id
stringlengths
9
9
context
stringlengths
176
49.8k
question
stringlengths
19
121
answer_text
stringlengths
1
286
answer_start
int64
0
41k
language
stringclasses
2 values
a26e727ff
மிகப் பெரிய மெய்க்கருவுயிரி உயிரினக் குழுக்களில் பூஞ்சை</b>களும் (Fungii) (இலங்கை வழக்கு:, பூஞ்சணம், பூசணம், பங்கசு) ஒன்று. தற்போதைய பாகுபாட்டியலின் அடிப்படையில், பூஞ்சைகள் ஒரு தனி இராச்சியமாக வகைப்படுத்தப்படுகின்றன. வளமற்ற மண்ணும், தாவர, விலங்கு கழிவுகளும் இவற்றின் தாக்கத்தால் மாற்றமடைந்து, நிலத்துடன் சேர்வதால் நிலவளம் அதிகரிக்கிறது. தொடக்கத்தில் தாவர இராச்சியத்தைச் சேர்ந்ததாகக் கருதப்பட்ட பூஞ்சைகள், பின்னர் தாவரங்கள், விலங்குகள் போலத் தனிப்பெரும் உயிர் இராச்சியமாக வகைப்படுத்தப்பட்டன. பூமியில் எல்லா வகை சுற்றுச்சூழல்களிலும் பூஞ்சைகள் காணப்படுகின்றன. இவை இருண்ட, ஈரப்பசை நிரம்பிய இடங்களிலும் கனிம ஊட்டப்பொருட்கள் நிறைந்த வளர்தளங்களிலும் வளர்கின்றன. பல முக்கியமான ஒட்டுண்ணி வாழ்வை மேற்கொள்ளும் உயிரினங்கள், மற்றும் சிதை மாற்றம் செய்யும் உயிரினங்கள் பூஞ்சை இராச்சியத்தில் உள்ளன. பூஞ்சைகள் பச்சையம் அற்ற மெய்க்கருவுயிரி (யூக்காரியோட்டிக்) உயிரினங்கள். இவை தாவரங்களைப் போலச் சுவருடைய உயிரணுக்களை உடையனவாகக் காணப்பட்டாலும், இவற்றில் பச்சையம் இல்லை. இப்பூஞ்சைகளினால் ஏற்படும் வேதிவினை மாற்றங்கள், சுற்றுப்புறத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. பூஞ்சைகளைப் பற்றிய அறிவியல் பிரிவு பூஞ்சையியல் (mycology) எனப்படுகிறது. பூஞ்சைகள் பொதுவாகக் கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கும். எனினும் காளான்களாக இவை விருத்தியடையும் போது கண்ணுக்குத் தென்படுகின்றன. ஏனைய நுண்ணியிர்கள் போலவே இவற்றிலும் மனிதர்களுக்குப் பயனுடையவை, பயனற்றவை, தீமையானவை என உள்ளன. கன்டிடயாசிஸ் போன்ற நோய்களுக்கு இவை காரணமாகின்றன; உணவைப் பழுதடையச் செய்கின்றன. எனினும் பெனிசிலின் போன்ற முக்கியமான நுண்ணியிர்க்கொல்லிகளை உற்பத்தி செய்யப் பயன்படுகின்றன. பூஞ்சைகள் பல தாவரங்களுடனும், வேறு உற்பத்தியாக்கிகளுடனும் ஒன்றியவாழிகளாக வாழ்கின்றன. இலைக்கன் (அல்கா-பூஞ்சை அல்லது சயனோபக்டீரியா-பூஞ்சை கூட்டணி) இதற்கு மிக முக்கியமான உதாரணமாகும். மரங்களின் வேர்களில் கனியுப்பு அகத்துறிஞ்சலுக்கு இவை ஒன்றியவாழிகளாகச் செயற்பட்டு உதவுகின்றன. பூஞ்சைகளின் பண்புகள் பூஞ்சைகள் உயிரியல் வகைப்பாட்டில் தனி இராச்சியமாகக் கருதப்படுகின்றன. முற்காலத்தில் தாவரங்களுடன் வகைப்படுத்தப்பட்டிருந்தாலும் தற்போது பூஞ்சைகளின் தனித்துவமான இயல்புகள் கண்டறியப்பட்டுள்ளதால் இவை தனி இராச்சியமான Fungii</i>க்குள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பூஞ்சைகள் பிற போசணிகளாகும். இவற்றால் சுயமாக உணவை உற்பத்தி செய்ய முடியாது. பூஞ்சைகள் மெய்க்கருவுயிரிகளாகும். இவற்றின் கலங்களில் உண்மையான, மென்சவ்வால் சூழப்பட்ட கரு/கருக்கள் உள்ளன. இவற்றின் கலங்களில் தாவரக் கலத்தைப் போல புன்வெற்றிடம் உள்ளது. கைட்டின் மற்றும் குளுக்கான்களாலான கலச்சுவரைக் கொண்டது. (தாவரக் கலச்சுவர் அனேகமாக செல்லுலோசால் ஆனது) L-லைசின் அமினோ அமிலத்தைத் தொகுக்கும் ஆற்றலுடையன. ஹைப்பே (பூஞ்சண இழை) எனப்படும் நீண்ட இழை போன்ற பல கருக்களைக் கொண்ட கலங்களாலானவை பூஞ்சைகள் பச்சையவுருமணிகளைக் கொண்டிருப்பதில்லை. உடற்கூற்றியல் அனேகமான பூஞ்சைகள் பூஞ்சண இழைகளாக (hyphae) வளர்கின்றன. பூஞ்சண இழைகள் 2–10µm விட்டமும் சில சென்டிமீட்டர்கள் நீளமுடையனவாகவும் வளர்கின்றன. பல பூஞ்சண இழைகள் ஒன்று சேர்ந்து பூஞ்சண வலையை (mycelium) ஆக்குகின்றன. பூஞ்சைகள் பூஞ்சண இழையை நீட்சியடையச் செய்வதன் மூலம் வளர்ச்சியடைகின்றன. வளர்ச்சி இழையுருப்பிரிவு மூலம் நிகழ்கின்றது. கருப்பிரிவு நிகழ்ந்து புதிய கருக்கள் உருவாக்கப்பட்டாலும், அக்கருக்களுக்கிடையிலான பிரிசுவர் (septum) முழுமையாக அவற்றைப் பிரிக்காததால் பூஞ்சைகள் அடிப்படையில் பொதுமைக் குழியக் கட்டமைப்பைக் காட்டுகின்றன. அதாவது (இனப்பெருக்கக் கட்டமைப்புக்களைத் தவிர) ஒரு பூஞ்சணத்தில் உடல் முழுவதும் ஒரே தொடர்ச்சியான குழியவுருவால் நிரப்பப்பட்டுள்ளது. இதனால் இனப்பெருக்கக் கட்டமைப்புக்களைத் தவிர வேறு வகையான இழைய வியத்தம் பூஞ்சைகளில் தென்படுவதில்லை. புதிய பூஞ்சண இழைகள் பழைய பூஞ்சண இழைகள் கிளை விடுவதன் மூலம் உருவாகின்றன. அனேகமான பூஞ்சைகள் பல்கல (உணமையில் பல்கரு) அங்கத்தவர்களென்றாலும், மதுவம் என்னும் கூட்டப் பூஞ்சைகள் தனிக்கல பூஞ்சணங்களாக உள்ளன. சில பூஞ்சணங்கள் தமது அகத்துறிஞ்சல் முறைப் போசணையை நிறைவேற்றுவதற்காக பருகிகள் (haustoria) என்னும் கட்டமைப்புக்களைக் கொண்டுள்ளன. இவற்றின் பூஞ்சண இழையினுள் பல சிறு புன்வெற்றிடங்கள் உள்ளன. இப்புன்வெற்றிடங்கள் தாவர புன்வெற்றிடம் புரியும் தொழிலையே புரிகின்றன. இதனைத் தவிர சாதாரண மெய்க்கருவுயிரி (யூக்கரியோட்டா) கலத்திலுள்ள அனைத்துப் புன்னங்கங்களும் பூஞ்சண இழைகளில் உள்ளன. இவை பொதுவாக காற்றுவாழிகள் (மதுவம் போன்றவற்றைத் தவிர்த்து) என்பதால் இவற்றில் இழைமணிகள் பல காணப்படும். பேசிடியோமைக்கோட்டா அங்கத்தவர்களின் இனப்பெருக்கக் கட்டமைப்புக்கள் நன்றாக வளர்ச்சியடைந்து வெற்றுக் கண்களுக்குப் புலப்படும் காளான் பூஞ்சணத்தை ஆக்குகின்றன. சில கைற்றிட் பூஞ்சைகளைத் தவிர ஏனைய பூஞ்சண இனங்களில் சவுக்குமுளை காணப்படுவதில்லை. வளர்ச்சியும் உடற்றொழிலியலும் பூஞ்சணங்களின் உடற்கட்டமைப்பு அவற்றின் போசணை முறைக்கமைய இசைவாக்கமடைந்துள்ளது. இவை இழையுருவான கட்டமைப்பைக் கொண்டுள்ளதால் இவற்றின் மேற்பரப்பு கனவளவு விகிதம் மிகவும் உயர்வாகும்; இதனால் பூஞ்சைகள் மிக அதிகமான அகத்துறிஞ்சல் வினைத்திறனைக் கொண்டுள்ளன. அனேகமானவை அழுகல்வளரிகளாகவும், பிரிகையாக்கிகளாகவும், சில ஒட்டுண்ணிகளாகவும், சில ஒன்றிய வாழிகளாகவும் உள்ளன. அனைத்துப் பூஞ்சணங்களும் அவற்றின் உணவின் மீதே வளர்வனவாக உள்ளன. தாம் வளரும் வளர்ச்சியூடகம்/ உணவு மீது நீர்ப்பகுப்பு நொதியங்களைச் சுரக்கின்றன. இந்நொதியங்கள் அவ்வுணவு மீது தொழிற்பட்டு அவ்வுணவு நீர்ப்பகுப்படைந்து குளுக்கோசு, அமினோ அமிலம் போன்ற எளிய உறிஞ்சப்படக்கூடிய வடிவத்துக்கு மாறுவதை ஊக்குவிக்கும். இவ்வெளிய சேதனப் பதார்த்தங்களை உள்ளெடுத்து பூஞ்சணம் வளர்ச்சியடைகின்றது. பூஞ்சணங்களின் நொதியங்கள் பல்சக்கரைட்டுக்கள், புரதம், இலிப்பிட்டு என அனைத்து வகை உயிரியல் மூலக்கூறுகளிலும் செயற்படக் கூடியது. பாக்டீரியாக்களைத் தாக்கியழிக்கப் பயன்படும் நுண்ணுயிர்க் கொல்லிகளால் இவற்றை அழிக்க முடியாது. பூஞ்சணங்கள் உயர் வளர்ச்சி வீதமுடையவை. இதனாலேயே இரவோடிரவாக ஒரே நாளில் காளான் வளர்ந்திருப்பதை அவதானிக்கலாம். பூஞ்சணங்கள் தாம் உள்ளெடுக்கும் உணவின் ஒரு பாகத்தைத் தம் வளர்ச்சி, இனப்பெருக்கத்துக்குப் பயன்படுத்தி மீதியை கிளைக்கோஜன் மற்றும் எண்ணெய்ச் சிறுதுளிகளாகச் சேமிக்கின்றன. இனப்பெருக்கம் பூஞ்சணங்கள் இலிங்க முறை மற்றும் இலிங்கமில் முறையில் இனம்பெருகுகின்றன. அனேகமானவை இரு முறைகளையும் மேற்கொண்டாலும் சில இனங்கள் இலிங்க முறை இனப்பெருக்கத்தை மேற்கொள்வதில்லை. இலிங்கமில் முறை இனப்பெருக்கம்: பதிய வித்திகள் (conidia) மூலம் பிரதானமாக இலிங்கமில் இனப்பெருக்கம் நிகழ்கிறது. இதனைத் தவிர துண்டுபடல் இழையுருவான பூஞ்சணங்களில் நிகழும். அதாவது புற விசைகலால் பூஞ்சண வலை சேதமுறும் போது, ஒவ்வொரு துண்டமும் புதிய பூஞ்சணமாக வளர்ச்சியடையும் ஆற்றலுடையது. மதுவம் போன்ற தனிக்கல பூஞ்சணங்களில் அரும்புதல் (budding) மூலம் இலிங்கமில் இனப்பெருக்கம் நிகழும். தனியே இலிங்கமில் இனப்பெருக்கத்தை மாத்திரம் காட்டும் பூஞ்சணங்கள் டியூட்டெரோமைக்கோட்டா (Deuteromycota) எனும் பூஞ்சணக் கூட்டமாக வகைப்படுத்தப்படுகின்றன. இலிங்க முறை இனப்பெருக்கம்: அனேகமான பூஞ்சணங்கள் ஒடுக்கற்பிரிவுடன் கூடிய இலிங்க முறை இனப்பெருக்கத்தை மேற்கொள்கின்றன. பூஞ்சணங்களின் வாழ்க்கை வட்டத்தில் பொதுவாக ஒரு மடிய (n), இருகருக்கூட்ட அவத்தை(n+n), இருமடிய நிலைகள்(2n) உள்ளன. வெவ்வேறு பூஞ்சைக் கூட்டங்களில் வெவ்வேறு நிலை ஆதிக்கம் செலுத்துவதாக உள்ளது. கைற்றிட் பூஞ்சணத்தில் இருகருக்கூட்ட அவத்தை காணப்படுவதில்லை. காளான் இருகருக்கூட்ட அவத்தை உடைய இனப்பெருக்கக் கட்டமைப்பாக உள்ளது. இவை நுகவித்தி (Zygospore), கோணி வித்தி (ascospore), சிற்றடி வித்தி (basidospore), இயங்கு வித்தி (zoospore) என பல்வேறு இலிங்க முறை இனப்பெருக்கக் கட்டமைப்புக்களைக் காட்டுகின்றன. உதாரணமாக ஒரு காளானின் குடை</i>யின் அடிப்பாகத்தில் நுணுக்குக்காட்டியினூடாக பல சிற்றடிகளையும், சிற்றடி வித்திகளையும் அவதானிக்கலாம். (இரு கருக்கூட்ட அவத்தை என்பது கருக்கட்டலின் போது உடனடியாக கருக்கட்டலில் ஈடுபடும் புணரிக் கருக்கள் (ஒருமடியம்-n) ஒன்றிணையாமல் ஒரு கலத்தினுள்ளேயே இரண்டும் சேர்ந்திருக்கும் (n+n) நிலை) இலிங்க முறை இனப்பெருக்கத்தின் போது முதலில் நேர் மற்றும் எதிர் குல பூஞ்சண இழைகளின் இணைதல் (conjugation) நிகழும். இவற்றின் இணைதலைத் தொடர்ந்து உடனடியாகக் கருக்கட்டல் நிகழ்வதில்லை. முதலில் குழிவுருப் புணர்ச்சி இடம்பெற்று இரு கருக்கூட்ட அவத்தை ஆரம்பமாகும். அதன் முடிவிலேயே கருப்புணர்ச்சி இடம்பெறும். பூஞ்சைகளின் வகைபாடு யூனிகோன்டா அமீபோசோவாஆபிஸ்தகோன்டா அனிமேலியா கொயேனோசோவா நியூக்ளியரீட்ஸ் ரோசெல்லிடாபூஞ்சை மைக்ரோஸ்போரிடியா கைட்ரீடியோமைகோடா நியோகாலிமாஸ்டிகோமைகோடா பிளாஸ்டோகிளாடியோமைகோடா ஜூபேகோமைகோடினா கிக்செல்லோமைகோடினா என்டோமாப்தோரோமைகோடினா மியூகோரோமைகோடினா குளோமெரோமைகோடாடிக்கார்யா அஸ்கோமைகோடா பெஸிடியோமைகோடா பூஞ்சணங்களின் பிரதான கூட்டங்கள் பூஞ்சணங்கள் அவை ஆக்கும் இலிங்க இனப்பெருக்கக் கட்டமைப்புக்க்களின் அடிப்படையிலேயே வகைப்படுத்தப்படுகின்றன. பின்வருவன பிரதான பூஞ்சண கணங்களாகும்: கைற்றிடோ மைக்கோட்டா (Chytridiomycota): இவை இயங்குவித்திகளை ஆக்கும் பூஞ்சணங்களாகும். இவ்வித்திகளில் சவுக்குமுளை உள்ளதால் இவை நீரினுள் அசையும் திறன் கொண்டவையாக உள்ளன. பொதுவாக கைற்றிட்டுக்கள் நீர்வாழ்க்கைக்குரியனவாக உள்ளன. இவற்றில் சந்ததிப் பரிவிருத்தி உள்ளதுடன், இருமடிய, ஒருமடிய இரு நிலைகளும் சம ஆதிக்கத்துடன் உள்ளன. இவற்றில் இருகருக்கூட்ட அவத்தை காணப்படுவதில்லை. இவற்றில் கிட்டத்தட்ட 1000 இனங்கள் அறியப்பட்டுள்ளன. இவை இருமடிய இயங்கு வித்தி மூலம் இலிங்கமில் முறை இனப்பெருக்கத்தையும், ஒருமடிய இயங்கு வித்தி மூலம் இலிங்க முறை இனப்பெருக்கத்தையும் மேற்கொள்கின்றன. இக்கூட்டமே அறியப்பட்ட பூஞ்சணக் கூட்டங்களுள் கூர்ப்பில் ஆதியானதாக உள்ளது. உ-ம்: Allomyces ஸைகோ மைக்கோட்டா (Zygomycota): இருமடிய நுகவித்தியை ஆக்கும் பூஞ்சைகள் இக்கூட்டத்தினுள் வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றின் வாழ்க்கை வட்டத்தில் ஒருமடிய, இரு கருக்கூட்ட அவத்தை (Dikaryon stage) மற்றும் இருமடிய ஆகிய மூன்று நிலைகளும் இருந்தாலும், ஒருமடிய நிலையே ஆதிக்கமான நிலையாக உள்ளது. கிட்டத்தட்ட 1050 இனங்கள் இக்கூட்டத்தினுள் உள்ளடக்கப்பட்டுள்ளன. பாணில் வளரும் பாண் பூஞ்சணம் இவ்வகையைச் சார்ந்ததாகும். இவற்றில் கருக்களிடையே பிரிசுவர் காணப்படுவதில்லை. உ-ம்: Rhizopus, Pilobus குளோமெரோ மைக்கோட்டா (Glomeromycota): இலிங்க முறை இனப்பெருக்கத்தைக் காட்டுவதில்லை. இவையே தாவரங்களின் வேரில் ஒன்றியவாழிகளாக வளரும் வேர்ப்பூஞ்சணங்களாகும். கிட்டத்தட்ட 150 இனங்கள் அறியப்பட்டுள்ளன. அஸ்கோ மைக்கோட்டா (Ascomycota): இலிங்க முறை இனப்பெருக்கத்தின் போது கோணி வித்திகளை உருவாக்கும் பூஞ்சணங்கள் இக்கணத்தினுள் உள்ளடக்கப்படுகின்றன. கோணி (ascus) என்னும் கட்டமைப்புக்குள் இவ்வித்திகள் உருவாக்கப்படுகின்றன. இலிங்கமில் முறை இனப்பெருக்கத்தின் போது தூளிய வித்திகளை (conidio spores) உருவாக்குகின்றன. கிட்டத்தட்ட 45000 இனங்கள் அறியப்பட்டுள்ளன. உ-ம்:Saccharomyces, Kluyveromyces, Pichia, Candida பேசிடியோ மைக்கோட்டா (Basidiomycota): இலிங்க முறை இனப்பெருக்கத்தின் போது சிற்றடி வித்திகளை உருவாக்கும் பூஞ்சணங்கள். இவை பொதுவாக காளான் என்னும் வெற்றுக்கண்ணுக்குத் தென்படக்கூடிய கட்டமைப்பை ஆக்குகின்றன. கிட்டத்தட்ட 22000 இனங்கள் அறியப்பட்டுள்ளன. இவற்றின் வாழ்க்கை வட்டத்தில் இருகருக்கூட்ட அவத்தை ஆதிக்கத்துடன் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். உ-ம்: Ustilago maydis, Malassezia, Cryptococcus neoformans சூழலியல் பூஞ்சைகள் புவியிலுள்ள அனைத்து வகையான சூழல்த்தொகுதிகளிலும் காணப்படுகின்றன. பக்டீரியாக்களும் பூஞ்சைகளுமே உயிரியல்த் தொகுதிகளில் முக்கியமான பிரிகையாக்கிகளாகும். எனவே இவை மீண்டும் சூழலுக்குக் கனியுப்புக்கள் சென்றடைவதை உறுதிப்படுத்துகின்றன. எனவே பூஞ்சைகள் அழிக்கப்பட்டால் புவியில் சூழலின் நிலைப்புத் தன்மை சீர்குலைந்து விடும். ஒன்றியவாழ்வு பூஞ்சைகள் ஆர்க்கியாவைத் தவிர்ந்த மற்றைய அனைத்து இராச்சியங்களைச் சேர்ந்த உயிரினங்களுடனும் ஒன்றியவாழிகளாகச் செயற்படுவதாக அறியப்பட்டுள்ளது. இவ்வாறான நிலமையில் இரு உயிரினங்களும் பயனடையும் வகையில் அவற்றுக்கிடையில் இடைத்தொடர்புகள் காணப்படும். தாவரங்களுடன் தாவரங்களின் வேர்களில் சில வகைப் பூஞ்சைகள் (நோய்த்தொற்று ஏற்படுத்துபவையைத் தவிர்த்து) வளர்ந்து வேர்ப் பூஞ்சணம் (மைகொரிஸா-Mycorrhiza) எனும் கட்டமைப்பை ஏற்படுத்துகின்றன. இவை பொதுவாக பெரும் மரங்களில் காணப்படும். மைகொரிஸா நீர் மற்றும் கனியுப்பு அகத்துறிஞ்சலின் வினைத்திறனை அதிகரிக்கின்றது. இதனால் மைகொரிஸா கட்டமைப்புடைய தாவரம் நன்மையடைகின்றது. பூஞ்சைகள் தாமுள்ள தாவர வேரிலிருந்து தமக்குத் தேவையான உணவைப் பெற்றுக்கொள்கின்றன. வேர் மயிர்கள் குறைவான தாவரங்களில் மைகொரிஸா மூலமே அனேகமான நீர் மற்றும் கனியுப்புத் தேவைகள் நிறைவு செய்யப்படுகின்றன. முக்கியமாக பொஸ்பேட்டு அகத்துறிஞ்சலுக்கு இக்கட்டமைப்புகள் உதவுவதாக அறியப்பட்டுள்ளது. அறியப்பட்டுள்ள தாவரங்களில் கிட்டத்தட்ட 90% ஆனவை மைகொரிஸா மூலம் பூஞ்சைகளுடன் ஒன்றிய வாழிகளாகச் செயற்படுகின்றன. இத்தொடர்புக்கான ஆதாரங்கள் கடந்த 400 மில்லியன் வருடங்களாக உள்ளன. சில பூஞ்சைகள் தாவரங்களின் இலைகள் மற்றும் தண்டினுள் ஒன்றியவாழிகளாக வாழ்கின்றன. இப்பூஞ்சைகள் சுரக்கும் நச்சுப்பதார்த்தங்கள் தாவரவுண்ணிகளிடமிருந்து இப்பூஞ்சைகள் வாழும் தாவரத்துக்குப் பாதுகாப்பளிக்கின்றன. பூஞ்சைகள் தாவரங்களிடமிருந்து உணவு மற்றும் உறையுள்ளைப் பெறுகின்றன. இத்தொடர்பை சில வகை புற்களில் அவதானிக்கலாம். அல்கா மற்றும் சயனோபக்டீரியாவுடன் பூஞ்சையானது அல்கா அல்லது சயனோபக்டீரியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளும் ஒன்றியவாழிக் கூட்டணியே லைக்கன் எனப்படும். லைக்கன்கள் ஏனைய உயிரினங்கள் வாழ முடியாத பாறைகளிலும் வாழும் ஆற்றலுள்ளன. இது இவ்வொன்றியவாழிக் கூட்டணியாலேயே சாத்தியமானது. பூஞ்சை அல்காக்கு/சயனோபக்டீரியாக்கு பாதுகாப்பு, நீர் மற்றும் கனியுப்புத் தக்கவைப்பை வழங்குவதுடன் அல்கா/சயனோபக்டீரியா உணவை உற்பத்தி செய்து பூஞ்சைக்குரிய பங்கை வழங்குகின்றது. லைக்கன்கள் புவியில் மண் தோன்றுவதில் முக்கிய பங்களிப்பு செய்துள்ளன. 17500 தொடக்கம் 20000 வரையான பூஞ்சையினங்கள் (20% பூஞ்சைகள்) லைக்கன்களைத் தோற்றுவிக்கின்றன. பூஞ்சைகளின் பயன்பாடுகள் பொருளாதார ரீதியிலும் மருத்துவ ரீதியிலும் இவை பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. காளான்களும், பெனிசிலியமும், மதுவமும் எமக்கு நன்றாகப் பழக்கப்பட்ட பூஞ்சைகளாகும். பெனிசிலியம் மருந்து தயாரிப்பிலும், மதுவம் மற்றும் காளான் உணவுற்பத்தியிலும் பயன்படுகின்றன. மருந்துற்பத்தி பெனிசிலின் போன்ற நுண்ணியிர்க்கொல்லிகளின் தயாரிப்பில் பூஞ்சைகள் பயன்படுத்தப்படுகின்றன. இயற்கையாக பெனிசிலியம் பூஞ்சையிலிருந்து பெறப்படும் பெனிசிலின் சிறிதளவான பக்டீரியாக்களையே எதிர்க்கும் ஆற்றல் கொண்டது. எனவே இயற்கையாகப் பெறப்படும் பெனிசிலினை மாற்றத்துக்குட்படுத்தி பலம் கூடிய பெனிசிலின் வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. Penicillium griseofulvum எனும் பூஞ்சை இனத்திலிருந்து கிரீசியோஃபல்வின் எனும் நுண்ணியிர்க்கொல்லி உற்பத்தி செய்யப்படுகின்றது. கொலஸ்திரோல் சுரப்பை நிரோதிக்கும் மருந்துகளை உற்பத்தி செய்யவும் பூஞ்சைகள் பயன்படுகின்றன. உணவுத் தயாரிப்பில் தனிக்கல பூஞ்சை வகையான மதுவம் பாண் தயாரிப்பிலும், மதுபானத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றது. Saccharomyces எனும் மதுவத்தின் நொதித்தல் தொழிற்பாட்டின் மூலம் மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன. படத்தொகுப்பு ஆரஞ்சு புல்லுருவி பூஞ்சை ரொட்டிப்பூஞ்சை பெரிதாக்கப்பட்ட ரொட்டிப்பூஞ்சை தமிழக மரக்காளான் மஞ்சள் பூஞ்சை மேற்கோள்கள் வெளி இணைப்புகள் அருஞ்சொற்பொருள் இராச்சியம் - Kingdom புல்லுருவி, ஒட்டுண்ணி - Parasite சிதை மாற்றம் செய்யும் உயிரினங்கள், பிரிகையாக்கிகள் - Decomposers பகுப்பு:பூஞ்சைகள்
பூஞ்சைகள் எந்த முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன?
இலிங்க
5,491
tamil
4c38392a6
ஆத்திரேலியா, ஆஸ்திரேலியா அல்லது அவுஸ்திரேலியா (Australia) என்பது உலகின் மிகச்சிறிய கண்டமாகவும் உலகின் மிகப்பெரும் தீவாகவும் உள்ள பெருநிலப்பரப்பையும், தாஸ்மானியா தீவு, இந்திய, பசிபிக் பெருங்கடல்களில் உள்ள சில சிறிய தீவுகளையும் உள்ளடக்கிய நாடு. இது பொதுநலவாய ஆஸ்திரேலியா (Commonwealth of Australia) என அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறது. எந்த நாட்டுடனும் இதற்கு நில எல்லை கிடையாது. இந்தோனீசியா, கிழக்குத் திமோர், பப்புவா நியூ கினி ஆகிய நாடுகள் இதன் வடக்கேயும், சொலமன் தீவுகள், வனுவாட்டு, நியூ கலிடோனியா ஆகியன வடகிழக்கேயும், நியூசிலாந்து தென்கிழக்கேயும் இதன் அயல் நாடுகளாக அமைந்துள்ளன. கிட்டத்தட்ட 42,000 ஆண்டுகளாக ஆஸ்திரேலியப் பழங்குடிகள் ஆஸ்திரேலியப் பெரு நிலப்பரப்பில் வாழ்ந்து வருவதாக வரலாறு சொல்கிறது[1]. அவ்வப்போது வடக்கில் இருந்து மீனவர்களும், பின்னர் 1606 இல் டச்சு நாடுகாண் பயணிகள் ஐரோப்பாவில் இருந்தும் இங்கு வந்து போன பின்னர்[2], 1770 இல் ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் வந்திறங்கிய ஆங்கிலேயர் அதனை ஐக்கிய இராச்சியத்துக்கென உரிமை கொண்டாடினர். ஆரம்பத்தில் ஆங்கிலேய, ஸ்கொட்டியக் குற்றவாளிகளின் குடியேற்றத் திட்டமாக ஜனவரி 26, 1788 இல் நியூ சவுத் வேல்ஸ் என்ற குடியேற்றப் பகுதி உருவாக்கப்பட்டது. பின்னர் மக்கள் தொகை பெருக, ஆஸ்திரேலியாவின் மேலும் பல புதிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு 19ம் நூற்றாண்டின் காலப்பகுதியில் சுயாட்சி கொண்ட மேலும் ஐந்து பிரித்தானியக் குடியேற்றப் பகுதிகள் அமைக்கப்பட்டன. ஜனவரி 1, 1901 இல் ஆறு தனித்தனியான குடியேற்றப் பகுதிகளும் ஒன்றிணைந்து பொதுநலவாய ஆஸ்திரேலியா என்ற திறந்த மக்களாட்சி அரசியலமைப்புடன் கூட்டமைப்பு அரசை உருவாக்கின. இதன் தலைநகரம் கான்பரா ஆகும். பரப்பளவில் ஆறாவது பெரிய நாடாக இருப்பினும் இதன் மக்கள்தொகை வெறும் 23.2 மில்லியன்கள் (2.32 கோடி, 2013 மதிப்பீட்டின் படி[3]) மட்டுமே. இவர்களில் 60 விழுக்காட்டினர் பெருநிலப்பரப்பில் மாநிலத் தலைநகரங்களை அண்டி வாழ்கின்றனர். ஆஸ்திரேலியா மேற்கத்திய பொருளாதார முறைகளைப் பின்பற்றுகிறது. ஆள்வீத வருமானம் வலுவான பொருளாதார நாடுகளுக்கு இணையானது. தொழிலாளிகளில் 5% மட்டும் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். எண்ணெய் வளமும், கனிம வளமும் மிகுந்த நாடு. பெயர்க் காரணம் ஆஸ்திரேலியா என்ற பெயர் Australis என்ற இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து உருவானது. தெற்கே என்பது இதன் கருத்து. 1521 இல் எசுப்பானியர் பசிபிக் பெருங்கடலில் பயணம் செய்த முதலாவது ஐரோப்பியர் ஆவர். ஆங்கில மொழியில் முதன் முதலாக ஆஸ்திரேலியா என்ற சொல் 1625 இல் பயன்படுத்தப் பட்டது.[4]. சக்கார்த்தாவில் நிலை கொண்டிருந்த டச்சு கிழக்கிந்தியக் கம்பனியினர் 1638 இல் தெற்கே தாம் புதிதாகக் கண்டுபிடித்த இடத்திற்கு Australische என்ற பெயரை இட்டனர். ஆஸ்திரேலியாவை முதன் முதலில் சுற்றி வந்த மத்தியூ பிலிண்டேர்ஸ் என்ற பிரித்தானிய மாலுமி 1814 இல் தனது A Voyage to Terra Australis என்ற நூலில் "ஆஸ்திரேலியா" என்ற பெயரைப் பயன்படுத்தியதில் இருந்து இப்பெயர் பரவலாக வழக்கூன்றியது. நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் லக்லான் மக்குவாரி 1817, டிசம்பர் 12 இல் இப்பெயரை காலனித்துவ அரசுக்கு பரிந்துரைத்தார்[5]. 1824 இல் இப்பெயர் ஏற்பு பெற்றது. ஆஸ்திரேலிய ஆங்கிலத்தில் "ஆஸ்திரேலியா" əˈstɹæɪljə, -liːə, -jə என்றவாறு பலுக்கப்படுகிறது[6]. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து ஆஸ்திரேலியா நாட்டை உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் ஓஸ் (Oz) என்றும், ஆஸ்திரேலியர்களை "ஒசி" (Aussie) எனவும் சுருக்கமாக அழைக்கப்படுகிறார்கள். வரலாறு ஆஸ்திரேலியப் பழங்குடிகள் ஆஸ்திரேலியாவின் முதல் மனிதர் குடியேறியது 42,000 முதல் 48,000 ஆண்டுகளுக்கு முன்னர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[7]. இவர்கள் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடிகளின் மூதாதையர் என அறியப்படுகிறது. இவர்கள் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் லெக்முங்கோ (Laje Mungo) என்னுமிடத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கற்காலத்திற்கு முன்பிருந்து மனிதர்கள் வசித்தாலும் அவர்கள் தற்போதைய தென்கிழக்காசியத் தீவுகளிலிருந்து மிகப்பழங்காலத்தில் பிரிந்தவர்களாகத் நம்பப்படுகிறது. மரபணு மற்றும் மொழி அடிப்படையில் இப்பழங்குடிகளின் உறவும் தொடர்பும் (பிற நாட்டினத்தவர்களுடன்) உறுதிப்படவில்லை. இப்பழங்குடினரில் பெரும்பான்மையானோர் வேட்டையாடுபவர்கள். குயின்ஸ்லாந்தின் தூர-வடக்கிலும், டொரெஸ் நீரிணைத் தீவுகளிலும் வாழும் பழங்குடியினர் மெலனேசியர்கள். இவர்களின் பண்பாடு, வாழ்க்கை முறை ஏனைய பழங்குடியினரை விட வேறுபட்டவை. ஐரோப்பியரின் வருகை ஆஸ்திரேலியப் பெரும்பரப்பை முதன் முதலில் வந்தடைந்த ஐரோப்பியர் டச்சு மாலுமியான வில்லெம் ஜான்சூன் என்பவர். இவர் கேப் யோர்க் தீபகற்பத்தின் கரையை 1606 இல் கண்டார். 17ம் நூற்றாண்டு காலகட்டத்தில் டச்சுக் காரர் மேற்கு மற்றும் வடக்குக் கரைகளில் வந்திறங்கி அப்பகுதிக்கு புதிய ஒல்லாந்து (Nova Hollandia) எனப் பெயரிட்டனர். ஆனாலும் அவர்கள் அங்கு குடியேற முயலவில்லை. 1770 ஆம் ஆண்டில், இங்கிலாந்து கப்டன் ஜேம்ஸ் குக் தனது பசிபிக் பயணத்தின் போது ஆஸ்திரேலியாவில் கிழக்குக் கரையில் தரையிறங்கி அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டு பெரிய பிரித்தானியாவுக்காக அதனை உரிமை கோரினான். இவனது கண்டுபிடிப்புகள் பின்னர் அங்கு பிரித்தானியாவின் குற்றவாளிகளின் குடியேற்றத்தை ஆரம்பிக்க ஏதுவாக இருந்தது. நியூ சவுத் வேல்ஸ் என்ற முடியாட்சிக் குடியேற்றம் ஆர்தர் பிலிப் என்பவரால் ஜாக்சன் துறையில் ஜனவரி 26, 1788 இல் அமைக்கப்பட்டது. இந்நாள் பின்னர் ஆஸ்திரேலியா நாள் என்ற பெயரில் ஆஸ்திரேலியாவின் தேசிய நாளாக ஆக்கப்பட்டது. வான் டியெமனின் நிலத்தில் (தற்போதைய தாஸ்மானியா) 1803 இல் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டு 1825 இல் தனியான குடியேற்ற நாடாக ஆக்கப்பட்டது.[8] ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியை (சுவான் ஆற்றுக் குடியேற்றம்) 1829 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியம் அதிகாரபூர்வமாக உரிமை கோரியது. 1832 இல் இப்பகுதி மேற்கு ஆஸ்திரேலியா எனப் பெயர் பெற்றது. 1836 இல் தெற்கு ஆஸ்திரேலியா, 1851 இல் விக்டோரியா, 1859 இல் குயின்ஸ்லாந்து ஆகிய தனியான குடியேற்றப் பகுதிகள் நியூ சவுத் வேல்சில் இருந்து பிரித்து அமைக்கப்பட்டன. 1911 ஆம் ஆண்டில் தெற்கு ஆஸ்திரேலியாவில் இருந்து வட மண்டலம் பிரிக்கப்பட்டு தனி மாநிலமாகியது. தெற்கு ஆஸ்திரேலியா, விக்டோரியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன பிரித்தானியக் குற்றவாளிகளின் குடியேற்றங்களாக ஆரம்பிக்கப்படவில்லை. ஆனாலும் விக்டோரியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன பின்னர் குற்றவாளிகளை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தன[9] ஏற்கனவே குடியேறியவர்களின் எதிர்ப்பினை அடுத்து நியூ சவுத் வேல்சிற்கு குற்றவாளிகள் அனுப்பப்படுவது 1848 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது[10]. 1788 இல் முதன்முதலாக ஐரோப்பியர்கள் இங்கு குடியேறியபோது அண்ணளவாக 350,000 பழங்குடிகள் இக்கண்டத்தில் வசித்து வந்தனர்[11]. அப்போது 500 வகையான பழங்குடியினர் இக்கண்டத்தில் தங்கள் சொந்த மொழியுடன் வாழ்ந்து வந்தனர். இவர்களின் தொகை அடுத்த 150 ஆண்டுகளில் பெருமளவு குறைய ஆரம்பித்தது. தொற்று நோய், கட்டாய மீள்குடியேற்றம், பண்பாட்டு சீரமைப்பு போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகிறது[12]. பழங்குடிகளின் குடும்பங்களில் இருந்து அவர்களின் பிள்ளைகள் கட்டாய வெளியேற்றமும் இவ்வீழ்ச்சிக்குக் காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்[13]. 1967 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மக்கள் வாக்கெடுப்பை அடுத்து நடுவண் அரசு பழங்குடிகள் தொடர்பாக கொள்கை மாற்றங்களுக்கும் புதிய சட்டங்கள் இயற்றுவதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டது. தலைமுறைகளாக நிலஉரிமை (native title) 1992 வரை ஆஸ்திரேலியாவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை. ஆஸ்திரேலிய மேல் நீதிமன்றத்தில் விசாரணக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட புகழ்பெற்ற மாபோ எதிர் குயின்ஸ்லாந்து வழக்கை அடுத்து ஐரோப்பிய ஆக்கிரமிப்பில் இருந்த நிலங்கள் முன்னர் terra nullius ("வெற்று நிலம்") ஆகக் கருதப்பட்டமை மாற்றப்பட்டு தலைமுறைகளாக நிலம் வைத்திருந்தோருக்கு நில உரிமை வழங்கப்பட்டது. கூட்டாட்சி 1855 - 1890 காலப்பகுதியில், ஆறு குடியேற்றப் பகுதிகளும் தனித்தனியே தமது அரசாங்கங்களை அமைத்துக் கொண்டு பிரித்தானியப் பேரரசுக்குள் இருந்தவாறே தமது உள்ளூர் விடயங்களைத் தாமே கவனித்துக் கொள்ளத் தொடங்கின. லண்டனில் அமைந்திருந்த காலனித்துவ நிர்வாகம் குறிப்பாக வெளிநாட்டலுவல்கள், பாதுகாப்பு, பன்னாட்டுக் கப்பற்துறை போன்றவற்றைக் கவனித்தது. 1901, ஜனவரி 1 இல், ஆஸ்திரேலியக் கூட்டமைப்பு நிறுவப்பட்டது. பிரித்தானிய இராச்சியத்திற்குள் அடங்கிய "பொதுநலவாய ஆஸ்திரேலியா" பிறந்தது. 1911 ஆம் ஆண்டில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் ஒரு பகுதி ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம் என்ற பெயரில் தனிப் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டு கூட்டமைப்பின் தலைநகரம் கான்பரா 1927 ஆம் ஆண்டில் இங்கு அமைக்கப்பட்டது. அதுவரையில் மெல்பேர்ண் நகரம் கூட்டமைப்பின் தற்காலிகத் தலைநகரமாக இருந்தது. தெற்கு ஆஸ்திரேலியாவின் பகுதியாக இருந்த வட மண்டலம் என்ற பிரதேசம் 1911 இல் தனியாகப் பிரிக்கப்பட்டு நடுவண் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. முதலாம் உலகப் போரில் ஆஸ்திரேலியா தன்னிச்சையுடன் போரில் ஈடுபட்டது[14]. கலிப்பொலி போரில் ஆஸ்திரேலியர்களின் பங்களிப்பு இந்நாட்டு இராணுவத்தினரின் முதலாவது பெரும் போர்ப் பங்கெடுப்பு ஆகும். இப்போரில் அவர்கள் தோல்வியடைந்தாலும், இந்நடவடிக்கை நாடொன்றின் எழுச்சியாக பெரும்பாலான ஆஸ்திரேலியர்களால் கணிக்கப்படுகிறது. ஐக்கிய இராச்சியத்தில் 1931 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 ஆஸ்திரேலியாவுக்கும், ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் இருந்த அரசிய்யலமைப்புத் தொடர்புகளைப் பேணி வந்தாலும் 1942 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட உப சட்டம் 1931 சட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. 1942 இல் இரண்டாம் உலகப் போரின் போது ஆசியாவில் ஐக்கிய இராச்சியத்தின் அதிர்ச்சித் தோல்விகளும், ஜப்பானியப் பேரரசின் முற்றுகையும் ஆஸ்திரேலியாவை ஐக்கிய அமெரிக்காவுடன் அணி சேர வாய்ப்பாக இருந்தது. 1951 ஆம் ஆண்டில் இருந்து ஐக்கிய அமெரிக்காவுடன் அன்சஸ் என்ற பாதுகாப்பு உடன்பாட்டை ஆஸ்திரேலியா ஏற்படுத்திக் கொண்டது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஐரோப்பாவில் இருந்து மக்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற வாய்ப்பளிக்கப்பட்டது. வெள்ளை ஆஸ்திரேலியா கொள்கை முடிவுக்கு வந்ததை அடுத்து 1970களில் இருந்து ஆசியா மற்றும் ஐரோப்பா அல்லாத மற்ற நாடுகளில் இருந்து மக்கள் இங்கு குடியேற ஊக்குவிக்கப்பட்டனர். இதனையடுத்து ஆஸ்திரேலியாவின் மக்கள் பரம்பல், பண்பாடு, மற்றும் தன்னடையாளம் ஆகியவற்றில் பெரும் மாற்றம் ஏற்படலாயின. ஆஸ்திரேலியாவுக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் இருந்து வந்த அரசியல் சட்ட இணைப்பு 1986 இல் ஆஸ்திரேலிய சட்டம் 1986 நிறைவேற்றப்பட்டதை அடுத்து மேலும் பிளவடைந்தது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து ஆஸ்திரேலிய மாநிலங்களில் பிரித்தானியாவின் பங்கு முடிவுக்கு வந்தது. ஐக்கிய இராச்சியத்தின் பிரிவி கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்யப்படுவது நிறுத்தப்பட்டது[15]. ஆஸ்திரேலியாவைக் குடியரசாக மாற்றுவதற்காக 1999 இல் நடத்தப்பட்ட அனைத்து மக்கள் வாக்கெடுப்பில் 54 விழுக்காட்டினர் எதிராக வாக்களித்தனர். அரசியல் பொதுநலவாய ஆஸ்திரேலியா நடுவண் ஆட்சியைக் கொண்ட நாடாளுமான்ற மக்களாட்சி அமைப்பாகும். இரண்டாம் எலிசபெத் ஆஸ்திரேலியாவின் மகாராணி ஆவார். நடுவண் ஆட்சியில் ஒரு பொது ஆளுநரையும், அந்தந்த மாநிலங்களுக்குத் தனித்தனியே ஆளுநர்களையும் அரசி தனது சார்பில் நியமித்துள்ளார். அரசியலமைப்பின் படி பொது ஆளுநர் பல நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டிருந்தாலும், அவர் பொதுவாக ஆஸ்திரேலிய பிரதமரின் ஆலோசனைக்கேற்பவே தனது அதிகாரங்களை நிறைவேற்றுகிறார். ஒரே ஒரு முறை மட்டும், 1975 ஆம் ஆண்டில் பொது-ஆளுநர் தன்னிச்சையாக அன்றைய விட்லமின் அரசை நீக்கியிருந்தார்[16]. ஆஸ்திரேலியாவில் மொத்தம் மூன்று அரசு சட்ட அமைப்புகள் செயற்படுகின்றன: சட்டமன்றம்: பொதுநலவாய நாடாளுமன்றம். இதில் அரசி, செனட் அவை, மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். அரசியின் சார்பில் பொது-ஆளுநர் பங்கு பற்றுகிறார். நிறைவேற்று அவை: நடுவண் நிறைவேற்றுப் பேரவை, இதில் பிரதமர், மற்றும் அமைச்சரவை அங்கத்தவர்கள் அங்கம் வகிக்கின்றனர். சட்டம்: ஆஸ்திரேலியாவின் உயர் நீதிமன்றம் மற்றும் நடுவண் நீதிமன்றங்கள். ஐக்கிய இராச்சியத்தின் பிரிவி கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்வது 1986 ஆம் ஆண்டில் இருந்து நிறுத்தப்பட்டது. இரு அவைகளைக் கொண்ட ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் செனட் அவையில் (மேலவை) 76 உறுப்பினர்களும், பிரதிநிதிகள் அவையில் (கீழவை) 150 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கீழவை உறுப்பினர்கள் ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் இருந்து ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மேலவைக்கு ஒவ்வோர் மாநிலமும் 12 உறுப்பினர்களையும், ஆஸ்திரேலியத் தலைநகர்ப் பிரதேசம், வட மண்டலம் ஆகிய இரு பிரதேசங்களிலும் இருந்து இருவருமாக பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இரு அவைகளுக்கும் தேர்தல்கள் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெறுகின்றன. கீழவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி அரசை அமைக்கும். அதன் தலைவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். மாநிலங்களும் பிரதேசங்களும் அவுஸ்திரேலியா மொத்தம் ஆறு மாநிலங்களையும், இரண்டு மண்டலங்களையும், வேறு சில சிறிய பிராந்தியங்களையும் தன்னகத்தே கொண்ட நாடு. மாநிலங்களாவன: நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோறியா, தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா, தாஸ்மானியா எனபனவாகும். வட மண்டலம், ஆஸ்திரேலிய தலைநகர் மண்டலம் என்பன இரண்டு பிரதான மண்டலங்களாகும். மண்டலங்களின் செயற்பாடுகள் பொதுவாக மாநிலங்களினதை ஒத்திருந்தாலும், மண்டலங்களின் அரசமைப்புச் சட்டவிதிகளை நடுவண் அரசு (அவுஸ்திரேலிய அரசாங்கம்) மாற்றியமைக்க முடியும். அதே வேளையில் மாநில அரசுகளின் சட்டங்களின் 51வது (சிறப்பு) சட்ட விதிகளை மட்டுமே நடுவண் அரசு மாற்ற முடியும். மருத்துவமனைகள், கல்வி, காவல்துறை, சட்டம், பாதைகள், பொது போக்குவரத்து, உள்ளூராட்சி சபைகள் (local government) போன்றவை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன. ஒவ்வொரு மாநிலமும் மண்டலங்களும் தமக்கென தனியான சட்டசபைகளை (நாடாளுமன்றங்களை) கொண்டுள்ளன. இவற்றில் வட மண்டலம், ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம், குயின்ஸ்லாந்து என்பன ஒரு சட்டசபையையும், ஏனைய மாநிலங்கள் கீழவை, மேலவை என இரு சபைகளையும் கொண்டுள்ளன. மாநிலங்களின் அரசுத் தலைவர் முதல்வர் (Premier) எனவும், மண்டலங்களின் தலைவர் முதலமைச்சர் (Chief Minister) எனவும் அழைக்கப்படுகின்றனர். மகாராணி தனது பிரதிநிதியாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநரையும், வட மண்டலத்தில் நிர்வாகியையும் நியமிப்பார். ஆஸ்திரேலியாவில் சில சிறிய பிரதேசங்களும் உள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஜேர்விஸ் குடா பிரதேசம் என்ற கடற்படைத் தளம் நடுவண் அரசினால் நிர்வகிக்கப்படுகிறது. இவற்றைவிட பின்வரும் பிரதேசங்கள் ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் உள்ளன: நோர்போக் தீவு கிறிஸ்மஸ் தீவு கொக்கோஸ் (கீலிங்) தீவுகள் ஆஷ்மோர் கார்ட்டியர் தீவுகள் பவளக் கடல் தீவுகள் ஹேர்ட் தீவு மற்றும் மக்டொனால்ட் தீவுகள் ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் மண்டலம் புவியியல் ஆஸ்திரேலியா இந்தோ அவுஸ்திரேலிய புவித்தட்டில் இந்திய, பசிபிக் பெருங்கடல்களால் சூழப்பட்டு, ஆசியா கண்டத்தை அரபுரா, மற்றும் திமோர் கடல்களால் பிரிக்கப்பட்டுள்ளது. 7,617,930 சதுர கிலோமீட்டர்[17] பரப்பளவுடைய இந்நாட்டின் பெரும்பகுதி பாலைநிலங்கள் ஆகும். ஆஸ்திரேலியாவின் பெரு நிலப் பரப்பு 34,218 கிமீ கரையோரப் பகுதியை (தீவுப் பகுதிகளைத் தவிர்த்து) கொண்டுள்ளது[18]. உலகின் மிகப் பெரும் பவளப் பாறைத் தொடர்[19] பெரும் தடுப்புப் பவளத்திட்டு, ஆஸ்திரேலியாவின் வடகிழக்குக் கடற்கரையை அண்டிக் காணப்படுகிறது. இதன் நீளம் 2000 கிமீ விட அதிகமானதாகும். மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஆகுஸ்டஸ் மலை உலகின் பெரிய ஒருகற்பாறை (monolith) எனக் கருதப்படுகிறது[20]. 2,228 மீ உயரமான கொஸ்கியஸ்கோ மலை ஆஸ்திரேலியாவின் பெரு நிலப்பரப்பில் உள்ள அதி உயரமான மலை ஆகும். பெரு நிலப்பரப்புக்கு வெளியே உள்ள ஹேர்ட் தீவு மற்றும் மக்டொனால்ட் தீவுகள் பிரதேசத்தில் உள்ள மோசன் மலை 2,745 மீ உயரமானது. ஆஸ்திரேலியா மிகத் தட்டையான கண்டமாகும். பழையதும் வளங்குறைந்ததுமான மண்ணைக் கொண்ட இது மனிதர் வாழும் கண்டங்களில் மிக வரண்டதுமாகும். பெரும்பாலான அவுஸ்திரேலியர்கள் நாட்டின் தென்கிழக்குக் கடற்கரையை அண்டியே வாழ்கிறார்கள். நாட்டின் வடக்குப் பகுதி வெப்பவலயப் பிரதேசமாகும். இங்கு மழைக்காடுகள், மரநிலங்கள், புல்வெளிகள், அலையாத்திக் காடுகள், மற்றும் பாலைநிலங்கள் என்பன உண்டு. அண்மைக்காலங்களில் ஆஸ்திரேலியாவில் காலநிலை மாற்றம் ஒரு பெரும் பிரச்சினையாக உருவாகியுள்ளது[21]. கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் மழைவீழ்ச்சி அதிகரித்துக் காணப்பட்டாலும்[22], ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை காணப்படுகிறது. நகரங்களில் மக்க்க்ள்தொகை அதிகரிப்பு, மற்றும் உள்ளூர் வரட்சி காரணமாக பல நகரங்களிலும் நீர்க்கட்டுப்பாடு அமுலில் உள்ளது[23]. குடிமதிப்பியல் தற்போதைய (2008) மதிப்பீட்டான 21.3மில்லியன் ஆஸ்திரேலியர்களின் பெரும்பான்மையானோர் காலனித்துவக் காலத்திலும், கூட்டாட்சிக்கு முன்னரும் ஐரோப்பாவில் இருந்து வந்தவர்களின் வழித்தோன்றல்களாகும். இவர்களில் பெரும்பான்மையானோர் பிரித்தானியத் தீவுகளில் இருந்து குடியேறியோராவர். இன்றும் ஆஸ்திரேலியர்களில் பெரும்பான்மையானோர் பிரித்தானியரும் ஐரிய மக்களும் ஆவர். முதலாம் உலகப் போர்க் காலத்தில் இருந்து ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை நான்கு மடங்காகவே உயர்ந்தது[25]. இதனால் குடியேற்றத் திட்டத்துக்கு ஆதரவு வலுத்தது. இரண்டாம் உலகப் போரை அடுத்தும், அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டு வரையும், கிட்டத்தட்ட 5.9மில்லியன் மக்கள் புதிதாகக் குடியேறினார்கள். அதாவது கிட்டத்தட்ட ஏழு ஆஸ்திரேலியர்களுக்கு இருவர் வெளிநாட்டில் பிறந்தவர்களாயினர்[26]. குடியேறியோரில் பெரும்பான்மையானோர் ஏதாவதொரு துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர்[27], ஆனாலும் குடும்ப உறுப்பினர்களும், அகதிகளும் குடியேற அனுமதிக்கப்பட்டது[27]. 2001 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி, வெளிநாட்டில் பிறந்தோரில் பெரும்பான்மையானோர் ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து, இத்தாலி, வியட்நாம், மற்றும் சீனா ஆகிய நாடுகளில் பிறந்தோராவர்[28]. 1973 ஆம் ஆண்டில் வெள்ளை ஆஸ்திரேலியா கொள்கை கைவிடப்பட்டதை அடுத்து, பல்கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு இனங்களுக்கிடையே ஒற்றுமையை வளர்க்க அரசு மட்டத்தில் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன[29]. 2005–06 காலப்பகுதியில், 131,000 பேருக்கு மேல் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் ஆசியா, மாற்றும் ஓசியானியா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்[30]. 2006–07 காலப்பகுதியில் குடியேற்றப்படுவோரின் எண்ணிக்கை 144,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது[31]. 2008-9 காலப்பகுதியில் 300,000 பேர்களைக் குடியமர்த்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் குடியேறிய எண்ணிக்கைகளில் மிகப் பெரியதாகும்[32]. 2001 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்பில் உள்ள பழங்குடியினரின் எண்ணிக்கை (ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மற்றும் டொரெஸ் நீரிணை மக்கள்) 410,003 ஆக இருந்தது. இது நாட்டின் முழுத் தொகையில் 2.2% ஆகும். இது 1976 ஆம் ஆண்டில் இருந்ததை விட 115,953 பேர் அதிகமாகும். கைதுகள், வேலையில்லாமை, படிப்பறிவின்மை, போன்றவை ஆஸ்திரேலியப் பழங்குடியினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆகும். இவர்களின் சராசரி வாழ்வுக்காலம் ஏனைய பழங்குடியினரல்லாத ஆஸ்திரேலியர்களை விட 17 ஆண்டுகள் வரை குறைவாகும்[33]. ஏனைய வளர்ச்சியடைந்த நாடுகளைப் போலவே, ஆஸ்திரேலியாவின் குடிமக்கள் வயது முதிர்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். கூடுதலானோர் ஓய்வுதியம் பெறுவோராகவும், சிறிய அளவினரே தொழில் பார்ப்போராகக் காணப்படுகின்றனர். 2004 ஆண்டில் மக்களின் சராசரி வயது 38.8 ஆண்டுகளாக இருந்தது[34]. ஆஸ்திரேலியர்களில் பெரும் எண்ணிக்கையானோர் (2002-03 காலத்தில் 759,849)[35] தமது பிறந்த நாட்டை விட்டு வெளியே வசித்து வந்தனர். மொழி ஆங்கிலம் இங்கு ஒரு தேசிய மொழியாகும்[36]. பெரும்பான்மையானோர் ஆஸ்திரேலிய ஆங்கிலம் பேசுகின்றனர். இது பிரித்தானிய ஆங்கில மொழியை ஒத்திருந்தாலும் ஆஸ்திரேலியர்களுக்கென தனிப்பட்ட சில உச்சரிப்பையும், சொற்தொகுதியையும் கொண்டுள்ளது. இலக்கணமும் எழுத்துக்கூட்டலும் பிரித்தானியாவின் ஆங்கிலத்துடன் ஒத்தது. 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, 80 விழுக்காட்டினோரின் வீட்டில் பேசும் மொழி ஆங்கிலம் ஆகும். அதற்கடுத்தபடியாக சீனம் (2.1%), இத்தாலியம் (1.9%), மற்றும் கிரேக்கம் (1.4%). இங்கு குடியேறியோரின் பெரும்பான்மையோர் இரண்டு மொழி பேசுபவர்கள் ஆவர். ஐரோப்பியர்கள் இங்கு குடியேறிய காலத்தில் கிட்டத்தட்ட 200 அல்லது 300 மொழிகள் பேசும் பழங்குடியினர் வாழ்ந்து வந்ததாக நம்பப்படுகிறது. இவற்றில் 70 மட்டுமே இன்று வழக்கிலுள்ளது. கிட்டத்தட்ட 50,000 (0.25%) மக்களின் முதல் மொழி ஒரு பழங்குடி மொழியாக உள்ளது. சமயம் ஆத்திரேலியாவில் அரச மதம் எதுவுமில்லை. 2006 கணக்கெடுப்பின்படி, 64% ஆஸ்திரேலியர்கள் தாம் கிறித்தவர்கள் என அடையாளப்படுத்தியுள்ளனர். இவர்களில் 26% ரோமன் கத்தோலிக்கத்தையும், 19% ஆங்கிலிக்கத்தையும் பின்பற்றுகிறார்கள். 19% விழுக்காட்டினர் எம்மதத்தையும் சேர்ந்தவர்கள் அல்லர் என இனங்காட்டியுள்ளனர். 12% விழுக்காட்டினர் தம்மை மத ரீதியாக அடையாளம் காட்டவில்லை. கிறித்தவர்களுக்கு அடுத்த படியாக 2.1% பௌத்தர்களும், 1.7% இசுலாமியர்களும், 0.8% இந்துக்களும் 0.5% யூதர்களும் வாழ்கின்றனர். மொத்தமாக 6% இற்கும் குறைவானோரே கிறித்தவம் அல்லாத சமயத்தைச் சேர்ந்தவர்கள்[37]. ஏனைய மேற்கத்தைய நாடுகளைப் போலவே இங்கும் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு குறைந்தளவினரே செல்கின்றனர். 1.5மில்லியன் மக்கள் வாரந்தோறும் தேவாலயங்களுக்குச் செல்கின்றனர். இது மொத்த மக்கள் தொகையில் 7.5% ஆகும்[38]. கல்வி ஆஸ்திரேலியாவில் 6 வயதில் இருந்து 15 வயது வரை (தெற்கு ஆஸ்திரேலியாவில் 16 வயது, மேற்கு ஆஸ்திரேலியா, மற்றும் குயின்ஸ்லாந்தில் 17 வயது) பள்ளிப் படிப்பு கட்டாயம் ஆகும். இது வயது வந்தோரின் படிப்பறிவை 99% ஆகக் காட்டுகிறது. தற்போது ஆஸ்திரேலியாவின் கல்விமுறை உலக நாடுகளில் எட்டாவது இடத்தை வகிக்கின்றது[39]. மொத்தம் 38 அரச பல்கலைக்கழகங்கள் இங்குள்ளன. அத்துடன் அரச மானியத்தில் இயங்கும் பல தனியார் பல்கலைக்கழகங்களும் உள்ளன. இவற்றைவிட அவ்வவ் மாநிலங்களில் அரச தொழிநுட்பக் கல்லூரிகள் இயங்குகின்றன. பல்வேறு தொழிற்துறை, மற்றும் தொழில் பழகுநர்களுக்கான கல்வி இங்கு வழங்கப்படுகின்றது. 25 முதல் 65 வயது வரையான ஆஸ்திரேலியர்களில் 58 விழுக்காட்டினர் தொழில்துறை அல்லது மேற்படிப்புக்கான சான்றிதழ்கள் பெற்றுள்ளனர்[33]. சுகாதாரம் 2006 ஆம் ஆண்டுத் தரவுகளின் படி, ஆத்திரேலியர்களின் சராசரி வாழ்வுக் காலம் ஆண்களுக்கு 78.7 ஆண்டுகளாகவும், பெண்களுக்கு 83.5 ஆண்டுகளாகவும் உள்ளன[40]. உலகிலேயே தோல் புற்றுநோய் அதிகமாக உள்ள நாடு ஆத்திரேலியாவே,[41], அதேவேளை இறப்புகளையும் நோய்களையும் தவிர்க்கக்கூடிய மிகப்பெரும் காரணியாக அமைவது புகையிலை பிடித்தல் விளங்குகிறது[42]. வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே அதிகமான உடற் பருமன் உள்ளோர் ஆத்திரேலியாவிலேயே உள்ளனர்[43]; அதே வேளை எயிட்ஸ் நோய் பரவாமல் வெற்றிகரமாகத் தடுத்த நாடுகளில் ஆத்திரேலியாவும் ஒன்று[44][45]. ஆஸ்திரேலியத் தமிழர் ஆஸ்திரேலியாவிற்கு 1970 ஆண்டில் இருந்து தமிழர்கள் புலம் பெயரத் தொடங்கினார்கள். அதற்கு முன்னர் தொழில் அனுமதி பெற்றுச் சிலர் வந்துள்ளனர். 1971க்கு முன்னர் மொத்தம் 162 தமிழர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார்கள் என அரசின் மதிப்பீடு தெரிவிக்கிறது[46]. முதன் முதலில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர் கமால் எனப்படும் கே. கமலேஸ்வரன் என்பவர். தமிழ் அவுஸ்திரேலியர்களின் எண்ணிக்கை 1971 இல் 202 ஆக இருந்து 1991 இல் 11,376 ஆக அதிகரித்தது. இதில் 60 வீதத்தினர் ஈழத் தமிழர்கள். அரசின் குடிமதிப்பின்படி 1996 இல் தமிழரின் எண்ணிக்கை 18,690 ஆகவும், 2001இல் 24,067 ஆகவும் உயர்ந்தது[47]. இவர்களில் 50 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வசிக்கின்றனர். இலங்கையை விட இந்தியா, தென்னாபிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், பீஜி போன்ற நாடுகளிலிருந்தும் வசதி வாய்ப்புகளை எதிர்பார்த்து அவுஸ்திரேலியாவில் குடியேறினர். பண்பாடு 1788 ஆம் ஆண்டில் இருந்து, ஆஸ்திரேலியாவின் பண்பாடு அடிப்படையில் ஆங்கிலோ-கெல்ட்டியர்களை ஒத்திருந்தது. ஆனாலும் இயற்கை சுற்றுச் சூழல், மற்றும் பழங்குடிகளின் பண்பாடு ஆகியன ஆஸ்திரேலியாவிற்கெனத் தனியான சில பண்பாடுகளை வரையறுத்தது. 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து ஆஸ்திரேலிய பண்பாட்டில் அமெரிக்காவின் பிரபலமான பண்பாடு (குறிப்பாக தொலைக்காட்சி, திரைப்படம்), ஆஸ்திரேலியாவின் அயல் ஆசிய நாடுகள், ஆங்கிலம் பேசாத நாடுகளில் இருந்தான புலம்பெயர்வு ஆகியவற்றினால் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலிய ஓவியக்கலை வரலாறு பழங்குடியினரின் குகை ஓவியங்களில் இருந்து ஆரம்பிக்கின்றது[48]. ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் மரபு பெரும்பாலும் செவிவழியே கர்ணபரம்பரைக் கதைகளாலும், சடங்குகளினாலுமே பரப்பப்பட்டு வந்துள்ளன. பழங்குடியினரின் இசை, நடனம், ஓவியம் போன்றவை சமகாலத்தைய ஆஸ்திரேலியப் பண்பாட்டில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியது. எமிலி கிங்வாரேய், கோர்டன் பென்னெட் போன்ற பிரபலமான ஓவியர்கள் பழங்குடியினரைச் சேர்ந்தவர்கள். ஆஸ்திரேலிய தேசிய கூடம் மற்றும் பல மாநிலங்களிலும் உள்ள கலைக்கூடங்களில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஓவியத் திரட்டுகள் உள்ளன. ஊடகங்கள் ஆஸ்திரேலியாவில் இரண்டு பொதுத் தொலைக்காட்சி சேவைகளும் (ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், மற்றும் பல்கலாச்சார சிறப்பு ஒலிபரப்புச் சேவை) மூன்று தனியார் தொலைக்காட்சிச் சேவைகளும் இயங்குகின்றன. இவற்றை விட பல தனியார் கம்பியிணை (cable), மற்றும் பல இலாப-நோக்கில்லா தொலைக்காட்சிக் சேவைகளும் உள்ளன. மாநிலத் தலைநகரங்கள் ஒவ்வொன்றிலும் தனித்தனியே புதினப் பத்திரிகைகளை வெளியிடுகின்றன. தேசிய அளவில் இரண்டு நாளிகைகள் வெளிவருகின்றன. எல்லைகளற்ற செய்தியாளர்களின் (Reporters Without Borders) 2008 அறிக்கையின் படி, ஆஸ்திரேலியாவின் ஊடகச் சுதந்திரம் 25வது நிலையில் உள்ளது. நியூசிலாந்து 7வது நிலையிலும், ஐக்கிய அமெரிக்கா 48வது நிலையிலும் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கான இவ்வளவு குறைந்த மதிப்பீட்டிற்கு இந்நாட்டில் பெரும்பாலான பத்திரிகை நிறுவனங்கள் இரண்டு பெரும் வர்த்தக நிறுவனங்களான நியூஸ் கார்ப்பரேசன், மற்றும் ஜோன் ஃபெயார்பாக்ஸ் நிறுவனங்களைச் சார்ந்தே இருப்பது காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது[49]. விளையாட்டு ஆஸ்திரேலியாவில் 15 அகவைக்கு மேலானோரில் 23.5 விழுக்காட்டினர் ஏதாவதொரு குழு விளையாட்டுக்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்[33]. துடுப்பாட்டம், ஹாக்கி, வலைப்பந்தாட்டம், ரக்பி லீக், மற்றும் துடுப்பு படகோட்டம், நீச்சல் போன்ற விளையாட்டுக்களில் ஆஸ்திரேலியா சர்வதேச மட்டத்தில் புகழ் பெற்று விளங்குகிறது. 1956, 2000 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றன. 2000 ஆம் ஆண்டில் இருந்து பதக்கங்களைஇ வென்ற நாடுகளின் பட்டியலில் முதல் ஆறு நாடுகளுக்குள் ஆஸ்திரேலியா அடங்குகிறது[50]. டென்னிஸ் போட்டிகளில் ஆஸ்திரேலிய ஓப்பன் கிராண்ட் சிலாம் போட்டிகள் உலகப் புகழ் பெற்றவை[51]. உயிர்ப் பல்வகைமை ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான இடங்கள் பகுதி-வரண்ட அல்லது பாலைவனங்களாக இருதாலும், இதன் வாழ்விடங்கள் மலைச்சாரல்கள் தொடக்கம் வெப்பவலய மழைக்காடுகளை உள்ளடக்கியது. கடுமையான வானிலை மாற்றங்கள், புவியியல் ரீதியாக நீண்ட காலம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை போன்ற காரணிகளினால், ஆஸ்திரேலியாவின் உயிரியத் துணைத்தொகுதி (biota) தனித்தன்மையையும் பல்வேறு வகைகளையும் கொண்டுள்ளது. இங்கு வளரும் பூக்கும் செடிகொடிகளில் 85%, பாலூட்டி விலங்குகளில் 84%, பறவையினங்களிலே 45%, மீன் போன்ற நீரின வாழினங்களில் 89% வேறு எங்கும் காணவியலா, முற்றிலும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தனி இனங்கள் ஆகும்[52]. கங்காரு, கோவாலா, வால்லரு ஆகியன சில அவுஸ்திரேலிய உயிரினங்களாகும். ஆஸ்திரேலியாவிலேயே உலகில் மிக அதிகமான ஊரும் விலங்குகள் உள்ளன. இங்கு கிட்டத்தட்ட 755 வகையான ஊர்வன உள்ளன[53]. பொருளாதாரம் thumbnail|right|மேற்கு ஆஸ்திரேலியாவின் கால்கூர்லி நகரில் அமைந்துள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரும் தங்கச் சுரங்கம் ஆஸ்திரேலிய டாலர் ஆஸ்திரேலியாவின் நாணயம் ஆகும். இது ஆஸ்திரேலியா தவிர கிறிஸ்மஸ் தீவுகள், கொக்கோஸ் (கீலிங்) தீவுகள், நோர்போக் தீவு, மற்றும் பசிபிக் தீவுகளான கிரிபட்டி, நவூரு, துவாலு ஆகியவற்றிலும் அதிகாரபூர்வ நாணயம் ஆகும். அவுஸ்திரேலியா மேற்கு நாடுகளையொத்த கலப்புப் பொருளாதார அமைப்புடையது. ஐக்கிய நாடுகளின் 2007 ஆம் ஆண்டுக்கான மனித அபிவிருத்திச் சுட்டெண்ணில் மூன்றாவது இடத்திலும் தி எக்கணமிஸ்ட் இதழின் 2005 ஆம் ஆண்டு உலக வாழ்க்கைத்தரச் சுட்டெண்ணில் ஆறாமிடத்திலும் உள்ளது. 2007 இல் அவுஸ்திரேலியாவில் வேலையில்லாதோர் தொகை 4.6 % ஆகும். மொ.உ.உ (GDP) ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி, மற்றும் பிரான்சை விட சற்று அதிகமாகும். அத்துடன் தி எக்கணமிஸ்ட் இதழின் உலகில் மக்கள் வசதியாக வாழக்கூடிய நகரங்களின் பட்டியலில் (2008) மெல்பேர்ண் 2வது, பேர்த் 4வது, அடிலெயிட் 7வது, சிட்னி 9வது இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டன[54]. மேற்கோள்கள் பகுப்பு:முன்னாள் பிரித்தானியக் குடியேற்றங்கள் பகுப்பு:ஓசியானிய நாடுகள் பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
அவுஸ்திரேலியா நாட்டின் தலைநகரம் எது?
கான்பரா
1,472
tamil
4fefb1b93
நியூயார்க் நகரிலுள்ள 102 மாடிகளைக் கொண்ட ஆர்ட் டெக்கோ கட்டிடமான எம்பயர் ஸ்டேட் கட்டிடம் (Empire State Building), ஷ்ரெவ், லாம்ப் மற்றும் ஹேர்மன் அசோசியேட் நிறுவனத்தினால் 1930ல் வடிவமைப்புச் செய்யப்பட்டது. இது 102 ஆவது தளத்திலுள்ள அவதான நிலையம் வரை, 390 மீ உயரம் கொண்டது. 2001 இல் தாக்குதலுக்குள்ளாகி அழிந்துபோன உலக வர்த்தக மையக் கட்டிடம் கட்டப்படுவதற்குமுன், இந்த நகரத்தில் அதி உயர்ந்த கட்டிடமாக இருந்தது. உலகின் அதியுயர் கட்டிடமாகவும் பல ஆண்டுகள் இருந்தது. கிறிஸ்லர் கட்டிடத்திடமிருந்து, உலகின் அதியுயர் கட்டிடமென்ற பெயரைத் தட்டிச் செல்வதற்காக, இதன் கட்டுமானப் பணிகள் அவசரமாக நிறைவேற்றப்பட்டன. இக்கட்டிடம், 1931, மே 1ல் அதிகாரப்பூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது. 1940கள் வரை இதன் பெருமளவு அலுவலகத்தளங்கள் வாடகைக்கு எடுக்கப்படாமலேயிருந்தன. இதன் உச்சியிலுள்ள, பொது அவதான நிலையத்திலிருந்து, நகரின் கவர்ச்சியான காட்சியைக் காணமுடியும். இது பிரபலமான ஒரு சுற்றுலாத் தலமாகும். கட்டிடத்தின் மேற்பகுதி, ஒளிபாச்சும் மின் விளக்குகளினால், இரவில், பல்வேறு நிற ஒளிகளில், ஒளியூட்டப்படுகின்றது. இந் நிறங்கள் காலங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் பொருத்தமாகத் தெரிவு செய்யப்படுகின்றது. உலக வர்த்தக மையத்தின் அழிவைத்தொடர்ந்து பல மாதங்கள், இது சிவப்பு, வெள்ளை மற்றும் நீலத்தில் ஒளியேற்றப்பட்டது. 1945ஆம் ஆண்டு ஜூலை 28, சனிக்கிழமை மு.ப. 9:49 அளவில் ஒரு B-25 மிச்செல் குண்டுவீச்சு விமானம் 79 ஆம் மாடியின் வடக்குப் பக்கத்தில் , தேசிய கத்தோலிக்க நல்வாழ்வுக் கவுன்சில் அமைந்திருந்த பகுதியில் தவறுதலாக மோதியதில் 14 பேர் இறந்தனர். அதனால் ஏற்பட்ட தீ 40 நிமிடத்தில் அணைக்கப்பட்டது. எம்பயர் ஸ்டேட் கட்டிடம், அமெரிக்கக் குடிசார் பொறியியல் சொசைட்டி (American Society of Civil Engineers) யினால் நவீன ஏழு அற்புதங்களில் ஒன்றாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இது 350 5 ஆவது அவெனியூ, 33ஆவது மற்றும் 34ஆவது வீதிகளுக்கு இடையே, மான்ஹற்றன் மத்திய நகரில் அமைந்துள்ளது. பெயர் நியூயார்க் மாநிலத்தின், "எம்பயர் ஸ்டேட்" என்ற செல்லப் பெயர் தொடர்பிலேயே இக் கட்டிடத்துக்குப் பெயரிடப்பட்டது. திரைப்படங்களில் இக் கட்டிடம் சம்பந்தப்பட்ட, மிகவும் பிரபலமான, மக்கள் கலாச்சார வெளிப்பாடாகக் கருதப்படக்கூடிய ஒரு விடயம், 1933ல், வெளியிடப்பட்ட, கிங் கொங் ஆங்கிலத் திரைப்படமாகும். இப்படத்தில் முக்கிய பாத்திரமான கிங் கொங் என்னும் இராட்சத மனிதக் குரங்கு, தன்னைப் பிடித்து வைத்திருப்பவர்களிடமிருந்து தப்புவதற்காக, இந்தக் கட்டிடத்தின் உச்சிக்கு ஏறி இறுதியில், அங்கிருந்து விழுந்து இறந்து விடுகிறது. 1983ல் இப் படத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவின் போது, ஒரு காற்றூதப்பட்ட, கிங் கொங் உருவம் உண்மையான எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் வைக்கப்பட்டது. எனினும் இது ஒருபோதும் முழுமையாகக் காற்றூதப்பட்டு இருக்கவில்லை. Love Affair மற்றும் Sleepless In Seattle போன்ற ஆங்கிலத் திரப்படங்களில் இக் கட்டிடத்தின் அவதானிப்பு நிலையம், படத்தில் வரும் காதலர்கள் சந்திக்கும் இடமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க் கிரக வாசிகளின் படையெடுப்பு தொடர்பான, ஐ லவ் லூசி படத்திலும் இவ்விடம் இடம் பெறுகின்றது. பப்பற் என்னும் அறிவியற் கற்பனைத் தொலைக்காட்சித் தொடரின் ஒரு அங்கமான தண்டர்பேர்ட்ஸ் இக் கட்டிடத்தைத் தண்டவாளங்களிலேற்றி வேறிடத்துக்கு நகர்த்தும் முயற்சியைக் காட்டுகிறது. நிகழ்வுகள் விமான தாக்குதல், 1945 1945ஆம் ஆண்டு ஜூலை 28, சனிக்கிழமை மு.ப. 9:49 அளவில் ஒரு B-25 மிச்செல் என்ற விமானத்தை வில்லியம் பிராங்க்ளின் ஸ்மித்[1] என்பவர் ஓட்டி வந்தார். கடும் பனிப் பொழிவின் காரணமாக, விமானத்தை இயக்க முடியாத சூழ்நிலையில் தவறுதலாக கட்டிடத்தின் வடக்குப் பகுதியிலுள்ள 79 மற்றும் 80ம் தளங்களின் மத்தியில் மோதியது. மோதிய அதிர்ச்சியின் காரணமாக விமானத்தின் எந்திரப்பகுதி, அதற்கு அடுத்த தளத்தின்மீது மோதியது. விமானத்தின் மற்றொரு பாகம், கட்டிடத்தின் உயர்த்தியை தாக்கியது.கட்டிடத்தின் தாக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட தீ, 40 நிமிடங்களில் அணைக்கப்பட்டது. இருப்பினும், 14 பேர் இறந்தனர்[2][3]. அதற்குப் பின்னர் வந்த திங்கட்கிழமை, கட்டிடம் மீண்டும் செயல்படத் துவங்கியது. சம்பவம் நடந்த ஒராண்டு கழித்து, மற்றொரு விமானம் இதேபோல மோத நேரிட்டது. ஆனால், விமான ஓட்டியின் சாதுர்யத்தால் விமானத்தை திசை திருப்பிவிட்டார்[4]. தற்கொலைகள் 2006ம் ஆண்டின் சராசரியாக 30க்கும் மேற்பட்டோர், கட்டிடத்தின் உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்[5]. கட்டிடத்தின் முதல் தற்கொலையானது, கட்டிடம் முடிப்பதற்கு முன்னரே நிகழ்ந்துள்ளது. 1947ம் ஆண்டில் தொடர்ச்சியான மூன்று வாரங்களில், அடுத்தடுத்து ஐந்து பேர் தற்கொலை செய்துள்ளனர்[6]. மே மாதம் 1ம் நாள் 1947ம் ஆண்டு, எவிலின் மெக்ஹல் (22) என்பவர், 86வது தளத்திலிருந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார்[7]. திசம்பர் மாதம் 1943ம் ஆண்டு, வில்லியம் லாயடு ராம்போ என்பவரும் அதே தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்[8]. நவம்பர் மாதம் 3ம் நாள் 1932ம் ஆண்டு, பெட்ரிக் எக்கர்ட் என்பவர் மட்டுமே, கட்டிடத்தின் உயர் மேல்தளமான 102ம் தளத்திலிருந்து குதித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார்[8]. தற்கொலை முயற்சிகள் திசம்பர் மாதம் 2ம் நாள் 1979 ஆண்டு, எல்வித்தா ஆதம் என்பவர் 86வது தளத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். ஆனால், இடுப்பெழும்பு முறிவுகளுடன் காப்பாற்றப்பட்டார்[9][10][11]. ஏப்ரல் மாதம் 25ம் நாள் 2013ம் ஆண்டு, 85வது தளத்திலிருந்து ஒருவர் குதித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் சிறு காயங்களுடன் காப்பாற்றப்பட்டார்[8]. துப்பாக்கிச்சூடுகள் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்திலும் அதன் முன்பக்கத்திலும் இரண்டு முக்கிய துப்பாக்கிச்சூடுகள் நடைபெற்றுள்ளன.1997 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத் 23ம் தேதி எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் 86 வது தளத்தின் காட்சி மாடத்தில் துப்பாக்கி ஏந்திய ஒருவனால் 7 பேர் சுடப்பட்டனர். 69 வயதுடைய பாரஸ்தீன ஆசிரியரான அபுல் கமால் எனும் பெயருடைய அந்நபர் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சுட்டதில் ஒருவர் கொல்லப்பட்டும் மற்ற அறுவர் காயமும் அடைந்தனர்.இசுரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே நிகழ்ந்த சச்சரவு சம்பவங்களுக்காக இது நடத்தப்பட்டதாக கூறப்பட்டது [12]. இக்கட்டிடத்தின் ஐந்தாவது வாயிலின் ஓர நடைபாதையில் ஆகஸ்ட் 24, 2012 அன்று 9.00 மணியளவில் ஜெஃப்ரி டி. ஜான்சன் (வயது 58) என்பவர் 2011 ல் தான் பணிநீக்கப்பட்டதால் எழுந்த ஆத்திரத்தால் தன் முன்னாள் சக பணியாளரை சுட்டுக் கொன்றார். துப்பாக்கி ஏந்திய அந்நபரை எதிர்கொண்டு 16 முறை அந்நபரை நோக்கிச் சுட்டனர். இருந்தபோதிலும் இச்சம்பவத்தால் அருகிலிருந்த ஒன்பது பேர் காயமடைந்தனர்.அதில் மூவர் நேரடியாக குண்டுகளால் தாக்கப்பட்டனர். [13] கட்டிடக்கலை உட்பக்க வடிவமைப்பு (Interior) எம்பயர் ஸ்டேட் கட்டிடம் 102 வது தளம் வரை 1,250 அடி (381 மீட்டர்) உயரமும் 2013 அடி (61.9 மீட்டர்) உயரம் கொண்ட உச்சி கோபுரமும் சேர்த்து 1,453 அடி 8 9⁄16 அங்குலம் (443.092 மீட்டர்) உயரம் கொண்டது.இக்கட்டிடத்தின் 2,158,000 சதுர அடிகள் பரக்களவு (200,500 மீ2) கொண்ட 85 அடுக்குகள் வர்த்தகம் மற்றும் அலுவலகப் பயன்பாடுகளுக்கு வாடைகைக்கு விடப்பட்டள்ளது. 86 வது தளத்திர் ஒரு உள் மற்றும் வெளிப்புற பார்வையாளர் மேடை உள்ளது. மீதமுள்ள 16 தளங்கள் கலை அலங்கார வடிவமைப்பு கோபுரமாக உள்ளது. 102 வது தளம் கண்காணிப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 203 அடிகள் கொண்ட உச்சி கோபுரம் ஒளிபரப்பு வானலை வாங்கி அலைக்கம்பங்களும் (Broadcasting Antenna) முகட்டு உச்சியில் இடி தாங்கியும் நிறுவப்பட்டுள்ளது. எம்பயர் ஸ்டேட் கட்டிடம் 100 தளங்கள் கொண்ட உலகின் முதல் கட்டிடமாகும்.இது 6,500 சன்னல்களையும், 73 மின் தூக்கிகளையும் தரையிலிருந்து 102 வது மாடி வரை 1,860 படிகளையும் கொண்டுள்ளது. இதன் மொத்த பரப்பு 2,768,591 சதுர அடி (257,211 மீ2). இக்கட்டிடத்தின் அடித்தளம் இரண்டு ஏக்கர் (8,094 மீ2).10118 என்ற சொந்த சிப் (ZIP) குறியீடு (அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள 5 அல்லது 9 எண்கள் கொண்ட அஞ்சல் இலக்கம்) கொண்ட இந்த கட்டிடத்தில் 1,000 தொழில் நிறுவனங்கள் அல்லது அவற்றுக்கான தலைமை அலுவலகங்கள் உள்ளன.2007 ஆண்டு நிலவரப்படி இக்கட்டிடத்தில் ஒவ்வொரு நாளும் தோராயமாக 21,000 பணியாளர்கள் பணி புரிகிறார்கள்.அமெரிக்காவின் இராணுவத் தலைமையகமான பெண்டகனைத் தொடர்ந்து அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய அலுவலக வளாகமாக இக்கட்டிடம் திகழ்கிறது இக்கட்டிடம் 40,948,900 அமெரிக்க டாலர் (2016 நிலவரப்படி இதன் மதிப்பு $644,878,000 ) செலவில் கட்டப்பட்டள்ளது.கட்டிடத்தின் வாழ்நாளை கருத்திற்கொண்டு முன்கணிப்பு வடிவமைப்பு முறையில் பல கட்டங்களாக கட்டப்பட்டுள்ள கட்டிடம் இதுவாகும், கட்டிடத்தின் எதிர்கால நோக்கம் மற்றும் பயன்கள் முந்தைய தலைமுறைகளின் தேவைகளால் கட்டுப்படுத்தப்படவில்லை. மின்சார அமைப்பின் மேலதிக வடிவமைப்பு கட்டிடத்தின் நயத்திற்குச் சான்று பகிர்வதாக உள்ளது. கலையம்சம் கொண்ட 16 தளங்கள் நியூயார்க்கில் இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய கட்டிடக்கலை வடிவமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.33 வது மற்றும் 34 வது தெருக்களில் இக்கட்டிடத்திற்கு வருவதற்காக உள்ள நுழைவாயிலில் நவீனத்திறன் வாய்ந்த எஃகு விதானங்கள் உள்ளன. இரண்டு அடுக்கு உயர் தாழ்வாரங்கள் மின்தூக்கி மையகத்திற்கு எஃகு மற்றும் கண்ணாடி பாலங்கள் வழியாகக் கடந்துசெல்கின்றன.இத்தளத்தில் மின் உயர்த்தி மையம் 67 மின் உயர்த்திகளைக் கொண்டுள்ளது. முகவாயில் அறையானது (lobby) மூன்று தளங்கள் உயரமுடையது.அலுமினியத்தாலான உச்சி கோபுரமானது 1952 வரை ஒளிபாப்பு கோபுரம் நிறுவப்படாமல் இருந்தது.1964 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக கண்காட்சிக்காக ராய் ஸ்பார்க்கியா மற்றும் ரெனீ நெமாரோவ் ஆகியோரால் 1963 ல் இக்கட்டிடத்தின் வடக்குத் தாழ்வாரத்தில் எட்டு ஒளியேற்றப்பட்ட சட்டங்கள் நிறுவப்பட்டது.பாரம்பரியமான ஏழு அதியங்களுக்கு அடுத்ததாக இது உலகின் எட்டாவது அதிசயமாக சித்தரிக்கப்பட்டது. சான்றுகள் இவற்றையும் பார்க்கவும் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள 50 அதியுயர் கட்டிடங்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:ஐக்கிய அமெரிக்க வானளாவிகள்
எம்பயர் ஸ்டேட் கட்டிடம் எத்தனை அடி உயரம் உள்ளது?
1,453
5,864
tamil
daaf5a25a
ஆசியா (ஒலிப்பு) (/ˈeɪʒə/(listen) or /ˈeɪʃə/) உலகின் மிகப்பெரியதும், அதிக மக்கள்தொகை கொண்டதுமான ஒரு கண்டம். பெரும்பாலும் கிழக்கு, வடக்கு ஆகிய அரைக்கோளப் பகுதிகளில் அமைந்துள்ள இது, யுரேசியா நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும். புவி மேற்பரப்பின் 8.7% பரப்பளவு ஆசியாக் கண்டத்தில் உள்ளது. உலக நிலப்பரப்பில் இது 30% ஆகும். 3.9 பில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட ஆசியாவில், உலகின் மக்களில் ஏறத்தாழ 60 சதவீதம் பேர் வாழ்கின்றனர். 20 ஆம் நூற்றாண்டில் ஆசியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ நான்கு மடங்காகியது.[3] பொதுவாக ஆசியா, யுரேசியாவின் கிழக்கில் ஐந்தில் நான்கு பகுதியைக் கொண்டதாகக் கொள்ளப்படுகிறது. இது சூயெசுக் கால்வாய்க்கும் ஊரல் மலைகளுக்கும் கிழக்கிலும்; காக்கேசிய மலைகள், கசுப்பியன் கடல், கருங்கடல் என்பவற்றுக்குத் தெற்கிலும் அமைந்துள்ளது.[4][5] கிழக்கில் பசிபிக் பெருங்கடலும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும், வடக்கில் ஆர்க்டிக் பெருங்கடலும் ஆசியாவின் எல்லைகளாக உள்ளன. ஆசியா என்னும் இடப்பெயர் மிகப் பழமையானது. இதன் அளவு, பல்வகைமைத் தன்மை என்பவற்றை நோக்கும்போது, இது பல்வேறுபட்ட பகுதிகளையும், மக்களையும் உள்ளடக்கிய ஒரு பண்பாட்டுக் கருத்துருவேயன்றி, ஒருதன்மைத்தான இயற்பியப் பொருள் அல்ல.[6] ஆசியாவில் பல்வேறு பகுதிகளும் மக்களும், இனக்குழுக்கள், பண்பாடு, சூழல், பொருளாதாரம், வரலாற்றுப் பிணைப்பு, அரசியல் முறைமை போன்ற விடயங்களில் தமக்குள் பெருமளவு வேறுபட்டுக் காணப்படுகின்றனர். வரைவிலக்கணமும் எல்லைகளும் கிரேக்கரின் மூன்று கண்ட முறை ஆசியாவையும், ஐரோப்பாவையும் முதலில் வேறுபடுத்தி அறிந்தவர்கள் பண்டைக் கிரேக்கர்கள் ஆவர். அவர்கள், ஏஜியக் கடல், டார்டனெல்சு, மர்மாராக் கடல், பொசுப்போரசு, கருங்கடல், கெர்ச் நீரிணை, அசாவ் கடல் ஆகியவற்றை ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான எல்லையாகக் கொண்டனர். நைல் ஆறு ஆசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான எல்லையாகக் கொள்ளப்பட்டது. எனினும், சில கிரேக்கப் புவியியலாளர்கள், செங்கடல் பொருத்தமான எல்லையாக இருக்கும் எனக் கருதினர்.[7] நைல் ஆற்றுக்கும், செங்கடலுக்கும் இடையில் இருந்த டேரியசுக் கால்வாய், பெரும்பாலான கருத்து வேறுபாடுகளுக்குக் காரணம் ஆகியது. கருங்கடலுட் கலக்கும் டொன் ஆறு ஆசியாவின் மேற்கு எல்லையாக அமைந்தது. 15 ஆம் நூற்றாண்டில் நைல் ஆற்றுக்குப் பதிலாகச் செங்கடலே ஆசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான எல்லையாக நிலைபெற்றது. தொடக்கத்தில் ஆசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான எல்லை ஆர்க்டிக் பெருங்கடல் வரை எட்டவில்லை.[7] ஆனால், நாடுகாண் பயணங்கள் வளர்ச்சியடைந்த பின்னர் இவ்வெல்லையை மீள்வரையறை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆசியா-ஐரோப்பா எல்லை சாரக உருசியாவின் மன்னனான பேரரசர் பீட்டர், சுவீடனும் ஓட்டோமான் பேரரசும் கிழக்குப் பகுதி நிலங்களுக்கு உரிமை கொண்டாடியதை முறியடித்ததுடன், சைபீரியப் பழங்குடியினரின் ஆயுத எதிர்ப்புக்களையும் முறியடித்து 1721ல் உருசியப் பேரரசை உருவாக்கினான். இப் பேரரசு யூரல் மலைகளை எட்டி அதற்கு அப்பாலும் பரந்திருந்தது. இதனால், டான் ஆறு ஆசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான எல்லையாக இருந்தது வட ஐரோப்பியர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. அக்காலத்தில் உருசியப் பேரரசின் முக்கியமான புவியியல் கோட்பாட்டாளராக இருந்தவர் வொன் இசுட்ராலென்பேர்க். போல்ட்டாவா சண்டையில் பிடிபட்ட ஒரு சுவீடியப் போர்க்கைதி. இவருக்குப் பீட்டரின் சைபீரிய அலுவலரான வசிலி டாட்டிசுச்சேவ் என்பவரின் தொடர்பு கிடைத்தது. அவர்மூலம் எதிர்கால நூல் ஒன்றுக்காகப் புவியியல், மானிடவியல் ஆகியவை தொடர்பிலான ஆய்வுகளைச் செய்வதற்குச் சுதந்திரம் கிடைத்தது. 1730ல், பீட்டர் இறந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், சுவீடனுக்குத் திரும்பிய வொன் இசுட்ராலென்பேர்க் ஆசியாவின் எல்லையாக ஊரல் மலைகளைக் குறித்துப் புதிய நிலப்படத் தொகுதி ஒன்றை வெளியிட்டார். புவியியல் அடிப்படையிலும், பிற பண்பாட்டுப் பாரம்பரிய அடிப்படையிலும் தமது ஐரோப்பிய அடையாளத்தை வைத்திருப்பதனால், இக்கருத்துரு குறித்து உருசியர்கள் அதிக உற்சாகம் காட்டினர். இந்தக் கருத்தைத் தானே வொன் இசுட்ராலென்பேர்க்குக் கூறியதாக டாட்டிசுச்சேவ் அறிவித்தார். எம்பா ஆறே கீழ் எல்லையாக இருக்க வேண்டும் என வொன் இசுட்ராலென்பேர்க் ஆலோசனை கூறினார். அடுத்த நூற்றாண்டு முழுவதும் பல்வேறு முன்மொழிவுகள் வெளியாயின. 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் ஊரல் ஆறே எல்லை என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. எல்லை கருங்கடலிலிருந்து, கசுப்பியன் கடலுக்கு நகர்த்தப்பட்டது.[8] அக்காலத்து நிலப்படங்களில் டிரான்சுகாக்கேசியா ஆசியாக் கண்டத்துள் இருந்தது. அப்பகுதியின் பெரும்பகுதி பின்னர் சோவியத் ஒன்றியத்தினுள் சேர்த்துக்கொள்ளப்பட்டதால், எல்லையைத் தெற்கே நகர்த்த வேண்டும் என்னும் கருத்து எழுந்தது. ஆசியா-ஓசானியா எல்லை ஆசியாவுக்கும் ஓசானியாவுக்கும் இடையிலான எல்லை மலாயத் தீவுக்கூட்டங்களில் ஓரிடத்தில் வைக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ""தென்கிழக்கு ஆசியாவும் ஓசானியாவும்" என்னும் தொடர், அது உருவான காலத்தில் இருந்தே பல்வேறுபட்ட புவியியல் பொருள்களை உடையதாக இருந்தது. எவ்வாறான வரைவிலக்கணங்களைக் கொடுத்தபோதிலும் ஓசானியா என்றும் ஆசியாவாக இருந்ததில்லை. மலாயத் தீவுக்கூட்டங்களில் எந்தத் தீவு ஆசியாவுக்குள் அமையும் என்பது, இத் தீவுகள்மீது பல்வேறு பேரரசுகள் கொண்டிருந்த குடியேற்றவாத உரிமைகளில் தங்கியிருந்தது. தென்கிழக்கு ஆசியாவின் எல்லை தற்போதைய நிலைக்குக் குறுகியது படிப்படியாக ஏற்பட்டது ஆகும்."[7] புவியியலும் காலநிலையும் உலகில் உள்ள கண்டங்களில் மிகப்பெரிய கண்டமே ஆசியா ஆகும். ஆசியா உலகின் 8.8% மொத்தமேற்பரப்புப் பரப்பளவு அதாவது பெருமளவு நிலப்பகுதியைக் கொண்டுள்ளதோடு மட்டுமன்றி பெரிய கடற்கரைப் பிரதேசத்தையும் ஆசியாவே கொண்டுள்ளது, அதன் நீளம் 62,800 கிலோமீற்றர்கள் ஆகும். சுயஸ் கால்வாயும், உரால் மலைகளும் கிழக்குத் திசையிலும், காகசஸ் மலைத்தொடரும், கஸ்பியன் கடலும், கருங்கடலும் தெற்குத் திசையிலும் ஆசியாவின் எல்லைகளாக உள்ளன.[9][4][10] இது கிழக்கில் அமைதிப் பெருங்கடல் ஆலும் தெற்கில் இந்தியப் பெருங்கடல் ஆலும் வடக்கில் ஆர்க்டிக் பெருங்கடல் ஆலும் சூழப்பட்டுள்ளது. ஆசியா 48 நாடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள ஒரு கண்டம், அவற்றில் இரண்டு (உருசியா மற்றும் துருக்கி) ஒரு பகுதியை ஐரோப்பியாக் கண்டத்தில் கொண்டுள்ளன. ஆசிய பல்வேறுபட்ட காலநிலைகளையும் புவியியல் தோற்றங்களையும் கொண்டது. தினசரி உலகின் அதிக வெப்பநிலை ஆசியாவின் மேற்குப் பக்கங்களிலேயே காணப்படுகின்றது. ஆசியாவின் தென்மேற்குப் பகுதி வெப்பமான காலநிலையைக் கொண்டுள்ளது. அதிகமாகப் புயல் அடிக்கக் கூடிய வாய்ப்புக்களைக் கொண்ட இடங்களான பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு ஜப்பான் ஆசியாவில் அமைந்துள்ள இடங்கள். மங்கோலியாவின் கோபி பாலைவனம் மற்றும் அரபியன் பாலைவனம் ஆகியன மத்திய கிழக்கு வரை பரந்துள்ளன. நோபாளத்துக்கும் சீனாவுக்கும் இடையில் இருக்கும் இமயமலை, இந்த உலகத்தின் மிகப்பெரிய மலைத்தொடர் ஆகும். காலநிலை மாற்றம் 2010 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராட்சி மூலம் ஆசியாவின் 16 நாடுகள் காலநிலை மாற்றத்தால் பெரும் இடர்களைச் சந்திகின்றன எனக் கண்டறியப்பட்டது. ஆசிய நாடுகளான வங்காளதேசம், இந்தியா, வியட்நாம், தாய்லாந்து, பாக்கித்தான் மற்றும் இலங்கை ஆகியன அந்தப் பதினாறு நாடுகளில் அதிக சிக்கல்களை எதிர்கொள்ளும் நாடுகள் ஆகும். மக்கள்தொகைப் புள்ளியியல் வரலாற்றில் சனத்தொகைYearPop.±%1500 243,000,000—1700 436,000,000+79.4%1900 947,000,000+117.2%1950 1,402,000,000+48.0%1999 3,634,000,000+159.2%2012 4,175,038,363+14.9%Source: The figure for 2012 is provided by . உலகில், மனித வளர்ச்சிச் சுட்டெண் மிகக் கூடுதலாக வளர்ந்திருப்பது கிழக்காசியாவிலேயே ஆகும். முன்னேற்றம் நலவியல், கல்வி, வருமானம் என்பவை தொடர்பிலான பகுப்பாய்வுகளின் அடிப்படையில், கடந்த 40 ஆண்டுகளில் சராசரி மனித வளர்ச்சிச் சுட்டெண் இரண்டு மடங்காகியுள்ளது. 1970ல் இருந்து மனித வளர்ச்சிச் சுட்டெண் மேம்பாட்டின் அடிப்படையில் உலகில் இரண்டாவது நிலையில் இருக்கும் சீனாவே, கல்வி, நலவியல் ஆகியவற்றில் அல்லாது வருமான அடிப்படையில் மட்டும் முதல் பத்துக்குள் அடங்கிய ஒரே நாடு ஆகும். சீனாவின் தனி நபர் வருமானம் கடந்த நான்கு பத்தாண்டுகளில் 21 மடங்கு ஆகியுள்ளதுடன், இக்காலப் பகுதியில் பல நூறு மில்லியன் மக்களை வறுமை நிலையிலிருந்து உயர்த்தியுள்ளது. இருந்தாலும், பள்ளிச் சேர்க்கை, வாழ்நாள் எதிர்பார்ப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் சீனா இப்பகுதியின் சிறப்பான வளர்ச்சி பெற்ற நாடுகளுள் அடங்கவில்லை.[11] 1970 ஆம் ஆண்டிலிருந்து குறிப்பாக நலவியல், கல்வி ஆகியவற்றின் மேம்பாட்டின் அடிப்படையில் விரைவாக வளரும் நாடாகத் தென்னாசிய நாடான நேப்பாளம் விளங்குகிறது. இதன் தற்போதைய வாழ்நாள் எதிர்பார்ப்பு 1970 ஆம் ஆண்டில் இருந்ததைவிட 25 ஆண்டுகள் கூடுதலானது. நேப்பாளத்தில் பள்ளிக்குச் செல்லும் வயதுள்ள ஐந்து சிறுவர்களில் நான்குக்கும் கூடுதலானவர்கள் இப்போது தொடக்கப் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். 40 ஆண்டுகளுக்கு முன்னர் இது ஐந்து பேருக்கு ஒருவராகவே இருந்தது.[11] மனித வளர்ச்சிச் சுட்டெண் அடிப்படையிலான உலகத் தரவரிசையில் சப்பானும், தென்கொரியாவும் முறையே 11, 12 ஆவது இடங்களில் உள்ளன. இவை மிக உயர்ந்த மனித வளர்ச்சி வகைக்குள் அடங்குகின்றன. இவற்றைத் தொடர்ந்து, ஆங்காங் 21 ஆவது இடத்திலும், சிங்கப்பூர் 27 ஆவது இடத்திலும் உள்ளன. ஆப்கானித்தான் மதிப்பிடப்பட்ட 169 நாடுகளுள் 155 ஆவது இடத்தைப் பெற்று, ஆசிய நாடுகளுள் மிகக் கீழான நிலையில் உள்ளது.[11] பொருளாதாரம் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐரோப்பியக் கண்டத்தை அடுத்து ஆசியக் கண்டமே இரண்டாம் இடத்தில் உள்ளது. எனினும் கொள்வனவு ஆற்றல் சமநிலை அடிப்படையில் ஒப்பிடும்போது இதுவே முதலிடம் வகிக்கின்றது. 2011 ஆம் ஆண்டில், ஆசியாவின் பாரிய பொருளாதார நாடுகளாக சீனா, சப்பான், இந்தியா, தென்கொரியா மற்றும் இந்தோனேசியா போன்றவை உள்ளன.[12] ஆசியா கண்டத்திலுள்ள நாடுகளும் துணை மண்டலங்களும் மொழிகள் ஆசியாவில் பல மொழிக் குடும்பங்களும், தனித்த மொழிகளும் உள்ளன. பெரும்பாலான ஆசிய நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட தாயக மொழிகள் பேசப்படுகின்றன. "எத்னாலாக்" தரும் தகவல்களின்படி, இந்தியாவில் 800க்கு மேற்பட்ட மொழிகளும், இந்தோனீசியாவில் 600க்கு மேற்பட்ட மொழிகளும், பிலிப்பைன்சில் 100க்கு மேற்பட்ட மொழிகளும் பேசப்படுகின்றன. சீனாவில் அதன் பல்வேறு மாகாணங்களிலும் பல மொழிகளும், கிளை மொழிகளும் பேசப்படுகின்றன. மதங்கள் ஆசியத் தொன்மவியல் சிக்கலானதும் பல்வகைப்பட்டதும் ஆகும். பெரு வெள்ளம் குறித்து கிறித்தவர்களின் பழைய ஏற்பாட்டில் வரும் கதை, மெசொப்பொத்தேமியத் தொன்மமான கில்கமேசு இதிகாசத்தில் முதன்முதலாகக் காணப்படுகிறது. இந்துப் புராணங்கள் கூறும் விட்டுணுவின் மீன் அவதாரம், மனுவுக்குப் பெரு வெள்ளம் குறித்து எச்சரிக்கை செய்கிறது. ஏறத்தாழ எல்லா ஆசிய மதங்களும் மெய்யியல் தன்மை கொண்டவை. அத்துடன், ஆசியாவின் மெய்யியல் மரபுகள் பல வகைத்தான மெய்யியல் சிந்தனைகளையும், எழுத்துக்களையும் உள்ளடக்குகின்றன. இந்திய மெய்யியல், இந்து மெய்யியல், பௌத்த மெய்யியல் என்பவற்றையும் உள்ளடக்குகிறது. இவை, பொருள்சாரா கூறுகளைத் தம்முள் கொண்டவை. அதேவேளை இந்தியாவில், பொருள் இன்பத்தை முன்னிலைப்படுத்தும் சார்வகம் போன்ற மதங்களும் உள்ளன. ஆசியாவின் ஒரு பகுதியான மையக்கிழக்கில் தோன்றிய இசுலாம் பல ஆசிய நாடுகளில் முதன்மை மதமாக உள்ளதுடன் ஏறத்தாழ எல்லா ஆசிய நாடுகளிலும் இசுலாம் மதத்தைப் பின்பற்றுபவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வாழ்கின்றனர். குடியேற்றவாதக் காலத்துக்குப் பின்னர், பல ஆசிய நாடுகளில் கிறித்தவமும் பரவியுள்ளது. ஆபிரகாமிய சமயங்கள் யூதம், கிறித்தவம், இசுலாம் மற்றும் பகாய் சமயம் போன்ற ஆபிரகாமிய சமயங்கள் மேற்கு ஆசியாவிலேயே தோற்றம் பெற்றன. யூதம் எனும் மதம்தான் ஆபிரகாமிய சமயங்களிலேயே மிகப் பழமையானது ஆகும். இது அதிகமாக இசுரேல்லில் பின்பற்றப்படுகிறது (இது யூத மக்களின் தாய்நாடு மற்றும் அவர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இந்த நாட்டில் ஐரோப்பியாவில் பரந்து இருந்து இங்கு வந்த யூத மக்களும் ஆசியா மற்றும் ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த அங்கு முதலே இருந்த மக்களும் வாழ்கின்றனர்).[13] கிறிஸ்தவ மதமும் ஆசியாவில் பரந்த அளவில் காணப்படுகின்ற மதமாகும். பிலிப்பீன்சு மற்றும் கிழக்குத் திமோர் போன்ற நாடுகளில் உரோமன் கத்தோலிக்கம் ஒரு முக்கிய மதமாகும்;இது முறையே இசுபானியர்களாலும் போர்த்துக்கேயராலும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆர்மீனியா, சைப்பிரஸ், சியார்சியா மற்றும் வடக்கு ஆசியா ஆகிய இடங்களில் கிழக்கு மரபுவழி திருச்சபை ஒரு முக்கிய மதமாக உள்ளது. சவூதி அரேபியாவில் உருவான இசுலாம் மதம் தான் பெரிய, மிகவும் அதிக அளவில் ஆசியாவில் பரந்து காணப்படும் மதமாகும். 12.7% அளவில் இருக்கின்ற உலக முஸ்லிம் சனத்தொகையில் தற்போது உலகில் அதிக அளவில் முஸ்லிம் மதம் பின்பற்றப்படும் நாடு இந்தோனேசியா. மேலும் முஸ்லிம் முக்கிய மதமாகப் பின்பற்றப்படுகின்ற ஆசிய நாடுகளாகப் பாக்கித்தான், இந்தியா, வங்காளதேசம், ஈரான் மற்றும் துருக்கி. உலகில் முஸ்லிம்களின் புனித இடங்களாக, மக்கா, மதீனா மற்றும் சிறிய அளவில் எருசலேம் ஆகிய நகரங்கள் முஸ்லிம்களின் புனித இடங்களாகக் கருத்தப்படுகின்றன. ஆசியாவில் உருவான பகாய் சமயம் ஆனது ஈரானிலிருந்து உதுமானியப் பேரரசு, நடு ஆசியா, இந்தியா, மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுக்குப் பக உல்லா (ஆங்கிலம்: Bahá'u'lláh) வாழ்ந்து கொண்டிருக்கையில் பரவியது. 20ம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலிருந்து இந்த மதப் பரம்பல் மிக மெதுவாகவே ஆசியாவில் இடம்பெற்றது. ஏனென்றால் பல முஸ்லிம் நாடுகளில் பாகாவின் மதப்பரப்பல் செயற்பாடுகள் அடக்கி ஒடுக்கப்பட்டன. இந்தியாவிலுள்ள மதங்கள் மற்றும் கிழக்காசிய மதங்கள் சாதனையை நிலைநாட்டிய ஆலயம்.[14]]] அதிகமாக அனைத்து ஆசிய மதங்களும் தத்துவ தன்மையைக் கொண்டமைந்தவை. மேலும் ஆசிய மதங்கள் ஒரு மிகப்பெரிய தத்துவக்கருத்துகள் கொண்ட கருத்துக்களையும் இலக்கியங்களையும் கொண்ட மிகப்பெரிய வட்டத்துள் அடங்குபவை. இந்திய மெய்யியல், இந்து மெய்யியல் ஐயும் பௌத்த மெய்யியலையும் தன்னகத்தே கொண்டது. இந்து சமயம், பௌத்தம், ஜைனம் மற்றும் சீக்கியம் ஆகிய மதங்கள் ஆசியாவில் குறிப்பாகத் தெற்காசியாவின் நாடான இந்தியாவில் தோற்றம் பெற்றன. கிழக்காசியாவில் குறிப்பாகச் சீனாவிலும் சப்பானிலும், கன்பூசியம், தாவோயியம் மற்றும் சென் புத்தமதம் ஆகியன தோற்றம் பெற்றன. 2012 ஆண்டு தகவல்களின் படி, இந்துமதம் சுமார் 1.1 பில்லியன் மக்களால் பின்பற்றப்படுகிறது. ஆசிய மொத்த சனத்தொகையில் 25% அளவுடைய மக்கள் இந்த மதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். இந்து மதம் ஆசியாவில் காணப்படுகின்ற மதங்களில் அதிக மக்களால் பின்பற்றப்படும் இரண்டாவது மிகப்பெரிய மதமாகத் திகழ்கின்றது. எப்படிஎன்றாலும் இது தெற்கு ஆசியாவில் மிகவும் அதிக அளவில் பின்பற்றப்படுகின்ற மதமாகும். 80% சதவிகத்திற்கும் அதிகமான இந்திய மற்றும் நேபாளியம் போன்ற நாடுகளைச்சேர்ந்த மக்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுகின்றனர். அத்தோடு குறிப்பிடத்தக்க அளவில் வங்காளதேசம், பாக்கித்தான், பூட்டான், இலங்கை மற்றும் பாலி ஆகிய இடங்களிலும் மக்களால் இந்துமதம் பின்பற்றப்படுகிறது. இந்தியப்பிரைஜைகள் வாழும் நாடுகளான மியான்மர், சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய இடங்களிலும் மக்களால் இந்துமதம் பின்பற்றப்படுகிறது. பௌத்தமதம் மிகப்பெரிய அளவில் தென்கிழக்காசியாவிலும் கிழக்காசியாவிலும் மக்களால் பின்பற்றப்படுகிறது. இந்த இடங்களில் பலநாடுகளில் சனத்தொகை அடிப்படையில் அதிக மக்கள் பின்பற்றும் மதமாகவும் இது திகழ்கிறது. அந்த வகையில் சனத்தொகை அளவில் அதிக மக்களால் பௌத்த மதம் பின்பற்றப்படும் நாடுகளாக: கம்போடியா (96%),[15] தாய்லாந்து (95%),[16] மியான்மர் (80%-89%),[17] சப்பான் (36%–96%),[18] பூட்டான் (75%-84%),[19] இலங்கை (70%),[20] லாவோஸ் (60%-67%)[21] and மங்கோலியா (53%-93%).[22] அதிக அளவில் பௌத்த மதத்தைப் பின்பற்றும் மக்கள் சிங்கப்பூர் (33%-51%),[23] சீனக் குடியரசு (35%–93%),[24][25][26][27] தென் கொரியா (23%-50%),[28] மலேசியா (19%-21%),[29] நேபாளம் (9%-11%),[30] வியட்நாம் (10%–75%),[31] சீனா (20%–50%),[32] வடகொரியா (1.5%–14%),[33][34][35] ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர். மேலும் சிறிய அளவில் இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளிலும் பௌத்த மக்கள் காணப்படுகின்றனர். ஜைன மதம் அதிகமாகவும் முக்கியமாகவும் இந்தியாவிலேயே பின்பற்றப்படுகிறது. அத்துடன் சிறிய அளவில் இந்தியர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளான அமேரிக்கா மற்றும் மலேசியாவிலும் பின்பற்றப்படுகிறது. சீக்கிய மதம் வடஇந்தியாவிலும், அதிக இந்தியர்கள் வாழும் ஏனைய ஆசியாவின் பகுதிகளிலும் முக்கியமாகத் தெற்காசியாவிலும் காணப்படுகின்றது. கன்பூசியம் அதிக அளவில் சீனா, தாய்வான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளிலும் சீனமக்கள் புலம்பெயர்ந்து வாழும் இடங்களிலும் அதிகமாகப் பின்பற்றப்படுகிறது. தாவோயியம், சீனா, தாய்வான், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பின்பற்றப்படுகிறது. நவீன பிரச்சினைகள் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான ஆசியாவில் ஏற்பட்ட முக்கிய வெளியுறவுப் பிரச்சினைகள் கொரியப் போர் வியட்நாம் போர் இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு இந்திய சீனப் போர் வங்காளதேச விடுதலைப் போர் இந்திய பாக்கித்தான் போர், 1971 யோம் கிப்பூர்ப் போர் ஈரானியப் புரட்சி ஆப்கான் சோவியத் போர் ஈரான் – ஈராக் போர் ஈழப் போர் 1991 வளைகுடாப் போர் ஈராக் மீதான படையெடுப்பு, 2003 2010-2011 மத்திய கிழக்கு வட ஆப்பிரிக்க எதிர்ப்புப் போராட்டங்கள் சிரிய உள்நாட்டுப் போர் இசுலாமிய தேசப் போர் ஆசிய நாடுகள் இவற்றையும் பார்க்கவும் கிழக்காசியா தென்கிழக்காசியா தெற்கு ஆசியா நடு ஆசியா மத்திய கிழக்கு நாடுகள் ஆசிய நாடுகளின் பட்டியல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள் புற இணைப்புகள் CS1 maint: discouraged parameter (link) Unknown parameter |deadurl= ignored (|url-status= suggested) (help)CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) ஆசியா பகுப்பு:கண்டங்கள்
ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய மலை எது?
இமயமலை
5,797
tamil
64211f815
Outline of South Asian history Palaeolithic (2,500,000–250,000 BC) Madrasian Culture Soanian Culture Neolithic (10,800–3300 BC) Bhirrana Culture (7570–6200 BC) Mehrgarh Culture (7000–3300 BC) Edakkal Culture (5000–3000 BC) Chalcolithic (3500–1500 BC) Anarta tradition (c. 3950–1900 BC) Ahar-Banas Culture (3000–1500 BC) Pandu Culture (1600–1500 BC) Malwa Culture (1600–1300 BC) Jorwe Culture (1400–700 BC) Bronze Age (3300–1300 BC) Indus Valley Civilisation(3300–1300 BC) – Early Harappan Culture(3300–2600 BC) – Mature Harappan Culture(2600–1900 BC) – Late Harappan Culture(1900–1300 BC) Vedic Civilisation(2000–500 BC) – Ochre Coloured Pottery culture(2000–1600 BC) – Swat culture(1600–500 BC) Iron Age (1500–200 BC) Vedic Civilisation(1500–500 BC) – Janapadas (1500–600 BC) – Black and Red ware culture(1300–1000 BC) – Painted Grey Ware culture (1200–600 BC) – Northern Black Polished Ware (700–200 BC) Pradyota Dynasty (799–684 BC) Haryanka Dynasty (684–424 BC) Three Crowned Kingdoms (c. 600 BC – AD 1600) Maha Janapadas (c. 600–300 BC) Achaemenid Empire (550–330 BC) Ror Dynasty (450 BC – AD 489) Shaishunaga Dynasty (424–345 BC) Nanda Empire (380–321 BC) Macedonian Empire (330–323 BC) Maurya Empire (321–184 BC) Seleucid India (312–303 BC) Pandya Empire (c. 300 BC – AD 1345) Chera Kingdom (c. 300 BC – AD 1102) Chola Empire (c. 300 BC – AD 1279) Pallava Empire (c. 250 AD – AD 800) Maha-Megha-Vahana Empire (c. 250 BC – c. AD 500) Parthian Empire (247 BC – AD 224) Middle Kingdoms (230 BC – AD 1206) Satavahana Empire (230 BC – AD 220) Kuninda Kingdom (200 BC – AD 300) Mitra Dynasty (c. 150 – c. 50 BC) Shunga Empire (185–73 BC) Indo-Greek Kingdom (180 BC – AD 10) Kanva Empire (75–26 BC) Indo-Scythian Kingdom (50 BC – AD 400) Indo-Parthian Kingdom (AD 21 – c. 130) Western Satrap Empire (AD 35–405 ) Kushan Empire (AD 60–240) Bharshiva Dynasty (170–350) Nagas of Padmavati (210–340) Sasanian Empire (224–651) Indo-Sassanid Kingdom (230–360) Vakataka Empire (c. 250 – c. 500) Kalabhras Empire (c. 250 – c. 600) Gupta Empire (280–550) Kadamba Empire (345–525) Western Ganga Kingdom (350–1000) Kamarupa Kingdom (350–1100) Vishnukundina Empire (420–624) Maitraka Empire (475–767) Huna Kingdom (475–576) Rai Kingdom (489–632) Kabul Shahi Empire (c. 500 – 1026) Chalukya Empire (543–753) Maukhari Empire (c. 550 – c. 700) Harsha Empire (606–647) Tibetan Empire (618–841) Eastern Chalukya Kingdom (624–1075) Rashidun Caliphate (632–661) Gurjara-Pratihara Empire (650–1036) Umayyad Caliphate (661–750) Mallabhum Kingdom (694-1947) Bhauma-Kara Kingdom (736-916) Pala Empire (750–1174) Rashtrakuta Empire (753–982) Paramara Kingdom (800–1327) Yadava Empire (850–1334) Somavamshi Kingdom (882–1110) Chaulukya Kingdom (942–1244) Western Chalukya Empire (973–1189) Lohara Kingdom (1003–1320) Hoysala Empire (1040–1347) Sena Empire (1070–1230) Eastern Ganga Empire (1078–1434) Kakatiya Kingdom (1083–1323) Zamorin Kingdom (1102–1766) Kalachuris of Tripuri (675-1210) Kalachuris of Kalyani (1156–1184) Chutiya Kingdom (1187–1673) Deva Kingdom (c. 1200 – c. 1300) Late medieval period (1206–1526) Delhi Sultanate (1206–1526) – Mamluk Sultanate (1206–1290) – Khalji Sultanate (1290–1320) – Tughlaq Sultanate (1320–1414) – Sayyid Sultanate (1414–1451) – Lodi Sultanate (1451–1526) Ahom Kingdom (1228–1826) Chitradurga Kingdom (1300–1779) Reddy Kingdom (1325–1448) Vijayanagara Empire (1336–1646) Bengal Sultanate (1352–1576) Garhwal Kingdom (1358–1803) Mysore Kingdom (1399–1947) Gajapati Empire (1434–1541) Ladakh Kingdom (1470–1842) Deccan Sultanates (1490–1596) – Ahmadnagar Sultanate (1490–1636) – Berar Sultanate (1490–1574) – Bidar Sultanate (1492–1619) – Bijapur Sultanate (1492–1686) – Golkonda Sultanate (1518–1687) Keladi Kingdom (1499–1763) Koch Kingdom (1515–1947) Early modern period (1526–1858) Mughal Empire (1526–1858) Sur Empire (1540–1556) Madurai Kingdom (1529–1736) Thanjavur Kingdom (1532–1673) Bhoi dynasty (1541–1804) Bengal Subah (1576–1757) Marava Kingdom (1600–1750) Sikkim Kingdom (1642–1975) Thondaiman Kingdom (1650–1948) Maratha Empire (1674–1818) Sikh Confederacy (1707–1799) Travancore Kingdom (1729–1947) Sikh Empire (1799–1849) Colonial states (1510–1961) Portuguese India (1510–1961) Dutch India (1605–1825) Danish India (1620–1869) French India (1759–1954) Company Raj (1757–1858) British Raj (1858–1947) Periods of Sri Lanka Prehistory (Until 543 BC) Early kingdoms period (543 BC – 377 BC) Anuradhapura period (377 BC – AD 1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) Crisis of the Sixteenth Century (1505–1594) Kandyan period (1594–1815) British Ceylon (1815–1948) Contemporary Sri Lanka (1948–present) National historiesAfghanistanBangladeshBhutanIndiaMaldivesNepalPakistanSri Lanka Regional historiesAssamBalochistanBengalBiharGujaratHimachal PradeshKabulKashmirKhyber PakhtunkhwaRajasthanMaharashtraUttar PradeshPunjabOdishaSindhSouth IndiaTamil NaduTibet Specialised historiesAgricultureArchitectureCoinageDemographicsDynastiesEconomyEducationIndologyInfluence on Southeast AsiaLanguageLiteratureMaritimeMetallurgyMilitaryPartition of IndiaPakistan studiesPhilosophyReligionScience &amp; TechnologyTimelinevt இந்திய வரலாறு (History of India) என்பது இந்தியத் துணைக்கண்டதில் வரலாற்றுக் காலம் முன்பு வாழ்ந்த மக்கள், அவர்தம் சமுதாயம், சிந்து சமவெளி நாகரிகம் இந்தோ-ஆரியப் பண்பாடு உள்ளடக்கிய வேதகால நாகரிகம்[1] தொடங்கி இன்றுவரை உள்ளிட்டகாலம் அடங்கும். மேலும் பல கலாச்சாரங்களின் சாரமாகவும் பண்பாடுகளை உள்வாங்கியும் பிறந்த இந்து சமயம், அதன் வளர்ச்சி குறித்தும் சிரமணா இயக்கத்தின் வளர்ச்சி, சிரவுத்தா பலிகளின் வீழ்ச்சி, சைனம், பௌத்தம், சைவம், வைணவம் மற்றும் சக்தி வழிபாடு இவைகளின் வளர்ச்சி, தாக்கம்,[2][3] மேலும் இப்பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த அரச பரம்பரை, பேரரசுகளின் தோற்றம், தாக்கம், இடைகாலத்தில் தோன்றிய இந்து மற்றும் முகலாய அரச பரம்பரைகள் குறித்த தகவல்கள், பிற்காலத்தில் வந்த ஐரோப்பிய வணிகர்கள், அதன் தொடர்ச்சியாக அமைந்த ஆங்கிலேய அரசு, அதன் தொடர்ச்சியாக எழுந்த விடுதலை இயக்கம், அதன் பின் நாடு பிரிவினை அடைந்து இந்தியக் குடியரசு பிறந்த வரை தகவல்கள் உள்ளிட்டவை அடங்கும்.[4] சுமார் 75,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் துணைக்கண்டத்தில் இன்றைய மனிதர்களின் உடற்கூறியல் வடிவத்தை ஒத்த மனிதர்களோ அல்லது 5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தற்கால மனிதனின் முன்னனோடிகளோ வாழ்ந்து வந்தததற்கான் சான்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.[5] கிமு 3200 முதல் கிமு 1300 வரை இந்தியாவில் செழிப்பாக விளங்கிய சிந்துவெளி நாகரிகம்தான் தெற்கு ஆசியாவில் [6] தோன்றிய முதல் நாகரிகம் ஆகும். தொழில்நுட்பத்திலும், புதுமையிலும் ஒரு தலைசிறந்த மற்றும் நகர்ப்புற வாழ்க்கையில் தனித்தன்மை வாய்ந்த நாகரிகம் பயன்பாட்டில் இருந்த காரப்பா காலம்[7] கிமு 2600 முதல் கிமு 1900 வரை தொடர்ந்தது. கிமு இரண்டாவது ஆயிரமாண்டு துவக்கத்தில் இது மறைய, இதன் தொடர்ச்சியாக இரும்புக்கால வேதிய நாகரிகம் சிந்து-கங்கைச் சமவெளியில் தோன்றி வளர்ந்தது. இக்காலத்தில் தான் மகாசனப்பாடங்கள் என்னும் பல அரசாட்சிமுறைகளும் தோன்றி வளர்ந்தன. கிமு 5-ஆம் நூற்றாண்டு முதல் கி.மு 6-ஆம் நூற்றாண்டு வாக்கில் இது போன்ற ஒரு அரச வம்சத்தில் தான் மகதர்கள், மகாவீரர் கௌதம புத்தர் போன்றோர் தோன்றி ’’சிராமனிய’’ தத்துவத்தைப் பரப்பி வந்தனர். கிமு 4 ஆம் நூற்றாண்டு மற்றும் கிமு 3 ஆம் நூற்றாண்டுகளில் துணைக்கண்டத்தின் பெரும் பகுதி மவுரியப் பேரரசின் கீழ் கொண்டுவரப்பட்டது. இக்காலக் கட்டத்தில் வடநாட்டில் பிரகிருதி மற்றும் பாளி மொழி இலக்கியங்களும், தெற்கில் சங்க இலக்கியங்களும் வளர்ச்சியடைந்தன.[8][9]. தென்னிந்தியாவில் எடுக்கப்பட்ட ஊட்டுச்சு எக்கு[10][11][12] எனும் ஒரு வகை இரும்பு இக்காலத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அடுத்த 1500 ஆண்டுகள் இந்தியாவின் பல பகுதிகள் பல அரசர்களால் ஆளப்பட்டிருந்தாலும், இக்காலத்தில் குப்தர் ஆண்ட காலம் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. இந்து சமயமும், கலை, கலாச்சாரம் போன்றவையும் புத்தாக்கம் பெற்று மறுமலர்ச்சியடைந்து விளங்கியதால், இந்தியாவின் பொற்காலம் என குப்தர்களின் காலம் வர்ணிக்கப்படுகிறது. இக்காலத்தில் இந்திய நாகரிகம், கலை, கலாச்சாரம், பண்பாடு, குறிப்பாக இந்து சமயம் மற்றும் பௌத்தம் முதலியன ஆசியா முழுவதும் பரவின. கிமு 77-ஆம் ஆண்டு வாக்கில் தென்னிந்திய அரசுகள் உரோமைப் பேரரசுடன் தொடர்பு வைத்திருந்தன. இந்திய கலாச்சாரத்தின் தாக்கமும், வீச்சமும் தென்கிழக்காசியாவின் பல இடங்களில் பரவின. இதன் காரணமாக பல இந்திய வம்சாவழி அரசுகள்[13][14] இப்பகுதியில் அமைந்தன. பாலி, இராசிட்ரகூடம், குருசார பிராதிகார பேரரசு ஆகியவற்றிடையே கன்னோசி அரசை மையப்படுத்தி நடந்த மும்முனைப் போட்டி கிபி 7-ஆம் நூற்றாண்டிற்கும் 11-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த முக்கியமான நிகழ்வாகும். இப்போராட்டம் இரண்டு நூற்றாண்டுகளாகத் தொடர்ந்தது. தென்னிந்தியா அப்பொழுது, சாளுக்கியர், சோழர், பல்லவர், சேரர், பாண்டியர் மற்றும் மேலைச் சாளுக்கியர்களால் ஆளப்பட்டு வந்தது. கிபி 7-ஆம் நூற்றாண்டில் முகமதிய மதம் தோன்றி ஒரு அரசியல் சக்தியாகவும் உருவெடுத்தது. அதன் சுவடுகள் இந்தியத் துணைக்கண்டத்தின் மேற்குப்பகுதியான இன்றைய பாக்கித்தானத்திலும் அறியப்பட்டது.[15] சோழர்கள் தென்னிந்தியா முழுவதும் வெற்றி பெற்று கிபி 11-ஆம் நூற்றாண்டில் [16][17] தெற்காசியாவில் இலங்கை, மாலத்தீவு, வங்காளம்[18] உட்படப் பல பகுதிகளில் கால் பதித்தனர். இடைக்காலத்தின் ஆரம்பத்தில் இந்தியக் கணிதவியல், அரேபிய உலகின் வானியல் மற்றும் கணிதவியலின் மீதும் தாக்கத்தை எற்படுத்தின. அப்பொழுதுதான் இந்திய எண்களும் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டன.[19] பல பேரரசுகளும் இராச்சியங்களும் இந்தப் பகுதியை ஆட்சி செய்ததின் மூலம் இந்தப் பகுதியின் பண்பாடு மேலும் வளர்ச்சி பெற்றது. கிமு 543 பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசு [20] முதல் கிமு 326 அலேக்சாண்டேர் தி கிரேட்[21] வரையில் நீடித்தது. பாக்திரியாவைச் சார்ந்த டெமெட்ரியஸால் உருவாக்கப்பட்ட இந்தோ கிரேக்க நாடு, கந்தாரம் மற்றும் பஞ்சாப் போன்ற இடங்களைத் தன்னுள் கொண்டிருந்தது. கிமு 184-ஆம் ஆண்டில் நிலவிய இந்த ராஜ்ஜியம் மெனாண்டர் காலத்தில் தனது உச்சத்தை அடைந்தது. இதே சமயத்தில் பண்பாட்டிலும், வாணிபத்திலும் சிறந்து விளங்கிய கிரேக்க-புத்த காலமும் எழுச்சி அடைந்தது. கிபி 77-ல் கேரளா, ரோம சாம்ராஜ்ஜியத்துடன் கடல் சார்ந்த வணிகப் பிணைப்புகள் கொண்டிருந்தது. கிபி 712-ல், அரபு நாட்டைச் சேர்ந்த படைத்தலைவர் முகம்மது பின் காசிமின் வருகையால் இந்தத் துணைக்ககண்டத்தில் இஸ்லாமிய ஆட்சி துவங்கியது. இவர், சிந்து, முல்டான், தெற்கு பஞ்சாப் பகுதிகளைக் கைப்பற்றினார்[22]. இதுவே மத்திய ஆசியப்பகுதியிலிருந்து பல படையெடுப்புகளை கிபி 10-ஆம் நூற்றாண்டிலிருந்து 15-ஆம் நூற்றாண்டுவரை இந்தியத் துணைக் கண்டம் சந்தித்து இஸ்லாமிய ராஜ்ஜியமாகக் காரணமாக இருந்தது. இவற்றுள் கஜினி முகமது, கோரி முகமது, தில்லி சுல்தான்கள், முகலாய சாம்ராஜ்ஜியங்கள் புகழ் பெற்றவை. துணைக் கண்டத்தின் பெரும்பாலான மேற்குப் பகுதிகளில் முகலாய சாம்ராஜ்ஜியம் பரவி இருந்தது. முகலாயர்கள் இந்தியாவுக்குள் மத்தியக் கிழக்கு ஓவியங்களையும், கட்டிடக் கலையையும் கொண்டு வந்தனர். முகலாயர்களுடன் விஜயநகரப் பேரரசு, மராத்தியப் பேரரசு, இராசபுத்திர ராஜ்ஜியங்கள் போன்ற பல இந்து ராஜ்ஜியங்களும், மேற்கு மற்றும் தென்னிந்தியப் பகுதிகளில் தழைத்தெழுந்தன. முகலாய சாம்ராஜ்ஜியம், அவுரங்கசீப்பிற்குப் பின் 18-ஆம் நூற்றாண்டில், தானாகவே வலுவை இழந்தது. இதனால் ஆப்கன்கள், பலோசியர்கள், சீக்கியர்கள், மராத்தியர்கள் வட மேற்குத் துணைக்கண்டப் பகுதிக்குள் எளிதே நுழைந்தனர். இவர்கள், தெற்கு ஆசியாவை ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய நிறுவனம் தன் வசம் ஈர்க்கும் வரை ஆட்சி புரிந்தனர்.[23] 18-ஆம் நூற்றாண்டிலிருந்து அடுத்த நூற்றாண்டு வரை ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய நிறுவனம் படிப்படியாக இந்தியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இந்த நிறுவனத்தின் ஆட்சியில் கிடைத்த அதிருப்தி, 1857-ஆம் ஆண்டு முதல் இந்திய சுதந்திரப் போருக்கு காரணமாக அமைந்தது. இதனால் ஆங்கிலேய அரசு இந்தியாவைத் தனது நேரடி ஆட்சிக்குள் கொண்டு வந்தது. இந்தக் கால கட்டத்தில் இந்தியா சமுதாயத்தின் வளர்ச்சியையும் பொருளாதாரத்தின் குலைவையும் கண்டது. 20-ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், நாடெங்கிலும் இந்திய தேசிய காங்கிரஸின் மூலம் துவக்கப் பட்ட சுதந்திரப் போராட்டம் காட்டுத் தீயைப் போல் பரவியது. இந்த போராட்டத்தில் முஸ்லிம் லீகும், தன்னை இணைத்துக் கொண்டது. இந்தத் துணைக் கண்டம் 1947ல், இந்தியா, பாகிஸ்தான் என்று இரு ஆளும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட பின்னர் ஆங்கிலேய ஆட்சியிடமிருந்து தன் சுதந்திரத்தைப் பெற்றது. எழுதிய அணுகுமுறை இந்திய வரலாற்றை எழுத வேண்டிய தேவை, ஆங்கிலேயர் இந்தியாவை ஆளத்துவங்கிய, 18-ஆம் நூற்றாண்டில் தான் அறியப்பட்டது. இந்தியாவை ஆள்வதற்கு இந்தியர்களின் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள் மற்றும் சட்டங்கள் முதலியவற்றை தெரிந்துகொள்ளவேண்டிய கட்டாயம் இருந்தன. அதுவே ஆங்கிலேயர்களை இதில் கவனம் செலுத்தத் தூண்டியது.[24] இதற்கு ஏதுவாக சர் வில்லியம் ஜோன்ஸ் 1784-ஆம் ஆண்டு வங்காள ஆசியக் கழகத்தை நிறுவினார்.[25] கீழை நாடுகளில் வசிக்கும் மக்கள், அவர்தம் வாழ்க்கை முறையைக் குறித்த தகவல்கள், மற்றும் ஆராய்ச்சி செய்து புரிந்துகொள்வது, ஆவணப்படுத்துவது இதன் நோக்கமாகும். சார்லஸ் வில்கின்ஸ், H.T. கோல்புரூக், H.H. வில்சன் (1786-1860) முதலியோர் பெரும் பங்காற்றினர். மேக்ஸ் முல்லர் உட்பட பல ஐரோப்பிய அறிஞர் பெருமக்கள் சமக்கிருதம் கற்று வேதங்களில் புலமை பெற்றனர். இந்திய நாகரிகத்தையும், பண்பாட்டையும் புரிந்துகொள்வதற்கும், இந்திய வரலாறு பின்பு சரித்திர ஆசிரியர்களால் எழுதப்படுவதற்கும் இவர்களது எழுத்து உதவியாக இருந்துவந்துள்ளது. இதைப்போல கிருத்துவ மத குருமார்களும், தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக, இந்திய நாகரீகத்தையும், பண்பாட்டையும் நன்கு அறிந்து, கிறித்துவ மதம் இதைவிட மேம்பாடானது என்று கூறி பரப்புரையில் ஈடுபட்டனர். இவர்களின் எண்ணமும் எழுத்தும் கூட ஒருதலைப்பட்சமாக இந்திய வரலாறு எழுதப்பட்டதற்கு காரணமாக அமைந்தது என்று கருதுவோரும் உண்டு. ஜான் ஸ்டூவர்ட் எழுதிய பிரித்தானிய இந்தியாவின் வரலாறு (History of British India) என்னும் நூல் 1817-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்தியர்களின் பண்பாட்டையும், நாகரீகத்தையும் காட்டுமிராண்டித்தனமானது, காரண காரியங்களுக்கு எதிர்மறையானது என்று இந்நூல் வலியுறுத்தியது. ஆங்கில அதிகாரிகள் இந்தியா வருவதற்கு முன் பயிற்சியின் போது இந்நூலை ஒரு பாடமாகவே கற்று வந்தனர். இந்நூல் இந்தியர்கள் குறித்த ஒரு மோசமான மனப்பான்மையை அவர்கள் உள்ளத்தில் ஏற்படுத்தியது. வி. ஏ. சிமித் என்னும் ஆங்கில அதிகாரி, இது போன்று வந்தவர்தான். இவர் ஆக்ஸ்போர்டு இந்திய வரலாறு (The Oxford history of India) என்னும் நூலை எழுதினார். ஆனால் ஸ்டூவர்ட் மில் போன்று அல்லாமல் இந்தியர்களைக் குறித்து வின்சென்ட் சிமித் அவ்வளவு மோசமான எண்ணம் கொண்டிருக்கவில்லை. இருந்தாலும் இந்தியர்கள் ஆளத்தெரியாதவர்கள் என விவரிக்கிறார். இதுபோன்று ஆங்கிலச் சரித்திர ஆசிரியர்கள் ஒருதலைப்பட்சமாக இந்திய வரலாற்றை எழுதுவதற்கு இந்தியச் சரித்திர ஆசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்திய அரசுமுறை குறித்தும் அதன் மேன்மை குறித்தும் பலவாறு விளக்கிவந்தனர். இவைகளின் தாக்கமாக ஆங்கிலச் சரித்திர ஆசிரியர்கள் பெரும்பாலும் பேரரசர்கள், பரம்பரையாக ஆட்சி செய்வது போன்றவற்றையே எழுதிவந்தனர். அரசர் தவிர வேறு எந்தவிதமான பயனுள்ள அரசியல், சமூக அமைப்புகளைப்பற்றியும் இவர்கள் எவ்விதக் குறிப்பும் கருத்தும் தெரிவிக்கவில்லை. மேலும் இந்திய மக்கள் சோம்பேறித்தனமான பிற்போக்கு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றும் ஆழமான எண்ணங்களைத் தம் மனதில் கொண்டே வரலாறை எழுதினர்.[26] பாகுபாடற்ற அணுகுமுறையுடன் இந்திய வரலாறு இவர்களால் பார்க்கப்படவில்லை என்னும் கருத்தும் உள்ளது. பிற்காலத்தில் இந்திய வரலாறு அதன் உண்மையான பரிமாணத்துடன் எழுதப்படவேண்டும் என பல அறிஞர்கள் விரும்பி, அவ்வாறு எழுதப்பட்டும் வந்துள்ளது.[27] வரலாற்று ஊழிக்கு முன் கற்காலம் ஹோமோ எரெக்டஸின் தனிமைப்படுத்தப்பட்ட மிச்சங்கள் மத்திய இந்தியப் பகுதியில் உள்ள நர்மதா சமவெளியில் கண்டெடுக்கப்பட்டன. இது பனி உறைந்திந்திருந்த மத்திய பிளைச்டோசீன் காலத்திலேயே அதாவது 200,000 இலிருந்து 500,000 ஆண்டுகளுக்கு நடுவே பரிணாமம் அடைந்த உயிரினங்கள் வாழ்ந்தன என்பதை உறுதிப்படுத்துகின்றது.[28][29] ஆனால், இந்து மகா சமுத்திரக் கரையோரம் இருந்த ஆப்பிரிக்க இடப்பெயர்ப்பின் அடையாளங்கள் சுவடே இல்லாமல் இருப்பதால் அவை தொலைந்ததாகவே கருதப்படுகின்றறன. 25,000 த்திலிருந்து 30,000 ஆண்டு காலம் வரை மத்தியக் கற்காலம் இந்த துணைக் கண்டத்தில் நீடித்திருந்தது. இன்னும் விரிவான குடியேற்றங்கள் இந்தத் துணைக் கண்டத்தில் பனியுரை காலத்தின் இறுதிக் கட்டங்களில் அதாவது ஏறத்தாழ 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தன என்று யூகிக்கப் படுகிறது. நிச்சயமாகச் சொல்லக்கூடிய நிலையான குடியேற்றங்கள் 9000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாக ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த ஆதாரங்கள் தற்கால மத்தியப் பிரதேசத்தில், பீம்பேட்கா பாறை வாழிடங்கள் என்ற இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டன. பாகிஸ்தானில் உள்ள தற்கால பலுசிஸ்தானில் இருந்த மெஹெர்கர் கண்டுபிடிப்புகள் தென்னாசியாவில், புதிய கற்காலத்தின் ஆரம்பக் காலப் பண்பாட்டைக் குறிக்கின்றன. இது சுமார் கிமு 7000 ஆண்டுக்குமுன் இருந்தது என்று கணக்கிடப்படுகிறது. இந்தப் புதிய கற்காலம் இருந்தது என்பதற்கான தடையங்கள் காம்பத் வளைகுடாவில் மூழ்கி இருந்தாலும், அதனையும் கண்டு பிடித்துள்ளனர். ரேடியோ கார்பன் முறை இதனை கிமு 7500 ஆண்டு என்று கணக்கிட்டுள்ளது.[30] புதிய கற்காலம் முடிவுக்கு வரும் காலத்தில் இருந்த பண்பாடு கி.மு. 6000 - 2000 ஆண்டுகளில் இந்து சமவெளி நாகரிகத்தில் இருந்ததாகவும், தென்னிந்தியாவில் கிமு 2800 - 1200 ஆண்டுகளில் இருந்ததாகவும் நிச்சயப்படுத்தப்பட்டுள்ளது. துணைக் கண்டத்தின் இந்த பகுதியில் இரண்டு மில்லியன் ஆண்டுக்லங்களாக மக்கள் வசித்து வருகின்றனர். இது தற்காலப் பாகிஸ்தான் பகுதியில் உள்ளது.[31][32] இந்தப் பகுதியின் பழைமையான வரலாறு, இப்பகுதி தென்னாசியாவின் மிகப் பழைமையான குடியேற்றங்களையும்[33],[34][35] தென்னாசியாவில் ஆரம்பக்காலங்களில் கண்டு பிடிக்கப்பட்ட தொல்பொருள் இடங்களில் பழைய கற்காலத்தில் சொவன் நதிக்கரையோரம் இருந்த ஹோமொனிட் புரயிடமும் ஒன்று.[36] கிராம வாசிப்பு வாழ்க்கையை மேர்கர்ஹில் உள்ள புதிய கற்காலத்தின் புரயிடங்கள் காட்டுகின்றன.[37] சிந்து சமவெளி நாகரிகம்[38] போல வளர்ச்சியடைந்த நகர வாழ்க்கையைக் காட்டும் நாகரிகங்கள் மொகேன்ஜதாரோ, லோத்தல் , ஹரப்பா போன்ற இடங்களில் இருந்ததற்கான அடையாளங்களும் இருக்கின்றன.[39] வெண்கலக் காலம் சிந்து சமவெளி நாகரிகத்தின் ஆரம்பக்காலங்களில், கிமு 3300-ஆம் ஆண்டில் வெண்கலக் காலம் இந்தியத் துணைக் கண்டத்தில் துவங்கியது. இது சிந்து நதி மற்றும் அதன் கிளைகளை ஆதாரமாகக் கொண்டிடிருந்தது. மேலும் கக்கர்-ஹக்ரா சமவெளி,[34] கங்கா-யமுனா, டோப்,[40] குஜராத்,[41] மற்றும் மேற்கு ஆப்கனிஸ்தான்பகுதிகளிலும் இது தழைத்து இருந்தது. .[42] இந்த நாகரிகம் பெரும்பாலும் இன்றைய இந்தியாவைச்சேர்ந்த (குஜராத், ஹரியானா, பஞ்சாப் ராஜஸ்தான் பகுதிகளிலும்) மற்றும் இன்றையப் பாகிஸ்தானைச் சேர்ந்த (சிந்து, பஞ்சாப், பலோசிஸ்தான் பகுதிகளில்) நிறைந்திருந்தது. வரலாற்றைச் சார்ந்து பார்க்கும் பொது பண்டைய இந்தியா , மெசபொடமியா, பண்டைய எகிப்து போல உலகிலேயே பழமை வாய்ந்த நகர நாகரிகத்தைக் கொண்டுள்ளது. சிந்து நதி சமவெளியில் வாழ்ந்த மக்கள் ஹரப்பர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் உலோகத்தைக்கொண்டு பலவற்றையும் தயாரிக்க புதுப் புது முறைகளைக் கண்டறிந்தனர். மேலும், அவர்கள் செம்பு, வெண்கலம், ஈயம், தகரம் போன்றவற்றையும் உற்பத்தி செய்தனர் கி.மு. 2600 - 1900 ஆண்டுகளை செழிப்பாக இருந்த சிந்து சமவெளி நாகரிகம் இந்த துணை கண்டத்தில், நகர வாழ்க்கை நாகரிகத்தின் ஆரம்பத்தை குறிக்கிறது.இன்றைய இந்தியாவில் உள்ள தோலவீரா, கலிபங்கன், ரூபார், ராக்கிகர்ஹி, லோத்தல் போன்ற நகரங்களும், இன்றைய பாகிஸ்தானிலுள்ள ஹரப்பா, கநேரிவாலா, மொகேஞ்சதாரோ போன்ற நகரங்களும் பழமைவாய்ந்த நாகரிகம் கொண்டிருந்த நகரங்களாக இருக்கின்றன.இந்த நாகரிகத்தில் நகரங்கள் செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன; சாலையோரங்களில் கழிவுகுழாய் அமைப்புகளும் பல மாடிக்கட்டிடங்களும் இந்த நகரங்களில் இருந்தன. வேத காலம் வேதங்களில் சிந்து நதி ’ஸிந்து’ ’இந்து’ என்று இரண்டு விதங்களில் குறிப்பிடப்பட்டது. பாரசீகர்கள் இதனை ’ஹிந்து’ என்று மாற்றியபின்னர் கிரேக்கர்கள் ’இன்டஸ்’ என்று மாற்றினர். இதிலிருந்தே இந்தியா, இந்தியன் என்ற சொற்கள் இந்தியர்களால் உருவாக்கப்பட்டன.[43] வேதங்கள் கி.மு 5000 ஆண்டுகளுக்கு முன்னரும் இன்றிருப்பது போலவே இருந்ததென்று பண்டித பாலகங்காதர திலகர் நிருபித்திருக்கிறார்.[44] இந்தோ ஆரியப் பண்பாடும், வேத சமஸ்கிருதத்தின் மூலம் வாய் வழியே கூறப்பட்ட, இந்து மதத்தினருக்கு புனிதமான வேதங்களும் வேத காலத்தின் வேராக அமைந்திருந்தது.. எகிப்து மேசபோடேமியாவில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துகளையடுத்து இந்த வேதங்கள் மிகப்பழமை வாய்ந்தவை. இந்த வேத காலம் கி.மு 1500 லிருந்து 500 வரை நீடித்திருந்தது. இது இந்து மதத்திற்கு பலமான அடித்தளத்தை இட்டுக் கொடுத்ததுடன் இந்தியாவின் சமூகத்தின் பண்பாட்டிற்கும் பல நல்வித்துக்களை இட்டது.பெரும்பாலாக கங்கைக் கரையோர சமவெளிகளில் வாழ்ந்த ஆரியர்கள் மேற்கிந்தியாவில் வேத நாகரிகம் பரவ காரணமாக இருந்தனர். ஆர்யா(ārya, Aryans) என்று தங்களை அழைத்துக்கொண்ட இன்டோ- ஆர்யர்களின் குடிப்பெயர்ப்பினால் ஏற்பட்டது இந்த காலம். டாசியஸ் என்று அவர்களுக்கு முன் இந்த பகுதியில் குடியிருந்தவர்களின் நாகரிகத்தை விட இவர்களது நாகரிகம் செம்மையாக இருந்தது.ஆரியர்களின் பூர்விகம் பெரும் சர்ச்சைக்குள்ளான ஒரு விஷயமாகும். ஒரு சிலர் அவர்கள் மத்திய ஆசியப் பகுதியிலிருந்து மையம் கொண்டிருந்தார்கள் என்றும் மற்றும் ஒரு சிலர் அவர்கள் ஏற்கனவேயே இந்தியாவில் இந்து சமவெளி நாகரிகத்திக்கு முன்னரே குடியிருந்தனர் என்றும் கூறுகின்றனர். இதற்கு அவர்கள் ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள ஒரு சில வாக்கியங்களையும் ஆதாரமாகக் கொண்டு பேசுகின்றனர்.இந்தியாவுக்கு வெளியே கோட்பாடு ஆரியகள் இந்தியாவிலிருந்து மத்திய ஆசியாவுக்கும் ஐரோப்பாவிற்கும் சென்றார்கள் என்று குறிப்பிடுகிறது.19 ஆம் நூற்றாண்டின் பின் பகுதியில் வந்த ஆரிய படையெடுப்புகள் கோட்பாடுகளை மாற்றி அறிஞர்கள், ஆராய்ச்சிகள் செய்து நம்பக்கூடிய கோட்பாடுகளை கொண்டுவந்துள்ளனர். ஹரப்பர்களின் புறக்கணிக்கப்பட்ட அந்த பழைய வேத கால சமுதாயத்தில் குருக்கள் இனத்தவர் மிகுந்து இருந்தனர்.[45]ரிக் வேதகட்டத்திற்கு பிறகு ஆரிய சமுதாயத்திற்கு வேளாண்மையிலும் ஈடுபாடு இருந்தது. நான்கு வர்ண பேதங்களையும் அது பின்பற்றியது.இந்து மதத்தின் ஆதாரமாக இருக்கும் வேதத்தை தவிர இராமாயணமும் மகாபாரதமும் கூட இந்த காலத்தில் தான் எழுதப்பட்டன.[46] தோல் பொருள் கண்டுபிடிப்புகள் இந்த இன்டோ-ஆர்யர்களின் வசிப்பு மஞ்சள் களிமண் வர்ணத்தை கொண்ட பானைகள் உறுதிப்படுத்துகின்றன.[47] குறு[48] ராஜ்ஜியங்கள் கருப்பு, சிகப்பு மற்றும் வர்ணம் பூசிய சாம்பல் நிற பாத்திரங்களைக் கொண்டிருந்தன. மேலும், கி.மு. 1000 ஆண்டில் எழுதப்பட்ட அதர்வண வேதம் இரும்புக் காலத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. இது இரும்பை கருப்பு உலோகம் என்று குறிப்பிட்டு<i about="#mwt101" data-mw='{"parts":[{"template":{"target":{"wt":"IAST","href":"./Template:IAST"},"params":{"1":{"wt":"śyāma ayas"}},"i":0}}]}' data-parsoid='{"stx":"html","dsr":[27824,27843,null,null],"pi":[[{"k":"1"}]]}' lang="sa-Latn" title="International Alphabet of Sanskrit transliteration" typeof="mw:Transclusion">śyāma ayas, இரும்பு காலத்தை பற்றி கூறிய முதல் இந்திய எழுத்து வடிவம் என்ற பெருமையையும் சேர்த்துக்கொண்டது. இந்த வர்ணம் பூசிய சாம்பல் நிற பாத்திர நாகரிகம் மேற்கிந்தியாவில் கி.மு.1100 விலிருந்து 600 வரை நீடித்திருந்தது.[47] இந்த காலத்தின் இறுதி பகுதியில் ஒரு குல அமைப்பின் மூலம், மகாஜனபதங்கள் என்ற ராஜ்ஜியத்தின் எழுச்சியைப் பார்க்க முடியும். மகாஜனபதங்கள் வேதா காலத்தின் இறுதி காலக் கட்டத்தில் இந்திய துணை கண்டத்தில் நிறைய சிறு ராஜ்ஜியங்களும், நகர மண்டலங்களும் வரத் துவங்கின என்று பல இந்து, புத்த, சமண மத இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.கி.மு. 500 ஆம் ஆண்டில்,பதினாறு முடியாட்சிகளும் மற்றும் மகாஜனபதங்கள் என்று அழைக்கப்பட்ட குடியரசும் தோன்றியன. இந்த மகாஜனபதத்தில் காசி, கோசலா,அங்கா,மகதா,வச்சி (வ்ரிச்சி), மல்லா, செடி, வட்சா(வம்சா), குறு,பாஞ்சாலா, மச்சா(மத்ஸ்யா), சுரசேனா, அசக்கா,அவந்தி,கந்தாரா,காம்போஜா ஆகிய நகரங்கள் இந்திய கங்கை சமவெளியில் இன்றைய ஆப்கனிஸ்தானிலிருந்து வெண்கலம் மற்றும் மகாராஷ்டிரம் வரை பரவி இருந்தன.இந்தியாவை நகரப்படுத்தி பார்த்ததில் இந்து சமவெளி நாகரிகத்துக்கு பிறகு வேத காலமே அடுத்த இடத்தை பிடிக்கிறது.ஆரம்பக்கால இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட பல குளங்கள் துணை கண்டத்தின் இந்த பகுதியில் காணப்பட்டன.இதில் சில அரசர்கள் வழி வழியாய் வந்தனர், மேலும் சிலர் அமைச்சரவையால் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.படித்தவர் சமஸ்க்ருதத்தில் பேசுகையில் மேற்கிந்தியாவின் பொது மக்கள் பிரக்ரித்தி மொழியில் பேசினார்.கி.மு.500/400 ல்,சித்தார்த்த கவுத்தமர் காலத்திலேயே இந்த பதினாறு ராஜியங்களும் ஒன்று கூடி நான்கு பெரும் அரசுகளாக உருமாறின.அவை வட்சா,அவந்தி,கோசலா,மகதா ஆகும்.[49] இந்து மதப்படி செய்த சடங்குகள் எளிதானவையாக இல்லாததால் குருக்கள் குலத்தை சேர்ந்தவர்கள் அவற்றை செய்தனர்.தத்துவங்களைப் புகட்டும் உபநிசதங்கள் பிற்கால வேத காலத்திலும் மகாஜனப்பதங்களின் ஆரம்பக் காலத்திலும் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. (அதாவது கி.மு. 600 இலிருந்து 400 வரை). இந்திய தத்துவங்களில் தனது ஆதிக்கத்தை கொண்டிருந்த உபநிடதங்கள், புத்த மற்றும் சமண மதங்களும் வித்திட்டது. இது சிந்தனைக்கான பொற்காலமாகக் கருதப்பட்டது.கி.மு 537 ல், சித்தார்த்த கவுத்தமர் போதி நிலையை அடைந்து ஞானம் பெற்றவராகக் கருதப்பட்டதால் அவர் புத்தா என்று அழைக்கப்பட்டார்.அதே சமயத்தில் சமண சமயத்தின் படி 24 வது தீர்த்தங்கரரான)மகாவீரர் புத்த மதத்தை போல் இருந்த மற்றும் ஒரு சமயத்தை கோட்படுத்தினார். அதை மக்கள் சமண மதம் என்று அழைத்தனர்.[50] வேதங்களிலும் ஒரு சில தீர்த்தங்கர்களை பற்றிய குறிப்புடன் ஸ்ரமண இயக்கத்தின் முனிகளின் ஒழுங்கமைவு பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.[51] புத்தரின் பிரச்சாரங்கள் மற்றும் சமண மதத்தின் கோட்பாடுகள் துறவறம் பற்றி பிரக்ரிதி மொழி கொண்டு மக்களிடம் கொண்டு சேர்த்தன.இந்து மதத்துடனும், ஆன்மீக கோட்பாடுகளுடனும் தொடர்பு கொண்டிருந்த இந்த இரு சமயங்களும், சைவ உணவமைப்பு பற்றியும், விலங்குகளிடத்தில் கருணைகாட்டுதல் பற்றியும், அஹிம்சா வழி பற்றியும் கூறுகின்றன. சமண மதம் இந்தியாவுக்குள் இருக்கையில் புத்த மதத்தின் துறவியர்கள் நாடு கடந்து சென்று மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா,திபெத், இலங்கை மற்றும் தென் கிழக்கு ஆசியாப் பகுதிகளில் புத்த மதத்தைப் பரப்பினர். பெர்சிய மற்றும் கிரேக்க படையெடுப்புகள் இந்திய துணைகண்டத்தின் பெரும்பாலான வட மேற்கு பகுதிகள் (தற்பொழுதைய கிழக்கு ஆப்கனிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்) பெர்சிய அகய்மேனிட் சம்ராஜ்ஜியாதின் போது டாரியஸ் தி கிரேட் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தன. (கி.மு. 520 ல்). அதற்கு பிறகும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு அதே சாம்ராஜ்ஜியம் நிலைத்து இருந்தது.[52] கி.மு. 326 ல் அலேக்சாண்டேர் ஆசியா மைனரை கைப்பற்றினார். அத்துடன் அகைமேனிட் சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சி இந்திய துணைகண்டத்தின் வட மேற்கு பகுதிகளில் ஒரு முடிவுக்கு வந்தது.அலேக்சாண்டேர் புரு மன்னனை ஹைடாச்பெஸ் போர்களத்தில் (இன்றைய பாகிஸ்தானின் ஜீலத்திற்கு அருகே) வீழ்த்தி பஞ்சாபை கைப்பற்றினார்.[53] பின்னர் அவர் கிழக்கு திசையில் சென்று நந்தர்கள் சாம்ராஜ்ஜியம், மகதா மற்றும் வங்காளத்தின் கங்காரிடை சாம்ராஜ்ஜியத்தை ஒடுக்கினார். அவரது படைகள் மேலும் பலத்த இந்திய படைகளை காலத்தில் சந்திக்க பயந்து போரை ஹைபாசிஸ் (இன்றைய பீஅஸ்) என்ற இடத்தில் கங்கை நதி கரையோரம் புறக்கணித்தது.அலேக்சாண்டேர் தனது தளபதி கொயினசுடன் பேசிய பிறகு, திரும்பி செல்ல முடிவெடுத்தார். இந்த பெர்சிய மற்றும் கிரேக்க படையெடுப்புகள் இந்திய நாகரிகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தின.பெர்சிய நாட்டின் அரசியல் அமைப்புகள், இந்த துணை கண்டத்தில் மவுரியா சாம்ராஜ்ஜியத்தில் தென்பட்டன.காந்தார( இன்றைய கிழக்கு ஆப்கனிஸ்தான் மற்றும் வட மேற்கு பாகிஸ்தான் பகுதிகள்) என்னும் இடம் இந்திய, பெர்சிய, மத்திய ஆசிய மற்றும் கிரேக்க பண்பாடுகளின் உறைவிடமாக திகழ்ந்தது. இது கிரேக்க புத்த மதம் போற கலவையான பண்பாடுகளை உருவாக்கிற்று. இந்த வகையான மகாயான புத்த மதம் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது. மவுரியர்களின் காலம் மவுரிய சாம்ராஜ்ஜியம் (கி.மு.322–185) மவுரிய அரச மரபினால் ஆட்சி செய்யப்பட்டது. அது அரசியல் மற்றும் போர் சார்ந்தவற்றில் மிகவும் வலிமை மிக்கதாகவும், புவியியலில் பரந்தும் இருந்தது. சந்திர குப்தா மவுரியரால் துவங்கப்பட்ட இந்த மவுரிய சாம்ராஜ்ஜியம் பேரரசர் அசோகரின் காலத்தில் தழைத்தோங்கியது.இந்த சாம்ராஜ்ஜியம் மேற்கு பகுதியில் இமாலயத்திலிருந்து கிழக்கு பகுதியில் அஸ்ஸாம் வரை பரந்திருந்தது.வடக்கு பகுதியில் அது பாகிஸ்தானையும் தாண்டி சென்று, பலோசிச்தானையும் (இப்போதைய ஆப்கனிஸ்தானில் ஹெராட், கந்தகார் மாகாணங்கள்) தன்னுள் அடக்கியது. சந்திர குப்தா மவுரியாவும் பிந்துசாராவும் மத்திய மற்றும் தென் இந்திய பகுதிகளைக் கைப்பற்றி இருந்தாலும், கண்டறியாத பல குலத்தினர் குடியிருந்த, பெரும் பகுதியான கலிங்கத்தை பேரரசர் அசோகர் வென்றார். பழைய மத்திய சமஸ்தானகள்-பொற்காலம் இந்த மத்திய காலம் பண்பாடு வளர்ச்சிக்கு பெயர் போன ஒன்றாகும். சதவாகனர்கள் அல்லது ஆந்திரா என்று அழைக்கப்பட்டவர்கள் மத்திய மற்று தென்னிந்திய பகுதிகளை கி.மு. 230 ல் ஆட்சி செய்தனர். சதவாகன சாம்ராஜ்ஜியத்தில் ஆறாவுதாக வந்த சதகர்ணி மன்னர் மேற்கிந்தியாவின் சுங்க சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்திய பெருமையைப் பெற்றவர் ஆவார். கவுதமிபுத்ர சதகரணி இந்த சாம்ராஜ்ஜியத்தின் மற்றும் ஒரு மேலார்ந்த மன்னர் ஆவார். இமாலய பகுதியிலிருந்த குலிந்தப் பேரரசு கி .மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து மூன்றாம் நூற்றாண்டு வரை நிலைத்து இருந்தது. கி.மு. முதல் நூற்றாண்டின் பாதியில் நடு ஆசியாவிலிருந்து வந்த குஷானர்கள் வட மேற்கு இந்தியப் பகுதி மீது படை எடுத்தனர். அவர்களது ராஜ்ஜியம் பெஷாவரிலிருந்து, மத்திய கங்கை பகுதியிலிருந்து மற்றும் வங்காள விரிகுடா வரை இருந்தது.அது பண்டைய பாக்திரியா (மேற்கு ஆப்கனிஸ்தான் பகுதி) மற்றும் தென் தஜகிச்தானத்தையும் தன்னுள் கொண்டிருந்தது. வடக்கு மற்றும் மத்திய இந்திய பகுதியை ஆண்ட சகர்கள், வடக்கு சத்திரப்பதிகளாக கருதப்பட்டனர்.( கி.பி 35-405)இவர்கள் இந்தோ சிதியர்களை அடுத்தும், மேற்கு பகுதியை ஆண்ட குஷானர்களின் மற்றும் தெற்கு பகுதியை ஆண்ட சாதவாகனர்களின் சமகாலத்திலும் வாழ்ந்தனர். மேலும் [பாண்டிய ராஜ்ஜியம், சோழ ராஜ்ஜியம், சேர ராஜ்ஜியம், கதம்ப ராஜ்ஜியம், பல்லவ ராஜ்ஜியம், சாளுக்கிய ராஜ்ஜியம் போன்ற பல சாம்ராஜ்ஜியங்களை, தென்னிந்தியாவில் பல கால கட்டங்களில் கொண்டிருந்தது.பல தென்னிந்திய ராஜ்ஜியங்கள் தங்களது எல்லையை கடலுக்கு வெளியேவும் எடுத்து சென்றனர். இது தென் கிழக்கு ஆசியா வரை இருந்தது.இந்த ராஜ்ஜியங்கள் தங்களுக்குள்ளேயும் , மத்திய மாநிலங்களுடன் ஆட்சிக்காக ஏராளமான போர்கள் இட்டன.களப்பிரர் எனும் புத்த ராஜ்ஜியம் தற்காலிகமாக சோழ, சேர பாண்டிய ராஜ்ஜியங்களை தன கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. வட மேற்கு கலப்பு பண்பாடுகள் இன்டோ கிரேக்க , இன்டோ ஸ்கைதிய , இன்டோ பார்த்திய , இன்டோ ஸஸநிட் போன்ற கலப்பு பண்பாடுகள் வட மேற்கு இந்திய துனைகண்டத்தில் காணப்பட்டது.sinids. இன்டோ கிரேக்க கலாசாரம் இன்டோ பாக்ற்றிய மன்னர், டெமெத்ரியஸ் கி.மு. 180 ௦ல் படையெடுத்த போது ஆரம்பித்தது.இது இரண்டு நூற்றாண்டுகளுக்கு நீடித்து இருந்தாலும் இதனை ஆண்ட கிரேக்க மன்னர்கள்( ஏறத்தாழ முப்பது) ஒருவரோடு ஒருவர் போரிட்டுக் கொண்டே இருந்தனர்.இந்திய ஐரோப்பிய சாகா ச்கைத்தியரின் பண்பாட்டின் ஒரு கிளை தான் இன்டோ ச்கைத்திய பண்பாடு. இந்த ஸ்கைதியர்கள் தெற்கு சைபீரியாவிலிருந்து, பாக்ட்ரியா, சொக்டியானா, காஸ்மீர், அரசோசியா, கந்தாரா வழி இந்தியா வந்து சேர்ந்தனர். இவர்களது ராஜ்ஜியம் மத்திய இரண்டாம் நூற்றாண்டிலிருந்து முதல் நூற்றாண்டு வரை நீடித்து இருந்தது.பகலவா என்று அழைக்கப்பட்ட இன்டோ பார்த்தியர்கள் தற்காலத்து ஆப்கனிஸ்தான் மற்றும் மேற்கு பாகிஸ்தான் பகுதிகளையும் கந்தாரா பகுதியின் குஷான், குசுலா கட்பிசர் போன்ற குறும் மன்னர்களிடமிருந்து போரிட்டுபெற்றனர்.பெர்சியாவை சார்ந்த ஸஸநிட் ராஜ்ஜியம் குப்தர்கள் காலத்தில் வாழ்ந்தனர். இவர்கள் தற்கால பாகிஸ்தானில் ஆட்சி செய்ததை நாம் அங்கு இருக்கு பெர்சிய கலாச்சாரத்தின் மூலம் தெளிவு படுத்திக் கொள்ளலாம். இதுவே இன்டோ சசானித் கலாச்சாரத்தின் பிறப்பிடம் எனவும் கூறலாம். இந்தியாவுடன் ரோமர்களின் வணிகம் இந்தியாவுடன் ரோமர்கள் தங்கள் வணிகத்தை கி.பி. 1 ஆரம்பித்தனர். இது அகஸ்டஸ் எகிப்தை கைப்பற்றிய பின்னர் நடந்தது. இந்தியா ரோமை வடக்கு பகுதியிலே, மிகப்பெரிய பங்காளியாகக் கொண்டிருந்தது. சைசியசின் எக்ஸொடஸ் கி.மு. 130 ல் இந்த வணிகத்தை ஆரம்பித்து வைத்தார், என்று ஸ்ட்ராபோ குறிப்பிடுகிறார்.(II.5.12.[54]) அகஸ்டஸ்காலகட்டங்களில் ஆண்டுக்கு ஒருகாபால் என்ற கணக்கில், மயோஸ் ஹார்மொசிலிருந்து இந்தியாவரை கப்பல் போக்குவரத்து இருந்தது.இங்கு ஏராளமாக தங்கம் வாணிகத்துக்காக உபயோகிக்கப்பட்டது. பின்னர் இதே தங்கத்தை குஷானர்களும் உருக்கி தங்களது காசுகளை அச்சடிக்க உபயோகித்துக்கொண்டனர்.இதனை பிளினி குற்றம் சாற்றி கூறியுள்ளார்(NH VI.101) இந்த வணிகப் பாதைகளும் துறைமுகங்களும் கி.பி. 1 நூற்றாண்டில் விவரிக்கப்பட்டுள்ளது. பெரிபிளஸ் ஆப் தி எரிதரேன் சீ . குப்தா அரச மரபு 4 ஆம் மற்றும் 5 ஆம் நூற்றாண்டுகளில் குப்த பேரரசு வட இந்தியாவை ஒன்றுபடுத்தியது. இந்து மதத்தின் மறுமலர்ச்சி பொற்காலமாகக் கருதப்பட்ட இந்த காலத்தில் இந்து பண்பாடு, அறிவியல் அரசியல் அமைப்புகள் வளர்ச்சி அடைந்தன.இந்த பேரரசில் மிகவும் பிரபலமானவர்கள்:முதலாம் சந்திரகுப்தர், சமுத்திரகுப்தர் மற்றும் இரண்டாம் சந்திரகுப்தர் மற்றும் முதலாம் குமாரகுப்தர் காலத்தில் பழமைவாய்ந்த புராணங்கள் எழுதப்பட்டது என்றும் கூறுவர். மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஹூணர்களின் படையெடுப்பின் காரணமாக இந்த குப்த சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வந்தது. 6 ஆம் நூற்றாண்டில், இந்த பேரரசின் முடிவுக்கு பின்னர் இந்தியாவில் மேலும் பல குறுநில மன்ன்னர்கள் ஆண்டனர்.இந்த அரசு உருக்குலைந்த பின்னரும் குப்த குலத்தை சேர்ந்த ஒரு சிலர் மகத நாட்டை ஆட்சி செய்தனர். இறுதியாக இந்த குலத்தை வென்றவர் ஹர்ஷவர்தனர் . இவர் தனது ராஜ்ஜியத்தை 7 ஆம் நூற்றாண்டின் பாதியில் துவக்கினார். ஹெப்தலைட்டுகள் குழுவை சார்ந்த வெள்ளை நிற ஹூணர்கள், 5 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், ஆப்கனிஸ்தானில் உள்ள பாமியான் என்ற தலைநகரை கொண்டு ஆட்சிசெய்தனர். இவர்கள் குப்தர்கள் சாம்ராஜ்ஜியம் குலைய காரணமாக இருந்ததால் இவர்களே பொற்காலத்தின் முடிவுக்கும் கரணம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.என்ன இருந்தாலும் இந்த சர்ச்சைகள் தென்னிந்திய பகுதியையும், டெக்கான் பகுதியையும் எள் அளவும் பாதிக்கவில்லை. பின்னர் வந்த நாட்களில் எழுந்த மத்திய இராச்சியங்கள் - தனிச்சிறப்புடைய காலம் இந்தியாவின் தனிச்சிறப்புடைய காலம் மேற்கு பகுதிகளில், குப்தர்களின் காலத்தில் துவங்கியது, மேலும் இது ஹர்ஷா வர்தனாவின் காலத்திலும் (7 ஆம் நூற்றாண்டு) தொடர்ந்தது. தெற்கு பகுதிகளில் தன்னிச்சிரப்புடன் விளங்கிய ராஜ்ஜியங்கள் விஜயநகர் சாம்ராஜ்ஜியத்துத்டன் ஒரு முடிவுக்கு வந்தது இந்த கால கட்டத்தில். இதற்கு காரணம் மேற்கிந்தியாவில் 13 ஆம் நூற்றாண்டில் நடந்த படையெடுப்புகள்.இந்த காலத்தில் இந்தியாவின் மிக சிறந்த கலைகள் தலையெடுத்தன. இதில் தனிச்சிறப்புடைய வளர்ச்சி காணப்பட்டது. ஆன்மீகம் மற்றும் இந்து, புத்த, மற்றும் சமண மதங்களின் தத்துவ அமைப்புகள் வளர்ச்சியடைந்தன. 7 ஆம் நூற்றாண்டில் பெர்கிந்தியாவை கனவுஜின் மன்னன் ஹர்ஷா ஒன்று படுத்தினார். இது குப்தர்களுக்கு பின்னர் நடந்தது.ஹர்ஷாவின் மறைவுக்கு பின்னர் இந்த ராஜ்ஜியமும் குலைந்தது.7 லிருந்து 9 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சிக்காக மேற்கிந்தியாவில் மூன்று அரச மரபுகள் போட்டியிட்டுக் கொண்டனர். அவர்கள், மாலுவாவின் பிரதிஹாரா (பின்னாளில் கனவுஜ்), வங்காளத்தின் பாலர்கள், மற்றும்டெக்கான் பகுதியின் ராஷ்டிரகூடர்கள் ஆவர்.பலார்கிடமிருந்து பின்னாட்களில் சேனா ராஜ்ஜியம் ஆட்சியை கைப்பற்றியது. அதே சமையத்தில் ப்ரதிஹாரா ராஜ்ஜியம் சிறு சிறு ராஜ்ஜியங்களாக மாறியது.அதன் பின்னர் வந்த ராஜபுதர்கள் இந்தியாவில் தங்கள் ஆட்சியை வெள்ளையரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெரும் நாள் வரை சரிவர செய்தனர்.நாம் அறிந்த வரை ராஜபுத ராஜ்ஜியம் முதல் முதலில் ( 6 ஆம் நூற்றாண்டு) ராஜஸ்தானில் தான் இருந்தது. அதற்கும் பிறகு சிறு சிறு ராஜபுத ராஜ்ஜியங்கள் மேற்கிந்தியாவை ஆண்டன.சவுதான் குலத்தை சேர்ந்த ப்ரித்வி ராஜ் சவுதான் என்கின்ற ராஜபுதர்,இஸ்லாமிய சுல்தான்களை எதிர்த்து வீரத்துடன் போரிட்டார்.கிழக்கு ஆப்கனிஸ்தானை, மேற்கு பாகிஸ்தானை மற்றும் காஸ்மீரை மத்திய 7 ஆம் நூற்றாண்டிலிருந்து பதினோராம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை சாகி அரச மரபு ஆட்சி புரிந்தது.ஹர்ஷாவுடன் ஒற்றுமை எண்ணம் மேற்கிந்தியாவில் மறைந்தாலும், இந்த கொள்கை அப்படியே தென் பகுதிக்கு மாறியது. 550 - 750 சாலுக்கிய சாம்ராஜ்ஜியம் மத்திய மற்றும் தென்னிந்தியாவை கர்நாடகாவிலுள்ள பதாமியிலிருந்து ஆண்டது. அதே கர்நாடகாவிலுள்ள கல்யாணியிலிருந்து 970-1190 ஆட்சி புரிந்தது.சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் என்றால் நாம் காஞ்சியின் பல்லவர்களை நினைவு கூறலாம்.சாளுக்கிய சாம்ராஜ்ஜியத்தின் முடிவுக்கு பின்னர் அவர்களது எதிரிகளான ஹலேபிடின் ஹோய்சாளர்கள், வாரங்களின்காகடியர்கள், தேவகிரியின் சூனா யாதவர்கள்மற்றும்கலசூரி என்ற தென் கிளையை சேர்ந்தவர்கள், பன்னிரண்டாம் நூற்றாண்டின் பாதியில் சாளுக்கிய ராஜ்ஜியத்தை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். பின்னர் வந்த காலங்களில் தமிழ் நாட்டின் மேற்கு பகுதியில் சோழ ராஜ்ஜியமும் கேரளாவில் சேர ராஜ்ஜியமும் எழுந்தன.1343 ல் இந்த ராஜ்ஜியங்களின் முடிவு விஜயநகரத்தின் எழுச்சிக்கு வழி வகுத்தது.இந்த தென்னிந்தியா ராஜ்ஜியங்கள் தங்களது ஆட்சிகளை கடல் தாண்டி தென் கிழக்கு ஆசியாவில் இந்தோனேசியா வரை கொண்டிருந்தனர்.தென்னிந்தியாவில் இருந்த துறைமுகங்கள் இந்து மகா சமுத்திரத்தில் நடந்த வாணிகத்தில் தங்களை ஈடுபடுத்தியிருந்தன. இந்த வாணிகம் வடக்கு பகுதியில் ரோமர்களிருந்து கிழக்கு பகுதியில் தென் கிழக்கு ஆசியா வரை நடைபெற்றது.[55][56] பதினான்காம் நூற்றாண்டில் டில்லி சுல்தான்களின் வருகை வரை தாய்மொழிகளில் இருந்த இலக்கியங்களும், கட்டிடக் கலையும் செழிப்பாக இருந்தன.இந்து மதத்தை பின்பற்றிய விஜயநகர அரச மரபு (பாமினி ராஜ்ஜியம்) இஸ்லாமிய ஆட்சியருடன் விரோதம் கொண்டது. இந்த இரு அமைப்புகளுக்கு நடுவே நடந்த கருத்து வேறுபாடுகள் ஒன்றன் மேல் மற்றொன்று தீராத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.டில்லியிலிருந்து ஆட்சி செய்த சுல்தான்களால் விஜயநகரம் தனது வலுவை இழந்தது. இந்தியாவின் தொல்பொருள் ஆரய்ச்சியாளர்கள் இந்தியாவின் 55,000000 கல்செதுக்கங்களில், 55 சதவிகிதமான கல்வெட்டுகள் தமிழில் உள்ளன என்றும் 60 சதவிகிதம் தமிழ்நாட்டில் உள்ளன என்றும் கண்டறிந்துள்ளனர்.[57] இஸ்லாமிய சுல்தான்கள் இந்தியாவின் வட தோழமை நாடான பெர்சியாவின் மீது ஆரபியர்கள் படையெடுத்த போது, நாகரிகத்தையும், வைர சுரங்கங்களையும், வெளிநாட்டு வாணிகத்திலும் செழித்தோங்கிய இந்தியாவையும் அவர்கள் கண்ணிட்டனர்.ஒரு சிறிய காலத்திற்கு போராட்டங்கள் இருந்தாலும் மேற்கிந்தியாவை இஸ்லாமிய சுல்தான்கள் கைப்பற்றினர். நாளடைவில் மேற்கு துணை கண்டத்தையும் தங்களது வசம் கொண்டுவந்தனர்.ஆனால் துருக்கியரின் படையெடுப்புக்கு முன்னர் இஸ்லாமியர்கள் இந்திய கடலோர பகுதிகளுடன் வாணிகம் கொண்டிருந்தனர். முக்கியமாக ச்ல்லவேண்டும் என்றால் அவர்கள் இந்து மகா சமுத்திரம் வழி அராபியாவிலிருந்து கேரளா வந்தனர். இதனால் ஆபிரகாமிய மத்திய கிழக்கு மதம் எழுந்தது. இது தென்னிந்தியாவில் புனிதமாகக் கருதப்பட்ட இந்து தருமங்களிலிருந்து வேறு பட்டிருந்தது.பின்பு பாமினி சுல்தான்களும் டெக்கான் சுல்தான்களும் தென்னிந்தியாவில் செழிப்புடன் இருந்தனர். டில்லி சுல்தான்கள் 12 மற்றும் 13 ஆம் நூறாண்டுகளில் துருக்கியர்கள் மற்றும் பாஷ்டுன்கள் ராஜபுதர்களின் கைகளில் இருந்த மேற்கிந்தியாவின் மீது படையெடுத்து டில்லி சுல்தான்களாக மாறினர்.[58] அதன் பிறகு வந்த டில்லியை சார்ந்த அடிமை அரச மரபுமேற்கிந்தியாவின் பெரும்பகுதியை குப்தர்கள் போலவே கைப்பற்றியது. அனால்கில்ஜி அரச மரபுமத்திய இந்தியாவில் கைப்பற்றி இருந்தாலும் அவர்களால் இந்த பக்டுதியை ஒன்று படுத்தி கட்டிக் காக்க இயலவில்லை.இந்திய கலாச்சாரத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது இந்த சுல்தானியம்.இந்த இந்திய இஸ்லாமிய கலாசாரங்களின் கலப்பு கட்டிடக் கலை, இசை, மதம். உடைகளில் அழியாத மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.நாடோடி இனம் அல்லது முகாம் என்ற பொருளை கொண்ட உருது மொழி (துருக்கிய மொழியில்) டில்லி சுல்தான்கள் காலில் பிறந்தது. இது சமஸ்க்ருத பிரகிருத்தி பெர்சியா, துருக்கி, அரபு மொழியுடன் கலந்ததால் ஏற்பட்டது. டில்லி சுல்தானியும் பெண் ஆட்சியாளரை நியமித்த ஒரு சில ராஜ்ஜியன்களுள் ஒன்று. இது ரசியா சுல்தானை ஆட்சியில் அமர்த்தியது.(1236-1240). 1398 ஆண்டில் துருக்க மங்கோலிய அரசர் தைமூர் டில்லியை சார்ந்த துக்ளக் அரச மரப மன்னரான சுல்தான் நசீருதீன் முஹம்மதின் ஆட்சியை பிடிக்க முனைப்புடன் செயல் பட்டார்.[59] சுல்தான் டிசம்பர் 17, 1398 அன்று தோல்வியுற்றார். தைமூர் டில்லியை அடைந்த பின் அதனை கொள்ளையடித்து, அழித்து, துயரமான நிலையில் விட்டுச் சென்றார். முகலாய காலம் 1526 ல் தைமூரிலிருந்து தைமூர் மற்றும் செங்கிஸ்கான் வம்சவழி வந்த பபூர், கைபர் பாசின் வழி வந்து முகலாய சாம்ராஜ்ஜியத்தை அமைத்தார். இது இரு நூறு ஆண்டுகளுக்கு நீடித்து இருந்தது.[60] 1600 களில் முகலாய அரச மரபு இந்திய துணைகண்டத்தின் முக்காவாசி பகுதிகளை ஆண்டு கொண்டிருந்தது. 1707 க்கு பிறகு அது தன வல்லாண்மையை இழக்கத் துவங்கியது. அது 1857 இந்திய சுதந்திரப் போர் அல்லது 1857 இந்திய புரட்சி காரணமாக முற்றிலும் தொலைந்து போனது.இந்த காலம் இந்திய வரலாற்றில் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்தியது. இந்து மக்கள் முகலாய பேரரசர்களால் ஆட்சி செய்யப்பட்ட காலம் இது. பெரும்பாலான இஸ்லாமிய மன்னர்கள் இந்து மதத்தையும் அதனது கலாச்சாரத்தையும் ஆதரித்தனர்.பபுரின் பேரரான அக்பர் இந்துக்களுடன் நல்லுறவை ஏற்படுத்த முனைப்பட்டார்.ஆயினும் பின்னர் வந்த அவுரங்கசீப் போன்ற மன்னர்கள் இஸ்லாமிய ஆதிக்கத்தை திணித்தனர். இதனால் பல கோவில்கள் அழிக்கப்பட்டன. இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் பெரும் வரிகளைக் கட்டினர்.மவுரிய சாம்ராஜ்ஜியத்தைப்போல பரந்த எல்லைப்பரப்பை கொண்டிருந்த முகலாய சாம்ராஜ்ஜியம் வலுவை இழந்தவுடன் அதனை ஈடுகட்ட சிறு சிறு ராஜ்ஜியங்கள் வரத் துவங்கின.செல்வசெழிப்புடன் இருந்த அரச மரபாக முகலாய சாம்ராஜ்ஜியம் திகழ்ந்தது. 1739 ல்,நதேர் ஷா முகலாய படையை கர்னல் போரில் வீழ்த்தினார். இந்த வெற்றியை தொடர்ந்து நதேர் ஷா தில்லியைக் கைப்பற்றி அதனுள் இருந்த செல்வத்தை தன்பால் எடுத்துச் சென்றார். அதில் மயில் சிம்மாசனமும் ஒன்றாகும்.[61] முகலாய காலத்தில் உச்சக் கட்டத்தில் முகலாய சாம்ராஜ்ஜியத்தின் அரசியல் அமைப்புகள் மிகவும் வலிமையாக இருந்தன, அதன் பின்னர் வலுவிழந்த இந்த முகலாயர்களை வீழ்த்த மராத்திய ராஜ்ஜியங்கள் வீரியம் கொண்டன.முகலாயர்கள் இந்திய கலாச்சாரத்துடன் ஒன்று கூடி செயல்பட்டதே அவர்கள் நீண்ட காலம் ஆட்சி புரிந்ததன் ரகசியமாகும்.இந்த ரகசியத்தை டில்லியின் சுல்தான்கள் அறியாததால் அவர்கள் வெகு விரைவில் ஆட்சியை இழந்தனர்.இந்த கொள்கையை பெரிதும் மதித்து செயல் பட்டவர் பேரரசர் அக்பர் ஆவார்.சமண மதம் தழைத்து இருந்த அந்த காலத்தில் அக்பர் அமரி என்ற ஒன்றை அமல் படுத்தினார்.இந்து விலங்குகளை கொல்லக்கூடாது என்ற சட்டமாகும்.அவர் ஜசியா என்ற வரியை ரத்து செய்தார் (முஸ்லிம் அல்லாதவர்களுக்கு). முகல்லாய மன்னர்கள் இந்திய மன்னர்களுடன் ஒப்பந்தங்கள் செய்து கொண்டனர், இந்திய ராணிகளை மணந்து கொண்டனர், அவர்கள் தங்களது துருக்கிய பெர்சிய கலாச்சாரத்தை இந்திய முறைகளுடன் இணைத்து இந்தோ-சாராசெனிக் கட்டிடக் கலையை உண்டாக்கினார்கள்.இந்த வழி முறையை மறந்த நிலையிலும், இஸ்லாமிய ஆதிக்கமும், மக்களை கொடுமைப்படுத்துதலும் ஒன்று சேர்ந்து அவுரங்கசீபின் காலத்திக்கு பிறகு இந்த சாம்ராஜ்ஜியம் வலு இழக்க காரணமாக இருந்தது. அவுரங்கசீப் மற்ற அரசர்களைப் போல் அல்லாது பொதுமக்கள் பெரிதும் விரும்பாத பல கொள்கைகளை கையாண்டார். முகலாயர்களுக்கு பின்னர் வந்த ராஜ்ஜியங்கள் முகலாயர்களுக்கு பிறகு அவர்களது இடத்தை மராத்தியர் பிடித்தனர். இதே சமயத்தில் ஐரோப்பியர்களின் நடவடிக்கைகளுக்கும் இந்தியாவில் அதிகரித்தது.சிவாஜி துவக்கிய மராத்திய அரசு அவர் காலத்தில் மிகவும் வலிமையாக இருந்தது.18 ஆம் நூற்றாண்டுகளில் பேஷ்வாவின் ஆட்சியில் தன்னை மராத்திய ராஜ்ஜியமாக மாற்றியமைத்துக் கொண்டது. 1760 ல், இந்த சாம்ராஜ்ஜியம் இந்திய துணைகண்டம் முழுவதிலும் தனது கொடியை நாட்டி இருந்தது.இந்த மராத்திய விரிவாக்கம் அஹ்மது ஷா அப்டாலி தலைமையின் கீழ்வந்த ஆப்கனிய படையால், மூன்றாம் பானிபெட் போரின் மூலம் தடுக்கப்பட்டது.(1761). கடைசி பெஷ்வாவாகிய பாஜி ராவ் II, ஆங்கிலேயரால் மூன்றாம் ஆங்கிலேய மராத்திய போரில் வீழ்த்தப்பட்டார். மைசூர் தென்னிந்தியாவில் ஒரு சிற்றரசாகும். இது கி.பி. 1400 ல் வாடியார் அரசு மரபினரால் துவக்கப்பட்டது.வாடியர்களின் ஆட்சி ஹைதர் அலியாலும் அவரது மகன் திப்பு சுல்தானாலும் ஒரு முடிவுக்கு வந்தது. ஆங்கிலேய-மைசூர்ப் போர்கள் மூலம் ஐதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஒடுக்கப்பட்டு, மைசூர் அரசு ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டும் சுதேசி சமஸ்தானமாக மாறியது. ஈடுப. ஹைதராபாத் 1591 ல், கோல்கொண்டாவை சேர்ந்த குதுப் ஸாஹியால் ஆக்கப்பட்டது. ஒரு சிறிய ஆசிப் ஜாவின் கீழ் நடந்த முகலாய ஆட்சிக்கு பிறகு மீண்டும் ஹைடிராபாதை சேர்ந்த நிசாம் அழ மலக் 1724 ல் ஆட்சியைப் பிடித்தார்.1724 இலிருந்து 1948 வரை ஹைதராபாத் நிஜாம் வம்சாவளியினத்தினரால் ஹைதிராபாத் ஆட்சி செய்யப்பட்டது. ஆங்கிலேய தென் இந்தியாவில் மைசூரும், ஹைதிராபாதும் மன்னராட்சி செய்த நாடுகளாக மாறின. சீக்கிய மதத்தினை சேர்ந்த ஒரு சிலரால் உண்டான பஞ்சாபிய ராஜ்ஜியம் அரசியல் நல்லபடியாக பஞ்சாபை ஆட்சிசெய்தது.இந்தப் பகுதி ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்ட இறுதிப் பகுதிகளில் ஒன்று.ஆங்கிலேய-சீக்கியப் போர்கள் சீக்கிய ராஜ்ஜியத்தின் உருக்குலைவுக்கு வழி வகுத்தது. 18 ஆம் நூற்றாண்டில் கோர்கா, ஷா மற்றும் ரானா ஆட்சியாளர்களால் நேபாளம் உருவாக்கப்பட்டது. அவர்கள், தங்களை பாதுகாத்துக் கொண்டதுடன் ஒற்றுமையாகவும் வாழ்ந்தனர். சேர பேரரசு பண்டைய தமிழகத்தை ஆட்சிபுரிந்த 3 பேரரசுகளில் சேர பேரரசு ஒன்றாகும். தற்போதைய கேரளாவின் பெரும்பான்மையான பகுதிகள்,தமிழ்நாட்டின் சில பகுதிகளையும் கொண்ட பகுதி சேர பேரரசு ஆகும். முக்கிய துறைமுகம் முசிறி ஆகும். முதல் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து முசிறி துறைமுகம் வழியாக உரோமை நாட்டுடன் வணிக தொடர்பு சிறப்பாக நடந்ததாக மார்க்கோ போலோ தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். சோழ பேரரசு சோழ பேரரசில் குறிப்பிட தக்க அரசர்களில் முக்கியமானவர்கள் இருவர், 1. ராஜராஜ சோழன் , 2. ராஜேந்திர சோழன் . இவர்களுடைய ஆட்சி காலத்தில் சோழ பேரரசு பறந்து விரிந்து காணப்பட்டது .சோழர்கள் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இரு குலங்கள் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். சோழர் என்னும் பெயர் எவ்வாறு வழங்கத்தொடங்கியது என்பது தெரியவில்லை, சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடும்பம் அல்லது குலத்தின் பெயராகும் என்று பரிமேலழகர் என்னும் புலவரால் கருதப்பட்டது. சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று கூறப்பட்டாலும் இது மரபு வழிச்செய்தியே தவிர வரலாற்று ஆதாரமற்றது. இது எவ்வாறாயினும் சோழ அரச மரபின் மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது. பாண்டிய பேரரசு நாட்டின் குடியேற்றத்தை அமைத்த காலம் வாஸ்கோ ட காமா 1498 ல் கடல் வழியே இந்தியாவுக்கு வழி கண்டு பிடித்தார்.இதனால் இந்திய ஐரோப்பிய வாணிகம் வளர்ச்சியடைந்தது.[62] போர்ட்யுகல் மக்கள் கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பேவில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர்.இவர்களையடுத்து டச், ஆங்கிலேயர்கள் வாணிக முகாம்களை சூரத்தின் வடக்கு கரையோரத்தில் நிறுவினர்.[63] 1619 ல் பிரெஞ்சு காரர்களும் அவர்களை பின் தொடர்ந்தனர்.உள்ளுக்குளே நடந்த போர்களும், குழப்பங்களும் ஐரோப்பியர் தேடிக்கொண்டிருந்த நுழைவு வாயிலாக அமைந்தன. இதன் மூலம் அவர்கள் அரசியல் ஆதிக்கத்தையும் செலுத்த ஆரம்பித்தனர்.மற்ற எல்லா ஐரோப்பியா நாடுகளும் தங்களது வசம் இருந்த பகுதிகளை ஆங்கிலேயரிடம் நாளடைவில், அதாவது இந்த ஒரே நூற்றாண்டில் இழந்தனர். இதற்கு விதிவிலக்காக பிரெஞ்சு நாட்டவர்களின் பாண்டிசெரி, சந்தேர்நாகூர் மற்றும் டச்சின் ட்ராவனகொர் துறைமுகமும், மற்றும் போர்ட்யுகல் நாட்டினரின் கோவா, டாமன், டியூ இருந்தன. ஆங்கிலேயர் அரசாட்சி ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனம் முகலாய பேரரசர் ஜெஹாங்கிரின் அனுமதிப் பெற்ற பிறகு இந்தியாவுடன் 1617 ல், வணிகம் கொள்ள ஆரம்பித்தது[64] நாளடைவில் அவர்களது ஆதிக்கத்தினால் சட்டப்படி (டி-சூரே ) இருந்த முகலாய பேரரசர் பருக் சியார் அவர்ர்களுக்கு தஸ்டக்குகள் அல்லது வரியில்லாமல் வங்காளத்தில், 1717 ல், வாணிகம் செய்ய அனுமதி வழங்கினார்.[65] வங்காள மாகாணத்தை தனது வம்சாவளியின் (டி-பாக்டோ ) மூலம் ஆண்ட, வங்காளத்தின் நவாப் சிராஜ் உத் தௌலா ஆங்கிலேயரரின் இந்த முயர்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது 1757 ல் பிளாசே போருக்கு வழி வகுத்தது. இதில் இராபர்ட் கிளைவின் தலைமையில் சென்ற கிழக்கிந்திய நிறுவனத்தின் படை நவாபை வீழ்த்தியது. நிலங்களை அரசியல் நோக்குடன் ஆங்கிலேயர்கள் ஆக்கிரமித்ததில் இதுவே முதல் முறை.இந்த நிறுவனம் கிளைவை முதல் வங்காள ஆளுநராக 1757 ல் நியமித்தது.[66] 1764 ல் பக்சார் போருக்கு பின்னர் வங்காளத்தை ஆட்சி செய்ய முகலாய பேரரசர் ஷா அலாம் II இடமிருந்து அனுமதிப்பெற்றது. இதுவே இந்தியா முழுதும் ஆங்கிலேயரின் ஆட்சிக்குள் வர முதல் படியாக இருந்தது.3}[113] வங்காளத்தின் வணிகத்தை தான் மட்டுமே கையாண்டது பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்.அவர்கள் ஒரு புது நில வரியை அறிமுகப்படுத்தியது. பெர்மனென்ட் செட்டில்மென்ட் என்ற இதன் வழியாக நிலங்கள் பியூடல் முறையில் கையாளப்பட்டன. (வங்காளத்தின் ஜமீன்தாரை பார்க்க) 1850 முடிவகளில் கிழக்கிந்திய நிறுவனம் இந்திய துணைகண்டத்தின் பெரும்பாலான பகுதிகளை (இன்றைய பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசம்) தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.அவர்கள் பிரித்து ஆள் என்ற கொள்கையை தீவிரமாகப் பயன்படுத்தினர். அரசர்களால் கட்டுபடுத்தப்பட்ட மாநிலங்களுக்கும், சமுக மற்றும் மத சார்ந்த குழுக்களுக்கும் இருந்த பகைமையை இவர்கள் மிகவும் அறிவு பூர்வமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.[[|ஆங்கிலேயரின் கம்பெனி ஆட்சியின் பொழுது, அரசாங்கத்தின் சொல்லப்படாத கொள்கைகளால்இந்தியாவில் பஞ்சங்கள் உருவாகின. மிக கொடுமையான பயங்கர பஞ்சம் (கிரேட் பாமின் ஆப் 1876–78), 6.1 மில்லியனிலிருந்து 10.3 மில்லியன் மக்கள் வரை கொன்றது [67]. அதனை தொடர்ந்த 1899–1900 இந்திய பஞ்சம், 1.25 இலிருந்து 10 மில்லியன் மக்கள் வரை இறந்தனர்.[67] மூன்றாம் பிளக் பாண்டமிக் தனது ஆதீனத்தை சீனாவில் கொண்டிருந்தது. மத்திய 19 ஆம் நூற்றாண்டில் துவங்கிய அது கண்டங்கள் முழுதும் அல்லது இந்தியாவில் மட்டும் 10 மில்லியன் மக்களை கொன்றது.[68] இந்த பஞ்சங்களும் வியாதிகளும் அதிகரித்த போதிலும் இந்திய துணைகண்டத்தின் மக்கள் தொகை 1750 ல் 125 மில்லியனாக இருந்து,1941 ல் 389 மில்லியனாக மாறியது 1941.[69] பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தை எதிர்த்து நடந்த முதல் இயக்கம் 1857 இந்திய கலகம் என்ற பெயர் பெற்றது. இதனை இந்திய விடுதலையின் முதல் போர் என்றும் அழைப்பர். ஒரு வருடத்துக்கு பிறகு, மிகுந்த நடவடிக்கைகள் எடுத்த பிறகுதான் இந்த கழகத்தை ஆங்கிலேயர்களால் கட்டுப்படுத்த முடிந்தது.இந்த கலகத்திற்கு மானசீக தளபதியாக விளங்கிய முகாலாய பேரரசர் பகதூர் ஷா சபர் பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இதனால் முகலாய வம்சாவழியே ஒழிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்திய கம்பெனி ஆட்சிப் பொறுப்பை தன்னிடம் ஆங்கிலேய முடியாட்சி மாற்றி கொண்டது. இது இந்தியாவில் ஒரு குடியேற்ற நாடாகவே பார்த்து. இது நிறுவனத்தின் கீழ் இருந்த நிலங்களை வெளிப்படையாகவும் மற்ற நிலங்களை அரசர்கள் ஆண்ட நாடுகள் என்ற போர்வை கீழ் மறை முகமாகவும் ஆட்சி செய்தது. ஆங்கிலேயரிடமிருந்து ஆகஸ்ட் 1947 ல் விடுதலைப்பெற்ற இந்தியாவில் மொத்தம் 565 அரசர்களால் ஆளப்பட்ட நாடுகள் இருந்தன.[70] இந்திய சுதந்திர இயக்கம் பிரிடிஷ் வைஸ்ராய்க்கு அறிவுரை கூற இந்திய கவுன்சிலர்கள் நியமிக்கப்பட்டனர். இதுவே இந்திய சுதந்திரத்துக்கும் வடக்கு முறை குடியரசுக்கும் முதல் படியாக இருந்தது.[71] மாநிலவாரியான கவுன்சில்களில் நியமிக்கப்பட்டதன மூலம் கவுன்சிலர்கள் சட்டம் இயற்றுகிற கவுன்சில்களிலும் தங்களை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டனர்.[72] 1920 இலிருந்து மோகன்தாசு கரம்சந்த் காந்தி போன்ற தலைவர்கள் ஆங்கிலேயருக்கு எதிரான மக்கள் இயக்கங்களை துவக்கி பாடுபட்டனர்.ஆங்கிலேயரை எதிர்த்து படைகளை சேர்த்தார் சுபாஷ் சந்திர போஸ் என்ற மாபெரும் சுதந்திரப் போராட்டத் தலைவர்.பகத் சிங் என்ற மற்றும் ஒரு சுதந்திரப் போராட்டத் தலைவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் புரட்சிகள் ஏற்படுத்த காரணமாக இருந்தார். அவர் ஷகீத் பகத் சிங் என்று அழைக்கபடுகிறார். ஷகீத் என்றால் கொள்கைவாதி என்று பொருள்.முதல் விடுதலை போராட்ட வீரர் கட்டலங்குளம் வீரன் அழகுமுத்து கோன் வரியைக் கட்ட மறுத்து ஆங்கிலேய தளபதியான கான்சாகிப் எதிர்த்து போரிட்டு அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுத்தார்.அவர் சிந்திய ரத்தமே இந்திய விடுதலை போராட்டதிற்கு வித்திட்டது. சுதந்திர போராட்ட வீரரில் வீரபாண்டிய கட்டபொம்மனும் ஒருவர்.ஆங்கிலேயருக்கு எதிரான இந்தியா சுதந்திரத்துக்கான புரட்சி இயக்கத்தின் செயல்பாடுகளும் இந்தியத் துணைக்கண்டத்தில் நடைபெற்றன. இந்த இயக்கங்கள் அனைத்தும் 1947 ல் இந்தியா சுதந்திரம் பெற உறுதுணையாக இருந்தன. சுதந்திரம் மற்றும் பிரிவினை ஆங்கில அரசு முகமதிய ஆட்சியையும் அது ஏற்படுத்திய அழிவுகளையும் முனைந்து பயின்று இந்து முஸ்லீம்களுக்கிடையேயான பிரச்சனைகளை முக்கியத்துவப்படுத்திக் காட்டுவதன் மூலம் இஸ்லாமிற்கு எதிரான அமைதியான கிறித்துவக் கொள்கையாக தனது காலனீய ஆட்சியைக் காட்ட முயன்றது என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மதத்தைத் தவிர பல காரணிகள் ஆட்சியைத் தீர்மானித்ததால், ஆராயும் வரலாற்றறிஞர்கள் ’இந்து ஆட்சி’, ’முகமதிய ஆட்சி’ என்று குறிப்பிடும் முறையை ஏற்பதில்லை.[73] இந்த விதத்தில் இந்திய விடுதலை இயக்கம் நடந்த அதே சமயத்திலேயே இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நடுவே பிரச்சனைகளும் வளர்த்தெடுக்கப்பட்டன.1915 ல் மோகன்தாஸ் கரம்சந்து காந்தி இருதரப்பினருக்கும் இடையே ஒற்றுமையைக் கொண்டுவர பாடுபட்டார். ஆங்கிலேயர்கள் "இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம்", என்று வாக்களித்தனர். இந்தியாவின் அனைத்து பகுதிகளும் 1947 ல் சுதந்திரம் பெற்றன. பிரித்தானிய இந்தியாவை பாகிஸ்தான் மற்றும் இந்தியா என பிரிக்கப்பட்டது. இந்தியப் பிரிவினைக்குப் பின், பஞ்சாப் மற்றும் வங்காளத்தின் பிரிவினைக்கு முன்னர் மற்றும் ஒரு கலவரம் இந்துக்களுக்கும், சீக்கியருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மூண்டது. இது இந்தியாவின் பெரும்பகுதிகளில் அதாவது பஞ்சாப், வங்காளம் மற்றும் டில்லியில் நடந்தது. இதில் கிட்டத்தட்ட 500,000 மக்கள் இறந்தனர்.[74] இதே சமயத்தில் வரலாறே ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய மக்கள் குடியேற்றம் நடந்தது. இதில் 12 மில்லியன் இந்துக்கள், சீக்கியர்கள், இஸ்லாமியர்கள் புதிதாய் உருவான இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தனர்.} சுதந்திரத்திற்குப் பின்னர் 15 ஆகஸ்ட் 1947அன்று இந்திய விடுதலைக்குப் பின் பிரதம அமைச்சர் ஜவகர்லால் நேரு தலைமையில் முதல் இந்திய அரசு உருவானது. 26 சனவரி 1950இல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவான அதே நாளில் இந்தியா குடியரசு நாடானது. 1951-1952ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்ற முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. வல்லபாய் படேலின் பெரு முயற்சியால் 562 மன்னராட்சி நாடுகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1960ஆம் ஆண்டில் இந்திய மாநிலங்கள் மொழிவாரி மாநிலங்களாக மாற்றி அமைக்கப்பட்டது. இந்திய விடுதலைப் பின்னர் ஜனவரி 30, 1948 ஆம் தேதி இந்தியாவின் தேசப்பிதா காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். மேற்கோள்கள் புற இணைப்புகள் at Curlie பகுப்பு:மேற்கோள் வழு-Defined multiple times
வெண்கலக் காலம் எந்த ஆண்டில் துவங்கியது?
கிமு 3300
16,665
tamil
39c90c6e8
இயற்கைப் பேரழிவு (ஆங்கிலம்<i data-parsoid='{"dsr":[242,262,2,2]}'>Natural disaster) அல்லது பெருங்கேடு என்பது இயற்கையாக நிகழும் இடையூறுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறிப்பதாகும். (எடுத்துக் காட்டாக, வெள்ளப் பெருக்கு, எரிமலை வெடிப்பு, நில நடுக்கம், மண்சரிவு போன்றவை), இந்தப் பேரழிவால் மிகையான அளவில் பொருட்ச்சேதம், உயிர்ச்சேதம், ஏற்படுவதுடன் சுற்றுச்சூழலும் விவரிக்க இயலாத அளவிற்கு சேதமடைகிறது. இதனால் ஏற்படும் பெரும் நட்டத்தை தாங்கிக் கொள்வது சுலபமல்ல, அதன் சுவடுகள் வாழ்நாள் முழுதும் பாதிப்படைந்தவர்களை துன்பத்திலும், துயரத்திலும் ஆழ்த்தினாலும், ஒரு வகையில் இந்தக் கட்ட நட்டங்களைத் தாங்கி மீள்வதற்கான செயல்பாடுகளை அந்நாட்டு மக்களும் சமூகமும் எடுக்கும் விரைவான நடவடிக்கைகளை மிகவும் சார்ந்தே, சுற்றுப்புற சூழ் நிலைகளை பழைய நிலைமைக்கு கொண்டு வருவதற்கான மிகச் சிறந்த, தெளிவான வழியாகும். அது மட்டுமன்றி, பேரழிவில் இருந்து மீண்டும் எழுவதற்கும், அதைத் துணிந்து போராடுவதற்கும், மக்கள் தன்னம்பிக்கையுடன் அதைப்புச்சத்தியுடன் துணிந்து செயல்படுவது மிகவும் முக்கியமாகும். மக்களின் ஆதரவு, அவர்கள் திறமையுடனும் விரைவாகவும் எடுக்கும் ஆக்கபூர்வமான செயல்பாடுகள், பதட்டப்படாமல் ஒற்றுமையுடன் செயல்படுதல், நேரம் காலம் பாராமல் அனைவரும் தமது பங்கை அளித்து சிரமங்களைப் பாராமல் செயல்படுவதால் நிலைமையை ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள சாத்தியமாகும், மேலும் நட்டங்களையும், பாதிப்புகளையும், ஓரளவிற்கு குறைக்கவும் வழி செய்யலாம்.[1] நாம் முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான கூற்று இதுவேயாகும்: "காற்றானது சீற்றமடைந்து ஆல மரத்தையே வேரோடு சாய்ப்பது போலவே, அளவு கடந்த இடர்பாடுகள் ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக நிகழும் பொழுது, அதுவே பேரழிவாக ஊறுபட்டு பேரழிவுகளுக்கு வித்திடுகிறது."[2] இயற்கையாக எழும் இடர்பாடுகள் சில பாதிப்படையக் கூடிய இடங்களில் மிகையாக நிகழும் போது மட்டுமே பேரழிவிற்கு வழி வகுப்பதாகக் காணப்படுகிறது, இதற்கு எடுத்துக்காட்டாக குறிப்பிடுவது என்னவென்றால், மக்கள் வசிக்காத இடங்களில் கடுமையான நில நடுக்கம் ஏற்படுவதில்லை. இவ்விடத்தில் இயற்கை என்ற சொல்லே பிற்பாடு விவாதத்திற்குரியதாக உள்ளது, ஏன் என்றால் அழிவுச் சம்பவங்கள், இடையூறுகள் அல்லது இடர்ப்பாடுகள் அனைத்துமே மனிதர்கள் சம்பந்தப் பட்டு இருந்தால் மட்டுமே அர்த்தமுடையதாயிருக்கும், என்ற விவாதமே.[3] சொல்லப் போனால், மக்கள் வசிக்காத இடங்களில் நடைபெறும் சம்பவங்களைக் குறித்து மனிதர்கள் தெரிந்து கொள்ளாமலும், அக்கறை காட்டாமலும் இருக்கலாம். இயற்கை இடையூறுகள் ஓர் இயற்கை இடையூறு என்பது, அதைச் சார்ந்த மக்களையும், சுற்றுச் சூழலையும் எதிர்மறை விளைவுகளுடன் பாதிக்கும் தன்மையுடைய அபாயங்களை அல்லது அச்சுறுத்தல்களைக் குறிக்கும் ஒரு நிகழ்வாகும். பல இயற்கையான இடையூறுகள் ஒன்றுடன் ஒன்று என தொடர்பு கொண்டவையாகும், உதாரணமாக, நில நடுக்கம் காரணமாக சுனாமி உருவாகலாம், வறட்சியின் விளைவாக நேரடியாக பஞ்சம்|பஞ்சமும் அதனுடனேயே சேர்ந்து கொள்ளை நோய்|கொள்ளை நோயும் தொற்றலாம். 1906 ஆம் ஆண்டில் ஸான் பிரான்ஸிஸ்கோவில் நிகழ்ந்த நில நடுக்கம் ஓர் பேரழிவாகும், ஆனால் பொதுவாக நடைபெறும் நில நடுக்கங்கள் இடையூறாக அமைவதே பேரழிவிற்கும் இடர்பாட்டிற்கும் இடையே நிலவும் பாகுபாட்டை விளக்கும் ஒரு வலுவான எடுத்துக்காட்டாகும். இடையூறுகள் பிற்பாடு வரப்போகும் எதிர்கால நிகழ்ச்சிகளோடு தொடர்பு கொண்டிருக்கும், பேரழிவுகள் கடந்த காலத்துச் சம்பவங்கள் அல்லது நடப்புச் சம்பவங்களோடு தொடர்பு கொண்டிருக்கும். இயற்கைப் பேரழிவுகள் நில அசைவுப் பேரழிவுகள் பனிச்சரிவு குறிப்பிடத்தகுந்த பனிப்பாறை சரிவுகள் பின்வருவன வாகும். 1910 ஆம் ஆண்டு வேல்லிங்க்டன் பனிப்பாறை சரிவு 1954 ஆம் ஆண்டு ப்லோன்ஸ் பனிப்பாறை சரிவு 1970 ஆம் ஆண்டு ஆன்காஷ் நிலநடுக்கம் 1999 ஆம் ஆண்டு கால்டுர் பனிப்பாறை சரிவு 2002 ஆம் ஆண்டு கொல்கா-கர்மடோன் பாறை பனி சரிவு நில நடுக்கங்கள் புவி ஓட்டில் திடுமென எதிர்பாராமல் ஏற்படுகின்ற அசைவே நில நடுக்கமாகும். அதன் அலைஅதிர்வுகள் பரும அளவில் மாறுபடும். நில நடுக்கத்திற்கு காரணமாக அமைந்த நிலத்தின் அடியிலான (கீழான) பிறப்பிடத்தினை 'குவியம்' என்றழைப்பர். அந்த குவியத்தின் நேர் மேலுள்ள முனையினை 'அதிர் மையம்' என்றழைப்பர். அவ்வாறு நில நடுக்கங்கள் ஏற்படும் பொழுது மக்களையோ அல்லது விலங்குகளையோ அது பாதிப்பதில்லை. நில நடுக்கத்தின் காரணமாக, இரண்டாம் பட்ச நிகழ்வுகளான கட்டிடங்கள் பாழடைந்துச் சரிதல், காட்டுத்தீ பரவுதல், சுனாமி உருவாகுதல், எரிமலை வெடித்தல் போன்ற நிகவுகளின் பின்னணியில் மக்களுக்கு பேரழிவுகளுடன் பேரிழப்பும் நேரிடுகிறது. பலமான கட்டிடங்களைக் கட்டுவது, சிறப்பான பாதுகாப்பு முறைகளை செயல் படுத்துவது, ஆரம்ப காலத்திலேயே எச்சரிக்கை செய்வது, முன்னதாகவே மக்களை இடம் பெயருவதற்கான முன்னேற்பாடுகளை திட்டமிட்டு செயல் படுத்துவது, ஆகிய சீரான நடவடிக்கைகள் மூலம் இது போன்ற பேரழிவு இடர்பாடுகளில் இருந்து ஓரளவிற்கு தடுக்கவோ அல்லது தவிற்கவோ முனையலாம். எனவே இயற்கை யல்லாத பேரழிவு என்ற கூற்று சட்டப்படி வாத ஆதாரமற்ற ஏற்றுக்கொள்ள முடியாத கூற்றாகும். நிலவியல் குறைபாடுகள் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் குவிந்து விட, அவை யாவற்றையும் ஒரே நேரத்தில் உடனுக்குடன் வெளியேற்றும் இயற்கை நிகழ்வுகளால் நில நடுக்கங்கள் ஏற்படுகின்றன. சமீப காலங்களில் நிகழ்ந்த மிகக் குறிப்பிடத் தக்க நில நடுக்கங்களாவன: 2004 ஆம் ஆண்டில் நிகழ்ந்த இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் வரலாற்றில் இரண்டாம் மிகப்பெரிய நிலநடுக்கமாக, குறித்த தருணத்தில் 9.3 என்ற அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கம் தூண்டிவிட்ட பெரும் சுனாமி ஆழிப் பேரலை காரணமாக 229,000 க்கும் மேற்பட்ட மக்கள் மரணமடைந்தார்கள். 2005 ஆம் ஆண்டு காஷ்மீர் நில நடுக்கம், அதன் அளவு 7.6-7.7 என்றிருக்க, பாகிஸ்தானில் 79,000 பேர்கள் அகால மரணமடைந்தார்கள். 7.7 பருமனளவு கொண்ட ஜூலை 2006 ஆம் ஆண்டு ஜாவா நில நடுக்கம் சுனாமி ஆழிப் பேரலைகளை முடுக்கிவிட்டது. அதேபோல் 7.9 பருமனளவில் மே 27, 2008 அன்று சிசுவான் நில நடுக்கம் சீனாவில் சிசுவான் பிரதேசத்தில் நிகழ்ந்தது. மே 27, 2008 அன்று 61,150க்கும் மேற்பட்டவர்கள் மாண்டார்கள். லாஹர்ஸ் லாஹர் என்பது ஒரு எரிமலைச் சேற்றுப் பெருக்கமாகும் அல்லது நிலச்சரிவாகும். அதனால் நிலச் சரிவும் நிகழ்வதுண்டு. 1953 ஆம் ஆண்டில் 'டாங்கிவாய் பேரிழப்பு' ஒரு லாஹாரால் நிகழ்ந்தது. அதே போல் ஆர்மிரோ பெருந்துன்பம் என்ற பேரழிவின் போது ஆர்மிரோ நகரம் முழுதும் புதையுண்டதுடன் 23000 பேர்கள் அதில் சிக்கி மடிந்தனர். நிலச்சரிவுகளும் சேற்றுப் பெருக்கமும் இவை கலிபோர்னியா பகுதிகளில் கனமழை பெய்து முடிந்த காலத்தில் தவறாமல் அடிக்கடி நிகழ்பவையாகும். எரிமலை வெடித்துச் சிதறுதல் எரிமலை வெடித்துச் சிதறும் நிகழ்வே பேரழிவாகலாம், அல்லது அக்கினிப் (தீப்பாறைகள்) பாறைகள் வீழ்வதும் பேரழிவாக உள்ளது. அப்படி மிகையானவை வெடித்துச் சிதறியதும் பற்பல விளைவுகள் தோன்றிட அது மானிட வாழ்க்கைக்கு ஊறு பயக்கின்றது. ஒரு எரிமலை வெடித்து பேரழிவாக சிதறும் போது 'லாவா'தீக்குழம்பு வெளிப்படும். அதில் மிகையான வெப்பத்துடன் கூடிய உள்ளிருக்கும் பாறைகளும் இருக்கும். அதனுள் பல்வேறு வேறுபட்ட வடிவங்கள் மென்மைத் துகளாகவும், பிசு பிசுப்பாகவும் இருக்கும். இது எரிமலையில் இருந்து சிதறும் போது எதிரில் காணும் கட்டடங்கள் மற்றும் தாவரங்கள் எல்லாவற்றையும் பொசுக்கி அழித்து விடும். எரிமலை சாம்பல் - என பொதுவாக பொருள்படுவது- குளிர்ந்தபடி சாம்பல் மேகமாக வடிவு எடுக்கும், அருகிலுள்ள பகுதிகளில் அடர்ந்து தங்கிவிடும். நீருடன் கலந்தவுடன் 'திண்காறை' போல ஒரு கட்டியான பொருளாகி விடும். போதுமான அளவில் இத்தகைய சாம்பல் அதன் எடையால் மேல் கூரையையே நொறுக்கிவிடும். சிறிதளவு சுவாசித்தாலே போதும், உடல் ஆரோக்கியத்தை முழுமையாக பாதித்து விடும். அந்த சாம்பலில் பொடித்த கண்ணாடித்தூள் கலந்து உள்ளதால் எஞ்சின் போல அசையும் உள்பகுதிகள் உராய்ந்து பாதிப்படையும். உன்னதஅக்கினி மலைகள்: டோபா பேரழிவு கோட்பாட்டின் படி 70 முதல் 75 ஆயிரம் வருடங்கள் முன்னர் டோபா ஏரியில் நிகழ்ந்த உன்னத எரிமலை சீற்றம் காரணமாக மக்கள் தொகை பத்தாயிரம் மக்கள் அல்லது ஆயிரம் உற்பத்தி ஜோடிகள் என்று குறுகியதால் மனித படிமலர்ச்சியில் ஒரு இக்கட்டான நிலை உருவானது. அது வட கோளரங்கத்திலுள்ள முக்கால் வாசி அளவு தாவர இனங்களையும் அழித்தது. உன்னத அக்கினி மலை கக்கும் சாம்பல் அதிவிரைவாக கார்மேகம் போல் படர்ந்து உலகெங்கும் தட்ப வெப்ப சீதோஷ்ண நிலையில் பல நூற்றாண்டுகளுக்கு பாதிக்கும் தன்மை கொண்டதாகும். பழம் பாறைகளின் துண்டுகளிலிருந்து ஒழுகும் உஷ்ண ஊற்றுகளில் நிரம்பி உள்ளதெல்லாம் வெப்ப எரிமலையின் சாம்பலாகும். அது வாயு மண்டலத்தில் ஊடுருவி பரவி தன்னுடைய எடை, ஆற்றொழுக்கு இரண்டாலும் விரிவடைந்து போகும் பாதையில் எதிர்கொள்ளும் பொருட்கள் யாவையும் எரித்துத் தள்ளுகிறது. ஒரு எரிமலைத் துண்டின் உஷ்ண ஊற்று ஒழுக்கே, பாம்பெய் முற்றிலுமாக சீரழிந்து போனதற்கு முக்கிய காரணம் என்று நம்புகிறார்கள். வெள்ளத்தால் பேரிழப்பு பெரு வெள்ளம் வரலாற்றுப் பதிவுகளில் இடம் பெற்ற மக்களை வெகுவாக பாதித்த ஒரு சில மிக குறிப்பிடத் தக்க வெள்ளங்கள் ஆவன: ஹுவாங் ஹ என வழங்கும் சீனாவின் புகழ் பெற்ற மஞ்சள் ஆறு அடிக்கடி வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுவதற்கு பிரபலம் அடைந்ததாகும். 1931 ஆம் ஆண்டில் நிகழ்ந்த மிகப் பெரிய வெள்ளம் காரணமாக 800,000 முதல் 4,000,000 மக்கள் இறந்தனர். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 1993 ஆம் ஆண்டில் நிகழ்ந்த பெரிய வெள்ளம் வரலாற்றில் இடம் பெற்ற பெரும் அளவில் மக்களை பாதித்து அதிக அளவில் நட்டம் விளைவித்த ஒரு நிகழ்வாகும். 1998 ஆம் ஆண்டில் சீனாவின் யாங்சே ஆற்றின் வெள்ளப் பெருக்கு பெரும் பேரழிவாக பதினான்கு மில்லியன் மக்களை பாதித்து வீடு வாசல் அனைத்தையும் இழக்க நேர்ந்தது. 2000 ஆம் ஆண்டில் நிகழ்ந்த மொசாம்பிக் பெருவெள்ளம் நாட்டின் பெரும்பான்மையான நிலப்பகுதிகளை மூன்று வாரங்களுக்கும் மேல் முழுமையாக மூழ்கடித்தது, அதன் விளைவாக பல ஆண்டுகளுக்கு அந்த நாடு சீரழிந்து தலை தூக்க இயலாத நிலைமை ஏற்பட்டது. வெப்ப மண்டலங்களில் ஏற்படும் சூறாவளிக்காற்று பொங்கும் புயல் பேரலை எழுச்சியுடன் கூடிய விரிவான வெள்ளப்போக்கை, பின் வரும்படி, பல இடங்களில் ஏற்படுத்தியது: போலா சூறாவளிக்காற்று கிழக்கு பாகிஸ்தான்|பாகிஸ்தானை அதாவது தற்சமயம் பங்களாதேஷ் நாட்டை 1970 ஆம் ஆண்டில் மிக மோசமாக வீசி தாக்கியது. 1975 ஆம் ஆண்டு சீனாவை தைபூன் நினா என்ற சூறாவளி தாக்கியது. வெப்ப மண்டல சூறை அள்ளிசண் 2001 ஆம் ஆண்டில் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள ஹியூஸ்டன் நகரத்தை கடுமையாக தாக்கியது. கத்ரீனா சூறாவளி நியூ ஓர்லீன்ஸ் எனும் மாகாணத்தையே முற்றிலுமாக 2005 ஆம் ஆண்டில் நீரில் மூழ்கடித்தது. 'லேவீ' எனப்படும் தடுப்புக்கரையை சரிவர அமைப்பதில் தோல்விகண்டதால், அந்த மாநிலத்தில் மிகையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மாநிலத்தையே சீர்குலைய வைத்தது. ஏரி வெடித்துக் கிளம்புதல் ஏரி வெடித்து நீர்ப்பெருக்கு ஏற்படுவதுண்டு. அதன் காரணம் கரியமில வாயு. (CO)2']]எனப்படும் கரியமில வாயு ஏரியின் ஆழத்தில் இருந்து வெடித்து நீர் பொங்கி வருவதாகும், இதன் விளைவாக வனவிலங்குகள், கால்நடைகள், மனிதர்கள் யாவரும் பிராண வாயு இல்லாததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு பாதிப்பு அடையலாம். அப்படி ஏரியில் இருக்கும் நீரை இடம் பெயர்த்து, கரியமில வாயு வெடித்துக் கிளம்பும் சம்பவத்தால் ஏரியில் சுனாமி ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.நிலச்சரிவுகள், எரிமலை சீற்றம் அடைவது அல்லது வெடித்துச் சிதறுதல் ஆகிய எதிர்வினைகளை இது போன்ற ஏரி வெடிப்பு சம்பவங்கள் முடுக்கி விடுவதாக அறிவியல் நிபுணர்கள் நம்புகிறார்கள். இதுநாள் வரை, இரண்டே இரண்டு ஏரி வெடிப்பு நிகழ்வுகள் மட்டுமே கவனத்திற்கு உட்பட்டு பதிவாகியுள்ளது. 1984 ஆம் ஆண்டில், கமரூன், பகுதியில் ஏரி மொனௌன் என்ற ஏரியில் நிகழ்ந்த வெடிப்பின் காரணம் அருகில் வாழ்பவர்கள் 37 பேர்களை மரணமடைந்தார்கள். அதன் அருகில் ஏரி ந்யோஸ் என்ற ஏரியில் 1986 ஆம் ஆண்டில் நடந்த பெரும் வெடிப்பில் 1,700 முதல் 1,800 பேர்கள் மூச்சு திணறல்ஏற்பட உயிர்துறந்தனர். சுனாமிகள் 'ஆழிப் பேரலைகள்' கடலுக்குள் நிலநடுக்கம் சுனாமியாக திரிந்துவிடும், அப்படி ஒரு சம்பவம் ஆஒ நங், தாய்லாந்து அலாஸ்கா நாட்டில் 2004 ஆம் ஆண்டு இந்தியன் பெருங்கடலின் நில நடுக்கம் நிகழ்ந்தது, சில நேரங்களில் நிலச்சரிவு நிகழ்வுகளும் இதற்கு வித்திட்டு அதனால் நடந்த நிகழ்வுகள்: அலாஸ்காவின் லிடுய விரிகுடாவில் நடந்தது. ஆஒ நங், தாய்லாந்து (2004). 2004 ஆம் ஆண்டில் இந்தியன் பெருங்கடல் நில நடுக்கம் காரணமாக குத்துச் சண்டை நாள் சுனாமி ஏற்பட்டு அவ்விடத்தில் பேரழிவை ஏற்படுத்தியது. லிடுய விரிகடல், அலாஸ்கா (1953). ஒரு பெரிய அளவு சுனாமி இங்கு நடந்தது. அதுவே பதிவு செய்ததில் மிகப்பெரும் நிகழ்வாகும். இது நில அசைவு அட்டவணை அதற்குள் இடம் பெறும் வகையாகும், ஏன் எனில் இது நில நடுக்கத்தோடு தான் இது ஆரம்பமாயிற்று. வானிலை பேரழிவுகள் பனிப்புயல்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வீசிய முக்கியமான பனிப்புயல்கள் ஆவன: 1888 ஆம் ஆண்டில் வீசிய மிகப்பெரும் பனிப்புயல் பள்ளி வீடு பனிப்புயல் அதே வருடம் முன்கூட்டியே வீசியது. [[அர்மிச்டிசே டே பனி சூறாவளி|அர்மிச்டிசே நாள் பனிப்புயல்]] 1940 ஆம் ஆண்டு நிகழ்வு 1993 ஆம் ஆண்டு நூற்றண்டின் புயல் சூறாவளிப் புயல்கள் சைக்ளோன் சூறாவளி, டிரபிகள் அயன மண்டல சூறை , ஹரிகேன் சுழல்காற்று , தைபூன் சண்டமாருதம் ஆகிய புயல்கள் எல்லாமே அரிய இயல் நிகழ்ச்சிகளாகும். சூறாவளி புயல் வீசுவது அனைத்தும் கடல்பரப்பின் மேல் நடைபெறுகிறது. 1970 ஆம் ஆண்டில் நிகழ்ந்த போலா சூறாவளி மிகவும் கடுமையானதாகும், அதை விட பயங்கரமான சூறாவளி அட்லாண்டிக் சூறைக்காற்று 1780 ஆம் ஆண்டில் மார்டிநிக்குயூ செயின்ட் யூச்டேடுயஸ் மற்றும் பார்படாஸ் ஆகிய இடங்களை தாக்கியதாகும். 2005 ஆம் ஆண்டில் வீசிய கத்ரினா புயலானது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கடலோர வளைகுடா பகுதியை முற்றிலுமாக அழித்தது. வறட்சி வரலாற்றில் பதிவுபெற்ற மக்களை மிகவும் பாதித்த வறட்சிக் காலங்கள் ஆவன: 1900 ஆம் ஆண்டு இந்தியாவை தாக்கிய வறட்சி - 250,000 முதல் 3.25 மில்லியன் மக்களை பலி வாங்கியது. 1921-22 ஆம் ஆண்டு சோவித் யூனியன் வறட்சிகள் - 5 மில்லியன் பேர்களை பட்டினியால் மடியச் செய்தது. 1928-30 ஆம் ஆண்டுகளில் வடமேற்கு சீனா வறட்சியால் வாடிய பொது, 3 மில்லியன் பேர்களுக்கும் மேலாக பஞ்சத்தில் மாண்டனர். 1936 மற்றும் 1941 ஆம் ஆண்டுகளில் சிசுவான் மாகாணம் - சீனாவில் - 5 மில்லியன் மற்றும் 2.5 மில்லியன் மரணங்களை முறையே சம்பவித்தது. 2006 ஆம் ஆண்டில் மேற்கு ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, விக்டோரியா மற்றும் க்வீன்ஸ்லாந்து ஆகிய ஆஸ்திரேலிய மாகாணங்கள் யாவும் ஐந்து முதல் பத்து வருடங்கள் வறட்சியில் வாடித் தவித்தன. முதல்முறையாக, வறட்சியானது பெருநகர மக்களை மிகவும் பாதித்தது. 2006 ஆம் ஆண்டு சிசுஅன் மாகணம் சீனா நவீன காலத்தில் கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்த அனுபவம் பெற்றது. எட்டு மில்லியன் மக்கள், மற்றும் ஏழு மில்லியன் கால்நடைகள் யாவும் தண்ணீர் பற்றாக் குறையால் வாடின. ஆலங்கட்டி மழைப்புயல் மழைப் புயல் அல்லது கல்மாரி பெய்யும் பொழுது பனிகட்டி யாக உரு எடுப்பதால் 'ஆலங்கட்டி' மழை எனவும் கூறுவதுண்டு. குறிப்பாக பாதிப்புடன் கூடிய பனிமழை தாக்கிய பகுதிகள்: முனிச், ஜெர்மனி ஆகஸ்ட் 31, 1986ஆம் ஆண்டு, ஆயிரக் கணக்கான மரங்கள் விழுந்தன. மற்றும் பல மில்லியன் டாலர்கள் இன்சூரன்ஸ் காப்பீடு தொகையாக வழங்கப் பெற்றது. வெப்ப பேரலைகள் சமீப வரலாற்றில் வீசிய மோசமான வெப்ப பேரலை யாதெனில் 2003 ஆம் ஆண்டில் ஐரோப்பியன் வெப்ப அலை ஆகும். விக்டோரியா ஆஸ்திரேலியாவில் வீசிய வெப்ப அலை நிகழ்வில் பெருமளவு முட்புதர் தீ 2009 ஆம் ஆண்டு மூண்டது. மெல்பேர்ண் நகரத்தில் மூன்று தினங்களுக்கு மேலாக அதிக வெப்ப நிலையை உணர்ந்தது, வெப்பத்தின் அளவு 43°C.க்கும் மிகையாக இருந்தது. சுழல் வளிகள் பல்வேறு வகையான சுழல் வளிகள்: சூப்பர் செல் சுழல் வளிகள் சூப்பர் செல் சுழல் வளிகள் மிக வன்மையான சுழல்காற்றாகும். அது இடியுடன் சேர்ந்து வருவதால், சூப்பர் செல் சுழல் வளியானது நெடுநேரம் இடிஒலி கலந்து வருவதுடன் வளியை அல்லது காற்றை தொடர்ந்து வேகமாக மேல் நோக்கி சுழற்ற வைக்கும். இப்புயல் காற்றுகள் அதிகப் பட்சமாக சுழல் வளியினை உருவாக்கும் இயல்பு படைத்ததாகும். இவ்வகையில் ஒருசில காற்றுகள் பெரியதொரு ஆப்பு வடிவத்தில் கம்பீரமாக அமைந்திருக்கும். சூப்பர் செல் இடிப்புயலானது அடைஅடுக்கு அல்லது பாளம் அதன் கீழ்ப்புறம் தொங்கிக் கொண்டிருக்கும். அதற்கு பெயர் "சுவர் மேகம்" ஆகும். அது அடுக்கு பாளமாகவே தோற்ற மளிக்கும். மேகம் அதன் கீழ்ப்புறம் அடியில் தொற்றிக் கொண்டிருப்பது போலுள்ள தோற்றத்துடன் அமைந்திருக்கும். பாளத்தின் ஒரு புறம் மழை இன்றி இருக்கும், மறுபுறம் அடர்ந்த அம்பு அல்லது ஈட்டி போல மழை பொழிந்து தோன்றும். சூப்பர் செல் சுழலும் மேல்பகுதியை ரேடார் மாயத்தாற்றங்களில் தோன்றி, அது "உள்ளிழை சூறாவளி" என்று வழங்குகிறது. சூரைகாற்றுகள் சூப்பர் செல்லுடன் இடியோடு சேர்ந்து வரும் போது தரையில் நெடுநேரம் தொடர்பு கொண்டிருக்கும் ஒருமணி அதற்கும் மேலாக! மற்ற வகை சூறாவளிகள் போல வன்மை மிக அதிகம் படைத்திருக்கும். அதனால் மணிக்கு இருநூறு மைல் வேகத்தில் வீசும். நிலத்தாரை பொதுவாகவே நிலத்தாரை சூப்பர் செல் சூறாவளியை விட பலம் குறைந்ததாகும். அதனுடன் சுவர்மேகம் மற்றும் உள்ளிழை சுழல் காற்று சேர்ந்து இருக்காது. முகில் திரள் குவியல்கள் கோபுரம் போலிருக்கும். அதை திரள் கார்முகிலின் அடியில் ஒருவேளை காண நேரிடலாம். அந்த நிலத்தாரை ஒரு இடத்தின் நீர்த்தாரைக்கு சமமான ஒரு நிகழ்வாகும். மழையால் குளிர்ந்து கீழ்நோக்கி செல்லும் இடிமின்னற்புயலின் முன் நுனை ஓரங்களில் அது உருவாகும், அதனை "வன்காற்றுமுகப்பு" என அழைப்பர். வன்காற்றுச்சுழல் ஒரு வன்காற்றுச்சுழல் வலுவின்றி குறுகிய காலம் நீடிக்கும். இடிப்புயலில் வன்காற்று முகப்பில் தாற்காலிகமாக அடையும் அழுக்குத்துகளும் முகில் படிவுகளும் கொண்டு விளங்கும். மிதக்கும் முகிலுடன் தெளிவான தொடர்பு அல்லது சுழற்சி சட்டம் இருப்பது தென்படாமல் போனாலும், இவை துகள் அடைப்பேய்கள் போல் காட்சி தரும். நீர்த்தாரை நீரின் மேலே சுழல்காற்று வீசி வரும்போது தாரையாக தோன்றும். ஒரு சில சூப்பர் செல் இடிப்புயலில் இருந்து வெளிவரும். ஆனால் பல வலு குன்றிய இடிபுயலில் இருந்து தோன்றும் அல்லது விரைவாக வளரும் முகில்திரள்களில் இருந்தும் வரும். நீர் தாரைகள் ஆற்றல் குறைந்து இருப்பதால் அழிவுகளும் குறைவான அளவில் இருக்கும். கத கத என அயன கடல் நீரில் சுமார் ஐம்பது கஜங்கள் அகலத்தில் எப்போதேனும் தோன்றும். அதன் புகை வாயில் தூய்மை வாய்ந்த நீர்த்துளிகள், நீராவி திரவமாற்றம் அடைவதால் அடர்த்தியாக காணலாம், உப்புநீர் கலந்ததாக அது இருக்காது. நீர்த்தாரைகள் வழக்கமாக தரை வந்து சேரும் போது சிதறிவிழும். நிலப்பகுதியை அவை அடைந்ததும் நீர்த்தாரைகள் தமது ஆற்றலை இழந்து மறைந்து விடும். கீழே கொடுத்தவை சூறாவளி போன்ற சுழல் காற்று வகையைச் சாரும். துகள் அடைப்பேய்கள் பாலைவனம் அல்லது வறண்ட நிலத்தில் துகள் அடைபேய்கள் வெப்பம் தெளிவாக உள்ள நாட்களில் வரும். சூரியனின் வெப்பம் மிதமாக இருக்கும். பின் காலை அல்லது முன் மதிய நேரங்களில் இவை தோன்றும், தீங்கு செய்யாத வகையில் இவை பெரும்பாலும் பாலைவனத்தில் வீசும் தென்றல் காற்றாகி சுழல் வேகம் கொண்டு சில நேரங்களில் மணிக்கு எழுபது மைல் வேக விகிதத்தில் வீசும். உள்ளுக்குள் இந்தச் சுழல் காற்றுகள் பல வேற்றுமைகள் கொண்டதாக இருக்கும். இதனுடன் இடிப்புயல் உடன் காற்றுகள் கலந்து வராது. மேகமும் உடன் இருக்காது. வழக்கமாக இது வலுகுறைந்து இருக்கும். அதிலும் வலிமை குன்றிய சுழல்காற்று போல இருக்கும். வகைப்படுத்திப் பார்க்கின்ற போது இது ஒரு சில நிமிடங்கள் என வாழ்க்கை சக்கரம் கொண்டு விளங்கும், சில நேரங்களில் அதை விடவும் கூடுதலான காலம் கொண்டு இருக்கும். அதிகம் தீங்கு ஏதும் செய்யாது என்றாலும் சிறிய அளவில் சேதங்கள் ஏற்படுத்த வல்லவையாகும். சாலைகளில் ஓடுகின்ற வண்டிகளையும், வாகனங்களையும் எல்லாவற்றையும் அவை தாக்கும். காண்போரின் கண்களில் தூசுகளையும் கொண்டு வந்து சேர்க்கும். தீச் சுழல்கள் சில நேரங்களில் காடுகளில் பரவும் காட்டுத்தீயானது அல்லது எரிமலை வெடிப்பானது தீ சுழல் காற்றை உருவாக்கும். அது சுற்றி வீசும் போது அனலையும் புகையையும் கக்கும். நெருப்பின் மேல் பரப்பில் பலம் குன்றிய சுழல் அல்லது சுழி காற்றில் உள்ள போது இது நடைபெறும்.நெருப்புடன் சுழன்று வரும் காற்றுகள் மணிக்கு நூறு மைல் வேகம் கொண்டு வீசும் என கணக்கிட்டுள்ளது. அவை அந்த அந்த நேரங்களில் தீசூரைகாற்றுகள், தீ பேய்கள், அல்லது தீ சுழல்கள் என்று அழைக்கப் படுகின்றன.[4] தீ கட்டுக்கு அடங்காத தீ என்பது காட்டு பகுதிகளில் பரவலாக திடுமென தோன்றும். இவை ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் ஆவன: மின்னல் மற்றும் வறட்சி என்றாலும் மனிதர்களின் அஜாக்கிரதை அதனாலும் கலவரம், சச்சரவுகள் ஏற்படும் போதும் தீப்பிழம்புகள் கொழுந்து விட்டு சூழ்ந்து கொண்டு எரியும். கிராமப்புறப் பகுதிகள் மட்டும் அல்லாமல், அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்கு இவை ஆபத்தாக அமைந்துவிடும். ஒரு குறிப்பிடத் தக்க அம்சமுடன் கட்டுக்கு அடங்காத காட்டுத்தீ 2009 ஆம் வருடத்தில் விக்டோரியன் எனப்படும் புதர்த்தீ ஆஸ்திரேலியா தீவு கண்டத்தில் ஏற்பட்டது. ஆரோக்கியமும் நோயும் தொற்றுநோய்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளும் போது சுலபமாக தொற்றிக் கொள்ளும் நோய்கள் மனித மக்கள் தொகையில் அதி விரைவாக, வேகமாக பரவும். பெரும்பரவல் தொற்றுகள் என்பது உலகெங்கிலும் விரைவாகப் பரவும். வரலாற்றில் பலபல தொற்றுகள் வந்துள்ளன. அதில் முக்கியமானது கருப்பு சாவு ஆகும். கடந்த நூற்றாண்டுகளில் முக்கியமான பெரும்பரவல்கள் தொற்றுகள் ஆவன: 1918 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் புளு பெரும் பரவல்நோய், உலகளவில் 50 மில்லியன் பேர்களை கொன்றுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. 1957-58 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த ஆசியான் புளு பெரும்பரவல் நோய் ஒரு மில்லியன் பேர்களின் உயிரைக் குடித்ததாக மதிப்பிட்டுள்ளது. 1968-69 ஆம் ஆண்டு ஹோங் காங் புளு பெரும்பரவல் நோய் 2002-3 ஆம் ஆண்டு சரஸ் பெரும்பரவல் நோய் எய்ட்ஸ் பெரும்பரவல் நோய், தொடக்கம் 1959 ஆம் ஆண்டு முதல் எச் ஒன்று என் ஒன்று இன்பிளுயன்சா பன்றி காய்ச்சல் பெரும்பரவல் நோய் 2009 பிற நோய்கள் மிக நிதானமாகப் பரவுகின்றன. ஆனால் அவற்றை உலக சுகாதார நிறுவனம்சர்வ தேச ஆரோக்கிய ஆபத்து நெருக்கடிகளாகவே கருதப்படுகின்றன. எக்ஸ்டிஆர் டி.பி காச நோயின் ஒரு இனப்பிரிவாகும். மருந்து சிகிச்சைகள் அளிப்பதை எதிர்க்கும் தடுப்பாற்றல் பரந்த முறையில் பெற்ற ஒரு வகையாகும். மலேரியா நோய் மதிப்பீட்டின் படி ஒவ்வொரு ஆண்டும் 1.5 மில்லியன் மக்களை கொன்று வருகிறது. 'எபோல ஹெமொர்ரஜிக்' காய்ச்சல் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் ஆப்பிரிக்காவில் பலமுறையாக தாக்கி உயிர்ப்பலி வாங்கியுள்ளது. பஞ்சம் நவீன காலங்களில் பஞ்சம் துணை-சஹாரா ஆப்பிரிக்கக் கண்டத்துப் பகுதிகளைத் தாக்கியுள்ளது. அப்பஞ்சம் மிக அதிகப் பட்ச கடுமையானதாகும். அதில் இறந்தோர் எண்ணிக்கை 20 நூற்றாண்டு ஆசியப் பஞ்சங்களில் மாண்டோர்களைக் காட்டிலும் குறைவேதான்! விண்வெளி 'கம்மா' ஒளிக்கற்றை வெடிப்புகள் விளைந்த நிகழ்வுகள் நவீன காலங்களில் 1908 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் நடந்த 'டுங்குஸ்கா நிகழ்வே' செயல்விளைவு ஏற்படுத்திய நிகழ்வுகளில் மிகவும் பெரியதாகும். சூரிய கிளர் ஒளிக்கற்றைகள் சூரிய கிளர் ஒளிக்கற்றைகள் என்பது ஓர் அரிதான நிகழ்வாகும். அப்பொழுது சூரியன் தன் கதிர்வீச்சை மிக அதிக பட்சமாக வெளியிடுன்றன. அது சாதாரண காலத்தில் வெளிவரும் வீச்சை விட அதிகமாகும். அத்தகைய சூரியக் கிளரொளிக் கற்றைகள் வெளிவந்த தினங்கள்: ஒரு சில சூரிய கிளர் ஒளிக்கற்றைகள்: எ க்ஸ் 20 நிகழ்வு ஆகஸ்ட் 16, 1989 ஆம் ஆண்டு அதேபோல் கிளரொளி ஏப்ரல் 2 ஏற்பட்ட 2001 மிக சக்தி வாய்ந்த கிளரொளி நடந்தது நவம்பர் 4 2003, மதிப்பளவு எக்ஸ் 40 மற்றும் எக்ஸ் 45 இதுவரை நிகழ்ந்ததில் மிக அதிக ஆற்றல் பெற்ற கிளரொளி வீச்சு கடந்த 500 வருடங்கள் இல்லாத அளவில் நடந்தது செப்டம்பர் 1859 வருடமாகும். சூப்பர்நோவா, ஹைப்பர்நோவா நட்சத்திரங்கள் எதிர்காலத்தில் இயற்கை பேரழிவுகள் ஐக்கியப் பேரரசினைத் தாயகமாகக் கொண்ட 'சேரிட்டி ஆக்ஸ்பேம்'அமைப்பு பொதுப்படையாக அறிவித்தது என்ன என்றால் 2015 ஆம் ஆண்டிற்குள் 375 மில்லியன் பேர்கள் மொத்தத்தில் வெப்ப வானிலை சம்பந்தமான நோய்களுக்கு உரிய இலக்காக ஆக நேரிடும் என்று எச்சரித்துள்ளது.[5] காப்பீடு இயற்கைப் பேரழிவுகள் காப்பீட்டுத் தொழிலில் மிக சிறப்பான பங்கு ஆற்றி வருகின்றது. நஷ்ட ஈடாக ஒருசில அழிவுகளுக்கு அது நிதியுதவி அளிக்கின்றது. (சூறாவளிகள், காட்டுத்தீ, போன்றன.) பிற பெருங்கேடுகளுக்கு ஈடு செய்ய பெரிய காப்பீடு நிறுவனங்கள் தக்க முறையில் ஈடு செய்து வருகின்றன.[6] குறிப்புகள் புற இணைப்புகள் CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link)வரலாற்றில் இடம் பெற்ற உலகின் மிகப் பயங்கரமான பேரழிவுகள் பற்றிய பட்டியல் அடங்கியது. *
1918 தொற்றுநோயால் எத்தனை பேர் இறந்தனர்?
50 மில்லியன்
18,219
tamil
18576a600
இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department, IMD), அல்லது சுருங்க வானிலைத் துறை, இந்திய அரசின் புவியறிவியல் அமைச்சின் கீழே உள்ள திணைக்களம் ஆகும். இது வானிலையியல் அவதானிப்புகள், வானிலை முன்னறிவிப்பு மற்றும் நில நடுக்கவியல் குறித்தான முதன்மை முகமையாகும். இதன் தலைமை அலுவலகம் புதுதில்லியில் லோதி சாலையில் அமைந்துள்ளது. இந்தியா முழுமையிலும் நூற்றுக்கணக்கான வானிலை கவனிப்பு மையங்களை இயக்கி வருகின்றது; அந்தாட்டிக்காவிலும் இதன் ஆய்வு மையம் உள்ளது. உலக வானிலை ஆய்வு அமைப்பின் ஆறு மண்டல சிறப்பு வானிலை ஆய்வு மையங்களில் ஒன்றாகவும் இது விளங்குகின்றது. வானிலை முன்னறிவிப்பு, மலாக்கா நீரிணை, வங்காள விரிகுடா, அரபிக்கடல் மற்றும் பாரசீக வளைகுடா உள்ளிட்ட வடக்கு இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் ஏற்படும் வெப்ப மண்டலச் சூறாவளிகளுக்கு பெயர் வழங்குவதும் அவை குறித்த எச்சரிக்கைகளை பரப்புவதும் இதன் பொறுப்புகளாக உள்ளன. வரலாறு 1686இல் எட்மண்டு ஏலி இந்தியக் கோடைக்காலத்தில் பருவப் பெயர்ச்சிக் காற்றுகள் குறித்த ஆய்வுரையை வெளியிட்டார்; இத்தகைய பருவம் சார்ந்த காற்று திசைமாற்றம் ஆசிய நிலப்பகுதியும் இந்தியப் பெருங்கடல் பகுதியும் வெவ்வேறாக வெப்பமடைவதால் ஏற்படுவதாக முன்மொழிந்திருந்தார். இந்தியாவில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் தான் முதன்முதலாக வானிலை ஆய்வு மையங்களை ஏற்படுத்தியது; 1785இல் கொல்கத்தா ஆய்வு மையத்தையும் 1796இல் மதராசு ஆய்வு மையத்தையும் 1826இல் கொலாபா ஆய்வுமையத்தையும் நிறுவப்பட்டன. 19ஆவது நூற்றாண்டின் முதற்பாதியில் நாடெங்கிலும் அவ்வப்பகுதி மாகாண அரசுகளால் பல வானிலை ஆய்வு மையங்கள் நிறுவப்படலாயின. கொல்கத்தாவில் 1784இலும் மும்பையில் 1804இலும் நிறுவப்பட்ட ஆசியச் சமூகம் இந்தியாவில் வானிலையியல் ஆய்வுகளை ஊக்குவித்தது. இச்சமூகத்தின் கொல்கத்தாவிலிருந்து வெளியாகும் ஆய்விதழில் 1835க்கும் 185க்கும் இடையே என்றி பிடிங்டன் என்பார் வெப்ப மண்டலச் சூறாவளி குறித்து 40 கட்டுரைகள் வெளியிட்டார். இவரே சைக்குளோன் என்ற ஆங்கிலச் சொல்லை உருவாக்கினார்; பாம்புச் சுருள் என்ற பொருள்படும். 1842இல் அவர் தனது சிறப்புமிக்க புயல்களின் விதிகள் என்ற கோட்பாட்டை வெளியிட்டார்.[2] 1864இல் வெப்ப மண்டலச் சூறாவளி ஒன்று கொல்கத்தாவை தாக்கிய பின்னரும் தொடர்ந்து 1866க்கும் 1871க்கும் இடையே பருமழை பொய்த்தமையால் ஏற்பட்ட பஞ்சத்தையும் அடுத்து ஒரே துறை கீழ் வானிலை தரவுகளையும் பகுப்பாய்வுகளையும் ஒருங்கிணைக்கத் திட்டமிடப்பட்டது. இதன் செயலாக்கமாக 1875ஆம் ஆண்டில் இந்திய வானிலை ஆய்வுத் துறை நிறுவப்பட்டது. இதன் முதல் அறிவிப்பாளராக என்றி பிரான்சிசு பிளான்போர்டு நியமிக்கப்பட்டார். மே 1889இல் அப்போதையத் தலைநகராக இருந்த கொல்கத்தாவில் இதன் முதல் தலைமை இயக்குநராக ஜான் எலியட் நியமிக்கப்பட்டார். இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தலைமையகம் 1905இல் சிம்லாவிற்கும் 1928இல் புனேக்கும் மாற்றப்பட்டது. இறுதியாக 1944இல் இதன் தலைமையகம் புது தில்லிக்கு மாற்றப்பட்டது.[3] இந்திய விடுதலைக்குப் பிறகு ஏப்ரல் 27, 1949இல் உலக வானிலை ஆய்வு அமைப்பில் உறுப்பினராக இணைந்தது.[4] இந்திய வேளாண்மையில் பருவமழையின் தாக்கத்தால் இத்துறை சிறப்பு பெற்றுள்ளது. ஆண்டு பருவமழையளவை மதிப்பிடுதல், நாடெங்கும் பருவமழையின் பரவலைக் கண்காணித்தல் ஆகியவற்றில் இத்துறை முக்கியப் பங்காற்றி வருகின்றது. [5] அமைப்பாண்மை இந்திய வானிலை ஆய்வுத்துறையின் தலைவராக வானிலையியல் தலைமை இயக்குநர் விளங்குகின்றார். தற்போது புகழ்பெற்ற வேளாண்-வானிலையாளர் முனைவர். இலட்சுமண் சிங் இரத்தோர் இப்பதவியில் உள்ளார். இத்துறைக்கு துணைத் தலைமை இயக்குநர் தலைமையிலான ஆறு மண்டல வானிலை ஆய்வு மையங்கள் உள்ளன. இவை சென்னை, குவகாத்தி, கொல்கத்தா, மும்பை, நாக்பூர், புது தில்லி நகரங்களில் அமைந்துள்ளன. தவிரவும் ஒவ்வொரு மாநிலத் தலைநகரிலும் வானிலை ஆய்வு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. முன்னறிப்பு அலுவலகங்கள், வேளாண் வானிலை ஆய்வு பரிந்துரை சேவை மையங்கள், வெள்ள எச்சரிக்கை அலுவலகங்கள், ஆட்புல சூறாவளி எச்சரிக்கை மையங்கள் இந்த மையங்கள் உள்ள இடங்களில் அமைந்துள்ளன.[6] வானிலைத் தரவுகளைப் பெற தரை, பனியாறுகள், உயர்வெளி, கமழிப் படலங்களிலும் அளவைக் கருவிகளை வைத்துள்ளது. மேகச் சூழலைக் கண்காணிக்க வானிலை கதிரலைக் கும்பா நிலையங்களை இயக்குகின்றது. கூடுதல் தரவுகளை கல்பனா-1 போன்ற இந்தியச் செயற்கைக் கோள்கள், இந்திய தொலை உணர்வு செயற்கைக்கோள் மற்றும் இந்திய தேசிய செயற்கைக்கோள் தொகுதி செயற்கைக்கோள்களில் உள்ள கருவிகள் மூலமும் பெறுகின்றது.[7] இந்தியக் கடற்படை கப்பல்களிலிருந்தும் இந்திய வணிகக் கப்பல்களிலிருந்தும் வானிலைத் தரவுகளைப் பெறுகின்றது. நில நடுக்கவியல் கண்காணிப்பு மையங்களையும் தேவையான இடங்களில் இயக்கி நில நடுக்கங்களை அளந்தும் கண்காணித்தும் வருகின்றது. இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வுக் கழகம், தேசிய இடைநிலை நெடுக்க வானிலை முன்கணிப்பு மையம் மற்றும் தேசியப் பெருங்கடல் தொழினுட்பக் கழகம் போன்ற முகமைகளுடன் ஒருங்கிணைந்து செயலாற்றுகின்றது. மேற்சான்றுகள் பகுப்பு:வானிலை ஆய்வு அமைப்புகள்
இந்திய வானிலை ஆய்வு துறையின் தலைமையகம் எங்கு உள்ளன?
புது தில்லி
2,490
tamil
82abd290f
இலத்தீன் அமெரிக்கா (Latin America, எசுப்பானியம்: América Latina or Latinoamérica, போர்த்துக்கேயம்: América Latina, பிரெஞ்சு: Amérique latine, இடாய்ச்சு: Latijns-Amerika) எனப்படுவது அமெரிக்க கண்டங்களில் உள்ள ரோமானிய மொழிகள் வழக்கத்தில் இருக்கும் பகுதிகளை குறிப்பதாகும். எசுப்பானியம், போர்த்துக்கேயம் மற்றும் பிரெஞ்ச் ஆகியவை இங்கு அதிக அளவில் பேசப்படுகின்றன[3][4]. இதன் மொத்த பரப்பு ஏறேக்குறைய 21,069,500 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். இது மொத்த புவியின் பரப்பில் 3.9 சதமும், நிலப்பரப்பின் அளவில் 14.1 சதமும் ஆகும். 2013 வரையிலான இதன் மக்கள் தொகை 59 கோடி ஆகும்[5]. மற்றும் இதன் கூட்டு உள்நாட்டு உற்பத்தி 7368 பில்லியன்[6]. அர்செண்டினா, பொலிவியா, பிரேசில், சிலி, கொலம்பியா, கோசுடா ரிகா, கூபா, டொமினிகன் குடியரசு, ஈகுவடார், எல் சால்வடோர், குவாத்தமாலா, எயித்தி, ஓண்டுரசு, மெக்சிகோ, நிகரகுவா, பனாமா, பராகுவே, பெரு, உருகுவே மற்றும் வெனிசுலா ஆகியவை இலத்தீன் அமெரிக்காவின் பகுதிகலாக உள்ளன. வரலாறு காலனியாதிக்கத்தின் முந்தைய வரலாறு இலத்தீன் அமெரிக்காவில் மனிதர்கள் வாழ்ததற்கான அடையாளங்களின் மிகவும் பழமையானவை, தெற்கு சிலி பகுதிகளில் கானக்கிடைக்கின்றன. இவை சுமார் 14000 வருடங்களுக்கு முந்தயவை. இதன் பிறகான முதல் குடியேற்றம் லாசு வேகாசு கலாச்சாரம் ஆகும்[7]. இது 8000 முதல் 4600 ஆண்டுகளுக்கு இடையில் ஈக்குவடார் நாட்டில் ஏற்பட்டது. தொடர்ந்து கொலம்பியா, பொலிவியா, பெரு ஆகிய நாடுகளிலும் பழங்குடிகளின் குடியேற்றங்கள் அமைந்தன. பிற்பாடு இலத்தின் அமெரிக்க பகுதிகள் பல நாகரீக குழுக்கள் உருவாகின. ஆசுடெக்குகள், டால்டெக்குகள், கரீபியர், டூபி, மாயா மற்றும் இன்கா ஆகிய குழுக்கள் இவர்களின் முக்கியமானவர்கள். குறிப்பாக ஆசுடெக் மக்கள் இலத்தீன் அமெரிக்க பகுதிகளில் அதிகம் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களாக இருந்தனர். இவர்களின் ஆட்சி, அமெரிக்காவின் எசுப்பானியர்களின் வருகையோடு முடிவு பெற்றது. ஐரோப்பிய காலனியாக்கம் 1492ல் கொலம்பசு அமெரிக்காவை அடைந்ததில் இருந்து, இலத்தீன் அமெரிக்காவின் ஐரோப்பிய காலனி ஆதிக்கம் தொடங்கியது. எர்னான் கோட்டெஸ் தலைமையிலான எசுப்பானிய படை ஒன்று வட அமெரிக்க பகுதிகளில் இருந்த ஆசுடெக் நகரங்களை முற்றுகையிட்டு அழித்தனர். போலவே பிரான்சிஸ்கோ பிசாரோ தலைமையிலான படை ஒன்று தென் அமெரிக்க பகுதிகளில் இருந்த இன்கா பேரரசை கைப்பற்றி அழித்தது. இதன் மூலம் வடக்கு மற்றும் தென் மேற்கு அமெரிக்க பகுதிகள் எசுப்பானிய பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. மேலும் குடியேற்றங்களை உருவாக்குவதில், எசுப்பானியா மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகளுக்கிடையில் ஏற்ப்பட்ட பினக்குகளின் முடிவில், 1494ல் இரு காலனிகளுக்கு இடையிலான எல்லைக் கோடு தீர்மானிக்கப்பட்டது. இதன் மூலம், இலத்தீன் அமெரிக்காவின் வடக்கு மற்றும் மேற்கு கரை பகுதிகள் எசுப்பானிய பேரரசின் கீழும், கிழக்குக் கரைப் பகுதி போர்த்துக்கலின் கீழும் கொண்டுவரப்பட்டன. இவர்களை தொடர்ந்து பிரித்தானியா, பிரான்சு மாற்றும் ஆலந்து ஆகிய நாடுகள் அமெரிக்காவை ஆக்கிரமித்து தமது குடியேற்றங்களை அங்கு உருவாக்கின. இதன் மூலம் பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் அலாசுகா முதல் சிலி வரை அமெரிக்காவின் அனைத்து பகுதிகளும் ஐரோப்பிய குடியேற்றங்களாக மாற்றப்பட்டன. பழங்குடிகளின் அழிவு தொடர் குடியேற்றங்களின் மூலம் அமெரிக்க பழங்குடிகளின் கலாச்சாரம் நசுக்கப்பட்டு, ஐரோப்பிய காலாச்சாரம் பரப்பட்டது. உரோமன் கத்தோலிக்கம் அறிவிக்கப்படாத அரசு சமயமானது. கத்தோலிக்க சபைகள் ஆட்சி அதிகாரம் மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் வலுவானதாக இருந்தன. இதன் மூலம் அமெரிக்க பழங்குடிகளின் சமய உரிமை மறுக்கப்பட்டு, கிருத்துவத்துக்கு மதம் மாற நிர்பந்திக்கப்பட்டனர். மேலும் ஐரோப்பியர்களின் மூலம் பரவிய பெரியம்மை மற்றும் தட்டம்மை போன்ற கொள்ளை நோய்களின் மூலம் மிகப்பெரும் அளவிலான பழங்குடிகள் மாண்டனர். இவ்வாறு இறந்தவர்களின் எண்ணிக்கைப் பற்றிய விபரங்கள் இன்றைக்கு சரிவர கிடைப்பதில்லை. இருப்பினும் மொத்த பழங்குடிகளின் மக்கள் தொகையில் 25% முதல் 85% வரை இறந்திருக்காலாம் என நம்பப்படுகின்றது. மீதம் இருந்த பழங்குடிகளும் காலனியவாதிகளின் சுரங்கங்களில் கட்டாய வேலை வாங்கப்பட்டனர். இந்த காலக்கட்டத்தில் ஏற்பட்ட இனக்கலப்பின் மூலம் மெசுடொசோ எனப்பட்ட புதிய ஐரோப்பிய-அமெரிக்க கலப்பு இனம் தோன்றத்தொடங்கியது. காலனியாதிக்கம் முடிவுக்கு வந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலத்தீன் அமெரிக்காவின் பெரும்பான்மையினராக மெசுடொசோக்களே இருந்தனர். விடுதலைப் போராட்டம் 1804ல் எயித்தியில் டூசான் லூவர்சூர் தலைமையிலான அடிமைகளின் கிளர்ச்சியை தொடர்ந்து, அந்த நாடு பிரான்சிடமிருந்து விடுதலை அடைந்தது. தொடர்ந்து அந்த நாட்டில் அடிமை முறை ஒழிக்கப்பட்டதுடன் சுதந்திர கூட்டாச்சி அமைக்கப்பட்டது. இது மற்ற இலத்தீன் அமெரிக்க நாடுகளில் விடுதலைப் போராட்டங்கள் தோன்ற தூண்டுதலாக இருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் எசுப்பானிய மேலாதிக்கத்துக்கு எதிரான கலகங்கள் தோன்றத் தொடங்கின. தாய் நாட்டில் பிறந்த எசுப்பானியார்கள் உயர் சாதியினர் எனவும், இலத்தீன் அமெரிக்காவில் பிறந்த எசுப்பானியர்கள் கிரியோலோ அல்லது கீழ் சாதியினர் எனவும் பாகுபடுத்தப்பட்டனர். இது அங்கு விடுதலைப் போர் ஏற்பட தூண்டுகோலாக அமைந்தது. மிகுவேல் கோசுடிலா, சிமோன் பொலிவார், யோசே சான் மார்ட்டின் ஆகியோர் முறையே மெக்சிகோ, வெனிசுலா மற்றும் அர்சென்டினா ஆகிய பகுதிகளில் மக்களை திரட்டி விடுதலைப் போரில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் அரச படையினரால் மக்கள் எழுச்சி அடக்கப்பட்டாலும் சிமோன் பொலிவார், யோசே சான் மார்ட்டின் போன்ற இளந்தலைமுறை தளபதிகளால் மக்கள் போராட்டம் மேலும் வலுவடைந்தது. தொடர்ந்த எழுச்சிகளின் பலனாக 1825க்கும் உள்ளாகவே போர்டோ ரிகோ மற்றும் கூபா தவிர்த்த அனைத்து எசுப்பானிய காலனிய பகுதிகலும் விடுதலையடைந்தன. 1822ல் சுதந்தர பிரேசிலில் சட்டத்திற்குட்ட முடியாட்சி ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. அதே ஆண்டு மெக்சிகோவின் இராணுவ தளபதி அகசுடின் தி டுபைட் தலைமையில் முடியாட்சி அமைக்கப்பட்டது. இறுப்பினும் சிறிது காலத்திலேயே இது கலைக்கப்பட்டு 1823ல் மெக்சிகோ குடியரசு மலர்ந்தது. மக்கள் பரம்பல் இனக்குழுக்கள் இலத்தீன் அமெரிக்கா பல்லின மக்கள் பரம்பலை கொண்ட ஒரு பிரதேசம். இந்த இனங்களின் பரவல் நாட்டுக்கு நாடு வேறுபடும். தாயக அமெரிக்கர்கள், ஆசியர்கள், ஆப்பிரிக்கர்கள், மெசுடொசோக்கள் (ஐரோப்பிய-தாயக அமெரிக்கர்களின் கலப்பு இனம்), முலாட்டோக்கள் (ஐரோப்பிய-ஆப்பிரிக்கர்களின் கலப்பு இனம்), ஐரோப்பியர்கள் (குறிப்பாக எசுப்பானிய மற்றும் போர்த்துக்கேய நாட்டவர்) மற்றும் சாம்போக்கள் (தாயக அமெரிக்கர்கள்-ஆப்பிரிக்கர்களின் கலப்பு இனம்) ஆகிய இனங்கள் இலத்தீன் அமெரிக்காவில் அதிகம் காணப்படுகின்றன. மொழி எசுப்பானியம் மற்றும் போர்த்துக்கேயம் ஆகிய இரண்டும் இலத்தீன் அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழிகள் ஆகும். மொத்த மக்கள் தொகையில் 60% பேர் எசுப்பானிய மொழியையும், 34% பேர் போர்த்துக்கேய மொழியையும், 6% பேர் மற்ற மொழிகளான கெச்வா, மாயன், குவாரனி, ஐமரா, நாகவற் மொழி, ஆங்கிலம், இடாய்ச்சு, பிரெஞ்ச் மற்றும் இத்தாலிய மொழிகளை பேசுகின்றனர். போர்த்துக்கேய மொழி பிரேசில் நாட்டில் மட்டும் பேசப்படுகின்றது. அதைத் தவிர்த்த மற்ற அனைத்து இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் எசுப்பானியம் ஆட்சி மொழியாக உள்ளது. பிரெஞ்ச், எயித்தி மற்றும் கயானா ஆகிய நாடுகளில் பேசப்படுகின்றது. அமெரிக்க பழங்குடி மொழிகள் பெரு, குவாத்தமாலா, பொலிவியா, பராகுவே மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் அதிக அளவில் பேசப்படுகின்றன. பனாமா, ஈகுவடார், பிரேசில், கொலம்பியா, வெனிசுலா, அர்செண்டினா மற்றும் சிலி ஆகிய நாடுகளிலும் குறிப்பிடத்தகுந்த அளவில் பேசப்படும் இவை பிற நாடுகளில் மிகக் குறைந்த அளவே பேசப்படுகின்றன. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது மெக்சிகோ, அதிக அளவில் பழங்குடி மொழி பேசுவோரைக் கொண்டுள்ளதாக உள்ளது. உருகுவே பழங்குடி மொழி வழக்கில் இல்லாத ஒரே இலத்தீன் அமெரிக்க நாடாகும். மதம் கிறித்தவம், இலத்தீன் அமெரிக்காவின் மிகப் பெரும்பான்மையான மதம் ஆகும்[8]. இவர்களில் 70% பேர் உரோமன் கத்தோலிக்கர்கள். பிரேசில், பனாமா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளில் சீர்திருத்தத் திருச்சபை சீரான வளர்ச்சியை கொண்டுள்ளது. இதைத் தவிர்த்த பழங்குடியினர் நம்பிக்கை, யூதம், இசுலாம் போன்றவை சிறிய அளவு மக்களால் கடைபிடிக்கபடுகின்றது. கலாச்சாரம் இலத்தீன் அமெரிக்க கலாச்சாரம் என்பது அமெரிக்க பூர்வீக குடிகள், ஐரோப்பியர்கள் மற்றும் ஆப்பிரிக்கர்களின் காலாச்சார கலவை ஆகும். பண்பாடு மற்றும் வாழ்க்கை முறையில் பூர்வீக குடிகளின் முறைகளும், சமயம், கலை, ஓவியம் போன்றவற்றில் ஐரோப்பிய தாக்கமும் அதிகம். இசை, நடனம் ஆகியவவை ஆப்பிரிக்க கலாச்சாரத்தை ஒத்ததாக உள்ளன. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் by Benjamin Dangl, The Nation, March 4, 2009] – Interview with Michael Reid of The Economist] பகுப்பு:கண்டங்கள்
பிரேசில் நாட்டில் அதிகம் பேசப்படும் மொழி எது?
