தி தண்டுகள் வரும் என்பதால் இது ஒரு சிறிய "இயந்திரம்" வேலை செய்ய வசதியாக உள்ளது.\nஇதன் விளைவாக, இத்தகைய செயல்திறன் குறிகாட்டிகளை அடைந்தது:\nகைப்பற்றப்பட்ட ஆழம் (மிமீ)-320;\nமிதவை அகலம் (மிமீ) -450-930;\nவேகம் (கிமீ / மணி) - முன்னோக்கி நகரும் போது 12 வரை, தலைகீழ் 4;\nஉள்நாட்டு மோட்டார் DM-66 உடன் மாற்றியமைத்தல்.உண்மையில், இது ஒரே DM-1 ஆகும் - "அறுபத்தி ஆறாவது" என்பது3கிலோ இலகுவானது (உலர் எடை 25 கிலோ) என்பது தவிர, பண்புகள் ஒரே மாதிரியானவை. ஒரு எண்ணெய் தெளிப்பானை உராய்வு அமைப்புக்குள் இணைக்கப்பட்டுள்ளது.\nஇது முக்கியம்! நீங்கள் பரிமாற்றத்தை "பிடிக்க முடியாது" என்றால், புலத்தில் வலது அல்லது கியர்பாக்ஸை அகற்றுவதற்கு விரைந்து செல்லாதீர்கள் - அத்தகைய சந்தர்ப்பங்களில், வேலைத்திட்டங்களில் பழுதுபார்க்கப்பட வேண்டும்.\nஆழம் பிடிக்கவும் (மிமீ) - 320 வரை;\nமிதவை அகலம் (மிமீ) - இரண்டு முறைகள் அமைக்கப்பட்டுள்ளன (350 அல்லது 610);\nவேகம் (கிமீ / மணி) - 10 வரை;\nஎடை (கிலோ) -105.\nஇந்த நிறுவனத்தின் மொத்த மாதிரியின் விலையிலிருந்து மிகவும் விலையுயர்ந்த அலகுகள் ஆகும்.\nஎஞ்சின் மாடல் DM-68 கிட்டத்தட்ட "ஆறாவது" தொடரின் அதிகார அலையை நகல் செய்கிறது. ஆனால் ஒரு சிறிய தொட்டி உள்ளது, மற்றும் எண்ணெய் அலகு மூலம் பகுதிகளுக்குள் தள்ளப்படுகிறது.\nஆழம் பிடிக்கவும் (மிமீ) - 300 வரை;\nஊடுருவி அகலம் (மிமீ) -450, 600 அல்லது 900\nவேகம் (கிமீ / மணி) - வரை 10.3;\nஎடை (கிலோ) - 103.\n"ஜீரோ எட்டாவது" பெரும்பாலும் வாங்கப்படுகின்றன. அதன் புகழ் ஒரு சிறிய விலை மற்றும் உயர் பராமரிப்பை வழங்கியது.\nதேர்வு முடிவு மற்றும் பொருத்தமான மோட்டார் தொகுதி வாங்கி கொண்டு, போன்ற உபகரணங்கள் திறமையான நடவடிக்கை விதிகள் பற்றி மறக்க வேண்டாம். இந்த பழுது மற்றும் நுகர்வு சேமிக்க.\nமுதல் மணிநேரம் மற்றும் வேலை நாட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன - பாகங்கள் மட்டுமே தேய்க்கப்படுகின்றன, எனவே அவை மென்மையான சுமைகளைத் தொடங்குகின்றன.\nஇது தொடங்கும் முன்பே, எல்லா ஃபாஸ்டினர்களையும் சரிபார்த்து, தேவைப்பட்டால், பலவீனமானவற்றை இறுக்கிக் கொள்ளுங்கள். எந்த காக்டெயில் தொடர் டிரைவரின் வழிமுறை கையேடு 35 மணிநேர ரன்-இன் சுழற்சியை வழங்குகிறது. இந்த காலகட்டத்தில் இது பரிந்துரைக்கப்படுகிறது:\nசுமை இல்லாமல் 3-5 நிமிடங்கள் மோட்டார் வேகத்தை, சராசரி வேகத்தை அமைக்கவும்;\nநடுத்தர வேகத்தில் முதல் கியரில் மட்டுமே வேலை செய்யும். சிறிய திருப்பங்கள் எப்பொழுதும் சூடான ஆபத்து. இதுவரை அதிகபட்சம் முரணாக உள்ளது;\nஉனக்கு தெரியுமா? 1950-1960 களின் தொடக்கத்தில் "சோளம்" காவியத்தை பற்றி, எல்லோரும் நிறைய கேட்டிருக்கிறார்கள். ஆனால் எங்கள் வரலாற்றில் ஒரு சாகசத்தின் விளிம்பில் மேலும் லட்சிய திட்டங்கள் இருந்தன. எனவே, முதல் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் பொல்டாவா பிராந்தியத்தின் பல பண்ணைகள் சிட்ரஸ் பயிரிடுவதற்கு ஒழுங்கான முறையால் மாற்றப்பட்டன! உண்மை, யோசனை விரைவில் கைவிடப்பட்டது, வழக்கமான தானிய திரும்ப.\nமுதல்5மணிநேரத்திற்குப் பிறகு எண்ணெய் மாற்றப்பட வேண்டும்;\nரன்-இன் முடிவடையும் வரை,7மணி நேரத்திற்கும் மேலாக இடைவெளியில் ஒரு புதிய தொகுதி வைக்க வேண்டும் (5 முன்னுரிமைக்குப் பிறகு);\n35 மணி நேரம் கழித்து, எண்ணெய் மாற்றங்கள், தேவைப்பட்டால் அனைத்து இணைப்புகளும் பரிசோதிக்கப்பட வேண்டும்.\nரன்-இன் முடிவை உடனடியாக நிறைவேற்றினால், மோட்டார் ஒரு முழு சுமையை கொடுக்கக்கூடாது. இது படிப்படியாக செய்யப்படுகிறது, முதலில், அதிகபட்ச முறைகள் மொத்த வேலை நேரத்தின் 25% க்கும் அதிகமாக இல்லை.பல உரிமையாளர்கள் ஆலை தட்டுவதற்கு ஒதுக்கி வைக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு பின்னர் இந்த விதிமுறைக்கு ஒத்துக்கொள்கிறார்கள்.\nநீங்கள் உங்கள் தோட்டத்தில் motoblock செயல்பாடு அதிகரிக்க எப்படி என்பதை அறிய இது பயனுள்ளதாக இருக்கும்.\nவரி ஆய்வுகள் மற்றும் பராமரிப்பு போன்ற நடைமுறைகள் குறைக்கப்படுகின்றன:\nஅழுக்கு, தூசி, எண்ணெய் ஆகியவற்றை தினசரி அகற்றுவதன் மூலம் அனைத்து வெளிப்புறப் பரப்புகளிலும்;\nகிடைக்கும் ஏற்றங்களின் அடிக்கடி சோதனை. புரோச் - தேவையானது;\nபெல்ட் நிலை குறித்த காட்சி மதிப்பீடு. தொகுப்புகள் அனுமதிக்கப்படவில்லை;\nஇணைப்பு இணைப்புகளைச் சரிபார்க்கவும்;\nஒவ்வொரு 50 மணிநேரமும், பெல்ட் பதற்றம் மற்றும் அனைத்து ஃபாஸ்டர்ஸர்களும் முழுமையாக சோதிக்கப்படுகின்றன, மற்றும் கியர்பாக்ஸில் உள்ள எண்ணெய் மாற்றப்படுகிறது.\nபெல்ட்டை மாற்ற, அதன் அளவு மற்றும் குறியீட்டை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், ஏனென்றால் அது வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளில் டிராக்டரில் உள்ள நடைபாதை-பின்னால் செல்கிறது. இந்த குறியீடுகள் A1180 (முன்னோக்கு) மற்றும் A1400 (பின்னால்) ஆகியவற்றுடன் இருக்கும்.\n"ஏ" என்ற கடிதம் 13 மிமீ ஒரு சுயவிவரத்தை குறிக்கிறது. பெரும்பாலும் படிப்படியாக, அளவுக்கு ஒத்த கூறுகள், ஆனால் உள் பற்கள்.\nஇயற்கையாகவே, மின்சக்தி அலகு இயக்க முறைமை ஓவர்லோடிங் மற்றும் செயலாக்கமின்றி போதுமானதாக இருக்க வேண்டும். தொழிற்சாலை ஆவணங்களை கவனமாக படிக்க - இது தேவையான அனைத்து இடைவெளிகளையும், சகிப்புத்தன்மையையும் கடைப்பிடிக்கிறது. இது செய்யவில்லை என்றால், ஒரு விலையுயர்ந்த மோட்டார் "அழித்தல்" ஆபத்து உள்ளது.\nஇது முக்கியம்! ஒரு மாதத்திற்கும் மேலாக மோபொலொக் இயங்கியிருந்தால், அதைப் பாதுகாப்பதென்பது நல்லது, அதன் பயன்பாடு இன்னும் திட்டமிடப்படவில்லை.\nவேலை செய்வது, இயக்கி சக்கரம் மிகவும் வசதியாக இருக்கும் மற்றும் தரையில் இணையாக மோட்டோலொக் இணைக்கிறது. சிறிதளவு பயாஸ் - மற்றும் கார் "முடிகிறது." ஒரே பாஸ் சாகுபடி அதிகபட்ச ஆழம் 200 மிமீ (மென்மையான மண்ணில்). மிகவும் கடினமான பகுதிகளில் அது 100-150 மிமீ வரை குறைக்கப்படுகிறது.\nமற்றொரு நுணுக்கம் - கஸ்தூரி தரையில் கத்தியால் உடைக்கப்படாமல், முதல் களத்தில் மட்டுமே இயற்றப்படுகிறது.\nபருவத்தின் முடிவில், உலர் காற்றோட்டமான பகுதியில் அலகு வைக்கப்படுகிறது. இது தெருவில் சேமித்து வைக்கலாம், ஒரு விதானத்தின் கீழ், முன்பு தார்பூலின் அல்லது பாலியெத்திலின் செய்யப்பட்ட ஒரு அட்டைடன் அதை மூடி வைத்திருக்க வேண்டும். இதற்கு முன்பு, இயந்திர மற்றும் எரிவாயு நிறுத்த நெம்புகோல்கள் STOP நிலையில் உள்ளன என்பதை உறுதிப்படுத்தவும்.\nபாதுகாப்பிற்காக, எல்லையற்ற பகுதிகளும் எண்ணெய் வகை K17 உடன் சிகிச்சையளிக்கப்படுகின்றன. அத்தகைய சேமிப்பு காலம் ஒரு வருடம் ஆகும். மோட்டோபொலொக் இயங்கத் தொடங்கி விட்டால், மசகு எண்ணெய் மறுபடியும் வைக்கப்படும், அதன் பிறகு அவர்கள் மெக்கானிசத்தை இறுக்கமாக "மறைக்க" மறக்க மாட்டார்கள்.\nதரமான தொகுப்பில் இது போன்ற சாதனங்கள் உள்ளன:\nபல்வேறு முறைகள் தளர்த்த பல்வேறு ஆழம்4ஆலைகள்;\nகூடுதல் செயல்பாடுகளை வாங்குவதன் மூலம் "செயல்பாட்டு" கணிசமாக விரிவுபடுத்தப்படுகிறது. மிகவும் பிரபலமான சாதனங்கள் மத்தியில் வெளியே நிற்க:\nHillersரூட் பயிர்களின் தோட்டங்களில் வேலை செய்யும் போது அவசியமானவை. அவர்கள் பெரிய இடங்களில் மென்மையான "முகடுகளை" செய்ய அனுமதிக்கிறார்கள். அவை "நிரந்தரமானவை" மற்றும் அனுசரிப்புடன் உள்ளன;\nஉனக்கு தெரியுமா? சில நேரங்களில் வடிவமைப்பாளர்கள் "இழுத்தனர்" மற்றும் டிராக்டர்கள் மீது. ஒரு காலத்தில், எல்லோரும் ஹங்கேரிய மாதிரியான Dutra D இன் அசாதாரண தோற்றத்தால் தாக்கினர், இது ஒரு குறுகிய அடித்தளம் மற்றும் ஒரு பெரிய வட்டமான "மூக்கு" இருந்தது, முதல் அச்சை முன் வலுவாக முன்னேறியது.\nதிணிப்பு பிளேடு, அகழ்வாராய்ச்சி மற்றும் குப்பை சேகரிப்பு (மற்றும் குளிர்காலத்தில் மற்றும் பனி) உதவுதல்;\nகலப்பை பனிக்கட்டியின் வெவ்வேறு அகலத்தோடு;\nபிளாட் வெட்டுகள்வரிசைகளுக்கு இடையில் களைகளை அகற்றுவது;\nதனியாக நிற்கவும் டிரெய்லர்கள்சரக்குகளை எளிதில் எடுத்து செல்ல முடியும்.\n"அடுக்ககம்" கூடுதல் பெல்ட் மூலம் இணைக்கப்பட்ட இயக்கக அலகுகளுடன் நம்பிக்கையுடன் செயல்படுகிறது:\nஉங்கள் கைகள் ஒரு சக்தி டிராக்டர் ஒரு mowing இயந்திரம் எப்படி கற்று கொள்ள ஆர்வமாக இருக்கும்.\nமோட்டோகிராக்குக்கான உருளைக்கிழங்கு முக்கிய வகைகளை அறிந்துகொள்ளுங்கள்.\nபொதுவாக, உண்மையான மாஸ்டர். ஆனால் அவர் "உடல்நிலை சரியில்லாமல்", பழுதுபார்க்க கோரினார்.\nஎந்தவொரு விவசாயியும் மோட்டார்-பிளாக்ஸின் பல "குடும்ப நோய்களை" எளிதில் பெயரிட முடியும். பொதுவாக அவை மின் அமைப்பு, பெல்ட்கள் மற்றும் பரிமாற்றங்களுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன.\nஇத்தகைய இடைவெளிகளின் நயவஞ்சகமானது, தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ள முடியும் என்பதே - குறைந்த தரப்பகுதிகள் அல்லது எரிபொருள் இந்த விஷயத்தில் ஈடுபடுகின்றன (சட்டமன்றத்தில் உள்ள குறைபாடுகள் மிகவும் அரிதாகவே உள்ளன). மிக நீளமான பிரச்சினைகள் மற்றும் அவற்றின் நீக்குதல் முறைகளை நிறுத்தி விடுவோம்.\nஅவர்கள் அனைத்து மோட்டார் சைக்கிள்களிலும் நன்கு அறிந்திருக்கிறார்கள், அனுபவமுள்ள ஒரு நபர் ஒரு சிக்கலை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. அது புரியும் மற்றும் புதுமை புதுமுகம்.\nஎளிமையான முறையில் தொடங்குவோம் - எரிபொருள் கார்பரேட்டருக்குள் நுழைய முடியாது. இந்த சரிபார்க்க, நீங்கள் மெழுகுவர்த்தி unscrew வேண்டும் - உலர் ஒரு போன்ற ஒரு hunch உறுதி. நடவடிக்கைகள் பின்வருமாறு:\nதொட்டியை பூர்த்தி செய்து, எரிபொருள் வால்வு திறக்க;\nபின்னர் எரிவாயு குழாயின் கீழே துளை சுத்தம் - ஆரம்ப வடிகால் சிக்கலான;\nபெட்ரோல் அடையவில்லை என்றால், அதை தொட்டிலிருந்து நீக்கிவிட வேண்டும், குழாய் நீக்கி அதை பறிப்போம்;\nஇது முக்கியம்! உத்தரவாத நிலைமைகள் மற்றும் முன்கூட்டிகளின் பட்டியல் ஆகியவற்றைப் பற்றி விற்பனையாளரை இந்த காலகட்டத்தில் உண்மையில் மாற்றுவதை உறுதி செய்யுங்கள். இது "அமெச்சூர் நடவடிக்கைகள்" கைவிட நல்லது - நீங்கள் எளிதாக சேவையை இழக்க முடியும்.\nபின்னர் கார்பூரியர் உடலில் இருந்து குழாய் unhook. இது ஜெட்ஸுடன் சேர்ந்து சேதமடைகிறது. கிரேன் மீண்டும் ஏற்ற பின்னர், எல்லாம் தேவை என வேலை செய்யும்.\nஇது எளிமையானதாகவே தோன்றுகிறது, ஆனால் புலத்தில் இது ஒரு இனிமையான வேலை இல்லை, காற்று காற்றில் தூசி போட முடியும்.\nமிகவும் சிக்கலான சூழ்நிலைகள் (உதாரணமாக, எரிபொருள் உருளைக்குள் நுழையாதபோது) கார்பரேட்டரை அகற்றுவதற்கும், அதற்கும் மேலிருக்கும் அதிகப்படியான தேவைக்கும் தேவைப்படும்.\nஇது சம்பந்தமாக, காஸ்கட் டிரைவர் யூனிட் இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் மூலம் சாதகமான முறையில் ஒப்பிடுகிறது, மற்றும் தொழிற்சாலை பழுதுபார்க்கும் அறிவுறுத்தல்கள் அனைத்தும் அதன் விவரங்களை விவரிக்கின்றன. பொதுவாக, இது போல் தோன்றுகிறது:\nபெட்ரோல் எச்சங்கள் இல்லாமல் ஏற்கெனவே நீக்கப்பட்ட அலகு ஒரு தொட்டியைக் கொண்டு சேதமடைகிறது, அதே நேரத்தில் அது தொழிலாளிக்கு நெருக்கமான நிலையில் வைக்க முயற்சிக்கின்றது. ஒரு எளிய சோதனை - நீங்கள் அதை திருப்பிவிட்டால், காற்று கடக்க கூடாது.\nஇதை உறுதி செய்து, மிதவை அறையில் நாக்கை சரிசெய்யவும். இது சாதாரண சுழற்சியை உறுதிப்படுத்த கவனமாக வளைந்து அல்லது வளைந்திருக்க வேண்டும்;\nஅடுத்த கட்டமானது ஜெட் கட்டுப்பாட்டு நீக்கம் ஆகும்;\nஇறுதியில், இயந்திரம் குறைந்த வேகத்தில் (இல்லை சுமை) சூடாக உள்ளது. தேவைப்பட்டால் ஒலியின் மீது கவனம் செலுத்துங்கள், முறுக்கப்பட்ட திருகு "வாயு" சற்று தளர்த்துவது.\nஇவை மின்சக்தி முறையின் வழக்கமான "தோல்விகள்" ஆகும், இது மிகப்பெரிய அளவிலான சாதனங்கள் வேலையின்மைக்கு காரணம்.\nZubr JR-Q12E Tillers, சால்யூட் 100, செண்டார் 1081 டி, நெவா எம்பி2பற்றி மேலும் அறியவும்.\nகியர் பாக்ஸ் - லேட் எண்ணெய் மாற்றம் மற்றும் இயக்க முறைமை மீறல் முக்கிய கூறுகளில் ஒன்று உடைந்து வழிவகுக்கும். பெரும்பாலும், பரிமாற்றத்தின் இந்த உறுப்பு அத்தகைய சிரமங்களைக் கோபப்படுத்துகிறது:\nசங்கிலியில் இருந்து சட்டைகளை இடமாற்றம் செய்வது, அது தளர்வை ஏற்படுத்துவதோடு போகலாம். இது பெரிய பக்கவாட்டு சுமைகளின் விளைவாகும்;\nதாங்கி துவைக்கும் துணி துவைக்கும் முனைப்பானது, தரையில் ஒரு கோணத்தில் தடையின்றி செயல்படுவது;\nஉனக்கு தெரியுமா? "ரெட்ரோ" க்கான பாஷன் விவசாய இயந்திரங்களை பாதித்துள்ளது. இந்த துறையில் சிறப்பு வெற்றி புதிய ஹாலந்து நிறுவனத்தின் மூலம் அடையப்பட்டது, இது நவீன சேஸை பழைய உருவங்களுடன் உட்புற வடிவங்கள் மற்றும் குரோம் நிறைந்ததாக கொண்டு "சேஸ்" ஆகும்.\nஒரு சங்கிலியால் நிறைந்த சட்டைகளின் சரிவு. மோட்டார் வாகன வடிவமைக்கப்படாத சக்திவாய்ந்த வீட்டில் ஆலைகள் தயாரிக்கப்படும் போது, ​​அடிக்கடி ஆபத்தான கிராக் "பகுத்தறிவு" செய்வதன் விளைவாகும்.\nஎபிபிளூன் கசிவு, இது எளிதில் அகற்றப்படும் (முனை முழுமையான மறுகூட்டலுடன் ஒப்பிடுகையில்).\nஅத்தகைய மீறல்களின் முதல் அறிகுறிகளை அங்கீகரிப்பது எளிது - வேலை அலகுக்குச் செவிசாயுங்கள். தெளிவான மற்றும் தெளிவற்ற தேவையற்ற "வளர்கைகள்" தெளிவான கிளிக்குகளால் தோன்றினாலும், அது சரிசெய்வதற்கான நேரமாகும்.\nநன்கு கவனித்துக்கொண்டிருக்கும் காக்கேட் மோட்டோக்லாக்கின் குறைபாடு "சோர்வாக" திணிப்புப் பெட்டியை மட்டுமே உறிஞ்சிவிடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இது போன்ற மாற்றங்கள்:\nவெட்டிகள் தண்டுகளிலிருந்து அகற்றப்படுகின்றன;\nசட்டைகளை மறக்காமல், பாதுகாப்பு அட்டையை அகற்றவும் (இது "இரண்டாவது கை" பிரதிகள் அல்ல);\nசுரப்பி ஒரு ஊசி அல்லது இதேபோல் ஏதோவொன்றில் இருந்து அகற்றப்பட்டு அகற்றப்படுகிறது;\nஒரு புதிய "கம்" தூசி இருந்து துடைக்கப்பட்டு, இயந்திர எண்ணெய் கொண்டு உயவூட்டு மற்றும் இடத்தில் வைத்து. நீங்கள் அதை ஒரு சாக்கெட் குறடு மூலம் முற்றுகையிடலாம். கொஞ்சம் மெதுவாக அதை மெதுவாக சுவைக்க வேண்டும். முடிந்தது!\nஎந்த கஷ்டமும் இல்லை, அது எண்ணெய் மாற்ற எளிதாக இருக்கும். ஆனால் புதிய புஷிங் மற்றும் சங்கிலிகளின் திறமை திறன் தேவைப்படும் - மாற்றங்கள் இல்லாமல், கியர்கள் கண்டிப்பாக சீரமைக்கப்பட வேண்டும்.\n4 முதல்5ஆண்டுகள் பணிபுரியும் மோட்டார்-பிளாக் வேலைகளுக்கு, இன்னொரு சிக்கல் இருக்கிறது - ஒரு சாதாரண தொடக்கத்திலேயே, இயந்திரம் சீரற்றதாக, கணிசமாக அதிகாரத்தை இழந்துவிடுகிறது.\nஒரு அனுபவம் வாய்ந்த மெக்கானிக் உடனடியாக வெளியேற்றத்தின் நிறம் பார்க்கும். கருப்பு நிறம் கூறுகிறது: மிகவும் பணக்கார கலவை கார்பரேட்டருக்குள் செல்கிறது. இந்த முனை சமீபத்தில் நகர்த்தப்பட்டிருந்தால், மெழுகுவர்த்தியை மறந்து விடுங்கள். அதிகமான கார்பன் வைப்பு, ஒரு எண்ணெய் மின்வலுடன் இணைந்திருக்கும்:\nஅடைத்த காற்று வடிகட்டி;\nஎரிபொருள் வால்வு கார்பௌட்டரின் இறுக்கத்தை மீறுவது;\nஅணிந்திருந்த எண்ணெய் சிதறல் பிஸ்டன் வளையம்.\nஇது முக்கியம்! அதே நேரத்தில் நெம்புகோல்களை முன்னோக்கி அழுத்தவும் மற்றும் தலைகீழ் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. இல்லையெனில், நீங்கள் கியர்பாக்ஸின் கயிறுகளின் விளிம்புகளை "அரைக்க" முடியும்.\nவடிகட்டி மற்றும் கார்பரேட்டர் அல்லது வால்வுகளை சரிசெய்தல், மோதிகைகளுக்கு பதிலாக இயந்திரத்தை "தள்ளி" விட மிகவும் எளிதானது. அத்தகைய நேரத்தைச் சாப்பிடும் நடவடிக்கைகள் இன்னொரு வழக்கில் கைவிடப்படுகின்றன - சுருக்கம் உடைந்தால்.\nஇந்த விஷயத்தில், மோதிரங்கள் மட்டுமே செய்ய முடியாது: உள் நுழைப்பு வால்வு முறிந்துவிடும் சாத்தியம் உள்ளது. மாற்றீடாக கூடுதலாக, இத்தகைய பணியின் போது, ​​சிலிண்டர்களின் தொகுதி மற்றும் வால்வுகளின் உழைப்பு முனைகளில் இருந்து கார்பன் வைப்புக்கள் அகற்றப்படுகின்றன. அத்தகைய கடினமான பழுதுபார்ப்பில் ஈடுபட்டிருப்பதால், பிஸ்டன்கள் மற்றும் சிலிண்டர் கண்ணாடியை கவனமாக பரிசோதிக்கவும். இப்போது பிரபலமான அடுக்குமாடி டிசைனரின் பல மாற்றங்களுக்கிடையிலான வித்தியாசத்தை நீங்கள் இப்போது அறிந்திருக்கின்றீர்கள். இந்த தகவல் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீடிக்கும் நம்பகமான நகலைத் தேர்ந்தெடுப்பதற்கு உதவுமென நம்புகிறோம். ஒரு நல்ல ஷாப்பிங்!\nஇதழ் மஞ்சள் ரொட்டி © Copyright 2020 | கஸ்கட் மோட்டார் தடுப்பு சாதனத்தின் பயன்பாடு, பயன்பாடு மற்றும் பழுது
வெறும் கணக்கு | சிறுகதைகள் (Short Stories in Tamil)\nதாமோதரன் மாமா வந்திருந்தார்.\nகாலை 6:30 மணிக்கு எங்களின் வீடு தேடி வருவது என்றால், அவர் அதிகாலை4மணிக்கே எழுந்து, வீட்டில் இருந்து கிளம்பியிருக்க வேண்டும். மாமாவின் வீடு, காட்டாங்கொளத்தூர் பகுதியில் இருந்தது. மின்சார ரயில் பிடித்துப் பயணித்து, கோடம்பாக்கத்தில் இறங்கி, நகரப் பேருந்து பிடித்து வடபழநி வந்து, வீடு தேடி நடந்து வந்திருக்க வேண்டும். அவரது முகத்தில் தூக்கமற்ற அசதியும் களைப்பும் படிந்திருந்தன. சோபாவில் கிடந்த நியூஸ் பேப்பரை எடுத்து ஒழுங்காக மடித்துவைத்துவிட்டு, ஓரமாக உட்கார்ந்துகொண்டார்.\nநந்தினி அவருக்கு காபி கொண்டுவந்தபோது மாமா அதை மறுத்து தலை ஆட்டியபடியே, ”நான் காபி குடிக்கிறது இல்லை… விட்டுட்டேன்” என்றார்.\nமாமாவுக்கு, அப்பாவைவிட நான்கு வயது அதிகம். ஆனாலும் உடலில் தளர்ச்சி இல்லை. ஆள் குள்ளம். நல்ல கறுப்பு. கசங்கிய வேஷ்டியைக் கட்டியிருந்தார். கயிறு சுற்றிய மூக்குக்கண்ணாடி, அவரின் சட்டைப் பையில் இருந்தது. தனது கையில் வைத்திருந்த மஞ்சள் பையை எடுத்து நீட்டியபடியே மாமா சொன்னார், ”ரமணா, இந்தக் கணக்கை ஒருக்கா பார்த்துரு. ஒரு மாசமா வெச்சுக்கிட்டே இருக்கேன்” என, பையில் இருந்த வெள்ளை பேப்பரையும் 40 பக்க நோட்டு ஒன்றையும் எடுத்தார். பேப்பரோடு நிறைய ரசீதுகளும் இணைக்கப்பட்டிருந்தன.\n”இருக்கட்டும் மாமா… கணக்கு எல்லாம் எதுக்கு?” என்றேன்.\n”அப்படி இல்லை… காசு குடுத்தவன் நீ. கணக்கை ஒருதடவை முழுசா பார்த்துடணும்” என அழுத்தமாகச் சொன்னார்.\n”இதுலபோயி எப்படி மாமா கணக்கு பார்க்கிறது?” எனத் தயக்கத்துடன் கேட்டேன்.\n”அப்படிச் சொல்லக் கூடாது. சாவும் ஒரு செலவுதான். உங்க அப்பா இறந்துபோன அன்னைக்குக் காலையில என்கிட்ட இருபதாயிரம் ரூபாய் குடுத்தே. அப்புறம் மூணு மணிக்கு இன்னும் முப்பதாயிரம் ரூபாய் குடுத்தே. ஐஸ்பாக்ஸ்ல இருந்து மயானம் வரைக்கும் ஆன எல்லா செலவுகளையும் சேர்த்து 42,316 ரூபாய் ஆச்சு. மிச்சத்தை உன்கிட்ட தந்துட்டேன். இதுல கணக்கு இருக்கு.”\n”நீங்க கூட இருந்து ஒத்தாசை செய்ததே பெரிய விஷயம். இதுல என்ன மாமா கணக்கு? அதெல்லாம் சரியாத்தான் இருக்கும்” என்றேன்.\n”இல்லை ரமணா. அப்படி விடக் கூடாது. ஒவ்வொரு காசும் நீ உழைச்சு சம்பாதிச்சது. கணக்கு பார்க்கிறது ஒண்ணும் தப்பான விஷயம் இல்லை. ஒண்ணைப் பத்தி முழுசா புரிஞ்சிக்கணும்னா, கணக்கு பார்க்கணும். அதுலயும் சாவுக் கணக்கைப் பார்த்தாதான், உலகம் இப்போ எப்படி இருக்குனு தெரிஞ்சுக்க முடியும்.”\n”அதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்லை மாமா. ஆபீஸ் போகணும். நிறைய வேலை கிடக்கு. இயர் எண்டு வேற” என்றேன்.\n”புரியுது. இதுக்கு அரை மணி நேரம் ஒதுக்கினா போதும். கணக்கை நானே விளக்கிச் சொன்னாதான் புரியும். நீ ஃப்ரீயா இருக்க நேரம் போன் பண்ணு, வர்றேன்.”\n”இதுக்காக நீங்க அலைய வேண்டாம் மாமா. கணக்கு எல்லாம் மெதுவா பார்த்துக்கலாம்” என்றேன்.\n”உங்க அப்பா சாவுல நான் நிறையக் கத்துக்கிட்டேன் ரமணா. ராயப்பேட்டையில கம்மியான வாடகைக்கு ஐஸ்பாக்ஸ் கிடைக்குது. இது தெரியாம, ஒரு கடன்காரன் என்னை ஏமாத்தி ரெண்டாயிரம் ரூபாய் ஜாஸ்தியாப் பிடுங்கிட்டான். அப்புறம் அன்னைக்கு காபியும் நல்லாவே இல்லை. தெரியாம ராயர் கடையில சொல்லிட்டேன். அவன் லோக்கல் காபித்தூள் போட்டிருக்கான்போல, பூச்சிமருந்தைக் குடிக்கிற மாதிரியே இருந்துச்சு. ‘சாவு வீடுதானே, யாரு கேட்கப்போறா?’னு நினைப்பு.\nஅம்பாள் மெஸ்ல சொல்லியிருந்தா, நல்ல காபி குடுத்திருப்பான். வாட்டர் கேன் வாங்கினது, மாலை, ஊதுபத்தி, பேப்பர் கப், பூ, ப்ளாஸ்டிக் சேர் வாடகைக்கு எடுத்தது, சாமியானா எல்லா செலவுகளும் ஜாஸ்தி. யார்கிட்டயும் பேரம் பேசவே முடியலை. முன்அனுபவம் கிடையாதே. இது பரவாயில்லை, சாவு வீட்டுக்கு வர்ற மனுஷங்களுக்கு செருப்பை எங்க விடுறதுனு தெரியலை. எதிர் வீட்டு முன்னாடி போட்டுட்டு ஒரே பிரச்னை. இதெல்லாம் உங்க அப்பாவுக்குப் பிடிக்காத விஷயம்.”\n”விடுங்க மாமா, அவர் என்ன திரும்ப வந்து கேட்கவாபோறார்?”\n”அப்படி விடக் கூடாது ரமணா. சாவு வீட்லதான் நம்மளை நிறையப் பேரு ஏமாத்துறாங்க. நினைச்சா ஆச்சர்யமா இருக்கு. சாவை வெச்சு, எத்தனையோ பேர் தொழில் பண்ணுறாங்க; கைநிறையச் சம்பாதிக்கிறாங்க. ஒவ்வொண்ணுக்கும் காசு, எதுவும் ஓசி கிடையாது. உதவிக்கு ஆள் கிடையாது.”\n”இது ஒண்ணும் நம்ம கிராமம் கிடையாது மாமா, பல்லுல பச்சை தண்ணிகூட படாம கூடமாட இருந்து ஓடி ஆடி உதவி செய்றதுக்கு.”\n”அதுவும் சரிதான். முன்னாடி எல்லாம் சாவு வீடுன்னா, தெருவே அமைதியா இருக்கும்; அழுகைச் சத்தம் மட்டும்தான் கேட்கும். இப்போ சாவு வீட்டுக்குள்ளே ஒரே செல்போன் பேச்சு… வம்பு… வழக்கடி. இது போதாதுனு நியூஸ் பேப்பர்ல வந்த பாலிட்டிக்ஸ் பற்றி சத்தமா அரட்டை அடிச்சுக்கிட்டு இருக்காங்க. ‘வாயை மூடிட்டு இருங்கடா’னு செவுட்டுல அறையலாம்போல இருந்துச்சு. அடக்கிக்கிட்டேன். மனுஷனுக்கு இதெல்லாம்கூடவா கத்துக்குடுக்கணும்?!”\n”காலம் மாறிட்டு வருதுல்ல. சாவு வீடும் ஒரு சம்பிரதாயம் ஆகிருச்சு.”\n”சிட்டியில ஒரு மனுஷன் செத்தா, இவ்வளவு செலவு ஆகும்னு இப்போதான் தெரிஞ்சுக்கிட்டேன். காசு இல்லாதவன் செத்தா, நிறைய அவமானப்படணும். அதான் எனக்கு பயமா இருக்கு.”\n”நாங்க இருக்கோம், பார்த்துக்கிட மாட்டோமா? இதுக்கே இப்படிச் சொல்றீங்க, வெளிநாட்டுல கல்லறை நிலத்தை அட்வான்ஸ் புக் பண்ணி வாங்கிக்கச் சொல்றாங்க. அதுக்கு மாதத் தவணைத் திட்டம்கூட இருக்கு.”\n”எதிர்காலத்துல மனுஷன் பொறக்கிறதும் சாகுறதும்தான் பெரிய தொழிலா இருக்கும்போல. ரமணா, நாலஞ்சு பேர் பில் தரலை. அதனால நானே ரசீது புக் ஒண்ணு வாங்கி, அதுல கையெழுத்து வாங்கிட்டேன். பரவாயில்லைதானே?”\n”நாம என்ன ஆடிட்டிங்கா பண்ணப்போறோம். அதெல்லாம் தேவை இல்லை மாமா.”\n”உங்க அப்பா பத்து பைசாவுக்குக்கூட டைரியில கணக்கு எழுதிடுவார். ஒருத்தர்கிட்டயும் பைசா பாக்கி வெச்சது இல்லை. நான் ஒருத்தன்தான் அவர் கடனைத் திருப்பித் தராத கடன்காரன்.”\n”அப்படி பைசா பைசாவா எழுதி கணக்குப் பார்த்தா, தேவை இல்லாத கவலை வரும்; பிபி ஏறிப்போயிரும்.”\n”காசு விஷயத்துல கவலைப்படுறது தப்பு இல்லை. உங்க ஜெனரேஷனுக்கு, காசோட அருமை தெரியலை. பத்து ரூபாய்தானேனு நினைக்கிறீங்க. பத்து ரூபாய்ங்கிறது எவ்வளவு பெரிய பணம்? எனக்குக் கல்யாணம் ஆன புதுசுல ஒரு மாச வாடகையே பத்து ரூபாய்தான். அதுகூட இல்லாம எத்தனையோ நாள் அவதிப்பட்டிருக்கேன். இன்னைக்கு ஸ்கூல் பசங்ககூட கையில் ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்துக்கிட்டு கடைக்கு வர்றாங்க. ஆயிரம் ரூபாய் எல்லாம் இன்னைக்குப் பெரிய பணமே இல்லை. அந்தக் காலத்துல நூறு ரூபாய் நோட்டை நான் தொட்டுக்கூடப் பார்த்தது கிடையாது. ஒரே ஒருதரம் பேங்க்ல குடுத்தாங்க, கையில வெச்சிருக்கவே பயமா இருந்துச்சு.”\n”இப்போ லட்சம் ரூபாயே பெரிய விஷயம் இல்லை மாமா” என்றேன்.\n”அதான் பிரச்னையே. என்னாலே இந்தக் கணக்கை வெச்சுக்கிட்டு நிம்மதியாத் தூங்க முடியலை. நேரம் ஒதுக்கிப் பார்த்துரியா!” என ஆதங்கமாகக் கேட்டார் தாமோதரன் மாமா.\n”பார்க்கலைன்னா நீங்க விட மாட்டீங்கபோல. சரி, அடுத்த வாரம் கூப்பிடுறேன்” என்றேன்.\n”நந்தினி… பழைய துணி ஒண்ணு இருந்தா குடும்மா” எனச் சத்தமாகக் கேட்டார் மாமா.\nஎதற்கு எனப் புரியாமல், பழைய துணி ஒன்றை நந்தினி தந்தபோது மாமா அதை வாங்கி, எனது மகனின் பள்ளிக்கூட ஷூவைத் துடைக்க ஆரம்பித்தார்.\n”சே! இதைப்போயி நீங்க செஞ்சுக்கிட்டு, விடுங்க… வைங்க மாமா” என்றேன்.\n”சும்மா பேசிக்கிட்டுத்தானே இருக்கப்போறோம். அப்படியே இதைச் செய்றதுல என்ன ஆகிடப்போகுது? ஸ்கூல் பசங்களுக்கு ஷூவைத் துடைச்சுப் பழக்கம் இல்லை. அந்தக் காலத்துல எல்லாம் ஷூல முகம் தெரியும். அப்படித் துடைப்பேன். இல்லைன்னா எங்க அப்பா மணிக்கட்டுலயே அடிப்பார்.”\n”போதும் வைங்க மாமா” என, உரத்தக் குரலில் சொன்னேன்.\nமாமா, ஷூவைத் துடைத்து வைத்துவிட்டுக் கேட்டார், ”உங்க அப்பாவோட பழைய டிரெஸ், மணிபர்ஸ், மூக்குக்கண்ணாடி, ஃப்ளாஸ்க், செப்பல்… எல்லாத்தையும் எடுத்து வைக்கச் சொல்லியிருந்தேனே… கட்டி வெச்சிருக்கியா?”\n”அதை எல்லாம் வெச்சு என்ன செய்யப்போறீங்க?”\n”ஹோம்ல குடுக்கப்போறேன். அவங்களுக்கு யூஸ் ஆகும்.”\n”இதைப்போயி யாராவது குடுப்பாங்களா?”\n”இந்த மாதிரி பேன்ட், ஷர்ட், செருப்பு இல்லாம எத்தனையோ பேர் கஷ்டப்படுறாங்க. அவங்களுக்கு உதவியா இருக்கும். எதுவும் வீணாப்போற விஷயம் இல்லை. நான் கிளம்புறேன். நந்தினி… வர்றேன்மா.”\n”சாப்பிட்டுப் போங்க” என, நந்தினி உள்ளே இருந்தபடி குரல் கொடுத்தாள்.\n”இல்லை… காலையில அவிச்ச காய்கறிகள் மட்டும்தான். அதை வீட்ல செஞ்சிவெச்சுட்டு வந்திருக்கேன். போயி சாப்பிட்டுக்கிறேன்” என்ற மாமா கிளம்பும்போது அவர் அதுவரை உட்கார்ந்திருந்த சோபாவைத் துடைத்து, மடிப்பு நீக்கிச் சரிசெய்துவிட்டு புன்சிரிப்போடு வெளியேறினார்.\nஅவரைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அப்பா இறந்த நாளில், மாமா ஒற்றை ஆளாக உடன் நின்று ஓடியாடி வேலை செய்தார். இவ்வளவுக்கும் அப்பாவுக்கும் அவருக்கும் ஆகாது. அப்பா இருந்த நாட்களில், மாமா வீடு தேடி வந்ததே கிடையாது.