id
stringlengths
9
9
context
stringlengths
176
49.8k
question
stringlengths
19
121
answer_text
stringlengths
1
286
answer_start
int64
0
41k
language
stringclasses
2 values
903deec17
ஒரு சாதாரண வளர்ந்த மனிதனுடைய எலும்புக்கூடு பின்வரும் 206 (மார்பெலும்பு மூன்று பகுதிகளாகக் கருதப்பட்டால் 208) எண்ணிக்கையான எலும்புகளைக் கொண்டிருக்கும். இந்த எண்ணிக்கை உடற்கூட்டியல் வேறுபாடுகளைப் பொறுத்து மாறுபடக்கூடும். எடுத்துக்காட்டாக, மிகக் குறைந்த எண்ணிக்கையான மனிதர்களில், ஒரு மேலதிக விலா எலும்பு (கழுத்துவில்) அல்லது ஒரு மேலதிகமான கீழ் முதுகெலும்பு காணப்படுவதுண்டு; இணைந்த சில எலும்புகளைத் தனி எலும்பாகக் கருதாவிடின், ஐந்து இணைந்த திருவெலும்பு; மூன்று (3 - 5) குயிலலகு எலும்புகள் சேர்ந்து 26 எண்ணிக்கையிலான முதுகெலும்புகள் 33 ஆகக் கருதப்படலாம். மனித மண்டையோட்டில் 22 எலும்புகள் (காதுச் சிற்றென்புகளைத் தவிர) உள்ளன; இவை எட்டு மண்டையறை (cranium) எலும்புகளாகவும் 14 முக எலும்புகளாகவும் (facial bones) பிரிக்கப்பட்டுள்ளன. (தடித்த எண்கள் அருகிலுள்ள படத்தில் காணும் எண்களைக் குறிக்கின்றன.) மண்டையறை எலும்புகள் (8) 1 நுதலெலும்பு (frontal bone) 2 சுவரெலும்பு (parietal bone) (2) 3 கடைநுதலெலும்பு (temporal bone) (2) 4 பிடர் எலும்பு (occipital bone) ஆப்புரு எலும்பு (sphenoid bone) நெய்யரியெலும்பு (ethmoid bone) முக எலும்புகள் (14) 7 கீழ்த்தாடை எலும்பு (mandible) 6 மேற்றாடை எலும்பு (maxilla) (2) அண்ணவெலும்பு (palatine bone) (2) 5 கன்ன எலும்பு (zygomatic bone) (2) 9 நாசி எலும்பு (nasal bone) (2) கண்ணீர் எலும்பு (lacrimal bone) (2) மூக்குச் சுவர் எலும்பு (vomer) கீழ் மூக்குத் தடுப்பெலும்பு (inferior nasal conchae) (2) நடுக்காதுகளில் (6): சம்மட்டியுரு (malleus) பட்டையுரு (incus) ஏந்தியுரு (stapes) தொண்டையில் (1): தொண்டை எலும்பு (நாவடி எலும்பு) (hyoid) தோள் பட்டையில் (4): 25. காறை எலும்பு (clavicle) 29. தோள் எலும்பு (scapula) மார்புக்கூட்டில் thorax(25): 10. மார்பெலும்பு (sternum) (1) மேலும் மூன்று என்புகளாகக் கருதப்படலாம்: பிடியுரு (manubrium), உடல் மார்பெலும்பு (body of sternum), வாள்வடிவ நீட்டம் (xiphoid process) 28. விலா எலும்புகள் (rib) (24) முதுகெலும்புத் தூண் (vertebral column) (33): 8. கழுத்து முள்ளெலும்புகள் (cervical vertebra) (7) மார்பு முள்ளெலும்புகள் (thoracic vertebra) (12) 14. நாரிமுள்ளெலும்புகள் (lumbar vertebra) (5) 16. திரிகம் (திருவெலும்பு) (sacrum) வால் எலும்பு (குயிலலகு) (coccyx) மேற்கைகளில் (arm) (1): 11. புய எலும்பு (மேல்கை எலும்பு) (humerus) 26. புய எலும்புப் புடைப்பு (மேல்கை எலும்புப் புடைப்பு) (condyles of humerus) முன்கைகளில் (forearm) (4): 12. அரந்தி (ulna) (2) 13. ஆரை எலும்பு (radius) (2) 27. ஆரை எலும்புத் தலை (head of radius) கைகளில் (hand) (54): மணிக்கட்டுகள் (carpal): படகெலும்பு (scaphoid) (2) பிறைக்குழி எலும்பு (lunate) (2) முப்பட்டை எலும்புtriquetrum) (2) பட்டாணி எலும்பு (pisiform) (2) சரிவக எலும்பு (trapezium) (2) நாற்புறவுரு எலும்பு (trapezoid) (2) தலையுரு எலும்பு (capitate) (2) கொக்கி எலும்பு (hamate) (2) அங்கை முன்னெலும்புகள் (அனுமணிக்கட்டு எலும்புகள்) (metacarpal): (5 × 2) விரலெலும்புகள் (phalange): அண்மை விரலெலும்புகள் (proximal phalanges) (5 × 2) நடு விரலெலும்புகள் (Intermediate phalanges) (4 × 2) தொலை விரலெலும்புகள் (distal phalanges) (5 × 2) இடுப்பு வளையம் (pelvis) (2): 15. இடுப்பெலும்பு (ilium) மற்றும் கீழ் இடுப்பெலும்பு (ischium) கால்கள் (leg) (8): 18. தொடையெலும்பு (femur) (2) 17. இடுப்பு மூட்டு (hip joint) (மூட்டு, எலும்பல்ல) 22. பெரிய தொடையெலும்புக் கொண்டை (greater trochanter of femur) 23. தொடையெலும்புப் புடைப்பு (condyles of femur) 19. சில்லெலும்பு (patella) (2) 20. கால் முன்னெலும்பு (கணைக்காலலுள்ளெலும்பு) (tibia) (2) 21. சிம்பு எலும்பு (கணைக்கால்வெளியெலும்பு) (fibula) (2) காலடிகளில் (52): கணுக்காலெலும்புகள் (tarsal): குதிகால் (calcaneus) (2) முட்டி (talus) (2) படகுரு எலும்பு (navicular bone) (2) உள் ஆப்புவடிவ எலும்பு (2) இடை ஆப்புவடிவ எலும்பு (2) வெளி ஆப்புவடிவ எலும்பு (2) கனசதுர எலும்பு (cuboidal bone) (2) அனுகணுக்காலெலும்புகள் (metatarsal) (5 × 2) விரலெலும்புகள் (phalange): அண்மை விரலெலும்புகள் (proximal phalanges) (5 × 2) நடு விரலெலும்புகள் (intermediate phalanges) (4 × 2) தொலை விரலெலும்புகள் (distal phalanges) (5 × 2) குழந்தை எலும்புக்கூடு குழந்தைகளின் எலும்புக்கூடுகளில் கீழ் வரும் எலும்புகள் மேலதிகமாக உள்ளன: மண்டையறை மற்றும் மண்டையோட்டு எலும்புகள் (21), இவை ஒன்றாகி மண்டையறையை உருவாக்குகின்றன. திரிக முள்ளெலும்புகள் (sacral vertebrae) (4 or 5), வளர்ந்தோரில் இவை ஒன்றாகி திரிகத்தை உருவாக்குகின்றன coccygeal vertebrae (3 to 5), வளர்ந்தோரில் இவை ஒன்றாகி வாலெலும்பை உருவாக்குகின்றன இடுப்பெலும்பு, கீழ் இடுப்பெலும்பு மற்றும் பொச்செலும்பு (pubis), என்பவை வளர்ந்தோரில் ஒன்றாகி இடுப்பெலும்பை உருவாக்குகின்றன பகுப்பு:மனித உடற்கூற்றியல் பகுப்பு:எலும்புகள்
மனித உடலில் எத்தனை எலும்புகள் உள்ளன?
206
53
tamil
d9841668c
காளிதாசன் (தேவநாகரி: कालिदास) சமஸ்கிருத இலக்கியத்தில் சிறந்து விளங்கிய இந்தியக் கவிஞர், நாடகாசிரியர். காளிதாசரைப் பற்றிய முழுமையான வரலாற்றுக்குறிப்புகள் அறியப்படவில்லை.[1] ஆயினும், இவரது படைப்புகளான சாகுந்தலம், மேகதூதம், இரகுவம்சம், குமாரசம்பவம், மாளவிகாக்கினிமித்திரம், விக்கிரமோர்வசியம், ருது சம்ஹாரம் ஆகியவை இந்திய மொழி இலக்கியங்களில் முக்கிய இடம் வகிக்கிறது. இவர் குப்தரகளின் காலத்தில் வாழ்ந்த ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது.[2][3] இவரின் காவியங்கள் இயற்கை அழகை வருணிப்பதாகவும், அக்காலத்தே வாழ்ந்த மக்களின் பண்பாட்டை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது. காலம் காளிதாசன்; இந்தியாவின் புராணக்கதையில் வரும், உஜ்ஜெய்னி நாட்டின் அரசரான விக்ரமாதித்தியன் என்பவரின் கவிஞனாக இருந்ததாக பல பண்டைய, மற்றும் இடைக்கால நூல்கள் கருதுகின்றன. விக்ரமாதித்தியன் என்ற புகழ்பெற்ற அரசர், கி. மு. 1 ஆம் நூற்றாண்டில், மத்திய இந்தியாவின் மால்வாப் பகுதியில் அமைந்துள்ள பழைய நகரமான உஜ்ஜெய்னியை ஆட்சி செய்ததாக கூறப்படுகிறது. அந்த புகழ்பெற்ற விக்ரமாதித்தியன், ஒரு வரலாற்றுப் பெயர் அல்ல என்று ஒரு பகுதியினர் அறிவர். உஜ்ஜைய்னியை விக்ரமாதித்தியன், இரண்டாம் சந்திரகுப்தர் (கி.மு 380 - 415) மற்றும் யசோதர்மன் (கி.மு. 6 ஆம் நூற்றாண்டு) ஆகியோர்கள் ஆட்சி செய்தது குறிப்பிடத்தக்கது.[4] குப்த பேரரசின் ஏதேனும் ஒரு காலக்கட்டத்தில் (அ) மூன்று அரச தலைமுறைகளான சந்திர குப்தர் II [விக்கிரமாதித்யா] (375-413 ஆம் ஆண்டு), குமார குப்தா [மகேந்திராதித்யா] (413-455 ஆம் ஆண்டு), ஸ்கந்த குப்தா [விக்கிரமாதித்யா] (455-467 ஆம் ஆண்டு) வாழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.[5] ஆரம்பகால வாழ்க்கை காளிதாசன் இந்தியத் துணைக்கண்டத்தில் அமைந்துள்ள இமயமலையின் அருகிலும், மத்திய இந்தியாவின் மால்வாப் பகுதியில் அமைந்துள்ள பழைய நகரமான உஜ்ஜைனிலும், மற்றும் தற்கால ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் பகுதிகளில் இருந்த கலிங்க நாடு போன்ற பல்வேறுப் பகுதிகளில் வாழ்ந்ததாக அறிஞர்கள் ஊகிக்கின்றனர்.[6] மேற்காணும் இந்த தகவல்கள், காளிதாசன் சமசுகிருத மொழியில் இயற்றிய காவியக் கவிதையான குமாரசம்பவம் எனும் நாடகக் கவிதையில், இமயமலைத் தொடர்களையும் காளிதாசரின் விரிவான விளக்கத்தையும் அடிப்படையாக கொண்டுள்ளது. மேலும், அவர் உஜ்ஜைனை ஆழமாக நேசித்த அன்பின் காட்சிகளாக, அவர் இயற்றிய மேகதூதம், மற்றும் இரகுவம்சம் எனும் காவியங்களில் மிகுந்த விளக்கங்கள் காணப்படுகின்றன.[7] காசுமீர் பண்டிதரும், சமசுகிருத அறிஞருமான "லட்சுமி தார் கல்லா" (1891 - 1953) என்பவர், 1926 இல் காளிதாசாவின் பிறப்பு என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார், அது காளிதாசனின் பிறப்பிடத்தை அவரது எழுத்துக்களில் அடிப்படையாகக் கொண்டது. மேலும் அவர் காளிதாசர் காசுமீரில் பிறந்தார் என்றும், ஆனால் தென்திசை நோக்கிச் சென்று உள்ளூர் ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற முயன்றதாகவும் கூறப்படுகிறது.[8][9][10] உஜ்ஜைன் மற்றும் கலிங்காவில் அல்லாத, காசுமீரில் காணப்படும் தாவரம் மற்றும் விலங்கினங்களின் விவரம்: குங்குமப்பூ செடிகள், தேவதாரு மரங்கள், கத்தூரி மான் போன்றவை. காசுமீரில் பொதுவான புவியியல் அம்சங்களின் விவரம்: மலையின் மீதுள்ள சிறிய ஏரிகள், காட்டிடைவெளிகள் முதலியன. கல்லாவின் படி, காசுமீர் இடங்களில் அடையாளம் காணக்கூடிய சில முக்கிய தளங்களைக் குறிப்பிடலாம். இதுபோன்ற தளங்கள் காசுமீருக்கு வெளியே மிகவும் பிரபலமானவை அல்ல, எனவே, காசுமீருடன் நெருங்கிய தொடர்பில்லாதவர் ஒருவருக்குத் தெரிந்திருக்க முடியாது. காசுமீரி வம்சத்தின் சில புராணக் குறிப்புகளில், நகும்பா (காசுமீர் உரை நீலமாத புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது) போன்றவை; காசுமீர் ஒரு ஏரியிலிருந்து உருவாக்கப்படுவது பற்றிய புராணக்கதை (சகுந்தலாவில்) குறிப்பிடப்பட்டுள்ளது. நிலாடா புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த புராணக் கதை, அனந்தா எனும் பழங்குடித் தலைவர், ஒரு பேயைக் கொல்ல ஒரு ஏரியை வடிகட்டி வைத்தார் என கருதப்படுகிறது. அனந்தா எனும் முன்னாள் ஏரி (இப்போது நிலம்) "காசுமீர்" என்று பெயரிடப்பட்டது, அவரது தந்தை காஷியாபாவுக்குப் பிறகு என்பது குறிப்பிடத்தக்கது. கல்லாவின் கூற்றுப்படி, சகுந்தலா பிராட்டியப்சினா தத்துவத்தின் (காசுமீர சைவம் ஒரு கிளை) ஒரு உருவகமான நாடகமாகும். அந்தக் கிளை, அந்த காலகட்டத்தில் காசுமீருக்கு வெளியே தெரியவில்லை என்று கல்லா மேலும் வாதிடுகிறார்.[11] நாட்டுப்புறக் கலைகளின்படி, காளிதாசன் முதலில் ஒரு அறிவார்ந்த நபராகவும், மற்றும் மகிஷபுரியின் இளவரசியை திருமணம் செய்துகொண்டவராகவும் சித்தரிக்கப்படுகிறார்.[12] அவரது மனைவியின் சவாலின் காரணமாக, அவர் ஒரு பெரிய கவிஞராக உருவானதாகவும், மற்றொரு புராணக்கதையின்படி அவர், சிலோன் என அழைக்கப்பட்ட இலங்கையில் குமரதாசனாக விசயம் செய்தார் எனவும், சில துரோகத்தின் காரணமாக காளிதாசன் கொலை செய்யப்பட்டார் என்றும் கருதப்படுகிறது.[13] படைப்புகள் அபிக்ஞான சாகுந்தலம் மகாபாரதத்தின் பகுதி சிறுகதையாகக் கொண்ட சகுந்தலையின் முழுவரலாற்றுக் காதல் காவியம் சாகுந்தலம் ஆகும். வானுலக மங்கை மேனகைக்கும், விசுவாமித்திரருக்கும் பிறந்த புதல்வி சகுந்தலை. விசுவாமித்திரரின் தவத்தைக் கலைக்கவே மேனகை பணிக்கப்பட்டதை அறிந்த விசுவாமித்திரர் மனைவி (மேனகை), சேயை (சகுந்தலை) விட்டு விலகுகிறார். தனக்கு பணிக்கப்பட்ட கெடு முடிந்ததாலும், மேலுலகம் செல்ல வேண்டிய கட்டாயத்தின்படியும் சகுந்தலையை காட்டிலேயே விட்டுவிட்டுச் செல்கிறாள் மேனகை. பறவைகளால் சூழப்பட்டு பாதுகாக்கப்பட்ட சகுந்தலையை கன்வ முனிவர் கண்டெடுத்து வளர்க்கிறார். கானக சோலையில் அவ்வழியே வேட்டையாட வந்த மகத மன்னன் துஷ்யந்தன், சகுந்தலையைக் கண்டு காதலில் விழுகிறான். மேலும் சகுந்தலையை காந்தர்வ மணம் புரிந்து சிலகாலம் வாழ்ந்து, தலைநகரத்தில் ஏற்பட்ட கலகத்தால் கானகம் விடுத்து நாடு செல்கிறான். முன்னர், அடையாளமாக தன் மோதிரத்தை அவளிடம் கொடுத்து விரைவில் திரும்புவதாகவும் உறுதி பூண்டுச் செல்கிறான். காலம் பல கழியவும், முப்பொழுதும் துஷ்யந்தனின் நினைவால் வாழும் சகுந்தலை, ஒருநாள் தம் ஆசிரமத்திற்கு வருகைதரும் துர்வாச முனிவரை வரவேற்கத் தவறுகிறாள். இதனால் கோபங்கொண்ட துர்வாசர் சகுந்தலையை அவள் நினைவிலேயே வாழும் நபர் அவளை மறக்க சபிக்கிறார். இவ்வாறான சூழலில், துஷ்யந்தன் முற்றிலுமாக சகுந்தலையை மறந்துவிடுகிறான். அவனைத்தேடி அவன் நாட்டிற்கு செல்லும் சகுந்தலை அவன் நினைவாக கொடுத்துச் சென்ற மோதிரத்தையும் தொலைத்துவிடுகிறாள். இவர்களுக்கு பரதன் என்னும் மகன் பிறக்கிறான். பல்வேறு இன்னல்களுக்கு பின்னர் துஷ்யந்தனுடன் இணைவதே இதன் இறுதிக்காட்சியாகும். அபிக்ஞான சாகுந்தலம், துஷ்யந்தனின் மோதிரத்தால் (அபிக்ஞ்யானம்) இணைவதையும், பறவைகளால் பாதுகாக்கப்பட்ட சகுந்தலையின் காதலை எடுத்துரைப்பதாலும் இக்காரணத்தலைப்பைப் பெற்றது. இக்காவியம், இயற்கை அழகை வருணிப்பதில் காளிதாசரின் சிறந்த ஆளுமையை எடுத்துரைக்கிறது. இரகுவம்சம் இராமபிரானின் முன்னோரான திலீபன் துவங்கி, ரகு, அயன், தசரதன், இராமன், லவன் - குசன், அவர்தம் வழி வந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகக் கூறும் காவியம் ரகுவம்சம் என காளிதாசரால் பாடப்பெற்றது.[14] மேகதூதம் குபேரனின் அரசவைச் சேவகன் சில கால அலுவல் பணி முடித்து தன் தலைவியைக் காண விரையும் செய்தியை தூதாக மேகத்தின் மூலம் அனுப்புவது மேகதூதம் ஆகும். இது ஏனைய தமிழ் இலக்கியங்களில் உள்ள தூது வகையினை ஒத்ததாகும். காளிதாசன் மேகத்தை வருணிக்கும் இடங்கள், காடு, மலை, ஆறு, ஏரி, மலர் என எல்லா இயற்கை வளங்களின் மீதும் மேகத்தின் பயணங்களை எண்ண ஓட்டங்களாக வருணிக்கிறார்.[15] குமாரசம்பவம் சிவபெருமானின் தவத்தைக் கலைத்ததால் மன்மதனை அவர் எரிப்பது, பார்வதி தேவியார் தவமிருந்து சிவனை அடைதல், முருகப்பெருமானின் பிறப்பு உள்ளிட்டவற்றை எடுத்தியம்புவது குமாரசம்பவம். விக்கிரமோவர்சியம் புரூரவனுக்கும், சுவர்க்க நடனமங்கை ஊர்வசிக்குமுள்ள காதல் காவியம் விக்கிரமோவர்சியம். கேசி என்ற அரக்கனிடமிருந்து ஊர்வசியை மீட்டு, தேவேந்திரனிடம் புரூரவன் ஒப்படைக்கிறான். தேவேந்திரனும் ஊர்வசியை புரூரவனிடமே கொடுத்துவிடுகிறான். சில காலம் இணைந்து வாழ்ந்த இவர்கள் பிரிகின்றனர். இப்பிரிதலினால் ஏற்படும் மன உளைச்சலிருந்து இறுதியாக புரூரவன் மீள்கிறான். மாளவிகாக்கினிமித்திரம் மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள விதிஷாவைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த சுங்கப் பேரரசன் அக்கினிமித்திரன் தனது அரசியின் பணிப்பெண்ணான மாளவிகாவின் மீது காதல் கொள்வதும், பின்னர் மணப்பதுமான காவியம் மாளவிகாக்கினிமித்திரம் ஆகும். இதர படைப்புகள் ருது சம்ஹாரம் - இருது சங்கார காவியம் என தமிழில் தி. சதாசிவ ஐயர் மொழிபெயர்த்துள்ளார்.[16] இக்காவியத்தில் இயற்கையின் பருவகாலங்களை அழகுற பாடியுள்ளார் காளிதாசர். இதனையும் காண்க அக்கினிமித்திரன் கல்ஹானர் சூத்திரகர் விசாகதத்தர் மேற்கோள்கள் மேற்கோள்கள் வெளியிணைப்புகள் by Arthur W. Ryder பகுப்பு:கவிஞர்கள் பகுப்பு:இந்தியக் கவிஞர்கள் பகுப்பு:இந்திய எழுத்தாளர்கள் பகுப்பு:சமசுகிருத இலக்கியம் பகுப்பு:சமசுகிருத நூலாசிரியர்கள் பகுப்பு:சமசுகிருத அறிஞர்கள்
காளிதாசன் எங்கு பிறந்தார்?
காசுமீரில்
2,358
tamil
29d154b56
சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் (Sir Alexander Fleming) (ஆகஸ்ட் 6, 1881 – மார்ச் 11, 1955) நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum) என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார். பெனிசிலின் கண்டுபிடிப்பு உலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிசிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பெனிசிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம். லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன. ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிஸிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. பெனிசிலினைக் கண்டு பிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானிதான் அலெக் ஸாண்டர் ஃப்பௌமிங். பெனிசிலின் உலகெங்கிலும் உள்ள 20 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்கிறது ஒரு மதிப்பீடு. பிறப்பு ஃப்ளெமிங் 1881 ஆகஸ்ட் 6 அன்று ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்தவர்[1]. அவரது இளமைக்கல்வி இயற்கையெழில் சூழ்ந்த மலைப்பகுதியில் அமைந்தது. அங்குதான் இயற்கையை ரசிக்கவும், எதையும் கூர்ந்து நோக்கி அறியவும் அவர் பயிற்சி பெற்றார். பின்னாளில் அவர் பெனிஸிலின் என்ற அற்புத மருந்தைக் கண்டுபிடிக்க இப்பயிற்சியே உதவி செய்தது. தொழில் நுட்ப கல்லுாரி படிப்பை முடித்தபிறகு 16 வயதிலேயே கப்பல் நிறுவனம் ஒன்றில் அவர் அலுவலராகச் சேர்ந்தார். எழுத்தர் பணி அவருக்கு மனநிறைவை அளிக்கவில்லை. தூரத்து உறவினர் ஒருவரிடமிருந்து கிடைத்த சொத்து, அவர் மிகத் தாமதமாக தனது 20 வயதில் மருத்துவக் கல்லூரியில் சேர வழி செய்தது. நோய்க்கிருமிகளுக்கு எதிரான போர் படிப்பை முடித்த பிறகு, நோய்க்கிருமிகளுக்கெதிரான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆல்ம்நாத் ரைட் என்பவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார் ஃப்ளெமிங். ஜெர்மன் விஞ்ஞானி பால் என்ரிக் என்பவர் ‘சிஃபிலிஸ்’ என்ற கொடிய பால்வினை நோய்க்கு ‘ஸல்வார்ஸன்’ என்ற மருந்தைக் கண்டுபிடித்திருந்தார். ரத்தத்தைப் பரிசோதித்து அந்த நோயை எளிதில் கண்டறியும் ஒரு மேம்பட்ட முறையை ஃப்ளெமிங் அறிமுகப்படுத்தினார். நான்கு ஆண்டுகள் நடந்த முதல் உலகப்போரில் ரைட் குழுவினரின் தடுப்பூசி மட்டும் பயன்படுத்தப்பட்டிரா விட்டால், ஆயிரக்கணக்கானோர் டைஃபாய்டு காய்ச்சலுக்கு பலியாகியிருப்பார்கள். போரில் காயமடைந்த வீரர்களுக்கு கார்பாலிக் அமிலம், போரிக் அமிலம், ஹைட்ரஜன் பெராக்ஸைட் போன்ற நச்சுமுறி மருந்துகளையே அக்காலத்தில் பயன்படுத்தி வந்தனர். இந்த மருந்துகள் சிகிச்சைக்கு உதவாததோடு, இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அழித்து மேலும் பலர் இறப்பதற்கே வழிவகுத்தன என்று ஃப்ளெமிங்க் நிரூபித்தார். குறைபாடற்ற நச்சுமுறி மருந்தைக் கண்டுபிடிப்பதில் அவர் கவனம் திரும்பியது. பல்வேறு வகை நுண்ணுயிர்களை தட்டுகளில் வளர்த்து அவற்றின் இயக்கங்களை அவர் ஆராயத் தொடங்கினார். தனது மூக்கிலிருந்து ஒழுகிய நீரிலிருந்தே ஓரிரு சொட்டுகள் எடுத்து பாக்டீரியாக்கள் அடங்கிய தட்டில் வைத்து வளர்த்தபோது, சளித்திரவத்தைச் சுற்றியிருந்த பாக்டீரியாக்கள் மட்டும் அழிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார். இதேபோல் கண்ணீர், உமிழ் நீர், சீழ் போன்ற உடலில் சுரக்கும் பல திரவங்களை எடுத்து ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். இந்த திரவங்கள் அனைத்திற்கும் நோய்க்கிருமிகளை வளராது தடுக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டார். இயற்கையிலேயே அமைந்த இந்த நச்சு முறிபொருளுக்கு ‘லைசோசைம்’ எனப் பெயரிட்டார். காளானிலிருந்து பெனிசிலின் 1928ஆம் ஆண்டில் நுண்ணுயிர்கள் வளர்க்கப்பட்ட ஒரு தட்டை நோக்கிய போது, லைசோசைம் அதுவரை செய்திராத ஒரு செயலை காளான் செய்திருந்ததைத் தற்செயலாகக் கண்டார். கொப்புளங்கள், கட்டிகள், மூக்கு, தொண்டை, தோல் இவற்றில் ஏற்படும் தொற்றுநோய்களை வரவழைக்கும் ஸ்டாபைலொகாக்கி எனப்படும் கிருமிகளை காளான் அழித்திருந்தது. அது மட்டுமல்ல, அந்தக் காளானின் சாரம் வெள்ளை அணுக்களை அழிக்கவில்லை என்றும், வேறு திசுக்களைப் பாதிக்கவில்லை என்றும் சோதித்துத் தெரிந்து கொண்டார். காளானில் பரவிய அப்பொருளுக்கு ‘பெனிசிலின்’ எனப் பெயரிட்டார் ஃப்ளெமிங். [2] ஆனால் பெனிசிலினைப் பெரிய அளவில் அப்போது உற்பத்தி செய்ய இயலவில்லை. ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகியோர் அடங்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் குழுவினர் 14 ஆண்டுகள் கழித்து அதைச் சாதித்தனர். பெனிசிலின் ஒவ்வாமை உடையவர்களுக்கு வேறு பாதுகாப்பான நச்சுக்கொல்லி மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலும் அக்குழுவினர் வெற்றியடைந்தனர். பாராட்டுக்களும் விருதுகளும் 1945ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங், ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகிய மூவருக்கும் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது[3]. ஆறாம் ஜோர்ஜ் மன்னரால் 1944 ஆம் ஆண்டில் நைட் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.[4] 1999 ஆம் ஆண்டில் டைம் சஞ்சிகையால் வெளியிடப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான 100 நபர்களின் பட்டியலில் அலெக்சாண்டர் பிளெமிங்கும் உள்ளடக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டு நிறைவுறும் தறுவாயில் சுவீடனிலிருந்து வெளிவரும் பிரசித்திபெற்ற மூன்று சஞ்சிகைகள் பென்சிலினை கடந்த ஆயிரமாண்டு காலத்தின் சிறந்த கண்டுபிடிப்பாக அறிவித்தன. 2002 ஆம் ஆண்டில் பிபிசியால் மக்களின் வாக்களிப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட பிரித்தானியாவின் முக்கியமான 100 நபர்களின் பட்டியலில் அலெக்சாண்டர் பிளெமிங்கும் உள்ளடக்கப்பட்டார்.[5] அலெக்சாண்டர் பிளெமிங்கின் ஞாபகார்த்தமாக சிறுகோள் படையிலுள்ள ஒரு சிறுகோளுக்கு 91006 பிளெமிங் எனப் பெயரிடப்பட்டது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:1881 பிறப்புகள் பகுப்பு:நோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள் பகுப்பு:ஆங்கிலேய அறிவியலாளர்கள் பகுப்பு:இசுக்கொட்டிய அறிவியலாளர்கள் பகுப்பு:1955 இறப்புகள்
பென்சிலின் கண்டுபிடித்தவர் யார்?
சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங்
0
tamil
41660850a
குழந்தையின் அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும் பாடப்படும் பாட்டு தாலாட்டு (Lullaby) ஆகும். தாலாட்டு நாட்டார் பாடல் வகைகளில் ஒன்று. வாய்மொழி இலக்கியங்களாக வழங்கிவந்த தாலாட்டுக்கள் நாட்டாரியல் ஆய்வாளர்களால் சேகரிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. தாலாட்டுப் பாடல்கள் கிராமிய மக்களின் வாழ்க்கையோடு அவர்களின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்த நாட்டுப் பாடல் வகைகளில் ஒன்று. தாலாட்டுப் பாடல்கள் இனிமையான இசையை உடையன. அவ்விசையில் மயங்கி குழந்தை மெய்ம்மறந்து தூங்குகின்றது. "தால்" என்பது நாவைக் குறிக்கும். நாவினால் ஓசை எழுப்பி குழந்தையை உறங்க வைப்பதே தாலாட்டுதல் எனவும் கூறுவர். தாய் தன் குழந்தையை மடியிலோ, தோளிலோ, கைகளிலோ, தொட்டிலிலோ வைத்து ஆட்டிய வண்ணம் தாலாட்டுவதே வழக்கம். ஆராரோ ஆரிரரோ என்ற சந்தத்தின் மூலம் ஓசை எழுப்புவதால் இது ஆராட்டுதல் என்றும் சொல்லபடும். திண்டிவனம் வட்டாரப் பகுதிகளில் தாலாட்டுப் பாடும் பெண்கள் “லுலுலாயி லுலுலாயி” என்று நாவை அசைத்து,குழந்தையின் கவனத்தைத் தம் பக்கம் இழுத்தே பாடலைப் பாடுகின்றனர். பாடலின் இசை ஓரே மாதிரியாக இல்லை. அவரவர் விருபத்திற்கு ஏற்ப நீட்டிப் படுகின்றனர். தாலாட்டின் தொடக்கத்திலும் இடையிலும் முடிவிலும் ராராரோ, ஆராரோ, ஆரிரரோ என்ற பதங்கள் பயன்படுத்தப் படுகின்றன. நீலாம்பரி என்ற இன்பமூட்டும் இராகத்திலேயே தாலாட்டுப் பாடல்கள் பெரும்பாலும் பாடப் படுவதுண்டு. எனினும் யதுகுலகாம்போதி, சகானா, ஆனந்தபைரவி போன்ற இராகங்களிலும் இவை இசைக்கப் படுகின்றன. தாலாட்டுப் பாடல்களில் குழந்தையின் அருமை, அதன் விளையாட்டுப்பொருள்கள், மாமன் பெருமை, குலப் பெருமை போன்றவை கூறப்படுகின்றன. இத்தாலாட்டுப் பாடல்களில் தத்ரூபமான உவமை, உருவக அணிகள் கையாளப்பட்டுள்ளன.  கொவ்வை இதழ் மகளே - என்  குவிந்த நவரத்தினமே  கட்டிப் பசும்பொன்னே - என்  கண்மணியே கண் வளராய் என்ற தாலாட்டுப் பாடலில் குழந்தையானது நவரத்தினமாகவும், பசும்பொன்னாகவும், கண்மணியாகவும் உருவகிக்கப்பட்டுள்ளமை படித்து இன்புறத்தக்கது. பக்தி இலக்கியங்களிலும் இறைவனை குழந்தையாக பாவித்து தலாட்டுக்கள் பாடப்பட்டுள்ளன. இலக்கியங்களில் தாலாட்டு “ஊமன் தாரட்ட உறங்கிற்றே” என்று முத்தொள்ளாயிராத்தில் தாலாட்ட என்பதைத் தாராட்ட எனக் கையளப்பட்டுள்ளது. கம்பராமாயணத்தில் “பச்சைத் தேரை தாலாட்டும் பண்ணை “ என்று கம்பர் தாலாட்டு என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். தாலாட்டுப் பாடல் ஓசையின் இனிமையைத் திருஞானசம்பந்தர் கீழ்கண்டவாறு பாடுகிறார்.  “பண்ணமரும் மென்மொழியார்  பாலகரைத் தாலாட்டும் ஓசை கேட்டு  விண்ணவர்கள் வியப் பெய்தி  விமானத்தோடும் இயும் மிழலையாமே” பெரியாழ்வார் கீழ்கண்டவாறு தாலாட்டுப் படுகிறார்.  “மாணிக்கம் கட்டி   வயிரம் இடைகட்டி   ஆணிப் பொன் னாற் செய்த   வண்ணச் சிறுதொட்டில் பேணி உனக்குப் பிரமன் விடுதாந்தான்   மாணிக் குறளனே! தாலேலோ!   வையம் அளந்தானே தாலேலோ!” குலசேகர ஆழ்வார் இராகவனைத் தாலாட்டுவது கீழ்கண்டவாறு  தேவரையும் அசுரரையும்  திசைகளையும் படைத்தவனே!  யாவரும் வந்தடி வணங்க  அரங்நகர்த் துயின்றவனே!  கவேரிநல் நதிபாயும்  கணபுறத்தென் கருமணியே!  ஏவரிவெம் சிலைவலவா!  இராகவே தாலே லோ” பாரதியார் கீழ்கண்டவாறு,  “காட்டில் விலங்கறியும் கைக்குழந்தை தானறியும்   பாட்டின் சுவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார்” என்று கைக்குழந்தை தாலாட்டுப் பாடலின் சுவையை அறியும் என்றும் படுகின்றனர்.[1] கண்ணதாசன் கீழ்கண்டவறு தனது கிருஷ்ண காணத்தில்[2] ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ அவன் வாய்நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின் ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ (ஆயர்பாடி…) பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவனுறங்க மண்டலமே உறங்குதம்மா ஆராரோ மண்டலமே உறங்குதம்மா ஆராரோ (ஆயர்பாடி…) நாகப்படம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில் தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ அவன் மோக நிலை கூட ஒரு யோக நிலை போலிருக்கும் யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ (ஆயர்பாடி…) கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும் அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ அவன் பொன்னழகைப் பார்ப்பதற்க்கும் போதை முத்தம் பெறுவதற்க்கும் கன்னியரே கோபியரே வாரீரோ கன்னியரே கோபியரே வாரீரோ (ஆயர்பாடி…) ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ ஆரடிச்சு நீயழுதாய் கண்மணியே கண்ணுறங்கு கண்ணே யடிச்சாரார் கற்பகத்தைத் தொட்டாரார் தொட்டாரைச் சொல்லியழு தோள் விலங்கு போட்டு வைப்போம் அடிச்சாரைச் சொல்லியழு ஆக்கினைகள் செய்து வைப்போம் மாமன் அடித்தானோ மல்லி பூச் செண்டாலே அண்ணன் அடித்தானோ ஆவாரங் கொம்பாலே பாட்டி அடித்தாளோ பால் வடியும் கம்பாலே ஆராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ ஆரடிச்சு நீயழுதாய் கண்மணியே கண்ணுறங்கு அறிமுகம் தாயின் அன்பையும், சேயைச் சுற்றி எழும் கற்பனையையும் பாடலாக வழங்கும் பாட்டுருவம் தாலாட்டாகும். பணக்காரர் வீட்டிலும் தாய் குழந்தையைத் தாலாட்டுகிறாள். ஏழை எளியவரான மீன் பிடிப்பவரும், உழவரும், பண்டாரமும், தட்டாரும், கருமாரும், தச்சரும், கொத்தரும் தங்கள் இல்லங்களில் பிறந்த குழந்தைகளுக்குத் தமிழிசையால் அமுதூட்டித் தாலாட்டுகிறார்கள். காட்டு வெள்ளம் போல் வரும் தாயின் மன எழுச்சியைத் தாலாட்டில் கண்ட ஆழ்வார்கள் பிற்கால கவிஞர்கள் முதலியோர் இப்பாடல் வகைக்கு மெருகேற்றி, பிள்ளைத் தமிழாகவும், தேவர் தேவியர் தாலாட்டுகளாகவும், யாப்பிலக்கணக் கட்டுக்கோப்பில் அடக்கிப் பாடல்கள் இயற்றியுள்ளனர். தெய்வத் தாலாட்டிற்கு விளைநிலம் மக்கள் தாலாட்டுக்களே. சில தாலாட்டுப் பாடல்களில் உண்மையான குழந்தையையும், அதில் தாலாட்டும் தாயும் நம் கண் முன்னே வருகிறார்கள். பாடல் 1 பச்சை இலுப்பை வெட்டி பவளக்கால் தொட்டிலிட்டு பவளக்கால் தொட்டிலிலே பாலகனே நீயுறங்கு கட்டிப் பசும் பொன்னே - கண்ணே நீ சித்திரப் பூந்தொட்டிலிலே சிரியம்மா சிரிச்சிடு - கண்ணே நீ சித்திரப் பூந் தொட்டிலிலே. இன்னும் சில தாலாட்டுப் பாடல்களில் உறவினரின் பெருமைகள் எல்லாம் வருகின்றன. இவற்றில் மாமன் பெருமையைக் கூறும் பாடல்களே அதிகம். மாமனைக் கேலி செய்து பாடும் நகைச்சுவைப் பாடல்களும் உள்ளன. பாடல் 2 உசந்த தலைப்பாவோ 'உல்லாச வல்லவாட்டு' நிறைந்த தலை வாசலிலே வந்து நிற்பான் உன் மாமன் தொட்டிலிட்ட நல்லம்மாள் பட்டினியாப் போராண்டா பட்டினியாய் போற மாமன்-உனக்கு பரியம் கொண்டு வருவானோ? பாடல் 3 பால் குடிக்கக் கிண்ணி, பழந்திங்கச் சேணாடு நெய் குடிக்கக் கிண்ணி, முகம் பார்க்கக் கண்ணாடி கொண்டைக்குக் குப்பி கொண்டு வந்தான் தாய்மாமன். பாடல் 4 ஆனை விற்கும் வர்த்தகராம்-உன் மாமன் சேனைக் கெல்லாம் அதிகாரியாம் சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்கு சின்னச் சட்டை கொடுத்தானோ உனக்கு பட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப் பல வர்ணச் சட்டைகளும் பட்டுப் புடவைகளும் கண்ணே-உனக்கு கட்டிக் கிடக் கொடுத்தானோ! பொன்னால் எழுத்தாணியும்-கண்ணே உனக்கு மின்னோலைப் புஸ்தகமும் கன்னாரே! பின்னா ரேன்னு-கண்ணே கவிகளையும் கொடுத்தானோ ! பாடல் 5 ஐரை மீனும், ஆரமீனும்-கண்ணே அம்புட்டுதாம் அப்பனுக்கு வாளை மீனும், வழலை மீனும்-கண்ணாட்டி விதம்விதமா அம்புட்டிச்சாம், அரண்மனைக்கு ஆயிரமாம் ஆயிரமும் கொண்டுபோய்-கண்ணாட்டி அப்பன் விற்று வீடுவர அண்டை வீடும், அடுத்த வீடும்-கண்ணாட்டி ஆச்சரியப் பட்டார்களாம், பிரித்த மீனு ஆயிரத்தில்-கண்ணே நான் பிரியமாக ஆறெடுத்தேன் அயலூரு சந்தையிலே-கண்ணே நான் ஆறு மீனை விற்றுப் போட்டேன். அரைச் சவரன் கொண்டுபோய்-கண்ணே அதை அரை மூடியாய்ச் செய்யச் சொன்னேன். அரை மூடியை அரைக்குப் போட்டு கண்ணே நான் அழகு பார்த்தேன், ஆலத்தியிட்டு அத்தை மாரும் அண்ணி மாரும்-கண்ணே உன் அழகைப் பார்த்து அரண்டார்களே. அத்திமரம் குத்தகையாம் ஐந்துலட்சம் சம்பளமாம் சாமத்தலை முழுக்காம்-உங்கப்பாவுக்குச் சர்க்கார் உத்தியோகமாம். பாடல் 6 ஆராரோ ஆரிரரோ ஆறு ரண்டும் காவேரி, காவேரி கரையிலயும் காசி பதம் பெற்றவனே! கண்ணே நீ கண்ணுறங்கு! கண்மணியே நீ உறங்கு! பச்சை இலுப்பை வெட்டி, பவளக்கால் தொட்டிலிட்டு, பவளக்கால் தொட்டிலிலே பாலகனே நீ உறங்கு! நானாட்ட நீ தூங்கு! நாகமரம் தேரோட! தேரு திரும்பி வர! தேவ ரெல்லாம் கை யெடுக்க! வண்டி திரும்பி வர! வந்த பொண்கள் பந்தாட! வாழப் பழ மேனி! வைகாசி மாங்கனியே! கொய்யாப் பழ மேனி! - நான் பெத்த கொஞ்சி வரும் ரஞ்சிதமே! வாசலிலே வன்னிமரம்! வம்மிசமாம் செட்டி கொலம்! செட்டி கொலம் பெத்தெடுத்த! சீராளா நீ தூங்கு! சித்திரப் பூ தொட்டிலிலே! சீராளா நீ தூங்கு! கொறத்தி கொறமாட! கொறவ ரெல்லாம் வேதம் சொல்ல! வேதஞ் சொல்லி வெளியே வர! வெயிலேறி போகுதையா! மாசி பொறக்கு மடா! மாமன் குடி யீடேற! தையி பொறக்குமடா - உங்க தகப்பன் குடி யீடேற! ஆராரோ ஆரிரரோ கண்ணே நீ கண்ணுறங்கு! பாடல்7 ஓடும் மான் கண்ணோ என் கண்ணே நீ கவரிமான் பெற்ற கண்ணோ புள்ளி மான் கண்ணோ என் கண்ணே நீ புத்திமான் பெற்ற கண்ணோ முத்தோ ரத்தினமோ என் கண்ணே நீ தூத்துக்குடி முத்தினமோ... முல்லை மலரோ என் கண்ணே நீ அரும்புவிரியா தேன்மலரோ.. கண்ணே கண்ணுறங்கு கனியமுதே நீ உறங்கு.... பாடல் 8 மார்கழி மாசத்திலேதான் - கண்ணே நீ மாராசாவைப் பார்க்கையிலே தைப் பொங்கல் காலத்திலே - கண்ணே நீ தயிரும், சோறும் திங்கையிலே மாசி மாசக் கடைசியிலே - கண்ணே நீ மாமன் வீடு போகையிலே பங்குனி மாசத்திலே - கண்ணே நீ பங்குச் சொத்தை வாங்கையிலே சித்திரை மாசத் துவக்கத்திலே - கண்ணே நீ சீர் வரிசை வாங்கையிலே, வைகாசி மாசத்திலே - கண்ணே நீ வயலைச் சுற்றிப் பார்க்கையிலே ஆனி மாசக் கடைசியிலே - கண்ணே நீ அடியெடுத்து வைக்கையிலே அகஸ்மாத்தா ஆவணியில் - கண்ணே நீ அரண்மனைக்குப் போகையிலே ஐப்பசி மாசமெல்லாம் கண்ணே - நீ அப்பன் வீடு தங்கையிலே கார்த்திகை மாசத்திலும் - கண்ணே கடவுளுக்குக் கையெடடி மேற்கோள்கள் பகுப்பு:தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள்
தமிழ்நாட்டில் குழந்தைகளை தூங்க வைக்க பாடும் பாடல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தாலாட்டு
68
tamil
b29c82c22