போர்த்துக்கேய மொழி
5,818
tamil
036947361
ஐசக் நியூட்டன் (டிசம்பர் 25, 1642 – மார்ச் 20, 1727)[5], ஒரு ஆங்கிலக் கணிதவியலாளரும், அறிவியலாளரும், தத்துவஞானியும் ஆவார். அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் பெரிதும் ஆய்வுகள் மேற்கொண்டவர் நியூட்டன். இது நாள் வரை வாழ்ந்த அறிவியலாளர்களுள் மிகவும் செல்வாக்கு உள்ளவர்களுள் ஒருவராகவும், அறிவியல் புரட்சியில் முக்கியமான ஒருவராகவும் இவர் இருந்தார். 1687ல் ஈர்ப்பு சம்பந்தமான விளக்கங்களை உள்ளடக்கிய, Philosophiae Naturalis Principia Mathematica என்னும் நூலை வெளியிட்டார். இவருடைய இயக்க விதிகள் மூலம், மரபார்ந்த விசையியல் (classical mechanics) என்னும் துறைக்கு வித்திட்டார். கோட்பிறைட் வில்ஹெல்ம் லீப்னிஸ் என்பவருடன் சேர்ந்து, வகையீட்டு நுண்கணிதத் துறையின் உருவாக்கத்தில் பங்கு கொண்டார். நியூட்டனின் பிரின்சிப்பியா</i>விலேயே, பின்வந்த மூன்று நூற்றாண்டுகளில் பௌதீக அண்டம் தொடர்பான அறிவியலாளரின் நோக்கில் ஆதிக்கம் செலுத்திய, இயக்க விதிகள், பொது ஈர்ப்பு ஆகியவை உருவாக்கம் பெற்றன. இது புவியில் பொருட்களின் இயக்கங்களையும், அண்டவெளியில் உள்ள கோள்கள் முதலிய பொருட்களின் இயக்கங்களையும் ஒரே கோட்பாடுகளின் அடிப்படையில் விபரிக்கலாம் என விளக்கியது. நியூட்டன் நடைமுறைச் சாத்தியமான முதலாவது தெறிப்புத் தொலைநோக்கியை உருவாக்கியதுடன், முப்பட்டைக் கண்ணாடி வெள்ளொளியைப் பிரித்துப் பல நிற ஒளிகளைக் கொண்ட நிறமாலையாகத் தரும் கவனிப்பை அடிப்படையாகக்கொண்டு நிறக் கோட்பாடு ஒன்றையும் உருவாக்கினார். ஒலியின் வேகம் குறித்தும் இவர் ஆய்வுகள் செய்தார். நுண்கணிதத்தில் இவரது ஆய்வுகளுக்குப் புறம்பாக, ஒரு கணிதவியலாளராக, அடுக்குத் தொடர் குறித்த ஆய்வுகளுக்கும் இவர் பங்களிப்புச் செய்துள்ளார். இளமை ஐசக் நியூட்டன் 1642 ஆம் ஆண்டு கிரிஸ்துமஸ் தினத்தன்று (டிசம்பர்-25) இங்கிலாந்தில் லிங்கன்ஷயர் கவுண்டியில், கோல்ஸ்டர்வேர்த்துக்கு அருகிலுள்ள வூல்ஸ்தோர்ப் என்னும் ஒரு சிற்றூரில் ஒரு சராசரி விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே இவரது தந்தையார் இறந்துவிட்டார். இரண்டு ஆண்டுகள் கழிய நியூட்டனை அவரது பாட்டியின் கவனிப்பில் விட்டுவிட்டு, தாயாரும் தனது புதிய கணவருடன் வாழச் சென்றுவிட்டார். கல்வி நியூட்டன் கிராந்தாம் கிறமர் பாடசாலையில் பயின்றார். ஆரம்பத்தில் அவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை. ஆனால் ஒருமுறை தன்னைக் கேலி செய்த வயதில் தன்னைவிட பெரிய சிறுவனை நையப் புடைத்த பின் தன்னம்பிக்கை அதிகரித்து நன்றாக படிக்கத் தொடங்கினார். சிறுவயதிலிருந்தே நியூட்டனுக்கு அறிவியலில் ஈடுபாடு இருந்தது, தண்ணீரிலும் வேலை செய்யும் கடிகாரத்தை அவர் சிறுவயதிலேயே உருவாக்கினார். அவருக்குப் பதினான்கு வயதானபோது குடும்ப ஏழ்மையின் காரணமாகப் பள்ளிப் படிப்பைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. நியூட்டனின் கல்வி ஆசையை அறிந்துகொண்ட அவரது மாமன் 1661ல், அவரைப் புகழ்பெற்ற கேம்பிறிஜ், திரித்துவக் கல்லூரியில் சேர்த்தார். அக்காலத்தில் கல்லூரியின் கற்பித்தல், அரிஸ்ட்டாட்டிலைப் பின்பற்றியதாகவே இருந்தது. ஆனால் நியூட்டன், டெஸ்கார்ட்டஸ், கலிலியோ, கோப்பர்னிக்கஸ் மற்றும் கெப்ளர் போன்ற அக்காலத்து நவீன தத்துவ வாதிகளுடைய கருக்களையும் கற்கவிரும்பினார். 1665 ல், ஈருறுப்புத் தேற்றத்தைக் கண்டுபிடித்ததுடன், பிற்காலத்தில் நுண்கணிதம் என வழங்கப்பட்ட, புதிய கணிதக் கோட்பாடொன்றை உருவாக்கத் தொடங்கினார். 1665ல் இவர் பட்டம் பெற்றதும், பெருங் கொள்ளைநோய் காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அடுத்த இரண்டுவருடங்கள் வீட்டிலிருந்தபடியே, நுண்கணிதம், ஒளியியல், ஈர்ப்பு என்பவை பற்றி ஆராய்ந்தார். மிகச்சிறப்பாகக் கற்றுத் தேர்ந்து 1665 ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார் நியூட்டன். அவரது பல்கலைக்கழக நாட்கள் பற்றிய குறிப்புகள் அவ்வுளவாக இல்லை. ஆனால் அவர் பட்டம் பெற்ற இரண்டு ஆண்டுகளில் அவரது அறிவியல் மூளை அபரிமிதமாக செயல்படத் தொடங்கியது. நவீன கணிதத்தின் பல்வேறு கூறுகளை அவர் கண்டுபிடித்தார். Generalized binomial theorem, infinitesimal calculus போன்ற நவீன கணிதத்தின் பிரிவுகள் அவர் கண்டுபிடித்தவைதான். வளைந்த பொருள்களின் பரப்பையும் கெட்டியான பொருள்களின் கொள்ளளவையும் கண்டுபிடிக்கும் முறைகள் அவர் வகுத்துத் தந்தவையே. பணிகள் 1667 ஆம் ஆண்டு தனது 25-ஆவது வயதில் நியூட்டன் டிரினிடி கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். டிரினிடி கல்லூரியில் அவருக்கு கெளரவ பொறுப்பு வழங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளை அவர் முழுநேரமாக பல்வேறு ஆராய்ச்சிகளில் செலவிட்டார். ஒளியின் தன்மைப் பற்றி ஆழமாக ஆராய்ந்ததோடு தொலைநோக்கிகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தினார். ஓராண்டில் அவர் ஓர் தொலைநோக்கியையும் உருவாக்கினார். அதன்மூலம் ஜூபிடர் கோலின் நிலவுகளை அவரால் பார்க்க முடிந்தது. இன்றைய நவீன தொலைநோக்கிகள் நியூட்டனின் அந்த முதல் தொலைநோக்கியின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றன. 1669 ஆம் ஆண்டு டிரினிடி கல்லூரியில் கணக்கியல் பேராசிரியராக நியூட்டன் பொறுப்பேற்றார். அதன்பின் பிரசித்திப் பெற்ற ராயல் சொசைட்டியில் அவர் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட்டார். கண்டுபிடிப்புகள் புவிசார் மற்றும் விண்வெளிசார் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் இயற்கை விதிகளை முதன்முதலில் விளக்கியவர் இவரேயாவார். இவர் அறிவியல் புரட்சியுடனும், சூரியமையக் கோட்பாட்டின் வளர்ச்சியுடனும் தொடர்புபட்டிருந்தார். கோள்களின் இயக்கத்துக்கான கெப்ளரின் விதிகள் தொடர்பில் கணிதரீதியான நிறுவல்களை வழங்கியதில் நியூட்டனுக்கும் பங்கு உண்டு. வால்வெள்ளி போன்ற விண்பொருட்களின் சுற்றுப்பாதைகள் நீள்வட்டமாக மட்டுமின்றி, பரவளைவாகவும், அதிபரவளைவாகவும்கூட இருக்கலாம் எனவும் வாதித்து, மேற்படி விதிகளை விரிவாக்கினார். ஒளியியல் ஆய்வுகள் பட்டகம் (Prism) எனப்படும் முக்கோணத்தில் ஒளி விழும்போது ஏற்படும் விளைவுகளை அவர் கண்டறிந்தார். ஒரு பட்டகத்தின் (prism) ஊடே கதிரவனின் ஒளிக்கதிர் செல்லும்போது அது ஏழு வண்ணங்களாகப் பிரிவதைச் செய்முறையில் விளக்கினார். மேலும், பல வண்ணங்களைக் கொண்ட நியூடன் தகட்டைச் (Newton’s disc) சுழற்றும்போது அது வெண்மை நிறம் கொண்டதாக மாறுவதையும் செய்து காட்டினார். வெண்ணிற ஒளி, பல நிற ஒளிகளின் சேர்க்கையென முதலில் விளக்கியவரும் இவரேgeshopan. வண்ணங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அவர் ஒரு கண்ணை மூடிக்கொண்டு மறு கண்ணால் சூரியனை பார்த்துக்கொண்டே இருந்தார். திடீரென்று வண்ணங்கள் மாறத்தொடங்கின. ஆனால் நியூட்டனுக்கு அந்த கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் பல நாட்கள் இருட்டறையில் இருந்து கண்களின் முன் மிதந்த புள்ளிகளை அகற்ற வேண்டியிருந்தது. ஒளியின் இமிசன் கோட்பாடு நியூட்டன் வகுத்து தந்ததுதான். வெகுதொலைவில் உள்ள ஓர் ஒளிரும் பொருளிலிருந்து வெளியாகும் துகள்கள் பரவெளியில் வினாடிக்கு நூற்றி தொன்னூராயிரம் மைல் வேகத்தில் விரைந்து வருவதுதான் ஒளியாக நமக்குத் தெரிகிறது என்பதுதான் அந்தக்கோட்பாடு. ஒளி, துணிக்கைகளால் ஆனது என்ற வாதங்களுக்காகவும் இவர் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார். பார்க்க: அலை-துணிக்கை இருமைத்தன்மைஇரண்டு துணிக்கைளுக்கிடையிலான ஈர்ப்பு விசையானது அவற்றின் திணிவுகளுக்கு நேர்விகிதசமனெனவும் அவற்றுக்கிடையிலான துாரத்துக்கு நேர்மாறுவிகிதசமனெனவும் கருத்தறிவித்தார். ஈர்ப்பு விதி கண்டுபிடிப்பு நியூட்டன் ஆப்பிள்(அப்பிள்) மரமொன்றின் கீழ் இருந்தபோது, அப்பிள் பழமொன்று அவர் தலையில் விழுந்ததாகவும், இது அவர் சிந்தனையைக் கிளறி, புவிசார்ந்த, விண்வெளி சார்ந்த ஈர்ப்புபற்றிய எண்ணக்கரு உதித்ததாகவும் கதை நிலவுகிறது. இது அவரது சொந்தக் கதையான, வூல்ஸ்தோர்ப் மனோரின்யின் யன்னலோரம் இருந்து ஆப்பிள் மரத்திலிருந்து விழுந்ததைக் கவனித்த கதையை மிகைப் படுத்திக் கூறியதாகும் எனக் கருதப்படுகிறது. நியூட்டனின் கதையும், பிற்காலத்தில் அவரால் கட்டப்பட்டது என்பது பலருடைய கருத்து. 1667 ல், தனது கண்டுபிடிப்புக்கள் குறித்த முடிவிலித் தொடர்கள் மூலமான பகுப்பாய்வு பற்றி (De Analysi per Aequationes Numeri Terminorum Infinitas) என்ற நூலினையும் பின்னர் தொடர்களினதும், பிளக்ஸியன்களினதும் வழிமுறைகள் பற்றி (De methodis serierum et fluxionum ) என்ற நூலினையும் வெளியிட்டார். நியூட்டனும், லீப்னிசும் நுண்கணிதக் கோட்பாடுகளைத் தனித்தனியே உருவாக்கியதுடன், வெவ்வேறு குறியீடுகளையும் பயன்படுத்தினார்கள். நியூட்டன் அவருடைய வழிமுறைகளை லீப்னிசுக்கு முன்னரே உருவாக்கியிருந்தும், பின்னவருடைய குறியீடுகளும்,வகையீட்டு வழிமுறை"யும், மேம்பட்டதாகக் கருதப்பட்டுப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. நியூட்டன், அவர் காலத்தைச் சேர்ந்த மிகத் திறமையான அறிவியலாளருள் ஒருவராக இருந்தும், அவருடைய கடைசி 25 வருடங்கள், லீப்னிசுடனான பிரச்சினைகளால் பாழாக்கப்பட்டது. லீப்னிஸ் தன்னுடைய கண்டுபிடிப்புக்களைத் திருடியதாக அவர் குற்றஞ்சாட்டி வந்தார். நியூட்டனுக்கு தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தான் தூண்களாக இருந்தன. அவருடைய கோட்பாடுகள் வன்மையாக எதிர்க்கப்பட்ட போதெல்லாம் அவர் மனம் தளர்ந்து விடவில்லை. தன்னம்பிக்கையோடு தனது ஆராய்ச்சிகளை தொய்வின்றி தொடர்ந்தார். 1669 ல், கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார். இவருடைய இந்தப்பதவி இவர், கல்லூரியின் ஆய்வாளாராக(Fellow) நீடிப்பதற்குத் தேவாலயத்துக்குச் செல்லவேண்டுமென்ற விதியிலிருந்து விலக்குப் பெற்றதுடன், அவருடைய எதிர்-திரி(கிறி?)த்துவவாதக் கருத்துக்கள் காரணமாக மரபுவாதத் தேவாலயத்துடன் ஏற்படவிருந்த முரண்பாடுகளையும் தவிர்த்துக்கொண்டார். விசை பற்றிய கோட்பாடுகள் எல்லாப் பொருள்களும் ஒன்றையொன்று ஈர்க்கும் தன்மையுடையன; அந்த ஈர்ப்பு விசை இரு பொருள்களுடைய நிறைகளின் பெருக்கலுக்கு நேர் விகிதத்திலும், அவ்விரு பொருள்களின் இடையே உள்ள தூரத்தின் வர்க்கத்திற்கு எதிர் விகிதத்திலும் இருக்கும். ஒவ்வொரு வினைக்கும், அதற்கு எதிர்த் திசையிலிருந்து சமமான எதிர் வினை நிகழும். ஒரு நிலையான பொருளை நகர்த்துவதற்கு, புற விசை இன்றியமையாதது. நியூட்டனின் நூல்கள் நியூட்டன் அறிவுச்செல்வத்தை சேர்த்து வைத்திருப்பதை உணர்ந்த அவரது நண்பர் ஹேய்லி அவற்றையெல்லாம் புத்தமாக வெளியிட நியூட்டனுக்கு ஊக்கமூட்டினார். அதன்பலனாக 1687 ஆம் ஆண்டு "Mathematical Principles of Natural Philosophy" என்ற புத்தகம் வெளியானது. "Principia" என்றும் அழைக்கப்பட்ட அந்த புத்தகம்தான் இதுவரை வெளியிடப்பட்டிருக்கும் அறிவியல் நூல்களிலேயே மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது. 1692 ஆம் ஆண்டு முதல் 1694 ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகள் நியூட்டன் கடுமையான நோய்வாய்ப்பட்டார். அவருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சினையும், தூக்கமின்மை பிரச்சினையும் ஏற்பட்டது. நியூட்டனுக்கு புத்தி பேதலித்து விட்டதாக வதந்திகள் பரவின. ஆனால் பின்னர் நன்கு குணமடைந்து பல்கலைக்கழகப் பணிகளில் ஈடுபட்டார். நூல்கள் மெத்தேட் ஆஃப் ஃபிளக்சியான்ஸ் (Method of Fluxions) (1671) ஆப்டிக்ஸ் (Opticks) (1704) அரித்மெட்டிகா யுனிவர்சலிஸ் (Arithmetica Universalis) (1707) சிறப்புகள் 1703 ஆம் ஆண்டில் நியூட்டன் ராயல் சொசைட்டியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 25 ஆண்டுகள் அவர் ஒவ்வொரு ஆண்டுமே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. 1705 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ராணி (Queen Anne) கேம்ஃப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு வருகை மேற்கொண்டபோது நியூட்டனுக்கு 'சர்' பட்டம் வழங்கி சிறப்பித்தார்.ஐசாக் நியூட்டன் இயற்பியல் துறையில் மிகப்பெரிய சாதனை புரிந்திருந்தபோதும் தம் சாதனையைப்பற்றி பின்வருமாறு கூறுகிறார். நான் இவ்வுலகிற்கு எவ்வாறிருப்பினும் என்னில் பொருத்தமட்டில் நானொரு கடற்கரையில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவன்,மென்மையான கூழாங்கல்லையும் அழகிய சங்கையும் கண்டுள்ளேன்,ஆனால் விரிந்து பரந்துள்ள பெருங்கடலோ என் கண்முன்னே காணப்படாமல் உள்ளது." இறுதிக்காலம் இங்கிலாந்தின் மிகச் சிறந்த விஞ்ஞானியாக இன்றும் கருதப்படும் "சர் ஐசக் நியூட்டன்" நோய்வாய்ப்பட்டு 1727 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி இயற்கை எய்தினார். லண்டனில் புகழ்பெற்ற "Westminster Abbey"-யில் அடக்கம் செய்யப்பட்டார். மனித குலத்தின் மிகச் சிறந்த விலை மதிப்பில்லா மாணிக்கம் (The Best and Invaluable Gem of Mankind) என்று அவர் கல்லறையில் பொறிக்கப்பட்டது. நியூட்டனுக்கு பலர் அஞ்சலி செலுத்தினாலும் போப் எழுதிய அஞ்சலி மிக ஆழமானது. இந்த வாசகம் நியூட்டன் பிறந்த அறையில் இன்றும் பொறிக்கப்பட்டிருக்கிறது! "இயற்கையும் அதன் விதிகளும் இருளில் கிடந்தன, கடவுள்... நியூட்டன் பிறக்கட்டும் என்றார் ஒளி பிறந்தது" உசாத்துணை வெளி இணைப்பு பகுப்பு:1642 பிறப்புகள் பகுப்பு:1727 இறப்புகள் பகுப்பு:கிறித்தவ சித்தர்கள் பகுப்பு:ஆங்கிலேய அறிவியலாளர்கள் பகுப்பு:பிரித்தானிய இயற்பியலாளர்கள் பகுப்பு:ஆங்கிலேயக் கணிதவியலாளர்கள் பகுப்பு:மேற்கோள் வழு-ref குறிச்சொல்லுக்கு உரையில்லாதவை பகுப்பு:ஆங்கிலேய வானியலாளர்கள் பகுப்பு:ஆங்கிலேயக் கண்டுபிடிப்பாளர்கள் பகுப்பு:ஆங்கிலேய இயற்பியலாளர்கள்
ஐசக் நியூட்டன் எப்பொழுது பிறந்தார்?
டிசம்பர் 25, 1642
16
tamil
6d573c9e0
இந்திய விடுதலை நாள் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15 ம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15 ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.[1] இந்த நாளில் இந்தியப் பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார். ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்/முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர்.[2][3] மேலும் பார்க்க இந்திய வரலாறு குடியரசு நாள் மேற்கோள்கள் வெளியிணைப்புகள் இந்திய அரசாங்க இணையதளத்தில் பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் தளத்தில் பகுப்பு:இந்திய வரலாறு பகுப்பு:இந்தியாவின் சிறப்பு நாட்கள் பகுப்பு:ஆகத்து சிறப்பு நாட்கள் பகுப்பு:இந்திய விடுதலைப் போராட்டம்
இந்தியநாடு சுதந்திரம் அடைந்தது எப்பொழுது?
1947 ஆகஸ்ட் 15 ல்
73
tamil
2cefe0615
தாமசு ஆல்வா எடிசன் (பெப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931) ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். 1880 ல் எடிசன் அறிவியல் சார்ந்த இதழ் ஒன்றைத் தொடங்கியவர். இது 1900-ஆம் ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for the Advancement of Science) இதழானது. தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவற்றுள் பெரும்பாலானவை இவரால் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல; முன்னைய உரிமங்களில் ஏற்படுத்திய சீரமைப்புக்களாகும். இவையும் பெரும்பாலும் இவரது பெருமளவிலான ஊழியர்களால் செய்யப்பட்டவை. இக்கண்டு பிடிப்புக்களுக்கான பெருமையில் மற்றவர்களுக்குரிய பங்கைக் கொடுக்காதமைக்காக எடிசன் அடிக்கடி விமர்சிக்கப்ப்ட்டார். இருந்தாலும், எடிசன் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் உரிமங்களைப் பெற்றார். எடிசன் நம்பிக்கை நிதியம் (Edison Trust) எனப் பொதுவாக அறியப்பட்ட, ஒன்பது முதன்மையான திரைப்படக் கலையகங்களின் கூட்டமைப்பான அசையும் பட உரிம நிறுவனத்தை (Motion Picture Patent Company) ஆரம்பித்தார். இளமை பவன் 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் நாள் அரியலூரில் என்னும் ஊரில் பிறந்தார். பவனின் பெற்றோர் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள். தந்தை ரவி ஓர் இந்தியர்ர; தாயார் சோபனா பரம்பரையில் வந்த காடூர் பெண். அவர் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. இவர்களுக்கு எடிசன் ஏழாவதாகவும் கடைசியாகவும் பிறந்தார். பின்னர் எடிசனின் குடும்பம் மிச்சிகனிலுள்ள ஊரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது கேட்கும் திறன் பாதித்திருந்தது அப்பிறவிப் பெருங் குறை அவரது பிற்கால நடையுடைப் பழக்கங்களை மிகவும் பாதித்ததோடு, அநேகப் புதுப் படைப்புகளுக்கும் காரணமாகவும் இருந்தது! 1840 இல் தந்தை சாமுவெல் எடிசன் மிலானில் ஒரு சாதாரண மர வியாபாரத்தைத் தொடங்கினார். பின்பு மிஸ்சிகன் போர்ட் ஹூரனில் கலங்கரைவிளக்கக் காப்பாளராகவும் , கிராடியட் கோட்டை ராணுவத் தளத்தின் தச்சராகவும் சாமுவெல் வேலை பார்த்தார். கல்வி தாமஸ் எடிசன், சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலில் கஷ்டப்பட்டுத் தாமதமாக, எட்டரை வயதில்தான் போர்ட் ஹூரன் பள்ளிக்குச் சென்றார். மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு நாள் 'மூளைக் கோளாறு உள்ளவன் ' என்று ஆசிரியர் திட்டியதால் அவரது பள்ளிப் படிப்பு முடிந்தது! எனவே, அவரின் தாயார் பள்ளியிலிருந்து தாமசை விலக்கிவிட்டுத் தானே அவருக்கு பாடங்கள் சொல்லிக் கொடுத்தார். பள்ளிக்கூட ஆசிரியரான தாயிடம் மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே, எடிசன் கல்வி கற்றார். படித்தல் எழுதுதல் மற்றும் எண்கணிதப் பயிற்சியோடு பைபிளையும், பழங்கதைகளைப் படிக்குமாறு தாமசின் தந்தை சாமுவேல் ஊக்கப்படுத்தினார். ஒவ்வொரு கதையை முடிக்கும் போதும் பத்து செண்ட்டுகளை அளிப்பதன் மூலம். விரைவில் தாமசு பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். கவிதைகளைப் படிப்பதிலும் பாடுவதிலும் அவருக்கு விருப்பம் அதிகமாயிருந்தது. நூலகத்திற்குச் சென்று அவருக்குத் தேவையான குறிப்புதவி நூலை அவரே எடுக்கக் கற்றுக்கொண்டபோது அவருக்கு வயது 11. தனது ஏழாவது வயது முதல் சூழ்நிலைச் சாதனங்களின் மேல் எடிசனுக்கு ஆர்வம் மிகுந்தது. ஒன்பது வயதில் ரிச்சர்டு பார்க்கர் (Richard Parker) எழுதிய 'இயற்கைச் சோதனைத் தத்துவம் ' (Natural &amp; Experimental Philosophy) என்ற நூலைப் படித்து முடித்தார். பதிமூன்றாம் வயதில் தாமஸ் பைன் [Thomas Paine] எழுதிய ஆக்க நூல்களையும், ஐசக் நியூட்டன் இயற்றிய 'கோட்பாடு ' என்னும் நூலையும் ஆழ்ந்து படித்தார். தனது 21 ஆம் வயதில், மைக்கேல் பாரடேயின் செய்தித்தாளில் இருந்த 'மின்சக்தியின் பயிற்சி ஆராய்ச்சிகள் ' பகுதியை ஒருவரி விடாது ஆழ்ந்து படித்து முடித்தார். இவை அவரது வாழ்க்கையில் ஒரு பெருத்த மாறுதலை உண்டாக்கியது! செய்கை முறையில், சோதனைகள் புரிந்து படைக்கும் திறனை எடிசனுக்கு அவை அடிப்படை ஆக்கின. கணித அறிவும் அறிவியல்இயற்பாடு எதுவும் முறையாகக் கற்காத எடிசன், சோதனைகள் மூலம் மட்டிலுமே திரும்பத் திரும்ப முயன்று, பல அரிய தொழில்நுட்பக் கருவிகளைப் படைத்தார். பணி 1860களின் தொடக்கத்தில் எடிசனுக்கு இரயில் நிலையத்தில் தந்தி இயக்கும் வேலை கிடைத்தது; அதிவேகத் தந்தி இயக்குதலுக்குப் பேர்பெற்றவர் தாமசு. அவரது முதல் கண்டுபிடிப்புகள் மின்தந்தி போன்ற தந்தி தொடர்பான கருவிகளே - பின்னர் வெசுடன் யூனியன் அலுவலகத்தில் வேலை. வேலைக்கிடையில் தன் ஆய்வுகளைத் தொடர்ந்து வந்தார் எடிசன். ஆனால் ஒரு முறை காரீய-அமில சேமக்கலனை வைத்திருந்த போது அதிலிருந்த கந்தக அமிலம் வெளியில் கொட்டி, பவனின் முதலாளி இருந்த அறைக்குள் பாய்ந்தது; அவரது வேலை பறிபோனது. அதன் பின்னர் இரயில்நிலையத்தில் நொறுக்குகளும் மிட்டாய்களும் விற்றார். சில காலம் பன்றி வெட்டினார்; காய்கறி வணிகம் செய்தார். இரயில் வண்டியின் ஒரு பெட்டியை அச்சகமாக மாற்றி அதிலிருந்தபடியே 1862-இல் ”த வீக்லி எரால்டு” என்ற வாரப் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார்; அதுவும், அக்டோபர் 28, 1868 அன்று (மின் வாக்குப்பதிவி) முதல் காப்புரிமைக்கு விண்ணப்பித்தார். ஆய்வுகள் முழுநேரக் கண்டுபிடிப்பாளராகத் தன் வாழ்க்கையை நடத்தும் பொருட்டு தாமசு நியூ செர்சியிலுள்ள நெவார்க்கிற்குச் சென்றார். நியூ செர்சியிலுள்ள மென்லோ பூங்கா என்ற இடத்தில் தன் ஆய்வகத்தை அமைத்தார் எடிசன். பங்குச்சந்தைப் புள்ளிகளை தொடராகப் பதிவேற்றும் துடிநாடா, மேம்படுத்தப்பட்ட தந்திக்கருவிகள் ஆகிய கருவிகளை உருவாக்கினார். ஆனால் எடிசனுக்குப் பெயர் பெற்றுத்தந்த கருவி 1877-இல் அவர் ஆக்கிய ஒலிவரைவியே. அதன் பிறகே “மென்லோ பூங்காவின் மேதை” என்ற பட்டம் அவருக்கு வழங்கலாயிற்று. தானாக இயங்கும் தந்திக்குறிப் பதிவுக் கருவி 1859 இல் எடிசன் தன் பன்னிரண்டாம் வயதில் பள்ளிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு, டெட்ராய்ட்-போர்ட் ஹூரன் புகைவண்டி நிலையத்தில் செய்தித் தாள் விற்கும் பையனாக வேலையில் சேர்ந்தார். அப்போது டெட்ராய்ட் மத்திய புகைவண்டி நிலையம், தந்திப் பதிவு ஏற்பாடு மூலம், ரயில் போக்குவரத்தைக் கண்காணிக்க முயன்று கொண்டிருந்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, வேலைக்கு மனுப் போட்டு, 1863 இல் டெலகிராஃப் பயிற்சியில் நுழைந்தார். தந்திச் செய்திகள் புள்ளி மற்றும் கோடுகளாகப் பதிவானதால், அவரது காது கேளாமைத் தன்மை வேலையை எந்த விதத்திலேயும் பாதிக்கவில்லை! பதிவானப் புள்ளிக் கோடுகளை அந்த காலத்தில் ஒருவர் படித்துப் புரிந்துதான், ஆங்கி லத்தில் மாற்றிக் கையால் எழுத வேண்டும். அதே பணியை ஆறு வருடங்கள் எடிசன் அமெரிக்காவில் தெற்கு, நடுமேற்குப் பகுதிகளில், நியூ இங்கிலாந்தில், மற்றும் கனடாவில் செய்து வந்தார். அப்போது இவ்வேலையை எளிதாக்கும் தந்திக் கருவியைச் செப்பனிட்டு தன் முதல் ஆக்கத் திறமையைக் காட்டினார். 1869 இல் தன் 22 ஆம் வயதில் 'இரட்டைத் தந்தி அடிப்புச் சாதனத்தைப் ' பதிவுக் கருவியுடன் இணைத்து, இரண்டு செய்திகளை ஒரே சமயத்தில், ஒரே கம்பியில் அனுப்பிக் காட்டினார். அத்துடன் தந்தியின் மின்குறிகளைத் தானாக மாற்றிச் சொற்களாய்ப் பதிவு செய்யவும் அமைத்துக் காட்டினார் . எடிசன் தனது தந்தி வேலையை விட்டுவிட்டு, முழு நேர ஆக்கப்பணிக்கு, நியூயார்க் நகருக்குச் சென்றார். அங்கு "பிராங்க் போப்" என்பவருடன் கூட்டாகச் சேர்ந்து, 'எடிசன் உலகப் பதிப்பி ' (Edison Universal Stock Printer), மற்றும் வேறு பதிக்கும் கருவிகளையும் உருவாக்கினார். 1870-1875 ஆண்டுகளில் நியூ ஜெர்ஸி நியூ ஆர்க், வெஸ்ட்டர்ன் யூனியனில் தானியங்கித் தந்தி (Automatic Telegraph) ஏற்பாட்டைச் செப்பனிட்டார். இரசாயன இயக்கத்தில் ஓடிய அந்தக்கருவி மின்குறி அனுப்புதலை மிகவும் சிக்கலாக்கியது. அதைச் சீர்ப்படுத்த முற்பட்ட எடிசன் தன், இரசாயன அறிவை உயர்த்த வேண்டியதாயிற்று. அந்த ஆராய்ச்சி விளைவில், மின்சாரப் பேனா (Electric Pen), பிரதி எடுப்பி (Mimeograph) போன்ற சாதனங்கள் உருவாகின. மேலும் அந்த பட்டறிவே, எடிசன் இசைத்தட்டு (கிராமஃபோன்) (Phonograph) கண்டுபிடிக்கவும் ஏதுவாயிற்று. எடிசன் புதிய கருவிகளைக் கண்டு பிடிக்க முனையும் போது, வேறு பல அரிய கருவிகளும் இடையில் தோன்றின. அவற்றுள் ஒன்று 'கரி அனுப்பி '(Carbon Transmitter) என்னும் சாதனம். முதல் ஒலிவரைவி கண்டுபிடிப்பு 1877 இல் எதிர்பாராதவாறு, எடிசன் கண்டு பிடித்தவற்றிலே, தொழில்நுட்ப முன்னோடிச் சாதனம், ஒலிவரைவி (கிராமஃபோன்) ஆகும். பிரான்சு நாட்டைச் சேர்ந்த லியான் ஸ்காட் 'ஒவ்வொரு ஒலியையும் ஒரு தகடு மீது பதிவு செய்ய முடிந்தால், அவை சுருக்கெழுத்து போல் தனித்துவ உருவில் அமையும் ' என்ற கோட்பாடை ஒரு நூலில் எழுதியிருந்தார். அதுதான் ஒலி மின்வடிவாய் எழுதும், ஒலிவரைவு (Phonography) எனப்பட்டது. அக் கோட்பாடை நிரூபித்துக் காட்ட, எடிசன் ஓர் ஊசியைத் தன் கரியனுப்பியுடன் சேர்த்து, ஒலிச்சுவடுகள் பாரபின் தாளில் பதியுமாறு செய்தார். அவர் வியக்கும்படி, ஒலிச் சுவடுகள் கண்ணுக்குத் தெரியாத வடிவில், கிறுக்கப் பட்டு நுணுக்கமாகத் தாளில் வரையப்பட்டிருந்தன. பிறகு ஊசியை ஒலிச் சுவடின் மீது உரசி, அதைப் ஒலிபெருக்கி மூலம் கேட்டதில், பதியப் பட்ட ஓசை மீண்டும் காதில் ஒலித்தது! எடிசன் அடுத்து ஓர் உருளை மீது தகரத் தாளைச் சுற்றி ஒலிச் சுவடைப் பதிவு செய்து காட்டினார். 1877 டிசம்பரில் அதற்கு எடிசன், தகரத்தாள் ஒலிவரைவி [Tinfoil Phonograph] என்னும் பெயரிட்டார். ஆனால் இவரது ஒலிவரைவி ஆய்வுக் கூடத்திலிருந்து வர்த்தகத் துறைக்கு வர பத்தாண்டுகள் ஆயின. மின்குமிழி, மின்சக்தி சேமிப்புக்கலன் கண்டுபிடிப்பு எடிசன் காலத்தில் வாயு விளக்குகள்தான் வீதிக் கம்பங்களில் பயன்படுத்தப்பட்டன. ஐம்பது ஆண்டுகளாக 'மின்சார விளக்கு ' பலருக்குக் கனவாகவும், முயலும் படைப்பாளிப் பொறியாளர்களுக்குத் தோல்வியாகவும் இருந்து வந்தது! அப்போதுதான் விஞ்ஞானிகள் 'மின்வீச்சு விளக்கு ' தொடர்பாக பல ஆய்வுகள் செய்து வந்தனர். 1878 ஜூலை மாதம் 29 ஆம் தேதி சூரிய கிரகணத்தின் போது, ராக்கி மலைத்தொடர் மீது சில ஆராய்ச்சிகள் செய்ய பல அமெரிக்க விஞ்ஞானிகள் சென்றிருந்தனர். கிரகணத்தின் போது 'சூரிய வெளிக்கனல்' எழுப்பிய வெப்ப வேறுபாட்டை அளக்க, அவர்களுக்கு ஒரு கருவி தேவைப்பட்டது. எடிசன் ஒரு கரிப் பொட்டுச் [Carbon Button] சாதனத்தைப் பயன்படுத்தி 'நுண்ணுனர் மானி ' என்னும் கருவியைச் செய்து கொடுத்தார். அக்கருவி மூலம் கம்பியில் ஓடும் மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்தலாம். அம்முறையைப் பயன்படுத்தி மின்சார விளக்கு ஒன்றைத் தயாரிக்க அப்போது எடிசனுக்கு ஓர் ஆர்வமேற்பட்டது. எடிசனின் மின்விளக்கு குறித்த ஆய்வுகளுக்கு, 'எடிசன் மின்சார விளக்குக் கம்பெனியை ' துவங்கிய ஜெ.பி. மார்கன் குழுவினர் முன் பணமாக 30,000 டாலர் தொகையை அளித்தார்கள். 1878 டிசம்பரில், பிரின்ஸ்டன் பல்கலைக் கழக அறிவியல் பட்டதாரி, 26 வயதான ஃபிரான்சிஸ் அப்டன் (Francis Upton) எடிசன் ஆய்வுக் குழுவில் சேர்ந்தார். எடிசனுக்குத் தெரியாத கணித, பெளதிக அறிவியல் நுணுக்கங்கள் யாவும், இளைஞர் ஃபிரான்சிஸ் மூலம் எடிசனுக்குக் கிடைத்தது. மின்தடை மிகுதியாய் உள்ள உலோகக் கம்பி ஒன்றை மின்விளக்கிற்கு எடிசன் முதலில் உபயோகித்தார். மின்சார அணிச் சுற்றில் செல்லும் மின்னோட்டம் மிகுதியாக இருந்ததால், மின் வீச்சு விளக்கு ஒன்றில் பழுது ஏற்பட்டால், எல்லா விளக்குகளும் அணைந்து போயின. எடிசன் மின் விளக்குகளை இணைச் சுற்றில் பிணைத்து, மின்னோட்ட அளவைக் குறைத்ததால், ஒரு விளக்கில் ஏற்படும் பழுது மற்ற விளக்குகளைப் பாதிக்கவில்லை. எடிசன் குழுவினர், பிளாட்டினம் கம்பியைச் சுருளைச் வெற்றிடக் குமிழி ஒன்றில் உபயோகித்துக், கட்டுப்படுத்திய மின்னோட்டத்தில் ஒளிர வைத்து, முதல் மின்விளக்கை உருவாக்கினார்கள். 1881 ஜனவரியில் முதல் 'மின் விளக்கொளி அமைப்பு ' வணிகமாக்கும் துறை ஏற்பாடு, நியூ யார்க் 'ஹிந்த் &amp; கெட்சம் ' அச்சக மாளிகையில் நடந்தது. நியூ யார்க் கீழ் மன்ஹாட்டனில் அமைந்த, உலகின் முதல் வர்த்தக 'மத்திய மின்சார நிறுவனம் ', எடிசனின் நேரடிப் பார்வையில் நிறுவப்பட்டது. அது 1882 செப்டம்பர் முதல் இயங்க ஆரம்பித்தது. பின்னர் மின்விளக்கு அமைப்பு வளர்ச்சி அடைந்து, பின் பெரிய உணவு விடுதிகள், அரங்க மேடைகள், வாணிபத் துறைகள், கடைகள் என அனைத்து இடங்களிலும் மின்குமிழி ஒளி வீச, ஆக்க மேதை எடிசனின் புகழ் உலகெங்கும் பரவியது. மின்சார மோட்டார் இதற்கு இடையில் 1879 இல் எடிசன், அப்டன் இருவரும் முதல் மின்சார சேமிப்புக்கலனை உண்டாக்க போதிய ஆய்வுகள் செய்து முடித்தார்கள். இயந்திர ஆற்றலால் ஓட்டினால் மின்சார சேமிப்புக்கலனில் மின்னழுத்தம் [Voltage] உண்டாகி, கம்பி முனையில் மின்திறம் [Electric Power] கிடைக்கிறது. எதிர்மறையாக மின்சார சேமிப்புக்கலனின் முனைகளில், மின்னழுத்தம் செலுத்தினால், அதே கருவி இயந்திர சக்தியைத் தரும் மின்சார மோட்டார் [Electric Motor] ஆனதை எடிசன் நிரூபித்துக் காட்டினார். இதுவும் அவரது முதல் சாதனை ஆகும். எடிசன் விளைவு விளக்கு எரியும் போது, வெற்றிட மின்குமிழிச் [Vacuum Bulb] சுருள் கம்பியின் நேர்முனையில் [Positive Pole] ஒருவித நீல நிறவொளி [Blue Glow] சூழ்ந்து கொண்டிருந்தது. 1883 இல் எடிசன் மின்குமிழியைப் பதிவு செய்தபோது, அந் நிகழ்ச்சிக்கு 'எடிசன் விளைவு ' [Edison Effect] என்று பெயர் கொடுத்தனர். பதினைந்து ஆண்டுகள் கழித்து 1898 இல் ஜெ. ஜெ. தாம்சன் முதன் முதல் 'எதிர் மின்னணுத் துகளைக் ' [Electron] கண்டுபிடித்தார். அதன் பின்னரே அறிவியலறிஞர்கள் எடிசன் விளைவுக்கு விளக்கம் தந்தனர். அதாவது எலக்ட்ரான்கள் சூடான முனையிலிருந்து குளிர்ச்சியான முனைக்கு வெப்பவியல் வீச்சால் [Thermionic Emission] பயணமாகும் போது, நேர்முனையில் அப்படி ஒரு நீல நிறவொளி எழுகிறது! அதுவே பின்னால் 'எலக்ட்ரான் குமிழி ' [Electron Tube] தோன்ற வழி வகுத்து 'மின்னியல் தொழிற் துறைக்கு' இது அடிகோலியது. நியூயார்க் நகரமும் மின்விளக்குகளும் அக்காலத்தில் தாம் வசித்து வந்த நியூயார்க் நகரின் வீடுகளிலும் வீதிகளிலும் மின்சார விளக்குகள் ஒளிவீச வேண்டும் என்பது எடிசனின் ஆசை. ஆனால் கேஸ் மற்றும் எண்ணெய் விளக்குகளை மட்டும் உபயோகித்துக் கொண்டிருந்த காலத்தில் அவரது ஆசை நிறைவேறும் என்பதை அவரைத் தவிர மற்ற விஞ்ஞானிகள் உட்பட யாரும் நம்பவில்லை. விஞ்ஞானிகள் எடிசனுக்கு எதிராகத் தங்கள் கருத்துகள் மூன்றை ஆணித்தரமாகக் கூறினர். 1. மின்சாரத்தைப் பல இடங்களுக்கு வினியோகிக்க முடியாது. 2. அப்படியே முடிந்தாலும் ஒவ்வொருவரும் எந்த அளவுக்கு அதைப் பயன்படுத்துவார்கள் என்பதைக் கணிக்க முடியாது. 3. மின்சார விளக்கு கேஸ் லைட் போல மலிவானதல்ல. அக்காலகட்டத்தில் அறிவியல் அந்த அளவே வளர்ந்திருந்ததால் அவர்கள் கூறியதில் உண்மை இருந்தது. வழிகள் இல்லாவிட்டால் அவை உருவாக்கப்பட வேண்டும் என்பது எடிசனின் சித்தாந்தம். அவர் தமது ஆராய்ச்சிக்கு உதவும் ஒவ்வொரு புத்தகத்தையும், கட்டுரையையும் விடாமல் படித்தார். இருநூறு நோட்டுகளில், 40,000-த்திற்கும் மேற்பட்ட பக்கங்களில், தம் கருத்துகளையும் வரைபடங்களையும் பதித்து ஆராய்ந்தார். கடைசியில் அவர் கனவு நனவாகியது. உலகிலேயே மின்விளக்குகளால் ஒளி பெற்ற முதல் நகரம் என்ற பெருமையை நியூயார்க் நகரம் பெற்றது. பத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும் அவரைப் பாராட்ட ஓடோடிச் சென்றபோது அவர் தமது ஆராய்ச்சிக்கூடத்தில் வேறோர் ஆராய்ச்சியை ஆரம்பித்திருந்தார். அவரது மகத்தான ஆராய்ச்சி வெற்றி குறித்து பத்திரிகையாளர்கள் கருத்து கேட்டபோது அவர் புன்னகையுடன் சொன்னார்: நேற்றைய கண்டுபிடிப்பு பற்றிப் பேசி இன்றைய நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை.” எடிசனின் வெற்றியில் ஒரு சதவீதம் அறிவு, 99 சதவீதம் உழைப்பு” என்ற பொன்மொழி பிரசித்தமானது திரைப்பட படப்பிடிப்புக் கருவி கிராம போன் ஒலித்தட்டு ஆய்வில் வெற்றி பெற்ற எடிசன் அடுத்து, 1880 களில் திரைப்பட படப்பிடிப்புக் கருவி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். எடிசன் நகரும் திரைப்பட படப்பிடிப்புக் கருவியை உருவாக்க, அதுவரை வெளிவந்த ஆய்வு முயற்சிகளையும், தன் கீழ் பணியாற்றும் நிபுணர்களின் ஆக்கங்களையும் பயன் படுத்திக் கொண்டார். இந்த எண்ணம் எடிசனுக்கு பத்தாண்டுகளாக இருந்திருக்கிறது. அதைப் பற்றி ஒரு சமயம் எடிசன் கூறியது: 'கற்பனையில் எனக்கு இது முன்பே உதயமானதுதான். போனோகிராஃப் எப்படிக் காதுக்கு இசை விருந்தளிக்கிறதோ, அது போல் 'நகரும் படம் ' மனிதர் கண்ணுக்கு விருந்தளிக்கச் செய்ய முடியும். போனோகிராஃப் ஒலி நுணுக்கத்தை திரைப்பட படப்பிடிப்புக் கருவியுடன் இணைத்துப் 'பேசும் படம் ' என்னால் தயாரிக்க முடியும் ' . முதல் நகரும் படம் வெளிவரப் உதவியாக இருந்தவர், எடிசனுக்கு உதவியாளராகச் சேர்ந்த, W.K.L. டிக்ஸன் என்பவராவார். 1888 இல் எடிசன் முதலில் படைத்த திரைப்பட படப்பிடிப்புக் கருவி கினெட்டாஸ்கோப் [Kinetoscope]. ஆனால் படம் யாவும் அதில் சற்று மங்கலாகத்தான் தெரிந்தன. 1889 இல் பிரிட்டனில் வாழ்ந்த ஃபிரீஸ்-கிரீன் என்பவர் ஒருவிதப் பதிவு நாடாவைப் பயன் படுத்தி உருவப் படங்களைப் பதித்தார். அதே நாடாவை சில வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் ஜார்ஜ் ஈஸ்ட்மன் உபயோகித்து ஓளிப் படங்களை அந்த நாடாவிலே எடுக்கும்படி செய்தார். முதல் முறையாக, எடிசன் கினெடாஸ்கோப் படப்பிடிப்புக் கருவியை விரிவாக்கி, ஐம்பது அடி நீளமுள்ள படச் சுருளை, மின்சார மோட்டார் மூலம் சுற்ற வைத்து, உருப்பெருக்கியின் வழியாகப் பேசும் படங்களை வெள்ளித் திரையில் காட்டிக் களிக்கச் செய்தார். அந்த திரைப்பட படப்பிடிப்புக் கருவியை எடிசன் 1891 இல் அமெரிக்காவில் பதிவு செய்தார். மறைவு ஆக்க மேதை எடிசன் தன் 84 ஆம் வயதில், 1931 அக்டோபர் 18 ஆம் தேதி நியூஜெர்சியில் உள்ள வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் எடிசனின் உடல் அடக்கத்தின் போது அமெரிக்காவெங்கும் மின்விளக்குகளை, ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார். அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 9:59 மணிக்கு அவரது உடல் அடக்கமானது. அக்டோபர் 21 ஆம் தேதி மாலை நியூ யார்க்கில் 'சுதந்திர தேவி சிலையின்'(Statue of Liberty) கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது! பிராட்வே விளக்குகள், வீதியில் பயணப் போக்கு விளக்குகளைத் தவிர மற்ற எல்லா விளக்குகளும் ஒளியிழந்தன. சிகாகோ, டென்வர் போன்ற முக்கியமான இடங்களிலும் விளக்குகள் அணைக்கப்பட்டன. உசாத்துணை வெளி இணைப்புகள் , சி. ஜெயபாரதன் - - பகுப்பு:அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர்கள் பகுப்பு:புத்தியற்றுநர் பகுப்பு:மின் பொறியியலாளர்கள் பகுப்பு:1847 பிறப்புகள் பகுப்பு:1931 இறப்புகள் பகுப்பு:காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள் பகுப்பு:ஆங்கில அமெரிக்கர்கள்
உலகில் மின்சாரம் பெற்ற முதல் நகரம் எது?
நியூயார்க் நகரம்
12,817
tamil
e05a793c9
ஆறு (ஒலிப்பு) (வடமொழியில் நதி) என்பது இயற்கையாகச் செல்லும் நன்னீரைக் கொண்ட ஒரு பெரிய நீரோட்டம் ஆகும். ஆறுகள் பொதுவாக மலைப் பகுதிகளில் தொடங்குகின்றன. ஆற்றின் இருபுறமும் உள்ள நிலப்பகுதி கரை என அழைக்கப்படுகிறது. ஆறுகள் பொதுவாக மற்றொரு ஆற்றிலோ, ஏரிகளிலோ அல்லது கடலிலோ இணைகின்றன. ஆற்றில் நீரோட்டமானது புவியீர்ப்பு விசையின் காரணமாக ஏற்படுகிறது. சில வேளைகளில் ஆறுகள் இன்னொரு நீர் நிலையை அடையும் முன்பே நிலத்துக்குள் உறிஞ்சப்படுவதோ அல்லது வரண்டு விடுவதோ உண்டு. பெரிய நீரோட்டங்கள் ஆறுகள் என்றும், சிறியவை சிற்றாறுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. எனினும் எதனை ஆறு என்று அழைக்கலாம் என்பதற்கான பொது விதி எதுவும் கிடையாது. ஆறு நீர்ச் சுழற்சியின் ஒரு கூறு ஆகும். ஆற்றில் இருக்கும் நீர் பொதுவாக மழை போன்றவற்றிலிருந்து பெறப்படுகிறது. புவி மேற்பரப்பில் வழிந்து ஓடுவதன் மூலமும், நிலத்தடி நீரை மீள்விப்பதன் மூலமும், இயற்கையான நீர் நிலைகள் நிரம்புவதன் மூலமும் மழை நீர் ஆற்றை அடைகின்றது. தோற்றம் ஊற்றுக்களில் இருந்தோ, ஏரிகளில் இருந்தோ, பனியாறுகள் உருகுவதன் மூலமோ, மழை நீர் வழிந்தோடுவதனாலோ அல்லது வேறு பல வழிகளிலோ ஆறுகள் உருவாகக் கூடும். பொதுவாக ஆறுகளுடன் வேறு ஆறுகள் வந்து இணைவது உண்டு. இத்தகைய ஆறுகள் சிற்றாறுகள் அல்லது துணையாறுகள் என அழைக்கப்படுகின்றன. ஆற்றில் கொண்டு செல்லப்படும் நீரின் அளவு. ஆற்றில் மேற்பரப்பில் செல்லும் நீரும், கண்ணுக்குத் தெரியாமல் நிலத்துக்குக் கீழ் செல்லும் நீரும் சேர்ந்தது ஆகும். பெரிய பள்ளத்தாக்குகளில் ஓடும் ஆறுகளில் இவ்வாறான கண்ணுக்குத் தெரியாத நீரோட்டத்தின் கூறு மேலே தெரியக்கூடிய நீரின் அளவை விடப் பெருமளவு அதிகமாக இருக்கக்கூடும். ஆற்றின் மூலத்தில் இருந்து பள்ளத்தை நோக்கி ஓடும் ஆறுகள் பொதுவாகக் கடலிலோ அல்லது பெரிய ஏரிகளைப் போன்ற நீர் நிலைகளிலோ கலக்கின்றன. வரண்ட பகுதிகளில் ஆற்று நீர் ஆவியாவதன் மூலம் இவ்வாறான நீர் நிலைகளை அடையு முன்னரே வரண்டு விடுவது உண்டு. சில ஆறுகள் மண்ணுக்கு ஊடாகவோ, ஊடுசெல்லவிடும் பாறைகளூடாகவோ நிலத்துக்குள் உறிஞ்சப்படுவது உண்டு. இது நிலத்தடி நீராகத் தங்கிவிடுகிறது. தொழிற்சாலைகளுக்கும், நீர்ப்பாசனத் தேவைகளுக்கும் பெருமளவில் நீரை எடுப்பதனாலும் அதன் இயற்கையான முடிவிடத்தை அடையுமுன்பே ஆறு வற்றிவிடுவதையும் காணலாம். ஆற்றுக்கு நீரை வழங்கும் பகுதி அல்லது ஆற்றினால் வடியச் செய்யப்படும் நிலப்பகுதி வடிநிலம் அல்லது நீரேந்து பகுதி எனப்படுகின்றது. நில அமைப்பு ஆற்றில் செல்லும் நீர் பொதுவாக அதன் கால்வாய்ப் பகுதியூடாகவே செல்கிறது. இது இரண்டு கரைகளுக்கு இடைப்பட்ட ஆற்றுப்படுகையினால் ஆனது. பெரிய ஆறுகளில் இந்த வாய்க்கால் பகுதிக்கு வெளியே வெள்ளப்பெருக்குச் சமதளம் (Flood plains) இருப்பதுண்டு. இது வெள்ளப்பெருக்குக் காலங்களில் ஆற்றுநீர் வாய்க்கால் பகுதிக்கு வெளியே செல்லும்போது உருவாவது. வெள்ளப்பெருக்குச் சமதளங்கள் ஆற்றின் கால்வாய் அளவிலும் மிகப் பெரிதாக இருப்பதும் உண்டு. பெரும்பாலும் ஆறுகள் ஒரு வழியிலேயே செல்லுகின்றன. ஆனால் சில ஆறுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட பல வழிகளில் சென்று பின்னல் ஆறுகளாக அமைவதும் உண்டு. பெரிய அளவிலான இவ்வாறான ஆறுகள், நியூசிலாந்தின் தெற்குத் தீவு போன்ற, உலகின் சில பகுதிகளிலேயே காணப்படுகின்றன. பின்னல் ஆறுகள், அரிப்புச் சமவெளிகளிலும், சில ஆற்றுக் கழிமுகங்களிலும் அமைவதுண்டு. பாயும் ஆறு ஒரு ஆற்றல் மூலமாகும். இதனால் இவ்வாற்றல் ஆற்றின் வாய்க்கால் மீது தாக்கி அதன் வடிவத்தை மாற்றுகிறது. பிராமின் விதிப்படி (Brahm's law) ஆற்றினால் அடித்துச் செல்லப்பக்கூடிய பொருளொன்றின் திணிவு ஆற்றின் வேகத்தின் ஆறாம் அடுக்குக்கு விகிதசமம் ஆகும். இதனால், ஆற்றின் ஓட்ட வேகம் இரண்டு மடங்காக அதிகரிக்கும்போது, 64 மடங்கு அதிக திணிவுள்ள பொருளை அடித்துச் செல்லக்கூடிய ஆற்றலைப் பெறுகிறது. மலைப்பாங்கான கடினப்பாறை வலயங்களில் இதன் காரணமாக கடினப் பாறைகள் ஊடாக அரிப்பு வாய்க்கால்கள் (erosion channel) ஏற்படுவதோடு, பெரிய பாறைகள் உடைந்து மணலும், சிறு கற்களும் உருவாவதைக் காணலாம். ஆறுகள் ஓடும் பாதையின் இடைப் பகுதிகளில் அது சமதளங்களில் ஓடும்போது, கரைகள் அரிக்கப்படுவதனால் வளைவுகள் ஏற்படுவதுடன், இத்தகைய உட்புற வளைவுகளில் படிவுகளும் ஏற்படுகின்றது. ஆற்றுப் பாதைகள் தடம் (loop) போல் அமையும் இடங்களில் சில வேளைகளில் ஆறு குறுக்கே ஓடி இணைந்து ஆற்றுப் பாதையின் நீளத்தைக் குறைப்பதுடன் இலாட வடிவ ஏரியையும் உருவாக்கும். வகைப்பாடு ஆறுகளைக் கற்பனை செய்து பார்ப்பதற்குக் கீழ் காட்டப்படும் வகைப்பாடு உதவும் எனினும், வேறு பல காரணிகளையும் கருத்தில் கொள்ளவேண்டும். ஓட்டப்பாதையின் சரிவு புவிமேலோட்டு அசைவுகளில் தங்கியுள்ளது எனினும் ஓடும் நீரின் அளவு, காலநிலையிலும், படிவின் அளவு, நிலவியல் அமைப்பு, சரிவு என்பவற்றிலும் தங்கியுள்ளன. இளமை ஆறு இது கூடிய சரிவைக் கொண்டதும், குறைந்த அளவு துணையாறுகளைக் கொண்டதும், வேகமாக ஓடுவதுமான ஆறு ஆகும். இத்தகைய ஆறுகள் அகலமாக அரிப்பதிலும் ஆழமாக அரிக்கின்றன. (எகா: பிராசோஸ் ஆறு, டிரினிட்டி ஆறு, எப்ரோ ஆறு) முதிர்ந்த ஆறு இளமை ஆறுகளிலும் குறைந்த சரிவு கொண்ட இது குறைவான வேகத்தில் ஓடுவது. இதன் வாய்க்கால்கள் அகலமாக அரிக்கப்படுகின்றன. இவை அதிகமான துணையாறுகளைக் கொண்டிருப்பதுடன் இளம் ஆறுகளைவிடக் கூடிய நீர் வரத்தைக் கொண்டிருக்கும். (எகா: மிசிசிப்பி ஆறு, சென். லாரன்ஸ் ஆறு, தனூப் ஆறு, ஓகியோ ஆறு, தேம்ஸ் ஆறு) பழைய ஆறு குறைந்த சரிவைக் கொண்டிருப்பதுடன், குறைவான அரிப்பு ஆற்றலையும் கொண்டிருக்கும். வெள்ளச் சமவெளிகளைக் கொண்டிருப்பது இவற்றின் சிறப்பு இயல்பாகும். (எகா: ஹுவாங் ஹே ஆறு, கங்கை ஆறு, டைகிரிஸ் ஆறு, இயுபிரட்டீஸ் ஆறு, சிந்து நதி, நைல் ஆறு) புத்திளமை ஆறு புவிமேலோட்டு அசைவினால் சரிவு கூடுதலான ஆறு. ஆறுகளின் இன்றியமையாமை உலகின் பெரும் நாகரிகங்கள் ஆறுகளின் கரைகளிலேயே அமைந்துள்ளன. ஆறுகள் மனிதர்களுக்கு குடிநீர்த் தேவையை மட்டுமன்றி அவர்களது வாழ்வியல் தேவைகளையும் நிறைவு செய்கின்றன. வேளாண்மை, பல வகையான தொழிற்சாலைகள் (எ.கா: காகித ஆலை) ஆற்று நீரையே நம்பியிருக்கின்றன. தற்காலத்தில் ஆற்றோட்டத்தைப் பயன்படுத்தி மின்சாரமும் உருவாக்கப்படுகிறது. ஆறுகளின் பட்டியல் உலகின் பத்து நீளமான ஆறுகளின் பட்டியல் நைல் (6,690 கி.மீ) அமேசான் (6,452 கி.மீ) மிசிசிப்பி-மிசூரி (6,270 கி.மீ) யெனிசே-அங்காரா (5,550 கி.மீ) ஓப்-இர்டிஷ் (5,410 கி.மீ) ஹுவாங்-ஹ (மஞ்சள் ஆறு) (5,464 கி.மீ) ஆமுர் (4,410 கி.மீ) காங்கோ (4,380 அல்லது 4,670 கி.மீ) லெனா (4,260 கி.மீ) புகழ்பெற்ற ஆறுகள் அமேசான் – உலகில் பெரியதும், நீளமானதுமான ஆறு (கனவளவில் (கன.மீ./செ)[1] அமு டாரியா – மத்திய ஆசியாவின் மிக நீளமான ஆறு. அமுர் – கிழக்கு சைபீரியாவினதும், ரஷ்ய, சீன எல்லைப் பகுதியினதும் முதன்மையான ஆறு. ஆர்கன்சாஸ் – மிஸ்ஸிசிப்பி ஆற்றின் முக்கிய துணை ஆறு. ஆர்னோ – புளோரன்ஸ் நகரினூடாக ஓடும் ஆறு. போய்னே - அயர்லாந்தின் கிழக்குக் கரையின் முதன்மை ஆறு. பிரம்மபுத்திரா – வடகிழக்கு இந்தியா, வங்காளதேசம், திபேத்து ஆகியவற்றின் முக்கிய ஆறு. சாவோ பிராயா – தாய்லாந்தின் முதன்மை ஆறு. கிளைய்ட் ஆறு – கிளாஸ்கோ நகரூடாக ஓடும் ஆறு. கொலராடோ – ஆர்ஜெண்டீனா கொலராடோ – தென்மேற்கு அமெரிக்காவின் முதன்மை ஆறு. கொலம்பியா – வடகிழக்குப் பசிபிக்கின் முக்கிய ஆறு. காங்கோ – மத்திய ஆபிரிக்காவின் முதன்மை ஆறு. தாமோதர் - இந்தியாவின் சோட்டாநாக்பூர் மேட்டுநிலப் பகுதியின் முதன்மையானதும், ஹூக்லி ஆற்றின் முக்கிய துணை ஆறும். தன்யூப் – மத்திய மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவின் முதன்மை ஆறு. டெட்ரோயிட் - ஐக்கிய அமெரிக்கா, கனடா ஆகியவற்றுக்கு இடையிலான எல்லையில் அமைந்திருப்பது. நீப்பெர் (Dnieper) – ரஷ்யா, பெலாரஸ், உக்ரேன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முக்கிய ஆறுகளில் ஒன்று. நீஸ்ட்டர் (Dniester) – கிழக்கு ஐரோப்பாவின் முக்கிய நதிகளுள் ஒன்று. எப்ரோ – வடமேற்கு ஸ்பெயினில் ஓடும் ஒரு ஆறு. எல்பே – ஹம்பர்க் நகரின் ஊடாக ஓடும், ஜெர்மனியின் முக்கிய ஆறுகளில் ஒன்று. இயூபிரட்டீஸ் – அனதோலியா (துருக்கி) மற்றும் மெசொப்பொத்தேமியா (ஈராக்)ஆகியவற்றைச் சேந்த முக்கியமான இரட்டை ஆறுகளில் ஒன்று. கங்கை – இந்தியா வங்காளதேசம் ஆகியவற்றில் ஓடும் முக்கிய ஆறு. கோதாவரி – தென்னிந்தியாவின் முக்கிய ஆறு. ஹான் – கொரியாவின் சியோலினூடாக ஓடும் ஆறு. ஹெல்மாண்ட் – ஆப்கனிஸ்தானின் முக்கிய ஆறு. ஹூக்லி - கங்கையின் முக்கிய துணை ஆறு. கொல்கத்தாவினூடாக ஓடுகிறது. ஹட்சன் – நியூயார்க்கின் முக்கிய ஆறு. சிந்து ஆறு – இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் ஓடும் முக்கிய ஆறு. ஜேம்ஸ் – ஐக்கிய அமெரிக்காவிலுள்ல வெர்ஜீனியாவின் முக்கிய ஆறு. ஜோர்தான் ஆறு – இஸ்ரேல், ஜோர்தான், மேற்குக்கரை ஆகிய பகுதிகளில் ஓடும் முக்கிய ஆறு. கருண் – தென் ஈரானில் ஓடும் கப்பற் போக்குவரத்துக்கு உதவும் ஆறு. காவிரி – தென்னிந்தியாவின் முக்கிய ஆறு. லேனா ஆறு – வடகிழக்கு சைபீரியாவின் முக்கிய ஆறு. லிஃபே ஆறு - அயர்லாந்தின் டப்லின் நகரூடாக ஓடும் ஆறு. லுவார் ஆறு – பிரான்சின் உள்ள மிக நீளமான ஆறு, வன உயிர் பாதுகாப்பில் முக்கிய இடம் வகிக்கும் ஒரு இயற்கை வளம். மெக்கின்சி ஆறு – கனடாவின் நீளமான ஆறு மேக்தலீனா ஆறு – கொலம்பியாவின் முதன்மையான ஆறு மைன் – செர்மனியில் பாயும் ஓர் ஆறு. பிராங்க்ஃபுர்ட் நகரத்தினுள் புகுந்து செல்கிறது மேக்காங் – தென்கிழக்கு ஆசியாவின் முதன்மையான ஆறு மெர்சி ஆறு – லிவர்பூல் அருகில் உள்ளது. மியூஸ் ஆறு – பிரான்சு, பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து வழியாகப் பாயும் ஆறு மிசிசிப்பி ஆறு – நடு, தெற்கு ஐக்கிய அமெரிக்காவின் முதன்மை ஆறு மிசௌரி ஆறு – இல் முக்கியமான ஒரு ஆறு Monongahela River – Pittsburgh ஐயும் PA ஐயும் இணைக்கும் ஆறு முர்ரே ஆறு – தென்கிழக்கு ஆஸ்திரேலியாவின் முதன்மையான ஆறு. நயாகரா ஆறு – ஈரீ ஏரி க்கும் ஒண்டாரியோ ஏரி க்கும் இடையில் ஓடும் ஆறு. இது தனது பாதையில் செங்குத்துச் சரிவில் பாயும் இடத்தில் இது நயாகரா அருவி எனப்படுகின்றது. நைஜர் ஆறு – மேற்கு ஆப்பிரிக்காவின் முதன்மை ஆறு. நைல் – எகிப்து மற்றும் வடகிழக்கு ஆப்பிரிக்காவின் முதன்மை ஆறு. ஓப் ஆறு – சைபீரியாவின் மிகப்பெரிய ஆறு. ஓடர் ஆறு – நடு ஐரோப்பாவில் உள்ள பெரிய ஆறு. ஓகியோ ஆறு – மிசிசிப்பி ஆறு, ஆப்பலேச்சிய மலைத்தொடர் க்கிடையிலான ஆறு ஒரினோக்கோ – வெனிசுவேலாவின் முதன்மை ஆறு. பரனா ஆறு – தென் அமெரிக்கா விலுள்ள நீளமான, அதி முக்கியமான ஆறுகளில் ஒன்று. இது பிரேசில், பரகுவை, அர்கெந்தீனா ஊடாகப் பாய்கின்றது. போ ஆறு - இத்தாலி்யின் முக்கிய ஆறு. ரைன் – இந்த ஆறு மேற்கு ஐரோப்பா விலுள்ள நீளமானதும், மிக முக்கியமானதும், கப்பல்கள் செல்லக்கூடியளவு ஆழமானதும் அகலமானதுமான ஆறுகளில் ஒன்றாகும். இது சுவிட்சர்லாந்து இலிருந்து, நெதர்லாந்து ஊாடகப் பாய்ந்து, லீக்டன்ஸ்டைன், ஆசுதிரியா, செருமனி, பிரான்சு ஆகிய நாடுகளுடன் இற்கையான எல்லையைக் கொண்டுள்ளது. ரோன் – இந்த ஆறு மேற்கு ஐரோப்பா விலுள்ள நீளமானதும், மிக முக்கியமானதும், கப்பல்கள் செல்லக்கூடியளவு ஆழமானதும் அகலமானதுமான ஆறுகளில் ஒன்றாகும். இது சுவிட்சர்லாந்து இலிருந்து, பிரான்சு க்குச் செல்கின்றது. ரியோ டி லா பிலாட்டா – உலகின் மிக அகலமான அறு. ரியோ கிராண்டே – மெக்சிகோவுக்கும் டெக்சஸ்-க்கும் எல்லை சபர்மதி ஆறு – இந்தியாவின் அகமதாபாத் வழியாக ஓடும் ஆறு. புனித லாரன்சு ஆறு – Great Lakes களை வடிகட்டி வரும் ஆறு. புனித மேரி ஆறு – அமெரிக்க ஐக்கிய நாடு க்கும், கனடா க்குமான எல்லையாகவும், சுப்பீரியர் ஏரி யை உரோன் ஏரியுடன் இணைப்பதாகவும் அமைவதுடன், உலகின் மிகவும் பரபரப்பான Soo Locks எனப்படும் நீர்ப் போக்குவரத்தைக் கொண்டுள்ளது. சாவோ பிரான்சிஸ்கோ ஆறு – பிரேசில் இலுள்ள மிக நீண்ட ஆறு சவா ஆறு – சுலோவீனியா, குரோவாசியா, பொசுனியா எர்செகோவினா (இந் நாட்டின் வட எல்லையாக அமைந்துள்ளது), செர்பியா ஆகிய நான்கு நாடுகளின் ஊடாகப் பாயும் ஆறு. அதனால் பழைய யுகோசுலாவியா வின் அடையாளமாகக் காணப்படுகின்றது. சவான்னா ஆறு –தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்காவின் முக்கியமான ஒரு ஆறு. ஜோர்ஜியா (மாநிலம்), தென் கரொலைனா]] ஆகியவற்றுக்கிடையேயான எல்லையின் பெரும்பகுதியாக அமைந்துள்ளது. சீன் – பிரான்சின் பாரிசு நகர் வழியே ஓடும் ஆறு. செகுரா (Segura) – தென்கிழக்கு ஸ்பெயினில் உள்ள ஓர் ஆறு. சேத்தி (Seti) – நேபாளத்தில் உள்ள ஆறு. செவர்ன் ஆறு – பெரிய பிரித்தானியா விலுள்ள மிக நீளமான ஆறு. ஷன்னன் ஆறு (Shannon) - அயர்லாந்தில் உள்ள நீளமான ஆறு. சாட்-அல்-அராப் – ஈரான் க்கும், ஈராக் க்கும் எல்லையா அமைந்திருக்கும் ஆறு. சினானோ காவா – ஜப்பானில் உள்ள நீளமான ஆறு. பாம்பா ஆறு – கொலம்பியா ஆற்றின் முக்கியமான துணையாறுகளுள் ஒன்று. தாகுஸ் – ஐபீரிய மூவலந்தீவில் உள்ள நீளமான நதி. டே ஆறு (Tay) – ஸ்காட்லாந்தின் மிகப்பெரிய ஆறு. டென்னெசி – டென்னிசி, Northern Alabama, கென்டக்கி யின் கிழக்கு / மேற்கினூடாக ஓடும் மிசிசிப்பியின் முக்கியமான ஒரு கிளையாற்றுச் சந்தி தேம்ஸ் ஆறு – லண்டன் நகரத்தின் ஊடாக ஓடும் இங்கிலாந்தின் தலையாய ஆறு. டைபெர் (Tiber) – ரோமின் ஊடாகப் பாயும் ஆறு. தியெத் (Tietê) – சாவோ பாவுலோ ஊடாக கண்டத்தின் நடுப்பகுதியை நோக்கி ஓடும் ஆறு. டைகிரிஸ் – அனத்தோலியா (துருக்கி), மெசொப்பொத்தேமியா (ஈராக்) ஆகியவற்றின் மிக முக்கியமான ஒரு ஆறு. டோன் (Tone) – சப்பானின் நீளமான ஆறுகளில் ஒன்று. விஸ்துலா – போலந்தின் முதன்மையான ஆறு. வித்தாவா – பிராகா வழியாகப் பாயும் ஆறு. வொல்கா – ரசியாவின் முதன்மையானதும் ஐரோப்பாவின் நீளமானதுமான ஆறு. வோல்ட்டா – மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பெரிய ஆறு. வாபாசு ஆறு – இந்தியானாவின் தலையாய ஆறு. யாங்சே – சீனாவிலும் ஆசியாவிலும் மிகவும் நீளமான ஆறு. மஞ்சள் – சீனாவின் முதன்மையான ஆறுகளில் ஒன்று. யெனிசெய் ஆறு – சைபீரியாவில் உள்ள ஒரு பெரிய ஆறு. யூகோன் – அலாஸ்காவின் முதன்மையான ஆறு. சாம்பசி ஆறு – தென்கிழக்கு ஆப்பிரிக்காவின் முதன்மையான ஆறு. நொய்யல் - தமிழகத்தில் கொங்கு மண்டலத்தின் முதன்மையானது மேலும் பார்க்க கடல் ஏரி அணை மேற்கோள்கள் * பகுப்பு:நீர்நிலைகள் en:Great Plains
ரைன் ஆறு எந்த கண்டத்தில் உள்ளது?
ஐரோப்பா
6,283
tamil
2a3eaf502
அமேசான் ஆறு (Amazon River) (இலங்கை வழக்கு: அமேசன் ஆறு   பொதுவாக சுருக்கமாக அமேசான் (US: /ˈæməzɒn/ or UK: /ˈæməzən/; Spanish மற்றும் Portuguese: Amazonas) தென் அமெரிக்க கண்டத்திலுள்ள ஒரு ஆறாகும். இது உலகின் இரண்டு நீளமான ஆறுகளில் ஒன்று. மற்றொன்று நைல் ஆறு. அமேசான் ஆறு கொணரும் நீரின் அளவில் உலகின் பெரிய ஆறாகும்.   மற்றும் சில ஆசிரியர்களின் கூற்றின்படி, உலகின் நீண்ட ஆறாகும். இதன் அளவு மிசிசிப்பி, நைல், மற்றும் யாங்சே ஆகிய நதிகளின் மொத்த அளவை விட அதிகம். இதன் நீளம் 6400 கி.மீ.கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறாகும். இதன் மொத்த அளவு அடுத்த எட்டு பெரிய ஆறுகளின் நன்னீரின் அளவை விட அதிகமாகும். இந்த ஆற்றின் ஓட்டம் பலமுறை மாறியுள்ளது. முதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த இந்த ஆறு அண்டெஸ் மலையின் வளர்ச்சியினால் கிழக்கு நோக்கிப் பாய்கிறது. அமேசான் ஆறு எந்த இடத்திலும் பாலம் மூலமாக கடக்கப்படுவதில்லை. இதற்கு காரணம் இதன் அகலம் அல்ல, தற்கால பொறியாளர்களால் இதன் குறுக்கே பாலம் கட்டமுடியும். எனினும் ஆற்றின் பெரும் பகுதி வெப்பமண்டல மழைக்காடுகள் வழியாக பாய்வதாலும் அங்கு சில நகரங்களே உள்ளதாலும் பாலத்தின் தேவை ஏற்படவில்லை. பல்வேறு அளவைகளின் படி அமேசான் ஆறே உலகில் பெரியதாக இருந்தாலும் நீளத்தை பொறுத்தமட்டில் இது நைல் ஆற்றைவிட சிறிது குறைவு என்பது பெரும்பாலான புவியிலாளர்களின் கணிப்பு. எனினும் இதை பிரேசில் மற்றும் பெரு நாட்டை சேர்ந்த சில அறிவியலாளர்கள் ஏற்க மறுக்கிறார்கள். இந்த ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு ஏறத்தாழ ஒரு விநாடிக்கு 209,000 கன மீட்டர்—தோராயமாக ஆண்டுக்கு 6,591 கியூபிக் கிலோமீட்டர் ஆகும், இது இதற்கடுத்த ஏழு மிகப்பெரிய ஆறுகள் வெளியேற்றும் ஆறுகளைவிட கூடுதலாக உள்ளது- உலகின் ஆற்றில் கலக்கும் மொத்த ஆறுகளின் நீரில் அமேசானின் பங்கு 20% ஆகும்.[1]  அமேசான் கால்வாய் உலகின் மிகப்பெரிய வடிகால் பகுதி ஆகும், இது சுமார் 7,050,000 சதுர கிலோமீட்டர் (2,720,000 சதுர மைல்) பரப்பளவில் உள்ளது. அமேசான் பாயும் நாடுகள் இதன் தலைத் துணை ஆறுகளின் உருவாக்கம் பெரு, எக்குவடோர் நாடுகளில் இருந்தாலும், இதன் பெரும்பாலான ஆற்று படுக்கை பகுதி பிரேசில் நாட்டில் அமைந்துள்ளது.Đ அமேசான் ஆறு ஆயிரத்திற்கும் மிகுதியான துணையாறுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் 17 ஆறுகள் 1000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டன. வடிநிலம் அமேசானின் வடிகால் பகுதியே உலகின் மிகப்பெரியதாகும். இது தோராயமாக தென் அமெரிக்காவின் பரப்பில் 40 விழுக்காடு ஆகும். இதன் ஒரு நீர்பிடிப்பு பகுதி உள் ஆண்டிய மேட்டுநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி பசிபிக் பெருங்கடலுக்கு அருகில் உள்ளது. அமேசான் ஆறினால் அட்லாண்டிக் பெருங்கடலில் சேரும் நீரின் அளவு மிக அதிகமாகும். மழைக்காலத்தில் வினாடிக்கு 300,000 கன மீட்டர் அளவு வரை நீர்வரத்தும் 1973-1990 வரையான காலப்பகுதியில் தோராயமாக 209,000 கன மீட்டர் அளவும் நீர்வரத்து இருந்தது. அமேசான் வடிநிலமானது தென் அமெரிக்காவின் மற்றொரு பெரிய ஆறான ஓரினோகோவின் வடிநிலத்துடன் காசிகியுயர் கால்வாய் மூலம் இணைக்கப்படுகிறது. அதனால் இதை இயற்கையாக அமைந்த நீர் இணைப்பு என்பார்கள். கால்வாய் என்று சொன்னாலும் காசிகியுயர் என்பது மேல் ஓரினோ ஆற்றின் கிளை ஆறாகும். இது தெற்காக ஓடி அமேசானின் துணை ஆறாகிய ரியோ நீக்ரோ ஆற்றுடன் கலக்கிறது. தோற்றம் பெரு, ஈக்வடார் நாடுகளில் அமேசான் ஆறு பல ஆற்றுத்தொகுதிகள் உடைய பெரிய ஆற்று அமைப்பாகும். பல நேரடியாக மரானான், உகயாலி போன்ற ஆறுகளில் கலக்கிறது. மரானா, பாஸ்டாச, நுகுரே போன்ற பல ஆறுகள் முதன்மை அமேசான் ஆற்றில் கலக்கின்றன. பெரு நாட்டின் ஆண்டீய மலைத்தொடரில் உள்ள பனி மூடிய நவாடோ மிசிமி சிகரத்தின் பனிஏரியில் அமேசான் உருவாவதாக ௧௯௯௧, 20012007ம் ஆண்டுகளில் நிறுவப்பட்டது. இது டிடிகாகா ஏரிக்கு மேற்கிலும் லிமாவுக்கு தென் கிழக்கிலும் உள்ளது. நவாடோ மிசிமியிலிருந்து வரும் நீரானது குபிராடாஸ் கார்குசன்டா மற்றும் அபாசேடா ஆறுகளில் கலக்கிறது இவை உகயாலி ஆற்றின் துணை ஆறாகிய ரியோ அபுரிமாக் உடன் இணைகிறது. உகயாலி மரானான் உடன் இணைந்து முதன்மை அமேசான் ஆற்றை உருவாக்குகிறது. இந்த இடத்தையே பெரும்பாலான புவியியலாளர்கள் முதன்மை அமேசான் உருவாகும் இடமாக கருதுகிறார்கள். இங்குள்ள ஆற்றை பிரேசிலில் சோலிமோஸ் டாஸ் ஆகுஅஸ் என அழைக்கிறார்கள். ஆயிரம் மைல்கள் கடந்த பின் கரிய நிறமுடைய நீரினை உடைய ரியோ நீக்ரோ மண் நிறமுடைய அமேசானுடன் இணைகிறது. ஆறு மைல் வரையில் இரண்டும் கலக்காமல் அடுத்தடுத்து ஓடுகின்றன. வெள்ளம் அனைத்து அமேசான் துணை ஆறுகளிலும் ஓரே சமயத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதில்லை. பெரும்பாலானவற்றில் நவம்பர் மாதத்தில் வெள்ளம் ஏற்படத்துவங்கி ஜூன் வரை நீடிக்கும். ரியோ நீக்ரோவில் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் வெள்ளம் ஏற்பட துவங்கி ஜூன் மாத வாக்கில் வெள்ளம் குறையத்தொடங்கும். மெடிரிரா மற்ற அமேசான் துணை ஆறுகளில் வெள்ளம் ஏற்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே வெள்ளம் ஏற்பட்டு குறையந்துவிடும். மழைக்காலத்தில் ஆற்றின் ஆழம் சராசரியாக 40 அடியாகும். முதன்மை ஆறு தோராயமாக ஒன்று முதல் ஆறு மைல் அகலம் உடையது. பெரிய கடலில் செல்லும் கலங்கள் இதில் மனவுஸ் வரை செல்லலாம். சிறிய 3000 டன் அல்லது 9000 டன் எடையுடைய கலங்கள் மற்றும் கலத்தின் கீழ் பாகம் நீர் நிலையிலிருந்து 18 அடி வரை இருந்தால் அவை ஆற்றில் 3600 கிமீ வரை செல்லலாம். கழிமுகம் இதன் கழிமுகத்தின் அகலம் தொடர்பாக நிபுணர்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது அதற்கு காரணம் கழிமுகத்தின் புவியியல் அமைப்பாகும். பாரா ஆறு அமேசானுடன் சேர்த்து கணக்கிடப்படுகிறது. சில முறை பாரா ஆறு டோகன்டின்ஸ் (Tocantins) ஆற்றின் தனிப்பட்ட கீழ் பகுதியாக கணக்கிடப்படுகிறது., தனிப்பட்ட பாரா ஆற்றின் கழிமுகம் பெரியதாகும். பாரா மற்றும் அமேசான் ஆறுகள் பல்வேறு ஆற்று கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு இடையில் மரஜா (Marajó)தீவு அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுவிட்சர்லாந்து நாட்டு அளவுக்கு பெரியதாகும். காட்டு உயிர்கள் உலகின் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு அமேசான் காடுகளில் வசிக்கின்றன. அமேசான் ஆற்றுப்படுகையும் மழைக்காடுகளும் 5.4 மில்லியன் சதுர கி.மீ (2.1 மில்லியன் சதுர மைல்) க்கும் மேலானதாகும். அமேசான் ஆற்றில் 3,000 க்கும் அதிகமான மீன் வகைகள் கண்டறியப்பட்டுள்ளது. அமேசான் ஆற்று டால்பின் அமேசான் மற்றும் ஒரினோகோ ஆற்றுப் பகுதியில் வசிக்கிறது. இதுவே ஆற்று டால்பின் வகைகளில் மிகப்பெரியதாகும். இது ௦௦ அடி வரை வளரக்கூடியது. இங்கு அதிகளவில் பிரன்கா என்ற மீன் வகை காணப்படுகிறது. இவை கூட்டமாக வாழும். இவை மாடு, மான் போன்ற உயிரினங்களை தாக்ககூடியவை. மனிதர்களும் தாக்கப்பட்டுள்ளார்கள். எனினும் சில வகை பிரன்காக்களை மனிதர்களை தாக்குகின்றன. குறிப்பாக சிவப்பு வயிற்று பிரான்கா மனிதரை தாக்கும் வகையாகும். அனகோண்டா வகை பாம்புகள் அமேசான் படுகையின் கரையில் காணப்படுகிறது. இது பெரிய பாம்பினங்களில் ஒன்றாகும். இவை பெரும்பாலும் நீரிலேயே வாழ்கின்றன. இதன் மூக்கு பகுதி மட்டும் நீர் மட்டத்துக்கு வெளியே இருக்கும். அமேசான் மழைக்காடுகள் முதன்மைக் கட்டுரை: அமேசான் மழைக்காடு அண்டெஸ் மலைத்தொடரின் கிழக்கில் இருந்து அமேசான் மழைக்காடு தொடங்குகிறது. இதுவே உலகின் மிகப்பெரிய மழைக்காடும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். இது உலகில் வெளியடப்படும் கார்பன்-டை-ஆக்சைடு வளியை பெருமளவில் உட்கொள்ளும் திறன் வாய்ந்தது. இந்த மழைக்காடுகளைக் காப்பது இந்நாட்களில் முக்கிய விடயமாக இருக்கிறது. மிகவும் ஈரப்பதம் கொண்ட அமேசான் படுகை இம்மழைக்காடுகளுக்கு அரணாக விளங்குகிறது. இப்பகுதியில் அமேசான் ஆறும் இதன் நூற்றுக்கணக்கான துணையாறுகளும் மிகவும் மெதுவாக ஓடி பின் கடலில் கலக்கின்றன. உயிரியல் வளம் மிக்க இம்மழைக்காடு, 25 இலட்சம் வகையான பூச்சியினங்களுக்கும் ஆயிரக்கணக்கான தாவர வகைகளுக்கும் ஏறத்தாழ இரண்டாயிரம் பறவைகள், பாலூட்டிகள் ஆகியவற்றிற்கும் இருப்பிடமாக விளங்குகிறது. உலகின் மொத்தப் பறவையினங்களில் ஐந்தில் ஒரு பகுதி இக்காடுகளில் வசிக்கின்றன. அமேசான் காடுகள் பெரும்பாலும் பிரேசில் நாட்டில் அமைந்துள்ளதால், அந்நாடு உல்கிலே உருசியாவிற்கு அடுத்த இரண்டாவது பெரிய காடு வளத்தை (பரப்பளவில் 4,776,980 ச.கி.மீகள்)கொண்டதாக உள்ளது. மேற்கோள்கள் பகுப்பு:தென் அமெரிக்க ஆறுகள்
அமேசான் ஆற்றின் நீளம் எவ்வளவு?
6400 கி.மீ.கள்
466
tamil
80452bc4d
கால்வாய் எனப்படுவது நீர்ப்பாசனத்துக்காக கால்வாய்கள், கப்பல் போக்குவரத்துக்கான கால்வாய்கள் என இருவகைப்படும். போக்குவரத்துக்கான கால்வாய்கள் செயற்கையாக அமைக்கப்படும் நீரிணைகள் ஆகும். இரு கடற்பகுதிகள், ஆற்றுப் பகுதிகள், அல்லது ஏரிப் பகுதிகளை இணைப்பதாக வெட்டப்படும் இவை கடற்போக்குவரத்துத் தூரத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு வெட்டப்படுபவை ஆகும். சுயஸ் கால்வாய், பனாமாக் கால்வாய் போன்றன கப்பற் போக்குவரத்துக்காக வெட்டப்பட்ட குறிப்பிடத்தக்க கால்வாய்களாகும். வரலாறு கால்நடை விலங்கால் செலுத்தப்படும் வண்டி போக்குவரத்து திறன் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் தான் இருந்தது. கோவேறு கழுதை பூட்டப்பட்ட வண்டியில் அதிகபட்சம் 8 டன் [1] 250 pounds (113kg) என்ற அளவில் உள்ள எடைகொண்ட சரக்குப் பொருட்களை சில நாட்களுக்கோ அல்லது வாரங்களுக்கோ சுமக்க முடியும்.[1] இது மிகச் சிறிய இடைவெளிகளுக்கும், காலத்திற்கும் பொருத்தமானது தவிர, வண்டிகள் செல்ல சாலைகள் தேவை. இதற்கு பதிலாக பழங்காலத்தில் எளிமையான, மலிவான போக்குவரத்திற்கு கால்வாய் பொருத்தமானதாக இருந்திருக்கிறது. பண்டைய வரலாறு அறியப்பட்ட பழமையான கால்வாய்களில் முதன்மையானது நீர்ப்பாசனக் கால்வாய்கள், இவைகள் பண்டைய மெசொப்பொத்தேமியாவில் சுமார் கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது, இப்போது ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் உள்ளது. சிந்து சமவெளி நாகரீகம், பண்டைய இந்தியாவில், கிர்னார் என்னும் இடத்தில் கட்டப்பட்ட நீர்த்தேக்கங்கள் உள்ளிட்ட நவீன பாசன மற்றும் சேமிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டது.[2] எகிப்து நாட்டில் உள்ள கால்வாய்கள் குறைந்தபட்சம் பெப்பி I மேரி]] (கி.மு 2332-2283 ஆட்சி காலத்தில்) அஸ்வான் அருகிலுள்ள நைல் மீது கடந்து செல்ல ஒரு கால்வாய் கட்டினார்.[3] பண்டைய சீனா வரலாற்றில், நதிப் போக்குவரத்திற்கான பெரிய கால்வாய்கள் கி.மு 481-221 வரையான காலத்தில் உருவாக்கப்பட்டது. பண்டைய சரித்திர ஆசிரியரான சிவா கியான் கூற்றுப்படி, மிக நீளமான கால்வாய் ஹாங்கா காௗ என்னும் இடத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கால்வாய் சாங், ஜாங், சென், காய், காவ் மற்றும் வேய் போன்ற பகுதிகளை இனைத்திருக்கிறது.[4] இன்றும் உலகின் மிக நீளமான கால்வாய், மற்றும் மிக மிக உயரமான ஒரு கால்வாய்களில் மிக நீண்ட கால்வாய் சீனாவின் பெரும் கால்வாய் இருந்து வருகிறது. இன்றும் பயன்பாட்டில் உள்ளது.[5] கிரேக்க பொறியியலாளர்கள் கி.மு.3 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே கால்வாய் தடுப்புகளைப் முதன்முதலாக பயன்படுத்தி இருந்தனர், இந்தத் தடுப்புகள் மூலம் அவர்கள் பண்டைய சூயஸ் கால்வாயில் நீர் ஓட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்தனர்.[6][7][8] முக்கியத்துவம் வரலாற்று ரீதியாக கால்வாய்கள் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி, மற்றும் ஒரு நாகரிகத்தின் வளர்ச்சி ஆகியவற்றிற்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 1855 ஆம் ஆண்டில் லேஹீ கால்வாய் 1.2 மில்லியன் டன் சுத்தமான எரியும் அனல்மின் நிலக்கரி சுரங்கத்தை நடத்தியது; சுமார் ஒரு நூற்றாண்டிற்கு செயல்பட்டு வந்த இந்தக் கால்வாய் 1930 களில் இதை உருவாக்கிய் நிறுவனத்தால் இதன் சேவை நிறுத்தப்பட்டது. நமது நவீன காலத்தில் சில கால்வாய்கள் இன்னும் செயல்படுகின்றன, அவை பொருளாதாரத்திற்குத் தேவையான உந்து சக்தியாக இருந்திருக்கிறது, உண்மையில் நகரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்குதல் ஆகியவற்றிற்கு கால்வாய்களின் தேவை இருந்தது. நிலக்கரி மற்றும் தாதுக்கள் போன்ற மொத்த மூலப்பொருட்களின் போக்குவரத்து நீர் போக்குவரத்து இல்லாமல் கடினமானதாகவும் பிற போக்குவரத்து செலவை ஒப்பிடும்போது ஓரளவு குறைவாகவும் இருக்கிறது. 17 மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் போது அதிகரித்த இயந்திரமயமாக்கல் சுழற்சியின் விளைவாக தொழில்துறை வளர்ச்சிகள் மற்றும் புதிய உலோகங்கள் இத்தகைய மூலப்பொருட்களுக்கு எரிபொருளாக கால்வாய்கள் செயல்பட்டது. புதிய ஆராய்ச்சி துறைகளில், புதிய தொழிற்சாலைகள் மற்றும் பொருளாதார முன்னேற்றதிற்கு வழிவகுத்தது, எந்தவொரு தொழில்மயமான சமுதாயத்திற்கும் வாழ்க்கை தரத்தை உயர்த்த கால்வாய்களின் தேவை முக்கியமானதாகும். பெரும்பாலான கப்பல் கால்வாய்கள் உள்ளிட்ட எஞ்சியிருக்கும் கால்வாய்கள் இன்று முதன்மையாக சரக்கு மற்றும் பெரிய கப்பல் போக்குவரத்துத் தொழில்களுக்கு சேவை செய்கின்றன, அதேசமயம் முன்னர் உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்துக்கு உதவிய கால்வாய்கள் பின்நாட்களில் கைவிட்ப்பட்டும், பாராமரிப்பில்லாமலும், நீரோட்டம் மின்றி தூர்ந்துபோயிற்று. அதேசமயம் அணைகள் வெள்ள நீரை கட்டுப்படுத்தவும் சேமிக்கவும் மற்றும் உல்லாச படகு போக்குவரத்துக்காகவும் பயன்படுத்தப்பட்டது. 1850 களின் நடுவில் அமெரிக்காவில் முதன்முதலாக துவங்கிய கால்வாய் கப்பல் போக்குவரத்து முதன்முதலில் அதிகரித்தது, நாளைடைவில் கால்வாய் போக்குவரத்து, விலை மலிவான இரயில் போக்குவரத்து வந்தவுடன் குறைந்து முற்றிலும் கைவிடப்பட்டது. 1880 களின் முற்பகுதியில், இரயில் போக்குவரத்துடன் பொருளாதாரரீதியாக போட்டியிடும் திறனைக் கொண்ட கால்வாய்கள் வரைபடத்தில் இருந்து வந்தன. அடுத்த இரண்டு தசாப்தங்களில், நிலக்கரி ஏற்றுமதி அதிகப்படியாக குறைந்து எண்ணெயை எரிபொருளாக கொண்டு வெப்ப உற்ப்பத்தியின் தொடக்கம், மற்றும் நிலக்கரியின் தேவை இதனால் குறைந்து. பின்னர், முதலாம் உலகப் போருக்குப் பிறகு, மோட்டார் வண்டிகள் வந்தபோது, சிறிய அமெரிக்கா கரைகள் கொண்ட கால்வாய்கள் மற்றும் பல ரயில்களுடனான சரக்கு போக்குவரத்து பத்து-மைல்களில் நிலையான சரிவைக் கண்டது, நெகிழ்வுத்தன்மை மற்றும் செங்குத்தான சரிவுகளில் சரக்குகளை எடுத்துச் செல்லக்கூடிய தன்மையால் சாலை போக்குவரத்து நெடுகிலும் அதிகரித்தது, மேலும் குளிர்காலத்தில் செயல்பட முடியாத சரக்கு இரயில் போக்குவரத்துக்கு பதிலாக சாலை போக்குவரத்து அதிகரித்தது. கட்டுமானம் கால்வாய்கள் கீழ் உள்ள மூன்று வழிகளில் ஒன்று அல்லது மூன்றின் கலவையாக, கிடைக்கக்கூடிய தண்ணீர் மற்றும் கிடைக்கக்கூடிய பாதையைப் பொறுத்து இருக்கும்: மனிதனால் உருவாக்கப்பட்ட நீரோடைகள் கால்வாய்கள் இயற்கையான நீரோடைகள் இல்லாத இடத்திலும் செயற்கையாக உருவாக்க முடியும். எப்படி என்றால்? கால்வாய்கள் செயற்கையாக ஆழமாக தோண்டப்பட்டும் மற்றும் அதன் கரைகள் கல், சிமின்ட் கான்கிரீட் கலவைகளால் பலப்படுத்தப்பட்டும் உருவாக்க முடியும். கால்வாயிற்கான தண்ணீர் வெளிப்புற மூலத்திலிருந்து நீரோடைகள் அல்லது நீர்த்தேக்கங்கள் போன்றவற்றில் இருந்து வழங்க வேண்டும். புதிய நீர்வழி பாதைகளில் தடுப்புகள், தூக்கி அல்லது மின் தூக்கிகல் (elevators) போன்ற நுட்பமான பொறியியல் வேலைகள் மூலம், கால்வாய்களில் கப்பல்கள் உயர்த்தப்படுவதற்காகவும் குறைப்பதற்காகவும் கட்டப்பட்டுள்ளன. எ.கா. ஒரு உயர்ந்த நிலத்தின் மீது பள்ளத்தாக்குகளை இணைக்கும் கால்வாய்கள், கால்வாய் டூ மிடி, கால்வாய் டி ப்ரைரே மற்றும் பனாமா கால்வாய் போன்றவை. தற்போதுள்ள ஏரியின் அடிவாரத்தில் உள்ள மணற்பகுதியை தூர்வாறி ஆழப்படுத்தி துளைப்பதன் மூலம் ஒரு கால்வாய் கட்டப்பட முடியும். கால்வாய் ஆழபடுத்தல் முடிந்ததும், ஏரியின் நீர் குறைக்கப்பட்டு கால்வாய்குள் நீர் நிரபப்படும் இதன் மூலம் சுற்றியுள்ள பகுதியின் நீரை வடிப்பதற்கு வடிகால்வாயாகவும் மற்றும் நீர் வழிப் போக்குவரத்திற்கும் பயன்படும். எ.கா. லேஜ் வார்ட் (nl). ஒரு ஏரிக்குள் இரண்டு இணை அணைக்கரைகள் உருவாக்கவும், புதிய கால்வாயை கரைகளின் இடையில் அமைக்கவும், பின்னர் ஏரியின் மீதமுள்ள நீரை வடிகட்டவும், இதனால் கால்வாய்குள் மட்டும் அதிக நீர் இருக்கும் மற்றும் ஏரியின் பிற பகுதியில் நீர் வடிகட்டப்படும். கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள் உள்ள வடக்கு கடல் கால்வாய் இந்த முறையில் தான் கட்டப்பட்டன. கால்வாய் மற்றும் நீர் வழி போக்குவரத்து அமைத்தல் ஒரு இயற்கை நீரோடையை கால்வாயாக மாற்றம் செய்தால் அதில் எளிதாக கணிக்கக்கூடிய கட்டுப்படுத்தப்பட்ட நீர் வழிப்போக்குவரத்தை உருவாக்க முடியும். இது எப்படி சாத்தியம் என்றால்? நீரோடையின் பாதையைத் ஆழப்படுத்தி தடுப்புகள் அமைத்து திசை திருப்புவதும், மாற்றுவதன் மூலமும் கட்டுப்படுத்துவதன் மூலம் நீரின் ஓட்டம் சீராக மாற்றப்படுகிறது. இதன் மூலம் சரக்குகளை சிறிய படகுகள் மற்றும் பெரிய கப்பல்கள் கொண்டு மிக எளிதாக எடுத்துச் செல்ல இயலும். எ.கா. வடகிழக்கு பென்சில்வேனியாவின் நிலக்கரிப் பகுதி, பாஸ்ஸோ சாவ்ன், கால்வாய் டி மைன்ஸ் டி ஃபெர் லா லாஸ் மோஸெல்லெ மற்றும் ஐசென் நதி ஆகியவற்றில் உள்ள லேஹி கால்வாய் அடங்கும். பக்கவாட்டு கால்வாய்கள் இயற்கை நீரோடைகளை கால்வாயாக மாற்றம் செய்ய இயலாத போது அதன் அருகில் பக்கவாட்டில் இணையான செயற்கையாக கால்வாய் அமைத்து இரண்டாவது நீரோட்டத்திற்கு வழி ஏற்படுத்தித் தருவது. இது பக்கவாட்டு கால்வாய் என்று அழைக்கப்படுகிறது. இயற்கை நீரோடைகள் சில சமயங்களில் தொடர்ச்சியான வளைவுகள், குதிரை குழம்பு வடிவ வளைவுகள் கொண்டதாகவும் சீர்படுத்த முடியாத அளவில் இருக்கும் பொழுது பக்கவாட்டு கால்வாய்களால் எளிதாக சீரான நீரோட்டப் பாதை கொண்டதாக கட்டமைக்க முடியும் அவ்வாறு அமைக்கப்படும் கால்வாய்க்கு தேவையான நீர் ஆதாரமாய் இயற்கை நீரோடை செயல்படும். எ.கா. சாசபீக் மற்றும் ஓஹியோ கால்வாய், கால்வாய் லாடெரல் லா லா லோயர், கேரோன் லேட்னல் கேனல் மற்றும் ஜூலியானா கால்வாய் ஆகியவை இதில் அடங்கும். நீர் பாசானக் கால்வாய்கள் ஆற்று நீர் பாசானக் கால்வாய்கள், வரத்துக் கால்வாய், மாறுகால் கால்வாய், பாசனக் கால்வாய் அல்லது கழனிக்கால் என மூன்று வகைப்படும்.[9] வரத்துக் கால்வாய் (Supply Channel) ஆறுகளில் குறிப்பிட்ட வளைவுகளில் மட்டுமே வரத்துக் கால்வாய்களின் தலைப்பகுதி வெட்டப்படும். அவ்வாறு வெட்டும் போது ஆற்றிலிருந்து தண்ணீர் மட்டுமே கால்வாய்க்குள் செல்லும். மணல் புகாமல் தடுக்கப்படும். மேலும் ஆற்றில் நீர்வரத்து குறையும் காலத்தில் கூட, தடையின்றி கால்வாய்க்குள் தண்ணீர் செல்லும். இதற்கு உதாரணமாக இருக்கிறது வைகை ஆற்றில் இருந்து வட ஏரிக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் கால்வாய். மறுகால் அல்லது வெள்ள வடிகால் கால்வாய் (Surplus Channel) வெள்ளக் காலங்களில் ஏரிகளின் உபரி நீரை கலிங்கல் வழியாக வெளியேற்றும் கால்வாய்தான் மறுகால்வாய். இவற்றின் கொள்ளளவும் ஏரியின் நீர்வரத்துக் கால்வாயின் கொள்ளளவும் சமமாக இருக்கும். நீர்வரத்தும் நீர் வெளியேற்றமும் சரிசமமாக அமைந்து வெள்ளப் பெருக்கை தடுக்க உதவும். பாசனக் கால் அல்லது கழனிக்கால் (Distribution Channel) ஏரி மடையின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்ட இக்கால்வாய்கள் மூலம் பாசன நிலங்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பபடும். நிலங்களின் அளவுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட இந்த கால்வாய்கள் கண்ணாறு, வதி, பிலாறு என அழைக்கப்பட்டது. மிதக்கும் நகரங்கள் கால்வாய்கள் வெனிஸ் நகரத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது, பல (கால்வாய்) மிதக்கும் நகரங்கள் "வெனிஸ் ஆஃப் ..." என்ற பெயரிடப்பட்டது. நகரம் சதுப்பு தீவுகளில் கட்டப்பட்டுள்ளது, கட்டடங்களை ஆதரிக்கும் மரச்சட்டங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது, மனிதனால் இந்த நகரம் செயற்கையாக உருவாக்கப்பட்டதாகும். தீவுகளுக்கு ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு; 12 ஆம் நூற்றாண்டில், வெனிஸ் ஒரு சக்தி வாய்ந்த நகரமாக இருந்தது. ஆம்ஸ்டர்டாம் நகரமும் வெனிஸ் போன்று கட்டப்பட்டது. 1300 ஆம் ஆண்டுகளில் இது ஒரு நகரமாக மாறியது. பல கால்வாய்கள் ஆம்ஸ்டர்டாமின் பலமான ஒரு பகுதியாக கட்டப்பட்டன. நகரம் விரிவடைந்து, வீடுகள் கால்வாய்களை ஒட்டியே கட்டப்பட்டது. விரிவான கால்வாய் கட்டமைப்புடன் உள்ள மற்ற நகரங்கள்: நெதர்லாந்தில் உள்ள ஆல்மாமார், அமர்ஸ்போர்ட், போல்வார்ட், பிரெய்ல், டெல்ஃப்ட், டென் பாஷ், டோக்மும், டார்ட்ரெச்ச்ட், என்குயூஜன், ஃபிரான்கெர், கௌடா, ஹார்லெம், ஹர்லிங்கென், லீவார்டன், லெய்டன், ஸ்னெக் மற்றும் யூட்ரெட்ச் நகரங்கள்; பிரஜி மற்றும் ஜெண்ட்ஸ் ப்ளாண்டர்ஸ், பெல்ஜியம்; இங்கிலாந்தில் பர்மிங்காம்; ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்; போர்ச்சுகில் ஏவிரோ; ஜெர்மனியில் ஹாம்பர்க் மற்றும் பெர்லின்; ஃபோர்ட் லாடெர்டேல் மற்றும் கேப் கோரல், புளோரிடா, அமெரிக்கா மற்றும் லாஹோர் பாக்கிஸ்தான். லிவர்பூல் கடல் வானிப நகரம் இங்கிலாந்தின் லிவர்பூலின் மையப்பகுதியில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களமாக உள்ளது, இங்கு முக்கியமாக குடியிருப்பு மற்றும் பொழுதுபோக்கு பயன்பாட்டிற்காக ஊடுருவிவரும் நீர்வழிகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன. மேற்கோள்கள் பகுப்பு:கால்வாய்கள் பகுப்பு:வேளாண்மை
உலகின் மிகப்பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட கால்வாய் எது?
பெரும்
1,928
tamil
a9d7a24e0
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். இதில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கு பெறுகின்றனர். உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படும் ஒலிம்பிக்கில் 200 நாடுகளுக்கு மேல் கலந்து கொள்கின்றன.[1] பண்டைய கிரீஸ் நாட்டில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் இருந்து வந்தது. பின்னர், பியர் ஃபிரெடி, குபர்த்தென் பிரபு என்ற பிரான்ஸ் நாட்டு பிரபுவால் (nobleman) 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் மீண்டும் வந்தது. இவர் 1894 ஆம் ஆண்டு அனைத்துலக ஒலிம்பிக் குழுவை உருவாக்கினார். இதன் அமைப்பும், அதிகாரமும் ஒலிம்பிக் பட்டயத்தினால் வரையறுக்கப்படுகின்றன. அனைத்துலக ஒலிம்பிக் குழுவே ஒலிம்பிக் இயக்கத்தை நிர்வகித்து வருகிறது. உலகப் போர் நடைபெற்ற ஆண்டுகள் தவிர்த்து, 1896 முதல், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்று வருகின்றன. ஆதி கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கி.மு.776 இல் கிரேக்க நாட்டிலுள்ள ஒலிம்பியாவில் தொடங்கி கி.பி.393 வரை நடைபெற்றன. கிரேக்க கவிஞர் பானாஜியோடிஸ் ஸௌட்ஸாஸ் கி.பி.1833இல் எழுதிய "இறந்தவர்களின் உரையாடல்" என்னும் கவிதை இப்போட்டிகளை மீண்டும் தொடங்கும் ஆர்வத்தை உருவாக்கியது. 20 ஆம் 21 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட ஒலிம்பிக் இயக்கத்தின் வளர்ச்சி ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், ஊனமுற்றோருக்கான மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள், பதின்ம வயதினருக்கான இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் என்பன தொடங்கப்பட்டமை இம் மாற்றங்களுட் சில. பனிக்கால விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பொருட்டு 1924 முதல் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. தொடக்கத்தில் கோடை கால மற்றும் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஒரே ஆண்டில் நடத்தப்பட்டு வந்தன. 1994 முதல் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. பொருளாதாரம், அரசியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சிகளுக்கு ஏற்ப ஒலிம்பிக் குழுவும் பல்வேறு மாற்றங்களைச் செய்யவேண்டியிருந்தது. இது, தொழில்முறை சாராத போட்டியாளர்கள் பங்குபெறும் போட்டியாக இருக்கவேண்டும் என்றே இவ்வியக்கத்தை உருவாக்கிய கூபேர்ட்டின் எண்ணியிருந்தார். ஆனாலும், ஒலிம்பிக் குழு இந்த விதியை மாற்றித் தொழில்முறை விளையாட்டு வீரர்களையும் போட்டிகளில் பங்குபற்ற அனுமதித்தது. மக்கள் ஊடகங்களின் முக்கியத்துவம் வளர்ந்து வந்தபோது, நிறுவன விளம்பர ஆதரவு முறை உருவாகி இப்போட்டிகள் வணிகமயமாக்கப்பட்டன. 1916, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் உலகப் போரினால் நடைபெறவில்லை. பனிப்போர்க் காலத்தில் பல நாடுகள் இப்போட்டியைப் புறக்கணித்ததனால், 1980, 1984 ஆண்டுகளில் இடம்பெற்ற போட்டிகள் மட்டுப்படுத்தப்பட்ட பங்கேற்புடனேயே நடைபெற்றன. ஒலிம்பிக் இயக்கம் அனைத்துலக விளையாட்டுகள் கூட்டமைப்பு, தேசிய ஒலிம்பிக் குழுக்கள், ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளுக்குமான ஏற்பட்டுக் குழுக்கள் என்பவற்றை உள்ளடக்குகிறது. முடிவுகளை எடுக்கும் அமைப்பு என்ற அளவில், அனைத்துலக ஒலிம்பிக் குழு எந்த நகரில் போட்டிகளை நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கின்றது. இவ்வாறு தெரிவு செய்யப்படும் நகரம், ஒலிம்பிக் பட்டயத்துக்கு ஏற்றவகையில், போட்டிகளை ஒழுங்கு செய்வதற்கும், நிதி வழங்குவதற்குமான பொறுப்பை ஏற்கவேண்டும். போட்டிகளில் இடம்பெறும் விளையாட்டுக்களை உள்ளடக்கிய நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கும் பொறுப்பும் அனைத்துலக ஒலிம்பிக் குழுவிடமே உள்ளது. ஒலிம்பிக் கொடி, தீப்பந்தம் போன்ற சின்னங்களும், தொடக்கவிழா, நிறைவுவிழா போன்ற நிகழ்வுகளும் ஒலிம்பிக் போட்டிகளின் பகுதிகளாக உள்ளன. கோடைகால ஒலிம்பிக்கிலும், குளிர்கால ஒலிம்பிக்கிலும் 33 வெவ்வேறு விளையாட்டுக்கள் தொடர்பில் இடம்பெறும் ஏறத்தாழ 400 போட்டிகளில் 13,000க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறும் வீரர்களுக்கு முறையே தங்கப் பதக்கம், வெள்ளிப் பதக்கம், வெண்கலப் பதக்கம் ஆகிய பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. ஏறத்தாழ உலகில் உள்ள எல்லா நாடுகளுமே பங்கேற்கும் அளவுக்கு ஒலிம்பிக் போட்டி வளர்ச்சி அடைந்துள்ளது. இத்தகைய வளர்ச்சி, புறக்கணிப்புகள், போதை மருந்துப் பயன்பாடு, கையூட்டு, பயங்கரவாதச் செயல்கள் போன்றவை தொடர்பான பல சவால்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் போட்டிகளும், அது தொடர்பான ஊடக விளம்பரமும் பல விளையாட்டு வீரர்கள் தேசிய அளவிலும் சில சமயங்களில் பன்னாட்டு அளவிலும் கூடப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. அத்துடன் போட்டிகளை நடத்தும் நகரமும், நாடும் தம்மை உலகுக்கு வெளிப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பையும் ஒலிம்பிக் ஏற்படுத்துகிறது. பண்டைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பண்டைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கிரீசு நாட்டின் ஒலிம்பியாவில் இருந்த சேயுசு கோவிலடியில் சமயமும், விளையாட்டும் சார்ந்த விழாவாக இடம்பெற்றது. இது அக்காலக் கிரீசில் இருந்த நகர அரசுகள், இராச்சியங்கள் என்பவற்றைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு இடையேயான போட்டியாகும். பெரும்பாலும் தடகள விளையாட்டுக்களே இடம்பெற்றாலும், மற்போர், குதிரைப் பந்தயம், தேர்ப் பந்தயம் போன்ற சண்டை சார்ந்த போட்டிகளும் நடைபெற்றன. இவ்விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் காலங்களில் நகர அரசுகளுக்கு இடையேயான பிணக்குகள் அனைத்தும் போட்டிகள் முடியும்வரை ஒத்திவைக்கப்பட்டதாகப் பலரும் எழுதி உள்ளனர். இது ஒலிம்பிக் அமைதி அல்லது ஒலிம்பிக் போர் நிறுத்தம் என அறியப்பட்டது. ஆனால் இது தற்காலத்தில் எழுந்த ஒரு உண்மையல்லாத கருத்து. கிரேக்கர்கள் என்றுமே தமக்கு இடையேயான போர்களை ஒத்திவத்தது இல்லை. ஒலிம்பிக்கின் தோற்றம் பற்றிச் சரியாகத் தெரியாவிட்டாலும், அது குறித்துப் பல கதைகள் உள்ளன. சேயுசுக் கடவுளின் மகனான ஏராக்கிள்சு தனது தந்தையைக் கௌரவிப்பதற்காக ஒலிம்பிக் விளையாட்டு அரங்கைக் கட்டினானாம். இது முடிவடைந்ததும், ஒரு நேர்கோட்டில் இருநூறு அடிகள் நடந்து அத் தூரத்தை ஒரு இசுட்டேடியன் என அறிவித்தான். இது பின்னர் தூரத்தின் அளவாகக் கொள்ளப்பட்டது. கிமு 776 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் விளையாட்டுகள் தோன்றியதாகப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அக்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஓட்டப் போட்டிகளுடன், பாய்தல் போட்டிகள், வட்டம் எறிதல், ஈட்டி எறிதல், மற்போர், குதிரை ஓட்டம் போன்ற போட்டிகளும் இடம் பெற்றன.[2][3] மரபுக் கதைகளின்படி எலிசு என்னும் நகரைச் சேர்ந்த கொரோயெபசு என்னும் பெயர் கொண்ட சமையற்காரன் ஒருவனே முதல் வெற்றியாளன் ஆவான்.[4] அக்கால ஒலிம்பிக்சு அடிப்படையில் சமய முக்கியத்துவம் கொண்டது. இதில், விளையாட்டு நிகழ்வுகளுடன் சேயுசுக் கடவுளையும், தேவ வீரனும், தொன்மங்களில் ஒலிம்பியாவின் அரசனாகக் குறிப்பிடப்படுபவனும் ஆகிய பெலோப்சுவையும் கௌரவிக்கும் முகமாகச் சடங்கு சார்ந்த வேள்விகளும் இடம்பெற்றன. விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்கள் குறித்துக் கவிதைகள் இயற்றப்பட்டதுடன், சிலைகளையும் அமைத்து அவர்களைப் பெருமைப்படுத்தினர்.[5] ஒலிம்பிக் விளையாட்டு கிமு ஆறாம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் அதன் உச்சநிலையில் இருந்தது. உரோமரின் பலம் அதிகரித்துக் கிரேக்க நாட்டில் அவர்களின் செல்வாக்கு வலுப் பெற்றபோது ஒலிம்பிக்கின் முக்கியத்துவமும் படிப்படியாகக் குறையத் தொடங்கிற்று. இவ்விளையாட்டுக்கள் எப்போது நிறுத்தப்பட்டன என்பது குறித்து அறிஞரிடையே ஒத்த கருத்து இல்லாவிட்டாலும், முதலாம் தியடோசியசு எல்லாச் சிலை வணக்கச் சமயங்களையும், அவை தொடர்பான சடங்குகளையும் தடை செய்த ஆண்டான கிபி 393ல் நிறுத்தப்பட்டது என்பதே பெரும்பான்மைக் கருத்தாகும். அவனது வாரிசான இரண்டாம் தியடோசியசு, எல்லாக் கிரேக்கக் கோயில்களையும் இடிக்கக் கட்டளையிட்டான். ஒலிம்பிக்சு நடந்த இடங்கள் வருடம் இடம் ஆண்டு இடம்1896 ஏதென்ஸ், கிரேக்கம்1900பாரிஸ், பிரான்சு1904செயிண்ட் லூயிஸ், ஐக்கிய அமெரிக்கா1908இலண்டன், இங்கிலாந்து1912ஸ்டாக்ஹோம், சுவீடன்1920ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்1924பாரிஸ், பிரான்சு1928ஆம்ஸ்டர்டாம், ஹாலந்து1932லாஸ் ஏஞ்சலீஸ், ஐக்கிய அமெரிக்கா1936பெர்லின், ஜெர்மனி1948லண்டன், இங்கிலாந்து1952ஹெல்சின்கி, பின்லாந்து1956மெல்போர்ன், ஆஸ்திரேலியா1960ரோம், இத்தாலி1964டோக்கியோ, ஜப்பான்1968மெக்ஸிகோ சிட்டி, மெக்சிக்கோ1972ம்யூனிச், ஜெர்மனி1976மாண்ட்ரீல், கனடா1980மாஸ்கோ, சோவியத் ஒன்றியம்1984லாஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா1988சியோல், தென் கொரியா1992பார்சிலோனா, எசுப்பானியா1996அட்லாண்டா, ஐக்கிய அமெரிக்கா 2000சிட்னி, ஆஸ்திரேலியா2004ஏதென்ஸ், கிரேக்கம்2008பெய்ஜிங், மக்கள் சீனக் குடியரசு2012இலண்டன், ஐக்கிய இராச்சியம்2016ரியோ டி ஜனேரோ, பிரேசில் உலகப் போர் சமயங்களில் மட்டும் (1916, 1940 &amp; 1944) ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை. இன்றைய ஒலிம்பிக்ஸ் 1896ல் ஏதென்ஸ் நகரில் தான் துவங்கியது. அடுத்த கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் 2016ம் ஆண்டில் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜனேரோ நகரில் நடக்கவுள்ளது. 2020ம் ஆண்டில் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடக்கவுள்ளது. பனி ஒலிம்பிக்ஸ் நடந்த இடங்கள் வருடம் இடம் ஆண்டு இடம்1924 சாமொனிக்ஸ், பிரான்ஸ்1928செயிண்ட் மோரிட்ஜ், ஸ்விட்சர்லாந்து1932ப்ளாசிட் ஏரி, ஐக்கிய அமெரிக்கா 1936கார்மிஷ்ச், ஜெர்மனி1948செயிண்ட் மோரிட்ஜ், ஸ்விட்சர்லாந்து1952ஆஸ்லோ, நார்வே1956கார்டினா, இத்தாலி1960ஸ்குவாவ் வேலி, ஐக்கிய அமெரிக்கா1964இன்ஸ்ப்ரக், ஆஸ்திரியா1968க்ரெநோபில், பிரான்ஸ்1972சாப்போரோ, ஜப்பான்1976இன்ஸ்ப்ரக், ஆஸ்திரியா1980ப்ளாசிட் ஏரி, ஐக்கிய அமெரிக்கா USA 1984சாராஜெவோ, யுகோஸ்லாவியா1988கால்கேரி, கனடா1992ஆல்பர்ட்வில்லே, பிரான்ஸ்1994லில்லேஹாம்மர், நார்வே1998நாகானோ, ஜப்பான்2002சால்ட் லேக் சிட்டி, ஐக்கிய அமெரிக்கா2006தோரீனோ, இத்தாலி2010வான்கூவர், கனடா2014சோச்சி, இருசியா உலகப் போர் சமயங்களில் மட்டும் (1940 &amp; 1944) பனி ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை. 1992 வரை பனி ஒலிம்பிக்சும் கோடைக்கால ஒலிம்பிக்சும் ஒரே ஆண்டிலேயே நடைபெற்று வந்தது. இதை மாற்ற வேண்டி 1994ல் மீண்டும் ஒரு பனி ஒலிம்பிக்சை நடத்தினார்கள். அதன்படி தற்பொழுது கோடைக்கால ஒலிம்பிக்சு நடந்து 2 ஆண்டுகள் கழித்து பனி ஒலிம்பிக்சு நடக்கும். அடுத்த பனி ஒலிம்பிக்சு, 2014ல் இருசியாவின் சோச்சி நகரில் நடக்க இருக்கிறது. குறிப்புகள் வெளி இணைப்புகள் - - பகுப்பு:ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
முதல் குளிர்கால ஒலிம்பிக் போட்டி எங்கு நடைப்பெற்றது
1924
1,590
tamil
fc8baf63c
நுண்ணுயிரியல் (இலங்கை வழக்கு: நுண்ணங்கியியல்; ஆங்கிலம்: Microbiology) என்பது நுண்ணுயிர் அவை சார்ந்த அனைத்தையும் பற்றிய படிப்பாகும். இதில் நிலை/மெய்க்கருவிலியான பாக்டீரியாக்களிலிருந்து மெய்க்கருவுயிர்களான பூஞ்சை, பாசி, மூத்தவிலங்கிகளும் அடங்கும். இதில் தீநுண்மங்களைச் சார்ந்த படிப்புகளும் அடங்கும். இவைகளை ஆங்கிலத்தில் மைக்ரோ ஒர்கனிசம்சு (கிரேக்க மொழியில்,μῑκρος mīkros என்றால் "நுண்ணிய",βίος bios என்றால் "உயிர்", மற்றும் -λογία -logia) நுண்ணுயிர்கள் என்பவை ஒற்றை செல் அல்லது கொத்து-செல்களாலான நுண்ணோக்கி வகை உயிரினங்களாகும்.[1] பூஞ்சைகள் மற்றும் அதிநுண்ணுயிரிகள் (புரோடிஸ்ட்கள்) போன்ற யூகேரியோட்டுகள் மற்றும் புரோகேரியோட்டுகள் இதில் அடங்கும். வைரஸ்கள், வாழும் உயிரினங்களாக தெளிவுற வகைப்படுத்தப்படவில்லை என்றாலும், அவையும் படிக்கப்படுகின்றன.[2] சுருக்கமாக நுண்ணுயிரியல் என்பது வெறும் கண்ணுக்குப் புலப்படாத அளவுக்கு சிறியதாய் இருக்கும் வாழ்க்கை மற்றும் உயிரினங்கள் குறித்த கல்வியைக் குறிக்கிறது. நுண்ணுயிரியல் பொதுவாக நோய்த்தடுப்பு அமைப்பு பற்றிய கல்வி, அல்லது நோய்த்தடுப்பியல் கல்வியை அடக்கியதாகும். பொதுவாக நோய்த்தடுப்பு அமைப்புகள் நோய் விளைவிக்கும் நுண்கிருமிகளைக் கையாளுகின்றன; இந்த இரண்டு படிப்புகளுமே ஒன்றுடன் ஒன்று குறுக்கிடுபவையாகும், அதனால் தான் தான் பல கல்லூரிகளும் இரண்டும் இணைந்த "நுண்ணுயிரியல் மற்றும் நோய்த்தடுப்பியல்" போன்ற பட்டப் படிப்புகளை வழங்குகின்றன. நுண்ணுயிரியல் என்பது வைராலஜி, பூஞ்சையியல், ஒட்டுண்ணியியல், பாக்டீரியாவியல் மற்றும் பிற பிரிவுகளை அடக்கிய ஒரு விரிந்த சொல்லாகும். நுண்ணுயிரியலாளர் என்பவர் நுண்ணுயிரியலில் நிபுணத்துவம் பெற்றவாராவார். நுண்ணுயிரியல் செயலூக்கத்துடன் ஆய்வு செய்யப்படுகிறது. அத்துடன் இந்த துறை தொடர்ந்து முன்னேறி வருகிறது. பூமியில் இருக்கும் நுண்ணுயிர்கள் அனைத்திலும் சுமார் ஒரு சதவீதம் பற்றி மட்டுமே நாம் அநேகமாகக் கற்றிருக்கிறோம் என்று கூறலாம்.[3] சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நுண்ணுயிர்கள் நேரடியாகவே ஆய்வு செய்யப்படுகின்றன என்ற போதிலும், விலங்கியல் மற்றும் தாவரவியல் போன்ற பழமைப்பட்ட உயிரியல் பிரிவுகளுடன் ஒப்பிடுகையில் நுண்ணுயிரியல் துறை தனது குழந்தைப் பருவத்தில் தான் இருக்கிறது என்று நாம் கூறலாம். வரலாறு புராதன வரலாறு நுண்ணுயிரிகள் இருக்கின்றன என்பது, 17 ஆம் நூற்றாண்டில் அவை உண்மையாகக் கண்டறியப்படும் முன்பே, பல நூற்றாண்டுகளாக அனுமானிக்கப்பட்டு வந்ததாகும். கிமு 600 ஆம் ஆண்டில், புராதன கால இந்திய அறுவைச் சிகிச்சை நிபுணரான சுஸ்ருதா பல்வேறு நோய்களுக்கும் நுண்ணுயிரிகள் காரணமாக இருக்கின்றன என்பதையும் அவை தொடுவதன் மூலமும், காற்று அல்லது நீர் மூலமும் பரவ முடியும் என்பதையும் சுஸ்ருதா சமிதாவில் விளக்கினார். நுண்ணுயிர்கள் குறித்த சித்தாந்த கருத்துகள் ரோமானிய அறிஞரான மார்கஸ் டெரென்சியஸ் வர்ரோ எழுதிய ஆன் அக்ரிகல்சர் என்கிற புத்தகத்தில் இடம்பெற்றன. நீர்தேங்கிய இடங்களின் அருகில் குடியிருக்கும் இடம் அமைவதற்கு எதிராக அவர் அதில் எச்சரிக்கிறார். கண்ணுக்கு புலப்படாத உயிரினங்களால் பரவக் கூடிய நோய்கள் குறித்த விழிப்புணர்வு பழங்காலத்தில் இருந்தது என்பதையே இது சுட்டிக் காட்டியது. உடல் சுரப்பு தொற்றுறும் முன்னதாக பூமியிலிருக்கும் அசுத்தமான வெளிப் பொருட்களால் அசுத்தமுறுவதாக தி கேனான் ஆஃப் மெடிசின் புத்தகத்தில் அவிசெனா (Abū Alī ibn Sīnā) கூறினார்.[4] ஆஸ்துமா மற்றும் பிற தொற்று நோய்களின் தொற்றும் தன்மை குறித்தும் அவர் அனுமானம் செய்திருந்தார். தொற்றுநோய்கள் பரவுவதைக் குறைக்கும் ஒரு வழியாக தனிமைப்படுத்தி வைப்பதை பயன்படுத்தினார்.[5] 14 ஆம் நூற்றாண்டில், கறுப்பு மரண புபோனிக் பிளேக் அல்-அன்டலஸை எட்டிய சமயத்தில், "நுண்ணிய பொருட்கள்" மனித உடலுக்குள் நுழைந்து நோய்க்கு காரணமாவதால் தான் தொற்று நோய்கள் ஏற்படுகின்றன என்று இப்ன் கதிமா அனுமானம் செய்தார்.[4] பரவத்தக்க விதைபோன்ற பொருட்களால் தான் தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. இந்த பொருட்கள் நோய்த் தொற்றினை நேரடி அல்லது மறைமுக தொடர்பின் வழியாகவோ அல்லது நெடுந் தொலைவுகளில் இருந்து நேரடித் தொடர்பு இல்லாமலும் கூட பரவச் செய்ய முடியும் என்று 1546 ஆம் ஆண்டில் கிரோலமோ ஃப்ரகஸ்டோரோ கூறினார். நுண்ணுயிர்கள் இருப்பது பற்றிய இந்த ஆரம்ப கால கூற்றுகள் எல்லாம் ஊக அடிப்படையிலானவையாக இருந்தன. எந்த தரவு அல்லது அறிவியலையும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. 17 ஆம் நூற்றாண்டு வரை நுண்ணுயிரிகள் நிரூபிக்கப்பட்டோ ஆய்வு செய்யப்பட்டோ இருக்கவில்லை. அல்லது சரியாகவும் துல்லியமாகவும் விவரிக்கப்பட்டும் இருக்கவில்லை. இதற்குக் காரணம், இந்த ஆய்வுகள் அனைத்திலுமே, நுண்ணுயிரியலும் பாக்டீரியாவியலும் ஒரு அறிவியலாக உயிர்வாழ்வதற்கு மிக அடிப்படை அவசியமான நுண்ணோக்கி என்கிற ஒரு கருவி இல்லாதிருந்ததே ஆகும். நவீன வரலாறு பாக்டீரியா, மற்றும் பிற நுண்ணுயிரிகளை, 1676 ஆம் ஆண்டில் ஆன்டன் வான் லீவென்ஹோக், தானே சொந்தமாய் வடிவமைத்த ஒற்றை-லென்ஸ் நுண்ணோக்கி மூலம் முதன்முதலில் ஆராய்ந்தார். இந்த செயலின் மூலம் உயிரியலில் மிக முக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்றை உருவாக்கிய லீவென்ஹோக் பாக்டீரியாவியல் மற்றும் நுண்ணுயிரியல் போன்ற அறிவியல் துறைகளுக்கும் முன்முயற்சியளித்து விட்டார்.[1] "பாக்டீரியம்" என்கிற பெயர் அதற்கு வெகு காலத்திற்கு பின் தான் 1828 ஆம் ஆண்டில் எரென்பெர்க் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. "சிறு குச்சி" என்னும் பொருள் கொண்ட βακτηριον என்னும் கிரேக்க வார்த்தையில் இருந்து அதனைத் தேற்றம் செய்தார். பெரும்பாலும் வான் லீவென்ஹோக் தான் முதல் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாகக் குறிப்பிடப்படுகிறார் என்றாலும், பழப் பொருட்களின் மீதான பூஞ்சைகள் குறித்ததான முதல் பதிவு செய்யப்பட்ட நுண்ணுயிரியல் ஆய்வு அதற்கு வெகுகாலம் முன்பே ராபர்ட் ஹூக் மூலம் 1665 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.[6] பாக்டீரியாவியல் துறை (பின்னர் நுண்ணுயிரியலின் துணைத் துறையாக ஆனது) பொதுவாக ஃபெர்டினான்ட் கோன் (1828-1898) மூலம் நிறுவப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஒரு தாவரவியல் விஞ்ஞானியான இவர் நீர்ப்பாசிகள் மற்றும் ஒளிச்சேர்க்கை பாக்டீரியாக்களில் செய்த ஆய்வு பாசிலஸ் மற்றும் பெகியடோவா உள்ளிட்ட பல பாக்டீரியாக்களை விவரிக்கும் திறனுக்கு இட்டுச் சென்றது. பாக்டீரியா குறித்த வகைப்பாட்டியல் வரைமுறைக்கான ஒரு திட்டத்தை முதலில் ஏற்படுத்தியவரும் கோன் தான்.[7] லூயிஸ் பாஸ்சர் (1822-1895) மற்றும் ராபர்ட் கோச் (1843- 1910) ஆகியோரும் கோனின் சம காலத்தவரே. இவர்கள் மருத்துவ நுண்ணுயிரியலின் ஸ்தாபகர்களாக பல சமயங்களில் குறிப்பிடப்படுவதுண்டு.[8] அப்போது பரவலாக இருந்த தன்னிச்சையான தலைமுறை தத்துவத்தை தவறென நிரூபணம் செய்யவும், அதன்மூலம் ஒரு உயிரியல் விஞ்ஞானமாக நுண்ணுயிரியலின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும் நோக்கம் கொண்டு பல தொடர்ச்சியான பரிசோதனைகளை வடிவமைத்து பாஸ்சர் பெரும் புகழ் பெற்றார்.[9] உணவைப் பாதுகாக்கும் வழிமுறைகளையும் (பாஸ்சரைசேஷன்) ஆந்த்ராக்ஸ், கோழிக் காலரா மற்றும் வெறிநாய்க் கடி போன்ற பல்வேறு நோய்களுக்கான மருந்துகளையும் பாஸ்சர் கண்டறிந்தார்.[1] நோய்க்கான கிருமி சித்தாந்தத்திற்கு தான் செய்த பங்களிப்பின் மூலம் கோச் மிகவும் அறியப்பட்டார். குறிப்பிட்ட நோய்கள் குறிப்பிட்ட நோய்க்காரண நுண்கிருமிகளால் தான் உண்டாகின்றன என்பதை அவர் நிரூபணம் செய்தார். கோச் ஏராளமான தகுதிவகைகளை அபிவிருத்தி செய்தார். இவை கோச்'சின் அடிக்கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. நுண்ணுயிர் வளர்ப்பில் பாக்டீரியாக்களை மட்டும் தனிமைப்படுத்தி வளர்த்து ஆய்வு செய்த முதல் விஞ்ஞானிகளில் கோச்சும் ஒருவர். இதன் காரணத்தால் அவரால் ஆஸ்துமா நோய்க்கு காரணமாக இருக்கும் மைகோபாக்டீரியம் ட்யூபர்குளோசிஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பாக்டீரியாக்களை விவரிக்க முடிந்தது.[1] பாஸ்சர் மற்றும் கோச் ஆகியோர் தான் நுண்ணுயிரியலின் ஸ்தாபகர்கள் என்று பெரும்பாலும் கருதப்பட்டாலும், அவர்களது பணிகள் நுண்ணுயிர் உலகின் உண்மையான பன்முகத்தன்மையைத் துல்லியமாக பிரதிபலிக்கவில்லை. ஏனென்றால் அவர்களின் பிரத்யேக கவனம் நேரடி மருத்துவத் தொடர்பு கொண்ட நுண்ணுயிர்கள் மீதே குவிந்திருந்தது. பொது நுண்ணுயிரியலின் (நுண்ணுயிர்களின் உடலியல், பன்முகத்தன்மை மற்றும் சூழலியல் அனைத்தையும் அடக்கிய பழைய சொற் பிரயோகம்) ஸ்தாபகர்களான மார்டினஸ் பெய்ஜெரிங்க் (1851 - 1931) மற்றும் செர்ஜி வினோகிராட்ஸ்கி (1856 - 1953) ஆகியோரது பணிகளுக்குப் பிறகு தான், நுண்ணுயிரியலின் உண்மை விஸ்தீரனம் புலப்பட்டது.[1] பெய்ஜெரிங்க் வைரஸ்களைக் கண்டறிந்தது மற்றும் செறிந்த நுண்ணுயிர் வளர்ப்பு தொழில்நுட்பங்களை அபிவிருத்தி செய்தது ஆகிய இரண்டு பெரும் பங்களிப்புகளை நுண்ணுயிரியலுக்கு செய்தார்.[10] டொபாகோ மொசைக் வைரஸ் மீதான இவரது பணி வைராலஜியின் அடிப்படை கோட்பாடுகளை ஸ்தாபித்தது. இவரது செறிந்த நுண்ணுயிர் வளர்ப்பு அபிவிருத்தி தொழில்நுட்பம், பரந்த மாறுபாடுகளுடனான உடலியல் கொண்ட பல்வேறுவகைப்பட்ட நுண்ணுயிர்களை செயற்கையாய் வளர்ப்பதற்கு அனுமதித்து நுண்ணுயிரியல் துறையில் மிகப்பெரும் தாக்கத்தை உடனடியாய் ஏற்படுத்தியது. வினோகிராட்ஸ்கி தான் கெமோலிதோடிராபி என்னும் கருத்தை முதலில் அபிவிருத்தி செய்தவராவார். இதன்மூலம் புவிவேதியியல் செயல்முறைகளில் நுண்ணுயிர்களின் அத்தியாவசிய பங்களிப்பை அவர் வெளிக்கொணர்ந்தார்.[11] முதன்முதலாக நைட்ரஜன் சேர்க்கை மற்றும் நைட்ரஜன் நிலைநிறுத்தும் பாக்டீரியாக்கள் இரண்டையுமே பிரித்தெடுக்கவும் விளக்கவும் திறன் பெற்றிருந்த முதல் விஞ்ஞானி இவரே.[1] துறைகள் நுண்ணுயிரியல் துறை பொதுவாக பல்வேறு துணைத் துறைகளாக பிரிக்கப்படலாம்: நுண்ணுயிர் உடலியல்: இது உயிர்வேதியியல்ரீதியாக நுண்ணுயிர் செல் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கற்கும் அறிவியல். நுண்ணுயிர் வளர்ச்சி, நுண்ணுயிர் வளர்சிதை மாற்றம் மற்றும் நுண்ணுயிர் செல் கட்டமைப்பு ஆகியவற்றை படிப்பதும் இதில் அடங்கும். நுண்ணுயிர் மரபணுவியல்: இது நுண்ணுயிரிகளில் அவற்றின் செல் செயல்பாடுகளுக்கேற்ப மரபணுக்கள் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகின்றன மற்றும் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதைக் கற்கும் கல்வி. இது மூலக்கூறு உயிரியல் துறைக்கு மிக நெருக்கமுற்ற துறையாகும். செல் நுண்ணுயிரியல்: இது நுண்ணுயிரியலுக்கும் செல் உயிரியலுக்கும் பாலமாக இருக்கும் துறையாகும். மருத்துவ நுண்ணுயிரியல்: இது நோய்க்காரண நுண்ணுயிர்கள் மற்றும் மனித நோய்களில் நுண்ணுயிர்களின் பங்கு ஆகியவை குறித்த கல்வியாகும். நுண்ணுயிர் நோய்தோன்றும் வகை மற்றும் தொற்றுநோயியல் கல்வியை இது அடக்கியிருக்கும். நோய்க் குறியியல் மற்றும் நோய்த்தடுப்பியல் கல்வியுடன் தொடர்புடையது. கால்நடை நுண்ணுயிரியல்: கால்நடை மருத்துவம் அல்லது விலங்கு வகைப்பாட்டியலில் நுண்ணுயிர்களின் பங்கு குறித்த கல்வி. சுற்றுச்சூழல் நுண்ணுயிரியல்: இது நுண்ணுயிர்களின் இயல்பான சூழலில் அவற்றின் செயல்பாடுகள் மற்றும் பன்முகத்தன்மை குறித்த கல்வி. பரிணாமகர நுண்ணுயிரியல்: நுண்ணுயிரிகளின் பரிணாமம் குறித்த கல்வி. பாக்டீரிய அமைப்பியல் மற்றும் வகைப்பாட்டியல் குறித்த கல்வியை அடக்கியது. தொழிலக நுண்ணுயிரியல்: தொழில்துறை செயல்முறைகளுக்கு பயன்படுத்துவதற்கேற்ற வகையில் நுண்ணுயிர்களை உபயோகப்படுத்துவது. தொழிலக நொதித்தல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆகியவை இதன் உதாரணங்களில் அடங்கும். உயிரித்தொழில்நுட்பத் துறைக்கு மிகவும் நெருக்கமுற்ற துறையாகும். நுண்ணுயிரியலின் முக்கியமான பயன்பாடான நொதியாதலும் இந்த துறையில் அடங்கும். வளிநுண்ணுயிரியல்: காற்றில் இருக்கும் நுண்ணுயிர்கள் குறித்த கல்வி. உணவு நுண்ணுயிரியல்: உணவு கெட்டுப் போவதற்கும் உணவினால் வரும் நோய்களுக்கும் காரணமான நுண்ணுயிரிகள் குறித்த கல்வி. உணவுத் தயாரிப்பில் நுண்ணுயிர்களை பயன்படுத்துதல் (உதாரணமாய் நொதித்தல் செயல்முறை மூலம்) இதில் அடங்கும். பார்மசூடிகல் மைக்ரோபயாலஜி: இது மருந்தாக்கம் கெட்டுப் போவதற்கும் மோசமுறுவதற்கும் காரணமாகும் நுண்ணுயிர்கள் பற்றிய கல்வி ஆகும். (நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பிற்கான மையத்தில் அநேக பணியிடங்களுக்கு நுண்ணுயிரியலில் பட்டம் பெற்றிருப்பது அவசியமாயிருக்கிறது). நன்மைகள் பல்வேறு மனித நோய்களுடன் சில நுண்ணுயிரிகள் தொடர்புபடுத்தப்படுவதால் எல்லா நுண்ணுயிர்களையும் பார்த்து சிலர் பயப்படுகிறார்கள். என்றாலும், தொழிலக நொதித்தல் செய்முறை நுட்பம் (உ-ம். ஆல்கஹால், வினிகர் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு), எதிர்-உயிரி உற்பத்தி, மற்றும் தாவரங்கள் போன்ற உயர் உயிரினங்களில் குளோனிங் சோதனைக்கு முன்னோட்ட வாகனமாகச் செயல்படுவது போன்ற ஏராளமான நன்மை பயக்கும் செயல்முறைகளுக்கும் பல நுண்ணுயிரிகள் காரணமாய் இருக்கின்றன. தொழில்துறையில் அமினோ அமிலங்கள் தயாரிக்க பாக்டீரியா பயன்படுத்தலாம். வருடத்திற்கு இரண்டு மில்லியன் டன்களுக்கும் அதிகமான அமினோ அமிலங்கள், முக்கியமாக L-க்ளுடமேட் மற்றும் L-லைசின், தயாரிக்க அவசியமான மிக முக்கிய பாக்டீரியா உயிரினங்களில் ஒன்றாக கோரினெபாக்டீரியம் க்ளூடமிகம் இருக்கிறது.[12] பாலிசாகரைடுகள், பாலியெஸ்டர்கள், மற்றும் பாலியமைடுகள் போன்ற பல்வேறு வகை பயோபாலிமர்களும் நுண்ணுயிர்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன. திசு பொறியியல் மற்றும் மருந்து செலுத்தம் போன்ற உயர்-மதிப்பு மருத்துவ பயன்பாடுகளுக்கு பொருத்தமான மிகச்சரியான குணங்களுடனான பயோபாலிமர்களை உயிரிதொழில்நுட்பரீதியாக உற்பத்தி செய்ய நுண்ணுயிர்கள் பயன்படுத்தப்படுகின்றன.[13] வீட்டு, விவசாய மற்றும் தொழில்துறை கழிவுகள் மற்றும் மண், சகதி மற்றும் கடல்சார் சூழல்களில் பரப்பின்கீழிருக்கும் அசுத்தம் ஆகியவற்றை நுண்ணுயிர்நுட்பம் மூலம் சிதைவுறச் செய்வதற்கும் (பயோடிகிரேடேஷன்) மற்றும் பயோரீமீடியேஷன் செயல்முறைக்கும் நுண்ணுயிர்கள் உதவி புரிகின்றன. நச்சுக் கழிவுகளை கொல்லும் ஒரு நுண்ணுயிரின் திறனானது ஒவ்வொரு அசுத்தத்தின் தன்மையைப் பொறுத்ததாகும். பொதுவாக மாசுபாட்டு தளங்களில் பலவகை மாசுபாட்டு வகைகளும் ஒன்றாய் இருக்கும் என்பதால், நுண்ணுயிர்வகை சிதைவுக்கு மிகத் திறம்பட்ட அணுகுமுறை என்னவென்றால், ஒன்று அல்லது கூடுதல் வகையான அசுத்தங்களை சிதைவுறச் செய்யும் பல்வேறு பாக்டீரியா வகைகள் மற்றும் இனப்பிரிவுகளின் ஒரு கலவையை பயன்படுத்துவதாகும்.[14] புரோபயாடிக்குகள் (ஜீரண அமைப்புக்கு நன்மை பயக்கும் திறனுற்ற பாக்டீரியா) மற்றும்/அல்லது ப்ரீபயாடிக்குகள் (புரோபயாடிக் நுண்ணுயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக உட்கொள்ளப்படும் பொருட்கள்) உட்கொள்வதன் மூலம் மனித மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்திற்கும் நுண்ணுயிர்கள் பங்களிப்பு செய்வதாகவும் பல்வேறு கூற்றுகள் தெரிவிக்கின்றன.[15] நுண்ணுயிரிகள் புற்றுநோய் சிகிச்சையிலும் பயனளிக்க முடியும் என்று சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன. நோய் விளைவிக்காத க்ளோஸ்ட்ரிடாவின் பல்வேறு இனப்பிரிவுகளும் திடப்பட்ட புற்றுகளுக்குள் ஊடுருவி தன்னை பெருக்கிக் கொள்ள முடியும். க்ளோஸ்ட்ரிடல் வெக்டார்கள் பாதுகாப்பாக நிர்வகிக்கப்பட முடியும் என்பதோடு அவை மருத்துவகுணமுற்ற புரதங்களை வழங்கும் திறனுற்றவையாகும் என்பது பல்வேறு மருத்துவபரிசோதனை மாதிரிகளில் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது.[16] குறிப்புதவிகள் கூடுதல் வாசிப்பு CS1 maint: extra text: authors list (link) மேலும் காண்க பாக்டீரியா உயிரிதொழில்நுட்பவியல் உயிர்வேதியியல் உயிரியல்பாதுகாப்பு உயிரிதொழில்நுட்பம் சுற்றுச்சூழல் நுண்ணுயிரியல் யூகாரியோட் | உணவு நுண்ணுயிரியல் மரபணுவியல் நோய்த்தடுப்பியல் நுண்ணுயிரியல் துறையில் முக்கிய வெளியீடுகள் தொழிலக நுண்ணுயிரியல் | மருத்துவ தொழில்நுட்ப நிபுணர் மருந்து வாய் நுண்ணுயிரியல் புரோகேரியோட் வைராலஜி புற இணைப்புகள் பொது University of South Carolina பத்திரிகைகள் Descriptions and summarys of a wide range of journals in all areas of microbiology Professional organizations பகுப்பு:நுண்ணுயிரியல்
வைரஸ்களின் தந்தை யார்?
மார்டினஸ் பெய்ஜெரிங்க்
6,954
tamil
39244d1cb
. இயற்பியலில் ஆற்றல் / சக்தி (energy, கிரேக்க மொழியில் ἐνέργεια – energeia, "செயற்பாடு, ἐνεργός – energos, "சுறுசுறுப்புடன் செயற்படுதல்") [1]) என்பது வேலை செய்யத்தகு அளவு என்று எளிமையாக வரையறை செய்வர். அதாவது ஒரு பொருளின் ஆற்றல் அதனால் செய்ய இயலும் வேலையின் அளவைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, ஆனால் ஒருவகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும். அனைத்துலக முறை அலகுகள் முறையில் ஆற்றலின் அலகு யூல் ஆகும். 1 நியூட்டனின் விசைக்கு எதிராக ஒரு பொருளை 1 மீட்டர் தூரத்திற்கு நகர்த்துவதற்கு செய்யப்படும் வேலையின் மூலம் மாற்றப்படும் ஆற்றல் ஒரு யூல் ஆகும். இயங்கும் பொருளின் இயக்க ஆற்றல், ஈர்ப்பு சக்தி, மின் அல்லது காந்த சக்தியில் ஒரு பொருளில் சேமிக்கப்படும் நிலை ஆற்றல், திண்மப் பொருட்களை நீட்டும்போது சேமிக்கப்படும் மீள்விசை, எரிபொருள் எரியும்போது வெளியிடப்படும் வேதி ஆற்றல், ஒளியில் சேமிக்கப்பட்டுள்ள கதிர்வீச்சு ஆற்றல், ஒரு பொருளின் வெப்பநிலை காரணமாகத் தோன்றும் வெப்ப ஆற்றல் போன்றவை அனைத்தும் ஆற்றலின் பொதுவான வடிவங்களாகும். நிறையும் ஆற்றலும் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளன. பொருளொன்றின் நிறை அதன் ஆற்றலுடன் எவ்வாறு தொடர்புடையது என்பதைக் காட்டும் நிறை – ஆற்றல் சமன்பாடு காரணமாக, நிலையாக உள்ள போது எந்தவொரு பொருளும் பெற்றுள்ள மாறா நிறைக்குச் சமமாக அப்பொருள் மாறா ஆற்றலையும் கொண்டிருக்கும். கூடுதலாக ஆற்றல் ஏதாவது எந்த வடிவத்திலாவது அப்பொருளுடன் சேருமாயின் அப்பொருளின் மொத்த நிறையும் ஆற்றலைப் போலவே அதிகரிக்கும். உதாரணமாக, ஒரு பொருளை சூடாக்கிய பின்னர், ஆற்றலின் அதிகரிப்பு போலவே நிறையின் அளவிலும் ஏற்படும் அதிகரிப்பை அளவிட்டு உணரலாம். இவ்வதிகரிப்பின் உணர்திறன் போதுமான அளவுள்ளதாக இருக்கும். உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றலால் மனிதர்கள் உயிர் வாழ்வது போல, பிற உயிரினங்கள் உயிருடன் வாழ்வதற்கும் ஆற்றல் தேவைப்படுகிறது. புதைபடிவ எரிபொருள்கள், அணு எரிபொருள், அல்லது புதுப்பிக்கத்தக்க சக்தி போன்ற ஆற்றல் வளங்களிலிருந்து மனிதர்களுக்குத் தேவைப்படும் ஆற்றல் கிடைக்கிறது. புவியின் காலநிலை மற்றும் சுற்றுச்சூழலின் செயல்முறைகள் ஆகியன சூரியன் மற்றும் புவியில் காணப்படும் புவிவெப்ப ஆற்றல் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் கதிரியக்க ஆற்றல் மூலம் பெறப்படுகின்றன. ஆற்றல் என்றால் என்ன? வேலை செய்யப்படும் திறமையை ஆற்றல் என்கிறோம். ஆற்றலின் வடிவங்கள் ஒரு முறைமையின் மொத்த ஆற்றல் பல்வேறு வழிகளில் பிரிக்கப்பட்டு வகைப்படுத்தப்படுறது. எடுத்துக்காட்டாக விசையியலிருந்து மரபார்ந்த விசையியல் வேறுபடுத்தப்படுகிறது. விண்வெளியின் ஊடாக நகரும் பொருள் மற்றும் அதன் நிலையாற்றல் ஆகியனவற்றைக் கொண்டு ஒரு பொருளின் இயக்க ஆற்றல் தீர்மானிக்கப்படுகிறது. விண்வெளிக்குள் அப்பொருளின் இருப்பிடம் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. புவியீர்ப்பு சக்தி, வெப்ப ஆற்றல், பல வகையான அணுக்கரு ஆற்றல், மின் ஆற்றல் மற்றும் காந்த ஆற்றல் போன்ற ஆற்றல்களுக்கிடையிலான வேறுபாடுகளை விளக்கவும் இத்துறை மிகுந்த பயனளிக்கிறது. இந்த வகைப்பாடுகளில் ஒன்றுடன் ஒன்று; உதாரணமாக, வெப்ப ஆற்றல் வழக்கமாக இயக்கவியல் மற்றும் பகுதியளவு சக்திவாய்ந்த பகுதியை கொண்டுள்ளது. இந்த வகைப்பாடுகளில் பல ஒன்றுடன் ஒன்று கலந்திருப்பதாகக் தோன்றுகின்றன. உதாரணமாக, வெப்ப ஆற்றல் வழக்கமாக பகுதியளவு இயக்கவியலும் பகுதியளவு நிலையாற்றலையும் கொண்டுள்ளது. சில வகையான ஆற்றல்கள் நிலையாற்றல் மற்றும் இயக்க ஆற்றல் ஆகிய இரண்டின் மாறுபட்ட கலவையாகும். இயந்திர ஆற்றலை இதற்கு ஒர் உதாரணமாகக் கூறலாம். இது நிலையாற்றல் மற்றும் இயக்க ஆற்றல் ஆகியவற்றின் கலவையாகும். இந்த பட்டியல் நிறைவுபெற வேண்டியதற்கான அவசியம் இல்லை. எப்போதெல்லாம் விஞ்ஞானிகள் ஆற்றல் பாதுகாப்பு விதியை மீறுவதாக கண்டறிகிறார்களோ அப்போதெல்லாம் புதிய ஆற்றல் வடிவங்கள் சேர்க்கப்பட்டு முரண்பாட்டினை வெளிப்படுத்துகின்றன. வெப்பம் மற்றும் வேலை என்பவை சிறப்பு வகை ஆற்றல்களாகும், அவை ஆற்றலின் பண்புகள் அல்ல, மாறாக ஆற்றல் மாற்றச் செயல்முறைகளின் பண்புகளாகக் கருதப்படுகின்றன. ஒரு பொருளில் எவ்வளவு வெப்பம் அல்லது வேலை உள்ளது என்பதை பொதுவாக அளவிட முடியாது, ஆனால் ஒரு குறிப்பிட்ட செயல்முறை நிகழ்வின் போது அப்பொருட்களில் ஏற்படும் ஆற்றல் மாற்றத்தை அளவிட முடியும். நாம் நோக்கும் திசையிலிருந்து வெப்பம் அல்லது வேலையின் அளவு நேர்மறை அல்லது எதிர்மறை அளவுகளாக அளவிடலாம். நிலையாற்றல்கள் பொதுவாக நேர்மறை அல்லது எதிர்மறை அளவுகளாக கணக்கிடப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட அடிப்படை நிலையில் உள்ள ஆற்றலைக் காட்டிலும் குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ உள்ள அளவை அடிப்படையாகக் கொண்டு இக்கணக்கீடு அமைகிறது. அல்லது இடைவினைபுரியும் இரண்டு பொருட்கள் வெகுதொலைவில் இருப்பதைப்போன்ற அமைப்பினைக் கொண்டுள்ளது. கதிர்வீச்சு ஆற்றல் மற்றும் ஒலி ஆற்றல் போன்ற அலை ஆற்றல்கள், இயக்க ஆற்றல், ஓய்வுநிலை ஆற்றல் முதலானவை ஒவ்வொன்றும் பூச்சியத்திற்குச் சமமாக அல்லது அதிகமாக இருக்கும். ஏனெனில் இவை அடிப்படை நிலை அளவாக பூச்சியத்தை ஒப்பிட்டு முறையே அலையற்ற, இயக்கமற்ற, சடத்துவமற்ற நிலையில் கணக்கிடப்படுகின்றன. வரலாறு ஆற்றல் என்ற பொருள் கொண்ட energy என்ற சொல் பண்டைய கிரேக்க மொழியில் ἐνέργεια, செயல்பாடு என்ற பொருள் கொண்ட சொல்லில் இருந்து வந்துள்ளது [2]. இச்சொல்லின் பயன்பாடு கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் அரிசுடாட்டிலின் படைப்பில் முதல் முறையாக தோன்றியிருப்பதாக அறியப்படுகிறது. நவீன வரையறைக்கு முரணாக ஆற்றல் என்பது மகிழ்ச்சி, ஆனந்தம் போன்ற பண்பு சார்ந்த ஒரு தத்துவ கருத்தாக அன்று கருதப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கோட்ஃபிரைட் லீப்னிசு இலத்தீன் மொழியில் vis viva என்ற கருத்தை முன்மொழிந்தார். ஒரு பொருளின் நிறையை அதன் திசைவேகத்தின் வர்கத்தால் பெருக்கினால் கிடைக்கும் அளவே ஆற்றல் என்று அவர் கூறினார். இம்முழு ஆற்றலும் காப்புற்ற அளவு என்றும் அவர் நம்பினார். உராய்வுடன் ஆற்றலை ஒப்பிட்ட, லீப்னிசு, பரு பொருள்களின் பகுதிகளான உட்கூறுகளின் சீரற்ற இயக்கத்தால் வெப்ப ஆற்றல் தோன்றுகிறது என்று கருதினார். இக்கோட்பாடு பொதுவாக ஒரு நூற்றாண்டுக்கு மேல்வரையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தற்கால இதனையொத்த இயக்க ஆற்றல் இரண்டு காரணிகளால் வேறுபடுகிறது. 1807 ஆம் ஆண்டில், தாமசு எங் ஆற்றலை அதன் நவீன பொருளுடன் vis viva என்ற சொற்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தினார் [3]. 1829 ஆம் ஆண்டில், குசுதாவே-காசுபார்டு கொரியோலிசு இயக்க ஆற்றலை அதன் நவீன பொருளுடன் பயன்படுத்தினார். 1853 ஆம் ஆண்டில் வில்லியம் ராங்கின் நிலை ஆற்றல் என்ற சொல்லை உருவாக்கி பயன்படுத்தினார். ஆற்றல் அழிவின்மை விதி 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முன்வைக்கப்பட்டது. எந்தவொரு தனிமைப்படுத்தப்பட்ட அமைப்பிற்கும் இவ்விதி பொருத்தப்பட்டது. வெப்பம் ஒரு இயற்பியல் தொடர்புடைய பொருள்தானா என்ற வாதம் சில ஆண்டுகளுக்கு நீடித்தது. கலோரி அல்லது உந்தம் போன்ற ஓர் அளவு என்று கருதப்பட்டது. இயந்திர வேலைக்கும் வெப்பம் உருவாதலுக்கும் உள்ள இணைப்பை 1845 ஆம் ஆண்டு யேம்சு பிரசுகோட் யூல் கண்டறிந்தார். இத்தகைய வளர்ச்சிகள் ஆற்றல் அழிவின்மை கோட்பாட்டிற்கு வழிவகுத்தன. பெரும்பாலும் வில்லியம் தாம்சன் (லார்டு கெல்வின்) வெப்பவியக்கவியல் துறையை முறைப்படுத்தினார். ருடால்ப் கிளாசியசு, யோசியா வில்லார்டு கிப்சு, மற்றும் வால்டர் நெர்ன்சுட் ஆகியோரின் வேதியியல் செயல்முறைகளின் விரைவான வளர்ச்சிக்கு வெப்ப இயக்கவியல் உதவியது. மேலும், இத்துறையானது கிளாடியசின் என்டிரோப்பி உருவாக்கல் தத்துவத்திற்கும், யோசப் சிடீபனின் கதிர்வீச்சு ஆற்றல் விதிகளை அறிமுகப்படுத்தவும் உதவியது. நோயெதரின் வகையிடத்தக்கச் சார்புத் தேற்றம், ஆற்றல் அழிவின்மை என்பது காலப்போக்கில் மாறாதது என்கிறது[4]. ஆகையால் 1918 ஆம் ஆண்டிலிருந்து ஆற்றல் அழிவின்மை விதியானது நேரத்துடன் நேரடி நகர்வு சீரொருமை கொண்ட கணக்கீட்டு அளவு என்று கோட்பாட்டாளர்களால் புரிந்து கொள்ளப்பட்டது. ஆற்றலின் அலகுகள் 1843 ஆம் ஆண்டில் யேம்சு பிரெசுகோட் யூல் என்பவர் தொடர்ச்சியான பரிசோதனைகளின் மூலம் வெப்பத்தின் பொறிமுறைச் சமவலுவைக் கண்டுபிடித்தார். மிகவும் பிரபலமானவர்களில் பலர் யூல் கருவியைப் பயன்படுத்தினர்: வெப்ப பரிமாற்றம் நிகழாமல் காப்பிடப்பட்டு தண்ணிரில் மூழ்கியுள்ள ஒரு துடுப்பைச் சுழற்றுகின்ற ஒரு கம்பியுடன் இணைக்கப்பட்ட எடையே இக்கருவியாகும். எடை இழந்த ஈர்ப்பு விசையியக்க சக்தியானது, துடுப்பின் உராய்வினால் நீர் பெறற உள் சக்திக்கு சமமாக இருக்கும் என்பதை இக்கருவி காட்டுகிறது. அனைத்துலக முறை அலகுகள் முறையில் ஆற்றலின் அலகு யூல் ஆகும். யேம்சு பிரெசுகோட் யூல் இதைக் கண்டுபிடித்த காரணத்தால் தருவிக்கப்படும் இவ்வலகு இப்பெயரைப் பெற்றது. ஒரு நியூட்டன் சக்தியைப் பயன்படுத்தி ஒரு மீட்டர் தொலைவு இடப்பெயர்ச்சி செய்ய செலவிடப்படும் ஆற்றலுக்கு சமமாக இருப்பது ஒரு யூல் ஆகும். இருப்பினும் அனைத்துலக முறை அலகுகள் முறைக்கு அப்பாற்பட்டு, எர்கு, கலோரி, பிரித்தானிய வெப்ப அலகு, கிலோவாட்டு மணி, கிலோகலோரி போன்ற பல்வேறு அலகுகள் வெப்ப ஆற்றலை அளவிடப் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வலகுகளைப் பயன்படுத்தும்போது அனைத்துலக அலகு முறையில் குறிப்பிட ஒரு மாற்றுக் காரணி அவசியமாகிறது. அனைத்துலக முறை அலகுகள் முறையில் ஆற்றல் விகிதத்தின் அலகு வாட் ஆகும். (அதாவது ஓர் அலகு நேரத்திற்கான ஆற்றல்) இது வினாடிக்கு ஒரு யூல் ஆகும். எனவே, ஒரு யூல் என்பது ஒரு வாட்-வினாடி மற்றும் 3600 யூல் ஒரு வாட்-மணிநேரத்திற்குச் சமம் ஆகும். சென்டிமீட்டர்-கிராம்-வினாடி அலகு முறையில் ஆற்றலின் அலகு எர்கு ஆகும். இம்பீரியல் அமெரிக்க அளவு முறையில் இதை அடி-பவுண்டு என்கிறார்கள். இவற்றைத் தவிர எலக்ட்ரான் வோல்ட்டு, கலோரி உணவு, கிலோகலோரி போன்ற அலகுகள் விஞ்ஞானம் மற்றும் வர்த்தகத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன. அறிவியல் பயன்கள் பாரம்பரிய விசையியலில் ஆற்றல் என்பது ஒரு கருத்து ரீதியாகவும் கணித ரீதியாகவும் பயன்படக்கூடிய ஒன்றாகும். ஏனெனில் இதுவொரு பாதுகாக்கப்பட்ட அளவு ஆகும். ஆற்றலை ஒரு முக்கிய கருவியாகப் பயன்படுத்தி இயக்கவியலில் பல சூத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வேலை என்பது ஆற்றலின் ஒரு வடிவம் ஆகும், இது நேரத்தையும் தூரத்தையும் இணைக்கிறது. W = ∫ C F ⋅ d s {\displaystyle W=\int _{C}\mathbf {F} \cdot \mathrm {d} \mathbf {s} } வேலை (W) என்பது பாதை C வழியாக F விசையின் ஒருங்கிணைப்புக்கு சமமான கோட்டுத் தொகையீடு ஆகும். வேலையும் ஆற்றலும் ஒரு சட்டகம் சார்ந்தவையாகும். உதாரணமாக ஒரு பந்து மட்டையால் அடிக்கப்படுகிறது எனக் கொள்வோம். மட்டை பந்தின்மீது எந்தவிதமான வேலையையும் செய்யவில்லை. ஆனால் மட்டையை வீசியவனால் பந்தின் மீது போதுமான அளவுக்கு ஒரு வேலை செய்யப்படுகிறது. ஓர் அமைப்பின் மொத்த ஆற்றல் சிலநேரங்களில் ஆமில்டோனியன் என்று அழைக்கப்படுகிறது. வில்லியம் ரோவன் ஆமில்ல்டன் கண்டறிந்த காரணத்தால் இவ்வாற்றல் இப்பெயரைப் பெற்றது. இயக்கத்தின் பாரம்பரிய சமன்பாடுகள் மிக சிக்கலான அல்லது சுருக்க அமைப்புகளுக்கும் கூட இயக்கத்தின் பாரம்பரிய சமன்பாடுகள் ஆமில்டோனியன் அடிப்படையில் எழுதப்படலாம். இந்தப் பாரம்பரிய சமன்பாடுகள் சார்பியல்சாரா விசையியல் குவாண்டம் இயக்கவியலுடன் குறிப்பிடத்தக்க நேரடி ஒப்புமைகளைக் கொண்டுள்ளன [5]. யோசப்-இலூயிசு இலாக்ரேங்கியன் கண்டறிந்த இலாக்ரேங்கியன் கோட்பாடு மற்றொரு ஆற்றல் தொடர்பான கோட்பாடு ஆகும். இம்முறையிலும் ஆமில்டன் கோட்பாட்டின் அடிப்படைகளே பின்பற்றப்படுகின்றன. இவ்விரு கோட்பாடுகளிலும் இயக்கத்தின் சமன்பாடுகள் பெறப்படுகின்றன அல்லது தருவிக்கப்படுகின்றன. பாரம்பரிய விசையியலுக்குப் போட்டியாக இக்கோட்பாடு கண்டறியப்பட்டாலும் நவீன இயற்பியலுக்கு இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பொதுவாக இயக்க ஆற்றலில் இருந்து நிலையாற்றலைக் கழிக்கக் கிடைப்பது இலாக்ரேங்கியன் எனப்படுகிறது. ஆமில்டோனியன் கோட்பாட்டைக் காட்டிலும் இலாக்ரேங்கியன் கோட்பாடு கனிதவியலுக்கு மிகவும் வசதியானதாக கருதப்படுகிறது. வகையிடத்தக்க சமச்சீர்நிலையுடைய எந்தவொரு இயற்பியல் முறையின் செயல்பாடும் தொடர்புடைய பாதுகாப்பு விதியைப் பெற்றுள்ளது என 1918 இல் உருவாக்கப்பட்ட நோயிதர் தேற்றம் கூறுகிறது. நவீன கோட்பாட்டு இயற்பியல் மற்றும் நுண்கணித வேறுபாடுகளுக்கு நோயிதர் தேற்றம் ஒரு அடிப்படைக் கருவியாக மாறியது. ஆற்றலின் வகைகள் நிலை ஆற்றல் இயக்க ஆற்றல் வெப்ப ஆற்றல் ஒளியாற்றல் வேதியியல் ஆற்றல் அணு ஆற்றல் அணுக்கரு ஆற்றல் மேற்கோள்கள் புற இணைப்புகள் - பகுப்பு:இயற்பியல் அளவுகள்
ஆற்றலின் அலகு கண்டுபிடித்தவர் யார்?
யேம்சு பிரெசுகோட் யூல்
6,683
tamil
004938454
இந்தியாவில் வங்கித்தொழில் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் முதன்முதலாகத் துவங்கியது. இந்தியாவின் மிகப்பழமையான வங்கி இந்திய ஸ்டேட் வங்கியாகும், அது 1806 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் செயல்படத் துவங்கியது. இந்திய ஸ்டேட் வங்கி ஓர் அரசுடைமை வங்கியும், நாட்டின் மிகப்பெரும் வணிக வங்கியுமாகும். மைய வங்கித்தொழிலின் பொறுப்புகளை மேற்கொண்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியானது , 1935 ஆம் ஆண்டில், அப்போதைய இந்திய இம்பீரியல் வங்கியிடமிருந்து இந்த பொறுப்புகளை முறைப்படி பெற்றுக்கொண்டதும், அதனை வணிகவங்கியாகச் செயல்படும் நிலைக்குத் தாழ்த்தியது. 1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்றபின், ரிசர்வ் வங்கி தேசியமயமாக்கப்பட்டு, அதற்கு பரந்த அதிகாரங்கள் வழங்கப் பெற்றது. 1969 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம், 14 மிகப்பெரும் வணிக வங்கிகளை அரசுடைமையாக்கியது; அதேபோல் 1980 ஆம் ஆண்டில் மேலும் ஆறு அடுத்த மிகப்பெரும் வங்கிகளை அரசுடைமையாக்கியது. தற்சமயம், இந்தியாவில் 96 அட்டவணையிட்ட வணிக வங்கிகள் (ஷெட்டியூல்ட் வணிக வங்கிகள்) (எஸ்சிபிகள்) உள்ளன - 27 பொதுத்துறை வங்கிகள் (அதாவது, இந்திய அரசாங்கம் தன்வசமே பணயப்பிணைப்பு வைத்துள்ளது), 31 தனியார் வங்கிகள் (அவை அரசாங்க பணயப்பிணைப்பு பெறாதவை; பொதுப்படையாக பட்டியலில் உள்ளவை மற்றும் பங்குச் சந்தையில் வணிகம் புரிய அதிகாரம் பெற்றவை ஆகும்) மற்றும் 38 அயல் நாட்டு வங்கிகளும் உள்ளன. அவை அனைத்தும் தனித்தனியாக செயல்பட்டாலும், ஒருங்கிணைந்த ஒரு வலையமைப்பாக ஆக மொத்தம் 53,000 கிளைகள் மற்றும் 17,000 தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் (ஏடிஎம்) கொண்டு செயல்படுகின்றன. ஐசிஆர்ஏ லிமிடெட் என்னும் ஒரு மதிப்பீட்டு நிறுவனத்தின் அறிக்கையின்படி, பொதுத்துறை வங்கிகள் வங்கித்தொழிலின் மொத்த சொத்துக்களில் 75% பங்கையும், தனியார் மற்றும் அயல் நாட்டு வங்கிகள் முறையே 18.2% மற்றும் 6.5% பங்குகளையும் வைத்துக்கொண்டுள்ளன. தொடக்ககால வரலாறு இந்தியாவில் வங்கித்தொழில் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் முதன்முதலாகத் துவங்கியது. 1786 ஆம் ஆண்டில் தி ஜெனரல் பேங்க் ஆஃப் இந்தியா, மற்றும் பேங்க் ஆப் ஹிந்துஸ்தான், ஆகியவை முதலில் துவங்கப் பெற்றாலும், தற்பொழுது அவ்வங்கிகள் செயல்பாட்டிலில்லை. இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருப்பவற்றில் மிகப்பழமையான வங்கி இந்திய ஸ்டேட் வங்கியாகும. அது முதன்முதலில் ஜூன் 1806 ஆம் ஆண்டில் பேங்க் ஆஃப் கொல்கத்தா என்ற வங்கியிலிருந்து உருவானது. பின் உடனடியாக பேங்க் ஆஃப் பெங்கால் ஆக மாறியது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வழங்கிய உரிமை சாசனத்தின் கீழ் நிறுவப்பெற்ற மூன்று தலைமை மானிலத்துக்குரிய வங்கிகளில் இந்த வங்கி ஒன்றாகும். இதர இரண்டு வங்கிகள் பேங்க் ஆஃப் பாம்பே மற்றும் பேங்க் ஆஃப் மெட்ராஸ் ஆகும். இந்த மூன்றுமே பல வருடங்களாகவே தலைமை வங்கிகளாக அரை-மத்திய வங்கிகளாக இயங்கி வந்தன. அதற்குப் பிறகு வந்த வங்கிகளும் அவ்வாறே இயங்கின. 1921 ஆம் ஆண்டில் அந்த மூன்று வங்கிகளும் ஒருங்கிணைந்து இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியாவாக உருவெடுத்தன. பிறகு இந்தியா சுதந்திரம் பெற்றதும், இவை மூன்றும் இந்திய ஸ்டேட் வங்கியாக மாறியது. கொல்கத்தாவில் உள்ள இந்திய வியாபாரிகள் 1839 ஆம் ஆண்டில் யூனியன் வங்கியை நிறுவினார்கள். ஆனால் 1848-49 ஆண்டுகளில் நிகழ்ந்த பொருளாதார நெருக்கடியால் அவ்வங்கி 1848 ஆம் ஆண்டில் தோல்வி அடைந்தது. 1865 ஆம் ஆண்டில் துவங்கி இன்றுவரை இயங்கி வரும் தி அலகபாத் வங்கி, இந்தியாவில் மிகப்பழமையான கூட்டு மூலநிதி வங்கியாகும். இருப்பினும் அது முதல் வங்கி அல்ல. அப்பெருமை பேங்க் ஆஃப் அப்பர் இந்தியாவிற்கே உரியது. அது, 1863 ஆம் ஆண்டில் தோன்றி, 1913 வரை நீடித்து, தோல்வி கண்டதும், அதன் சில சொத்துகளும் மற்றும் கடன்களும் அல்லியான்ஸ் பேங்க் ஆஃப் சிம்லாவிற்கு மாற்றப்பெற்றது. அமெரிக்கன் உள்நாட்டு யுத்தம் காரணமாக கூட்டமைப்பு மாகாணங்களில் இருந்து லங்காஷையருக்கு பஞ்சு ஏற்றுமதி தடைப்பட்டதும், இந்திய பஞ்சு வியாபாரத்திற்கு நிதி கடனாக வழங்க நிதி மேம்பாட்டாளர்கள் வங்கிகளைத் தொடங்கினர். ஊகபேரம் செய்யும் துணிகர முயற்சிகளுக்கு பெருமளவு இடம் கொடுத்தமையால், அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் துவங்கிய பெரும்பாலான வங்கிகள் தொழிலில் தோல்வியைத் தழுவின. இதனால் நிதிவைப்பாளர்கள் பணமிழந்தனர் மற்றும் வங்கிகளில் உள்ள வைப்புகளில் இருந்து பெறும் வட்டித்தொகையையும் இழந்தனர். அதன் விளைவாக, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் பல ஆண்டுகளுக்கு இந்தியாவில் வங்கித்தொழில் ஐரோப்பியர்களின் தனிப்பட்ட தளமாகவே இருந்தது. 1860 ஆண்டுகளில் குறிப்பாக கொல்கத்தாவில், அந்நிய வங்கிகள் கிளைகளைத் துவங்கின. 1860 ஆம் ஆண்டில் தி கம்போடிரே டி'எஸ்கம்ப்டே டி பாரிஸ் கொல்கத்தாவில் ஒரு கிளையையும், 1862 ஆம் ஆண்டில் பாம்பேயில் மற்றும் ஒரு கிளையையும் திறந்தது; அதைத் தொடர்ந்து மெட்ராசிலும், அந்நாளைய பிரெஞ்சு குடியிருப்பான பாண்டிச்சேரியிலும் கிளைகள் துவங்கின. 1869 ஆம் ஆண்டில் எச்எஸ்பிசி தன்னை வங்காளத்தில் நிலை நிறுத்திக் கொண்டது. பிரிட்டிஷ் பேரரசின் வர்த்தகத்தின் காரணமாக, இந்தியாவில் மிக சுறுசுறுப்பாக இயங்கும் துறைமுகமாக கொல்கத்தா விளங்கியதால், அந்நகரம் ஒரு வங்கித்தொழில் மையமாகவே மாறியது. 1881 ஆம் ஆண்டில் ஃபைசாபாதில் துவங்கிய தி அவுத் வணிக வங்கிதான் முதல் முழுமையான இந்தியன் கூட்டு மூலநிதி வங்கியாகும். அது 1958 ஆம் ஆண்டில் தோல்வி கண்டது. அடுத்து 1895 ஆம் ஆண்டில் லாகூரில் துவங்கிய பஞ்சாப் நேஷனல் வங்கி, இன்றளவும் நிலைத்திருந்து, தற்போது இந்தியாவில் உள்ள மிகப்பெரிய வங்கிகளுள் ஒன்றாக விளங்குகிறது. இருபதாம் நூற்றாண்டு முடியும் தறுவாயில், இந்தியப் பொருளாதாரம் நிலைப்புத்தன்மை அடையும் காலகட்டத்தில் இருந்தது. இந்தியக் கலகம் நிகழ்ந்ததன்பின் ஐந்து பத்தாண்டுகள் இடைவெளிக்குப்பிறகு, சமூகம், தொழில் துறை மற்றும் பிற உள்கட்டமைப்புகள் நன்கு வளர்ச்சி கண்டது. பெரும்பாலும் குறிப்பிட்ட இனத்தையும் மற்றும் சமயத்தையும் சார்ந்த சமுதாயத்தினர் பயன்பெறும் வகையில் இந்தியர்கள் சிறு வங்கிகளை அமைத்தனர். ராஜதானி வங்கிகள் வங்கித் தொழிலில் மேலாதிக்கம் செய்து வந்தனவென்றாலும் ஒரு சில நாணய மாற்று வங்கிகளும், ஏராளமான இந்தியன் கூட்டு மூலநிதி வங்கிகளும் அமைந்தன. அனைத்து வகையான வங்கிகளும் பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளில் இயங்கின. பெரும்பாலும் ஐரோப்பியர்களுக்குச் சொந்தமான நாணய மாற்று வங்கிகள், வெளிநாட்டு வணிகத்திற்கு நிதியளிப்பதில் முழுக்கவனம் செலுத்தின. பொதுவாக இந்தியன் கூட்டு மூலநிதி வங்கிகள் குறைவான மூலதனத்துடனிருந்ததால், ராஜதானி மற்றும் நாணய மாற்று வங்கிகளோடு போட்டியிடும் அளவுக்குப் போதுமான அனுபவமோ முதிர்ச்சியோ பெற்றிருக்கவில்லை. இந்த பிரிவினை கர்சன் பிரபுவை "வங்கித்தொழிலைப் பொறுத்த மட்டில் நாம் காலங்களில் மிகவும் பின் தங்கி இருக்கின்றோம். கனத்த மரத்தடுப்புகளால் தனித்தனியான இடைஞ்சல் மிகுந்த அறைகளாகப் பிரித்த பழைய பாணி பயணக்கப்பல்கள் போல் நாம் இருக்கிறோம்" என்று கூறவைத்தது. 1906 முதல் 1911 வரை, இடைப்பட்ட காலத்தில் சுதேசி இயக்கத்தால் ஊக்கமடைந்த வங்கிகள் தோன்றின. உள்ளூர் வணிகர்கள் மற்றும் அரசியல் புள்ளிகள், இந்திய சமுதாயத்தினருடையதும் இந்திய சமுதாயத்தினருக்காகவுமான வங்கிகளை நிறுவுவதற்கு சுதேசி இயக்கம் தூண்டுகோலாக அமைந்தது. அப்போது துவங்கப் பெற்ற பேங்க் ஆஃப் இந்தியா, கார்ப்பொரேஷன் வங்கி, இந்தியன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற பல வங்கிகள் இன்றும் இயங்கி வருகின்றன. சுதேசி இயக்கம் அளித்த ஊக்கத்தால், தெற்கு கனரா மாவட்டம் (தெற்கு கனரா) என்ற பெயரில் ஒருங்கிணைந்த தக்ஷிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டத்தில் பல வங்கிகள் தோன்றின. நான்கு நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் இந்த மாவட்டத்தில் தான் தொடங்கப் பெற்றன. மற்றும் ஒரு முன்னணி தனியார் துறை வங்கியும் இங்குள்ளது. எனவே பிரிவுபடாத தக்ஷிண கன்னட மாவட்டம் "இந்தியன் வங்கித்தொழிலுக்குத் தொட்டில்" எனப்பட்டது. முதல்உலகப் போரில் இருந்து சுதந்திரம் பெறும்வரையில் முதல் உலகப்போர் நடைபெற்ற காலம் (1914-1918) தொடர்ந்து இரண்டாம் உலகப்போர் நடந்து முடிந்த காலம் (1939-1945), அதன்பின் இந்தியா சுதந்திரம்பெறுவதற்கு முந்தைய இரண்டு வருட காலம் இந்திய வங்கித்தொழிலுக்குச் சவாலாகவே இருந்தன. கொந்தளிப்பாக இருந்த முதல் உலகப்போர் நடந்த வருடங்களில், போர் சார்ந்த பொருளியல் நடவடிக்கைகளால் இந்தியப் பொருளாதாரத்திற்கு மறைமுகமான உந்துதல் இருந்தாலும், வீழ்ச்சியடைந்த வங்கிகள் போருக்குப் பலியாயின. 1913 முதல் 1918 வரையில், இந்தியாவில் குறைந்த பட்சம் 94 வங்கிகள், பின்வரும் அட்டவணையில் எடுத்துக்காட்டியது போல் தோல்வி கண்டன: சுதந்திரம் பெற்றபிறகு 1947 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியாவின் பிரிவினை பஞ்சாப் மற்றும் மேற்கு வங்காளம் மாகாணங்களில், பல மாதங்களுக்கு வங்கி நடவடிக்கைகள் முடங்கும் அளவிற்கு, பொருளாதாரத்தில் எதிரிடையான விளைவுகளை உருவாக்கியது. இந்தியாவின் சுதந்திரம் வங்கித்தொழிலில் கட்டுப்பாடற்ற வணிகக் கோட்பாட்டு ராஜ்யத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்திய அரசாங்கம் நாட்டின் பொருளியல் வாழ்க்கையில் தீவிரமாகப் பங்காற்றும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டது. மேலும், 1948 ஆம் ஆண்டில் அரசு மேற்கொண்ட தொழில்துறைக் கொள்கை தீர்மானமாம், ஒரு கலப்புப் பொருளாதாரத்தை எதிர்நோக்கியது. இது வங்கி மற்றும் நிதி உள்ளிட்ட பொருளியலின் பல்வேறுபட்ட பிரிவுகளில் மாநிலம் அதிகமாக ஈடுபடும்படியான விளைவுகளை உருவாக்கியது. வங்கித்தொழிலைக் கட்டுப்படுத்தும் முக்கியமான வழிமுறை நடவடிக்கைகள் பின்வருமாறு மேற்கொள்ளப் பெற்றன: 1948 ஆம் ஆண்டில், இந்தியாவின் மைய வங்கி ஆணையமாகத் திகழ்ந்த இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனமாக நாட்டுடைமை ஆக்கப் பெற்றது. 1949 ஆம் ஆண்டில், வங்கித்தொழில் கட்டுப்பாட்டு சட்டம் நிறைவேறியதுடன் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) "இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளையும் ஒழுங்குபடுத்த, கட்டுப்படுத்த, மற்றும் கண்காணிப்பு ஆய்வு நடத்த" தேவைப்படும் அதிகாரங்கள் அனைத்தும் வழங்கப்பெற்றது. வங்கித்தொழில் கட்டுப்பாட்டுச் சட்டப்படி, ஒரு புதிய வங்கியோ, அல்லது ஏற்கனவே உள்ள வங்கியின் கிளையோ துவங்க இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற வேண்டிய தாயிற்று. மேலும் ஒன்றிற்கும் மேற்பட்ட வங்கிகளில் பொதுவான இயக்குனர்கள் இருப்பது தடை செய்யப் பெற்றது. எனினும், இந்த உடன்படிக்கைகள், கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் இருந்தும், இந்தியாவில் ஸ்டேட் வங்கி தவிர்த்த பிற வங்கிகள் தொடர்ந்து தனிப்பட்ட நபர்களுக்குச் சொந்தமாக இயங்கி வந்தன. 19 ஜூலை 1969 அன்று அரசாங்கம் முக்கிய வங்கிகளை தேசீய மயமாக்கியதுடன் இந்த நிலைமை அடியோடு மாறியது. தேசியமயமாக்கல் 1960 களில், இந்திய வங்கித்தொழில்துறை இந்தியப் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒரு முக்கிய கருவியாக திகழ்ந்தது. அதே நேரத்தில், மிகவும் அதிக அளவில் வேலை வாய்ப்புக்கள் வழங்கும் ஒரு துறையாக வங்கித் துறை உருவெடுக்க, வங்கித்துறையை நாட்டின் முன்னேற்றம் கருதி நாட்டுடமையாக்குவது பற்றி பேச்சுக்கள் எழுந்தன. அப்போதைய இந்தியப் பிரதமரான இந்திரா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் வருடாந்திர மாநாட்டில் " வங்கிகளை தேசிய மயம் ஆக்குதல் பற்றிய சிதறிய சிந்தனைகள்" எனும் தலைப்பிலான கருத்துருவில் இந்திய அரசாங்கத்தின் நோக்கத்தை வெளிப்படுத்தினார். அந்தக் கருத்துருவானது நேர்மறையான வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு, அவரது நடவடிக்கை துரிதமாகவும் மற்றும் எதிர்பாராததாகவும் அமைந்தது. இந்திய அரசாங்கம் ஜூலை 19, 1969 நள்ளிரவு முதல் பதினான்கு பெரிய வணிக வங்கிகளை நாட்டுடைமையாக்கும் ஒரு அவசரச் சட்டத்தை கொண்டு வந்து அமுல்படுத்தியது. இந்தியாவின் ஒரு தேசியத் தலைவரான ஜெயப்ரகாஷ் நாராயண், அந்த நடவடிக்கையை " அரசியல் விவேகத்தின் திறமையான வீரச்செயல்" என்று வர்ணித்தார். அவசரச் சட்டம் வெளியிட்ட இரண்டு வாரத்திற்குள் பாராளுமன்றம் வங்கித்தொழில் நிறுவனங்கள் (கைப்பற்றுதல் மற்றும் பொறுப்பு மாற்றுதல்) மசோதாவை நிறைவேற்றி, 9 ஆகஸ்ட் 1969 அன்று ஜனாதிபதின் ஒப்புதலையும் பெற்றது. 1980 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக மேலும் ஆறு வணிக வங்கிகளைத் தேசியமயம் ஆக்குவது தொடர்ந்தது. கடன் வழங்குவதில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை அதிகரிக்கவே இவ்வாறு செய்ததாக காரணம் கூறியது. இரண்டாவது முறையாக தேசியமயமாக்கப் பெற்றதும, நாட்டின் வங்கித்தொழில் வணிகத்தில் 91% அளவை இந்திய அரசாங்கம் கட்டுப்படுத்தியது. பின்னர், 1993 ஆம் ஆண்டில், அரசாங்கம் நியூ பேங்க் ஆஃப் இண்டியா வங்கியை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைத்தது. அது தேசியமயமாக்கிய வங்கிகளுக்குள் நடந்த ஒரே இணைப்பாகும். இதனால், தேசியமயமாக்கிய வங்கிகளின் எண்ணிக்கை 20 லிருந்து, 19க்குக் குறைந்தது. இதன் பிறகு, 1990 ஆண்டுகள் வரையில், தேசியமயமாக்கிய வங்கிகள் 4% வளர்ச்சி வீதம் கண்டு இந்தியப் பொருளாதாரத்தின் சராசரி வளர்ச்சி வீதத்திற்கு ஈடு கொடுத்தது. 2007-2009 ஆண்டுகளில் நிலவிய உலகளாவிய நிதி நெருக்கடியின்போது இந்தியப் பொருளாதாரம் தாக்குப்பிடிப்பதற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உதவின என்று உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம் உள்ளிட்ட பலரும் போற்றியுள்ளனர்.[1][2] தாராளமயம் ஆக்குதல் 1990 ஆண்டுகளின் தொடக்கத்தில், அப்போதைய நரசிம்மராவ் அரசாங்கம் தாராளமயம் ஆக்கும் கொள்கையை படுத்தியது. அதன்படி சிறு எண்ணிக்கையில் தனியார் வங்கிகள் அமைக்க உரிமம் வழங்கியது. இவை புதிய தலைமுறை தொழில்-நுட்ப வங்கிகள் என்று வழங்கின. அந்த வரிசையில், குளோபல் டிரஸ்ட் பேங்க் (முதன் முதலாக தோன்றிய புதிய தலைமுறை வங்கி) மேலும் பின்னர் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் உடன் இணைந்தது, ஆக்சிஸ் பேங்க் (துவக்கத்தில் யுடிஐ பேங்க்), ஐசிஐசிஐ பேங்க் மற்றும் எச்டிஎப்சி பேங்க் ஆகிய வங்கிகள் அடங்கும். இத்தகைய புதிய நடவடிக்கை, இந்தியப் பொருளாதாரத்தின் துரித வளர்ச்சியுடன் சேர்ந்து, அரசாங்க வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் அந்நிய வங்கிகள் ஆகிய மூன்று பிரிவு வங்கிகளின் வலுவான பங்களிப்புடன் துரித வளர்ச்சியடைந்து வந்த இந்திய வங்கித்துறைக்கு மறு வலுவூட்டியது. அயல் நாட்டினரின் நேரடி முதலீடுகளுக்கான விதிமுறைகளைத் தளர்த்துவதற்கான திட்டத்துடன் இந்திய வங்கித்தொழிலின் அடுத்த கட்ட நடவடிக்கை அமைந்தது. இதன் மூலம் அயல் நாட்டு முதலீட்டாளர்கள் தற்போதைய 10%ஐ விட அதிகமாக வாக்குரிமை வழங்கலாம். இது, தற்சமயம் சில வரம்புகளுடன் 74% வரை எட்டியுள்ளது. இந்த புதிய கொள்கை இந்தியாவில் வங்கித்துறையை முற்றிலுமாகக் குலுக்கியது. வங்கியாளர்கள், இதுநாள் வரை 4-6-4 (கடன் வாங்குதல் 4%; கடன் கொடுத்தல் 6%; 4 மணிக்கு வீடு திரும்புதல்) என்ற செயல்முறைக்குப் பழக்கப்பட்டிருந்தனர். இந்த புதிய அலை பாரம்பரிய வங்கிகளின் பணியில் நவீன தோற்றத்தையும், தொழில்-நுட்ப அறிவுமுறைகளையும் அறிமுகப்படுத்தியது. இவையெல்லாம் இந்தியாவில் சில்லறை வணிகம் பெருக வைத்தது. மக்கள் அவர்களின் வங்கிகளிடமிருந்து அதிகமாகக் எதிர்பார்ப்பது மட்டுமன்றி அவற்றிடமிருந்து அதிகமாக பெற்றுக் கொள்ளவும் செய்தனர். நடப்பு காலத்தில் (2007), தனியார் வங்கிகளுக்கும் அயல் நாட்டு வங்கிகளுக்கும் இந்திய கிராமங்களைச் சென்றடைவது ஒருபெரும் சவாலாகவே இருப்பினும், பொதுவாக வழங்கல், பொருள் வரிசை, மற்றும் இலக்கை அடைதல் ஆகியவற்றில் இந்திய வங்கித்தொழில் நன்கு முதிர்ச்சி பெற்றுள்ளது. சொத்துகள் தரம் மற்றும் போதிய மூலதன வசதி ஆகியவற்றின் அடிப்படையில், அவற்றின் வட்டாரத்த்தில் உள்ள மற்ற வங்கிகளைக் காட்டிலும் இந்திய வங்கிகள் தூய்மையான, வலிமையான, மற்றும் வெளிப்படையான கையிருப்பு நிலைஏடுகள் வைத்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி குறைந்த பட்ச அரசுத் தலையீடு கொண்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இந்திய ரூபாயை பொறுத்த மட்டில் இந்தியாவின் கொள்கையானது, எந்த குறிப்பிட்ட நாணய மாற்று விகிதமுமின்றி அதன் நிலையற்ற தன்மையைக் கையாள்வதாகும் - பெரும்பாலும் இதுவே உண்மையுமாகும். இந்தியப் பொருளாதாரம், குறிப்பாக சேவைப் பிரிவு, சில காலத்திற்கு வளர்ச்ச்சியடைந்து வலிமையாக இருப்பதை எதிர்பார்க்கும் தருவாயில், வங்கிச் சேவைகளுக்கு, குறிப்பாக சில்லறை வங்கி சேவை, அடமானம், மற்றும் முதலீட்டு சேவைகளுக்கான தேவைகளும் வலுவாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனங்களிடையே சேர்க்கை, மற்றும் கையகப் படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் ஊக்கம் பெறலாம். மார்ச் 2006 ஆம் ஆண்டில், இந்திய ரிசர்வ் வங்கி வார்பர்க் பின்க்கசுக்கு கோடக் மகிந்திரா வங்கியில் (ஒரு தனியார் துறை வங்கி) தனது பணயப் பிணைப்பை 10% அதிகரித்துக் கொள்ள அனுமதி வழங்கியது. ஒரு முதலீட்டாளர் தனியார் துறை வங்கியில் பணயப் பிணைப்பை 5% மேலாக அதிகரித்துக் கொள்ள அனுமதி வழங்கியது. இதுவே முதல்முறையாகும். ஏனெனில், எந்த ஒரு தனியார்துறை வங்கியிலும், 5% மேற்பட்ட பணயப் பிணைப்புகள் தம்மால் மதிப்பீடு செய்யப்பட வேண்டுமென்று 2005 ஆம் ஆண்டில் ஆர்பிஐ சில நெறிமுறைகளை அறிவித்தது. வீட்டுக்கடன், வாகனக்கடன் மற்றும் தனியார் கடன்களை வசூலிக்கும் முயற்சியில் அரசு-சார்பில்லாத வங்கிகள் வன்முறையாகச் செயல்படுவதாக சமீப ஆண்டுகளாக விமரிசகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். வங்கிக்கடன் வசூல் முயற்சிகளால், வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த சக்தியற்றவர்கள் தற்கொலைக்குத் தூண்டப்படுகின்றனர் என்று செய்திப்பத்திரிகை அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.[3][4][5] கூடுதல் வாசிப்பு "பாரத ஸ்டேட் பேங்க் வளர்ச்சி" ( இந்திய இம்பீரியல் பேங்க் காலகட்டம்,1921-1955) (வால்யூம் III) "வங்கித்தொழில் எல்லைகள்" - ஒரு மாதாந்திர சஞ்சிகை, மும்பையில் இருந்து வெளிவரும் க்லோகால் இன்போர்மட் பிரசுரிப்பது. பதிப்பாசிரியர்- மனோஜ் அகர்வால் குறிப்புகள் மேலும் பார்க்க இந்திய வங்கிகள் பட்டியல் இந்திய வங்கிகள் வெளி இணைப்புகள் பகுப்பு:இந்தியாவில் வங்கியியல்
இந்தியாவில் தாராளமயம் எப்போது தொடங்கியது?
1990
10,683
tamil
0115b1c86
மிகப்பெரிய உயிரினங்கள் கனவளவு, திணிவு, உயரம், நீளம் போன்ற பல்வேறு அளவீடுகள் கொண்டு வரையறுக்கப் படுகின்றன. சில உயிரினங்கள் இணைந்து பேருயிரினமாக காணப்படும் நிலையில் அவை பெரிய உயிரினமாக வகைப்படுத்தப்பட மாட்டது. எடுத்துக்காட்டாக உலகின் மிகப்பெரிய பவளத்திட்டான பெரும் தடுப்புப் பவளத்திட்டு பல உயிரினங்களின் கூட்டாகும், எனவே அது மிகப்பெரிய உயிரினமாக வகைப்படுத்தப்படவில்லை. எசுப்பன் மரங்கள் ஒரு தாய்த்தாரவத்திலிருந்து வரும் வேரிலிருந்தே தோன்றுகின்றன. ஒருகுழு எசுப்பன் மரங்கள் தரைக்கடியில் ஒரே இணைக்கப்பட்ட வேர்த்தொகுதியையே கொண்டிருக்கும். இவ்வாறு தரைக்கடியில் இணைக்கப்பட்ட மிகப்பெரிய எசுப்பன் தோப்பு ஐக்கிய அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் காணப்படும் பண்டோ மரமாகும்.[1] சில அறிஞ்சர்களின் கருத்துப்படி இது திணிவு அல்லது கனவளவின் படி உலகின் மிகபெரிய உயிரினமாகும்.[2] இது மொத்தமாக 0.43சதுர கிலோமீட்டர் (km²) (106 ஏக்கர்) பரப்பளவை அடைக்கிறது. இதன் மதிப்பிடப்பட்ட நிறை 6000 தொன்னாகும்.[3] ஐக்கிய அமெரிக்காவின் ஒரிகன் மாநிலத்தில் அமிந்துள்ள மெல்லர் தேசியக் காட்டில் காணப்படும் இராட்சத பூஞ்சான் இனமான தேன் காளான் (Armillaria ostoyae) 8.9சதுர கிலோமீட்டர் (km²) (2,200ஏக்கர்)[4] பரப்பளவைக் கொண்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன்படி இதுவே பரப்பளவின் படி உலகின் மிகப்பெரிய உயிரினமாகும். இதை ஒரு தனி உயிரினமா அல்லது பேருயிரினாம என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. சில சோதனைகளின் அடிப்படையில் இது ஒரே மரபணுவைக் கொண்டுள்ளது எனினும் [5], தேன்காளானின் பூஞ்சை (mycelium) இணைக்கப்பட்ட ஒன்றாக இல்லாவிடில் இது தனிப்பட்ட பல பூஞ்சைகளின் குத்துச்செட்டு குடியிருப்பாகவே (clonal colony) கருதலாம்.தேன்காளானை குத்துச்செட்டு குடியிருப்பாக கருதுமிடத்து, நடுநிலக் கடலில் பெலரிக் தீவுகளுக்கு அண்மையில் கண்டறியப்பட்டுள்ள 8கிலோமீட்டர் (km) (4.3மைல்) நீளமான கடல் நிலைதிணையொன்றின் (Posidonia oceanica) குத்துச்செட்டு குடியிருப்பொன்று தேன்காளானை குத்துச்செட்டு குடியிருப்பை விட பெரியதாகும்.[6] மிகப்பெரிய தாவரம் பல்-தண்டு மரங்களை தவிர்த்துப் பார்க்குமிடத்து ஜெனரல் சேர்மன் (General Sherman) என அழைக்கப்படும் 1,487 m3 (52,500 cu ft) கனவளவைக் கொண்ட இராட்சத செகொயா மரம் கனவளவின் படி பெரிய உயிரினமாக கருதப்படலாம்.[7] 83.8 மீட்டர் (m) (275 அடி) உயரமான இந்த மரத்தின் தண்டு மாத்திரம் 1,800 தொன் எடையைக் கொண்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆகக் குறைந்தது 2,500 கன மீட்டர் (m3) (88,000 கன அடி) கனவளவையும் 3,300 தொன் எடையையுடைய தண்டைக் கொண்ட லின்சீ கிரீக் என்றழைக்கப்பட்ட இராட்சத செகொயா மரமே இது வரை அளவிடப்பட்ட மிப்பெரிய தனித் தண்டு மரமாகும். இது 1905 ஆம் ஆண்டு புயலின்போது தரையில் வீழ்ந்தது.[8] மிகப்பெரிய விலங்கு கனவளவு, எடையின் படியான மிகப்பெரிய விலங்கு தற்போது அருகிய இனமான நீலத்திமிங்கிலமாகும். நீலத்திமிங்கிலம் ஒன்றின் அளவிடப்பட்ட கூடிய நீளம் 33.58 மீட்டர் (110.2 அடி)யும் கூடிய நிறை 210 அமெரிக்க தொன்களுமாகும் (கர்ப்பமான திமிங்கிலம்). ஆப்பிரிக்க யானைகளின் களிறுகளே தரையில் வாழும் விலங்குகளின் மிகப்பெரியவாகும்.பின்வரும் அட்டவணை முதல் பத்து மிகப்பாரமான விலங்குகளைப் பற்றியது: மிகப்பெரிய நிலவாழ் விலங்கு ஒரு குறித்த களிறு ஒன்று 12,272 கிலோகிராம் எடையை கொண்டிருந்தது. பல தொன்மாக்கள் உட்பட, தற்போது இன அழிவுக்குட்பட்டுள்ள பல விலங்குகள் களிறுகளை விட பெரியனவாக காணப்பட்டன. மிகப்பெரிய பக்றீரியா இதுவரை அறியப்பட்ட மிகப்பெரிய பக்றீரியா Thiomargarita namibiensis ஆகும். இது 0.75mm வரை வளரக்கூடியது. இது வெற்றுக்கண்களுக்குத் தெரியக்கூடியது. ஆதாரங்கள் பகுப்பு:உயிரினங்கள்
பூமியில் மிகப்பெரிய பாலூட்டி எது?
களிறு
2,605
tamil
37dbb9859
கணிப்பொறி மென்பொருள் அல்லது மென்பொருள் என்பது கணிப்பொறி நிரல்கள் மற்றும் கணிப்பொறிகளால் படிக்கவும் எழுதப்படவும் முடிகின்ற மற்றும் பிற வகைப்பட்ட தகவல் போன்ற எண்ணிம முறையில் சேமிக்கப்படும் தரவு என்று முதன்மையாகப் பயன்படுத்தப்படுகின்ற பொதுவான ஒரு சொல்லாகும். இன்று இந்தச் சொல் திரைப்படச் சுருள், நாடாக்கள் மற்றும் பதிவுப்பொருட்கள் போன்று வழக்கமாக கணிப்பொறியோடு தொடர்புகொண்டிராத தரவையும் உள்ளடக்கியிருக்கிறது..[1] இந்த சொற்பதம் வன்பொருள் (அதாவது உடலியல் சாதனங்கள்) என்ற பழைய சொல்லுக்கு முரணாக இருக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது; வன்பொருள் என்பதற்கு முரணாக மென்பொருள் என்பது கண்ணுக்குப் புலப்படாதது, அதாவது "தொட இயலாதது" என்பதைக் குறிக்கிறது.[2]. மென்பொருள் என்பதும் சிலசமயங்களில் மிகவும் குறுகலான பொருளிலேயே, அதாவது பயன்பாட்டு மென்பொருட்கள் என்பதாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டுகள்: பயன்பாட்டு மென்பொருள், பயனர்களுக்கு பயன்மிக்க வேலையை செய்துதரும் வேர்ட் பிராசஸர்கள் போன்றவை. தளநிரல், உடனிணைக்கப்பட்ட முக்கியப் பலகைகள் அல்லது மற்ற வகைப்பட்ட ஒருங்கிணைந்த வன்பொருள் கடத்திகளிலான மின்னனுரீதியில் நிரல்படுத்தப்பட்ட நினைவக சாதனங்களுக்கான, மென்பொருள் நிரல்படுத்தப்பட்ட உறைவிடம். மையநிரல், விநியோகிகப்பட்ட அமைப்புக்களைக் கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் செய்கிறது. அமைப்பு மென்பொருள் கணக்கீட்டு மூலாதாரங்களைக் மற்றும் பயனர்களுக்கான வசதிவாய்ப்பினை வழங்கும் இயங்கு தளங்களைக் கொண்டிருக்கிறது . மென்பொருள் பரிசோதனை என்பது மேம்படுத்தல் மற்றும் நிரல்படுத்தலின் செயற்களம் சார்ந்தது. மென்பொருள் பரிசோதனை என்பது பரிசோதனைக்கான பல முறைகளையும் உள்ளிட்டிருக்கிறது என்பதுடன் தனிநபராலோ அல்லது குழுவினராலோ பயன்படுத்தப்படுவதற்கு வெளியிடப்படும் முன்னர் மென்பொருள் தயாரிப்பைப் பொருத்தமானது என்று பிரகடனப்படுத்துகிறது. சோதனைநிரல், இது எல்லா பயனீடுகளுக்கும் ஒரு பொதுச் சொல்லாகவோ கொள்கலன் சொல்லாகவோ இருக்கிறது என்பதுடன் மென்பொருள் தொகுதியைச் சோதிப்பதற்கு இணையாகச் செயல்படும் பயன்பாட்டு மென்பொருளாகவும் இருக்கிறது, ஆனால் அவசியம் இவை செயல்பாட்டு நோக்கங்களுக்காக பங்களிக்கும் விருப்பத்தேர்வாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இதேபோன்று, சோதனைநிரல் நிலைப்படுத்தப்பட்ட உருவரை அல்ல ஆனால் பயன்பாட்டு மென்பொருள் அல்லது அதனுடைய துணைத்தொகுதிகளுக்கான வேலைச் சூழலாகும். வீடியோ கேம்கள் (வன்பொருள் பகுதியைத் தவிர்த்து) வலைத்தளங்கள் மேலோட்டப் பார்வை மென்பொருள் என்பது இலக்க முறையில் சேமி்க்கப்பட்ட தரவு கொண்டிருக்கக்கூடிய பல்வேறு வடிவங்கள் மற்றும் பாத்திரங்களை உள்ளடக்கியிருக்கிறது என்பதுடன் கணிப்பொறியில் (அல்லது அதேபோன்ற அமைப்பில்) செயல்படுவது, இந்தத் தரவு சிபியூ விற்கான குறியெழுத்தாகவோ அல்லது பிற பொருள் விளக்கியாகவோ பயன்படுத்தப்படுகிறதா அல்லது இது மற்ற வகைப்பட்ட தகவலைக் குறிக்கிறதா என்பது பொருட்டல்ல. இவ்வாறு மென்பொருள் என்பது வழக்கமான நிரலாக்க மொழிகள், உரையாக்க மொழிகள், நுண்குறியெழுத்து அல்லது எஃப்பிஜிஏ போன்ற பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி மேம்படுத்தப்படக்கூடிய பரந்த அளவிலான தயாரிப்புகளை உடனிணைத்துக்கொண்டதாக இருக்கிறது. இவ் வகையான மென்பொருள், ஹெச்டிஎம்எல், பிஹெச்பி, பெர்ல், ஜேஎஸ்பி, ஏஎஸ்பி.நெட், எக்ஸ்எம்எல், போன்ற மொழிகள் மற்றும் வடிவமைப்புப் பணிகளில் உருவாக்கப்படும் வலைப் பக்கங்கள் மற்றும் சி, சி++, ஜாவா, சி# அல்லது ஸ்மால்டாக் போன்ற மொழிகளில் உருவாக்கப்பட்ட ஓபன்ஆபீஸ், மைக்ரோசாஃப்ட் வேர்ட் போன்ற டெஸ்க்டாப் பயன்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிறது. பயன்பாட்டு மென்பொருள் வழக்கமாக லினக்ஸ் அல்லது மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் போன்ற உள்ளுறையும் இயங்கு தளங்களில் செயல்படுகின்றன. மென்பொருள் (அல்லது தளநிரல்) வீடியோ கேம்களிலும் வாகனங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் பிற நுகர்வோர் மின்னணு சாதனங்களின் லாஜிக் அமைப்புக்களின் உருவரையாக்க பாகங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. கணிப்பொறி மென்பொருள் என்பது மென்பொருளை சேமித்தும் செயல்நிறைவேற்றவும் (அல்லது செயல்படுத்தவும்) தேவைப்படும் உள்ளார்ந்த உள்ளிணைப்புகள் மற்றும் சாதனங்களை உடனிணைந்துக் கொண்டுள்ள கணினி வன்பொருள் (வன்பொருள்) என்பதிலிருந்து வேறுபடுத்திக் காட்டப்படுவதற்கென்றே இவ்வாறு அழைக்கப்படுகிறது. மிகக்குறைந்த அளவில் செயல்நிறைவேற்ற குறியெழுத்து தனிப்பட்ட நிகழ்ப்படுத்திக்கென்றே உள்ள இயந்திர மொழி்க் குறிப்புகளை உள்ளிட்டிருக்கிறது. ஒரு இயந்திர மொழி முன்பிருந்த நிலையிலிருந்து கணிப்பொறியின் நிலையை மாற்றும் நிகழ்படுத்தி அறிவுறுத்தல்களைக் குறிப்பிடும் பைனரி மதிப்புக் குழுக்களை உள்ளிட்டதாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட தொடராக்கத்தில் கணினியின் நிலையை மாற்றுவதற்காக அறிவுறுத்தல்களின் தொடர்வரிசைக்கு நிரலாக்கங்கள் கட்டளையிடுகின்றன. இது வழக்கமாக இயந்திர மொழியைக் காட்டிலும் மனிதர்களுக்கு பயன்படுத்த சுலபமாகவும் மிகுந்த பயன்மிக்கதாகவும் இருக்கும் (இயற்கை மொழிகள் போன்று) உயர் மட்ட நிரலாக்க மொழிகளில் எழுதப்படுகின்றன. உயர்மட்ட மொழிகள் இயந்திர மொழி இலக்கு குறியெழுத்திற்கு தொகுக்கப்படுகின்றன அல்லது பொருள் விளக்கம் செய்யப்படுகின்றன. மென்பொருளானது தொகுப்பு மொழியிலும் எழுதப்படலாம், குறிப்பாக இயற்கை மொழி அகரவரிசையைப் பயன்படுத்தும் இயந்திர மொழியின் நினைவூட்டு வெளிப்பாடு. தொகுப்பு மொழி ஒரு தொகுப்பி வழியாக ஆப்ஜெக்ட் குறியெழுத்தாக தொகுப்பாக்கம் செய்யப்பட வேண்டும். "மென்பொருள்" என்ற சொல் இந்தப் பொருளில் முதன்முறையாக 1958 இல் ஜான் டபிள்யு.டர்க்கி அவர்களால் பயன்படுத்தப்பட்டது.[3] கணினி அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியலில் கணினி மென்பொருள் என்பது எல்லா கணினி நிரல்களுமாகும். மிகவும் நவீன மென்பொருளுக்கு அடிப்படையாக உள்ள கோட்பாடு 1935 ஆம ஆண்டில் ஆலன் டூரிங் அவர்களால், அவருடைய எண்ஸ்டைடங்ஸ்பிராப்ளத்திற்கான (முடிவுசெய்யும் கணிதம்) பயன்பாட்டுடன் கூடிய கணக்கிடக்கூடிய எண்கள் கட்டுரையில் முதல்முறையாக முன்மொழியப்பட்டிருக்கிறது.[4] மென்பொருள் வகைகள் நடைமுறை கணினி அமைப்புகள் மென்பொருள் அமைப்புகளை மூன்று முக்கிய வகைகளாகப் பிரிக்கின்றன: அமைப்பு மென்பொருள், நிரலாக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள், இருப்பினும் இந்த வேறுபாடு விதிகளுக்கு உட்படாது என்பதுடன் தெளிவற்றதாகவே இருந்து வருகிறது. அமைப்பு மென்பொருள் அமைப்பு மென்பொருள் கணிப்பொறி வன்பொருளையும் கணிப்பொறி அமைப்பையும் செயல்படுத்த உதவுகிறது. இது பின்வரும் இணைகளை உள்ளடக்கியிருக்கிறது: சாதன இயக்கிகள் இயங்கு தளம் சர்வர்கள் பயனீடுகள் விண்டோ சிஸ்டம்ஸ் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட கணினியின் விவரங்கள் தொடர்ந்து சிக்கலானதாகவே இருப்பதிலிருந்து பயன்பாடுகள் நிரலாக்குநருக்கான சுமையைக் குறைப்பதே அமைப்பு மென்பொருளின் நோக்கமாகும், இது தகவல்தொடர்பு சாதனங்கள், அச்சிடும் சாதனங்கள், சாதன வாசிப்பான்கள், காட்சியமைப்புகள் மற்றும் விசைப்பலகைகள் போன்ற துணைப்பொருட்களையும், நினைவகம் மற்றும் நிகழ்படுத்தியை பாதுகாப்பான மற்றும் நிலைப்படுத்தப்பட்ட முறையாக கணிப்பொறி மூலாதாரங்களுக்கான பிரிப்பு ஆகியவற்றையும் உள்ளடக்கியிருக்கிறது. உதாரணங்கள்- விண்டோஸ் எக்ஸ்பி, லினக்ஸ், மற்றும் மேக் ஓஎஸ் எக்ஸ். நிரலாக்க மென்பொருள் நிரலாக்க மென்பொருள் வழக்கமாக கணிப்பொறி நிரலாக்கங்களை எழுதுவதில் நிரலாக்குனருக்கு உதவுவதற்கென்று கருவிகள் மற்றும் மிகவும் வசதியான முறையில் வேறுபட்ட நிரலாக்க மொழிகளைப் பயன்படுத்தும் மென்பொருளையும் வழங்குகின்றன. இந்தக் கருவிகளில் உள்ளடங்குவன: தொகுப்பிகள் டீபக்கர்கள் இண்டர்பிரட்டர்கள் லின்கர்கள் டெக்ஸ்ட் எடிட்டர்கள் ஒரு ஒருங்கிணைந்த உருவாக்கச் சூழல் என்பது (ஐடிஇ) இந்த செயல்பாடுகள் அனைத்தையும் கையாள்வதற்கு முயற்சிக்கும் ஒற்றைப் பயன்பாடாக இருக்கிறது. பயன்பாட்டு மென்பொருள் பயன்பாட்டு மென்பொருள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட (நேரடியாக கணினி மேம்பாடு தொடர்புடையது) வேலைகளை செய்துமுடிக்க பயனர்களுக்கு உதவுகிறது. வழக்கமான பயன்பாடுகளில் உள்ளவை: தொழில்துறை தானியக்கம் தொழில் மென்பொருள் வீடியோ கேம்ஸ் நுண்ணலகு ரசாயனம் மற்றும் திடநிலை இயற்பியல் மென்பொருள் தகவல்தொடர்புகள் (அதாவது இணையத்தளம் மற்றும் அதில் உள்ளடக்கப்பெறும் அனைத்தும்) தரவுத்தளங்கள் கல்வித்துறை மென்பொருள்( தற்போது இவை இந்தியாவில் பிரபலமடைந்து வருகின்றன ) மருத்துவ மென்பொருள் இராணுவ மென்பொருள் மூலக்கூறு மாதிரியாக்க மென்பொருள் இமேஜ் எடிட்டிங் வீடியோ எடிடிங் ஸ்பிரெட்ஷீட் போலியாக்க மென்பொருள் வேர்ட் பிராசஸிங் முடிவெடுத்தல் மென்பொருள் முப்பரிமான வரைகலை மென்பொருள் கணக்குப் பதிவியல் மென்பொருள் சம்பளப் பட்டியல் மென்பொருள் பரந்துவிரிந்த தலைப்புகளுக்கான பயன்பாட்டு மென்பொருள் இருப்பதுடன் அவற்றில் தாக்கமேற்படுத்தவும் செய்கின்றன. மென்பொருள் தலைப்புகள் கட்டுமானம் நிரலாக்குனர்களைக் காட்டிலும் பயனர்கள் இவற்றைப் வேறுபட்ட விதத்தில் பார்க்கின்றனர். நவீன பொதுப்பயன்பாட்டு கணினிகளை (எம்பட்டட் சிஸ்டம்கள், அனலாக் கணினிகள் மற்றும் சூப்பர் கணினிகளுக்கு எதிரானதாக), தளம், பயன்பாடு மற்றும் பயனர் மென்பொருள் என மூன்று அடுக்குகளிலான மென்பொருள் பல்வேறுவிதமான வேலைகளைச் செய்வதை பயன்படுத்துனர்கள் காண்கின்றனர்: . தளம் மென்பொருள்: தளம் என்பது தளநிரல், சாதன இயக்கிகள், ஒரு இயங்கு தளம் மற்றும் வகைமாதிரியாக ஒரு கிராபிக்கல் பயனர் இடைமுகம் ஆகியவற்றை உள்ளிட்டிருக்கிறது, இது மொத்தத்தில் கணினி மற்றும் அதனுடைய துணைப்பொருட்களோடு (உடனிணைந்த சாதனம்) ஒருங்கிணைந்த முறையில் பயனர் செயல்படுவதற்கு உதவுகிறது. தளம் மென்பொருள் கணிப்பொறியுடன் இணைந்தே வருகிறது. ஒரு பிசியில் நீங்கள் சாதாரணமாக தளம் மென்பொருளை மாற்றிக்கொள்வதற்கான திறன் உங்களுக்கு இருக்கிறது. பயன்பாட்டு மென்பொருள்: மென்பொருளை பற்றி நினைக்கையில், பெரும்பாலான பயனர்கள் பயன்பாட்டு மென்பொருள் அல்லது பயன்பாடுகளை தான் நினைக்கிறார்கள். ஆஃபீஸ் ஸ்யூட் மற்றும் வீடியோ கேம்ஸ் ஆகியவை வகைமாதிரியான உதாரணங்களாகும். பயன்பாட்டு மென்பொருள் எப்பொழுதும் கணிப்பொறி வன்பொருளிலிருந்து தனித்தே வாங்கப்படுகிறது. சிலநேரங்களில் பயன்பாடுகள் கணிப்பொறியுடன் சேர்ந்தே வருகின்றன, ஆனால் அது தனிப்பட்ட பயன்பாடுகளாகத்தான் செயல்படும் என்ற உண்மையை மாற்றிவிடுவதில்லை. பயன்பாடுகள் வழக்கமாக இயங்கு தளத்திலிருந்து தனித்திருக்கும் நிரல்களாகும், இருப்பினும் அவை குறிப்பிட்ட தளங்களுக்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான பயனர்கள் இருமமாக்கிகள், தரவுத்தளங்கள் மற்றும் இதர "அமைப்பு மென்பொருள்" ஆகியவற்றை பயன்பாடுகள் என்றே நினைத்துக்கொண்டிருக்கின்றனர். பயனர்-எழுதிய மென்பொருள்: இறுதிப் பயனர் மேம்படுத்துனர், பயனரின் குறிப்பிட்ட தேவைகளை பூர்த்திசெய்வதற்கு அமைப்புக்களை வடிவமைக்கிறார். பயனர் மென்பொருள் ஸ்பிரெட்ஷீட் டெம்ப்லட்டுகள், வேர்ட் பிராசஸரை உள்ளிட்டிருக்கிறது [தளம் மென்பொருள்: தளம் என்பது தளநிரல், சாதன இயக்கிகள், ஒரு இயங்குதளம் மற்றும் வகைமாதிரியாக கிராபிகல் பயனர் இடைமுகம் ஆகியவற்றை உள்ளிட்டிருக்கிறது, மொத்தத்தில் இது பயனரை கணிப்பொறியோடும் அதனுடைய துணைப்பொருட்களோடும் (உடனிணைந்த சாதனம்) ஒருங்கிணைந்து செயல்பட அனுமதிக்கிறது. தளம் மென்பொருள் கணி்னியுடன் இணைந்தே வருகிறது. ஒரு பிசியில் தள மென்பொருளை மாற்றுதற்கான திறன் உங்களுக்கு வழங்கப்படுகிறது. மின்னஞ்சல் பிரிப்பான்கள்கூட ஒருவகையான பயனர் மென்பொருளாகும். பயனர்கள் இந்த மென்பொருளை தாங்களாகவே உருவாக்கிக்கொள்கின்றனர் என்பதோடு இது எவ்வளவு முக்கிமானது என்பதையும் மேற்பார்வையிடுகின்றனர். தன்னியல்பான பயன்பாட்டு பேக்கேஜ்களில் பயனர் எழுதிய மென்பொருள் எவ்வளவு திறனோடு ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்து பல பயனர்களும் அசலான பேக்கேஜ்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களால் சேர்க்கப்பட்டவற்றிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை பயனர்கள் தெரிந்துகொண்டிராமல் இருக்கலாம். ஆவணமாக்கல் பெரும்பாலான மென்பொருள்களும் மென்பொருள் ஆவணமாக்கலைக் கொண்டிருப்பதால் ஒரு நிரல் என்ன செய்கிறது மற்றும் அதைப் பயன்படுத்துவது எப்படி என்பதை இறுதிப் பயனர் புரிந்துகொள்கிறார். தெளிவான ஆவணமாக்கம் இல்லாமல் மென்பொருள் பயன்படுத்துவதற்கு கடினமானதாக இருக்கலாம் - குறிப்பாக இது ஃபோட்டோஷாப் அல்லது ஆட்டோகேட் போன்று மிகவும் சிறப்புவாய்ந்த மற்றும் சிக்கலான மென்பொருளாக இருக்கும்போது அவ்வாறு ஏற்படலாம். மேம்படுத்துனர் ஆவணமாக்கலும் இருக்கலாம், குறியெழுத்துக்கள் குறிப்புகளாகவோ மற்றும்/அல்லது தனித்தனி ஆவணங்களாகவோ இருக்கலாம் என்பதோடு இந்த நிரல்கள் எவ்வாறு செயல்படுகின்றன மற்றும் எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதையும் விவரமாக தெரிவிக்கின்றன. நூலகம் ஒரு செயல்நிறைவேற்றக்கூடியது என்பது நேரடி செயல்நிறைவேற்றத்திற்கு எப்போதுமே போதுமான அளவிற்கு முழுமையடையச் செய்வதில்லை. மென்பொருள் நூலகங்கள் பிற பயன்பாடுகளோடு இணைந்திருக்கக்கூடிய செயல்பாடுகள் மற்றும் செயல்பாட்டின் தொகுப்புக்களை உள்ளிட்டிருக்கின்றன. இயங்கு தளங்கள் உள்ளிட்டிருக்கும் பல நிலைப்படுத்தப்பட்ட மென்பொருள் நூலகங்கள் மற்றும் பயன்பாடுகள் ஆகியவை அவற்றின் சொந்த நூலகங்களுக்குள்ளாகவே விநியோகிக்கப்பட்டவையாக இருக்கின்றன. தரநிலை மென்பொருளானது வெவ்வேறு நிரலாக்க மொழிகள், இயங்கு தளங்கள் மற்றும் செயல்பாட்டு சூழல்களில் வடிவமைக்கப்படுகின்றன என்பதால் மென்பொருள் தரநிலை தேவைப்படுகிறது, இதனால் வெவ்வேறு மென்பொருள்கள் ஒன்றையொன்று புரிந்துகொள்ளவும் தகவலைப் பரிமாறிக்கொள்ளவும் செய்கின்றன. உதாரணத்திற்கு, ஒரு மின்னஞ்சல் மைக்ரோசாஃப்ட் அவுட்லுக்கிலிருந்து அனுப்பப்படுகிறது என்றால் அது யாஹூ!மெயில் மற்றும் நிலையெதிர் மாறாகவும் படிக்கப்படுவதாக இருக்க வேண்டும். செயல்படுத்துதல் கணிப்பொறி மென்பொருள் "கணிப்பொறியின் சேமிப்பகத்திற்குள்ளாக" (வன் வட்டு, நினைவகம் அல்லது ரேம்) பதிவேற்றம் செய்யப்படுகிறது. மென்பொருள் ஏற்றப்பட்டவுடன் கணிப்பொறியானது மென்பொருளை செயல்படுத்தும் திறனைப் பெறுகிறது. இது பயன்பாட்டு மென்பொருளிலிருந்து அமைப்பு மென்பொருள் ஊடாக அறிவுறுத்தல்களை முடிவில் இயந்திர குறியெழுத்தாக பெறும் வன்பொருளுக்கு எடுத்துச்செல்கிறது. ஒவ்வொரு அறிவுறுத்தலும் ஒரு செயல்பாட்டை கணிப்பொறி மேற்கொள்வதற்கு காரணமாக அமைகிறது - தரவை நகர்த்திச்செல்லல், கணக்கிடுதல் அல்லது அறிவுறுத்தல்களின் கட்டுப்பாட்டு ஓட்டத்தை மாற்றுவது ஆகியன இதில் அடங்கும். தரவு நகர்தல் என்பது நினைவகத்திலுள்ள ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது. சிலநேரங்களில் இது சிபியூவில் தரவு அணுகலை உயர்வேக திறனுள்ளதாக ஆக்குவதற்கு தரவை நினைவகத்திலிருந்து பதிவுகளுக்கு மாற்றுவதோடும் தொடர்புகொண்டிருக்கிறது. தரவை நகர்த்துவது குறிப்பாக பெரும் அளவிற்கானதாக மாற்றுவது செலவு மிகுந்ததாக இருக்கலாம். எனவே, இது சிலநேரங்களில் தரவிற்குப் பதிலாக "பாய்ண்டர்களைப்" பயன்படுத்துவதன் மூலம் தவிர்க்கப்படுகிறது. கணக்கிடுதல்கள் மாறுபடும் தரவுக் கூறுகளின் மதிப்பை அதிகரிக்கச் செய்வது போன்ற எளிய செயல்பாடுகளையும் உள்ளிட்டதாக இருக்கிறது. மிகவும் சிக்கலான கணக்கீடுகள் பல செயல்பாடுகள் மற்றும் தரவுக் கூறுகளோடு ஒன்றிணைந்த நிலையில் தொடர்புகொண்டதாக இருக்கலாம். தரமும் நம்பகத்தன்மையும் மென்பொருளின் தரம் முக்கியமானது, குறிப்பாக மைக்ரோசாஃப்ட் ஆபீஸ், மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் போன்ற வர்த்தக மற்றும் அமைப்பு மென்பொருள்களுக்கு. மென்பொருள் பிழையானதாக (பக் கொண்டிருந்தால்) இது ஒருவருடைய வேலையை அழித்தும் சிதைத்தும் விடலாம் என்பதுடன் எதிர்பாராத செயல்களையும் செய்துவிடலாம். தவறுகளும் பிழைகளும் "பக்ஸ்" என்றழைக்கப்படுகின்றன. பல பக்ஸ்களும் மென்பொருள் சோதனையின் வழியாக கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன (டீபக் செய்யப்படுகிறது). இருப்பினும், மென்பொருள் சோதனை எப்போதாவதுதான் -அவ்வாறு இருந்தால்- ஒவ்வொரு பக்கையும் அழிக்கிறது; சில நிரலாக்குனர்கள் "ஒவ்வொரு நிரலாக்கமும் குறைந்தது ஒரு பக்காவது இல்லாமல் இருக்காது"(லூபேர்ஸ்கி விதி) என்று கூறுகின்றனர். எல்லா முக்கியமான நிறுவனங்களும், மைக்ரோசாஃப்ட், நோவல் மற்றும் சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் போன்றவை, சோதனையிடுவதற்கு மட்டுமேயான குறிப்பிட்ட இலக்கோடு மென்பொருள் சோதிப்பு துறைகளை வைத்திருக்கின்றன. மென்பொருளானது யூனிட் டெஸ்டிங், ரெக்ரஸன் டெஸ்டிங் மற்றும் இதர வழிமுறைகள் மூலமாக பரிசோதிக்கப்படுகின்றன, சோதிக்கப்படும் குறியாக்கம் அதிகமாக இருக்கலாம் என்பதால் இவை கைமுறையாகவோ அல்லது மிகவும் பொதுவாக தானியங்கி ரீதியாகவோ செய்யப்படுகின்றன. உதாரணத்திற்கு நாசா பல இயங்கு தளங்கள் மற்றும் தகவல்தொடர்பு செயல்பாடுகளுக்கு மிகவும் கடுமையான மென்பொருள் பரிசோதிப்பு நடைமுறைகளை வைத்திருக்கிறது. நாசா அடிப்படையிலான பல செயல்பாடுகள் மென்பொருள் எனப்படும் கட்டளை நிரல்கள் வழியாக ஒன்றோடொன்று செயல்பட்டும் அடையாளம் காண்பபடவும் செய்கின்றன. இது நாஸாவில் பணிபுரியும் பல பயனர்களையும் ஒட்டுமொத்தமாக செயல்பாட்டு அமைப்புக்களை மதிப்பிட அனுமதிக்கிறது. கட்டளை மென்பொருளைக் கொண்டிருக்கும் நிரல்கள் வன்பொருள் பொறியியல் மற்றும் அமைப்புச் செயல்பாடுகளை ஒன்றிணைத்து மிகவும் சுலபமாக செயல்படுத்துவதற்கு உதவுகின்றன. உரிமம் மென்பொருளின் உரிமம் உரிமமளிக்கப்பட்ட சூழலில் அந்த மென்பொருளைப் பயன்படுத்துவதற்கான உரிமையைப் பயனருக்கு அளிக்கிறது. சில மென்பொருட்கள் கடையிலிருந்து வாங்கும்போது உரிமத்துடன் வருகிறது அல்லது வன்பொருளுடன் வரும்போது ஓஇஎம் உரிமத்துடன் வருகிறது. பிற மென்பொருள்கள் இலவச மென்பொருள் உரிமத்துடன் வருகின்றன என்பதுடன், பெறுநருக்கு மென்பொருளை மேம்படுத்துவதற்கும் விநியோகிப்பதற்குமான உரிமைகளையும் வழங்குகிறது. மென்பொருளானது இலவசநிரல் அல்லது பகிர்வுநிரல் போன்ற வடிவத்திலும் வருகின்றன. காப்புரிமைகள் மென்பொருள்கள் காப்புரிமை பெற்றவையாக இருக்கலாம்; இருப்பினும், மென்பொருள் காப்புரிமைகள் குறித்து மென்பொருள் துறையில் பல்வேறுவிதமான கண்ணோட்டங்கள் நிலவுவதால் அது முரண்பாடுகள் உள்ளதாக இருக்கிறது. மென்பொருள் காப்புரிமைகள் மீதான முரண்பாடு என்னவெனில் ஒரு மென்பொருள் கொண்டிருக்கும் குறிப்பிட்ட செயல்முறை அல்லது உத்தி மற்றவர்களால் போலிசெய்ய முடியாதது என்பதுடன் அதனுடைய தீவிரத்தன்மையைப் பொறுத்து அறிவுசார் சொத்தாகவும் காப்புரிமை மீறலாகவும் கருதப்படுகிறது. வடிவம் மற்றும் நடைமுறைப்படுத்தல் மென்பொருளை வடிவமைத்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் மென்பொருளின் சிக்கல்தன்மையைப் பொறுத்து அமைகிறது. உதாரணத்திற்கு, மைக்ரோசாஃப்ட் வேர்ட் மென்பொருளின் வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் மைக்ரோசாஃப்ட் நோட்பேடைக் காட்டிலும் மிக அதிகமான நேரத்தை எடுத்துக்கொள்ளும், ஏனென்றால் இவை ஒவ்வொன்றிலும் உள்ள செயல்பாடுகள் வெவ்வேறு விதமானவை. இந்த நிகழ்முறையையும் நிரலை தொகுக்கச் செய்வதையும் எளிதாக்கக்கூடிய எக்லிப்ஸ், இமேக்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் விஷுவல் ஸ்டுடியோ போன்ற ஒருங்கிணைந்த மேம்பாட்டுச் சூழலில் (ஐடிஇ) மென்பொருள் சாதாரணமாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது (குறியாக்கம்/எழுதுதல்/நிரலாக்கம்). பல்வேறு பிரிவுகளில் குறிப்பிட்டுள்ளபடி, மென்பொருள் என்பது ஜிடிகே+, ஜாவாபீ்ன்ஸ் அல்லது ஸ்விங் போன்ற உள்ளுறையும் மென்பொருளை வழங்கும் இருந்துவரும் மென்பொருள் மற்றும் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (ஏபிஐ) ஆகியவற்றில் உருவாக்கப்படுவதாகும். நூலகங்கள் (ஏபிஐகள்) வேறுபட்ட நோக்கங்களுக்காக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, ஜாவாபீன்ஸ் நூலகம் நிறுவனப் பயன்பாடுகளை வடிவமைக்கப் பயன்படுத்தப்படுகிறது, விண்டோஸ் ஃபார்ம்ஸ் நூலகம் மைக்ரோசாஃப்ட் வேர்ட் போன்ற வரைகலை சார்ந்த பயனர் இடைமுகத்தை (ஜியுஐ) வடிவமைக்கப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் விண்டோஸ் கம்யூனிகேஷன் ஃபவுண்டேஷன் வலைத்தள சேவைகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. குயிக்சார்ட், ஹாஷ்டேபில், அரே மற்றும் பைனரி ட்ரீ போன்ற உள்ளுறையும் கணி்ப்பொறி நிரலாக்க கருத்தாக்க மென்பொருளை உருவாக்குவதற்கு பயன்மிக்கதாக இருக்கலாம். ஒரு நிரல் வடிவமைக்கப்படும்போது அது ஏபிஐயை நம்பியிருக்கிறது. உதாரணத்திற்கு ஒரு பயனர் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் டெஸ்க்டாப் பயன்பாட்டை வடிவமைக்கிறார் என்றால் அவர் அந்த டெஸ்க்டாப் பயன்பாட்டை உருவாக்குவதற்கு .நெட் விண்டோஸ் ஃபார்ம்ஸ் நூலகத்தைப் பயன்படுத்தலாம் என்பதோடு அதை அவர் அதன் ஏபிஐயை பின்வருவது போல் அழைப்பார் form1.Close() மற்றும் form1.Show() [5] இது பயன்பாட்டை திறப்பதற்கும் மூடுவதற்கும் என்பதோடு அது கொண்டிருக்க வேண்டிய கூடுதல் செயல்பாடுகளையும் எழுதுவார். இந்த ஏபிஐகள் இல்லாமல் நிரலாக்குனர் இந்த ஏபிஐகளை தானாகவே எழுதவேண்டியிருக்கும். சன் மைக்ரோசிஸ்டம்ஸ், நோவல் மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் அவர்களுடைய சொந்த ஏபிஐகளை வழங்குகின்றன என்பதால் பல பயன்பாடுகளும் தங்களுக்குள் நிறைய ஏபிஐகளைக் கொண்டிருக்கும் சொந்த மென்பொருள் நூலகங்களைப் பயன்படுத்தி எழுதப்படுகின்றன. சிறப்பு பொருளாதார குணவியல்புகளைப் பெற்றிருக்கும் மென்பொருள் மற்ற சிக்கனமான பொருள்களிலிருந்து வேறுபடும் வடிவம், உருவாக்கம் மற்றும் விநியோகிப்பைக் கொண்டதாக இருக்கிறது.[6][7] ஒரு மென்பொருளை உருவாக்குபவர், நிரலாக்குனர், மென்பொருள் பொறியாளர், மென்பொருள் மேம்படுத்துனர் அல்லது கோட் மங்கி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுவது அனைத்தும் ஒரே பொருளையே கொண்டிருக்கின்றன. நிறுவனமும் அமைப்புக்களும் மென்பொருளானது மென்பொருள் துறை எனப்படும் தனக்கேயுரிய தொழில்துறையைக் கொண்டிருக்கிறது என்பதுடன் இது மென்பொருளை உருவாக்கும் பல்வேறு நிறுவனங்கள், நபர்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டிருப்பதோடு அதன் விளைவாக உலகில் பல மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் நிரலாக்குனர்களை வழங்கியிருக்கிறது. மென்பொருள் நிதித்துறை, தேடுதல், கணிதம், விண்வெளி ஆராய்ச்சி, விளையாட்டு மற்றும் சுரங்கம் போன்ற பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது என்பதால் இதுபோன்ற மென்பொருள் நிறுவனங்களும் நபர்களும் குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்கின்றனர். உதாரணத்திற்கு, மின்னணுக் கலைகள் வீடியோ கேம்களையே பிரதானமாக உருவாக்குகின்றன. மென்பொருள் விற்பனை செய்வதும் ஒரு இலாபம் மிகுந்த துறையாக இருக்கிறது. உதாரணத்திற்கு, மைக்ரோசாஃப்டின் நிறுவனரான பில் கேட்ஸ் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் மென்பொருள் நிரல்களை விற்பனை செய்ததன் மூலமே 2009 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருந்தார். இதே போன்றுதான் லேரி எல்லிஸன் தனது ஆரக்கிள் தரவுத்தளம் மென்பொருள் மூலமாக பணக்காரராக இருக்கிறார். கட்டற்ற மென்பொருள் இயக்கம், குனூ, மொஸிலா ஃபயர் ஃபாக்சு போன்ற இலாப நோக்கமற்ற மென்பொருள் நிறுவனங்களும் இருக்கின்றன. டபிள்யு3சி, ஐஇடிஎஃப் போன்ற மென்பொருள் தரநிலை நிறுவனங்களும் இருக்கின்றன என்பதோடு மற்றவர்கள் எக்ஸ்எம்எல், ஹெச்டிஎம்எல், மீயுரை பரிமாற்ற நெறிமுறை அல்லது கோப்புப் பரிமாற்ற நெறிமுறை போன்ற தரநிலைகளின் மூலமாக பல மென்பொருள்களும் செயல்படுகின்றன மற்றும் ஒன்றோடொன்று ஒத்துழைப்பு அளிப்பதற்கான மென்பொருள் தரநிலைக்கு கொண்டுவர முயற்சிக்கின்றனர். மைக்ரோசாஃப்ட், ஆரக்கிள், நோவல், எஸ்ஏபி, சிமண்டெக், அடோப் சிஸ்டம்ஸ் மற்றும் கோரல் ஆகியவை சில பிரபலமான நன்கறியப்பட்ட மென்பொருள் நிறுவனங்களாகும். குறிப்புகள் பகுப்பு:மென்பொருள் பகுப்பு:கணினியியல் பகுப்பு:கணினி அறிவியல்
மென்பொருள் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
1935
4,847
tamil
66efdba8c
மட்பாண்டம் என்பது களிமண் வகைகளை கொண்டு மனிதர்கள் தங்கள் தேவவைகளுக்கு பயன் படுத்தும் பொருட்களின் வகை ஆகும் மட்பாண்டம் என்பது பொதுவாக மண்ணால் செய்யப்படும் பொருட்களைக் குறிக்கும். மிகப் பழங்காலத்திலேயே மட்பாண்டங்களைச் செய்யும் நுட்பங்கள் கண்டறியப்பட்டன. மட்பாண்டங்கள் செய்வது உலகின் பல பகுதிகளிலும் மிகவும் பழமை வாய்ந்த தொழிலாக இருந்து வருகிறது. இத் தொழில் தமிழில் குயத் தொழில் என்றும், மட்பாண்டம் செய்பவர்கள் "குயவர்" என்றும் அழைக்கப்படுகின்றனர். நீர்,தூர்வையாகபட்ட மண் சேர்த்துக் குழைக்கப்பட்ட களி மண்ணை வேண்டிய உருவத்தில் செய்து, அதனை சூளையில் இட்டு உயர்ந்த வெப்பநிலைக்குச் சூடாக்கி மட்பாண்டங்கள் உருவாக்கப் படுகின்றன. இவ்வாறு சூடாக்குவதன் மூலம், களிமண் இறுகுதல், பலம் கூடுதல், வடிவம் உறுதியாதல் போன்ற நிரந்தரமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. மட்பாண்டங்கள் செய்வதற்குப் பயன்படும் களிமண் இடத்துக்கு இடம் வேறுபாடாக அமைவதால், அவ்விடங்களில் செய்யப்படும் மட்பாண்டங்களும் தனித்துவமான இயல்புகளைக் கொண்டவையாக அமைகின்றன. சில குறிப்பிட்ட தேவைகளுக்காகக் களி மண்ணுடன் வேறுசில கனிமங்களையும் சேர்ப்பது உண்டு. வரலாறு மட்பாண்ட வரலாற்றின் பெரிய பகுதியானது வரலாற்றுக்கு முந்தைய, எழுத்தறிவுக்கு முந்தைய தொல்பழங்காலக் கலாச்சாரத்தைச் சார்ந்ததாக உள்ளது. எனவே, இந்த வரலாற்றின் பெரும்பகுதி தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கப் பெற்ற கலைப்படைப்புகளின் வாயிலாகவே பெறப்படுகிறது. மட்பாண்டத்தின் ஆயுள் மிகவும் நீடித்தது என்பதால், மட்பாண்டங்கள், ஓட்டுச்சில்லுகள் ஆகியவை பல்லாயிரம் ஆண்டுகளாக தப்பிப்பிழைத்து தொல்லியல் ஆராய்ச்சி நடைபெறும் தளங்களில் கிடைக்கப்பெறுகின்றன. மட்பாண்டக் கலை அல்லது மட்பாண்டத் தொழில் கலாச்சாரத்தின் பகுதியாக மாறுவதற்கு முன்பு, பல நிலைகள் பொதுவாக சந்திக்கப்பட்டிருக்க வேண்டும். அவை, முதலில், மட்பாண்டம் செய்வதற்கு பொருத்தமான களிமண் கிடைக்க வேண்டும். ஆரம்ப மட்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வுக்களங்கள், ஒழுங்காக வடிவமைக்கப்படவும், சுடுவதற்கும் ஏதுவான, உடனடியாக கிடைக்கக்கூடிய களிமண் மூலங்களை கொண்டிருக்கும் இடங்களுக்கு அருகாமையில் உள்ளவையாக உள்ளன. பலவிதமான களிமண் வகைகளை சீனா கொண்டிருந்துள்ளதால், மட்பாண்டத்தொழில் அல்லது கலையில் முன்னோடியாகத் திகழும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்துள்ளது. சீனா மட்டுமல்லாது வேறு பல நாடுகளும் பல்வேறு களிமண் வகைகளின் பெரிய படிவுகளைக் கொண்டுள்ளன. இரண்டாவதாக, கச்சா களிமண்ணிலிருந்து சுட்டாங்கல் வரை உருமாற்றம் செய்யப்படும் வெப்பநிலையை உருவாக்குதற்கு வாய்ப்பிருந்திருக்க வேண்டும். மட்பாண்டங்கள் சுடப்படுவதற்கு ஏற்ற வெப்பநிலையை நம்பகமான முறையில் உருவாக்கும் முறைகள் கலாச்சார வளர்ச்சியின் பிற்காலம் வரையிலும் உருவாக்கப்பட்டதாக அறியப்படவில்லை. மூன்றாவதாக, களிமண் மட்பாண்டங்களைத் தயாரிக்கவும், வடிவமைக்கவும், சூளையில் சுட்டு பக்குவப்படுத்தவும் போதுமான நேரம் கிடைத்திருக்க வேண்டும். தீயைக் கட்டுப்படுத்துவதற்கு மனிதர்கள் அறிந்த பிறகும் கூட நிலையான இருப்பிடத்தில் வாழும் நிலையைப் பெறும் வரை மனிதர்கள் மட்பாண்டம் உருவாக்குவதை அறிந்திருக்கவில்லை. மனிதர்கள் விவசாயம் செய்தலில் நிபுணத்துவம் பெற்று நிரந்தரமான குடியேற்றங்களுக்கு வழிவகுத்த பின்னரே மட்பாண்டம் உருவாக்கப்பட்டது என்று கருத வாய்ப்பிருக்கிறது. இருப்பினும், பழங்காலத்திலேயே அறியப்பட்ட மட்பாண்டமானது சீனாவிலிருந்து கி.மு.20,000 க்கு முன்னதாக, அதாவது விவசாயமெல்லாம் அறியப்படுவதற்கு முன்னதாகவே இருந்திருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. நான்காவது, அதன் உற்பத்திக்கான அவசியம் இருந்திருந்தால் மட்டுமே மட்பாண்டங்களைத் தயாரிப்பதற்கான வளங்களைக் குறித்து நியாயப்படுத்த முடியும்.[1] மூலப்பொருட்கள் களிமண்ணில் காணப்படும் முதன்மை கனிமமானது வெண்களிமண் அல்லது காவோளினைட்(Kaolinite) ஆகும்; களிமண்ணானது, பொதுவாக 40% அலுமினிய ஆக்சைடு, 46% சிலிக்கான் ஆக்சைடு, மற்றும் 14% நீர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது என பொதுவாக குறிக்கப்படலாம். இரண்டு வகையான களிமண் இயற்கையில் காணப்படுகின்றன. அவை முதனிலை மற்றும் இரண்டாம் நிலைக் களிமண் எனப்படுகின்றன. முதன்மைக் களிமண்ணானது, அது பெறப்பட்ட பாறையின் இடத்திலேயே தான் காணப்படுகிறது. இது ஓடும் நீர் அல்லது பனிப்பாறைகளால் கொண்டு செல்லப்படவில்லையாதலால், வேறுவிதமான வண்டல் படிவுகளுடன் கலந்திருக்கவில்லை. முதன்மை களிமண்ணாது கனமானதும், அடர்த்தியானதும் மற்றும் தூய்மையானதும் ஆகும். இரண்டாம் நிலை அல்லது வண்டல் களிமண், இலகுவான வண்டல் வடிவில் உருவாகிறது, அது நீரில் மூழ்கி, சேமித்து வைக்கப்படுகிறது. இந்த இரண்டாம் வகையான களிமண், வண்டல் கலவையானது, முதன்மை களிமண்ணை விட நுண்ணியதாகவும், இலேசானதாகவும் இருக்கிறது. மாறுபட்ட சேர்க்கைப் பொருட்கள் களிமண்ணுக்கு வெவ்வேறு பண்புகளை கொடுக்கின்றன.[2] மட்பாண்டத் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் வெவ்வேறு வகையான களிமண்ணின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.[3] வெண்களிமன் அல்லது காவோளினைட்: சீனாவில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டு வந்ததால், இது சில நேரங்களில் சீனக் களிமண் என அழைக்கப்படுகிறது. பீங்கான் தயாரிப்பில் இது பயன்படுத்தப்படுகிறது. பந்து களிமண்: மிகச் சிறந்த நெகிழ்வுத்தன்மை கொண்ட, நல்ல நுண்ணிய துகள்களாலான, வண்டல் களிமண், இது சில கரிமப்பொருட்களைக் கொண்டிருக்கலாம். பீங்கான் தயாரிப்பின் போது அதன் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும் பொருட்டு சிறிய அளவில் சேர்க்கப்படுகிறது. தீக்களிமண்: இவ்வகைக் களிமண் வெண்களிமண்ணைக் காட்டிலும் சற்று குறைவான சதவீதத்தில் இளக்கிகளைக் கொண்டிருக்கிறது, ஆனால் வழக்கமான மற்றும் போதுமான அளவிலான நெகிழ்வுத்தன்மையைக் கொண்டதாக உள்ளது. இவ்வகைக் களிமண் வெப்பம் தாங்கவல்லதாக இருப்பதுடன் மற்ற வகைக்களிமண்ணுடன் இணைந்து அந்தக் களிமண்ணின் வெப்பம் தாங்கு திறனை அதிகரிப்பதாகவும் இருக்கிறது. மாக்கல் பாண்டக் களிமண்: இவ்வகைக் களிமண் மாக்கல் வகைப்பாண்டங்களை உருவாக்கப் பொருத்தமானதாகும். இந்தக் களிமண்ணின் பண்புகள் தீக்களிமண்ணின் பண்புகளுக்கும், பந்துக் களிமண்ணின் பண்புகளுக்கும் இடைப்பட்டதாக அமைந்துள்ளன. இவ்வகைக் களிமண் பந்துக் களிமண்ணைப் போன்று நுண்ணிய துகள்களாகவும், தீக்களிமண்ணைப் போன்று வெப்பம் தாங்கவல்லவையாகவும் காணப்படுகின்றது. பொதுவான சிவப்பு களிமண் மற்றும் சேல் களிமண் ஆகியவை தாவர மற்றும் ஃபெர்ரிக் ஆக்சைடு அசுத்தங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும், இவை செங்கல் தயாரிக்க பயனுள்ளதாக இருக்கும், ஆனால், சிறப்பு நிபந்தைனகளுக்குட்பட்டு ஒரு குறிப்பிட்ட சில படிவுகள் மட்டுமே மட்பாண்டங்கள் செய்வதற்கு உகந்தவையாக உள்ளன. தவிர, பொதுவாக, இத்தகைய களிமண் மட்பாண்டங்கள் தயாரிப்பிற்கு உகந்தவையல்ல.[4] பென்டோனைட் வகைக் களிமண் மிகுந்த நெகிழ்வுத்தன்மை கொண்டதாகும். இவ்வகைக் களிமண் மற்ற வகைக் களிமண்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க சேர்க்கப்படுகிறது. உற்பத்தியின் படிநிலைகள் மட்பாண்டங்களை உருவாக்கும் போது களிமண் பாண்டங்கள் மாறுபட்ட இயற்பியல் பண்புகளைப் பெறுகிறது. பச்சை மட்பாண்டங்கள் என்பவை சுடப்பாடத பொருட்களைக் குறிக்கிறது. போதுமான ஈரப்பதத்துடன் உள்ள இந்த நிலையில் பொருட்கள் மிகுந்த நெகிழ்வுத் தன்மை கொண்டவையாக உள்ளன. (அதாவது, மென்மையாகவும், வளையும் தன்மை கொண்டவையாகவும், உருமாற்றம் செய்யப்படக்கூடியவையாகவும் உள்ளன) தோல்-வன்மை என்பது களிமண்ணால் செய்யப்பட்ட பகுதி உலர்த்தப்பட்ட பொருளின் நிலையைக் குறிக்கும். இந்த நிலையில், களிமண்ணால் செய்யப்பட்ட பொருளானது தோராயமாக, 15% ஈரப்பதத்தைக் கொண்டதாக காணப்படும். இத்தகைய நிலையில் காணப்படும் களிமண் பொருட்கள் மிகவும் உறுதி வாய்ந்தவையாகவும், மிகச்சிறிதளவு மட்டுமே வளையத்தக்கதாகவும் காணப்படும். செவ்வியதாக்கல் மற்றும் கைப்பிடி சேர்த்தல் போன்றவை தோல்-வன்மை நிலையிலேயே நிகழ்த்தப்படுகின்றன. மிகவும் உலர்ந்த (சுட்கிய) நிலை என்பது ஈரப்பதமானது 0% அல்லது அதற்கு மிக அருகாமையிலான நிலையை அடைந்த நிலையைக் குறிக்கிறது. இந்த நிலையிலுள்ள மட்பாண்டங்கள் இளஞ்சிவப்பான பழுப்பு நிலையை அடையும் பொருட்டு சூளையில் இட்டு சுடத்தக்கவையாகும். சுட்ட களிமண் என்பது [5][6] பொருளானது விரும்பிய வடிவத்திற்கு கொண்டு வரப்பட்ட பிறகு முதல் முறையாக சூளையில் இட்டு சுடப்பட்ட நிலையைக் குறிக்கிறது. சுட்ட களி அல்லது ரொட்டியளவுக்கு சுட்ட நிலையைக் குறிக்கிறது. இவ்வாறு சூளையிலிட்டுச் சுடுவது என்பது களிமண்ணால் செய்யப்பட்ட பொருளை பல வழிகளில் மாற்றுகிறது. களிமண்ணால் ஆக்கப்பட்ட பொருளில் உள்ள கனிமப் பகுதிப்பொருட்கள் வேதிய மாற்றத்திற்குட்பட்டு பொருளின் நிறத்தை மாற்றுகின்றன. மெருகிட்ட அல்லது பளிங்கூட்டப்பட்ட சுட்ட களிமண் என்பது மட்பாண்டம் உருவாக்குதலில் இறுதி நிலையாகும். ஒரு வகையான சுட்டாங்கல் மெருகானது சுட்ட களிமண்பாண்டம் மீது பூசப்படுகிறது. மேலும், மட்பாண்டமானது பலவேறு வகைகளில் அலங்கரிக்கப்படுகிறது. இவ்வாறு கிடைக்கும் மட்பாண்டத்தின் நிலையே மெருகிட்ட சுட்ட களிமண் என்ற நிலையாகும். பளிங்கூட்டப் பயன்படும் மெருகு சுடப்படும் போது உருகி பாண்டத்தோடு நன்கு ஒட்டிக்கொள்கிறது. இவ்வாறான மெருகிட்டு சுடுதல் பாண்டத்தை மேலும் கடினமாக்குகிறது. வடிவமைக்கும் முறைகள் மட்பாண்டங்கள் பலவிதமான முறைகளைப் பயன்படுத்தி வடிவமைக்கப்படுகின்றன. அவற்றில் சில: கைகளால் வடிவமைத்தல்: இது தொடக்ககால முறையாகும். களிமண் பாண்டங்கள் களிமண் சுருள்களிலிருந்து வடிவமைக்கப்படுகின்றன. களிமண்ணின் தட்டையான அடுக்குகளை இணைத்தல் அல்லது களிமண் திட பந்துகளைப் பிசைந்து பிணைத்தல் அல்லது இந்த இரண்டு முறைகளையும் சேர்த்து பயன்படுத்தி களிமண் பாண்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு கைகளால் உருவாக்கப்பட்ட பாத்திரங்களின் பாகங்கள் பெரும்பாலும் களிமண் மற்றும் நீர் சேர்ந்த தொங்கல் கலவைகளைக் கொண்டு சீட்டு எனும் துணைக்கருவியின் உதவியுடன் ஒன்றிணைக்கப்படுகின்றன. களிமண்ணால் ஆக்கப்பட்ட பாண்டமானது சூளையிலிட்டு சுடுவதற்கு முன்னரோ அல்லது சுடப்பட்ட பின்னரோ அலங்கரிக்கப்படலாம். குயவரின் சக்கரம்: "வீசுதல்" என்று அழைக்கப்படும் ஒரு செயல்முறையில், களிமண்ணானது ஒரு சுழல் மேடையின் நடுவில் சக்கரத்தலை என்ற பகுதியில் வைக்கப்படும். பானை செய்பவர் இச்சக்கரத்தை ஒரு குச்சியின் மூலம் தனது கால்களில் உள்ள விசையைப் பயன்படுத்தியோ அல்லது மின் மோட்டாரைப் பயன்படுத்தியோ தேவைப்படும் வேகத்தில் சுழற்றுவார். இந்தச் செயல்முறையின் போது, சக்கரம் சுழலச் சுழல, மெல்லிய களிமண்ணின் திடக்கோளம் அழுத்தப்பட்டு, பிதுக்கப்பட்டு, மென்மையாக மேல்நோக்கியும், வெளிநோக்கியும் இழுக்கப்பட்டு ஒரு வெற்றிடக்கலனாக வடிவமைக்கப்படுகிறது. முதல் படிநிலையானது, சீரற்ற களிமண் பந்தை சமச்சீரான சுழற்சியைப் பயன்படுத்தி கீழ்நோக்கியும், உள்நோக்கியும் அழுத்துவது களிமண்ணை மையத்திற்குக் கொணரும் செயலாகும். இது மிக முக்கியமான அதிகத் திறன் தேவைப்படுகின்ற படிநிலையாகும்.திறப்பு ஏற்படுத்துவது (திடமான களிமண் பந்திலிருந்து மையத்தில் திறப்பு கொண்ட ஒரு வெற்றுக் கோளத்தை உருவாக்குவது), தளப்படுத்துதல் (தட்டையான வட்ட வடிவ அடிப்புறத்தை பானையின் உட்புறத்தில் உருவாக்குதல்) எறிதல் அல்லது இழுத்தல் (பானையின் உட்புறமிருந்து பானையின் சுவர்களை ஒரே அளவிலான தடிமனில் பரவிவிடுதல் மற்றும் செவ்வியதாக்கல் (தேவையற்ற அல்லது அதிகப்படியான களிமண்ணை நீக்கி தேவைப்படும் வடிவத்தைத் துல்லியமாக்குவது). ஏற்றுக்கொள்ளக்கூடிய தரநிலைகளுடன் மண்பாண்டங்களை உருவாக்குவதற்கு குயவரின் சக்கரத்தில் எறிதல் செயல்முறையைக் கையாள குறிப்பிடத்தக்க திறன் மற்றும் அனுபவம் தேவைப்படுகிறது. அவ்வாறான அனுபவமும், திறனும் இருக்கும் நேர்வில் உருவாக்கப்படும் பாண்டங்கள் உயர் கலை நேர்த்தியுடனும் அமையும்.[7] பல விதமான மட்பாண்டங்கள் ஓவிய மட்கலன் மண் சாடி கருப்புச்சட்டி பானை செய்தல் மண்பானையில் மனித முகம் (A clay pot with a face) சீனப் பானை (Ancient China Pot) தமிழ் நாட்டு மண் சட்டி (Clay pot of Tamil Nadu) எகிப்த்திய நாட்டுப் பானை (Pot of Egypt) சித்திரப் பானை (Martinez Pot) பல்கேரிய நாட்டுப் பானை(A pot of Bulgaria) சீனாவின் உலோகப் பானை(Jade pot of Chaina) மெக்சிகோவின் சித்திரப் பானை (Mata Ortiz Pottery of Mexico) பானை விற்பனை அகல் விளக்கு நீர் சேமித்து வைக்கும் மட்பாத்திரம் மேலும் பார்க்க பானை மேற்கோள்கள்
பானை செய்யும் தொழிலை எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
குயவர்
408
tamil
7a3e4bf22
சிந்துவெளி நாகரிகம் (Indus Valley Civilisation) மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தழைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது. இங்கு வாழ்ந்த மக்களினம் பற்றியோ, அவர்கள் பேசிய மொழிகள் பற்றியோ ஆய்வாளர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது. தொல்லியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான முத்திரைகள் காணப்படுகின்ற, அவர்களுடைய மொழியை எழுதப்பயன்படுத்திய குறியீடுகளையும் எவரும் இன்றும் வாசித்தறிய முடியவில்லை.[2] சிந்துவெளி நாகரிகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் சிந்துவெளிப் பகுதியில் கி.மு 6000 ஆண்டளவிலேயே மக்கள் குடியேற்றங்களும், சிறிய நகரங்களும் இருந்தததாகக் கூறப்படுகின்றது. பலுச்சிஸ்தானிலுள்ள மெஹெர்கர் பகுதி, ஹரப்பாவின் அடியிலுள்ள படைகள் என்பன இக்கூற்றுக்கான சான்றுகளாகும். எனினும் இவை சிறிய நகரங்களாகவும், சுதந்திரமான நிர்வாகம் மற்றும் தன்நிறைவுப் பொருளாதாரம் ஆகியவற்றைக் கொண்ட நகர அரசுகளாகவே இருந்தன. தற்போது ஹரப்பா நாகரிகம் என்று அறியப்படுகின்ற காலகட்டத்தில் சிந்துவெளி நாகரிகம், முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் அக்காலத்து வேறெந்த நாகரிகத்திலும் பார்க்க அளவிற் பெரிதாக சுமார் 13 இலட்சம் சதுர கிலோமீட்டர் (5 இலட்சம் சதுர மைல்கள்) பரப்பளவு கொண்டதாக வளர்ந்திருந்தது. இங்கே சிறிதும் பெரிதுமாக 200 க்கும் மேற்பட்ட ஊர்களும், 6 மிகப் பெரிய நகரங்களும் இருந்தன. இந்த நகரங்கள், குடியேற்றங்களுடைய ஒரு தன்மைத்தான அமைப்பு இவையனைத்தும் ஒரு உயர் வளர்ச்சி நிலையில் சமூக ஒருங்கிணைப்பு வல்லமை கொண்ட ஒரே நிர்வாகத்திக் கீழ் அமைந்திருந்தமையைக் காட்டுகின்றது. சிந்துவெளிப் பண்பாட்டின் காலப் பகுப்பு முறையான ஹரப்பா பண்பாடு கி.மு 2600 இலிருந்து 1900 வரை நிலவியது. இதன் முன் நிலவிய மற்றும் பின் நிலவிய பண்பாடுகளான முந்திய மற்றும் பிந்திய ஹரப்பாப் பண்பாடுகளையும் சேர்த்துப் பார்க்கும்போது, இது, கி.மு 33 – 14 ஆம் நூற்றாண்டுகளிலிருந்து ஆரம்பித்ததாகக் கருதலாம். சிந்துவெளிப் பண்பாட்டின் காலப் பகுப்பு தொடர்பில் இரண்டுவகையான பகுப்புக உள்ளன. ஒன்று சகாப்தங்கள் (Eras) மற்றது கட்டங்கள் (Phases). மக்களினம் சிந்து வெளிப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பது பற்றி உறுதியாக அறிந்து கொள்வதற்கான சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை. ஆனாலும், ஆய்வாளர்கள் பல்வேறு ஒன்றுக்கொன்று முரண்படுகின்ற கருத்துக்களை முன் வைத்து வாதிட்டு வருகின்றனர். சிந்து வெளி பண்பாட்டுக்கு உரியவர்கள் திராவிட இனத்தவர்களே என ஒரு சாராரும், இல்லை ஆரியரே என இன்னொரு பகுதியினரும் கூற வேறு பலர் பலவிதமான கலப்பினக் கொள்கைகளையும் முன் வைத்துள்ளனர். பொருளாதாரம் சிந்துவெளி நாகரிகத்தின் பொருளாதாரம் வணிகத்திலேயே பெரும்பாலும் தங்கியிருந்தது எனலாம். போக்குவரத்துத் தொழில்நுட்பத்தில் சிறப்பான முன்னேற்றம் காணப்பட்டமை இதற்குக் காரணமாகும். சிந்துவெளி நாகரிக மக்களே சக்கரத்தை முதன்முதலில் பயன்படுத்தியிருக்கக்கூடும்.[3] இன்று தெற்காசியா முழுவதும் காணக்கூடிய மாட்டு வண்டிகளும், படகுகளும் அன்று பயன்படுத்தப்பட்டிருக்கலாம். படகுகள் பெரும்பாலும் சிறிய தட்டையான வடிவில் காணப்பட்டதோடு, இவை பாய்மரம் மூலம் செயற்படுத்தப்பட்டிருக்கலாம். தொல்பொருளியலாளர்கள் மேற்கு இந்தியாவின் குஜராத்தின் கடற்கரை நகரான லோத்தலில் பாரிய ஆழமான கால்வாயொன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு கப்பற்துறையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலும் நீர்ப்பாசனத்துக்கு பயன்படுத்தப்பட்ட பாரிய கால்வாய் வலையமைப்பொன்றை H. P. பிராங்போர்ட் என்பவர் கண்டுபிடித்துள்ளார். 4300–3200 BCEக்கு இடைப்பட்ட கல்கோலிதிக் (செப்புக் காலம்) காலத்தில், சிந்துவெளி நாகரிகப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட செரமிக் பொருட்கள் தெற்கு துர்க்மெனிஸ்தானிலும், வடக்கு ஈரானிலும் காணப்பட்ட செரமிக் பாண்டங்களுடன் ஒத்துப்போகின்றன. இதன் மூலம் சிந்துவெளி மக்கள் அப்பகுதிகளுடன் வணிகத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. முந்திய ஹரப்பாக் காலத்தில் (கிட்டத்தட்ட 3200–2600 BCE) மட்பாண்டங்கள், முத்திரைகள், உருவங்கள், அணிகலன்கள் போன்றவை, மத்திய ஆசியா மற்றும் ஈரானியப் பீடபூமிப் பிரதேசங்களுடன் சிறப்பான முறையில் வணிகம் நடைபெற்றதை எடுத்துக்காட்டுகின்றன.[4] சிந்துவெளி நாகரிக கலைப்படைப்புகளின் பரவலைக் கொண்டு மதிப்பிடும் போது, வணிகத் தொடர்புகள் ஒரு பரந்த பிரதேசத்தில் நடைபெற்றிருப்பதைக் காணமுடிகிறது. இப் பகுதிகள், ஆப்கானிஸ்தானின் பகுதிகள், பாரசீகத்தின் கடற்கரைப் பகுதிகள், வடக்கு மற்றும் மேற்கு இந்தியா மற்றும் மெசொப்பொத்தேமியா ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன. வணிகத் தொடர்புகள் கிரீட் மற்றும் எகிப்து வரை பரந்திருந்தமைக்கான சில சான்றுகளும் உள்ளன.[5] நடு ஹரப்பாக் காலத்திலேயே, ஹரப்பா மற்றும் மெசொப்பொத்தேமிய நாகரிகங்களுக்கிடையில் பாரிய கடல்வழி வணிக நடவடிக்கைகள் காணப்பட்டுள்ளன. இவ் வணிக நடவடிக்கைகளில் பெரும்பாலானவற்றை "தில்முன்னிலுள்ள நடுத்தர வணிகர்கள்" முன்னெடுத்தனர் (பாரசீக வளைகுடாவிலுள்ள இன்றைய பக்ரைன் மற்றும் பைலகா பகுதிகள்).[6] பலகையினால் கட்டப்பட்ட, தனிக் கொடிமரத்தில் கட்டப்பட்ட பாய்மரப் படகுகள் மூலமாக இவ்வாறான நீண்ட தூர கடல் வணிகம் சாத்தியமானது. பாகிஸ்தானிலுள்ள சொட்காஜென்-டோர் (ஜிவானிக்கு வடக்கேயுள்ள அஸ்ட்ரைட் டாஸ்ட் நதி), சொக்டா கொஹ் (பஸ்னிக்கு வடக்கேயுள்ள அஸ்ட்ரைட் ஷாடி நதி) மற்றும் பாலாகோட் (சொன்மியானிக்கு அருகிலுள்ளது) போன்ற கரையோரக் குடியிருப்புக்கள் மற்றும் இந்தியாவிலுள்ள லோத்தல் ஆகியன, ஹரப்பாவின் வணிக நிலையங்களாக இருந்தமைக்குச் சான்று பகர்கின்றன. கடலுக்கு அருகிலுள்ள கழிமுகங்களில் அமைந்துள்ள ஆழமற்ற துறைமுகங்கள், மெசொப்பொத்தேமிய நகரங்களுடன் சிறப்பான வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியுள்ளன. சமயம் சமயச் சடங்குகளோடு தொடர்புடையவை அல்லது வணக்கத் தலங்கள் என்று சொல்லக்கூடிய கட்டிடப் பகுதிகள் எதுவும் தொல்பொருளாய்வில் அகப்படவில்லை அல்லது அடையாளம் காணப்படவில்லை. எனினும், சிறிய உருவச் சிலைகள், மற்றும் முத்திரைகளில் காணப்படுகின்ற உருவங்களையும், அவற்றிலே உருவகப்படுத்தப்பட்டுள்ள காட்சிகளையும் வைத்துச் சமயத் தொடர்புள்ள கருத்துருக்களையும் ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக இந்து சமயத்தில் காணப்படும் பெண் தெய்வ வழிபாடு, இலிங்க வழிபாடு, பசுபதி பற்றிய எண்ணக்கரு, பலி பீடங்கள் போன்றவற்றின் அடைப்படைகளுக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இவற்றை வைத்துத் தற்கால இந்து சமயத்தின் கூறுகள் பல சிந்துவெளிக் காலத்திலேயே தோற்றம் பெற்றிருக்கக் கூடும் எனக் கருதப் படுகின்றது. மொழி சிந்து வெளி மக்கள் பேசிய மொழி அல்லது மொழிகள் பற்றி உறுதியான முடிவுக்கு வரக்கூடிய தகவல்கள் இதுவரை வெளிப்படவில்லை. இங்கு பேசப்பட்ட மொழியின் எழுத்து வடிவங்கள் எனக் கருதப்படும் குறியீட்டு வடிவங்கள் சிறிய அளவுள்ள முத்திரைகளின் வடிவில் ஏராளமாகக் கிடைத்துள்ளது தவிர வேறு சான்றுகள் எதுவும் கிடையாது. இவ்வெழுத்துக்களை வாசிக்கும் முயற்சிகளில் பல பத்தாண்டுகளாக ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் இன்னும் வெற்றி பெறாதது ஒரு புறமிருக்க இவை எழுத்துக்களே அல்ல வெறும் குறியீட்டு அடையாளங்களே என அண்மையில் சில ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளார்கள். எனினும் இது பற்றிய வாதங்கள் தொடர்ந்து தான் வருகின்றன. இது சிந்துச் சமவெளி மக்கள் பேசிய மொழிக்குரிய எழுத்துக்களே என நம்பும் ஆய்வாளர்களும், இம்மொழி எந்த மொழியினத்தைச் சார்ந்தது என்பது குறித்து ஒத்த கருத்துக்கு வரமுடியாமல் உள்ளனர். இன்று சிந்துவெளியைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதிலும் பெரும்பான்மையாகப் பேசப்படுவது இந்தோ-ஐரோப்பிய மொழிகளாகும். எனினும், இம்மொழி பேசுவோர், சிந்துவெளி நாகரீகம் வீழ்ச்சியடைந்த காலப் பகுதியிலேயே இந்தியாவுக்குள் வந்ததாகக் கருதப்படுவதால், இது இந்தோ-ஐரோப்பிய இனத்தைச் சாராத மொழியென்றே பெரும்பாலான ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சிறப்பாக, இது திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என்ற கருத்துக்குப் பல ஆய்வாளரிடையே ஆதரவு உண்டு. இது முண்டா மொழியாக இருக்கலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள். அண்மைக் காலத்தில், வட இந்திய ஆய்வாளர்கள் பலர், சிந்துவெளி மொழியானது இந்தோ-ஐரோப்பிய மொழியே என நிறுவ முயன்று வருகிறார்கள். சிறப்பாக, இந்து தேசியவாதிகள் பலர் இதன் மீது தீவிர கருத்துக்களைக் கொண்டிருப்பதால், இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள், அரசியல் பின்னணி கொண்டவையாகவும், உணர்வு சார்ந்தவைவையாகவும் மாறிவருகின்றன. நகர அமைப்பும், கட்டிடக்கலையும் சிந்துவெளி நாகரீகத்தில், சிக்கல் தன்மை வாய்ந்த, உயர்நிலை நகர்சார் பண்பாடு இருந்தது. இங்கே காணப்படுகின்ற நகர அமைப்பின் தன்மை, சுகாதாரத்துக்கு, முக்கியத்துவம் கொடுக்கின்ற உள்ளூராட்சி அமைப்பு மற்றும் நகரத் திட்டமிடல் தொடர்பான அறிவு இந் நாகரீக மக்களிடையே நிலவியமையைக் காட்டுகின்றது. மொஹெஞ்சதாரோ, ஹரப்பா போன்ற முக்கிய நகரங்களின் தெருக்கள், முறையான வலைப்பின்னல் அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன. சத்தம், துர்நாற்றம், கள்வர் தொல்லை போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் விதத்தில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஹரப்பா, மொஹெஞ்சதாரோ, மற்றும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ராக்கிகர்ஹி ஆகியவற்றில் காணப்படுகின்ற சுகாதார அமைப்பு முறைமைகள், உலகிலேயே முதல் நகர்சார் சுகாதார அமைப்பு முறைமைகளாகும். நகரங்களில், வீடுகள் தனியாகவோ அல்லது வேறு அயல் வீடுகளுடன் கூட்டாகவோ கிணறுகளில் இருந்து நீர் பெற்றன. குளிப்பதற்குத் தனியான அறைகள் ஒதுக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. கழிவு நீர், வீடுகளில் இருந்து, தெருக்களில் அமைக்கப்பட்டிருந்த மூடிய கால்வாய்கள் மூலமாக வெளியேற்றப்பட்டது. வீடுகளின் வாயில்கள், உள் முற்றங்களிலோ, சிறிய தெருக்களிலோதான் அமைக்கப்பட்டன. பண்டைக்காலச் சிந்து வெளியின் செல்வாக்குக்கு உட்பட்ட எல்லா நகரப் பகுதிகளிலும் காணப்பட்ட கழிவு நீரகற்றல் மற்றும் வடிகால் அமைப்பு முறைகள், சமகால மத்திய கிழக்கு நகரங்களில் காணப்பட்டவற்றிலும் திறன் மிக்கவையாக இருந்தது மட்டுமன்றித் தற்கால இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் உள்ள சில பகுதிகளில் காணப்படுபவற்றிலும் சிறந்தவையாகவும் காணப்படன. சிந்துவெளி நாகரீகக்காலக் கட்டிடக்கலையின் தரம் பற்றி, அங்கே காணப்படுகின்ற இறங்கு தளங்கள், தானிய சேமிப்புக் கிடங்குகள், களஞ்சியத் தொகுதிகள், செங்கற் கட்டுமான மேடைகள் மற்றும் பாதுகாப்புச் சுவர்கள் போன்ற இன்னோரன்ன அமைப்புக்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. பெரிய அளவிலான நகர் பாதுகாப்புக் கோட்டைகள், அக்காலத்து மெசொப்பொத்தேமியாவில் காணப்பட்ட பெரும்பாலான ஸிகரெட்டுக்களிலும் பெரியவை. இவ்வாறான கோட்டைகள் கட்டப்பட்டதற்கான காரணம் இன்னும் விவாதத்துக்கு உரியதாகவே உள்ளது. மெசொப்பொத்தேமியா, எகிப்து போன்ற, இப் பண்பாட்டின் சமகாலப் பண்பாடுகளில் காணப்படுவதற்கு முரணாக, இங்கே பிரம்மாண்டமான கட்டுமானச் சின்னங்கள் (monumental structures) எதுவும் காணப்படவில்லை. இங்கே, அரண்மனைகளோ, கோயில்களோ இருந்ததற்கான முடிவான சான்றுகளோ, அரசர், படைகள், சமயக் குருமார் போன்றவர்கள் பற்றிய தகவல்களோ எதுவும் கிடைக்கவில்லை. ஒரு நகரத்தில், பொதுக் குளியல் இடம் எனக் கருதப்படுகின்ற, சிறப்பாகக் கட்டப்பட்ட குளியல் தடாகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோட்டைகள் மதிலால் சூழப்பட்டிருந்தபோதும், இவை பாதுகாப்புக் காரணங்களுக்காகக் கட்டப்பட்டவையா என்பதில் தெளிவு இல்லை. இவை வெள்ள நீர் உட்புகாது தடுப்பதற்காகக் கட்டப்பட்டவையாகவும் இருக்கலாம். பெரும்பாலான நகரவாசிகள், வணிகராகவும், கைவினைஞராகவும் இருந்ததாகத் தெரிகிறது. முத்திரைகள், மணிகள் (beads) மற்றும் பலவகைப் பொருட்களைச் செய்வதற்காக தொலைதூர இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மூலப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சில வீடுகள் ஏனையவற்றிலும் பெரியவையாகக் காணப்பட்டபோதிலும், பொதுவாக இவற்றின் அமைப்பு, சிந்துவெளி நகரச் சமுதாயம் பெருமளவுக்கு ஒரு சமத்துவச் சமுதாய அமைப்பைக் கொண்டு விளங்கியமையையே காட்டுகிறது. சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சி கி.மு 1800 அளவில் இப் பண்பாட்டின் படிப்படியான வீழ்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுகிறது. கி.மு 1700 இல் பெரும்பாலான நகரங்கள் கைவிடப்பட்டுவிட்டன. ஆனாலும்,சிந்துவெளிப் பண்பாடு சடுதியாக மறைந்துவிடவில்லை. இப் பண்பாட்டின் பல கூறுகள் பிற்காலப் பண்பாடுகளிலும் காணப்படுகின்றன. நடப்புத் தொல்லியல் தரவுகள், பிந்திய ஹரப்பாப் பண்பாடு என்று குறிக்கப்படுகின்ற பொருள்சார் பண்பாடு, கி.மு 1000 – 900 வரையிலுமாவது தொடர்ந்திருக்கக்கூடும் என்று காட்டுகின்றன. சிந்துவெளிப் பண்பாட்டின் வீழ்ச்சிக்குக் காலநிலை மாற்றம் தொடர்பான இயற்கைக் காரணங்கள் இருந்திருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது. .[7]சிந்துவெளியின் காலநிலை கி.மு 1800 இலிருந்து, குறிப்பிடத் தக்க அளவு குளிரானதாகவும், வறண்டதாகவும் மாறியது. காக்கர் ஹக்ரா ஆற்று (Ghaggar Hakra river) முறைமையில் குறிப்பிடத்தக்க பகுதி இல்லாமல் போனதும் ஒரு முக்கியமான காரணியாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. எனினும் மேற்படி எடுகோள் பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆரியர் முதலாக, ஆப்கானியர், துருக்கியர், முகலாயர் போன்றோர் இந்து குஷ் பகுதியில் உள்ள கணவாய்கள் வழியாகத் தென்னாசியாவுக்குள் ஊடுருவிய பாதையில், இப் பகுதி உள்ளது. இதை அடிப்படையாக வைத்தே சிந்து வெளிப் பண்பாட்டின் வீழ்ச்சி மற்றும் ஆரியர் வட இந்தியாவுக்குள் நுழைந்த இந்திய-ஆரிய இடப்பெயர்வு தொடர்பான எடுகோள்கள் ஆராயப்பட்டன. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இது ஒரு "ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கை"யாக முன்வைக்கப்பட்டது. இதன் வீழ்ச்சிக்காலம் குறித்த தொல்லியல் சான்றுகளும், ஆரியர் உள்வரவு தொடர்பான கணிப்புக்களும் பொருந்தி வந்தது இக் கோட்பாட்டுக்கு ஒரு சான்றாக அமைந்தது. அத்துடன் போரில் இறந்த அடையாளங்களுடனான பலரின் புதை குழிகள் மேற்படைகளில் காணப்பட்டதும் இக் கோட்பாட்டிற்கு வலு சேர்த்தது. தொல்லியலாளரான மார்ட்டிமர் வீலர் (Mortimer Wheeler) இது பற்றிக் குறிப்பிட்டபோது, இந்தோ-ஆரிய போர்க் கடவுளான இந்திரனே, அழிவுக்காகக் "குற்றம் சாட்டப்படுகிறான்" என்றார். இன்று இக் கொள்கைக்கு மாற்றாக வேறு பல கொள்கைகளும் நிலவுகின்றன. ஆரியர் இந்தியாவுக்குள் வெளியிலிருந்து வரவில்லையென்றும், இந்தியாவே அவர்களது தாயகம் என்றும், இந்தோ ஐரோப்பிய மொழிகள் தோன்றியது இந்தியாவிலேயே என்றும், சில இந்திய ஆய்வாளர்கள், குறிப்பாக வட இந்திய ஆய்வாளர்கள் வாதாடி வருகிறார்கள். சிந்துவெளி நாகரீகம் ஆரியர்களுடையது என்பதும் இவர்களது வாதம். எனினும் இவ்வாதங்களுக்கு அனைத்துலக அளவில் அறிஞர்கள் மத்தியில் வரவேற்புப் பெறவில்லை. சிந்துவெளி எழுத்துக்கள் மயிலாடுதுறையில் சிந்துவெளி எழுத்துக்கள் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் 2007ல் சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடரி ஒன்று கிடைத்துளது. இதிலிருந்து சிந்துவெளி மக்களும் தமிழரும் ஒரே மொழியையோ அல்லது ஒரே தாய்மொழியிலிருந்து பிரிந்த கிளை மொழிகளையோ பேசியதாக தெரிகிறது என்பது ஐராவதம் மகாதேவன் கருத்து.[8] இதன் காலம் கி.மு. 2000 - கி.மு. 1500 ஆகும்.[9] காவிரிக்கரையில் சிந்துசமவெளி எழுத்துக்கள் தமிழ்நாட்டின் காவிரிக் கழிமுகப் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறையின் அகழ்வாய்வின்போது பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த முதுமக்கள் தாழிகளில் காணப்பட்ட சில குறியீடுகள், ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகக் குறியீடுகளைப் போன்றே இருப்பதாக, பழங்கால எழுத்துக்களை ஆய்வு செய்துவரும் ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.[10] சிந்து சமவெளி நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகம் உள்ள நகரான மொகஞ்சதாரோவில் கிடைத்த முதுகைக் காட்டி உட்கார்ந்த நிலையிலான விலங்கு, கொக்கி, நாற்சந்தி, குவளை வடிவ முத்திரைகள் ஆய்வு செய்யப்பட்டன.இவற்றில் விலங்கு வடிவம் பண்டமாற்று முறை, கொக்கி வடிவம் வாங்குதல், எடுத்துக் கொள்வது, நாற்சந்தி வடிவம் தெருக்கள் அடங்கிய நகரம், கிராமம் என்பதை உணர்த்துகிறது. குவளை வடிவம் சிந்துவெளியில் அதிகம் காணப்படுகிறது. சொல்லின் இறுதியில் காணப்படும் இந்த வடிவம் அன், நகரத் தலைவன், பாண்டி, பாண்டியன் போன்றவற்றைக் குறிக்கிறது. இதற்கு இணையான வார்த்தைகள் பழந்தமிழிலும் உள்ளன. இந்த 4 எழுத்துகளையும் சேர்த்து வாசிக்கும்போது நகர வணிகன் என்ற வாக்கியம் கிடைக்கிறது. இதை, மாற செழிய வழுதிபாண்டியன் எனவும் வாசிக்க முடியும். இதையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும்போது சிந்து சமவெளியில் திராவிட குடும்ப மொழியே பேசப்பட்டிருக்க வேண்டும் என்று கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் கருதுகிறார்.[11] சென்னை அருங்காட்சியகத்தில் இந்த நாகரீக கால போருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.[12] இவற்றையும் பார்க்கவும் சிந்துவெளி/ஹரப்பா வரிவடிவம் சிந்துவெளிக் கட்டிடக்கலை சிந்துவெளி நாகரிக மக்களின் மொழி ஹரப்பா மொஹெஞ்சதாரோ ராகி கர்கி லோத்தல் தோலாவிரா மெஹெர்கர் முண்டிகாக் மேற்கோள்கள் நூல்தொகை CS1 maint: discouraged parameter (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: ref=harv (link). CS1 maint: discouraged parameter (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: extra text: editors list (link) CS1 maint: ref=harv (link) Unknown parameter |editors= ignored (|editor= suggested) (help); CS1 maint: discouraged parameter (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: extra text: editors list (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: discouraged parameter (link) மேலும் படிக்க வெளியிணைப்புகள் ] பகுப்பு:நாகரிகங்கள் பகுப்பு:இந்திய வரலாறு
சிந்து சமவெளி நாகரிகம் எப்போது உருவானது?