\nஆனால், மருத்துவமனையில் அப்பா இறந்துபோன தகவல் கேட்டு வந்த நிமிடம் முதல் இறுதிக் காரியங்கள் முடியும் வரை கூடவே இருந்தார். சாவு செலவுக்குக் கொடுத்த கணக்கைப் பார்த்துவிடச் சொல்லி இப்படி அலைந்துகொண்டும் இருக்கிறார். ‘என்ன மனிதர் இவர்..?!’ எனப் புரியவே இல்லை.\nமாமா போன பிறகு, கதவைச் சாத்திவிட்டு நந்தினி சொன்னாள், ”நீங்க கணக்கைப் பார்த்திருங்க. உங்க மாமாவை நம்ப முடியாது. சுத்த ஃப்ராடு… இதுலயும் கை வெச்சிருப்பார். பேச்சுவாக்குல தானே ரசீது போட்டு வாங்கி வெச்சிருக்கேன்னு சொல்றார் பார்த்தீங்களா? அது பித்தலாட்டம், ஃப்ராடுத்தனம்!”\n”பணத்தை எடுத்தா எடுத்துட்டுப் போகட்டும். யாரு இத்தனை அக்கறையா கூடவே இருந்து கவனிப்பா? நான் மாமாவை நம்புறேன்” எனக் கோபமாகச் சொன்னேன்.\n”நம்புங்க… நல்லா நம்புங்க. ஆனா, கட்டின பொண்டாட்டியும் பெத்தப் புள்ளைங்களும் நம்பாமத்தானே அவரை வீட்டைவிட்டு விரட்டிவிட்டுட்டாங்க. ஒத்தைக் குரங்கா தனியா வாழுறார். அதை மறந்துராதீங்க” என்றாள் நந்தினி.\n”அது நமக்குத் தேவை இல்லாத விஷயம். அப்பா சாவுக்கு, இவர்தான் கூடவே இருந்து பார்த்துக்கிட்டார். அந்தக் கணக்கை நான் பார்க்க மாட்டேன். எனக்கு அவர் மேல நம்பிக்கை இருக்கு” என்றேன்.\n”இப்படித்தான் உங்களை எல்லாரும் நல்லா ஏமாத்துறாங்க. ஏமாளியாவே இருந்துட்டுப்போங்க… யாருக்கு நஷ்டம்?” என்றாள் நந்தினி.\n”பரவாயில்லை… இப்படி ஏமாளியாவே இருந்துட்டுப்போறேன்” எனப் பேச்சைத் துண்டித்துக்கொண்டு, குளிப்பதற்குக் கிளம்பினேன். நந்தினி, மாமாவை பற்றி இன்னும் ஏதேதோ சொல்லிக்கொண்டே இருந்தாள். எதையும் நான் கேட்டுக்கொள்ளவில்லை.\nசில வாரங்களுக்குப் பிறகு, ஒருநாள் மாமா என் அலுவலகத்துக்கே வந்து காத்திருந்தார்.\n”இங்கே எப்படி மாமா கணக்கு வழக்கு பார்க்கிறது? இது ஆபீஸ்” எனத் தயக்கத்துடன் சொன்னேன்.\n”அதுக்கு இல்லை… நாள் ஆகிட்டேபோகுது. கணக்கை வெச்சுக்கிட்டு என்னால நிம்மதியா இருக்க முடியலை. என் மேல உனக்குக் கோபம் ஒண்ணும் இல்லையே… இருந்தா சொல்லிடு” என தழுதழுத்தக் குரலில் கேட்டார் மாமா.\n”அதெல்லாம் ஒண்ணும் இல்லை மாமா. நேரம் கிடைக்கலை அவ்வளவுதான். கணக்கு எதுவும் வேண்டாம்” என்றேன்.\n”அது என் சுமை. தட்டிக்கழிக்காதே. பத்து நிமிஷம் போதும். எல்லா பில்லையும் தனித்தனியா பின் பண்ணிவெச்சிருக்கேன். ஒரே ஒரு பார்வை பார்த்தா போதும்!”\n”நான் உங்களை நம்புறேன் மாமா. காசு ஒண்ணும் பெரிசு இல்லை” என்றேன்.\n”அதான் பிரச்னையே… நீ என்னை நம்புறேல்ல. அதுக்காகத்தான் கணக்கைப் பார்க்கச் சொல்றேன் ரமணா. காசு விஷயத்துல ஒரு மனுஷன் மேல நம்பிக்கை வர்றதுதான் பெரிய விஷயம். என்னை என் பொண்டாட்டியே நம்ப மாட்டா. ஃப்ராடுனு திட்டுவா. ஆனா,\nநீ என்னை நம்புற. அப்போ கணக்கைப் பார்க்கத்தானே வேணும்” என்றார்.\n”உங்க முன்னாடி கணக்கு பார்க்க, எனக்கு இஷ்டம் இல்லை. அந்தப் பையைக் கொடுத்துட்டுப் போங்க… நானே கணக்கைப் பார்த்துக்கிறேன்.”\n”அது சரிவராது. நானே விளக்கிச் சொல்ல வேண்டிய விஷயம் அதுல நிறைய இருக்கு. ஒரு ரூபாய்னாலும் ஏன் எடுத்துக் குடுத்தேன்னு நீ தெரிஞ்சுக்கணும்ல.”\n”தெரிஞ்சு என்ன ஆகப்போகுது? ஏன் மாமா இவ்வளவு பதற்றப்படுறீங்க?”\n”என் அனுபவம் அப்படி. ஊரே என்னை ஃப்ராடுனு சொல்லுதே. கேன்டீன்ல போயி உட்கார்ந்து கணக்கைப் பார்த்துரலாமா?”\n”சரி வாங்க… கேன்டீனுக்குப் போவோம்!” என்றேன்.\nஇருவரும் ஆபீஸ் கேன்டீனுக்குப் போனபோது கூட்டமே இல்லை. ஓரமான டேபிளில் உட்கார்ந்து, தனது பையில் இருந்த பேப்பர்களை எடுத்து வைத்து, கணக்கை மறுபடியும் ஒருமுறை படித்து சரி பார்த்துக்கொண்டார்.\nரசீதுகளை முறையாக அடுக்கி, கணக்கைத் துல்லியமாக எழுதியிருந்தார். தனது இத்தனை வருட அனுபவத்தில் இப்படி ஒரு கணக்கை அலுவலகத்தில் எவரும் காட்டியதே இல்லை. அதைப் புரட்டிப் பார்த்துவிட்டு, ”சரியா இருக்கு மாமா” என்றேன்.\n”அப்படி இல்லை. ஒவ்வொண்ணுக்கும் நான் விவரம் சொல்ல வேண்டாமா?” எனக் கேட்டார்.\n”வேண்டியது இல்லை… போதும்” என அந்தக் காகிதங்களை அவரிடம் இருந்து வாங்கிக்கொண்டேன்.\n”ரொம்ப நன்றி ரமணா!” என்றார்.\n”எதுக்கு மாமா நன்றி?” என்றேன்.\n”எனக்கு பயமா இருந்துச்சு. ஏதாவது விடுபடல் இருக்குமோ… ஜாஸ்தி செலவு செய்துட்டேனோனு… உன் காசை நான் வீணடிச்சிரலயே?” எனக் கேட்டார்.\n”உங்க மனசு யாருக்கு வரும். இதுக்கு எப்படி நன்றி சொல்றதுனு தெரியலை” என்றேன்.\n”இந்தக் கணக்குல நான் நூத்தி இருபது ரூபா, ஆட்டோ செலவுக்குப் போட்டிருக்கேன். அன்னைக்கு மாலை வாங்கிறதுக்காக அவசரத்துல வேற வழி தெரியலை. பஸ்ல போனா லேட் ஆகிரும்னு அப்படிப் பண்ணிட்டேன். அந்தப் பணத்தைத் திருப்பிக் குடுத்துரவா?”\n”என்ன மாமா இப்படிப் பேசுறீங்க?”\n”மனசை உறுத்திக்கிட்டே இருக்கு ரமணா. சாவுக் கணக்குல அஞ்சு ரூபாய் ஏமாத்திட்டேன்னு யாராவது பேசிட்டா என்ன ஆகுறது? உனக்கு ஒரு விஷயம் தெரியாது. என் பொண்டாட்டி, புள்ளைங்க சொல்றது எல்லாம் உண்மை. நான் நிறையப் பேரை ஏமாத்தியிருக்கேன்; ஃப்ராடு பண்ணியிருக்கேன். ஆபீஸ்ல கள்ளக் கணக்கு எழுதி, பணத்தைச் சுருட்டியிருக்கேன். பொறுப்பு இல்லாம குடிச்சுட்டு செலவு பண்ணியிருக்கேன்.\nஒருதடவை, உங்க அப்பன் நூறு ரூபா பணத்தை என்கிட்ட கொடுத்து, சீட்டு பணம் கட்டச் சொன்னான். அதை நான் குடிச்சு செலவு பண்ணிட்டேன். நேர்ல பார்த்தா உங்க அப்பன் திட்டுவான்னு ஒளிஞ்சு திரிஞ்சேன். அயோத்தியா மண்டபம்கிட்ட ஒருநாள் பார்த்துட்டான். ‘காபி சாப்பிடலாம் வா…’னு கூட்டிட்டுப் போயி, காபி வாங்கிக் கொடுத்தான். பணத்தைப் பத்தி ஒரு வார்த்தைகூட கேட்கவே இல்லை. பஸ் ஏத்திவிட வரும்போது சொன்னான், ‘நீ கேட்டா, அந்தப் பணத்தைக் குடுத்திருப்பேன். பணமாடா முக்கியம்?’ அமைதியா தலை கவிழ்ந்து நின்னேன்.\n‘ஒரு ஆள் நம்மளை நம்பி பணம் குடுக்கிறதுங்கிறது ஒரு பரீட்சை. அதுல எவ்வளவு நேர்மையா இருக்கோம்னு நிரூபிக்கணும். ஏமாத்தினா, யாரும் உடனே தண்டிச்சிர மாட்டாங்க. ஆனா, அதுக்கு அப்புறம் உன்னை நம்ப மாட்டாங்க. அதான்டா பெரிய அவமானம். அப்படி ஏய்ச்சி… பிடுங்கி வாழ்றதுக்கு விஷத்தைக் குடிச்சுட்டு செத்துப்போயிரலாம். மனசாட்சிக்குப் பயந்தவன்தான்டா, கணக்கு எழுதுவான்; கரெக்டா கணக்குக் கொடுப்பான். உன்னைப் பார்த்தா எனக்குப் பரிதாபமா இருக்கு. நீ என்னை ஏமாத்தலை… உன்னையே ஏமாத்திட்டிருக்கே. இப்பவும் நான் உன்னை நம்புறேன். கை சுத்தமா இருக்கிறவனுக்குத்தான் மனசும் சுத்தமா இருக்கும். உனக்கு ஏதாவது பணம் வேணும்னா,\nகடனா கேளு. திருப்பிக் குடு. புரியுதா?’னு கேட்டார்.\nஎனக்கு செருப்பாலே அடிச்ச மாதிரி இருந்துச்சு. ‘நாம ஏன் இப்படி இருக்கோம்?’னு தலையைக் குனிஞ்சிட்டு நின்னேன்.\n‘செட்டியார் கடையில உனக்கு பாக்கெட் நோட்டும் பேனாவும் வாங்கித் தர்றேன். இனிமேலாவது ஒழுங்கா கணக்கு எழுதிப் பழகு’னு சொன்னதோடு, நோட்டும் பேனாவும் வாங்கித் தந்துட்டுப் போனார்.\nஅதுக்கு அப்புறம் நான் மாறிட்டேன். ஆனா, வீட்ல யாரும் என்னை நம்பலே. கணக்கு எழுதிக் காட்டினாக்கூட சந்தேகப்படுவாங்க. ஆபீஸ்ல பொய்க் கணக்கு எழுதி காசை அடிச்சிட்டேன்னு சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. சம்பாதிக்காத ஆள் வீட்டுக்கு எதுக்குனு பொண்டாட்டி – புள்ளைங்க என்னை வெளியே அனுப்பிட்டாங்க.\nஉங்க அப்பன் சாவுக்கு வேலை செய்தது, ஒரு சுயநலம். நான் நியாயமான ஆள்னு நிரூபிக்க ஒரு சந்தர்ப்பம். அதான் துல்லியமா செலவுக் கணக்கு எழுதி ஒப்படைச்சேன். நீயும் ஏத்துக்கிட்டே. இன்னைக்குதான் மனசு நிறைவா இருக்கு. நான் இப்படி கரெக்ட்டா கணக்குக் கொடுத்தேன்னு தெரிஞ்சா, உங்க அப்பன் சந்தோஷப்படுவான். பாவிப் பய செத்துட்டான்” என்றபடியே மாமா எழுந்துகொண்டார்.\nபிறகு, தனது மஞ்சள் பையில் இருந்த பழைய காகிதம் ஒன்றை எடுத்து, யாரோ குடித்தபோது தரையில் சிந்திய காபியை குனிந்து சுத்தம் செய்யத் தொடங்கினார். யார் காலிலும் விழுந்து ஆசி வாங்க விரும்பாத எனக்கு, முதன்முறையாக தாமோதரன் மாமா காலில் விழுந்து ஆசி பெற வேண்டும் என அப்போது ஆசையாக இருந்தது!\n- ஜூலை 2015\nகதை ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன். ஒரு சிறிய தவறு அது. காலையில் வங்கியில் செலுத்துவதற்காக எடுத்து சென்ற அலுவலக பணத்தை பறிகொடுத்துவிட்டேன். இவ்வளவிற்கும் பணத்தை செலுத்துவதற்கு துணையாக என்னோடு பழனியப்பனும் வந்திருந்தான். எப்போதும் போலவே வங்கியின் வாசல் வரை ஒன்றாக வந்தோம். அப்போது ...\nகதை ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன் அன்று காலை பதினோறு மணிக்கு நாயை வைத்தியரிடம் அழைத்து போக வேண்டும் என்று முன்பதிவு செய்திருந்தாள் சியாமளா . உண்மையில் நாய் ஆரோக்கியமாகவே இருந்தது. ஆனால் அதன் சுபவாம் மாறியிருப்பதை தான் அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. திருமணமாகி வரும்வரை ...\nகடவுளின் குரலில் பேசி\nகதை ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன் ஜான் வீடு திரும்பும் வழியில் விசாரணைக்காரர்களால் விசாரிக்கப்பட்டான். அவர்கள் கேள்விகள் எல்லாவற்றிற்கும் ஜானிடம் பதிலிருந்தது. அவர்கள் அந்த நாடகத்தைப் பற்றியே திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு மாலையும் அந்த நாடகம் சதுக்கத்தில் நடைபெறுகிறது. தினமும் அதில் நடிக்கும் நடிகர்களின் எண்ணிக்கை ...\nவெறும் கணக்கு மீது4கருத்துக்கள்\n‘வெறும் கணக்கு’ தாமோதரன் மாமா நெகிழ்வான கதாபாத்திரத்தில் அருமையான கதை.\nவ. விஐயரட்ணம் says:\nமிகவும் அருமையான கதை.உடனே படித்துவிட்டேன்.மற்ற கதைகளையும் படிக்க வேண்டும்என்ற ஆவலை ஏற்படுத்துகிறது.எஸ் ரா. அவர்களது மேடை பேச்சுக்களை மிக ஆர்வமாக கேட்டுக்கொண்டிருக்கறேன். அற்புதம்.\nவெறும் கணக்கு கதைக்கு பொருத்தமான தலைப்பு. அருமையான கதை\nநரைத்து மூத்தவர்களே, கேளீர்!\nநரிவெரூஉத்தலையார் தாம் கண்ட அனுபவங்களை உலகோர்க்கு, உரைக்க விரும்பினார்: “பற்பல கொள்கைகள் பேசும் பெரியோர்களே! மீன் முள் போன்று, நரை மயிர் நீண்டு நிற்கக் கண்களைச் சுறுக்கிப் பார்க்கும் பயனற்ற முதுமையை ஏற்றுக் குனிந்தோர்களே! கேளுங்கள் ! மழுவை ஏந்தி வரும் எமன், பாசக் கயிற்றால் உம்மைக் கட்டிக் கதறக் கதற இழுக்கும் போது வருந்துவீர்களே.\nமாறிப் போன மாரி
பிரபல ரவுடியை கொடூரமாக கொலை செய்து இதயத்தை வெட்டி சென்ற கொலையாளிகள்...\nஆந்திராவில் பிரபல ரவுடியை கொலை செய்து விட்டு அவரது இதயத்தை தனியாக வெட்டி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nAndhra Pradesh, First Published Nov 9, 2018, 5:53 PM IST\nஆந்திராவின் கர்னூல் மாவட்டம், சாய்பாபா சஞ்சீவி நகரைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி சென்னய்யா. இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் சிறை சென்று வந்துள்ளார். ஆனால் கடந்த2ஆண்டுகளாக திருந்தி மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வாழ்ந்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் நேற்று அதிகாலை துங்கபத்ரா நதிக்கரையில் வாலிபர் ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டதாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.\nஅதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இதில் சென்னய்யாவை கொலை செய்து அவரது இதயத்தை அறுத்து எடுத்து சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறகு கொலை செய்து தொடர்பாக போலீசார் விசாரணை தொடங்கினர். முற்கட்ட விசாரணையில் கொலை முன் பகையால் நடத்திருக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.\nகொலை செய்யப்பட்ட சென்னய்யாவிற்கும் மற்றொரு ரவுடி கும்பலுக்கும் இடையே2ஆண்டுகளுக்கு முன் சண்டை ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் சென்னய்யா திருந்தி கூலி வேலை செய்து வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் முன்விரோதம் காரணமாக கொலை செய்யபட்டிருக்கலாம் என்று தெரிகிறது. ரவுடியை கொலை செய்து இருதயத்தை அறுத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nLast Updated Nov 9, 2018, 5:53 PM IST
Maalaimalar News: Exercises to Teach Child Health\nபதிவு: பிப்ரவரி 08, 2020 08:36\nகுழந்தைகளுக்கு எளிய உடற்பயிற்சிகளை சொல்லித் தரலாம். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். மூளை நன்கு சுறுசுறுப்படையும்.\nகுழந்தைகளை ஓடவிட்டு, கூடவே நாமும் ஓடலாம். இதனால் குழந்தைகளுக்குப் பெற்றோரின் மீதான நெருக்கம் அதிகரிக்கும். உடல் சோர்வும் நீங்கும். குழந்தைகளுக்கு எளிய உடற்பயிற்சிகளை சொல்லித் தரலாம். உடல் ஆரோக்கியமாக இருக்கும். மூளை நன்கு சுறுசுறுப்படையும்.\n6. நன்றாக ஓடி ஆடி விளையாடினாலே, அது ஒருவகையில் பயிற்சிதான். நீச்சல், ஓட்டப்பந்தயம், கால்பந்து, கிரிக்கெட் என விளையாட்டுக்களில் ஈடுபடும் குழந்தைகள், தினமும் கட்டாயம் உடல் வலுவை மேம்படுத்த சில பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.\n7. பள்ளியைவிட்டுத் திரும்பியதும் சைக்கிள் ஓட்டலாம், ஓடிப் பிடித்து விளையாடலாம். படிகளில் ஏறி இறங்கலாம். ரத்த ஓட்டம் சீராகும்.\nயோகாசனம் ஆரம்பப் பயிற்சியும் ஆசனங்கள் செய்யும் வழிமுறைகளும்
அயோத்தி ராமர் பிறந்த இடம் என ஆங்கிலேயர்கள் குறிப்பிட்டுள்ளனர் : உச்சநீதிமன்றத்தில் வாதம் | Dinamalar\nஅயோத்தி ராமர் பிறந்த இடம் என ஆங்கிலேயர்கள் குறிப்பிட்டுள்ளனர் : உச்சநீதிமன்றத்தில் வாதம்\nபதிவு செய்த நாள் : 14 ஆகஸ்ட் 2019 20:56\nஇந்தியாவுக்கு வந்த ஆங்கில வணிகரான வில்லியம் ஃபிஞ்ச் உள்ளிட்ட பல ஆங்கிலேயர்கள் தங்கள் பயண குறிப்பில் அயோத்தியில் தான் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நம்புகிறார்கள் என எழுதியுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் ராம் லாலா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ் வைத்தியநாதன் தெரிவித்தார்.\nஅயோத்தியா ராம ஜென்ம பூமி வழக்கின் 6வது நாள் விசாரணை இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் நடந்தது.\nஅப்போது3மனுதார்களில் ஒருவரான ‘ராம் லாலா’ சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ் வைத்தியநாதன், ராமர் பிறப்பிடம் குறித்து வாதாடினார்.\nஅயோத்தியில் தான் ராமர் பிறந்தார் என இந்துக்கள் முழுமையாக நம்புகிறார்கள். அதன் அடிப்படையிலேயே அயோத்தியா ராமரின் பிறப்பிடமாக அறியப்படுகிறது.\nஇந்த கருத்து உண்மை என்பதற்கு இந்து புராணங்களில் உள்ள குறிப்புகள் ஆதாரமாக உள்ளன.\nஅதை தவிர கடந்த 1608 முதல் 1611ம் ஆண்டு வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆங்கில வணிகரான வில்லியம் ஃபிஞ்ச் என்பவர் தன் பயண குறிப்பில் அயோத்தி பற்றி கூறியுள்ளார். அயோத்தி நகரில் ஒரு கோட்டை உள்ளது. அங்கு தான் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நம்புகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ‘ஏர்லி டிராவல்ஸ் டு இந்தியா’ (Early Travels to India) என்ற புத்தகத்தில் இந்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.\nஇதை தவிர ஆங்கிலேய சர்வேயர் மோண்டகமரி மார்டின், கிறிஸ்துவ மிஷினரியான ஜோசப் தைஃபெந்தலெர் உள்ளிட்ட பலரது குறிப்புகளிலும் அயோத்தி தான் ராமரின் பிறப்பிடம் என்று இந்துக்கள் நம்புவதாக கூறியுள்ளனர் என்று வழக்கறிஞர் சி.எஸ் வைத்தியநாதன் தெரிவித்தார்.\nஅப்போது பாபர் மசூதி என்ற பெயர் எப்போது வழக்கத்திற்கு வந்தது என வழக்கறிஞர் வைத்தியநாதனிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு பதிலளித்த வைத்தியநாதன் 19ம் நூற்றாண்டில் தான் அயோத்தியாவில் இருந்த மசூதி, பாபர் மசூதி என அழைக்கப்பட்டது. அதற்கு முன் அவ்வாறு அழைக்கப்பட்டதற்கான சான்றுகள் இல்லை என கூறினார்.\nஅப்போது முகலாய பேரரசர் பாபரின் வாழ்க்கை சரித்திரத்தை கூறும் பாபர்நாமாவில் (Baburnama) பாபர் மசூதி பற்றி குறிப்பிடவில்லையா ? என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு பாபர்நாமாவில் பாபர் மசூதி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என வைத்தியநாதன் கூறினார்.\nஇதை முஸ்லிம் தரப்பு வழக்கறிஞர் ராஜீவ் தவான் மறுத்தார். பாபர்நாமாவில் முகலாய மன்னர் பாபர் அயோத்தியாவில் உள்ள ஒரு நதியை கடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின் சில பக்கங்கள் காணவில்லை என ராஜீவ் தவான் தெரிவித்தார்.\nஇறுதியில் இந்த விவகாரத்தில் முதலில் ஆவணச்சான்றுகளை சமர்ப்பித்த பின்னர் வாய்மொழி சான்றுகளை சமர்ப்பிப்பதாக வழக்கறிஞர் வைத்தியநாதன் நீதிபதிகளிடம் கூறினார். அதன் பின் அகழ்வாராய்ச்சி சான்றுகளை தாக்கல் செய்வதாக வைத்தியநாதன் தெரிவித்தார்.
இந்த சின்ன வயசுல இப்படி ஒரு திறமையா.? 10 வயது சிறுமியின் சாதனை.! குவிந்துவரும் பாராட்டுக்கள்.! - TamilSpark\nஇந்த சின்ன வயசுல இப்படி ஒரு திறமையா.? 10 வயது சிறுமியின் சாதனை.! குவிந்துவரும் பாராட்டுக்கள்.!\nBy தமிழன் Wed, 07 Jul 2021 09:55:26 IST\nஇயற்கை வளங்களை தொடர்ந்து சுரண்டிக்கொண்டேயிருந்தால் நம் எதிர்காலம் ஆபத்தாக அமையலாம் என்பத\nஇயற்கை வளங்களை தொடர்ந்து சுரண்டிக்கொண்டேயிருந்தால் நம் எதிர்காலம் ஆபத்தாக அமையலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்துக்களாக உள்ளது. தற்போதைய வாழ்க்கைமுறையில் இயற்கை வளங்களை அழித்து தான் நிறைய பொருட்களை தயாரித்து வருகின்றனர். இதனால் தான் பல நாடுகளில் மறுசுழற்சி முறையை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். மறுசுழற்சி முறை, தான் மக்களை உலகில் நீண்டகாலம் வாழ வைக்கும்.\nதற்போது மறுசுழற்சி முறை முக்கியமான ஒன்றாக மாறி வரும் இந்த வேலையில் மறுசுழற்சியில் பலரையும் வியக்க வைக்கும் வகையில் 10 வயது சிறுமி ஒரு சாதனையை படைத்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்த மான்யா ஹர்ஷா என்ற 10 வயது சிறுமி தனது வீட்டின் சமயலறையில் உள்ள காய்கறி கழிவுகளை வைத்து வெஜிடபிள் பேப்பரை உருவாக்கியுள்ளார்.\nதனது வீட்டில் வீணாகும் காய்கறி கழிவுகளை வைத்து உபயோகமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த சிறுமி மான்யா ஹர்ஷா, வீட்டில் வீணாகும் காய்கறி கழிவுகளை வைத்து பேப்பரை தயாரித்துள்ளார். அது மட்டுமில்லாமல் வீட்டில் உள்ள செடிகளை வைத்தும் பேப்பர் தயாரித்துள்ளார்.\nஇதுகுறித்து அந்த சிறுமி கூறுகையில், ஆயிரம் பவுண்ட் பேப்பர் தயாரிப்பதற்கு நாம் எட்டு மரங்களை வெட்ட வேண்டியுள்ளது. மரங்கள் நம் நாட்டிற்கு மிகவும் முக்கியமான ஒன்று. இயற்கை வளங்களை ஒவ்வொரு நாளும் அழித்து நாம் ஒரு பொருளை தயாரிப்பதை காட்டிலும், இதுபோன்ற மறுசுழற்சி முறையை பயன்படுத்தி பேப்பரை தயாரிக்க முடியும். எட்டு முதல் பத்து வெங்காய இதழ்களை கொண்டு நாம் இரண்டு முதல் மூன்று பேப்பர் தயாரிக்க முடியும்.\nஅதேபோல 0.5 கிலோ பட்டாணி தோல்களைக் கொண்டு 3,4பேப்பர் தயாரிக்க முடியும். இந்த பேப்பர் கலராக இருக்கும். இந்த பேப்பரில் நாம் எழுதலாம், வரையலாம், சாதாரண பேப்பர் எப்படி பயன்படுத்துகிறோமோ அதே போல் இதையும் பயன்படுத்தலாம் என கூறியுள்ளார். சிறுமியின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.\nTags: #paper #young girl #new record
Raksha Bandhan இந்த ரக்ஷா பந்தன் நாளில் உங்க சகோதர சகோதரிகளுக்கு தப்பி தவறிகூட 'இத' சொல்ல மறந்துடாதீங்க...! | Happy Raksha Bandhan 2021: Wishes Images, Greetings Quotes, Whatsapp, Facebook Status, Messages in tamil - Tamil BoldSky\n2 min ago Today Rasi Palan: இன்று பணத்தைப் பற்றிய கவலைகள் இந்த ராசிக்காரர்களுக்கு அதிகரிக்கும்...\n| Updated: Saturday, August 21, 2021, 13:08 [IST]\nரக்ஷா பந்தன் என்பது மிகவும் பிரபலாமான இந்து பண்டிகையாகும். ஒவ்வொரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையேயான பந்தத்தை கோலாகலமாக கொண்டாடும் பண்டிகை இது. ஒவ்வொரு ஆண்டும் இந்து மாதமான ஆடி மாதத்தில் பௌர்ணமி தினத்தன்று இந்த ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் உள்ள பழமையான பண்டிகைகளில் இதுவும் ஒன்றாக விளங்குவதால் மக்கள் அனைவரும் இதை மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். இரத்த சம்பந்தம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அனைத்து சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கும் ராக்கி கயிற்றை கட்டி ரக்ஷாபந்தன் கொண்டாடுவது மிகவும் விசேஷமான நிகழ்வாக உள்ளது.\nஇந்த நாளை ராக்கி பூர்ணிமா என்றும் அழைக்கின்றனர். நாளை ரக்ஷா பந்தன் அன்று எல்லா சகோதர்கள் கையிலும் கலர் கலரான ராக்கி கயிறு இருக்கும். மறுபுறம், சகோதரர்கள் ஒரு சிறந்த பரிசை தங்கள் சகோதரிக்கு கொடுக்க காத்துக்கொண்டிருக்கிறார்கள். நாளை ரக்ஷா பந்தன் அன்று, நீங்கள் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள வாழ்த்துக்களை கூறி மகிழ்ச்சியாக கொண்டாடலாம்.\nஇனிய ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள்!\nஎன் அன்பு சகோதர சகோதரிகளுக்கு அன்பான ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்!\nஎன்றென்றும் நம் உறவு நிலைத்திருக்க அன்பான ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் உடன்பிறப்பே!\nஎனக்காக துடிக்கும் ஒரே இரத்த பந்தம் என் அன்பு சகோதர சகோதரிகளே... இனிய ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்!\nவாழ்க்கையில் நீங்கள் என்றும் மகிழ்ச்சியாக இருக்க என் அன்பு வாழ்த்துக்கள்... இனிய ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்!\nஉங்களை போன்ற சகோதரர் யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. என்றும் நம் சொந்தம் தொடர ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்!\nதாயாக தந்தையாக என்றும் உடன் இருக்கும் தோழனாக இருக்கும் என் அன்பு சகோதரருக்கு இனிய ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்!\nஒரு குழந்தைபோல பாவித்து பல நேரங்களில் எனக்கு அம்மாவாக இருக்கும் என் அன்பு சகோதரிக்கு இனிய ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்!\nRead more about: insync pulse raksha bandhan festival happy sister men family உலக நடப்புகள் சுவாரஸ்யம் ரக்ஷா பந்தன் திருவிழா மகிழ்ச்சி ஆண்கள் குடும்பம் வாழ்த்துக்கள்\nHappy Raksha Bandhan 2021: Wishes Images, Greetings Quotes, Whatsapp, Facebook Status, Messages in tamil\nHere we sharing the Happy Raksha Bandhan 2021: Wishes Images, Greetings Quotes, Whatsapp, Facebook Status Messages in tamil to share with your loved ones.
பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டி- அமைச்சர் தம்பிதுரை பேட்டி Posted on 26-Aug-2018\nகரூர், ஆக. 27\nவருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று தம்பிதுரை எம்பி பேசினார்.\nஇந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காததால் தீவிரவாதம் பெருகி வருவதாக ராகுல் காந்தி கூறியிருப்பது தவறான கருத்து. மத்தியில் ஆளும் மோடி அரசும், தமிழகத்தில் ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசும் வேலை வாய்ப்பை உருவாக்கி வருகிறது. காங்கிரஸ் ஆண்ட காலத்திலும் வேலை வாய்ப்பு இல்லாமல் இருந்தது.\nஆகவே தீவிரவாதத்திற்கும், வேலை வாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லை. மு.க. அழகிரி தி.மு.க.வில் இருக்கும் போது தான் 2014 பாராளுமன்ற தேர்தலில் 37 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. 2016 சட்ட மன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. போட்டியிட்டு ஆட்சியை பிடித்தது.\nபாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவாக இருந்தது. அந்த கனவை நிறைவேற்ற வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு அ.தி.மு.க. வெற்றி பெறும். சிறிய கட்சிகள் கூட்டணிக்கு வந்தாலும் இரட்டைஇலை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.5000 கோடிக்கு இன்ஃப்ரா பாண்டுகளை வாங்க எல்.ஐ.சி. முடிவு!\nPosted Date : 18:03 (02/04/2015)\nஇந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. 5,000 கோடி ரூபாய் மதிப்பில் இன்ஃப்ரா பாண்டுகளை வாங்கி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. புதிய தலைமுறை தனியார் வங்கிகளான ஹெச்.டி.எஃப்.சி. வங்கியும் ஐசிஐசிஐ வங்கியும் சுமார் 5,000 கோடி ரூபாய்க்கு இன்ஃப்ரா பாண்டுகளை வெளியிட முடிவு செய்துள்ளது.\nஇதில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஏறக்குறைய 3,000 கோடி ரூபாய் அளவுக்கு இன்ஃப்ரா பாண்டுகளை வெளியிடுகிறது. 10 ஆண்டு கால ஆயுள் கொண்ட இந்த பாண்டுகளை எல்.ஐ.சி. நிறுவனம் வாங்குவதன் மூலம் அதற்கு 8.45 சதவிகிதம் வருமானம் கிடைக்கும்.\nஎல்.ஐ.சி. நிறுவனம் ஏறக்குறைய 2,500 கோடி ரூபாய் அளவுக்கு இன்ஃப்ரா பாண்டுகளை வெளியிட உள்ளது. 10 ஆண்டு கால ஆயுட்காலம் கொண்ட இந்த பாண்டுக்கும் 8.45 வட்டி கிடைக்கும். ஐசிஐசிஐ நிறுவனம் வெளியிடும் பாண்டுகளில் 2,000 கோடி ரூபாயை எல்.ஐ.சி.யும் மீதமுள்ள 500 கோடி ரூபாயை தனியார் முதலீட்டு நிறுவனங்களும் வாங்குகின்றன.\nரூரல் எலெக்ட்ரிபிகேஷன் கார்ப்பரேஷன் மற்றும் பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் போன்ற அரசு நிறுவனங்கள் வெளியிடும் பாண்டுகள் மூலம் கிடைக்கும் வருமானத்தைவிட ஹெச்.டி.எப்ஃ.சி. மற்றும் ஐசிஐசிஐ நிறுவனங்கள் தற்போது வெளியிட்டிருக்கும் இன்ஃப்ரா பாண்டுகளுக்கு 15 அடிப்படைப் புள்ளிகள் கூடுதலாக வருமானம் தரும்படியாக இருக்கிறது.