சூரியக் குடும்பம் சூரியக் குடும்பம் (Solar System) அல்லது சூரியத் தொகுதி என்பது சூரியனையும் சூரியனின் ஈர்ப்புவிசையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து பருப்பொருட்களையும் உள்ளடக்கிய ஒரு தொகுதி ஆகும். இச் சூரியத்தொகுதி கதிரவனைச் சுற்றி வரும் எட்டு கோள்களையும், இக்கோள்களின் 162 (இதுவரை தெரிந்த கணக்கெடுப்பின்படி) துணைக்கோள்களையும், சிந்து குறுங்கோள்களையும், அக்குறுங்கோள்களின் துணைக்கோள்களையும் மற்றும் ஆயிரக்கணக்கான பிற வான்பொருட்களையும் உள்ளடக்கியது. வால்வெள்ளி, எரிகற்கள், விண்கற்கள் மற்றும் நாள்மீன்களுக்கு இடையே உள்ள விண்துகள்கள் போன்றவையும் சூரியத் தொகுதியில் காணப்படுகின்றன. சூரியன் சூரியனும் ஒரு விண்மீனே. இது பூமிக்கு மிக அருகில் உள்ள விண்மீன்(கோள்கள் வேறு விண்மீன்கள் வேறு). இது ஒரு நெருப்புக்கோளம். எனவே, இதன் அருகில் செல்லவே முடியாது. இது பூமியைப் போலப் பல மடங்கு பெரியது. பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ளது. சூரியன், சூரிய மண்டலத்தின் மையத்தில் உள்ள, சூரிய மண்டலத்தின் ஆதாரமான விண்மீன் ஆகும். பூமி உள்பட பல கோள்களும், கோடிக்கணக்கான விண்கற்களும், வால்வெள்ளிகளும், அண்டத்தூசி ஆகியனவும் பல்வேறு கோளப் பாதைகளில் சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரியனின் எடை மட்டுமே சூரிய மண்டலத்தின் நிறையில் 98.6 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள சராசரி தொலைவு சுமார் 149 ,600 ,000 கிலோமீட்டர்கள். சூரியனில் இருந்து ஒரு ஒளிக்கற்றை பூமியை வந்தடைய சுமார் 8 நிமிடங்கள், 19 வினாடிகளில் கடக்கிறது. கதிரவன் பெருமளவில் ஹைட்ரஜன் (சுமார் 74% நிறை, மற்றும் 92% கனவளவு) மற்றும் ஹீலியம் (சுமார் 24% நிறை, 7% கனவளவு) ஆகியவற்றையும், சிறிய அளவில் பிற தனிமங்களான, இரும்பு, நிக்கல், ஆக்சிசன், சிலிக்கன், கந்தகம், மக்னீசியம், கரிமம், நியான், கல்சியம், குரோமியம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. புதன் இது சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள். எனவே இது மிகவும் வெப்பமாக இருக்கும். இதனை ஆங்கிலத்தில் மெர்க்கூரி என்று அழைக்கின்றனர். அனைத்துக் கிரகங்களுக்குள்ளும் புதனே மிகச் சிறிய கிரகமாகும். இக்கிரகத்தின் விட்டம் 4800 கிலோ மீற்றராகும். இது சந்திரனைவிட சிறிய பருமனுடையது. புதன் சூரியனை ஒரு முறை சுற்றிவர 88 செல்கின்றன. நாம் வாழுகின்ற பூமியானது இருபத்து நான்கு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை தன்னைத்தானே சுற்றுவதினால் புவியின் எல்லாப் பகுதிகளுக்கும் இரவு, பகல் மாறி மாறிக்கிடைக்கின்றது. ஆனால் புதனில் நீண்டநாட்களுக்கு இரவும் பகலும் மாறிமாறி வருகின்றன. புதன் சூரியனுக்கு அருகில் இருக்கும்போது கதிரவனின் ஒளி படுகின்ற பகுதியின் வெப்பநிலை சுமார் 400 பாகை செல்ஸியஸ் ஆகவும் தூரத்தில் இருக்கும் வேளையில் ஏறத்தாழ 280 பாகை செல்ஸியஸாகவும் தென்படுகின்றது என வானிலை ஆய்வாளர் கூறுகின்றனர். பூமிக்கும் சூரியனுக்கும் இடையே புதன் ஒரே நேர் கோட்டில் வலம்வரும்போது அது சூரிய பிம்பத்திற்குக் குறுக்காக ஒருசிறு கரும்புள்ளியாக ஊர்ந்து செல்லும். இதனைக் கிரகணம் என்று கூறுவதற்குப் பதிலாக புதசந்திரணம் என்று அழைக்கின்றனர். வெள்ளி சூரியனிலிருந்து இரண்டாவது கோள் வெள்ளி. இது மிகவும் வெப்பமான கோள். இதில் காரீயம் கூட உருகிவிடும். பூமிக்கு மிக அருகில் உள்ள கோள் இது. இதை அதிகாலையில் வானத்தில் பார்க்கலாம். இக்கிரகம் பருமனிலும் திணிவிலும் பூமியை ஓரளவிற்கு ஒத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இதனுடைய விட்டம் 12320 கிலோ மீற்றராகும். இது சூரியனை ஒருமுறை சுற்றிவர 224 நாட்கள் ஆகின்றது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரு நேர்கோட்டில் வரும்போது இதுவும் கரும்புள்ளியாகதான் தோற்றமளிக்கும். இந்நிகழ்வை சுக்கிர சந்திரணம் என அழைப்பார்கள். இது வெகு அபூர்வமாக நிகழுகின்றது. இறுதியாக இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு ஜூன் எட்டாம் திகதி நடைபெற்றது. அடுத்ததாக எதிர்வரும் 2012 ஆண்டு ஜூன் 06 நிகழும் என்று வானியலாளர் கூறுகின்றனர். எட்டு ஆண்டுகள் இடைக்காலத்தைக் கொண்ட இச்சுக்கிரசந்தரணம் இரண்டாயிரத்துப் பன்னிரெண்டுக்குப் பின்னர் நூற்றாண்டு காலப் பகுதியைக் கடந்ததும் நிகழுமாம், இக்கிரகத்தைச் சுற்றி வென்நிற மேகப்படலம் பரிணமித்துள்ளது. இதனால் சுக்கிரனின் மேற்பரப்பைத் துல்லியமாக ஆராய்வதில் சிக்கல் நிலை தோற்றியுள்ளது. பூமி சூரியக் குடும்பத்தில் மூன்றாவது கோள்தான் நமது பூமி. இது ஒரு பாறைக்கோளம். பூமியைக் காற்று மண்டலம் சூழ்ந்துள்ளது. இதன் மேற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு நீர் உள்ளது. காற்றும் நீரும் உள்ளதால் உயிரினங்கள் இங்கு வாழ முடிகிறது. பூமி உருண்டை வடிவமென ஏற்றுக்கொண்டாலும் அது சரியான உருண்டை வடிவாக அமைந்திருக்கவில்லை. இருதுருவங்களும் சிறிது தட்டையாகவும், கற்பனைக் கோடான பூமத்திய ரேகைப்பகுதியில் சற்று பருத்தும் காணப்படுகின்றது.. பூமத்திய ரேகையின் ஊடாகச் செல்லும் விட்டம் 12742 கிலோ மீற்றரரும் துருவங்கள் இரண்டிற்குமிடையில் உள்ள விட்டம் 12713 கிலோ மீற்ரராகும். பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதுடன் 365,2563 நாட்களில் சூரியனையும் ஒரு முறை சுற்றி வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி அளவில் பூமியானது சூரியனுக்கு அருகில் வருகின்றது. பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிவரும் நேரத்தை ஒரு நாளென்றும் சூரியனை ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் ஒரு வருடமென்றும் கொள்ளப்படுகின்றது. பூமி தன்னைத்தானே சுற்றுவதினால் இரவு, பகல் உண்டாவதும், சூரியனைச் சுற்றி வருவதனால் பருவ காலங்களும் ஏற்படுகின்றன. செவ்வாய் செவ்வாய் நான்காவது கோளாகும். இதைச் சிவப்புக் கோள் என்றும் அழைப்பர். செவ்வாயின் ஒருநாள் என்பது 24.5 மணி நேரம் செவ்வாயில் உயிரினங்கள் இருக்கக்கூடும் இதுவரை மெய்ப்பிக்கப்படவில்லை. செவ்வாய் சூரியனை ஒருமுறை சுற்றிவருவதற்கு 687 நாட்கள் எடுக்கின்றது. தன்னைத்தானே சுற்ற 24 மணி 37 நிமிடங்களும் ஆகின்றது. ஆகவே புவியைப் போலவே அங்கும் இரவு பகல் மாறிமாறி உண்டாகும். பூமியின் அச்சு இருபத்து மூன்று அரை பாகை சரிந்துள்ளது. செவ்வாய் தன்னைத்தானே சுற்றும் அச்சு இருபத்து நான்கு பாகையில் சரிந்துள்ளமையினால் பருவகாலம் புவியை ஒத்ததாகவே காணப்படுகிறது. செவ்வாய் சூரியனைச் சுற்ற எடுக்கும் காலம் ஏறக்குறைய பூமி கதிரவனைச் சுற்ற எடுக்கும் காலப்பகுதியைக் காட்டிலும் இருமடங்காக உள்ளதினால் காலநிலையும் இருமடங்காகின்றது. தொலைநோக்கி வாயிலாக செவ்வாயை உற்று நோக்கும் வேளையில் அது செம்மஞ்சள் நிறமாகத் தோன்றும். வியாழன் ஐந்தாவது கோள்தான் வியாழன். இதுவே கோள்களில் மிகப்பெரியது. இதன் பருமன் ஏனைய கிரகங்களை விட பெரிதாக உள்ளதினால் இதனை ‘ராட்சத கிரகம்’ என அழைக்கப்படுகின்றது. வியாழன் பூமியைப் போல 1300 மடங்கு பெரியது. வியாழன் வாயுக்களால் ஆனது. வியாழனில் ஒரு பெரிய சிவப்புப் பகுதி உள்ளது. மெல்லிய மங்கலான வளையம் ஒன்று வியாழனைச் சூழ்ந்துள்ளது. இவ்வளையம் பனிக்கட்டி மற்றும் தூசுகளால் ஆனது. இது தன்னைத்தானே ஒருமுறை சுற்ற 9 மணித்தியாலங்களும் 55 நிமிடங்களும் ஆகின்றது. ஆகவே இந்த ராட்சத கிரகம் பூமியை விட எவ்வளவு வேகமாகச் சுழலுகின்றது என்பதைக் கற்பனை பண்ணிப்பார்க்கலாம். அதேவேளை வியாழன் சூரியனை ஒருமுறை சுற்றிவர பதினொரு வருடங்களும் முந்நூற்று பதினைந்து நாட்களும் எடுக்கின்றது. வியாழனிலிருந்து கிடைக்கப்பெற்ற நிறமாலையை விஞ்ஞானிகள் ஆராய்ந்து பார்த்தபோது அங்கு அம்மோனியா, மெதேன் போன்ற வாயுக்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். நாம் வாழுகின்ற பூமிக்கு ஒரே ஒரு உபகிரகம் உள்ளது. ஆனால் வியாழனுக்கு பதினாறு உபகிரகங்கள் சுற்றிவருவதாக அண்மையில் கண்டிபிடித்துள்ளனர். சனி சனி ஆறாவது கோள். இது இரண்டாவது பெரியகோள். வியாழனைப் போன்று சனியும் வாயுக்களால் ஆனது. சனியைச் சுற்றித் தட்டையான வட்ட வடிவமான மிகப்பெரிய வளையங்கள் உள்ளன. இவற்றை வைத்தே சனியை அடையாளம் காண இயலும். இந்தப் பெரிய சனிக் கோளைத் தண்ணீரில் போட்டால் மிதக்குமாம்! ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஏனெனில் சனியில் உள்ள வாயுக்கள் நீரைவிட (அடர்த்தி குறைந்தவை) இலேசானவை. சனியின் நிறம் மஞ்சள். சூரியனை ஒருமுறை சுறறிவர 29.5 ஆண்டுகள் ஆகின்றன. யுரேனஸ் ஏழாவது கோள் யுரேனஸ். இதுவும் வியாழன் சனியைப் போன்று வாயுக்களால் ஆனதே. இதனைச் சுற்றியும் வளையங்கள் உள்ளன. யுரேனஸ் ஆகும். 1781 ஆண்டுவரை சூரிய குடும்பத்தில் ஆறு கிரகங்களே உள்ளன என்று நம்பியிருந்தனர். வில்லியம் ஹர்ஷா என்னும் விஞ்ஞானியினால் யுரேனஸ் என்ற கிரகம் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டதாம். இதன் விட்டம் 48000 கிலோ மீற்றராகும். தன்னைத்தானே சுற்ற பத்து மணி நாற்பத்து எட்டு நிமிடங்கள் எடுக்கின்றது. சூரியனை ஒருமுறை சுற்ற 84 வருடங்கள் செல்கின்றது. யுரேனெஸ்ஸிற்கு ஐந்து உப கிரகங்கள் உள்ளன. நெப்டியூன் நெப்டியூன் எட்டாவது கோளாகும். இதைத் தொலைநோக்கியில் பார்க்கும்பொழுது நீலம் கலந்த பச்சை நிறத்தில் தெரியும். இக்கிரகம் 1846 ஆண்டு பெர்லின் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்த விஞ்ஞானிகளினால் கண்டுபிடிக்கப்பட்டது. 165 ஆண்டுகளுக்கு ஒருமுறை இது சூரியனைச் சுற்றி வருகின்றது. தன்னைத்தானே சுற்ற பதினைந்து மணி நாற்பது நிமிடங்களும் செல்லும். இக்கிரகம் சூரியனிலிருந்து மிகவும் தொலைவில் நிலைகொண்டுள்ளதினால் எப்பொழுதும் குளிராகவே காணப்படுகின்றது. இதற்கு இரண்டு உபகிரகங்கள் உள்ளன. இவ் உபகிரகங்களில் ஒன்று ஆறு நாட்களுக்கு ஒருமுறை தாய்க்கிரகத்தை எதிர்த்திசையில் வலம் வருகின்றது. நெப்ரியூனை வெறுங்கண்களால் முடியாது. சூரியனுக்கும் ஒரு குடும்பம் வானத்தில் சூரியனை மையமாக வைத்துக்கொண்டு அதனைச் சுற்றிச் சுழன்று வரும் கோள்களை - அவற்றில் முக்கியமாக நம் கண்களுக்குப் புலப்படும் கோள்களை சூரியக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். நாம் வாழுகின்ற பூமியும் சூரிய குடும்பத்தைச் சேர்ந்ததுதான். ஏனெனில் பூமியும் சூரியனை மையமாகக் கொண்டு சுழன்று வருகின்றது. சூரியக் குடும்பத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் கோள்களிடையே ஆச்சரியப்படும் விதத்தில் ஓர் ஒழுங்குமுறை அமைந்திருக்கின்றது. கிரகங்கள் எனப்படும் பெருங்கோள்கள் அனைத்துமே சூரியனின் மத்திய ரேகைத் தடத்தில் சூரியனை வலம் வருகின்றன. பெருங்கோள்கள் அனைத்துமே ஒரே திசையில் சூரியனைச் சுற்றி வலம் வருவது வியப்பூட்டும் விஷயமாகும். யுரேனஸ் என்று குறிப்பிடப்படும் கோளைத் தவிர மற்ற கோள்கள் ஒவ்வொன்றும், கடிகாரமுள் சுற்றும் திசைக்கு எதிர்ப்புறமாக தன்னைத்தானே சுற்றிக் கொள்கின்றன. சூரியனும் அதே திசையில் தன்னைத் தானே சுற்றிக்கொள்கின்றது. சூரியனுக்கு என்று கோள்களினால் ஆன ஒரு குடும்பம் எவ்வாறு தோன்றியிருக்கக் கூடும் என்பது குறித்து பல கருத்துகள் கூறப்படுகின்றன. சூரியனுக்கு ஏற்பட்ட ஒரு பெரிய அதிர்ச்சி காரணமாக சூரியனின் பகுதிகளில் சில சிறு சிறு துண்டுகளாக உடைந்து தனித்தனி கோள்களாக சூரியனை வலம் வரத் தொடங்கின என்பது ஒரு கருத்து. சூரியன் மற்றொரு கோளுடன் மோதியதன் காரணமாக புதுக்கோள்கள் தோன்றி, சூரியனைச் சுற்றத் தொடங்கின என்பது மற்றொரு கருத்து. புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் எச்.டி. 10180 என்ற நட்சத்திரம் குறித்து கடந்த 6 ஆண்டுகளாக சிலியில் உள்ள லாசில்லா என்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 3.6 மீட்டர் டெலஸ்கோப் உதவியுடன் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 7 கிரகங்களுடன் புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு இந்த நிலையில் எச்.டி. 10180 நட்சத்திரத்தை சுற்றி ஒரு புதிய சூரிய குடும்பத்தை கண்டுபிடித்தனர். அதில் 7 கிரகங்கள் உள்ளன. அவற்றில் 5 கிரகங்கள் மிக தெளிவாக தெரிகின்றன. அதில் ஒன்று சனி கிரகம் போன்ற தோற்றத்தில் உள்ளது. இவை தவிர மிக சிறிய அளவில் வெளி கிரகங்களும் உள்ளன. இந்த புதிய சூரிய குடும்பம் பூமியில் இருந்து 127 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. இது தற்போதுள்ள சூரிய குடும்பம் போன்றே உள்ளது. அது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாக விஞ்ஞானி கிறிஸ்டோபே லோவிஸ் தெரிவித்துள்ளார். [1] [2]
பூமியின் அருகில் உள்ள விண்மீன் எது?
சூரியனும்
585
tamil
d419db018
மின்னணுவியல் (Electronics) மின்னணுக்கள் அல்லது மின்னன்கள் வழி மின் ஆற்றலைக் கட்டுபடுத்தும் அறிவியல் புலமாகும். இலத்திரனியல் அல்லது மின்னணுவியல் மின்குமிழ், கடிகாரம், தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, கணினி போன்ற அன்றாட வாழ்வில் பயன்படும் பல கருவிகளின் இயக்கத்துக்குப் பயன்படும் அடிப்படைத் தொழில்நுட்பம் ஆகும். மின்னணுவியல் தகவல்களைத் தேக்கவும் கையாளவும் பயன்படுகிறது. அதாவது, மின்ஆற்றலைக் கொண்டு மின்குறிகைகளை உருவாக்கலாம். மின்குறிகைகளால் தகவல்களை பதிலீடு செய்யலாம். இந்த மின்குறிகைகளை அல்லது தகவல்களை மின்னணுவியல் கருவிகளால் தேக்கலாம் அல்லது கணிக்கலாம். இந்தப் புலத்தில் வெற்றிடக் குழல்கள், திரிதடையங்கள், இருமுனையங்கள், நுண் தொகுப்புச்சுற்றுக்களும் ஒளிமின்னன் கருவிகளும் உணரிகளும் போன்ற செயல்படு மின்கூறுகளும் மின்தடையம், மின்தேக்கி, மின்தூண்டிகள் போன்ற செயலறு மின்கூறுகளால் ஆகிய மின்சுற்றுகளும் பெரும் பங்காற்றுகின்றன. எனவே பொதுவாக மின்னனியல் கருவிகளில் செயல்முனைவான அரைக்கடத்திகளும் செயலறு மின்சுற்று உறுப்புகளும் அமையும். இந்தச் சுற்றே மின்னணுவியல் சுற்று எனப்படுகிறது. மின்னணுவியல் இயற்பியலின் பிரிவாகவும் மின்பொறியியலின் பிரிவாகவும் கருதப்படுகிறது.[1][2] செயல்படு மின்கூறுகளின் நேர்பாங்கற்ற நடத்தையும் அவற்றின் மின்னன்களின் பாய்வைக் கட்டுப்படுத்தும் பண்பும் மிக நலிவுற்ற குறிகை அலைகளைக் கூட வலுப்படுத்த உதவுகின்றன; இப்பயன்பாடு தகவல் பதப்படுத்தல், தொலைத்தொடர்பு, குறிகைச் செயலாக்கம் அல்லது பதப்படுத்தல் ஆகிய துறைகளில் பெரும் பங்காற்றுகிறது. மேலும் இக் கருவிகளை நிலைமாற்றிகளாகவும் பயன்படுத்தலாம்; இப்பயன்பாடு எண்ணிமத் தகவல் பதப்படுத்தலில் பயனாகிறது. ஒருங்கிணைப்புச் சுற்றுத் தொழில்நுட்பங்கள், பொதியல்சுற்றுத் தொழில்நுட்பங்கள், பல்வேறு இணைப்புத் தொழில்நுட்பங்கள் ஆகியவை, மின்சுற்றுப் பலகை]]களின் மின்சுற்றுச் செயல்பாட்டை முழுமையாக்கிக் கலவையான மின்கூறுகள் வழியாக ஓர் ஒருங்கியமாக அல்லது ஓர் அமைப்பாகச் (System) செயல்படச் செய்கின்றன. மின்னியல், மின்பொறியியல், மின்னணுவியல் மின்னணுவியல் என்பது மின்னியல், மின்பொறியியல் ஆகியவற்றிலிருந்து வேறுபட்ட து; மின்பொறியியல் பொதுவாக மின்னாக்கம், மின்செலுத்தம், மின்பகிர்மானம் ஆகியவற்றையும் மின்னழுத்தம் அல்லது மின்னோட்டம்ஆகியவற்றின் நிலைமாற்றல், தேக்கிவைத்தல் பற்றியும் மின் ஆற்றலை பிற ஆற்றல் வடிவங்களுக்கும் மற்ற ஆற்றல் வடிவங்களிலிருந்து மின் ஆற்றலுக்கும் மாற்றுவதைப் பற்றியும் கருப்பொருளாக்க் கொண்டுள்ளது. இவற்றின் கூறுகளாக மின்கம்பிகள், மின் இயக்கிகள், மின்னியற்றிகள், மின்கலங்கள், நிலைமாற்றிகள், உணர்த்திகள், மின்மாற்றிகள், மின்தடையங்கள் அமைகின்றன. மின்னியலில் இருந்தான மின்னணுவியலின் பிரிவினை மின்னணுவியல் மிகைப்பிகள் நலிவுற்ற குறிகைகளின் வீச்சையும் திறனையும் மிகுக்கப் பயன்படுத்தத் தொடங்கிய 1906 இல் இருந்து தொடங்கியது எனலாம். 1950 வரை இதன் முதன்மைப் பயன்பாடு வானொலி சார்ந்த அலைபரப்பிகள், அலைவாங்கிகள் ஆகியவற்றிலும் அதற்குப் பயன்பட்ட வெற்றிடக் குழல்களிலும் மட்டுமே இருந்தமையால் இத்துறை தொடக்கத்தில் "வானொலி தொழில்நுட்பம்" என்றே அழைக்கப்பட்டு வந்தது. இன்று, பெரும்பாலான மின்னணுவியல் கருவிகள் குறைக்கடத்திகளைப் பயன்படுத்தி மின்னன்களைக் கட்டுப்படுத்துகின்றன. குறைகடத்திக் கருவிகளின் அறிவியலும் தொழில்நுட்பமும் திண்மப்பொருள் இயற்பியலின் பிரிவாகக் கருதப்படுகிறது; நடைமுறை இடர்களுக்குத் தீர்வாக மின்னனியல் மின்சுற்றுக்களின் வடிவாக்கமும் உருவாக்கமும் மின்னணுவியல் பொறியியல் துறையாக உருமாறியது. மின்னணுவியல் கிளைப்பிரிவுகள் மின்னணுவியல் கீழுள்ள கிளைப்பிரிவுகளாக அமைகிறது: எண்ணிம அல்லது எண்ணியல் மின்னணுவியல் ஒப்புமை மின்னணுவியல் நுண்மின்னணுவியல் சுற்றதர் வடிவமைப்பு ஒருங்கிணைந்த மின்சுற்றதர்கள் ஒளிமின்னணுவியல் செங்கடத்திக் (அரைக்கடத்திக்) கருவிகள் பொதியல் சுற்றதர்கள் மின்னனியல் உறுப்புகளின் வரலாறு தொடக்கநிலை மின்னனியல்உறுப்புகளாக வெற்றிடக் குழல்கள் (வெம்மின்னணுக் கவாடங்கள்) அமைந்தன.[3] இருபதாம் நூற்றாண்டின் முதல் அரைப்பகுதியில் இவைதாம் மின்னனியல் புரட்சிக்கு வழிவகுத்தன.[4][5] இவை வானொலி, தொலைக்காட்சி, இசைத்தட்டுகள், இராடார் (வீவாணி-வீச்சும் வாக்கும் காணி), நெடுந்தொலைவுத் தொலைபேசி ஆகிய தொழில்நுட்ப அமைப்புகளுக்கும் மேலும் பல நுட்பங்களுக்கும் வழிவகுத்தன. இவை 1980 கள் வரை நுண்ணலை உயர்திறன் செலுத்த்த்துக்கும் தொலைக்கட்சி அலைவாங்கிகளுக்கும் அடிப்படை உறுப்புகளாக அமைந்தன.[6] 1980 களில் இவற்றின் இடத்தைத் திண்மநிலைக்கருவிகள் கைப்பற்றின. சிறப்புப் பயன்பாடுகளான உயர்திறன் வானொலி அலைவெண் மிகைப்பிகளிலும் எதிர்முனைக் கதிர்க்குழல்களிலும் சிறப்பு ஒலியியல் கருவியாகிய கிதார் மிகைப்பிகளிலும் குழிக்காந்த மிகைப்பி போன்ற நுண்ணலைக் கருவிகளிலும் வெற்றிடக் குழல்கள் தாம் இன்றும் பயன்பாட்டில் உள்ளன. 1955 ஏப்பிரலில் IBM 608 எனும் கணக்கீட்டுக் கருவியில் IBM நிறுவனம் முதலில் திரிதடையங்களைப் பயன்படுத்தியது. வணிகச் சந்தையில் புழங்கிய முதல் அனைத்துத் திரிதடையக் கணக்கீட்டுக் கருவி இதுவேயாகும்.[7][8] IBM 608 கணக்கீட்டுக் கருவியில் 3000 க்கும் மேற்பட்ட ஜெர்மேனியத் திரிதடையங்கள் பயன்பட்டன. தாமசு ஜே. வாட்சன் இளவல் IBM பொருள்களில் திரிதடையங்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்ற ஆணையை வழங்கினார். அப்போதிலிருந்தே கணினி தருக்கத்திலும் பிற இணைகருவிகளிலும் திரிதடையங்கள் மட்டுமே பயன்படலாயின. மின்னணுவியல் தொழில்நுட்பத்தின் அடிப்படைக் கருவியான திரிதடையம். கண்டுபிடித்த பின்னரே இத்துறை மாபெரும் வளர்ச்சி பெற்றது.கீழே சில மின்னனியல் வரலாற்று நிகழ்வுகள் தரப்படுகின்றன. 1897 - அணுத் துகள்களில் ஒன்றான மின்னனைக் (electron) ஜெ. ஜெ. தாம்சன். கண்டுபிடித்தார். 1904 - ஜான் அம்புரோசு பிளெமிங் வெப்பமின்னணுக் குழலைக் கண்டுபிடித்தார். இது செயற்பாட்டில் திரிதடையங்ளை ஒத்த மும்முனையம் ஆகும். 1947 - வில்லியம் ஷாக்லி, ஜான் பர்டீன், வால்டர் பிராட்டைன் ஆகியோர் திரிதடையத்தைக் கண்டுபிடித்தனர். 1940-1950 - கணினி உருவாக்கம் 1959 - ஜாக் கில்பி ஒருங்கிணைந்த சில்லு கண்டுபிடித்தார். 2000 - மீநுண் திரிதடையம் மின்னணுவியல் கருவிகளும் உறுப்புகளும் thumbnail| மின்னணு உறுப்புகள் மின்னணுக் கூறு என்பது ஒரு இலத்திரனியல் அமைப்பில் எதிர்பார்க்கப்படுகின்ற வகையில் அவ்வமைப்பு செயல்பட ஏதுவாக இலத்திரன்களையோ அதன் தொடர்புடைய புலங்களையோ பாதிக்கின்ற உளதாம் பொருளாகும். இக்கூறுகள் பொதுவாக மற்றக்கூறுகளுடன் குறிப்பிட்ட செயற்பாட்டை (காட்டாக பெருக்கி, வானொலி பெறும் கருவி, அல்லது அலையியற்றி) நிகழ்த்துமாறு இணைக்கப்பட்டிருக்கும். (பொதுவாக மின்சுற்றுப் பலகையில் பற்றவைக்கப்பட்டிருக்கும்.) மின்னணுக்கூறுகள் தனியாகவோ அல்லது சற்றே சிக்கலான ஒருங்கிணைந்த சில்லு போன்ற தொகுதிகளாகவோ பொதியப்படலாம். சில பரவலான மின்னணுக்கூறுகள்: மின்தேக்கிகள், மின்தூண்டிகள், மின்தடையங்கள், இருமுனையங்கள், திரிதடையங்கள் ஆகியனவாகும். மின்னணுக்கூறுகளை செயல்படு கூறுகள் என்றும் ( திரிதடையங்கள்,இருமுனையங்கள்) செயலறு கூறுகள் (மின்தடையங்கள்,மின்தேக்கிகள்) வகைப்படுத்தப்படுகின்றன. வெற்றிடக் குழல்கள் துவக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இலத்திரனிய கூறுகளில் ஒன்றாகும். இவை நடு1980கள் வரை முதன்மை செயல்படு கூறுகளாக இருந்தன.[6] 1980களிலிருந்து திண்மநிலைக் கருவிகள் இவற்றிற்கு மாற்றாக அமைந்துள்ளன. இன்றும் வெற்றிடக் குழல்கள் உயராற்றல் பெருக்கிகள், எதிர்முனைக் கதிர்க்குழாய்கள், வல்லுநர் ஒலிக்கருவிகள், நுண்ணலைக் கருவிகள் போன்ற சில சிறப்புப் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. மின்சுற்று வகைகள் மின்சுற்றுக்களும் இலத்தினியக் கூறுகளும் இருவகையாகப் பிரிக்கப்படலாம்: அலைமருவி மற்றும் எண்மருவி. ஒரு குறிப்பிட்ட கருவியில் இவற்றில் ஏதேனும் ஒருவகையிலோ அல்லது இரண்டும் கலந்துமோ பயன்படுத்தப்படலாம். ஒப்புமை மின்சுற்றுக்கள் வானொலிப் பெட்டிகள் போன்ற பெரும்பாலான அலைமருவி இலத்தினிய சாதனங்கள் சில அடிப்படையான மின்சுற்றுக்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இவற்றில் மின் அழுத்தத்தின் வீச்சு எவ்வித இடைவெளியும் இன்றி தொடர்ந்திருக்கும். எண்ணிம முறை (எண்மருவி)யில் மின் அழுத்தம் படிப்படியாக இடைவெளியுடன் இருக்கும். ஒரேஒரு இலத்தினியக் கூறு கொண்ட அலைமருவிச் சுற்றிலிருந்து பல கூறுகளை அடக்கிய சிக்கலான சுற்றுக்கள் வரை பல்லாயிரக்கணக்கான அலைமருவிச் சுற்றுக்கள் உள்ளன. இவை சில நேரங்களில் நேரியல் சுற்றுக்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. இருப்பினும் மின்னதிர்வு கலக்கிகள், அலைமாற்றிகள் போன்றவற்றில் இவை நேரியல் அல்லாத தன்மையைக் கொண்டுள்ளன. அண்மைக்கால சுற்றுக்களில் முழுமையும் அலைமருவி சுற்றுக்கள் காணப்படுவதில்லை. பெரும்பாலும் எண்மச் சுற்றுக்களே காணப்படுகின்றன.சில குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமே அலைமருவி முறையில் அமைக்கப்படுகின்றன; இவை கலப்பு மின்சுற்றுக்கள் எனப்படுகின்றன. எண்ணிம மின்சுற்றுக்கள் எண்மருவி சுற்றுக்களில் மின்னழுத்தம் பலதனித்தனி மதிப்புகளில் இருக்கும். காட்டாக, 1 வோல்ட், 1.5 வோல்ட், 2 வோல்ட் என்று பயன்படுத்தப்படும். இவற்றிற்கு இடையேயான 1.25 வோல்ட் போன்றவை இருக்காது. பூலியன் ஏரணம் என்ற கணிதவகையின் நிகழ் சார்பாள அமைப்பாக இவை விளங்குகின்றன. அனைத்து எண்ணிம கணினிகளும் இந்த ஏரணத்தின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. பல எண்ணிம மின்சுற்றுக்கள் ஈரியல் எண்முறையில் இரண்டு மின்னழுத்த நிலைகளுடன், "0" மற்றும் "1" இயங்குகின்றன. பெரும்பாலும் ஏரணம் "0" கீழ்நிலை மின்னழுத்தமாகவும் ( "தாழ்" எனப்படும்) ஏரணம் "1" உயர்நிலை மின்னழுத்தமாகவும் ( "உயர்" எனப்படும்) உள்ளது. கணினிகள், இலத்திரனிய கைக்கடியாரங்கள், நிரலேற்பு தருக்கக் கட்டுப்படுத்திகள் எண்ணிம முறை மின்சுற்றுக்களைக் கொண்டு உருவாக்கப்படுவன ஆகும். எண்ணிமச் சுற்றதரின் கட்டமைப்புக் கூறுகள்: தருக்க அல்லது அளவையியல் வாயில்கள் கூட்டிகள் Flip-flopகள் எண்ணிகள் செயலாக்கப் பதிவகங்கள் பன்மைப்படுத்திகள் சுகிமிடு தொடங்கிகள் எண்ணிம உயர்நிலை ஒருங்கிணைப்புக் கருவிகள்: நுண்செயலிகள் நுண்கட்டுபடுத்திகள் சிறப்புப் பயன்பட்டு ஒருங்கிணைந்த சுற்றதர்கள் (ASIC) எண்ணிமக் குறிகைச் செயலாக்கி (DSP) கள நிரலாக்க வாயில் அணிகள் (FPGA) வெப்பச் சிதர்வும் மேலாண்மையும் இவற்றையும் பாக்க இலத்திரனியல் கலைச்சொற்கள் மின்காந்தவியல் தலைப்புகள் பட்டியல் மேற்கோள்கள் பகுப்பு:மின்னணுவியல்
திரிதடையங்களைப் பயன்படுத்திய முதல் நிறுவனம் எது?
IBM
4,171
tamil
c29e29ab6
அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் ( Alexander Graham Bell, மார்ச் 3, 1847 - ஆகஸ்ட் 2, 1922) ஓர் அறிவியலாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர், ஆசிரியர் மற்றும் அறிவியல் அறிஞர் ஆவார். தொலைபேசியைக் கண்டுபிடித்ததற்காக அறியப்படுகிறார். தனது இளமையில் பிரித்தானியக் குடிமகனாக இருந்தார். பின்னர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்."[1][2] இவரது தாயாரும் மனைவியும் செவிடராதலினால் இவரது ஆய்விற்கு இது ஓர் உந்துசக்தியாக அமைந்திருக்கலாம்.[3] இவரது ஆய்வுகள் ஊடாக 1876 ஆம் ஆண்டு தொலைபேசி உருவாக்கப்பட்டது. இவர் பெல் தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார். வாழ்க்கை இளமை அலெக்சாண்டர் பெல் ஸ்கொட்லாந்தில் எடின்பேர்க்கில் 3 மார்ச் 1847 ஆம் ஆண்டு பிறந்தார்.[4] அவருடைய குடும்ப நண்பரான அலெக்சாண்டர் கிரகாம் என்பவரின் மேல் மிகுந்த மதிப்பு கொண்டு அவருடைய பெயரையும் சேர்த்து அலெக்சாண்டர் கிரகாம் பெல் என்று இவருக்குப் பெயர் சூட்டப்பட்டது.[5][N 1][6] அலெக்சாண்டருக்கு மெல்வில்லி ஜேம்ஸ் பெல் (1845–70) , எட்வர்டு ஜேம்ஸ் பெல்(1848–67) என்ற இரண்டு சகோதரர்கள். இவர்கள் இருவரும் காசநோயால் மரணமடைந்து விட்டனர்.[7] இவருடைய தந்தை அலெக்சாண்டர் மெல்வில்லி பெல் ஒரு பேராசிரியர். தாயார் எலிசா கிரேஸ் ஆவார்.[N 2] லண்டனில் வசித்த அவருடைய தாத்தா, டப்ளினில் உள்ள அவருடைய மாமா, எடின்பர்க்கில் உள்ள அவருடைய தந்தை அலெக்சாண்டர் மெல்வில்லி பெல் ஆகிய அனைவரும் பணி முறையாக நாவன்மை பயிற்றுவிப்பவர்களாகத் (Professed elocutions) திகழ்ந்து வந்தனர். கண்பார்வை அசைவுகளினால் பல்வேறு உணர்வுகளை எவ்வாறு காட்டுவது? உதடுகளின் அசைவைக் கொண்டு ஒருவர் பேசுவதைக் காது கேளாதோர் எவ்வாறு புரிந்து கொள்வது? என்பதைப் பற்றியெல்லாம் பெல்லின் தந்தை பல நூல்களை எழுதியுள்ளார்.[8][9] எட்டு வயதிலேயே கிரகாம் நன்றாகப் பியானோ வாசிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார்.[8] பத்து வயதான போது அவருக்குப் பள்ளி செல்ல நாட்டமில்லாமல் போனது.[10] இலத்தீன், கிரேக்க மொழிகளைப் படிப்பதைவிட பியானோ வாசிப்பதிலும், ஒலி அலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் தனது நேரத்தைப் போக்கினார்[11] . பேச்சை மின் ஒலியாக மாற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது வந்த காது கேளாத பெண்ணை விரும்பி அவளையே திருமணம் செய்துகொண்டார். பணிகள் கிரகாம் பெல்லின் குடும்பம் கனடாவிற்குக் குடி பெயர்ந்தது.[13] போஸ்டன் நகரத்தில் வசித்த போது காது கேளாதோர் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி தருவதற்காக பெல் ஒரு பள்ளிக் கூடத்தை ஏற்படுத்தினார்.[14][15][16] அதில் பேச்சுமுறை பற்றிய அடிப்படைகளைக் கற்பித்தார்[17] .அவரது ஆய்வுமுறை, அறிவாற்றல் எங்கும் பரவியதால், பாஸ்டன் பலகலைக் கழகம் பேச்சு அங்கவியல் பேராசிரியராக இவரை பணியில் அமர்த்தியது. ஆய்வு பியானோவில் ஒலி எழுப்பி மின்சாரம் மூலமாக அந்த இசையை ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அணுப்பினார் பெல். தந்தி முறையில் வெறும் ஒலிகள் மட்டுமே அனுப்பப்பட்டன. பேச்சுகளையும் அந்த முறையில் அனுப்பலாமே என்று கிரகாமுக்கு 18 வயதிலேயே தோன்றியது. அதனால் அந்த முயற்சிகளில் ஈடுபடார்[18] . அக்காலத்தில் மனிதனின் பேச்சொலிகளை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு தந்திகள் மூலம் அனுப்பப்பட்டு வந்தது. அந்த முறைகள் இவருடைய ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாயிருந்தன. 1875 இல் இந்த முயற்சிகள் ஓரளவு வெற்றி பெற்றன. முதலில் தெளிவில்லாத பேச்சொலிகளை அனுப்ப முடிந்தது. 1876 ஆம் ஆண்டு உலகின் முதல் தொலைபேசி பேசியது பெல் அவருடைய உதவியாளர் வாட்சன் என்பவரிடம் பேசினார். அவர் முதலில் தொலைபேசியில் பேசிய சொற்றொடர் " வாட்சன் இங்கே வாருங்கள். உங்களைக் காண வேண்டும்."(Watson, come here, I want to see you)என்பதுதான்.[19] இந்த சொற்களை வாட்சனால் தெளிவாகக் கேட்க முடிந்தது.[20] ஆனால் பெல் கண்டுபிடித்த தொலைபேசியைப் பற்றி யாரும் அக்கறை கொள்ளவில்லை அதனால் அவர் மிகவும் சோர்வடைந்தார். பிலெடெல்பியாவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் தனது தொலைபேசியைப் பார்வைக்கு வைத்தார். அங்கு வந்த பிரேசில் நாட்டு மன்னர் அதை வியப்போடு எடுத்துப் பயன்படுத்திய பின்னர் தான் தொலைபேசியின் பெருமை எங்கும் பரவியது. அமெரிக்காவில் உள்ள தனது மாமனாரின் உதவியுடன் 1876 மார்ச்சு 7 ஆம் தேதி தொலைபேசிக்கான காப்புரிமையைப் பெற்றார்.[21] [22][23] 1877 இல் தன் உதவியாளர் வாட்சனுடன் சேர்ந்து "பெல் தொலைபேசி கம்பனி" என்ற பெயரில் தொலைபேசி நிறுவனம் ஒன்றை நிறுவினார். தொலைபேசியைக் கண்டுபிடித்ததற்காக பிரெஞ்சு அரசு அவருக்கு வழங்கிய 50,000 பிராங்க் பரிசுத் தொகையைக் கொண்டு வோல்டா ஆய்வுச் சாலை (Volta Laboratory) என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவினார்.[24] கண்டு பிடிப்புகள் பெல் தொலைபேசியுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அரசு நிறுவனத்தின் மூலம் பொட்டோ போன்[25][26][27], ஆடியோ மீட்டர்[28][29][30][31], மெட்டல் டிடக்டர்[32], இன்டக்‌ஷன் பேலன்ஸ், வாக்ஸ் ரிகார்டிங் சிலிண்டர், கிராமபோன் போன்ற கருவிகளைக் கண்டு பிடித்தார். பெல் விமானம் கண்டு பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால் அது அவருக்கு வெற்றி தரவில்லை. ஆனால் சில கண்டுபிடிப்புகளைச் செய்தார். விமானத்தின் எய்லிரான் என்ற பகுதியைக் கண்டுபிடித்தவர் பெல் ஆவார். பிற்காலத்தில் கடல் விமானத்தைச் சீர்திருத்தி அமைப்பதில் வெற்றி கண்டார்.[33] ஆடுகள் வளர்க்கும் முயற்சியில் புதுமையைப் புகுத்தினார். ஒவ்வொரு முறையும் இரட்டைக் குட்டிகளை ஈடும் பெண் ஆடுகளை உருவாக்கவும் திட்டமிட்டார். பாலைவனங்களில் நாடுகாண முற்படும் படைவீரர்களுகு, காற்றிலுள்ள மிகுந்த ஈரத்தை வடிகட்டி உதவக் கூடிய அரிய கருவியைக் கண்டுபிடித்தார். காது கேளாதோருக்குப் பேச்சுப் பயிற்சியை வளர்ப்பதற்கான சங்கம் ஒன்றை நிறுவினார்[34]. கண் தெரியாதவர்களுக்குப் பிரெய்ல் முறையைக் கண்டு பிடித்த ஹெலன் கெல்லருக்கு பெல் பல உதவிகளைச் செய்துள்ளார்.[35] ஒலியியல் அடிப்படையில் உலக ஆங்கிலம் என்பதை உருவாக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினார். தனிப்பட்ட முறையிலும், பிற அறிவியலறிஞர்களுடன் சேர்ந்தும் 59 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை பெல் பெற்றுள்ளார் என்பது அவருடைய வரலாற்றில் மிக முக்கியமான அம்சமாகும். சிறப்புகள் 1882 இல் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். 1888 இல் உலக புவியியல் கழகத்தை(National Geograph Society) ஆரம்பித்த உறுப்பினர்களில் ஒருவராகவும், அந்தக் கழகத்தின் இரண்டாவது தலைவராகவும் விளங்கினார்.[36] He has been described as one of the most influential figures in human history.[37] பிரெஞ்சு அரசு வழங்கிய 'லெஜியன் ஆப் ஆனர்'(Legion of Honour) விருது Acedemic Francise விருது[38] வோல்டா பரிசு[39][40][41][42][43][44] ராயல் சொசைட்டி ஆப் ஆர்ட்ஸ்(லண்டன்), ஆல்பெர்ட் பதக்கம்(1902) உர்ஸ்பர்க் பல்கலைக் கழகம் வழங்கிய முனைவர் பட்டம் எடிசன் பதக்கம்(1914) போன்ற பல்வேறு சிறப்புகளையும் விருதுகளையும் பெற்றார். மறைவு அமெரிக்காவில் உள்ள பாடக் என்ற ஊரில் 1922 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி அலெக்சாண்டர் கிரகாம் பெல் காலமானார்.[45] அவர் மறைந்த தினத்தன்று அமெரிக்காவில் உள்ள தொலைபேசிகள் அனைத்தும் 5 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.[46] காப்புரிமைகள் Improvement in Transmitters and Receivers for Electric Telegraphs, filed March 1875, issued April 1875 (multiplexing signals on a single wire) Improvement in Telegraphy, filed February 14, 1876, issued March 7, 1876 (Bell's first telephone patent) Improvement in Telephonic Telegraph Receivers, filed April 1876, issued June 1876 Improvement in Generating Electric Currents (using rotating permanent magnets), filed August 1876, issued August 1876 Electric Telegraphy (permanent magnet receiver), filed January 15, 1877, issued January 30, 1877 Apparatus for Signalling and Communicating, called Photophone, filed August 1880, issued December 1880 Aerial Vehicle, filed June 1903, issued April 1904 அடிக்குறிப்பு மேற்கோள்கள் துணை நூல்கள் Alexander Graham Bell (booklet). Halifax, Nova Scotia: Maritime Telegraph & Telephone Limited, 1979. Ayers, William C., Therese Quinn and David Stovall, eds. The Handbook of Social Justice in Education. London: Routledge, 2009. ISBN 978-0-80585-928-7. Bell, Alexander Graham. Washington, D.C.: Sanders Printing Office, 1898. Bethune, Jocelyn. Halifax, Nova Scotia, Canada: Nimbus Publishing, 2009. ISBN 978-1-55109-706-0. Bruce, Robert V. . Ithaca, New York: Cornell University Press, 1990. ISBN 0-8014-9691-8. Black, Harry. Canadian Scientists and Inventors: Biographies of People who made a Difference. Markham, Ontario, Canada: Pembroke Publishers Limited, 1997. ISBN 1-55138-081-1. Boileau, John. Fastest in the World: The Saga of Canada's Revolutionary Hydrofoils. Halifax, Nova Scotia, Canada: Formac Publishing Company Limited, 2004. ISBN 0-88780-621-X. Dunn, Andrew. Alexander Graham Bell (Pioneers of Science series). East Sussex, UK: Wayland (Publishers) Limited, 1990. ISBN 1-85210-958-0. Eber, Dorothy Harley. Genius at Work: Images of Alexander Graham Bell. Toronto, Ontario, Canada: McClelland and Stewart, 1982. ISBN 0-7710-3036-3. Evenson, A. Edward. The Telephone Patent Conspiracy of 1876: The Elisha Gray— Alexander Bell Controversy. Jefferson, North Carolina: McFarland Publishing, 2000. ISBN 0-7864-0138-9. Gray, Charlotte. Reluctant Genius: Alexander Graham Bell and the Passion for Invention. New York: Arcade Publishing, 2006. ISBN 1-55970-809-3. Grosvenor, Edwin S. and Morgan Wesson. Alexander Graham Bell: The Life and Times of the Man Who Invented the Telephone. New York: Harry N. Abrahms, Inc., 1997. ISBN 0-8109-4005-1. Groundwater, Jennifer. Alexander Graham Bell: The Spirit of Invention. Calgary, Alberta, Canada: Altitude Publishing, 2005. ISBN 1-55439-006-0. Lusane, Clarence. Hitler's Black Victims: The Historical Experiences of Afro-Germans, European Blacks, Africans, and African Americans in the Nazi Era. Hove, East Sussex, UK: Psychology Press, 2003. ISBN 978-0-415932-950. Hart, Michael H. The 100: A Ranking of the Most Influential Persons in History. New York: Citadel, 2000. ISBN 0-89104-175-3. Mackay, James. Sounds Out of Silence: A life of Alexander Graham Bell. Edinburgh: Mainstream Publishing Company, 1997. ISBN 1-85158-833-7. MacKenzie, Catherine. Whitefish, Montana: Kessinger Publishing, 2003. ISBN 978-0-7661-4385-2. MacLeod, Elizabeth. Alexander Graham Bell: An Inventive Life. Toronto, Ontario, Canada: Kids Can Press, 1999. ISBN 1-55074-456-9. Matthews, Tom L. Always Inventing: A Photobiography of Alexander Graham Bell. Washington, D.C.: National Geographic Society, 1999. ISBN 0-7922-7391-5. Micklos, John Jr. Alexander Graham Bell: Inventor of the Telephone. New York: Harper Collins Publishers Ltd., 2006. ISBN 978-0-06-057618-9. Miller, Don and Jan Branson. Washington, D.C.: Gallaudet University Press, 2002. ISBN 978-1-56368-121-9. Mims III, Forest M. Fiber Optics Weekly Update(Information Gatekeepers), February 10–26, 1982, pp.6–23. Mullett, Mary B. New York: Rogers and Fowle, 1921. Parker, Steve. Alexander Graham Bell and the Telephone(Science Discoveries series). New York: Chelsea House Publishers, 1995. ISBN 0-7910-3004-0. Petrie, A. Roy. Alexander Graham Bell. Don Mills, Ontario: Fitzhenry & Whiteside Limited, 1975. ISBN 0-88902-209-7. Phillips, Allan. Into the 20th Century: 1900/1910 (Canada's Illustrated Heritage). Toronto, Ontario, Canada: Natural Science of Canada Limited, 1977. ISBN 0-919644-22-8. Ross, Stewart. Alexander Graham Bell (Scientists who Made History series). New York: Raintree Steck-Vaughn Publishers, 2001. ISBN 0-7398-4415-6. Shulman, Seth. The Telephone Gambit: Chasing Alexander Bell's Secret. New York: Norton & Company, 2008. ISBN 978-0-393-06206-9. Toward, Lilias M. Toronto, Ontario, Canada: Methuen, 1984. ISBN 0-458-98090-0, ISBN 978-0-458-98090-1. Town, Florida. Alexander Graham Bell. Toronto, Ontario, Canada: Grolier Limited, 1988. ISBN 0-7172-1950-X. Tulloch, Judith. The Bell Family in Baddeck: Alexander Graham Bell and Mabel Bell in Cape Breton. Halifax, Nova Scotia, Canada: Formac Publishing Company Limited, 2006. ISBN 978-0-88780-713-8. Walters, Eric. The Hydrofoil Mystery. Toronto, Ontario, Canada: Puffin Books, 1999. ISBN 0-14-130220-8. Webb, Michael, ed. Alexander Graham Bell: Inventor of the Telephone. Mississauga, Ontario, Canada: Copp Clark Pitman Ltd., 1991. ISBN 0-7730-5049-3. Winfield, Richard. Never the Twain Shall Meet: Bell, Gallaudet, and the Communications Debate. Washington, D.C.: Gallaudet University Press, 1987. ISBN 0-913580-99-6. Wing, Chris. Alexander Graham Bell at Baddeck. Baddeck, Nova Scotia, Canada: Christopher King, 1980. Winzer, Margret A. Washington, D.C.: Gallaudet University Press, 1993. ISBN 978-1-56368-018-2. வெளியிணைப்புகள் erected in honor both Bell and the Invention of the Telephone in Brantford, Ontario's Alexander Graham Bell Gardens at the at the comprises a selection of 4,695 items (totaling about 51,500 images) containing correspondence, scientific notebooks, journals, blueprints, articles, and photographs documenting Bell's invention of the telephone and his involvement in the world's first telephone company, his family life, his interest in the education of the deaf and his aeronautical and other scientific works Photophone, very clear description; published as "On the Production and Reproduction of Sound by Light" in the American Journal of Sciences, Third Series, vol. XX, No. 118, October 1880, pp.305–324 and as "Selenium and the Photophone" in Nature, September 1880 இவற்றையும் பார்க்கவும் தொலைபேசி பகுப்பு:அமெரிக்க அறிவியலாளர்கள் பகுப்பு:அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர்கள் பகுப்பு:1847 பிறப்புகள் பகுப்பு:1922 இறப்புகள் பகுப்பு:பிரித்தானியக் கண்டுபிடிப்பாளர்கள் பகுப்பு:அமெரிக்க இயற்பியலாளர்கள் பகுப்பு:அமெரிக்க அறியொணாமையியலாளர்கள் பகுப்பு:வானூர்தியியல் முன்னோடிகள் பகுப்பு:கனடிய இயற்பியலாளர்கள்
தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் யார்?
அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்
0
tamil
2a5ba78e2
முதல் உலகப்போர் என்பது உலகம் தழுவிய அளவில் இடம்பெற்ற ஒரு போர். எனினும் இது பெரும்பாலும் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது. இப் போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் எதிர்ப் பக்கங்களில் நின்று போரிட்டன. இதன் அளவும், செறிவும் முன்னெப்பொழுதும் இல்லாத அளவு பெரிதாக இருந்தது. பெருமளவினர் சண்டையில் ஈடுபட்டிருந்ததோடு பெரும் தொகையில் இழப்புகளும் ஏற்பட்டன. 60 மில்லியன் ஐரோப்பியர்களை உள்ளடக்கிய சுமார் 70 மில்லியன் போர்வீரர்கள் சண்டையில் ஈடுபட்டிருந்தனர். புதிய தொழில்நுட்பங்களின் வழிவந்த இயந்திரத் துப்பாக்கிகள், உயர்தரமான கனரகப் பீரங்கிகள், மேம்பட்ட போக்குவரத்து, நச்சு வளிமம், வான்வழிப் போர்முறை, நீர்மூழ்கிகள் என்பன போரின் தாக்கத்தைப் பெரிதும் அதிகப்படுத்தின. போரில் 40 மில்லியன் பேருக்குக் காயங்களும் உயிரிழப்புக்களும் ஏற்பட்டன. இதில் குடிமக்களும், போராளிகளுமாகச் சுமார் 20 மில்லியன் பேர் இறந்தனர். போரினால் ஏற்பட்ட, முற்றுகைகள், புரட்சிகள், இன ஒழிப்பு, நோய்த் தொற்றுக்கள் என்பன மக்களுடைய துன்பங்களை மேலும் அதிகப்படுத்தின. இப் போர் 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது. இப் போரினால், 20 ஆம் நூற்றாண்டின் எஞ்சிய காலம் முழுதும், அரசியலிலும், பண்ணுறவாண்மை தொடர்பிலும் பெரும் விளைவுகள் ஏற்பட்டன. போரின் விளைவு காரணமாக, ஆஸ்திரோ-ஹங்கேரியப் பேரரசு, ரஷ்யப் பேரரசு, உதுமானிய பேரரசு என்பன சிதைவுற்றுத் துண்டுகள் ஆகின. செருமானியப் பேரரசு வீழ்த்தப்பட்டது. அது பெருமளவிலான நிலப்பகுதிகளை இழந்தது. இவ் விளைவுகள் காரணமாக ஐரோப்பாவிலும், மையக் கிழக்கிலும் நாடுகளின் எல்லைகள் மாற்றம் அடைந்தன. பழைய முடியாட்சிகளின் இடத்தில் பல பொதுவுடமை அரசுகளும், குடியரசுகளும் உருவாயின. மீண்டும் இவ்வாறான போர் ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்துடன், உலக வரலாற்றில் முதல் முறையாகப் பன்னாட்டு அமைப்பான நாடுகளின் சங்கம் (League of Nations) ஒன்று உருவானது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களும், புதிதாக உருவான நாடுகளின் உறுதியற்ற தன்மைகளும், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு உலகப் போர் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக அமைந்தன. 1871 ஆம் ஆண்டில் ஜேர்மனி ஒருங்கிணைக்கப்பட்டதும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவின் வல்லரசுகளிடையே இக்கட்டான அதிகாரச் சமநிலை நிலவியதும் இப் போர் உருவாவதற்கான அடிப்படைக் காரணங்களுள் அடங்கும். இவற்றுடன், 19 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியிடம் நிலப்பகுதிகளை இழந்ததில் பிரான்சுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு உணர்வு; ஜேர்மனிக்கும், பிரித்தானியாவுக்கும் இடையே பொருளியல், படைத்துறை, குடியேற்றங்கள் தொடர்பான போட்டிகள்; பால்கன் பகுதிகளில் ஆஸ்திரோ-ஹங்கேரிய ஆட்சி தொடர்ச்சியான உறுதியற்ற நிலையில் இருந்தமை என்பனவும் இப் போருக்கான மேலதிக காரணங்களாகும். ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாண்டும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 ஜுன் 28) சுட்டுக் கொல்லப்பட்டது போர் தொடங்குவதற்கான உடனடிக் காரணம் ஆயிற்று. சுட்டவன், காவ்ரீலோ பிரின்சிப்,செர்பியா நாட்டைச்சேர்ந்தவன். இதன் காரணமாகப் பழிவாங்கும் நோக்குடன், செர்பிய இராச்சியத்தின் மீது ஆஸ்திரியா படையெடுத்தது. இதனைத் தொடர்ந்து பல கூட்டணிகள் உருவாயின. பல ஐரோப்பிய நாடுகள் பேரரசு எல்லைகள் உலகின் பல பகுதிகளிலும் இருந்ததால் விரைவிலேயே போர் உலகம் முழுவதற்கும் விரிவடைந்தது. சில கிழமைகளுக்கு உள்ளாகவே பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் போரில் இறங்கிவிட்டன. போர் முக்கியமாக நேச நாடுகள், மைய நாடுகள் எனப்பட்ட இரண்டு கூட்டணிகளுக்கு இடையே நடை பெற்றது. நேச நாடுகளின் பக்கத்தில் தொடக்கத்தில் பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், ரஷ்யா என்பனவும் அவற்றோடு சேர்ந்த பேரரசுகளும் இருந்தன. பின்னர் பல நாடுகள் இக் கூட்டணியில் இணைந்தன. குறிப்பாக, ஆகஸ்ட் 1914ல் ஜப்பானும், ஏப்ரல் 1915 இல் இத்தாலியும், ஏப்ரல் 1917ல் ஐக்கிய அமெரிக்காவும் இணைந்தன. ஐரோப்பாவின் மையப் பகுதியில் இருந்ததால் மைய நாடுகள் என அழைக்கப்பட்ட கூட்டணியில், ஜெர்மனியும், ஆஸ்திரியாவும் அவற்றோடு சேர்ந்த பேரரசுகளும் இருந்தன. ஓட்டோமான் பேரரசு 1914 அக்டோபரில் இக் கூட்டணியில் இணைந்தது. ஓராண்டு கழித்து பல்கேரியாவும் இதில் இணைந்தது. போர் விமானங்களும், போர்க் கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் முதன் முதலாக இந்தப் போரில் தான் பயன்படுத்தப்பட்டன. போர் முடிந்தபோது, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், ஸ்கண்டினேவிய நாடுகள் மொனாக்கோ என்பன மட்டுமே ஐரோப்பாவில் நடுநிலையில் இருந்தன. எனினும் இவற்றுட் சில நாடுகள் போர்புரிந்த நாடுகளுக்குப் பொருளுதவிகள் செய்திருக்கக்கூடும். போர் பெரும்பாலும் ஐரோப்பாக் கண்டத்தைச் சுற்றியுள்ள பல முனைகளில் இடம்பெற்றது. மேற்கு முனை எவருக்கும் சொந்தமில்லாத பகுதிகளால் பிரிக்கப்பட்ட, பதுங்கு குழிகளும் அரண்களும் நிறைந்த பகுதியாக இருந்தது[1]. இவ்வரண்கள் 475 மைல்கள் தூரத்துக்கு (600 கிலோ மீட்டருக்கு மேல்) அமைந்திருந்தன[1]. இது பதுங்கு குழிப் போர் என அழைக்கப்படலாயிற்று. கிழக்குப் போர் முனை பரந்த வெளிகளைக் கொண்டிருந்ததாலும், தொடர்வண்டிப் பாதை வலையமைப்பு அதிகம் இல்லாதிருந்ததாலும் மேற்கு முனையைப்போல் யாருக்கும் வெற்றியில்லாத நிலை காணப்படவில்லை. எனினும் போர் தீவிரமாகவே நடைபெற்றது. பால்கன் முனை, மையக் கிழக்கு முனை, இத்தாலிய முனை ஆகிய முனைகளிலும் கடும் சண்டை நடைபெற்றது. அத்துடன், கடலிலும், வானிலும் சண்டைகள் இடம்பெற்றன. காரணங்கள் 1914 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி பாஸ்னிய சேர்பிய மாணவனான காவ்ரிலோ பிரின்சிப் என்பவன் ஆஸ்திரோ ஹங்கேரியின் முடிக்குரிய இளவரசரான ஆர்ச்டியூக் பிராண்ஸ் பேர்டினண்டை சரயேவோவில் வைத்துச் சுட்டுக் கொன்றான். பிரின்சிப், தெற்கு சிலாவியப் பகுதிகளை ஒன்றிணைத்து அதனை ஆஸ்திரோ ஹங்கேரியில் இருந்து விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட இளம் பாஸ்னியா என்னும் அமைப்பின் உறுப்பினன். சரயேவோவில் நடைபெற்ற இக் கொலையைத் தொடர்ந்து மிக வேகமாக நடந்தேறிய நிகழ்வுகளைத் தொடர்ந்து முழு அளவிலான போர் வெடித்தது.[2] ஆஸ்திரோ ஹங்கேரி இக் கொலைக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனச் சேர்பியாவைக் கோரியது. எனினும், சேர்பியா இதற்குச் செவிசாய்க்கவில்லை எனக் கருதிய ஆஸ்திரோ ஹங்கேரி சேர்பியா மீது போர் தொடுத்தது. ஐரோப்பிய நாடுகளிற் பல கூட்டுப் பாதுகாப்பிற்காக ஒன்றுடன் ஒன்று செய்து கொண்டிருந்த ஒப்பந்தங்கள் காரணமாகவும், சிக்கலான பன்னாட்டுக் கூட்டணிகள் காரணமாகவும் பெரும்பாலான அந்த நாடுகள் போரில் ஈடுபடவேண்டி ஏற்பட்டது. ஆயுதப் போட்டி ஜெர்மனிக்கு, பிரித்தானியாவைப் போல பெரிய பேரரசின் வணிகச் சாதகநிலை இல்லாமல் இருந்தபோதும், 1914 ஆம் ஆண்டளவில் அந் நாட்டின் தொழில்துறை பிரித்தானியாவினதைக் காட்டிலும் பெரிதாகி விட்டது. இதனால், தத்தமது கடற்படைகளை வலுவாக வைத்திருக்கவேண்டி போருக்கு முந்திய ஆண்டுகளில் இரு நாடுகளும் பெருமளவிலான போர்க் கப்பல்களைக் கட்டின. இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான இந்தக் கடற்படைப் போட்டி 1906 ஆம் ஆண்டளவில் எச்எம்எஸ் டிரெட்நோட் (HMS Dreadnought) என்னும் போர்க்கப்பலின் வெள்ளோட்டத்துடன் மேலும் தீவிரமானது. இப் போர்க் கப்பலின் அளவும், வலுவும் இதற்கு முந்திய கப்பல்களை காலம் கடந்தவை ஆக்கின. பிரித்தானியா பிற துறைகளிலும் தனது கப்பற்படையின் முன்னணி நிலையைப் பேணிவந்தது. டேவிட் ஸ்டீவன்சன் என்பார் இந்த ஆயுதப் போட்டியை, தன்னைத்தானே சுழல்முறையில் வலுப்படுத்திக்கொண்ட உச்சநிலையிலான படைத்துறைத் தயார்நிலை என விளக்கினார்."[3] டேவிட் ஹெர்மான் கப்பல் கட்டும் போட்டியை போரை நோக்கிய ஒரு நகர்வாகவே பார்த்தார்.[4] எனினும் நீல் பெர்கூசன் என்பார், பிரித்தானியா தனது முன்னணி நிலையைத் தக்க வைத்துக் கொள்ளும் வலிமையைக் கொண்டிருந்ததால், ஏற்படவிருந்த போருக்கான காரணமாக இது இருக்க முடியாது என வாதிட்டார்.[5] இந்த ஆயுதப் போட்டிக்கான செலவு பிரித்தானியா, ஜெர்மனி ஆகிய இரு நாடுகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தின. பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஆஸ்திரியா-ஹங்கேரி, இத்தாலி ஆகிய பெரிய வல்லரசுகளின் ஆயுதங்களுக்கான மொத்தச் செலவு 1908 க்கும் 1913 க்கும் இடையில் 50% கூடியது.[6] திட்டங்கள், நம்பிக்கையின்மை, படைதிரட்டல் ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட படைதிரட்டல் திட்டங்கள் பிணக்குகளைத் தாமாகவே தீவிரமாக்கின எனப் பல அரசியல் அறிஞர்கள் கருதுகின்றனர். பல மில்லியன் கணக்கான படையினரைச் செயற்படவைத்தல், நகர்த்துதல், வசதிகள் அளித்தல் போன்றவற்றின் சிக்கலான தன்மைகளினால், தயார்ப் படுத்துதலுக்கான திட்டங்களை முன்னராகவே தொடங்கவேண்டி இருந்தது. இத்தகைய தயார்ப்படுத்தல் உடனடியாகவே தாக்குதலை நடத்தவேண்டிய நிலையையும் நாடுகளுக்கு ஏற்படுத்தியது. குறிப்பாக, ஃபிரிட்ஸ் பிஷர் (Fritz Fischer) என்னும் வரலாற்றாளர் ஜேர்மனியின் ஸ்கீல்பென் திட்டத்தின் உள்ளார்ந்த தீவிரத்தன்மை பற்றி எடுத்துக்காட்டினார். ஜேர்மனிக்கு இரண்டு முனைகளில் போரிடவேண்டிய நிலை இருந்ததனால் ஒருமுனையில் எதிரியை விரைவாக ஒழித்துவிட்டு அடுத்த முனையில் கவனம் செலுத்தவேண்டிய தேவை இருந்தது. இதனால், வலுவான தாக்குதல் ஒன்றின் மூலம் பெல்ஜியத்தைக் கைப்பற்றிக்கொண்டு, பிரான்சின் படைகள் தயாராகுமுன்பே அதனைத் தாக்கிச் செயலிழக்கச் செய்ய வேண்டும் என்பதும் திட்டமாக இருந்தது. இதன் பின்னர் ஜேர்மன் படையினர் தொடர்வண்டிப் பாதை வழியாகக் கிழக்கு நோக்கிச் சென்று மெதுவாகத் தயாராகிக் கொண்டிருக்கும் ரஷ்யப் படைகளை அழிப்பது திட்டம். பிரான்சின் திட்டம் 17, ஜேர்மனியில் தொழிற்றுறை மையமான ரூர் பள்ளத்தாக்கைத் (Ruhr Valley) தாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. கோட்பாட்டு அடிப்படையில் இது, ஜேர்மனி நவீன போர் நடவடிக்கைகளில் ஈடுபடும் வலிமையை ஒழித்துவிடும். ரஷ்யாவின் திட்டம் 19, ஆஸ்திரியா-ஹங்கேரி, ஜேர்மனி, ஓட்டோமான்கள் ஆகியோருக்கு எதிராக ஒரே நேரத்தில் தாக்குதல்களைத் தொடங்க வேண்டுமென எதிர்பார்த்தது. எனினும், திருத்தப்பட்ட திட்டம் 19 இன் படி ஆஸ்திரியா-ஹங்கேரியே முதன்மை இலக்காகக் கொள்ளப்பட்டது. இதன்மூலம் கிழக்குப் பிரசியாவுக்கு எதிராகப் படைகளை அனுப்புவதற்கான தேவை குறைகின்றது. மூன்று திட்டங்களுமே விரைவாகச் செயற்படுவது வெற்றியை முடிவு செய்யும் என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தன. விரிவான கால அட்டவணைகள் தயாரிக்கப்பட்டன. போருக்கான ஆயத்தங்கள் தொடங்கிய பின் திரும்பிப் பார்க்கும் சாத்தியங்கள் மிகவும் குறைவு. இராணுவவாதமும் வல்லாண்மையும் முன்னாள் ஐக்கிய அமெரிக்க சனாதிபதியான வூட்ரோ வில்சனும், வேறு சிலரும் போருக்கான காரணமாக இராணுவவாதத்தைக் (militarism) குற்றம் சாட்டினர்.[7] ஜேர்மனி, ரஷ்யா, ஆஸ்திரியா-ஹங்கேரி போன்ற நாடுகளில் வல்லாண்மை வாதிகளும், படைத்துறைத் தலைவர்களும் கூடிய அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றனர் என்றும், சனநாயகத்தை அமுக்கிவிட்டு இராணுவ அதிகாரத்தைப் பெருக்கிக் கொள்வதற்கான அவர்களின் ஆசையின் விளைவே போர் என்றும் சிலர் கூறுகின்றனர்.[8] இந்தக் கருத்து ஜேர்மனிக்கு எதிரான பரப்புரைகளில் பெரிதும் பயன்பட்டது.[9][10] 1918 ஆம் ஆண்டளவில் ஜேர்மனியின் முயற்சிகள் தோல்வியடையத் தொடங்கியபோது இரண்டாம் கெய்சர் வில்கெல்ம் போன்ற தலைவர்கள் விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அத்துடன், இராணுவவாதமும், வல்லாண்மையியமும் (aristocracy) முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற பொதுவான கோரிக்கைகளும் உருவாகின. இந்த அடிப்படை 1917 ல் ரஷ்யா சரணடைந்ததன் பின்னர், அமெரிக்கா போரில் பங்குபற்றுவதற்கான நிலைமையைத் தோற்றுவித்தது.[11] நேச நாடுகளின் கூட்டணியின் முக்கிய பங்காளிகளான பெரிய பிரித்தானியாவும், பிரான்சும் மக்களாட்சியைக் கொண்ட நாடுகள். இவை ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, ஓட்டோமான் பேரரசு போன்ற சர்வாதிகார நாடுகளுடன் போரிட்டன. நேச நாடுகளில் ஒன்றாகிய ரஷ்யா 1917 ஆம் ஆண்டு வரை ஒரு பேரரசாக இருந்தது, எனினும் அது ஆஸ்திரியா-ஹாங்கேரியினால் சிலாவிய மக்கள் ஒடுக்கப்படுவதை எதிர்த்தது. இப் பின்னணியில் இப் போர் தொடக்கத்தில் சனநாயகத்துக்கும், சர்வாதிகாரத்துக்கும் இடையிலான போராகவே பார்க்கப்பட்டது. எனினும், போர் தொடர்ந்தபோது இது அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. நாடுகளின் சங்கமும் (League of Nations), ஆயுதக்குறைப்பும் உலகிக் நிலைத்த அமைதியை ஏற்படுத்தும் என வில்சன் நம்பினார். எச். ஜி. வெல்ஸ் என்பாரின் கருத்தொன்றைப் பின்பற்றி போரை, "எல்லாப் போர்களையும் முடித்து வைப்பதற்கான போர்" என விபரித்தார். பிரித்தானியாவும், பிரான்சும் கூட இராணுவவாதத்தில் சிக்கியிருந்த போதும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தை அடைவதற்காக, அவர்களுடன் சேர்ந்து போரிட அவர் தயாராக இருந்தார். பிரிட்ஸ் பிஷர் (Fritz Fischer) போருக்காகப் பெரும்பாலும் ஜேர்மனியின் வல்லாண்மைவாதத் தலைவர்களையே குற்றஞ்சாட்டினார்[12]. ஜேர்மனியின் சமூக சனநாயகக் கட்சி பல தேர்தல்களில் வெற்றிபெற்று இருந்தது. அவர்களுடைய தங்களுடைய வாக்கு விகிதத்தை அதிகரித்து 1912 ஆம் ஆண்டில் பெரும்பான்மைக் கட்சியானது. எனினும் திரிவு செய்யப்பட்ட அவைகளுக்கு, கெய்சருடன் ஒப்பிடும்போது குறைவான அதிகாரங்களே இருந்தன. இச் சூழலில் ஒருவகையான அரசியல் புரட்சி ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக அஞ்சப்பட்டது. ரஷ்யாவிலும் படைப் பெருக்கமும், 1916-1917 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டிய சீர்திருத்த நடைவடிக்கைகளும் நடந்து வந்தன. இவைகளுக்கு முன்பே போரில் ரஷ்யா தோல்வியுற்று, ஜேர்மனி ஒன்றிணைக்கப்படக் கூடிய நிலை இருந்தது. தனது பிந்திய ஆக்கங்களில், ஜேர்மனி 1912 ஆம் ஆண்டிலேயே போரைத் திட்டமிட்டு விட்டதாக பிஷர் வாதித்தார்[13]. வரலாற்றாளரான சாமுவேல் ஆர். வில்லியம்சன் போரில் ஆஸ்திரியா-ஹங்கேரியின் பங்களிப்பை வலியுறுத்தினார். சேர்பியத் தேசியவாதமும், ரஷ்யாவுக்கு பால்க்கன் பகுதி தொடர்பில் இருந்த குறிக்கோள்களும், 17 வெவ்வேறு நாட்டினங்களைக் கொண்டிருந்த முடியாட்சியைச் சீர்குலைத்ததாக அவர் கருதினார். ஆஸ்திரியா-ஹங்கேரி, சேர்பியாவுக்கு எதிராக ஒரு வரையறுக்கப்பட்ட போரையே எதிர்பார்த்தது என்றும், வலுவான ஜேர்மனியின் ஆதரவு ரஷ்யாவைப் போரிலிருந்து விலக்கி வைத்து பால்கனில் அதற்கு இருக்கும் கௌரவத்தைக் குறைக்கும் என அது எண்ணி இருந்ததாகவும் அவர் கருத்து வெளியிட்டார்[14]. அதிகாரச் சமநிலை போருக்கு முந்திய காலத்தில் வல்லரசுகளின் வெளிநாட்டுக் கொள்கைகளின் இலக்கு அதிகாரச் சமநிலையைப் பேணிக் கொள்வதாகும். இது, வெளிப்படையானதும், இரகசியமானதுமான கூட்டணிகளையும், ஒப்பந்தங்களையும் உள்ளடக்கிய விரிவான வலையமைப்புக்களோடு தொடர்புபட்டது. எடுத்துக் காட்டாக பிராங்கோ-பிரஷ்யப் போருக்குப் (1870–71) பின்னர், தனது மரபுவழியான எதிரியான பிரான்சின் பலத்தைச் சமப்படுத்துவதற்கு வலுவான ஜெர்மனியைப் பிரித்தானியா விரும்பியது. ஆனால், பிரித்தானியாவின் கடற்படைக்குச் சவாலாக ஜேர்மனி தனது கப்பற்படையைக் கட்டியெழுப்ப முற்பட்டபோது, பிரித்தானியா தனது நிலையை மாற்றிக்கொண்டது. ஜேர்மனியின் அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்காகத் துணை தேடிய பிரான்ஸ், ரஷ்யாவைக் கூட்டாளி ஆக்கிக்கொண்டது. ரஷ்யாவிடம் இருந்து அச்சுறுத்தலை எதிர்கொண்ட ஆஸ்திரியா-ஹங்கேரி, ஜேர்மனியின் ஆதரவை நாடியது. முதல் உலகப் போர் தொடங்கிய பின்னர், இவ்வாறான ஒப்பந்தங்கள் ஓரளவுக்கு மட்டுமே எந்தநாடு எந்தப் பக்கத்துக்குச் சார்பாகப் போரிட்டது என்பதை முடிவு செய்தது. இத்தாலி, ஆஸ்திரியா-ஹங்கேரியுடனும், ஜேர்மனியுடனும் ஒப்பந்தங்களைச் செய்திருந்தது. எனினும் அது அந் நாடுகளுக்குச் சார்பாகப் போரில் இறங்கவில்லை. அது பின்னர் நேச நாடுகளுக்கு ஆதரவாக இருந்தது. எல்லாவற்றிலும் குறிப்பிடத்தக்க ஒப்பந்தம் ஜேர்மனிக்கும், ஆஸ்திரியா-ஹங்கேரிக்கும் இடையே முதலில் தற்பாதுகாப்புக்காகச் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஆகும். இதனை 1909 ஆம் ஆண்டில் ஜேர்மனி விரிவுபடுத்தி, ஆஸ்திரியா-ஹங்கேரி போரைத் தொடங்கினாலும் கூட ஜேர்மனி அதன் பக்கம் இருக்கும் என உறுதி கூறியது[15]. பொருளியல் பேரரசுவாதம் விளாடிமிர் லெனின் பேரரசுவாதமே போருக்கான காரணம் எனக் குறிப்பிட்டார். இவர் கார்ல் மார்க்ஸ், ஆங்கிலப் பொருளியலாளரான ஜான் ஏ. ஹொப்சன் ஆகியோரின் பொருளியல் கோட்பாடுகளை எடுத்துக் காட்டினார்.[16] இவர்கள், விரிவடையும் சந்தைகளுக்கான போட்டி உலகளாவிய பிணக்குகளை உருவாக்கும் என்று எதிர்வு கூறியிருந்தனர். பிரித்தானியாவின் முதன்மையான பொருளியல் நிலை, செருமானியத் தொழில் துறையின் விரிவான வளர்ச்சி அச்சுறுத்தியது என்றும், பெரிய பேரசு ஒன்றின் சாதகநிலை செருமனிக்கு இல்லாத காரணத்தால், அது செருமானிய மூலதனங்களுக்கான இடங்களுக்காகப் பிரித்தானியாவுடன் தவிர்க்கமுடியாதபடி போரிட வேண்டியிருந்தது என்றும் லெனின் எடுத்துக் காட்டினார். இவ் வாதம் போர்க்காலத்தில் பெரிதும் பெயர் பெற்றிருந்ததுடன், பொதுவுடமையியத்தின் வளர்ச்சிக்கும் துணையாக இருந்தது. வணிகத் தடைகள் அமெரிக்காவில் பிராங்க்லின் ரோஸ்வெல்ட்டின் கீழ் உள்நாட்டுச் செயலாளராக இருந்த கோர்டெல் ஹல் என்பார், வணிகத் தடைகளே முதல் உலகப் போர், இரண்டாம் உலகபோர் இரண்டுக்குமான அடிப்படைக் காரணங்கள் என நம்பினார். 1944 ஆம் ஆண்டில், பிணக்குகளுக்குக் காரணங்கள் என அவர் நம்பிய வணிகத் தடைகளைக் குறைப்பதற்காக பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்தம் என்னும் ஒப்பந்தத்தை உருவாக்குவதில் உதவினார்.[17][18] இன, அரசியல் போட்டிகள் பால்க்கன் பகுதிகளில் ஆஸ்திரியா-ஹங்கேரியின் செல்வாக்குக் குறைந்து, பரந்த-சிலேவியா இயக்கம் வளர்ச்சி பெற்றுவந்ததால், ஆஸ்திரியா-ஹங்கேரிக்கும், சேர்பியாவுக்கும் இடையிலான போர் தவிர்க்க முடியாததெனவே கருதப்பட்டது. ஆஸ்திரிய எதிர்ப்பு உணர்வு அதிகமாகக் காணப்பட்ட சேர்பியாவின் வளர்ச்சியுடன் இனவழித் தேசியம் பொருந்தி வந்தது. ஆஸ்திரியா-ஹங்கேரி, முன்னைய ஓட்டோமான் பேரரசின் மாகாணமாக இருந்ததும், சேர்பியர்கள் அதிகம் வாழ்ந்து வந்ததுமான பொஸ்னியா-ஹெர்சகொவினாவை 1878 ஆம் ஆண்டில் கைப்பற்றிக் கொண்டது. 1908 ஆம் ஆண்டில் இது முறையாக ஆஸ்திரியா-ஹங்கேரியுடன் இணைக்கப்பட்டது. அதிகரித்து வந்த இன உணர்வுகளின் வளர்ச்சி, ஓட்டோமான் பேரரசின் வீழ்ச்சியுடனும் பொருந்தி வந்தது. இன மற்றும் மதப் பிணைப்புக்கள் காரணமாகவும், கிரீமியப் போர்க் காலத்திலிருந்து ஆஸ்திரியாவுடன் இருந்து வந்த போட்டி காரணமாகவும், ரஷ்யா பரந்த-சேர்பியா இயக்கத்துக்கு ஆதரவாக இருந்தது. தோல்வியடைந்த ரஷ்ய-ஆஸ்திரிய ஒப்பந்தம், நூற்றாண்டுகளாக பால்க்கன் பகுதித் துறைமுகங்கள் மீது ரஷ்யாவுக்கு இருந்த ஆர்வம் என்பனவும் இதற்கான காரணங்களாக இருந்தன.[19] ஜூலை நெருக்கடியும் போர் அறிவிப்பும் முடிக்குரிய இளவரசர் கொல்லப்பட்டதை ஒரு சாக்காக வைத்து சேர்பியப் பிரச்சினையைக் கையாள ஆஸ்திரியா-ஹங்கேரிய அரசு முற்பட்டது. ஜேர்மனியும் இதற்கு ஆதரவாக இருந்தது. 1914 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி, பத்துக் கோரிக்கைகளுடன் கூடிய காலக்கெடு ஒன்றை ஆஸ்திரியா-ஹங்கேரி, சேர்பியாவுக்கு விதித்தது. இக் கோரிக்கைகளுட் சில மிகவும் கடுமையாக இருந்ததால் அதன் சாத்தியப்பாடுகள் குறித்து ஐயம் வெளியிட்ட சேர்பியா ஆறாவது கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. பதில் அளிப்பதற்கான தொடக்க வரைவுகளில் இந்த ஆறாவது கோரிக்கையை ஏற்க சேர்பியா விருப்பம் தெரிவித்தது எனினும், ரஷ்யாவின் ஆதரவில் நம்பிக்கை வைத்த சேர்பியா பின்னர் இறுதி வரைவில் அதனை நீக்கிவிட்டது. அத்துடன் ஆயத்த நிலைக்கும் ஆணை பிறப்பித்தது. இதற்குப் பதிலாக ஜூலை 28 ஆம் தேதி ஆஸ்திரியா-ஹங்கேரி போர் அறிவிப்பை வெளியிட்டது. தொடக்கத்தில் ரஷ்யா ஆஸ்திரியாவின் எல்லையைக் குறிவைத்து பகுதித் தயார் நிலையொன்றுக்கு ஆணை பிறப்பித்தது. எனினும், ரஷ்யத் தளபதிகள், பகுதித் தயார்நிலை சாத்தியம் அற்றது என "சார்" (Czar) மன்னருக்குத் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஜூலை 31 ஆம் நாள் முழுத் தயார்நிலை ஆணை பிறப்பிக்கப்பட்டது. போருக்கான ஜேர்மனியின் ஸ்கிளீபென் திட்டம் விரைவாகப் பிரான்சைத் தாக்குவதை அடிப்படையாகக் கொண்டிருந்ததால், ரஷ்யா தயார்நிலைக்கு வர அனுமதிக்க முடியாத நிலை ஜேர்மனிக்கு ஏற்பட்டது. இதனால், ஆகஸ்ட் முதலாம் தேதி ஜேர்மனி, ரஷ்யா மீது போர் தொடுப்பதாக அறிவித்தது. இரண்டு நாட்களுக்குப் பின்னர் பிரான்சின் மீதும் போர் அறிவிப்புச் செய்யப்பட்டது. இதன் பின்னர், பாரிஸ் நோக்கிப் படை நடத்துவதற்காக நடுநிலை நாடான பெல்ஜியத்தின் இறைமையை மீறி அதனூடாகச் சென்றது. 1830 ஆம் ஆண்டின் பெல்ஜியப் புரட்சியின் தொடர்பாகச் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தமொன்றின்படி பெல்ஜியத்தின் நடுநிலைமையைப் பிரித்தானியா உறுதிப்படுத்தி இருந்தது. இதன் காரணமாகப் பிரித்தானியாவும் போரில் தலையிட வேண்டியதாயிற்று. இத்துடன் ஆறு ஐரோப்பிய வல்லரசுகளில் ஐந்து போரில் ஈடுபட்டிருந்தன. இது நெப்போலியன் காலத்துக்குப் பிற்பட்டு ஐரோப்பாக் கண்டத்தில் இடம் பெற்ற மிகப் பெரிய போராக இருந்தது.[20] நிகழ்வுகளின் காலவரிசை தொடக்க நடவடிக்கைகள் மைய நாடுகளிடையே குழப்பநிலை மைய நாடுகளின் போர் வியூகம் தொடர்புக் குறைபாடுகள் காரணமாகப் பாதிப்புக்கு உள்ளானது. ஆஸ்திரியா-ஹங்கேரியின் சேர்பியா மீதான படையெடுப்புக்கு ஆதரவு அளிக்க ஜேர்மனி ஒப்புக்கொண்டிருந்தது. எனினும், இதன் விளக்கம் குறித்து இரு நாடுகளிடையே வேறுபாடுகள் நிலவின. ஆஸ்திரியா-ஹங்கேரியத் தலைவர்கள், தமது வடக்கு எல்லையில் ரஷ்யாவைக் கவனித்துக் கொள்ளும் பணியை ஜேர்மனி ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்த்தனர். ஆனால், ஜேர்மனியோ, பெரும்பாலான ஆஸ்திரியா-ஹங்கேரியப் படைகள் ரஷ்யாவுடனான எல்லைக்கு அனுப்பப்படும் என்றும், அதே வேளை தாம் பிரான்சைக் கையாள்வதென்றும் திட்டமிட்டது. இக் குழப்ப நிலையினால், ஆஸ்திரியா-ஹங்கேரியப் படைகளைப் பிரித்து ரஷ்ய எல்லைக்கும், சேர்பியாவுக்கும் அனுப்பவேண்டி இருந்தது. ஆப்பிரிக்கப் படைநடவடிக்கைகள் போரின் தொடக்ககால நடவடிக்கைகளில் ஒன்று பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகியவற்றை உள்ளடக்கி ஆப்பிரிக்காவில் இடம் பெற்றது. ஆகஸ்ட் 7 ஆம் நாள், பிரித்தானிய, பிரான்சியப் படைகள் ஜேர்மனியின் பாதுகாப்புப் பகுதியான டோகோலாந்துக்குள் புகுந்தன. ஆகஸ்ட் 10 ஆம் தேதி தென்மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்த ஜேர்மனியின் படைகள் தென்னாபிரிக்காவைத் தாக்கின. போர்க்காலம் முழுதும் தீவிரமான தாக்குதல்கள் ஆப்பிரிக்காவிலும் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணமே இருந்தன. சேர்பியப் படையெடுப்பு சேர்பியப் படைகள், ஆஸ்திரியா-ஹங்கேரிக்கு எதிரான சேர்ச் சண்டை எனப்பட்ட சண்டையில் ஆகஸ்ட் 12 ஆம் தேதியில் இருந்து ஈடுபட்டிருந்தன. இவை, டிரினா, சாவா ஆகிய ஆறுகளின் தெற்குக் கரையில் இருந்து தற்காப்புத் தாக்குதலை நடத்தின. அடுத்து இரண்டு கிழமைகளில் ஆஸ்திரியா-ஹங்கேரித் தாக்குதல்கள் பெரும் இழப்புக்களுடன் பின்னடைவுகளைச் சந்தித்தது. நேச நாடுகள் கூட்டணியின் குறிப்பிடத்தக்க முதல் வெற்றியான இது, ஆஸ்திரியாவின் விரைவான வெற்றி குறித்த கனவுகளைத் தகர்த்தது. இதனால், ஆஸ்திரியா தனது படைகளில் பெரும்பகுதியை சேர்பிய முனையில் ஈடுபடுத்த வேண்டி ஏற்பட்டதால், ரஷ்ய முனையிலான நடவடிக்கைகள் பலவீனமாயின. பெல்ஜியத்திலும் பிரான்சிலும் ஜேர்மன் படைகள் தொடக்கத்தில் இடம்பெற்ற எல்லைச் சண்டைகளில் (14 ஆகஸ்ட்–24 ஆகஸ்ட்) ஜேர்மனிக்குப் பல வெற்றிகள் கிடைத்தன. எனினும் ரஷ்யா கிழக்குப் பிரஷ்யாவைத் தாக்கியதால் மேற்கு முனையில் போராட வேண்டிய ஜேர்மன் படைகள் திசை திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டது. தானென்பர்க் சண்டை (17 ஆகஸ்ட் – 2 செப்டெம்பர்) என ஒருங்கே அழைக்கப்பட்ட தொடரான பல சண்டைகளில் ஜேர்மனி ரஷ்யாவைத் தோற்கடித்தது. எனினும் ரஷ்யப் போரினால் கவனம் திசை திரும்பியதால், போதிய வேகமின்மை காரணமாக ஜேர்மனியின் தளபதிகள் எதிர்பாராதபடி, மற்ற முனையில் பிரச்சினைகள் ஏற்பட்டன. ஸ்கிளீபென் திட்டப்படி, வலப்புறத்தில் ஜேர்மன் படைகள் பாரிசுக்கு மேற்குப்புறம் முன்னேற வேண்டும். ஆனால், குதிரைகளால் இழுக்கப்பட்ட போக்குவரத்து வண்டிகளில் இடவசதி, வேகம் என்பன போதாமையினால், ஜேர்மனியின் வழங்கல் பாதிக்கப்பட்டது. இதனால் இறுதியாக பிரித்தானிய, பிரான்சியப் படைகள் ஜேர்மனியின் படைகளை மார்னே முதற் சண்டை (5 செப்டெம்பர்–12 செப்டெம்பர்) என அழைக்கப்பட்ட போரில் பாரிசுக்குக் கிழக்கே தடுத்து நிறுத்தின. இதனால் மைய நாடுகள் விரைவான வெற்றியைப்பெறும் வாய்ப்பு இல்லாமல் ஆக்கப்பட்டதுடன், அவர்கள் இரு முனைகளில் போரிடவேண்டிய தேவையையும் ஏற்படுத்தியது. ஜேர்மனியின் படைகள் பிரான்சுக்குள் புகுந்து பாதுகாப்பான நிலையில் இருந்ததுடன், பிரித்தானிய பிரான்சியப் படைகளில் 230,000 பேரை நிரந்தரமாகச் செயலிழக்கச் செய்தது. இது ஜேர்மனி இழந்ததிலும் அதிகமாகும். ஆசியாவும் பசிபிக் பகுதிகளும் நியூசிலாந்து ஆகஸ்ட் 30 ஆம் தேதி இன்று மேற்கு சமோவா என அழைக்கப்படும் அன்றைய ஜேர்மன் சமோவாவைக் கைப்பற்றியது. செப்டெம்பர் 11 ஆம் தேதி, ஆஸ்திரேலிய கடற்படை மற்றும் இராணுவப் படைகள், ஜேர்மன் நியூ கினியாவின் ஒரு பகுதியாக இருந்த இன்று நியூ பிரிட்டன் என அழைக்கப்படும் நியூ பொம்மேர்ன் தீவில் இறங்கின. ஜேர்மனியின் மைக்குரோனீசியக் குடியேற்றங்களையும்; சிங்டாவோ சண்டைக்குப் பின், சீனாவின் ஷாண்டாங் குடாநாட்டில் இருந்த ஜேர்மனியின் நிலக்கரித் துறைமுகமான சிங்டாவோவையும் ஜப்பான் கைப்பற்றிக் கொண்டது. சில மாதங்களிலேயே நேச நாடுகளின் படைகள் பசிபிக் பகுதியில் இருந்த எல்லா ஜேர்மனியின் ஆட்சிப் பகுதிகளையும் கைப்பற்றிக் கொண்டன. தொடக்க கட்டங்கள் பதுங்குகுழிப் போர் தொடக்கம் முதலாம் உலகப் போருக்கு முந்திய படைத்துறை உத்திகள் தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு இணையாக வளரத் தவறியிருந்தன. இப்போது, பெரும்பாலான போர்களில் காலங்கடந்த முறைகளால் ஊடறுக்க முடியாத கவர்ச்சிகரமான பாதுகாப்பு முறைமைகள் உருவாக்கப்பட்டன. முட்கம்பி வேலிகள் பெருமளவில் காலாட் படைகள் முன்னேறுவதற்குத் தடையாக இருந்தன. தொலைதூர கனரக ஆயுதங்கள், 1870 ஆண்டின் ஆயுதங்களைக் காட்டிலும் கூடிய பாதிப்புக்களை விளைவிக்கக் கூடியனவாக இருந்ததுடன், இயந்திரத் துப்பாக்கிகளுடன் சேர்ந்து, திறந்த வெளிகளைப் படைகள் கடந்து செல்வதைக் கடினமாக்கியிருந்தன. இப் போரில் ஜேர்மனி நச்சு வளிமங்களைப் போராயுதமாக அறிமுகப்படுத்தியது. விரைவிலேயே எதிரணியும் இதனைப் பயன்படுத்தத் தொடங்கியது. எனினும், சண்டைகளை வெல்வதில் இது முக்கிய பங்கு வகித்ததாகத் தெரியவில்லை. நச்சு வளிமங்களின் விளைவுகள் கொடூரமானவையாக இருந்தன. தாக்கப்பட்டவர்கள் மெதுவாகவும், கூடிய வலிகளுடனும் இறந்தனர். இப் போரில், நச்சு வளிமங்கள் மிகுந்த அச்சத்தை விளைவிப்பனவாகவும், மிகவும் கொடூரமான நினைவுகளை ஏற்படுத்தியன ஆகவும் இருந்தன. இரு அணித் தளபதிகளுமே பதுங்குகுழி நிலைகளைப் பாரிய இழப்பின்றித் தகர்ப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறியத் தவறியிருந்தனர். காலப் போக்கில், தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதிய தாக்குதல் ஆயுதங்கள் உருவாக்கப்பட்டன. இவற்றுள் குறிப்பிடத்தக்கது "தாங்கி" ஆகும். பிரித்தானியாவும், பிரான்சுமே இதனை முக்கியமாகப் பயன்படுத்தினர். இவர்களிடமிருந்து கைப்பற்றியவற்றையும், தாமே உருவாக்கிய குறைந்த அளவு தாங்கிகளையும் ஜேர்மனியும் பயன்படுத்தியது. முதலாம் மார்னே சண்டைக்குப் பின்னர், நேச நாடுகளின் படைகளும், ஜேர்மனியின் படைகளும், கடல் நோக்கிய ஓட்டம் (Race to the Sea) எனப்பட்ட, தொடரான பல சுற்றுவழி நகர்வுகளை மேற்கொள்ளலாயின. பிரித்தானியாவும், பிரான்சும் லோரைனில் இருந்து பெல்ஜியத்தின் பிளெமியக் கரை வரை நீண்டிருந்த பதுங்குகுழிகளில் இருந்து போரிட்ட ஜேர்மனியின் படைகளை எதிர்கொள்ளவேண்டி ஏற்பட்டது. பிரித்தானியாவும், பிரான்சும் தாக்குதலில் குறியாக இருந்தபோது, ஜேர்மனியின் படைகள் கைப்பற்றப்பட்ட நிலப்பகுதிகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன. இதனால், பாதுகாப்புக்கு ஏற்றவாறு ஜேர்மனியின் பதுங்குகுழிகள் எதிரிப்படைகளினதைக் காட்டிலும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், பிரித்தானியாவினதும், பிரான்சினதும் பதுங்குகுழிகள் ஜேர்மனியின் பாதுகாப்பு நிலைகளை ஊடறுக்கும் வரையிலான தற்காலிகத் தேவைக்கானவையாகவே இருந்தன. எவருமே வெற்றிபெற முடியாதிருந்த இந்த நிலையை மாற்றுவதற்கு, இரு பகுதியினருமே அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளைப் பயன்படுத்தலாயினர். 1915 ஆம் ஆண்டு ஏப்ரலில், 1899 இலும் 1907 இலும் ஏற்படுத்தப்பட்ட ஹேக் மாநாட்டு முடிவுகளுக்கு எதிராக, ஜேர்மனி குளோரீன் வளிமத்தை முதன்முதலாகப் பயன்படுத்தியது. இவ்வளிமம் பயன்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து நேசப் படைகள் பின்வாங்கியதால், அவற்றின் முன்னரங்க நிலைகளில் 6 கிலோமீட்டர் (4 மைல்கள்) நீளமான வெளியொன்றை ஏற்படுத்த ஜேர்மனியால் முடிந்தது. கனடாவின் படைகள் இரண்டாம் ஈபிரெ சண்டையில் (Second Battle of Ypres) இந்த உடைப்பை மூடிவிட்டனர். சொம்மா சண்டையின் முதல் நாளான 1916 ஜூலை முதலாம் தேதி பிரித்தானியப் படைகளுக்கு மறக்கமுடியாத நாளாக விளங்கியது. இந் நாளில் அப்படைகளுக்கான பாதிப்பு 57,470 போராக இருந்தது. இதில் 19,240 பேர் இறந்துவிட்டனர். பெரும்பாலான பாதிப்புக்கள் தாக்குதல் தொடங்கிய முதல் மணிநேரத்தில் இடம்பெற்றன. சொம்மாத் தாக்குதல் முழுவதிலுமான பிரித்தானியப் படைகளின் இழப்பு சுமார் ஐந்து இலட்சம் பேராகும்[21]. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எந்தத் தரப்பினருமே எதிர்த்தரப்பினருக்கு முடிவான தோல்வியை ஏற்படுத்த முடியவில்லை. எனினும், வேர்டனில் 1916 ஆம் ஆண்டு முழுதும் தொடர்ந்த ஜேர்மனியின் நடவடிக்கைகளும், சொம்மாவில் நேசப்படைகளுக்கு ஏற்பட்ட தோல்வியும், பிரான்சின் படைகளை நிலைகுலையும் நிலைக்கு அருகில் கொண்டுவந்தது. வீணான முன்னரங்கத் தாக்குதல்களும், நடைமுறைக்கு ஒவ்வாத முறைகளை இறுக்கமாகப் பின்பற்றியதும், பிரித்தானியாவினதும், பிரான்சினதும் படைகளுக்குக் கடும் இழப்புக்களை ஏற்படுத்தியதுடன், பரவலான படைவீரர்களின் கலகங்களுக்கும் வித்திட்டது. 1915 தொடக்கம் 1917 வரையான காலப்பகுதி முழுவதும், எடுத்துக்கொண்ட போர் உத்திகள், வியூகங்கள் என்பன காரணமாக பிரித்தானியப் பேரரசுக்கும், பிரான்சுக்கும் ஜேர்மனியைவிடக் கூடிய அளவில் இழப்புக்கள் ஏற்பட்டன. ஜேர்மனி, வேர்டன் சண்டையின்போது ஒரேயொரு முக்கிய தாக்குதலை மட்டுமே நிகழ்த்திய வேளையில், ஜேர்மனியின் நிலைகளை ஊடறுப்பதற்காக நேசப்படைகள் பல தாக்குதல்களை நடத்தின. உத்தி அடைப்படையில், ஜேர்மனியின் தற்காப்புக் கொள்கை, இழப்புக்களைத் தாங்கக்கூடிய இலகுவான முன்னணி நிலைகளுடனும், வலுவான எதிர்த்தாக்குதல்களை உடனடியாக நடத்தக்கூடிய முக்கியமான நிலைகளுடனும் கூடிய பதுங்குகுழிப் போருக்கு பொருத்தமானதாக அமைந்தது. இது, எதிரிகளின் தாக்குதல்களைக் குறைந்த இழப்புடன் முறியடிப்பதற்கு உதவியாக அமைந்தது. மொத்தமாகப் பார்க்கும்போது தாக்குதல், தற்காப்பு இரண்டிலுமே உயிரிழப்புக்கள் பாரிய அளவிலேயே இருந்தன. எந்தவொரு நேரத்திலும் சுமார் 800,000 போர்வீரர்கள், பிரித்தானியப் பேரரசின் சார்பில் மேற்குப் போர்முனையில் இருந்தனர். 