கி.மு 3000
305
tamil
72a17acc4
ரேடியம் (Radium) என்பது Ra என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கதிர்வீச்சு இயல்புள்ள ஒரு தனிமமாகும். இதன் அணு எண் 88 ஆகும். இதன் அணுநிறை 226 ஆகும். தனிம வரிசை அட்டவணையின் நெடுங்குழு 2 இல் இடம்பெற்றுள்ள ஆறாவது தனிமம் ரேடியம் ஆகும். காரமண் உலோகம் என்றும் இதை வகைப்படுத்துவர். தூய்மையான ரேடியம் வெள்ளியைப் போல வெண்மை நிறமுடையதாக உள்ளது. ஆனால் காற்றில் வெளிப்பட நேர்ந்தால் ரேடியம் ஆக்சிசனுக்குப் பதிலாக நைட்ரசனுடன் உடனடியாக வினைபுரிந்து ரேடியம் நைட்ரைடு (Ra3N2) என்ற கருப்பு நிற மேற்பரப்பு அடுக்காக உருவாகிறது. ரேடியத்தின் அனைத்து ஐசோடோப்புகளும் அதிகமான கதிரியக்கத் தன்மையுடையனவாகும். இவற்றில் ரேடியம் -226 என்ற ஐசோடோப்பு அதிக நிலைப்புத்தன்மை கொண்டதாக உள்ளது. இதனுடைய அரை ஆயுள் காலம் 1600 ஆண்டுகளாகும். கதிரியக்கச் சிதைவடைந்து இந்த ஐசோடோப்பு ரேடான் வாயுவாக, குறிப்பாக ரேடான் - 222 என்ற ஐசோடோப்பாக மாறுகிறது. ரேடியம் சிதைவடையும்போது அயனியாக்கும் கதிர் ஒரு விளைபொருளாகும். இது ஒளிரும் வேதிப்பொருட்களை கிளர்வூட்டி கதிரியக்க ஒளிர்வைத் தருகிறது. ரேடியம் குளோரைடு வடிவத்தில் ரேடியம் 1898 ஆம் ஆண்டு மேரிகியூரி மற்றும் பியரிகியூரி தம்பதியரால் கண்டறியப்பட்டது. பிரஞ்சு அறிவியல் அகாதமியில் யுரேனைட்டு என்ற கனிமத்திலிருந்து ரேடியம் தனித்துப் பிரித்தெடுக்கப்பட்டு ஐந்து நாட்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்டது. மேரிகியூரியும் ஆன்றே -லூயிசு டெபியர்ன் ஆகியோர் 1911 ஆம் ஆண்டு ரேடியம் குளோரைடை மின்னாற்பகுப்பு செய்து ரேடியத்தை அதனுடைய உலோக நிலையில் தயாரித்தனர்[1] இயற்கையில் ரேடியம் யுரேனியம் மற்றும் தோரியம் தாதுக்களில் மிகச்சிறிய அளவில் காணப்படுகிறது. வாழும் உயிரினங்களுக்கு ரேடியம் ஒன்றும் அத்தியாவசியமான தேவையாக இல்லை. இதன் கதிரியக்க மற்றும் இரசாயன வினைத்திறன் காரணமாக உயிர் வேதியியல் செயல்முறைகளில் இணைந்திருக்கும்போது, ஆரோக்கியத்திற்கு பாதகமான விளைவுகள் ஏற்படலாம். அணுக்கரு மருத்துவத்தில் பயன்படுவதைத் தவிர்த்து ரேடியத்திற்கு என வேறு வணிகப்பயன்பாடுகள் ஏதுமில்லை. முன்னர் இது கதிர் ஒளி வீசுகின்ற சாதனங்களுக்கான கதிரியக்க ஆதாரமாக பயன்படுத்தப்பட்டது. மேலும் இது பிணி நீக்கும் மருந்தாக கருதப்பட்டு கதிரியக்க போலி மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டது. இன்று இத்தகைய பயன்பாடுகளுக்காக ரேடியம் பயன்படுத்தப்படுவதில்லை. ஏனெனில் ரேடியத்தின் நச்சுத்தன்மை இன்று உணரப்பட்டுவிட்டது. எனவே குறைந்த நச்சுத்தன்மை கொண்ட ஐசோடோப்புகள் இக்கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றன. பண்புகள் அறியப்பட்டுள்ள காரமண் உலோகங்களில் மிகவும் கனமான உலோகம் ரேடியம் ஆகும். மற்றும் அக்குழுவில் இடம்பெற்றுள்ள ஒரே கதிரியக்க உலோகமும் இதுவேயாகும். ரேடியத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் பேரியம் தனிமத்தின் பண்புகளை ஒத்ததாக உள்ளது. தூய ரேடியம் ஓர் ஆவியாகக் கூடிய தனிமமாகும். இதன் இலேசான இணை தனிமங்களாகக் கருதப்படும் கால்சியம், இசுட்ரோன்சியம் மற்றும் பேரியம் ஆகியவை சிறிய மஞ்சள் நிறத்தில் இருந்தாலும் இது வெள்ளியைப் போல வெண்மை நிறத்துடன் காணப்படுகிறது. இதனுடைய நிறம் காற்றில் விரைவாக மங்கிவிடுகிறது. காற்றுடன் வினைபுரிந்து ரேடியம் நைட்ரைடு கருப்பு படலமாக இதன் மேற்பரப்பில் உருவாகிறது. ரேடியத்தின் உருகு நிலை 700 பாகை செல்சியசு வெப்ப நிலை அல்லது 960 பாகை செல்சியசு வெப்பநிலை இவற்றில் ஒன்றாக இருக்கலாம். மற்றும் இதனுடைய கொதி நிலை 1737 பாகை செல்சியசு வெப்பநிலை ஆகும். இவ்விரு அளவுகளும் பேரியத்தைக் காட்டிலும் குறைவான அளவுகளாக உள்ளன. தனிமவரிசை அட்டவணையின் ஆவர்த்தன போக்குகளுக்கு உட்பட்டதாகவும் இந்த அளவுகள் உள்ளன[2] . அட்டவணையின் மேலிருந்து கீழாகச் செல்லும்போது நெடுங்குழு 2 இன் தனிமங்கள் இத்தகைய போக்கையே காட்டுகின்றன. பேரியம் மற்றும் கார உலோகங்களைப் போல ரேடியம் சாதாரண வெப்ப நிலை மற்றும் அழுத்தத்தில் பொருள் மைய கனசதுர வடிவில் படிகமாகிறது. ரேடியம்-ரேடியம் பிணைப்பின் பிணைப்பு இடைவெளி 514.8 பைக்கோ மீட்டர்களாகும். இதன் அடர்த்தி 5.5 கிராம்/செ.மீ3 ஆகும். இது பேரியத்தின் அடர்த்தியைக் காட்டிலும் அதிகமாகும். ரேடியம்-பேரியம் அடர்த்தி வீதம் ரேடியம்-பேரியம் அணு நிறை வீதத்துடன் ஒப்பிட்டு நோக்கத்தக்கதாக உள்ளது. ஏனெனில் இரண்டு தனிமங்களும் ஒரே மாதிரியான படிகக் கட்டமைப்பில் படிகமாகியுள்ளன. ஐசோடோப்புகள் நிறை எண்கள் 202 முதல் 234 வரை உள்ள 33 ஐசோடோப்புகளை ரேடியம் கொண்டுள்ளது. இவை அனைத்தும் கதிரியக்கச் செயல்பாடு கொண்டவையாகும். அரை ஆயுட்காலம் 11.4 நாட்களைக் கொண்ட 223Ra, அரை ஆயுட்காலம் 3.64 நாட்களைக் கொண்ட 224Ra , அரை ஆயுட்காலம் 1600 ஆண்டுகள் கொண்ட 226Ra, அரை ஆயுட்காலம் 5.75 ஆண்டுகள் கொண்ட 228Ra என்ற நான்கு ஐசோடோப்புகளும் தோரியம்-232, யுரேனியம்-235, மற்றும் யுரேனியம்-238 போன்ற ஐசோடோப்புகளின் சிதைவுச் சங்கிலியிலிருந்து இயற்கையாகத் தோன்றுகின்றன. 223Ra ஐசோடோப்பு யுரேனியம்-235 ஐசோடோப்பிலிருந்தும், 226Ra ஐசோடோப்பு யுரேனியம்-235 ஐசோடோப்பிலிருந்தும், மற்ற இரண்டு ஐசோடோப்புகளும் தோரியம் 232 ஐசோடோப்பிலிருந்தும் உருவாகின்றன. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் at The Periodic Table of Videos (University of Nottingham) பகுப்பு:தனிமங்கள் பகுப்பு:காரக்கனிம மாழைகள்
ரேடியத்தின் அணு நிறை என்ன?
226
135
tamil
32d8ae902
ஜெ.ஜெ. தாம்சன்(Joseph John Thomson) என்று பொதுவாக அறியப்படுகின்ற சர் ஜோசப் ஜான் தாம்சன்(டிசம்பர் 18, 1856 - ஆகஸ்ட் 30, 1940)அணுவின் அடிப்படைப் பொருளான மின்னணு எனப்படும் எலக்ட்ரானைக் கண்டுபிடித்த ஆங்கில இயற்பியலார் ஆவார். இவர் மின்சாரவியல், காந்தவியல், ஐசோடோப்புகள் குறித்து ஆய்வுகள் செய்தவர். 'நவீன அணு இயற்பியலின் தந்தை' எனப் போற்றப்படுபவர். நிறை நிறமாலையைக் கண்டறிந்தவர்.இயற்பியல் பேராசிரியராக விளங்கியது மட்டுமல்லாமல் தனது ஆய்வுகளுக்காக 'ஆதம்சு பரிசு' மற்றும் 1906 -ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஆகியவற்றைப் பெற்றவர்.இவரது தாய் எம்மா ஸ்விண்டெல் மற்றும் தந்தை ஜோசப் ஜேம்ஸ் தாம்சன் ஸ்காட்டிய குடும்பத்தை சேர்ந்தவர்கள்.[1] இளமை 1856- ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மான்செசுடரில் உள்ள 'சீத்தம் குன்று' (Cheetham Hill)என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் ஸ்காட்ட்டியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 1870-ல் மான்செசுடரில் உள்ள ஓவென்சு கல்லூரியிலும், பின் 1876-ல் ஆக்சுபோர்டில் உள்ள டிரினிடி கல்லூரியிலும் சேர்ந்து படித்தார். அங்கு மிகச் சிறப்பாகப் படித்து 'ஆதம்சு பரிசை' வென்றார்[2] . அதன் காரனமாக இவருடைய இறுதிக்காலம் வரை அக்கல்லூரியின் உறுப்பினராக அமர்த்தப்பட்டார். இவருடைய தந்தை இவரை ஒரு பொறியாளராக்க விரும்பினார். ஆனால் இவரின் தந்தை இறந்தபின் அதற்குரிய கட்டணங்களைச் செலுத்த முடியாத சூழ்நிலை அவரின் குடும்பத்திற்கு இருந்ததால் அந்த விருப்பம் நிறைவேறவில்லைஓவென்சு கல்லூரியில் மிகச் சிறந்த பேராசிரியர்கள் கல்வி கற்பித்ததினால் இவருடைய அறிவியல் கல்வி சிறப்பாக அமைந்தது. 1883 -ல் அக்கல்லூரியிலேயே பேராசிரியராக நியமிக்கப்பட்டார். கேம்பிரிட்சு பல்கலைக் கழகத்தில் ஆய்வுமுறை இயற்பியலில் (Experimental Physics) கேவண்டிசு ஆய்வுக்கூடப் பேராசிரியராக அமர்த்தப்பட்டார். இவருக்கு முன்பாக லார்டு ராலே அப்பணியில் பேராசிரியராக இருந்தார். 1884 முதல் 1918 வரை மதிப்பியல் பேராசிரியராக கெம்பிரிட்ஜிலும், லண்டனில் உள்ள ராயல் நிறுவனத்திலும் அமர்த்தப்பட்டார்[3]. ராயல் கழகத்தின் உறுப்பினராகவும் ஆனார். 1890-ல் ரோசு எலிசபெத் என்ற பெண்ணைத் திருமணம் புரிந்துகொண்டார். இவருக்கு ஒரு மகனும், மகளும் பிறந்தனர். இவருடைய மகன் 'ஜார்ஜ் பேஜட் தாம்சன்' மிகச்சிறந்த இயற்பியல் பேராசிரியராக விளங்கி பின்னாளில் 1937-ல் பரிசையும் வென்றார். ஆய்வுப்பணிகள் தாம்சன் முதன்முதலில் அணுவைப் பற்றி ஆராய்ச்சி செய்து " நீர்ச்சுழி வளையங்களின் இயக்கத்தில் ஆய்வு" (Treatise on the motion of Vortex Rings) என்ற ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார். அது 1884-ல் ஆதம்சு பரிசை இவருக்குப் பெற்றுத் தந்தது. 1886-ல்'இயற்பியல், வேதியலில் இயக்கவியலின் தாக்கம்'(Application of the Dynamics to Physics and Chemistry) என்ற ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார். 1892-ல் 'மின்சாரவியல், காந்தவியலில் அண்மை ஆய்வுகள் பற்றிய குறிப்புகள்' (Notes on Recent Researches in Electricity and Magnetism)என்ற நூலை வெளியிட்டார். ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் எழுதிய நூலின் விளக்கவுரையாக அவருடைய நூலுக்கு மூன்றாவது தொகுதியாக இது அமைந்திருந்தது. பேராசிரியர் பாண்டிங் (J.H.Poynting) என்பவருடன் இணைந்து இயற்பியலுக்கான பாடத்தைப் 'பொருளின் குணங்கள்'(Properties of Matter) என்ற தலைப்பில் நான்கு தொகுதிகளாக வெளியிட்டிருந்தார். கத்தோடு கதிர்கள் பற்றிய ஆய்வு தாம்சன் எதிர்மின் கதிர்க்குழாயின் (Cathode Ray Tube) உதவி கொண்டு எதிர் மின் கதிர்களைப் பற்றிய ஆய்வுகளில் எஈடுபட்டார். எதிர்மின்கதிர்களிலிருந்து எதிர்மின்தன்மை தரும் துகளைத் தனியே பிரிக்க இயலுமா என்பது இவருடைய முதல் ஆய்வு ஆகும். ஓர் எலக்ட்ரோ மீட்டரின் உதவி கொண்டு, குழாயில் பல வெட்டுத்துளைகளை உருவாக்கி காந்தப் புலத்தின் உதவி கொண்டு ஆராய்ந்தார். இக்கதிர்களிலிருந்து எதிர் மின்துகளைத் தனியே பிரிக்க இயலாது என்பதை உணர்ந்தார்[4]. இரண்டாவதாக மின்புலத்தினால் இக்கதிர்கள் எவ்வாறு தாக்கப்படுகின்றன என்பதைப் பற்றி அராய்ந்தார். அதற்கு வெற்றிடக் குழாயையும் ஒளிருன் தன்மையையும் பயன்படுத்தி ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். அதன் மூலம் எதிர்மின் கதிர்கள் மின்புலத்தால் தாக்கப்படுவதைக் கண்டறிந்தார்[5]. மின்னணு(எலக்ட்ரான்) கண்டறிதல் மூன்றாவது ஆய்வில் எலக்ட்ரானின் மின்னூட்ட -நிறை விகிதத்தைக் (Charge-mass ratio) கண்டறிய முற்பட்டார். இவர் எதிர்மின் துகள்களைத் 'துகள்கள்(Corpuscles)' என்றே கூறிவந்தார். பின்னாளில் ஜான்ஸ்டோன் ஸ்டோனி என்ற அறிவியலறிஞர் இதை மின்னணு என்று உறுதிப் படுத்தினார் [6]. பொருள்கள் மின்தன்மை கொண்டவை என்ற உண்மை இதிலிருந்து தோன்றியது. தற்கால அணுக் கொள்கையும், அணுவையொட்டிய இயற்பியல் விளைவுகளின் விளக்கமும் இதிலிருந்து தோன்றின. எனவே இவர் நவீன அணு இயற்பியலின் தந்தை என்று போற்றப்பட்டார். 1895-ல் 'கணிதவியலின் ஆதாரக் கூறுகள்','மின்சர, காந்தவியலின் கோட்பாடுகள்' என்ற இரு நூல்களையும் வெளியிட்டார். அவை 1921-ல் ஐந்தாவது வெளியீடாகவும் வெளியிடப்பட்டன. 1896-ல் தாம்சன் அமெரிக்கா சென்றர். இவருடைய அணமைக்கால ஆய்வுகளின் அடிப்படையில் அங்கு நான்கு சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இலண்டன் இராயல் கழகத்தில் நடைபெற்ற மாலைச் சொற்பொழிவின் போது தான் கண்டறிந்த மின்னணு துகளைப் பற்றி அறிவித்தார். 1897 ஏப்ரல் 30 வெள்ளியன்று இதை அறிவித்தார். 1903-ல் அவர் வெளியிட்ட "வாயுக்களின் வழியே மின்சாரம் கடத்துதல் " என்ற தலைப்பில் அதனை ஒரு நூலாகவும் வெளியிட்டார். 'கேவண்டிசு ஆய்வுக்கூடத்தில் தாம்சனின் முக்கியமான பெரிய நாள்கள்' என்ற தலைப்பில் இந்த நூல் இவருடைய மகன் ஜார்ஜ் தாம்சனால் பிற்காலத்தில் (1928,1933 ஆகிய ஆண்டுகளில்) இரண்டு பதிப்புகளில் வெளியிடப்பட்டது. 1904-ல் மீண்டும் அமெரிக்கா சென்றார். பொருள்கள் மற்றும் மின்சாரம் பற்றி யேல் பலகலைக் கழகத்தில் சொற்பொழிவாற்றினார். 'அணுவின் அமைப்பு' பற்றிய இவருடைய கருத்துகள் வெளியிடப்பட்டன. ஐசோடோப்புகள் மற்றும் நிறை நிறமாலை மானி நேர்மின் கதிர்களைக் கொண்டு வெவ்வேறு வகையான அணுக்களையும் மூலக்கூறுகளையும் பிரிப்பது பற்றிய ஆஸ்டன், டெம்ப்ஸ்டர் போன்ற அறிவியலறிஞர்களுடைய கருத்துகளின் மூலமாகப் பல ஐசோடோப்புகளைக் கண்டுபிடிக்க உதவும் ஒரு முறையைப் பற்றி விளக்கினார். நியான் வாயுவைப் பகுத்து இவர் செய்த ஆய்வின் மூலம் ஐசோடோப்புகளின் கலவையாக சில தனிமங்கள் இருப்பதைத் தெளிவாக்கினார். அதன் அடிப்படையில் இவருடைய மாணவர்கள் ஆசுடன், டெம்ப்ஸ்டெர் ஆகியோர் இணைந்து நிறை நிலைமானி (Mass spectrograph)உருவாக்கினர். 1906-ல் மின்னிறக்கக் குழாயில் வாயுக்களின் வழியே மின்சாரத்தைச் செலுத்தும்போது ஏற்படும் விளைவுகளைப் பற்றிய இவருடைய ஆய்வுகளுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஒளி, பெயர் தெரியாக் கதிர்கள், பீட்டா, காமாக் கதிர்களின் கதிர்ச் சிதறல்களின் அளவை அளந்தறிவதன் மூலம் அணுக்களில் உள்ள மின்னணுக்களின் எண்ணிக்கையைக் கண்டறிதல் ஆகியவற்றில் இவர் ஈடுபட்டார். அது போல நேர்மின் துகள்களின் தன்மை பற்றிய ஆய்வுகளிலும் ஈடுபட்டார். இந்த ஆய்வுகள் இவருடைய மாணவரான ரூதர்போர்டுக்கு உதவியாக அமைந்து இவருடைய ஆய்வுகளை அவர் தொடர வழி வகுத்தது. வெளியிட்ட நூல்கள் ஒளியின் அமைப்பு (The Structure of Light)-1907 பொருளின் துகள் கொள்கை (The Corpuscular Theory of Matter)-1913 நேர் மின்சாரக் கதிர்கள் (Positive Rays of Electricity)-1913 வேதியியலில் எலக்ட்ரான் (The electron in Chemistry)-1936 மறுசேகரிப்பும் பிரதிபலிப்புகளும்(தன் வரலாறு)(Recollection and Reflections)-1936 போன்ற பல நூல்களை எழுதி வெளியிட்டார். சிறப்புகள் 1908 -ல் இவருக்குத் தகுதி வரிசை மதிப்பு (Order of Merit) அளிக்கப்பட்டது. 1912 -ல் ஆங்கிலேயச் சங்கத்தின் தலைவரானார். ராயல் கழகத்தின்ன் சிறப்பு உறுப்பினர் பதவியும், அதன் பின் 1916 முதல் 1920 வரை அதன் தலைவர் பதவியும் அளிக்கப்பட்டது. 1918-ல் டிரினிடி கல்லூரியின் முதல்வரனார். கேவண்டிஷ் ஆராய்ச்சி சாலையை இவர் அங்கு நிறுவினார். ராயல் ஹ்யூஜெஸ் பதக்கங்கள் (1894,1902) வாசிங்டன் சுமித்சோனியன் நிறுவனத்தின் ஹாட்கின்ஸ் பதக்கம் (1902) ஸ்காட் பதக்கம்(பிலாடெல்பியா-1923) எனப் பல பதக்கங்களைப் பெற்று பெருமையடைந்தார். மறைவு தாம்சன் பல பரிசுகள் பெற்றுச் சிறந்து விளங்கி 85 ஆண்டுகள் வாழ்ந்து 1940 ஆகஸ்ட் மாதம் 30 ஆம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார். இங்கிலாந்தின் புகழ்பெற்ற பல மேதைகள் புதைக்கப்பட வெஸ்ட் மினிஸ்டர் அப்பே (West Minister Abbey) என்ற இடத்தில் இவருடைய உடல் அனைத்து மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவற்றையும் பார்க்க இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் உசாத்துணை 'அறிவியல் அறிஞர் ' என்ற தலைப்பில் 'அறிவியல் ஒளி' டிசம்பர் 2009 இதழ் கட்டுரை. மேற்கோள்கள் பகுப்பு:அறிவியலாளர்கள் பகுப்பு:1856 பிறப்புகள் பகுப்பு:1940 இறப்புகள் பகுப்பு:பிரித்தானிய இயற்பியலாளர்கள் பகுப்பு:ஆங்கிலேய அறிவியலாளர்கள் பகுப்பு:நோபல் இயற்பியற் பரிசு பெற்றவர்கள் பகுப்பு:ஆங்கிலேயக் கணிதவியலாளர்கள் பகுப்பு:ஆங்கிலேய இயற்பியலாளர்கள்
எலக்ட்ரானைக் கண்டுபிடித்தவர் யார்?
ஜெ.ஜெ. தாம்சன்
0
tamil
55323822a
வெள்ளி (Venus) சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். நம் இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே ஒளி மிகுந்ததாகும். சூரியனின் உதயத்துக்கு முன்னும், மறைவிற்குப் பின்னும் வெள்ளி தன் உச்ச ஒளிநிலையை அடைகிறது. எனவே இது காலை நட்சத்திரம் , விடிவெள்ளி மற்றும் மாலை நட்சத்திரம் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளியாகும். இது கூடுதலான பைங்குடில் விளைவால் ஏற்பட்டதாகும். இதன் சூழல் உயிரினங்கள் வாழ முடியாத நிலையைக் கொண்டுள்ளது. வெள்ளி ஞாயிறை ஒவ்வொரு 224.7 புவி நாட்களில் சுற்றி வருகின்றது.[14] இக்கோளிற்கு இயற்கைத் துணைக்கோள் ஏதுமில்லை. ஐரோப்பிய வழக்குகளில் இதற்கு உரோமைத் தொன்மவியலில் அழகிற்கும் காதலுக்குமான பெண்கடவுள் வீனசின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய மொழிகளில் இந்தியத் தொன்மவியலில் அசுரர்களின் குருவான சுக்கிரனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. புவியில் இக்கோளின் தோற்ற ஒளிப்பொலிவெண் −4.6 ஆக உள்ளதால் இதன் ஒளியினால் நிழல்கள் உருவாகும்.[15] வெள்ளிக்கோள் புவியிலிருந்து சூரியனை நோக்கிய உட்புறக் கோளாக இருப்பதால் எப்போதுமே சூரியனுக்கு அருகாமையில் இருப்பதாகத் தோன்றுகின்றது. வெள்ளிக்கோள் ஓர் திண்மக்கோளாகும். இது புவியை ஒத்த அளவு, ஈர்ப்புவிசை, உள்ளடக்கம் கொண்டிருப்பதால் சிலநேரங்களில் வெள்ளி புவியின் "சகோதரிக் கோள்" எனபடுகின்றது. இக்கோள் புவிக்கு மிக அருகிலுள்ள கோளும் ஒத்த அளவை உடைய கோளும் ஆகும். அதேநேரத்தில் இது பலவகைகளில் புவியிலிருந்து வேறுபட்டுள்ளதும் சுட்டப்படுகின்றது. தரைப்பரப்புள்ள நான்கு கோள்களில் மிக அடர்த்தியான வளிமண்டலம் உள்ள கோள் வெள்ளியாகும். இந்த வளிமண்டலம் 96%க்கும் கூடிய காபனீரொக்சைட்டு அடங்கியது. கோளின் தரைப்பரப்பில் வளிமண்டல அழுத்தம் புவியை விட 92 மடங்காக உள்ளது. சூரியக் குடும்பத்தின் மிகவும் வெபமிகுந்த கோளாக விளங்கும் வெள்ளியின் தரைமட்ட வெப்பநிலை 735K (462°C; 863°F)ஆக உள்ளது. இங்கு கார்பன் சுழற்சி நடைபெறாமையால் பாறைகளோ தரைப்பரப்பு மேடுபள்ளங்களோ உருவாகவில்லை; தவிரவும் உயிர்த்திரளில் கரிமத்தை உள்வாங்கிட எவ்வித கரிம உயிரினமும் இல்லை. வெள்ளியின் வளிமண்டலத்தில் சல்பூரிக் அமில மேகங்களின் எதிரொளிப்பால் கீழுள்ள தரைப்பரப்பை ஒளி மூலம் காணவியலாது உள்ளது. முன்னொரு காலத்தில் வெள்ளியில் பெருங்கடல்கள் இருந்திருக்கலாம்;[16][17] ஆனால் இவை பைங்குடில் விளைவின் வெப்பநிலைகளால் ஆவியாகியிருக்கலாம்.[18] ஆவியான நீர் ஒளிமின்பிரிகையால் பிரிக்கப்பட்டிருக்கலாம்; கோளில் காந்தப்புலங்கள் இல்லாமையால் கட்டற்ற ஐதரசன் சூரியக் காற்றால் கோள்களிடையேயான விண்வெளிக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம்.[19] வெள்ளியின் தரைப்பகுதி வறண்ட பாலைவனமாக, அவ்வப்போதைய எரிமலை வெடிப்புகளால் புதிப்பிக்கப்பட்ட வண்ணம், உள்ளது. பௌதிகப் பண்புகள் இது புவியைப் போல கற்கோளத்தைக் கொண்ட கோளாகும். இதன் திணிவும் ஆரை நீளமும் கிட்டத்தட்ட புவியினுடையதை ஒத்துப் போவதால் இக் கோளானது புவியின் தங்கை எனவும் அழைக்கப்படுகின்றது. இதன் ஆரை 12092 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்டது. புவியியல் வெள்ளியின் மேற்பரப்பில் 80 சதவீதம் சமவெளியாய் உள்ளது. அதில் 10 சதவீதம் மென்மையான லோபடே சமவெளியும் 70 சதவீதம் மென்மையான, ​​எரிமலை சமவெளியும் அடக்கம். இதில் வடதுருவத்தில் ஒரு கண்டமும் வெள்ளியின் நிலநடுக்கோட்டிற்கு சற்று தெற்கில் ஒரு கண்டமும் அமையப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா கண்டத்திற்கு இணையான பரப்பளவு கொண்ட வடக்கு கண்டம் பாபிலோனியக் காதல் தெய்வமான இசுதாரின் பெயரில் அழைக்கப்படுகிறது. மேக்ஸ்வெல் மோன்டசு, வெள்ளியின் மிக உயர்ந்த மலையாகும். அதன் சிகரம் சராசரி மேற்பரப்பு உயரமான 11 கி.மீ. தொலைவில் உள்ளது. பரப்பளவில் இரண்டு தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இணையான தெற்குக் கண்டம் அப்ரோடிட் டெர்ரா கிரேக்க காதல் தெய்வத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. காந்தப் புலமும் மையக்கருவும் 1967இல் செலுத்தப்பட்ட வெனரா 4 என்ற விண்கலம் வெள்ளியில் உள்ள காந்தப் புலம் புவியினுடையதை விட மிக வலிவற்றதாக இருப்பதைக் கண்டறிந்தது. இந்தக் காந்தப் புலமும் அயனிமண்டலத்திற்கும் சூரியக் காற்றுக்குமிடையேயான இடைவினையால் தூண்டப்பட்டதாகும்;[20][21] பொதுவாக கோள்களின் கருவத்தில் காணப்படும் உள்ளக மின்னியற்றி போன்று வெள்ளியில் இல்லை. வெள்ளியின் சிறிய தூண்டப்பட்ட காந்த மண்டலம் அண்டக் கதிர்களிலிருந்து வளிமண்டலத்திற்கு எவ்வித பாதுகாப்பும் வழங்குவதில்லை. இந்தக் கதிர்களால் மேகங்களுக்கிடையே மின்னல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.[22] புவியை ஒத்த அளவினதாக இருப்பினும் வெள்ளியில் காந்தப்புலம் இல்லாதிருப்பது வியப்பளிப்பதாக உள்ளது. உள்ளக மின்னியற்றி இயங்கிட மூன்று முன்தேவைகள் உள்ளன: கடத்துகின்ற நீர்மம், தற்சுழற்சி, மற்றும் மேற்காவுகை. வெள்ளியின் கருவம் மின்கடத்தும் தன்மையதாக கருதப்படுகின்றது; வெள்ளியின் சுழற்சி மிக மெதுவாக இருப்பினும் ஆய்வகச் சோதனைகளில் இந்த விரைவு மின்னியக்கி உருவாகப் போதுமானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[23][24] இதனால் வெள்ளியில் மின்னியக்கி இல்லாதிருப்பதற்கு மேற்காவுகை இல்லாதிருக்கலாம் என நம்பப்படுகின்றது.[25] புவியில் மையக்கருவின் வெளிப்புற அடுக்குகளில் உள்ள நீர்மத்தின் வெப்பநிலையை விட உட்புற அடுக்குகளில் மிகக் கூடுதலாக இருப்பதால் மேற்காவுகை நிகழ்கின்றது. வெள்ளியில் ஏதேனும் மேற்புற நிகழ்வினால் தட்டுநிலப் பொறைக் கட்டமைப்பை மூடி கருவத்தில் குறைந்த வெப்பச்சலனத்தை உண்டாக்கி இருக்கலாம். இதனால் மேலோட்டு வெப்பநிலை உயர்ந்து உள்ளிருந்து வெப்பப் பரவலை தடுத்திருக்கலாம். இக்காரணங்களால் புவிசார் மின்னியக்கி செயற்பாடு இல்லாதிருக்கலாம். மாற்றாக, கருவத்தின் வெப்பத்தால் மேலோடு சூடுபடுத்தப்படலாம்.[25] மற்றொரு கருத்தாக, வெள்ளியில் திண்மநிலை உட்கருவம் இல்லாதிருக்கலாம் அல்லது அந்தக் கருவம் குளிரடையவில்லை என முன்வைக்கப்படுகின்றது.[26] இதன் காரணமாக முழுமையான நீர்மப்பகுதி அனைத்துமே ஒரே வெப்பநிலையில் இருக்க வாய்ப்புள்ளது. வெள்ளியின் கருவம் முழுமையுமே திண்மமாக மாறிவிட்டது என்ற மாற்றுக் கருத்துக்கும் வாய்ப்புள்ளது. உட்கருவத்தில் உள்ள கந்தகத்தின் அடர்வைப் பொறுத்து கருவத்தின் நிலை இருக்கும்; ஆனால் கந்தக அடர்த்தி குறித்து இதுநாள் வரை அறியப்படவில்லை.[25] வெள்ளியில் காந்தப்புலம் வலிவற்றதாக இருப்பதால் அதன் வெளிப்புற வளிமண்டலத்துடன் சூரியக் காற்று நேரடியாகவே இடைவினையாற்றுகின்றது. இங்கு புற ஊதாக்கதிர்களால் நடுநிலை மூலக்கூறுகள் பிரிக்கப்பட்டு ஐதரசன், ஆக்சிசன் அயனிகள் உருவாகின்றன. இந்த அயனிகளுக்கு வெள்ளியின் ஈர்ப்புப் புலத்திலிருந்து விடுபட சூரியகாற்று தேவையான ஆற்றலை வழங்குகின்றது. இந்த அரித்தலால் குறைந்த நிறையிலுள்ள ஐதரசன், ஹீலியம், ஆக்சிசன் அயனிகள் இழக்கப்படுகின்றன; உயர்நிறை உள்ள மூலக்கூறுகளான கார்பன் டைஆக்சைடு போன்றவை தக்க வைத்துக்கொள்ளப்படுகின்றன. இத்தகைய சூரியக்காற்றின் செய்கையால் வெள்ளியில் அது உருவானபோது இருந்திருக்கக்கூடிய நீர் முதல் பில்லியன் ஆண்டுகளில் இழக்கப்பட்டிருக்கலாம். தவிரவும் இச்செய்கையால் உயர்ந்த வளிமண்டலத்தில் நிறை குறைந்த ஐதரசனுக்கும் நிறையான தியூட்டிரியத்திற்குமான விகிதம் உட்புற வளிமண்டலத்தில் நிலவும் விகிதத்தை விட 150 மடங்கு குறைந்துள்ளது.[27] புறத் தோற்றம் புவியில் இருந்து மானிடர் நோக்கும் போது வெள்ளிக் கோளே எந்த விண்மீனை (சூரியனை தவிர்த்து) விடவும் வெளிச்சமாக உள்ளது. வெள்ளி பூமியின் அருகில் இருக்கும் போது அதன் பிரகாசம் அதிகமாகவும், தோற்றப்பருமன் -4.9 ஆகவும், பிறை கட்டத்திலும் காணப்படுகிறது. சூரியன் பின்னோளி வீசும் போது இதன் பிரகாசம் -3 ஆக மங்குகிறது. இக்கோள் நடுப்பகலிலும் காணத்தக்க பிரகாசமாக இருப்பதுடன் சூரியும் கீழ் வானில் இருக்கும் போது எளிதில் காணக் கூடியதாகவும் இருக்கிறது. இதன் சுற்றுப்பாதை சூரியனுக்கும் புவியின் சுற்றுப்பாதைக்கும் நடுவில் இருப்பதால் புவியில் இருந்து பார்க்கும் போது சூரியனின் நிலநடுக்கோட்டில் இருந்து 47 டிகிரி சாய்வு வரை அதிகமாக செல்வது போல் தோற்றம் அளிக்கிறது. மானிடக் குடியேற்றத்தின் சாத்தியம் வெள்ளிக் கோள் பரப்பின் சூழல் தற்போது மானிடர் வாழும் சூழலை பெறவில்லை. ஆனால் வெள்ளிக் கோள் பரப்பில் இருந்து ஐம்பது கிலோமீட்டர்களுக்கு மேல் உள்ள வளி மண்டலம் மனிதர் வாழ்வதற்கு ஏற்ற அடிப்படை வாயுக்களான நைட்ரசனையும் ஆக்சிசனையும் பெற்றுள்ளது. அதனால் வெள்ளியின் வானில் மானிடர் மிதக்கும் நகரங்களை உருவாக்க வாய்புள்ளது. காற்றினும் எடை குறைந்த மிதக்கும் நகரங்களை (வலது பக்கத்தில் உள்ள மிதக்கும் விண்கலன் போல்) உருவாக்கி அதில் நிரந்தரக் குடியேற்றங்களை அமைக்க முடியும். ஆனால் இதில் மிகப்பெரிய அளவுக்கு பொறியியல் தொழில்நுட்பச் சவால்களும், இந்த உயரத்தில் உள்ள கந்தக அமிலத்தின் அடர்த்தியும் இதற்கு தடைகள் ஆகும். சூரியனைக் கடக்கும் போது முதன்மைக் கட்டுரை - வெள்ளிக் கோளின் சூரியக்கடப்பு வெள்ளிக் கோளின் சூரியக்கடப்பு அல்லது வெள்ளியின் இடைநகர்வு என்பது சூரியக் குடும்பத்தில் உள்ள வெள்ளி கோளானது சுற்றுப்பாதையில் வரும்போது சூரிய வட்டத்தைக் கடப்பதைக் குறிப்பதாகும். அதாவது வெள்ளிக் கோள் சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் செல்வதைக் இது குறிக்கும். இந்த இடைநகர்வின் போது வெள்ளி சூரிய வட்டத்தில் ஒரு சிறு கரும் புள்ளியாகக் கண்ணுக்குத் தெரியும். இந்த இடைநகர்வு இடம்பெறும் காலம் பொதுவாக மணித்தியாலங்களில் கூறப்படுகிறது. இந்த இடைநகர்வு நிலவினால் ஏற்படும் சூரிய கிரகணத்தை ஒத்தது. வெள்ளி பூமியில் இருந்து அதிக தூரத்தில் இருப்பதனால் (நிலவுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள தூரத்தை விடவும், வெள்ளிக்கும் பூமிக்குமிடையிலுள்ள தூரம் கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகம்), வெள்ளியின் விட்டம் நிலவை விட 3 மடங்கு அதிகமானதாக இருந்தாலும்கூட, வெள்ளி இடைநகர்வின்போது, வெள்ளி மிகச் சிறியதாகத் தெரிவதுடன், மிக மெதுவாக நகர்வதையும் காணலாம். அவதானிப்பு குறிப்புகள் மேற்சான்றுகள் * பகுப்பு:புவியொத்த கோள்கள் பகுப்பு:சூரியக் குடும்பம்
வெப்பமான கிரகம் எது?
வெள்ளி
0
tamil
d11538e85
பாம்பு ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும்.முதுகெலுப்பில்லா நீளமான உடலும் சிறு தலையும் கொண்ட விலங்கு. இவை கால்கள் அற்றவையெனினும் உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகரவல்லவை. சில பாம்புகள் நீரிலும் நன்றாக நீந்தக்கூடியவை. பாம்புகளில் 2,700க்கும் அதிகமான வகைகள் உண்டு.நூற்றில் ஒரு விழுக்காடுக்கும் குறைவானவையே நச்சுப்பாம்புகள் (&lt; 1% ). இந்தியாவிலுள்ள நல்ல பாம்பு (நாகப்பாம்பு), கட்டுவிரியன் போன்றவை நச்சுப் பாம்புகள். இவ்வகை நச்சுப் பாம்புகள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ளவும் உணவுக்காகவும் எதிரி விலங்குளையும் இரைகளையும் பற்களால் கவ்விக் கடிக்கையிலே பாம்பின் பல்லுக்குப் பின்னே உள்ள நச்சுப்பையில் இருந்து வெளியேறி கடிபடும் விலங்கின் உடலுள்ளே செலுத்துகின்றது. கடிபட்ட விலங்கு விரைவில் இறக்க நேரிடும். இந்தியாவிலே 230 வகையான பாம்பினங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 இனங்களே நச்சுடையவை. ஒருவகையான நச்சுப்பாம்புகளின் நஞ்சு நரம்பு மண்டலத்தைத் தாக்குகின்றது. இவ்வகையில் சேர்ந்ததே நாகப்பாம்பு, பவளப்பாம்பு, கட்டுவிரியன் என்பன. வேறு சில பாம்புகளின் நஞ்சு இரத்தக் குழாய்களையும் இரத்த அணுக்களையும் தாக்கி அழித்து குருதி உறைவதையும் நிறுத்தவல்லது. கண்ணாடி விரியன் என்னும் பாம்பு இவ்வகையைச் சேர்ந்தது. இலங்கையில் சுமாராக 216 வகைப் பாம்பு இனங்கள் உள்ளன. உடலமைப்பு தோலும் நிறமும் பாம்பு ஆண் பெண் கூடல் பாம்பு தோலுரித்த சட்டை பாம்பு தோலுரித்த சட்டை பாம்பின் தோலானது செதில்களால் சூழப்பட்டிருக்கும். குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை இவை தங்கள் தோலை உரித்து விடுகின்றன. பாம்புகளின் மீண்டும் புதுப்பித்துக்கொள்ளும் பண்பின் காரணமாக இவை மருத்துவத் துறையின் குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனாலாயே கிரேக்கக் குறியீடான அஸ்லெபியசின் தடியில் (Rod of Asclepius) உள்ளது. இக்குறியீடு மருந்துகள் மூலம் குணமடைவதைக் குறிக்கிறது. பாம்பின் தாடை நுண்ணியமாக அதிர்கையில், இந்த ஸ்டேப்ஸும் அதிரும். இந்த அதிர்ச்சியை அதன் மூளை ‘கேட்கிறது’. பாம்பிற்கு காது மடல் இல்லை. எலும்புச் சட்டம் பெரும்பாலான பாம்புகளின் எலும்புக்கூடு மண்டை ஓடு, முதுகெலும்புகள் மற்றும் விலா எலும்புகள் மட்டுமே.பாம்பின் முதுகெலும்பு நெடுவரிசையில் 200 முதல் 400 (அல்லது அதற்கு மேற்பட்ட) முதுகெலும்புகள் உள்ளன.பாம்பின் அதிகமாக அசையக்கூடிய தாடை எலும்புகள் பெரிய இரைகளை கையாளுதல் மற்றும் உட்கொள்ளுதல் ஆகியவற்றை எளிதாக்குகின்றன. உள் அங்கங்கள் பாம்புகளின் இடது நுரையீரல் மிகவும் சிறியது சிலவற்றில் இல்லாமலும் இருப்பதுண்டு. எனவே பாம்புகளில் நுரையீரல்களில் ஒன்று மட்டுமே வேலை செய்கிறது. உணவுப்பழக்கம் எல்லாப் பாம்புகளும் ஊனுண்ணிகள் ஆகும். இவை சிறு விலங்குகளை உணவாகக் கொள்கின்றன. சிறிய ஊர்வன, எலி, பறவைகள், அவற்றின்முட்டைகள், மற்றும் பூச்சிகளை இவை உணவாகக் கொள்கின்றன. "ராஜநாகம் பாம்பை மட்டுமே உணவாக உட்கொள்ளும். சில பாம்புகள் தனது நச்சுக்கடியின் மூலம் இரையைக் கொள்கின்றன. சில பாம்புகள் இரையை சுற்றி வளைத்து நெருக்கிக் கொல்கின்றன. சில பாம்புகள் தனது இரையை உயிருடன் முழுதாக விழுங்கி விடுகின்றன. வாழ்முறை இனப்பெருக்கம் பாம்புகள் முட்டையிட்டு செய்கின்றன. ஆனால் சில பாம்புகள் குட்டி போடுகின்றன. உ.ம். விரியன்கள், பச்சைப்பாம்பு. மண்பாம்பில் கருமுட்டை வயிற்றில் வளர்ந்து குட்டியாகப்பிறக்கிறது. பாம்புகள் முட்டைகளுக்கு அதிகப்பாதுகாப்பு தருவதில்லை. சில் பாம்புகள் முட்டைகளை அடைக்காக்கின்றன. ரீனல் பாம்பு தரையில் இலைகளை கூடாகக்கட்டி அதில் முட்டை இடுகின்றன. பாம்புகளில் குருட்டு(அல்லது புழு)ப்பாம்பு மட்டும் ஆணில்லாமல் கருவடைகிறது. இதில் பெண் இனம் மட்டுமே கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இனவகைகள் A phylogenetic overview of the extant groups தற்காலபாம்புகள் ஸ்கோலெகோபீடியா லெப்டோரைபிலோபீடியா அனோமலிபீடியா ரைபிலோபீடியாஅலிதினோபீடியா அனிலியஸ்கோர்அலிதினோபீடியா ஜுரோபெல்ரிடா சிலின்டிரோபில்ஸ் அனோமோசிலஸ் ஜுரோபெல்ரினாMacrostomata Pythonidae Pythoninae Xenopeltis LoxocemusCaenophidia Colubridae Acrochordidae Atractaspididae Elapidae கடல் பாம்பு ViperidaeBoidae Erycinae Boinae Calabaria Ungaliophiinae Tropidophiinae பாம்பியல் அறிஞர்கள் 2,700க்கும் அதிகம் உள்ள பாம்பினங்களில் உட்பிரிவுகள் 11 என்றும் 15 என்றும் வேறுபடுகிறார்கள். மலைப்பாம்பு வெண்ணாந்தை போவா நச்சற்ற பாம்புகள்: சாரைப்பாம்பு பச்சைப் பாம்பு கொம்பேறி மூக்கன் வட அமெரிக்க கார்ட்டர் பாம்பு ஆனைக்கொன்றான் (Anaconda) உலகிலேயே நீளமான நீர்நிலைப் பாம்பு (9 மீ) கொடிய பாம்புகள் சில வகைப் பாம்புகள் அதித நஞ்சினை உருவாக்கும் வல்லமை கொன்டவைகள். உலகின் மிக கொடிய பாம்புகளாக கருதப்படும் பாம்பினங்கள்: கருப்பு மாம்பா ஆப்பிரிக்காவை வாழிடமாகக் கொண்ட ஒரு நச்சுப்பாம்பு இனம் ஆகும். இதுதான் உலகிலேயே மிக விரைந்து ஊர்ந்து செல்லவல்ல பாம்பினம். மணிக்கு 20 கி.மீ(12.5 மைல்கள்) விரைவில் சிறு தொலைவு ஊரவல்லது.ஒரே கடியில் 100 மில்லி கிராம் நஞ்சை உட்செலுத்தும் என்றும் சுமார் 10 மில்லி கிராம் கொடுத்தாலே மக்கள் இறந்துவிடுவார்கள் என்றும் அறியத்தக்கது, உடலில் உள்ள தசைகளை இந்த நஞ்சு தாக்குவதால், உறுப்புகள் செயல் இழந்து இறப்பு நேரிடும். இந்திய நாகம் இந்தியத் துணைக்கண்டத்தில் பரவலாகக் காணப்படும் நச்சுப் பாம்பாகும். இவை எறத்தாழ இரண்டு மீட்டர் நீளம் வரை வளரக் கூடியன. இவை இந்தியத் துணைக்கண்டத்தின் கொடிய பாம்புகளாக கருதப்படும் பெரும் நான்கு மிகவும் ஆபத்தான நச்சுப்பாம்புகள் பட்டியலில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவில் பாம்புக்கடியினால் ஏற்படும் மிகப்பெரும்பாலான இறப்புக்களுக்கும் இவையே காரணமாக விளங்குகின்றன. சுருட்டைவிரியன் பெரும் நான்கு மிகவும் ஆபத்தான நச்சுப்பாம்புகள் பட்டியலில் ஒன்றாகும்.அளவில் சிறியதாக இருந்தாலும் இதன் நஞ்சுசிவப்பணுக்களை அழிக்கும் குருதி நச்சு வகையைச் சேர்ந்தது; வீரியம் வாய்ந்தது; தொல்லை தரப்பட்டால் உடனே தாக்கக்கூடியது; பெரும்பாலான இறப்புகளுக்கு சுருட்டை விரியன்களும் காரணமாகின்றன. கண்ணாடி விரியனும் பெரும் நான்குஎனப்படும் நான்கு பாம்புகளில் ஒன்று.கண்ணாடி விரியன் பாம்பின் நச்சும் குருதிச் சிதைப்பானாகும். ஆகவே மருத்துவர்கள் இரத்தம் உறையும் நேரம் மற்றும் இரத்தம் வழியும் நேரம் ஆகியவற்றை மணிக்கொரு முறைச் சோதிப்பர். இராச நாகம் என்பது தென்கிழக்கு ஆசியபகுதிகளில் வசிக்கும் ஒரு பாம்பு இனம் ஆகும்.நச்சுப்பாம்புகளில் இதுவே உலகில் மிக நீளமானது. சுமார் 6.7 மீட்டர் (22 அடி) வரை வளரவல்லது.[1] பொதுவாக அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வாழும் இந்த வகை பாம்புகள், மற்ற பாம்புகளையே பெரும்பாலும் உணவாகக் கொள்கின்றன. இதன் நஞ்சின் கடுமை ஒரே கடியிலேயே ஒரு மனிதனைக் கொல்லவல்லது. இதன் கடியால் இறப்பு நேரிடும் வீதம் 75% வரை இருக்கும். பச்சை விரியன் என்பது இலங்கையில் காணப்படும் விரியன் இனத்தைச் சேர்ந்த ஒரு நச்சுப் பாம்பு. இது வரை சிற்றினங்கள் ஏதும் கண்டறியப்படவில்லை. ஆண் பாம்புகள் 70 செ.மீ நீளம் வரையும் பெண் பாம்பு 130 செ.மீ வரையும் வளரக்கூடியவை. இலங்கையில் பரவலாக எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. தரை மட்டத்தில் இருந்து 1800 மீட்டர் உயரம் வரையுள்ள பகுதிகளில் காணப்படுகின்றன. மனித நாகரிகங்களில் பாம்பு பாரசீகம், இந்தியா, இலங்கை, சீனா, சப்பான், பர்மா, சாவா, அரேபியா, எகிப்து, கிரீசு, இத்தாலி, பெரு, அமெரிக்கா முதலிய நாடுகளிலெல்லாம் பாம்பு வழிபாட்டின் அடையாளங்கள் காணப்படுகின்றன. சில நாடுகளில் பாம்பு நல்ல தெய்வமாகவும் சிலவற்றில் கெட்ட தெய்வமாகவும் கொள்ளப்பட்டது.[2] பழமொழிகள் பாம்பென்றால் படையும் நடுங்கும் பாம்பின் கால் பாம்பறியும் பாம்பிற்க்கு பால் வார்த்தாலும் நஞ்சைத்தான் கக்கும் "பாலூட்டி வளர்த்தாலும் பாம்பின் குணம் மாறுமா?" "பாம்பாட்டிக்குப் பாம்பிலே சாவு, கள்ளனுக்கு களவிலே சாவு" "பாம்பும் சாகக் கூடாது கம்பும் உடையக் கூடாது." "பாம்பு தின்கிற ஊர் போனால், நடுமுறி தமக்கு என்று இருக்க வேண்டும்!" "பாம்பு தின்ற ஊருக்குப்போனா நடுக்கண்டம் நம்ப கண்டம்." "பாம்பு என்று அடிக்கவும் முடியாது, பழுதை என்று தாண்டவும் முடியாது." "பாம்பு கடிச்சுதா? பயம் கடிச்சுதா?" "போதாத காலத்தில் புடுக்கும் பாம்பாய்ப் பிடுங்கும்." "பாம்பு கடித்தால் பத்து நிமிஷம், அரணை கடித்தால் அரை நிமிஷம்."[3] புராணக்கதைகளில் பாம்பு இந்துக்களின் புராணங்களில் பாம்புகள் முக்கிய பங்கு வகிக்கும் உயிரினம் ஆகும். இந்துக்களின் காக்கும் கடவுளான விஷ்ணுவின் படுக்கையாக இருக்கின்ற நாகம் ஆதிசேஷன் ஆகும்.அழிக்கும் கடவுளான சிவபெருமானது கழுத்தில் ஆபரணமாக இருக்கும் வாசுகி பாம்பின் இதன் சகோதரனாகவும் கருதப்படுகிறது.ஆதிசேஷனின் ஏழு தலைகளைக் குறிக்கும் வண்ணமாக ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளதால், திருப்பதி திருத்தலம் சேஷாசலம் எனப்படுவதும் உண்டு. விஷ்ணு கிருஷ்ண அவதாரம் எடுக்கும் பொது யமுனை நதியில் காளியன் எனப்படும் நச்சுப் பாம்பு வாழ்ந்து வந்தது. அப்பாம்பினால் அந்நதியினுடைய நீர் விசமாக மாறியது. இதனால் யமுனை நதிக்கு ஒருவரும் செல்லவதில்லை. அப்பாம்பின் விஷத்தால் அருகிலிருந்த புல், பூண்டு, செடி, கொடி, மரங்கள் எல்லாம் வாடின. கிருஷ்ணர் யமுனை நதிக்குச்சென்று அப்பாம்பினை அழித்தார் என புராணக்கதைகள் கூறுகின்றன. சிவனுடைய கழுத்தில் ஆபரணமாக இருக்கும் வாசுகி பாம்பினை பாற்கடலை கடைய மத்தாக இருக்க வேண்டுமென தேவர்களும், அசுரர்களும் வேண்டினார்கள். அமுதத்தில் பகுதியை வாசுகிக்கும் தருவதாகக் கூறினார்கள். எனவே பாற்கடலை கடைவதற்கு மந்திர மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு அரக்கர்கள் பாம்பின் ஒருபுறமும், தேவர்கள் மறுபுறமும் நின்று இழுத்து கடைந்தார்கள். நீண்ட நேரம் கடைந்தமையால் வலி தாங்காமல் வாசுகி பாம்பு ஆலகால விஷத்தினைக் கக்கியது. அந்த ஆலகால விஷத்திலிருந்து மக்களையும், தங்களையும் காக்க தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் வேண்டினர். சிவபெருமான் ஆலகால விஷத்தினை அருந்தி "நீலகண்டன்" என்று பெயர் பெற்றார்.[4] வெளியிணைப்புகள் இவற்றையும் பார்க்க பாம்புக் கடி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:ஊர்வன *
உலகின் எத்தனை வகையான பாம்புகள் உள்ளன
2,700
230
tamil
191367de3
சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக்கம்பினால் தொடுதல் (தொடு புள்ளி) போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாதக் காலம் தேவை. இதற்கென சிலம்பாட்டக் கழகங்கள் பல தமிழகத்தில் உள்ளன. சிலம்பாட்டம் ஆடுவதற்குக் குறைந்தது இருவர் வேண்டும். நன்கு பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்களே சிலம்பாட்டப் போட்டிகளில் விளையாடுவர், தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று விளையாடி வருகின்றனர். திருவிழா, கோயில் விழாக்கள், மற்றும் ஊர்வலங்களில் சிலம்பாட்டம் தவறாது இடம் பெறும். இக்கலை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெருமளவு நடக்கிறது.[1] பொது நலம் மற்றும் மருத்துவப் பயன்கள் பயிற்சியாளர் அல்லது சிலம்பம் மற்றும் காய் சிலம்பம் (குத்துவரிசை) போன்ற தசை விரைவு மற்றும் வளைந்து கொடுக்கும் தன்மை, கையும் கண்ணும் ஒருங்கிணைப்பு, காலும் கண்ணும் ஒருங்கிணைப்பு, உடல் சமநிலை, தசை ஆற்றல், வேகம், தசை வலிமை மேம்படுத்த சுகாதார நலன்கள் பெறும் வழக்கமான பயிற்சி, சுற்றோட்டத் தொகுதி பொறுமை, தசை வலிமை.[2] வரலாறு மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது என்பர். தமது கைகளில் எப்போதும் இருக்கக் கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு (தடி), சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள இந்தக் கலையைப் பயன்படுத்தினர். தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதமே ஆகும். இதுவே பின்னர் சிலம்புக் கலையாக வளர்ச்சி பெற்றது. ஆதிகாலத்தில் மனிதர்கள் சண்டை செய்ய ஈட்டி, கத்தி, வேல், வாள், கம்பு போன்ற பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் கம்பு எனப்படும் 'சிலம்பு' ஆகும். முற்காலத்தில் இக்கலையை சத்திரியர்கள் பயன்படுத்தினர். தற்போது இது ஒரு சில பள்ளிகளிலும், தனியார் அமைப்புகளாலும் கற்றுத் தரப்படுகிறது. விளையாட்டுப் போட்டிகளில் வீர விளையாட்டாகவும் இடம்பெறுகிறது. சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப் படும் தொன்மையான சிலம்பச் சுவடு மற்றும் அடி வரிசைகள், தமிழக மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று, தமிழகம் அன்னியர்களுக்கு அடிமைப்பட்ட பின் கால மாற்றத்தால் அதன் பெயர்களும் ஆடும் முறைகளும் சிறு மாற்றமடைந்தன. வடக்கன் களரி, தெக்கன் களரி, சுவடு அடி முறை, கர்நாடகச் சுவடு, சிரமம், சைலாத், தஞ்சாவூர் குத்து வரிசை, நெடுங்கம்பு என்ற பெயர்களில் இன்றும் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஆடப்பட்டு வருகின்றன. ஆய்வுகள் சிலம்பக் கலை பற்றிய அகழ்வாய்வுச் சான்றுகள் மிகத் தொன்மையானவை. கி.மு.2000க் கும் முற்பட்ட ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வில், 32 வகையான சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் எகிப்திய போர் வீரர்கள் பயன்படுத்திய நான்கு அடி நீளமுள்ள கம்பு வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த கம்பினைப் பயன்படுத்திய முறை சிலம்பத்தை ஒத்திருப்பதால் தமிழகத்தில் இருந்து எகிப்துக்கு கலாச்சாரப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சிலம்பக்கலையும் பரவியதாக கருதப்படுகிறது. சொல் பிறப்பு சிலம்பம் என்ற பெயர் சிலம்பு என்ற வார்த்தையில் இருந்து உருவானது. சிலம்பு என்பதற்கு ஒலித்தல் என்று பொருள். சிலம்பம் ஆடும் பொது உருவாகும் ஒலிகளை குறிக்கும் விதமாக சிலம்பம் என்ற பெயர் சூட்டபட்டதாகச் சொல்லப்படுகிறது. "சிலம்பம்' என்ற சொல் "சிலம்பல்' என்ற வினையின் அடியாகப் பிறந்தது. மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை, விலங்குகளின் இரைச்சல் போன்ற பல ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, "சிலம்பம்' என்ற மற்றொரு பெயரும் உண்டு. எனவே, மலை நிலக் (குறிஞ்சி) கடவுளான முருகனுக்கும், "சிலம்பன்' என்ற பெயருண்டு. கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்று இருப்பதால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு "சிலம்பம்' என்ற பெயர் ஏற்பட்டது. நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூருக்கு மேற்கே உள்ள மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியினருள் "சிலம்பரம்' என்ற பெயரும் வழக்கில் உள்ளது.[3] இலக்கியக் குறிப்புகள் சிலம்பம் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகத்திய முனிவர் 64 கலைகளில் ஒன்றாக சிலம்பத்தை குறிப்பிடுகிறார். சிலம்பம் பற்றி தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக சிலப்பதிகாரத்தில் சிலம்பம் ஆடுவதற்கான கம்பு, கத்தி போன்றவை ஒரு கடையில் விற்கப்படுவதாகவும் அவற்றை வெளிநாட்டினர் மிக ஆர்வமுடன் வாங்கிச் செல்வதாகவும் குறிப்புகள் உள்ளன. திருக்குறளில் "கோல்' என்ற பெயரிலும், கலிங்கத்துப்பரணியில், "வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே' என்ற வரிகள் மூலம், "தண்டு' என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப் பட்டுள்ளது. திருவிளையாடற் புராணத்திலும், சிலம்ப விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "பதார்த்த குண சிந்தாமணி' என்ற நூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகியவை நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இவைகளைத் தவிர கம்பு சூத்திரம், குறுந்தடி சிலம்பம், நடசாரி போன்ற ஓலைச்சுவடிகளும் உள்ளன. இச்சுவடிகளில் உள்ள பாடல்கள் அகத்திய முனிவர் சிலம்பம் பயின்ற பிறகே யோகக் கலை, மருத்துவம் போன்ற கலைகளைப் பயின்றதாகத் தெரிவிக்கின்றன.[3] நாட்டுப்புறப் பாடல்களில் ஒன்றான கட்டபொம்மன் கதைப்பாடலில் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயரை விரட்ட சிலம்பத்தைப் பயன்படுத்தினான் என்பதை "கொட்டுக்கொட்டென்று மேல் பொட்டிப் பகடையும் கொல்வேன் என்றான் தடிக்கம்பாலே; சட்டுச் சட்டென்று சிலம்ப வரிசைகள் தட்டிவிட்டான் அங்கே பாரதன் வல்லை" என்ற கும்மிப் பாடல் மூலம் அறியலாம்.[3][4] சிலம்பின் உட்கூறுகள் மெய்ப்பாடம், உடற்கட்டு, மூச்சுப்பயிற்சி, குத்துவரிசை, தட்டுவரிசை, அடிவரிசை, பிடிவரிசை, சிலம்பாட்டம், வர்மம் முதலானவை சிலம்பக்கலையின் முக்கியக் கூறுகளாகும். ஒருவர் சிலம்பக்கலையைக் கற்றுக் கொள்ள வேண்டுமாயின், அடிப்படையில் துவங்கி படிப்படியாகக் இவற்றைக் கற்பதன் மூலம் சிலம்பக்கலையின் பல்வேறு உட்கூறுகளைத் தம்முள் அடையலாம். மெய்ப்பாடம் மெய்ப்பாடம் என்பது சிலம்பக் கலையின் முதலாவது பயிற்சியாகும்., உடல் வலிமையைப் பெருக்கும் நோக்கில் வகுத்தறிந்த உடற்பயிற்சிகளைச் செய்து உடல் தகுதியை அடைவது மெய்ப்பாடம். உடற்கட்டுப்பாடம் குறிப்பிடத்தகுந்த வலிமையை உடலுக்கு ஏற்படுத்தவும், உடலின் நெகிழ்வை உறுதிப்படுத்தவும் கற்பிக்கப்படுவது உடற்கட்டுப் பாடம் ஆகும். இது இரண்டாம் நிலைப் பயிற்சியாகும். மூச்சுப்பாடம் மூச்சுப்பாடம் என்பது மூன்றாவதாக இடம் பெறும் பயிற்சியாகும். கூடுதலான நுணுக்கமிகு பயிற்சிகளைச் செய்வதற்கு ஏதுவாக இருக்கும் பொருட்டு மூச்சுப்பாடம் கற்பிக்கப்படுகிறது.. ஒருவர் மெய்ப்பாடம், உடற்கட்டுப் பாடம் மற்றும் மூச்சுப்பாடம் ஆகியவற்றைக் கற்றுக் கொள்வது. தனக்கு விருப்பமுள்ள கூடுதல் பாடங்களைப் பயில வழி வகுக்கிறது. குத்துவரிசை சிலம்பாட்டத்தின் முக்கிய உட்கூறாக குத்துவரிசை அமைகிறது. பெயருக்குத் தகுந்தாற்போல் எதிரியைக் கைகளால் வரிசையாகக் குத்துவதே குத்துவரிசையாகும். குத்துவரிசையின் நுணுக்கமாக, நிற்கும் நிலைகளை எப்படி இலாகவமாக மாற்றிக் கொள்வது என்பதைக் கற்றுக்கொள்வது இன்றியமையாததாகும். கிட்டத்தட்ட, அறுபத்து நான்கு விதமான நிலைகள், புலி, யானை, பாம்பு, கழுகு, குரங்கு ஆகிய உயிரினங்களிடமிருந்து கற்றுக் கொள்ளப்படுகின்றன. எதிரியின் நிலை மற்றும் இடப்பெயர்ச்சிக்கேற்ப தன் நிலைகளை விரைவாக மாற்றிக் கொண்டே எதிரியின் மீது குத்துவிடுதல் என்பதே குத்துவரிசையாகும். தட்டுவரிசை ஒருவர் குத்துவரிசை பயிலும் போதே தட்டுவரிசையையும் கற்றுக் கொள்ளலாம். மறுநிலையில் இருப்பவர் குத்துக்களைத் தம்மீது பாய்ச்சும் போது, அவற்றை அவர்தம் நிலைக்கேற்பத் தன்நிலையை மாற்றித் தட்டிவிடுதல் என்பதே தட்டுவரிசையாகும். பிடிவரிசை எதிரி தம்மைத் தாக்க வரும் போது, எதிரியை எப்படி இலாகவமாகத் தம்பிடிக்குள் கொண்டு வந்து தாக்குதலை முறியடிப்பது என்பதே பிடிவரிசை என்பதாகும். சிலம்பாட்டத்தின் இக்கூறானது, யானைகளிடம் இருந்து வகுக்கப்பட்ட ஒன்றாகும். யானைகள் ஒன்றுக்கொன்று பிடி போட்டுக்கொள்ளும் போது, கிட்டத்தட்ட இருநூறு வகையான பிடிகள் இருப்பது கண்டறியப்பட்டு அவை யாவும் இப்பயிற்சியில் இடம் பெற்றுள்ளன. அடிவரிசை ஏதாகிலும் ஒன்றைப் பாவித்து நேர்த்தியாகத் தம் காலடிகளைச் சூழலுக்கேற்ப மாற்றிக் கொண்டு எதிரியின் மீது அடி விழச் செய்தலை வரிசைப்படுத்துவதே அடிவரிசை என்பதாகும். சிலம்புக்கலையின் இக்கூறானது குரங்குகளிடமிருந்து கற்றுக் கொண்டதாகும். அடிவரிசையில் கற்றுத் தேர்ந்த ஒருவர் அடுத்ததாக சிலம்பாட்டம் எனும் சிலம்புக்கலையின் உட்பிரிவைக் கற்றுத் தேர்ச்சியடையலாம்.[5] சிலம்பத்தில் சுவடு, தெக்கன் சுவடு, வடக்கன் சுவடு, பொன்னுச் சுவடு, தேங்காய்ச் சுவடு, ஒத்தைச் சுவடு, குதிரைச்சுவடு, கருப்பட்டிச் சுவடு, முக்கோணச் சுவடு, வட்டச் சுவடு, மிச்சைச் சுவடு, சர்சைச் சுவடு, கள்ளர் விளையாட்டு, சக்கர கிண்டி, கிளவி வரிசை, சித்திரச் சிலம்பம், கதம்ப வரிசை, கருநாடக வரிசை போன்ற வரிசை முறைகள் உள்ளன. சிலம்பத்தடி சிலம்பம் ஆட்டத்திற்கான கம்பு அல்லது தடி, மூங்கில் இனத்தைச் சேர்ந்த சிறுவாரைக் கம்பு, பிரம்பு போன்ற மரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் சிறுவாரைக் கம்பு என்பது நன்கு வளைந்து கொடுக்கக்கூடியது. சிலம்பத்திற்கான தடி, நிலத்தில் இருந்து ஓர் ஆளின் நெற்றிப் புருவம் வரையான உயரமுடையதாக இருக்க வேண்டும். சிலம்பாட்ட வகைகள் சிலம்பத்தில் பல வகைகள் உண்டு. அவையாவன துடுக்காண்டம் குறவஞ்சி மறக்காணம் அலங்காரச் சிலம்பம் போர்ச் சிலம்பம் பனையேறி மல்லு நாகதாளி, நாகசீறல், கள்ளன்கம்பு ஆகியனவாகும். சிலம்பாட்டச் சுற்று முறைகள் சிலம்பாட்டத்தில் 72-க்கும் மேற்பட்ட வகைகளில் சுற்றும் முறைகள் உள்ளன. சுருள் கத்தி, தீப்பந்தம், அடிவருசு, தொடுபுள்ளி, பிச்சுவாப் பிடிவரிசை, கோடாலிக் கேடயம், வேல்கம்பு, சுருள், வாரல், முன்வெட்டு, பின்வெட்டு, இடையறுப்பு ,மேலறுப்பு, மலார், பின்னுருட்டு, முன்னுருட்டு போன்றன சில சுற்று முறைகளாகும். ஒற்றைச் சிலம்புத்தடி கொண்டு இரு கைகளில் பிடித்துச் சுழன்றாடுவது, இரண்டு ககைகளிலும் இரண்டு சிலம்பத்தடி கொண்டு ஆடுவது என இரு முறைகளும் இதில் உண்டு. ஆயுதப் பிரிவுகள் சிலம்பத்தில் ஒத்தைச் சுவடு, பிரிவுச் சுவடு, ரெட்டு வீச்சு, பூட்டுப் பிரிவு, மடு சிரமம், எடுத்தெறிதல், நெடுங்கம்படி, கோபட்டா, வாள் வீச்சு, பீச்சுவா, சுருள்பட்டா, லேசம், செண்டாயுதம், வளரி, இடிகட்டை, கட்டாரி, கண்டக்கோடாரி, வீச்சரிவாள், வெட்டரிவாள், கல்துணி போன்ற ஆயுதப்பிரிவுகளும் உள்ளன. ஊமைத்துரை சுருள் பட்டா வீசுவதிலும், நெடுங்கம்பு வீசுவதிலும், சின்னமருது வளரி வீசுவதிலும் வல்லவர்களாக விளங்கினர். கராத்தேவும் சிலம்பமும் கராத்தே என்ற வீர விளையாட்டின் "காட்டா" (kata) என்ற பயிற்சி, சிலம்பத்தின் கதம்பவரிசை ஆகிய இரண்டின் செயல்பாடுகளும் ஒன்றேபோல் இருக்கும். சிலம்பப் போட்டி தமிழர்களின் போர் முறையாகவும் தற்காப்புக் கலையாகவும் திகழ்ந்த சிலம்பாட்டம் மத்திய காலங்களில் திருவிழாக்களில் மட்டுமே ஆடப்பட்டு வந்தது. தற்போது இக்கலையானது வீர விளையாட்டாக மாறி போட்டிகளிலும் பங்கு பெறும் அளவில் வளர்ந்துள்ளது[6]. சிலம்பம் தனி ஒருவராகவோ அல்லது இருவராகவோ அல்லது பலருடனோ ஆடப்படுகிறது. தனி ஒருவர் ஆடிக் காட்டுவது 'தனிச்சுற்று' எனப்படும். சிலம்பம் இருவர் போட்டியிடும் விளையாட்டாக நடைபெறுவதும் உண்டு. இது தற்காப்புக் கலை. சிலம்பம் கலை பயிற்றுவித்தல் இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களிலும், இலங்கை , மலேசியா, பிரான்சு, கனடா போன்ற நாடுகளிலும் சிலம்பம் பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழக அரசு சிலம்பத்தை பள்ளி விளையாட்டாக அங்கீகரித்துள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் வெங்காடம்பட்டி சமுதாயக் கல்லூரியில் சிலம்பம் பட்டயப்படிப்பாக நடத்தப்படுகிறது. பாளையங்கோட்டை தூயசவேரியர் தன்னாட்சி கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தென்பாண்டி தமிழரின் "சிலம்ப வரலாறும் அடிமுறைகளும்' என்ற நூலை வெளியிட்டுள்ளது. பயன்கள் சிலம்பாட்டம் என்பது சிறந்த உடற்பயிற்சியாகும். கம்பு எடுத்து சுழற்றும் போது உடம்பில் உள்ள ஒவ்வொரு நாடி, நரம்பும், தசைகளும் இயக்கப்படுகின்றன. கம்பைக் கைகளால் பிடித்து, தன்னைச் சுற்றிலும் சுழற்றிச் சுற்றும்போது தம் உடலைச் சுற்றிலும் ஒரு வேலி போன்ற அமைப்பை உருவாக்கிட முடியும். ஒரே ஒரு கலத்தைக் கொண்டு அமைக்கும் இது போன்ற வேலிக்குள் வேறு ஆயுதங்களைக் கொண்டு யார் தாக்க முற்பட்டாலும் அதனை சுழற்றும் கம்பால் தடுத்திட முடியும். உடலின் வலிமை, ஆற்றல், விரைவுத்திறன், உடல் நெகிழ்தன்மை(flexibility) ஆகியவற்றை அடைய சிலம்பப் பயிற்சி உதவுகிறது. உலக சாதனை ஜனவரி 21, 2019 ஐக்கிய நாடுகள் சபை உலகின் பார்வையில் சிலம்பம் பெயர் வரலாற்றில் முதல் முறையாக விவாதிக்கப்பட்டது மற்றும் ஆசிய கண்டத்தின் நிலைக்கான சிலம்பம் ஆசியா நியமிக்கப்பட்டது. சீனா மற்றும் இந்தியா வரலாற்று பதிவுகளின் எல்லை பிரச்சினைகள் உள்ளது. எல்லை பிரச்சினைகள் தீர்ப்பதற்கு சீனா அரசாங்க பிரதிநிதி சிலம்பம் ஆசியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா நியூயார்க் நகரத்தில் ஐக்கிய நாடுகள் (United Nations) தலைமையகத்தில் நடைபெற்றது.[7] உசாத்துணைகள் ஜே. டேவிட் டேனியல் ராஜ், சிலம்பம் - அடிமிறைகளும் வரலாறும், காரைக்குடி அழகப்பர் கல்லூரி வெளியீடு, 1971 ஞா. தேவநேயப் பாவாணர், பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும், 1966 டாக்டர் இரா. நாகசாமி, கல்வெட்டுக் காலாண்டிதழ், தமிழ்நாடு அரசு தொல்பொருள் துறை வெளியீடு, ஏப்ரல் 1974 டாக்டர் ஏ. என். பெருமாள், தமிழக நாட்டுப்புறக் கலைகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980 வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் ஏடான 'அருவி' இதழில் வெளியான கட்டுரை பக். 3-4. சேலம் சிலம்ப ஆசான் திரு. முருகேசன் அவர்களுடன் நேரடியாக உரையாடிப் பெற்ற செய்திகள். இவற்றையும் பார்க்க அங்கப்போர் களரிப்பயிற்று தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்) தமிழர் தற்காப்புக் கலை கைச்சிலம்பாட்டம் மேற்கோள்கள் பகுப்பு:சிலம்பம்
சிலம்பம் எந்த நாட்டின் தற்காப்புக்கலை?
இந்தியா
10,130
tamil
e84654621
. இயற்பியலில் ஆற்றல் / சக்தி (energy, கிரேக்க மொழியில் ἐνέργεια – energeia, "செயற்பாடு, ἐνεργός – energos, "சுறுசுறுப்புடன் செயற்படுதல்") [1]) என்பது வேலை செய்யத்தகு அளவு என்று எளிமையாக வரையறை செய்வர். அதாவது ஒரு பொருளின் ஆற்றல் அதனால் செய்ய இயலும் வேலையின் அளவைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, ஆனால் ஒருவகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும். அனைத்துலக முறை அலகுகள் முறையில் ஆற்றலின் அலகு யூல் ஆகும். 1 நியூட்டனின் விசைக்கு எதிராக ஒரு பொருளை 1 மீட்டர் தூரத்திற்கு நகர்த்துவதற்கு செய்யப்படும் வேலையின் மூலம் மாற்றப்படும் ஆற்றல் ஒரு யூல் ஆகும். இயங்கும் பொருளின் இயக்க ஆற்றல், ஈர்ப்பு சக்தி, மின் அல்லது காந்த சக்தியில் ஒரு பொருளில் சேமிக்கப்படும் நிலை ஆற்றல், திண்மப் பொருட்களை நீட்டும்போது சேமிக்கப்படும் மீள்விசை, எரிபொருள் எரியும்போது வெளியிடப்படும் வேதி ஆற்றல், ஒளியில் சேமிக்கப்பட்டுள்ள கதிர்வீச்சு ஆற்றல், ஒரு பொருளின் வெப்பநிலை காரணமாகத் தோன்றும் வெப்ப ஆற்றல் போன்றவை அனைத்தும் ஆற்றலின் பொதுவான வடிவங்களாகும். நிறையும் ஆற்றலும் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளன. பொருளொன்றின் நிறை அதன் ஆற்றலுடன் எவ்வாறு தொடர்புடையது என்பதைக் காட்டும் நிறை – ஆற்றல் சமன்பாடு காரணமாக, நிலையாக உள்ள போது எந்தவொரு பொருளும் பெற்றுள்ள மாறா நிறைக்குச் சமமாக அப்பொருள் மாறா ஆற்றலையும் கொண்டிருக்கும். கூடுதலாக ஆற்றல் ஏதாவது எந்த வடிவத்திலாவது அப்பொருளுடன் சேருமாயின் அப்பொருளின் மொத்த நிறையும் ஆற்றலைப் போலவே அதிகரிக்கும். உதாரணமாக, ஒரு பொருளை சூடாக்கிய பின்னர், ஆற்றலின் அதிகரிப்பு போலவே நிறையின் அளவிலும் ஏற்படும் அதிகரிப்பை அளவிட்டு உணரலாம். இவ்வதிகரிப்பின் உணர்திறன் போதுமான அளவுள்ளதாக இருக்கும். உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றலால் மனிதர்கள் உயிர் வாழ்வது போல, பிற உயிரினங்கள் உயிருடன் வாழ்வதற்கும் ஆற்றல் தேவைப்படுகிறது. புதைபடிவ எரிபொருள்கள், அணு எரிபொருள், அல்லது புதுப்பிக்கத்தக்க சக்தி போன்ற ஆற்றல் வளங்களிலிருந்து மனிதர்களுக்குத் தேவைப்படும் ஆற்றல் கிடைக்கிறது. புவியின் காலநிலை மற்றும் சுற்றுச்சூழலின் செயல்முறைகள் ஆகியன சூரியன் மற்றும் புவியில் காணப்படும் புவிவெப்ப ஆற்றல் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் கதிரியக்க ஆற்றல் மூலம் பெறப்படுகின்றன. ஆற்றல் என்றால் என்ன? வேலை செய்யப்படும் திறமையை ஆற்றல் என்கிறோம். ஆற்றலின் வடிவங்கள் ஒரு முறைமையின் மொத்த ஆற்றல் பல்வேறு வழிகளில் பிரிக்கப்பட்டு வகைப்படுத்தப்படுறது. எடுத்துக்காட்டாக விசையியலிருந்து மரபார்ந்த விசையியல் வேறுபடுத்தப்படுகிறது. விண்வெளியின் ஊடாக நகரும் பொருள் மற்றும் அதன் நிலையாற்றல் ஆகியனவற்றைக் கொண்டு ஒரு பொருளின் இயக்க ஆற்றல் தீர்மானிக்கப்படுகிறது. விண்வெளிக்குள் அப்பொருளின் இருப்பிடம் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. புவியீர்ப்பு சக்தி, வெப்ப ஆற்றல், பல வகையான அணுக்கரு ஆற்றல், மின் ஆற்றல் மற்றும் காந்த ஆற்றல் போன்ற ஆற்றல்களுக்கிடையிலான வேறுபாடுகளை விளக்கவும் இத்துறை மிகுந்த பயனளிக்கிறது. இந்த வகைப்பாடுகளில் ஒன்றுடன் ஒன்று; உதாரணமாக, வெப்ப ஆற்றல் வழக்கமாக இயக்கவியல் மற்றும் பகுதியளவு சக்திவாய்ந்த பகுதியை கொண்டுள்ளது. இந்த வகைப்பாடுகளில் பல ஒன்றுடன் ஒன்று கலந்திருப்பதாகக் தோன்றுகின்றன. உதாரணமாக, வெப்ப ஆற்றல் வழக்கமாக பகுதியளவு இயக்கவியலும் பகுதியளவு நிலையாற்றலையும் கொண்டுள்ளது. சில வகையான ஆற்றல்கள் நிலையாற்றல் மற்றும் இயக்க ஆற்றல் ஆகிய இரண்டின் மாறுபட்ட கலவையாகும். இயந்திர ஆற்றலை இதற்கு ஒர் உதாரணமாகக் கூறலாம். இது நிலையாற்றல் மற்றும் இயக்க ஆற்றல் ஆகியவற்றின் கலவையாகும். இந்த பட்டியல் நிறைவுபெற வேண்டியதற்கான அவசியம் இல்லை. எப்போதெல்லாம் விஞ்ஞானிகள் ஆற்றல் பாதுகாப்பு விதியை மீறுவதாக கண்டறிகிறார்களோ அப்போதெல்லாம் புதிய ஆற்றல் வடிவங்கள் சேர்க்கப்பட்டு முரண்பாட்டினை வெளிப்படுத்துகின்றன. வெப்பம் மற்றும் வேலை என்பவை சிறப்பு வகை ஆற்றல்களாகும், அவை ஆற்றலின் பண்புகள் அல்ல, மாறாக ஆற்றல் மாற்றச் செயல்முறைகளின் பண்புகளாகக் கருதப்படுகின்றன. ஒரு பொருளில் எவ்வளவு வெப்பம் அல்லது வேலை உள்ளது என்பதை பொதுவாக அளவிட முடியாது, ஆனால் ஒரு குறிப்பிட்ட செயல்முறை நிகழ்வின் போது அப்பொருட்களில் ஏற்படும் ஆற்றல் மாற்றத்தை அளவிட முடியும். நாம் நோக்கும் திசையிலிருந்து வெப்பம் அல்லது வேலையின் அளவு நேர்மறை அல்லது எதிர்மறை அளவுகளாக அளவிடலாம். நிலையாற்றல்கள் பொதுவாக நேர்மறை அல்லது எதிர்மறை அளவுகளாக கணக்கிடப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட அடிப்படை நிலையில் உள்ள ஆற்றலைக் காட்டிலும் குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ உள்ள அளவை அடிப்படையாகக் கொண்டு இக்கணக்கீடு அமைகிறது. அல்லது இடைவினைபுரியும் இரண்டு பொருட்கள் வெகுதொலைவில் இருப்பதைப்போன்ற அமைப்பினைக் கொண்டுள்ளது. கதிர்வீச்சு ஆற்றல் மற்றும் ஒலி ஆற்றல் போன்ற அலை ஆற்றல்கள், இயக்க ஆற்றல், ஓய்வுநிலை ஆற்றல் முதலானவை ஒவ்வொன்றும் பூச்சியத்திற்குச் சமமாக அல்லது அதிகமாக இருக்கும். ஏனெனில் இவை அடிப்படை நிலை அளவாக பூச்சியத்தை ஒப்பிட்டு முறையே அலையற்ற, இயக்கமற்ற, சடத்துவமற்ற நிலையில் கணக்கிடப்படுகின்றன. வரலாறு ஆற்றல் என்ற பொருள் கொண்ட energy என்ற சொல் பண்டைய கிரேக்க மொழியில் ἐνέργεια, செயல்பாடு என்ற பொருள் கொண்ட சொல்லில் இருந்து வந்துள்ளது [2]. இச்சொல்லின் பயன்பாடு கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் அரிசுடாட்டிலின் படைப்பில் முதல் முறையாக தோன்றியிருப்பதாக அறியப்படுகிறது. நவீன வரையறைக்கு முரணாக ஆற்றல் என்பது மகிழ்ச்சி, ஆனந்தம் போன்ற பண்பு சார்ந்த ஒரு தத்துவ கருத்தாக அன்று கருதப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கோட்ஃபிரைட் லீப்னிசு இலத்தீன் மொழியில் vis viva என்ற கருத்தை முன்மொழிந்தார். ஒரு பொருளின் நிறையை அதன் திசைவேகத்தின் வர்கத்தால் பெருக்கினால் கிடைக்கும் அளவே ஆற்றல் என்று அவர் கூறினார். இம்முழு ஆற்றலும் காப்புற்ற அளவு என்றும் அவர் நம்பினார். உராய்வுடன் ஆற்றலை ஒப்பிட்ட, லீப்னிசு, பரு பொருள்களின் பகுதிகளான உட்கூறுகளின் சீரற்ற இயக்கத்தால் வெப்ப ஆற்றல் தோன்றுகிறது என்று கருதினார். இக்கோட்பாடு பொதுவாக ஒரு நூற்றாண்டுக்கு மேல்வரையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தற்கால இதனையொத்த இயக்க ஆற்றல் இரண்டு காரணிகளால் வேறுபடுகிறது. 1807 ஆம் ஆண்டில், தாமசு எங் ஆற்றலை அதன் நவீன பொருளுடன் vis viva என்ற சொற்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தினார் [3]. 1829 ஆம் ஆண்டில், குசுதாவே-காசுபார்டு கொரியோலிசு இயக்க ஆற்றலை அதன் நவீன பொருளுடன் பயன்படுத்தினார். 1853 ஆம் ஆண்டில் வில்லியம் ராங்கின் நிலை ஆற்றல் என்ற சொல்லை உருவாக்கி பயன்படுத்தினார். ஆற்றல் அழிவின்மை விதி 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முன்வைக்கப்பட்டது. எந்தவொரு தனிமைப்படுத்தப்பட்ட அமைப்பிற்கும் இவ்விதி பொருத்தப்பட்டது. வெப்பம் ஒரு இயற்பியல் தொடர்புடைய பொருள்தானா என்ற வாதம் சில ஆண்டுகளுக்கு நீடித்தது. கலோரி அல்லது உந்தம் போன்ற ஓர் அளவு என்று கருதப்பட்டது. இயந்திர வேலைக்கும் வெப்பம் உருவாதலுக்கும் உள்ள இணைப்பை 1845 ஆம் ஆண்டு யேம்சு பிரசுகோட் யூல் கண்டறிந்தார். இத்தகைய வளர்ச்சிகள் ஆற்றல் அழிவின்மை கோட்பாட்டிற்கு வழிவகுத்தன. பெரும்பாலும் வில்லியம் தாம்சன் (லார்டு கெல்வின்) வெப்பவியக்கவியல் துறையை முறைப்படுத்தினார். ருடால்ப் கிளாசியசு, யோசியா வில்லார்டு கிப்சு, மற்றும் வால்டர் நெர்ன்சுட் ஆகியோரின் வேதியியல் செயல்முறைகளின் விரைவான வளர்ச்சிக்கு வெப்ப இயக்கவியல் உதவியது. மேலும், இத்துறையானது கிளாடியசின் என்டிரோப்பி உருவாக்கல் தத்துவத்திற்கும், யோசப் சிடீபனின் கதிர்வீச்சு ஆற்றல் விதிகளை அறிமுகப்படுத்தவும் உதவியது. நோயெதரின் வகையிடத்தக்கச் சார்புத் தேற்றம், ஆற்றல் அழிவின்மை என்பது காலப்போக்கில் மாறாதது என்கிறது[4]. ஆகையால் 1918 ஆம் ஆண்டிலிருந்து ஆற்றல் அழிவின்மை விதியானது நேரத்துடன் நேரடி நகர்வு சீரொருமை கொண்ட கணக்கீட்டு அளவு என்று கோட்பாட்டாளர்களால் புரிந்து கொள்ளப்பட்டது. ஆற்றலின் அலகுகள் 1843 ஆம் ஆண்டில் யேம்சு பிரெசுகோட் யூல் என்பவர் தொடர்ச்சியான பரிசோதனைகளின் மூலம் வெப்பத்தின் பொறிமுறைச் சமவலுவைக் கண்டுபிடித்தார். மிகவும் பிரபலமானவர்களில் பலர் யூல் கருவியைப் பயன்படுத்தினர்: வெப்ப பரிமாற்றம் நிகழாமல் காப்பிடப்பட்டு தண்ணிரில் மூழ்கியுள்ள ஒரு துடுப்பைச் சுழற்றுகின்ற ஒரு கம்பியுடன் இணைக்கப்பட்ட எடையே இக்கருவியாகும். எடை இழந்த ஈர்ப்பு விசையியக்க சக்தியானது, துடுப்பின் உராய்வினால் நீர் பெறற உள் சக்திக்கு சமமாக இருக்கும் என்பதை இக்கருவி காட்டுகிறது. அனைத்துலக முறை அலகுகள் முறையில் ஆற்றலின் அலகு யூல் ஆகும். யேம்சு பிரெசுகோட் யூல் இதைக் கண்டுபிடித்த காரணத்தால் தருவிக்கப்படும் இவ்வலகு இப்பெயரைப் பெற்றது. ஒரு நியூட்டன் சக்தியைப் பயன்படுத்தி ஒரு மீட்டர் தொலைவு இடப்பெயர்ச்சி செய்ய செலவிடப்படும் ஆற்றலுக்கு சமமாக இருப்பது ஒரு யூல் ஆகும். இருப்பினும் அனைத்துலக முறை அலகுகள் முறைக்கு அப்பாற்பட்டு, எர்கு, கலோரி, பிரித்தானிய வெப்ப அலகு, கிலோவாட்டு மணி, கிலோகலோரி போன்ற பல்வேறு அலகுகள் வெப்ப ஆற்றலை அளவிடப் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வலகுகளைப் பயன்படுத்தும்போது அனைத்துலக அலகு முறையில் குறிப்பிட ஒரு மாற்றுக் காரணி அவசியமாகிறது. அனைத்துலக முறை அலகுகள் முறையில் ஆற்றல் விகிதத்தின் அலகு வாட் ஆகும். (அதாவது ஓர் அலகு நேரத்திற்கான ஆற்றல்) இது வினாடிக்கு ஒரு யூல் ஆகும். எனவே, ஒரு யூல் என்பது ஒரு வாட்-வினாடி மற்றும் 3600 யூல் ஒரு வாட்-மணிநேரத்திற்குச் சமம் ஆகும். சென்டிமீட்டர்-கிராம்-வினாடி அலகு முறையில் ஆற்றலின் அலகு எர்கு ஆகும். இம்பீரியல் அமெரிக்க அளவு முறையில் இதை அடி-பவுண்டு என்கிறார்கள். இவற்றைத் தவிர எலக்ட்ரான் வோல்ட்டு, கலோரி உணவு, கிலோகலோரி போன்ற அலகுகள் விஞ்ஞானம் மற்றும் வர்த்தகத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன. அறிவியல் பயன்கள் பாரம்பரிய விசையியலில் ஆற்றல் என்பது ஒரு கருத்து ரீதியாகவும் கணித ரீதியாகவும் பயன்படக்கூடிய ஒன்றாகும். ஏனெனில் இதுவொரு பாதுகாக்கப்பட்ட அளவு ஆகும். ஆற்றலை ஒரு முக்கிய கருவியாகப் பயன்படுத்தி இயக்கவியலில் பல சூத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வேலை என்பது ஆற்றலின் ஒரு வடிவம் ஆகும், இது நேரத்தையும் தூரத்தையும் இணைக்கிறது. W = ∫ C F ⋅ d s {\displaystyle W=\int _{C}\mathbf {F} \cdot \mathrm {d} \mathbf {s} } வேலை (W) என்பது பாதை C வழியாக F விசையின் ஒருங்கிணைப்புக்கு சமமான கோட்டுத் தொகையீடு ஆகும். வேலையும் ஆற்றலும் ஒரு சட்டகம் சார்ந்தவையாகும். உதாரணமாக ஒரு பந்து மட்டையால் அடிக்கப்படுகிறது எனக் கொள்வோம். மட்டை பந்தின்மீது எந்தவிதமான வேலையையும் செய்யவில்லை. ஆனால் மட்டையை வீசியவனால் பந்தின் மீது போதுமான அளவுக்கு ஒரு வேலை செய்யப்படுகிறது. ஓர் அமைப்பின் மொத்த ஆற்றல் சிலநேரங்களில் ஆமில்டோனியன் என்று அழைக்கப்படுகிறது. வில்லியம் ரோவன் ஆமில்ல்டன் கண்டறிந்த காரணத்தால் இவ்வாற்றல் இப்பெயரைப் பெற்றது. இயக்கத்தின் பாரம்பரிய சமன்பாடுகள் மிக சிக்கலான அல்லது சுருக்க அமைப்புகளுக்கும் கூட இயக்கத்தின் பாரம்பரிய சமன்பாடுகள் ஆமில்டோனியன் அடிப்படையில் எழுதப்படலாம். இந்தப் பாரம்பரிய சமன்பாடுகள் சார்பியல்சாரா விசையியல் குவாண்டம் இயக்கவியலுடன் குறிப்பிடத்தக்க நேரடி ஒப்புமைகளைக் கொண்டுள்ளன [5]. யோசப்-இலூயிசு இலாக்ரேங்கியன் கண்டறிந்த இலாக்ரேங்கியன் கோட்பாடு மற்றொரு ஆற்றல் தொடர்பான கோட்பாடு ஆகும். இம்முறையிலும் ஆமில்டன் கோட்பாட்டின் அடிப்படைகளே பின்பற்றப்படுகின்றன. இவ்விரு கோட்பாடுகளிலும் இயக்கத்தின் சமன்பாடுகள் பெறப்படுகின்றன அல்லது தருவிக்கப்படுகின்றன. பாரம்பரிய விசையியலுக்குப் போட்டியாக இக்கோட்பாடு கண்டறியப்பட்டாலும் நவீன இயற்பியலுக்கு இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பொதுவாக இயக்க ஆற்றலில் இருந்து நிலையாற்றலைக் கழிக்கக் கிடைப்பது இலாக்ரேங்கியன் எனப்படுகிறது. ஆமில்டோனியன் கோட்பாட்டைக் காட்டிலும் இலாக்ரேங்கியன் கோட்பாடு கனிதவியலுக்கு மிகவும் வசதியானதாக கருதப்படுகிறது. வகையிடத்தக்க சமச்சீர்நிலையுடைய எந்தவொரு இயற்பியல் முறையின் செயல்பாடும் தொடர்புடைய பாதுகாப்பு விதியைப் பெற்றுள்ளது என 1918 இல் உருவாக்கப்பட்ட நோயிதர் தேற்றம் கூறுகிறது. நவீன கோட்பாட்டு இயற்பியல் மற்றும் நுண்கணித வேறுபாடுகளுக்கு நோயிதர் தேற்றம் ஒரு அடிப்படைக் கருவியாக மாறியது. ஆற்றலின் வகைகள் நிலை ஆற்றல் இயக்க ஆற்றல் வெப்ப ஆற்றல் ஒளியாற்றல் வேதியியல் ஆற்றல் அணு ஆற்றல் அணுக்கரு ஆற்றல் மேற்கோள்கள் புற இணைப்புகள் - பகுப்பு:இயற்பியல் அளவுகள்
இயக்க ஆற்றலைக் கண்டுபிடித்தவர் யார்?
குசுதாவே-காசுபார்டு கொரியோலிசு
5,374
tamil
ebc9d3b16
வேம்பு அல்லது வேப்பை (Azadirachta indica, Neem) இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும் மிகவும் பயனுள்ள ஒரு மரம். இதன் மருத்துவ பண்புகள் கருதி, ஒரு மூலிகை என்றும் வகைப்படுத்தலாம். வேப்ப மரம் நன்றாக வளர்ந்து நிழல் தர வல்லது. அதன் இலைகள் கிருமிகளை அழிக்கும் அல்லது அணுகவிடா தன்மை கொண்டவை என்று கருதப்படுகின்றது. வேப்பம் பூ இல் இருந்து வேப்பம் பூ வடகம், பச்சடி, ரசம் என்பவை செய்யலாம். வேப்ப எண்ணெய் மருத்துவ ரீதியாக பாவிக்கப்படுகின்றது. காப்புரிமை 1995ல் யுரோப்பிய காப்புரிமைக்கழகம் வேம்பு தொடர்பான காப்புரிமையை அமெரிக்க ஐக்கிய நாடுகள் விவசாயத்துறைக்கு வழங்கியது. பிறகு இந்திய அரசாங்கம் காப்புரிமை வழங்கப்பட்ட இச்செயற்பாடு 2000 ஆண்டுகளாக இந்தியாவில் நடைமுறையில் இருப்பதாக கூறி இதை எதிர்த்தது. கிபி2000ல் இந்தியாவிற்கு சாதகமாக யுரோப்பிய காப்புரிமைக்கழகம் தீர்ப்பளித்தது. உசாத்துணை வெளி இணைப்புகள் from the Hawaiian Ecosystems at Risk project (HEAR) Contains a detailed monograph on Azadirachta indica (Neem; Nimba) as well as a discussion of health benefits and usage in clinical practice. பகுப்பு:மரங்கள் பகுப்பு:மூலிகைகள் பகுப்பு:மூவடுக்கிதழிகள்
வேப்ப மரத்தின் விஞ்ஞான பெயர் என்ன?
Azadirachta indica
22
tamil
e2362a9b9
லியொனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) அல்லது இலியனார்தோ தா வின்சி (ஏப்ரல் 15, 1452 - மே 2, 1519) ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞரும், புதுமைப் புனைவாளரும், பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும் ஆவார். ஒரு பல்துறை மேதையாகக் கருதப்பட்டவர். குறிப்பாக இவரது, சிறப்பான ஒவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். "கடைசி விருந்து" (The Last Supper), "மோனா லிசா" (Mona Lisa) போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. உரி EAHCDWQNய காலத்துக்கு மிக முன்னதாகவே செய்யப்பட்ட பல கண்டுபிடிப்புக்கள் தொடர்பிலும் இவர் பெயர் பெற்றவர். எனினும் இவரது காலத்தில் இவை எதுவும் வெளியிடப்படவில்லை. அத்துடன் இவர், உடற்கூற்றியல், வானியல், குடிசார் பொறியியல் ஆகிய துறைகளின் வளர்ச்சியிலும் பெரும்பங்கு ஆற்றியுள்ளார். இவர் தணியாத ஆர்வம் கொண்டவராகவும் தீவிர கற்பனை வளம் கொண்டவராகவும் இருந்துள்ளார் [1] உலகில் இது வரை வாழ்ந்த மிகச்சிறந்த ஒவியர்களில் ஒருவராகவும், பண்முக ஆற்றல் கொண்டவராகவும் இருந்துள்ளார்.[2] இலியனார்தோ தா வின்சி அடிப்படையாக ஒரு ஒவியராக அறியப்படுபவர். இவருடைய "மோனா லிசா" (Mona Lisa) ஒவியம் உலகில் மிகவும் புகழ் பெற்ற ஒவியமாக கருதப்படுகிறது.[3] இலியனார்தோ தா வின்சி தொழில் நுட்பவியல் சார்ந்த அறிவாற்றலுக்காக பெரிதும் மதிக்கப்படுபவர். நிலவியல் உட்பட பல துறைகளில் தன்னுடைய அறிவார்ந்த எண்ணங்களை பகிர்ந்து கொண்ட இவர் தன்னுடைய காலத்தில் நினைத்து பார்க்க முடியாத பல புதுமைப் புனைவுகளைச் செய்துள்ளார்.[4] இவர் உடற்கூறியல், கட்டிடக்கலை, ஒளியியல், நீர்ம இயக்கவியல் ஆகிய துறைகளில் புதுமைப் புனைவு களை நிகழ்த்தியுள்ளார். எனினும், அவற்றைத் தன் சம காலத்தில் வெளியிடாததால், இந்ந துறைகளில் இவருடைய நேரடி தாக்கம் இல்லை.[5] வாழ்க்கை இளமை இவருடைய வாழ்க்கை ஜார்ஜியோ வாசரியின், விட்டே என்னும் வாழ்க்கை வரலாற்று நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. இலியனார்தோ, இத்தாலியிலுள்ள, வின்சி என்னுமிடத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் செர் பியரோ தா வின்சி, ஒரு நல்ல நிலையிலிருந்த நில உரிமையாளர் அல்லது கைப்பணியாளர்; தாய் கத்தரீனா ஒரு உழவர் குடும்பப் பெண். கத்தரீனா, பியரோவுக்குச் சொந்தமாயிருந்த, மத்திய கிழக்கைச் சேர்ந்த ஒரு அடிமை என்ற கருத்தும் நிலவினாலும் இதற்கான வலுவான சான்றுகள் இல்லை. இவர் தனது தந்தையாருடன் புளோரன்சில் வளர்ந்தார். இவர் வாழ்க்கை முழுதும் ஒரு சைவ உணவுக்காரராகவே இருந்தார். இவர் புளோரன்சில் ஒரு ஒவியரின் கீழ் பயிற்சியாளராக இருந்து, பின்னர் தற்சார்பான ஒவியர் ஆனார். இவரது காலம் ஐரோப்பாவில் நவீன பெயரிடு முறை நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகும். இதனால் இவரது முழுப்பெயர், "இலியனார்தோ தி செர் பியெரோ தா வின்சி" என்பதாகும். இது, "வின்சியைச் சேர்ந்த பியரோவின் மகன் இலியனார்தோ" என்ற பொருளுடையது. இவர் தன்னுடைய ஆக்கங்களில், "இலியனார்தோ" என்றோ அல்லது "நான் இலியனார்தோ" (Io, Leonardo) என்றோதான் கையெழுத்திட்டார். இதனால் இவரது ஆக்கங்கள் பொதுவாக "தா வின்சிகள்" என்றில்லாமல், "இலியொனார்தோக்கள்" என்றே குறிப்பிடப்படுகின்றன. இவர் ஒரு முறைதவறிப் பிறந்த பிள்ளை என்பதால், தந்தை பெயரைப் பயன்படுத்தாமல் விட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. லியொனார்டோவின் தொடக்க காலம் பெரும்பாலும் வரலாற்று ஊகங்களே. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும், மறுமலர்ச்சிக் கால ஓவியர்களைப் பற்றிய வரலாறுகளை எழுதியவருமான வாசரி என்பவர், லியொனார்டோ குறித்த ஒரு குறிப்பை எழுதியுள்ளார். ஒரு உள்ளூர் குடியானவன், லியனார்டோவின் தந்தையிடம் வந்து, திறமையான அவரது மகனைக் கொண்டு ஒரு வட்டமான பலகையில் படமொன்று வரைந்து தருமாறு கோரினானாம். இதற்கிணங்க லியொனார்டோ அப்பலகையில் பாம்புகள் தீயை உமிழ்வது போன்ற படமொன்றை வரைந்து கொடுத்தாராம். பார்ப்பதற்குப் பயத்தைக் கொடுத்த அந்த ஓவியத்தை, லியொனார்டோவின் தந்தை புளோரன்சின் கலைப்பொருள் விற்பனையாளரிடம் விற்றுவிட்டார். அவ்விற்பனையாளர் அதனை மிலானின் டியூக்கிடம் வெற்றார். இதன் மூலம் நல்ல இலாபம் பெற்ற லியொனார்டோவின் தந்தை இதயத்தை அம்பு துளைப்பது போன்ற இன்னொரு படத்தை விலைக்கு வாங்கிவந்து குடியானவனுக்குக் கொடுத்ததாக அக் குறிப்புச் சொல்கிறது. வெரோச்சியோவின் பணிக்கூடம், 1466-1476 1466 இல், 14ஆம் அகவையிலேயே, அக்காலத்தில் மிகவும் வெற்றிகரமான ஓவியராக விளங்கியவரும், வெரோக்கியோ என அறியப்பட்டவருமான ஆந்திரே தி சீயோன் என்பவரிடம் இலியொனார்தோ தொழில் பழகுவதற்காகச் சேர்ந்தார். வெரோக்கியோவின் பணிக்கூடம் புளோரன்சின் அறிவுசார் பகுதியில் இருந்ததால், இலியொனார்தோவுக்கு கலைத்துறை தொடர்பான அறிவு கிடைத்தது. கிர்லாண்டாயோ, பெருஜீனோ, பொட்டிச்செல்லி, லொரென்சோ டி கிரெடி போன்ற புகழ்பெற்ற ஓவியர்களும் இதே பணிக்கூடத்தில் தொழில் பழகுவோராகவோ, வேறு வகையில் தொடர்பு உள்ளவர்களாகவோ இருந்துள்ளனர். இலியொனார்தோவுக்குப் பல வகையான தொழில் நுட்பத் திறன்களின் அறிமுகம் கிடைத்ததோடு, வரைவியல், வேதியியல், உலோகவியல், உலோகவேலை, சாந்து வார்ப்பு, தோல் வேலை, பொறிமுறை, தச்சுவேலை போன்றவற்றோடு வரைதல், ஓவியம், சிற்பம் முதலிய பல திறமைகளையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. வெரோக்கியோவின் பணிக்கூடத்தில் உருவானவற்றுள் பல அவரிடம் வேலை செய்தவர்களால் செய்யப்பட்டவை. வாசரியின் கூற்றுப்படி, கிறிஸ்துவின் ஞானஸ்நானம் என்னும் ஓவியத்தை, வெரோக்கியோவும், இலியொனார்தோவும் இணைந்து வரைந்தனர். யேசுவின் உடையை இளம் தேவதை ஏந்தியிருப்பதை இலியொனார்தோ வரைந்த விதம், அவரது குருவையும் விஞ்சியதாக இருந்ததால், வெரோக்கியோ தனது தூரிகையைக் கீழே வைத்துவிட்டு அதன் பின்னர் வரைவதையே நிறுத்திவிட்டார். இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக இருக்கலாம். நெருக்கமாக ஆராயும்போது, இவ்வோவியம் இலியொனார்தோவின் கைவண்ணமாகவே தோன்றுகிறது. 1472 ஆம் ஆண்டளவில், இலியொனார்தோ 20 ஆம் அகவையில், மருத்துவர்களினதும், கலைஞர்களினதும் குழுவான சென். லூக் குழுவில், வல்லுனராகத் தகுதி பெற்றார். ஆனால், இலியொனார்தோவின் தந்தையார் இவருக்குத் தனியான பணிக்கூடம் ஒன்றை அமைத்துக் கொடுத்திருந்தும், வெரோக்கியோவுடன் இருந்த நெருக்கம் காரணமாகத் தொடர்ந்து அவருடன் இணைந்து வேலை செய்தார். இலியொனர்தோ வரைந்ததாக அறியப்படும் மிகப் பழைய ஓவியம், பேனாவாலும், மையினாலும் வரையப்பட்ட ஆர்னோப் பள்ளத்தாக்கு ஓவியம் ஆகும். இது 1473 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதியிட்டு வரையப்பட்டுள்ளது. தொழில் புரிந்த காலம் நீதிமன்றப் பதிவுகளின்படி, 1476 ஆம் ஆண்டில் சில குற்றச்சாட்டுகளின் பேரில் இவர்மேல் வழக்குத் தொடரப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். 1476 முதல் 1481 ஆம் ஆண்டுவரை இவர் புளோரன்சில் தனது சொந்த பணிக்கூடத்தை நடத்திவந்ததாகக் கொள்ளப்படினும், 1476 முதல் 1478 ஆம் ஆண்டுவரை இவர் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. 1478ல், புனித பர்னாட் சிற்றாலயத்தில் The Adoration of the Magi என்ற ஓவியத்தை வரையும் பணி இவருக்குக் கிட்டியது. 1482 இலிருந்து, 1499 வரை மிலானின் "டியூக்"கான லுடோவிக்கோ ஸ்போர்ஸா என்பவரிடம் வேலை பார்த்துவந்ததுடன், பல பயிற்சியாளர்களுடன் கூடிய பணிக்கூடம் ஒன்றையும் நடத்திவந்தார். 1495 இல், சார்ள்ஸ் VIII இன் கீழான பிரெஞ்சுப் படைகளின் தாக்குதலிலிருந்து மிலானைக் காப்பதற்காக, இலியனார்தோவின், "கிரான் கவால்லோ" என்னும் குதிரைச் சிலைக்காக ஒதுக்கப்பட்ட எழுபது தொன் வெண்கலம், ஆயுதங்கள் வார்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. 1498ல் பிரான்சியர், லூயிஸ் XIII இன் கீழ் திரும்பி வந்தபோது, மிலான் எதிர்ப்பெதுவுமின்றி வீழ்ச்சியடைந்தது. ஸ்போர்ஸா பதவியிழந்தார். ஒரு நாள், தனது "கிரான் காவல்லோ"வுக்கான முழு அளவு களிமண் மாதிரியை, பிரான்சிய வில்வீரர்கள், குறிப்பயிற்சிக்குப் பயன்படுத்தியதைக் காணும்வரை, இலியனார்தோ மிலானிலேயே தங்கியிருந்தார். பின்னர் அவர் சாலையுடனும், அவரது நண்பரான லூக்கா பக்கியோலியுடனும் மந்துவாவுக்குச் சென்று இரண்டு மாதங்களுக்குப் பின் வெனிஸ் சென்றடைந்தார். 1500 ஏப்ப்ரலில் மீண்டும் புளோரன்சுக்கு வந்தார். புளோரன்சில் செஸாரே போர்கியா (போப் அலெக்சாண்டர் VI இன் மகன், "டூக்கா வலெண்டீனோ" என்றும் அழைக்கப்பட்டார்) என்பவரிடம் ஆயுதப்படைக் கட்டிடக்கலைஞராகவும், பொறியியலாளராகவும் பணியில் அமர்ந்தார். 1506 இல் மீண்டும், சுவிஸ் கூலிப்படைகளினால் பிரான்சியர் துரத்தப்பட்ட பின், மக்சிமிலியன் ஸ்போர்ஸா வின் வசம் வந்துவிட்ட, மிலானுக்குத் திரும்பினார். அங்கே அவர், இறக்கும்வரை அவரது தோழனாகவும், பின்னர் வாரிசாகவும் அமைந்த பிரான்சிஸ்கோ மெல்ழியைச் சந்தித்தார். பிற்காலம் 1513 இலிருந்து 1516 வரை அவர் ரோம் நகரில் வாழ்ந்தார். அக்காலத்திலேயே, அங்கே ரபாயேலோ சண்டி மற்றும் மைக்கல் ஆஞ்சலோ போன்ற ஓவியர்கள் செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள். எனினும் இவருக்கு அவர்களுடன் அதிகத் தொடர்பு இருக்கவில்லை. 1515ல் பிரான்சின் பிரான்சிஸ் I மிலானைத் திரும்பக் கைப்பற்றிக் கொண்டான். பிரான்சின் அரசருக்கும், போப் லியோ Xக்கும் பொலொக்னாவில் நடைபெறவிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்காக ஒரு இயந்திரச் சிங்கமொன்றைச் செய்வதற்கு லியொனார்டோ அமர்த்தப்படார். அப்பொழுதுதான் அரசரை லியொனார்டோ முதன் முதலில் சந்தித்திருக்கவேண்டும். 1516ல், அவர் பிரான்ஸிசின் பணியில் அமர்ந்தார். அரசரின் வாசஸ்தலத்துக்கு அருகில் குளொஸ் லுகே என்னும் மனோர் வீடு அவரது பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டதுடன், தாராளமன ஓய்வூதியமும் வழங்கப்பட்டது. அரசர் அவருக்கு நெருங்கிய நண்பரானார். 1519 ல், பிரான்சிலுள்ள, குளோக்ஸ் என்னுமிடத்தில், லியொனார்டோ காலமானார். அவருடைய விருப்பப்படி 60 பிச்சைக்காரர்கள் அவரது பிணப்பெட்டியைத் தொடர்ந்து சென்றார்கள். அம்போயிஸ் கோட்டையிலுள்ள, சென்-ஹியூபெர்ட் சப்பலில் இவர் அடக்கம் செய்யப்பட்டார். தொடர்புகளும் செல்வாக்குகளும் புளோரன்ஸ் - லியொனார்டோவின் கலை மற்றும் சமூகப் பின்னணி லியொனார்டோ வெரோக்கியோவிடம் தொழில் பழகுவதற்குச் சேர்ந்த 1466 இலேயே வெரோக்கியோவின் ஆசிரியரான டொனெடெல்லோ (Donatello) இறந்தார். நிலத்தோற்ற ஓவியங்களின் வளர்ச்சிக்கு உதவிய ஓவியங்களை வரைந்த உக்கெல்லோ (Uccello) மிகவும் வயது முதிர்ந்தவராக இருந்தார். ஓவியர்களான பியெரோ டெல்லா பிரான்சிஸ்கா (Piero della Francesca), பிரா பிலிப்போ லிப்பி (Fra Filippo Lippi), லூக்கா டெல்லா ரோபியா (Luca della Robbia) என்போரும் கட்டிடக்கலைஞரும் எழுத்தாளருமான ஆல்பர்ட்டியும் அறுபது வயதைத் தாண்டியவர்களாகவும் இருந்தனர். அடுத்த தலைமுறையின் வெற்றிகரமான ஓவியர்களாக, லியொனார்டோவின் குரு வெரோக்கியோ, ஆன்டோனியோ பொலையுவோலோ (Antonio Pollaiuolo), சிற்பியான மினோ டா பியெசோலே (Mino da Fiesole) ஆகியோர் இருந்தனர். லியொனார்டோவின் இளமைக்காலம் மேற்படி ஓவியர்களால் அலங்கரிக்கபட்ட புளோரன்சிலேயே கழிந்தது. பொட்டிச்செல்லி, கிர்லாண்டாயோ, பெருஜீனோ ஆகியோர் லியொனார்டோவுக்குச் சமகாலத்தவர்கள். இவர்களை லியொனார்டோ வெரோக்கியோவின் வேலைத்தலத்திலும், மெடிசி அக்கடமியிலும் சந்தித்திருக்கக்கூடும். பொட்டிச்செல்லி மெடிசி குடும்பத்தால் விரும்பப்பட்டவராக இருந்ததால், ஒரு ஓவியராக அவரது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது. கிர்லாண்டாயோ, பெருஜீனோ ஆகியோர் வசதி மிக்கவர்கள் பெரிய வேலைத்தலங்களை நடத்திவந்தனர். இவர்கள் இருவரும் மிகத் திறமையுடன் பணிசெய்து தமக்கு வேலை கொடுப்போரைத் திருப்திப்படுத்தினர். லியொனார்டோவுக்குக் கிடைத்த முதல் வேலை Adoration of the Magi என்னும் ஓவியமாகும். ஆனால் இது நிறைவடையவில்லை. கலை லியோனார்டோ டா வின்சி, 1498ல் வரையப்பட்ட கடைசி விருந்து, மற்றும் 1503-1506ல் வரையப்பட்ட மோனோலிசா போன்ற ஒவியங்களுக்காகப் பெயர் பெற்றவர். இவருடைய 17 ஓவியங்கள் மட்டுமே இன்று தப்பியுள்ளன. சிற்பங்கள் எதுவும் அறியப்படவில்லை. அயர்லாந்தின் லிமெரிக்கிலுள்ள ஹண்ட் நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ள, வீடொன்றின் சிறிய சிற்பமொன்று இவர் செய்ததாகக் கருதப்படுகிறது. தப்பியுள்ள ஒவியங்களில் ஒன்று வட அமெரிக்காவில் உள்ளது. லியொனார்டோ, பெரும்பாலும் பெரும் ஓவியங்களாகவே திட்டமிட்டார். அதனால் இத்திட்டங்கள் முற்றுப்பெறாமல் இடையிலேயே நிற்கவேண்டியேற்பட்டது. மிலானில் நிறுவுவதற்கு, 7 மீட்டர் (24 அடி) உயரமுள்ள வெண்கலத்திலான குதிரைச் சிற்பமொன்றைச் செய்வதற்காக, மாதிரிகளும், திட்டங்களும் வகுப்பதில் பல வருடங்கள் செலவு செய்யப்பட்டன. எனினும் பிரான்சுடனான போர் காரணமாகத் திட்டம் முற்றுப்பெறவில்லை. தனிப்பட்ட முயற்சி காரணமாக, டாவின்சியின் திட்டங்கள் சிலவற்றின் அடிப்படையில் இதைப்போன்ற சிலையொன்று 1999ல் நியூயோர்க்கில் செய்யப்பட்டு, மிலானுக்கு வழங்கப்பட்டு அங்கே நிறுவப்பட்டது. புளோரன்சில், அங்கியாரிப் போர் என்ற தலைப்பில் பொது மியூரல் ஒன்றைச் செய்வதற்காக இவர் அமர்த்தப்பட்டார். இதற்கு நேரெதிர்ச் சுவரில், இவரது போட்டியாளரான மைக்கலாஞ்சலோ ஒவியம் வரைவதாக இருந்தது. பலவிதமான, சிறப்பான ஆரம்ப ஆய்வுப்படங்களை வரைந்த பின்னர் அவர் நகரிலிருந்து வெளியேறிவிட்டார். தொழில்நுட்பக் காரணங்களால் மியூரல் பூர்த்திசெய்யப்படவில்லை. அறிவியலும், பொறியியலும் இவருடைய கலைப்பணிகளிலும் பார்க்க, அதிக கவர்ச்சியுடையனவாக, இவரது, அறிவியல், பொறியியல் ஆய்வுகள் அமைந்தனவெனலாம். இவ்வாய்வுகள் குறிப்புகளாகவும் படங்களாகவும் சுமார் 13,000 பக்கங்களில், குறிப்புப் புத்தகங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இடதுகையால் எழுதுபவர், வாழ்நாள் முழுதும் கண்ணாடி உருவ எழுத்துக்களையே பயன்படுத்திவந்தார். அறிவியல் தொடர்பான இவரது அணுகுமுறை நோக்கிடுகள் சார்ந்தது. விவரிப்பதன் மூலமும், அவற்றை மிக நுணுக்கமான விவரங்களுடன் வெளிப்படுத்துவதன் மூலமுமே, புறத்தோற்றப்பாடுகளை அவர் விளங்கிக்கொள்ள முயன்றார். செய்முறைகளுக்கும், கோட்பாட்டு விளக்கங்களுக்கும் அவர் முதன்மை கொடுக்கவில்லை. தனது வாழ்நாள் முழுவதும், எல்லாவற்றுக்குமான விரிவான வரைபடங்களைக் கொண்ட ஒரு கலைக்களஞ்சியமொன்றை உருவாக்கத் திட்டமிட்டுவந்தார். இவருக்கு இலத்தீனிலும், கணிதத்திலும் முறையான கல்வி இல்லாமையால், இவர் அக்கால அறிவியலாளர்களால் புறக்கணிக்கப்பட்டார். உடற்கூற்றியலும் உடலியக்கவியலும் இவர் ஆந்திரியா வெரோச்சியின் கீழான பயிற்சி வழி மாந்த உடலின் உடற்கூற்றியல் ஆய்வைத் தொடங்கினார். வெரோச்சி தம் மாணவர்கள் இந்தக் கருப்பொருளில் ஆழ்ந்த அறிவு பெறுவதில் கண்ன்ங் கருத்துமாய் இருந்துள்ளார்.[6] ஓவியராக விரைவில் தா வின்சி தசைகள், தசைநாண்கள், கட்படும் உடற்கூற்றியல் கூறுபாடுகளை வரைந்து உடலுருவவியலில் தேர்ந்தார். ஓவியராக வெற்றிகண்ட தாவின்சி புளோரன்சில் உள்ள சாந்தா மரியா நுவோவா மருத்துவ மனையில் மாந்த உடல்களை வெட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டார். பின்னர் இவர் உரோம் நகரம், மிலான் மருத்துவமனைகளிலும் இதற்கு ஒப்புதல் பெற்றுள்ளார். இவர் 1510 முதல் 1511 வரை மருத்துவர் மார்க்கந்தோனியோ தெல்லா தோரேவுடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டார். இலியனார்தோ 240 விரிவான வரைபடங்களை வரைந்து 13,000 சொற்கள் அடங்கிய உடற்கூற்றியல் பாடநூலை இயற்றியுள்ளார்.[7] இவற்றை தன் உறவினராகிய பிரான்சிசுகோ மெல்ழியிடம் வெளியிட கொடுத்துள்ளார். இப்பணி தா வின்சியின் தனித்த பாணி நடையாலும் அதன் புலமை விரிவாலும் மிக அரிய பணியாக விளங்கியுள்லது.[8]இத்திட்டம், மெல்ழி 50 ஆண்டுகள் கழித்து இறக்கந் தறுவாயிலும் முடிவுறவில்லை; இவரது ஓவியப் பெருநூலில் உடற்கூற்றியலின் சிறிதளவு பகுதியே 1632 இல் வெளியிடப்பட்ட்து.[9][8] மெல்ழி பாடப்பொருளை இயல்களாக ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தபோது இவை பல உடற்கூற்றியலாளர்களாலும் வசாரி, செல்லினி, ஆல்பிரெக்ட் தூரர் உட்பட, பல ஓவியர்களாலும் பார்வையிடப்பட்டு, அவற்றில் இருந்து பல வரைபடங்கள் வரைந்துகொள்ளப்பட்டுள்ளன.[8] பொறியியலும் புதுமைப் புனைவுகளும் புகழும் பெற்றியும் இவரது புகழ் இவரது வாழ்நாளிலேயே பிரான்சு அரசர் இவரை வெற்றிக்கோப்பையைப் போல அவரது கையால் தூக்கிச் செல்ல வைத்துள்ளது, மேலும், அரசர் இவரை முதுமைக்கால முழுவதும் பேணிப் பாதுகாத்துள்ளார். இறந்த பிறகும் அரசர் இவரைக் கையால் ஏந்திக் கொண்டிருந்துள்ளார். இவரது பணிகள் பேரிலான ஆர்வம் குன்றவே இல்லை. இவரது நன்கறிந்த கலைப்பணிகளைப் பார்க்க இன்றும் மக்கள் குழுமுகின்றனர்; T-சட்டைகள் இன்றும் இவரது ஓவியங்கள் சுடர்விடுகின்றன; எழுத்தாளர்கள் தொடர்ந்து இவரது அறிவுத்திறனைப் பாராட்டித் தனிவாழ்க்கையைப் படம்பிடிக்க ஆர்வம் கொண்டுள்ளனர்.[9] [[ஜியார்ஜியோ வசாரி, அவருடைய விரிவாக்கிய கலைஞர்களின் வாழ்க்கைகள், 1568 எனும் நூலில்,[10] இலியனார்தோ தா வின்சியைப் பின்வரும் சொற்களால் அறிமுகப்படுத்துகிறார்: இயல்பாகவே பல ஆண்களும் பெண்களும் உயர்ந்த திறமைகளோடு பிரக்கின்றனர்; சிலவேளைகளில் மட்டுமே, இயற்கையைக் கடந்த நிலையில், தனியொருவர் வானகம் தந்த அழகு, அறிவு, அருள், திறமை செறிய மற்ர வர்களை எங்கோ பின்தள்ளிவிட்டு அரிதாகப் பிறக்கின்றார். இவருக்கு எள்லா வல்லமைகளும் மாந்தத் திறத்தால் ஆற்ற்ப்படுவன அல்ல, மாறாக கடவுளிடம் இருந்தே வருகின்றன. இது இலியனார்தோ தா வின்சியைப் பொறுத்தவரையில் உண்மையென அனைவருமே ஒப்புக்கொள்கின்றனர். அவரது பேரழகும் பேரருளும் அவர் செய்யும் அனைத்திலும் மிளிர்கின்றன. இவர் தான் எடுத்த சிக்கல்களுக்கெல்லாம் மிக எளிமையாக தீர்வுகளும் காணும் வகையில் தன் அறிவு த் திறனை அருமையாக வளர்த்துகொண்டார்.—ஜியார்ஜியோ வாசரி பல்வகைத் தகவல்கள் தாவின்சைட் எனும் அன்மையில் புதிதாக விவரிக்கப்பட்டகனிமத்துக்கு 2011இல் பன்னாட்டுக் கனிமவியல் கழகம் இவரது நினைவாகப் பெயரிட்டுள்ளது.[11] கலைச் சந்தை சால்வதார் முண்டி எனும் இலியனார்தோ ஓவியம் 450.3 மில்லியன் டாலருக்கு விற்று , நியூயார்க் கிறித்தி ஏலத்தில் 2017 நவம்பர் 15 இல் உலகிலேயே உயர்ந்த விலைக்கு விற்ற கலைப்பொருளாக பதிவாகியுள்ளது.[12] முன்பு மிக உயர்ந்த விலைக்கு பாப்ளோவின் இலெசு பெம்மெசு தா அல்கர் (Les Femmes d'Alger) எனும் ஓவியம் 2015 மேவில் அதே நியூயார்க், கிறித்தி ஏலத்தில் 179.4 மில்லியன் டாலருக்கு விற்றுள்ளது. 300 மில்லியன் டாலருக்கு வில்லியம் தெ கூனிங்கின் இடைமாற்றம் எனும் ஓவியம் தனியாருக்கு 2015 செப்டம்பரில் டேவிட் கெஃபன் அறக்கட்டளை விற்றுள்ளது. இதுவே முன்னர் விற்ற கலைப்பொருளில் மிக உயர்ந்த விலை பெற்றதாகும். [13] அடிக்குறிப்புகள் மேற்கோள்கள் நூல்தொகை CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) volume 2: ISBN0-486-22573-9. A reprint of . CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) [The chapter "The Graphic Works" is by Frank Zollner &amp; Johannes Nathan]. வெளி இணைப்புகள் at the Encyclopædia Britannica at Project Gutenberg at LibriVox (public domain audiobooks) at Internet Archive The Queen's Gallery, Buckingham Palace, Friday, 4 May 2012 to Sunday, 7 October 2012. High-resolution anatomical drawings. , Catalog of an exhibition held at the Metropolitan Museum of Art, New York, 22 Jan. – 30 March 2003. பகுப்பு:மறுமலர்ச்சி அறிவியலாளர்கள் பகுப்பு:1452 பிறப்புகள் பகுப்பு:1519 இறப்புகள் பகுப்பு:எறிபடையியல் வல்லுனர்கள் பகுப்பு:இத்தாலிய உடற்கூற்றியலாளர்கள் பகுப்பு:இத்தாலியக் கட்டிடப் பொறியாளர்கள் பகுப்பு:இத்தாலியப் புதுமைப் புனைவாளர்கள் பகுப்பு:இத்தாலியப் படையியல் பொறியாளர்கள் பகுப்பு:இத்தாலிய உடலியக்கவியலாளர்கள் பகுப்பு:இத்தாலிய மறுமலர்ச்சி ஓவியர்கள் பகுப்பு: இத்தாலிய மறுமலர்ச்சி சிற்பிகள் பகுப்பு:கணிதவியல் கலைஞர்கள் பகுப்பு:மறுமலர்ச்சி கட்டிடக் கலைஞர்கள் பகுப்பு:மறுமலர்ச்சி ஓவியர்கள் பகுப்பு:மறுமலர்ச்சி அறிவியலாளர்கள் பகுப்பு:பாய்ம இயங்கியலாளர்கள்
லியோனார்டோ டா வின்சி எங்கு பிறந்தார்?
இத்தாலியிலுள்ள, வின்சி
1,629
tamil
a317a9b97
ஜெ.ஜெ. தாம்சன்(Joseph John Thomson) என்று பொதுவாக அறியப்படுகின்ற சர் ஜோசப் ஜான் தாம்சன்(டிசம்பர் 18, 1856 - ஆகஸ்ட் 30, 1940)அணுவின் அடிப்படைப் பொருளான மின்னணு எனப்படும் எலக்ட்ரானைக் கண்டுபிடித்த ஆங்கில இயற்பியலார் ஆவார். இவர் மின்சாரவியல், காந்தவியல், ஐசோடோப்புகள் குறித்து ஆய்வுகள் செய்தவர். 'நவீன அணு இயற்பியலின் தந்தை' எனப் போற்றப்படுபவர். நிறை நிறமாலையைக் கண்டறிந்தவர்.இயற்பியல் பேராசிரியராக விளங்கியது மட்டுமல்லாமல் தனது ஆய்வுகளுக்காக 'ஆதம்சு பரிசு' மற்றும் 1906 -ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஆகியவற்றைப் பெற்றவர்.இவரது தாய் எம்மா ஸ்விண்டெல் மற்றும் தந்தை ஜோசப் ஜேம்ஸ் தாம்சன் ஸ்காட்டிய குடும்பத்தை சேர்ந்தவர்கள்.[1] இளமை 1856- ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மான்செசுடரில் உள்ள 'சீத்தம் குன்று' (Cheetham Hill)என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் ஸ்காட்ட்டியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 1870-ல் மான்செசுடரில் உள்ள ஓவென்சு கல்லூரியிலும், பின் 1876-ல் ஆக்சுபோர்டில் உள்ள டிரினிடி கல்லூரியிலும் சேர்ந்து படித்தார். அங்கு மிகச் சிறப்பாகப் படித்து 'ஆதம்சு பரிசை' வென்றார்[2] . அதன் காரனமாக இவருடைய இறுதிக்காலம் வரை அக்கல்லூரியின் உறுப்பினராக அமர்த்தப்பட்டார். இவருடைய தந்தை இவரை ஒரு பொறியாளராக்க விரும்பினார். ஆனால் இவரின் தந்தை இறந்தபின் அதற்குரிய கட்டணங்களைச் செலுத்த முடியாத சூழ்நிலை அவரின் குடும்பத்திற்கு இருந்ததால் அந்த விருப்பம் நிறைவேறவில்லைஓவென்சு கல்லூரியில் மிகச் சிறந்த பேராசிரியர்கள் கல்வி கற்பித்ததினால் இவருடைய அறிவியல் கல்வி சிறப்பாக அமைந்தது. 1883 -ல் அக்கல்லூரியிலேயே பேராசிரியராக நியமிக்கப்பட்டார். கேம்பிரிட்சு பல்கலைக் கழகத்தில் ஆய்வுமுறை இயற்பியலில் (Experimental Physics) கேவண்டிசு ஆய்வுக்கூடப் பேராசிரியராக அமர்த்தப்பட்டார். இவருக்கு முன்பாக லார்டு ராலே அப்பணியில் பேராசிரியராக இருந்தார். 1884 முதல் 1918 வரை மதிப்பியல் பேராசிரியராக கெம்பிரிட்ஜிலும், லண்டனில் உள்ள ராயல் நிறுவனத்திலும் அமர்த்தப்பட்டார்[3]. ராயல் கழகத்தின் உறுப்பினராகவும் ஆனார். 1890-ல் ரோசு எலிசபெத் என்ற பெண்ணைத் திருமணம் புரிந்துகொண்டார். இவருக்கு ஒரு மகனும், மகளும் பிறந்தனர். இவருடைய மகன் 'ஜார்ஜ் பேஜட் தாம்சன்' மிகச்சிறந்த இயற்பியல் பேராசிரியராக விளங்கி பின்னாளில் 1937-ல் பரிசையும் வென்றார். ஆய்வுப்பணிகள் தாம்சன் முதன்முதலில் அணுவைப் பற்றி ஆராய்ச்சி செய்து " நீர்ச்சுழி வளையங்களின் இயக்கத்தில் ஆய்வு" (Treatise on the motion of Vortex Rings) என்ற ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார். அது 1884-ல் ஆதம்சு பரிசை இவருக்குப் பெற்றுத் தந்தது. 1886-ல்'இயற்பியல், வேதியலில் இயக்கவியலின் தாக்கம்'(Application of the Dynamics to Physics and Chemistry) என்ற ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார். 1892-ல் 'மின்சாரவியல், காந்தவியலில் அண்மை ஆய்வுகள் பற்றிய குறிப்புகள்' (Notes on Recent Researches in Electricity and Magnetism)என்ற நூலை வெளியிட்டார். ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் எழுதிய நூலின் விளக்கவுரையாக அவருடைய நூலுக்கு மூன்றாவது தொகுதியாக இது அமைந்திருந்தது. பேராசிரியர் பாண்டிங் (J.H.Poynting) என்பவருடன் இணைந்து இயற்பியலுக்கான பாடத்தைப் 'பொருளின் குணங்கள்'(Properties of Matter) என்ற தலைப்பில் நான்கு தொகுதிகளாக வெளியிட்டிருந்தார். கத்தோடு கதிர்கள் பற்றிய ஆய்வு தாம்சன் எதிர்மின் கதிர்க்குழாயின் (Cathode Ray Tube) உதவி கொண்டு எதிர் மின் கதிர்களைப் பற்றிய ஆய்வுகளில் எஈடுபட்டார். எதிர்மின்கதிர்களிலிருந்து எதிர்மின்தன்மை தரும் துகளைத் தனியே பிரிக்க இயலுமா என்பது இவருடைய முதல் ஆய்வு ஆகும். ஓர் எலக்ட்ரோ மீட்டரின் உதவி கொண்டு, குழாயில் பல வெட்டுத்துளைகளை உருவாக்கி காந்தப் புலத்தின் உதவி கொண்டு ஆராய்ந்தார். இக்கதிர்களிலிருந்து எதிர் மின்துகளைத் தனியே பிரிக்க இயலாது என்பதை உணர்ந்தார்[4]. இரண்டாவதாக மின்புலத்தினால் இக்கதிர்கள் எவ்வாறு தாக்கப்படுகின்றன என்பதைப் பற்றி அராய்ந்தார். அதற்கு வெற்றிடக் குழாயையும் ஒளிருன் தன்மையையும் பயன்படுத்தி ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். அதன் மூலம் எதிர்மின் கதிர்கள் மின்புலத்தால் தாக்கப்படுவதைக் கண்டறிந்தார்[5]. மின்னணு(எலக்ட்ரான்) கண்டறிதல் மூன்றாவது ஆய்வில் எலக்ட்ரானின் மின்னூட்ட -நிறை விகிதத்தைக் (Charge-mass ratio) கண்டறிய முற்பட்டார். இவர் எதிர்மின் துகள்களைத் 'துகள்கள்(Corpuscles)' என்றே கூறிவந்தார். பின்னாளில் ஜான்ஸ்டோன் ஸ்டோனி என்ற அறிவியலறிஞர் இதை மின்னணு என்று உறுதிப் படுத்தினார் [6]. பொருள்கள் மின்தன்மை கொண்டவை என்ற உண்மை இதிலிருந்து தோன்றியது. தற்கால அணுக் கொள்கையும், அணுவையொட்டிய இயற்பியல் விளைவுகளின் விளக்கமும் இதிலிருந்து தோன்றின. எனவே இவர் நவீன அணு இயற்பியலின் தந்தை என்று போற்றப்பட்டார். 1895-ல் 'கணிதவியலின் ஆதாரக் கூறுகள்','மின்சர, காந்தவியலின் கோட்பாடுகள்' என்ற இரு நூல்களையும் வெளியிட்டார். அவை 1921-ல் ஐந்தாவது வெளியீடாகவும் வெளியிடப்பட்டன. 1896-ல் தாம்சன் அமெரிக்கா சென்றர். இவருடைய அணமைக்கால ஆய்வுகளின் அடிப்படையில் அங்கு நான்கு சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இலண்டன் இராயல் கழகத்தில் நடைபெற்ற மாலைச் சொற்பொழிவின் போது தான் கண்டறிந்த மின்னணு துகளைப் பற்றி அறிவித்தார். 1897 ஏப்ரல் 30 வெள்ளியன்று இதை அறிவித்தார். 1903-ல் அவர் வெளியிட்ட "வாயுக்களின் வழியே மின்சாரம் கடத்துதல் " என்ற தலைப்பில் அதனை ஒரு நூலாகவும் வெளியிட்டார். 'கேவண்டிசு ஆய்வுக்கூடத்தில் தாம்சனின் முக்கியமான பெரிய நாள்கள்' என்ற தலைப்பில் இந்த நூல் இவருடைய மகன் ஜார்ஜ் தாம்சனால் பிற்காலத்தில் (1928,1933 ஆகிய ஆண்டுகளில்) இரண்டு பதிப்புகளில் வெளியிடப்பட்டது. 1904-ல் மீண்டும் அமெரிக்கா சென்றார். பொருள்கள் மற்றும் மின்சாரம் பற்றி யேல் பலகலைக் கழகத்தில் சொற்பொழிவாற்றினார். 'அணுவின் அமைப்பு' பற்றிய இவருடைய கருத்துகள் வெளியிடப்பட்டன. ஐசோடோப்புகள் மற்றும் நிறை நிறமாலை மானி நேர்மின் கதிர்களைக் கொண்டு வெவ்வேறு வகையான அணுக்களையும் மூலக்கூறுகளையும் பிரிப்பது பற்றிய ஆஸ்டன், டெம்ப்ஸ்டர் போன்ற அறிவியலறிஞர்களுடைய கருத்துகளின் மூலமாகப் பல ஐசோடோப்புகளைக் கண்டுபிடிக்க உதவும் ஒரு முறையைப் பற்றி விளக்கினார். நியான் வாயுவைப் பகுத்து இவர் செய்த ஆய்வின் மூலம் ஐசோடோப்புகளின் கலவையாக சில தனிமங்கள் இருப்பதைத் தெளிவாக்கினார். அதன் அடிப்படையில் இவருடைய மாணவர்கள் ஆசுடன், டெம்ப்ஸ்டெர் ஆகியோர் இணைந்து நிறை நிலைமானி (Mass spectrograph)உருவாக்கினர். 1906-ல் மின்னிறக்கக் குழாயில் வாயுக்களின் வழியே மின்சாரத்தைச் செலுத்தும்போது ஏற்படும் விளைவுகளைப் பற்றிய இவருடைய ஆய்வுகளுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஒளி, பெயர் தெரியாக் கதிர்கள், பீட்டா, காமாக் கதிர்களின் கதிர்ச் சிதறல்களின் அளவை அளந்தறிவதன் மூலம் அணுக்களில் உள்ள மின்னணுக்களின் எண்ணிக்கையைக் கண்டறிதல் ஆகியவற்றில் இவர் ஈடுபட்டார். அது போல நேர்மின் துகள்களின் தன்மை பற்றிய ஆய்வுகளிலும் ஈடுபட்டார். இந்த ஆய்வுகள் இவருடைய மாணவரான ரூதர்போர்டுக்கு உதவியாக அமைந்து இவருடைய ஆய்வுகளை அவர் தொடர வழி வகுத்தது. வெளியிட்ட நூல்கள் ஒளியின் அமைப்பு (The Structure of Light)-1907 பொருளின் துகள் கொள்கை (The Corpuscular Theory of Matter)-1913 நேர் மின்சாரக் கதிர்கள் (Positive Rays of Electricity)-1913 வேதியியலில் எலக்ட்ரான் (The electron in Chemistry)-1936 மறுசேகரிப்பும் பிரதிபலிப்புகளும்(தன் வரலாறு)(Recollection and Reflections)-1936 போன்ற பல நூல்களை எழுதி வெளியிட்டார். சிறப்புகள் 1908 -ல் இவருக்குத் தகுதி வரிசை மதிப்பு (Order of Merit) அளிக்கப்பட்டது. 1912 -ல் ஆங்கிலேயச் சங்கத்தின் தலைவரானார். ராயல் கழகத்தின்ன் சிறப்பு உறுப்பினர் பதவியும், அதன் பின் 1916 முதல் 1920 வரை அதன் தலைவர் பதவியும் அளிக்கப்பட்டது. 1918-ல் டிரினிடி கல்லூரியின் முதல்வரனார். கேவண்டிஷ் ஆராய்ச்சி சாலையை இவர் அங்கு நிறுவினார். ராயல் ஹ்யூஜெஸ் பதக்கங்கள் (1894,1902) வாசிங்டன் சுமித்சோனியன் நிறுவனத்தின் ஹாட்கின்ஸ் பதக்கம் (1902) ஸ்காட் பதக்கம்(பிலாடெல்பியா-1923) எனப் பல பதக்கங்களைப் பெற்று பெருமையடைந்தார். மறைவு தாம்சன் பல பரிசுகள் பெற்றுச் சிறந்து விளங்கி 85 ஆண்டுகள் வாழ்ந்து 1940 ஆகஸ்ட் மாதம் 30 ஆம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார். இங்கிலாந்தின் புகழ்பெற்ற பல மேதைகள் புதைக்கப்பட வெஸ்ட் மினிஸ்டர் அப்பே (West Minister Abbey) என்ற இடத்தில் இவருடைய உடல் அனைத்து மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவற்றையும் பார்க்க இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் உசாத்துணை 'அறிவியல் அறிஞர் ' என்ற தலைப்பில் 'அறிவியல் ஒளி' டிசம்பர் 2009 இதழ் கட்டுரை. மேற்கோள்கள் பகுப்பு:அறிவியலாளர்கள் பகுப்பு:1856 பிறப்புகள் பகுப்பு:1940 இறப்புகள் பகுப்பு:பிரித்தானிய இயற்பியலாளர்கள் பகுப்பு:ஆங்கிலேய அறிவியலாளர்கள் பகுப்பு:நோபல் இயற்பியற் பரிசு பெற்றவர்கள் பகுப்பு:ஆங்கிலேயக் கணிதவியலாளர்கள் பகுப்பு:ஆங்கிலேய இயற்பியலாளர்கள்
அணுவை முதலில் கண்டுபிடித்தவர் யார்?
சர் ஜோசப் ஜான் தாம்சன்
65
tamil
72016545a
திவான் பகதூர் டாக்டர் சர் ஆற்காடு இராமசாமி முதலியார்[1][2] (1887–1976) ஓர் இந்திய வழக்கறிஞரும் அரசியல்வாதியும் இராசதந்திரியும் ஆவார். இவர் நீதிக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவர். இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் இந்திய அரசாங்கத்தில் நிருவாகம், ஆட்சி சார்ந்த பல பதவிகளை வகித்தவர். வாழ்க்கைக் குறிப்பு இராமசாமி முதலியார் 1887இல் தென்னாற்காட்டில் ஒரு வசதி படைத்த அகமுடையார் குடும்பத்தில் பிறந்தார். இவரும் ஆற்காடு லட்சுமணசாமி முதலியாரும் இரட்டையர்கள் ஆவர்.[3] இவர் கர்னூலிலுள்ள முனிசிப்பல் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.[3] சென்னை கிருத்துவக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டமும் பயின்றார். சட்டப்படிப்பு முடிந்தபின், அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1920இல் சென்னை சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 1920–1926; 1931–1934 காலகட்டங்களில் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த ராமசாமி முதலியார் 1934இல் இடம்பெற்ற சென்னை மாகாணச் சட்டமன்றத் தேர்தலில், எஸ். சத்தியமூர்த்தியிடம் தோற்றுப் போனார். நீதிக்கட்சி இராமசாமி முதலியார், நீதிக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே (1917) கட்சியில் இருந்தவர். நீதிக்கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.[4] சூலை 1918இல் இராமசாமி முதலியார், மருத்துவர் டி. எம். நாயர், கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு ஆகிய மூவரடங்கிய குழு ஒன்று இங்கிலாந்து சென்று நீதிக்கட்சி சார்பில் வகுப்புவாரியான பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி அதற்கான சான்றுகளைப் பிரித்தானிய நாடாளுமன்றச் சீர்திருத்தச் செயற்குழு முன் சமர்ப்பித்தது.[5] இவர் நீதிக்கட்சியில் படிப்படியாக முன்னேறி அக்கட்சியின் மூளையென்று கருதப்படும் அளவுக்கு உயர்ந்தார்[6]. இந்தியாவில் வெவ்வேறு பகுதிகளிலும் உள்ள பிராமணர் அல்லாதோரை ஒன்றிணைக்கவும் அவர்களையும் உள்ளடக்கி மாநாடுகளை நடத்தவும் முயற்சிகள் மேற்கொண்டார்.[6] இவர் ஒரு சிறந்த பேச்சாளர். இவரது பேச்சுக்கள் ஊக்கம் மிக்கவையாக அமைந்திருந்தன.[6] நவம்பர் 8, 1926இல் நடைபெற்ற சென்னை சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி 98இற்கு 21 இடங்களை மட்டுமே பிடித்து மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது.[7] தோல்வியடைந்தவர்களில் முதலியாரும் ஒருவர். தற்காலிகமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்று பி. என். ராமன் பிள்ளைக்குப் பதில் நீதிக்கட்சியின் ஜஸ்டிஸ் செய்தித் தாளின் பொறுப்பை ஏற்று நடத்தினார்.[6] இவரது மேற்பார்வையின் கீழ் அச்செய்தித் தாள் பிரபலமடைந்து அதன் விற்பனையும் அதிகமானது.[6] மார்ச் 1, 1929இல் இவரும் நீதிக்கட்சியின் மற்றொரு முக்கியத் தலைவருமான சர் ஏ. டி. பன்னீர்செல்வமும் நீதிக்கட்சி சார்பில் கோரிக்கைகளை சைமன் குழு முன் வைத்தனர்.[6] இவர் 1928 முதல் 1930 வரை சென்னை நகர மேயராகப் பணிபுரிந்தார். 1935இல் அரசின் வரித்துறையில் நியமிக்கப்பட்டதால் ஜஸ்டிஸ் செய்தித் தாளின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார்.[6] இவர் பிரித்தானிய அரசின் இந்தியத்துறை அமைச்சரின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். பெப்ரவரி 25, 1937இல் பக்கிங்ஹாம் அரண்மனையில் இவருக்கு சர் பட்டம் வழங்கப்பட்டது.[8][9] அனைத்திந்தியப் பிராமணரல்லாதோர் இயக்கம் இராமசாமி முதலியாருக்கு ஷாகு மகாராஜுடனும் மகாராட்டிரப் பிராமணரல்லாதோர் கூட்டத் தலைவர்களோடும் மற்ற வட இந்தியப் பிராமணரல்லாதோர் கூட்டத் தலைவர்களோடும் நட்புமுறையிலான நல்ல உறவு இருந்தது. ராமசாமி முதலியார் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் உள்ள பிராமணரல்லாதோர் அமைப்புகளின் தலைவர்களை ஒருங்கிணைப்பதிலும் அவர்களுக்கான மாநாடுகள் நடத்துவதற்கும் உதவினார்.[10] திசம்பர் 18, 1922இல் சதாராவில் இரண்டாம் இராஜாராமின் தலைமையில் நடந்த பிராமணரல்லாதோர் மாநாட்டில் இவரும் பங்கேற்றார்.[10] திசம்பர் 26, 1924இல் பெல்காமில் நடந்த அனைத்திந்தியப் பிராமணரல்லாதோர் மாநாட்டில் கலந்து கொண்டு இவர் ஆற்றிய சொற்பொழிவு அனைவராலும் பாராட்டிப் பேசப்பட்டது. பெப்ரவரி 8, 1925இல் நடந்த ஏழாவது பிராமணரல்லாதோர் மாநாட்டில் கலந்து கொண்டு பிராமணரல்லாதவர்களிடம் இருக்க வேண்டிய ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.[10][11] 1925இல் சர் பி. டி. தியாகராய செட்டியின் மறைவுக்குப்பின் ஷாகு மஹாராஜின் சத்ய ஷோதக் சமாஜையும் நீதிக்கட்சியையும் இணைக்கும் பாலமாக இருந்தவர் முதலியார் ஒருவர் மட்டுமே. திசம்பர் 19, 1925இல் சென்னை விக்டோரியா மண்டபத்தில் அனைத்திந்தியப் பிராமணரல்லாதோர் மாநாடு நடத்த பனகல் அரசருக்குத் துணை புரிந்தார். திசம்பர் 26, 1925இல் இரண்டாவதாக மறுபடியும் ஒரு மாநாட்டை அமராவதியில் நடத்தினார். அது இரு தொடர்களாக நடந்தது. முதல் கூட்டத்தொடருக்குக் கோலாப்பூர் மகாராசாவும் இரண்டாவது தொடருக்குப் பனகல் அரசரும் தலைமை தாங்கினர். இரண்டாவது தொடரில் முதலியார் பேசியது:- பிராமணரல்லாதோர் இயக்கத்தினைப் பற்றி நான் விளக்க வேண்டிய கட்டத்தை அது தாண்டிவிட்டது. அதன் செயல்பாடுகள் பம்பாயிலிருந்து சென்னை வரையும் விந்திய மலையிலிருந்து கன்னியாகுமரி வரையும் பரவியுள்ளன. நாடு முழுவதும் அதன் கொள்கைகள் பரவிய மின்னல் வேகமும் வீச்சுமே இயக்கத்தின் நிலையை விளக்கிவிடும். முதலியாரின் பேச்சைத் தி இந்து நாளிதழ், பிற மாகாணத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற அவரது விருப்பம் இந்த அளவுக்கு அவரது கற்பனையைத் தூண்டியிருக்கிறது என விமர்சனம் செய்தது. போர்க்கால அமைச்சரவையில் 1939இல் இரண்டாம் உலகப்போர் மூண்டபோது இராமசாமி முதலியார், வைசிராயின் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[12][13] ஜூன் 1942ல் அவருக்கு கே. சி. எசு. ஐ (KCSI) பட்டம் வழங்கப்பட்டது. சூலை 1942இல் பிரித்தானியப் பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சிலின் போர்க்கால அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்ட இரு இந்தியரில் இவரும் ஒருவர். பிரித்தானியரின் ஆட்சிக்குட்பட்ட மற்றப் பகுதிகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமைகளும் சலுகைகளும் இவர்களுக்கும் சமமாக வழங்கப்பட்டிருந்த்து.[12][13] டாக்டர் இரண்டாம் உலகப்போர் காலத்தில் இவர் ஆற்றிய தொண்டினைப் பாராட்டி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இவருக்கு "டாக்டர் ஆப் சிவில் லா" (Doctor or Civil Law) என்னும் பட்டத்தை 1945ஆம் ஆண்டில் வழங்கியது. [14] ஐக்கிய நாடுகள் பொருளாதார, சமூக மன்றத் (ECOSOC) தலைவராக 1945இல் ஏப்ரல் 25 முதல் சூன் 26 வரை சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் மாநாட்டில் இந்தியப் பிரதிநிதியாக முதலியார் கலந்து கொண்டார். அங்கு பொருளாதார, சமுதாயப் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்த செயற்குழுக் கூட்டதிற்குத் தலைமை தாங்கினார்.[15] சனவரி 23, 1946 அன்று சர்ச் ஹவுஸ், இலண்டனில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொருளாதார, சமூக மன்றக் கூட்டத்தில் மன்றத்தின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[16][17] முதலியாரின் தலைமையில் பெப்ரவரி 1946இல் நடந்த மன்றக் கூட்டத்தில் பன்னாட்டுச் சுகாதார மாநாடு ஒன்று நடத்தப்படவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.[18] சூன் 19, 1946இல் பன்னாட்டுச் சுகாதார மாநாடு நடந்தது. அதனை முதலியார் தொடங்கி வைத்தார். அம்மாநாட்டிற்றான் உலக சுகாதார அமைப்பு (WHO) உருவானது. அவ்வமைப்பின் சட்டதிட்டங்கள் விவாதிக்கப்பட்டு 61 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.[19] பொருளாதார, சமூக மன்றத் தலைவராக ஓராண்டு பணிபுரிந்து பின் பணிக்காலம் முடிவடைந்ததால் இந்தியாவுக்குத் திரும்பி மைசூரின் முதலமைச்சராகப் (திவான்) பதவியேற்றார்.[20] மைசூர் மகாராஜா ஜயச்சாமராஜ வாடியாருக்கு சுதந்திர இந்தியாவுடன் இணைய வேண்டாமென ஆலோசனை கூறினார்.[21][22]. படைப்புகள் குறிப்புகள் மேற்கோள்கள் Cite has empty unknown parameter: |coauthors= (help) பகுப்பு:சென்னை நகரத்தந்தைகள் பகுப்பு:நீதிக்கட்சித் தலைவர்கள் பகுப்பு:1887 பிறப்புகள் பகுப்பு:1976 இறப்புகள் பகுப்பு:மைசூர் திவான்கள்
வின்ஸ்டன் சர்ச்சில் எந்த நாட்டை சேர்ந்தவர்?
பிரித்தானிய
1,338
tamil
3e9696e57
விலங்குகள் (Animals), அனிமாலியா (Animalia) அல்லது மீடாசொவா (Metazoa) இராச்சியத்தின் பெரும்பாலும் பலசெல் கொண்ட, மெய்க்கருவுயிரி உயிரினங்களின் ஒரு மிகப் பெரும் பிரிவாகும். அவை வளர்ச்சியுறுகையில் அவற்றின் உடல் திட்டம் இறுதியில் நிலைபெறுகிறது. சில தங்களது வாழ்க்கையின் பிற்பகுதியில் உருமாற்ற நிகழ்முறைக்குள் செல்கின்றன. அநேக விலங்குகள் இடம்பெயரும் தன்மையுடையவை. அவற்றால் தன்னிச்சையாகவும் சுதந்திரமாகவும் நகர முடியும். பல விலங்குகள் கொன்றுண்ணிப் பழக்க முடையவையாகவும் உள்ளன. அதாவது தங்கள் வாழ்க்கைக்கு அவை பிற உயிரினங்களை சாப்பிட்டாக வேண்டும். பல அறியப்பட்ட விலங்கு தொகுதிகள் புதைபடிவ பதிவுகளில் சுமார் 542 மில்லியன் வருடங்களுக்கு முன்னதாக கேம்பிரியன் வெடிப்பு சமயத்தில் கடல்வாழ் இனங்களாகக் காட்சியளிக்கின்றன. பெயர்வரலாறு "அனிமல்" என்ற ஆங்கில வார்த்தை அனிமலே என்கிற இலத்தீன் வார்த்தையில் இருந்து பிறந்ததாகும். இது அனிமா என்னும் முக்கிய மூச்சு அல்லது ஆன்மா எனப் பொருள் கொண்ட வார்த்தையில் இருந்து தோற்றம் செய்யப்பட்டது. அன்றாட பேச்சுவழக்குப் பயன்பாட்டில், இந்த வார்த்தை பொதுவாக மனிதரல்லாத விலங்குகளைக் குறிக்கிறது. விலங்கு ராச்சியம் (Kingdom Animalia) என்னும் இந்த வார்த்தையின் உயிரியல் வரையறை மனிதன் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களையும் குறிக்கிறது. பண்புகள் பிற உயிரினங்களில் இருந்து தங்களைத் தனித்துக் காட்டும் பல பண்புகளை விலங்குகள் கொண்டுள்ளன. விலங்குகள் யூகார்யோடிக்குகளாகவும் பலசெல் உயிரினங்களாகவும்[3] உள்ளன (ஆயினும் காணவும் மிக்சோசோவா). இவை அவற்றை பாக்டீரியாக்கள் மற்றும் அநேக ஓர்செல் உயிரினங்களில் இருந்து பிரிக்கின்றன. இவை கொன்றுண்ணி பழக்கமுடையவை.[4] பொதுவாக ஒரு உள்ளறையில் உணவு செரித்தல் நிகழ்பவை. இது தாவரங்கள் மற்றும் பாசி வகைகளில் இருந்து அவற்றை பிரிக்கின்றன (சில கடற்பாசிகள் ஒளிச்சேர்க்கைதிறனும் நைட்ரஜன் நிலைப்பாட்டு திறனும் கொண்டிருக்கின்றன என்றாலும்).[5] உறுதியான செல் சுவர்கள் இல்லாதிருக்கும் வகையில் இவை தாவரங்கள், பாசிகள் மற்றும் பூஞ்சைகளில் இருந்தும் வேறுபடுகின்றன.[6] எல்லா விலங்குகளும் குறிப்பிட்ட வாழ்க்கை கட்டங்களில் இடம்பெயர்பவையே [7] என்று சொல்லலாம். அநேக விலங்குகளில், முளைக்கருவானது ஒரு கருக்கோளம் என்னும் கட்டத்திற்கு செல்கிறது. இது விலங்குகளுக்கு மட்டுமேயான தனித்துவமான பண்பாகும். உடலமைப்பு விலங்குகள் தனித்தனி திசுக்களாகப் பிரிக்கப்பட்ட உடலமைப்புகளைக் கொண்டிருக்கின்றன. ஆயினும் கடற்பாசிகள் (துளையுடலிகள் (Porifera) தொகுதி) மற்றும் பிளகோசோவா ஆகிய மிகக் குறிப்பிடத்தக்க சில விதிவிலக்குகளும் உண்டு. சுருங்கக் கூடியதும் நகர்வை கட்டுப்படுத்தத்தக்கதுமான தசைகள், மற்றும் சமிக்ஞைகளை அனுப்புகிறதும் பரிசீலிப்புக்குட்படுத்துவதுமான நரம்பு மண்டலத் திசு ஆகியவை இந்த உடலமைப்பில் அடங்கும். பொதுவாக ஒரு உள்ளமைந்த செரிமான அறையும் ஒன்று அல்லது இரண்டு திறப்புகளுடன் அமைந்திருக்கும். இந்த வகை ஒழுங்கமைப்புடன் கூடிய விலங்குகள் மெடாசோவான்கள் (பலசெல் உயிரினங்கள்) என்று அழைக்கப்படுகின்றன. அல்லது முந்தையது பொதுவாக விலங்குகளைக் குறிப்பிடப் பயன்படும் இடங்களில் இமெடாசோவான்கள் (eumetazoans) என்று அழைக்கப்படுகின்றன. இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சி ஏறக்குறைய எல்லா விலங்குகளுமே ஒரு வகை பால்முறை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. அவை ஒரு சில சிறப்பியல்பான இனப்பெருக்க செல்களைக் கொண்டுள்ளன. இவற்றில் சிறிய நகரும் விந்தணுக்கள் அல்லது பெரிய நகரா சினை முட்டைகளை உருவாக்க குன்றல் பிரிவு(meiosis) நடக்கிறது. இவை ஒன்றிணைந்து கருமுட்டைகளை (zygotes) உருவாக்கி, அவை புதிய தனிஉயிர்களாய் வளர்ச்சியுறுகின்றன. பாலில்லா இனப்பெருக்கத் திறனையும் பல விலங்குகள் கொண்டிருக்கின்றன. (பார்தெனோஜெனிசிஸ் மூலம்) இனப்பெருக்க திறனுடைய முட்டைகள் கலவியின்றி உற்பத்தி செய்யப்படுகின்றன, அல்லது சில சந்தர்ப்பங்களில் சிறுகூறாகல் (fragmentation) மூலமாகவும் இது நடைபெறுகின்றது. ஒரு கருமுட்டையானது கருக்கோளம் (blastula) என்னும் ஒரு உள்ளீடற்ற கோளத்திற்குள் ஆரம்பத்தில் வளர்கிறது. இது மறுஒழுங்கமைவுக்கும் வேறுபாட்டிற்கும் (differentiation) உள்ளாகிறது. கடற்பாசிகளில், கருக்கோள லார்வாக்கள் ஒரு புதிய இடத்திற்கு நீந்திச் சென்று ஒரு புதிய கடற்பாசி இனமாக உருவாகிறது. பல பிற குழுக்களில், கருக்கோளமானது இன்னும் சிக்கலான மறுஒழுங்கமைவுக்குள் உட்செல்கிறது. இது முதலில் உள்மடிந்து ஒரு செரிமான அறை, மற்றும் இரண்டு தனியான நுண்ணுயிர் அடுக்குகள் – ஒரு வெளிப்புற எக்டோதெர்ம் (புற அடுக்கு) மற்றும் ஒரு உள்முக என்டோதெர்ம் (அக அடுக்கு) – கொண்ட ஒரு ஈரடுக்கு கருக்கோளத்தை (gastrula) உருவாக்குகிறது. இந்த திசு அடுக்குகள் பின் வேறுபாட்டிற்கு உள்ளாகி, திசுக்கள் மற்றும் உறுப்புகளாக உருவாகின்றன. உணவு மற்றும் சக்திக்கான ஆதாரம் மிருகவேட்டை என்பது வேட்டையாடும் விலங்கு (வேட்டையாடுகிற ஒரு கொன்றுண்ணி பழக்க விலங்கு) தனது இரையை (தாக்குதலுக்கு இலக்காகும் உயிரினம்) உணவாகக் கொள்ளும் ஒரு உயிரியல் பரிமாற்ற நிகழ்வாகும். வேட்டை விலங்குகள் தங்களது இரையை உண்ணுவதற்கு முன்னர் அவற்றைக் கொல்லலாம் அல்லது கொல்லாமலும் போகலாம். ஆனால் மிருகவேட்டை எப்போதும் இரை இறப்பதில் முடியும். நுகர்வில் இன்னொரு முக்கிய பிரிவு பிணந்திண்ணி (detritivory) வகை ஆகும். அதாவது இறந்த உறுப்பாக்கமுடைய உணவை நுகர்வது. சமயங்களில் இரண்டு உண்ணும் பழக்கத்திற்கும் இடையில் பேதம்பிரிப்பது சிரமமாகி விடும். உதாரணமாக ஒட்டுண்ணி உயிர்வகைகள் ஒரு உயிரினத்தை வேட்டையாடி உண்கின்றன. பின் சிதைவுறும் அந்த உடலை தமது வழித்தோன்றல்களுக்கு உணவாக்கும் வகையில் அதன் மீது தங்களது முட்டைகளை இடுகின்றன. ஒன்று மற்றொன்றின் மீது அளிப்பதான தேர்ந்தெடுத்த அழுத்தங்கள் வேட்டையாடும் விலங்குக்கும் இரைக்கும் இடையில் பரிணாமரீதியான ஆயுதப் போட்டிக்கு இட்டுச் சென்றிருக்கிறது. இது பல்வேறு மிருகவேட்டை-எதிர்ப்பு தகவமைவுகளுக்கு வழிவகுத்துள்ளது. அநேக விலங்குகள் சூரிய ஒளி சக்தியில் இருந்து மறைமுகமாக உணவைப் பெறுகின்றன. தாவரங்கள் இந்த சக்தியை ஒளிச்சேர்க்கை எனும் ஒரு நிகழ்முறையைப் பயன்படுத்தி சூரிய ஒளியை எளிய சர்க்கரைகளாக மாற்றிப் பயன்படுத்துகின்றன. கரியமில வாயு (CO2) மற்றும் நீர் (H2O) மூலக்கூறுகளுடன் தொடங்கி, ஒளிச்சேர்க்கையானது சூரிய ஒளி சக்தியை குளுகோஸ் (C6H12O6) பிணைப்புகளில் சேகரிக்கப்படும் வேதியியல் சக்தியாக மாற்றி பிராண வாயுவை (O2) வெளியிடுகிறது. இந்த சர்க்கரைகள் பின் கட்டுமான அடுக்குகளாகப் பயன்பட்டு, தாவரம் வளர அனுமதிக்கின்றன. விலங்குகள் இந்த தாவரங்களை உண்ணும்போது (அல்லது தாவரங்களை உண்டிருக்கக் கூடிய பிற விலங்குகளை உண்கையில்), தாவரத்தால் உருவாக்கப்பட்ட சர்க்கரைகள் விலங்கினால் பயன்படுத்தப்படுகிறது. அவை நேரடியாக விலங்கு வளர பயன்படுத்தப்படலாம், அல்லது உடைக்கப்பட்டு, சேகரிக்கப்பட்ட சூரிய ஒளி சக்தியை வெளியிட்டு, விலங்குக்கு நகர்வுக்கு அவசியமான சக்தியை கொடுக்கலாம். இந்த நிகழ்முறை கிளைகோலைசிஸ் என்று அழைக்கப்படும். மூல ஆதாரங்கள் மற்றும் புதைபடிவ பதிவு விலங்குகள் பொதுவாக ஒரு சவுக்குயிர் யூகார்யோட்டில் இருந்து பரிணாமமுற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவற்றின் மிக நெருங்கிய வாழும் உறவினர்களாகக் கருதப்படுவது சோவனொஃபிளாகெல்லேட்டுகள் என்கிற, சில கடற்பாசிகளின் சோவனொசைட்டுகளை ஒத்த உருவமைப்பியல் கொண்ட கழுத்துப்பட்டியுடனான சவுக்குயிர்களாகும் (flagellates). செல்கூறு ஆய்வுகள் விலங்குகளை ஒபிஸ்தோகோன்ட்ஸ் என்னும் சிறப்புகுழுவில் வகைப்படுத்துகின்றன. இதில் சோவனொஃபிளாகெல்லேட்டுகள், பூஞ்சைகள் மற்றும் கொஞ்சம் சிறிய ஒட்டுண்ணி வகை ஒருசெல் உயிரினங்கள் ஆகியவை அடங்கும். அநேக விலங்குகளின் முதிர்ந்த விந்தணுவில் இருப்பது போன்று நகரும் செல்களில் கசையிழைகள் (flagellum) பிற்பக்க அமைவு கொண்டிருப்பதில் இருந்து இந்த பெயர் வருகிறது. பிற யூகார்யோட்டுகள் முற்பக்க கசையிழைகள் கொண்டிருக்க விழைகின்றன. விலங்குகளை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய முதல் புதைவுகள் கேம்ப்ரியன் காலத்துக்கு முந்தைய காலத்தினதாய் தோன்றுகின்றன. இவை சுமார் 610 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த புதைவுகளாகும். ஆயினும், இவை பிற்கால புதைவுகளுடன் தொடர்புபடுத்த கடினமானவையாக உள்ளன. சில நவீன விலங்கு தொகுதிகளுக்கு முன்னறிவிப்பினை குறித்ததாய் இருந்தாலும் கூட அவை தனித்தனியான குழுக்களைச் சேர்ந்தவையாக இருக்கலாம்; அவை விலங்குகளே அல்ல என்பதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளது. அவை தவிர, அநேக அறியப்பட்ட விலங்கு தொகுதிகள் சுமார் 542 மில்லியன் வருடங்களுக்கு முன்னதாக கேம்ப்ரியன் காலத்தில் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் தோற்றம் செய்கின்றன. கேம்ப்ரியன் வெடிப்பு என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வானது, வெவ்வேறு குழுக்கள் இடையிலான ஒரு துரித விலகுபாதையைக் குறிக்கிறதா அல்லது புதைவடிவத்தை சாத்தியமாக்கிய சூழ்நிலைகளிலான ஒரு மாற்றத்தைக் குறிக்கிறதா என்பது இன்னமும் விவாதிக்கப்படும் ஒன்றாகவே உள்ளது. ஆயினும் புதைபடிவங்கள் மூலம் ஆதிகாலத்து வாழ்க்கை வடிவங்களை ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்களும் (paleontologists) மற்றும் நிலநூல் வல்லுநர்களும் முன்னர் கருதப்பட்டதை விட வெகு முன்னதாகவே, சாத்தியமான அளவில் ஏறக்குறைய 1 பில்லியன் வருடங்களுக்கும் முன்னதாக, விலங்குகள் இருந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர். தோனியன் சகாப்தத்தில் காணப்பட்ட தடங்கள் மற்றும் பொந்துகள் போன்ற புதைவு சுவடுகள், மெடோசோவான்கள் போன்ற டிரிப்ளோபிளாஸ்டிக் புழுக்கள் ஏறக்குறைய மண்புழுக்கள் அளவுக்கு பெரியதாகவும் (சுமார் 5 மிமீ அகலம்) சிக்கலானதாகவும் இருந்திருக்கலாம் என்பதை சுட்டிக் காட்டுகின்றன.[8][9][10] விலங்குத் தொகுதிகள் துளையுடலிகள் (Porifera) கடற்பாசிகள் (துளையுடலிகள்) ஆரம்பத்தில் பிற விலங்குகளிடம் இருந்து பிரிந்து தோன்றியதாகத் தான் வெகு காலம் கருதப்பட்டு வந்தது. மேலே குறிப்பிட்டதைப் போல, அவற்றில் பிற பல விலங்கு தொகுதிகளில் காணப்படும் சிக்கலான உடலமைப்பு இல்லாதிருக்கிறது. அவற்றின் செல்கள் வகையீடுற்றவை. ஆனால் அநேக சந்தர்ப்பங்களில் தனித்தனி திசுக்களாக ஒழுங்கமைக்கப்படாததாய் இருக்கிறது. கடற்பாசிகள் ஒட்டிவாழ்பவை. பொதுவாக நீரை துளைகள் வழியே இழுப்பதின் மூலம் உணவு உட்கொள்கின்றன. ஆயினும் 2008 ஆம் ஆண்டில் 21 இனங்களில்[11] 150 மரபணுக்களில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று சிகை ஜெல்லிக்கள் தான் விலங்குகளின், குறைந்தபட்சம் அவற்றின் 21 தொகுதிகளின், அடிப்படையான வழிமரபாய் இருக்கலாம் என்று வெளிப்படுத்துகிறது. இரண்டுக்கும் தனித்தனி திசுக்கள் உண்டு, ஆனால் அவை உறுப்புகளாக ஒழுங்கமைக்கப்படவில்லை. புற அடுக்கு (ectoderm) மற்றும் அகஅடுக்கு (endoderm) ஆகிய இரண்டு முக்கிய நுண்ணியிர் அடுக்குகள் மட்டுமே உண்டு. அவற்றுக்கு இடையில் செல்கள் மட்டும் சிதறிக் காணப்படும். உள்ளபடியே, இந்த விலங்குகள் சில சமயங்களில் ஈரடுக்கு (diploblastic) விலங்குகள் என்று அழைக்கப்படுகின்றன. சின்னஞ்சிறு பிளாகோசோவான்கள் ஒத்தவையாக இருக்கும். ஆனால் அவற்றுக்கு நிரந்தரமான செரிமான அறை ஒன்று இருக்காது. எஞ்சிய விலங்குகள் பைலேடரியா என்னும் ஒற்றைத்தொகுதி குழுவை உருவாக்குகின்றன. அநேக பாகத்திற்கு, அவை இருசமபக்க ஒத்தமைவுடையவையாக இருக்கின்றன. பெரும்பாலும் உணவு உட்கொள்ளும் மற்றும் புலனுணர்வு உறுப்புகளுடனான சிறப்பியல்பான தலையைக் கொண்டுள்ளன. உடம்பு மூவடுக்கு கொண்டதாக இருக்கிறது. அனைத்து மூன்று நுண்ணுயிர் அடுக்குகளும் நன்கு-வளர்ச்சியடைந்தவையாக இருக்கின்றன. திசுக்கள் நல்ல வகைப்பட்ட உறுப்புகளை உருவாக்குகின்றன. செரிமான அறை இரண்டு திறப்புகளைக் கொண்டுள்ளது. ஒரு வாய் மற்றும் ஒரு மலத்துவாரம், கொயலம் (coelom) அல்லது சூடோகொயலம் (pseudocoelom) என்னும் இன்னொரு உள்முக உடல் துவாரமும் உள்ளது. ஆயினும் இந்த பண்புகளில் ஒவ்வொன்றுக்கும் விதிவிலக்குகள் உண்டு – உதாரணமாக முதிர்ந்த முட்தோலிகள் (echinoderm) ஆரவகையில் இருசமபக்கம் ஒத்தவையாக இருக்கும். சில ஒட்டுண்ணி புழுக்கள் மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட உடல் அமைப்புகளைக் கொண்டிருக்கும். பைலேடரியாவுக்கு உள்ளான உறவுகள் மீதான நமது புரிதலில் மரபணு ஆய்வுகள் குறிப்பிடத்தக்க மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளன. அநேகமானவை டியூடெரோஸ்டோம்கள் மற்றும் புரோடோஸ்டோம்கள் என்னும் இரண்டு முக்கிய வம்சாவளியைச் சேர்ந்தவையாகத் தோன்றுகின்றன. டியூடெரோஸ்டோம்கள் டியூடெரோஸ்டோம்கள் புரோடோஸ்டோம்கள் என்று அழைக்கப்படும் பிற பைலேடரியாக்களில் இருந்து பல வழிகளில் வேறுபடுகின்றன. இரண்டிலுமே ஒரு முழுமையான செரிமான பாதை உண்டு. ஆயினும், புரோடோஸ்டோம்களில் ஆரம்ப துவாரம் (ஆர்சென்டெரான்) வாயாக வளர்ச்சியுறுகிறது, மலத்துவாரம் தனியாக உருவாகிறது. டியூடெரோஸ்டோம்களில் இது தலைகீழாய் நடக்கிறது. டியூடெரோஸ்டோம்கள் ஒரு வயிற்றுப்பக்கத்தை விட, முதுகுப்பக்க நரம்பு நாணை கொண்டுள்ளன. மற்றும் அவற்றின் முளைக்கருக்கள் ஒரு வேறுபட்ட பிளவுக்குள் உட்செல்கின்றன. இவையெல்லாம் டியூடெரோஸ்டோம்களும் புரோடோஸ்டோம்களும் தனித்தனியான, ஒற்றைத்தொகுதி வம்சாவளிகள் என்பதைக் காட்டுகின்றன. டியூடெரோஸ்டோம்களின் முக்கிய தொகுதி முட்தோலிகள் (Echinodermata) மற்றும் முதுகெலும்புள்ளவை (Chordate)ஆகியவை. முந்தையது ஆரவடிவில் இருசமபக்கம் ஒத்தவை, நட்சத்திர மீன், கடல் முள்ளெலி, மற்றும் கடல் வெள்ளரிகள் போன்ற கடல்நீரில் மட்டும் வாழ்கின்றவை. பிந்தையவை முதுகெலும்பு கொண்ட விலங்குகளான வெர்டிப்ரேட்டுகள் வகையினால் ஆதிக்கம் செலுத்தப்பட்டவையாகும். இவற்றில் மீன், நீர்நில வாழ்விகள், ஊர்வன, பறவைகள், மற்றும் பாலூட்டிகள் ஆகியவை அடங்கும். சடோநாதா அல்லது அம்பு புழுக்களும் டியூடெரோஸ்டோம்களாக இருக்கலாம். ஆனால் சமீபத்திய ஆய்வுகள் அவற்றின் புரோடோஸ்டோம் தொடர்புகளை கூறுகின்றன. எக்டிசாசோவா எக்டிசாசோவாக்கள் புரோடோஸ்டோம்கள் ஆகும். இவை சிறகுதிர்ப்பது அல்லது தோலுரிவதன் (ecdysis) மூலம் வளரும் பொதுவான பழக்கத்தால் இந்த பெயரிடப்பட்டன. மிகப்பெரும் விலங்கு தொகுதியான கணுக்காலிகள் (Arthropoda) இதற்கு சொந்தமானதே. இதில் பூச்சிகள், சிலந்திகள், நண்டுகள் மற்றும் அவற்றின் உறவினங்கள் அடக்கம். இந்த அனைத்து உயிரினங்களும் பொதுவாக இணை ஒட்டுறுப்புகளுடன் உடல் தொடர்ச்சியான பிரிவுகளாகப் பகுக்கப்பட்டு கொண்டுள்ளன. ஓனிகோபோரா மற்றும் டார்டிகிராடா ஆகிய இரண்டு சிறு தொகுதிகளும் கணுக்காலிகளின் (Arthropoda) நெருங்கிய உறவினங்கள். இவை இதே பண்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. எக்டிசாசோவாக்கள் நெமடோடா அல்லது உருளைப்புழுக்களையும் அடக்கியிருக்கின்றது. இவை இரண்டாவது மிகப்பெரிய விலங்கு தொகுதியாகும். உருளைப்புழுக்கள் பொதுவாக நுண்ணுயிர்களாக இருப்பதோடு, ஏறக்குறைய நீர் இருக்கும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் காணப்படக்கூடியவை. ஏராளமானவை முக்கியமான ஒட்டுண்ணிகள். நெமடோமார்பா அல்லது குதிரைமுடி புழுக்கள், மற்றும் கினோரின்ஜா, பிரியபுலிடா, மற்றும் லோரிசிஃபெரா ஆகியவை அவற்றுக்குத் தொடர்புடைய சிறு தொகுதிகள் ஆகும். இந்த பிரிவுகள் சூடோகொயலம் (pseudocoelom) என்று அழைக்கப்படுகிற ஒரு குறைந்துபட்ட கொயலமைக் கொண்டுள்ளன. புரோடோஸ்டோம்களின் எஞ்சிய இரண்டு பிரிவுகளும் சில சமயங்களில் ஒன்றாக ஸ்பைரலியா என்று ஒரே பிரிவாக பகுக்கப்படுகின்றது. காரணம் இரண்டிலுமே முளைக்கருக்கள் சுருள் பிளவுடன் உருவாகின்றன. பிளாட்டிசோவா பிளாட்டிசோவாவில் தட்டைப்புழுவினம் (Platyhelminthes), தட்டைப்புழுக்கள் ஆகிய தொகுதிகள் அடக்கம். இவை ஆரம்பத்தில் மிக ஆதி காலத்து பைலேட்டரியா வகைகளில் சிலவாகக் கருதப்பட்டன. ஆனால் அவை அதனை விட சிக்கலான மூதாதையரிடம் இருந்து வளர்ச்சியுற்றிருக்கலாம் என்பதாக இப்போது கருதப்படுகிறது.[12] ஒட்டுயிர் தட்டைப் புழுக்கள் (flukes) மற்றும் நாடாப்புழுக்கள் போன்ற ஏராளமான ஒட்டுண்ணிகள் இந்த குழுவில் அடங்கியுள்ளன. தட்டைப் புழுக்கள் உடற்குழியற்றவை.[13] பிற பிளாட்டிசோவா தொகுதிகள் பெரும்பாலும் நுண்ணுயிரி வகைகளாக உடற்குழி உள்ளவை (pseudocoelomate) களாக இருக்கின்றன. இவற்றில் மிகப் பிரதானமானவை ரோடிஃபெரா உயிரினங்கள் ஆகும். இவை நீர்ப்புற சூழ்நிலைகளில் மிகச் சாதாரணமாய் காணப்படும். இவற்றில் அகான்தோசெபாலா அல்லது ஊசிமுனைத்-தலை புழுக்கள், நதோஸ்டோமுலிதா, மைக்ரோநதோசோவா, மற்றும் சாத்தியமான அளவில் சைக்ளிஃபோரா ஆகியவையும் அடங்கும்.[14] இந்த பிரிவுகள் எல்லாம் சிக்கலான தாடைகள் கொண்டிருப்பதைப் பகிர்ந்து கொள்கின்றன. இதிலிருந்து இவை நாதிஃபெரா (Gnathifera) என்று அழைக்கப்படுகின்றன. லோபோட்ரோசாசோவா லோபோட்ரோசாசோவா மெல்லுடலிகள் (Mollusca) மற்றும் வத்தசைப்புழுக்கள் (Annelida) ஆகிய இரண்டு மிக வெற்றிகரமான விலங்கு தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது.[15][16] விலங்கு தொகுதியில் இரண்டாவது மிகப்பெரியதான முன்னையதில், நத்தைகள், கிளிஞ்சல்கள், மற்றும் கடற்கணைகள் ஆகியவை அடக்கம். பிந்தையதில் மண்புழுக்கள் மற்றும் அட்டைகள் போன்ற கூறுபிரிந்த புழுக்கள் அடங்கியிருக்கின்றன. இந்த இரண்டு பிரிவுகளும் அவற்றில் பொதுவாக இருக்கும் ட்ராகோபோர் லார்வாக்களின் காரணமாக நெடுங்காலமாக நெருங்கிய உறவினங்களாக கருதப்படுகின்றன. ஆனால் வத்தசைப்புழுவினம் (Annelida) கணுக்காலிகளுக்கு (Arthropoda) நெருங்கியவையாகக் கருதப்படுகின்றன.[17] ஏனென்றால் இரண்டும் கூறுபட்ட உடல் கொண்டவை.[18] லோபோட்ரோசாசோவா நெமர்டியா அல்லது ரிப்பன் புழுக்கள், சிபுன்குலா, மற்றும் லோபோபோர் என்று அழைக்கப்படும் வாயைச் சுற்றி அமைந்த ஒரு பிசிர் உரோம அமைப்பு விசிறியைக் கொண்டிருக்கும் பல தொகுதிகள் ஆகியவற்றையும் அடக்கியிருக்கிறது.[19] அவை மரபுவழியாக லோபோபோரேட்டுகள் என்று ஒன்றாக பிரிக்கப்பட்டு வந்தன.[20] ஆனால் இப்போது அவை பாராபைலெடிக் என்றும்,[21] சில நெமர்டியாவுக்கு நெருக்கமானவை என்றும், சில மெல்லுடலிகள் (Mollusca) மற்றும் வத்தசைப்புழுக்களுக்கு (Annelida) நெருக்கமானவை என்றும் கருதப்படுகிறது.[22][23] புதைபடிவ பதிவுகளில் பிரதானமாகக் காணப்படும் பிராசியோபோடா அல்லது விளக்கு கூடுகள், என்டோபிராக்டா, போரோனிடா, மற்றும் சாத்தியமான அளவில் பிரையோசோவா அல்லது பாசி விலங்குகளும் இவற்றில் அடங்குகின்றன.[24] மாதிரி உயிரினங்கள் விலங்குகளில் காணப்படும் பெரும் பன்முகத்தன்மை காரணமாக, தேர்ந்தெடுத்த ஒரு சிறு எண்ணிக்கையிலான உயிரின வகைகளை ஆய்வு செய்து, பல்வேறு விஞ்ஞானிகளது வேலைகளுக்கு இடையே இணைப்புகளை ஏற்படுத்தி, பொதுவாக விலங்குகள் எப்படி செயல்படுகின்றன என்பது குறித்த முடிவுகளுக்கு அதிலிருந்து தேற்றம் செய்து கொள்வது தான் விஞ்ஞானிகளுக்கு பொருளாதார ரீதியாக கூடுதல் உகந்ததாக இருக்கிறது. வளர்ப்பதும் பராமரிப்பதும் எளிது என்பதால், பழப் பூச்சியான ட்ராசோபிலா மெலனோகாஸ்டர் மற்றும் நெமடோடெ கெனோஹப்டிடிஸ் எலிகான்ஸ் ஆகியவை தான் மிகவும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்ட பலசெல் விலங்கு (metazoan) மாதிரி உயிரினங்களாக இருக்கின்றன. இவை தான் மரபணு ரீதியாக குறியீடு பிரிக்கப்பட்ட முதல் வாழ்க்கை வடிவங்களாகவும் இருக்கின்றன. அவற்றின் மரபணுத் தொகுதியின் நிலை இதற்கு வசதி செய்தது. ஆனால் அதன் மறுபக்க பிரச்சினை என்னவென்றால் பல மரபணுக்கள், இன்ட்ரான்கள் மற்றும் மரபணு இணைப்புகள் காணாதிருக்கும். இந்த எக்டிஸோசோவாக்கள் பொதுவாக விலங்குகளின் மூலம் குறித்து கொஞ்சம் தான் கற்றுத்தர முடியும். சூப்பர்ஃபைலத்திற்குள்ளாக இந்த வகை பரிணாமத்தின் நீட்சியானது தற்போது வளர்ந்து கொண்டிருக்கும் கிரஸ்டசீன், வத்தசைபுழுவினம், மற்றும் மெல்லுடலிகள் மரபணுத் திட்டங்களின் மூலம் தெரிய வரும். ஸ்டார்லெட் கடல் அனிமோன் மரபணுத்தொகுதியின் ஆய்வானது, இமெடாசோவாவுக்கென பிரத்யேகமான 1500 பழமைப்பட்ட மரபணுக்களின் வருகையை விளக்குவதில் கடற்பாசிகள், பிளாகோசோவாக்கள், மற்றும் சோவனோஃபிளாகெல்லேட்டுகள் இவையும் குறியீட்டு வரிசைப்படுத்தப்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளன.[25] ஓஸ்கரெல்லா கார்மெலா கடற்பாசி மீது செய்யப்பட்ட ஒரு ஆய்வானது, கடற்பாசிகள் மற்றும் இமெடாசோவா விலங்குகளின் பொதுவான மூதாதையரின் மரபணு அமைப்பு முன்னர் அனுமானித்திருந்ததை விட மிகவும் சிக்கலானதாக இருந்தது என்று தெரிவிக்கிறது.[26] விலங்குகள் ராச்சியத்திற்கு சொந்தமான பிற மாதிரி உயிரினங்களில் எலி (Mus musculus) மற்றும் வரிக்குதிரைமீன் (Danio rerio) ஆகியவை அடக்கம். வகைப்பாட்டு வரலாறு வாழும் உலகத்தை அரிஸ்டாட்டில் விலங்குகள் மற்றும் தாவரங்கள் எனப் பிரித்தார். இதனைத் தொடர்ந்து காலக்கிரம வகைப்படுத்தலில் கரோலஸ் லினீயஸ் (Carl von Linné) வகைப்படுத்தல் வந்தது. அப்போது முதல் உயிரியல் நிபுணர்கள் பரிணாம உறவுகளில் அழுத்தம் கொடுக்கத் துவங்கியிருக்கிறார்கள். அதனால் இந்த குழுக்கள் ஒருவகையில் கட்டுப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன. உதாரணமாக, நுண்ணியிர் ஒரு செல் விலங்குகள் (protozoa), அவை நகர்பவை என்பதால், ஆரம்பத்தில் விலங்குகள் எனக் கருதப்பட்டன. ஆனால் இப்போது அவை தனி வகையாகக் கருதப்படுகின்றன. லினீயஸின் ஆரம்ப வகைப்பாட்டில், விலங்குகள் மூன்று ராச்சியங்களில் ஒன்றாக, வெர்மெஸ் (Vermes), இன்செக்டா (Insecta), மீன்கள் (Pisces), நீர் நில வாழுயிர் (Amphibia), பறவையினம் (Aves), மற்றும் மம்மாலியா (Mammalia) ஆகிய பகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அது முதல் கடைசி நான்கும் கார்டேடா (Chordata) என்னும் ஒற்றை தொகுதிக்குள் கொண்டுவரப்பட்டன. பல பிற வடிவங்கள் பிரிக்கப்பட்டு விட்டன. மேற்கண்ட பட்டியல்கள் இந்த பிரிவு குறித்த நமது தற்போதைய புரிதலைக் குறிப்பிடுகிறது. ஆயினும் மூலத்திற்கு மூலம் சில வேறுபாடுகள் உள்ளது. கூடுதல் பார்வைக்கு விலங்கு நடத்தை மிருக உரிமைகள் விலங்குகளின் பெயர்களின் பட்டியல் நியூரான்கள் எண்ணிக்கையின் படி விலங்குகளின் பட்டியல் தாவரம் குறிப்புதவிகள் குறிப்புகள் நூற்பட்டி கிளாஸ் நீல்சன். Animal Evolution: Interrelationships of the Living Phyla (இரண்டாம் பதிப்பு). ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக பிரஸ், 2001. நட் ஸ்கிமிட்-நீல்சன். Animal Physiology: Adaptation and Environment . (5th edition). கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பிரஸ், 1997. புற இணைப்புகள் - மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் விலங்குகள் தரவுத்தளம், பாகுபாட்டியல் பகுப்புகள், படங்கள் மற்றும் பிற தகவல்களைக் காட்டுகிறது. - உலகின் அபாயத்திற்குட்பட்டிருக்கும்/பாதுகாக்கப்பட்டிருக்கும் உயிரினங்கள் மற்றும் இங்கிலாந்தின் பொதுவான உயிரின வகைகள் குறித்த தரவுத்தளம். மீனில் இருந்து நான்கு கால் விலங்குகளின் பரிணாமம் குறித்தது. பகுப்பு:விலங்குகள் பகுப்பு:உயிரியல்
மெல்லுடலிகள் எந்த திணையை சார்ந்தது?
விலங்கு
0
tamil
0231ad0ec
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் வேளாண்மையும் அதனுடன் தொடர்புடைய உணவுப் பதனிடல், பகிர்ந்தளிப்பு, விற்பனை, ஆய்வு ஆகிய செயல்பாடுகளையும் தமிழ்நாடு வேளாண்மைத் தொழிற்துறை குறிக்கின்றது. தமிழக மக்களுக்கு வேளாண்மை வெறும் ஒரு தொழில் மட்டுமல்லாமல் ஒரு வாழ்வு முறையும் ஆகும். தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலனவர்கள் மரபுரீதியாக வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டவர்கள். இன்றும் பெரும்பான்மையானவர்கள் இந்த துறையிலேயே இயங்கிவருகின்றார்கள். தமிழ்நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மைத் தொழிற்துறை 21 % பங்கு வகிக்கின்றது. தமிழ்நாட்டு பொருளாதாரத்தின் மிக முக்கியமான துறையாக வேளாண்மை உள்ளது. மாநில மக்கள் தொகையில் 70%, விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த நடவடிக்கைகளில், தங்கள் வாழ்வாதாரத்திற்காக ஈடுபட்டுள்ளனர்[1] வேளாண்மை மரவள்ளி கிழங்கு உற்பத்தியில் இந்தியாவில், தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.[2]. கரும்பு சாகுபடியில் இந்தியாவில், தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது[3]. சப்போட்டா உற்பத்தியில் இந்தியாவில், தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது[4]. அரிசி உற்பத்தியில் இந்தியாவில், தமிழ்நாடு ஆறாவது இடத்தில் உள்ளது. பருத்தி உற்பத்தியில் இந்தியாவில், தமிழ்நாடு ஓன்பதாவது இடத்தில் உள்ளது[5]. தமிழ்நாட்டில் விளையும் முக்கிய பழங்கள் வாழை,மாம்பழம், கொய்யா, பலா. தமிழ்நாட்டில் விளையும் மாம்பழ வகைகள் மல்கொவா, அல்பொன்சா, ரூமானி, நீலம் ஆகும். கீழே தமிழ்நாட்டில், பழங்கள் விளையும் முக்கிய இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன தமிழ்நாட்டில் விளையும் முக்கிய காய்கறிகள் மரவள்ளி கிழங்கு, தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய் மற்றும் முருங்கை. கீழே தமிழ்நாட்டில், காய்கறி விளையும் முக்கிய இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன தமிழ்நாட்டில் விளையும் முக்கிய வாசனைப்பொருட்கள் கறிவேம்பு[கறிவேப்பிலை], மஞ்சள், கொத்துமல்லி, மிளகாய், புளி. கீழே தமிழ்நாட்டில், மசாலா விளையும் முக்கிய இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன தமிழ்நாட்டில் விளையும் முக்கிய பூக்கள் மல்லிகை, முல்லை, சாமந்தி, ரோஜா, செவ்வந்தி. ஓசூர் நகரில் இருந்து ரோஜா ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது[12]. கீழே தமிழ்நாட்டில், பூக்கள் விளையும் முக்கிய இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன[13]. தமிழ்நாட்டின் ஆறுகள்: பாலார், செய்யார், பொன்னையார், காவிரி, மெய்யார், பவானி, அமராவதி, வைகை, சிற்றாறு மற்றும் தாமிரபரணி. நெல் தமிழ்நாட்டில், சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் நெல் விளைகிறது. நெல் விளையும்(பரப்பளவில்) முக்கிய மாவட்டங்கள்: திருவாரூர் (8.9 %), தஞ்சாவுர் (8.8 %), நாகப்பட்டினம் (8.7 %), விழுப்புரம் (7.9 %), ராமநாதபுரம் (6.9 %)[14]. தமிழ்நாட்டில், 2009-2010ல் மொத்த நெல் விளைச்சல் 50.43 லட்ச டன்கள். தமிழ்நாட்டில் சராசரி நெல் உற்பத்தி, இந்திய சராசரியை விட அதிகம். உதாரணமாக, தமிழ்நாட்டில் 2008-09ல் நெல் மகசூல், ஒரு ஹெக்டெருகு 2510 கிலொ கிராம், இது இந்திய சராசரியை[2186 கிலொ/ஹெக்டெர்] விட 324 கிலொ கிராம் அதிகம்[15]. கோயம்புத்தூர் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை வட்டங்களில் அமராவதி, பவானி, ஆழியாறு, பாசன வசதியால் நெல் மிகுதியாக விளைகிறது. நெல், சோளம், கம்பு, ராகி, திணை, சாமை வரகு, முதலியவை கோயம்புத்தூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படுகின்றன. குழம்பி தமிழ்நாடு, குழம்பி தயாரிக்கும் முக்கிய மாநிலங்களில் ஒன்று. குழம்பி தயாரிப்பில் கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. நீலகிரி மாவட்டம், ஏற்காடு, கொடைக்கானல் ஆகிய இடங்களில் குழம்பி விளைகிறது. நீலகிரி மாவட்டத்தில் விளையும் பரப்பு: அராபிக்கா - 36,00,000 சதுர மீட்டர், ரொபோஸ்டா - 40,00,000 சதுர மீட்டர்[16] நீலகிரி மாவட்டத்தில் விளையும் முக்கிய வகைகள்: அராபிக்கா - எஸ்.795, கே என்ட்ஸ், காவிரி ரொபோஸ்டா - பி எர்டினியா, எஸ்.274, சிஎக்ஸ்ஆர் நீலகிரி மாவட்டத்தின் சராசரி உற்பத்தி: அராபிக்கா - 1,400 மெட்ரிக் டன்கள், ரொபோஸ்டா - 2,800 மெட்ரிக் டன்கள் புள்நெய்ஸ் கொடைக்கானல் மலையில் விளையும் முக்கிய வகை: அராபிக்கா, பரப்பு: 140,00,000 சதுர மீட்டர், சராசரி உற்பத்தி: 7500 மெட்ரிக் டன்கள்[17]. சேர்வராயன் ஏற்காடு மலையில் விளையும் முக்கிய வகை: அராபிக்கா, பரப்பு: 50,00,000 சதுர மீட்டர், சராசரி உற்பத்தி: 3,000 மெட்ரிக் டன்கள்[18]. தேயிலை தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விளைகிறது. நீலகிரி தேயிலை வாசனையுள்ள , இருண்ட நிறம் கொண்டதாகும். தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம்[தமிழ்நாடு அரசு] 1968 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து திரும்பிய மலை வாழ் மக்களின் மறுவாழ்வுகாக தொடங்கப்பட்டது. தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக தேயிலை தொட்டம் 4500000 பரப்பளவில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் அமைந்துள்ளது. தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம்[டான்டீ] தொழிற்சாலை கூடலூர், குன்னூர், கோத்தகிரி, வால்பாரை ஆகிய இடங்களில் அமைந்துள்ளது[19]. இவற்றையும் பார்க்க தமிழ்நாட்டுப் பொருளாதாரம் தமிழ்நாடு தானுந்து தொழிற்துறை தமிழ்நாடு இலத்திரனியல் தொழிற்துறை மருதத் தமிழர் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:வேளாண்மை பகுப்பு:தமிழ்நாட்டுப் பொருளாதாரம் பகுப்பு:தமிழர் வேளாண்மையியல் வேளாண்மைத் தொழிற்துறை
தமிழ்நாட்டில் அதிகமான ரோஜா பூ எங்கு சாகுபடி செய்யப்படுகிறது
ஓசூர்
1,731
tamil
88353196e
பிரமிடு (pyramid, Greek: πυραμίς pyramis[1]) என்பது பட்டைக்கூம்பு வடிவில் அமைந்த ஒரு கட்டிட அமைப்பு ஆகும். இதன் அடி பெரும்பாலும் சதுரமாக அமைந்திருக்கும். எனினும், இது முக்கோணம், வேறுவகைப் பல்கோணங்கள் ஆகிய வடிவங்களிலும் அமையலாம். இக் கட்டிடங்களின் நிறையில் பெரும் பகுதி அடிப்பகுதியில் அமைந்திருப்பதால், இவற்றின் புவியீர்ப்பு மையம் நிலத்துக்கு அண்மையில் அமைந்திருக்கும் இதனால், சில பழங்கால நாகரிக மக்கள் உறுதியான நினைவுச் சின்னங்களை அமைப்பதற்கு இந்த வடிவத்தைத் தேர்ந்தெடுத்தனர். பல ஆயிரம் ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய அமைப்புக்கள் பிரமிடுகளாகவே இருந்தன. முதலில் எகிப்தில் டாசுர் நக்குரோபோலிசில் உள்ள சிவப்புப் பிரமிட்டும், பின்னர் கூபுவின் பெரிய பிரமிடும் மிகப்பெரிய அமைப்புக்களாக இருந்தன. பழைய ஏழு உலக அதிசயங்களுள் இன்றும் நிலைத்திருப்பது கூபுவின் பெரிய பிரமிடு மட்டுமே. இது பெரும்பாலும் சுண்ணக்கல்லால் கட்டப்பட்டுள்ளது; சில உள்ளறைகள் சிவப்பு கிரானைட்டு கற்களால் ஆனவை. கட்டிடவியல் அதிசயம் எனப்படும் பெரி பிரமிடில் 2.5 tonnes (5,500lb) இலிருந்து வரை எடையுள்ள 1,300,000 கற்கள் கொண்டு 13 ஏக்கரா நிலப்பரபில் கட்டப்பட்டுள்ளது. இதன் அடி சதுரத்தின் ஒவ்வொரு பக்கமும் ஏறத்தாழ 230மீ (755அடி) நீளமுடையதாக உள்ளது.இதன் உயரம் கட்டப்பட்டபோது 146.5மீ (488அடி)யாக இருந்தது. ஆனால் உச்சியில் இருந்த வெண்ணிற துரா சுண்ணக்கற்கள் திருடப்பட்டு கெய்ரோவில் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டதால் இன்று இதன் உயரம் 137மீ (455அடி)யாக உள்ளது. இருப்பினும் இதுவே மிக உயரமான பிரமிடாக விளங்குகிறது. உலகில் கட்டப்பட்ட பிரமிடுக்களில், கனவளவு அடிப்படையில் மிகப் பெரியது மெக்சிக்கோவில் உள்ள சோலுலாவின் பெரிய பிரமிடு ஆகும். இப் பிரமிடு இன்னும் அகழப்பட்டு வருகின்றது. பிரமிடு வடிவிலான கட்டிடங்கள் எகிப்தியர், மாயர், சுமேரியர் உள்ளிட்ட பல பழம் நாகரிக மக்களால் அமைக்கப்பட்டன. பாரிசில் உள்ள லூவர் அருங்காட்சியகம் முன்பாகக் கண்ணாடியாலான பிரமிடு அமைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் நெவாடா மாநில லாஸ் வேகஸ் நகரில் லக்சர் ஓட்டல் எகிப்திய பிரமிடின் வடிவமைப்பில் கண்ணாடியால் கட்டப்பட்டுள்ளது. தொன்மையானக் கட்டிடங்கள் மெசொப்பொத்தேமியா மெசொப்பொத்தேமியர்கள் சிக்குரத்கள் எனப்பட்ட துவக்க கால பிரமிடுகளை முதன்முதலாகக் கட்டினர். இவை சூரிய வெப்பத்தில் உலர்ந்த செங்கற்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டமையால் அனைத்தும் அழிந்துபட்டன. இத்தகைய சிக்குரத்களை சுமேரியர்கள், பாபேலியர்கள், ஈலாமியர்கள், அக்காடியர்கள், மற்றும் அசிரியர்கள் அவரவர் பகுதிகளில் கட்டினர். எகிப்து எகிப்திய பிரமிடுகளே மிகவும் புகழ்பெற்றவையும் அறியப்பட்டவையும் ஆகும். செங்கல் அல்லது பாறைகளால் கட்டப்பட்ட இவற்றில் சில உலகின் மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றாக அமைந்தன. பெரும்பாலான பிரமிடுகளின் மேற்பரப்புகள் வெள்ளைநிற சுண்ணக்கற்களால் மிகவும் எதிரொளிக்குமாறு தீட்டப்பட்டிருந்தன. இதனால் தொலைவிலிருந்து பளபளப்புடன் காணப்பட்டன. முகட்டுக்கல் அல்லது சிகரம் மட்டும் கருங்கல் அல்லது எரிமலைப்பாறையால் ஆனதாகவும் தங்கம், வெள்ளி அல்லது தங்கம்,வெள்ளியின் கலப்பு உலோகத்தினால் பூசப்பட்டும் இருந்தது.[2] கி.மு 2700க்குப் பிறகு [3] கட்டத் துவங்கிய எகிப்தியர்கள் கி.மு 1700 வரை பிரமிடுகளைக் கட்டினர். மூன்றாம் வம்ச காலத்தில் யோசர் மன்னர் காலத்தில் ஆறு மஸ்தபாக்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி முதல் பிரமிடு ஒன்றை கட்டினர். எகிப்தின் பெரிய பிரமிடுகள் கிசா என்றவிடத்தில் உள்ளன. பெரும்பாலான பிரமிடுகள் நைல் ஆற்றின் மேற்குப் புறத்திலேயே கட்டப்பட்டன. 2008ஆம் ஆண்டுப்படி , இதுவரை 135 பிரமிடுகள் எகிப்தில் கண்டறியப்பட்டுள்ளன.[4][5] எகிப்தின் மிகப்பெரிய பிரமிடாகிய கிசாவின் பெரிய பிரமிட்டின் அடித்தளம் பரப்பளவில் அமைந்துள்ளது. இது பண்டைய உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது. முகட்டில் பதித்திருந்த சுண்ணக்கற்களும் கடற்சங்குகளும்[6] காலப்போக்கில் விழுந்துவிட்டன அல்லது திருடப்பட்டு கெய்ரோவில் கட்டிடங்களுக்குப் பயன்படுத்தப்பட்டன. பெரும்பாலான பிரமிடுகள் கெய்ரோவிற்கு அண்மையிலேயே உள்ளன.[7] சூடான் பிரமிடுகள் எகிப்துடனேயே அடையாளப்படுத்தப்பட்டாலும் உலகின் மிகக் கூடுதலான பிரமிடுகளை கொண்ட நாடாகச் சூடான் விளங்குகிறது. இங்கு 220 பிரமிடுகள் இன்றும் உள்ளன.[8] நுபியர்கள் சூடானின் மூன்றிடங்களில் இந்த 220 பிரமிடுகளை அமைத்துள்ளனர். நாப்பட்டா மற்றும் மெரோ அரசர்/அரசிகளின் கல்லறைக் கட்டிடங்களாக இவற்றைக் கட்டினர். இவை எகிப்திய பிரமிடுகளிலிருந்து மாறுபட்டுள்ளன. அவற்றைவிட நுபியப் பிரமிட்கள் செங்குத்தான கோணங்களில் அமைக்கப்பட்டுள்ளன.[9] சூடானில் கிமு 300 வரை பிரமிடுகள் கட்டப்பட்டு வந்தன. நைஜீரியா அபுஜாவில் சுடெ பிரமிடுகளை அங்கு வாழ்ந்த குபோ நாகரிகத்தின் கூறாகக் காணலாம். களிமண்ணால் கட்டப்பட்ட பத்து பிரமிடுகள் இங்குள்ளன. முதல் கட்ட அடிப்பகுதி 60 அடி சுற்றளவையும் 3 அடி உயரத்தையும் கொண்டுள்ளது. அடுத்தப்படியில் 45 அடி சுற்றளவில் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறான அடுக்குகள் வட்டவடிவ ஒன்றன்மேல் ஒன்றாக மேல்வரை கட்டப்பட்டுள்ளன. இவை கடவுளரின் இருப்பிடமாகவும் சிகரத்தில் அவர்கள் வசிப்பதாகவும் நம்பப்பட்டது. இதன் அடையாளமாக ஒரு கம்பு அங்கு நடப்பட்டிருந்தது. இவை ஐந்து குழுக்களாக ஒன்றுக்கொன்று இணையாகக் கட்டப்பட்டன. இவை களிமண்ணால் கட்டப்பட்டமையால் அவ்வப்போது மீளுருவாக்கம் செய்ய வேண்டியிருந்தது.[10] கிரீசு கிமு இரண்டாம் நூற்றாண்டின் புவியியலாளர் பவுசானியாசு பிரமிடுகளை ஒத்த இரு கட்டிடங்களைக் குறிப்பிடுகிறார்; இவற்றில் ஒன்று ஹெலனிக்கோன் நகரிலிருந்து 19 கிமீ (12 மைல்) தொலைவில் தென்மேற்கே இருந்ததாகவும்[11] அர்கோசு ஆட்சிக்காகப் போராடிய போர்வீரர்களின் நினைவாக இவை கட்டப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவை இரண்டுமே பிரமிடுகளை ஒத்து இருந்ததற்கான எந்தவொரு சான்றும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. இன்றளவும் காணக்கிடைக்கின்ற இரு பிரமிடு போன்ற இரு கட்டிடங்கள் ஹெலனிக்கோனிலும் லிகுரியோவிலும் உள்ளன. இவை சாய்வான சுவர்களைக் கொண்டிருந்தாலும் எவ்வகையிலும் எகிப்திய பிரமிடுகளை ஒத்திருக்கவில்லை. இவற்றின் உள்ளே பெரிய அறைகள் உள்ளன. ஹெலனிக்கோனிலுள்ள பிரமிடின் அடித்தளம் சதுரமாக இல்லாது செவ்வகமாக,12.5x14மீ, உள்ளது; இதனால் இதன் பக்கவாட்டுச் சுவர்கள் ஒரு புள்ளியில் சந்தித்திருக்க முடிந்திருக்காது.[12] இந்தியாவில் சோழர்கள் காலத்தில் தென்னிந்தியாவில் கருங்கற்களால் கட்டப்பட்ட பிரமிடு வடிவ கோபுரங்களுடன் கூடிய பல பெரும் கோவில்கள் இன்றும் சமயப் பயன்பாட்டில் உள்ளன. தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் சிறீரங்கம் வட்டத்திலுள்ள அரங்கநாதசுவாமி கோயில் ஆகியன இவற்றில் சிலவாம். 11ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பிரகதீசுவரர் கோவில் யுனெசுகோவால் உலகப் பாரம்பரியக் களமாக 1987இல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விரிவாக்கமாக 2004 ஆம் ஆண்டு கங்கை கொண்ட சோழபுரம் கோயிலும் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலும் இணைக்கப்பட்டன.[13] இந்தோனேசியா இந்தோனேசியாவின் ஆத்திரேலேசிய பாறைக் கட்டமைப்பு பண்பாட்டில் குத்துக்கல், கல் மேடைகள், கற்சிலைகளுக்கு அடுத்ததாகப் புந்தென் பெருந்தக் எனப்பட்ட மண்,கற்களாலான அடுக்கு பிரமிடு கட்டமைப்புகள் இருந்தன. இவை மேற்கு சாவாவின் குனுங் படாங் பகுதியிலும் சிசுலோக் பங்குயங்கன் பகுதிகளிலும் காண்டறியப்பட்டன. மலைகளிலும் உயர்ந்த இடங்களிலும் மூதாதையரின் ஆவி வாழ்வதாக உள்ளூர் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே இக்கற்கட்டிடங்கள் கட்டப்பட்டன. மத்திய சாவாவில் உள்ள போரோபுதூரில் 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த சமய பிரமிடு ஒன்று உள்ளது. பிந்தையக் கால சாவா கட்டமைப்புக்கள் இந்திய கட்டிடக்கலையின் தாக்கத்துடன் கட்டப்பட்டன. காட்சிக்கூடம் காப்ராவின் பிரமிடு ஷயோயெயோ கல்லறை, குஃபு, சீன மக்கள் குடியரசு இசுடாக்போர்ட் பிரமிடு, ஐக்கிய இராச்சியம் கார்லசுருஹே பிரமிடு, செருமனி அரெனா பிரமிடு , மெம்பிசு ஹனோய், வியட்நாமில் உள்ள ஹனோய் அருங்காட்சியகத்தில் தலைகீழானதொரு பிரமிடு. மெடைய்ரி செமட்ரி, நியூ ஓர்லென்ஸ் சும்மம் பிரமிடு, சால்ட் லேக் நகரம், யூட்டா சபர் பிளாசா அங்காடி மையம், புர்சா, துருக்கி சிலோவாக்கிய வானொலி கட்டிடம், பிராத்திஸ்லாவா, சிலோவாக்கியா. கசன் முற்றுகைக்கான நினைவுச்சின்னம், கசன், உருசியா. "பிரமிடு" பண்பாட்டு-மனமகிழ்வு வளாகம் கசன், உருசியா. மேற்சான்றுகள் உசாத்துணைகள் Patricia Blackwell Gary and Richard Talcott, "Stargazing in Ancient Egypt," Astronomy, June 2006, pp.62–67. Fagan, Garrett. "Archaeological Fantasies." RoutledgeFalmer. 2006 பகுப்பு:கட்டிடங்கள் பகுப்பு:பிரமிடுகள்
எகிப்து நாட்டின் மிகப்பெரிய பிரமிட் எது?
கிசா
2,935
tamil
2aa045b35
பிரமிடு (pyramid, Greek: πυραμίς pyramis[1]) என்பது பட்டைக்கூம்பு வடிவில் அமைந்த ஒரு கட்டிட அமைப்பு ஆகும். இதன் அடி பெரும்பாலும் சதுரமாக அமைந்திருக்கும். எனினும், இது முக்கோணம், வேறுவகைப் பல்கோணங்கள் ஆகிய வடிவங்களிலும் அமையலாம். இக் கட்டிடங்களின் நிறையில் பெரும் பகுதி அடிப்பகுதியில் அமைந்திருப்பதால், இவற்றின் புவியீர்ப்பு மையம் நிலத்துக்கு அண்மையில் அமைந்திருக்கும் இதனால், சில பழங்கால நாகரிக மக்கள் உறுதியான நினைவுச் சின்னங்களை அமைப்பதற்கு இந்த வடிவத்தைத் தேர்ந்தெடுத்தனர். பல ஆயிரம் ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய அமைப்புக்கள் பிரமிடுகளாகவே இருந்தன. முதலில் எகிப்தில் டாசுர் நக்குரோபோலிசில் உள்ள சிவப்புப் பிரமிட்டும், பின்னர் கூபுவின் பெரிய பிரமிடும் மிகப்பெரிய அமைப்புக்களாக இருந்தன. பழைய ஏழு உலக அதிசயங்களுள் இன்றும் நிலைத்திருப்பது கூபுவின் பெரிய பிரமிடு மட்டுமே. இது பெரும்பாலும் சுண்ணக்கல்லால் கட்டப்பட்டுள்ளது; சில உள்ளறைகள் சிவப்பு கிரானைட்டு கற்களால் ஆனவை. கட்டிடவியல் அதிசயம் எனப்படும் பெரி பிரமிடில் 2.5 tonnes (5,500lb) இலிருந்து 15 tonnes (33,000lb) வரை எடையுள்ள 1,300,000 கற்கள் கொண்டு 13 ஏக்கரா நிலப்பரபில் கட்டப்பட்டுள்ளது. இதன் அடி சதுரத்தின் ஒவ்வொரு பக்கமும் ஏறத்தாழ 230மீ (755அடி) நீளமுடையதாக உள்ளது.இதன் உயரம் கட்டப்பட்டபோது 146.5மீ (488அடி)யாக இருந்தது. ஆனால் உச்சியில் இருந்த வெண்ணிற துரா சுண்ணக்கற்கள் திருடப்பட்டு கெய்ரோவில் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டதால் இன்று இதன் உயரம் 137மீ (455அடி)யாக உள்ளது. இருப்பினும் இதுவே மிக உயரமான பிரமிடாக விளங்குகிறது. உலகில் கட்டப்பட்ட பிரமிடுக்களில், கனவளவு அடிப்படையில் மிகப் பெரியது மெக்சிக்கோவில் உள்ள சோலுலாவின் பெரிய பிரமிடு ஆகும். இப் பிரமிடு இன்னும் அகழப்பட்டு வருகின்றது. பிரமிடு வடிவிலான கட்டிடங்கள் எகிப்தியர், மாயர், சுமேரியர் உள்ளிட்ட பல பழம் நாகரிக மக்களால் அமைக்கப்பட்டன. பாரிசில் உள்ள லூவர் அருங்காட்சியகம் முன்பாகக் கண்ணாடியாலான பிரமிடு அமைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் நெவாடா மாநில லாஸ் வேகஸ் நகரில் லக்சர் ஓட்டல் எகிப்திய பிரமிடின் வடிவமைப்பில் கண்ணாடியால் கட்டப்பட்டுள்ளது. தொன்மையானக் கட்டிடங்கள் மெசொப்பொத்தேமியா மெசொப்பொத்தேமியர்கள் சிக்குரத்கள் எனப்பட்ட துவக்க கால பிரமிடுகளை முதன்முதலாகக் கட்டினர். இவை சூரிய வெப்பத்தில் உலர்ந்த செங்கற்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டமையால் அனைத்தும் அழிந்துபட்டன. இத்தகைய சிக்குரத்களை சுமேரியர்கள், பாபேலியர்கள், ஈலாமியர்கள், அக்காடியர்கள், மற்றும் அசிரியர்கள் அவரவர் பகுதிகளில் கட்டினர். எகிப்து எகிப்திய பிரமிடுகளே மிகவும் புகழ்பெற்றவையும் அறியப்பட்டவையும் ஆகும். செங்கல் அல்லது பாறைகளால் கட்டப்பட்ட இவற்றில் சில உலகின் மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றாக அமைந்தன. பெரும்பாலான பிரமிடுகளின் மேற்பரப்புகள் வெள்ளைநிற சுண்ணக்கற்களால் மிகவும் எதிரொளிக்குமாறு தீட்டப்பட்டிருந்தன. இதனால் தொலைவிலிருந்து பளபளப்புடன் காணப்பட்டன. முகட்டுக்கல் அல்லது சிகரம் மட்டும் கருங்கல் அல்லது எரிமலைப்பாறையால் ஆனதாகவும் தங்கம், வெள்ளி அல்லது தங்கம்,வெள்ளியின் கலப்பு உலோகத்தினால் பூசப்பட்டும் இருந்தது.[2] கி.மு 2700க்குப் பிறகு [3] கட்டத் துவங்கிய எகிப்தியர்கள் கி.மு 1700 வரை பிரமிடுகளைக் கட்டினர். மூன்றாம் வம்ச காலத்தில் யோசர் மன்னர் காலத்தில் ஆறு மஸ்தபாக்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி முதல் பிரமிடு ஒன்றை கட்டினர். எகிப்தின் பெரிய பிரமிடுகள் கிசா என்றவிடத்தில் உள்ளன. பெரும்பாலான பிரமிடுகள் நைல் ஆற்றின் மேற்குப் புறத்திலேயே கட்டப்பட்டன. 2008ஆம் ஆண்டுப்படி , இதுவரை 135 பிரமிடுகள் எகிப்தில் கண்டறியப்பட்டுள்ளன.[4][5] எகிப்தின் மிகப்பெரிய பிரமிடாகிய கிசாவின் பெரிய பிரமிட்டின் அடித்தளம் 52,600 square metres (566,000sqft) பரப்பளவில் அமைந்துள்ளது. இது பண்டைய உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது. முகட்டில் பதித்திருந்த சுண்ணக்கற்களும் கடற்சங்குகளும்[6] காலப்போக்கில் விழுந்துவிட்டன அல்லது திருடப்பட்டு கெய்ரோவில் கட்டிடங்களுக்குப் பயன்படுத்தப்பட்டன. பெரும்பாலான பிரமிடுகள் கெய்ரோவிற்கு அண்மையிலேயே உள்ளன.[7] சூடான் பிரமிடுகள் எகிப்துடனேயே அடையாளப்படுத்தப்பட்டாலும் உலகின் மிகக் கூடுதலான பிரமிடுகளை கொண்ட நாடாகச் சூடான் விளங்குகிறது. இங்கு 220 பிரமிடுகள் இன்றும் உள்ளன.[8] நுபியர்கள் சூடானின் மூன்றிடங்களில் இந்த 220 பிரமிடுகளை அமைத்துள்ளனர். நாப்பட்டா மற்றும் மெரோ அரசர்/அரசிகளின் கல்லறைக் கட்டிடங்களாக இவற்றைக் கட்டினர். இவை எகிப்திய பிரமிடுகளிலிருந்து மாறுபட்டுள்ளன. அவற்றைவிட நுபியப் பிரமிட்கள் செங்குத்தான கோணங்களில் அமைக்கப்பட்டுள்ளன.[9] சூடானில் கிமு 300 வரை பிரமிடுகள் கட்டப்பட்டு வந்தன. நைஜீரியா அபுஜாவில் சுடெ பிரமிடுகளை அங்கு வாழ்ந்த குபோ நாகரிகத்தின் கூறாகக் காணலாம். களிமண்ணால் கட்டப்பட்ட பத்து பிரமிடுகள் இங்குள்ளன. முதல் கட்ட அடிப்பகுதி 60 அடி சுற்றளவையும் 3 அடி உயரத்தையும் கொண்டுள்ளது. அடுத்தப்படியில் 45 அடி சுற்றளவில் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறான அடுக்குகள் வட்டவடிவ ஒன்றன்மேல் ஒன்றாக மேல்வரை கட்டப்பட்டுள்ளன. இவை கடவுளரின் இருப்பிடமாகவும் சிகரத்தில் அவர்கள் வசிப்பதாகவும் நம்பப்பட்டது. இதன் அடையாளமாக ஒரு கம்பு அங்கு நடப்பட்டிருந்தது. இவை ஐந்து குழுக்களாக ஒன்றுக்கொன்று இணையாகக் கட்டப்பட்டன. இவை களிமண்ணால் கட்டப்பட்டமையால் அவ்வப்போது மீளுருவாக்கம் செய்ய வேண்டியிருந்தது.[10] கிரீசு கிமு இரண்டாம் நூற்றாண்டின் புவியியலாளர் பவுசானியாசு பிரமிடுகளை ஒத்த இரு கட்டிடங்களைக் குறிப்பிடுகிறார்; இவற்றில் ஒன்று ஹெலனிக்கோன் நகரிலிருந்து 19 கிமீ (12 மைல்) தொலைவில் தென்மேற்கே இருந்ததாகவும்[11] அர்கோசு ஆட்சிக்காகப் போராடிய போர்வீரர்களின் நினைவாக இவை கட்டப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவை இரண்டுமே பிரமிடுகளை ஒத்து இருந்ததற்கான எந்தவொரு சான்றும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. இன்றளவும் காணக்கிடைக்கின்ற இரு பிரமிடு போன்ற இரு கட்டிடங்கள் ஹெலனிக்கோனிலும் லிகுரியோவிலும் உள்ளன. இவை சாய்வான சுவர்களைக் கொண்டிருந்தாலும் எவ்வகையிலும் எகிப்திய பிரமிடுகளை ஒத்திருக்கவில்லை. இவற்றின் உள்ளே பெரிய அறைகள் உள்ளன. ஹெலனிக்கோனிலுள்ள பிரமிடின் அடித்தளம் சதுரமாக இல்லாது செவ்வகமாக,12.5x14மீ, உள்ளது; இதனால் இதன் பக்கவாட்டுச் சுவர்கள் ஒரு புள்ளியில் சந்தித்திருக்க முடிந்திருக்காது.[12] இந்தியாவில் சோழர்கள் காலத்தில் தென்னிந்தியாவில் கருங்கற்களால் கட்டப்பட்ட பிரமிடு வடிவ கோபுரங்களுடன் கூடிய பல பெரும் கோவில்கள் இன்றும் சமயப் பயன்பாட்டில் உள்ளன. தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் சிறீரங்கம் வட்டத்திலுள்ள அரங்கநாதசுவாமி கோயில் ஆகியன இவற்றில் சிலவாம். 11ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பிரகதீசுவரர் கோவில் யுனெசுகோவால் உலகப் பாரம்பரியக் களமாக 1987இல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விரிவாக்கமாக 2004 ஆம் ஆண்டு கங்கை கொண்ட சோழபுரம் கோயிலும் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலும் இணைக்கப்பட்டன.[13] இந்தோனேசியா இந்தோனேசியாவின் ஆத்திரேலேசிய பாறைக் கட்டமைப்பு பண்பாட்டில் குத்துக்கல், கல் மேடைகள், கற்சிலைகளுக்கு அடுத்ததாகப் புந்தென் பெருந்தக் எனப்பட்ட மண்,கற்களாலான அடுக்கு பிரமிடு கட்டமைப்புகள் இருந்தன. இவை மேற்கு சாவாவின் குனுங் படாங் பகுதியிலும் சிசுலோக் பங்குயங்கன் பகுதிகளிலும் காண்டறியப்பட்டன. மலைகளிலும் உயர்ந்த இடங்களிலும் மூதாதையரின் ஆவி வாழ்வதாக உள்ளூர் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே இக்கற்கட்டிடங்கள் கட்டப்பட்டன. மத்திய சாவாவில் உள்ள போரோபுதூரில் 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த சமய பிரமிடு ஒன்று உள்ளது. பிந்தையக் கால சாவா கட்டமைப்புக்கள் இந்திய கட்டிடக்கலையின் தாக்கத்துடன் கட்டப்பட்டன. காட்சிக்கூடம் காப்ராவின் பிரமிடு ஷயோயெயோ கல்லறை, குஃபு, சீன மக்கள் குடியரசு இசுடாக்போர்ட் பிரமிடு, ஐக்கிய இராச்சியம் கார்லசுருஹே பிரமிடு, செருமனி அரெனா பிரமிடு , மெம்பிசு ஹனோய், வியட்நாமில் உள்ள ஹனோய் அருங்காட்சியகத்தில் தலைகீழானதொரு பிரமிடு. மெடைய்ரி செமட்ரி, நியூ ஓர்லென்ஸ் சும்மம் பிரமிடு, சால்ட் லேக் நகரம், யூட்டா சபர் பிளாசா அங்காடி மையம், புர்சா, துருக்கி சிலோவாக்கிய வானொலி கட்டிடம், பிராத்திஸ்லாவா, சிலோவாக்கியா. கசன் முற்றுகைக்கான நினைவுச்சின்னம், கசன், உருசியா. "பிரமிடு" பண்பாட்டு-மனமகிழ்வு வளாகம் கசன், உருசியா. மேற்சான்றுகள் உசாத்துணைகள் Patricia Blackwell Gary and Richard Talcott, "Stargazing in Ancient Egypt," Astronomy, June 2006, pp.62–67. Fagan, Garrett. "Archaeological Fantasies." RoutledgeFalmer. 2006 பகுப்பு:கட்டிடங்கள் பகுப்பு:பிரமிடுகள்
மிக உயரமான பிரமிடு எது?
கூபு
628
tamil
bf8608c0a
தமிழ்நாடு (Tamil Nadu) என்து இந்தியாவின் 29 மாநிலங்களில் ஒன்றாகும். தமிழ்நாடு, தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. இதன் தலைநகராகச் சென்னை உள்ளது. தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன. புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு மாநிலம் எல்லைகளைக் கொண்டுள்ளது. புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை வீச்செல்லை, ஆனை மலை வீச்செல்லை, பாலக்காடு கணவாய் ஆகியவையும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவையும் தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன. தமிழகம் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் சென்னை மாகாணம் என்றும் அழைக்கப்பெற்றது. இதனைத் தமிழ்நாடு என்று மாற்றக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன. சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார்[11]. பின்னர் மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது. தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் பரப்பளவில் 11வதாகவும் மக்கள்தொகையில் ஏழாவதாகவும் விளங்குகிறது. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பங்களிப்பதில் நான்காவதாகவும் (2010இல்)[12] உள்ளது. 2006ஆம் ஆண்டில் மனித வளர்ச்சிச் சுட்டெண்ணில் பத்தாமிடத்தில் (ஒன்றிய ஆட்சிப்பகுதிகளையும் சேர்த்தால் பதினாறாவது இடத்தில்) இருந்தது.[13] மேலும் இந்தியாவிலேயே அதிக நகர்ப்புறமாக்கப்பட்ட மாநிலமாகத் திகழ்கிறது.[14] இந்தியாவின் 6% மக்கள்தொகையே கொண்டிருந்தும் மிகக் கூடுதலான வணிக நிறுவனங்கள் கொண்ட மாநிலமாகவும் (10,56%) மொத்த வேலை வாய்ப்புகள் கொண்ட மாநிலங்களுள் இரண்டாவதாகவும் (9,97%) விளங்குகிறது[15]. கி.மு. 500க்கும் முன்பிருந்தே இப்பகுதியில் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 20000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமை வாய்ந்த தமிழ் மொழி கல்வெட்டுக்களும் இலக்கியமும் காணக் கிடைக்கின்றன.[16]தொன்கதை பாரம்பரியத்தின் படி தமிழ் மொழியானது சிவ பெருமானால் அகத்தியருக்கு கற்பிக்கப்பட்டதாக நம்பப் படுகின்றது[17][18][19][20][21][22][23][24]. தமிழ்நாட்டில் பல இயற்கை வளங்கள், தமிழர் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன; எட்டு உலக பாரம்பரியக் களங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.[25][26] புவியமைப்பு தமிழ்நாடு இந்திய தீபகற்பத்தின் தென் கோடியில் அமைந்துள்ளது. வடக்கில் கருநாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களும், மேற்கில் கேரளாவும் உள்ளன. யூனியன் பிரதேசமாகிய புதுச்சேரி (முன்பு பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டது) தமிழ் நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்துக்குத் தென்கிழக்கில் இலங்கைத் தீவு உள்ளது. நாட்டின் ஏனைய பல பகுதிகளைப் போலன்றி, தமிழ்நாடு, அக்டோபர் – திசம்பர் மாதங்களில் "வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று" மூலமே மழை பெறுகிறது. இக்கால கட்டத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகும் புயற்சின்னங்களின் மூலம் பெய்யும் மழையை உழவர்கள் பெரிதும் நம்பியுள்ளனர். இம்மாநிலத்தின் முதன்மையான ஆறான காவிரி ஆறு வடக்கே கர்நாடக மாநிலத்தில் குடகு மலையில் உருவாகித் தமிழ்நாட்டில் பாய்கிறது. வைகை, தாமிரபரணி, பாலாறு ஆகியவை பிற முதன்மையான ஆறுகளாகும். மதராஸ் என்று 1996 வரை அழைக்கப்பட்டு வந்த சென்னையே தமிழ்நாடு மாநிலத்தின் மிகப் பெரிய நகரமும் அதன் தலைநகரமுமாகும். பதின்மூன்று கிலோமீட்டர் நீளமுடையதும், உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையுமான, மெரீனா கடற்கரை சென்னையில் உள்ளது. மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், திண்டுக்கல், திருநெல்வேலி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தூத்துக்குடி மற்றும் வேலூர் தமிழ் நாட்டின் ஏனைய பெரிய நகரங்களாகும். வரலாறு தமிழ்நாடு பண்டைக் காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் ஆளப்பெற்றது. மேலும், இம்மாநிலம் பல கோயில்களையும், சிற்பங்களையும் பெற்ற கலை அம்சம் கொண்ட பகுதியாக விளங்குகிறது. தமிழகத்தின் எல்லைகளைத் தொல்காப்பியப் பாடல் வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம் என்று வரையறுக்கிறது (தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம், 1-3). தொன்றுதொட்டே தமிழ் மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு தமிழகம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அதற்குச் சான்றாகக் கீழ்வரும் இலக்கியக் குறிப்புகளைக் காட்டலாம்: வையக வரைப்பில் தமிழகம் கேட்ப (புறநானூறு, 168:18) இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்க (பதிற்றுப்பத்து, இரண்டாம் பத்து, பதிகம்: 5) இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய (சிலப்பதிகாரம், அரங்கேற்றுகாதை: 38) சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் (மணிமேகலை, 17: 62) தமிழ்நாடு, ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழுகின்ற தமிழ் இன மக்களின் தோற்றம் தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்திருந்த தமிழர்கள், சிந்து வெளி நாகரீகத்துக்கு உரியவர்களுள் ஒரு பிரிவினராக இருந்தனர் என்று கருதுகிறார்கள். இவ்வினத்தவருடைய தெற்கு நோக்கிய பெயர்வு, ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கையுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. இக்கொள்கைப்படி, வடக்கிலிருந்து வந்த ஆரிய ஆக்கிரமிப்பு தமிழர்களை இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகியவை அடங்கிய தென்னிந்தியாவுக்குள் ஒடுக்கியதாகக் கருதப்படுகின்றது. வரலாற்று உண்மைகள் எவ்வாறு இருப்பினும், தற்காலத் தமிழ் மக்களுடைய அடையாளம் மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது எனலாம். இன்றைய தமிழ்நாட்டையும் உள்ளடக்கிப் பரந்திருந்த பண்டைய தமிழர் நாடு, பல்வேறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. இவற்றைக் காலத்துக்குக் காலம் பல அரச வம்சங்கள் ஆண்டுவந்தன. இவற்றுள் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கவர்கள்,வேளிர்கள் பாண்டியர், சேரர், சோழர், பல்லவர், சாளுக்கியர், விஜய நகரத்தார், நாயக்கர் என்போராவர். மேலே குறிப்பிடப்பட்ட மதுரை தற்கால மதுரைக்குத் தெற்கே அமைந்திருந்து பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் முற்றாக அழிந்து போனதாகப் பழந் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியக்கிடைக்கின்றது. பாண்டிய நாடு கல்வியிலும், வணிகத்திலும் சிறந்து விளங்கியது. தமிழகத்தின் மக்கள் அக்காலத்தின் பேரரசுகளாகிய கிரேக்க, ரோமப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவ்வப்போது பல்லவர்களாலும், சோழர்களாலும் அடக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் ஆற்றல் மிக்க அரச பரம்பரைகளில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர். கிபி 1 தொடக்கம் 4 ஆம் நூற்றாண்டுவரை சங்ககால மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர் கிபி முதலாம் நூற்றாண்டு தொடங்கி நான்காம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள் சேரர்களில் செங்குட்டுவன் மன்னனும், சோழர்களில் கரிகால் சோழன் மன்னனும், பாண்டியர்களில் நெடுஞ்செழியன் மன்னனும் பெயர் பெற்ற ஆட்சியாளர்களாகத் திகழ்ந்து, மிகவும் புகழ்பெற்று விளங்கினர். சேரர்கள் தற்கால கேரள மற்றும் கொங்கு மாவட்டங்களிலும், சோழர்கள் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளிலும், பாண்டியர்கள் மதுரை, நெல்லை மற்றும் தென் கேரள மாவட்டங்களிலும் செல்வாக்கு செலுத்தினர். இவர்கள் கூட்டணியால் தமிழகம் வடதிசை மவுரிய குப்தா பேரரசுகளின் ஆளுகையினை எதிர்த்து தனியரசுகளாக விளங்கின இவர்களின் போர் நடவடிக்கைகளில் சிறந்து விளங்கியதாக நம்பப்படுகிறது. கிபி 4 தொடக்கம் 9 ஆம் நூற்றாண்டுவரை கி.பி. நான்காம் நூற்றாண்டு முற்பகுதியில் களப்பிரர் என்னும் குலம் தெரியாத அரசர்கள் தமிழகத்தை ஆண்டனர். அவர்கள் மூவேந்தர்களையும் அடக்கி ஆண்டதால் அவர்களின் வரலாறு தெரியாமல் போயினும், பல்லவர் என்னும் அக்கால புதிய அரசர்கள் சுயாட்சி செலுத்தியதால் அவர்களைப் பற்றி மட்டும் குறிப்பிடத் தக்க ஆவணங்கள் கிடைத்துள்ளன. இக்களப்பிர அரசர்கள் கிபி 4 தொடக்கம் 6 ஆம் நூற்றாண்டுவரை ஆண்ட காலத்தைத் தமிழகத்தின் இருண்ட காலம் என்று வரலாற்றாளர்கள் கூறுவதுண்டு. கி.பி. நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சிறந்த கோவில்களை அமைத்த பல்லவர்கள் முன்னணிக்கு வந்தனர். இவர்கள் தென்னிந்தியாவில் 400 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். காஞ்சிபுரத்தைத் தலை நகரமாகக் கொண்டு தமிழ் நாட்டின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் சோழரைத் தோற்கடித்தனர். இவர்கள் செல்வாக்கு இலங்கை வரை பரவியிருந்ததாகக் கருதப்படுகிறது. முதலாம் மகேந்திரவர்மனும், அவனுடைய மகனான நரசிம்மவர்மனும் பல்லவர்களுள் சிறந்து விளங்கிய அரசர்களாவர். பல்லவர் கட்டிடக்கலை பல்லவர் காலத்திலேயே வளர்ச்சியடைந்து உருப்பெற்றது. இறுதிப் பல்லவ மன்னன் அபராசிதன் ஆவான். இவன் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டதுடன் பல்லவராட்சி தமிழ் நாட்டில் முடிவுக்கு வந்தது. இக்காலக்கட்டத்தில் (கிபி 300 – கிபி 600) பெளத்தம் தமிழகத்தில் மிகவும் செல்வாக்கோடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.[27] 9 தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டுவரை கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இராசராச சோழன் மற்றும் அவனது மகனான இராசேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் சோழர், தென்னிந்தியாவில் ஆற்றல் மிக்கவர்களாக உருவெடுத்தனர். இவர்களுடைய பேரரசு, மைய இந்தியா, ஒரிசா, மற்றும் வங்காளத்தின் சில பகுதிகள்வரைகூடப் பரவியிருந்தது. இராசராச சோழன் கிழக்கிலிருந்த சாளுக்கிய அரசர்கள் மற்றும் சேர மன்னர்களை வீழ்த்தினான். அத்துடன் பாண்டிய அரசிடமிருந்து இலங்கையின் சில பகுதிகளையும் கைப்பற்றினான். இராசேந்திர சோழன் மேலும் முன்னேறி அந்தமான் நிக்கோபார் தீவுகள், இலட்சத்தீவுகள், சுமத்ரா, சாவா, மலேயா மற்றும் பெகு தீவுகளையும் தன் கப்பற்படையைக் கொண்டு கைப்பற்றினான். அத்துடன் தற்போதைய பீகார் மற்றும் வங்காளப் பகுதிகளை ஆண்டு வந்த மகிபாலனையும் வீழ்த்தினான். தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் தலைநகரை உருவாக்கினான். பதின்மூன்றாம் நூற்றாண்டுவாக்கில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது. 14ஆம் நூற்றாண்டு 14ஆம் நூற்றாண்டில் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர். ஆயினும் அந்த எழுச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1316 இல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்சி ஆட்சியாளர்கள், மதுரையை முற்றுகையிட்டு சூறையாடினர். இசுலாமியர்களின் படையெடுப்பு சோழர்களையும் பாண்டியர்களையும் ஆற்றலற்றவர்களாக்கி இசுலாமிய "பாமினி" ஆட்சிக்கு வித்திட்டது. இசுலாமியப் படையெடுப்புக்கு பதிலடி தரும் வண்ணம் பல்வேறு சிற்றரசுகள் சேர்ந்து விசயநகர பேரரசைத் தோற்றுவித்தன. இப்பேரரசின் பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வையிட நாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள் நியமிக்கப் பட்டனர். அம்பியை தலை நகராகக் கொண்டிருந்த விசய நகரப் பேரரசு செல்வச் செழிப்போடும் அமைதியுடனும் திகழ்ந்தது. ஆனால், 1564 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த தலிகோட்டா போரில் தக்காணப் பீடபூமியைச் சேர்ந்த சுல்தான்களால் விசயநகர ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் ஆட்சிக்கடங்கிய பகுதிகள் யாவும் நாயக்கர்களிடையே பிரித்தளிக்கப்பட்டன. நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு அரசியல் அமைப்புகள் மாற்றி அமைக்க பட்டன பாளையங்கள் உருவாக்கப்பட்டு கிராம சுய ஆட்சி முறை ஒழிக்க பட்டது. தஞ்சை மற்றும் மதுரையைச் சேர்ந்த நாயக்கர்கள் புகழ் பெற்று விளங்கியதோடு பழங்கால கோயில்களைப் புதுப்பிக்கவும் செய்தனர். இன்றைய கேரளாவும் மலபாரை ஒட்டிய பகுதிகளும் சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி ரோமானியர்களுடனான வாணிபத்திற்கு ஏதுவாக இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பு நிகழும் வரை சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய நிலப்பகுதி பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது. 17 ஆம் நூற்றாண்டு 1639 இல்ஆ ங்கிலேயர்கள் மதராசில் (தற்பொழுது சென்னை என்று அழைக்கப்படுகிறது) கிழக்கிந்தியக் கம்பெனியை நிறுவியபிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய பகுதி தொடங்கியது. தமிழ் நாட்டு சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பிரித்தாண்டு, அவர்களின் மேல் தங்கள் அதிகாரத்தைச் செலுத்தத் தொடங்கினர். தமிழ்நாடும் அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவும் மெல்ல மெல்ல ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் அதிகாரத்தைத் தம் வசப்படுத்திய இந்தக் காலக்கட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்களும் கணிசமானோர் இருந்தனர். வீரபாண்டிய கட்டபொம்மன்,அனந்த பத்மநாப நாடார், பூலித்தேவன், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வாண்டாயத் தேவன், அழகு முத்துக்கோன், வீரன் சுந்தரலிங்கம், ஒண்டி வீரன், பெரிய காலாடி, தீரன் சின்னமலை, போன்ற ஆட்சியாளர்கள் வெள்ளையரை எதிர்த்துப் போரிட படைகளைத் தலைமையேற்று நடத்தினர். 20 ஆம் நூற்றாண்டு 1947இல் இந்தியா விடுதலை அடைந்தபோது, மதராசு மாகாணம் (படம்) (The Madras Province) மதராசு மாநிலம் ஆனது. ஆனால் 1948ஆம் ஆண்டுவரை புதுக்கோட்டை சமஸ்தானம் தொண்டைமான் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. இதுவே இந்தியாவோடு சேர்ந்த கடைசி சில சமஸ்தானங்களுள் ஒன்றாகும். தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை மதராசு மாநிலத்தின் கீழ் வந்தன. 1953இல் மதராசு மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்களுள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும் தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராசு மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டது. 1956இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் மதராசு மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டது. 1969இல், மதராசு மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ‎திருவாங்கூர்-கொச்சி மாநிலத்தின் தென்பகுதியில் தமிழ் பேசும் மக்கள் வாழிடம் கன்னியாகுமரி மாவட்டமாக உருவாக்கப்பட்டு, நவம்பர் 1, 1956இல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. பாரம்பரியம் தமிழ்நாடு, இன்றும் செழிப்புடன் விளங்கும், வளமான இலக்கிய, இசை, நடனப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. இது இந்தியாவின் அதிக அளவு கைத்தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்று. சுப்பிரமணிய பாரதி,, வ. உ. சிதம்பரம்பிள்ளை, சி. வி. இராமன், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ,பெருந்தலைவர் காமராசர், சுப்பிரமணியன் சந்திரசேகர், ஆர். கே. நாராயண், ஆர். வெங்கட்ராமன், சி. என். அண்ணாதுரை, சீனிவாச ராமானுசன், அப்துல் கலாம், பாரதிதாசன், அயோத்தி தாசர், திரு.வி.க., கண்ணதாசன், என்.எஸ்.கிருட்டிணன்,ஈ.வே.ரா பெரியார் ஆகியோர் மாநிலத்தின் நன்கு அறியப்பட்டவர்களில் சிலராவர். இவர்களோடு, இளங்கோவடிகள், கண்ணகி, திருவள்ளுவர், தொல்காப்பியர், ஔவையார், கம்பர், கரிகால்சோழன், இராசராச சோழன், போன்ற முற்காலத்தவரும் இன்றும் நினைவில் இருப்பவர்களாகும். அரசியல் தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234. நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39. 1986 வரை தமிழ் நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர். தமிழ் நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகளாகத் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை விளங்குகின்றன. (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), இந்திய தேசிய காங்கிரசு, இந்தியக் குடியரசுக் கட்சி, அகில இந்திய பார்வார்ட்டு பிளாக், இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், பாரதிய ஜனதா கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், முஸ்லீம் லீக்,அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன. பெரியார் 1916இல் தோற்றுவித்த திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து, 1949 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை சி. என். அண்ணாதுரை தோற்றுவித்தார். 1947 இல் இந்திய விடுதலைக்குப் பிறகு 1967 வரை தமிழ்நாட்டை இந்திய தேசிய காங்கிரசு ஆண்டது. 1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. 1972 இல் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ம. கோ. இராமச்சந்திரன் தோற்றுவித்தார். 1977இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலில் ஆட்சியைப் பிடித்தது. 1967 முதல் 2016 இல் கடைசியாக நடந்த சட்டமன்றத் தேர்தல்வரை தி.மு.க. அல்லது அ.இ.அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்று அல்லது அக்கட்சிகள் தலைமை வகிக்கும் கூட்டணிகள் பெரும்பான்மை தொகுதிகளை வென்று வருகின்றன. தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தல்களில் பல கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதுண்டு என்றாலும், இதுவரை தனிக்கட்சி ஆட்சியே நடைபெறுகிறது. முதன் முறையாகத் தி.மு.க. ஒரு அறுதிப் பெரும்பான்மையற்ற சிறுபான்மை அரசாகச் (2006–2011) செயல்பட்டது. இருப்பினும், தமிழக கட்சிகள் நடுவண் அரசில் செல்வாக்கோடு விளங்கிக் கூட்டணி ஆட்சி அமைக்க உதவவும், பங்கேற்கவும் செய்கின்றன. மாவட்டங்கள் தமிழ் நாட்டில் தற்போது 33 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன. இவற்றுள் விதிவிலக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில், நீலமலை மாவட்டத்தின் தலைநகர் உதகமண்டலம் என்றுள்ளன. தற்போதுள்ள மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாகப் பெயர்மாற்றம் பெற்றுவந்துள்ளன. ஒரு சில காலகட்டங்களில் மாவட்டங்களின் பெயருடன் காலம் சென்ற தமிழக தலைவர்கள் பெயரும் இணைத்துப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தன. தற்போது அப்பெயர்கள் நீக்கப்பட்டு, மாவட்டங்களின் பெயர்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன. இந்த 33 மாவட்டங்களில் 288 வருவாய் வட்டங்கள் உள்ளது. அரியலூர் மாவட்டம் இராமநாதபுரம் மாவட்டம் ஈரோடு மாவட்டம் கடலூர் மாவட்டம் கரூர் மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் கிருட்டிணகிரி மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் சிவகங்கை மாவட்டம் சென்னை மாவட்டம் சேலம் மாவட்டம் தஞ்சாவூர் மாவட்டம் தருமபுரி மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம் திருப்பூர் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளூர் மாவட்டம் திருவாரூர் மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் தேனி மாவட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் நாமக்கல் மாவட்டம் நீலமலை மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம் பெரம்பலூர் மாவட்டம் மதுரை மாவட்டம் விருதுநகர் மாவட்டம் விழுப்புரம் மாவட்டம் வேலூர் மாவட்டம் நகரங்கள் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் முதல் 15 பெரிய நகரங்கள்:[28] சென்னை கோயம்புத்தூர் மதுரை திருச்சி சேலம் திருப்பூர் ஈரோடு திருநெல்வேலி வேலூர் தூத்துக்குடி திருவண்ணாமலை திண்டுக்கல் தஞ்சாவூர் நாகர்கோவில் கடலூர் உள்ளாட்சி அமைப்புகள் தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளும், 125 நகராட்சி மன்றங்களும், 529 பேரூராட்சிகளும், 385 ஊராட்சி ஒன்றியங்களும் மற்றும் 12,524 ஊராட்சி மன்றங்களும் உள்ளது. மக்கள் வகைப்பாடு தமிழ்நாடு இந்தியாவின் ஏழாவது மக்கட்தொகை மிகுந்த மாநிலமாகும். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 72.147.030 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 36.137.975 மற்றும் பெண்கள் 36.009.055 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,423,832 ஆக உள்ளது. அதில் சிறுவர்கள் 3.820.276 ஆகவும்: சிறுமிகள் 3.603.556 ஆகவும் உள்ளனர். மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.61% ஆக உள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 996 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 555 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் படிப்பறிவு 51,837,507 (80.09 %) ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 28.040.491 (86,77 %) ஆகவும், பெண்களின் படிப்பறிவு 23.797.016 (73,44 %) ஆகவும் உள்ளது. நகரப்புறங்களில் 48,40% மக்களும், கிராமப்புறங்களில் 51,60 % மக்களும் வாழ்கின்றனர்.[29] சமயம் தமிழகத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 63.188.168 (87,58 %) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 4,229,479 (5,86 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 4.418.331 (6,12 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள்தொகை 14.601 (0,02 %) ஆகவும், சமண சமய மக்கள்தொகை 89.265 (0,12 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 11.186 (0,02 %) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 7.414 (0,01 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 188.586 (0,26 %) ஆகவும் உள்ளது. மொழிகள் 89 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். தெலுங்கு (5,65%), கன்னடம் (1,68%), உருது (1,51%), மலையாளம் (0,89%) ஆகிய மொழிகளும் பேசப்படுகின்றன. பழங்குடிகள் தமிழகத்தின் மக்கள்தொகையில் 3.5% மக்கள் பழங்குடிகள் (2001 கணக்கெடுப்பு). மாநிலத்தில் 40-க்கும் மேற்பட்ட பழங்குடிகள் உள்ளனர். நீலமலை, ஆனைமலை, கொல்லிமலை ஆகிய பகுதிகளில் குறிப்பிடத் தக்க எண்ணிக்கையில் தோடர், காடர், குறும்பர், காணிக்காரர், மலமலசர், பணியர், பழியர் முதலிய பழங்குடி இன மக்கள் வாழ்கின்றனர். பொருளாதாரம் தமிழ்நாடு, நல்ல தொழில் வளர்ச்சி கண்டுள்ள ஒருசில இந்திய மாநிலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. தமிழக மக்கள் தொகையில் குறிப்பிடத் தகுந்த பகுதியினர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் பொறியியல், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்கள், நெசவாலைகளுக்கும், ஆடை ஏற்றுமதி, விவசாய உபகரணங்கள், மோட்டார், கிரைண்டர் உற்பத்திக்கும், ஈரோடு மஞ்சள் சாகுபடி மற்றும் ஆடை ஏற்றுமதிக்கும், கரூர் இல்ல உப-சவுளி ஏற்றுமதி மற்றும் கனரக வாகன கூடு கட்டும் தொழில்களுக்கும், திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கும், சேலம் இரும்பு உருக்கு, அலுமினியம், ஆலைகளுக்காகவும், சவ்வரிசி, மாம்பழ, பட்டு சேலை, பருத்தி உற்பத்திக்கும் , கனரக தொழிற்சாலைகளுக்கும் ,மின்சார உற்பத்திக்காகவும், கனரக வாகனங்கள் கட்டுமானத்திலும், நிலக்கடலை, கரும்பு, தக்காளி போன்ற பயிர் உற்பத்திக்கும், நாமக்கல் கோழிப் பண்ணைகளுக்கும், சிவகாசி அச்சுத்தொழில், பட்டாசு உற்பத்திக்கும், காவிரி பாசன பகுதியில் அமைந்துள்ள திருச்சி, தஞ்சாவூர் போன்ற பகுதிகளும் கன்னியாகுமரி மாவட்ட நாஞ்சில் நாட்டுப் பகுதியும் விவசாயத்திற்கும், வேலூர் தோல் தொழிலுக்கும், சென்னை வாகன உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களுக்கும் பெயர் பெற்றுள்ளன. பாலிவுட் என அழைக்கப்படும் மும்பை திரைப்படத் துறைக்கு அடுத்ததாக, தமிழகத் திரைப்படத்துறை இந்தியாவின் இரண்டாவது பெரிய திரைப்படத் தொழில் மையமாகக் கோலிவுட் என்னும் பெயரோடு (கோடம்பாக்கம் + ஹாலிவுட் என்பதன் பெயர்த் தழுவல்) திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும், பெருமளவில் தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. தற்போதைய விலையில், 2011–2012 ஆண்டு கணக்கின்படி, தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி – 132.4 பில்லியன் அமெரிக்க டாலர் [30]. இந்தியாவில் தொழிற்சாலைகள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம் - 26122 [31] மொத்த தொழில்துறை உற்பத்தியில் நாட்டில் முதலிடம். வெளிநாட்டு நேரடி முதலீட்டில் இந்தியாவில் முதல் மூன்று மாநிலங்களில் ஒன்று. இந்தியாவில் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில், தமிழ்நாட்டின் பங்கு 35 % சென்னையின் தானுந்துத் தயாரிப்பு திறன்: தானுந்து 13,80,000, வர்த்தக வாகனங்கள்: 3,61,000, ஸ்யுவி: 1,50,000 தானுந்துத் தொழிற்சாலைகள்: யுன்டாய், போர்டு, நிசான், அசோக் லேய்லான்ட் சென்னையில் உள்ள டயர் தயாரிப்பு நிறுவனங்கள்: எம்.ஆர்.எஃப், அப்பல்லோ டயர்ஸ், மிஷ்ஷலின், ஜெ.கெ டயர்ஸ் இலத்திரனியல் தொழிற்துறை: நோக்கியா, பாக்ஸ்கான், பிளக்ஸ்டிராநிக்ஸ், டெல், பிஒய்டி, வீடியொக்கான், சாம்சங், மோட்டரோலா இந்தியாவில் கறி-கோழி வளர்ப்பில், தமிழ்நாடு இரண்டாவது பெரியது [32]. இந்தியாவில் பால் உற்பத்தியில், தமிழ்நாடு இரண்டாவது பெரியது [33]. மின்சாரம்: 18083 மெகா வாட்(இரண்டாவது பெரியது) சிறப்பு பொருளாதார மண்டலம்: 92, தொழிற் பூங்கா: 19 [34] அதிக சாலை அடர்த்தி (மூன்றாவது பெரியது). சுகாதாரம், வீடமைப்பு, கல்வி ஆகிய துறைகளில் வளர்ச்சி அடைந்த மாநிலம். .ரகுராம் ராஜன் அறிக்கையின் படி தமிழ்நாடு இந்தியாவின் மூன்றாவது முன்னேறிய மாநிலம்[35]. தமிழ்நாட்டின் ஏழ்மை நிலை ரகுராம் ராஜன் அறிக்கையின் படி[2013ஆம் ஆண்டு], தமிழ்நாட்டின் ஏழ்மைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் விகிதம் 11.28 விழுக்காடு. இது மற்ற இந்திய மாநிலங்களை ஒப்பிடுகயில், தமிழ்நாட்டின் ஏழ்மை விகிதம் குறைவு [36]. 2004/2005ஆம் ஆண்டுகள் எடுத்த கணக்கெடுப்பு பணியின்போது 29.4 சதவீதத்தினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்தனர்.[37] ஆனால் இது 1999/00 கணிப்பீட்டின் படி 12-17 மில்லியன் மக்கள் அல்லது 21 விழுக்காடு மட்டுமே இருந்தது.[38] கல்வி அறிவு மற்றும் சமூக வளர்ச்சி சமூக முன்னேற்றத்தின் குறியீடுகளான (மனித வளர்ச்சிச் சுட்டெண்) பரவலான கல்வியறிவு, ஆண் - பெண் சமத்துவம், மேம்பட்ட பொது சுகாதாரம், நீண்ட சராசரி மனித ஆயுள், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, வேலை வாய்ப்புகள், தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியாவின் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாகத் தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாட்டு மக்களின் கல்வியறிவு இந்தியாவின் சராசரியைவிட அதிகம். இங்கு 2001–2011 காலக் கட்டத்தில் 74,04%ல் இருந்து 80,33% என்று கல்வியறிவு அதிகரித்தது. இன்று தமிழ்நாட்டில் 86,81% ஆண்களும் 73,86% பெண்களும் கல்வியறிவுடையவர் ஆவர். தமிழ்நாட்டில் 37 பல்கலைக்கழகங்கள், 454 பொறியியல் கல்லூரிகள், 1.150 கலைக் கல்லூரிகள், 2550 பள்ளிக்கூடங்கள் மற்றும் சுமார் 5.000 மருத்துவமனைகள் உள்ளன. இங்கு இரண்டு நடுவண் அரசு கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவை சென்னையில் அமைந்த இந்திய தொழில்நுட்பக் கழகம்,பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சியில் அமைந்த தேசிய தொழில்நுட்ப கழகம் ஆகும். மேலும் புகழ் மிக்க சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம்,அண்ணாமலை பல்கலைக்கழகம்,சேலம் சோனா பொறியியல் கல்லூரி்,பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம், வேலூர் கிருத்துவ மருத்துவ கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர்,பச்சையப்பன் கல்லூரி ,சென்னை, இலயோலாக் கல்லூரி ஆகியனவும் உள்ளன. தமிழகத்தில் வருடந்தோறும் 130.000 பேர் பொறியியல் படிப்பு முடித்துத் தேர்ச்சி பெறுகின்றனர். இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது. 525 பொறியியல் கல்லூரிகள்– 226034 பொறியியல் பட்டதாரிகள் (2012). 447 பலதொழில்நுட்பப் பயிலகம் – 171637 தொழில்நுட்பர்கள் (2012). 1622 தொழில் பயிற்சி நிறுவனம் – 173746 (2012). மருத்துவ கல்லூரி – 28 (ஆண்டு – 2012)[39]. பண்பாடு தமிழர் பண்பாடு நீண்ட கால வரலாறு கொண்டது. இலக்கியம், இசை, நாடகம் என்பன சார்ந்த பல்வேறு கலை வடிவங்கள் தமிழ் நாட்டில் சிறப்பான நிலையில் உள்ளன. பரத நாட்டியம், கர்நாடக இசை, திராவிடக் கட்டிடக்கலை போன்ற புகழ் பெற்ற உயர் கலை வடிவங்கள் பெரும்பாலும் தமிழகத்தில் வளர்ச்சியடைந்து சிறப்பெய்தியவை. மொழியும் இலக்கியமும் தமிழ் நாட்டின் ஆட்சி மொழி தமிழ் ஆகும். ஆங்கிலமும் அலுவல் மொழியாகப் பயன்படுகிறது. இந்தியா செம்மொழியாக அங்கீகரித்துள்ள மொழிகளில் தமிழ் முதலிடத்தில் உள்ளது. தமிழரின் பண்பாட்டில் தமிழ் மொழி மிக இன்றியமையாத இடத்தை வகிக்கிறது. சங்க இலக்கியங்கள் எனப்படும் தமிழின் மிகப் பழமையான இலக்கியங்கள் யாவும் செய்யுள் வடிவில் இயற்றப்பட்டவையாகும். தொன்மைக் காலம் முதலே இலக்கியம் மட்டுமல்லாமல் மக்களின் வாழ்க்கைக்கும் இலக்கணம் கண்ட மொழி தமிழ் மொழியாகும். திருக்குறள் என்ற அறநூல் தமிழின் மிகச் சிறந்த நீதிநூல் ஆகும். இது உலகின் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தன்னை இன்னாரென அடையாளம் காட்டாத ஒரு சிறந்த தமிழ்ப் புலவரால் இயற்றப்பட்டது இந்நூலாகும். நாடு, மொழி, இனம் கடந்து உலக மக்கள் யாவருக்கும் பொதுவான நீதியைக் கூறுவதால் திருக்குறள் உலகப் பொதுமறையெனப் போற்றப்படுகிறது. கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை (திருக்குறள் 400) தமிழின் இலக்கியங்களிலிருந்து அக்கால தமிழ் மக்களின் தலைசிறந்த பண்பாடு, வாழ்க்கை முறை போன்ற கூறுகளை நாம் அறியமுடிகிறது. இந்தியாவின் முதல் நூல்கள் தமிழிலேயே அச்சாயின. தமிழகத்தின் முதல் அச்சுக்கூடம் புன்னைக்காயலில் 1578இல் போர்த்துகீசியரால் நிறுவப்பட்டது.[40] பின்னர் தரங்கம்பாடி அச்சுக்கூடத்திலும் சென்னையிலும் ஏராளமான தமிழ் இலக்கியங்கள் அச்சுவடிவம் பெற்றன. இந்திய விடுதலைப் போரில் மக்களின் விடுதலை உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கு தமிழ் கவிஞர்களான பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் கவிதைகள் உதவியாய் இருந்தன. தற்காலத்தில் வாலி, வைரமுத்து, தாமரை போன்ற தமிழ்க் கவிஞர்கள் கவிதை படைக்கின்றனர். தமிழ் எழுத்தாளர்களால் புதினங்கள், சிறுகதைகள், பெருங்கதைகள் எனத் தமிழ் நூல்கள் வெளிவருகின்றன. போக்குவரத்து தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து மூலம் சிறு கிராமங்களை இணைப்பதால் போக்குவரத்து வளர்ச்சி அடைந்துள்ளது.இரயில் போக்குவரத்து மூலம் பெரும்பான்மையான நகரங்களையும், விமான போக்குவரத்து மூலம் முக்கிய நகரங்களையும் இணைக்கின்றன. விழாக்கள் பொங்கல் திருநாள் (தமிழர் திருநாள் அல்லது உழவர் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது), தமிழர்கள் கொண்டாடும் முதன்மையான திருநாள் ஆகும். தமிழ் மாதமான தை முதல் நாள் (சனவரி 14 அல்லது 15)-ல் இத்திருநாள் கொண்டாடப்படுகிறது. நோன்புப் பெருநாள், பக்ரீத், முகரம் இசுலாமியப் புத்தாண்டு பொங்கல் தவிர தீபாவளி, தைப்பூசம், வினாயகர் சதுர்த்தி, சரசுவதி (கல்விக் கடவுள்) பூசை, ஆயுத பூசை , கிறிஸ்துமஸ், புனித வெள்ளி போன்ற சமயம் சார்ந்த திருநாட்களும் கோடைக்கொண்டாட்டமாம் தமிழ் புத்தாண்டு திருநாளும் (சித்திரை மாதம் முதல் நாள் - ஏப்ரல் 13 அல்லது 14 ) மற்றும் ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் நடைபெறுகின்றன. சுற்றுலாத்துறை தமிழ்நாடு அழகிய நிலப் பகுதிகள், பாரம்பரியச் சின்னங்கள் நிறைந்த சுற்றுலா முதன்மைத்துவம் உள்ள மாநிலமாகும். தமிழ்நாடு, திராவிட கட்டிடக்கலை பாணியைப் பிரதிபலிக்கும் கோயில்களுக்குப் புகழ் பெற்றது. இக்கோயில்களுக்கு வியக்க வைக்கும் கோபுரங்களும் ரதங்களும் அழகு சேர்க்கின்றன.இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவிலின் மூன்றாம் பிரகாரம், உலகின் மிகப் பெரியதாகும். சோழர் கால தஞ்சை பெரிய கோவிலும் பல்லவர் கால மாமல்லபுரம் சிற்பங்களும் கோவில்களும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இராமநாதபுரம், தஞ்சை, மதுரை, சுவாமிதோப்பு காஞ்சி,சேலம்,தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்,மேச்சேரி பத்ரகாளியம்மன் மற்றும் செங்காட்டூர்(சேலம்) ஆகியவை கோயில் நகரங்களாகத் திகழ்கின்றன. கன்னியாகுமரி கடல் முனையில் அமைந்துள்ள வள்ளுவர் சிலையும் காண வேண்டிய இடமாகும். எழில் கொஞ்சும் நீலகிரி மற்றும் கோடைக்கானல் மலைப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப் பகுதிகள், கிழக்குக் கடற்கரை, ஏற்காடு, மேட்டூர், பூலாம்பட்டி போன்ற மனம் கவரும் தலங்களும் உண்டு. இவற்றையும் பார்க்கவும் தமிழ்நாட்டுப் பொருளாதாரம் தமிழ்நாடு வேளாண்மைத் தொழிற்துறை தமிழ்நாடு இலத்திரனியல் தொழிற்துறை தமிழ்நாடு தானுந்து தொழிற்துறை தமிழ்நாட்டு ஓவியக் கலை தமிழ்நாட்டு ஊர்களும் உணவுகளும் தமிழ்நாட்டு இந்துத்துவ அமைப்புகள் தமிழ்நாட்டு தொழிற்துறைகள் தமிழ்நாட்டு வேதிப்பொருள் தொழிற்துறை தமிழ்நாட்டு அறிவொளி இயக்கம் தமிழ்நாட்டு சீர்திருத்தங்கள் தமிழ்நாட்டு ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்கள் தமிழ்நாட்டு தலித் அமைப்புகள் தமிழக வரலாறு தமிழக ஏரிகள் தமிழ்நாடு துடுப்பாட்ட அணி தமிழ்நாட்டுக் காலநிலை தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் - அதிகாரப்பூர்வ இணையத்தளம் - நிலப்படங்களுக்கான அரசு இணையத்தளம் - அரசு சுற்றுலாத்துறை இணையத்தளம் * பகுப்பு:இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்
தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரம் எது?