தாளிகை : 2017\n1. கல்லுக்கு உருவம் கொடுக்கும் வரை நான் சிற்பி, நீ கல்., உருவம் கொடுத்தபின்பு நீ கடவுள், நான் தீண்டத்தகாதவன்!\n(நம்ம ஊரு டிசைன் அப்படி)\n2. கும்பிடும் வரை கடவுள்; திருட்டுப் போனால் சிலை !\n(ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை)\n3. எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது!\n(மிகச் சிரியவையாக இருந்தாலும் ஞானம் அதிகமா இருக்கிறது இந்த எறும்புக்கு தான்)\n4. தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை நாடு சுத்தம் ஆகாது!\n(ஆகவே ஆகாது... கண்பார்ம்டு)\n5. ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு தீகுச்சியின் மரணம்!\n(மரணம் ஒரு முடிவு அல்ல!)\n6. வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை!\n7. அவசரத்துக்கு ஒரு கொத்தனாரைக் கூட தேடுனா ஊர்ல ஒரு பய இல்ல, தெருவுக்கு நாலு இஞ்சினியர் மட்டும் இருக்கானுங்க !! ஏன் இந்த கொடுமை!\n(ஊருக்கு ரெண்டு இன்ஜினீயரிங் காலேஜ் தான் காரணம்)\n8. இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம்.ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல!\n(எல்லாத்துக்கும் காரணம் இந்த எண்ணங்கள் தான்)\n9. இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவன பாத்து அது சாப்புடு இது சாப்புடுனு சொல்லுவான். வசதி இருக்கவன பாத்து எதையும் சாப்புடகூடாதுனு சொல்லுவான்!\n(எல்லாம் பீஸ் தான் காரணம்)\n10. இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு, இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு!\n(ஒரு முழம் கூடப்போறதும் இல்லை குறையப் போறதும் இல்லை)\n11. 250 ரூபாய்க்கு பளிச்சென்றும் 100 ரூபாய்க்கு சுமாராகவும் இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் கடவுள்!\n(லஞ்சம் தான் காரணம்)\n12. மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்படுத்தினார்கள். இப்போது வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்!\n(யூஸ் பண்ணத் தெரியலை அவ்வளவுதான் )\n13. தூக்கம் வராமல் முதலாளி... தூங்கி வழியும் வாட்ச்மேன். என்ன ஒரு முரண்பாடு!\n(கரன்சி பண்ற வேலை)\n14. கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்..கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் உங்களுக்கு தெரிவதில்லை!\n(இது மனிதன் செய்த தவறு என்பதில் சந்தேகமே இல்லை)\n- வாட்ஸ் ஆப் சித்தன்\nPosted by ஜி. ஆரோக்கியதாஸ் at 17:33 1 comments\n121. குளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை விட்டு அதில் காய்கறிகளைப் போட்டு வைத்தால் காய்கறிகள் அப்போது பறித்தது போல் “பிரஷ்”ஷாக இருக்கும்.\n(வாட்ஸ் ஆப்பில் வந்தது.)\nPosted by ஜி. ஆரோக்கியதாஸ் at 03:164comments\nகவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளுமா?\n"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்\nஎன்கிறார் திருவள்ளுவர். ( குறள் 969 )\nகவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளும். அதே போல மானம் மிக்கவர்கள், தம் பெருமைக்கு இழுக்கு ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது பொதுவாக இந்தக் குறளுக்குக் கூறப்படும் விளக்கம்.\nஇந்திய காடுகளில், அதிகம் காணப்படும் விலங்குகளில், மான் இனமும் ஒன்று. சருகுமான், புள்ளி மான், குரைக்கும் மான், நான்கு கொம்பு மான், எலிமான், கடமான், ஆண்டி லோப் மான், சாம்பார் மான் உள்ளிட்ட, 200-க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும், 80-க்கும் மேற்பட்ட மான் இனங்கள் உள்ளன.\nஇந்த மான் இனங்களைப் பற்றி நாம் படித்திருப்போம். ஆனால், கவரி மான் என்ற வகை மான் இருக்கிறதா என்று நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? ஆனால், இப்படி ஒரு மான் இருப்பது குறித்த தகவல்கள் வேறு எந்த புத்தகங்களிலும் இல்லை. குழப்பமாக இருக்கிறது அல்லவா?\n969- என் திருக்குறளைக் கவனமாகப் படித்துப் பார்த்தால் ஒரு உண்மை விளங்கும். அதில் சொல்லப்பட்டு இருப்பது ‘கவரி மான்’ அல்ல, ‘ கவரி மா’ என்பதே சரி! கவரி மா பேச்சு வழக்கில் கவரி மானாக மருவிவிட்டது.\n‘கவரி மா’ என்று ஒரு விலங்கு உண்டு. ஆனால், அது மான் இனம் அல்ல.\nபுறநானூற்றில் இந்த விலங்கு பற்றிய குறிப்பு உண்டு.\n"நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி\nவட திசை யதுவே வான் தோய் இமயம்"\nஇமயமலைப் பகுதியில், கவரிமா என்ற விலங்கு, நரந்தை எனும் புல்லை உண்டு, தன் துணையுடன் மகிழ்ச்சியாக வாழும் என்பது இதன் பொருள்.\nகவரிமா என்பது தமிழ் நாட்டு விலங்கு அல்ல. இமயமலையில் வாழும் விலங்கு. மேலும், அது மாடு வகையைச் சேர்ந்த விலங்கு.\nவள்ளுவர் குறிப்பிடுவது இந்த விலங்கைத்தான். கவரி மா குறித்து பதிற்றுப் பத்திலும் குறிப்புகள் உள்ளன.\n‘முடி சடை போல தொங்கக் கூடிய விலங்கு’ கவரி மா. அந்த முடியை வெட்டி எடுத்து செயற்கை முடி உருவாக்குவது வழக்கம். கவரி என்பதில் இருந்துதான் ‘சவரி முடி’ என்ற இன்றைய சொல் உருவானது. ‘மா’ என்பது விலங்குகளுக்கு உரிய பொதுவான சொல்.\nபனிப் பிரதேசத்தில் வாழும் கவரிமாவுக்கு, அதன் முடி கடுங்குளிரில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. அதன் முடி நோயினால் உதிர்ந்தாலோ, மனிதர்களால் வெட்டப்பட்டாலோ, குளிரினால் இறந்து விடும்.\nஅதே போல சில மனிதர்கள். அவர்கள் பெருமைக்கு இழுக்கு நேர்ந்து விட்டால், அவர்கள் வாழ்வது அரியதாகி விடும். என்பதே 969 எண் திருக்குறள் சொல்லும் பொருள்.\nஎனவே, குறள் சொல்வதில் தவறு இல்லை. பெரும்பாலான உரைகளும் தவறு இல்லை.ஆனால் கவரிமா வைக் கவரிமான் எனப் புரிந்து கொள்வது தவறு!\nPosted by ஜி. ஆரோக்கியதாஸ் at 19:054comments\n"என்னாடா ? தலையில இவ்வளவு பெரிய கட்டு, என்னாச்சு ??"\n"கீழே விழும் போதும் கொஞ்சம் சத்தமா சிரிச்சுட்டேன்... அதான் இப்படி "\n"அம்மா.. யாரோ வாசல்ல..!"\n"அது உங்கப்பாதான் .....!\n“ 'ஏன் லேட்டு?'ன்னு கேட்டா பதினெட்டு விதமான ஆங்கிள்ல கதை சொல்லுவாரு. அதான் அவருக்கு டேபிள்மேட்னு பேர் வச்சிருக்கேன்..."\nதிருமணம் முடிந்து மணப் பெண் மாப்பிள்ளை வீட்டிற்கு செல்ல தயாராகி கண்களில் கண்ணீருடன் புறப்படுகிறாள். அப்போது அதை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் அவன் தந்தையிடம் கேட்கிறான்.\nமகன் : அப்பா... ஏன் அந்த கல்யாணப் பெண் அழுகிறாள்?.\nஅப்பா : ஏன் என்றால் அவள் தனது பெற்றோரைப் பிரிந்து ஒரு புது இடத்திற்கு செல்கிறாள்.\nமகன் : அப்போ அந்த மணமகன் ஏன் அழவில்லை?".\nஅப்பா : அவன் நாளைல இருந்து தினமும் அழுவான்.\nஒரு முதலை பண்ணையில் ஒரு போட்டி வைத்திருந்தார்கள். யார் அந்த முதலைகள் நிறைந்த குளத்தில் குதித்து குளத்தின் மறு கரையை அடைகிறார்களோ, அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என்று. அனைவரும் அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள்.\nஅப்போது ஒருவன் மட்டும் குளத்தில் குதித்து மறு கரையை அடைந்தான்.\nஅவனுக்கு உடனே ஒரு கோடி ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டது.\nஉடனே அவன் கூட்டத்தினரை பார்த்து," என்னை யார் பின்னல் இருந்து குளத்தினுள் தள்ளியது?" என்று கேட்டான். கூட்டத்தினர் ஆச்சரியத்துடன் அவனை பார்த்தனர். அப்போது அந்த கூட்டத்தில் இருந்த அவன் மனைவி அவனை பார்த்து புன்னகைத்தாள்.\nமனைவியை ஆங்கிலத்தில் wife என்று அழைப்பதன் அர்த்தம் இதுதான்\n‘Without information fight everytime ’ இதைத்தான் ஆங்கிலேயர்கள் சுருக்கி wife என்ற வார்த்தையை பயன்படுத்தி வந்தனர். எப்ப வேணாலும் ஏழரை\nஉலகத்துல3விஷயம் முடியாது.\n1) தலைமுடியை எண்ண முடியாது\n2) கண்களை சோப்பால் கழுவ முடியாது\n3) நாக்கை வெளிய நீட்டிவிட்டு மூச்சுவிட முடியாது\nஉடனே நாக்கை வெளிய விட்டு மூச்சுவிட்டு பாக்குற உங்களயெல்லாம் திருத்தவே முடியாது.\nPosted by ஜி. ஆரோக்கியதாஸ் at 19:142comments\nகொசுவுக்கு பிடிக்காத செடிகள்\nகொசுவை விரட்ட வீடுகளில் வைக்கப்படும் ரசாயனம் கலந்த கொசுவர்த்தி சுருள் போன்ற பொருட்கள் மனிதனுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நமக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், கொசுக்களுக்கு பிடிக்காத, ஆனால், நமக்கு பயன்தரக்கூடிய சில செடிகளை வீடுகளில் வளர்ப்பதன் மூலம் கொசுக்களை எளிதாக விரட்ட முடியும். அந்த செடிகள் என்னென்ன தெரியுமா?\nநிறைய மருத்துவக் குணங்களைக் கொண்டிருக்கும் காட்டுத்துளசி எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. கொசுவையும், சிறு பூச்சிகளையும் விரட்டும் தன்மைகொண்டது. இதன் சாறு, பூச்சி விரட்டிக்குப் பயன்படுத்தப்படும் டீட்டைவிடப் (DEET-Diethyltoluamide) பலமடங்கு சக்தி வாய்ந்தது. காட்டுத்துளசியின் வாசம் இருக்கும் இடத்தில் கொசுக் நெருங்காது.\nஓமத்தின் விதை சமையலுக்கு நல்ல நறுமணத்தைத் தரக்கூடியது. ஓம இலைகளில் இருக்கும் வாசனை, கொசுக்களை விரட்டும். இதை வளர்க்க சின்ன மண்பாண்டம் போதும்.\nசின்ன தொட்டியில் நட்டு, ஜன்னல் ஓரத்தில் வைத்தால் போதும். சீக்கிரம் வளர்ந்துவிடும். இதன் வாசனைக்கு கொசுக்கள் உள்ளே வராது.\nகண்களைக் கவரும் மலர்களைக் கொண்ட இந்தச் செடி அழகுக்காக மட்டும் வளர்க்கப்படுவதில்லை. இந்தச் செடியை வீட்டுத் தோட்டத்தைச் சுற்றி நட்டுவைத்தால் கொசுவிடம் இருந்து நம்மைப் பாதுகாகாக்கலாம்; அதோடு, இந்த மாரிகோல்டு செடியால் மற்ற செடிகளுக்கும் பாதுகாப்பு. இந்தச் செடி இருக்கிற இடத்தில் செடிகளை அழிக்கும் பூச்சிகளும் அண்டாது.\nலாவெண்டர் மணம் கொசுக்களை அண்ட விடாது, அதனால்தான் கொசு கடிக்காமல் இருக்க, நாம் பூசிக்கொள்ளும் நிறைய தோல் பூச்சுக்கள், லாவெண்டர் மணத்தில் இருக்கின்றன. இந்தியாவில் இது வளரும். செடிகளுக்கான பொட்டிக்கில், லாவெண்டர் செடி கிடைக்கும்.\nஐந்து அல்லது ஆறு அடி வரை வளரக்கூடியது சிட்ரோசம் செடி. இதன் நறுமணம் கொசுவை விரட்டப் பயன்படும், காரணம் இதிலிருந்து எடுக்கப்படும் `சிட்ரோனெல்லா' (Citronella) எனும் ரசாயனம் சிறந்த கொசுவிரட்டி. இந்தத் தாவரத்திலிருந்து கிடைக்கும் மெழுகை ஏற்றினாலும், அதன் வாசத்துக்குக் கொசுக்கள் அண்டாது.\nஅழகிய செந்நீல நிறப் பூக்கள்கொண்ட இந்தச் செடியின் மணம், கொசுவைத் தடுக்கும் அரணாகவும் செயல்படுகிறது..\nஇந்த பூச்செடியும் சிறந்த பூச்சிவிரட்டி. பயிர்களை பூச்சிகள் தாக்காமல் இருக்க, இந்த செடியை ஓரங்களில் நட்டு வைத்தால், பயிர்கள் பாதுகாக்கப்படும். கொசுக்களுக்கும் இந்த செடி எதிரி. இதேபோன்று கற்றாழை செடியும் வளர்க்கலாம்.\nஇதைத் தவிர, இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட மேலும் சில வழிகளும் உள்ளன.\n✍ கற்பூரவல்லி இலைச் சாற்றை சோற்றுக் கற்றாழைச் சாற்றுடன் சேர்த்து தண்ணீரில் கலந்து பாட்டிலில் ஊற்றி, வீடு முழுவதும் ஸ்ப்ரே செய்தால் கொசு வராது.\n✍ புகைப் போடுதல் மிகவும் பழமையான முறை. யூகலிப்டஸ் இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து புகை போடலாம். வேப்ப இலை, நொச்சி இலைகளை நெருப்புக் கங்குகளில் போட்டுப் புகை போடலாம். கற்பூரத்துடன் சிறிது சாம்பிராணியைச் சேர்த்துப் புகை போடலாம். ஆஸ்துமா நோயாளிகள், சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் புகை போடுவதைத் தவிர்க்கவேண்டும்.\n✍ வேப்பிலை, நொச்சி, ஆடாதொடை, குப்பைமேனி ஆகியவற்றின் இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொள்ளவேண்டும். அதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சினால் பச்சிலைத் தைலம் கிடைக்கும். இந்தப் பச்சிலைத் தைலத்தை கற்பூரத்துடன் சேர்த்து சாம்பிராணி புகையாகப் போடலாம்.\n✍ தேங்காய் எண்ணெய், லாவண்டர் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், வேப்பெண்ணெய் போன்றவற்றில் ஒன்றை கை, கால்களில் தேய்த்துக்கொள்ளலாம். கொசு அண்டாது.\n✍ புதினாவுடன் சிறிது நீர் சேர்த்து அரைக்க வேண்டும். கிடைக்கும் சாற்றை வீடு முழுவதும் தெளிக்கலாம். எலுமிச்சை பழத்தைப் பாதியாக வெட்டி ஜன்னல், கதவுகளின் மூலையில் வைக்கலாம். இவற்றிலிருந்து வரும் வாசனையும் கொசுவை விரட்டும்.\nPosted by ஜி. ஆரோக்கியதாஸ் at 18:212comments\nஒரு முறை காடு வழியே சென்ற ஒரு மனிதனை ஒரு புலி துரத்தியது. அதனிடமிருந்து தப்பித்து அவன் ஒரு மரத்தின் மேல் ஏறினான். உச்சியை அடைந்தவனுக்கு ஒரு அதிர்ச்சி. அங்கே ஒரு பெரிய மனித குரங்கு உட்கார்ந்திருந்தது.\nநடுநடுங்கிய மனிதன் அந்த மனித குரங்கிடம் அடைக்கலம் கேட்டான். அந்த குரங்கு, “கவலை படாதே நான் உன்னை ஏதும் செய்ய மாட்டேன். என்னை அண்டி வந்த உனக்கு பாதுகாப்பு தருவேன்” என்றது.\nஇரவு பொழுதும் வந்தது. புலியோ மரத்தின் கீழே பசியோடு இருந்தது. ஆனால், இடத்தை விட்டு நகர்வதாக இல்லை. மனிதனும் குரங்கும் மரத்தின் மேலேயே மாறி மாறி உறங்க முடிவு செய்தனர். மனிதன் தூங்கிய போது குரங்கு காவல் காத்தது. குரங்கு தூங்கும் போது மனிதன் காவல் காத்தான்.\nஅவர்களை பிரித்தாலன்றி நமக்கு உணவு கிடைக்காது என்று எண்ணிய புலி மனிதனிடம், “குரங்கு இப்போது தூங்குகிறது நீ அதை பிடித்து கீழே தள்ளிவிடு, எனக்கு வேண்டியது பசிக்கு இரை, உன்னை விட்டுவிடுகிறேன்” என்றது.\nகுரங்கை தள்ளிவிட்டுவிட்டால், நாம் தப்பித்துக்கொள்ளலாம் என்று எண்ணிய மனிதன், பிடித்து குரங்கை கீழே தள்ளிவிட்டான். ஆனால் புலியோ குரங்கிடம், “எனக்கு மனித மாமிசம் தான் வேண்டும், உனக்கு மனிதனின் இயல்பை புரிய வைக்கவே இப்படி செய்தேன் இப்போதும் உன்னை விட்டு விடுகிறேன், நீ மேலே சென்று மனிதனை கீழே தள்ளிவிடு நான் பசியாற மனித மாமிசம் உண்டுவிட்டு போய்விடுகிறேன்” என்றது.\nஅப்படியே செய்வதாக சொல்லிவிட்டு மரத்தின் மேலே ஏறி வந்த குரங்கு மனிதனின் அருகில் வந்தது. மனிதனோ பயத்தால் நடுங்கினான்.\nகுரங்கோ “பயப்படாதே மனிதா என்னை நம்பி அடைக்கலம் என்று வந்த உன்னை எப்போதும் காப்பேன். புலியிடமிருந்து தப்பிக்கவே நான் உன்னை கீழே தள்ளுவதற்கு ஒப்புக்கொண்டதாக நடித்தேன். நீ கவலை இல்லாமல் இருக்கலாம்.” என்றது.\nகுரங்குக்கு துரோகம் இழைத்த மனிதன் வெட்கி தலைகுனிந்தான்.\nகவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளுமா...
Doshas will go Navagraha hierophant || தோஷம் போக்கும் நவக்கிரக வழிபாடு\nதோஷம் போக்கும் நவக்கிரக வழிபாடு + "||" + Doshas will go Navagraha hierophant\nகோவிலுக்கு செல்பவர்கள் அங்குள்ள நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபட்டால், அந்த நவ நாயகர்களின் அருள் கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கை வைத்துள்ளனர்.\nபதிவு: ஜனவரி 22, 2019 13:05 PM\nசிலருக்கு ஜாதக ரீதியாக குறிப்பிட்ட நவக்கிரகங்களால் ஏற்பட்ட தோஷம் காரணமாக நற்செயல்கள் கூடி வருவது தள்ளிப்போகலாம். சிலர் கஷ்டங்களை அனுபவிக்கலாம். இவற்றை போக்க கிரக தோஷ பரிகாரங்களை மேற்கொள்ளலாம். நவக்கிரகங்களை பற்றியும், அவற்றின் தோஷங்கள் விலகுவதற்கான எளிய பரிகாரங்களையும் இங்கே பார்க்கலாம்.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் குணமடைந்தனர்! - CapitalNews.lk\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் குணமடைந்தனர்!\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 16 பேர் குணமடைந்துள்ளனர்.\nசுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது.\nஇவ்வாறு குணமடைந்தவர்களில் 13 பேர் கடற்படை வீரர்கள் என தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த நிலையில், கொரோனா தொற்றில் இருந்து 250 கடற்படையினர் இதுவரை முழுமையாக குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 620 ஆக அதிகரித்துள்ளது.\nஇதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 55 ஆக அதிகரித்துள்ளது.\nஅத்துடன், 139 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளான 442 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nஇதன்படி, தேசிய தொற்றுநோய் வைத்தியசாலை, வெலிக்கந்த ஆதார வைத்தியசாலை, கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலை, இரணவில வைத்தியசாலை, காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, இராணுவ வைத்தியசாலை, ஹோமாகமை ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅத்துடன், நாடுமுழுவதும் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக 49 ஆயிரத்து 124 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபுதிய விதிமுறைகளை கட்சிகளுக்கு வழங்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானம்!\nNext articleமெக்ஷிக்கொவில் கடந்த 24 மணிநேரத்தில் 420 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு
மகளுடன் அத்வானி! | தமிழ் அகம்\nபி.ஜே.பி-யில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை தேர்வு செய்ததில் இருந்தே கட்சிக்குள் ஒரே முட்டல் மோதல்தான். அத்வானிக்கு குஜராத் மாநிலத்தில் காந்தி நகர் தொகுதி ஒதுக்கப்பட்டது. மோடி ஆதரவாளர்களால் சதி வேலைகள் நடைபெறுமோ என்று பயந்து, மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில்தான் போட்டியிடுவேன் என அத்வானி பிடிவாதம் செய்தார். ஆனால், க்ளைமாக்ஸில் கட்சியின் முடிவை ஏற்பதாக சொன்னவர், தொகுதி முழுவதும் தனது அன்பு மகள் பிரதிபாவுடன் கொளுத்தும் வெயிலில் பிரசாரம் செய்துவருகிறார் 86 வயதான அத்வானி. ‘அடுத்த தேர்தலில் பிரதிபா தேர்தலில் நிற்பார்’ என்கிறார்கள்!\nஓட்டு போட்ட பச்சன் குடும்பம்!\nமும்பையில் உள்ள வாக்குச்சாவடிக்கு குடும்பத்தினருடன் வந்து அமிதாப் பச்சன் ஓட்டு போட்டதே வட இந்தியா மீடியாவால் பரபரப்பாகப் பேசப்படுகிறது. வாக்களித்துவிட்டு வெளியே வந்த பச்சனிடம், மீடியா கேள்வி எழுப்ப, சட்டென சிரித்த பச்சன் ”என்னுடைய இங்க் விரலால் என் ஐனநாயகக் கடமையை நிறைவேற்றிவிட்டேன்” எனச் சொல்லி குடும்பத்துடன் போஸ் கொடுத்தார். ஐஸ்வர்யா ராய் வெகு நாட்கள் கழித்து மீடியா முன் வந்ததால், அவரைப் பற்றி ஏதாவது எழுதாமல் இருந்தால் எப்படி என எண்ணினார்களோ… தெரியவில்லை. ‘மீண்டும் ஐஸ்வர்யா மாசமாக இருக்கிறார்’ என பற்ற வைத்துவிட்டன மீடியாக்கள். இதை அவசர அவசரமாக அவர்களே மறுத்து இருக்கிறார்கள்.\nமீண்டும் மீண்டும் முட்டை!\nகடந்த தேர்தலின்போது, ஜெகன்மோகன் ரெட்டியை தாக்கிப்பேசி முட்டை, செருப்பு வீச்சை எதிர்கொண்ட சிரஞ்சீவி, இந்த முறை மோடியைத் தாக்கிப் பேசி முட்டை தாக்குதலை எதிர்கொண்டுள்ளார். ஆந்திர மாநிலத்தில் உள்ள மசூலிப்பட்டினத்தில் பிரசாரம் மேற்கொண்ட நடிகர் சிரஞ்சீவி… பி.ஜே.பி., தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகளை விமர்சித்துப் பேசினார். தொடர்ந்து, ”வாஜ்பாய், அத்வானி போன்ற மூத்த தலைவர்களை ஓரங்கட்டியவர்; கொடுங்கோலன்; ஹிட்லர்” என மோடியை விமர்சித்துப் பேச… ஆத்திரமடைந்த சிலர், சிரஞ்சீவி மீது முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிரஞ்சீவி, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ போல அவசர அவசரமாகப் பேச்சை முடித்துவிட்டு மூட்டை கட்டினார்.\nஉ.பி-யில் நான்கு முனை போட்டி உள்ள சூழலில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி தனது கட்சியின் சார்பில் வேறு எந்த கட்சியிலும் இல்லாத வகையில் 19 முஸ்லிம்களுக்கும் 21 பிராமணர்களுக்கும் சீட் கொடுத்து இருக்கிறார். இது தலித் சமுதாயத்தினரிடம் அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இதுபற்றி பேசும் அவர், ”பிற கட்சியினர் உங்களிடம் வந்து மாற்று சமுதாயத்துக்கு வாக்களிக்காதீர்கள் எனச் சொல்வார்கள். அதைக் கேட்காதீர்கள். நான் உங்களின் சகோதரி… தலித்களின் மகள்.. அந்த உரிமையில் கேட்கிறேன். எனது வேட்பாளர்களை யார் என்று பார்க்காதீர்கள். நானே போட்டியிடுவதாக நினைத்துக்கொண்டு எனக்காக வாக்களியுங்கள்’ என கெஞ்சும் குரலில் வாக்கு கேட்கிறார். அவரது பேச்சை மற்ற கட்சியினர் கிண்டலடிக்க… அடிக்கடி டென்ஷனின் உச்சத்துக்கே சென்றுவிடுகிறார் மாயாவதி!\n‘சக்தி கொடு! சக்தி கொடு… இறைவா..!’\nஅமிர்தசரஸ் தொகுதியில் பி.ஜே.பி. சார்பாக அருண் ஜெட்லி போட்டியிடுகிறார். அவர் பங்கேற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மாநில வருவாய் துறை அமைச்சர் விக்ரம் சிங் மஜிதியா, சீக்கியர்களின் 10-வது மத குருவான குரு கோவிந்த் சிங் எழுதிய புத்தகத்தில் இருந்து ஒரு பாடலைப் பாடினார். கூட்டத்துக்கு வந்திருந்த பொதுமக்களை எழுந்து கைகளை உயர்த்தச் சொன்னவர், அந்தப் பாடலை அனைவரையும் திருப்பிப் பாடவைத்தார். ‘கடவுளே… எனக்கு சக்திகொடு. நல்ல விஷயங்களைச் செய்வதற்கு பலம் கொடு. எனது எதிரியை எதிர்கொள்ள அச்சப்படாமல் இருக்கச் செய். நியாயமான வெற்றி என் பக்கமாகவே இருக்கட்டும்’ என்ற பாடலில், ‘நிச்சயமான வெற்றி அருண்ஜெட்லி பக்கமாவே இருக்கட்டும்’ என மாற்றிச் சொன்னார். இந்த விவகாரத்தால் சீக்கியர்களை இழிவுபடுத்துவிட்டதாகச் சர்ச்சை கிளம்பியிருக்கிறது.\n”அங்கே போனா அவங்க.. இங்கே வந்தா இவங்க!”\nதேர்தல் பிரசாரத்தில் அடுத்தடுத்து தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறார் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். தன் மீது நடத்தப்படும் தாக்குதல்களின் பின்னணியில் பி.ஜே.பி. இருப்பதாக, வாரணாசியில் பிரசாரம் மேற்கொண்ட கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். அடுத்து, அமேதி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், ”நான் செல்லும் இடங்களில் எல்லாம் என் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இது காங்கிரஸாரின் திட்டமிட்ட செயல். எந்த ஊரிலும் மோடி மீது காங்கிரஸார் தாக்குதல் நடத்தவில்லை. இது ஏன் தெரியுமா? மோடிக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் ரகசிய உடன்பாடு உள்ளது” என்று விளாசியிருக்கிறார்.\nமோடி போட்டியிடும் தொகுதியில் தன்மீது பி.ஜே.பி-யினர் தாக்குதல் நடத்துவதாகவும், ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் தன்மீது காங்கிரஸார் தாக்குதல் நடத்துவதாக கைப்புள்ள ரேஞ்சுக்கு கதறுகிறார் கெஜ்ரிவால்.\nஉத்தரப்பிரதேச மாநிலம், சகாரான்பூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத், மோடியைத் துண்டு துண்டாக வெட்டிக் கூறுபோடுவேன் எனப் பேசிய வீடியோ காட்சிகள் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில், பீகார் மாநிலம், பகல்பூரில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், பேசிய பகல்பூர் ஐஜத வேட்பாளர் சகுனி சவுத்ரி, ”மோடிக்கு எதிராக நாம் அனைவருமே ஒரே சக்தியாக ஒன்றிணைந்தால், அந்த மோடியை பகல்பூர் பூமியிலேயே அடக்கம் செய்துவிடலாம்” எனக் கூறினார். முதல்வர் நிதிஷ் குமார் அமர்ந்திருக்கும் மேடையிலேயே அவரது வேட்பாளர், இப்படி பேசியிருப்பதால், அரசியல் வட்டாரத்தில் ஏக பரபரப்பு.\nசைக்கிள் பிசினஸ் அமோகம்!\nஉத்தரப்பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் தேர்தல் பிரசாரம் செய்த செய்தியைவிட, அவரது ஆதரவாளர்கள் பிரசாரத்தில் செய்த அலப்பறைகள்தான் ஹாட் டாபிக்.\nமுலாயம் சிங்கின் சின்னம் சைக்கிள் என்பதால், பலரும் பிரசாரத்துக்கு சைக்கிளிலேயே வந்தனர். இன்னும் சிலர் ஹெல்மெட் போட்டு சைக்கிளை ஓட்டி முலாயமுக்கு ஆதரவு திரட்டினர். குழந்தைகள் விளையாடும் சைக்கிள் பொம்மைகளையும் சிலர் பிரசாரத்தில் பயன்படுத்தினார்கள். இன்னும் சிலர் வாக்குப்பதிவின்போதுகூட சைக்கிளில் வந்து எதிர்க்கட்சிகளை கோபத்தின் உச்சத்துக்கே போகவைத்தனர். எது எப்படியோ… உத்தரப்பிரதேசத்தில் சைக்கிள் பிசினஸ் அமோகம்!\nபி.ஜே.பி-யில் மன்மோகன் சகோதரர்!\nதிரைப்பட நடிகர்கள், தொழில் துறையினர் என்று முக்கிய பிரமுகர்களுடன் நடக்கும் மோடியின் அடுத்தடுத்த சந்திப்புகள்தான் பி.ஜே.பி-க்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒன்றுவிட்ட சகோதரர் தல்ஜித்சிங் கோஹ்லி, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடியின் முன்னிலையில் பி.ஜே.பி-யில் இணைந்தார். அந்தக் கூட்டத்தில், ”இன்று பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர் பி.ஜே.பி-யில் இணைந்துள்ளார். இது நமக்குக் கூடுதல் பலத்தை அளிக்கும்” என நரேந்திர மோடி வரவேற்க… அதிர்ச்சியில் உறைந்துள்ளது காங்கிரஸ். ”தல்ஜித்சிங் நடத்திவரும் ஆயத்த ஆடை தொழிலில் போதுமான லாபம் இல்லை. அவருக்குப் பணம், பதவி தருவதாகச் சொல்லவே, அவர் பி.ஜே.பி-யில் இணைந்துவிட்டார்” என அவரது குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர். ”சகோதரர் என் கட்டுப்பாட்டில் இல்லை” என மன்மோகன் வெள்ளந்தியாக விளக்கம் சொல்லியிருக்கிறார்.\nPrevious: தலைவர்கள் தேர்தல் பிரசாரம்\nNext: பணம் கொடுப்பதைத் தடுக்க இரண்டு தேர்தல்கள் ஆகும்!
ஆரோக்கியமாக வாழ கிரீன் டீ பருகுங்கள் | சேலம் - Dinakaran\nஆரோக்கியமாக வாழ கிரீன் டீ பருகுங்கள்\n11/14/2017 10:28:19 AM\n“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது பழமொழி. இன்றைய கால கட்டத்தில் மனிதனின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, பல்வேறு நோய்களுக்கு உட்படுகிறான். நமது முன்னோர்கள் போல் ஆரோக்கியமாக வாழ, இயற்கை உணவுகள், கிரீன் டீ, முறையான உடற்பயிற்சிகளை கடைபிடிக்க வேண்டும். நமது உடலில் தினமும் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற வேதிவினையின் போது, உற்பத்தியாகிற “ப்ரிரேடிகல்ஸ் கெமிக்கல்” உடலின் செல்களை சேதப்படுத்தி நோய்கள் வர காரணமாகிறது. ப்ரிரேடிகல்ஸ் என்பது நாம் பிறந்தது முதல் சுவாசிக்கும், ஆக்ஸிஜன் O2 ஆக அப்படியே நமது உடலில் செல்லாமல் O1+O1 ஆக பிரிந்து எந்த செல்லில் சேருகிறதோ, அந்த செல் சேதமாகி நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.\nஆன்டி ஆக்ஸிடன்ட்: நமது உடலில் நோய்கள் வர காரணமாகிற ப்ரிரேடிகல்ஸ், அதாவது செல்கள் சேதமாவதை தடுக்கிறது. இதில் O2 வை O1, O1 ஆக பிரியவிடாமல், அப்படியே O2 ஆகவே செல்களில் சேர, ஆன்டி ஆக்ஸிடன்ட் செயல்புரிகிறது ஆன்டி ஆக்ஸிடன்ட்டின் வேலையே O2 வை பிரிய விடாமல் தடுப்பது தான். மேலும் ஆன்டி ஆக்ஸிடன்ட், நமது உடல் செல்களின் பாதுகாவலனாக இருந்து, சிறப்பாக செயல்பட உதவுகிறது. இயற்கையாகவே நமது உடலில் நோய் எதிர்ப்பு செல்கள் மிகவும் அதிகமாக்க உதவுகிறது. இதனால் நோய்கள் வருவது தடுப்படுகிறது:\nகிரீன் டீ: தேயிலை செடியின் நுனிக்கொழுந்து இலையில் பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருப்பதை விட மிகவும் அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது என பல ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. நமது உடல் ஆரோக்கியமாக இருக்க, கிரீன் டீயை பருகலாம்.வெந்தய கிரீன் டீ: பெரியவர்கள் சிலர் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை ஊற வைத்தோ, பொடியாகவோ அல்லது அப்படியே சாப்பிடுவர். இது ஜீரணமாகி, ரத்தத்தில் கலக்க5மணி நேரம் ஆகும். ஆனால் வெந்தய கிரீன் டீயை, வெறும் வயிற்றில் தினமும் காலை குடித்தால், அரை மணி நேரத்தில் ரத்தத்தில் கலந்து உடலின் வெப்பத்தை சமநிலையாக வைக்கும். மேலும் உணவுக்குழாய் மற்றும் ஜீரண உறுப்புகளை தூய்மைபடுத்தும்.\nகடுக்காய் கிரீன் டீ: இரவு தூங்கும் முன் கடுக்காய் கிரீன் டீயை குடித்தால், நமது மலக்குடலில் சேரும் கழிவுகளை வெளியேற்றி, மலவாய், மலக்குடல், ஆசனவாய் ஆகிய பகுதியை தூய்மைப்படுத்தும். நமது உடலில் தினமும் கழிவுகள் சேராமல், அதை முறையாக வெளியேற்றி, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க கடுக்காய் கிரீன் டீ உதவுகிறது.\nமாதுளை கிரீன் டீயை குடித்தால், ரத்த செல்கள் அதிகமாகும். வாழைத்தண்டு கிரீன் டீ குடித்தால், சிறுநீரக கற்கள் கரைக்கப்படும். ஜீரண உறுப்புகளை சரிப்படுத்த, முள்ளங்கி கிரீன் டீ குடிக்க வேண்டும். ரத்தத்தை விருத்தி செய்ய, பீட்ரூட் கிரீன் டீ குடிக்க வேண்டும். கண்பார்வையை சரி செய்ய, கேரட் கிரீன் டீ குடிக்க வேண்டும். உடலில் ஏற்படும் அனைத்து நோய்களையும் குணப்படுத்த, ஒவ்வொரு விதமான கிரீன் டீ உள்ளது. எனவே கிரீன் டீ குடித்து, உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள், என்று அதன் தயாரிப்பாளர் செவிலம்பா கூறினார்.
Teaching of English by Phonetic Method Video- Unit 16 - Kalvisiragukal Plus\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!\nTeaching of English by Phonetic Method Video- Unit 16\nஇளையராஜா தன்னோட முதல் பாட்டுப் பதிவைத் தொடங்கியதுமே CURRENT போயிடுச்சாம். எல்லாரும் என்னடா இது? நேரம் சரியில்லனு..... பேசிக்கிட்டாங்களாம். ஆனால், இன்னைக்கி வரை என்ன, என்னைக்குமே இசைனா ராஜா மட்டும் தான்.\nஇரண்டு மாசமா அங்கயும் இங்கயும் அலஞ்சு, இடத்தப் பிடிச்சி பெயிண்ட் அடிச்சு சுவர் பூராம் PHONETICS படம் வரைஞ்சி CONTENT எல்லாத்தையும் SCREEN PLAY ஆ எழுதி, நடிக்கிற டீச்சர்ஸ் எல்லாத்து கிட்டயும் ஒரு மாசத்துல முடிச்சுருலாமுனு சும்மானாச்சிக்கும் ஒரு தைரியத்தச் சொல்லி SHOOTING START பண்ண நாள் குறிச்சி AEEO அல்போன்ஸ் சார் தலைமையில குத்து விளக்கெல்லாம் பொருத்த தயார் பண்ணிட்டு எல்லோரும் கிளம்பிகிட்டு இருக்கிற சமயத்துல, இரு சக்கர வாகனத்துல வந்த ஒரு தர்மத்தின் தலைவன் UNIT – 16 எடுக்குற சுகுமாரி டீச்சரை விபத்துக்குள்ளாக்கிட்டு பறந்து போயிட்டான். நாங்களெல்லாம் பயந்து போயிட்டோம்.\nமுதல் நாளு வேற....., சரித்தான்!! இனி ஆரம்பிச்ச மாதிரிதானு சின்னதா ஒரு கலக்கம் எல்லோர் முகத்திலும்.... அந்த நேரத்தில் மருத்துவமனையிலிருந்து அலைபேசி அழைப்பு..... சரி, பரவாயில்லை இன்னொரு நாள் ஆரம்பிச்சுக்கலாம் என்ற மனநிலையுடன் அலைபேசிய ON செய்தால், சார் நீங்க மத்த வேலைகள பார்த்துக்கிட்டே இருங்க. ஒரு பத்து நிமிஷத்துல டாக்டரப் பாத்துட்டு, சித்ரா மிஸ்ஸோட வந்துடுறேன் என்று தீர்க்கமான சுகுமாரி ஆசிரியரின் இந்த குரல், PROJECT – ன் முதல் தைரியத்த உள் ஊட்டியது. சுகுமாரி ஆசிரியரின் கணவரும் அந்த சூழலில் பக்க பலமாக இருந்து படப்பதிவுக்கு அழைத்து வந்தது HATS OFF செய்ய வேண்டிய நெகிழ்வு.\nஇக்கட்டான சூழலில் நடக்குமோ நடக்காதோ என்ற தடுமாற்றத்திலும், தன்னம்பிக்கையுடன் அன்று ஏற்றப்பட்ட குத்து விளக்கின் சுடர்தான் இன்றுவரை அணையா ஜோதியாக மாணவ நெஞ்சங்களில் வாஞ்சையுடன் விடியலேற்றிக் கொண்டிருக்கிறது.\nதொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் நான் உட்படத் தங்குவது, சாப்பிடுவது என்பது கடைசி நாள்வரை எதிர் நோக்குப் பிரச்சனையாகவே இருந்து வந்தது. தங்கும் வீட்டில், FAN, CURRENT இல்லாத பல இரவுகள் காருக்குள் உட்கார்ந்திருந்தபடியே கழித்திருக்கின்னறன. கண்ணன் சார், சுகுமாரி டீச்சர் போன்றோரது கரிசனத்தாலும், தாயுள்ளத்தாலும் தான் அடிப்படை வசதிகள் ஆசுவாசப்படுத்தப்பட்டன.\nஇவர் கொண்டு வரும் லெமன் ஜூஸ் தான் சுட்டெரிக்கும் வெக்கையில் சக்கரமாய் எங்களைச் சுழல வைத்தன.\nஎதைச் செய்தாலும் நேர்த்தியாக இருக்க வேண்டுமென முன் கூட்டியே திட்டமிடுதல் இவரது அசாத்தியப் பெருமை.\nRHYMES SHOOTING (OUT DOOR) – ல் இவரது பங்களிப்பு ஈடு செய்ய முடியாதது.\nஒரே மாதிரி டிரஸ் ஆறு குழந்தைகளுக்கு புதுசா எடுத்துத் தைச்சாச்சு. SHOOTING அன்று காலையில பாத்தா ஒரு கட்சியோட கொடி கலருல டிரஸ். SHOOTING எடுப்பதில் எனக்குத் தயக்கம். வேற ஏற்பாடு செய்ய முடியுமானு கேட்ட அடுத்த செகண்ட் ஒரு டெயிலர (TAILOR) வரவழைச்சி, ஒரு மணி நேரத்துல BORDER(பார்டர்) துணி வேற கலர்ல வாங்கி தைச்சு.........!!! என்னாவொரு டைமிங்க்(TIMING). சூழ் நிலையைக் கையாளும் அலட்டாத நேர்த்தி. இதுதான் ஒரு ஆசிரியரின் ஆளுமை. சிறப்பாக முடிந்தது அன்றைய நாள்.\nகாந்தம் என்பதன் வட துருவம்,தென் துருவம் (NORTH POLE,SOUTH POLE) COLOUR PICTURE உலகம் பூராம் ஒரே மாதிரி கலர் தான். தமிழ் நாட்டுப் பாடப்புத்தகத்துல மட்டுந்தான் வேற கலர்ல இருக்கும். . பாடப்புத்தகத்துக்கே இந்த கதினா, பாட்டு தாங்குமானுதான் கலர் சேஞ்ச் (COLOUR CHANGE) பண்ணினேன்.\nஅரசியல் கலக்காத கல்வியே அறிவினைத் தூண்டும். இல்லையேல் அது வெறும் உணர்வையேத் தூண்டும்.\nஎழுதுவதற்கு இன்னும் நிறைய மிச்சமிருக்கிறது. ஒவ்வொருவரைப் பற்றியும்....\nபிறரது உழைப்பிற்கும் திறமைக்கும் கை தட்டும் கரங்களை விட, கண்குத்தும் விரல்களே உலகில் அதிகம்.\nஅறியப்படாமலும், அங்கீகரிக்கப்படாமலும் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களே இங்கு அதிகம்.\nஎனவேதான் PHONETIC DVD இயக்குநர் என்ற முறையில் படைப்புகளையும், தியாகங்களையும் பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறேன்.\nஊடகங்கள், முகநூல் இவர்கள் முகங்களை முன்னிருத்தட்டும். சந்தோசமான குழந்தைகளின் கற்றல் ஆசிகளாக இவர்கள் சந்ததிக்கே புண்ணியப் பூச்சொரியட்டும்.\n"ஆசிரியராகவே" வாழ்ந்து கொண்டிருக்கும் சக தோழமை சுகுமாரி அவர்களுக்கு வார்த்தைகள் வாழ்த்துகளாகட்டும்.\nPls click the below link:\nவாழ்த்து சொல்வதோடு நின்று விடாமல் பிறரும் வாழ்த்த ஒரு SHARE செய்யலாமே.........\nat April 09, 2018\n5th std TLM\nFA (B) & FA (A)\nPrimary English Study Materials\nகாலை வழிபாட்டு செயல்பாடுகள்\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nகாலை, 9:15 மணிக்குள், பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு, 'ஆப்சென்ட்'\nஅரசாணை எண் 319-நாள் 24.09.2018-நிதித்துறை (BPE)- அரசு ஊழியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந்து ரூ - 21,000 மாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு\nஆசிரியர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்\nஆசிரியர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் தமிழக கல்வித்துறைக்கு தனி கௌரவத்தை ஏற்படுத்தி, ஆசிரியர்களிடம் பேரன்பையும் கொண்டிருந்த நம் *பள்ள...\nJuly 2019 (381)\nMarch 2019 (560)\nFebruary 2019 (634)\nJanuary 2019 (693)\nDecember 2018 (705)\nNovember 2018 (836)\nOctober 2018 (789)\nSeptember 2018 (746)\nAugust 2018 (665)\nJuly 2018 (783)\nJune 2018 (798)\nMay 2018 (613)\nApril 2018 (694)\nMarch 2018 (436)\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nCopyright © 2013. Kalvisiragukal Plus . Some Rights Reserved
முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ (Galileo Galilei) - (1564-1642)\nMonday, 01 February 2021 06:11\t- சி. ஜெயபாரதன்,B.E (Hons), P.Eng (Nuclear) Canada -\tஅறிவியல்\n“கடந்த நூற்றாண்டுகளில் தெரியாமல் மறைந்திருந்த பல மகத்தான காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு அளவற்ற எனது நன்றியைக் கூறுகிறேன்”- காலிலியோ\n“பிரபஞ்சத்தை அது எழுதப்பட்ட பண்பாட்டுப் பங்களிப்புகளில் பழக்கமாகி அதன் மொழியைக் கற்பதுவரை நாம் வாசிக்க முடியாது. அது கணித மொழியில் எழுதப் பட்டுள்ளது. அதன் எழுத்துக்கள் எவையென்றால் கோணங்கள், வட்டங்கள் அவை போன்ற மற்ற வரைவியல் வடிவங்கள் (Geometrical Figures). அவை இல்லாமல் பிரபஞ்சத்தின் ஒரு சொல்லைக் கூட மனிதர் புரிந்து கொள்வது இயலாது.” - காலிலியோ\nLast Updated on Monday, 01 February 2021 06:20\tRead more...