1000 பட்டாலியன்கள் வடகடல் முதல், ஓர்னே ஆறு வரையிலான நிலைகளில், நான்கு கட்டச் சுழற்சி முறையில் ஒரு மாத காலத்துக்கு இருந்தனர். இம்முறை தாக்குதல்கள் நடைபெறாத காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. முன்னணி 9,600 kilometres (5,965mi) க்கு மேற்பட்ட பதுங்கு குழிகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு பட்டாலியனும், தமது முன்னணி நிலைகளில் ஒரு வாரமும், பின்னர் பின்னுள்ள துணை நிலைகளுக்கு நகர்ந்து அங்கே இன்னொரு வாரமும் பணிபுரிந்தனர். அடுத்த கிழமை அங்கிருந்து பின் நகர்ந்து ஒதுக்கு (reserve) நிலைகளில் இருப்பர். நான்காவது கிழமை நிலைகளை விட்டு நீங்கி இளைப்பாறுவர். 1917ல் இடம்பெற்ற அராஸ் சண்டையில் பிரித்தானியாவுக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க ஒரே வெற்றி விமி மலைமுகட்டைக் கைபற்றியமை ஆகும். சர் ஆர்தர் கியூரி (Arthur Currie), ஜூலியன் பிங் (Julian Byng) ஆகியோர் தலைமையிலான கனடாப் படைகள் இதனைக் கைப்பற்றின. தாக்குதல் படைகள் முதல் தடவையாக நிலைகளைக் கைப்பற்றி விரைவாக நிலைகளை வலுப்படுத்தி அவற்றைத் தக்க வைத்துக்கொண்டு நிலக்கரி வளம் மிக்க டுவே (Douai) சமவெளியைப் பாதுகாத்தன.[22]. கடற்போர் போரின் தொடக்கத்தில், ஜேர்மன் பேரரசு, உலகின் பல பகுதிகளிலும் ஓரளவு தாக்குதற் திறன் கொண்ட கப்பல்களை வைத்திருந்தது. இவை பின்னர் நேச நாடுகளைச் சேர்ந்த வணிகக் கப்பல்களைத் தாக்குவதற்குப் பயன்பட்டன. பிரித்தானிய ராயல் கடற்படை அக் கப்பல்களைத் தாக்கி அழித்து வந்தது. எனினும், வணிகக் கப்பல்களைப் பாதுகாக்க முடியாத சில இக்கட்டான நிலைகளும் ஏற்படவே செய்தன. எடுத்துக்காட்டாக, சிங்டாவோவில் இருந்த கிழக்காசியப் படைப்பிரிவைச் சேர்ந்த இலகு போர்க்கப்பலான எம்டன், 15 வணிகக் கப்பல்களை அழித்ததுடன், ஒரு ரஷ்ய இலகு போர்க்கப்பலையும், பிரான்சின் அழிப்புக் கப்பலொன்றையும் மூழ்கடித்தது. ஆனாலும், ஜேர்மனியின் கிழக்காசியப் பிரிவைச் சேர்ந்த, ஆயுதம் தாங்கிய கப்பல்களான ஸ்கார்னோஸ்ட், நீசெனோ, இலகு போர்க்கப்பல்களான நேர்ன்பர்க், லீப்சிக் மற்றும் இரண்டு போக்குவரத்துக் கப்பல்களுக்கு வணிகக் கப்பல்களைத் தாக்கும் ஆணை வழங்கப்படவில்லை. அவை ஜேர்மனியை நோக்கிச் சென்றன. வழியில் பிரித்தானியக் கப்பற்படையினரை எதிர் கொண்ட டிரெஸ்டென் என்னும் கப்பலும் உள்ளிட்ட ஜேர்மனியின் கப்பல்கள், கொரோனெல் சண்டை எனப்பட்ட சண்டையில் இரண்டு ஆயுதம் தாங்கிய கப்பல்களை மூழ்கடித்தன. எனினும் 1914இ இடம்பெற்ற போக்லாந்துத் தீவுச் சண்டையில், டெஸ்டென் தவிர்ந்த எல்லாக் கப்பல்களுமே அழிக்கப்பட்டன.[23]. போர் தொடங்கியதுமே ஜேர்மனி மீதான கடற் தடையொன்றைப் பிரித்தானியா ஏற்படுத்தியது. இந்த உத்தி, ஜேர்மனிக்கான முக்கியமான இராணுவ, குடிமக்களுக்கான தேவைகளின் வழங்களை நிறுத்துவதில் வெற்றிகண்டாலும், இது முன்னைய இரண்டு நூற்றாண்டுகளாகப் பல்வேறு பன்னாட்டு ஒப்பந்தங்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டிருந்த அனைத்துலகச் சட்டங்களை மீறுவதாக அமைந்தது[24]. அனைத்துலகக் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பிரித்தானியா கடற் கண்ணிகளை விதைத்து, எக்கப்பலும் கடலின் எப்பகுதிக்குள்ளும் நுழைய முடியாதவாறு தடுத்தது. இது நடுநிலைக் கப்பல்களுக்கும் ஆபத்தை விளைவிப்பதாக இருந்தது.[25] இந்த உத்திக்குக் குறைவான எதிர்ப்பே இருந்ததால், அதையே தனது வரையறையற்ற நீர்மூழ்கிக் கப்பல் போருக்கும் ஜேர்மனி எதிர்பார்த்தது.[26]. 1916 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜூட்லாந்துச் சண்டை முதலாம் உலகப்போரின் மிகப்பெரிய கடற் சண்டையாக உருவானது. இப்போரின் முழு அளவிலான போர்க்கப்பற் சண்டை இது மட்டுமே. இது 1916 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் நாள், ஜூட்லாந்துக்கு அப்பால் வடகடலில் இடம்பெற்றது. வைஸ் அட்மிரல் ரெய்ன்ஹார்ட் ஸ்கீர் (Reinhard Scheer) என்பவர் தலைமையிலான கெய்சர்லிச் கடற்படையின் ஆழ்கடல் கப்பற்படையும், அட்மிரல் சர் ஜான் ஜெலிக்கோ தலைமையிலான ராயல் கடற்படையின் கிராண்ட் கப்பற்படையும் மோதிக்கொண்டன. போரில் எவரும் வெற்றிபெறாத நிலை ஏற்பட்டபோதும், பிரித்தானியாவின் பெரிய கடற்படைக்குத் தாக்குப் பிடிக்க முடியாத ஜேர்மனியின் கப்பல்கள் பின்வாங்கிச் சென்றுவிட்டன. எனினும், அவை தாம் இழந்ததிலும் கூடிய இழப்புக்களைப் பிரித்தானியக் கடற்படைக்கு ஏற்படுத்தின. இருந்த போதிலும், பிரித்தானியா கடலில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்திய ஒரு நிகழ்வாகவே இது அமைந்தது. அத்துடன் போரின் எஞ்சிய பகுதி முழுவதும், ஜேர்மனியின் கப்பல்கள் அதன் துறைமுகங்களிலேயே இருந்தன. ஜேர்மன் யூ-போட்டுகள் ஐக்கிய அமெரிக்காவுக்கும், பிரித்தானியாவுக்கும் இடையிலான வழங்கல்களின் போக்குவரத்தைத் துண்டிக்க முயன்றன.[27] தாக்குதல்கள் எச்சரிக்கை எதுவும் இன்றியே வருவது நீர்மூழ்கிப் போரின் இயல்பு ஆகும். இதனால் வணிகக் கப்பல்கள் தப்புவதற்கு மிகவும் குறைந்த சாத்தியங்களே உண்டு.[28] ஐக்கிய அமெரிக்கா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இதனால் ஜேர்மனி தனது தாக்குதல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்தியது. 1915 ஆம் ஆண்டில் ஆர்எம்எஸ் லூசித்தானியா என்னும் பயணிகள் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகள் கப்பல்களைத் தாக்குவது இல்லை என்று ஜேர்மனி உறுதியளித்தது. அதேவேளை பிரித்தானியா தனது வணிகக் கப்பல்களை ஆயுதமயமாக்கியது. இது அவற்றை போர்நோக்கமற்ற கப்பல்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அடங்காமல் செய்தது. இறுதியாக, அமெரிக்கா போரில் ஈடுபடப்போகிறது என்று உணர்ந்து கொண்ட ஜேர்மனி, கட்டுப்பாடற்ற நீர்மூழ்கிப் போர் என்னும் கொள்கையைக் கடைப்பிடிக்க முடிவு செய்தது.[29] அமெரிக்கா பெருமளவில் படைகளை வெளியே அனுப்பமுன் நேச நாடுகளின் கடல் வழிகளை நெருக்குவது ஜேர்மனியின் நோக்கமான இருந்தது. வணிகக் கப்பல்கள் அழிப்புக் கப்பல்களின் பாதுகாப்புடன் கூடிய அணிகளாகச் செல்லத் தொடங்கியதும் யூ-போட்டுகளின் அச்சுறுத்தல்கள் குறையலாயின. இந்த உத்தி யூ-போட்டுகளுக்கான இலக்குகளை இல்லாதாக்கியது. இதனால் இழப்புக்கள் குறைந்தன. புதிய கருவிகளின் அறிமுகம், கடலுக்கு அடியிலேயே நீர்மூழ்கிகளைத் தாக்கக்கூடிய வாய்ப்புக்களையும் உருவாக்கின. கப்பல்கள் ஒன்று சேரும்வரை காத்திருக்க வேண்டி இருந்ததால் அணிகளாகச் செல்லும் உத்தியின் மூலம் வழங்கல்களில் தாமதங்கள் ஏற்பட்டன. வானூர்தி தாங்கிகளும் முதன் முதலாக முதலாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டன. எச்எம்எஸ் பியூரியஸ் என்னும் வானூர்தி தாங்கிக் கப்பலில் இருந்து புறப்பட்ட சொப்வித் கமல் (Sopwith Camels) என்னும் வானூர்திகள் 1918 ஆம் ஆண்டில், தொண்டேர்னில் உள்ள செப்பெலின் வானூர்தித் தரிப்பிடத்தை வெற்றிகரமாகத் தாக்கின. அத்துடன் இதிலிருந்து பிளிம்ப் (blimp) வானூர்திகள் மூலம் நீர்மூழ்கிகளைக் கண்காணிக்கும் பணிகளும் நடைபெற்றன.[30] தெற்குப் போர்முனைகள் பால்க்கன் போர் ரஷ்யாவுடன் போரிடவேண்டி இருந்ததால், ஆஸ்திரியா-ஹங்கேரி அதன் படைகளின் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே சேர்பியாவைத் தாக்கப் பயன்படுத்த முடிந்தது. பெரும் இழப்புகளுக்குப் பின்னர் ஆஸ்திரியர்கள் சேர்பியாவின் தலைநகரான பெல்கிரேடைக் கைப்பற்றிச் சிறிது காலம் வைத்திருந்தனர். 1914 இன் முடிவில், கொலூபரா சண்டை என அழைக்கப்பட்ட எதிர்த்தாக்குதல் ஒன்றை நடத்திச் சேர்பியர்கள் ஆஸ்திரியர்களை நாட்டை விட்டு விரட்டினர். 1915 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களிலும் ஆஸ்திரியா-ஹங்கேரி தனது ஒதுக்குப் படைகளில் பெரும்பாலானவற்றை இத்தாலியுடன் போரிடப் பயன்படுத்தியது. ஜேர்மனியும், ஆஸ்திரியா-ஹங்கேரியும் சேர்பியாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதற்கு பல்கேரியாவை இணங்க வைத்தனர். ஆஸ்திரியா-ஹங்கேரியின் மாகாணங்களான சிலோவேனியா, குரோசியா, பாஸ்னியா என்பன சேர்பியாவை ஆக்கிரமிப்பதற்கும், ரஷ்யா, இத்தாலி என்பவற்றுடன் போரிடுவதற்கும் ஆஸ்திரியா-ஹங்கேரிக்குப் படைகளை அளித்தன. மான்டனீக்ரோ சேர்பியாவுக்குத் துணைநின்றது. ஒரு மாதத்துக்கும் குறைவான காலத்தில் சேர்பியா கைப்பற்றப்பட்டது. மைய நாடுகள் வடக்கிலிருந்து அக்டோபரில் தாக்குதலைத் தொடங்கின. நான்கு நாட்களின் பின்னர் பல்கேரியாவும் தெற்கிலிருந்து தாக்கத் தொடங்கியது. இரண்டு முனைகளில் போரிடவேண்டியிருந்த சேர்பியப் படைகள் தோல்வியை உணர்ந்துகொண்டு அல்பேனியாவுக்குப் பின்வாங்கின. அவர்கள் ஒரு தடவை மட்டுமே பல்கேரியருடன் போரிடுவதற்காகத் தமது பின்வாங்கலை நிறுத்தினர். சேர்பியர்கள் கொசோவோச் சண்டை என்னும் சண்டையில் தோல்வியடைந்தனர். 6-7 ஜனவரி 1916 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மொய்கோவாக் சண்டை என்னும் சண்டையின் மூலம் சேர்பியர்கள் பின்வாங்குவதற்கு மான்டனீக்ரோ உதவியது. எனினும் இறுதியில் ஆஸ்திரியா மான்டினீக்ரோவையும் கைப்பற்றியது. சேர்பியப் படைகள் கப்பல் மூலம் கிரீசுக்குச் சென்றன. பிரிட்டிஷ் போர் வீரர்களின் நாட்குறிப்புகள் முதலாம் உலகப்போரின் நூற்றாண்டைக் குறிக்கும் நிகழ்வுகளில் ஒரு பகுதியாக முதலாம் உலகப் போரில் பங்கேற்ற பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள், போரின்போது எழுதிய நாட்குறிப்புகள் பிரிட்டனின் தேசிய ஆவணக் காப்பகத்தால் இணையத்தில் பிரசுரிக்கப்படுகின்றன. 1.5 மில்லியன் நாட்குறிப்பு பக்கங்கள் தேசிய ஆவணக்காப்பகத்தால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றில், ஐந்தில் ஒரு பங்கு பக்கங்கள் 2014 வரை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன.இந்த டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்ட 1944 நாட்குறிப்புகளில் எழுதப்பட்டிருக்கும் குறிப்புகள், பிரிட்டன் போரில் முதலில் பயன்படுத்திய முன்று குதிரைப்படை மற்றும் ஏழு காலாட்படைப் பிரிவுகளின் அனுபவங்களை விளக்குகின்றன.அதிகாரபூர்வ நாட்குறிப்புகள் தவிர, போரில் பங்கேற்ற பிரிட்டிஷ் ராணுவத்தினர் எழுதிய தனிப்பட்ட நாட்குறிப்புகள் சிலவும் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்படுகின்றன.முதல் பட்டாலியனின் கேப்டன் ஜேம்ஸ் பேட்டர்சன் எழுதி வைத்திருந்த சொந்த நாட்குறிப்பும் இது போல டிஜிட்டல் வடிவில் பாதுகாக்கப்படுகிறது.உலகின் கடைசி முதல் உலகப்போர் வீரர், க்லாட் சூல்ஸ் , ஆஸ்திரேலியாவில், தனது 110வது வயதில், 2011ல் காலமாதை ஒட்டி முதலாம் உலகப்போரின் போது பங்கேற்ற வீரர்கள் யாரும் உயிருடன் இல்லாத நிலையில், இந்த நாட்குறிப்புத் திட்டம் அவர்களது குரல்களை மக்கள் கேட்க வகை செய்யும் என்று கூறப்படுகிறது.[31] இவற்றையும் பார்க்கவும் இரண்டாம் உலகப் போர் அன்சாக் நாள் 11.11.11. நூற்றாண்டு நினைவு ஆதாரங்கள் பகுப்பு:போரியல்
முதலாம் உலகப்போர் எப்பொழுது துவங்கியது?
1914ம்
1,070
tamil
10ff95f4c
இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் ஒரு தன்னாட்சி பெற்ற இந்திய அரசாங்கத்தின் ஆணையமாகும். அக்டோபர் 12, 1993[1] இல் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993[2], (டி பி எச் ஆர் ஏ) இன் கீழ் இவ்வாணையம் நிலைநாட்டப்பெற்றது. பாரிசில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவை சார்பில் மனித உரிமை பாதுகாப்பு ஆணைய கூட்டத்தில் எடுக்கப்பெற்ற தீமானத்தின் அடிப்படையில் இவ்வாணையம் இந்தியாவில் உருவாக்கப்பட்டது, செயற்பாடுகள் புகார் புகார்கள் அனுப்புவது தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பப்படும் புகார்கள் ஆங்கிலம் அல்லது இந்தியிலோ எட்டவாது அட்டவணையில் [3] கூறப்பட்டுள்ளபடி மாநில மொழியான தமிழிலும் இருத்தல் வேண்டும். இந்த மொழிகளில் அனுப்படும் புகார்களை ஆணையம் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். புகார் மனுவில் குறிப்பிட வேண்டியவை புகார் மனு கீழ்கண்ட விவரங்கள் அடங்கியவனவாக இருத்தல் வேண்டும்;-[4] குறிப்பு-;ஒருவர் மாநில மனித உரிமை அல்லது தேசிய மனித உரிமை ஆணையம் என்று ஏதாவதொரு ஆணையத்தில் புகார் செய்யலாம். மாநில ஆணையத்தில் புகார் செய்தபின் தேசிய ஆணையம் அவ்வழக்கை மேற்கொள்ளாது. தேசிய ஆணையத்தில் புகார் செய்தபின் மாநில ஆணையம் அப்புகாரை மேற்கொள்ளாது. (ஒரே நேரத்தில் ஒரு வழக்கை இரு ஆணையங்கள் மேற்கொள்ளாது). புகார் பெற்றபின் அதற்குரிய புகார் பெற்றதற்கான இரசீது கொடுக்கப்படும். ஏற்கப்படாத புகார்கள் கீழ்க்கண்டத் தன்மை கொண்ட புகார்கள் எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்திடலாம்.[3] புகார்களைப் பெறுதல் ஆய்வு ஒவ்வொரு புகாரும் அதன் தன்மைக் குறித்து ஆய்வு[3] செய்யப்பட்டு அதன் படி வகைப்படுத்தப்படுகின்றது. அவற்றை ஒழுங்குபடுத்தியபின் அவற்றை தன்மைக்கேற்ப வழக்குப் பதிவு செய்து அதற்கு பதிவெண் வழங்கப்படுகின்றது. காலவரை புகார்ரைப்பதிவு செய்த நாளிலிருந்து 7 நாட்களுக்கு மிகாமல்[3] ஆணையத்தின் முன் வைக்கவேண்டும். அவசரத் தேவையாக இருப்பின் அவற்றின் அவசரத்தன்மைக் கருதி 24 மணி நேரத்திற்குள்[3] தேசிய அல்லது மாநில மனித உரிமை ஆணையத்தின் முன் வைக்கப்படவேண்டும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆக்கமைவு மற்றும் நியமனம் டி பி எச் ஆர் ஏ பிரிவு 3 மற்றும் 4 ன் கீழ் வரையறுத்துள்ளதின்படி இவ்வாணையத்தின் நியமனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் நியமனங்கள் அதன் சிறப்புக்குழுப் பரிந்துறையின்படி இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். ஆணையக் குழு வ.எண்குழுஉறுப்பினர்பொறுப்பு 1பிரதமர் தலைமையர் 2மக்களவைத் தலைவர் உறுப்பினர் 3இந்திய உள் துறை அமைச்சர் உறுப்பினர் 4மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் உறுப்பினர் 5மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் உறுப்பினர் 6மாநிலங்களவைத் துணைத் தலைவர் உறுப்பினர் தேசிய மனித உரிமை பாதுகாப்பு ஆணைய நியமனங்கள் வ.எண்நியமனங்கள்பொறுப்பு 1உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையர் 2உச்ச நீதிமன்ற நீதிபதி உறுப்பினர் 3உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி உறுப்பினர் 4மனித உரிமை ஆர்வலர்கள் இருவர் உறுப்பினர் தற்பொழுதய ஆக்கமைவு உறுப்பினர்கள் வ.எண்நியமனங்கள்பொறுப்பு 1மாண்புமிகு நீதியரசர் திரு எஸ்.இராஜேந்திரபாபு தலைமையர் 2மாண்புமிகு நீதியரசர் திரு கோவிந்த் பிரசாத் மாத்தூர் உறுப்பினர் 3மாண்புமிகு நீதியரசர் திரு ஒய். பாஸ்கர ராவ் உறுப்பினர் 4திரு ஆர்.எஸ்.கல்கா உறுப்பினர் 5திரு பி.சி.சர்மா உறுப்பினர் 6திரு முகம்மது ஷபி குரேஷி (தலைமையர், தேசிய சிறுபான்மையினர் ஆணையம்) அலுவல் நிலை உறுப்பினர்7(தலைமையர், பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் ஆணையம்) அலுவல் நிலை உறுப்பினர்8முனைவர் கிரிஜா வயாஸ் (தலைமையர், தேசிய மகளிர் ஆணையம்) அலுவல் நிலை உறுப்பினர்தலைமை செயலாட்சி அலுவலர்கள்1திரு ஏ.கே. ஜெயின் பொதுச் செயலர்2திரு சுனில்கிருஷ்ணாகாவல்துறை இயக்குநர் (புலனாய்வு)3திரு ஏ,கே கார்க்பதிவர் (சட்டம்) ' ' ஆணையம் அமைந்துள்ள இடம் தேசிய மனித உரிமை ஆணையம் புதுதில்லியில் காப்பர் நிக்கஸ் மார்க், அருகில் பரித்கோட் இல்லத்தில் (அவுஸ்) இயங்குகின்றது. ஆணையத்தை தொலைபேசியில் ஆணுக 011-23385368, எண்ணும், புகார் செய்ய கைப்பேசி எண்,9810298900 அளிக்கப்பட்டுள்ளன. புகார்கள் 24 மணி நேரமும் பெறப்படும். புகாருக்கு இன்னுமோரு தனி தொலைநகல் எண் 011-23386521 / ஆட்சியர்களை அணுக 23384863,/ புலனாய்வுக்கு 23382734 அளிக்கப்பட்டுள்ளன. மின்னஞ்சல் covdnhrc@nic.in (பொது) / புகாருக்கு jrlaw@nic.in மற்றும் ஆய்வு பிரிவிற்காக resnhrc@nic.in அளிக்கப்பட்டுள்ளன. செயல்பாடு தேசிய மனித உரிமை ஆணையம் 2015 ஆம் ஆண்டு நெல்லையில் பள்ளிகளில் மாணவர்களின் நடவடிக்கை பற்றி மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியது. [5] இவற்றையும் பார்க்கவும் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வெளிப்புற இணைப்புக்கள் மேற்கோள்கள் பகுப்பு:மனித உரிமை அமைப்புகள் பகுப்பு:இந்தியாவில் மனித உரிமைகள் பகுப்பு:இந்திய ஆணைக்குழுக்கள்
இந்தியாவில் மனித உரிமை ஆணையம் எப்போது நிறுவப்பட்டது?
அக்டோபர் 12, 1993
90
tamil
7a6e807d7
நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 சூலை 1918 – 5 திசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது. சூன் 2008ல் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இளமை நெல்சன் மண்டேலா 1918 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தியதி தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி இன மக்கள் தலைவர் ஆவார்[1]. இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவர் தான் மண்டேலா. இவரின் முழுப்பெயர் 'நெல்சன் ரோபிசலா மண்டேலா'. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். இவரின் சிறுவயதில் குத்துச் சண்டை வீரராகவே அறியப் பெற்றார். அந்தக் குடும்பத்திலிருந்து முதன் முதலில் பள்ளி சென்ற மண்டேலா, இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். போர் புரியும் கலைகளையும் பயின்றார். இவரின் பெயரின் முன்னால் உள்ள "நெல்சன்" இவர் கல்வி கற்ற முதல் பள்ளியின் ஆசிரியரினால் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்ட மண்டேலா, லண்டன் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார். 1941 ஆம் ஆண்டு ஜோகானஸ்பேர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றி வந்தார். அப்போது 'நோமதாம் சங்கர்' என்ற செவிலியரைத் திருமணம் செய்து கொண்டார். மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் தென்னாப்பிரிக்க அரசு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியைத் தடை செய்தது. மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது. ஐந்தாண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது 1958 ஆம் ஆண்டு வின்னி மடிகி லேனா என்பவரை மணந்தார். வின்னி தனது கணவரின் கொள்கைகளுக்காகப் போராடி வந்தார். மண்டேலாவுக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்தைகளும் 2 வது மனைவி மூலம் 2 குழந்தைகளும் உள்ளனர். அரசியல் அறப் போராட்டங்கள் தென்னாப்பிரிக்க நாட்டில் கறுப்பர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அங்கு வெள்ளையர்கள் சிறுபான்மையினர். ஆனாலும் ஆட்சி அதிகாரம் வெள்ளையர்களிடமே இருந்தது. 1939 ஆம் ஆண்டில் தனது 21 ஆவது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்து, ‘கறுப்பின மக்கள் அடக்கப்படுகின்றனர். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகின்றது. அவர்கள் பிரயாணம் செய்வதற்கு அவர்களுடைய நாட்டினுள்ளேயே அனுமதி பெற வேண்டியுள்ளது. நிலவுடமையாளர்களாக கறுப்பின மக்கள் இருப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இவை சுதேச மக்களுக்கு எதிரானவை. நீதியற்றவை. இவற்றிற்கு எதிராக நாம் போராட வேண்டும்” என அறை கூவி கறுப்பின மக்களை விழிப்படையச் செய்வதில் வெற்றிக் கண்டார்.[3] 1943 ஆம் ஆண்டு ஆப்ரிக்க தேசிய காங்கிரஸில் சேர்ந்தார்.[4] 1948 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஆட்சிப் பொறுப்பேற்ற அரசு, கறுப்பின மக்களுக்கெதிராக முறையற்ற நடவடிக்கைகளை எடுத்தது. மண்டேலாவும் அவரின் பல்கலைக்கழகத் தோழனாகிய ஒலிவர் ரம்போவும் இணைந்து இன ஒதுக்கலுக்குள்ளாகிய கறுப்பின மக்களுக்காக சட்ட ஆலோசனைகளை வழங்கினர். இனவாதமும் ஒடுக்குமுறையும் அரசின் ஆதரவுடன் அரங்கேறுவதை அறிந்து கொண்ட மண்டேலா சீற்றம் கொண்டவராக அரசியலுக்குள் குதித்தார். கறுப்பர்களின் நலனை பாதுகாப்பதற்காக உருவான "ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்" என்ற கட்சியின் முதன்மை பொருப்புக்கு வந்தார். அதன் தலைவரான நெல்சன் மண்டேலா, இனவெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் போராடினார். இவரின் தலைமையில் அரசின் இனவாதக் கொள்கைகளுக்கு எதிராக அறப் போராட்டங்கள் முளையெடுக்க ஆரம்பித்தன. இவரது வன்முறையற்ற போராட்டம் வளர்ச்சியடைவதைக் கண்ட வெள்ளையர் அரசு 1956 இல், அரசுக்கு எதிராக புரட்சி செய்தார் என கைது செய்தது. ஆனால் நான்காண்டு விசாரணைக்குப் பிறகு குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.[4] சிறையில் இருந்து வெளிவந்த மண்டேலா தீவிரமாகச் செயற்பட்டார். இதன் காரணமாக 1960 களில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வேகமாக வளர்ச்சியடைந்தது. 1960 இல் ஆபிரிக்கர்களுக்கு விசேட கடவுச்சீட்டு வழங்குவதற்கு எதிராக ஊர்வலம் ஒன்றை சார்ப்பிவில் நகரில் நடத்தினார். பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் 69 பேர் கொல்லப்பட்டனர். 1956 ஆம் ஆண்டு திசம்பர் 5ல் தேசத்துரோகக் குற்றம் சாட்டுகளுக்காக மண்டேலாவும் அவரின் 150 வரையான தோழர்களும் கைது செய்யப்பட்டனர். நெடிய சட்ட போராட்டத்திற்கு பிறகு 1961இல் அனைவரும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர். ஆயுதப் போராட்டங்கள் இதனையடுத்து அறப்போர் மூலம் போராடி உரிமைகளைப் பெற முடியாது என உணர்ந்த மண்டேலா ஆயுத வழிமுறையை நாடினார். இதனையடுத்து அவரைக் கைது செய்ய வெள்ளையாட்சியினர் முடிவு செய்தனர். 1961 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப்படைத் தலைவனாக மண்டேலா உருவெடுத்தார். இதை உருவாக்கியதிலும் இவருக்கு பங்குண்டு. வெளிநாட்டு நட்பு சக்திகளிடமிருந்து பணம் மற்றும் இராணுவ உதவிகளைப் பெற்று, அரசு மற்றும் இராணுவ கேந்திர நிலையங்கள் மீது கெரில்லா பாணியிலான தாக்குதல்களை ஒருங்கிணைத்து நடத்தினார். 1961, திசம்பர் 16 ஆம் நாள் இனவெறிக்கு எதிரான முதலாவது தாக்குதல் மண்டேலா தலைமையில் நடத்தப்பட்டது. அரசாங்கம் கடுமையாக கெடுபிடி செய்ததால் 1961 ம் ஆண்டில் மண்டேலா தலைமறைவானார். அவரை பிடிக்க வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், பின்னாளில் இவர் தலைமை வகித்த அமைப்பினரின் நடவடிக்கைகளால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். இனவெறிக்கு எதிரான இவரது போர் நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனைக் காரணம் காட்டி அமெரிக்காவும் இவர் மீது பயங்கரவாத முத்திரைக் குத்தியது. மண்டேலா அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான தடை சூலை, 2008 வரை நடைமுறையில் இருந்தது. 1962, ஆகத்து 05 ஆம் நாள் இவர் தங்கியிருந்த பகுதிக்குள் மாறு வேடமணிந்து புகுந்த காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைதாகினார். திட்டமிட்டபடி மண்டேலா உட்பட 10 முக்கிய ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ் (African National Congress) தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைந்தது வெள்ளை அரசு. அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தமை, அமைதியைக் குலைத்தமை, கலகத்தை உருவாக்கியமை என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வழக்கு 1963 இல் ரிவோனியா செயற்பாடு (process Rivonia) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மண்டேலாவுக்கு 1964 ஆம் ஆண்டு சூன் 12ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது. அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாகத் தொடர்ந்தது. சிறை மண்டேலா 1962இல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது. பல ஆண்டுகள் அவரைத் தனிமைச்சிறையில் அடைத்து கொடுமை செய்தது தென்னாப்பிரிக்க அரசாங்கம். மனைவியைச் சந்திப்பதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்றார். அதனால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார். மண்டேலாவின் விடுதலைக்கான போராட்டங்கள் மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. ஆனால் தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார். மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி மண்டேலாவின் மனைவி தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன. "மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்" என்று தென்னாப்பிரிக்கா அரசு ஆசை காட்டியது. ஆனால் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். தென்னாப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபராக டெக்ளார்க் பதவிக்கு வந்தார். அவர் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார். இதனால் மண்டேலாவின் விடுதலை நாளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது. பேச்சு வார்த்தைகள் மண்டேலா தனது கோரிக்கைகள் தொடர்பாக டெக்ளார்க் அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, அவர்களிடம் இருந்து தனது பல கோரிக்கைகளைப் பெற்றுக் கொண்டார். தென்னாப்பிரிக்கா ஒரு மக்களாட்சி நாடாகப் பின்னர் மலர்வதற்கு இந்தப் பேச்சுவார்த்தைகள் முக்கிய பங்கு வகித்தன. விடுதலை அப்போதைய தென்னாப்பிரிக்கா அரசுத் தலைவரான பிரடெரிக் வில்லியம் டி கிளர்க் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கி, மண்டேலா பெப்ரவரி 11, 1990 அன்று விடுதலைச் செய்யப்படுவார் என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.[5]. 1990ல் மண்டேலா சிறையிலிருந்து விடுதலை பெற்றார்..விடுதலை பெற்றபோது அவருக்கு வயது 71. இந்நிகழ்வு உலகம் முழுவதும் நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது[6]. தென்னாப்பிரிக்கா அரசு அறிவித்தபடியே பெப்ரவரி 11, 1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலைச் செய்யப்பட்டார். மண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. இந்தியா சார்பாக பிரதமர் வி. பி. சிங் தலைமையில் வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. மண்டேலாவுடன் அவர் மனைவி வின்னி கை கோர்த்தபடி சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைச்சாலையின் வாசலில் ஆப்பிரிக்கா நாட்டுத் தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவரை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர். பின்னர் மண்டேலாவை காவலர் பாதுகாப்பாக கேப்டவுன் நகருக்கு அழைத்துச் சென்றனர். சிறைச்சாலையின் வாசலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொலைக்காட்சி மற்றும் புகைப்பட நிபுணர்கள் அவரை படம் எடுத்தனர். மண்டேலா விடுதலையான நிகழ்ச்சி தென்னாப்பிரிக்கா முழுவதும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. மண்டேலா விடுதலை செய்யப்பட்டதை உலக தலைவர்கள் பலர் வரவேற்றார்கள். கேப்டவுன் நகருக்கு திரும்பிய மண்டேலா அங்கு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது:- இனவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வதேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது. நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம். மக்களாட்சி, தேர்தல், தென்னாப்பிரிக்காவின் அதிபராதல் 1994, மே 10 ஆம் தியதி அவர் தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார். அதிபர் ஆனப்பின், 1998 ம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்கப் பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடுச் செய்தார்.[7] நோபல் பரிசுபெற்ற நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு பதவி வகித்ததன் பின் 1999 இல் பதவியை விட்டு விலகினார். இவர் 2வது முறை அதிபர் பதவிக்கு போட்டியிட மறுத்துவிட்டார். உண்மைக்கும் நல்லிணக்கப்பாட்டுக்குமான செயற்பாடுகள் நீண்ட போராட்டத்தின் பின், அடக்குமுறையாளர்களுக்கும், அடக்கப்பட்டவர்களுக்கும் இடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் பல்வேறு செயற்பாடுகளில் மண்டேலா ஈடுபட்டார். அவற்றில் முக்கியமானது உண்மையும் நல்லிணக்கப்பாட்டுக்குமான ஆணைக் குழுவை (Truth and Reconciliation Commission) அமைத்து பழிவாங்கலைத் தவிர்த்து உண்மையையும் நியாயத்தையும் பெறுவதற்கான ஒரு முறைமையை அதனூடாக ஏற்படுத்தியது ஆகும். உலக வரலாற்றுக்கே, ஆண்டைகள், அடிமைகள் உண்மைகளை அறிந்து மன்னித்து இணக்கமாக வாழ்வதற்கான ஒரு சிறந்த முன்மாதிரியாக இந்த முறைமை கருதப்படுகிறது. உடல்நலம் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 2013 சூன் மாதம் 8 ஆம் தியதி மண்டேலா பிரிட்டோரியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளது என தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமாவின் அலுவலகம் 2013 சூன் 23 ஆம் தியதி அறிவித்தது.[8] மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்ததால், 2013 சூன் 27 ஆம் தியதி ஜனாதிபதி யாக்கோபு சூமா தனது மொசாம்பிக் பயணத்தை இரத்து செய்தார். நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய உறவினர்கள் அனைவரும் பூர்வீக வீட்டிற்கு அவசரமாக வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மண்டேலா நலமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை நடத்தி வந்தனர்.[9] மறைவு 5 டிசம்பர் 2013 அன்று தனது 95வது அகவையில் காலமானார். விருதுகள் நேரு சமாதான விருது உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு "நேரு சமாதான விருது" வழங்கியது. கணவர் சார்பில் வின்னி டெல்லிக்கு வந்து அந்த விருதைப் பெற்றார். பாரத ரத்னா விருது 1990-ல் இந்தியாவின் 'பாரத ரத்னா' விருதும் வழங்கப்பட்டது. நெல்சன் மண்டேலா ஒருவருக்கு மட்டுமே இந்தியர் அல்லாத ஒருவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.[10] நோபல் பரிசு‍ 1993 இல் உலக அமைதிக்கான நோபல் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.[11] சர்வதேச நெல்சன் மண்டேலா தினம் தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான சூலை 18ம் தியதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா அறிவித்துள்ளது.[12] இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கத்தில் திருவுருவச்சிலை ரசிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பிரபலங்கள் முன்னிலையில், சர் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் ஆபிரகாம் லிங்கன் அருகில் உரிய நெல்சன் மண்டேலாவின் ஒரு வெண்கல சிற்பம் 30 ஆகத்து 2007 இல் இங்கிலாந்து பாராளுமன்ற சதுக்கத்தில் வைக்கப்பட்டது. அது குறித்த ஒரு உரையில், நெல்சன் மண்டேலா பாராளுமன்ற சதுக்கத்தில் கருப்பு மனிதன் ஒருவனின் சிலை இருக்கும் என்று 1962 இல் கண்ட கனவு நிறைவேறியது என்று கூறினார்.[13] நிறவெறி கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்துக்கு தனது வாழ்நாளையே அர்ப்பணித்த நெல்சன் மண்டேலாவை உலக நாடுகள் பலவும் உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்தது. அந்த வகையில் சுமார் 250க்கும் மேற்பட்ட விருதுகளை மண்டேலா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[14] காட்சியகம் ~1937 சிறை வளாகம் இருந்த சிறை கைதி எண் 1992 1993 சிறையிலிருந்து வந்த பிறகு, தேசத்தின் அதிபர் ஆனா பிறகு உரையாற்றிய இடம் இவற்றையும் பார்க்கவும் நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:ஆபிரிக்க தலைவர்கள் பகுப்பு:தென்னாப்பிரிக்க அரசியல்வாதிகள் பகுப்பு:அறப் போராளிகள் பகுப்பு:பாரத ரத்னா விருது பெற்றவர்கள் பகுப்பு:1918 பிறப்புகள் பகுப்பு:காந்தியவாதிகள் பகுப்பு:2013 இறப்புகள் பகுப்பு:லெனின் அமைதிப் பரிசு பெற்றவர்கள்
நெல்சன் மண்டேலா எத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்தார்?