சென்னை
136
tamil
d7592882c
1945 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் கடைசிக் கட்டங்களில் நேச நாடுகள் சப்பான் நாட்டுக்கு எதிராக அந்நாட்டு நகர்களாகிய இரோசிமா, நாகசாக்கி மீது அணுகுண்டு வீச்சு நிகழ்த்தின. இந்த இரு அணுகுண்டு வீச்சுகள் மட்டுமே இன்றுவரை போர்ச் செயல்பாட்டில் நிகழ்ந்தவை ஆகும். அமெரிக்க அரசின் அறிக்கையில், இந்த அணுகுண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அணுகுண்டை யப்பான் மீது போட்டு பேரழிவை உண்டாக்காமலிருந்திருந்தால் இரண்டாம் உலகப் போர் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும். அதன்மூலம் இதனை விட அதிகமான மக்கள் இறந்திருப்பர். பரவலாக மக்கள் சாகாமல் பார்த்துக் கொண்டது அமெரிக்கா என்று குறிப்பிட்டது. இந்தப் படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை குறித்துப் பெரும் சர்ச்சை உலகெங்கும் இன்றும் தொடர்கின்றது. இரண்டாம் உலகப் போரின் கடைசிக் கட்டங்கள் இரண்டாம் உலகமகா யுத்தத்தின் போது ஜப்பான், தானும் ஒரு வல்லரசாக மாறும் முனைப்பில் மிக உக்கிரமாகப் போரில் குதித்திருந்தது. வெற்றிபெற்றுக்கொண்டே வந்த ஜப்பான், பசிபிக் கடல் பிராந்தியத்தின் பேர்ள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க படைக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது. அதன்பின்னரே போரின் போக்கு முற்றாகத் திசைதிரும்பியது. முடிவில், அமெரிக்கா, தான் புதிதாகக் கண்டுபிடித்திருந்த அணுகுண்டுகளை வெடிக்கவைத்துப் பார்க்கும் பரிசோதனைக்கூடமாக ஜப்பானைப் பயன்படுத்திக் கொண்டது. ஹிரோஷிமா, நாகசாக்கி ஆகிய ஜப்பானிய நகரங்களின் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் மூலம் அணுகுண்டுகள் வீசியெறியப்பட்டன. சரணடைய சப்பானுக்கு இறுதி எச்சரிக்கை நேச நாடுகள் முதலில் சப்பான்மீது தீக்குண்டுகளை வீசித் தாக்குதல் நிகழ்த்தின. இதனால் பல நகரங்கள் அழிந்தன. பின்னர், தாக்குதல்களின் தீவீரம் அதிகரித்தது. ஐரோப்பிய போர்முனையில் நாசி செருமனி 1945, மே 8ஆம் நாள் தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைந்தது. அதே நாளில் "சரண் ஆவணம்" (instrument of surrender) கையெழுத்தானது. ஆனால் பசிபிக் போர்முனையில் போர் தொடர்ந்து நடந்தது. பின்னர், 1945, சூலை 26ஆம் நாள், ஐக்கிய அமெரிக்கா, சீனக் குடியரசு மற்றும் ஐக்கிய இராச்சியத்தோடு இணைந்து, "பாட்சுடம் அறிக்கை" (Potsdam Statement) வெளியிட்டது அந்த அறிக்கையில் சப்பானின் அரசு தோல்வியை ஏற்று, "நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்" என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் "உடனடி, முழு அழிவு"க்கு அணியமாக வேண்டும் கூறப்பட்டிருந்தது. அதற்குப் பத்து நாட்களுக்கு முன்னர் அணுகுண்டு வெடிப்பு சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டிருந்ததால் "உடனடி, முழு அழிவு" என்னும் சொற்கள் சப்பான் மீது நேச நாடுகள் அணுகுண்டு வீச்சு நிகழ்த்த வேண்டிய சூழ்நிலை எழலாம் என்று கடைசி எச்சரிக்கை கொடுத்தது போல் ஆயிற்று. அணுகுண்டு வீச்சு இந்த எச்சரிக்கையை சப்பான் அரசு கண்டுகொள்ளவில்லை. "மான்ஹாட்டன் செயல்திட்டம்" என்பதின் கீழ் உருவாக்கப்பட்ட இரு அணு ஆயுதங்கள் சப்பானின் மீது வீசப்பட்டன. "சிறு பையன்" (Little Boy) என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு ஹிரோஷிமா நகர்மீது 1945, ஆகத்து 6ஆம் நாளும், "பருத்த மனிதன்" (Fat Man) என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு நாகசாக்கி நகர்மீது மூன்று நாட்களுக்குப் பிறகு ஆகத்து 9ஆம் நாளும் வீசப்பட்டன. நினைத்துப் பார்க்கவும் முடியாத பேரழிவுகளை ஜப்பான் சந்திக்க நேர்ந்தது. அந்த அழிவின் சாட்சியங்கள் இன்றும் அந்த நாட்டில் நிலைத்துள்ளன. விளைவு இதுவே வரலாற்றில் முதல்முறையாக அணுகுண்டுகள் போரில் பயன்படுத்தப்பட்ட நிகழ்ச்சியாகும். இந்த இரு குண்டுவீச்சுகளின் விளைவு மிகப் பயங்கரமாக இருந்தது. குண்டுகள் வீசப்பட்ட 2-4 மாதங்களுக்குள் ஹிரோஷிமாவில் 90,000-166,000 மக்களும், நாகசாக்கியில் 60,000-80,000 மக்களும் குண்டுவெடிப்பின் காரணமாக உயிர் இழந்தார்கள். இவ்வாறு உயிர் இழந்தவர்களுள் பாதிப்பேர் இரு நகரங்களிலும் குண்டு வீசப்பட்ட முதல் நாளிலேயே கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிரோஷிமா நகரின் நலத்துறை கணிப்புப்படி, குண்டுவீச்சு நிகழ்ந்த நாளில் இறந்தோரில் 60% பேர் தீக்காயங்களாலும், 30% பேர் இடிமானங்கள் தங்கள்மேல் விழுந்ததாலும், 10% பிற காரணங்களாலும் கொல்லப்பட்டனர். குண்டுவீச்சைத் தொடர்ந்த மாதங்களில் ஏராளமான மக்கள் தீக்காயங்களின் விளைவாலும், கதிர்வீச்சு நோயாலும், வேறு காயங்களால் நோய் தீவிரமாகியும் இறந்தனர். ஐக்கிய அமெரிக்கா, குண்டுவீச்சைத் தொடர்ந்த சாவுகளுக்கு உடனடியான மற்றும் குறுகிய காலக் காரணங்களைக் கீழ்வருமாறு கணித்தது: 15-20% பேர் கதிர்வீச்சு நோயால் இறந்தனர்; 20-30% தீக்காயங்களால் இறந்தனர்; 50-60% பேர் வேறு காயங்களால் நோய் தீவிரமாகி இறந்தனர். ஹிரோஷிமாவிலும் நாகசாக்கியிலும் கொல்லப்பட்டவர்களுள் மிகப் பெரும்பான்மையோர் போர்வீரர்கள் அல்ல, சாதாரண குடிமக்களே ஆவர். ஹிரோஷிமாவில் மட்டும் இராணுவ முகாம்கள் பல இருந்தன. அணுகுண்டுகளின் பெயர்கள் ஹிரோஷிமா நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டிற்கு அமெரிக்கா வைத்த குறிப்பெயர் ”சின்னப் பையன்” (little boy) என்பதாகும். மூன்று நாட்கள் கழித்து நாகசாகி நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டிற்கு ”கொழுத்த மனிதன்” (Fat man) என்ற குறுப்பெயர் சூட்டினர். சின்னப்பையன் ‘எனோலாகே’ என்ற விமானம் ‘லிட்டில் பாய்’ என்ற அணுகுண்டை காலை 8.15 மணிக்கு இரோசிமா நகரத்தின் நட்ட நடுப்பகுதியில் போட்டது. அணுகுண்டைத் தாங்கி வந்த விமானத்தை ஓட்டிய விமானியும் படைத் தளபதியுமான ‘பால்டிப்பெட்ஸ்’ என்பவரின் தாயார் பெயர்தான் ‘எனோலாகே’ என்பதாகும். அணுகுண்டு விழுந்தவுடன் பயங்கரச் சத்தத்துடன் வெடித்து நகரத்திற்கு 2000 அடிகளுக்கும் மேல் தீப்பிழம்புகள் தெரிந்தன. 90,000 மக்கள் செத்து மடிந்தனர். மொத்தத்தில் சுமார் 16 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இருந்த அனைத்தும் முழுமையாக அழிந்தது. கட்டடங்கள் தரைமட்டமாயின. தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதால் ஜப்பானில் வேறு பகுதிகளில் வசித்தவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கூட அழிவின் வீச்சு என்ன என்பதை தொடக்கத்தில் தெரிந்து கொள்ள இயலவில்லை. ஜப்பான் இராணுவத்தின் தலைமையகம் இரோசிமா நகரத்திலுள்ள இராணுவப் பிரிவை திரும்பத் திரும்ப அழைக்க முயன்றது. மறுபக்கத்தில் எந்தப் பதிலும் கிடைக்காமல் முழு அமைதி நிலவியதால் ஜப்பான் நாட்டின் இராணுவத் தலைமையகம் குழப்பம் மேலிட்டு பதற்றமடைந்தது. ஏற்பட்ட பயங்கர பாதிப்பை ஜப்பான் தலைமை முழுமையாக உணர முடியாத காரணத்தினால் தலைமையிலிருந்து ஓர் இளம் அதிகாரி விமானத்தில் ஹிரோஷிமா சென்று அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிந்துவரப் பணிக்கப்பட்டார். அதிகாரி விமானத்தில் ஹிரோஷிமா விரைந்தார். மூன்று மணி நேரம் பறந்ததற்குப் பிறகு இன்னும் ஹிரோஷிமா சென்றடைய நூறு கிலோ மீட்டர் தூரமே இருந்த போது அவரும் அந்த விமானத்தின் பைலட்டும் வானமண்டலமே புகை கக்கும் மேக மண்டலங்களாக உருவெடுத்திருப்பதைப் பார்த்தனர். மிகுந்த சிரமப்பட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு விமானத்தை வேறு ஒரு பகுதிக்குச் செலுத்தி பத்திரமாக இறக்கினர். அந்த இளம் அதிகாரி, ஏற்பட்ட பேரழிவைப் பற்றித் திரும்பி வந்து சொன்ன பிறகுதான் உலகமே இக்கொடுமை குறித்துத் தெரிந்தது. ஹிரோஷிமா மீது குண்டு போடப்பட்டு பதினாறு மணிநேரம் கழித்து அமெரிக்க வெள்ளை மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம்தான் ஜப்பானின் தலைமையகத்திற்கு குண்டு வெடிப்பின் விபரீதம் விளங்கியது. 1950 முதல் 1990 வரை நடைபெற்ற ஆய்வில் அணுகுண்டுக் கதிர்வீச்சின் நச்சுத்தன்மை காரணமாக பல்லாயிரம் பேர் இறந்தனர் என்பது வெளிப்பட்டது. பல்லாயிரம் பேருக்கு இச்சம்பவம் நிகழ்ந்து பல்லாண்டுகளான பின்பும் சதைப் பிண்டங்களாக குழந்தைகள் பிறக்கின்றன. கை,கால், கண்,மூக்கு போன்ற உடல் பாகங்களின்றி ஊனமாகக் குழந்தைகள் பிறக்கின்றன. குண்டுமனிதன் நாகசாகி மீது போடப்பட்ட ‘ஃபேட்மேன்’ அணுகுண்டு வெடித்தவுடன் பதினெட்டு கிலோமீட்டார் உயரத்திற்கு எகிறி தீப்பிழம்பாய்த் தேரிந்தது. தீ ஜூவாலை அணைந்தவுடன் அடர்த்தியான நச்சுக் கரும்புகை மேகங்களாக உயரத்தில் உருவெடுத்து உலவின. இந்தக் குண்டு வெடிப்புகள் குறித்த ஜப்பான் நாட்டின் அறிக்கை “சமாதிகள் எழுப்பப்படாத சுடுகாடாக ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் காணப்பட்டன” என்று குறிப்பிடுகிறது. ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் அமெரிக்கா இன்னோர் அணுகுண்டைப் போடத் தயார் நிலையில் இருந்தது. மூன்று குண்டுகள் செப்டம்பரிலும், முன்று குண்டுகளை அக்டோபரிலும் போட அமெரிக்கா திட்டமிட்டது. இந்தக் குண்டுகள் அனைத்தையும் அன்றைய குடியரசுத் தலைவரின் எழுத்துப்பூர்வமான உத்தரவில்லாமல் போட இயலாது என உயர்மட்ட இராணுவ அதிகாரிகளே தங்களது அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததால் படிப்படியாக சூழல் மாற்றம் ஏற்பட்டு இத்திட்டங்களைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சப்பான் சரணடைதல் 1945, ஆகத்து 15ஆம் நாள், அதாவது, நாகசாக்கியில் அணுகுண்டு வீசப்பட்ட ஆறாம் நாள், சப்பான் போரில் தோல்வியை ஏற்று நேசநாடுகளின் முன் சரணடைந்தது. அதே ஆண்டு, செப்டம்பர் மாதம் சப்பான் "சரண் ஆவணத்தில்" (Japanese Instrument of Surrender) கையெழுத்திட்டது. இவ்வாறு இரண்டாம் உலகப் போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது. அணுகுண்டு வீச்சு அறநெறிக்கு உகந்ததா? இரண்டாம் உலகப் போருக்குப் பின் சப்பான் நாடு உலக அமைதியைப் பேண உறுதிபூண்டது. 1967இல் சப்பான் "அணு ஆயுத விலக்கு பற்றிய மூன்று தத்துவங்கள்" (Three Non-Nuclear Principles - சப்பானிய மொழியில்: Hikaku San Gensoku) என்னும் கொள்கையைத் தனக்கென்று வகுத்துக்கொண்டது. போரில் சப்பான் அணுகுண்டு அழிவைச் சந்தித்ததும் அக்கொள்கை உருவாக்கத்திற்குக் காரணமாக அமைந்தது. சப்பான் ஏற்ற மூன்று தத்துவங்கள் பின்வருமாறு: சப்பான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யாது. அணு ஆயுதங்களைக் கைவசம் கொண்டிராது. அணு ஆயுதங்கள் சப்பானுக்குள் வர இசையாது. இக்கொள்கைகள் சப்பானிய மக்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை எதிரொலித்தன. அவை நாடாளுமன்றத்தால் சட்டமாகப் பிரகடனம் செய்யப்படாவிட்டாலும், "தீர்மானங்களாக" (Resolutions) நிறைவேற்றப்பட்டன. இரண்டாம் உலகப் போரில் சப்பான் தோல்வியை ஏற்று சரணடைந்ததற்கு நேச நாடுகள் அணுகுண்டு வீசியதுதான் காரணமா என்னும் கேள்வி தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. அதுபோலவே, போர் நிகழ்கையில் நேச நாடுகள் பயங்கர அழிவுகளையும் உயிர்ச்சேதத்தையும் விளைவித்த அணுகுண்டுகளை வீசியது அறநெறிக்கு உகந்ததா என்னும் கேள்வியும் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. அணுகுண்டு வீச்சின் பின்புலம் பசிபிக் போர் 1945இல் நேச நாடுகளுக்கும் சப்பான் பேரரசுக்கும் இடையே நிகழ்ந்த போர் நான்காம் ஆண்டை எட்டியது. இரண்டாம் உலகப் போர் முடிவதற்கான அறிகுறிகளும் இருந்தபாடில்லை. மாறாக, சண்டையின் மும்முரம் அதிகரித்துக்கொண்டே போனது. இரண்டாம் உலகப் போரின் போது ஐக்கிய அமெரிக்க போர்வீரர்கள் 1.25 மில்லியன் பேர் இராணுவத் தளத்தில் இறந்தார்கள்; அவர்களுள் ஏறத்தாழ 1 மில்லியன் பேர் சூன் 1944க்கும் சூன் 1945க்கும் இடைப்பட்ட 12 மாதங்களில் இறந்தார்கள் என்பதிலிருந்து சண்டையின் மும்முரம் தெளிவாகிறது. 1944 திசம்பர் மாதத்தில் மட்டுமே செருமானிய துருப்புகள் "ஆர்டேன் தாக்குதல்" என்று அழைக்கப்படுகின்ற பல்ஜ் சண்டையில் 88,000 அமெரிக்க போர்வீரர்களைக் கொன்றுகுவித்தன. ஒரே மாதத்தில் மிக அதிகமான போர்வீரர் இறந்தது அச்சண்டையில்தான்.[2] அதே காலக்கட்டத்தில், பசிபிக் முனையில் நடந்த போரில் நேச நாடுகளின் படைகள் மரியானா தீவைகளையும் பலாவு தீவையும் கைப்பற்றிவிட்டு,[3] பிலிப்பீன்சுக்குச் சென்று,[4] அதன்பின் போர்னியோவைத் தாக்கின.[5] சப்பானின் படைகளை விட்டுவைக்கும் கொள்கை கைவிடப்பட்டது. தம் போர்வீரர்களை சண்டை நிகழ்ந்த பிற பகுதிகளுக்குக் கொண்டுபோவதற்காக, பூகேய்ன்வில், நியூ கினி, பிலிப்பீன்சு ஆகிய முனைகளில் சண்டையைத் தொடர்ந்துகொண்டிருந்த சப்பானின் படைகளைக் குறைக்கும் நோக்குடன் நேச நாடுகள் தாக்குதல்கள் நிகழ்த்தின.[6] 1945 ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க படைகள் ஓக்கினாவாவில் களமிறங்கி சூன் மாதம் வரையிலும் கடுமையான சண்டையில் ஈடுபட்டன. அக்கட்டத்தில் சப்பானிய படைகளில் பிலிப்பீன்சில் ஐந்துக்கு ஒன்று என்றிருந்த சாவு விகிதம் ஓக்கினாவாவில் இரண்டுக்கு ஒன்று என்று கணிசமாகக் குறைந்தது. [2] சப்பானை ஆக்கிரமிக்க நிகழ்ந்த தயாரிப்பு 1945, மே 8ஆம் நாள் நாசி செருமனி சரணடைந்தது. அதற்கு முன்னரே, பசிபிக் மாக்கடல் பகுதியில் மிகப் பெரிய அளவில் போர் நிகழ்த்துவதற்கும், சப்பான் நாட்டை ஆக்கிரமிப்பதற்கும் நேச நாடுகள் திட்டம் தீட்டி, தயாரிப்புகளைத் தொடங்கிவிட்டிருந்தன.[7] "வீழ்ச்சி நடவடிக்கை" (Operation Downfall) என்று பெயரிடப்பட்ட அந்தப் போர்த்திட்டம் இரு பகுதிகளாக அமைந்தது: 1) "ஒலிம்பிக் நடவடிக்கை"; 2) "மகுட நடவடிக்கை". "ஒலிம்பிக் நடவடிக்கை" 1945 அக்டோபர் மாதம் தொடங்குவதாகவும், அதன்படி ஐக்கிய அமெரிக்காவின் 6வது படைப்பிரிவு பகுதிபகுதியாகக் களமிறங்கி, சப்பானின் நான்கு பெரிய தீவுகளில் தெற்கே அமைந்த கியூஷூ என்னும் தீவின் தென்புறமாக மூன்றில் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பதாகவும் திட்டமிடப்பட்டிருந்தது. [8]அந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, 1946 மார்ச் மாதம் "மகுட நடவடிக்கை" தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, ஐக்கிய அமெரிக்காவின் முதல் படைப்பிரிவு, எட்டாம் படைப்பிரிவு, பத்தாம் படைப்பிரிவு ஆகியவை சப்பானின் நான்கு முக்கிய தீவுகளில் மிகப்பெரியதாகிய ஹொன்ஷூ தீவில் தலைநகராகிய டோக்கியோவின் அருகில் அமைந்த கான்டோ வெளி (Kantō Plain) என்னும் பகுதியை ஆக்கிரமிப்பதாகத் திட்டம் போடப்பட்டிருந்தது. ஆக்கிரமிப்புக்கான நாளைக் குறித்தபோது, "ஒலிம்பிக் நடவடிக்கை" தன் குறிக்கோளை எய்துவதற்கும், அந்த நடவடிக்கையில் ஈடுபட்ட போர்ப்படைகளை ஐரோப்பாவிலிருந்து சப்பானுக்குக் கொண்டுவருவதற்கும், சப்பான் பகுதியில் பனிபெய்கின்ற குளிர்காலம் கடப்பதற்கும் போதிய ஐந்து மாத கால இடைவெளி இடப்பட்டிருந்தது.[9] நேச நாடுகள் தன்னை ஆக்கிரமிக்க திட்டம் தீட்டியதை சப்பான் எளிதில் அறிந்துகொண்டது. அதன் நில அமைப்பு அதற்கு சாதகமாய் இருந்தது. நேச நாடுகளின் ஆக்கிரமிப்புத் திட்டத்தை சப்பான் துல்லியமாக முன்னறிந்து, அந்த ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள திட்டம் வகுத்தது. சப்பானின் போர்த்திட்டத்திற்கு "கெத்சுகோ நடவடிக்கை" (Operation Ketsugō) என்று பெயர். அதன்படி, சப்பானியர் கியூஷூ தீவைப் பாதுகாக்கும்படி தம் போர்ப்படையின் மிகப்பெரும் பகுதியைத் தயாராக அங்கு நிறுத்தினர். இதனால் தொடர் பாதுகாப்புக்கு அழைக்கக் கூடுமான படைப்பிரிவு சிறிதளவே எஞ்சியது. [10] குறிப்புகள் ஆதாரங்கள் CS1 maint: ref=harv (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: ref=harv (link) CS1 maint: ref=harv (link) மேல் ஆய்வுக்கு There is an extensive body of literature concerning the bombings, the decision to use the bombs, and the surrender of Japan. The following sources provide a sampling of prominent works on this subject matter. CS1 maint: discouraged parameter (link) CS1 maint: ref=harv (link) வெளி இணைப்புகள் ஆவணக் காப்பகம் CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) நினைவு நிகழ்ச்சிகள் – video by Democracy Now! 2005 website commemorating 60th anniversary பகுப்பு:பசிபிக் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) பகுப்பு:1945 நிகழ்வுகள்
இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டால் அழிந்த நாடு எது
ஜப்பான்
797
tamil
5efde6551
அபிசீனியா-எத்தியோப்பியா கோல்ட் கோஸ்ட்-கானா பிரிட்டிஷ் கினியா-கினியா பெச்சுவானாலேண்டு-போட்ஸ்வானா மாலகாஸி-மடகாஸ்கர் பிரெஞ்சு மேற்கு ஆப்பிரிக்கா-மாலி பிரிட்டிஷ் ஹண்டுரஸ்-பெலிஸ் டஹோமே-பெனின் மேல் வோல்டா-புர்கினாஃபோஸா கோட் ஐவரி-ஐவரி கோஸ்ட் தென் மேற்கு ஆப்பிரிக்கா-நமீபியா தெற்கு ரொடீஷியா-ஜிம்பாப்வே வடக்கு ரொடீஷியா-ஜாம்பியா காங்கோ-ஜயர் போர்ச்கீஷ் கினியா-கினியா பிஸாவு நியூஸியாலாந்து-மாலவி டச்சு கிழக்கிந்திய தீவுகள்-இந்தோனேஷியா ஐக்கிய அரேபியா-ஓமன் ஏடன்-ஏமன் பர்மா-மியான்மர் சிலோன்-ஸ்ரீலங்கா கம்பூச்சியா-கம்போடியா பார்மோஸா-தைவான் சயாம்-தாய்லாந்து மலேயா-மலேசியா பெர்ஸியா-ஈரான் மெசபடோமியா-ஈராக் கிழக்கு பாகிஸ்தான்-பங்களாதேஷ் மேற்கு பாகிஸ்தான்-பாகிஸ்தான் டச்சு கயானா-சுரினாம் ரிட்டிஷ் கயானா-கயானா ஹாலந்து-நெதர்லாந்து மேற்கோள்கள்
காங்கோவின் பழைய பெயர் என்ன?
ஜயர்
326
tamil
8415640d1
இந்திய உச்ச நீதிமன்றம் (ஆங்கிலம்-Supreme Court of India') இந்திய அரசியல் சட்டப்பிரிவு அத்தியாயம் 4, பிரிவு 5 இன் கீழ் இந்தியாவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட நீதிமன்றமாகவும், கீழ்நீதிமன்றங்களின், உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்யும் நீதிமன்றமாகவும் செயல்படுகின்றது. இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதி விசாரணைக்கு உட்பட்ட அதிகாரங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் 124 முதல் 147 ன் கீழ் எழுதப்பட்டுள்ளன. இது ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றமாகையால், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சிலபல ரிட் மனுக்களையும், மனித உரிமை மீறல் வழக்குகளையும் அவசர மனுவாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. உச்ச நீதிமன்றம் தன்னுடைய முதல் அமர்வை சனவரி 28, 1950 துவங்கியது. அன்று முதல் 24,000 மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்ப்புரைகள் வழங்கியுள்ளது . நீதிமன்ற கட்டமைவு சனவரி 26, 1950, ல் இந்தியா ஒரு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு பின்பு உச்சநீதிமன்றம் தன் செயல்பாட்டைத் துவங்கி, துவக்கவிழா நாடாளுமன்ற இளவரசு மாளிகையில் நடைபெற்றது. 1937 முதல் 1950 இடைபட்ட 12 வருடகாலத்தில் இந்தியாவின் கூட்டு நீதிமன்றம் இளவரசு அமர்வின் கீழ் செயல்பட்டது. அதன் காரணமாக 1958 வரை உச்ச நீதிமன்றம் இளவரசு அமர்வின் கீழ் இயங்கியது. துவக்கவிழாவிற்குப் பிறகு உச்சநீதிமன்றம் தன் வழக்குகளை இளவரசு கூட்ட அமர்வின் கீழ் நாடாளுமன்றத்தில் நடத்தியது. தற்பொழுதுள்ள கட்டடத்தில் 1958 ல் இடம்பெயர்ந்து தன் செயல்பாட்டைத் தொடர்ந்தது. உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம், வழக்குரைஞர்கள் சங்கத்தின் மிக உயர்ந்த சங்கமாகக் கருதப்படுகிறது. இதன் தற்பொழுதய வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பி. எச். பரேக். உச்ச நீதிமன்ற கட்டுமானம் இதன் தற்பொழுதைய கட்டடத்திற்கு 1958 ல் இடம்பெயர்ந்தது. இதன் கட்டட ஒழுங்கமைவு படத்தில் காட்டியுள்ளபடி இதன் மைய மண்டபம் நீதி வழங்கும் முகத்தோற்றத்தைக் கொண்டுள்ளது. 1979 ல் இதனோடு இரண்டு மண்டபங்கள் - ஒன்று கிழக்கு மண்டபம் மற்றொன்று மேற்கு மண்டபம். இணைக்கப்பட்டது. இவையனைத்தும் 15 நீதிமன்ற அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மைய மண்டபத்தில் தலைமை நீதிபதியின் மன்றம் மிகப்பெரிய நீதிமன்றமாக அமைக்கப்பட்டுள்ளது. நீதிபதிகளின் எண்ணிக்கை 1950 ல் உருவாக்கப்பெற்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதியுடன் ஏழு கீழ் தகுதி பெற்ற நீதிபதிகளைக் கொண்டு இயங்கியது. பாராளுமன்றத்தின்ஏற்படுத்தப்பெற்ற தீர்மானத்தின்படி ஆண்டுகளின் வரிசையில் உச்ச நீதிமன்றத்தில் கூடுதலாக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை. அமர்வு சிறு அமர்வில் 2 முதல் 3 நீதிபதிகளாகவும் அமையும் அவை பகுதி அமர்வு என்றும், பெரிய அமர்வில் 5 நீதிபதிகளாகவும் அமையும் அவை அரசியல் சாசன அமர்வு என்றும் வழங்கப்படுகின்றது. இந்திய உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி மற்றும் அதன் இதர நீதிபதிகளான 30 நீதிபதிகளும் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்று சிறப்புடன் செயல்படுகின்றது. தேர்வு குழு இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் உரிமையை மத்திய அரசு பழைய முறையை விட்டு புதிதாக கொலீஜியம் என்ற ஒரு முறையை 13 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் 2014 ஆம் ஆண்டு குரல் வாக்கெடுப்பு மூலம் கொண்டு வந்தது. ஆனால் அந்த முறையை இந்திய உச்ச நீதிமன்றம் அக்டோபர் மாதம் 2015 ஆம் ஆண்டு தடை செய்து உத்தரவிட்டது [1] ஒய்வு உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு பெறும் வயது 65 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதிகள் இவர்களின் தகுதியாவன இந்திய குடிமகனாக இருத்தல் அவசியம், குறைந்த பட்சம் 5 வருடகாலத்திற்காகவது உயர்நீதிமன்றம் அல்லது இரண்டுக்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களில் பணியாற்றியிருக்கவேண்டும்., அல்லது உயர் நீதிமன்ற வழக்குரைஞர்களாக, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களில் குறைந்தது 10 வருடங்களுக்காவது பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது மேன்மை வாய்ந்த சட்டநிபுணர் என்று குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்றவர் ஆக இருக்க வேண்டும். உச்சநீதிமன்றம் பல சிறப்புகளின் அடையாளமாக சமய வேறுபாடுகளை களைந்த மன்றமாக உள்ளது. பல சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து நீதிபதிகளாக பதவி வகித்துள்ளனர். முதல் பெண் நீதிபதி முதல் பெண் நீதிபதியாக எம். பாத்திமா பீவி 1987 ல் பதவி வகித்தார். அவரைத் தொடர்ந்து சுஜாதா மனோகர், ரூமா பால் பெண் நீதிபதிகளாகப் பதவி வகித்தனர். முதல் தலித் நீதிபதி மாண்புமிகு நீதியரசர் கே.ஜி. பாலகிருஷ்ணன் 2000 ஆம் ஆண்டு முதல் நீதிபதியாகப் பதவி வகித்த முதல் தலித் சமூகத்தவர். முதல் தலித் தலைமை நீதிபதி 2007 முதல் தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற மாண்புமிகு நீதியரசர் கே.ஜி. பாலகிருஷ்ணன், முதல் தலித் தலைமை நீதிபதி என்ற பெருமையும் கொண்டவர். தலைமை நீதிபதி பதவி வகிக்காமல் சட்ட ஆணையத் தலைவர்களாக பதவி ஏற்றவர்கள் முதன் முறையாக நீதியரசர் பி.பி. ஜூவன் ரெட்டி மற்றும் ஏ.ஆர்.இலட்சுமணன் இருவரும் தலைமை நீதிபதி பதவி வகிக்காமலேயே சட்ட ஆணையத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரும்,(அ) முதன்மை ஆதரவுரைஞர் (அட்டர்னி ஜென்ரல் ஆப் இந்தியா) இந்தியக் குடியரசுத் தலைவரால் அரசியலமைப்பு சட்ட விதி 76[2] இன் படி நியமனம் செய்யப்படுகின்றார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களுக்குரியத் தகுதியுடையவர். இந்திய அரசுக்குரிய ஆலோசணைகளும் இந்திய அரசின் சார்பில் வழக்காடுபவரும் ஆவார். இந்தியாவின் எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்காட அனுமதியுடையவர். இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டங்களின் விவாதங்களில் கலந்து கொள்ள உரிமை கொண்டவர். ஆனால் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அனுமதியில்லை. நடுவண் அரசு வழக்குரைஞர் இவருக்குத் துணைபுரிய நடுவண் அரசு வழக்குரைஞர் (சொலிசிட்டர் ஜென்ரல்) மற்றும் நடுவண் அரசு கூடுதல் வழக்குரைஞர் (அடிசனல் சொலிசிட்டர் ஜென்ரல்) நால்வரும் உதவி புரிவர். தற்பொழுதய இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் திரு மிலன் பானர்ஜி [3]. இவர் 2004முதல் இப்பதவி வகிக்கின்றார். நீதிபரிபாலணை உச்ச நீதிமன்றம் மூன்று நீதி பரிபாலணைகளை கையாள்கின்றது. மூல நீதிபரிபாலணை, மேல்முறையீட்டு நீதிபரிபாலணை மற்றும் ஆலோசணைக் குழு நீதிபரிபாலணை. மூல நீதிபரிபாலணை இந்திய அரசு மற்றும் அதன் ஒன்று (அ) ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்கள்,(அ) இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் இடையே ஏற்படுகின்ற சச்சரவுகளை தீர்த்து வைக்கின்றது. கூடுதலாக அரசியல் சாசனப் பிரிவு 32 ல் கூறியுள்ளபடி அந்த்தந்த மாநிலங்களின் அடிப்படை உரிமைகளை கட்டாயப்படுத்துகின்றது. அழைப்பாணை (ரிட்) மனுக்கள், அழைப்பாணை (ரிட்) மூலம் கோரப்படும் ஆட்கொணர்வு மனு (ஏபியஸ் கார்பஸ்) , தடைச்சட்டம் (புரோகிபிசன்), பதவி ஆதிகாரத்தை நிருபிக்கும் ஆணை (கோ வாரண்டோ), மற்றும் கீழ் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் செர்டியோரேரி போன்ற ஆணைகளை வழங்க சட்டரீதியான உரிமைபெற்றிருக்கும் நீதிபரிபாலணையைக் கொண்டுள்ளது. மேல்முறையீட்டு நீதிபரிபாலணை உயர் நீதிமன்றங்கள் விதி 132 (1), 133 (1) அ 134 களின்படி அவைகளால் வழங்கப்பட்ட உரிமை இயல் (சிவில்-சமூக நலன்) மற்றும் குற்றவியல் தீர்ப்புரைகளை,தீர்ப்பாணைகளை (அ) இறுதி தீர்ப்பாணைகளை உச்ச நீதிமன்றங்களில் அரசியல் விதிக்குட்பட்ட, சட்டவிதிகளுக்குட்பட்ட வழக்குகளை மேல்முறையீடு செய்யப் பரிந்துறைக்கின்றன. உச்ச நீதிமன்றம் சிறப்பு விடுமுறைகளை மேல்முறையீடுசெய்யும் அவகாசகாலமாக இராணுவ நீதிமன்றங்களைத் தவிர பிற நீதிமன்றங்களுக்கு வழங்குகின்றது. பாரளுமன்றத்தில் குற்றவியல் மேல்முறையீட்டு நீதிபரிபாலணத்தின் விரிவாக்கத்திற்காக இதற்கான சிறப்பு அதிகாரம் விதி 1970 கீழ் வழங்கப்பட்டது. ஆலோசனைக்குழு நீதிபரிபாலணை இந்தியக் குடியரசுத்தலைவரின் பேரில் அமைந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143 ன் கீழ் உச்சநீதிமன்றம் சிறப்பு ஆலோசனைக்குழு நீதிபரிபாலணத்தைப் பெற்றுள்ளது. தன்னாட்சிப் பெற்ற நீதிமன்றம் இந்திய அரசியலமைப்பு உச்சநீதிமன்றத்திற்கு பலவழிகளில் தன்னாட்சி செயல்திறனை வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பதவியில் இருந்து நீக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் பரிந்துரைக்கப்பட்டப்பின், அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பெறும் பட்சத்தில், அதன் மொத்த உறுப்பினர்களில் மூன்றின் இரண்டு பங்கு பெரும்பான்மை உறுப்பினர்களால் வாக்களித்து வெற்றிப்பெற்ற தீர்மானத்தின் அடிப்படையில், குடியரசுத் தலைவரால் வழங்கப்பெறும் ஆணையைத்தவிர , வேறு எவராலும் அவரை பதவியிலிருந்து நீக்கவியலாது. இது அவரின் நன்னடத்தையின்மை அல்லது செயலின்மையை நிருபிக்கும் பட்சத்தில் இது சாத்தியமாகும். அவரின் ஊதியமும், படிகளும் பதவி நியமனத்திற்குப்பின் எவ்வகையிலும் குறைக்கப்படாது. உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டப்பின் அவர் வேறு எந்த நீதிமன்றத்திலும், எவ்வகையிலும் பணியாற்ற அனுமதியில்லை. உச்ச நீதிமன்ற வரலாற்றுத் தீர்ப்புக்கள நிலச்சீர்த்திருத்த சட்டம் 9 (முந்தய அணுகுமுறை) பல மாநில கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்புகளின் உந்துதலால் உச்சநீதிமன்றத்திற்கு வந்த நிலச்சுவான்தார்களின் (ஜமீன்தார்) நிலங்களைப் பங்கீடுவது தொடர்பான வழக்கு, நிலச்சுவான்தாரர்களின் (ஜமீன்தாரர்களின்) அடிப்படை உரிமைகளைப் பரிப்பதாகும் என்ற மேல்முறையீட்டீனால், நாடாளுமன்றம் இந்திய அரசியலமைப்பில் , 1951 இல் மேற்கொண்ட தன் முதல் திருத்தச் சட்டத்தினைத் தொடர்ந்து 1955 இல் நான்காவது திருத்தச் சட்டத்தினை அடிப்படை உரிமைகளில் நிறைவேற்றி அமல் படுத்தியது. இத்திருத்தச் சட்டத்தினை 1967 இல் உச்ச நீதிமன்றம் மாநிலம் என்ற வழக்கின் மூலம் எதிர் கொண்டு, : — நாடாளுமன்றம் அடிப்படை உரிமைகளை இரத்து செய்ய அதிகாரமில்லை, அது தனியார் உடமைகளுக்கும், உரிமையாளருக்கும், இந்தியக் குடியரசு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் அவர்களுக்கும் பொருந்தும் என்ற வரலாற்றுத் தீர்ப்பீனை வழங்கியது. அரசியலமைப்புக்கு எதிரானவையாக உச்ச நீதிமன்றம் கருதிய ஏனைய சட்டங்கள் பிப்ரவரி 1, 1970, அன்று உச்ச நீதிமன்றம் செல்லாததாக்குகின்ற சட்டமாக, அரசு உதவி பெறும் வங்கிகளை தேசியமயமாக்குகின்ற சட்டம் நாடளுமன்றத்தால் ஆகஸ்டு, 1969, இல் நிறைவேற்றியபின் இத்தீர்ப்பினை வழங்கி செல்லாத சட்டமாக்கியது. செப்டம்பர் 7, 1970, இல் வழங்கிய குடியரசுத் தலைவரின் பெயரில் வழங்கிய ஆணையான, இந்தியாவின் முந்தைய (பிரித்தானிய) ஆட்சியில் பேரரசு இளவரசரின் பெயரால் வழங்கப்பெற்ற பட்டயம், சலுகைகள், பரிசுகளை இரத்து செய்யும் ஆணையை உச்ச நீதிமன்றம் நிராகரித்த்து. நீதிமன்ற அவமதிப்பிற்கு தண்டணையளிக்கும் அதிகாரம் அரசியல் விதி 129 மற்றும் 142 ன் கீழ் அனுமதிக்கப்பட்ட சட்டத்தின்படி நீதிமன்றத்தை அவமதிப்பவர் எவராயினும் , அவரை தண்டிக்க, உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது. மகாராஷ்டிராவின் தற்பொழுதய அமைச்சர் சுவருப் சிங் நாயக்[4] முன் எப்பொழுதும் நடைபெறாத நிகழ்வாக, நீதிமன்ற அவமதிப்பிற்காக மே 12, 2006 ஒரு மாதம் சிறைத்தண்டணைப் பெற்றார். நீதிபதிகளின் நன்னடத்தையின்மை மற்றும் ஒழுக்கக்கேடு இந்தியாவின் உயரிய நீதிமுறைமை ,[5][6][7][8][9][10][11][12][13][14][15][16][17][18][19][20][21][22] 2008,ஆம் ஆண்டு சந்திதித்த மிக முக்கிய சர்ச்சையாக நீதிபதிகளின் அதீத ஒழுக்கக்குறைபாடுகளை விடுமூறைக் காலங்களில் வரி செலுத்துவோருக்கு[23] இணையாக அவர்கள் செய்திடும் செலவீனங்கள் மூலம், வெளிப்படுத்தியதின் காரணமாகவும், இதன் காரணமாக நீதிபதிகளின் சொத்துக்கணக்கை பொதுமக்களின் பார்வைக்கு தாக்கல் செய்ய வலியுறுத்தும் கோரிக்கையை அது தகவல் அறியும் உரிமைச் சட்டமாக[24][25][26][27][28] இருப்பினும் நிராகரிக்கப்படும் என்று அறிவித்த்தின் காரணமாக வெளிப்படுத்தியது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தன் பதவிக் குறித்து வெளிப்படுத்தியக் கருத்துக்கள் விமர்சிக்கப்பட்டன. அவர் வெளியிட்டக் கருத்துக்களாவன : — நீதிபதி என்பவர் பொது ஊழியரல்லர் [29] அவர் ஒரு அரசியலமைப்பின் பொறுப்பாளர். பின்னர் தான் வெளிப்படுத்தியக் கருத்திலிருந்து விலகிக் கொண்டார்[30]. நீதிமுறைமை கடமைத் தவறியனவாக[31] தற்பொழுதய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலாலும் முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமினாலும் பலத்த விமர்சனத்துக்குள்ளானது. பிரதமர் மன்மோகன் சிங் ஒழுக்கக்கேடுகளை (ஊழல்) எதிர் கொள்வதிலும், அவற்றை அடியோடு அழிக்க நீதிமுறைமைகளை வலுப்படுத்த ஆலோசனைகள் வழங்கினார்[32] பதவி இறக்க உயர்நீதிமன்ற நீதிபதியோ, உச்சநீதிமன்ற நீதிபதியோ என்ன குற்றம் செய்து பிடிபட்டாலும், அவர்கள் மீது வழக்கு போட சட்டத்தில் இடமில்லை. அவர்களை பதவியிலிருந்து இறக்குவதற்கே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். தேசிய நீதிபரிபாலணை மன்றம் இந்திய அமைச்சரவை நீதிபதிகளை விசாரணை செய்யும் மசோதா 2008 நாடாளுமன்றத்தின் மூலம் அறிமுகம் செய்து அதன் மூலம் இந்தியத் தலைமை நீதிபதியை தலமையாகக் கொண்டு தேசிய நீதித்துறைமை மன்றம் அ தேசிய நீதிபரிபாலணை மன்றம் ஒன்றை அறிமுகம் செய்தது. இம்மன்றம் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் முறைகேடுகள் மற்றும் நன்னடத்தையின்மையை விசாரிக்கும் பொருட்டு இம்மசோதா உருவாக்கப்பட்டது. இம்மசோதா மக்கள் நகைப்புக்குரியதாக இருப்பினும் மக்களின் அமைதியை உருவாக்கும் நோக்கில் செயல் படுத்தப்பட்டுள்ளது. இம்மசோதாவின் படி அமைக்கப்பட்ட நீதிபதிகளின் குழு நீதிபதிகளின் செயல் குறித்து விசாரணை செய்யும். தலைமை நீதிபதியையோ அல்லது ஒய்வுபெற்ற நீதிபதியையோ, மற்றும் தண்டணைக்குள்ளானவரின் புகார்கள், அபராதம் விதிக்க பட்டோரரின் புகார்கள் இம்மன்றத்தை கட்டுபடுத்தாது. மேலும் உள்நோக்கம் கற்பிக்கும் வகையில், அற்பத்தனமான மற்றும் அவரின் நேர்மையை களங்கப்படுத்தும் நோக்கில் தரப்படும் புகார்கள் ஏற்கபடமாட்டா. மூத்த நீதிபதிகள் உச்ச நீதிமன்ற அமர்வு , நீதியரசர் பி.என். அகர்வால், நீதியரசர் வீ.எஸ்.சிர்புர்கர் மற்றும் நீதியரசர் ஜி.சிங்வி — நாங்கள் எந்த நீதிபதியும் ஊழல் புரிவதில்லை, என்று சான்றளிக்கவில்லை. கருப்பு ஆடுகள் எங்கெங்கும் உள்ளன. இங்குள்ளப் படிநிலையில் எழுந்தது இக் கேள்வி-உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்[33][34] மூத்த அரசு அலுவலர்கள் முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர்,ஏ.பி.ஜே.அப்துல்கலாம் — காலந்தாழ்ந்த வழக்குகளின் நீட்சியால், மக்கள், நீதித்துறைமைக்கு அப்பாற்பட்ட செயல்களை மேற்கொள்ள வழிவகுக்கும்-ஏ.பி.ஜே.அப்துல்கலாம்[35] * முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர், பிரதீபா பாட்டீல்: நீதிமுறைமையின் சீர்திருத்தங்கள் என்றத் தலைப்புடைய கருத்தரங்கில்[31]: — காலந்தாழ்ந்த நீதியினால் சமுதாயத்திற்கு மிகப்பெரிய அச்சுருத்தலையும், சட்டமுறைப்படா (சட்டத்திற்கு கட்டுப்படாத) குழுவினரை ஊக்குவிப்பதற்கு நீதிமன்றம் இடமளிக்கின்றது, என்கின்ற பழிச்சொல்லிருந்து நீதிமுறைமைகள் தப்பித்துக்கொள்ள முடியாது. நீதிமுறைமைகளின் இயந்திரங்கள் தங்களையே உள்ளாய்வு செய்வதினால் அனைவரும் எதிர்பார்க்கும் முழுமையான நீதியையும், உண்மை, பற்றுறுதி, நம்பிக்கை இவைகளை நிலைநிறுத்தும் விதமாக, மக்களுக்கு ஒளிகாட்டும் கலங்கரை விளக்கமாக நீதிமன்றங்கள் திகழ்கின்ற காலம் வந்துவிடும். மறுப்புக்கிடமின்றி நீதிமறைமைகளின் செயல் திறம், தரம் குறைந்தனவாகவும் , கறைபடிந்தனவாகவும் உள்ளன. -பிரதீபா பாட்டீல் அமர்வு நீதிபதிகள் {| class="collapsible collapsed" cellspacing=0 align=center cellpadding=5px width=75% style="background: Lavenderblush; border: 1px solid gray;" |-style="background:Beige;font color:black" !colspan=3| இந்திய உச்ச நீதிமன்ற தற்பொழுதய அமர்வு நீதிபதிகள்[36] |-style="background:Darkblue;color:white;border-bottom:2.5px solid black" !style="background:brown;color:white;border-bottom:2.5px solid black"| வ.எண் ! style="background:brown;color:white;border-bottom:2.5px solid black"| நீதிபதிகள் |- | align=center width=25% style="border-bottom:2px solid gray" |1 | width=75% style="border-bottom:2px solid gray" |நீதியரசர் கே. ஜி. பாலகிருஷ்ணன் -இந்தியாவின் மாண்புமிகு தலைமை நீதிபதி |- |align=center width=25% style="border-bottom:1px solid gray" |2 | width=75% style="border-bottom:1px solid gray" |நீதியரசர் பி. என். அகர்வால் |- |align=center width=25% style="border-bottom:1px solid gray" |3 | width=75% style="border-bottom:1px solid gray" |நீதியரசர் அருஜித் பசாயத் |- |align=center width=25% style="border-bottom:1px solid gray" |4 |width=75% style="border-bottom:1px solid gray" |நீதியரசர் எஸ். பி. சின்கா |- | align=center width=25% style="border-bottom:1px solid gray" |5 |width=75% style="border-bottom:1px solid gray" |நீதியரசர் எஸ். எச். கப்பாடியா |- |align=center width=25% style="border-bottom:1px solid gray" |6 |width=75% style="border-bottom:1px solid gray" |நீதியரசர் சி. கே. தக்கர் |- |align=center width=25% style="border-bottom:1px solid gray" |7 |width=75% style="border-bottom:1px solid gray" |நீதியரசர் தருண் சட்டர்ஜி |- |align=center width=25% style="border-bottom:1px solid gray" |8 |width=75% style="border-bottom:1px solid gray" |நீதியரசர் அல்தாமஸ் கபிர் |- | align=center width=25% style="border-bottom:1px solid gray" |9 |width=75% style="border-bottom:1px solid gray" |நீதியரசர் ஆர். வி. இரவீந்திரன் |- |align=center width=25% style="border-bottom:1px solid gray" |10 |width=75% style="border-bottom:1px solid gray" |நீதியரசர் தல்வீர் பண்டாரி |- |align=center width=25% style="border-bottom:1px solid gray" |11 |width=75% style="border-bottom:1px solid gray" |நீதியரசர் லோக்ஏஸ்வர் சிங் பன்டா |- | align=center width=25% style="border-bottom:1px solid gray" |12 |width=75% style="border-bottom:1px solid gray" |நீதியரசர் டி. கே. ஜெயின் |- |align=center width=25% style="border-bottom:1px solid gray" |13 | width=75% style="border-bottom:1px solid gray" |நீதியரசர் மார்கணைடேய கட்ஜூ |- | align=center width=25% style="border-bottom:1px solid gray" |14 | width=75% style="border-bottom:1px solid gray" |நீதியரசர் எச். எஸ். பேடி |- | align=center width=25% style="border-bottom:1px solid gray" |15 | width=75% style="border-bottom:1px solid gray" |நீதியரசர் வி. எஸ். சிர்புர்கர் |- |align=center width=25% style="border-bottom:1px solid gray" |16 | width=75% style="border-bottom:1px solid gray" |நீதியரசர் பி. சுந்தரேசன் ரெட்டி |- | align=center width=25% style="border-bottom:1px solid gray" |17 | width=75% style="border-bottom:1px solid gray" |நீதியரசர் பி. சதாசிவம் |- |align=center width=25% style="border-bottom:1px solid gray" |18 | width=75% style="border-bottom:1px solid gray" |நீதியரசர் ஜி. எஸ். சிங்க்வி |- | align=center width=25% style="border-bottom:1px solid gray" |19 | width=75% style="border-bottom:1px solid gray" |நீதியரசர் அப்தாப் அலாம் |- |align=center width=25% style="border-bottom:1px solid gray" |20 | width=75% style="border-bottom:1px solid gray" |நீதியரசர் ஜே. எம். பாஞ்சல் |- |align=center width=25% style="border-bottom:1px solid gray" |21 | width=75% style="border-bottom:1px solid gray" |நீதியரசர் முகுந்தகம் சர்மா |- | align=center width=25% style="border-bottom:1px solid gray" |22 | width=75% style="border-bottom:1px solid gray" |நீதியரசர் சிரியக் ஜோசப் |- |} ' ' இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள்[37] வ.எண் முன்னாள் தலைமை நீதிபதிகள்1நீதியரசர் எச். ஜே. கனியா2நீதியரசர் எம். பி. சாஸ்திரி3நீதியரசர் மெர் சந்த் மகாஜன்4நீதியரசர் பி. கே. முகர்ஜி5நீதியரசர் சுதி இரஞ்சன் தாஸ்6நீதியரசர் புவனேஸ்வர் பிரசாத் சின்கா7நீதியரசர் பி. பி. கஜேந்திரகட்கர்8நீதியரசர் ஏ. கே. சர்க்கார்9நீதியரசர் கே. சுப்பா ராவ்10நீதியரசர் கே. என. வான்சூ11நீதியரசர் எம். இதயத்துல்லா12நீதியரசர் ஜே. சி. ஷா13நீதியரசர் எஸ். எம். சிக்ரி14நீதியரசர் ஏ. என். ராய்15நீதியரசர் மிர்சா எமதுல்லா பேக்16நீதியரசர் ஒய். வி. சந்திரகுட்17நீதியரசர் பி. என். பகவதி18நீதியரசர் ஆர். எஸ். பதக்19நீதியரசர் இ. எஸ். வெங்கட்டராமய்யா20நீதியரசர் எஸ். முகர்ஜி21நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா22நீதியரசர் கே.என். சிங்23நீதியரசர் எம். எச். கனியா24நீதியரசர் எல். எம். சர்மா25நீதியரசர் எம். என். வெங்கட்டசலய்யா26நீதியரசர் ஏ. எம். அகமதி27நீதியரசர் ஜே. எஸ். வர்மா28நீதியரசர் எம். எம். பன்சி29நீதியரசர் ஏ. எஸ். ஆனந்30நீதியரசர் எஸ். பி. பரூச்சா31நீதியரசர் பி. என். கிர்பால்32நீதியரசர் ஜி. பி. பட்நாயக்33நீதியரசர் வி.என். கரே34நீதியரசர் இராஜேந்திர பாபு35நீதியரசர் ஆர். சி. லகோட்டி36நீதியரசர் ஒய்.கே. சபர்வால் ' ' இவற்றையும் பார்க்கவும் சென்னை உயர் நீதிமன்றம் இந்திய உயர் நீதிமன்றங்கள் இந்தியத் தலைமை நீதிபதி நீதிப் பேராணைகள் மேற்கோள்கள் கட்டுரையின் மேற்கோள்கள் ' ' வெளி இணைப்புக்கள் வெளி இணைப்புக்கள் நீதியரசர் பி.என். ஸ்ரீகிருஷ்ணா, "பூனையின் தோல்", (2005) 8 எஸ் சி சி (ஜோர்) 3, கிடைக்குமிடம் (உச்ச நீதிமன்றத்தின் நீதிபரிபாலணைக் குறித்த திறனாய்வுக் கட்டுரை). ' ' பகுப்பு:இந்திய உச்ச நீதிமன்றம் பகுப்பு:உச்ச நீதிமன்றங்கள் பகுப்பு:மேற்கோள் வழு-Defined multiple times
உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி யார்?
எம். பாத்திமா பீவி
3,569
tamil
2c4b9df73
நைல் (அரபி: النيل, அன் நைல்; பண்டைய எகிப்தியம்: இட்டேரு யிஃபி; கோதிக் எகிப்தியம்: ⲫⲓⲁⲣⲱ, P(h)iaro; அம்காரியம்: ዓባይ?, ʿAbbai) வடகிழக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாயும் மிக முக்கியமான ஆறாகும். இது உலகின் மிக நீளமான ஆறு எனவும் கூறப்படுவதுண்டு[1]. 6650 கி.மீ நீளம் கொண்ட இது, தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரித்திரியா, தெற்கு சூடான், சூடான், எகிப்து ஆகிய பதினோரு நாடுகளின் வழியாகப் பாய்ந்து நடுநிலக் கடலில் கலக்கின்றது[2]. இவற்றில் எகிப்து, சூடான் ஆகியவை நைல் ஆற்றால் அதிகம் பயனடையும் நாடுகள் ஆகும்[3]. நைல் ஆறு, வெள்ளை நைல் மற்றும் நீல நைல் என்ற இருபெரும் துணை ஆறுகளைக் கொண்டது. இவற்றில் வெள்ளை நைல் அதிக நீளம் கொண்டது. இது மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள பெரிய ஏரி பகுதிகளில் இருந்து உற்பத்தியாகின்றது. அங்கிருந்து ருவாண்டா, புருண்டி, தான்சானியா, விக்டோரியா ஏரி, உகாண்டா வழியாகத் தெற்கு சூடானை வந்தடைகின்றது. நீல நைலானது, எத்தியோப்பியாவில் உள்ள தனா ஏரியில் உற்பத்தியாகி சூடானின் தென்கிழக்குப் பகுதி வழியாகப் பாய்ந்து, அதன் தலைநகரான கர்த்தூம் அருகே வெள்ளை நைலுடன் இணைகின்றது. சூடான் முதல் எகிப்து வரையிலான இவ்வாற்றின் வடபகுதி, பெரும்பாலும் சகாரா பாலைவனத்தின் வழியாகவே பாய்கின்றது. இந்தப் பகுதி தொன்மையான எகிப்திய கலாச்சாரத்திற்கும், நைல் ஆற்று நாகரீகத்துக்கும் பெயர் பெற்றது. பண்டைய எகிப்தின் பல குடியேற்றங்கள் இந்தப் பகுதியிலேயே அமைந்திருந்தன. பெயர்க் காரணம் பண்டைய எகிப்திய மொழியில், நைல் ஆறானது யிஃபி அல்லது இடுரு என அழைக்கப்பட்டது. இதன் அர்த்தம் பெரிய ஆறு என்பதாகும். அருகில் இருக்கும் படிமம், நைல் ஆற்றைக் குறிக்கப் பயன்பட்ட எகிப்திய சித்திர எழுத்து ஆகும். இதன் தற்போதைய ஆங்கில உச்சரிப்பான நைல் என்பதன் பெயர்க் காரணம் சரிவரத் தெரியவில்லை. இது செமித்திய மொழியின் நகல் (ஆறு என்பது அர்த்தம்) என்ற வார்த்தையில் இருந்து மருவியதாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது[4]. வரலாறு நைல் ஆறு, பண்டைய எகிப்திய நாகரீகத்தின் முக்கிய காரணி ஆகும். அன்றைய காலத்தின் பல முக்கிய நகரங்கள் நைல் பள்ளத்தாக்கு மற்றும் அதன் கழிமுகப் பகுதியிலேயே இருந்தன. கற்காலத்தின் தொடக்கத்தில் இருந்தே இது, எகிப்திய கலாச்சாரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. கி.மு 3400 வாக்கில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தைத் தொடந்து, வட ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு சகாரா பாலைவனம் உருவாகத் தொடங்கியது. அந்தக் காலக் கட்டத்தில், அங்கிருந்த பல பழங்குடியினர் நைல் பள்ளத்தாக்கு பகுதிக்குக் குடியேறத் தொடங்கினர். இந்தக் காலக்கட்டத்திலேயே உலகின் முதல் கிராமம் மற்றும் விவசாயம் செய்யத் தொடங்கிய சமூகம் ஆகியவை உருவாகின. யோநைல் நைல் ஆறு, எத்தியோப்பிய உயர் பகுதிகளில் இருந்து உருவாகி வடக்கு நோக்கிப் பயனித்த ஆறுகளில் ஐந்தாவதாக உருவான ஆறாக இருக்கக்கூடும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆதி நைல், யோநைல் என அழைக்கப்படுகின்றது. இதன் தடையங்கள் இன்றைய நைலின் மேற்கில் உள்ள பாலைவனப்பகுதிகளில் கிடைக்கின்றன. யோநைல், 23 - 5.3 மில்லியன் வருடங்கள் பழமையானது. இது அதிக அளவிலான பழம்பாறை படிவுகளை மத்தியதரைக் கடலில் கொண்டு சேர்த்தது. இந்தப் படிவுப் பகுதியில் பல இயற்கை எரிவாயுக் கிணறுகள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துணை ஆறுகள் நைல் ஆற்றின் வடிநிலப் பரப்பு 3,254,555 சதுர கி.மீ. இது மொத்த ஆப்பிரிக்க கண்டத்தின் பரப்பளவில் 10% ஆகும். இதன் முக்கிய துணை ஆறுகள் வெள்ளை நைல், நீல நைல் மற்றும் அத்பரா ஆறு ஆகும். வெள்ளை நைல் வெள்ளை நைல், நைல் ஆற்றின் மிகப் பெரிய துணையாறு ஆகும். இதன் ஊற்றாக விக்டோரியா ஏரி சொல்லப்படுவதுண்டு. ஆனால் அந்த ஏரியிலும் சில ஆறுகள் வந்து கலக்கின்றன. எனவே இதை ஏற்பதற்கில்லை. விக்டோரியா ஏரியில் இருந்து, இரைபான் அருவி மூலமாக வெளியேறும் வெள்ளை நைல் 500 கி.மீ. தூரம் பயனம் செய்து யோகா ஏரி வழியாக ஆல்பர்ட் ஏரியை வந்தடைகிண்றது. இதற்கு இடைப்பட்ட பரப்பில் இருக்கும் ஆறானது, விக்டோரியா நைல் என அழைக்கப்படுகின்றது. ஆல்பர்ட் ஏரியில் இருந்து வெளியேரும் ஆறானது, ஆல்பர்ட் நைல் என அழைக்கப்படுகின்றது. இதன் பிறகு தெற்கு சூடானில் நுழையும் ஆல்பர்ட் நைல் அங்கு பகர் அல் யபல் என அழைக்கப்படுகின்றது. இது நோ ஏரியில் வைத்துப் பகர் அல் கசல் எனப்படும் மற்றொரு துணையாற்றுடன் இணைகின்றது. பகர் அல் கசல், சத் சதுப்பு நிலப் பகுதில் உற்பத்தியாகும் ஒரு ஆறாகும். இதன் மொத்த நீளம் 716 கி.மீ. இவ்விறு ஆறுகள் இணைந்து, நோ ஏரியில் இருந்து வெளிப்படும் நீரானதே, பகர் அல் அபயாத் அல்லது வெள்ளை நைல் என அழைக்கப்படுகின்றது. வெள்ளை நிற களிமன் துகள்கள் இவ்வாற்றில் மிதப்பதாலேயே, இதற்கு இப்பெயர் ஏற்பட்டது[5]. நீல நைல் நீல நைலின் பிறப்பிடம் எத்தியோப்பிய பீட பூமி பகுதியில் இருக்கும் தனா ஏரி ஆகும். இதன் மொத்த நீளம் 1400 கி.மீ. இது எத்தியோப்பியாவின் மிக முக்கியமான ஆறு ஆகும். எத்தியோப்பிய குடிநீர் தேவையில் 90 சதவிகிதத்தை இந்த ஆறு பூர்த்தி செய்கின்றது. மேலும், எத்தியோப்பிய நீர்வழிப் போக்குவரத்திலும் 96 சதவிகிதம் இவ்வாற்றின் வழியாகவே நடக்கின்றது[6]. இருப்பினும் எத்தியோப்பிய பீட பூமிப் பகுதி அதிகம் மழை பெறும் காலங்களிலேயே இந்த ஆறு குறிப்பிடத்தகுந்த நீரோட்டத்தக் கொண்டுள்ளது. பிற காலங்களின் இதன் நீரோட்டம் மிகவும் குறைவே. குறிப்பாக ஆகத்து மாதத்தின் இறுதியில், நொடிக்கு 5663 மீ3 நீர் வரத்தைக் கொண்டுள்ள இந்த ஆறு, ஏப்ரல் மாததின் இறுதியில் வெறும் 133 மீ3 மட்டுமே நீர் வரத்தைக் கொண்டுள்ளது. அத்பரா ஆறு நீல நைலைப் போலவே அத்பரா ஆறும், எத்தியோப்பிய தனா ஏரியிலேயே உற்பத்தியாகின்றது. அங்கிருந்து 800 கி.மீ. தூரம் பாயும் இந்த ஆறு, கர்த்தூம் நகருக்கு வடக்கு 300 கி.மீ. தொலைவில் நைல் நதியுடன் இணைகின்றது. மழை காலங்களில் மட்டுமே நீரோட்டத்தைக் கொண்டுள்ள அத்பரா ஆறு, சனவரி முதல் சூன் வரையிலான கோடைக் காலத்தில், பெரும்பாலும் வறண்டே கானப்படுகின்றது. நீரோட்டம் அகன்ற நைல் ஆற்றின் தோராய தொடக்கமான ஆல்பர்ட் நைலின் நீரோட்டம், வினாடிக்கு 1048 மீ3 ஆகும். இது ஆண்டு முழுவதுமான சீரான நீரோட்டத்தைக் கொண்டுள்ளது. இதன் பிறகான பகர் அல் யபல் ஆறு, தனது நீரின் பெரும்பகுதியை, சத் சதுப்பு நிலப் பகுதியில் இழக்கின்றது. ஏறேக்குறைய இதன் நீரோட்டத்தின் சரிபாதி இங்கு ஆவியாதல் மூலம் விரையமாவதால் இந்த ஆற்றின் முடிவில் இதன் நீரோட்டம் வினாடிக்கு 1048 மீ3ல் இருந்து 510 மீ3 ஆகக் குறைகின்றது. வெள்ளை நைலின் நீரோட்டம் சராசரியாக வினாடிக்கு 924 மீ3 ஆகும். மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இது, அதிகபட்சமாக வினாடிக்கு 1218 மீ3 வரை செல்கின்றது. குறைந்தபட்சமாக ஆகத்தில், வினாடிக்கு 609 மீ3 ஆக இருக்கின்றது. சோபாத் எனப்படும் துணையாறின் வெள்ளப் பெருக்கே, வெள்ளை நைலின் இந்த நீரோட்ட மாறுபாட்டிற்கான காரனம். நைல் ஆற்றின் மொத்த நீரோட்டத்தில், வெள்ளை நைலின் பங்கு சராசரியாக 30% ஆகும். ஆனால் சனவரி முதல் சூன் வரையிலான கோடைகாலத்தில் இது 70% முதல் 90% வரை அதிகரிக்கும். இந்தக் குறிப்பிட மாதங்களின் நீல நைலின் நீரோட்டம் வினாடிக்கு 113 மீ3க்கும் குறைவாகவே இருப்பதாலும், அத்பரா ஆறு ஏறக்குறைய வறண்டு விடுவதாலும் இந்த விகிதாச்சார ஏற்றம் நிகழ்கின்றது. நீல நைலின் பங்கு, மொத்த நைல் நீரோட்டத்தில் சராசரியாக 70% ஆகும். ஆகத்து மாத மழைக் காலங்களில் இந்த ஆற்றில் ஏற்படும் கடும் வெள்ளப்பெருக்கே, இந்த நீரோட்ட வேறுபாட்டிற்கு காரனம். இந்த நேரங்களில் நீல நைலின் நீரோட்டம் வினாடிக்கு 5663 மீ3 ஆக இருக்கும். இது வழக்கமான நீரோட்டத்துடன் ஒப்பிடும்போது, 50% அதிகம் ஆகும். இந்த ஆற்றின் மீது அணைகள் கட்டுவதற்கு முன்பு, இதன் நீரோட்டம் இன்னும் 15% அதிகம் இருந்தது. அந்தக் காலங்களின் நீல நைல் அதிகபட்சமாக வினாடிக்கு 8212 மீ3 நீரோட்டத்தைக் கொண்டிருந்தது. குறைந்தபட்ச அளவு 552 மீ3. கழிமுகம் நைல் ஆற்றின் கழிமுகம் உலகின் மிகப்பெரிய கழிமுகங்களில் ஒன்று. இது நைல் நீரோட்டப் பாதையில், எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் தொடங்கி மத்தியதரைக் கடலில் முடிகின்றது. வில் வடிவ கழிமுக வகையைச் சார்ந்த இதன் நீளம் கிழக்கு மேற்காக 240 கி.மீ மற்றும் வடக்கு தெற்காக 160 கி.மீ. முன்பு இந்தக் கழிமுகத்தில், நைல் ஆற்றின் ஏழு கிளையாறுகள் பாய்ந்தன. ஆனால் நைல் ஆற்றின் குறுக்கே பல அணைகள் கட்டப்பட்ட பிறகு இது இரண்டாகக் குறைந்துள்ளது. மேலும் உயரும் கடல் நீர் மட்டம், இந்தக் கழிமுகத்தை பெரிதும் பாதித்துள்ளது. பண்டைய புகழ் பெற்ற துறைமுக நகரான அலெக்சாந்திரியா இவ்வாறான கடல் மட்ட உயர்வினாலேயே மூழ்க நேரிட்டது. 2025ல் மத்தியத்தரைக் கடலின் நீர்மட்டம் 30 செ.மீ வரை உயரக்கூடும் என கண்க்கிடப்பட்டுள்ளது. இந்த உயர்வு, நைல் கழிமுகத்தின் 200 சதுர கி.மீ வரை ஆக்கிரமிக்கக் கூடும். நீர் பங்கீட்டு சிக்கல் நைல் ஆற்றின் நீர்ப் பங்கீடு, கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க கொம்பு நாடுகளின் முக்கிய அரசியல் மற்றும் கலாச்சார சிக்கல் ஆகும். உகாண்டா, சூடான், எத்தியோப்பியா, கென்யா ஆகிய நாடுகள் நைல் நீர்வளத்தை பங்கிட்டுக்கொள்வதில் உள்ள எகிப்தின் மேலாதிக்கத்தை எதிர்த்தவண்ணம் உள்ளன. 1929ல் ஐரோப்பிய காலனியாதிக்க ஆட்சியின் கீழ் ஏற்பட்ட இங்கிலாந்து – எகிப்து உடன்படிக்கையின் படி, நைல் ஆற்றின் வடிநிலப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பிற நாடுகளின் நீர்பாசன திட்டங்களுக்கு, எகிப்து அரசின் ஒப்புதல் அவசியமாகின்றது. இது இன்றைய பிரச்சனைகளின் முக்கியக் காரணி ஆகும். “நைல் ஆற்றுவடிநில முனைப்பு அமைப்பு” இந்த சிக்கலைத் தீர்க்க முனைந்து வருகின்றது[7]. பெப்ரவரி 1999ல் இந்த அமைப்பு எகிப்து, சூடான், எத்தியோப்பியா, உகாண்டா, கென்யா, தான்சானியா, புருண்டி, ருவாண்டா, காங்கோ ஆகிய ஒன்பது நாடுகளின் நீர்வளத்துறை அமைச்சர்களைக் கொண்டு அமைக்கப்பட்டது. எரித்திரியா இந்த அமைப்பில் வெறும் பார்வையாளராக மட்டும் உள்ளது. உலக வங்கி மற்றும் சில தன்னார்வ நிறுவனங்கள் இந்த அமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றின[8]. மே 2010இல், இந்த அமைப்பில் உள்ள எத்தியோப்பியா, கென்யா, உகாண்டா, ருவாண்டா மற்றும் தான்சானியா ஆகிய ஐந்து நாடுகள் தமக்குள் இணைந்து ஒரு தீர்மானத்துக்கு வந்தன. தற்போது உள்ள நீர் பங்கீட்டு முறை சீரமைக்கப்பட வேண்டும் எனவும், 1929ல் ஏற்பட்ட இங்கிலாந்து – எகிப்து உடன்படிக்கை ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் இந்தத் தீர்மானம் வலியுறுத்துகின்றது[9]. இந்தத் தீர்மானத்திற்கு எகிப்து மற்றும் சூடான் ஆகிய நாடுகள் தங்களின் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன[10]. எனினும், புருண்டி இந்த தீர்மானத்தை ஆதரித்துப் பெப்ரவரி 2011ல் கையெழுத்திட்டது[11]. இவற்றையும் பார்க்கவும் அஸ்வான் அணை நைல் முதலை மேற்கோள்கள் வெளி இணைப்புகள் – slideshow by The New York Times பகுப்பு:ஆப்பிரிக்க ஆறுகள்
உலகின் மிக நீளமான நதி எது?
நைல்
0
tamil
2ca209546
ஒரு சாதாரண வளர்ந்த மனிதனுடைய எலும்புக்கூடு பின்வரும் 206 (மார்பெலும்பு மூன்று பகுதிகளாகக் கருதப்பட்டால் 208) எண்ணிக்கையான எலும்புகளைக் கொண்டிருக்கும். இந்த எண்ணிக்கை உடற்கூட்டியல் வேறுபாடுகளைப் பொறுத்து மாறுபடக்கூடும். எடுத்துக்காட்டாக, மிகக் குறைந்த எண்ணிக்கையான மனிதர்களில், ஒரு மேலதிக விலா எலும்பு (கழுத்துவில்) அல்லது ஒரு மேலதிகமான கீழ் முதுகெலும்பு காணப்படுவதுண்டு; இணைந்த சில எலும்புகளைத் தனி எலும்பாகக் கருதாவிடின், ஐந்து இணைந்த திருவெலும்பு; மூன்று (3 - 5) குயிலலகு எலும்புகள் சேர்ந்து 26 எண்ணிக்கையிலான முதுகெலும்புகள் 33 ஆகக் கருதப்படலாம். மனித மண்டையோட்டில் 22 எலும்புகள் (காதுச் சிற்றென்புகளைத் தவிர) உள்ளன; இவை எட்டு மண்டையறை (cranium) எலும்புகளாகவும் 14 முக எலும்புகளாகவும் (facial bones) பிரிக்கப்பட்டுள்ளன. (தடித்த எண்கள் அருகிலுள்ள படத்தில் காணும் எண்களைக் குறிக்கின்றன.) மண்டையறை எலும்புகள் (8) 1 நுதலெலும்பு (frontal bone) 2 சுவரெலும்பு (parietal bone) (2) 3 கடைநுதலெலும்பு (temporal bone) (2) 4 பிடர் எலும்பு (occipital bone) ஆப்புரு எலும்பு (sphenoid bone) நெய்யரியெலும்பு (ethmoid bone) முக எலும்புகள் (14) 7 கீழ்த்தாடை எலும்பு (mandible) 6 மேற்றாடை எலும்பு (maxilla) (2) அண்ணவெலும்பு (palatine bone) (2) 5 கன்ன எலும்பு (zygomatic bone) (2) 9 நாசி எலும்பு (nasal bone) (2) கண்ணீர் எலும்பு (lacrimal bone) (2) மூக்குச் சுவர் எலும்பு (vomer) கீழ் மூக்குத் தடுப்பெலும்பு (inferior nasal conchae) (2) நடுக்காதுகளில் (6): சம்மட்டியுரு (malleus) பட்டையுரு (incus) ஏந்தியுரு (stapes) தொண்டையில் (1): தொண்டை எலும்பு (நாவடி எலும்பு) (hyoid) தோள் பட்டையில் (4): 25. காறை எலும்பு (clavicle) 29. தோள் எலும்பு (scapula) மார்புக்கூட்டில் thorax(25): 10. மார்பெலும்பு (sternum) (1) மேலும் மூன்று என்புகளாகக் கருதப்படலாம்: பிடியுரு (manubrium), உடல் மார்பெலும்பு (body of sternum), வாள்வடிவ நீட்டம் (xiphoid process) 28. விலா எலும்புகள் (rib) (24) முதுகெலும்புத் தூண் (vertebral column) (33): 8. கழுத்து முள்ளெலும்புகள் (cervical vertebra) (7) மார்பு முள்ளெலும்புகள் (thoracic vertebra) (12) 14. நாரிமுள்ளெலும்புகள் (lumbar vertebra) (5) 16. திரிகம் (திருவெலும்பு) (sacrum) வால் எலும்பு (குயிலலகு) (coccyx) மேற்கைகளில் (arm) (1): 11. புய எலும்பு (மேல்கை எலும்பு) (humerus) 26. புய எலும்புப் புடைப்பு (மேல்கை எலும்புப் புடைப்பு) (condyles of humerus) முன்கைகளில் (forearm) (4): 12. அரந்தி (ulna) (2) 13. ஆரை எலும்பு (radius) (2) 27. ஆரை எலும்புத் தலை (head of radius) கைகளில் (hand) (54): மணிக்கட்டுகள் (carpal): படகெலும்பு (scaphoid) (2) பிறைக்குழி எலும்பு (lunate) (2) முப்பட்டை எலும்புtriquetrum) (2) பட்டாணி எலும்பு (pisiform) (2) சரிவக எலும்பு (trapezium) (2) நாற்புறவுரு எலும்பு (trapezoid) (2) தலையுரு எலும்பு (capitate) (2) கொக்கி எலும்பு (hamate) (2) அங்கை முன்னெலும்புகள் (அனுமணிக்கட்டு எலும்புகள்) (metacarpal): (5 × 2) விரலெலும்புகள் (phalange): அண்மை விரலெலும்புகள் (proximal phalanges) (5 × 2) நடு விரலெலும்புகள் (Intermediate phalanges) (4 × 2) தொலை விரலெலும்புகள் (distal phalanges) (5 × 2) இடுப்பு வளையம் (pelvis) (2): 15. இடுப்பெலும்பு (ilium) மற்றும் கீழ் இடுப்பெலும்பு (ischium) கால்கள் (leg) (8): 18. தொடையெலும்பு (femur) (2) 17. இடுப்பு மூட்டு (hip joint) (மூட்டு, எலும்பல்ல) 22. பெரிய தொடையெலும்புக் கொண்டை (greater trochanter of femur) 23. தொடையெலும்புப் புடைப்பு (condyles of femur) 19. சில்லெலும்பு (patella) (2) 20. கால் முன்னெலும்பு (கணைக்காலலுள்ளெலும்பு) (tibia) (2) 21. சிம்பு எலும்பு (கணைக்கால்வெளியெலும்பு) (fibula) (2) காலடிகளில் (52): கணுக்காலெலும்புகள் (tarsal): குதிகால் (calcaneus) (2) முட்டி (talus) (2) படகுரு எலும்பு (navicular bone) (2) உள் ஆப்புவடிவ எலும்பு (2) இடை ஆப்புவடிவ எலும்பு (2) வெளி ஆப்புவடிவ எலும்பு (2) கனசதுர எலும்பு (cuboidal bone) (2) அனுகணுக்காலெலும்புகள் (metatarsal) (5 × 2) விரலெலும்புகள் (phalange): அண்மை விரலெலும்புகள் (proximal phalanges) (5 × 2) நடு விரலெலும்புகள் (intermediate phalanges) (4 × 2) தொலை விரலெலும்புகள் (distal phalanges) (5 × 2) குழந்தை எலும்புக்கூடு குழந்தைகளின் எலும்புக்கூடுகளில் கீழ் வரும் எலும்புகள் மேலதிகமாக உள்ளன: மண்டையறை மற்றும் மண்டையோட்டு எலும்புகள் (21), இவை ஒன்றாகி மண்டையறையை உருவாக்குகின்றன. திரிக முள்ளெலும்புகள் (sacral vertebrae) (4 or 5), வளர்ந்தோரில் இவை ஒன்றாகி திரிகத்தை உருவாக்குகின்றன coccygeal vertebrae (3 to 5), வளர்ந்தோரில் இவை ஒன்றாகி வாலெலும்பை உருவாக்குகின்றன இடுப்பெலும்பு, கீழ் இடுப்பெலும்பு மற்றும் பொச்செலும்பு (pubis), என்பவை வளர்ந்தோரில் ஒன்றாகி இடுப்பெலும்பை உருவாக்குகின்றன பகுப்பு:மனித உடற்கூற்றியல் பகுப்பு:எலும்புகள்
மனித உடம்பில் எத்தனை எலும்புகள் உள்ளன
208
104
tamil
f73fe7c6b
இந்திய விடுதலை நாள் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15 ம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15 ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.[1] இந்த நாளில் இந்தியப் பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார். ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்/முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர்.[2][3] மேலும் பார்க்க இந்திய வரலாறு குடியரசு நாள் மேற்கோள்கள் வெளியிணைப்புகள் இந்திய அரசாங்க இணையதளத்தில் பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் தளத்தில் பகுப்பு:இந்திய வரலாறு பகுப்பு:இந்தியாவின் சிறப்பு நாட்கள் பகுப்பு:ஆகத்து சிறப்பு நாட்கள் பகுப்பு:இந்திய விடுதலைப் போராட்டம்
இந்தியாவுக்கு எப்போது சுதந்திரம் கிடைத்தது?
1947 ஆகஸ்ட் 15
73
tamil
b3b1e04f3
என்புருக்கி நோய் அல்லது காச நோய் (Tuberculosis, டியூபர்க்குலோசிசு) என்பது மைக்கோபாக்டீரியா (mycobacteria) என்னும் நுண் கோலுயிரியின் தாக்குதலால் மாந்தர்களுக்கு ஏற்படும் கடும் தொற்றுநோய். இதனால் நோயுற்றவர் இறக்கவும் நேரிடும். இந்நோய் முக்கியமாக மைக்கோபாக்டீரியம் டியூபர்க்குலோசிசு (Mycobacterium tuberculosis) என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகின்றது. மைக்கோபாக்டீரியம் போவிசு (Mycobacterium bovis), மைக்கோபாக்டீரியம் ஆப்பிரிக்கானம் (Mycobacterium africanum), மைக்கோபாக்டீரியம் கனெட்டி (Mycobacterium canetti), மைக்கோபாக்டீரியம் மைக்குரோட்டி (Mycobacterium microti) முதலான நுண்ணுயிரிகளாலும் தூண்டப்படலாம்[1]. நோயின் தாக்கம் காச நோயானது பொதுவாக மூச்சுத்தொகுதியில் நுரையீரலைத் தாக்கி நோயுண்டாக்கினாலும், இவை நரம்புத் தொகுதி, நிணநீர்த் தொகுதி (Lymphatic system), இரைப்பை-குடல் தொகுதி, எலும்புகள் மூட்டுகள், குருதிச் சுழற்சிப்பாதை, சிறுநீரகம், பாலுறுப்புகள், தோல் போன்ற பற்பல பகுதிகளிலும் நோயுண்டாக்க வல்லவை. இந்நோய் பொதுவாக டி.பி (TB) எனக் குறிப்பிடப்படுகிறது. TB என்பது T</b>ubercle b</b>acillus (டியூபர்க்கில் பாசிலசு)அல்லது T</b>U<b data-parsoid='{"dsr":[2018,2025,3,3]}'>B</b>ERCULOSIS (டியூபர்க்குலோசிசு) என்பதன் சுருக்கமாகும். சில மருந்துகள் உதவியால் நோய்த் தொற்றும் வாய்ப்புள்ளவர்களுக்கு நோய் தொற்றி வராமல் தடுப்பதற்கும், நோய் வந்தவருக்கு சிகிச்சையளிக்கவும், நோயிலிருந்து மீளவும் வாய்ப்புக்கள் இருப்பினும், இந்நோயை முற்றாக வர இயலாமற் செய்வதற்கான வழிமுறைகளை இன்னமும் அறிவியலாளர்கள் கண்டு பிடிக்கவில்லை. இந்த நோயானது இருமல், தும்மல், உமிழ்நீர் போன்றவற்றிலிருந்து காற்றில் பரவும் தன்மை கொண்டது. ஏராளமான மனிதர்களில் தொற்று ஏற்பட்டிருந்தாலும் அது ஒரு ‘மறைநிலையில்' அல்லது துஞ்சுநிலையில் (Latent TB) காணப்படும். அப்படி உள்ளவர்களில் பத்தில் ஒரு பங்கினர் பிந்திய நிலையில் நோய் அறிகுறிகளை வெளிக்காட்டி நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர். இவர்களுக்கு சரியான முறையில் சிகிச்சையளிக்கப்படாவிடின் அதில் 50 % இற்கு மேலானோர் இறக்கின்றனர். நோயைக் கண்டு பிடிக்க நெஞ்சில் X-கதிர் படப்பிடிப்பு, தோலில் செய்யப்படும் டியூபர்க்குலின் (Tuberculin) பரிசோதனை, உடல் நீர்மங்களின் நுண்ணுயிர் வளர்ப்பு மெய்த்தேர்வு (பரிசோதனை) என்பன பயன்படுத்தப்படுகின்றன. இந்த நோயைக் குணப்படுத்த கூட்டாக பல்வேறு நுண்ணுயிர்கொல்லிகள் இணைத்து, நீண்ட காலத்துக்கு கொடுக்கிறார்கள். ஆனால் தற்போது பயன்பாட்டிலுள்ள அனைத்து நுண்ணுயிர் கொல்லிகளையும் எதிர்க்கும் திறனுள்ள பாக்டீரியா கிளைவகை உருவாகியிருப்பது (Multi Drug Resistance) மிகப் பெரும் சிக்கலாகக் காணப்படுகிறது. இதனால் புதிதாக உருவாகியிருக்கும் நுண்ணுயிர் வகைக்கு மக்கள் நோயெதிர்ப்பாற்றலை இழந்து வருவதால் நோயின் வலிமை (தீவிரம்) அதிகரித்து வருகிறது. உலக நாடுகளெங்கும் உள்ள பல அறிவியலாளர்கள் ஆய்வுகள் மூலம், இதற்கான தீர்வைக் கண்டு பிடிப்பதில் முனைப்பாக உள்ளனர். 'பி.சி.ஜி' (பா.கா.கு, BCG) எனப்படும் எதிர்ப்பூசி போட்டுக் கொள்வதும் பல நாடுகளில் நடை முறையிலுள்ளது. உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்நோயால் தாக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 80 - 90 இலட்சம் மக்கள் இத்தொற்று நோய்க்கு உள்ளாவதாகவும் உலகத் தூய்நல (சுகாதார) நிறுவனத்தின் அறிக்கை கூறுகின்றது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நொடியிலும் புதிதாக ஒருவர் இந்நோய்த் தாக்கத்திற்குள்ளாவதாக அறியப்படுகிறது[2]. நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகும் மனிதர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது[3] . எய்ட்ஃசு நோயை உருவாக்கும் எச்.ஐ.வி என அழைக்கப்படும் மனித நோயெதிர்ப்புக்குறைபாட்டு வைரசின் (HIV) தாக்கத்திற்குள்ளான நோயாளிகளில் ஏற்படக்கூடிய முக்கியமான இரண்டாவது தொற்றாக (secondary infection) இந்த காசநோயே காணப்படுகிறது[4]. 2005 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு (World Health Organization - WHO) வெளியிட்ட அறிக்கையின்படி, 2003 ஆம் ஆண்டில் 88 இலட்சம் மக்கள் புதிதாக நோய்த் தொற்றுக்குட்பட்டதுடன், 17 இலட்சம் மக்கள் இந்நோயினால் இறந்திருக்கிறார்கள். இந்நோயினால், ஆப்பிரிக்க நாட்டிலேயே மிக அதிகமான இறப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றது. , , . வளர்ந்துவரும் நாடுகளில், 2004 ஆம் ஆண்டில், 1.46 கோடி தீவிர (நோய்முதிர்ந்த) நோயாளிகளும், 89 இலட்சம் புதிய நோயாளிகளும், 16 இலட்சம் இறப்புக்களும், அறியப்பட்டன[2]. மேலும் நோயெதிர்ப்பு குறைபாட்டு நோய் (AIDS), உடலின் நோயெதிர்ப்பாற்றலை குறைக்கும் மருந்துகளின் பயன்பாடு போன்ற காரணங்களால், வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இந்நோய் பரவி வருகிறது. இந்நோயானது ஆசிய, ஆப்பிரிக்க நாட்டினரில் 80% உம், அமெரிக்காவில் 5-10% உம் காணப்படுகிறது[1]. வகைப்படுத்தல் தற்போது காசநோய்க்கான சிகிச்சைக்கான பகுப்பு முறையானது, நோயின் தொற்றுத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.[5] அடையாளங்களும் அறிகுறிகளும் நோயானது தீங்குதரத் தொடங்கும்பொழுது, நோயாளிகளில் 75% பேருக்கு நுரையீரல் காச நோயாக (பல்மனரி டிபி, Pulmonary TB) இருக்கும். அவற்றின் அறிகுறிகளாவன; நெஞ்சு நோவு, இருமலுடன் குருதி வெளிவரல், 3 கிழமைகளுக்கு மேலாக கடுமையான நீடித்த இருமல். குறிப்பிடத்தக்க அறிகுறிகளாவன; காய்ச்சல், தடிமன், இரவில் வியர்த்தல், பசியின்மை, உடல் எடை குறைதல், உடல் வெளிறியிருத்தல், மிக இலகுவாக அடிக்கடி உடற் சோர்வடையும் தன்மையைக் கொண்டிருத்தல்[2] மீதம் இருக்கும் 25% நோயாளிகளில் இந்த நோயானது நுரையீரலிலிருந்து வேறு உடல் உறுப்புக்களுக்குப் பரவிச் செல்கிறது. இது நுரையீரலுக்கு வெளியான காச நோயென (Extra Pulmonary TB) அழைக்கப்படும்[8]. இவை பொதுவாக உடலில் எதிர்ப்புத் தன்மை குறைந்தவர்களிலும், குழந்தைகளிலும் ஏற்படும். இவ்வகை காச நோய் நரம்புத் தொகுதியைத் தாக்குகையில் (மூளை, தண்டுவடங்களின் சவ்வு உறையைத் தாக்குகையில்) மெனிஞ்சைட்டிசு (Meningitis) என்றும், நிணநீர்த் தொகுதியைத் தாக்குகையில் கழுத்துப் பகுதியில் சுக்ரோபுயூலா (scrofula) என்றும் கூறப்படுகின்றது. மேலும் பிளியூரா (pleura) எனப்படும் நுரையீரல் குழியின் இரட்டைச் சவ்வுப்படலம், இரைப்பை-குடல் தொகுதி, எலும்புகள், மூட்டுகள், குருதிச் சுழற்சிப்பாதை, சிறுநீரகம், பாலுறுப்புகள், தோல் போன்ற பற்பல பகுதிகளையும் தாக்கி நோயுண்டாக்க வல்லவை. எலும்பு, மூட்டுக்களைப் பாதிக்கையில் அது பாட்டின் நோய் (Pott's disease) என அறியப்படுகிறது. நுண்கிழிவுகளாகக் காணப்படும் குருனைக் காசநோய் (Miliary tuberculosis) மிகவும் கடுமையான ஒரு நோய்த்தன்மை கொண்டதாகும். இந் நிலையில், தொற்றானது குருதித் தொகுதியினுள்ளும் சென்று, அந்நிலையில் தினை (millet, தினை) போன்ற தானியத்தின் தோற்றத்தில் சிறிய புண்கள் உருவாகிறது. அந்தப் புண்கள் X - கதிர் படத்தில் காணக்கூடியதாக இருக்கும்.[9][10]. நுரையீரல் காசநோய், நுரையீரலுக்கு வெளியான காசநோய் இரண்டும் ஒரே நோயாளியில் தாக்கியிருக்கவும் கூடும்[11]. நோய்க் காரணி முதன்மையான நோய்க் காரணி Mycobacterium tuberculosis (MTB) என்னும் கோலுருவான (bacilli), ஒரு காற்றுவாழ் (aerobic) பக்டீரியாவாகும். இதில் 16-20 மணித்தியாலங்களுக்கு ஒரு முறையே உயிரணுப்பிரிவு நிகழ்வதால், ஏனைய பக்டீரியாக்களுடன் ஒப்பிடும்போது (பொதுவாக பக்டீரியா ஒரு மணித்தியாலத்திற்குள் ஒரு தடவை உயிரணுப்பிரிவடையும்), மிகவும் மெதுவான வளர்ச்சிவீதத்தைக் கொண்டிருக்கிறது[12]. (E.coli என்னும் மிக விரைவான வளர்ச்சியுடைய பக்டீரியா 20 நிமிடத்திற்கொரு முறை உயிரணுப்பிரிவு அடைகின்றது. இந்த மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிசு (Mycobacterium tuberculosis) உயிரணு உயிரணுச்சுவரைக் கொண்டிருப்பினும், வெளி பொசுபோலிப்பிட் மென்சவ்வைக் கொண்டிராதமையால் கிராம் நேர்வகைப் (Gram positive) பிரிவில் வகைப்படுத்தப்படுகிறது. ஆனாலும் கிராம் நிறமூட்டுகையின்போது, இதன் உயிரணுச்சுவரில் உள்ள அதிகளவிலான லிப்பிட்டு, மைக்கோலிக் காடி (அமிலம்) (Mycoli acid) காரணமாக, மிக மென்மையாக நிறமூட்டப் பட்டோ, அல்லது நிறமூட்டப்படாமலோ காணப்படுகின்றன[13]. இந்த மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிசு (Mycobacterium tuberculosis) பக்டீரியாவானது பலமற்ற நுண்ணுயிர்க்கொல்லிகளை எதிர்த்து, உலர் நிலையில் பல கிழமைகள் உயிருடன் வாழும் வல்லமை கொண்ட, கோலுருவான பாசிலசு (bacillus) வகையைச் சார்ந்தது ஆகும். இது, இயற்கையில், ஓர் ஏற்புதரும் உயிரினத்தின் உடலில் மட்டுமே வளரும் தன்மை கொண்டிருப்பினும், தகுந்த வளர்ப்பூடகத்தில் செயற்கையாக, பரிசோதனைக் குழாய்களில் வளர்க்கப்படக் கூடியவையாய் உள்ளன[14]. நோயாளிகளின் வாயிலிருந்து பெறப்படும் சளியில் செய்யப்படும் இழையவியல் நிறமூட்டுகையில் இருந்து, சாதாரண நுணுக்குக்காட்டி மூலம், அறிவியலாளர்களால் இந்த பக்டீரியாவை இனம்காண முடியும். பொதுவான கிராம் நிறமூட்டுகையின்போது, இவ்வகை பக்டீரியாக்கள் நிறமூட்டப்பட்டாலும், பின்னர் காடிக் கரைசல்களுடன் கையாளப்படும்போது, இந்த பக்டீரியாவானது நிறநீக்கத்துக்கு உட்படாமல், சில நிறங்களை தக்க வைத்துக் கொள்வதனால், இது காடியின் நிலை கொள்ளும் பாசிலசு (Acid Fast Bacillus - AFB) என்னும் பிரிவினுள் வகைப்படுத்தப்படுகிறது.[1][13]. இவ்வகை பக்டீரியாக்களை இனம்காண பொதுவாக பயன்படும் சோதனைமுறை சீயல்-நீல்சன் (Ziehl-Neelsen) நிறமூட்டுகை ஆகும்.[15]. இந்த சீயல்-நீல்சன் (Ziehl-Neelsen) நிறமூட்டுகையின்போது, நீலநிற பின்புலத்தில், பளிச்சென்று சிவப்பு நிறத்தில் இவ்வகை பக்டீரியாவின் உயிரணுக்கள் இனம் காணப்படும். ஔராமைன்-ரோடாமைன் (Auramine-rhodamine) நிறமூட்டுகை, மற்றும் தூண்டொளிர் (fluorescent) நுண்ணோக்கி மூலமாகவும் AFB ஐ இனம்காண முடியும். மேலும் இரு பகுதி, இரு படிமுறை AFB குளிர் நிறமூட்டுகை (two component, two step AFB cold staining method) முறையினாலும் இந்த பாக்டீரியா இனம் காணப்பட முடியும்.[16]. M.tuberculosis complex ஆனது, காசநோயை உருவாக்கவல்ல, வேறு மூன்று மைக்கோபக்டீரியாக்களை உள்ளடக்கியுள்ளது. அவையாவன M. bovis, M. africanum, M. microti. இவற்றில் M. africanum அதிகளவு பரவியிருக்காவிட்டாலும், ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் காசநோயை உருவாக்கும் முக்கிய நோய்க்காரணியாக உள்ளது[17][18]. முன்னைய ஒரு கால கட்டத்தில் M. bovis காசநோய்க்கான பொதுவான ஒரு காரணியாக இருந்தவந்த போதிலும், பின்னர் கிருமிநீக்கிய பாலின் (pasteurized milk) அறிமுகத்தினால், வளர்ச்சியடைந்த நாடுகளில் இக்காரணியால் பொதுவான சுகாதார பிரச்சனைகள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது[1][19]. M. microti யானது பொதுவாக நோயெதிர்ப்பாற்றல் குறைந்த மனிதர்களிலேயே நோயை உண்டாக்குவது அறியப்பட்டிருக்கின்ற போதிலும், இந்நோய்க் காரணியின் பாதிப்பு குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதற்கான சாத்தியங்களும் உள்ளது[20]. நோயை உருவாக்கும் திறனுள்ள வேறு சில மைக்கோபக்டீரியா வகைகளும் உள்ளன. Mycobacterium leprae தொழுநோயை உருவாக்கும் வல்லமை கொண்டது. Mycobacterium avium, M. kansasii ஆகிய இரண்டும் காசநோயை உருவாக்காத மைக்கோபக்டீரியா (Non Tuberculosis Mycobacteria - NTB) வகையினில் அடங்கும். இவையிரண்டும் காச நோயையோ, அல்லது தொழுநோயையோ உருவாக்காவிட்டாலும், காச நோயை ஒத்த நுரையீரல் சம்பந்தமான சில நோய்களை உருவாக்க வல்லன[21]. தொற்றும் பரவலும் சாதாரண தடிமனைப் போன்றே காசநோயும் காற்றினால் தொற்றுதலை ஏற்படுத்தி, பரவுகின்றது. நுரையீரல் காசநோய்த் தொற்றுக்குட்பட்ட ஒருவர் இருமும்போது, தும்மும்போது, பேசும்போது அல்லது துப்பும்போது வெளியேற்றும் 05-5µm விட்டமுள்ள காற்றுத் துளிகள் காசநோய்த் தொற்றை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. ஒரு தனியான தும்மலின்போது நோயை உருவாக்கும் திறன்கொண்ட 40,000 துளிகள்வரை வெளியேறும் வாய்ப்பு உள்ளது[22]. தொற்றை ஏற்படுத்த தேவையான நோய்க்காரணியின் அளவு மிகச் சிறியதாக இருப்பதால், ஒரு தனி காற்றுத் துளியே வேறு ஒருவரில் ஒரு புதிய தொற்றை ஏற்படுத்த முடியும்[23] நோயுள்ள ஒருவருடன் தொடர்ந்த, அடிக்கடியான, அதிகமான தொடர்பில் இருப்பவருக்கு இந்நோய் உருவாவதற்கான சந்தர்ப்பம் அதிகமாக இருக்கும். நோயுள்ள, ஆனால் சிகிச்சைக்குட்படாத நபர் ஒருவர், வருடமொன்றுக்கு மேலும் 10-15 பேர்வரை தொற்றுக்குட்பட்த்துவதற்கான சாத்தியம் உள்ளது[2]. காசநோய் அதிகமிருக்கும் இடத்தில் வசிப்பவர்கள், சரியான முறையில் தொற்றுநீக்கம் செய்யப்படாத ஊசிகளை போட்டுக் கொள்பவர்கள், தொற்றுக்குட்பட்டவருடன் தொடர்பில் இருக்கும் குழந்தைகள், மனித உடலின் நோயெதிர்ப்பாற்றலை குறைக்கும் தன்மை கொண்ட மருந்துகளை உட்கொள்பவர்கள், எய்ட்சு நோய்த் தாக்கத்திற்குட்பட்ட நோயாளிகள், மற்றும் காசநோய் நோயாளிகளுக்கு உதவும், மருத்துவ உதவிகளைச் செய்யும் பணியாளர்கள் என்போர் இந்நோய்த் தாக்கத்திற்குட்படுவதற்கான நிகழ்தகவு மிகவும் அதிகமாக இருக்கும்[24] நோய்க்காரணியினால் தொற்றுக்குட்பட்ட பலரில், நோயானது வெளித்திரியாமல் ஒரு மறைநிலையில் (Latent TB) காணப்படும். இப்படி நோயானது மறைநிலையில் காணப்படும் ஒருவரால் புதிய தொற்று ஏற்படமாட்டாது. நோயானது செயல்நிலையிலுள்ள (active TB) ஒருவரிலிருந்து மட்டுமே நோய்த் தொற்று ஏற்படும் சாத்தியமுள்ளது[1]. நோய்த்தொற்று ஏற்படுவதற்கான நிகழ்தகவானது நோய்க்காவியாக (carrier) செயற்படும் ஒருவரினால் வெளியேற்றப்படும் நோய்த் தாக்கத்தை ஏற்படுத்தவல்ல நீர்த் துளிகளின் எண்ணிக்கை, அவர் இருக்கும் இடத்தில் காற்றோட்டத்தின் தன்மை, நோய்க்காரணியை எதிர்கொள்ளும் நேரத்தின் அளவு, M.tuberculosis வகையின் நோயேற்படுத்தும் தன்மையின் அளவு (virulence) போன்ற காரணிகளில் தங்கியிருக்கும்[11]. இதனால் தொற்றானது தொடராக ஏற்படுவதைத் தவிர்க்க, நோய் செயல்நிலையில் உள்ளவரை உடனடியாக தனிமைப்படுத்தி, காசநோய்க்கெதிரான சிகிச்சையை தாமதிக்காமல் மேற்கொள்வதுமேயாகும். அப்படி சிகிச்சை செய்யப்படுமிடத்து, இரண்டு கிழமைகளில் அவர் பொதுவாக தொற்றை ஏற்படுத்த முடியாத நிலைக்கு செல்வார். புதிதாக நோய்த்தொற்றுக்கு உள்ளாகி நோயின் செயற்படு நிலையில் உள்ள ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கு அவருக்கு தொற்று ஏற்பட்ட நேரத்திலிருந்து 3- 4 கிழமைகள் எடுக்கும்[25]. காசநோய்த் தொற்றுள்ள இறைச்சியை உண்பதனாலும் இந்நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு[26]. Mycobacterium bovis ஆனது கால்நடைகளில் காசநோயை உருவாக்கும் திறனுள்ளது[27]. நோயுருவாக்கும் தன்மை M.tuberculosis இனால் தாக்கத்துக்கு உட்படுவோரில் 90% ஆனவர்கள் அறிகுறிகளற்ற, நோயின் மறைநிலையையே (Latent TB Infection - LTBI) கொண்டிருப்பார்கள். இப்படி மறைநிலையில் இருப்போரில் 10% ஆனவர்கள் மட்டுமே பிந்திய தமது வாழ்க்கைக் காலத்தில், செயற்பாடுள்ள நோயை பெறுகின்றனர்[1]. ஆனாலும், தகுந்த சிகிச்சை அளிக்கப்படாதவிடத்து, நோயைப்பெற்ற நோயாளர்களில் 50% க்கும் அதிகமானோர் இறக்கின்றனர்[28]. நோய்க் கண்டுபிடிப்பு நோய்க்கான அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளில் நடத்தப்படும் மருத்துவ சோதனைகளுக்காகப் பெறப்படும் மாதிரிகளில் இருந்து (உமிழ்நீர், சீழ்) நோய்க்காரணி நிச்சயமாக அறிந்து கொள்ளப்படும்போது, நோயானது கண்டு பிடிக்கப்படும். இது சாத்தியமில்லாமல் போகுமிடத்து, X- கதிர் படப்பிடிப்பு மூலமும், அத்துடன், அல்லது டியூபெர்குலின் தோல் சோதனை மூலமும் நோயானது உறுதிப்படுத்தப்படும். நோய்க்காரணியின் மிக மெதுவான வளர்ச்சி வேகத்தினால் இந்நோயை கண்டு பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. குருதி, அல்லது உமிழ்நீர் மாதிரிகளை, தகுந்த வளர்ப்பூடகத்தில் சோதனைச்சாலையில் வளர்த்தெடுக்க 4 - 12 கிழமைகள் பிடிக்கின்றது. காசநோய் பற்றிய ஒரு முழுமையான மருத்துவ கணிப்பீட்டிற்கு மருத்துவ வரலாறு, நேரடி உடல் சோதனைகள் (Physical examination), நெஞ்சின் X-கதிர் படம், நுண்ணுயிர்களின் பூச்சு (microbial smear), நுண்ணுயிர் வளர்ப்பு (microbial culture) என்பன தேவையாகின்றன. அத்துடன் டியூபெர்குலின் சோதனையும், இரத்த நிணநீர் சோதனை (serological test) போன்றனவும் செய்யப்படலாம். டியூபெர்குலின் சோதனை முடிவுகளை விளக்குவதானது, ஏற்கனவே குறிப்பிட்ட நபர் காசநோய்த் தடுப்பு (BCG vaccine) செய்துள்ளாரா, அவர் நோயுள்ள பலருடன் தொடர்பில் இருந்தாரா போன்ற காரணிகளில் தங்கியிருக்கும்[11]. அத்துடன் இந்த சோதனை முறையானது வேறு சில நோயுள்ளவர்கள், சத்தூட்டம் குறைவானவர்களில் தவறான முடிவுகளையும் தரக் கூடியதாக இருக்கிறது[1]. காசநோய் தடுப்பு உலக சுகாதார அமைப்பானது இநோயின் தீவிரத்தை முன்னிட்டு, 1993 ஆம் ஆண்டில், உலகளாவிய காசநோயை கட்டுப்படுத்துவதற்கான திட்டம் ஒன்றை முன்னெடுத்தது. அதன் நோக்கம் ஆண்டுகள் 2006 - 2015 இற்கிடையில் இந்நோயினால் நிகழக் கூடிய 14 மில்லியன் உயிர் இழப்புக்களை தடுப்பதாகும்[29]. M.tuberculosis வகையினால் நோய்த் தொற்றுக்கு உட்படக்கூடிய இனம் மனித இனமாக மட்டுமே இருப்பதனால், வீரியமுள்ள ஒரு தடுப்பு மருந்தின் உதவியுடன் இந்த நோயை முழுமையாக கட்டுப்பாட்டினுள் கொண்டுவருதல் சாத்தியம் என்றே நம்பப்படுகிறது[30]. காசநோயை ஏற்படுத்தாத வேறு மைக்கோபக்டீரிய இனங்கள் அதிகமாக உள்ள வெப்ப மண்டல நாடுகளில் இயற்கையாகவே காசநோய்க்கெதிரான ஒருவகை தடுக்கும் தன்மை நிலவுகிறது[31]. காசநோய்த் தடுப்பு இரு வழிகளில் நடை முறைப்படுத்தப்படலாம். நோயை கண்டுபிடித்தலும், குணப்படுத்தலும் நோய் அதிகம் ஏற்படும் நிகழ்தவுள்ளவர்களை சோதனைக்குட்படுத்தி, நோயுள்ளவர்களை கண்டுபிடித்து, அவர்களை தனிமைப்படுத்தி, உரிய சிகிச்சையை உடனடியாக ஆரம்பித்து, அவர்களை குணப்படுத்துதல். இதன் மூல நோயானது மேலும் பரவுவதை தடுக்கலாம். நோய்த் தடுப்பு மருந்தின் பயன்பாடு 1921 ஆம் ஆண்டில் பாசில்லசு கால்மெட்-குவெரின் (பா.கா.கு) (Bacillus Calmette-Guerin (BCG)) தடுப்பூசியானது மனிதர்களில் காசநோயைத் தடுக்கும் நோக்குடன் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது[32]. இந்தத் தடுப்பூசி மைக்கோபாக்டீரியம் போவிசு (Mycobacterium bovis) நுண்ணுயிரை வலுவிழக்கச்செய்யும் மாற்றங்களுக்கு உட்படுத்தி தயாரிக்கப்பட்டது. செயற்கையான வளர்ப்பூடகத்தில் தொடர்ந்து பல ஆண்டுகள் வளர்த்ததில், மனிதர்களில் நோயை உருவாக்கும் தன்மையை இந்த நுண்ணுயிர் இழந்திருக்கும். இந்த தடுப்பூசியானது குழந்தைகளிலேயே உரிய தொழிற்பாட்டை காட்டுகிறது. பெரியவர்களான பின்னர் இந்த தடுப்பூசி பயன்படுத்தப்பட்டால், அது சரியான முறையில் தொழிற்படுவதில்லை. தடுப்பூசி 1905-1921 ஆண்டுகளுக்கிடையில் காசநோய்க்கெதிராக கண்டுபிடிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து BCG ஆகும். இதுவே குழந்தைகளில் பெருமளவில் பயன்படுத்தப்படும் தடுப்பு மருந்தாகும்[33][34]. பா.கா.கு (BCG) தடுப்பூசி குழந்தை பிறந்து நான்கு கிழமைக்குள் கொடுக்கப்பட வேண்டும். இதன்போது தழும்பொன்று உருவாகும். இத்தழும்பு உண்டாகாதவிடத்து ஆறுமாதம் தொடக்கம் ஐந்து வயது காலத்திற்குள் இவ்வூசி மீண்டும் கொடுக்கப்பட வேண்டும். மூன்று கிழமைகளுக்கு மேல் இருமல் இருக்குமிடத்து உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும் மக்கள் நெரிசலான இடங்கள், சூரிய வெளிச்சம் உள்வராத வீடுகள், இந்நோய் பரவுவதை ஊக்குவிப்பனவாகும். வலுவூட்டும் உணவுக் குறைபாடு இருப்பது இலகுவில் இந்நோய் தொற்ற வழிவகுக்கும் பசும்பாலினாற் பரவுங் காசநோயைத் தவிர்க்க நன்கு கொதிக்க வைத்த பால் அல்லது பாய்ச்சர் (Pasteur) முறையிற் பதனிட்ட பாலை அருந்தவும். சிகிச்சை ஆறு மாத காலத்துக்குக் கட்டாய சிகிச்சை அத்தியாவசியம். தவறுமிடத்து எதிர்ப்பு சக்தியுடைய நோய்க்கிருமிகள் உருவாகி நோயைக் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படும். பயன்படும் மருந்துகள் றிபம்பிசின் (Rifampicin) ஐசோனியாசிட் (Isoniasid) பைரமினமைட் (Pyriminamide) எதம்பியூட்டோல் (Ethambutol) இவ்வகையான நுண்ணுயிர் கொல்லிகளில் சிலவற்றை ஒருசேர எதிர்க்கும் திறனுள்ள (Multi Drug Resistance or Extensively Drug Resistance), M.tuberculosis பக்டீரியா வகை புதிதாக உருவாகியிருப்பதால் சில சமயம் சிகிச்சை சரியான பலனைத் தர முடியாமலும் போகின்றது[35]. வரலாறு தொல்பழங் காலத்திலேயே காசநோய் இருந்திருப்பது அறியப்பட்டுள்ளது. இற்றைக்கு கிட்டத்தட்ட 18,000 வருடங்களுக்கு முன்னர் இருந்திருக்கக் கூடிய எருமையின் எச்சங்களிலிலிருந்து Mycobacterium tuberculosis கண்டு பிடிக்கப்பட்டது[36]. Tuberculosis மாடுகள் / கால்நடைகளிலிருந்து தோன்றி, மனிதர்களைத் தாக்கும் திறனுடன் மாற்றப்பட்ட ஒரு இனமா, அல்லது வெவ்வேறு இனங்களில் தொற்று ஏற்படுத்தும் திறமை கொண்ட ஒரு பொது மூதாதையரிலிருந்து தோன்றி, பின்னர் திரிபடைந்த ஒரு இனமா என்ற நிலை இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை[37]. இருப்பினும், மிக அண்மைக்காலத்தில் உருவாகி மாடுகளைத் தாக்கும் மை.போவிசு (M. bovis) இலிருந்து நேரடி வழித் தோன்றலாகவே மை. டியூபர்குலோசிசு (M. tuberculosis) திரிபடைந்து வந்திருக்கிறது என்பது தெளிவாக உள்ளது[38]. மனித வரலாற்றுக்கு முன்னைய காலத்தில் (கி.மு. 7000 ஆண்டு) வாழ்ந்த உயிரினங்களின் என்பு எச்சங்களில் TB இருந்தது கண்டறியப்பட்டுள்ளது[39]. அத்துடன் கி.மு. 3000-2400 ஆண்டுகளில் இருந்த பழம் உடலங்களின் தண்டுவடத்தில் (முண்ணாணில், spines), இந்நுண்ணங்கிகளின் அழிவுகள் காணப்பட்டன[40]. கி.மு. 460 ஆம் ஆண்டளவில், காசநோய் கிரேக்க மொழியில் இப்திசிசிசு (Phthisis) என அழைக்கப்பட்டது. பெரும்பாலும் இறப்பையே ஏற்படுத்தும், காய்ச்சல், மேலும் இரத்தத்துடன் கூடிய இருமலைக் கொண்டிருக்கும், மிக அதிகளவில் பரவலாக இருந்த பயங்கரமான ஒரு நோயாக, காச நோயை இப்போக்கிரேட்டசு (Hippocrates) அறிந்திருந்தார்[41]. தென்னமெரிக்காவில், கிட்டத்தட்ட கி.மு 760 இலிருந்து கி.பி. 100 ஆண்டுகளுக்கான இடைப்பட்ட, பராக்கசு நாகரீக (Paracus Culture) காலத்திலேயே, Tuberculosis இருந்ததற்கான ஆதாரங்கள் தென்பட்டன[42][43]. முற்காலத்தில் இந்த நோயானது ‘உருக்கி நோய்' எனவும் அழைக்கப்பட்டது. இரத்த இருமல், காய்ச்சல், வெளிறிய உடல் போன்ற அறிகுறிகளால் அழிவு ஏற்படுவதால் இநோயை இப்பெயரிட்டு அழைத்தனர். உருக்குதல் என்ற சொல்லின் கிரேக்க சொல்லான phthisis என்ற சொல்லின் பெயர் கொண்டும் இந்நோய் அறியப்பட்டிருந்தது. இந்நோயின் ஒரு நிலையில், தொற்றானது குருதித் தொகுதியினுள்ளும் சென்று, அந்நிலையில் தினை போன்ற தானியத்தின் தோற்றத்தில் சிறிய புண்கள் X - கதிர் படத்தில் காணப்படுகிறது[9][10]. அது குருனைக் காசநோய் (Miliary tuberculosis) என அழைக்கப்படுகிறது. 1882 இல் Tuberculosis bacillus ஐ , தனிப்படுத்தி, பிரித்தெடுத்த (isolated) அறிவியலாளர் ரோபேர்ட் கொக் (Robert Koch) இன் நினைவாக இந்நோய் 'கொக் நோய்' (Koch disease) எனவும் அழைக்கப்படுகிறது[44] . இயந்திர தொழில் புரட்சிக்கு முன்னைய காலத்தில், இந்நோயானது இரத்தக்காட்டேரித்தனமாக கருதப்பட்டது. காரணம் ஒரு குடும்பத்தினர் இந்நோயினால் இறந்து போனபின்னர், அக்குடும்பத்திலுள்ள இந்நோய்த் தொற்றுக்குள்ளான ஏனைய அங்கத்தினர், சிறிது சிறிதாக உடல்நலம் குன்றியவர்களாக வருவார்கள். அந்நிலமைக்குக் காரணம் அந்த இறந்துபோனவரின் ஆவியே என்றும், அது மற்றவர்களின் வாழ்க்கையை உறிஞ்சி அழிப்பதாக மக்கள் நம்பி வந்தனர். மேலும் காசநோய்க்கு ஆட்பட்ட மனிதர்களில் தோன்றும் அறிகுறிகளும் அவர்களை அவ்வாறு நம்ப வைத்திருந்தது. அதிக ஒளியினால் தாக்கப்படக் கூடிய சிவந்த, வீங்கிய கண்கள், வெளிறிய தோல், மிகவும் குறைந்த உடல் வெப்பம், பலவீனமான இதயம், இரத்தத்தை வெளியேற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் அவர்களை அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கைக்கு தள்ளியிருந்தது. இரத்தம் உறிஞ்சப்படும் காரணத்தாலேயே இவ்வாறு இருமும்போது இரத்தம் வருகிறது என்று நினைத்தார்கள். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில், இந்த காச நோயானது சுய இன்பம் மேற்கொள்ளும் காரணத்தால் ஏற்படுவதாகவும் ஒரு நம்பிக்கை நிலவியது[45]. 1020 ஆம் ஆண்டில் இபுன் சினா (Ibn Sina) என்பவர் எழுதிய மருத்துவத்தின் அடிக்கோட்பாடுகள் (The Canon of Medicine) என்னும் நூலில் இருந்து இந்நோய் பற்றிய படிப்பு துவங்கியது எனக் கூறலாம். இது ஒரு தொற்றுநோய் என முதலில் கண்டு பிடித்து அறிவித்து, இது சலரோகம் அல்லது நீரிழிவு நோயுடன் தொடர்புடையது என முதலில் கூறி, இது மண் அல்லது நீரினால் பரவலாம் என்றுக் கூறிய அறிவியலாளர் இவரே[46][47]. இந்நோயின் பரவலைத் தடுப்பதற்கான முறைய உருவாக்கியவரும் இவரேயாவார்[48]. முன்னைய காலத்தில் சிகிச்சை முறைகள் பொதுவாக உணவை மாற்றுவதை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருந்தது. 1689 ஆம் ஆண்டில் ரிச்சர்டு மார்ட்டன் (Dr.Richard Morton) என்பவரினால் நுரையீரலில் ஏற்படும் காசநோய்க்கும் டியூபர்கியூலோசிசுக்கும் இடையிலான தொடர்பு நிறுவப்பட்டு இருந்த போதிலும்[49][50], இந்நோயின் பல வேறுபட்ட அறிகுறிகளின் காரணமாய், 1820 வரையில், இது ஒரு தனியான நோயென்பது சரியாக அறியப்படாமல் இருந்ததுடன், 1839 இல் J.L.Schönlein என்பவர் குறிப்பிடும்வரை Tuberculosis என பெயரிடப்படாமல் இருந்தது[51]. மாமத்து (Mammoth) குகையின் உரிமையாளரான முனைவர் சான் குரோகன் (Dr. John Croghan) என்பவர் 1838 – 1845 ஆண்டுப் பகுதியில், இந்நோயால் தாக்கப்பட்ட சில நோயாளிகளை இக்குகைக்குள் இருக்கும் மாறாத வெப்பநிலையும், சுத்தமான காற்றும் குணப்படுத்திம் என்றெண்ணி கொண்டு வந்து வைத்திருந்த போதும், அவர்கள் ஒரு வருடத்திலேயே இறந்து விட்டனர்[52]. இந்நோய்க்கான முதல் சிகிச்சை நிலையம் 1854 ஆம் ஆண்டில் செர்மனியில் கோபர்சுடோர்பு (Görbersdorf) என்னுமிடத்தில், (தற்போது போலந்தில் சோக்கோலோவ்சுக்கோ (Sokołowsko) என்னுமிடத்தில்) எர்மன் பிரேமர் (Hermann Brehmer) என்பவரால் தொடங்கி வைக்கப்பட்டது[53]. பொறுப்பு துறப்பு நீங்கள் பார்க்க வேண்டிய முக்கிய பக்கம் விக்கிப்பீடியா:மருத்துவ பொறுப்பு துறப்பு பக்கம் வெளி இணைப்புக்கள் அடிக்குறிப்பு இவற்றையும் பார்க்கவும் மார்ச் 24 - அனைத்துலக காசநோய் நாள் பகுப்பு:பாக்டீரிய நோய்கள் பகுப்பு:மேற்கோள் வழு-Defined multiple times
காச நோய்க்கு எந்த ஆண்டு முதல் முதலில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது?
1905-1921 ஆண்டுகளுக்கிடையில்
15,196
tamil
ccb893067
செம்பருத்தி அல்லது செவ்வரத்தை (Hibiscus rosa-sinensis) என்பது இந்தியா,இலங்கை போன்ற வரள்வலய இடங்களில் வளரும் தாவர இனம் ஆகும். இது செடி இனத்தை சார்ந்தது. இதன் பூமருத்துவ குணங்களை கொண்டதாகும். இது கிழக்கு ஆசியாவில் தோன்றிய ஒரு தாவரமாகும். இது சீன ரோஜா எனவும் அழைக்கப்படுகிறது[1] . இது மலேசியாவின் தேசிய மலராகும். இது பொதுவாக அழகுத்தாவரமாக வளர்க்கப்படுகிறது. ஆயுர்வேதத்தில் இது ஜபா புஸ்பா, ருத்ர புஷ்ப, ரக்த கார்பாச என்றும் அழைக்கப்படுகிறது பதியமுறை இனப் பெருக்கம் இச்‌செடி விதைகளின் மூலம் இனப்பெருக்கம் செய்வதில்லை. தண்டுத் துண்டம் மூலம் பதியமுறையில் எளிதாக இனம் பெருக்கலாம். ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி ரோசா-சினென்சிஸ் பெரும்பாலான மற்ற இனங்கள் போல் குரோமோசோம்களின் மேற்பட்ட முழு செட், உள்ளன இதில் பலதொகுதியாக்கும் இயல்பு எனப்படும் மரபணு பண்பு, பல தாவர இனங்கள் ஒன்றாகும். பலதொகுதியாக்கும் இயல்பு ஒரு பக்க விளைவு பிள்ளைகள் பற்றிய பீநோடைப் அடிப்படையில் முன் போயிருக்கிறார்கள் என்று அனைத்து தலைமுறைகளின் சிறப்பியல்புகளை அனைத்து (அல்லது எந்த) ஒரு சாத்தியமான சீரற்ற வெளிப்பாடு அனுமதிக்கிறது, பெற்றோர், அல்லது உண்மையில் எந்த மூதாதையர் இருந்து வேறுபட்டு இருக்கும் ஒரு நிலையில் உள்ளது. இந்த பண்பு கொண்ட, எச் ரோசா-சினென்சிஸ் புதிய பெயரிடப்பட்ட வகைகள் உருவாக்கி பல விளைவாக புதிய நாற்றுகள் மற்றும் பெரும்பாலும் பளிச்சென தனிப்பட்ட மலர்கள் வெளிப்படுத்துகின்றன மற்றும் தீர்ப்பு போட்டிகள் பிடித்து, கடந்து வந்த பொழுதுபோக்காக மற்றும் recross வகைகள் பிரபலமாக உள்ளது. மரபணு வாய்ப்புகளை சேர்க்க, ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி ரோசா-சினென்சிஸ் வெற்றிகரமாக குளிர்-ஹார்டி கலப்பினங்கள் (குளிர், ஹார்டி ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி பயிரிடு பார்க்க) உற்பத்தி, குளிர் எதிர்ப்பு ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி moscheutos மற்றும் பல வட அமெரிக்க ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி இனங்கள் கலப்பினம். பெரும்பாலும் இந்த சிலுவைகள் சந்ததி மலட்டு இருக்கிறது, ஆனால் சில இன்னும் மாறும் சிக்கலான மற்றும் இறுதியான ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி ரோசா-சினென்சிஸ் வகைகள் ஒரு கிட்டத்தட்ட வரம்பற்ற வாய்ப்பு அதிகரிக்கும், வளமான இருக்கும். இது மேலும் குளிர் பகுதிகளில் தொலைவுகளுக்கு உட்பட உலகம் முழுவதும் இந்த வெப்பமண்டல தாவரங்கள் பயிற்சி இந்த பொழுதுபோக்கு மேலும் உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புக்கள், சங்கங்கள், வெளியீடுகள், மற்றும் கையேடுகள் உருவாக்கிய பொழுதுபோக்காக,,, கவர்கிறது பயன்கள் இச்செடியின் பூக்கள் தலை முடி அழகுக்காக பல வழிகளில் பயன்படுகிறது. இதனை பசிபிக் தீவுகளில் உணவாகவும் மக்கள் உட்கொள்கின்றனர். சீன மருத்துவ முறைகளிலும் இந்தப் பூ பயன்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் அழகுப்பொருளாகவும், தலையில் சூடிக்கொள்ளவும், கடவுளை வழிபடவும் இந்த செடியின் பூ பயன்படுகிறது. காலணிகளை பொலிவூட்டவும் இந்த பூவின் இதழ்களை பயன்படுத்தலாம். ஜமாய்க்காவில் இந்தப் பூவை வயிற்றில் உண்டான கருவை கலைக்கவும் பயன்படுத்துகின்றனர். மருத்துவக் குணங்கள் செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை. வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணமாக்கும். (பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.) கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் கருஉருவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. (செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.) மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கும். (செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, தலையிடி, மயக்கம் போன்றவை குறையும்.) வெள்ளைப்படுதலைக் குணமாக்கும். (செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும். விற்பனை இச் செடி இரசியா போன்ற குளிர் நாடுகளில் காலநிலைமாற்றங்களை தாண்டி வளரக்கூடியது. எனவே இது வீடுகளில் அலங்காரச்செடியாக வளர்க்கப்படுகின்றது. இரு மீற்றர் (மீட்டர்) வளர்ந்த செடி அங்கு 250$-க்கு விற்கப்படுகின்றது. பூக்கள் பூக்கள் பல நிறங்களிலும், பல அடுக்கு இதழ்களை கொண்டதாகவும் காணப்படுகின்றன. இது தவிர கலப்புப் பிறப்பாக்கம் மூலமும் பல்நிற பூக்களை உருவாக்க முடியும். மேற்கோள்கள் பகுப்பு:மூலிகைகள் பகுப்பு:மலர்கள் பகுப்பு:மெய்யிருவித்திலையிகள்
செம்பருத்தி பூவில் எத்தனை இதழ்கள் உள்ளன?
பல அடுக்கு
3,748
tamil
274be2c15
ஆப்பிரிக்கா கண்டம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டம் ஆகும்.இக்கண்டத்தின் 54 நாடுகளில் மொத்தம் 80 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள நாடுகளின் பட்டியல் சூடான் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நாடும் சிஷெல்ஸ் மிகச்சிறிய நாடும் ஆகும். கிழக்கு ஆப்பிரிக்கா புருண்டி கென்யா ருவாண்டா மொசாம்பிக் தான்சானியா உகாண்டா ... மேற்கு ஆப்பிரிக்கா நைகர் செனகல் நைஜீரியா காம்பியா கானா ... வடக்கு ஆப்பிரிக்கா அல்ஜீரியா எகிப்து லிபியா மொராக்கோ சூடான் துனிசியா மேற்கு சகாரா ... மத்திய ஆப்பிரிக்கா அங்கோலா கேமரூன் மத்திய ஆப்பிரிக்க குடியரசு காங்கோ ... தெற்கு ஆப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா ஜிம்பாப்வே ஜாம்பியா நமீபியா அங்கோலா மொசாம்பிக் .... பிரதேசத்தின் பெயர்[1] பரப்பளவு (km²) மக்கள் தொகை (1 ஜூலை 2002 மதிப்பீடு) மக்கள்தொகை அடர்த்தி (per km²) தலைநகரம் கிழக்கு ஆபிரிக்கா: புருண்டி 27,830 6,373,002 229.0 புஜும்புரா கமோரோஸ் 2,170 614,382 283.1 மொரோனி ஜிபுட்டி 23,000 472,810 20.6 ஜிபுட்டி நகரம் எரித்ரியா 121,320 4,465,651 36.8 அஸ்மாரா எத்தியோப்பியா 1,127,127 67,673,031 60.0 அடிஸ் அபாபா கென்யா 582,650 31,138,735 53.4 நைரோபி மலகாசி 587,040 16,473,477 28.1 அண்டனானரீவோ மலாவி 118,480 10,701,824 90.3 லிலொங்வே மொரீஷியஸ் 2,040 1,200,206 588.3 லூயி துறை மயோட்டே (பிரான்ஸ்) 374 170,879 456.9 மமுட்சு மொசாம்பிக் 801,590 19,607,519 24.5 மபூட்டோ ரீயூனியன் (பிரான்ஸ்) 2,512 743,981 296.2 தூய-தெனி ருவாண்டா 26,338 7,398,074 280.9 கிகாலி சிஷெல்ஸ் 455 80,098 176.0 விக்டோரியா சோமாலியா 637,657 7,753,310 12.2 மொகடீசு தான்சானியா 945,087 37,187,939 39.3 டொடோமா உகான்டா 236,040 24,699,073 104.6 கம்பாலா ஜாம்பியா 752,614 9,959,037 13.2 லுசாக்கா ஜிம்பாப்வே 390,580 11,376,676 29.1 அராரே மத்திய ஆப்பிரிக்கா: அங்கோலா 1,246,700 10,593,171 8.5 லுவான்டா காமரூன் 475,440 16,184,748 34.0 யாவுண்டே மத்திய ஆப்பிரிக்க குடியரசு 622,984 3,642,739 5.8 பங்கி சாட் 1,284,000 8,997,237 7.0 ந்ஜமேனா காங்கோ 342,000 2,958,448 8.7 பிரஸ்ஸவீல் காங்கோ மக்களாட்சி குடியரசு 2,345,410 55,225,478 23.5 கின்ஷாஷா புவி நடுக்கோட்டு கினி 28,051 498,144 17.8 மலாபோ கேபொன் 267,667 1,233,353 4.6 லிப்ரவில் சாவோ தோமே பிரின்சிபே 1,001 170,372 170.2 சாவோ தோம் வடக்கு ஆப்பிரிக்கா: அல்ஜீரியா 2,381,740 32,277,942 13.6 அல்ஜியர்ஸ் எகிப்து[2] 1,001,450 70,712,345 70.6 கெய்ரோ லிபியா 1,759,540 5,368,585 3.1 திரிப்பொலி மொராக்கோ 446,550 31,167,783 69.8 ரெபாட் சூடான் 2,505,810 37,090,298 14.8 கார்ட்டூம் துனீசியா 163,610 9,815,644 60.0 துனிஸ் மேற்கு சகாரா[3] 266,000 256,177 1.0 அல்-உயூன் European dependencies in Northern Africa: கேனரி தீவுகள் (ஸ்பெயின்)[4] 7,492 1,694,477 226.2 சான்டா குரூசு தெ டெனிரீஃபே, லாசு பல்மாசு சியூடா (ஸ்பெயின்)[5] 20 71,505 3,575.2 — மதீரா (போர்த்துக்கல்)[6] 797 245,000 307.4 பஞ்ச்சல் மெலில்லா (ஸ்பெயின்)[7] 12 66,411 5,534.2 — தெற்கு ஆபிரிக்கா: போட்ஸ்வானா 600,370 1,591,232 2.7 காபரோனி லெசோத்தோ 30,355 2,207,954 72.7 மசெரு நமீபியா 825,418 1,820,916 2.2 விந்தோக் தென்னாப்பிரிக்கா 1,219,912 43,647,658 35.8 புளும்பொன்டின், கேப் டவுன், பிரிட்டோரியா[8] சுவாசிலாந்து 17,363 1,123,605 64.7 ம்பாபேன் மேற்கு ஆபிரிக்கா: பெனின் 112,620 6,787,625 60.3 நோவோ துறை புர்கினா ஃபாசோ 274,200 12,603,185 46.0 உகாதுகு வெர்து முனை 4,033 408,760 101.4 பிரைய்யா தந்தக்கரை 322,460 16,804,784 52.1 அபிஜான், யாமூசூக்ரோ[9] காம்பியா 11,300 1,455,842 128.8 பன்ஜுல் கானா 239,460 20,244,154 84.5 அக்ரா கினி 245,857 7,775,065 31.6 கொனாக்ரி கினி-பிசாவு 36,120 1,345,479 37.3 பிசாவு லைபீரியா 111,370 3,288,198 29.5 மொன்ரோவியா மாலி 1,240,000 11,340,480 9.1 பமாக்கோ மௌரித்தானியா 1,030,700 2,828,858 2.7 நவாக்சோட் நைஜர் 1,267,000 10,639,744 8.4 நியாமி நைஜீரியா 923,768 129,934,911 140.7 அபூஜா செயிண்ட். எலனா (ஐக்கிய இராச்சியம்) 410 7,317 17.8 Jamestown செனகல் 196,190 10,589,571 54.0 டக்கார் சியெரா லியொன் 71,740 5,614,743 78.3 ஃப்ரீடௌன் டோகோ 56,785 5,285,501 93.1 லோமே மொத்தம் 30,368,609 843,705,143 27.8 ஆதாரங்கள் இவற்றையும் பார்க்கவும் ஆபிரிக்க ஒன்றியம் வெளி இணைப்புகள் * பகுப்பு:கண்டங்கள்
ஆப்பிரிக்கா கண்டத்தின் மிகப்பெரிய நாடு எது?
சூடான்
214
tamil
5b2a3e80b
கணிதத்தில் சார்பு (function[1]) என்பது ஒரு கணத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் மற்றொரு கணத்திலுள்ள ஒரேயொரு உறுப்போடு இணைக்கும் ஒரு தொடர்பாகும். முதல் கணம் சார்பின் ஆட்களம் என்றும் இரண்டாவது கணம் சார்பின் இணையாட்களம் என்றும் அழைக்கப்படும். ஆட்களத்தின் உறுப்புகள் உள்ளீடுகள் எனவும் இவ்வுள்ளீடுகளோடு இணைக்கப்படும் இணை ஆட்களத்திலுள்ள உறுப்புகள் வெளியீடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. அனைத்து வெளியீடுகளைக் கொண்ட கணம் சார்பின் வீச்சு அல்லது எதிருரு எனப்படும். பொதுவாக சார்பு f என்ற குறிகொண்டு குறிக்கப்படும். சார்பைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான function என்பதின் முதல் எழுத்தே இக்குறி. சார்புகளுக்கு ஒரு எளிய எடுத்துக்காட்டு: f(x) = x2 இத்தொடர்பின்படி, ஒவ்வொரு உள்ளீடு x -ம் அதன் வர்க்கத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது. உள்ளீடு x -ன் f -ஐப் பொறுத்த வெளியீடு f(x) (வாசித்தல்: "f of x") உள்ளீடு –3 எனில், அதற்குரிய வெளியீடு 9. அதாவது f(–3) = 9. ஒரு சார்பின் உள்ளீடு சார்பின்மாறி (argument) என்றும் அந்த உள்ளீட்டிற்குரிய வெளியீடு சார்பின் மதிப்பு எனவும் அழைக்கப்படும். ஒரு சார்பின் உள்ளீடுகளும் வெளியீடுகளும் எப்பொழுதும் எண்களாகவே இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அவை எந்தவொரு கணங்களின் உறுப்புகளாகவும் அமையலாம். எடுத்துக்காட்டாக, வடிவவியல் வடிவங்களின் பக்கங்களின் எண்ணிக்கை என்ற சார்பு ஒரு முக்கோணத்தை எண் மூன்றுடனும் சதுரத்தை எண் நான்குடனும், .... தொடர்புபடுத்தும். ஒரு சார்பினைப் பலவிதங்களில் குறிக்கலாம்: சார்புகளை வாய்ப்பாடு அல்லது விதி மூலமாகக் குறிக்கலாம். அவ்வாய்ப்பாடு தரப்பட்ட உள்ளீடிற்குரிய வெளியீட்டைக் கணிப்பது எவ்வாறு என்பதை விளக்கும். சார்புகளை வரைபடங்கள் மூலமாகக் குறிக்கலாம். அறிவியலில் சில சார்புகள் அட்டவணை வடிவில் தரப்படுகின்றன. ஒரு சார்பினைப் பிற சார்புகளுடன் அதுகொண்ட தொடர்புகள் மூலமாகக் குறிக்கலாம். எடுத்துக்காட்டு: நேர்மாறுச் சார்பு, ஒரு வகையீட்டுச் சார்பின் தீர்வு. எண்கணித்தின் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் செயல்களைச் சார்புகளாக வரையறுக்கலாம். சார்புகளில் வரையறுக்கப்படும் மற்றொரு முக்கியமான செயல் சார்புகளின் தொகுப்பு. இச்செயலில் ஒரு சார்பின் வெளியீடு மற்றொரு சார்பின் உள்ளீடாக அமையும். ஒரு சார்பின் உள்ளீடும் அதற்குரிய வெளியீடும் ஒரு வரிசைச் சோடியாக குறிக்கப்படலாம். எடுத்துக்காட்டாக மேலே தரப்பட்ட எடுத்துக்காட்டில் உள்ள வரிசைச் சோடிகள்: &lt;x, x2&gt; (&lt;–3, 9&gt;). இந்த வரிசைச் சோடிகளைக் கார்ட்டீசியன் தளத்தில் வரையப்பட்ட சார்பின் வரைபடத்தின் மீதமைந்த ஒரு புள்ளிகளின் அச்சுத்தூரங்களாகக் கருதலாம். சம ஆட்களமும் சம இணை ஆட்களங்களும் கொண்ட அனைத்து சார்புகளும் கொண்ட கணம் சார்பு வெளி எனப்படும். சார்பு வெளியின் பண்புகளைப் பற்றி மெய்ப் பகுப்பியலிலும் மெய்ப்புனைப் பகுப்பியலிலும் அலசப்படுகிறது. உள்ளுணர்வான விளக்கம் சார்புகள் பொதுவாக ஒரு உள்ளீட்டை எடுத்துக்கொண்டு அதனை வெளியீடாக மாற்றும் ஒரு இயந்திரத்தைப் போன்றதாகக் கருதப்படுகிறது. பெரும்பாலும் உள்ளீடுகள் x அல்லது t (உள்ளீடுகள் நேரமாக இருந்தால்) எனக் குறிக்கப்படுகின்றன. வெளியீடுகள் y எனக் குறிக்கப்படுகின்றன. சார்பு, f எனக் குறிக்கப்படுகிறது. y = f(x) என்ற குறியீடு, f என்ற சார்பு x என்ற உள்ளீட்டையும் y என்ற வெளியீட்டையும் கொண்டுள்ளது என்பதைக் கூறுகிறது. y=f(x) -ல், y சார் மாறியாகும், x சாரா மாறியாகும். அடிக்கடிப் பயன்படுத்தப்படும் சார்புகளுக்குச் சிறப்புப் பெயர்கள் அளிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக: ஒரு மெய்யெண் x -ன் சிக்னம் சார்பு பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது: sgn ⁡ ( x ) = { − 1 if  x &lt; 0 , 0 if  x = 0 , 1 if  x &gt; 0. {\displaystyle \operatorname {sgn}(x)={\begin{cases}-1&amp;{\text{if }}x&lt;0,\\0&amp;{\text{if }}x=0,\\1&amp;{\text{if }}x&gt;0.\end{cases}}} ஒரு சார்பின் அனுமதிக்கப்பட்ட உள்ளீடுகளின் கணம் சார்பின் ஆட்களம் எனவும் கிடைக்கக் கூடிய வெளியீடுகளின் கணம் சார்பின் வீச்சு அல்லது சார்பின் எதிருரு எனவும் அழைக்கப்படும். வீச்சை உட்கணமாகக் கொண்ட கணம் சார்பின் இணையாட்களம் எனவும் அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, f(x) = x2 சார்பின் ஆட்களம் மெய்யெண்கள் கணம் எனில் அதன் வீச்சகம் எதிரிலா மெய்யெண்களின் கணமாகவும் இணையாட்களம் மெய்யெண்களின் கணமாகவும் அமையும். இச்சார்பு f -ஐ மெய்யெண்கள் மீதான மெய்மதிப்புச் சார்பு எனப்படும். ஆட்களம் மற்றும் இணையாட்களத்தைக் குறிப்பிடாமல் ஒரு "f ஒரு சார்பு" என்று மட்டும் சொன்னால் போதாது. f ( x ) = x 2 − 5 x + 6 {\displaystyle f(x)={\sqrt {x^{2}-5x+6}}} என்ற வாய்ப்பாடு முறையாக வரையறுக்கப்பட்ட சார்பு அல்ல. இதன் ஆட்களத்தை மெய்யெண் கணம் R -ன் உட்கணம், x≤2 அல்லது x≥3 ஆகவும் இணை ஆட்களத்தை R ஆகவும் எடுத்துக்கொண்டால்தான் இது ஒரு சார்பாக அமையும்.[2] வெவ்வேறு வாய்ப்பாடுகள் ஒரே சார்பைக் குறிக்கலாம். எடுத்துக்காட்டாக f(x) = (x + 1) (x − 1) மற்றும் f(x) = x2 − 1 இரண்டும் ஒரே சார்பையே குறிக்கின்றன.[3] மேலும் ஒரு சார்பானது வாய்ப்பாட்டினால் மட்டுமே குறிக்கப்பட வேண்டியதோ அல்லது எண்கள் சம்பந்தப்பட்டதாக மட்டுமே அமைய வேண்டும் என்பதோ இல்லை. சார்புகளின் ஆட்களங்களும் இணையாட்களங்களும் எந்தவொரு கணமாகவும் இருக்கலாம். உள்ளீடுகளாக தமிழ் வார்த்தைகளையும் வெளியீடுகளாக அவற்றின் முதலெழுத்துக்களையும் கொண்ட சார்பை இதற்கு எடுத்துக்காட்டாகக் காட்டலாம். சாதாரணமாகப் பார்த்தால், ஒரு சார்பை X கணத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பு x -உடனும் Y கணத்திலுள்ள ஒரேயொரு உறுப்பு y -ஐ இணைக்கும் ஒரு விதி எனலாம்.[4][5][6] ஆயினும் சார்பை ஒரு விதியாகக் கருதுவது அவ்வளவு துல்லியமானதல்ல.[7] விதி அல்லது இணைப்பது என்ற சொற்கள் ஏற்கனவே வரையறுக்கப்படாமல் இருப்பதே இம்முறையில் ஒரு சார்பை வரையறுப்பதில் உள்ள குறைபாடு. இவ்வகையான சார்பின் விளக்கம் சாதாரணமாகப் பார்க்கும் போது பொருத்தமாகத் தோன்றினாலும் தருக்கரீதியாக நுட்பமானதல்ல.[8] பல புத்தகங்களில், குறிப்பாகப் பாடப்புத்தகங்களில் இம்முறைசாரா வரையறை பயன்படுத்தப்பட்டாலும் உள்ளீடுகளும் வெளியீடுகளும் எப்படியும் வரிசைப்படுத்தப்பட்ட சோடிகளாக அமைகின்றன என்பது கவனிக்கத் தக்கது.[9][10]. ஒரு சார்பினை பின்வரும் பண்புகள் கொண்டவரிசைச்சோடிகளாலான தொகுப்பாக விவரிக்கலாம்: (a, b) மற்றும் (a, c) இரண்டும் அத்தொகுப்பில் இருந்தால், b=c. அதாவது சோடிகளின் தொகுப்பில் ஒரே முதல் உறுப்பைக் கொண்ட இரண்டு வெவ்வேறான சோடிகள் இருக்காது. x என்ற உறுப்பு, சார்பு f -ன் ஆட்களத்தில் இருந்தால் (x, y) என்ற வரிசைச் சோடி f -ல் உள்ளவாறு ஒரு தனித்த y ஒன்று இருக்கும். இந்த தனித்த y, f(x) எனக் குறிக்கப்படுகிறது.[11] முறையான வரையறை . தரப்பட்ட இரு கணங்கள் X மற்றும் Y என்க. X கணத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பு x -க்கும் Y கணத்தில் அமையும் தனித்ததொரு உறுப்பு y இரண்டையும் கொண்ட வரிசைச் சோடிகள் (x, y) அனைத்தையும் உறுப்புகளாகக் கொண்ட கணம் F</i>ஆனது, X லிருந்து Y -க்கு வரையறுக்கப்பட்ட ஒரு சார்பாகும்.[12] எடுத்துக்காட்டாக, (x, x2), (x ஒரு மெய்யெண்) என்ற வரிசைச் சோடிகளின் கணம் மெய்யெண்கணத்திலிருந்து மெய்யெண்கணத்திற்கு வரையறுக்கப்பட்ட ஒரு சார்பாகும். மெய்யெண்கணத்திலிருந்து மெய்யெண்கணத்திற்கு வரையறுக்கப்படும் வர்க்கப்படுத்தும் சார்பும், மெய்யெண்கணத்திலிருந்து எதிரில்லா மெய்யெண்கணத்திற்கு வரையறுக்கப்படும் வர்க்கப்படுத்தும் சார்பும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறானவை. இவ்வகையாக சார்புகளை வரையறுப்பதில் இரு வெவ்வேறான விதங்கள் உள்ளன. ஆட்களமும் இணையாட்களமும் வெளிப்படையாக அல்லது மறைமுகமாக குறிக்கப்படலாம். முதல் வகை வரையறை: இதில் சார்பின் வரையறையில் வரிசைப்படுத்தப்பட்ட மூன்று உறுப்புகள் உள்ளன: (X, Y, F) X -ஆட்களம்; Y -துணை ஆட்களம்; F - (x, y) வரிசைச்சோடிகளின் கணம்.[13] ஒவ்வொரு வரிசைச் சோடியிலும் முதல் உறுப்பு ஆட்களத்திலும் இரண்டாவது உறுப்பு இணையாட்களத்திலும் அமையும். மேலும் ஆட்களத்தின் ஒவ்வொரு உறுப்பும் ஒரேயொரு வரிசைச்சோடியின் முதல் உறுப்பாக இருத்தல் வேண்டும் என்பது ஒரு தேவையான கட்டுப்பாடாகவும் இருக்கும். இரண்டாம் வகை வரையறை: இவ்வகையில் வரிசைப்படுத்தப்பட்ட சோடிகளைக் கொண்ட கணமாக சார்பு வரையறுக்கப்படுகிறது. இவ்வரிசைச் சோடிகளில் முதல் உறுப்பாக அமைவது ஒரேயொரு வரிசைச் சோடியில் மட்டுமே வரலாம். வரிசைச் சோடிகளின் முதல் உறுப்புகளாலான கணம் சார்பின் ஆட்களம். இரண்டாவது உறுப்புகளாலான கணம் சார்பின் எதிருரு அல்லது வீச்சு. இணையாட்களத்தைப் பற்றி எந்த விவரமும் தரப்படவில்லை.[14] [15] தொடர்பு: சார்புகளை தொடர்புகளின் ஒரு வகைப்பாடாகவும் கொள்ளலாம்: X லிருந்து Y கணத்திற்கு வரையறுக்கப்படும் தொடர்பு என்பது (x, y) வரிசைச் சோடிகளைக் கொண்ட கணம். இவ்வரிசைச் சோடிகளில், x ∈ X {\displaystyle x\in X} மற்றும் y ∈ Y {\displaystyle y\in Y} . இடது-முழுமை மற்றும் வலது-தனித்த என அமையும் சிறப்புத் தொடர்பாக ஒரு சார்பைக் கருதலாம். X மற்றும் Y கணங்கள் குறிப்பிடப்படாமல் இருந்தால் சார்புகளைத் தொடர்பின் ஒரு வகையாகக் கருதுவது இயலாது. f: X → Y என்ற குறியீடு X -ஐ ஆட்களமாகவும் Y -ஐ இணையாட்களமாகவும் கொண்ட சார்பு f என்பதைக் குறிக்கிறது. அனைத்து y -களால் அமைந்த கணம் சார்பின் எதிருரு அல்லது வீச்சு எனப்படும். வீச்சு எல்லா சார்புகளிலும் அவற்றின் இணையாட்களத்திற்குச் சமமாக இருக்க வேண்டியதில்லை. சார்பின் உள்ளீடு சார்பின் மாறி எனவும் அந்த உள்ளீட்டிற்குரிய வெளியீடு சார்பின் மதிப்பு அல்லது அவ்வுள்ளீட்டின் எதிருரு எனவும் அழைக்கப்படும். ஆட்களத்தில் உள்ள ஒரு உறுப்பு x எனில் அதனோடு இணைக்கப்படும் இணையாட்களத்தின் தனித்த உறுப்பு y என்பது x -ன் எதிருரு அல்லது, x -ன் சார்பு மதிப்பு எனப்படும். ƒ -ன் கீழ் இணைக்கப்படும் x -ன் எதிருரு ƒ(x) எனக் குறிக்கப்படும். ஒரு சார்பின் வரைபடம் என்பது அச்சார்பின் வரிசைச் சோடிகளை ஆள்கூறுகளாகக் கொண்ட புள்ளிகளைக் கார்ட்டீசியன் தளத்தில் குறிப்பதால் கிடைக்கும் வரைபடமாகும். ஆட்களம் X வெற்றுக்கணமாக இருக்கலாம். X=∅ எனில் F=∅. இணையாட்களம் Y=∅ எனில் X=∅ மற்றும் F=∅. இத்தைகைய வெற்றுச்சார்புகள் பொதுவாக காணப்படுவதில்லை என்றாலும் கொள்கையளவில் அவை உள்ளதாகக் எடுத்துக்கொள்ளப்படுன்றன. குறியீடு ஒரு சார்பின் முறையான விளக்கமானது அச்சார்பின் பெயர், ஆட்களம், இணையாட்களம் மற்றும் இணைக்கும் விதி ஆகியவற்றைக் கொண்டிருக்கும். கீழே தரப்பட்டுள்ள குறியீடு இரு பகுதிகளைக் கொண்டுள்ளது: f : N → R n ↦ n π {\displaystyle {\begin{aligned}f\colon \mathbf {N} &amp;\to \mathbf {R} \\n&amp;\mapsto {\frac {n}{\pi }}\end{aligned}}} முதல் பகுதி, "ƒ என்பது N லிருந்து R -க்கு வரையறுக்கப்பட்ட ஒரு சார்பு" என்பதையும் இரண்டாவது பகுதி, " n , {\displaystyle n,\,} n π . {\displaystyle {\frac {n}{\pi }}.\,\!} -உடன் இணைக்கப்படுகிறது" என்பதையும் குறிக்கின்றன. இச்சார்பின் ஆட்களம் இயல் எண் கணம், இணையாட்களம் மெய்யெண்கணம். இச்சார்பு n -ஐ அதனை π -ஆல் வகுக்கப்பட்ட கணியத்துடன் இணைக்கிறது. இதனைச் சுருக்கமாக: f ( n ) = n π , {\displaystyle f(n)={\frac {n}{\pi }},\,\!} என எழுதலாம். f(n), "f ஆஃப் (of) n" என வாசிக்கப்படுகிறது. ஆனால் இவ்வாறு சுருக்கமாக எழுதும்போது ஆட்களமும்(N) இணையாட்களமும் (R) வெளிப்படையாகக் குறிக்கப்படுவதில்லை. சார்பின் வகைகள் உள்ளிடு சார்பு முழுச் சார்பு இருவழிச் சார்பு பல மாறிச் சார்பு இரு சார்புகளின் தொகுப்பு சார்பு முற்றொருமைச் சார்பு நேர்மாறுச் சார்பு சார்பு வெளிகள் X கணத்திலிருந்து Y கணத்திற்கு வரையறுக்கப்பட்ட அனைத்து சார்புகளையும் கொண்ட கணம் சார்பு வெளி எனப்படுகிறது. இதன் குறியீடு: [X → Y], அல்லது YX. ஆட்களத்தின் அளவை எண் |X|; இணை ஆட்களத்தின் அளவை எண் |Y| இவை இரண்டும் முடிவுறு எண்கள் எனில், X லிருந்து Y -க்கு வரையறுக்கப்படும் சார்புகளின் எண்ணிக்கை: |YX| = |Y||X|. |X| முடிவுறா எண்ணாகவும் Y கணம் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளோடும் இருந்தால், X லிருந்து Y -க்கு வரையறுக்கப்படும் சார்புகள் எண்ணுறா அளவிலானவை. எனினும் அவற்றில் எண்ணக்கூடிய அளவிலான சார்புகள் மட்டுமே ஒரு வாய்ப்பாடாக எழுதக் கூடியவையாக இருக்கும். சார்பு, ƒ: X → Y எனில் ƒ ∈ [X → Y] என்பது தெளிவு. மேற்கோள்கள் இவற்றையும் பார்க்கவும் ஆட்களம் வீச்சகம் இணையாட்களம் வெளி இணைப்புகள் gives formulae and visualizations of many mathematical functions. , interactive Java applet for graphing and exploring functions. , a Java applet for exploring functions graphically. , online drawing program for mathematical functions. from cut-the-knot. . . பகுப்பு:சார்புகளும் கோப்புகளும் பகுப்பு:கணக் கோட்பாடு பகுப்பு:அடிப்படைக் கணிதம்
கணிதத்தில் சார்பு இரண்டாவது கணம் எவ்வாறு அழைக்கப்படும்?
இணையாட்களம்
200
tamil
021fcb4f4
உலக வணிக அமைப்பு (WTO ) என்பது ஒரு சர்வதேச நிறுவனமாகும், சர்வதேச மூலதன வணிகத்தினைத் தாராளமயமாக்கி அதை மேற்பார்வையிடும் நோக்குடன் இந்த அமைப்பு நிறுவப்பட்டது. 1947 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்த ஜிஏடிடி என்ற (General Agreements on Tariffs and Trade (GATT)) வணிகம் மற்றும் கட்டண விகிதத்திற்கான பொது உடன்பாட்டு அமைப்பிற்குப் பதிலாக ஜனவரி 1, 1995 ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பு அதிகாரபூர்வமாக, மர்ரகேஷ் ஒப்பந்தத்தின்கீழ் செயல்படத் துவங்கியது. உலக வணிக அமைப்பானது அதில் பங்குபெறும் நாடுகளிடையே நிலவும் வணிகத்தை ஒழுங்குமுறைப்படுத்துகிறது; பேச்சுவார்த்தைகள் மூலம் வணிக உடன்பாடுகள் செய்து முடிவு காண்பதற்கு ஒரு நிலையான கட்டமைப்பை அது வழங்குகிறது. இந்த அமைப்பு இரு நாடுகளுக்கிடையே எழும் தகராறுகளுக்கு, உலக வணிக அமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் சுமுகமான தீர்வுகாண வழிவகுக்கிறது, இந்த ஒப்பந்தங்களைப் பங்கு பெறும் நாடுகளின் அரசைச் சார்ந்த பிரதிநிதிகள் கையொப்பமிட்டு, அவற்றை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஏற்புறுதி செய்ய வேண்டும்.[4][5] இது வரையில் உலக வணிக அமைப்பின் (WTO) கவனத்தை ஈர்த்த மிகையான விவகாரங்கள் இதற்கு முனனால் நடந்த முடிவுறாத வணிகப் பேச்சு வார்த்தைகளாகும், அவற்றிலும் குறிப்பாக உருகுவே சுற்றை (1986-1994) சார்ந்தவையாகும். இந்த அமைப்பானது, தற்போது 2001 ஆம் ஆண்டில் துவங்கிய தோகா மேம்பாட்டுக் கூட்டப்பொருள் (அல்லது தோகா சுற்று) என்ற வணிகமுறைப் பேச்சுவார்த்தைகளில் எடுத்த முடிவுகளைச் செயல்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இது உலக மக்கள் தொகையில் மிகுதியாக உள்ள நலிந்த நாடுகளின் பங்கேற்பினைச் செழுமைப்படுத்திச் சம நிலையில் வாதம்புரிந்து பங்கேற்பதற்கான பெரும் முயற்சியாகும். இருந்தாலும், "வேளாண் பொருட்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகள் மற்றும் எண்ணற்ற ஏழ்மையில் வாடும் குடியானவர்கள் கொண்ட நாடுகளிடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகளில், அதிகமாக இறக்குமதி செய்யும் காலகட்டங்களில், ஏழைக்குடியானவர்களுக்குத் 'தனி பாதுகாப்பு கவசம்' அளிப்பது பற்றிய துல்லியமான செயல்பாட்டிற்கு ஒவ்வாமை இருப்பதனால் வாக்குவாதங்கள் நீண்டு கொண்டே போகின்றன. தற்போது, தோகா சுற்றின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது."[6] இப்போது உலக வணிக அமைப்பில் 153 உறுப்பினர்கள் உள்ளனர்,[7] இது உலக அளவிலான வணிகத்தின் மொத்த அளவின் 95% ஆகும்.[8] இந்த அமைப்பில் தற்பொழுது 30 பார்வையாளர்களும் உள்ளனர், அவர்களும் உறுப்பினர் ஆவதற்கு முனைந்து வருகின்றனர். இந்த உலக வணிக அமைப்பு, அதன் செயல்பாடுகளை, அலுவலகப்பணித் தொகுதி கூட்டங்களை அவ்வப்போது செயல்படுத்தி முறைப்படுத்தி வருகிறது. இரண்டாண்டுகளில் ஒருமுறை அவர்கள் கூடுவார்கள். இந்த அமைப்பின் உறுப்பினர்களின் ஒரு பொதுக்குழு, கூட்டத்தில் எடுத்த கொள்கை அளவிலான முடிவுகளை செயல்படுத்தி நிர்வாகத்திற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு தலைமை தாங்க, அலுவலகப்பணித் தொகுதி கூட்டத்தால் தெரிவு செய்த ஓர் உயரதிகாரி, நியமிக்கப்படுவார். உலக வணிக அமைப்பின் (WTO) தலைமைச் செயலகம் செண்டர் வில்லியம் ரப்பர்ட், ஜெனீவா, சுவிட்சர்லாந்தில் உள்ளது. வரலாறு உலக வணிக அமைப்பு மற்றும் ஜிஏடிடி 1947 இரண்டாவது உலகப் போர் நடந்த பிறகு சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த பலவகையான நிறுவனங்கள் - குறிப்பாக பிரெட்டன் வூட்டின் நிறுவனங்கள், உலக வங்கி மற்றும் அனைத்துலக நாணய நிதியம் போன்ற நிறுவனங்களுடன் உலக வணிக அமைப்பின் முன்னோடியான ஜேஏடிடி (GATT) என்ற அமைப்பை நிறுவியது. வணிகம் செய்வதற்காக, அதே அளவிற்கு ஒப்பிடக்கூடிய ஒரு நிறுவனத்தை, சர்வதேச வணிக அமைப்பு என்ற பெயரில், பேச்சுவார்த்தைகள் மூலம் வெற்றிகரமாக செயல்படுத்த முடிவானது. சர்வதேச வர்த்தக அமைப்பானது, ஐக்கிய நாடுகளின் (United Nations) தனிச்சிறப்பு பெற்ற அமைப்பாக, வியாபாரத்தில் ஏற்படும் தடைகளை நீக்குவதோடல்லாமல், வியாபாரத்துடன் மறைமுகமாக தொடர்புகொண்ட இதர பிரச்சினைகளான வேலைவாய்ப்பு, முதலீடுகள், குறுகிய நோட்டத்துடன் தொழில் செய்வது, பயன்படு பொருள்களுக்கான ஒப்பந்தங்கள் போன்றவைகளையும் மேற்பார்வையிட வல்லதாகும். ஆனால் இந்த சர்வதேச வர்த்தக அமைப்பிறகான ஒப்பந்தத்தை அமேரிக்கா மற்றும் சில இதர நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை, அதனால் அவை நிறைவேற்றப்படவில்லை.[9][10][11] வர்த்தகத்திற்கான ஒரு சர்வதேச அமைப்பு இல்லாது போனதால், ஜி ஏ டி டி (GATT) இன்னும் சில வருட நடைமுறையில் ஒரு சர்வதேச நிறுவனமாக 'தன்னைத் தானே' மாற்றியமைத்துக்கொள்ளும்.[12] ஜிஏடிடி (GATT) பேச்சுவார்த்தை சுற்றுகள் 1948 ஆண்டு தொடங்கி, 1995 ஆம் ஆண்டில் உலக வணிக அமைப்பு நிறுவியதுவரை, சர்வதேச வாணிபத்தை முறைப்படுத்திய ஒரே ஒரு பலதரப்பட்ட சாதனமாக ஜிஏடிடி (GATT) விளங்கியது.[13] 1950 மற்றும் 1960 ஆண்டுகளுக்கிடையில், சர்வதேச வர்த்தகத்திற்காக ஒரு விதமான நிறுவன இயக்கமுறையை செயல்படுத்த முயன்ற போதிலும், ஜிஏடிடி (GATT) தொடர்ந்து அரை நூற்றாண்டிற்கும் மேல், ஒரு தற்காலிக அடிப்படையில், ஒரு பலவகை ஒப்பந்த ஆட்சிபுரியும் பங்களவு நிறுவனமாக செயல்பட்டுவந்தது.[14] ஜெனீவாவில் இருந்து டோக்கியோ வரை ஜிஏடிடி (GATT) யின் கீழ் ஏழு சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. முதல் சுற்று ஜிஏடிடி (GATT) பேச்சு வார்த்தைகள் கட்டணங்களை மேலும் குறைப்பதை நோக்கமாக கொண்டது. அப்புறம், அறுபதுக்கிடையில் நடந்த கென்னடி சுற்றில் ஜிஏடிடி (GATT) கொட்டுதலுக்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்துடன் வணிக மேம்பாட்டிற்காக ஒரு பிரிவை நிறைவேற்றியது. எழுபதுகளில் நடந்த டோக்கியோ சுற்றுகளில் கட்டணங்கள் அல்லாத இதர வணிகத்தடைகளை நீக்குவதற்கும் செய்முறைகளை மேம்படுத்துவதற்கும் முதல் பெரிய முயற்சி நடைபெற்றது, தொடர்ச்சியாக கட்டணங்கள் அல்லாத தடைகள் நீக்கும் பல ஒப்பந்தங்கள் ஏற்றுக்கொண்டது, சில நிகழ்வுகளில் ஜிஏடிடி (GATT) யில் நிலவிய புழக்கத்தில் இருக்கும் முறைகளை ஏற்றுக்கொண்டது, மேலும் சில இதர நிகழ்வுகள் முற்றிலும் புதிய பிரிவுகளுக்கு வழிவகுத்தது. இவ்வகையான பலதரப்பு ஒப்பந்தங்களில் சில ஜிஏடிடி (GATT)யின் அனைத்து உறுப்பினர்களாலும் ஏற்றுக்கொள்ளப் படாததால், அவை அடிக்கடி இயல்பாக "குறிகள்" என வழங்கின. இவற்றில் பல குறிகள் உருகுவே சுற்றில் மாற்றியமைந்தன, மேலும் அவை அனைத்து உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள் ஒப்புக்கொண்ட பலவகையான நிற்பந்தங்களாக (கடமை / உத்தரவு) திரிந்தன. அவற்றில் நாலு மட்டுமே பலவகையானதாக எஞ்சியது (அரசு கொள்முதல் செய்வது, மாட்டிறைச்சி, குடியியல் வானூர்தி மற்றும் பால்பண்ணை சார்ந்த பொருட்கள்), ஆனால் 1997 ஆம் ஆண்டில் உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள் மாட்டிறைச்சி மற்றும் பால்பண்ணை சார்ந்த ஒப்பந்தங்களை நீக்க முடிவுசெய்தனர், அதனால் எஞ்சியது இரண்டு மட்டுமே.[13] உருகுவே சுற்று ஜிஏடிடி (GATT) யின் நாற்பதாவது ஆண்டுவிழாவிற்கு முன்னதாகவே, அதன் உறுப்பினர்கள் ஜிஏடிடி (GATT) யின் முறைகளால் புதிய உலகளவில் விரிந்துவரும் உலக பொருளாதாரத்துடன் தாக்குப்பிடித்து ஒத்துவர இயலவில்லை என்பதை உணர்ந்தனர்.[17][18] 1982 ஆம் ஆண்டில் அலுவலகப்பணித் தொகுதி கூட்ட சாற்றுரையில் அடையாளம் காட்டிய குறைகளை நிவர்த்தி செய்வதற்காக (அமைப்பிற்குரிய குறைபாடுகள், உலக வணிகத்தைப்பற்றிய சில நாடுகளின் கொள்கைகளால் ஏற்பட்ட நிரம்பி வழிந்த தாக்கங்களால் ஏற்பட்ட நிலைகுலைவு ஜிஏடிடி (GATT) யால் நிர்வாகம் செய்ய இயலாமல் போனது போன்றவை), எட்டாவது ஜிஏடிடி (GATT) சுற்று, உருகுவே சுற்று என்று அறியப்படுவது- உருகுவேயில் உள்ள புண்டா டெல் ஈஸ்டேயில் 1986 செப்டம்பரில் துவங்கியது.[17] இதுவரை எங்கும் நடைபெறாத வணிகம் சார்ந்த மற்றும் ஒப்புமை கொண்ட மிகப்பெரிய உரிமைக்கட்டளை அதுவேயாகும்: பேச்சுவார்த்தைகள் வணிக முறைகளையும் தாண்டியது மற்றும் பல புதிய துறைகளை சீண்டியது, குறிப்பாக சேவைகள் புரிவதற்கான வணிகம் மற்றும் அறிவுத்திறனுடையார் சொத்துடமை, மேலும் வேளாண் மற்றும் நெசவுத்தொழில் போன்ற உணர்ச்சிவசப்படக்கூடிய துறைகளில் வணிக செய்முறைகளில் சீர்திருத்தங்கள்; அனைத்து அசல் ஜிஏடிடியின் உடன்பாடு விதிகள் திரும்பவும் பரிசீலிக்கப்பெற்றது..[18] ஏப்ரல், 1994 ஆம் ஆண்டில் நடந்த அலுவலகப்பணித் தொகுதி கூட்டம், மோரோகொவில் உள்ள மர்ரகேஷில் நடைபெற்றது, அத்துடன் உருகுவே சுற்றின் பேச்சுவார்த்தைகள் முடிவுற்று அதிகார பூர்வமாக உலக வணிக அமைப்பின் ஆட்சியை நிறுவியதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது, அதனால் இது மர்ரகேஷ் ஒப்பந்தம் என அறியப்படுகிறது.[19] ஜிஏடிடி (GATT) இன்றும் உலக வணிக அமைப்பின் பொருட்களுக்கான வணிகத்தின் குடை ஒப்பந்தமாக இருந்துவருகிறது, உருகுவே சுற்று பேச்சுவார்த்தைகளின் காரணமாக அவை நிகழ்நிலைப்பட்டுள்ளன.(ஆவணங்களான ஜிஏடிடி (GATT) 1994, நிகழ்நிலை ஜிஏடிடி (GATT) பாகங்கள், மற்றும் GATT 1947, வேறுபடுத்திய பின்னர் அசலான GATT 1947 ஒப்பந்தக்குறிப்பு, இன்னும் GATT 1994 இன் இதயமாக திகழ்கிறது).[17] ஜிஏடிடி 1994 (GATT) ஒப்பந்தம் கூடாமல் மற்றும் மர்ரகேஷ் இறுதி கூட்டத்தில் இதர ஒப்பந்தங்களும் சட்ட ரீதியாக அனுமதி பெற்றுள்ளன; 60 ஒப்பந்தங்கள், இணைப்புகள், முடிவுகள், மற்றும் ஏற்றுக்கொண்டவை போன்ற நீண்ட பட்டியலில் அவை பதிவாகியுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் ஆறு முதன்மை பாகங்களுடன் கூடிய அமைப்பாக கட்டமைத்துள்ளது: உலக வணிக அமைப்பை நிறுவுவதற்கான ஒப்பந்தம் சரக்கு மற்றும் முதலீடு — சரக்குகளில் வணிகம் செய்வதற்கான பலவகை ஒப்பந்தங்கள், அவற்றில் ஜிஏடிடி 1994 (GATT) 1994 மற்றும் வணிகம் சார்ந்த முதலீட்டு நடவடிக்கைகள் அடங்கும் சேவைகள் புரிதல் — சேவைகள் புரிவதற்கான பொது ஒப்பந்தம் அறிவுத்திறனுடையார் சொத்துடமை — அறிவுத்திறனுடையார் சொத்துடமை உரிமைக்கான வணிகம் சார்ந்த பாங்குகளுக்கான ஒப்பந்தம் (ட்ரிப்ஸ்) (TRIPS) தகராறுகளுக்கான தீர்வு (DSU) அரசின் வணிக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல் (TPRM)[20] அலுவலகப்பணித் தொகுதி கூட்டங்கள் முதல் அலுவலகப்பணித் தொகுதி கூட்டம் தொடக்க விழா அலுவலகப்பணித் தொகுதி கூட்டம் சிங்கப்பூரில் 1994 ஆண்டில் நடந்தது. இந்த கூட்டத்தில், முதல் முறையாக விவாதத்திற்கு கொண்டுவந்த நான்கு விவகாரங்களில், மிகையாக மேம்பாடடைந்த நாடுகள் மற்றும் மேம்பாடடைந்த மற்றும் மேம்பட்டு வரும் பொருளாதாரங்களில் கருத்து வேறுபாடுகள் எழுந்தன, அதன் காரணமாக அவை நான்கையும் சுட்டிக்காட்டும் வகையில் அவற்றை "சிங்கப்பூர் விவகாரங்கள்" என அழைத்தனர். இரண்டாவது அலுவலகப்பணித் தொகுதி கூட்டம் இக்கூட்டம் ஜெனீவா சுவிட்சர்லாந்தில் நடந்தேறியது. மூன்றாவது அலுவலகப்பணித் தொகுதி கூட்டம் சீயாட்டில், வாஷிங்டனில் நடந்த மூன்றாவது கூட்டம் தோல்வியில் முடிவுற்றது, பெரிய அளவில் மக்கள் கூட்டம் ஆர்ப்பாட்டம் செய்தார்கள் மேலும் காவல் துறையினர் மற்றும் தேசீய பாதுகாவலர்களுடைய மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் முறை உலகளவில் சர்ச்சைக்குள்ளாயிற்று. நான்காவது அலுவலகப்பணித் தொகுதி கூட்டம் இது பாரசீக வளைகுடாவில் உள்ள நாடான கட்டாரில் உள்ள தோஹவில் நடைபெற்றது தொஹ மேம்பாட்டு சுற்று இந்த கூட்டத்தில் தொடங்கியது. இந்தக்கூட்டத்தில் சீனா உறுப்பினராக சேர்வதையும் அனுமதித்தது, அந்நாடு 143 ஆவது உறுப்பினர் நாடாகும். ஐந்தாவது அலுவலகப்பணித் தொகுதி கூட்டம் z இந்த அலுவலகப்பணித் தொகுதி கூட்டம் கான்கன் , மெக்ஸிகோ வில் நடைபெற்றது, தொஹ சுற்று ஒப்பந்தத்தை நிறைவேற்றும் நோக்குடன் அது நடந்தது. 22 தெற்கு நாடுகள் கொண்ட ஒரு கூட்டு, G20 மேம்பாடடையும் நாடுகள், இந்தியா, சீனா [21] மற்றும் பிரேசில் போன்ற நாடுகளின் தலைமையில், வடக்கு நாடுகளுடைய சிங்கப்பூர் விவகாரங்கள் குறித்த கோரிக்கைகளை ஏற்க மறுத்தனர் மேலும் அவர்கள் வேளாண் தொழிலுக்கு ஐக்கிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க நாடுகள் அளித்துவரும் மானியத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பேச்சு வார்த்தைகள் அத்துடன் முறிந்தன மேலும் அவை முன்னேறவில்லை. ஆறாவது அலுவலகப் பணித் தொகுதி கூட்டம் ஆறாவது உலக வணிக அமைப்பு சார்ந்த அலுவலகப்பணித் தொகுதி கூட்டம் ஹாங் காங் இல் 13 டிசம்பர் முதல் 18 டிசம்பர், 1995 வரை நடந்தது. நான்கு ஆண்டுகள் பழமையான தோஹ மேம்பாட்டு நிகழ்ச்சி நிரல் பேச்சுவார்த்தைகளுக்கு தீர்வு காண்பதை முக்கியமாகவும் மற்றும் அந்த சுற்றை 2006 ஆம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்ற நோக்குடனும் நடந்தது. இந்த கூட்டத்தில், நாடுகள் வேளாண் ஏற்றுமதி தொழிலுக்கு வழங்கிவரும் மானியத்தை படிப்படியாக 2013 ஆண்டின் முடிவுக்குள்ளும் மேலும் பஞ்சு ஏற்றுமதிக்கான மானியத்தை 2006 ஆண்டுக்குள்ளும் முடிவுக்கு கொண்டுவர இசைந்தனர். மேம்பாடு அடைந்து வரும் நாடுகளுக்கு அளித்த இதர சலுகைகளில் வரியில்லாத, கட்டணமில்லாத சரக்குகளை மிகவும் குறைந்த அளவிற்கு மேம்பட்ட நாடுகளில் இருந்து பெறுவதற்கான உடன்பாடு, அது ஐரோப்பிய ஒன்றியத்தின் "அனைத்தும் ஆனால் படைக்கலம் மட்டும் இல்லாமல்" (Everything But Arms) என்ற முனைப்பை ஆதாரமாக கொண்டதாகும். மேலும் 3% வரையிலான கட்டண வரிகள் விலக்கு அளிக்காததாக இருக்கும். இதர பெரிய விவகாரங்களை பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 2010 ஆண்டுக்குள் முடிக்க முடிவு செய்தது. ஏழாவது அலுவலகப்பணித் தொகுதி கூட்டம் உலக வணிக அமைப்பின் பொதுக்குழு, 26 மே 2009 அன்று, ஏழாவது உலக வணிக அமைப்பு (WTO) அலுவலகப்பணித் தொகுதி கூட்டத்தை ஜெனீவாவில் 30 நவம்பர் முதல் டிசம்பர் 2009 வரை நடத்த முடிவுசெய்தனர். தலைவர் அம்ப விடுத்த ஒரு குறிப்பு மரியோ மடுஸ் கூறியதாவது இரு வருடங்களுக்கு ஒரு முறை சந்திக்கும் நடைமுறையில் இருக்கும் குறைபாடுகளை நீக்குதல் வேண்டும், அதுவே 2005 தொஹ சுற்று, முடிவில் காலம் கடந்து தோல்வி கண்டது, மேலும் நடக்கவிருக்கும் 'அளவு குறைந்த' கூட்டமானது பேரம் பேசும் பேச்சுவார்த்தைகள் கொண்டதாக இருக்காது, ஆனால் "சிறு குழுக்கள் கொண்ட பேரம் பேசும் அமைப்பாக அல்லாமல் மற்றும் இயல்பான பேச்சுவார்த்தை நடத்தும் கட்டமைப்பாக இல்லாமல், ஒளிவு மறைவில்லாமல் மற்றும் வெளிப்படையாக பேச்சுவார்த்தைகள் நடக்கும் சூழ்நிலைகளை வலியுறுத்தும்".[22] தோகா சுற்று உலக வணிக அமைப்பு தற்போதைய பேச்சுவார்த்தைகளுக்கான சுற்றை, தோகா மேம்பாட்டு நிகழ்ச்சிநிரல் என அறியப்படுவது, அதன் நான்காம் அலுவலகப்பணித்தொகுதி கூட்டத்தில், நவம்பர் 2001 முதல் தோகா, கத்தாரில் துவங்கியது. தோகா சுற்று மிகவும் எதிர்பார்ப்புகளுடன் கூடிய, உலகமயமாக்குவதற்கான எண்ணத்தை கருத்தில் கொண்டு, மேலும் உலகத்தில் வாழும் மிகவும் ஏழையான மக்களுக்கு உதவி புரியும் நோக்குடன், குறிப்பாக வேளாண் தொழில் தடைகள் மற்றும் மானியத்தொகை விவகாரங்களை அகற்றுவதற்கான ஒரு வெளிப்படை முயற்சியாகும்.[23] அதன் துவக்க நிகழ்ச்சிநிரல் வணிக குறைகளை மேலும் தளையகற்றி விடுவித்து, தற்காலத்துக்கேற்ற புதிய விதிமுறைகளை அமுல்படுத்தி, மேம்பாடு அடையும் நாடுகளுக்கு ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி அமைப்பை வலுவூட்டுவதே.[24] பல முறை பேச்சுவார்த்தைகள், அலுவலகப்பணித் தொகுதி கூட்டங்கள் மற்றும் இதர கூட்டங்கள் நடந்தாலும், பேச்சுவார்த்தைகள் மிகவும் காரசாரமாக இருந்ததோடல்லாமல் எந்த முடிவுக்கும் ஒப்புதல் கிடைக்கவில்லை. பல முக்கிய விவகாரங்களில், வேளாண் மானியம் போன்றவையும் அடங்கும், கருத்து வேறுபாடுகள் தொடர்ந்துகொண்டே இருந்தன.[25] பணிகள் உலக வணிக அமைப்பின் பல்வேறுபணிகளில், கீழே கொடுக்கப்பட்டவை மிகவும் முக்கியமானதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்: முடிவெடுத்த ஒப்பந்தங்களை நடைமுறையில் நிறைவேற்றுதல், நிர்வகித்தல் மற்றும் இயக்குதல் போன்றவற்றை மேற்பார்வையிடுதல்.[29][30] பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு சுமுகமான சூழ்நிலையுடன் கூடிய ஒரு மன்றத்தை அளித்து விவகாரங்களை தீர்த்து வைத்தல்.[31][32] கூடுதலாக, தேசிய வணிகக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்து அவற்றை பபரப்புதல், மற்றும் வணிகக் கொள்கைகளின் முன்-பின் ஒத்திணக்கம் மற்றும் ஒளிவு மறைவின்மை சரியாக உள்ளதா என்பதை உலக பொருளாதார கொள்கைகளை உருவாக்கும் போது கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டியது போன்றவை உலக வணிக அமைப்பின் முதலாய கடமையாகும்.[30][32] உலக வணிக அமைப்பின் மற்றுமொரு தலையாய கடமை மேம்பட்டுவரும், மிக குறைவாக மேம்பட்ட மற்றும் குறைந்த வருவாய் ஈட்டும் நாடுககளுக்கு இந்த சூழ்நிலைகள் மாறிவரும் வேளையில், உலக வணிக அமைப்பின் விதிமுறைகள் மற்றும் பிரிவுகளை தொழில்நுட்ப கூட்டுமுயற்சி மற்றும் பயிற்சிகள் மூலம் தெரிந்துகொள்ள வைப்பதுமாகும்.[33] உலக வணிக அமைப்பு பொருளாதார ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளது: உலக வணிக உண்மைநிலை குறித்த மதிப்பீடுகள் மற்றும் குறிப்பிட்ட தலைப்புகளில் ஆராய்ச்சிக்கட்டுரைகள் போன்றவைகளை தயாரித்து அவ்வப்போது மற்றும் ஆண்டறிக்கைகளில் வெளியிட்டு வருகிறது.[34] இறுதியாக, உலக வணிக அமைப்பு பிரெட்டன் வுட்டினுடைய இரு முறைகளான, ஐ எம் எப் மற்றும் உலக வங்கியுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருகிறது.[31] வணிக முறையின் கொள்கைகள் உலக அரங்கில் அனைத்து நாடுகளும் பங்கேற்று வாணிபம் புரிந்திடும் நோக்குடன் வணிகத்திற்கான கொள்கைகளை வரையறுத்து உலக வர்த்தக அமைப்பு என்ற ஒரு கட்டமைப்பிற்கு ஒரு வடிவத்தை கொடுத்துள்ளார்கள். இந்த அமைப்பு விளைவுகளை வரையறுக்கவோ அல்லது குறிப்பிடவோ இல்லை. அதாவது, வணிக கொள்கைகளுக்கான விளையாட்டுகளுக்கான விதிமுறைகளை இந்த அமைப்பு மேற்கொள்கிறது.[35] 1994 ஆண்டிற்கு முந்தைய ஜிஏடிடி அமைப்பு (pre-1994 ஜிஏடிடி (GATT)) மற்றும் உலக வணிக அமைப்பினை பற்றி தெரிந்துகொள்ள ஐந்து விதிமுறைகள் முக்கியமாகும்: பாகுபாடு இல்லாமை. இதில் இரண்டு பெரிய பாகங்களுண்டு: மிகவும் வேண்டிய நாடு (MFN) விதிமுறை, மற்றும் தேசிய நடத்துதல் கொள்கை இவை இரண்டும், சரக்குகள், சேவைகள் மற்றும் அறிவுத்திறனுடையார் சொத்துடமை உலக வணிக அமைப்பின் விதிமுறைகளில் வரையறுத்துள்ளது, ஆனால் அவற்றின் துல்லியமான நோக்கம் மற்றும் இயல்பு ஒவ்வொரு வகைக்கும் வேறுபடும். இந்த மிகவும் வேண்டிய நாடு MFN விதிமுறைகளின் படி உலக வணிக அமைப்பு உறுப்பினர் ஒரே மாதிரியான நியமங்களை இதர உலக வணிக அமைப்பின் உறுப்பினருடைய அனைத்து வணிக விவகாரங்களுக்கும் அமைக்க வேண்டும், அதாவது ஒரு உலக வணிக அமைப்பு உறுப்பினர் ஒரு குறிப்பிட்ட பொருளுக்காக வணிகம் செய்யும் போது அதற்காக அளிக்க விரும்பும் மிகவும் உன்னதமான நிலவரங்களை மற்ற இதர உறுப்பினர்களுக்கும் பாகுபாடில்லாமல் அளிக்க முன்வரவேண்டும்.[35] "யாராவது ஒருவருக்கு சில சலுகைகளை அளித்தால், அச்சலுகைகளை எஞ்சி இருக்கும் அனைத்து உலக வணிக அமைப்பு உறுப்பினர்களுக்கும் அளிக்க வேண்டும்."[36] தேசிய நடத்துகை என்றால் இறக்குமதி சரக்குகள் மற்றும் உள்நாட்டில் தயாரித்த சரக்குகள் இரண்டும் பாகுபாடில்லாமல் ஒரே முறையில் சீராக பார்க்க வேண்டும் (குறைந்தது வெளிநாட்டு சரக்குகள் சந்தையில் வந்த பிறகாவது) மேலும் இந்த விதிமுறைகள் வணிகம் செய்வதில் கட்டணம் இல்லாத தடைகளை அகற்றுவதற்காகவே ஏற்பட்டன. (எடுத்துக்காட்டு:தொழில்நுட்ப தரங்கள், பாதுகாப்பு தரங்கள் போன்றவை இறக்குமதி சரக்குகளுக்கு எதிராக பாகுபடுவது).[35] பிரதிச்சலுகை. எம்எப்என் விதிமுறை (MFN rule) காரணமாக எழும் இலவச சலுகைகளில் நோக்கெல்லையை ஒரு அளவிற்குள் வைத்திடவும் மற்றும் வெளிநாட்டு சந்தையில் பங்குபெற ஒரு நல்ல அணுக்கம் கிடைப்பதற்குமான விருப்பத்தையும் தெரிவிக்கிறது. இது தொடர்பாக ஒரு நாடு பேரம்பேசி கலந்துரையாட, அதனால் கிடைக்கும் ஆதாயம் ஒரு தலைப்பட்சமான தாரளமயமாக்குதலை விட மிகையாக இருத்தல் வேண்டும்; பிரத்திச்சலுகைகள் மூலமாக இவ்வாறான ஆதாயங்கள் கிடைக்க வழி வகுக்கிறது.[37] கட்டமைத்த மற்றும் வலிந்து செயற்படுத்துதலுக்கான கடமைகள். உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள் பலவகை வணிக பேச்சுவார்த்தைகளில் அறிவித்த கட்டண வாக்குறுதிகள் மற்றும் அணுக்கத்திற்கான வழிமுறைகள் ஒரு கால அட்டவணையில் எண்ணிக்கையுடன் பட்டியலிட வேண்டும். இது போன்ற கால அட்டவணைகள் "மேல் மட்ட கடமைகளை " நிலைநாட்டும்: ஒரு நாடு தனது கட்டமைப்புகளை மாற்றலாம், ஆனால் அவற்றை அந்நாட்டு வணிக கூட்டாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே செய்யலாம், அவ்வாறு செய்யும் போது அவர்களுக்கு வணிகத்தில் ஏற்படும் நட்டத்தை ஈடு செய்ய வேண்டியிருக்கும். இதனால் திருப்தி அடையவில்லை என்றால், குற்றத்தை முறையிடும் நாடு உலக வணிக அமைப்பின் தகராறுகளுக்கு தீர்வு காணும் நடைமுறைகளை அழைத்து செயல்படுத்தலாம்.[36][37] ஒளிவின்மை. உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள் தங்கள் நாட்டின் வணிக விதிமுறைகளை அச்சிட்டு வெளியிடவேண்டும், வணிக ரீதியில் பாதிக்கும் நிர்வாக முடிவுகளை மறுபரிசீலனை செய்வதற்கான நிறுவனங்களை தடங்கலில்லாமல் கட்டிக்காக்க வேண்டும், இதர உறுப்பினர்களுக்கு தேவைப்படும் தகவல்களை அவ்வப்போது வழங்குதல் வேண்டும், மேலும் வணிக ரீதியிலான கொள்கை மாற்றங்களை உடனுக்குடன் உலக வணிக அமைப்பிற்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறான உட்புறத்து ஒளிவுமறைவின்மையுடன் கூடிய தேவைகளுடன் காலமுறையில் தனி நாட்டை குறிக்கும் அறிக்கைகள் (வணிக கொள்கை மறுபரிசீலனைகள்) வணிக கொள்கைகளுக்கான மறுபரிசீலனை இயக்க அமைப்பு (TPRM) மூலமாக மிகைநிரப்பி இணைப்புகளை சேர்த்து உதவிகள் வழங்கப்படும்.[38] இவ்வாறு உலக வணிக அமைப்பு முறைகள், முன்னறிந்து கொள்ளக்கூடிய தன்மை மற்றும் நிலைத்தன்மைகளை மேம்படுத்தி, மேலும் ஒதுக்கீடு மற்றும் அது போன்ற தடைகளை விதிக்கும் நடைமுறைகளை நீக்கி, இறக்குமதி பொருட்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லாதவாறு பார்த்துக்கொள்கின்றன.[36] பாதுகாப்பு வால்வுகள் . சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், அரசுகளால் வணிகத்தை கட்டுப்படுத்த இயலும். இத்திசையில் மூன்று வகையிலான முன்னேற்பாட்டு ஒதுக்கங்களை காணலாம்: பொருளாதாரமல்லாத கொள்கைகளை அடைவதற்கான விதிமுறைகள், நியாயப் போட்டிகளை அனுமதிக்கும் நோக்குடைய விதிமுறைகள்; மற்றும் பொருளாதார காரணங்களுக்காக குறிக்கீடுகளை அனுமதிக்கும் தனிவகைமுறைகள்.[38] எம்எப்என் கொள்கைகளுக்கு விதிவிலக்கானவை மேம்பாடடைந்து வரும் நாடுகளுக்கு அளிக்கும் சலுகைகள், தடையிலா வணிகம் புரிவதற்கான இடங்கள் மற்றும் சுங்க ஒன்றியங்கள். சரக்கு மன்ற அமைப்பில் 11 வகை குழுக்கள் உள்ளன, ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பணியை செயல்படுத்துகின்றன. உலக வணிக அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் குழுக்களில் பங்கேற்கின்றனர். நெசவுத்தொழில் கண்காணிப்புக்குழு மற்ற குழுக்களில் இருந்து வேறுபட்டதாக இருந்தாலும், அதுவும் சரக்கு மன்றத்திற்குள் அடங்கியதே. இந்த அமைப்பிற்கு அதனுடைய தனித் தலைவர் உண்டு மேலும் அது 10 உறுப்பினர்கள் கொண்டது. நெசவுத்தொழில் சார்ந்த பல குழுக்களுடன் இந்த அமைப்பிற்கு தொடர்பு உள்ளது.[39] அறிவுசார் சொத்துரிமை சார்ந்த வணிக முறையிலான கோட்பாடுகளுக்கான குழு உலக வணிக அமைப்பிலுள்ள அறிவுசார் சொத்துக்களுக்கான தகவல்கள், செய்திகள் மற்றும் TRIPS குழுமத்தின் (TRIPS Council) அலுவலகக்குறிப்புகள், மற்றும் இத்துறையில் உலக வணிக அமைப்பு இதர சர்வதேச நிறுவனங்களுடன் மேற்கொண்ட பணிகள் [40] சேவைகள் வழங்குவதற்கான குழுமம் பொதுக்குழுவின் அமைப்பின் வழிகாட்டுதலுடன் சேவைகள் புரிவதற்கான குழுமம் செயல் படுகிறது மேலும் அக்குழு சேவைகள் அளிப்பதற்கான வணிகத்திற்கான பொது ஒப்பந்தங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது அதன் பொறுப்பாகும் (GATS) இந்த குழுமம் உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள் எல்லோருக்கும் திறந்து வைத்ததாகும், மேலும் தேவைகளுக்கேற்றபடி துணைக்குழுமங்களையும் ஏற்படுத்திக்கொள்ளலாம்.[41] சேவைக் குழுவிற்கு மூன்று துணைக்குழுக்கள் உள்ளன: நிதி சேவைகள், வீட்டுக்குரிய ஒழுங்கு முறைகள், GATS விதிமுறைகள் மற்றும் தனிப்பட்ட கடமைகள்.[39] இதர குழுக்கள் பொதுக் குழுவில் பலவகை குழுக்கள், பணிக்குழுக்கள் மற்றும் பணி புரியும் கட்சிகள் உள்ளன.[42] குழுக்களின் விவரம் வணிகம் மற்றும் சூழல் வணிகம் மற்றும் மேம்பாடு (மிகக்குறைவாக மேம்பாடடைந்த நாடுகளுக்கான துணைக்குழு) வட்டார வணிக ஒப்பந்தங்கள். வெளிக் கொடுப்பு நிலைதொடர்புள்ள கட்டுப்பாடுகள். வரவு செலவுத் திட்டம், நிதி மற்றும் நிர்வாகம். பணிகள் செய்யும் கட்சிகள் வாரிசாக ஏற்றல் அல்லது இணக்கம் பணிக் குழுக்கள் வணிகம், கடன் மற்றும் நிதி வணிகம் மற்றும் தொழில் நுட்பப்பரிமாற்றம் வணிக ஒப்பந்த உடன்பாட்டுக் குழு வணிக ஒப்பந்த உடன்பாட்டுக் குழு (TNC) தற்போது வணிக சுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருகிறது. அதன் தலைவர் உலக வணிக அமைப்பின் உயரதிகாரியாகும். இக்குழு தற்போது தோகா மேம்பாட்டு சுற்றின் பேச்சுவார்த்தைகளில் சமரசம் காண முயன்று வருகிறது.[43] வாக்களிப்பு முறை உலக வணிக அமைப்பு ஒரு நாடு, ஒரு வோட்டு முறையில் செயல்படுகிறது, ஆனால் இது வரை வோட்டு எடுப்பதற்கான சூழ்நிலைகள் எழவில்லை. பொதுவாக கருத்து ஒருமைப்பாட்டுடன் கூடிய முடிவுகள் எடுப்பதே முறையாகும், மற்றும் ஒப்புநோக்கத்துடைய சந்தையின் அளவே அவர்களுக்கு பேரம் பேசுவதற்கான வலிமையை அளிப்பதாகும். கருத்து ஒருமைப்பாட்டுடன் கூடிய முடிவுகளால் உள்ள நன்மையானது அதன் மூலமாக மிகவும் பரவலாக பங்கேற்பவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்ளும் வகையிலான முடிவுகளை ஏற்பதாகும். கருத்தொருமை கொண்ட முடிவுகள் எடுப்பதில் உள்ள குறைபாடுகளில் முடிவெடுப்ப்பதற்குண்டான நீண்ட நேரம் மற்றும் பல சுற்றுகள் கொண்ட பேச்சுவார்த்தைகளாகும். இறுதி முடிவுகளுக்கான ஒப்பந்தங்களில் கருத்தொருமை பெறாத பொருட்களுக்கு தெளிவற்ற இருசொல்படும் வார்த்தைகள் பயன்பாட்டினால் விளையக்கூடிய எதிர்கால குழப்பங் களும் அடங்கும். உண்மை நிலவரம் என்ன என்றால், உலக வணிக அமைப்பு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் அனைத்து உறுப்பினர்களின் கருத்தொருமையுடன் நடப்பதில்லை, ஆனால் நாடுகளின் சிறு சிறு குழுக்கள் நடத்தும் இயல்பான பேச்சுவார்த்தைகள் மூலமாக நடைபெறுகின்றன. இவ்வகை பேச்சுவார்த்தைகளை "பச்சை அறை" (Green Room) பேச்சுவார்த்தைகள் என அழைக்கப்படுகிறது, (ஜெனீவாவிலுள்ள உலக வணிக அமைப்பு மேலதிகாரியின் அலுவலக அறையின் வண்ணம்), அல்லது "சிறு -அமைச்சுகள்", இதர நாடுகளில் அவற்றை மேற்கொள்ளும் போது. இவ்வகை செயல்முறைகளை உலக வணிக அமைப்பின் மேம்பாடடைந்த் நாடுகளின் உறுப்பினர்கள் மிகவும் விமரிசனம் செய்துள்ளனர், ஏன் என்றால் அவர்கள் இந்த பேச்சுவார்த்தைகளில் இருந்து விலக்கி வைத்திருப்பதாகும். ரிச்சர்ட் ஹரோல்ட் ச்டீன்பேர்க் (2002) கூறுவது என்னவென்றால், உலக வணிக அமைப்பின் கருத்தொருமை கொண்ட ஆட்சி மாதிரி சட்டத்திற்குட்பட்ட துவக்க பேச்சுவார்த்தைகளுக்கு வழி வகுத்தாலும், இறுதி சுற்றுகளில் அவை ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளின் சக்தி வாய்ந்த பேரங்கள் காரணம் அவை அந்நாடுகளுக்கு சாதகமாக அமைகின்றன, அதனால் அது சம நிலையிலான மேம்பாடாக கருத இயலாது.[44] சிக்கல்களுக்கு தீர்வு காணல் 1994 ஆம் ஆண்டில், உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள் மர்ரகேஷ் ஒப்பந்தத்தில் கையிட்ட "இறுதி சட்டம்" என்ற தலைப்பின் கீழ் வழங்கிய தகராறுகளுக்கு தீர்வு காணல் (DSU) விதிமுறைகள் மற்றும் செயல் முறைகளை பற்றி நன்கு புரிந்து கொண்டதாக தெரிவித்தனர் மற்றும் அதை செயல்படுத்தவும் ஒப்புக்கொண்டனர்.[45] தகராறுகளுக்கு தீர்வு காண்பது என்பதை உலக வணிக அமைப்பின் பல வகை வணிகமுறைகளை தாங்கிப்பிடிக்கும் நடுவிலமைந்த தூணாக கருதுகின்றனர், மற்றும் "உலக பொருளாதார வளர்ச்சிக்கான அவர்களுடைய தனி பங்களிப்பாக அதை போற்றுகின்றனர்."[46] மேலும், உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள், அவர்களுடைய கூட்டு சார்ந்த உறுப்பினர்களில் யாரேனும் விதிமுறைகளை மீறியதாக நினைத்தால், அவர்களே நேரிடையாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், வணிக அமைப்பின் பலவகை தகராறுகளை தீர்வு காணும் முறையை பின்பற்றி அனுசரிப்பதாக வாக்களித்துள்ளனர்.[47] உலக வணிக அமைப்பின் தகராறுகளை தீர்க்கும் வழிமுறைகளை செயல்படுத்த, அதற்கான தனி DSB குழுக்கள், மேல்முறையீட்டு ஆணைக்குழு, உலக வணிக அமைப்பு செயலகம், நடுவர்கள், பிறர் சார்பற்ற வல்லுனர்கள் மற்றும் பல தனி நிறுவனங்கள் போன்றவை தேவைப்படும்.[48] இணக்கம் மற்றும் உறுப்பாண்மை நடைமுறையில் உலக வணிக அமைப்பின் உறுப்பினராக ஆவதென்பது ஒவ்வொரு நாட்டிற்கும் தனிப்பட்டதாகும், மேலும் அவ்வமைப்புடன் இணைவதற்கு நாட்டின் பொருளாதார மேம்பட்டு நிலை மற்றும் தற்போதைய வணிக செயல்பாட்டின் நிலைமையை பொறுத்திருக்கிறது.[49] இந்த நடவடிக்கை சுமார் ஐந்து ஆண்டுகள் எடுக்கலாம், சராசரியாக, ஆனால் அதற்கும் மேலும் ஆகலாம், அந்நாடு முழுதுமாக ஒத்திசைவு செய்யவில்லை என்றால் மற்றும் அரசியல் காரணங்கள் இடைஞ்சலாக இருந்தால்.[50] உலக வணிக அமைப்பின் தனிப்பட்ட செயல்முறையாக, இணைவதற்கு ஆர்வம் காட்டும் பிரிவினருக்கிடையே கருத்தொருமை இருந்தால் மட்டுமே அதற்கான ஒப்புதல் வழங்கப்படும்.[51] இணைவதற்கான செய்முறை உலக வணிக அமைப்புடன் இணைவதற்கு விருப்பம் கொண்ட நாடுகள் முதலில் அதற்கான விண்ணப்பத்தை பொதுக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும், உலக வணிக அமைப்பின் ஒப்பந்தங்கள் சார்ந்த மற்றும் தொடர்புள்ள அந்நாட்டின் அனைத்து வணிக விவகாரங்களையும் மற்றும் பொருளாதார கொள்கைகளைப் பற்றியும் குறிப்பிட்டு விளக்க வேண்டும்.[52] உலக வணிக அமைப்பிறகு அளிக்கும் விண்ணப்பம் ஒரு நிகழ்ச்சிப்பதிவுக் குறிப்பாக இருக்க வேண்டும், மேலும் அதனை அதில் ஈடுபாடுள்ள அனைத்து உலக வணிக அமைப்பு அங்கத்தினரும் கொண்ட செயற்குழு ஆராய்ந்து பார்க்கலாம்.[51] பின்னணி தகவல்களனைத்தையும் பெற்றுக்கொண்ட பிறகு, செயற்குழுவானது விண்ணப்பத்தில் அளித்த தகவல் மற்றும் உலக வணிக அமைப்பு விதிமுறைகளுக்கிடையே விளங்கும் வேறுபாடுகள் மீதுகவனம் செலுத்தும், மேலும் விண்ணப்பதாரரின் சர்வதேச மற்றும் உள்நாட்டு வணிக கொள்கைகள் மற்றும் சட்டங்களை கூர்ந்து ஆராயும். இந்த செயற்குழு, உலக வணிக அமைப்புடன் விண்ணப்பித்த நாடு இணைவதற்கான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை பரிந்துரைக்கும், மேலும் உலக வணிக அமைப்பின் விதிமுறைகளுடன் ஒத்திசைந்து செயல்படுவதற்கான கால அவகாசமும் நல்கும்.[49] இணக்கத்திற்கான இறுதி கட்டங்களில் விண்ணப்பமளித்த நாடு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கிடையே இருதரப்பு விவாதங்கள் மேற்கொள்ளப்படும் மற்றும் அதில் சலுகைகள் மற்றும் கட்டண அளவிற்கான விதிமுறைகள் மற்றும் சரக்குகள் மற்றும் சேவைகள் அளிப்பதற்கான சந்தையுடன் இணைவதற்கான கட்டுப்பாடுகள் குறித்து விளக்கப்படும். இரு தரப்பினரிடையே மட்டும் பேச்சுவார்த்தைகள் நடந்திருந்தாலும், புதிய அங்கத்தினரின் கடமைகள் பொதுவான பாகுபாட்டின்மை விதிமுறைகளின் படி, ஒரேபோல மற்றும் சமமாக மற்ற இதர உலக வணிக அமைப்பு உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.[52] இரு தரப்பினர்களுக்கிடையே ஆன பேச்சுவார்த்தைகள் முடிவுற்றதும், செயற்குழு பொதுக்குழுவிற்கு அல்லது அலுவலகப்பணித் தொகுதி கூட்டத்திற்கு ஒரு இணைப்பிற்கான தொகுப்பினை அளிக்கும், அதில் செயற்குழுவுடன் நடந்த அனைத்து கூட்டங்களைப் பற்றிய தொகுப்பு, இணைவதற்கான நெறிமுறை (அங்கத்தினருக்கான உறுப்பாண்மை ஒப்பந்த படிவத்தின் வடிவம்), மற்றும் பட்டியல்கள் ("கால அட்டவணை") உறுப்பினராகப்போகும் நாட்டின் கடமைகள். ஒரு முறை பொதுக்குழு அல்லது அலுவலகப்பணித் தொகுதி கூட்டம் இணைவதற்கான நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு விட்டால், விண்ணப்பித்த நாடு அதனுடைய பாராளுமன்றத்தில் இணைப்பிற்கான தொகுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும், அதற்குப்பிறகே அந்நாடு உறுப்பினராக சேர இயலும்.[53] உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்கள். உலக வணிக அமைப்பு 153 உறுப்பினர்களை கொண்டது. (உருகுவே சுற்றில் கலந்து கொண்ட 123 நாடுகளும் நிறுவிய நாள் அன்றே உறுப்பினராவதற்கு கையொப்பமிட்டனர், பின்னர் வந்தவர்கள் எல்லோரும் பிறகே உறுப்பினர்களாயினர்).[54] ஐரோப்பிய ஒன்றியத்தை சார்ந்த 27 நாடுகளும் ஐரோப்பிய சமுதாய பிரதிநிதிகள் என அறியப்பட்டனர். உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள் ஒரு இறையாண்மை வாய்ந்த நாட்டின் அங்கத்தினர்களாக இருக்கவேண்டும் என்பதில்லை. அதற்கு பதிலாக, அவை வெளிநாடுகளுடன் வர்த்தக உறவுகள் புரியும் மற்றும் சுங்கவரி வசூலிக்கும் ஒரு முழு சுயாட்சி கொண்ட தனி இடமாகவும் இருக்கலாம். இப்படித்தான் ஹாங் காங் (அதாவது "ஹாங் காங், சீனா" 1997) ஜிஏடிடி (GATT) அமைப்பில் ஒரு ஒப்பந்த நாடாக சேர்ந்தது, மற்றும் ரிபப்ளிக் ஒப் சீனா (ROC) (பொதுவாக தைவான் என அறியப்படுவது, அதன் சுயாட்சி நிலவரத்தை சீனா ஒத்துக்கொண்டதில்லை) உலக வணிக அமைப்பில் 2002 ஆம் ஆண்டில் "தனி சுங்கவரி விதிக்கும் தைவான், பெங்கு, கின்மேன் மற்றும் மட்சு நாடுகள் கூடிய" (சைனீஸ் தைபெய்) யாக அங்கம் வகிக்கின்றது.[55] உறுப்பினர்கள் அல்லாத பலர் (30) பார்வையாளர்களாக உலக வணிக அமைப்பில் உள்ளனர் மேலும் அவர்களையும் அங்கத்தினர் ஆக்கும் நடவடிக்கைகள் தற்போது நடந்துவருகிறது. ஈரான், ஈராக், மற்றும் ரஷ்ய நாடுகள் பார்வையாளர்களாகவே உள்ளனர் மேலும் அவர்கள் இன்னும் அங்கத்தினர்களாகவில்லை. ஹோலி சி என்ற இடத்தை தவிர, இதர நாடுகள் பார்வையாளர்கள் ஆனதிலிருந்து ஐந்து வருடங்களுக்குள் பேச்சுவார்த்தைகள் புரிந்து இணக்கம் செய்துகொள்ள வேண்டும். சில சர்வதேச அரசுகளுக்கிடையேயான நிறுவனங்களும் உலக வணிக அமைப்பின் பார்வையாளர்களாக அனுமதி பெற்றுள்ளனர்.[56] இது வரை 14 நாடுகள் மற்றும் 2 வட்டாரங்கள் உலக வணிக அமைப்புடன் அதிகாரபூர்வமான தொடர்புகளை வைத்துக்கொள்ளவில்லை. ஒப்பந்தங்கள் உலக வணிக அமைப்பு தற்போது சுமார் 60 வேறுபட்ட ஒப்பந்தங்களை மேற்பார்வையிட்டு வருகிறது, ஒவ்வொன்றும் சர்வதேச சட்ட உரை நிலை கொண்டவையாகும். இணக்கத்திற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் உறுப்பினர் நாடுகள் உலக வணிக அமைப்பின் அனைத்து ஒப்பந்தங்களிலும் கையொப்பமிட்டு அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்.[57] சில முக்கியமான ஒப்பந்தங்களைப்பற்றிய சிறிய குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வேளாண் தொழிலுக்கான ஒப்பந்தம் (AoA) வேளாண் தொழிலுக்கான ஒப்பந்தம் (AoA) 1995 ஆம் ஆண்டில் உலக வணிக அமைப்பு தொடக்கத்திலேயே செயல்படுத்தியது. இந்த ஒப்பந்தம் மூன்று மையக்கருத்துகளை கொண்டது, அல்லது "தூண்கள்": உள்நாட்டு ஆதாரம், சந்தையுடன் தொடர்பு மற்றும் ஏற்றுமதிக்கான மானியங்கள். சேவைகள் வழங்குவதற்கான பொது ஒப்பந்தம் (GATS) ஜிஏடிடி (GATT) அதாவது சரக்குகளில் வணிகம் செய்வதற்காக உருவாக்கிய கட்டணம் மற்றும் வணிக (முறைகளுக்கான) பொது ஒப்பந்தத்தை போலவே ஒரு உடன்பாட்டை சேவைகள் புரியும் தொழில்துறைக்கும் நீட்டுவதற்காகவே, சேவைகள் புரியும் வணிகத்திற்கான பொது ஒப்பந்த முறை (GATS) உருவானது. இந்த ஒப்பந்தம் ஜனவரி 1995 முதல் அமுலில் உள்ளது. அறிவுசார் சொத்துரிமைக்கான வணிகம் சார்ந்த நோக்கங்களுக்கான ஒப்பந்தம் (TRIPs) அறிவுசார் சொத்துரிமைக்கான வணிகம் சார்ந்த நோக்கங்களுக்கான ஒப்பந்தம் (TRIPs) பலவகை அறிவுசார் சொத்துரிமைக்கான (IP) குறைந்த அளிவிலான தர கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதைப்பற்றிய பேர நடவடிக்கைகள் 1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜிஏடிடி (GATT) பேச்சுவார்த்தைகளுடன் உருகுவே சுற்றின் இறுதியில் மேற்கொண்டது. துப்புரவு சார்ந்த மற்றும் தாவர-துப்புரவு சார்ந்த (SPS) ஒப்பந்தம் துப்புரவு சார்ந்த மற்றும் தாவர-துப்புரவு சார்ந்த ஒப்பந்தத்தை பயன் படுத்துவது குறித்தான - SPS ஒப்பந்தம் எனவும் அறியப்படுவது - உருகுவே சுற்றில் ஜிஏடிடி யின் பொது ஒப்பந்தத்தை பற்றிய பேரப் பேச்சுவார்த்தைகளின் போது நிகழ்ந்தது, மேலும் 1995 ஆம் ஆண்டில் உலக வணிக அமைப்பு நிறுவியதில் இருந்து செயலாக்கத்தில் உள்ளது. SPS ஒப்பந்தத்தின் கீழ், உலக வணிக அமைப்பு உணவுப் பொருட்களின் பாதுகாப்புடன் கூடிய பயன்பாட்டிற்கான தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கான எல்லைகளை தெளிவு செய்யும் கொள்கைகளை வெளியிட்டது (நுண்மை தீங்குயிரிகள், உயிர்கொல்லிகள், சோதனை செய்தல் மற்றும் விவரச்சீட்டுகளை பொருந்துதல்) மேலும் விலங்குகள் மற்றும் தாவர உடல்நலம் (இறக்குமதி செய்த பூச்சிகள் மற்றும் வியாதிகள்). வணிகத்தில் தொழில்நுட்ப தடைகள் குறித்த ஒப்பந்தம் (TBT) வணிகத்தில் தொழில்நுட்ப தடைகள் குறித்த ஒப்பந்தம் (TBT) என்பது உலக வணிக அமைப்பின் ஒரு சர்வதேச உடன்பாடாகும். உருகுவே சுற்றில் ஜிஏடிடி யின் பொது ஒப்பந்தத்தை பற்றிய பேரப்பேச்சுவார்த்தைகளின் போது அது நிகழ்ந்தது, மேலும் 1994 ஆம் ஆண்டிறுதியில் உலக வணிக அமைப்பு நிறுவிய போதிலிருந்து செயலாக்கத்தில் இருந்து வருகிறது. தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகள், தரக்கட்டுப்பாடுகள் மற்றும் சோதனை மேற்கொள்வது மற்றும் சான்றிதழ்கள் வழங்குவது போன்ற காரணங்களால் வணிகத்திற்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் நோக்குடன் இவை செயல்படுகின்றன".[58] விமர்சனம் உலக வணிக அமைப்பின் குறிக்கோளானது தடைகள் இல்லா வணிகத்தை மேம்படுத்தி பொருளாதார வளர்ச்சியை தூண்டுவதேயாகும். தடையிலா வணிகத்தைப்பற்றி திறனாய்வாளர்கள் கூறுவது என்னவென்றால் அதனால் பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கிடையே வருவாய் அளவுகள் ஒருங்குவதற்கு பதிலாக திசை விரிந்து செல்வதே (அதாவது பணக்காரன் மேலும் பணக்காரனாவான் ஆனால் ஏழை இன்னும் ஏழ்மையில் தவிப்பான்).[59] மார்டின் க்ஹோர், தேர்ட் வோர்ல்ட் நெட்வர்க் என்ற நிறுவனத்தின் இயக்குனர், சொல்வது என்னவென்றால் உலக வணிக அமைப்பு உலகப்போருளாதாரத்தை பாகுபாடில்லாமல் நிர்வாகம் புரிய தவறிவிட்டது என்றும் அதன் செயல்பாடுகள் பணக்கார நாடுகள் மற்றும் பல்நாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக வளைந்து கொடுப்பதாகவும், மேலும் அதனால் சிறிய நாடுகளிடம் பேரம் பேசுவதற்கான ஆற்றல் குறைவாக உள்ளதனால் அவர்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள் என்றும் கூறுகிறார். உருகுவே சுற்றில் உலக வணிக அமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் காரணமாக மேம்பாடடையும் நாடுகளுக்கு ஒரு பயனும் இல்லை என்றும், அதற்கான காரணங்களாக, தொழில்களுக்கான சந்தை நிலவரத்தில் முன்னேற்றம் காணவில்லை என்றும்; நெசவுத்தொழில்களுக்கு வழங்கிய பத்தியமுறையை கொஞ்சம் கொஞ்சமாக பின்வாங்கியதால் அவர்களுக்கு மெச்சும் படியாக எதுவும் நடக்கவில்லை என்றும்; கட்டணமில்லா தடைகள் அதாவது குவிப்பதற்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன என்றும்; மற்றும் உள்நாட்டு ஆதாரம் மற்றும் வேளாண் ஏற்றுமதிக்கான மானியங்கள் பணக்கார நாடுகளில் இப்போதும் மிகையாக உள்ளதாகவும் கூறுகிறார்.[60] இருந்தாலும் ஜகதீஷ் பகவதி உறுதியாக கூறுவதென்ன வென்றால், ஏழையர் நாடுகளில் தயாரிப்பாளர்களுக்கு கட்டணப் பாதுகாப்பு மிகையாக உள்ளதாகவும், மேலும் அந்நாடுகளும் பணக்கார நாடுகளை விட அதிகமாக குவித்தல் அல்லது கொட்டிவைத்தலுக்கு எதிராக நிறைய எண்களில் தாக்கலிடுவதாகவும் கூறுகிறார்.[61] இதர திறனாய்வாளர்கள் தொழிலாளர் உறவுகள் மற்றும் சூழல் சார்ந்த பிரச்சினைகளை மறந்தேபோய்விட்டனர் என்று சொல்கிறார்கள். ஸ்டீவ் சார்நோவித்ஸ், (Steve Charnovitz) குளோபல் என்வைரன்மென்ட் அண்ட் ட்ரேட் ஸ்டடி (Global Environment and Trade Study)(GETS) என்ற நிறுவனத்தின் இயக்குனர், உலக வணிக அமைப்பு "வணிகம் மற்றும் தொழிலாளர்கள் மற்றும் சூழல்களுக்கு இடையிலேயான கவலைகளுக்கு தீர்வு காணவேண்டும்" என்று நினைக்கிறார்.[62] மேலும், தொழிற் சங்கங்கள் மேம்பட்ட நாடுகளின் தொழில் உரிமைகள் சார்ந்த குறிப்புகளை ஏளனம் செய்கிறார், மேலும் அவர் கூறுவது என்ன என்றால், உலக வணிக அமைப்பு உலகமயமாக்கும் கொள்கையை எவ்வளவுக்கு எவ்வளவு முன்னுக்கு கொண்டு போகின்றதோ, அவ்வளவுக்கு அவ்வளவு சுற்று சூழலும் தொழிலாளர் உரிமைகளும் பின்னுக்கு தங்கி விடும் என்று.[63] இன்னொரு பக்கம், க்ஹோர் பதிலளிப்பது என்ன என்றால், "சூழல் மற்றும் தொழிற்சங்கங்கள் உலக வணிக அமைப்பு முறைகளில் நுழைந்தால், [...] கொள்கையளவில் சமூக மற்றும் பண்பாடு சார்ந்த விவகாரங்களுக்கும் இடம் அளிக்கலாமே"[64] பகவதியும் "பணக்கார நாடுகளின் புறக்கூட்டங்கள் அவர்களுக்கு சம்பந்தமில்லாத நிகழ்ச்சிநிரல்களை வணிக உடன்பாடுகளில் திணிப்பது அட்டூழியமாகும்" என்று விமர்சிக்கிறார்.[65] அதனால், கொலம்பியா பல்கலைக்கழகத்தை சார்ந்த பகவதி மற்றும் அரவிந்த் பணகரியா ஆகிய இருவரும், TRIPs என்ற செயல்பாட்டை உலக வணிக அமைப்பில் அறிமுகப்படுத்தியதை குறை கூறுகிறார்கள், இது போன்ற வணிகம் சாரா நிகழ்ச்சி நிரல்கள் ஒரு நாள் கட்டுக்கடங்காமல் போகலாம் மற்றும் அமைப்பை செயலிழக்க செய்யலாம் என்று ஆதங்கம் கொள்கின்றனர்.[66] இதர திறனாய்வாளர்கள் உலக வணிக அமைப்பின் முடிவுகள் எடுக்கும் முறையானது சிக்கலானதாகவும், பலனில்லாததாகவும், நிறுவனத்துடன் தொடர்பில்லாதது போலவும், மற்றும் உள்ளடங்காமல் இருப்பதாகவும், மேலும் அவர்கள் ஒரு சிறிய, இயல்பான வழிநடத்தி செல்லும் செயற்குழுவினை (ஒரு "ஆலோசனை மன்றம்") அமைத்து, அதன் மூலமாக உறுப்பினர் நாடுகளிடையே வணிக சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்கு சுமுகமாக கருத்தொரிமை ஏற்றெடுக்கும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்கலாம் என அறிவுறுத்துகின்றனர்.[67] தேர்ட் வேர்ல்ட் நெட்வொர்க் உலக வணிக அமைப்பு "மிகவும் ஒளிவு மறைவுடன் கூடிய சர்வதேச நிறுவனமாகும்" என அழைத்துள்ளது, ஏன் என்றால் "உலக வணிக அமைப்பு செயல்பாட்டு முறைகளில் பெரும்பான்மையினராக இருக்கும் மேம்பாடடைந்துவரும் நாடுகளுக்கு உண்மையாக தங்கள் அதிகாரத்தை பயன்படுத்த ஒரு வழிமுறையும் இல்லை"; நெட்வொர்க் மேலும் அழுத்திக் கூறுகிறது "குடியியல் சமூக குழுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அவர்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்த வாய்ப்புகள் அளிக்க வேண்டும் என்றும் மற்றும் அவற்றின் அடிப்படையில் கொள்கைகள் மற்றும் முடிவுகள் எடுக்கப் படவேண்டும் என வலியுறுத்துகிறது."[68] சில அரசு சாரா நிறுவனங்கள், வேர்ல்ட் பெதரலிஸ்ட் மூவ்மென்ட், உலக வணிக அமைப்பு மக்களாட்சியில் உள்ளது போல ஒரு பாராளுமன்றத்தை அமைத்து செயல் புரிவது நன்றாக இருக்கும் என்று வாதாடுகிறது, ஆனால் இதற்கு இதர திறனாய்வாளர்கள் செவி சாய்க்கவில்லை.[69] சில விடுதலை விரும்பிகள் மற்றும் சிற்றரசுகள், லுட்விக் வான் மிசெஸ் இன்ஸ்டிட்யூட் போன்ற ஆலோசகர்கள், உலக வணிக அமைப்பிணை எதிர்க்கின்றனர், அது ஒரு அதிகாரச் செருக்குள்ள மற்றும் முதலீட்டிற்கு எதிரான நிறுவனமாகும் என்றும், அது தடையில்லா வணிகத்திற்கு பதிலாக அரசியல் குறுக்கீடுகளுக்கு பெயர் போவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். லுட்விக் வான் மிசெஸ் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் தலைவர், லேவேல்லின் எச் ரோக்வேல் சிறியவர், கூறுவது . . . உலக வணிக அமைப்பு என்ன சொல்கிறது என்றால் அமேரிக்கா அந்நாட்டு ஏற்றுமதி செய்வோரை வெளி நாடுகளில் கிளை அலுவலகங்களை அமைப்பதை தடுக்க வேண்டும், அப்படி அவர்கள் செய்வதால் அவர்கள் அரசிற்கு கட்டவேண்டிய வருமான வரியில் 30% அளவிற்கு சேமித்து விதி விலக்கு பெறுகிறார்கள். இப்போது அமெரிக்க வரிவிகிதத்தை ஏற்றவேண்டும் மற்றும் இதர குறைபாடுகளை நீக்க வேண்டும் இல்லா விட்டால் பெரிய அளவில் மேலும் புதிதாக மானியங்களை அளிக்கும் நிலைமை ஏற்பட்டு அது நமது நாட்டின் ஏறுமதித்துறையை பெரிதும் பாதித்துவிடும். [...] சமீப காலமாக வெளிநாட்டினர் நமது நாட்டின் வளமை மற்றும் நாகரீகத்தை வெறுப்பவர்களைப்பற்றி நிறைய பேச்சுக்கள் அடிபடுகின்றன, மேலும் அவர்கள் பழிக்குப் பழியாக ஏதாவது ஒரு வழியில் நமக்கு பாதகம் விளைவிக்க பார்க்கிறார்கள். சொல்லப்போனால், இங்கே இன்னொரு வழங்குமுறை சுட்டிக்காட்டத்தக்கது, இவற்றில் இஸ்லாமிய தீவிரவாதிகள் ஈடுபடவில்லை; அவர்கள் தூதர்கள் மற்றும் ராஜதந்திரிகள் ஆவார், மற்றும் அவர்கள் சந்தேகப்படும் பட்டியலில் காணப்படும் பேர்வழிகள் அல்ல. [70] மேலும் பார்க்கவும் உலகமயமாக்குதலுக்கு எதிராக சர்வதேச வணிக மையம் சென்டர் வில்லியம் ராபர்ட் நார்த் அமெரிக்கன் ப்ரீ ட்ரேட் அக்ரீமென்ட் (NAFTA) காகிதம்-அல்லாத பாதுகாப்பு மானியம் | ஸ்விஸ் பார்முலா (வாய்ப்பாடு) வணிகக் கூட்டணி வாஷிங்டன் கருத்தொருமை 1999 ஆண்டில் நடந்த உலக வணிக அமைப்பு அலுவலகப் பணித் தொகுதி கூட்டத்திற்கு எதிராக கண்டன நடவடிக்கை உலகளாவிய நிர்வாக சட்டம் உலகமயமாக்கலும், சுகாதாரமும் உலகமயம் ஆமாம் போடும் மனிதர்கள் குறிப்புதவிகள் மற்றும் குறிப்புகள் கூடுதல் வாசிப்பு வெளி இணைப்புகள் அதிகாரபூர்வமான உலக வணிக அமைப்பு பக்கங்கள் — முதல் பத்தாண்டு செயல்பாடுகளின் சிறப்புக் கூறுகள், ஆண்டறிக்கை 2005 பக்கங்கள் 116-166 - உலக நாடுகள் / உலக வணிக அமைப்பு இணைந்த அமைப்பு உலக வணிக அமைப்பின் அரசு சார்ந்த பக்கங்கள் உலக வணிக அமைப்பு பற்றிய செய்தித்தாளில் வெளிவந்தன நேரடி நிகழ்சசி உலக வணிக அமைப்பு பற்றிய அரசு-சாரா நிறுவனங்களின் பக்கங்கள் - பரோடி ஒப் ஆபீசியல் வேர்ல்ட் ட்ரேட் ஆர்கனைசேசன் பேஜ் பை தி எஸ் மென் பகுப்பு:1995 நிறுவனங்கள் பகுப்பு:சர்வதேச வணிக நிறுவனங்கள் பகுப்பு:சர்வதேச வணிகம் பகுப்பு:உலக வணிக அமைப்பு பகுப்பு:உலக அரசு பகுப்பு:சுவிட்சர்லாந்தில் இருந்து இயங்கும் நிறுவனங்கள் பகுப்பு:மேற்கோள் வழுவுள்ள பக்கங்கள்-கூகுள் தமிழாக்கம்
உலக வணிகயின் தலைமையகம் எங்கு உள்ளன?
ஜெனீவா, சுவிட்சர்லாந்தில்
2,621
tamil
32d6d08d5
எலுமிச்சை (Lemon) சிட்ரசு எலுமிச்சை (எல்) ஓசுபேக் என்ற தாவரவியற் பெயர் கொண்ட நிலம்வாழ் தாவரமாகும். ஆசியாவை தாயகமாகக் கொண்ட இத்தாவரம் பூக்கும் தாவரம் என்ற துணைப்பிரிவில் ருட்டேசி குடும்பத்தின் உறுப்பினராக வகைப்படுத்தப்பட்டுள்ளது.பெரும்பாலும் வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டல மண்டலப் பகுதிகளில் இது வளர்கின்றது. குறுஞ்செடி வகைத் தாவரமாக எலுமிச்சை அறியப்படுகிறது. தேசிக்காய் (lime), தோடம்பழம் ஆகியவற்றை உள்ளடக்கிய பூக்கும் தாவரக் குடும்பத்தை சேர்ந்த தாவரமாகும். இதன் பழம் பொதுவாக அதன் சாற்றுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது. எலுமிச்சை மருத்துவ குணம் கொண்டது. எலுமிச்சைச் சாற்றை தண்ணீருடன் கலந்து, விருப்பத்துக்கேற்ப சீனி (சர்க்கரை) அல்லது உப்புடன் சேர்த்துப் பருகுவது ஆரோக்கியமான பானமாகக் கருதப்படுகிறது. சமையலில், உணவுகளுக்குச் சுவை சேர்ப்பதற்காகப் பயன்படுகிறது. மரத்தின் நீள்வட்ட மஞ்சள் பழமானது உலகம் முழுவதிலும் சமையல் மற்றும் சமையல் அல்லாத நோக்கங்களுக்காகப் பயன்படுகிறது, முதன்மையாக இதன் பழச்சாறுக்கு உணவு மற்றும் சுத்திகரிப்பு பயன்பாடு ஆகிய இரண்டும் உள்ளன [1]. திசுக்கூழ் மற்றும் தோல் கூட சமையல் மற்றும் உட்சுடல் என்ப்படும் பேக்கிங்கில் பயன்படுத்தப்படுகின்றன. எலுமிச்சை சாறில் சுமார் 5% முதல் 6% சிட்ரிக் அமிலம் உள்ளது, எலுமிச்சை சாறின் தனித்துவமான புளிப்பு சுவை எலுமிச்சைப் பானம் போன்ற உணவுகளில் ஒரு முக்கிய மூலப்பொருளாக உள்ளது. எலுமிச்சை சாறின் pH அளவு 2 முதல் 3 வரை இருக்கும். இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல் சோதனைகளில் மலிவான அமிலமாகப் பயன்படுத்துகிறார்கள். வரலாறு இது இந்தியாவின் அசாம் மாநிலம், வடக்கு பர்மா, சீனா ஆகிய பகுதிகளிலேயே தோன்றியிருக்கலாம் என நம்பப்பட்டாலும், இதன் தோற்றம் பற்றிய சரியான தகவல்கள் தெரியவில்லை [1]. கசப்பு ஆரஞ்சு (புளிப்பு ஆரஞ்சு) மற்றும் சிட்ரான் இடையிலான கலப்பினச்சேர்க்கை தொடர்பான ஆய்வே எலுமிச்சை மரபணு பிறப்பு பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வாக அறியப்படுகிறது [2][3]. பண்டைய ரோம் சமுதாயத்தில் இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தெற்கு இத்தாலியின் அருகே ஐரோப்பாவில் எலுமிச்சை சாகுபடி அறிமுகமாகியிருக்கிறது[1]. எனினும், இங்கு பரவலாக பயிரிடப்படவில்லை. தெற்காசியாவிலும், தென்கிழக்காசியாவிலும், இது ஒரு தொற்றுநீக்கியாகப் பயன்பட்டு வந்தது. அத்துடன் பல வகை நச்சுப் பொருட்களுக்கான நஞ்சு முறிப்பு மருந்தாகவும் பயன்பட்டது. பின்னர் இது பாரசீகத்துக்கும் அங்கிருந்து ஈராக் மற்றும் கிபி 700 அளவில் எகிப்துக்கும் அறிமுகமானது. இது பற்றிய பதிவுகள் முதன் முதலில் கிபி பத்தாம் நூற்றாண்டின் வேளாண்மை தொடர்பான நூல்களில் காணப்படுகின்றன. இது தொடக்க கால இசுலாமியப் பூங்காக்களில் அழகூட்டல் தாவரங்களாகவும் பயன்பட்டன. கிபி 1000க்கும் 1150க்கும் இடைப்பட்ட காலத்தில் அரபு உலகிலும், மத்தியதரைக் கடல் பகுதிகளிலும் எலுமிச்சை பரவியிருந்தது.[4] [1] எலுமிச்சைகளின் கணிசமான சாகுபடி 15 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பாவின் கெனோவாவில் தொடங்கியது. கிறிசுடோபர் கொலம்பசு தனது பயணத்தில் எலுமிச்சை விதைகளை இசுபானியோலாவிற்கு கொண்டு வந்தபோது 1493 ஆம் ஆண்டில் எலுமிச்சை அமெரிக்கர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. எசுப்பானிய வெற்றி புதிய உலகம் முழுவதும் எலுமிச்சை விதைகள் பரவ உதவியது. இது முக்கியமாக அலங்கார செடியாகவும், மருந்துக்காகவும் பயன்படுத்தப்பட்டது [1]. 19 ஆம் நூற்றாண்டில், எலுமிச்சைகளை புளோரிடா மற்றும் கலிபோர்னியாவில் அதிக அளவில் எலுமிச்சையை பயிரிட்டனர் [1]. 1747 ஆம் ஆண்டில் யேம்சு லிண்டு சிகர்வி நோயால் பாதிக்கப்பட்ட தனது மாலுமிகளுக்கு உணவில் எலுமிச்சம் பழசாறை கலந்து கொடுத்ததாக அறியப்படுகிறது. அக்காலத்தில் வைட்டமின் சி கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது [1][5]. மத்தியக் கிழக்கிலிருந்து லெமன் என்ற சொல் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பண்டைய பிரெஞ்சு மொழியில் limon என்றும், இத்தாலிய மொழியில் limone என்றும், அரபு மொழியில் laymūn அல்லது līmūn, சமசுகிருதத்தில் nimbū, “lime மற்றும் பாரசீக மொழியில் līmūn,என்றும் காணப்பட்டாலும், எலுமிச்சை பொதுவாக எல்லா இடங்களிலும் சிட்ரசு பழம் என்ற பொருளிலேயே வழங்கப்படுகிறது [6]. தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடி நகரில் தனியான எலுமிச்சைக்கான தினசரி சந்தை நடைபெறுகிறது. புளியங்குடி அருகிலுள்ள புன்னையாபுரம் கிராமம் எலுமிச்சை விளைவிப்பதில் சிறந்த இடம் வகிக்கின்றது. இப்பகுதி எலுமிச்சை பழத்தில் சாறு (நீர்ப்பதம்) குறைவதற்கு மற்ற எலுமிச்சைகளைவிட அதிக நாட்களாகும் என்பதே இதன் சிறப்பாகும்.[7] வகைகள் 'போனி பிரேய்' என்பது நீளமான, மென்மையான, மெல்லிய தோல், மற்றும் விதையற்ற ஓரினமாகும்[8]. பெரும்பாலும் கலிபோர்னியாவின் சான் டியாகோ மாவட்டத்தில் வளர்கிறது.[9] யுரேகா எலுமிச்சை ஆண்டு முழுவதும் மிகுதியாக வளர்கின்ற ஒரு தாவரமாகும். ஆண்டு முழுவதும் பழங்களையும் மலர்களையும் ஒன்றாக உற்பத்தி செய்யும் திறனைப் பெற்றதன் காரணமாக இதை 'நான்கு பருவங்களின் தாவரம் என்றும் அழைக்கப்படுகிறது[10]. பொதுவான பல்பொருள் அங்காடி எலுமிச்சையாக விற்பனை செய்யப்படுகிறது[11]. இளஞ்சிவப்பு- சதையுடன் பச்சை மற்றும் மஞ்சள் வண்ணமயமான வெளிப்புற தோல் கொண்டதாக இந்த யுரேகா எலுமிச்சை காணப்படுகிறது[12]. இத்தாலியில் பெம்மினெல்லோ செயின்ட் தெரசா', அல்லது சார்ரெண்டோ நகருக்குச் சொந்தமானதாக எலுமிச்சை கருதப்படுகிறது [13]. இலிமோன்செல்லோ என்ற இத்தாலிய பானம் தயாரிப்பில் இது பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது. எலுமிச்சை மற்றும் ஆரஞ்சுடன் குறுக்குக் கலப்பினச் சேர்க்கையால் மெயர் வகை எலுமிச்சை தோன்றுகிறது. 1908 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கு அறிமுகப்படுத்திய ஃபிராங்க் என். மெயர் என்பவரின் பெயரால் இப்பழம் அழைக்கப்படுகிறது. இலிசுபன், யுரேகா எலுமிச்சைகளைக் காட்டிலும் மெல்லிய தோலும், சிறிது அமிலத்தன்மையும் மெயர் எலுமிச்சையில் குறைவாக உள்ளது. வணிக அடிப்படையில் பரவலாக வளர்க்கப்படாத போது மெயர் எலுமிச்சைக்கு அதிக கவனம் தேவை. பெரும்பாலும் இது மஞ்சள் நிற ஆரஞ்சு நிறத்தில் முதிர்ச்சியடைகிறது. மற்ற எலுமிச்சைகளை விட உறைபனியை தாங்கும் சக்தி இதற்கு அதிகமாக உள்ளது. சாதாரணமான எலுமிச்சைகளைக் காட்டிலும் 'பொன்டெரோசா' எலுமிச்சை மிகவும் குளிர்ச்சியானது ஆகும். இப் பழம் தடித்த-தோலுடன் மிகப்பெரிய அளவில் காணப்படுகிறது. இது ஒரு சிட்ரான்-எலுமிச்சை கலப்பினமாகும். 'யென் பென்' என்பது ஆத்திரேலிய பழங்குடியினரால் சாகுபடி செய்யப்பட்ட ஒரு எலுமிச்சை வகையாகும் [14]. சிட்ரசு ஆரேன்சியம் எனப்படும் நார்த்தங்காய், சிட்ரசு ரெடிகுலேட்டா எனப்படும் கமலா ஆரஞ்சு, சிட்ரசு சைனென்சிசு எனப்படும் சாத்துக்குடி போன்றவை இதே வகையில் வகைப்படுத்தப்பட்ட சிட்ரசு வகைத் தாவரங்களாகும். தோட்டப்பயிர் எலுமிச்சைக்கு குறைந்தபட்சமாக 7 ° செல்சியசு வெப்பநிலை தேவைப்படுகிறது, எனவே இவை மிதமான பருவநிலையில் கடுமையாக இருப்பதில்லை, ஆனால் முதிர்ச்சியடைந்த நிலையில் இவை கடினமாகி விடுகின்றன. வளரும்போது குறைக்கப்பட வேண்டிய கிளைகளை வெட்டி குறைக்கப்படுகிறது. மிக அதிகமான கிளைகள் புதராக வளரும் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. கோடையில் முழுவதும், மிகவும் தீவிரமான வளர்ச்சியடைகிறது. பயன்கள் சிகர்வி, வாதம், முடக்குவாதம் போன்ற நோய்களுக்கு மருந்தாகவும் உணவாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். ஊறுகாய், மருந்துகள், மிட்டாய், பழப்பாகு முதலியன தயாரிக்கப் பயன்படுகின்றன. நறுமண எண்ணெய்கள் தயாரிப்பிலும் சோப்பு தயாரிப்பிலும் எலுமிச்சை பயன்படுகிறது.எலுமிச்சை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது[15]. ஊட்டச்சத்துகளும் தாவர வேதிப்பொருட்களும் எலுமிச்சையில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பிறவும் சிறிதளவில் கலந்துள்ளன. எலுமிச்சைகள் பாலிபீனால்கள், டெர்பீன்கள் மற்றும் டானின்கள் [16] உள்ளிட்ட பல்வேறு தாவர வேதிப்பொருட்களும் எலுமிச்சையில் உள்ளன. மற்ற சிட்ரசு பழங்களைப் போலவே இதிலும் சிட்ரிக் அமிலத்தின் குறிப்பிடத்தக்க செறிவு நிரம்பியுள்ளது. (சுமார் 47 கிராம் / லி) [17]. உற்பத்தி மேற்கோள்கள் புற இணைப்புகள் Data related to Citrus × limon at Wikispecies Media related to Köhler's Medicinal Plants at Wikimedia Commons பகுப்பு:பழ மரங்கள்
எலுமிச்சை பழத்தின் சுவை என்ன?