கர்நாடகாவை சேர்ந்த வெள்ளி வாங்கிய பெண்ணாம்... சிந்து பெயரை மறந்த ஹரியானா முதல்வர்! | Haryana CM forgets PV Sindhu's name and state - myKhel Tamil\n» கர்நாடகாவை சேர்ந்த வெள்ளி வாங்கிய பெண்ணாம்... சிந்து பெயரை மறந்த ஹரியானா முதல்வர்!\nPublished: Wednesday, August 24, 2016, 15:30 [IST]\nசண்டீகர்: சாக்ஷி மாலிக்கிற்கு நடந்த பாராட்டு விழாவின்போது, பி.வி.சிந்து பெயரை மறந்ததோடு, அவரை கர்நாடகாவை சேர்ந்த வீராங்கனை என கூறியுள்ளார் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார்.\nஹரியானாவை சேர்ந்த சாக்ஷி மாலிக், சமீபத்தில் நிறைவடைந்த ரியோ ஒலிம்பிக், மல்யுத்தத்தில் வெண்கல பதக்கம் வென்றார். சொந்த ஊர் திரும்பிய சாக்ஷிக்கு இன்று பாராட்டு விழா நடந்தது. அதில் பங்கேற்ற முதல்வர் மனோகர் லால் கட்டார், சாக்ஷிக்கு ரூ.2.5 கோடி பரிசு வழங்கினார்.\nவிழாவில் மனோகர் கட்டார் பேசுகையில், பேட்மின்டனில் வெள்ளி வென்ற சிந்து பெயரை குறிப்பிட நினைத்தார். ஆனால் பெயர் மறந்துவிட்டது. எனவே, கர்நாடகாவை சேர்ந்த வெள்ளி வென்ற வீராங்கனைக்கும் வாழ்த்து என எதையோ கூறி சமாளித்தார்.\nஉண்மையில், சிந்து, ஹைதராபாத்தை சேர்ந்தவர். எனவே அவர் தெலுங்கானாவுக்கு சொந்தமா, ஆந்திராவுக்கு சொந்தமா என இரு மாநிலத்தவர்களும் அடித்துக்கொள்கிறார்கள். இதில் ஹரியானா முதல்வர் புது பஞ்சாயத்தாக கர்நாடகாவையும் இழுத்துவிட்டுள்ளார்.\nமத்திய விளையாட்டு துறை அமைச்சர் விஜய் கோயல், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் பெயரை தவறாக உச்சரித்து சர்ச்சையில் சிக்கியது நினைவிருக்கலாம்.\nRead more about: rio olympics 2016 rio 2016 sindhu haryana ரியோ ஒலிம்பிக் 2016 ரியோ 2016 சிந்து மாநிலம் கர்நாடகா முதல்வர் ஹரியானா\nThe Haryana government arrangedagrand felicitation ceremony for Sakshi Malik with the Chief Minister Manohar Lal Khattar handingacash reward of Rs 2.5 crore to the Rio medallist.\nStory first published: Wednesday, August 24, 2016, 15:30 [IST]
ஒரே நாள் வாக்குசேகரிப்பு... ஸ்டாலின் திண்ணை பிரச்சாரத்தை தூக்கி அடித்த எடப்பாடியார்..!\nTamil Nadu, First Published 14, Oct 2019, 10:22 AM\nஸ்டாலின் திமுக தலைவரானது தான் விபத்து என்றும் அவரால் இனி ஒரு எம்எல்ஏ கூட ஆக முடியாது என்று கூறி பிரச்சாரத்தை ஹைடெசிபளுக்கு கொண்டு சென்றார். எடப்பாடியாரின் இந்த பேச்சு அனைத்து ஊடகங்களிலும் முக்கிய இடம் பிடித்தது. ஸ்டாலின் பிரச்சாரத்தை காட்டிலும் எடப்பாடியாரின் பிரச்சாரம் சமூக வலைதளங்களிலும் வைரல் ஆனது.\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் ஒரே ஒரு நாள் எடப்பாடியார் மேற்கொண்ட பிரச்சாரம் ஸ்டாலின் பிரச்சாரத்தை தூக்கி அடிக்கும் வகையில் இருந்ததாக அதிமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.\nகடந்த வாரம் நாங்குநேரியில் இரண்டு நாட்கள், விக்கிரவாண்டியில் இரண்டு நாட்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் இடைத்தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து இரண்டு நாட்கள் ஸ்டாலின் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதே சமயம் திமுக போட்டியிடும் விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரித்து திண்ணை பிரச்சாரத்தோடு வேன் பிரச்சாரமும் செய்தார்.\nஅப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அந்த பதவி கிடைத்தது ஒரு விபத்து என்று ஸ்டாலின் கூறியிருந்தார். மேலும் விபத்து போல முதலமைச்சர் பதவி எடப்பாடிக்கு கிடைத்துவிட்டது என்று கூறி கடுமையான விமர்சனங்களை ஸ்டாலின் முன்வைத்தார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று விக்கிரவாண்டியில் எடப்பாடி பிரச்சாரத்தை துவக்கினார்.\nமாலை நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடியாரின் பேச்சில் அனல் பறந்தது. அதுவும் தன்னை விபத்தில் உருவான முதலமைச்சர் என்று ஸ்டாலின் கூறியதற்கு சரியான பதிலடி கொடுத்தார் எடப்பாடி. தான் எப்படி அதிமுகவின் சாதாரண தொண்டனாக இருந்து அதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் வரை உயர்ந்தேன் என்றும் முதலமைச்சரானது தனது உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் என்றும் அவர் கூறினார்.\nஅதோடு மட்டும் அல்லாமல் ஸ்டாலின் திமுக தலைவரானது தான் விபத்து என்றும் அவரால் இனி ஒரு எம்எல்ஏ கூட ஆக முடியாது என்று கூறி பிரச்சாரத்தை ஹைடெசிபளுக்கு கொண்டு சென்றார். எடப்பாடியாரின் இந்த பேச்சு அனைத்து ஊடகங்களிலும் முக்கிய இடம் பிடித்தது. ஸ்டாலின் பிரச்சாரத்தை காட்டிலும் எடப்பாடியாரின் பிரச்சாரம் சமூக வலைதளங்களிலும் வைரல் ஆனது.\nஇதே போல் நாங்குநேரியிலும் எடப்பாடியின் பிரச்சாரம் அதிர வைப்பதாக இருந்தது. இரண்டு தொகுதிகளிலும் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு ஏற்பாட்டை அதிமுகவின்ர செய்திருந்தனர். இதனால் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி உறுதி என்று அதிமுகவினர் தற்போதே மார்தட்டி வருகின்றனர்.\nLast Updated 14, Oct 2019, 10:23 AM
நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 26/6/16 - 3/7/16\nகாபரெட் மருத்துவர்களின் மனசாட்சிக்கு சில கேள்விகள் !\nதனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் நடைபெறும் முறைகேடுகளை அங்கு பணிபுரியும் மருத்துவர்களே அம்பலப்படுத்தி எழுதியுள்ள புத்தகம் “டிசண்டிங் டையக்னசிஸ்”(Dissenting Diagnosis”). நாட்டின் பல பகுதிகளிலிருக்கும் 78 மருத்துவர்களை சந்தித்து தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் நடத்தை குறித்து கருத்துக்கள் தொகுக்கப்பட்டு இப்புத்தகம் வெளிவந்துள்ளது. மருத்துவர்கள் அருன் கேத்ரே மற்றும் அபய் சுக்லா ஆகியோர் இப்புத்தகத்தை எழுதியுள்ளார்கள். தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் நடைபெறும் முறைகேடுகளை அங்கு பணிபுரியும் மருத்துவர்களே அம்பலப்படுத்தி எழுதியுள்ள புத்தகம் “டிசண்டிங் டையக்னசிஸ்” குறிப்பாக 1990-களுக்கு பிறகு மருத்துவம் எந்த அறமுமில்லாத தொழிலாக சீரழிந்திருக்கிறது, எப்படி வணிகமாக மாறியிருக்கிறது என்பதை மருத்துவர்களின் தனிப்பட்ட அனுபவங்களினுடாக விவரிக்கிறார்கள்.\n>சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார் ஐ.டி. ஊழியர் சுவாதி. இந்த சம்பவத்தில் குற்றவாளி இதுவரை அடையாளம் காணப்படவில்லை.>சுவாதியை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு இளைஞர் சந்தித்துப் பேசியதாக தமிழ்ச்செல்வன் என்ற தனியார் நிறுவன ஊழியர் ;6.50 செங்கல்பட்டு ரயிலில் ஏற 6.40க்கு ரயில் நிலையத்தில் இருப்பேன். அப்போது டப் டப் என சத்தம் கேட்டது. நான் 4வது கம்பார்ட்மெண்ட்டில் ஏறுவேன். அந்தப் பெண் 5வது கம்பார்ட்மெண்ட்டில் பெண்களுக்கான பெட்டியில் ஏற நின்றார். அப்போது ரத்த வெள்ளத்தில் கிடந்தார். 6,7பேர்தான் இருந்தார்கள். இரண்டு பெண்கள் அய்யோ, அய்யோ என கத்தினார்கள். ஒரு வாலிபர் இரண்டாவது நடைமேடையில் வேகமாக சென்றார். அவரை ஒருவர் துரத்தினார். அப்போது செங்கல்பட்டு ரெயில் வந்தவுடன் நான் ஏறிபோய்விட்டேன்\nஆங்கிலம் இனி தேவையில்லை : ஐரோப்பிய ஒன்றியம் முடிவு\nலண்டன் :ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக பிரிட்டன் முடிவு செய்துள்ளதால் தங்களின் அலுவல் மொழிகளின் பட்டியலில் இருந்து ஆங்கிலத்தை நீக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது. மேலும் அதன் உறுப்பு நாடுகளிலும் இனி ஆங்கிலம் அலுவல் மொழியாக இருக்காது என கூறப்படுகிறது.\nஇது குறித்து ஐரோப்பிய பார்லி.,ன் அரசியலமைப்பு விவகார குழு கூறுகையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதால் அவர்களின் மொழியான ஆங்கிலம் எங்களுக்கு தேவையில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் அனைத்திற்கும் தங்களின் முதன்மை மொழியை தேர்வு செய்யும் உரிமை உண்டு. ஆனால் பிரிட்டனை மட்டுமே ஆங்கிலத்தை தங்களின் முதன்மை மொழியாக பதிவு செய்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆவணங்கள் மற்றும் சட்ட பதிவுகள் 24 ஆட்சி மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். இதனால் ஆங்கிலம் தனது அந்தஸ்தை இழக்கும் நிலை உருவாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமலர்.com\nஏன் யாரும் காப்பாற்ற வரவில்லை? சுவாதி2மணிநேரம் ரெயில் நிலையத்திலேயே....ஏன் யாரும்?\nஇந்நிலையில் சென்னையில் சட்ட ஒழுங்கு, பெண்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட பல கேள்விகள் எழுந்துள்ளன. மேலும், சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் சுவாதி கொலை செய்யப்பட்ட பின்னர் யாரும் அவருக்கு உதவ முன்வராதது குறித்து விவாதித்து வருகின்றனர்.சுவாதி படுகொலை செய்யப்பட்டு2மணி நேரம் ரயில் நடைபாதையிலே கிடந்துள்ளார். அவருக்கு உதவவோ, கொலை செய்தவனை பிடிக்கவோ, சுவாதியை மருத்துவமனையில் சேர்க்கவோ யாரும் முன்வரவில்லை.\nபுனைவு ஆபாசப் படம் நம் வாழ்க்கையையே அழிக்கவல்லதா?\nஓர் அநியாய மரணத்துக்குப் பின்பான போராட்டங்கள் என்பது தமிழகத்துக்கு ஒன்றும் புதிதல்ல. அதேநேரம் அப்படியான போராட்டங்களை அடக்குவது அல்லது நீர்த்துப்போவச் செய்வது என்பது அதிகார மையங்களுக்கு ஒன்றும் சிரமமான காரியமும் அல்ல. வெற்றுச் சமாதானங்கள் வீசப்படும், நாங்கள் மட்டும் என்ன செய்யமுடியும் என்பார்கள், மெலிதான மிரட்டல் தொனி வெளிப்படும், இவ்வளவு ஏன் அடித்து விரட்டியும் கூட போராட்டம் ஒடுக்கப்படும்.\nஇதில் சேலம் வினுபிரியா தற்கொலை வழக்கில் வேறுமாதிரியான ஒரு முன்னுதாரணமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், தம் துறையினர் செய்த தவறுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டு பிரச்சினையை தற்காலிகமான முடித்து வைத்திருக்கிறார். குற்றச்சாட்டில் தொடர்புடையவர்கள் பணி நீக்கம் மற்றும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் உறுதியளித்திருக்கிறார்.\nசுப.வீரபாண்டியன் : ஒசந்த சாதி மகேந்திரனின் சாதி வெறி...\nசுவாதி என்னும் பெண்ணை அரிவாள் ஒருமுறை கொன்றது. சாதி பலமுறை கொல்கிறது! நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பெயரில் வெளியாகியிருக்கும் ஒரு பதிவு, சமூக வலைத்தளங்களில் வெகு விரைவாகப் பரவிக் கொண்டுள்ளது. இப்போது அது குறித்து அவரே ஒரு விளக்கத்தையும் ஒரு தொலைக்காட்சியில் கூறியுள்ளார்.\n24 மணிநேரமும் திறப்பு ! தியேட்டர், ஹோட்டல், கடை மற்றும் வங்கிகள் மணி நேரமும் open\nடெல்லி: தியேட்டர்கள், ஹோட்டல்கள், கடைகள் மற்றும் வங்கிகளை 24 மணி நேரமும் திறந்து வைத்திருக்க வகை செய்யும் சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.\n'The clearance of the Model Shops and Establishments (Regulation of Employment and Conditions of Services) Act 2015' என்று அழைக்கப்படும் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதன் மூலம், 24 மணி நேர சேவை சாத்தியப்படும்.\nதற்போது பெரிய உற்பத்தி நிறுவனங்கள், ஐடி உள்ளிட்ட சேவை துறை சார்ந்த நிறுவனங்கள் மட்டுமே 24 மணி நேரம் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nவினுப்பிரியவின் கொலையாளி : காதலை ஏற்காததால் ஆபாசமாக மாப்பிங் செய்தேன்\nசேலம்,:'பேஸ்புக்'கில் வினுபிரியாவின் புகைப்படத்தை, ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டவன் கைது செய்யப்பட்டான். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே மோட்டூர் புவனகிரி தெருவைச் சேர்ந்தவர் அண்ணாதுரை, 46. அவரது மகள் வினுபிரியா, 21. கடந்த, 16ம் தேதி, பேஸ்புக்கில், வினுபிரியாவின், 'மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச புகைப்படம், பரவியது. இது குறித்து, புகார் அளித்த வினுபிரியாவின் பெற்றோர் அலைக்கழிப்பு செய்யப்பட்டனர்.மார்பிங் ஆபாச படம் தொடர்ந்து, பரவி வந்ததால், மனமுடைந்த வினுபிரியா துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அம்மா, அக்கா, தங்கச்சி யாரேனும் இருந்து இவன் சொன்னதைக் கேக்கலேன்னா அவங்க படத்தையும் மார்பிங் செய்து போடுவானா ????\nY.G.மகேந்திரனின் மகள் மதுவந்தி தமிழக பாஜகவில் உயர் பதவி... பிலால் மாலிக் உபயம்..\nதமிழக பாஜகவில் YG மகேந்திரனின் புதல்வி மதுவந்தி உயர் பதவியில் ! அதுவும் கல்வி அமைச்சர் ரேஞ்சுக்கு . அவிங்க குடும்பம்தான் அவாள் கல்விக்கு அதாரிட்டி. விரைவில் சமஸ்கிருத கிருமி பரவும். பத்மா சேஷாத்ரி குடும்பமா கொக்கா? ஒய். ஜி.பார்த்தசாரதி பேத்திக்கு வாழ்த்துக்கள் ..... நேத்து ஒய் .ஜி மகேந்திரன் ஓவரா அலப்பறை பண்ணியது ஏனென்று இப்போ தெரிகிறது .அவர்கள் ஓவரா பொங்கல் வச்சப்பவே நினச்சேன் ... எதுக்குமே பொங்கல் பொங்காதவர் இதுக்கு நுரைத்தல்ல பொங்கும்போதே யோசிச்சு இருக்கணும் நாம் ... பொங்கல் நல்லா பொங்கிட்டது ...அப்புறம் நெம்போ பொங்கி அடுப்பு அணைஞ்சிருச்சாம் ( பதிவு அழிக்கப்பட்டது)... உயிர்னா எல்லோருடைய உயிரும் ஒன்னுதான்.... அது எந்த ஜாதியா இருந்தா என்ன .... மனிதாபிமானம் மட்டும் இருந்தாபோதும்... சாவுல கூட ஜாதி.தம்பி கடந்த 10 ஆண்டுகள் சொறிஞ்சி இருந்த ஆயா .3நாளில்6கொலை . இதற்காக ஒரு வருத்தம் அல்லது நேரில் சந்தித்து ஆறுதல் கூற கூட நேரம் இல்லையா முதுகு இல்ல எடுபட்ட அமைச்சர் நாய்களுக்கு ?3நாளில்6கொலை . இதற்காக ஒரு வருத்தம் அல்லது நேரில் சந்தித்து ஆறுதல் கூற கூட நேரம் இல்லையா முதுகு இல்ல எடுபட்ட அமைச்சர் நாய்களுக்கு ? பெருசா பேசக்கூடாது அரசியல் நாகரீகம் இல்லாத கொல்லை கூட்டம்தானே.?முகநூல் உபயம்\nசுவாதி கொலைசெய்யப்பட்டது அப்பட்டமான ஆணாதிக்க வெறியினால். ஒரு வேட்டை நாயைப் போல பெண்களை துரத்தி பாடுபடுத்தி அடக்குவதே ஒரு இளைஞனின் நவீன மஞ்சு விரட்டு வீரம் என்பதாக சினிமா பயிற்றுவித்திருக்கிறது. தனக்கு அடங்கிக் கிடக்கவேண்டிய ஒரு விலங்கு எப்படி மறுப்பு தெரிவிக்கலாம் என்பதே இவ்வெறியர்களின் நிலை. இதில் எல்லா சாதி, மதங்களைச் சேர்ந்தோரும் இருக்கிறார்கள். தனிப்பட்ட வாழ்விலும் கூட ஒரு பெண்ணுக்கு ஜனநாயக உரிமை இல்லை என்பதை இக்கயவர்கள் விதியக வைத்துள்ளார்கள்.\nமேலும் சுவாதி ஒரு பார்ப்பனப் பெண் என்று இந்த பிரச்சினையை ‘ஆய்வு’ செய்த சில ‘முற்போக்காளர்களின்’ பார்வையை வன்மையாக கண்டிக்கிறோம்.\nவிஜயகாந்த்: உங்களுக்கு கொடுக்க என்னிடம் பணம் கிடையாது! கட்சிக்கு செலவழித்தவர்கள் தலையில் துண்டு\nகட்டம் கட்டப்படுகிறார் விஜயகாந்த்: 'உங்களுக்குக் கொடுக்க என்னிடம் பணம் கிடையாது' என, விஜயகாந்த் கைவிரித்ததால், தே.மு.தி.க.,வினர் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., சார்பில், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. தேர்தலில் நிறைய செலவு செய்தும், இவர்கள் படுதோல்வி அடைந்தனர். இதனால், இவர்கள் பெற்ற கடன் தொகையை திருப்பி அளிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். கருப்பு எம்ஜியார் கப்டன் விஜயகாந்த் டப்பு லேது என்று கூறி விட்டார் , தமிழ்நாட்டுக்கு சேவை செய்த கண்மணிகளே போய் வேலை வெட்டி யை பாருங்க...அரசியலுக்கு வரவில்லையென்றால் அது ரஜினிகாந்த்...அரசியலே வரவில்லையென்றால் அது விஜயகாந்த்... ஆனா ரெண்டு பேருமே கல்லா கட்டுறதுல கில்லாடிங்க . ஜனங்க ? புண்ணாக்குங்க .\nஜெகன்மோகன் ரெட்டியின் 749 கோடி சொத்துக்கள் பறிமுதல்.. YSR காங்கிரஸ் தலைவரின்...\nஐதராபாத்: ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங். கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவர் மறைந்த முன்னாள் ஆந்திரா முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன். ராஜசேகர ரெட்டி ஆட்சியின் போது பல்வேறு நிறுவனங்களிடமிருந்து லஞ்சமாக பணம் பெற்றதாக ஜெகன் மோகன் ரெட்டி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டிக்கு சொந்தமான பெங்களூரூ, ஐதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள ரூ. 749 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை ஜப்தி செய்தது.தினமலர்.காம் ஏனுங்க வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பது குற்றம் அல்ல என்று ஜெயலலிதாவின் நீதிபதிகள் சொல்றாங்களே?\nவைகோ :நான் அதிமுகவின் பீ டீம் புரோக்கர்தான் ! ஒரு அரசியல் விபச்சாரியின் ஒப்புதல் வாக்குமூலம் !\nதிருச்சி: எனது ராஜதந்திரம்தான் தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிட முடியாமல் தடுத்தது என்று திருச்சியில் நடைபெற்ற ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ பேசினார். திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் வாளாடியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு புறநகர் மாவட்ட பொறுப்பாளர் சேரன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், தமிழகத்தில் மதுக்கடைகளை முழுமையாக மூடி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், விவசாய கடன் தள்ளுபடியை, அறிவித்தபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது, ''என்னை ராஜதந்திரம் இல்லாதவர் என கருணாநிதி நினைத்து கொண்டிருந்தார். ஆனால், எனது ராஜ தந்திரத்தால்தான், ஆட்சி அமைக்க வேண்டிய வாய்ப்புகள் இருந்தும்கூட தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாமல் போனது என்பதை மறுக்க முடியாது.\nதிராவிட முன்னேற்ற கழகம் அதிமுகவாக மாறுகிறதா? காலில் விழுதல்- துதி பாடல் -?\nதிமுகவில் காலில் விழும் கலாச்சாரம்..கொத்தடிமை புத்தி படு வேகமாக வளர்கிறது.... திமுக அம்மாதிமுகவாக மாறக்கூடாது... இன்று மு.க ஸ்டாப்களின் மருமகளுக்கு பிறந்தநாளாம்..அவருக்கு திமுகவினர் அண்ணி என்று விளித்து வாழ்த்துகிறார்கள் ? எதற்காக ? வருங்கால திமுகவின் வாரிசு விடம் இப்போதே விசுவாசத்தை காட்டுகிறார்களா?... திமுகவினர் பலர் என் முகநூல் பக்கத்தை டேக் இணைத்துள்ளார்கள். வாரிசு அரசியலையும்...துதிபாடும் அரசியலையும் தனிநபர் வழிபாடும் அரசியலையும்... கலைஞரும் தளபதியும் வன்மையாக கண்டிக்க வேண்டும்..அப்படிப் பட்டவர்களை தங்கள் அருகில் சேர்க்கக்கூடாது இப்போதே களை எடுக்கத் தவறினால் பின்பு திமுக இருக்காது. திமுக ஒரு லட்சிய இயக்கம்...மக்கள் இயக்கம் என்று சொன்னால் போதாது. செயல்படுத்தியும் காட்டவேண்டிய பொறுப்பு தலைமைக்கு உள்ளது. தாமோதரன் முகநூல்\nIstanbul துருக்கி விமான நிலைய குண்டு வெடிப்பு 28 பேர் இறப்பு 60 பேர் படுகாயம்\nதுருக்கி விமான நிலையத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 28 பேர் பலியாயினர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். துருக்கியிலுள்ள இஸ்தான்புல் அடாடர்க் விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய இரண்டு குண்டு வெடிப்பு தாக்குதலில் 28 பேர் உடல் சிதறி பலியாயினர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். விமான நிலையத்தின் பன்னாட்டு வருகையிலுள்ள எக்ஸ்-ரே செக்யூரிட்டி அறையை ஒட்டிய பகுதியில் குண்டு வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாகவும், இது மனித வெடிகுண்டு தாக்குதலாக இருக்கலாம் எனவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை ஜெயலலிதா ஒருபோதும் விடுதலை செய்யவே மாட்டார் !\nஅன்பை பகிருங்கள் என்று வேண்டிகொண்ட கன்னியாஸ்திரி.. கடவுளை கும்பிடுங்கள் என்று கூறவில்லை\nஇந்த கன்னியாஸ்திரி மிகவும் ஆனந்த நிலையில் தனது இறுதி யாத்திரையை ஆரம்பிதார். இவரது புன்னகை சமுக வலைதளங்களில்... ஆஜெண்டினாவை சேர்ந்த பியூனஸ் அயர்சைச் சேர்ந்த கன்னியாஸ்திரி சிசிலியா மரியாவுக்கு கடந்த6மாதங்களுக்க முன் புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அன்பும் கனிவும் நிறைந்த மரியா,நோய் குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து இறை தொண்டாற்றி வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இறந்து போனார். அனைவரும் அன்பை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று இறக்கும் தருவாயில் சிஸ்டர் மரியா கூறியவாறே உயிரிழந்தார். முகத்தில் புன்னகையுடன் உயிரிழந்த சிஸ்டர் மரியாவின் புகைப்படங்கள்தான் இவை.விகடன்.காம்\nஇளங்கோவன் ராஜினாமா...இனி தமிழக காங்கிரஸ் மெல்ல காணாமல் போகும் ?\nயாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக துணிச்சலாக பேசுவது, கூடவே நக்கலும், நையாண்டியும். தனக்கு எதிராக பேசுபவர் யாராக இருந்தாலும், கட்சியில் இருந்து அதிரடியாக தூக்குவது, பலருடன் மோதல் போக்கை கடைபிடிப்பது என தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியேற்றதில் இருந்து சர்ச்சைகளுடனே வலம் வந்தார் இளங்கோவன்.இதனால் அதிகமாக ஊடகங்களில் பேசப்பட்டார், அதுவே அவருக்கு பலமாகவும் இருந்தது. ஆனால் இந்த சர்ச்சைகளே அவரது பதவி பறிப்புக்கு காரணம் என கூறப்படுகிறது. பதவியை ராஜினாமா செய்யுமாறு மேலிடம் அழுத்தம் கொடுத்ததாலயே அவர் ராஜினாமா கடிதம் கொடுத்ததாகவும் பேசப்படுகிறது.\nதிருநெல்வேலி : அண்ணன் தங்கை மாலாவை வெட்டி கொன்றான்.. ஆணவ கொலை\nதிருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு அருகேயுள்ள மேலமூன்றடைப்பைச் சேர்ந்தவர் சிதம்பரம் என்ற கணேசன். அரசுப் பேருந்து நடத்துநர். இவரது மகன்கள் கிருஷ்ணராஜா, செல்வக்குமார், மகள் மாலா. இதில், கிருஷ்ணராஜா சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றுகிறார். மாலா, பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரியில் எம்.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.\nகல்லூரிக்கு தினமும் பேருந்தில் சென்று வந்தபோது, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பழக்கடையில் வேலை செய்துவந்த சார்லஸ் என்பவருக்கும் மாலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். சார்லஸுக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனராம். இந்த விவரம் தெரியவந்ததும், மாலாவை பெற்றோர் கண்டித்ததால் அவர் கல்லூரிக்குச் செல்லவில்லை. இதனிடையே, கடந்த2மாதங்களுக்கு முன்னர் மாலா காணாமல் போயிருக்கிறார்.\nசினிமாவும் டிவியும் பெண்களை படுக்கை பொருளாக... ஆணாதிக்க - காம வெறியை தூண்டுகின்றன\nசுகந்தி நாச்சியாள் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலையில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்படுகிறார். அதற்கு அடுத்தநாளே வினுப்பிரியா என்கிற பெண் சேலத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொள்கிறார். காரணம் அவருடைய முகநூலில், வாட்ஸப்பில் இருந்த புகைப்படங்களை மார்ஃபிங் மூலம் போர்னோ படமாக உருவாக்கி, அதை உலவவிடுகிறார்கள். சொந்தக்காரர் ஒருவர் பார்த்துவிட்டு, அக்குடும்பத்தினிடரிடம் சொல்ல பதைபதைத்துப் போகிறது அக்குடும்பம். உடனே காவல்துரைக்கு செல்கிறார்கள். ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையான நம் காவல்துறை 2000 ரூபாயும் ஒரு செல்போனூம் அன்பளிப்பாக(?) வாங்கிக்கொண்டு செயல்பட ஆரம்பிக்கிறது நத்தை வேகத்தில்.\nஇந்தியர்களின் அமெரிக்க மோகம்... சீனா நக்கல்?\nபுதுடில்லி: சீன அரசுக்கு சொந்தமான குளோபல் டைம்ஸ் நாளிதழ்: இந்தியர்களுக்கு தேசியம் என்றால் என்ன என தெரியவில்லை. நீதிநெறி முறை பற்றி தெரியவில்லை. மேற்கத்திய நடைமுறையை பின்பற்றி தங்களை பாழ்படுத்தி கொள்கின்றனர். மேகத்திய நாடுகளை பின்பற்றுகிறது.\nஇந்தியாவின் பெரிய நோக்கத்தை அமெரிக்கா ஆதரிக்கிறது. ஆனால், அமெரிக்கா மட்டும் முழு உலகம் மட்டுமல்ல. அமெரிக்காவின் ஒப்புதல் பெற்று விட்டால் மட்டும் உலக நாடுகளின் ஒப்புதல் பெற்றது போலாகி விடாது. இது தான் அடிப்படை உண்மை. ஆனால், இதனை இந்தியா புரிந்து கொள்ள மறுக்கிறது.\nஇந்தியா பெரிய நாடாக விளங்க வேண்டும் என நினைக்கின்றனர். பெரிய நாடுகள் எவ்வாறு நடந்து கொண்டன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். என்எஸ்ஜியில் நாடுகள் உறுப்பினராவதற்கான விதிகளை இதியா கடைப்பிடிக்க வேண்டும். இந்தியா இன்னும் அணுசக்தி பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திடவில்லை. ஆனால் என்எஸ்ஜியில் இந்தியா விண்ணப்பித்தவுடன் இந்திய பத்திரிகைகள், சீனா தவிர 47 நாடுகள் ஆதரவு தெரிவிப்பதாக செய்தி வெளியிட்டன. என கூறியுள்ளது.தினமலர்.com\nபார்பனர்கள் கொல்லப்பட்டால் அரசு துறைகள் படு வேகமாக செயல்படும்? தலித் கொல்லப்பட்டால்....?\nஉங்கள் ஆட்கள் யாராவது கொல்லப்பட்டால் அரசுத்துறைகள் விரைந்து செயல்பட்டுவிடும். அல்லது நீங்கள் யாரையாவது காலிசெய்தாலோ அத்துறை செயல்படாமலே இருந்துவிடும் (உங்கள் பள்ளியின் அலட்சியத்தால் கொல்லப்பட்ட மாணவனின் வழக்கில் நீங்கள் ஒரு ரோமத்தைக் கூட இழக்கவில்லை இல்லையா...)\nபோட்டது பெரியவா என்பதால் கொல்லப்பட்ட சங்ககரராமன் விவகாரத்தில் நீங்கள் எல்லோரும் பொத்திக்கொண்டிருந்தீர்கள்.\nசுவாதி கொலையும் YG மகேந்திரனின் ஜாதி அபிமானமும்\nஇறந்தது ஒரு உயிர், அது பிராமண சாதி என்றாலும், வேறு என்ன சாதி என்றாலும், அதற்கு எதிராக குரல்கொடுக்க வேண்டியது, கொலைகாரனை கண்டுபிடித்து தகுந்த தண்டனை வழங்குவது நிச்சயம் நடந்தே ஆகவேண்டும். ஆனால் திடீரென இந்த பிராமணர்கள் பொங்குவது ஏன் என்று தெரியவில்லை.\nவிஜயகாந்த் : எப்போதும் திமுகவுடன் கூட்டணி இல்லை... அம்மான்னா அம்மாதான்\nநடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக படுதோல்வியை சந்தித்தது. அதன் தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்ப்பேட்டையில் டெபாசிட் இழந்தார். இந்த நிலையில் தமது கட்சியின் நிர்வாகிகளை தொடர்ந்து சந்தித்து கருத்து கேட்டு வருகிறார் விஜயகாந்த்.\nநேற்று ஜூன் 27 அன்று கட்சியில் உள்ள அணியின் மாவட்ட நிர்வாகிகளையும், கட்சியின் மாவட்ட துனை செயலாளர், துனை பொருளாளர், துனை தலைவர்களை அழைத்து கருத்துகளை கேட்டுள்ளார். இந்த கூட்டத்தில் என்ன நடந்தது?\nதேர்தல் தோல்வியால் பல லட்சங்களை இழந்த ஓர் தேமுதிக வேட்பாளர் கூட்டத்தில் நடந்ததை விவரிக்கிறார்.‘தேர்தலால் பல லட்சங்களில் கடன் சுமை ஏறிவிட்டது. வட்டி கட்டமுடியவில்லை. மிகவும் நொடிந்து இருக்கிறோம்’ என்று பலர் தெரிவித்தனர். அதை கூர்ந்து கவனித்தவர் தொடர்ந்து அதேபோல கருத்துக்கள் வந்தபோது கோபத்தில் எழுந்து அருகில் இருந்த அறைக்கு சென்றார். அரசியலில் ஈடுபட்டு குறுகிய காலத்திலேயே மிகபெரும் வெற்றியை அடைந்தவர்களில் நடிகர் விஜகாந்து தான் முதன்மையானவர் .. கரன்சி... கரன்சி.... கரன்சி .. அள்ளிட்டார்ல?\nஅரசினர் மருத்துவ மனையில் 18 பேரின் கண்பார்வை பறிபோனது.. மேட்டூரில் அக்கிரமம்\nமேட்டூர் அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது குறித்து தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் 18 பேருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு விரைவில் கண்பார்வை திரும்பும் என்று சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் உறுதி அளித்துள்ளனர். இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவத்துக்கு விளக்கம் கேட்டு மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வெப்துனியா.கம\nஅந்த 700 கோடி ரூபாய் விஜயகாந்துக்கு கிடைத்தது எப்படி ?ரகசியத்தை போட்டுடைத்த மக்கள் தேமுதிக சந்திரகுமார்\nமரணத்திலும் ஜாதி : சுவாதி கொலை குறித்து ஒய்.ஜி.மகேந்திரன்\n(டி.என்.எஸ்) சென்னை நுங்கம்பாக்கத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி வழக்கில், இதுவரை குற்றவாளியை போலீஸ் கண்டுபிடிக்காமல் திணறிக்கொண்டிருக்க, அவரை கொலை செய்தது ஒரு இஸ்லாமியர் என்றும், சுவாதி பிராமணப் பெண் என்பதால், அவரது மரணத்திற்கு எதிராக யாரும் குரல் கொடுக்கவில்லை, என்றும் பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஆதங்கப்பட்டுள்ளார்.\nஇது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:\nசுவாதி என்ற பிராமணப் பெண் கொடூரமாக பிலால் மாலிக் என்ற மிருகதால் வெட்டி கொல்லப் பட்டுள்ளார்.\nகுஷ்பூ :சுவாதியின் கொலையே இறுதியானதாக இருக்க வேண்டும்\nமென்பொறியாளர் சுவாதியின் கொலையே இறுதியாக இருப்பதற்கு அரசு மட்டுமின்றி பொதுமக்களும் முழுமையான பொறுப்புனர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு வலியுறுத்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் ஐ.டி. நிறுவன பெண் ஊழியர் சுவாதி மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சுவாதியின் குடும்பத்தினரை இன்று குஷ்பு சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, தமிழ்நாட்டில் கடைசியாக இந்த சம்பவம் இருக்கட்டும். இந்த கொலையை பார்க்கும்போது, சுவாதியின் பெற்றோர் மட்டும் ஒரு குழந்தையை இழக்கவில்லை. தமிழ்நாட்டில் ஒரு பெண்ணை நாம் இழந்திருக்கிறோம். சுவாதியின் கொலையே இறுதியாக இருப்பதற்கு அரசு மட்டுமின்றி பொதுமக்களும் முழுமையான பொறுப்புனர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார் நக்கீரன்.in\nநளினியை விடுதலை செய்ய முடியாது! ஜெயா அரசு\nநெடுமாறன் சைமன் செபாஸ்டியன் சீமான் மற்றும் அவரது குஞ்சுகள்.. வைக்கோ. கொளத்தூர் மணி விடுதலை ராஜேந்திரன் கோவை இராமகிருஷ்ணன் மே 17 முத்துக்குமாரனா ? ( பெயர் தெரியல)... பண்ருட்டி வேல்முருகன் பெண் சிங்கம் தாமரை.. ஐயநாதன் மற்றும் பல சில்லறை ஈழ போராளிகள் இன்னும் வாய் திறக்காதது ஏன் ? ஏன் ? ஏன் ?????? கம்பி என்னிகிட்டு கழித்திங்க வைப்பாங்க என்ற பயமா ? கம்மிசன் தொகை கிடைக்காது என்ற கவலையா ? தேர்தல் பரப்புரைக்கு பயன்படும் அற்புதம்மாவும் கருத்து சொல்ல வில்லையே ?..திருடனை தேள்கொட்டிய கதையாக ஆயிடுச்சா ? இதுவே கருணாநிதி சொல்லி இருந்தால் தமிழ்நாடே தீ பற்றி எரிந்திருக்குமே ..நீங்கள் பேயாட்டம் ஆடி இருப்பீர்களெ ?.... என்னங்கய்யா உங்க ஈய பற்று...ஈய பாசம் ??\nசுவாதி கொலையும் பார்ப்பன மாலன் நாராயணன் Sumanth Raman ஞாநி சங்கரன் Badri Seshadri Rangaraj Pandey\nசூர்ப்பனகை போல வெட்டப்பட்டதா H Raja ‪#‎BJP‬ யின் மூக்கு ...\nஅவரின் விரும்பி திணிக்க பார்த்த லவ்ஜிஹாத் கோணத்தை ஸ்வாதி வீட்டினர் ஏற்காமல் திருப்பி அனுப்பி விட்டதை சொல்ல வருகிறீர்கள் போல .\nஅது மட்டுமா ., இங்கு பிராமணர் சங்கம் , மூன்று மருத்துவ மாணவிகள் மரணத்தை தற்கொலை என்று செய்த அதிகாரத்தை கண்டிக்காமல், எழுச்சி கொண்டு ஸ்வாதிக்கு மட்டுமே போஸ்டர் ஓட்டுவதை மட்டுமே காணும் போது ஆச்சிரியம் வருகிறது ...\nபிரகாசமான ராமசாமிகளும் சேஷாத்திரிகளும் மற்ற சமூகத்து கொலையில் மனித நேயத்துடன் எழுதியவர்களை வீணர்கள் "போராளீஸ்" என்றே சிலாகித்தும், கிண்டல் செய்ததையும் மறந்து இன்று FB Twiter இல் அவர்களே ஸ்வாதிக்கு மட்டுமே போராளி கோலம் போர் பரணி பாடும் கட்சியை காணும் போது மலைப்பும் வருகிறது ...\nயானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்த சத்குரு ஜாக்கி வாசுதேவ் என்கின்ற அயோக்கியன்\nமக்கள் பணம் 500 கோடியை சுருட்டிய விஜயகாந்த்... ஊரை அடிச்சு உலையில் போட்ட பிரேமலதா குடும்பம்\nதேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு எதிராக 14 மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். மாவட்ட செயலாளர்கள் ஏ.எம்.காமராஜ் (சென்னை மேற்கு), எஸ்.நித்யா (வேலூர் கிழக்கு), வி.சந்திரன் (கிருஷ்ணகிரி), டாக்டர் வி.இளங்கோவன் (தர்மபுரி), என்.தினேஷ்குமார் (திருப்பூர் வடக்கு), ஆர்.பாண்டியன் (கோவை வடக்கு), துரை காமராஜ் (பெரம்பூர்), எஸ்.செந்தில்குமார் (திருச்சி தெற்கு), பி.சம்பத் குமார் (நாமக்கல்), பாலு (திண்டுக்கல்), முத்துகுமார் (மதுரை மாநகர்), கே.ஜெய பால் (திருநெல்வேலி), டி.ஜெகநாதன் (கன்னியா குமரி கிழக்கு), க.ராமசாமி (புதுக்கோட்டை) ஆகியோர் பகிரங்கமாக கடிதம் எழுதி விஜயகாந்துக்கு அனுப்பியுள்ளனர்.\nபார்ப்பனர்களால் அசுரனாக்கப்பட்ட மகிஷன் ஒரு பவுத்த அரசன்: பேராசிரியர் குருவின் ஆய்வுக் கட்டுரை\nமைசூர் அல்லது மகிஷ மண்டலா ராஜாங்கத்தின் மிகச் சிறந்த ஆட்சியாளராக இருந்தவர் மகிஷா. புத்தமத கலாச்சாரத்திலும் மரபிலும் வந்த மகிஷா, மனிதநேயத்தையும் ஜனநாயக கொள்கைகளையும் தனது ஆளுடையில் பின்பற்றினார். ஆனால், கர்நாடகத்தின் கலாச்சார மற்றும் அறிவுசார் தலைநகரமான மைசூரை, புராணங்கள் மூலம் பார்ப்பன சக்திகள் திட்டமிட்டே புதைத்தனர் என்கிறார் பேராசிரியர் மகேஷ் சந்திர குரு. விரைவில் வெளிவரவிருக்கும்என்ற நூலிலிருந்து இந்த கட்டுரையை ஃபார்வர்டு பிரஸ் வெளியிட்டுள்ளது. அதன் தமிழாக்கம் இங்கே:\nபேராசிரியர் குரு மகிஷ மண்டலா மைசூரு, கர்நாடகத்தின் இரண்டாவது மிகப் பெரிய நகரமாக இருக்கிறது. பெங்களூருவிலிருந்து 130 கிமீ தென்கிழக்கில் அமைந்துள்ளது. பண்டைய வரலாற்றில் அசோக அரசரின் காலத்தில் அதாவது கிமு 245ல் மைசூர் அல்லது மகிஷூர் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nசுவாதி :என்னோட அப்பா அம்மாவே என்னை நம்பாதப்போ நான் உயிரோட இருந்து என்ன பிரயோஜனம்”\nமொதல்ல நீங்க எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க, என்னோட லைஃப் போனதுக்கு அப்புறம் நான் வாழ்ந்து என்ன பண்ணப் போறேன். எனக்கு வாழப் புடிக்கல்ல, என்னோட அப்பா அம்மாவே என்னை நம்பாதப்போ நான் உயிரோட இருந்து என்ன பிரயோஜனம், அவங்களே என்னைப் பற்றி கேவலமா பேசுறாங்க, சத்தியமா சொல்றேன் நான் என் போட்டோவை யாருக்கும் அனுப்பல, நான் எந்த தப்பும் பண்ணல்ல.”தனது இறுதிக் கடிதத்தில் வினுப்ரியா எழுதியவை… சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வினுப்பிரியா என்ற இளம்பெண், மர்ம நபர்கள் சிலர் தன்னுடைய படத்தை ஆபாசமாக ‘மார்ஃபிங்’ செய்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளதாக கூறி கடந்த 23-ஆம் தேதி காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.\nவழக்கமாக நமது தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் சிங்கப்பூர் டால்ஃபின் சர்க்கஸுக்கோ, டோக்கியோ வாண வேடிக்கைக்கோ, அமெரிக்காவில் மாஸ்டர் ஹெல்த் செக்கப்புக்கோ சென்று வந்தால் என்ன நடக்கும்? மீனம்பாக்கத்திலிருந்து கார்டன் அல்லது தோட்டம் அல்லது தாயகம் அல்லது பவன் செல்லும் வழிகளில் “டால்ஃபின் கண்டு களித்த தங்கத் தாரகை, டோக்கியோ வென்று வந்த புரட்சிப் புயல், அமெரிக்காவில் ஆரோக்கியத்தை மீட்டெடுத்த தளபதி” இன்னபிற லித்தோ சுவரொட்டிகள் கண்ணைக் குத்தும்! தமிழகத்தைப் பொறுத்த வரை ஆர்.எஸ்.எஸ் வானரப்படை அனைத்தும் தமிழின விரோத கூரூப்பாகவே மக்களால் மதிப்பிடப்படுகிறது. என்ன செண்ட் போட்டாலும், என்ன சாயம் பூசினாலும் அவர்களை அவாள் கட்சியாகவும், ஹிந்தி வாலாக்களாகவும்தான் நமது மக்கள் ஃபீல் பண்ணுகின்றனர்.\nஅடுத்தடுத்த திருப்பங்களுடன் அரங்கேறிவருகிறது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ராஜினாமாவுக்கு பிறகான காட்சிகள். டில்லி சென்று தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு திரும்பினார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். இதில் அதிர்ச்சியடைந்த அவரின் ஆதரவாளர்கள் அவர் வீட்டில் திரண்டனர். அதில் இரண்டு தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்போது\nஇளங்கோவன் ஆதரவு மாவட்ட தலைவர்களான ரங்கபாஷ்யம் (மத்திய சென்னை), வி.ஆர். சிவராமன் (காஞ்சி வடக்கு) உள்பட 38 மாவட்ட தலைவர்கள் தங்களது மாவட்ட தலைவர் பதவியையும் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தனர். “நானாகத்தான் பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன். மேலிடம் என்னை திருப்பி அழைத்தாலும் தலைவர் பதவியில் நீடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை.\nஏன் யாரும் காப்பாற்ற வரவில்லை? சுவாதி2மணிநேரம் ...\nசுப.வீரபாண்டியன் : ஒசந்த சாதி மகேந்திரனின் சாதி வெ...\n24 மணிநேரமும் திறப்பு ! தியேட்டர், ஹோட்டல், கடை மற...\nவினுப்பிரியவின் கொலையாளி : காதலை ஏற்காததால் ஆபாசமா...\nY.G.மகேந்திரனின் மகள் மதுவந்தி தமிழக பாஜகவில் உயர்...\nசுவாதியைக் கொன்றவனது அரிவாளுக்கு குறைவானது அல்ல, ஒ...\nவிஜயகாந்த்: உங்களுக்கு கொடுக்க என்னிடம் பணம் கிடைய...\nஜெகன்மோகன் ரெட்டியின் 749 கோடி சொத்துக்கள் பறிமுதல...\nவைகோ :நான் அதிமுகவின் பீ டீம் புரோக்கர்தான் ! ஒரு ...\nதிராவிட முன்னேற்ற கழகம் அதிமுகவாக மாறுகிறதா? காலி...\nIstanbul துருக்கி விமான நிலைய குண்டு வெடிப்பு 28 ப...\nராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை ஜெயலலிதா ஒருபோதும்...\nஅன்பை பகிருங்கள் என்று வேண்டிகொண்ட கன்னியாஸ்திரி.....\nஇளங்கோவன் ராஜினாமா...இனி தமிழக காங்கிரஸ் மெல்ல காண...\nதிருநெல்வேலி : அண்ணன் தங்கை மாலாவை வெட்டி கொன்றான்...\nசினிமாவும் டிவியும் பெண்களை படுக்கை பொருளாக... ஆணா...\nபார்பனர்கள் கொல்லப்பட்டால் அரசு துறைகள் படு வேகமாக...\nவிஜயகாந்த் : எப்போதும் திமுகவுடன் கூட்டணி இல்லை.....\nஅரசினர் மருத்துவ மனையில் 18 பேரின் கண்பார்வை பறிபோ...\nஅந்த 700 கோடி ரூபாய் விஜயகாந்துக்கு கிடைத்தது எப்...\nமரணத்திலும் ஜாதி : சுவாதி கொலை குறித்து ஒய்.ஜி.மகே...\nசுவாதி கொலையும் பார்ப்பன மாலன் நாராயணன் Sumanth R...\nயானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்த சத்குரு ஜாக்கி வா...\nமக்கள் பணம் 500 கோடியை சுருட்டிய விஜயகாந்த்... ஊரை...\nபார்ப்பனர்களால் அசுரனாக்கப்பட்ட மகிஷன் ஒரு பவுத்த ...\nசுவாதி :என்னோட அப்பா அம்மாவே என்னை நம்பாதப்போ நான்...\nஇட்லி – தோசை – ரஜினிதான் தருண் விஜயின் தமிழ்ப் பற்...