27
494
tamil
4ab83393f
உலகக்கோப்பை காற்பந்து எனப்படுவது வெவ்வேறு நாடுகளில், பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் ஆண்களின் தேசிய காற்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான உலகளவிலான போட்டியாகும். இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம் வழங்கப்படும். இந்தப் போட்டியானது 1930 ஆம் ஆண்டு முதல், இன்றுவரை நான்கு ஆண்டுகளுக்கு ஒருதடவை நடைபெற்று வருகின்றது. ஆனாலும் இரண்டாம் உலகப் போரின் காரணமாக 1942, 1946 ஆகிய இரு ஆண்டுகளிலும் இந்தப் போட்டி நடைபெறவில்லை. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் செருமனி வெற்றியீட்டியது. ஒவ்வொரு நான்காவது ஆண்டிலும் போட்டியை நடத்தும் நாட்டுடன் சேர்த்து 32 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட அந்நாடுகளுக்கிடையே போட்டிகள் நடத்தப்பட்டு இறுதியாக ஒரு அணி வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும் வகையில் உலகக்கோப்பை காற்பந்து போட்டியானது வடிவமைக்கப்படுகிறது. இப்போட்டிகள் உலககோப்பை இறுதியாட்டம் என்றழைக்கப்படுகிறது. போட்டி நடைபெறும் ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகளிலும் போட்டியை நடத்தும் நாடு உட்பட பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளின் அணிகள் தகுதிச்சுற்று ஆட்டங்களில் போட்டியிட்டு இறுதிப்போட்டிக்கான அணிகள் தீர்மானிக்கப்படுகின்றன. இதுவரை நடைபெற்றுள்ள 19 உலக கோப்பை போட்டிகளில் எட்டு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன. பிரேசில் அணி ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளதோடு நடைபெற்றுள்ள அனைத்துப் போட்டிகளிலும் விளையாடிய ஒரே அணியாகத் திகழ்கிறது. செருமனி , இத்தாலி ஆகியவை நான்கு முறையும், அர்ஜென்டீனா, உருகுவே ஆகியவை இரண்டு முறையும், இங்கிலாந்து, பிரான்சு, எசுப்பானியா ஆகியவை ஒருமுறையும் வெற்றிபெற்றுள்ள மற்ற நாடுகளாகும். உலகக்கோப்பை காற்பந்து போட்டி அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட விளையாட்டு நிகழ்வாக உள்ளது. செர்மனியில் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற காற்பந்து இறுதியாட்டத்தை 715.1 மில்லியன் பார்வையாளர்கள் கண்டுகளித்ததாக பதிவாகியுள்ளது. . உருசியா, கத்தார் ஆகிய நாடுகளில் முறையே 2018, 2022 ஆம் ஆண்டுகளில் அடுத்து வரும் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன. வரலாறு தொடக்ககால சர்வதேசப் போட்டிகள்:- உலகின் முதல் சர்வதேச கால்பந்து போட்டி, ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையில் 1872 ஆம் ஆண்டில் கிளாஸ்கோவில் நடைபெற்றது. இச்சவால் போட்டியானது வெற்றி தோல்வி ஏதுமில்லா சமனில் முடிந்தது. இங்கிலாந்து நாட்டின் உள்ளூர் சாம்பியன் கோப்பை சர்வதேச போட்டி 1884 ஆம் ஆண்டில் நடைபெற்றது. இருபதாம் நூற்றாண்டில் கால்பந்து போட்டிகள் உலகின் மற்ற பகுதிகளில் பிரபலமாக வளர்ச்சியடைந்தன. 1900 மற்றும் 1904 கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் 1906 ஆம் ஆண்டு இடைச்செருகலாக நடைபெற்ற போட்டிகளில், காற்பந்தாட்டப் போட்டி பதக்கங்கள் வழங்கப்படாமல் காட்சிப் போட்டியாக மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. 1904 ஆம் ஆண்டில் பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பு நிறுவப்பட்ட பின்னர், 1906 ஆம் ஆண்டு ஒலிம்பிக் கட்டமைப்புக்கு வெளியே உள்ள நாடுகளிடையே ஒரு சர்வதேச கால்பந்து போட்டியை சுவிச்சர்லாந்தில் இக்கூட்டமைப்பு ஏற்பாடு செய்ய முயற்சித்தது. சர்வதேச கால்பந்து போட்டிகள் அப்போது மிகவும் ஆரம்ப நாட்களில் இருந்த காற்பந்துப் போட்டிகள் கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ வரலாறு போட்டிகளின் நோக்கம் தோல்வி என்றே விவரிக்கிறது. ம இங்கிலாந்து கால்பந்து சங்கத்தின் திட்டமிடலால் லண்டன் 1908 கோடை ஒலிம்பிக் போட்டிகளில், கால்பந்து ஒரு அதிகாரப்பூர்வ போட்டியாக இடம்பெற்றது. பயிற்சி வீரர்கள் மட்டுமே விளையாடிய இப்போட்டி ஒரு போட்டியாக இல்லாமல் ஐயத்திற்கிடமின்றி கண்காட்சியாக இருந்தது. தங்க பதக்கங்களை வென்ற கிரேட் பிரிட்டனின் இங்கிலாந்து தேசிய தன்னார்வ கால்பந்து அணி ஸ்டாக்ஹோமில் 1912 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியிலும் வென்று சாதனையை நிகழ்த்தியது. ஒலிம்பிக் நிகழ்வுகளில் தன்னார்வ அணிகள் மட்டுமே போட்டியிடுவது தொடர்ந்து கொண்டு இருந்த அந்நாளில், சர்தாமஸ் லிப்டன் என்பவர் சர்தாமஸ் லிப்டன் பரிசுக்கோப்பை போட்டியை 1909 ஆம் ஆண்டு ஏற்பாடு செய்தார். லிப்டன் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தனியார் குழுக்கள் அவை சார்ந்த நாட்டின் சார்பில் போட்டியிட்டன. இப்போட்டிகள் முதலாவது உலகக்கோப்பை போட்டிக்கு இணையாகக் கருதப்படுகிறது. இத்தாலி, ஜெர்மனி மற்றும் சுவிச்சர்லாந்து போன்ற நாடுகளின் மிக மதிப்புமிக்க தொழில்முறை விளையாட்டுக் குழுக்களும் பங்கேற்ற இப்போட்டியில் இங்கிலாந்து கால்பந்து சங்கம் அந்நாட்டின் தொழில்முறை அணியை அனுப்ப மறுத்து போட்டியை நிராகரித்தது. லிப்டன் இங்கிலாந்துக்குப் பதிலாக துர்காம் கோட்டத்தைச் சார்ந்த மேற்கு ஆக்லாந்து தொழில்முறை விளையாட்டுக் குழுவை இங்கிலாந்தின் பிரதிநிதியாக விளையாட அழைப்பு விடுத்தார். மேற்கு ஆக்லாந்து அப்போட்டியில் வெற்றிபெற்று மீண்டும் வெற்றிகரமாக 1911 ஆம் ஆண்டில் அவ்வெற்றியை தக்கவைத்துக் கொண்டது. ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெற்ற தன்னார்வர்கள் கலந்துகொண்டு விளையாடிய காற்பந்து போட்டிகளை பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பு 1914 ஆம் ஆண்டில் ஒரு " உலக கால்பந்து போட்டி “ என அங்கீகரிக்க ஒப்புக்கொண்டது. இவ்வொப்புதல் 1920 கோடைகால ஒலிம்பிக் போட்டியில் உலகின் முதல் கண்டங்களுக்கு இடையேயான கால்பந்து போட்டி நடைபெறவும் வழிவகுத்தது. எகிப்து மற்றும் பதிமூன்று ஐரோப்பிய அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் பெல்ஜியம் வெற்றி பெற்றது. 1924 மற்றும் 1928 – களில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் உருகுவே பட்டம் வென்றது. இவர்களே முதல் இரண்டு உலகக்கோப்பை போட்டிகளையும் வென்றனர். 1924 ஆம் ஆண்டு தொழில்முறை பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பு சகாப்தத்தின் தொடக்கமாகும். இரண்டாம் உலக போருக்கு முந்தைய உலக கோப்பைகள் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜூல்ஸ் ரிமெட், ஒலிம்பிக் கால்பந்து போட்டிகளின் வெற்றியை உந்து சக்தியாக கொண்டு மீண்டும் ஒலிம்பிக் அமைப்பிற்கு வெளியே அவ்வமைப்பின் சொந்த சர்வதேச காற்பந்து போட்டிகளை நடத்த ஆரம்பித்தார். 1928 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதியன்று பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ஆம்ஸ்டர்டமில் கூடியது. இரண்டு முறை அதிகாரப்பூர்வ கால்பந்து உலக சாம்பியனான உருகுவை நாட்டின் 1930 ஆம் ஆண்டை சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவாக கொண்டாடும் விதமாக அந்நாடு உலகக் கோப்பை போட்டியை நடத்தும் நாடு என்ற அறிவிப்பை வெளியிட்டது. போட்டிக்காக ஒரு குழுவை அனுப்புமாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் தேசிய கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் போட்டி நடத்தப்படும் நாடாக உருகுவே தேர்வு செய்யப்பட்டிருந்தது. உருகுவே நாட்டுத் தேர்வு ஐரோப்பிய நாடுகளுக்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்கு குறுக்கே ஒரு நீண்ட மற்றும் விலை உயர்ந்த பயணத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. அதனால் எந்த ஐரோப்பிய நாடும் போட்டி நடைபெறுவதற்கு இரண்டு மாதங்கள் முன்புவரை தங்கள் நாட்டு அணியை போட்டிக்கு அனுப்புவதாக உறுதி மொழியைத் தரவில்லை. இறுதியில் ரைமெட் பெல்ஜியம், பிரான்ஸ், ருமேனியா, மற்றும் யூகோஸ்லாவியா நாட்டு அணிகளை அழைத்து உருகுவே வந்து விளையாடுமாறு வ்ற்புறுத்தினார். இறுதியில் தென் அமெரிக்காவில் இருந்து ஏழு, ஐரோப்பாவில் இருந்து நான்கு மற்றும் வட அமெரிக்காவில் இருந்து இரண்டு என மொத்தம் பதிமூன்று நாடுகள் போட்டியில் பங்கேற்றன. ஜூலை மாதம் 13 ஆம் தேதி 1930 ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் முதல் இரண்டு உலக கோப்பை போட்டிகளில் நடந்தன. பிரான்சு அணி மெக்சிக்கோ அணியை 4-1 மற்றும் அமெரிக்கா அணி பெல்ஜியம் அணியை 3-0 என்ற கோல்கணக்கில் தோற்கடித்து வெற்றி பெற்றன. உலக கோப்பை காற்பந்து வரலாற்றில் முதல் கோல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூசியன் லாரண்ட் என்பவரால் அடிக்கப்பட்டது. மொண்டேவீடியோ நகரில் 93.000 மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் நடந்த இறுதி போட்டியில், உருகுவே அணி அர்ஜென்டீனா அணியை 4-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து உலககோப்பையை வென்ற முதல் தேசம் என்ற பெருமையைப் பெற்றது. அமெரிக்க மக்களிடையே விளையாட்டு ஆர்வம் குறைந்த அளவிலேயே இருந்த காரணத்தால் உலக கோப்பை காற்பந்து போட்டிகள் உருவாக்கப்பட்ட பின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 1932 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளின் போட்டிகள் அட்டவணையில் கால்பந்து விளையாட்டு சேர்க்கப்படவில்லை. சர்வதேச ஒலிம்பிக் சங்கம் மற்றும் காற்பந்து சங்கங்களின் கூட்டமைப்பும் தொழில்முறை அல்லாத காற்பந்து வீரர்களை மறுத்து வந்ததால் அந்த ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் காற்பந்து போட்டிகள் கைவிடப்பட்டன. 1936 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் மீண்டும் காற்பந்து சேர்த்துக்கொள்ளப்பட்டது. மதிப்புமிக்க உலக கோப்பை காற்பந்து போட்டிகளின் காரணமாக ஒலிம்பிக் காற்பந்து போட்டிகளுக்கு பொதுவில் அவ்வளவாக முக்கியத்துவம் தரப்படுவதில்லை. ஆரம்ப காலத்தில் கண்டம் விட்டு கண்டம் பயணம் மேற்கொள்ளுதல் மற்றும் போர் முதலிய பிரச்சினைகள் உலக கோப்பை போட்டிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களாக இருந்தன. சில தென் அமெரிக்க அணிகள் மட்டுமே 1934 மற்றும் 1938 போட்டிகளுக்காக ஐரோப்பியப் பயணம் செய்ய தயாராக இருந்தனர். தென் அமெரிக்க அணியான பிரேசில் மட்டுமே இரண்டு போட்டிகளிலும் கலந்துகொண்டது. செருமணி மற்றும் பிரேசில் நாடுகள் நடத்துவதாயிருந்த 1942, 1946 போட்டிகள் இரண்டாம் உலகப் போர் காரணமாக இரத்து செய்யப்பட்டன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலக கோப்பை போட்டிகள் இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டிருந்த நாடுகளுக்கு எதிராக விளையாடுவதற்கு விருப்பமின்மையும், கால்பந்தாட்டத்தில் வெளிநாடுகளின் செல்வாக்கிற்கு எதிர்ப்பைக் காட்டவும் இங்கிலாந்து 1920 ஆம் ஆண்டில் பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பிலிருந்து தமது அணிகளை விலக்கிக் கொண்டிருந்தது. ஆனால் கூட்டமைப்பின் அழைப்பை ஏற்று மீண்டும் 1946 ல் கூட்டமைப்புடன் இணைந்தது. பிரேசிலில் நடைபெற்ற 1950 உலக கோப்பை போட்டியில்தான் , இங்கிலாந்து நாட்டவர் முதன்முதலாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். முந்தைய இரண்டு உலகக் கோப்பை போட்டிகளை புறக்கணித்திருந்த உருகுவே அணியையும் போட்டியில் காணமுடிந்தது. 1930 உலக கோப்பையை வெற்றி கொண்ட சாம்பியன் உருகுவே 1950ல் போட்டியை நடத்திய பிரேசிலை இறுதியாட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து மீண்டும் பட்டம் வென்றது. பிரேசிலின் இத்தோல்வி மரக்காணசோ வீழ்ச்சி என்று வர்ணிக்கப்படுகிறது. 600px|center|Map of countries' best results 1934 முதல் 1978 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற போட்டிகளில், ஒவ்வொருமுறையும் 16 அணிகள் கலந்துகொண்டு விளையாடின. ஆனால் 1938 ஆம் ஆண்டில் போட்டியில் விளையாட தகுதி பெற்றிருந்தும் செர்மனியுடன் இணைத்துக் கொள்ளப்பட்டதால் ஆஸ்திரியா போட்டியில் பங்கேற்கவில்லை. 1950 ல் நடைபெற்ற போட்டியில் இந்தியா, ஸ்காட்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் விலகிக் கொண்டதால் 13 நாடுகள் மட்டுமே பங்கேற்றன. இப்போட்டியில் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த அணிகள் பெரும்பான்மையாகவும் வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஓசியானியா நாடுகள் சிறுபான்மையாகவும் பங்கேற்றன. இச்சிறுபான்மை அணிகள் வழக்கமாக ஐரோப்பிய மற்றும் தென் அமெரிக்க அணிகளால் எளிதாக தோற்கடிக்கப்பட்டன. அமெரிக்கா 1930 போட்டியில் அரையிறுதி, 1938 போட்டியில் கியூபா கால் இறுதி, கொரியா 1966 போட்டியில் காலிறுதி, மெக்சிகோ 1970 போட்டியில் காலிறுதி என்று முன்னேறியதே சிறுபான்மை நாடுகளின் முதல்சுற்று ஆட்டங்களைத் தாண்டிய சாதனையாக இருந்தது. 32 அணிகளாக விரிவாக்கம் உலககோபை போட்டிகளில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கை 1982 ஆம் ஆண்டில் 24 அணிகளாக விரிவுபடுத்தப்பட்டது. 1998ல் இந்த எண்ணிக்கை 32 அணிகளாக உயர்த்தப்பட்டது. இதனால் ஆப்பிரிக்கா, ஆசியா, வட அமெரிக்கா போன்ற நாடுகளின் அதிகமான பங்கேற்புக்கு வாய்ப்பு கிட்டியது. இந்நாடுகளில் இருந்து பங்கேற்ற அணிகள் கனிசமான வெற்றிகளை ஈட்டத் தொடங்கின. மெக்சிகோ, கேமரூன், செனகல் மற்றும் அமெரிக்கா, கானா அணிகள் முறையே 1986,1990,2002,2010 ஆம் ஆண்டுகளில் காலிறுதி சுற்றுவரை முன்னேறின. இருப்பினும், ஐரோப்பிய மற்றும் தென் அமெரிக்க அணிகளின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது.. உதாரணமாக 1994,1998 மற்றும் 2006 போட்டிகளில் காலிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள் யாவும் ஐரோப்பா அல்லது தென் அமெரிக்கா நாடுகளாகவே இருந்தன. 2002 உலககோப்பை காற்பந்து தகுதிச்சுற்று போட்டிகளில் 200 அணிகளும், 2006 உலககோப்பை காற்பந்து தகுதிச்சுற்று போட்டிகளில் 198 அணிகளும், 2010 உலககோப்பை காற்பந்து தகுதிச்சுற்று போட்டிகளில் 204 அணிகளும் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். கூட்டமைப்பின் பிற போட்டிகள் ஆண்கள் காற்பந்து போட்டிகளுக்கு சமமான முதலாவது மகளிர் உலக கோப்பை காற்பந்து போட்டிகள் சீன மக்கள் குடியரசில் 1991 ஆம் ஆண்டில் நடைபெற்றது. பெண்கள் போட்டியில் குறைந்த அளவு அணிகளே பங்கேற்றன என்றாலும் 2007 ஆம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை 120 அணிகளாக வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வளர்ச்சி 1991 பங்கேற்ற அணிகளை விட இரண்டு மடங்கு அதிகமாகும். கால்பந்து போட்டிகள் 1896 மற்றும் 1932 ஆம் ஆண்டுகளைத் தவிர ஒவ்வொரு கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் இடம் பெற்றாலும் கால்பந்து போட்டிகள் மற்ற விளையாட்டுகளைப் போல் உயர் மட்ட போட்டியாகக் கருதப்படவில்லை. 1992 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு அணியிலும் 23 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான போட்டிகளில் பங்கேற்க மூன்று வீரர்களுக்கு வயது மீறல் சலுகை அளிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டது. பெண்கள் கால்பந்து போட்டி 1996 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போட்டிகள் வயது கட்டுப்பாடு ஏதுமின்றி முழுமையான தேசிய அணிகளுக்கு இடையிலான போட்டியாக நடைபெற்றது. கோப்பை 1930-லிருந்து 1970-வரை காற்பந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டியை வெல்லும் அணிக்கு ஜூல்ஸ் ரிமெட் கோப்பை வழங்கப்பட்டது. ஆரம்ப காலங்களில், இக்கோப்பை எளிமையாக உலகக்கோப்பை என்றே வழங்கப்பட்டது. 1946-ஆம் ஆண்டில், முதன்முதலில் இத்தகைய போட்டியை நடத்தத் திட்டமிட்டு ஆரம்பித்துவைத்த ஃபிஃபா தலைவரான ஜூல்ஸ் ரிமெட் என்பவரின் பெயரில் கோப்பையை வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது. 1970-இல் பிரேசில் அணி மூன்றாம் முறையாக உலகக்கோப்பையை வென்றபிறகு, ஜூல்ஸ் ரிமெட் கோப்பை அவ்வணியிடமே நிரந்தரமாகக் கொடுக்கப்பட்டது. ஆயினும், 1983-ஆம் ஆண்டில் அக்கோப்பை திருடப்பட்டது; அதன்பிறகு, அக்கோப்பை கண்டுபிடிக்கப்படவில்லை.[1] 1970-க்குப் பிறகு, காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம் என்றழைக்கப்பட்ட கோப்பை வடிவமைக்கப்பட்டது. ஏழு நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபிஃபா நிபுணர்கள் உலகக்கோப்பைக்கான 53 மாதிரிகளை சோதனை செய்து, இறுதியில் இத்தாலிய வடிவமைப்பாளரான சில்வியோ கஸ்சானிகாவின் மாதிரியைத் தேர்ந்தெடுத்தனர். 36.5 செ.மீ. உயரம் கொண்ட இக்கோப்பை 5 கி.கி. எடைகொண்ட 18 காரட் (75%) தங்கத்தால் செய்யப்பட்டது; இரண்டடுக்காலான மாலக்சைட் அடிப்பாகத்தையும் சேர்த்து மொத்தம் 6.175 கி.கி. எடை கொண்டது. இக்கோப்பையின் அடித்தட்டில், உலகக்கோப்பைப் போட்டியை வென்ற அணியின் பெயரும் வென்ற ஆண்டும் பொறிக்கப்பட்டிருக்கும்.[2] இந்தப் புதிய கோப்பையானது, வெற்றியாளருக்கு நிரந்தரமாக வழங்கப்படுவதில்லை. அடுத்த உலகக்கோப்பைப் போட்டி நிகழும்வரை, நான்காண்டுகளுக்கு கடைசியாக வெற்றிகண்ட அணியின் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கும். பின்னர், தங்கமுலாம் பூசப்பட்ட கோப்பைப் பிரதி ஒன்று வழங்கப்படும்.[3] தற்போது, முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணியின் அனைத்து உறுப்பினர்களும் (விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், மேலாளர்கள்) உலகக்கோப்பை சின்னம் பொறிக்கப்பட்ட பதக்கங்களைப் பெறுவர்: தங்கம் (வாகையர்), வெள்ளி (இரண்டாம் இடம்) மற்றும் வெண்கலம் (மூன்றாம் இடம்). 2002 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் நான்காம் இடம் பெற்ற தென் கொரிய அணிக்கும் பதக்கங்கள் பரிசளிக்கப்பட்டன. 1978-ஆம் ஆண்டுவரை, இறுதிப் போட்டி மற்றும் மூன்றாம் இடத்துக்கான போட்டியின் முடிவில் மைதானத்தில் இருக்கும் ஒவ்வொரு அணியின் 11 வீரர்களுக்கு மட்டுமே பதக்கங்கள் வழங்கப்பட்டன. நவம்பர் 2007-இல் ஃபிஃபாவினால் எடுக்கப்பட்ட முடிவின்படி, 1930-இலிருந்து 1974-வரையிலான முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகளின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பதக்கங்கள் அளிக்கப்படுவதென தீர்மானம் செய்யப்பட்டது.[4][5][6] முடிவுகள் கூ.நே.பி: கூடுதல் நேரத்திற்கு பின்னர் ச: சமன்நீக்கி மோதலிற்குப் பின்னர் குறிப்புகள் குறிப்புதவிகள் *
முதல் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வென்ற அணி எது
உருகுவே
1,455
tamil
b8ac8836e
பாரிஸ் அல்லது பாரி எனப்படுவது பிரான்ஸ் நாட்டின் தலை நகரமாகும். உலகத்தில் உள்ள‌ நகரங்களிலேயே மிக அழகிய நகரம் என்று பெயரெடுத்த பாரிஸ், நாட்டிலுள்ள மிகப் பெரிய நகரமும் இதுவே. இந் நகரம் சீன் நதியினால் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வலது கரை வடக்கிலும், சிறிய இடது கரை தெற்கிலும் உள்ளது. இந்த ஆறு, அதன் கரையிலுள்ள மர வரிசைகளோடு கூடிய நடை பாதைகள் (quais), திறந்த வெளிப் புத்தக விற்பனை நிலையங்கள், ஆற்றின் வலது, இடது கரைகளை இணைக்கும் வரலாற்று முக்கியத்துவம் உள்ள பாலங்கள் என்பவற்றுக்குப் பெயர் பெற்றது. சம்ஸ் எலிசீஸ் (Champs-Élysées) போன்ற மரவரிசைகளோடு கூடிய "புலேவாட்"டுகள் மற்றும் பல கட்டிடக்கலைச் சிறப்பு வாய்ந்த கட்டிடங்களுக்கும்கூடப் பாரிஸ் புகழ் பெற்றது. இந்நகர் அண்ணளவாக 20 லட்சம் சனத்தொகையைக் கொண்டது (1999 கணக்கெடுப்பு: 2,147,857). பிரெஞ்சு மொழியில் aire urbaine de Paris என வழங்கப்படும் பாரிஸின் பெருநகரப் பகுதியில் சுமார் 1.1 கோடி மக்கள் (1999 கணக்கெடுப்பு: 11,174,743) வசிக்கிறார்கள். வரலாறு (முழுமையான விவரங்களுக்குப் பாரிஸின் வரலாறு கட்டுரையைப் பார்க்கவும்) பாரிஸ் என்ற பெயர், ரோமர் இப் பிரதேசத்தை ஆக்கிரமித்த காலத்தில் அங்கே வாழ்ந்துவந்த "கலிக்" இனக் குழுவின் பெயரான பரிசிஸ் என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது. வரலாற்று அடிப்படையில் பாரிஸின் மையக்கரு, பலைஸ் டி ஜஸ்டிஸ் (Palais de Justice) மற்றும் நோட்ரே-டேம் டி பாரிஸ் தேவாலயம் என்பவற்றினால் பெரிதும் இடங் கொள்ளப்பட்டுள்ள, இலே டி லா சிட்டே (Île de la Cité) எனப்படும் ஒரு சிறு தீவாகும். இது பெரும்பாலும் 17ஆம், 18 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட அழகிய வீடுகளைக்கொண்ட இன்னொரு தீவான இலே செயிண்ட்-லூயிஸ் என்பதுடன் இணைக்கப்பட்டுள்ளது. கி.மு 52ல் ரோமர் வரும் வரை பாரிஸில், கலிக் இனக்குழுவினர் வாழ்ந்து வந்தனர். இவர்களை ரோமர் பாரிஸீ என அழைத்தனர், எனினும் நகரத்தின் பெயரை "சதுப்பு இடம்" எனப் பொருள்படும் லூட்டேசியா எனவே குறிப்பிட்டனர். சுமார் 50 வருடங்களுக்குப் பின்னர், நகரம், தற்போது லத்தீன் பகுதி என வழங்கும், சீன் நதியின் இடது கரைக்கு விரிவடைந்தது, இது பின்னர் "பாரிஸ்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ரோமர் ஆட்சி 508ல் முடிவடைந்தது. பிரான்க் குளோவியஸ், பாரிஸை, பிரான்க்ஸின் மெரோவிங்கியன் வம்சத்தின் தலைநகரமாக ஆக்கினான். 88 களில் இடம்பெற்ற Viking ஆக்கிரமிப்புகள், இலே டி லா சிட்டேயில் கோட்டை ஒன்றைக் கட்டவேண்டிய நிலையைப் பாரிஸியர்களுக்கு ஏற்படுத்தின. மார்ச் 28, 845 ல், ரக்னார் லொட்புரொக் என்பவனின் தலைமையில் நடந்ததாகக் கருதப்படும் Viking தாக்குதல்களுக்கு பாரிஸ் அடி பணிந்தது, எனினும் பெருந்தொகையைக் கப்பமாகப் பெற்றுக்கொண்டு அவன் பாரிஸை விட்டு நீங்கினான். பிற்காலக் கரோலிங்கியன் அரசர்களின் வலிமைக் குறைவினால், பாரிஸின் கவுண்ட்கள் படிப்படியாக வலிமை பெற்று வந்தனர். இதன் விளைவாக பாரிஸின் கவுண்ட், ஓடோ நிலப் பிரபுக்களினால் பிரான்சின் அரசனாகத் தெரியப்பட்டான், எனினும் சார்ள்ஸ் IIIயும் அரியணைக்கு உரிமை கோரினான். இறுதியாக 987ல் இறுதிக் கரோலிங்கியனின் மறைவுக்குப் பின், பாரிஸின் கவுண்டான ஹியூ கப்பெட் அரசனாகத் தெரிந்தெடுக்கப்பட்டான். 11 ஆம் நூற்றாண்டில் நகரம் ஆற்றின் வலது கரைக்கும் விரிவடைந்தது. பிலிப் II அகஸ்தஸின் காலத்தையும் (1180–1223) உள்ளடக்கிய 12ஆம், 13ஆம் நூற்றாண்டுகளில் நகரம் மிகவும் வளர்ச்சியடைந்தது. முக்கிய பாதைகளுக்குத் தளமிடப்பட்டது, முதல் லூவர் ஒரு கோட்டையாகக் கட்டப்பட்டது, நோட்ரே டேம் தேவாலயம் அடங்கலாகப் பல தேவாலயங்கள் கட்டப்பட்டன அல்லது ஆரம்பிக்கப்பட்டன. வலது கரையிலிருந்த பல கல்விக்கூடங்கள் Sorbonne ஆக ஒழுங்கமைக்கப்பட்டன. அல்பர்ட்டஸ் மக்னஸ், சென். தோமஸ் அக்குவைனஸ் போன்றவர்கள் இவற்றைச் சேர்ந்த ஆரம்பகால அறிஞர்களாயிருந்தார்கள். 14 ஆம் நூற்றாண்டில் Black Death தாக்கம் காரணமாக ஏற்பட்ட தற்காலிக தடங்கல் தவிர மத்திய காலப் பகுதியில், பாரிஸ் ஒரு வர்த்தக மற்றும் அறிவு சார்ந்த மையமாக விளங்கியது. சூரிய அரசன் (Sun King) என அழைக்கப்பட்ட லூயிஸ் XIV அரசன் காலத்தில் (1643–1715) அரச மாளிகைகள் பாரிஸிலிருந்து, அண்மையிலுள்ள வெர்சாய்க்கு மாற்றப்பட்டது. புவியியல் பாரிஸ், சீன் ஆற்றின் வடக்கே திரும்பும் வளைவில் செயிண்ட் லூயி, டி லா சிட்டே என்னும் இரண்டு தீவுகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. டி லா சிட்டே பாரிசின் பழைய பகுதியாகும். ஒப்பீட்டளவில் நகரம் மட்டமானது. மிகக்குறைந்த உயரம் கடல் மட்டத்திலிருந்து 35 மீட்டர் (115 அடி). பாரிஸ் பல குன்றுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் உயரமானது 130 மீட்டர் (427 அடி) உயரமான மொண்ட்மார்ட்ரே ஆகும். நகரின் புறப்பகுதியில் அமைந்துள்ள பொயிஸ் டி பொலோங்னே, பொயிஸ் டி வின்சென்ஸ் என்னும் பூங்காக்களைத் தவிர்த்து, பாரிசின் பரப்பளவு 86.928 சதுர கிலோ மீட்டர்கள் (34 சதுர மைல்கள்) ஆகும். இறுதியாக 1860 ஆம் ஆண்டில் நகரத்துடன் அதன் புறத்தே அமைந்திருந்த பகுதிகளையும் இணைத்துக்கொண்டது, நகருக்கு இன்றைய வடிவத்தை அளித்தது. 1860ல் நகர எல்லை 78 சதுர கிலோ மீட்டரில் இருந்து, 1920ல் 86.9 சதுர கிலோ மீட்டர் ஆகுவரை சிறிதளவு அதிகரித்துள்ளது. 1929 ஆம் ஆண்டில் பொயிஸ் டி பொலோங்னே, பொயிஸ் டி வின்சென்ஸ் என்னும் காட்டுப் பூங்காக்கள் நகருடன் இணைக்கப்பட்டன. இதனால் பாரிசின் மொத்தப் பரப்பளவு 105.397 சதுர மீட்டர்கள் (41 சதுர மைல்கள்) ஆனது. காலநிலை பாரிஸ், பெருங்கடல் காலநிலையைக் கொண்டது. இது வட அத்திலாந்திக் நீரோட்டங்களினால் பாதிக்கப்படுகின்றது. இதனால் நகரத்தில் அதி கூடிய வெப்பநிலையையோ அதி குறைந்த வெப்பநிலையையோ காண்பது அரிது. கோடையில் சராசரி வெப்பநிலைகளாக உயர்ந்த அளவு 25 °ச (77 °ப)ம், குறைந்த அளவு 15 °ச (59 °ப) ஆகவும் இருக்கும். குளிர் காலத்தில் குளிர் அதிகமாக இருந்தாலும் வெப்பநிலை உறை நிலைக்குக் கீழ் செல்வதில்லை. சராசர் வெப்பநிலைகள் 3 °ச (37 °ப) – 8 °ச (46 °ப) ஆகக் காணப்படும். இளவேனில் மற்றும் இலையுதிர் காலங்களில் பகலில் மிதமான வெப்பநிலையும், இரவில் குளிரும் இருக்கும். ஆண்டின் எந்த நேரத்திலும் இங்கே மழை முகில்கள் காணப்படலாம். பாரிஸ் அதிக மழை கொண்ட நகரம் இல்லாவிட்டாலும், சடுதியான மழைக்கு இந் நகரம் பெயர்பெற்றது. மழை வீழ்ச்சி ஆண்டுக்கு 650 மிமீ (26 அங்) ஆக உள்ளது. ஆனால் ஓரளவு மிதமான மழை வீழ்ச்சி ஆண்டு முழுதும் பரவலாகப் பெய்யும். பெரும்பாலும் பாரிசில் பனி பெய்வதில்லை. சில மாரிகாலங்களில் இலேசாகப் பனி பெய்வது உண்டு. பாரிசில் பதிவு செய்யப்பட்ட மிக அதிகமான வெப்பநிலை 40.4 °ச (105 °ப). இது 1948 ஜூலை 28 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. மிகக் குறைந்த வெப்பநிலை −23.9 °ச (−11 °ப). இது 1879 டிசம்பர் 10 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டு உள்ளது. நகரின் மையப்பகுதியில் நகர்ப்புற வெப்பத் தாக்கம் காரணமாக இரவுகளிலும் காலையிலும் மிதமான வெப்பநிலை காணப்படுகின்றது. அத்துடன் நகரின் புறப்பகுதிகளைவிடக் குறைவான பனியும் பெய்கிறது. நகர்த் தோற்றம் கட்டிடக்கலை தற்காலப் பாரிஸ், பெரும்பாலும் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இடம் பெற்ற பெருமெடுப்பிலான நகர மீளமைப்புத் திட்டங்களின் விளைவாகும். பல நூற்றாண்டுகளாகப் பாரிஸ் ஒடுங்கிய தெருக்களையும், மரச் சட்ட வீடுகளையும் கொண்ட நகரமாக இருந்தது. ஆனால் 1852 தொடக்கம் ஓஸ்மான் பிரபுவின் நகராக்கத் திட்டங்களினால் பல பழைய கட்டிடங்கள் உடைக்கப்பட்டுச் சாலைகள் அகலமாக்கப்பட்டதுடன், இரண்டு பக்கங்களிலும் கல்லாலான புதிய செந்நெறிப் பாணிக் கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. இன்று வரை நிலைத்துள்ள பழைய கட்டிடங்கள் பெரும்பாலும் இக்காலத்தனவே. அக்காலத்தில் வரையறுக்கப்பட்ட "வரிசையாக்க" (alignement) சட்டவிதிகளைப் பாரிஸ் நகரம் பல புதிய கட்டிட வேலைகளில் இன்றும் பயன்படுத்தி வருவதனால், இந்த இரண்டாம் பேரரசுத் திட்டங்கள் பல இடங்களில் இன்றுவரை பயன்பாட்டில் உள்ளன எனலாம். கட்டிடங்களின் உயரங்களும் அன்று வரையறுக்கப்பட்ட சாலை அகலங்களின் அடிப்படையிலேயே இன்றும் தீர்மானிக்கப்படுகின்றன. அத்துடன், உயர்ந்த கட்டிடங்களை அமைக்கும் நோக்கில் 19 ஆம் நூற்றாண்டுக்குப் பின் கட்டிடச் சட்ட விதிகளில் சில திருத்தங்களே செய்யப்பட்டுள்ளன. பாரிசின் எல்லைகள் மாறாமல் இருப்பதும், கட்டிடங்கள் கட்டுவதற்கான கடுமையான சட்டவிதிகளும், புதிய கட்டிடங்களுக்கான நிலங்கள் பற்றாக்குறையும் அருங்காட்சியகமாதல் (museumification) என்னும் ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளது. பாரிசின் வரலாற்றைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளும், நகர எல்லைக்குள் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்பப் புதிய பெரிய கட்டிடங்களையும், பிற சேவை வழங்கும் கட்டமைப்புக்களையும் அமைப்பதைக் கடினமாக்கியுள்ளது. பாரிசின் பல நிறுவனங்களும், பொருளாதாரக் கட்டமைப்புகளும் ஏற்கனவே புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ளன அல்லது இடம் பெயர்வதற்குத் திட்டமிடுகின்றன. நிதி வணிகப் பகுதி, முக்கியமான உணவு மொத்த விற்பனைச் சந்தை, முக்கியமான பெயர் பெற்ற பள்ளிகள் பல, உலகப் புகழ் பெற்ற ஆய்வுக் கூடங்கள், மிகப் பெரிய விளையாட்டு ஸ்டேடியம், போக்குவரத்து அமைச்சு போன்ற சில அமைச்சகங்கள், என்பன பாரிஸ் நகருக்கு வெளியே அமைந்துள்ளன. பிரான்சின் தேசிய ஆவணக் காப்பகம் 2010 ஆம் ஆண்டுக்கு முன் வடக்குப் புறநகர்ப் பகுதிக்கு இடம் பெயர உள்ளது. பாரிசை விரிவாக்க வேண்டிய தேவையை பிரான்ஸ் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. நவம்பர் 2007ல் இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போதிலும், எந்தப் பகுதிகளைப் பாரிசுடன் இணைப்பது என்பது தொடர்பில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. புறநகர் மற்றும் பாரிஸ் பெரு நகரப் பிரதேசங்களில்(Île-de-France) வணிகப் பகுதிகள் ''La Défense'' – மேற்குப் பாரிஸிலுள்ள முக்கியமான அலுவலக, அரங்க மற்றும் கொள்வனவுத் தொகுதி கேளிக்கைப் பூங்காக்கள் டிஸ்னிலாண்ட் Resort பாரிஸ் – பாரிஸின் கிழக்கேயுள்ள, Marne-la-Vallée யின் புற நகர்ப் பகுதியிலுள்ளது ''Parc Astérix'', பாரிஸின் வடக்கில் நினைவுச் சின்னங்கள் ''Grande Arche de la Défense வேர்செயில்ஸ் அரண்மனை – பாரிஸின் வட கிழக்கிலுள்ள வெர்சாய் நகரில் அமைந்துள்ள லூயிஸ் XIV இனதும் பின் வந்த அரசர்களினதும் அரச மாளிகைகள். பிரான்ஸின் அதிக சுற்றுலாக் கவர்ச்சியுள்ள இடம். ''Vaux-le-Vicomte'', மெலுனுக்கு அண்மையிலுள்ள சிறிய அரச மாளிகை. இதனைப் பின்பற்றியே வெர்சாய் மாளிகைகள் வடிவமைக்கப்படன. செயிண்ட் டெனிஸ் பசிலிக்கா – பண்டைய கொதிக் தேவாலயம் மற்றும் பல பேரரசர்களின் புதைகுழிகள், நகரின் வடக்கிலுள்ளது. நிகழ்ச்சிகள் 52 BC – பின்னர் பாரிஸான லூதேசியா, கல்லோ-ரோமரினால் கட்டப்பட்டது 1113 – பியரே அபிலார்ட் தன்னுடைய பாடசாலையை ஆரம்பித்தார் 1163 – நொட்ரே டேமின் கட்டிட வேலைகள் ஆரம்பம் 1257 – Sorbonne பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது 1682 – லூயிஸ் XIV moves the French court from the Tuileries palace to Versailles சூலை, 1789 – Storming of the Bastille அரச குடும்பம் வேர்செயில்சிலிருந்து பாரிசுக்கு வர நிர்ப்பந்திக்கப்பட்டது. 1814 – நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஆறாவது கூட்டணிப் படைகள் பாரிஸை ஆக்கிரமித்தன. 1815 – நூறு நாட்கள் முடிவுக்குப் பின்னர் பாரிஸ் மீண்டும் ஏழாவது கூட்டணிப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டது. 1840 – நெப்போலியனின் உடல் Les Invalides இல் அடக்கம் செய்யப்பட்டது. 1853 – Baron Haussmann பாரிஸின் மையப் பகுதியை மீளமைத்தார் 1855 – ''Exposition Universelle'' (1855) 1856 – பாரிஸ் மகாநாடு கூட்டப்பட்டது மேற்கோள்கள் வெளியிணைப்புகள் பாரிஸின் உத்தியோகபூர்வ இணைய தளம்: (பிரெஞ்சு மொழியில்; ) பாரிஸின் கட்டிடக்கலை: பாரிஸ் மற்றும் பிரான்ஸின் ஏனைய பகுதிகளில் எடுக்கப்பட்ட 700க்கு மேற்பட்ட புகைப் படங்கள்: Photos of Paris in rollers: பகுப்பு:பிரான்சின் நகரங்கள் பகுப்பு:ஐரோப்பியத் தலைநகரங்கள் * பகுப்பு:ஐரோப்பியப் பண்பாடுகள்
பாரிஸ் எந்த நாட்டின் தலைநகரம் ஆகும்?
பிரான்ஸ்
30
tamil
8188e62a9
ஆப்பிரிக்கா கண்டம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டம் ஆகும்.இக்கண்டத்தின் 54 நாடுகளில் மொத்தம் 80 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள நாடுகளின் பட்டியல் சூடான் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நாடும் சிஷெல்ஸ் மிகச்சிறிய நாடும் ஆகும். கிழக்கு ஆப்பிரிக்கா புருண்டி கென்யா ருவாண்டா மொசாம்பிக் தான்சானியா உகாண்டா ... மேற்கு ஆப்பிரிக்கா நைகர் செனகல் நைஜீரியா காம்பியா கானா ... வடக்கு ஆப்பிரிக்கா அல்ஜீரியா எகிப்து லிபியா மொராக்கோ சூடான் துனிசியா மேற்கு சகாரா ... மத்திய ஆப்பிரிக்கா அங்கோலா கேமரூன் மத்திய ஆப்பிரிக்க குடியரசு காங்கோ ... தெற்கு ஆப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா ஜிம்பாப்வே ஜாம்பியா நமீபியா அங்கோலா மொசாம்பிக் .... பிரதேசத்தின் பெயர்[1] பரப்பளவு (km²) மக்கள் தொகை (1 ஜூலை 2002 மதிப்பீடு) மக்கள்தொகை அடர்த்தி (per km²) தலைநகரம் கிழக்கு ஆபிரிக்கா: புருண்டி 27,830 6,373,002 229.0 புஜும்புரா கமோரோஸ் 2,170 614,382 283.1 மொரோனி ஜிபுட்டி 23,000 472,810 20.6 ஜிபுட்டி நகரம் எரித்ரியா 121,320 4,465,651 36.8 அஸ்மாரா எத்தியோப்பியா 1,127,127 67,673,031 60.0 அடிஸ் அபாபா கென்யா 582,650 31,138,735 53.4 நைரோபி மலகாசி 587,040 16,473,477 28.1 அண்டனானரீவோ மலாவி 118,480 10,701,824 90.3 லிலொங்வே மொரீஷியஸ் 2,040 1,200,206 588.3 லூயி துறை மயோட்டே (பிரான்ஸ்) 374 170,879 456.9 மமுட்சு மொசாம்பிக் 801,590 19,607,519 24.5 மபூட்டோ ரீயூனியன் (பிரான்ஸ்) 2,512 743,981 296.2 தூய-தெனி ருவாண்டா 26,338 7,398,074 280.9 கிகாலி சிஷெல்ஸ் 455 80,098 176.0 விக்டோரியா சோமாலியா 637,657 7,753,310 12.2 மொகடீசு தான்சானியா 945,087 37,187,939 39.3 டொடோமா உகான்டா 236,040 24,699,073 104.6 கம்பாலா ஜாம்பியா 752,614 9,959,037 13.2 லுசாக்கா ஜிம்பாப்வே 390,580 11,376,676 29.1 அராரே மத்திய ஆப்பிரிக்கா: அங்கோலா 1,246,700 10,593,171 8.5 லுவான்டா காமரூன் 475,440 16,184,748 34.0 யாவுண்டே மத்திய ஆப்பிரிக்க குடியரசு 622,984 3,642,739 5.8 பங்கி சாட் 1,284,000 8,997,237 7.0 ந்ஜமேனா காங்கோ 342,000 2,958,448 8.7 பிரஸ்ஸவீல் காங்கோ மக்களாட்சி குடியரசு 2,345,410 55,225,478 23.5 கின்ஷாஷா புவி நடுக்கோட்டு கினி 28,051 498,144 17.8 மலாபோ கேபொன் 267,667 1,233,353 4.6 லிப்ரவில் சாவோ தோமே பிரின்சிபே 1,001 170,372 170.2 சாவோ தோம் வடக்கு ஆப்பிரிக்கா: அல்ஜீரியா 2,381,740 32,277,942 13.6 அல்ஜியர்ஸ் எகிப்து[2] 1,001,450 70,712,345 70.6 கெய்ரோ லிபியா 1,759,540 5,368,585 3.1 திரிப்பொலி மொராக்கோ 446,550 31,167,783 69.8 ரெபாட் சூடான் 2,505,810 37,090,298 14.8 கார்ட்டூம் துனீசியா 163,610 9,815,644 60.0 துனிஸ் மேற்கு சகாரா[3] 266,000 256,177 1.0 அல்-உயூன் European dependencies in Northern Africa: கேனரி தீவுகள் (ஸ்பெயின்)[4] 7,492 1,694,477 226.2 சான்டா குரூசு தெ டெனிரீஃபே, லாசு பல்மாசு சியூடா (ஸ்பெயின்)[5] 20 71,505 3,575.2 — மதீரா (போர்த்துக்கல்)[6] 797 245,000 307.4 பஞ்ச்சல் மெலில்லா (ஸ்பெயின்)[7] 12 66,411 5,534.2 — தெற்கு ஆபிரிக்கா: போட்ஸ்வானா 600,370 1,591,232 2.7 காபரோனி லெசோத்தோ 30,355 2,207,954 72.7 மசெரு நமீபியா 825,418 1,820,916 2.2 விந்தோக் தென்னாப்பிரிக்கா 1,219,912 43,647,658 35.8 புளும்பொன்டின், கேப் டவுன், பிரிட்டோரியா[8] சுவாசிலாந்து 17,363 1,123,605 64.7 ம்பாபேன் மேற்கு ஆபிரிக்கா: பெனின் 112,620 6,787,625 60.3 நோவோ துறை புர்கினா ஃபாசோ 274,200 12,603,185 46.0 உகாதுகு வெர்து முனை 4,033 408,760 101.4 பிரைய்யா தந்தக்கரை 322,460 16,804,784 52.1 அபிஜான், யாமூசூக்ரோ[9] காம்பியா 11,300 1,455,842 128.8 பன்ஜுல் கானா 239,460 20,244,154 84.5 அக்ரா கினி 245,857 7,775,065 31.6 கொனாக்ரி கினி-பிசாவு 36,120 1,345,479 37.3 பிசாவு லைபீரியா 111,370 3,288,198 29.5 மொன்ரோவியா மாலி 1,240,000 11,340,480 9.1 பமாக்கோ மௌரித்தானியா 1,030,700 2,828,858 2.7 நவாக்சோட் நைஜர் 1,267,000 10,639,744 8.4 நியாமி நைஜீரியா 923,768 129,934,911 140.7 அபூஜா செயிண்ட். எலனா (ஐக்கிய இராச்சியம்) 410 7,317 17.8 Jamestown செனகல் 196,190 10,589,571 54.0 டக்கார் சியெரா லியொன் 71,740 5,614,743 78.3 ஃப்ரீடௌன் டோகோ 56,785 5,285,501 93.1 லோமே மொத்தம் 30,368,609 843,705,143 27.8 ஆதாரங்கள் இவற்றையும் பார்க்கவும் ஆபிரிக்க ஒன்றியம் வெளி இணைப்புகள் * பகுப்பு:கண்டங்கள்
ஆப்பிரிக்க கண்டத்தின் பரப்பளவு என்ன?