புளிப்பு
1,145
tamil
3c5ef73ad
புகையிலை ஒரு வேளாண்மை உற்பத்திப் பொருள். இதனைப் புகைத்தலுக்கு அல்லது புகையிலை பிடித்தலுக்குப் பயன்படுத்துவதனால் இது புகையிலை என்னும் காரணப்பெயரைப் பெற்றது. இதனைப் புகைத்துப் பழக்கப்பட்டவர்கள் அப் பழக்கத்துக்கே அடிமையாகி விடுவர்[2]. புகையிலை, நிக்கொட்டீனா என்னும் பேரினத்தைச் சேர்ந்த தாவரத்தின் இலைகளிலிருந்து செய்யப்படுகின்றது. மிகப் பழங்காலம் தொட்டே இது அமெரிக்காக் கண்டத்தில் பயன்பட்டு வந்துள்ளது. ஐரோப்பியர்கள் அமெரிக்காவுக்கு வந்ததிலிருந்து இது ஒரு வணிகப் பண்டம் ஆனதுடன், பொழுதுபோக்குத் தேவைகளுக்கான ஒரு பொருளாகவும் பிரபலமானது. இதனால் இது, ஐக்கிய அமெரிக்காவின் தென்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியது. இப்பகுதிகளில் பருத்தி அறிமுகப்படுத்தப்படும் வரை பணப்பயிராக இதன் முதன்மைத்துவம் நீடித்தது. சொலனேசி குடும்பத்தைச் சேர்ந்த இது நிக்கொட்டீனா எனும் பேரினத்துள் அடங்கும் பல புகையிலை இனங்களும் இதில் உண்டு. இப்பேரினத்தின் பெயர் போர்த்துக்கல் நாட்டுக்கான பிரான்ஸ் தூதுவரான ஜீன் நிக்கொட் டீ வில்லமெயின் என்பவரைக் கௌரவிப்பதற்காக இடப்பட்டது[3]. இவர் 1560 ஆம் ஆண்டில் கத்தரீன் டி மெடிசியின் அரண்மனைக்கு ஒரு மருந்துப் பொருளாக அனுப்பி வைத்திருந்தார். இதனைப் பயன்படுத்தும் முறையையும், அளவையும் பொறுத்து மனித உடலில் இது ஏற்படுத்தும் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இதனைப் பயன்படுத்துவதனால் ஏற்படக்கூடிய முக்கியமான உடல்நலக் கேடு குருதிச் சுற்றோட்டத்தொகுதியில் ஏற்படக்கூடிய நோய்கள் ஆகும். புகைத்தல் காலப்போக்கில், வாய், தொண்டை, நுரையீரல் ஆகிய பகுதிகளில் பெருமளவு புற்று நோயைத் தூண்டும் பொருட்களைப் படியச் செய்கிறது. 2008ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு புகையிலை இறப்பின் எளிய வழியாகச் சாடியது.[4] சொற்பிறப்பியல் இலைகள் புகைத்தலுக்குப் பயன்படுவதால் இது புகையிலை எனக் காரணப்பெயர் பெறுகிறது. மேலும் இதனை நுகர உலர வைத்து பொடியாக்கிய புகையிலையை நன்கு துகள்களாக்கி இலையினுள் வைத்து சுருட்டுவதால் புகையிலைச் சுருட்டு எனவும் தமிழில் வழங்கப்படுகிறது. ஆங்கிலத்தில் வழங்கப்பெறும் டொபாக்கோ(tobacco) எனப்படுவது டொபாகோ(tobaco) ஸ்பானிய மற்றும் போர்ச்சுக்கல் மொழியிலிருந்து பெறப்பட்டது ஆகும். 9ஆம் நூற்றாண்டுகளில் அரபு மொழியிலிருந்து அறியப்பட்ட டுபாக் (طُباق ṭubāq) என்பது பலவகையான மருத்துவ மூலிகைகளைக் குறிப்பதாகும். இதிலிருந்தே பின்னர் 1410ஆம் ஆண்டு ஸ்பானிய, போர்ச்சுகீசிய, இலத்தீன் மொழிகளில் பயன்படுத்தப்பட்ட குறிப்புகள் உள்ளன.[5][6] வரலாறு புகையிலை வரலாற்றின் படி தென்னமெரிக்க மக்களால் கண்டறியப்பட்டு அமெரிக்காவிற்கும், ஸ்பானியர்கள் மூலம் ஐரோப்பாவிற்கும், பிறகு மற்ற நாடுகளுக்கும் பரவியதாக அறியப்படுகிறது. பாரம்பரிய பயன்பாடு கி.மு 1400-1000 ஆண்டுகளில் புகையிலை அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டுள்ளது, மேலும் மெக்சிகோ நாட்டில் சாகுபடி செய்யப்பட்டதாகவும் அறியப்படுகிறது.[7] பூர்வ அமெரிக்க குடிகள் இவற்றை சாகுபடி செய்தும், பயன்படுத்தியும் வந்துள்ளனர். வடகிழக்கு அமெரிக்கர்கள் தங்களின் கைப்பைகளில் பயன்படுத்தும் வணிகப்பொருளாகவும், சமுதாய சடங்குப்பொருளாகவும் வணிக ஒப்பந்தத்திற்கும் பயன்படுத்தினர்.[8][9] சில சமயங்களில் மக்களின் நம்பிக்கைப்படி தங்கள் கடவுளின் பரிசாகவும், சமய வழிபாட்டில் பிரார்த்தனைப் பொருளாகவும் பயன்படுத்தினர்.[10] பிரபலம் ஐரோப்பியர்களின் வருகையால் அமெரிக்காவிலிருந்து புகையிலையின் பயன்பாடு வணிக ரீதியாக ஐரோப்பிய நாடுகளில் பரவ ஆரம்பித்தது. 1559 ஆம் ஆண்டு ஸ்பானிய அரசர் ஃபிலிப் (II)ன் ஆணைக்கிணங்க ஹெமாண்டெஸ் டி பான்கலோவால் மேற்கத்திய நாடுகளுக்கு விதைகள் கொண்டுவரப்பட்டு பரப்பப்பட்டன. 1700களில் ஐரோப்பிய நாடுகளுக்கும் அதன் காலணிய நாடுகளுக்கும் புகைக்கவும், மெல்லவும், மூக்குப்பொடியாகவும் மிகப்பெரிய ஆலைப்பொருளாக பரவின. [11][12] 18ஆம் நூற்றாண்டில் கியூபா நாட்டிலும், கரீபியன் தீவுகளிலும் முக்கிய பணப்பயிராகத் திகழ்ந்தது. கியூபாவின் சிகரட்டுகள் உலகப்பிரசித்தி பெற்றவை. 19ஆம் நூற்றாண்டில் ஜேம்ஸ் பான்சோக் என்பவரால் கண்டறியப்பட்ட சாதனம் புகையிலை சிகரட்டுகள் உற்பத்தியை விரைவுபடுத்தி எளிமையாக்கியது. இது புகையிலை வணிகத்தின் வளர்ச்சிக்கு உதவியது. 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் புகையிலையின் தீங்கு, உடல்நலக்கேடு பற்றிய விழிப்புணர்வு பெறும் வரையிலும் புகையிலை உற்பத்தி மிகவும் வளர்ச்சியடைந்து கொண்டே இருந்தது.[13][14] 17ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.[15] தற்கால பயன்பாடு 20ஆம் நூற்றாண்டின் மத்தியில் பல்வேறு அறிவியற் கண்டுபிடிப்புகளினாலும், புகையிலையின் தாக்கம் பற்றிய அறிவாலும், புகையிலையின் கட்டுப்படு முக்கியத்துவம் பெறத்தொடங்கியது. புகையிலையால் புற்று நோய், சுவாசக் கோளாறு, மற்றும் இரத்த சுழற்சி மண்டல பாதிப்புகள் போன்றவை ஆராய்ந்தறியப்பட்டன. ஐக்கிய அமெரிக்காவில் கொணரப்பட்ட புகையிலை ஒப்பந்தங்களால் புகையிலைப் பொருட்கள் பற்றிய விளம்பரங்கள், சந்தைப்படுத்தல், முதலியவற்றிற்கு வருடாந்திர ஒப்பந்தத் தொகை பெறப்பட்டது. 2003 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலை பற்றிய தீங்கு, கட்டுபடுத்துவதன் முக்கியத்துவம், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் போன்றவற்றிற்கான பரிந்துரைகளில் 168 நாடுகள் கையெழுத்திட்டன.[16] தாவர-உயிரியல் புகையிலை ஆண்டுக்கொருமுறை சாகுபடி செய்யப்படும் பூண்டுத்தாவரம் பணப்பயிர் ஆகும். சொலனேசி குடும்பத்தைச் சேர்ந்த நிக்கோடியானா பேரினத்தைக் கொண்ட இப்புகையிலையில் பல சிற்றினங்கள் உள்ளன. உயிர்-வேதிப்பொருள்-நிகோடின் நிகோட்டினாத் தாவரத்தின் ஆல்கலாய்டுகள் போதையை ஏற்படுத்தி அடிமையாக்க வல்லன. மேலும் பூச்சிகளின் நரம்பு நச்சாகவும் செயல்படுகிறது. புகையிலையின் உலர்ந்த நிலையில் 0.6% முதல் 3.0% நிக்கோடின் உள்ளது. நிக்கோடின் அசிட்டைல் கொலைன் ரிசப்டார்களில்(nAChRs), அதன் இரு துணை மூலக்கூறுகளைத் (nAChRα9 and nAChRα10) தவிர நிகோட்டின் புகுவாய்களில் (ரிசப்டார்களில்) முதன்மை இயக்கியாக (அகோனிஸ்ட்) செயல்படுகிறது. இவைகளே மூளையுடன் தொடர்பு கொண்டு புகையிலை அடிமைத்தனத்திற்கு காரணமாகின்றன. புகையிலையை நுகர்ந்தவுடன் அது நிக்கோட்டின் மூலக்கூறாக இரத்த ஓட்டத்தில் கலந்து 10-20 நொடிகளில் மூளையை அடைகிறது. இப்போதை சில நொடிகளே மதிமயக்கச் செய்து அதனை நுகரத் தூண்டுகிறது.[17] வேளாண் உற்பத்தி ஏனைய பயிர்கள் உற்பத்தியைப்போன்றே புகையிலையும் விதைகளின் மூலம் வேளாண் சாகுபடி செய்யப்படுகிறது.பணப்பயிரான புகையிலை விதைகள் நன்கு உலர்ந்த மண்ணில் மேற்பரப்பில் தூவப்படுகின்றன. சூரிய ஒளி, நீர், போன்ற புறக்காரணிகளால் அவை முளைத்து மேலெழுகின்றன. புகையிலை ஜெனிவாவில் விதைப்படுக்கையானது மரத்தூளினாலோ, குதிரை சாணத்தாலோ ஆன உரப்படுக்கையில் விதைக்கப்படுகின்றன. சில தெள்ளுப்பூச்சிகள் (எபிட்ரிக்ஸ் குகுமிரிஸ், எ.ப்யூபசென்ஸ்) புகையிலையில் நோயினை உண்டாக்குகின்றன. 1876ஆம் ஆண்டு 50% புகையிலைச் சாகுபடி பாதிப்பிற்கு காரணமாகின. பின்னர் 1890களில் கடைபிடிக்கப்பட்ட தீங்குயிரித் தடுப்பு முறைகளால் இழப்பு கட்டுப்படுத்தப்பட்டது. சாகுபடி &amp; புகையிலை பதனிடல் நன்கு விளைந்த புகையிலைகள் அறுவடை செய்யப்பட்டு, அல்லது கிள்ளப்பட்டு பதனிடல் (அ) புகையிலைப் பதனீடு செய்யப்படுகிறது. இதனால் புகையிலையிலுள்ள ஈரத்தன்மை, பச்சையம் முதலியன முழுமையாக / பகுதியளவு நீக்கப்பட்டு சுவையும், நறுமணமுமூட்டப் படுகிறது. பதனிடல் முறைகள் காற்றில் பதனிடல் தீயில் பதனிடல் சூரிய ஒளியில் பதனிடல் நிழலில் பதனிடல் வெப்பத்தில் பதனிடல் பதனிட்டு பதனிடல் வகைகள் புகையிலையின் வகைகளாவன, நறுமணப் புகையிலை சிறிய நெருப்பினால் தீட்டி புகையூட்டி உணர்த்தப்பட்டு, நறுமணமும், சுவையுமிக்க புகையிலைகள் புகையிலை நுகர்வுக்குழாய்களில் நுகர பயன்படுத்தப்படுகின்றன. இவைப் பெரும்பாலும் ஐக்கிய அமெரிக்காவின் வெர்ஜீனியாவிலுள்ள டென்னஸ், மேற்கு கென்டகியில் விளைவிக்கப்படுகின்றன. தீயில் உணர்த்தப்பட்ட இப்புகையிலைகள் கென்டகி, டென்னஸ் பகுதிகளில் மெல்லும் புகையிலையாகவும், சிகரட்டுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. லடாக்கியா புகையிலை சிரியா நாட்டின் துறைமுக நகரமான லடாக்கியாவில் மிகவும் பிரபலமான புகையிலை, லடாக்கியா புகையிலை ஆகும். இது தற்போது முக்கியமாக சிப்ரஸ் தீவுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. இலைகள் அறுவடை செய்யப்பட்ட பின்னர் சூரிய ஒளியில் உலர்விக்கப்பட்டு பின்னர் களஞ்சியத்தில் நிரப்பப்பட்டு பின்னர் புகை மூலம் பதனீடு (அ) உணர்த்தல் செய்யப்படுகிறது. பொலிவிலைப் புகையிலை அமெரிக்க குடியுரிமைப் போர்கள் நடக்கும் வரை தீயில் வாட்டப்பட்ட கரும்புகையிலைகளே அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தன. 1812ஆம் ஆண்டிற்குப் பிறகு, மென்மையான, மிருதுவான, அதிக சுவையும், மணமும் கொண்ட புகையிலை உற்பத்தி மற்றும் தேர்வை இன்றியமையாததாக இருந்தது. அமெரிக்க விவசாயிகளின் பல்வேறு ஆராய்ச்சிகளினால் பல்வேறு உணர்த்தல் முறைகள் 1839ஆம் ஆண்டு வரையிலும் முயற்சி செய்யப்பட்டன. 1839ஆம் ஆண்டு வடக்கு கரோலினாவைச் சேர்ந்த மாலுமி அபிசா ஸ்லேடின் பணியாளரான ஸ்டீபன் பொலிவிலைப் புகையிலையை ஏதேச்சையாக கண்டறிந்தார். தீயிலுணர்த்த நிலக்கரியைப் பயன்படுத்தினார். இதனால் வெளிறிய மஞ்சள் (அ) தங்க நிறத்தில் புகையிலைகள் உலர்ந்து பெறப்பட்டன. கொரோஜோ க்ரியொலோ தோகா ஈக்குவடோரியன் சுமத்ரா ஹபானோ ஹபானோ 2000 மதுரோ கிழக்கத்திய புகையிலை பெரிக் வகை 22 ஒய் 1 (Y1) நிழல் புகையிலை தோக் லாவ் பொருளாதாரம் உலகளாவிய உற்பத்தி முக்கிய தயாரிப்பாளர்கள் ஆண்டொன்றிற்கு , சுமார் 6.7 மில்லியன் டன்கள் புகையிலை உலகம் முழுதும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் சீனா (39.6%), இந்தியா (8.3%), பிரேசில் (7.0%) ஐக்கிய அமெரிக்கா (4.6%).[19] விழுக்காட்டில் முக்கிய புகையிலை உற்பத்தி நாடுகளாக உள்ளன. சீனா உலகின் முதல்நிலை புகையிலை உற்பத்தியாளர்களாக சீனா விளங்குகிறது. சுமார் 2.1 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் 20 மில்லியன் ஊரக, கிராம சீனமக்கள் இதனை உற்பத்தி செய்கின்றனர்.[20] புகையிலை உற்பத்தியில் முன்னிலை வகித்தாலும் பருத்தி, கரும்பு போன்ற இலாபம் தரும் பணப்பயிராக இவை திகழ்வதில்லை. ஏனெனில் சீன அரசு புகையிலைக்கு வரிகளும், கட்டுப்பாடுகளும், சந்தை விலைநிர்ணயமும் செய்கின்றது. 1982ல் அமைக்கப்பட்ட சீன புகையிலைக்கட்டுப்பாடு முன்னுரிமை மேலாண் கழகம் (STMA), சீனாவின் எல்லைப்பகுதியின் புகையிலை உற்பத்தி, சந்தைப்படுத்தல், ஏற்றுமதி, இறக்குமதி, மற்றும் 12% மொத்த தேசிய வருவாய் வளர்ச்சி, போன்றவற்றைக் கண்காணிக்கின்றன. மேலும் புகையிலை உற்பத்தியைக் கட்டுப்படுத்த சீன அரசு நிறுவனங்கள், சில்லரை விற்பனையாளார்களிடம் வரி விதிக்கின்றது. இந்தியா ஆந்திர மாநிலத்திலுள்ள குண்டூரில் புகையிலை மையத் தலைமையகம் உள்ளது.[21] இந்தியாவில் சுமார் 96,865 அங்கீகரிக்கப் பட்ட விவசாயிகள் இத்தொழிலை செய்து வருகின்றனர்.[22] மேலும் பலர் அனுமதியின்றி சாகுபடி செய்கின்றனர். சுமார் 3120 புகையிலை உற்பத்தி மையங்கள் நாடு முழுவதும் இயங்குகின்றன.[23]நாடு முழுதும் உள்ள வேளாண் நிலங்களில் சுமார் 0.25 விழுக்காடு நிலங்கள் புகையிலை வேளாண்மைக்கு பயன்படுத்தப்படுகிறது.[24] பிரேசில் பிரேசிலில் சுமார் 1,35,000 விவசாயக் குடும்பங்கள் அவர்களின் முக்கியப் பொருளாதாரத்தேவைக்காக புகையிலை சார்ந்த தொழில்களைச் செய்கின்றனர். நுகர்வு சுருட்டு சிம்லி பீடி புகையிலை சீவல், துருவல்கள் சிகரெட்டுகள் ஹுக்கா குட்கா மூக்குப் பொடிகள் புகையிலைக் களிம்புகள் புகையிலை நீர் புகையிலைத் துண்டுகள் குட்கா பான் மசாலா உற்பத்தி சிக்கல்கள் குழந்தைத் தொழிலாளர்கள் புகையிலை சார்ந்த தொழில்களில் குழந்தைத் தொழிலாளர்கள் உலகில் சீனா, இந்தியா, அர்ஜெண்டினா, இந்தொனேசியா, மலாவி, பிரேசில், மற்றும் ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளில் [25] பயன்படுத்தப்படுகின்றனர். புகையிலை மற்றும் புகைப்பதனால் ஏற்படும் விளைவுகள் இறப்பு உலக அளவில் தவிர்க்கக் கூடிய மரணங்கள் நிகழ்வதற்கு புகையிலை ஒரு முன்னணிக் காரணியாக விளங்குகிறது. ஒரு சிகரட் புகைக்கப்படும் போது தோராயமாக ஒருவர் தன் ஆயுட்காலத்தின் 11 நிமிடங்களை இழக்கின்றார். ஒவ்வொரு 6 நொடிப்பொழுதிலும் உலகில் ஒரு உயிரழப்பு புகையிலையால் ஏற்படுகிறது. புகைப்பழக்கம் உடையவர்கள் இயல்பான இறப்பு விகிதத்தைக் காட்டிலும் 60-80% அதிகம்.[26] ஒருவருடத்திற்கு சுமார் 5 மில்லியன் மக்கள் புகையிலை சார்ந்த நோயால் மடிகின்றனர்.[27][28] புற்றுநோய் புகையிலைப் பயன்பாடால் புற்றுநோய்கள் ஏற்பட அதிகம் வாய்ப்புகள் உள்ளன. சான்றாக, நுரையீரல் புற்றுநோய்,[29] குரல்வளை, கழுத்து புற்றுநோய்,[30][31] இரத்த, இரத்தக்குழாய் புற்றுநோய்,[32] சிறுநீரக புற்றுநோய்,[33] வாய், உணவுக்குழாய் புற்றுநோய்,[34] கணையப்புற்றுநோய்,[35] வயிற்றுப் புற்றுநோய்,[36] நுரையீரல் பாதிப்பு நுரையீரல் வளர்ச்சியைக் குறைக்கிறது. சுவாசப்பாதை குறுக ஆரம்பிக்கிறது. புகையிலை புகைப்பதால் நுரையீரல் சீர்கெட்டு பல்வேறு சுவாசநோய்கள் ஏற்பட முக்கியக் காரணமாக அமைகிறது. இதர பாதிப்புகள் இதய நாள நோய் - ரத்த அழுத்தம் அதிகரிப்பு, இதயத் துடிப்பு அதிகரித்தல், இரத்தக் குழாய்களின் தன்மை கடினமடைகிறது. வாய், முகர்தல், சுவைக் கோளாறு - வாயில் ஈறுகள் நிறமாறத்திற்குக் காரணமாகிறது. சுவை, நுகரும் திறனைக் குறைக்கிறது. புகையினால் வாய்ப்புண்களை ஏற்படுத்துகிறது. பக்கவாதம்,மனநோய்கள் - புகைத்தல் மூளையை பாதித்து பக்கவாதம் வரக் காரணமாகிறது. சிறுநீரக நோய் நோய்த்தொற்று ஆண்மைக்குறைபாடு பெண் கருவுறாமை கர்ப்ப பிரச்சனைகள் மருந்து இடைவினைகள் உலக புகையிலை ஒழிப்பு தினம் உலக சுகாதார நிறுவனத்தால் ஒவ்வொரு ஆண்டும் உலக புகையிலை ஒழிப்பு தினம் மே மாதம் 31 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் அபாயம் 2017 ல் உலக சுகாதார நிறுவனம் புகையிலையும் அதன் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து விழிப்புணர்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. [37] புகையிலை சார்ந்த கழிவுகள் சுமார் 7000ற்கும் மேற்பட்ட நச்சு வேதிப்பொருட்களையும், மனித புற்று நோய்க்காரணிகளையும் சுற்றுச்சூழலில் பரப்பி, அதனை மாசுபடுத்துகின்றன.[38] புகையிலையிலிருந்து வெளியேறும் புகை நச்சு சுமார் 1000 டன்கள் மனித புற்று நோய்க்காரணிகளை வளிமண்டலத்தில் பரப்புகின்றன. தினமும் விற்பனையாகும் 15 பில்லியன் சிகரட்டுகளில் சுமார் 10 பில்லியன் சிகரட் கழிவுகள் சுற்றுச்சூழலில் பரப்பப்படுகின்றன. சுமார் 30%-40% கடற்கரை மற்றும் ஊரகக் கழிவுகள் சிகரட் பஞ்சுகளைக் கொண்டிருக்கின்றன. பொருளாதாரம் &amp; விளம்பரப்படுத்தல் புகையிலையின் தீங்கு, பக்க விளைவுகளைக் கருத்தில் கொண்டு புகையிலையின் விளம்பரங்கள் மற்றும் சந்தைபடுத்டுதலில் பல்வேறு கட்டுப்படுகள் மற்றும் தடைகள் உலகம் முழுவதிலும் கடைபிடிக்கப் படுகிறது. இந்தியாவில் புகையிலை வஸ்துகளில் புகையிலையின் அபாயம் பற்றிய படங்கள் இடம் பெற வேண்டும். பொது இடங்களில் புகைப்பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது. திரைப்படம் இந்திய புகையிலைக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுகாதார விழிப்புணர்விற்காக, திரைப்படங்களில் புகைப்பிடித்தல் பற்றிய விழிப்புணர்வு காட்சிகள் தலையங்கம், இடைவேளை, இறுதி போன்றவற்றில் இடம்பெறச் செய்தல் வேண்டும். திரைப்படங்களில் புகைப்பிடித்தல் காட்சிகள் வரும்போது "புகைப்பிடித்தல் கேடு தரும்" உள்ளிட்ட வாசகங்கள் ஆன்கிலம் மற்றும் மாநில மொழிகளில் இடம் பெறல் வேண்டும். மேற்கோள்கள் பகுப்பு:காசுப் பயிர்கள்
புகையிலை எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
கி.மு 1400-1000
2,305
tamil
cd1314476
பெரியம்மை (Smallpox), மனிதர்களை மட்டும் தாக்கும் அதிகத் தொற்றுத் தன்மை கொண்ட நோயாகும். இது வரியோலா மேசர் (Variola major) மற்றும் வரியோலா மைனர் (Variola minor) ஆகிய இரு அதி நுண் நச்சுயிர்களால் உண்டாகிறது.[1] இவற்றுள் வரியோலா மேசர் அதிக உயிர்ப்பலிகளை உண்டாக்க வல்லதாகும். இக்கிருமி தாக்கியவர்களுள் 20 முதல் 40 விழுக்காட்டினர் இறந்து விடுகின்றனர். வரியோலா மைனர் கிருமி தாக்கியவர்களுள் ஒரு விழுக்காட்டினர் மட்டுமே இறக்கின்றனர். உயிர் பிழைத்தவர்களில் பலரும், (ஒன்று அல்லது) இரண்டு கண்கள் குருடாவதுடன், நீங்காத தழும்புகளையும் பெறுகின்றனர். 20ஆம் நூற்றாண்டில் இந்நோய் காரணமாக 300-500 மில்லியன் மக்கள் இறந்தனர். 1967ல் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி அந்த ஆண்டு மட்டும் 15 மில்லியின் மக்கள் அந்நோய்யால் பாதிக்கப்பட்டு அவர்களுள் இரண்டு மில்லியன் மக்கள் இறந்தனர். எட்வர்ட் ஜென்னர் இந்நோய்க்கான தடுப்பு மருந்தை 1796 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய இராச்சியத்தில் ஜேனட் பார்க்கர் என்பவர் இந்நோய் தாக்கி இறந்தார். அதன் பின் இந்நோயின் தாக்குதல் எங்கும் அறியப்படவில்லை. வரலாறு பெரியம்மையின் முதல் தோற்றம் இன்னும் தெரியவில்லை. ஆனால் பல நூற்றாண்டுகளாக, இந்தக் கொடிய நோய், உலகின் பல்வேறு இடங்களில் தாக்கியுள்ளது. இதற்கான காலவரிசை[2] கீழே உள்ளது 3ம் நூற்றாண்டு - எகிப்து நாட்டில் வாழ்ந்த பார்வோன் ராம்சேஸின் மம்மியில், பெரியம்மையின் தடயங்கள் தென்பட்டன. 3ம் நூற்றாண்டிலே, பெரியம்மை இவ்வுலகில் இருந்தது என்பதற்கு இதுவே சான்றாகும். 4ம் நூற்றாண்டு - சீனாவில், இந்த நோயின் அறிகுறிகளைப் பற்றி எழுத்து வடிவில் 4ம் நூற்றாண்டில் பதிவு செய்துள்ளனர். இந்த நோயிலிருந்து குணமடைய தேவன் 'யோ ஹோ லாங்'கிடம் மக்கள் வேண்டியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 6ம் நூற்றாண்டு - சீனாவுக்கும், கொரியாவுக்கும் இடையே வர்த்தகம் அதிகரித்த காலம், 6ம் நூற்றாண்டு. இதன் மூலமாக கொரியாவுக்கும், சப்பானுக்கும் பெரியம்மை பரவத் தொடங்கியது. 'சிவப்பு வண்ணம்/ஒளி பெரியம்மையை நீக்கும்' என்னும் கட்டுக்கதை உலகும் முழுவதும் நம்பப்பட்டது. சப்பான் கலாச்சாரத்திலும் அப்படித்தான், பெரியம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் சிவப்பு உடைகளை அணிந்தனர்.[3] 7ம் நூற்றாண்டு - 7ம் நூற்றாண்டில், இந்திய துணைக் கண்டத்திற்கு பரவியது. பின்னர், அரேபியர்கள் மூலம் வடக்கு ஆபிரிக்காவுக்குப் பரவத் தொடங்கியது. 10ம் நூற்றாண்டு - 10ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிரேக்கம், துருக்கி, ரோமெனியா போன்ற நாடுகள், பெரியம்மையால் பாதிக்கப்பட்டன. ஆசியாக் கண்டத்தில் வர்த்தகம் மூலமாகப் பெரியம்மை பரவியதாகக் கருதப்படுகிறது. 11ம் நூற்றாண்டு - ஐரோப்பிய கண்டத்தில் பெரியம்மை பரவியது. சிலுவைப் போரின் காரணமாக, ஐரோப்பிய கிருத்துவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குக் குடிபுகுந்த போது பரவியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 13ம் நூற்றாண்டு - மக்கள் தொகை பெருக்கத்தினாலும், உலகம் சுற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், பெரியம்மை வடக்கு ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்துக்கு பரவியது. 15ம் நூற்றாண்டு - 15ம் நூற்றாண்டில், பெரியம்மை ஐரோப்பிய நாடுகளில் பரவலாக தென்பட்டது. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த மக்கள் மேற்கொண்ட கடல் வழி பயணத்தால், கிழக்கு ஆபிரிக்காவுக்குப் பெரியம்மை பரவியது 16ம் நூற்றாண்டு - ஐரோப்பியர்களின் குடியேற்றத்தினாலும், ஆபிரிக்காவின் அடிமை வர்த்தகத்தினாலும், அமெரிக்கக் கண்டங்களுக்கு பெரியம்மை பரவியது. 1520ல் ஸ்பாணியர்கள் தற்போதைய மெக்ஸிகோவில் பெரியம்மையபை் பரப்பினர். அப்போது அங்கு வாழ்ந்த அஸ்டெக் நாகரிகமே அழிந்ததிற்கு பெரியம்மையும் ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதற்கிடையே 16ம் நூற்றாண்டில், வரியோலேசன் என்னும் பெரியம்மையின் தடுப்பு முறை சீனாவிலும் இந்தியாவிலும் பரவலாக பின்பற்றபட்டது. வரியோலேசன் என்பது, பெரியம்மையால் பாதிக்கப்பட்டவரின் பொருக்கை எடுத்து நன்றாக வரண்ட பிறகு, அதை பொடித்து வைப்பதாகும். பெரியம்மையால் பாதிப்படையாதவர்கள், இந்த பொடியை மூச்சு வழியாக உள்ளிழுக்க வேண்டும். இதன் மூலம் பெரியம்மை கட்டுப்படுத்தினர். 17ம் நூற்றாண்டு - 'வரியோலேசன்' தடுப்பு முறை, ஒட்டோமன் பேரரசாங்கத்திலும் பின்பற்றத் தொடங்கினர். இதன் பொருட்டு, துருக்கி மற்றும் வட ஆபிரிக்கா நாடுகளில், இந்த தடுப்பு முறை பயன்படுத்தப்பட்டது. 18ம் நூற்றாண்டு - 'வரியோலேசன்' தடுப்பு முறை இங்கிலாந்து நாட்டில் 'லேடி மேரி வார்ட்லி மான்டெகு' அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இவர், துருக்கி நாட்டின் ஆங்கிலேய தூதரின் மனைவி ஆவார். இவர் துருக்கியில் பெரியம்மையால் நோயுற்ற போது, தனது இரு குழந்தைகளுக்கும் 'வரியோலேசன்' தடுப்பு முறையை அளித்தார். இதற்கிடையே 1796ம் ஆண்டில், 'எட்வார்ட் ஜென்னர்' மாட்டு அம்மை மூலமாக, பெரியம்மையை தடுக்க முடியும் என நிரூபித்தார். இதுவே, பெரியம்மையின் தடுப்பு ஊசிக்கு அடிப்படையாக அமைந்தது. 20ம் நூற்றாண்டு - 20ம் நூற்றாண்டில், பெரியம்மை ஆபிரிக்கா, ஆசியா மற்றும் தென் அமெரிக்கா கண்டங்களில் இன்னும் தென்பட்டது. ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க கண்டங்களில் தடுப்பூசி மூலம் பெரும்பாலும் கட்டுப்படுத்தப் பட்டிருந்தது. உலகளாவிய வேருடன் அழித்தல் முகாம் மூலம், 1980ம் ஆண்டில் பெரியம்மை முற்றிலுமாக நீக்கப்பட்டது. அறிகுறிகள் பெரியம்மையால் பாதிக்கப்பட்டவர், குணமடையும் முன் கீழ் காணும் கட்டங்களை கடக்க வேண்டும். ஒவ்வொரு கட்டத்திற்கும் சில அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் உள்ளன. [4] 1) நோயரும்பல்: இந்த காலக் கட்டத்தில், பெரியம்மையின் நோய்க்கிருமி மனிதனின் உடலில் பெருகிக்கொண்டிருக்கும். ஆனால் எந்த அறிகுறியும் தெரியாது. அறிகுறிகள்: இல்லை காலம்: 7 - 19 நாட்கள் (பெரும்பாலும் 7 -14) வரை நீடிக்கும். பரவும் தன்மை: இல்லை 2) ஆரம்ப அறிகுறிகள்: இந்த கட்டத்தில், நோயுற்றவர்கள் எந்த வேலையும் செய்ய இயலாத அளவிற்கு, சோர்வு அடைந்திருப்பார்கள். அறிகுறிகள்: அதிகபடியான காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி மற்றும் அவ்வப்போது வாந்தியெடுத்தல் காலம்: 2 - 4நாட்கள் பரவும் தன்மை: சில சமயங்களில் 3) முற்கால வேனற்கட்டி: சின்ன வேனற்கட்டிகள், முதலில் நாக்கிலோ அல்லது வாயினிலோ வரும். இந்த கட்டிகள் புண்னாகி வெடித்தப்பின், இந்த நோய்கிருமி பெரிய அளவில் உடம்பு முழுவதும் பரவும். முகத்தில் ஆரம்பித்து, 24 மணி நேரத்திற்குள், கை மற்றும் கால் வரை, உடம்பில் எல்லா இடங்களிலும் பருக்கள் தென்பட ஆரம்பிக்கும். இப்படி கட்டிகள் தென்படும் தருணத்தில் காய்ச்சல் சற்று தனிந்திருக்கும். நான்காம் நாளில், எல்லா கட்டிகளும் தடித்து புண்ணாகி விடும். இந்த புண்ணில் தடித்த, தெளிவற்ற திரவம் இருக்கும். இந்த தருணத்தில் காய்ச்சல் மீண்டும் அதிகரிக்கும் அறிகுறிகள்: அதிகபடியான காய்ச்சல், உடம்பு முழுவதும் தடித்த, தெளிவற்ற வேனற்கட்டிகள் காலம்: 4நாட்கள் பரவும் தன்மை: ஆமாம், அதிகமாக பரவும் கட்டம் 4) சீழ் கொப்புளங்கள் மற்றும் பொருக்குகள்: இந்த கட்டத்தில், உடம்பில் உள்ள புண்கள், கொப்புளங்களாக மாறும். இந்த கொப்புளங்களின் தன்மை, சற்று எழுப்பப்பட்ட, வட்டமாகவும் தொடுவதற்கு தோலுக்குள் பட்டாணி இருப்பது போல தோன்றும். சுமார் 5 நாட்களுக்கு பிறகு, இந்த கொப்புளங்களின் மேல் ஓடுகள் போன்று உருவெடுக்கும், பின்னர் பொருக்களாகும். பொருக்கள் என்பது காய்ந்த புண்ணின் மேல் படிந்திருக்கும் ஓடு போன்றது. அறிகுறிகள்: கொப்புளங்கள் மற்றும் பொருக்குகள் காலம்: சுமார் 10 நாட்கள் நீடிக்கும் பரவும் தன்மை: ஆமாம் 5) பொருக்குகள் உதிர்வது: இந்த கட்டத்தில், காய்ந்த பொருக்கள் உதிர ஆரம்பிக்கும். காய்ந்த போதிலும், இன்னும் பரவும் தன்மை கொண்டது. ஆகையால் கவனமாக இருக்க வேண்டும். உதிர்ந்தப் பின், உடம்பில் தழும்புகள் இருக்கும். அறிகுறிகள்: பொருக்குகள் உதிரும் காலம்: 6 நாட்கள் வரை நீடிக்கும் பரவும் தன்மை: ஆமாம் 6) பொருக்கின்மை: எல்லா பொருக்குகளும் உதிர்ந்தப் பின், நோய் பரவாது. பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டவர், முழுவதும் குணமடைவதற்கான அறிகுறி இது. பரவும் தன்மை: இல்லை மருத்துவ சிகிச்சை பெரியம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை ஒன்றும் கிடையாது. எந்த ஒரு சிகிச்சையும் பயனளிக்காது. ஆயினும், சில சமயங்களில் நச்சுயிருக்கு எதிரான சில மருந்துகளும், நுண்ணுயிர்க்கு எதிரான சில மருந்துகளும் பரிந்துரைக்கப்படலாம்.[5] இவை பெரியம்மையின் நச்சுயிரை எதிர்ப்பதற்காக இல்லை. பெரியம்மையால் பாதித்த போது மற்ற நோய்கள் தாக்கக் கூடாது என்பதற்காக கொடுக்கப்படலாம். வருமுன் காத்தல் பெரியம்மைக்கு எந்த மருத்துவ சிகிச்சையும் இல்லாததால், இதனை வருமுன் காப்பதே நல்லது. இதற்காக தடுப்பூசிகள் உள்ளன. பெரியம்மை நச்சுயிர்கள் தாக்கும் முன் எடுத்துக் கொண்டால், நோயிலிருந்து முற்றிலுமாக காத்திடலாம் நச்சுயிர்கள் தாக்கிய 3 நாட்களுக்குள் எடுத்துக் கொண்டால், தடுப்பூசி அந்த நச்சுயிகள் பெருக விடாமல் காக்கும். இதனால் பாதிப்பு இருக்காது தாக்கிய 4-7 நாட்களுக்குள் எடுத்துக் கொண்டால், நோயிலிருந்து காத்துக் கொள்ள இயலும். இருப்பினும் நோய் வசப்பட்டால், அதன் தாக்கம் சற்று குறைவாகத் தான் இருக்கும் [6] வேருடன் அழித்தல் பெரியம்மை தொற்றும் தன்மை கொண்டிருந்தமையால், இது மிகவும் கொடிய நோயாக கருதப்பட்டது. பெரியம்மைக்கு தடுப்பு ஊசிகள் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்திலே இருந்த போதிலும், ஆபிரிக்கா, ஆசியா கண்டங்களில் இந்த நோய் பரவிக்கொண்டு தான் இருந்தது. 1959ம் ஆண்டில் தான், உலக சுகாதார மையம், பெரியம்மையை முற்றிலுமாக நீக்க முடிவெடுத்தது. நிதி பற்றாகுறையினாலும், போதுமான தன்னார்வத் தொண்டர்கள் இல்லாததாலும், இதனை வெற்றிகரமாக செயலாக்க இயலவில்லை. 1967ம் ஆண்டில், மீண்டும் இந்த முயற்சி தீவிரப்படுத்தப்பட்டது. அழித்த காலவரிசை பெரியம்மையின் கடைசி தோற்றங்கள், [7] வட அமெரிக்கா கண்டம் - 1952 தென் அமெரிக்கா கண்டம் - ஏப்ரல் 19, 1971 (பிரேசில்) ஐரோப்பிய கண்டம் - 1953 ஆப்ரிக்கா கண்டம் - அக்டோபர் 12, 1977 (சோமாலியா) ஆசியா கண்டம் - அக்டோபர் 16, 1975 (வங்காளதேசம்) ஆஸ்திரேலியா கண்டம் - நோய் இங்கு பரவியதற்கு எந்த அடையாளமும் இல்லை இறுதித் தோற்றம் 1975ம் ஆண்டில், வங்காளதேசத்தில், 'ரஹிமா பானு' என்னும் 3 வயது சிறுமி பெரியம்மை 'வரியோலா மேசர்' நோயால் இயற்கை முறையில் பாதிக்கப்பட்டு குணமடைந்த கடைசி மனிதராவார். அக்டோபர் 12, 1977 அன்று, 'அலி மாவோ மாலின்' என்னும் சமையல்காரர், பெரியம்மை 'வரியோலா மைனர்' நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார். 1978ம் ஆண்டில், 'ஜேனட் பார்க்கர்' என்னும் மருத்துவ புகைப்படம் எடுப்பவர், பெரியம்மை நோயின் ஆராய்ச்சியின் போது நோயுற்று, செப்டம்பர் 11 அன்று இறந்தார். பெரியம்மை நோய் வேருடன் அழிக்கப்பட்டதாக, மே 8, 1980 அன்று, உலக சுகாதார் சட்டசபையில், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.[8] உலகிலிருந்து பெரியம்மை நொய் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, 27 ஆண்டுகளாகிறது (2017ல்). மேலும் படிக்க Archives of the smallpox eradication programme, a guide and inventory, WHO, Geneva, 1982, 2 vol மேற்கோள்கள் பகுப்பு:நோய்கள்
பெரியம்மை நோய் எந்த ஆண்டு இந்தியாவில் முதல் முதலில் தோன்றியது?
7ம் நூற்றாண்டில்
1,940
tamil
d4adce367
கிரேக்க எழுத்துக்கள் என்பன கிரேக்க மொழியை எழுதப் பயன்பட்ட 24 எழுத்துக்களைக் கொண்ட ஒரு தொகுதி ஆகும். இது கிமு 9 ஆம் அல்லது 8 ஆம் நூற்றாண்டிலிருந்து பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு உயிரெழுத்துக்கும், மெய்யெழுத்துக்கும் தனித்தனி எழுத்துக்களைப் பயன்படுத்தும் எழுத்து முறை என்ற அளவில் இதுவே உலகின் மிகப் பழமையான எழுத்து முறையாகும். இது இன்றுவரை பயன்பாட்டில் உள்ளது. கிமு இரண்டாம் நூற்றாண்டில் இருந்து கிரேக்க எண்களைக் குறிக்கவும் எழுத்துக்கள் பயன்பட்டன. கிரேக்கம்##போனீசியன்#எண்########Α α ἄλφα άλφα Alpha [a] [aː] [a] Aleph a a 1Β β βῆτα βήτα Beta [b] [v] Beth b v 2Γ γ γάμμα γάμμα γάμα Gamma [ɡ] [ʝ] முன் [e̞] அல்லது [i]; [ɣ] வேறுவழியில் Gimel g gh, g, j 3Δ δ δέλτα δέλτα Delta [d] [ð] Daleth d d, dh 4Ε ε εἶ ἒ ψιλόν έψιλον Epsilon [e] [e̞] He e e 5Ζ ζ ζῆτα ζήτα Zeta [zd] ([dz]) [zː] [z] Zayin z z 7Η η ἦτα ήτα Eta [i] Heth e, ē i 8Θ θ θήτα Theta Teth th th 9Ι ι ιώτα γιώτα Iota [i], Yodh i i 10Κ κ κάππα κάπα Kappa முன் [e̞] அல்லது [i]; வேறுவழியில் Kaph k k 20Λ λ λάβδα λάμδα λάμβδα Lambda [l] [l] Lamedh l l 30Μ μ μῦ μι μυ Mu [m] [m] Mem m m 40Ν ν νῦ νι νυ Nu [n] [n] Nun n n 50Ξ ξ ξεῖ ξῖ ξι Xi [ks] [ks] Samekh x x, ks 60Ο ο οὖ ὂ μικρόν όμικρον Omicron [o] [o̞] 'Ayin o o 70Π π πεῖ πῖ πι Pi [p] [p] Pe p p 80Ρ ρ ῥῶ ρω Rho [r], [r̥] [r] Resh r (: rh) r 100 Σ σ ς (final) σίγμα Sigma Shin s s 200Τ τ ταυ Tau Taw t t 300Υ υ ύψιλον Upsilon [y] [yː] ([u] [uː]) [i] Waw u, y y, v, f 400Φ φ φεῖ φῖ φι Phi [pʰ] [f] நிச்சயமற்ற ph f 500Χ χ χεῖ χῖ χι Chi [ç] முன் [e̞] அல்லது [i]; [x] வேறுவழியில் ch ch, kh 600Ψ ψ ψεῖ ψῖ ψι Psi [ps] [ps] ps ps 700Ω ω ὦ ὦ μέγα ωμέγα Omega [ɔː] [o̞] 'Ayin o, ō o 800 கிரேக்கம்போனீசியன்###எண்###Ϝ ϝ(Ͷ ͷ) WawDigammaw6Ϛ ϛStigma –st6Ͱ ͱ HethHetah –Ϻ ϻ SadeSans –Ϟ ϟ(Ϙ ϙ) QophKoppaq90Ϡ ϡ(Ͳ ͳ) SadeSampi –ss, [ks], 900Ϸ ϸ ShinSho – – š – வரலாறு தோற்றம் கிரேக்க எழுத்துக்கள் கி.மு ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலோ அல்லது கி.மு எட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலோ வெளிவந்தன. இக் கிரேக்க எழுத்துக்கள் போனீசியன் எழுத்துக்களிலிருந்து வந்தவை எனக் கூறப்படுகின்றது. மேற்கோள்கள் பகுப்பு:எழுத்து முறைகள்
கிரேக்க மொழியில் எத்தனை எழுத்துகள் உள்ளது?
24
58
tamil
6b4c9d95e
ஒரு சாதாரண வளர்ந்த மனிதனுடைய எலும்புக்கூடு பின்வரும் 206 (மார்பெலும்பு மூன்று பகுதிகளாகக் கருதப்பட்டால் 208) எண்ணிக்கையான எலும்புகளைக் கொண்டிருக்கும். இந்த எண்ணிக்கை உடற்கூட்டியல் வேறுபாடுகளைப் பொறுத்து மாறுபடக்கூடும். எடுத்துக்காட்டாக, மிகக் குறைந்த எண்ணிக்கையான மனிதர்களில், ஒரு மேலதிக விலா எலும்பு (கழுத்துவில்) அல்லது ஒரு மேலதிகமான கீழ் முதுகெலும்பு காணப்படுவதுண்டு; இணைந்த சில எலும்புகளைத் தனி எலும்பாகக் கருதாவிடின், ஐந்து இணைந்த திருவெலும்பு; மூன்று (3 - 5) குயிலலகு எலும்புகள் சேர்ந்து 26 எண்ணிக்கையிலான முதுகெலும்புகள் 33 ஆகக் கருதப்படலாம். மனித மண்டையோட்டில் 22 எலும்புகள் (காதுச் சிற்றென்புகளைத் தவிர) உள்ளன; இவை எட்டு மண்டையறை (cranium) எலும்புகளாகவும் 14 முக எலும்புகளாகவும் (facial bones) பிரிக்கப்பட்டுள்ளன. (தடித்த எண்கள் அருகிலுள்ள படத்தில் காணும் எண்களைக் குறிக்கின்றன.) மண்டையறை எலும்புகள் (8) 1 நுதலெலும்பு (frontal bone) 2 சுவரெலும்பு (parietal bone) (2) 3 கடைநுதலெலும்பு (temporal bone) (2) 4 பிடர் எலும்பு (occipital bone) ஆப்புரு எலும்பு (sphenoid bone) நெய்யரியெலும்பு (ethmoid bone) முக எலும்புகள் (14) 7 கீழ்த்தாடை எலும்பு (mandible) 6 மேற்றாடை எலும்பு (maxilla) (2) அண்ணவெலும்பு (palatine bone) (2) 5 கன்ன எலும்பு (zygomatic bone) (2) 9 நாசி எலும்பு (nasal bone) (2) கண்ணீர் எலும்பு (lacrimal bone) (2) மூக்குச் சுவர் எலும்பு (vomer) கீழ் மூக்குத் தடுப்பெலும்பு (inferior nasal conchae) (2) நடுக்காதுகளில் (6): சம்மட்டியுரு (malleus) பட்டையுரு (incus) ஏந்தியுரு (stapes) தொண்டையில் (1): தொண்டை எலும்பு (நாவடி எலும்பு) (hyoid) தோள் பட்டையில் (4): 25. காறை எலும்பு (clavicle) 29. தோள் எலும்பு (scapula) மார்புக்கூட்டில் thorax(25): 10. மார்பெலும்பு (sternum) (1) மேலும் மூன்று என்புகளாகக் கருதப்படலாம்: பிடியுரு (manubrium), உடல் மார்பெலும்பு (body of sternum), வாள்வடிவ நீட்டம் (xiphoid process) 28. விலா எலும்புகள் (rib) (24) முதுகெலும்புத் தூண் (vertebral column) (33): 8. கழுத்து முள்ளெலும்புகள் (cervical vertebra) (7) மார்பு முள்ளெலும்புகள் (thoracic vertebra) (12) 14. நாரிமுள்ளெலும்புகள் (lumbar vertebra) (5) 16. திரிகம் (திருவெலும்பு) (sacrum) வால் எலும்பு (குயிலலகு) (coccyx) மேற்கைகளில் (arm) (1): 11. புய எலும்பு (மேல்கை எலும்பு) (humerus) 26. புய எலும்புப் புடைப்பு (மேல்கை எலும்புப் புடைப்பு) (condyles of humerus) முன்கைகளில் (forearm) (4): 12. அரந்தி (ulna) (2) 13. ஆரை எலும்பு (radius) (2) 27. ஆரை எலும்புத் தலை (head of radius) கைகளில் (hand) (54): மணிக்கட்டுகள் (carpal): படகெலும்பு (scaphoid) (2) பிறைக்குழி எலும்பு (lunate) (2) முப்பட்டை எலும்புtriquetrum) (2) பட்டாணி எலும்பு (pisiform) (2) சரிவக எலும்பு (trapezium) (2) நாற்புறவுரு எலும்பு (trapezoid) (2) தலையுரு எலும்பு (capitate) (2) கொக்கி எலும்பு (hamate) (2) அங்கை முன்னெலும்புகள் (அனுமணிக்கட்டு எலும்புகள்) (metacarpal): (5 × 2) விரலெலும்புகள் (phalange): அண்மை விரலெலும்புகள் (proximal phalanges) (5 × 2) நடு விரலெலும்புகள் (Intermediate phalanges) (4 × 2) தொலை விரலெலும்புகள் (distal phalanges) (5 × 2) இடுப்பு வளையம் (pelvis) (2): 15. இடுப்பெலும்பு (ilium) மற்றும் கீழ் இடுப்பெலும்பு (ischium) கால்கள் (leg) (8): 18. தொடையெலும்பு (femur) (2) 17. இடுப்பு மூட்டு (hip joint) (மூட்டு, எலும்பல்ல) 22. பெரிய தொடையெலும்புக் கொண்டை (greater trochanter of femur) 23. தொடையெலும்புப் புடைப்பு (condyles of femur) 19. சில்லெலும்பு (patella) (2) 20. கால் முன்னெலும்பு (கணைக்காலலுள்ளெலும்பு) (tibia) (2) 21. சிம்பு எலும்பு (கணைக்கால்வெளியெலும்பு) (fibula) (2) காலடிகளில் (52): கணுக்காலெலும்புகள் (tarsal): குதிகால் (calcaneus) (2) முட்டி (talus) (2) படகுரு எலும்பு (navicular bone) (2) உள் ஆப்புவடிவ எலும்பு (2) இடை ஆப்புவடிவ எலும்பு (2) வெளி ஆப்புவடிவ எலும்பு (2) கனசதுர எலும்பு (cuboidal bone) (2) அனுகணுக்காலெலும்புகள் (metatarsal) (5 × 2) விரலெலும்புகள் (phalange): அண்மை விரலெலும்புகள் (proximal phalanges) (5 × 2) நடு விரலெலும்புகள் (intermediate phalanges) (4 × 2) தொலை விரலெலும்புகள் (distal phalanges) (5 × 2) குழந்தை எலும்புக்கூடு குழந்தைகளின் எலும்புக்கூடுகளில் கீழ் வரும் எலும்புகள் மேலதிகமாக உள்ளன: மண்டையறை மற்றும் மண்டையோட்டு எலும்புகள் (21), இவை ஒன்றாகி மண்டையறையை உருவாக்குகின்றன. திரிக முள்ளெலும்புகள் (sacral vertebrae) (4 or 5), வளர்ந்தோரில் இவை ஒன்றாகி திரிகத்தை உருவாக்குகின்றன coccygeal vertebrae (3 to 5), வளர்ந்தோரில் இவை ஒன்றாகி வாலெலும்பை உருவாக்குகின்றன இடுப்பெலும்பு, கீழ் இடுப்பெலும்பு மற்றும் பொச்செலும்பு (pubis), என்பவை வளர்ந்தோரில் ஒன்றாகி இடுப்பெலும்பை உருவாக்குகின்றன பகுப்பு:மனித உடற்கூற்றியல் பகுப்பு:எலும்புகள்
மனிதனின் காலில் எத்தனை எலும்புகள் உள்ளன?
8
106
tamil
13043bdc5
Main Page எந்திரன் 2010ல் வெளியான ஒரு அறிபுனை தமிழ்த் திரைப்படமாகும். சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கின்றார்கள். இப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசை அமைத்திருக்கின்றார். 2010, அக்டோபர் 1 அன்று இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. துபாய், சிட்னி உட்பட சில உலக நகரங்களில் செப்டம்பர் 30 இல் இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன. இப்படம் இதற்கு முன்பு வெளியான அனைத்து தமிழ்த் திரைபடங்களின் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.[1] இப்படத்திற்கு, 2.0 என்ற பெயரில் ஒரு தொடர்ச்சி திரைப்படம், தயாரிப்பில் உள்ளது. கதை ஒரு சுயசிந்தனை எந்திரனை உருவாக்குவதே விஞ்ஞானி வசீகரனின் குறிக்கோள். பல வருட உழைப்புக்கு பிறகு சிட்டியை உருவாக்குகிறார் வசி(வசீகரன்). சகமனிதர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாமல் முடக்கப்படும் நிலையில் உள்ள சிட்டிக்கு உணர்வுகளையும் உருவாக்குகிறார் வசி. விஞ்ஞானியான ரஜினி (வசீகரன்) ஒரு மனிதனை ஒத்த ரோபோ (AndroidHumanoid Robot) தயாரிக்கிறார். அதே சமயம் அவருடைய குரு டேனி டென்சோங்கோவும் இதைனைப் போலவே முயற்சிக்க தோல்வியடைகிறது. வசீகரன்(ரஜினி) உருவாக்கிய எந்திரனுக்கு(சிட்டி) அங்கீகாரம் அளிக்கும் பொறுப்பு அவருக்கு இருக்கையில்,வசீகரன்(ரஜினி) உருவாக்கிய எந்திரனுக்கு உணர்வில்லை, அதனால் இது ஆபத்தானது என்று அங்கீகாரத்தை மறுத்து விடுகிறார்.மீண்டும் முயன்று வசீகரன் அந்த எந்திரனுக்கு உணர்வுகளை ஊட்டி அங்கீகாரம் பெற்றுவிடுகிறார். ஆனால் உணர்வு பெற்ற எந்திரனோ வசீகரன்(ரஜினி) காதலிக்கும் ஐஸ்வர்யாவையே காதலிக்க வேறு வழியில்லாமல் எந்திரனை அழித்து குப்பைத் தொட்டியில் வீசி விடுகிறார். தூக்கி எறிந்த மீதிப்பாகங்களை வைத்து மீண்டும் உருவாக்கி சிட்டியினிடம் காணப்பட்ட ஆக்கதிறனைக் கொண்ட நீல சிப்பை வெளியேற்றி விட்டு தவறான மென்பொருளை உள்ளடக்கிய அழிக்கும் திறனைக் கொண்டுள்ள சிவப்பு சிப்பை உள்ளீடு செய்ய, அது டேனியையும் அழித்து மேலும் தன்னை ஒத்த சிட்டி ரோபாக்களை தாங்களே உருவாக்கிக்கொள்ளும் திறம்கொண்டு விடுகிறது. அதனால் ஏற்படும் குழப்பம், அவை செய்யும் நாச வேலைகள், பிருமாண்ட இறுதிக்காட்சிகள என்பதுதான் மீதிக் கதையே. நடிகர்கள் ரசினிகாந்து (நடிகர்) - கே. வசீகரன் மற்றும் சிட்டி ஐஸ்வர்யா ராய் (நடிகை) - சனா சந்தானம் (நடிகர்) -சிவா கருணாஸ் - ரவி தேவதர்சினி - லலிதா சாபு சிரில் - ஏஜேன் சா கலாபவன் மணி - பச்சைமுத்து ரேவதி சங்கரன் - வசீகரன் தாய் டெல்லி குமார் - வசீகரன் தந்தை கொச்சி ஹனீஃபா - போக்குவரத்து காவல் அதிகாரி தமிழ்ப் பெயர் சர்ச்சை தமிழ்நாடு அரசு தமிழ்த் திரைப்படங்கள் தமிழில் பெயரிடப்பட்டால் வரிவிலக்கு வழங்குகிறது. ரோபோ என்பது Robot என்ற ஆங்கிலச் சொல்லை அப்படியே எடுத்தாள்வதாகும். தமிழில் ரோபோ என்பதற்கு தானியங்கி என்ற பெயர் வழங்குகிறது. முன்னர் ரோபோ என்று பெயரிடப்பட்டு, பின்னர் எந்திரன் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.(இப்படம் முதன் முதலில் தயாரிக்க திட்டமிட்டது அய்ங்கரன் இண்டர்நேசனல். தயாரிப்பு காரணங்களினால் பின்பு சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்டது [2] ஏனைய மொழிகளில் எந்திரன் திரைப்படம் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. அத்துடன் மேலைத்தேய நாடுகளில் ஆங்கில உப தலைப்புகளுடன் வெளியிட எச்.பி.ஓ நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது [3]. இசை வெளியீடு 31 சூலை, 2010 அன்று மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூரில் எந்திரன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்தத் திரைப்பட இசையை ஏழு கோடி இந்திய ரூபாய்க்கு திங் என்ற நிறுவனம் வாங்கிக்கொண்டது.[4] இசை வெளியிட்டு முதலாவது வாரத்தில் ஐடியூன்சில் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் இந்தத் திரைப்படப்பாடல்கள் முதல் இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. அதாவது அதிகமாகப் பதிவிறக்கப்பட்ட பாடலாக இருந்தது. ஒரு தமிழ் திரைப்படப்பாடல் உலக அளவில் இவ்வாறு முதல் இடம் பிடித்தமை இதுவே முதற் தடவையாகும்.[5][6] வரவேற்பு உலகம் முழுதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த எந்திரன் திரைப்படமானது அதிக‌ வசூல் பெற்று தமிழ்த் திரைப்படங்களில் அதிக அளவு வசூல் அடைந்த திரைப்படம் என்னும் பெருமையைப் பெற்றது. [7] இந்தியில் எதிர்பார்த்த வெற்றியைத் தராவிட்டாலும், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியிடப்பட்ட இந்தப் படமானது உலகம் முழுதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. [8] மேற்கோள்கள் பகுப்பு:அறிபுனைத் தமிழ் திரைப்படங்கள் பகுப்பு:2010 தமிழ்த் திரைப்படங்கள் பகுப்பு:ரசினிகாந்து நடித்துள்ள திரைப்படங்கள்
எந்திரன் திரைப்படத்தின் இயக்குனர் யார்?
சங்கர்
70
tamil
bec619eb7
Main Page சத்திய சோதனை (The Story of my Experiments with Truth) என்பது மோகன்தாசு கரம்சந்த் காந்தி எழுதிய அவருடைய வாழ்க்கை வரலாற்று நூ‌ல் ஆகும். தன்னுடைய வாழ்வு முழுவதும் ஓர் ஆய்வாளனின் ஆய்வுப் பயணம் போல எனக் குறிப்பிட்டிருக்கும் காந்தி தன் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தன் வாழ்வின் மறக்க இயலாத பகுதிகளைச் சமூகத்திற்கு ஞாபகப்படுத்த வேண்டிய பாடங்களாகக் குறிப்பிட்டுள்ளார். அவை யாவும் சத்தியத்திற்கு ஏற்பட்ட சோதனைகள் என்பது அவர் எண்ணம். அதனால் இந்நூ‌லுக்கு சத்தியசோதனை என்று அவர் பெயர் வழங்கியுள்ளார். நான் செய்த சத்திய சோதனையின் கதை என்று திரு மோகன்தாசு கரம்சந்த் காந்தி தம் இளம் வயது முதல் 1921 ஆம் ஆண்டு வரையிலான தம் சரிதையை எழுதியுள்ளார். நவஜீவன் வாரப் பத்திரிக்கையில் 1925 முதல் 1929 வரை அவர் குஜராத்தி மொழியில் எழுதிய கட்டுரையின் தொகுப்பு. இதன் ஆங்கில மொழி பெயர்ப்பும் "யங் இந்தியா"[1]என்னும் ஆங்கில இதழில் பிரசுரமானது.சுவாமி ஆனந்த் மற்றும் அவருடன் பணியாற்றியவர்களின் தூண்டுதல் இதற்கு முக்கிய காரணம். இவர்கள் காந்தியடிகளின் பொது வாழ்க்கை பரப்புறைகளின் பின்புலங்களை பகிர்ந்து கொள்ளும்படி ஊக்கப் படுத்தினர். இந்நூல் 20ஆம் நூற்றாண்டின் 100 சிறந்த ஆன்மீக நூல்களுள் ஒன்றாக உலக ஆன்மீக மற்றும் மத ஆணையத்தால் தெரிவு செய்யப்பட்டது [2] ஆங்கில மொழிபெயர்ப்பாளர் முன்னுரை குஜராத்தி மொழியில் காந்தியடிகள் எழுதிய இந்நூலை 1940 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த திரு மகாதேவ் தேசாய் தமது முன்னுரையில் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டதாகவும், முதல் தொகுதி 1927 ஆம் ஆண்டும், இரண்டாவது தொகுதி 1929 ஆம் ஆண்டு வெளியிட்டதாகவும் குறிப்பிடுகிறார், இந்நூலின் விலை ஒரு ரூபாய் என நிர்ணயம் செய்ததாகவும், முன்னுரை எழுதுவதற்குள் குஜராத்தி மொழியில் 50,000 பிரதிகள் விற்றுத் தீர்ந்ததாகவும், ஆங்கில நூல் விலை அதிகமானதால் இந்தியர்கள் வாங்க இயலவில்லை எனவும் குறிப்பிடுகிறார். ஆங்கில நூலை மலிவு விலையில் கொண்டு வர வேண்டிய அவசியத்தையும் குறிப்பிடுகிறார். பகுதி 5ல் 29 ஆம் அத்தியாயம் முதல் 43 ஆம் அத்தியாயம் வரை திரு தேசாயின் நண்பர் பியாரிலால் மொழி பெயர்த்ததாகவும் குறிப்பிடுகிறார்.[3] முன்னுரை காந்தியடிகளே இந்நூலிற்கு முன்னுரை எழுதியுள்ளார். தன்னுடன் எரவாட சிறையில் இருந்த சேத் ஜெர்மதாஷ் அவர்களின் வற்புறுத்தலின் பேரிலேயே இச்சுயசரிதையை எழுத முனைந்ததாகக் குறிப்பிடுகிறார். இது போன்ற சுயசரிதைகளை எழுதுவது மேலை நாடுகளில் இருந்துவந்த பழக்கமாகும், கீழைநாடுகளில் முற்றிலுமாக இப்பழக்கம் இல்லை [4]என்றும் நண்பரின் யோசனையை எண்ணிப்பார்த்தது குறித்தும் குறிப்பிடுகிறார். தமது எண்ணங்கள் பிற்காலத்தில் மாற நேரலாம் என்ற போதிலும் சத்தியத்துடன் தம் வாழ்வில் செய்த சோதனைகளைப் பதிவு செய்ய வேண்டும் என்னும் எண்ணத்திலேயே இன்னூலை[5] எழுத முனைந்ததாகக்குறிப்பிடுகிறார். இந்நூலில் தாம் செய்த ஆன்மீக மற்றும் நன்னெறி குறித்த சோதனைகளைப் பற்றியே குறிப்பிட விரும்புவதாகவும் அரசியல் குறித்து குறிப்பிட விரும்பவில்லை எனவும் தெளிவாக விளக்கியுள்ளார் பகுதி ஒன்று முதல் பகுதி புலால் உண்பது, புகை பிடிப்பது, மது அருந்துவது, கையாடல் செய்வது, பின்பு இவைகளுக்காக பிராயசித்தம் செய்வது குறித்து எழுதுகிறார்.[6]இரண்டு புத்தகங்கள் தம் குழந்தைப் பருவத்தில் தம்மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் இவைகளில் அரிச்சந்திரன் நாடகத்தை தாம் மிகுந்த ஆர்வத்துடன் படித்ததாகவும்.அந்நாடகம் மனதைவிட்டு அகலாமல் இருந்ததாகவும் எண்ணிலடங்கா முறை தாமே அரிச்சந்திரனாக நடந்ததாக உணர்ந்ததாகவும் குறிப்பிடுகிறார் "[7]. இசிரவணனின் பெற்றோர் பாச நாடகமும் இதில் இசிரவணன் தம் பெற்றோரிடம் காட்டிய அர்ப்பணிப்பு தம்மை மிகவும் பாதித்ததாகவும் குறிப்பிடுகிறார் [8] காந்தியடிகள் தமது 13வது வயதில் மணமுடித்தார்.இது குறித்து அவர் “ எனக்கு 13 வது வயதில் திருமணம் ஆகிவிட்டது என்னும் செய்தியை மிக்க வேதனையுடன் இங்கு பதிவு செய்ய வேண்டியதுள்ளது. இது போன்ற நம்ப முடியாத சிறிய வயதில் திருமணத்தை எவ்வகையிலும் நியாயப்படுத்த இயலாது”. தமது தந்தையார் திரு.கரம்சந்த் காந்தி இயற்கை எய்ததை மற்றொரு முக்கியமான நிகழ்வாக இப்பகுதியில் பதிவு செய்கிறார்.பள்ளியில் தாம் பெற வேண்டிய உடற்பயிற்சியின் மீது தாம் எவ்வாறு வெறுப்பு கொண்டிருந்தார் என்பதையும் இப்பகுதியில் பதிவு செய்கிறார்.[9] பகுதி இரண்டு காந்தியடிகள் தம் குடும்பத்தினருடன், உறவினர், நண்பர்கள், தம் மனைவியுடனும் தங்கி உறவுகளை மேம்படுத்த விரும்பியிருந்தாலும் தமது பணி ஆர்வமூட்டுவதாக அமையவில்லை என்பதால் ஒரு இந்திய முகமதிய நிறுவனத்திற்கு சட்ட ஆலோசனை கூறும் பணியை ஏற்றுக் கொண்டார். தமது தென்னாப்பிரிக்கா பயணம் ஒரு தற்காலிக ஏற்பாடு, மேலும் அது தமது தொழிலில் இருந்து வந்த மந்த நிலைக்கு ஒரு மாற்று என்று கருதினார். பிரித்தானியர்களும்,டச்சுக்காரர்களும் நீண்ட கால போராட்டத்திற்குப்பின் நேட்டால் மற்றும் கேப் காலனி பகுதியை ஆங்கிலேயர்களும் பூவர்கள் என்று கூறப்பட்டு வந்த ஏற்கன்வே தென் ஆப்பிரிக்காவில் தங்கியிரிந்த டச்சுக்காரர்கள் ஆரஞ்சு குடியரசு மற்றும் டிரான்ச் வால் என்னும் இரண்டு குடியிருப்புகளை முறையே ஆண்டு வந்தனர் என்கிறார். சுதந்திர பூவர் நாடுகளுக்கும் அங்கு வாழ்ந்து வந்த வெள்ளைக்கார குடிமக்களுக்கும் பிரித்தானியர்களுடன் போராட்டம் தொடர்ச்சியாக இருந்து வந்தது. இவர்களை அடக்குவதற்காக ஆங்கில அரசு கடுமையான நிறவெறிக்கொள்கையை அங்கு கடைப்பிடித்து வந்தது. இதன்காரணமாக பெரும்பாலும் கருப்பினத்தவர் மிகுந்த சிரமங்களுக்கு உட்படுத்தப்பட்டனர். கரும்பு மற்றும் காபித் தோட்டங்களில் வசித்து வந்த இந்தியர்களுக்கு பாதிப்பு கருப்பினத்தவர்களை போல் இல்லை சற்று குறைவாக இருந்தது. இருந்தாலும் இவர்கள் இரண்டாம் தரக் குடிகளாகவே நடத்தப்பட்டனர். தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் அடைந்த உளைச்சல், அடக்கு முறையை எதிர்த்து அவர் நடத்திய போராட்டம் அனைவரும் அறிந்த ஒன்று. இங்கு இவர் தங்கியிருந்த நீண்ட காலத்தில் இவர் அனுபவித்த இழிவுகள் ஏராளாம். மேரிட்சுபாசு நகரில் புகைவண்டியிலிருந்து இவர் தூக்கி வீசப்பட்ட செய்தி[10]மிகவும் பிரபலமடைதிருந்தது. தாம் கொண்ட கொள்கையின் அடிப்படையில் முதல் வகுப்பிலிருந்து இறங்க மறுத்த காந்தியடிகள் புகைவண்டியிலிருந்து தூக்கிவீசப்பட்டார். இதன் பின்னர் உணவு விடுதியில் தங்குவதற்கு இடம் கிடைப்பதிலும் நிறவெறிக்கொள்கையால் பல இடர்பாடுகளை அனுபவித்தார். தமது சக இந்தியர்கள், பெரும்பாலும் தொழிலாளிகளான படியாலும் மேலும் பல அநியாயங்களை ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்ததையும் காணமுடிந்தது. ஆரம்பத்தில் குழப்பமடைந்தாலும், தாம் அடைந்த இழிவுகளும் அவமானங்களும் இவரை நிறவெறிக் கொள்கையை எதிர்க்க வேண்டும் என்னும் நிலைப்பாட்டை எடுக்க வைத்தது. டிரான்ஸ்வல் இந்தியர்கள் மத்தியில் ஒரு பொது மனிதராகவும் குறிப்பிடும் நபராகவும் உயர்ந்தார். அவர் அங்கு ஆற்றிய முதல் உரையில் இது போன்று ஒப்பின்மையை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் கடுமையாக உழைக்க வேண்டும், ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மேலும் சுகாதாரமான பழக்க வழக்கங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். காந்தியடிகள் ஏற்றுக் கொண்ட வழக்கறிஞர் பணி அவருக்கு பளுவாக இருந்தாலும் ஓய்வு வேளையில் டால்ஸ்டாயின் நூல்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடைய அமைதி மற்றும் நீதி முதலிய கருத்துக்களால் மிகவும் கவரப்பட்ட காந்தியடிகள் டால்ஸ்டாய் அவர்களுடன் நெருங்கிய கடிதப்போக்குவரத்து வைத்துக்கொண்டார். இருவரும் அஹிம்சையின் தத்துவத்தில் ஒத்த கருத்துடையவர்களாக விளங்கினர். தென்னாப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிக்கொள்கைக்கு எதிரான காந்தியடிகளின் தீவிரமான எதிர்ப்பும் கோபமும், டால்ஸ்டாயின் சமுதாயத் திறனாய்வில் தீவிரமாக எதிரொலித்தது. கிருத்துவர்களின் விவிலியம் புதிய ஏற்பாட்டில் மலைவழிபாட்டில் ஏசுகிருத்து கூறிய நாட்டு மக்களுக்காக சுயமறுப்பு என்னும் தத்துவத்தை இருவரும் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டனர். [மோகன்தாசு கரம்சந்த் காந்தி | காந்தியடிகள் ]] தொடர்ந்து தமது ஆன்மிகத் தேடலுக்கு பகவத்கீதையையே சார்ந்திருந்தார். அதன் பலனாக தமது பணியின் அடிப்படை தன்னிறைவே என்றும் சுயமறுப்பு அல்ல என்பதையும் அறிந்தார்.பொது வாழ்வு என்பது, தான் என்ற உணர்வில்லாத நிலை என்பதைக் கடைப்பிடித்த காந்தியடிகள் தமது சேவைக்கு எவ்விதக் கட்டணமும் வாங்கிக்கொள்ள மறுத்ததுடன், தன்வாழ்க்கைக்கு தமது வழக்கறிஞர் தொழிலின் மூலம் ஈட்டிய வருமானத்தையே நம்பியிருந்தார். மதங்களைப்பற்றிய புரிதலுக்கும் கோட்பாடுகளை வகுத்துக் கொள்வதற்கும் அவர் மதம் தொடர்பான நூல்களை மட்டும் நம்பியிருக்கவில்லை. காந்தியடிகளின் நண்பர் பம்பாயைச் சேர்ந்த ராய்சந்திரா என்பவர் தீவிரமத நம்பிக்கை கொண்டவர். இந்து சமயம் கிறித்தவம் இவைகளில் பல தலைப்புக்களை நன்கு அறிந்தவர், மெத்தப்படித்த ஆன்மிகவாதி. இவருடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு கருத்துப்பரிமாற்றம் செய்து கொள்வார். இதன் காரணமாக அவர் அகத்தில் நேர்மையும் தெளிவுமே முக்கியம் என்று உணர்ந்து கொண்டார். மதங்களின் அடிபடையில்லாத கோட்பாடுகளின் மீதும், புறத்தில் அனுசரிக்கப்பட வேண்டிய ஒழுங்கைவிட அகசுத்தி மேன்மையானது முக்கியமானது என்று நம்பினார். ஆதலால் தமது மதத்தின் கடவுளை தான் நம்பினாலும், எல்லா மதங்களும் அவரவர் பாணியில் உண்மைகளை எடுத்துரைக்கின்றன எனவும், ஆதலால் அவைகளை மதிப்பதும் பொருத்தமானது எனவும் நம்பினார். தென்னாப்பிரிக்காவில் தமது அலுவல் முடிந்த பின்னர், எதிர்பார்த்தது போல் காந்தியடிகள் தொடர்ந்து தங்கியிருக்க காரணம் இருந்ததைக் கண்டார். அப்பொழுது நேட்டால் சட்டமன்றம் இந்தியர்களுக்கு வாக்குரிமை மறுக்கும் “ இந்திய வாக்குரிமைச் சட்டத்தை” இயற்ற முனைந்தது . காந்தியடிகளின் ஒரு சில நண்பர்களைத் தவிர இந்த சட்டமன்ற வழக்கை குறித்து பரவலான விழிப்புணர்வும் கருத்தும் ஏதும் இருக்கவில்லை. நண்பர்கள் காந்தியடிகளை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் இருக்கும் படியும் அவர்களுடன் சேர்ந்து இந்தியர்களுக்கு நேரும் அநீதியை எதிர்த்து நிற்கும்படியும் கேட்டுக்கொண்டன்ர். இந்தியர்கள் அங்கு மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்பட்டு ‘கூலிகள்’ என்றே அழைக்கப்பட்டு வந்தனர். நிறவெறிக்கொள்கை வெள்ளையர்களின் இரத்தத்தில் ஊறியிருப்பதையும் குறிப்பாக டச்சுக்காரர்கள் ஆளும் பகுதியில் இந்தியர்கள் மிகவும் மோசமான நகர்ப்புற சேரிகளில் வசிப்பதையும் வேளாண் நிலங்களை சொந்தமாக வைத்துக்கொள்ளவோ அல்லது நிர்வாகம் செய்யவோ கூடாது என்பதையும் கண்டார். இந்தியர்கள் சிறிது அதிகம் செல்வாக்கு உள்ள நேட்டால் பகுதியில் கூட இரவு 9 மணிக்கு மேல் அனுமதி அட்டை இல்லாமல் வெளியே வரக்கூடாது. ஆங்கிலேயர் ஆளுகைக்குட்பட்ட மற்றொரு இடமான ‘கேப் காலனி’ யில் சாலைகளின் ஓரத்தில் உள்ள நடைபாதையில் இந்தியர்கள் நடப்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இது போன்ற பல அநியாயங்களுக்கு சட்டவடிவம் கொடுப்பதே கொண்டு வர இருந்த ‘சட்டமுன்வடிவின்’ நோக்கமாக இருந்தது. கடைசி நேரத்தில் செய்த மனுக்கள் இந்தியக் குடியுரிமை சட்ட முன்வடிவைத்தடுக்க முடியவில்லை என்றாலும், காந்தியடிகள் ஆங்கிலேய அரசின் குடியேற்றங்களுக்கான செயலாளருக்கு இதை வலியுறுத்தி, மனுவை அனுப்பிவைத்ததுடன், அதனை தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து மற்றும் இந்திய பத்திரிக்கைகளிலும் வெளியிட்டார். பத்திரிக்கை செய்திகள், இந்த மூன்று நாடுகளிலும் தென் ஆப்பிரிக்கா இந்தியரின் பரிதாப நிலையைக் குறித்து நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், இந்திய டைம்ஸ் பத்திரிக்கையும், லண்டன் டைம்ஸ் பத்திரிக்கையும் இந்தியர்களின் வாக்குரிமைக்கான நியாயத்தை தலையங்கம் வாயிலாக வலியுறுத்தின. காந்தியடிகள் நேத்தால் இந்தியக் காங்கிரசு என்னும் அரசியல் அமைப்பையும் நிறுவினார்.இந்த நிறுவனம் வாலாயமாக கூட்டங்கள் நடத்தி வந்தது.சிறிது பண முடைக்குப்பின், ஒரு நூலகமும் வழக்கமான கலந்துரையாடல்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டன. ஒவ்வொரு ஆங்கிலேயருக்கும் ஒரு வேண்டுகோள் எனவும், இந்திய மக்களுக்கு வாக்குரிமை ஒரு வேண்டுகோள் எனவும் இரண்டு துண்டு பிரசுரங்களை நிறவெறிக் கொள்கைகளின் அநீதிகளை விளக்கி வெளியிட்டார். முதலில் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில், ஒரு மாதம் அல்லது அதிகபட்சமாக ஒரு வருடம் இருக்க வேண்டியிருக்கும் என்று கருதியிருந்தாலும்,அவர் சுமார் 20 ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவில் இருந்தார். அவர் முதலில் ஏற்றுக் கொண்ட பணி முடிந்திருந்தாலும் 20 புதிய நிறுவனங்களுக்கு அவர் பணியை மேற்கொண்டிருந்தார். முதலில் ஏற்றுக்கொண்ட பணி முடிவடைந்திருந்தாலும் புதிதாக ஏற்றுக்கொண்ட 20 நிறுவனங்களுக்கான பணி நிமித்தம் வருவாயும் கிடைத்தது, இது வாழ்க்கை நடத்துவதற்கும் ஏதுவாக இருந்தது.இதனால் பொது வாழ்வில் ஈடுபடுவதற்கான நேரமும் அவருக்குக் கிடைத்தது, தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக் கொள்கைக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் எதிராக அவர் நடத்திய போராட்டம் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் மத்தியில் இவர் ’உத்தமர்’-’மகாத்மா’ என அறியப்பட்டார். பகுதி மூன்று 1896 ஆண்டு காந்தியடிகள் ஒரு சிறிது காலம் இந்தியா வந்து விட்டு குடும்பத்துடன் தென்னாப்பிரிக்கா திரும்பினார்.இந்தியாவில் “தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் பரிதாபநிலையை” விளக்கி ‘பச்சைப்பிரசுரம்’ என்று ஒரு துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டார். இந்தியர்கள் மத்தியில் தாம் எவ்வளவு புகழ்பெற்றவராக இருந்தார் என்பதையும்,தமது சேவையை அவர்கள் எவ்வளவு போற்றி மதிக்கிறார்கள் என்பதையும் உணர்ந்தார். தென்னாப்பிரிக்காவில் உள்ள பல தொழிலாளர்கள் சென்னை மாகாணத்திலிருந்து வந்நவர்களாதலால் காந்தியடிகள் சென்னை வந்திருந்த பொழுது திரளாக வந்திருந்து பலத்த கரவொலி எழுப்பி உற்சாகமாக வரவேற்றனர்.காந்தியடிகள் தமது குடும்பத்துடன் 1896 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் தென் ஆப்பிரிக்காவிற்குத் திரும்பினார். தென்னாப்பிரிக்காவில் முழுவதும் காந்தியடிகள் மிகவும் பிரபலம் அடைந்திருந்தார். அவர் தென் ஆப்பிரிக்காவிற்கு திரும்பி வரும் பொழுது நேட்டால் துறைமுகத்துக் வந்தடைந்தார். அவரை நேட்டால் நகருக்குள் அனுமதிக்கக் கூடாது என்று ஒரு வன்முறைக் கும்பல் போராட்டத்தில் ஈடுபட்டது. அந்தக் கூட்டம் காந்தியடிகள் சென்ற கப்பலிலிருந்து வெள்ளையரல்லாத அனைவரும், தென்னாப்பிரிக்காவில் தங்க வைப்பதற்காக காந்தியடிகளால் அழைத்து வரப்பட்டவர்கள் என்று தவறாக எண்ணிக் கொண்டனர். ஆனால் காந்தியடிகளுடன் வந்தவர்கள் நேட்டால் நகரில் ஏற்கனவே வாழ்ந்து வந்தவர்கள். அதிர்ஸ்டவசமாக காந்தியடிகள் தென்ஆப்பிரிக்க ஆங்கிலேயர்களுடன் நல்லுறவு வைத்திருந்ததால், நேட்டால் துறைமுகத்தின் காவல்துறை கண்பாணிப்பாளரும் அவர் துணைவியாரும் பத்திரமாக காந்தியடிகளை அழைத்துச் சென்றனர். இந்நிகழ்ச்சிக்குப்பின் அங்கிருந்த வெள்ளையர்கள் அவரை உயர்வாக நினைத்து மதிக்கத் துவங்கினர். நேட்டால் இந்திய காங்கிரசில் தமது பணியை மீண்டும் துவங்கினார். ஆங்கிலேயர்கள் மீது அவர் கொண்டிருந்த நல்லெண்ணம்,பின்னர் துவங்கிய பூவர் போரை எவ்வாறு கையாள்வது என்பதை முடிவு செய்ய உதவியாக இருந்தது. நல்லெண்ணம் வளர வேண்டும் என்று விரும்பியதால்,பூவர் யுத்தத்தில் போர்ககளத்தில் பங்கேற்று சண்டையிடாவிட்டாலூம் இந்திய மருத்துவ சேவகர்கள் என்று தொண்டர் படையுடன் சேவை செய்தனர்.1900 ஜனவரியில் நடந்த ‘சுப்பயன்காப்’ என்னும் யுத்தம் குறிப்பிடத்தகுந்தாகும். காந்தியடிகள் சமத்துவம், சகாதரத்துவம் போன்ற கொள்கைகளில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். ஆங்கிலேய அரசும் இக்கொள்கைகளைக் கொண்டிருப்பதால், ஆங்கில அரசின் அரசியலமைப்புச்சட்டமும்,அரசும், இந்தியர்களுப்பட்ட அனைத்து குடிமக்களுடைய விசுவாசத்தைப் பெற தகுதி வாய்ந்தது என்று நம்பினார்.தென் ஆப்பிரிக்காவின் நிறவெறிக்கொள்கை ஒரு நிரந்திர அணுகுமுறை அல்ல என்றும் ஒரு தற்காலிக ஏற்பாடு என்றும் கருதினார். இந்தியாவிலும் ஆங்கில அரசு தேவை என்றும் அது பொதுமக்களுக்கு நல்லது செய்வதாகவே எண்ணினார். ஆங்கிலேயர்களுக்கும், டச்சுக்ககாரர்களுக்கும் நடந்த யுத்தம் மூன்றாண்டு காலம் தொடர்ந்தது. தீவிரமாக நடந்த யுத்தத்தில் ஆங்கிலேயர் வெற்றி பெற்று டிரான்ஸ்வால் மற்றும் ஆர்ஞ்சு பிரீ பகுதிகளை கைவசப் படுத்தினர். ஆங்கிலேயர் வெற்றி தென்னாப்பிரிக்காவில் நீதியை நிலை நாட்டச் செய்யும் எனவும், தாம் தாயகம் திரும்பிவிடலாம் என்று நம்பினார். 1901-இல் நடந்த இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டில் கலந்து கொள்ள விரும்பினார். இந்திய தேசிய காங்கிரஸ், நடுத்தர மக்களுக்கு அரசியல் மற்றும் சமூக அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் என்று நம்பினார்.1885-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஒருவரால் நிறுவப்பட்ட காங்கிரசிற்கு அரசியல் அதிகாரம் எதுவும் இருக்கவில்லை.அரசுக்கு’ஆதரவு நிலைப்பாட்டையே’ அது எடுத்து வந்தது. காந்தியடிகள் கூட்டத்தில் பங்கேற்று தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கு ஆதரவான தீர்மானம் இயற்ற வேண்டும் மென்று விரும்பினார். நேட்டாலை விட்டுக்கிளம்புமுன், தேவைப்பட்டால் மீளவும்தென்னாப்பிரிக்கா வருவதாகக் கூறிவிட்டு தாயகம் திரும்பினார். 1901 ஆம் ஆண்டு நடந்த காங்கிரசு மாநாட்டில் பங்கேற்ற காந்தியடிகளின் நம்பிக்கை வீண்போகவில்லை.முக்கியமான தலைவர்களுள் ஒருவரான கோபால கிருஷ்ண கோகலே அவர்கள் உதவியுடன் தென் ஆப்பிரிக்க இந்தியர்களுக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காந்தியடிகள் , திரு. கோகலே அவர்களின் இல்லத்தில் ஒரு மாத காலம் தங்கியிருந்து பல தலைவர்களைச் சந்தித்தார். இது பிற்காலத்தில் காந்தியடிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. காந்தியடிகள் ஏற்கனவே உறுதியுளித்தபடி நேட்டாலுக்குத் திரும்ப வேண்டி வந்தது. ஆங்கிலேயர்களும்,பூவர்களும் நட்பு பாராட்டி ,ஒருங்கிணைந்து இந்தியர்களின் நலனுக்கு முரணாகச் செயல்படுவதாகவும், ஆங்கிலேயர்கள், கனாடா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ளது போன்று,அதிகாரத்தை அங்கு வாழும் வெள்ளையர் கைவசம் வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்தது. காந்தியடிகள் உடனடியாகத் தென்னாப்பிரிக்காதிரும்பி ஆங்கிலேய அரசின் குடியேற்றங்களுக்கான செயலாளர் திரு.சாம்பர்லின் அவர்களைச் சந்தித்து, இந்தியர்களுக்கு அநீதி இழைப்பதை மனு மூலம் எடுத்துரைத்தார்.ஆனால் இந்தியர்கள், தென் ஆப்பிரிக்காவை ஆள்பவர்களுக்கு அடங்கிப் போக வேண்டுமென்று செயலாளர் தெளிவாக்கினார். தென் ஆப்பிரிக்காவை ஆளத் தகுதியானவர்கள் டச்சுக்காரார்களும் அங்கு வாழும் ஆங்கிலேயர்களாகும் என்று தெரிவிக்கப்பட்டது.அவர்கள் ”ஆபகாளார்ஸ்” என்றும் அழைக்கப்பட்டனர். காந்தியடிகள் இந்தப் புதிய அரசியல் ஏற்பாட்டிற்கு எதிராக அணி திரட்டினார்.நேட்டாலில் தங்கியிருப்பதற்குப் பதிலாக டிரான்ஸ்வால் நகரில் தங்கி போரிலிருந்து திரும்பியவர்களுக்கும், அதிக விலை கொடுத்து அனுமதி அட்டையை வாங்க வேண்டியவர்களுக்கும் உதவிப்புரிந்தார். தாம் குடியிருந்த வீடுகளை ஆங்கிலேயரின் வற்புறுத்தலின் பேரில் காலி செய்ய வேண்டி இடர்பாடுகளை அடைந்தவர்களுக்கும் உதவி புரிந்தார். தென் ஆப்பிரிக்காவில் அரசியல் சுதந்திரம் மற்றும் இந்தியர்களுக்கு சமவாய்ப்பு என்னும் கொள்கைகளைப் பரப்புவதற்காக ”இந்தியன் ஒபினியன்” என்னும் பத்திரிக்கையைத் துவங்கினார்.பத்திரிக்கையின் அலுவலகத்தில் பல ஐரோப்பிய பெண்கள் பணி புரிந்தனர். பின்னர் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பலர் இப்பணியில் ஈடுப்பட்டனர். இது காந்தியடிகளின் புகழை உயர்த்தவும்,அவர் கொள்கைகளுக்கு விளம்பரத்தையும் தேடித்தந்தது. அதே நேரத்தில் சான் ரச்கின் எழுதிய ’கடையேனுக்கும் கடைத் தேற்றம்’ என்னும் நூலைக் கற்றார். எல்லா விதமான பணியையும் விட உடலுழைப்பால் செய்யும் பணியே மேலானது என்னும் கொள்கையை இந்த நூல் வலியுறுத்தியது. இக்கருத்து காந்தியடிகள் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. காந்தியடிகள் மேலை நாட்டு பழக்கவழக்கங்கள், நடை, உடை, பாவனை அனைத்தையும் அறவே துறந்தார். தமது குடும்பத்துடன் டிரான்ஸ்வால் நகரில் ஒரு பண்ணை வீட்டில் அமைந்த ’போனிகஸ்’ என்னும் குடிலில் குடியேறினார்.இயந்திரங்களின் பயன்பாட்டினைத் தவிர்த்து ’இந்தியன் ஒப்பினியன்’ பத்திரிக்கையைக் கைகளால் அச்சிட்டு வெளியிட்டார். எந்திரங்களின் உதவி இன்றி கைகளால் வேளாண்மை செய்தார்.மேலை நாடுகளின் தாக்கம் இல்லாமல் இந்தியாவின் பாரம்பரியமிக்க விழுமியங்களை மீட்டெடுத்து வள்ர்ப்பது தான் தமது கொள்கையாகக் கருதி நடைமுறைப்படுத்த முயன்றார்.அவர் மின்சாரம், தொழில் நுட்பம் போன்ற மேலை நாடுகளின் தாக்கத்திற்கு உட்பட விரும்பவில்லை. 1906 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி இக்கொள்கையை செயல்படுத்தத் துவங்கினார். டிரான்ஸ்வால் நகரில் கூடியிருந்த திரளான இந்தியர்களை ஒத்துழையாமை இயக்கம் நடத்துவது என்று உறுதியெடுத்துக் கொள்ளும்படி கூறினார்.அப்பொழுது தென் ஆப்பிரிக்கா அரசு 8 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்கள் அனைவரும் தமது பெயரைப் பதிந்து கொள்ள வேண்டுமென்ரு ஒரு புது விதியைக் கொண்டு வந்தது. அனைவருக்கும் முன்னோடியாக காந்தியடிகள் தமது பெயரைப் பதிவு செய்ய மறுத்தார். அதன் காரணமாக நீதிபதியின் முன் நிறுத்தப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார் ஒத்துழையாமை இயக்கத்தை தாம் கடைப்பிடிப்பதாகவும் தமக்கு இன்னும் அதிகமான தண்டனை வழங்கும் படி கேட்டுக்கொண்டார். காந்தியடிகள் தமது பரப்புரையத் தொடர்ந்து செய்து வந்தார். ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தமது அனுமதி அட்டையை எதிர்த்தும் அனுமதி அட்டை இல்லாமலேயே டிரான்ஸ்வால் நகருக்குள் நுழைந்தும் தங்களது எதிர்ப்பையும் ஒத்துழையாமையயும் தெரிவித்தார். 1908 ஆம் ஆண்டு மறுபடியும் காந்தியடிகளுடன் பலர் சிறை சென்றனர். ஜான்கிறிஸ்டியன் சுமட்சு என்னும் தென் ஆப்பிரிக்கத் தளபதி அனுமதி அட்டை விதியை தளர்த்துவதாகக் கூறி பின் மறுத்துவிட்டார். காந்தியடிகள் மனம் தளரவில்லை. 1909 ஆம் ஆண்டு லண்டன் சென்று அங்கு ஆதரவு திரட்டினார்.அதன் பலனாக 1913 ஆம் ஆண்டு தளபதி சுமட்சு இவ்விதியை ரத்து செய்து விட்டார். இருந்தாலும் டிரான்ஸ்வால் பிரதம அமைச்சர் இந்தியர்களை இரண்டாம் தர குடிளாகவே நடத்தினார். அதே சமயம் கேப் காலனி அரசு கிருத்து அல்லாத மற்ற திருமணங்கள் செல்லாது எனச் சட்டம் இயற்றியது. இதன் பயனாக அனைத்து இந்தியக் குழந்தைகளும் திருமணத்திற்கு அப்பால் பிறந்தவர்களாகவே கருதப்பட்டனர். நேட்டால் அரசு இந்தியர்கள் மீது கடுமையான வாக்குவரியை விதித்து கொடுமைப்படுத்தியது. இது போன்று இந்திய கொள்கைகு எதிராக பெரிய அளவில் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தினார். இவ்வியக்கத்தில் பெருவாரியாகப் பெண்கள் பங்கேற்று நேட்டால் நகர எல்லையை அனுமதியில்லாமல் கடந்து வந்தனர்.5000 நிலக்கரிச் சுரங்க ஊழியர்களும் வேலை நிறுத்தத்திலும் ஈடுப்ப்ட்டனர். இவர்கள் காந்தியடிகளின் தலைமையில் கைது செய்வதை எதிர் நோக்கி நேட்டால் எல்லையைக் கடந்தனர். தளபதி சுமட்சும் பல நேரங்களில் கருத்து மாறுபாடு கொண்டிருந்தாலும், பரஸ்பரம் ஒருவருக்கொருவர் மரியாதை கொண்டிருந்தனர். திராளன இந்தியர்கள் எதிர்பைக் காட்டியதால் சுமிட்சும் பணிந்து இந்தியத் திருமணங்களை ஏற்றுக்கொண்டதுடன் வாக்கு வரியையும் ரத்து செய்தார். வேலைக்கு இந்தியவிலிருந்து ஆட்களைக் கொண்டு வருவதும் படிப்படியாகக் குறைக்கப்படும் எனவும் 1920 ஆம் ஆண்டு முழுவதுமாக நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.1914 ஆம் ஆண்டு ஜூலை மாதம் காந்தியடிகள் ’மகாத்மா’ என அழைக்கப்பட்டு தமது ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியால் உலகப் புகழ் பெற்றார். பகுதி நான்கு முதல் உலகப் போர் துவங்கும் போது காந்தியடிகள் இங்கிலாந்தில் இருந்தார். தென் ஆப்பிரிக்காவில் பூவர் போரில் சேவை செய்தது போன்று முதலுதவித் தொண்டர் படையை ஏற்படுத்தி சேவை செய்தார். உடல் நலச் சீர் கேடு அடைந்து பின் நாடு திரும்பினார்.அவருக்கு மீண்டும் எழுச்சியான உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. காந்தியடிகள் அன்பாக ‘மகாத்மா’ எனவே எல்லோராலும் அழைக்கப்பட்டார். பொதுமக்களின் அன்பையும் பாசத்தையும் பணிவுடன் ஏற்றுக் கொண்டாலும் ,எல்லோரும் சமம் என்றும் தமக்குப் பட்டம் கொடுத்து புனிதம் அளிப்பதை ஏற்றுக் கொள்ள மனம் விரும்பவில்லை என்றும் கூறி வந்தார். புலடைக்கம், பணிவு வேண்டி, ஒரு வருடம் பொது வாழ்க்கையிலிருந்து விலகி புனிதம்-ஆற்றுமை(healing) ஆகியவைகளை சோதிக்க சுயபரிசோதனையில் ஈடுப்பட்டார். அதுமட்டுமில்லாமல் தீண்டத்தாதவர்களுடன் இணைந்து ஆசிரமம் அமைத்து அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். நிதியுதவி செய்த தனவந்தர்களும், உயர் ஜாதிக்காரர்களும் உடன்படாவிட்டாலும் தொடர்ந்து ஆசீரம வாழ்க்கையைக் கடைப்பிடித்தார். அகமதாபாத் மாவட்டத்தில் தீண்டத்தாதவர்கள் வசிக்கும் பகுதில் ஒரு முகமதிய கனவான் செய்த நிதி உதவியுடன் தமது ஆசிரம வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்தி வந்தார். நாளடைவில் ஆசீரம வாழ்க்கை மற்றவர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பொது வாழ்க்கையிலிருந்து விலகி இருந்தாலும் காந்தியடிகள் பம்பாய் மாகாணத்தின் ஆளுநரைச் சந்தித்து அரசியல் நடவடிக்கை எதுவும் எடுக்கும் முன்பு அவரைக் கலந்து ஆலோசிப்பதாக ஒப்புக் கொண்டார். அப்பொழுது பம்பாய் ஆளுநராக இருந்த திரு.வெல்லிங்டன் அவர்கள் பிற்காலத்தில் இந்தியாவின் வைஸ்ராய் பதிவும் வகித்தார். கோபால கிருஷ்ண கோகலே மறைவிற்காக மிகவும் மனம் வருந்தனார். கோகலே அவர்கள் காந்தியடிகளின் வழிகாட்டியாகவும் ஆதரவாளராகவும் இருந்து வந்துள்ளார். இந்திய தேசிய காங்கிரசில் பலர் இந்திய தேசிய வாதத்தை ஏற்றுக் கொண்ட போதும், காந்தியடிகள் சற்று விலகியே இருந்தார்.1915 ஆம் ஆண்டு சத்தியாகிரக ஆசிரமம் என்னும் புதிய குடியிருப்பை அகமதாபாத் நகருக்கு அருகில் நிறுவி தமது சகாக்களுடனும் ஒரு தீண்டத் தகாத குடும்பத்துடனும் குடியேறினார்.ஆசிரம வாசிகள் அனைவரும் புனிதமான எளிமையான வாழ்க்கை வாழ்வதாக உறுதி எடுத்துக் கொண்டனர். சிறிது காலத்திற்குப் பின் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெறுவது அவசியம் என்று கருதினாலும் அவர்களுக்கு பதிலாக மேலை நாகரிகத்தில் வளர்ந்த வசதி படைத்த இந்தியர்கள் தான் நாட்டை ஆள வருவார்கள் என்று பயம் கொண்டிருந்தார். சமூக பொருளாதார மறுமலர்ச்சியுடன் வறுமை, சாதி சமயப்பிரிவு இல்லாத, ஏற்றத் தாழ்வற்ற சமூகத்துடன் விடுதலை பெறுவது என்று தீர்மானமான கொள்கையைக் கொண்டிருந்தார்.அனைவருக்கும் ஏழைகள் பால் கருணையும் அனுசரணையும் இல்லாதவரை இந்தியா விடுதலைக்குத் தகுதிபெற்று விட்டதாக காந்தியடிகள் கருதவில்லை. தமது பொது வாழ்க்கையை 1916 ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கிய காந்தியடிகள் காசி இந்துப் பல்கழைக் கழகத்தில் உரையாற்றிய போது விடுதலை குறித்தும் சமூக பொருளாதார மறுமலர்ச்சி குறித்த தமது புரிதலையும் விளக்கிக் கூறினார். மக்களின் வாழ்க்கைத்தரம் எவ்வளவு மோசமாக உள்ளது என்றும் தமது பயணத்தின் போது கண்டவைகளையும் குறிப்பாக சுகாதாரச் சீர்கேடு எவ்வாறு பரவிக் கிடக்கிறது என்றும் விளக்கினார். உயர் சாதியினர் இந்தக்க் கருத்துக்கு உடன்படவில்லை என்றாலும் தமது கருத்துக்குளுக்குச் செயல் வடிவம் கொடுக்க காந்தியடிகள் முடிவு செய்தார்.தென் ஆப்பிரிக்காவைப் போல இங்கு கைது செய்வதை எதிர் நோக்கி சம்பாரன் மாவட்டத்தில் உள்ள ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுத்தார்.இவர் எடுத்த முயற்சியின் காரணமாக தோட்ட முதலாளிகளின் சுரண்டலுக்கு எதிராக, அரசு ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது. காந்தியடிகள் வன்முறைக்கு எதிராக எப்பொழுதும் குரல் கொடுத்து வந்தார். அகமதாபாத் ஆலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து, வன்முறையில் இறங்கிய போது உண்ணா நோன்பிருந்து அமைதியை நிலை நாட்டினார். சில அரசியல் நோக்கர்கள் உண்ணா நோன்பிருந்து பிறருக்கு அழுத்தம் கொடுப்பது தவறான அணுகுமுறை என்று விமர்சித்தாலும், மூன்று நாட்களுக்குள் ஆலை முதலாளிகளும், தொழிலாளர்களும் பேசி உடன்பாடு செய்து கொண்டனர். இந்தச் சோதனை மூலம் காந்தியடிகள் உண்ணா நோன்பு ஒரு பலமான ஆயுதம் என்று உணர்ந்து கொண்டார். இது பிற்காலத்தில் இவருக்கு மிகுந்த பலனை கொடுத்தது. முதலாம் உலகப்போர் தொடங்கியதும், காந்தியடிகள் ஆங்கிலேயப் படைக்கு ஆள் சேர்ப்பதற்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்டு முயன்று வந்தார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் குறித்த உணர்ச்சி பூர்வமான உரைகளைக் கேட்டிருந்த அவர் சகாசகள்,அவருடைய இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டினர். ஆங்கில அரசிற்கு காந்தியடிகள் விசுவாசமாக இருந்தாலும்,பிரித்தானிய அரசின் கொள்கையின் மீதும் கோட்பாடுகள் மீதும் ஈடுபாடு கொண்டிருந்தாலும்,சுயாட்சிக் கொள்கை மீது அதிகமான பிடிப்பு கொள்ளத் துவங்கினார். இதன் தொடர்ச்சியாக காந்தியடிகள் நாடு முழுவதும் பயணம் செய்தார்கள். பின்னர் அவர் உடல் நிலை மிகவும் மோசமடைந்த பொழுது எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல் தமது மண் சிகிச்சை முறையையும் ,உணவுப் பக்குவத்தையுமே அனுசரித்தார். தமது ஆசிரமத்தில் படுத்த படுக்கையாகச் சில காலம் இருக்க வேண்டியிருந்தது. உலகின் முக்கியாமன முகமதிய அரசான ‘ஒட்டாமா’ பேரரசை ஆங்கிலேயர்கள் வென்றதையடுத்து, இந்தியாவிலும் பரவலாக அமைதியின்மை காணப்பட்டது. ஆங்கிலேயர்கள், சிறிய அரசுகளையும், மக்களையும், ஒட்டாமா அரசின் கொடுங்கோன்மையிலிருந்து பாதுகாத்ததாகக் காரணம் கூறினாலும், இந்திய மக்கள் இதனை நம்ப மறுத்தனர். முதல் உலகப் போர் முடிவுக்குப் பின்பும்,ஆங்கிலேய அரசு,போர்க்காலத்திற்காக ஏற்படுத்திய சிறப்பு சட்டங்களையும், விதிகளையும் நீக்காமல் தொடர்ந்து அமல் படுத்தவும் முடிவு செய்தது. இதன் பயனாக ஊரடங்கு உத்தரவு பேச்சு சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் பல அதிகாரங்கள் அரசின் வசம் தொடர்ந்து இருந்துவந்தது.இந்த ஏற்பாட்டிர்கு அடிப்படை ரெளலத் குழுவின் பரிந்துரையாகும். காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்று 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி பொது வேலை நிறுத்தம் நாடு தழுவிய அளவில் நடைபெற்றது. இதற்காக காந்தியடிகள் கைது செய்யப்பட்டார். பல இடங்களில் போராட்டத்தில் பொது மக்கள் ஈடுப்பட்டனர். காந்தியடிகளின் விருப்பத்திற்கு மாறாக வன்முறையும் வெடித்தது. வன்முறையை ஏற்றுக்கொள்ளாத காந்தியடிகள் போராட்டத்தை விடுத்து அனைவரையும் தம் வேலைக்குத் திரும்பும்படி வேண்டுகோள் விடுத்தார். சத்தியகிரகத்தை வன்முறையையில்லாமல் நடத்த இயலாதென்றால் அதை தொடர்வதில் பயனில்லை என்று வலியுருத்தினார். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் காந்தியடிகளின் கருத்துக்கு உடன்படவில்லை.பஞ்சாப் மாகாணத்தின் தலை நகரமான அமிர்தசரஸ் நகரில், ஆங்கிலேய அரசு, காங்கிரசு அமைப்பின் இந்து மற்றும் முகமதிய உறுப்பினர்களை மாகாணத்தை விட்டு வெளியேற்றியது. நகரின் தெருவெங்கும் மக்கள் கூட்டமாகச் சேர்ந்து வன்முறையில் ஈடுபட்டனர்.ஆங்கில அரசு, பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்டு.இ.டயர் என்னும் அதிகாரியை சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த அனுப்பியது. டயர் அனைத்துப் பொது கூட்டங்களையும் தடை செய்ததுடன் காவல் துறையினர் அருகில் வரும் பொழுது மக்களைக் கசையடி கொடுத்துக் தாக்கினார். இதனைப் பொருட்படுத்தாத சுமார் 1000 பொதுமக்கள் அமிர்தசரச் நகரின் மையப்பகுதியில் குவிந்தனர். இவர்கள் மீது எந்த விதமான முன்னறிவுப்புமின்றி டயர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். ஒடுக்கமான இடத்தில் மாட்டிக் கொண்ட பொதுமக்கள் வெளியேற வழியில்லாமல் தரையில் படுத்துக்கொண்டனர்.ஆனால் டயர் ஆனணையினை ஏற்று காவல் துறையினர் தரையில் படுத்துக்கொண்டிருந்த பொதுமக்கள் மீது, தமது கைவசமிருந்த துப்பாக்கி குண்டுகள் தீரும்வரை சுட்டுத் தள்ளினர். நூற்றுக்கணக்கானவர்கள் மாண்டனர்.பலர் காயமுற்றனர். இந்தத் துப்பாக்கிச்சூடு நிகழ்ச்சி அமிரதசரச் படுகொலை என்று அழைக்கப்பட்டது. இந்திய மக்களைப் போலவே இங்கிலாந்து மக்களையும் இது கோபப்பட வைத்தது.லண்டனில் உள்ள ஆங்கிலேய அதிகாரிகள் இந்நிகழ்ச்சியை கண்டித்ததுடன் டயரையும் பணி நீக்கம் செய்ய வைத்தனர். இப்படுகொலை இந்திய மக்களிடையே மிகப் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியது. மிதவாதிகளும் இந்திய விடுதலைதான் தீர்வு என்று வாதத்தைக் கையிலெடுத்தனர். இப்படுகொலைக்குப் பின் காந்தியடிகள் அமிர்தசரச் சென்று விசாரணை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தார்.தம் விசாரணை அறிக்கையை காந்தியடிகள் வழங்கிய போது மேலும் பல அரசியல் வாதிகளின் தொடர்பும் கிடைத்தது. அவர்களும் அங்கிலேய அரசிடமிருந்து விடுதலை ஒன்றுதான் தீர்வு என்று தீர்மாணித்தனர். அமிர்தசரஸ் நிகழ்விற்குப்பின் காந்தியடிகள் டில்லியில் நடைபெற்ற முகமதியர் கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தில் முகமதியர்கள் துருக்கியின் காலிபை ஆங்கிலேயர்கள் அடக்கியாள்வது குறித்து கவலையைத் தெரிவித்தனர். முகமதியர் காலிபுகளை முகமதுவின் வாரிசாகக் கருதினர். ஆங்கிலேயர்கள் முதலாம் உலகப் போரின் பின்பு அமைதியை நிலை நாட்ட இதுபோன்ற நடவடிக்கை தேவைப்பட்டது என்று விளக்கினர்.ஆனால் முகமதியர்கள் இவ்வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. காந்தியடிகளும் ஆங்கிலேயர்களின் நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தினார். காந்தியடிகள் ஆங்கிலேயர்கள் தொடர்ந்து காலிபுகளை அடக்கி ஆள முயன்றால் இந்திய முஸ்லிம்கள் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு அரசுப்பணிகளையும் வரிசெலுத்துவதையும் மறுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இங்கிலாந்தும்,துருக்கியும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டாலும் காந்தியடிகள் அமைதியாக இருக்கும்படியும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தினார். மற்ற தேசியவாத அரசியல் வாதிகளைப் போலல்லாமல், காந்தியடிகள் மாண்டேகு செமஸ் போர்டு பரிந்துரைகளுக்கு ஆதரவு தந்தார். இப்பரிந்துரைகள் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்துவதற்கு வழிகோலின. இறுதியில் காந்தியடிகளின் பெருமையினாலும், அவரைத் தவிர்த்து காங்கிரசால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது என்ற எண்ணத்தினாலும்,மாற்றுக் கருத்து கொண்ட அரசியல்வாதிகளும் இவருடன் ஒத்துப் போயினர். ஆங்கிலேயர்கள் முஸ்லிம் காலிப் பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதில் தீவிரமாக இருந்தனர்.அது போலவே அடக்குமுறைச் சட்டத்திற்கு அடிப்படையான ரெளலத் சட்டத்தை அமல்படுத்துவதிலும் தீவிரம் காட்டினர். இதனால் பொருமையிழந்த காந்தியடிகள் ,1920 ஆம் வருடம் மேலை நாட்டுத் துணிகளையும்.அரசுப் பணிகளையும் துறந்து ஒத்துழையாமை இயக்கத்தை தீவிரப்படுத்தும் படி நாட்டு மக்களை வேண்டிக்கொண்டார். முன்னோடியாக, தாம் தென் ஆப்பிரிக்காவில் பூவர் போரில் புரிந்த சேவைக்காக பெற்ற பரிசுகளையும் பதக்கங்களையும்’ திருப்பிக் கொடித்தார். சுயாட்சி இயக்கத்தின் முதல் தலைவராகப் பொறுப் பேற்றுக் கொண்டதன் மூலம் இந்தியாவிற்கு விடுதலை தான் தீர்வு என்பதை அனைவரும் அறியும் வண்ணம் உணர்த்தினார். 1920ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காந்தியடிகள் சட்டங்களையும் அமைப்பு விதிகளையும் காங்கிரசுக்கு வகுத்துக் கொடுத்தார். இதன்படி தேசிய அளவில் இரண்டு குழுக்களும் அடிப்படையில் பல குழுக்களை அமைத்தும் ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவு திரட்டுவதற்கு ஏதுவாக வழியினை ஏற்படுத்திக் கொடுத்தார். காந்தியடிகளும் மற்ற தலைவர்களும் நாடு முழுவதும் பயணம் செய்து இந்த அடிப்படை அமைப்புகளுக்கு வலு சேர்த்தனர். இது மகத்தான வெற்றியை அளித்தது. காந்தியடிகளின் பெரும் புகழுக்கு பின்பு ஆங்கிலேய அரசின் வைஸ்ராய் ரீடிங் பிரபுவால் எந்த நடவடிக்கையையும் எதிராக எடுக்க முனையவில்லை. 1922 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கமாக உருப்பெற வேண்டுமென்று காந்தியடிகள் விரும்பினார். ஆங்கிலேய அதிகாரிகளை சாரிசாரி என்னும் நகரில் ஒரு வன்முறைக் கூட்டம் கொலை செய்ததைத் தொடர்ந்து ரிடிங் பிரபு காந்தியடிகளைக் கைது செய்யும் படி ஆணை பிறப்பித்தார். எப்பொழுதும் வன்முறையை ஏற்றுக்கொள்ளாத காந்தியடிகள் சாரிசாரி நிகழ்ச்சியைக் கண்டித்ததுடன் உண்ணா நோன்பையும், தொழுகையையும் மேற்கொண்டார். ஆனாலும் ஆங்கிலேயர்கள் இது வன்முறையை தூண்டும் என்று கருதி கைது செய்வதைத் தொடர்ந்தனர். பகுதி ஐந்து ஆங்கிலேயர்கள் காந்தியடிகள் மீது தேசத் துரோகம் குற்றம் சாட்டி ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுத் தந்தனர். இந்தியாவில் குற்றம் சாட்டப்படுவது இதுவே முதல் முறையாகும். காந்தியடிகள் புகழினை நன்கு அறிந்திருந்த நீதிபதி புரூம்பீலடு கடுமையான தண்டனை வழங்குவதற்குத் தயங்கினார். காந்தியடிகள் குற்றம் புரிந்தார் என முடிவுக்கு வந்தார்.குற்றத்தை ஒப்புக்கொண்ட காந்தியடிகள் தமக்கு கடுமையான தண்டனை வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.குற்றத்தை ஒப்புக் கொள்வதும் தண்டனை அனுபவிப்பதும் தமது சத்தியாகிரகக் கொள்கையின் பாற்பட்டது.மேலும் தண்டனை அனுபவிப்பதும் தமது கொள்கையின் மீது கொண்ட ஈடுபாட்டை வலுப்படுத்தும் என்று நம்பினார்.சிறையில் அவருக்கு அதிகாரிகள் இராட்டை வைத்து நூல் நூற்கவும் படிப்பதற்குப் புத்தகங்களும் வைத்திருக்க அனுமதித்தனர். இச்சிறையில் இருக்கும் பொழுதுதான் தமது சுய வரலாறை எழுதினார். காந்தியடிகள் சிறையிலிருக்கும் பொழுது இந்தியர்கள் தம் அரசுப் பணிக்கு வழக்கம் போல் திரும்பினர்.மேலும் காந்தியடிகளின் விருப்பத்திற்கு மாறாக இந்துக்களுக்கும்,முகமதியர்களுக்கும் பகைமை தீவிரமடைந்தது. பல இடங்களில் வன்முறையும் நடந்தது. தமக்குள் ஒற்றுமையின்மையினால் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும்தொய்வு ஏற்பட்டது.சாதியினாலும், மதத்தினாலும் ஒற்றுமையின்மை பரவலாக இருந்தது. ஆங்கிலேயர்கள் தொடர்ந்து அரசாட்சி செய்வதற்கான தார்மிகத்தை இழந்து விட்டதாகக் காந்தியடிகள் நம்பினார்.ஆனால் இங்கிலாந்து அரசைப் பலவீனப்படுத்தி இந்தியா விடுதலை பெறுவதை அவர் விரும்பவில்லை. இந்தியர்கள் விடுதலை பெறுவதற்கான தார்மிக அதிகாரம் பெற வேண்டும் என்று கருதினார்.பணிவு.அடக்கம், நன்னடத்தை, குழந்தைத் திருமண மறுப்பு போன்றவை குறித்து காந்தியடிகள் அறிவுறுத்தி நாட்டுமக்களிடம் விடுதலைக்கான தார்மிக அதிகாரத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார். குழந்தைத் திருமணம் போன்ற பல நிகழ்ச்சிகளில் தம் நிலையை பலமுறை மாற்றிக் கொண்டதை காந்தியடிகள் ஒப்புக் கொண்டுள்ளார். எல்லா வேளைகளிலும் சரியான தார்மிக வழியை தம்மால் கடைப்பிடிக்க முடியவில்லை என்றும் கூறுகிறார்.சிறைவாசம் முடிந்த பின் தமது சத்திய சோதனையத் தொடர்ந்தார். தம் ஆன்மாவில் அடங்கியிருக்கும் தீராத ஆவலின் அடிப்படையில் தொடர்ந்து பல சோதனைகள் செய்வதாகக் கூறி தமது சுயவரலாறை முடிக்கின்றார். தமது விருப்பங்களையும் புலன்களையும் கட்டுப்படுத்தி இக்கடுமையான பாதையைத் தொடர்ந்து, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து, வீடு போற்றை அடைவது தமது நோக்கம் என்று கூறி முடிக்கின்றார். தமது வாழ்வு ஒரு சுயசரிதை அல்ல,அது தம் வாழ்வில் நடத்திய சோதனைகளின் தொகுப்பே என்றும் கூறி முடிக்கின்றார். காந்தியடிகளின் மீது தாக்கம் ஏற்படுத்தியவை தமது நூலில் காந்தியடிகள் , லியோ டால்ச்டாய் எழுதிய ‘கடவுளின் அரசாங்கம் உன்னிடமே உள்ளது’ (The Kingdom of God is with in you) என்னும் நூலும், சான் இரச்க்கின் எழுதிய ‘கடையேனுக்கும் கடைத்தேற்றம்’ (Unto this Last) என்னும் நூலும், கவிஞர் ராய்சந்திராவின் ( Shrimad Rajchandra )தொடர்பும் தமது வாழ்வில் மிகப் பெறிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று பதிவு செய்கிறார். ஆதரங்கள் பகுப்பு:மொழிபெயர்ப்பு நூல்கள் பகுப்பு:சுயசரிதைகள்
சத்யசோதனை புத்தகத்தை எழுதியவர் யார்?
மோகன்தாசு கரம்சந்த் காந்தி
71
tamil
ebeb02880
இந்தியா (India) அல்லது அதிகாரப்பூர்வமாக இந்தியக் குடியரசு (Republic of India))[கு 1] என்பது தெற்காசியாவில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது பரப்பளவில் உலகின் 7வது மிகப்பெரிய நாடாகவும், 2வது மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும் (1.2 பில்லியன் மக்கள்), மிக அதிக மக்கள்தொகையைக் கொண்ட மக்களாட்சி நாடாகவும் உள்ளது. தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிக் கடல், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவற்றால் சூழப்பட்டுள்ள இதன் எல்லை நாடுகளாக மேற்கே பாக்கிஸ்தான், வடக்கே பூட்டான், மக்கள் சீனக் குடியரசு, நேபாளம், கிழக்கே வங்காளதேசம், மியான்மர் ஆகியவை அமைந்துள்ளன. இலங்கை, மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் இந்தியப் பெருங்கடலின் அண்மையில் அமைந்துள்ளன. இந்தியாவின் ஒன்றியமான அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாய்லாந்து, இந்தோனேசியாவின் சுமாத்திரா ஆகியவற்றுடன் கடல் எல்லையைக் கொண்டுள்ளது.[19] பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு ஆகும். இந்தியா மொத்தம் 7,517 கிமீ (4,700 மைல்) நீளக் கடல் எல்லையைக் கொண்டது.[20] 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 121 கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்தியா உலகளவில் 2வது இடத்தில் உள்ளது.[21] பொருளாதாரத்தில் பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. உலகின் பண்டைய நாகரிகங்களில் இந்தியாவும் ஒன்று ஆகும். சிந்து சமவெளி நாகரிகம் அல்லது ஹரப்பா-மொகஞ்சதாரோ என்று அழைக்கப்படும் நாகரிகம் இங்கு தோன்றியது ஆகும். இந்து சமயம், புத்தம், சமணம், மற்றும் சீக்கியம் ஆகிய நான்கு தலைமை மதங்கள் இந்தியாவிலேயே தோன்றின. பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளினால் கைப்பற்றப்பட்டு, 1947, ஆகத்து 15 அன்று விடுதலை பெற்றது. பின்னர் 1950, சனவரி 26 அன்று குடியரசாக அறிவிக்கப்பட்டு உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாகத் திகழ்கிறது. வரலாறு கி.மு.300 இல் அசோகரால் கட்டப்பட்டு, மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாஞ்சி ஸ்தூபம் போன்று 40,000 ஆண்டுகளுக்கு முந்திய, பழைய கற்காலத்தைச் சேர்ந்த பாறை ஓவிய மரபு, நடு இந்தியாவிலுள்ள பீம்பேட்கா என்னுமிடத்திலும் வேறு இடங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது. தெற்காசியாவின், முதல் நிரந்தரக் குடியிருப்புகள் சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் தோன்றின. இப் பகுதி சார் பண்பாடு, உலகின் மிகப் பழைய நாகரிகங்களுள் ஒன்றாக, கி.மு 6000 தொடக்கம் கி.மு 1900 வரை உச்ச நிலையிலிருந்த, சிந்துவெளி நாகரீகமாக வளர்ச்சியடைந்தது. கி.மு 1500 அளவில், இந்தியாவின் வடமேற்கிலிருந்து ஏற்பட்ட ஆரிய இனக்குழுக்களின் உள்வரவாலும், ஓரளவுக்கு உள்ளூர் வாசிகளுடனான கலப்பினாலும் வேதகாலப் பண்பாடு உருவானதாக ஒரு கருத்து உண்டு. காலப்போக்கில் ஆரியரின் பண்பாடு, மொழி மற்றும் சமயம் என்பன இந்நாட்டில் மிக தலைமைத்துத்துவம் பெற்றவையாகின என்று இக்கருத்து கூறகிறது. முந்தைய, பரவலான நோக்கில், இவ்வுள்வரவானது, திடீரென ஏற்பட்ட வன்முறை குடிபெயர்ப்பாகும். எனினும், அண்மைக்காலச் சிந்தனைகள், இது ஒரு படிப்படியான உள்வரவாக இருந்திருக்கக் கூடும் என்ற கருத்துக்கு ஆதரவாக இருப்பது போல் தெரிகிறது. (ஆரிய ஆக்கிரமிப்புக் கோட்பாட்டைப் பார்க்கவும்). வடமேற்கிலிருந்து எந்தப் பிரிவினரும் வரவில்லை என்றும், சிந்து சமவெளி நாகரிகமும் வேத நாகரிகமும் ஒன்று என்ற கருத்தும். சிந்து சமவெளி நாகரித்தினரும், தமிழ் சங்க இலக்கியங்களில் கூறப்படும் மூழ்கிய குமரிக் கண்டத்தைச் சேர்ந்த தென்னகத்தாரும் இன்றைய இந்தியரின் முன்னோர்கள் என்ற மற்றொரு கருத்து உண்டு. எனினும் இதில் எந்தக் கருத்தும் முழுமையாகவும் திட்டவட்டமாகவும் மெய்ப்பிக்கப் படவில்லை. இதுபற்றி ஆராய்ச்சியாளர்களிடையே பல கருத்து வேறுபாடுகள் உண்டு. மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கிய குப்தர்களின் ஆட்சிக்காலமானது பண்டைய இந்தியாவின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. சேர, சோழ, பாண்டிய, பல்லவ, சாளுக்கிய, கடம்பப் பேரரசுகள் தென்னிந்தியாவை பல்வேறு காலகட்டங்களில் ஆண்டன. அராபியர் வருகை எட்டாம் நூற்றாண்டில் தொடங்கியது. துருக்கியர் 12ஆம் நூற்றாண்டில் வரத்தொடங்கினர். இவர்களைத் தொடர்ந்து ஐரோப்பிய வணிகர்கள் 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் வரத்தொடங்கினர். முகலாயப் பேரரசை அடிபணிய வைத்ததன் மூலம், 19ஆம் நூற்றாண்டில், கிட்டத்தட்ட முழு இந்தியாவினதும் அரசியல் கட்டுப்பாடு ஆங்கிலேயப் பேரரசிடம் போய்ச் சேர்ந்தது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி தலைமையேற்று நடத்திய வன்முறையற்ற அகிம்சைப் போராட்டம் 1947-இல் கிடைத்த இந்திய விடுதலைக்கு வித்திட்டது. இந்திய துணைக்கண்டம் மதச்சார்பற்ற இந்தியாவாகவும் இசுலாமிய நாடான பாகிஸ்தானாகவும் பிரிந்தது. பின்னர் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி இந்தியா குடியரசு ஆனது. தொடர்ச்சியற்ற நிலப் பகுதிகளான மேற்கு மற்றும் கிழக்கு பாகிசுதானிடையே 1971-இல் உள்நாட்டுப் போர் மூண்டதற்குப் பிறகு இந்தியத் தலையீட்டின் பேரில் கிழக்கு பாகிசுதான் வங்காள தேசம் என்ற தன்னாட்சி பெற்ற நாடாகப் பிரிந்தது. 1991-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட தாராளமயமாக்கலுக்குப் பிறகு இந்தியப்பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி பெறத்தொடங்கியது. இயற்கை வளம், மனித வளம் மற்றும் பாதுகாப்பிற்கு உகந்த நில அமைப்பு ஆகியவை இந்தியாவின் தலைமை பலங்களில் சிலவாகும். பாகிசுதானுடனான காஷ்மீர் பிரச்சினை, கவலை தரும் மக்கள் தொகை பெருக்கம், சுற்றுச் சூழல் சீர் கேடு, ஊழல் ஆகியவை இந்தியா எதிர் நோக்கும் சவால்களில் சிலவாகும். இவற்றையும் பார்க்க: இந்திய வரலாற்று காலக் கோடு அரசியல் அமைப்பு இந்தியா 29 மாநிலங்களையும் 7 ஒன்றியப் பகுதிகளையும் கொண்ட ஒரு கூட்டமைப்பு ஆகும். இக்கூட்டமைப்பு ஆற்றல்பூர்வமாக இந்திய சுதந்திர சமூகவுடமை சமய சார்பற்ற மக்களாட்சிக் குடியரசு என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரச நிர்வாகம் சட்டப் பேரவை, செயலாற்றுப் பேரவை, சுதந்திர நீதியமைப்பு ஆகிய மூன்று கூறுகளால் பேணப்படுகின்றது. இவை கூட்டாகவும், அதேவேளை ஒவ்வொரு கூறும் மற்றதன் நடவடிக்கைகளை, தவறான ஆற்றல் பயன்பாடுகளை, ஊழலைக் கண்காணிக்ககூடிய வகையில் ஆங்கிலேய நிர்வாக அமைப்புகளைப் பின்பற்றிக் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்திய நாட்டின் தலைவராகக் குடியரசுத் தலைவர் இருக்கின்றார் எனினும் இவரது கடமைகள் பெரும்பாலும் மரபுவழிச்சடங்குகள் அடிப்படையிலேயே அமைகின்றன. குடியரசுத் தலைவரும் குடியரசுத் துணைத்தலைவரும் பாராளுமன்ற மற்றும் மாநில, நாட்டு சட்டமன்றங்களின் (ஈரவை அமைப்பாயின் கீழவை) உறுப்பினர்களால் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். செயல் அதிகாரம் பிரதமரிடமும் அவரின் தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சரவையிடமும் இருக்கின்றது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரைக் குடியரசுத் தலைவர் பிரதமாராக நியமிப்பார். பிரதமரின் ஆலோசனைக்கேற்ப பிற அமைச்சர்களைக் குடியரசுத் தலைவர் அங்கீகரிப்பார். இந்திய பாராளுமன்றம் இரு சட்ட அவைகளை கொண்டு உள்ளது. அவை மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகும். இவை இரண்டும் இந்திய கட்டமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை. அமைச்சரவை பாராளுமன்றத்திற்கு, அதிலும் குறிப்பாக மக்களவைக்கு, கடமையுற்றது. மாநிலங்களவையின் 233 உறுப்பினர்கள் மாநில-நாட்டு சட்டப்பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு ஆண்டுகளுக்குப் பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலுக்குச் செல்ல வேண்டியிருக்கும். இந்திய மக்களவைக்கு அதிகமாக 552 உறுப்பினர்கள் வரை இருக்கலாம் என்று இந்திய அரசியல் சாசனம் வழிமுறை காட்டுகிறது.[22] இதில் 530 உறுப்பினர்கள் மாநிலங்களில் இருந்தும் 20 உறுப்பினர்கள் நடுவணரசு பகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படலாம். குடியரசுத்தலைவர் விரும்பினால் இரண்டு ஆங்கிலோ-இந்தியர்களையும் நியமிக்கலாம். இவ்வாறாக இந்தியா மக்களவைக்கு அதிகமாக 552 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கப்படலாம். ஆனால் தற்போது மதிய ஆளுமைப் பகுதிகளிலிருந்து 13 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதனால் மக்களவையின் தற்போதைய உறுப்பினர்கள் 545 ஆகும். மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். இந்திய சட்ட கட்டமைப்பின் மிக உயர் ஆற்றல் உச்ச நீதிமன்றத்திடம் உள்ளது. உயர் நீதிமன்றம் அரசியலமைப்பின் பாதுகாவலனாகச் செயல் படுகிறது. உயர் நீதிமன்றம் மாநிலங்களுக்கும் நடுவணரசிற்கும் இடையான சிக்கல்கள் தொடர்பாக ஆள் வரை உண்டு. மேலும் மேன் முறையீடு ஆள் வரையும் உயர் நீதிமன்றங்கள்மீது உண்டு. பெரிய மாநிலங்களுக்கு ஒன்றும் சிறிய மாநிலங்களுக்குப் பொதுவாகவும் 18 உயர் நீதி மன்றங்கள் இயங்குகின்றன. அதற்கு அடுத்த நிலைகளில் மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளன. இவை அனைத்திலும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. அரசியல் இந்தியாவில் பல கட்சி ஆட்சி முறை பின்பற்றப்படுவதால் எண்ணற்ற கட்சிகள் உள்ளன. இவை இந்தியாவின் தேர்தல் ஆணையத்தால், குறிப்பிட்ட சில அடிப்படைகளுக்கு அமைய, நாட்டுக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் என இரண்டு பிரிவுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு, மத்தியில் பெரும்பாலும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியே ஆண்டு வந்திருக்கிறது. மாநில அளவில் பல்வேறு மாநிலக் கட்சிகள் செல்வாக்கு உள்ளவையாக விளங்குகின்றன. மற்ற பெரிய நாட்டுக் கட்சிகள் பாரதிய ஜனதா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), ஜனதா தளம் ஆகியவை ஆகும். குறுகிய இரண்டு காலப் பகுதிகளைத் தவிர்த்து 1950 முதல் 1990 வரையான காலம் முழுவதும் இந்திய காங்கிரசு கட்சியே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக் கட்சியாக விளங்கியது. 1977 க்கு முன் காங்கிரசு அரசு காலத்தில் கொண்டுவரப்பட்ட அவசரநிலைச் சட்டத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்ட திருப்தியின்மையினால் 1977 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு தோல்வியுற்றது. பல கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய ஜனதாக் கட்சியும், இடதுசாரிகள் உட்பட்ட பிற கட்சிகள் சிலவும் சேர்ந்து உருவாக்கிய தேசிய முன்னணி என்னும் அமைப்பு காங்கிரசைத் தோற்கடித்து ஆட்சியமைத்தது. எனினும் இக் கூட்டணியால் நீண்டகாலம் நீடித்து ஆள முடியவில்லை. இரண்டு ஆண்டுக் காலத்திலேயே அரசு கவிழ்ந்தது. 1996 ஆம் ஆண்டுக்கும் 1998 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலம் நடுவணரசைப் பொறுத்தவரை ஒரு குழப்பமான காலமாகும். இக்காலத்தில் முதலில் பாரதீய ஜனதாக் கட்சியும், பின்னர் சில மாதங்கள் ஐக்கிய முன்னணி என்னும் பல கட்சிக் கூட்டணியும் ஆட்சி நடத்தின. தொடர்ந்து 1998 இல் நடை பெற்ற தேர்தலில் பாரதீய ஜனதாக்கட்சி தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த அரசு, நாடாளுமன்றத்தின் முழு ஐந்தாண்டுக் காலமும் பதவியில் இருந்த முதல் காங்கிரசு அல்லாத அரசு என்னும் பெயரையும் பெற்றது. 2004 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் எக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும், நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருந்த காங்கிரசு கட்சி, இடதுசாரிகள், பிற மாநிலக் கட்சிகள் ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டு உருவாக்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற அமைப்பின் சார்பில் ஆட்சியில் அமர்ந்தது. காங்கிரஸ் கட்சியால் அமைக்கப்பட்ட முதலாவது கூட்டணி அரசு இது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று தனிபெரும்பான்மையுடன் ஆட்சி பொறுப்பேற்றது. நரேந்திர மோதி பிரதமராகப் பதவியேற்றார். வெளியுறவும், இராணுவமும் 1947 ஆம் ஆண்டில் விடுதலை பெற்றதிலிருந்து இந்தியா பெரும்பாலான பிற நாடுகளுடன் நல்லுறவையே கொண்டுள்ளது. 1950களில், ஐரோப்பிய நாடுகளின் பிடியிலிருந்து ஆசிய ஆபிரிக்கக் குடியேற்ற நாடுகளின் விடுதலைக்காகக் குரல் கொடுத்து வந்தது. இந்தியா பொதுநலவாய நாடுகள் குழுவின் ஒரு உறுப்பு நாடும், அணிசேரா நாடுகள் இயக்கத்தின் தொடக்க உறுப்பு நாடும் ஆகும். சீன -இந்தியப் போருக்கும், 1965 இல் இடம்பெற்ற இந்திய-பாகிஸ்தான் போருக்கும் பின்னர் இந்தியா சோவியத் ஒன்றியத்துடன் நல்லுறவைப் பேண முயன்றது. இதனால், அமெரிக்காவுடனான உறவு பாதிக்கப்பட்டது. இந்நிலை சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்து, பனிப்போர் முடியும் வரை நீடித்தது. இந்தியாவும், பாகிஸ்தானும் முக்கியமாக, காஷ்மீர்ப் பிணக்குக் காரணமாக மூன்று போர்களில் ஈடுபட்டன. இவற்றைவிட அவ்வப்போது சிறு சிறு சண்டைகளும் இடம்பெற்ற வண்ணமே இருக்கின்றன.குறிப்பாக, 1984 ல் இடம்பெற்ற சியாச்சென் பனியாற்றுப் போரையும், 1999 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கார்கில் போரையும் குறிப்பிடலாம். அண்மைக் காலங்களில் இந்தியா "ஆசியான்" எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பிலும், "சார்க்" எனப்படும் பிரதேச ஒத்துழைப்புக்கான தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பிலும் முக்கியமான பங்களிப்புக்களைச் செய்து வருகிறது. ஐக்கிய நாடுகள் அவையின் தீவிரமான ஆதரவு நாடும், தொடக்ககால உறுப்பு நாடுமான இந்தியா, இச் சபையின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்காக 55,000க்கு மேற்பட்ட படையினரையும், காவல் துறையினரையும், நான்கு கண்டங்களில் சேவையாற்றுவதற்கு அனுப்பியுள்ளது. எனினும், பல விமர்சனங்களையும், இராணுவத் தேவைகள் தொடர்பான தடைகளையும் சந்தித்தபோதிலும், அணுவாற்றல் திட்டங்களில் தனது இறைமையைப் பேணிக்கொள்ளும் விருப்பினால், முழுமையான அணுகுண்டு சோதனைத் தடை ஒப்பந்தம், அணுவாயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட மறுத்து வருகின்றது. இந்தியாவின் அண்மைக்கால நடவடிக்கைகளினால் அது ஐக்கிய அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்தி வருகின்றது. பொருளியல் அடிப்படையில், இந்தியா ஆசியா, தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களைச் சேர்ந்த பிற வளரும் நாடுகளுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது. இந்தியா உலகின் மூன்றாவது பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பிற்காக தரைப்படை, கடற்படை, வான்படை ஆகியவைகள் இந்தியப் பாதுகாப்புத் துறையின் இயங்குகிறது. இவற்றுடன் எல்லைப் பாதுகாப்புப் படை, இந்திய - திபெத் எல்லைக் காவல்படை, மத்திய சேமக் காவல் படை, மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை, கரையோரக் காவல்படை என்பன இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்தியக் குடியரசுத் தலைவரே, இந்தியப் படைகளின் உயர் தளபதி ஆவார். 1974 ஆம் ஆண்டில், நடத்தப்பட்ட சிரிக்கும் புத்தர் நடவடிக்கை (Operation Smiling Buddha) எனப் பெயரிடப்பட்ட தொடக்க அணுக்கருச் சோதனை, பின்னர் 1998 இல் இடம் பெற்ற "நிலத்துக்கு அடியிலான சோதனைகள்" என்பவற்றின் மூலம் இந்தியா ஒரு அணு வல்லரசு என்னும் இடத்தைப் பிடித்தது. 1998 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து உலக நாடுகள் இந்தியாவுக்கான இராணுவத் தேவைகள் வழங்குவதைத் தடை செய்தன. எனினும் படிப்படியாக இவை திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டன. இந்தியா தான் முதலாவதாக அணுவாயுதத்தைப் பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. மாநிலங்களும் பகுதிகளும் இந்தியா ஒரு கூட்டாட்சிக் குடியரசு நாடாகும். இதில் 29 மாநிலங்களும் 7 ஒன்றியப் பகுதிகளும் அடங்கியுள்ளன. எல்லா மாநிலங்களிலும், புதுச்சேரி மற்றும் தேசிய தலைநகர ஒன்றியமான டெல்லி ஆகிய ஒன்றியப் பகுதிகளிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் நடுவண் அரசினால் நியமிக்கப்படும் துணைநிலை ஆளுநர்களைக் கொண்ட, குடியரசுத்தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும். 1956 ஆம் ஆண்டில், மாநிலங்கள் மீளமைப்புச் சட்டத்தின் கீழ் மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதன் பின்னர், வட இந்தியப் பகுதிகளில் சில புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது தவிர, அதிகம் மாற்றம் எதுவும் இல்லாமலேயே இம்முறைமை இயங்கிவருகிறது. மாநிலங்களும் ஒன்றியப் பகுதிகளும், சிறிய நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை மாவட்டங்கள் எனப்படுகின்றன. இந்தியாவில் ஏறத்தாழ 600 மாவட்டங்கள் உள்ளன. ஏழு ஒன்றியப் பகுதிகளில் புதுச்சேரியும், தில்லியும் மட்டும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பு இசைவின்[23] பேரில் ஏனைய மாநிலங்களைப் போலத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட அவைகள் அமைத்துக் கொள்ளும் உரிமை பெற்றுள்ளன. இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370-இன் படி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் தற்காலிகமாகச் சில சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.[24] புவியியல் . பரப்பளவில் இந்தியா உலகில் ஏழாவது பெரிய நாடாகும்.இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு பகுதியான இந்தியாவில் புவியியல் அடிப்படையில் மூன்று உட்பகுதிகள் உள்ளன. அவை, வடக்கே இமயமலைத்தொடர்கள் (உயரமான சிகரம் கஞ்சன்சுங்கா 8,598 மீ), இந்து-கங்கை சமவெளி (மேற்கில் தார் பாலைவனம்) மற்றும் தக்காணப் பீடபூமி. தக்காணப் பீடபூமி மூன்று திசைகளில் முறையே கிழக்கே வங்காள விரிகுடாக் கடல், தெற்கே இந்துமாக்கடல் மற்றும் மேற்கே அரபுக்கடல் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இமய மலையில் தோன்றி இந்தியாவுக்குள் பாயும் ஆறுகளில் கங்கை ஆறும், பிரமபுத்திராவும் முக்கியமானவை. இவை இரண்டுமே வங்காள விரிகுடாவில் கலக்கின்றன. யமுனா, கோசி என்பன கங்கை நதியின் துணை நதிகள். கோசி ஆறு பாயும் நிலப்பகுதி மிகக் குறைவான சரிவைக் கொண்டிருப்பதால் ஆண்டுதோறும் பெரும் அழிவைக் கொடுக்கும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. தீவக்குறைப் பகுதியில் பாயும் கோதாவரி, மகாநதி, காவிரி, கிருஷ்ணா போன்ற ஆறுகள் சரிவு கூடிய பகுதியில் அமைந்திருப்பதால் வெள்ளப்பெருக்கு அபாயம் குறைவாகவே காணப்படுகின்றது. இந்த ஆறுகளும் வங்காள விரிகுடாவிலேயே கலக்கின்றன. நர்மதா, தாபி போன்ற முக்கிய ஆறுகள் இந்தியாவின் மேற்குக் கரையூடாக அரபிக் கடலில் கலக்கின்றன. இந்தியா என்ற பெயர் ஏற்படக் காரணமாக இருந்தது சிந்து நதியாகும். இந்திய எல்லைக்குள் இரண்டு தீவுக்கூட்டங்கள் உள்ளன. பவளப்பாறைத் தீவுகளான லட்சத்தீவுகள் இந்தியத் தீவக்குறையின் மேற்குக் கடற்கரைக்கு அப்பாலும், எரிமலைச் சங்கிலியான அந்தமான்-நிக்கோபார் தீவுக்கூட்டம் கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் அந்தமான் கடலிலும் அமைந்துள்ளன. இந்தியாவின் தட்ப வெட்பம் தெற்கே வெப்பம் மிகுந்த பருவ மழை சார்ந்ததாகவும், வடக்கே மட்டான தட்பவெப்பமுள்ள காலநிலை ஆகவும் ஏனைய பகுதிகளில் பல்வேறு இடைப்பட்ட தட்ப வெட்ப நிலைகளாகவும் நிலவுகிறது. இந்தியாவில் கடற்கரை 7,517 கிலோமீட்டர்கள் (4,671 மைல்கள்) நீளமானது. இதில் 5,423 கிலோமீட்டர்கள் (3,370 மைல்கள்) இந்தியத் தீவக்குறைப் பகுதியையும், 2,094 கிமீ (1,301 மை) அந்தமான், நிக்கோபார், லட்சத்தீவுகள் ஆகியவற்றையும் சேர்ந்தவை. இந்தியத் தலைநிலப் பகுதியைச் சேர்ந்த கரைகளில், 43% மணற்பாங்கானவை, 11% பாறைகளைக் கொண்டவையாகவும், 46% சேற்று நிலங்கள் அல்லது சதுப்பு நிலங்களாகவும் காணப்படுகின்றன. குஜராத், மகாராஷ்டிர, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் கடல் எல்லைகளைக் கொண்டுள்ளன. இந்த மாநிலங்களின் கடற்கரைகளில் பெரிய மற்றும் சிறிய துறைமுகங்கள் அமைந்துள்ளன. இவற்றில் பல இயற்கையாகவே அமைந்த துறைமுகங்கள் ஆகும். இந்தியாவின் தாவர விலங்கு வளங்கள் இந்தோமாலய சூழ்நிலைவலயத்துள் அமைந்துள்ள இந்தியாவில் குறிப்பிடத்தக்க உயிரியல் பல்வகைமை காணப்படுகின்றது. 18 பெரும்பல்வகைமை நாடுகளுள் இதுவும் ஒன்று. உலகிலுள்ள மொத்த இனங்களுடன் ஒப்பிடும்போது, பாலூட்டி இனங்களில் 7.6%, பறவை இனங்களில் 12.6%, ஊர்வனவற்றில் 6.2%, ஈரூடகவாழிகளில் 4.4%, மீன்களில் 11.7%, பூக்கும் தாவரங்களில் 6.0% இந்தியாவிலே காணப்படுகின்றன. இங்குள்ள சோலாக் காடுகள் போன்ற பல சூழ்நிலைவலயங்கள், உயர்ந்த விழுக்காட்டிலான பகுதிக்குரிய (endemic) இனங்களைக் கொண்டவையாக உள்ளன. ஏறத்தாழ 33 விழுக்காடு இந்தியத் தாவரங்கள் பகுதிக்குரியவை. இந்தியாவின் காடுகள், அந்தமான், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள், வடகிழக்கு இந்தியா ஆகியவற்றின் வெப்பவலய மழைக் காடுகள் தொடக்கம் இமயமலைப் பகுதிகளின் ஊசியிலைக் காடுகள் வரை பல்வேறுபட்டு அமைந்துள்ளன. இந்த எல்லைகளிடையே, ஆச்சா மரங்களை அதிகமாகக் கொண்ட கிழக்கு இந்தியாவின் ஈரவலய இலையுதிர் காடுகள், தேக்கு மரங்களைக் கூடுதலாகக் கொண்ட நடு இந்தியா, தென்னிந்தியா ஆகிய பகுதிகளில் காணும் இலையுதிர் காடுகள், கருவேல மரம்|கருவேல மரங்களைப் பெருமளவில் கொண்ட நடுத் தக்காணத்தினதும், மேற்குக் கங்கைச் சமவெளியினதும் முட்காடுகள் என்பன உள்ளன. முக்கியமான இந்தியத் தாவரங்களுள், நாட்டுப்புறங்களிலே மருத்துவத் தேவைகளுக்காகப் பயன்படும் வேம்பு, மொஹெஞ்சதாரோவின் முத்திரைகளில் காணப்படுவதும், புத்தர் அறிவு பெற்றதுமான அரச மரம் என்பவை குறிப்பிடத்தக்கவை. பல இந்தியத் தாவர, விலங்கு இனங்கள் தொடக்கத்தில் இந்தியாவின் அமைவிடமான கோண்ட்வானாவில் உருவான வகைகளின் வழிவந்தவை. பின்னர், இந்தியத் தீவக்குறை நகர்ந்து, லோரேசிய நிலத்திணிவுடன் மோதியபோது, பெருந் தொகையான உயிரினங்கள் இடம் மாறுவதற்கு வழியேற்பட்டது. எனினும், 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த, எரிமலை வெடிப்புக்களினாலும், காலநிலை மாற்றங்களினாலும் பெருமளவு இந்தியப் பகுதிக்குரிய இனங்கள் அழிந்து போயின. இதன் பின்னர், ஆசியப் பகுதிகளிலிருந்து, உருவாகிவந்த இமயமலையின் இரு பக்கங்களிலும் இருந்த விலங்குப்புவியில் கணவாய்கள் வழியாகப் பாலூட்டிகள் இந்தியாவுக்குள் வந்தன. முடிவில், இந்திய இனங்களில், 12.6% பாலூட்டிகளும், 4.5% பறவைகளும் மட்டுமே இந்தியப் பகுதிக்குரியவையாக இருக்கின்றன. இது, 45.8% ஊர்வனவும், 55.8% ஈரூடகவாழிகளும் இந்தியாவுக்கு உரியனவாக இருப்பதுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாகும். குறிப்பிடத்தக்க ஊள்ளூர் இனங்கள், சோலை மந்தி (Trachypithecus johnii), புபோ பெதோமீ (Bufo beddomii) என்னும் ஒருவகைத் தவளை இனம் என்பனவாகும். இயற்கைப் பாதுகாப்புக்கான அனைத்துலக ஒன்றியம் அழியும் வாய்ப்புள்ளவையாகக் குறிப்பிட்டுள்ள இனங்களில் 2,9% இனங்கள் இந்தியாவில் உள்ளவை. இவற்றுள் ஆசியச் சிங்கம், வங்காளப் புலி என்பவை அடங்கும். அண்மைப் பத்தாண்டுகளில், மனித ஊடுருவல் காட்டுயிர்களுக்கு ஆபத்தாக அமைந்தன. இதனால், நாட்டு பூங்காக்களும், 1935 ஆம் ஆண்டில் முதன் முதலாக அமைக்கப்பட்டுப் பின்னர் விரிவாக்கப்பட்டன. 1972 இல் இந்தியாவில் காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தியாவில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட காப்பகங்களும், 13 உயிர்க்கோள ஒதுக்ககங்களும், 25 ஈர நிலங்களும் ராம்சார் ஒபந்தம் எனும் அனைத்துலக ஒப்பந்தத்தின்படி பதிவு செய்யப்பட்டுள்ளன. பொருளாதாரம் விடுதலைக்குப் பிற்பட்ட காலத்தின் பெரும் பகுதியில் இந்தியா, தனியார் தொழில் முயற்சிகளிலும், வெளிநாட்டு வணிகம், வெளிநாட்டு நேரடி முதலீடு போன்ற துறைகளிலும் இறுக்கமான அரசுக் கட்டுப்பாடுகளைக் கொண்டு ஒரு சோசலிசம் சார்ந்த அணுகு முறையையே கடைப்பிடித்து வந்தது. ஆயினும், 1991 ஆம் ஆண்டு முதல், பொருளாதாரச் சீர்திருத்தங்கள்மூலம் படிப்படியாக அதன் சந்தைகளைத் திறந்துவிட்டதோடு, வெளிநாட்டு வணிகம், முதலீடு என்பவற்றின் மீதான கட்டுப்பாடுகளையும் தளர்த்தி வந்தது. மத்திய, மாநில அரசிகளின் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை குறைந்துள்ளதோடு, 1991 மார்ச் மாதத்தில் 5.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த வெளிநாட்டு நாணயமாற்று ஒதுக்கம், 2008 ஜூலையில் 308 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. பல்வேறு அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியிலும், அரச நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்தலும், சில துறைகளைத் தனியார் மற்றும் வெளிநாட்டுப் பங்களிப்புக்காகத் திறந்து விடுவதும் தொடர்ந்து வருகிறது. இந்தியப் பொருளாதாரம் மரபுவழி வேளாண்மை, தற்கால வேளாண்மை, கைவினைப் பொருள் தயாரிப்பு, பல தரப்பட்ட புதிய தொழில்கள் மற்றும் மென்பொருள் உட்பட்ட பல துணைச் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. 2003-ஆம் ஆண்டு நிலவரத்தின் படி மென்பொருள் ஏற்றுமதி மட்டும் சுமார் 1000 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது. இருப்பினும் மக்கள் தொகையில் கால் பங்கு வகிப்பவர்கள் சரியான உணவின்றி வறுமையில் வாழ்கின்றனர். இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மற்றும் நாணய மதிப்பு 2001 மற்றும் பின் வரும் ஆண்டுகளில் மிகவும் நல்ல நிலையில் இருந்தன. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $1.089 டிரில்லியன் டாலர்கள் அளவை எட்டியுள்ளது. பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் $4.726 டிரில்லியன் (2,66,000 கோடி டாலர்) அளவுடன் உலகில் நான்காவது இடத்தில் இருக்கிறது. கடந்த இரு பத்தாண்டுகளாக 5.5% சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியுடன் இந்தியா உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது. 516.3 மில்லியன் அளவான இந்தியாவின் தொழிலாளர்படை உலகின் இரண்டாவது பெரிய தொழிலாளர்படை ஆகும். இவர்களில் 60 விழுக்காட்டினர் வேளாண்மை அல்லது அது சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். 28 விழுக்காட்டினர் சேவைத்தொழில்கள் அல்லது அது சார்ந்த துறைகளிலும், 12 விழுக்காட்டினர் தொழில்துறைகளிலும் பணிபுரிகின்றனர். இந்தியாவின் முதன்மை வேளாண்மைப் பயிர்கள் அரிசி, எண்ணெய்விதை, பருத்தி, சணல், தேயிலை, கரும்பு, உருளைக்கிழங்கு என்பனவாகும். வேளாண்மைத் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28% ஐ வழங்குகிறது. சேவைத்துறையும், தொழில்துறையும் முறையே 54%, 18% பங்களிப்பைச் செய்கின்றன. முக்கியமான தொழில்துறைகளில், தானுந்து, சிமெந்து, வேதிப்பொருட்கள், நுகர்வோர் மின்னணுவியல் பொருட்கள், உணவு பதனிடல், இயந்திரங்கள், சுரங்கத்தொழில், பெட்ரோலியம், மருந்துவகை, உருக்கு, போக்குவரத்துச் சாதனங்கள், உடைகள் என்பன அடங்குகின்றன. விரைவாக வளரும் பொருளாதாரத்துடன் கூடவே, ஆற்றல் தேவையும் அதிகரித்து வருகின்றது. ஆற்றல் தகவல் நிர்வாகத்தின் (Energy Information Administration) கணக்கீட்டின் படி, எண்ணெய் நுகர்வில் இந்தியா ஆறாவது இடத்திலும், நிலக்கரி நுகர்வில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. வறுமை நிலை இந்தியா வளர்ச்சியடைந்து வரும் ஒரு நாடு. ஆயினும், 350–400 மில்லியன் மக்கள் வறுமை கோட்டின் கீழேயே வாழ்கின்றார்கள். உலக வங்கியின் உலக வளர்ச்சி அளவீடுகளின் அடிப்படையில் 35% இந்தியர்கள் $1 வருமானத்திலேயே வாழ்கின்றார்கள். இவர்களுக்குரிய அடிப்படை உணவு, உறைவிட, கல்வி, மருத்துவ வசதிகள் மிகவும் குறைவு. மேலும், 40% மக்களுக்கு எழுதவோ வாசிக்கவோ தெரியாது. இந்தியாவின் பொருளாதர பகிர்வு மிகவும் சமனற்றது. குறிப்பாக, தலித்துக்கள், ஒடுக்கப்பட்டோருக்கும் மற்றவருக்கும், நகர வாசிகளுக்கும், கிராம வாசிகளுக்குமான பொருளாதார நிலை வேறுபாடுகள் மிகவும் பெரியதாக காணப்படுகிறது. மக்கள் தொகையில் 2011-ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மக்கட்தொகை 121 கோடியே 19 இலட்சத்து மூவாயிரத்தி நானூற்று இருபத்தி இரண்டு பேர் (1,210,193,422) உள்ளனர். மக்கட்தொகை கடந்த பத்தாண்டுகளின் (2001–2011) வளர்ச்சி விகிதம் 17.70% ஆக உயர்ந்துள்ளது.[26] அதிக மக்கட்தொகை (199,812,341) கொண்ட மாநிலமாக உத்தரப்பிரதேசமும், குறைந்த மக்கட் தொகை (610,577) கொண்ட மாநிலமாக சிக்கிம் உள்ளது. எழுத்தறிவு படிப்பறிவு வீதம் 74.04% ஆக உயர்ந்துள்ளது (ஆண்கள் 82.14%; பெண்கள் 65.46%). [27] சமயம் 2011ஆம் ஆண்டைய மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய மக்கள் தொகை ஆணையம் 27 ஆகஸ்டு 2015 அன்று வெளியிட்டுள்ள சமயவாரி மக்கட்தொகை கணக்கீட்டின்படி[28][29][30], இந்தியாவின் மொத்த மக்கட்தொகையான 121.09 கோடியில், இந்துக்களின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 0.7% ஆக குறைந்து, 96.63 கோடியாகவும் (79.08%), முஸ்லிம்களின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 0.8% உயர்ந்து, 17.22 கோடியாகவும் (14.2%)[31][32][33][34][35], கிறித்தவர் மக்கட்தொகை 2.78 கோடியாகவும் (2.3%), சீக்கியர்கள் மக்கட்தொகை 2.08 கோடியாகவும் (1.7%), சமணர்கள் மக்கட்தொகை 45 இலட்சமாகவும் (0.4%), புத்த மதத்தினரின் மக்கட்தொகை 84 இலட்சமாகவும் (0.8%), சமயம் குறிப்பிடாதோர் 29 இலட்சமாகவும் (0.4%) உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.[36][37] முதன்முறையாக "சமயம் குறிப்பிடாதோர்" என்ற பிரிவு 2011 கணக்கீட்டில் சேர்க்கப்பட்டது.[38][39] சமயவாரி மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தில் ஏற்றத்தாழ்வு மேற்படி அட்டவனையின் படி, 1951ல் 84.1% ஆக இருந்த இந்துக்களின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 60 ஆண்டுகளில் படிப்படியாக 4.30% வீழ்ச்சியடைந்து, 2011ல் 79.80%ஆக குறைந்துள்ளது. அதே சமயத்தில் 1951ல் 9.8%ஆக இருந்த இசுலாமியர்களின் மக்கள் தொகை, படிப்படியாக 4.40% வளர்ச்சியடைந்து, 2011ல் 14.23% ஆக உயர்ந்துள்ளது. மற்ற சமயங்களைப் பொறுத்தவரையில் மக்கள் தொகை வளர்ச்சி அதிக ஏற்ற-இறக்கம் இல்லாது உள்ளது. இந்துக்கள் சிறுபான்மையினத்தவராக வாழும் மாநிலங்கள் மக்கள் தொகையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் மற்றும் ஒன்றியப் பகுதியான இலட்சத்தீவுகளில் இசுலாமியர்கள் பெரும்பான்மை சமூகத்தவர்களாக உள்ளனர். அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், நாகாலாந்து மற்றும் மேகாலயா என நான்கு மாநிலங்களில் கிறித்தவர்கள் பெரும்பான்மை சமூகத்தவர்களாக உள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்கள் பெரும்பான்மை மக்களாக உள்ளனர். [40]இந்துக்கள் அல்லோதோர் பெரும்பான்மையாக வாழும் மாநிலங்களில், சிறுபான்மை இன இந்துக்களுக்கு சிறுபான்மையினர் என்ற தகுதி இந்திய அரசால் வழங்கப்படவில்லை. இம்மாநிலங்களின் சிறுபான்மை இந்து மக்களுக்கு கல்விநிலையங்களில் இடஒதுக்கீடு மற்றும் கல்வி உதவிகள் இந்திய அரசாலும்; மாநில அரசுகளால் தொடர்ந்து மறுக்கப்படுகிறது. மொழி இந்தியா இரண்டு பெரிய மொழிக்குடும்பங்களின் இருப்பிடம் ஆகும். அவை 74% மக்களால் பேசப்படும் இந்தோ-ஆரிய மொழிக்குடும்பமும், 24% மக்களால் பேசப்படும் திராவிட மொழிக்குடும்பமும் ஆவை. இந்தியாவில் பேசப்படும் மற்ற மொழிகள், ஆஸ்திரோ-ஆசிய மற்றும் திபெத்தோ-பர்ம மொழிக்குடும்பங்களை சார்ந்தவை. இந்திய அரசியல் அமைப்போ, இந்திய சட்டங்களோ, தேசிய மொழியாக, எந்த ஒரு மொழியையும் விவரிக்கவில்லை.[41] அதிகபட்ச பேச்சாளர்களைக்[42] கொண்ட இந்தி மொழி, இந்திய அரசின் ஆட்சி மொழியாகும்.[43] ஆங்கிலம், உப ஆட்சி மொழியாக நிலைபெற்று, பெருமளவில், வேலையிடங்களிலும், நிர்வாக இடங்களிலும் பயன்படுத்தப் படுகிறது.'[44] இந்தியாவில் கல்வி பெறுவதில், அதிலும் உயர்கல்வி (Department of Higher Education (India)) பெறுவதில் ஆங்கிலம் பெரும்பங்கு வகிக்கிறது. அதோடு, ஒவ்வொரு மாநிலமும் தனக்குத் தானே, அந்தந்த மாநிலங்களில் பரவலாகப் பேசப்படும் மொழியை ஆட்சி மொழியாகக் கொண்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு 21 மொழிகளை அடையாளம் கொள்கிறது. செம்மொழித் தகுதி பெற்ற முதல் இந்திய மொழி தமிழ் மொழியாகும். தமிழ் மொழியைத் தொடர்ந்து சமசுகிருதம் (2005), தெலுங்கு (2008), கன்னடம் (2008), மலையாளம் (2013), ஒடியா (2014) ஆகிய மொழிகள் செம்மொழிகள் என இந்திய அரசால் அறிவிக்கப்பட்டன. மரபாகச் செம்மொழிக்கு இருக்கும் வரையறையைப் பயன்படுத்தாமல் இந்தியா தானாகச் செம்மொழிக்கான வரையறையை வகுத்து உள்ளது சமூக அமைப்பு சாதிய அமைப்பே இந்திய சமூக கட்டமைப்பின் சமூக அதிகாரப் படிநிலை முறைமையின் அடித்தளம். சாதிய கட்டமைப்பு பிறப்பு, தொழில், பொருளாதாரம் மற்றும் சமயம் சார்ந்த கூறுகளால் ஆனது. இவ்வமைப்பின் தோற்றத்தை வேதங்களில் வலியுறுத்தப்படும் "நான்கு வர்ண" சாதி பெரும் பிரிவுகளில் காணலாம். இவற்றுள் பல்லாயிரக் கணக்கான உட்பிரிவுகளும் இருக்கின்றன. அவற்றிற்கு இடையேயான ஏற்றத்தாழ்வு நிலை ஒவ்வொறு பகுதியிலும் வெவ்வேறாக இருக்கின்றது. வேதங்களில் கூறப்படும் சாதி நெறிகளைத் தவறாகப் புரிந்து கொண்ட காரணத்தால் மத்திய காலங்களில் சமூகத்தில் சாதி அடிப்படையில் பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் ஏற்பட்டன. தற்போது சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு எதிரான பல சட்டங்கள் உள்ளன. இதுதவிர தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடும் உள்ளது. இருப்பினும் இந்நாட்டின் அரசியல் வாழ்விலும் திருமணம் உட்பட்ட பல சமூக வழக்கங்களிலும் சாதி ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. இந்தியாவில் பெண்களின் சமூக நிலை என்றும் சம நிலமையுடையதாக இருக்கவில்லை. அரசியலில், தொழில் வாய்ப்பில், கல்வியில், பொருளாதார பங்கில் பெண்கள் புறக்கணிகப்பட்டோ தடுக்கப்பட்டோ வந்துள்ளார்கள். பெண் சிசுக் கொலை, சிறுவர் திருமணம், சீதனம், உடன்கட்டையேறுதல், மறுமண மறுப்பு, மணவிலக்கு மறுப்பு, உடமை மறுப்பு, கொத்தடிமை யாக்கல், தேவதாசி முறை எனப் பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சட்ட ரீதியாகப் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன எனக் கூடச் சொல்ல இயலாது ஏனெனில் இந்தியாவில் சமய அடிப்படையிலான குடியியல் சட்டம் நடப்பில் இருக்கின்றது. எனினும், இந்திய வரலாற்றில் மற்ற நாடுகள்போல் அல்லாத ஒரு முரண்பாடும் உண்டு. அதாவது, பெண்கள் தெய்வங்களாக வழிபடப்படல், பெண்களைச் சிவனுடைய சரி பாதியாக, சக்தியாக அங்கீகரித்தல் போன்றவையாம். மேலும், நவீன இந்தியாவின் ஆளுமை படைத்த தலைவர்களாகப் பெண்களும் இடம் பெறுகின்றார்கள். இந்திரா காந்தி, ஜெயலலிதா, மம்தா பானர்ஜி ஆகியோர் சிறந்த எடுத்துக்காட்டுக்கள். இந்தியாவின் அனைத்து பாகங்களிலும் பெண்களின் நிலை ஒரே ரீதியில் அமைந்திருக்கின்றது என்றும் கூற முடியாது. குறிப்பாகக் கேரள மாநிலத்தில் பெண்களின் உரிமைகள் நன்கு பேணப்படுகின்றன. சமீப காலங்களில் பெண்களின் நிலை குறிப்பிடத் தகுந்த அளவு முன்னேற்றம் கண்டுள்ளது. தகவல் தொடர்பு துறையின் வளர்ச்சி மற்றும் அதைத் தொடர்ந்த இந்திய பொருளாதார வளர்ச்சி பெண்களுக்குப் பல வாய்ப்புகளை வழங்கியுள்ளது. பண்பாடு இந்திய பண்பாடு உலகின் முக்கிய பண்பாட்டு ஊற்றுக்களில் ஒன்று. பல இன, மொழி, சமய, பண்பாட்டு தாக்கங்களை உள்வாங்கி இந்திய பண்பாடு வெளிப்பட்டு நிற்கின்றது. இப்பண்பாடு உயரிய, பலக்கிய (complex), பன்முக இசை, நடனம், இலக்கியம் எனப் பல கூறுகளைக் கொண்டது. இந்திய பண்பாட்டின் தன்மை, வெளிப்பாடு, ஆழம் பல நிலைகளைக் கொண்டது. பின் வருவன ஒரு சுருக்கமே. கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை இரு முக்கிய செந்நெறி இசை மரபுகள் ஆகும். கர்நாடக இசை தெற்கிலும், இந்துஸ்தானி இசை வடக்கிலும் தோற்றம் கொண்டன. இந்துஸ்தானி இசை இஸ்லாமிய இசையின் தாக்கங்களை உள்வாங்கிய ஒரு மரபு. இவைதவிர நாட்டார் இசை, தமிழிசை எனப் பல வேறு இசை மரபுகளும் வெளிப்பாடுகளும் உண்டு. இந்திய நடனக்கலையில் பரத நாட்டியம், ஒடிசி, குச்சிப்புடி, கதக், கதகளி போன்று பல நடன வெளிப்பாடுகள் உண்டு. நடனம்மூலம் கதைகளும் சொல்லப்படுகின்றன. இவைத் தவிர நாட்டுப்புறக் கலைகளான நடனங்களும், பொம்மை நடனங்களும் உண்டு. இசையின் வெளிப்படுத்தும் இசைக் கருவிகளில் வீணை, யாழ், புல்லாங்குழல், தம்புரா, மிருதங்கம், நாதசுவரம், மத்தளம், தவில், ஆகுளி, உறுமி, முரசு, தமுக்கு, பம்பை, கஞ்சிரா, ஐம்முக முழவம், கொடுகொட்டி (அல்லது) கிடிகிட்டி, கொம்பு, தாரை, சங்கு, முகவீணை, எக்காளம் மற்றும் தாளம் முதன்மையானவைகள் ஆகும். உலகின் மிக முக்கிய இலக்கிய உருவாக்கங்களை இந்தியா கொண்டுள்ளது. சமசுகிருதம், தமிழ், வங்காள மொழி, உருது போன்ற பல முக்கிய உலக மொழிகளின் இலக்கிய வெளிப்பாடுகள் இந்தியாவின் பண்பாட்டு கலவையில் வெளிப்பட்டு நிற்கின்றன. வேதம், வேதாந்தம், ஆகமங்கள், புத்தசமய படைப்புக்கள், காப்பியங்கள் (இராமாயணம், மகாபாரதம்), தமிழ் சங்க இலக்கியங்கள், ஐம்பெரும் தமிழ் காப்பியங்கள் எனப் பல கோணங்களில் இந்திய இலக்கியம் வெளிப்படுகின்றது. கொண்டாட்டங்கள் இந்திய பண்பாட்டின், வாழ்வியலின் இணை பிரியா கூறுகள் ஆகும். பொங்கல், தீபாவளி, நவராத்திரி எனக் கொண்டாட்டங்கள் பல உண்டு. இந்திய சுதந்திர தினம், மகாத்மா காந்தி பிறந்த தினம் போன்றவையும் முக்கியத்துவம் வாய்ந்த தேசியக் கொண்டாட்டங்கள் ஆகும். மேலும், தனி மனித வாழ்வியல் நிகழ்வுகளை மையமாக வைத்தும் பல கொண்டாட்டங்கள் உண்டு. பண்டைய இந்தியாவானது அறிவியலில் சிறந்து விளங்கியது. ஆரியபட்டர், பாஸ்கரர் ஆகியோர் கோள்களின் இயக்கங்களின் பற்றி ஆராய்ந்த அறிஞர்களில் முக்கியமானவர்களாவர். இன்று பொதுவாகப் பயன்படுத்தப்படும் கணித எண்கள், இந்து-அரபு எண்கள் ஆகும். இந்தியாவிலேயே 0 என்ற எண்ணக்கரு முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது என்பர். சேலை, வேட்டி, குர்தா, சல்வார் கமீஸ் போன்றவை, இந்தியாவில் தொன்று தொட்டு இருந்து வரும் உடைகளாகும். அரிசியும், கோதுமையும் இந்திய உணவு வகைகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தாளி, இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவை இந்தியர்கள் வழக்கமாக உட்கொள்ளும் உணவுகளில் சிலவாகும். இந்தியர்களின் முக்கியப் பொழுதுபோக்குகளில் ஒன்றாகத் திரைப்படங்கள் விளங்குகின்றன. இந்தி, தமிழ், தெலுங்குத் திரைப்படங்கள் அவற்றின் பொழுதுபோக்கு கூறுகளுக்காகவும் வங்காள மொழி மற்றும் மலையாளத் திரைப்படங்கள் அவற்றின் கலை நேர்த்திக்காகவும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன. இந்தியாவின் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் குறிப்பிடத்தக்க சில பண்பாட்டு வேறுபாடுகளைக் காண முடியும் என்றாலும் மாநில மற்றும் மொழி எல்லைகளைக் கடந்து பண்பாட்டுச் கூடல் நிகழும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்நிகழ்வுக்கான முக்கிய காரணிகளில் ஒன்று, பெருகி வரும் மக்கள் தொடர்பு சாதனங்கள் ஆகும். 1990களுக்குப் பிறகு நிகழ்ந்த உலக மயமாக்கலும், பொருளாதார தாராளமயமாக்கலும் இந்தியப் பண்பாட்டைக் குறிப்பிடத்தக்க அளவுமேல் நாட்டு பண்பாட்டின் ஆதிக்கத்திற்கு உட்படுத்தியுள்ளன. நவீன இந்திய இசை, திரைப்படங்கள், நாடகங்கள், ஊடகங்கள், மொழிகள், வர்த்தக முறைகள், அன்றாட வாழ்க்கை முறை, பணியிட நடத்தை முறைகள், ஆண்-பெண் நட்பு / உறவு ஆகியவற்றில் ஆங்கிலச் சொற்கள், மேல் நாட்டு சிந்தனைகள், மனப்போக்குகள் இடம் பெறத் தொடங்கியுள்ளன. பல்வேறு காலக்கட்டங்களில் பலவாறு மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தாலும், இந்திய பண்பாட்டின் முக்கியக் கூறுகளான சகிப்புத்தன்மை, விருந்தோம்பல், குடும்ப உறவுகளுக்கான மதிப்பு, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவை இன்னும் நீர்த்துப் போகாமல் இருப்பது அதன் சிறப்பாகும். இவற்றையும் பார்க்கவும் இந்தியத் திரைப்படங்கள் இந்திய விழாக்கள் இந்திய இலக்கியம் இந்தியக் கட்டிடக்கலை சுற்றுலா சுற்றுலாத்துறை இந்தியாவின் மிகப் பெரிய சேவைத் துறையாகும். இது நாட்டின் தேசிய மொத்த உற்பத்தியில் 6.23 சதவீதம் பங்களிக்கிறது மொத்த வேலைவாய்ப்பில் 8.78% சதவீதத்தைக் கொண்டுள்ளது. ஆண்டுக்கு 5 மில்லியனுக்கும் மேலான அந்நிய சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் 562 மில்லியன் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையையும்[45] கொண்டுள்ளது. இந்தியாவில் சுற்றுலாத் துறையானது 2008 ஆம் ஆண்டில் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியது. மேலும் இத்துறையானது 2018 இல் ஆண்டு வளர்ச்சி விகிதம் 9.4% சதவீதமாக அதிகரித்து 275.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.[46] சுற்றுலாத்துறை அமைச்சகமானது இந்தியாவின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ஒருங்கிணைப்பு முகமையாக உள்ளது. மேலும் "" பிரச்சாரத்தையும் தொடர்ந்து நடத்துகின்றது. சுற்றுலா தொடருந்துகள் இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் மற்றும் இந்தியன் இரயில்வே, [47] உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல சுற்றுலாத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பேலஸ் ஆன் வீல்ஸ் [48], மகாராஜா எக்ஸ்பிரஸ், ராயல் ஓரியன்ட் எக்ஸ்பிரஸ், டெக்கான் ஒடிசி, ராயல், ராசத்தான் ஆன் வீல்ஸ் மற்றும் கோல்டன் சாரியட் (தங்க இரதம்), டெக்கான் ஒடிசி, புத்திஸ்ட் எக்ஸ்பிரஸ் போன்ற பெயர்களில் நவீன சொகுசு தொடருந்துகள் வட இந்தியா மற்றும் தென்னிந்தியா மற்றும் கிழக்கிந்தியாவின் பண்பாட்டு கலாசார இடங்களைச் சுற்றிப் பார்க்கும் வகையில் சிறப்பு சொகுசு தொடருந்துகள் தில்லி, பெங்களூரு, மும்பை, கொல்கத்தாவிலிருந்து இயக்கப்படுகிறது. இந்தியாவின் முதன்மையான சுற்றுலா இடங்களை குறைந்த கட்டணத்தில் காணத் தக்கவாறு பாரத் தர்சன் என்ற பெயரில் சிறப்பு தொடருந்துகளை இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் இந்தியா முழுவதும் இயக்குகிறது.[49] விளையாட்டு இந்தியாவில் தேசிய விளையாட்டு, ஹாக்கி இந்தியாவால் கையாளப்படும் வளைதடிப் பந்தாட்டம் ஆகும். இந்திய வளைதடிப் பந்தாட்ட அணி, 1975 வளைதடிப் பந்தாட்ட உலகக் கோப்பை மற்றும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 8 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்று உலக அளவில் அதிக வெற்றி பெற்ற ஹாக்கி அணியாகத் திகழ்கிறது. இருப்பினும், மட்டைப்பந்து தாம் மக்களிடையே மிகவும் புகழ் பெற்ற விளையாட்டாகும்.[50] இந்தியத் துடுப்பாட்ட அணி, 1983 துடுப்பாட்ட உலகக் கிண்ணம், 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் மற்றும் 2007 ஐசிசி உலக இருபது ஓவர் கோப்பையை வென்று, அதோடு 2002 ஐசிசி சாம்பியன் கோப்பையை இலங்கையுடன் பங்கு கொண்டது. இந்தியாவில் மட்டைப்பந்து விளையாட்டை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) நிர்வகித்து வருகிறது. உள்நாட்டுப் போட்டிகளான ரஞ்சிக் கோப்பை, துலீப் கோப்பை, இரானி கோப்பை மற்றும் என்.கே.பி. சால்வே சேலஞ்ஜர் கோப்பையையும் அது நிர்வகித்து வருகிறது. இவற்றோடு பிசிசிஐ, இந்தியன் பிரீமியர் லீக் என்ற இருபது ஓவர் மட்டைப்பந்து போட்டியையும் விமரிசையாக நடத்தி வருகிறது. இந்தியா பல்வேறு வகையான பாரம்பரிய விளையாட்டுக்களின் துவக்க இடமாகவும் இருப்பிடமாகவும் திகழ்கிறது. அவை கபடி, சடுகுடு, பெகெல்வாணி, மற்றும் கில்லி தண்டா ஆகும். இந்திய வீர விளையாட்டுக் கலைகளான களரிப்பயிற்று, மல்யுத்தம், சிலம்பாட்டம், வர்மக்கலை ஆகியவற்றின் முற்கால வடிவங்கள் இந்தியாவில் தொடங்கின. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜுனா விருது இரண்டும் இந்தியாவில் விளையாட்டிற்காகக் கொடுக்கப்படும் உயர்ந்த பட்ச விருதுகளாகும். அதுபோல் துரோணாச்சார்யா விருது விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு இந்திய அரசால் கொடுக்கப் படும் உயர்ந்த பட்ச விருதாகும். இந்தியாவிலிருந்து ஆரம்பமானதாகக் கருதப்படும், சதுரங்கம், இந்திய பெருந்தலைவர்கள் எனப்படும் வெற்றி வீரர்களின் அதிக எண்ணிக்கை அதிகமாகி வருவதால், மீண்டும் பரவலான விளையாட்டாகத் தலைதூக்குகிறது.[51] இந்திய டேவிஸ் கோப்பை அணி மற்றும் பல்வேறு டென்னிஸ் ஆட்டக்காரர்களின் வெற்றிகளாலும், டென்னிஸ் விளையாட்டும் புகழ்பெற்று வருகிறது.[52] துப்பாக்கி சுடுதல் போட்டியில், ஒலிம்பிக் போட்டி, உலக துப்பாக்கி சுடுதல் போட்டி, மற்றும் பொதுநலவாய விளையாட்டுக்களில் பல்வேறு தங்கப் பதக்கங்களையும் வென்று, இந்தியா திடமான முன்னிலை வகிக்கிறது.[53] இவற்றோடு இந்திய விளையாட்டாளர்கள் சர்வதேச அளவில் பூப்பந்தாட்டம்[54], குத்துச்சண்டை[55] மற்றும் மற்போர்[56][57] விளையாட்டுக்களில் பல பதக்கங்களையும் பரிகளையும் வென்றுள்ளனர். காற்பந்தாட்டம், வடகிழக்கு இந்தியா, மேற்கு வங்காளம், கோவா, தமிழ் நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் புகழ்பெற்ற விளையாட்டாகும்.[58] விடுமுறை நாட்கள் இந்தியாவில் நான்கு நாட்கள் தேசிய விடுமுறை நாட்களாகும். அவை: விடுதலை நாள் (ஆகஸ்ட் 15) குடியரசு நாள் (ஜனவரி 26) காந்தி பிறந்த நாள் (அக்டோபர் 2) தொழிலாளர் தினம் (மே 1) இவைதவிர விழாக்களுக்கென உள்ளூர் விடுமுறைகளும் உண்டு. இவற்றையும் பார்க்கவும் இந்திய வரலாற்று காலக் கோடு இந்தியப் பிரதமர்கள் இந்தியக் குடியரசுத் தலைவர்கள் இந்தியாவில் தொடர்புத் துறை இந்தியாவில் போக்குவரத்து, இந்திய இரயில்வே இந்தியாவிலுள்ள பெருநகரங்கள் இந்தியாவின் ஆயுதப்படை இந்தியாவின் வெளிநாட்டுத் தொடர்புகள் செல்வாக்குள்ள இந்திய வர்த்தகர்கள் பிரபல இந்தியர்களின் பட்டியல் இந்தியா தொடர்பான தலைப்புக்களின் பட்டியல் இந்தியாவில் மக்கள் தொடர்புச் சாதனங்கள் இந்திய அரசியல் கட்சிகள் குடிமக்களுக்கான கௌரவம் பாரத ரத்னா பத்ம விபூஷண் பத்ம பூஷண் பத்ம ஸ்ரீ துணை நூல்கள் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் உடன் ய.சு.ராஜன். நெல்லை சு. முத்து (தமிழாக்கம்). (2002). இந்தியா 2020. சென்னை: நியூ செஞ்சரி புக் ஹவுஸ் (பி) லிட். மு. அப்பாஸ் மந்திரி. (2001). உலக நாடுகளும் விவரங்களும். சென்னை: குட்புக்ஸ் பதிப்பகம். குறிப்புகள் மேற்கோள்கள் அதிகாரப்பூர்வமான இணைப்புகள் வெளியிணைப்புகள் * பகுப்பு:முன்னாள் பிரித்தானியக் குடியேற்றங்கள் பகுப்பு:தெற்காசிய நாடுகள் பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
இந்தியா நாட்டின் தலைநகரம் எது?
டெல்லி
12,526
tamil
45cc92578
கலைக்களஞ்சியம் (ஒலிப்பு) (Encyclopedia)[1] என்பது எழுத்து வடிவில் உள்ள அறிவுத்தொகுப்பு ஆகும். கலைக்களஞ்சியங்கள் பல துறை அறிவை உள்ளடக்கியதாகவோ, ஒரு குறிப்பிட்ட துறைக்கெனத் தனிப்பட அமைந்ததாகவோ, அல்லது ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதி, இனம் குறித்தோ அமையலாம்.[2] கலைக்களஞ்சியத்தில் உள்ள தகவல்கள் அகர வரிசையிலோ, துறை வாரியாகவோ தொகுக்கப்பட்டிருக்கும். அகர வரிசையில் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சியங்களே அதிகம் பயன்பாட்டில் உள்ளன.[3] சமூக தலைமைப்பண்பு 18 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் பிரான்சிய (பிரெஞ்சு) மொழியில் கலைக்களஞ்சியம் ஒன்றை வெளியிட்ட டெனிசு டிடேரோ (Denis Diderot) என்பார் கலைக்களஞ்சியம் பற்றிப் பின்வருமாறு கூறினார்: கலைக்களஞ்சியத்தின் நோக்கம் உலகம் முழுதும் பரந்துள்ள அறிவைச் சேமித்து மக்களுக்குப் பயன்படுமாறு தொகுத்தலும், நமக்குப் பின்வரும் தலைமுறையினருக்கு அவற்றைக் கையளிப்பதும் ஆகும். இது முந்திய நூற்றாண்டுகளின் பணிகள் பிற்காலத்தவருக்குப் பயன்படாமல் போவதைத் தடுப்பதுடன், நமது இளந் தலைமுறையினர் நல்லமுறையில் கற்பிக்கப்படுவதற்கும், மகிழ்வுடன் வாழ்வதற்கும் உதவும். அத்துடன், நாம் இறப்பதற்கு முன், பின் வரும் காலங்களில் வாழவுள்ள மனித குலத்துக்கு நாம் செய்யும் தொண்டும் இது அமையும்.—Diderot[4] இயல்புகள் இன்றைய கலைக்களஞ்சியங்கள் 18 ஆம் நூற்றாண்டில் அகரமுதலிகளில் இருந்து உருவானவை. அகரமுதலிகள் பொதுவாக சொற்களையும் அவற்றுக்கான பொருள்களையும் தருகின்றன. அத்துடன், சில வேளைகளில் அச் சொற்களின் பின்புலங்களையும், தொடர்புள்ள பிற தகவல்களையும் குறைந்த அளவில் உள்ளடக்குவதும் உண்டு. சொல்லின் பொருள்களைத் தந்த போதும், அதன் முழுமையான விளக்கம், தனிச்சிறப்பு, பயன்பாட்டு எல்லைகள், பரந்த அறிவுத் துறையில் அச் சொல் எவ்வாறான தொடர்புகளைக் கொண்டுள்ளது போன்றவை குறித்த தகவல்கள் பயனர்களுக்குக் கிடைப்பதில்லை. மேற்குறித்த தேவைகளைக் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு, கலைக்களஞ்சியங்கள் ஒவ்வொரு தலைப்பையும் எடுத்துக்கொண்டு அதுபற்றி ஆழமான தகவல்களைத் தருவதுடன் அத்துறை தொடர்பாகக் கிடைக்கக்கூடிய எல்லா அறிவுச் செல்வங்களையும் தொகுத்துத் தர முயல்கிறது. கலைக்களஞ்சியங்கள் நிலப்படங்கள், விளக்கப்படங்கள், உசாத்துணைகள், புள்ளித்தகவல்கள் போன்றவற்றையும் உள்ளடக்குகின்றன. கடந்த காலங்களில் கலைக்களஞ்சியங்களும், அகரமுதலிகளும், அவற்றில் எழுதவுள்ள உள்ளடக்கங்களில் துறைபோகக் கற்ற வல்லுனர்களைக் கொண்டு எழுதப்பட்டன. ஒரு கலைக்களஞ்சியத்தை நான்கு தலைமையான கூறுகள் வரையறுக்கின்றன. அவை: உள்ளடக்கம், எல்லை, ஒழுங்குபடுத்தும் முறை, உருவாக்கும் முறை என்பன. கலைக்களஞ்சியங்கள் பொதுவானவையாக இருக்கலாம். இவை, ஒவ்வொரு துறையிலும் உள்ள தலைப்புக்களில் கட்டுரைகளைக் கொண்டிருக்கும் (எ.கா: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்). கலைக்களஞ்சியங்கள் ஒரு குறிப்பிட்ட துறை எல்லைக்குள் அடங்கும் விடயங்களில் மட்டும் கவனம் செலுத்துவது உண்டு. இவை மருத்துவக் கலைக்களஞ்சியம், மெய்யியல் கலைக்களஞ்சியம், சட்டத்துறைக் கலைக்களஞ்சியம் என்ற வகையில் அமையும். இவற்றில் உள்ளடக்கப்படும் ஆக்கங்களின் ஆழ அகலங்கள் அவற்றின் பயனர்களின் தன்மையைப் பொருத்து அமையும். கலைக்களஞ்சியங்கள் ஒரு சான்றுகோளாக அமையத்தக்க உசாத்துணை ஆக்கமாக அமைய வேண்டும் எனில் அது முறைப்படியான ஒழுங்கு ஒன்றில் அமைய வேண்டும். கடந்த காலங்களில் அச்சில் வெளிவந்த கலைக்களஞ்சியங்கள் இரண்டு தலைமையான முறைகளில் ஒன்றில் ஒழுங்குபடுத்தப்பட்டன. இவை அகரவரிசை முறை, வகைகளின் படிமுறையமைப்பு முறை என்பனவாகும். முதல் முறையே இன்று மிகப் பொதுவாகக் கையாளப்படும் முறையாகும். சிறப்பாகப் பொதுக் கலைக்களஞ்சியங்கள் இம்முறையிலேயே ஒழுங்கமைக்கப் படுகின்றன. தற்காலத்தில் மின்னணு ஊடகங்கள் ஒரே நேரத்தில் பல முறைகளில் உள்ளடக்கங்களை ஒழுங்கமைக்கும் வசதிகளை அளிக்கின்றன. அத்துடன் மின்னணு ஊடகங்கள் முன்னர் நினைத்தும் பார்த்திராத தேடல் வசதிகள், இணைப்பு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குகின்றன. தற்காலத்தில் ஏற்பட்டுள்ள பல்லூடகங்கள், தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சி பல்வேறு வகையான தகவல்களைச் சேகரித்தல், சரிபார்த்தல், ஒன்றாக்குதல், வெளிப்படுத்துதல் போன்றவைகளில் பெருமளவிலான தாக்கங்களை எற்படுத்தி வருகின்றன. எளிமையாகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அமைந்த எவ்ரித்திங்2, என்கார்ட்டா, எச்2ஜி2, விக்கிப்பீடியா போன்றவை புதிய வடிவிலான கலைக்களஞ்சியங்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். அகரமுதலிகள் என்று பெயரிடப்பட்ட சில ஆக்கங்கள் உண்மையில் கலைக்களஞ்சியங்களை ஒத்தவை. சிறப்பாக, குறிப்பிட்ட துறைகளுக்காகத் தனிப்பட அமைந்த அகரமுதலிகள் இவ்வாறாக அமைவதுண்டு. எடுத்துக்காட்டாக, ஆங்கிலத்தில் உள்ள இடைக்காலத்துக்கான அகரமுதலி (Dictionary of the Middle Ages), அமெரிக்கக் கடற்போர்க் கப்பல்கள் அகரமுதலி (Dictionary of American Naval Fighting Ships), பிளாக்கின் சட்டத்துறை அகரமுதலி (Black's Law Dictionary) என்பவற்றைக் கூறலாம். வரலாறு மூத்த பிளினி கி.பி முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த உரோம அரசியலாளரான மூத்த பிளினியால் எழுதப்பட்ட இயற்கை வரலாறு என்று பொருள்படும் நாட்சுராலிசு இசுட்டோரியா (Naturalis Historia) என்னும் இலத்தீன் மொழி ஆக்கமே இன்று கிடைப்பவற்றுள் மிகவும் பழமையான கலைக்களஞ்சிய ஆக்கம் ஆகும். இயற்கை வரலாறு, கலையும் கட்டிடக்கலையும், மருத்துவம், புவியியல், நிலவியல், போன்றவை தொடர்பான 37 பிரிவுகளைக் கொண்ட நூலொன்றை இவர் தொகுத்தார். 100 ஆக்குனர்களால் எழுதப்பட்ட 2000 வெவ்வேறு ஆக்கங்களில் இருந்து 20,000 குறிப்புகளைத் தொகுத்துள்ளதாகவும், தனது சொந்த பட்டறிவிலிருந்தும் பலவற்றை உள்ளடக்கி உள்ளதாகவும் அவர் தனது முன்னுரையில் தெரிவித்துள்ளார். இது கிபி 77 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. சிறப்புவாய்ந்த இந்த ஆக்கம் பெரியதும், விரிவானதும் ஆகும். இது, இயற்கையோடு தொடர்புள்ள அனைத்து அறிவுத்துறை மற்றும் கலைகள் ஆகியவற்றின் முழுமையான தொகுப்பாக விளங்கியது எனலாம். பிளினி பின்வருமாறு கூறினார்: இயற்கை உலகம் அல்லது வாழ்க்கை என்னும் என்னுடைய தலைப்பு வரண்டது. மிகக் குறைந்த அளவுக்கு மதிக்கப்படும் ஒரு துறை. பட்டிக்காட்டுத்தனமான சொற்களையோ அந்நியமான காட்டுமிராண்டித் தனமான சொற்களையோ தான் வருத்ததுடன் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அத்துடன் இதற்கான பாதை எழுத்தாளர்களால் ஏற்கனவே செழுமை ஆக்கப்பட்டதோ அல்லது எவராவது இவ்வழியில் செல்வதற்கு விருப்பப்பட்டதோ இல்லை. எங்களில் எவரும் இதற்கு முயன்றதும் இல்லை, அல்லது ஒரு கிரேக்கனாவது தனியாக இத் தலைப்பின் எல்லாப் பிரிவுகளையும் கையாண்டதும் இல்லை. இதே போன்ற பழைய ஆக்கங்கள் பல இருந்திருந்தாலும், இருண்ட காலத்தையும் தாண்டி நிலைத்திருந்த நூல் இது மட்டுமே. உரோமர் காலத்தில் இது மிகவும் புகழ் பெற்றிருந்தது. இதன் பல படிகள் உருவாக்கப்பட்டு ஐரோப்பா முழுவதிலும் பரவியிருந்தது. முதலில் அச்சேறிய செந்நெறிக்கால (classical period) நூல்களில் ஒன்றாக 1469 ஆம் ஆண்டில் இது பதிப்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து உரோமானியர் காலத்தைப் பற்றிய தகவல்களுக்கான உசாத்துணை நூலாகப் பெயர்பெற்றிருந்தது. சிறப்பாக, உரோமக் கலை, உரோமத் தொழில்நுட்பம், உரோமப் பொறியியல், போன்றவற்றுக்காக இது பெயர் பெற்றிருந்ததுடன்; மருத்துவம், கனிமவியல், விலங்கியல், தாவரவியல், நிலவியல் போன்ற துறைகள் தொடர்பான தகவல்களுக்காகவும் இது பெரிதும் வேண்டப்பட்ட நூலாக இருந்தது. இடைக் காலம் இடைக் காலத்தின் தொடக்கத்தில் சிறந்த அறிஞராக விளங்கிய செவில் ஊரைச் சேர்ந்த செயின்ட் இசிடோர் என்பவர் இடைக் காலத்தின் முதல் கலைக்களஞ்சியமான எட்டிமோலொச்சியே (Etymologiae - கிபி 630) என்னும் நூலை ஆக்கினார். இதில் அவர் தமது காலத்தில் இருந்த பழையனவும் புதியனவுமான எல்லா அறிவுத் துறை தொடர்பான தகவல்களையும் தொகுத்தார். இது 20 தொகுதிகளில் 448 பிரிவுகளை உள்ளடக்கியதாக இருந்தது. இத்தொகுப்பு, இதன் சிறப்புத்தன்மைக்காக மட்டுமன்றி, இதில் எடுத்தாளப்பட்ட பிற ஆக்கியோர்களின் மேற்கோள்கள், அவர்களது ஆக்கங்களிலிருந்து எடுத்த பகுதிகள் என்பனவற்றுக்காகவும் பெறுமதி வாய்ந்தது. இவர் இவ்வாறு தொகுக்காமல் போயிருப்பின் பல அரிய நூல்கள் பற்றிய தகவல்களே இன்று கிடைக்காமல் போயிருக்கும். பார்த்தொலோமியசு ஆங்கிலிக்கசு என்பவர் 1240 இல் ஆக்கிய கலைக்களஞ்சியமே இடைக்காலத்தின் நடுப்பகுதியில் அதிகமாக வாசிக்கப்பட்ட கலைக்களஞ்சியமாகும். எனினும் பிந்திய இடைக் காலத்தில் 1260 ஆம் ஆண்டளவில் வின்சென்ட் என்பவரால் ஆக்கப்பட்ட கலைக்களஞ்சியம் 3 மில்லியன் சொற்களைக் கொண்டதாக விளங்கியது. இசுலாமும் பாரசீகமும் இடைக் காலத்தில் ஆக்கப்பட்ட முசுலிம்களின் தொடக்க அறிவுத் தொகுப்புக்கள் பல விரிவான ஆக்கங்களை உள்ளடக்கியிருந்ததுடன், இன்று அறிவியல் முறை, வரலாற்று முறை, மேற்கோள் என்று அழைக்கப்படும் பல துறைகளில் பெரிய வளர்ச்சிகளையும் கண்டிருந்தன. கிபி 960 ஆம் ஆண்டளவில், பாசுராவைச் சேர்ந்த தூய்மையின் உடன்பிறப்புகள் (Brethren of Purity) எனப்பட்டோர் தூய்மையின் உடன்பிறப்புகளின் கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதில் ஈடுபட்டிருந்தனர். இவற்றுள், அபு பக்கர் அல் ராசி ஆக்கிய அறிவியல் கலைக்களஞ்சியம், முத்தாசிலிட்டே அல் கிண்டி எழுதிய 270 நூல்கள், இபின் சீனாவின் மருத்துவக் கலைக்களஞ்சியம் என்பன முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை. சீனா 11 ஆம் நூற்றாண்டளவில் சோங் வம்சத்தின் தொடக்க காலத்தில் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சிய ஆக்கமான சோங்கின் பெரிய நான்கு நூல்கள் என்னும் ஆக்கம் அக்காலத்தின் பாரிய அறிவுத்துறை சார்ந்த பணியாகும். இவற்றுள் கடைசி நூல் 1000 தொகுதிகளில் 9.4 மில்லியன் சீன மொழி எழுத்துக்களைக் கொண்டது. சீன வரலாறு முழுவதும் பல கலைக்களஞ்சிய ஆக்குனர்கள் காணப்படுகின்றனர். இவர்களுள் அறிவியலாளரும், அரசியலாளருமான ஷென் குவோ (1031–1095); அரசியலாளரும், கண்டுபிடிப்பாளரும், உழவியலாளரும் ஆன வாங் சென் (1290–1333); சோங் யின்சியாங் (1587–1666) போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். மிங் வம்சத்தைச் சேர்ந்த சீனப் பேரரசரான யொங்கிள் என்பவர் யொங்கிள் கலைக்களஞ்சியம் என்னும் கலைக் களஞ்சியம் ஒன்றைத் தொகுப்பித்தார். 1408 ஆம் ஆண்டில் தொகுக்கப்பட்ட இது உலகின் மிகப் பெரிய கலைக்களஞ்சியங்களுள் ஒன்று. இது கையால் எழுதப்பட்ட 11,000 தொகுதிகளையும், 370 மில்லியன் சீன மொழி எழுத்துக்களையும் கொண்டது. 17 – 19 ஆம் நூற்றாண்டுகள் பொதுத் தேவைக்கானவையும், பரவலாகப் பயன்பட்டவையுமான கலைக்களஞ்சியன் குறித்த தற்கால எண்ணக்கரு 18 ஆம் நூற்றாண்டின் கலைக்களஞ்சியங்களுக்கும் முற்பட்டவை. எனினும், சேம்பர்சின் சைக்கிளோப்பீடியா அல்லது கலை மற்றும் அறிவியல் அகரமுதலி (Cyclopaedia, or Universal Dictionary of Arts and Sciences – 1728), டிடேரோ மற்றும் டி'அலம்பேர்ட்டின் என்சைக்கிளோபீடியே (Encyclopédie – 1751), பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம், கான்வசேசன்ஸ் லெக்சிக்கன் (Conversations-Lexikon) என்பனவே முதலில் இன்றைய கலைக்களஞ்சியங்களின் வடிவத்தில் அமைந்ததுடன், விரிவான வீச்செல்லைகளைக் கொண்ட தலைப்புக்களுடனும், ஆழமான விளக்கங்களுடனும் இவை அமைந்திருந்தன. பிரெஞ்சு மறுமலர்ச்சியின் கலைக்களஞ்சியவியல், மனிதனுக்குத் தெரிந்த எல்லாவற்றையுமே உள்ளடக்கத் தேவையில்லை என்றும், தேவையானவற்றை மட்டுமே உள்ளடக்க வேண்டும் என்னும் அடிப்படையிலும் அமைந்திருந்தது. அவசியமானது எது என்பது பல அளபுருக்களின் (criteria) அடிப்படையில் முடிவு செய்யப்பட்டதனால், வேறுபட்ட அளவுகளைக் கொண்ட கலைக்களஞ்சிய ஆக்கங்கள் உருவாயின. அளபுருக்கள் பெரும்பாலும் ஒழுக்கநெறிகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன. இந்த அணுகுமுறையினால் கலைக்களஞ்சியவியலாளர்கள் பல சிக்கல்களை எதிர்நோக்கினர். இவற்றுள் எதை உள்ளடக்கக்கூடாது என்று எப்படி முடிவு செய்வது, கட்டமைப்புக்குள் அடக்க முடியாதிருந்த அறிவுத்துறைகளை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட அறிவுகளை எவ்வாறு கையாள்வது, முன்னைய அமைப்பில் இவை ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் போன்றவை இத்தகைய சிக்கல்களுக்குள் உள்ளடங்கி இருந்தன. இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவரும், மெய்யியலாளருமான சர் தாமஸ் பிரவுண் (Thomas Browne) என்பவர் 1646 ஆம் ஆண்டில் சியூடோடாக்சியா எப்பிடமிக்கா (Pseudodoxia Epidemica) என்னும் கலைக்களஞ்சியத்தை வெளியிட்டார். இவர் தனது கலைக்களஞ்சியத்தை மறுமலர்ச்சிக்காலத்தில் பரவலாகக் கையாளப்பட்ட "படைப்பின் அளவுத்திட்டம்" எனச் சொல்லப்பட்ட ஒரு படிமுறை அமைப்பு முறையில் ஒழுங்கமைத்திருந்தார். இதன்படி, தலைப்புகள் கனிமம், காய்கறி, விலங்குகள், மனிதன், கோள்கள், அண்டம் என்னும் வரிசையில் கீழிருந்து மேலாக அமைந்திருந்தன. பிரவுணின் தொகுப்பு ஐந்து பதிப்புக்களைக் கண்டது. ஒவ்வொரு பதிப்பும் திருத்தப்பட்டும் புதிய தகவல்கள் சேர்த்தும் வெளிவந்தன. கடைசிப் பதிப்பு 1672 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 18 ஆம் நூற்ராண்டின் முற்பகுதியிலும் படித்த ஐரோப்பியர்களுடைய வீடுகளில் காணப்பட்ட இது பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. தற்காலத்தில் மிகவும் பழக்கமான அகரவரிசையில் ஒழுங்குபடுத்தும் முறையை அறிமுகப்படுத்தியவர் ஜான் ஹரிஸ் (John Harris) என்பவராவார். 1704 இல் வெளியிடப்பட்ட இவரது நூலின் தலைப்பு லெக்சிக்கன் டெக்னிக்கம் அல்லது கலைகளுக்கும் அறிவியல்களுக்குமான ஆங்கில அகரமுதலி: கலை தொடர்பான சொற்களை மட்டுமன்றி கலைகளையே விளக்குகிறது. (Lexicon Technicum: Or, A Universal English Dictionary of Arts and Sciences: Explaining not only the Terms of Art, but the Arts Themselves). தலைப்பில் குறிப்பிட்டபடியே கலை மற்றும் அறிவியல் தொடர்பான சொற்களை மட்டுமன்றி கலைகள், அறிவியல்கள் பற்றிய விளக்கங்களையும் இந்நூல் உள்ளடக்கி இருந்தது. வேதியியல் பற்றி சர் ஐசாக் நியூட்டன் எழுதிப் பதிப்பிக்கப்பட்ட ஒரே ஆக்கம் இதன் 1710 ஆம் ஆண்டுப் பதிப்பில் உள்ளது. இது தலைமையாக அறிவியலையே முதன்மைப்படுத்தியது. 18 ஆம் நூற்றாண்டில் "அறிவியல்" என்பதால் புரிந்துகொள்ளப்பட்டவை பற்றி இதன் உள்ளடக்கங்கள் அமைந்திருந்ததோடு, கலைத்துறை மற்றும் நுண்கலைத்துறைகள் சார்ந்த தலைப்புக்களும் இருந்தன. எடுத்துக்காட்டாக சட்டம், வணிகம், இசை போன்ற துறைகள் சார்ந்த தலைப்புக்களில் 1200 பக்கங்கள் வரை இருந்தன. இதைக் கலைக்களஞ்சியம் என்பதைவிடக் கலைக்களஞ்சியத் தன்மை கொண்ட அகரமுதலியாகக் கருதலாம். இவற்றையும் பார்க்கவும் தமிழ்க் கலைக்களஞ்சியம் விக்கிப்பீடியா பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் , encyclopedia of Hindu Dharma (includes Wikipedia) – Biographical errors in encyclopedias and almanacs – Diderot's article on the Encyclopedia from the original பிரெஞ்சு கலைக்களஞ்சியம். – First Renaissance encyclopedia – Online Comprehensive Science Encyclopedia – CNET article University of Wisconsin– Stout listing by category , 1728, with the 1753 supplement , 1851, Francis Lieber ed. (Boston: Mussey &amp; Co.) at the University of Michigan Making of America site , articles and illustrations from 9th ed., 1875–89, and 10th ed., 1902–03. , 11th ed., 1911, at the LoveToKnow site. *
உலகின் மிக பழமையான கலைக்களஞ்சியம் எது?
நாட்சுராலிசு இசுட்டோரியா
4,270
tamil
77aa75247
ரேடியம் (Radium) என்பது Ra என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கதிர்வீச்சு இயல்புள்ள ஒரு தனிமமாகும். இதன் அணு எண் 88 ஆகும். இதன் அணுநிறை 226 ஆகும். தனிம வரிசை அட்டவணையின் நெடுங்குழு 2 இல் இடம்பெற்றுள்ள ஆறாவது தனிமம் ரேடியம் ஆகும். காரமண் உலோகம் என்றும் இதை வகைப்படுத்துவர். தூய்மையான ரேடியம் வெள்ளியைப் போல வெண்மை நிறமுடையதாக உள்ளது. ஆனால் காற்றில் வெளிப்பட நேர்ந்தால் ரேடியம் ஆக்சிசனுக்குப் பதிலாக நைட்ரசனுடன் உடனடியாக வினைபுரிந்து ரேடியம் நைட்ரைடு (Ra3N2) என்ற கருப்பு நிற மேற்பரப்பு அடுக்காக உருவாகிறது. ரேடியத்தின் அனைத்து ஐசோடோப்புகளும் அதிகமான கதிரியக்கத் தன்மையுடையனவாகும். இவற்றில் ரேடியம் -226 என்ற ஐசோடோப்பு அதிக நிலைப்புத்தன்மை கொண்டதாக உள்ளது. இதனுடைய அரை ஆயுள் காலம் 1600 ஆண்டுகளாகும். கதிரியக்கச் சிதைவடைந்து இந்த ஐசோடோப்பு ரேடான் வாயுவாக, குறிப்பாக ரேடான் - 222 என்ற ஐசோடோப்பாக மாறுகிறது. ரேடியம் சிதைவடையும்போது அயனியாக்கும் கதிர் ஒரு விளைபொருளாகும். இது ஒளிரும் வேதிப்பொருட்களை கிளர்வூட்டி கதிரியக்க ஒளிர்வைத் தருகிறது. ரேடியம் குளோரைடு வடிவத்தில் ரேடியம் 1898 ஆம் ஆண்டு மேரிகியூரி மற்றும் பியரிகியூரி தம்பதியரால் கண்டறியப்பட்டது. பிரஞ்சு அறிவியல் அகாதமியில் யுரேனைட்டு என்ற கனிமத்திலிருந்து ரேடியம் தனித்துப் பிரித்தெடுக்கப்பட்டு ஐந்து நாட்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்டது. மேரிகியூரியும் ஆன்றே -லூயிசு டெபியர்ன் ஆகியோர் 1911 ஆம் ஆண்டு ரேடியம் குளோரைடை மின்னாற்பகுப்பு செய்து ரேடியத்தை அதனுடைய உலோக நிலையில் தயாரித்தனர்[1] இயற்கையில் ரேடியம் யுரேனியம் மற்றும் தோரியம் தாதுக்களில் மிகச்சிறிய அளவில் காணப்படுகிறது. வாழும் உயிரினங்களுக்கு ரேடியம் ஒன்றும் அத்தியாவசியமான தேவையாக இல்லை. இதன் கதிரியக்க மற்றும் இரசாயன வினைத்திறன் காரணமாக உயிர் வேதியியல் செயல்முறைகளில் இணைந்திருக்கும்போது, ஆரோக்கியத்திற்கு பாதகமான விளைவுகள் ஏற்படலாம். அணுக்கரு மருத்துவத்தில் பயன்படுவதைத் தவிர்த்து ரேடியத்திற்கு என வேறு வணிகப்பயன்பாடுகள் ஏதுமில்லை. முன்னர் இது கதிர் ஒளி வீசுகின்ற சாதனங்களுக்கான கதிரியக்க ஆதாரமாக பயன்படுத்தப்பட்டது. மேலும் இது பிணி நீக்கும் மருந்தாக கருதப்பட்டு கதிரியக்க போலி மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டது. இன்று இத்தகைய பயன்பாடுகளுக்காக ரேடியம் பயன்படுத்தப்படுவதில்லை. ஏனெனில் ரேடியத்தின் நச்சுத்தன்மை இன்று உணரப்பட்டுவிட்டது. எனவே குறைந்த நச்சுத்தன்மை கொண்ட ஐசோடோப்புகள் இக்கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றன. பண்புகள் அறியப்பட்டுள்ள காரமண் உலோகங்களில் மிகவும் கனமான உலோகம் ரேடியம் ஆகும். மற்றும் அக்குழுவில் இடம்பெற்றுள்ள ஒரே கதிரியக்க உலோகமும் இதுவேயாகும். ரேடியத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் பேரியம் தனிமத்தின் பண்புகளை ஒத்ததாக உள்ளது. தூய ரேடியம் ஓர் ஆவியாகக் கூடிய தனிமமாகும். இதன் இலேசான இணை தனிமங்களாகக் கருதப்படும் கால்சியம், இசுட்ரோன்சியம் மற்றும் பேரியம் ஆகியவை சிறிய மஞ்சள் நிறத்தில் இருந்தாலும் இது வெள்ளியைப் போல வெண்மை நிறத்துடன் காணப்படுகிறது. இதனுடைய நிறம் காற்றில் விரைவாக மங்கிவிடுகிறது. காற்றுடன் வினைபுரிந்து ரேடியம் நைட்ரைடு கருப்பு படலமாக இதன் மேற்பரப்பில் உருவாகிறது. ரேடியத்தின் உருகு நிலை 700 பாகை செல்சியசு வெப்ப நிலை அல்லது 960 பாகை செல்சியசு வெப்பநிலை இவற்றில் ஒன்றாக இருக்கலாம். மற்றும் இதனுடைய கொதி நிலை 1737 பாகை செல்சியசு வெப்பநிலை ஆகும். இவ்விரு அளவுகளும் பேரியத்தைக் காட்டிலும் குறைவான அளவுகளாக உள்ளன. தனிமவரிசை அட்டவணையின் ஆவர்த்தன போக்குகளுக்கு உட்பட்டதாகவும் இந்த அளவுகள் உள்ளன[2] . அட்டவணையின் மேலிருந்து கீழாகச் செல்லும்போது நெடுங்குழு 2 இன் தனிமங்கள் இத்தகைய போக்கையே காட்டுகின்றன. பேரியம் மற்றும் கார உலோகங்களைப் போல ரேடியம் சாதாரண வெப்ப நிலை மற்றும் அழுத்தத்தில் பொருள் மைய கனசதுர வடிவில் படிகமாகிறது. ரேடியம்-ரேடியம் பிணைப்பின் பிணைப்பு இடைவெளி 514.8 பைக்கோ மீட்டர்களாகும். இதன் அடர்த்தி 5.5 கிராம்/செ.மீ3 ஆகும். இது பேரியத்தின் அடர்த்தியைக் காட்டிலும் அதிகமாகும். ரேடியம்-பேரியம் அடர்த்தி வீதம் ரேடியம்-பேரியம் அணு நிறை வீதத்துடன் ஒப்பிட்டு நோக்கத்தக்கதாக உள்ளது. ஏனெனில் இரண்டு தனிமங்களும் ஒரே மாதிரியான படிகக் கட்டமைப்பில் படிகமாகியுள்ளன. ஐசோடோப்புகள் நிறை எண்கள் 202 முதல் 234 வரை உள்ள 33 ஐசோடோப்புகளை ரேடியம் கொண்டுள்ளது. இவை அனைத்தும் கதிரியக்கச் செயல்பாடு கொண்டவையாகும். அரை ஆயுட்காலம் 11.4 நாட்களைக் கொண்ட 223Ra, அரை ஆயுட்காலம் 3.64 நாட்களைக் கொண்ட 224Ra , அரை ஆயுட்காலம் 1600 ஆண்டுகள் கொண்ட 226Ra, அரை ஆயுட்காலம் 5.75 ஆண்டுகள் கொண்ட 228Ra என்ற நான்கு ஐசோடோப்புகளும் தோரியம்-232, யுரேனியம்-235, மற்றும் யுரேனியம்-238 போன்ற ஐசோடோப்புகளின் சிதைவுச் சங்கிலியிலிருந்து இயற்கையாகத் தோன்றுகின்றன. 223Ra ஐசோடோப்பு யுரேனியம்-235 ஐசோடோப்பிலிருந்தும், 226Ra ஐசோடோப்பு யுரேனியம்-235 ஐசோடோப்பிலிருந்தும், மற்ற இரண்டு ஐசோடோப்புகளும் தோரியம் 232 ஐசோடோப்பிலிருந்தும் உருவாகின்றன. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் at The Periodic Table of Videos (University of Nottingham) பகுப்பு:தனிமங்கள் பகுப்பு:காரக்கனிம மாழைகள்
ரேடியம் கண்டுபிடித்தவர் யார்?
மேரிகியூரி மற்றும் பியரிகியூரி
986
tamil
23a3dc02a
சூரியக் குடும்பம் சூரியக் குடும்பம் (Solar System) அல்லது சூரியத் தொகுதி என்பது சூரியனையும் சூரியனின் ஈர்ப்புவிசையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து பருப்பொருட்களையும் உள்ளடக்கிய ஒரு தொகுதி ஆகும். இச் சூரியத்தொகுதி கதிரவனைச் சுற்றி வரும் எட்டு கோள்களையும், இக்கோள்களின் 162 (இதுவரை தெரிந்த கணக்கெடுப்பின்படி) துணைக்கோள்களையும், சிந்து குறுங்கோள்களையும், அக்குறுங்கோள்களின் துணைக்கோள்களையும் மற்றும் ஆயிரக்கணக்கான பிற வான்பொருட்களையும் உள்ளடக்கியது. வால்வெள்ளி, எரிகற்கள், விண்கற்கள் மற்றும் நாள்மீன்களுக்கு இடையே உள்ள விண்துகள்கள் போன்றவையும் சூரியத் தொகுதியில் காணப்படுகின்றன. சூரியன் சூரியனும் ஒரு விண்மீனே. இது பூமிக்கு மிக அருகில் உள்ள விண்மீன்(கோள்கள் வேறு விண்மீன்கள் வேறு). இது ஒரு நெருப்புக்கோளம். எனவே, இதன் அருகில் செல்லவே முடியாது. இது பூமியைப் போலப் பல மடங்கு பெரியது. பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ளது. சூரியன், சூரிய மண்டலத்தின் மையத்தில் உள்ள, சூரிய மண்டலத்தின் ஆதாரமான விண்மீன் ஆகும். பூமி உள்பட பல கோள்களும், கோடிக்கணக்கான விண்கற்களும், வால்வெள்ளிகளும், அண்டத்தூசி ஆகியனவும் பல்வேறு கோளப் பாதைகளில் சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரியனின் எடை மட்டுமே சூரிய மண்டலத்தின் நிறையில் 98.6 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள சராசரி தொலைவு சுமார் 149 ,600 ,000 கிலோமீட்டர்கள். சூரியனில் இருந்து ஒரு ஒளிக்கற்றை பூமியை வந்தடைய சுமார் 8 நிமிடங்கள், 19 வினாடிகளில் கடக்கிறது. கதிரவன் பெருமளவில் ஹைட்ரஜன் (சுமார் 74% நிறை, மற்றும் 92% கனவளவு) மற்றும் ஹீலியம் (சுமார் 24% நிறை, 7% கனவளவு) ஆகியவற்றையும், சிறிய அளவில் பிற தனிமங்களான, இரும்பு, நிக்கல், ஆக்சிசன், சிலிக்கன், கந்தகம், மக்னீசியம், கரிமம், நியான், கல்சியம், குரோமியம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. புதன் இது சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள். எனவே இது மிகவும் வெப்பமாக இருக்கும். இதனை ஆங்கிலத்தில் மெர்க்கூரி என்று அழைக்கின்றனர். அனைத்துக் கிரகங்களுக்குள்ளும் புதனே மிகச் சிறிய கிரகமாகும். இக்கிரகத்தின் விட்டம் 4800 கிலோ மீற்றராகும். இது சந்திரனைவிட சிறிய பருமனுடையது. புதன் சூரியனை ஒரு முறை சுற்றிவர 88 செல்கின்றன. நாம் வாழுகின்ற பூமியானது இருபத்து நான்கு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை தன்னைத்தானே சுற்றுவதினால் புவியின் எல்லாப் பகுதிகளுக்கும் இரவு, பகல் மாறி மாறிக்கிடைக்கின்றது. ஆனால் புதனில் நீண்டநாட்களுக்கு இரவும் பகலும் மாறிமாறி வருகின்றன. புதன் சூரியனுக்கு அருகில் இருக்கும்போது கதிரவனின் ஒளி படுகின்ற பகுதியின் வெப்பநிலை சுமார் 400 பாகை செல்ஸியஸ் ஆகவும் தூரத்தில் இருக்கும் வேளையில் ஏறத்தாழ 280 பாகை செல்ஸியஸாகவும் தென்படுகின்றது என வானிலை ஆய்வாளர் கூறுகின்றனர். பூமிக்கும் சூரியனுக்கும் இடையே புதன் ஒரே நேர் கோட்டில் வலம்வரும்போது அது சூரிய பிம்பத்திற்குக் குறுக்காக ஒருசிறு கரும்புள்ளியாக ஊர்ந்து செல்லும். இதனைக் கிரகணம் என்று கூறுவதற்குப் பதிலாக புதசந்திரணம் என்று அழைக்கின்றனர். வெள்ளி சூரியனிலிருந்து இரண்டாவது கோள் வெள்ளி. இது மிகவும் வெப்பமான கோள். இதில் காரீயம் கூட உருகிவிடும். பூமிக்கு மிக அருகில் உள்ள கோள் இது. இதை அதிகாலையில் வானத்தில் பார்க்கலாம். இக்கிரகம் பருமனிலும் திணிவிலும் பூமியை ஓரளவிற்கு ஒத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இதனுடைய விட்டம் 12320 கிலோ மீற்றராகும். இது சூரியனை ஒருமுறை சுற்றிவர 224 நாட்கள் ஆகின்றது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரு நேர்கோட்டில் வரும்போது இதுவும் கரும்புள்ளியாகதான் தோற்றமளிக்கும். இந்நிகழ்வை சுக்கிர சந்திரணம் என அழைப்பார்கள். இது வெகு அபூர்வமாக நிகழுகின்றது. இறுதியாக இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு ஜூன் எட்டாம் திகதி நடைபெற்றது. அடுத்ததாக எதிர்வரும் 2012 ஆண்டு ஜூன் 06 நிகழும் என்று வானியலாளர் கூறுகின்றனர். எட்டு ஆண்டுகள் இடைக்காலத்தைக் கொண்ட இச்சுக்கிரசந்தரணம் இரண்டாயிரத்துப் பன்னிரெண்டுக்குப் பின்னர் நூற்றாண்டு காலப் பகுதியைக் கடந்ததும் நிகழுமாம், இக்கிரகத்தைச் சுற்றி வென்நிற மேகப்படலம் பரிணமித்துள்ளது. இதனால் சுக்கிரனின் மேற்பரப்பைத் துல்லியமாக ஆராய்வதில் சிக்கல் நிலை தோற்றியுள்ளது. பூமி சூரியக் குடும்பத்தில் மூன்றாவது கோள்தான் நமது பூமி. இது ஒரு பாறைக்கோளம். பூமியைக் காற்று மண்டலம் சூழ்ந்துள்ளது. இதன் மேற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு நீர் உள்ளது. காற்றும் நீரும் உள்ளதால் உயிரினங்கள் இங்கு வாழ முடிகிறது. பூமி உருண்டை வடிவமென ஏற்றுக்கொண்டாலும் அது சரியான உருண்டை வடிவாக அமைந்திருக்கவில்லை. இருதுருவங்களும் சிறிது தட்டையாகவும், கற்பனைக் கோடான பூமத்திய ரேகைப்பகுதியில் சற்று பருத்தும் காணப்படுகின்றது.. பூமத்திய ரேகையின் ஊடாகச் செல்லும் விட்டம் 12742 கிலோ மீற்றரரும் துருவங்கள் இரண்டிற்குமிடையில் உள்ள விட்டம் 12713 கிலோ மீற்ரராகும். பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதுடன் 365,2563 நாட்களில் சூரியனையும் ஒரு முறை சுற்றி வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி அளவில் பூமியானது சூரியனுக்கு அருகில் வருகின்றது. பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிவரும் நேரத்தை ஒரு நாளென்றும் சூரியனை ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் ஒரு வருடமென்றும் கொள்ளப்படுகின்றது. பூமி தன்னைத்தானே சுற்றுவதினால் இரவு, பகல் உண்டாவதும், சூரியனைச் சுற்றி வருவதனால் பருவ காலங்களும் ஏற்படுகின்றன. செவ்வாய் செவ்வாய் நான்காவது கோளாகும். இதைச் சிவப்புக் கோள் என்றும் அழைப்பர். செவ்வாயின் ஒருநாள் என்பது 24.5 மணி நேரம் செவ்வாயில் உயிரினங்கள் இருக்கக்கூடும் இதுவரை மெய்ப்பிக்கப்படவில்லை. செவ்வாய் சூரியனை ஒருமுறை சுற்றிவருவதற்கு 687 நாட்கள் எடுக்கின்றது. தன்னைத்தானே சுற்ற 24 மணி 37 நிமிடங்களும் ஆகின்றது. ஆகவே புவியைப் போலவே அங்கும் இரவு பகல் மாறிமாறி உண்டாகும். பூமியின் அச்சு இருபத்து மூன்று அரை பாகை சரிந்துள்ளது. செவ்வாய் தன்னைத்தானே சுற்றும் அச்சு இருபத்து நான்கு பாகையில் சரிந்துள்ளமையினால் பருவகாலம் புவியை ஒத்ததாகவே காணப்படுகிறது. செவ்வாய் சூரியனைச் சுற்ற எடுக்கும் காலம் ஏறக்குறைய பூமி கதிரவனைச் சுற்ற எடுக்கும் காலப்பகுதியைக் காட்டிலும் இருமடங்காக உள்ளதினால் காலநிலையும் இருமடங்காகின்றது. தொலைநோக்கி வாயிலாக செவ்வாயை உற்று நோக்கும் வேளையில் அது செம்மஞ்சள் நிறமாகத் தோன்றும். வியாழன் ஐந்தாவது கோள்தான் வியாழன். இதுவே கோள்களில் மிகப்பெரியது. இதன் பருமன் ஏனைய கிரகங்களை விட பெரிதாக உள்ளதினால் இதனை ‘ராட்சத கிரகம்’ என அழைக்கப்படுகின்றது. வியாழன் பூமியைப் போல 1300 மடங்கு பெரியது. வியாழன் வாயுக்களால் ஆனது. வியாழனில் ஒரு பெரிய சிவப்புப் பகுதி உள்ளது. மெல்லிய மங்கலான வளையம் ஒன்று வியாழனைச் சூழ்ந்துள்ளது. இவ்வளையம் பனிக்கட்டி மற்றும் தூசுகளால் ஆனது. இது தன்னைத்தானே ஒருமுறை சுற்ற 9 மணித்தியாலங்களும் 55 நிமிடங்களும் ஆகின்றது. ஆகவே இந்த ராட்சத கிரகம் பூமியை விட எவ்வளவு வேகமாகச் சுழலுகின்றது என்பதைக் கற்பனை பண்ணிப்பார்க்கலாம். அதேவேளை வியாழன் சூரியனை ஒருமுறை சுற்றிவர பதினொரு வருடங்களும் முந்நூற்று பதினைந்து நாட்களும் எடுக்கின்றது. வியாழனிலிருந்து கிடைக்கப்பெற்ற நிறமாலையை விஞ்ஞானிகள் ஆராய்ந்து பார்த்தபோது அங்கு அம்மோனியா, மெதேன் போன்ற வாயுக்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். நாம் வாழுகின்ற பூமிக்கு ஒரே ஒரு உபகிரகம் உள்ளது. ஆனால் வியாழனுக்கு பதினாறு உபகிரகங்கள் சுற்றிவருவதாக அண்மையில் கண்டிபிடித்துள்ளனர். சனி சனி ஆறாவது கோள். இது இரண்டாவது பெரியகோள். வியாழனைப் போன்று சனியும் வாயுக்களால் ஆனது. சனியைச் சுற்றித் தட்டையான வட்ட வடிவமான மிகப்பெரிய வளையங்கள் உள்ளன. இவற்றை வைத்தே சனியை அடையாளம் காண இயலும். இந்தப் பெரிய சனிக் கோளைத் தண்ணீரில் போட்டால் மிதக்குமாம்! ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஏனெனில் சனியில் உள்ள வாயுக்கள் நீரைவிட (அடர்த்தி குறைந்தவை) இலேசானவை. சனியின் நிறம் மஞ்சள். சூரியனை ஒருமுறை சுறறிவர 29.5 ஆண்டுகள் ஆகின்றன. யுரேனஸ் ஏழாவது கோள் யுரேனஸ். இதுவும் வியாழன் சனியைப் போன்று வாயுக்களால் ஆனதே. இதனைச் சுற்றியும் வளையங்கள் உள்ளன. யுரேனஸ் ஆகும். 1781 ஆண்டுவரை சூரிய குடும்பத்தில் ஆறு கிரகங்களே உள்ளன என்று நம்பியிருந்தனர். வில்லியம் ஹர்ஷா என்னும் விஞ்ஞானியினால் யுரேனஸ் என்ற கிரகம் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டதாம். இதன் விட்டம் 48000 கிலோ மீற்றராகும். தன்னைத்தானே சுற்ற பத்து மணி நாற்பத்து எட்டு நிமிடங்கள் எடுக்கின்றது. சூரியனை ஒருமுறை சுற்ற 84 வருடங்கள் செல்கின்றது. யுரேனெஸ்ஸிற்கு ஐந்து உப கிரகங்கள் உள்ளன. நெப்டியூன் நெப்டியூன் எட்டாவது கோளாகும். இதைத் தொலைநோக்கியில் பார்க்கும்பொழுது நீலம் கலந்த பச்சை நிறத்தில் தெரியும். இக்கிரகம் 1846 ஆண்டு பெர்லின் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்த விஞ்ஞானிகளினால் கண்டுபிடிக்கப்பட்டது. 165 ஆண்டுகளுக்கு ஒருமுறை இது சூரியனைச் சுற்றி வருகின்றது. தன்னைத்தானே சுற்ற பதினைந்து மணி நாற்பது நிமிடங்களும் செல்லும். இக்கிரகம் சூரியனிலிருந்து மிகவும் தொலைவில் நிலைகொண்டுள்ளதினால் எப்பொழுதும் குளிராகவே காணப்படுகின்றது. இதற்கு இரண்டு உபகிரகங்கள் உள்ளன. இவ் உபகிரகங்களில் ஒன்று ஆறு நாட்களுக்கு ஒருமுறை தாய்க்கிரகத்தை எதிர்த்திசையில் வலம் வருகின்றது. நெப்ரியூனை வெறுங்கண்களால் முடியாது. சூரியனுக்கும் ஒரு குடும்பம் வானத்தில் சூரியனை மையமாக வைத்துக்கொண்டு அதனைச் சுற்றிச் சுழன்று வரும் கோள்களை - அவற்றில் முக்கியமாக நம் கண்களுக்குப் புலப்படும் கோள்களை சூரியக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். நாம் வாழுகின்ற பூமியும் சூரிய குடும்பத்தைச் சேர்ந்ததுதான். ஏனெனில் பூமியும் சூரியனை மையமாகக் கொண்டு சுழன்று வருகின்றது. சூரியக் குடும்பத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் கோள்களிடையே ஆச்சரியப்படும் விதத்தில் ஓர் ஒழுங்குமுறை அமைந்திருக்கின்றது. கிரகங்கள் எனப்படும் பெருங்கோள்கள் அனைத்துமே சூரியனின் மத்திய ரேகைத் தடத்தில் சூரியனை வலம் வருகின்றன. பெருங்கோள்கள் அனைத்துமே ஒரே திசையில் சூரியனைச் சுற்றி வலம் வருவது வியப்பூட்டும் விஷயமாகும். யுரேனஸ் என்று குறிப்பிடப்படும் கோளைத் தவிர மற்ற கோள்கள் ஒவ்வொன்றும், கடிகாரமுள் சுற்றும் திசைக்கு எதிர்ப்புறமாக தன்னைத்தானே சுற்றிக் கொள்கின்றன. சூரியனும் அதே திசையில் தன்னைத் தானே சுற்றிக்கொள்கின்றது. சூரியனுக்கு என்று கோள்களினால் ஆன ஒரு குடும்பம் எவ்வாறு தோன்றியிருக்கக் கூடும் என்பது குறித்து பல கருத்துகள் கூறப்படுகின்றன. சூரியனுக்கு ஏற்பட்ட ஒரு பெரிய அதிர்ச்சி காரணமாக சூரியனின் பகுதிகளில் சில சிறு சிறு துண்டுகளாக உடைந்து தனித்தனி கோள்களாக சூரியனை வலம் வரத் தொடங்கின என்பது ஒரு கருத்து. சூரியன் மற்றொரு கோளுடன் மோதியதன் காரணமாக புதுக்கோள்கள் தோன்றி, சூரியனைச் சுற்றத் தொடங்கின என்பது மற்றொரு கருத்து. புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் எச்.டி. 10180 என்ற நட்சத்திரம் குறித்து கடந்த 6 ஆண்டுகளாக சிலியில் உள்ள லாசில்லா என்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 3.6 மீட்டர் டெலஸ்கோப் உதவியுடன் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 7 கிரகங்களுடன் புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு இந்த நிலையில் எச்.டி. 10180 நட்சத்திரத்தை சுற்றி ஒரு புதிய சூரிய குடும்பத்தை கண்டுபிடித்தனர். அதில் 7 கிரகங்கள் உள்ளன. அவற்றில் 5 கிரகங்கள் மிக தெளிவாக தெரிகின்றன. அதில் ஒன்று சனி கிரகம் போன்ற தோற்றத்தில் உள்ளது. இவை தவிர மிக சிறிய அளவில் வெளி கிரகங்களும் உள்ளன. இந்த புதிய சூரிய குடும்பம் பூமியில் இருந்து 127 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. இது தற்போதுள்ள சூரிய குடும்பம் போன்றே உள்ளது. அது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாக விஞ்ஞானி கிறிஸ்டோபே லோவிஸ் தெரிவித்துள்ளார். [1] [2]
எந்த கிரகம் பூமிக்கு மிக அருகில் உள்ளது?
வெள்ளி
449
tamil
4d548343d
டஸ் கப்பிற்ரால் (Das Kapital) (தமிழில் - மூலதனம், ஆங்கிலத்தில் - Capital) என்பது கார்ல் மார்க்ஸினால் ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட அரசபொருளியல் சார்ந்த ஆராய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூலாகும். இந் நூலானது மூலதனம் பற்றி பொருளியலாளர்களினால் முன்வைக்கப்பட்ட கோட்பாடுகள், முதலாளித்துவம் பற்றிய மார்க்சின் ஆய்வுகள் போன்றவற்றை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. இந்நூல் முதன்முதலில் தியாகு என்பவரால் தமிழில் மூலதனம் என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டது. பதிப்பு டஸ் கப்பிற்ரால் நூலின் முதல் பாகம் கார்ல் மார்க்சினால் 1867ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. இரண்டாம், மூன்றாம் பாகங்கள் அவரின் உற்ற நண்பனான பிரெட்ரிக் ஏங்கல்ஸ் (Friedrich Engels) என்பவரால் தொகுத்து 1885 மற்றும் 1894 இல் வெளியிடப்பட்டது. நான்காவது பாகமான Theories of Surplus-Value ஆனது 1905-1910 காலப்பகுதியில் Karl Kautsky என்பவரால் தொகுத்து வெளியிடப்பட்டது. வெளி இணைப்புக்கள் Online editions பிற இணைப்புக்கள் எஸ். வீ. இராஜதுரை, தி இந்து 2017 அக்டோபர் 1 . Will help with understanding the early concepts. . An earlier document that deals with many of the ideas later expanded in Das Kapital. Synopses . பகுப்பு:மார்க்சியம் பகுப்பு:நூல்கள் பகுப்பு:பொதுவுடைமை நூல்கள் பகுப்பு:கார்ல் மார்க்சின் நூல்கள் பகுப்பு:நூலட்டை விடுபட்ட நூல்கள்
தாஸ் கேபிடல் புத்தகத்தை எழுதியவர் யார்?
கார்ல் மார்க்ஸினால்
81
tamil
edfcf5fb9
இந்தியாவில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி அல்லது கம்பெனி ஆட்சி (Company rule in India) or (Company Raj),[1]. 1757ஆம் ஆண்டில் நடந்த பிளாசி சண்டைக்குப்பின், வங்காள நவாப், பிரிட்டன் கிழக்கிந்திய கம்பேனி நிறுவனத்திடம் சரண் அடைந்த பின், இந்திய துணைக் கண்டத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பேனியின் ஆட்சி காலூன்றியது. [2] 1765 ஆண்டு முதல் வங்காளம், ஒரிசா மற்றும் பிகாரில் திவானி எனும் நிலவரி வசூலிக்கும் உரிமையைப் பெற்றது.[3] 1773ஆம் ஆண்டில், கிழக்கிந்திய கம்பேனியின் ஆட்சிக்குட்பட்ட நிலப்பரப்பின், தலைமை ஆளுனர், வாரன் ஹேஸ்டிங்ஸ் நேரடி நிர்வாகத்தில், கல்கத்தா நகரை தலைமையகமாகக் செயல்பட்டது. [4]கிழக்கிந்திய கம்பேனி நிறுவனம் பல பங்குதாரர்களைக் கொண்ட, லாப நோக்கத்துடன் செயல்படும், தனியார் கூட்டு வர்த்தக நிறுவனம் ஆகும். இதன் நிர்வாகக் குழு மற்றும் தலைமையகம் லண்டனில் அமைந்திருந்தது. கிழக்கிந்திய கம்பேனி தனக்கென காவல் படை, இராணுவப் படை மற்றும் நீதிமன்றங்கள் கொண்டது. கிழக்கிந்திய கம்பேனி நிர்வாகிகள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஊழல்களையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் தடுத்து நிறுத்திட, பிட்டின் இந்தியா சட்டம், பிரித்தானிய அரசு நடைமுறைப்படுத்தியது. கிழக்கிந்திய நிறுவனச் சட்டம், 1784, சிப்பாய்க் கிளர்ச்சி, 1857க்குப் பின், பிரித்தானிய அரசு கொண்டு வந்த இந்திய அரசுச் சட்டம், 1858க்கு பின்னர் முடிவடைந்தது. 1858ஆம் ஆண்டில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் கலைக்கப்பட்டு, இந்தியத் துணைக் கண்டத்தை, இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வில் தேறிய அதிகாரிகளின் நிர்வாகத்தில், பிரித்தானியப் பேரரசு தனது நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. எல்லைகளை விரிவு செய்தல் 1765 மற்றும் 1805இல் இந்தியா, பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பேனி ஆட்சிப் பகுதிகள், இளஞ்சிவப்பு நிறத்தில். 1837 மற்றும் 1857இல் இந்தியா, பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பேனி ஆட்சிப்பகுதிகள் (இளஞ்சிவப்பு நிறத்தில்) மற்றும் பிற பகுதிகள் இந்தியத் துணைக் கண்டத்தில் வணிகம் செய்து லாபம் ஈட்டும் நோக்கத்தில், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பேனி, பிரித்தானிய வணிகர்களால் லண்டனில் 1600ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தின் மசூலிப்பட்டணக் கடற்கரையில் 1611ஆம் ஆண்டிலும், சூரத்தில் 1612ஆம் ஆண்டிலும், 1640இல் விஜயநகரப் பேரரசின் அனுமதியுடன், சென்னையிலும். பின் பம்பாய் நகரிலும் வணிகக் கூடங்களை திறந்தனர். இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் 1640ஆம் ஆண்டில் கல்கத்தாவில் தொழிற்கூடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தொடங்கினர். போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனி, பிரான்சு இந்திய கம்பேனி, டச்சு இந்திய கம்பேனிகளுடான போட்டியில், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வெற்றி அடைந்தது. ராபர்ட் கிளைவ் மற்றும் ஆண்ட்ரே பஸ்தாமாண்டி ஆகிய கிழக்கிந்தியக் கம்பேனியின் படைத் தலைவர்களின் தலைமையிலான படைகள், 1757இல் நடந்த பிளாசிப் போர் மற்றும் 1764இல் நடந்த பக்சார் போர்களில் பெற்ற வெற்றியால், வங்காளம், ஒரிசா மற்றும் பிகாரில் நிலவரி வசூலிக்கும் உரிமையும், 1773இல் கீழ் கங்கைப் பகுதிகளில் பல நிலப்பரப்புகளும் அடைந்தனர். கர்நாடகப் போர்கள் (1746 – 1758), ஆங்கிலேய-மைசூர்ப் போர்கள் (1766-1799), ஆங்கிலேய-மராட்டியப் போர்கள் (1772-1818), ஆங்கிலேய-நேபாளப் போர் (1814 - 16), ஆங்கிலேய-பர்மியப் போர்கள் (1824-1826), இரண்டாம் ஆங்கிலேய-சீக்கியப் போர்கள் (1849-1856) மூலம் வட மேற்கு இந்தியாவிலும், மேற்கு இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும், வடகிழக்கு இந்தியாவிலும், கிழக்கிந்தியக் கம்பெனியினர தங்களது ஆளும் நிலப்பரப்பை விரிவுபடுத்திக் கொண்டனர்.[5][6] ஆங்கிலேய-நேபாளப் போர் (1814–16) முடிவில் ஏற்பட்ட சுகௌலி உடன்படிக்கை மூலம், நேபாள இராச்சியத்தின் கார்வால், குமாவுன், சிக்கிம், டார்ஜிலிங் மற்றும் மேற்கு தராய் சமவெளிப் பகுதிகள் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனியினர் கைக்கு வந்தது. ஆங்கிலேய-பர்மியப் போர்கள் மூலம் அசாம், மணிப்பூர், அரக்கான் பகுதிகளை, பர்மாவிடமிருந்து கைப்பற்றினர். ஆங்கிலேய-மராட்டியப் போர்கள் மூலம் குஜராத், ராஜபுதனம், மத்திய இந்தியா மற்றும் மகாராட்டிரா பகுதிகளை, மராட்டியர்களிடமிருந்து கைப்பற்றினர். ஆங்கிலேய–சீக்கியர் போர்களின் (1848 - 1849) முடிவில்[7], சீக்கியப் பேரரசிடமிருந்த பஞ்சாப் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணப் பகுதிகள் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியுடன் இணைக்கப்பட்டது. சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய நகரங்களைத் தலைநகராகக் கொண்ட நிலப்பரப்புகள் என்றும், கிழக்கிந்தியக் கம்பேனியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளான ரோகில்கண்ட், கோரக்பூர், தோவாப், தில்லி, அசாம், சிந்து, பஞ்சாப் மாகாணம், வடமேற்கு எல்லைப்புற மாகாணம் மற்றும் காஷ்மீர் பகுதிகள் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின் நேரடி நிர்வாகத்தில் இருந்தன. மேலும் ஆண்டு தோறும் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பேனிக்கு கப்பம் கட்டிக் கொண்டு, தன்னிச்சையாக ஆண்ட மன்னர்களின் நிலப்பரப்புகள் (தனக்கென தனி இராணுவப் படைகள் வைத்துக் கொள்ளாத) எண்ணற்ற சுதேச சமஸ்தானங்கள், கிழக்கிந்திய ஆட்சிப் பகுதிகள் இருந்தது. 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியத் துணை கண்டத்தின் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகள், இந்து, இசுலாமிய மற்றும் சீக்கிய சுதேச சமஸ்தான மன்னராட்சியில் இருந்தன. சென்னை மாகாணத்தில் கம்பனி ஆட்சி (1684-1858) தமிழகத்தில் முதன் முதலில் ஆங்கிலேயர் பதினாறாம் நூற்றாண்டில் கால் பதித்தனர்.[8] தற்கால சென்னை நகரத்தில், புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினர். முதலில் வர்த்தகம் மட்டும் செய்து வந்த ஆங்கில கிழக்கிந்தியக் கம்பனி, பின் மெல்ல மெல்ல உள்ளூர் அரசியல் விவகாரங்களில் தலையிடத் தொடங்கியது. 1684 ஆம் ஆண்டு தென்னாட்டில் உள்ள கம்பனி பிரதேசங்கள், சென்னை மாகாணம் என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டன. பதினெட்டாம் நூற்றாண்டில், நடைபெற்ற கர்நாடகப் போர்களால், ஆங்கிலேயர்களின் கை ஓங்கியது. ஆற்காடு நவாப் மற்றும், ஃபிரஞ்சுப் படைகளை வென்றதால், அவர்களின் ஆதிக்கத்திலிருந்த பல பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தன. ஹைதர் அலி, மற்றும் திப்பு சுல்தானை வீழ்த்தியதின் மூலம் மேற்கிலும், கட்டபொம்மன், மருது பாண்டியர் முதலிய பாளையக்காரர்களை வென்றதன் மூலம் சென்னை மாகாணத்தில் கம்பெனி ஆட்சி வலுப்பெற்றது. இராணுவம் மற்றும் குடிமைப் பணிகள் 1772ஆம் ஆண்டில் வாரன் ஹேஸ்டிங் முதல் கவர்னர் ஜெனரலாக, கொல்கத்தாவில் பதவியேற்றவுடன், கிழக்கிந்தியக் கம்பெனியின், வங்காள மாகாண இராணுவத்தை விரைவாக பெருக்கினார். அயோத்தி வீரர்கள், இராஜபுதன ராஜபுத்திரர்கள் மற்றும் பிராமணர்களை கம்பேனி படையணிகளில் திரட்டினார். மூன்றாம் ஆங்கிலேய-மைசூர் போருக்குப்பின் 1791இல் சென்னை மாகாணப் படைகளுக்கு ஆதரவாகவும், ஜாவா, இலங்கை போன்ற வெளி நாட்டுப் போர்களுக்குத் துணையாக வங்காள மாகாணப் படைகள் பயன்பட்டன. வேலூர் சிப்பாய் எழுச்சியின் போது, 1806இல் கிழக்கிந்திய கம்பேனியின் படையில் 1,54,500 படைவீரர்களும் அதிகாரிகளும் இருந்தனர்.[10] வளர்ச்சிப் பணிகள் அஞ்சல், தந்தி சேவைகள் தொடங்கப்பட்டது. ஆங்கிலேய முறை கல்வி வளர்ந்தது. தொடருந்து சேவை துவக்கப்பட்டது. தலைமை ஆளுனர்கள் பிரித்தானிய கிழக்கிந்திய ஆட்சியில், முக்கிய நிகழ்வுகளின் போது இருந்த தலைமை ஆளுனர்களின் பெயர்கள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. } கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் வீழ்ச்சி கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழ் அமைந்த கம்பெனி ஆட்சியின் நிர்வாகத்தில் ஊழல் பெருகியதாலும், கடுமையான பஞ்சத்தாலும் கம்பெனியின் நிதி திவாலா நிலைக்குச் சென்றதாலும், சிப்பாய்க் கிளர்ச்சிக்குப்பின் 1858ஆம் ஆண்டின் இறுதியில், கிழக்கிந்திய நிறுவனத்தை கலைக்கப்பட்டதால், இந்தியாவில் கம்பெனி ஆட்சி முடிவுற்று, பிரித்தானியா பேரரசின் கீழ் பதவி வகித்த வைஸ்ராய் தலைமையில் இந்திய துணைக் கண்டத்து ஆட்சியை தனது நேரடிக் கட்டுக்குள் கொண்டு வந்தது. இதனையும் காண்க பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் பிளாசி சண்டை 1757 பக்சார் சண்டை 1764 பர்மாவில் பிரித்தானிய ஆட்சி பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு அடிக்குறிப்புகள் வெளி இணைப்புகள் பகுப்பு:பிரித்தானிய இந்தியா பகுப்பு:பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி பகுப்பு:இந்திய வரலாறு
பிரித்தானியப் பேரரசு இந்தியாவில் எந்த ஆண்டு காலூன்றியது?
1757
118
tamil
8069e0eea
ஈலியம் (Helium) என்பது He என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட தனிமமாகும். நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற, நச்சுத்தன்மையற்ற, கூடிய அளவில் வேதி வினையில் ஈடுபடாத ஒரு வளிமமுமாகும். இத்தனிமம் (மூலகம்) தனிம அட்டவணையில் இரண்டாமிடத்தில் இருக்கிறது. இதன் உருகுநிலையும் கொதிநிலையும் எல்லாத் தனிமங்களை விடவும் குறைவானதாகும். இதன் அணு எண் 2. இதுவே அண்டத்தில் மிகுந்து காணப்படும் தனிமங்களில் இரண்டாவது ஆகும். இதுவே நீரியத்திற்கு அடுத்து எளிய அமைப்புக் கொண்ட தனிமமும் ஆகும். பூமியின் கடல் மட்டத்தில் காற்றுமண்டலத்தில் ஈலியம் 6ஆவதாக, நைதரசன், ஒட்சிசன், ஆர்கான், காபனீரொட்சைட்டு, நியானுக்கு அடுத்ததாகச் செறிவுற்றுள்ளது. இதன் செழுமை மில்லியனில் 5.2 பங்குகள் ஆகும். பூமியில் அரிதாகக் கிடைத்தாலும் அண்டப் பெருவெளியில் நீரியத்திற்கு அடுத்து மிகுதியாக இருப்பது ஈலியமாகும். இதன் பங்கு 7%. நீரியமும் ஈலியமும் சேர்ந்து அண்டப் பெருவெளியில் 99.9%ஆக உள்ளது. வரலாறு ஈலியம் கண்டறிதல் ஈலியம் பூமியில் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னால் அது இருப்பதாக ஒருவாறு உணரப்பட்டது. 1868 ல் பிரான்சு நாட்டின் வானவியலாரான பியர் இழோன்சன் (Pierre Jonsson) என்பார் பிரித்தானிய இந்தியாவில் குண்டூர் பகுதியில் ஏற்பட்ட முழு சூரிய கிரகணத்தைப் பற்றி ஆராய்ந்த போது எதிர்பாராத விதமாக ஒளியுமிழ் நிறமாலை வரிசையில் மஞ்சள் பகுதியில் ஒரு புதிய வரியைக் கண்டார்.[1][2] அது அப்போது கண்டறியப்பட்ட எந்தத் தனிமத்திற்கும் அக்கோடு ஒத்துப் போகவில்லை என்பதால் அவ்வரி புதிய ஒரு தனிமத்தாலோ மூலக்கூறாலோ ஏற்பட்டிருக்க வேண்டும் என்று தீர்மானித்தார். அப்போது இங்கிலாந்து நாட்டிலிருந்து வெளி வந்த இயற்கை என்ற அறிவியல் இதழின் ஆசிரியரான லாக்கியர் என்பாரும் பிராங் லாண்டு என்பாரும், இதற்கு ஈலியம் எனப் பெயரிட்டனர்.[3] கிரேக்க மொழியில், எலியோசு என்பது சூரியனைக் குறிக்கும் கடவுளாகும்.[4][5][6] ஏறக்குறைய 27 ஆண்டுகளுக்குப் பிறகு 1895 ல் இசுகாட்லாந்தின் வில்லியம் இராம்சே (William Ramsay) என்பார், தோரியம், யுரேனியத்தின் ஒரு சில கனிமங்கள் மந்த வளிமங்களை வெளியிடுவதாகக் கண்டறிந்தார். கதிரியக்கத் தனிமங்கள் உமிழ்ந்த மந்த வளிமங்களை நிறமாலைக்கு உட்படுத்த அது ஈலியம் என்று உறுதி செய்தார். அதன் நிறமாலை பியரி இழோன்சன் இனமறிந்த நிறமாலையின் வரிகளோடு ஒத்துப் போயிற்று. பூமியில் ஈலியம் தனிமத்தை முதன் முதலாக உறுதியுடன் அறிவித்ததால், அதை கண்டுபிடித்த பெருமை இராம்சேக்குக் கிடைத்தது.[2][3][7][8][9][10][11][12] 1907 ல் இரதர்போர்டு கதிரியக்கக் கதிர்களைப் பற்றி ஆராய்ந்து அயனியாக்கப்பட்ட ஈலியமும், ஆல்பாக் கதிரும் ஒன்றே என்று நிறுவினார். உண்மையில் ஈலியம் அணுக்கரு என்பதை முதலில் அறியாததால் இதற்கு ஆல்பாத் துகள் எனப் பெயரிட்டார். இயற்கை எரி வளிமத்தில் மீதேன் முக்கியமாக இருந்தாலும் அதில் 0.3% ஈலியமாகும். பகுதி காய்ச்சி வடித்தல் மூலம் ஈலியத்தை மீத்தேனிலிருந்து பிரித்தெடுக்கின்றார்கள். பகுதி காய்ச்சி வடித்தலின் நுட்பம், கொதி நிலையில் உள்ள வேறுபாட்டைப் பயன்படுத்தி நீர்மக் கலவையிலிருந்து நீர்மங்களைப் பிரிப்பதாகும் ஈலிய வளிமத்தை எளிதில் குளிர்வூட்டி நீர்மமாக்க முடிவதில்லை. அதன் கொதி நிலை மிகவும் தாழ்ந்த -268.9 பாகை செல்சியசு ஆகும். இது பிற வளிமங்களைக் காட்டிலும் குறைவானது. காற்றைக் குளிர்வூட்டி நீர்மமாக்கும்போது அதிலுள்ள எல்லா வளிமங்களும் நீர்மமாக்கப் பட்டாலும், ஈலியம் மட்டும் நீர்மமாக நிலை மாறாமல் வளிமமாகவே எஞ்சி நிற்கும் ஈலியத்தை இப்படியும் மீட்டுப் பெறமுடியும். 1908 ஆம் ஆண்டில், ஈலியம் முதல் இடச்சு இயற்பியலாளர் எய்க்கு காமர்லிங் ஆன்சு என்பவர் முதன் முதலில் ஒரு கெல்வினுக்கும் குறைவான வெப்பநிலையில் ஈலியத்தைக் குளிர்வித்து நீர்ம ஈலியத்தைப் பெற்றார்.[13] நிறமாலை மூலம் இன்றைக்கு விண்மீன்களில், குறிப்பாக வெப்ப நிலை மிக்க விண்மீன்களில், ஈலியம் அதிகமுள்ளதாகக் கண்டு பிடித்துள்ளனர். உண்மையில் அங்கு ஈலியம் ஐதரசனை மூலப்பொருளாகக் கொண்டு தொகுப்பாக்கம் (Synthesis) மூலம் உண்டாக்கப்படுகிறது. இது அவற்றின் ஆற்றல் மூலமாக விளங்குகின்றது. உயர் வெப்ப நிலையில் ஏற்படும் இரு விதமான வெப்ப அணுக்கரு வினைகளை "நேர்மின்னி-நேர்மின்னித் தொடர்" (புரோட்டான்-புரோட்டான் தொடர்), என்றும், கார்பன்-நைதரசன் சுற்று என்றும் குறிப்பிடுவர். இதில் நான்கு நேர்மின்னிகள் இணைந்து ஒரு ஈலியம் அணுக்கருவாக மாறுகின்றது. ஐதரசன் குண்டிலும் இவ்வினையே தூண்டப்பட்டு ஆற்றல் வெளிப்படுகின்றது. பண்புகள் He என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய ஈலியம் இயல்பான சூழலில் வளிமமாக இருக்கின்றது. இதன் அணு வெண் 2, அணு நிறை 4 .003, அடர்த்தி 0.166 கிகி /க மீ .இதன் உறை நிலையும், கொதி நிலையும் முறையே 1.72 K, 4.22 K ஆகும். நீர்ம ஈலியம் தாழ்ந்த வெப்ப நிலையில் மற்றொரு நிலை மாற்றம் பெறுகிறது. இதன் லாம்டா நிலை மாற்றம் என்பர். சாதாரண நீர்ம ஈலியத்தை நீர்ம ஈலியம் – I என்றும்,[3] லாம்டா நிலை மாற்றம் பெற்ற நீர்ம ஈலியத்தை நீர்ம ஈலியம் –II என்றும் கூறுவர். 2.174 டிகிரி K வெப்ப நிலையில் நிகழும் இந்த லாம்டா நிலை மாற்றத்தினால் நீர்ம ஈலியத்தின் சுய வெப்பம், பாய் திறன் வெப்பங் கடத்தும் திறன் போன்றவற்றில் முரண்பாடான மாற்றங்கள் ஏற்படுகின்றன நீர்ம ஈலியம் -II, நீரூற்று விளைவு[14], உயரளவு பாகு நிலைத் தன்மை, கூடுதலான வெப்பங் கடத்தும் திறன் போன்ற வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ளது.&lt;/ref&gt;[15] தோற்றமும் உற்பத்தியும் இயற்கைத்தோற்றம் பூமியில் அரிதானது என்றாலும் புவியில் அறியப்பட்ட வாயுக்களில் இரண்டாவதாக மிக அதிகமான அளவில் (பேரியான் நிறை அளவில் 23% அளவு) காணப்படுவது ஈலியம் ஆகும் [2]. ஐதரன் வாயு முதல் இடத்தைப் பிடிக்கிறது. பெரு வெடிப்புக்குப் பின்னர் ஒன்று முதல் மூன்று நிமிடங்கள் வரை பெருவெடிப்பு உட்கரு தொகுப்பு மூலம் பெரும்பாலான ஈலியம் உருவானது. அதனுடைய அளவின் அளவுகள் அண்டவியல் மாதிரிகளின் அளவிடலில் இது பங்களிக்கிறது. விண்மீன்களில், புரோட்டான்-புரோட்டான் சங்கிலி வினைகளைக் கொண்ட ஐதரசன் அணுக்கரு இணைவு மற்றும் கார்பன் நைட்ரசன் ஆக்சிசன் சுழற்சி மூலம் ஈலியம் உருவாகிறது [16]. புவியின் வளிமண்டலத்தில் ஈலியம் வாயுவின் அடர்த்தி ஒரு மில்லியனுக்கு 5.2 பாகங்களை மட்டுமே கொண்டது ஆகும்[17][18]. பூமியின் வளிமண்டலத்தில் பெரும்பாலான ஈலியம் பல செயல்முறைகள் வழியாக விண்வெளிக்கு சென்று விட்டாலும் கூட புதிய ஈலியம் வாயு தொடர்ச்சியாக உற்பத்தியாவதால் குறைவான இந்த அடர்த்தியானது மாறாமல் நிலையாக உள்ளது[19][20]. வளிமண்டலத்தின் ஒரு பகுதியான பூமியின் வெப்ப மண்டலத்தில் ஈலியம் மற்றும் மற்ற இலேசான வாயுக்கள் மிக அதிகமான அளவில் உள்ளன. கதிரியக்கச் சிதைவு மூலமும் ஈலியம் உற்பத்தியாகிறது. கிளிவெய்ட்டு, பிட்சுபிளண்டு, கார்னோடைட்டு மற்றும் மோனசைட்டு உள்ளிட்ட யுரேனியம், தோரியத்தின் கனிமங்களில் ஈலியம் கலந்து காணப்படுகிறது. ஏனெனில் இவை ஆல்பா கதிர்களை உமிழ்கின்றன. இவ்வழிமுறையில் இக்கற்கோளத்தில் ஆண்டுக்கு 3000 மெட்ரிக் டன் ஈலியம் உற்பத்தியாகிறது [21][22][23]. புவி மேலோட்டில் ஈலியத்தின் அடர்த்தி பில்லியனுக்கு 8 பகுதிகள் ஆகும். கடல் நீரில் ஈலியத்தின் அடர்த்தி பில்லியனுக்கு 4 பகுதிகள் ஆகும். கனிம நீரூற்றுகள், எரிமலை வாயு மற்றும் விண்கல் இரும்பு போன்ற பகுதிகளிலும் ஈலியம் சிறிய அளவில் காணப்படுகிறது. நிலத்தடியில் இயற்கை வாயு சிக்கியிருப்பது போல ஈலியமும் சிக்குகிறது. இதனால் இயற்கை வாயுவில் ஈலியத்தின் அடர்த்தி அதிகமாகும். வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்குரிய ஈலியம் இயற்கை வாயுவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. நியூ மெக்சிகோ போன்ற இடங்களில் ஈலியம் வாயுவின் அடர்த்தி மில்லியனுக்கு 5 முதல் 7 பகுதிகள் வரை மாறுபடுகிறது [24][25]. 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி உலக ஈலியம் இருப்பு 40 பில்லியன் கனமீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் கால் பாகம் கத்தார் மற்றும் ஈரான் நாடுகளில் காணப்படுவதாகவும் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன [26]. வட அமெரிக்கா [27] மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா [28] போன்ற நாடுகளில் ஈலியம் மேலும் இருப்பு இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவீன தயாரிப்பு முறைகள் இயற்கை வாயுவிலிருந்து பின்னக் காய்ச்சி வடித்தல் மூலம் ஈலியம் பேரளவில் தயாரிக்கப்படுகிறது. இயற்கை எரிவாயுவில் ஈலியம் 7% காணப்படுகிறது[29]. ஈலியம் வேறு எந்த தனிமத்தையும் விட குறைவான கொதிநிலையைக் கொண்டிருப்பதால், குறைந்த வெப்பநிலை மற்றும் உயர் அழுத்தத்தில் கிட்டத்தட்ட மற்ற அனைத்து வாயுக்களையும் விட இதை திரவமாக்கலாம். இதன் விளைவாகத் தோன்றும் கச்சா எண்ணெய் படிப்படியாக வெப்பநிலைகள் குறைக்கப்பட்டு ஈலியம் தூய்மையாக்கப்படுகிறது. மீதமுள்ள நைட்ரசன் மற்றும் பிற வாயுக்கள் வாயு கலவையிலிருந்து வீழ்படிவாக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றன. கிளர்வூட்டப்பட்ட கரியானது இறுதி சுத்திகரிப்பு படிநிலையாகப் பயன்படுத்தப்படுகிறது, இதன் மூலம் பொதுவாக 99.995% தூய தரம் மிக்க ஈலியம் உருவாகிறது[3]. நியான் ஈலியத்தின் முதன்மையான மாசாக கலந்திருக்கிறது. குளிரூட்டும் முறையில் திரவமாக்கி ஈலியம் இறுதிபடிநிலையில் தயரிக்கப்படுகிறது. சில பயன்பாடுகளுக்கு நீர்ம ஈலியம் அவசியமாகிறது. பயன்கள் ஈலியம் எல்லாத் தனிமங்களைக் காட்டிலும் மிகத்தாழ்ந்த உறைநிலையைத் தனிச் சுழி வெப்பநிலைக்கு மிக அருகாமையில் கொண்டுள்ளது. அதனால் இது தாழ்ந்த வெப்பநிலை ஏற்படுத்தும் தொழில்நுட்பத்துக்குப் பெரிதும் உதவியாய் இருக்கின்றது.[30] மீக்கடத்தும் காந்தங்கள் பற்றிய ஆய்வுகளுக்கும்,விண்வெளியில் அணுக் கதிர் ஆய் கருவிகளை குளிர் வூட்டுவதற்கும், தாழ்ந்த வெப்ப நிலை ஆய்வுகளுக்கும், நீர்ம ஈலியம் பயன் தருகிறது.[31] வெப்பஞ் சார்ந்த அதிர்வுகளால் உண்டாகும் தாறுமாறான மின் சமிக்கைகள் (செய்தி தராத வெறும்) இரைச்சலாகக் கருதப்படும். அவற்றை நீர்ம ஈலியம் மூலம் குறைப்பதால் புள்ளி விவரங்களைத் துல்லியமாகப் பெறமுடிகிறது. வெப்பநிலையைத் தனிச் சுழி வெப்பநிலை வரை குறைத்தாலும் வளி மண்டல அழுத்தத்தில் ஈலியம் நீர்மமாக மட்டுமே மாறும், திண்மமாக உறைவதில்லை. செயல்படும் சூழ் அழுத்தத்தை அதிகரித்து இதைச் செய்யமுடியும். இவ் அழுத்தத்தைச் செயல்படுத்தி அதன் பருமன் 30 %. அளவு மாறுபடுமாறு செய்ய முடிகிறது.[32][33] ஈலியம் இலேசான வளிமமாக இருப்பதாலும், காற்றை விட அடர்த்தி குறைவாக இருப்பதாலும், மந்த வளிமமாக இருப்பதாலும், பலூன்களில் இட்டு நிரப்பி வானவெளியில் பறந்து அதிக உயரங்களில் இருந்து கொண்டு வளி மண்டல ஆய்வுகளை மேற்கொள்ள முடிகிறது. எனினும் ஐதரசனை விட அடர்த்தி மிக்கதாய் இருப்பதால் 98 % மிதவைத் திறனையே ஈலியம் பெற்றுள்ளது.[34] நீர் நிலைகளில் அதிக ஆழங்களில் உள்ள அதிகமான புற அழுத்தத்தில் செயல்படும் முத்துக்குளிப்பவர்கள் உள்ளிழுக்கும் மூச்சுக் காற்றில் ஆக்சிசன் 20 % உம், ஈலியம் 80 % உம் கலந்திருக்கும். இதில் நைதரசனை நீக்கி விட்டு அதற்குப் பதிலாக ஈலியத்தைச் சேர்த்திருப்பார்கள். ஈலியம், நைதரசனை விடக் குறைவாக நீரில் கரைகிறது.[35][36] அதனால் இரத்தத்திலும் குறைவாகக் கரைந்து உறைகிறது. இது காற்றழுத்த நோயிலிருந்து பாதுகாப்பளிக்கிறது. நீரில் மூழ்கியவர் நீரின் மேற்பரப்பிற்கு வந்தவுடன், தாழ்ந்த அழுத்தத்தினால் இரத்தத்தில் கரைந்த வளிமம் குமிழ்களாக வெளியேறும் (சோடா பாட்டிலின் மூடியைத் திறந்தவுடன் அதில் கரைந்துள்ள காற்று குமிழ்களாக வெளியேறுவதைப் போல) இப்படி உடலுக்குள் வெளியேறும் வளிமம் மூட்டுகளில் உறையும் வாய்ப்பைப் பெறும்.[37][38] இது மூட்டுவலியைத் தரும். இதனால் நீரில் மூழ்கி வேலை செய்வவர்கள் விரைவில் சோர்ந்து விடுவர்.[39] காற்றை விட அடர்த்தி குறைவான ஈலியத்தை மூச்சிழுப்பதால், குரலின் சுரமும், தரமும் குறிப்பிடும் படியாக மாறிப்போகின்றன. இதனால் திடீரென்று ஒருவர் உரத்த குரலில் பேசுவது போலத் தோன்றும்.[2][40] ஈலியத்தில் ஒலியின் வேகம் காற்றில் இருப்பதை விட 3 மடங்கு அதிகம். அடைக்கப்பட்ட ஒரு வளிமத்தில் அடிப்படை அதிர்வெண் அந்த வளிமத்தில் ஒலியின் வேகத்தைப் பொருத்தது. அதனால் ஈலியத்தை மூச்சிழுக்க குரலின் சுரம் மாறிப் போகிறது.[41][42] ஈலியத்தின் இணைதிறன் சுழி என்றாலும், இயல்பான சூழலில் அது எவ்விதமான வேதிச் சேர்மத்தையும் தோற்றுவிப்பதில்லை. ஈலியம்-டை-புளூரைடு தோற்றுவிப்பதற்கான ஆய்வுகள் தொடருகின்றன. ஈலியம்-நியான், ஈலிய அயனி மூலக் கூறுகள், He 2 +, மற்றும் He2 ++ போன்றவைகள் கண்டறியப் பட்டுள்ளன. பற்றவைப்பு முறையில், மந்த வெளிச் சூழலை நிறுவ ஈலியம் பயன்படுத்தப்படுகிறது.[30] இதே காரணத்திற்காக தைட்டானியம் சிர்க்கோனியம் உற்பத்தி முறையிலும், சிலிக்கான், செருமானியம் படிகங்களை வளர்க்கும் வழி முறையிலும் அணு உலைகளில் குளிர்வூட்டியாகவும் ஒலியை விஞ்சும் வேகத்தில் இயங்கும் வானவூர்திகளில் உந்திச் செல்ல பின்னால் எக்கித் தள்ளப்படும் வளிமமாகவும், ஈலியம் பயன்படுகிறது.[43][44] ஈலியத்தின் மற்றொரு முக்கியமான பயன்பாடு ஈலியம்-நியான் வளிம சீரொளியாகும் (இலேசராகும்).[2] இது அலி சாவன் என்ற அமெரிக்க அறிவியலாளரால் கண்டு பிடிக்கப்பட்டது. ஏறக்குறைய ஒன்றுக்கொன்று நெருக்கமான உயர் ஆற்றல் நிலைகளைக் கொண்ட இரு வளிமங்களுக்கிடையே இடையீட்டுச்செயல் (interaction) காரணமாக கிளர்வூட்டப்பட்ட ஈலியத்தின் செழுமையை அதிகரித்து வளிம ஊடகத்தில் தூண்டல் உமிழ்வை (stimulated emission) ஏற்படுத்த முடிகிறது. இதன் ஒளி, ஓரலைநீளத் தன்மை (Monochromatic) சிதறாமல் நெடுந்தொலைவு கடந்து செல்லுமாறு ஒருதிசை போக்குத்தன்மை (directonality), ஒத்த அலைமுகம் (coherence) இவற்றைப் பெற்றிருந்தாலும் திறன் வெளிப்பாடு மில்லி வாட் நெடுக்கையில் இருக்கின்றது. ஈலியம்-நியான் சீரொளி கீற்றணி போல பல வரிக்கோடுகளால் சுட்டுக் குறியிடப்பட்ட பொருட்கள், புத்தகங்கள், மாணவர்கள் எழுதும் விடைத் தாள்கள், பல் பொருள் அங்காடியில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் போன்றவற்றை இனமறியப்பயன்படுகிறது. விளம்பரத் தட்டிகளில் நியான் விளக்குகள் பயன்படுகின்றன, இது விளம்பரத்தை நெடுந்தொலைவு தெரியுமாறு செய்ய உதவுகிறது. ஈலியம் ஆக்சிசனை இடப்பெயர்வால் நீக்கம் செய்கிறது, அதனால் நச்சுத் தன்மையற்ற ஈலியத்தை தொடர்ந்து சுவாசித்தால், ஆக்சிசன் போதாமையால், உடல் நலம் பாதிக்கப்படவும் மரணமும் நிகழ வாய்ப்புள்ளது.[2][41][45][46] புறச் சூழல்களாலும் வில்லைகளில் ஏற்படும் வெப்பநிலை மாற்றங்களாலும் ஒளியியல் கருவிகளில் விளையும் பிறழ்ச்சியை ஈலியத்தினால் குறைக்க முடிகிறது.[3] இதற்குக் காரணம் ஈலியம் குறைந்த ஒளிவிலகல் எண்ணைப் பெற்றுள்ளது. இது விண்வெளி ஆய்வுகளுக்காக எடுத்துச் செல்லப்படும் தொலை நோக்கிகளில் பயன்படுத்தப் படுகிறது.[47] வெற்றிடத்துடன் கூடிய தொலை நோக்கிகள் அதிக எடையுள்ளவை என்பதால் அவற்றை விண்வெளிக்கு எடுத்துச் செல்வது உதவியாக இராது.[48] மீக்கடத்தும் காந்தங்களைக் குளிர்விக்க நீர்ம ஈலியம் பயன்தருகிறது. மீக்கடத்தும் காந்தங்கள் இன்றைக்கு காந்த ஒத்ததிர்வுப் பட (MRI) வரிக் கண்ணோட்டக்கருவிகள்[49] அதி வேக ஒற்றைத் தண்டவாள இரயில் வண்டிகள் , நுண் அளவில் சுருக்கப் பட்ட, மின் காந்தங்களால் செயல்படும் சாதனங்களில் பயன்படுகின்றன.[50], ஏவூர்திகளில் எரிபொருளாகப் பயன்படும் ஐதரசன் மற்றும் ஆக்சிசனை குளிர்வித்து நீர்ம நிலையில் வைத்துக் கொள்ள ஈலியம் பயன் படுகிறது. யுரேனியமும் தோரியமும் கொண்ட பழம் பாறைப் படிவுகளின் வயதை ஈலியத்த்தால் அளக்க முடிகிறது.[2][3] மேற்கோள் துணை நூல்கள் CS1 maint: discouraged parameter (link) CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) Explicit use of et al. in: |author= (help) வெளியிணைப்புகள் General With some history of helium. beginning 1996: Aga website (MP3) from the Royal Society of Chemistry's Chemistry World: More detail at the Helsinki University of Technology; includes pressure-temperature phase diagrams for helium-3 and helium-4 – includes a summary of some low temperature techniques Miscellaneous with audio samples that demonstrate the unchanged voice pitch Helium shortage பகுப்பு:தனிமங்கள் பகுப்பு:மந்த வளிமங்கள் பகுப்பு:திண்மப்பொருள் இயற்பியல்
ஹீலியத்தின் அணு எண் என்ன?