குறையும் புழக்கம், அச்சடிப்பும் நிறுத்தம், மெதுவாக மறையும் ₹2000 நோட்டு; என்ன காரணம்? | circulations of rs 2000 banknotes reduced and no new notes - what rbi report says - Vikatan\nஅச்சடிப்பு நிறுத்தம், புழக்கத்திலிருந்து ரூ.2,000 நோட்டுகள் குறைவது போன்ற காரணங்களால், ரூ.2,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்படுமா என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.\n2016-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 8-ம் தேதி இரவு, தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ``500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது. உங்களிடம் இருக்கும் அந்த நோட்டுகளை டிசம்பர் 31-ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளுங்கள். இந்த நடவடிக்கை மூலம் இந்தியாவை கறுப்புப்பணம் இல்லாத நாடாக மாற்றுவோம்" என்றார். விமர்சனங்கள் வந்தன. அநேக மக்கள் வேறு வழியில்லாமல் அதை சகித்துக் கொண்டனர்.\n2017-18 நிதியாண்டின்போது 3,363 மில்லியன் நோட்டுகளாக இருந்த இதன் எண்ணிக்கை, 2018-19-ம் ஆண்டில் 3,291 மில்லியனாகக் குறைந்துள்ளது. சுமார் 72 மில்லியன் நோட்டுகள் புழக்கத்தில் இல்லாமல் இருப்பதாக ரிசர்வ் வங்கி 2018-19-ம் நிதி ஆண்டின் அறிக்கையில் தெரிவித்தது. மதிப்பின் அடிப்படையில், 2017-18 நிதியாண்டில் ரூ.6,72,600 கோடி இருந்த இதன் மதிப்பு, 2018-19-ம் ஆண்டில் ரூ.6,58,200 ஆக குறைந்துள்ளது.\nதற்போது வெளியாகியிருக்கும் 2020-2021-ம் ஆண்டுக்கான வருடாந்தர நிதிநிலை அறிக்கையையிலும், ரூ.2,000 நோட்டுகளின் எண்ணிக்கை புழக்கத்திலிருந்து குறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2017-2018-ம் நிதி ஆண்டில் இருந்த 3,363 மில்லியன் நோட்டுகளிலிருந்து, மார்ச் 2021-ம் ஆண்டு நிலவரப்படி 2,415 மில்லியன் நோட்டுகளாகக் குறைந்துள்ளன. அதாவது, மொத்தம் 912 மில்லியன் நோட்டுகள் குறைந்துள்ளன.\nமதிப்பு அடிப்படையில் கடந்த 2020-ம் ஆண்டின் மார்ச் மாதம் ரூ. 5.48 லட்சம் கோடியாக இருந்த ரூ.2,000 நோட்டு புழக்கம், மார்ச் 2021-ம் ஆண்டில் ரூ.4.9 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை மெல்ல மெல்ல திரும்பப் பெறுவது என்பதற்கான காரணத்தை இதுவரை வெளிப்படையாக சொல்லவில்லை. மேலும், இந்த அறிக்கையில், 2019-2020-ம் நிதி ஆண்டைப் போலவே, கடந்த நிதியாண்டிலும் ரூ.2,000 நோட்டுகள் புதிதாக அச்சடிக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nஅச்சடிப்பு நிறுத்தம், புழக்கத்திலிருந்து ரூ.2,000 நோட்டுகள் குறைவது போன்ற காரணங்களால், ரூ.2,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்படுமா என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது. மக்களுக்கு இருக்கும் பல்வேறு சந்தேகங்களுக்கு விடை தேட, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் தாமஸ் பிராங்கோவிடம் பேசினோம்.\nரூ.2,000 நோட்டுகள் செல்லாதா; புதிய ரூ.1,000 நோட்டு வெளியாகிறதா..? உண்மை என்ன?!\n``மக்கள் பீதியடைய மூன்று காரணங்கள் இருக்கின்றன. ஏற்கெனவே 2016-ம் ஆண்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டுவந்தபோது ரூ.2000 நோட்டை அறிமுகப்படுத்துகிறார்கள். அப்போது எஸ்.குருமூர்த்தி ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் பேசும்போது, `ரூ.2000 நோட்டை மீண்டும் கொஞ்ச நாள்களில் ரிசர்வ் வங்கி திரும்பப்பெறும்' என்று கூறினார். அப்போதே மக்கள் மத்தியில் இதுகுறித்த சந்தேகப்பேச்சு தொடங்கிவிட்டது. தற்போது இவர் ரிசர்வ் வங்கியின் இயக்குநர்களில் ஒருவராகவும் இருக்கிறார். அவர் நினைத்தால் அந்த முடிவை எடுக்க நிர்ப்பந்திக்கலாம். எனவே, அந்த சந்தேகம் வலுப்பது இயல்புதான்.\nஇரண்டாவது, தற்போது ரூ.2000 நோட்டுக்களை அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது. ஏன் நிறுத்திவிட்டார்கள், இதைத் திரும்பப்பெற நினைக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுவதற்கு இதுவும் காரணமாகிறது.\nமூன்றாவதாக, இவர்கள் வெளியிட்ட ரூ.2000 நோட்டுக்களில் பெரும்பாலான நோட்டுக்கள் திரும்பவும் வங்கிக்கு வரவில்லை. அவற்றைப் பதுக்கியிருக்க வாய்ப்புள்ளது என ரிசர்வ் வங்கி கருதினால், மீண்டும் பணமதிப்பிழப்பு கொண்டுவருவார்களோ என்ற அச்சம் உள்ளது.\n2,000 ரூபாய் நோட்டுகளாக\nஏற்கெனவே கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மத்திய அரசுக்கு எதிர்பார்த்த எதுவும் பெரிதாக நடக்கவில்லை. எனவே, இம்முறை மீண்டும் முயற்சி செய்து சாதிக்க நினைப்பார்களோ என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுகிறது. மத்திய அரசுதான் இந்த விஷயத்தில் மக்களிடையே கிளம்பியுள்ள பீதியைப் போக்க வேண்டும். ரிசர்வ் வங்கி மீதும் மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது. எனவே, ரிசர்வ் வங்கி தரப்பிலும் இந்த ரூ.2000 நோட்டு பிரச்னை குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் தரப்பட வேண்டும். இல்லை என்றால் பணப்புழக்கத்தில் மேலும் சிக்கல்கள் அதிகரித்துக்கொண்டே போகும்" என்றார்.
Maniblog: உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு விடை.\nஉச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு விடை.\nகலைஞர் காட்சி ஊடகத்திற்கு சென்ற 200 கோடி ரூபாயும் எங்கே போயிற்று என்றும், அதுதான் லஞ்சப்பணம் என்று குற்றம் சாட்டும் சீ.பி.ஐ. அந்த பணத்தை கைப்பற்றியுள்ளதா என்றும் உச்சநீதிமன்றம் எளிதாக கேள்வி கேட்டு விடலாம். அதற்கான உண்மை பதிலை அவர்கள், எப்படியாவது சீ.பி.ஐ. யை நெருக்கி, அதுவும் ராஜாத்தி குடும்பத்தினரை நெருக்கி பெற்றுவிடலாம். கனிமொழிக்கு பிணை கிடைக்க வேண்டும் என்றால், அவருக்கு அந்த பணத்தில் சம்பந்தம் இல்லை என்ற உணமையையும் யாராவது வெளியே சொல்லிவிடலாம். அந்த உணமையைத்தான் அந்த " பாட்டியாலா நீதிமன்றத்தில்" ராஜாத்தி அம்மையார் புலம்பி, புலம்பி சொல்கிறார்களே. ஆனால் அது யாருக்கு போனது என்பதுதானே கேள்வி. கனிமொழியும் தனது நண்பர்களிடம், அந்த பணத்தில் ஒரு பைசா கூட தான் கைநீட்டி வாங்கவில்லை என்ற உண்மையை சொல்லிவந்தார். ஆனால் யாருக்கு போனது என்று சொல்லவில்லையே?\nதனதையையும், குடும்பத்தையும், கழகத்தையும் காப்பாற்றுவதற்காக கனிமொழி அந்த உண்மையை சொல்லவில்லை. அப்படியானால் எப்படி கனிமொழி மீது மட்டும் பழி விழுந்தது? அவருக்கு சம்பந்தம் இல்லாத பணத்தை, கலைஞர் காட்சி ஊடகத்தில் தனக்கு சம்பந்தம் இல்லாதபோதே , உணமிக்கு மாறாக யார் பொட்டுக் கொடுத்து? சீ.பி.ஐ. சொல்கிறது, " அமிர்தம்தான் கனிமொழி கலைஞர் காட்சி ஊடகத்தில் முக்கியமாக இயக்கியவர் என்று கூறினார் " . அப்படியானால் உண்மையில் கலைஞர் காட்சி ஊடகத்தை முழுமையாக இயக்கிய முக்கியத்தர்களில் ஒருவர் " அமிர்தம்" என்பது பொய்யா? அப்படியானால் " அந்த 200 கோடியில், அமிரதத்திற்கு ஐம்பது கோடியும், அவர் மகன் குனாநிதிக்கு ஐம்பது கோடியும், ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு ஐம்பது கோடியும், அழகிரி மகன் தயாநிதி அழகிரிக்கு ஐம்பது கோடியும், ஆக மொத்தம் இரநூறு கோடியும் கை மாறியது" என்று சீ.பி.ஐ. கண்டுபிடித்ததாக சொல்வது உண்மையா இல்லையா? அப்படி கண்டுபிடித்தால் அதற்காக " மன்னர் குடும்பதிற்குள் உள்ள " பெண்கள் குடும்பத்தை, ஆண்கள் குடும்பம் பழி வாங்கியதை, பெண்கள் குடும்பம் போட்டுக் கொடுத்துவிட்டது" எனபதா?\nPosted by Maniblog at 5:40 AM\nதிமுக உயர்மட்ட கூட்டத்தில் நடந்த " போட்டி காய் நகர...
போரூர் ஏரியில் மீண்டும் ப்பை அகற்றும் பணி நிறுத்தம்| Dinamalar\nAdded : செப் 10, 2021 06:10\nபோரூர் : போரூர் ஏரியில் குப்பை அகற்றும் பணி, மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீர்நிலை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.சென்னையின் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றாக போரூர் ஏரி உள்ளது. சமூக விரோதிகளால் இங்கு மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன. இது குறித்து, நம் நாளிதழில் ஜூலை மாதம் செய்தி வெளியானது.அமைச்சர்\nபோரூர் : போரூர் ஏரியில் குப்பை அகற்றும் பணி, மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீர்நிலை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nசென்னையின் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றாக போரூர் ஏரி உள்ளது. சமூக விரோதிகளால் இங்கு மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன. இது குறித்து, நம் நாளிதழில் ஜூலை மாதம் செய்தி வெளியானது.அமைச்சர் உறுதிஇதையடுத்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், ஆய்வு மேற்கொண்டனர்.\nஅப்போது, 'குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு, ஏரியை ஆழப்படுத்தி கரை அமைக்கப்படும்' என, அமைச்சர் உறுதியளித்தார்.இதையடுத்து, ஏரியில் உள்ள குப்பை கழிவுகள், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொடுங்கையூரில் உள்ள சென்னை மாநகராட்சி குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக, மாநகராட்சிக்கு, முன்பணமாக, 6.3 லட்சம் ரூபாய் கட்டப்பட்டது. ஜூலை, 20ம் தேதி முதல் இரண்டு லாரிகள் வாயிலாக, குப்பை அப்புறப்படுத்தும் பணி நடந்தது.\nமாநகராட்சியில் கட்டிய முன் பணத்திற்கு ஈடாக, கொடுங்கையூரில் குப்பை கொட்டப்பட்டதை அடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம், ஐந்து நாட்கள் பணி தடைபட்டது.கோரிக்கைபின், மாநகராட்சியில் மீண்டும், 6.8 லட்சம் ரூபாய் கட்டிய நிலையில், மீண்டும் குப்பை கொட்டும் பணி தொடர்ந்தது.இந்நிலையில், மீண்டும், 10 நாட்களுக்கு மேலாக, போரூர் ஏரியில் இருந்து குப்பை அகற்றும் பணி தடைபட்டுள்ளது.ஏரியில் குப்பை கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டு, ஆழப்படுத்தி கரை அமைக்கப்படும் வரை, பணிகள் தடைபடாமல் நடக்க, அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீர்நிலை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், 'சென்னை மாநகராட்சிக்கு முறையாக காசோலை கொடுத்து வருகிறோம். ஆனால், தற்போது, அங்குள்ள அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.'இதனால், குப்பை கொட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விரைவில் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்' என்றனர்.\nபோரூர் : போரூர் ஏரியில் குப்பை அகற்றும் பணி, மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீர்நிலை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.சென்னையின் முக்கிய\nஆவடியில் 1,000 ஆண்டு கல்வெட்டு; கண்டுகொள்ளாத தொல்லியல் துறை(1)\nஆவடியில் 1,000 ஆண்டு கல்வெட்டு; கண்டுகொள்ளாத தொல்லியல் துறை
Issue Date: 19-07-09\nஇந்த ஆட்சியில் பொதுப்பணித் துறையில் பிந்தைய நான்கு சதவிகிதம் அப்படியே இருந்தாலும், முந்தைய ஆறு என்பது பத்தாக உயர்த்தப்பட்டதாம். அப்போதே கான்ட்ராக்டர்கள் புலம்ப ஆரம்பித்தார்கள். போதாக்குறைக்கு, ஆந்திராவைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட கான்ட்ராக்டருக்கே பெரும்பாலான ஸ்பெஷல் ஸ்டோரி\nஎப்போதும் அன்பு பாராட்டும் முதல்வரே தன்னைப் பற்றி உளவுத் துறை ரிப்போர்ட் கேட்டிருப்பதைத் தெரிந்துகொண்ட துரைமுருகன், காங்கிரஸில் தனக் கிருக்கும் நண்பர்கள் வட்டாரத்தைத் தொடர்பு கொண்டு முதல்வருடன் பேசச் சொன்னாராம். ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களோ... ஒட்டுமொத்தமாக துரைமுருகனைப்\nதங்கபாலுவுக்கு ஒரு தடாலடி கடிதம்! அச்சுதானந்தன் அடுத்து என்ன செய்வார்?\nசீமானின் அடுத்த உறுமல்... அண்ணன் மாறிட்டார்... அடிப்பொடிகள்?\nவழிதவறியவரின் கண்ணீர் கடிதம்.. 'ஆறு கோடி மதிப்பு மரகதலிங்கம்..' க்ரைம்\nஜூஸில் மயக்க மருந்து... சீரழிக்கப்பட்ட புகார்! உச்சாணிக்கொம்பில் உருளை! உணவைப் பாதுகாக்க ஒரு உலகக் கூட்டணி!
by Admin on Fri 15 Oct 2010, 2:03 am\nபத்தியம் என்பது நன்மை செய்யும் ஒன்று எனவும், நோயாளிக்கு இசைந்த உணவு என்றும் பொருளுரைக்கப்படுகிறது.\nநோய்வாய்ப்பட்ட நோயாளிக்கு வந்துற்ற நோயின் வீரியத்தை அதிகப்படுத்துகின்ற உணவை உண்டால் நோய் தீவிரமடையும். அதனால், விலக்க வேண்டிய பொருள்களை விலக்கிவிட வேண்டும். நோய்க்கு ஆதரவாக இல்லாமல், நோயாளியின் உடல் நலத்துக்கு ஆதரவாக அமையும் பொருள்களைப் பத்தியப் பொருள் என்றும், அதனைக் கடைப்பிடித்து வருவதற்குப் பெயர் பத்தியம் என்றும் கூறுவர். பத்தியம் என்பதை ஒழுங்கு, ஒழுக்கம் என்னும் கருத்துடைய சொல்லாகக் கொள்ளலாம்.\nபத்தியம் என்னுஞ்சொல் ‘லங்கணம்’ என்னுஞ் சொல்லாலும் வழங்கப்படுகிறது. லங்கணம், பட்டினி என்னும் பொருளைத் தருகின்ற வட சொல்லாகும். அச்சொல், இங்கு காரணவாகு பெயராக நின்று பொருள் தருகிறது. அதாவது, பட்டினி என்னும் காரணத்தால், நோயாளியின் நோய்க்காக ஊட்டப்பட்ட மருந்துக்கு எதிர்ப்பாக உள்ளது கொழுப்புச் சத்தும், நோயாளியின் உடல் நல இழப்புமாகும். அவ்விரண்டும் பட்டினியால் குறைக்கப்படுகின்றன என்பர்.\nநோயாளி மருந்துகளை உண்ணும் போது, மருந்தின் வீரியம் உடலுக்குள் சென்றடைய சில பொருள்கள் தடையாக இருக்கின்றன. மருந்தின் தன்மையை மாற்றக் கூடிய அல்லது நோயாளிக்கு எதிர்வினைகளை உண்டாக்கக் கூடிய உணவுகள் உண்ணப்படாமல் தடுக்கப்படுவதும் பத்தியமாம்.\nநோய் வந்த போதும், நோய்க்கான மருந்துண்ணும் போதும் ஒதுக்கப்பட வேண்டிய பத்தியப் பொருள் ஒதுக்கப் படாவிட்டால் நோய் குணமாகாது என்பது சித்த மருத்துவக் கொள்கையாகக் கூறப் படுகிறது.\n"" பத்தியம் இல்லார்க்கு என்றும் பகர்பிணி நீங்காது என்று\nசத்திய சித்த வேதம் சாற்றிய உண்மை யாலே.''\nபத்திய ஒழுக்கம் பிணி நீங்கத் தேவையான ஒன்று என்பதே மருத்துவ உண்மை என்கிறது.\n"" திருப்பாகும் பத்தியந்தான் இல்லாவிட்டால்\nதீராது சொல்லிவிட்டேன் திறந்தான் காணே''\nஎன்று, பத்தியம் இல்லாவிட்டால் நோய் குணமாகாது என்று அகத்தியர் நூல் உறுதிப்படுத்துகிறது.\nநோயைக் குணப்படுத்திக் கொள்ள தேவைப்படுகின்ற மருத்துவத் தின் அங்கமாகவே பத்தியமும் கருதப்படுகிறது.\nபத்தியத்தினால் நோய்க்காக உண்ணப்படும் மருந்து நோயைப் போக்கக் கூடிய பலனைத் தருவதாக அமையும். பத்தியம் தவறிவிட்டால், நோய் தீர்க்கும் பணியிலிருந்து மருந்தும் தவறிவிடும். நோயைத் தீர்க்கும் மருந்துவப் பணியைச் செய்கின்ற மருத்துவனுக்கு, அவன் தருகின்ற மருந்தை விடவும், அவன் கூறுகின்ற பத்தியமே அவனின் மருத்துவ வெற்றிக்குக் காரணமாக அமையும். பத்தியமுறை மருத்துவமே சித்த மருத்துவத்தின் நுண்ணறிவுக்கு எடுத்துக் காட்டாகும்.பத்தியம், மருந்துவம் சார்ந்த முறை என்பதுடன், மருந்தினும் சிறந்ததாகவும் கூறப்படுகிறது.\nபத்தியத்தில் எவ்விதமான தவறும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதே மருத்துவ நெறியாகக் கூறப்பட்டு வருகிறது. பத்தியத்தில் தவறு நேர்ந்து விட்டால் என்ன ஆகும்.\n“பத்தியத்தின் குற்றத்தினால் மருந்தின் பயன் கெடுவது மட்டு மல்லாமல், உடம்பிலுள்ள தாதுக்களில் எலும்பு வரை நோயின் கடுமை தீவிரமாகி நோயாளியை வருத்தும்.”\nஎன்பதால், பத்தியத்தில் குற்றம் நிகழக் கூடாது என்பது குறிப்பிடத் தக்கது.\nஎந்தச் செயலுக்குமே பயன் என ஒன்றிருந்தால், எதிர் விளைவு என ஒன்று இருந்தே ஆகவேண்டும். எதிர்வினை ஆற்றல் என்பதே செயலுக்குரிய ஆற்றலாகக் கூறுவர். அதைப் போல, பத்தியத்தினால் உண்டாகக் கூடிய பயன் என ஒன்று இருக்கும் போது, எதிர்விளைவு என்ன என்பதையும் அறிந்தால் பத்தியத்தின் தேவை புலப்படும்.\nநோய்க் காலங்களில் மட்டுமல்லாமல், நோயைத் தடுக்கும் கற்ப முறை மருந்துகளை உண்ணுகின்ற காலத்திலும், புளிக்கறி உண்டால் பெருவயிறு உண்டாகும். கிழங்கு வகை உண்டால் சோகை முற்றி பாண்டு நோயை உருவாக்கும். மீன் மயக்கம், கெடுதி, சுரம் போன்ற நோய்களை வருவிக்கும். மோர், குன்ம நோயைத் தரும். பச்சை உப்பை உணவில் சேர்த்துக் கொண்டால் கண்ணிரண்டும் பாதிக்கும் என்று பத்தியப் பொருள்களினால் வரக்கூடிய விளைவுகள் உரைக்கப்பட்டன.\nஒரு நோய்க்காக மருந்தை உண்ணும் போது, அந்நோய் தீராமல், வேரொரு நோயை வருவித்துக் கொள்வது அறிவுடைமையாக அமையாது என்பதால், மருத்துவக் காலங்களில் மருத்துவர் கூறும் பத்திய முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறியலாம்.\nபத்தியப் பொருள் என்பது விலக்க வேண்டிய பொருள், விலக்க வேண்டாப் பொருள் என்னும் இரண்டையும் குறிக்கும். இங்கு, விலக்க வேண்டிய பொருளைக் குறிக்கவே பத்தியம் என்னும் சொல் பயன் படுத்தப்படுகிறது.\nபொதுவாகப் பத்தியப் பொருள்களில் முதலிடம் வகிக்கக் கூடிய பொருளாக அமைபவை, புளி, புகை ஆகிய இரண்டுமாகும்.\n"" தீருந்தான் புகையோடு புளியுந் தள்ளு''\n"" சங்கற்பம் புளியுடனே புகையிலையுந் தள்ளு''\n"" வெறுத்திடுவாய் புளிபுகை மாங்கிஷங்கள்''\nஎனக் கூறக் காணலாம்.\nபுளி, புகை ஆகிய இரண்டும் மருந்துக்கு எதிர்வினை ஆற்றலைத் தூண்டக் கூடிய பொருளாகக் கண்டறியப் பட்டிருப்பது தெரிகிறது. அதனால் தான் குறிப்பாக, புளி என்றும் புகை என்றும் கூறக் காண்கிறோம்.\nஇவை மட்டும் பத்தியப் பொருள்களல்ல. பொதுவான பத்தியப் பொருள்களாகக் கூறப்படுகின்றவை, உப்பு, புளி, கடுகு, எள், இறைச்சி, மீன், பூசுணைக்காய், பெண்போகம், வரகு, கொள்ளு, புகையிலை என்பன முக்கியமானவை.\nநோய்க்குறிய பத்தியம், சிறப்பு விதி\nபத்தியம், உடல் வகை–நோய் வகை என வகைப்படுத்தப் பட்டிருக்கின்றது. உடல் வகையில் வாதம், பித்தம், ஐயம் என மூன்றும், நோய் வகையில் வாதம், பித்தம், ஐயம் என மூன்றும் குறிப்பாகக் கொள்ளப்படும்.\nவாத உடலினர், வாத நோய்க்கு உரிய பத்தியத்தையும், பித்த உடலினர், ஐய உடலினர் அவரவருக்குரிய பத்தியத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.\nவாதம் பித்தம் ஐயம்\nபுடல் அகத்தி வெள்ளரிப் பிஞ்சு ஆட்டுப்பால்\nஅவரைக்கீரை சிறுபயறு சீனி, கற்கண்டு கோதுமை\nஅவரைக்காய் தண்டுக்கீரை மல்லி மணத்தக்காளிக்கீரை\nஅரைக்கீரை கதளிப்பிஞ்சு சீரகம் முளைக்கீரை\nதுவரை வெந்தயம் முந்திரிகை மீன்\nமிளகு பேரீச்சை பசும்பால் கருவாடு\nமஞ்சள் நெய் மோர் ஊறுகாய்\nவெள்ளுள்ளி பழம் நெல்லி\nஇம்முறையைச் சிறப்பு விதியாகக் கருதலாம். கூறப்பட்டுள்ள பொருள்களைக் கொண்டு பத்தியம் எந்த அளவுக்கு ஆழ்ந்த நுண்ணறிவுடன் கண்டறியப்பட்டுள்ளது என்பது விளங்கும்.\nசலுகை முறையில் அளிக்கப்படுகின்ற விதிவிலக்கைப் போல, பத்தியத்துக்கும் விலக்கு அளிக்கக் கூடிய முறை கூறப்படுகிறது.\n"" இல்லையேல் முப்பதின்மேல் பத்தியங்கள்\nஇடம்வேணும் பொருள்வேணும் ஏவல்வேணும்\nவல்லையே முப்பதுக்குள் வந்த தானால்\nவலுக்குமே பத்தியங்கள் வேணும் வேணும்.''\nபொது விதியாக முப்பது வயதுக்கு மேல் பத்தியம் வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டாலும், இடம், பொருள், ஏவல் என்னும் மூன்றையும் கருத்தில் கொண்டு, அவர்களுக்கும் பத்தியத்தை முடிவு செய்க என்று, மருத்துவர்க்குக் கூறப்பட்டுள்ளது.\nஇடம் என்பது, நோயாளி வாழுகின்ற இடத்தையும், நோயாளி யின் உடல் வகையும், பொருள் என்பது நோய், நோயினால் நோயாளிக்கு ஏற்பட்ட பாதிப்பையும், ஏவல் என்பது மருந்தையும், மருந்து தரப்பட வேண்டிய காலத்தையும் கருத்தில் கொண்டு பத்தியம் தேவை. தேவையில்லை என்பதை முடிவு செய்ய வேண்டிய முடிவு, மருத்துவரிடம் விடப்படுகிறது.\nசித்த மருத்துவத்தில் உடலைக் காக்கவும், உடற்பிணியைப் போக்கவும் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கை அறிவார்ந்த ஒழுங்குமுறை போல, வகுக்கப்பெற்றது.