30,368,609
4,081
tamil
321e80660
மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை (Three Gorges Dam) என்பது யாங்சே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நீர்மின்சாரம் உற்பத்தி செய்யும் ஓர் அணையாகும். இந்த அணை சீனாவின் ஹுபய் (Hubei) மாகாணத்திலுள்ள யில்லிங் (Yiling) மாவட்டத்திலிருக்கும் சான்டோப்பிங் (Sandouping) நகரத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் இடமாகும்[1]. அணைக் கட்டமைப்பு 2006இல் கட்டி முடிக்கப்பட்டது. அக்டோபர் 30, 2008 அன்று கரையில் இருந்த 26ஆவது மின்னியக்கி வணிக நோக்கில் செயல்படத் தொடங்கிய போது கப்பல் உயர்த்தும் பகுதியைத் தவிர மூலத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்துப் பகுதிகளும் கட்டிமுடிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மின்னியக்கியும் 700 மெகாவாட் திறனுடையது. நிலத்துக்கடியில் உள்ள ஆறு மின்னியக்கி்கள் 2012ஆம் ஆண்டுக்கு முன் முழு செயல்பாட்டுக்கு வராது. அணையின் 32 முதன்மை மின்னியக்கிகளையும் 50 மெகாவாட் திறனுடைய இரண்டு சிறிய மின்னியக்கிகளையும் சேர்த்தால் அணையின் மின் உற்பத்தி நிலையத்தின் மொத்தத் திறன் 22.5 கிகாவாட் ஆகும். இந்த அணைத் திட்டத்தால் மின்சார உற்பத்தி மற்றும் வெள்ளக்கட்டுப்பாடு தவிர ஆற்றில் பெரிய கலன்கள் செல்லும் வசதியும் கிடைக்கிறது. சீன அரசாங்கம் இத்திட்டத்தை வரலாற்றுச் சிறப்புமிக்க பொறியியல், சமூக, பொருளாதார வெற்றியாகக் கருதுகிறது. எனினும் அணையினால் பல தொல்பொருள், பண்பாட்டு இடங்கள் நீரில் மூழ்கிவிட்டன. 1.3 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்தனர். மேலும் இதனால் குறிப்பிடத்தக்க வகையில் சூழ்நிலை மாற்றம் ஏற்பட்டது; நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகின.[2]. இந்த அணையானது சர்ச்சைக்குரியதாகவே சீனாவிலும், வெளிநாடுகளிலும் பலரால் பார்க்கப்படுகிறது.[3] பெயர்க் காரணம் யாங்சே ஆற்றில் அமைந்துள்ள குடாங் (Qutang 瞿塘峡)) ஆழ்பள்ளத்தாக்கு, வூ (wu 巫峡)ஆழ்பள்ளத்தாக்கு, ஜில்லிங் (Xiling 西陵峡) ஆழ்பள்ளத்தாக்கு என மூன்று பள்ளத்தாக்குகள் உள்ள இப்பகுதி மூன்று ஆழ்பள்ளத்தாக்குப் பகுதி என அழைக்கப்படுகிறது. இந்த அணை இப்பகுதியில் அமைந்துள்ளதால் மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை என அழைக்கப்படுகிறது. இவ்வணை இந்த மூன்று ஆழ்பள்ளத்தாக்குகளிலேயே மூன்றாவதாக உள்ளதும் நீளம் மிக்கதுமான ஜில்லிங் (Xiling 西陵峡) ஆழ்பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ளது. திட்ட வரலாறு இந்த அணைத் திட்டம் பற்றி 1919ம் ஆண்டு சன் யாட்-சென் தனது "மாநிலங்களுக்கான உத்திகள்-பகுதி II: தொழில் திட்டங்கள்" (Strategy for State) என்ற புத்தகத்தில், இப்பகுதியில் கப்பல்களின் போக்குவரத்துக்கும் இப்பகுதியின் நீர்வள சக்தியைப் பயன்படுத்தவும் இங்கு ஓர் அணை அமைக்கப் பரிந்துரைத்தார்.[4]. மூன்று ஆழ்பள்ளத்தாக்கு பகுதியின் கீழ்புறத்தில் அமையும் இவ்வணையினால் 30 மில்லியன் (22,371 மெகாவாட்) குதிரைசக்தி திறன் கொண்ட நீர்மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும் என்று கூறினார். 1932ல் சியங் கை-சேக்கினால் வழி நடத்தப்பட்ட தேசிய அரசாங்கம் மூன்று ஆழ்பள்ளத்தாக்கில் அணை தொடர்பான தொடக்க கட்ட வேலைகளை மேற்கொண்டது. 1939இல் யிசாங் (Yichang) பகுதியை கைப்பற்றிய யப்பானிய இராணுவம், அணை கட்டப்படும் பகுதியை மதிப்பீடு செய்தது. சீனாவை யப்பான் வெற்றி கொள்ளும் என்ற எதிர்பார்ப்பில் யப்பானியர்கள் அணைக்கான ஒட்டானி திட்டம் என்ற வடிவமைப்பை தயாரித்திருந்தார்கள். 1944ல் ஐக்கிய அமெரிக்காவின் நிலச்சீராக்க செயலகத்தின் தலைமை வடிவமைப்பு பொறியாளர் ஜான் லூசியன் சாவேஜ் (John L. Savage) இப்பகுதியை மதிப்பீடு செய்து யாங்சே ஆற்று திட்டம் என்ற பெயரில் அணைக்கான கருத்துருவை முன்மொழிந்தார்.[5]. இதைத்தொடர்ந்து 54 சீன பொறியாளர்கள் ஐக்கிய அமெரிக்காவிற்கு பயிற்சிக்காக சென்றனர். அவர்கள் பல்வேறு துறைகளில் பயிற்சியை முடித்த பொழுது சீன உள்நாட்டு போர் காரணமாக 1947ல் இவ்வேலை தடைபட்டது. 1949இல் சீன் உள்நாட்டுப் போரில் பொதுவுடைமைவாதிகள் பெற்ற வெற்றியையடுத்து மா சே துங் இத்திட்டத்தை ஆதரித்தார். எனினும் ஜிஜோப (Gezhouba) அணைத் திட்டமே முதலில் எடுத்துக்கொள்ளப்பட்டது. பண்பாட்டு புரட்சி, முன்னோக்கி செல்லுதல் போன்ற நடவடிக்கையினால் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களினால் இவ்வணை திட்டம் தள்ளிப்போடப்பட்டது. 1958ல் நூறு மலர்கள் இயக்கத்தை அடுத்து இத்திட்டத்திற்கு எதிராகக் கருத்து கூறிய சில பொறியாளர்கள் சிறை வைக்கப்பட்டனர்.[6]. 1980ஆம் ஆண்டுவாக்கில் இத்திட்டம் தொடர்பான கருத்து மீண்டும் ஆட்சியாளர்களின் கவனத்தைப் பெற்றது. 1992இல் தேசிய மக்கள் காங்கிரசு இந்த அணை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. மீண்டும் இதன் பணிகள் டிசம்பர் 14, 1994அன்று தொடங்கின. அணையானது 2009ல் முழு இயக்கத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலத்துக்கடியில் வைக்கப்படும் ஆறு மின்னியக்கிகள் போன்ற கூடுதல் கட்டுமானப் பணிகளால் 2012க்கு முன் முழு இயக்கத்தை அடையாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2008இல், அணையினால் நீர்மட்டம் 172.5 மீட்டராக (566 அடி) உயர்ந்தது.[7] தளக்கோலம் அணையின் சுவரானது பைஞ்சுதையினால் ஆக்கப்பட்டது. இச்சுவரின் நீளம் 2,309 மீட்டர் (7,575 அடி) உயரம் 185 மீட்டர் (607 அடி) ஆகும். அணையின் அடியில் இச்சுவர் 115 மீட்டர் (377 அடி) தடிமனாகும் மேல் பகுதியில் 40 மீட்டர் (131.2 அடி) தடிமனாகும். இத்திட்டத்திற்காக 27,200,000 கன மீட்டர் (35,600,000 கன அடி) பைஞ்சுதையும், 463,000 டன் இரும்பும் பயன்படுத்தப்பட்டது, இந்த இரும்பைக்கொண்டு 63 ஈபிள் கோபுரங்களை உருவாக்க முடியும், இதற்காக தோண்டப்பட்ட மண்ணின் அளவு 102,600,000 கன மீட்டர் (134,200,000 கன அடி).[8]. கப்பல் உயர்த்தி அணையின் வலப்பக்கத்தில் தனக்கென தனி நீர்ப்பாதையை கொண்டுள்ளது. அணையின் நீர்மட்டம் கடல் மட்டத்தை விட 175 மீட்டருக்கு (574 அடி) அதிகமாக (110 மீட்டர் அல்லது 361 அடி கீழ்நிலை ஆற்றின் மட்டத்தைவிட) உள்ளபோது அணை உருவாக்கிய நீர்தேக்கமானது சராசரியாக 660 கிமீ (410 மைல்) நீளம் மற்றும் 1.12 கிமீ (0.70 மைல்) அகலம் இருக்கும். பொருளியல் கூறுகள் இத்திட்டம் முடிக்கப்படும் போது இதற்கு செலவழித்தது 180 பில்லியன் யுஆன் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது முதலில் செலவாகும் என எதிர்பார்க்கப்பட்ட தொகையில் 12% குறைவாகும். இதற்கு காரணம் குறைவான பணவீக்கமே தவிர குறைவான செலவு அல்ல.[9] 2008இன் முடிவில் செலவு 148.365 பில்லியன் யுஆன் ஆகும் இதில் கட்டுமானத்திற்கு செலவிடப்பட்டது 64.613 பில்லியன் யுஆன், பாதிக்கப்பட்ட மக்களை மீள் குடியமர்த்த 68.557 பில்லியன் யுஆன் மற்றும் நிதியுதவி, கடன் போன்றவற்றிகு 15.195 பில்லியன் யுஆன்.[10] 250 பில்லியன் யுஆன் மதிப்புடைய 1,000 TWh மின்சாரத்தை அணை உற்பத்தி செய்யும் பொழுது இத்திட்டன் கட்டுமானத்திற்கு செலவிடப்பட்ட தொகை மீளப்பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணை முழு செயல்பாட்டுக்கு வந்த பத்து ஆண்டுகளில் இத்திட்டத்திற்கு செலவிடப்பட்ட முழு தொகையும் மீளப்பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.[11] இத்திட்டத்திற்கான நிதியானது மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை கட்டுமான நிதி, ஜிஜோப (Gezhouba) அணையிலிருந்து பெறப்படும் லாபம், சீன வளர்ச்சி வங்கியிலிருந்து பெறப்பட்ட கடன், உள்நாட்டு, வெளிநாட்டு வணிக வங்களில் இருந்து பெறப்பட்ட கடன், நிறுவன கடன்பத்திரம், அணை முழுதும் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்னும் பின்னும் கிடைக்கும் வருவாய் போன்றவற்றிலிருந்து பெறப்படுகிறது.[12] மின் உற்பத்தியும் பகிர்வும் மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை உலகின் பெரிய நீர்மின்சார உற்பத்தி நிலையத்தை உடையதாகும். இதன் மொத்த திறன் 22,500 மெகாவாட் ஆகும். இதில் 34 மின்னியக்கிகள் உள்ளன. 700 மெகாவாட் திறனுடையவை 32 ஆகும், இரண்டு 50 மெகாவாட் திறனுடையவை. இந்த 32இல் 14 அணையின் வடபுறமும் 12 தென்புறமும் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஆறு தென் பகுதியில் உள்ள மலைக்கடியில் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவு ஆண்டுக்கு 100 TWh க்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 26, 2010 அன்று அணையின் நீர் மட்டம் உயர் அளவான 175மீ-க்கு உயர்த்தப்பட்டு அணையின் மின் உற்பத்தி முழு அளவில் நடந்தது.[13] ஜூலை 2003ல் முதலில் மின்உற்பத்தியை தொடங்கியது. அணையில் மின் உற்பத்தி தொடங்கி 9 ஆண்டுகளுக்கு பின் 2012 ஜூலையில் 32 மின்னியக்கிகளும் இயக்கப்பபட்டு முழு அளவு (22.5 ஜிகாவாட்)மின்சாரம் எடுக்கப்பட்டது, இது சீனாவின் மொத்த நீர் மின்உற்பத்தியில் 11% ஆகும்.[14] மின்னியக்கிகள் முதன்மை மின்னியக்கிகள் ஒவ்வொன்றும் 6,000 டன் எடை கொண்டிருப்பதுடன் 700 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மின்னியக்கிகளின் நிலை மட்டம் 80.6 மீட்டர் (264 அடி) இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மின்னியக்கிகளில் செல்லும் நீரின் அளவு அதன் நிலை மட்டத்தை பொறுத்து 600–950 கன மீட்டர் (780–1,240 கன யார்டு) ஆக இருக்கும். நிலை மட்டம் பெரியதாக இருந்தால் அது அதிக அளவு ஆற்றலைப் பெறக் குறைந்த நீரே போதும். இங்கு ஃபிரான்சிஸ் விசைச்சுழலி பயன்படுத்தப்படுகிறது. விசைச்சுழலியின் விட்டம் 9.7/10.4 மீட்டர்; சுழற்சி வேகம் நிமிடத்திற்கு 75 ஆகும். மின்னியக்க நிறுத்தியின் வெளிப்புற விட்டம் 21.4/20.9 மீட்டரும் உட்புற விட்டம் 18.5/18.8 மீட்டரும் ஆகும். இதன் உயரம் 3.1/3 மீட்டர் ஆகும். இதுவே இவ்வகையான மின்னியக்க நிறுத்திகளில் பெரியதாகும். இந்த மின்னியக்கிகள் இரண்டு கூட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் விளைவுகள் உயிர்ப் பல்வகைமை அழிவுறும் நிலையிலுள்ள சைபீரிய நாரைகள் உலகில் இன்னும் 3,000 - 4,000 இருப்பதாக கருதப்படுகிறது. இவற்றில் பல குளிர்காலத்தில் இப்பகுதியிலுள்ள சதுப்புநிலத்தில் தங்கும். அணை உருவாக்கம் அந்த நிலங்களை அழித்துவிட்டது. யாங்சே ஆற்று டால்பினான பாய்ஜி அழிவதற்கு அணையும் ஓரளவுக்குக் காரணமாகும். மின்சக்தி உருவாக்கம் சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீரமைப்பு அமைப்பின் கூற்றுப்படி 366 கிராம் நிலக்கரியானது 1 kWh மின்சாரத்தை சீனாவில் உற்பத்தி செய்கிறது. அணை முழுதிறனில் இயங்கும் போது ஆண்டுக்கு 31 மில்லியன் டன் நிலக்கரி பயன்பாட்டை குறைக்கும். மேலும் 100 மில்லியன் டன் பசுமைக்குடில் காற்று, மில்லயன் கணக்கான புழுதி, மில்லியன் டன் சல்பர் டைஆக்சைடு, 370,000 டன்கள் நைட்ரிக் ஆக்சைடு, 10,000 டன்கள் கார்பன் மோனாக்சைடு மற்றும் குறிப்பிடத்தக்க அளவில் பாதரசம் குறைகிறது. இதனால் வடசீனாவில் மின்சாரத்துக்காக நிலக்கரி வெட்டி எடுக்கப்படுவது, சுத்தப்படுத்தப்படுவது போன்றவை குறைகின்றன. மண் அரிப்பு, வண்டல் படிதல் மண் அரிப்பும் வண்டல் படிதலும் இந்த அணையை பாதிக்கும் இரண்டு காரணிகளாகும். தற்போதைய அளவில் 80% நிலப்பரப்பு மண் அரிப்புக்கு உட்பட்டுள்ளது. அதனால் ஆண்டுக்கு 40 மில்லியன் டன்கள் வண்டல் யாங்சே ஆற்றில் படிகின்றது. அணை கட்டுவதற்காக மீள்குடியமர்த்தப்பட்ட மக்களினால் ஏற்படும் காடழிப்பு, விவசாயத் தேவைகள் மண் அரிப்பை உருவாக்குவதாக கருதப்படுகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியிலும் கட்டுப்பாடற்ற முறையிலும் யாங்சே ஆற்றில் வரும் வெள்ளம் அணையினால் கட்டுப்படுத்தப்படுவதால் ஆற்றின் கீழ் பகுதிகளில் ஆற்றங்கரை அரிப்பு குறைவடையும். அணையினால் யாங்சே ஆற்றின் கழிமுகத்துக்கு செல்லும் வண்டலின் அளவு குறையும், படியும் வண்டல் அணை மின் உற்பத்தி திறனை குறைக்கும். ஆற்றின் கடற்கரையோர பகுதிகளில் அரிப்பு ஏற்படவும் அவை மூழ்கவும் ஆற்றின் கீழ்பகுதிகளில் வண்டல் குறைவது காரணமாகலாம். அதிகளவில் படியும் வண்டல் அணையின் மதகுகளை அடைத்து அணை உடைவதற்கு காரணமாகலாம் எனவும் கருதப்படுகிறது. ஆண்டுக்கு சராசரியாக 530 மில்லியன் டன் வண்டல் அணை நீர்தேக்கத்தில் சேரும் என விமர்சகர்கள் கூறுகிறார்கள். அணையில் சேரும் வண்டலினால் மின்னியக்கிகளின் விசைச்சுழலியின் வாயில் அடைக்கப்படும் எனவும் கருதப்படுகிறது. ஆனால் 2006லிருந்து சீனா அணையின் மேல்பகுதி ஆற்றில் நான்கு பெரிய அணைகளை கட்டிவருவதால் இந்த அணைக்கு வரும் வண்டலின் அளவு முதலில் கணிக்கப்பட்டதை விடக் குறைவாக இருக்கும். வண்டல் வரத்து குறைவு இரண்டு விளைவுகளை ஏற்படுத்துகிறது. சில நீரியல் நிபுணர்கள் ஆற்றின் கீழ்பகுதியில் உள்ள ஆற்றங்கரைகள் வெள்ளம் வந்தால் அதிகம் பாதிக்கப்படும் என்று கருதுகிறார்கள். 1000 மைல்களுக்கு அப்பால் யாங்சே ஆற்றின் கழிமுகத்தில் உள்ள சாங்காய் நகரம் பெரும் வண்டல் சமவெளியில் அமைந்துள்ளது. ஆற்றில் வரும் வண்டல்கள் இப்பகுதியை வலுப்படுத்தி வந்துள்ளன. குறைவான வண்டல் வரத்து வண்டல் சமவெளியின் வலுவை குறைந்து விடும். அதனால் இதன் மேல் கட்டப்பட்டுள்ள சாங்காய் முதலான நகரங்கள் பாதிப்படையும் என்று கருதுகிறார்கள். நிலநடுக்கமும் நிலச்சரிவும் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதியில் இந்த அணை அமைந்துள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்படும் நில அதிர்வும் அணையில் தேக்கப்பட்டுள்ள நீரின் எடையும் சேரும் போது அணையின் மேல்பகுதியில் உடைப்பு ஏற்படலாம்.[15] உயரும் நீர்மட்டத்தால் ஏற்படும் மண்அரிப்பு காரணமாக அடிக்கடி பெரிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. மே 2009ஆம் ஆண்டு ஏற்பட்ட இரண்டு நிலச்சரிவுகளில் முறையே 50,000 மற்றும் 20,000 கன மீட்டர் (65,000 and 26,000 கன யார்டு) மண் ஆற்றில் விழுந்தது.[16] கழிவுப்பொருள் நிருவாகம் அணையின் காரணமாக ஆற்றின் மேல்பகுதியில் உள்ள சிகோஜிங் (Chongqing) மற்றும் அதன் புறப்பகுதிகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை மேம்படுத்தப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகத்திதன் கூற்றுப்படி ஏப்ரல் 2007ல் 50க்கும் அதிகமான கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன, இவை நாளொன்றுக்கு 1.84 மில்லியன் டன் கழிவுகளை சுத்திகரித்தன. இது நகரின் தேவையில் 65% ஆகும். மேலும் 32 குப்பை கொட்டும் இடங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டு அதில் நாளொன்றுக்கு 7,664.5 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டன. ஆண்டுக்கு ஒரு மில்லியன் டன்னுக்கும் அதிகமான கழிவுநீர் ஆற்றில் விடப்படுகிறது. காடுகள் தற்போது மூன்று ஆழ்பள்ளத்தாக்கு பகுதியில் காட்டுப்பகுதி 10% ஆக உள்ளது, 1950ல் 20% காடுகள் இப்பகுதியில் இருந்தன. ஐ.நாவின் உணவு விவசாய அமைப்பின் ஆராய்ச்சியானது 2008ல் ஆசிய-பசிபிக் பகுதியானது 6,000 சதுர கிமீ காட்டுப்பகுதியை பெற்றுள்ளது என கூறுகிறது. இது 1990களில் ஆண்டுக்கு 13,000 சதுர கிமீ காட்டுப்பகுதியை இழந்ததை ஒப்பிடும் போது குறிப்பிடத்தக்க மாற்றமாகும். இதற்கு முதன்மைக் காரணம் சீனா காடு வளர்ப்பில் மேற்கொண்ட முயற்சிகளே. 1998ல் ஏற்பட்ட மோசமான வெள்ளப்பெருக்கை அடுத்து காடழிப்பே இதற்கு காரணம் என சீன அரசாங்கம் கருதியதால் மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணைக்கு மேல் பகுதியில் யாங்சே ஆற்றுப்படுகையில் காடுவளர்ப்பை அரசு மேற்கொண்டது. வெள்ளக்கட்டுப்பாடும் விவசாயமும் அணையின் செயல்பாடுகளில் வெள்ளக்கட்டுப்பாடு முதன்மையானதாகும். வெள்ளமானது யாங்சே ஆற்றின் பெரிய சிக்கலாகும். அணைக்கு கீழ்பகுதி ஆற்றங்கரைப்பகுதியில் பல மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள், பெரிய நகரங்ளான வுஹன் (Wuhan), நன்ஜிங் (Nanjing), சாங்காய் (Shanghai) போன்றவை ஆற்றை ஒட்டி உள்ளன. ஏராளமான விளை நிலங்களும் சீனாவின் சிறப்பு வாய்ந்த தொழிற்கூடங்களும் ஆற்றை ஒட்டி உள்ளன. அணை நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 22 கன கிமீ (18 மில்லியன் ஏக்கர் அடி) ஆகும். இந்த கொள்ளளவின் காரணமாக பத்து அல்லது நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆற்றின் கீழ்பகுதியில் ஏற்படும் வெள்ளத்தின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் அவற்றின் பாதிப்பை இந்த அணை வெகுவாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யாங்சே ஆற்றில் 1954இல் ஏற்பட்ட வெள்ளத்தால் 33,169 மக்கள் உயிரிழந்தார்கள், 18,884,000 பேர் இடம் பெயர்ந்தார்கள். எட்டு மில்லியன் மக்கள் தொகையுடைய வுஹன் நகரமானது மூன்று மாதங்களுக்கு நீரால் சூழப்பட்டிருந்தது. ஜின்ஜிகுவாங் (Jingguang) தொடருந்து சேவை 100 நாட்களுக்கு செயல்படவில்லை. 1954ல் ஏற்பட்ட வெள்ளத்தில் 50 பில்லியன் கன மீட்டர் நீர் வந்ததாக அறியப்படுகிறது. 1998இல் இப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல பில்லியன் டாலர் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டது, 2,039 சதுர கிமீ (787 சதுர மைல்) அளவில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. இதில் 2.3 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டார்கள், 1,526 மக்கள் உயிரிழந்தார்கள். இது 40 ஆண்டுகளில் வட சீனத்தில் ஏற்பட்ட மோசமான வெள்ளமாக கருதப்படுகிறது. ஆகஸ்ட் 2009இல் ஏற்பட்ட வெள்ளம் அணை வழியே சென்றதால் வெள்ளத்தின் கடுமை குறைக்கப்பட்டு வினாடிக்கு 40,000 கன மீட்டர் நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 1, 2009இல் 145.13 மீட்டராக இருந்தது ஆகஸ்ட் 8, 2009இல் 152.88 மீட்டராக உயர்ந்தது. 4.27 பில்லியன் கன மீட்டர் வெள்ள நீரானது அணையினால் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 15,000 கன மீட்டராக குறைக்கப்பட்டதால் ஆற்றின் கீழ்பகுதி வெள்ள அபாயத்தில் இருந்து காப்பாற்றப்பட்டது. அணையிலுள்ள நீர் வறட்சி காலமான நவம்பர் முதல் ஏப்ரல் வரை வெளியேற்றப்படுகிறது. இதனால் ஆற்றின் கீழ்பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்து அக்காலங்களில் விவசாயத்திற்கும் தொழிற்கூடங்களுக்கும் நீர் தடையின்றி கிடைக்கிறது. மேலும் இதனால் இக்காலத்தில் ஆற்றில் கப்பல்கள் செல்லும் சூழலும் மேம்படுகிறது. இக்காலத்தில் அணையின் நீர்மட்டம் 175 மீட்டரிலிருந்து 145 மீட்டராக குறைந்து விடுகிறது. எதிர் வரும் மாரிக்காலத்தையும் திடீர் என வெள்ளம் ஏற்பட்டால் அதை சமாளிக்கவும் இக்குறைந்த நீர்மட்டம் உதவுகிறது. 2003லிருந்து இந்த அணையிலிருந்து வறட்சி காலத்தில் 11 பில்லியன் கன மீட்டர் நீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் வறட்சி சமாளிக்கப்பட்டதுடன் ஆற்றின் கீழ்பகுதியில் உள்ள விளை நிலங்கள் மற்றும் நகரங்கள் பயன் அடைந்தன. ஜூலை 2010இல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அணைக்கு வினாடிக்கு 70,000 கன மீட்டர் நீர் வரத்து இருந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் ஓரிரவில் நான்கு மீட்டர் உயர்ந்தது. அணையிலிருந்து 40,000 கன மீட்டர் நீர் வெளியேற்றப்பட்டது. இந்த அணையின் காரணமாக ஆற்றின் கீழ்பகுதிகள் கடும் வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளன.[17]. மேற்கோள்கள் வெளிஇணைப்பு - திட்டம் குறித்த தகவல்பக்கம் பிபிசி - - செப்டம்பர் 14, 2004. பிபிசி செய்திகள் - மே 2006 பிபிசி செய்திகள் - May 20, 2006. 中国与世界,环境危机大家谈 - சீனாவில் நீர்ப்பகிர்வு குறித்த அரசியலை விவரிக்கும் கட்டுரை - திட்டத்தினால் ஏற்படும் தாக்கங்களை விளக்கும் ஆவணப் படம் - சுற்றுலாப் பயண நோக்கில் மூன்று பள்ளத்தாக்கு அணை ஜில் மெக்கிவரிங், பிபிசி செய்திகள், மே 20, 2006 அன்று தகவல் பெறப்பட்டது. ராய்டர்ஸ் நவம்பர் 14, 2007 CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) பகுப்பு:சூழலியல் பகுப்பு:சீனாவில் உள்ள அணைகள் பகுப்பு:சீன உட்கட்டமைப்பு
மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணையின் உயரம் எவ்வளவு?
185 மீட்டர்
4,241
tamil
7eb816d62
கடிகாரம் ஒலிப்பு) (வேளைப்பொறி, பொழுதுப்பொறி, மணிக்கூடு) என்பது நேரத்தை காட்டுவதற்கும், அளவிடவும், அதனை ஒருங்கிணைக்கவும் பயன்படும் ஒரு கருவியாகும். கடிகாரத்தை மணிக்கூடு என்றும் குறிப்பர். கையில் கட்டப்படும் கடிகாரத்தினை கைக்கடிகாரம் என்பர். பொதுவாக கடிகாரம் எளிதில் தூக்கி செல்லக்கூடியதாக வடிவமைக்கப்படுவதில்லை. நாகரிக முதிர்ச்சியின் ஒரு கட்டமாக நேரத்தை அளவிடும் முறை மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் பழைய மனித கண்டுபிடுப்புகளில் ஒன்றான இது பொதுவாக இயற்கையான அளவீடான ஒரு நாளினை விட குறுகிய கால அளவை அளக்க பயன்படுத்தப்படுகின்றது. பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வரும் கடிகாரங்கள் இயற்பியல் செயல்முறைகளில் பல வளர்சியினை கண்டுள்ளது. சூரிய கடிகாரமும் பிற கருவிகளும் சூரிய மணி காட்டி என்பது சூரியனின் ஒளியினையும் அதன் விளைவாக நிகழும் நிழல்களின் நகர்வையும் அடிப்படையாகக் கொண்டு நேரம் அளவிடப்பட்டும் கடிகாரத்தினைக்குறிக்கும். வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே சுமேரியர்கள் நேரத்தை அளவிட முயன்றதாகவும், இதில் முன்னோடிகளாக விளங்கியவர்கள் அவர்களே என்றும் கருதப்படுகிறது. சுமேரிய நாகரிகமே ஒரு ஆண்டை மாதங்களாகவும், மாதத்தை நாட்களாகவும், ஒரு நாளைப் பல கூறுகளாகவும் முதலில் பிரித்தது என்று கூறப்படுகிறது. காலப்போக்கில் அரேபியர்கள் தமது சொந்த முறைகளைக் கையாண்டு நேரத்தை அளப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். மற்றும் சூரியன் நகர்வதைப் பின்பற்றி 24 பெரிய கம்பங்களை வட்டப்பாதையில் நிறுவி, ஒளியும் நிழலும் அவற்றின் மீது விழுவதன் அடிப்படையில் எகிப்தியர்கள் நேரத்தை அளவிட்டனர். தொடர்ந்து நேரத்தை அளவிடும் முயற்சி பல்வேறு நாகரகங்கள் வாயிலாகப் பல நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டது. சூரியனின் ஒளி இரவில் கிடைக்காதென்பதால் ஒரே சீராக எரியும் திரியினைக்கொண்டு இரவில் காலத்தைக்கணக்கிட்டனர். மணலினை சிறு ஓட்டையில் வடித்தும் (hourglass) காலத்தை அளந்தனர். நீர் கடிகாரங்கள் அதே வேளையில் கிரேக்க நாட்டில் தண்ணீரைப் பயன்படுத்தி நேரத்தை அளவிடும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சாதனத்தில், தண்ணீர் ஒவ்வொரு துளியாக ஒரு கல் பாத்திரத்தில் விழுமாறு அமைக்கப்பட்டது. திரட்டபட்ட தண்ணிரின் அளவை அடிப்படையாகக் கொண்டு நேரம் அளவிடப்பட்டது. இத்தகைய முறை கி.மு. 320-ல் வழக்கத்தில் இருந்து வந்தது. கிரேக்கர்களும் ரோமானியர்களும் கி.மு.300-400 காலப் பகுதியில் இத்தண்ணீர்க் கடிகாரத்தில் மாற்றங்களைப் புகுத்தி அதனை மேம்படுத்தினர். எங்கே, எப்போது இவை முதன் முதலில் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்த தகவல் இல்லை. கிண்ணத்தில் வடிவத்தில் நீர் வெளிப்படுவது போன்ற எளிய வடிவம் உள்ள கடிகாரங்கள் பாபேல் மற்றும் எகிப்து நாட்டுகளில் கி.மு. 16ஆம் நூற்றாண்டளவில் பயன்படுத்தப்பட்டன. இந்தியா மற்றும் சீனாவிலும் இத்தகைய கடிகாரங்கள் புழக்கத்தில் இருந்தன. கிரேக்கம் வானியலாளர் அன்டுரோனிகஸ் கி.மு. 1இல் ஏதன்சு நகரில் கடிகாரக்கூண்டு ஒன்றை (Tower of the Winds) கட்டியதாக குறிப்புகள் உள்ளன.[1] கிரேக்கர்களும் உரோமையர்களுமே முதன் முதலில் தண்ணீர் கடிகாரங்களை நவீனப்படுத்தினர் என்பர். பற்சில்லுகளைக்[2] கொண்டு தானியக்கமாக அதிக துல்லியமாக நேரத்தைக்கணக்கிடுமாறு தண்ணீர் கடிகாரங்களை வடிவமைத்தனர். இக்கண்டுபிடுப்புகள் பைசாந்தியப்பேரரசுகளாலும், இசுலாமியர்களாலும் ஐரோப்பாவுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. தனிப்பட்ட முறையில் சீனர்களும் நவீன நீர் கடிகாரங்களை (水鐘) கி.பி 725இல் உருவாக்கினர். அங்கிருந்து இவை கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பரவின. சில நீர் கடிகார வடிவமைப்பு தனிப்பட்ட முறையிலும் மற்றும் சில வணிகம் பரவல் மூலம் அறிவு பரிமாற்றத்தால் விளைந்தன. தொழிற்புரட்சியின் போது தேவைப்பட்ட துள்ளிய அளவீடுகள் முக்காலத்தில் தேவைப்படவில்லையாதலால் முக்காலத்து கடிகாரங்கள் சோதிடக்கணிப்புக்கே பெரிதும் பயன்பட்டன. சூரிய மணி காட்டியோடு சேர்ந்தே இவை பழக்கத்தில் இருந்தன. இவ்வகை நீர் கடிகாரங்கள் ஒரு நவீன கடிகாரத்தின் துல்லியம் நிலையினை அடையவில்லை என்ற போதும், ஐரோப்பாவில் ஊசல் கடிகாரம் (pendulum clock) 17 ஆம் நூற்றாண்டில் பயன்பாட்டுக்கு வரும் வரையிலும் இதுவே மிகவும் துல்லியமான மற்றும் பொதுவாக பயன்படுத்தப்படும் காலங்காட்டும் கருவியாக இருந்தது. இஸ்லாமிய நாகரிகத்துக்கே விரிவான பொறியியல் கடிகாரங்களின் துல்லியத்தினை முன்னெடுத்து சென்ற பெருமை சேரும். 797இல் பக்தாத் அப்பாசியக் கலீபா ஹருன் அல்-ரசீது ஆசிய யானை ஒன்றினையும் மிகவும் நுட்பம் வாய்ந்த ஒரு நீர் கடிகாரத்தினையும்[3] சார்லமேன் மன்னருக்கு பரிசாக அளித்தார். நவீன கடிகாரம் கி.பி.1510-ம் ஆண்டுப் பகுதியில் ஜெர்மன் நாட்டைச் சார்ந்த பூட்டு செய்யும் தொழிலாளியான பீட்டர் ஹென்கின் என்பவர், நேரத்தைக் காட்டும் நின்ற நிலையிலான கடிகாரம் ஒன்றை உருவாக்கினார். பின்னர் 1656-ம் ஆண்டு வாக்கில் டச்சு நாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர் ஹியூஜன்ஸ் என்பவர் ஊசல் (pendulum) அசைவில் இயங்கும் கடிகாரம் ஒன்றை உருவாக்கி நேரத்தை அளவிடும் முயற்சியில் வெற்றி பெற்றார். இவர் ஒரு நாளை 24 மணிகளாகவும், ஒரு மணியை 60 நிமிடங்களாகவும், ஒரு நிமிடத்தை 60 நொடிகளாகவும் பாகுபாடு செய்தார். புதிய முறைகளைப் பயன்படுத்திக் கடிகாரத்தையும் மேம்படுத்தினார். இப்போதுள்ள கடிகாரங்களெல்லாம் இதன் முன்னேறிய வடிவங்களேயாகும். துவக்கத்தில் இந்தக் கடிகாரத்தின் பகுதிகளெல்லாம் மரத்தில் செய்யப்பட்டவைகளாகவே இருந்தன. பின்னாளில் இப்பகுதிகள் உலோகத்தாலும், கண்ணாடியாலும் செய்யப்பட்டன. கி.பி.1927-ல் கனடா நாட்டுத் தொலைத்தொடர்புத் துறையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் வாரன் மோரிசன் என்பவரால் கண்ணாடியால் ஆன கடிகாரம் ஒன்று உருவாக்கப்பட்டது. இது மிகக் குறைந்த காலத்திலேயே பெரிய வரவேற்பைப் பெற்றது.பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கம்வரை, ஊசல்களைப் பயன்படுத்தி இயங்கும் கடிகாரங்களே பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. சமச்சீராக அசையும் ஊசல், கடிகாரத்தின் இரு முட்களை இயக்கிச் சரியான நேரத்தைக் காட்டுவதற்குப் பயன்பட்டது. இவ்வகைக் கடிகாரங்களை இன்றும் ஆங்காங்கே காணலாம். ஆனால் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், ஊசல் கடிகாரங்கள் மாற்றமடைந்தன. அலெக்சாண்டர் பெயின் என்பவர் 1840-ம் ஆண்டில் பாட்டரி (battery) என்னும் மின்கலத்தைப் பயன்படுத்தி இயங்கும் கடிகாரத்தைக் கண்டுபிடித்தார். பின்னர் பல அறிவியல் அறிஞர்கள் இவ்வகைக் கடிகாரத்தை மேம்படுத்தினர். பெரிய மின்கலங்களுக்குப் பதிலாகச் சின்னஞ்சிறு மின்கலங்கள் பயன்படுத்தப்பட்டன.இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் எனப்படும் எச்.எம்.டி. தொழிலகம் இந்தியாவின் பழைய கடிகாரத் தொழிற்சாலைகளுள் ஒன்றாகும். இத்தொழிலகம் கடிகாரங்களைத் தயாரிப்பதற்கு முன்பு பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட கடிகாரங்களே நம் நாட்டில் பயன்படுத்தப் பட்டன. தற்போது இந்தியாவில் டைட்டான், டைமெக்ஸ், சிட்டிசன் போன்ற பல கம்பெனிகள் கடிகாரத் தயாரிப்பில் ஈடுபட்டு உலகத் தரத்திற்குக் கடிகாரங்களைத் தயாரித்து வருகின்றன. வகைகள் நேரத் திரை முறைகள் ஒத்திசை (Analog) ஒத்திசை கடிகாரங்கள் வழக்கமாக ஒரு வட்டமான கடிகார முகத்தை கொண்டுள்ளன, இதில் குறிக்கப்பட்டுள்ள எண்களைப் பார்த்தவாறு சுழலும் சுட்டிகளுக்கு கைகள் என்று பெயர்.உலகம் முழுவதும் வழக்கமான கடிகார வட்ட முகத்தில் உள்ள குறுங்கை 1 முதல் 12 மணி வரையிலான மணியைக் குறிக்க ஒரு நாளில் இரு சுற்றுகளை மேற்கொள்ளும். நீளமான நிமிட முள்ளானது நிகழும் மணியளவின் 60 பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட நிமிடங்களை அதே கடிகார வட்ட முகத்தில் காட்டும்.மேலும் அதே போன்றதொரு நொடி முள்ளும் அப்போதைய நிகழும் நிமிடத்தின் நொடியளவை காண்பித்துச் சுழலும்.இன்று பரவலாக பயன்படுத்தப்படும் கடிகார முகம் 24 மணிநேர ஒத்திசைக் கடிகாரங்கள் மட்டுமே.அதற்கான காரணம் 24 மணி நேர அளவை முறை பயன்பாட்டில் இருக்கும் இராணுவ அமைப்புகள் மற்றும் கால அட்டவணை பயன்படத்தப்படுவதாகும். நவீன கடிகாரங்கள் வழக்கத்திற்கு வருவதற்கு முன்னர் தொழிற்புரட்சி காலக்கட்டத்தில் ஆண்ட முழுவதும் பல்வேறு நேர முக வடிவமைப்பு கொண்ட கடிகாரங்களும் பயன்படுத்தப்பட்டன. நேரமானது 6,8.10,மற்றும் 24 மணிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.பிரெஞ்சுப் புரட்சியின் போது பிரெஞ்சு அரசாங்கம் தசம அளவிலான மெட்ரிக் அளவிட்டு முறைமையை அமல்படும்தும் பொருட்டு 10 மணி கொண்ட கடிகாரத்தை அறிமுகம் செய்ய முயன்றது.ஆனால் அது எடுபடவில்லை.18 ஆம் நூற்றாண்டில் ஓர் இத்தாலியர் மின் சேமிப்புக்காக 6 மணிகளாக குறைக்கப்பட்ட கடிகாரத்தை மேம்படுத்தினார்.(24 மணிநேரக் கடிகாரம் அதிக மின் சக்தியை நுகர்கின்றன) ஒத்திசை கடிகாரத்துக்கு மற்றொரு உதாரணம் சூரிய மணி காட்டி அல்லது சூரிய கடிகாரம் ஆகும்.சூரிய மணி காட்டி என்பது சூரியனின் நிலையை பொறுத்து நாளின் நேரத்தை கணக்கிட உதவும் கருவி ஆகும். பொதுவாக கிடைமட்ட சூரிய மணி காட்டி வடிமைப்பில் சூரியனின் நிழல் ஆனது, அதில் குறிக்கப்பட்டுள்ள நேரத்தை குறிக்கும் கோடுகளின் மீது விழும். நேரம் குறிப்பிடும் அமைப்பான க்னோம் (gnomon)ஆனது பொதுவாக மெல்லிய கம்பியாகவோ அல்லது கூர்மையான அல்லது நேரான விளிம்பைக் கொண்ட அமைப்பாக இருக்கும். சூரியன் நகரும்போது இந்த அமைப்பின் முனையின் நிழலானது வேறுபட்ட நேரத்தை குறிக்கும் கோடுகளின் மீது விழும். சரியான நேரத்தைக் காட்ட அனைத்து சூரிய மணி காட்டிகளும் பூமியின் சுழல் அச்சுடன் ஒத்துப்போகுமாறு அமைக்கப்பட வேண்டும். சூரிய மணி காட்டியில் பல்வேறு வகைகள் உள்ளன. சில சூரிய மணி காட்டிகள் ஒரு ஒளிக் கோட்டை நேரத்தை காட்ட பயன்படுத்துகின்றன. மற்றைவைகள் நிழலின் முனைகளை பயன்படுத்துகின்றன இலக்கமுறை (Digital) இலக்கமுறைக் கடிகாரங்கள் ஜப்பானில் உள்ள கனன்சாவா ரயில் நிலைய வெளிப்புறத்தில் செயற்கை நீரூற்று தடுக்கிதழை கட்டுப்படுத்தும் விதமாக பொருத்தப்பட்டுள்ள இலக்க முறை கடிகாரம் அடிப்படை இலக்க முறை கடிகார வானொலி நுண்ணறி பேசியின் திரையில் மேற்புற வலது மூலையில் இலக்கமுறையில் நேரம் காட்டப்படுகிறது இலக்க முறை அல்லது எண்ம முறை கடிகாரங்கள் நேரத்தை எண்களாகக் காட்டுகின்றன.பொதுவாக இரண்டு எண்ம வடிவங்கள் இவ்வகைக் கடிகாரங்களில் பயன்படுத்தப்படுகிறது. 00-23 மணிநேரங்கள் கொண்ட 24 மணிநேர குறியீடு முற்பகல்/பிற்பகல் (AM/PM) குறிக்கப்பட்ட 12 மணி நேரக்குறியீடுகள் முற்பகல் 1 மணியிலிருந்து முற்பகல் 11 மணியைத் தொடர்ந்து வரும் முற்பகல் 12 மணி,பிற்பகல் 1 மணியிலிருந்து பிற்பகல் 11 மணியைத் தொடர்ந்து வரும் பிற்பகல் 12 மணி (உள்நாட்டு சூழல்களில் பயன்படுத்தப்படும் குறிமுறை) பெரும்பாலான இலக்கமுறைக் கடிகாரங்கள் நீர்மப்படிகக் காட்சி (LCD), ஒளிஉமிழ் இருமுனையம் (LED),வெற்றிட ஒளிர் திரைக்காட்சி (VFD) போன்ற திரைகளைக் கொண்டு மின்னணு வழிமுறைகளில் செயல்படுகின்றன.மீட்டமைக்கப்பட்ட பிறகு, ஒரு காப்பு மின்கலம் (Backup Battery) அல்லது மின்தேக்கி (Capacitor) இல்லாத சமயத்தில் மின்கலம் மாற்றம் அல்லது மின்துண்டிப்பு நிகழ்ந்தால் இந்த கடிகாரங்கள் 12:00 மணியைக் காட்டி நேரம் அமைக்க வேண்டி 12:00 என்ற இலக்கத்தைக் காட்டி ஒளிரும்.சில அண்மைய புதிய கடிகாரங்கள் வானொலி அல்லது இணைய நேர வழங்கிகளை (Servers) அடிப்படையாகக் கொண்டு தங்களை (நேரத்தை) மீட்டமைக்கின்றன. 1960 களில் இலக்க முறை கடிகாரங்களின் வருகையிலிருந்து, ஒத்திசைவு கடிகாரங்களின் பயன்பாடு கணிசமாக குறைந்துவிட்டது செவிப்புலன் (Auditory) தூரம், தொலையொலியம் அல்லது பார்வைக் குறைபாடு போன்றவற்றுக்காக பேசுதல் அல்லது ஒலியாக நேரம் ஒலிக்கப்படுகிறது. ஒலியானது இயல்பாக பேசுதல் போன்றோ (உதாரணம்:தற்போதைய நேரம் பன்னிரெண்டு மணி முப்பது நிமிடம் என பேசுதல்) அல்லது செவிப்புல குறிகளாகவோ (இலண்டன் பிக்-பென் கடிகாரத்தில் ஒலிப்பது போன்று எத்தனை மணியோ அத்தனை எண்ணிக்கையில் தொடர்ச்சியான மணி ஒலிக்கச்செய்தல்) இருக்கும். பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பேசும் கடிகார சேவையினை வழங்கி வருகின்றன. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:கருவிகள் பகுப்பு:கால அளவுகள் பகுப்பு:கடிகாரங்கள்
பூட்டு செய்யும் தொழிலாளியான பீட்டர் ஹென்கின் எந்த ஆண்டு கடிகாரம் உருவாக்கினார்?
கி.பி.1510
3,865
tamil
873ee70ee
சாக்கிரட்டீசு (Socrates) (கி.மு 470/469 – கி.மு 399, பிப்ரவரி 15 ) [1] ஏதென்சைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர் (தத்துவஞானி) ஆவார். இவர் எப்போது பிறந்தார் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவருடைய சீடர் பிளேட்டோவும் [2] புகழ்பெற்ற தத்துவஞானி ஆவார். கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீசு போற்றப்படுகிறார்.மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர் சாக்ரடீசு என்பது இவருடைய சிறப்பாகும். சாக்ரடீசு நன்னெறித் துறையில் அவரது பங்களிப்புக்கு புகழ்பெற்றவராக விளங்குகிறார் என்பது பிளாட்டோவின் உரையாடல்கள் மூலம் சித்தரிக்கப்படுகிறது. சாக்ரடீசு முரண்நகை மற்றும் சாக்ரடீசு வழிமுறை ஆகிய தத்துவக் கருத்துகளுக்காக தத்துவ அறிஞர் சாக்ரடீசு அறியப்படுகிறார். பிந்தைய கருத்து பொதுவாக பரவலான விவாதங்களில் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது, இது ஒரு வகையான கற்பித்தலும் ஆகும், இம்முறையில் தொடர்ச்சியான கேள்விகளுக்கு தனிப்பட்ட பதில்களைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், அடிப்படை நுண்ணறிவை ஊக்குவிப்பதற்காகவும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒளிர்வுக் கோட்பாடு தொடர்பான முக்கியமானதும் நிலையானதுமான கோட்பாடுகளுக்கு பிளாட்டோவின் சாக்ரடீசு பங்களித்திருக்கிறார். மேலும் இவருடைய கருத்தியலும் அணுகுமுறையும் தொடர்ந்து வந்த மேற்கத்திய தத்துவத்திற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அளித்துள்ளன. சாக்ரடீசு புதிர் சாக்ரடீசு எழுதிய படைப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இதனால் அவரைப்பற்றியும், அவருடைய தத்துவங்கள் பற்றியுமான தகவல்கள் இரண்டாம்நிலை ஆதாரங்களில் தங்கியிருக்கின்றன. மேலும், இந்த ஆதாரங்களின் உள்ளடக்கங்களுக்கு இடையிலான நெருக்கமான ஒப்பீடு சில முரண்பாடுகளை அம்பலப்படுத்துகிறது, இதனால் உண்மையான சாக்ரடீசைப் பற்றிய ஆழமான உண்மைகளை அறிந்துகொள்ளும் சாத்தியக்கூறுகள் பற்றிய கவலைகள் உருவாகின்றன. இந்த ஐயமே சாக்ரடீசு புதிர் [3] அல்லது சாக்ரடீசு வினா [4][5] எனப்படுகிறது. சாக்ரடீசு மற்றும் அவரது சிந்தனைகளைப் புரிந்து கொள்ள விரும்பும் ஒருவர், முதலில் பிளாட்டோவின் படைப்புகளைப் படித்துத் தெளிய வேண்டும். இவையே சாக்ரடீசின் வாழ்க்கை மற்றும் தத்துவங்களுக்கு முக்கியமான மூலங்களாக உள்ளன[6] செனொபானின் படைப்புகளும் இத்தகையதே ஆகும்.[7].. இந்தப் படைப்புகள் சாக்ரடிகோய் லோகோ அல்லது சாக்ரடிக் உரையாடல்கள் எனப்படுகின்றன. இவற்றில் சாக்ரடீசு சம்பந்தமான வெளிப்படையான உரையாடல்களின் அறிக்கைகள் உள்ளன[8][9]. சாக்ரடீசின் வாழ்க்கை தொடர்பான உண்மைகளை கண்டுபிடிப்பதற்கு கிடைக்கும் பண்டைய ஆதாரங்களில் செனொபான் தவிர பெரும்பாலும் தத்துவ மற்றும் வியத்தகு நூல்களாகவே இருக்கின்றன. சாக்ரடீசின் சமகாலத்திய எந்தவொரு நேரடியான வரலாறும் இல்லை. கிடைக்கபெற்ற ஆதாரங்களின் வேறுபாடுகள் விளைவித்த அனைத்து கருத்துகளுக்கும் இடையில் இரண்டு காரணிகள் சாக்ரடீசு தொடர்பான அனைத்து மூலங்களிலிருந்தும் வெளிப்படுகின்றன. அவர் அசிங்கமானவராக இருந்திருக்கலாம் என்றும், சாக்ரடீசு ஒரு புத்திசாலித்தனமான அறிவைக் கொண்டவராக இருந்தார் என்றும் தெரிகிறது [10][11]. சாக்ரடீசின் பிறப்பு மற்றும் ஆரம்ப காலம் சாக்ரடீஸ் எப்போது பிறந்தார் என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை . 2450 ஆண்டு களுக்கு முன்பு அதாவது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ்.இவர் கிரேக்க நகரமான ´ஏதென்ஸ்´இல் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு சிற்பி. இவரது தாயார் ஒரு மருத்துவச்சி. உலகில் எந்த மதமும் தோன்றாத அந்த காலக்கட்டத்திலேயே தன் சுய முயற்சியால் மனித அறிவின் தோற்றம், தர்க்க சாஸ்திரம் ஆகியவற்றில் திறன் பெற்று விளங்கினார். கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகின்றார். கேள்விகேட்கும் திறன் சிறுவனாக இருந்தபோதே சாக்ரடீஸ் கேள்விகள் கேட்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். எதைப்பற்றியும் கேள்வி கேட்டு, அது பற்றிய உண்மையை அறிந்துகொள்வதே சாக்ரடீசின் வழக்கமாகும். நீதி, நியாயம், ஆத்மா, கடவுள், சமூகம், அரசு, வழக்கம் என எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தினார் சாக்ரடீஸ். சாக்ரடீஸ் பொது இடங்களில் மக்களைச் சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும், அதிக நேரங்களை செலவிட்டார். ஆனால் மற்றவர்கள் சக்ரடீஸிடம் கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாகப்பதில் அளிக்காமல் சாக்ரடீஸ் கேள்வி எழுப்புவார். ஏதாவது ஒரு பிரச்சினையை மையமாகக் கொண்டு மக்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு, அவர்களிடமிருந்தே பதிலைக் கேட்டு, அந்தப் பிரச்சினையை எழுப்பியவர்களே காரணத்தைப் புரிந்து கொள்ளுமாறு செய்வார் சாக்ரடீஸ். பிரச்சினையின் காரணத்தைத் தமது கேள்வியின் மூலம் உணரச்செய்த சாக்ரடீஸ், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் கேள்விகளைக் கேட்டார். இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள் தெளிவு பெற்றனர்; பிரச்சினையைப் புரிந்தனர். அதற்கான காரணத்தையும் அறிந்தனர். அதைப் போக்குவதற்குச் செய்ய வேண்டியவற்றையும் அவர்கள் உணர்ந்தனர். இதனால், ஏதென்ஸ் மக்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கெல்லாம் சாக்ரடீஸிடம் தெளிவு கிடைக்கும் என்று நம்பினர். சாக்ரடீஸின் எழுத்துக்களும், சொற் பொழிவுகளும் மக்களைச் சிந்திக்க வைத்தது; செயல்களில் ஈடுபடவும் அவர்களைத் தூண்டியது சாக்ரடீசின் மாணவர் சாக்ரடீஸின் இந்தக் கேள்வி கேட்கும் முறை ஏதென்ஸ் நகர இளைஞர்களைக் கவர்ந்தது. இளைஞர்கள் மத்தியில் சாக்ரடீஸ் எப்போதும் காட்சி தந்தார். சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருந்தது.அவரின் கேள்வி கேட்கும் பழக்கம் இளைஞர்களிடமும் தொற்றிக் கொண்டது.கிரேக்க சமூகத்தில் காலகாலமாக கடைப்பிடித்து வந்த மூடக் கொள்கைகளையெல்லாம் சாக்ரடீஸை சிந்திக்க வைத்த தல்லாமல், மெல்ல இளைஞர்களையும் மாற்ற ஆரம்பித்திருந்தது.இதுபோல் சாக்ரடீசின் கொள்ககளால் ஈர்க்கப்பட்டு பிளேட்டோவும் சாக்ரடீசுடன் சேர்ந்தார்.பின் நாளில் இவரும் உலக புகழ் பெற்ற தத்துவஞானி ஆனார். சாக்ரடீசின் மீது பழி இளைஞர்களையும் மாற்ற ஆரம்பித்தது ஏதென்ஸ் அரசுக்கு தெரியவந்தது.சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருப்பது சிலருக்கு எரிச்சலைத் தந்தது.சாக்ரடீஸ் தினம்தோறும் இளைஞர்களி டம் உரையாடியது கிரேக்க ஆட்சியாளர்களை கோபப்படுத்தியது. அவர் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன . அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் என்ற மேடைப் பேச்சாளனும் சாக்ரடீஸ் மீது வழக்குத் தொடுத்தனர். இதற்கு சாக்ரடீஸ் மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பே காரணமாகும். இளைஞர்களைத் தூண்டி விடுவதாகவும், மத எதிர்ப்பைக் கிளப்பி விடுவதாகவும், தனக்குப் பெருமை சேர்ப்பதற்காக சாக்ரடீஸ் தவறான வழிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்காகவும், அதன் வழியாக ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் சாக்ரடீஸ் மீது அனிடஸூம், லைகோனும், மெலிட்டஸூம் குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர். மரண தண்டனை எண்ணற்ற குற்றச்சாட்டுகளையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது . அப்போது மெலிடஸ் என்பவன் சாக்ரடீஸ் மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இளைஞர்களைக் கெடுக்கிறார், கிரேக்கர்கள் தொழுது வணங்கும் கடவுள்களைத் தூற்றி, ஒரு புதுக்கடவுளைத் தானே உருவாக்குகிறார், வானத்தைப் பற்றியும் நிலத்தைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார் (ஏனெனில் அக்காலக்கட்டத்தில் கிரேக்கர்கள் இயற்கையையே கடவுளாக வழிபட்டனர்). சந்திரனை மண் என்றும் , சூரியனைக் கல் என்றும் சொல்கிறார். புதிய மதக் கோட்பாடுகளைப் புகுத்துகிறார். சாக்ரடீஸ் மிகவும் தீயவர். இவருக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்று கூறினான் . இதற்கு பதில் அளித்த சாக்ரடீஸ், 'என்னை வழக்கு மன்றத்தில் நிறுத்திய என் எதிரிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி குறுக்கு விசாரணை செய்ய நான் விரும்பவில்லை. என்னுடைய நியாயமான எதிரிகள் அநீதியும் அறிவின்மையும் தான். நான் கல்லையும் மண்ணையும் ஆண்டவன் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறேன். ஆண்டவனைப் பற்றியும் அவனுடைய படைப்பைப் பற்றியும் ஆராய்ச்சி செய்வது நாத்திகம் என்றால் ஆண்டவனை ஒப்புக்கொள்ள எங்கே மறுத்து விடுவார்களோ என்று பயப்படுவது அதை விட நாத்திகம்' என்றார். இதன் பின்னர் நீதி மன்றத்தில் தீர்ப்பு கூறும் தருணம் வந்தது. மரணம், மன்னிப்பு என்ற இரண்டு பெட்டிகள் வைக்கப்பட்டன . நீதிக் குழுவின் உறுப்பினர்கள் 501பேர் வாக்குப்பதிவு செய்யத் தொடங்குகின்றனர். 220 பேர் சாக்ரடீஸை மன்னித்து விடுமாறும், 281 பேர் மரண தண்டனை அளிக்கவும் வாக்களித்தனர். நீதிபதிகள் சாக்ரடீஸ் குற்றவாளி தான் என்று தீர்ப்புக்கூறி அவருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை சாக்ரடீஸையே அறிவிக்கும்படி அறிவித்தனர். தாம் எந்தவிதக் குற்றமும் செய்யவில்லை என்றும்; தம் தாய் திரு நாட்டிற்குத் தமது செயல்களின் மூலம் நன்மையே செய்ததாகவும், அதன் பொருட்டு இந்த நீதிமன்றம் தமக்குத் தண்டணைக்குப் பதிலாக பாராட்டும், பரிசும்தான் கொடுத்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டார் சாக்ரடீஸ். ஆனால் தண்டனை வழங்குவதாக இந்த நீதி மன்றம் முடிவு செய்தால், அது அபராதத் தொகையாக இருக்க வேண்டும் என்றும்; அந்த அபராதத் தொகையைத் தமது நண்பர்கள் அரசுக்குச் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் நீதிமன்றத்தில் சாக்ரடீஸ் முழங்கினார். சாக்ரடீஸ் தமது செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பார் என்று நீதிபதிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக அவர் நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தது நீதிபதிகளுக்கு எரிச்சலையே ஊட்டியது. அதனால் சாக்ரடீஸை விஷம் கொடுத்துக் கொல்ல வேண்டும் என்று கி.மு. 339ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இறப்பு சில காரணங்களினால் 30 நாட்கள் கழித்து தண்டனை நிறைவேற்றப்படும் என்றும், அதுவரை சாக்ரடீஸின் காலை சங்கிலியால் பிணைத்து வைக்க வேண்டும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.பின் தண்டனையை நிறைவேற்றும் நாள் வந்தது .விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ், “இனி நான் செய்ய வேண்டியது என்ன?” என்றார். அதற்கு, “கோப்பையில் உள்ள விஷத்தை முழுவதுமாக நீங்கள் குடிக்க வேண்டும. குடித்து முடித்ததும் சிறைக்குள்ளேயே நீங்கள் நடந்து கொண்டிருக்க வேண்டும். உங்கள் கால்கள் செயல் இழக்கும் போது படுத்துக்கொள்ள வேண்டும்” என்றான் சிறைப்பணியாளன். கண் கலங்காமல், சிரித்த முகத்துடன் ஒரு கோப்பை விஷத்தையும் குடித்து முடித்தார் சாக்ரடீஸ். அதைக் கண்ட நண்பர்கள் அனைவரும் அழுது தீர்த்தனர். “பெண் மக்களைப் போன்று நீங்களும் ஏன் கண்ணீர் சிந்துகிறீர் கள்?” என்று சிரித்தபடி கேட்டுவிட்டு,சாக்ரடீஸ் நடக்கத் தொடங்கினார். சிறிது நேரம் நடந்து முடிந்ததும், அவர் மல்லாந்து படுத்துக் கொண்டார்.விஷம் கொடுத்த பணியாளன், சாக்ரடீஸின் கால்களை அமுக்கியபடி, “நான் உங்களை கால்களை அமுக்குவது உங்களுக்குத் தெரிகிறதா?” என்றான்.“இல்லை” என்றார் சாக்ரடீஸ்.சிறிது நேரத்தில் அவர் விழிகள் மூடின. சாக்கிரட்டீசின் முறை சாக்ரட்டீசிய முறை அல்லது எலன்க்கோசு (elenchos) முறை என அறியப்படுகின்ற இவருடைய மெய்யியல் ஆராய்வு முறையே, மேற்கத்திய சிந்தனைகளுக்கு இவரது முக்கியமான பங்களிப்பாகும். இந்த முறையை அவர் பெரும்பாலும் முக்கியமான நல்லொழுக்க எண்ணக்கருக்களை மெய்த்தேர்வு செய்வதில் (பரிசோதிப்பதில்) பயன்படுத்தினார். இதற்காக, சாக்கிரட்டீசு, அறநூல் அல்லது நல்லொழுக்கத் தத்துவத்தினதும் அதனால் பொதுப்படையான தத்துவஞானத்தினது தந்தையுமாக, ஊற்றுக்கண்ணுமாகக் கருதப்பட்டுவருகிறார். மேற்கோள்கள் புற இணைப்புகள் at Curlie at the Indiana Philosophy Ontology Project on In Our Time at the BBC Project Gutenberg e-texts on Socrates, amongst others: (see also Wikipedia articles on Dialogues by Plato) , such as the Memorablia and Hellenica. at பகுப்பு:கிமு 399 இறப்புகள் பகுப்பு:கிமு 470 பிறப்புகள் பகுப்பு:கிரேக்க மெய்யியலாளர்கள் பகுப்பு:குடியியற் சட்டமறுப்பு
சாக்கிரட்டீசு எப்போது பிறந்தார்?
கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில்
2,905
tamil
b0dae4743
அனைத்துலக முறை அலகுகள்(SI) குழுமத்தினரால் நிர்ணயித்தபடி, நேரத்தின் அடிப்படை அலகு, நொடி அல்லது வினாடி ஆகும். இதன் குறியீடு மற்றும் சுருக்கக் குறியீடு பின்வருமாறு: குறியீடு: (ஆங்கிலம்: s; தமிழ்: வி அல்லது வினாடி அல்லது நொடி) சுருக்கக் குறியீடு: (சுருக்கக் குறியீடு: ஆங்கிலம்: s; தமிழ்: வி).[1][2] மணிநேரத்தினை முதல் முறையாக அறுபது பிரிவுகளகப் பிரிக்கும்போது நிமிடங்கள் கிடைக்கின்றன. மணிநேரத்தினை முதல் முறையாகப் பிரித்துக் கிடைக்கும் நிமிடங்களை இரண்டாவது முறையாக அறுபது பிரிவுகளகப் பிரிக்கும்போது நொடிகள் அல்லது வினாடிகள் கிடைக்கின்றன. இரண்டாவது முறையாகப் பிரித்தலை ஆங்கிலத்தில் 'Second' - 'செகண்டு' என்கிறோம்.[3] சீசியம் (அணு நிறை:133) அணு இயல்நிலையில் இரண்டு மீ நுண் மட்டங்களுக்கு இடையே  நிலைமாற்றம் கொள்ளும்போது தோன்றும் கதிர்வீச்சுக்கான காலம் 9 192 631 770 கால அளவுகள் ஆகும். இதுவே SI அலகில் நொடி அல்லது வினாடி எனப்படுகிறது.[1][4] நொடி (அல்லது வினாடி) என்பது காலத்தை அளவிடப் பயன்படும் அடிப்படை அலகு.[5] 60 நொடிகள் = 1 நிமிடம் (மணித்துளி) ஆகும்.[6] வரையறை வரலாறு ஆரம்பகால நாகரிகங்கள்: ஆரம்ப கால நாகரிகங்கள் ஒரு நாளை சிறு பிளவுகளாக்கி பகுத்துக் கூறுகளுக்கு தனித்தனி பெயரிட்டன. ஆனால் கூறாகிய நேரத்தின் சிறு பகுதிக்கு வினாடி அல்லது நொடி என்ற வார்த்தையை யாரும் முறையாக பயன்படுத்தவில்லை.  கி.மு. 2000ல் எகிப்தியர்கள் ஒரு நாளை பகல் பன்னிரண்டு மணிநேரம் என்றும், இரவு பன்னிரண்டு மணிநேரம் என்றும், சமமாகப் பிரித்திருந்தனர். எனவே பருவகால மாறுபாடுகளுக்கு ஏற்ப பகல் மற்றும் இரவுகளில் மணிநேர நீளத்தின் அளவுகளும் வேறுபட்டன. ஹெலனிய கால வானியலாளர்களான ஹிப்பார்க்கஸ் (கி.மு 150 கி.மு.) மற்றும் தொலெமி (சி.டி. 150) ஆகியோர், மணிநேரத்தை அறுபது பகுதிகளாகப் (அறுபதிற்குரிய பின்னங்களின் கீழ் எண் அமைப்பு) பிரித்தனர். ஒரு சராசரி மணி நேரத்தை (1/24 நாள்) என்றும், ஒரு மணி நேரத்தின் எளிய பின்னக்கூறுகள் (1/4, 2/3, முதலியன) என்றும், மற்றும் நேரக் கோணத்தை (1/360 நாள் அல்லது அதற்குச் சமமான நான்கு நவீன நிமிடங்கள்) என்றும் பயன்படுத்தினர்.[7] கி.மு. 300 க்குப் பின்னர் பபிலோனியர்கள் அறுபதிற்குரிய பின்னங்களின் கீழான முறையைப் பயன்படுத்தி ஒரு நாளை திட்டமிட்டனர். அடுத்துள்ள ஒவ்வொரு துணைப்பிரிவும் அறுபதுகளால் பிரிக்கப்பட்டது. அதாவது  1/60, 1/60, 1/60 என்று, அறுபதின் விசைமடங்காகக் கணக்கிடப்படுகிறது.  இதன் துல்லியத் தன்மை  2 மைக்ரோ வினாடிகளுக்குச் சமமானதாகும்.[8]   பாபிலோனியர்கள் மணிநேரத்தை பயன்படுத்தவில்லை. ஆனால் 120 நவீன நிமிடங்கள் கொண்ட இரட்டை கால அளவு பயன்படுத்தப்பட்டது. ஒரு கால அளவு-நான்கு நீடித்த நிமிடங்களாக கணிக்கப்பட்டது. ஒரு பார்லிகார்ன் என்பது 3 1/3 நவீன வினாடிகள் நீடிக்கும் (நவீன ஹீப்ரூவின் காலண்டர் வளைவு),[9] ஆனால், அறுபதிற்குரிய பின்னங்களின் கீழ்  சிறிய அலகுகளாகப் பிரித்தெடுக்கப்படவில்லை. சந்திர சுழற்சியின் துணைப்பிரிவுகளின் அடிப்படையில்: சிர்கா 1000, பாரசீக அறிஞர் அல்-பிருனி அரபு மொழியில் வினாடி அல்லது நொடி என்ற முறையைப் பயன்படுத்தியுள்ளார். இரண்டு அமைவாதைகளுக்கு இடையே உள்ள காலத்தை வாரங்கள், நாட்கள், மணிநேரம், நிமிடங்கள், வினாடிகள், மூன்றாவது மற்றும் நான்காவது பிற்பகல் ஞாயிறு எனப் பிரித்துள்ளார்.[10] 1267 ஆம் ஆண்டில், இடைக்கால விஞ்ஞானி ரோஜர் பேகன், லத்தீன் மொழி அறிக்கையில், மூன்றாவது மற்றும் நான்காவது முழு நிலா எனப்படும் பூரணைகளுக்கு இடையேயான பிரிவைக் கொண்டு மணிநேரங்கள் (ஹொரே-horae), நிமிடங்கள்(மினுடா-minuta), விநாடிகள்(செகுண்டா-secunda), மூன்றாவது(டெர்ஷியா-tertia) மற்றும் நான்காவது(குவார்டா-quarta) ஆகியவற்றை குறிப்பிட்ட நாட்காட்டியில் வரையறுத்தார்.[11] நவீன நொடிகள் அல்லது வினாடிகள், பின்வருமாறு தசம எண்களைப் பயன்படுத்தி பிரிக்கப்பட்டு வருகின்றன - மூன்றாவது குறியீட்டு சொல்  (1⁄60 வினாடிப்பகுதி) பிற மொழிகளிலும்  நொடிகள் அல்லது வினாடிகள் என்ற வார்த்தைப் பயன்பாடு உள்ளது. உதாரணம்: போலிய மொழி (டர்க்ஜா-tercja) மற்றும் துருக்கிய மொழி (சலிசெ-salise). இயந்திர கடிகாரங்களின் அடிப்படையில்: 16 ஆம் நூற்றாண்டின் கடைசியில்,  நொடிகளைக் காட்டப் பயன்படும் ஆரம்பகால கடிகாரங்கள் தோன்றின.  இயந்திரக் கடிகாரங்கள் உருவானதன் பின் நொடிகள் அல்லது வினாடிகளைத் துல்லியமாக அளப்பது எளிதானது.  இது சூரிய மணிகாட்டி மூலம் காட்டப்படும் உத்தேச நேரத்திற்கு எதிரானது. ஃப்ரேமர்ஸ்டார்ஃப் (Fremersdorf)  சேகரிப்பில் ஆர்ஃபியஸை (Orpheus) சித்தரிக்கும் கடிகாரம், சுருள் வில்லுடன் விநாடிகளைக் குறிக்கக்கும் கையுடன் கூடிய உந்துதல் கடிகாரம் ஆகியவை மக்களை மிகவும் கவர்ந்தன. இதன் தொடக்க காலம் 1560 நிறைவுறு காலம்  16 ஆம் நூற்றாண்டின் மூன்றாம் காலாண்டில், தகி-அல்-தின் (Taqi al-Din) ஒவ்வொரு 1/5 நிமிடத்தையும் காட்டும் ஒரு கடிகாரம்  உருவாக்கினார்.[12] 1579ல் ஹோஸ்த் பர்கி (Jost Bürgi) ஹெஸ்ஸ (Hesse) நாட்டின் வில்லியமுக்கு வினாடிகளைக் காட்டும் ஒரு கடிகாரம் செய்தார்.[13]:105}} 1581ல் டைக்கோ பிராகி மறுசீரமைக்கப்பட்ட  கடிகாரங்களை உருவாக்கினார். அதனைத் தன் வானியல் ஆய்வு மையங்களில் பயன்படுத்தினார். அவை நிமிடங்களையும் நொடிகளையும் காட்டின. எனினும், அவை வினாடிகளை கணிக்கப் போதுமான துல்லியத்துடன் இல்லை. 1587 ஆம் ஆண்டில், டைக்கோ தனது நான்கு கடிகாரங்கள், நான்கு வினாடிகள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வேறுபடுத்திக் காட்டியதாகk குறை கூறினார்.seconds.[13]:104 1644 ஆம் ஆண்டில், மரின் மெர்சென் (Marin Mersenne) 39.1 அங்குல நீளம் (0.994) ஊசலைப் பயன்படுத்தி வினாடிகளைக் கணக்கிட்டார். அது, திட்ட புவியீர்ப்பு முடுக்கத்துடன் செயல்பட்டது. ஊசல் முன்னோக்கிச் செல்ல ஒரு விநாடியும், மீண்டும் பின்னோக்கிச் செல்ல ஒரு விநாடியும், ஆகும் எனத் துல்லியமாக கணக்கிட்டு செயல்படுத்தினார்[14] 1670 ஆம் ஆண்டில், லண்டன் கடிகார தயாரிப்பாளர் வில்லியம் கிளெமெண்ட் (William Clement) இந்த வினாடி ஊசலை, கிறித்தியான் ஐகன்சின் அசல் ஊசல் கடிகாரத்துடன் இணைத்தார்.[15]  1670 முதல் 1680 வரை, கிளெமெண்ட் தனது கடிகாரங்களுக்கு பல மேம்பாடுகளைச் செய்தார்.  1832 இல், கார்ல் பிரீடிரிக் காஸ் தனது மில்லிமீட்டர்-மில்லிகிராம்-வினாடி தரப்படுத்தப்பட்ட முறை அலகுகளில், நேரத்தின் அடிப்படை  அலகு வினாடி என முன்மொழிந்தார். 1862ஆம் ஆண்டு, அறிவியல் முன்னேற்றத்திற்கான பிரிட்டிஷ் கூட்டமைப்பினர், (BAAS-British Association for the Advancement of Science) "விஞ்ஞானத்தின் அடிப்படையில், அனைத்து மாந்தர்களும் சூரிய நேரத்தின் சராசரி அடிப்படை அலகு நேரம் வினாடி என்ற கால அளவைப் பயன்படுத்த வேண்டும்" என ஒப்புக் கொண்டுள்ளனர்.[16] ஒரு வருடத்தின் ஒரு பகுதி என்ற அடிப்படையில்:  புவியின் இயக்கம் சார்ந்த, நியூகோம்பின் (Newcomb) சூரிய இயக்க அட்டவணையில் (1895) ந்ப்டிகள் பற்றி விவரிக்கப்பட்டது. 1750க்கும் 1892க்கும் இடைப்பட்ட  காலத்தில் வானியல் கண்காணிப்புகளை அடிப்படையாகக் கொண்டு,  சூரிய இயக்கத்தின் மதிப்பை மதிப்பிடுவதற்கான ஒரு சூத்திரம் உருவாக்கப்பட்டது.[17] குறிப்பாக, 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் பயன்படுத்தப்பட்ட அட்டவணைகள் நியூகொம்ஸின் சூரிய இயக்கத்தை ஒட்டியவை. (1900 முதல் 1983 வரை). மேலும், எர்னெசுட்டு வில்லியம் பிரவுனின் நிலவு அட்டவணைகள் 1923 முதல் 1983 வரை பயன்படுத்தப்பட்டன. சீசியம் நுண்ணலை அணு கடிகாரத்தின் அடிப்படையில்: பல ஆண்டுகளின் வேலைகளைத் தொடர்ந்து  இங்கிலாந்தின்  டெடிங்டன், தேசிய இயற்பியல் ஆய்வகத்திலிருந்து லூயிஸ் எஸென் (Louis Essen) மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டு கடற்படையின் வானியல் நிலையத்திலிருந்து வில்லியம் மார்கோவிட்ஸ் (William Markowitz) ஆகியோர், சீசியம் அணுவின் மீ நுண் நிலைமாற்ற அதிர்வெண் மற்றும் கோளியல் காலம் ஆகியவற்றுக்கு இடையேயான உறவை உறுதிப்படுத்தினர்.[18] இதில், டபிள்யூ. டபிள்யூ. வி. (WWV) வானொலி நிலையத்திலிருந்து பெறப்பட்ட சமிக்ஞைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொதுவான காட்சி அளவீட்டு முறை பயன்படுத்தப்பட்டது.[19] அவர்கள் கோளியல் காலம் (ET), நொடி அல்லது வினாடி, தேர்ந்தெடுக்கப்பட்ட சீசியம் அணுவின் அதிர்வெண் ஆகியவை ஒரே அளவிலான 9,192,631,770 ± 20 சுழற்சிகளைப் பெற்றுள்ளன என்பதை கண்டறிந்து உறுதி செய்தனர்.[18]  (SI வினாடி ஏற்கெனவே ஏற்கப்பட்டது. SI வினாடியானது, சராசரி சூரிய காலத்தின் வினாடி மதிப்பைக் காட்டிலும் சிறிது குறுகியதாக இருந்தது.[20][21]) சார்பியல் ரீதியாக, SI வினாடி மதிப்பு பூமிவடிவத்தின் மற்றும் சுழற்சியின்  சரியான நேரமாக வரையறுக்கப்படுகிறது.[22] முன்மொழியப்பட்ட ஒளியியல் அணு கடிகாரத்தின் அடிப்படையில்: லட்லோ எட் ஆல் (Ludlow et al) மேற்கோள்: இன்று, நுண்ணலைப் பகுதியில் செயல்படும் அணு கடிகாரங்களுக்கு, ஒளியியல் அணு கடிகாரங்கள் ஒரு சவாலாக அமையும்.[23] கனடிய தேசிய ஆராய்ச்சி கவுன்சில் 2.5 × 10-11 "ஒப்பீட்டளவில் நிச்சயமற்றது" என்பதைக் குறிக்கிறது.  அயோடின் (அணு எடை 127) மூலக்கூறை அடிப்படையாகக் கொண்டிருக்கும் அணு கடிகாரத்திற்கு பதிலாக, ஸ்ட்ரான்சியம் (அணு எடை 88) அயனி பொறியைப் பயன்படுத்துவதை ஆதரிக்கிறது.[24] நிச்சயமற்ற நிலைகள் நுண்ணலைப் பகுதியில் உள்ள NIST-F1 சீசியம் அணுக் கடிகாரத்தை எதிர்த்து நிற்கின்றன, அதிர்வெண் அடிப்படையில் ஒரு நாளின் பகுதிகள் சராசரியாக பத்தின் அடுக்கு பதினாறு என்று மதிப்பிடப்படுகின்றன.[25][26] ஒரு நொடி என்பது துல்லியமான நிலைநாட்டலின் படி கீழ்க்காணுமாறு குறிப்பிடப்படும். சீசியம்-133 என்னும் அணு, தன் அடி நிலையில் இருக்கும் பொழுது அதன் அணுக்கருவில் உள்ள காந்தப்புலனின் விளைவால் நிகழும் மீ நுண் ஆற்றல் வேறுபாடுகளின் அடிப்படையில் ஒரு நொடி என்பது விளக்கபடுகின்றது. ஒரு நொடி என்பது அசையாது 0 K (கெல்வின்) வெப்பநிலையில் இருக்கும் ஒரு சீசியம்-133அணுவின் அடி நிலையில் உள்ள இரு வேறு மிக நுண்ணிய ஆற்றல் இடைவெளிகளுக்கிடையே நிகழும் 192 631 770 அலைவுகளின் கால அளவு ஆகும். ஒரு நாளில் 3600 விநாடிகள் உள்ளன. ஒரு நாளில் 24 மணி நேரமும், ஒரு மணி நேரத்தில் 60 நிமிடங்களும், ஒரு நிமிடத்தில் 60 செக்கன்களும் உள்ளன. எனவே ஒரு விநாடி 24 செக்கன்களுக்குச் சமமாகும். Notes and references பகுப்பு:SI அடிப்படை அலகுகள் பகுப்பு:கால அளவுகள்
1 நிமிடத்தில் எத்தனை விநாடிகள் உள்ளன?
60 நொடிகள்
909
tamil
70e9abc7e
பெருங்கடல் (ocean) என்பது முக்கியமான உப்பு நீர் நிலை ஆகும். இது நீர்க் கோளத்தின் முக்கியமான கூறும் ஆகும். ஏறத்தாழ 71% புவி மேற்பரப்பு (361 மில்லியன் சதுர கிலோமீட்டர்) தொடர்ச்சியாக அமைந்துள்ள பெருங்கடல்களினால் மூடப்பட்டுள்ளது. இது பல பெருங்கடல்களாகவும், பல சிறிய கடல்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. பூமியின் மேற்பரப்பில் சுமார் 71% மற்றும் பூமியின் உயிர்க்கோளத்தில் 90% அடங்கியது கடல் ஆகும். [1] புவியில் உள்ள நீரில் 97% கடலில் உள்ளது, மேலும் கடல்சார் அறிஞர்கள் உலக சமுத்திரத்தில் 5% க்கும் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். [1] புவியின் கடலானது ஏறக்குறைய 3,700 மீட்டர் (12,100 அடி) சராசரி ஆழத்துடன்,[2][3][4] 1.35 பில்லியன் கனசதுர கிலோமீட்டர் (320 மில்லியன் க்யூ) நீரைக் கொண்டது ஆகும். இதன் பரப்பளவின் அரைப் பகுதிக்கு மேல் 3,000 மீட்டருக்கு (9,800 அடி) மேற்பட்ட ஆழம் கொண்டது. சராசரி உப்புத்தன்மை ஆயிரத்தில் 35 பகுதி (35%) ஆகும். பொதுவாக முழுக் கடல்நீரும் சராசரியாக ஆயிரத்துக்கு 30 - 38 பகுதிகள் உப்புத்தன்மை கொண்டது. பூமியின் உயிர்கோலத்தில் உலகப் பெருங்கடல்கள் முக்கிய அங்கமாக இருப்பதால், இது அனைத்து காலங்களிலிலும், கார்பன் சுழற்சியின் பகுதிகள், காலநிலை மற்றும் வானிலை போன்றை பாதிக்கிறது. உலக சமுத்திரத்தில் 230,000 அறியப்பட்ட உயிர் இனங்கள் உள்ளன, ஆனால் பெரும்பாலானவற்றை கண்டுபிடிக்க முடியாததால், இருபது மில்லியனுக்கும் அதிகமான உயிரினங்கள் உள்ளதாக கருதப்படுகிறது. [5] பூமியின் பெருங்கடலின் தோற்றம் குறித்து தெரியவில்லை; ஹேடான் காலத்தில் உருவாகிய சமுத்திரங்கள், உயிரின் வெளிப்பாட்டிற்கு உந்துதலாக இருந்திருக்கலாம். சூரிய மண்டலத்தில் மற்ற இடங்களில் சமுத்திரங்கள் இருப்பதற்கான சான்றுகள் உள்ளன இருப்பினும், புவிக்கு வெளியே உறுதிப்படுத்தப்பட்ட ஒரே நீர்மக் கடல் சனி கோலின் துணைக்கோலான டைட்டனில் உள்ள பெரிய டைட்டானின் ஏரிகள் ஆகும். புவியியல் வரலாறுகளின்படி துவக்கத்தில், செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகியவை பெரிய நீர் சமுத்திரங்களைக் கொண்டிருந்ததாக கோட்பாட்டு உள்ளது. செவ்வாயில் கடல் குறித்த கருதுகோள் செவ்வாயின் மேற்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி தண்ணீரால் மூடப்பட்டிருந்ததாக கூறுகிறது, வெள்ளி கிரகத்தில் ஏற்பட்ட பசுமைக்குட்டில் விளைவால் அங்கிருந்த கடல் ஆவியாகி சென்றிருக்கலாம் என்கின்றனர். பல குள்ள கிரகங்கள் மற்றும் துணைக்கோல்களின் மேற்பரப்பில் உறுதிபடுத்தப்படாத சமுத்திரங்கள் இருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றன; குறிப்பிடத்தக்க வகையில், வியாழன் கோளின் துணைக்கோளான ஐரோப்பாவின் கடல் பூமியின் நீரின் அளவைவிட இரு மடங்கு அதிகமாகக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சூரியக் குடும்பத்தில் உள்ள பெரிய கிரகங்களில் திரவ வளிமண்டல அடுக்குகள் இன்றும் இருக்கலாம் என உறுதிப்படுத்த கூறுகளைக் கொண்டிருக்கின்றன. பெருங்கடல் கிரகங்கள் என்பது ஒரு கருதுகோள் வகையாகும், இந்த கிரகங்களின் மேற்பரப்பு முழுவதும் திரவத்தால் மூடப்பட்டிருக்கும். [6][7] சொற்பிறப்பு ஆங்கிலத்தில் பெருங்கடலுக்கு வழங்கப்படும் சொல்லான «ஓஷன்» என்னும் சொல் செவ்வியல் கால பழஞ்சொல்லாகும், ஒசியஸ் (/ oʊsiːənəs /; கிரேக்கம்: Ὠκεανός Ōkeanós, [8] உச்சரிக்கப்படுகிறது [ɔːkeanós]), கிரேக்க செவ்வியல் புராணங்களின்படி டைட்டனின் அண்ணனாவார், இவர் உலகத்தை சுற்றிவளைத்த மகத்தான ஆற்றின் ஆளுருவாக, பண்டைய கிரேக்கர்கள் மற்றும் ரோமர நாகரிக மக்களால் கடல் குறித்த தெய்வீகமாக நம்பிக்கையாக இருந்தது. ஒசியஸ் என்ற கருத்துவில் இந்திய-ஐரோப்பிய கருத்துருவில் தொடர்பு கொண்டது என அறிஞர்கள் கருதுகின்றனர். [9] புவியின் உலகளாவிய கடல் கடல் பகுதிகள் பொதுவாகப் புவி மேற்பரப்பிலுள்ள பெருங்கடல்கள் தனித்தனியானவை எனக் கொள்ளப்பட்டு வந்தாலும், அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள உப்பு நீருடன் கூடிய உலகப் பெருங்கடல் ஆகும். இவ்வாறு பெருங்கடல்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கட்டற்ற பரிமாற்றங்களைக் கொண்ட ஒரே உலகப் பெருங்கடல் அல்லது உலகக்கடல் என்றும் அழைக்கப்படுகிறது. [10][11] முதன்மையான பெருங்கடல் பிரிவுகள், ஒரு பகுதி கண்டங்களாலும், தீவுக் கூட்டங்களாலும், பிற கட்டளை விதிகளாலும் இறங்குவரிசையில் பட்டியலிடப்பட்டுள்ளன,  பல்வேறு தொல்பொருட்கள், மற்றும் பிற நிபந்தனைகளுடன். [12][7][13] ஆதாரங்கள்: புவிக் கலைக்களஞ்சியம், [21][14][15][16][20] சர்வதேச ஹைட்ரோகிராபிக் ஆர்கனைசேஷன்,[22] பிராந்திய கடல்வழி: ஒரு அறிமுகம் (டாம்சாக், 2005), [18] என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா [19] சர்வதேச தொலைத்தொடர்பு கழகம். [23]|style=line-height: 1.4em; margin: 1em 0 1.4em 1em; font-size: 0.9em;}} பசிபிக், அத்திலாந்திக் பெருங்கடல்களை புவி மையக் கோட்டை வைத்து வடக்குத் தெற்குப் பகுதிகளாகப் பிரிப்பதும் உண்டு. பெருங்கடல்களின் சிறிய பகுதிகள் கடல்கள், வளைகுடாக்கள், விரிகுடாக்கள் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இவற்றைவிட நிலத்தால் சூழப்பட்ட சில உப்புநீர் நிலைகளும் உள்ளன. ஆரல் கடல், பெரும் உப்புநீரேரி போன்றன இவற்றுட் சில. இவை கடல் என அழைக்கப்பட்டாலும் உண்மையில் இவை உப்புநீரேரிகளே. மிகப்பெரிய பெருங்கடல் உலகின் மிகப் பெரிய பெருங்கடல் பசுபிக் பெருங்கடலாகும். இது உலக பரப்பளவில் மூன்றில் ஒரு பகுதியை தனது பரப்பளவாகக் கொண்டுள்ளது. பசுபிக் பெருங்கடலே உலகின் ஆழமான பெருங்கடலும் ஆகும். இது முப்பத்தாறாயிரத்து இருனூறு அடி ஆழம் கொண்டதாகும். மிக சிறிய பெருங்கடல் உலகின் மிகச்சிறிய பெருங்கடல் ஆர்டிக் பெருங்கடலாகும். இதை வடக்கு பெருங்கடல் என்றும் கூறுவர். பெருங்கடலின் நிறம் பொதுவாக மக்கள் அனைவரும் தண்ணீர் நீல வானத்தை பிரதிபலிக்கிறது அதனால் நீல நிறமாக உள்ளது என்று கூறுகிறார்கள்.ஆனால் அது உண்மை இல்லை. கடலின் நீரின் அளவு மற்றும் ஆழத்தின் அளவை பொறுத்து நிறம் மாறுபடும்.பொதுவாக இந்த நிறமாற்றங்களை பெருங்கடல்களில் காணலாம். பெரும்பாலும் பெருங்கடல் பச்சை மற்றும் நீல நிறத்தில் காணப்படும்.இந்த நிற வேறு பாட்டிற்கு காரணம் கடல் நீர் சூரிய ஒளியில் உள்ள சிவப்பு நிறத்தை உறிஞ்சி நீல மற்றும் பச்சை வண்ணங்களை உமிழ்கின்றது. உயிரியல் உயிரினங்களின் வாழ்வில் கடல் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. கடல் நீராவி, நீர் சுழற்சியின் ஒரு கட்டமாகவும், மழையின் முதன்மை ஆதாரமாகவும், உள்ளது மேலும் கடலின் வெப்பநிலையானது நிலத்தில் வாழும் உயிர்களின் வாழ்க்கையை பாதிக்கும் காலநிலை மற்றும் காற்றின் வடிவங்களையும் தீர்மானிக்கின்றது. கடலுக்குள் உயிர் வாழ்க்கையானது 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக உருவானது. கடற்கரையிலிருந்து ஆழம் மற்றும் தூரம் இரண்டும் ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் போன்ற பல்லுயிரிகளை வலுவாக பாதிக்கின்றன. [24] கடல்களில் வாழும் உயிரினங்கள் உப்பு நீரிலும் வாழ முடியும். பல்வேறு கடல் உயிரினங்கள் ஆழமற்ற நீர், மற்றும் ஆழமான கடல் பகுதியில் வாழ்கின்றனர். கிட்டத்தட்ட கடலில் அனைத்து விலங்குகளும் நேரடியாக அல்லது மறைமுகமாக தங்கியுள்ளது. ஆழமற்ற நீரில் கடல் நண்டுகள் காணலாம்.டால்பின்கள், திமிங்கலங்கள் போன்றவை பெருங்கடலில் அதிகமாக காணப்படுகின்றன.மற்றும் பல வகை பாலூட்டிகளும் பெருங்கடல் உயிரினங்களில் அடங்கும். பெருங்கடலின் சூழல் கடலை போலவே பெருங்கடலின் சூழலும் இருக்கும்.பெருங்கடலில் ஏராளமான எரிமலைகள் இருக்கும். மேலும், எவரெசுட்டு சிகரங்களை காட்டிலும் மிகப்பெரிய சிகரங்கள் பெருங்கடலில் இருக்கும். மேலும் பவளப்பாறைகள், தாதுக்களும் பெருங்கடளில் புதைந்து உள்ளன. பெருங் கடலில் உப்பு பெருங்கடல்கள் உப்பு நீரைக் கொண்டுள்ளது. உப்புக் கனிமங்கள் நிலத்திலிருந்து ஆறுகள் வழியாக கடலில் கலப்பதால், கடல்நீர் உப்புத் தன்மைக் கொண்டுள்ளது. வளிமண்டலத்தில் உள்ள கரியமிலவாயு, மழை நீருடன் கலந்து சிறிது அமிலத் தன்மையாக மாறி, பின் மலைநீர் ஆறாக உருவமாறி, மலைப் பாறைகள் மற்றும் மண்னில் உள்ள பலவகையான உப்பு முதலிய கனிமங்களுடன் கலந்து இறுதியாக கடலில் கலப்பதாலும் கடல் நீர், அருந்த முடியாத அளவிற்கு உப்புநீராக மாறுகிறது. மேலும் கடலுக்கடியில் உள்ள எரிமலைகள் நீராவியை கக்குவதாலும், எரிமலைகள் வெடிப்பதாலும், புவிக்கடியில் உள்ள உப்புக் கனிமங்கள் கடலில் கலப்பதால் கடல்நீர் உப்புத் தன்மையாக மாறுகிறது.[25] கடலில் அறுவடை ருஸ்யா ம்ற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் பெருங்கடலை வைத்து நிறைய லாபம் ஈட்டுகின்றனர்.ருஸ்ய , ஜப்பானிய மீன்பிடி தொழிலாளர்கள் மிகப்பெரிய கப்பல்களில் சென்று பல வருடங்களுக்கும் மேலாக பெருங்கடளில் உள்ள மீன்களை பிடிக்கச் செல்வர்.அந்த கப்பல்களிளேயே அவர்களும் அவர்களின் குடும்பமும் தங்க அனைத்து வசதிகளும் இருக்கும்.மருத்துவமனை, தொழிற்சாலை, பள்ளிகள் உணவு மற்றும் பல இடங்கள் கப்பலிலேயே இருக்கும். மீன்பிடி தொழில் கடலியல் வல்லுநர்கள் 15,300 வகையான மீன்கள் பெருங்கடளில் உள்ளது எனவும். அதில் பெரும்பாலும் உணவுக்காக பயன்படுத்தப்படுகின்றன என்வும் கூறுகின்றனர். மீன் புரதச்சத்து அபரீதமாக உள்ள உணவு ஆகும். மீன்பிடி தொழில்கள் மில்லியன் கணக்கான மக்களுக்கு உணவும் வேலையும் கொடுக்கின்றது. இன்று, வழக்கமாக கடல் மீன்பிடி மூலம், கடலோர மக்களுக்கு தேவையான கலோரிகளில் சுமார் 2% கடல் மீன்கலே வழங்குகிறது. துனா, நெத்தலி, மற்றும், போலாக், ஃப்ளவண்டா மற்றும் குறுகு ஆகியவை கடலின் மேற்பரப்பில் பிடிபடும் மீன்களாகும்.ஒரு மில்லியன் டன் கடல் மீன்கள் வட பசிபிக் மற்றும் வட அட்லாண்டிக் கடல் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் அகப்படுகின்றன.பொதுவாக பிடிபடும் பத்து மீன்களில் கிட்டத்தட்ட எட்டு மீன்கள் மனிதர்களுக்கு உணவாக உண்ணப்படுகிறது. மற்ற மீன்கள் உரம், பசை, மற்றும் பிற விலங்குகளுக்கு உணவாக பயன்படுத்தப்படுகின்றன. பெருங்கடலின் வெப்பம் கடல் பகுதியில் வெப்பம் வேறுபடும். இரண்டு விதங்களாக வெப்பம் வேறுபடும் ஒன்று செங்குத்தாக (மேலிருந்து கீழாக) மற்றும் கிடைமட்டமாக மாறும். நிலநடுக்கோடு பகுதியில் கடல் சூடாக இருக்கும், முனையில்(போல்) மிகவும் குளிர்ந்த நீராகவும், பனிப்பாறைகளாகவும், இருக்கும். நீர், நிலத்தை காட்டிலும் மெதுவாக வெப்பம் மற்றும் குளுமையாடைகிறது. எனவே கடலின் பருவசூழல் நிலத்தைக்காட்டிலும் மாறுபடும். மேலும் கடலின் வெப்பம் ஒரே இடத்திலும் மூன்று விதமாக மாறும். அதாவது மேற்பரப்பில் ஒரு வெப்பமும், 2000 அடிக்கு மேல் ஒரு வெப்பமும், அடிப்பகுதியில் ஒரு வெப்பமும் உணரப்படும். இதை வெப்ப கலப்பு அடுக்குகள் என்பர். பெருங்கடலின் அடிபகுதிகளில் வெளிச்சம் இல்லாமல் கருப்பாக இருக்கும்.ஏனெனில் கடல் நீரில் உள்ள உப்புக்கள் ஒளியை சிதறச்செய்துவிடும். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:கடலியல் பகுப்பு:இயங்குபடம் உள்ள கட்டுரைகள்
உலகில் மிக பெரிய பெரும்கடல் எது?
பசுபிக்
4,346
tamil
5e1f9bca8
போர்த்துகல் (Portuguese: Portugal), என்றழைக்கப்படும் போர்த்துகல் குடியரசு (Portuguese Republic, Portuguese: República Portuguesa) ஐரோப்பாக் கண்டத்தின் தென்மேற்குப்பகுதியில் ஐபீரியத் தீவக்குறையில் உள்ள ஒரு நாடு ஆகும். கண்ட ஐரோப்பாவின் மேற்குக் கோடியில் அமைந்த நாடும் இதுவே. இதன் வடக்கிலும் கிழக்கிலும் ஸ்பெயின் நாடும் மேற்கிலும் தெற்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலும் உள்ளன. கண்டப் போத்துக்கல் தவிர, அத்திலாந்திக் தீவுக்கூட்டங்களான அசோரெசு, மதேரியா என்பனவும் போர்த்துகலின் இறைமைக்குள் அடங்கும் பகுதிகள் ஆகும். இவை போர்த்துகலின் தன்னாட்சிப் பகுதிகள். போர்த்துகல் என்னும் பெயர், போர்ட்டசு கேல் என்னும் இலத்தீன் பெயர் கொண்ட அதன் இரண்டாவது பெரிய நகரான போர்ட்டோ என்பதில் இருந்து பெறப்பட்டது.[1] லிஸ்பன் போர்த்துகலின் தலைநகரமும் நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும். அலுவல் மொழி போர்த்துக்கீச மொழி ஆகும். தர்போதைய போர்த்துகல் குடியரசின் எல்லைகளுக்குள் அடங்கிய நிலப்பகுதிகள் வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இருந்தே தொடர்ச்சியாகக் குடியேற்றங்களைக் கொண்டதாக இருந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட காலம் உரோமரும், விசிகோதியர், சுவேபியர் ஆகியோரும் ஆட்சி செய்த பின்னர், 8 ஆம் நூற்றாண்டில் ஐபீரியத் தீவக்குறை முழுவதையும் இசுலாமியரான மூர்கள் கைப்பற்றிக் கொண்டனர். பின்னர் இவர்கள் வெளியேற்றப்பட்டனர். கிறித்தவ மீட்பின்போது, 1139 ஆம் ஆண்டில், போர்த்துகல் கலீசியாவில் இருந்து பிரிந்து தனியான இராச்சியம் ஆனது. இதன்மூலம் ஐரோப்பாவின் மிகப் பழைய தேச அரசு என்ற பெருமையையும் பெற்றது.[2] 15 ஆம், 16 ஆம் நூற்றாண்டுகளில், கண்டுபிடிப்புக் காலத்தின் முன்னோடியாக விளங்கியதன் விளைவாக, போர்த்துகல் மேற்கத்திய செல்வாக்கை விரிவாக்கி முதல் உலகப் பேரரசை நிறுவியதுடன்,[3] உலகின் முக்கியமான பொருளாதார, அரசியல், படைத்துறை வல்லரசுகளில் ஒன்றாகவும் ஆனது. அத்துடன், நவீன ஐரோப்பிய குடியேற்றவாதப் பேரரசுகளுள் மிகக் கூடிய காலமான ஏறத்தாழ 600 ஆண்டுகள் நிலைத்திருந்தது போர்த்துக்கேயப் பேரரசே. இது 1415ல் செயுட்டாவைக் கைப்பற்றியதில் இருந்து 1999ல் மாக்கூவுக்கும் 2002ல் கிழக்குத் திமோருக்கும் விடுதலை அளிக்கும்வரை நீடித்து இருந்தது. இந்தப் பேரரசு, உலகம் முழுவதும் இன்று 53 நாடுகளை உள்ளடக்கியிருக்கும் பரந்த பகுதியில் பரவி இருந்தது. எனினும், போர்த்துகலின் அனைத்துலகத் தகுதி 19 ஆம் நூற்றாண்டில், குறிப்பாக அதன் மிகப்பெரிய குடியேற்ற நாடான பிரேசில் விடுதலை பெற்ற பின்னர், பெருமளவு குறைந்து போனது. போர்த்துகல் மிகவும் கூடிய மனித வளர்ச்சிச் சுட்டெண்ணுடன் கூடிய வளர்ச்சியடைந்த ஒரு நாடு. வாழ்க்கைத் தரச் சுட்டெண் அடிப்படையில் உலகில் 19 ஆவது இடத்திலும் (2005), பூமராங்கின் உலகப் புதுமைகாண் சுட்டெண் அடிப்படையில் 25 ஆவது இடத்திலும் உள்ளது.[4] இது உலகில் கூடிய அளவு உலகமயமான நாடுகளில் ஒன்றும், அமைதியான நாடுகளின் ஒன்றும் ஆகும். இது ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் அவை ஆகியவற்றில் உறுப்பினராக இருப்பதுடன், இலத்தீன் ஒன்றியம், ஐபீரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பு, பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பு, நாட்டோ, போத்துக்கேய மொழி நாடுகள் சமூகம், யூரோசோன், செங்கன் ஒப்பந்தம் ஆகியவற்றின் தொடக்க உறுப்பு நாடாகவும் உள்ளது. வரலாறு தொடக்க வரலாறு போர்த்துகலின் முந்திய வரலாறு, ஐபீரியத் தீவக்குறையின் பிற பகுதிகளின் வரலாற்றுடன் சேர்ந்தே இருந்தது. இப்பகுதியில் குடியேறியிருந்த முன்-செல்ட்டுகள், செல்ட்டுகள் ஆகியோரிலிருந்து, கலீசிகள், லுசித்தானியர், செல்ட்டிசிகள், சைனெட்டுகள் போன்ற இனத்தினர் தோன்றினர். போனீசியரும், கார்த்தசினியரும் இப்பகுதிக்கு வந்தனர். இசுப்பானியாவின் பகுதிகளான லுசித்தானியாவும், கலீசியாவின் ஒரு பகுதியும் உரோமக் குடியரசினுள் அடங்கியிருந்தன. கிமு 45 முதல் கிபி 298 வரையான காலப்பகுதியில் சுவெபி, புரி, விசிகோத் ஆகிய இனத்தவர் குடியேறியிருந்தனர். பின்னர் இப்பகுதிகளை முசுலிம்கள் கைப்பற்றிக்கொண்டனர். தொல்பழங்காலத்தில் இன்றைய போர்த்துகல் இருக்கும் பகுதியில் நீன்டர்தால்கள் வாழ்ந்துவந்தன. பின்னர் ஓமோ சப்பியன்கள், எல்லைகள் இல்லாதிருந்த வடக்கு ஐபீரியத் தீவக்குறைப் பகுதிகளில் அலைந்து திரிந்தனர். இச் சமூகம் ஒரு வாழ்வாதாரச் சமூகமாகவே இருந்தது. இவர்கள் வளமான குடியேற்றங்களை உருவாக்காவிட்டாலும், ஒழுங்கமைந்த சமூகமாக இருந்தனர். புதிய கற்காலப் போர்த்துகலில், மந்தை விலங்கு வளர்ப்பு, தானியப் பயிர்ச்செய்கை, மழைநீர் ஏரி அல்லது கடல் மீன்பிடித்தல் போன்றவற்றில் முயற்சிகள் செய்யப்பட்டன. கிமு முதலாவது ஆயிரவாண்டின் தொடக்க காலத்தில், மைய ஐரோப்பாவில் இருந்து பல அலைகளாக போர்த்துகலுக்குள் வந்த செல்ட்டுகள் உள்ளூர் மக்களுடன் மணம் கலந்ததால் பல பழங்குடிகளை உள்ளடக்கிய பல்வேறு இனக்குழுக்கள் உருவாயின. இவற்றுள் முக்கியமானவை, வடக்கு போர்த்துகலைச் சேர்ந்த கலைசியர் அல்லது கலீசி, மையப் போர்த்துகலைச் சேர்ந்த லுசித்தானியர், அலென்டசோவைச் சேர்ந்த செல்ட்டிசி, அல்கார்வேயைச் சேர்ந்த சைனெட்டுகள் அல்லது கோனீ எனப்படும் இனக்குழுக்கள் ஆகும். உரோம லுசித்தானியாவும், கலீசியாவும் ஐபீரியத் தீவக்குறையினுள் உரோமரின் முதல் ஆக்கிரமிப்பு கிமு 219ல் இடம்பெற்றது. 200 ஆண்டுகளுக்குள் முழுத் தீவக்குறையுமே உரோமக் குடியரசுடன் இணைக்கப்பட்டுவிட்டது. உரோமரின் எதிரிகளான கார்த்தசினியர் கரையோரக் குடியேற்றங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இன்று போர்த்துகலாக இருக்கும் பகுதிகளை உரோமர் கைப்பற்றுவதற்கு ஏறத்தாழ 200 ஆண்டுகள் பிடித்ததுடன், பல இளம் போர்வீரர்களும் தமது உயிர்களை இழந்தனர். அத்துடன் கைதிகளாகப் பிடிபட்டவர்களுள் பேரரசின் பிற பகுதிகளில் விற்கப்படாதவர்கள், சுரங்கங்களில் அடிமைகளாக விரைவான சாவைத் தழுவினர். கிமு 150ல் வட பகுதியில் ஒரு கலகம் ஏற்பட்டது. லுசித்தானியரும், பிற தாயகப் பழங்குடிகளும் விரியாத்தசுவின் தலைமையில் மேற்கு ஐபீரியாவைக் கைப்பற்றிக்கொண்டனர். உரோம், ஏராளமான படைகளையும், மிகச் சிறந்த தளபதிகளையும் கலகத்தை அடக்குவதற்காக அனுப்பியும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. லுசித்தானியர்கள் நிலப்பகுதிகளைத் தொடர்ந்து கைப்பற்றிக் கொண்டிருந்தனர். உரோமத் தலைவர்கள் தமது உத்தியை மாற்றிக்கொள்ளத் முடிவு செய்தனர். விரியாத்தசுவைக் கொல்வதற்காக அவனது கூட்டாளிகளுக்குக் கையூட்டுக் கொடுத்தனர். கிமு 139ல் விரியாத்தசு கொல்லப்பட்டான். தௌலாத்தசு என்பவன் தலைவனானான். ரோம் ஒரு குடியேற்றவாத ஆட்சியை அங்கே நிறுவியது. விசிகோத்தியக் காலத்திலேயே லுசித்தானியாவின் உரோமமயமாக்கம் முழுமை பெற்றது. கிமு 27ல் லுசித்தானியா உரோமப் பேரரசின் ஒரு மாகாணம் ஆனது. லுசித்தானியர் தமது சுதந்திரத்தை இழந்து அடக்கப்படுபவர்கள் ஆயினர். பின்னர், கலீசியா என்று அழைக்கப்பட்ட, லுசித்தானியாவின் வடக்கு மாகாணம் உருவானது. இன்று பிராகா என்று அழைக்கப்படும் பிராக்காரா ஆகசுத்தா என்பது இதன் தலைநகரமாக இருந்தது. இன்றும் காசுட்ரோ என அழைக்கப்படும் மலைக் கோட்டைகளின் அழிபாடுகளும் பிற காசுட்ரோ பண்பாட்டு எச்சங்களும் தற்காலப் போர்த்துகல் முழுவதும் காணப்படுகின்றன. ஏராளமான உரோமர் காலக் களங்கள் இன்றைய போர்த்துகலில் பரவலாக உள்ளன. சில நகர் சார்ந்த எச்சங்கள் மிகவும் பெரியவை. கொனிம்பிரிகா, மிரோபிரிகா என்பன இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள். முசுலிம் ஐபீரியா கிபி 712ல் உமயாட் கலீபகம் ஐபீரியத் தீவக்குறையைக் கைப்பற்றியதில் இருந்து 1249ல் போத்துகலின் மூன்றாம் அபோன்சோ திரும்பக் கைப்பற்றும் வரை ஏறத்தாழ ஐந்தரை நூற்றாண்டுகள் போர்த்துகல் கலீபகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. விசிகோத்துகளை சில மாதங்களிலேயே முறியடித்த உமயாட் கலீபகம் தீவக் குறையினுள் விரைவாகத் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தியது. கிபி 711ல் தொடங்கி இன்றைய போர்த்துகலுக்குள் அடங்கும் நிலப்பகுதிகள், இந்தியாவின் சிந்து நதி முதல் பிரான்சுக்குத் தெற்கேயுள்ள பகுதிகள் வரை பரந்திருந்ததும் டமாசுக்கசைத் தளமாக கொண்டிருந்ததுமான உமயாட் கலீபகத்தின் பேரரசின் பகுதியாயின. 750ல் பேரரசின் மேற்குப் பகுதி தன்னைக் கலீபகத்தில் இருந்து விடுவித்துக் கொண்டு முதலாம் அப்த்-அர்-ரகுமான் தலைமையில் கோர்தோபா அமீரகமாக உருவாகியது. ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் 929 ஆம் ஆண்டில், இந்த அமீரகம் கோர்தோபா கலீபகமாக மாறியது. 1031 ஆம் ஆண்டில் இது தைபா இராச்சியங்கள் எனப்பட்ட 23க்கும் அதிகமான சிறிய இராச்சியங்களாகப் பிரிந்தது. தைபாக்களின் ஆளுனர்கள் தம்மைத் தமது மாகாணங்களுக்கு எமிர்களாக அறிவித்துக்கொண்டு வடக்கே இருந்த கிறித்தவ இராச்சியங்களுடன் அரசுமுறை உறவுகளையும் ஏற்படுத்திக் கொண்டனர். போர்த்துகலின் பெரும்பாலான பகுதிகள் அப்தாசிட் வம்சத்தின் படாயோசு தைபாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அலன்டாலசு குரா எனப்படும் பல்வேறு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. கர்ப் அல் அன்டாலசு மிகவும் பெரிதாக இருந்தபோது 10 குராசுகளை உள்ளடக்கியிருந்தது. ஒவ்வொரு குராவுக்கும் தனியான தலைநகரம் இருந்தது ஆளுனரும் இருந்தார். அக்காலத்தில் இருந்த முக்கியமான நகரங்கள் பேசா, சில்வெசு, அல்காசர் டோ சல், சாந்தாரெம், லிசுபன், கொயிம்பிரா என்பன. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:ஐரோப்பிய நாடுகள் பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
போர்த்துகல் நாட்டின் தலைநகரம் எது?