அணு எண் 2
312
tamil
5414397bd
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். இதில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கு பெறுகின்றனர். உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படும் ஒலிம்பிக்கில் 200 நாடுகளுக்கு மேல் கலந்து கொள்கின்றன.[1] பண்டைய கிரீஸ் நாட்டில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் இருந்து வந்தது. பின்னர், பியர் ஃபிரெடி, குபர்த்தென் பிரபு என்ற பிரான்ஸ் நாட்டு பிரபுவால் (nobleman) 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் மீண்டும் வந்தது. இவர் 1894 ஆம் ஆண்டு அனைத்துலக ஒலிம்பிக் குழுவை உருவாக்கினார். இதன் அமைப்பும், அதிகாரமும் ஒலிம்பிக் பட்டயத்தினால் வரையறுக்கப்படுகின்றன. அனைத்துலக ஒலிம்பிக் குழுவே ஒலிம்பிக் இயக்கத்தை நிர்வகித்து வருகிறது. உலகப் போர் நடைபெற்ற ஆண்டுகள் தவிர்த்து, 1896 முதல், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்று வருகின்றன. ஆதி கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கி.மு.776 இல் கிரேக்க நாட்டிலுள்ள ஒலிம்பியாவில் தொடங்கி கி.பி.393 வரை நடைபெற்றன. கிரேக்க கவிஞர் பானாஜியோடிஸ் ஸௌட்ஸாஸ் கி.பி.1833இல் எழுதிய "இறந்தவர்களின் உரையாடல்" என்னும் கவிதை இப்போட்டிகளை மீண்டும் தொடங்கும் ஆர்வத்தை உருவாக்கியது. 20 ஆம் 21 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட ஒலிம்பிக் இயக்கத்தின் வளர்ச்சி ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், ஊனமுற்றோருக்கான மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள், பதின்ம வயதினருக்கான இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் என்பன தொடங்கப்பட்டமை இம் மாற்றங்களுட் சில. பனிக்கால விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பொருட்டு 1924 முதல் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. தொடக்கத்தில் கோடை கால மற்றும் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஒரே ஆண்டில் நடத்தப்பட்டு வந்தன. 1994 முதல் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. பொருளாதாரம், அரசியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சிகளுக்கு ஏற்ப ஒலிம்பிக் குழுவும் பல்வேறு மாற்றங்களைச் செய்யவேண்டியிருந்தது. இது, தொழில்முறை சாராத போட்டியாளர்கள் பங்குபெறும் போட்டியாக இருக்கவேண்டும் என்றே இவ்வியக்கத்தை உருவாக்கிய கூபேர்ட்டின் எண்ணியிருந்தார். ஆனாலும், ஒலிம்பிக் குழு இந்த விதியை மாற்றித் தொழில்முறை விளையாட்டு வீரர்களையும் போட்டிகளில் பங்குபற்ற அனுமதித்தது. மக்கள் ஊடகங்களின் முக்கியத்துவம் வளர்ந்து வந்தபோது, நிறுவன விளம்பர ஆதரவு முறை உருவாகி இப்போட்டிகள் வணிகமயமாக்கப்பட்டன. 1916, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் உலகப் போரினால் நடைபெறவில்லை. பனிப்போர்க் காலத்தில் பல நாடுகள் இப்போட்டியைப் புறக்கணித்ததனால், 1980, 1984 ஆண்டுகளில் இடம்பெற்ற போட்டிகள் மட்டுப்படுத்தப்பட்ட பங்கேற்புடனேயே நடைபெற்றன. ஒலிம்பிக் இயக்கம் அனைத்துலக விளையாட்டுகள் கூட்டமைப்பு, தேசிய ஒலிம்பிக் குழுக்கள், ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளுக்குமான ஏற்பட்டுக் குழுக்கள் என்பவற்றை உள்ளடக்குகிறது. முடிவுகளை எடுக்கும் அமைப்பு என்ற அளவில், அனைத்துலக ஒலிம்பிக் குழு எந்த நகரில் போட்டிகளை நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கின்றது. இவ்வாறு தெரிவு செய்யப்படும் நகரம், ஒலிம்பிக் பட்டயத்துக்கு ஏற்றவகையில், போட்டிகளை ஒழுங்கு செய்வதற்கும், நிதி வழங்குவதற்குமான பொறுப்பை ஏற்கவேண்டும். போட்டிகளில் இடம்பெறும் விளையாட்டுக்களை உள்ளடக்கிய நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கும் பொறுப்பும் அனைத்துலக ஒலிம்பிக் குழுவிடமே உள்ளது. ஒலிம்பிக் கொடி, தீப்பந்தம் போன்ற சின்னங்களும், தொடக்கவிழா, நிறைவுவிழா போன்ற நிகழ்வுகளும் ஒலிம்பிக் போட்டிகளின் பகுதிகளாக உள்ளன. கோடைகால ஒலிம்பிக்கிலும், குளிர்கால ஒலிம்பிக்கிலும் 33 வெவ்வேறு விளையாட்டுக்கள் தொடர்பில் இடம்பெறும் ஏறத்தாழ 400 போட்டிகளில் 13,000க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறும் வீரர்களுக்கு முறையே தங்கப் பதக்கம், வெள்ளிப் பதக்கம், வெண்கலப் பதக்கம் ஆகிய பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. ஏறத்தாழ உலகில் உள்ள எல்லா நாடுகளுமே பங்கேற்கும் அளவுக்கு ஒலிம்பிக் போட்டி வளர்ச்சி அடைந்துள்ளது. இத்தகைய வளர்ச்சி, புறக்கணிப்புகள், போதை மருந்துப் பயன்பாடு, கையூட்டு, பயங்கரவாதச் செயல்கள் போன்றவை தொடர்பான பல சவால்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் போட்டிகளும், அது தொடர்பான ஊடக விளம்பரமும் பல விளையாட்டு வீரர்கள் தேசிய அளவிலும் சில சமயங்களில் பன்னாட்டு அளவிலும் கூடப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. அத்துடன் போட்டிகளை நடத்தும் நகரமும், நாடும் தம்மை உலகுக்கு வெளிப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பையும் ஒலிம்பிக் ஏற்படுத்துகிறது. பண்டைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பண்டைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கிரீசு நாட்டின் ஒலிம்பியாவில் இருந்த சேயுசு கோவிலடியில் சமயமும், விளையாட்டும் சார்ந்த விழாவாக இடம்பெற்றது. இது அக்காலக் கிரீசில் இருந்த நகர அரசுகள், இராச்சியங்கள் என்பவற்றைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு இடையேயான போட்டியாகும். பெரும்பாலும் தடகள விளையாட்டுக்களே இடம்பெற்றாலும், மற்போர், குதிரைப் பந்தயம், தேர்ப் பந்தயம் போன்ற சண்டை சார்ந்த போட்டிகளும் நடைபெற்றன. இவ்விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் காலங்களில் நகர அரசுகளுக்கு இடையேயான பிணக்குகள் அனைத்தும் போட்டிகள் முடியும்வரை ஒத்திவைக்கப்பட்டதாகப் பலரும் எழுதி உள்ளனர். இது ஒலிம்பிக் அமைதி அல்லது ஒலிம்பிக் போர் நிறுத்தம் என அறியப்பட்டது. ஆனால் இது தற்காலத்தில் எழுந்த ஒரு உண்மையல்லாத கருத்து. கிரேக்கர்கள் என்றுமே தமக்கு இடையேயான போர்களை ஒத்திவத்தது இல்லை. ஒலிம்பிக்கின் தோற்றம் பற்றிச் சரியாகத் தெரியாவிட்டாலும், அது குறித்துப் பல கதைகள் உள்ளன. சேயுசுக் கடவுளின் மகனான ஏராக்கிள்சு தனது தந்தையைக் கௌரவிப்பதற்காக ஒலிம்பிக் விளையாட்டு அரங்கைக் கட்டினானாம். இது முடிவடைந்ததும், ஒரு நேர்கோட்டில் இருநூறு அடிகள் நடந்து அத் தூரத்தை ஒரு இசுட்டேடியன் என அறிவித்தான். இது பின்னர் தூரத்தின் அளவாகக் கொள்ளப்பட்டது. கிமு 776 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் விளையாட்டுகள் தோன்றியதாகப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அக்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஓட்டப் போட்டிகளுடன், பாய்தல் போட்டிகள், வட்டம் எறிதல், ஈட்டி எறிதல், மற்போர், குதிரை ஓட்டம் போன்ற போட்டிகளும் இடம் பெற்றன.[2][3] மரபுக் கதைகளின்படி எலிசு என்னும் நகரைச் சேர்ந்த கொரோயெபசு என்னும் பெயர் கொண்ட சமையற்காரன் ஒருவனே முதல் வெற்றியாளன் ஆவான்.[4] அக்கால ஒலிம்பிக்சு அடிப்படையில் சமய முக்கியத்துவம் கொண்டது. இதில், விளையாட்டு நிகழ்வுகளுடன் சேயுசுக் கடவுளையும், தேவ வீரனும், தொன்மங்களில் ஒலிம்பியாவின் அரசனாகக் குறிப்பிடப்படுபவனும் ஆகிய பெலோப்சுவையும் கௌரவிக்கும் முகமாகச் சடங்கு சார்ந்த வேள்விகளும் இடம்பெற்றன. விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்கள் குறித்துக் கவிதைகள் இயற்றப்பட்டதுடன், சிலைகளையும் அமைத்து அவர்களைப் பெருமைப்படுத்தினர்.[5] ஒலிம்பிக் விளையாட்டு கிமு ஆறாம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் அதன் உச்சநிலையில் இருந்தது. உரோமரின் பலம் அதிகரித்துக் கிரேக்க நாட்டில் அவர்களின் செல்வாக்கு வலுப் பெற்றபோது ஒலிம்பிக்கின் முக்கியத்துவமும் படிப்படியாகக் குறையத் தொடங்கிற்று. இவ்விளையாட்டுக்கள் எப்போது நிறுத்தப்பட்டன என்பது குறித்து அறிஞரிடையே ஒத்த கருத்து இல்லாவிட்டாலும், முதலாம் தியடோசியசு எல்லாச் சிலை வணக்கச் சமயங்களையும், அவை தொடர்பான சடங்குகளையும் தடை செய்த ஆண்டான கிபி 393ல் நிறுத்தப்பட்டது என்பதே பெரும்பான்மைக் கருத்தாகும். அவனது வாரிசான இரண்டாம் தியடோசியசு, எல்லாக் கிரேக்கக் கோயில்களையும் இடிக்கக் கட்டளையிட்டான். ஒலிம்பிக்சு நடந்த இடங்கள் வருடம் இடம் ஆண்டு இடம்1896 ஏதென்ஸ், கிரேக்கம்1900பாரிஸ், பிரான்சு1904செயிண்ட் லூயிஸ், ஐக்கிய அமெரிக்கா1908இலண்டன், இங்கிலாந்து1912ஸ்டாக்ஹோம், சுவீடன்1920ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்1924பாரிஸ், பிரான்சு1928ஆம்ஸ்டர்டாம், ஹாலந்து1932லாஸ் ஏஞ்சலீஸ், ஐக்கிய அமெரிக்கா1936பெர்லின், ஜெர்மனி1948லண்டன், இங்கிலாந்து1952ஹெல்சின்கி, பின்லாந்து1956மெல்போர்ன், ஆஸ்திரேலியா1960ரோம், இத்தாலி1964டோக்கியோ, ஜப்பான்1968மெக்ஸிகோ சிட்டி, மெக்சிக்கோ1972ம்யூனிச், ஜெர்மனி1976மாண்ட்ரீல், கனடா1980மாஸ்கோ, சோவியத் ஒன்றியம்1984லாஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா1988சியோல், தென் கொரியா1992பார்சிலோனா, எசுப்பானியா1996அட்லாண்டா, ஐக்கிய அமெரிக்கா 2000சிட்னி, ஆஸ்திரேலியா2004ஏதென்ஸ், கிரேக்கம்2008பெய்ஜிங், மக்கள் சீனக் குடியரசு2012இலண்டன், ஐக்கிய இராச்சியம்2016ரியோ டி ஜனேரோ, பிரேசில் உலகப் போர் சமயங்களில் மட்டும் (1916, 1940 &amp; 1944) ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை. இன்றைய ஒலிம்பிக்ஸ் 1896ல் ஏதென்ஸ் நகரில் தான் துவங்கியது. அடுத்த கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் 2016ம் ஆண்டில் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜனேரோ நகரில் நடக்கவுள்ளது. 2020ம் ஆண்டில் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடக்கவுள்ளது. பனி ஒலிம்பிக்ஸ் நடந்த இடங்கள் வருடம் இடம் ஆண்டு இடம்1924 சாமொனிக்ஸ், பிரான்ஸ்1928செயிண்ட் மோரிட்ஜ், ஸ்விட்சர்லாந்து1932ப்ளாசிட் ஏரி, ஐக்கிய அமெரிக்கா 1936கார்மிஷ்ச், ஜெர்மனி1948செயிண்ட் மோரிட்ஜ், ஸ்விட்சர்லாந்து1952ஆஸ்லோ, நார்வே1956கார்டினா, இத்தாலி1960ஸ்குவாவ் வேலி, ஐக்கிய அமெரிக்கா1964இன்ஸ்ப்ரக், ஆஸ்திரியா1968க்ரெநோபில், பிரான்ஸ்1972சாப்போரோ, ஜப்பான்1976இன்ஸ்ப்ரக், ஆஸ்திரியா1980ப்ளாசிட் ஏரி, ஐக்கிய அமெரிக்கா USA 1984சாராஜெவோ, யுகோஸ்லாவியா1988கால்கேரி, கனடா1992ஆல்பர்ட்வில்லே, பிரான்ஸ்1994லில்லேஹாம்மர், நார்வே1998நாகானோ, ஜப்பான்2002சால்ட் லேக் சிட்டி, ஐக்கிய அமெரிக்கா2006தோரீனோ, இத்தாலி2010வான்கூவர், கனடா2014சோச்சி, இருசியா உலகப் போர் சமயங்களில் மட்டும் (1940 &amp; 1944) பனி ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை. 1992 வரை பனி ஒலிம்பிக்சும் கோடைக்கால ஒலிம்பிக்சும் ஒரே ஆண்டிலேயே நடைபெற்று வந்தது. இதை மாற்ற வேண்டி 1994ல் மீண்டும் ஒரு பனி ஒலிம்பிக்சை நடத்தினார்கள். அதன்படி தற்பொழுது கோடைக்கால ஒலிம்பிக்சு நடந்து 2 ஆண்டுகள் கழித்து பனி ஒலிம்பிக்சு நடக்கும். அடுத்த பனி ஒலிம்பிக்சு, 2014ல் இருசியாவின் சோச்சி நகரில் நடக்க இருக்கிறது. குறிப்புகள் வெளி இணைப்புகள் - - பகுப்பு:ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
முதல் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டி யாரால் தொடக்கி வைக்கப்பட்டது?
பிரான்ஸ்
503
tamil
38b1f92d6
மின்காந்தம் என்பது மின்னோட்டம் பாய்வதன் மூலம் காந்தப் புலத்தை உருவாக்கும் காந்தம் ஆகும். இங்கு மின்னோட்டம் நிறுத்தப்படும்போது காந்தப்புலம் மறைந்துவிடும். மோட்டர்கள், மின்பிறப்பாக்கிகள், அஞ்சல் சுற்றுக்கள், ஒலிபெருக்கிகள், வன்வட்டுக்கள், காந்தப் பரிவுப் படிமவாக்கல் இயந்திரங்கள், அறிவியல் கருவிகள், காந்தவியல் பிரித்தெடுப்பு சாதனங்கள் போன்ற மின் சாதனங்களில் மின்காந்தங்கள் ஒரு துணை அங்கமாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கைத்தொழிற்துறையில் அதிக அடை கொண்ட இரும்புப் பாளங்களைத் தூக்கும் பணியில் பயன்படுத்தப்படுகிறது. கம்பியொன்றில் பாயும் மின்னோட்டமானது அக்கம்பியைச் சுற்றி காந்தப்புலமொன்றை உருவாக்குகிறது. காந்தப்புலத்தை ஒருமுகப்படுத்துவதற்காக மின்காந்தமொன்றில், கம்பியானது முறுக்குகள் மிகவும் அருகருகே இருக்கும் வகையில் ஒரு சுருளாகச் சுற்றப்பட்டிருக்கும். அப்போது கம்பியின் ஒவ்வொரு முறுக்கினாலும் உண்டாக்கப்படும் காந்தப்புலமானது சுருளின் மையத்தினூடாகச் சென்று ஒரு உறுதியான காந்தப்புலத்தைத் தோற்றுவிக்கிறது. குழாய் வடிவிலான கம்பிச்சுருள் வரிச்சுருள் எனப்படும். சுருளின் உள்ளே மெல்லிரும்பு போன்ற அயக்காந்தப் பொருளை வைப்பதன் மூலம் வலிமையான காந்தப்புலத்தை உருவாக்க முடியும். அயக்காந்தப் பொருளின் காந்த ஊடுபுகவிடுதிறன் உயர்வு என்பதால் சாதாரணச் சுருள் உருவாக்கும் காந்தப்புல வலிமையிலும் அயக்காந்த அகணியின் காந்தப்புல வலிமை ஆயிரம் மடங்கு அதிகமாகும். இந்த அயக்காந்த அகணி அல்லது இரும்பு அகணி மின்காந்தமென அழைக்கப்படும். கம்பிச் சுருளினூடான காந்தப்புலத்தின் திசையை வலக்கை விதிமூலம் துணியலாம்.[1][2][3][4][5][6] அதாவது, வலக்கையின் விரல்கள் கம்பிச்சுருளினூடு பாயும் மின்னோட்டத்தின் திசையில் வளைக்கப்படுமாயின் வலக்கைப் பெருவிரலானது கம்பிச்சுருளின் மையத்தினூடாகப் பாயும் காந்தப்புலத்தின் திசையைத் தரும். காந்தப்புலக்கோடுகள் வெளியேறுவதாகத் தோற்றும் முனைவு அம்மின்காந்தத்தின் வடமுனைவாக வரையறுக்கப்படும். வழங்கப்படும் மின்னோட்டத்தின் அளவை ஆளுவதன் மூலம் உருவாகும் காந்தப்புலத்தின் அளவை ஒரு பரந்த வீச்சுக்கு, விரைவாக மாற்றக்கூடியதாக இருப்பது நிலைபேறான காந்தத்துடன் ஒப்பிடுகையில் மின்காந்தத்தின் முக்கிய பயன்பாடாகும். இருப்பினும் காந்தப்புலத்தைப் பேணுவதற்கு தொடர்ச்சியான மின்சக்தி வழங்கல் அவசியமாகும். இரும்பு அகணியின் செயற்பாடு காந்தத்தின் அகணிப்பகுதியின் பொருளானது (வழமையாக இரும்பு), சிறிய காந்தங்களைப் போல் செயற்படும் ”காந்த ஆட்சிப்பகுதிகள்” எனப்படும் சிறு வலயங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. மின்காந்தத்தில் மின்னோட்டம் பாய்வதற்கு முன் இக்காந்த ஆட்சிப்பகுதிகள் எழுமாறான திசைகளைச் சுட்டியவாறு காணப்படும். ஆகவே அவற்றின் சிறிய காந்தப் புலங்கள் ஒன்றையொன்று சமப்படுத்திக் கொள்ளும். ஆகவே, இரும்பில் பெரியளவில் காந்தப்புலம் உருவாக மாட்டாது. அகணியின் மேல் சுற்றப்பட்டுள்ள கம்பியில் மின்னோட்டம் பாயும்போது சுருளில் உருவாகும் காந்தப்புலம் மெல்லிரும்பு அகணியை அதிரச் செய்வதன் மூலம் காந்த ஆட்சிப்பகுதிகளை காந்தப்புலத்துக்குச் சமாந்தரமாக ஒழுங்கமைக்கிறது. எனவே அவற்றின் சிறிய காந்தப்புலங்கள் ஒன்றுசேர்ந்து காந்தத்தைச் சூழ, பெரிய காந்தப்புலத்தைத் தோற்றுவிக்கின்றன. மின்னோட்டம் அதிகரிக்கும்போது, காந்த ஆட்சிப்பகுதிகள் ஒழுங்கமையும் வீதமும் அதிகரிப்பதால், காந்தப்புலத்தின் வலிமையும் அதிகரிக்கும். எனினும் எல்லாக் காந்த ஆட்சிப்பகுதிகளும் இவ்வாறு ஒழுங்கமைந்த பின்னர் மின்னோட்டத்தின் அதிகரிப்பு பெரியளவில் காந்தப்புலத்தை அதிகரிக்க மாட்டாது. இந்நிலை "நிரம்பல் நிலை" என அழைக்கப்படுகிறது. சுருளில் உள்ள மின்சாரம் துண்டிக்கப்படும்போது பெரும்பாலான ஆட்சிப்பகுதிகள் தமது ஒழுங்கமைவை இழந்து எழுமாறான நிலையை அடையும். ஆயினும் சில ஒழுங்கமைவுகள் மாற்றமடையாது காணப்படும். ஏனெனில் இவ்வாட்சிப்பகுதிகள் தமது திசையை மாற்றுவதில் பாரிய எதிர்ப்பை எதிர்நோக்குகின்றன. இதனால் மின்காந்தத்தின் அகணி ஒரு வலுக்குறைந்த நிலைபேறான காந்தமாக மாறுகின்றது. இச்செயற்பாடு காந்தப்பின்னிடைவு எனப்படுகிறது. எஞ்சியுள்ள காந்தப்புலம் மீந்த காந்தப்புலம் எனப்படும். இவ்வெஞ்சிய காந்தப்புலமானது காந்த நீக்கல்முறை மூலம் அகற்றப்படலாம். வரலாறு 1820ல் டேனிய விஞ்ஞானியான ஆன்சு கிருத்தியான் ஆர்ஸ்டெட், கடத்தியொன்றினூடு பாயும் மின்னோட்டம் அக்கடத்தியைச் சூழ காந்தப்புலத்தை உருவாக்குவதைக் கண்டறிந்தார். 1824ல் பிரித்தானிய விஞ்ஞானியான வில்லியம் ஸ்டேர்ஜன் மின்காந்தத்தைக் கண்டுபிடித்தார்.[7][8] அவரது முதலாவது மின்காந்தம் காவலிடப்படாத செப்புக்கம்பியினால் 18 தடவைகள் சுற்றப்பட்ட குதிரை லாட வடிவிலான இரும்புத்துண்டினால் ஆக்கப்பட்டிருந்தது. இரும்பு, வார்ணிசு பூச்சினால் காப்பிடப்பட்டிருந்தது. சுருளினூடாக மின்னோட்டமொன்று பாயும்போது, இரும்பு காந்தமாக்கப்பட்டதோடு ஏனைய இரும்புத்துண்டுகளையும் கவர்ந்தது. மின்னோட்டம் நிறுத்தப்பட்டபோது அது காந்தத்தன்மையை இழந்தது. இத்துண்டு வெறுமனே 200 கிராம் திணிவைக் கொண்டிருந்தபோதும், ஒரு தனிக்கல மின்கலத்துடன் இணைக்கப்படும்போது 4 கிலோகிராம் திணிவை உயர்த்தக்கூடியதாய் இருந்தது. இதன் மூலம் மின்காந்தத்தின் வலிமையை ஸ்டேர்ஜன் உணர்த்தினார். எவ்வாரயினும் ஸ்டேர்ஜனின் மின்காந்தம் நலிந்ததாக இருந்தது. ஏனெனில், பயன்படுத்தப்பட்ட செப்புக்கம்பி காப்பிடடப்படாமல் இருந்தமையால், அகணியைச் சுற்றி செப்புக்கம்பியை ஒருதடவை மாத்திரமே சுற்றக்கூடியதாய் இருந்தது. மேலும், கம்பியின் ஒவ்வொரு சுற்றுக்கிடையிலும் இடைவெளிகள் விடவேண்டியிருந்தது. இதனால், அகணியைச் சுற்றி சுற்றப்படும் சுற்றுக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. 1827ன் துவக்கத்தில் அமெரிக்க விஞ்ஞானியான ஜோசப் ஹென்றி, மின்காந்தத்தை மேம்படுத்தினார்.[9] பட்டு நூலினால் காவலிடப்பட்ட கம்பிகளைப் பயன்படுத்தியதன் மூலம், அவரால் அகணியின் மீது அதிக படைகளில் கம்பியைச் சுற்றமுடிந்தது. இதனால் ஆயிரக்கணக்கான சுற்றுக்களைக்கொண்ட வலிமையான காந்தங்களை அவரால் உருவாக்க முடிந்தது. இவற்றுள் ஒன்று, 936 கி. கி. திணிவை உயர்த்தக்கூடியதாய் இருந்தது. மின்காந்தம் முதலில் முதன்மையாகக் தந்தி ஒலிப்பானில் பயன்படுத்தப்பட்டது. அயக்காந்த அகணி எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றிய காந்த ஆட்சிக் கொள்கை 1906ல் பிரெஞ்சு புவியியலாளரான பியரி ஏனஸ்ட் வெய்ஸ் என்பவரால் முதன்முதலில் முன்மொழியப்பட்டது. மேலும் அயக்காந்தவியலின் முழுமையான "சக்திச்சொட்டுப் பொறியியல் கொள்கை" 1920களில் வேர்னர் ஹெய்சன்பர்க், லெவ் லன்டௌ, ஃபீலிக்ஸ் ப்ளொச் மற்றும் பலரால் ஆராயப்பட்டது. மின்காந்தத்தின் பயன்பாடுகள் மின்காந்தங்கள் பெரும்பாலும் பின்வரும் மின் மற்றும் மின்பொறியியல் துணைக்கருவிகளில் பயன்படுத்தப்படுகிறது. பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் - மோட்டர்கள், மின்பிறப்பாக்கிகள் மற்றும் காந்தத் தூக்கல் போக்குவரத்து நிலைமாற்றிகள் மின்மணி ஒலிபெருக்கி காந்தப் பதிவுச் சாதனங்கள் அஞ்சல் சுற்று துகள் முடுக்கி மின்காந்தப் பூட்டு காந்தப் பரிவுப் படிமவாக்கல் இயந்திரங்கள் மற்றும் திணிவுப் பகுப்பு மானி போன்ற விஞ்ஞான துணைக்கருவிகள் காந்தப் பிரித்தெடுப்பு பாரந்தூக்கிகள் மருத்துவம் - காந்த அதிர்வு அலை வரைவு அயக்காந்த மின்காந்தங்களின் பகுப்பாய்வு மின்காந்தங்களின் காந்தப்புலம் பொதுவாக அம்பியரின் விதியிலிருந்து தரப்படும்: ∫ J ⋅ d A = ∮ H ⋅ d l {\displaystyle \int \mathbf {J} \cdot d\mathbf {A} =\oint \mathbf {H} \cdot d\mathbf {l} } அதாவது, காந்தப்புலத்தில் யாதேனுமொரு மூடியசுற்றைச் சுற்றிய காந்தமாக்கும் புலம் H இன் தொகையீடு அச்சுற்றினூடாகப் பாயும் மின்னோடத்தின் கூட்டுத்தொகைக்குச் சமனாகும். இதுதவிர பியோ சவார்ட்டின் விதியும் பயன்படுத்தப்படுகிறது. இது சிறு கடத்தியில் பாயும் மின்னோட்டம் காரணமாக உருவாகும் காந்தப்புலத்தைத் தரும். அயக்காந்தப்பொருள்களால் உருவாகும் காந்தப்புலம் மற்றும் விசை ஆகியவற்றைக் கணிப்பிடுவது கடினமானதாகும். இதற்கு இரு காரணங்கள் உள்ளன. முதற் காரணம், புலவலிமை வெவ்வேறு புள்ளிகளில் சிக்கலான முறையில் மாறுபடுவதாகும். இதனை முக்கியமாக அகணிக்கு வெளியிலும், வளியிடைவெளிகளிலும் அவதானிக்கலாம். இங்குக் கீற்றணிப் புலங்களும் (fringing fields), மின்னொழுகு பாயமும் (leakage flux) கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அடுத்து, காந்தப்புலமும் (B) விசையும் மின்னோட்டத்துடன் நேர்விகிதசமனாக மாறுவதில்லை. இவை பயன்படுத்தப்படும் அகணிப்பொருளின் காந்தப்புலத்துக்கும் (B), காந்தமாக்கும் புலத்துக்கும் (H) இடையிலான தொடர்பில் தங்கியிருக்கும். சொற்களின் வரைவிலக்கணம் A {\displaystyle A\,} சதுர மீற்றர்அகணியின் குறுக்குவெட்டுப் பரப்பு B {\displaystyle B\,} டெஸ்லாகாந்தப் புலம் (காந்தப்பாய அடர்த்தி) F {\displaystyle F\,} நியூற்றன்காந்தப்புலத்தால் பிரயோகிக்கப்படும் விசை H {\displaystyle H\,} மீற்றருக்கு அம்பியர்காந்தமாக்கும் புலம் I {\displaystyle I\,} அம்பியர்கம்பிச்சுருளில் பாயும் மின்னோட்டம் L {\displaystyle L\,} மீற்றர்காந்தப்புலப் பாதையின் மொத்த நீளம் L c o r e + L g a p {\displaystyle L_{\mathrm {core} }+L_{\mathrm {gap} }\,} மீற்றர்அகணிப் பொருளில் உள்ள காந்தப்புலப் பாதையின் நீளம்மீற்றர்வளியிடைவெளியில் உள்ள காந்தப்புலப் பாதையின் நீளம்அம்பியர் மீற்றர்மின்காந்தத்தின் முனைவு வலிமைசதுர அம்பியருக்கு நியூற்றன்மின்காந்த அகணிப் பொருளின் உட்புகவிடுதிறன்சதுர அம்பியருக்கு நியூற்றன்வெற்றிடத்தின் (அல்லது வளி) உட்புகவிடுதிறன் = 4π(10−7)- மின்காந்த அகணிப் பொருளின் தொடர்பு உட்புகவிடுதிறன்-மின்காந்தத்திலுள்ள கம்பியின் முறுக்குகளின் எண்ணிக்கைமீற்றர்இரு மின்காந்தங்களின் முனைவுகளுக்கிடையிலான தூரம் மேற்கோள்கள் வெளியிணைப்புக்கள் National High Magnetic Field Laboratory Cuyahoga Community College School of Geology and Geophysics, University of Oklahoma பகுப்பு:மின்காந்தவியல் பகுப்பு:இயற்பியல் கோட்பாடுகள்
மின்காந்தத்தை கண்டுபிடித்தவர் யார்?
வில்லியம் ஸ்டேர்ஜன்
3,736
tamil
ca4371704
உலக வணிக அமைப்பு (WTO ) என்பது ஒரு சர்வதேச நிறுவனமாகும், சர்வதேச மூலதன வணிகத்தினைத் தாராளமயமாக்கி அதை மேற்பார்வையிடும் நோக்குடன் இந்த அமைப்பு நிறுவப்பட்டது. 1947 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்த ஜிஏடிடி என்ற (General Agreements on Tariffs and Trade (GATT)) வணிகம் மற்றும் கட்டண விகிதத்திற்கான பொது உடன்பாட்டு அமைப்பிற்குப் பதிலாக ஜனவரி 1, 1995 ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பு அதிகாரபூர்வமாக, மர்ரகேஷ் ஒப்பந்தத்தின்கீழ் செயல்படத் துவங்கியது. உலக வணிக அமைப்பானது அதில் பங்குபெறும் நாடுகளிடையே நிலவும் வணிகத்தை ஒழுங்குமுறைப்படுத்துகிறது; பேச்சுவார்த்தைகள் மூலம் வணிக உடன்பாடுகள் செய்து முடிவு காண்பதற்கு ஒரு நிலையான கட்டமைப்பை அது வழங்குகிறது. இந்த அமைப்பு இரு நாடுகளுக்கிடையே எழும் தகராறுகளுக்கு, உலக வணிக அமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் சுமுகமான தீர்வுகாண வழிவகுக்கிறது, இந்த ஒப்பந்தங்களைப் பங்கு பெறும் நாடுகளின் அரசைச் சார்ந்த பிரதிநிதிகள் கையொப்பமிட்டு, அவற்றை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஏற்புறுதி செய்ய வேண்டும்.[1][2] இது வரையில் உலக வணிக அமைப்பின் (WTO) கவனத்தை ஈர்த்த மிகையான விவகாரங்கள் இதற்கு முனனால் நடந்த முடிவுறாத வணிகப் பேச்சு வார்த்தைகளாகும், அவற்றிலும் குறிப்பாக உருகுவே சுற்றை (1986-1994) சார்ந்தவையாகும். இந்த அமைப்பானது, தற்போது 2001 ஆம் ஆண்டில் துவங்கிய தோகா மேம்பாட்டுக் கூட்டப்பொருள் (அல்லது தோகா சுற்று) என்ற வணிகமுறைப் பேச்சுவார்த்தைகளில் எடுத்த முடிவுகளைச் செயல்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இது உலக மக்கள் தொகையில் மிகுதியாக உள்ள நலிந்த நாடுகளின் பங்கேற்பினைச் செழுமைப்படுத்திச் சம நிலையில் வாதம்புரிந்து பங்கேற்பதற்கான பெரும் முயற்சியாகும். இருந்தாலும், "வேளாண் பொருட்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகள் மற்றும் எண்ணற்ற ஏழ்மையில் வாடும் குடியானவர்கள் கொண்ட நாடுகளிடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகளில், அதிகமாக இறக்குமதி செய்யும் காலகட்டங்களில், ஏழைக்குடியானவர்களுக்குத் 'தனி பாதுகாப்பு கவசம்' அளிப்பது பற்றிய துல்லியமான செயல்பாட்டிற்கு ஒவ்வாமை இருப்பதனால் வாக்குவாதங்கள் நீண்டு கொண்டே போகின்றன. தற்போது, தோகா சுற்றின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது."[3] இப்போது உலக வணிக அமைப்பில் 153 உறுப்பினர்கள் உள்ளனர்,[4] இது உலக அளவிலான வணிகத்தின் மொத்த அளவின் 95% ஆகும்.[5] இந்த அமைப்பில் தற்பொழுது 30 பார்வையாளர்களும் உள்ளனர், அவர்களும் உறுப்பினர் ஆவதற்கு முனைந்து வருகின்றனர். இந்த உலக வணிக அமைப்பு, அதன் செயல்பாடுகளை, அலுவலகப்பணித் தொகுதி கூட்டங்களை அவ்வப்போது செயல்படுத்தி முறைப்படுத்தி வருகிறது. இரண்டாண்டுகளில் ஒருமுறை அவர்கள் கூடுவார்கள். இந்த அமைப்பின் உறுப்பினர்களின் ஒரு பொதுக்குழு, கூட்டத்தில் எடுத்த கொள்கை அளவிலான முடிவுகளை செயல்படுத்தி நிர்வாகத்திற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு தலைமை தாங்க, அலுவலகப்பணித் தொகுதி கூட்டத்தால் தெரிவு செய்த ஓர் உயரதிகாரி, நியமிக்கப்படுவார். உலக வணிக அமைப்பின் (WTO) தலைமைச் செயலகம் செண்டர் வில்லியம் ரப்பர்ட், ஜெனீவா, சுவிட்சர்லாந்தில் உள்ளது. வரலாறு உலக வணிக அமைப்பு மற்றும் ஜிஏடிடி 1947 இரண்டாவது உலகப் போர் நடந்த பிறகு சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த பலவகையான நிறுவனங்கள் - குறிப்பாக பிரெட்டன் வூட்டின் நிறுவனங்கள், உலக வங்கி மற்றும் அனைத்துலக நாணய நிதியம் போன்ற நிறுவனங்களுடன் உலக வணிக அமைப்பின் முன்னோடியான ஜேஏடிடி (GATT) என்ற அமைப்பை நிறுவியது. வணிகம் செய்வதற்காக, அதே அளவிற்கு ஒப்பிடக்கூடிய ஒரு நிறுவனத்தை, சர்வதேச வணிக அமைப்பு என்ற பெயரில், பேச்சுவார்த்தைகள் மூலம் வெற்றிகரமாக செயல்படுத்த முடிவானது. சர்வதேச வர்த்தக அமைப்பானது, ஐக்கிய நாடுகளின் (United Nations) தனிச்சிறப்பு பெற்ற அமைப்பாக, வியாபாரத்தில் ஏற்படும் தடைகளை நீக்குவதோடல்லாமல், வியாபாரத்துடன் மறைமுகமாக தொடர்புகொண்ட இதர பிரச்சினைகளான வேலைவாய்ப்பு, முதலீடுகள், குறுகிய நோட்டத்துடன் தொழில் செய்வது, பயன்படு பொருள்களுக்கான ஒப்பந்தங்கள் போன்றவைகளையும் மேற்பார்வையிட வல்லதாகும். ஆனால் இந்த சர்வதேச வர்த்தக அமைப்பிறகான ஒப்பந்தத்தை அமேரிக்கா மற்றும் சில இதர நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை, அதனால் அவை நிறைவேற்றப்படவில்லை.[6][7][8] வர்த்தகத்திற்கான ஒரு சர்வதேச அமைப்பு இல்லாது போனதால், ஜி ஏ டி டி (GATT) இன்னும் சில வருட நடைமுறையில் ஒரு சர்வதேச நிறுவனமாக 'தன்னைத் தானே' மாற்றியமைத்துக்கொள்ளும்.[9] ஜிஏடிடி (GATT) பேச்சுவார்த்தை சுற்றுகள் 1948 ஆண்டு தொடங்கி, 1995 ஆம் ஆண்டில் உலக வணிக அமைப்பு நிறுவியதுவரை, சர்வதேச வாணிபத்தை முறைப்படுத்திய ஒரே ஒரு பலதரப்பட்ட சாதனமாக ஜிஏடிடி (GATT) விளங்கியது.[10] 1950 மற்றும் 1960 ஆண்டுகளுக்கிடையில், சர்வதேச வர்த்தகத்திற்காக ஒரு விதமான நிறுவன இயக்கமுறையை செயல்படுத்த முயன்ற போதிலும், ஜிஏடிடி (GATT) தொடர்ந்து அரை நூற்றாண்டிற்கும் மேல், ஒரு தற்காலிக அடிப்படையில், ஒரு பலவகை ஒப்பந்த ஆட்சிபுரியும் பங்களவு நிறுவனமாக செயல்பட்டுவந்தது.[11] ஜெனீவாவில் இருந்து டோக்கியோ வரை ஜிஏடிடி (GATT) யின் கீழ் ஏழு சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. முதல் சுற்று ஜிஏடிடி (GATT) பேச்சு வார்த்தைகள் கட்டணங்களை மேலும் குறைப்பதை நோக்கமாக கொண்டது. அப்புறம், அறுபதுக்கிடையில் நடந்த கென்னடி சுற்றில் ஜிஏடிடி (GATT) கொட்டுதலுக்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்துடன் வணிக மேம்பாட்டிற்காக ஒரு பிரிவை நிறைவேற்றியது. எழுபதுகளில் நடந்த டோக்கியோ சுற்றுகளில் கட்டணங்கள் அல்லாத இதர வணிகத்தடைகளை நீக்குவதற்கும் செய்முறைகளை மேம்படுத்துவதற்கும் முதல் பெரிய முயற்சி நடைபெற்றது, தொடர்ச்சியாக கட்டணங்கள் அல்லாத தடைகள் நீக்கும் பல ஒப்பந்தங்கள் ஏற்றுக்கொண்டது, சில நிகழ்வுகளில் ஜிஏடிடி (GATT) யில் நிலவிய புழக்கத்தில் இருக்கும் முறைகளை ஏற்றுக்கொண்டது, மேலும் சில இதர நிகழ்வுகள் முற்றிலும் புதிய பிரிவுகளுக்கு வழிவகுத்தது. இவ்வகையான பலதரப்பு ஒப்பந்தங்களில் சில ஜிஏடிடி (GATT)யின் அனைத்து உறுப்பினர்களாலும் ஏற்றுக்கொள்ளப் படாததால், அவை அடிக்கடி இயல்பாக "குறிகள்" என வழங்கின. இவற்றில் பல குறிகள் உருகுவே சுற்றில் மாற்றியமைந்தன, மேலும் அவை அனைத்து உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள் ஒப்புக்கொண்ட பலவகையான நிற்பந்தங்களாக (கடமை / உத்தரவு) திரிந்தன. அவற்றில் நாலு மட்டுமே பலவகையானதாக எஞ்சியது (அரசு கொள்முதல் செய்வது, மாட்டிறைச்சி, குடியியல் வானூர்தி மற்றும் பால்பண்ணை சார்ந்த பொருட்கள்), ஆனால் 1997 ஆம் ஆண்டில் உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள் மாட்டிறைச்சி மற்றும் பால்பண்ணை சார்ந்த ஒப்பந்தங்களை நீக்க முடிவுசெய்தனர், அதனால் எஞ்சியது இரண்டு மட்டுமே.[10] உருகுவே சுற்று ஜிஏடிடி (GATT) யின் நாற்பதாவது ஆண்டுவிழாவிற்கு முன்னதாகவே, அதன் உறுப்பினர்கள் ஜிஏடிடி (GATT) யின் முறைகளால் புதிய உலகளவில் விரிந்துவரும் உலக பொருளாதாரத்துடன் தாக்குப்பிடித்து ஒத்துவர இயலவில்லை என்பதை உணர்ந்தனர்.[14][15] 1982 ஆம் ஆண்டில் அலுவலகப்பணித் தொகுதி கூட்ட சாற்றுரையில் அடையாளம் காட்டிய குறைகளை நிவர்த்தி செய்வதற்காக (அமைப்பிற்குரிய குறைபாடுகள், உலக வணிகத்தைப்பற்றிய சில நாடுகளின் கொள்கைகளால் ஏற்பட்ட நிரம்பி வழிந்த தாக்கங்களால் ஏற்பட்ட நிலைகுலைவு ஜிஏடிடி (GATT) யால் நிர்வாகம் செய்ய இயலாமல் போனது போன்றவை), எட்டாவது ஜிஏடிடி (GATT) சுற்று, உருகுவே சுற்று என்று அறியப்படுவது- உருகுவேயில் உள்ள புண்டா டெல் ஈஸ்டேயில் 1986 செப்டம்பரில் துவங்கியது.[14] இதுவரை எங்கும் நடைபெறாத வணிகம் சார்ந்த மற்றும் ஒப்புமை கொண்ட மிகப்பெரிய உரிமைக்கட்டளை அதுவேயாகும்: பேச்சுவார்த்தைகள் வணிக முறைகளையும் தாண்டியது மற்றும் பல புதிய துறைகளை சீண்டியது, குறிப்பாக சேவைகள் புரிவதற்கான வணிகம் மற்றும் அறிவுத்திறனுடையார் சொத்துடமை, மேலும் வேளாண் மற்றும் நெசவுத்தொழில் போன்ற உணர்ச்சிவசப்படக்கூடிய துறைகளில் வணிக செய்முறைகளில் சீர்திருத்தங்கள்; அனைத்து அசல் ஜிஏடிடியின் உடன்பாடு விதிகள் திரும்பவும் பரிசீலிக்கப்பெற்றது..[15] ஏப்ரல், 1994 ஆம் ஆண்டில் நடந்த அலுவலகப்பணித் தொகுதி கூட்டம், மோரோகொவில் உள்ள மர்ரகேஷில் நடைபெற்றது, அத்துடன் உருகுவே சுற்றின் பேச்சுவார்த்தைகள் முடிவுற்று அதிகார பூர்வமாக உலக வணிக அமைப்பின் ஆட்சியை நிறுவியதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது, அதனால் இது மர்ரகேஷ் ஒப்பந்தம் என அறியப்படுகிறது.[16] ஜிஏடிடி (GATT) இன்றும் உலக வணிக அமைப்பின் பொருட்களுக்கான வணிகத்தின் குடை ஒப்பந்தமாக இருந்துவருகிறது, உருகுவே சுற்று பேச்சுவார்த்தைகளின் காரணமாக அவை நிகழ்நிலைப்பட்டுள்ளன.(ஆவணங்களான ஜிஏடிடி (GATT) 1994, நிகழ்நிலை ஜிஏடிடி (GATT) பாகங்கள், மற்றும் GATT 1947, வேறுபடுத்திய பின்னர் அசலான GATT 1947 ஒப்பந்தக்குறிப்பு, இன்னும் GATT 1994 இன் இதயமாக திகழ்கிறது).[14] ஜிஏடிடி 1994 (GATT) ஒப்பந்தம் கூடாமல் மற்றும் மர்ரகேஷ் இறுதி கூட்டத்தில் இதர ஒப்பந்தங்களும் சட்ட ரீதியாக அனுமதி பெற்றுள்ளன; 60 ஒப்பந்தங்கள், இணைப்புகள், முடிவுகள், மற்றும் ஏற்றுக்கொண்டவை போன்ற நீண்ட பட்டியலில் அவை பதிவாகியுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் ஆறு முதன்மை பாகங்களுடன் கூடிய அமைப்பாக கட்டமைத்துள்ளது: உலக வணிக அமைப்பை நிறுவுவதற்கான ஒப்பந்தம் சரக்கு மற்றும் முதலீடு — சரக்குகளில் வணிகம் செய்வதற்கான பலவகை ஒப்பந்தங்கள், அவற்றில் ஜிஏடிடி 1994 (GATT) 1994 மற்றும் வணிகம் சார்ந்த முதலீட்டு நடவடிக்கைகள் அடங்கும் சேவைகள் புரிதல் — சேவைகள் புரிவதற்கான பொது ஒப்பந்தம் அறிவுத்திறனுடையார் சொத்துடமை — அறிவுத்திறனுடையார் சொத்துடமை உரிமைக்கான வணிகம் சார்ந்த பாங்குகளுக்கான ஒப்பந்தம் (ட்ரிப்ஸ்) (TRIPS) தகராறுகளுக்கான தீர்வு (DSU) அரசின் வணிக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல் (TPRM)[17] அலுவலகப்பணித் தொகுதி கூட்டங்கள் முதல் அலுவலகப்பணித் தொகுதி கூட்டம் தொடக்க விழா அலுவலகப்பணித் தொகுதி கூட்டம் சிங்கப்பூரில் 1994 ஆண்டில் நடந்தது. இந்த கூட்டத்தில், முதல் முறையாக விவாதத்திற்கு கொண்டுவந்த நான்கு விவகாரங்களில், மிகையாக மேம்பாடடைந்த நாடுகள் மற்றும் மேம்பாடடைந்த மற்றும் மேம்பட்டு வரும் பொருளாதாரங்களில் கருத்து வேறுபாடுகள் எழுந்தன, அதன் காரணமாக அவை நான்கையும் சுட்டிக்காட்டும் வகையில் அவற்றை "சிங்கப்பூர் விவகாரங்கள்" என அழைத்தனர். இரண்டாவது அலுவலகப்பணித் தொகுதி கூட்டம் இக்கூட்டம் ஜெனீவா சுவிட்சர்லாந்தில் நடந்தேறியது. மூன்றாவது அலுவலகப்பணித் தொகுதி கூட்டம் சீயாட்டில், வாஷிங்டனில் நடந்த மூன்றாவது கூட்டம் தோல்வியில் முடிவுற்றது, பெரிய அளவில் மக்கள் கூட்டம் ஆர்ப்பாட்டம் செய்தார்கள் மேலும் காவல் துறையினர் மற்றும் தேசீய பாதுகாவலர்களுடைய மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் முறை உலகளவில் சர்ச்சைக்குள்ளாயிற்று. நான்காவது அலுவலகப்பணித் தொகுதி கூட்டம் இது பாரசீக வளைகுடாவில் உள்ள நாடான கட்டாரில் உள்ள தோஹவில் நடைபெற்றது தொஹ மேம்பாட்டு சுற்று இந்த கூட்டத்தில் தொடங்கியது. இந்தக்கூட்டத்தில் சீனா உறுப்பினராக சேர்வதையும் அனுமதித்தது, அந்நாடு 143 ஆவது உறுப்பினர் நாடாகும். ஐந்தாவது அலுவலகப்பணித் தொகுதி கூட்டம் z இந்த அலுவலகப்பணித் தொகுதி கூட்டம் கான்கன் , மெக்ஸிகோ வில் நடைபெற்றது, தொஹ சுற்று ஒப்பந்தத்தை நிறைவேற்றும் நோக்குடன் அது நடந்தது. 22 தெற்கு நாடுகள் கொண்ட ஒரு கூட்டு, G20 மேம்பாடடையும் நாடுகள், இந்தியா, சீனா [18] மற்றும் பிரேசில் போன்ற நாடுகளின் தலைமையில், வடக்கு நாடுகளுடைய சிங்கப்பூர் விவகாரங்கள் குறித்த கோரிக்கைகளை ஏற்க மறுத்தனர் மேலும் அவர்கள் வேளாண் தொழிலுக்கு ஐக்கிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க நாடுகள் அளித்துவரும் மானியத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பேச்சு வார்த்தைகள் அத்துடன் முறிந்தன மேலும் அவை முன்னேறவில்லை. ஆறாவது அலுவலகப் பணித் தொகுதி கூட்டம் ஆறாவது உலக வணிக அமைப்பு சார்ந்த அலுவலகப்பணித் தொகுதி கூட்டம் ஹாங் காங் இல் 13 டிசம்பர் முதல் 18 டிசம்பர், 1995 வரை நடந்தது. நான்கு ஆண்டுகள் பழமையான தோஹ மேம்பாட்டு நிகழ்ச்சி நிரல் பேச்சுவார்த்தைகளுக்கு தீர்வு காண்பதை முக்கியமாகவும் மற்றும் அந்த சுற்றை 2006 ஆம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்ற நோக்குடனும் நடந்தது. இந்த கூட்டத்தில், நாடுகள் வேளாண் ஏற்றுமதி தொழிலுக்கு வழங்கிவரும் மானியத்தை படிப்படியாக 2013 ஆண்டின் முடிவுக்குள்ளும் மேலும் பஞ்சு ஏற்றுமதிக்கான மானியத்தை 2006 ஆண்டுக்குள்ளும் முடிவுக்கு கொண்டுவர இசைந்தனர். மேம்பாடு அடைந்து வரும் நாடுகளுக்கு அளித்த இதர சலுகைகளில் வரியில்லாத, கட்டணமில்லாத சரக்குகளை மிகவும் குறைந்த அளவிற்கு மேம்பட்ட நாடுகளில் இருந்து பெறுவதற்கான உடன்பாடு, அது ஐரோப்பிய ஒன்றியத்தின் "அனைத்தும் ஆனால் படைக்கலம் மட்டும் இல்லாமல்" (Everything But Arms) என்ற முனைப்பை ஆதாரமாக கொண்டதாகும். மேலும் 3% வரையிலான கட்டண வரிகள் விலக்கு அளிக்காததாக இருக்கும். இதர பெரிய விவகாரங்களை பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 2010 ஆண்டுக்குள் முடிக்க முடிவு செய்தது. ஏழாவது அலுவலகப்பணித் தொகுதி கூட்டம் உலக வணிக அமைப்பின் பொதுக்குழு, 26 மே 2009 அன்று, ஏழாவது உலக வணிக அமைப்பு (WTO) அலுவலகப்பணித் தொகுதி கூட்டத்தை ஜெனீவாவில் 30 நவம்பர் முதல் டிசம்பர் 2009 வரை நடத்த முடிவுசெய்தனர். தலைவர் அம்ப விடுத்த ஒரு குறிப்பு மரியோ மடுஸ் கூறியதாவது இரு வருடங்களுக்கு ஒரு முறை சந்திக்கும் நடைமுறையில் இருக்கும் குறைபாடுகளை நீக்குதல் வேண்டும், அதுவே 2005 தொஹ சுற்று, முடிவில் காலம் கடந்து தோல்வி கண்டது, மேலும் நடக்கவிருக்கும் 'அளவு குறைந்த' கூட்டமானது பேரம் பேசும் பேச்சுவார்த்தைகள் கொண்டதாக இருக்காது, ஆனால் "சிறு குழுக்கள் கொண்ட பேரம் பேசும் அமைப்பாக அல்லாமல் மற்றும் இயல்பான பேச்சுவார்த்தை நடத்தும் கட்டமைப்பாக இல்லாமல், ஒளிவு மறைவில்லாமல் மற்றும் வெளிப்படையாக பேச்சுவார்த்தைகள் நடக்கும் சூழ்நிலைகளை வலியுறுத்தும்".[19] தோகா சுற்று உலக வணிக அமைப்பு தற்போதைய பேச்சுவார்த்தைகளுக்கான சுற்றை, தோகா மேம்பாட்டு நிகழ்ச்சிநிரல் என அறியப்படுவது, அதன் நான்காம் அலுவலகப்பணித்தொகுதி கூட்டத்தில், நவம்பர் 2001 முதல் தோகா, கத்தாரில் துவங்கியது. தோகா சுற்று மிகவும் எதிர்பார்ப்புகளுடன் கூடிய, உலகமயமாக்குவதற்கான எண்ணத்தை கருத்தில் கொண்டு, மேலும் உலகத்தில் வாழும் மிகவும் ஏழையான மக்களுக்கு உதவி புரியும் நோக்குடன், குறிப்பாக வேளாண் தொழில் தடைகள் மற்றும் மானியத்தொகை விவகாரங்களை அகற்றுவதற்கான ஒரு வெளிப்படை முயற்சியாகும்.[20] அதன் துவக்க நிகழ்ச்சிநிரல் வணிக குறைகளை மேலும் தளையகற்றி விடுவித்து, தற்காலத்துக்கேற்ற புதிய விதிமுறைகளை அமுல்படுத்தி, மேம்பாடு அடையும் நாடுகளுக்கு ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி அமைப்பை வலுவூட்டுவதே.[21] பல முறை பேச்சுவார்த்தைகள், அலுவலகப்பணித் தொகுதி கூட்டங்கள் மற்றும் இதர கூட்டங்கள் நடந்தாலும், பேச்சுவார்த்தைகள் மிகவும் காரசாரமாக இருந்ததோடல்லாமல் எந்த முடிவுக்கும் ஒப்புதல் கிடைக்கவில்லை. பல முக்கிய விவகாரங்களில், வேளாண் மானியம் போன்றவையும் அடங்கும், கருத்து வேறுபாடுகள் தொடர்ந்துகொண்டே இருந்தன.[22] பணிகள் உலக வணிக அமைப்பின் பல்வேறுபணிகளில், கீழே கொடுக்கப்பட்டவை மிகவும் முக்கியமானதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்: முடிவெடுத்த ஒப்பந்தங்களை நடைமுறையில் நிறைவேற்றுதல், நிர்வகித்தல் மற்றும் இயக்குதல் போன்றவற்றை மேற்பார்வையிடுதல்.[23][24] பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு சுமுகமான சூழ்நிலையுடன் கூடிய ஒரு மன்றத்தை அளித்து விவகாரங்களை தீர்த்து வைத்தல்.[25][26] கூடுதலாக, தேசிய வணிகக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்து அவற்றை பபரப்புதல், மற்றும் வணிகக் கொள்கைகளின் முன்-பின் ஒத்திணக்கம் மற்றும் ஒளிவு மறைவின்மை சரியாக உள்ளதா என்பதை உலக பொருளாதார கொள்கைகளை உருவாக்கும் போது கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டியது போன்றவை உலக வணிக அமைப்பின் முதலாய கடமையாகும்.[24][26] உலக வணிக அமைப்பின் மற்றுமொரு தலையாய கடமை மேம்பட்டுவரும், மிக குறைவாக மேம்பட்ட மற்றும் குறைந்த வருவாய் ஈட்டும் நாடுககளுக்கு இந்த சூழ்நிலைகள் மாறிவரும் வேளையில், உலக வணிக அமைப்பின் விதிமுறைகள் மற்றும் பிரிவுகளை தொழில்நுட்ப கூட்டுமுயற்சி மற்றும் பயிற்சிகள் மூலம் தெரிந்துகொள்ள வைப்பதுமாகும்.[27] உலக வணிக அமைப்பு பொருளாதார ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளது: உலக வணிக உண்மைநிலை குறித்த மதிப்பீடுகள் மற்றும் குறிப்பிட்ட தலைப்புகளில் ஆராய்ச்சிக்கட்டுரைகள் போன்றவைகளை தயாரித்து அவ்வப்போது மற்றும் ஆண்டறிக்கைகளில் வெளியிட்டு வருகிறது.[28] இறுதியாக, உலக வணிக அமைப்பு பிரெட்டன் வுட்டினுடைய இரு முறைகளான, ஐ எம் எப் மற்றும் உலக வங்கியுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருகிறது.[25] வணிக முறையின் கொள்கைகள் உலக அரங்கில் அனைத்து நாடுகளும் பங்கேற்று வாணிபம் புரிந்திடும் நோக்குடன் வணிகத்திற்கான கொள்கைகளை வரையறுத்து உலக வர்த்தக அமைப்பு என்ற ஒரு கட்டமைப்பிற்கு ஒரு வடிவத்தை கொடுத்துள்ளார்கள். இந்த அமைப்பு விளைவுகளை வரையறுக்கவோ அல்லது குறிப்பிடவோ இல்லை. அதாவது, வணிக கொள்கைகளுக்கான விளையாட்டுகளுக்கான விதிமுறைகளை இந்த அமைப்பு மேற்கொள்கிறது.[29] 1994 ஆண்டிற்கு முந்தைய ஜிஏடிடி அமைப்பு (pre-1994 ஜிஏடிடி (GATT)) மற்றும் உலக வணிக அமைப்பினை பற்றி தெரிந்துகொள்ள ஐந்து விதிமுறைகள் முக்கியமாகும்: பாகுபாடு இல்லாமை. இதில் இரண்டு பெரிய பாகங்களுண்டு: மிகவும் வேண்டிய நாடு (MFN) விதிமுறை, மற்றும் தேசிய நடத்துதல் கொள்கை இவை இரண்டும், சரக்குகள், சேவைகள் மற்றும் அறிவுத்திறனுடையார் சொத்துடமை உலக வணிக அமைப்பின் விதிமுறைகளில் வரையறுத்துள்ளது, ஆனால் அவற்றின் துல்லியமான நோக்கம் மற்றும் இயல்பு ஒவ்வொரு வகைக்கும் வேறுபடும். இந்த மிகவும் வேண்டிய நாடு MFN விதிமுறைகளின் படி உலக வணிக அமைப்பு உறுப்பினர் ஒரே மாதிரியான நியமங்களை இதர உலக வணிக அமைப்பின் உறுப்பினருடைய அனைத்து வணிக விவகாரங்களுக்கும் அமைக்க வேண்டும், அதாவது ஒரு உலக வணிக அமைப்பு உறுப்பினர் ஒரு குறிப்பிட்ட பொருளுக்காக வணிகம் செய்யும் போது அதற்காக அளிக்க விரும்பும் மிகவும் உன்னதமான நிலவரங்களை மற்ற இதர உறுப்பினர்களுக்கும் பாகுபாடில்லாமல் அளிக்க முன்வரவேண்டும்.[29] "யாராவது ஒருவருக்கு சில சலுகைகளை அளித்தால், அச்சலுகைகளை எஞ்சி இருக்கும் அனைத்து உலக வணிக அமைப்பு உறுப்பினர்களுக்கும் அளிக்க வேண்டும்."[30] தேசிய நடத்துகை என்றால் இறக்குமதி சரக்குகள் மற்றும் உள்நாட்டில் தயாரித்த சரக்குகள் இரண்டும் பாகுபாடில்லாமல் ஒரே முறையில் சீராக பார்க்க வேண்டும் (குறைந்தது வெளிநாட்டு சரக்குகள் சந்தையில் வந்த பிறகாவது) மேலும் இந்த விதிமுறைகள் வணிகம் செய்வதில் கட்டணம் இல்லாத தடைகளை அகற்றுவதற்காகவே ஏற்பட்டன. (எடுத்துக்காட்டு:தொழில்நுட்ப தரங்கள், பாதுகாப்பு தரங்கள் போன்றவை இறக்குமதி சரக்குகளுக்கு எதிராக பாகுபடுவது).[29] பிரதிச்சலுகை. எம்எப்என் விதிமுறை (MFN rule) காரணமாக எழும் இலவச சலுகைகளில் நோக்கெல்லையை ஒரு அளவிற்குள் வைத்திடவும் மற்றும் வெளிநாட்டு சந்தையில் பங்குபெற ஒரு நல்ல அணுக்கம் கிடைப்பதற்குமான விருப்பத்தையும் தெரிவிக்கிறது. இது தொடர்பாக ஒரு நாடு பேரம்பேசி கலந்துரையாட, அதனால் கிடைக்கும் ஆதாயம் ஒரு தலைப்பட்சமான தாரளமயமாக்குதலை விட மிகையாக இருத்தல் வேண்டும்; பிரத்திச்சலுகைகள் மூலமாக இவ்வாறான ஆதாயங்கள் கிடைக்க வழி வகுக்கிறது.[31] கட்டமைத்த மற்றும் வலிந்து செயற்படுத்துதலுக்கான கடமைகள். உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள் பலவகை வணிக பேச்சுவார்த்தைகளில் அறிவித்த கட்டண வாக்குறுதிகள் மற்றும் அணுக்கத்திற்கான வழிமுறைகள் ஒரு கால அட்டவணையில் எண்ணிக்கையுடன் பட்டியலிட வேண்டும். இது போன்ற கால அட்டவணைகள் "மேல் மட்ட கடமைகளை " நிலைநாட்டும்: ஒரு நாடு தனது கட்டமைப்புகளை மாற்றலாம், ஆனால் அவற்றை அந்நாட்டு வணிக கூட்டாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே செய்யலாம், அவ்வாறு செய்யும் போது அவர்களுக்கு வணிகத்தில் ஏற்படும் நட்டத்தை ஈடு செய்ய வேண்டியிருக்கும். இதனால் திருப்தி அடையவில்லை என்றால், குற்றத்தை முறையிடும் நாடு உலக வணிக அமைப்பின் தகராறுகளுக்கு தீர்வு காணும் நடைமுறைகளை அழைத்து செயல்படுத்தலாம்.[30][31] ஒளிவின்மை. உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள் தங்கள் நாட்டின் வணிக விதிமுறைகளை அச்சிட்டு வெளியிடவேண்டும், வணிக ரீதியில் பாதிக்கும் நிர்வாக முடிவுகளை மறுபரிசீலனை செய்வதற்கான நிறுவனங்களை தடங்கலில்லாமல் கட்டிக்காக்க வேண்டும், இதர உறுப்பினர்களுக்கு தேவைப்படும் தகவல்களை அவ்வப்போது வழங்குதல் வேண்டும், மேலும் வணிக ரீதியிலான கொள்கை மாற்றங்களை உடனுக்குடன் உலக வணிக அமைப்பிற்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறான உட்புறத்து ஒளிவுமறைவின்மையுடன் கூடிய தேவைகளுடன் காலமுறையில் தனி நாட்டை குறிக்கும் அறிக்கைகள் (வணிக கொள்கை மறுபரிசீலனைகள்) வணிக கொள்கைகளுக்கான மறுபரிசீலனை இயக்க அமைப்பு (TPRM) மூலமாக மிகைநிரப்பி இணைப்புகளை சேர்த்து உதவிகள் வழங்கப்படும்.[32] இவ்வாறு உலக வணிக அமைப்பு முறைகள், முன்னறிந்து கொள்ளக்கூடிய தன்மை மற்றும் நிலைத்தன்மைகளை மேம்படுத்தி, மேலும் ஒதுக்கீடு மற்றும் அது போன்ற தடைகளை விதிக்கும் நடைமுறைகளை நீக்கி, இறக்குமதி பொருட்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லாதவாறு பார்த்துக்கொள்கின்றன.[30] பாதுகாப்பு வால்வுகள் . சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், அரசுகளால் வணிகத்தை கட்டுப்படுத்த இயலும். இத்திசையில் மூன்று வகையிலான முன்னேற்பாட்டு ஒதுக்கங்களை காணலாம்: பொருளாதாரமல்லாத கொள்கைகளை அடைவதற்கான விதிமுறைகள், நியாயப் போட்டிகளை அனுமதிக்கும் நோக்குடைய விதிமுறைகள்; மற்றும் பொருளாதார காரணங்களுக்காக குறிக்கீடுகளை அனுமதிக்கும் தனிவகைமுறைகள்.[32] எம்எப்என் கொள்கைகளுக்கு விதிவிலக்கானவை மேம்பாடடைந்து வரும் நாடுகளுக்கு அளிக்கும் சலுகைகள், தடையிலா வணிகம் புரிவதற்கான இடங்கள் மற்றும் சுங்க ஒன்றியங்கள். சரக்கு மன்ற அமைப்பில் 11 வகை குழுக்கள் உள்ளன, ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பணியை செயல்படுத்துகின்றன. உலக வணிக அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் குழுக்களில் பங்கேற்கின்றனர். நெசவுத்தொழில் கண்காணிப்புக்குழு மற்ற குழுக்களில் இருந்து வேறுபட்டதாக இருந்தாலும், அதுவும் சரக்கு மன்றத்திற்குள் அடங்கியதே. இந்த அமைப்பிற்கு அதனுடைய தனித் தலைவர் உண்டு மேலும் அது 10 உறுப்பினர்கள் கொண்டது. நெசவுத்தொழில் சார்ந்த பல குழுக்களுடன் இந்த அமைப்பிற்கு தொடர்பு உள்ளது.[33] அறிவுசார் சொத்துரிமை சார்ந்த வணிக முறையிலான கோட்பாடுகளுக்கான குழு உலக வணிக அமைப்பிலுள்ள அறிவுசார் சொத்துக்களுக்கான தகவல்கள், செய்திகள் மற்றும் TRIPS குழுமத்தின் (TRIPS Council) அலுவலகக்குறிப்புகள், மற்றும் இத்துறையில் உலக வணிக அமைப்பு இதர சர்வதேச நிறுவனங்களுடன் மேற்கொண்ட பணிகள் [34] சேவைகள் வழங்குவதற்கான குழுமம் பொதுக்குழுவின் அமைப்பின் வழிகாட்டுதலுடன் சேவைகள் புரிவதற்கான குழுமம் செயல் படுகிறது மேலும் அக்குழு சேவைகள் அளிப்பதற்கான வணிகத்திற்கான பொது ஒப்பந்தங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது அதன் பொறுப்பாகும் (GATS) இந்த குழுமம் உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள் எல்லோருக்கும் திறந்து வைத்ததாகும், மேலும் தேவைகளுக்கேற்றபடி துணைக்குழுமங்களையும் ஏற்படுத்திக்கொள்ளலாம்.[35] சேவைக் குழுவிற்கு மூன்று துணைக்குழுக்கள் உள்ளன: நிதி சேவைகள், வீட்டுக்குரிய ஒழுங்கு முறைகள், GATS விதிமுறைகள் மற்றும் தனிப்பட்ட கடமைகள்.[33] இதர குழுக்கள் பொதுக் குழுவில் பலவகை குழுக்கள், பணிக்குழுக்கள் மற்றும் பணி புரியும் கட்சிகள் உள்ளன.[36] குழுக்களின் விவரம் வணிகம் மற்றும் சூழல் வணிகம் மற்றும் மேம்பாடு (மிகக்குறைவாக மேம்பாடடைந்த நாடுகளுக்கான துணைக்குழு) வட்டார வணிக ஒப்பந்தங்கள். வெளிக் கொடுப்பு நிலைதொடர்புள்ள கட்டுப்பாடுகள். வரவு செலவுத் திட்டம், நிதி மற்றும் நிர்வாகம். பணிகள் செய்யும் கட்சிகள் வாரிசாக ஏற்றல் அல்லது இணக்கம் பணிக் குழுக்கள் வணிகம், கடன் மற்றும் நிதி வணிகம் மற்றும் தொழில் நுட்பப்பரிமாற்றம் வணிக ஒப்பந்த உடன்பாட்டுக் குழு வணிக ஒப்பந்த உடன்பாட்டுக் குழு (TNC) தற்போது வணிக சுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருகிறது. அதன் தலைவர் உலக வணிக அமைப்பின் உயரதிகாரியாகும். இக்குழு தற்போது தோகா மேம்பாட்டு சுற்றின் பேச்சுவார்த்தைகளில் சமரசம் காண முயன்று வருகிறது.[37] வாக்களிப்பு முறை உலக வணிக அமைப்பு ஒரு நாடு, ஒரு வோட்டு முறையில் செயல்படுகிறது, ஆனால் இது வரை வோட்டு எடுப்பதற்கான சூழ்நிலைகள் எழவில்லை. பொதுவாக கருத்து ஒருமைப்பாட்டுடன் கூடிய முடிவுகள் எடுப்பதே முறையாகும், மற்றும் ஒப்புநோக்கத்துடைய சந்தையின் அளவே அவர்களுக்கு பேரம் பேசுவதற்கான வலிமையை அளிப்பதாகும். கருத்து ஒருமைப்பாட்டுடன் கூடிய முடிவுகளால் உள்ள நன்மையானது அதன் மூலமாக மிகவும் பரவலாக பங்கேற்பவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்ளும் வகையிலான முடிவுகளை ஏற்பதாகும். கருத்தொருமை கொண்ட முடிவுகள் எடுப்பதில் உள்ள குறைபாடுகளில் முடிவெடுப்ப்பதற்குண்டான நீண்ட நேரம் மற்றும் பல சுற்றுகள் கொண்ட பேச்சுவார்த்தைகளாகும். இறுதி முடிவுகளுக்கான ஒப்பந்தங்களில் கருத்தொருமை பெறாத பொருட்களுக்கு தெளிவற்ற இருசொல்படும் வார்த்தைகள் பயன்பாட்டினால் விளையக்கூடிய எதிர்கால குழப்பங் களும் அடங்கும். உண்மை நிலவரம் என்ன என்றால், உலக வணிக அமைப்பு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் அனைத்து உறுப்பினர்களின் கருத்தொருமையுடன் நடப்பதில்லை, ஆனால் நாடுகளின் சிறு சிறு குழுக்கள் நடத்தும் இயல்பான பேச்சுவார்த்தைகள் மூலமாக நடைபெறுகின்றன. இவ்வகை பேச்சுவார்த்தைகளை "பச்சை அறை" (Green Room) பேச்சுவார்த்தைகள் என அழைக்கப்படுகிறது, (ஜெனீவாவிலுள்ள உலக வணிக அமைப்பு மேலதிகாரியின் அலுவலக அறையின் வண்ணம்), அல்லது "சிறு -அமைச்சுகள்", இதர நாடுகளில் அவற்றை மேற்கொள்ளும் போது. இவ்வகை செயல்முறைகளை உலக வணிக அமைப்பின் மேம்பாடடைந்த் நாடுகளின் உறுப்பினர்கள் மிகவும் விமரிசனம் செய்துள்ளனர், ஏன் என்றால் அவர்கள் இந்த பேச்சுவார்த்தைகளில் இருந்து விலக்கி வைத்திருப்பதாகும். ரிச்சர்ட் ஹரோல்ட் ச்டீன்பேர்க் (2002) கூறுவது என்னவென்றால், உலக வணிக அமைப்பின் கருத்தொருமை கொண்ட ஆட்சி மாதிரி சட்டத்திற்குட்பட்ட துவக்க பேச்சுவார்த்தைகளுக்கு வழி வகுத்தாலும், இறுதி சுற்றுகளில் அவை ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளின் சக்தி வாய்ந்த பேரங்கள் காரணம் அவை அந்நாடுகளுக்கு சாதகமாக அமைகின்றன, அதனால் அது சம நிலையிலான மேம்பாடாக கருத இயலாது.[38] சிக்கல்களுக்கு தீர்வு காணல் 1994 ஆம் ஆண்டில், உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள் மர்ரகேஷ் ஒப்பந்தத்தில் கையிட்ட "இறுதி சட்டம்" என்ற தலைப்பின் கீழ் வழங்கிய தகராறுகளுக்கு தீர்வு காணல் (DSU) விதிமுறைகள் மற்றும் செயல் முறைகளை பற்றி நன்கு புரிந்து கொண்டதாக தெரிவித்தனர் மற்றும் அதை செயல்படுத்தவும் ஒப்புக்கொண்டனர்.[39] தகராறுகளுக்கு தீர்வு காண்பது என்பதை உலக வணிக அமைப்பின் பல வகை வணிகமுறைகளை தாங்கிப்பிடிக்கும் நடுவிலமைந்த தூணாக கருதுகின்றனர், மற்றும் "உலக பொருளாதார வளர்ச்சிக்கான அவர்களுடைய தனி பங்களிப்பாக அதை போற்றுகின்றனர்."[40] மேலும், உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள், அவர்களுடைய கூட்டு சார்ந்த உறுப்பினர்களில் யாரேனும் விதிமுறைகளை மீறியதாக நினைத்தால், அவர்களே நேரிடையாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், வணிக அமைப்பின் பலவகை தகராறுகளை தீர்வு காணும் முறையை பின்பற்றி அனுசரிப்பதாக வாக்களித்துள்ளனர்.[41] உலக வணிக அமைப்பின் தகராறுகளை தீர்க்கும் வழிமுறைகளை செயல்படுத்த, அதற்கான தனி DSB குழுக்கள், மேல்முறையீட்டு ஆணைக்குழு, உலக வணிக அமைப்பு செயலகம், நடுவர்கள், பிறர் சார்பற்ற வல்லுனர்கள் மற்றும் பல தனி நிறுவனங்கள் போன்றவை தேவைப்படும்.[42] இணக்கம் மற்றும் உறுப்பாண்மை நடைமுறையில் உலக வணிக அமைப்பின் உறுப்பினராக ஆவதென்பது ஒவ்வொரு நாட்டிற்கும் தனிப்பட்டதாகும், மேலும் அவ்வமைப்புடன் இணைவதற்கு நாட்டின் பொருளாதார மேம்பட்டு நிலை மற்றும் தற்போதைய வணிக செயல்பாட்டின் நிலைமையை பொறுத்திருக்கிறது.[43] இந்த நடவடிக்கை சுமார் ஐந்து ஆண்டுகள் எடுக்கலாம், சராசரியாக, ஆனால் அதற்கும் மேலும் ஆகலாம், அந்நாடு முழுதுமாக ஒத்திசைவு செய்யவில்லை என்றால் மற்றும் அரசியல் காரணங்கள் இடைஞ்சலாக இருந்தால்.[44] உலக வணிக அமைப்பின் தனிப்பட்ட செயல்முறையாக, இணைவதற்கு ஆர்வம் காட்டும் பிரிவினருக்கிடையே கருத்தொருமை இருந்தால் மட்டுமே அதற்கான ஒப்புதல் வழங்கப்படும்.[45] இணைவதற்கான செய்முறை உலக வணிக அமைப்புடன் இணைவதற்கு விருப்பம் கொண்ட நாடுகள் முதலில் அதற்கான விண்ணப்பத்தை பொதுக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும், உலக வணிக அமைப்பின் ஒப்பந்தங்கள் சார்ந்த மற்றும் தொடர்புள்ள அந்நாட்டின் அனைத்து வணிக விவகாரங்களையும் மற்றும் பொருளாதார கொள்கைகளைப் பற்றியும் குறிப்பிட்டு விளக்க வேண்டும்.[46] உலக வணிக அமைப்பிறகு அளிக்கும் விண்ணப்பம் ஒரு நிகழ்ச்சிப்பதிவுக் குறிப்பாக இருக்க வேண்டும், மேலும் அதனை அதில் ஈடுபாடுள்ள அனைத்து உலக வணிக அமைப்பு அங்கத்தினரும் கொண்ட செயற்குழு ஆராய்ந்து பார்க்கலாம்.[45] பின்னணி தகவல்களனைத்தையும் பெற்றுக்கொண்ட பிறகு, செயற்குழுவானது விண்ணப்பத்தில் அளித்த தகவல் மற்றும் உலக வணிக அமைப்பு விதிமுறைகளுக்கிடையே விளங்கும் வேறுபாடுகள் மீதுகவனம் செலுத்தும், மேலும் விண்ணப்பதாரரின் சர்வதேச மற்றும் உள்நாட்டு வணிக கொள்கைகள் மற்றும் சட்டங்களை கூர்ந்து ஆராயும். இந்த செயற்குழு, உலக வணிக அமைப்புடன் விண்ணப்பித்த நாடு இணைவதற்கான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை பரிந்துரைக்கும், மேலும் உலக வணிக அமைப்பின் விதிமுறைகளுடன் ஒத்திசைந்து செயல்படுவதற்கான கால அவகாசமும் நல்கும்.[43] இணக்கத்திற்கான இறுதி கட்டங்களில் விண்ணப்பமளித்த நாடு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கிடையே இருதரப்பு விவாதங்கள் மேற்கொள்ளப்படும் மற்றும் அதில் சலுகைகள் மற்றும் கட்டண அளவிற்கான விதிமுறைகள் மற்றும் சரக்குகள் மற்றும் சேவைகள் அளிப்பதற்கான சந்தையுடன் இணைவதற்கான கட்டுப்பாடுகள் குறித்து விளக்கப்படும். இரு தரப்பினரிடையே மட்டும் பேச்சுவார்த்தைகள் நடந்திருந்தாலும், புதிய அங்கத்தினரின் கடமைகள் பொதுவான பாகுபாட்டின்மை விதிமுறைகளின் படி, ஒரேபோல மற்றும் சமமாக மற்ற இதர உலக வணிக அமைப்பு உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.[46] இரு தரப்பினர்களுக்கிடையே ஆன பேச்சுவார்த்தைகள் முடிவுற்றதும், செயற்குழு பொதுக்குழுவிற்கு அல்லது அலுவலகப்பணித் தொகுதி கூட்டத்திற்கு ஒரு இணைப்பிற்கான தொகுப்பினை அளிக்கும், அதில் செயற்குழுவுடன் நடந்த அனைத்து கூட்டங்களைப் பற்றிய தொகுப்பு, இணைவதற்கான நெறிமுறை (அங்கத்தினருக்கான உறுப்பாண்மை ஒப்பந்த படிவத்தின் வடிவம்), மற்றும் பட்டியல்கள் ("கால அட்டவணை") உறுப்பினராகப்போகும் நாட்டின் கடமைகள். ஒரு முறை பொதுக்குழு அல்லது அலுவலகப்பணித் தொகுதி கூட்டம் இணைவதற்கான நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு விட்டால், விண்ணப்பித்த நாடு அதனுடைய பாராளுமன்றத்தில் இணைப்பிற்கான தொகுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும், அதற்குப்பிறகே அந்நாடு உறுப்பினராக சேர இயலும்.[47] உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்கள். உலக வணிக அமைப்பு 153 உறுப்பினர்களை கொண்டது. (உருகுவே சுற்றில் கலந்து கொண்ட 123 நாடுகளும் நிறுவிய நாள் அன்றே உறுப்பினராவதற்கு கையொப்பமிட்டனர், பின்னர் வந்தவர்கள் எல்லோரும் பிறகே உறுப்பினர்களாயினர்).[48] ஐரோப்பிய ஒன்றியத்தை சார்ந்த 27 நாடுகளும் ஐரோப்பிய சமுதாய பிரதிநிதிகள் என அறியப்பட்டனர். உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள் ஒரு இறையாண்மை வாய்ந்த நாட்டின் அங்கத்தினர்களாக இருக்கவேண்டும் என்பதில்லை. அதற்கு பதிலாக, அவை வெளிநாடுகளுடன் வர்த்தக உறவுகள் புரியும் மற்றும் சுங்கவரி வசூலிக்கும் ஒரு முழு சுயாட்சி கொண்ட தனி இடமாகவும் இருக்கலாம். இப்படித்தான் ஹாங் காங் (அதாவது "ஹாங் காங், சீனா" 1997) ஜிஏடிடி (GATT) அமைப்பில் ஒரு ஒப்பந்த நாடாக சேர்ந்தது, மற்றும் ரிபப்ளிக் ஒப் சீனா (ROC) (பொதுவாக தைவான் என அறியப்படுவது, அதன் சுயாட்சி நிலவரத்தை சீனா ஒத்துக்கொண்டதில்லை) உலக வணிக அமைப்பில் 2002 ஆம் ஆண்டில் "தனி சுங்கவரி விதிக்கும் தைவான், பெங்கு, கின்மேன் மற்றும் மட்சு நாடுகள் கூடிய" (சைனீஸ் தைபெய்) யாக அங்கம் வகிக்கின்றது.[49] உறுப்பினர்கள் அல்லாத பலர் (30) பார்வையாளர்களாக உலக வணிக அமைப்பில் உள்ளனர் மேலும் அவர்களையும் அங்கத்தினர் ஆக்கும் நடவடிக்கைகள் தற்போது நடந்துவருகிறது. ஈரான், ஈராக், மற்றும் ரஷ்ய நாடுகள் பார்வையாளர்களாகவே உள்ளனர் மேலும் அவர்கள் இன்னும் அங்கத்தினர்களாகவில்லை. ஹோலி சி என்ற இடத்தை தவிர, இதர நாடுகள் பார்வையாளர்கள் ஆனதிலிருந்து ஐந்து வருடங்களுக்குள் பேச்சுவார்த்தைகள் புரிந்து இணக்கம் செய்துகொள்ள வேண்டும். சில சர்வதேச அரசுகளுக்கிடையேயான நிறுவனங்களும் உலக வணிக அமைப்பின் பார்வையாளர்களாக அனுமதி பெற்றுள்ளனர்.[50] இது வரை 14 நாடுகள் மற்றும் 2 வட்டாரங்கள் உலக வணிக அமைப்புடன் அதிகாரபூர்வமான தொடர்புகளை வைத்துக்கொள்ளவில்லை. ஒப்பந்தங்கள் உலக வணிக அமைப்பு தற்போது சுமார் 60 வேறுபட்ட ஒப்பந்தங்களை மேற்பார்வையிட்டு வருகிறது, ஒவ்வொன்றும் சர்வதேச சட்ட உரை நிலை கொண்டவையாகும். இணக்கத்திற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் உறுப்பினர் நாடுகள் உலக வணிக அமைப்பின் அனைத்து ஒப்பந்தங்களிலும் கையொப்பமிட்டு அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்.[51] சில முக்கியமான ஒப்பந்தங்களைப்பற்றிய சிறிய குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வேளாண் தொழிலுக்கான ஒப்பந்தம் (AoA) வேளாண் தொழிலுக்கான ஒப்பந்தம் (AoA) 1995 ஆம் ஆண்டில் உலக வணிக அமைப்பு தொடக்கத்திலேயே செயல்படுத்தியது. இந்த ஒப்பந்தம் மூன்று மையக்கருத்துகளை கொண்டது, அல்லது "தூண்கள்": உள்நாட்டு ஆதாரம், சந்தையுடன் தொடர்பு மற்றும் ஏற்றுமதிக்கான மானியங்கள். சேவைகள் வழங்குவதற்கான பொது ஒப்பந்தம் (GATS) ஜிஏடிடி (GATT) அதாவது சரக்குகளில் வணிகம் செய்வதற்காக உருவாக்கிய கட்டணம் மற்றும் வணிக (முறைகளுக்கான) பொது ஒப்பந்தத்தை போலவே ஒரு உடன்பாட்டை சேவைகள் புரியும் தொழில்துறைக்கும் நீட்டுவதற்காகவே, சேவைகள் புரியும் வணிகத்திற்கான பொது ஒப்பந்த முறை (GATS) உருவானது. இந்த ஒப்பந்தம் ஜனவரி 1995 முதல் அமுலில் உள்ளது. அறிவுசார் சொத்துரிமைக்கான வணிகம் சார்ந்த நோக்கங்களுக்கான ஒப்பந்தம் (TRIPs) அறிவுசார் சொத்துரிமைக்கான வணிகம் சார்ந்த நோக்கங்களுக்கான ஒப்பந்தம் (TRIPs) பலவகை அறிவுசார் சொத்துரிமைக்கான (IP) குறைந்த அளிவிலான தர கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதைப்பற்றிய பேர நடவடிக்கைகள் 1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜிஏடிடி (GATT) பேச்சுவார்த்தைகளுடன் உருகுவே சுற்றின் இறுதியில் மேற்கொண்டது. துப்புரவு சார்ந்த மற்றும் தாவர-துப்புரவு சார்ந்த (SPS) ஒப்பந்தம் துப்புரவு சார்ந்த மற்றும் தாவர-துப்புரவு சார்ந்த ஒப்பந்தத்தை பயன் படுத்துவது குறித்தான - SPS ஒப்பந்தம் எனவும் அறியப்படுவது - உருகுவே சுற்றில் ஜிஏடிடி யின் பொது ஒப்பந்தத்தை பற்றிய பேரப் பேச்சுவார்த்தைகளின் போது நிகழ்ந்தது, மேலும் 1995 ஆம் ஆண்டில் உலக வணிக அமைப்பு நிறுவியதில் இருந்து செயலாக்கத்தில் உள்ளது. SPS ஒப்பந்தத்தின் கீழ், உலக வணிக அமைப்பு உணவுப் பொருட்களின் பாதுகாப்புடன் கூடிய பயன்பாட்டிற்கான தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கான எல்லைகளை தெளிவு செய்யும் கொள்கைகளை வெளியிட்டது (நுண்மை தீங்குயிரிகள், உயிர்கொல்லிகள், சோதனை செய்தல் மற்றும் விவரச்சீட்டுகளை பொருந்துதல்) மேலும் விலங்குகள் மற்றும் தாவர உடல்நலம் (இறக்குமதி செய்த பூச்சிகள் மற்றும் வியாதிகள்). வணிகத்தில் தொழில்நுட்ப தடைகள் குறித்த ஒப்பந்தம் (TBT) வணிகத்தில் தொழில்நுட்ப தடைகள் குறித்த ஒப்பந்தம் (TBT) என்பது உலக வணிக அமைப்பின் ஒரு சர்வதேச உடன்பாடாகும். உருகுவே சுற்றில் ஜிஏடிடி யின் பொது ஒப்பந்தத்தை பற்றிய பேரப்பேச்சுவார்த்தைகளின் போது அது நிகழ்ந்தது, மேலும் 1994 ஆம் ஆண்டிறுதியில் உலக வணிக அமைப்பு நிறுவிய போதிலிருந்து செயலாக்கத்தில் இருந்து வருகிறது. தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகள், தரக்கட்டுப்பாடுகள் மற்றும் சோதனை மேற்கொள்வது மற்றும் சான்றிதழ்கள் வழங்குவது போன்ற காரணங்களால் வணிகத்திற்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் நோக்குடன் இவை செயல்படுகின்றன".[52] விமர்சனம் உலக வணிக அமைப்பின் குறிக்கோளானது தடைகள் இல்லா வணிகத்தை மேம்படுத்தி பொருளாதார வளர்ச்சியை தூண்டுவதேயாகும். தடையிலா வணிகத்தைப்பற்றி திறனாய்வாளர்கள் கூறுவது என்னவென்றால் அதனால் பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கிடையே வருவாய் அளவுகள் ஒருங்குவதற்கு பதிலாக திசை விரிந்து செல்வதே (அதாவது பணக்காரன் மேலும் பணக்காரனாவான் ஆனால் ஏழை இன்னும் ஏழ்மையில் தவிப்பான்).[53] மார்டின் க்ஹோர், தேர்ட் வோர்ல்ட் நெட்வர்க் என்ற நிறுவனத்தின் இயக்குனர், சொல்வது என்னவென்றால் உலக வணிக அமைப்பு உலகப்போருளாதாரத்தை பாகுபாடில்லாமல் நிர்வாகம் புரிய தவறிவிட்டது என்றும் அதன் செயல்பாடுகள் பணக்கார நாடுகள் மற்றும் பல்நாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக வளைந்து கொடுப்பதாகவும், மேலும் அதனால் சிறிய நாடுகளிடம் பேரம் பேசுவதற்கான ஆற்றல் குறைவாக உள்ளதனால் அவர்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள் என்றும் கூறுகிறார். உருகுவே சுற்றில் உலக வணிக அமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் காரணமாக மேம்பாடடையும் நாடுகளுக்கு ஒரு பயனும் இல்லை என்றும், அதற்கான காரணங்களாக, தொழில்களுக்கான சந்தை நிலவரத்தில் முன்னேற்றம் காணவில்லை என்றும்; நெசவுத்தொழில்களுக்கு வழங்கிய பத்தியமுறையை கொஞ்சம் கொஞ்சமாக பின்வாங்கியதால் அவர்களுக்கு மெச்சும் படியாக எதுவும் நடக்கவில்லை என்றும்; கட்டணமில்லா தடைகள் அதாவது குவிப்பதற்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன என்றும்; மற்றும் உள்நாட்டு ஆதாரம் மற்றும் வேளாண் ஏற்றுமதிக்கான மானியங்கள் பணக்கார நாடுகளில் இப்போதும் மிகையாக உள்ளதாகவும் கூறுகிறார்.[54] இருந்தாலும் ஜகதீஷ் பகவதி உறுதியாக கூறுவதென்ன வென்றால், ஏழையர் நாடுகளில் தயாரிப்பாளர்களுக்கு கட்டணப் பாதுகாப்பு மிகையாக உள்ளதாகவும், மேலும் அந்நாடுகளும் பணக்கார நாடுகளை விட அதிகமாக குவித்தல் அல்லது கொட்டிவைத்தலுக்கு எதிராக நிறைய எண்களில் தாக்கலிடுவதாகவும் கூறுகிறார்.[55] இதர திறனாய்வாளர்கள் தொழிலாளர் உறவுகள் மற்றும் சூழல் சார்ந்த பிரச்சினைகளை மறந்தேபோய்விட்டனர் என்று சொல்கிறார்கள். ஸ்டீவ் சார்நோவித்ஸ், (Steve Charnovitz) குளோபல் என்வைரன்மென்ட் அண்ட் ட்ரேட் ஸ்டடி (Global Environment and Trade Study)(GETS) என்ற நிறுவனத்தின் இயக்குனர், உலக வணிக அமைப்பு "வணிகம் மற்றும் தொழிலாளர்கள் மற்றும் சூழல்களுக்கு இடையிலேயான கவலைகளுக்கு தீர்வு காணவேண்டும்" என்று நினைக்கிறார்.[56] மேலும், தொழிற் சங்கங்கள் மேம்பட்ட நாடுகளின் தொழில் உரிமைகள் சார்ந்த குறிப்புகளை ஏளனம் செய்கிறார், மேலும் அவர் கூறுவது என்ன என்றால், உலக வணிக அமைப்பு உலகமயமாக்கும் கொள்கையை எவ்வளவுக்கு எவ்வளவு முன்னுக்கு கொண்டு போகின்றதோ, அவ்வளவுக்கு அவ்வளவு சுற்று சூழலும் தொழிலாளர் உரிமைகளும் பின்னுக்கு தங்கி விடும் என்று.[57] இன்னொரு பக்கம், க்ஹோர் பதிலளிப்பது என்ன என்றால், "சூழல் மற்றும் தொழிற்சங்கங்கள் உலக வணிக அமைப்பு முறைகளில் நுழைந்தால், [...] கொள்கையளவில் சமூக மற்றும் பண்பாடு சார்ந்த விவகாரங்களுக்கும் இடம் அளிக்கலாமே"[58] பகவதியும் "பணக்கார நாடுகளின் புறக்கூட்டங்கள் அவர்களுக்கு சம்பந்தமில்லாத நிகழ்ச்சிநிரல்களை வணிக உடன்பாடுகளில் திணிப்பது அட்டூழியமாகும்" என்று விமர்சிக்கிறார்.[59] அதனால், கொலம்பியா பல்கலைக்கழகத்தை சார்ந்த பகவதி மற்றும் அரவிந்த் பணகரியா ஆகிய இருவரும், TRIPs என்ற செயல்பாட்டை உலக வணிக அமைப்பில் அறிமுகப்படுத்தியதை குறை கூறுகிறார்கள், இது போன்ற வணிகம் சாரா நிகழ்ச்சி நிரல்கள் ஒரு நாள் கட்டுக்கடங்காமல் போகலாம் மற்றும் அமைப்பை செயலிழக்க செய்யலாம் என்று ஆதங்கம் கொள்கின்றனர்.[60] இதர திறனாய்வாளர்கள் உலக வணிக அமைப்பின் முடிவுகள் எடுக்கும் முறையானது சிக்கலானதாகவும், பலனில்லாததாகவும், நிறுவனத்துடன் தொடர்பில்லாதது போலவும், மற்றும் உள்ளடங்காமல் இருப்பதாகவும், மேலும் அவர்கள் ஒரு சிறிய, இயல்பான வழிநடத்தி செல்லும் செயற்குழுவினை (ஒரு "ஆலோசனை மன்றம்") அமைத்து, அதன் மூலமாக உறுப்பினர் நாடுகளிடையே வணிக சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்கு சுமுகமாக கருத்தொரிமை ஏற்றெடுக்கும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்கலாம் என அறிவுறுத்துகின்றனர்.[61] தேர்ட் வேர்ல்ட் நெட்வொர்க் உலக வணிக அமைப்பு "மிகவும் ஒளிவு மறைவுடன் கூடிய சர்வதேச நிறுவனமாகும்" என அழைத்துள்ளது, ஏன் என்றால் "உலக வணிக அமைப்பு செயல்பாட்டு முறைகளில் பெரும்பான்மையினராக இருக்கும் மேம்பாடடைந்துவரும் நாடுகளுக்கு உண்மையாக தங்கள் அதிகாரத்தை பயன்படுத்த ஒரு வழிமுறையும் இல்லை"; நெட்வொர்க் மேலும் அழுத்திக் கூறுகிறது "குடியியல் சமூக குழுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அவர்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்த வாய்ப்புகள் அளிக்க வேண்டும் என்றும் மற்றும் அவற்றின் அடிப்படையில் கொள்கைகள் மற்றும் முடிவுகள் எடுக்கப் படவேண்டும் என வலியுறுத்துகிறது."[62] சில அரசு சாரா நிறுவனங்கள், வேர்ல்ட் பெதரலிஸ்ட் மூவ்மென்ட், உலக வணிக அமைப்பு மக்களாட்சியில் உள்ளது போல ஒரு பாராளுமன்றத்தை அமைத்து செயல் புரிவது நன்றாக இருக்கும் என்று வாதாடுகிறது, ஆனால் இதற்கு இதர திறனாய்வாளர்கள் செவி சாய்க்கவில்லை.[63] சில விடுதலை விரும்பிகள் மற்றும் சிற்றரசுகள், லுட்விக் வான் மிசெஸ் இன்ஸ்டிட்யூட் போன்ற ஆலோசகர்கள், உலக வணிக அமைப்பிணை எதிர்க்கின்றனர், அது ஒரு அதிகாரச் செருக்குள்ள மற்றும் முதலீட்டிற்கு எதிரான நிறுவனமாகும் என்றும், அது தடையில்லா வணிகத்திற்கு பதிலாக அரசியல் குறுக்கீடுகளுக்கு பெயர் போவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். லுட்விக் வான் மிசெஸ் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் தலைவர், லேவேல்லின் எச் ரோக்வேல் சிறியவர், கூறுவது . . . உலக வணிக அமைப்பு என்ன சொல்கிறது என்றால் அமேரிக்கா அந்நாட்டு ஏற்றுமதி செய்வோரை வெளி நாடுகளில் கிளை அலுவலகங்களை அமைப்பதை தடுக்க வேண்டும், அப்படி அவர்கள் செய்வதால் அவர்கள் அரசிற்கு கட்டவேண்டிய வருமான வரியில் 30% அளவிற்கு சேமித்து விதி விலக்கு பெறுகிறார்கள். இப்போது அமெரிக்க வரிவிகிதத்தை ஏற்றவேண்டும் மற்றும் இதர குறைபாடுகளை நீக்க வேண்டும் இல்லா விட்டால் பெரிய அளவில் மேலும் புதிதாக மானியங்களை அளிக்கும் நிலைமை ஏற்பட்டு அது நமது நாட்டின் ஏறுமதித்துறையை பெரிதும் பாதித்துவிடும். [...] சமீப காலமாக வெளிநாட்டினர் நமது நாட்டின் வளமை மற்றும் நாகரீகத்தை வெறுப்பவர்களைப்பற்றி நிறைய பேச்சுக்கள் அடிபடுகின்றன, மேலும் அவர்கள் பழிக்குப் பழியாக ஏதாவது ஒரு வழியில் நமக்கு பாதகம் விளைவிக்க பார்க்கிறார்கள். சொல்லப்போனால், இங்கே இன்னொரு வழங்குமுறை சுட்டிக்காட்டத்தக்கது, இவற்றில் இஸ்லாமிய தீவிரவாதிகள் ஈடுபடவில்லை; அவர்கள் தூதர்கள் மற்றும் ராஜதந்திரிகள் ஆவார், மற்றும் அவர்கள் சந்தேகப்படும் பட்டியலில் காணப்படும் பேர்வழிகள் அல்ல. [64] மேலும் பார்க்கவும் உலகமயமாக்குதலுக்கு எதிராக சர்வதேச வணிக மையம் சென்டர் வில்லியம் ராபர்ட் நார்த் அமெரிக்கன் ப்ரீ ட்ரேட் அக்ரீமென்ட் (NAFTA) காகிதம்-அல்லாத பாதுகாப்பு மானியம் | ஸ்விஸ் பார்முலா (வாய்ப்பாடு) வணிகக் கூட்டணி வாஷிங்டன் கருத்தொருமை 1999 ஆண்டில் நடந்த உலக வணிக அமைப்பு அலுவலகப் பணித் தொகுதி கூட்டத்திற்கு எதிராக கண்டன நடவடிக்கை உலகளாவிய நிர்வாக சட்டம் உலகமயமாக்கலும், சுகாதாரமும் உலகமயம் ஆமாம் போடும் மனிதர்கள் குறிப்புதவிகள் மற்றும் குறிப்புகள் கூடுதல் வாசிப்பு வெளி இணைப்புகள் அதிகாரபூர்வமான உலக வணிக அமைப்பு பக்கங்கள் — முதல் பத்தாண்டு செயல்பாடுகளின் சிறப்புக் கூறுகள், ஆண்டறிக்கை 2005 பக்கங்கள் 116-166 - உலக நாடுகள் / உலக வணிக அமைப்பு இணைந்த அமைப்பு உலக வணிக அமைப்பின் அரசு சார்ந்த பக்கங்கள் உலக வணிக அமைப்பு பற்றிய செய்தித்தாளில் வெளிவந்தன நேரடி நிகழ்சசி உலக வணிக அமைப்பு பற்றிய அரசு-சாரா நிறுவனங்களின் பக்கங்கள் - பரோடி ஒப் ஆபீசியல் வேர்ல்ட் ட்ரேட் ஆர்கனைசேசன் பேஜ் பை தி எஸ் மென் பகுப்பு:1995 நிறுவனங்கள் பகுப்பு:சர்வதேச வணிக நிறுவனங்கள் பகுப்பு:சர்வதேச வணிகம் பகுப்பு:உலக வணிக அமைப்பு பகுப்பு:உலக அரசு பகுப்பு:சுவிட்சர்லாந்தில் இருந்து இயங்கும் நிறுவனங்கள் பகுப்பு:மேற்கோள் வழுவுள்ள பக்கங்கள்-கூகுள் தமிழாக்கம்
உலக வணிக எப்பொழுது துவங்கப்பட்டது?
1995
340
tamil
83f5c039a
மைக்ரோசாப்ட் நிறுவனம்(Microsoft Corporation) அமெரிக்காவை மையமாக கொண்டு செயல் படும் ஓர் பன்னாட்டு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது உலகின் மிகப் பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. கணினிக்குத் தேவையான பல வகை மென்பொருட்களை தயாரிப்பது, மேம்படுத்துவது, உரிமை மற்றும் ஆதரவு அளிப்பது போன்ற செயற்பாடுகளை உடையது. வாசிங்டனில் உள்ள ரெட்மாண்ட் நகரத்தில் இதன் தலைமை இடம் உள்ளது. இதனை பில் கேட்சும் பவுல் ஆல்லெனும் ஏப்ரல் 4, 1975இல் நிறுவினர். வருமானத்தின் அளவுகொண்டு உலகின் மிகப்பெரும் மென்பொருள் ஆக்குனராக மைக்ரோசாப்ட் விளங்குகிறது.[4] உலகளவில் பங்குச்சந்தையில் மிகக் கூடுதலான மொத்தமதிப்பைக் கொண்டுள்ள நிறுவனமாகவும் இது விளங்குகிறது.[5]விண்டோஸ் இயக்குதளங்கள், மைக்ரோசாப்ட் ஆபிஸ் ஆகியவை இதன் முக்கிய உற்பத்தி பொருட்கள் ஆகும். அல்டைர் 8800விற்கு பேசிக் மொழிமாற்றி மென்பொருளை உருவாக்கி விற்கும் நிறுவனமாக மைக்ரோசாப்ட் முதலில் துவங்கப்பட்டது. பின்னர் எம்.எஸ்.டாஸ் எனும் இயக்குதளத்தை 1980களில் அறிமுகப்படுத்தி தனி மேசைக் கணினி இயக்கு தளம் தயாரிப்பில் முன்னணி வகித்தது. இதனையொட்டி மைக்ரோசாப்ட் விண்டோசு எனும் வரைகலைச் சூழல் இயக்குதளங்களை ஒன்றையடுத்து ஒன்றாக உருவாக்கி விற்பனை செய்தது. இதனால் மைக்ரோசாப்ட், "ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மேசையிலும் மைக்ரோசாப்ட்டின் மென்பொருள்" என்ற நிலையை எட்டியது. 1986இல் வெளியிட்ட ஆரம்ப பொது விடுப்புகள் மற்றும் பிந்தைய பங்கு விலை ஏற்றங்கள் காரணமாக மைக்ரோசாப்ட் தனது ஊழியர்களில் மூவரை பில்லியனர்களாகவும் 12000 பேரை மில்லியனர்களாகவும் ஆக்கியது. 1990களிலிருந்து பல நிறுவனங்களை கையகப்படுத்தியும் இணைத்தும் தன்னை இயக்குதள சந்தையிலிருந்து விரிவுபடுத்திக் கொண்டுள்ளது. 2011இல் இசுகைப் தொழில்நுட்ப நிறுவனத்தை $8.5 பில்லியனுக்கு வாங்கியுள்ளது; இதுவரை இதுவே மிகப்பெரும் வாங்குதலாகும்.[6] 2013இல் மைக்ரோசாப்ட் தனிமேசைக் கணினி மற்றும் மடிக்கணினி இயக்குதளங்களிலும் அலுவலக திறன்பெருக்கு மென்பொருள் பயன்பாட்டுச் செயலிகளிலும் (குறிப்பாக மைக்ரோசாப்ட் ஆபிஸ் உடன்) முதன்மைநிலையில் உள்ளது. தவிர தனிமேசைக் கணினிகளுக்கும் கணிவழங்கிகளுக்கும் பல்வேறு மென்பொருள் பயன்பாட்டுச் செயலிகளை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது. மேலும் இணைய தேடுபொறிகள், நிகழ்பட ஆட்டத் தொழிற்துறை ( எக்ஸ் பாக்ஸ் மற்றும் எக்ஸ் பாக்ஸ் 360 வழங்கல்களுடன்), எண்ணிமச் சேவைகள் சந்தை (எம்எஸ்என் மூலமாக), மற்றும் நகர்பேசிகள் (விண்டோஸ் போன் இயக்குதளம் மூலமாக) போன்றவற்றிலும் முதன்மைநிலை எய்த முயன்று வருகிறது. சூன் 2012இல் முதன்முறையாக மைக்ரோசாப்ட் தனிக்கணினி வழங்குனர் சந்தையில் தனது மைக்ரோசாப்ட் சர்பேஸ் கைக் கணினி யுடன் நுழைந்துள்ளது. 1990களில் மைக்ரோசாப்ட் முற்றுரிமை வணிகச் செயல்பாடுகளையும் போட்டிக்கெதிரான செய்முறைகளிலும் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. தனது மென்பொருளைப் பயன்படுத்த நியாயமற்ற கட்டுப்பாடுகளை கடைபிடித்ததாகவும் தவறான தகவல்களை தனது சந்தைப்படுத்துதல் முயற்சிகளில் பயன்படுத்தியதாகவும் வழக்குகள் போடப்பட்டன. அமெரிக்காவின் நீதித்துறையும் ஐரோப்பியக் குழுமமும் மைக்ரோசாப்ட் சட்டங்களுக்குப் புறம்பாக செயல்பட்டதாக கண்டறிந்தனர். நிறுவனம் "மைக்ரோசாப்ட்" என்ற பெயர் மைக்ரோ கம்ப்யூட்டர் சாப்ட்வேர் என்ற ஆங்கிலச் சொற்களின் இணைப்பாகும். சூலை, 1975இல் பில் கேட்சு பவுல் ஆல்லெனுக்கு எழுதிய கடிதத்தில் முதன்முதலில் "மைக்ரோ-சாப்ட்" எனக் குறிப்பிட்டுள்ளார்.[7]. தற்போதைய வடிவம் நவம்பர் 26, 1976 அன்று நியூ மெக்சிகோ மாநிலத்தில் பதியப்பட்டது[8].. நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள ரெட்மாண்டில் அமைந்துள்ளது. இதனால் மைக்ரோசாப்ட் சில நேரங்களில் ரெட்மாண்ட் நிறுவனம் என்றழைக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் இயக்கு தளம் விண்டோசு பல பதிப்புகள் வெளியிடப்பட்டு கணினி உலகில் ஓர் சீர்தரமாக விளங்குகிறது. இந்த நிறுவனத்தில் 88,000 ஊழியர்கள் உலகெங்கும் பல நாடுகளில் பணி புரிகின்றனர். சனவரி 14, 2000 முதல் இசுட்டீவ் பால்மர் இதன் தலைவராக பொறுப்பில் உள்ளார். 2014 பிப்ரவரி 4ஆம் தேதி அன்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக சத்ய நாதெல்லா என்பவர் அமர்த்தப்பட்டார். இவர் ஒரு இந்தியர். அதேபோல் மைக்ரோசாப்ட்டின் புதிய தலைவராக ஜான் தாம்சன் தேர்வு செய்யப்பட்டார். இதுவரை தலைவர் பதவி வகித்த பில்கேட்ஸ் இனிமேல் தொழில்நுட்ப ஆலோசகராகச் செயல்படுவார் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. வரலாறு வணிகச் சின்னத்தின் கூர்ப்பு இசுகாட் பேக்கர் வடிவமைத்த மைக்ரோசாப்ட் "பாக்-மான்" சின்னம், 1987 முதல் 2012 வரை பயன்படுத்தப்பட்டது.[9][10] 2006–2011இல் மைக்ரோசாப்டின் சின்னம்[10] 2011–2012இல் வணிகச்சின்னம்.[11] 2012- நடப்பு:ஆகத்து 23, 2012இல் அறிமுகப்படுத்திய சின்னம் "எண்ணிம இயக்க உலகையும்" மைக்ரோசாப்டின் "பல்வேறு பொருட்களின் பட்டியலையும்" பிரதிபலிக்கிறது.[12] மேற்சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்பு:மைக்ரோசாப்ட் பகுப்பு:அமெரிக்க வணிக நிறுவனங்கள் பகுப்பு:நாசுடாக்கில் பட்டியிலடப்பட்டுள்ள நிறுவனங்கள் பகுப்பு:கணினி வன்பொருள் நிறுவனங்கள்
மைக்ரோசாப்ட் நிறுவனம் யாரால் நிறுவப்பட்டது?
பில் கேட்சும் பவுல் ஆல்லெனும்
396
tamil
c2043a852
மொங்கோலியா அல்லது மங்கோலியா[5] (Mongolia) உலகின் இரண்டாவது பெரிய நிலஞ்சூழ் நாடாகும். இது ஆசியக் கண்டத்தில் அமைந்துள்ளது. இதன் வடக்கில் ரஷ்யாவும் தெற்கில் சீனாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் அரசியல் அமைப்பு நாடாளுமன்றக் குடியரசு ஆகும். உலான் பாட்டர் எனும் நகரமே இதன் தலைநகரமும் நாட்டின் மிகப் பெரிய நகரமும் ஆகும். வரலாறு மொங்கோலியா ஆனது பற்பல நாடோடிப் பேரரசுகளால் ஆளப்பட்ட ஒரு நாடாகும். இவ்வாறு இருந்த ஆட்சி 1206 ஆம் ஆண்டில் செங்கிஸ் கான் கான் என்பவரால் நிறுவப்பட்ட மாபெரும் மங்கோலியப் பேரரசு உருவாகும் வரையே நீடித்தது. யுவான் அரச மரபின் ஆட்சியின் பின் மங்கோலியப் பேரரசு சரிந்துவிட்டது, மீண்டும் மக்கள் நாடோடி வாழ்க்கை வாழ வேண்டியதாய் ஆயிற்று. பதினாறாம் நூற்றாண்டின் பின்பு, மங்கோலியா திபெத்திய பௌத்தத்தால் தாக்கமுற்றது. பதினேழாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் மங்கோலியாவின் ஒரு பகுதி குயிங் வம்சத்தால் ஆட்சி செய்யப்பட்டது. 1911 ஆம் ஆண்டில் குயிங் வம்சத்தின் ஆட்சி சரிந்த போது, மங்கோலிய நாடு சுதந்திரமடைந்த நாடாக பிரகடனம் செய்யப்பட்டது. எனினும் அவர்கள் மீண்டும் சண்டை செய்ய வேண்டி ஏற்பட்டது. அவர்களுக்கு சோவியத் யூனியன் மங்கோலியர்களுக்கு உதவி செய்தது. 1921 ஆம் ஆண்டில் மங்கோலிய நாட்டை உலக நாடுகள் சுதந்திர நாடாக ஏற்றுக் கொண்டன. மங்கோலியா இன்றும் கூட முக்கியமான கிராமப்புற நாடு ஆகும். மங்கோலிய செஞ்சிலுவை சங்கம் 1939 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் உலான் பத்தூரில் அமைந்துள்ளது. சோவியத் யூனியனின் கலைப்பின் பின்பு ரஷ்ய நாட்டின் மங்கோலியாவின் மீதிருந்த சுவாரசியம் குறைந்து கொண்டே சென்றது. தற்போது சீனாவும் தென் கொரியாவுமே மங்கோலியாவின் வர்த்தக மற்றும் அரசியல் பங்காளி நாடுகளாக உள்ளனர். புவியியலும் காலநிலையும் மங்கோலியா உலகின் ஈரானுக்கு அடுத்துள்ள மிகப் பெரிய பத்தொன்பதாவது நாடாகும். மங்கோலியா அதிகமாக புல்வெளிகளையும் காட்டுப் பிரதேசங்களையும் உள்ளடக்கியுள்ளது. இது மங்கோலியாவின் மொத்த நிலப்பரப்பில் 11.2% வீதமாகும். இங்கு சனவரி காலத்தில் வெப்பநிலை −30 °C (−22 °F) ஆகக் குறைகிறது. மாகாணங்கள் மங்கோலிய நாடு 21 மாகாணங்களாக அதாவது மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாகாணங்களும் அல்லது மாநிலங்களும் 329 மாவட்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன. அவையாவன ஆர்க்கன்காய் (Arkhangai) பயன் ஒல்ஜீ (Bayan-Ölgii) பயன்க்ஹோன்கோர் (Bayankhongor) புல்கன் (Bulgan) டார்க்கன்-யூல் (Darkhan-Uul) டொர்னொட் (Dornod) டொர்னோகொவி (Dornogovi) டுன்கொவி (Dundgovi) கொவி-அல்டை (Govi-Altai) கொவிசம்பர் (Govisümber) கேன்டீ (Khentii) கோவ்த் (Khovd) கோவ்ஸ்கொல் (Khövsgöl) ஒம்னொகொவி (Ömnögovi) ஓர்க்கோன் (Orkhon) ஒவொர்கான்கய் (Övörkhangai) செலெகெ (Selenge) சுக்பாடர் (Sükhbaatar) டொவ் (Töv) உவ்ஸ் (Uvs) சவ்கான் (Zavkhan) தேசிய விடுமுறைகள் சமயம் 2010 இல் நடந்த தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்களில், 53 வீதமானோர் பௌத்தர்கள் ஆவார்கள். அதுமட்டுமன்றி அங்கு சமய ஈடுபாடு இல்லாதவர்கள் 39% வீதமானோர் உள்ளார்கள். மொழிகள் மங்கோலியாவின் உத்தியோகபூர்வ மொழி மங்கோலியன் ஆகும். இது அங்குள்ள 95 வீதமான மக்களால் பேசப்படுகின்றது. இங்கு மங்கோலியன் சிரில்லிக் எழுத்துக்களே எழுதுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. வேளாண்மை 2002 ஆம் ஆண்டில், முப்பது வீதமான வீடுகளில் கால்நடை வளர்ப்பே அடிப்படையாக அமைந்திருந்தது. மங்கோலியாவில் உள்ள பல மேய்ப்பவர்களும் நாடோடி வாழ்க்கையே வாழ்ந்து வந்தனர். 2009 மற்றும் 2010 போன்ற ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான குளிரால் மங்கோலியா 96.7 மில்லியன் விலங்குகளை இழந்தது. மேற்கோள்கள் * பகுப்பு:நிலம்சூழ் நாடுகள் பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
மங்கோலியா நாட்டின் தலைநகரம் எது
உலான் பாட்டர்
236
tamil
51e8dc355
யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (~ 70 ஆண்டுகள்). மனிதர்கள் தவிர்ந்த மற்றைய விலங்குகளில் இதுவே அதிக நாட்கள் வாழும் தரைவாழ் விலங்கு ஆகும். யானைகள் மிகவும் வலிமையானவை. வேட்டை விலங்குகளும் காட்டுயிர்களின் உணவுப் படிநிலையில் உயர்நிலையிலுள்ளவைகளுமான சிங்கம் (அரிமா), புலி முதலியனவும் நெருங்க முடியாத வலிமை கொண்டவை. சிங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து, தனியாக வர நேரிடும் களைத்த அல்லது இளைத்த யானையைக் கொல்லும். ஆனால், இவ்வகை நிகழ்வுகள் மிகமிகக் குறைவே. யானைகள் குடும்பமாக வாழும். மேலும், இவை அதிக ஞாபக சக்தி கொண்டவை. யானைகளில் மூன்று சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன. அவை, ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், ஆசிய யானைகள் ஆகும். இவைகளுக்கிடையே சிறப்பான வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக, எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள்வரை உயிர்வாழ்கின்றன. ஆண் யானைக்குக் களிறு என்று பெயர். பெண் யானைக்குப் பிடி என்று பெயர். யானையின் குட்டியைக் கன்று என்றோ, குட்டியானை என்றோ சொல்வர். யானை உரக்க எழுப்பும் ஒலியைப் பிளிறுதல் என்பர். யானையினங்கள் ஆப்பிரிக்க யானைகள் ஆசிய யானைகளைவிட உருவத்தில் பெரியவை. பெரிய காது மடல்களைக் கொண்டுள்ளன. ஆப்பிரிக்க யானைகளில் ஆண், பெண் இரண்டும், தந்தங்களைக் கொண்டுள்ளன. ஆனால், ஆசியப் பெண் யானைகளில் தந்தம் அரிதாகவே காணப்படுகிறது. ஆப்பிரிக்க யானைகளின் முதுகுப்புறம், தலைக்கு அடுத்துச் சற்று உள்நோக்கி வளைந்தும், புடைத்த நெற்றி மேடுகள் இல்லாமல் சமமாகவும் இருக்கும். இவற்றின் துதிக்கையின் நுனியில் இரண்டு இதழ்கள் இருக்கும். ஆனால், முன்னங்கால்களில் நான்கு அல்லது ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் மூன்று நகங்களும் இருக்கும். ஆசிய யானைகளின் முதுகு சற்று உயர்ந்து மேடாக இருக்கும். நெற்றியில் இரு மேடுகளும், காது மடல்கள் சிறியனவாகவும் இருக்கும். துதிக்கை நுனியில் ஒரே ஓர் இதழும் இருக்கும் (மேல் புறம்). முன்னங்கால்களில் ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் நான்கு நகங்களும் இருக்கும். உணவும் வாழிடமும் யானைகள் இலையுண்ணிகள் அல்லது தாவர உண்ணிகள் ஆகும். இவை மூங்கில், கரும்பு போன்றவற்றை விரும்பி உண்கின்றன. இவை ஒரு நாளைக்கு 16 மணிநேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. மேலும், இவற்றின் செரிமானத் திறன் மிகவும் மந்தமானது. எனவே, இவை உண்பதில் 40 விழுக்காடே செரிமானம் ஆகிறது. எனவே, இவை நிறைய உணவு உட்கொள்ள நேரிடுகிறது. நன்கு வளர்ந்த யானைகள் நாள் ஒன்றுக்குச் சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன. உடலமைப்பு ஆண் யானைகள் பொதுவாக 3 மீட்டர் உயரமும் 6000 கிலோகிராம் எடையும் கொண்டவை. யானையின் தோல் மிகவும் தடிப்பானது. சுமார் 3 செ.மீ தடிப்பு இருக்கும். எனினும், மெத்தெனவே இருக்கும். இதனால், கொசு முதலியனவும் கடிக்கும். யானை வலுவான நான்கு கால்களைக் கொண்டிருக்கிறது. யானை பருமனான உடலைக் கொண்டிருந்தாலும் மலை மீதும், நெடுங்குத்தான இடங்களிலும் திறம்பட ஏறவும் இறங்கவும் வல்லது. "ஆனைக்கும் அடி சறுக்கும்" என்னும் பழமொழி, யானையின் நெடுங்குத்தான ஏற்ற இறக்கங்களில் அதன் நடைத்திறனைக் குறிப்பிட்டு எழுந்ததாகும். தும்பிக்கை யானையின் சிறப்பான உறுப்பு அதன் தும்பிக்கை. இது யானைகளில் மட்டுமே சிறப்பாகக் காணப்படுகின்றது. ஒருசில விலங்குகளிலே முன் மூக்குப் பகுதி சற்று நீண்டு இருந்தாலும் (நெடுமூக்குக் குரங்கு போல்), தும்பிக்கை போலும் நீண்ட உறுப்புடைய விலங்குகள் இல்லை. தும்பிக்கையானது மொத்தம் 40,000 தசைகளால் ஆனது. இது எல்லாப்புறங்களிலும் வளையக்கூடியது. தும்பிக்கையின் நுனியில் யானை மூச்சுவிடும் மூக்குத் துளைகளும், சின்னஞ்சிறிய, மிகவும் நுண்ணுணர்வு உள்ள விரல் நீட்சியும் இருக்கின்றன.[1] தும்பிக்கையால் சிறு குச்சி முதல் பெரிய மரம் வரை தூக்க முடியும். இவை பொதுவாக உணவை எடுப்பதற்கும் நீர் பருகுவதற்கும் உதவுகின்றன. பகை விலங்குகளின் தாக்குதலையும் யானை தும்பிக்கையால் எதிர்த்து முறியடிக்கிறது. கழுத்து குட்டையாக இருப்பதால் தும்பிக்கையின் முக்கியத்துவம் மிகப் பெரியது. தந்தம் யானைகள் இரண்டு தந்தங்களைக் கொண்டுள்ளன. இவைகளுக்கு யானைக் கோடு என்று பெயர். இந்த யானைக் கோடானது ஆசிய இந்திய யானைகளில் ஆண் யானைகளுக்கு (களிறுக்கு) மட்டுமே உண்டு பெண் யானைகளுக்குக் (பிடிக்குக்) கிடையா. ஆனால் ஆப்பிரிக்கக் காட்டு யானைகளில் ஆண் பெண் ஆகிய இருபால் யானைகளுக்கும் (களிறு, பிடி ஆகிய இரண்டிற்கும்) கோடு உண்டு. சுமத்ரா போர்னியோ பகுதிகளில் வாழும் யானை, இலங்கையின் யானைகளில் ஆண் பெண் (களிறு, பிடி) ஆகிய இருபால் விலங்குகளுக்கும் பெரும்பாலும் யானைக் கோடு கிடையா. யானைக் கோடானது யானையின் கடைவாய்ப் பற்களின் நீட்சியாகும். இதனால் இவைகளுக்கு யானைகளின் எயிறு அல்லது தந்தம் என்றும் பெயர் (எயிறு, தந்தம் என்றால் பல் என்று பொருள்). தந்தங்கள் 3 மீட்டர் (10 அடி) வரை வளரக்கூடியவை. மேலும் இவை 90 கிலோகிராம் எடை வரை இருக்கலாம். இத் தந்தங்கள் வியாபாரத்திற்காகவும் பயன்படுகின்றன. பல யானைகளைக்கொன்று எடுக்கப்பட்ட ஆறு டன் தந்தங்களை எதியோப்பியா நாடு 2015 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் தீயிட்டு அழித்தது.[2] தோல் யானையின் தோல் மிகவும் தடிப்பானது. உடலின் பெரும்பாலான பகுதிகளில் தடித்த தோல் காணப்படுகிறது. தோலின் தடிமன் ஏறத்தாழ இரண்டரை சென்டிமீட்டர் இருக்கும். எனினும் இதன் வாயைச் சுற்றியும் காதின் உட்பகுதியிலும் தோல் மெல்லியதாக உள்ளது. பொதுவாக ஆசிய யானைகளின் தோல் ஆப்பிரிக்க யானைகளை விட கூடுதலான முடியைக் கொண்டுள்ளது. யானைகள் பொதுவாக சேற்றையோ மண்ணையோ உடல் முழுதும் பூசிக் கொள்கின்றன. இது யானைச் சமூகத்தின் ஒரு முக்கியக் குணம் ஆகும். இது யானையின் தோலை சூரிய வெப்பத்தில் இருந்தும் கதிர் வீச்சில் இருந்தும் காத்துக் கொள்ள உதவுகிறது. யானையின் தோல் தடித்து இருப்பினும் இதன் உணர்திறன் அதிகம். இதனாலேயே யானைகள் சேற்றையோ அல்லது குளித்த பின் மண்ணை வாரித் தூற்றிக் கொள்கின்றன. கால்கள் யானையின் பெரிய உடலைத் தாங்குதற்கு ஏற்ப இவை வலிமையான கால்களைக் கொண்டுள்ளன. இவற்றின் கால்கள் செங்குத்தாக இருப்பதாலும் அகன்ற பாதங்கள் இருப்பதாலும் இவை நிற்பதற்கு தசையாற்றல் அதிகம் தேவையில்லை. எனவே இவற்றால் நீண்ட நேரம் இளைப்பாறாமல் நிற்க இயலும். ஆப்பிரிக்க யானைகள் நோயுற்றாலோ அல்லது காயம் பட்டாலோ தவிர பெரும்பாலும் அமர்வதில்லை. ஆனால் ஆசிய யானைகள் அடிக்கடி இளைப்பாறுகின்றன. யானை அகன்ற வட்டமான அடியைக் (பாதம்) பெற்றுள்ளது. ஆப்பிரிக்க யானைக்கு பின்னங்கால்களில் மூன்று உகிர்களும் (நகங்கள்) முன்னங்கால்களில் நான்கும் உள்ளன. ஆசிய யானைக்கு பின்னங்கால்களில் நான்கும் முன்னங்கால்களில் ஐந்துமாக உகிர்கள் உள்ளன. யானைகளால் நன்கு நீந்தவும் ஏறவும் முடியும். இவற்றால் குதிக்க இயலாது. காதுகள் யானைகள் நன்கு பெரிய அகன்ற மடல் போன்ற காதுகளைக் கொண்டுள்ளன. இவை யானையின் உடல் வெப்பநிலையைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. யானையின் காதுகள் இரத்த நாளங்கள் நிரம்பியனவாய் உள்ளன. வெப்பம் மிகுந்த இரத்தம் காதுகளில் பாயும் போது சுற்றுப்புறக் காற்று பட்டு குளிர்கிறது. பின் இது உடலுக்குள் சென்று வெப்பநிலையைக் குறைக்கிறது. இரத்தச் சுழற்சியின் காரணமாக இச்செயல் தொடர்ந்து நிகழ்ந்து வெப்பநிலை கட்டுக்குள் வைக்கப்படுகிறது. இதனாலேயே யானைகள் எப்போதும் காதுகளை அசைத்துக் கொண்டே இருப்பதைக் காணலாம். வளர்ந்த யானைக்காதுகளின் மேல் ஓரம் ஆசிய யானைக்கு வெளிப்புறம் மடிந்து இருக்கும், ஆப்பிரிக்க யானைக்கு உட்புறம் சுருண்டிருக்கும்.[3] அறிவாற்றல் தரையில் வாழும் விலங்குகளில் யானையின் மூளையே மிகவும் பெரியதாகும். இது ஐந்து கிலோ கிராமுக்கும் சற்று கூடிய எடையைக் கொண்டது. யானைகள் நினைவாற்றல் மிக்கன. விலங்குகளில் முதனிகளுக்கும் டால்பின்களுக்கும் அடுத்து யானைகளே அறிவாற்றல் நிரம்பியவையாகக் கருதப்படுகின்றன. மனிதர்களுக்கு அடுத்தபடியாக அறிவிற்சிறந்தவையாக யானைகள் கூறப்படுகின்றன. யானைகளின் மூளையும் அமைப்பிலும், நுட்பத்திலும் சிறந்தவை. கருவிகளைப் பயன்படுத்தவும் கற்றுக் கொள்கின்றன. பொதுவாக யானை இரக்கவுணர்ச்சி கொண்டது.[4] புலன் உணர்வு யானைகள் மிகச்சிறந்த கேட்கும் திறனையும் மோப்பத் திறனையும் பெற்றுள்ளன. யானையின் கண் சற்று கிட்டப்பார்வை கொண்டது. எனவே, ஒரு யானை தன் பார்வையை விட கூர்மையான கேட்பு சக்தியையும், நுட்பமான மோப்பத்திறனையுமே நம்பி வாழ்கிறது.[5] இவற்றின் தும்பிக்கையும் உணர்திறன் மிக்கது. இவற்றின் காதுகள் மட்டுமன்றி தும்பிக்கையும் அதிர்வுகளை உணர வல்லது. இவற்றின் பாதங்கள் மிகக் குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளையும் உணர வல்லன. சமூக வாழ்க்கை களிறுகளின் சமூக வாழ்க்கை முறையும் பிடிக்களின் வாழ்க்கை முறையும் வேறுபட்டது. களிறுகள் தான் பருவம் எய்தும் வரை தன் தாய் உள்ள குழுவோடு வாழும், பின் பெரும்பாலும் தனியாகவே வாழ்கின்றன. ஆனால் பிடிகள் நன்கு பிணைப்பான குடும்பமாக தாய், சகோதரி, மகள் என வாழ்கின்றன. இனப்பெருக்க காலங்களில் பருவமெய்திய பிடியும் தனித்துக்காணப்படும். தன்னுணர்வு யானைகள் தன்னுணர்வு கொண்டவை. இது கண்ணாடிச் சோதனை மூலம் நிறுவப்பட்டுள்ளது. யானைகள் முன் கண்ணாடியை வைக்கும் போது இவை தங்களை அடையாளம் கண்டுகொள்கின்றன. இத்திறன் இதுவரை மதிமாக்கள், சில குரங்கினங்கள், டால்பின்களில் மட்டுமே கண்டறியப் பட்டுள்ளது.யானைகள் ஒருவர் சுட்டிக்காட்டுவதைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவை என்று சிம்பாப்வேயில் பழக்கப்பட்ட யானைகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.[6] இனப்பெருக்கம் யானையின் சினைக்காலம் 22 மாதங்கள் ஆகும். இதுவே பாலூட்டிகளில் மிக நீண்ட சினைக்காலம் ஆகும். பொதுவாக இவை ஒரேயொரு கன்றையே ஈனுகின்றன. இரட்டைகள் பிறப்பது மிகவும் அரிது. பிறந்த யானைக் கன்றானது 90 – 115 கிலோகிராம் எடை வரை இருக்கும். யானை ஈனும் முன்னும், ஈனும் பொழுதும், ஈன்ற பின்னரும் அதனைச் சுற்றிலும் மற்ற வளர்ந்த யானைகள் இருந்து மிகவும் உதவுகின்றன. யானைக்கன்று பிறந்ததில் இருந்து, அது யானைக் கூட்டத்தாலேயே வளர்க்கப்படுகின்றது. அச்சுறுத்தல்கள் வேட்டையாடுதல் யானைகளுக்கு முக்கியமான அச்சுறுத்தல் வேட்டையாடுதல் ஆகும். யானைகள் அவற்றின் தந்தங்களுக்காக வேட்டை ஆடப்படுகின்றன. பெரியவையும், நீண்ட காலம் வாழுவனவும், குறைவான வேகத்தில் இனம் பெருகுவனவுமான யானைகளுக்கு, அளவு மீறி வேட்டையாடுதல் பெரும் பாதிப்பை எற்படுத்துகின்றது. இவை பெரிதாக இருப்பதனால் எளிதில் மறைந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு யானையும் வளர்ந்து இனம் பெருக்குவதற்குப் பல ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வொரு யானைக்கும் சராசரியாக நாளொன்றுக்கு 140 கிலோகிராம் (300 இறாத்தல்) இலை தழைகள் தேவைப்படுகின்றது. புலி, சிங்கம் போன்ற பெரிய கோண்மாக்கள் அழிக்கப்படுவதாலும் யானைகளின் உணவுக்குப் போட்டியாக உள்ள சிறய தாவர உண்ணிகள் பெருகி தாவரங்களைப் பெருமளவில் அழிப்பதால் யானைகளுக்கு உணவு பெறுவது கடினமாகின்றது. யானைகள் மனிதனால் கொல்லப்படுவதைத் தவிர பிற விலங்குகளால் உணவுக்காகக் கொல்லப்படுவது அரிது. வாழிடம் சுருங்குதல் யானைகளின் வாழிடங்கள் அழிக்கப் படுவதும் மற்றொரு முக்கியமான அச்சுறுத்தல் ஆகும். மனிதர் வேளாண்மை விரிவாக்கத்துக்காக யானைகளின் வாழிடங்களான காடுகளை அழித்துவருகிறார்கள். இது மனிதர்களின் நலனுக்கும் யானைகளின் நலன்களுக்குமிடையே முரண்பாடுகளை உருவாக்குகின்றது. எடுத்துக்காட்டாக யானைகள் புதிய வேளாண்மைக் குடியேற்றங்களுக்குள் நுழைந்து பயிர்களை அழித்துவிடுவதுடன் மக்களுக்கு உயிராபத்தையும் ஏற்படுத்துகின்றன. இவ்வாறான முரண்பாடுகளால், இலங்கையில் சராசரியாக ஆண்டொன்றுக்கு 150 யானைகளும், 100 மனிதர்களும் இறப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. காடழிப்பு யானைகளின் வாழிடத்தையும் குறைக்கின்றது. ஆசிய யானைகளின் அழிவுக்கான முதன்மைக் காரணம் வாழிடங்கள் இழக்கப்படுவதே என்று கூறப்படுகிறது. யானைகள் வாழ்வதற்கு பெரிய அளவிலான காட்டுப்பகுதிகள் தேவைப்படுகின்றன. ஏனெனில், யானைகள் கூட்டமாக ஒரு பகுதிக்குள் புகுந்து மரங்களையும் செடி கொடிகளையும் பெருமளவில் அழித்து உண்கின்றன. பின்னர் வேறிடத்துக்குச் செல்கின்றன. இவ்வாறு புதிய இடங்களுக்குச் சென்று அழிக்கப்பட்ட காடுகள் மீண்டும் வளர்ந்ததும் திரும்பவும் அதே இடத்துக்கு வந்து உணவைப் பெறுகின்றன. வாழிடங்களின் அளவு குறையும் போது, மிக விரைவிலேயே உணவு முடிவடைந்து விடுகிறது.[7] மனிதர்களும் யானைகளும் யானைகள், மனிதர்களினால் சட்டத்துக்கு அமைவாகவும், எதிராகவும் கொல்லப்படுவதனால், யானைகளின் உடலமைப்பில் எதிர்பாராத விளைவுகளும் ஏற்படுகின்றன. ஆப்பிரிக்காவில் தந்தங்களுக்காக வேட்டையாடுபவர்கள், பெரிய தந்தங்களுள்ள யானைகளையே வேட்டையாடுவதால் எஞ்சியிருக்கும் யானைகள் சிறிய தந்தங்கள் உள்ளவையாக அல்லது தந்தங்கள் இல்லாதவையாக உள்ளன. புதிதாகப் பிறக்கும் குட்டிகளும் இவற்றின் மூலமாகவே பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரிப்பதால் புதிய தலைமுறைகளில் தந்தமில்லாத் தன்மையை உருவாக்கும் மரபணுக்கள் கூடுதலாகிப் பெருமளவிலான தந்தமில்லா யானைகள் பிறப்பதற்கு வழியேற்படுகிறது. 1930ல் 1% ஆக இருந்த இவ்வாறான யானைகளின் தொகை இப்போது சில பகுதிகளில் 30% வரை அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் தந்தமில்லாத் தன்மை என்பது ஒரு அரிதான இயல்புப் பிறழ்வாக இருந்த நிலை மாறி இப்போது பொதுவான மரபுவழி இயல்பாக மாறிவருகிறது. இறப்பு இருதயக் கோளாறு, மாரடைப்பு, மூளையில் இரத்தக்கட்டி போன்றவற்றால் யானைகள் இறக்கக்கூடும்.[8] சங்க இலக்கியங்களில் யானை தமிழ் சங்க இலக்கியங்களில் யானையை, 170க்கும் மேற்பட்ட பெயர்களில் குறிப்பிடுகிறார்கள்.விரிவாக காணலாம். அவைகளில் சில வருமாறு; 1. யானை, 2. வேழம், 3. களிறு, 4. பிளிறு, 5. கலபம், 6. மாதங்கம், 7. கைமா, 8.உம்பல் - , 9. வாரணம், 10. அஞ்சனாவதி, 11. அத்தி, 12. அத்தினி, 13. அரசுவா, 14. அல்லியன், 15. அனுபமை, 16. ஆம்பல், 17. ஆனை, 18. இபம், 19. இரதி, 20. குஞ்சரம் / இராசகுஞ்சரம், 21. இருள், 22. தும்பு, 23. வல் விலங்கு, 24.கரி, 25.அஞ்சனம்,26.நாகம் (கதநாகம்), 27. பழமொழிகளும் சொலவடைகளும் தமிழில் யானை பற்றிய பழமொழிகளும் சொலவடைகளும் இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. பழமொழிகள் யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன். யானைக்கும் அடி சறுக்கும். யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே யானை கறுத்தாலும் ஆயிரம் பொன் சொலவடைகள் யானைப்பசிக்கு சோளப்பொரியா? யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டது போல துணை நூற்பட்டியல் Check date values in: |date= (help) மேற்கோள்கள் இவற்றையும் காண்க யானையின் தமிழ்ப்பெயர்கள் குருவாயூர் கேசவன் புற இணைப்புகள் * பகுப்பு:ஒலிக்கோப்பு உள்ள கட்டுரைகள்
யானையின் கர்ப்பகாலம் எத்தனை நாட்கள்?
22 மாதங்கள்
8,015
tamil
d9da39b42
செம்மறியாடு (Sheep, Ovis aries) என்பது, நாலுகால், இரைமீட்கும், பாலூட்டியாகும். எல்லா இரைமீட்கும் விலங்குகளையும் போலவே, இதுவும் ஆர்ட்டியோடக்டிலா என்னும் இரட்டைக் குளம்புள்ள விலங்கின வரிசையைச் சேர்ந்தது. செம்மறியாடு என்பது தொடர்புடைய பல இனங்களைக் குறித்தாலும் அன்றாடப் பயன்பாட்டில் இது பெரும்பாலும் ஆவிஸ் ஏரீஸ் என்னும் இனத்தையே குறிக்கிறது. இதனை உள்ளடக்கிய பேரினத்தில் மிக அதிகமாகக் காணப்படுபவை வளர்ப்புச் செம்மறியாடுகளே. உலகில் இவற்றின் எண்ணிக்கை ஒரு பில்லியன் அளவுக்கு இருக்கலாம் என்கின்றனர். இவை ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் காணப்படுகின்ற மோஃப்லோன் (mouflon) எனப்படும் காட்டுச் செம்மறித் துணை இனத்திலிருந்து தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. வேளாண்மைத் தேவைகளுக்காக மிகப் பழங்காலத்திலேயே வளர்ப்பு விலங்கு ஆக்கப்பட்ட இவ்வினம் கம்பளி, இறைச்சி, பால் என்பவற்றுக்காக வளர்க்கப்படுகின்றது. வேறெந்த விலங்கிலும் அதிகமாக செம்மறியாட்டுக் கம்பளியே பயன்படுகின்றது. ஆஸ்திரேலியாவில் ஒரு செம்மறி ஆட்டிலிருந்து 45 கிலோ கம்பளி வெட்டு எடுக்கப்பட்டது.[1] செம்மறி ஆடு வளர்ப்பானது உலகிலுள்ள பெரும்பாலான மனித குடியிருப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றது. இதுவே பல நாகரீகங்களின் அடிப்படையாக அமைந்திருந்தது. புது யுகத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தெற்கு மற்றும் தென் மத்திய அமெரிக்க தேசங்கள் மற்றும் பிரித்தானியத் தீவுகள் ஆகியன ஆடு வளர்ப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. ஆடுகளின் குழுவிற்கு மந்தை (herd or flock) எனவும் அதன் இளம் குட்டிக்கு கன்று (calf) எனவும் அழைக்கப்படுகின்றது.பண்ணையத் தொழில் வரலாற்றில் செம்மறியாடு ஒரு முக்கிய விலங்காக இடம்பெற்று வந்திருக்கிறது. மேலும் மனித கலாச்சாரத்துடனுடன் மிக நெருக்காமான இவ்விலங்கு திகழ்கிறது. பண்புகள் கொம்புகள் வளர்ப்புச் செம்மறியாடுகள் சிறு அசைபோடும் பிரானிகளாகும். வழக்கமாக செம்மறியாட்டில் கம்பளி என அழைக்கப்படும் நெருக்கமாக வளர்ந்த உரோமங்கள் காணப்படுகிறது. கொம்புகள் வளர்ந்த பின் சுருண்டு சுருள் வடிவில் காணப்படும். வளர்ப்புச் செம்மறியாடுகள் அதன் மூதாதைகள் மற்றும் தொடர்புடைய காட்டினங்களிலிருந்து பல்வேறு பண்புகளில் வேறுபடுகின்றன. வீட்டில் வளர்ப்பதற்கு ஏற்ற தனித்துவமான மரபியல் பண்புகளால் மனித இனம் இதனை வளர்ப்புப் பிரானியாக தேர்ந்தெடுத்திருக்கக் கூடும் [2] [3]. ஒரு சில பழமையான செம்மறியாட்டு இனங்கள் அவற்றினுடைய காட்டு உறவுமுறை விலங்குகளின் பண்பாகிய குறுகிய வால்கள் போன்ற சில குணாதிசயங்களைத் தக்கவைத்திருக்கின்றன. வருக்கத்தைப் (breeds) பொருத்து பெரும்பாலான செம்மறி ஆடுகளுக்கு கொம்புகள் இருப்பதில்லை. சில இனங்களில் ஆண் பெண் இரண்டுக்கும் கொம்புகள் காணப்படுகின்றன. சில இனங்களில் ஆண் செம்மறி ஆடுகளுக்கு மட்டும் கொம்புகள் காணப்படுகின்றன. பெரும்பாலான கொம்புடைய ஆடுகளுக்கு ஒரு சோடி கொம்புகளும் அரிதாக சில இனங்களில் பல கொம்புகளும் காணப்படலாம் [4]. உரோமம் மற்றும் நிறங்கள் மற்றொரு தனித்துவமான பண்புக் கூறு நிறம் ஆகும்.செம்மறியின் காட்டு உறவு விலங்குகளிலிருந்து நிறத்தால் பரந்துபட்ட மாறுபாடு காணப்படுகிறது. காட்டின செம்மறியாடுகளில் நிற மாறுபாடு மிகவும் குறைவாகவே உள்ளது அதாவது பெரும்பாலும் பழுப்பு சாயல்களில் மாறுபாடுகள் மட்டுமே காப்படுகிறது. ஆனால் வளர்பின நாட்டுச் செம்மறியாடுகளில் அவற்றுக்குள்ளேயே தூய வெள்ளை முதல் கருமையான இன்னட்டு நிறம் வரையிலான பல்வேறு நிறங்கள் மட்டுமல்லாமல் பழுப்பு மற்றும் சீரான புள்ளிகள் அல்லது திட்டு திட்டாகப் பல வண்ணங்களும் காணப்படுகிறது[5][6] .எளிதாக நிறமேற்றக்கூடிய வெள்ளை உரோமம் கொண்ட செம்மறி ஆடுகள் பழக்கப்படுத்தக்கூடியதாக இருந்ததாலும் ஆரம்ப நிலையில் இவ்வினங்களே பரலால் வளர்க்க வளர்க்கப்பட்டது. மேலும் மதிப்பு வாய்ந்த வெள்ளைக் கம்பளியும் இதன் விரைவான பரவலுக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தன.எனினும், நிறமுடைய ஆடுகளின் பல நவீன இனங்கள் தற்போது வளர்க்கப்பட்டுவருகின்றன. வெள்ளை செம்மறி ஆட்டுமந்தைகளில் ஒரு சில நிறமுடைய ஆடுகளும் குறைந்தளவு காணப்படுகின்றன . இது வெள்ளளைப் பண்புக்குரிய ஒடுங்கிய (recessive) நிலையாகும் [5][6] [7][8].வெள்ளை நிற கம்பளிகள் வணிகச்சந்தைகளில் அதிக மதிப்புமிக்கதாக இருப்பதால் அனைவராலும் விரும்பத்தக்கதாக உள்ளது. உரேமத்தின் இயல்புகள் இனங்களுக்குள்ளேயே அடர்த்தியான அதிக சுருள்களைக் கொண்டது முதல் நீண்ட முடி போன்றது வரை பரவலாக மாறுபடுகிறது. கம்பளியில் காணப்படும் இது போன்ற வேறுபாடுகள் மற்றும் தரம் ஒரே மந்தைக்குள் இருக்கும் செம்மறியாடுகளில் வேறுபட்டதாக இருக்கின்றன. எனவே உரோமங்களின் நிறம் அடிப்படையிலான தரம் பிரித்தல் வணிகநோக்கில் முக்கியத்துவம் பெறுகிறது. [9] உயரம் மற்றும் எடை இனங்களைப் பொருத்து செம்மறியாடுகளின் உயரம் மற்றும் எடையளவுகளில் மாறுபாடுகள் காணப்படுகின்றன. வளர்ச்சி வீதம் மற்றும் முதிர்ச்சியடைந்த செம்மறியாடுகளில் நல்ல மரபுத்தன்மை காணப்படுவதால் இனப்பெருக்கத்திற்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றன [9].இனச்சேர்க்கைக்காக வளர்க்கப்படும் பெண் செம்மறி ஆடு (Ewes) கிட்டத்தட்ட 45 கிலோகிராம் முதல் 100 கிலோகிராம் (100 and 220 lb) வரையுள்ள எடையளவுகளில் காணப்படும். இனப்பெருக்கத்திற்காக வளர்க்கப்படும் ஆண் செம்மறி ஆடு (rams) 45 கிலோகிராம் முதல் 160 கிலோகிராம் (100 and 220 lb) வரையுள்ள எடையளவுகளில் இருக்கும் [10]. பற்களும் வாழ்நாளும் செம்மறி ஆட்டினங்களில் அதன் பற்களுக்கும் வாழ்நாளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இளம் செம்மறி ஆட்டில் அனைத்து உதிர்பற்களும் முளைத்திருக்கும் நிலையில் 20 பற்களைக் கொண்டிருக்கும் [11]. முதிர்ச்சியடைந்த செம்மறியில் 32 பற்கள் காணப்படும்.மற்ற அசைபோடும் விலங்குகளைப் பொலவே, கீழ்த்தாடையில் மட்டுமே பற்கள் காணப்படுகிறது. மேல் தாடை ஒரு கடினமான பற்களற்ற மெத்துத் திண்டு போல காணப்படுகிறது.இப்பற்கள் இலை தளைகளை நன்றாகப் பற்றிக்கொள்ள உதவுகிறது. பின்பற்கள் அவற்றை அரைத்து பின்னர் முழுங்குகின்றன. இசைபோடும் விலங்குகளில் எட்டு கீழ்த்தாடை வெட்டுப் பற்கள் காணப்படுகின்றன. ஆனால் எட்டு பற்களில் ஆறைத் தவிர மற்ற இரு பற்கள் மாறுபட்டுள்ளதாக சில சர்ச்சைகளும் உள்ளன. செம்மறி ஆட்டிற்கு 0.0.3.34.0.3.3 அல்லது 0.0.3.33.1.3.3 [12] என்ற ஒருங்கமைப்பு முறைப் படி பற்கள் காணப்படுகின்றன. முன்வாய்ப் பற்களுக்கும் (incisors) பின் கடைவாய்ப்பற்களுக்கும் (molars) நீண்ட பல் இடைவெளி (diastema) காணப்படுகிறது. செம்மறிஆட்டின் ஆரம்ப வாழ்நாளில் முன்வாய்ப்பற்களைக் கொண்டு அதன் வயதை ஒருவரரல் எளிதாகக் கணித்துக் கூறிவிட முடியும்.ஒவ்வொரு ஆண்டும் பால் பற்கள் ஒரு ஜோடி பெரிய நிரந்தரப் பற்களால் மாற்றப்பட்டுக் கொண்டே வரும். இவ்வாறு எட்டு நிரந்தரப் பற்கள் முழு தொகுப்பும் மாற்றப்பட்டிருக்கும் போது செம்மறியின் வயது சுமார் நான்கு ஆண்டுகளாக இருக்கும். பின்னர் வயது அதிகரிக்க அதிகரிக்க முன் பற்களை இழந்து கொண்டே வரும். இது ஆட்டின் உணவு உட்கொள்ளுவதும் உணவை அசை போட்டு அரைப்பதும் அவைகளுக்கு கடினமாவதுடன் உடல்நிலையிலும் உற்பத்தியிலும் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக வளர்க்கப்படும் செம்மறி நான்கு வயதுக்குப் பின் முதுமையை நோக்கி நகரத்தொடங்குகின்றன. செம்மறி ஆட்டின் சராசரி ஆயுட்காலம் 10 முதல் 12 ஆண்டுகள் என்றாலும் சில செம்மறி ஆடுகள் 20 ஆண்டுகள் வரை வாழக்கூடும் [13][14][15] செம்மறி ஆடுகளுக்கு நன்றாக கேட்கும் திறனும் இரைச்சலுக்கு பயந்து எதிர்வினை ஆற்றும் பழக்கத்தையும் கொண்டுள்ளன. [16]. பயன்கள் இறைச்சியாகப் பயன்படுத்தப்படுகிறது. கொழுப்புத் தேவைகளுக்காகவும் பயன்படுகிறது. மனிதன் தேவைக்கான கம்பளி ஆடைகளாகவும், கம்பளிப் பொருட்களாகவும் பயன்படுத்தப்படுகிறது. வகைகள் செம்மறியாடுகள் சில இறைச்சிக்காகவும், கொழுப்புக்காகவும் வளர்க்கப்படுகின்றன. சில கம்பளிக்காக வளர்க்கப்படுகின்றன. இறைச்சிக்காகவும் கொழுப்புக்காக வளர்க்கப்படும் செம்மறியாடுகளில் வால்சதை ஆடுகள், ஹிஸ்ஸார் ஆடுகள் போன்றவைகளைக் குறிப்பிடலாம். கம்பளிக்காக வளர்க்கப்படும் ஆடுகளில் நுண்மயிருள்ள செம்மறி ஆடுகள், நடுத்தர மயிருள்ள செம்மறி ஆடுகள், பாதி முரட்டு மயிருள்ள செம்மறி ஆடுகள், முரட்டு மயிருள்ள செம்மறி ஆடுகள் என நான்கு முக்கிய வகைகள் உள்ளன. தமிழ் நாட்டில் வகைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் காணப்படும் செவ்வாடு, ராமநாதபுரம் மாவட்டம், மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் காணப்படும் பட்டணம் ஆடு, மதுரை மாவட்டத்தில் காணப்படும் கச்ச கத்தி ஆடு என இந்த 3 இனங்களும் பாரம்பரிய பெருமை கொண்டவையாக உள்ளது. தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்டப்பகுதிகளில் செவ்வாடு, அரிச்செவ்வாடு, கருஞ்செவ்வாடு என இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை மேலநீலிதநல்லூர், மானூர், பாப்பாகுடி, ஆலங்குளம், நாங்குநேரி,மற்றும் பாளையங்கோட்டை போன்ற பகுதியில் வளர்க்கப்படுகிறது. இவற்றோடு சேர்த்து சென்னை பகுதியில் சிவப்பு ஆடு, திருச்சிப் பகுதியில் காணப்படும் கருப்பு ஆடு, சேலம் பகுதியில் காணப்படும் மேச்சேரி ஆடு, கோவை பகுதியில் குரும்பை ஆடு, நீலகிரி மாவட்டத்தில் நீலகிரி ஆடு, ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளை ஆடு, வெம்பூர் ஆடு, மேலும் கீழக்கரிசல் ஆடு என 8 வகையான ஆடுகள் பாரம்பரிய ஆடுகள் ஆகும்.[17] தயாரிப்பு மற்றும் நுகர்வுகள் ஆட்டிறைச்சி நுகர்வு பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு OECD- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு FAO ஆகியவற்றின் 2016 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையில் உலகளவில் ஆட்டிறைச்சி உற்பத்தி மற்றும் நுகர்வு பற்றி கூறப்பட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு [18] Sudan – 10.5 kilograms (23lb) per capita Kazakhstan – 8.1 kilograms (18lb) Australia – 7.4 kilograms (16lb) Algeria – 7.1 kilograms (16lb) Uruguay – 5.7 kilograms (13lb) Saudi Arabia – – – – – ஆட்டு இறைச்சி உற்பத்தி கீழ்காணும் அட்டவணையில் உலகளவில் அதிகமான ஆட்டிறைச்சி உற்பத்தி செய்யும் நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளது. மூலம்: ஹெல்கி நூலகம்,[19] உலக வங்கி, FAOSTAT மேலும் பார்க்க மெரீனோ மேற்கோள் பகுப்பு:வளர்ப்பு விலங்குகள் பகுப்பு:செம்மறி ஆடுகள்
செம்மறியாடுக்கு எத்தனை கொம்புகள் உள்ளன?
பொருத்து பெரும்பாலான செம்மறி ஆடுகளுக்கு கொம்புகள் இருப்பதில்லை. சில இனங்களில் ஆண் பெண் இரண்டுக்கும் கொம்புகள் காணப்படுகின்றன. சில இனங்களில் ஆண் செம்மறி ஆடுகளுக்கு மட்டும் கொம்புகள் காணப்படுகின்றன. பெரும்பாலான கொம்புடைய ஆடுகளுக்கு ஒரு சோடி கொம்புகளும் அரிதாக சில இனங்களில் பல கொம்புகளும்
2,183
tamil
218b19bdf
அனைத்துலக முறை அலகுகள்(SI) குழுமத்தினரால் நிர்ணயித்தபடி, நேரத்தின் அடிப்படை அலகு, நொடி அல்லது வினாடி ஆகும். இதன் குறியீடு மற்றும் சுருக்கக் குறியீடு பின்வருமாறு: குறியீடு: (ஆங்கிலம்: s; தமிழ்: வி அல்லது வினாடி அல்லது நொடி) சுருக்கக் குறியீடு: (சுருக்கக் குறியீடு: ஆங்கிலம்: s; தமிழ்: வி).[1][2] மணிநேரத்தினை முதல் முறையாக அறுபது பிரிவுகளகப் பிரிக்கும்போது நிமிடங்கள் கிடைக்கின்றன. மணிநேரத்தினை முதல் முறையாகப் பிரித்துக் கிடைக்கும் நிமிடங்களை இரண்டாவது முறையாக அறுபது பிரிவுகளகப் பிரிக்கும்போது நொடிகள் அல்லது வினாடிகள் கிடைக்கின்றன. இரண்டாவது முறையாகப் பிரித்தலை ஆங்கிலத்தில் 'Second' - 'செகண்டு' என்கிறோம்.[3] சீசியம் (அணு நிறை:133) அணு இயல்நிலையில் இரண்டு மீ நுண் மட்டங்களுக்கு இடையே  நிலைமாற்றம் கொள்ளும்போது தோன்றும் கதிர்வீச்சுக்கான காலம் 9 192 631 770 கால அளவுகள் ஆகும். இதுவே SI அலகில் நொடி அல்லது வினாடி எனப்படுகிறது.[1][4] நொடி (அல்லது வினாடி) என்பது காலத்தை அளவிடப் பயன்படும் அடிப்படை அலகு.[5] 60 நொடிகள் = 1 நிமிடம் (மணித்துளி) ஆகும்.[6] வரையறை வரலாறு ஆரம்பகால நாகரிகங்கள்: ஆரம்ப கால நாகரிகங்கள் ஒரு நாளை சிறு பிளவுகளாக்கி பகுத்துக் கூறுகளுக்கு தனித்தனி பெயரிட்டன. ஆனால் கூறாகிய நேரத்தின் சிறு பகுதிக்கு வினாடி அல்லது நொடி என்ற வார்த்தையை யாரும் முறையாக பயன்படுத்தவில்லை.  கி.மு. 2000ல் எகிப்தியர்கள் ஒரு நாளை பகல் பன்னிரண்டு மணிநேரம் என்றும், இரவு பன்னிரண்டு மணிநேரம் என்றும், சமமாகப் பிரித்திருந்தனர். எனவே பருவகால மாறுபாடுகளுக்கு ஏற்ப பகல் மற்றும் இரவுகளில் மணிநேர நீளத்தின் அளவுகளும் வேறுபட்டன. ஹெலனிய கால வானியலாளர்களான ஹிப்பார்க்கஸ் (கி.மு 150 கி.மு.) மற்றும் தொலெமி (சி.டி. 150) ஆகியோர், மணிநேரத்தை அறுபது பகுதிகளாகப் (அறுபதிற்குரிய பின்னங்களின் கீழ் எண் அமைப்பு) பிரித்தனர். ஒரு சராசரி மணி நேரத்தை (1/24 நாள்) என்றும், ஒரு மணி நேரத்தின் எளிய பின்னக்கூறுகள் (1/4, 2/3, முதலியன) என்றும், மற்றும் நேரக் கோணத்தை (1/360 நாள் அல்லது அதற்குச் சமமான நான்கு நவீன நிமிடங்கள்) என்றும் பயன்படுத்தினர்.[7] கி.மு. 300 க்குப் பின்னர் பபிலோனியர்கள் அறுபதிற்குரிய பின்னங்களின் கீழான முறையைப் பயன்படுத்தி ஒரு நாளை திட்டமிட்டனர். அடுத்துள்ள ஒவ்வொரு துணைப்பிரிவும் அறுபதுகளால் பிரிக்கப்பட்டது. அதாவது  1/60, 1/60, 1/60 என்று, அறுபதின் விசைமடங்காகக் கணக்கிடப்படுகிறது.  இதன் துல்லியத் தன்மை  2 மைக்ரோ வினாடிகளுக்குச் சமமானதாகும்.[8]   பாபிலோனியர்கள் மணிநேரத்தை பயன்படுத்தவில்லை. ஆனால் 120 நவீன நிமிடங்கள் கொண்ட இரட்டை கால அளவு பயன்படுத்தப்பட்டது. ஒரு கால அளவு-நான்கு நீடித்த நிமிடங்களாக கணிக்கப்பட்டது. ஒரு பார்லிகார்ன் என்பது 3 1/3 நவீன வினாடிகள் நீடிக்கும் (நவீன ஹீப்ரூவின் காலண்டர் வளைவு),[9] ஆனால், அறுபதிற்குரிய பின்னங்களின் கீழ்  சிறிய அலகுகளாகப் பிரித்தெடுக்கப்படவில்லை. சந்திர சுழற்சியின் துணைப்பிரிவுகளின் அடிப்படையில்: சிர்கா 1000, பாரசீக அறிஞர் அல்-பிருனி அரபு மொழியில் வினாடி அல்லது நொடி என்ற முறையைப் பயன்படுத்தியுள்ளார். இரண்டு அமைவாதைகளுக்கு இடையே உள்ள காலத்தை வாரங்கள், நாட்கள், மணிநேரம், நிமிடங்கள், வினாடிகள், மூன்றாவது மற்றும் நான்காவது பிற்பகல் ஞாயிறு எனப் பிரித்துள்ளார்.[10] 1267 ஆம் ஆண்டில், இடைக்கால விஞ்ஞானி ரோஜர் பேகன், லத்தீன் மொழி அறிக்கையில், மூன்றாவது மற்றும் நான்காவது முழு நிலா எனப்படும் பூரணைகளுக்கு இடையேயான பிரிவைக் கொண்டு மணிநேரங்கள் (ஹொரே-horae), நிமிடங்கள்(மினுடா-minuta), விநாடிகள்(செகுண்டா-secunda), மூன்றாவது(டெர்ஷியா-tertia) மற்றும் நான்காவது(குவார்டா-quarta) ஆகியவற்றை குறிப்பிட்ட நாட்காட்டியில் வரையறுத்தார்.[11] நவீன நொடிகள் அல்லது வினாடிகள், பின்வருமாறு தசம எண்களைப் பயன்படுத்தி பிரிக்கப்பட்டு வருகின்றன - மூன்றாவது குறியீட்டு சொல்  (1⁄60 வினாடிப்பகுதி) பிற மொழிகளிலும்  நொடிகள் அல்லது வினாடிகள் என்ற வார்த்தைப் பயன்பாடு உள்ளது. உதாரணம்: போலிய மொழி (டர்க்ஜா-tercja) மற்றும் துருக்கிய மொழி (சலிசெ-salise). இயந்திர கடிகாரங்களின் அடிப்படையில்: 16 ஆம் நூற்றாண்டின் கடைசியில்,  நொடிகளைக் காட்டப் பயன்படும் ஆரம்பகால கடிகாரங்கள் தோன்றின.  இயந்திரக் கடிகாரங்கள் உருவானதன் பின் நொடிகள் அல்லது வினாடிகளைத் துல்லியமாக அளப்பது எளிதானது.  இது சூரிய மணிகாட்டி மூலம் காட்டப்படும் உத்தேச நேரத்திற்கு எதிரானது. ஃப்ரேமர்ஸ்டார்ஃப் (Fremersdorf)  சேகரிப்பில் ஆர்ஃபியஸை (Orpheus) சித்தரிக்கும் கடிகாரம், சுருள் வில்லுடன் விநாடிகளைக் குறிக்கக்கும் கையுடன் கூடிய உந்துதல் கடிகாரம் ஆகியவை மக்களை மிகவும் கவர்ந்தன. இதன் தொடக்க காலம் 1560 நிறைவுறு காலம்  1570.[12]:417–418[13] 16 ஆம் நூற்றாண்டின் மூன்றாம் காலாண்டில், தகி-அல்-தின் (Taqi al-Din) ஒவ்வொரு 1/5 நிமிடத்தையும் காட்டும் ஒரு கடிகாரம்  உருவாக்கினார்.[14] 1579ல் ஹோஸ்த் பர்கி (Jost Bürgi) ஹெஸ்ஸ (Hesse) நாட்டின் வில்லியமுக்கு வினாடிகளைக் காட்டும் ஒரு கடிகாரம் செய்தார்.[12]}} 1581ல் டைக்கோ பிராகி மறுசீரமைக்கப்பட்ட  கடிகாரங்களை உருவாக்கினார். அதனைத் தன் வானியல் ஆய்வு மையங்களில் பயன்படுத்தினார். அவை நிமிடங்களையும் நொடிகளையும் காட்டின. எனினும், அவை வினாடிகளை கணிக்கப் போதுமான துல்லியத்துடன் இல்லை. 1587 ஆம் ஆண்டில், டைக்கோ தனது நான்கு கடிகாரங்கள், நான்கு வினாடிகள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வேறுபடுத்திக் காட்டியதாகk குறை கூறினார். 1644 ஆம் ஆண்டில், மரின் மெர்சென் (Marin Mersenne) 39.1 அங்குல நீளம் (0.994) ஊசலைப் பயன்படுத்தி வினாடிகளைக் கணக்கிட்டார். அது, திட்ட புவியீர்ப்பு முடுக்கத்துடன் செயல்பட்டது. ஊசல் முன்னோக்கிச் செல்ல ஒரு விநாடியும், மீண்டும் பின்னோக்கிச் செல்ல ஒரு விநாடியும், ஆகும் எனத் துல்லியமாக கணக்கிட்டு செயல்படுத்தினார்[15] 1670 ஆம் ஆண்டில், லண்டன் கடிகார தயாரிப்பாளர் வில்லியம் கிளெமெண்ட் (William Clement) இந்த வினாடி ஊசலை, கிறித்தியான் ஐகன்சின் அசல் ஊசல் கடிகாரத்துடன் இணைத்தார்.[16]  1670 முதல் 1680 வரை, கிளெமெண்ட் தனது கடிகாரங்களுக்கு பல மேம்பாடுகளைச் செய்தார்.  1832 இல், கார்ல் பிரீடிரிக் காஸ் தனது மில்லிமீட்டர்-மில்லிகிராம்-வினாடி தரப்படுத்தப்பட்ட முறை அலகுகளில், நேரத்தின் அடிப்படை  அலகு வினாடி என முன்மொழிந்தார். 1862ஆம் ஆண்டு, அறிவியல் முன்னேற்றத்திற்கான பிரிட்டிஷ் கூட்டமைப்பினர், (BAAS-British Association for the Advancement of Science) "விஞ்ஞானத்தின் அடிப்படையில், அனைத்து மாந்தர்களும் சூரிய நேரத்தின் சராசரி அடிப்படை அலகு நேரம் வினாடி என்ற கால அளவைப் பயன்படுத்த வேண்டும்" என ஒப்புக் கொண்டுள்ளனர்.[17] ஒரு வருடத்தின் ஒரு பகுதி என்ற அடிப்படையில்:  புவியின் இயக்கம் சார்ந்த, நியூகோம்பின் (Newcomb) சூரிய இயக்க அட்டவணையில் (1895) ந்ப்டிகள் பற்றி விவரிக்கப்பட்டது. 1750க்கும் 1892க்கும் இடைப்பட்ட  காலத்தில் வானியல் கண்காணிப்புகளை அடிப்படையாகக் கொண்டு,  சூரிய இயக்கத்தின் மதிப்பை மதிப்பிடுவதற்கான ஒரு சூத்திரம் உருவாக்கப்பட்டது.[18] குறிப்பாக, 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் பயன்படுத்தப்பட்ட அட்டவணைகள் நியூகொம்ஸின் சூரிய இயக்கத்தை ஒட்டியவை. (1900 முதல் 1983 வரை). மேலும், எர்னெசுட்டு வில்லியம் பிரவுனின் நிலவு அட்டவணைகள் 1923 முதல் 1983 வரை பயன்படுத்தப்பட்டன. சீசியம் நுண்ணலை அணு கடிகாரத்தின் அடிப்படையில்: பல ஆண்டுகளின் வேலைகளைத் தொடர்ந்து  இங்கிலாந்தின்  டெடிங்டன், தேசிய இயற்பியல் ஆய்வகத்திலிருந்து லூயிஸ் எஸென் (Louis Essen) மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டு கடற்படையின் வானியல் நிலையத்திலிருந்து வில்லியம் மார்கோவிட்ஸ் (William Markowitz) ஆகியோர், சீசியம் அணுவின் மீ நுண் நிலைமாற்ற அதிர்வெண் மற்றும் கோளியல் காலம் ஆகியவற்றுக்கு இடையேயான உறவை உறுதிப்படுத்தினர்.[19] இதில், டபிள்யூ. டபிள்யூ. வி. (WWV) வானொலி நிலையத்திலிருந்து பெறப்பட்ட சமிக்ஞைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொதுவான காட்சி அளவீட்டு முறை பயன்படுத்தப்பட்டது.[20] அவர்கள் கோளியல் காலம் (ET), நொடி அல்லது வினாடி, தேர்ந்தெடுக்கப்பட்ட சீசியம் அணுவின் அதிர்வெண் ஆகியவை ஒரே அளவிலான 9,192,631,770 ± 20 சுழற்சிகளைப் பெற்றுள்ளன என்பதை கண்டறிந்து உறுதி செய்தனர்.[19]  (SI வினாடி ஏற்கெனவே ஏற்கப்பட்டது. SI வினாடியானது, சராசரி சூரிய காலத்தின் வினாடி மதிப்பைக் காட்டிலும் சிறிது குறுகியதாக இருந்தது.[21][22]) சார்பியல் ரீதியாக, SI வினாடி மதிப்பு பூமிவடிவத்தின் மற்றும் சுழற்சியின்  சரியான நேரமாக வரையறுக்கப்படுகிறது.[23] முன்மொழியப்பட்ட ஒளியியல் அணு கடிகாரத்தின் அடிப்படையில்: லட்லோ எட் ஆல் (Ludlow et al) மேற்கோள்: இன்று, நுண்ணலைப் பகுதியில் செயல்படும் அணு கடிகாரங்களுக்கு, ஒளியியல் அணு கடிகாரங்கள் ஒரு சவாலாக அமையும்.[24] கனடிய தேசிய ஆராய்ச்சி கவுன்சில் 2.5 × 10-11 "ஒப்பீட்டளவில் நிச்சயமற்றது" என்பதைக் குறிக்கிறது.  அயோடின் (அணு எடை 127) மூலக்கூறை அடிப்படையாகக் கொண்டிருக்கும் அணு கடிகாரத்திற்கு பதிலாக, ஸ்ட்ரான்சியம் (அணு எடை 88) அயனி பொறியைப் பயன்படுத்துவதை ஆதரிக்கிறது.[25] நிச்சயமற்ற நிலைகள் நுண்ணலைப் பகுதியில் உள்ள NIST-F1 சீசியம் அணுக் கடிகாரத்தை எதிர்த்து நிற்கின்றன, அதிர்வெண் அடிப்படையில் ஒரு நாளின் பகுதிகள் சராசரியாக பத்தின் அடுக்கு பதினாறு என்று மதிப்பிடப்படுகின்றன.[26][27] ஒரு நொடி என்பது துல்லியமான நிலைநாட்டலின் படி கீழ்க்காணுமாறு குறிப்பிடப்படும். சீசியம்-133 என்னும் அணு, தன் அடி நிலையில் இருக்கும் பொழுது அதன் அணுக்கருவில் உள்ள காந்தப்புலனின் விளைவால் நிகழும் மீ நுண் ஆற்றல் வேறுபாடுகளின் அடிப்படையில் ஒரு நொடி என்பது விளக்கபடுகின்றது. ஒரு நொடி என்பது அசையாது 0 K (கெல்வின்) வெப்பநிலையில் இருக்கும் ஒரு சீசியம்-133அணுவின் அடி நிலையில் உள்ள இரு வேறு மிக நுண்ணிய ஆற்றல் இடைவெளிகளுக்கிடையே நிகழும் 192 631 770 அலைவுகளின் கால அளவு ஆகும். ஒரு நாளில் 3600 விநாடிகள் உள்ளன. ஒரு நாளில் 24 மணி நேரமும், ஒரு மணி நேரத்தில் 60 நிமிடங்களும், ஒரு நிமிடத்தில் 60 செக்கன்களும் உள்ளன. எனவே ஒரு விநாடி 24 செக்கன்களுக்குச் சமமாகும். Notes and references பகுப்பு:SI அடிப்படை அலகுகள் பகுப்பு:கால அளவுகள்
ஒரு மணி நேரத்தில் எத்தனை நிமிடங்கள் உள்ளன?
60
905
tamil
89561de47
கதிரவ அமைப்பு (Solar System) அல்லது சூரியக் குடும்பம் என்பது கதிரவனுக்கும் அதைச் சுற்றி வரும் பொருட்ளுக்கும் இடையே உள்ள ஈர்ப்புவிசைப் பிணைப்பால் உருவான ஒரு அமைப்பாகும். இது கதிரவனைச் சுற்றி வரும் எட்டு கோள்களையும், ஐந்து குறுங்கோள்களையும் உள்ளடக்கியது ஆகும் என்று உலகளாவிய வானியல் ஒன்றியம் வரையறுத்துள்ளது. இந்த அமைப்பில் கதிரவனை நேரடியாக சுற்றி வரும் பெரிய அளவு கொண்ட கோள்களும் சிறிய அளவு கொண்ட குறுங்கோள் மற்றும் சிறு கதிரவ அமைப்பு பொருட்கள் போன்றவையும், கதிரவனை மறைமுகமாக சுற்றி வரும் துணைக்கோள்களும் அடங்கும். 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரு மிகப்பெரிய மூலக்கூறு மேகத்தில் ஏற்பட்ட ஈர்ப்புவிசை சுருக்கம் காரணமாக கதிரவ அமைப்பு உருவானது. இந்த அமைப்பின் எடையில் பெரும்பகுதியை கதிரவனே கொண்டுள்ளது. அதற்கடுத்து மிக அதிக எடை கொண்டது வியாழன் கோளாகும். புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் ஆகிய நான்கு உட்கோள்கள், புவியொத்த கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பொதுவாக பாறைகள் மற்றும் உலோகங்கள் ஆகியவற்றால் உருவானவையாகும். ஏனைய நான்கு புறக்கோள்களும் புவியொத்த கோள்களை விட நிறைமிக்கனவாகும். அவற்றில் மிகப்பெரிய கோள்களான வியாழன் மற்றும் சனி போன்றவை பெரும்பாலும் ஐதரசன் மற்றும் ஈலியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளதால் வளிமப் பெருங்கோள்கள் என்றும் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்றவை மீதேன், அமோனியா போன்ற உயர் உருகு நிலை கொண்ட பொருட்களைக் கொண்டுள்ளதால் பனிப பெருங்கோள்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. அனைத்தும் தனித்தனி நீள்வட்ட சுற்றுப்பாதைகளில் (Orbital path) கதிரவனைச் சுற்றிவருகின்றன. கதிரவ அமைப்பு சிறு பொருட்களையும் கொண்டுள்ளது. செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கிடையே அமைந்துள்ள சிறுகோள் பட்டை அகக்கோள்களைப் போல் உலோகங்கள் மற்ரும் தனிமங்களையே பெரும்பாலும் கொண்டுள்ளது, இதில் சியரீசு குறுங்கோள் அமைந்துள்ளது. பனிக்கட்டிகளால் உருவான கைப்பர் பட்டை நெப்டியூனின் வட்டப்பாதையில் அமைந்துள்ளது. இதில் புளுட்டோ, அவுமியா, மேக்மேக் மற்றும் ஏரிஸ் ஆகிய குறுங்கோள்கள் அமைந்துள்ளன. இந்த இரு பகுதிகளைத் தவிர, பல்வேறு சிறு சிறு பொருட்களும் தடையின்றிப் பயணித்து வருகின்றன. ஆறு கோள்களையும், குறைந்தபட்சம் நான்கு குறுங்கோள்களையும் பல சிறு பொருட்களையும் துணைக்கோள்கள் சுற்றி வருகின்றன. இவை நிலவுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. புறக்கோள்கள் ஒவ்வொன்றையும் தூசு மற்றும் சிறு பொருட்களால் ஆன ஒரு கோள் வளையம் சுற்றியுள்ளது. கதிரவ அமைப்பு பால்வெளிப் பேரடையின் மையத்தில் இருந்து 26,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஓரியன் கையில் அமைந்துள்ளது. கண்டு பிடிப்பும் ஆய்வுப் பயணமும் பல்லாயிரம் ஆண்டுகளாக மனித இனம் கதிரவ அமைப்பைப் பற்றி புரிந்துகொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ இல்லை. அவர்கள் புவியானது அசைவற்றது எனவும் அண்டத்தின் நடுவில் இருப்பது எனவும் நம்பி வந்தனர். கண்ணுக்கு புலப்படும் வான் வழியே பயணிக்கின்ற தெய்வீகப் பொருட்களை விட புவி வேறுபட்ட வகையைச் சேர்ந்தது என்று கருதிவந்தனர். இந்திய கணிதமேதையும் வான சாஸ்திர வல்லுனரும் ஆன ஆரியபட்டா மற்றும் கிரேக்க தத்துவ அறிஞர் அரிசுடாட்டில் ஆகிய இருவரும் ஆய்வு ஊக செய்தியாக அண்டம்[5] பற்றி மறுவரிசைப் படுத்தினர். அரிச்சுடார்க்கசு என்ற அறிஞர் கதிரவனை மையமாகக் கொண்ட முறையை ஊகித்தார். இருப்பினும் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் என்பவர்தான் கதிரவ அமைப்பில் மையப்பகுதியில் கதிரவன் அமைந்துள்ளது என்பதை கணித பூர்வமாக அறிவித்தவர். 17ஆம் நூற்றாண்டில் கலீலியோ கலிலி, எனபவர் கதிரவனில் கதிரவ புள்ளிகள் இருப்பதையும் வியாழனை நான்கு நிலவுகள் சுற்றி வருவதையும் கண்டறிந்தார். அவரது கண்டுபிடிப்புகளைப் பின்பற்றி கிறித்தியான் ஐகன்சு என்பவர் சனியைச் சுற்றி வரும் டைடன் என்ற நிலவையும் சனியைச் சுற்றியுள்ள கோள் வட்டத்தையும் கண்டறிந்தார். 1705ஆம் ஆண்டு எட்மண்டு ஏலி என்பவர் ஒரு வால்வெள்ளி 74-75 வருடங்களுக்கு ஒருமுறை ஒரே பொருளையே மீண்டும் வந்தடைவதை உணர்ந்தார். இதுவே கோள்களைத் தவிர மற்ற பொருட்களும் கதிரவ அமைப்பில் உள்ளது என்பதற்கான முதல் சான்றாக விளங்கியது. 1838ஆம் ஆண்டு பிரீட்ரிக் பெசல் என்பவர் முதன்முறையாக இடமாறு தோற்றப் பிழை வாயிலாக கதிரவனுக்கும் மற்றொரு விண்மீனுக்கும் இடையில் உள்ள நம்பத் தகுந்த தொலைவைக் கண்டறிதார். அதன்பிறகு நோக்கீட்டு வானியல் மற்றும் ஆளில்லா விண்கலங்கள் ஆகியவற்றின் வளர்ச்சி, கதிரவ அமைப்பில் உள்ளவற்றைக் குறித்து விரிவாக ஆய்வு செய்ய உதவியது. அமைப்பு கதிரவன் மற்றும் புவி இடையே உள்ள தொலைவு ஒரு வானியல் அலகு ஆகும். கதிரவன் கதிரவன் என்பது கதிரவ அமைப்பின் மையத்தில் உள்ள ஒரு விண்மீன் ஆகும். இதன் நிறை (332,900 புவி நிறைகள்) கதிரவ அமைப்பின் மொத்த நிறையில் 99.86 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. இது தன் உள்ளகத்தில் இருக்கும் ஐட்ரசன் அணுக்களை ஈலியத்துடன் இணைப்பதன் மூலம் மாபெரும் ஆற்றலை வெளியிடுகிறது. அந்த ஆற்றல் பெரும்பாலும் மின்காந்த கதிர்வீச்சு மூலம் விண்வெளிக்குள் கதிர்வீசப்படுகிறது. கதிரவன் என்பது ஒரு G-வகை முதன்மை வரிசை விண்மீன் ஆகும். +4.83 என்ற தனி ஒளி அளவைக் கொண்டுள்ள கதிரவன், ஏறக்குறைய பால் வழியில் உள்ள 85% விண்மீன்களை விட ஒளிர்வுமிக்கதாகும். அந்த விண்மீன்களில் பெரும்பாலனாவை செங்குறுமீன்கள் ஆகும். கதிரவன் ஒரு உலோகசெறிவு மிக்க விண்மீன் வகையை சார்ந்தது. கதிரவ அமைப்பின் உட்பகுதி நான்கு உட்கோள்கள் அல்லது புவியொத்த கோள்கள் அடர்ந்த பாறைப்படலங்களாக உள்ளன. அவற்றில் இரு கோள்கள் தனித்தனி நிலவுகளைக் கொண்டுள்ளன. இவற்றுக்கு கோள் வளையங்கள் கிடையாது. இவை பெரும்பாலும் உயர் உருகுநிலை கொண்ட உலோகங்கள் அதாவது மணல்சத்து உப்புக்களை வெளிப்புறத்திலும் இரும்பு, நிக்கல் போன்ற உலோகங்களை மையப்பகுதியிலும் கொண்டுள்ளன. நான்கு கோள்களில் வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய மூன்றையும் கட்டுறுதியான வளிக்கோளங்கள் சூழ்ந்திருக்கினறன. இவற்றில் அழுத்தமான எரிமலை முகடுகளும் கட்டுமானக் கலையுடன் நேர்த்தியான மேல்பரப்பும் அமைந்துகிடக்கின்றன. அதில் பிளவுண்டபள்ளத் தாக்குகள் மற்றும் எரிமலைகள் உள்ளன. உட்கோள் என்ற பெயரை தாழ்ந்த கோள் என்ற பெயருடன் குழப்பம் ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது. தாழ்ந்த கோள் எனப்படுபவை புவியை காட்டிலும் கதிரவனுக்கு அருகில் உள்ள புதன் மற்றும் வெள்ளி ஆகும். புதன் புதன் கதிரவனுக்கு மிக அருகில் உள்ள கோளும் கதிரவ அமைப்பில் உள்ள கோள்களில் மிகச்சிறியதும் ஆகும். இது கதிரவனிலிருந்து 0.4 வானியல் அலகு தொலைவில் உள்லது. இதற்கு இயற்கைத் துணைக்கோள்கள் கிடையாது. இது புவியமைப்பு அம்சங்களுக்காக பெயர் பெற்றதாகும். அழுத்தமான எரிமலைவாய்களில் தொங்கும் கூடல் வாய்கள் அமைந்துள்ளன. அவைகள் ஒருவேளை கடல் தோன்றிய காலத்தில் நிகழ்ந்த ஒடுக்கத்தால் உருவாகியிருக்கக்கூடும்[6]. புதனின் வளிமண்டலம் புறக்கணிக்கத்தக்கதாகும். அதில் உள்ள அணுக்கள் மேற்பரப்பில் கதிரவன் காற்றால் தாக்கப்பட்டு வெடிக்கும்[7]. இது மையப்பகுதியில் இரும்பு உலோகம் அதிகமாக உள்ளது. அதன் மெல்லிய 'மூடகம்' பற்றி இதுவரை விளக்கப்படவில்லை. தற்காலிகக் கோட்பாடுகள்ன்படி, அதன் வெளிப்பகுதி அடுக்குகள் பெரும் பயன்விளைவால் முற்றிலும் களையப்பட்டுள்ளது அல்லது அது திரண்டு உருவாக்குவதை இளம் கதிரவனின் எரிசக்தி தடுத்து வந்துள்ளது[8][9]. வெள்ளி வெள்ளி என்பது அளவில் புவியை ஒத்திருக்கும் ஒரு கோளாகும். இது கதிரவனிலிருந்து 0.7 வானியல் அலகு தூரத்திலுள்ளது. இது புவியைப்போல் இரும்பு மையத்தைச் சுற்றி பருமனான மணல் சத்து (சிலிகேட்) மூடகத்தைக் கொண்டுள்ளது. இது புவியை விட வறண்டும் ஒன்பது மடங்குகள் அடர்த்தியான வளிமண்டலத்தையும் கொண்டுள்ளது. இதற்கு இயற்கை துணைக்கோள்கள் கிடையாது. இது மிகமிக வெப்பமான கிரகமாகும். இதன் மேற்பரப்பு வெப்பநிலை 400 °செல்சியசை எளிதில் அடைந்துவிடக்கூடியது. இதற்கு அதன் வளிமண்டலத்தில் பைங்குடில் வளிமங்கள் அதிகமாக இருப்பதே காரணமாகும்[10]. நடப்பு மண்ணியல் நடவடிக்கைகள் அங்கு புவியியல் நடைபெறுவதற்குரிய உறுதியான தடயங்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. அதன் வளிமண்டலம் வெறுமையாகாமல் தடுக்க அதற்கு காந்தப்புலம் எதுவும் இல்லை. எனவே அதன் வளிமண்டலம் எரிமலை வெளியேற்றங்களால் தொடர்ந்து நிரப்பப்படுகிறது [11]. புவி புவி (1 வாஅ) உட்கோள்களில் மிகப்பெரியதும் மிக அடர்த்தியானதும் ஆகும். இதில் மட்டுமே புவியியல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அண்டத்தில் புவி ஒன்றில் மட்டும் தான் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.[12][12][12][12][12][12][12][12][12][8][7] புவியொத்த கோள்களில் இது ஒன்றுதான் திரவ நீர்க்கோளம் பெற்றுள்ளது. இத்தனிச்சிறப்பு இதற்கு மட்டுமே இருக்கின்றது. மேலும் புவியில் காணப்படும் 'ண்டத்தட்டு'இயக்கவியல் அதன் தனிச்சிறப்பை கூடுதலாக்குகின்றது. புவியின் வளிமண்டலம் மற்ற கோள்களின் வளிமண்டலங்களைக் காட்டிலும் வேறுபாடாக உள்ளது. உயிரினங்கள் வாழத் தேவையான 21 சதவீதம் ஆக்சிசனைக் கொண்டிருப்பதால் இத்தகைய வேறுபாடுகள் தோன்றியுள்ளன[13]. அதற்கு நிலவு என்ற ஒரேயொரு இயற்கை துணைக்கோள் உண்டு. அந்த நிலவே கதிரவ அமைப்பில் அமைந்துள்ள புவியொத்த கோள்களின் துணைக்கோள்களில் பெரியது எனப் பெயர் பெற்றுள்ளது. செவ்வாய் செவ்வாய் (1.5 வாஅ) என்பது புவி மற்றும வெள்ளி ஆகிய இரண்டைக் காட்டிலும் சிறிய கோளாக உள்ளது. அது கொண்டுள்ள வளிமண்டலத்தில் கரியமில வாயுவே அதிகம் உள்ளது. அதில் பரந்து காணக்கிடக்கும் 'ஒலம்பஸ் மான்ஸ்' போன்ற எரிமலைகள் மற்றும் 'வாலிஸ் மேரினாரிஸ்' போன்ற பிளந்த பள்ளத்தாக்குகளும் காணப்படுகின்றன. அவைகள் அதன் புவியியல் நடவடிக்கைகளை எடுத்துக்காட்டுகின்றன.[14] அதன் சிகப்புநிறம் அதில் உள்ள இரும்பு ஆக்ஸைடுகளால்[15] ஏற்பட்டதாகும். செவ்வாய் கோளுக்கு இரண்டு சிறிய இயற்கை துணைக்கோள்கள் உள்ளன. அவைகள் 'டைமோஸ்' மற்றும் 'போபோஸ்' என்றழைக்கப் பெறுகின்றன.[16][17] கதிரவ அமைப்பின் வெளிப்பகுதி கதிரவ அமைப்பின் வெளிப்புறப் பகுதி வளிமப் பெருங்கோள்கள் (gas giants) மற்றும் அவற்றின் துணைக்கோள்களுக்கு தாயகமாக அமைந்துள்ளது. பல குறுகிய ஆயுள் கொண்ட வால்மீன்கள் ('சென்டார்கள்' எனும் விண்மீன் குழுக்கள் உள்பட) சுற்றி வருகின்றன. கதிரவனிடமிருந்து மிக நீண்ட தூரம் வெளிப்புறத்தில் அமைந்து இருப்பதால் இவை விரைந்து ஆவியாகும் தண்ணீர், அமோனியா, மீதேன் ஆகியவற்றால் நிரம்பியுள்ளன. ஆனால் உட்புற கதிரவ குடும்பத்தில் உள்ள பாறைகள் குளிர்ந்த நிலையில் திடமாகவே இருக்கச்செய்கின்றன. வெளிப்புறக் கோள்கள் கதிரவ அமைப்பில் நான்கு வெளிப்புறக் கோள்கள் அல்லது பெருங்கோள்கள் உள்ளன. இவை மொத்தமாக 99 சதவீதம் பொருண்மையுடன் கதிரவனின் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. வியாழன் மற்றும் சனி கோள்களில் அதிகபட்சமாக ஹைட்ரஜன், ஹீலியம் இருக்கின்றன. யுரேனசு மற்றும் நெப்டியூனில் அதிக பட்சம் பனிக்கட்டிகள் உள்ளன. எனவே வானியலாளர்கள் இவைகளை 'பனி அரக்கர்கள்' என்று தனியாக வகைப்படுத்துகின்றனர்.[18] நான்கு பெருங்கோள்களுக்கும் கோள் வளையங்கள் இருப்பினும் சனியின் வளையத்தை மட்டும் புவியிலிருந்து எளிதாகக் காண இயலும். வியாழன் வியாழன் (5.2 வாஅ) 318 மடங்கு புவியின் நிறையைக் கொண்டுள்ள கோளாகும். அது 2.5 மடங்குகள் பிற கோள்களின் மொத்த பொருண்மையை காட்டிலும் அதிகமானதாகும். இது ஐட்ரசன் மற்றும் ஈலியம் இரண்டாலும் உருவாகியுள்ளது. இதன் வலிமையான உள்வெப்பம் பல நிரந்தர அம்சங்களை வளிமண்டலம், முகில்திரள்கள், 'பெரிய செந்நிற இடம்' என்று அறியப்படுத்தியுள்ளன. வியாழன் அறுபத்து மூன்று அறியப்பட்ட நிலவுகளைக் கொண்டுள்ளது. இதில் மிகப்பெரிய நிலவுகளான கனிமீடு, கலிஸ்டோ, அயோ, மற்றும் ஐரோப்பா ஆகிய நான்கும் புவியொத்த கோள்களை ஒத்துள்ளன. எரிமலைச் செயற்பாடு, உள்ளிட வெப்பமூட்டல் இரண்டிலும் ஒத்திருக்கும் அம்சங்கள் காணலாம்.[19] 'கனிமீடு' நிலவு கதிரவ அமைப்பில் உள்ள புதன் கோளை விட அளவில் பெரியதாகும். சனி சனி (9.5 வாஅ) தனது வளையத்தால் அறியப்படும் கோளாகும் வியாழனினை ஒத்த அம்சங்கள் அதன் வளிக்கோளம் மற்றும் காந்தக்கோளத்தில்  உள்ளன. வியாழனின் கொள்ளளவில் 60 சதவீதத்தை சனி கொண்டுள்ளது. ஆனால் நிறையைப் பொறுத்த மட்டில் மூன்றாவதாக உள்ளது. கதிரவ அமைப்பில் உள்ள கோள்களில் சனி மட்டுமே நீரை விட அடர்த்தி குறைந்த கோள் ஆகும். இதற்கு 60 அறியப்பட்ட துணைக்கோள்கள் உள்ளன. அவற்றில் 'டைட்டான்' மற்றும் 'என்சடலாடஸ்' ஆகிய நிலவுகளில் புவியியல் தொடர்பான செயல்பாடுகள் நடப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. அதிகம் பனிப்படலம் இருப்பினும்! [20] கதிரவ அமைப்பின் இரண்டாவது மிகப்பெரிய நிலவான டைட்டன், புதன் கோளைவிடப் பெரியதும் கதிரவ அமைப்பில் கணிசமான வளிமண்டலம் கொண்டுள்ள ஒரே துணைக்கோளும் ஆகும். யுரேனசு யுரேனசு (19.6 வாஅ) 14 புவிப்பொருண்மைகள் கொண்ட வெளிப்புற கிரகங்களுள் மிக மென்மையானதாகும். தனிச்சிறப்பான அம்சமாக அமைவது, எல்லா கோள்களைக் காட்டிலும் கதிரவனை அது அதன் வட்டப்பாதையில் அதன் பக்கமாகவே சுற்றிவலம் வருவதேயாகும். ஞாயிறு செல்லும் மார்க்கத்தில் தொண்ணூறு டிகிரி ஊடு அச்சில் சாய்வுநிலை- அதாவது ஒருக்கணித்துக் கொண்டு செல்வதேயாகும். பிற வாயு அரக்கர்களைக் காட்டிலும் இது மிகக்குளிர்ந்த மையப்பகுதியைக் கொண்டுள்ளது. அண்ட வெளியில் மிகக்குறைந்த வெப்பத்தையே கதிர்வீச்சாக வெளியிடுகிறது[21] யுரேனசு 27 அறியப்பட்ட துணைக்கோள்களைக் கொண்டுள்ளது. அதில் பெரிய நிலவான டைட்டன் புவிவியல் செயல்பாட்டுடன் உள்ளது. நெப்டியூன் யுரேனசைக் காட்டிலும் சிறிதாக இருந்தாலும் நெப்டியூன் (30 வாஅ) புவியை விட பதினேழு மடங்கு நிறையைக் கொண்டுள்ளதால் அதிக அடர்த்தியுடன் உள்ளது.  இதன் உள்வெப்ப கதிர்வீச்சு வியாழன் மற்றும் சனியை விட அதிகமாக உள்ளது.[22] நெப்டியூன் பதினான்கு அறியப்பட்ட துணைக்கோள்களைக் கொண்டுள்ளது. அதில் பெரிய 'டிரைட்டன்' புவியியல் செயல்பாட்டுடன் உள்ளது. மேலும் வெந்நீர் ஊற்றுகள், நீர்ம நைட்ரஜன் [23] கொண்டுள்ளன. டிரைட்டன் மட்டும் தான் வட்டப்பாதையில் பின்னோக்கிச்செல்லும் ஒரேயொரு நிலவாகும். நெப்டியூன் அதன் வட்டப்பாதையில் ஏராளமான சிறுகோள்களைக் கொண்டுள்ளது. நெப்டியூன் டிரோசன்கள் என்று அழைக்கப்படும் அவை ஒன்றுக்கு ஒன்று சரி விகிதத்தில் ஒலியலை அதிர்வுகள் கொண்டதாக உள்ளன நெப்டியூனுக்கு அப்பால் உள்ள பகுதி நெப்டியூனின் சுழற்சிப் பாதைக்கு அப்பால் உள்ள பகுதியில் கைப்பர் பட்டையும் புளூட்டோ உள்ளிட்ட பல்வேறு குறுங்கோள்களும் உள்ளன. சில நேரங்களில் இது கதிரவ அமைப்பின் மூன்றாம் பகுதி என்றும் அழைக்கப்படுகிறது. கைப்பர் பட்டை கைப்பர் பட்டை (Kuiper belt) என்பது பனிப்பொருட்களைக் கொண்ட ஒரு பகுதி ஆகும் . இது கதிரவனில் இருந்து 30 வானியல் அலகுகள் தொடக்கம் 50 வானியல் அலகுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ளது(30AU-50AU). இது கதிரவ அமைப்பு உருவாகிய பின் மீதமான சிறு பொருட்களால் ஆனது. இப்பகுதியிலேயே புளூட்டோ, ஹௌமியா மற்றும் மேக்மேக் போன்ற குறுங்கோள்கள் உள்ளன. இங்குள்ளவை அனைத்தும் நீர் மற்றும் உறைந்துள்ள, எரியக்கூடிய மெதேன், அமோனியாவால் ஆனவை. குறிப்புகள் புற இணைப்புகள் கல்வி சஞ்சிகைகள் கட்டுரைகள் சூரிய குடும்பபொருள்கள் * பகுப்பு:கோள் தொகுதிகள்
நமது சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகம் எது?
வியாழன்
737
tamil
7a3626dd9
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது. இது அடிப்படை அரசியல் கொள்கைகள், அரசாங்க நிறுவனங்களின் கட்டமைப்பு, நடைமுறைகள், சக்திகள், மற்றும் அடிப்படை உரிமைகள், உத்தரவுக் கொள்கைகள், குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றின் கட்டமைப்புகளை உள்ளடக்கியுள்ளது. இது தான் இதுவரை உலக நாடுகளின் இடையே எழுதப்பட்டதில் மிக நீண்ட அரசியலமைப்பாகும். இதில் மொத்தம் 22 பிரிவுகள், 12 அட்டவணைகள், 101 திருத்தங்கள், 465 உட்பிரிவுகள் மற்றும் 117,369 சொற்கள் உள்ளன. இது ஆங்கிலப் பதிப்பைத் தவிர, ஒரு அதிகாரப்பூர்வ இந்தி மொழிபெயர்ப்பினையும் கொண்டுள்ளது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி 29 ஆகஸ்ட் 1947 அன்று முதல் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் தொடங்கப்பட்டது. முழுமையடைந்த அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. (இத்தேதி 26 ஜனவரி 1929, முழு தன்னாட்சி சாற்றல் நினைவாகத் தேர்வு செய்யப்பட்டது). இதன் மூலம் இந்தியா ஒரு ஒருங்கிணைந்த, தன்னாட்சி கொண்ட, குடியரசின் மக்களாட்சிக் கோட்பாட்டின்படி வழிநடத்துகின்ற நாடாக அறிவித்துக் கொண்டது. நடைமுறைக்கு வந்த பிறகு, அதுவரை நாட்டின் அடிப்படை நிருவாக ஆவணமாக இருந்த இந்திய அரசு சட்டம், 1935 என்னும் சட்டத்திற்கு பதில் இந்திய அரசியலமைப்பு நாட்டின் அடிப்படை நிர்வாக ஆவணமாக மாற்றியது. அரசியலமைப்புக்கு வலுசேர்க்கும் விதமாக 1976 ல் நடைபெற்ற திருத்தங்களில் இந்தியா பொதுவுடைமை, மதச்சார்பின்மை மற்றும் நேர்மை இவைகளை தன் கொள்கைகளாக அறிவித்தது. இந்தியா தனது அரசியலமைப்பின் ஏற்பை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதியை குடியரசு நாளாகக் கொண்டாடுகிறது. இந்திய அரசியலமைப்பின் படி இந்தியா ஒரு கூட்டாட்சி (federalism) நாடாகும். இருப்பினும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 'கூட்டாட்சி' (கூட்டரசு - federal government) என்ற சொல்லிற்குப் பதிலாக 'ஒன்றியம்' (union) என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் முகப்புரை(preamble)யில், " இறையாண்மை உடைய மக்களாட்சி, சமதர்ம, சுதந்திரக் குடியரசு" என்றும் " இந்திய ஒன்றியம் என்றும் இந்தியா7 பெயரிடப்பட்டுள்ளது. இது இச்சட்டத் தொகுப்பின் முழுப் புரிதலையும் தரும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் தொடக்கத்திலேயே வழங்கப்பட்டிருந்தாலும், பின்பு அடிப்படைக் கடமைகளும் உருவாக்கப்பட்டன. இந்திய அரசமைப்பின் தனிச் சிறப்புக்களில் 'அடிப்படை உரிமைகளும்' அடங்கும். இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கப்படும் போது, பல்வேறு நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களின் கூறுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதனால் இந்திய அரசமைப்பு சட்டத்தை, 'கடன்களின் பொதி' என்பர். 'கூட்டாட்சி முறையை' கனடாவில் இருந்தும், 'அடிப்படை உரிமைகள்' அமெரிக்க ஐக்கிய நாடுகளிடம் இருந்தும், அடிப்படைக் கடமைகளை அன்றைய சோவியத் யூனியனிடமிருந்தும் பெற்றது. அரசியல் சட்டத்திருத்த முறையை தென்னாப்பிரிக்கா இருந்தும், மாநிலங்களவை நியமன எம்.பி.,க்கள் முறையை அயர்லாந்திடம் இருந்தும் பெற்றது. இந்திய அரசியலமைப்பு உருவான வரலாறு இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பாலான பகுதி 1858 லிருந்து 1947 வரை ஆங்கிலேயர் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த காலத்தில் வெளிநாட்டு ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற இந்திய சுதந்திர இயக்கம் படிப்படியாக உயர்வு கண்டது. 1934-ல் இந்தியாவிற்கு ஒரு அரசியல் நிர்ணய மன்றம் வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. பின்னர் 1936-இலும் 1939-இலும் இக்கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அதன்படி, அரசியல் நிர்ணய மன்றத்தை உருவாக்கலாம் என கிரிப்ஸ் தூதுக்குழு மார்ச்-1942-ல் பரிந்துரைத்தது. பின்னர் வந்த அமைச்சரவைத் தூதுக்குழு (மே-1946) அரசியல் நிர்ணய மன்றம் ஏற்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைத்தது. அதன்படி அரசியல் நிர்ணய மன்றத்திற்கான தேர்தல், ஜூலை 1946-ல் நடைபெற்றது. டிசம்பர் 1946-ல் அரசியல் நிர்ணய மன்றம் கூடியது. அம்மன்றத்தின் தற்காலிக தலைவராக சச்சிதானந்த சின்ஹா டிசம்பர் 09 தேர்வுசெய்யப்பட்டார். பிறகு நிர்ணய மன்றத்தின் நிரந்தர தலைவராக டிசம்பர்-11, 1946-ல் இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1947,ஆகஸ்ட் 15-ல் பிரித்தானிய இந்தியாவானது இந்திய மாகாணம், பாக்கிஸ்தான் மாகாணம் என்ற இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டதால் சுதந்திர இந்தியாவிற்கான அரசியலமைப்பை மட்டும் உருவாக்கும் பணியை அரசியல் நிர்ணய மன்றம் செய்ய வேண்டியதாயிற்று. இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் ஒன்றிய மற்றும் மாநில சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களால் அரசியலமைப்பு நிர்ணய மன்றம் அமைக்கப்பட்டது. ஜவகர்லால் நேரு, சி ராஜகோபாலாச்சாரி, ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் படேல், சந்திப் குமார் படேல், டாக்டர் அம்பேத்கர், மவுலானா அபுல் கலாம் ஆசாத், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, நளினி ரஞ்சன் கோஷ், மற்றும் பால்வந்த் சிங் மேத்தா ஆகியோர் சட்டமன்றத்தில் முக்கிய பிரமுகர்களாக இருந்தனர். தாழ்த்தபட்ட வகுப்புகளை சேர்ந்த 30 மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கு இருந்தன. பிராங்க் அந்தோணி ஆங்கிலோ இந்திய சமூகத்தை பிரதிபலித்தார். பார்சி இனத்தவர்களை ஹெச்பி மோடி பிரதிபலித்தார். சிறுபான்மையினர் குழுவின் தலைவராக, ஆங்கிலோ இந்தியர்கள் தவிர மற்ற அனைத்து கிரிஸ்துவர்களின் பிரதிநிதியாக ஃஅரென்ட்ர ஊமர் முகெர்ஜீ என்ற புகழ்பெற்ற கிரிஸ்துவர் இருந்தார். அரி பகதூர் குறூங் கோர்கா சமூகத்தை பிரதிபலித்தார். அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், பி ஆர் அம்பேத்கர், பெனகல் நர்சிங் ராவ் மற்றும் கி.மீ. முன்ஷி, கணேஷ் மவ்லன்கர் போன்ற முக்கிய நடுவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். சரோஜினி நாயுடு, ஹன்சா மேத்தா, துர்காபாய் தேஷ்முக், ராஜ்குமாரி அம்ரித் கவுர் மற்றும் விஜயலட்சுமி பண்டிட் போன்றவர்கள் முக்கியமான பெண்கள் உறுப்பினர்களாக இருந்தனர். அரசமைப்பு மன்றத்தின் முதல் ஜனாதிபதியாக டாக்டர் சச்சிதானந்தன் சின்ஹா ​​இருந்ததார். பின்னர், ராஜேந்திர பிரசாத் சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசமைப்பு மன்ற உறுப்பினர்கள் டிசம்பர் 9, 1946 அன்று முதல் முறையாகக் கூடினர். அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு 1947, ஆகஸ்ட் 29 -ல் அரசியல் நிர்ணய மன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத பீ. இரா. அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு (Drafting committee) உருவாக்கப்பட்டது. பீ. இரா. அம்பேத்கர் கோபால்சாமி ஐயங்கார் அல்லாடி கிருஷ்ணமூர்த்தி கே. எம். முன்ஷி சையது முகமது சாதுல்லா மாதவராவ் டி. பி. கைதான் ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றனர். இக்குழு தனது அறிக்கையை 1948, பிப்ரவரி 21-ல் ஒப்படைத்தது. நவம்பர் 4-ல் அரசியல் நிர்ணய மன்றத்திற்கு ஒப்படைக்கப்பட்ட இவ்வறிக்கை, முழு வடிவம் பெற்று 1949 நவம்பர் 26-ல் அரசியல் நிர்ணய மன்றத்தின் தலைவர் இராஜேந்திரப் பிரசாத்தின் கையொப்பம் பெற்றது. ஜனவரி 24-ல் நடைபெற்ற அரசியல் நிர்ணய மன்றத்தின் கடைசிக் கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். லாகூரில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் 1930,ஜனவரி 26-ல் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றே தீருவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நினைவாக ஜனவரி 26 தேதியை இந்தியக் குடியரசு நாளாக ஏற்பது என்றும் அரசியல் நிர்ணய மன்ற முடிவு செய்தது. "இந்திய அரசியலமைச் சட்டம்-1950" இந்தியக் குடியரசு தினத்தில் நடைமுறைக்கு வந்தது. இது பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து அதன் விடுதலைக்கு பிறகு இந்திய அரசின் நில சட்டத்தின் ஸ்தாபக கொள்கைகளைக் கொண்டிருந்தது. அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து, இந்தியா பிரிட்டிஷ் அரசாட்சியில் இருந்து நீக்கப்பட்டது. வரைவு சட்டமன்றத்தின் 14 ஆகஸ்ட் 1947 கூட்டத்தில், பல்வேறு குழுக்களை உருவாக்கும் திட்டம் வழங்கப்பட்டது. அத்தகைய குழுக்களில் அடிப்படை உரிமைகள், ஒன்றியத்துக்கான அதிகாரக் குழு மற்றும் ஒன்றிய அரசியல் குழு அடங்கியிருந்தன. 29 ஆகஸ்ட் 1947 அன்று, வரைவு குழு, தலைவரை டாக்டர் அம்பேத்கராக கொண்டு, ஆறு உறுப்பினர்களுடன் நியமிக்கப்பட்டது. அரசியலமைப்பின் வரைவு தயாரிக்கப்பட்டு 4 நவம்பர், 1947 அன்று சட்டமன்ற குழுவிடம் சமர்பித்தது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள், பல வெளிப்புற ஆதாரங்களை தழுவினாலும், மிக அதிக அளவில் பிரிட்டிஷ் முறையான பாராளுமன்ற மக்களாட்சியினால் ஈர்க்கப்பட்டனர். கூடுதலாக பல கொள்கைகள் அமெரிக்க அரசியலமைப்பிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டன. அரசாங்கத்தின் முக்கிய கிளைகள் மத்தியில் அதிகார பிரிப்பு, உச்ச நீதிமன்ற நடைமுறை, மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பு ஆகிய கொள்கைகள் அடங்கும். சட்டமன்ற அரசியலமைப்பு தத்தெடுக்கும் முன்னதாக 2 ஆண்டுகள் 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் முழுவதும் கொண்ட மொத்தம் 166 நாட்கள், பொது திறந்த அமர்வுகளில் சந்தித்தது. சில மாற்றங்களுக்கு பிறகு, சட்டமன்றத்தின் 308 உறுப்பினர்களும் இரண்டு ஒப்பந்ததிலும் (இந்தி மற்றும் ஆங்கிலம்)24 ஜனவரி,1950 அன்று கையெழுத்து இட்டனர். இந்தியாவின் உண்மையான அரசியலமைப்பு கையால் எழுதப்பட்டு, பியூகார் ராம்மனோஹர் சின்ஹா ​​மற்றும் மற்றவர்கள் உட்பட சாந்திநிகேதன் கலைஞர்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு பின்னர், 26 ஜனவரி 1950 அன்று, இந்திய அரசியலமைப்பு அனைத்து இந்திய மாநிலங்களுக்கும் ஒன்றியப் பகுதிகளுக்குமான சட்டமானது. அரசியலமைப்பு அதன் அரங்கேற்றம் முதல் பல திருத்தங்களை பெற்றுவிட்டது. பிறநாட்டு அரசியலமைப்பின் தாக்கங்கள் டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான சட்ட வரைவுக்குழு இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கும் பொருட்டு அப்போது மக்களாட்சி நடைபெற்ற நாடுகள் பலவற்றிலிருந்து இந்திய நடைமுறைக்கு பொருத்தும் சட்டக்கூறுகளை இந்திய அரசியலமைப்பு வரைவில் சேர்த்தது. இவற்றில், 1935ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட இந்திய அரசாங்க சட்டம் 1935 -உம் அடக்கம். அமைப்பு அரசியலமைப்பு அதன் தற்போதைய வடிவத்தில் (மார்ச்,2011), ஒரு முன்னுரை, 450 கட்டுரைகள், 12 அட்டவணை, 2 பின் இணைப்பு மற்றும் 114 திருத்தங்களை இன்றுவரை கொண்டு மொத்தம் 24 பகுதிகளைக் கொண்டுள்ளது. இது கூட்டாட்சி தத்துவம் கொண்டது என்றாலும், ஒரு வலுவான ஒற்றைச் சார்பு கொண்டிருக்கிறது. முகவுரை இந்திய அரசியலமைப்பின் முகப்புரை என்பது இந்தியஅரசியலமைப்பின் அறிமுகப்பகுதியாகும்.நாம், இந்திய மக்கள், உறுதிக் கொண்டு முறைப்படி தீர்மானித்து, இந்தியாவை ஓர் இறையாண்மை சமூகத்துவ சமயசார்பற்ற மக்களாட்சி குடியரசாக கட்டமைத்திட, மற்றும் இதன் எல்லா குடிமக்களுக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி எண்ணம், கருத்து, பக்தி, நம்பிக்கை மற்றும் வழிபாடு தன்செயலுரிமை; படிநிலை மற்றும் வாய்ப்பு சமத்துவம் ஆகியன உறுதிசெய்திட; மற்றும் தனிநபர் கண்ணியத்தையும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைபாட்டையும் உறுதிப்படுத்த அனைவரிடத்திலும் உடன்பிறப்புணர்வை ஊக்குவித்திட. இந்த 1949, நவம்பர் இருபத்தி-ஆறாம் நாள் நம்முடைய அரசியல் நிர்ணய மன்றத்தில் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு முறைமையை, இதன்படி ஏற்று, சட்டமாக்கி நமக்கு தருகிறோம். பகுதிகள் பகுதி 1 (உட்பிரிவு 1-4) இந்திய ஒன்றியம் பற்றியது. அதாவது மாநில அமைப்பு. மாநில எல்லை வரையறை போன்றவை. பகுதி 2 (உட்பிரிவு 5-11) இந்திய குடியுரிமை பற்றியது. பகுதி 3 (உட்பிரிவு 12-35) அடிப்படை உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள். பகுதி 4 (உட்பிரிவு 36-51) அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள். பகுதி 4A ( உட்பிரிவு 51 A) அடிப்படை கடமைகள்.(1976 ஆம் ஆண்டு 42வது திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது) பகுதி 5 (உட்பிரிவு 52- 151) ஒன்றிய அரசமைப்பு அதாவது குடியரசு தலைவர்,துணைக் குடியரசு தலைவர், நடுவண் அமைச்சரவை, பாராளுமன்றம் மற்றும் அதன் அமைப்பு, உச்ச நீதிமன்றம் மற்றும் அதன் அமைப்பு. பகுதி 6 ( உட்பிரிவு 152-237) மாநில அரசமைப்பு, ஆளுநர், மாநில அமைச்சரவை. மாநில சட்டமன்றம் / சட்ட மேலவை அதன் அமைப்பு உயர் நீதி மன்றம் அதன் அமைப்பு. பகுதி 7 (உட்பிரிவு 238) அரசமைப்பு சட்டம் முதல் பட்டியலில் உள்ள மாநிலங்கள் பற்றியது- இந்தப் பிரிவு இப்போது நீக்கப் பட்டுள்ளது. பகுதி 8 (உட்பிரிவு 239 -242) ஒன்றியப் பகுதிகள் குறித்து. பகுதி 9 ( உட்பிரிவு 243) உள்ளாட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன. பகுதி 9A ( உட்பிரிவு 243P-243Z,243ZA-243ZG) நகராட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன. பகுதி 10 (உட்பிரிவு 244) பட்டியல் சாதிகள்/ பழங்குடியினர்/ ஆங்கிலோ இந்தியர் ஆகியோர் குறித்து. பகுதி 11 (உட்பிரிவு 245-263) ஒன்றிய மற்றும் மாநில அரசு உறவு, மாநிலங்ளுக்கிடையேயான உறவு. பகுதி 12 (உட்பிரிவு 264-300) அரசின் நிதி குறித்த உட்பிரிவுகள் நிதி / நிதியினைக் கையாளும் நெறிகள். பகுதி 13 ( உட்பிரிவு 301- 307) இந்திய நாட்டில் வணிகம் செய்யும் நடைமுறைக்கான உட்பிரிவுகள். பகுதி 14 ( உட்பிரிவு 308-323) அரசுப் பணிகள் பகுதி 14A (உட்பிரிவு 323ஏ மற்றும் 323 பி) ஒன்றிய அரசின் தீர்ப்பாயங்கள். பகுதி 15 (உட்பிரிவு 324-329) தேர்தல்கள், தேர்தல் ஆணையம். பகுதி 16 (உட்பிரிவு 330-342) - பகுதிவாரி பெரும்பாண்மை சாதிகளுக்கான உரிமைகள் பற்றி. பகுதி 17 (உட்பிரிவு 343-351) அலுவல் மொழி, வட்டார மொழி,நீதி மன்றங்களில் மொழி. பகுதி 18 (உட்பிரிவு 352-360) அவசர நிலைக்கானது பிரகடனம் (எமெர்ஜென்சி) பகுதி 19 (உட்பிரிவு 361-367) இதர (இதில் குடியரசு தலைவர், ஆளுநர் இந்தப் பதவிக்கான சட்ட சிறப்பு பாதுகாப்பு மற்றும் சில) பகுதி 20 (உட்பிரிவு 368) இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தம் அதற்கான நடைமுறை. பகுதி 21 (உட்பிரிவு 369-392) தற்காலிக, இடைநிலை மற்றும் சிறப்பு ஒதுக்கீடுகள் பகுதி 22 (உட்பிரிவு 392-395) குறுகிய தலைப்பு, ஆரம்பம் தேதி, இந்தி மற்றும் ரிப்பீல்ஸில் அதிகாரப்பூர்வ உரை. அட்டவணைகள் முதலாம் அட்டவணை (Articles 1 and 4) இரண்டாம் அட்டவணை (Articles 59(3), 65(3), 75(6), 97, 125, 148(3), 158(3), 164(5), 186 and 221) மூன்றாம் அட்டவணை (Articles 75(4), 99, 124(6) நான்காம் அட்டவணை (Articles 4(1) and 80(2)) ஐந்தாம் அட்டவணை (Article 244(1)) ஆறாம் அட்டவணை (Articles 244(2) and 275(1)) ஏழாம் அட்டவணை (Article 246) எட்டாம் அட்டவணை (Articles 344(1) and 351) ஒன்பதாம் அட்டவணை (Article 31-B) பத்தாம் அட்டவணை (Articles 102(2) and 191(2)) பதினோராம் அட்டவணை (Article 243-G)  பனிரெண்டாம் அட்டவணை (Article 243-W)  இந்திய அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் இந்திய அரசியலமைப்பில் 22 அத்தியாயங்களும்(Chapters) 9 அட்டவணைகளும் (Schedules) (முதலில் 8 அட்டவணைகளே இருந்தன; 1951-ல் 9-ஆவது அட்டவணை சேர்க்கப்பட்டது) 22 அத்தியாயங்களும் 395 பிரிவு (Article) களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமைகள், அரசு நெறிமுறைக் கோட்பாடுகள், ஒன்றிய அரசின் நிர்வாகக்குழு, மாநில அரசுகள், நீதிமன்றங்கள் ஆகியன பற்றி சொல்லப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு கீழ்கண்ட முகப்புரையுடன் தொடங்குகிறது: இந்தியாவின் மக்களாகிய நாங்கள் இந்தியாவை ஒரு சுதந்திரமான, சமுதாயநலம்நாடும், சமயச்சார்பற்ற, சமஉரிமைக் குடியரசு நாடாக அமைக்க மனமார்ந்து முடிவுசெய்து, அதன் குடிமக்கள் எல்லோருக்கும் சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் நியாயமும், எண்ணத்தில், வெளிப்பாடுகளில், நம்பிக்கையில், மதம் மற்றும் வழிபாடுகளில் சுதந்திரமும், சமூகநிலையில் மற்றும் வாய்ப்புகளில் சமத்துவமும் கிடைக்கச் செய்யவும், ஒவ்வொரு மனிதனின் மதிப்பையும் நாட்டின் ஒருமையையும் முழுமையையும் காக்கும்வண்ணம் அவர்கள் அனைவரிடமும் உடன்பிறப்புணர்வை ஊக்குவிக்கவும் நம் அரசியல் அமைப்பு உருவாக்கும் அவையில் இந்த 1949 நவம்பர் இருபத்தாறாம் நாளில் இங்ஙனம் இந்த அரசாங்க சாசனத்தை இயற்றி, எங்களுக்கே தந்து, ஏற்றுக்கொள்கிறோம். அடிப்படை உரிமைகள் இந்திய அரசியலமைப்பின் முதல் அத்தியாயத்தில் நாட்டின் பெயர், ஆட்சிப்பரப்பு ஆகியனவும், இரண்டாவது அத்தியாயத்தில் குடிமை(Citizenship) பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. 12-ஆவது பிரிவு முதல் 35-ஆவது பிரிவு வரை உள்ள மூன்றாவது அத்தியாயத்தில் இந்தியரின் அடிப்படை உரிமைகள் பட்டியலிடப்பட்டு உள்ளன. அவற்றுள்: இந்தியாவிற்குள் அனைவரும் சம பாதுகாப்பு (பிரிவு-14) வேறுபாடின்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம் (பிரிவு-15) பொதுவேலைவாய்ப்பில் சம வாய்ப்பு (பிரிவு-16) தீண்டாமை ஒழிப்பு (பிரிவு-17) பட்டங்கள் ஒழிப்பு (பிரிவு-18) ஏழு சுதந்திரங்கள் (பிரிவு-19 முதல் 22) சமய உரிமை (பிரிவு 25-28) சிறுபான்மையினரின் பண்பாட்டு,கல்வி உரிமை (பிரிவு 29-30) இவ்வுரிமைகளைக் காத்துக் கொள்ள உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் உரிமை (பிரிவு-32) ஆகியன முக்கியமானவையாகும். நெருக்கடி நிலையின் போது தற்காலிகமாக அடிப்படை உரிமைகள் நீக்கப்படும். ஆனால் நெருக்கடி நிலை ரத்தானதும் அடிப்படை உரிமைகள் தானாக அமலாகிவிடும். அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் இந்தியாவிலுள்ள ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மக்களைப் பாதுகாத்து நல்வழிப்படுத்த, எந்தக் கோட்பாடுகளை உள்ளடக்கி சட்டங்கள் இயற்ற வேண்டும் என்பதே அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் (Directive Principles) ஆகும். இது பற்றி நான்காம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லோருக்கும் போதுமான வாழ்க்கை வசதிகள், வயதுக்கும் வேலைக்கு ஏற்ற பொருத்தமான வேலை, தொழில் செய்ய ஏற்ற சூழ்நிலை, வேலைக்கு ஏற்ற வயது வரை இலவச கட்டாயக் கல்வி, பொது சுகாதாரம், மது விலக்கு, வேளாண்மை வளர்ச்சி, வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு ஆகியன அக்கோட்பாடுகளுள் சிலவாகும். இக்கோட்பாடுகள் யாவும் அறிவுரைகளே; இவற்றைச் செயல்படுத்தக் கோரி அரசுகள் மீது நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது. கூட்டாட்சி அமைப்பு அரசியலமைப்பு ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே அதிகாரங்களை பகிர்ந்து வழங்குகிறது. இது பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் அதிகாரங்களை மூன்று பட்டியல்,அதாவது ஒன்றிய அரசுப் பட்டியல், மாநில பட்டியல் மற்றும் உடன்நிகழ்கிற பட்டியல் என பிரிக்கிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை, நாணய வழங்கல் போன்ற விடயங்கள் ஒன்றியப் பட்டியலில் ஒதுக்கப்பட்டுள்ளன. பொது ஒழுங்கு, உள்ளூர் அரசாங்கங்கள், சில வரிகள் ஆகியவை மாநிலப் பட்டியல் உள்ளன. பாராளுமன்றம் விதிவிலக்கான சூழ்நிலைகளில் தவிர, அந்த சட்டங்களை இயற்ற எந்த சக்தியும் கிடையாது.கல்வி, போக்குவரத்து, குற்றவியல் சட்டம் ஆகிய உடன்நிகழ்கிற பட்டியலில் உள்ள பாடங்களில் மாநில சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் சட்டங்களை இயற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது .எஞ்சியுள்ள அதிகாரங்கள் ஒன்றியத்தின் வசம் உள்ளது.மாநிலங்களின் பிரதிநிதிகளை கொண்டிருக்கும் மேல்சபையான மாநிலங்களவையில்,மேல் கூட கூட்டாட்சி அரசாங்கம் முறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. பாராளுமன்ற மக்களாட்சி இந்திய குடியரசு தலைவர், பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுபவர்.நேரடியாக மக்களால் கிடையாது. பாராளுமன்றத்தில் இயற்றப்படும் நிர்வாகம் மற்றும் சட்டங்கள் அனைத்தும் அவர் பெயரில் நிறைவேற்றப்படுகிறது. ஆனால் இந்த அதிகாரங்கள் பெயரளவுக்கு மட்டுமே உள்ளன, குடியரசு தலைவர் பிரதமர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின் படி தான் செயல்பட வேண்டும். இதே போன்ற ஒரு அமைப்பு, நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்,முதல்வர் மீதும் அமைச்சர்கள் மீதும் தங்கள் கட்டுப்பாட்டை செலுத்தும் முறை தற்போது மாநிலங்களில் உள்ளது. சுதந்திரமான நீதித்துறை இந்திய நீதித்துறை, நிர்வாகிகள் முதல் பாராளுமன்றம் வரை அதன் கட்டுப்பாட்டை செலுத்த முடியும். நீதித்துறை அரசியல் பொருள் விளக்குபவராக செயல்படுகிறது. இரு மாநிலங்களுக்கு இடையிலோ,ஒரு மாநிலத்துக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையிலோ ஏற்படும் பிரச்சினைகளில் நடுநிலையாளராக செயல்படும். பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இயற்றப்பட்ட சட்டம் நீதிமுறை மேலாய்வுக்கு உட்பட்டது. அந்த சட்டம் அரசியலமைப்பு விதிகளை மீறுகிறது என்று நினைத்தால் நீதித்துறை அரசியலமைப்பில் அல்லாததாக அறிவிக்க முடியும். சட்டங்களின் நீதிமுறை மேலாய்வு நீதிமுறை மேலாய்வை அமெரிக்காவின் அரசியலமைப்பிலிருந்து இந்திய அரசியலமைப்பு பயன்படுத்திக்கொண்டது. நீதிமன்ற உறுப்புரை 13 கீழ் நீதிமுறை மேலாய்வு செயல்படுகிறது. நீதிமன்ற அரசியலமைப்பு நாட்டின் உச்ச சக்தி மற்றும் அனைத்து சட்டங்களும் அதன் மேலாதிக்கத்தின் கீழ் என்பதை குறிக்கிறது. உறுப்புரை 13 கூறுவதாவது, 1. அனைத்து முன் அரசியலமைப்பு சட்டங்களும் பின்னர் அரசியலமைப்பு சட்ட விதிகளுடன் மோதல்கள் ஏற்பட்டால், அரசியலமைப்பின் விதிகள் அதற்கு ஏற்றதாக மாற்றப்படும் வரை செயல்படுத்த படாமல் இருக்கும்.இது டாற்றின் ஆப் எலிப்ஸ் கொள்கை என்று அழைக்கப்படுகிறது. 2. இதே முறையில், அரசமைப்பு மன்றத்தால் அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டதிலிருந்து இயற்றபடும் சட்டங்கள் அரசியலமைப்புக்கு இணக்கத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும், இல்லையெனில் சட்டங்கள் மற்றும் திருத்தங்களை வய்டு-அ பி- இனிடியோ வேண்டும் என கருதப்படுகிறது. ஒன்றிய அரசு நிர்வாகக் குழு குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், ஒன்றிய அமைச்சரவை, பாராளுமன்றம் ஆகியவற்றைக் கொண்டதாக ஒன்றிய அரசு நிர்வாகக் குழு அமையும். குடியரசுத் தலைவர் (President of India) இந்தியக் குடியரசுத் தலைவர்</b>என்பவர் இந்தியக் குடியரசு எனப்பட்ட "இந்திய அரசின் தலைவர்" ஆவார். ஒன்றிய அரசு நிர்வாகக் குழுவின் தலைவரும், கூட்டாட்சி நிர்வாகத்தின் தலைவரும், இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதியும் ஆவார். 'இந்தியாவின் முதல் குடிமகன்' என்றும் அவர் குறிப்பிடப்படுகிறார். குடியரசுத் துணைத் தலைவர் இந்தியாவின் இரண்டாவது மிக உயர் பதவிக்குரியதாகும், குடியரசுத் தலைவருக்கு அடுத்த நிலையில் வரும் பதவியாகும். துணைக்குடியரசுத்தலைவரே நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைத் தலைவராவார். எனினும் இவருக்கு மாநிலங்க‌ளவை வாக்கெடுப்பில் வாக்களிக்கும் உரிமை இல்லை. ஏனெனில் இவர் மாநிலங்களவை உறுப்பினர் அல்லர். எனினும் வாக்குகள் சமநிலையில் இருக்கும் போது இவர் வாக்களிக்கலாம். ஒன்றிய அமைச்சரவை பாராளுமன்றம் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ளதைப்போல் இந்தியாவிலும் பாராளுமன்றம் ஈரவை கொண்ட அமைப்பாக விளங்குகிறது. முதலாம் மன்றம் அல்லது கீழவை அல்லது மக்களவை (First Chamber or Lower House or House of the People) என்ற அவை மக்களை பிரதிநித்துவப்படுதுகிறது. இரண்டாம் மன்றம் அல்லது மேலவை அல்லது மாநிலங்களவை (Second Chamber or Upper House or Council of the States) என அழைக்கப்படும் இரண்டாவது அவை இந்திய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள மாநிலங்களையும் மற்றும் ஒன்றிய அரசின் ஆளுகைப்பகுதிகளையும் பிரதிநித்துவப்படுத்துகிறது. இது தவிர குடியரசுத்தலைவர் இந்தியப் பாராளுமன்றத்தின் ஒரு அங்கமாக விளங்குகிறார். மாநிலங்களவை மாநிலங்களவையின் 233 உறுப்பினர்கள் மாநில-பிரதேச சட்டப்பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு வருடங்களுக்கு பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மக்களவை மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். முன்பு நிலவிய சட்டங்கள் 1935 முன்பான பிரித்தானிய நாடாளுமன்றத்தின் சட்டங்கள் அச்சட்டம் மேலும் இங்கிலாந்தில் இந்திய மாநில செயலாளர் அலுவலகத்தை நிறுவி நாடாளுமன்றம், அதன் மூலம் ஆட்சி செய்தது. அதே போல் இந்திய அரச பிரதிநிதி அலுவலகத்தை நிறுவியது. நிர்வாக மன்றம் மற்றும் அல்லாத அதிகாரப்பூர்வ உறுப்பினர்கள் கொண்ட சட்ட மன்றங்கள் இந்திய சபைகள் சட்டம், 1861 வழங்கியது. இந்திய சபைகள் சட்டம், 1892 மாகாண சட்டமன்றங்களை நிறுவியது. சட்ட சபையின் அதிகாரங்களை அதிகரித்தது. இந்த சட்டங்களால் அரசாங்கத்தில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்த போதிலும், அவர்களின் அதிகாரம் குறைவாகத் தான் இருந்தது. இந்திய சபைகள் சட்டம், 1909 மற்றும் இந்திய அரசுச் சட்டம், 1919 ஆகியவற்றால் இந்தியர்களின் பங்கு மேலும் விரிவடைந்தது. இந்திய அரசுச் சட்டம் 1935 இந்திய அரசு சட்டம் 1935 யின் விதிகள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை, எனினும் இந்திய அரசியலமைப்பில் பெரும் தாக்கத்தை ஏர்படுத்தியது. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பின் பல முக்கிய அம்சங்கள் நேரடியாக இந்த சட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டன. கூட்டாட்சி அரசாங்கம் அமைப்பு, மாகாண சுயாட்சி, கூட்டாட்சி சட்டமன்றம் மற்றும் சட்ட அதிகாரங்களை மத்தியிலும் மாகாணங்களின் இடையிலும் பிரித்தல் ஆகியவற்றை தற்போது இந்திய அரசியலமைப்பு அவை சட்டத்தின் விதிகளில் இருந்து எடுத்துக்கொண்டது. கேபினெட்டு மிஷன் திட்டம் 1946 இல், பிரித்தானியப் பிரதமர் கிளெமென்ட் அட்லி அதிகாரத்தை பிரித்தானிய இந்தியாவிடமிருந்து இந்திய தலைமைக்கு மாற்ற விவாதித்து முடிவு செய்யவும், காமன்வெல்த்து நாடுகளின் ஒரு அங்கமாக இந்தியாவை மேலாட்சி அரசுமுறையின் கீழ் சுதந்திரம் வழங்க ஒரு அமைச்சரவைக் குழுவை உருவாக்கினார். இக்குழு கேபினட்டு மிஷன் என அழைக்கப்பட்டது. பிரித்தானிய இந்திய மாநிலங்களில் ஒதுக்கப்பட்டிருந்த 296 இடங்களுக்கான தேர்தல் ஆகத்து 1946 இல் நிறைவு பெற்றது. இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் திசம்பர் 9, 1946 அன்று முதல் கூடி புதிய அரசமைப்பை உருவாக்கும் வேலையைத் தொடங்கியது. இந்திய சுதந்திர சட்டம் 1947 சூலை 18, 1947 பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இந்திய விடுதலை (சுதந்திர)ச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அது இரண்டு புதிய சுதந்திர மேலாட்சி நாடுகளான - இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் என்று பிரித்தானிய இந்தியாவைப் பிரித்து, அவர்கள் தங்களுக்கான புதிய அரசியலமைப்பு சட்டம் எழுதப்படும் வரை, காமன்வெல்த் நாடுகள் கீழ் இருக்க வேண்டும் என்றது. தனி மாநிலங்களுக்காக அரசமைப்பு மன்றம் இரண்டாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு புதிய சட்டமன்றத்திற்கும் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரங்கள் வழங்கப்பட்டது. இந்த சட்டம் மன்னர்கள் ஆளும் மற்ற மாநிலங்களை ஏதாவது ஒன்றின் அடியே இணையச் சொன்னது. இந்திய அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு சனவரி 26 அன்று வழக்குக்கு வந்த போது இந்திய விடுதலைச் சட்டம் நீக்கப்பட்டது. இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுப்பட்டு இறையாண்மை கொண்ட மக்களாட்சிக் குடியரசாக மாறியது. 26 நவம்பர், 1949 தேசிய சட்ட தினம் என்று அறியப்படுகின்றது. அரசாங்கத்தின் அமைப்பு பின்வருமாறு ஒன்றிய அரசு அடிப்படை வடிவம் எதிர்நோக்குகிறது "ஒரு மக்களாட்சி நிர்வாகம் மூன்று நிலைகளை தீர்க்க வேண்டும்: 1. ஒரு நிலையான நிர்வாகம் இருக்க வேண்டும் 2. ஒரு பொறுப்பான நிர்வாகம் இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, அது சம அளவு இரண்டு நிலைமைகளையும் உறுதி செய்ய ஒரு முறையை திட்டமிடுவது இதுவரை சாத்தியமே இல்லை. ..... அமெரிக்க முறையில் இல்லாத தினசரி பொறுப்பு மதிப்பீடு குறித்த காலத்து மதிப்பீட்டை விட மிகவும் பயனுள்ளதக இந்தியா போன்ற நாடுகளில் மிகவும் பயனுள்ளதாக அமையும். வரைவு அரசியமைப்பு நிலைத்தன்மையைவிட பொறுப்புக்கு விருப்பமாக பாராளுமன்ற அமைப்புக்கு பரிந்துரைத்துள்ளது.” அரசியலமைப்பை மாற்ற கட்டுரை 368 அமைக்கப்பட்டுள்ள செயல்முறை படி, அரசியல் சட்ட திருத்தங்களை பாராளுமன்றம் மாற்றம் செய்யலாம். ஒரு திருத்த மசோதா மூன்றில் இரண்டு பெரும்பான்மையினரின் வாக்கெடுப்பால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற வேண்டும். மேலும் கூட்டாட்சி அரசியலமைப்பு தொடர்புடையதான சில திருத்தங்களை மாநில சட்டமன்றங்கள் பெரும்பான்மை மூலம் உறுதிப்படுத்த வேண்டும். செப்டம்பர் 2010 வரை, பாராளுமன்றம் முன் செலுத்தப்பட்ட 108 திருத்த மசோதாக்களில் 94 திருத்தம் சட்டமாக நிறைவேறி உள்ளது. எனினும், அரசியலமைப்பு அரசாங்க அதிகாரங்களை மிகவும் கவனிப்பதால் இந்த பிரச்சினைகளில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட வேண்டும். இதன் விளைவாக, ஆவணம் ஒரு வருடத்திற்கு சுமார் இரண்டு முறை திருத்தப்பட்டு உள்ளது. உசாத்துணை , தமிழக அரசு இணையத்திலிருந்து, பார்த்த நாள், 06, ஏப்ரல், 2012. வெளி இணைப்புகள் பகுப்பு:இந்திய அரசியல் பகுப்பு:இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுப்பு:அரசியலமைப்புகள் பகுப்பு:இந்திய நடுவண் அரசுச் சட்டங்கள் பகுப்பு:இந்தியா
உலகின் மிகப்பெரிய அரசியலமைப்பு சட்டம் எது?
இந்தியா
62
tamil
eef50e78c
நானோ தொழில்நுட்பம் (Nanotechnology) அல்லது மீநுண் தொழில்நுட்பம் என்பது அணு, மூலக்கூறு, மீமூலக்கூறு அளவில் பொருள்களைக் கையாளும் தொழிற்கலை ஆகும். பரவலாக இன்று அறியப்படும் தொடக்கநிலை மீநுண் தொழில்நுட்பம்[1][2] சில குறிப்பிட்ட தொழில்நுட்ப இலக்குகளை ஒட்டியது. இதன்படி, பெரிய அளவிலான பொருள்களையோ கருவிகளையோ செய்ய, துல்லியமாக அணு அளவிலும், மூலக்கூறு அளவிலும் பொருள்களைக் கையாண்டு செய்யும் முறையே மீநுண் தொழில்நுட்பம் ஆகும். இது இப்போது மூலக்கூற்று மீநுண் தொழில்நுட்பம் எனப்படுகிறது. பிறகு, மிகவும் பொதுவான விளக்கம் ஒன்றை அமெரிக்கத் தேசிய மீநுண் தொழில்நுட்ப முன்முயற்சியகம் தந்தது. இதன்படி, மீநுண் தொழில்நுட்பம் என்பது குறைந்தது ஒரு பருமானத்தில் 1 முதல் 100 நானோமீட்டர்களில் ஒன்றைக் கையாளும் திறம் கொண்ட நுட்பமாக வரையறுக்கப்பட்டது. இந்த வரையறையின்படி பொருளின் பரும அளவு மிகக்குறைவாக இருப்பதால் குவைய இயக்கவியல் (குவாண்டம் இயக்கவியல்) விளைவுகள் மிகவும் வினைப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கும். எனவே வரையறை குறிப்பிட்ட தொழில்நுட்ப இலக்கில் இருந்து பெயர்ந்து ஆய்வு வகைக்கு மாறிவிட்ட்தைக் கண்ணுறலாம். இதன்படி, இன்று இது குறிப்பிட்ட பரும அளவுக்குக் கீழே அமைந்த பொருளின் சிறப்பு இயல்புகளை விவரிக்கும் அனைத்து ஆராய்ச்சிகளையும் தொழில்நுட்பங்களையும் உள்ளடக்குகிறது.எனவே இது இப்போது மீநுண் தொழில்நுட்பங்கள் அல்லது மீநுண்ணளவுத் தொழில்நுட்பங்கள் என பன்மையில் அழைக்கப்படுகிறது. இதன் பொதுப்பான்மையாக அளவு மட்டுமே கருதப்படுகிறது. இதற்குப் பல பயன்பாடுகள் தொழில்துறையிலும் படைத்துறையிலும் வாய்த்துள்ளதால், உலக வல்லரசுகள் பல பில்லியன் வெள்ளிகள் (தாலர்கள்) செலவிட்டு வருகின்றன. அமெரிக்கா தன் தேசிய மீநுண் தொழிலுட்ப முன்முயற்சியகத்தின் வழி 3.7 பில்லியன் அமெரிக்க வெள்ளிகளை முதலீடு செய்துள்ளது; ஐரோப்பிய ஒன்றியம் 1.2 பில்லியன் அமெரிக்க வெள்ளிகளையும் நிப்பான் எனும் யப்பான் 750 மில்லியன் அமெரிக்க வெள்ளிகளையும் முதலீடு செய்துள்ளன.[3] பரு அளவால் வரையறுக்கப்படும் மீநுண் தொழில்நுட்பம், அறிவியலில் மேற்பரப்பு அறிவியல், [[கரிம வேதியியல், [[மூலக்கூற்று உயிரியல், குறைகடத்தி இயற்பியல், நுண்புனைவியல், மூலக்கூற்றுப் பொறியியல் போன்ற பல புலங்களை உள்ளடக்குகிறது.[4] எனவே இத்துறை சார்ந்த ஆராய்ச்சியும் பயன்பாடுகளும் பல்திறத்தனவாக, மரபியலான குறைகடத்திக் கருவி இயற்பியலில் இருந்து முற்றிலும் புதிய அணுகுமுறைகள் வாய்ந்த மூலக்கூற்றுமுறைத் தன்பூட்டுதல் முதல் மீநுண் பொருள்களை உருவாக்கல், நுண் தொழில்நுட்பம், மூலக்கூற்று மீநுண் தொழில்நுட்பம் என, நேரடி அணுவியல் மட்டக் கட்டுபாடுள்ள புலங்கள் அனைத்திலும் பரந்து விரிந்தமைகிறது. அறிவியலாளர்கள் அன்மையில் மீநுண் தொழில்நுட்பத்தின் தொடர்ந்த எதிர்கால பின்விளைவுகள் பற்ரி விவாதித்து வருகின்றனர். இது மீநுண் மருத்துவம், மிநுண் மின்னணுவியல், உயிரிப்பொருள்வழி ஆற்றலாக்கம், நுகர்பொருட்கள் போன்ற அகன்ற விரிவான மீநுண் தொழில்நுட்பப் பயன்பாடுகளுக்கான பல புதிய பொருள்களையும் கருவிகளையும் உருவாக்க வல்லதாகும். இன்னொருவகையில் பார்த்தால், புதிய தொழில்நுட்பம் ஏற்படுத்தும் அத்தனைச் சிக்கல்களையும் மீநுண் தொழில்நுட்பமும் எதிர்கொள்கிறது. இது மீநுண் நச்சியல் விளைவுகளையும் மீநுண் பொருள்களால் ஆகிய சுற்றுச்சூழல் தாக்கங்களையும் கொண்டுள்ளது.[5] இதன் தாக்கம் உலகப்பொருளியல் மீதும் அமைவதோடு பல அழிவுநாள் வரம்புநிலைகளையும் உருவாக்க வல்லதாக உள்ளது. இந்த அக்கறைகள், மீநுண் தொழில்நுட்பத்தைப் பரிந்துரைப்போருக்கும் உலக அரசுகளுக்கும் இடையில் சிறப்பு மீநுண் தொழில்நுட்ப ஒழுங்குமுறைகளை உருவாக்குதல் தேவையா எனும் விவாதத்தைக் கிளப்பிவருகின்றன. தோற்றம் மீநுண் தொழில்நுட்பத்துக்கான எண்ணக்கரு விதைந்த விவாதம் 1959 இல் பெயர்பெற்ற இயற்பியலாளரான இரிச்சர்டு பீய்ன்மனால் அவரது There's Plenty of Room at the Bottom எனும் உரையில் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் இவர் அணுக்களை நேரடியாகக் கட்டுபடுத்தி உருவாக்கும் பொருள்தொகுப்பின் வாய்ப்புகள் பற்றி விவரிக்கிறார். மீநுண் தொழில்நுட்பம் எனும் சொல்லை முதலில் 1974 இல் நோரியோ தானிகுச்சி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அப்போது இச்சொல் மிகவும் பரவலாக வழங்கப்படவில்லை. பெயின்மன் கருத்துகளால் கவரப்பட்டு, கே. எரிக் டிரெக்சிலர் என்பார் தான் 1986 ஆம் ஆண்டு வெளியிட்ட Engines of Creation: The Coming Era of Nanotechnology எனும் நூலில் மீநுண் தொழில்நுட்பம் எனும் சொல்லைப் பயன்படுத்தினார். இதில் மீநுண் அளவு புனைவி எனும் எண்ணக்கருவை முன்மொழிந்தார். இது அணுக் கட்டுபாட்டின் வழி சிக்கலான கட்டமைப்புடைய தன்னையே புனைவதோடு பிறவற்றையும் புனையும் ஆற்றல் கொண்டதாகும். இவர் 1986 இல் முன்னோக்கு நிறுவனம் அமைப்பை இனையாக நிறுவினார்.இதன்வழி மக்களின் விழிப்புணர்வை மீநுண் தொழில்நுட்பத்தின்பால் ஈர்த்து அத்தொழில்நுட்பத்தின் கருத்துப்படிமங்களையும் விளைவுகளையும் புரிந்துகொள்ள வழிவகுத்தார். இதனால், 1980 களில் இவரது கோட்பாட்டுப் பணிகளாலும் பொதுப்பணிகளாலும் மீநுண் தொழில்நுட்பம் தனிப்புலமாக எழுச்சிகண்டு வளரலானது. பல நுண்ணோக்கான உயர்நிலைச் செய்முறைகள் மேற்கோள்ளப்பட்டன. பொருண்மத்தின் அணுக்கட்டுபாட்டின்பால் ஆய்வாளர்களின் கவனத்தைக் குவித்தது. 1980 களில் ஏற்பாட்ட இரு புதுமைக் கண்டுபிடிப்புகள் இத்துறைyai உரமூட்டி வளர்த்தன. முதலாவது கண்டுபிடிப்பு, ஊடுருவும் அலகீட்டு நுண்ணோக்கி 1981இல் புதிதாகப் புனைந்தமையாகும். இது வரலாறுகாணாத வகையில் தனித்தனி அணுக்களையும் அவற்றுக்கிடையில் அமைந்த பிணைப்பையும் தெளிவாக்க் காண வழிவகுத்தது. இதனால் 1989 ஆண்டளவுக்குள் தனி அணுக்களை வெற்றியோடு கையாள இந்நுண்ணோக்கியை பயன்படுத்த முடிந்தது. இதை உருவாக்கியதற்காக ஐ பி எம் சூரிச் ஆய்வகத்தைச் சேர்ந்த ஜெர்டு பின்னிகுவும் என்றிச் உரோகிரரும் 1986 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசைப் பெற்றனர்.[6][7] அதே ஆண்டில் பின்னிகுவும், குவேட்டும் கெர்பெரும் இதையொத்த அணுவிசை நுண்ணோக்கியைப் புத்திதாக புனைந்தனர். இரண்டாவது கண்டுபிடிப்பு, 1985 இல் நெளிபந்துகள் எனப்படும் பெருங்கரிம மூலக்கூறுகளாகிய புல்லெரீன்கள் கண்டுபிடிக்கப்பட்டமையாகும். இக்கண்டுபிடிப்புக்காக ஆரி குரோட்டொ, இரிச்சர்டு சுமால்லேஇராபர்ட் கர்ல் ஆகிய மூவரும் 1996 ஆம் ஆண்டின் வேதியியல் நோபல் பரிசைப் பெற்றனர்.[8][9] C60 இவை முதலில் மீநுண் தொழில்நுட்பத்துக்குள் அடக்கப்படவில்லை ஆனால், பின்னர் கரிம மீநுண் குழல்கள் அல்லது நெளிகுழல்கள் எனப்படும் கிராபீன் குழல்களின் கண்டுபிடிப்புக்குப் பின்னரே மீநுண் தொழில்நுட்ப வரையறைக்குள் வந்தது. இவற்றின். பயன்பாடுகள் மீநுண்ணளவு மின்னணுவியலிலும் மின்னணுவியல் கருவிகளிலும் பேரளவாக அமையும் வாய்ப்புகளும் புலனாகின. இப்புலம் 2000 களின் தொடக்கத்தில், வளர்நிலை அறிவியல், அரசியல், வணிகவியல் கவனத்துக்கு ஆட்படலானது. பல எதிர்ப்புகளையும் தொடர்ந்த முண்ணேற்ரத்தையும் சந்தித்தது. அரசு கழகத்தின் மீநுண் தொழில்நுட்ப அறிக்கைக்குப் பிறகு, வரையறைகள் குறித்தும் இத்தொழில்நுட்பத்தின் பின்விளைவுகள் குறித்தும் கருத்து மோதல்கள் தோன்றின.[10] மூலக்கூற்று மீநுண் தொழில்நுட்ப விரும்பிகளால் விவரிக்கப்படும் பயன்பாடுகள் குறித்து பல அறைகூவல்கள் எழுந்தன. இது பொதுமக்களிடையே பெருவிவாத்த்தைக் கிளப்பியது. இவ்விவாத்த்தில் 2001 இலும் 2003 இலும் டிரெக்சிலரும் சுமால்லேவும் ஈடுபட்டனர்.[11] இதற்கிடையில் மீநுண்ணளவு தொழில்நுட்ப முன்னேற்றங்களால் உருவாகிய பொருள்கள் வணிகவீயலாக வெற்ரிகாணத் தொடங்கிவிட்டன. இப்பொருள்கள் மீநுண்பொருள்களின் பேரளவு பயன்பாட்டால் உருவாகியவையே தவிர இவற்றில் பொருண்மத்தின் அணுமட்டக் கட்டுபாடேதும் கைக்கொள்ளப்படவில்லை. எடுத்துகாட்டுகளாக்க் குச்சுயிரித் தொற்றெதிர்ப்புள்ல வெள்ளி மீநுண்துகள்களைப் பயன்படுத்திய சூரியத் தடுப்புத்திரை அமைந்த வெள்ளி மீநுண்தட்டமைவையும் மீநுண் துகள்களால் ஆகியஒளி ஊடுருவும் சூரியத் தடுப்புத்திரையையும் அனலக மீநுண் துகள்களைப் பயன்படுத்தி வலுவூட்டிய கரிமநாரையும் துகிலியலில் உருவாகிய கறையெதிர்ப்பு மீநுண் குழல்களையும் கூறலாம்.[12][13] இந்தத் தொழில்நுட்பம் மூலம் வெவ்வேறு பண்புகளையுடைய துகள்களை (துணிக்கைகளை) ஒன்று சேர்க்கிறது. எடுத்துகாட்டாக, காந்தவியல், மின்னியல் அல்லது ஒளியியல் பண்புகள் வாய்ந்த துகள்களைக் குறிப்பிடலாம். மீநுண் துகள்களைத் தொகுக்கும்போது அவை தமது பொறியியல்வலிமையைக் கூட்டுகின்றன. எடுத்துக்காட்டாக மரபான பலபடிவங்கள் மீநுண் தொழில்நுட்பத்தால் வலிவூட்டப்படலாம். இவற்றை நாம் மாழைகளுக்கு (உலோகங்களிற்குப்) பதிலாகப் பயன்படுத்தலாம். இதன்காரணமாக எடையற்ற வலிவூட்டிய உறுதியான அமைப்புகள் கிடைக்கின்றன. உலக அரசுகள், குறிப்பாக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் மீநுண் தொழில்நுட்ப அறிவியல் ஆராய்ச்சியை வளர்த்தெடுக்க கணிசமான நிதியை ஒதுக்கீடு செய்தன. அமெரிக்கா மீநுண் தொழில்நுட்பத்துக்கான வரையறையை உருவாக்கி, மீநுண் தொழில்நுட்ப முயல்வகத்தைத் தோற்றுவித்தது. இதன்வழி இத்தொழில்நுட்பத்துக்கான நிதியைப் பகிர்ந்தளித்த்து. ஐரோப்பா, ஐரோப்பியா ஆராய்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சிக்கான அடிப்படைத் திட்டங்களால் மீநுண் தொழில்நுட்பத்தை வளர்த்தெடுத்தது. இதில் 2000 இன் இடைப்பகுதியில் சீரிய அறிவியல் கவனம் செழிக்கத் தொடங்கியது. மீநுண் தொழில்நுட்ப நெடுஞ்சாலையைத் திட்டமிடும் பல புதிய திட்டங்கள் எழுச்சி கண்டன[14][15] இது அணுவியல் நிலையில் பொருண்மத்தைக் துல்லியமாகக் கட்டுபடுத்துவதில் மையங்கொண்டு நடப்பு, எதிர்கால வளவாய்ப்புகளையும் இலக்குகளையும் பயன்பாடுகளையும் விவாதத்துக்கு உட்படுத்தியது. இந்தியா உட்பட பல நாடுகளில் இந்த ஆராய்ச்சி நடைபெறுகின்றது. இது அடுத்த தலைமுறையின் தொழில் நுட்பம் எனக்கருதப்படுவதால் ஆராய்ச்சிகள் மிக இரகசியமாகவே நடைபெறுகின்றன. அடிப்படை கருத்துப்படிமங்கள் மீநுண் தொழில்நுட்பம் என்பது மூலக்கூற்று உலகின் செயல்பாட்டு அமைப்புகள் சார்ந்த பொறியியலாகும். இது நடப்பு ஆய்வுகளையும் மேலும் உயராய்வுக் கருத்துப்படிமங்களையும் உள்ளடக்குகிறது. அதன் உண்மைப் பொருளில், மீநுண் தொழில்நுட்பம் கீழிருந்து மேலாகப் பொருள்களைக் கட்டியமைக்கும் விரிவாக்கத் திறமையைச் சுட்டுகிறது. இன்று உருவாகியுள்ள நுட்பங்களும் கருவிகளும் இத்தகைய முழுமை வாய்ந்த உயர்செயல்திறப் பொருள்களைச் செய்ய உதவுகின்றன. நானோ தொழில்நுட்பக் கட்டமைப்பு நானோ தொழினுட்பவியலில் பயன்படுத்தப்படும் பிரதான மூலகம் காபனாகும். கடுங்கரி, வைரம் என்பன காபனின் பிறதிருப்பங்களாகும். புளோரின் செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட காபனின் மூன்றாவது பிறதிருப்பமாகும். காபன் பக்கி பந்து, காபன் நானோ குழாய், காபன் நானோ ஊதுகுழாய் என்பன புளோரின் மூலம் உற்பத்தியாக்கப்பட்ட சில பொருட்களாகும். மேற்கோள் உசாத்துணை Bonett, Jeniffer. Nanotechnology, Penn Engineering News (Spring 2004). Merkle, Ralph, Nanotechnology is coming, Frankfurter Allgegmeine Zeitung, September 11 2000, on page 55. (Originial in German but Translation is in English). Nanoscience and nanotechnologies: opportunities and uncertainties. The Royal Society and The Royal Academy of Engineering Nanoscience and nanotechnologies (July 2004), on page 5-6. . The Foresight Institute. 1986–2006. James Lewis Enterprises. 03 Dec 2006 . Reynolds, Glenn. “Nanotechnology: Good Things in Small Packages.” Popular Mechanics October, 2006 issue. Vol 183.No 10. The Next Big Thing . By Colin Blakemore. Vega and the Open University. 16 August 2000. Whales, England. Bond, Richard “East Nanotechnology”. BBC News Online: Politics Show. 11 September, 2003.03 Dec 2006 Chen, Andrew. The Ethics of Nanotechnology. Santa Clara University “student pages” (March 2002 ) Drexler, K.Eric. Engines of Creation: The Coming Era of Nanotechnology. New York,US; Anchor Books, 1986. வெளி இணைப்புகள் at Curlie (A Vega/BBC/OU Video Discussion) பகுப்பு:வேதியியல் பகுப்பு:பயன்பாட்டு அறிவியல்
நானோ தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர் யார்?
இரிச்சர்டு பீய்ன்மனால்
3,202
tamil
2af96ab07
சதுரம், கேத்திரகணித அடிப்படை வடிவங்களில் ஒன்று. இது, நான்கு உச்சிகளையும், சம அளவிலான நான்கு கோட்டுத்துண்டுகளை பக்கங்களாகவும் கொண்ட, ஒரு இரு பரிமாண உருவமாகும். சதுரம் ஓர் ஒழுங்கு நாற்கரம் ஆகும். அடிப்படை உண்மைகள் சதுரம் நான்கு சமபக்கங்களுடைய ஒரு பல்கோணமாகும். ABCD சதுரத்தில் A B = B C = C D = A D {\displaystyle AB=BC=CD=AD} நான்கு கோணங்களின் அளவுகள் சமமாகவும் ஒவ்வொன்றும் 90 பாகை அளவாகவும் இருக்கும். ∠ A = ∠ B = ∠ C = ∠ D = 90 {\displaystyle \angle A=\angle B=\angle C=\angle D=90} பாகைகள். சதுரத்தின் இரு மூலைவிட்டங்களும் (கோணல் கோடுகள்) சமநீளமுள்ளவை. ஒரு சதுரத்தின் ஒரு பக்கத்தின் நீளம் a எனில், அதன் சுற்றளவு a யின் நான்கு மடங்கு ஆகும். மூலைவிட்டத்தின் நீளம்: விளக்கம்: சதுரத்தின் ஒவ்வொரு கோணமும் செங்கோணம் என்பதால் இரு அடுத்துள்ள பக்கங்களும் ஒரு மூலைவிட்டமும் ஒரு செங்கோண முக்கோணத்தை அமைக்கின்றன. சதுரத்தின் பக்க அளவு a, மூலைவிட்டத்தின் நீளம் d எனில், பித்தகோரசு தேற்றத்தின்படி: சதுரத்தின் பரப்பு ஒரு சதுரத்தின் பரப்பளவு அதன் ஒரு பக்க அளவின் வர்க்கத் தொகையால் தரப்படுகிறது. உதாரணத்திற்கு, ஒரு சதுரத்தின் பக்க அளவு 5 மீட்டர் என்றால், அதன் பரப்பளவு 5 x 5 = 25 சதுர மீட்டர் ஆகும். 5 மீட்டர் பக்க நீளமுள்ள சதுரத்தை 1 மீட்டர் பக்க நீளமுள்ள சிறுசிறு சதுரங்களாகப் பிரித்தால் மொத்தம் 25 சிறு சதுரங்கள் கிடைக்கின்றன. பொதுவாகச் சதுரத்தின் பரப்பு a எனில்: மூலைவிட்டத்தின் மூலமாகவும் சதுரத்தின் பரப்பளவைக் காணலாம். சதுரத்தின் மூலைவிட்டத்தின் நீளம் d எனில் அச்சதுரத்தின் பரப்பளவு: சதுரத்தின் சுற்றுவட்ட ஆரம் R எனில், எனவே சதுரத்தின் பரப்பளவு: சதுரத்தின் உள்வட்ட ஆரம் r எனில், எனவே சதுரத்தின் பரப்பளவு: அடுக்கு இரண்டு என்பது சதுரத்தின் பரப்பளவாக எடுத்துக் கொள்ளப்பட்டதால்தான் அடுக்கு இரண்டானது ஆங்கிலத்தில் ஸ்கொயர் என அழைக்கப்பட்டது. சமன்பாடுகள் கார்ட்டீசியன் ஆள்கூற்று முறைமையில் ஆதிப்புள்ளியை மையமாகவும் 2 அலகுகள் பக்கநீளமும் கொண்ட சதுரத்தின் உச்சிகளின் ஆயதொலைவுகள்: (±1,±1). சதுரத்தின் உட்புறம் அமையுமொரு புள்ளிகளின் ஆயதொலைவுகள் (xi, yi) , , ஆகும். இச் சதுரத்தின் சமன்பாடு: , அதாவது "x2 அல்லது y2, இரண்டில் எது பெரியதோ அதன் மதிப்பு 1 ஆக இருக்கும்." இச்சதுரத்தின் சுற்றுவட்டத்தின் ஆரம் மூலைவிட்டத்தின் நீளத்தில் பாதியாக இருக்கும். அதாவது சுற்றுவட்டத்தின் ஆரம்: . சுற்றுவட்டத்தின் சமன்பாடு: x 2 + y 2 = 2. {\displaystyle x^{2}+y^{2}=2.} சதுரத்தின் மற்றொரு சமன்பாடு: சதுரத்தின் மையம்: (a, b) மற்றும் கிடைமட்ட அல்லது குத்து ஆரம் r எனில் அச்சதுரத்தின் சமன்பாடு: | x − a | + | y − b | = r . {\displaystyle \left|x-a\right|+\left|y-b\right|=r.} பண்புகள் சதுரம் என்பது சாய்சதுரம், பட்டம், இணைகரம், நாற்கரம் மற்றும் செவ்வகம் ஆகியவற்றின் சிறப்பு வகையாகும். எனவே இவ்வடிவவியல் வடிவங்களின் பண்புகள் சதுரத்திற்கும் உண்டு:[1] சதுரத்தின் எதிரெதிர் பக்கங்கள் இணையாகவும் சமமாகவும் இருக்கும். சதுரத்தின் நான்கு கோணங்களும் சமம். (ஒவ்வொன்றும் 360°/4 = 90° க்குச் சமம்.) சதுரத்தின் நான்கு பக்கங்களும் சமம். இரு மூலைவிட்டங்களும் சம நீளமுள்ளவை. சதுரத்தின் இரு மூலைவிட்டங்களும் ஒன்றையொன்று இருசமக் கூறிடும். மேலும் செங்குத்தாக வெட்டிக்கொள்ளும். சதுரத்தின் கோணங்களை அதன் மூலைவிட்டங்கள் இருசமக்கூறிடும். பிற விவரங்கள் ஒரு சதுரத்தின் மூலைவிட்டங்கள் ஒவ்வொன்றின் நீளமும் அச்சதுரத்தின் பக்கநீளத்தைப்போல் 2 {\displaystyle \scriptstyle {\sqrt {2}}} (கிட்டத்தட்ட 1.414) மடங்காகும். விகிதமுறா எண் என நிறுவப்பட்ட முதல் எண் 2 . {\displaystyle \scriptstyle {\sqrt {2}}.} கோணங்களை இருசமக்கூறிடும் சம நீளமுள்ள மூலைவிட்டங்கள் கொண்ட இணைகரமாகச் சதுரத்தை வரையறுக்கலாம். செவ்வகமாகவும் சாய்சதுரமாகவும் அமையக்கூடிய வடிவவியல் வடிவமாகச் சதுரத்தைக் கருதலாம். சதுரத்தைச் சுற்றி அதன் நான்கு உச்சிகளின் வழியாகச் செல்லும் வட்டத்தின் (சுற்று வட்டம்) பரப்பளவு சதுரத்தின் பரப்பைப்போல் π / 2 {\displaystyle \pi /2} (கிட்டத்தட்ட 1.571) மடங்காகும். சதுரத்துக்குள் அதன் பக்கங்களைத் தொட்டவாறு வரையப்பட்ட வட்டத்தின் (உள்வட்டம்) பரப்பளவு சதுரத்தின் பரப்பளவைப்போல் π / 4 {\displaystyle \pi /4} (கிட்டத்தட்ட 0.7854) மடங்காகும். ஒரு சதுரத்துடன் சம சுற்றளவுடைய எந்தவொரு நாற்கரத்தின் பரப்பளவையும் விட சதுரத்தின் பரப்பளவு பெரியது.[2] சதுரம் அதிக சமச்சீருள்ள ஒரு வடிவம். ஒரு சதுரத்திற்கு நான்கு பிரதிபலிப்பு சமச்சீர் அச்சுகளும் நான்கு கிரம சுழற்சி சமச்சீரும் (through 90°, 180° , 270° கோண சுழற்சிகள்) உள்ளது. சதுரத்தின் சமச்சீர் குலம், ஒரு இருமுகக் குலம் (D4). ABCD சதுரத்தின் பக்கங்கள் AB, BC , CD, DA ஆகியவற்றை உள்வட்டம் தொடும் புள்ளிகள் முறையே E , F , G , H மற்றும் உள்வட்டத்தின் மேலுள்ள ஒரு புள்ளி P எனில்[3]: 2 ( P H 2 − P E 2 ) = P D 2 − P B 2 . {\displaystyle 2(PH^{2}-PE^{2})=PD^{2}-PB^{2}.} வரைதல் கவராயமும் நேர்விளிம்பும் மட்டும் கொண்டு சதுரம் வரையும் விதம் இங்குள்ள அசைபடத்தில் காட்டப்பட்டுள்ளது. வரைமுறை நேர்விளிம்பு கொண்டு ஒரு நேர்கோடு வரைக. கவராயம் கொண்டு இக்கோட்டின் மீதமைந்த ஏதேனுமொரு புள்ளியை மையமாகவும் ஒரு குறிப்பிட்ட ஆரமும் கொண்ட வட்டம் வரைக. இவ்வட்ட மையத்துக்கும் வட்டமையம் கோட்டை வெட்டும் புள்ளிக்கும் இடைப்பட்ட தூரத்தை ஆரமாகவும், வட்டம் கோட்டை வெட்டும் புள்ளியை மையமாகவும் கொண்டு ஒரு வட்டம் வரைக. இந்த இரண்டாவது வட்டம் முதல் வட்டத்தை வெட்டும் இரு புள்ளிகளை இணைத்து ஒரு கோட்டுத்துண்டு வரைக. இந்த கோட்டுத்துண்டு முதலில் வரைந்த கோட்டை சந்திக்கும் புள்ளியை மையமாகவும், இப்புள்ளிக்கும் முதல் வட்டத்தின் மையத்துக்கும் இடைப்பட்ட தூரத்தை ஆரமாகவும் கொண்டு மூன்றாவது வட்டமொன்று வரைக. இந்த வட்டம் கோட்டுத்துண்டை இரு புள்ளிகளில் சந்திக்கும். இந்த இரு புள்ளிகள் ஒவ்வொன்றையும் முதலில் வரைந்த வட்ட மையத்துடன் இணைத்து வரையப்படும் கோட்டை இருபுறங்களிலும் நீட்டித்தால், அக்கோடுகள் இரண்டும் முதல் வட்டத்தைச் சந்திக்கும் நான்கு புள்ளிகளும் ஒரு சதுரத்தை உருவாக்கும். மேற்கோள்கள் பகுப்பு:நாற்கரங்கள்
சதுரத்தில் எத்தனை பக்கம் உள்ளன?