நன்கொடைகள் - தொட்டில் பார்வை\nஅனைத்து நன்கொடைகளும் அதற்கேற்ப செலவிடப்படும்\nஎங்களுக்கு ஏன் நன்கொடை?\nஎங்களுக்கு அளித்த எந்தவொரு நன்கொடையையும் நாங்கள் மதிக்கிறோம், நீங்கள் நன்கொடை அளித்தால் இது எங்களுக்கு மிகவும் உதவும். ஒரு தளத்தை விட்டு வெளியேறுவதும், உங்கள் ஆதரவைக் காண்பிப்பதும் ஒரு தளமாக நாம் வளரக்கூடிய மற்றொரு வழியாகும். உங்களுக்கு நல்வாழ்த்துக்கள், தயவுசெய்து பொறுப்புடன் நன்கொடை அளிக்கவும். அனைத்து நன்கொடைகளும் கணக்கிடப்பட்டு அதற்கேற்ப தொட்டில் பார்வைக்கு உதவுவதற்காக, முறையாக cradleview.net மற்றும் வேறு எந்த நோக்கத்திற்காகவும் செலவிடப்படும்.\nஎங்கள் நன்கொடை விருப்பங்கள்\nஉங்கள் அனைவருக்கும் கீழே சில விருப்பங்கள் உள்ளன. உங்களுக்கு ஏற்ற விலையை நீங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவுசெய்து தொடர்பு பக்கத்தின் மூலம் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். அல்லது நாங்கள் வழங்கிய மின்னஞ்சலைப் பயன்படுத்தி எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\n$ 1 நன்கொடை\nதொட்டில் பார்வையின் உரிமையாளர்களுக்கு அவர்களின் தளத்திற்கு உதவுவதற்காக முறையாக cradleview.net க்கு நன்கொடை. அனைத்து நிதிகளும் அதற்கேற்ப செலவிடப்படும்.\n$ 2.50 நன்கொடை\n$5நன்கொடை\n$ 10 நன்கொடை
ராஜஸ்தான் அணி தோல்வியால் சென்னை அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு! என்ன விஷயம் தெரியுமா? - TamilSpark\nராஜஸ்தான் அணி தோல்வியால் சென்னை அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு! என்ன விஷயம் தெரியுமா?\nBy Web Team Mon, 08 Apr 2019 17:19:29 IST\nKolkaththa moved to first place in points table\nஐபில் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கோப்பையை வெல்ல அனைத்து அணிகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இதுவரை நடந்த அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவிய பெங்களூர் அணி அடுத்த கட்டத்திற்கு செல்வது மிகவும் கடினம். மற்றைய அணிகள் அடுத்த கட்டத்திற்கு செல்லும் முயற்சியில் தீவிரமாக உள்ளது.\nஇதுவரை நடந்த போட்டிகளில் கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகள் முதல் நான்கு இடத்தில் உள்ளது. நேற்றைய இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் அணி கொல்கத்தா அணியுடன் மோதியது. இதில் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ராஜஸ்தான் அணியின் இந்த தோல்வி சென்னை அணிக்கு சற்று பின்னடைவை ஏற்பட்டுத்தியுள்ளது.\nஅதாவது நேற்று வரை புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்த சென்னை அணி நேற்று கொல்கத்தா அணி வெற்றிபெற்றதால் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. நேற்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றதன் மூலம் கொல்கத்தா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.\nமுதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் மட்டுமே அடுத்த சுற்றிற்கு தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
குடிபோதையில் விழுந்தவர் சாவு போலீஸ் விசாரணை\nதிங்கள் 20, மே 2019 10:19:23 AM (IST)\nநெல்லை மாவட்டம் கீழச்சுரண்டையில் குடிபோதையில் விழுந்தவர் மரணமடைந்தார் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசுரண்டை அருகே உள்ள கடையாலுருட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் கைக்கொண்டார்(35), டிரைவரான இவருக்கு கீழச்சுரண்டையில் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் கீழச்சுரண்டையில் மாமனார் கரடி மாடனுடன் வசித்து வருகிறார். கடுமையாக குடிப்பழக்கம் உடைய இவர் அடிக்கடி குடித்து விட்டு விழுந்து கிடப்பாராம்.\nஅதே போல் சம்பவத்தன்று விழுந்து கிடந்த இவரை அக்கம்பக்கம் பார்த்த போது இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த சுரண்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
நக்கீரன் கோபால் கைது - அவமானப்பட்டது ஆளுநரா அல்லது அட்மினா? -\nஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை பணி செய்ய மறுத்ததாக ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் பேரில் நேற்று காலை செய்து செய்யப்பட்டார் நக்கீரன் வார இதழின் ஆசிரியர் கோபால். அவர் மீது தேசத்துரோக வழக்கு 124 A போடப்பட்டது. இந்திய வரலாற்றில் இதுவரை எந்த ஒரு ஊடகவியலாளரும் கவர்னரின் புகாரின் பேரில் கைது செய்யப்படவில்லை. நக்கீரன் கோபால் கைதுதான் முதல் கைது என்கிறார்கள்.\nநீதிமன்றத்தில் நக்கீரன் கோபாலுக்காக வழக்கறிஞர் பெருமாள் ஆஜராகி இருந்தார். நக்கீரன் கோபாலுக்காக ஆஜரான வழக்கறிஞர்கள் கேட்ட ஒரு கேள்விதான் இந்த வழக்கை நொறுக்கியது. “ நக்கீரன் கோபால் எழுதிய கட்டுரையால் ஆளுநரின் பணி தடுக்கப்பட்டிருப்பதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆறு மாதத்தில் அவரது எந்த பணியை தடுத்தார்? ஆளுநரால் அவரது எந்த பணியை செய்ய முடியவில்லை என்பதை விளக்க வேண்டும்?” என்ற கேள்விக்கு போலீசிடம் பதில் இல்லை.\nகோபால் மீது தொடரப்பட்ட வழக்கில் புகார் மனு ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் கொடுக்கப்பட்டதா? என்ற கேள்விக்கும் அரசுத்தரப்பில் இருந்து எந்த ஒரு தெளிவான பதிலும் இல்லை. மேலும், ஹிந்து ஆசிரியர் என்.ராம் ஆஜராகி “ஊடகங்களில் எழுதுவதற்கு எதிராக 124 பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. இதை அனுமதித்தால் நாடு முழுக்க இதை முன்னுதாரணமாக வைத்து கைதுகள் நடக்கும். அரசியல் சாசனம் 19 -A பிரிவு எழுதும் உரிமையை உறுதி செய்கிறது அதை நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும்” என்றார். பின்னர் நீதிபதி நக்கீரன் கோபாலை சொந்த ஜாமீனில் விடுதலை செய்தார்.\nஇந்த வழக்கில் கவர்னரின் செயலாளர் தான் புகார் மனுதாரர். ஆளுநர் நேரடியாக புகார் கொடுக்காமல் ஆளுநர் மாளிகை அட்மினை அனுப்பி புகார் பதிவு செய்திருக்கிறார். அதற்கான பரிந்துரையை மட்டும் நேரடியாக முதல்வரிடம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் செய்ததாக தெரிகிறது. ஆளுநரும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திநாதனும் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் என்கிறார்கள் விஷமறிந்தவர்கள்.ஆனால், எது எப்படி என்றாலும். நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை பாலியல் அடிமைகளாக நடத்திய பவர்புரோக்கிங் வழக்கின் சந்தேக நிழல் கவர்னர் மீதும் ஆழப்படிந்து விட்டது.\nநக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதன் மூலம் தமிழகத்தின் கோடிக்கணக்கானவர்களுக்கு நக்கீரனின் அந்த கட்டுரை சென்று சேர்ந்து விட்டது. இந்த கைதின் மூலம் வாயை அடைத்து விடலாம் என்று திட்டமிட்டவர்கள் மக்கள் முன்னால் அவமானப்பட்டு நிற்கிறார்கள். ஆறு மாதங்களாக ஏன் நிர்மலா தேவிக்கும் இந்த வழக்கில் கைதாகி உள்ள ஏனைய இருவருக்கும் ஜாமீன் வழங்கப்படவில்லை. அவர்களது ஜாமீன் மனுவுக்கு அரசு ஏன் இத்தனை எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கில் மூவர் மட்டும்தான் சந்தேக நபர்களா மதுரை காமராஜ் பல்கலைக்கழக அதிகாரிகள், கவர்னர் மாளிகையின் அதிகாரிகள் ஏன் கொண்டு வரப்படவில்லை என்ற கேள்விகளும் பொதுவெளியில் எழுப்படுகின்றன.\nதேன் கூட்டில் கைவைத்து கூட்டைக் கலைத்து தேனீக்களுக்கு மத்தியில் சிக்கி சின்னா பின்னமானது போலாகி விட்டது நிலமை. ஆனால் அசிங்கப்பட்டது ஆளுநரா அல்லது அவரது அட்மினா என்பதுதான் நம்முன் உள்ள மிகப்பெரிய கேள்வி.\n#NakkeeranGopal #shamelessmodi #MyCMisAThief#MyGovernorisaPervert\n#NakkeeranGopal #MKStalin #puppetgovernment #shamelesstn#modiatrocities #fascistmodi #shamelessmodi\n#NakkeeranGopal #shamelessmodi #MyCMisAThief #MyGovernorisaPervert #NakkeeranGopal #MKStalin #puppetgovernment #shamelesstn #modiatrocities #fascistmodi #shamelessmodi\nஊழல்வாதிகளை காப்பாற்ற ஆளுநர் முயற்சிக்கிறாரா?-ஸ்டாலின் கேள்வி
சக்தியிடமிருந்து மிருணாவுக்கு.... - பறத்தல் - பறத்தல் நிமித்தம்\nதொடுவானமற்ற கடல்' தொகுப்பிலிருந்து மற்றொரு கவிதை...\nநுகரப்பட்ட ஒரு மலரின் மணம் இதர புலன்களைத் தூண்டி மனசின் அடியாழம் வரை ஞாபகப் புதையல்களை சங்கிலித் தொடர்ச்சியாய் எடுத்துவைத்த பட்டியல் மலைக்க வைக்கிறது. அம்மா இறப்பில் முடிந்த நினைவுச் சங்கிலியின் கண்ணி வெகு கனம். தேடலின் உணர்வுக் குவியலில் துக்கம் கசிய வைக்கும் முடிப்பு வாசிப்பை நிறுத்தி நம்மையும் அதில் தோயச் செய்து விடுகிறது.\nஇதோ சக்தியின் கவிதை வரிகள்...\nஒரு மல்லிகைப் பூவின் மணம்\nஅதன் மனமாய் மட்டும் இருப்பதில்லை\nநுணாப்பூவின் மணத்தையும் நினைவூட்டுகிறது\nநட்சத்திரங்களைப் பூக்களென உதிர்க்கும்\nஊரையும் அங்கிருந்த வீட்டையும்\nஉழவோட்டிய வயலுக்கு உரமாக\nதழைகளும் கிளைகளும் கழிக்கப்பட்டு\nவேலிக் கிளுவையும் கிளோரியாவையும்\nமக்கிப் போன எருக் குழிகளில் எழும்\nஎருவடிக்கும் மொட்டை மாட்டு வண்டிகளில்\nஉரத்திற்காகப் போடப் பட்ட\nஒருமுறை போட்ட வாத்துக் கிடை\nநீந்தித் திளைத்த குளத்தில் துழாவியபோது\nகையிலகப்பட்ட நான்கு வாத்து முட்டைகளையும்\nஅவயம் வைத்த கோழி முட்டைகளுடன்\nபொரிந்த வாத்துக் குஞ்சுகளையும்\nவாத்துக் குஞ்சுகள் நீந்தி வளர்ந்த\nஎரியூட்டப் பட்ட அம்மாவையும்\nஞாபகப் படுத்தி விடுகிறது.\nவெகு காலத்துக்கு முன் மிருணா என்ற தோழியின் கீழ்க்கண்ட கவிதையை ரசித்து ரசித்து வியந்திருக்கிறேன். இன்று வரை அப்படியொரு கவிதை எழுத முடியாத ஆதங்கம் என்னுள் உண்டு. வரிக்கு வரி அழகுறு அந்தாதி. வார்த்தைகளுள் அடங்கிய படைப்பின் சூட்சுமம்!\nஅந்தப் பூ புலிநகம் போன்றது\nபுலிநகம் கழுகின் அலகு போலிருந்தது\nபிறைநிலா வானில் மிதக்கும் தோணி\nதோணி ஒரு கருநீலத் திமிங்கிலத்தின் வால்\nவால் மறியாட்டின் கருங்கொம்பு\nகருங்கொம்போ கவண் பிளவு\nகவண் பிளவு விரிமரக் கிளை\nவிரிமரக்கிளை குழைந்து பரவும் நீரூற்று\nநீரூற்றோ அந்தியில் செம்பளிங்குப் பூ\nவெங்கட் நாகராஜ்7January 2018 at 21:44\nஎடுத்துக் காட்டிய இரண்டு கவிதைகளும் வெகு சிறப்பு. பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.\nநிலாமகள்9January 2018 at 18:28\nசிவகுமாரன் 16 January 2018 at 15:47\nயப்பா என்ன அருமையான கவிதைகள். அதிலும் மிருணாவின் அந்தப் பூ கவிதை ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மீள முடியவில்லை.\nநிலாமகள் 20 January 2018 at 15:25\nஆம் சிவா. சில படைப்புகள் நம்மைத் தூண்டும், துலக்கும்.\nமிருணா 28 February 2018 at 19:42\nநிலா, எப்படி இருக்கீங்க? அம்மா இறந்த பிறகு என்னால எழுதவே முடியல. ஆனா இன்னிக்கு தற்செயலா இந்த பதிவ நான் பாத்ததும், அதே நாளில் முகநூலில் நீங்கள் வந்ததும் நடந்திருக்குறது மகிழ்வும், இனிமையும். நன்றி நிலா.\nஎப்பிறப்பில் காண்பேன் இனி?!\nகடலில் ஒரு துளி -மதிப்புரை முன்னோட்டம்
தாத்தா ரஜினி போலிருக்கும் யாத்ரா.. லைலா பசங்க இவ்ளோ க்யூட்டா..\nஅப்படியே தாத்தா ரஜினி போலிருக்கும் யாத்ரா.. லைலா பசங்க இவ்ளோ க்யூட்டா.. பங்கமான லாஸ்லியா !\nDeepa Lakshmi | Jan 4, 2020\nநடிகர் தனுஷ் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்ததும் அவருக்கு இரண்டு மகன்கள் இருப்பதும் உலகம் அறிந்த ஒரு விஷயம்தான். இதில் ரஜினியின் பேரன் யாத்ரா மற்றும் லிங்கா ஆகியவர்களின் புகைப்படங்களை அவ்வவ்போது பார்த்து வந்திருக்கின்றனர்.\nநடிகர் ரஜினிதான் மகள்களின் மகன்களுக்கெல்லாம் பெயர் வைத்தவர். அவர் வைத்த பெயர்கள் எல்லாமே ஆன்மிக அதிர்வுகளை உண்டாக்கக் கூடிய பெயர்கள்தான். ஐஸ்வர்யா தனுஷ் மகன்களில் மூத்தவருக்கு யாத்ரா என்றும் இளையவருக்கு லிங்கா என்றும் பெயர் வைத்த ரஜினிகாந்த் (rajinikanth) சௌந்தர்யாவின் மகனுக்கு வேத் எனும் பெயரை வைத்திருந்தார்.\nஇதில் தற்போது ஐஸ்வர்யா தனுஷ் (aishwarya dhanush) தன்னுடைய மகன்களுடன் இருக்கும் சமீபத்திய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் பகிர்ந்திருக்கிறார்.\nதனுஷின் ரசிகர்கள் மூத்த மகன் யாத்ரா (yaathra) அப்படியே தாத்தா ரஜினிகாந்தை உரித்து வைத்தது போல இருப்பதாகவும் இளைய மகன் லிங்கா (linga) அப்படியே தனுஷை போல இருப்பதாகவும் சொல்லி மகிழ்ந்து பகிர்ந்து வருகின்றனர்.\nஉனக்கு someone else பிடிக்குமா I dont kno.. கொள்ளை கொள்ளும் குரலோடு மீண்டு(ம்) வந்த சுச்சி\nPost birthday mood .... happy new year all ! #sons ♥️\nA post shared by Aishwaryaa R Dhanush (@aishwaryaa_r_dhanush) on Jan 2, 2020 at 3:56am PST\nபுன்னகை அரசி நடிகை கே ஆர் விஜயாவிற்கு பின்னர் அவரது பெயரை அப்படியே எடுத்துக் கொண்டவர் லைலா (laila) . இவரது புன்னகைக்காகவே பல ரசிகர்கள் இருக்கின்றனர். ஒரு சில திரைப்படங்களில்தான் லைலா நடித்திருக்கிறார் என்றாலும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார் லைலா.\nநன்றாக நடித்துக் கொண்டிருக்கும்போதே எட்டு வருடங்கள் காதலித்து வந்த தொழிலதிபர் ஒருவரைத் திருமணம் செய்த லைலா அதன் பின்னர் நடிப்புக்கு டாடா சொல்லி விட்டார். அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டியதுடன் அவர் வேறு எதுவும் செய்யவில்லை.\nதிருமணம் செய்து கொண்ட பின்னர் நடிகை லைலாவிற்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். சமீபத்தில் அவர்களுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தினை லைலா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.\nநம்முடைய சுட்டித்தனமான லைலாவிற்கு இவ்வளவு பெரிய மகன்களா என்று ரசிகர்கள் அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர். பையன்கள் இருவரும் அப்படியே லைலாவின் நிறத்தையும் அழகான புன்னகையையும் கொண்டிருக்கின்றனர்.\nகவனிக்க கூட யாருமற்ற நிலையில் நடிகை ஷர்மிளா.. அரசு மருத்துவமனையில் அனுமதிப்பு\nபேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலாவுடன் காதல்... உறுதி செய்தார் நடிகர் விஷ்ணு விஷால்!\nபிக் பாஸ் (bigg boss) புகழ் லாஸ்லியா (losliya) என்றால் கலவையான விமர்சனங்கள் எழும். என்ன ஆனார் லாஸ்லியா கவினை காதலித்தாரா இல்லையா எனப் பல கேள்விகளை தன்னை சுற்றி எழுப்பி கொண்டு அதன் மூலம் இன்னமும் மீடியா வெளிச்சத்தை விட்டு விலகாமல் இருக்கிறார் லாஸ்லியா\nஇந்நிலையில் புத்தாண்டை (new year) முன்னிட்டு போட்டோ ஷூட் (photo shoot) நடத்தி இருக்கும் லாஸ்லியா அதனை வெகு சந்தோஷமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். கூடவே புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார்.\nஏற்கனவே சொன்னபடி விருப்பு வெறுப்பு என கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கும் லாஸ்லியாவின் இந்தப் புகைப்படங்களை வழக்கம்போல மீம் க்ரியேட்டர்கள் கழுவி ஊற்றிக் கொண்டிருக்கின்றனர். லாஸ்லியா கவின் ரசிகர்களோ அதனை கண்டு கொள்ளாமல் மேலும் புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.\nபிரபுதேவா உடன் காதல்..? வாரம் ஒருமுறை பிரபுதேவாவை சந்திக்கும் சாய் பல்லவி!
குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து கட்சி கூட்டத்துக்கு பார்லி.சபாநாயகர் அழைப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon\nகுளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து கட்சி கூட்டத்துக்கு பார்லி.சபாநாயகர் அழைப்பு\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை மறுதினம் தொடங்க உள்ள நிலையில், அனைத்து கட்சி கூட்டம் நாளை நடைபெறும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்துள்ளார்.\nவழக்கமாக பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு குஜராத், இமாச்சல் சட்டமன்ற தேர்தல் காரணமாக குளிர்கால கூட்டத்தொடர் குறித்து அறிவிக்காமல் காலம் தாழ்த்தப்பட்டது.\nஇதுகுறித்து காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சியினர் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தன.\nஇந்நிலையில், நாளை மறுதினம் (15ந்தேதி) பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.\nவரும் 15ந்தேதி தொடங்கும் இந்த கூட்டத்தொடர் ஜனவரி 5ந்தேதி வரை நடத்த முடிவு செய்துள்ள தாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில் பாராளுமன்ற சபாநாயகர் நாளை அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தின்போது, குளிர்கால கூட்டத்தொடரை அமைதியாக நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், நாளை காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டமும் நாளை நடைபெற உள்ளது. அப்போது கூட்டத்தொடர் எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.\nபஞ்சாப் முதல்வர் ஆகிறார் கெஜ்ரிவால்? அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைத்த 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள சிலைகள்! மீட்க உழைத்தவர்கள் பின்னனி! உண்ட வீட்டுக்கு இரண்டகம்: பிணத்துடன் உடலுறவு கொண்ட காமுகர்கள்..!\nTags: Parliament Winter Session: Speaker called for all party leaders, குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து கட்சி கூட்டத்துக்கு பார்லி.சபாநாயகர் அழைப்பு\nPrevious முன்கூட்டியே நடைபெறுமா பாராளுமன்ற தேர்தல் ? : பாஜக உறுப்பினர் ஆரூடம்
இப்போது கேளுங்கள் மறுபரிசீலனை - ஆன்லைன் மனநல வாசிப்புகள்\nஆன்லைன் மன ரீதியான வாசிப்பு > மதிப்பாய்வு இப்போது கேள்\nமுழு AskNow விமர்சனம்\nAsknow ஒரு பயங்கர மனநல வலையமைப்பு மற்றும் நாட்டின் சிறந்த உளவியலாளர்கள் மற்றும் டாரோட் கார்டு வாசகர்களைப் பயன்படுத்துகிறது. நாங்கள் மதிப்பாய்வு செய்த ஒரே நெட்வொர்க் இப்போது கேளுங்கள், இது ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலத்திலும் வாசிப்புகளை வழங்கியது. உங்கள் மனநல வாசிப்பில் நீங்கள் திருப்தி அடைவீர்கள் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள், அவர்கள் 100% பணத்தை திரும்ப உத்தரவாதம் அளிக்கிறார்கள். நீங்கள் திருப்தி அடையவில்லை என்றால், அவர்களின் வாடிக்கையாளர் ஆதரவு குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள், அவர்கள் உங்கள் பணத்தை திருப்பித் தருவார்கள், கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை. நான் பயன்படுத்துகின்ற Asknow ஆலோசனைக்காக அடிக்கடி, அவற்றின் விலைகள் மிகச் சிறந்தவை மற்றும் ஒட்டுமொத்த சிறந்த ஒப்பந்தம் என்பதை நான் கண்டேன்.\nAsknow பல ஆண்டுகளாக வணிகத்தில் உள்ளது மற்றும் ஆன்லைனில் சேவைகளை வழங்கத் தொடங்கிய முதல் மனநல சேவைகளில் ஒன்றாகும். தற்போது அவை புளோரிடாவிலிருந்து சொந்தமானவை மற்றும் இயக்கப்படுகின்றன, எனவே நீங்கள் நம்பக்கூடிய ஒரு நிறுவனத்தை நீங்கள் பெறுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம், சில வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அல்ல. வாடிக்கையாளர் திருப்தி அதிகமாக உள்ளது மற்றும் அவர்கள் சமீபத்தில் தங்கள் கணினியைப் புதுப்பித்துள்ளனர், இதன் மூலம் நீங்கள் விரும்பும் ஆலோசகரிடம் பேசலாம், அவை இப்போதே கிடைக்கவில்லை என்றாலும். உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும், அவை கிடைத்தவுடன் கணினி உங்களை திரும்ப அழைக்கும். மற்ற மனநல சேவைகள் இலவச ஜாதகங்களையும், ஆன்லைன் அரட்டை வாசிப்புகளையும் விரும்பாத பல சிறிய நன்மைகளை அவை வழங்குகின்றன.\nபிக்சர்ஸ் ஐந்து ஸ்கிரீனிங் செயல்முறை\nAsknowஉளவியலுக்கான ஸ்கிரீனிங் செயல்முறை அருமை. விண்ணப்பிக்கும் 1 உளவியல்களில் 10 பேர் பணியமர்த்தப்படுகிறார்கள். பொருந்தும் புதிய உளவியலாளர்களுக்கு பல நேர்காணல்கள் வழங்கப்படுகின்றன, பின்னர் அவற்றின் மனநல திறன்கள் சோதிக்கப்படுகின்றன. வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க உளவியலாளர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள், மேலும் அவர்களுக்கு அதிகமான புகார்கள் வந்தால் Asknow அவர்கள் இனி வாசிப்புகளைக் கொடுக்க அனுமதிக்க மாட்டார்கள்.\nசமீபத்தில் Asknow அவர்களின் வலைத்தளத்தைப் புதுப்பித்தது, அது முன்பை விடவும் சிறந்தது என்று நான் சொல்ல வேண்டும். நான் மிகவும் விரும்பும் “திரும்ப அழைக்கவும்” என்ற புதிய அம்சத்தை அவர்கள் சேர்த்துள்ளனர். உங்களுக்கு பிடித்த மனநோய் ஆன்லைனில் இருக்கிறது, ஆனால் கிடைக்கவில்லை என்று சொல்லலாம். உங்கள் தொலைபேசி எண்ணை நீங்கள் வைக்கலாம், மேலும் அவை கிடைத்தவுடன் மனநோய் உங்களைத் திரும்ப அழைக்கும். உங்களுக்கு பிடித்த மனநோய்க்காக காத்திருக்கும் நிச்சயமாக துடிக்கிறது. புதிய வலைத்தளம் பயன்படுத்த எளிதானது, விரைவானது மற்றும் ஒரு நல்ல மனநோயைக் கண்டுபிடிக்க உங்களுக்கு உதவுகிறது.\nபுதிய வாடிக்கையாளர்களுக்கான சலுகைகள்\nAsknow புதிய வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய ஒப்பந்தம் உள்ளது. வெறும் $ 15 க்கு 10 நிமிடங்கள் கிடைக்கும். அவர்கள் இணையதளத்தில் இலவச மின்னஞ்சல் வாசிப்புகளையும் வழங்குகிறார்கள், இருப்பினும் பதிலைப் பெற சில நாட்கள் ஆகும், இது ஒரு நல்ல தொடுதல். கூப்பன்கள் மற்றும் சில புத்திசாலித்தனமான ஜாதகங்களுக்கான வாராந்திர செய்திமடலுக்கு பதிவுபெற நான் பரிந்துரைக்கிறேன்.\nAsknowவாடிக்கையாளர் சேவை குழு சிறந்தது. அவர்களிடம் பணம் திரும்ப உத்தரவாதம் உள்ளது, எனவே நீங்கள் திருப்தி அடையவில்லை என்றால் பணத்தைத் திரும்பப்பெறுமாறு கோரலாம். அவர்கள் வாடிக்கையாளர் ஆதரவு தொலைபேசி எண்ணை வழங்கவில்லை, இது ஏமாற்றமளிக்கிறது, ஆனால் அவர்களின் மின்னஞ்சல் ஆதரவு குழு எனது பிரச்சினைகளுக்கு சில நிமிடங்களில் பதிலளித்தது, மேலும் அவர்கள் எப்போதும் எனது பிரச்சினைகளை விரைவாக தீர்க்க முடிந்தது.
கலைப்பார்வையா? காமப்பார்வையா? | சித்திரவீதிக்காரன்\nPosted: பிப்ரவரி 1, 2012 in நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள், மதுரையில் சமணம்\nயானைமலை எங்கள் உயிர். யானைமலை எங்கள் தெய்வம். யானைமலை எங்கள் அரண். யானைமலை எங்கள் தொன்மம். யானைமலை எங்கள் வரலாறு. யானைமலை எங்கள் அடையாளம். யானைமலை எங்கள் உலகம்.\nமதுரை மலைகள் சூழ்ந்த மாநகரம். இந்த ஊரில் நீங்கள் எந்தத் திசையில் பயணித்தாலும் ஒரு பெரிய மலையைப் பார்க்கலாம். யானைமலை, நாகமலை, அழகர்மலை, திருப்பரங்குன்றம், சமணமலை என நாலாபக்கமும் மலைகளை அரணாகக் கொண்டு அமைந்த உலகின் தொன்மையான நகரம், நம்ம மதுரை. மலைகளெல்லாம் மதுரைக்கு அழகாக, அரணாக இருப்பதாக எண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் யானைமலையை ‘சிற்பநகரம்’ என்ற கலைப்பார்வையோடு ஒரு குழு பார்க்க மனதில் கலக்கம் ஏற்பட்டது. செவனேன்னு படுத்து மதுரையைப் பார்த்துக்கொண்டிருக்கும் யானையை எழுப்பி நிப்பாட்ட போறாங்ஙளாம். மேலும், நிறைய சிற்பங்கள் செய்து இந்த மலைப்பகுதியையே சிற்ப நகரமாக்க போறாங்ஙளாம். நகரமாக்கப்போறாங்ஙளா, நரகமாக்கப் போறாங்ஙளான்னு தெரியல.\nமதுரையை கோயில்மாநகரம் என்றும் அழைப்பார்கள். சிற்பநகரக்குழுவினர்க்கு இங்கு எவ்வளவு பழமையான கோயில்கள், தர்காக்கள், தேவாலயங்கள், குடைவரைகள் உள்ளன தெரியுமா? எத்தனை ஆயிரம் சிற்பங்கள் மதுரையில் இருக்கின்றன தெரியுமா? மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெற்குகோபுரத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான சிலைகள் உள்ளன. பிறைபோல அழகாக வளைந்திருக்கும் அந்தக்கோபுரத்தை ரசித்துப்பார்க்கவே ஒரு ஆயுள் போதாது. அதைவிடவா சிற்ப நகரில் சிற்பம் அமைக்கப்போகிறீர்கள்?\nமீனாட்சியம்மன் கோயில், கூடல்அழகர் பெருமாள்கோயில், ஹாஜிமார் பள்ளிவாசல், இம்மையில் நன்மைதருவார் கோயில், திருமலைநாயக்கர்மஹால், சென்மேரீஸ், இடைக்காட்டூர் தேவாலயங்கள், மருதநாயகம் கான்சாகிப் தர்கா, கோரிப்பாளையம் தர்கா, திருப்பரங்குன்றம், திருமாலிருஞ்சோலை, திருமோகூர், திருவாதவூர், நரசிங்கம் கோயில்கள், பத்திற்கும் மேற்பட்ட குன்றுகளில் காணப்படும் சமணச்சிற்பங்கள், குதிரையில் அமர்ந்திருக்கும் காவல்தெய்வங்கள் என மதுரையில் எவ்வளவோ பழமையான சிலைகளைக் கொண்ட இடங்கள் உள்ளன. இதையெல்லாம் பார்த்து சலித்துவிட்டதா? பார்க்கப் பிடிக்கவில்லையா?\nசிற்பநகரம் அமைக்கும்போது யானைமலையில் இருந்து கிடைக்கும் கிரானைட்டுகள் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு போகுமாம். இப்பொழுதுதான் இவர்களது ‘கலைப்பார்வை’ தெளிவாக நமக்குத் தெரிகிறது. உதாரணமாக, நான் படுத்துக்கிடந்தால் ஆறடி. நின்றால் ஒரு அடியே அதிகம். மூன்று கிலோமீட்டர் நீளத்தில் படுத்திருக்கும் யானையை எழுப்பி நிற்க வைத்தால் அரைகிலோமீட்டரில் அடங்கிவிடும். மீதியை அறுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். இது கலைப்பார்வையா? காமப்பார்வையா? காமாலைப்பார்வையா?\nதொ.பரமசிவன் அய்யா மதுரை புத்தகத்திருவிழாவில் ‘உலகமயமாக்கல்’ குறித்த உரையில் சொன்ன வரிகள்தான் ஞாபகம் வருகிறது.\nஉலகமயமாக்கல் என்ற சொல்லே எனக்குப் புரியவில்லை. உலகை எப்படி உலகமயமாக்குவது? மதுரையை எப்படி மதுரை மயமாக்குவது? மதுரையை வண்ணமயமாக்கவேண்டும், ஒளிமயமாக்கவேண்டும் என்று சொல்லுங்கள். புரிகிறது. ஆனால், உலகமயமாக்கம் என்ற சொல்லே நமக்கு புரியவில்லை. நம் ஆட்சியாளர்கள் நமக்கு அளித்த நன்கொடையிது.\nநானும் அதைத்தான் கேட்கிறேன். யானைமலையை எப்படி யானைமலையாக்குவது? யானைமலையை இப்போது பார்க்கும் போது குதிரை போலவா தெரிகிறது? எங்கிருந்து பார்த்தாலும் அழகாக யானை போலத்தானே தெரிகிறது? இயற்கையாகவே யானை போல அமைந்த மலை அதிசயமா? அல்லது நாமாக செதுக்கி யானை மாதிரி மாற்றி வைக்கும் மலை அதிசயமா? யானைமலையை சிற்பநகராக மாற்றினால் வெளிநாட்டுக்காரர்களெல்லாம் வீடுவாசல் துறந்து, மறந்து இந்தியா வந்து விடுவார்களா என்ன?\nசிற்பநகரம் அமைந்தால் சுற்றுலா பெருகும்! பொருளாதாரம் உயரும்! மக்கள் வாழ்க்கை மேம்படும்! கலைகள் வளரும்! சிற்பிகள் மகிழ்வர்! உலகமே வியக்கும்! என சிற்பநகரக்குழுவினர் சொல்வதைப் பார்த்தால் இவர்கள் சிற்பிகளா? ஜோசியக்காரர்களா? என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. கிரானைட் தொழில் வளரும், பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்கள் ஆவார்கள் என்று சொல்லுங்கள் நம்புகிறேன்.\nஎப்போதுமே மத்தியஅரசு, மாநிலஅரசுதான் நமக்கு இம்சையைக் கொடுக்கும். பேரைக் காப்பாற்ற தஞ்சாவூரிலிருந்து அரசு என்ற சிற்பி கிளம்பியிருக்கிறார். கலைப்பார்வை கொண்ட அவரிடம் சில கேள்விகள்: உங்க தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர்கோயில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் கோயில் எல்லாம் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களாக அங்கிகரித்த கோயில்கள் என நினைக்கிறேன். அங்கெல்லாம் சிற்பங்களைப் பார்க்க தினமும் எத்தனை ஆயிரம் பேர் வருகிறார்கள்? வருபவர்கள் சிற்பங்களை ரசித்துப் பார்க்கிறார்களா? இல்லையென்றால் பிரதோஷத்துக்கு வாங்கிய பாலை நந்தி மீது ஊற்றிவிட்டு கொடுக்கிற திருநீறு, குங்குமத்தை கோயில் சுவற்றில் போட்டு போகிறார்களா? ஏன் கேட்கிறேன் என்றால் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் பலநூற்றாண்டுகளைச் சேர்ந்த சன்னதிகள், சிற்பங்கள் எல்லாம் உள்ளன. அவற்றையே யாரும் தனியாக வியந்து பார்த்து நான் பார்த்ததில்லை. வரிசையில் நின்று மீனாட்சியையும், சொக்கநாதரையும் பார்த்தோமா, தெப்பக்குளத்துக்கிட்ட உட்கார்ந்து ஒரு போட்டோ எடுத்தோமான்னு வந்து போறவங்கதான் அதிகம். அதனால் உங்க கலைப்பார்வையை காலம் கடந்து காட்டாதீர்கள்.\nஇந்தக் காலத்தில் கலைகளுக்கெல்லாம் மதிப்பு குறைவுதான். உலகக்கோப்பையை வென்ற இந்தியஅணிக்கு எத்தனை கோடிகள் கொடுக்கப்பட்டன – ஆளாளுக்கு போட்டிபோட்டு கோடிகோடியாக கொட்டிக் கொடுத்தார்கள். பத்தாண்டுகளாக உழைத்து மதுரையின் வரலாற்றை நாவலாகப் பதிவுசெய்த ‘காவல்கோட்டம்’ நூலாசிரியர் சு.வெங்கடேசனுக்கு சாகித்யஅகாடமி வெறும் ஒருலட்சம்தான் பரிசு தருகிறது. குடும்பத்தோடு டெல்லி போய் வாங்கிவரவே பத்தாது. சினிமாவில் ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு ஒரு நடிகைக்கு பல கோடிகள் கொடுக்கப்படுகிறது. நாட்டுப்புறக்கலைஞர்கள் நாக்குத்தள்ள ஆடினாலும் மாதம் நாலாயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியுமா? இங்க வந்து கலைப்பார்வை அப்படி இப்படின்னு சொன்னா நகைச்சுவையா இருக்கு.\nசதுரங்கம் விளையாடும் போது ராஜாவை நோக்கி குறிவைக்கப்பட்டால்கூட எனக்கு கோபம் வராது. யானையை வெட்டுவது போல் காய்நகர்த்தப்பட்டால் என்னுடைய ஆட்டமே மாறிவிடும். அந்தளவு யானை மேலான காதல் அதிகம். ஜெயமோகனின் ‘மத்தகம்’ என்னும் குறுநாவல் பற்றிய பதிவில் கூட யானையைக் குறித்துதான் அதிகம் எழுதியிருக்கிறேன். எங்க அண்ணனுடன் ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும்போது பெரும்பாலான மலைகளைப் பார்க்கும்போது யானை மாதிரி இருப்பதாகச் சொன்னேன். எங்க அண்ணன் யானையைப் பார்க்கும் போது மலை மாதிரிதானே இருக்குன்னு சொன்னாரு. அந்த மாதிரி திருப்பரங்குன்றமலைகூட ரயில்நிலையம் பக்கமிருந்து பார்க்கும்போது யானை நிற்பது மாதிரிதானிருக்கு. இனி நிக்கிற யானையைப் படுக்கவச்சா கிரானைட்டு கிடைக்கும்ன்னு யோசிப்பாங்ஙளோன்னு பயமா வேற இருக்கு.\nமதுரையில் நரியைப் பரியாக்கி, பரியை நரியாக்கும் திருவிளையாடல்களை எல்லாம் நிகழ்த்த சிவன் இருக்கிறார். அவர்தான் கல்லை ‘கரி’யாக்கியதாகவும் திருவிளையாடல்புராணம் கூறுகிறது. ஊருக்கு ஒரு சிவன் போதும்.\nஒரே காலில் ஆடிக்கொண்டிருக்கிறாரே என்று வருந்திய பாண்டியனுக்காக சிவன் கால்மாறி ஆடிய வெள்ளியம்பலம் மதுரைதான். சிவனே நின்னா கால்வலிக்கும்ன்னு வருத்தப்படுற ஊர்ல செவனேன்னு படுத்திருக்கிற யானையை நிப்பாட்டப்போறோம்ன்னு சொன்னா எப்படியிருக்கும்? கோயில்ல இருக்கிற யானையையே காட்டில் கொண்டுபோய் புத்துணர்வு முகாம் நடத்திக்கொண்டிருக்கும் போது சும்மா படுத்திருக்கிற யானைய எழுப்பி மதம் பிடிக்க வச்சுறாதீங்க.\nபடத்துல உள்ள கருப்புச்சாமி ஆனையூர்க்காரரு! யானைமலையை நோக்கித்தான் பார்த்துக்கிட்டிருக்காரு! கருப்பா ஆனைமலைய பத்திரமா பாத்துகப்பா!\n10:34 பிப இல் பிப்ரவரி 1, 2012\nமதுரையைப் பற்றிப் பல தகவல்கள் ! அருமையான பதிவு ! கருப்புச்சாமி காப்பாத்துப்பா ! நன்றி நண்பரே !\n10:40 பிப இல் பிப்ரவரி 1, 2012\nawareness must be given to people regarding dis…\n5:31 முப இல் பிப்ரவரி 2, 2012\nஅன்பின் சித்திர வீதீக்கார,\nயானையின் மீது வைத்திருக்கும் அன்பும் பாசமும் – யானை மலையின் ,மீது வைத்திருக்கும் அலாதிப்பிரியமும் மனதைக் கவர்கிறது. உண்மை – கலைப்பார்வை அல்ல – காமப் பார்வை தான். கோடி கோடியாகச் சேர்க்க அலையும் கூட்டத்தின் சிந்தனை தான் .\nமதுரையில் இல்லாத சிற்பங்களா ? சிற்ப நகரம் மதுரைக்குத் தேவையற்ற ஒன்று. கோபம் கொப்பளிக்க எழுதப்பட்ட பதிவு நன்று. இதனைத்தொடர்ந்து சுரேஷ் கண்ணன் ஜெய மோகன் என்று சென்று பார்த்தேன். மததகம் புத்தகம் உன்னிடம் இருந்தால் தருக.\nமீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருபவர்கள் சிறப்க் கலையினை இரசிக்கும் மன நிலையில் இல்லை. நேரமில்லை – கூட்டம் இரசிக்க அனுமதிப்பில்லை.\nஉலகக் கோப்பையினை வென்றவர்களுக்குக் கோடி கோடியாகக் கொட்டுவதும் நாட்டுப்புறக் கலைஞர்கள் படும் பாடும் ……….சாகித்திய அகடமி கொடுத்த ஒரு இலட்சமும் ……… ஒன்றும் செய்ய இயலாது. ப்லவேறு துறைக்ளை ஒப்பு நோக்குவதில் பயனில்லை, கோபமும் ஆதங்கமும் புரிகிறாது நண்பா ……\nயானை மலையினை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கும் ஆனையூர்க்கார கருப்புசாமி பார்த்துக்கொள்வார்.\n9:49 முப இல் பிப்ரவரி 3, 2012\nஅடுத்து என்ன? நாக மலை படம் விரிக்கும்; பசுமலை பால் கறக்குமா?\nஇந்த சிற்ப நகர யோசனையால் உந்தப்பட்டு சில உலகளாவிய/ உள்ளூர் ஐடியாக்கள்:\n(1) பாலாற்றில் பத்து இருபது மீட்டருக்கு பசும்பாலையே ஆறாக ஓடவைப்பது (மீதியை நாங்கள் எடுத்துக்கொள்வது)\n(2) அடிவானத்தை மறைத்து ஓவிய நகரம் உருவாக்குவது\n(3) உடனடி செயல்திட்டம்: எங்கள் ஊர் கண்மாய் ஒரு முன்னூறு ஏக்கர் இருக்கும் (150சி போகும்). ஒரு ஓரத்தில் முன்னூறு அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்து ஆண்டு முழுவதும் நீர் தருவது (மீதி நிலத்தை நாங்கள் எடுத்துக்கொள்வது). இந்த செலவுக்கு ஊர்க்காரர்கள் பணம் தரத் தேவையில்லை.\nசெயல்படுத்த விருப்பம் உள்ளவர்கள், மணலோ, மார்பிளோ, மன்னார்குடியோ, மயிலாப்பூரோ – ஏதாவது ஒரு மாஃபியா தொடர்புகொள்ளவும்.\nஏன் நம்மூர் சிற்பிகளும், விஞ்ஞானிகளும், நிபுணர்களும் மட்டும் இப்படி?\nஇந்த “சிற்பி” இருபத்தைந்தாயிரம் கோடியில் ஆயிரம்கோடியை ஆனைமலைவாசிகளுக்கு அள்ளி வீசி வள்ளலாகிறார்.\nஅப்துல்கலாம் என்ற “விஞ்ஞானி” இருநூறு கோடிக்கு கூடங்குளத்தில் காகிதப் புறா பறக்கவிட்டு “உலை நல்லது” என்று 100% உத்தரவாதம் தருகிறார். இங்கு விட்டது போதாதென்று இலங்கைக்கும் சென்று மலைப்புறா, நிலப்புறா, கடல்புறா என கலர்கலராய் புறாவிடுகிறார். பேச்சு புறா புறா என்று. செய்வது அணுகுண்டு ஏவுகணை. பிறகு யாரோடு சேர்வார்?\nராமஸ்வாமி அய்யர் என்றொரு “நிபுணர்” ஒப்பந்தத்தில் ஓட்டை என்று சொல்லி பெரியாற்று நீரை தமிழர்கள் மறந்துவிடவேண்டும் என்கிறார்.\nஇதுபோக பசுமை புரட்சியின் ஒன்றுவிட்ட சித்தப்பா, “நடுநிலை” அரசியல் விமர்சகர், ஹார்வர்ட் மேனாள் பேராசிரியர், இதழியல் அறப்போதகர் என இவன்ய்ங்க தொல்லை தாங்க முடியல. தமிழர்கள் எல்லாம் எங்களை மாதிரி பாமரர்களாய் இருந்து தொலைஞ்சாத்தான் எங்க உயிருக்கே உத்தரவாதம்போல!\n11:06 முப இல் பிப்ரவரி 3, 2012\nThangalin intha katturaikku mikka NANRIGAL. Intha MAMADURAIYIL ethunaiyo kavanathukku varaatha MAAPERUM POKKISHANGAL ullana. Athai muthalil paathukappon anaivarukkum theriyapaduthuvom.. potruvom..\n8:00 பிப இல் பிப்ரவரி 8, 2012\n11:28 முப இல் பிப்ரவரி 14, 2012\nஎன் போலவே மதுரை மீது பாசம் வைத்திருக்கும் உங்கள் இணை மனத்தைக் கண்டு கொண்டதில் மகிழ்ச்சி.இனி,மதுரையைப் பற்றி நினைவு வரும்போதெல்லாம் உங்கள் வலைக்கு வந்து விடுவேன்.\nகாவல் கோட்டம் பற்றித் தொடர்ந்து எழுதவிருக்கிறேன்.அது என்னை ஈர்த்ததற்குக் காரணமும் மதுரைதான்…\nஎன் பதிவுகளுக்கு நீங்கள் எழுதிய சிறப்பான கருத்துரைகள் கிடைத்தன.உங்கள் ஆர்வத்துக்கு மிக்க நன்றி[உங்கள் மின் அஞ்சல் தெரியாததால் இதையும் பின் ஊட்டத்தில் சேர்த்திருக்கிறேன்]..
நாஞ்சில் - தமிழன் எட்வின்: மட்டைவீச்சில் சொதப்பும் இந்திய பந்துவீச்சாளர்கள்\nமட்டைவீச்சில் சொதப்பும் இந்திய பந்துவீச்சாளர்கள்\nநேற்று நடந்து முடிந்த இந்தியா-பாக் கிரிக்கெட் ஆட்டம் காலங்காலமாக இந்திய அணியின் மட்டைவீச்சில் இருந்து வரும் பலவீனத்தை மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.\nவழக்கமாக இந்திய அணித்தலைவர் அவரது சார்பில் பந்துவீச்சைக் குறை கூறியிருக்கிறார். என்றாலும் 303 என்ற இலக்கு, உலகிலேயே மட்டை வீச்சில் சிறந்து விளங்கும் இந்தியாவிற்கு !! அத்தனை கடினம் அல்லவே.ஷேவாக்கும், யுவ்ராஜும் இல்லாதது பின்னடைவு என்றாலும் காம்பீர், டிராவிட், ரைனா மூவரும் ரன் விகிதம்6க்கு குறையாமல் பார்த்துக் கொண்டது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.\nஇம்மூன்று மட்டை வீச்சாளர்களை பாராட்டுதல் ஒருபுறமிருந்தாலும் இவர்களுக்கு பின் வந்த மட்டை வீச்சாளர்களை குறை சொல்லாமலும் இருக்க முடியாது. இறுதி4ஆட்டக்காரர்கள் இணைந்து 50 ஓட்டங்கள் எடுக்கவியலாதவர்களை தேர்வு செய்ததற்காக தேர்வுக்குழுவை குறை கூறினாலும் தகும்.\nபதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பந்து வீச்சாளர்களின் மட்டை வீச்சு எப்படியிருந்ததோ இன்றளவும் அது அப்படியே தொடர்கிறது. இன்று பந்து வீச்சு பயிற்சியாளராக இருக்கும் வெங்கடேஷ் பிரசாத் காலம் முதல் இன்றைய இஷாந்த் ஷர்மா வரை இந்திய அணியில் இதுவரை இடம் பிடித்த பந்து வீச்சாளர்கள் எவரும் சொல்லும்படியான மட்டை வீச்சை வெளிப்படுத்தாதது எவர் குற்றமோ!\nஆறு விக்கெட்டுகள் சரிந்து விட்டது என்றால் போதும்; அதன் பின்னர் வரும் இந்திய மட்டை வீச்சாளர்களிடம் பெரிதாக எதுவும் எதிர்பார்க்க வேண்டாம் என்றே கிரிக்கெட் விமர்சகர்கள் சொல்வார்கள்; இன்று வரை அதனை மெய்ப்பிக்கும் வரையில் அவர்கள் (பந்து வீச்சாளர்கள்) ஆடி வருவதே அதற்கு காரணம்\nபிற அணிகள், குறிப்பாக தர வரிசையில் முதல் இரண்டு இடங்களில் இது வரை இருந்து வரும் ஆஸ்திரேலிய, தென்னாப்பிரிக்க அணியின் பந்து வீச்சாளர்கள் மட்டை வீச்சிலும் சிறந்து விளங்கியது தான் அவர்கள் தொடர்ந்து இத்தனை காலமாக முதல் இரண்டு இடங்களை தக்க வைத்துக் கொள்வதற்கான காரணங்களில் ஒன்று.\nஇந்திய அணி சிறந்த அணியாக உருவாக வேண்டுமென்றால் பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சில் மட்டுமல்லாது மட்டைவீச்சிலும் கவனம் செலுத்துதல் அவசியம். அது முடியாத பட்சத்தில் பந்துவீச்சு, மட்டைவீச்சு என இரண்டு பிரிவுகளிலும் திறமை காட்டுபவர்களை தேர்வுக்குழுவினர் கண்டெத்த வேண்டும்.\nநேற்றைய தோல்விக்கு காம்பீர் மற்றும் டிராவிட்டின் தேவையற்ற ரன் அவுட்களும்; பொறுப்பற்ற முறையில் ஆடிய அணித்தலைவர் தோனியும் ஒரு விதத்தில் காரணங்களே.\n(டிராவிட் விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவதில் அன்றும் இன்றும் அப்படியே தான் இருக்கிறார். பாவம் நேற்று அவரை காம்பீர் ஓட விட்டு பின்னி பெடலெடுத்து விட்டார்)\nPosted by எட்வின் at 9/27/2009 02:43:00 PM\nஆமாம் காலங்காலமாக இந்திய அணிக்கு இருக்கும் சாபம் இது. கடைசி3விக்கெட்டுகளும் போகும் வேகம் மிகவும் கொடுமை.\nஎன்றுதான் இதற்கு மாற்றம் வருமோ தெரியவில்லை.\nநேற்று யூசுப் பத்தான் சொதப்பியது மிகவும் கொடுமை. ரெய்னா அவுட்டானவுடன் ஆட்டமே முடிந்துவிட்டது என்பது அதைவிட கொடுமை.\nதீவிரவாதம் பேசும் 'உன்னைப்போல் ஒருவன்'\nதென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களுக்கு அஞ்சலிகள்\nகிரிக்கெட்வாதிகள் ஆகும் அரசியல்வாதிகள்
ஜேர்மனியில் பொலிஸ் கார்கள், ஹெலிகொப்டர் உதவியுடன் பசுவை துரத்திய பொலிசார்! - Lankasri News\nஜேர்மனியில் பொலிஸ் கார்கள், ஹெலிகொப்டர் உதவியுடன் பசுவை துரத்திய பொலிசார்!\nஜேர்மனியின் பவேரிய நகரமான Sand am Mainஇல் இரண்டு பசுக்கள் ஒரு விவசாயியின் வீட்டிலிருந்து தப்பி விட்டிருக்கின்றன.\nஅவற்றில் ஒன்றை அவர் எப்படியோ துரத்திப் பிடித்துவிட, மற்றொரு பசு நகருக்குள் ஓடிவிட்டிருக்கிறது.\nகடைசியாக கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் மயக்க ஊசி ஒன்றை செலுத்தி அந்த பசுவை பிடித்திருக்கிறார்கள் பொலிசார்.