நான்கு
53
tamil
1f7240414
சென்னை (Chennai) தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் (Madras) என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 10 மில்லியன் (ஒரு கோடி) மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 17ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை தென்னிந்தியாவின் வாசலாகக் கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை கோலிவுட் (Kollywood) என அறியப்படும் தமிழ்த் திரைப்படத் துறையின் தாயகம். பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன. சென்னையின் பொருளாதாரம் பலதரப்பட்ட தொழில்களைச் சார்ந்தது. ஊர்தி, தகவல் தொழில்நுட்பம், வன்பொருள் தயாரிப்பு, மருத்துவம் போன்ற பல துறைகளைக் கொண்டது. ஊர்தி மற்றும் ஊர்திகளின் உதிரி பாகங்கள் உற்பத்தியில் நாட்டின் 35 விழுக்காடு சென்னையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மேலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நியூயார்க் டைம்ஸ் இதழின் 2014இல் செல்ல வேண்டிய உலகின் 52 இடங்களின் பட்டியலில் சென்னை 26வது இடத்தைப் பெற்றுள்ளது[11]. வரலாறு சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது.கி.பி. 1ஆம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாகக் கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னைக் கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது. 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி தான் தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் இந்நகரம் உருவானது. அன்றைய தினம் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தங்களது உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவருடன் இப்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை இவர்களிடம் விற்ற அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரின் தந்தையான சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாகக் கோட்டைக்கு வடக்கில் உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் 1639ஆம் ஆண்டு[12] செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டியதைத் தொடர்ந்து தான் சென்னை நகரம் உருவாகி வளர்ந்தது என்றாலும் பின்னர் நகரத்தோடு இணைந்த ஊர்களான திருவல்லிக்கேணி, மைலாப்பூர், திருவொற்றியூர், திருவான்மியூர் ஆகிய பகுதிகள் அதற்கு மேலும் பல நூற்றாண்டுகள் தொன்மையானவை. சென்னையில் உள்ள மயிலாப்பூர் பல்லவ அரசின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. இயேசுவின் தோழர்களுள் ஒருவரான புனித தாமஸ் கி.பி. 52 முதல் 70 வரை இங்கு வந்து போதித்ததாகக் கருதுபவர்கள் உண்டு. 16ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர் 1522ஆம் ஆண்டு சாந்தோம் (சான் தோம - "புனித தோமஸ்") என்ற பெயரில் ஒரு துறைமுகத்தை நிறுவினர். பிறகு 1612ஆம் ஆண்டு டச்சு நாட்டவரிடம் இவ்விடம் கைமாறியது. 1639ஆம் ஆண்டு ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாகத் தேர்வு செய்யப்பட்டது. ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்தக் கோட்டையை மையமாகக் கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன. 1522ஆம் ஆண்டில் இங்கு வந்த போத்துக்கீசர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதி போத்துக்கீசர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612ஆம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது. 1688ஆம் ஆண்டில் சென்னை முதல் நகர அவையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையைச் சென்னை பெற்றது. கிழக்கிந்தியக் கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது படை நடவடிக்கைகளுக்கான தளமாக இதைப் பயன்படுத்தினார். பின்னர் இது பிரித்தானிய அரசின் இந்தியக் குடியிருப்புப் பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான "சென்னை மாகாணம்" என்ற பெயர் பெற்றது. 1746ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு படைகள் கைப்பற்றின. 1749ஆம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகராக மதராஸ் ஆனது. சென்னை மாகாணம் 1969ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகரின் பெயரான மதராஸ் என்பதும் 1996ஆம் ஆண்டு சென்னை என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகி மாநிலத்தின் தலைநகரானது சென்னை. மதராஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் தமிழக அரசு 1966இல் சென்னை என மாற்றம் செய்தது. வெங்கடபதி சகோதரர்களிடமிருந்து சென்னை ஜார்ஜ் கோட்டை நிலத்தை பிரித்தானியர் வாங்கியதால், தங்கள் தந்தை 'சென்னப்ப நாயக்கர்' பெயரால் சென்னப்பட்டணம் என இந்நகரம் அழைக்கப்பட வேண்டும் என வெங்கடபதி சகோதரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆகவே சென்னை ஜார்ஜ் கோட்டை நிலமும் அதனைச் சுற்றிய பகுதிகளும் சென்னை என அழைக்கப்படுகிறது. டிசம்பர் 2004 ஆழிப்பேரலை தாக்குதலில் பெரும் பாதிப்புக்குள்ளான இடங்களில் சென்னையும் ஒன்றாகும். புவியியல் இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள சென்னை, தமிழகத்தின் வடகிழக்கு கோடியில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அருகில் உள்ளது. சென்னை நகரின் கிழக்கில் வங்காள விரிகுடா உள்ளது. சென்னை நகரத்தின் பரப்பளவு 174 கி.மீ². சென்னை மாவட்டமும், திருவள்ளூர், மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளும் சென்னை மாநகரப் பகுதிகளாகக் கருதப்படுகின்றன. சென்னை நகரின் அருகாமையில் மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், ஸ்ரீஹரிக்கோட்டா ஆகிய ஊர்கள் உள்ளன. சென்னையில் வெப்பமும் ஈரப்பதமும் வருடம் முழுவதும் மிகுந்து காணப்படுகிறது. சென்னையில் பதிவு செய்யப்பட்ட அதிக வெப்பநிலை 44.1˚ செல்சியஸ், குறைந்த வெப்பநிலை 15.8˚ செல்சியஸ். தென்கிழக்கு பருவமழையும், முக்கியமாக வடகிழக்கு பருவமழையும் நகருக்கு மழை கொண்டு வருகிறது. சென்னையில் வருடத்திற்கு சுமார் 1300 மி.மீ மழை பெய்கிறது. பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளில் சென்னையின் கடற்கரை நகரின் மிக உட்புறத்தே அங்கப்ப நாயக்கன் தெரு உள்ள தொலைவில் இருந்தது. பிற்பட்ட காலப்பகுதியில் கடல் நன்றாக உள்வாங்கித் தற்போதைய இடத்தில் நிலைக்கொண்டுவிட்டது.[13][14] கோட்டைக்குள் இருக்கும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் வண்ண வரைபடங்கள் சிலவற்றில் கடலின் அலைகள் கோட்டையின் சுவர்களுக்கு மிக மிக அருகில் காண்பிக்கப்பட்டிருக்கின்றன. கூவம், மற்றும் அடையாறு ஆகிய நதிகள் சென்னை நகரின் வழியாகப் பாய்கின்றன. புழல் ஏரி, சோழவரம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய ஏரிகளிலிருந்து நகருக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை ஆகும். 13 கி.மீ. நீளம் உள்ள இக்கடற்கரை, மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையின் வடகோடியில் கூவம் கடலில் கலக்கும் இடத்திற்கு தெற்கில் உள்ள பகுதி மெரினா கடற்கரை என்றும், அதன் தெற்கில் அடையாறு கடலில் கலக்கும் பகுதிக்கு வடக்கில் உள்ள பகுதி சாந்தோம் கடற்கரை என்றும், அடையாற்றின் தெற்கில் உள்ள பகுதி எலியட் அல்லது பெசன்ட் நகர் கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது. சென்னை நகரின் தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை வட சென்னையில் உள்ளன. மத்திய சென்னை, சென்னையின் முக்கியப் பகுதியாகும். தென் சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. நிர்வாகம் சென்னை மாநகரின் நிர்வாகம் சென்னை மாநகராட்சியின் பொறுப்பில் உள்ளது. மாநகராட்சியின் மேயர் (மாநகரத் தந்தை) என்று அழைக்கப்படுகிறார். இவர் தவிர 200 வட்டங்களிலிருந்து 200 மாமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தற்போதைய மேயர் சைதை துரை சாமி அவர்களும் துணைமேயர் பெசமின் அவர்களும் அக்டோபர் 29, 2011 முதல் இப்பதவியை வகித்து வருகிறார்கள். சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றது. சென்னை மாநகராட்சி 1688 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது இந்தியாவில் மட்டுமின்றி இங்கிலாந்து அல்லாத காமன் வெல்த் நாடுகளின் மாநகராட்சியைக் காட்டிலும் பழமையானது. தமிழகத் தலைமைச்செயலகம் இங்கு உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வந்தது. பின் 13 மார்ச் 2010 அன்று ஓமந்துரார் அரசினர் தோட்டத்தில் 400 கோடிகளுக்கு மேல் செலவில் கட்டப்பட்ட பசுமை கட்டடத்தில் மாற்றப்பட்டது. இது உலகின் முதல் பசுமை சட்டமன்ற கட்டடமாகும். ஓராண்டிற்கு பிறகு தமிழகத் தலைமைச்செயலகம் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் 18 தமிழக சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. வட சென்னையில் திருவொற்றியூர்,ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி), இராயபுரம் ஆகிய தொகுதிகளும், மத்திய சென்னையில் வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய தொகுதிகளும்,தென் சென்னையில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர்,மைலாப்பூர்,வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய தொகுதிகளும் உள்ளன. இந்திய பாராளுமன்றத்தின் மூன்று தொகுதிகள் சென்னையில் உள்ளன. அவை வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகியவையாகும். தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களின் உயர்நீதிமன்றம் சென்னையில் உள்ளது. தமிழகக் காவல் துறையின் பிரிவான சென்னை பெருநகரக் காவல்துறை சென்னையில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கிறது. சென்னை மாநகர் முப்பத்தாறு காவல் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 121 காவல் நிலையங்கள் சென்னை மாநகரப் பகுதியில் உள்ளன. பொருளாதாரம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் முதலே தெற்காசியாவின் முக்கிய துறைமுகங்களுள் ஒன்றாகச் சென்னை விளங்கி வருகிறது. பல இந்திய நிறுவனங்களின் கிளைகள் சென்னையில் உள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்களுள் ஒன்றாகவும், தமிழகத்தின் தலைநகராகவும் சென்னை விளங்குவதால், பல தேசிய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் சென்னையில் உள்ளன. 1990களிலிருந்து, சென்னை இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. தென் சென்னையில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளன. தரமணியில் உள்ள டைடல் பூங்கா இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவாகும். சோழிங்கநல்லூர் எல்காட் தொழில்நுட்ப பூங்கா, சிறுசேரி சிப்காட் தொழில்நுட்ப பூங்கா ஆகியவை மென்பொருள் உருவாக்கம் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் உள்ளிட்ட பல பிரிவுகளில் சிறந்து விளங்குகிறது. மேலும் சில தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் நகரங்களும் கட்டப்பட்டு வருகின்றன. இந்தியாவின் வாகன உற்பத்தியில் சென்னை முதலிடம் வகிக்கிறது. பெரம்பூரில் இயங்கிவரும் இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (Integral Coach Factory) இந்திய ரயில்வேயின் முதன்மையான ரயில் உற்பத்தி தொழிற்சாலையாகும். அம்பத்தூர் மற்றும் பாடி பகுதிகளில் பல தொழிற்சாலைகள் உள்ளன. டி.வி.எஸ், அசோக் லேலண்ட், ஹுண்டாய் , ஃபோர்டு , மிட்சுபிசி, டி.ஐ மிதிவண்டிகள், எம்.ஆர்.எஃப், பி.எம்.டபிள்யூ (BMW), ரினல்ட் நிசான் போன்ற நிறுவனங்களின் தொழிற்சாலைகள் சென்னையில் உள்ளன. சென்னையை அடுத்த ஆவடியில் கன ஊர்தி தொழிற்சாலை உள்ளது. இந்தியாவின் முக்கிய போர் பீரங்கியான அர்ஜுன் இங்கு தயாரிக்கப்படுகிறது. மக்கள் சென்னையின் மக்கள் தொகை சுமார் 7.45 மில்லியன் ஆகும். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 24,418 மக்கள் வசிக்கின்றனர். ஆயிரம் ஆண்களுக்கு 948 பெண்கள் உள்ளனர். கல்வியறிவு விகிதம் 80.14%. நகரின் 25 விழுக்காடு மக்கள் குடிசைப் பகுதிகளில் வசிக்கின்றனர். சென்னையில் தமிழ் மொழி பேசுவோரே பெரும்பான்மை, இதைத்தவிர ஆங்கிலம், தெலுங்கு, உருது, கன்னடம், மலையாளம், ஹிந்தி, போன்ற மொழிகளும் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் தமிழிற்கு அடுத்த படியாக, இந்திய மொழிகளில், தெலுங்கே அதிக அளவில் பேசப்படுகிறது. அலுவலகங்களிலும் கல்விக் கூடங்களிலும் ஆங்கிலம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலோ இந்திய மக்களும், மற்ற நாட்டவரும் சிறு அளவில் காணப்படுகின்றனர். இங்கு பேசப்படும் பல மொழிகளின் கலவையில் உருவான மெட்ராஸ் பாஷை உள்ளூர் மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்களாலும், ஆட்டோ மற்றும் லாரி ஓட்டுனர்கள் போன்றோராலும் ஒயிலாகப் பேசப்படுகிறது. இந்த மொழி அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாத மொழியாகக் கருதப்படுகிறது. கலாசாரம் சென்னையில் வாழும் பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாகச் சென்னையின் கலாச்சாரம் விளங்குகிறது. நவீனமும் பாரம்பரியமும் இங்கு கலந்து காணப்படுகிறது. சென்னையில் வருடந்தோறும் டிசம்பர் மாதம் முழுவதும் இசைத் திருவிழா இசை ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் தினந்தோறும் சென்னையின் பல இடங்களில் கர்நாடக சங்கீத கச்சேரிகள் நடத்தப்படுகின்றன. சென்னை அடையாறில் உள்ள கலாக்ஷேத்ராவில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் வந்து பரதநாட்டியமும் மற்ற பாரம்பரியக் கலைகளும் பயின்று செல்கின்றனர். தமிழ் மற்றும் ஆங்கில நாடகங்கள் வருடந்தோறும் அரங்கேற்றப்படுகின்றன. சென்னையிலும் சுற்றுப்புறங்களிலும் உள்ள கல்லூரிகளில் வருடந்தோறும் கலைத்திருவிழாக்கள் மாணவர்களால் நடத்தப்படுகின்றன. சென்னையில் உள்ள கோலிவுட் என்றழைக்கப்படும் தமிழ் திரைப்படத் துறை இந்தியாவில் பாலிவுட்டுக்கு அடுத்தபடியாக மிகப் பெரியது. தமிழ் திரைப்படப் பாடல்கள் சென்னை மக்களால் மிகவும் ரசிக்கப்படுகிறது. தனியார் தொலைக்காட்சிகளிலும் வானொலி அலைவரிசைகளிலும் திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சிகள் அதிகம் ஒலிபரப்பப்படுவதைக் காணலாம். அரிசி இங்கு பிரதான உணவாக இருக்கின்றது. பிரபலமான தெற்காசிய உணவான பிரியாணியும், இட்லி, வடை, தோசை போன்ற தென்னிந்திய உணவு வகைகளும் சமீபத்தில் மேற்கத்திய நாகரிகத்தின் பாதிப்பால் பீட்ஸா, பர்கர் போன்ற உணவு வகைகளும் சென்னையில் பிரபலமாய் உள்ளன. புனித ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் கட்டிடம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் அரசு அருங்காட்சியகம் போன்று ஆங்கிலேயரின் பாதிப்பில் உருவான கட்டடங்களையும் அதிகமாகக் காணலாம். சமீபத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியால் பல நவீன கட்டடங்கள் பெருகி வருகின்றன. சமயங்கள் 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மற்ற தமிழ் நகரங்களைப்போல, சென்னை மாநகரிலும் இந்து மக்களின் எண்ணிக்கை அதிக அளவிலுள்ளன. இதற்கு அடுத்தப்படியாக, இசுலாமியம் மற்றும் கிறித்துவம் மேலோங்கிக் காணப்படுகிறது. இதை தவிர, சைணம், பௌத்தம் மற்றும் சீக்கிய சமயங்களும் உ ள்ளன. சென்னையில் மயிலை கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் மற்றும் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் போன்ற பல பழங்கால கோயில்கள் உள்ளன. திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில், வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில் என நான்கு தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் சென்னை மாவட்டத்திற்குள் அமைந்துள்ளன. தொன்மையான சாந்தோம் தேவாலயம், தென் இந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த தேவாலயமாகும். சாந்தோம் அவர்கள், இயேசுவின் 12 சீடர்களில் ஒருவராவர். சிலவும் இங்கு உள்ளன. இதை போர்சுக்கல் நாட்டை சார்ந்தவர்கள் எழுப்பியதாகக் கருதப்படுகிறது. போக்குவரத்து சென்னையில் ஆகாய மார்க்கமாகவும், கடல் வழியாகவும், ரயில் மற்றும் சாலை வழியிலும் போக்குவரத்தை மேற்கொள்ளலாம். இந்திய நாட்டின் ரயில் அமைப்பு, சென்னையில் தான் தொடங்கியது எனக் கூறலாம். 1832ம் ஆண்டில் சென்னையில் முதல் ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. 1837ல் சரக்கு ஏற்றுமதி செய்வதற்காக, ஒரு சிறிய ரயில் பாதை அமைக்கப்பட்டது. 16 வருடங்களுக்கு பின்னர், முதல் நுகர்வோர் ரயில் பாதை தானேவில் அமைக்கப்படது. 1931ம் ஆண்டில், சென்னை கடற்கரைக்கும் தாம்பரத்துக்கும் இடையே புறநகர் ரயில் பாதை அமைக்கப்பட்டது. சென்னைய்ல் சுமார் 65 ஆண்டுகள், டிராம்ஸ் போக்குவரத்து அமைப்பு இயங்கியது. பின்னர் 1950ல், ராஜகோபாலச்சாரி முதலமைச்சாராய் பணியாற்றியப் போது, டிராம்ஸ் போக்குவரத்து நிறுத்தப்படது. 2012ன் போது சுமார் 37,60,000 வாகனங்கள் பதிவுச் செய்யப்பட்டிருந்த்தது. பின்னர், 2016ல் சுமார் 47,57,000 வாகனங்கள் இயங்கிவருகின்றன. ஆகாய வழி போக்குவரத்து சென்னை விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பிற நகரங்களுக்கும் தெற்கு, மற்றும் தென்கிழக்காசியா, வளைகுடா நாடுகள், ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய பகுதிகளுக்கும் நல்ல விமானப் போக்குவரத்து உண்டு. சென்னை விமான நிலையம், இந்தியாவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சரக்கு விமான நிலையமாகும். கடல் வழி போக்குவரத்து சென்னை துறைமுகம் இந்தியாவில் முக்கிய துறைமுகங்களுள் ஒன்று. மேலும் சென்னையின் வடக்கில் உள்ள எண்ணூர் துறைமுகத்தில் நிலக்கரி, தாதுக்கள் போன்ற பொருட்களின் போக்குவரத்து நடைபெறுகிறது. ரயில் வழி போக்குவரத்து சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ஆகியவை சென்னையின் இரு முக்கிய ரயில் நிலையங்கள். சென்னை சென்ட்ரல், இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது. சென்னை எழும்பூர், மற்ற தமிழக நகரங்களுக்குச் சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது. இப்போது சென்னையில் உள்ள தாம்பரம் ரயில் நிலையத்தையும் சென்னையின் மூன்றாவது முனையாக மாற்றப் பட்டுள்ளது. சென்னை புறநகர் இருப்புவழி நான்கு மார்க்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை - தாம்பரம், தாம்பரம் – செங்கல்பட்டு ஆகியவை. இவை தவிர சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கத்தில் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் சேவை முதற்கட்டமாக ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையிலான 10.15 கி.மீ தூரத்திற்கும் பின்னர் இரண்டாம் கட்டமாக சின்னமலை – விமான நிலையம் இடையேயான 8.6 கி.மீ தூரத்திற்கும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிற வழித்தடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது. சாலை வழி போக்குவரத்து சென்னை நகரிலிருந்து இந்தியாவின் மற்ற நகரங்களுக்குச் சென்று வர நல்ல சாலை வசதிகள் உள்ளன. ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் சென்னையை கொல்கத்தா, பெங்களூர், திருச்சி, பாண்டிச்சேரி, திருவள்ளூர் ஆகிய நகரங்களுடன் இணைக்கின்றன. சென்னை கோயம்பேட்டில் உள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையமாகும். சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களையும் இணைக்கும் பொதுப் போக்குவரத்து வசதியாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் செயல்பட்டு வருகிறது. சுமார் 2773 பேருந்துகள் 375 வழித்தடங்கள் மூலம் சென்னை நகரின் பகுதிகளை இணைக்கின்றன. மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் நூற்றுக்கணக்கான சிற்றுந்துகளும் நகர் முழுவதும் இயக்கப்படுகின்றது. இது தவிர பல்லாயிரக்கணக்கான ஆட்டோக்களும், கால் டாக்ஸிக்களும் நகரத்தில் ஓடுகின்றன. தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களின் முக்கிய இடங்களுக்கும் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றது. தகவல் தொடர்பு தென்கிழக்காசிய கண்ணாடி நூலிழை மையங்களுள் ஒன்றான சென்னை இந்தியாவில் தகவல் தொடர்பில் முதலிடம் வகிக்கிறது. இங்கு பி.எஸ்.என்.எல், டாடா, ரிலையன்ஸ், ஏர்டெல் ஆகிய தொலைபேசி நிறுவனங்கள் தொலைபேசி இணைப்பு அளிக்கின்றன. பி.எஸ். என்.எல், ஏர்டெல், வோடபோன், ஏர்செல், டாடா, ரிலையன்ஸ், ஐடியா ஆகிய நிறுவனங்கள் நகர்பேசி இணைப்பு அளிக்கின்றன. இது தவிர இந்நிறுவனங்கள் அகலப்பாட்டைஇணைய இணைப்புகளும் அளிக்கின்றன. அனைத்து தேசிய, அனைத்துலக தொலைக்காட்சிகளும் சென்னையில் தெரிகின்றன. சன் டிவி மற்றும் அதன் பல்வேறு சிறப்பு அலைவரிசைகளான சன் மியூசிக்,சன் நியூஸ்,கே டிவி, ஆதித்யா, மக்கள் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி மற்றும் அதன் பல்வேறு சிறப்பு அலைவரிசைகளான கலைஞர் செய்திகள், இசையருவி, சித்திரம், சிரிப்பொலி, ராஜ் தொலைக்காட்சி மற்றும் அதன் அலைவரிசைகள் ராஜ் நியூஸ், ராஜ் டிஜிட்டல் ப்ளஸ், ஸ்டார் விஜய், ஜெயா தொலைக்காட்சி மற்றும் அதன் அலைவரிசைகள் ஜெயா மாக்சு, ஜெயா பிளசு, தூர்தர்சன் பொதிகை, டிஸ்கவரி தமிழ் ஆகிய தொலைக்காட்சி அலைவரிசைகள் அவற்றில் பரவலான சிலவாகும். நான்கு ஏ. எம் மற்றும் பதினொன்று பண்பலை அலைவரிசைகளில் வானொலி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. சூரியன் பண்பலை,ரேடியோ மிர்ச்சி, ரேடியோ சிட்டி, ஹலோ, ரேடியோ ஒன், ஆஹா, பிக், ரெயின்போ பண்பலை, எப் எம் கோல்டு ஆகியன அவற்றில் சிலவாகும். தினகரன், தமிழ் முரசு, தினத்தந்தி, தின மலர், தினமணி, மாலை மலர், தி இந்து ஆகிய தமிழ் செய்தித் தாள்களும், தி இந்து, தி நியூ இந்தியன் எக்சுபிரசு, டெக்கான் கிரானிக்கிள், தி டைம்சு ஆப் இந்தியா ஆகிய ஆங்கில செய்தித்தாள்களும் சென்னையில் அச்சிடப்படுகின்றன. ஆனந்த விகடன், குமுதம், கல்கி, குங்குமம், நக்கீரன், புதிய தலைமுறை ஆகியவை இங்கு அச்சிடப்படும் முக்கிய வார இதழ்கள். மருத்துவம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ராயபேட்டை அரசு மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை ஆகியவை புகழ்பெற்ற அரசு மருத்துவமனைகளாகும். இவை தவிர அப்போல்லோ மருத்துவமனை, மலர் மருத்துவமனை, MIOT மருத்துவமனை, குளோபல் மருத்துவமனை, விஜயா மருத்துவமனை போன்ற சிறந்த தனியார் மருத்துவமனைகளும் இயங்கி வருகின்றன. காலநிலை சென்னையில் கோடைக்காலத்தில் அதிக பட்ச வெப்பம் சுட்டெரிக்கும் நாட்கள் மே முதல் சூன் வரையான காலமாகும். அப்போது சில நாட்களைக் கத்தரி வெயில் அல்லது அக்னி நட்சத்திரம் என்றும் அழைக்கின்றனர்.[16] அக்காலங்களில் அதிக பட்ச வெப்பமாக 38–42°C (100–108°F) இருக்கும். சனவரியில் குளிர் அதிகம் இருக்கும். அப்போது குறைந்த பட்ச வெப்பநிலை 18–20°C (64–68°F). மிகக் குறைந்த வெப்பநிலையாகப் 15.8°C (60.4°F) பதிவாகியுள்ளது மேலும் அதிகபட்சமாகப் 45°C (113°F) பதிவாகியுள்ளது[17] சராசரி மழைப்பொழிவு 140cm (55in) [18]. இந்நகரம் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்திருக்கிறது. அக்டோபர் மாதத்திலிருந்து திசம்பர் மாதங்களில் மழைக்காலமாகும். சில சமயங்களில் புயல் காற்று வங்காளவிரிகுடா பக்கங்களிலிருந்து வருகிறது. 2005 ஆம் ஆண்டு அதிக பட்ச மழைப்பொழிவாகப் பதிவாகியுள்ளது.[19] ஏப்ரல் முதல் அக்டோபர் வரை தென்மேற்கு பருவக்காற்று காலமாகும் [20] மற்ற எல்லா மாதங்களிலும் வடகிழக்கு காற்று அடிக்கிறது. பொதுவாக வடகிழக்கு பருவமழையின் காரணமாக 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி காலையில் மட்டும் 16 சென்டிமீட்டர் மழைபெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.[21] கல்வி சென்னையில் உள்ள ஐ.ஐ.டியும், அண்ணா பல்கலைக்கழகமும், இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களுள் சிலவாகும். இவை தவிர பல தனியார் தொழில்நுட்பக் கல்லூரிகளும் நிகர்நிலை பல்கலைகழகங்களும் மருத்துவ கல்லூரிகளும் சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ளன. சென்னை பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தைப் பயன்படுத்தும் பல கலை, அறிவியல் கல்லூரிகள் சென்னையில் உள்ளன. அவற்றுள் சென்னை மாநிலக் கல்லூரி, சென்னை கிறித்துவ கல்லூரி, லயோலா கல்லூரி, புதுக்கல்லூரி, வைஷ்ணவ் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, S.I.E.T கல்லூரி, விவேகானந்தா கல்லூரி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இது தவிர என்.ஐ.எஃப்.டி (National Institute of Fashion Technology – தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி), ஏ.சி.ஜெ (Asian College of Journalism), சென்னை சமூகப்பணிப் பள்ளி (Madras School of Social Work) போன்ற கல்வி நிறுவனங்களும் உள்ளன. வருடந்தோறும் பள்ளி இறுதித் தேர்வுகளில் இந்தியாவிலேயே சென்னை மாணாக்கர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதைக் காணலாம். நூலகங்கள் சென்னையில் உள்ள கன்னிமரா பொது நூலகம் தேசிய களஞ்சிய நூலகங்களுள் (National Depository Libraries) ஒன்று. இதன் அடிக்கல் 1890-இல் நாட்டப்பட்டு, 1896-இல் துவங்கி வைக்கப்பட்டது; அப்போதைய மதறாஸ் மாநிலத்தின் கவர்னரான கன்னிமரா பிரபுவின் பெயர் இந்நூலகத்திற்கு சூட்டப்பட்டது.[23] செப்டம்பர் 15, 2010 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகம் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது; இது தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் ஆகும். 3.75 இலட்சம் சதுர அடிப் பரப்பில் ஏறத்தாழ 180 கோடி[24] செலவில் கட்டப்பட்டது. விளையாட்டு மற்ற இந்திய நகரங்களைப் போலச் சென்னையிலும் கிரிக்கெட்டே பிரபலமான விளையாட்டாகும்.[25] சென்னையிலுள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கம் 50000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது. இந்திய கிரிக்கெட் அணி இங்கு தான் முதன் முதலாக டெஸ்ட் போட்டியை வென்றது. ஐ.ஐ.டி வளாகத்திலுள்ள கெம்பிளாஸ்ட் கிரிக்கெட் மைதானம் மற்றொரு முக்கிய மைதானம். நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் அரங்கத்தில் வருடந்தோறும் ஜனவரி மாதம் சர்வதேச ஏ.டி.பி பந்தயமான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபறுகின்றன. விஜய் அமிர்தராஜ், இராமநாதன் கிருஷ்ணன், ரமேஷ் கிருஷ்ணன் போன்று சர்வதேச போட்டிகளில் முத்திரை பதித்த பல இந்திய ஆட்டக்காரர்கள் சென்னையைச் சேர்ந்தவர்களே. எழும்பூரிலுள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கம் 4000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது. இது செயற்கை தரை கொண்டது. 1995ஆம் ஆண்டு இங்கு சாம்பியன் கோப்பைப் பந்தயத்தொடர் நடந்தது. 2005 டிசம்பரிலும் இப்போட்டிகள் இங்கு நடைபெறும். ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் கால்பந்து, தடகளப்போட்டிகள் போன்றவை நடைபெறுகின்றன. இதன் வளாகத்தில் உள்ள உள்ளக விளையாட்டரங்கில் கூடைப்பந்து, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம் போன்ற போட்டிகள் நடத்தும் வசதிகள் உள்ளன. 1996 ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. மூன்று கோல்ஃப் விளையாடும் இடங்கள் உள்ளன. ஸ்ரீபெரும்புதூரில் மோட்டர் பந்தய போட்டிகள் நடைபெறும் களம் உள்ளது. உயிரியல் பூங்காக்கள் கிண்டியில் உள்ள உயிரியல் பூங்காவில் மான்கள், பாம்புகள், ஆமைகள் ஆகியவை உள்ளன. ஆளுனர் வசிக்கும் ராஜ் பவனிலும், அதை ஒட்டியுள்ள ஐ.ஐ.டி வளாகத்திலும் குரங்குகளும் மான்களும் துள்ளி விளையாடுவதைக் காணலாம். வண்டலூரிலுள்ள அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில் சுமார் 80 மிருக வகைகள் உள்ளன. சென்னையின் தெற்கில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் முதலைப்பண்ணை உள்ளது. இங்கு முதலைகள், ஆமைகள், பாம்புகள் ஆகியவை வளர்க்கப்படுவதுடன் ஆராய்ச்சியும் நடைபெறுகிறது. பொழுதுபோக்கு உலகின் இரண்டாவது நீளமான மெரினா கடற்கரை, எழில்மிகு பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை ஆகியவை புகழ்பெற்ற இடங்களாகும். வள்ளுவர் கோட்டம், அரசு அருங்காட்சியகம், முட்டுக்காடு படகு குழாம், பிர்லா கோளரங்கம் மற்றும் தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள் கிஷ்கிந்தா, குயின்ஸ் லேன்ட், விஜிபி கோல்டன் பீச், மாயாஜால், MGM Dizzee World உள்ளிட்டவைகள் மக்களை கவர்ந்த சிறந்த சுற்றுலாத் தலங்களாகும். பிரச்சனைகள் மாசு மிகுந்த குடிநீர் மற்றும் குடிநீர் பற்றாக்குறை அதிக மக்கள் தொகை அடர்த்தி 25% மக்கள் குடிசைப்பகுதிகளில் வாழ்வது மாசு மிகுந்த சுற்றுப்புறச் சூழல் வாகன நெரிசல் மாசு மிகுந்த சாலைகள் மற்றும் சாலைகள் பராமரிக்கப்படாமை சென்னை சார்ந்த மென்பொருள் நிறுவன வளர்ச்சி விளைவுகள் சென்னை ராஜீவ் காந்தி சாலையில் அமைந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்ட மென்பொருள் நிறுவனங்கள் உள்ளிட்ட பல தேவைகளுக்குமாக நிலத்தடி தண்ணீர் லாரிகளால் உறிஞ்சப்படுவதால் பாதிக்கப்படும் சோழவரம், திருமழிசை. போன்ற பகுதி மக்கள் மக்கள் 2013ஆம் ஆண்டு தண்ணீர் லாரிகளை அனுமதிக்கப்பட்டதற்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதைத் தடுத்ததால், அப்பகுதியின் தனியார் தண்ணீர் லாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் செய்தனர்.ராஜீவ் காந்தி சாலையில் அமைந்திருந்த மென்பொருள் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டன, சில நிறுவனங்கள் தண்ணீர்த் தட்டுப்பாடால் விடுமுறை விட எத்தனித்தன. அரசால் விவசாயிகள் சமாதானப்படுத்தப்பட்டு மீண்டும் தண்ணீர் உறிஞ்சப்பட அனுமதிக்கப்பட்ட பின்னர் இந்நிறுவனங்களின் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கிற்று.[26] நிலத்தடி நீர் இவ்வாறு உறிஞ்சப்படுவதால் வேறு வழியின்றி விவசாயிகள் நிலத்தை விற்று விட்டு பிழைப்பு தேடி சென்னை நகருக்குள் வரவேண்டிய தேவை ஏற்படுத்தப்படுகின்றது.[27] சென்னை 375 சென்னை நகரம் உருவாகி 2014ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 22ஆம் நாளுடன் 375 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் விதமாக சென்னை 375 விழா, சென்னைவாசிகளால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.[28][29].[30] [31]. [32].* [33]. [34]. சகோதர நகரங்கள் உலகில் உள்ள சில நகரங்கள் சென்னை அரசு நிர்வாகத்துடன் அதிகாரப்பூர்வ தொடர்புகளைக் கொண்டுள்ளது. கலை, கலாச்சாரத்தை அந்த நகரங்கள் சென்னையுடன் பகிர்ந்து கொள்கின்றன. சென்னையுடன் தொடர்புடைய சகோதர நகரங்கள் கீழே. சென்னை பெரு வெள்ளம் 2015 டிசம்பர் மாதம் சென்னையில் கனமழை கொட்டியது. செம்பரம்பாக்கம் ஏரி தூர்வாரப்படாததால் உடையும் அபாயம் ஏற்பட்டது. மேலும் படிக்க சென்னை தினம் வலைவாசல்:சென்னை மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தினமலர் தினமலர் பகுப்பு:சென்னை சுற்றுப் பகுதிகள் பகுப்பு:தமிழ்நாட்டிலுள்ள மாநகரங்கள் பகுப்பு:இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள்
தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சென்னை நகரத்தின் பரப்பளவு என்ன?
174 கி.மீ²
5,047
tamil
b8b634cd3
கதிரவ அமைப்பு (Solar System) அல்லது சூரியக் குடும்பம் என்பது கதிரவனுக்கும் அதைச் சுற்றி வரும் பொருட்ளுக்கும் இடையே உள்ள ஈர்ப்புவிசைப் பிணைப்பால் உருவான ஒரு அமைப்பாகும். இது கதிரவனைச் சுற்றி வரும் எட்டு கோள்களையும், ஐந்து குறுங்கோள்களையும் உள்ளடக்கியது ஆகும் என்று உலகளாவிய வானியல் ஒன்றியம் வரையறுத்துள்ளது. இந்த அமைப்பில் கதிரவனை நேரடியாக சுற்றி வரும் பெரிய அளவு கொண்ட கோள்களும் சிறிய அளவு கொண்ட குறுங்கோள் மற்றும் சிறு கதிரவ அமைப்பு பொருட்கள் போன்றவையும், கதிரவனை மறைமுகமாக சுற்றி வரும் துணைக்கோள்களும் அடங்கும். 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரு மிகப்பெரிய மூலக்கூறு மேகத்தில் ஏற்பட்ட ஈர்ப்புவிசை சுருக்கம் காரணமாக கதிரவ அமைப்பு உருவானது. இந்த அமைப்பின் எடையில் பெரும்பகுதியை கதிரவனே கொண்டுள்ளது. அதற்கடுத்து மிக அதிக எடை கொண்டது வியாழன் கோளாகும். புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் ஆகிய நான்கு உட்கோள்கள், புவியொத்த கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பொதுவாக பாறைகள் மற்றும் உலோகங்கள் ஆகியவற்றால் உருவானவையாகும். ஏனைய நான்கு புறக்கோள்களும் புவியொத்த கோள்களை விட நிறைமிக்கனவாகும். அவற்றில் மிகப்பெரிய கோள்களான வியாழன் மற்றும் சனி போன்றவை பெரும்பாலும் ஐதரசன் மற்றும் ஈலியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளதால் வளிமப் பெருங்கோள்கள் என்றும் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்றவை மீதேன், அமோனியா போன்ற உயர் உருகு நிலை கொண்ட பொருட்களைக் கொண்டுள்ளதால் பனிப பெருங்கோள்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. அனைத்தும் தனித்தனி நீள்வட்ட சுற்றுப்பாதைகளில் (Orbital path) கதிரவனைச் சுற்றிவருகின்றன. கதிரவ அமைப்பு சிறு பொருட்களையும் கொண்டுள்ளது. செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கிடையே அமைந்துள்ள சிறுகோள் பட்டை அகக்கோள்களைப் போல் உலோகங்கள் மற்ரும் தனிமங்களையே பெரும்பாலும் கொண்டுள்ளது, இதில் சியரீசு குறுங்கோள் அமைந்துள்ளது. பனிக்கட்டிகளால் உருவான கைப்பர் பட்டை நெப்டியூனின் வட்டப்பாதையில் அமைந்துள்ளது. இதில் புளுட்டோ, அவுமியா, மேக்மேக் மற்றும் ஏரிஸ் ஆகிய குறுங்கோள்கள் அமைந்துள்ளன. இந்த இரு பகுதிகளைத் தவிர, பல்வேறு சிறு சிறு பொருட்களும் தடையின்றிப் பயணித்து வருகின்றன. ஆறு கோள்களையும், குறைந்தபட்சம் நான்கு குறுங்கோள்களையும் பல சிறு பொருட்களையும் துணைக்கோள்கள் சுற்றி வருகின்றன. இவை நிலவுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. புறக்கோள்கள் ஒவ்வொன்றையும் தூசு மற்றும் சிறு பொருட்களால் ஆன ஒரு கோள் வளையம் சுற்றியுள்ளது. கதிரவ அமைப்பு பால்வெளிப் பேரடையின் மையத்தில் இருந்து 26,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஓரியன் கையில் அமைந்துள்ளது. கண்டு பிடிப்பும் ஆய்வுப் பயணமும் பல்லாயிரம் ஆண்டுகளாக மனித இனம் கதிரவ அமைப்பைப் பற்றி புரிந்துகொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ இல்லை. அவர்கள் புவியானது அசைவற்றது எனவும் அண்டத்தின் நடுவில் இருப்பது எனவும் நம்பி வந்தனர். கண்ணுக்கு புலப்படும் வான் வழியே பயணிக்கின்ற தெய்வீகப் பொருட்களை விட புவி வேறுபட்ட வகையைச் சேர்ந்தது என்று கருதிவந்தனர். இந்திய கணிதமேதையும் வான சாஸ்திர வல்லுனரும் ஆன ஆரியபட்டா மற்றும் கிரேக்க தத்துவ அறிஞர் அரிசுடாட்டில் ஆகிய இருவரும் ஆய்வு ஊக செய்தியாக அண்டம்[5] பற்றி மறுவரிசைப் படுத்தினர். அரிச்சுடார்க்கசு என்ற அறிஞர் கதிரவனை மையமாகக் கொண்ட முறையை ஊகித்தார். இருப்பினும் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் என்பவர்தான் கதிரவ அமைப்பில் மையப்பகுதியில் கதிரவன் அமைந்துள்ளது என்பதை கணித பூர்வமாக அறிவித்தவர். 17ஆம் நூற்றாண்டில் கலீலியோ கலிலி, எனபவர் கதிரவனில் கதிரவ புள்ளிகள் இருப்பதையும் வியாழனை நான்கு நிலவுகள் சுற்றி வருவதையும் கண்டறிந்தார். அவரது கண்டுபிடிப்புகளைப் பின்பற்றி கிறித்தியான் ஐகன்சு என்பவர் சனியைச் சுற்றி வரும் டைடன் என்ற நிலவையும் சனியைச் சுற்றியுள்ள கோள் வட்டத்தையும் கண்டறிந்தார். 1705ஆம் ஆண்டு எட்மண்டு ஏலி என்பவர் ஒரு வால்வெள்ளி 74-75 வருடங்களுக்கு ஒருமுறை ஒரே பொருளையே மீண்டும் வந்தடைவதை உணர்ந்தார். இதுவே கோள்களைத் தவிர மற்ற பொருட்களும் கதிரவ அமைப்பில் உள்ளது என்பதற்கான முதல் சான்றாக விளங்கியது. 1838ஆம் ஆண்டு பிரீட்ரிக் பெசல் என்பவர் முதன்முறையாக இடமாறு தோற்றப் பிழை வாயிலாக கதிரவனுக்கும் மற்றொரு விண்மீனுக்கும் இடையில் உள்ள நம்பத் தகுந்த தொலைவைக் கண்டறிதார். அதன்பிறகு நோக்கீட்டு வானியல் மற்றும் ஆளில்லா விண்கலங்கள் ஆகியவற்றின் வளர்ச்சி, கதிரவ அமைப்பில் உள்ளவற்றைக் குறித்து விரிவாக ஆய்வு செய்ய உதவியது. அமைப்பு கதிரவன் மற்றும் புவி இடையே உள்ள தொலைவு ஒரு வானியல் அலகு ஆகும். கதிரவன் கதிரவன் என்பது கதிரவ அமைப்பின் மையத்தில் உள்ள ஒரு விண்மீன் ஆகும். இதன் நிறை (332,900 புவி நிறைகள்) கதிரவ அமைப்பின் மொத்த நிறையில் 99.86 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. இது தன் உள்ளகத்தில் இருக்கும் ஐட்ரசன் அணுக்களை ஈலியத்துடன் இணைப்பதன் மூலம் மாபெரும் ஆற்றலை வெளியிடுகிறது. அந்த ஆற்றல் பெரும்பாலும் மின்காந்த கதிர்வீச்சு மூலம் விண்வெளிக்குள் கதிர்வீசப்படுகிறது. கதிரவன் என்பது ஒரு G-வகை முதன்மை வரிசை விண்மீன் ஆகும். +4.83 என்ற தனி ஒளி அளவைக் கொண்டுள்ள கதிரவன், ஏறக்குறைய பால் வழியில் உள்ள 85% விண்மீன்களை விட ஒளிர்வுமிக்கதாகும். அந்த விண்மீன்களில் பெரும்பாலனாவை செங்குறுமீன்கள் ஆகும். கதிரவன் ஒரு உலோகசெறிவு மிக்க விண்மீன் வகையை சார்ந்தது. கதிரவ அமைப்பின் உட்பகுதி நான்கு உட்கோள்கள் அல்லது புவியொத்த கோள்கள் அடர்ந்த பாறைப்படலங்களாக உள்ளன. அவற்றில் இரு கோள்கள் தனித்தனி நிலவுகளைக் கொண்டுள்ளன. இவற்றுக்கு கோள் வளையங்கள் கிடையாது. இவை பெரும்பாலும் உயர் உருகுநிலை கொண்ட உலோகங்கள் அதாவது மணல்சத்து உப்புக்களை வெளிப்புறத்திலும் இரும்பு, நிக்கல் போன்ற உலோகங்களை மையப்பகுதியிலும் கொண்டுள்ளன. நான்கு கோள்களில் வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய மூன்றையும் கட்டுறுதியான வளிக்கோளங்கள் சூழ்ந்திருக்கினறன. இவற்றில் அழுத்தமான எரிமலை முகடுகளும் கட்டுமானக் கலையுடன் நேர்த்தியான மேல்பரப்பும் அமைந்துகிடக்கின்றன. அதில் பிளவுண்டபள்ளத் தாக்குகள் மற்றும் எரிமலைகள் உள்ளன. உட்கோள் என்ற பெயரை தாழ்ந்த கோள் என்ற பெயருடன் குழப்பம் ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது. தாழ்ந்த கோள் எனப்படுபவை புவியை காட்டிலும் கதிரவனுக்கு அருகில் உள்ள புதன் மற்றும் வெள்ளி ஆகும். புதன் புதன் கதிரவனுக்கு மிக அருகில் உள்ள கோளும் கதிரவ அமைப்பில் உள்ள கோள்களில் மிகச்சிறியதும் ஆகும். இது கதிரவனிலிருந்து 0.4 வானியல் அலகு தொலைவில் உள்லது. இதற்கு இயற்கைத் துணைக்கோள்கள் கிடையாது. இது புவியமைப்பு அம்சங்களுக்காக பெயர் பெற்றதாகும். அழுத்தமான எரிமலைவாய்களில் தொங்கும் கூடல் வாய்கள் அமைந்துள்ளன. அவைகள் ஒருவேளை கடல் தோன்றிய காலத்தில் நிகழ்ந்த ஒடுக்கத்தால் உருவாகியிருக்கக்கூடும்[6]. புதனின் வளிமண்டலம் புறக்கணிக்கத்தக்கதாகும். அதில் உள்ள அணுக்கள் மேற்பரப்பில் கதிரவன் காற்றால் தாக்கப்பட்டு வெடிக்கும்[7]. இது மையப்பகுதியில் இரும்பு உலோகம் அதிகமாக உள்ளது. அதன் மெல்லிய 'மூடகம்' பற்றி இதுவரை விளக்கப்படவில்லை. தற்காலிகக் கோட்பாடுகள்ன்படி, அதன் வெளிப்பகுதி அடுக்குகள் பெரும் பயன்விளைவால் முற்றிலும் களையப்பட்டுள்ளது அல்லது அது திரண்டு உருவாக்குவதை இளம் கதிரவனின் எரிசக்தி தடுத்து வந்துள்ளது[8][9]. வெள்ளி வெள்ளி என்பது அளவில் புவியை ஒத்திருக்கும் ஒரு கோளாகும். இது கதிரவனிலிருந்து 0.7 வானியல் அலகு தூரத்திலுள்ளது. இது புவியைப்போல் இரும்பு மையத்தைச் சுற்றி பருமனான மணல் சத்து (சிலிகேட்) மூடகத்தைக் கொண்டுள்ளது. இது புவியை விட வறண்டும் ஒன்பது மடங்குகள் அடர்த்தியான வளிமண்டலத்தையும் கொண்டுள்ளது. இதற்கு இயற்கை துணைக்கோள்கள் கிடையாது. இது மிகமிக வெப்பமான கிரகமாகும். இதன் மேற்பரப்பு வெப்பநிலை 400 °செல்சியசை எளிதில் அடைந்துவிடக்கூடியது. இதற்கு அதன் வளிமண்டலத்தில் பைங்குடில் வளிமங்கள் அதிகமாக இருப்பதே காரணமாகும்[10]. நடப்பு மண்ணியல் நடவடிக்கைகள் அங்கு புவியியல் நடைபெறுவதற்குரிய உறுதியான தடயங்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. அதன் வளிமண்டலம் வெறுமையாகாமல் தடுக்க அதற்கு காந்தப்புலம் எதுவும் இல்லை. எனவே அதன் வளிமண்டலம் எரிமலை வெளியேற்றங்களால் தொடர்ந்து நிரப்பப்படுகிறது [11]. புவி புவி (1 வாஅ) உட்கோள்களில் மிகப்பெரியதும் மிக அடர்த்தியானதும் ஆகும். இதில் மட்டுமே புவியியல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அண்டத்தில் புவி ஒன்றில் மட்டும் தான் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.[12][12][12][12][12][12][12][12][12][8][7] புவியொத்த கோள்களில் இது ஒன்றுதான் திரவ நீர்க்கோளம் பெற்றுள்ளது. இத்தனிச்சிறப்பு இதற்கு மட்டுமே இருக்கின்றது. மேலும் புவியில் காணப்படும் 'ண்டத்தட்டு'இயக்கவியல் அதன் தனிச்சிறப்பை கூடுதலாக்குகின்றது. புவியின் வளிமண்டலம் மற்ற கோள்களின் வளிமண்டலங்களைக் காட்டிலும் வேறுபாடாக உள்ளது. உயிரினங்கள் வாழத் தேவையான 21 சதவீதம் ஆக்சிசனைக் கொண்டிருப்பதால் இத்தகைய வேறுபாடுகள் தோன்றியுள்ளன[13]. அதற்கு நிலவு என்ற ஒரேயொரு இயற்கை துணைக்கோள் உண்டு. அந்த நிலவே கதிரவ அமைப்பில் அமைந்துள்ள புவியொத்த கோள்களின் துணைக்கோள்களில் பெரியது எனப் பெயர் பெற்றுள்ளது. செவ்வாய் செவ்வாய் (1.5 வாஅ) என்பது புவி மற்றும வெள்ளி ஆகிய இரண்டைக் காட்டிலும் சிறிய கோளாக உள்ளது. அது கொண்டுள்ள வளிமண்டலத்தில் கரியமில வாயுவே அதிகம் உள்ளது. அதில் பரந்து காணக்கிடக்கும் 'ஒலம்பஸ் மான்ஸ்' போன்ற எரிமலைகள் மற்றும் 'வாலிஸ் மேரினாரிஸ்' போன்ற பிளந்த பள்ளத்தாக்குகளும் காணப்படுகின்றன. அவைகள் அதன் புவியியல் நடவடிக்கைகளை எடுத்துக்காட்டுகின்றன.[14] அதன் சிகப்புநிறம் அதில் உள்ள இரும்பு ஆக்ஸைடுகளால்[15] ஏற்பட்டதாகும். செவ்வாய் கோளுக்கு இரண்டு சிறிய இயற்கை துணைக்கோள்கள் உள்ளன. அவைகள் 'டைமோஸ்' மற்றும் 'போபோஸ்' என்றழைக்கப் பெறுகின்றன.[16][17] கதிரவ அமைப்பின் வெளிப்பகுதி கதிரவ அமைப்பின் வெளிப்புறப் பகுதி வளிமப் பெருங்கோள்கள் (gas giants) மற்றும் அவற்றின் துணைக்கோள்களுக்கு தாயகமாக அமைந்துள்ளது. பல குறுகிய ஆயுள் கொண்ட வால்மீன்கள் ('சென்டார்கள்' எனும் விண்மீன் குழுக்கள் உள்பட) சுற்றி வருகின்றன. கதிரவனிடமிருந்து மிக நீண்ட தூரம் வெளிப்புறத்தில் அமைந்து இருப்பதால் இவை விரைந்து ஆவியாகும் தண்ணீர், அமோனியா, மீதேன் ஆகியவற்றால் நிரம்பியுள்ளன. ஆனால் உட்புற கதிரவ குடும்பத்தில் உள்ள பாறைகள் குளிர்ந்த நிலையில் திடமாகவே இருக்கச்செய்கின்றன. வெளிப்புறக் கோள்கள் கதிரவ அமைப்பில் நான்கு வெளிப்புறக் கோள்கள் அல்லது பெருங்கோள்கள் உள்ளன. இவை மொத்தமாக 99 சதவீதம் பொருண்மையுடன் கதிரவனின் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. வியாழன் மற்றும் சனி கோள்களில் அதிகபட்சமாக ஹைட்ரஜன், ஹீலியம் இருக்கின்றன. யுரேனசு மற்றும் நெப்டியூனில் அதிக பட்சம் பனிக்கட்டிகள் உள்ளன. எனவே வானியலாளர்கள் இவைகளை 'பனி அரக்கர்கள்' என்று தனியாக வகைப்படுத்துகின்றனர்.[18] நான்கு பெருங்கோள்களுக்கும் கோள் வளையங்கள் இருப்பினும் சனியின் வளையத்தை மட்டும் புவியிலிருந்து எளிதாகக் காண இயலும். வியாழன் வியாழன் (5.2 வாஅ) 318 மடங்கு புவியின் நிறையைக் கொண்டுள்ள கோளாகும். அது 2.5 மடங்குகள் பிற கோள்களின் மொத்த பொருண்மையை காட்டிலும் அதிகமானதாகும். இது ஐட்ரசன் மற்றும் ஈலியம் இரண்டாலும் உருவாகியுள்ளது. இதன் வலிமையான உள்வெப்பம் பல நிரந்தர அம்சங்களை வளிமண்டலம், முகில்திரள்கள், 'பெரிய செந்நிற இடம்' என்று அறியப்படுத்தியுள்ளன. வியாழன் அறுபத்து மூன்று அறியப்பட்ட நிலவுகளைக் கொண்டுள்ளது. இதில் மிகப்பெரிய நிலவுகளான கனிமீடு, கலிஸ்டோ, அயோ, மற்றும் ஐரோப்பா ஆகிய நான்கும் புவியொத்த கோள்களை ஒத்துள்ளன. எரிமலைச் செயற்பாடு, உள்ளிட வெப்பமூட்டல் இரண்டிலும் ஒத்திருக்கும் அம்சங்கள் காணலாம்.[19] 'கனிமீடு' நிலவு கதிரவ அமைப்பில் உள்ள புதன் கோளை விட அளவில் பெரியதாகும். சனி சனி (9.5 வாஅ) தனது வளையத்தால் அறியப்படும் கோளாகும் வியாழனினை ஒத்த அம்சங்கள் அதன் வளிக்கோளம் மற்றும் காந்தக்கோளத்தில்  உள்ளன. வியாழனின் கொள்ளளவில் 60 சதவீதத்தை சனி கொண்டுள்ளது. ஆனால் நிறையைப் பொறுத்த மட்டில் மூன்றாவதாக உள்ளது. கதிரவ அமைப்பில் உள்ள கோள்களில் சனி மட்டுமே நீரை விட அடர்த்தி குறைந்த கோள் ஆகும். இதற்கு 60 அறியப்பட்ட துணைக்கோள்கள் உள்ளன. அவற்றில் 'டைட்டான்' மற்றும் 'என்சடலாடஸ்' ஆகிய நிலவுகளில் புவியியல் தொடர்பான செயல்பாடுகள் நடப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. அதிகம் பனிப்படலம் இருப்பினும்! [20] கதிரவ அமைப்பின் இரண்டாவது மிகப்பெரிய நிலவான டைட்டன், புதன் கோளைவிடப் பெரியதும் கதிரவ அமைப்பில் கணிசமான வளிமண்டலம் கொண்டுள்ள ஒரே துணைக்கோளும் ஆகும். யுரேனசு யுரேனசு (19.6 வாஅ) 14 புவிப்பொருண்மைகள் கொண்ட வெளிப்புற கிரகங்களுள் மிக மென்மையானதாகும். தனிச்சிறப்பான அம்சமாக அமைவது, எல்லா கோள்களைக் காட்டிலும் கதிரவனை அது அதன் வட்டப்பாதையில் அதன் பக்கமாகவே சுற்றிவலம் வருவதேயாகும். ஞாயிறு செல்லும் மார்க்கத்தில் தொண்ணூறு டிகிரி ஊடு அச்சில் சாய்வுநிலை- அதாவது ஒருக்கணித்துக் கொண்டு செல்வதேயாகும். பிற வாயு அரக்கர்களைக் காட்டிலும் இது மிகக்குளிர்ந்த மையப்பகுதியைக் கொண்டுள்ளது. அண்ட வெளியில் மிகக்குறைந்த வெப்பத்தையே கதிர்வீச்சாக வெளியிடுகிறது[21] யுரேனசு 27 அறியப்பட்ட துணைக்கோள்களைக் கொண்டுள்ளது. அதில் பெரிய நிலவான டைட்டன் புவிவியல் செயல்பாட்டுடன் உள்ளது. நெப்டியூன் யுரேனசைக் காட்டிலும் சிறிதாக இருந்தாலும் நெப்டியூன் (30 வாஅ) புவியை விட பதினேழு மடங்கு நிறையைக் கொண்டுள்ளதால் அதிக அடர்த்தியுடன் உள்ளது.  இதன் உள்வெப்ப கதிர்வீச்சு வியாழன் மற்றும் சனியை விட அதிகமாக உள்ளது.[22] நெப்டியூன் பதினான்கு அறியப்பட்ட துணைக்கோள்களைக் கொண்டுள்ளது. அதில் பெரிய 'டிரைட்டன்' புவியியல் செயல்பாட்டுடன் உள்ளது. மேலும் வெந்நீர் ஊற்றுகள், நீர்ம நைட்ரஜன் [23] கொண்டுள்ளன. டிரைட்டன் மட்டும் தான் வட்டப்பாதையில் பின்னோக்கிச்செல்லும் ஒரேயொரு நிலவாகும். நெப்டியூன் அதன் வட்டப்பாதையில் ஏராளமான சிறுகோள்களைக் கொண்டுள்ளது. நெப்டியூன் டிரோசன்கள் என்று அழைக்கப்படும் அவை ஒன்றுக்கு ஒன்று சரி விகிதத்தில் ஒலியலை அதிர்வுகள் கொண்டதாக உள்ளன நெப்டியூனுக்கு அப்பால் உள்ள பகுதி நெப்டியூனின் சுழற்சிப் பாதைக்கு அப்பால் உள்ள பகுதியில் கைப்பர் பட்டையும் புளூட்டோ உள்ளிட்ட பல்வேறு குறுங்கோள்களும் உள்ளன. சில நேரங்களில் இது கதிரவ அமைப்பின் மூன்றாம் பகுதி என்றும் அழைக்கப்படுகிறது. கைப்பர் பட்டை கைப்பர் பட்டை (Kuiper belt) என்பது பனிப்பொருட்களைக் கொண்ட ஒரு பகுதி ஆகும் . இது கதிரவனில் இருந்து 30 வானியல் அலகுகள் தொடக்கம் 50 வானியல் அலகுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ளது(30AU-50AU). இது கதிரவ அமைப்பு உருவாகிய பின் மீதமான சிறு பொருட்களால் ஆனது. இப்பகுதியிலேயே புளூட்டோ, ஹௌமியா மற்றும் மேக்மேக் போன்ற குறுங்கோள்கள் உள்ளன. இங்குள்ளவை அனைத்தும் நீர் மற்றும் உறைந்துள்ள, எரியக்கூடிய மெதேன், அமோனியாவால் ஆனவை. குறிப்புகள் புற இணைப்புகள் கல்வி சஞ்சிகைகள் கட்டுரைகள் சூரிய குடும்பபொருள்கள் * பகுப்பு:கோள் தொகுதிகள்
கதிரவ தொகுதியில் உள்ள இரண்டாவது பெரிய கோள் எது?
சனி
1,037
tamil
40482e320
லூயிஸ் பிரெய்ல் (ஜனவரி-4, 1809. ஜனவரி-6, 1852, பிரான்ஸ்) பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் எழுத்தினை உருவாக்கியவர். பிரெஞ்சுக்காரரான இவர் பார்வையற்றவர். பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்துப் படிக்க ஏற்ற பிரெய்லி எழுத்தினைக் கண்டுபிடித்தார். பிரெயில் முறையில் ஒன்று முதல் ஆறு புடைப்புப்புள்ளிகளையும் ஓட்டைகளையும் கொண்டு எழுதிய எழுத்துகளை விரல்களை வைத்துத் தடவுதலின் மூலம் இனங்கண்டு கொள்வர். இளமைக்காலம் லூயி பிரெயில் தன் மூன்றாவது வயதில், ஒரு தையல் ஊசியை வைத்துக்கொண்டு விளையாடும் போது எதிர்பாராத விதமாக, ஒரு கண்ணில் காயம் ஏற்பட்டது; உரிய மருத்துவம் செய்யாது விட்டதனால், அக்கண்ணை இழக்க நேரிட்டது. பரிவுக்கண் நோய் (sympathetic ophthalmia) காரணத்தினால், அவர் இன்னொரு கண்ணையும் இழக்க நேரிட்டது. சிறப்புகள் இவர் கண்டறிந்த பார்வையற்றவர்களுக்கான கல்வி முறையானது, பார்வையாளர்களுக்கு மிகவும் உதவிகரமான மற்றும் சுலபமான முறையாகும். இதற்காக உலக நாடுகள் பலவும் இவரது அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயங்கள் வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளன. இந்திய அரசும் இவரது படம் பொறித்த 2 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட்டு பெருமைப்படுத்தியது. பகுப்பு:கண்டுபிடிப்பாளர்கள் பகுப்பு:1809 பிறப்புகள் பகுப்பு:1852 இறப்புகள் பகுப்பு:பிரெஞ்சு கண்டுபிடிப்பாளர்கள்
பிரெயில் கல்வி முறையை கண்டுபிடித்தவர் யார்?
லூயிஸ் பிரெய்ல்
0
tamil
36a4760ec
செப்பு (Copper) எனப்படுவது உலோக வகையைச் சேர்ந்த ஒரு தனிமம் ஆகும். இத்தனிமம் செம்பு எனவும் தாமிரம் எனவும் வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு Cu ஆகும். இதன் அணு எண் 29 ஆகும். மிகவும் மென்மையானதாக, தகடாக அடிக்கக்கூடியதாகவும், கம்பியாக நீட்டக்கூடியதாகவும், மிகவும் உயர் வெப்பம் மற்றும் மின் கடத்துத்திறன் கொண்டதாகவும் தாமிரம் விளங்குகிறது. இந்த மாழையின் புத்தம்புதிய மேற்பரப்பு சிவந்த நிறத்தில் இருப்பதால் இதை செம்பொன் என்றும் அழைக்கிறார்கள். வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தும் ஒரு கடத்தியாக மக்கள் தாமிரத்தைப் பயன்படுத்துகின்றனர். கட்டுமானப் பொருளாகவும் பல்வேறு கலப்புலோகங்களின் பகுதிப் பொருளாகவும், நாணயங்கள் தயாரிப்பிலும் வெப்ப மின்னிரட்டை போன்ற வெப்ப அளவீட்டுக் கருவிகள் தயாரிப்பிலும் தாமிரம் பயன்படுகிறது. தாமிரம் இயற்கையில் ஒரு தனி உலோகமாகக் கிடைக்கிறது. தாதுவிலிருந்து பிரித்தெடுக்க வேண்டிய அவசியமேதுமில்லாமல் நேரடியாகவே இது கிடைக்கிறது. அதன் கனிமங்களிலிருந்தும் மிக எளிதாக இதைப் பிரித்தெடுக்க முடியும். இதனால் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செம்பைப் பற்றி மக்கள் அறிந்திருந்தனர். 3500 ஆண்டுகளுக்கு முன்னரே தாமிரத்தைப் பயன்படுத்தி வெண்கலம் என்ற கலப்புலோகம் செய்யவும் மக்கள் அறிந்திருந்தனர் [5]. உரோமானிய காலத்தில் தாமிரம் சைப்பிரசு எனப்படும் தீவுநாட்டில் வெட்டி எடுக்கப்பட்டது. சைப்பிரசின் உலோகம் என்ற பொருள் கொண்ட ஏயிசு சைப்பிரியம் என்ற சொல் பின்னாளில் குப்ரம் என்றானது. இதிலிருந்து காப்பர் என்ற ஆங்கில சொல்லும், கியுவர் என்ற பிரஞ்சு மொழி சொல்லும், கோபெர் என்ற டச்சு மொழி சொல்லும், குப்பெர் என்ற செருமானிய மொழி சொல்லும் உருவாகின [6]. பொதுவாக தாமிரம்(II) உப்புகள் பரவலாகக் கிடைக்கின்றன. அசுரைட்டு, மாலகைட்டு, டர்கியோயிசு போன்ற கனிமங்களில் நீலம் அல்லது பச்சை வண்ணங்களில் இவை காணப்படுகின்றன. வரலாற்றில் இவை நிறமிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. வீடுகளுக்கு கூரை வேயவும், இதன் ஆக்சைடுகள் பசுங்களிம்பாகவும் பயன்படுகின்றன. தனிமநிலை தாமிரம் சில வேளைகளில் அலங்கரிக்கும் கலைப் பொருளாகவும், இதன் சேர்மங்கள் நிறமிகளாகவும் , பாக்டீரியா தடுப்பிகளாகவும், பூஞ்சைக் கொல்லிகளாகவும், மரப்பாதுகாப்புப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. தாமிரம் அனைத்து உயிரினங்களுக்கும் அவசியமான ஒரு தனிமம் ஆகும். ஏனெனில் உணவுப் பட்டியலில் உள்ள கனிமங்களில் தாமிரத்தின் சுவடுகள் இருப்பதால் இது அவசியமான கனிமமாகிறது. சுவாச நொதித் தொகுப்பான சைட்டோகுரோம் சி ஆக்சிடேச்சின் முக்கியமான பகுதிப்பொருள் தாமிரமாகும். மெல்லுடலிகளிலும், கணுக்காலிகளிலும் தாமிரம் ஏமோசயனின் என்ற இரத்த நிறமியின் பகுதிப்பொருளாக உள்ளது. மீன் மற்றும் முதுகெலும்பிகளில் உள்ள ஈமோகுளோபின் என்ற இரத்தநொதியிலுள்ள இரும்பு இங்கு தாமிரத்தால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டுள்ளது. மனிதர்களில் கல்லீரல், தசைகள், எலும்புகள் போன்றவற்றில் தாமிரம் காணப்படுகிறது [7]. நன்கு வளர்ச்சியடைந்த மனித உடலில் ஓர் கிலோகிராம் உடல் எடைக்கு 1.4 முதல் 2.1 மில்லி கிராம் வரை தாமிரம் காணப்படுகிறது [8]. அமெரிக்காவில் மிக்சிகன் மாநிலத்திலும், உருசியாவில் சில இடங்களிலும், ஆத்திரேலியாவின் தென் பகுதிகளிலும், பொலிவியா நாட்டிலும் செம்பு தனித்த வடிவில் கிடைக்கின்றது. உலோகங்கள் மற்றும் அலோகங்களுடன் செம்பு சேர்ந்து பல வகையான கனிமங்களாகவும் காணப்படுகின்றது. இந்தியாவில் பீகார் மாநிலத்தில் சிங்பம் மாவட்டத்தில் செம்பு கிடைக்கின்றது. குப்ரைட், மாலகைட்டு, அசுரைட், சால்கோ பைரைட்டு, டெனொரைட்டு, போர்னைட்டு போன்றவை சில முக்கியமான கனிமங்களாகும். பண்புகள் இயற்பியற் பண்புகள் தனிமவரிசை அட்டவனையின் 11 ஆவது தொகுதியில் தாமிரம், வெள்ளி, தங்கம் போன்ற தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இம்மூன்று தனிமங்களும் ஒரு எசு ஆர்பிட்டால் எலக்ட்ரானுடன் டி எலக்ட்ரான் கூடு நிரப்பப்பட்ட மேல் வரிசையில் இடம்பெற்றுள்ளன. இவை கடினமானவை, தகடாக்கத்தக்கவை, கம்பியாக நீட்டப்படும் தன்மை உடையவை ஆகும். இந்த உலோகங்கள் மின்சாரம் மற்றும் வெப்பத்தை நன்கு கடத்தும். டி-கூடுகள் நிரம்பியுள்ள இத்தனிமங்கள் அணுக்களிடையிலான செயல்பாட்டிற்கு சிறிதளவே பங்களிக்கின்றன. இவற்றில் எசு- எலக்ட்ரான்கள் உலோகப்பிணைப்பு வழியாக ஆதிக்கம் செலுத்துகின்றன. டி- கூடுகள் நிரப்பப்படாத தனிமங்கள் போலன்றி, தாமிரத்தில் உள்ள உலோகப் பிணைப்புகளில் சகப்பிணைப்புத் தன்மை குறைவாகவும் ஒப்பீட்டளவில் வலிமை குறைந்தும் காணப்படுகின்றன. தாமிரத்தின் உயர் கம்பியாக நீளும் தன்மைக்கும் குறைவான கடினத்தன்மைக்கும் இதுவே காரணம் ஆகும் [9]. படிக அணிக்கோவையின் பரல் எல்லைகள், அழுத்தத்தின் கீழ் பொருட்களின் ஓட்டம் போன்ற பேரளவு அளவீடுகளில், நீட்டிக்கப்பட்ட குறைபாடுகளை அறிமுகப்படுத்தும் போது அதன் கடினத்தன்மை அதிகரிக்கும். இந்த காரணத்திற்காக, செப்பு வழக்கமாக நுண்பல்படிக வடிவத்தூளாக வினியோகிக்கப்படுகிறது. ஒற்றைப்படிகங்களை விட பல்படிக வடிவம் அதிக வலிமை கொண்டதாக உள்ளது [10]. . தாமிரத்தின் உயர் மின்கடத்துத் திறனையும் (59.6×106 வி/மீ), உயர் வெப்பக் கடத்துத் திறனையும் அதன் மென் தன்மை சிறிதளவு விளக்குகிறது. அறை வெப்பநிலையில், தூய உலோகங்கள் வெளிப்படுத்தும் இப்பண்பில் வெள்ளி உலோகம் முதலிடத்தையும் தாமிரம் இரண்டாம் இடத்தையும் பிடிக்கின்றன [11]. ஏனென்றால், அறை வெப்பநிலையில் எலக்ட்ரான் போக்குவரத்துக்கான எதிர்ப்பானது, அணிக்கோவையின் வெப்ப அதிர்வுகளால் எலக்ட்ரான்கள் சிதறல் அடைவதிலிருந்து உருவாகிறது. மென் உலோகங்களில் இவ்வெதிர்ப்பு பலவீனமாக இருக்கிறது [9] The maximum permissible current density of copper in open air is approximately 3.1×106A/m2 of cross-sectional area, above which it begins to heat excessively.[12]. தாமிரத்தில் அதிகபட்சமாக அணுமதிக்கத்தகு மின்சார அடர்த்தி தோராயமாக அதன் குறுக்கு வெட்டுப் பரப்புக்கு 3.1×106 ஆ/மீ2 ஆகும். இதற்கும் அதிகமான அளவெனில் தாமிரம் சூடேற்றம் அடைகிறது [13]. சாம்பல் அல்லது வெள்ளி நிறம் தவிர வேறு சில இயற்கை நிறத்தில் காணப்படும் தனிமங்களில் ஒன்று தாமிரமாகும் [14]. தூயநிலையிலுள்ள தாமிரம் ஆரஞ்சு-சிவப்பு நிறத்தில் இருக்கும். காற்றில் படும்போது செந்நிறமாக மங்குகிறது. நிரம்பியுள்ள 3டி மற்றும் பாதியாக நிரம்பியுள்ள 4எசு அணுக்கூடுகள் இடையே நடைபெறும் எலக்ட்ரான் பரிமாற்றமே தாமிரத்தின் இத்தனித்துவ நிறத்திற்கான காரணமாகும். இவ்விரு கூடுகளுக்கிடையே உள்ள ஆற்றல் வேறுபாடு ஆரஞ்சு நிற ஒளிக்கு காரணமாகிறது. தாமிரம் மற்ற உலோகங்களுடன் இணைக்கப்படும்போது கால்வானிக் அரித்தல் உண்டாகிறது [15]. வேதியியல் பண்புகள் தாமிரம் தண்ணிருடன் வினைபுரிவதில்லை. ஆனால் வளிமண்டல ஆக்சிசனுடன் வினைபுரிந்து கரும்பழுப்பு நிறத்திலான தாமிர ஆக்சைடு அடுக்காக உருவாகிறது. ஈரக்காற்றில் இரும்பு துருப்பிடித்தலைப் போல அல்லாமல் இவ்வடுக்கு தாமிரம் மேலும் அரித்தலுக்கு உட்படாமல் பாதுகாக்கிறது. சுதந்திரச் சிலை [16] போன்ற பெரும்பாலும் பழமையான கட்டிடங்களின் [17] கூரைப் பகுதிகளில் தாமிரக் கார்பனேட்டின் பசுமை நிற அடுக்கு தாமிரப்பைந்துருவாக காணப்படுகிறது. மங்கிய தாமிரம் சில கந்தக சேர்மங்களுடன் தொடர்பு கொள்ள நேர்ந்தால் அவற்றுடன் வினைபுரிந்து தாமிர சல்பைடுகளை உருவாக்குகிறது [18]. ஐசோடோப்புகள் தாமிரம் உலோகத்திற்கு 29 ஐசோடோப்புகள் உள்ளன. 63Cu மற்றும் 65Cu ஐசோடோப்புகள் நிலைப்புத்தன்மை கொண்டவையாகும். 63Cu ஐசோடோப்பில் தோராயமாக இயற்கையாகத் தோன்றும் தாமிரம் 69% அளவில் உள்ளது. இரண்டுமே 3⁄2. சுழற்சிகளைக் கொண்டவையாக உள்ளன [19]. மற்ற ஐசோடோப்புகள் யாவும் கதிரியக்கத்தன்மை கொண்டவை. இவற்றில் 67Cu ஐசோடோப்பு 61.83 மணி நேர அரைவாழ்வுக் காலம் கொண்டு அதிக நிலைப்புத்தன்மை கொண்ட ஐசோடோப்பாக உள்ளது. சிற்றுறுதி ஐசோடோப்புகளாக ஏழு ஐசோடோப்புகள் இனங்காணப்பட்டுள்ளன [19]. இவற்றில் 68mCu ஐசோடோப்பு 3.8 நிமிடங்கள் அளவிற்கு நீண்ட நேரம் நிலையாக இருந்துள்ளது. அணுநிறை எண் 64 என்ற அளவுக்கு அதிகமான அணுநிறையைக் கொண்ட ஐசோடோப்புகள் β− என்ற அலவுக்கு சிதைவடைகின்றன, அணுநிறை எண் 64 என்ற அளவுக்கு குறைவான அணுநிறையைக் கொண்ட ஐசோடோப்புகள் β+.அளவுக்கு சிதைவடைகின்றன. 12.7 மணி நேர அரைவாழ்வுக் காலம் கொண்ட ஐசோடோப்பு இவ்விரு முறைகளிலும் சிதைவடைகிறது [20]. 62Cu மற்றும் 64Cu ஐசோடோப்புகள் இரண்டும் குறிப்பிடத்தக்க பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. 62Cu-PTSM (தாமிர-பைருவால்டிகைடு-பிசு(என்4-மெத்தில்தயோசெமிகார்பசோன்) இல் பாசிட்ரான் உமிழ்வு கணிணிவழி வரைவியலுக்கான ஒரு கதிரியக்க சுவடறிவானாக 62Cu ஐசோடோப்பு பயன்படுத்தப்படுகிறது[21]. தோற்றம் பெரிய நட்சத்திரங்களில் தாமிரம் காணப்படுகிறது[22].புவியின் மேலோட்டில் மில்லியனுக்கு 50 பகுதிகள் என்ற அளவில் தாமிரம் காணப்படுகிறது[23]. இயற்கையில் இது சால்கோபைரைட்டு, சால்கோசைட்டு என்ற தாமிர சல்பைடாகவும், அசூரைட்டு, மாலகைட்டு என்ற தாமிர கார்பனேட்டுகளாகவும், குப்ரைட்டு என்ற தாமிர(1) ஆக்சைடு சேர்மமாகவும் தாமிரம் காணப்படுகிறது[11]. அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் [23] மாநிலத்தில் உள்ள கீவீனாவ் தீபகற்பத்தில் 420 டன்கள் எடையுள்ள தனிமநிலை தாமிரம் 1857 இல் கண்டறியப்பட்டது. 4.4×3.2×3.2 செ.மீ அளவுள்ள மிகப்பெரிய ஒற்றைப் படிகத்துடன் பல்படிகமாக இயற்கைத்தாமிரம் விவரிக்கப்படுகிறது[24]. உற்பத்தி அதிக அளவிலான தாமிரம் தாமிர சல்பைடுகளாக வெட்டியெடுக்கப்படுகிறது அல்லது பிரித்து எடுக்கப்படுகிறது. 0.4 முதல் 1.0% தாமிரத்தைக் கொண்ட கலவைப் பாறை படிவுகள் திறந்தவெளி பள்ளங்களில் இவை வெட்டப்படுகின்றன. சிலி நாட்டிலுள்ள சுகுயிகாமட்டா, அமெரிக்காவின் யூட்டா மாநிலத்திலுள்ள பிங்காம் கேன்யோன் சுரங்கம், புது மெக்சிகோவிலுள்ள எல் சினோ சுரங்கம் போன்ற தளங்களில் இம்முறையில் தாமிரம் கிடைக்கிறது. பிரித்தானிய நிலவியல் அளவைத் துறையின் 2005 ஆம் ஆண்டு கருத்துப்படி, தாமிர உற்பத்தியில் சிலி உலகின் மூன்றாவது பெரிய நாடாக திகழ்கிறது. அமெரிக்கா, இந்தோனேசியா மற்றும் பெரு [11] ஆகிய நாடுகளைத் தொடர்ந்து உலக மொத்த தாமிரத் தயாரிப்பில் மூன்றில் ஒரு பங்கை சிலி நாடு உற்பத்தி செய்கிறது. கள ஊடுறுவல் செயல்முறையிலும் தாமிரம் நிலத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. அரிசோனா மாநிலத்தின் பல தளங்களில் இம்முறையில் தாமிரம் பிரித்தெடுக்கப்படுகிறது [25]. பயன்பாட்டில் தாமிரத்தின் அளவு அதிகரித்து வந்தாலும், அனைத்து நாடுகளும் பயன்படுத்தக் கூடிய வகையில், உலக அளவிலான பயன்பாட்டை அனுமதிக்கும் அளவுக்கு தாமிரம் தயாரிக்கப்பட்டு வருகிறது [26]. காப்பு இருப்பு குறைந்த பட்சம் 10,000 ஆண்டுகளாக தாமிரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது, ஆனால் பயன்படுத்தப்பட்ட தாமிரத்தின் அளவில் 95% தாமிரம் 1900 ஆம் ஆண்டுக்கு பின்னரே வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பாதிக்கு மேலான தாமிரம் கடந்த 24 ஆண்டுகளில் வெட்டப்பட்டுள்ளது. பல இயற்கை வளங்களைப் போலவே, பூமியிலுள்ள செப்பின் அளவும் மொத்தத்தில் பரவலாக உள்ளது, பூமியின் மேற்பரப்பில் சில கிலோமீட்டருக்கு அடியில் 1014 டன் அளவுக்கும் அதிகமாக புதைந்துள்ளது. தற்போதைய வெட்டியெடுக்கும் விகிதத்தில் நோக்கினால் ஏராளமான மதிப்புள்ள தாமிரம் இருப்பில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது [27]. இருப்பினும், இந்த இருப்புக்களின் ஒரு சிறிய பகுதி மட்டுமே இன்றைய விலை மற்றும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற வகையில் பொருளாதார ரீதியாக வெட்டியெடுப்பது சாத்தியமாக உள்ளது. வளர்ச்சிக்கு ஏற்ப மேலும் 25 முதல் 60 ஆண்டுகளுக்கு வெட்டி எடுக்கும் அளவுக்கு தாமிரத்தின் இருப்பு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மறுசுழற்சி முறையில் தாமிரம் தயாரிப்பது நவீன உலகில் ஒரு பெரும் மூலமாக கருதப்படுகிறது.[28]. இவ்வகையான மற்றும் பிற காரணிகளின் காரணமாக, தாமிர உற்பத்தி மற்றும் விநியோகித்தல் என்பது விவாதத்திற்கு உட்படுகிறது. உச்ச எண்ணெய் தத்துவத்தை ஒத்த உச்ச தாமிரம் உள்ளிட்ட தத்துவமும் இவ்விவாதத்தில் இடம் பெறுகிறது. வரலாற்றில் தாமிரத்தின் விலை நிலையாக இல்லாமல் அவ்வப்போது மாறுபட்டு வருகிறது. [29].[30].[31] தயாரிப்பு முறைகள் தாதுக்களில் சராசரியாக தாமிரத்தின் அடர்த்தி 0.6% மட்டுமே ஆகும். பெரும்பாலான வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த தாமிரத் தாதுக்கள் சல்பைடுகளாகும். குறிப்பாக சால்கோபைரைட்டு (Cu2S) என்னும் தாது சல்பைடு தாதுவேயாகும்[32]. நன்றாகத் தூளாக்கப்பட்ட தாதுவிலிருந்து நுரைமிதப்பு முறை அல்லொஅது உயிரினப் பிரிப்பு முறைகளால் 10-15% தாமிரம் பிரித்தெடுக்கப்படுகிறது[33]. இம்முறையில் பிரிக்கப்பட்ட தாமிரத்துடன் சிலிக்காவைச் சேர்த்து சூடுபடுத்துகிறார்கள். சல்பைடுகளை ஆக்சைடுகளாக மாற்றுவதன் மூலம் இரும்பு மாசுக்கள் அகற்றப்படுகின்றன. மேற்புறத்தில் மிதக்கும் சிலிக்கா கசடும் நீக்கப்படுகிறது. எஞ்சியிருக்கும் கலவையை வறுத்தல் மூலமாக அனைத்து சல்பைடுகளும் ஆக்சைடுகளாக மாற்றப்படுகின்றன:[32] 2 Cu2S + 3 O2 → 2 Cu2O + 2 SO2 குப்ரசு ஆக்சைடு சூடுபடுத்தப்படுவதால் கொப்பள தாமிரமாக மாற்றப்படுகிறது. 2 Cu2O → 4 Cu + O2. இச்செயல்முறையில் ஆக்சைடாக மாற்றப்படாத சல்பைடு, இதில் உருவான ஆக்சைடைப் பயன்படுத்தி கந்தகம் முழுவதையும் ஆக்சைடாக மாற்றுகிறது. பின்னர் மின்னாற் பகுப்பு முறையில் தாமிரமாகப் பிரித்தெடுக்கப்படுகிறது. இயற்கை வாய்வை கொப்பள தாமிரத்தின் வழியாகச் செலுத்தும் போது ஆக்சிசன் முழுவதுமாக நீக்கப்பட்டு தூய்மையான தாமிரம் பெறப்படுகிறது: Cu2+ + 2 e− → Cu. மறுசுழற்சி அலுமினியம் உலோகத்தைப் போலவே தாமிரத்தையும் மறுசுழற்சி முறையில் தயாரித்துப் பயன்படுத்தலாம். இதுவரை தயாரிக்கப்பட்ட தாமிரத்தில் கிட்டத்தட்ட 80 சதவீதம் தாமிரம் இன்றும் பயன்பாட்டில் உள்ளது[34]. சர்வதேச உலோக இருப்பு ஆதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, சமுதாயத்தில் பயன்படுத்தும் செப்பு அளவின் உலக தனிநபர் மதிப்பு 35-55 கிலோ ஆகும். இது மிகவும் வளர்ந்த நாடுகளில் குறைந்தது 140-300 கிலோவாகவும், அவ்வளவாக வளர்ச்சியடையாத நாடுகளில் ஒரு நபருக்கு 30-40 கிலோவாகவும் உள்ளது. தாமிரத்தை பிரித்தெடுப்பதற்கு பயன்படுத்தப்படும் அதே முறைகளே மறுசுழற்சி செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன. சேகரிக்கப்பட்ட உயர்-தூய்மையான தாமிர துண்டுகளை உலைகளில் இட்டு உருக்கி, பின்னர் கட்டிகளாகவும் பாளங்களாகவும் தயாரிக்கப்படுகிறது. சேகரிக்கப்பட்ட குறைந்த-தூய்மை தாமிரத்துகள்களை கந்தக அமிலக் குளியல் மூலம் மின்னாற்பகுப்பு செய்து சுத்திகரிக்கப்படுகிறது [35]. உலோகக் கலவைகள் முக்கிய பயன்பாடுகளுடன் கூடிய பல செப்பு உலோகக் கலவைகள் தயாரிக்கப்பட்டுள்ளன,. செம்பு மற்றும் துத்தநாகம் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுவது பித்தளை என்ற உலோகக் கலவை ஆகும். வெண்கலம் பொதுவாக செப்பு-வெள்ளீயம் கலந்து உருவாக்கப்படும் உலோகக் கலவைகளை குறிக்கிறது, ஆனால், அலுமினிய வெண்கலம் போன்ற தாமிர உலோகக் கலவைகள் எதையும் வெண்கலம் என்றே கருதுகிறார்கள். வெள்ளி மற்றும் தங்க அணிகலன்கள் தயாரிப்பில் கடினத்தன்மையையும் உருகுநிலையையும் மாற்ற தாமிரம் ஒரு முக்கியமான பகுதிப் பொருளாக உள்ளது [36]. ஈயம் இல்லாத பற்றவைப்புகளில் வெள்ளீயத்துடன் தாமிரமும் வேறு சில உலோகங்களும் சேர்க்கப்பட்டு பயன்படுத்தப் படுவதுண்டு [37]. தாமிரமும் நிக்கலும் கலந்து தயாரிக்கப்படும் குப்ரோநிக்கல் உலோகக் கலவை நாணயங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க நாணயங்கள் 75% தாமிரமும் 25% நிக்கலும் கலந்து தயாரிக்கப்படுகின்றன. 90% தாமிரமும் 10% நிக்கலும் கலந்த உலோகக் கலவை கடல்நீரால் உண்டாகும் அரித்தலை எதிர்க்கும் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுகின்றன [38], 7% அலுமினியத்துடன் தாமிரம் சேர்த்து தயாரிக்கும் கலவை பொன் நிறத்துடன் அலங்காரங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது ref name=emsley/&gt;. 4-10% தங்கம் கலக்கப்பட்டு உருவாக்கப்படும் உலோகக் கலவையை அடர் நீல அல்லது கருப்பு நிற பசுங்களிம்பாக சப்பானில் பயன்படுத்துகிறார்கள் [39]. சேர்மங்கள் தாமிரம் பல்வேறு வகையான ஏராளமான சேர்மங்களை உருவாக்குகிறது, பொதுவாக ஆக்சிசனேற்ற நிலை எண் +1 மற்றும் +2 மதிப்புள்ள சேர்மங்களாக இவை உருவாகின்றன. இவற்றை முறையே குப்ரசு சேர்மங்கள் என்றும் குப்ரிக் சேர்மங்கள் என்றும் அழைக்கிறார்கள்[40]. இரட்டைச் சேர்மங்கள் மற்ற தனிமங்களுடன் சேர்ந்து தாமிரம் இரண்டு தனிமங்கள் கொண்ட எளிய இரட்டை சேர்மங்களாக உருவாகிறது, ஆக்சைடுகள், சல்பைடுகள், ஆலைடுகள் என்பவை முதன்மையான உதாரணங்களாகும். ஆக்சைடுகளில் குப்ரசு ஆக்சைடுகள் மற்றும் குப்ரிக் ஆக்சைடுகள் இரண்டும் அறியப்படுகின்றன. பல்வேறு தாமிர சல்பைடுகளில் தாமிர(1) சல்பைடும் தாமிர(II) சல்பைடும் முக்கியமானவையாகும். குளோரின், புரோமின், அயோடின் தனிமங்களுடன் தாமிரம் சேர்ந்து உருவாகும் குப்ரசு ஆலைடுகள் அறியப்படுகின்றன. தாமிர(II)அயோடைடு தயாரிக்கும் முயற்சியில் தாமிர(I) அயோடைடும் அயோடைடும் மட்டுமே உருவாகின்றன [40] 2 Cu2+ + 4 I− → 2 CuI + I2. = அணைவுச் சேர்மங்கள் ஈனிகளுடன் சேர்ந்து தாமிரம் அணைவுச் சேர்மங்களை உருவாக்குகிறது. நீரிய கரைசல்களில் தாமிரம்(II) ஆனது, [Cu(H2O)6]2+ ஆகக் காணப்படுகிறது. விரைவான நீர் மாற்று விகிதத்தை (வேகமாக நீர் ஈனிகளை இணைத்தல் மற்றும் நீக்குதல்) இந்த அணைவுச் சேர்மம் வெளிப்படுத்துகிறது: Cu2+ + 2 OH− → Cu(OH)2. நீரிய அம்மோனியா அதே வீழ்படிவில் விளைகிறது. மேலும் அதிகமான அமோனியாவை சேர்த்ததன் பின்னர், டெட்ராமீன்தாமிரம்(II) உருவாகிறது Cu(H2O)4(OH)2 + 4 NH3 → [Cu(H2O)2(NH3)4]2+ + 2 H2O + 2 OH−, தாமிர(II) அசிட்டேட்டு, தாமிர(II) நைட்ரேட்டு, தாமிர(II) கார்பனேட்டு உள்ளிட்ட ஆக்சோ எதிர்மின் அயனி அணைவுச் சேர்மங்களும் உருவாகின்றன. தாமிர(II) சல்பேட்டு நீலநிற படிகங்களாக ஒரு ஐந்து நீரேற்றாக உருவாகிறது. ஆய்வகங்களில் அதிகமான அளவில் பயன்படுத்தப்படும் மயில்துத்தம் என்ற சேர்மம் இதுவாகும். இதைப் பயன்படுத்தி போர்டோக் கலவை எனப்படும் பூஞ்சைக் கொல்லி தயாரிக்கப்படுகிறது [41] . ஒன்றுக்கு மேற்பட்ட ஆல்ககால் தொகுதிகளைக் கொண்டு ஆல்ககால்கள் (பல்லால்ககால்கள்) பொதுவாக குப்ரிக் உப்புகளுடன் வினைபுரிகின்றன. உதாரணமாக தாமிர உப்புகள் ஒடுக்கும் சர்க்கரைகளின் சோதனையில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக பென்டிக்டு வினைபொருள் மற்றும் பெய்லிங்கு கரைசல் போன்றவை இச்சொதனையில் பயன்படுத்தப்படும் போது சர்க்கரையின் இருப்பு நிறமாற்றத்தால் வெளிப்படுத்தப்படுகிறது. நீலநிறமான Cu(II) சிவப்பு நிற தாமிர(I) ஆக்சைடாக மாறுகிறது [42]. எத்திலீன்டையமீனும் பிற அமீன்களும் சேர்ந்த இசுகீவர் வினைப்பொருளும் அதனுடன் தொடர்புடைய பிற அணைவுச் சேர்மங்களும் செல்லுலோசைக் கரைக்கின்றன [43]. அமினோ அமிலங்கள் தாமிர(II) உப்புகளுடன் சேர்ந்து மிகவும் நிலையான இடுக்கி இணைப்பு அணைவுச் சேர்மங்களைத் தருகின்றன. தாமிர அயனியின் இருப்பைக் காண பல ஈர வேதியியல் சோதனைகள் உள்ளன. உதாரணமாக பொட்டாசியம் பெர்ரோசயனைடுடன் தாமிர(II) உப்புகளுடன் சேர்கையில் பழுப்பு நிறமான வீழ்படிவு உருவாகிறது. கரிமத்தாமிரம் சேர்மங்கள் கார்பன்-தாமிரம் பிணைப்பு கொண்டுள்ள சேர்மங்கள் யாவும் கரிமத்தாமிர சேர்மங்கள் எனப்படும். இவை ஆக்சிசனுடன் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு தாமிர(I) ஆக்சைடை உருவாக்குகிறது. வேதியியலில் இச்சேர்மம் பல பயன்களைத் தருகிறது. தாமிர(I) சேர்மங்களை கிரிக்னார்டு வினைப்பொருள், விளிம்புநிலை ஆல்க்கைன்கள் அல்லது கரிம இலித்தியம் வினைப்பொருள்கள் சேர்த்து சூடுபடுத்துகையில் கரிமத்தாமிர சேர்மங்கள் உண்டாகின்றன;[44]. அதிலும் குறிப்பாக இவ்வகை வினையில் கில்மான் வினைப்பொருள் உற்பத்தியாகிறது. இவை ஆல்க்கைல் ஆலைடுகளுடன் பதிலீட்டு வினைகளில் பங்கேற்கின்றன. இதனால் கரிமத் தொகுப்பு வினைகளில் கரிமத்தாமிரப் பொருள்கள் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகக் கருதப்படுகின்றன. தாமிர(I) அசிடிலைடு ஓர் உயர் அதிர்வு உணரியாகும். ஆனால் கேடியோட்டு-சோட்கிவிக்சு பிணைப்பு வினை[45], சோனோகாசுகிரா பிணைப்பு வினைகளில்[46] இடைநிலையாக உள்ளது. மேலும் கரிமத்தாமிர சேர்மங்களைக் கொண்டு ஈனோன் கூட்டு வினைகள்[47], கார்போதாமிர ஏற்றவினை[48] போன்றவற்றையும் அடைய முடிகிறது. ஆல்க்கீன்கள் மற்றும் கார்பன் ஓராக்சைடுகளுடன் அமீன் ஈனி முன்னிலையில் தாமிர(I) உப்புகள் வினைப்பட்டு பலவீனமான அணைவுச் சேர்மங்களையும் உருவாக்குகின்றன[49]. தாமிர(III) மற்றும் தாமிர(IV) சேர்மங்கள் தாமிரம்(III) பெரும்பாலும் ஆக்சைடுகளில் காணப்படுகிறது. நீலகருப்பு நிறத்தினாலான பொட்டாசியம் குப்ரேட்டு, KCuO2 திண்மம் ஒர் எளிய உதாரணமாகும் [50]. குப்ரேட்டு மீக்கடத்திகள், இட்ரியம்பேரியம்தாமிர ஆக்சைடு (YBa2Cu3O7) போன்றவை விரிவாக ஆராயப்பட்ட தாமிரம்(III) சேர்மங்களாகும். ஆக்சைடு போலவே புளோரைடும் உயர்கார எதிர்மின் அயனியாகும். இவை உலோகங்களை உயர் ஆக்சிசனேற்ற நிலைக்கு நிலைப்படுத்துகின்றன[51] K3CuF6 மற்றும் Cs2CuF6, போன்ற தாமிர(III) மற்றும் தாமிர(IV) புளோரைடுகள் அறியப்படுகின்றன[40]. சிலவகையான தாமிர புரோட்டீன்கள் ஆக்சோ அணைவுச் சேர்மங்களாக உருவாகின்றன. இவையும் தாமிர(III) சேர்மங்களாகும்[52]. டெட்ராபெப்டைடுகளுடன் தாமிர(III) உப்புகளின் செவ்வுதா நிற அணைவுச் சேர்மங்களை புரோட்டாஅன் நீக்க ஈனிகள் நிலைப்படுத்துகின்றன [53]. கரிமத்தாமிர வினைகளில் இடைநிலை விளைபொருளாகவும் தாமிர(III) உப்புகள் காணப்படுகின்றன.[54]. வரலாறு செப்புக் காலம் செப்புக் காலம் என்பது, மனித பண்பாட்டு வளர்ச்சியில், தொடக்ககால உலோகக் கருவிகள் தோன்றிய ஒரு கால கட்டம் ஆகும். செப்பு இயல்பாகவே இயற்கையில் தோன்றுகிறது, மிகப்பழமையான நாகரிகங்கள் சில செப்பை அறிந்திருந்ததாக பதிவுகள் வழியாக அறியப்படுகின்றன. வரலாற்றில், மத்திய கிழக்கில் கி.மு. 9000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பே செம்பின் பயன்பாடு இருந்ததாக அறியப்படுகிறது [55]. வட ஈராக்கில் கி.மு. 8700 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு செப்புப் பதக்கம் கண்டறியப்பட்டுள்ளது [56]. தங்கம் மற்றும் இரும்பு மட்டுமே தாமிரம் உலோகத்திற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட உலோகங்கள் என்று சான்றுகள் தெரிவிக்கின்றன [57]. தாமிரத்தின் உலோகவியல் இங்கு தரப்பட்டுள்ள தொடர்ச்சி முறையைப் பின்பற்றுவதாகக் கருதப்படுகிறது: 1) இயற்கையான செப்பு, 2) பதனாற்றல் 3) உருக்கிப் பிரித்தல் 4) இழந்த-மெழுகு வார்ப்பு. தென்கிழக்கு அனடோலியாவில், இந்த நுட்பங்கள் அனைத்தும் புதிய கற்காலத்தின் தொடக்கத்தில் கி.மு 7500 இல் இருந்ததாக அறியப்படுகின்றது [58]. ஆங்காங்கே விவசாயம் கண்டறியப்பட்டது போல தாமிரத்தை உருக்கிப் பிரித்தலும் ஆங்காங்கே தனிநபர்களால் கண்டறியப்பட்டது. அநேகமாக இக்கண்டுபிடிப்பு கி.மு 2800 இல் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. மத்திய அமெரிக்காவில் சுமார் கி.மு 600 மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் கி.மு 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டிலும் நிகழ்ந்திருக்கலாம். இழப்பு மெழுகு வார்ப்பு செயல்முறை கி.மு 4500 – 4000 காலப்பகுதியில் தென்கிழக்கு ஆசியாவில் கண்டறியப்பட்டுள்ளது [55]. இங்கிலாந்தில் கி.மு 2280- 1890 காலகட்டத்தில் தாமிரம் வெட்டி எடுக்கப்பட்டதாக கதிரியக்கக்கரிம காலக்கணிப்பு தெரிவிக்கிறது[59]. கி.மு 3300-3200 கால இறந்த ஆண் உடலின் கையிலிருந்த கோடாலியின் முனையில் இருந்த வெட்டி 99.7% தூய்மையான தாமிரத்தால் செய்யப்பட்டிருந்தது. அவ்வுடலின் தலையிலிருந்து முடியில் அதிக அளவு ஆர்சனிக் கலந்திருப்பது அவன் செப்பை உருக்கிப் பிரித்தலில் ஈடுபட்டுள்ளான் என்பதையும் கூற முடிகிறது[60]. செப்பு உருக்குப் பிரித்தல் தொழில் நுட்ப அனுபவம் இதர தனிமங்களைப் பிரித்தெடுக்கவும் வழிவகுத்தது. இதனால் இரும்பு பிரித்தெடுத்தல் தொழில் நுட்பமும் கண்டறியப்பட்டது[60]. செம்பு தனித்த வடிவில் அமெரிக்காவில் மிக்சிகன் மாநிலத்தில் கி.மு 6000- 3000 காலத்திலேயே கண்டறியப்பட்டிருக்கலாம்[61][62]. கி.மு 5700-4500 காலகட்டம் விங்கா கலாச்சாரக் காலத்தை வெண்கலக் காலம் என்பர் [63][64]. [65] சுமேரியர்களும் எகிப்தியர்களும் செப்பு, வெண்கலம் போன்றவற்றை கி.மு. 3000 ஆண்டிலேயே பயன்படுத்தியுள்ளனர் [66]. வெண்கலக் காலம், வரலாற்றுக்கு முந்திய சமூகங்களுக்கான முக்கால முறையில் இரண்டாவது காலகட்டமாக இருந்திருக்கலாம். இம் முக்காலங்களில் முதலாவது கற்காலத்திற்கும், மூன்றாவது இரும்புக் காலத்திற்கும் இடையில் இந்த வெண்கலக் காலம், புதிய கற்காலமாக வருகிறது. ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் தென் இந்தியாவிலும் வேறு சில பகுதிகளிலும், வெண்கலக் காலம் இல்லாமலேயே புதிய கற்காலத்தை அடுத்து இரும்புக் காலம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. வெண்கலக் காலத்தில் உலோகவேலைத் தொழில்நுட்பம் மேம்பட்டிருந்ததாக அறியப்படுகிறது. செப்பு, தகரம் போன்றவற்றை, நிலத்துக்கு மேல் இயற்கையாகக் கிடைக்கும் அவற்றின் தாதுப் பொருட்களில் இருந்து பிரித்து எடுத்தனர். உரோமானியர்கள் காலத்தில் உருக்குதல், உலோகங்களைக் கலத்தல் முறையில் வெண்கலம் என்ற உலோகக் கலவை தயாரிக்கப்பட்டது [66]. தொல்பழங்காலமும் இடைக்காலமும் கிரேக்கத்தில் செப்பு சால்கோசு (χαλκός) என்ற பெயரால் அறியப்பட்டது. உரோமர்கள், கிரேக்கர்கள் மற்றும் பிற பண்டைய மக்களுக்கு செப்பு ஒரு முக்கிய ஆதாரப் பொருளாக இருந்தது. உரோமானியக் காலங்களில், ஏயிசு சைப்ரியம் என்ற பெயரில் அவர்களால் அறியப்பட்டது, ஏயிசு என்ற சொல் செப்பு உலோகக்கலவைகளுக்கான பொதுவான இலத்தீன் வார்த்தையாகும், மற்றும் சிரியாவின் சைப்ரசில் இருந்து செப்பு வெட்டியெடுக்கப்பட்டது என்பதைக் குறிக்க சைப்ரியம் என்ற சொல்லும் சேர்ந்துள்ளது. நாளடைவில் இந்த சொற்றொடர் கப்ரம் என்று சுருங்கி எளிமையானது, எனவே ஆங்கிலத்தில் அஃப்ரோடைட் (உரோமில் வீனசு) என்ற சொல்லிலும், இதன் பளபளப்பான அழகு மற்றும் கண்ணாடியை உற்பத்தி செய்வதில் இதன் பழமையான பயன்பாடு காரணமாக இரசவாதத்திலும் செம்பு என்ற சொல் பயன்பாடு இருந்தது. பண்டைய காலங்களில் அறியப்பட்ட ஏழு பரலோக உடல்கள், பழங்காலத்தில் அறியப்பட்ட ஏழு உலோகங்களோடு தொடர்புபடுத்தப்பட்டன, வீனசு செம்புடன் தொடர்பு படுத்தப்பட்டது [67]. தாமிரம் முதன்முதலாக பண்டைய பிரிட்டனில் கி.மு.மூன்றாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது. வட அமெரிக்காவில், பூர்வீக அமெரிக்கர்களால் தாமிர சுரங்கங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட ஆரம்பித்தன. 800 மற்றும் 1600 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பழமையான கல் கருவிகளைக் கொண்டு இசுல் ராயல் என்ற தளத்திலிருந்து தாமிரம் பிரித்தெடுக்கப்பட்டுள்ளது [68]. தென் அமெரிக்காவில், குறிப்பாக பெருவில் தாமிரத் தொழில்நுட்பம் தழைத்திருந்தது. எனினும் 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை இவ்வுலோகத்தின் வர்த்தக உற்பத்தி தொடங்கவில்லை. செப்புகளின் கலாச்சார பங்களிப்பு குறிப்பாக நாணயப் பயன்பாட்டில் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக இருந்தது. உரோமானியர்கள் கி.மு ஆறாம் நூற்றாண்டில் செப்புப் பாளங்களை பணமாக பயன்படுத்தியுள்ளனர். முதலில் செப்பு மதிப்பு மிக்க ஒரு பொருளாக கருதப்பட்டு பின்னர் படிப்படியாக அதன் வடிவம் மற்றும் தோற்றம் முக்கியத்துவம் பெற்றது. யூலியசு சீசர் வெண்கலத்தால் ஆன நாணயங்களை சொந்தமாக வைத்திருந்தார். அதே வேளையில் அகசுடசு சீசர் செப்பு. ஈயம், தகரம் ஆகியவற்றின் உலோகக்கலவையால் ஆன நாணயங்களைப் பயன்படுத்தினார். தொழிற்புரட்சிக்கு முன்னரே உரோமானியர்கள் ஆண்டுக்கு 15000 டன்கள் செப்பை உற்பத்தி செய்கின்ற அளவுக்கான நடவடிக்கைகளில் இசுபானியா, சைப்ரசு, மத்திய ஐரோப்பா பொன்ற நாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் [69][70]. பண்டைய இந்தியாவில் ஆயுர்வேத மருத்துவத்தில் அறுவைச் சிகிச்சைக் கருவிகள் தயாரிப்பில் தாமிரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல பண்டைய எகிப்தியர்களும் காயங்களை ஆற்றவும், குடிநீர் அருந்தவும், தலைவலி, தீக்காயங்கள், சிகிச்சைக்காக தாமிரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். நவீன காலம் 10 ஆம் நூற்றாண்டு முதல் 1992 வரை சுவீடனில் இருந்த ஒரு சுரங்கத்திலிருந்து தாமிரம் வெட்டியெடுக்கப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் செப்பு நுகர்வுகளில் மூன்றில் இரண்டு பங்கை இச்சுரங்கம் அளித்தது. அந்த நேரத்தில் நடைபெற்ற பல போர்கள் பலவற்றிற்கும் இது நிதி உதவியை அளித்தது[71]. சுவீடன் நாட்டின் தேசியக் கருவூலமாக இச்சுரங்கம் கருதப்பட்டது. செப்பு பூசப்பட்ட நாணயங்கள் சுவீடனில் வழக்கில் இருந்தன[72]. கூரை வேய்வதற்கும்[17], நாணயமாகவும் டேகியுரியோவகை புகைப்பட நுட்பத்திலும் தாமிரம் பயன்படுத்தப்படுகிறது. சிற்பக்கலையின் மறுமலர்ச்சிக்கும், அமெரிக்காவின் சுதந்திர சிலை உருவாக்கத்திற்கும் தாமிரம் பயன்படுத்தப்பட்டது. கட்டிடக் கலையின் பல்வேறு அம்சங்களில் தாமிரம் பயன்படுத்தப்பட்டது. நீருக்கடியில் கப்பலைப் பாதுகாக்க தாமிர முலாம் பூசுதல் மற்றும் சூழுறையிடல் போன்ற முன்னோடித் திட்டங்களை பிரித்தானிய ஆட்சிக்குழு 18 ஆம் நூற்றாண்டில் செயல்படுத்தியது[73] 1876 இல் முதலாம் மின்முலாம் பூசும் தொழிற்சாலை செருமனியில் தோற்றுவிக்கப்பட்டது[74].. 1830 இல் செருமனி விஞ்ஞானியால் தூள் உலோகவியலும், 1949 இல் பின்லாந்தில் விரைவு உருக்கிப் பிரித்தல் செயல்முறையும் கண்டுபிடிக்கப்பட்டதால் தாமிர உற்பத்தியின் வேகம் மேலும் அதிகரித்தது[75]. நாடுகளிடை தாமிர ஏற்றுமதி நாடுகளின் கழகம் 1967 இல் உருவாக்கப்பட்டது. சிலி, பெரு, சாம்பியா, சாயிர் போன்ற நாடுகள் இதை தொடங்கின. தாமிர உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடான அமெரிக்கா இக்கழகத்தில் உறுப்பினராக சேராத காரணத்தால் 1988 இல் கலைக்கப்பட்டது [76]. பயன்பாடுகள் மின்சார கம்பியாக (60%), கூரை மற்றும் குழாயமைத்தல் (20%), மற்றும் தொழில்துறை இயந்திரங்கள் (15%). பித்தளை மற்றும் வெண்கல உலோகக் கலவையாக பயன்படுவது தாமிரத்தின் முக்கியப் பயன்பாடுகள் ஆகும். சமையல் பாத்திரங்கள், கொதிகலன்கள், நீராவிக் குழாய்கள், மின்கம்பி, மின்வடம், மின்வாய், போன்றவைகள் செய்யவும் செம்பு பயன்படுகின்றது. எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் ஆபத்தான வேதிப் பொருட்களோடு தொடர்புடைய கருவிகள் மற்றும் சாதனங்களுக்கு இரும்பைக் காட்டிலும் செம்பு நற்பயன் அளிக்கிறது. இரும்பைப் பயன்படுத்தும் போது உராய்வினால் ஏற்படும் தீப்பொறி உண்டாக்கும் விபத்து இதனால் தவிர்க்கப்படுகின்றது பெரும்பாலும் தாமிரம் தூயநிலை உலோகமாகவே பயன்படுத்தப்படுகிறது. கடினத்தன்மை மாற்றம் தேவைப்படும் நேரங்களில் மட்டும் கலப்புலோகமாக பயன்படுத்தப்படுகிறது. படகுகளின் அடிப்பகுதியைப் பாதுகாக்க தாமிரச் சாயம் பூசி பாதுகாக்கிறார்கள். உணவு கூட்டுப்பொருளாகவும் பூஞ்சைக் கொல்லியாகவும் விவசாயத்தில் பயன்படுத்தப்படுகிறது [41][77]. மின்கம்பி மற்றும் மின்வடம் செம்பின் மின்கடத்துத் திறன் இரும்பை விட 5 மடங்கும், அலுமினியத்தை விட 1.5 மடங்கும், துத்தநாகத்தை விட 3 மடங்கும், டைட்டானியத்தை விட 35 மடங்கும் அதிகமுள்ளது. இதனால் செம்பு மின்துறை வளர்ச்சியின் நெம்புகோலாக விளங்குகின்றது. பிற தனிமங்களைக் காட்டிலும் தாமிரம் சிறந்த மின்கடத்தியாக தேர்வு செய்யப்பட்டு அனைத்து வகையான மின் விநியோகத்திற்குமான மின் கம்பிகளிலும் பயன்படுத்தப்படுகிறது [78]. தலைக்குமேல் வான்வழியாக செல்லும் மின்கம்பி, மின்சுற்றுகளுக்கு மட்டும்அலுமினியம் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன [79][80]. மாங்கனின், கான்சுடன்டன் போன்ற செம்பின் சில கலப்பு உலோகங்கள் உயர் மின்தடை கொண்டுள்ளன. இவை மின்னுலை, மின்னடுப்பு போன்ற கருவிகளுக்கு மின் கம்பியாகப் பயன் தருகின்றது. மின் மாற்றிகள், மின் மோட்டார்கள், மின்னியற்றிகள், மின் காந்தங்கள் போன்றவைகளுக்கான வரிச் சுற்றுகளுக்கு செம்புக் கம்பி இணக்கமானது. செம்பின் மின்தடை குறைவாக இருப்பதால் வெப்ப இழப்பும் குறைந்து மின்சாரம் கணிசமாக மிச்சமாகின்றது. மின்கருவிகளைக் குளிர்விக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை [81]. 1960 களின் பிற்பகுதியிலிருந்து 1970 களின் பிற்பகுதி வரையிலான குறுகிய காலத்தில்,அமெரிக்க வீடுகளில் மின் விநியோகத்திற்கான செப்பு பயன்பாடு அலுமினியத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் அலுமினியப் பயன்பாட்டால் பல வீடுகளில் தீவிபத்துகள் ஏற்பட்டதால் மீண்டும் அவர்களும் செப்புக்கு திரும்பினர் [82][83]. செம்பு அசிடேட் பிரகாசமான பச்சை வண்ணத்திற்குப் பயன் தருகின்றது. 'வோல்டாமானி' போன்ற மின்னாற்பகுப்பு மின்கலங்களுக்கு செம்பு ஒரு முக்கிய மூலப் பொருளாகும். செம்பை முதல் நிலை மின்னாற்பூச்சாக இரும்புத் தகடுகளில் பூசுகின்றார்கள். மின் முலாம் பூச்சிற்கு மிகவும் அனுகூலமான மூலங்களில் ஒன்று செம்பு ஆகும். செம்பு முலாம் பூச்சிற்கான மின்னாற்பகு நீர்மத்தை காரக் கரைசலாகவோ அல்லது அமிலக் கரைசலாகவோ வைத்துக் கொள்ளமுடியும். மின்னணு மற்றும் தொடர்புடைய சாதனங்கள் ஒருங்கிணைந்த மின்சுற்றுகள், அச்சிடப்பட்ட மின்சுற்றுப் பலகைகள் போன்றவற்றில் அலுமினியத்திற்குப் பதிலாக தாமிரம் இதனுடைய மீக்கடத்துத்திறனுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. வெப்ப ஈர்ப்பிகள் மற்றும் வெப்ப பரிமாற்றிகளும் தாமிரத்தின் மீக்குறை ஆற்றலிழப்பு பண்பினால் இதைப் பயன்படுத்துகின்றன. மின்காந்தங்கள், வெற்றிடக் குழாய்கள், நேர்மின் கதிர்க் குழாய்கள், நுண்ணலை அடுப்புகள் போன்ற கருவிகள் நுண்ணலைக் கதிவீச்சு தன்மைக்காக தாமிரத்தைப் பயன்படுத்துகின்றன[84]. மின்மோட்டார்கள் தாமிரத்தின் உயர்ந்த கடத்துத்திறன் மின்சார மோட்டார்களின் செயல்திறனை அதிகரிக்கிறது [85]. அனைத்து உலகளாவிய மின்சார நுகர்வு மற்றும் 69% மின்சாரத்தில் பயன்படுத்தப்படும் மின்சக்தி அமைப்புகளும் மோட்டார்கள் மற்றும் மோட்டார் உந்துதல் அமைப்புகள் 43% -46% அளவிற்குப் பயன்படுத்துகின்றன [86]. மோட்டார் செயல்திறனை அதிகரிக்க ஆற்றல் சேமிப்பை பிரதான நோக்கமாகக் கொண்டு மின்மோட்டார்கள் வடிவமைக்கப்படுகின்றன [87][88]. தேசிய மின்சார உற்பத்தியாளர்கள் சங்கம் செயல்திறன் தரங்களைக் கண்காணிக்கிறது [89]. கலப்புலோகப் பயன்கள் செம்பிலிருந்து பலதரப்பட்ட கலப்பு உலோகங்களைப் பெறலாம். செம்பும்(99-70%) தகரமும் (1-30%) கலந்த கலப்பு உலோகம் வெண்கலமாகும். இதில் சில சமயம் ஈயம் அல்லது துத்தநாகம் சேர்க்கப்படும். இது கடினமானதாகவும் எளிதில் வார்த்தெடுக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. அதனால் சுழல் வட்டுக்கள், ஒருவழிச்செலுத்திகள் இயந்திர உறுப்புக்கள், அணிகலன்கள் ,உலோக ஆடிகள், சிலைகள், கோயில் மணிகள் போன்றவை செய்யப் பயன்படுகின்றது. சிலிகானும் செம்பும் 20:80 என்ற வீதத்தில் கலந்த சிலிகான் வெண்கலம், அலுமினியமும் செம்பும் கலந்த அலுமினிய வெண்கலம் இவற்றில் சிறிதளவு வெள்ளீயத்தை சேர்த்து நாணயங்கள், உலோகச் சிலைகள் செய்யவும் பற்றவைப்புக்கான இடு பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றது. இக் கலப்பு உலோகங்கள் விமானங்களுக்கான இயந்திரங்கள், சுழலிகளுக்கான விசிறிகள் போன்றவைகள் செய்யவும் பயன்படுகின்றன. பெல் கலப்பு உலோகம் பாசுபரசு வெண்கலம், துப்பாக்கி உலோகம் செருமானிய வெள்ளி, பித்தளை போன்ற பல சிறப்புக் கலப்பு உலோகங்களிலும் செம்பு சேர்ந்துள்ளது. பித்தளையில் செம்பும் துத்தநாகமும் முறையே 60-80 % 40-20 % என்ற விகிதத்தில் இருக்கும். அதற்கேற்ப நிறமும் செம்பின் சிவப்பிலிருந்து பொன்னிற மஞ்சள் வரை மாற்றமிருக்கும். துத்தநாகத்தின் செறிவு தாழ்வாக இருந்தால் அதை ஆல்பாபித்தளை என்றும் அதிகமாக இருந்தால் அதை பீட்டாபித்தளை என்றும் கூறுவர். இது பட்டறைப் பயன்களுக்கு இணக்கமானது என்பதால் பாத்திரங்கள் செய்யப் பயன்படுகின்றது. ஒரு நீடித்த, அரிப்பு எதிர்ப்பியாகவும், தட்பவெப்ப மேற்கூரைப் பூச்சாகவும் தாமிரம் ஒரு கட்டிடக்கலைப் பொருளாக பண்டைய காலங்களில் இருந்தே பயன்படுத்தப்படுகிறது [90][91][92][93]. தாழ்வாரம், கூரை, மழைப்பாதுகாப்பு, கோபுரங்கள், மற்றும் கதவுகள் போன்ற கட்டிடக்கலைப் பொருட்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செய்யப்பட்டு வந்துள்ளன. உட்புற மற்றும் வெளிப்புற சுவர் உறைப்பூச்சு, கட்டிட விரிவாக்கம், இணைப்புகள், ரேடியோ அதிர்வெண் பாதுகாப்பு, மற்றும் கவர்ச்சிகரமான கைவேலைப்பாடுகள், குளியலறை சாதனங்கள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அலங்கார உட்புற பொருட்கள் ஆகியனவற்றை உள்ளடக்கி செப்புக் கட்டடக்கலை நவீன காலபகுதியில் விரிவடைந்தவண்ணம் உள்ளது. கட்டிடக் கலைப்பொருள், குறைந்த வெப்ப இயக்கம், இலேசான எடை, மின்னல் பாதுகாப்பு மற்றும் மறுசுழற்சி முதலானவை தாமிரத்தின் மற்ற முக்கிய நன்மைகள் ஆகும். இவ்வுலோகத்தின் தனித்துவமான பச்சைக்களிம்பு நிறம் நீண்ட காலமாக வடிவமைப்பாளர்களாலும்,கட்டிடக் கலை வல்லுநர்களாலும் விரும்பப்படுகின்றது. பசுக்களிம்பின் நீடித்துழைக்கும் அடுக்கு வளிமண்டல அரிப்பை மிகவும் எதிர்க்கும் தன்மையுடையது ஆகும். இதன் மூலம் இவ்வடுக்கு தொடர்ந்து உலோகத்தைப் பாதுகாக்கிறது[94][95][96]. கந்தகம் அடங்கிய அமில மழை போன்ற சுற்றுச்சூழல் நிலைமைகளைப் பொறுத்து தாமிரம் பல்வேறு அளவுகளில் கார்பனேட் மற்றும் சல்பேட் சேர்மங்களின் கலவையாகக் காணப்படுகிறது[97][98][99][100]. கட்டடக்கலைக்குரிய செப்பும் அதன் உலோகக் கலவைகளும் குறிப்பிட்ட ஒரு தோற்றம், நிறம், உணர்தல் ஆகியவற்றை எதிர்நோக்கியே தொடங்கப்பட்டு முடிவை எட்டுகின்றன. இம்முடிவுகள் பெரும்பாலும் இயந்திர மேற்பரப்பு சிகிச்சைகள், இரசாயன வண்ணம் மற்றும் இரசாயண பூச்சுகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன[101]. தாமிரம் மிகச்சிறந்த பற்றவைத்தல் பண்புகளைப் பெற்றுள்ளது. வாயு உலோக வில்சுடர் பற்றவைப்பு சிறந்த முடிவுகளைத் தருவதாக தெரிவிக்கப்படுகிறது .[102] நுண்ணுயிர் எதிர்ப்பு பயன்கள் பாக்டீரியா மற்றும் பல வகையான உயிரினங்கள் எதுவும் தாமிரத்தின் மீது வளர்வதில்லை. இந்த காரணத்திற்காகவே நீண்ட காலமாக கப்பல்களின் அடிப்புறத்தைப் பாதுகாப்பதற்காக தாமிரம் பயன்படுத்தப்படுகிறது. மீன்பிடி தொழிலில் தாமிரத்தின் உலோகக் கலவைகள் மீன்வலைகள் செய்யப் பயன்படுகின்றன [103]. பிற பயன்கள் தாமிரத்தின் கரைசல்கள் மரப்பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. நுண்ணுயிர் பாதுகாப்புப் பொருள்களை உருவாக்குவதற்காக சில நூலிழை இழைகளுடன் தாமிரம் கலக்கப்படுகின்றது. சில இசைக்கருவிகளில் தாமிரத்தின் உலோகக் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன. நிக்கல் முலாம் பூசுகையில் தாமிரம் ஒரு காரமாகப் பயன்படுத்தப்படுகிறது. அருங்காட்சியகங்களில் ஈயம், வெள்ளி உலோகங்களுடன் சேர்த்து பரிசோதனையின் மூலம் குளோரைடு, சல்பைடு, ஆக்சைடு போன்றவற்றை கண்டறிய உதவுகிறது. தாமிரம் தரம் குறைதல் கோளவடிவ பாக்டீரியாவும், சூடோமோனாசு புளூரசன்சு என்ற குச்சிவடிவ பாக்டீரியாவும் திண்ம நிலையிலுள்ள தாமிரத்தை சயனைடு தாமிரமாக தரம் குறைக்கின்றன [104]. தாமிரம் கலந்துள்ள மண்ணில் சில வகை பூஞ்சைககள் வளர்கின்றன. இளம் பைன் மரங்களை தாமிர நச்சிலிருந்து சில வகைப் பூஞ்சைகள் காக்கின்றன [104]. தங்கம் தோண்டியெடுக்கப்படும் சுரங்கங்களில் உள்ள கரைசல்களில் ஆசுபெர்கில்லசு போன்ற பூஞ்சைகள் காணப்படுகின்றன. மேலும் தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு, துத்தநாகம் போன்ற தனிமங்களின் சயனோ அணைவுச் சேர்மங்களைக் இக்கரைசல் கொண்டுள்ளது. கன உலோகங்களை இப்பூஞ்சைகள் கரைத்துவிடுகின்றன [105]. உயிரியல் பங்களிப்பு உயிரியல் எலக்ட்ரான் போக்குவரத்திலும், ஆக்சிசன் போக்குவரத்திலும் தாமிரப் புரோட்டீன்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. தாமிரம் (I) வகை சேர்மங்களை தாமிரம்(II) வகை சேர்மங்களாக இவை இடைமாற்றுகின்றன [106][107][108] [109]. பூமியின் வளிமண்டலத்தில் ஆக்சிசனைத் தோற்றுவிப்பதன் மூலம் செப்புக்கான உயிரியல் பங்களிப்பு தொடங்குகிறது [110]. மைட்டோகாண்டிரியாவிலுள்ள சகல யூகாரியோட்டுகளின் காற்றுச் சுவாசத்திற்கு தாமிரம் அவசியமாகும். ஆக்சிசனேற்ற பாசுப்போரைலேற்ற வினையில் கடைசி புரதமான சைட்டோகுரோம் சி ஆக்சிடேசில் இது காணப்படுகிறது. இப்புரதம் ஆக்சிசனை தாமிரம் இரும்பு போன்ற தனிமங்களுடன் இணைக்க உதவுகிறது. மேலும் இப்புரதம் எட்டு எலக்ட்ரான்களை ஆக்சிசன் மூலக்கூற்றுக்கு இடம் மாற்றுகிறது. பல மிகை ஆக்சைடுகளில் காணப்படும் தாமிரம் அவை சிதைவடைவதற்கான வினையூக்கியாகச் செயல்படுகிறது. இச்சிதைவு வினையில் ஆக்சிசனும் ஐதரசன் பெராக்சைடும் உருவாகின்றன. 2 HO2 → H2O2 + O2 விலங்கினங்களுள் ஆக்டோபசு, கணவாய் மீன், சிப்பிகள், நண்டுகள், நத்தைகள் போன்ற கடல் வாழ் உயிரினங்களின் இரத்தத்தில் செம்பு ஈமோசையனின் எனும் நிறமியாக உள்ளது. இதில் செம்பு 0.33-0.38 % அடங்கியுள்ளது. ஈமோகுளோபினில் இரும்பு எங்ஙனம் செயல்படுகின்றதோ அது போல இவற்றில் செம்புச் செயல்படுகின்றது. வளி மண்டலத்திலுள்ள ஆக்சிசனுடன் சேரும் போது இந்த நிறமி நீல நிறம் பெறுகின்றது. இதனால் நத்தைகள் நீல நிற இரத்தம் கொண்டவை எனச் சொல்லப்படுகின்றன. உட்கவர்ந்த ஆக்சிஜனை உடலிலுள்ள திசுக்களுக்கு ஆற்றலாகக் கொடுத்த பின் அவற்றின் இரத்தம் நிறமற்றதாகி விடுகின்றது . பொதுவாக நகைகள் செய்வதற்கு தாமிரம் பயன்படுத்தப்படுகிறது, செம்பு வளையல்கள் கீல்வாதம் அறிகுறிகளைத் தடுக்கின்றன என்று சில நாட்டுப்புற மருத்துவக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் இச்சிகிச்சையால் கீல்வாதம் குணமடைந்ததாக நிருபணம் ஏதும் ஆகவில்லை. மருத்துவக் குணம் எதுவும் தாமிரத்திற்கு இருப்பதாக மருத்துவத்துறையின் பரிந்துரைகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. உணவுத் தேவைகள் சராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 0.005 கிராம் செம்புச் சத்து தேவை. செம்புச் சத்துக் குறைவினால் இரத்தச் சோகை, சோர்வு ஏற்பட வாய்ப்புண்டு. இதனால் பலர் செம்புக்கு மருத்துவ குணமுண்டு என்று சொல்வார்கள். சில உயிரினங்களுக்கு ஒத்துக் கொள்ளும் செம்பு வேறுசில உயிரினங்களுக்கு ஒத்துக் கொள்வதில்லை. சுறா மீன்களுக்கு செம்பு சல்பேட்டுக்கள் தீங்கானது. இதை எதிர் சுறாப் பொருள் என்று குறிப்பிடுகின்றார்கள். கடலில் சிக்கிக் கொண்டவர்கள் சுறாக்களிடமிருந்து தப்பிக்க இவ்வேதிப் பொருளைப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். தோலின் வழியாக தாமிரம் ஈர்க்கப்படுவதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஒருவேளை அவ்வாறு ஈர்க்கப்பட்டால் அது ஒரு நச்சு ஆக செயல்படும் [111]. தாவரங்கள் மற்றும் விலங்குகள் அனைத்துக்கும் தாமிரம் இன்றியமையாத ஒரு கனிமமாக உள்ளது ஆனால் அனைத்து நுண்ணுயிரிகளுக்கும் இதன் அவசியம் இருப்பதில்லை. மனித உடலில் அவன் உடல் எடைக்கு ஏற்ப கிலோவுக்கு 1.4 முதல் 2.1 மில்லி அளவு தாமிரம் காணப்படுகிறது [112]. மனிதக்குடலால் ஈர்க்கப்படும் தாமிரம் கல்லீரலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது [113], கல்லீரல் செயல்முறைகளைத் தொடர்ந்து தாமிரம் பல்வேறு திசுக்களும் அனுப்பப்படுகிறது. தேவைக்கு அதிகமான தாமிரம் உடலில் இருந்தால் அது கல்லீரலை விட்டு வெளியேற்றப்படுகிறது [114][115]. தாமிரக் குறைபாடு நோய்கள் செப்பு குறைபாடு காரணமாக இரத்த சோகை, எலும்பு அசாதாரண மாறுபாடுகள், மயக்கம், வளர்ச்சிக் குறைபாடு , தொற்றுநோய்கள், எலும்பு இயக்கக் குறைபாடுகள் மற்றும் குளுக்கோசு மற்றும் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் அசாதாரணங்கள் ஆகியவவை உருவாகின்றன. வில்சன் நோய் காரணமாக உடல் திசுக்களில் தாமிரம் கூடுகிறது. மேலும் பார்க்க பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல் ஆவர்த்தன அட்டவணை மேற்கோள்கள் புற இணைப்புகள் at The Periodic Table of Videos (University of Nottingham) from the National Pollutant Inventory of Australia from the Centers for Disease Control and Prevention's National Institute for Occupational Safety and Health from the Centers for Disease Control and Prevention's National Institute for Occupational Safety and Health - official website of the Copper Development Association with an extensive site of properties and uses of copper - also operated by the Copper Development Association; dedicated to brass, a copper alloy. பகுப்பு:தனிமங்கள் பகுப்பு:உலோகங்கள் பகுப்பு:தாண்டல் உலோகங்கள் பகுப்பு:மின் கடத்திகள் பகுப்பு:உணவுப் பட்டியல் கனிமங்கள் பகுப்பு:கனசதுரக் கனிமங்கள் பகுப்பு:தாயகத் தனிமக் கனிமங்கள்
செப்பு எந்த நிறத்தில் இருக்கும்?
சிவந்த
401
tamil
8d15b9e7a
ஆத்திரேலியா, ஆஸ்திரேலியா அல்லது அவுஸ்திரேலியா (Australia) என்பது உலகின் மிகச்சிறிய கண்டமாகவும் உலகின் மிகப்பெரும் தீவாகவும் உள்ள பெருநிலப்பரப்பையும், தாஸ்மானியா தீவு, இந்திய, பசிபிக் பெருங்கடல்களில் உள்ள சில சிறிய தீவுகளையும் உள்ளடக்கிய நாடு. இது பொதுநலவாய ஆஸ்திரேலியா (Commonwealth of Australia) என அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறது. எந்த நாட்டுடனும் இதற்கு நில எல்லை கிடையாது. இந்தோனீசியா, கிழக்குத் திமோர், பப்புவா நியூ கினி ஆகிய நாடுகள் இதன் வடக்கேயும், சொலமன் தீவுகள், வனுவாட்டு, நியூ கலிடோனியா ஆகியன வடகிழக்கேயும், நியூசிலாந்து தென்கிழக்கேயும் இதன் அயல் நாடுகளாக அமைந்துள்ளன. கிட்டத்தட்ட 42,000 ஆண்டுகளாக ஆஸ்திரேலியப் பழங்குடிகள் ஆஸ்திரேலியப் பெரு நிலப்பரப்பில் வாழ்ந்து வருவதாக வரலாறு சொல்கிறது[1]. அவ்வப்போது வடக்கில் இருந்து மீனவர்களும், பின்னர் 1606 இல் டச்சு நாடுகாண் பயணிகள் ஐரோப்பாவில் இருந்தும் இங்கு வந்து போன பின்னர்[2], 1770 இல் ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் வந்திறங்கிய ஆங்கிலேயர் அதனை ஐக்கிய இராச்சியத்துக்கென உரிமை கொண்டாடினர். ஆரம்பத்தில் ஆங்கிலேய, ஸ்கொட்டியக் குற்றவாளிகளின் குடியேற்றத் திட்டமாக ஜனவரி 26, 1788 இல் நியூ சவுத் வேல்ஸ் என்ற குடியேற்றப் பகுதி உருவாக்கப்பட்டது. பின்னர் மக்கள் தொகை பெருக, ஆஸ்திரேலியாவின் மேலும் பல புதிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு 19ம் நூற்றாண்டின் காலப்பகுதியில் சுயாட்சி கொண்ட மேலும் ஐந்து பிரித்தானியக் குடியேற்றப் பகுதிகள் அமைக்கப்பட்டன. ஜனவரி 1, 1901 இல் ஆறு தனித்தனியான குடியேற்றப் பகுதிகளும் ஒன்றிணைந்து பொதுநலவாய ஆஸ்திரேலியா என்ற திறந்த மக்களாட்சி அரசியலமைப்புடன் கூட்டமைப்பு அரசை உருவாக்கின. இதன் தலைநகரம் கான்பரா ஆகும். பரப்பளவில் ஆறாவது பெரிய நாடாக இருப்பினும் இதன் மக்கள்தொகை வெறும் 23.2 மில்லியன்கள் (2.32 கோடி, 2013 மதிப்பீட்டின் படி[3]) மட்டுமே. இவர்களில் 60 விழுக்காட்டினர் பெருநிலப்பரப்பில் மாநிலத் தலைநகரங்களை அண்டி வாழ்கின்றனர். ஆஸ்திரேலியா மேற்கத்திய பொருளாதார முறைகளைப் பின்பற்றுகிறது. ஆள்வீத வருமானம் வலுவான பொருளாதார நாடுகளுக்கு இணையானது. தொழிலாளிகளில் 5% மட்டும் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். எண்ணெய் வளமும், கனிம வளமும் மிகுந்த நாடு. பெயர்க் காரணம் ஆஸ்திரேலியா என்ற பெயர் Australis என்ற இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து உருவானது. தெற்கே என்பது இதன் கருத்து. 1521 இல் எசுப்பானியர் பசிபிக் பெருங்கடலில் பயணம் செய்த முதலாவது ஐரோப்பியர் ஆவர். ஆங்கில மொழியில் முதன் முதலாக ஆஸ்திரேலியா என்ற சொல் 1625 இல் பயன்படுத்தப் பட்டது.[4]. சக்கார்த்தாவில் நிலை கொண்டிருந்த டச்சு கிழக்கிந்தியக் கம்பனியினர் 1638 இல் தெற்கே தாம் புதிதாகக் கண்டுபிடித்த இடத்திற்கு Australische என்ற பெயரை இட்டனர். ஆஸ்திரேலியாவை முதன் முதலில் சுற்றி வந்த மத்தியூ பிலிண்டேர்ஸ் என்ற பிரித்தானிய மாலுமி 1814 இல் தனது A Voyage to Terra Australis என்ற நூலில் "ஆஸ்திரேலியா" என்ற பெயரைப் பயன்படுத்தியதில் இருந்து இப்பெயர் பரவலாக வழக்கூன்றியது. நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் லக்லான் மக்குவாரி 1817, டிசம்பர் 12 இல் இப்பெயரை காலனித்துவ அரசுக்கு பரிந்துரைத்தார்[5]. 1824 இல் இப்பெயர் ஏற்பு பெற்றது. ஆஸ்திரேலிய ஆங்கிலத்தில் "ஆஸ்திரேலியா" əˈstɹæɪljə, -liːə, -jə என்றவாறு பலுக்கப்படுகிறது[6]. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து ஆஸ்திரேலியா நாட்டை உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் ஓஸ் (Oz) என்றும், ஆஸ்திரேலியர்களை "ஒசி" (Aussie) எனவும் சுருக்கமாக அழைக்கப்படுகிறார்கள். வரலாறு ஆஸ்திரேலியப் பழங்குடிகள் ஆஸ்திரேலியாவின் முதல் மனிதர் குடியேறியது 42,000 முதல் 48,000 ஆண்டுகளுக்கு முன்னர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[7]. இவர்கள் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடிகளின் மூதாதையர் என அறியப்படுகிறது. இவர்கள் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் லெக்முங்கோ (Laje Mungo) என்னுமிடத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கற்காலத்திற்கு முன்பிருந்து மனிதர்கள் வசித்தாலும் அவர்கள் தற்போதைய தென்கிழக்காசியத் தீவுகளிலிருந்து மிகப்பழங்காலத்தில் பிரிந்தவர்களாகத் நம்பப்படுகிறது. மரபணு மற்றும் மொழி அடிப்படையில் இப்பழங்குடிகளின் உறவும் தொடர்பும் (பிற நாட்டினத்தவர்களுடன்) உறுதிப்படவில்லை. இப்பழங்குடினரில் பெரும்பான்மையானோர் வேட்டையாடுபவர்கள். குயின்ஸ்லாந்தின் தூர-வடக்கிலும், டொரெஸ் நீரிணைத் தீவுகளிலும் வாழும் பழங்குடியினர் மெலனேசியர்கள். இவர்களின் பண்பாடு, வாழ்க்கை முறை ஏனைய பழங்குடியினரை விட வேறுபட்டவை. ஐரோப்பியரின் வருகை ஆஸ்திரேலியப் பெரும்பரப்பை முதன் முதலில் வந்தடைந்த ஐரோப்பியர் டச்சு மாலுமியான வில்லெம் ஜான்சூன் என்பவர். இவர் கேப் யோர்க் தீபகற்பத்தின் கரையை 1606 இல் கண்டார். 17ம் நூற்றாண்டு காலகட்டத்தில் டச்சுக் காரர் மேற்கு மற்றும் வடக்குக் கரைகளில் வந்திறங்கி அப்பகுதிக்கு புதிய ஒல்லாந்து (Nova Hollandia) எனப் பெயரிட்டனர். ஆனாலும் அவர்கள் அங்கு குடியேற முயலவில்லை. 1770 ஆம் ஆண்டில், இங்கிலாந்து கப்டன் ஜேம்ஸ் குக் தனது பசிபிக் பயணத்தின் போது ஆஸ்திரேலியாவில் கிழக்குக் கரையில் தரையிறங்கி அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டு பெரிய பிரித்தானியாவுக்காக அதனை உரிமை கோரினான். இவனது கண்டுபிடிப்புகள் பின்னர் அங்கு பிரித்தானியாவின் குற்றவாளிகளின் குடியேற்றத்தை ஆரம்பிக்க ஏதுவாக இருந்தது. நியூ சவுத் வேல்ஸ் என்ற முடியாட்சிக் குடியேற்றம் ஆர்தர் பிலிப் என்பவரால் ஜாக்சன் துறையில் ஜனவரி 26, 1788 இல் அமைக்கப்பட்டது. இந்நாள் பின்னர் ஆஸ்திரேலியா நாள் என்ற பெயரில் ஆஸ்திரேலியாவின் தேசிய நாளாக ஆக்கப்பட்டது. வான் டியெமனின் நிலத்தில் (தற்போதைய தாஸ்மானியா) 1803 இல் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டு 1825 இல் தனியான குடியேற்ற நாடாக ஆக்கப்பட்டது.[8] ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியை (சுவான் ஆற்றுக் குடியேற்றம்) 1829 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியம் அதிகாரபூர்வமாக உரிமை கோரியது. 1832 இல் இப்பகுதி மேற்கு ஆஸ்திரேலியா எனப் பெயர் பெற்றது. 1836 இல் தெற்கு ஆஸ்திரேலியா, 1851 இல் விக்டோரியா, 1859 இல் குயின்ஸ்லாந்து ஆகிய தனியான குடியேற்றப் பகுதிகள் நியூ சவுத் வேல்சில் இருந்து பிரித்து அமைக்கப்பட்டன. 1911 ஆம் ஆண்டில் தெற்கு ஆஸ்திரேலியாவில் இருந்து வட மண்டலம் பிரிக்கப்பட்டு தனி மாநிலமாகியது. தெற்கு ஆஸ்திரேலியா, விக்டோரியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன பிரித்தானியக் குற்றவாளிகளின் குடியேற்றங்களாக ஆரம்பிக்கப்படவில்லை. ஆனாலும் விக்டோரியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன பின்னர் குற்றவாளிகளை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தன[9] ஏற்கனவே குடியேறியவர்களின் எதிர்ப்பினை அடுத்து நியூ சவுத் வேல்சிற்கு குற்றவாளிகள் அனுப்பப்படுவது 1848 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது[10]. 1788 இல் முதன்முதலாக ஐரோப்பியர்கள் இங்கு குடியேறியபோது அண்ணளவாக 350,000 பழங்குடிகள் இக்கண்டத்தில் வசித்து வந்தனர்[11]. அப்போது 500 வகையான பழங்குடியினர் இக்கண்டத்தில் தங்கள் சொந்த மொழியுடன் வாழ்ந்து வந்தனர். இவர்களின் தொகை அடுத்த 150 ஆண்டுகளில் பெருமளவு குறைய ஆரம்பித்தது. தொற்று நோய், கட்டாய மீள்குடியேற்றம், பண்பாட்டு சீரமைப்பு போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகிறது[12]. பழங்குடிகளின் குடும்பங்களில் இருந்து அவர்களின் பிள்ளைகள் கட்டாய வெளியேற்றமும் இவ்வீழ்ச்சிக்குக் காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்[13]. 1967 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மக்கள் வாக்கெடுப்பை அடுத்து நடுவண் அரசு பழங்குடிகள் தொடர்பாக கொள்கை மாற்றங்களுக்கும் புதிய சட்டங்கள் இயற்றுவதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டது. தலைமுறைகளாக நிலஉரிமை (native title) 1992 வரை ஆஸ்திரேலியாவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை. ஆஸ்திரேலிய மேல் நீதிமன்றத்தில் விசாரணக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட புகழ்பெற்ற மாபோ எதிர் குயின்ஸ்லாந்து வழக்கை அடுத்து ஐரோப்பிய ஆக்கிரமிப்பில் இருந்த நிலங்கள் முன்னர் terra nullius ("வெற்று நிலம்") ஆகக் கருதப்பட்டமை மாற்றப்பட்டு தலைமுறைகளாக நிலம் வைத்திருந்தோருக்கு நில உரிமை வழங்கப்பட்டது. கூட்டாட்சி 1855 - 1890 காலப்பகுதியில், ஆறு குடியேற்றப் பகுதிகளும் தனித்தனியே தமது அரசாங்கங்களை அமைத்துக் கொண்டு பிரித்தானியப் பேரரசுக்குள் இருந்தவாறே தமது உள்ளூர் விடயங்களைத் தாமே கவனித்துக் கொள்ளத் தொடங்கின. லண்டனில் அமைந்திருந்த காலனித்துவ நிர்வாகம் குறிப்பாக வெளிநாட்டலுவல்கள், பாதுகாப்பு, பன்னாட்டுக் கப்பற்துறை போன்றவற்றைக் கவனித்தது. 1901, ஜனவரி 1 இல், ஆஸ்திரேலியக் கூட்டமைப்பு நிறுவப்பட்டது. பிரித்தானிய இராச்சியத்திற்குள் அடங்கிய "பொதுநலவாய ஆஸ்திரேலியா" பிறந்தது. 1911 ஆம் ஆண்டில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் ஒரு பகுதி ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம் என்ற பெயரில் தனிப் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டு கூட்டமைப்பின் தலைநகரம் கான்பரா 1927 ஆம் ஆண்டில் இங்கு அமைக்கப்பட்டது. அதுவரையில் மெல்பேர்ண் நகரம் கூட்டமைப்பின் தற்காலிகத் தலைநகரமாக இருந்தது. தெற்கு ஆஸ்திரேலியாவின் பகுதியாக இருந்த வட மண்டலம் என்ற பிரதேசம் 1911 இல் தனியாகப் பிரிக்கப்பட்டு நடுவண் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. முதலாம் உலகப் போரில் ஆஸ்திரேலியா தன்னிச்சையுடன் போரில் ஈடுபட்டது[14]. கலிப்பொலி போரில் ஆஸ்திரேலியர்களின் பங்களிப்பு இந்நாட்டு இராணுவத்தினரின் முதலாவது பெரும் போர்ப் பங்கெடுப்பு ஆகும். இப்போரில் அவர்கள் தோல்வியடைந்தாலும், இந்நடவடிக்கை நாடொன்றின் எழுச்சியாக பெரும்பாலான ஆஸ்திரேலியர்களால் கணிக்கப்படுகிறது. ஐக்கிய இராச்சியத்தில் 1931 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 ஆஸ்திரேலியாவுக்கும், ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் இருந்த அரசிய்யலமைப்புத் தொடர்புகளைப் பேணி வந்தாலும் 1942 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட உப சட்டம் 1931 சட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. 1942 இல் இரண்டாம் உலகப் போரின் போது ஆசியாவில் ஐக்கிய இராச்சியத்தின் அதிர்ச்சித் தோல்விகளும், ஜப்பானியப் பேரரசின் முற்றுகையும் ஆஸ்திரேலியாவை ஐக்கிய அமெரிக்காவுடன் அணி சேர வாய்ப்பாக இருந்தது. 1951 ஆம் ஆண்டில் இருந்து ஐக்கிய அமெரிக்காவுடன் அன்சஸ் என்ற பாதுகாப்பு உடன்பாட்டை ஆஸ்திரேலியா ஏற்படுத்திக் கொண்டது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஐரோப்பாவில் இருந்து மக்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற வாய்ப்பளிக்கப்பட்டது. வெள்ளை ஆஸ்திரேலியா கொள்கை முடிவுக்கு வந்ததை அடுத்து 1970களில் இருந்து ஆசியா மற்றும் ஐரோப்பா அல்லாத மற்ற நாடுகளில் இருந்து மக்கள் இங்கு குடியேற ஊக்குவிக்கப்பட்டனர். இதனையடுத்து ஆஸ்திரேலியாவின் மக்கள் பரம்பல், பண்பாடு, மற்றும் தன்னடையாளம் ஆகியவற்றில் பெரும் மாற்றம் ஏற்படலாயின. ஆஸ்திரேலியாவுக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் இருந்து வந்த அரசியல் சட்ட இணைப்பு 1986 இல் ஆஸ்திரேலிய சட்டம் 1986 நிறைவேற்றப்பட்டதை அடுத்து மேலும் பிளவடைந்தது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து ஆஸ்திரேலிய மாநிலங்களில் பிரித்தானியாவின் பங்கு முடிவுக்கு வந்தது. ஐக்கிய இராச்சியத்தின் பிரிவி கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்யப்படுவது நிறுத்தப்பட்டது[15]. ஆஸ்திரேலியாவைக் குடியரசாக மாற்றுவதற்காக 1999 இல் நடத்தப்பட்ட அனைத்து மக்கள் வாக்கெடுப்பில் 54 விழுக்காட்டினர் எதிராக வாக்களித்தனர். அரசியல் பொதுநலவாய ஆஸ்திரேலியா நடுவண் ஆட்சியைக் கொண்ட நாடாளுமான்ற மக்களாட்சி அமைப்பாகும். இரண்டாம் எலிசபெத் ஆஸ்திரேலியாவின் மகாராணி ஆவார். நடுவண் ஆட்சியில் ஒரு பொது ஆளுநரையும், அந்தந்த மாநிலங்களுக்குத் தனித்தனியே ஆளுநர்களையும் அரசி தனது சார்பில் நியமித்துள்ளார். அரசியலமைப்பின் படி பொது ஆளுநர் பல நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டிருந்தாலும், அவர் பொதுவாக ஆஸ்திரேலிய பிரதமரின் ஆலோசனைக்கேற்பவே தனது அதிகாரங்களை நிறைவேற்றுகிறார். ஒரே ஒரு முறை மட்டும், 1975 ஆம் ஆண்டில் பொது-ஆளுநர் தன்னிச்சையாக அன்றைய விட்லமின் அரசை நீக்கியிருந்தார்[16]. ஆஸ்திரேலியாவில் மொத்தம் மூன்று அரசு சட்ட அமைப்புகள் செயற்படுகின்றன: சட்டமன்றம்: பொதுநலவாய நாடாளுமன்றம். இதில் அரசி, செனட் அவை, மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். அரசியின் சார்பில் பொது-ஆளுநர் பங்கு பற்றுகிறார். நிறைவேற்று அவை: நடுவண் நிறைவேற்றுப் பேரவை, இதில் பிரதமர், மற்றும் அமைச்சரவை அங்கத்தவர்கள் அங்கம் வகிக்கின்றனர். சட்டம்: ஆஸ்திரேலியாவின் உயர் நீதிமன்றம் மற்றும் நடுவண் நீதிமன்றங்கள். ஐக்கிய இராச்சியத்தின் பிரிவி கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்வது 1986 ஆம் ஆண்டில் இருந்து நிறுத்தப்பட்டது. இரு அவைகளைக் கொண்ட ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் செனட் அவையில் (மேலவை) 76 உறுப்பினர்களும், பிரதிநிதிகள் அவையில் (கீழவை) 150 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கீழவை உறுப்பினர்கள் ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் இருந்து ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மேலவைக்கு ஒவ்வோர் மாநிலமும் 12 உறுப்பினர்களையும், ஆஸ்திரேலியத் தலைநகர்ப் பிரதேசம், வட மண்டலம் ஆகிய இரு பிரதேசங்களிலும் இருந்து இருவருமாக பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இரு அவைகளுக்கும் தேர்தல்கள் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெறுகின்றன. கீழவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி அரசை அமைக்கும். அதன் தலைவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். மாநிலங்களும் பிரதேசங்களும் Western Australia Northern Territory South Australia Queensland New South Wales Australian Capital Territory Victoria Tasmania Indian Ocean Timor Sea Gulf of Carpentaria Arafura Sea Great Australian Bight Tasman Sea Bass Strait Coral Sea ● ● ● ● ● ● ● ● South Pacific Ocean Southern Ocean Great Barrier Reef அவுஸ்திரேலியா மொத்தம் ஆறு மாநிலங்களையும், இரண்டு மண்டலங்களையும், வேறு சில சிறிய பிராந்தியங்களையும் தன்னகத்தே கொண்ட நாடு. மாநிலங்களாவன: நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோறியா, தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா, தாஸ்மானியா எனபனவாகும். வட மண்டலம், ஆஸ்திரேலிய தலைநகர் மண்டலம் என்பன இரண்டு பிரதான மண்டலங்களாகும். மண்டலங்களின் செயற்பாடுகள் பொதுவாக மாநிலங்களினதை ஒத்திருந்தாலும், மண்டலங்களின் அரசமைப்புச் சட்டவிதிகளை நடுவண் அரசு (அவுஸ்திரேலிய அரசாங்கம்) மாற்றியமைக்க முடியும். அதே வேளையில் மாநில அரசுகளின் சட்டங்களின் 51வது (சிறப்பு) சட்ட விதிகளை மட்டுமே நடுவண் அரசு மாற்ற முடியும். மருத்துவமனைகள், கல்வி, காவல்துறை, சட்டம், பாதைகள், பொது போக்குவரத்து, உள்ளூராட்சி சபைகள் (local government) போன்றவை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன. ஒவ்வொரு மாநிலமும் மண்டலங்களும் தமக்கென தனியான சட்டசபைகளை (நாடாளுமன்றங்களை) கொண்டுள்ளன. இவற்றில் வட மண்டலம், ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம், குயின்ஸ்லாந்து என்பன ஒரு சட்டசபையையும், ஏனைய மாநிலங்கள் கீழவை, மேலவை என இரு சபைகளையும் கொண்டுள்ளன. மாநிலங்களின் அரசுத் தலைவர் முதல்வர் (Premier) எனவும், மண்டலங்களின் தலைவர் முதலமைச்சர் (Chief Minister) எனவும் அழைக்கப்படுகின்றனர். மகாராணி தனது பிரதிநிதியாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநரையும், வட மண்டலத்தில் நிர்வாகியையும் நியமிப்பார். ஆஸ்திரேலியாவில் சில சிறிய பிரதேசங்களும் உள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஜேர்விஸ் குடா பிரதேசம் என்ற கடற்படைத் தளம் நடுவண் அரசினால் நிர்வகிக்கப்படுகிறது. இவற்றைவிட பின்வரும் பிரதேசங்கள் ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் உள்ளன: நோர்போக் தீவு கிறிஸ்மஸ் தீவு கொக்கோஸ் (கீலிங்) தீவுகள் ஆஷ்மோர் கார்ட்டியர் தீவுகள் பவளக் கடல் தீவுகள் ஹேர்ட் தீவு மற்றும் மக்டொனால்ட் தீவுகள் ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் மண்டலம் புவியியல் ஆஸ்திரேலியா இந்தோ அவுஸ்திரேலிய புவித்தட்டில் இந்திய, பசிபிக் பெருங்கடல்களால் சூழப்பட்டு, ஆசியா கண்டத்தை அரபுரா, மற்றும் திமோர் கடல்களால் பிரிக்கப்பட்டுள்ளது. 7,617,930 சதுர கிலோமீட்டர்[17] பரப்பளவுடைய இந்நாட்டின் பெரும்பகுதி பாலைநிலங்கள் ஆகும். ஆஸ்திரேலியாவின் பெரு நிலப் பரப்பு 34,218 கிமீ கரையோரப் பகுதியை (தீவுப் பகுதிகளைத் தவிர்த்து) கொண்டுள்ளது[18]. உலகின் மிகப் பெரும் பவளப் பாறைத் தொடர்[19] பெரும் தடுப்புப் பவளத்திட்டு, ஆஸ்திரேலியாவின் வடகிழக்குக் கடற்கரையை அண்டிக் காணப்படுகிறது. இதன் நீளம் 2000 கிமீ விட அதிகமானதாகும். மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஆகுஸ்டஸ் மலை உலகின் பெரிய ஒருகற்பாறை (monolith) எனக் கருதப்படுகிறது[20]. 2,228 மீ உயரமான கொஸ்கியஸ்கோ மலை ஆஸ்திரேலியாவின் பெரு நிலப்பரப்பில் உள்ள அதி உயரமான மலை ஆகும். பெரு நிலப்பரப்புக்கு வெளியே உள்ள ஹேர்ட் தீவு மற்றும் மக்டொனால்ட் தீவுகள் பிரதேசத்தில் உள்ள மோசன் மலை 2,745 மீ உயரமானது. ஆஸ்திரேலியா மிகத் தட்டையான கண்டமாகும். பழையதும் வளங்குறைந்ததுமான மண்ணைக் கொண்ட இது மனிதர் வாழும் கண்டங்களில் மிக வரண்டதுமாகும். பெரும்பாலான அவுஸ்திரேலியர்கள் நாட்டின் தென்கிழக்குக் கடற்கரையை அண்டியே வாழ்கிறார்கள். நாட்டின் வடக்குப் பகுதி வெப்பவலயப் பிரதேசமாகும். இங்கு மழைக்காடுகள், மரநிலங்கள், புல்வெளிகள், அலையாத்திக் காடுகள், மற்றும் பாலைநிலங்கள் என்பன உண்டு. அண்மைக்காலங்களில் ஆஸ்திரேலியாவில் காலநிலை மாற்றம் ஒரு பெரும் பிரச்சினையாக உருவாகியுள்ளது[21]. கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் மழைவீழ்ச்சி அதிகரித்துக் காணப்பட்டாலும்[22], ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை காணப்படுகிறது. நகரங்களில் மக்க்க்ள்தொகை அதிகரிப்பு, மற்றும் உள்ளூர் வரட்சி காரணமாக பல நகரங்களிலும் நீர்க்கட்டுப்பாடு அமுலில் உள்ளது[23]. குடிமதிப்பியல் தற்போதைய (2008) மதிப்பீட்டான 21.3மில்லியன் ஆஸ்திரேலியர்களின் பெரும்பான்மையானோர் காலனித்துவக் காலத்திலும், கூட்டாட்சிக்கு முன்னரும் ஐரோப்பாவில் இருந்து வந்தவர்களின் வழித்தோன்றல்களாகும். இவர்களில் பெரும்பான்மையானோர் பிரித்தானியத் தீவுகளில் இருந்து குடியேறியோராவர். இன்றும் ஆஸ்திரேலியர்களில் பெரும்பான்மையானோர் பிரித்தானியரும் ஐரிய மக்களும் ஆவர். முதலாம் உலகப் போர்க் காலத்தில் இருந்து ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை நான்கு மடங்காகவே உயர்ந்தது[25]. இதனால் குடியேற்றத் திட்டத்துக்கு ஆதரவு வலுத்தது. இரண்டாம் உலகப் போரை அடுத்தும், அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டு வரையும், கிட்டத்தட்ட 5.9மில்லியன் மக்கள் புதிதாகக் குடியேறினார்கள். அதாவது கிட்டத்தட்ட ஏழு ஆஸ்திரேலியர்களுக்கு இருவர் வெளிநாட்டில் பிறந்தவர்களாயினர்[26]. குடியேறியோரில் பெரும்பான்மையானோர் ஏதாவதொரு துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர்[27], ஆனாலும் குடும்ப உறுப்பினர்களும், அகதிகளும் குடியேற அனுமதிக்கப்பட்டது[27]. 2001 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி, வெளிநாட்டில் பிறந்தோரில் பெரும்பான்மையானோர் ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து, இத்தாலி, வியட்நாம், மற்றும் சீனா ஆகிய நாடுகளில் பிறந்தோராவர்[28]. 1973 ஆம் ஆண்டில் வெள்ளை ஆஸ்திரேலியா கொள்கை கைவிடப்பட்டதை அடுத்து, பல்கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு இனங்களுக்கிடையே ஒற்றுமையை வளர்க்க அரசு மட்டத்தில் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன[29]. 2005–06 காலப்பகுதியில், 131,000 பேருக்கு மேல் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் ஆசியா, மாற்றும் ஓசியானியா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்[30]. 2006–07 காலப்பகுதியில் குடியேற்றப்படுவோரின் எண்ணிக்கை 144,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது[31]. 2008-9 காலப்பகுதியில் 300,000 பேர்களைக் குடியமர்த்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் குடியேறிய எண்ணிக்கைகளில் மிகப் பெரியதாகும்[32]. 2001 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்பில் உள்ள பழங்குடியினரின் எண்ணிக்கை (ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மற்றும் டொரெஸ் நீரிணை மக்கள்) 410,003 ஆக இருந்தது. இது நாட்டின் முழுத் தொகையில் 2.2% ஆகும். இது 1976 ஆம் ஆண்டில் இருந்ததை விட 115,953 பேர் அதிகமாகும். கைதுகள், வேலையில்லாமை, படிப்பறிவின்மை, போன்றவை ஆஸ்திரேலியப் பழங்குடியினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆகும். இவர்களின் சராசரி வாழ்வுக்காலம் ஏனைய பழங்குடியினரல்லாத ஆஸ்திரேலியர்களை விட 17 ஆண்டுகள் வரை குறைவாகும்[33]. ஏனைய வளர்ச்சியடைந்த நாடுகளைப் போலவே, ஆஸ்திரேலியாவின் குடிமக்கள் வயது முதிர்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். கூடுதலானோர் ஓய்வுதியம் பெறுவோராகவும், சிறிய அளவினரே தொழில் பார்ப்போராகக் காணப்படுகின்றனர். 2004 ஆண்டில் மக்களின் சராசரி வயது 38.8 ஆண்டுகளாக இருந்தது[34]. ஆஸ்திரேலியர்களில் பெரும் எண்ணிக்கையானோர் (2002-03 காலத்தில் 759,849)[35] தமது பிறந்த நாட்டை விட்டு வெளியே வசித்து வந்தனர். vt Largest populated areas in Australia 2019 data from Australian Bureau of Statistics[36] Rank Name State Pop. Rank Name State Pop. Sydney Melbourne 1 Sydney NSW 5,312,163 11 Geelong Vic 275,794 Brisbane Perth 2 Melbourne Vic 5,078,193 12 Hobart Tas 236,136 3 Brisbane Qld 2,514,184 13 Townsville Qld 181,668 4 Perth WA 2,085,973 14 Cairns Qld 153,951 5 Adelaide SA 1,359,760 15 Darwin NT 147,255 6 Gold Coast–Tweed Heads Qld/NSW 693,671 16 Toowoomba Qld 138,223 7 Newcastle–Maitland NSW 491,474 17 Ballarat Vic 107,652 8 Canberra–Queanbeyan ACT/NSW 462,136 18 Bendigo Vic 100,991 9 Sunshine Coast Qld 341,069 19 Albury–Wodonga NSW/Vic 93,603 10 Wollongong NSW 306,034 20 Launceston Tas 87,382 மொழி ஆங்கிலம் இங்கு ஒரு தேசிய மொழியாகும்[37]. பெரும்பான்மையானோர் ஆஸ்திரேலிய ஆங்கிலம் பேசுகின்றனர். இது பிரித்தானிய ஆங்கில மொழியை ஒத்திருந்தாலும் ஆஸ்திரேலியர்களுக்கென தனிப்பட்ட சில உச்சரிப்பையும், சொற்தொகுதியையும் கொண்டுள்ளது. இலக்கணமும் எழுத்துக்கூட்டலும் பிரித்தானியாவின் ஆங்கிலத்துடன் ஒத்தது. 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, 80 விழுக்காட்டினோரின் வீட்டில் பேசும் மொழி ஆங்கிலம் ஆகும். அதற்கடுத்தபடியாக சீனம் (2.1%), இத்தாலியம் (1.9%), மற்றும் கிரேக்கம் (1.4%). இங்கு குடியேறியோரின் பெரும்பான்மையோர் இரண்டு மொழி பேசுபவர்கள் ஆவர். ஐரோப்பியர்கள் இங்கு குடியேறிய காலத்தில் கிட்டத்தட்ட 200 அல்லது 300 மொழிகள் பேசும் பழங்குடியினர் வாழ்ந்து வந்ததாக நம்பப்படுகிறது. இவற்றில் 70 மட்டுமே இன்று வழக்கிலுள்ளது. கிட்டத்தட்ட 50,000 (0.25%) மக்களின் முதல் மொழி ஒரு பழங்குடி மொழியாக உள்ளது. சமயம் ஆத்திரேலியாவில் அரச மதம் எதுவுமில்லை. 2006 கணக்கெடுப்பின்படி, 64% ஆஸ்திரேலியர்கள் தாம் கிறித்தவர்கள் என அடையாளப்படுத்தியுள்ளனர். இவர்களில் 26% ரோமன் கத்தோலிக்கத்தையும், 19% ஆங்கிலிக்கத்தையும் பின்பற்றுகிறார்கள். 19% விழுக்காட்டினர் எம்மதத்தையும் சேர்ந்தவர்கள் அல்லர் என இனங்காட்டியுள்ளனர். 12% விழுக்காட்டினர் தம்மை மத ரீதியாக அடையாளம் காட்டவில்லை. கிறித்தவர்களுக்கு அடுத்த படியாக 2.1% பௌத்தர்களும், 1.7% இசுலாமியர்களும், 0.8% இந்துக்களும் 0.5% யூதர்களும் வாழ்கின்றனர். மொத்தமாக 6% இற்கும் குறைவானோரே கிறித்தவம் அல்லாத சமயத்தைச் சேர்ந்தவர்கள்[38]. ஏனைய மேற்கத்தைய நாடுகளைப் போலவே இங்கும் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு குறைந்தளவினரே செல்கின்றனர். 1.5மில்லியன் மக்கள் வாரந்தோறும் தேவாலயங்களுக்குச் செல்கின்றனர். இது மொத்த மக்கள் தொகையில் 7.5% ஆகும்[39]. கல்வி ஆஸ்திரேலியாவில் 6 வயதில் இருந்து 15 வயது வரை (தெற்கு ஆஸ்திரேலியாவில் 16 வயது, மேற்கு ஆஸ்திரேலியா, மற்றும் குயின்ஸ்லாந்தில் 17 வயது) பள்ளிப் படிப்பு கட்டாயம் ஆகும். இது வயது வந்தோரின் படிப்பறிவை 99% ஆகக் காட்டுகிறது. தற்போது ஆஸ்திரேலியாவின் கல்விமுறை உலக நாடுகளில் எட்டாவது இடத்தை வகிக்கின்றது[40]. மொத்தம் 38 அரச பல்கலைக்கழகங்கள் இங்குள்ளன. அத்துடன் அரச மானியத்தில் இயங்கும் பல தனியார் பல்கலைக்கழகங்களும் உள்ளன. இவற்றைவிட அவ்வவ் மாநிலங்களில் அரச தொழிநுட்பக் கல்லூரிகள் இயங்குகின்றன. பல்வேறு தொழிற்துறை, மற்றும் தொழில் பழகுநர்களுக்கான கல்வி இங்கு வழங்கப்படுகின்றது. 25 முதல் 65 வயது வரையான ஆஸ்திரேலியர்களில் 58 விழுக்காட்டினர் தொழில்துறை அல்லது மேற்படிப்புக்கான சான்றிதழ்கள் பெற்றுள்ளனர்[33]. சுகாதாரம் 2006 ஆம் ஆண்டுத் தரவுகளின் படி, ஆத்திரேலியர்களின் சராசரி வாழ்வுக் காலம் ஆண்களுக்கு 78.7 ஆண்டுகளாகவும், பெண்களுக்கு 83.5 ஆண்டுகளாகவும் உள்ளன[41]. உலகிலேயே தோல் புற்றுநோய் அதிகமாக உள்ள நாடு ஆத்திரேலியாவே,[42], அதேவேளை இறப்புகளையும் நோய்களையும் தவிர்க்கக்கூடிய மிகப்பெரும் காரணியாக அமைவது புகையிலை பிடித்தல் விளங்குகிறது[43]. வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே அதிகமான உடற் பருமன் உள்ளோர் ஆத்திரேலியாவிலேயே உள்ளனர்[44]; அதே வேளை எயிட்ஸ் நோய் பரவாமல் வெற்றிகரமாகத் தடுத்த நாடுகளில் ஆத்திரேலியாவும் ஒன்று[45][46]. ஆஸ்திரேலியத் தமிழர் ஆஸ்திரேலியாவிற்கு 1970 ஆண்டில் இருந்து தமிழர்கள் புலம் பெயரத் தொடங்கினார்கள். அதற்கு முன்னர் தொழில் அனுமதி பெற்றுச் சிலர் வந்துள்ளனர். 1971க்கு முன்னர் மொத்தம் 162 தமிழர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார்கள் என அரசின் மதிப்பீடு தெரிவிக்கிறது[47]. முதன் முதலில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர் கமால் எனப்படும் கே. கமலேஸ்வரன் என்பவர். தமிழ் அவுஸ்திரேலியர்களின் எண்ணிக்கை 1971 இல் 202 ஆக இருந்து 1991 இல் 11,376 ஆக அதிகரித்தது. இதில் 60 வீதத்தினர் ஈழத் தமிழர்கள். அரசின் குடிமதிப்பின்படி 1996 இல் தமிழரின் எண்ணிக்கை 18,690 ஆகவும், 2001இல் 24,067 ஆகவும் உயர்ந்தது[48]. இவர்களில் 50 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வசிக்கின்றனர். இலங்கையை விட இந்தியா, தென்னாபிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், பீஜி போன்ற நாடுகளிலிருந்தும் வசதி வாய்ப்புகளை எதிர்பார்த்து அவுஸ்திரேலியாவில் குடியேறினர். பண்பாடு 1788 ஆம் ஆண்டில் இருந்து, ஆஸ்திரேலியாவின் பண்பாடு அடிப்படையில் ஆங்கிலோ-கெல்ட்டியர்களை ஒத்திருந்தது. ஆனாலும் இயற்கை சுற்றுச் சூழல், மற்றும் பழங்குடிகளின் பண்பாடு ஆகியன ஆஸ்திரேலியாவிற்கெனத் தனியான சில பண்பாடுகளை வரையறுத்தது. 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து ஆஸ்திரேலிய பண்பாட்டில் அமெரிக்காவின் பிரபலமான பண்பாடு (குறிப்பாக தொலைக்காட்சி, திரைப்படம்), ஆஸ்திரேலியாவின் அயல் ஆசிய நாடுகள், ஆங்கிலம் பேசாத நாடுகளில் இருந்தான புலம்பெயர்வு ஆகியவற்றினால் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலிய ஓவியக்கலை வரலாறு பழங்குடியினரின் குகை ஓவியங்களில் இருந்து ஆரம்பிக்கின்றது[49]. ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் மரபு பெரும்பாலும் செவிவழியே கர்ணபரம்பரைக் கதைகளாலும், சடங்குகளினாலுமே பரப்பப்பட்டு வந்துள்ளன. பழங்குடியினரின் இசை, நடனம், ஓவியம் போன்றவை சமகாலத்தைய ஆஸ்திரேலியப் பண்பாட்டில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியது. எமிலி கிங்வாரேய், கோர்டன் பென்னெட் போன்ற பிரபலமான ஓவியர்கள் பழங்குடியினரைச் சேர்ந்தவர்கள். ஆஸ்திரேலிய தேசிய கூடம் மற்றும் பல மாநிலங்களிலும் உள்ள கலைக்கூடங்களில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஓவியத் திரட்டுகள் உள்ளன. ஊடகங்கள் ஆஸ்திரேலியாவில் இரண்டு பொதுத் தொலைக்காட்சி சேவைகளும் (ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், மற்றும் பல்கலாச்சார சிறப்பு ஒலிபரப்புச் சேவை) மூன்று தனியார் தொலைக்காட்சிச் சேவைகளும் இயங்குகின்றன. இவற்றை விட பல தனியார் கம்பியிணை (cable), மற்றும் பல இலாப-நோக்கில்லா தொலைக்காட்சிக் சேவைகளும் உள்ளன. மாநிலத் தலைநகரங்கள் ஒவ்வொன்றிலும் தனித்தனியே புதினப் பத்திரிகைகளை வெளியிடுகின்றன. தேசிய அளவில் இரண்டு நாளிகைகள் வெளிவருகின்றன. எல்லைகளற்ற செய்தியாளர்களின் (Reporters Without Borders) 2008 அறிக்கையின் படி, ஆஸ்திரேலியாவின் ஊடகச் சுதந்திரம் 25வது நிலையில் உள்ளது. நியூசிலாந்து 7வது நிலையிலும், ஐக்கிய அமெரிக்கா 48வது நிலையிலும் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கான இவ்வளவு குறைந்த மதிப்பீட்டிற்கு இந்நாட்டில் பெரும்பாலான பத்திரிகை நிறுவனங்கள் இரண்டு பெரும் வர்த்தக நிறுவனங்களான நியூஸ் கார்ப்பரேசன், மற்றும் ஜோன் ஃபெயார்பாக்ஸ் நிறுவனங்களைச் சார்ந்தே இருப்பது காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது[50]. விளையாட்டு ஆஸ்திரேலியாவில் 15 அகவைக்கு மேலானோரில் 23.5 விழுக்காட்டினர் ஏதாவதொரு குழு விளையாட்டுக்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்[33]. துடுப்பாட்டம், ஹாக்கி, வலைப்பந்தாட்டம், ரக்பி லீக், மற்றும் துடுப்பு படகோட்டம், நீச்சல் போன்ற விளையாட்டுக்களில் ஆஸ்திரேலியா சர்வதேச மட்டத்தில் புகழ் பெற்று விளங்குகிறது. 1956, 2000 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றன. 2000 ஆம் ஆண்டில் இருந்து பதக்கங்களைஇ வென்ற நாடுகளின் பட்டியலில் முதல் ஆறு நாடுகளுக்குள் ஆஸ்திரேலியா அடங்குகிறது[51]. டென்னிஸ் போட்டிகளில் ஆஸ்திரேலிய ஓப்பன் கிராண்ட் சிலாம் போட்டிகள் உலகப் புகழ் பெற்றவை[52]. உயிர்ப் பல்வகைமை ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான இடங்கள் பகுதி-வரண்ட அல்லது பாலைவனங்களாக இருதாலும், இதன் வாழ்விடங்கள் மலைச்சாரல்கள் தொடக்கம் வெப்பவலய மழைக்காடுகளை உள்ளடக்கியது. கடுமையான வானிலை மாற்றங்கள், புவியியல் ரீதியாக நீண்ட காலம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை போன்ற காரணிகளினால், ஆஸ்திரேலியாவின் உயிரியத் துணைத்தொகுதி (biota) தனித்தன்மையையும் பல்வேறு வகைகளையும் கொண்டுள்ளது. இங்கு வளரும் பூக்கும் செடிகொடிகளில் 85%, பாலூட்டி விலங்குகளில் 84%, பறவையினங்களிலே 45%, மீன் போன்ற நீரின வாழினங்களில் 89% வேறு எங்கும் காணவியலா, முற்றிலும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தனி இனங்கள் ஆகும்[53]. கங்காரு, கோவாலா, வால்லரு ஆகியன சில அவுஸ்திரேலிய உயிரினங்களாகும். ஆஸ்திரேலியாவிலேயே உலகில் மிக அதிகமான ஊரும் விலங்குகள் உள்ளன. இங்கு கிட்டத்தட்ட 755 வகையான ஊர்வன உள்ளன[54]. பொருளாதாரம் thumbnail|right|மேற்கு ஆஸ்திரேலியாவின் கால்கூர்லி நகரில் அமைந்துள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரும் தங்கச் சுரங்கம் ஆஸ்திரேலிய டாலர் ஆஸ்திரேலியாவின் நாணயம் ஆகும். இது ஆஸ்திரேலியா தவிர கிறிஸ்மஸ் தீவுகள், கொக்கோஸ் (கீலிங்) தீவுகள், நோர்போக் தீவு, மற்றும் பசிபிக் தீவுகளான கிரிபட்டி, நவூரு, துவாலு ஆகியவற்றிலும் அதிகாரபூர்வ நாணயம் ஆகும். அவுஸ்திரேலியா மேற்கு நாடுகளையொத்த கலப்புப் பொருளாதார அமைப்புடையது. ஐக்கிய நாடுகளின் 2007 ஆம் ஆண்டுக்கான மனித அபிவிருத்திச் சுட்டெண்ணில் மூன்றாவது இடத்திலும் தி எக்கணமிஸ்ட் இதழின் 2005 ஆம் ஆண்டு உலக வாழ்க்கைத்தரச் சுட்டெண்ணில் ஆறாமிடத்திலும் உள்ளது. 2007 இல் அவுஸ்திரேலியாவில் வேலையில்லாதோர் தொகை 4.6 % ஆகும். மொ.உ.உ (GDP) ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி, மற்றும் பிரான்சை விட சற்று அதிகமாகும். அத்துடன் தி எக்கணமிஸ்ட் இதழின் உலகில் மக்கள் வசதியாக வாழக்கூடிய நகரங்களின் பட்டியலில் (2008) மெல்பேர்ண் 2வது, பேர்த் 4வது, அடிலெயிட் 7வது, சிட்னி 9வது இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டன[55]. மேற்கோள்கள் பகுப்பு:முன்னாள் பிரித்தானியக் குடியேற்றங்கள் பகுப்பு:ஓசியானிய நாடுகள் பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
ஆஸ்திரேலியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?
ஆறு
1,317
tamil
71a1c9770
ஆப்பிரிக்கா கண்டம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டம் ஆகும்.இக்கண்டத்தின் 54 நாடுகளில் மொத்தம் 80 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள நாடுகளின் பட்டியல் சூடான் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நாடும் சிஷெல்ஸ் மிகச்சிறிய நாடும் ஆகும். கிழக்கு ஆப்பிரிக்கா புருண்டி கென்யா ருவாண்டா மொசாம்பிக் தான்சானியா உகாண்டா ... மேற்கு ஆப்பிரிக்கா நைகர் செனகல் நைஜீரியா காம்பியா கானா ... வடக்கு ஆப்பிரிக்கா அல்ஜீரியா எகிப்து லிபியா மொராக்கோ சூடான் துனிசியா மேற்கு சகாரா ... மத்திய ஆப்பிரிக்கா அங்கோலா கேமரூன் மத்திய ஆப்பிரிக்க குடியரசு காங்கோ ... தெற்கு ஆப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா ஜிம்பாப்வே ஜாம்பியா நமீபியா அங்கோலா மொசாம்பிக் .... பிரதேசத்தின் பெயர்[1] பரப்பளவு (km²) மக்கள் தொகை (1 ஜூலை 2002 மதிப்பீடு) மக்கள்தொகை அடர்த்தி (per km²) தலைநகரம் கிழக்கு ஆபிரிக்கா: புருண்டி 27,830 6,373,002 229.0 புஜும்புரா கமோரோஸ் 2,170 614,382 283.1 மொரோனி ஜிபுட்டி 23,000 472,810 20.6 ஜிபுட்டி நகரம் எரித்ரியா 121,320 4,465,651 36.8 அஸ்மாரா எத்தியோப்பியா 1,127,127 67,673,031 60.0 அடிஸ் அபாபா கென்யா 582,650 31,138,735 53.4 நைரோபி மலகாசி 587,040 16,473,477 28.1 அண்டனானரீவோ மலாவி 118,480 10,701,824 90.3 லிலொங்வே மொரீஷியஸ் 2,040 1,200,206 588.3 லூயி துறை மயோட்டே (பிரான்ஸ்) 374 170,879 456.9 மமுட்சு மொசாம்பிக் 801,590 19,607,519 24.5 மபூட்டோ ரீயூனியன் (பிரான்ஸ்) 2,512 743,981 296.2 தூய-தெனி ருவாண்டா 26,338 7,398,074 280.9 கிகாலி சிஷெல்ஸ் 455 80,098 176.0 விக்டோரியா சோமாலியா 637,657 7,753,310 12.2 மொகடீசு தான்சானியா 945,087 37,187,939 39.3 டொடோமா உகான்டா 236,040 24,699,073 104.6 கம்பாலா ஜாம்பியா 752,614 9,959,037 13.2 லுசாக்கா ஜிம்பாப்வே 390,580 11,376,676 29.1 அராரே மத்திய ஆப்பிரிக்கா: அங்கோலா 1,246,700 10,593,171 8.5 லுவான்டா காமரூன் 475,440 16,184,748 34.0 யாவுண்டே மத்திய ஆப்பிரிக்க குடியரசு 622,984 3,642,739 5.8 பங்கி சாட் 1,284,000 8,997,237 7.0 ந்ஜமேனா காங்கோ 342,000 2,958,448 8.7 பிரஸ்ஸவீல் காங்கோ மக்களாட்சி குடியரசு 2,345,410 55,225,478 23.5 கின்ஷாஷா புவி நடுக்கோட்டு கினி 28,051 498,144 17.8 மலாபோ கேபொன் 267,667 1,233,353 4.6 லிப்ரவில் சாவோ தோமே பிரின்சிபே 1,001 170,372 170.2 சாவோ தோம் வடக்கு ஆப்பிரிக்கா: அல்ஜீரியா 2,381,740 32,277,942 13.6 அல்ஜியர்ஸ் எகிப்து[2] 1,001,450 70,712,345 70.6 கெய்ரோ லிபியா 1,759,540 5,368,585 3.1 திரிப்பொலி மொராக்கோ 446,550 31,167,783 69.8 ரெபாட் சூடான் 2,505,810 37,090,298 14.8 கார்ட்டூம் துனீசியா 163,610 9,815,644 60.0 துனிஸ் மேற்கு சகாரா[3] 266,000 256,177 1.0 அல்-உயூன் European dependencies in Northern Africa: கேனரி தீவுகள் (ஸ்பெயின்)[4] 7,492 1,694,477 226.2 சான்டா குரூசு தெ டெனிரீஃபே, லாசு பல்மாசு சியூடா (ஸ்பெயின்)[5] 20 71,505 3,575.2 — மதீரா (போர்த்துக்கல்)[6] 797 245,000 307.4 பஞ்ச்சல் மெலில்லா (ஸ்பெயின்)[7] 12 66,411 5,534.2 — தெற்கு ஆபிரிக்கா: போட்ஸ்வானா 600,370 1,591,232 2.7 காபரோனி லெசோத்தோ 30,355 2,207,954 72.7 மசெரு நமீபியா 825,418 1,820,916 2.2 விந்தோக் தென்னாப்பிரிக்கா 1,219,912 43,647,658 35.8 புளும்பொன்டின், கேப் டவுன், பிரிட்டோரியா[8] சுவாசிலாந்து 17,363 1,123,605 64.7 ம்பாபேன் மேற்கு ஆபிரிக்கா: பெனின் 112,620 6,787,625 60.3 நோவோ துறை புர்கினா ஃபாசோ 274,200 12,603,185 46.0 உகாதுகு வெர்து முனை 4,033 408,760 101.4 பிரைய்யா தந்தக்கரை 322,460 16,804,784 52.1 அபிஜான், யாமூசூக்ரோ[9] காம்பியா 11,300 1,455,842 128.8 பன்ஜுல் கானா 239,460 20,244,154 84.5 அக்ரா கினி 245,857 7,775,065 31.6 கொனாக்ரி கினி-பிசாவு 36,120 1,345,479 37.3 பிசாவு லைபீரியா 111,370 3,288,198 29.5 மொன்ரோவியா மாலி 1,240,000 11,340,480 9.1 பமாக்கோ மௌரித்தானியா 1,030,700 2,828,858 2.7 நவாக்சோட் நைஜர் 1,267,000 10,639,744 8.4 நியாமி நைஜீரியா 923,768 129,934,911 140.7 அபூஜா செயிண்ட். எலனா (ஐக்கிய இராச்சியம்) 410 7,317 17.8 Jamestown செனகல் 196,190 10,589,571 54.0 டக்கார் சியெரா லியொன் 71,740 5,614,743 78.3 ஃப்ரீடௌன் டோகோ 56,785 5,285,501 93.1 லோமே மொத்தம் 30,368,609 843,705,143 27.8 ஆதாரங்கள் இவற்றையும் பார்க்கவும் ஆபிரிக்க ஒன்றியம் வெளி இணைப்புகள் * பகுப்பு:கண்டங்கள்
ஆப்பிரிக்கா கண்டத்தின் மிக சிறிய நாடு எது?
சிஷெல்ஸ்
255
tamil
7673d85c6
நைல் (அரபி: النيل, அன் நைல்; பண்டைய எகிப்தியம்: இட்டேரு யிஃபி; கோதிக் எகிப்தியம்: ⲫⲓⲁⲣⲱ, P(h)iaro; அம்காரியம்: ዓባይ?, ʿAbbai) வடகிழக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாயும் மிக முக்கியமான ஆறாகும். இது உலகின் மிக நீளமான ஆறு எனவும் கூறப்படுவதுண்டு[1]. 6650 கி.மீ நீளம் கொண்ட இது, தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரித்திரியா, தெற்கு சூடான், சூடான், எகிப்து ஆகிய பதினோரு நாடுகளின் வழியாகப் பாய்ந்து நடுநிலக் கடலில் கலக்கின்றது[2]. இவற்றில் எகிப்து, சூடான் ஆகியவை நைல் ஆற்றால் அதிகம் பயனடையும் நாடுகள் ஆகும்[3]. நைல் ஆறு, வெள்ளை நைல் மற்றும் நீல நைல் என்ற இருபெரும் துணை ஆறுகளைக் கொண்டது. இவற்றில் வெள்ளை நைல் அதிக நீளம் கொண்டது. இது மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள பெரிய ஏரி பகுதிகளில் இருந்து உற்பத்தியாகின்றது. அங்கிருந்து ருவாண்டா, புருண்டி, தான்சானியா, விக்டோரியா ஏரி, உகாண்டா வழியாகத் தெற்கு சூடானை வந்தடைகின்றது. நீல நைலானது, எத்தியோப்பியாவில் உள்ள தனா ஏரியில் உற்பத்தியாகி சூடானின் தென்கிழக்குப் பகுதி வழியாகப் பாய்ந்து, அதன் தலைநகரான கர்த்தூம் அருகே வெள்ளை நைலுடன் இணைகின்றது. சூடான் முதல் எகிப்து வரையிலான இவ்வாற்றின் வடபகுதி, பெரும்பாலும் சகாரா பாலைவனத்தின் வழியாகவே பாய்கின்றது. இந்தப் பகுதி தொன்மையான எகிப்திய கலாச்சாரத்திற்கும், நைல் ஆற்று நாகரீகத்துக்கும் பெயர் பெற்றது. பண்டைய எகிப்தின் பல குடியேற்றங்கள் இந்தப் பகுதியிலேயே அமைந்திருந்தன. பெயர்க் காரணம் பண்டைய எகிப்திய மொழியில், நைல் ஆறானது யிஃபி அல்லது இடுரு என அழைக்கப்பட்டது. இதன் அர்த்தம் பெரிய ஆறு என்பதாகும். அருகில் இருக்கும் படிமம், நைல் ஆற்றைக் குறிக்கப் பயன்பட்ட எகிப்திய சித்திர எழுத்து ஆகும். இதன் தற்போதைய ஆங்கில உச்சரிப்பான நைல் என்பதன் பெயர்க் காரணம் சரிவரத் தெரியவில்லை. இது செமித்திய மொழியின் நகல் (ஆறு என்பது அர்த்தம்) என்ற வார்த்தையில் இருந்து மருவியதாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது[4]. வரலாறு நைல் ஆறு, பண்டைய எகிப்திய நாகரீகத்தின் முக்கிய காரணி ஆகும். அன்றைய காலத்தின் பல முக்கிய நகரங்கள் நைல் பள்ளத்தாக்கு மற்றும் அதன் கழிமுகப் பகுதியிலேயே இருந்தன. கற்காலத்தின் தொடக்கத்தில் இருந்தே இது, எகிப்திய கலாச்சாரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. கி.மு 3400 வாக்கில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தைத் தொடந்து, வட ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு சகாரா பாலைவனம் உருவாகத் தொடங்கியது. அந்தக் காலக் கட்டத்தில், அங்கிருந்த பல பழங்குடியினர் நைல் பள்ளத்தாக்கு பகுதிக்குக் குடியேறத் தொடங்கினர். இந்தக் காலக்கட்டத்திலேயே உலகின் முதல் கிராமம் மற்றும் விவசாயம் செய்யத் தொடங்கிய சமூகம் ஆகியவை உருவாகின. யோநைல் நைல் ஆறு, எத்தியோப்பிய உயர் பகுதிகளில் இருந்து உருவாகி வடக்கு நோக்கிப் பயனித்த ஆறுகளில் ஐந்தாவதாக உருவான ஆறாக இருக்கக்கூடும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆதி நைல், யோநைல் என அழைக்கப்படுகின்றது. இதன் தடையங்கள் இன்றைய நைலின் மேற்கில் உள்ள பாலைவனப்பகுதிகளில் கிடைக்கின்றன. யோநைல், 23 - 5.3 மில்லியன் வருடங்கள் பழமையானது. இது அதிக அளவிலான பழம்பாறை படிவுகளை மத்தியதரைக் கடலில் கொண்டு சேர்த்தது. இந்தப் படிவுப் பகுதியில் பல இயற்கை எரிவாயுக் கிணறுகள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துணை ஆறுகள் நைல் ஆற்றின் வடிநிலப் பரப்பு 3,254,555 சதுர கி.மீ. இது மொத்த ஆப்பிரிக்க கண்டத்தின் பரப்பளவில் 10% ஆகும். இதன் முக்கிய துணை ஆறுகள் வெள்ளை நைல், நீல நைல் மற்றும் அத்பரா ஆறு ஆகும். வெள்ளை நைல் வெள்ளை நைல், நைல் ஆற்றின் மிகப் பெரிய துணையாறு ஆகும். இதன் ஊற்றாக விக்டோரியா ஏரி சொல்லப்படுவதுண்டு. ஆனால் அந்த ஏரியிலும் சில ஆறுகள் வந்து கலக்கின்றன. எனவே இதை ஏற்பதற்கில்லை. விக்டோரியா ஏரியில் இருந்து, இரைபான் அருவி மூலமாக வெளியேறும் வெள்ளை நைல் 500 கி.மீ. தூரம் பயனம் செய்து யோகா ஏரி வழியாக ஆல்பர்ட் ஏரியை வந்தடைகிண்றது. இதற்கு இடைப்பட்ட பரப்பில் இருக்கும் ஆறானது, விக்டோரியா நைல் என அழைக்கப்படுகின்றது. ஆல்பர்ட் ஏரியில் இருந்து வெளியேரும் ஆறானது, ஆல்பர்ட் நைல் என அழைக்கப்படுகின்றது. இதன் பிறகு தெற்கு சூடானில் நுழையும் ஆல்பர்ட் நைல் அங்கு பகர் அல் யபல் என அழைக்கப்படுகின்றது. இது நோ ஏரியில் வைத்துப் பகர் அல் கசல் எனப்படும் மற்றொரு துணையாற்றுடன் இணைகின்றது. பகர் அல் கசல், சத் சதுப்பு நிலப் பகுதில் உற்பத்தியாகும் ஒரு ஆறாகும். இதன் மொத்த நீளம் 716 கி.மீ. இவ்விறு ஆறுகள் இணைந்து, நோ ஏரியில் இருந்து வெளிப்படும் நீரானதே, பகர் அல் அபயாத் அல்லது வெள்ளை நைல் என அழைக்கப்படுகின்றது. வெள்ளை நிற களிமன் துகள்கள் இவ்வாற்றில் மிதப்பதாலேயே, இதற்கு இப்பெயர் ஏற்பட்டது[5]. நீல நைல் நீல நைலின் பிறப்பிடம் எத்தியோப்பிய பீட பூமி பகுதியில் இருக்கும் தனா ஏரி ஆகும். இதன் மொத்த நீளம் 1400 கி.மீ. இது எத்தியோப்பியாவின் மிக முக்கியமான ஆறு ஆகும். எத்தியோப்பிய குடிநீர் தேவையில் 90 சதவிகிதத்தை இந்த ஆறு பூர்த்தி செய்கின்றது. மேலும், எத்தியோப்பிய நீர்வழிப் போக்குவரத்திலும் 96 சதவிகிதம் இவ்வாற்றின் வழியாகவே நடக்கின்றது[6]. இருப்பினும் எத்தியோப்பிய பீட பூமிப் பகுதி அதிகம் மழை பெறும் காலங்களிலேயே இந்த ஆறு குறிப்பிடத்தகுந்த நீரோட்டத்தக் கொண்டுள்ளது. பிற காலங்களின் இதன் நீரோட்டம் மிகவும் குறைவே. குறிப்பாக ஆகத்து மாதத்தின் இறுதியில், நொடிக்கு 5663 மீ3 நீர் வரத்தைக் கொண்டுள்ள இந்த ஆறு, ஏப்ரல் மாததின் இறுதியில் வெறும் 133 மீ3 மட்டுமே நீர் வரத்தைக் கொண்டுள்ளது. அத்பரா ஆறு நீல நைலைப் போலவே அத்பரா ஆறும், எத்தியோப்பிய தனா ஏரியிலேயே உற்பத்தியாகின்றது. அங்கிருந்து 800 கி.மீ. தூரம் பாயும் இந்த ஆறு, கர்த்தூம் நகருக்கு வடக்கு 300 கி.மீ. தொலைவில் நைல் நதியுடன் இணைகின்றது. மழை காலங்களில் மட்டுமே நீரோட்டத்தைக் கொண்டுள்ள அத்பரா ஆறு, சனவரி முதல் சூன் வரையிலான கோடைக் காலத்தில், பெரும்பாலும் வறண்டே கானப்படுகின்றது. நீரோட்டம் அகன்ற நைல் ஆற்றின் தோராய தொடக்கமான ஆல்பர்ட் நைலின் நீரோட்டம், வினாடிக்கு 1048 மீ3 ஆகும். இது ஆண்டு முழுவதுமான சீரான நீரோட்டத்தைக் கொண்டுள்ளது. இதன் பிறகான பகர் அல் யபல் ஆறு, தனது நீரின் பெரும்பகுதியை, சத் சதுப்பு நிலப் பகுதியில் இழக்கின்றது. ஏறேக்குறைய இதன் நீரோட்டத்தின் சரிபாதி இங்கு ஆவியாதல் மூலம் விரையமாவதால் இந்த ஆற்றின் முடிவில் இதன் நீரோட்டம் வினாடிக்கு 1048 மீ3ல் இருந்து 510 மீ3 ஆகக் குறைகின்றது. வெள்ளை நைலின் நீரோட்டம் சராசரியாக வினாடிக்கு 924 மீ3 ஆகும். மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இது, அதிகபட்சமாக வினாடிக்கு 1218 மீ3 வரை செல்கின்றது. குறைந்தபட்சமாக ஆகத்தில், வினாடிக்கு 609 மீ3 ஆக இருக்கின்றது. சோபாத் எனப்படும் துணையாறின் வெள்ளப் பெருக்கே, வெள்ளை நைலின் இந்த நீரோட்ட மாறுபாட்டிற்கான காரனம். நைல் ஆற்றின் மொத்த நீரோட்டத்தில், வெள்ளை நைலின் பங்கு சராசரியாக 30% ஆகும். ஆனால் சனவரி முதல் சூன் வரையிலான கோடைகாலத்தில் இது 70% முதல் 90% வரை அதிகரிக்கும். இந்தக் குறிப்பிட மாதங்களின் நீல நைலின் நீரோட்டம் வினாடிக்கு 113 மீ3க்கும் குறைவாகவே இருப்பதாலும், அத்பரா ஆறு ஏறக்குறைய வறண்டு விடுவதாலும் இந்த விகிதாச்சார ஏற்றம் நிகழ்கின்றது. நீல நைலின் பங்கு, மொத்த நைல் நீரோட்டத்தில் சராசரியாக 70% ஆகும். ஆகத்து மாத மழைக் காலங்களில் இந்த ஆற்றில் ஏற்படும் கடும் வெள்ளப்பெருக்கே, இந்த நீரோட்ட வேறுபாட்டிற்கு காரனம். இந்த நேரங்களில் நீல நைலின் நீரோட்டம் வினாடிக்கு 5663 மீ3 ஆக இருக்கும். இது வழக்கமான நீரோட்டத்துடன் ஒப்பிடும்போது, 50% அதிகம் ஆகும். இந்த ஆற்றின் மீது அணைகள் கட்டுவதற்கு முன்பு, இதன் நீரோட்டம் இன்னும் 15% அதிகம் இருந்தது. அந்தக் காலங்களின் நீல நைல் அதிகபட்சமாக வினாடிக்கு 8212 மீ3 நீரோட்டத்தைக் கொண்டிருந்தது. குறைந்தபட்ச அளவு 552 மீ3. கழிமுகம் நைல் ஆற்றின் கழிமுகம் உலகின் மிகப்பெரிய கழிமுகங்களில் ஒன்று. இது நைல் நீரோட்டப் பாதையில், எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் தொடங்கி மத்தியதரைக் கடலில் முடிகின்றது. வில் வடிவ கழிமுக வகையைச் சார்ந்த இதன் நீளம் கிழக்கு மேற்காக 240 கி.மீ மற்றும் வடக்கு தெற்காக 160 கி.மீ. முன்பு இந்தக் கழிமுகத்தில், நைல் ஆற்றின் ஏழு கிளையாறுகள் பாய்ந்தன. ஆனால் நைல் ஆற்றின் குறுக்கே பல அணைகள் கட்டப்பட்ட பிறகு இது இரண்டாகக் குறைந்துள்ளது. மேலும் உயரும் கடல் நீர் மட்டம், இந்தக் கழிமுகத்தை பெரிதும் பாதித்துள்ளது. பண்டைய புகழ் பெற்ற துறைமுக நகரான அலெக்சாந்திரியா இவ்வாறான கடல் மட்ட உயர்வினாலேயே மூழ்க நேரிட்டது. 2025ல் மத்தியத்தரைக் கடலின் நீர்மட்டம் 30 செ.மீ வரை உயரக்கூடும் என கண்க்கிடப்பட்டுள்ளது. இந்த உயர்வு, நைல் கழிமுகத்தின் 200 சதுர கி.மீ வரை ஆக்கிரமிக்கக் கூடும். நீர் பங்கீட்டு சிக்கல் நைல் ஆற்றின் நீர்ப் பங்கீடு, கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க கொம்பு நாடுகளின் முக்கிய அரசியல் மற்றும் கலாச்சார சிக்கல் ஆகும். உகாண்டா, சூடான், எத்தியோப்பியா, கென்யா ஆகிய நாடுகள் நைல் நீர்வளத்தை பங்கிட்டுக்கொள்வதில் உள்ள எகிப்தின் மேலாதிக்கத்தை எதிர்த்தவண்ணம் உள்ளன. 1929ல் ஐரோப்பிய காலனியாதிக்க ஆட்சியின் கீழ் ஏற்பட்ட இங்கிலாந்து – எகிப்து உடன்படிக்கையின் படி, நைல் ஆற்றின் வடிநிலப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பிற நாடுகளின் நீர்பாசன திட்டங்களுக்கு, எகிப்து அரசின் ஒப்புதல் அவசியமாகின்றது. இது இன்றைய பிரச்சனைகளின் முக்கியக் காரணி ஆகும். “நைல் ஆற்றுவடிநில முனைப்பு அமைப்பு” இந்த சிக்கலைத் தீர்க்க முனைந்து வருகின்றது[7]. பெப்ரவரி 1999ல் இந்த அமைப்பு எகிப்து, சூடான், எத்தியோப்பியா, உகாண்டா, கென்யா, தான்சானியா, புருண்டி, ருவாண்டா, காங்கோ ஆகிய ஒன்பது நாடுகளின் நீர்வளத்துறை அமைச்சர்களைக் கொண்டு அமைக்கப்பட்டது. எரித்திரியா இந்த அமைப்பில் வெறும் பார்வையாளராக மட்டும் உள்ளது. உலக வங்கி மற்றும் சில தன்னார்வ நிறுவனங்கள் இந்த அமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றின[8]. மே 2010இல், இந்த அமைப்பில் உள்ள எத்தியோப்பியா, கென்யா, உகாண்டா, ருவாண்டா மற்றும் தான்சானியா ஆகிய ஐந்து நாடுகள் தமக்குள் இணைந்து ஒரு தீர்மானத்துக்கு வந்தன. தற்போது உள்ள நீர் பங்கீட்டு முறை சீரமைக்கப்பட வேண்டும் எனவும், 1929ல் ஏற்பட்ட இங்கிலாந்து – எகிப்து உடன்படிக்கை ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் இந்தத் தீர்மானம் வலியுறுத்துகின்றது[9]. இந்தத் தீர்மானத்திற்கு எகிப்து மற்றும் சூடான் ஆகிய நாடுகள் தங்களின் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன[10]. எனினும், புருண்டி இந்த தீர்மானத்தை ஆதரித்துப் பெப்ரவரி 2011ல் கையெழுத்திட்டது[11]. இவற்றையும் பார்க்கவும் அஸ்வான் அணை நைல் முதலை மேற்கோள்கள் வெளி இணைப்புகள் – slideshow by The New York Times பகுப்பு:ஆப்பிரிக்க ஆறுகள்
நைல் ஆற்றின் நீளம் என்ன?
6650 கி.மீ
243
tamil
fd568b6f7
யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (~ 70 ஆண்டுகள்). மனிதர்கள் தவிர்ந்த மற்றைய விலங்குகளில் இதுவே அதிக நாட்கள் வாழும் தரைவாழ் விலங்கு ஆகும். யானைகள் மிகவும் வலிமையானவை. வேட்டை விலங்குகளும் காட்டுயிர்களின் உணவுப் படிநிலையில் உயர்நிலையிலுள்ளவைகளுமான சிங்கம் (அரிமா), புலி முதலியனவும் நெருங்க முடியாத வலிமை கொண்டவை. சிங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து, தனியாக வர நேரிடும் களைத்த அல்லது இளைத்த யானையைக் கொல்லும். ஆனால், இவ்வகை நிகழ்வுகள் மிகமிகக் குறைவே. யானைகள் குடும்பமாக வாழும். மேலும், இவை அதிக ஞாபக சக்தி கொண்டவை. யானைகளில் மூன்று சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன. அவை, ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், ஆசிய யானைகள் ஆகும். இவைகளுக்கிடையே சிறப்பான வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக, எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள்வரை உயிர்வாழ்கின்றன. ஆண் யானைக்குக் களிறு என்று பெயர். பெண் யானைக்குப் பிடி என்று பெயர். யானையின் குட்டியைக் கன்று என்றோ, குட்டியானை என்றோ சொல்வர். யானை உரக்க எழுப்பும் ஒலியைப் பிளிறுதல் என்பர். யானையினங்கள் ஆப்பிரிக்க யானைகள் ஆசிய யானைகளைவிட உருவத்தில் பெரியவை. பெரிய காது மடல்களைக் கொண்டுள்ளன. ஆப்பிரிக்க யானைகளில் ஆண், பெண் இரண்டும், தந்தங்களைக் கொண்டுள்ளன. ஆனால், ஆசியப் பெண் யானைகளில் தந்தம் அரிதாகவே காணப்படுகிறது. ஆப்பிரிக்க யானைகளின் முதுகுப்புறம், தலைக்கு அடுத்துச் சற்று உள்நோக்கி வளைந்தும், புடைத்த நெற்றி மேடுகள் இல்லாமல் சமமாகவும் இருக்கும். இவற்றின் துதிக்கையின் நுனியில் இரண்டு இதழ்கள் இருக்கும். ஆனால், முன்னங்கால்களில் நான்கு அல்லது ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் மூன்று நகங்களும் இருக்கும். ஆசிய யானைகளின் முதுகு சற்று உயர்ந்து மேடாக இருக்கும். நெற்றியில் இரு மேடுகளும், காது மடல்கள் சிறியனவாகவும் இருக்கும். துதிக்கை நுனியில் ஒரே ஓர் இதழும் இருக்கும் (மேல் புறம்). முன்னங்கால்களில் ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் நான்கு நகங்களும் இருக்கும். உணவும் வாழிடமும் யானைகள் இலையுண்ணிகள் அல்லது தாவர உண்ணிகள் ஆகும். இவை மூங்கில், கரும்பு போன்றவற்றை விரும்பி உண்கின்றன. இவை ஒரு நாளைக்கு 16 மணிநேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. மேலும், இவற்றின் செரிமானத் திறன் மிகவும் மந்தமானது. எனவே, இவை உண்பதில் 40 விழுக்காடே செரிமானம் ஆகிறது. எனவே, இவை நிறைய உணவு உட்கொள்ள நேரிடுகிறது. நன்கு வளர்ந்த யானைகள் நாள் ஒன்றுக்குச் சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன. உடலமைப்பு ஆண் யானைகள் பொதுவாக 3 மீட்டர் உயரமும் 6000 கிலோகிராம் எடையும் கொண்டவை. யானையின் தோல் மிகவும் தடிப்பானது. சுமார் 3 செ.மீ தடிப்பு இருக்கும். எனினும், மெத்தெனவே இருக்கும். இதனால், கொசு முதலியனவும் கடிக்கும். யானை வலுவான நான்கு கால்களைக் கொண்டிருக்கிறது. யானை பருமனான உடலைக் கொண்டிருந்தாலும் மலை மீதும், நெடுங்குத்தான இடங்களிலும் திறம்பட ஏறவும் இறங்கவும் வல்லது. "ஆனைக்கும் அடி சறுக்கும்" என்னும் பழமொழி, யானையின் நெடுங்குத்தான ஏற்ற இறக்கங்களில் அதன் நடைத்திறனைக் குறிப்பிட்டு எழுந்ததாகும். தும்பிக்கை யானையின் சிறப்பான உறுப்பு அதன் தும்பிக்கை. இது யானைகளில் மட்டுமே சிறப்பாகக் காணப்படுகின்றது. ஒருசில விலங்குகளிலே முன் மூக்குப் பகுதி சற்று நீண்டு இருந்தாலும் (நெடுமூக்குக் குரங்கு போல்), தும்பிக்கை போலும் நீண்ட உறுப்புடைய விலங்குகள் இல்லை. தும்பிக்கையானது மொத்தம் 40,000 தசைகளால் ஆனது. இது எல்லாப்புறங்களிலும் வளையக்கூடியது. தும்பிக்கையின் நுனியில் யானை மூச்சுவிடும் மூக்குத் துளைகளும், சின்னஞ்சிறிய, மிகவும் நுண்ணுணர்வு உள்ள விரல் நீட்சியும் இருக்கின்றன.[1] தும்பிக்கையால் சிறு குச்சி முதல் பெரிய மரம் வரை தூக்க முடியும். இவை பொதுவாக உணவை எடுப்பதற்கும் நீர் பருகுவதற்கும் உதவுகின்றன. பகை விலங்குகளின் தாக்குதலையும் யானை தும்பிக்கையால் எதிர்த்து முறியடிக்கிறது. கழுத்து குட்டையாக இருப்பதால் தும்பிக்கையின் முக்கியத்துவம் மிகப் பெரியது. தந்தம் யானைகள் இரண்டு தந்தங்களைக் கொண்டுள்ளன. இவைகளுக்கு யானைக் கோடு என்று பெயர். இந்த யானைக் கோடானது ஆசிய இந்திய யானைகளில் ஆண் யானைகளுக்கு (களிறுக்கு) மட்டுமே உண்டு பெண் யானைகளுக்குக் (பிடிக்குக்) கிடையா. ஆனால் ஆப்பிரிக்கக் காட்டு யானைகளில் ஆண் பெண் ஆகிய இருபால் யானைகளுக்கும் (களிறு, பிடி ஆகிய இரண்டிற்கும்) கோடு உண்டு. சுமத்ரா போர்னியோ பகுதிகளில் வாழும் யானை, இலங்கையின் யானைகளில் ஆண் பெண் (களிறு, பிடி) ஆகிய இருபால் விலங்குகளுக்கும் பெரும்பாலும் யானைக் கோடு கிடையா. யானைக் கோடானது யானையின் கடைவாய்ப் பற்களின் நீட்சியாகும். இதனால் இவைகளுக்கு யானைகளின் எயிறு அல்லது தந்தம் என்றும் பெயர் (எயிறு, தந்தம் என்றால் பல் என்று பொருள்). தந்தங்கள் 3 மீட்டர் (10 அடி) வரை வளரக்கூடியவை. மேலும் இவை 90 கிலோகிராம் எடை வரை இருக்கலாம். இத் தந்தங்கள் வியாபாரத்திற்காகவும் பயன்படுகின்றன. பல யானைகளைக்கொன்று எடுக்கப்பட்ட ஆறு டன் தந்தங்களை எதியோப்பியா நாடு 2015 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் தீயிட்டு அழித்தது.[2] தோல் யானையின் தோல் மிகவும் தடிப்பானது. உடலின் பெரும்பாலான பகுதிகளில் தடித்த தோல் காணப்படுகிறது. தோலின் தடிமன் ஏறத்தாழ இரண்டரை சென்டிமீட்டர் இருக்கும். எனினும் இதன் வாயைச் சுற்றியும் காதின் உட்பகுதியிலும் தோல் மெல்லியதாக உள்ளது. பொதுவாக ஆசிய யானைகளின் தோல் ஆப்பிரிக்க யானைகளை விட கூடுதலான முடியைக் கொண்டுள்ளது. யானைகள் பொதுவாக சேற்றையோ மண்ணையோ உடல் முழுதும் பூசிக் கொள்கின்றன. இது யானைச் சமூகத்தின் ஒரு முக்கியக் குணம் ஆகும். இது யானையின் தோலை சூரிய வெப்பத்தில் இருந்தும் கதிர் வீச்சில் இருந்தும் காத்துக் கொள்ள உதவுகிறது. யானையின் தோல் தடித்து இருப்பினும் இதன் உணர்திறன் அதிகம். இதனாலேயே யானைகள் சேற்றையோ அல்லது குளித்த பின் மண்ணை வாரித் தூற்றிக் கொள்கின்றன. கால்கள் யானையின் பெரிய உடலைத் தாங்குதற்கு ஏற்ப இவை வலிமையான கால்களைக் கொண்டுள்ளன. இவற்றின் கால்கள் செங்குத்தாக இருப்பதாலும் அகன்ற பாதங்கள் இருப்பதாலும் இவை நிற்பதற்கு தசையாற்றல் அதிகம் தேவையில்லை. எனவே இவற்றால் நீண்ட நேரம் இளைப்பாறாமல் நிற்க இயலும். ஆப்பிரிக்க யானைகள் நோயுற்றாலோ அல்லது காயம் பட்டாலோ தவிர பெரும்பாலும் அமர்வதில்லை. ஆனால் ஆசிய யானைகள் அடிக்கடி இளைப்பாறுகின்றன. யானை அகன்ற வட்டமான அடியைக் (பாதம்) பெற்றுள்ளது. ஆப்பிரிக்க யானைக்கு பின்னங்கால்களில் மூன்று உகிர்களும் (நகங்கள்) முன்னங்கால்களில் நான்கும் உள்ளன. ஆசிய யானைக்கு பின்னங்கால்களில் நான்கும் முன்னங்கால்களில் ஐந்துமாக உகிர்கள் உள்ளன. யானைகளால் நன்கு நீந்தவும் ஏறவும் முடியும். இவற்றால் குதிக்க இயலாது. காதுகள் யானைகள் நன்கு பெரிய அகன்ற மடல் போன்ற காதுகளைக் கொண்டுள்ளன. இவை யானையின் உடல் வெப்பநிலையைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. யானையின் காதுகள் இரத்த நாளங்கள் நிரம்பியனவாய் உள்ளன. வெப்பம் மிகுந்த இரத்தம் காதுகளில் பாயும் போது சுற்றுப்புறக் காற்று பட்டு குளிர்கிறது. பின் இது உடலுக்குள் சென்று வெப்பநிலையைக் குறைக்கிறது. இரத்தச் சுழற்சியின் காரணமாக இச்செயல் தொடர்ந்து நிகழ்ந்து வெப்பநிலை கட்டுக்குள் வைக்கப்படுகிறது. இதனாலேயே யானைகள் எப்போதும் காதுகளை அசைத்துக் கொண்டே இருப்பதைக் காணலாம். வளர்ந்த யானைக்காதுகளின் மேல் ஓரம் ஆசிய யானைக்கு வெளிப்புறம் மடிந்து இருக்கும், ஆப்பிரிக்க யானைக்கு உட்புறம் சுருண்டிருக்கும்.[3] அறிவாற்றல் தரையில் வாழும் விலங்குகளில் யானையின் மூளையே மிகவும் பெரியதாகும். இது ஐந்து கிலோ கிராமுக்கும் சற்று கூடிய எடையைக் கொண்டது. யானைகள் நினைவாற்றல் மிக்கன. விலங்குகளில் முதனிகளுக்கும் டால்பின்களுக்கும் அடுத்து யானைகளே அறிவாற்றல் நிரம்பியவையாகக் கருதப்படுகின்றன. மனிதர்களுக்கு அடுத்தபடியாக அறிவிற்சிறந்தவையாக யானைகள் கூறப்படுகின்றன. யானைகளின் மூளையும் அமைப்பிலும், நுட்பத்திலும் சிறந்தவை. கருவிகளைப் பயன்படுத்தவும் கற்றுக் கொள்கின்றன. பொதுவாக யானை இரக்கவுணர்ச்சி கொண்டது.[4] புலன் உணர்வு யானைகள் மிகச்சிறந்த கேட்கும் திறனையும் மோப்பத் திறனையும் பெற்றுள்ளன. யானையின் கண் சற்று கிட்டப்பார்வை கொண்டது. எனவே, ஒரு யானை தன் பார்வையை விட கூர்மையான கேட்பு சக்தியையும், நுட்பமான மோப்பத்திறனையுமே நம்பி வாழ்கிறது.[5] இவற்றின் தும்பிக்கையும் உணர்திறன் மிக்கது. இவற்றின் காதுகள் மட்டுமன்றி தும்பிக்கையும் அதிர்வுகளை உணர வல்லது. இவற்றின் பாதங்கள் மிகக் குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளையும் உணர வல்லன. சமூக வாழ்க்கை களிறுகளின் சமூக வாழ்க்கை முறையும் பிடிக்களின் வாழ்க்கை முறையும் வேறுபட்டது. களிறுகள் தான் பருவம் எய்தும் வரை தன் தாய் உள்ள குழுவோடு வாழும், பின் பெரும்பாலும் தனியாகவே வாழ்கின்றன. ஆனால் பிடிகள் நன்கு பிணைப்பான குடும்பமாக தாய், சகோதரி, மகள் என வாழ்கின்றன. இனப்பெருக்க காலங்களில் பருவமெய்திய பிடியும் தனித்துக்காணப்படும். தன்னுணர்வு யானைகள் தன்னுணர்வு கொண்டவை. இது கண்ணாடிச் சோதனை மூலம் நிறுவப்பட்டுள்ளது. யானைகள் முன் கண்ணாடியை வைக்கும் போது இவை தங்களை அடையாளம் கண்டுகொள்கின்றன. இத்திறன் இதுவரை மதிமாக்கள், சில குரங்கினங்கள், டால்பின்களில் மட்டுமே கண்டறியப் பட்டுள்ளது.யானைகள் ஒருவர் சுட்டிக்காட்டுவதைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவை என்று சிம்பாப்வேயில் பழக்கப்பட்ட யானைகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.[6] இனப்பெருக்கம் யானையின் சினைக்காலம் 22 மாதங்கள் ஆகும். இதுவே பாலூட்டிகளில் மிக நீண்ட சினைக்காலம் ஆகும். பொதுவாக இவை ஒரேயொரு கன்றையே ஈனுகின்றன. இரட்டைகள் பிறப்பது மிகவும் அரிது. பிறந்த யானைக் கன்றானது 90 – 115 கிலோகிராம் எடை வரை இருக்கும். யானை ஈனும் முன்னும், ஈனும் பொழுதும், ஈன்ற பின்னரும் அதனைச் சுற்றிலும் மற்ற வளர்ந்த யானைகள் இருந்து மிகவும் உதவுகின்றன. யானைக்கன்று பிறந்ததில் இருந்து, அது யானைக் கூட்டத்தாலேயே வளர்க்கப்படுகின்றது. அச்சுறுத்தல்கள் வேட்டையாடுதல் யானைகளுக்கு முக்கியமான அச்சுறுத்தல் வேட்டையாடுதல் ஆகும். யானைகள் அவற்றின் தந்தங்களுக்காக வேட்டை ஆடப்படுகின்றன. பெரியவையும், நீண்ட காலம் வாழுவனவும், குறைவான வேகத்தில் இனம் பெருகுவனவுமான யானைகளுக்கு, அளவு மீறி வேட்டையாடுதல் பெரும் பாதிப்பை எற்படுத்துகின்றது. இவை பெரிதாக இருப்பதனால் எளிதில் மறைந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு யானையும் வளர்ந்து இனம் பெருக்குவதற்குப் பல ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வொரு யானைக்கும் சராசரியாக நாளொன்றுக்கு 140 கிலோகிராம் (300 இறாத்தல்) இலை தழைகள் தேவைப்படுகின்றது. புலி, சிங்கம் போன்ற பெரிய கோண்மாக்கள் அழிக்கப்படுவதாலும் யானைகளின் உணவுக்குப் போட்டியாக உள்ள சிறய தாவர உண்ணிகள் பெருகி தாவரங்களைப் பெருமளவில் அழிப்பதால் யானைகளுக்கு உணவு பெறுவது கடினமாகின்றது. யானைகள் மனிதனால் கொல்லப்படுவதைத் தவிர பிற விலங்குகளால் உணவுக்காகக் கொல்லப்படுவது அரிது. வாழிடம் சுருங்குதல் யானைகளின் வாழிடங்கள் அழிக்கப் படுவதும் மற்றொரு முக்கியமான அச்சுறுத்தல் ஆகும். மனிதர் வேளாண்மை விரிவாக்கத்துக்காக யானைகளின் வாழிடங்களான காடுகளை அழித்துவருகிறார்கள். இது மனிதர்களின் நலனுக்கும் யானைகளின் நலன்களுக்குமிடையே முரண்பாடுகளை உருவாக்குகின்றது. எடுத்துக்காட்டாக யானைகள் புதிய வேளாண்மைக் குடியேற்றங்களுக்குள் நுழைந்து பயிர்களை அழித்துவிடுவதுடன் மக்களுக்கு உயிராபத்தையும் ஏற்படுத்துகின்றன. இவ்வாறான முரண்பாடுகளால், இலங்கையில் சராசரியாக ஆண்டொன்றுக்கு 150 யானைகளும், 100 மனிதர்களும் இறப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. காடழிப்பு யானைகளின் வாழிடத்தையும் குறைக்கின்றது. ஆசிய யானைகளின் அழிவுக்கான முதன்மைக் காரணம் வாழிடங்கள் இழக்கப்படுவதே என்று கூறப்படுகிறது. யானைகள் வாழ்வதற்கு பெரிய அளவிலான காட்டுப்பகுதிகள் தேவைப்படுகின்றன. ஏனெனில், யானைகள் கூட்டமாக ஒரு பகுதிக்குள் புகுந்து மரங்களையும் செடி கொடிகளையும் பெருமளவில் அழித்து உண்கின்றன. பின்னர் வேறிடத்துக்குச் செல்கின்றன. இவ்வாறு புதிய இடங்களுக்குச் சென்று அழிக்கப்பட்ட காடுகள் மீண்டும் வளர்ந்ததும் திரும்பவும் அதே இடத்துக்கு வந்து உணவைப் பெறுகின்றன. வாழிடங்களின் அளவு குறையும் போது, மிக விரைவிலேயே உணவு முடிவடைந்து விடுகிறது.[7] மனிதர்களும் யானைகளும் யானைகள், மனிதர்களினால் சட்டத்துக்கு அமைவாகவும், எதிராகவும் கொல்லப்படுவதனால், யானைகளின் உடலமைப்பில் எதிர்பாராத விளைவுகளும் ஏற்படுகின்றன. ஆப்பிரிக்காவில் தந்தங்களுக்காக வேட்டையாடுபவர்கள், பெரிய தந்தங்களுள்ள யானைகளையே வேட்டையாடுவதால் எஞ்சியிருக்கும் யானைகள் சிறிய தந்தங்கள் உள்ளவையாக அல்லது தந்தங்கள் இல்லாதவையாக உள்ளன. புதிதாகப் பிறக்கும் குட்டிகளும் இவற்றின் மூலமாகவே பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரிப்பதால் புதிய தலைமுறைகளில் தந்தமில்லாத் தன்மையை உருவாக்கும் மரபணுக்கள் கூடுதலாகிப் பெருமளவிலான தந்தமில்லா யானைகள் பிறப்பதற்கு வழியேற்படுகிறது. 1930ல் 1% ஆக இருந்த இவ்வாறான யானைகளின் தொகை இப்போது சில பகுதிகளில் 30% வரை அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் தந்தமில்லாத் தன்மை என்பது ஒரு அரிதான இயல்புப் பிறழ்வாக இருந்த நிலை மாறி இப்போது பொதுவான மரபுவழி இயல்பாக மாறிவருகிறது. இறப்பு இருதயக் கோளாறு, மாரடைப்பு, மூளையில் இரத்தக்கட்டி போன்றவற்றால் யானைகள் இறக்கக்கூடும்.[8] சங்க இலக்கியங்களில் யானை தமிழ் சங்க இலக்கியங்களில் யானையை, 170க்கும் மேற்பட்ட பெயர்களில் குறிப்பிடுகிறார்கள்.விரிவாக காணலாம். அவைகளில் சில வருமாறு; 1. யானை, 2. வேழம், 3. களிறு, 4. பிளிறு, 5. கலபம், 6. மாதங்கம், 7. கைமா, 8.உம்பல் - , 9. வாரணம், 10. அஞ்சனாவதி, 11. அத்தி, 12. அத்தினி, 13. அரசுவா, 14. அல்லியன், 15. அனுபமை, 16. ஆம்பல், 17. ஆனை, 18. இபம், 19. இரதி, 20. குஞ்சரம் / இராசகுஞ்சரம், 21. இருள், 22. தும்பு, 23. வல் விலங்கு, 24.கரி, 25.அஞ்சனம்,26.நாகம் (கதநாகம்), 27. பழமொழிகளும் சொலவடைகளும் தமிழில் யானை பற்றிய பழமொழிகளும் சொலவடைகளும் இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. பழமொழிகள் யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன். யானைக்கும் அடி சறுக்கும். யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே யானை கறுத்தாலும் ஆயிரம் பொன் சொலவடைகள் யானைப்பசிக்கு சோளப்பொரியா? யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டது போல துணை நூற்பட்டியல் Check date values in: |date= (help) மேற்கோள்கள் இவற்றையும் காண்க யானையின் தமிழ்ப்பெயர்கள் குருவாயூர் கேசவன் புற இணைப்புகள் * பகுப்பு:ஒலிக்கோப்பு உள்ள கட்டுரைகள்
எத்தனை யானை இனங்கள் உள்ளன?
மூன்று சிற்றினங்கள்
654
tamil
68fba417f
நிலநடுக்கப் பதிவுக் கருவி (Seismometer, சீஸ்மோகிராப்) பூமியின் நகர்வுகளை அளக்க பயன்படுகிறது. நிலநடுக்கத்தால் ஏற்படும் அதிர்வலைகள், எரிமலை வெடிப்புகளாளும் மற்ற அதிர்வு மூலங்களாலும் ஏற்படும் அதிர்வலைகள் ஆகியவற்றை அளக்க நிலநடுக்கப் பதிவுக் கருவி பயன்படுகிறது. இக்கருவியின் அதிர்வலைப் பதிவுகள் நிலநடுக்க ஆய்வாளர்கள் பூமியின் உள்பகுதியை வரைபடமாக்கவும், மற்றும் இந்த வெவ்வேறு மூலங்களினை கண்டறிந்து அளவிடவும் பயன்படுகிறது. நிலநடுக்கத்தை மதிப்பீடு செய்ய ரிக்டர் அளவுகோல் பயன்படுத்தப்படுகிறது. இதன் அலகு 0 முதல் 9 ரிக்டர் அளவை வரை ஆகும். ரிக்டர் அளவில் 6.0 என்ற அளவிற்கு மேல் குறிக்கப்படும் நிலநடுக்கங்கள் ஆபத்தானவை[1]. மேற்கோள்கள் பகுப்பு:கருவிகள் பகுப்பு:நிலநடுக்கவியல்
நிலநடுக்கம் அளவீடு செய்யும் கருவியின் பெயர் என்ன
சீஸ்மோகிராப்
40
tamil
dab6fa1cf
எத்தனால் (Ethanol) என்பது எரிநறா அல்லது வெறியம் என்னும் வகையைச் சார்ந்த ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இது எரியக்கூடிய தன்மையுடையதும் நிறமற்றதும் ஆகும். மதுபானங்களில் பொதுவாகக் கலந்திருக்கும் இந்த வெறியம் ஆதி காலத்தில் இருந்து ஒரு போதைப் பொருளாக அறியப்பட்ட ஒன்று ஆகும். ஈசுட்டு என்ற நொதியைப் பயன்படுத்தி சர்க்கரையை நொதிக்கச் செய்து எத்தனால் தயாரிப்பது மனிதகுலம் அறிந்த கரிம வேதிவினைகளுள் முதன்மையானவற்றுள் ஒன்று என்றும் நம்பப்படுகிறது. பெட்ரோ வேதியியல் செயல்முறையிலும் எத்தனாலை தயாரிக்க இயலும். ஆல்ககால், எத்தில் ஆல்ககால், குடிக்கும் ஆல்ககால் என்ற பல பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. நிறமற்ற நீர்மமான இச்சேர்மம் தீப்பற்றி எரியக்கூடியதாகவும், எளிதில் ஆவியாகக் கூடியதாகவும், உள்ளது. எத்தில் ஆல்ககாலின் வேதியியல் வாய்ப்பாடு C2H6O ஆகும். இவ்வாய்ப்பாட்டை CH3-CH2-OH அல்லது C2H5-OH என்றும் எழுதலாம். அதாவது எத்திலீனில் (C2H6) உள்ள ஓர் ஐதரசனுக்கு மாற்றீடாக ஒரு ஐதராக்சைல் குழு (-OH) உள்ளது. இப்படி எழுதுவதால் மெத்தில் குழுவில் (CH3-) உள்ள கரிமம் மெத்திலீன் குழுவில் (-CH2-) உள்ள கரிமத்துடன் இணைந்துள்ளது என்றும், அதன் கரிமம் ஐதராக்சில் குழுவுடன் (-OH) இணைந்துள்ளது என்றும் பார்த்தவுடன் புரிந்துகொள்ளலாம். எத்தனாலை சுருக்கக் குறியீடாக எத்OH என்றும் அழைக்கலாம். எத்தனால் ஒரு போதை மருந்துக்கு அடிமையாக்கும் பழமையான மற்றும் மிகவும் பொதுவான பொழுதுபோக்கு பானமாகும். போதுமான ஒரு அளவுக்கு மேல் உட்கொள்ளப்படும் போது போதை அதிகரித்து குடிவெறியும் நரம்பு தளர்ச்சிக்கும் காரணமாக உள்ளது[1][2]. பரவலாக, ஒரு கரைப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது எரிபொருளாகவும் இதர வேதிப்பொருட்களைத் தயாரிப்பதற்கான ஒரு மூலப்பொருளாகவும் எத்தனால் பயன்படுகிறது. பெயர்க்காரணம் பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் ஐயுபிஏசி முறையில் இதற்கு எத்தனால் என்று பெயரிட்டுள்ளது. ஒற்றைப் பிணைப்பால் பிணைக்கப்பட்ட இரண்டு கார்பன் அணுக்களைக் கொண்ட ஆல்க்கைல் குழுவுடன் OH என்ற வேதி வினைக்குழு இணைக்கப்பட்டுள்ள ஒரு சேர்மமாக இது கருதப்படுகிறது [3]. ’எத்’ என்ற முன்னொட்டும் ’ஆல்’ என்ற பின்னொட்டும் சேர்க்கப்பட்டு இச்சேர்மம் எத்தனால் எனப்படுகிறது. 1834 ஆம் ஆண்டு C2H5- என்ற குழுவுக்கு யசுடசு இலைபெக் சூட்டிய எத்தில் என்ற பெயரிலிருந்துதான் ’எத்’ என்ற முன்னொட்டும் எத்தில் ஆல்ககாலில் உள்ள எத்தில் என்ற சொல்லும் பெறப்பட்டன, C2H5-O-C2H5 சேர்மத்தின் செருமன் பெயரான Aether என்ற பெயரிலிருந்துதான் இவர் ’எத்தில்’ என்ற சொல்லை உருவாக்கினார். ஆங்கிலத்தில் பொதுவாக ஈதர் என்றும் மிகக்குறிப்பிட்டு அழைப்பதென்றால் டையெத்தில் ஈதர் என்றும் இது அழைக்கப்படுகிறது[4]. எத்தில் என்பது (aithḗr, மேற் காற்று), (hyle, பொருள்) என்ற பண்டைய கிரேக்க சொற்களின் சுருக்கம் என்று ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி குறிப்பிடுகிறது. 1892 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டின் செனீவாவில் நடைபெற்ற இரசாயனப் பெயரிடல் பற்றிய சர்வதேச மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் எத்தனால் என்ற பெயர் உருவாக்கப்பட்டது [5]. இரசாயனப் பெயரிடலில் ஆல்ககால் என்ற பெயர் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும் பொதுவாக எத்தனால் என்ற பெயர் நிலைத்துவிட்டது. அரபி மொழியில் ஆண்டிமனி தனிமத்தின் தாதுவாக அறியப்படும் சொல்லின் பொருள் இடைக்கால லத்தீனில் நிலைபெற்றுவிட்டதாக ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி தெரிவிக்கிறது[6]. எத்தனாலுக்கு ஆல்ககால் என்ற பெயர் முதன்முதலில் 1753 இல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. பயன்கள் மருத்துவப் பயன்கள் எத்தனால் ஒரு கிருமி நாசினியாகப் பயன்படுகிறது. பொதுவாக பாக்டீரியாவை எதிர்க்கும் நோய் நுண்ணுயிர்தடையாக எத்தனால் கருதப்படுகிறது. நோயுண்டாக்கும் பாக்டிரியாக்களின் புரதத்தில் வீரியத்தைக் குறைக்கிறது. அவற்றின் கொழுப்பையும் கரைத்து விடுகிறது. பாக்டிரியா மற்றும் பூஞ்சைகளுக்கு எதிராகவும் பல வைரசுகளுக்கு எதிராகவும் எத்தனால் செயல்படுகிறது. எனினும், எத்தனால் பாக்டிரியா சுபோர்கள் எனப்படும் பாக்டீரிய வித்துக்களுக்கு எதிராக திறனற்றதாக உள்ளது [7] மெத்தனால் [8] மற்றும் எத்திலீன் கிளைக்கால் போன்றவற்றால் உண்டாகும் நச்சுத்தன்மையை ஒழிக்கும் நச்சுமுறியாக எத்தனால் பயன்படுகிறது. உயர் செறிவு எத்தனால் பெரும்பாலும் பல நீரில் கரையாத மருந்துகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சேர்மங்களை கரைக்க பயன்படுத்தப்படுகிறது. இருமல் மற்றும் குளிர் ஈரத்திற்கான வைத்தியத்திற்கும், வலி நிவாரண மருந்துகள் தயாரிப்பிலும், வாய் கொப்புளிக்கும் திரவங்கள் தயாரித்தலிலும் எத்தனால் 1 முதல் 25% செறிவு நிலையில் பயனாகிறது. ஆசுதுமா போன்ற சுவாசப்பாதை கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆல்ககால் பயன்பாட்டை தவிர்க்கவேண்டும் [9]. அசிட்டமினோஃபென், இரும்பு கூட்டுப்பொருட்கள், பியூரோசுமைடு, மானிட்டால், ஃபெனோபார்பிட்டால், டிரைமெத்தோபிரிம்/சல்பாமெத்தாக்சசோல், இருமல் மருந்துகள் உள்ளிட்ட 700 வகையான மருந்துகளில் எத்தனால் பங்கு கொண்டுள்ளது [10]. பொழுதுபோக்கு மதுபானம் மத்திய நரம்பு மண்டலத்தில் மாற்றங்களை விளைவிக்கும் உளவியல் மருந்தாக எத்தனால் செயல்படுகிறது [11]. பொதுவாக ஓர் அலகு இரத்த அளவிலுள்ள எத்தனாலின் எடையை அறிவதன்மூலமாக உடலின் இரத்த ஆல்ககால் அளவிடப்படுகிறது. சிறிதளவு எத்தனாலை உட்கொள்வதால் மகிழுணர்வும் நெகிழ்வுணர்வும் ஏற்படலாம். உளரல், குழப்பம், கட்டுப்பாடின்மை முதலியன இதற்கான அறிகுறிகள் ஆகும். அளவுக்கு மீறி எத்தனாலை உட்கொள்வதால் பார்வை இழப்பு, உணர்விழத்தல், நினைவிழத்தல், மந்தபுத்தி, மயக்கமடைதல், மரணமடைதல் போன்ற தீங்குகள் ஏற்படலாம் [12] எரிபொருள் எத்தனால் ஒரு பெரிய தனிநிலை இயந்திர எரிபொருளாகவும் எரிபொருள் சேர்க்கைப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. பிரேசில் நாட்டில் எத்தனால் இயந்திர எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே எத்தனால் உற்பத்தி செய்யும் உலகநாடுகளில் பிரேசில் முதலிடம் பிடிக்கிறது [13]. பிரேசில் நாட்டில் விற்கப்படும் கெசோலின் எனப்படும் பெட்ரோலில் குறைந்தபட்சமாக 25 சதவீதமாவது எத்தனால் கலக்கப்படுகிறது. ஐதரசு எத்தனால் என்பது 95% எத்தனாலும் 5% தண்ணிரும் கலந்த கல்வையாகும். பிரேசில் நாட்டில் இவ்வெரிபொருள் புதியதாக விற்கப்படும் 90% பெட்ரோல் கார்களுக்கு எரிபொருளாக இடப்படுகிறது. பிரேசிலியன் எத்தனால் கரும்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அதிக அளவு கார்பனை தனிப்படுத்தி சேமிக்கிறது என்பதற்காகவும் இது அறியப்படுகிறது [14]. அமெரிக்காவும் மற்றும் பல நாடுகளும் இ10 (10% எத்தனால்) எரிபொருளைப்யும் சில சமயங்களில் இ85 (85% எத்தனால்) எரிபொருளையும் பயன்படுத்துகின்றன. இராக்கெட்டு எரிபொருளாகவும் எத்தனால் பயன்படுத்தப்படுகிறது. இலகுரக இராக்கெட் இயக்க பந்தய விமானங்களில் தற்போது எத்தனால் பயன்படுத்தப்படுகிறது [15]. கரும்பு கழிவில் இருந்து தயாரிக்கப்படும் தூய எத்தனால் வாகனங்களுக்குப் பயன்படுத்துவதை ஆத்திரேலியா நாட்டுச் சட்டம் 10% வரை மட்டுப்படுத்துகிறது. பழைய கார்கள் மற்றும் மெதுவாக எரியும் எரிபொருளைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட கார்கள் மாற்றப்பட வேண்டும் அல்லது அவற்றில் இயந்திர வால்வுகள் பொருத்தி மேம்படுத்தப்பட வேண்டும் என அச்சட்டம் வலியுறுத்துகிறது [16]. எத்தனாலை எரிபொருளாகப் பயன்படுத்துவதால் கார்பன் ஓராக்சைடு, நைட்ரசன் ஆக்சைடுகள், மற்றும் ஓசோன் மாசுக்கள் உருவாதல் தீங்குகள் குறைவதாக தொழிர்சாலைகள் ஆலோசனைக் குழு ஒன்று தெரிவிக்கிறது [17]. பல்வேறு இயந்திரங்கள் மற்றும் எரிபொருள் இணைப்புகள் வெளியிடும் பைங்குடில் விளைவு வாயுக்கள் வெளியீடு குறைவதாக ஆர்கோன் தேசிய ஆய்வகத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தூய கேசோலின் பெட்ரோலுடன் ஒப்பிடுகையில் உயிரிஎரிபொருள் பயன்பாடு 8% மாசுக்களை குறைப்பதாகவும், எ85 எத்தனால் பயன்பாட்டால் 17% மாசுக்கள் குறைவதாகவும், மரக்கூழ் எத்தனால் பயன்பாட்டால் 64% மாசுக்கள் குறைவதாகவும் ஆர்கோன் தேசிய ஆய்வகத்தின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன[18]. எத்தனால் எரிப்பு என்பது ஓர் உள்ளெரி இயந்திர எரிப்புவகையாகும். முழுமையடையாத பெட்ரோல் எரிப்பினால் வெளியிடப்படும் பார்மால்டிகைடு, அசிட்டால்டிகைடு போன்ற பொருட்கள் எத்தனால் எரிப்பில் கணிசமாக பெரிய அளவில் உற்பத்தியாகின்றன [19]. இதனால் அதிக்மான அளவில் ஒளிவேதியியல் வினைகளும் தரையளவு ஓசோன் அளவும் அதிகரிக்கின்றன [20]. இத்தரவுகள் யாவும் எரிபொருள் உமிழ்வுகள் குறித்த தூய எரிபொருள் அறிக்கையின் தரவுகளாகும் [21]. அமெரிக்காவில் எத்தனால் உற்பத்தியானது சோளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு தரவுகளின்படி அமெரிக்காவில் 7.0 பில்லியன் அமெரிக்க காலன்கள் எத்தனால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மேலும் 72 திட்டங்கள் கட்டுமானத்தில் உள்ளன. இத்திட்டங்களும் நிறைவு பெற்றால் மேலும் 6.4 பில்லியன் அமெரிக்க காலன்கள் எத்தனால் உற்பத்தி உறுதி செய்யப்படுகிறது. இதே நேரத்தில் அமெரிக்க நாடெங்கிலும் பெட்ரோல் வர்த்தகத்தை எத்தனால் இடப்பெயர்ச்சி செய்துவருகிறது என்பதும் கவனிக்கத்தக்கது ஆகும் [22]. எத்தனால் தயாரிப்பதற்கு உதவும் மற்றொரு சாத்தியமான மூலமாக இனிப்புச் சோளம் கருதப்படுகிறது. மானாவாரி நிலங்களில் இனிப்புச் சோளத்தை சாகுபடி செய்யமுடியும். ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் [23] எரிபொருள், உணவு, மற்றும் விலங்குணவுக்காக, வறண்ட வெப்ப மண்டல சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிலையம் சோளம் உற்பத்தியை ஊக்குவிக்கும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. கரும்பு சாகுபடிக்கு ஆகும் அதே கால அளவில் சோளம் உற்பத்திக்கு மூன்றில் ஒரு பங்கு தண்ணிரே தேவைப்படுவதாக கூறப்படுகிறது. உலகின் முதலாவது இனிப்பு சோள எத்தனால் வடிமனை இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 2007 இல் தனது வணிக உற்பத்தியைத் தொடங்கியது [24]. தண்ணீருடன் எத்தனால் எளிதில் கலக்குமென்பதால் திரவ ஐதரோகார்பன்கள் போல நவீனக் குழாய்கள் அமைத்து கொண்டு செல்வது பொருத்தமற்ற செயலாக இருக்கிறது [25]. எத்தனாலுடன் தண்ணிர் கலப்பதால் கார்புரேட்டர் போன்ற சிறிய இயந்திரங்கள் பழுதடைந்து விடுவதை இயந்திரப் பொறியாளர்களால் காண முடிகிறது. எனவே எத்தனாலுடன் தண்ணிர் கலப்பதை தவிர்க்க உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன [26]. பொதுவாக தொடக்கக் கால ஈருந்தி இராக்கெட்டுகளில் (நீர்ம உந்துபொருள்) எத்தனால் திரவ ஆக்சிசனுடன் சேர்க்கப்பட்டு எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போர் காலத்தில் விண்வெளியுகத்தை தொடங்கி வைத்த செருமனியின் வி2 இராக்கெட்டில் எத்தனால் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டது. இராக்கெட்டின் எரிகோபுரத்தின் வெப்பத்தைக் குளிர்விப்பதற்காக எத்தனாலுடன் 25% தண்ணிர் சேர்க்கப்பட்டது[27][28]. வி2 இராக்கெட்டை வடிவமைத்த பொறியாளர்கள், இரண்டாம் உலகப்போருக்கு பின் தயாரிக்கப்பட்ட அமெரிக்காவின் ரெட்சுடோன் இராக்கெட்டுகளில் எத்தனாலைப் பயன்படுத்த உதவி செய்தனர்[29]. நவீன எரிபொருட்கள் வளர்ந்த காரணத்தால் ஆல்ககால் எரிபொருட்களின் பயன்பாடு குறைந்து வருகிறது[28]. எரிபொருள் மின்கலங்கள் வணிகரீதியிலான எரிபொருள் கலங்கள் புதுப்பிக்கப்பட்ட இயற்கை எரிவாயு, ஐதரசன் அல்லது மெத்தனால் முதலான எரிபொருட்களால் இயங்குகின்றன. பரவலாகக் கிடைப்பதாலும், அதிக தூய்மை மற்றும் மலிவான விலை, குறைவான நச்சுத்தன்மை போன்ற காரணங்களால் இவற்றுக்கு மாற்றாக எத்தனால் பயன்படுத்தப்படுகிறது. நேரடி-எத்தனால் எரிபொருள் கலங்கள், தன்வெப்ப சீர்திருத்தும் அமைப்புகள் மற்றும் வெப்ப ஒருங்கிணைப்பு அமைப்புகள் உட்பட பல எரிபொருள் கலத் தத்துவங்கள் முயற்சிக்கப்படுகின்றன. எத்தனால் எரிபொருள் கலங்கள் தொடர்பான செயல்பாடுகள் ஆராய்ச்சி நிலையில் உள்ளன. பல்வேறு நிறுவனங்கள் எத்தனால் எரிபொருள் கலங்களை சந்தைப்படுத்தும் முயற்சியைத் தொடங்கியுள்ளன [30] மாற்று எரிபொருளாக எத்தனால் அண்மைக் காலங்களில் எத்தனால் ஒரு மாற்று எரிபொருளாய் முன்வைக்கப் படுகிறது. நேரடியாக ஊர்திகளில் எரிபொருளாகவும், கன்னெய் (பெட்ரோல்) போன்ற பிற ஊர்தி எரிபொருட்களோடு கலந்தும் இதனைப் பயன்படுத்தலாம். எரிபொருளுக்காக எத்தனாலைப் பயன்படுத்துவது பல நாடுகளில் இருந்தாலும் பெரும்பாலும் (~90%) அமெரிக்காவிலும், பிரேசிலிலும் தான் அதிகமாகப் பயன்படுத்தப் படுகிறது. அமெரிக்காவில் சோளத்தில் இருந்தும், பிரேசிலில் கரும்பில் இருந்தும் எத்தனால் தயாரிக்கப் படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனால் தயாரிப்பு இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. குறிப்பு: 2005இல் எத்தனால் தயாரிப்பு ஏறத்தாழ ஒன்பது பில்லியன் கேலன்கள். பிரேசிலில் விற்கப்படும் கன்னெய்களில் ஏறத்தாழ 20% எத்தனால் கலக்கப் படுகிறது. நேரடியாகத் தூய்மையான நீரற்ற எத்தனாலையும் ஊர்தி எரிபொருளாகப் பயன்படுத்துகின்றனர். பிரேசிலின் ஊர்திகளில் கிட்டத்திட்ட பாதியளவில் நேரடியாக எத்தனாலை மட்டுமே வைத்து ஓட்ட முடியும். நெகிழ்-எரி-எந்திரங்களில் முழுமையாக எத்தனாலையோ, அல்லது முழுமையாகப் பெட்ரோலையோ, அல்லது ஏதாவதொரு விகிதத்தில் இரண்டையும் கலந்தோ பயன்படுத்த முடியும். அமெரிக்காவில் முழுமையாக எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்த அனுமதிப்பதில்லை. அதிக அளவாக 85% எத்தனாலை மட்டுமே அனுமதிக்கின்றனர். 85% எத்தனாலும், மிச்சம் 15% பெட்ரோலும் கொண்ட கலவையை E85 என்று சந்தையில் விற்கிறார்கள். இந்தியாவில் பெட்ரோலுடன் எத்தனாலையும் கலந்து விற்க இந்திய அரசு முடிவு எடுத்துள்ளது.[31] வீடுகளில் எத்தனால் அடுப்படிகளிலும் அலங்கார நெருப்பாகவும் எத்தனால் வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது [32]. ஊட்டு மூலப்பொருள் எத்தனால், தொழிற்சாலைகளுக்குத் தேவையான ஒரு முக்கியமான ஊட்டு மூலப்பொருளாகும். எத்தில் ஆலைடுகள், எத்தில் எசுத்தர்கள், டை எத்தில் ஈதர், அசிட்டிக் அமிலம், எத்தில் அமீன்கள் உள்ளிட்ட பல்வேறு கரிமச் சேர்மங்களுக்கு எத்தனால் ஒரு முன்னோடிச் சேர்மமாக விளங்குகிறது. கரைப்பான் எத்தனால் நீருடன் கலக்கும் இயல்பைக் கொண்டுள்ளது. மற்றும் ஒரு நல்ல பொது கரைப்பானாகவும் எத்தனால் செயல்படுகிறது. சாயங்கள், டிஞ்சர், அடையாளங் காட்டிகள், சொந்தநலன் காக்கும் பொருட்கள் போன்றவற்றில் எத்தனால் பயன்படுகிறது. கூட்டுச்சர்க்கரைகளை ஆல்ககால் முன்னிலையில் வீழ்படிவாக்கவும் டி.என்.ஏ, ஆர்.என்.ஏ போன்றவற்றை தூய்மைப்படுத்தவும் எத்தனால் பயன்படுகிறது. தாழ் வெப்பநிலை நீர்மம் குறைவான உருகு நிலை (−114.14 ° செ) மற்றும் குறைவான நச்சுத்தன்மை காரணமாக எத்தனால் சில சமயங்களில் ஆய்வகங்களில் உலர் பனிக்கட்டியுடன் அல்லது குளிரூட்டிகளில் வெப்பத்தைக் குறைக்கப் பய்ன்படுத்தப்படுகிறது. எதிர்மறை விளைவுகள் சமநிலை இழத்தல் ஆல்ககால் மூளைக்குச் செல்லும்போது, அது நரம்புச் செல்களிலிருந்து அனுப்பப்படும் குறிப்பலைகளை தாமதப்படுத்துகிறது. இதனால் கட்டுப்பாடு, சிந்தனை மற்றும் இயக்கம் முதலிய செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன[33]. குடல் நோய்கள் இரைப்பையில் உணவு இல்லாத நேரத்திலும் கூட மதுபானம் இரைப்பைச்சாறு உற்பத்தியை தூண்டுகிறது. இதன் விளைவாக பொதுவாக புரத மூலக்கூறுகளை செரிப்பதற்காக அமில சுரப்பு தூண்டப்படுகிறது. அதிக அமிலச்சுரப்பு வயிற்றின் உட்புறச் சுவர்களை அரிக்கிறது. வயிற்றின் உட்புறச்சுவர் பொதுவாக மென்சவ்வு அடுக்கினால் பாதுகாக்கப்படுகிறது. வயிறு தானே செரித்தலுக்கு உட்படுவதை இச்செவ்வு தடுக்கிறது. வயிற்றுப்புண் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இச்சவ்வு பழுதடைந்திருக்கும். பொதுவாக வயிற்றுப்புண் நோய் எச்.பைலோரி என்ற பாக்டீரியாவுடன் தொடர்பு கொண்டதாகும். இப்பாக்டீரியாவினால் சுரக்கப்படும் ஒருவகை நஞ்சு வயிற்றைப் பாதுகாக்கும் மென்சவ்வை பலமிழக்கச் செய்கிறது. எனவே வயிற்றுபுண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் வெறும் வயிற்றில் மதுபானம் அருந்துவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு அருந்தினால் அதிகப்படியான அமிலச்சுரப்பு ஏற்பட்டு பலவீனமான குடல் சுவரை மேலும் அழித்துவிடும் [34]. இதனால் அடிவயிற்றில் கடுமையான வலி, வயிறு வீக்கம் போன்ற கடுமையான பாதிப்புகள் உண்டாகும். அடர் கருப்பு மலம் உட்புற இரத்தக் கசிவுக்கு அறிகுறியாகும் [35]. இத்தகைய சிக்கல் உள்ளவர்கள் தொடர்ச்சியாக மது அருந்துவதிலிருந்து விடுதலை பெறவேண்டும் [35]. மது உட்கொள்வதால் அமைப்பு அழற்சி சார்பு மாற்றங்கள் இரண்டு குடல் வழிகள் மூலம் ஏற்படுகிறது. (1)குடல் திசுக்களின் பகுதிப்பொருட்களில் மாற்றத்தை ஏற்படுத்தி லிப்போகூட்டுச்சர்க்கரை வெளியிடுவதை அதிகரித்தல், (2)குடல் சுவரிலுள்ள மென்சவ்வை பலவீனப்படுத்தி அதன்வழியாக லிப்போ கூட்டுச்சர்க்கரையை இரத்தச் சுழற்சி மண்டலத்திற்குள் அனுமதித்தல் இக்கூட்டுச்சர்க்கரை வெளியீடு அதிகரிப்பினால் கல்லிரல் பாதிப்புக்கு உள்ளாகிறது. இதன் தொடர்ச்சியாக உறுப்புகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன [36]. குறுகியகால நச்சு அழற்சிகள் எத்தனால் அடங்கிய பானங்கள் அருந்துவதால் ஆசுதுமா போன்ற வரலாறு நோயாளிகளுக்கு தோல் வெடிப்புகள், நாசியழற்சி அதிகரித்தல், மூச்சுக்குழல் ஒடுக்கம் ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் உண்டாகும். மது அருந்திய ஒரு மணி நேரத்திற்குள் இத்தகைய பாதிப்புகளின் அறிகுறிகள் தென்படத் தொடங்கும் [9]. நீண்ட கால பாதிப்புகள் மது அருந்துவதால் பிறவிக் குறைபாடுகள் [37], புற்றுநோய உண்டாகும் வாய்ப்புகள் "[38], இரத்தத்தில் டிரைகிளிசரைடுகளின் அளவு அதிகரிப்பு[39] போன்ற பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. வலுவூட்டல் கோளாறுகள் மூளையிலுள்ள கேட்டலேசு மற்றும் சைட்டோகுரோம் பி-4502இ1 போன்ற ஆக்சிசனேற்றும் நொதிகளால் உருவாக்கப்படும் அசிட்டால்டுகைடால் போதைக்கு அடிமையாக்கும் விளைவுகள் நிகழ்கின்றன [40]. ஆல்டிகைடுகள் எதிர்மறை விளைவுகளை உண்டாக்குவதாகக் கருதப்பட்டாலும் மூளையின் மத்தியப்பகுதியை செயலிழக்கச் செய்வதில் இவை முக்கியப்பங்கு வகிக்கின்றன [41]. எத்தனாலின் போதைப் பண்புகள் அல்லது அடிமையாக்கும் பண்புகள் மீசோலிம்பிக் ரிவார்டு பாத்வே எனப்படும் இடையங்கப் பாதையிலுள்ள தோப்பாமைன் நியூரான்கள்கள் மூலம் கடத்தப்படுகின்றன. நடுமூளையின் அடிப்புற திசு உறையை முன்மூளையின் அடித்தளத்திலுள்ள நியூக்ளியசு அக்கும்பென்சுடன் இணைக்கும் பாதையே இடையங்கப்பாதை எனப்படுகிறது[42][43]. என்-மெத்தில்-டி-அசுபார்டேட்டு ஏற்பிகளிலும், காமா அமினோபியூட்டரிக் அமிலம்ஏ ஏற்பிகளில் மாற்றுத்தூண்டு தடுப்பியாகச் செயல்படுவதுதான் எத்தனாலின் முதன்மையான விளைவுகளில் ஒன்றாகும்[44]. உயர் அளவுகளில் எடுத்துக் கொள்ளப்படும் எத்தனாலால் அதிக ஈனிமறைப்பு அயனி வழிகள் மற்றும் நியூரான்களில் உள்ள வோல்டேச்மறைப்பு அயனிவழிகளும் தடுக்கப்படுகின்றன. மிகக்கடுமையான அளவில் எத்தனால் உட்கொள்ளப்படும் நிகழ்வுகளில் இடையங்க நரம்பியற் சந்திப்புகளில் தோபாமைன் வெளியிடப்படுகிறது[42][43]. நாட்பட்ட தீவிரமான எத்தனால் விரும்பிகளுக்கு, செல்படியெடுத்தல் காரணிகளில் இதேவகையான தூண்டுதல் ஏற்பட்டு செல்களில் பாசுபோரைலேற்றம் நிகழ்ந்து நிரந்தர மது அடிமைகளாக மாற்றப்படுகிறார்கள் [43][45][46][47]. பல ஆண்டு கடுமையான குடிபோதையை திடீரென நிறுத்துவதும் உயிருக்கு ஆபத்தானதாக முடியும். பதட்டம் தன்னியக்க செயல் பிறழ்ச்சி, வலிப்பு மற்றும் சித்தப்பிரமை முதலிய பாதிப்புகள் ஏற்படலாம். எதிர்வினைகள் பார்பிட்டியுரேட்டுகள், பென்சோடையசிப்பின்கள், ஓப்பியாயிட்டுகள் போன்ற மூளைத்திறன் குறைப்பு மருந்துகளுக்கு எத்தனால் எதிர்வினை புரிகிறது[48] மற்றொரு உளவியல் பொருளான கோகைதைலீன் தயாரிப்பதற்கும் எத்தனால் எதிர்வினை புரிகிறது [49] மத்திய நரம்புமண்டல சிகிச்சையில் பயன்படும் மெத்தில்பெனிடேட்டு என்ற மருந்தின் இருப்பை எத்தனால் உடலில் உயர்த்துகிறது [50]. கனாபிசு எனப்படும் கஞ்சாவுடன் சேர்த்து பயன்படுத்தும்போது எத்தனால், டெட்ரா ஐதரோகனபினாலை ஈர்த்து உடலில் அதன் அளவை அதிகரிக்கிறது [51]. ஆல்ககாலும் மெட்ரோனிடசோலும் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துசார் மருத்துவத்தில் பயன்படும் மெட்ரோனிடசோலுக்கும் ஆல்ககாலுக்கும் இடையிலான எதிர்வினைகள் முக்கியமாக கவனிக்கத்தக்கன ஆகும். பாக்டீரியா எதிர்ப்பு முகவரான மெட்ரோனிடசோல், பாக்டீரியாக்களை அழிப்பதன் மூலம் செல்லணு டி.என்.ஏக்களையும் அதன் செயல்பாடுகளையும் அழிக்கிறது [52]. பொதுவாக குளோசுடிரிடியம் திப்பிசைல் பாக்டிரியாவால் ஏற்படும் வயிற்றுப்போக்கு நோய்க்கு மருந்தாக மெட்ரோனிடசோல் கொடுப்பது வழக்கம் ஆகும். வயிற்றுப்போக்கை உண்டாக்கும் நுண்ணுயிரிகளில் ஒன்று குளோசுடிரிடியம் திப்பிசைல் பாக்டிரியா ஆகும். இதனால் பெருங்குடல் வீக்கமும் மரணமும் கூட சம்பவிக்கலாம. மெட்ரோனிடசோல் மருந்தை எடுத்துக் கொள்ளும் நோயாளிகள் ஆல்ககாலை பயன்படுத்துவதை கடுமையாகத் தவிர்க்க வேண்டும். மதுவும் மெட்ரோனிடசோலும் சேர்ந்து சிவந்துபோதல், தலைவலி, குமட்டல், வாந்தி, வயிற்று பிடிப்புகள் மற்றும் வியர்த்தல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன [53][54][54]. இந்த அறிகுறிகள் பெரும்பாலும் டைசல்ஃபிரம் போன்ற வினைகளாகக் கருதப்படுகின்றன. மெட்ரோனிடசோல் பொதுவாக ஆல்ககாலை வளர்சிதைமாற்றமடையச் செய்யும் ஒரு நொதியைப் பிணைக்கிறது. இத்தகைய நொதி பிணைப்பு முறையால் ஆல்ககாலை வெளியேற்றும் கல்லீரலின் ஆற்றல் பாதிக்கப்படுகிறது [55]. மருந்தியல் மருந்தியக்கமுறை காமா அமினோபியூட்டரிக் அமிலம் ஏற்பிகளுடன் பிணைந்து அவற்றின் விளைவுகளை அதிகரிப்பது எத்தனாலின் முதன்மையான பணியாகும்[56]. மேலும், எத்தனால் பின்வரும் மருத்தியக்க முறைகளை தனதாகக் கொண்டுள்ளது:[57]. •காமா அமினோபியூட்டரிக் அமிலம்ஏ ஏற்பி நேர்மாற்றுத்தூண்டு பண்பேற்றி[44] (primarily of δ subunit-containing receptors) •என்-மெத்தில்-டி-அசுபார்டேட்டு ஏற்பி எதிர்மாற்றுத்தூண்டு பண்பேற்றி[44][58] •இடையங்கப் பாதையில் தோபாமைன் வெளியீடு[41][44] •மூளையிலுள்ள ஓப்பியாயிடு ஏற்பிகளில் நியூக்ளியசு அக்கும்பென் வெளியீடு •α-அமினோ-3-ஐதராக்சி-5-மெத்தில்-4-ஐசோசாக்சோல்புரோப்பியோனிக் அமில ஏற்பி எதிர்மாற்றுத்தூண்டு பண்பேற்றி [58] •கைனேட்டு ஏற்பி எதிர்மாற்றுத்தூண்டு பண்பேற்றி [58] •நிக்கோட்டின் அசிட்டோகோலின் ஏற்பி முன்னியக்கி •5-எச்டி3 ஏற்பி முன்னியக்கி •கிளைசீன் மீளேற்புத்தடுப்பி [59] •அடினோசின் மீளேற்புத்தடுப்பி [60] •எல்-வகை கால்சியம் வழித்தடுப்பி •கி-புரதவழி பொட்டாசியம் திறப்பி மருந்தியக்கத் தாக்கியல் கல்லீரலில் ஆல்ககால் டீ ஐதரசனேசால் ஆக்சிசனேற்றம் செய்யப்பட்டு மனித உடலில் இருந்து எத்தனால் அகற்றப்படுவது குறைக்கப்படுகிறது. எனவே இரத்தத்திலிருந்து அடர் ஆல்ககாலை நீக்குவது சுழியவகை வேதிவினையாகக் கருதப்படுகிறது. ஆல்ககால் உடலைவிட்டு மாறாத விகிதத்தில் வெளியேறுகிறது என்பதே இதன்பொருள் ஆகும். ஒரு பொருளுக்கான வேதிவினை படிநிலை விகிதம் மற்றொரு பொருளுக்கு பொதுவானதாக இருக்கலாம். இதனால் மெத்தனால் மற்றும் எத்திலீன் கிளைக்கால் வளர்சிதை மாற்றங்களில் இரத்த ஆல்ககால் அளவு வேதிவினை வீதத்தை மாற்ற பயன்படுத்தப்படுகிறது. மெத்தனாலைக் காட்டிலும் இதன் வளர்சிதை மாற்றப்பொருட்களான பார்மால்டிகைடும் பார்மிக் அமிலமும் நச்சுப்பொருட்களாகும். எனவே இத்தகைய நச்சுப்பொருட்களின் உற்பத்தியையும் அடர்த்தியையும் குறைக்க எத்தனால் உட்செலுத்தப்படுகிறது [61]. எத்திலீன் கிளைக்கால் நச்சுத்தன்மையும் இதே முறையில் நீக்கப்படுகிறது. தூய்மையான எத்தனால் கண்களிலும் தோலிலும் எரிச்சலை உண்டாக்குகிறது [62]. நாட்பட்ட தொடர்ச்சியான பயன்பாட்டினால் கல்லீரல் பாதிக்கப்படும் [63]. வளிமண்டலத்தில் எத்தனாலின் செறிவு ஆயிரத்தில் ஒரு பங்கு என ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில் வெளிப்பாடு வரம்பெல்லை தெரிவிக்கிறது [63]. வளர்சிதை மாற்றம் மனித உடலில் உள்ள எத்தனால் ஆல்ககால் டி ஐதரோசனேசால் அசிட்டால்டிகடாகவும் பின்னர் ஆல்டிகைடு டி ஐதரோசனேசால் அசிட்டைலாகவும் மாற்றப்படுகிறது. கார்போ ஐதரேட்டு கொழுப்பு இரண்டின் வளர்சிதை மாற்றத்திலும் இருதி விளைபொருளாக அசிட்டைல் இணை நொதியே விளைகிறது. இந்த அசிட்டலை உயிரிதொகுப்புக்கும் ஆற்றலுக்கும் பயன்படுத்தமுடியும். இதேபோல எத்தனாலும் தோராயமாக ஒரு கிராமுக்கு 7கிலோகலோரி ஆற்றலை வெளியிடுகிறது [64]. எனினும், முதல்படிநிலையில் உருவாகும் அசிட்டால்டிகைடு [65] எத்தனாலைக் காட்டிலும் நச்சுத்தன்மை மிக்கது ஆகும். கல்லீரல் இழைநார் வளர்ச்சிக்கும் [66] புற்றுநோய் உருவாக்கத்திற்கும் இது காரணமாகிறது. தொடர்புடைய டி ஐதரோசனேசு வழியாக ஆல்ககால் வளர்சிதை மாற்றத்தின்போது நிக்கோட்டினமைடு அடினைன் டைநியூளியோடைடு ஒடுக்கப்படுகிறது. ஆல்ககால் செரிமானத்துடனும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. எத்தில் ஆல்ககாலின் ஒரு பகுதி நிர்விலக்கியாகும். நீர்விலக்கி அல்லது கொழுப்பு விரும்பியான எத்தனால் வயிற்றுச்சுவரின் குறுக்கே பரவுகிறது. உண்மையில் ஆல்ககால் வயிற்றில் ஈர்க்கப்படும் பொருள்களில் அரிதானது ஆகும். பெரும்பாலான உணவுப் பொருட்கள் சிறுகுடலால் ஈர்த்துக் கொள்ளப்படுகின்றன. ஆல்ககால் சிறுகுடலால் ஈர்த்துக் கொள்ளப்பட்டபிறகு வயிற்றுப் பொருட்கள் வெளியிடுவதை தாமதப்படுத்துகிறது[67]. ஈர்க்கப்பட்டபின்னர் இது கல்லீரலை அடைந்து அங்கு வளர்சிதை மாற்றமடைகிறது. கல்லீரல் மூலம் பதப்படுத்தப்படாத மது இதயத்திர்கு செல்கின்றது. ஓர் அலகு நேரத்தில் கல்லீரல் ஒரு குறிப்பிட்ட அளவு ஆல்ககாலை மட்டுமே பதப்படுத்தும் ஆகவே, ஒருவர் அதிகமாக மது குடிக்கும்போது அது இதயத்தை அடைகிறது. இதயத்தில், இதய சுருக்கத்தின் வேகத்தைக் குறைக்கிறது. இதன் விளைவாக, இதயம் குறைவான இரத்தைச் செலுத்துகிறது. எனவே ஒட்டுமொத்தமாக உடலின் இரத்த அழுத்தமும் குறைகிறது [33]. இதயத்திற்குள் செல்லும் இரத்தம் நுரையீரலுக்குள்ளும் செல்ல வாய்ப்பு இருக்கிறது. சுவாசத்தில் ஆல்ககாலின் சுவடுகள் தென்படுகின்றன. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை இனம் கண்டு கொள்ள உதவும் மூச்சுப்பகுப்பி இதனைக் கண்டுபிடிக்கிறது. நுரையீரலில் இருந்து இதயத்திற்குத் திரும்பும் இரத்தம் உடல் முழுவதற்கும் செலுத்தப்படுகிறது. ஆல்ககால் இரத்தத்திலுள்ள லிப்போபுரதங்களின் அடர்த்தியை அதிகரிக்கின்றது. இவை கொழுப்பைக் கொண்டு செல்கின்றன. மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன. மிதமான ஆல்ககால் பயன்பாடு மாரடைப்பைக் குறைக்கும் என்பது ஆல்ககாலின் உடல் நலவியல் பயனாகும் [68]. மற்றவர்களை விட அதிகமாக எத்தனால் நுகர்வு இருக்கும் சில தனிநபர்கள் கடுமையான அறிகுறிகளுக்கு சகிப்புத்தன்மை கொண்டவர்களாக இருப்பதுண்டு. அத்தகையவர்கள் சிலரிடம் நொதிகள் பாதிப்பின்றி மிகவும் வேகமாக எத்தனால் வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுவதுமுண்டு. வேதியியல் இயற்பியல் பண்புகள் நிறமற்ற நீர்மமான எத்தனால் சற்று நெடியுடன் விரைவில் ஆவியாகக்கூடிய ஒரு சேர்மமாக உள்ளது. புகையில்லாமல் நீல நிறத்துடன் எரியும் இதை சாதாரண வெளிச்சத்தில் எப்பொதும் காண முடியாது. ஐதராக்சில் குழுவின் அடிப்படையிலும், குறுகிய சங்கிலி அமைப்பின் அடிப்படையிலும் இதன் இயற்பியல் பண்புகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஐதராக்சில் குழுவால் ஐதரசன் பிணைப்பில் பங்கேற்கமுடிகிறது. இதனால் இதே மூலக்கூறு எடையைக் கொண்ட முனைவுக் கரிம சேர்மமான புரோப்பேனைக் காட்டிலும் அதிகமான பாகுமையும், குறைவான ஆவியாகும் தன்மையும் பெற்றுள்ளது. தண்ணிரைவிட சற்று அதிமான பிரதிபலிப்பைக் கொண்டுள்ளது. எத்தனாலின் ஒளிவிலகல் எண் 1.36242. ( 18.35° செ வெப்பநிலையில் λ=589.3 நா.மீ ஆக உள்ளபோது) 4.3 × 10−4 பாசுகல் அழுத்தத்தில் எத்தனாலின் மும்மைப்புள்ளி 150 கெல்வின் ஆகும். கரைப்பான் பண்புகள் எத்தனால் ஒரு பல்துறை கரைப்பான் ஆகும்., நீருடன் கலக்கும் இயல்பைக் கொண்ட இச்சேர்மம் அசிட்டிக் அமிலம், அசிட்டோன், பென்சீன், கார்பன் டெட்ராகுளோரைடு, குளோரோபார்ம், டை எத்தில் ஈதர், எத்திலீன் கிளைக்கால், கிளிசரால், நைட்ரோமீத்தேன், பிரிடின், தொலுயீன் உள்ளிட்ட பல கரிமக் கரைப்பான்களுடனும் கலக்கும் இயல்புடையது [69][70]. பென்டேன், எக்சேன் உள்ளிட்ட இலேசான அலிபாட்டிக் ஐதரோகார்பன்களுடனும், முக்குளோரோ ஈத்தேன், நாற்குளோரோ எத்திலீன் போன்ற அலிப்பாட்டிக் குளோரைடுகளுடனும் எத்தனால் கலக்கும் தன்மையுடையது ஆகும் [70]. எத்தனாலின் தண்ணீருடன் கலக்கும் இயல்பு நீண்ட சங்கிலி சேர்மங்களின் கலக்கும் இயல்புடன் மாறுபடுகிறது. ஐந்து கார்பனுக்கு மேற்பட்ட நீளமுடைய சேர்மங்களின் நீருடன் கலக்கும் இயல்பு கார்பனின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க குறைகிறது [71] ஆல்க்கேன் முதல் அன்டெக்கேன் வரையுள்ள ஆல்க்கேன்களின் கலக்கும் பண்பு கட்டுப்படுத்தப்படுகிறது. பன்னிருடெக்கேன் மற்றும் உயர் ஆல்க்கேன்களின் கலவைகள் வெப்பநிலைக்கு ஏற்ப அவற்ரின் கலக்கும் இயல்பில் கலப்பு இடைவெளியை வெளிபடுத்துகின்றன[72]). மேலும் உயர் ஆல்க்கேன்களைப் பொறுத்தவரையில் வெப்பநிலையும் பெரிய கலக்கும் இடைவெளியைக் காட்டுகின்றன. எத்தனால்-நீர்க் கலவையின் பருமன் அவற்றின் தனிப்பட்ட கூறுகளின் கூட்டுத்தொகையை விட குறைந்த அளவாக உள்ளது. சம அளவு எத்தனாலும் தண்ணீரும் சேர்க்கப்பட்டால் 1.92 பருமனளவு கொண்ட எத்தனால்-நீர்க் கலவை மட்டுமே கிடைக்கிறது[69][73]. வெப்ப உமிழ்வினையான இவ்வினை 298 கெல்வின் வெப்பநிலையில் 777யூ/மோல் வெப்பம் உமிழப்படுகிறது[74]. எத்தனால்-நீர்க் கலவையில் 89 மோல்% எத்தனாலும் 11 மோல்% நீரும் கலந்து கொதிநிலை மாறா கலவையாக உருவாகின்றன[75]. இதையே 95.6 சதவீத எத்தனால் நிறையளவு கலவை என்றும் குறிப்பிடலாம். சாதாரண அழுத்தத்தில் இக்கலவை 78 பாகை செல்சியசு வெப்பநிலையில் கொதிக்கிறது. மேலும், இக்கொதிநிலை மாறா கலவையின் உட்கூறுகள் வெப்பநிலை-அழுத்தத்தை சார்ந்திருக்கின்றன. இவை 303 கெல்வின் வெப்பநிலைக்குக் கீழ் மறைந்தும் விடுகின்றன[76]. ஐதரசன் பிணைப்பு தூய எத்தனாலை தண்ணீர் உறிஞ்சி எத்தனாலாக மாற்றுகிறது. காற்றிலுள்ள நீரையும் எத்தனால் உறிஞ்சிக் கொள்கிறது. ஐதராக்சில் குழுவின் முனைவுத்தன்மை காரணமாக பல அயனிச் சேர்மங்களையும் எத்தனால் கரைத்துவிடுகிறது. சோடியம் மற்றும் பொட்டாசியம் ஐதராக்சைடுகள், மக்னீசியம் குளோரைடு, கால்சியம் குளோரைடு, அம்மோனியம் குளோரைடு, அம்மோனியம் புரோமைடு, மற்றும் சோடியம் புரோமைடு போன்ற சேர்மங்கள் எத்தனால் கரைக்கும் சில குறிப்பிட்ட சேர்மங்களாகும் [70]. சோடியம், பொட்டாசியம் குளோரைடுகள் எத்தனாலில் சிறிதளவு கரைகின்றன [70]. ஏனெனில் எத்தனால் மூலக்கூறின் முனைவற்ற முனை காரணமாக இது முனைவுத்தன்மையற்ற எண்ணெய் [77], சுவையூட்டிகள், நிறமூட்டிகள் போன்ற பொருட்களையும் கரைக்கிறது. எரிதன்மை எடையளவில் 40% ஆல்ககால் கலந்த எத்தனால் – தண்ணீர் கரைசலை 26° செல்சியசு வெப்பநிலைக்கு மேலாகச் சூடுபடுத்தினால் ஒரு தீப்பற்றும் மூலத்தின் மீது இக்கரைசல் தீப்பற்றி எரிகிறது. இவ்வெப்பநிலை தீப்பற்றும் வெப்பநிலை எனப்படுகிறது[78]. தூய்மையான எத்தனாலின் தீப்பற்றும் வெப்பநிலை 16.60° செல்சியசு வெப்பநிலையாகும். இது சராசரி அறை வெப்பநிலையைக் காட்டிலும் சற்று குறைவு ஆகும். எத்தனாலின் எடையும் தீப்பற்றும் வெப்பநிலையும்[79] ! எடை %!! வெப்பநிலை |- | 10% || 49°C (120°F) |- | 20% || 36°C (97°F) |- | 30% || 29°C (84°F) |- | 40% || 26°C (79°F) |- | 50% || 24°C (75°F) |- | 60% || 22°C (72°F) |- | 70% || 21°C (70°F) |- | 80% || 20°C (68°F) |- | 90% || 17°C (63°F) |- | 96% || 17°C (63°F) |}: இயற்கைத் தோற்றம் ஈசுட்டு நொதியால் நிகழும் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளில் உடன் விளைபொருளாக எத்தனால் தோன்றுகிறது. மிகக்கனிந்த பழங்களில் எத்தனால் காணப்படுகிறது [80]. பனை, தென்னை மரங்களிலிருந்து ஈசுட்டுகள் மூலம் தயாரிக்கப்படும் கள்ளு என்ற போதை பானத்திலும் மரச்சுண்டெலி போன்ற சிலவகை விலங்குகளிலும் எத்தனால் காணப்படுகிறது[81]. இயற்கையாகவே காற்றில்லா சூழலில் முளைக்கின்ற பல தாவரங்கள் எத்தனாலை உற்பத்தி செய்கின்றன[82]. விண்வெளியில் விண்மீன்களிடை மேகத்திலும் எத்தனால் பனிப்போர்வையுடன் காணப்படுகிறது[83]. தயாரிப்பு எத்தி்லீனை நீரேற்றம் செய்யும் பெட்ரோ வேதிப்பொருட்கள் தயாரிப்பு முறையிலும். கரும்புச் சர்க்கரையுடன் ஈசுட்டு நொதியைச் சேர்த்து நொதித்தல் என்ற உயிரினச் செயல்முறையிலும் எத்தனால் தயாரிக்கப்படுகிறது [84]. ஊட்டு மூலப்பொருட்களின் விலையை அடிப்படையாக கொண்டே ஒரு குறிப்பிட்ட வகை தயாரிப்பு முறை சிறந்தது என கூறமுடியும். 1970 களில் அமெரிக்காவில் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் தயாரிப்பு முறை சிறந்ததாகவும், 1980 களில் சோளத்தை அடிப்படையாகக் கொண்ட உயிரினச் செயல்முறை சிறந்ததாகவும் கருதப்பட்டது [85]. தொழிற்சாலை ஊட்டு மூலப்பொருளான எத்தனால் அல்லது எத்தனால் கரைப்பான் அல்லது செயற்கை எத்தனால் என்றழைக்கப்படும் எத்தனால், பெட்ரோவேதியியல் ஊட்டு மூலப்பொருளான எத்திலீனை அமில வினையூக்கியின் முன்னிலையில் நீரேற்றம் செய்து தயாரிக்கப்படுகிறது. C2H4 + H2O → CH3CH2OH பொதுவாக இவ்வகை வினைகளில் பாசுபாரிக் அமிலம் வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகின்றது [86] 1947 இல் செல் ஆயில் நிறுவனம் இம்முறையில் எத்தனாலை தயாரித்தது [87]. உயர் அழுத்தத்தில் 300° செல்சியசு நீராவி வெப்பத்தில் 1.0:0.6 நீராவி, எத்திலீன் விகிதத்தில் இவ்வினை மேற்கொள்ளப்படுகிறது[88][89]. அமெரிக்காவில் யூனியன் கார்பைடு நிறுவனம்[90] மற்றும் சில நிறுவனங்கள் இம்முறையைப் பயன்படுத்தின. தற்பொழுது லையோந்தெல்பேசல் நிறுவனம் மட்டும் இம்முறையில் எத்தனால் தயாரிக்கிறது. தற்காலத்தில் எத்திலீன் அடர் கந்தக அமிலத்துடன் வினைப்படுத்தப்பட்டு எத்தில் சல்பேட்டு தயாரிக்கப்படுகிறது. பின்னர் இது நீராற்பகுப்பு முறையில் மறைமுகமாக நீரேற்றப்பட்டு எத்தனால் தயாரிக்கப்படுகிறது. கந்தக அமிலம் மீளுற்பத்தி செய்யப்படுகிறது[91]. C2H4 + H2SO4 → CH3CH2SO4H CH3CH2SO4H + H2O CH3CH2OH + H2SO4 மதுபானங்களில் காணப்படும் எத்தனால் நொதித்தல் முறையில் தயாரிக்கப்படுகிறது. சில வகை ஈசுட்டுகள் சர்க்கரையுடன் நொதித்தல் வினை புரிந்து எத்தனாலைக் கொடுக்கின்றன. கார்பனீராக்சைடு உடன் விளைபொருளாக உண்டாகிறது. C6H12O6 → 2 CH3CH2OH + 2 CO2 C12H22O11 + H2O → 4 CH3CH2OH + 4 CO2 பொருத்தமான வெப்பநிலையில் ஈசுட்டுகள் நொதித்தல் வினையில் ஈடுபட்டு ஆல்ககாலைக் கொடுக்கின்றன. பொதுவாக 35–40 °செல்சியசு வெப்பநிலையில் இவ்வினை நிகழ்கிறது. நொதித்தலுக்குத் தேவையான சர்க்கரை செல்லுலோசிலிருந்தும் கிடைக்கிறது. செல்லுலோசு தொழில்நுட்பத்தால் பல்வேறு விவசாயப்பொருட்கள் நொதித்தலுக்கான சர்க்கரை மூலங்களாக இனங்காணப்பட்டுள்ளன [92]. சோதனை எத்தனாலின் அடர்த்தியைக் கண்டறிய இரண்டு வகையான முறைகள் தொழிற்சாலைகளில் பின்பற்றப்படுகின்றன. 1. அகச்சிவப்பு எத்தனால் உணரி முறை. 2. நீரடர்த்திமானி காய்ச்சிவடித்தல் முறையில் தூய்மையாக்கல் பல்வேறு வழிமுறைகளில் தயாரிக்கப்படும் எத்தனால் நீருடன் கலந்த கலவையாகக் காணப்படுகிறது. எனவே எத்தனாலை தூய்மைப்படுத்த வேண்டியது கட்டாயமாகிறது. வளிமண்டல அழுத்தத்தில் எத்தனால் தண்ணிர் கலந்த கலவையை பின்னக் காய்ச்சிவடித்தல் முறையில் தூய்மையாக்கலாம். பென்சீன், வளைய எக்சேன், எப்டேன் போன்ற வேதிப்பொருட்களின் உதவியால் எத்தனாலில் உள்ள தண்ணீர் முற்றிலுமாக நீக்கப்படுகிறது. இவைதவிர வேறு பல முறைகளும் தூய்மையாக்கலுக்கு பயன்படுகின்றன. பொட்டாசியம் கார்பனேட்டு சேர்த்து உப்பாக்குதல் முறை. கார்பனீராக்சைடை நேரடி மின்வேதியியல் ஒடுக்கம் செய்தல் மீ உய்யப்பாய்ம பிரித்தெடுப்பு முறை சவ்வு ஒட்டு ஆவியாக்க முறை வடித்து உறைதல் முறை அழுத்தச் சுழல் பரப்பீர்த்தல் முறை [93] எத்தனால் தரங்கள் தூய எத்தனால் மற்றும் மதுபானங்கள் உளவியல் மருந்துகள் என்ற வகையில் வரிவிதிக்கப்படுகின்றன. ஆனால், எத்தனால் நுகர்வு என்பதைத்தாண்டி பல பயன்களைக் கொண்டுள்ளது. இந்த பயன்பாடுகளைக் கருதி வரி சுமை குறைக்கப்பட்டால், குடிக்க தகுதியற்றதாக எத்தனால் தயாரிக்கப்படும் போக்கு குறையும். கசப்புச்சுவை வேதிப்பொருளான தெனாட்டோனியம் பென்சோயேட்டு, மெத்தனால், நாப்தா, பிரிடின் போன்ற கசப்பு முகவர்கள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் ஆல்க்ககால் இயல்பு திரிந்த ஆல்ககால் எனப்படுகிறது [94][95]. தனி ஆல்ககால் அல்லது நீரற்ற ஆல்ககால் என்பது மிகக்குறைவான அளவு பகுதிப்பொருளாக தண்ணீர் கலந்திருக்கும் ஆல்ககாலைக் குறிக்கும். தண்ணிரின் அளவுக்கு ஏற்ப தரம் வெவ்வேறாக வழங்கப்படுகிறது. தண்ணீரை நீக்குவதற்காகச் சேர்க்கப்படும் பென்சீன் போன்ற பொருட்கள் இவ்வகை ஆல்ககாலுடன் சுவடளவுக்கு கலந்திருப்பதுண்டு [96]. மனிதப்பயன்பாட்டுக்கு இவ்வால்ககாலை பயன்படுத்தலாகாது. ஆனால் தொழிற்சாலைகளில் கரைப்பானாக, எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. புற ஊதா – கட்புல அலைமாலை ஓளி அளவியலில் எத்தனால் கரைப்பானாகப் பயன்படுகிறது [97]. தூய்மையான எத்தனாலின் தரமதிப்பு அமெரிக்காவில் 200 புள்ளிகளும் , ஐக்கிய இராச்சியத்தில் 175 பாகை புள்ளிகளும் தர அளவாக நிர்ணயம் செய்யப்பட்டு அளவிடப்படுகின்றன [98]. 96% எத்தனாலும் 4% தண்ணிரும் சேர்ந்த கலவை வடித்துப் பிரித்த சிபிரிட் எனப்படுகிறது. நீரற்ற ஆல்ககாலுக்கு மாற்றாக பலதுறைகளில் இதைப் பயன்படுத்துகிறார்கள் [99]. வினைகள் முதல்நிலை ஆல்ககாலாக எத்தனால் வகைப்படுத்தப்படுகிறது. அதாவது ஐதராக்சில் குழு இடம்பெற்றுள்ள கார்பனுடன் குறைந்தபட்சம் இரண்டு ஐதரசன் அணுக்கள் இணைக்கப்பட்டிருக்கும். பல எத்தனால் வினைகள் ஐதராக்சில் குழுவில் நிகழ்கின்றன. எசுத்தர் உருவாக்க வினை அமில வினையூக்கிகள் முன்னிலையில் எத்தனால் கார்பாக்சிலிக் அமிலங்களுடன் வினைபுரிந்து எத்தில் எசுத்தர்களையும் நீரையும் கொடுக்கிறது. RCOOH + HOCH2CH3 → RCOOCH2CH3 + H2O பெருமளவில் தொழில்முறையாக எசுத்தர்கள் இம்முறையில் தயாரிக்கப்பட்டு நீர் நீக்கப்படுகின்றன. எசுத்தர்கள் அமிலம் அல்லது காரம் முன்னிலையில் மீளவும் ஆல்ககாலாகவும் உப்பாகவும் மாறுகின்றன. இவ்வினை சோப்பாக்குதல் வினை எனப்படுகிறது. எத்தனால் கனிம அமிலங்களுடன் வினைபுரிந்தும் எசுத்தர்களை உருவாக்குகின்றன. எத்தனாலுடன் கந்தக மூவாக்சைடு சேர்த்து டை எத்தில் சல்பேட்டும், பாசுபரசு பென்டாக்சைடு சேர்த்து மூவெத்தில் பாசுபேட்டும் தயாரிக்கப்படுகின்றன. கரிமத் தொகுப்பு வினைகளில் டை எத்தில் சல்பேட்டு ஒரு எத்திலேற்றும் முகவராகப் பயன்படுகிறது. எத்தனாலுடன் சோடியம் நைட்ரைல் மற்றும் கந்தக அமிலம் சேர்த்து தயாரிக்கப்படும் எத்தில் நைட்ரைல் சிறுநீர்பெருக்கியாக பயனாகிறது. நீர் நீக்கவினை வலிமையான ஈரமுறிஞ்சிகளில் எத்தனால் சிறிதலவு நீரை இழந்து டை எத்தில் ஈதராகவும் பிற உடன் விளைபொருள்களையும் கொடுக்கிறது. 160 ° செல்சியசு வெப்பநிலைக்கு மேற்பட்டால் முழுமையான நீர் நீக்கம் நிகழ்ந்து எத்திலீன் உருவாகிறது. 2 CH3CH2OH → CH3CH2OCH2CH3 + H2O (120 °செல்சியசு) CH3CH2OH → H2C=CH2 + H2O (160 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல்) எரிதல் வினை முழுமையான எரிதலுக்கு எத்தனால் உட்பட்டால் கார்பனீராக்சைடும் தண்ணீரும் உருவாகின்றன. C2H5OH (l) + 3 O2 (g) → 2 CO2 (g) + 3 H2O (l); −ΔHc = 1371 கிலோயூல்/மோல்[100] = 29.8 கிலோயூல்/கிராம் = 327கிலோகலோரி/மோல் = 7.1கிலோகலோரி/கிராம் C2H5OH (நீ) + 3 O2 (வாயு) → 2 CO2 (வாயு) + 3 H2O (நீராவி); −ΔHc = 1236 கிலோயூல்/மோல் = 26.8 கியூ/கி = 295.4 kகலோரி/மோல் = 6.41 கிலோகலோரி/கிராம்[101] தன்வெப்பம் = 2.44 கிலோயூல்/(கிலோகிராம்•கெல்வின்) அமிலக்கார வேதியியல் எத்தனால் ஒரு நடுநிலை மூலக்கூறு ஆகும். இக்கரைசலின் pH குறியீட்டு எண் 7 ஆகும். சோடியம் போன்ற கார உலோகத்துடன் வினைபுரியச் செய்து இதை ஓர் ஈத்தாக்சைடு (CH3CH2O−) அயனியாக மாற்ரி இணை காரமாக்கலாம்[71] 2 CH3CH2OH + 2 Na → 2 CH3CH2ONa + H2. அல்லது மிகவலிமையான காரமான சோடியம் ஐதரைடுடன் வினைபுரியச் செய்யலாம். CH3CH2OH + NaH → CH3CH2ONa + H2 தண்ணீர் மற்றும் எத்தனாலின் அமிலத்தன்மை கிட்டத்தட்ட சமமாகும். இவற்றின் pKa மதிப்பு முறையே 15.7 மற்றும் 16 ஆகும். எனவே சோடியம் ஈத்தாக்சைடும், சோடியம் ஐதராக்சைடும் சமநிலையில் நெருக்கமாக ஒன்றுபட்டுள்ளன. CH3CH2OH + NaOH CH3CH2ONa + H2O ஆலசனேற்றம் எத்தில் ஆலைடுகளைத் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாக தொழிற்சாலைகளில் எத்தனால் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் அதற்கான வினைகளை விளக்கமுடியும். எத்தனால் ஐதரசன் ஆலைடுகளுடன் SN2 வினைபுரிந்து எத்தில் குளோரைடு, எத்தில் புரோமைடு போன்ற எத்தில் ஆலைடுகளை உருவாக்குகிறது. CH3CH2OH + HCl → CH3CH2Cl + H2O துத்தநாகக் குளோரைடு போன்ற வினையூக்கிகள் இவ்வகை வினைகளுக்கு அவசியமாகிறது [91]. கந்தக அமில வினையூக்கி HBr சேர்மத்திற்கு தேவைப்படுகிறது [91]. எத்தனாலுடன் ஆலசனேற்றும் முகவர்களான பாசுபரசு முப்புரோமைடு அல்லது தயோனைல் குளோரைடு போன்றவற்றை பயன்படுத்தியும் எத்தில் ஆலைடுகள் தயாரிக்கலாம் [71][91] CH3CH2OH + SOCl2 → CH3CH2Cl + SO2 + HCl. ஆலசன்களுடன் சேர்த்து காரத்தின் முன்னிலையில் சூடுபடுத்தினால் எத்தனால் அதனுடன் தொடர்புடைய ஆலோபார்ம்களைக் கொடுக்கிறது.(CHX3, இங்கு X = Cl, Br, I). இவ்வினை ஆலோபார்ம் வினை என்றழைக்கப்படுகிறது [102] குளோரினுடன் வினைபுரியும்போது இடைநிலை வேதிப்பொருளாக குளோரால் உண்டாகிறது. தண்ணிருடன் இது குளோரால் ஐதரைடாக உருவாகிறது:[103] 4 Cl2 + CH3CH2OH → CCl3CHO + 5 HCl CCl3CHO + H2O → CCl3C(OH)2H. ஆக்சிசனேற்றம் பயன்படுத்தப்படும் வினைப்பொருள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு எத்தனால் அசிட்டால்டிகைடாகவும் பின்னர் அசிட்டிக் அமிலமாகவும் ஆக்சிசனேற்றம் அடைகிறது[91]. தொழிற்சாலைகளில் அவ்வளவாக முக்கியத்துவம் பெறாத எத்தனால் ஆக்சிசனேற்றம் மனித உடலில் முக்கியத்துவம் பெறுகிறது. வரலாறு நொதித்தல் முறையில் எத்தனால் உற்பத்தி பண்டைய காலத்திலேயே மனிதர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது. எத்தனால் நுகர்வும் போதைப் பழக்கமும் பண்டைய காலத்தில் இருந்தே அறியப்படுகின்றன. எத்தனால் மதுபானங்களை போதை பொருளாக வரலாற்றுக்கு முந்தைய மனிதர்கள் முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவில் காணப்படும் 9,000 வயதான மட்பாண்டங்களின் உலர்ந்த எச்சங்களில் இதற்கான சான்றுகள் காணப்படுகின்றன[104]. தொடக்கக்கால கிரேக்கர்களும் அரேபியர்களும் காய்ச்சிவடித்தல் முறையை அறிந்துள்ளனர். பின்மத்திய கால மருத்துவப்பள்ளியில் 12 ஆம் நூற்றாண்டில் ஆல்ககால் உற்பத்தி செய்யப்பட்டதாக அறியப்படுகிறது[105]. தனி ஆல்ககாலைக் குறித்த செய்திகள் இரேமண்டு லுல் தெரிவித்துள்ளார்[105]. 1796 இல் செருமன்-உருசிய வேதியியலாளர் நீரற்ற காரத்தை பகுதியாக தூய்மையாக்கப்பட்ட எத்தனாலுடன் சேர்த்து தாழ் வெப்பநிலையில் காய்ச்சி வடித்து தூய எத்தனாலை தயாரித்துள்ளார்[106]. பிரெஞ்சு வேதியியலர் அந்துவான் இலவாசியே எத்தனாலை கார்பன், ஆக்சிசன், ஐதரசன் தனிமங்களின் சேர்மம் என்று விவரித்தார். 1807 இல் நிக்கோலசு தியோடர் எத்தனாலின் மூலக்கூற்று வாய்ப்பாட்டை உறுதிப்படுத்தினார்[107][108]. ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் எத்தனாலின் அமைப்பு வாய்ப்பாடு உறுதிப்பட்டது[109]. மைக்கேல் பாரடேவால் 1825 இல் எத்தனால் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது. நிலக்கரி வாயுவை கந்தக அமிலம் அதிக அளவில் ஈர்க்கிறது என்பதை இவர் தெரிவித்தார்[110] வினையில் விளைந்த கரைசலை இவர் பிரித்தானிய வேதியியலர், எத்தில் ஐதரசன் சல்பேட்டைக் கண்டறிந்த என்றி என்னெல்லிடம் கொடுத்தார்.[111] 1828 இல் எத்தில் ஐதரசன் சல்பேட்டு சிதைவடைதல் கண்டறியப்பட்டது[112][113] எத்திலீனில் இருந்து எத்தனால் தயாரிக்கும் முறை உறுதிப்படுத்தப்பட்டது. 1840 களில் விளக்கெரிக்க எத்தனால் பயன்படுத்தப்பட்டது[114]. வாகன எரிபொருளாக 1908 முதல் பயன்படத்தொடங்கியது[115]. எத்திலீனில் இருந்து தயாரிக்கப்பட்ட எத்தனால் தொழில்துறையில் பயன்படுத்தப்பட்டது[116]. நுகர்வு, நறுமணம், சுவை, வண்ணங்கள் மற்றும் மருந்துகள் உட்பட மனிதப் பயன்பாட்டிற்கு பரவலாக எத்தனால் பயன்படத்தொடங்கியது. . வேதியியலில் இது ஒரு கரைப்பான் மற்றும் மற்ற வேதிப்பொருட்கள் தயாரிப்பிற்கான மூலப்பொருள் ஆகும். வெப்பம், ஒளி, எரிபொருள் போன்ற ஒரு நீண்ட வரலாறு எத்தனாலுக்கு உண்டு. சமூகக் கலாச்சாரத்தில் போக்குவரத்து விபத்துகள் ஆய்வில், மக்கள் 41% மதுவுடன் தொடர்புடையவர்களாக இருக்கின்றனர் என கண்டறியப்பட்டுள்ளது[117]. பெருகிவரும் கார்விபத்துக்களுக்கும் ஓட்டுநரின் மதுப்பழக்கமே காரணமாக உள்ளது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது[118]. இரத்த ஆல்ககால் அளவு தொடர்பாக அமெரிக்காவில் பல்வேறு சட்டங்கள் பல இயற்றப்பட்டுள்ளன[119] மேற்கோள்கள் வெளி இணைப்புகள் at The Periodic Table of Videos (University of Nottingham) ethanol safety information chemical data on ethanol news and market data on ethanol futures Calculation of , , , of ethanol A look into the history of ethanol Kyoto Encyclopedia of Genes and Genomes signal transduction pathway: பகுப்பு:முதன்மை ஆல்ககால்கள் பகுப்பு:எரிபொருட்கள் பகுப்பு:ஆல்ககால் கரைப்பான்கள் பகுப்பு:வீட்டு வேதிப்பொருள்கள் பகுப்பு:ஆல்கனால்கள் பகுப்பு:மயக்க மருந்து பகுப்பு:தொற்றுநீக்கிகள் பகுப்பு:மனித வளர்சிதைப்பொருட்கள்
எத்தனாலின் மூலக்கூறு வாய்பாடு என்ன?