சுடுநீரில் இஞ்சி கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?\nMay 14, 2016 May 14, 2016 admin_10Comments ஆரோக்கியம்\nஇஞ்சியின் மருத்துவ குணங்களை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அழகிலிருந்து ஆரோக்கியம் வரைக்கும் இஞ்சி அற்புத பல்களைத் தரும். இஞ்சி ஜூஸுடன் உங்கள் காலை நேரத்தை தொடங்கியிருக்கிறீர்களா? இல்லையென்றால் இதை படித்துப்பாருங்கள்.\nஇந்த இஞ்சி ஜூஸ் உங்கள் வயிற்றிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கவைக்கும்.\nஇஞ்சி ஜூஸ் செய்யும் முறை :\nஇஞ்சியின் தோலை உரித்துவிட்டு , துண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் ஒன்றரைக் கப் அளவுள்ள நீரை கொதிக்க வையுங்கள்.\nநீர் கொதித்ததும் இஞ்சித் துண்டுகளை அதில் போட்டு மேலும் 20 நிமிடங்கள் கொதிக்கவிடுங்கள்.பின் ஆற வைத்து வடிகட்டி அதனுடன் சிறிது தேன் மற்றும் சில துளி எலுமிச்சை சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருகுங்கள்.\nஇப்போது இந்த இஞ்சி ஜூஸின் மகத்துவத்தை பார்க்கலாம். உங்களுக்கு உடல் நிலை சரியில்லாம இருந்தால், சோர்வாக இருப்பீர்கள். அந்த சமயங்களில் இது மிகவும் நல்லது.\nஉடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும். நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கச் செய்யும். மிகவும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.\nதொற்று நோய்கள் கிட்ட நெருங்காது.ரத்தத்தை சுத்தப்படுத்தும்.ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். குளிர் ஜுரம் அல்லது குளிரானால் நடுங்கும்போது இந்த ஜூஸை குடித்தால் உடலுக்கு தேவையான சூட்டை அளித்து நடுக்கத்தை கட்டுபடுத்தும்.\nமன அழுத்தம், நடுக்கம்,நரம்புத் தளர்ச்சி ஆகியவைகளுக்கு இந்த இஞ்சி ஜூஸ் நல்ல தீர்வை அளிக்கிறது. நரம்பு மண்டலத்தை நலமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.\nஜீரண மண்டலத்தை நன்றாக செயல்பட வைக்கிறது. வயிற்றில் தங்கும் நச்சுக்களை உடனடியாக வெளியேற்றும். வாய்வு, அஜீரணம் மற்றும் அசிடிட்டியாகியவைகளை குணப்படுத்தும்.\nஇது வயிற்றில் உருவாகும் அமிலத்தை சமன் செய்து, வயிற்றை கூலாக வைத்திருக்க உதவுகிறது. தினமும் உடலில் உருவாகிக் கொண்டிருக்கும் ஃப்ரீ ரேடிகல்ஸை அழித்து, புற்று நோய் வராமல் காக்கும்.\nஉடலில் இருக்கும் அன்றாட கழிவுகளையும் நச்சுக்களையும் வெளியேற்றி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும் இந்த அற்புத ஜூஸ். நோயற்ற வாழ்வே மிக முக்கியமான செல்வம். உடலுக்கு எந்த உணவு நன்மை தருகிறதோ அவற்றை உண்டு, ஆரோகியமாய் வாழலாம்.\n← மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-\nபத்தே நாட்களில் தொப்பையை குறைக்க எளிய வழிகள் →\nகுளிர் கால பாதுகாப்பு!!
தமிழகத்தில் இன்று | attempt to kill tamaraikani - Tamil Oneindia\nஉயிரையும் பொருட்படுத்தாமல் மாடு கடத்தலைத் தடுத்த தாமரைக்கனி\nகேரள மாநிலத்திற்கு அடிமாடுகளை கடத்திச் சென்ற லாரிகளைத் தடுக்க முயன்ற அதிமுக எம்.எல்.ஏ. தாமரைக்கனியை லாரியை ஏற்றிக் கொல்ல சிலர்முயன்றனர்.\nஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ தாமரைக்கனி, வத்திராயிருப்பு என்ற இடத்தில் நடை பெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு காரில் வந்து கொண்டிருந்தார்.அவருடைய கார் இந்திரா நகர் விலக்கு அருகே வரும் போது இரண்டு லாரிகளில் மாடுகள் கடத்தப்படுவதைப் பார்ததார்.\nஇதையடுத்து லாரியை நிறுத்துமாறு சைகை காட்டினார்.\nஅவை நிற்காததால் அதை விரட்டிச் சென்று ஸ்ரீ வில்லிப்புததூர் அருகே லாரிகளை மடக்கினார். அப்போது ஒரு லாரி வேகமாக கடந்து சென்று விட்டது. ஒருலாரி மட்டும் பிடிபட்டது.\nமற்றொறு லாரியையும் நிறுத்துவதற்காக ஆட்டோவில் விரட்டிச் சென்ற தாமரைக் கனி, லாரியின் முன் சென்று ஆட்டோவுடன் நின்றார். ஆனால்லாரியை நிறுத்தாத டிரைவர், ஆட்டோ மீது ஏற்ற முயன்றார். ஆனால் அப்போது எதிர் திசையில் வேறொரு வாகனம் வந்ததால் ஆட்டோ மீது லாரிமோதுவது தடுக்கப்பட்டது. இதனால், தாமரைக்கனி உயிர் தப்பினார்.\nவீர, தீரத்துடன் லாரியை நிறுத்திய தாமரைக்கனி, போலீஸ் நிலையத்துக்கு லாரியை கொண்டு வந்தார்.அதற்குள் அங்கு மக்கள் கூடி விட்டனர். தாசில்தார்ரங்கமணி வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. அப்போது மேலும்3லாரிகள் மாடுகளுடன் கடந்து சென்றன. அவற்றையும் தாமரைக்கனி மறித்துநிறுத்தினார்.\nவிருதுநகர் கலெக்டருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அடிமாடுகள், கறிக்காகக் கடத்தப்படுவதைத் தடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.\nபிடிபட்ட5லாரிகளில் மொத்தம் 200 -க்கும் மேற்பட்ட மாடுகள் இருந்தன. கடந்த மாதம் பிரதமருக்கு பேக்ஸ் அனுப்பிய தாமரைக்கனி, ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் பல இடங்களிலிருந்து கேரளாவிற்கு அடிமாடுகள் கறிக்காக கடத்தப்படுகின்றன. இதை தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். பதில் அனுப்பிய பிரதமர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.\nadmk bull tamilnadu tamaraikani
3rdeyereports.com | ThirdEyeReports: RRR திரைப்படத்தில் என்டிஆரின் பீம்\nRRR திரைப்படத்தில் என்டிஆரின் பீம் 'லுக்' வெளியீடு\nஇன்று காலை வெளியிடப்பட்ட என்டிஆரின் 'பீம்' லுக் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருள் ஆகியுள்ளது. இதுவரை அவரை இத்தகைய தோற்றத்தில் பார்த்திருக்கவில்லை என ரசிகர்கள் சிலாகித்துக் கொண்டாடுகின்றனர். இயக்குநர் ராஜமவுலி, தற்போது ராம் சரண், என்டிஆருடன் இணைந்து ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பெரும் இடைவேளைக்குப் பின்னர், அத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நவம்பரில், ஆலியா பட் படப்பிடிப்பில் இணைவார் எனத் தெரிகிறது. அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ் ஆகியோர் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்கின்றனர். எப்போது என்பது உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.
கௌதம் கம்பீரைக் காணவில்லை என்னும் சுவரொட்டியால் டில்லியில் பரபரப்பு | www.patrikai.com\nபாஜகவின் மக்களவை உறுப்பினரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீரைக் காணவில்லை என நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.\nடில்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது. இதையொட்டி மக்கள் கடும் துயரில் ஆழ்ந்துள்ளனர். பல கட்சிகள் இது குறித்து கவலைக் கொண்டுள்ளன. இது குறித்து விவாதிக்கக் கடந்த நவம்பர் மாதம் டில்லியில் ஒரு ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜகவின் மக்களவை உறுப்பினருமான கௌதம் கம்பீர் கலந்துக் கொள்ளவில்லை.\nஇது ஆளும் ஆம் ஆத்மிக் கட்சிக்கு கடும் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது. இந்நிலையில் அந்த கூட்டம் நடைபெற்ற அதே தினத்தன்று இந்தூர் நகரில் தனது நண்பர்களுடன் ஒரு தெருவில் கௌதம் கம்பீர் ஜிலேபி சாப்பிடும் புகைப்படம் வெளியாகி அதிருப்தியை அதிகரித்துள்ளது. இதையொட்டி ஆம் ஆத்மி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஆம் ஆத்மி கட்சியினர் ஒரு தட்டில் ஜிலேபிகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் ஆம் அத்மி கட்சியினர் ஒட்டி உள்ள சுவரொட்டிகளில், “இவரை நீங்கள் பார்த்தீர்களா? இவர கடைசியாக இந்தூரில் ஜிலேபி மற்றும் அவல் சாப்பிடும் போது காணப்பட்டார். காணாமல் போன இவரை விரைவில் கண்டுபிடித்துத் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” எனக் காணப்படுகிறது.\nPrevious articleநாளை உச்சநீதிமன்ற 47 ஆம் தலைமை நீதிபதியாக போப்டே பதவி ஏற்பு\nNext articleவசதி அற்றவர்களுக்கு தேர்தல் வாய்ப்பு கிடையாது : அதிமுக அமைச்சர் அதிரடி
Instagram update now allows you to embed links and add landscape/portrait photos in Direct Messages - Tamil Gizbot\nஇன்ஸ்டாகிராமில் இந்த வசதி கூட வந்துருச்சா? பயனாளிகள் ஆச்சரியம்\nPublished: Thursday, June 1, 2017, 0:01 [IST]\nபிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம், வாடிக்கையாளர்களின் நலன்களை முன்னிட்டு அவ்வப்போது புதுப்புது வசதிகளை செய்து தருகின்றது. அந்த வகையில் தற்போது இந்த செயலி தன்னுடைய புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.\nஏற்கனவே இன்ஸ்டாகிராம் செயலியில் கலெக்சன், புதிய ஃபேஸ் பில்டர், ஹேஷ்டே, லோகேஷன் அறிதல் போன்ற பல வசதிகள் இருந்து வரும் நிலையில் இந்த புதிய அப்டேட்டில் இன்னும் சில சிறப்பான வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ளது.\nஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த செயலி தன்னுடைய புதிய அப்டேட்டில் நேரடி மெசேஜ் சர்வீஸை தொடங்கியுள்ளது. மேலும் இந்த புதிய அப்டேட்டில் மெசேஜ் அனுப்பும்போதோ அல்லது சேட்டிங் செய்யும்போது தற்போது லிங்குகளையும் சேர்த்து அனுப்பலாம்.\nஅதுமட்டுமின்றி தற்போது இந்த செயலி லேண்ட்ஸ்கேப் மற்றும் போர்ட்ராஃய்டு ஆகிய இரண்டுக்கும் சப்போர்ட் செய்வதால் அகலமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை முழு திருப்தியுடன் பார்க்கலாம்\nமேலும் தற்போது இன்ஸ்டாகிராம் லேண்ட்ஸ்கேப் மற்றும் போர்ட்ராஃய்டு ஆகிய இரண்டுக்கும் சப்போர்ட் செய்வதால் புகைப்படங்களை ஷேரிங் செய்யும்போதோ, சேட்டிங்கில் இணைக்கும்போதோ கிராப் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. நேரடியாக கேலரியில் இருந்து புகைப்படம் அல்லது வீடியோக்களை தேர்வு செய்து நேரடியாக மிக எளிதாகவும், விரைவாகவும் அனுப்பலாம்\nயூடியூப்பில் பணம் சம்பாதிக்க சில முக்கிய குறிப்புகள்.!\nபிரைவைட் சேட்டிங்கில் புகைப்படம் அல்லது வீடியோ அனுப்பும்போது நாம் அனுப்புகின்ற புகைப்படங்களை பிரிவியூவாக அனுப்பும் முன்பே பார்த்து கொள்ளலாம். மேலும் புகைப்படத்தில் தலைப்பு கொடுக்கவோ, அல்லது புகைப்படம் குறித்த குறிப்புகள் எழுதவோ செய்யலாம்.\nமேலும் லிங்குகள் அனுப்பும்போது எந்தவகையான லிங்குகளை அனுப்புகின்றோம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். மேலும் பயனாளிகள் போன் நம்பரையோ அல்லது முகவரியையோ அனுப்ப விரும்பினால் தானாகவே அது லிங்க் ஆக மாறிவிடும். எனவே இதை பெறுபவர்கள் அதிலிருந்தே கிளிக் செய்து போன் அழைப்பை பெறலாம்.\nஆனால் அதே நேரத்தில் மேற்கண்ட அப்டேட்டுக்கள் அனைத்தும் இப்போதைக்கும் ஐஒஎஸ் போன்களுக்கு மட்டுமே சப்போர்ட் செய்யும் வகையில் உள்ளது. ஆனாலும் இந்த வசதி ஆண்ட்ராய்டு போன்களுக்கு மிக விரைவில் கிடைக்கும். மொத்தத்தில் இந்த மாற்றத்தால் இன்ஸ்டாகிராம் புதுப்பொலிவுடன் வாடிக்கையாளர்களை மேலும் கவர்ந்துள்ளது என்பது மட்டும் உண்மை\nStory first published: Thursday, June 1, 2017, 0:01 [IST]
மல்லையா அசல் திருப்ப சம்மதம்! வங்கிகள்- மல்லையா இழுபறி: வட்டி, அபராத வட்டி, மற்ற செலவுகள் குறித்தானதா? - Mowval\nமல்லையா அசல் திருப்ப சம்மதம்! வங்கிகள்- மல்லையா இழுபறி: வட்டி, அபராத வட்டி, மற்ற செலவுகள் குறித்தானதா?\nPublished by குமரிநாடன் ருat 05 Dec 2018 03:07 pm\t | 235 Views\n19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நூறு விழுக்காடு அசல் தொகையையும் தந்து விடுகிறேன், தயவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள்; என வங்கிகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தெரிவித்து வருவதாக மல்லையா குறிப்பிடுகிறார்.\nலண்டன் அறங்கூற்று மன்றத்தில், தீர்ப்பு வெளிவர5நாட்களே உள்ள நிலையில், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தி விடுவதாக விஜய் மல்லையா கூறியிருப்பதாக செய்தி வெளியிட்டதை விமர்சித்து, கீச்சு பதிவிட்டுள்ள விஜய் மல்லையா, 'வழக்கமான முட்டாள்தனம் இது, 2016 முதலே நான் பணத்தை திருப்பி செலுத்தி விடுவதாக கூறி வருகிறேன்' என தெரிவித்துள்ளார்.\nஇந்திய வங்கிகள் பலவற்றிலும்9ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல், மல்லையா, லண்டனில் இருக்கிறார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர நடுவண் அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இது தொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. என்பது செய்தி என்ற நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அசல் தொகையை செலுத்த சம்மதம் என மல்லையா தெரிவிப்பதாகவும், வங்கிகள் மறுப்பதாகவும் சொன்னால், வங்கிகள் நிர்பந்;;;;;;;;;;;;திப்பது வட்டி, அபராத வட்டி மற்றும் கடன் வசூல் முயற்சியின் பாற்பட்ட செலவுத் தொகையா! என்ற கேள்வி எழுகிறது.\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் திங்கட் கிழமை அளிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.\nஅரசியல்வாதிகளும், ஊடகங்களும், பொதுத்துறை வங்கிகளின் பணத்தை வேண்டும் என்றே திரும்ப செலுத்தாமல் ஓடி விட்டதாக கூக்குரல் இடுகின்றனர். இவை அனைத்தும் தவறானவை. கர்நாடக அறங்கூற்றுமன்றத்தில் நான் பணத்தை செலுத்தி விடுவதாக கூறியதற்கு ஏன், யாரும் அதிகம் பேசவில்லை.\nவிமான எரிபொருள் விலை அதிகரித்ததால், விமானங்கள் நிதி நெருக்கடியில் சிக்கின. இழப்புகள் அதிகரித்ததால், வங்கி பணம் அங்கு சென்றது. அசல் தொகை 100 விழுக்காட்டையும் தந்து விடுகிறேன். தயது செய்து அவற்றை பெற்றுக் கொள்ளுங்கள். இவை மறுக்கப்படுமாயின் ஏன்? எனவும் கேள்வி எழுப்பி அடுத்தடுத்து கீச்சுவில் விஜய் மல்லையா பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் – Captain News\nYou Are Here: Home » News » தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்\nPosted by: admin Posted date: May 23, 2014 In: News, Pondicherry, Tamil Nadu | comment : 0\nவெப்பச்சலனம் காரணமாக இன்று‌ தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் இதனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சாத்தூரில்7சென்டிமீட்டரும்‌, சூளைகிரியில்6சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளதாக ரமணன் தெரிவித்தார்‍.\nஇதனிடையே, நேற்று‌ மாலை காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் சூறைகாற்று‌டன் கூடிய மழை பெய்து‌ள்ளது‌. இதனால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து‌ம், கிளைகள் முறிந்து‌ம் , சாலைகளில் விழுந்தன.\nவெப்ப சலனம் காரணமாக இன்று‌ம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nவங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது அந்தமான் மற்று‌ம் மியான்மர் பகுதியில் நிலைகொண்டுள்ளதாக தெரிவித்த அவர்‌, இது மேலும் வலுவிழக்க வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டார்‍. இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்‍.\nஇதனிடையே, தமிழகத்தில் இந்த வருடம் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவேலூரில் கனமழை பெய்து வருவது அம்மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடர் மழையால் வேலூரில் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது..\nஇதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று‌ மாலை பலத்தகாற்று‌டன் கனமழை பெய்தது. சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் சில இடங்களில் மரங்களின் கிளைகள் உடைந்து சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடும் வெய்யில் கொளுத்தி வரும் நிலையில், பெய்துள்ள கனமழை பொதுமக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.\nNumber of Entries : 5552
லோக்பால் உறுப்பினர் திலீப் ராஜினாமா ஏற்பு| Dinamalar\nலோக்பால் உறுப்பினர் திலீப் ராஜினாமா ஏற்பு\nAdded : ஜன 15, 2020 23:40\nபுதுடில்லி: லோக்பால் உறுப்பினராக இருந்த ஓய்வுபெற்ற நீதிபதி திலீப் பாபாசாகிப் போஸ்லேவின் ராஜினாமாவை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.\nஅரசியல் தலைவர்கள் அரசு உயரதிகாரிகள் ஆகியோர் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க மத்தியில் லோக்பால் அமைப்பும் மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பும் அமைக்கப்பட்டன. இதையடுத்து 2019 மார்ச் மாதம் லோக்பால் அமைப்பின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஸ் பதவியேற்றுக்கொண்டார்.\nஅந்த அமைப்பில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். அதிகாரிகள் என எட்டு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் அந்த அமைப்பின் உறுப்பினராக இருந்த ஓய்வுபெற்ற நீதிபதி திலீப் பாபாசாகிப் போஸ்லே 6ம் தேதி தன் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.\nதிலீப் போஸ்லேவின் ராஜினாமாவை மத்திய பணியாளர் துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டது. ஜனவரி 12ல் திலீப் போஸ்லே அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக மத்திய அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை திலீப் போஸ்லே 'டுவிட்டரி'ல் பதிவிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.\nஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கான 'ஷெங்கென் விசா' கட்டணம், உயர்வு\nபொங்கல் கொண்டாடிய வெளிநாட்டு பயணியர்(1)\nபொங்கல் கொண்டாடிய வெளிநாட்டு பயணியர்
தொண்டையில் புண் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்...!! - Asiriyar.Net\nHome TIPS தொண்டையில் புண் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்...!!\nதொண்டை அழற்சி ஏற்பட ஸ்டெப்டோகோகஸ், ஹிமோபில்ஸ் ஆகிய பாக்டீரியாக்கள் தான் காரணம். அதுபோல, அடெனோவைரஸ், எப்ஸ்டின் - பார் ஆகிய வைரஸ்கள் காரணமாக உள்ளன. இந்த பாக்டீரியா, வைரஸ்கள், அடுத்தவரிடம் இருந்தும் தொற்றும்; சில காரணங்களாலும் தொற்றும். குடும்பத்தில் உள்ள யாருக்காவது டான்சிலிட்டிஸ் இருந்தால், மற்ற சிறு வயதினருக்கும் தொற்றும்.
நண்பரை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி.. தலைமறைவான வக்கீல் கோர்ட்டில் சரண் | Attempt to murder case, Advocate surrendered in Court - Tamil Oneindia\n| Published: Friday, June 16, 2017, 9:34 [IST]\nதூத்துக்குடி: நண்பரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த வக்கீல் கோர்ட்டில் சரண் அடைந்தார்.\nதூத்துக்குடியில் வக்கீ்ல்கள் சங்க தேர்தலில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த அக்டோபர் மாதம் மகிளா கோர்ட்டில் மோதல் ஏற்பட்டது. இதில் தூத்துக்குடியை சேர்ந்த வக்கீல் ரகுராமன் கத்தியால் குத்தப்பட்டார்.\nஇது தொடர்பாக அவரது நண்பரும் பார் கவுன்சில் உறுப்பினருமான வக்கீல் பிரபு உள்பட 8 பேர் மீது தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் பிரபுவை தவிர மற்ற அனைவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த வக்கீல் பிரபுவை தேடி வந்தனர். தூத்துக்குடி வடபாகம், தென்பாகம் உள்ளிட்ட காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாகவும் அவர் தேடப்பட்டு வந்தார்.\nஉடனடியாக சரண் அடையாவிட்டால் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கபோவதாக தூத்துக்குடி முதலாவது ஜேஎம் கோர்ட்டு எச்சரிக்கை விடுத்ததோடு அவர் சரண் அடையவும் அவகாசம் அளித்தது.\nஇருப்பினும் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்த வக்கீல் பிரபு தூத்துக்குடி முதலாவது கோர்ட்டில் மாலை6மணி அளவில் சரண் அடைந்தார். அதில் ஏற்கனவே இரு வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டாலும், கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில் பிரபுவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.\nadvocate surrender court tuticorin வக்கீல் சரண் நீதிமன்றம் தூத்துக்குடி\nStory first published: Friday, June 16, 2017, 9:34 [IST]
(IED )விட (I D )பலமானது; மோடி| Dinamalar\nUpdated : ஏப் 23, 2019 21:23 | Added : ஏப் 23, 2019 09:21 | கருத்துகள் (53)\nகாந்திநகர்: வாக்காளர்கள் அடையாள அட்டை (I D ) என்பது , சக்தி வாய்ந்த வெடி மருந்தை (IED ) விட பலமானது. அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டு கொண்டார்.நாடு முழுவதும் இன்று3ம் கட்ட தேர்தலில் 13 மாநிலங்கள்,2யூனியன் பிரதேசங்களில் ஓட்டுப்பதிவு நடந்தது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலும் இன்று ஓட்டுப்பதிவு நடந்தது. இங்கு உள்துறை அமைச்சர்\nகாந்திநகர்: வாக்காளர்கள் அடையாள அட்டை (I D ) என்பது , சக்தி வாய்ந்த வெடி மருந்தை (IED ) விட பலமானது. அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டு கொண்டார்.\nநாடு முழுவதும் இன்று3ம் கட்ட தேர்தலில் 13 மாநிலங்கள்,2யூனியன் பிரதேசங்களில் ஓட்டுப்பதிவு நடந்தது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலும் இன்று ஓட்டுப்பதிவு நடந்தது. இங்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பா.ஜ., தலைவர் அமித்ஷா ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள்.\nஇனிப்பு ஊட்டிய தாய்\n3 வது கட்ட லோக்சபா தேர்தல் நடக்கும் குஜராத் மாநிலத்திற்கு இன்று பிரதமர் மோடி சென்றார். காந்திநகருக்கு சென்ற பிரதமர் அவரது தாயார் ஹீராபென்னை சந்தித்து ஆசி பெற்றார்.\nமோடிக்கு தாயார் ஆசி வழங்கி இனிப்பு ஊட்டினார். மோடியும் தாயாருக்கு இனிப்பை ஊட்டி விட்டார்.\nதொடர்ந்து மோடி ஆமதாபாத் புறப்பட்டு சென்றார். அங்குள்ள ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளித்தார்.\nமுன்னதாக ஓட்டுச்சாவடியில் அமித்ஷா குடும்பத்தினர் மோடியை வரவேற்றனர். அமித்ஷாவின் பேத்தியை பிரதமர் தூக்கி கொஞ்சினார். மோடியை காண அப்பகுதி மக்கள் திரளாக கூடியிருந்தனர். மோடியை பார்த்து கையசைத்து ஆரவாரமாக வரவேற்றனர். மோடி, மோடி என மக்கள் கோஷங்கள் எழுப்பினர்.\nநான் ஒரு அதிர்ஷ்டசாலி\nஓட்டளித்த பின்னர் பிரதமர் மோடி ஜீப்பில் ஏறி நின்றவாறு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:\nஇந்தியாவில் நடக்கும் ஜனநாயக திருவிழாவில் நான் ஒரு வாக்காளராக எனது கடமையை நிறைவேற்றினேன். சொந்த தொகுதியில் ஓட்டளித்த நான் ஒரு அதிர்ஷ்டசாலி. இது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும். இந்திய வாக்காளர்கள் அறிவில் சிறந்தவர்கள். அனைவரும் வளமான ஒளிமயமான எதிர்காலத்திற்கு சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும்.\nஜனநாயகத்தில் ஓட்டு அடையாளம் பெரும் ஆயுதம் ஆகும். வாக்காளர்கள் அடையாள அட்டை (I D ), சக்தி வாய்ந்த வெடி மருந்தை (IED )விட பலமானது. ஓட்டளிக்கும்போது கும்பமேளாவில் நீராடினால் தூய்மை அடைவது போல் ஒரு உணர்வு வரும். பயங்கராவதிகளுக்கு ஆயுதம் போல் வாக்காளர்களுக்கு வலுவானது ஓட்டு உரிமை. இதன் வலுவை உணர்ந்து சரியாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் கூறினார்.\nRelated Tags நான் அதிர்ஷ்டசாலி மோடி பிரதமர் தேர்தல் ஓட்டு\n3ம் கட்ட தேர்தல்: 63.24 சதவீத ஓட்டுப்பதிவு (10)\nசைக்கிளுக்கு ஓட்டு கேட்ட அதிகாரிக்கு அடி(6)
அர்விந்த் கெஜ்ரிவால் ஆபாச படத்துக்கு 'லைக்' போட்டாரா? உண்மை என்ன? » Sri Lanka Muslim\nசெய்திகளின் உண்மைத்தன்மையை கண்டறியும் பிபிசி குழுவின் ஆய்வு இது .\nடெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆபாசப் படம் பார்த்து அதற்கு விருப்பக்குறியிட்டதாக கூறி கேலி கிண்டலுக்குள்ளானார்.\nதனது ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக செயல்படும் டெல்லி எம்.எல்.ஏ கபில் மிஸ்ரா இவ்விவரத்தை கடந்த வியாழக்கிழமை காலையில் ட்வீட் மூலம் வெளியிட்டார்.\n”டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ட்விட்டரில் ஆபாச படம் பார்த்திருக்கிறார். நேற்று இரவு அவர் ஆபாச படத்துக்கு விருப்பக்குறியிட்டுளார்” என அவர் குறிப்பிட்டிருந்தார்.\nபடத்தின் காப்புரிமைKAPIL MISHRA/TWITTER\nமிஸ்ரா பகிர்ந்த காணொளி, டெல்லி முதல்வர் ஆபாச காணொளியை பார்த்தற்கான ஆதாரமாக பார்க்கப்பட்டது. ட்விட்டரில் மிஸ்ரா பகிர்ந்த காணொளி 60 ஆயிரத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டது. மேலும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் இதை பகிர்ந்திருந்தார்கள்.\nகபில் மிஸ்ரா மட்டுமின்றி டெல்லி பாஜக செய்தி தொடர்பாளர் தேஜிந்தர் பால் சிங் பக்கா மற்றும் பாஜகவின் தகவல் தொடர்பு அமைப்பின் தலைவர் புனித் அகர்வால், அகாலிதள தேசிய செய்தி தொடர்பாளர் மஞ்சிந்தர் சிங் சிர்ஸா ஆகியோர் இதே போன்ற காணொளியை பகிர்ந்தனர். இதனால் பல்லாயிரக்கணக்கான மக்களை சென்றடைந்தது இக்காணொளி.\nஆனால் எங்களது ஆய்வில், அக்காணொளியில் இருந்தது நிச்சயமாக ஒரு நிர்வாண ஆண் என்றும் ஆனால் ஆபாச காணொளி எனக்கோருவது தவறானது என்பதையும் அறிந்தோம்.\nபடத்தின் காப்புரிமைHELEN DALE/TWITTER\nஆபாசக் காணொளியை அர்விந்த் கெஜ்ரிவால் பார்த்ததாக கோரப்படும் ஓரு காணொளிக்கு டெல்லி முதல்வர் கடந்த புதன்கிழமை இரவு விருப்பக்குறி இட்டது உண்மையே.\nஇந்த காணொளியை வெளியிட்டவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எழுத்தாளரும் பிரிட்டனில் வழக்குரைஞராக பணியாற்றும் நபருமான் ஹெலன் டெல். கடந்த புதன்கிழமை காலையில் இவர் ட்விட்டரில் வெளியிட்ட காணொளிக்கு இதுவரை7மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. 32 ஆயிரம் மக்கள் விருப்பக்குறி இட்டுள்ளனர்.\nஇக்காணொளி இணையதளத்தில் மிகவும் விரும்பப்பட்ட ஒன்று என ஹெலன் டெல் காணொளியை பகிர்ந்தபோது எழுதியிருக்கிறார்.\nஇக்காணொளி ஜப்பானைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் கஜூஹிஸா உகுசா என்பவருக்குச் சொந்தமானது. உணவு மேசையில் துடைக்கப் பயன்படுத்தும் அளவிலான துணியை கொண்டு அபாயகரமான சாகசம் செய்வதில் இவர் வல்லவர்\nகஜூஹிஸா கடந்த 10 ஆண்டுகளாக மேடை நகைச்சுவை நடிகராக உள்ளார். ஜப்பான் தொலைக்காட்சி சேனல்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்பாளாக இருந்துள்ளார். தனது திறமை மூலமாக ஒரு ரியாலிட்டி ஷோவில் அரை இறுதிப்போட்டி வரை வந்தார்.\nஅவருக்கு யூடியூபில் 5000 பேர் சப்ஸ்கிரைபராக உள்ளனர். ட்விட்டரில் 34 ஆயிரம் பேரும் இன்ஸ்டாகிராமில் 1.25 லட்சம் பேரும் அவரை பின்தொடர்கின்றனர்.\nயூ-டியூப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சர்வதேச தர நிர்ணய விதிகளின் படி கஜூஹிஸாவின் காணொளிகள் ஆபாச காணொளிகளாக கருதப்படவில்லை. இவை ஒரு கலையாக கருதப்பட்டுள்ளது.\nஉதாரணமாக, யூ-டியூபின் நிர்வாண மற்றும் பாலியல் உள்ளடக்க கொள்கையின் படி ஆபாச காணொளிகள் அவர்களது தளத்தில் தடை செய்யப்பட்டுள்ளன. ஆபாச காணொளிகள் என அறியப்பட்டால் அவை நீக்கப்பட்டுவிடும். ஆனால் நிர்வாணத்தை கல்வி, ஆவணப்படுத்தல், அறிவியல் அல்லது கலை சார்ந்த விஷயங்களுக்காக பயன்படுத்தினால் அவை ஆபாசக் காணொளியாக முத்திரை குத்தப்படாது.\nகஜூஹிஸா ஆடையின்றி செய்யும் சாகச செயல்களை மக்களில் பலர் விமர்சித்துள்ளனர். சமூக வலைதளத்தில் சிலர் அதை ஆபாசக் காணொளியாக பார்க்கின்றனர். தொடர் கேலி கிண்டல் காரணமாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அந்த ட்வீட்டுக்கு தான் விடுத்திருந்த விருப்பக்குறியை நீக்கியுள்ளார்.\nஎனினும், டெல்லி முதல்வர் ஆபாச படம் பார்த்து மாட்டிக்கொண்டதாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை .
Arulmozhi Manickam Support to EnemyArulmozhi Manickam Support to Enemy\nHome Latest News எனிமிக்கு துணை நிற்கும் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம்\nஎனிமிக்கு துணை நிற்கும் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம்\nஎனிமி திரைப்படத்திற்கு துணைநின்று வருகிறார் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம். ‌\nArulmozhi Manickam Support to Enemy : தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களான ஆர்யா மற்றும் விஷால் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி. ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மிருணாளினி ரவி நாயகியாக நடித்துள்ளார். வினோத் இந்த படத்தை தயாரித்துள்ளார்.\nவார்னரை நீக்கக்கூடாது : ஷேன் வார்னே வலியுறுத்தல்\nஇந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக படத்தின் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டது. பிரச்சனைகளை களைந்து திட்டமிட்டபடி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முயற்சி செய்து வந்த நிலையில் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம்.\nஅதாவது அவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் எனிமி திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள். தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் எனிமி திரைப்படத்திற்கு நண்பர்களாக வேண்டும் என பிராத்தனை செய்து கொள்வதாக பதிவு செய்துள்ளார். இவருடைய பதிவு சமூக வலைதளப் பக்கங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.\nNayanthara-க்கு7Assistant வேணுமாம்! – Producer K Rajan Blasting Speech\nதமிழ் சினிமாவில் ஒருவருக்கு பிரச்சனையென்றால் மற்ற தயாரிப்பாளர்கள் ஓடிவந்து ஆதரவாக நிற்பது பார்ப்பதற்கு பெருமையாக உள்ளது என கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.\nPrevious articleNayanthara-க்கு7Assistant வேணுமாம்! – Producer K Rajan Blasting Speech\nNext articleஇந்தமுறை ஸ்கெட்ச் தப்பல.. பிக்பாஸ் சீசன் 5-லிருந்து இரண்டாவது ஆளாக வெளியேறியது யார் தெரியுமா?? வெளியான பரபரப்பு தகவல்கள்
HerSolution ஆய்வு அதிகாரப்பூர்வ மூலத்திலிருந்து | படங்கள் வெளிப்படுத்தப்பட்டன!\nHerSolution உடன் HerSolution - சோதனையின் HerSolution அதிகரிப்பு உண்மையில் கிடைத்ததா?\nமேலும் கவர்ச்சிகரமான மக்கள் HerSolution பயன்படுத்தும் சூழலில் தயாரிப்பு மற்றும் அதன் வெற்றியைப் பற்றி HerSolution. நிச்சயமாக அனுபவ அறிக்கைகளில் ஆர்வமாக உள்ளோம்.\nகேள்வியின்றி, நீங்கள் ஏற்கனவே HerSolution உண்மையில் நேர்மறை சான்றுகள் காட்ட HerSolution என்று கவனித்திருக்கிறேன். HerSolution உண்மையில் HerSolution காமத்தை அதிகரிக்க HerSolution? HerSolution.\nநீங்கள் HerSolution இலிருந்து என்ன HerSolution வேண்டும்?\nHerSolution இயற்கை பொருட்கள் மட்டுமே கொண்டுள்ளது. இதன்மூலம் இதன்மூலம் நடவடிக்கைகளின் நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் குறைந்தபட்சம் பக்க விளைவுகள் மற்றும் மலிவான விலையை குறைப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்டது.\nகூடுதலாக, வாங்குதல் அநாமதேயமாக, மருத்துவ அறிவு இல்லாமல், உலகளாவிய வலையில் வசதியாகவும், தற்போதைய பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு (SSL இரகசியத்தன்மை, தரவு பாதுகாப்பு + கம்பெனி) இணங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.\nHerSolution இன் HerSolution உள்ள பொருட்கள்\nநான் தயாரிப்பு ஒவ்வொரு மூலப்பொருள் பகுப்பாய்வு அவசியம் என்று நான் நினைக்கவில்லை - அதனால் தான் நாம் மிகவும் சுவாரஸ்யமான தான் நம்மை குறைக்க:\nபொதுவாக, தனியாக எந்த வகையிலும் அதன் விளைவைத் தீர்மானிப்பதற்கில்லை, அதுவும் எவ்வளவு முக்கியம் என்று சொல்ல வேண்டும்.\nதற்செயலாக, வாங்குவோர் உற்பத்தியின் அளவு பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை - மாறாக: இந்த கூறுகள் ஆராய்ச்சி மீது கவனம் செலுத்துவதன் மூலம் மிகவும் ஒருங்கிணைக்கப்பட்டவை.\nஇந்த நன்மைகள் HerSolution ஒரு திருப்திகரமான தயாரிப்புகளை உருவாக்குகின்றன:\nமுற்றிலும் இயற்கை பொருட்கள் அல்லது பொருட்கள் சரியான பொருந்தக்கூடிய மற்றும் எளிமை பயன்பாடு உறுதி\nநீங்கள் உங்கள் பிரச்சனையைச் சொல்லவும், மேலும் தடுப்பு எடுக்கவும் தேவையில்லை\nHerSolution அதிகரிக்க உதவும் தயாரிப்புகளை வழக்கமாக ஒரு மருந்து மூலம் மட்டுமே வாங்க முடியும் - HerSolution வசதியாகவும் மிகவும் மலிவாகவும் வாங்க முடியும்\nபேக் & அனுப்புநர் எளிமையானவர்கள் மற்றும் முற்றிலும் ஒன்றும் அர்த்தமல்ல - ஏனென்றால் நீங்கள் ஆன்லைனில் வாங்குகிறீர்கள், அது ரகசியமாகவே இருக்கிறது, நீங்கள் அங்கு சரியாக என்ன பெறுகிறீர்கள்\nஅதனால்தான் இந்த தயாரிப்பு மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது, ஏனென்றால் அந்தந்த கூறுகள் குறைபாடற்ற முறையில் ஒன்றாக செயல்படுகின்றன.\nஇன்பத்தை திறம்பட அதிகரிப்பதற்காக HerSolution மிகவும் விரும்பப்பட்ட தயாரிப்புகளில் ஒன்றாகும் என்பதற்கான ஒரு காரணம், இது உயிரினத்தில் உள்ள உயிரியல் வழிமுறைகளுடன் மட்டுமே செயல்படுகிறது.\nபல மில்லியன் ஆண்டுகால மேலதிக வளர்ச்சியானது, அதிக ஆசைக்கான அனைத்து செயல்முறைகளும் எப்படியும் அழைக்கப்படலாம், மேலும் அவை தானாகவே தொடங்கப்பட வேண்டும்.\nஇந்த வழியில், தயாரிப்பு முதன்மையாக தோன்றலாம் - உடனடியாக அல்ல. விளைவுகள் தனிப்பட்ட பக்க விளைவுகளுக்கு உட்பட்டவை என்பது யாருக்கும் தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் பலவீனமாகவோ அல்லது வலுவாகவோ தோன்றக்கூடும். இது Green Coffee விட சிறந்தது.\nHerSolution தனிப்பட்ட முறையைப் பயன்படுத்துவதன் மூலம் வழங்கப்படும் முறையான செயல்முறைகளை உருவாக்குகிறது.\nஇதன் விளைவாக, தயாரிப்பு மனித உடலுடன் இயங்குகிறது, அதற்கு எதிராகவோ அல்லது அதற்கு அடுத்ததாகவோ இல்லை;\nதயாரிப்பு முதலில் ஒரு பிட் ஒற்றைப்படை முழுவதும் வரும் என்று ஒரு வாய்ப்பு உள்ளது? அது சிறிது நேரம் எடுக்கும், அதனால் விளைவு உணர்கிறது மற்றும் மகிழ்வளிக்கிறதா?\nஉண்மையில் ஆமாம். இது சிறிது நேரம் எடுக்கும், மற்றும் பயன்பாட்டின் தொடக்கத்தில் ஒரு அறிமுகமில்லாத உணர்வு ஏற்கனவே நடைபெறுகிறது.\nதயாரிப்பு நுகர்வோரிடமிருந்து வரும் அறிக்கைகள் பக்க விளைவுகள் பொதுவாக நிகழக்கூடாத அதே கருத்தில் வெளிப்படுத்துகின்றன.\nஎந்த விஷயத்தில் தயாரிப்பு எந்த விஷயத்தில் பயன்படுத்தப்படக்கூடாது?\nஇந்த சூழ்நிலையில், இந்த தயாரிப்பைப் பயன்படுத்துவதை HerSolution : நீங்கள் எதிர்பார்த்த நேரங்களில் HerSolution பயன்படுத்த முடியாது. உங்கள் கவலையை அகற்ற நீங்கள் பணத்தை செலவழிக்கிறீர்கள்.\nஇந்த காரணிகளால் உங்களை அடையாளம் காண முடியாது என்று நீங்கள் கருதினால், "நான் என்னுடைய இன்பம் அனுபவத்தில் வேலை செய்வேன், அதற்காக எல்லாவற்றையும் கொடுக்க தயாராக இருப்பேன்" என்று நீங்கள் தெளிவாக சொல்லலாம். , இப்போது உங்கள் திட்டத்தை தயங்காதே ,\nஇது நிச்சயம்: இந்த திட்டத்திற்காக, அதே தீர்வு உங்களுக்கு நன்கு தெரியும்.\nHerSolution நன்மைகளை விட நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, கட்டுரை மதிப்பீட்டில் ஒரு பிட் முயற்சியை முதலீடு செய்ய வேண்டும்.\nஇந்த காரணத்திற்காக, இது முற்றிலும் எதிர்வினை பற்றிய கருத்துக்களைப் பெற பரிந்துரைக்கப்படவில்லை. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும், நீங்கள் எங்குமே எவ்விதமான விடயமும், எங்குமே எவ்விதத்திலும் உபயோகிப்பதில்லை.\nஇது ஒரு சில நூறு வாடிக்கையாளர்களிடமிருந்து பெரும்பாலான வாடிக்கையாளர் அறிக்கைகள் நிரூபிக்கின்றன.\nஅனைத்து பதிலளிக்கப்படாத கேள்விகளுக்கும், கட்டுரையில் துல்லியமான தகவல்கள் மற்றும் நெட்வொர்க்கில் வேறு இடத்திற்கு கூடுதலாக உள்ளது, நீங்கள் இணைப்புக்கு வருகிறீர்கள் ..\nஎண்ணற்ற பயனர்கள் நீங்கள் முதலில் பயன்படுத்தும் போது ஒரு மகத்தான நிவாரண கவனிக்க முடிந்தது என்று. இது ஒரு சில வாரங்களுக்கு முன்பே வெற்றிகரமாக வெற்றிகரமாக வெற்றிகரமாக இடம்பெற்றது.\nஆய்வுகள், HerSolution பெரும்பாலும் நுகர்வோர் ஒரு உறுதியான தாக்கத்தை வழங்கப்பட்டது, ஆரம்பத்தில் ஒரு சில மணி நேரம் HerSolution. தொடர்ச்சியான பயன்பாட்டுடன், முடிவு இறுக்கமாகிவிடும், எனவே பயன்பாட்டின் முடிந்தபின், முடிவுகள் கடினமானவை.\nசில வருடங்களுக்கு ஒரு சில வாரங்களுக்கு பிறகு சில நேரங்களில் அவை மீண்டும் மீண்டும் உட்கொள்ளும் மருந்துகள் பயனளிக்கும்.\nஎனவே மிக விரைவான முடிவுகளைப் பற்றி சொல்லும் வாடிக்கையாளர் அறிக்கைகளால் நீங்கள் மிக அதிகமாக வழிநடத்தப்படக்கூடாது. பயனர் பொறுத்து, அது முதல் உண்மையான பாதுகாப்பான முடிவுகளை அடைய மிகவும் நீண்ட நேரம் எடுக்க முடியும். Hammer of Thor மாறாக, இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nHerSolution மற்ற பயனர்களின் முன்னேற்றங்கள்\nபொதுவாக நீங்கள் தயக்கமின்றி கட்டுரை பரிந்துரை என்று முக்கியமாக விமர்சனங்களை காணலாம். நிச்சயமாக ஒரு பிட் அதிருப்தி யார் மற்றவர்கள், ஆனால் ஒட்டுமொத்த எதிரொலி மிகவும் இரக்கமுள்ள உள்ளது.\nநீங்கள் இன்னும் HerSolution பற்றி அக்கறை கொண்டிருக்கிறீர்கள் HerSolution, உங்கள் HerSolution எதிராக போராட உங்களுக்கு தெரியவில்லை.\nதயாரிப்பு உண்மையிலேயே எவ்வளவு நன்மை என்பதை விளக்கும் சில உண்மைகள் இங்கே உள்ளன:\nஇவை தனிநபர்களின் உண்மை மனப்பான்மை என்பதை நினைவில் வையுங்கள். எல்லாவற்றையும் மீறி, இந்த தொகை மிகவும் சுவாரஸ்யமானது மற்றும் நான் முடிக்கையில், அது மக்களுக்கு இடமாற்றம் செய்யப்படும் - எனவே உங்களுடைய நபருக்கும்.\nஇது கேள்விக்கு அப்பாற்பட்டது - HerSolution உடன் ஒரு சோதனை ஓட்டம், தெளிவாக பரிந்துரைக்கப்படுகிறது!\nHerSolution போன்ற உறுதியான HerSolution சந்தையில் ஒரு குறுகிய நேரத்தை HerSolution எரிச்சலூட்டுவதாக உள்ளது, ஏனென்றால் இயற்கையின் அடிப்படையான நிதியங்கள் இந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால், மற்ற உற்பத்தியாளர்களை அழுத்தம் கொடுக்கிறது. எனவே நீங்கள் ஒரு சரியான நேரத்தில் முடிவு எடுக்க வேண்டும், எனவே வாய்ப்பு இழக்க முடியாது.\nமுடிவானது: நம்மால் இணைக்கப்பட்ட விநியோகத்தின் மூலத்தில் தயாரிப்புகளைப் பெறுங்கள், அதை சட்டரீதியாக விலையில்லாமல் பெறமுடியும் வரை அதை முயற்சிக்கவும்.\nநேர்மையாக இருக்க, நடைமுறை முடிந்தவுடன் நீங்கள் தொடர்ந்து தொடர்ந்து இருக்கிறீர்களா? இந்த கேள்வியின் பதில் "இல்லை" என்பது வரை, நீங்களே உங்களை வேதனைக்குள்ளாக்கிக் கொள்வீர்கள், இருப்பினும், இந்த முறைகளில் ஈடுபடுவதற்கு போதுமான ஊக்கத்தை நீங்கள் பெற்றுள்ளீர்கள், உங்கள் உதவியின் உதவியுடன் உங்கள் இலக்கை அடையலாம்.\nஇந்த விஷயத்தை சமாளிப்பதற்கு முன்பே ஆலோசனை\nHerSolution ஒருவர் கவனமாக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும், இதுபோன்ற பயனுள்ள வழிமுறைகளைப் போலவே HerSolution மின்னல் வேகமாகத் தோன்றும்.\nபட்டியலிடப்பட்ட இணைப்புகள் அனைத்தையும் நான் வாங்கியிருக்கிறேன். எனவே பட்டியலிடப்பட்ட இணைப்புகள் மீது கட்டுரைகளை வரிசைப்படுத்த எப்போதும் எனது பரிந்துரையாகும், இதனால் நீங்கள் கட்டுரையின் அசல் உற்பத்தியாளர் நேரடியாக நேரடியாக வீழ்ச்சியடைவீர்கள்.\nHerSolution -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்க ஆர்வமா? அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஎனவே மறந்துவிடாதீர்கள்: குறைவான மரியாதைக்குரிய மூலங்களிலிருந்து HerSolution வாங்குவது ஒவ்வொரு முறையும் ஒரு வாய்ப்பாகும், எனவே, எல்லாவற்றையும் தவிர்க்கவும்.\nHerSolution இன் அசல் உற்பத்தியாளரின் இணைய HerSolution, நம்பகமான மற்றும் விவேகமான கொள்முதல் மீது கவனம் செலுத்துகிறது.\nஎனக்கு வழங்கிய இணைப்புகளுக்கு நன்றி, பேண்ட்ஸில் எதுவும் இல்லை.\nஅது ஒரு பெரிய தொகுதி வாங்குவதற்கு சிறப்பாக செலுத்துகிறது, எனவே நீங்கள் பணம் சேமிக்க மற்றும் நிலையான சீரமைக்க தடுக்க வேண்டும். இதற்கிடையில், ஒரு நிலையான நடைமுறை, ஒரு நிலையான வருமானம் மிகப் பெரிய வெற்றியை உறுதி செய்கிறது.
உள்ளாட்சித் தேர்தல் அதிர்ச்சி : காங்., விசிக, மதிமுகவுக்கு அல்வா! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News\nஉள்ளாட்சித் தேர்தல் அதிர்ச்சி : காங்., விசிக, மதிமுகவுக்கு அல்வா!\n21 September 2021, 9:08 pm\n2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டிலும் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக முஸ்லிம்லீக் உள்ளிட்ட ஒரு டஜன் கட்சிகள் தற்போதும் அதே அணியில் நீடிக்கின்றன.\n2019 டிசம்பர் மாதம் நடந்த 27 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்களிலும் இவை ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்தித்தன.\nஎஞ்சிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய9மாவட்டங்களுக்கும் அக்டோபர் மாதம்6மற்றும்9தேதிகளில் இரு கட்டாங்களாக தேர்தல் நடக்கிறது.\nதிமுக கூட்டணியின் முதல் உள்ளாட்சி தேர்தல்\nசட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு திமுக கூட்டணி சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பதால் அரசியல் களம் பரபரக்கிறது. ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய தலைவர், மாவட்ட கவுன்சிலர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், என9மாவட்டங்களில் பல ஆயிரம் பதவிகள் என்பதால், ஒட்டுமொத்தமாக அவற்றை கைப்பற்றிவிடவேண்டும் என்ற முனைப்புடன் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தேர்தல் பணியாற்றி வருகின்றன.\nஅதிமுகவை பொறுத்தவரை கூட்டணியில் பாஜக, தமாகா மற்றும் சிறு சிறு கட்சிகள் அப்படியே நீடிக்கின்றன. பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தாலும் கூட வட மாவட்டங்களில் நிலவும் கடும் போட்டியை கருத்தில்கொண்டு தற்போது அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் இடங்களை பகிர்ந்து கொள்ளும் மறைமுக முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.\nசெயல்படாத திமுக வாக்குறுதிகள்\nதேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில், நீட் தேர்வு ரத்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத்தொகை, கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு4ரூபாய் குறைப்பு, மின் கட்டணம் மாதாந்திர முறையில் வசூல் போன்ற நேரடியாக பயனளிக்கும் திட்டங்களை இதுவரை செயல்படுத்தாததால் அது இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இது தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று அதிமுக கூட்டணி நம்புகிறது.\nஅதேநேரம் உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் உள்ளன.\nதிமுகவைப் பொறுத்தவரை அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களே கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களை பங்கீடு செய்துகொள்ளலாம் என்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஒருபக்கம் வேட்புமனு தாக்கல் நடந்து கொண்டிருந்தாலும் கூட இன்னொரு பக்கம்\nஇடப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்கிறது.\nஇந்த உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்கு திமுக தலைமை 15 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் வைத்திருந்தது. ஆனால் வடமாவட்டங்களில் 10 சதவீத இடங்களை கூட திமுக மாவட்ட செயலாளர்கள் பகிர்ந்து கொள்ள முன்வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.5முதல்7சதவீத இடங்களை மட்டுமே ஒதுக்க முடியும் என்று திமுக மாவட்ட செயலாளர்கள் மிகக் கறாராக கூறிவிட்டனர், என்கிறார்கள்.\nகே.எஸ் அழகிரி கொதிப்பு\nஅதுவும் நான்கைந்து மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கு திமுக தரப்பில் இருந்து செமத்தியான கவனிப்பும் நடந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் காங்கிரசுக்கு2சதவீத இடங்கள் கூட கிடைக்கவில்லை என்கிறார்கள். இந்த தகவல் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் காதுகளுக்கு செல்ல அவர் கொதித்துப் போயுள்ளார்.\n15 சதவீத இடங்கள் கேட்டால்தான் 10 சதவீதமாவது கிடைக்கும் என்பது அவருடைய கணக்காக இருந்தது. அதற்கும் தனது கட்சிக்காரர்களே வேட்டு வைத்து விட்டதால் அவர் மனம் நொந்துபோய் இருக்கிறார்.\nஅதுவும் காங்கிரசுக்கு செல்வாக்கு உள்ளதாக கூறப்படும், திருநெல்வேலி தென்காசி மாவட்டங்களில் கூட இதுபோல நடந்து இருப்பதை அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.\nபரிதாப நிலையில் விசிக\nதிமுக கூட்டணியில் இன்னொரு பெரிய கட்சியான விசிகவின் நிலையோ இன்னும் பரிதாபம். அக்கட்சியின் தலைவர் திருமாவளவனிடம், திமுக மேலிடத் தலைவர்கள்5சதவீத இடங்களை ஒதுக்கி தருகிறோம் என்று உறுதியளித்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஒரு சில மாவட்ட திமுக செயலாளர்கள்2சதவீத அளவிற்கு மட்டுமே இடங்களை விசிகவுக்கு ஒதுக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதுவும் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் பற்றி மூச்சே விடவில்லை.\nசெல்வாக்கு இல்லாத கம்யூ.,\nஇதேபோல் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திருநெல்வேலியிலும் தென்காசியில் சில இடங்களை மட்டுமே திமுக பகிர்ந்து கொண்டிருக்கிறது. இந்த இரு கட்சிகளும் தலா\n5 சதவீத இடங்களை எதிர்பார்த்தன. ஆனால் மொத்தமாக2சதவீத இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nஅதுவும் வட மாவட்டங்களில், உங்கள் கட்சிகளுக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செல்வாக்கு இல்லை என்ற காரணம் வேறு கூறியதாக சொல்கிறார்கள். இதனால் இரு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் இது என்ன சோதனை? என்று மனதுக்குள் வேதனையோடு புலம்புகின்றனர் என்கிறார்கள்.\nமோசமான நிலையில் மதிமுக\nமதிமுகவின் நிலைமையோ படுமோசம். அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் பெயரளவுக்கு கூட பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்படவில்லை.\n“உங்க கட்சிதான் எங்களோட இணைஞ்சு ரெண்டு வருஷம் ஆச்சே. எதுக்கு உங்களுக்கு சீட்டு” என்று திமுகவினர் கிண்டல் வேறு செய்கிறார்களாம். திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் சில இடங்களை திமுக பகிர்ந்து கொண்டிருப்பதாக தாயகத்தில் பரபரப்பு பேச்சு அடிபடுகிறது. அப்படியென்றால் மற்ற6மாவட்டங்களிலும் ஓரிரு இடம் கூட மதிமுகவுக்கு ஒதுக்கப்படமாட்டாது என்பது உறுதியாகத் தெரிகிறது.\nதோழமை கூட்டணி கட்சிகளின் நிலை?\nஇந்தக் கட்சிகளின் பெயர்களாவது, திமுக கூட்டணி பேச்சு வார்த்தையில் அடிபடுகிறது. ஆனால்\nதமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி பற்றி எந்தத் தகவலும் இல்லை. இந்தக் கட்சிகளுக்கு அரை சதவீத இடம் கூட ஒதுக்கப்படவில்லை என்கிறார்கள்.\nஇப்படி திமுக கூட்டணியில் உள்ள அதன் பிரதான கட்சிகளுக்கு மிக மிகக் குறைவான இடங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு இருப்பதால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர் மாவட்டங்களில் கூட்டணி பேச்சுவார்த்தையில் கடும் இழுபறி நிலை காணப்படுகிறது. வேட்புமனு வாபஸ் வாங்கும் நாளுக்குள் இதற்கு தீர்வு காணப்படும் என்று காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டு கட்சிகள் நம்புகின்றன.\nதங்களுக்கு திமுக மேலிடம் ஒதுக்குவதாக கூறிய 15,5சதவீத இடங்களை திமுக மாவட்ட செயலாளர்கள் தர மறுப்பது கூட்டணிக்குள் சலசலப்பையும் முணுமுணுப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.\nஅரசியல் விமர்சகர்களின் கருத்து\nஅதேநேரம் அரசியல் விமர்சகர்களின் பார்வை இதில் வேறு விதமாக உள்ளது. இதுபற்றி அவர்கள் கூறும்போது, “திமுக தலைமையும் அதன் மாவட்ட செயலாளர்களும் தற்போது தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு இருப்பதற்கு சில காரணங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. முதலில் பாமக தனித்துப் போட்டியிடும் என்று வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பாமகவின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டணி இல்லாமல் ஜெயிப்பது கடினம் என்ற உண்மையான கள நிலவரத்தை உணர்ந்துள்ளனர். இதனால் தற்போது அவர்கள் அதிமுக-பாஜகவுடன் மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தி இடங்களைப் பகிர்ந்து கொள்ளும் மறைமுக நடவடிக்கையும் ஒருபக்கம் நடக்கிறது. இதை உணர்ந்துதான் திமுக, தனது கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்கத் தயங்குகிறது.\nமேலும் திமுக மாவட்டச் செயலாளர்கள், கூட்டணி கட்சிகளின் மாவட்டச் செயலாளர்களிடம் சாதுர்யமாக பேசி, நன்கு உபசரித்து அவர்களை சரிக்கட்டி 90 முதல் 95 சதவீத இடங்களில் திமுக போட்டியிடுவதற்கு வழி செய்துவிட்டனர், என்கிறார்கள்.\nபோட்டியில் விஜய் ரசிகர்கள்?\nநடிகர் விஜய்யின் ரசிகர் மன்ற நிர்வாகிகளும் தற்போது போட்டிக் களத்தில் குதித்து விட்டனர். அவர்கள் எல்லாக் கட்சி வேட்பாளர்களுக்கும் கடும் சவால் அளிக்கலாம் என்றும் திமுக மேலிடம் கருதுகிறது.\nபல இடங்களில் சுயேச்சைகளும், அரசியல் கட்சியினருக்கு இணையாக தங்களது பணம் பலத்தையும், சொந்த செல்வாக்கையும் வெளிப்படுத்தும் விதமாக உள்ளாட்சித் தேர்தலில் களம் இறங்குவார்கள். இது எல்லாக் கட்சிகளுக்குமே பெரும் சவாலாக இருக்கும்.\nஇப்படி போட்டி கடுமையாக இருப்பதால் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிடும் இடங்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை உறுதியாக கூற முடியாது. எனவேதான்\nதிமுக குறைந்தபட்சம் 90 சதவீத இடங்களில் போட்டியிட விரும்புகிறது.\nஅப்போதுதான் அடுத்து நடக்கவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களிலும் பெரும் வெற்றியைக் குவிக்க முடியும் என்று திமுக தலைமை கருதுகிறது.\nஇந்த நிலையில் நடிகர் கமல், டிடிவி தினகரன் போன்றோர் தங்களுக்கு மீண்டும் டார்ச்லைட், குக்கர் சின்னம் கிடைத்ததற்காக பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தனித்துப் போட்டியிடும் தேமுதிகவும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறது. இந்தக் கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர்களில் எத்தனை பேர் கடைசி வரை தேர்தல் களத்தில் இருப்பார்கள் என்பது கேள்விக்குறியான ஒன்று.\nஏனென்றால் உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களை விலைக்கு வாங்குவது சர்வ சாதாரணமாக நடக்கக் கூடிய நிகழ்வாகும். தேர்தல் முடிவுகள் வெளியாகும்போதுதான் யார் யார் களத்தில் இருந்தார்கள் யார், யார்? ஒதுங்கிக் கொண்டார்கள் என்பதெல்லாம் வெளிச்சத்துக்கு வரும். அதனால் சிறு, சிறு கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இந்த உள்ளாட்சி தேர்தல் ஒரு ஜாக்பாட்தான்” என்று அவர்கள் எதார்த்த நிலையை குறிப்பிட்டனர்.\nViews: - 447\nTags: அரசியல், ஊரக உள்ளாட்சி தேர்தல், திமுக, திமுக கூட்டணிக்கு அல்வா\nPrevious பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: உடல் கருகி இரண்டு பெண்கள் பலி!!!\nNext ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல்:அதிபர் புதின் கட்சி அமோக வெற்றி
வாக்குக்கு கட்டுப்பட்ட மழை! ஆச்சார்யாள் மகிமை! - தினசரி தமிழ்\n14/06/2021 8:49 AM\nமே 1, 1979 அன்று சிருங்கேரியில் நடைபெற்ற சதுரம்னாய சம்மலனத்திற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி, ஒன்றாக அமர்ந்திருந்த நான்கு ஜகத்குருக்களின் வரலாற்று சந்திப்பைக் காண ஆவலுடன் இருந்தனர்.\nஆனால் இடியுடன் கூடிய மழையை அச்சுறுத்தும் இருண்ட மேகங்களால் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிகழ்வை ரசிக்க அனைத்து தேவர்களும் கூடியிருந்ததைப் போல இருந்தது. ஆனால் எங்களில் சிலர் கூடிவந்த மேகங்களைப் பார்த்து பயந்து, ஆச்சார்யாளிடம் தங்கள் கவலையை வெளிப்படுத்தினர்.\nஆச்சார்யாள் தடையில்லாமல் இருந்தார், அவர் ஆற்றைக் கடக்கும்போது, ​​வானத்தைப் பார்த்து, சர்வவல்லவர் சுப நடவடிக்கைகளுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்த மாட்டார் என்று எங்களுக்கு உறுதியளித்தார்.\nஅன்று மேகங்களைப் பார்த்த அனைவருக்கும், ஒரு சொட்டு மழை கூட வரவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. ஒரு இனிமையான காற்று மட்டுமே இருந்தது.\nமற்றொரு சம்பவத்தில், ஸ்ரீ காஷி ஐயர் (இந்தியா சிமெண்ட்ஸ்) ஆச்சார்யாளின் ஆசீர்வாதங்களுடன் கல்லடைக்குரிச்சியில் அதிருத்ரம் நடத்த முயன்றார்.\nஇது மழைக்காலம், ஆனாலும் ஒவ்வொரு ஏற்பாடும் பக்தியுடன் மேற்கொள்ளப்பட்டது. முதல் நாளில், சங்கல்பமும் ஜபமும் எந்த பிரச்சனையும் இல்லாமல் நன்றாக சென்றது.\nஜபம், ஹோமம், உணவளித்தல் போன்றவற்றுக்கு மிகப்பெரிய பந்தல்கள் அமைக்கப்பட்டன. முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டாலும், மூன்று நாட்கள் பெய்த கனமழைக்குப் பிறகு, பக்தர்கள் கவலையுடன் இருந்தனர்.\nபந்தலைக் காப்பாற்ற எதுவும் செய்யமுடியாத நிலையில், பலத்த மழை அதிருத்ரம் நடக்க அனுமதிக்காது என்று தோன்றியபோது, ​​காஷி ஐயர் ஆச்சார்யாளின் ஆசீர்வாதங்களை நாடினார், அது மட்டுமே நிலைமையைக் காப்பாற்ற முடியும்.\nஆச்சார்யாள் புன்னகையுடன் அவரிடம், “கவலைப்பட வேண்டாம். சிவபெருமான் தனது பக்தர்கள் ஹோமம் மற்றும் ஜபத்தை நேர்மையுடனும், தன்னலமற்ற தன்மையுடனும் உலக நலனுக்காகச் செய்யும்போது சோதிக்க மாட்டார்கள்.\nஅடுத்த நாள் முதல் அதிருத்ரத்தின் இறுதி வரை வானம் தெளிவாகவும், வெயிலாகவும் இருந்தது.\nசுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான மழை பெய்தது மற்றும் விவசாயிகள் பெரிதும் பயனடைந்துள்ளனர் என்றும் அறியப்பட்டது.
குஜராத்திலும் நீட் தேர்வுக்கெதிராக மாணவர்கள் போராட்டம் – தமிழ் வலை\nHomeSlideகுஜராத்திலும் நீட் தேர்வுக்கெதிராக மாணவர்கள் போராட்டம்\n/அனிதாகுஜராத்நீட் எதிர்ப்புநீட் தேர்வுபாஜகமருத்துவக்கல்லூரி\nகுஜராத்திலும் நீட் தேர்வுக்கெதிராக மாணவர்கள் போராட்டம்\nஇந்தப் போராட்டம் தற்போது குஜராத்திலும் ஆரம்பித்துள்ளது. நீட்’ தேர்வு வேண்டவே வேண்டாம், மாநிலக் கல்வித் திட்டத்தின் கீழ்தான் தேர்வு வேண்டும் என்று கூறி பாஜக ஆளும் – குஜராத்தில் மாணவர்கள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.\nநீட் தேர்வில் ஆங்கில வழிக்கும் குஜராத்தி வழிக்கும் தனித்தனி வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. இதில் ஆங்கில வழியில் கேட்கப்பட்ட கேள்விகள் சுலபமாகவும், குஜராத்தி வழியில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாகவும் இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்களால் சொல்லப்படுகிறது.\nகுஜராத்தின் அரோல்லி பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். மருத்துவக் கல்லூரியில் சேரும் ஆசையுடன் இரவும் பகலும் படித்து 92% மதிப்பெண் 12ஆம் வகுப்பில் வாங்கிய அவரால் நீட் தேர்வில் 292/700 மதிப்பெண் தான் வாங்க முடிந்தது.\nஅவருடைய தகுதி (ரேங்க்) 3881 ஆனதால் அவர் மருத்துவக் கனவு நிராசை ஆனது. அவருக்கு புஜ் நகரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் ரூ. 17 லட்சம் கொடுத்தால் இடம் தர நிர்வாகம் தயாராக இருந்தது. ஒரு ஏழை விவசாயியின் மகனால் அவ்வளவு பணம் புரட்ட முடியாததால் அந்த இடமும் பறிபோனது.\nகுஜராத்தி வழியில் தனியாகவும், ஆங்கில வழியில் தனியாகவும் தகுதிப் பட்டியல் போடும்படி மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்கள் கோரிக்கையைக் கண்டு கொள்ளாமல் ஒரே தர வரிசைப் பட்டியலை அரசு வெளியிட்டு, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.\nஇவரைப் போல வேறு பல மாணவர்களும் உள்ளனர். கிராமப்புற மாணவர்களான அவர்கள் அகமதாபாத் நகருக்குச் சென்று நீட் தனிப்பயிற்சி நிறுவனங்களில் படிக்கப் போவதாகச் சொல்கிறார்கள். அதே நேரத்தில், நீட்டில் குறைந்த மதிப்பெண் எடுத்த ஹனி படேல் என்னும் மாணவி, “குஜராத் அரசுப் பள்ளியில் படிப்பதால் எந்தப் பயனும் இல்லை. கிராமப்புற குஜராத்தி வழி மாணவர்களுக்கு தனிப்பயிற்சியகங்களில் படிக்கச் செலவு செய்ய வேண்டியுள்ளது. தவிர தரமான தனிப் பயிற்சியகங்கள் என்பதும் இந்த மாநிலத்தில் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன. தனி தரவரிசைப் பட்டியல் போடாமல் அரசு எங்களை ஏமாற்றி விட்டது. நான் இப்போது என் டாக்டர் கனவுக்காக ஹோமியோபதி கல்லூரியில் சேர்ந்துள்ளேன்” எனக் கூறினார்.\nமேலும் பல மாணவர்களும், குஜராத்தி வழி தனி தேர்வுத்தாள் தந்ததற்குத் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். பலர் சரியான பயிற்சியகங்கள் இல்லாததால் ஒரு வருடம் காத்திருந்தாலும் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாது என்னும் எண்ணத்தில் உள்ளனர். அவர்களின் ஒட்டு மொத்தக் கருத்து, மருத்துவக் கல்லூரிக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்ணை மட்டுமே கணக்கில் எடுக்க வேண்டும். நீட் தேர்வே வேண்டாம் என்பதுதான்.\nதமிழகம் மட்டும்தான் எதிர்க்கிறது என்று சொல்பவர்கள் இதைக்கவனிப்பார்களாக.\nTags:அனிதாகுஜராத்நீட் எதிர்ப்புநீட் தேர்வுபாஜகமருத்துவக்கல்லூரி\nநீட் எதிர்ப்புப் போராட்டம் – தினகரனைத் தொடர்ந்து கிருஷ்ணப்பிரியாவும் இரத்து செய்தார்\nதிருமணத்தாம்பூலமாக அரிய புத்தகங்கள் – கோவையில் நடந்த புதுமை
தமிழக பள்ளி மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு – சூரிய ஒளியில் இயங்கும் இஸ்திரி வண்டிக்கு ஸ்வீடன் விருது – Malaysiakini\nசிறப்புக் கட்டுரைகள்டிசம்பர் 2, 2020\nதமிழக பள்ளி மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு – சூரிய ஒளியில் இயங்கும் இஸ்திரி வண்டிக்கு ஸ்வீடன் விருது\nசூரிய ஒளி மூலமாக இயங்கும் நடமாடும் இஸ்திரி வண்டியை வினிஷா உமாசங்கர் என்ற 14 வயது மாணவி கண்டுபிடித்துள்ளார். மாணவியின் இந்த கண்டுபிடிப்பிற்கு ஸ்வீடன் நாட்டில் ‘மாணவர் பருவநிலை விருது’ கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த விருதானது, சுற்றுச்சூழல்-பருவநிலை பிரச்னைகளுக்கு வருங்கால தலைமுறையினர் நன்மைக்காக புதிய தீர்வுகளைக் கண்டுபிடிக்கும் 12 முதல் 17 வயது வரை உள்ள மாணவர்களை ஊக்குவிக்க வழங்கப்படும் சர்வதேச விருதாகும்.\nதிருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியைச் சேர்த்த உமாசங்கர், சங்கீதா என்ற தம்பதியின் மகளான வினிஷா உமாசங்கர், தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்குச் சிறு வயது முதலே அறிவியலின் மீது அதிக ஈடுபாடு இருந்து வருகிறது.\n“என்னுடைய 5வது பிறந்தநாளின் பொது எனது பெற்றோர் விண்வெளி கலைக்களஞ்சியம் பற்றிய புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கினர். அதைப் படித்ததிலிருந்து எனக்கு அறிவியலின் மீது ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியது. அதை தொடர்ந்து சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை குறித்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆர்வம் காட்டினேன்” என்று கூறுகிறார் மாணவி வினிஷா உமாசங்கர்.\nஎதற்காக இந்த கண்டுபிடிப்பு?\n“சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அனைத்தையும் படித்துத் தெரிந்து கொண்டதன் மூலம் எனது 12 வயதில், சூரிய சக்தி மூலமாக இயங்கும் இஸ்திரிப் பெட்டி தயாரிப்பதற்கான யோசனை வந்தது. குறிப்பாக, இந்த யோசனையானது ஒரு நாள் பள்ளி முடிவடைந்து, வீட்டிற்கு வந்துகொண்டிருந்த போது, சாலையோரங்களில் சலவை தொழிலாளர்களைக் கண்டேன். அவர்கள் இஸ்திரி செய்வதற்கான கரியைச் சாலையில் காய வைத்துக் கொண்டிருந்தனர்.\nகாய வைத்த அந்த கரித் துண்டுகளை இஸ்திரி செய்வதற்குப் பயன்படுத்திய பிறகு, அதனை குப்பையில் போடுவதைக் கவனித்தேன். இதை அவர்கள் தினமும் செய்வதைக் கண்டேன். இதுபோன்று கரி பயன்படுத்துவதால் நிறையப் பிரச்னைகள் ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்து, இதனால் சுற்றுச் சூழலுக்கும், மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் சுவாச பிரச்னைகள் வருகின்றன என்பதை அறிந்தேன்.\nமரத்தை வெட்டி எரித்துத் தான் இந்த கரியைத் தயாரிக்கின்றனர். இதனால் காடுகளில் இருக்கும் மரங்கள் அழிக்கப்படுகின்றன. மேலும் காற்று, நிலம், நீர் அனைத்துமே மாசுபடுகிறது. இதன் எதிரொலியாக பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. ஆகவே இந்த கரி உற்பத்தி செய்வதை எப்படியாவது நிறுத்தவேண்டும் என்பதற்காகவே சூரிய சக்தி மூலமாக இயங்கும் இஸ்திரி வண்டி(Solar Ironing Cart) என்ற திட்டத்தை உருவாக்கினேன்,” என்கிறார் வினிஷா உமாசங்கர்.\nசூரிய ஒளி இஸ்திரி வண்டியின் பயன்பாடு\nகரியைச் சூடு ஏற்படுத்துவதாகத் தான் பயன்படுத்துகின்றனர். அதனால் சூரிய ஒளி மூலம் பெறப்படும் சக்தியை, சூரிய தகடுகள்(Solar Panels) மூலமாகப் பெற்று அதை வண்டியில்பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரியில் சேமிக்க முடியும். பிறகு, பேட்டரியிலிருந்து நேரடியாக வெப்பம் இஸ்திரிப் பெட்டிக்குச் செல்கிறது. இந்த முறையானது நேரடி சக்தியில்(Direct Current) இயங்குவதால் மின் சக்தி குறைவாகப் பயன்படுத்தப்பட்டு, நீண்ட நேரம் மின் சக்தி நீடிக்க உதவுவதாக கூறுகிறார் மாணவி.\n“இதுபோன்று சலவை தொழில் செய்பவர்கள் தினமும் ரூபாய் 700 முதல் 1000 வரை கரி வாங்குகின்றனர். இதனால் அவர்களுடைய அன்றாட வருமானத்தில் பெருமளவு தொகையைக் கரி வாங்குவதில் செலவிடுகின்றனர். இவர்களைப் போன்ற தொழிலாளர்கள் சூரிய ஒளி மூலம் இயங்கும் இஸ்திரி வண்டியை ஒரு முறை வாங்கினால், குறைந்தபட்சம் 8 வருடங்கள் அவர்களது வருமானத்தை மிச்சப்படுத்தலாம். இதற்கிடையில் இந்த இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால் உள்ளூர் எலெக்ட்ரிசன் உதவியுடன் இதனைச் சரி செய்து கொள்ளலாம்,” என்று கூறுகிறார்.\nஇந்த திட்டத்திற்காக 2019 ஆண்டு “டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் இக்னைட் விருது”, இதையடுத்து சிறந்த பெண் கண்டுபிடிப்பாளர் பிரிவில் “டாக்டர் பிரதீப் பி தேவனூர் விருது” வினிஷாவுக்கு கிடைத்துள்ளன.\n“இந்த ஆண்டு ஸ்வீடன் நாட்டின் குழந்தைகள் பருவநிலை விருது வாங்கினேன். இந்த விருதுக்கு நான் தேர்வான போது, இந்த முயற்சியின் பயன்பாடு திருவண்ணாமலை மட்டுமின்றி இந்திய அளவில் மட்டுமே பயன்படும் என்றிருந்தனர். ஆனால் இந்த கரி பயன்பாட்டைக் குறைந்துவிட்டால் கற்று மாசுபாடு குறையத் தொடங்கிவிடும். ஆகவே காற்று மாசுபாடு கொஞ்சம் குறைத்தாலுமே இதன் தாக்கம் உலகம் முழுவதும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைச் சுட்டிக்காட்டி விருது வழங்கும்போது என்னைப் பாராட்டினர்,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் மாணவி வினிஷா உமாசங்கர்.\nமாணவியின் தனிப்பட்ட முயற்சி\nஇந்த யோசனையும், இதற்கான திட்டத்தை உருவாக்கியது அனைத்துமே எனது தனி முயற்சியால் கொண்டு வரப்பட்டது. ஆனால் எனது இந்த முயற்சிக்கு எனது பெற்றோர் துணையாக இருந்து எனக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுத்தனர். அறிவியல் தொடர்பான புத்தகங்களை வாங்கிக்கொடுப்பது, அறிவியல் தொடர்பாக எனக்கு எழும் சந்தேகங்களை பெற்றோரிடம் கேட்பேன். அதற்கான விடையை எப்படியாவது ஆராய்ந்து எனக்கு தெரிவித்து விடுவார்கள். இந்த தாக்கம் தன்னை சர்வதேச அளவுக்கு கொண்டு வந்துள்ளதாக வினிஷா பெருமிதம் கொள்கிறார்.\n“திருவண்ணாமலையில் இருந்து சூரிய சக்தி மூலமாக ஒரு இஸ்திரி வண்டியைச் செய்ய முடிவெடுத்த பிறகு அதற்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் இங்கே கிடைக்கவில்லை. அதனால் எனது முயற்சிக்கான திட்டத்தை முதலில் கோட்பாடு முறையில்(Theory Based) உருவாகினேன். அதாவது இதை எப்படி உருவாக்குவது என கூகுள் செய்தும், நிறையப் புத்தகங்களை படித்தும் இதற்கான திட்டத்தை வடிவமைத்தேன்.\nஇதை உருவாக்க எனக்கு7மாதங்கள் ஆகின, எனது 7ஆம் வகுப்பு முடிக்கும் பொழுது இந்த திட்டத்தை உருவாக்கத் தொடங்கினேன். பிறகு இந்த திட்டத்தை வெளியே கொண்டுவரக் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக் காலம் ஆகியது. எனது திட்டத்தைத் தேசிய அளவிலான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் சமர்ப்பித்தபோது, இதற்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்ப்பாக்கவில்லை,” என்று கூறுகிறார் வினிஷா.\nதற்போது இந்த திட்டத்திற்குக் காப்புரிமை பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறும் வினிஷா, இந்த ஆண்டு இறுதிக்குள் அதற்கான காப்புரிமை கிடைத்துவிடும் என்கிறார்.\nகுழந்தைகள் எந்த ஒரு முயற்சி செய்தாலும் அதைச் சிறிது, பெரிது என்று வேறுபாட்டிற்குக் கொண்டு செல்லாமல், அனைத்தையும் ஒரே மாதிரியாக பார்க்கும் மனநிலை பெற்றோருக்கு வர வேண்டும் என்கிறார் மாணவியின் தந்தை உமாசங்கர்.\n“மாணவர்களுக்குப் பொருளாதார ரீதியாக உதவியாக இருக்க வேண்டும் என்பது இல்லை. அவர்களது முயற்சியை ஊக்கப்படுத்தி துணையாக உடன் இருந்தாலே போதுமானது. ஆகவே நமது பிள்ளை செய்யக்கூடிய சிறிய சிறிய முயற்சிகளை ஊக்குவிக்கும் போது, அது பெரிய அளவில் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.\nமாநில அளவிலும், தேசிய அளவிலும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான போட்டி வரும் பொழுது அதை முன் கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்வேன். அதாவது, அடுத்த ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்தில் வர இருக்கும் போட்டிகளின் தன்மையை ஆராய்ந்து அதற்கென அனைத்து ஏற்பாடுகளையும் எனது மகளுக்குச் செய்து கொடுப்பேன். இதன் மூலமாக போட்டியின் முக்கியத்தை அறிந்து அதற்கென பிரத்யேகமாக தமது திட்டத்தை வகுப்பது பெரிதும் பயனுள்ளதாக அமைகிறது,” என்று கூறுகிறார் தந்தை உமாசங்கர்.\nமாணவி வினிஷா, சூரிய ஒளி இஸ்திரி வண்டியை கண்டுபிடித்ததற்காக ஸ்வீடன் நாட்டில் துணை பிரதமர் இசபெல்லா லோவின் பங்கு பெற்ற காணொளி நிகழ்வில் ஸ்வீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சார்பில் இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருதில் பட்டம், பதக்கம் மற்றும் இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 8.5 லட்சம் ரொக்கம் வழங்கப்பட்டது.\nவினிஷா விருது பெற்றதற்கு மகிழ்ச்சியையும், பாராட்டுதலையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nநன்றி – நடராஜன் சுந்தர் பிபிசி தமிழ் 20 நவம்பர் 2020