C2H5-OH
765
tamil
1a1654401
எண் (Number) என்பது எண்ணுதல், அளவிடுதல் மற்றும் சிட்டையிடுதலுக்குப் பயன்படும் ஒரு கணிதப் பொருளாகும். கணிதத்துறையில் பலவகையான எண்கள் உள்ளன. எண்களுக்கான இயல் எண்கள் (1, 2, 3, 4, ...) எண்களுக்கான அடிப்படை எடுத்துக்காட்டாகும்.[1] எண்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் குறியீடானது எண்ணுரு எனப்படும்.[2] மனிதன் தோன்றிய காலத்திலேயே அவன் கைவிரல்களை எண்ண எப்பொழுது தானே கற்றுக்கொண்டானோ அன்றே 'எண்' என்ற கருத்து உண்டானதாகக் கொள்ளலாம். எண்களின் கருத்து வளர்ச்சியே கணிதவியலின் தோற்றம் ஆகும். கணிதத்தில், பல நூற்றாண்டுகளாக பூச்சியம்[3] எதிர்ம எண்கள்,[4] விகிதமுறு எண்கள் ({{math|1/2, −2/3), மெய்யெண்கள்,[5] (√2]], π), சிக்கல் எண்கள் [6] [4] என எண்களின் தொகுப்பு நீட்சியடைந்தது. எண்கணிதத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், அடுக்கேற்றம் ஆகிய கணிதச் செயலிகளின் மூலம் எண்கள் கணிக்கிடப்படுகின்றன. எண் கோட்பாட்டில் எண்களின் பண்புகள் விளக்கப்படுகிறது. எண் என்ற கருத்துரு தொன்மக் காலம் தொட்டு தமிழர்களிடம் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப; இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" என்ற திருவள்ளுவர் குறளும், "எண் எழுத்து இகழேல்" என்ற ஒளவையார் கூற்றும் பழந்தமிழர் சிந்தனையில் எண்ணுக்கும், எழுத்துக்கும் தொன்றுதொட்டு தந்த முக்கியத்துவத்தை விளக்குகின்றன. வகைப்பாடு இயல் எண், மெய் எண் போன்ற எண் தொகுப்புகள் அல்லது கணங்களாக எண்கள் வகைப்படுத்தப்படுகின்றன.[7] எண்களின் முக்கிய வகைப்பாடுகள்: இயல் எண்கள் நடைமுறையில் மிகவும் பழக்கமான எண்கள், எண்ணுவதற்குப் பயன்படும் எண்கள் இயற்கை எண்களாகும். இவைகளை இயல் எண்கள் அல்லது இயலெண்கள் என்றும் குறிப்பிடலாம். இவை 1, 2, ... என்பன. இவ்வெண் தொகுதி (கணம்) N {\displaystyle \mathbf {N} } என்னும் சிறப்பெழுத்தால் கணிதத்தில் குறிக்கப்படுகின்றது. முழு எண்கள் இயல் எண்களுடன் பூச்சியம் மற்றும் எதிர்ம எண்களையும் (-1, -2, -3, ...) சேர்த்து, முழு எண்கள் கணம் அமைகிறது. இக்கணத்தின் குறியீடு ஆகும். முழு எண்கள் மூன்று வகைப்படும்: மிகை எண்கள் அல்லது நேர்ம எண்கள்: 1, 2, 3, ... பூச்சியம் அல்லது சூனியம்: 0 குறை எண்கள் அல்லது எதிர்ம எண்கள்: -1, -2, -3, ... இம்முழு எண்களின் கணம் இயல் எண்களின் கணமான N {\displaystyle \mathbf {N} } ஐ உள்ளடக்கியது. அதாவது விகிதமுறு எண்கள் அரை, கால், ஒன்றேமுக்கால் என்பன போன்று முழு எண்களால் ஆன விகிதங்களால் குறிப்பிடப்படுவன ஒரு வகுகோட்டின் மேலும் கீழுமாக முழு எண்களால் குறிப்பிடப்படும் வகுனி எண்கள் அல்லது விகிதமுறு எண்கள் (rational numbers) எனப்படும். இவை அரை கால், வீசம் போன்ற கீழ்வாய் எண்களாக அல்லது குறைஎண்களாக (பின்னங்கள், பிள்வங்கள்) இருக்கலாம், அல்லது 7/3, 21/6 என்பன போன்று ஒன்றின் மிகையான எண் அளவைக்குறிக்கும் எண்களாகவும் இருக்கலாம். இவ் வகுனி எண்கள் கணம் என்னும் எழுத்தால் குறிக்கப்படுகின்றது. இந்த விகிதமுறு கணம் முழு எண்களின் கணமான ஐ உள்ளடக்கியது. அதாவது Z ⊂ Q {\displaystyle \mathbf {Z} \subset \mathbf {Q} } . மெய்யெண்கள் எல்லா எண்களும் விகிதமுறு எண்களல்ல என்பது √ 2 {\displaystyle \surd {2}} முதலிய எண்களின் உதாரணம் கொண்டு கணித ஆய்வாளர்கள் கிரேக்க கணிதகாலத்திலிருந்தும், இந்துக்களின் சுல்வசூத்திர</b>ங்களிலிருந்தும் தெரிந்து வைத்திருந்தனர். ஆனால் என்ற விகிதமுறு எண்கள் கணத்தையும் உள்ளடக்கி ஒரு மிகப்பெரிய எண்கணம் R {\displaystyle \mathbf {R} } என்பதொன்று உண்டென்றும் அதுதான் நாம் வாழ்க்கையில் சந்திக்கும் எல்லா எண்களையும் உள்ளடக்கியது என்றும் மனிதன் ஐயமறத் தெரிந்துகொள்வதற்கு 19வதுநூற்றாண்டு வரையில் காத்திருக்கவேண்டியதாயிற்று. R {\displaystyle \mathbf {R} } என்றகணத்தின் உறுப்புகளுக்கு மெய் எண்கள் என்றும், உள்ளது உள்ளபடி இருப்பதால் உள்ளக எண்கள் என்றும் பெயர்கள் உண்டு. இதனில், விகிதமுறு எண்களை எடுத்துவிட்டால், இதர எண்கள் விகிதமுறா எண்கள் எனப்படும். விகிதமுறா எண்கள் இரண்டு வகைப்படும்: இயற்கணித எண்கள், விஞ்சிய எண்கள். கலப்பெண்கள்(Complex numbers) இதற்குமேலுள்ள எண்கணங்களெல்லாம் கணித இயலர்களின் படைப்புகளே. எடுத்துக்காட்டாக, செறிவெண்கள் (பலக்கெண், அல்லது சிக்கலெண் என்னும் ஒருவகை எண்களுக்குக் கணிதத்திலும் அதன் எல்லா பயன்பாடுகளிலும் முக்கிய இடமுண்டு. சிக்கலெண்களின் கணம் C {\displaystyle \mathbf {C} } என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது. ஒவ்வொரு சிக்கலெண்ணிலும் ஒரு உள்ளகப் பகுதியும் (மெய்ப்பகுதி) ஒரு அமைகணப் பகுதியும் (கற்பனைப் பகுதி) உண்டு. C {\displaystyle \mathbf {C} } இலுள்ள ஒவ்வொரு எண் z ம் a + ib என்ற உருவத்தில் இருக்கும். இங்கு a யும் b யும் மெய்யெண்கள். a க்கு z இன் உள்ளகப் பகுதி அல்லது மெய்ப்பகுதி என்றும் b க்கு z இன் அமைகணப் பகுதி அல்லது கற்பனைப் பகுதி என்றும் பெயர். இதில், i என்பது கற்பனை அலகு ஆகும். இவ்வெண் வகைகளின் தொடர்பு கீழே காட்டியவாறு உள்ளது: N ⊂ Z ⊂ Q ⊂ R ⊂ C {\displaystyle \mathbf {N} \subset \mathbf {Z} \subset \mathbf {Q} \subset \mathbf {R} \subset \mathbf {C} } பகா எண்கள் பகா எண் என்பது 1 மற்றும் அதே எண்ணைத் தவிர வேறு நேர் வகுத்திகள் இல்லாத, 1 ஐ விடப் பெரிய இயல் எண்ணாகும். 1 மற்றும் அதே எண்ணைத் தவிர வேறு வகுத்திகள் கொண்ட பிற இயல் எண்கள் (1 நீங்கலாக) கலப்பெண்கள் (composite numbers) என அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இயல் எண் 11 ஒரு பகா எண். அதற்கு 1 ஐத் தவிர வேறு வகுத்திகள் இல்லை. இயல் எண் 6 ஒரு கலப்பெண். ஏனெனில் இதன் வகுத்திகள்: 1, 2, 3, 6. கணிதத்தில் மட்டுமல்லாது, அறிவியலைச் சார்ந்த மிகப்பல பிரிவுகளிலும், பகா எண் என்ற கருத்து எண்களைப் பற்றிய பற்பல உறவுகளில் பங்களிக்கிறது. எண் கோட்பாட்டில் பகா எண் முக்கிய பங்குவகிக்கிறது. எண்கள் தோன்றிய காலத்திலிருந்தே பகா எண் என்ற கருத்துள்ள பெயர் இருந்திருக்காவிட்டாலும், கருத்தளவில் அது மனிதனின் எண்ணத்தில் தோன்றியிருக்க வேண்டும் என்றும், அத்தோன்றலே அறிவியலின் தொடக்கம் என்ற கருத்தும் உள்ளது. பகா எண்களைப் பற்றிச் சில கருத்துக்கள் ஆய்வு செய்யப்பட முடியாமலே பல நூற்றாண்டுகள் சென்றபிறகு, தற்காலத்தில் கணினிகளின் உதவியால் அவை மீண்டும் பெரிய அளவிலே ஆய்வு செய்யப்பட்டு வெற்றியும் தந்து கொண்டிருக்கின்றது. இலக்கங்கள் இலக்கங்கள் அல்லது எண்ணுருக்கள் என்பவை எண்களிலிருந்து வேறுபட்டவை. இலக்கங்கள் எண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குறியீடுகளாகும். பல வகையான எண் முறையினங்கள் புழக்கத்தில் உள்ளன. முதன்முதலில் எகிப்தியர்கள் மறையீட்டு எண்ணுருக்களைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து கிரேக்கர்கள் எண்களை ஐயோனிய மற்றும் டோரிக் (Ionian and Doric) எழுத்துக்களோடு எண்களைத் தொடர்புபடுத்தினர்.[8] எழுத்துக்களின் சேர்ப்பாக அமைந்த ரோம என்ணுருக்கள், 14 ஆம் நூற்றாண்டின் பிற்காலத்தில் அராபிய எண்ணுருக்கள் அறிமுகமாகும் முன்னரான இடைக்காலம் வரை ஐரோப்பாவில் முக்கியப் பயன்பாட்டில் இருந்தது. அராபிய எண்ணுருக்களே இன்றுவரை உலகில் அதிகம் பயன்பாட்டில் உள்ளன.[9] கிட்டத்தட்ட கிபி 500 இல் பண்டைய இந்தியக் கணிதவியலாளர்களால் கண்டறியப்பட்ட பூச்சியத்தால் அராபிய எண்ணுருக்கள் அதிகப் பயனுள்ளதாக அமைந்தது.[9] காப்ரேகர் எண்கள் இந்தியக் கணிதவியலாளர் கப்ரேகர் கண்டுபிடித்த கப்ரேகர் எண்கள் என்பவை கணிதத்தில் குறிப்பிடத்தக்கவையாகும். எடுத்துக்காட்டாக, 703 என்பது ஒரு கப்ரேகர் எண்ணாகக் குறிப்பிடப்பெறுகிறது. இவ்வெண்ணின் சிறப்பியல்புகளாவது, இந்த எண்ணின் வர்க்கம், அதாவது இந்த எண்ணை இதே எண்ணால் பெருக்கிவரும் பெருக்கற்பலனை, இரு பகுதிகளாக வகைப்படுத்தி, அவ்விரு பகுதிகளின் கூட்டற்பலன் என்பது மூல எண்ணாக, அதாவது 703 ஆகவே அமையும். 703 X 703 = 494209 பெருக்கற்பலன் 494209 இன் இரு பகுதிகள் என்பவை 494 மற்றும் 209 இவ்விரு பகுதிகளின் கூட்டற்பலன்: 494 + 209 = 703 வரலாறு விலங்கின் எலும்புகளே முதலில் எண் முறைமைக்கு மானுடத்தால் பயன்படுத்தப்பட்டது.[10] வரலாற்றில் முதலில் மதிப்பாக எண்களைப் பயன்படுத்தியவர்கள் மெசொப்பொத்தேமியர்கள் ஆவர். இவர்கள் கி. மு. 3400 ஆண்டுகளின் வாக்கில் அறுபதின்ம எண் முறையைப் பயன்படுத்தினர். எகிப்தியர்கள் கி. மு. 3100 ஆண்டுகளின் வாக்கில் பதின்ம எண் முறையைப் பயன்படுத்தினர்.[11] பாபிலோனியர்களும், எகிப்தியர்களும் சுழியத்தை (0) சொல்லாகவும் இந்தியர்கள் சுழியத்தை சூன்யம் என்ற சொல்லாகவும் பயன்படுத்தினர்.[12] எதிர்ம எண்கள் கிமு 100 முதல் கிமு 50 வரையிலான காலக்கட்டங்களில் சீனாவில் எதிர்மறை எண்களின் சுருக்கத் தொகுப்புகள் உணரப்பட்டன. ஒன்பது இயல்களை உள்ளடக்கிய கணிதக் கலை நூலில் எண்களைக் குறிக்க பல்வேறு வழிமுறைகள் கையாளப்பட்டுள்ளன. நேர்ம எண்களைக் குறிப்பிட சிவப்புக் கோல்கள் பயன்படுத்தப்பட்டன. கருமையான கோல்கள் எதிர்ம எண்களைக் குறிப்பிடுவதற்கு பயன்பட்டன.[13] மேற்கத்தியப் பயன்பாட்டில் இவ்வெண்கள் பற்றிய முதல் குறிப்புகள் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் கிரேக்க நாட்டில் காணப்பட்டன. தைபோபாண்டசு (Diophantus) இன் அரித்மேட்டிகாவில் (Arithmetica) 4x + 20 = 0 என்கிற ஒரு சமன்பாட்டின் தீர்வாக எதிர்ம எண் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இச்சமன்பாடானது ஒரு அபத்தமான தீர்வை தந்தது என்றும் கூறியது. கி.பி. 600 காலக்கட்டங்களில் எதிர்ம எண்கள் இந்தியாவில் கடன்கள் குறித்த பிரதியாதலில் பயன்படுத்தப்பட்டன. கி.பி. 628 இல் இந்தியக் கணிதவியலாளரான பிரம்மகுப்தரின் ”பிராமசுபுத சித்தாந்தா” (Brāhmasphuṭasiddhānta) வானது, தைபோபாண்டசின் முந்தைய குறிப்புகள் பற்றி அதிக வெளிப்படைத்தன்மையுடன் விவாதித்தது. பிரம்மகுப்தர் எதிர்ம எண்களைப் பயன்படுத்தித் தோற்றுவித்த, பொதுவாக நான்கு பகுதிகளை உள்ளடக்கிய இருபடி வாய்ப்பாடு (Quadratic formula), தற்காலத்திலும் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. எனினும், இந்தியாவில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் பாசுகரர் என்பார் இருபடிச் சமன்பாடுகளுக்கான எதிர்ம மூலங்களை அளித்தார். மேலும் அவர் எதிர்ம மதிப்பானது எடுத்துக்கொள்ளப்படமாட்டாது எனவும் கூறினார். எதிர்ம மூலங்களின் போதாமையின் காரணமாக, மக்கள் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. ஐரோப்பியக் கணிதவியல் அறிஞர்களுள் பெரும்பாலோனோர் பதினேழாம் நூற்றாண்டு வரை, எதிர்ம எண்கள் பற்றிய கருத்தினை எதிர்த்தனர். இருந்தபோதிலும், பிபோனாச்சி (Fibonacci), நிதி சம்மந்தப்பட்ட பிரச்சினைகளில் எதிர்மத் தீர்வுகளை அனுமதித்தார். அங்கு, அவை முதலில் கடன்களாகக் ( Liber Abaci , 1202 இல் 13 ஆவது அத்தியாயம் ) கொள்ளப்பட்டன. அதன்பின்னர், நட்டங்களுக்குப் பதிலீடாகக் கருதப்பட்டன. அதேவேளையில், சீனர்கள், நேர்ம எண்களின் வலக்கோடி பூச்சியமற்ற எண்ணுருவின் ஊடாக மூலைவிட்டக் கோடு வரைந்து அந்த நேர்ம எண்களுக்குரிய எதிர்ம எண்களைக் குறிப்பிட்டனர்.[14] பதினைந்தாம் நூற்றாண்டில் நிக்கோலோ சூகுத் (Nicolas Chuquet) என்பவர், ஐரோப்பியக் கணிதச் செயற்பாடுகளில் முதன்முதலாக எதிர்ம எண்களின் பயன்பாட்டைக் கொண்டுவந்தார். அவ்வெண்களை அடுக்குகளாக (Exponents) உபயோகப்படுத்தினார். ஆனாலும், அவற்றை அபத்த எண்கள் (Absurd numbers) என்று குறிப்பிட்டார். விஞ்சிய எண்கள் விஞ்சிய எண்களின் இருப்பதை லியோவில் (Liouville) 1844, 1851 களில் முதன்முதலாக நிறுவினார். 1873 இல் கெர்மைத் (Hermite) என்பார், e ஒரு விஞ்சிய எண் என்று நிரூபித்தார். 1882 இல் லிண்டெமன் (Lindemann) என்பதை ஒரு விஞ்சிய எண் என நிரூபணம் செய்தார். முடிவாக, காண்டர் (Cantor) என்பவர், மெய் எண்களின் தொகுப்பை எண்ணுறா முடிவிலி (Uncountably infinite) கணம் என்று எடுத்துரைத்தார். ஆனால், இயற்கணித எண்களின் தொகுப்பை எண்ணுரு முடிவிலி (Countably infinite) எனக் குறிப்பிட்டார். ஆகவே, விஞ்சிய எண்கள் எண்ணுறா முடிவிலிகளாக உள்ளன. முடிவிலி முடிவிலி பற்றிய கணிதக் கருத்தானது, பண்டைய இந்திய வேதநூலான எசுர்வேதத்தில் குறிப்பிடப் பெற்றுள்ளது. அதில் எடுத்துரைக்கும் ஒரு கருத்தாவது, முடிவிலியிலிருந்து ஒரு பகுதியை அகற்றினாலோ, முடிவிலியில் ஒன்றை சேர்த்தாலோ முடிவிலியானது மாற்றம் அடையாது நீடித்திருக்கும் என்பதாகும். கி.மு. 400 இல் சமண சமய கணிதவியலாளர்களிடையே, அவர்தம் மெய்யியல் கல்வியின் குறிப்பிடத்தக்கப் பாடமாக முடிவிலி அமைந்திருந்தது. அவர்கள் முடிவிலியினை ஐந்து வகையாக வகைப்படுத்தியிருந்தனர். அவையாவன: ஒற்றை திசை முடிவிலி இரு திசை முடிவிலி பரப்பு முடிவிலி யாண்டு முடிவிலி நிலைத்த முடிவிலி இவற்றையும் பார்க்கவும் தமிழ் எண்கள் எண் அமைப்பு எண்களின் பட்டியல் கணித மாறிலிகள் ஒற்றை, இரட்டை எண்கள் பகா எண்கள் சிறிய எண்கள் பெரிய எண்கள் அளவு (எண்கள்) அடிப்படையிலான வரிசை பதினறும எண்கள் பல்வேறு மொழிகளில் எண்கள் எண்ணுருக்கள் (Numerals) விகிதமுறு எண்கள் விகிதமுறா எண்கள் hyperreal numbers surreal numbers p-adic numbers மேற்கோள்களும் குறிப்புகளும் வெளி இணைப்புகள் பகுப்பு:எண்கள் பகுப்பு:குலக்கோட்பாடு
எண் முறையை கண்டுபிடித்தவர் யார்?
மெசொப்பொத்தேமியர்கள்
6,711
tamil
d04864f4d
ரெயால் (; பிரேசிலிய போர்த்துக்கேயம்: ரெயாவ்; பன்மை ரெயாயிசு) பிரேசிலின் புழக்கத்திலுள்ள நாணயம் ஆகும். இதன் குறியீடு R$ மற்றும் ஐ.எசு.ஓ குறியீடு BRL ஆகும். ஒரு ரெயால் 100 சென்டவோசாக ("நூற்றிலொன்று") பகுக்கப்பட்டுள்ளது. இப்போது புழக்கத்திலிருக்கும் ரெயால் 1994 இல் பழைய நாணயத்திற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. முப்பதாண்டுகளாக வளர்ந்து வந்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த செயல்படுத்தப்பட்ட நிதி மேலாண்மை சீர்திருத்தத்தின் அங்கமாக புதிய நாணயம் வெளியிடப்பட்டது. அமெரிக்க டாலருக்கு இணையான நாணயமாற்று வீதத்தில் (1:1) வெளியிடப்பட்ட இந்தப் புதிய நாணயம் 1999இல் 2:1 ஆகவும் 2002இல் கிட்டத்தட்ட 4:1 ஆகவும் மதிப்பிறங்கியது. பின்னர் பொருளியல் வளர்ச்சியால் 2006இல் மீளவும் 2:1 நிலையை எட்டியது. திசம்பர் 31, 2013இல் நாணய மாற்றுவீதம் ஒரு அமெரிக்க டாலருக்கு 2.36 பிரேசிலிய ரெயாலாக இருந்தது. டாலரைப் போன்ற, இரட்டை நெடுங்கோடுகளை உடைய சிஃப்ரோ குறியீடு () மூலம் குறிக்கப்படுகிறது.[3] இருப்பினும் ஒருங்குறி இதனை எழுத்துரு வடிவத்தின் வேறுபாடாகவே கருதி தனி குறியீட்டை வழங்கவில்லை.[4] மேற்சான்றுகள் பகுப்பு:பிரேசில் பகுப்பு:நாணயங்கள்
பிரேசிலின் நாணயம் என்ன?
ரெயால்
0
tamil
b51909abb
அ. இர. ரகுமான் (அல்லா இரக்கா இரகுமான், பிறப்பு: ஜனவரி 6, 1966), புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார். மேலும் இத்திரைப்பட இசைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும் , பாஃப்டா விருதும் கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரேயாவார். இவருக்கு 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்ம பூசண் விருது அளிக்கப்பட்டது. இவர் ஆசியாவின் மொசார்ட் என்றும் அழைக்கப்படுகிறார்[1]. [2009] ஆம் ஆண்டு 81ஆம் ஆஸ்கார் விருதுகளுக்காக அமைத்த மாபெரும் மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று அவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திரச் சொல்லைப் பாடினார்.[2] 2017 ஆம் ஆண்டு இவருக்கு தமிழ் ரத்னா விருது வழங்கி அமெரிக்கா தமிழ் சங்கம் கவுரவித்துள்ளது.[3] வாழ்க்கைக் குறிப்பு ரகுமான் 1966 சனவரி 6 ஆம் திகதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். அருணாச்சலம் சேகர் திலீப் குமார் என்பது இவரது இயற்பெயர் ஆகும். இசையுலகப் பயணத்தை 1985 இல் ஆரம்பித்தார். இவரின் குடும்பம் இசை சார்ந்தது. இவரின் தந்தை சேகர் மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். அதன் பின் குடும்பத்தில் வருமானம் இல்லாத நிலையில் தன் தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்குவிட்டு அந்த வருமானத்தில் பியானோ, ஆர்மோனியம் மற்றும் கித்தார் வாசிக்கக் கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்டார். 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காகச் சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார். இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா, அமின் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். 1992 இல் தனது வீட்டிலேயே இசைக் கலையகத்தை அமைத்தார். இதே ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம், இவருடய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கித் தந்தது. பின்னர் 1997ல் மின்சாரக் கனவும், 2002 லகான் இந்தி படமும், 2003-இல் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் இவருக்குத் தேசிய விருதுகள் வாங்கித் தந்தன. முத்து திரைப்படம் சப்பானில் வெற்றி பெற்று, இவரது புகழ் உலகமெங்கும் பரவத் தொடங்கியது. 2012 இல் இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலேயே நவீன தொழில்நுட்ப ரெகார்டிங் ஸ்டுடியோவாக உள்ளது. இசையில் ஆரம்ப காலம் ரகுமான் தனது ஒன்பதாது வயதில் தந்தையை இழந்ததால், விளம்பரங்களுக்கு இசையமைத்தார். திரிலோக் மற்றும் சாரதா ஆகியோருடன் இணைந்து விளம்பரப் படங்களை இவர் தயாரித்தார். அதன் மூலம் ரகுமான் வெகுவாக அறியப்பட்டார். பூஸ்ட், ஏசியன் பெயின்ட்ஸ், ஏர்டெல், லியோ காபி ஆகிய 300க்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களுக்கு ரகுமான் இசையமைத்தார். படைப்புகள் திரைப்பட இசையமைப்புகள் குறிப்பு: "ஆண்டு", பன்மொழித் திரைப்படமாயின், எந்த மொழியில் அத்திரைப்படம் முதலில் வெளியானதோ, அந்த ஆண்டைக் குறிக்கும். பின் வரும் பிற மொழித் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்: 1993 யோதா (மலையாளம்) 1999 Return of the Thief of Baghdad (ஆங்கிலம்) 2003 Tian di ying xiong (சீன மொழி) 1999- பிஸா- ஹிந்தி) (ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைப்பு). திரைப்படமல்லாத இசையமைப்புகள் Return of the Thief of Baghdad (2003) தீன் இசை மாலை (1989) (திலீப் குமார் என்ற பெயரில்) செட் மீ ஃப்ரீ (1991) வந்தே மாதரம் (1997) ஜன கண மன (2000) பாம்பே ட்ரீம்ஸ் (2002) (இசை நாடகம்) இக்னைட்டட் மைன்ட்ஸ் (2003) (இசைத்தொகுப்பு வெளியிடப்படாத நேரடி இசை நிகழ்ச்சி) ராகாஸ் டான்ஸ்(2004) (வனேசா மே நடனத்திலிருந்து) இவர் பெற்ற விருதுகள் இசைத்துறையில் ஏ.ஆர். ரகுமானின் 20 ஆண்டுகாலப் பங்களிப்பைப் பெருமைப்படுத்தும் வகையில் அவருக்கு, அமெரிக்காவின் பெர்க்லீ இசைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க உள்ளது[4]. 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளருக்காகவும் சிறந்த பாடலுக்காகவும் ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் மொரீசியசு நாட்டின் விருது, மலேசிய விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது, தேசிய திரைப்பட விருது, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது, தமிழக அரசு திரைப்பட விருது (ஆறு முறை), பிலிம்பேர் விருது (13 முறை), பிலிம்பேர் சவுத் விருது (12 முறை - அதில் 9 முறை தொடர்ந்து பெற்றார்), ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது, 2009ஆம் ஆண்டு வெளியான "ஸ்லம்டாக் மில்லினியர்" படத்திற்காக கோல்டன் குளோப் விருது, பெப்டா விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார். மிடில்செக்ஸ் பல்கலைக்கழகமும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமும் வழங்கிய மதிப்புறு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். ரங் தே பசந்தி, லகான், சாத்தியா, தால் ஆகிய திரைப்படங்களுக்காக ஐ.ஐ.எஃப்.ஏ விருது பெற்றுள்ளார். சிகரமாக, இந்தியக் குடிமக்களுக்கான மூன்றாம் உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு இவருக்கு அளிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டில் இவருக்கு இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருதும் வழங்கப்பட்டது. ஸ்வரலயா யேசுதாஸ் விருது(2006), மத்தியப்பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது (2004) ஆகிய மாநில விருதுகளைப் பெற்றுள்ளார். ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகம் இவருக்கு உலகப் பங்களிப்புக்கான மதிப்புறு விருதை வழங்கியுள்ளது. இந்திய அணியின் நல்லெண்ணத் தூதர் ரியோ டி ஜனேரோ 2016 ஓலிம்பிக் விளையாட்டுக்கள் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்காக ஏ. ஆர். ரகுமான் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டார்.[5] மேற்கோள்கள் வெளி இணைப்புகள் at AllMusic at பில்போர்ட் (இதழ்) at IMDb NAMM Oral History Program (2013) பகுப்பு:ஏ. ஆர். ரகுமான் பகுப்பு:பத்ம பூசண் விருது பெற்ற தமிழர்கள் பகுப்பு:1966 பிறப்புகள் பகுப்பு:சென்னை நபர்கள் பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் பகுப்பு:1967 பிறப்புகள் பகுப்பு:வாழும் நபர்கள் பகுப்பு:பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள் பகுப்பு:இந்திய முஸ்லிம்கள் பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்
இந்திய இசைக்கலைஞர் ஏ.ஆர்.ரஹ்மான் எப்போது பிறந்தார்?
ஜனவரி 6, 1966
48
tamil
57a56c43f
மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் இயங்கும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல், சமிபாடு (செரிமானம்), இதயத்துடிப்பு, கொட்டாவி[1] போன்ற செயற்பாடுகளையும்,[2] விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மற்ற எல்லா உயிர்களையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது. மனிதனின் மூளை, மற்ற பாலூட்டிகளின் மூளையின் பொது வடிவத்தினை பலவாறு ஒத்திருப்பினும், அவற்றின் மூளைகளைக் காட்டிலும் உடல் எடை-மூளை அளவு விகிதத்தில் குறைந்தது ஐந்து மடங்கு பெரியது. இதற்குக் காரணம், மனித மூளையின் நன்கு விரிவடைந்த பெருமூளைப் புறணிப் (cerebral cortex) பகுதியாகும். நரம்பிழையத்தால் (neural tissue) உருவாகி, பல தொடர் மடிப்புகளை கொண்ட இப்பகுதி மனிதனின் முன்மூளையில் அமைந்துள்ளது. குறிப்பாக, பிற விலங்குகளில் இருந்து மனிதனைப் பிரித்துக்காட்டும் சிறப்பு செயல்பாடுகளான, தற்கட்டுப்பாடு, திட்டமிடல், பகுத்தறிதல், கற்றறிதல் ஆகியவற்றிக்குக் காரணமான மூளையின் முன் மடல்கள் மனித மூளையில் நன்கு விரிவடைந்து காணப்படுகின்றன. மேலும், கண் பார்வைக்குக் காரணமான பகுதியும் மனித மூளையில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது. மூளையின் படிவளர்ச்சியில், மிக முந்திய சிறிய பாலுட்டியான மூஞ்சூறில் இருந்து மனிதக் குரங்கு வழியாக உயர்நிலை விலங்கினங்களில் ஒன்றான மனிதன் வரை மூளை-உடல் அளவு விகிதம் படிப்படியாக உயர்ந்துள்ளது; இதை மூளைப் பருமனாக்கம் (encephalisation) என்று அழைக்கின்றனர். மனித மூளையில் உள்ள சுமார் 50–100 பில்லியன் (5000-10000 கோடி) நரம்பணுக்களில் (1011), சுமார் 10 பில்லியன் நரம்பணுக்கள் (1010) புறணிக் கோபுர உயிரணுக்கள் (cortical pyramidal cells) ஆகும். இவ்வுயிரணுக்கள் தமக்குள் சமிக்கைகளை (குறிகைகளை) அனுப்பி கொள்ள ஏறத்தாழ 100 டிரிலியன் (1014) நரம்பிணைப்புகளைப் பயன்படுத்துகின்றன. மனித மூளை, தடிப்பான மண்டையோட்டின் எலும்புகளாலும், மூளை முதுகுத் தண்டுநீர்மம் (cerebrospinal fluid) என்னும் நீர்மத்தாலும், அதிர்வுகளிலிருந்தும், வெளிச் சேதங்களிலிருந்தும், குருதி-மூளை வேலி (blood-brain barrier) என்னும் அமைப்பின் மூலம் இரத்த மண்டத்திலிருந்தும், இரத்தம் மூலம் பரவும் நோய்களில் இருந்தும் தீங்குறாமல் பெரிதும் பாதுகாக்கப்படுகிறது. ஆனாலும், அதன் மென்மையான தன்மையால் பல வகை நோய்களாலும், சேதங்களாலும் தீங்குகள் ஏற்படுவது தவிர்க்க இயலாதது. பொதுவாக மூளையில் ஏற்படும் சேதங்கள், உள் தலை காயங்கள் (closed head injuries) எனப்படும் வகையை சார்ந்த, தலையில் ஏற்படும் காயம், மூளையில் இரத்த தடை ஏற்படுவதால் ஏற்படும் பக்கவாதம் (stroke), நரம்பு நச்சுகள் (neurotoxin) எனப்படும் வேதியியல் நச்சுப் பொருட்களால் பாதிக்கப்படுதல் ஆகியன குறிப்பிடத் தக்கவை. மூளை தொற்றுநோய்களால் பாதிக்கப்படுவது மிக அரிதானது. ஏனெனில், இரத்த மண்டலத்தில் கலந்து உடல் உறுப்புக்களைத் தாக்கக் கூடிய பெரும்பாலான பாக்டீரியா கிருமிகளை, மனித மூளையில் குருதி-மூளை வேலி என்ற அமைப்பு வடிகட்டி விடுவதன் மூலம், மூளை தொற்றுநோய் நுண்ணுயிரிகளில் இருந்து பெரும்பாலும் பாதுகாக்கப் படுகிறது. இருப்பினும், மூளை பாக்டடீரியாவால் அரிதாக தாக்கப்படும் போது, பிறஒருளெதிரி (antibodies) மூலம் சிகிச்சை அளிப்பது மிக கடினமானதாகிறது. ஏனெனில் இதே குருதி-மூளை வேலி அமைப்பு நோய் எதிர்ப்பு மருந்துகளையும் தடுத்து நிறுத்தி விடுவதே காரணம். தீநுண்மம் (வைரசு) எளிதாக குருதி-மூளை வேலியை தாண்ட வல்லவை. இவை இரத்தத்தில் உள்ள வெண்குருதியணுக்களுடன் சேர்ந்து தாண்டுகின்றன. இவை தவிர பொதுவாகக் காணப்படும் பல மரபியல் நோய்களும் மூளையைத் தாக்க வல்லவை. அவற்றுள், நடுக்குவாதம் (பார்கின்சன் நோய்), உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமே நரம்பு மண்டலத்தை தாக்கும் மல்டிபிள் சுகுலோரோசிஸ் (multiple sclerosis) ஆகியவை முக்கியமானவை. உளவியல் நோய்களான உளச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை, மந்த அறிவு ஆகியவையும் மூளையில் ஏற்படும் மாற்றங்களால் தோன்றுகின்றன. அமைப்பு மாந்தரில் ஒரு சராசரி ஆணின் மூளை சுமார் 1.5 கிலோகிராம் எடையும்,[3] 1260 கன சென்டிமீட்டர் அளவும் உடையது. பெண்ணின் மூளை சுமார் 1130 கன சென்டிமீட்டர் (cc) அளவுடையது.[4] மனிதன் உயிருடன் இருக்கும்போது, மூளையின் வெளிப்பரப்பு அடர்த்தியான சாம்பல் நிறத்திலும், உள்நிறை மஞ்சள், வெள்ளை நிறமாகவும் காணப்படுகிறது. வலது புறத்தில் உள்ள புகைப்படத்தில் மூளையின் நடுவில் கிடைமட்ட குறுக்குவெட்டு தோற்றம் காட்டப்பட்டுள்ளது. இப்படத்தில் பெருமூளைப் புறணியையும் (மடிப்புகள் நிறைந்த பகுதி) வெண்பொருளையும் காணலாம். கோடிக்கணக்கான மயலின் உடைய நரம்பிழைகள் (myelinated fibre) வெண்பொருளையும், பெருமூளைப் புறணியையும் இணைக்கின்றன. 20 வயதான ஆணின் மூளையில் உள்ள மயலின் உடைய நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 176,000 கிலோமீட்டர். அதே வயதில் பெண்ணின் மூளையில் உள்ள மயலின் உடைய நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 149,000 கிலோமீட்டர்.[5] மூளையின் மேல் பகுதியில், மடிப்புகளை உடைய பெருமூளைப் புறணிப் பகுதி, இரண்டு அரைக் கோளங்களாக அமைந்திருப்பதால், அவை பெருமூளை அரைக்கோளங்கள் (cerebral hemispheres) என்று அறியப்படுகின்றன. இப்பகுதியே மூளையின் பெரிய பகுதி.[6] பெருமூளை அரைக்கோளங்களுக்குக் கீழே அவற்றை இணைத்தவாறு அமைந்துள்ள தண்டுப் பகுதி மூளைத்தண்டு என்று அழைக்கப்படுகிறது. மூளையின் பின்பகுதியில், பெருமூளைப் புறணிக்கு கீழே, மூளைத்தண்டிற்கு பின்பகுதியில் உள்ள பகுதி சிறுமூளை (cerebellum) என்று அறியப்படுகிறது. இப்பகுதியில் கிடைவாக்கில் வரிவரியான பள்ளம் போன்ற அமைப்பு உள்ளமையால், மூளையின் மற்ற பகுதிகளை விட தோற்றத்தில் மாறுபட்டதாக காணப்படுகிறது. மற்ற பாலூட்டி இனங்களிலும் காணப்படும் சிறுமூளை, மூளையின் சிறிய பகுதிகளில் ஒன்று. மேலும், பொதுவான விதியாக ஓர் உயிரினத்தின் சிறுமூளை எவ்வளவு சிறிதாக உள்ளதோ, அதே அளவு அதன் பெருமூளைப் புறணி பகுதி குறைந்த மடிப்புகளை கொண்டதாக இருக்கும். எலி, சுண்டெலியின் பெருமூளைப் புறணி பகுதி மடிப்புக்களே இன்றி வழுவழுப்பான பகுதியாக இருப்பது இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக அமையும். பாலூட்டிகளில் மிகப்பெரியதான திமிங்கலமும், ஓங்கிலும் (dolphin) மனிதனை விட மிக அதிகமான மடிப்புகளைப் பெருமூளைப் புறணிப் பகுதியில் கொண்டுள்ளன. மனித மூளையின் சிறப்பு வேறுபாடு மிகப் பெரிய அளவிலான பெருமூளைப் புறணிப் பகுதியாகும். மனிதனில் மிகப்பெரிதாக இருப்பதால் அது மூளையின் ஏனைய பகுதிகளை முழுவதும் மறைத்தவாறு காணப்படுகிறது. மனிதனின் சிறுமூளை மற்ற பாலூட்டிகளை விட அளவில் பெரியது. மனிதனின் பெருமூளைப் புறணி அளவில் மட்டுமல்லாது மூளையின் செயல் பாட்டிலும் பெரும் பங்கு வகிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு எலியின் பெருமூளைப் புறணிப் பகுதி அறுவை முறையில் அகற்றப்பட்ட நிலையிலும், அவ்வுயிரினத்தால் நடக்கவும், உண்ணவும், வெளிப்புற மாற்றங்களை உணரவும் இயலும். ஆனால் பெருமூளைப் புறணி பாதிப்படைந்த நிலையில் உள்ள ஓர் மனிதன், நிரந்தர ஆழ்மயக்க (coma) நிலைக்கு உட்படுவான். பெருமூளைப் புறணி தோராயமாக ஈடான வலது-இடது அரைக் கோளங்களாக பிரிக்கப்படுகிறது.உடற்கூறு வல்லுநர்கள் ஒவ்வொரு அரைக் கோளத்தையும் நான்கு மடல்களாக பிரிக்கின்றனர். அவையாவன, முன் மடல் (frontal lobe), சுவர் மடல் (parietal lobe), பக்க மடல் (temporal lobe), மற்றும் பிடரி மடல் (occipital lobe). இப்பிரிவுகளின் பெயர்கள் அப்பிரிவுகளின் அருகில் இருக்கும் மண்டையோட்டு எலும்புகளின் பெயருக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பெருமூளைப் புறணி பகுதி, ஓர் அகலமான பெரிய நரம்பணு இழைய விரிப்பை பல மடிப்புகளாக மடிப்பதன் மூலம் சுருக்கி குறுகிய மண்டையோட்டினுள் வைத்தது போன்ற வடிவத்தையுடையது. ஒவ்வொரு பெருமூளைப் புறணி அரைக்கோளத்தில் உள்ள நரம்பணு இழையத்தை மடிப்புகளை அகற்றி விரித்தால் அவற்றின் பரப்பளவு சுமார் 1.3 சதுர அடியாகும்.[7] உடற்கூறு வல்லுநர்கள் இத்தகைய மடிப்புகளால் ஏற்படும் பள்ளத்தை வரிப்பள்ளம் (sulcus) எனவும், ஒவ்வொரு வரிப்பள்ளத்துக்கும் இடையே உள்ள வழுவழுப்பான பகுதியை மடிமேடு (gyrus) எனவும் குறிப்பிடுகின்றனர். பொதுவாக எல்லா மனிதர்களின் மடிப்புகளும் ஏறத்தாழ ஒரே வடிவத்தைக் கொண்டிருப்பினும், வேறுபாடுகளை அறியத்தக்க அளவில் அவை வடிவத்திலும், மதிப்புகளின் அமைவிடத்திலும் சில மாறுதல்களைக் கொண்டு தனித்தன்மையுடன் விளங்குகின்றன. இருப்பினும், சில பெரிய மடிப்புகளை எல்லா மாந்தரிடமும் காண இயலும். பெருமூளைப் புறணியின் வெவ்வேறு பகுதிகள், வெவ்வேறான புலனறிவுத் திறன்களை (எ.கா, பார்த்தல், கேட்டல், உணர்தல்) கற்று ஆளும் திறனை பெற்றுள்ளன. இதனை பல்வேறு வழிகளின் மூலம் உறுதிப்படுத்த இயலும்: மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதி சேதமடைதல், ஒரு குறிப்பிட்ட புலனை மட்டுமே பாதித்தல், காந்த ஒத்ததிர்வு வரைவு (magnetic resonance imaging) நுட்பத்தின் சிறப்பு வரைவு முறையான வினைசார் காந்த ஒத்ததிர்வு வரைவு (functional magnetic resonance imaging அல்லது fMRI) மூலம் ஓர் குறிப்பிட்ட புலனையும் அதனை ஆளும் மூளையின் குறிப்பிட்ட பகுதியையும் அறிதல், பெருமூளைப் புறணியின் இழைய கட்டமைப்பை ஆராய்தல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. உடற்கூறு வல்லுனர்களின் கருத்துப்படி நுண்ணோக்கி துணை கொண்டு பெருமூளைப் புறணி இழையத்தை சுமார் 6 அடுக்குகளாக பிரிக்க இயலும். ஆயினும், பெருமூளையின் அனைத்து இடங்களிலும் இவ்வடுக்குகளை பிரித்துக் காண இயலாது. பல உடற்கூறு வல்லுனர்கள் புறணியில் உள்ள இவ்வடுக்குகளை வரைபடமாக குறித்துள்ளனர். இவர்களில் முதன்மையானவராக அறியப்படும் பிராட்மேன் மூளையின் பல்வேறு பாகங்களை 52 பிரிவுகளாக குறித்துள்ளார். (பின்னாளில் உடற்கூறு வல்லுநர்கள் அதனை மேலும் பல உட்பிரிவுகளாக பிர்த்துள்ளனர்). இடவிளக்கவியல் இயக்கப் புறணி முதன்மை இயக்கப் புறணி (primary motor cortex) என்ற பட்டையான நரம்பு இழையம் படத்தில் காட்டியுள்ளபடி நடு வரிப்பள்ளத்தின் (central sulcus) முன்புற ஓரத்தில் அமைந்துள்ள ஒரு இயக்கப் புறணி (motor cortex) ஆகும். இயக்கப் புறணிகள் உடம்பில் உள்ள, மனிதனின் விருப்பத்துக்கேற்ப இயங்கக் கூடிய தசைகளுக்கு ஆணைகளை அனுப்பி கட்டுப்படுத்தும் பகுதிகளாகும். வலது புறத்தில் உள்ள வரைபடம் மூலம் மூளையின் இயக்கப் புறணிகளில் ஒன்றான முதன்மை இயக்கப் புறணியில், உடம்பில் உள்ள பாகங்களின் இயக்க கட்டுப்பாட்டு பகுதிகளை வரிசை முறையே ஒழுங்கு படுத்தி இருப்பதை அறிய முடிகிறது. அதாவது, முதலில் கால் பாதம், அதை தொடர்ந்து கால்கள், தொடை, அடிவயிறு என்று உடம்பில் பாகங்கள் எவ்வரிசையில் அமைந்துள்ளனவோ, அதே வரிசையில் மூளையிலும் அவற்றின் கட்டுப்பாட்டு பகுதிகள் அமைக்கப் பட்டுள்ளன. புறணியின் ஒரு பகுதியை மின்கிளர்ச்சியூட்டினால், அப்பகுதி கட்டுப்படுத்தும் உடல் உறுப்பின் தசையில் இறுக்கம் ஏற்படுவதையும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். ஆயினும், ஒவ்வொரு உறுப்பும் வெவ்வேறு அளவு புறணி நரம்பிழையத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக,மனிதனின் தலையில் உள்ள உறுப்புகளை கட்டுப்படுத்தும் புறணி நரம்பிழையம், முதுகினை கட்டுப்படுத்தும் புறணி நரம்பிழையத்தை விட மூன்று மடங்கு அளவில் பெரிது. எந்த அளவு ஒரு உடல் உறுப்பினை கட்டுப்படுத்தும் புறணி நரம்பிழையம் செரிவுமிக்கதாக (பெரிய அளவினை உடையதாக) அமைந்துள்ளதோ, அதே அளவு அவ்வுறுப்பின் இயக்க கட்டுப்பாடும், புலன் பாகுபடுத்தி அறியும் திறனும் அமையும். இக்காரணத்தால், மனிதனின் உதடு, நாக்கு, விரல்கள், முக தசைகள் ஆகிய அவயங்கள் சிறிதாக இருப்பினும் பல நுண்ணிய செயல்பாடுகளை ஆற்றுவதால் ( எ.கா, நாக்கு,உதடு - பேசுதல்) அவற்றைக் குறிக்கும் புறணி நரம்பிழையத்தின் அளவு பெரிதாக அமைந்துள்ளது. பார்வைப் புறணி மனிதனின் பார்வைக்கான புறணி நரம்பிழைய அமைப்புகள், கண்ணின் பின்புறம் அமைந்துள்ள விழித்திரையின் (retina) அமைப்பினை ஒத்துள்ளன. மனிதனின் கண்ணை வந்தடையும் ஒளியினை சமிக்கைகளாக மாற்றும் விழித்திரையின் ஒவ்வொரு நரம்பணுவும், இப்பகுதியில் சில புறணி நரம்பணுக்களால் குறிக்கப்படுகின்றன. அதிலும், விழித்திரையின் நடுவில் உள்ள நரம்பணுக்களுக்கு (பார்வையின் நடுவில் இருக்கும் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில்) விழித்திரையின் ஓரத்தில் உள்ள நரம்பணுக்களை விட அதிக அளவு பார்வை புறணி நரம்பணுக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பெருமூளைப் புறணியில் உள்ள பார்வைப் புறணியில் (visual cortex) விழித்திரையினில் விழும் ஒரு காட்சியின் தோற்றங்களை பல்வேறு கோணங்களில் ஆராய நூற்றுக்கணக்கான வெவ்வேறு விழித்திரை ஒப்புருவ வரைவுகள் (retinotopic maps) உள்ளன. இவற்றின் மூலம் ஒரு தோற்றம், ஒரே நேரத்தில் பல கோணங்களில் ஆராயப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப் படுகிறது. முதன்மைப் பார்வைப் புறணி (primary visual cortex) (பிராட்மேன் வகைப்பாட்டில் 17வது பகுதி), கண்ணில் இருந்து வரும் நரம்பு சமிக்கைகளை முன்மூளை உள்ளறை (thalamus) வழியே நேரடியாகப் பெறுகிறது. இப்பகுதி பெறப்பட்ட தோற்ற சமிக்கைகளில் உள்ள முக்கிய சிறப்பியல்புகளை (visual feature) எளிதாக பிரித்தெடுக்க வல்லது. முன்மூளை உள்ளறை முன்மூளையில் உள்ள கோள வடிவிலான, சாம்பல் நிற பொருளாலான, இரண்டு பெரிய அறைகளை குறிக்கும். இவை பெருமூளைப் புறணிக்கு புலன்களில் இருந்து வரும் சமிக்கைகளை தம் வழியே அனுப்புகின்றன. காட்சியில் இருந்து பொருளின் நிறம், இயக்கம், வேகம், வடிவம் ஆகியவற்றை முதன்மைப் பார்வைப் புறணிக்கு அடுத்து ஆராயும் பார்வை புறணிகள் கண்டறிகின்றன. கேட்டல் புறணி கேட்டல் புலன் பகுதி, இடமகன்ற தொனியொழுங்கு முறையில் அமைக்கப்பட்ட ஒப்பு வரைவுகளைக் (tonotopic maps) கொண்டது. இடமகன்ற தொனியொழுங்கு முறை என்பது மனிதன் கேட்கும் ஒவ்வொரு மாறுபட்ட தொனியும் (ஒலி அதிர்வெண்ணும்), கேட்டல் புறணியின் வெவ்வேறு இடத்தை கிளர்ச்சி அடையச் செய்தல் ஆகும். சுருக்கமாக, தொனியின் அதிர்வெண்ணைக் கொண்டு, இடமகன்ற வெளியில் ஒழுங்கு படுத்துதல் என்ற பொருள்படும். கேட்டல் புறணியின் பல்வேறு பகுதிகளில் நிகழும் கிளர்ச்சிகளின் மொத்தக் கூட்டு தரும் இணைவுப் பொருத்தம் (combination) ஒரு சொல்லை உருவாக்கும். ஒலிகள் அவை தரும் அதிர்வெண்ணை (அதாவது, உச்ச சுருதி அல்லது தாழ்ந்த சுருதி) கொண்டே பிரித்துணரப் படுகின்றன. பார்வை அமையம் (visual system) போன்றே, கேட்டல் பகுதியிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடமகன்ற தொனியொழுங்கு முறையில் அமைக்கப்பட்ட புறணி ஒப்பு வரைவுகள் (tonotopic cortical maps) உள்ளன. ஒவ்வொரு ஒப்பு வரைவும் வெவ்வேறு வகையில் ஒலியினை ஆராய விழைகின்றன. வினை இடமறிதல் வினை இடமறிதல் என்பது மூளையின் ஒவ்வொரு கட்டுப்பாட்டு பகுதியையும், அது கட்டுப்படுத்தும் உறுப்பின் செயல்பாடுகளையும் கண்டறிந்து அவற்றை ஒன்றுடன் ஒன்று பொருத்துதல் எனலாம். பெருமூளையின் ஒவ்வொரு அரைக் கோளமும், உடம்பின் ஒரு பாகத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும், வலது பக்க மூளை உடம்பின் இடப்பக்க உறுப்புகளையும், இடப்பக்க மூளை உடம்பின் வலப்பக்க உறுப்புகளையும் கட்டுப்படுத்துவது குறிப்பிடத்தக்கது. இதே முறையிலேயே, மூளைக்கும், முதுகுத் தண்டுக்கும் இடையே உள்ள இயக்க இணைப்புகளும் (motor connections), புலன் இணைப்புகளும் (sensory connections), மூளைத்தண்டின் நடுப்பகுதியில், வலது இடதாகவும், இடது வலமாகவும் இடம் மாறுகின்றன. கலைச் சொற்கள் frontal lobe - முன் மடல் parietal lobe -சுவர் மடல் temporal lobe -பக்க மடல் occipital lobe -பிடரி மடல் cerebellum - சிறுமூளை cerebral hemispheres - பெருமூளை அரைக்கோளங்கள் cerebral - பெருமூளை cortex - புறணி (புறத்தே இருப்பதால் புறணி) cerebral cortex - பெருமூளைப் புறணி nerve tissue - நரம்பிழையம் myelinated fiber - மயலின் உடைய நரம்பிழை white matter - வெண் பொருள் grey matter - சாம்பல் நிறப் பொருள் closed head injuries - உள் தலை காயங்கள் brain stem - மூளைத்தண்டு coma - ஆழ்மயக்கம் sulcus -வரிப்பள்ளம் gyrus -மடிமேடு functional magnetic resonance imaging அல்லது fMRI - வினைசார் காந்த ஒத்ததிர்வு வரைவு primary motor cortex- முதன்மை இயக்கப் புறணி thalamus - முன்மூளை உள்ளறை hypothalamus - முன்மூளை கீழுள்ளறை இவற்றையும் பார்க்கவும் உடல் உறுப்புக்கள் மனித மண்டையோடு முள்ளந்தண்டு மேற்கோள்கள் மேலும் படிக்க Unknown parameter |coauthors= ignored (|author= suggested) (help) Unknown parameter |coauthors= ignored (|author= suggested) (help) Unknown parameter |coauthors= ignored (|author= suggested) (help) Unknown parameter |coauthors= ignored (|author= suggested) (help) Unknown parameter |coauthors= ignored (|author= suggested) (help); Cite journal requires |journal= (help) Simon, Seymour (1999). The Brain. HarperTrophy. ISBN 0-688-17060-9 Thompson, Richard F. (இரண்டாயிரம்.The Brain: An Introduction to Neuroscience. Worth Publishers. ISBN 0-7167-3226-2 Campbell, Neil A. and Jane B. Reece. 2005<i data-parsoid='{"dsr":[19468,19479,2,2]}'>Biology. Benjamin Cummings. ISBN 0-8053-7171-0 வெளி இணைப்புகள் ScienceDaily – an article by Hans Moravec — Provided by New Scientist. About differences between female and male brains. பகுப்பு:மூளை பகுப்பு:நரம்பியல் பகுப்பு:விலங்கின உடற்கூற்றியல் en:Human brain
மூளையின் மிகப்பெரிய பகுதி எது?
பெருமூளை அரைக்கோளங்கள்
4,429
tamil
1a1d3f58e
அமேசான் ஆறு (Amazon River) (இலங்கை வழக்கு: அமேசன் ஆறு   பொதுவாக சுருக்கமாக அமேசான் (US: /ˈæməzɒn/ or UK: /ˈæməzən/; Spanish மற்றும் Portuguese: Amazonas) தென் அமெரிக்க கண்டத்திலுள்ள ஒரு ஆறாகும். இது உலகின் இரண்டு நீளமான ஆறுகளில் ஒன்று. மற்றொன்று நைல் ஆறு. அமேசான் ஆறு கொணரும் நீரின் அளவில் உலகின் பெரிய ஆறாகும்.   மற்றும் சில ஆசிரியர்களின் கூற்றின்படி, உலகின் நீண்ட ஆறாகும். இதன் அளவு மிசிசிப்பி, நைல், மற்றும் யாங்சே ஆகிய நதிகளின் மொத்த அளவை விட அதிகம். இதன் நீளம் 6400 கி.மீ.கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறாகும். இதன் மொத்த அளவு அடுத்த எட்டு பெரிய ஆறுகளின் நன்னீரின் அளவை விட அதிகமாகும். இந்த ஆற்றின் ஓட்டம் பலமுறை மாறியுள்ளது. முதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த இந்த ஆறு அண்டெஸ் மலையின் வளர்ச்சியினால் கிழக்கு நோக்கிப் பாய்கிறது. அமேசான் ஆறு எந்த இடத்திலும் பாலம் மூலமாக கடக்கப்படுவதில்லை. இதற்கு காரணம் இதன் அகலம் அல்ல, தற்கால பொறியாளர்களால் இதன் குறுக்கே பாலம் கட்டமுடியும். எனினும் ஆற்றின் பெரும் பகுதி வெப்பமண்டல மழைக்காடுகள் வழியாக பாய்வதாலும் அங்கு சில நகரங்களே உள்ளதாலும் பாலத்தின் தேவை ஏற்படவில்லை. பல்வேறு அளவைகளின் படி அமேசான் ஆறே உலகில் பெரியதாக இருந்தாலும் நீளத்தை பொறுத்தமட்டில் இது நைல் ஆற்றைவிட சிறிது குறைவு என்பது பெரும்பாலான புவியிலாளர்களின் கணிப்பு. எனினும் இதை பிரேசில் மற்றும் பெரு நாட்டை சேர்ந்த சில அறிவியலாளர்கள் ஏற்க மறுக்கிறார்கள். இந்த ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு ஏறத்தாழ ஒரு விநாடிக்கு 209,000 கன மீட்டர்—தோராயமாக ஆண்டுக்கு 6,591 கியூபிக் கிலோமீட்டர் ஆகும், இது இதற்கடுத்த ஏழு மிகப்பெரிய ஆறுகள் வெளியேற்றும் ஆறுகளைவிட கூடுதலாக உள்ளது- உலகின் ஆற்றில் கலக்கும் மொத்த ஆறுகளின் நீரில் அமேசானின் பங்கு 20% ஆகும்.[1]  அமேசான் கால்வாய் உலகின் மிகப்பெரிய வடிகால் பகுதி ஆகும், இது சுமார் 7,050,000 சதுர கிலோமீட்டர் (2,720,000 சதுர மைல்) பரப்பளவில் உள்ளது. அமேசான் பாயும் நாடுகள் இதன் தலைத் துணை ஆறுகளின் உருவாக்கம் பெரு, எக்குவடோர் நாடுகளில் இருந்தாலும், இதன் பெரும்பாலான ஆற்று படுக்கை பகுதி பிரேசில் நாட்டில் அமைந்துள்ளது.Đ அமேசான் ஆறு ஆயிரத்திற்கும் மிகுதியான துணையாறுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் 17 ஆறுகள் 1000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டன. வடிநிலம் அமேசானின் வடிகால் பகுதியே உலகின் மிகப்பெரியதாகும். இது தோராயமாக தென் அமெரிக்காவின் பரப்பில் 40 விழுக்காடு ஆகும். இதன் ஒரு நீர்பிடிப்பு பகுதி உள் ஆண்டிய மேட்டுநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி பசிபிக் பெருங்கடலுக்கு அருகில் உள்ளது. அமேசான் ஆறினால் அட்லாண்டிக் பெருங்கடலில் சேரும் நீரின் அளவு மிக அதிகமாகும். மழைக்காலத்தில் வினாடிக்கு 300,000 கன மீட்டர் அளவு வரை நீர்வரத்தும் 1973-1990 வரையான காலப்பகுதியில் தோராயமாக 209,000 கன மீட்டர் அளவும் நீர்வரத்து இருந்தது. அமேசான் வடிநிலமானது தென் அமெரிக்காவின் மற்றொரு பெரிய ஆறான ஓரினோகோவின் வடிநிலத்துடன் காசிகியுயர் கால்வாய் மூலம் இணைக்கப்படுகிறது. அதனால் இதை இயற்கையாக அமைந்த நீர் இணைப்பு என்பார்கள். கால்வாய் என்று சொன்னாலும் காசிகியுயர் என்பது மேல் ஓரினோ ஆற்றின் கிளை ஆறாகும். இது தெற்காக ஓடி அமேசானின் துணை ஆறாகிய ரியோ நீக்ரோ ஆற்றுடன் கலக்கிறது. தோற்றம் பெரு, ஈக்வடார் நாடுகளில் அமேசான் ஆறு பல ஆற்றுத்தொகுதிகள் உடைய பெரிய ஆற்று அமைப்பாகும். பல நேரடியாக மரானான், உகயாலி போன்ற ஆறுகளில் கலக்கிறது. மரானா, பாஸ்டாச, நுகுரே போன்ற பல ஆறுகள் முதன்மை அமேசான் ஆற்றில் கலக்கின்றன. பெரு நாட்டின் ஆண்டீய மலைத்தொடரில் உள்ள பனி மூடிய நவாடோ மிசிமி சிகரத்தின் பனிஏரியில் அமேசான் உருவாவதாக ௧௯௯௧, 20012007ம் ஆண்டுகளில் நிறுவப்பட்டது. இது டிடிகாகா ஏரிக்கு மேற்கிலும் லிமாவுக்கு தென் கிழக்கிலும் உள்ளது. நவாடோ மிசிமியிலிருந்து வரும் நீரானது குபிராடாஸ் கார்குசன்டா மற்றும் அபாசேடா ஆறுகளில் கலக்கிறது இவை உகயாலி ஆற்றின் துணை ஆறாகிய ரியோ அபுரிமாக் உடன் இணைகிறது. உகயாலி மரானான் உடன் இணைந்து முதன்மை அமேசான் ஆற்றை உருவாக்குகிறது. இந்த இடத்தையே பெரும்பாலான புவியியலாளர்கள் முதன்மை அமேசான் உருவாகும் இடமாக கருதுகிறார்கள். இங்குள்ள ஆற்றை பிரேசிலில் சோலிமோஸ் டாஸ் ஆகுஅஸ் என அழைக்கிறார்கள். ஆயிரம் மைல்கள் கடந்த பின் கரிய நிறமுடைய நீரினை உடைய ரியோ நீக்ரோ மண் நிறமுடைய அமேசானுடன் இணைகிறது. ஆறு மைல் வரையில் இரண்டும் கலக்காமல் அடுத்தடுத்து ஓடுகின்றன. வெள்ளம் அனைத்து அமேசான் துணை ஆறுகளிலும் ஓரே சமயத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதில்லை. பெரும்பாலானவற்றில் நவம்பர் மாதத்தில் வெள்ளம் ஏற்படத்துவங்கி ஜூன் வரை நீடிக்கும். ரியோ நீக்ரோவில் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் வெள்ளம் ஏற்பட துவங்கி ஜூன் மாத வாக்கில் வெள்ளம் குறையத்தொடங்கும். மெடிரிரா மற்ற அமேசான் துணை ஆறுகளில் வெள்ளம் ஏற்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே வெள்ளம் ஏற்பட்டு குறையந்துவிடும். மழைக்காலத்தில் ஆற்றின் ஆழம் சராசரியாக 40 அடியாகும். முதன்மை ஆறு தோராயமாக ஒன்று முதல் ஆறு மைல் அகலம் உடையது. பெரிய கடலில் செல்லும் கலங்கள் இதில் மனவுஸ் வரை செல்லலாம். சிறிய 3000 டன் அல்லது 9000 டன் எடையுடைய கலங்கள் மற்றும் கலத்தின் கீழ் பாகம் நீர் நிலையிலிருந்து 18 அடி வரை இருந்தால் அவை ஆற்றில் 3600 கிமீ வரை செல்லலாம். கழிமுகம் இதன் கழிமுகத்தின் அகலம் தொடர்பாக நிபுணர்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது அதற்கு காரணம் கழிமுகத்தின் புவியியல் அமைப்பாகும். பாரா ஆறு அமேசானுடன் சேர்த்து கணக்கிடப்படுகிறது. சில முறை பாரா ஆறு டோகன்டின்ஸ் (Tocantins) ஆற்றின் தனிப்பட்ட கீழ் பகுதியாக கணக்கிடப்படுகிறது., தனிப்பட்ட பாரா ஆற்றின் கழிமுகம் பெரியதாகும். பாரா மற்றும் அமேசான் ஆறுகள் பல்வேறு ஆற்று கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு இடையில் மரஜா (Marajó)தீவு அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுவிட்சர்லாந்து நாட்டு அளவுக்கு பெரியதாகும். காட்டு உயிர்கள் உலகின் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு அமேசான் காடுகளில் வசிக்கின்றன. அமேசான் ஆற்றுப்படுகையும் மழைக்காடுகளும் 5.4 மில்லியன் சதுர கி.மீ (2.1 மில்லியன் சதுர மைல்) க்கும் மேலானதாகும். அமேசான் ஆற்றில் 3,000 க்கும் அதிகமான மீன் வகைகள் கண்டறியப்பட்டுள்ளது. அமேசான் ஆற்று டால்பின் அமேசான் மற்றும் ஒரினோகோ ஆற்றுப் பகுதியில் வசிக்கிறது. இதுவே ஆற்று டால்பின் வகைகளில் மிகப்பெரியதாகும். இது ௦௦ அடி வரை வளரக்கூடியது. இங்கு அதிகளவில் பிரன்கா என்ற மீன் வகை காணப்படுகிறது. இவை கூட்டமாக வாழும். இவை மாடு, மான் போன்ற உயிரினங்களை தாக்ககூடியவை. மனிதர்களும் தாக்கப்பட்டுள்ளார்கள். எனினும் சில வகை பிரன்காக்களை மனிதர்களை தாக்குகின்றன. குறிப்பாக சிவப்பு வயிற்று பிரான்கா மனிதரை தாக்கும் வகையாகும். அனகோண்டா வகை பாம்புகள் அமேசான் படுகையின் கரையில் காணப்படுகிறது. இது பெரிய பாம்பினங்களில் ஒன்றாகும். இவை பெரும்பாலும் நீரிலேயே வாழ்கின்றன. இதன் மூக்கு பகுதி மட்டும் நீர் மட்டத்துக்கு வெளியே இருக்கும். அமேசான் மழைக்காடுகள் முதன்மைக் கட்டுரை: அமேசான் மழைக்காடு அண்டெஸ் மலைத்தொடரின் கிழக்கில் இருந்து அமேசான் மழைக்காடு தொடங்குகிறது. இதுவே உலகின் மிகப்பெரிய மழைக்காடும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். இது உலகில் வெளியடப்படும் கார்பன்-டை-ஆக்சைடு வளியை பெருமளவில் உட்கொள்ளும் திறன் வாய்ந்தது. இந்த மழைக்காடுகளைக் காப்பது இந்நாட்களில் முக்கிய விடயமாக இருக்கிறது. மிகவும் ஈரப்பதம் கொண்ட அமேசான் படுகை இம்மழைக்காடுகளுக்கு அரணாக விளங்குகிறது. இப்பகுதியில் அமேசான் ஆறும் இதன் நூற்றுக்கணக்கான துணையாறுகளும் மிகவும் மெதுவாக ஓடி பின் கடலில் கலக்கின்றன. உயிரியல் வளம் மிக்க இம்மழைக்காடு, 25 இலட்சம் வகையான பூச்சியினங்களுக்கும் ஆயிரக்கணக்கான தாவர வகைகளுக்கும் ஏறத்தாழ இரண்டாயிரம் பறவைகள், பாலூட்டிகள் ஆகியவற்றிற்கும் இருப்பிடமாக விளங்குகிறது. உலகின் மொத்தப் பறவையினங்களில் ஐந்தில் ஒரு பகுதி இக்காடுகளில் வசிக்கின்றன. அமேசான் காடுகள் பெரும்பாலும் பிரேசில் நாட்டில் அமைந்துள்ளதால், அந்நாடு உல்கிலே உருசியாவிற்கு அடுத்த இரண்டாவது பெரிய காடு வளத்தை (பரப்பளவில் 4,776,980 ச.கி.மீகள்)கொண்டதாக உள்ளது. மேற்கோள்கள் பகுப்பு:தென் அமெரிக்க ஆறுகள்
அமேசான் ஆற்றின் நீளம் என்ன?
6400 கி.மீ.கள்
466
tamil
e60195863
பிரமிடு (pyramid, Greek: πυραμίς pyramis[1]) என்பது பட்டைக்கூம்பு வடிவில் அமைந்த ஒரு கட்டிட அமைப்பு ஆகும். இதன் அடி பெரும்பாலும் சதுரமாக அமைந்திருக்கும். எனினும், இது முக்கோணம், வேறுவகைப் பல்கோணங்கள் ஆகிய வடிவங்களிலும் அமையலாம். இக் கட்டிடங்களின் நிறையில் பெரும் பகுதி அடிப்பகுதியில் அமைந்திருப்பதால், இவற்றின் புவியீர்ப்பு மையம் நிலத்துக்கு அண்மையில் அமைந்திருக்கும் இதனால், சில பழங்கால நாகரிக மக்கள் உறுதியான நினைவுச் சின்னங்களை அமைப்பதற்கு இந்த வடிவத்தைத் தேர்ந்தெடுத்தனர். பல ஆயிரம் ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய அமைப்புக்கள் பிரமிடுகளாகவே இருந்தன. முதலில் எகிப்தில் டாசுர் நக்குரோபோலிசில் உள்ள சிவப்புப் பிரமிட்டும், பின்னர் கூபுவின் பெரிய பிரமிடும் மிகப்பெரிய அமைப்புக்களாக இருந்தன. பழைய ஏழு உலக அதிசயங்களுள் இன்றும் நிலைத்திருப்பது கூபுவின் பெரிய பிரமிடு மட்டுமே. இது பெரும்பாலும் சுண்ணக்கல்லால் கட்டப்பட்டுள்ளது; சில உள்ளறைகள் சிவப்பு கிரானைட்டு கற்களால் ஆனவை. கட்டிடவியல் அதிசயம் எனப்படும் பெரி பிரமிடில் 2.5 tonnes (5,500lb) இலிருந்து 15 tonnes (33,000lb) வரை எடையுள்ள 1,300,000 கற்கள் கொண்டு 13 ஏக்கரா நிலப்பரபில் கட்டப்பட்டுள்ளது. இதன் அடி சதுரத்தின் ஒவ்வொரு பக்கமும் ஏறத்தாழ 230மீ (755அடி) நீளமுடையதாக உள்ளது.இதன் உயரம் கட்டப்பட்டபோது 146.5மீ (488அடி)யாக இருந்தது. ஆனால் உச்சியில் இருந்த வெண்ணிற துரா சுண்ணக்கற்கள் திருடப்பட்டு கெய்ரோவில் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டதால் இன்று இதன் உயரம் 137மீ (455அடி)யாக உள்ளது. இருப்பினும் இதுவே மிக உயரமான பிரமிடாக விளங்குகிறது. உலகில் கட்டப்பட்ட பிரமிடுக்களில், கனவளவு அடிப்படையில் மிகப் பெரியது மெக்சிக்கோவில் உள்ள சோலுலாவின் பெரிய பிரமிடு ஆகும். இப் பிரமிடு இன்னும் அகழப்பட்டு வருகின்றது. பிரமிடு வடிவிலான கட்டிடங்கள் எகிப்தியர், மாயர், சுமேரியர் உள்ளிட்ட பல பழம் நாகரிக மக்களால் அமைக்கப்பட்டன. பாரிசில் உள்ள லூவர் அருங்காட்சியகம் முன்பாகக் கண்ணாடியாலான பிரமிடு அமைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் நெவாடா மாநில லாஸ் வேகஸ் நகரில் லக்சர் ஓட்டல் எகிப்திய பிரமிடின் வடிவமைப்பில் கண்ணாடியால் கட்டப்பட்டுள்ளது. தொன்மையானக் கட்டிடங்கள் மெசொப்பொத்தேமியா மெசொப்பொத்தேமியர்கள் சிக்குரத்கள் எனப்பட்ட துவக்க கால பிரமிடுகளை முதன்முதலாகக் கட்டினர். இவை சூரிய வெப்பத்தில் உலர்ந்த செங்கற்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டமையால் அனைத்தும் அழிந்துபட்டன. இத்தகைய சிக்குரத்களை சுமேரியர்கள், பாபேலியர்கள், ஈலாமியர்கள், அக்காடியர்கள், மற்றும் அசிரியர்கள் அவரவர் பகுதிகளில் கட்டினர். எகிப்து எகிப்திய பிரமிடுகளே மிகவும் புகழ்பெற்றவையும் அறியப்பட்டவையும் ஆகும். செங்கல் அல்லது பாறைகளால் கட்டப்பட்ட இவற்றில் சில உலகின் மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றாக அமைந்தன. பெரும்பாலான பிரமிடுகளின் மேற்பரப்புகள் வெள்ளைநிற சுண்ணக்கற்களால் மிகவும் எதிரொளிக்குமாறு தீட்டப்பட்டிருந்தன. இதனால் தொலைவிலிருந்து பளபளப்புடன் காணப்பட்டன. முகட்டுக்கல் அல்லது சிகரம் மட்டும் கருங்கல் அல்லது எரிமலைப்பாறையால் ஆனதாகவும் தங்கம், வெள்ளி அல்லது தங்கம்,வெள்ளியின் கலப்பு உலோகத்தினால் பூசப்பட்டும் இருந்தது.[2] கி.மு 2700க்குப் பிறகு [3] கட்டத் துவங்கிய எகிப்தியர்கள் கி.மு 1700 வரை பிரமிடுகளைக் கட்டினர். மூன்றாம் வம்ச காலத்தில் யோசர் மன்னர் காலத்தில் ஆறு மஸ்தபாக்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி முதல் பிரமிடு ஒன்றை கட்டினர். எகிப்தின் பெரிய பிரமிடுகள் கிசா என்றவிடத்தில் உள்ளன. பெரும்பாலான பிரமிடுகள் நைல் ஆற்றின் மேற்குப் புறத்திலேயே கட்டப்பட்டன. 2008ஆம் ஆண்டுப்படி , இதுவரை 135 பிரமிடுகள் எகிப்தில் கண்டறியப்பட்டுள்ளன.[4][5] எகிப்தின் மிகப்பெரிய பிரமிடாகிய கிசாவின் பெரிய பிரமிட்டின் அடித்தளம் 52,600 square metres (566,000sqft) பரப்பளவில் அமைந்துள்ளது. இது பண்டைய உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது. முகட்டில் பதித்திருந்த சுண்ணக்கற்களும் கடற்சங்குகளும்[6] காலப்போக்கில் விழுந்துவிட்டன அல்லது திருடப்பட்டு கெய்ரோவில் கட்டிடங்களுக்குப் பயன்படுத்தப்பட்டன. பெரும்பாலான பிரமிடுகள் கெய்ரோவிற்கு அண்மையிலேயே உள்ளன.[7] சூடான் பிரமிடுகள் எகிப்துடனேயே அடையாளப்படுத்தப்பட்டாலும் உலகின் மிகக் கூடுதலான பிரமிடுகளை கொண்ட நாடாகச் சூடான் விளங்குகிறது. இங்கு 220 பிரமிடுகள் இன்றும் உள்ளன.[8] நுபியர்கள் சூடானின் மூன்றிடங்களில் இந்த 220 பிரமிடுகளை அமைத்துள்ளனர். நாப்பட்டா மற்றும் மெரோ அரசர்/அரசிகளின் கல்லறைக் கட்டிடங்களாக இவற்றைக் கட்டினர். இவை எகிப்திய பிரமிடுகளிலிருந்து மாறுபட்டுள்ளன. அவற்றைவிட நுபியப் பிரமிட்கள் செங்குத்தான கோணங்களில் அமைக்கப்பட்டுள்ளன.[9] சூடானில் கிமு 300 வரை பிரமிடுகள் கட்டப்பட்டு வந்தன. நைஜீரியா அபுஜாவில் சுடெ பிரமிடுகளை அங்கு வாழ்ந்த குபோ நாகரிகத்தின் கூறாகக் காணலாம். களிமண்ணால் கட்டப்பட்ட பத்து பிரமிடுகள் இங்குள்ளன. முதல் கட்ட அடிப்பகுதி 60 அடி சுற்றளவையும் 3 அடி உயரத்தையும் கொண்டுள்ளது. அடுத்தப்படியில் 45 அடி சுற்றளவில் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறான அடுக்குகள் வட்டவடிவ ஒன்றன்மேல் ஒன்றாக மேல்வரை கட்டப்பட்டுள்ளன. இவை கடவுளரின் இருப்பிடமாகவும் சிகரத்தில் அவர்கள் வசிப்பதாகவும் நம்பப்பட்டது. இதன் அடையாளமாக ஒரு கம்பு அங்கு நடப்பட்டிருந்தது. இவை ஐந்து குழுக்களாக ஒன்றுக்கொன்று இணையாகக் கட்டப்பட்டன. இவை களிமண்ணால் கட்டப்பட்டமையால் அவ்வப்போது மீளுருவாக்கம் செய்ய வேண்டியிருந்தது.[10] கிரீசு கிமு இரண்டாம் நூற்றாண்டின் புவியியலாளர் பவுசானியாசு பிரமிடுகளை ஒத்த இரு கட்டிடங்களைக் குறிப்பிடுகிறார்; இவற்றில் ஒன்று ஹெலனிக்கோன் நகரிலிருந்து 19 கிமீ (12 மைல்) தொலைவில் தென்மேற்கே இருந்ததாகவும்[11] அர்கோசு ஆட்சிக்காகப் போராடிய போர்வீரர்களின் நினைவாக இவை கட்டப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவை இரண்டுமே பிரமிடுகளை ஒத்து இருந்ததற்கான எந்தவொரு சான்றும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. இன்றளவும் காணக்கிடைக்கின்ற இரு பிரமிடு போன்ற இரு கட்டிடங்கள் ஹெலனிக்கோனிலும் லிகுரியோவிலும் உள்ளன. இவை சாய்வான சுவர்களைக் கொண்டிருந்தாலும் எவ்வகையிலும் எகிப்திய பிரமிடுகளை ஒத்திருக்கவில்லை. இவற்றின் உள்ளே பெரிய அறைகள் உள்ளன. ஹெலனிக்கோனிலுள்ள பிரமிடின் அடித்தளம் சதுரமாக இல்லாது செவ்வகமாக,12.5x14மீ, உள்ளது; இதனால் இதன் பக்கவாட்டுச் சுவர்கள் ஒரு புள்ளியில் சந்தித்திருக்க முடிந்திருக்காது.[12] இந்தியாவில் சோழர்கள் காலத்தில் தென்னிந்தியாவில் கருங்கற்களால் கட்டப்பட்ட பிரமிடு வடிவ கோபுரங்களுடன் கூடிய பல பெரும் கோவில்கள் இன்றும் சமயப் பயன்பாட்டில் உள்ளன. தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் சிறீரங்கம் வட்டத்திலுள்ள அரங்கநாதசுவாமி கோயில் ஆகியன இவற்றில் சிலவாம். 11ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பிரகதீசுவரர் கோவில் யுனெசுகோவால் உலகப் பாரம்பரியக் களமாக 1987இல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விரிவாக்கமாக 2004 ஆம் ஆண்டு கங்கை கொண்ட சோழபுரம் கோயிலும் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலும் இணைக்கப்பட்டன.[13] இந்தோனேசியா இந்தோனேசியாவின் ஆத்திரேலேசிய பாறைக் கட்டமைப்பு பண்பாட்டில் குத்துக்கல், கல் மேடைகள், கற்சிலைகளுக்கு அடுத்ததாகப் புந்தென் பெருந்தக் எனப்பட்ட மண்,கற்களாலான அடுக்கு பிரமிடு கட்டமைப்புகள் இருந்தன. இவை மேற்கு சாவாவின் குனுங் படாங் பகுதியிலும் சிசுலோக் பங்குயங்கன் பகுதிகளிலும் காண்டறியப்பட்டன. மலைகளிலும் உயர்ந்த இடங்களிலும் மூதாதையரின் ஆவி வாழ்வதாக உள்ளூர் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே இக்கற்கட்டிடங்கள் கட்டப்பட்டன. மத்திய சாவாவில் உள்ள போரோபுதூரில் 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த சமய பிரமிடு ஒன்று உள்ளது. பிந்தையக் கால சாவா கட்டமைப்புக்கள் இந்திய கட்டிடக்கலையின் தாக்கத்துடன் கட்டப்பட்டன. காட்சிக்கூடம் காப்ராவின் பிரமிடு ஷயோயெயோ கல்லறை, குஃபு, சீன மக்கள் குடியரசு இசுடாக்போர்ட் பிரமிடு, ஐக்கிய இராச்சியம் கார்லசுருஹே பிரமிடு, செருமனி அரெனா பிரமிடு , மெம்பிசு ஹனோய், வியட்நாமில் உள்ள ஹனோய் அருங்காட்சியகத்தில் தலைகீழானதொரு பிரமிடு. மெடைய்ரி செமட்ரி, நியூ ஓர்லென்ஸ் சும்மம் பிரமிடு, சால்ட் லேக் நகரம், யூட்டா சபர் பிளாசா அங்காடி மையம், புர்சா, துருக்கி சிலோவாக்கிய வானொலி கட்டிடம், பிராத்திஸ்லாவா, சிலோவாக்கியா. கசன் முற்றுகைக்கான நினைவுச்சின்னம், கசன், உருசியா. "பிரமிடு" பண்பாட்டு-மனமகிழ்வு வளாகம் கசன், உருசியா. மேற்சான்றுகள் உசாத்துணைகள் Patricia Blackwell Gary and Richard Talcott, "Stargazing in Ancient Egypt," Astronomy, June 2006, pp.62–67. Fagan, Garrett. "Archaeological Fantasies." RoutledgeFalmer. 2006 பகுப்பு:கட்டிடங்கள் பகுப்பு:பிரமிடுகள்
உலகின் மிகப்பெரிய பிரமிடு எந்த நாட்டில் உள்ளது?
எகிப்தில்
559
tamil
765b2de64
சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) (பிப்ரவரி 12, 1809 - ஏப்ரல் 19, 1882) ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை[1] ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.[2][3] இது மிகவும் புகழ் பெற்ற ஒரு புரட்சி ஏற்படுத்திய நூல். இவர் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன. மனித இனம் குரங்கு இனத்தோடு தொடர்பு கொண்டது என்று இவர் அஞ்சாமல் கூறிய கருத்துக்கள், அன்று இவரைப் பலர் எள்ளி நகையாட வைத்தது. எனினும், இவருடைய கருத்துக்கள் இன்று அறிவியல் உலகில் பெரு மதிப்புடையவை.[4] இவரே மனிதன், குரங்கிலிருந்து பரிணமித்தவன், உலகில் விலங்குகள் மற்றும் உயிரினங்களில் வளர்ச்சி என்பது, 'தக்கன பிழைக்கும்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது,[5][6] அதாவது தகுதியானது உயிர் வாழும் என்றதன் அடிப்படையில் அமைந்தது என்பன போன்ற புதிய அறிவியல் கோட்பாடுகளைக் கண்டறிந்தவராவர்.[7] இளமை டார்வின் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் நாள் இங்கிலாந்தில் உள்ள சுரூஸ்பெரி (Shrewsbury) எனுமிடத்தில் பிறந்தார்.[8] அவரது தந்தையார் ராபர்ட் டார்வின் ஒரு மருத்துவர்; அவரது பாட்டனாரும் ஒரு மருத்துவரே. டார்வின் மிக இளம் வயதிலேயே தன் அன்னையை இழந்து விட்டார். சுரூஸ்பெரியில் தொடக்கக்கல்வியைக் கற்றார்.[9] சிறு வயது முதற் கொண்டே விலங்குகள், புழு பூச்சிகள் ஆகியன மீது அவர் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். தன்னைப் போன்று மகன் சார்லஸும் மருத்துவராக வரவேண்டும் என்று அவரது தந்தையார் விரும்பி எடின்பரோ பல்கலைக்கழகத்தில் மகனைச் சேர்த்தார்; ஆனால் இயற்கையியல் துறையிலும், நிலவியல் துறையிலும் சிறந்த மாணவராக விளங்கிய டார்வினுக்கு மருத்துவத் துறையில் நாட்டம் செல்லவில்லை.[10] சிறு வயதியிலிருந்தே டார்வினுக்கு புழு, பூச்சிகள், விலங்குகள் ஆகியவற்றின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. எடின்பர்க் சென்ற பிறகும் அவர் கற்கள், செடிகள், புழு, பூச்சிகள் ஆகியவற்றை சேமிக்கத் தொடங்கினார்.[11] மருத்துவம் படித்துக்கொண்டிருந்தபோது ஒருமுறை ஒரு குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை நடப்பதைப் பார்க்க வேண்டிய கட்டாயம் டார்வினுக்கு ஏற்பட்டது. அப்போதெல்லாம் மயக்க மருந்தின்றி அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டதால் அந்தக் குழந்தை பட்ட வேதனையைக் கண்டும், கேட்டும் மருத்துவத்தின்மீது இருந்த ஆர்வத்தை இழந்தார். அவர் தந்தைக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அடுத்து அவரை இறையியல் பயிலுமாறு ஆலோசனை கூறினார். அதனை ஏற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் டார்வின்.[12] படிப்பில் சிறந்து விளங்கிய அவரது ஆர்வமெல்லாம் உயிரினங்களின் தோற்றம் பற்றிய ஆய்விலேயே மிகுந்திருந்தது. கடற்பயணம் தமது 22ஆம் வயதில் இறையியலில் (Theology) பட்டம் பெற்ற டார்வின் கிறித்தவத் திருச்சபையில் உறுப்பினராகச் சேரவும் மறுத்துவிட்டார். அப்போது அதே பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் பேராசிரியராக இருந்த ஜான் ஹென்ஸ்லோ (John Stevens Henslow) என்பவரிடம் நெருங்கிய நட்பு கொண்டார் டார்வின்.[13] சனவரி 1831 சாதாரண பட்ட இறுதிப் பரீட்சையில் அவர் சிறப்பாகச் செய்து, 178 பரீட்சார்த்திகளில் பத்தாவதாக வந்தார்.[14] அவர் மூலமாக கேப்டன் ராபர்ட் பிட்ஸ்ராய் (Robert FitzRoy) என்பவரின் நட்பு கிட்டியது. தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்ய HMS Beagle என்ற கப்பல் புறப்படவிருந்தது. கேப்டன் ராபர்ட் பிட்ஸ்ராயின் தலமையில் செல்லவிருந்த அந்தப் பயணத்தில் கலந்துகொள்ளுமாறு டார்வினுக்கு அழைப்பு வந்தது. அதனை ஏற்றுக்கொண்டு 1831-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி கேப்டன் பிட்ஸ்ராயும், டார்வினும் பயணத்தைத் தொடங்கினர்.[15] இரண்டாண்டுகளில் திரும்புவது என்ற முடிவோடு தங்கள் பயணத்தினைத் தொடங்கினர்.[16] ஆனால் ஐந்து ஆண்டுகள் நீடித்த அந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த பயணம்தான் பரிணாம வளர்ச்சிக் கொள்கை உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது.[5][17][18] அந்தப் பயணத்தைத் தொடங்கியபோது டார்வினுக்கு வயது 22. ஐந்து ஆண்டுகளில் அந்தக் கப்பல் உலகையே ஒரு வலம் வந்தது. இடரும், இன்னலும் மிகுந்த கடற்பயணத்தைச் சார்லஸ் டார்வின் மிகுந்த துணிச்சலுடன் மேற்கொண்டார். பயணத் துன்பத்தைப்பற்றிக் கவலைப்படாமல், தற்போது காணக்கிடைக்காத பல உயிரினங்களின் எலும்புகளை ஏராளமாகச் சேகரித்தார்.[17][19][20] ஊர்வன, பறப்பன, நடப்பன என்று எல்லா உயிரினங்களின் வாழ்க்கையும் இடத்துக்கிடம் ஒற்றுமையும், வேற்றுமையும் கொண்டிருப்பதைக் கண்டு டார்வின் வியப்படைந்தார்.[21] இத்தகைய ஒற்றுமை, வேற்றுமைகளைப் புரிந்துகொள்ள உயிரினங்கள் அனைத்தும் பொதுவான மூதாதையர்களின் வழித்தோன்றல்களா என்பதையும், மேலும் அவை தொடர்ச்சியான சிறு, சிறு மாற்றங்களோடு இன்றைய வளர்ச்சியைப் பெற்றுள்ளனவா என்பதையும் தெரிந்து கொள்வது இன்றியமையாதது என்று அவருக்குத் தோன்றியது.[22][23] “உயிரினங்களில் ஏற்படும் மாற்றங்கள் எப்படி, ஏன் ஏற்படுகின்றன?” என்ற வினாவிற்கு விடை காணும் ஆர்வம் டார்வினுக்கு ஏற்பட்டது. ஆய்வுப்பணிகள் இந்நாளில் காணவியலாத, மறைந்துவிட்ட உயிரினங்களையும், மற்றும் இப்போது உயிரோடிருக்கிற உயிரினங்களையும் அவற்றின் எலும்புகளின் துணைகொண்டு ஆய்வு செய்யும் முயற்சியில் டார்வின் ஈடுபட்டார். தான் சேகரித்த சில எலும்புகளுக்கு சொந்தமான விலங்குகள் முற்றாக அழிந்து போயிருக்கும் என்று முதலில் யூகித்தார். ஆனால் பின்னர் அந்த விலங்குகளிலிருந்துதான் தற்போதைய சிறிய அளவிலான விலங்குகள் தோன்றியிருக்க வேண்டும் என்று பகுத்தறிந்தார். கெலபகஸ் (Galapagos Island) தீவுகளில் புதிய வகையான பறவைகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றைக் கண்டு அதிசயித்தார். இவ்வாய்வின் பயனாக “பரிணாம வளர்ச்சிக் கொள்கை” முடிவுக்கு அவர் வந்தார்.[24][25] இப்படி பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, டார்வின் 1836-ஆம் ஆண்டு இங்கிலாந்து திரும்பினார்.[26][27][28] அமெரிக்கக் கடலோரப் பகுதி மற்றும் ஐரோப்பியத் தீவுகளில் பயணத்தை முடித்துக் கொண்டு வந்த டார்வின் ஐந்து ஆண்டுகளில் தான் சேகரித்த விபரங்களையும்,தமது கண்டுபிடிப்புகளையும் ஆய்வுக்கட்டுரையாக எழுதி The voyage of the Beagle என்ற நூலை லண்டனில் வெளியிட்டார்.[29][30] திருமணம் தமது 30-ஆவது வயதில் எம்மா வெட்ஜ்வுட் (Emma Wedgwood) என்ற உறவுக்காரப் பெண்ணை மணந்து கொண்டு [31] ஏழு பிள்ளைகளுக்கு தந்தையானார் டார்வின். திருமணத்திற்குப் பின்னரும், தமக்கு விருப்பமான இயற்கையியல் ஆய்வில் டார்வின் மிகுதியாக ஈடுபட்டார். அவரது குழந்தைகள் இடார்வீனின் குழந்தைகள் வாழ்நாள் வில்லியம் எராசுமசு இடார்வின்(27 திசம்பர் 1839 – 1914)அனே எலிசெபத் இடார்வின்(2 மார்ச்சு1841 – 23 1851)மேரி எலினார் இடார்வின்(23 செப்டம்பர்1842 – 16 அக்டோபர்1842)என்ரிட்டா எம்மா "எட்டீ" இடார்வின்(25 செப்டம்பர்1843–1929)சியார்சு ஓவர்டு இடார்வின்(9 சூலை 1845 – 7 திசம்பர்1912)எலிசெபத் "பெசி" இடார்வின்(8 சூலை 1847–1926)பிரான்சிசு இடார்வின்(16 ஆகத்து 1848 – 19 செப்டம்பர்1925)லியோனார்டு இடார்வின்(15 சனவரி1850 – 26 மார்ச்சு1943)ஓரேசு இடார்வின்(13 மே 1851 – 29 செப்டம்பர்1928)சார்லசு வாரிங் இடார்வின்(6 திசம்பர்1856 – 28 சூன் 1858) நூல்கள் சார்லஸ் டார்வினுக்கும், ஆல்பிரெட் ரஸ்ஸல் வாலஸ் என்ற மற்றொரு இயற்கையியல் அறிஞருக்கும் நட்பு உண்டாயிற்று. டார்வின் தாம் ஏற்கனவே அமெரிக்கக் கடற்கரையோரம் திரட்டிய சான்றுகளிலிருந்து உருவாக்கிய கொள்கைகளுக்கு மேலும் ஆதாரங்களைச் சேகரிப்பதில் நண்பருடன் சேர்ந்து ஈடுபட்டார்.[32] புதிய உயிரினங்கள் உருவாவதற்கான ஒழுங்கு மற்றும் விதிமுறைகள், அவ்வாறு உருவாகும் உயிரினங்களுள் சில பிரிவுகள் முழுமையாக மூல நிலையிலிருந்து மாறிவிடுவதற்கான போக்குகள் ஆகியவை பற்றிய ஆய்வுகளின் அடிப்படையில் டார்வின் தனது கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். பரிணாம வளர்ச்சிக் கொள்கை 1858ஆம் ஆண்டு ஜூலை முதல் நாள், மேற்கூறிய டார்வினின் கண்டுபிடிப்புகளும், அவரது நண்பர் வாலஸின் கட்டுரையும் லண்டன் லின்னன் கழகத்தில் (Linnean Society of London) வாசிக்கப்பட்டன. மேற்கொண்டு ஆய்வு செய்ததன் பயனாக டார்வினுக்குத் தோன்றியதே ‘பரிணாம வளர்ச்சிக் கொள்கை’ ஆகும். 1859 ஆம் ஆண்டு இக்கொள்கையை, டார்வின் உலகை வியப்பில் ஆழ்த்திய ஒரு புத்தகம் மூலம் வெளியிட்டார். "The Origin of Species by Natural Selection" அதாவது 'இயற்கைத் தேர்வு மூலமாக உயிரினங்களின் தோற்றம்' என்ற அந்த புத்தகம் கூறிய கொள்கைதான் பரிணாம வளர்ச்சிக் கொள்கை. அதன்படி உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியும், வலிமையும் உள்ளவை நிலைத்து நிற்கும். மற்றவை அழிந்துபோகும்."[5][33] இது புதிய இனங்களின் உருவாக்கத்திற்கு வழியேற்படுத்தும் என்று கூறினார் டார்வின்.[5][34] இக்கருத்துகளின் அடிப்படையிலேயே உயிரினங்களில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. டார்வினின் இக்கருத்துகள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன; வியப்போடும், ஆர்வத்தோடும் அவரது ஆய்வுகளை மக்கள் படித்தனர். இந்நிலவுலகில் வாழும் உயிரினங்களின் குறிப்பாக விலங்கினங்களின் பரிணாம வளர்ச்சியில் இயற்கையோடு ஒன்றிப்போகின்றவை பாதுகாப்போடு வாழ்வதையும், மற்றவை மறைந்து போவதையும் அறிந்து மக்கள் பெரிதும் வியப்படைந்தனர். ஆனால் அந்த சித்தாந்தத்தின் விளைவை உலகம் அப்போது உணரவில்லை. செடிகொடிகளுக்கும், விலங்குகளுக்கும் மட்டுமே அது பொருந்தும் என்றுதான் நம்பியது. டார்வின்கூட மனிதனைப் பற்றி புத்தகத்தில் எதுவும் குறிப்பிடவில்லை. பரிணாம வளர்ச்சிக் கொள்கை மனிதனுக்கும் பொருந்த வேண்டும் என்பதை உலகம் உணரத் தொடங்கியபோது நாம் குரங்கிலிருந்து பிறந்தோமா? என்ற கேள்வி எழுந்தது. டார்வின் அப்படி நேரடியாக சொன்னதில்லை நம்பியதுமில்லை. ஆனால் அறிவுப்பூர்வமாக சிந்தித்துப் பார்த்தால் அப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதத் தொடங்கினர். எதிர்பார்க்கப்பட்டது போலவே தேவாலயங்களின் கண்டனத்துக்கு உள்ளானது டார்வினின் கொளகை. அவர் வாழ்ந்த போதே அவரது நூல் உலகம் முழுவதும் பதிக்கப்பட்டது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இந்நூல் இன்றும் விவாதத்திற்குரிய, கருத்துமாறுபாடுகளுக்கு இடம்தரும் நூலாக இருக்கிறது. டார்வின் பரிணாம கோட்பாடு மூன்று அம்சங்களைக் கொண்டது. மாறுபாடு (எல்லா உயிரினங்களிலும் காணப்படுவது) மரபு வழி (ஒத்த உயிர் வடிவத்தை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்குஎடுத்துச் செல்லும் ஆற்றல்) உயிர் வாழ்தலுக்கானப் போராட்டம் (எந்தெந்த மாறுதல்கள் ஒரு குறிப்பிட்ட சூழலுக்குச் சாதகமாக இருக்கும் என்று கணித்து அதற்கேற்ப இனப்பெருக்க முறைகளை தீர்மானித்து உயிரினங்களில் மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்வது) இதைத்தான் இன்றைய நாகரீக, விஞ்ஞான உலகம் அதன் நீட்சியாக பரம்பரை மரபியல் குணங்களின் இயல்பினைப் பற்றி நமக்கு விளக்கம் தருகிறது. இதை 'நவீன டார்வினியம்' என்கிறார்கள். உயிர் வாழ்தலுக்கான போராட்டம் என்பது தனித்தனியான பொருளைப் பொறுத்தது மட்டுமல்ல; தன் இனத்தை உற்பத்தி செய்து, இனவிருத்தி செய்யும் (குணம்,உடல்வாகு, நிறம், திறமை, அறிவு இவையும் உள்ளடங்கும்) சக்தியைப் பொறுத்ததாகும் என்பது இன்றைய நவீன டார்வினியமாகும். பிற டார்வினின் கண்டுபிடிப்புகளைப் பற்றிய மற்ற நூல்கள் ‘மனிதனின் மரபுவழி’ மற்றும் ‘தாவரங்களின் இடம்பெயர்த் திறன்’ ஆகியனவாகும். மேலும் மண்ணின் வளத்திற்கும், பயிர் வளர்ப்புக்கும் முக்கிய காரணமாக விளங்குவது மண்ணில் வாழும் மண்புழுக்கள் என்பதையும் டார்வின் தெளிவுபடுத்தினார். அவருடைய நூலான “தாவர வளர்ச்சிக்குப் புழுக்களின் பங்கு” என்பது மண் ஆராய்ச்சியும், மண்புழுக்களின் ஆய்வும் ஒன்றோடொன்று எவ்வளவு தொடர்புடையன என்பதை விளக்குவதாகும்.[36] இறப்பு சார்லஸ் டார்வின் 1882ஆம் ஆண்டு ஏப்பிரல் 19ஆம் நாள் காலமானார். இங்கிலாந்தின் வெஸ்ட் மினிஸ்டர் அப்பேயில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.[37][38][39] ஊடகங்கள் இளைஞன் எம்மா (மனைவி) தலைமகனுடன் (33வயது) மகள் இறந்ததால், 1851-க்கு பிறகு அவர் கிறித்தவத் தேவாலயம் செல்வதை நிறுத்திவிட்டார். 46வயதில், 1855 1862-66 நோய்வாயில்.. 1874 1881 கேலிச் சித்திரம், 1871 கையெழுத்து, 1837 அவரது வீடு அவரது அறை அவரது சோதனைச்சாலையின் அருகில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி குறிப்புகளும் மேற்கோள்களும் வெளி இணைப்புகள் The Complete Works of Charles Darwin Online – ; Darwin's publications, private papers and bibliography, supplementary works including biographies, obituaries and reviews Full text and notes for complete correspondence to 1867, with summaries of all the rest ; public domain from LibriVox கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் in libraries (WorldCat catalog) , Natural History Museum – a short video discussing Darwin and Agassiz' coral reef formation debate (3 min 20 sec). – A 3 part drama-documentary exploring Charles Darwin and the significant contributions of his colleagues Joseph Hooker, Thomas Huxley and Alfred Russel Wallace also featuring interviews with ரிச்சர்ட் டாக்கின்சு, David Suzuki, Jared Diamond Account of the Beagle voyage using animation, in English from Centre national de la recherche scientifique CS1 maint: discouraged parameter (link) View books owned and annotated by at the online Biodiversity Heritage Library. பகுப்பு:மரபியலாளர்கள் பகுப்பு:பிரித்தானிய உயிரியலாளர்கள் பகுப்பு:1809 பிறப்புகள் பகுப்பு:1882 இறப்புகள் பகுப்பு:பரிணாம உயிரியல் பகுப்பு:உயிரியலாளர்கள் பகுப்பு:உயிரியல்
உயிரியலாளர் சார்லஸ் டார்வின் எப்போது பிறந்தார்?
பிப்ரவரி 12, 1809
50
tamil
c5fdb266d
தில்லி அல்லது டெல்லி (Delhi, இந்தி: दिल्ली, பஞ்சாபி: ਦਿੱਲੀ, உருது: دلی) இந்தியாவில் உள்ள இரண்டாம் மிகப்பெரிய மாநகரமாகும். இது தேசிய தலைநகரப் பகுதியில் உள்ள மூன்று நகரங்களுள் ஒன்றாகும். மற்ற இரண்டு நகரங்கள் புது தில்லி மற்றும் தில்லி கண்டோன்மென்ட் ஆகியனவாகும். இத் தேசிய தலைநகரப் பகுதி 11 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகின் எட்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகவும் விளங்குகிறது. இது நடுவண் அரசினால் நிர்வாகம் செய்யப்படுகின்றது. வட இந்தியாவில் உள்ள யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந் நகரம் நீண்ட காலம் தொடர்ச்சியாக மக்கள் குடியிருப்புப் பகுதியாக விளங்கி வருகின்றது. கி.மு. ஆறாம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் இருந்தே இப் பகுதியில் மக்கள் வாழ்ந்து வருவதற்கான தொல்லியல் சான்றுகள் காணப்படுகின்றன. தில்லி சுல்தானகத்தின் எழுச்சிக்குப் பின்னர், வடமேற்கு இந்தியாவுக்கும், சிந்து-கங்கைச் சமவெளிக்கும் இடையிலான வணிகப் பாதையில் அமைந்த முக்கியமான அரசியல், பண்பாட்டு வணிக நகரமாக இந் நகரம் உருவானது. இங்கே, பெருமளவிலான பழங்காலத்தைச் சேர்ந்தனவும், மத்திய காலத்தைச் சேர்ந்தனவுமான நினைவுச் சின்னங்களும், தொல்லியல் களங்களும் அமைந்துள்ளன. 1639 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசர் சாஜகான் மதிலால் சூழப்பட்ட நகரமொன்றை இங்கே அமைத்தார். இது 1649 தொடக்கம் 1857 ஆம் ஆண்டுவரை முகலாயப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது. 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின்னர், கல்கத்தாவே (இன்றைய கொல்கத்தா) அவர்களது தலைமையிடமாக இருந்தது. கம்பனியின் ஆட்சியிலும் பின்னர் சில காலம் பிரித்தானிய அரசின் கீழும் இந்நிலை நீடித்தது. 1911 ஆம் ஆண்டில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் தலைநகரத்தை தில்லிக்கே மாற்றும் அறிவிப்பை விடுத்தார். 1920களில், பழைய தில்லி நகருக்குத் தெற்கே புது தில்லி எனப் பெயர்பெற்ற புதிய தலைநகரம் அமைக்கப்பட்டது. 1947ல் இந்தியா விடுதலை பெற்ற பின்னர் இதுவே தலைநகராகவும், அரசின் இருப்பிடமாகவும் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து மக்கள் குடிபெயர்ந்ததால் தில்லி ஒரு பல்லின மக்கள் வாழும் நகரமானது. இங்கு வாழ்வோரின் உயர்ந்த சராசரி வருமானமும், தில்லியின் விரைவான வளர்ச்சி, நகராக்கம் என்பனவும் நகரைப் பெருமளவு மாற்றியமைத்தன. இன்று இது இந்தியாவின் முக்கியமான பண்பாட்டு, அரசியல், வணிக மையமாக விளங்குகின்றது. பெயர் தில்லி என்னும் பெயர்த் தோற்றம் பற்றித் தெளிவு இல்லை. எனினும், இப்பெயர் ஏற்பட்டதற்கான பல காரணங்கள் கூறப்படுகின்றன. மௌரிய வம்சத்தைச் சேர்ந்த டில்லு அல்லது டிலு எனப் பெயர் கொண்ட மன்னனால் கி.மு. 50 ஆம் ஆண்டில் இப்பகுதியில் அமைக்கப்பட்ட நகருக்குத் அவனது பெயரைத் தழுவி இடப்பட்ட பெயர் தில்லி ஆனதாகப் பெரும்பாலானவர்கள் நம்புகின்றனர். இங்கே அரசர் தாவா என்பவரால் நிறுவப்பட்ட இரும்புத் தூண் ஒன்றின் அத்திவாரம் உறுதியற்றதாக இருந்ததாகவும் இதனைக் குறித்து நகரம், இந்தி / பிராகிருத மொழிகளில் தளர்வு என்னும் பொருள்படும் டிலி என்று அழைக்கப்பட்டதாகவும் இதிலிருந்து தில்லி என்னும் பெயர் ஏற்பட்டது என்பதும் இன்னொரு சாரார் கருத்து. ராஜபுத்திர அரசர்கள் காலத்தில் இப்பகுதியில் புழங்கிய நாணயம் தெஹ்லிவால் எனப்பட்டது. சில ஆய்வாளர்கள் இப்பெயர் வாயிற்படி என்னும் பொருள் கொண்ட தெஹ்லீஸ் அல்லது தெஹாலி என்னும் சொற்களிலிருந்து பெறப்பட்டதாகக் கருதுகின்றனர். இந்து-கங்கைச் சமவெளிப் பகுதிக்கு ஒரு வாயிலாகத் தொழிற்பட்டதாலேயே இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர். இந்நகரின் தொடக்ககாலப் பெயர் தில்லிக்கா என்பது வேறு சிலருடைய கருத்து. வரலாறு இதுவரை கிடைத்துள்ள தொல்லியல் சான்றுகளின்படி தில்லியிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் கி.மு. இரண்டாவது ஆயிரவாண்டுகளிலும் அதற்கு முன்னரும் குடியேற்றங்கள் இருந்ததாகத் தெரிகிறது. புகழ்பெற்ற இந்திய இதிகாசமான மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களின் தலைநகரமான இந்திரப்பிரஸ்தம் இப் பகுதியிலேயே அமைந்திருந்ததாக நம்பப்படுகிறது. மௌரியப் பேரரசுக் காலத்தில் (கி.மு. 300) இக் குடியேற்றங்கள் வளர்ச்சியடைந்தன. ஏழு முக்கிய நகரங்களின் எச்சங்களை தில்லிப் பகுதியில் கண்டறிந்துள்ளனர். தொமாரா மரபினர் கி.பி 736ல் லால் காட் என்னும் நகரத்தை நிறுவினர். சௌகான் ராஜபுத்திரர் அல்லது ஆஜ்மெர் என அழைக்கப்படுவோர் 1180ல் லால் காட் நகரைக் கைப்பற்றி அதன் பெயரை கிலா ராய் பித்தோரா எனப் பெயர் மாற்றினர். சௌகான் அரசர் மூன்றாம் பிரிதிவிராஜை 1192 ஆம் ஆண்டில் ஆப்கானியரான முகம்மத் கோரி தோற்கடித்தார். 1206 ஆம் ஆண்டில் குலாம் மரபைத் தொடக்கி வைத்த குதுப்-உத்-தீன் ஐபாக் தில்லி சுல்தானகத்தை நிறுவினார். குதுப்-உத்-தீன், குதுப் மினாரையும், குவாத் அல் இஸ்லாம் எனப்படும் இந்தியாவின் மிகப் பழைய பள்ளிவாசலையும் கட்டுவித்தார். குலாம் மரபினர் ஆட்சி வீழ்ச்சியுற்ற பின்னர் கில்ஜி, துக்ளக், சய்யித், லோடி ஆகிய துருக்கியையும், நடு ஆசியாவையும் சேர்ந்த மரபினர் ஒருவர் பின் ஒருவராக ஆட்சி செய்தனர். இவர்கள் தில்லியில் உள்ள ஏழு நகரங்களுள் அடங்கும் பல கோட்டைகளையும், நகரப் பகுதிகளையும் அமைத்தனர். தில்லியின் முஸ்லிம் சுல்தான்கள் தமது இந்துக் குடிமக்களிடம் தாராளமாக நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டிக்கொண்டு திமூர் லெங்க் எனப்படுவோர் 1398ல் இந்தியாவுக்குள் நுழைந்தனர். தில்லிக்குள் புகுந்த அவர்கள் அதனை அழித்தனர். தில்லி சுல்தான்களின் காலத்தில் தில்லி, சூபியத்தின் முக்கிய மையமாக விளங்கியது. 1526 ஆம் ஆண்டில், சாகிருத்தீன் பாபர், முதலாம் பானிப்பட் போரில், லோடி மரபின் கடைசி சுல்தானை வென்று முகலாயப் பேரரசை நிறுவினார். தில்லி, ஆக்ரா, லாகூர் ஆகியவை இப் பேரரசின் தலைநகரங்களாக விளங்கின. முகலாயப் பேரரசு, 16 ஆம் நூற்றாண்டில் நடுப்பகுதியில் ஷேர் ஷா சூரி என்பவரின் ஐந்து ஆண்டு கால ஆட்சி நீங்கலாக, வட இந்தியாவில் மூன்று நூற்றாண்டுகள் நிலை பெற்றிருந்தது. பேரரசர் அக்பர் தலைநகரை ஆக்ராவில் இருந்து தில்லிக்கு மாற்றினார். இன்று, பழைய தில்லி என்று பொதுவாக அழைக்கப்படும் தில்லியின் ஏழாவது நகரை அமைத்தவர் பேரரசர் சாஜகான் ஆவார். அப்போது அந் நகருக்கு பேரரசரின் பெயரைத் தழுவி சாஜகானாபாத் எனப் பெயரிடப்பட்டது. 1638 ஆம் ஆண்டிலிருந்து பழைய தில்லி முகலாயப் பேரரசின் தலைநகராக இருந்தது. 1739 பெப்ரவரி மாதம், நாதர் ஷா, கர்னால் போரில் முகலாயப் படைகளை வென்று தில்லியைக் கைப்பற்றினார். இவர் தில்லியைக் கொள்ளையிட்டு மயிலணை உட்பட்ட பல விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்றார். 1761ல் இடம் பெற்ற மூன்றாம் பானிப்பட் போருக்குப் பின், அகமத் ஷா அப்தாலி தில்லியைக் கைப்பற்றினார். 1803 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் நாள், தளபதி லேக் என்பாரின் தலைமையிலான பிரித்தானியப் படைகள் தில்லிப் போரில் மராட்டியரைத் தோற்கடித்து நகரைக் கைப்பற்றின. 1857 ஆம் ஆண்டின் இந்தியக் கலகத்துக்குப் பின், தில்லி பிரித்தானியரின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதற்குச் சிறிது காலத்தின் பின், கல்கத்தா, பிரித்தானிய இந்தியாவின் தலைநகரானது. தில்லி, பஞ்சாப் மாகாணத்தின் ஒரு மாவட்டம் ஆனது. 1911 ஆம் ஆண்டில், தில்லி பிரித்தானிய இந்தியாவின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அரசின் கட்டிடங்களை அமைப்பதற்காக, பிரித்தானியக் கட்டிடக்கலைஞரான எட்வின் லூட்யென் (Edwin Lutyens) என்பவரின் தலைமையிலான குழு, புதிய அரசியல், நிர்வாகத் தலைநகருக்கான வடிவமைப்பைத் தொடங்கியது. புது தில்லி எனப்பட்ட இப் புதிய நகரம் பிரித்தானிய இந்தியாவின் தலைநகர் ஆனது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் இதுவே தலைநகராகத் தொடர்ந்தது. இந்தியப் பிரிவினையின் போது ஏராளமான முஸ்லிம்கள் தில்லியிலிருந்து பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்த அதே வேளை மேற்குப் பஞ்சாப், சிந்து ஆகிய மாகாணங்களில் இருந்து, பெருமளவு இந்துக்களும், சீக்கியரும் தில்லிக்குக் குடி பெயர்ந்தனர். இந்திய அரசியலமைப்பு (அறுபத்தொன்பதாவது திருத்தம்) சட்டம், 1991, தில்லி ஒன்றிய ஆட்சிப்பகுதியை (Union Territory of Delhi), தில்லி தேசிய தலைநகரப் பகுதியாக முறைப்படி அறிவித்தது. இச் சட்டத்தின்படி, இப் பகுதிக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய சட்டசபை ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பகைமை உணர்வினாலும், காஷ்மீர் தொடர்பான பிணக்கினாலும், தில்லிக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்து வருகிறது. டிசம்பர் 2001ல், இந்திய நாடாளுமன்றக் கட்டிடம் காஷ்மீர் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானது. ஆறு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்ட இத் தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கு இருந்ததாக இந்தியா கருதியது. தொடர்ந்து அக்டோபர் 2005 ஆம் ஆண்டில், இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 62 குடிமக்களும், செப்டெம்பர் 2008 இல் நிகழ்ந்த இது போன்ற இன்னொரு தாக்குதலில் 30 குடிமக்களும் கொல்லப்பட்டனர். மக்கள் தொகையியல் 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தில்லி மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 16,787,941 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 2.50% மக்களும், நகரப்புறங்களில் 97.50% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 21.21% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 8,987,326 ஆண்களும் மற்றும் 7,800,615 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 868 பெண்கள் வீதம் உள்ளனர். 1,483 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 11,320 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 86.21 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 90.94 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 80.76 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2,012,454 ஆக உள்ளது. [1] சமயம் இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 13,712,100 (81.68 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 2,158,684 (12.86 %) ஆகவும், ஆகவும் கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 146,093 (0.87 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 570,581 (3.40 %) ஆகவும் , சமண சமய மக்கள் தொகை 166,231 (0.99 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 18,449 (0.11 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 2,197 (0.01 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 13,606 (0.08 %) ஆகவும் உள்ளது. மொழிகள் இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது, பஞ்சாபி மற்றும் அனைத்து இந்திய மாநிலங்களின் ஆட்சி மொழிகளும் பேசப்படுகிறது. அரசியல் தில்லி மாநிலம் எழுபது சட்டமன்ற உறுப்பினர்களையும், இரண்டு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளையும், இரண்டு நாடாளுமன்ற மாநிலங்குகளவை தொகுதிகளையும் கொண்டுள்ளது.[2] புவியியலும் தட்பவெப்பநிலையும் தில்லி தேசிய தலைநகரப் பகுதி, 1,484 ச.கிமீ (573 ச.மைல்) பரப்பளவு கொண்டது. இதில் 783 ச.கிமீ (302 ச.மைல்) பரப்பளவு கொண்ட பகுதி நாட்டுப்புறப் பகுதியாகவும், 700 ச.கிமீ (270 ச.மைல்) பகுதி நகர்ப்புறப் பகுதியாகவும் உள்ளது. தில்லி தேசிய தலைநகரப் பகுதியின் மிகக் கூடிய நீளம் 51.9 கிமீ (32 மைல்), அகலம் 48.48 கிமீ (30 மைல்). இப் பகுதியில் மூன்று உள்ளாட்சி அமைப்புக்கள் உள்ளன. இவை தில்லி முனிசிப்பல் கார்ப்பரேசன் (1,397.3 ச.கிமீ அல்லது 540 ச.மை), புது தில்லி முனிசிப்பல் கமிட்டி (42.7 ச.கிமீ அல்லது 16 ச.மை), தில்லி கன்டோன்மென்ட் சபை (43 ச.கிமீ அல்லது 17 ச.மை) என்பனவாகும். தில்லி வட இந்தியாவில் அமைவிடத்தில் உள்ளது. இது கிழக்கில் உத்தரப் பிரதேசத்தையும்; மேற்கு, வடக்கு, தெற்குத் திசைகளில் அரியானாவையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. தில்லி ஏறத்தாழ முழுமையாக கங்கைச் சமவெளியில் அமைந்துள்ளது. தில்லியின் முக்கியமான இரண்டு புவியியல் அம்சங்கள் யமுனை வெள்ளச் சமவெளியும், தில்லி முகடும் ஆகும். தாழ்நில யமுனை வெள்ளச் சமவெளி வேளாண்மைக்கு உகந்த வண்டல் மண்ணை வழங்குகிறது. எனினும் இச் சமவெளி தொடர்ச்சியான வெள்ளப் பெருக்குகளுக்கு உள்ளாகிறது. 318 மீட்டர் (1,043 அடி) வரையான உயரத்தை எட்டும் முகடு, இப் பகுதியின் மிக முக்கியமான அம்சமாக விளங்குகிறது. இது தெற்கே ஆரவல்லி மலைத்தொடரில் இருந்து தொடங்கி நகரின் மேற்கு, வடகிழக்கு, வடமேற்குப் பகுதிகளைச் சுற்றிச் செல்கிறது. இந்துக்களால் புனிதமானதாகக் கருதப்படும் யமுனை ஆறு மட்டுமே தில்லி ஊடாகச் செல்லும் முக்கியமான ஒரே ஆறு ஆகும். புது தில்லி உட்பட்ட நகரின் பெரும்பாலான பகுதிகள் யமுனையின் மேற்குப் பகுதியிலேயே அமைந்துள்ளன. நகர்ப்புறப் பகுதியான சாஹ்தாரா ஆற்றின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. தில்லி புவிநடுக்க வலயம்-4 இல் அமைந்துள்ளதால் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்காக வாய்ப்பு உண்டு. தில்லி கண்டத் தட்பவெப்பநிலை கொண்டது. கோடை, மாரி காலங்களுக்கிடையே அதிக வெப்பநிலை வேறுபாடு காணப்படுகின்றது. ஏப்ரல் தொடக்கத்துக்கும், அக்டோபர் நடுப் பகுதிக்கும் இடையே நீண்ட கோடை காலமும்; இடையே பருவப்பெயர்ச்சிக் காற்றுக் காலமும் நிலவுகின்றன. அக்டோபர் பின் பகுதியில் தொடங்கும் மாரிகாலம், ஜனவரியில் உயர் நிலை அடைகிறது. இக் காலத்தில் கடுமையான மூடுபனியும் காணப்படும். வெப்பநிலை −0.6 °ச (30.9 °ப) தொடக்கம் 47 °ச (117 °ப) வரை மாறுபடும். ஆண்டுக்கான சராசரி வெப்பநிலை 25 °ச (77 °ப) ஆக இருக்க, மாதத்துக்கான சராசரி வெப்பநிலை 13 °ச – 32 °ச (56 °ப – 90 °ப) இடையே மாறுபடுகின்றது. ஆண்டுக்கான சராசரி மழைவீழ்ச்சி 714 மிமீ (28.1 அங்குலம்). இதில் பெரும்பான்மையும் ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் பருவப் பெயர்ச்சிக் காற்றுக் காலத்தில் பெய்கிறது. போக்குவரத்து வான்வழி இங்கிருந்து ஆண்டுதோறும் 37 மில்லியன் மக்கள் வான்வழியாக பயணிக்கின்றனர்.[4] சாலைவழி தில்லியில் கீழ்க்காணும் சாலைகள் உள்ளன. உள்வட்டச் சாலைகள் வெளிவட்டச் சாலைகள் தில்லி - குர்கான் விரைவுவழிச்சாலை தேசிய நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலை - 1 தேசிய நெடுஞ்சாலை - 2 தேசிய நெடுஞ்சாலை - 8 தேசிய நெடுஞ்சாலை - 10 இரயில்வே இந்திய இரயில்வே தில்லியில் இருந்தும், மற்ற இடங்களில் இருந்து தில்லிக்கும் தொடர்வண்டிகளை இயக்குகிறது. தில்லி மாநிலத்தில் உள்ள தொடர்வண்டி நிலையங்கள் வடக்கு ரயில்வேயின் கட்டுப்பாடில் உள்ளது. தில்லியில் புது தில்லி, தில்லி சந்திப்பு, ஹசரத் நிசாமுதீன், ஆனந்து விகார் முனையம், தில்லி சராய் ரோகில்லா ஆகிய ஐந்து இடங்களில் தொடர்வண்டி நிலையங்கள் உள்ளன.[5] தில்லி மெட்ரோ ரயில் திட்டத்தின் மூலம் தில்லியின் சுற்றுப்பகுதிகளுக்கு உள்ளூர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த தொடர்வண்டிகளின் மூலம் தில்லியின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கும், பரிதாபாது, குர்கான், நொய்டா, காசியாபாத் ஆகிய நகரங்களுக்கும் பயணிக்கலாம்.[6] மேற்கோள்கள் வெளியிணைப்புகள் பகுப்பு:இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள் பகுப்பு:இந்திய ஊர்களும் நகரங்களும் பகுப்பு:தில்லி
தில்லி மாநகரத்தின் பரப்பளவு என்ன?
1,484 ச.கிமீ
9,006
tamil
996bdeeb4
நெருப்பு அல்லது தீ அல்லது அக்கினி (Fire) என்பது வெப்பத்தை வெளியேற்றும் வேதியியல் செயலான தகனத்தின்போது, பொருட்களில் விரைவான ஆக்சிசனேற்றம் நிகழ்ந்து, பிழம்புகளுடன் கூடிய வெப்பம், ஒளி ஆகியவற்றை வெளியேற்றி எரியும் ஒரு நிகழ்வு ஆகும்.[1]. துருப்பிடித்தல் (Rusting), சமிபாடு போன்ற ஆக்சிசனேற்ற செயல்முறைகள் மெதுவாக நிகழ்வதனால், இந்த விரைவான ஆக்சிசனேற்ற செயல்முறையில் இருந்து வேறுபடுவதுடன் நெருப்பை உருவாக்குவதில்லை. நெருப்பு பழைய கற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அக்கால மனிதன் சிக்கி முக்கி கற்களை உராய்வதனால் நெருப்பை கண்டுபிடித்தான். அதை வைத்து விலங்குகளை பயமுறுத்தினான். உணவு சமைத்தான். நெருப்பு என்பது வெப்பத்தை உமிழும் செயலாகும். நெருப்பு எரிவதற்கு பிராண வாயு எனப்படும் ஆக்சிசன் தேவைப்படுகிறது. ஆதிகாலத்தில் இரு கூழாங்கற்களை உரசி அதன் மூலம் காய்ந்த இலைச் சருகுகளையும் குச்சிகளையும் கொண்டு நெருப்பை உண்டாக்கினர். பின்னர் அறிவியல் வளர்ச்சியினால் கந்தகம் கொண்டு தீக்குச்சிகள் தயாரிக்கப்பட்டு, தீப்பெட்டியை பயன்படுத்தி நெருப்பு உண்டாக்கப்பட்டது. நெருப்பை "அக்னி" என்னும் பெயரினால் கடவுளாகவும் வணங்கினர். நெருப்பு பஞ்ச பூதங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. சுடர்/தீச்சுடர் அல்லது பிழம்பு/தீப்பிழம்பு என்பதே நெருப்பின் கண்ணுக்குத் தெரியும் பகுதியாகும். எரிபொருளினதும், அதற்கு வெளியிலிருக்கும் மாசுக்களினதும் தன்மை, மற்றும் அளவில் எரியும் தீச்சுடர் அல்லது தீப்பிழம்பின் நிறம், நெருப்பின் அடர்த்தி, தீவிரம் என்பன தங்கியிருக்கும். நெருப்பின் சுடரில் மேற்பரப்பில் அதிகப்படியான வெப்பம் இருக்கும். நெருப்பானது கட்டுப்பாடற்று ஏற்படும்போது பொருள் சார்ந்த அழிவுகளையும், தாவரங்கள், விலங்குகள், மனிதருக்கு ஆபத்தையும், உயிரிழப்புக்களையும் ஏற்படுத்துகின்றது. அதேவேளை இயற்கையில் நேரும் நெருப்பானது, சூழல் மண்டலம் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ள அல்லது மீளமைத்துக் கொள்ளவும் உதவுகின்றது]].[2]. நெருப்பின் தோற்றுவாய் பொதுவாக நெருப்பு என்பது பின்வரும் நிலைகளில் தோன்றுகின்றது. 1. கட்டுப்பாடான எரித்தல் - ஓர் எரிபொருள் எரிக்கப்படும்போது தோன்றும் நெருப்பு. எ.கா.: சமையலுக்கு, அல்லது வெப்பத்தை உருவாக்க விறகுகளையோ, அல்லது வேறு எரிபொருளையோ எரித்தல். 2. கட்டுப்பாடற்ற எரிதல் இது விபத்தினால் தற்செயலாக தோன்றும் நெருப்பாக இருக்கலாம். எ.கா.:எண்ணெய்க் கிணறு, அல்லது கட்டடங்களில் தானாக ஏற்படும் நெருப்பு. இயற்கையாகத் தோன்றும் நெருப்பாக இருக்கலாம். எ.கா.: காட்டுத்தீ திட்டமிட்டு எரிப்பை செய்வதனால் ஏற்படும் பெரு நெருப்பாக இருக்கலாம். எ.கா.:வாழிடங்களை எரிக்கும்போது, அது பின்னர் தானாகவே பெரு நெருப்பாக கட்டுப்பாடற்று எரிதல். சுடர் நெருப்பு என்பது சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கும் தீச்சுடர் அல்லது தீச்சுவாலையையே குறிக்கின்றது. சுடர் என்பது புலப்படும் ஒளிக்கற்றை , அகச்சிவப்புக் கதிர், மற்றும் சில நேரங்களில் புற ஊதாக் கதிர் என்பவற்றையும் உமிழும். இது அதிர்வெண் நிறமாலை உமிழ்கின்ற வாயுக்கள் மற்றும் திட பொருளைக்கொண்ட ஒரு கலவையாகும். இயற்கை மாசுபாடு நெருப்பு அனைத்து பொருளையும் கரியாக மாற்றிவிடும். எனவே பூமியில் உள்ள கார்பனின் அளவை நெருப்பு அதிகரிக்கிறது. எனவே சுற்றுசூழல் மாசுபடுகின்றது. இந்தியாவில் நெருப்பின் வரலாறு நெருப்ப்பு என்பது தீமையை அழித்து புனிதம் சேர்ப்பத்தாக இந்துக்களால் நம்பப்படுகிறது. அதனால் திருமணம் உட்பட பல சுப நிகழ்வுகளில் இந்தியர்கள் அக்னியை பயன் படுத்துகின்றனர். வேத காலத்திலிருந்தே நெருப்பு புனிதமாக கருதப்படுகிறது. சொவ்ராஸ்டிரர்கள் எனும் இந்தியர்கள் நெருப்பை மட்டுமே தெய்வமாக வழிபடுவார்கள். நெருப்பின் வகைகள் நெருப்பு பல காரணங்களால் உருவாக்கப்படுகின்றன. உராய்வதால் உருவாகும் நெருப்பே அனைத்திற்கும் பிரதானம் ஆகும். இயற்கை நெருப்பு செயற்கை நெருப்பு இயற்கை நெருப்பு காட்டுத்தீ போன்றவை இயற்கை நெருப்பின் வகைகளாகும்.சூரியன் இயற்கை நெருப்பிற்கு உதாரணம் ஆகும். செயற்கை நெருப்பு தீக்குச்சினால் உருவாகும் நெருப்பு போன்றவை செயற்கை நெருப்பு ஆகும். நெருப்பு குறித்த படிமங்கள் காட்டுத்தீ குவைத்தில் உள்ள எண்ணெய்க் கிணறு பற்றி எரியும் காட்சி பள்ளியில் ஏற்பட்ட தீ தீ மூட்டுதல் தீக்குச்சியிலிருந்து தீமூட்டல் நெருப்புச் சூறாவளி காடுகளில் மரங்கள் அல்லது காய்ந்த புற்கள் ஒன்றோடொன்று உரசிக் கொள்ளும்போது உண்டாகும் உராய்வினால் நெருப்பு பற்றிக் கொள்ளும். இத்தகைய காட்டுத் தீ (WILD FIRE) என்றழைக்கப்படும் நெருப்பு மிகவும் ஆபத்தான ஒன்றாகும். சில வேளைகளில் காற்றின் வேகம் மற்றும் சுற்றுச்சூழலில் காணப்படும் வெப்பநிலையைப் பொறுத்து இந்த காட்டுத் தீயானது, ஒரு நெருப்புப் பந்தாக உருவெடுத்து நெருப்புச் சுழலாக உருமாறும். காற்றின் வேகச் சுழற்சி காரணமாக, செங்குத்தாய் உருவாகும் இத்தகைய நெருப்புப் கோளங்கள் சில பொழுதுகளில் முப்பது அடி முதல் இருநூறு அடி உயரமும், சுமார் பத்து அடி அகலமும் கொண்ட வெப்பச் சூறாவளியாக மாறிவிடும். காற்று வீசும் திசை மற்றும் வேகத்தைப் பொறுத்து இந்நெருப்புச் சூறாவளி நீண்ட நேரம் நீடிக்கும். இத்தகைய நெருப்புச் சூறாவளியின் வெப்பநிலையானது மிக அதிகளவில் காணப்படும். இதன் காரணமாக இது கடந்து செல்லும் பாதையில் உள்ள மரங்கள், செடிகள் எல்லாம் சொற்ப நேரத்தில் தீயில் கருகி மடியும். இந்த நெருப்புச் சூறாவளி, மிகவும் குறுகிய காலத்தில் இயற்கைப் பேரழிவை உண்டாக்கி விடும் தன்மையுடையது. மரங்கள் செடிகள் உள்ளிட்ட தாவரங்கள் மட்டும் இல்லாமல் காட்டில் வசிக்கும் பறவைகள், விலங்குகள், பூச்சியினங்கள் முதலானவையும் அகப்பட்டுக் கொண்டு கூட்டம் கூட்டமாக மாண்டு போகும்.[3] நெருப்பை நெருங்கவிடாத ரொடோடென்றன் மரம் காட்டில் திடீரென உருவாகும் காட்டுத் தீயானது செடி, கொடி, மரங்கள் என சுற்றியிருக்கும் எதனையும் விட்டு வைக்காது அழித்துவிடும். ஆனால், நெருப்பினைத் தன்னருகில் நெருங்க விடாமல் காத்துக்கொள்ளும் தகவமைப்பைத் தன்னகத்தே கொண்ட மரங்கள் இந்தியாவின் இமயமலைத் தொடர்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் காணப்படுகின்றன. இமயமலை ரொடோடென்றன் ( Himalayan Rhododendran) எனப்படும் இத்தகைய மரத்தின் அருகில் நெருப்பானது பரவி வருகையில், பல அடுக்குகளாகத் தகவமைப்புப் பெற்றுள்ள இதன் மரப் பட்டைகளிலிருந்து நீர் போன்றதொரு திரவம் வடியத் தொடங்கிவிடும். இதனால் நெருப்பினால் உண்டாகும் அழிவிலிருந்து இத்தகைய மரங்கள் நெருப்பை நெருங்கவிடாமல் தப்பித்துக் கொள்ளும். பரந்த புல்வெளியில் செந்நிறப் பூக்களுடன் காட்சிதரும் இத்தகைய மரங்கள் பறவைகளைத் தன்னகத்தே கவர்ந்திழுத்து, பெரும்பாலான பறவைகளின் வாழிடங்களாக விளங்குகின்றன. அதுபோல, பலத்த காற்றினையும் எதிர்த்து நிற்கக் கூடிய உறுதி படைத்தனவாகவும் இவை திகழ்கின்றன. இம்மரத்தில் காணப்படும் செந்நிற மலர்களிலிருந்து உருவாக்கப்படும் மலர்ச் சாறு மருத்துவத் தன்மை நிறைந்தது. தமிழில் காட்டுப் பூவரசு என இது அழைக்கப்படுகிறது. நீலகிரியில் வாழும் படுகர்கள் தம் மொழியில் இதனை பில்லி என்றழைக்கின்றனர். பூர்வீகக் குடிகளான தோடர் இனத்தவர்கள் இம்மரத்தில் காணப்படும் பூக்களை,போரஸ் என்று கூறுகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் (நீலகிரி, ஆனைமலை, பழனி மலை, மேகமலை உள்ளிட்ட பகுதிகள்) அதாவது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500 மீட்டர் உயரத்திற்கும் அதிகமான இடங்களில் இம்மரங்கள் படர்ந்து வளர்ந்துள்ளன. நீலகிரியின் பூர்வீக மரங்கள் என்றும் இது வழங்கப்படுகிறது. இந்தியாவைத் தவிர இலங்கை, நேபாளம், மியான்மர், சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் ரொடோடென்றன் மரங்கள் காணப்படுகின்றன.[4] புது வகை நெருப்புக் கண்டுப்பிடிப்பு அறிவியல் அறிஞர்கள் சிலர் நிகழ்த்திய நெருப்புச் சுழற்காற்று ஆய்வு ஒன்றில், இதற்கு முன்பு யாரும் கண்டிடாத, இன்னும் அமைதியான மற்றும் துல்லியமான முறையில் எரியும் நெருப்புச் சுழலில் சுழன்றுகொண்டிருக்கும் நீல மற்றும் ஊதா நிற தீப்பிழம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதல் முறையாக, மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழு விஞ்ஞானிகள் தொன்மையான மஞ்சள் நெருப்பை விட தூய்மையாக எரிகிற நீலப் புயல் சுடர் ஒன்றை உருவாக்கிக் காட்டினர். இந்த நெருப்பின் மூலம் திறன் மிகு சூழலிய எண்ணெய்க் கசிவுச் சுத்திகரிப்பு முறை மேற்கொள்ள வாய்ப்புண்டு.[5] Read more at: Read more at: மேலும் பார்க்க தீ உண்டாக்கல் தீக்குச்சி பந்தம் மேற்கோள்கள் பகுப்பு:தீ
தீ எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
கற்காலத்தில்
422
tamil
575930e3c
மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவோனரோட்டி சிமோனி (Michelangelo di Lodovico Buonarroti Simoni, மார்ச் 6, 1475 - பெப்ரவரி 18, 1564) ஒரு இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியரும், சிற்பியும், கவிஞரும்,கட்டிடக்கலைஞருமாவார். இவர் மைக்கலாஞ்சலோ எனப் பொதுவாக அறியப்படுகிறார். இவரது கலைசார்ந்த பல்துறைத் திறமையின் உயர்ந்த தரம் காரணமாகச் சமகாலத்தவரான லியொனார்டோ டா வின்சியுடன் சேர்த்து இவரும் மறுமலர்ச்சிக் காலத் தந்தையெனக் கணிக்கப்படுகின்றார். மைக்கலாஞ்சலோவின் நீண்ட கால வாழ்க்கையில், அவர் படைத்தவைகள் அனைத்தும் அவரது அதிசயிக்கத்தக்க திறமைக்குச் சான்றாக அமைகின்றன. கடிதத் தொடர்புகள், வரைபடங்கள், நினைவுக் குறிப்புகள் என இவர் எழுதிக் குவித்தவை ஏராளம். இவைகளையும் சேர்த்தால், 16 ஆம் நூற்றாண்டில் அதிகமாக ஆவணப்படுத்தப்பட்ட கலைஞர் இவரே எனலாம். மைக்கலாஞ்சலோவின் புகழ் பெற்ற படைப்புக்களான, பியேட்டா (Pietà), டேவிட் ஆகியவை 16ஆம் நூற்றாண்டின் இருபதுகளின் பிற்பகுதியிலும், முப்பதுகளின் ஆரம்பத்திலும் உருவாக்கப்பட்டவை. ஒவியம் தொடர்பாக இவருக்கு உயர்ந்த அபிப்பிராயம் இல்லாதபோதும், மேற்கத்திய ஓவியக் கலைத் துறையில் பெரும் செல்வாக்குச் செலுத்திய இரண்டு ஓவியங்களையும் இவர் படைத்துள்ளார். இவை ரோம் நகரிலுள்ள சிசுடைன் சிற்றாலய உட்கூரையிலும் அதன் பீடத்தின் பின்னுள்ள சுவரில் வரையப்பட்டுள்ள கடைசித் தீர்ப்பு ஓவியங்களாகும். இவருடைய வாழ்வின் பிற்பகுதியில் வத்திக்கானின் புனித பேதுரு பேராலயத்தின் குவிமாடத்தை (dome) வடிவமைத்தார். இவர் வாழ்ந்த காலத்திலேயே இவரது இரண்டு வாழ்க்கை வரலாறுகள் வெளியிடப்பட்டது. இவற்றில் ஒன்றை எழுதிய ஜோர்ஜியோ வசாரி (Giorgio Vasari), இவரை, மறுமலர்ச்சிக் காலச் சாதனைகள் அனைத்துக்கும் சிகரம் போன்றவர் எனப் புகழ்ந்துள்ளார். இக்கருத்து, பின்வந்த நூற்றாண்டுகளில், கலைத்துறையில் ஆமோதிக்கப்பட்டது. ஆரம்ப காலம் மைக்கலாஞ்சலோ, மத்திய இத்தாலியப் பிரதேசமான தஸ்கனியிலுள்ள (Tuscany) அரெஸ்சோ (Arezzo) மாகாணத்தில் காப்ரெஸ் (Caprese) எனும் ஊரில் 1475 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தையார், லொடோவிகோ டி லியனார்டோ டி புவனரோட்டி டி சிமோனி (Lodovico di Leonardo di Buonarotti di Simoni) ஒரு நீதிபதியாக இருந்தவர். இவரது தாய் பிரான்செஸ்கா டி நேரி டெல் மினியாட்டோ டி சியேனா (Francesca di Neri del Miniato di Siena) என்பவர். புவனரோட்டி குடும்பம் தஸ்கனியின் பிரபுத்துவ குடும்பத்தின் வழிவந்தது. எனினும் மைக்கலாஞ்சலோவின் காலத்தில் இவர் குடும்பம் ஒரு முக்கியத்துவமற்ற பிரபுத்துவ குடும்பமாகவே கணிக்கப்பட்டனர். ஆரம்பகாலத்தில் மைக்கலாஞ்சலோ புளோரன்சிலேயே வளர்ந்து வந்தார். பின்னர், இவரது தாயார் நீண்டகாலம் நோய்வாய்ப் பட்டிருந்தபோதும், அவர் இறந்த பின்னரும், மைக்கலாஞ்சலோ, செட்டிக்னானோ (Settignano) என்னும் நகரத்தில் ஒரு கல் வெட்டுபவரின் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். இந்த நகரத்தில் இவர் தந்தைக்கு ஒரு பளிங்குக்கல் அகழ்விடமும் (quarry), ஒரு சிறிய பண்ணையும் சொந்தமாக இருந்தது. சிலகாலம் இலக்கணம் படித்த மைக்கலாஞ்சலோ, அவரது தந்தையாரின் விருப்பத்துக்கு மாறாக, டொமினிக்கோ கிர்லாண்டாயியோ (Domenico Ghirlandaio) என்பவரிடம் ஓவியத்துறையிலும், பெர்ட்டோல்டோ டி கியோவன்னி (Bertoldo di Giovanni) என்பவரிடம் சிற்பத்துறையிலும் பயிற்சி பெற்றார். 1488 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதியன்று, ஒரு பிரபல ஓவியரிடம் வேலை செய்வதற்காக மூன்று ஆண்டு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார். இவரது திறமையால் கவரப்பட்ட இவரது பயிற்சியாளரான டொமெனிக்கோ, இவரை அந் நகரத்து ஆட்சியாளரான லொரென்சோ டி மெடிசிக்குச் (Lorenzo de' Medici) சிபாரிசு செய்தார். 1489 ல், தனது பயிற்சித் தலத்திலிருந்து விலகிய மைக்கலாஞ்சலோ, 1490 இலிருந்து 1492 வரை லொரென்சோவின் பாடசாலையில் படித்து வந்தார். இக்காலத்தில் அவர் பல பிரபலமானவர்களைச் சந்தித்தார். அவர்கள் மூலம் இவரது கலை பற்றிய எண்ணங்கள் மாற்றம் பெற்றதுடன், விரிவாக்கமும் பெற்றது. மைக்கலாஞ்சலோவின் படைப்புத்திறன் மைக்கலாஞ்சலோ, தான் ஓவியம் வரைவதற்கு முன்பயிற்சியாக சற்றேறக்குறைய பன்னிரண்டு ஆண்டு காலம் மனித உடற்கூறு இயல் (ANATOMY) குறித்து நன்குக் கற்றுத் தேர்ந்தார். அவரது ஓவியப் படைப்புகளை இக்கற்றல் அனுபவமும் நுட்பமும் உயிர்ப்புடையதாக ஆக்கின. இதன் காரணமாக, அவருடைய ஓவியம் மற்றும் சிற்பப் படைப்புகளில் மனித உடலின் எலும்பு அமைப்பு, உடல் தசையின் தோற்ற அமைப்பு, தோலின் வடிவமைப்பு முதலியவை துல்லியமான முறையில் உருவாகின.மேலும், ஓவியத்திற்கான வண்ணக் கலவைகளை மைக்கலாஞ்சலோவே உருவாக்கிக் கொண்டார். இந்த வேலைக்குத் தம்மிடம் பணிபுரியும் பணியாட்களையோ, தம்முடைய மாணாக்கர்களையோ அவர் அனுமதிப்பதை விரும்பவில்லை.[2] படைப்புக்கள் ரோமின் அவரது படைப்புக்கள் மைக்கேலேஞ்சலோ தன் 21 வயதில் 1496-ம் ஆண்டு ஜூன் 25 ல் ரோம் வந்தடைந்தார். அதே ஆண்டு ஜூலை 4, அவர் கார்டினல் ராஃப்யேல் ரியாரியோவுக்காக ரோமானிய மது கடவுள் பாக்கஸின் சமஅளவு சிலைக்கான வேலையைத் தொடங்கினார். பின் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் கார்டினலால் நிராகரிக்கப்பட்டது, பின்னர், வங்கி அதிபர் ஜாகோபொ காலி தனது தோட்ட சேகரிப்புக்காக அதை வாங்கிக்கொண்டார். நவம்பர் 1497 ல், பிரஞ்சு புனித தூதுவர் பியாடா, இயேசு உடல் மீது கன்னி மேரி வருத்தப்படுவதைக் காட்டும் ஒரு சிற்பம் செதுக்க அவரை நியமித்தார், மைக்கேலேஞ்சலோ அதன் முடிந்த நேரத்தில் அவர் வயது 24ஆக இருந்தது. இந்தச் சிற்பம் உலகின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மைக்கேலேஞ்சலோ ரோமில், சாண்டா மரியா டி லொரேட்டோ தேவாலயம் அருகே வசித்து வந்தார். இங்கே, அவர் வெட்டோரியாவா க்ளோனா என்ற கவிஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரின் லொகோன் மற்றும் அவரது மகன்கள் என்ற சிற்பம் தற்காலத்தில் வாடிகனில் உள்ளது. பியட்டா சிலையின் சிறப்புகள் பியட்டா (Pieta) என்னும் சொல்லுக்கு இத்தாலிய மொழியில் இரக்கம் என்பது பொருள் ஆகும்.[3] இந்த பியட்டா சிலையானது சலவைக் கல் கொண்டு மைக்கலாஞ்சலோவால் உருவாக்கப்பட்டதாகும். இப் பளிங்குச் சிலை, கனடா நாட்டிலுள்ள கியூபெக் நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு செயின்ட் ஆன் -டி- போப்ரே பசிலிகா (St. Anne-de-Beupre Basilica) என்னும் ஆலயத்தில் வைக்கப்பட்டு உள்ளது. கியூபெக் நகரத்திலிருந்து சற்றுத் தொலைவில் செயின்ட் ஆன் -டி- போப்ரே என்னும் ஊர் காணப்படுகிறது. இந்த இடமானது கனடிய மற்றும் வட அமெரிக்க கத்தோலிக்க வழிபாட்டுத் தலங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.[3] இந்த பியட்டா சிலையின் தோற்றத்தில் அன்னை மேரியின் மடியில் இயேசு படுத்திருக்கும் காட்சி வெளிப்படுத்தப்பட்டிருக்கும். அதில், அன்னை மேரியின் ஒரு கரம் இயேசுவின் உடலைத் தாங்கிப் பிடித்திருக்கும். அவரது பிறிதொரு கரமானது ஆகாயத்தை நோக்கித் திரும்பிக் காணப்படும். ஏஞ்சலோ அன்னை மேரியினை இங்கு இளம்பெண்ணாகச் சித்திரித்து இருப்பார். அச் சித்திரிப்பானது அன்னை மேரியின் கன்னித்தன்மையை உலகுக்கு உணர்த்துவதாகக் காணப்படுகின்றது. செயின்ட் பீட்டர் பஸிலிக்காவில் இப்பியட்டா சிலையானது பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், இந்த ஒரு சிலையில் மட்டுமே மைக்கலாஞ்சலோவின் கையொப்பம் இடம்பெற்றுள்ளது.[3] டேவிட் சிலை மைக்கேலேஞ்சலோ 1499-1501 ல் புளோரன்ஸ் திரும்பினார்.1498 ல் குடியரசு எதிர்ப்பு மறுமலர்ச்சி பூசாரி மற்றும் புளோரன்ஸ் கிரோலாமோ தலைவர் சவோனரோலான் வீழ்ச்சி மற்றும் கோந்ஃபாலொனிரெ பைரோ சொடெரினியின்(gonfaloniere Piero Soderini) எழுச்சி பின்னர் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது, எனவே புளோரன்ஸ் சுதந்திரச் சின்னமாக டேவிட்ஐ சித்தரித்து ஒரு மாபெரும் சிலையை அகோச்டினோ டி டுச்சியோ மூலம் 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது ஒரு முடிக்கப்படாத திட்டத்தை முடிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டார். மைக்கேலேஞ்சலோ 1504 ல் டேவிட் சிலையை முடித்தார். சிஸ்டின் சேப்பல் மேற்கூரை 1505 ல், மைக்கேலேஞ்சலோ புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போப் இரண்டாம் ஜூலியஸால் மீண்டும் ரோமிற்கு அழைக்கப்பட்டார். அவருக்குப் போபின் கல்லறையை கட்ட அனுமதி வழங்கப்பட்டது.மைக்கேலேஞ்சலோ போபின் பல்வேறு பணிகளை நிறைவேற்றியதன் பொருட்டு கல்லறையில் அவரது பணி தொடர்ந்து குறுக்கீடுகளை சந்தித்தது. அந்த சிக்கல்கள் காரணமாக அவர் 40 ஆண்டுகள் கல்லறையில் பணியாற்றினார். இதே காலத்தில், மைக்கேலேஞ்சலோ சிஸ்டின் சேப்பல் மேற்கூரையை முடிக்க சுமார் நான்கு ஆண்டுகள்(1508-1512) பிடித்தன. மைக்கேலேஞ்சலோ முதலில் விண்மீன்கள் வானத்தின் பின்னணியில் பன்னிரண்டு அப்போஸ்தலர்களை வரைவதற்கு நியமித்தது, ஆனால் பின் மனிதனின் உருவாக்கம்,மற்றும் தீர்க்கதரிசிகள் வாக்குறுதிபடி வீழ்ச்சி, மற்றும் கிறிஸ்துவின் மரபுவழி குறிக்கும் ஆகியவற்றை வரையுமாறு ஒரு வேறுபட்ட மற்றும் மிகவும் சிக்கலான திட்டம் முன்மொழியப்பட்டது.கத்தோலிக்க திருச்சபை கொள்கையை மிகவும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக தேவாலயத்தில் உள்ள அலங்காரம் உள்ளதாக கூறப்படுகிறது. கூரை மீது மிகவும் பிரபலமான ஓவியங்களான ஏதேன் தோட்டத்தின் மத்தியில் ஆடம், ஆதாம் மற்றும் ஏவாள் உருவாக்குதல், பெரிய வெள்ளம், நபி ஏசாயா ஆகியவை உள்ளன. சாளரத்தை சுற்றி கிறிஸ்துவின் முன்னோர்கள் வரையப்பட்டிருந்தது. கடைசி தீர்ப்பு ( 1534-41 ) சிஸ்டின் மண்டபத்தில் பலிபீடத்தின் சுவரில் கடைசி தீர்ப்பு சுவரோவியம் பால் III மைக்கேலேஞ்சலோ மூலமாக தொடங்கியது. மைக்கேலேஞ்சலோ 1534 முதல் அக்டோபர் 1541 வரை வரைதலில் ஈடுபட்டிருந்தனர். சிஸ்டின் மண்டபத்தில் பலிபீடத்தின் பின்னால் முழு சுவரிலும் பரவியிருக்கின்றது. கடைசி தீர்ப்பு மற்றும் கிறிஸ்து வெளிப்படுத்தல் சித்திரம் உள்ளது. அது முடிந்தவுடன், கிறிஸ்து மற்றும் கன்னி மேரி ஓவியம் நிர்வாண சித்தரிக்கப்பட்டிருந்தது புனிதத்துவத்தை பாழடிக்கிற குற்றமாக கருதப்படுகிறது, மைக்கேலேஞ்சலோ மரணத்திற்கு பிறகு அதன் பிறப்புறுப்புக்களை மறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன் ஒரு அசல் தணிக்கை நகல், நேபிள்ஸ் காபோடிமொண்டே அருங்காட்சியகத்தில் காண முடியும் . மேற்கோள்கள் பகுப்பு:இத்தாலிய ஓவியர்கள் பகுப்பு:இத்தாலியக் கட்டிடக் கலைஞர்கள் பகுப்பு:இத்தாலியக் கவிஞர்கள் பகுப்பு:1475 பிறப்புகள் பகுப்பு:1564 இறப்புகள்
மைக்கலாஞ்சலோ எந்த வயதில் பியேட்டா சிலையை செதுக்கினார்?
24
4,510
tamil
cdf2868a5
Main Page தி இந்து (The Hindu) சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆங்கிலத்திலும் தமிழிலும் பிரசுரிக்கப்படும் செய்தித்தாள் ஆகும். [2] 1878 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட செய்தித்தாள் நாள்தோறும் சுமார் பதினான்கரை லட்சம் பிரதிகள் விற்பனையாகிறது. இச்செய்தித்தாளை பதிப்பிக்கும் இந்து குழுமம், கஸ்தூரி அன் சன்ஸ் என்ற நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இது இந்தியாவின் ஆங்கில செய்தித்தாள்களுள் விற்பனையில் இரண்டாவது இடத்தையும், படிப்பவர் எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. வரலாறு இந்து செய்தித்தாள் முதன் முதலாக செப்டம்பர் 20, 1878 இல் வெளியானது. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு முதன் முதலில் இந்தியர் ஒருவர் நியமிக்கப் பட்டதைக் கண்டித்து பிரிட்டிஷ் ஆதரவு ஆங்கிலப் பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டன. இதனால் கோபமடைந்த திருவல்லிக்கேணி இலக்கிய வட்டத்தை (Triplicane Literary Society - TLS) சேர்ந்த ஆறு இளைஞர்கள், இந்தியர்கள் கருத்தை வெளியிட ஒரு பத்திரிக்கை வேண்டுமென முடிவு செய்தனர். ஜி. சுப்ரமணிய ஐயரை ஆசிரியராகக் கொண்டு தி இந்து என்ற செய்தித்தாளைத் தொடங்கினர். ஆரம்பத்தில் வாரந்தோறும் புதன் கிழமைகளில் ஒரு வார இதழாகவே இந்து வெளிவந்தது. ஆங்கிலப் பத்திரிக்கைகளை கண்டித்து எழுதினாலும், ஆங்கில அரசை வெளிப்படையாக எதிர்க்காமல் பாராட்டி செய்தி வெளியிட்டது. 1883 முதல் வாரம் மும்முறை வெளியாகத் தொடங்கியது.[3] 1887 இல் சென்னையில் இந்திய தேசிய காங்கிரசின் வருடாந்தர மாநாடு நடந்தது. அதிலிருந்து இந்துவில் தேசிய அரசியல் பற்றி செய்திகள் வெளியாகத் தொடங்கின. 1898 இல் சுப்ரமணிய ஐயர், இந்துவிலிருந்து விலகி வீரராகவாச்சாரியார் உரிமையாளரானார். 1900 களில் இந்துவின் விற்பனை குறைந்து நிதி நெருக்கடி உண்டானது. 1905 ஆம் ஆண்டு வீர்ராகவாச்சாரியார் இந்துவை கஸ்தூரிரங்க அய்யங்காரிடம் விற்று விட்டார். அன்று முதல் இன்று வரை கஸ்தூரிரங்க அய்யங்காரின் குடும்பத்தினரே இந்துவை நிர்வகித்து வருகிறார்கள். தி இந்து இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் நாள்தோறும் வெளியாகத் தொடங்கியது. 1910 களில் அன்னி பெசன்ட் அம்மையாரின் சுயாட்சி போராட்டத்திற்கு இந்து ஆதரவளித்தது. நீதிக்கட்சியின் தலைவர்கள் டி. எம் . நாயர், தியாகராய செட்டி ஆகியோர், சட்டமன்றத்தில் வகுப்பு வாரி இட ஒதுக்கீடு கோரிய போது இந்து அதை கடுமையாக எதிர்த்தது. இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவாகவும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகவும் செய்திகளை வெளியிட்டது. 1948 இல் முதல் பக்கத்தில் முழு விளம்பரம் பிரசுரிக்கும் வழக்கம் நிறுத்தப்பட்டு மறுவடிவம் செய்யப்பட்டது. 1987 இல் போஃபோர்ஸ் பீரங்கி ஊழலை அம்பலப்படுத்தியது. 1995 முதல் இணையத்திலும் வெளிவரத் துவங்கியது. 1965 முதல் 1993 வரை ஜி. கஸ்தூரியும், 1993 – 2001 இல் என். ரவியும் இந்து குழுமத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தனர். 2003 முதல் என். ராம் இந்துவின் நிர்வாக இயக்குனராகவும், தலைமை ஆசிரியராகவும் இருக்கின்றார்.[4] விற்பனையும் பதிப்புகளும் இந்தியன் ரீடர்ஷிப் சர்வே 2008 இன் படி, இந்து தினம் பதினான்கரை லட்சம் பிரதிகள் விற்கின்றது. விற்பனை அளவில் இந்தியாவின் ஆங்கில செய்தித்தாள்களுள் இரண்டாவது இடத்தில் உள்ளது (முதலிடம் டைம்ஸ் ஆஃப் இந்தியா). படிப்பவர்கள் எண்ணிக்கையில் மூன்றாமிடத்தில் உள்ளது. இந்து சென்னை, கோவை, பெங்களூரு, ஹைதராபாத், மதுரை, நோய்டா, விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், கொச்சி, விஜயவாடா, மங்களூர், திருச்சி, கொல்கத்தா, ஹூப்ளி, மொகாலி, அலகாபாத், மலப்புரம், லக்னோ, அனந்தபூர், நெல்லூர் ஆகிய நகரங்களில் இருந்து இருபது பதிப்புகளை வெளியிடுகிறது.[5][6] நிர்வாக இயக்குனர்கள் இந்து குழுமத்திற்கு தற்போது பன்னிரெண்டு நிர்வாக இயக்குனர்கள் உள்ளனர். கஸ்தூரி ரங்க அய்யங்காரின் வாரிசுகளான அவர்கள் – என். ராம், என். ரவி, என். முரளி, மாலினி பார்த்தசாரதி, நிர்மலா லட்சுமணன், நளினி கிருஷ்ணன், ரமேஷ் ரங்கராஜன், விஜயா அருண், அகிலா அய்யங்கார், கே. பாலாஜி, கே. வேணுகோபால், லக்ஷ்மி ஸ்ரீநாத் ஆகியோராவர்.[7] சார்பு நிலைகள் இந்துவில் பத்திகள் மதவாதத்திற்கு எதிராகவும், மதச்சார்பின்மையை ஆதரித்தும் எழுதப் படுகின்றன. பொதுவாக உள்நாட்டு அரசியலில் பாரதீய ஜனதா கட்சியின் கொள்கைகளை ஆதரித்தும்[8] மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்தும்,[9] வெளிநாட்டு விஷயங்களில், தமிழீழ விடுதலையை எதிர்த்தும், சீன-இலங்கை நாடுகளை ஆதரித்தும் பத்திகள் எழுதப்பட்டதாக இதன் ஆசிரியர் ஒருவரான நரசிம்மன் ராம் மீது குற்றம் சாட்டப்படுகிறது.[10] குழும இதழ்கள் தி இந்து குழுமம் வெளியிடும் மற்ற இதழ்கள் பிசினஸ் லைன் (பொருளியல் மற்றும் வணிக இதழ்) இந்து சர்வதேசப் பதிப்பு (வார இதழ்) ஸ்போர்ட்ஸ்டார் (விளையாட்டு செய்திகள் வார இதழ்) ஃப்ரன்ட்லைன் ( மாதம் இருமுறை வெளியாகும் அரசியல், சமூக இதழ்) ப்ராக்சிஸ் (மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியாகும் மேலாண்மை இதழ்) எர்கோ இணைய இதழ் தி இந்து (தமிழ் நாளிதழ்) உள் பூசல்கள், அம்பலங்கள் த இந்து ந. ராம் தனது சகோதரரான ந. ரவியை முதன்மை ஆசிரியராக வருவதைத் தடுத்தார். ரவி கம்பனி ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் இந்து நோக்கி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அதில் இந்து பத்திரிகை, விளம்பரதாரர்களின் 'காசுச் செய்துப்' பத்திரிகையாக இருப்பதாக குற்றஞ்சாட்டினார். மேலும் பல்வேறு செய்திகளும், ஊழல்களும் இவ்வாறு மழுங்கடிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.[11] மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:இந்திய ஆங்கிலப் பத்திரிகைகள்
இந்து செய்தித்தாள் நிறுவனம் எப்போது நிறுவப்பட்டது?
1878
131
tamil
83a2621f5
இளம்பிள்ளை வாதம் பாதிக்கப்பட்டவரின் மலத்தின் வழியாகப் பரவும் தீநுண்மத் தொற்றுநோய் ஆகும். மலத் துகள்களினால் மாசடைந்த நீர், அல்லது உணவு வாய்வழியாக உட்கொள்ளப்படும்போது இந்நோய் தொற்றுகிறது. இது போலியோ என்னும் ஆங்கிலப் பெயராலும் பரவலாக அழைக்கப்படுகின்றது. போலியோமியெலிட்டிஸ் (Poliomyelitis) என்பது இந்நோயின் மருத்துவப் பெயர்.போலியோமைலிட்டிஸ் வைரஸ் தண்டுவடத்தைத் தாக்கும்போது ஏற்படும் பக்கவாதம் இது. இந் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களில் 90% பேரில் அறிகுறிகள் எதுவும் தோன்றுவதில்லை. எனினும் தீநுண்மங்கள் குருதியோட்டத்துடன் கலந்துவிடின் பல வகையான அறிகுறிகள் தோன்றுகின்றன. பாதிக்கப்படுபவர்களில் 1%க்கும் குறைவானவர்களில் தீநுண்மங்கள் மைய நரம்புத் தொகுதிக்குள் சென்று இயக்க நரம்பணுக்களைத் தாக்குவதனால் தசைநார்கள் பலவீனமுற்றுத் தீவிரமான தளர்வாதத்தை (flaccid paralysis) உருவாக்குகிறது. பாதிக்கப்படும் நரம்புகளைப் பொறுத்துப் பலவகையான வாத (paralysis) நிலைமைகள் ஏற்படலாம். முள்ளந்தண்டோடு தொடர்புள்ள இளம்பிள்ளை வாதமே மிகவும் பொதுவாகக் காணப்படுகின்றது. இது பொதுவாகக் கால்களைத் தாக்குகிறது. போலியோவைரசால் உண்டாகும் இந்நோய் முடமாக்கக் கூடியதும் மரணத்தை வரவழைப்பதுமான தொற்று நோய். மனிதரில் இருந்து மனிதருக்குப் பரவுகிறது. இது மூளையையும், தண்டுவடத்தையும் தாக்குவதால் பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. போலியோ வைரசுக்கு அறியப்பட்ட ஒரே புகலிடம் மனிதனே. தொற்று உள்ள ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவுகிறது. போலியோ தொற்றில் இரு அடிப்படை வடிவங்கள் உள்ளன நடுநரம்பு மண்டலத்தைத் தாக்காத குறும்நோய். இது சில சமயம் குறை இளம்பிள்ளைவாதம் என அழைக்கப்படும்.நடுநரம்பு மண்டலத்தைத் தாக்கும் பெரும்நோய். இதில் பக்கவாதம் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம நோய் அறிகுறிகள் குழந்தைகளில் 72% போலியோ தொற்று அறிகுறிகளைக் காட்டுவதில்லை. ஆனால் போலியோ வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மலம் மூலமாக, நோய்த்தொற்று பிறருக்குப் பரவும் அபாயம் உள்ளது.[1] ஏறக்குறைய 4-8% போலியோ தொற்று, குறும்நோயாக மாறுகிறது. மருத்துவ மற்றும் ஆய்வகச் சோதனைகளில் நடுநரம்பு மண்டலத்தைப் பாதித்ததற்கான தடயங்கள் இருப்பதில்லை. இது குறை இளம்பிள்ளை வாதம் எனப்படுகிறது. ஒரு வாரத்தில் முற்றிலும் குணமடைவது இதன் இயல்பு. இத்தகைய போலியோவைரஸ் தொற்றில் மூன்று அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன: மேல் மூச்சுப்பாதைத் தொற்று (தொண்டைவலியும் காய்ச்சலும்), இரைப்பைக்குடல் உபாதைகள் (குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு) மற்றும் இன்ஃபுளுயன்சா போன்ற நோய்கள். 1-2 % தொற்று, வாதமற்ற பரவாத மூளைக்காய்ச்சலாக (கழுத்து, முதுகு மற்றும்/அல்லது கால் விறைப்பு அறிகுறி) உருவாகிறது. இந்த அறிகுறிகள் சிறு நோய் போல பல நாட்கள் தொடரும். அதிக அல்லது அசாதாரண உணர்வுகள் ஏற்படும். 2-10 நாட்கள் வரை இவ்வறிகுறிகள் நீடித்துப் பின் முற்றிலும் மறைந்து போகும். ஒட்டுமொத்தப் போலியோ தொற்றில், 1% விட குறைவானவையே தசை மெலிந்த வாதமாக வெளிப்படுகிறது. ஒரு சிறு நோயைத் தொடர்ந்து 1-10 நாட்களில் இளம்பிள்ளை வாத அறிகுறிகள் பொதுவாகத் தொடங்குகின்றன. காய்ச்சல் இயல்பு நிலைக்கு வந்த பின் மேலும் வாதம் ஏற்படாது. தொடக்கத்தில் தசைநாண் செயல்பாடு அதிகரிப்பும், கடும் தசை வலியும், அவயவ அல்லது முதுகு பிடிப்போடும் கூடிய மேலோட்டமான அனிச்சை செயல் இழப்பு அறிகுறியில் அடங்கும். ஆழ்தசைநாண் அனிச்சை செயல்கள் குறைந்து இந்நோய் தொய்வு வாதமாக மாறும். பலநாட்கள் அல்லது வாரங்களுக்கு மாற்றமின்றி அவ்வாறே இருக்கும். இந்நிலையில் இது சமச்சீரற்றுக் காணப்படும். பின் வலிமை திரும்பத் தொடங்கும். நோயாளிக்கு உணர்விழப்போ அறிவாற்றல் மாற்றமோ இருக்காது.உடம்பிலுள்ள முக்கிய அங்கமான கை, கால் மற்றும் முதுகுதண்டு வடம் பகுதிகளை அசைக்க முடியாமல் பலவீனம் அடையும். ஒரு சில நாட்களில் வெப்பகாய்ச்சல் ஏற்பட்டு பேதி ஏற்படும்; தலை பாரமாக இருக்கும்; உடல் முழுதும் தீராத வலி இருக்கும்.[2] சிக்கல்கள் நிரந்தரமான தசை வாதமும், இடுப்பு, கணுக்கால், மற்றும் பாதங்களின் குறைபாடுகளும், ஊனமும், இளம்பிள்ளை வாதத்தினால் உண்டாகலாம். பல குறைபாடுகளை அறுவை மருத்துவத்தின் மூலமும் உடலியல் சிகிச்சை மூலமும் சரிசெய்ய முடியும் என்றாலும், வளர்ந்து வரும் நாடுகளில் இந்த சிகிச்சை முறைகள் சாத்தியமில்லை. இதன் காரணமாக இளம்பிள்ளை வாதத்திற்குத் தப்பிப் பிழைக்கும் குழந்தைகள் கடுமையான குறைபாடுகளுடன் வாழவேண்டியுள்ளது. கீழ்கண்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. நுரையீரல் அழற்சி இதயக்கீழறை மிகுவழுத்தம் அசைவின்மை நுரையீரல் பிரச்சினைகள் நுரையீரல் வீக்கம் அதிர்ச்சி நிரந்தரத் தசை வாதம் சிறுநீர்ப்பாதைத் தொற்று நோய்கண்டறிதல் வைரசைத் தனிமைப்படுத்தல் இளம்பிள்ளை வாதமுடைய ஒருவரின் மலம் அல்லது தொண்டையில் இருந்து போலியோவைரஸ் எடுக்கப்படுகிறது. மூளைத்தண்டுவட பாய்மத்தில் இருந்து வைரசைப் பிரித்து எடுப்பதே நோய்கண்டறிதல். ஆனால் அது அபூர்வமாகவே முடியக்கூடியது ஆகும். கடும் தளர் வாதம் உடைய ஒருவரிடம் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட வைரஸ் மேலும் சோதிக்கப்பட வேண்டும். ஒலிகோநியூக்ளியோடைட் படமிடல் (oligonucleotidemapping) அல்லது மரபணு வரிசைப்படுத்துதல் (genomic sequencing) மூலம் அந்த வைரசு இயற்கையானதா (“wild type”) அல்லது தடுப்புமருந்து வகையா (தடுப்பு மருந்து திரிபில் இருந்து பெறப்பட்டது) என்று தீர்மானிக்கப்படும். ஊனீரியல் தொடக்கத்திலேயே சமன்படுத்தும் எதிர்பொருட்கள் தோன்றி, நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அதிக அளவில் பெருகி இருக்கும். இதனால் நான்கு மடங்கு அதிகரிப்பை எதிர்பொருள் வேதியல் வினையூக்கி சோதனையால் காட்ட முடியாது. மூளைத்தண்டுவடப் பாய்மம் இளம்பிள்ளைவாதத் தொற்று நோய் இருந்தால் மூளைத் தண்டுவட பாய்மத்தில் பொதுவாக வெள்ளணுக்களின் என்ணிக்கை அதிகமாய் இருக்கும் (10-20 உயிரணுக்கள்/mm3, பெரும்பாலும் வடிநீரணுக்கள்). மேலும், புரத அளவும் சற்றே அதிகரிக்கும் (40–50 mg/100 mL). நோய் மேலாண்மை இளம்பிள்ளை வாதத்தைக் குணப்படுத்த முடியாது. எனவே நோயாளிக்கு ஆதரவு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளி நலமடையும் வரை அறிகுறிகளுக்கான சிகிச்சை அளிக்கப்படும். போலியோ அறிகுறிகளுக்கான மருந்துகள், உடற்பயிற்சிகள் மற்றும் சமநிலை உணவு.அளிக்க வேண்டும். தடுப்புமுறை இளம்பிள்ளை வாதம் இதுவரை குணப்படுத்த முடியாத நோயாக இருந்து வருகிறது. எனவே தடுப்பு மருந்து ஒன்றே பாதுகாப்பும் நோயைக் கட்டுப்படுத்தும் ஒரே வழியுமாகும். இரு வகையான தடுப்பு மருந்துகள் உள்ளன: வீரியம் அழிக்கப்பட்ட இளம்பிள்ளை வாதத் தடுப்பு மருந்து மற்றும் வாய்வழி இளம்பிள்ளை வாதத் தடுப்பு மருந்து . வயதைப் பொறுத்துக் காலிலோ புயத்திலோ வீரியம் அழிக்கப்பட்ட இளம்பிள்ளை வாதத் தடுப்பு மருந்து ஊசி வழியாகச் செலுத்தப்படுகிறது. பிற தடுப்பு மருந்துகள் அளிக்கும்போதே போலியோ தடுப்பு மருந்தும் அளிக்கலாம். குழந்தைப் பருவத்திலேயே தடுப்பு மருந்து கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு 4 வேளை வீரியம் அழிக்கப்பட்ட இளம்பிள்ளை வாதத் தடுப்பு மருந்து பின்வரும் வயதில் அளிக்கவேண்டும்: 2 வது மாதம், 4 வது மாதம், 6-18 வது மாதம் மற்றும் ஊக்க அளவு 4-6 வயதில். வாய்வழி இளம்பிள்ளை வாதத் தடுப்பு மருந்தில், மூன்று போலியோவைரஸ் வகையிலும் உயிருள்ள மற்றும் வீரியம் குறைந்த போலியோ வைரஸ் திரிபுகளின் கலவை இருக்கும். போலியோ சொட்டு மருந்துத் திட்டத்தின் கீழ் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுக்கு இரு வேளை வாய்வழி தடுப்பு மருந்து கொடுக்கப்படும். குழந்தைகள் காக்கப்படுவதோடு சமூகத்தில் பரவலாக்கப்பட்டு விரிவான பாதுகாப்பையும் அளிக்கிறது. 1952ம் ஆண்டில், 'ஜோனஸ் சால்க்’ (Jonas Salk) என்ற அமெரிக்க மருத்துவர், போலியோ நோய்க்குத் தடுப்பூசியைக் கண்டுபிடித்தார். அவர், தான் கண்டுபிடித்த உயிர்காக்கும் தடுப்பூசிக்கு, காப்புரிமை வேண்டாம் என மறுத்துவிட்டார்.எனது கண்டுபிடிப்பு, சூரியனுக்கு ஒப்பானது. அனைவருக்கும் பயனளிக்க வேண்டியது. சூரியனுக்கு காப்புரிமை கேட்க முடியுமா என்று, அதை மறுத்தவர் சால்க். 1957ம் ஆண்டில, 'ஆல்பர்ட் சாபின்’ (Albert Sabin) என்ற மற்றொரு அமெரிக்க மருத்துவர் இதே நோய்க்குத் தடுப்புச் சொட்டு மருந்தைக் கண்டுபிடித்தார். குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசியைப் போடுவதை விட சொட்டு மருந்தைக் கொடுப்பது எளிதாகவும், செலவு குறைவாகவும் இருந்தது. இதனால், இந்திய அரசாங்கம் 'குழந்தைகளுக்கு முறைப்படி போலியோ சொட்டு மருந்து கொடுத்தால், நோயைத் தடுக்கலாம்’ என்னும் விழிப்பு உணர்வை மக்களிடம் ஏற்படுத்தியது.[3] உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 16ம் தேதி ‘உலக போலியோ சொட்டு மருந்து தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் இளம்பிள்ளை வாதம் என்ற போலியோவை ஒழிக்க 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. பாதிக்கப்படுபவர்களில் 1%க்கும் குறைவானவர்களில் தீநுண்மங்கள் மைய நரம்புத் தொகுதிக்குள் சென்று இயக்க நரம்பணுக்களைத் தாக்குவதனால் தசைநார்கள் பலவீனமுற்றுத் தீவிரமான தளர்வாதத்தை (flaccid paralysis) உருவாக்குகிறது. பாதிக்கப்படும் நரம்புகளைப் பொறுத்துப் பலவகையான வாத (paralysis) நிலைமைகள் ஏற்படலாம். முள்ளந்தண்டோடு தொடர்புள்ள இளம்பிள்ளை வாதமே மிகவும் பொதுவாகக் காணப்படுகின்றது. இது பொதுவாகக் கால்களைத் தாக்குகிறது. இந்தியாவில் இளம்பிள்ளை வாதம் 2009ம் ஆண்டில் இந்தியாவில் 741 இளம்பிள்ளை வாதம் தாக்கிய சம்பவங்கள் பதியப்பட்டிருந்தன. இந்தியாவில் இளம்பிள்ளை வாதம் தாக்கிய கடைசி சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் ஜனவரி 13 2011ல் தெரியவந்தது. அங்கு ஒரு 18 வயது பெண்ணுக்கு இந்த நோய் தாக்கியிருந்தது. அதன் பிறகு தொடர்ந்து 3 ஆண்டுகளாக எந்த குழந்தைக்கும் போலியோ நோய் தாக்காததால், இந்தியா தன்னை போலியோ அற்ற நாடு என்று அறிவிக்கும் நிலையை 13 சனவரி 2014இல் எட்டியது. இந்திய அரசின் இந்த அறிவிப்பு 13 சனவரி 2014இல் வருகிறது என்றாலும், உலகச் சுகாதார நிறுவனம், இந்தியாவிலிருந்து வந்த கடைசி ஆய்வு மாதிரிகள் சிலவற்றை பரிசோதித்துப் பார்த்துவிட்டுப் பின்னர் பிப்ரவரி 11ம் தேதியே தனது அத்தாட்சிப் பத்திரத்தை வழங்கும்.[4] தெலங்கானாவின் தலைநகரான ஐதராபாத்தில் உள்ள அம்பர்பேட்டை கால்வாய் நீரை பரிசோதித்தபோது போலியோ வைரஸ் அதில் கலந்திருப்பது கண்டறியப்பட்டது[5] பாதிப்புகள் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு இல்லை. ஆனால், வடமாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார், டெல்லி, சண்டிகரில் 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை போலியோவால் குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். இதேபோல் அரியானா, பஞ்சாய், இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் 2010ம் ஆண்டில் ஆங்காங்கே போலியோ பாதிப்புகள் இருந்தது. தடுப்பூசி இந்தியாவில் குழந்தைகளுக்கு வாய் வழியாக போடப்படும் சொட்டு மருந்து மூலம், நாட்டில் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. சொட்டு மருந்து போடப்படும் 1 கோடி குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு தடுப்பு மருந்தின் மூலம் போலியோ பாதிப்பு வரவாய்ப்புள்ளது என்பதை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனவே, குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடுவதே சிறந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற பல்வேறு நாடுகளில் தற்போது வாய் வழியாக போலியோ சொட்டு மருந்து போடுவதை நிறுத்தியுள்ளனர். போலியோ தடுப்பூசி மட்டுமே போடுகின்றனர். போலியோ தடுப்பூசி போடுவதால், 100 சதவீதம் போலியோ பாதிப்பை தடுத்துவிடலாம். அதனால், வெளிநாடுகளை போல இந்தியாவிலும் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.[6] மேற்கோள்கள் வெளியிணைப்புகள் பகுப்பு:தொற்று நோய்கள்
போலியோ நோய் எப்போது இந்தியாவிலிருந்து ஒழிக்கப்பட்டது?
2011
7,988
tamil
164f824e3
மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் இயங்கும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல், சமிபாடு (செரிமானம்), இதயத்துடிப்பு, கொட்டாவி[1] போன்ற செயற்பாடுகளையும்,[2] விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மற்ற எல்லா உயிர்களையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது. மனிதனின் மூளை, மற்ற பாலூட்டிகளின் மூளையின் பொது வடிவத்தினை பலவாறு ஒத்திருப்பினும், அவற்றின் மூளைகளைக் காட்டிலும் உடல் எடை-மூளை அளவு விகிதத்தில் குறைந்தது ஐந்து மடங்கு பெரியது. இதற்குக் காரணம், மனித மூளையின் நன்கு விரிவடைந்த பெருமூளைப் புறணிப் (cerebral cortex) பகுதியாகும். நரம்பிழையத்தால் (neural tissue) உருவாகி, பல தொடர் மடிப்புகளை கொண்ட இப்பகுதி மனிதனின் முன்மூளையில் அமைந்துள்ளது. குறிப்பாக, பிற விலங்குகளில் இருந்து மனிதனைப் பிரித்துக்காட்டும் சிறப்பு செயல்பாடுகளான, தற்கட்டுப்பாடு, திட்டமிடல், பகுத்தறிதல், கற்றறிதல் ஆகியவற்றிக்குக் காரணமான மூளையின் முன் மடல்கள் மனித மூளையில் நன்கு விரிவடைந்து காணப்படுகின்றன. மேலும், கண் பார்வைக்குக் காரணமான பகுதியும் மனித மூளையில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது. மூளையின் படிவளர்ச்சியில், மிக முந்திய சிறிய பாலுட்டியான மூஞ்சூறில் இருந்து மனிதக் குரங்கு வழியாக உயர்நிலை விலங்கினங்களில் ஒன்றான மனிதன் வரை மூளை-உடல் அளவு விகிதம் படிப்படியாக உயர்ந்துள்ளது; இதை மூளைப் பருமனாக்கம் (encephalisation) என்று அழைக்கின்றனர். மனித மூளையில் உள்ள சுமார் 50–100 பில்லியன் (5000-10000 கோடி) நரம்பணுக்களில் (1011), சுமார் 10 பில்லியன் நரம்பணுக்கள் (1010) புறணிக் கோபுர உயிரணுக்கள் (cortical pyramidal cells) ஆகும். இவ்வுயிரணுக்கள் தமக்குள் சமிக்கைகளை (குறிகைகளை) அனுப்பி கொள்ள ஏறத்தாழ 100 டிரிலியன் (1014) நரம்பிணைப்புகளைப் பயன்படுத்துகின்றன. மனித மூளை, தடிப்பான மண்டையோட்டின் எலும்புகளாலும், மூளை முதுகுத் தண்டுநீர்மம் (cerebrospinal fluid) என்னும் நீர்மத்தாலும், அதிர்வுகளிலிருந்தும், வெளிச் சேதங்களிலிருந்தும், குருதி-மூளை வேலி (blood-brain barrier) என்னும் அமைப்பின் மூலம் இரத்த மண்டத்திலிருந்தும், இரத்தம் மூலம் பரவும் நோய்களில் இருந்தும் தீங்குறாமல் பெரிதும் பாதுகாக்கப்படுகிறது. ஆனாலும், அதன் மென்மையான தன்மையால் பல வகை நோய்களாலும், சேதங்களாலும் தீங்குகள் ஏற்படுவது தவிர்க்க இயலாதது. பொதுவாக மூளையில் ஏற்படும் சேதங்கள், உள் தலை காயங்கள் (closed head injuries) எனப்படும் வகையை சார்ந்த, தலையில் ஏற்படும் காயம், மூளையில் இரத்த தடை ஏற்படுவதால் ஏற்படும் பக்கவாதம் (stroke), நரம்பு நச்சுகள் (neurotoxin) எனப்படும் வேதியியல் நச்சுப் பொருட்களால் பாதிக்கப்படுதல் ஆகியன குறிப்பிடத் தக்கவை. மூளை தொற்றுநோய்களால் பாதிக்கப்படுவது மிக அரிதானது. ஏனெனில், இரத்த மண்டலத்தில் கலந்து உடல் உறுப்புக்களைத் தாக்கக் கூடிய பெரும்பாலான பாக்டீரியா கிருமிகளை, மனித மூளையில் குருதி-மூளை வேலி என்ற அமைப்பு வடிகட்டி விடுவதன் மூலம், மூளை தொற்றுநோய் நுண்ணுயிரிகளில் இருந்து பெரும்பாலும் பாதுகாக்கப் படுகிறது. இருப்பினும், மூளை பாக்டடீரியாவால் அரிதாக தாக்கப்படும் போது, பிறஒருளெதிரி (antibodies) மூலம் சிகிச்சை அளிப்பது மிக கடினமானதாகிறது. ஏனெனில் இதே குருதி-மூளை வேலி அமைப்பு நோய் எதிர்ப்பு மருந்துகளையும் தடுத்து நிறுத்தி விடுவதே காரணம். தீநுண்மம் (வைரசு) எளிதாக குருதி-மூளை வேலியை தாண்ட வல்லவை. இவை இரத்தத்தில் உள்ள வெண்குருதியணுக்களுடன் சேர்ந்து தாண்டுகின்றன. இவை தவிர பொதுவாகக் காணப்படும் பல மரபியல் நோய்களும் மூளையைத் தாக்க வல்லவை. அவற்றுள், நடுக்குவாதம் (பார்கின்சன் நோய்), உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமே நரம்பு மண்டலத்தை தாக்கும் மல்டிபிள் சுகுலோரோசிஸ் (multiple sclerosis) ஆகியவை முக்கியமானவை. உளவியல் நோய்களான உளச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை, மந்த அறிவு ஆகியவையும் மூளையில் ஏற்படும் மாற்றங்களால் தோன்றுகின்றன. அமைப்பு மாந்தரில் ஒரு சராசரி ஆணின் மூளை சுமார் 1.5 கிலோகிராம் எடையும்,[3] 1260 கன சென்டிமீட்டர் அளவும் உடையது. பெண்ணின் மூளை சுமார் 1130 கன சென்டிமீட்டர் (cc) அளவுடையது.[4] மனிதன் உயிருடன் இருக்கும்போது, மூளையின் வெளிப்பரப்பு அடர்த்தியான சாம்பல் நிறத்திலும், உள்நிறை மஞ்சள், வெள்ளை நிறமாகவும் காணப்படுகிறது. வலது புறத்தில் உள்ள புகைப்படத்தில் மூளையின் நடுவில் கிடைமட்ட குறுக்குவெட்டு தோற்றம் காட்டப்பட்டுள்ளது. இப்படத்தில் பெருமூளைப் புறணியையும் (மடிப்புகள் நிறைந்த பகுதி) வெண்பொருளையும் காணலாம். கோடிக்கணக்கான மயலின் உடைய நரம்பிழைகள் (myelinated fibre) வெண்பொருளையும், பெருமூளைப் புறணியையும் இணைக்கின்றன. 20 வயதான ஆணின் மூளையில் உள்ள மயலின் உடைய நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 176,000 கிலோமீட்டர். அதே வயதில் பெண்ணின் மூளையில் உள்ள மயலின் உடைய நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 149,000 கிலோமீட்டர்.[5] மூளையின் மேல் பகுதியில், மடிப்புகளை உடைய பெருமூளைப் புறணிப் பகுதி, இரண்டு அரைக் கோளங்களாக அமைந்திருப்பதால், அவை பெருமூளை அரைக்கோளங்கள் (cerebral hemispheres) என்று அறியப்படுகின்றன. இப்பகுதியே மூளையின் பெரிய பகுதி.[6] பெருமூளை அரைக்கோளங்களுக்குக் கீழே அவற்றை இணைத்தவாறு அமைந்துள்ள தண்டுப் பகுதி மூளைத்தண்டு என்று அழைக்கப்படுகிறது. மூளையின் பின்பகுதியில், பெருமூளைப் புறணிக்கு கீழே, மூளைத்தண்டிற்கு பின்பகுதியில் உள்ள பகுதி சிறுமூளை (cerebellum) என்று அறியப்படுகிறது. இப்பகுதியில் கிடைவாக்கில் வரிவரியான பள்ளம் போன்ற அமைப்பு உள்ளமையால், மூளையின் மற்ற பகுதிகளை விட தோற்றத்தில் மாறுபட்டதாக காணப்படுகிறது. மற்ற பாலூட்டி இனங்களிலும் காணப்படும் சிறுமூளை, மூளையின் சிறிய பகுதிகளில் ஒன்று. மேலும், பொதுவான விதியாக ஓர் உயிரினத்தின் சிறுமூளை எவ்வளவு சிறிதாக உள்ளதோ, அதே அளவு அதன் பெருமூளைப் புறணி பகுதி குறைந்த மடிப்புகளை கொண்டதாக இருக்கும். எலி, சுண்டெலியின் பெருமூளைப் புறணி பகுதி மடிப்புக்களே இன்றி வழுவழுப்பான பகுதியாக இருப்பது இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக அமையும். பாலூட்டிகளில் மிகப்பெரியதான திமிங்கலமும், ஓங்கிலும் (dolphin) மனிதனை விட மிக அதிகமான மடிப்புகளைப் பெருமூளைப் புறணிப் பகுதியில் கொண்டுள்ளன. மனித மூளையின் சிறப்பு வேறுபாடு மிகப் பெரிய அளவிலான பெருமூளைப் புறணிப் பகுதியாகும். மனிதனில் மிகப்பெரிதாக இருப்பதால் அது மூளையின் ஏனைய பகுதிகளை முழுவதும் மறைத்தவாறு காணப்படுகிறது. மனிதனின் சிறுமூளை மற்ற பாலூட்டிகளை விட அளவில் பெரியது. மனிதனின் பெருமூளைப் புறணி அளவில் மட்டுமல்லாது மூளையின் செயல் பாட்டிலும் பெரும் பங்கு வகிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு எலியின் பெருமூளைப் புறணிப் பகுதி அறுவை முறையில் அகற்றப்பட்ட நிலையிலும், அவ்வுயிரினத்தால் நடக்கவும், உண்ணவும், வெளிப்புற மாற்றங்களை உணரவும் இயலும். ஆனால் பெருமூளைப் புறணி பாதிப்படைந்த நிலையில் உள்ள ஓர் மனிதன், நிரந்தர ஆழ்மயக்க (coma) நிலைக்கு உட்படுவான். பெருமூளைப் புறணி தோராயமாக ஈடான வலது-இடது அரைக் கோளங்களாக பிரிக்கப்படுகிறது.உடற்கூறு வல்லுநர்கள் ஒவ்வொரு அரைக் கோளத்தையும் நான்கு மடல்களாக பிரிக்கின்றனர். அவையாவன, முன் மடல் (frontal lobe), சுவர் மடல் (parietal lobe), பக்க மடல் (temporal lobe), மற்றும் பிடரி மடல் (occipital lobe). இப்பிரிவுகளின் பெயர்கள் அப்பிரிவுகளின் அருகில் இருக்கும் மண்டையோட்டு எலும்புகளின் பெயருக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பெருமூளைப் புறணி பகுதி, ஓர் அகலமான பெரிய நரம்பணு இழைய விரிப்பை பல மடிப்புகளாக மடிப்பதன் மூலம் சுருக்கி குறுகிய மண்டையோட்டினுள் வைத்தது போன்ற வடிவத்தையுடையது. ஒவ்வொரு பெருமூளைப் புறணி அரைக்கோளத்தில் உள்ள நரம்பணு இழையத்தை மடிப்புகளை அகற்றி விரித்தால் அவற்றின் பரப்பளவு சுமார் 1.3 சதுர அடியாகும்.[7] உடற்கூறு வல்லுநர்கள் இத்தகைய மடிப்புகளால் ஏற்படும் பள்ளத்தை வரிப்பள்ளம் (sulcus) எனவும், ஒவ்வொரு வரிப்பள்ளத்துக்கும் இடையே உள்ள வழுவழுப்பான பகுதியை மடிமேடு (gyrus) எனவும் குறிப்பிடுகின்றனர். பொதுவாக எல்லா மனிதர்களின் மடிப்புகளும் ஏறத்தாழ ஒரே வடிவத்தைக் கொண்டிருப்பினும், வேறுபாடுகளை அறியத்தக்க அளவில் அவை வடிவத்திலும், மதிப்புகளின் அமைவிடத்திலும் சில மாறுதல்களைக் கொண்டு தனித்தன்மையுடன் விளங்குகின்றன. இருப்பினும், சில பெரிய மடிப்புகளை எல்லா மாந்தரிடமும் காண இயலும். பெருமூளைப் புறணியின் வெவ்வேறு பகுதிகள், வெவ்வேறான புலனறிவுத் திறன்களை (எ.கா, பார்த்தல், கேட்டல், உணர்தல்) கற்று ஆளும் திறனை பெற்றுள்ளன. இதனை பல்வேறு வழிகளின் மூலம் உறுதிப்படுத்த இயலும்: மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதி சேதமடைதல், ஒரு குறிப்பிட்ட புலனை மட்டுமே பாதித்தல், காந்த ஒத்ததிர்வு வரைவு (magnetic resonance imaging) நுட்பத்தின் சிறப்பு வரைவு முறையான வினைசார் காந்த ஒத்ததிர்வு வரைவு (functional magnetic resonance imaging அல்லது fMRI) மூலம் ஓர் குறிப்பிட்ட புலனையும் அதனை ஆளும் மூளையின் குறிப்பிட்ட பகுதியையும் அறிதல், பெருமூளைப் புறணியின் இழைய கட்டமைப்பை ஆராய்தல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. உடற்கூறு வல்லுனர்களின் கருத்துப்படி நுண்ணோக்கி துணை கொண்டு பெருமூளைப் புறணி இழையத்தை சுமார் 6 அடுக்குகளாக பிரிக்க இயலும். ஆயினும், பெருமூளையின் அனைத்து இடங்களிலும் இவ்வடுக்குகளை பிரித்துக் காண இயலாது. பல உடற்கூறு வல்லுனர்கள் புறணியில் உள்ள இவ்வடுக்குகளை வரைபடமாக குறித்துள்ளனர். இவர்களில் முதன்மையானவராக அறியப்படும் பிராட்மேன் மூளையின் பல்வேறு பாகங்களை 52 பிரிவுகளாக குறித்துள்ளார். (பின்னாளில் உடற்கூறு வல்லுநர்கள் அதனை மேலும் பல உட்பிரிவுகளாக பிர்த்துள்ளனர்). இடவிளக்கவியல் இயக்கப் புறணி முதன்மை இயக்கப் புறணி (primary motor cortex) என்ற பட்டையான நரம்பு இழையம் படத்தில் காட்டியுள்ளபடி நடு வரிப்பள்ளத்தின் (central sulcus) முன்புற ஓரத்தில் அமைந்துள்ள ஒரு இயக்கப் புறணி (motor cortex) ஆகும். இயக்கப் புறணிகள் உடம்பில் உள்ள, மனிதனின் விருப்பத்துக்கேற்ப இயங்கக் கூடிய தசைகளுக்கு ஆணைகளை அனுப்பி கட்டுப்படுத்தும் பகுதிகளாகும். வலது புறத்தில் உள்ள வரைபடம் மூலம் மூளையின் இயக்கப் புறணிகளில் ஒன்றான முதன்மை இயக்கப் புறணியில், உடம்பில் உள்ள பாகங்களின் இயக்க கட்டுப்பாட்டு பகுதிகளை வரிசை முறையே ஒழுங்கு படுத்தி இருப்பதை அறிய முடிகிறது. அதாவது, முதலில் கால் பாதம், அதை தொடர்ந்து கால்கள், தொடை, அடிவயிறு என்று உடம்பில் பாகங்கள் எவ்வரிசையில் அமைந்துள்ளனவோ, அதே வரிசையில் மூளையிலும் அவற்றின் கட்டுப்பாட்டு பகுதிகள் அமைக்கப் பட்டுள்ளன. புறணியின் ஒரு பகுதியை மின்கிளர்ச்சியூட்டினால், அப்பகுதி கட்டுப்படுத்தும் உடல் உறுப்பின் தசையில் இறுக்கம் ஏற்படுவதையும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். ஆயினும், ஒவ்வொரு உறுப்பும் வெவ்வேறு அளவு புறணி நரம்பிழையத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக,மனிதனின் தலையில் உள்ள உறுப்புகளை கட்டுப்படுத்தும் புறணி நரம்பிழையம், முதுகினை கட்டுப்படுத்தும் புறணி நரம்பிழையத்தை விட மூன்று மடங்கு அளவில் பெரிது. எந்த அளவு ஒரு உடல் உறுப்பினை கட்டுப்படுத்தும் புறணி நரம்பிழையம் செரிவுமிக்கதாக (பெரிய அளவினை உடையதாக) அமைந்துள்ளதோ, அதே அளவு அவ்வுறுப்பின் இயக்க கட்டுப்பாடும், புலன் பாகுபடுத்தி அறியும் திறனும் அமையும். இக்காரணத்தால், மனிதனின் உதடு, நாக்கு, விரல்கள், முக தசைகள் ஆகிய அவயங்கள் சிறிதாக இருப்பினும் பல நுண்ணிய செயல்பாடுகளை ஆற்றுவதால் ( எ.கா, நாக்கு,உதடு - பேசுதல்) அவற்றைக் குறிக்கும் புறணி நரம்பிழையத்தின் அளவு பெரிதாக அமைந்துள்ளது. பார்வைப் புறணி மனிதனின் பார்வைக்கான புறணி நரம்பிழைய அமைப்புகள், கண்ணின் பின்புறம் அமைந்துள்ள விழித்திரையின் (retina) அமைப்பினை ஒத்துள்ளன. மனிதனின் கண்ணை வந்தடையும் ஒளியினை சமிக்கைகளாக மாற்றும் விழித்திரையின் ஒவ்வொரு நரம்பணுவும், இப்பகுதியில் சில புறணி நரம்பணுக்களால் குறிக்கப்படுகின்றன. அதிலும், விழித்திரையின் நடுவில் உள்ள நரம்பணுக்களுக்கு (பார்வையின் நடுவில் இருக்கும் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில்) விழித்திரையின் ஓரத்தில் உள்ள நரம்பணுக்களை விட அதிக அளவு பார்வை புறணி நரம்பணுக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பெருமூளைப் புறணியில் உள்ள பார்வைப் புறணியில் (visual cortex) விழித்திரையினில் விழும் ஒரு காட்சியின் தோற்றங்களை பல்வேறு கோணங்களில் ஆராய நூற்றுக்கணக்கான வெவ்வேறு விழித்திரை ஒப்புருவ வரைவுகள் (retinotopic maps) உள்ளன. இவற்றின் மூலம் ஒரு தோற்றம், ஒரே நேரத்தில் பல கோணங்களில் ஆராயப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப் படுகிறது. முதன்மைப் பார்வைப் புறணி (primary visual cortex) (பிராட்மேன் வகைப்பாட்டில் 17வது பகுதி), கண்ணில் இருந்து வரும் நரம்பு சமிக்கைகளை முன்மூளை உள்ளறை (thalamus) வழியே நேரடியாகப் பெறுகிறது. இப்பகுதி பெறப்பட்ட தோற்ற சமிக்கைகளில் உள்ள முக்கிய சிறப்பியல்புகளை (visual feature) எளிதாக பிரித்தெடுக்க வல்லது. முன்மூளை உள்ளறை முன்மூளையில் உள்ள கோள வடிவிலான, சாம்பல் நிற பொருளாலான, இரண்டு பெரிய அறைகளை குறிக்கும். இவை பெருமூளைப் புறணிக்கு புலன்களில் இருந்து வரும் சமிக்கைகளை தம் வழியே அனுப்புகின்றன. காட்சியில் இருந்து பொருளின் நிறம், இயக்கம், வேகம், வடிவம் ஆகியவற்றை முதன்மைப் பார்வைப் புறணிக்கு அடுத்து ஆராயும் பார்வை புறணிகள் கண்டறிகின்றன. கேட்டல் புறணி கேட்டல் புலன் பகுதி, இடமகன்ற தொனியொழுங்கு முறையில் அமைக்கப்பட்ட ஒப்பு வரைவுகளைக் (tonotopic maps) கொண்டது. இடமகன்ற தொனியொழுங்கு முறை என்பது மனிதன் கேட்கும் ஒவ்வொரு மாறுபட்ட தொனியும் (ஒலி அதிர்வெண்ணும்), கேட்டல் புறணியின் வெவ்வேறு இடத்தை கிளர்ச்சி அடையச் செய்தல் ஆகும். சுருக்கமாக, தொனியின் அதிர்வெண்ணைக் கொண்டு, இடமகன்ற வெளியில் ஒழுங்கு படுத்துதல் என்ற பொருள்படும். கேட்டல் புறணியின் பல்வேறு பகுதிகளில் நிகழும் கிளர்ச்சிகளின் மொத்தக் கூட்டு தரும் இணைவுப் பொருத்தம் (combination) ஒரு சொல்லை உருவாக்கும். ஒலிகள் அவை தரும் அதிர்வெண்ணை (அதாவது, உச்ச சுருதி அல்லது தாழ்ந்த சுருதி) கொண்டே பிரித்துணரப் படுகின்றன. பார்வை அமையம் (visual system) போன்றே, கேட்டல் பகுதியிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடமகன்ற தொனியொழுங்கு முறையில் அமைக்கப்பட்ட புறணி ஒப்பு வரைவுகள் (tonotopic cortical maps) உள்ளன. ஒவ்வொரு ஒப்பு வரைவும் வெவ்வேறு வகையில் ஒலியினை ஆராய விழைகின்றன. வினை இடமறிதல் வினை இடமறிதல் என்பது மூளையின் ஒவ்வொரு கட்டுப்பாட்டு பகுதியையும், அது கட்டுப்படுத்தும் உறுப்பின் செயல்பாடுகளையும் கண்டறிந்து அவற்றை ஒன்றுடன் ஒன்று பொருத்துதல் எனலாம். பெருமூளையின் ஒவ்வொரு அரைக் கோளமும், உடம்பின் ஒரு பாகத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும், வலது பக்க மூளை உடம்பின் இடப்பக்க உறுப்புகளையும், இடப்பக்க மூளை உடம்பின் வலப்பக்க உறுப்புகளையும் கட்டுப்படுத்துவது குறிப்பிடத்தக்கது. இதே முறையிலேயே, மூளைக்கும், முதுகுத் தண்டுக்கும் இடையே உள்ள இயக்க இணைப்புகளும் (motor connections), புலன் இணைப்புகளும் (sensory connections), மூளைத்தண்டின் நடுப்பகுதியில், வலது இடதாகவும், இடது வலமாகவும் இடம் மாறுகின்றன. கலைச் சொற்கள் frontal lobe - முன் மடல் parietal lobe -சுவர் மடல் temporal lobe -பக்க மடல் occipital lobe -பிடரி மடல் cerebellum - சிறுமூளை cerebral hemispheres - பெருமூளை அரைக்கோளங்கள் cerebral - பெருமூளை cortex - புறணி (புறத்தே இருப்பதால் புறணி) cerebral cortex - பெருமூளைப் புறணி nerve tissue - நரம்பிழையம் myelinated fiber - மயலின் உடைய நரம்பிழை white matter - வெண் பொருள் grey matter - சாம்பல் நிறப் பொருள் closed head injuries - உள் தலை காயங்கள் brain stem - மூளைத்தண்டு coma - ஆழ்மயக்கம் sulcus -வரிப்பள்ளம் gyrus -மடிமேடு functional magnetic resonance imaging அல்லது fMRI - வினைசார் காந்த ஒத்ததிர்வு வரைவு primary motor cortex- முதன்மை இயக்கப் புறணி thalamus - முன்மூளை உள்ளறை hypothalamus - முன்மூளை கீழுள்ளறை இவற்றையும் பார்க்கவும் உடல் உறுப்புக்கள் மனித மண்டையோடு முள்ளந்தண்டு மேற்கோள்கள் மேலும் படிக்க Unknown parameter |coauthors= ignored (|author= suggested) (help) Unknown parameter |coauthors= ignored (|author= suggested) (help) Unknown parameter |coauthors= ignored (|author= suggested) (help) Unknown parameter |coauthors= ignored (|author= suggested) (help) Unknown parameter |coauthors= ignored (|author= suggested) (help); Cite journal requires |journal= (help) Simon, Seymour (1999). The Brain. HarperTrophy. ISBN 0-688-17060-9 Thompson, Richard F. (இரண்டாயிரம்.The Brain: An Introduction to Neuroscience. Worth Publishers. ISBN 0-7167-3226-2 Campbell, Neil A. and Jane B. Reece. 2005<i data-parsoid='{"dsr":[19468,19479,2,2]}'>Biology. Benjamin Cummings. ISBN 0-8053-7171-0 வெளி இணைப்புகள் ScienceDaily – an article by Hans Moravec — Provided by New Scientist. About differences between female and male brains. பகுப்பு:மூளை பகுப்பு:நரம்பியல் பகுப்பு:விலங்கின உடற்கூற்றியல் en:Human brain
மனித மூளையின் எடை என்ன?
1.5 கிலோகிராம்
3,565
tamil
5979f7d6a
கலைச்சொல் (ஒலிப்பு) என்பது, ஏதாவது ஒரு அறிவுத்துறையில் பயன்படக்கூடிய சிறப்புச் சொற்றொகுதியைக் குறிக்கும். ஒவ்வொரு துறைக்குள்ளும் ஒரு கலைச்சொல்லுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பான பொருள்கள் இருக்கக்கூடும். இவை பொது வழக்கில் உள்ள பொருள்களோடு ஒத்திருக்க வேண்டியது இல்லை. ஒரு குறிப்பிட்ட துறை குறிப்பிடத்தக்க காலம் பயிலப்பட்டு வரும்போது அத்துறையில் காணப்படும் இத்தைகைய சிறப்புச் சொற்கள் செறிவான பொருளை உணர்த்துவனவாக வளர்ச்சியடைகின்றன. இவ்வாறான சிறப்புச் சொற்றொகுதியின் பெறுமதி ஒவ்வொரு சொல்லிலும் ஒரு குறிப்பிட்ட அளவு தகவலைப் பொதித்து வைத்திருப்பதில் தங்கியுள்ளது. கலைச்சொல் என்பது சொற்சிக்கனத்தோடு, பொருளில் ஆழத்தையும், துல்லியத்தன்மையையும் பெறுவதற்கான ஒரு வழிமுறையும் ஆகும். இதனால், ஒரு துறைசார்ந்த வல்லுனர்கள் தங்களிடையே அத் துறைசார் விடயங்களைச் சுருக்கமாகவும், துல்லியமாகவும் பரிமாறிக் கொள்வதற்குக் கலைச்சொற்கள் பயனுள்ளவையாக அமைகின்றன. பொதுச் சொற்களும், கலைச்சொற்களும் வேறுபாடுகள் வரைவிலக்கணங்களின் அடிப்படையில் கலைச்சொற்கள் பொதுச் சொற்களில் இருந்து பல வேறுபட்ட பண்புகளைக் கொண்டனவாக உள்ளன. குறிப்பாகக் கலைச்சொற்களின் பின்வரும் பண்புகள்[1] அவற்றைப் பொதுச் சொற்களில் இருந்து வேறுபடுத்துகின்றன. பொது வழக்கில் பயன்படாமை ஒரு துறைசார்ந்த குழுவினர் மட்டும் பயன்படுத்துவது சிறப்புப் பொருள் இருப்பது சொல்லும் பொருளும் துறை சார்ந்தோரால் தீர்மானிக்கப்படுதல் நுண்பொருளைக் குறிக்கும்போது ஆழ்ந்த பொருளை வெளிப்படுத்துவது. பொதுத் தன்மைகள் ஆனாலும், பயன்பாட்டில் இரண்டுக்கும் இடையே பொதுத் தன்மைகளும் இருக்கவே செய்கின்றன. சொற்கள் மொழியின் பொது வழக்கில் இல்லாவிட்டாலும் கூட, அம்மொழியின் இலக்கண வரம்புகளுக்குள்ளேயே பயன்படுகின்றன. இதனால், குறிப்பிட்ட ஒரு மொழியைப் பொறுத்தவரை கலைச்சொற்கள் பொதுச் சொற்களோடு பின்வரும் பொதுத் தன்மைகளைக் கொண்டுள்ளதைக் காணலாம்.[2] ஒரே குறியீடுகளைப் பயன்படுத்துவது ஒரே ஒலிப்புமுறை ஒரே உருபனியல் அமைப்பு ஒரே தொடரியல் விதிகளுக்கு அமைவது ஒரே சொற்றொடர் வகைகளைப் பயன்படுத்துவது. வகைகள் கலைச்சொற்கள் பெரும்பாலும் பொது வழக்கில் இருந்து வேறுபட்டுக் காணப்படுவதால் சாதாரண மக்களும், பிற துறைகளைச் சார்ந்தவர்களும் புரிந்து கொள்ள முடியாதவையாக உள்ளன. எனினும், எல்லாக் கலைச்சொற்களுமே பொதுவழக்கில் இல்லாதவை என்று கூறிவிடுவதற்கு இல்லை. கலைச்சொற்களாகக் கருதப்படும் பல சொற்கள் பொது வழக்கிலும் புரிந்துகொள்ளக்கூடியவையாக இருப்பதைக் காணலாம். இந்த அடிப்படையில் பார்க்கும்போது கலைச்சொற்களாகப் பயன்படும் சொற்களை மூன்று வகைகளுக்குள் அடக்கலாம். பொது வழக்கில் உள்ளவை (மூளை, பரப்பளவு, முக்கோணம் போன்ற சொற்கள் இத்தகையவை) முற்றிலும் துறைசார்ந்தவை (பொட்டாசியம் சல்பேட்டு, பெருங்கற்காலம், எறியம், பிரிமென்றகடு போன்ற கலைச்சொற்கள் இந்த வகைக்குள் அடங்குவன) இடை நிலையில் உள்ளவை (கணினி, ஓசோன் படலம், பாலைவனமாதல் போன்ற சில சொற்கள் தற்காலத்தில் பரவலாகப் புரிந்து கொள்ளக்கூடிய கலைச்சொற்கள்) கலைச்சொற்கள் தொடர்பிலான அணுகுமுறைகள் கலைச்சொற்களை உள்ளடக்கிய சிறப்பு மொழிவழக்குகள் மொழியின் ஒரு பகுதி என்ற அளவில், அது உணர்வு வெளிப்பாட்டுக்கும், தொடர்பாடலுக்குமான ஒரு ஊடகம் என்ற அடிப்படையையே பெரும்பாலான அணுகுமுறைகள் பொதுவாகக் கொண்டிருந்தன. பயனாளிகளின் நோக்கங்களையும் செயற்பாட்டுத் தேவைகளையும் பொறுத்து, அணுகுமுறைகளிடையே வேறுபாடுகள் காணப்பட்டன. தொடக்கத்தில் மூன்று விதமான அணுகுமுறைகள் கையாளப்பட்டன. இவை, 1) மொழியியல் அணுகுமுறை, 2) மொழிபெயர்ப்பு அணுகுமுறை, 3) திட்டமிடல் அணுகுமுறை என்பன.[3] மொழியியல் அணுகுமுறையைப் பொறுத்தவரை மூன்று குழுக்களை முக்கியமாகக் கருதலாம். ஒரு குழுவினர் யூஜீன் வூசுட்டரின் "பொதுக் கலைச்சொல்லியல் கோட்பாட்டின்" அடிப்படையில் தமது அணுகு முறையை அமைத்துக்கொண்டவர்கள். இவர்கள் கருத்துருக்களே முதன்மையானவை என்றும் அவற்றுக்கான பெயரீடுகளே கலைச்சொற்கள் எனனவும் கொண்டனர். இக்குழுவினர், கலைச்சொற்களைப் பன்னாட்டு அளவில் தரப்படுத்துதலுக்கும் முக்கியத்துவம் அளித்தனர். இன்னொரு குழுவினர், கலைச்சொற்களை உள்ளடக்கிய சிறப்பு மொழிவழக்கைப், பொது மொழிவழக்கின் ஒரு பாணியாகவே கருதியதுடன், கலைச்சொற்களை, மொழியின் செயற்பாட்டு, தொழில்சார் பாணியின் அலகுகளாகக் கொண்டனர். மூன்றாவது குழுவினர், பன்மொழிச் சூழலைப் பின்னணியாகக் கொண்டு, கருத்துருக்களையும், கலைச்சொற்களையும் தரப்படுத்துவது தொடர்பில் தமது அணுகுமுறையை அமைத்துக்கொண்டனர்..[4] மொழிபெயர்ப்பு அணுகுமுறை மொழிபெயர்ப்புகளுக்கான வசதிகளை வழங்குவதை அடிப்படையாகக் கொண்டது. இந்த அணுகுமுறை, பன்மொழிக் கலைச்சொற்களை உருவாக்குவதற்கும் அவற்றுக்கான தரவுத்தளங்களை உருவாக்குவதற்கும் முக்கியத்துவம் வழங்குவது.[5] பன்மொழி பேசும் சமூகங்களைக் கொண்ட பகுதிகளில், அரசாங்க நிர்வாகத் தேவைகளுக்கு இந்த அணுகுமுறை பெரிதும் பயன்படுகிறது. அதிகாரபூர்வக் கலைச்சொற்களை மொழிபெயர்ப்பாளர்கள் எல்லோரும் பயன்படுத்துவதைக் கலைச்சொல் தரவுத்தளம் உறுதிசெய்கிறது. கலைச்சொல் தரப்படுத்தல் கலைச்சொற்கள் நீண்டகால வரலாறு கொண்டவை. எனினும், அக்காலங்களில் கலைச்சொற்கள் தொடர்பில் ஒருமைப்பாடு காணப்படவில்லை. அறிவியல், தொழிநுட்பம் மற்றும் புதிய அறிவுத் துறைகள் வேகமாக வளர்ச்சியடைந்து வந்தபோது, பன்னாட்டளவிலான தொடர்புகளுக்கும் அறிவுப் பரவலுக்கும் கலைச்சொற்களைத் தரப்படுத்தலின் முக்கியத்துவம் உணரப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆசுத்திரிய நாட்டைச் சேர்ந்தவரும், கலைச்சொல்லியலின் தந்தை எனக் கருதப்படுபவருமான யூஜீன் வூசுட்டர் (Eugen Wüster) என்பவர் இது தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டார். 1931 ஆம் ஆண்டில் இவர் எழுதிய தொழில்நுட்பக் கலைச் சொற்களைப் பன்னாட்டளவில் தரப்படுத்தல் என்னும் செருமன் மொழி நூல், பன்னாட்டுத் தரப்படுத்தல் அமைப்பின் கீழ் கலைச்சொல் தரப்படுத்தலுக்கான பன்னாட்டுத் தொழில்நுட்பக் குழு ஒன்று உருவாகக் காரணமானது. இக்குழு 1967 ஆம் ஆண்டிலிருந்து 1973 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கலைச்சொற்களைத் தரப்படுத்தல் தொடர்பான ஏழு அடிப்படை ஆவணங்களை வெளியிட்டது. வூசுட்டரும் பிற ஆய்வாளர்களுடன் சேர்ந்து ஆய்வுகளை நிகழ்த்திக் கலைச்சொல் பொதுக் கோட்பாட்டின் அடிப்படைகள், பன்னாட்டுக் கலைச்சொற்கள் என்பன உள்ளிட்ட பல நூல்களை எழுதினார். இவற்றின் மூலம், கலைச்சொல்லாக்க வழிமுறைகள், கலைச்சொற்களைத் தெளிவுபடுத்தல், ஆவணப்படுத்தல், ஒலிபெயர்ப்பு போன்றவை தொடர்பான பல கருத்துக்களை வெளிப்படுத்தினார். குறிப்புகள் உசாத்துணைகள் சண்முகம், செ. வை., மொழி ஆய்வு, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2005. செல்லப்பன், இராதா., கலைச்சொல்லாக்கம், அறிவுப் பதிப்பகம், சென்னை, 2006. மாதையன், பெ., அகராதியியல் கலைச்சொல்லகராதி, பாவை பப்ளிகேசன்சு, சென்னை, 2009. Cabre, M. Teresa., Terminology: Theory, Methods and Applications, John Benjamins Publishing Company, Amsterdam, 1999. இவற்றையும் பார்க்கவும் கலைச்சொல்லியல் வெளி இணைப்புகள் கலைச்சொற்களின் ஒரு பட்டியல் பகுப்பு:கலைச்சொற்கள் பகுப்பு:கலைச்சொல்லியல்
ஒலிப்பின் தந்தை என்று கருதப்படுபவர் யார்?
யூஜீன் வூசுட்டர்
4,689
tamil
11d635808
ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் (பிறப்பு ஜூன் 4, 1946, நெல்லூர் மாவட்டம், மெட்ராஸ் மாகாணம் தற்போது ஆந்திரப் பிரதேசம்) புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இசைப் பாடகர் ஆவார். எஸ். பி. பி (S.P.B) என்ற முன்னெழுத்துகளால் பரவலாக அறியப்படுகிறார். 1966இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்படங்களில் பாடத் தொடங்கினார். 1966 முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். திரைப்பட பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர். இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் வழங்கியது.[2] இவருக்கு 2016 ஆம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது.[3][4][5][6] தொடக்கம் 1960களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையிசை உலகில் அறிமுகமான எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னணிப் பாடகராக உள்ளார்.[7][8][9][10][11] இவர் தமிழில் முதலில் பாடியது ஹோட்டல் ரம்பா திரைப்படத்தில் மெல்லிசை மன்னர்௭ம்.௭ஸ்.வி இசையில் எல். ஆர். ஈஸ்வரியோடு இணைந்து அத்தானோடு இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு ௭ன்ற பாடலைப் பாடினார்.[12] ௭திர்பாராத நிலையில் ஹோட்டல் ரம்பா திரைப்படம் வெளியிடப்படவில்லை. அடுத்ததாக சாந்தி நிலையம் படத்தில் வரும் இயற்கையெனும் இளையகன்னி என்ற பாடலைப் பாடினார் . ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண் திரைப்படத்தில் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் வெளிவந்தது.[13][14][15] சாதனைகள் நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.[16][17][18] ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். எஸ். பி. பி. முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. பிலிம்பேர் விருதினை ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார். மேலும் இவர் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றார். இவர் 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார்.[19][20] எஸ் பி பி எந்த பாடகரும் செய்யாத சாதனைகளை இந்திய திரையிசையில் செய்திருக்கிறார். இவர் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி கர்நாடகா, பெங்களூரில் உள்ள பதிவரங்கில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை கன்னட மொழி இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக பாடி சாதனை செய்துள்ளார். மேலும் தமிழ் மொழியில் 19 பாடல்களையும் (ஒரேநாளில்), இந்தி மொழியில் 16 பாடல்களையும் (6மணி நேரத்தில்) பாடி சாதனை செய்திருக்கிறார். இவைகளெல்லாம் இவருடைய குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.[21][22] ஆரம்ப கால வாழ்க்கை பாலசுப்பிரமணியம் எஸ் பி சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக கொணடம்பேட்டை, நெல்லூர் மாவட்டம், ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை எஸ் பி சம்பமூர்த்தி ஹரிஹத கலைஞர் ஆவார். இவர் உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் இருக்கின்றனர். இவர்களில் எஸ். பி. சைலஜா, கிரிஜா[23] இளைய தங்கைகள் ஆவார். சைலஜா 5000க்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய மொழிகளில் பாடியுள்ளார்.[24][25] பாலசுப்பிரமணியம் இசை ஆர்வத்தை இளவயதிலேயே வளர்த்து, தன் தந்தை ஹரிஹதத்தை வாசிக்கும் பொழுது கவனித்து, கற்று, இசை கருவிகளை வாசிக்கவும் தேர்ச்சி பெற்றார். அதில் குறிப்பிடத்தக்க கருவிகள் என்றால் ஹார்மோனியம் மற்றும் புல்லாங்குழல் ஆகும். இவர் பொறியாளர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரி, அனன்டபூரில் மாணவனாக சேர்ந்தார். டைப்பாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னையில் உள்ள வேறொரு கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவருடைய ஆசையோ பாடகனாக வேண்டும் என்பது ஆனால் இவருடைய தந்தையின் ஆசையோ தன் மகன் பொறியாளன் ஆக வேண்டும் என்றிருந்தது. கல்லூரியில் படிக்கும் போதே பல இசை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார். 1964 ஆம் ஆண்டு அமெட்டூர் பாடகர்கள் ஏற்பாடு செய்திருந்த சென்னை மையமாக கொண்ட தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் எஸ் பி பி முதல் பரிசு பெற்றார். ஆரம்பகாலத்தில் மெல்லிசைக் குழு ஒன்று நடத்தி வந்தார்.இதில் பங்கு பெற்றவர்களில் குறிப்பாக இளையராஜா (ஹிட்டார் பிறகு ஹார்மோனியம்), அனிருதா (ஹார்மோனியம்), பாஸ்கர் (percussion) மற்றும் கங்கை அமரன் (ஹிட்டார்) ஆகியோராவர். இவர்களோடு சேர்ந்து எஸ் பி பி இசை நிகழ்ச்சிகளையும் நாடககச்சேரிகளில் பாடல்கள் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். எஸ் பி கோதண்டபானி மற்றும் கண்டசாலா நடுவராக இருந்து பங்குபெற்ற பாட்டுப்போட்டியில் எஸ் பி பி சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[26] அடிக்கடி இசையமைப்பாளர்களை சந்திப்பதும், பாட வாய்ப்பு கேட்பதுமாக இருந்த எஸ் பி பிக்கு முதல் போட்டி பாடல் பி. பி. ஸ்ரீனிவாஸ் பாடிய நிலவே என்னிடம் நெருங்காதே என்ற பாடலாகும்.[27] குடும்ப வாழ்க்கை பாலசுப்பிரமணியம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி பெயர் சாவித்ரி,மகள் பல்லவி, மகன் எஸ். பி. பி. சரண், சரண் சிறந்த பின்னணி பாடகர், நடிகர், சின்னத்திரை தொடர் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு வளர்ந்து வருகிறார்.[28][29] திரையிசை வரலாறு (1960-1970) எஸ் பி பிக்கு முதல் அரங்கேற்ற படம் எஸ். பி. கோதண்டபானி இசையமைத்த தெலுங்கு திரைப்படம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ரமணா (15,திசம்பர், 1966), இத்திரைப்படத்தில் ராவே காவ்ய சுமபாலா ஜவராலா பாடலை பி. சுசீலா மற்றும் பி. பி. ஸ்ரீனிவாஸோடு இணைந்து பாடினார். அரங்கேற்ற பாடலுக்கு பிறகு வெறும் எட்டு நாட்களில் கன்னடம் மொழிப்பாடலை 1966இல் "நகரே அதே ஸ்வர்க" என்ற திரைப்படத்தில், கன்னட நகைச்சுவை நடிகர் டி. ஆர். நரசிம்மராஜுக்கு மாமரவில்லோ கோகிலே ௭ல்லோ பாடலைப் பாடினார். இவர் முதன் முதலில் தமிழ் மொழியில் பாடியது, 1969 ஆம் ஆண்டு ஹோட்டல் ரம்பா திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் ௭ல். ஆர். ஈஸ்வரியோடு இணைந்து அத்தானோடு இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு ௭ன்ற பாடலைப் பாடினார். ௭திர்பாராத நிலையில் ஹோட்டல் ரம்பா திரைப்படம் வெளியிடப்படவில்லை.[12] அடுத்ததாக ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்த சாந்தி நிலையம் திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன் இயற்றிய பாடலை எம். எஸ். விஸ்வநாதன் இசையில் இயற்கையெனும் இளையக்கன்னி பாடலைப் பாடினார்.அதற்குப்பிறகு எம். ஜி. ராமச்சந்திரன் நடித்த அடிமைப் பெண் திரைப்படத்தில் ஆயிரம் நிலவே பாடலையும் பாடினார். மலையாள திரையுலகிற்கு இசையமைப்பாளர் ஜி. தேவராஜன் என்பவரால் கடல்பாலம் என்ற திரைப்படத்தில் "இ கடலும் மறு கடலும்" பாடலை பாடியதன் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். இவர் இந்திய திரையிசையில் செழுமையான வாழ்க்கையை மிக கடின உழைப்பால் உருவாக்கிக் கொண்டார்.[30] இவர் 1970 களில் இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் இணைந்து தமிழ் மற்றும் மலையாள மொழிப்பாடல்களைப் பாடியுள்ளார்.[31][32] தமிழ் திரைப்பட நடிகர்களான எம். ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் என பல நடிகர்களுக்கு 1970களில் பின்னணி பாடியுள்ளார்.[33] இவர் அப்பொழுது பிரபலமாக இருந்த பின்னணிப்பாடகிகளான பி. சுசீலா, எஸ். ஜானகி, வாணி ஜெயராம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இவர்களோடு பல ஜோடிப்பாடல்களை பாடியுள்ளார்.[34] தென்னிந்திய திரையிசையில் வெற்றி கூட்டணியான இளையராஜா, எஸ். பி. பி , எஸ். ஜானகி கூட்டணி 1970களின் கடைசியில் உருவானது.[35][36] 1980-உலகளாவிய வெற்றி எஸ் பி பாலசுப்பிரமண்யம் 1979 இல் வெளிவந்த சங்கராபரணம் திரைப்படப் பாடல்கள் பாடியதன் மூலம் உலகளவில் பிரபலமானார். சங்கராபரணம் தெலுங்கு திரையுலகில் சிறந்த திரைப்படமாக திகழ்கிறது. இத்திரைப்படம் இயக்குனர் கே. விஸ்வநாத்தால் இயக்கப்பட்டது. கே விஸ்வநாத் எஸ் பி பிக்கு பெரியப்பா மகன் ஆவார். இத்திரைப்படத்தின் பாடல்கள் திரையிசை திலகம் கே. வி. மகாதேவனால் கர்நாடக சங்கீதத்தை கொண்டு உருவாக்கப்பட்டது. எஸ் பி பி முறையாக கர்நாடக சங்கீதம் கற்கவில்லை என்றாலும் கேள்வி ஞானத்தை வைத்து சங்கராபரணம் படப்பாடல்களை பாடினார். இத்திரைப்படத்திற்காக இவர் முதல் தேசிய விருதும் பெற்றார்.[37]. இவருக்கு கிடைத்த அடுத்த தேசிய விருது ஏக் தூஜே கே லியே (1981) இந்தி மொழி திரைப்படம் இது இவருடைய முதல் இந்தி திரைப்படம் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரால் எடுக்கப்பட்டது.[38] எஸ் பி பாலசுப்பிரமணியம் தமிழ் திரைப்படங்களுக்கு நிறைய பாடல்களை பாடினார் குறிப்பாக இளையராஜாவின் இசையில் எஸ். ஜானகியோடு இணைந்து ஜோடிப்பாடல்களையும், தனித்தும், சக பின்னணிப்பாடகர்கள் மற்றும் பாடககிகளுடன் சேர்ந்து பல பாடல்களைப் பாடியிருக்கிறார்.[39][40][41] தமிழ் திரையிசையில் இளையராஜா, எஸ் பி பி, எஸ். ஜானகி இம்மூன்று பேரின் வெற்றிப்பாடல்கள் நிறைய உள்ளன. 1983 ஆம் ஆண்டு வெளிவந்த சகார சங்கமம் (தெலுங்கு திரைப்படம்) கிளாசிக்கல் இசையில் அமைத்ததனால் இளையராஜாவுக்கும் எஸ் பி பிக்கும் இந்திய தேசிய விருது கிடைத்தது. 1988 ஆம் ஆண்டு ருத்ரவீணா (தெலுங்கு) திரைப்படத்திற்காக மீண்டும் இவ்விருவருக்கும் இந்திய தேசிய விருது கிடைத்தது. இளையராஜா மட்டுமல்லாது இடைக்காலத்தில் இசையமைத்த எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் பின்னணி பாடியிருக்கிறார்.[42] 1989 ஆம் ஆண்டிலிருந்து எஸ் பி பி பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு பின்னணி பாடிவந்தார். அதிலும் மைனே பியார் க்யா மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இத்திரைப்படத்தில் எல்லா பாடல்களையும் பாடியுள்ளார். எல்லா பாடல்களும் வெற்றி பெற்றது மட்டுமல்லாது தில் தீவானா பாடல் சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருதினையும் இவருக்கு வாங்கி கொடுத்தது. இவர் அடுத்த தலைமுறைக்கும் காதல் ரசனையோடு சல்மான் கான் திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். சல்மான் கான் நடித்த ஹம் ஆப்கே ஹே ஹான் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை குவித்தது இப்படத்தில் லதா மங்கேஷ்கர் உடன் எஸ் பி பி பாடிய திதி தேரா தேவர் தீவானா பாடல் மிகவும் பிரபலமானது இப்பாடலுக்காக லதா மங்கேஷ்கர் பிலிம்பேர் விருது சிறப்பு விருது பெற்றார். இவைகளெல்லாம் பாலசுப்பிரமணியம் ஒரு மிகப்பெரிய இந்தியப் பின்னணிப்பாடகர் என்பதை எடுத்துகாட்டுகிறது.[43][44][45] 1990களில் ௭ஸ் பி பாலசுப்பிரமணியம்1990களில் இசையமைப்பாளர்களான தேவா, வித்யாசாகர், எம். எம். கீரவாணி , எஸ். ஏ. ராஜ்குமார், பரத்வாஜ் போன்றோரின் இசையில் நிறைய பாடல்களைப் பாடினார்.[46] ஆனால் மிகப்பெரிய வெற்றி என்று சொன்னால் அது ஏ. ஆர். ரகுமான் இசையில் பாடிய பாடல்களாகும். ஏ ஆர் ரகுமானின் இசை அரங்கேற்ற படம் ரோஜா இதில் எஸ் பி பி மூன்று பாடல்களைப் பாடினார். ரோஜா திரைப்படத்திற்கு பிறகு நிறைய பாடல்களை ஏ ஆர் ரகுமானின் இசையில் நீண்ட காலமாகவும் பாடிவருகிறார். புதிய முகம் திரைப்படத்தில் "ஜுலை மாதம் வந்தால்" பாடலை அனுபமாவோடு பாடினார். அனுபமாவிற்கு அப்பாடல் அரங்கேற்ற பாடலாகும். கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் "மானூத்து மந்தையிலே மாங்குட்டி" பாடல் நாட்டுப்புற நடையில் வித்தியாசமாகப் பாடினார். டூயட் படத்தில் ஏறத்தாழ எல்லா பாடல்களையும் பாடினார். மின்சார கனவு படத்தில் தங்கத்தாமரை மகளே பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான இந்திய தேசிய விருது எஸ் பி பிக்கு 1996 ஆம் ஆண்டு கிடைத்தது. இதுதான் இவருக்கு கிடைத்த ஆறாவது தேசிய விருதாகும். பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர் அம்சலேகாவின் இசையில் கன்னட திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார். பிரேமலோக திரைப்படத்திற்குப் பிறகு நிறைய பாடல்களை அம்சலேகாவின் இசையில் பாடினார்.இவருடைய ஐந்தாவது தேசிய விருது அம்சலேகாவின் இசையில் பாடியதற்காக கிடைத்தது. கனயோகி பஞ்சக்சரி காவயி (1995) திரைப்படத்தில் உமண்டு குமண்டு பாடலுக்காக, சிறந்த பின்னணிப் பாடகருக்கான இந்திய தேசிய விருது அம்சலேகாவின் ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் இசையில் பாடியதன் மூலம் பெற்றார். 2000ஆம் ஆண்டிற்கு பிறகு எஸ் பி பி 2000ஆம் ஆண்டிற்கு பிறகு இளைய தலைமுறை இசையமைப்பாளர்களான யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ்,டி. இமான், ஜி. வி. பிரகாஷ்குமார், நிவாஸ் கே. பிரசன்னா, அனிருத் ரவிச்சந்திரன் போன்றோரின் இசையமைப்பில் பாடிக்கொண்டிருக்கிறார்.[47][48][49] எஸ் பி பி 2013 ஆம் ஆண்டு வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தில் நடிகர் சாருக்கானுக்காக விஷால்-சேகரின் இசையில் "நிக்கல் நா சாயி சென்னை எக்ஸ்பிரஸ்" தலைப்பு பாடலை பாடியுள்ளார். இப்பாடல் பதினைந்து வருடங்களுக்கு பிறகு இவர் இந்தி திரையிசையில் பாடியதாகும்.[50] பாலசுப்பிரமணியம் 2015ஆம் ஆண்டு சனவரி மாதம் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஆந்திரமாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.[51] இவர் மதங்களை கடந்து பக்திப்பாடல்கள் பல பாடியுள்ளார் இதற்காக 2015ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் "ஹரிவராசனம்" விருது பெற்றுள்ளார்[52][53][54] பின்னணிக்குரல், இசையமைப்பு, நடிப்பு எஸ் பி பி நடிகர் கமல்ஹாசனுக்கு 120 தெலுங்கு திரைப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.[55] கமல் நடித்த தமிழ் திரைப்படம் மன்மத லீலை தெலுங்கில் மனமத லீலா என மொழிமாற்றம் செய்யப்பட்டது அதன்மூலம் எஸ். பி. பி தொடர்ந்து பல நடிகர்களுக்கு பின்னணிக்குரல் கொடுத்துள்ளார் குறிப்பாக கமல்ஹாசன், ரசினிகாந்த், சல்மான் கான், கே. பாக்யராஜ், மோகன், அணில்கபூர், கிரிஸ் கர்ணாட், ஜெமினி கணேசன், அர்ஜுன் சர்சா, நாகேஷ், கார்த்திக் மற்றும் ரகுவரன் ஆகியோருக்கு பல்வேறு மொழிப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.[56] நடிகர் கமலஹாசனுக்கு குரல் ஒன்றிய பின்னணி கொடுப்பவராக திகழ்கிறார். கமல் நடித்த தசாவதாரம் திரைப்படத்தை தெலுங்கில் மாற்றிய போது மொத்தமுள்ள பத்து கதாபாத்திரங்களில் ஏழு கதாபாத்திரங்களுக்கு (பெண் கதாப்பாத்திரம் உட்பட) பின்னணி கொடுத்துள்ளார். இவர் சிறந்த பின்னணிக்குரல் கொடுப்பவருக்கான நந்தி விருதினை அன்னமயா மற்றும் ஸ்ரீ சாய் மகிமா திரைப்படத்திற்கும் பெற்றுள்ளார். 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ ராம ராஜ்ஜியம் (தமிழ்) படத்திற்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்காக பின்னணிக்குரல் கொடுத்துள்ளார். பாலசுப்பிரமணியம் தென்னிந்திய மொழிகளில் எழுபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.[57][58] தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி இந்நான்கு மொழிகளில் நாற்பத்தைந்து திரைப்படத்திற்கு மேல் இசையமைத்துள்ளார்.[59][60][61]. [62] பெற்ற விருதுகள் இந்திய தேசிய விருதுகள் திரைப்பட பட்டியல் நடித்த திரைப்படங்கள் இசையமைத்த திரைப்படங்கள் பின்னணிக்குரல் தந்த திரைப்படங்கள் (இதுவொரு முழுமையான பட்டியல் அல்ல) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மேற்கோள்கள் பகுப்பு:திரைப்படப் பாடகர்கள் பகுப்பு:திரைப்பட நடிகர்கள் பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள் பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகர்கள் பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகர்கள் பகுப்பு:இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்கள் பகுப்பு:தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள் பகுப்பு:தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் பகுப்பு:1946 பிறப்புகள் பகுப்பு:வாழும் நபர்கள் பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள் பகுப்பு:நந்தி விருதுகள் பகுப்பு:பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள் பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் பகுப்பு:தெலுங்கு மக்கள்
எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் முதல் பாடல் எது?
அத்தானோடு இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு
1,177
tamil
f34e9ce70
சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி (Chakravarti Rajagopalachari, 10 திசம்பர் 1878– 25 திசம்பர் 1972) இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, மற்றும் எழுத்தாளர் ஆவார்.[1] இவர் சுருக்கமாக ராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர். இந்தியாவின் கடைசித் தலைமை ஆளுநராகப் பணியாற்றியவர்.[2] அத்துடன் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர், சென்னை மாகாணம், சென்னை மாநில முதலமைச்சர், மேற்கு வங்க ஆளுநர், இந்திய ஒன்றியத்தின் உட்துறை அமைச்சர் போன்ற பல பதவிகளிலும் பணியாற்றியுள்ளார். பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் இந்தியர்களில் ஒருவர். பிற்காலத்தில் சவகர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 1959இல் சுதந்திராக் கட்சியது தொடங்கினார். இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து 1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும் பெரியார் ஈ. வே. இராமசாமியுடன் தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர். அணுவாற்றல் போர்க்கருவிகளைக் குறைக்க போராடியவர். சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர். வாழ்க்கை வரலாறு கிருட்டிணகிரி மாவட்டத்தில் (பழைய சேலம் மாவட்டத்தின்) ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை சக்கரவர்த்தி வெங்கடார்யா தாயார் சிங்காரம்மா ஆவார்.[3] ராஜாஜியின் பள்ளிக் கல்வி ஒசூரிலும், உயர்நிலைக் கல்வி பெங்களூரில். கல்லூரிக் கல்வி பெங்களூரு சென்ட்ரல் கல்லூரியிலும் சென்னை மாகாணக் கல்லூரியிலும் கழிந்தது. 1898 இல் சித்தூர் திருமலை சம்பங்கி ஐயங்கார் மகள் அலர்மேலு மங்கம்மாளை மணந்தார். மூன்று ஆண்பிள்ளைகள், இரண்டு பெண்பிள்ளைகள் பிறந்தனர். 1900இல் தமது வழக்கறிஞர் தொழிலை நன்கு நடத்தி வந்தார். பின்னர் அரசியலில் ஈடுபட்டு 1917 இல் சேலம் நகராட்சி உறுப்பினராகவும் பின்னர் நகர தந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசில் சேர்ந்து ரௌலத் சட்டத்திற்கெதிரான இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாகிரகம் போன்றவற்றில் ஈடுபட்டார். 1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையை ஒட்டி வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடத்தி சிறை சென்றார். 1937 ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் முதன்மை மந்திரியாக பொறுப்பேற்று 1940 வரை பதவி வகித்தார்.பிரித்தானியா ஜெர்மனியுடன் போர் தொடுத்த வேளையில் காந்தியின் வெள்ளையனே வெளியேறு போராட்ட முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். போர்க்காலத்தில் பிரிட்டானியாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. பின்னாளில் முகமது அலி ஜின்னாவுடனும் அகில இந்திய முஸ்லிம் லீக்குடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காண விழைந்தார். இவரது திட்டம் சி ஆர் பார்முலா என அழைக்கப்பட்டது. 1946 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில், வழங்கல், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராக பணியாற்றினார். குடும்பம் ராஜாஜியின் மகள் லட்சுமி, மகாத்மா காந்தியின் நான்காவது மகன் தேவதாஸ் காந்தியை மணந்தவர். இவரது ஒரே மகன் சி. ஆர். நரசிம்மன் இந்திய அரசியல்வாதி ஆவார். வகித்த பதவிகள் 1947 முதல் 1948 வரை மேற்கு வங்க ஆளுனராகவும் 1948 முதல் 1950 வரை விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் 1951 முதல் 1952 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக 1952 முதல் 1953 வரை பதவி வகித்தார். அப்போது அவர் கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்திற்காக மிகுந்த விமரிசனத்திற்கு ஆட்பட்டார். காங்கிரசின் சோசலிச நோக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியிலிருந்து விலகி அரசின் பெர்மிட்-கோட்டா ஆட்சி</i>க்கு மாறான தாராளமயத்தை கொள்கையாகக் கொண்ட சுதந்திராக் கட்சியை நிறுவி 1962,1967 மற்றும் 1972 பொது தேர்தல்களில் போட்டியிட்டார். 1967 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசிற்கு எதிரான அணியை ஒருங்கிணைத்து தமிழக அரசியலில் முதன்முறையாக காங்கிரசல்லாத ஆட்சி மலர துணை நின்றார்.அவருடன் கூட்டணி கண்ட சி. என். அண்ணாதுரை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.நாடாளுமன்றத்திலும் சுதந்திராக் கட்சி 45 இடங்களைப் பிடித்து முதன்மை எதிர்கட்சியாக விளங்கியது. பாரத ரத்னா 1954 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய குடிமையியல் விருதான பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது இலக்கியம் ராஜாஜி தமது எழுத்தாற்றலால் ஆங்கில இலக்கியத்திற்கு சிறப்பாக பங்களித்துள்ளார். தமிழிலும் ராமாயணம் மற்றும் மகாபாரதம் காவியங்களை மொழிபெயர்த்துள்ளார். இவர் கல்கி மற்றும் ரசிகமணி டி.கே.சியுடன் இணைந்து குற்றாலத்தில் இலக்கிய ஆய்வுகள் நடத்தினார். புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடலான "குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா" இவர் இயற்றிய பாடலே. . இந்தி திணிப்பு 1937 ஆம் ஆண்டு பிற காங்கிரசு ஆட்சி மாகாணங்களில் இல்லாத திட்டமான இந்தி மொழி கட்டாயப்பாடத் திட்டத்தைக் கொணர்ந்தவர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொண்டு உயிரிழந்த தாலமுத்து (தாளமுத்து) குறித்து சென்னைச் சட்டமன்றக் கூட்டத்தில் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பிய போது, ’தற்குறி தாலமுத்து தேவையில்லாமல் சிறைப்பட்டு இறந்தார்’ என்று இவர் கூறிய பதில் கோடிக்கணக்கான தமிழர்களின் மனத்தைப் புண்படுத்தியது என்றும் அம்மக்களின் தற்குறித்தன்மையைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதவர் இவ்வாறு விமர்சித்தது பண்பாடல்ல என்றும் நெ.து.சுந்தரவடிவேலு குறிப்பிடுகின்றார். [4] மதுவிலக்கு இந்திய தேசிய காங்கிரசின் கொள்கைகளில் ஒன்றான மதுவிலக்குக் கொள்கையில் ராஜாஜி ஈடுபாடு உடையவராக இருந்தார். அவர் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக 1937ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற பின்னர், அன்றைய சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கை அமல்படுத்தினார். அதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட 1939ஆம் ஆண்டில் விற்பனைவரியை விதித்தார். 1952ஆம் ஆண்டில் சென்னை மாகாண முதல்வராக இரண்டாம் முறை இருந்தபொழுது மாகாணம் முழுக்க மதுவிலக்கை அமல்படுத்தினார். 1971-ஆகத்து-31ஆம் நாள் முதல் தமிழ்நாட்டில் மதுவிலக்கு கைவிடப்படும் என அன்றைய முதலமைச்சர் மு. கருணாநிதி அறிவித்தபொழுது, அம்முடிவைக் கைவிடும்படி கோபாலபுரத்தில் இருக்கும் கருணாநிதியின் வீட்டிற்கு 1971-சூலை-20ஆம் நாள் மாலை கொட்டும்மழையில் சென்று கருணாநிதியைச் சந்தித்து மதுவிலக்கை கைவிட வேண்டாம் என கேட்டுக்கொண்டார். [5] நினைவுச் சின்னங்கள் தமிழ்நாடு அரசு சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி நினைவைப் போற்றும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளியில் அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாகவும், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடமான சென்னை கிண்டியில் அவருக்கு நினைவு மண்டபமும். அமைத்துள்ளது. மேலும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான மண்டபத்திற்கு ராஜாஜி மண்டபம் என்று பெயர் சூட்டியுள்ளது. படைப்புகள் தமிழில் முடியுமா திண்ணை ரசாயனம் சக்கரவர்த்தித் திருமகன் வியாசர் விருந்து கண்ணன் காட்டிய வழி பஜகோவிந்தம் கைவிளக்கு உபநிஷதப் பலகணி ரகுபதி ராகவ முதல் மூவர் (மீ.ப.சோமுவுடன்) திருமூலர் தவமொழி (மீ.ப.சோமுவுடன்) மெய்ப்பொருள் பக்திநெறி ஆத்ம சிந்தனை ஸோக்ரதர் திண்ணை இரசாயனம் பிள்ளையார் காப்பாற்றினார் ஆற்றின் மோகம் வள்ளுவர் வாசகம் ராமகிருஷ்ண உபநிஷதம் வேதாந்த தீபம் இதனையும் காண்க சி. ஆர். நரசிம்மன் இந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல் மேலும் அறிய "ராஜாஜி" - கௌசிகன் CS1 maint: discouraged parameter (link). ஆதாரங்கள் புற இணைப்புகள் ஜ்யோத்ஸ்னா காமத் பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள் பகுப்பு:தமிழ்நாட்டு முதலமைச்சர்கள் பகுப்பு:தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் பகுப்பு:1878 பிறப்புகள் பகுப்பு:1972 இறப்புகள் பகுப்பு:சுதந்திரவாத சிந்தனையாளர்கள் பகுப்பு:அறிவியல் தமிழ் எழுத்தாளர்கள் பகுப்பு:தமிழ் கலைச்சொல் அறிஞர் பகுப்பு:தமிழிசை இயக்க செயற்பாட்டாளர்கள் பகுப்பு:அறிவியல் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் பகுப்பு:ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் பகுப்பு:தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள் பகுப்பு:கிருட்டிணகிரி மாவட்ட நபர்கள் பகுப்பு:இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் பகுப்பு:மேற்கு வங்காள ஆளுநர்கள் பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு:தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் பகுப்பு:இந்திய வைசிராய்கள் பகுப்பு:1 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
சி.ஆர்.ராவ் எப்போது பிறந்தார்?
10 திசம்பர் 1878
60
tamil