லிஸ்பன்
686
tamil
faad03372
மார்பகப் புற்றுநோய் அல்லது மார்புப் புற்று நோய் என்பது பெண்களுக்கே வரும் புற்று நோய்களுள் ஒன்று. (Breast cancer) என்பது மார்பகத் திசுக்களில் ஆரம்பிக்கும் புற்றுநோய்களைக் குறிக்கும், இது பெரும்பாலும் பால் சுரப்பி நாளங்களின் அல்லது அந்த குழாய்களுக்கு பாலைக் கொண்டு சேர்க்கும் நுண்ணறைகளின் உள் அடுக்குகளில் தோன்றும். நாளங்களில் உருவாகும் புற்றுநோய்களுக்கு நாள புற்றுநோய் (டக்டல் கார்சினோமாஸ்) என்று பெயர்; அதேபோல நுண்ணறைகளில் தொடங்கும் புற்றுகளுக்கு நுண்ணறை தீவிரபுற்றுநோய் (லோபுளர் கார்சினோமாஸ்) என்று பெயர். மார்பக புற்றுநோய்களில், பல வகையான நிலைகள் (நோய் பரவல்), தீவிரம், மற்றும் மரபுசார் காரணிகள் உள்ளன: இவற்றின் அடிப்படையிலேயே நோயிலிருந்து மீளுதலின் சாத்தியம் அடங்கியுள்ளது.[8] நோயுற்றவரின் வாழும் காலத்தைக் கணக்கிட கணினி மாதிரிகள் உள்ளன.[9] மிகச்சிறந்த சிகிச்சை முறைகளுடன், நோய் நீங்கி 10-ஆண்டுகாலம் வாழுவதற்கான வாய்ப்புகள் 98% முதல் 10% வரை வேறுபடுகின்றன. இந்த சிகிச்சைகளில், அறுவை, மருந்துகள் (இயக்கு நீர் மருத்துவம் (ஹார்மோன் தெரபி) மற்றும் வேதிசிகிச்சை (கீமோதெரபி)), மற்றும் கதிரியக்கம் ஆகிய சிகிச்சைகள் அடங்கும். உலகெங்கும் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில், 10.4% நிகழ்வுகள் மார்பக புற்றுநோயால் ஏற்படுகிறது, இது தோல் மேல் ஏற்படாத புற்றுநோயில் இரண்டாவது இடத்தையும் (நுரையீரல் புற்றுநோய்க்கு அடுத்ததாக) புற்றுநோயால் ஏற்படும் மரணங்களில் ஐந்தாவது பெரிய காரணமாகவும் இருக்கிறது.[10] 2004ஆம் ஆண்டில், உலகெங்கும் 519,000 மரணங்கள் மார்பக புற்றுநோயால் ஏற்பட்டது (புற்றுநோய் மரணங்களில் 7%; மொத்த மரணங்களில் 1% ).[11] மார்பக புற்றுநோயானது, ஆண்களை விட 100 மடங்கு அதிகமாக பெண்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன, அதேநேரத்தில் பிழைப்பதற்கான வாய்ப்புகள் இரண்டு பாலினங்களிலும் ஒரே மாதிரியே உள்ளன.[12][13][14] சில புற்றுநோய்கள் வளர்ச்சியடைய, ஹார்மோன்கள் (தூண்டி முட்கள்) தேவைப்படுகின்றன, அதாவது பெண்மை இயக்க நீர் (ஈஸ்ட்ரோஜன்) மற்றும் மாதவிடாய் ஒழுக்கு இயக்கி நீர் (புரோஜெஸ்டிரோன்) போன்றவை மேலும் அந்த ஹார்மோன்களுக்கான ஏற்பிகளைக் கொண்டுள்ளன. அறுவை சிகிச்சைக்கு பின்னர், அவ்வகை புற்றுநோய்கள், ஹார்மோன்களுடன் செயல்புரியும் டாமோக்சிஃபென் போன்ற மருந்துகளால் சிகிச்சையளிக்கப்படுகின்றன, மற்றும் முட்டைப்பை (ஓவரி) அல்லது வேறு இடங்களில் ஈஸ்ட்ரோஜன் உருவாவதைத் தடுக்கின்றன, இதனால் ஓவரியும் கருத்தரிக்கும் வாய்ப்புகளும் பாதிப்படையக் கூடும். அறுவை சிகிச்சைக்கு பின்னர், ஆபத்து குறைந்த, ஹார்மோனால் தூண்டப்படும் மார்பக புற்றுநோய்கள் ஹார்மோன் தெரபி மற்றும் கதிரியக்கம் ஆகியவற்றை மட்டும் கொண்டு சிகிச்சையளிக்கப்படலாம். ஹார்மோன் ஏற்பிகள் இல்லாத, அல்லது அக்குள்களில் உள்ள நிணநீர் சுரப்பிகளுக்கு பரவி விட்ட, அல்லது சில வெளிப்படையான மரபுசார் குணநலன்களைக் காட்டுகின்ற மார்பக புற்றுநோய்கள் அதிக ஆபத்தானவை, எனவே அவற்றுக்கு மிகவும் தீவிர சிகிச்சையளிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் பிரபலமான, ஒரு முக்கியமான மருந்தானது, சைக்ளோபாஸ்பமைடு உடன் டோக்சோரூபிசின் (அட்ரியாமைசின்), சிஏ என்றறியப்படுகிறது; இந்த மருந்துகள், வளரும் புற்றில் உள்ள டிஎன்ஏக்களை அழிக்கும், அதேநேரத்தில் வேகமாக வளரும் சாதாரண செல்களையும் அழிக்கக்கூடியது, இந்நிலையில் இவை தீவிரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. சிலநேரங்களில் டாக்ஸேன் மருந்து, டாகிடாக்ஸல் போன்றவை, சேர்க்கப்படுகின்றன, இதனால் இந்த மருந்தின் பெயர் CAT என்றழைக்கப்படுகிறது; டாக்ஸேன் புற்றுநோய் உயிரணுக்களில் உள்ளை மைக்ரோடியூப்லஸை அழிக்கிறது. இதே போல ஒரு சிகிச்சை முறை ஐரோப்பாவிலும் பிரபலமாகவுள்ளது, அது சைக்ளோபாஸ்மைடு, மீதோட்ரெக்சேட், மற்றும் ஃப்ளூரோசில் (CMF) ஆகியவையாகும்.[15] ட்ராஸ்டுஸூமாப் போன்ற மோனோக்ளோனால் ஆன்டிபாடிகள், HER2 உருமாற்றத்தைக் கொண்ட புற்றுநோய் உயிரணுக்களில் பயன்படுத்தப்படுகின்றன. கதிரியக்கமானது, அறுவை சிகிச்சையின்போது தவறிய புற்றுநோய் செல்களை அழிக்க பொதுவாக பயன்படுத்தப்படுகிறது, இதனால் வாழ்நாள் அதிகமாகும், ஆனாலும் இதயமானது கதிரியக்கத்தின் தாக்குதலைப் பெற்றால் அதற்கு பின்வரும் ஆண்டுகளில் இதய செயலிழப்பும் கூட ஏற்படும் வாய்ப்புண்டு.[16] நோயின் பிரிவுகள் வெவ்வேறு நிலைகளின் அடிப்படையில் மார்பக புற்றுநோயை வகைப்படுத்தலாம். இவற்றில் ஸ்டேஜ் (TNM), நோயியல் (பேத்தாலஜி), தரம் (கிரேட்), ஏற்பி நிலை மற்றும் டிஎன்ஏ சோதனையால் தீர்மானிக்கப்பட்ட மரபணுக்கள் உள்ளதா அல்லது இல்லையா என்பன அடங்கும்: புற்றுநோய் நிலை மார்பகப் புற்றுநோய்க்கான TNM வகைப்பாடு கட்டியின் அளவு (T), அது அக்குள்களில் உள்ள நிணநீர் முடிச்சுகளுக்கு (N) பரவியுள்ளதா , மற்றும் அந்த கட்டி மெட்டாடாஸ்சைஸ்ட் (M) அல்லது உடலில் மிக தூரத்தில் உள்ள பாகங்களுக்கு பரவியுள்ளதா என்பனவற்றின் அடிப்படையில் அமைந்ததாகும். பெரிய அளவு, முடிச்சுகளுக்கு பரவல், மெட்டாஸ்டாசிஸ் ஆகியவை பெரிய நிலை எண்ணையும், குறைவான சரிசெய்தல் வாய்ப்பையும் குறிக்கும். பேத்தாலஜி (நோய்க்குறியியல்) பெரும்பாலான மார்பகப் புற்றுநோய்கள் குழாய்கள் அல்லது லோப்யூல்களில் உள்ள எபிதீலியம் திசுக்களிலிருந்து உருவாகின்றன. (பிறவகை திசுக்களிலிருந்து உருவாகும், புற்றுநோய்கள் "அரியவகை" புற்றுநோய்கள் எனப்படுகின்றன.) சிடு(situ)வில் கார்சினோமா என்பது எபிதீலியல் திசுக்களில் கான்சர் செல்களின் அதிவேக வளர்ச்சியாகும், இதில் அதனை சுற்றியுள்ள திசுக்கள் பங்கேற்காது. இன்வாசிவ் கார்சினோமா என்பது சுற்றியுள்ள திசுக்களையும் தாக்கும்.[17] மிகவேகமாக பிளவடையும் திசுக்கள் விரைவாக மோசமான சரிசெய்ய முடியாத நிலைக்கு சென்றுவிடுகின்றன. கட்டியின் உயிரணுவின் (செல்லின்) வளர்ச்சியை Ki67 புரதத்தை வைத்து அளவிடலாம், இது உயிரணுவானது S கட்டத்தில் உள்ளதையும், குறிப்பிட்ட சில சிகிச்சை முறைகளின் ஏற்புத்திறனையும் காட்டும்.[18] கிரேட் (ப்ளூம்-ரிச்சர்ட்சன் கிரேட்). செல்கள் வகைப்படுத்தப்பட்டவுடன், அவை வெவ்வேறு வடிவங்களையும் தோற்றங்களையும் பெற்று, ஒரு உறுப்பின் செயல்பாட்டைத் தீர்மானிக்கின்றன. கான்சர் செல்கள் இந்த வகைப்பாட்டை இழந்து விடுகின்றன. செல்கள் ஒரு ஒழுங்கான வரிசையில் அமைந்து பால் குழாய்களை சிதைக்கின்றன. செல் பிரிதல் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. செல்லின் உட்கருக்கள் சீரற்றதாகின்றன. பேத்தாலிஜிஸ்ட்கள், இந்த செல்களை வகைப்படுத்தப்பட்டவை (குறைந்த கிரேட்), ஓரளவுக்கு வகைப்படுத்தப்பட்டவை (இடைநிலை கிரேட்) மற்றும் மோசமாக வகைப்படுத்தப்பட்டவை (அதிக கிரேட்) என்று பிரிக்கின்றனர். மோசமாக வகைப்படுத்தப்பட்ட கான்சர்களைச் சரிசெய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஏற்பி நிலை. மார்பக புற்றுநோய் செல்களின் பரப்பில் ஏற்பிகள் உள்ளன. ஹார்மோன்கள் போன்ற வேதிப்பொருட்கள் இந்த ஏற்பிகளுடன் பிணைந்து விடுகின்றன, இதனால் செல்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. மார்பக புற்றுநோய் செல்களில் பின்வரும் மூன்று முக்கிய ஏற்பிகள் இருக்கலாம் அல்லது இல்லாமலிருக்கலாம்: ஈஸ்ட்ரோஜன் ஏற்பி (ER), புரோஜெஸ்டீரான் ஏற்பி (PR), மற்றும் HER2/neu. இந்த ஏற்பிகளைக் கொண்ட செல்கள் ER பாசிட்டிவ் (ER+), ER நெகடிவ் (ER-), PR பாசிட்டிவ் (PR+), PR நெகடிவ் (PR-), HER2 பாசிட்டிவ் (HER2+), மற்றும் HER2 நெகடிவ் (HER2-) என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஏற்பிகள் எதுவுமே இல்லாத செல்கள் அடிப்படை செல்கள் அல்லது ட்ரிபிள் நெகடிவ் என்றழைக்கப்படுகின்றன. ER+ கான்சர் செல்களின் வளர்ச்சிக்கு, ஈஸ்ட்ரோஜன் தேவைப்படுகிறது, எனவே ஈஸ்ட்ரோஜனைக் குறைக்கும் மருந்துகளின் மூலமாக சிகிச்சையளிக்கப்படுகின்றன. மேலும் இவற்றை பெரும்பாலும் குணமாக்குவது எளிதானது. HER2+ கான்சர் செல்கள் ட்ராடுஸுமாப் போன்ற மருந்துகள் மற்றும் டோக்ஸோரூபிசின் மருந்தின் வீரியமிக்க அளவுகள் ஆகியவற்றால் குறைவடைகின்றன. ஆனால் பொதுவாக, HER2+ மிகக் குறைந்த குணமாதல் வாய்ப்பு கொண்டது.[19] இந்த நோய் ஏற்பிகள் இம்யுனோ ஹிஸ்டோ கெமிஸ்ட்ரியால் கண்டறியப்படுகின்றன. ஏற்பி நிலையின் மூலமாக, மார்பக புற்றுநோயானது நான்கு மூலக்கூறு நிலைகளாக பிரிக்கப்படுகிறது: (1) அடிப்படை நிலை, ER-, PR- மற்றும் HER2- (ட்ரிபிள் நெகடிவ், TN). பெரும்பாலான BRCA1 மார்பக புற்றுநோய்கள் பேசல்-லைக் TN ஆகியவை. (2) லூமினல் A, இவை ER+ மற்றும் குறைவான கிரேட் கொண்டவை (3) லூமினல் B, இவை ER+ ஆனால் பெரும்பாலும் உயர்நிலையானவை (4) HER2+, இவற்றில் பெரிதாக்கப்பட்ட ERBB2 இருக்கும்.[19] DNA மைக்ரோஅர்ரேஸ் என்பது சாதாரண செல்களையும், மார்பக புற்றுநோய் செல்களையும் ஒப்பிட்டு நூற்றுக்கணக்கான ஜீன்களில் வேறுபாட்டைக் கண்டறிந்தது, ஆனால் இவற்றில் பெரும்பாலான வேற்றுமைகளின் முக்கியத்துவம் தெரியாமலே இருக்கிறது. பல கண்டறிதல் சோதனைகள் வணிகரீதியாக சந்தைப்படுத்தப்படுகின்றன, ஆனால் அவற்றின் கண்டறிதல் திறன் மிகவும் குறைவானதே. இரண்டாம் நிலை சான்றின் மூலம் ஆதரிக்கப்படும் ஒரே சோதனையானது, ஆங்கோடைப் DX என்பதாகும், ஆனால் அது அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பால் (FDA) ஏற்றுக்கொள்ளப்படவில்லை, மேலும் அது அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் கிளினிக்கல் ஆங்கோலஜியால் சான்றளிக்கப்படவில்லை. மம்மாபிரிண்ட் என்பது எஃப்டிஏவால் ஆதரிக்கப்படுகிறது, ஆனால் அது மூன்றாம் நிலை சான்றை மட்டுமே வழங்குகிறது. இன்னும் இரண்டு சோதனைகள் மூன்றாம் நிலை சான்றைக் கொண்டுள்ளன: திரோஸ் மற்றும் மேப்க்வான்ட் டிஎக்ஸ். முதலாம் நிலை சான்றைக் கொண்டுள்ளதாக எந்த சோதனையும் உறுதி செய்யப்படவில்லை. (அதாவது ஒரு எதிர்பார்ப்புடன் கூடிய, தோராயமான கட்டுப்பாட்டு தொடர்நிகழ்வு, இதில் பங்கேற்ற நோயாளிகளுக்கு பங்கேற்காதவர்களை விட ஓரளவுக்கு நல்ல முடிவுகள் கிடைத்தன). ஒரு மதிப்பாய்வில், சோடிரவு கூறியதாவது, "HER2-பாசிட்டிவ் மற்றும் ட்ரிபிள் நெகடிவ் கட்டிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு மரபணு சோதனைகள் ஓரளவுக்கு குணமாக்குவதற்கான தகவல்களை அளிக்கின்றன, ஆனால் மருத்துவரீதியான ஆபத்துகளின் முடிவுகள் குழப்பத்தைத் தந்தால் (எ.கா., ER -இன் இடைநிலை வெளிப்பாடு மற்றும் இடைநிலை ஹிஸ்டோலாஜிக் கிரேட்), இவை கிளினிக்கல் முடிவுகளுக்கு வழிவகுக்கின்றன."[19] மார்பக புற்றுநோய் பெரும்பாலும், ஆனால் எப்போதும் அல்ல அதனுடைய ஹிஸ்டோலாஜிக்கல் தோற்றத்தின்படி வகைப்படுத்தப்படுகின்றன. அரிதான சில வகைகள் உடல்ரீதியான சோதனை கண்டுபிடிப்புகள் மூலம் வரையறுக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, வீக்கத்துடன் கூடிய மார்பக புற்றுநோய் (IBC), அதாவது ஒரு வகை டக்டல் கார்சினோமா அல்லது குழாய்களில் ஏற்படும் மாலிக்னான்ட் கான்சர் ஆனது பிறவகை கார்சினோமாக்களிலிருந்து நோய் பாதிப்படைந்த மார்பகத்தின் வீக்கமடைந்த தோற்றத்தின் மூலமாக வேறுபடுத்தி அறியப்படுகிறது.[20] எதிர்காலத்தில், சில நோய்க்குறியியல் வகைப்பாடுகள் மாறக்கூடும். குறிகளும் அறிகுறிகளும் மார்பக புற்று நோயின் போது, மார்பில் எங்காவது கட்டி அல்லது முடிச்சு இருக்கும் மார்பகப் பகுதியில் வீக்கம், சிவந்து காணப்படுதல் போன்றவை இருக்கலாம். காம்பில் வெள்ளை நிறக் கசிவு போன்ற அறிகுறிகள் இருக்கும். மார்பக புற்றுநோயை கண்டறியக்கூடிய முதல் அறிகுறியானது மார்பகத்தின் திரட்சியானது பிறத் திசுக்களிலிருந்து வேறுப்பட்டதாக இருப்பதை அறிவதாகும். ஒரு பெண் கட்டியை உணர்ந்தவுடனே 80% மார்பக புற்றுநோய்கள் கண்டறியப்பட்டு விடுகின்றன.[21] மார்பகத்தின் திரட்சி கண்ணுக்கு புலனாகும் அளவுக்கு மாறும்போது, அது பல ஆண்டுகளாக வளர்ந்து வந்திருக்கும் நிலையே ஆகும். ஆரம்பநிலை மார்பக புற்றுநோய்கள் முலை ஊடுகதிர்ப்பட சோதனை (மேமோகிராம்) மூலமாக அறியப்படுகின்றன.[22] அக்குள்களில் உள்ள நிணநீர் முடிச்சுகளில் உள்ள திரட்சிகளும்[21] மார்பக புற்றுநோயைச் சுட்டிக்காட்டக் கூடும். திரட்சியில் ஏற்படும் மாற்றம் தவிர, மார்பக புற்றுநோயின் பிற அறிகுறிகளாவன, மார்பக அளவு, வடிவம் ஆகியவற்றில் மாற்றம், தோலில் பருக்கள் தோன்றுதல், மார்பு காம்பு திரும்புதல் அல்லது ஏதேனும் ஒரு காம்பிலிருந்து தானாகவே நீர்வடிதல். மார்பக புற்றுநோய் இருக்கிறதா அல்லது இல்லையா என்று தீர்மானிப்பதில், வலியானது ("மாஸ்டோடைனியா") ஒரு நம்பகமற்ற கருவியாகும், ஆனால் இது பிற மார்பக நலக் கோளாறுகளைத் தீர்மானிக்க உதவும்.[21][22][23] டெர்மல் லிம்பாடிக்ஸ் எனப்படும் மார்பக தோல்பகுதியில் உள்ள சிறிய நிணநீர் பைகளை மார்பக புற்றுநோய் செல்கள் தாக்கும்போது, அதனுடைய வெளிப்பாடானது தோல் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும், எனவே இது வீக்கமுடைய மார்பக புற்றுநோய் ( inflammatory breast cancer- IBC) என்றழைக்கப்படுகிறது. வீக்கம் கொண்ட மார்பக புற்றுநோயின் அறிகுறிகளாவன, வலி, வீக்கம், மார்பு முழுவதும் எரிச்சல் மற்றும் சிவந்து காணப்படுதல், மேலும் ஆரஞ்சு தோலைப் போன்ற அமைப்பு மார்பகத்தின் தோல்முழுவதும் காணப்படுவது ஆகியவை ஆகும். இது பீயவ் டி' ஆரஞ்சு என்று குறிப்பிடப்படுகிறது.[21] மார்பகப் புற்றுநோயின் அறிகுறி என்று குறிப்பிடப்படும் மற்றொன்று மார்பகத்தில் பேஜட் குறைபாடு (Paget's disease of the breast) ஏற்படுவதாகும். இந்த அறிகுறியானது எக்சிமாடாய்ட் தோல் மாற்றங்களால் வெளிப்படும். அதாவது மார்பு காம்பின் தோலானது சிவந்தும், சிறிதளவு உறிந்து வருமாறும் மாறும். பேஜட் தீவிரமடையும்போது, எரிச்சல், அரிப்பு, அதிகமான உணர்திறன் மற்றும் வலி ஆகியவைக் காணப்படும். காம்பிலிருந்து கசிவு ஏதேனும் கூட ஏற்படலாம். பேஜட் இருப்பதாக கண்டறியப்பட்ட பெண்களில் ஏறத்தாழ பாதிப்பேரின் மார்பகங்களில் நிணநீர் (லிம்ப்) இருப்பதும் கண்டறியப்பட்டது.[24] சில நேரங்களில், மார்பக புற்றுநோய், மெட்டாஸ்டாடிக் (மாற்றிடமேறிய) குறைபாடாக இருக்கும், அதாவது புற்று ஏற்பட்ட இடத்திலிருந்து பிற இடங்களுக்கு பரவக்கூடும். மெட்டாஸ்டாடிக் மார்பக புற்றுநோயானது மெட்டாஸ்டாடிஸின் இருப்பிடத்தைப் பொறுத்து அறிகுறிகளை ஏற்படுத்தக் கூடும். மெட்டாஸ்டாடிஸ் உருவாகக் கூடிய பொதுவான இடங்களாவன: எலும்பு, கல்லீரல், நுரையீரல் மற்றும் மூளை ஆகியவையாகும்.[25] காரணமற்ற எடையிழப்பும் கூட, சில நேரங்களில் மார்பக புற்றுநோயின் புதிரான அறிகுறியாக கொள்ளப்படலாம், இதே போல காய்ச்சல் அல்லது குளிரும் கூட அறிகுறிகளாகக்கூடும். எலும்பு அல்லது மூட்டு வலிகள் ஆகியவையும் சில நேரங்களில் மெட்டாஸ்டாடிக் மார்பக புற்றுநோயின் பிரதிபலனாக உருவாகக்கூடும், இதே போல மஞ்சள் காமாலை அல்லது நரம்பியல் அறிகுறிகள் போன்றவையும் இதன் அறிகுறிகளாக இருக்கக்கூடும். இந்த அறிகுறிகள் "குறிப்பானவை" அல்ல, அதாவது இவை வேறு நோய்களின் அறிகுறிகளாகவும் இருக்க வாய்ப்புண்டு.[26] மார்பகக் குறைபாடுகளின் பல அறிகுறிகள், மார்பக புற்றுநோயைக் குறிப்பதில்லை. மார்பக [[வீக்கம்/0} மற்றும் கொழுப்புக் கட்டிகள் போன்ற பெனின் மார்பக நோய்|வீக்கம்/0} மற்றும் கொழுப்புக் கட்டிகள் போன்ற பெனின் மார்பக நோய்]]கள் பொதுவான மார்பகக் குறைபாடு அறிகுறிகளாகும். புதிய அறிகுறிகள் தோன்றுவதை நோயாளிகளும், அவர்களின் மருத்துவர்களும் மிகவும் கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் மார்பக புற்றுநோயின் ஆபத்து எல்லா வயதினருக்கும் பொதுவானது.[27] ஆபத்து காரணிகள் முதன்மையான ஆபத்து காரணிகளாக அறியப்பட்டவை, பாலுறவு,[28] வயது,[29] குழந்தை பெறுதல் அல்லது பாலூட்டுதல் இல்லாமை, மற்றும் உயர்ந்த ஹார்மோன் அளவுகள் ஆகியவை ஆகும்,[30][31]. 1995ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், மிகவும் விரிவான ஆபத்துக்காரணிகளே 47% நோயாளிகளுக்கு காரணமாக இருந்துள்ளன, வெறும் 5% பேர் மட்டும் மரபு வழியாக இந்த நோய்களைப் பெற்றுள்ளனர்.[32] குறிப்பாக, மார்பக புற்றுநோய் ஊடுருவு மரபணுக்களைக் கொண்ட கடத்திகளான, BRCA1 மற்றும் BRCA2 ஆகியவை, மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய்க்கான வாய்ப்பை 30-40% உயர்த்தியது, இது மரபணுவில் உள்ள புரதத்தின் எந்த பகுதி உருமாற்றம் அடைகிறது என்பதை சார்ந்துள்ளது.[33]. சமீப ஆண்டுகளில், உணவூட்டம் மற்றும் பிற நடத்தைகளால் மார்பக புற்றுநோய்க்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன என்று கண்டறிந்துள்ளனர். இந்த கூடுதல் ஆபத்து காரணிகளில், அதிக கொழுப்பு நிறைந்த உணவு,[34] ஆல்கஹால் உட்கொள்ளுதல்,[35][36] உடல்பருமன்,[37] மற்றும் புகையிலை பயன்பாடு, கதிரியக்கம் போன்ற சுற்றுச்சூழல் காரணிகள்[38], நாளமில்லா சுரப்பிகளைப் பாதிப்பது மற்றும் ஷிஃப்ட்வொர்க் போன்றவை அடங்கும்.[39] முலை ஊடுகதிர்ப்படத்தின் (மேமோகிராஃபி) மூலம் பெறப்படும் கதிரியக்கம் மிகவும் குறைவாக இருந்தாலும், தொடர்ந்து பெறப்படும்போது அது புற்றுநோயை உருவாக்கக் கூடும். மேலே குறிப்பிடப்பட்ட ஆபத்துக் காரணிகளுடன், மக்கள்தொகை பரவல் மற்றும் மருத்துவ ஆபத்துக்காரணிகளும் உள்ளன. அவையாவன: தனிநபருக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருப்பது: ஒரு மார்பில் புற்றுநோயைப் பெற்ற ஒரு பெண்ணுக்கு மற்றொரு மார்பிலும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். குடும்ப வரலாறு: ஒரு பெண்ணின் தாய், சகோதரி அல்லது மகளுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டால், அந்த பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் யாருக்காவது 40 வயதுக்கு முன்பாக மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் இந்த ஆபத்து இன்னும் அதிகம். பிற உறவுமுறைகளில் ஒருவருக்கு (தாய் அல்லது தந்தை வழி உறவினர்களுக்கு) மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருந்தாலும் இந்த ஆபத்து அதிகரிக்கும். குறிப்பிட்ட மார்பக மாற்றங்கள்: சில பெண்களின் மார்பக செல்கள் மைக்ரோஸ்கோப்பினால் பார்க்கப்படும்போது இயல்புக்கு மாறான தோற்றத்தைக் காட்டும். சிலவகை இயல்புக்கு மாறான செல்களைப் பெற்றிருத்தல், (அரியவகை ஹைப்பர்பிளாசியா மற்றும் சிடு(situ)வில் லோபுலர் கார்சினோமா [LCIS]) மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. இனம்: லத்தீன், ஆசிய அல்லது ஆப்பிரிக்க அமெரிக்க பெண்களை விட காஸ்காசியன் பெண்களிடையே மார்பக புற்று நோய் அதிகமாக கண்டறியப்பட்டது. கருக்கலைப்பு செய்வது மார்பக புற்றுநோயை ஏற்படுத்தும் என்று கண்டறியப்படவில்லை. ஆனாலும், கருக்கலைப்பினால் மார்பக புற்றுநோய் என்ற கருத்து சில கருப் பாதுகாப்பு குழுக்களால் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது.[40][41][42] சர்வதேச புற்றுநோய் ஜீனோம் கன்சோர்டியம் என்பதில் உறுப்பினராக உள்ள ஐக்கிய இராஜ்யம் (யுனைடெட் கிங்டம்) முழுமையான மார்பக புற்றுநோய் ஜீனோமைக் கண்டறியும் செயல்பாடுகளில் முன்னிலை வகிக்கிறது. உடலியக்க நோய்க்குறியியல் எல்லா புற்றுநோய்களையும் போலவே, மார்பக புற்றுநோயும், ஒரு குறைபாடுடைய மரபணு அதனுடைய சூழலுடன் தொடர்பு கொள்வதன் மூலமாக ஏற்படுகிறது. சாதாரண செல்கள் தேவையான அளவுக்கு பிளவுப்பட்டு, பின்னர் நின்றுவிடும். அவை பிற செல்களுடன் ஒட்டிக்கொண்டு, திசுக்களில் தங்கியிருக்கும். உருமாற்றத்தின் காரணமாக, செல்கள் பிளவுறுவதை நிறுத்தும் திறனை இழந்து, மற்ற செல்களுடன் ஒட்டியிருக்கும் தன்மையை இழந்து, அவற்றுக்கு சொந்தமான இடங்களில் தங்கியிருக்கும் திறனையும் இழந்து விடும்போது அவை புற்றுகளாக மாறுகின்றன. செல்கள் பிளவுறும்போது, அவற்றின் டிஎன்ஏ பொதுவாகவே பல தவறுகளுடன் நகலெடுக்கப்படுகின்றன. இந்த தவறுகளை பிழை-திருத்தும் புரதங்கள் சரிசெய்யும். p53, BRCA1 மற்றும் BRCA2 போன்ற உருமாற்றங்கள் கான்சரை ஏற்படுத்தும் என்று அறியப்பட்டுள்ளன, இவை பிழை திருத்தும் செயல்பாடுகளில்தான் இருக்கின்றன. இந்த உருமாற்றங்கள் மரபுவழியாகவோ அல்லது பிறந்தபின்னர் பெறப்பட்டதாகவோ இருக்கலாம். இவையே, பிற உருமாற்றங்களை, கட்டுப்பாடற்ற பிளவு, ஒட்டியிருக்கும் தன்மை இழப்பு மற்றும் தொலைவில் உள்ள உறுப்புகளில், மெட்டாஸ்டாடிஸ் ஆகியவற்றுக்கு காரணமாக உள்ளன என்று யூகிக்கப்படுகிறது.[38][43] சாதாரண செல்கள், அவை தேவைப்படாத நிலை ஏற்படும்போது, தற்கொலை (அபோப்டோசிஸ்) செய்து கொள்கின்றன. அதுவரை, அவை, பல புரத தொகுப்புகள் மற்றும் தடங்களால் (பாத்வே) தற்கொலையிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. இம்மாதிரியான ஒரு பாதுகாப்பு பாத்வேயானது PI3K/AKT பாத்வே ஆகும்; மற்றொன்று RAS/MEK/ERK பாத்வே ஆகும். சில நேரங்களில், இந்த பாதுகாப்பு பாத்வேக்களில் உள்ள சில ஜீன்கள் உருமாற்றம் அடைந்து இவற்றை எப்போதுமே "இயங்கிக்" கொண்டிருக்குமாறு மாற்றி விடுகின்றன, இதனால் செல்லின் தேவை இல்லாத நிலையிலும் செல் தற்கொலை செய்து கொள்ள முடியாமல் போகிறது. பிற உருமாற்றங்களுடன் இணைந்து புற்றுநோயை உருவாக்கும் படிகளில் இதுவும் ஒன்று. சாதாரணமாக, ஒரு செல்லானது தற்கொலைக்கு தயாராகும்போது PTEN புரதமானது PI3K/AKT பாத்வேயின் இயக்கத்தை நிறுத்தி விடுகிறது. சில மார்பக புற்றுநோய்களில், PTEN புரதத்தின் ஜீன் உருமாற்றம் அடைகிறது, எனவே PI3K/AKT பாத்வே "இயங்கும்" நிலையில் தங்கிவிடுகிறது, இதனால் கான்சர் செல்கள் தற்கொலை செய்து கொள்வதில்லை.[44] மார்பக புற்றுநோயை உருவாக்கும் உருமாற்றங்கள், ஈஸ்ட்ரோஜன் பயன்பாட்டோடு தொடர்புடையவை என்று ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.[45] நோய்த்தடுப்பு கவனிப்பு, மாலிக்னான்ட் செல்களை ஒருவருடைய ஆயுள் முழுவதும் நோய்த்தடுப்பு அமைப்பு நீக்கி விடும் என்ற கொள்கை.[46] இயல்புக்கு மாறான வளர்ச்சி வீதமானது [[ஸ்ட்ரோமல் செல்/0}கள் மற்றும் எபிதீலியல் செல்கள் ஆகியவற்றுக்கு இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளதையும் மாலிக்னன்ட் செல் வளர்ச்சியையும் காண்பிக்கிறது.|ஸ்ட்ரோமல் செல்/0}கள் மற்றும் எபிதீலியல் செல்கள் ஆகியவற்றுக்கு இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளதையும் வீரியம் மிக்க (மாலிக்னன்ட்) செல் வளர்ச்சியையும் காண்பிக்கிறது.[47][48]]] வளர்ந்த நாடுகளை விட குறைவாக வளர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் குறைவாக நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அமெரிக்காவில், மார்பக அல்லது கருப்பை புற்றுநோயைக் கொண்ட மக்களில் 10 முதல் 20 சதவீதம் பேர் அவர்களின் முதல் நிலை அல்லது இரண்டாம் நிலை உறவினர்களில் ஒருவருக்கு இந்த நோய்களில் ஒன்று இருப்பதாக தெரிவிக்கின்றனர். இரண்டு முக்கிய நோய் காரணி ஜீன்களில் உருமாற்றங்கள், அதாவது மார்பக புற்று தாக்கி ஜீன் 1 (breast cancer susceptibility gene 1 -BRCA1) மற்றும் மார்பக புற்று தாக்கி ஜீன் 2 (BRCA2) ஆகியவை மார்பக புற்றுநோய்க்கான ஆபத்தை வாழ்நாள் முழுவதும் 60 மற்றும் 85 சதவீதமாகவும், கருப்பை புற்றுநோய்க்கான ஆபத்தை வாழ்நாள் முழுவதற்கும் 15 மற்றும் 40 சதவீதத்துக்கு இடையிலும் கொண்டுள்ளது. ஆனாலும், இந்த ஜீன்களில் ஏற்படும் உருமாற்றங்கள், ஒட்டுமொத்த மார்பக புற்றுநோய்களில் 2 முதல் 3 சதவீதமாகவே இருக்கிறது.[49] நோய் கண்டறிதல் கண்டறிதல் நுட்பங்கள், (கீழே விரிவாக விளக்கப்படுகின்றன) கான்சரின் வாய்ப்புகளைத் தீர்மானிக்கப் பயன்படுகின்றன என்றாலும், கண்டறியப்பட்ட கட்டி, சாதாரண கட்டி போன்றவையாக இல்லாமல், புற்றுநோய்தான் என்று கண்டறிய கூடுதல் சோதனைகள் அவசியம். மருத்துவ அமைப்புகளில், மார்பக புற்றுநோயானது, மார்பக பரிசோதனையில் ஒரு "மும்மை சோதனை" மூலம் கண்டறியப்படுகிறது (பயிற்சி பெற்ற மருத்துவரின் மார்பக பரிசோதனை), மேம்மோகிராஃபி, மற்றும் நுண் ஊசி கண்டறிதல் சைட்டோலஜி ஆகியவை ஆகும். மேம்மோகிராஃபி மற்றும் கிளினிக்கல் மார்பக சோதனை ஆகிய இரண்டுமே, ஒரு கட்டி புற்றுநோய்தானா என்று அறியவும், சில நேரங்களில் பிற காயங்கள் ஏதும் உள்ளனவா என்று அறியவும் கூட பயன்படுத்தப்படுகின்றன. நுண் ஊசி கண்டறிதல் மற்றும் சைட்டோலஜி (FNAC), என்ற சோதனையை, GP இன் அலுவலகத்தில், மரத்துப்போகும் பொருளைப் பயன்படுத்தி, கட்டியிலிருந்து திரவத்தை எடுக்க முயற்சி செய்வதாகும். தெளிவான திரவமானது, கட்டி புற்றுநோயாக இல்லை என்று தெரிவிக்கும், ரத்தத்துடன் கூடிய திரவமானது புற்றுநோய் செல்கள் உள்ளனவா என்று நுண் பெருக்கி கண்ணாடி (மைக்ரோஸ்கோப்) பரிசோதனைக்கு அனுப்பப்படும். இந்த மூன்று சோதனைகளையும் ஒன்றிணைத்து, மார்பக புற்றுநோயை மிக அதிக துல்லியத்துடன் கண்டறிய பயன்படுத்தலாம். உடல் திசு ஆய்வு (பயாப்ஸி)க்கான பிற வாய்ப்புகளாவன கோர் பயாப்ஸி, இதில் மார்பகத்தின் ஒரு பகுதி நீக்கப்படும், மற்றும் துண்டித்தல் பயாப்ஸி, இதில் முழு கட்டியும் அகற்றப்படும். பிரித்தெடுக்கப்பட்ட மனித மார்பக திசு, சீரற்ற, அடர்த்தியான, வெள்ளைநிற ஸ்டெல்லட் பகுதி 2 செ.மீ விட்டம் கொண்டது, கூடவே மஞ்சள் நிற கொழுப்புநிறைந்த திசு. டக்டல் மார்பக கார்சினோமாவால் பாதிக்கப்பட்ட நிணநீர் முடிச்சு மற்றும் அதனுடன் கட்டியின் முடிச்சுக்கு வெளியேயான நீட்சி. சாதாரண மார்பகம் மற்றும் மார்பக கார்சினோமா திசுக்களின் நியூரோபிலின்-2 வெளிப்பாடு. மார்பகத்துடன் உள்ள நிணநீர் முடிச்சுகள் கண்டறிதல் மார்பக புற்றுநோய் கண்டறிதல் என்பது, ஆரோக்கியமான பெண்ணுக்கு, முன்னதாகவே மார்பக புற்றுநோய் இருக்கிறதா என்று கண்டறியும் முயற்சியாகும். முன்னதாகவே கண்டறிவதால் எளிதாக குணமாக்க முடியும் என்று நம்பப்படுகிறது. பல கண்டறிதல் சோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன, அவையாவன: மருத்துவ மற்றும் சுய மார்பக சோதனைகள், முலை ஊடுகதிர்ப் படம் (மேம்மோகிராஃபி), மரபுசார் சோதனை, செவியுணரா ஒலி அலை வரைவு (அல்ட்ராசவுண்ட்) மற்றும் காந்த அதிர்வு அலை வரைவு (மாக்னடிக் ரெசொனன்ஸ் படமெடுத்தல்). மருத்துவ அல்லது சுய மார்பக பரிசோதனை என்பதில் மார்பகத்தில் கட்டிகள் அல்லது பிற அசாதாரண மாற்றங்கள் உள்ளனவா என்று அறியப்படுகிறது. இந்த இரண்டு வகை மார்பக பரிசோதனையிலும், சிறந்த முடிவுகள் பெறப்படுகின்றன என்பதற்கு ஆராய்ச்சிப்பூர்வமான சான்றுகள் ஏதுமில்லை, ஏனெனில் கண்டறியக்கூடிய அளவுக்கு பெரிதாக கட்டி வளர்ந்திருக்கும்போது, அது முன்பே பல ஆண்டுகளாக வளர்ந்திருக்கக் கூடும், விரைவிலேயே அதனை பரிசோதனை இல்லாமலே கண்டறியலாம்.[50] மார்பக புற்றுநோய்க்கான மேமோகிராஃபிக் ஸ்கிரீனிங் எக்ஸ்-ரேக்களைப் பயன்படுத்துகின்றன, இதன் மூலம் ஏதேனும் வழக்கத்துக்கு மாறான கட்டிகள் அல்லது லம்ப்கள் உள்ளனவா என்று அறியப்படுகின்றன. 2009 ஆம் ஆண்டில் கொக்ரேன் கொலாப்ரேஷன், மேமோகிராம்கள் மார்பக புற்றுநோய்களில் பிழைக்கும் வாய்ப்பை 15 சதவீதம் வரை குறைக்கின்றன. மேலும் தேவையற்ற அறுவைசிகிச்சை மற்றும் தொல்லைகளை உருவாக்கும் என்று கூறியது. இதன் விளைவாக மேம்மோகிராஃபி சோதனைகள் நன்மை செய்வதை விடவும் தீமையைத்தான் அதிகம் செய்கின்றன என்று கூறினார்கள்.[51] ஆனாலும், பல தேசிய நிறுவனங்கள், வழக்கமான மேமோகிராஃபியைப் பரிந்துரைக்கின்றன. 50 முதல் 74 வயதான சாதாரண பெண்ணுக்கு, அமெரிக்க முன்னெச்சரிக்கை சேவைகள் அமைப்பு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை மேம்மோகிராஃபி செய்து கொள்ளுமாறு பரிந்துரைக்கிறது.[52] இந்த டாஸ்க் ஃபோர்ஸ், தேவையற்ற அறுவை சிகிச்சை மற்றும் தொல்லைகளுடன் கூடவே அடிக்கடி மேம்மோகிராம்களை எடுத்துக் கொள்வதால், சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க அளவுக்கு மார்பக புற்றுநோயின் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டுகிறது.[53] அதிகமான பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பெண்கள் போன்ற அதிக ஆபத்தில் உள்ள பெண்களுக்கு, மேம்மோகிராஃபி கண்டறிதல் சிறிய வயதிலேயே பரிந்துரைக்கப்படுகிறது, மேலும் BRCA ஜீன்கள் மற்றும் / அல்லது மாக்னடிக் ரெசொனன்ஸ் இமேஜிங் போன்ற கூடுதல் சோதனைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. நடமாடும் கண்டறிதல் சேவை மார்பக புற்றுநோயை கண்டறிய டாக்டர் கே. சாந்தா மார்பக புற்றுநோய் அமைப்பு 2012-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடமாடும் கண்டறிதல் சேவையை தொடங்கி வைத்தது. குறைந்த செலவில் மார்பக புற்றுநோயின் அறிகுறிகளை கண்டறிய மாமோகிராம் கருவிகள் பொருத்தப்பட்ட ஒரு வாகனம் தமிழ்நாடு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று இச்சேவையை வழங்கி வருகிறது. பழைய வாகனம் ஒன்றை வைத்துக்கொண்டு தொடங்கப்பட்ட இச்சேவைக்காக, ஒரு தனியார் வாகன தயாரிப்பு நிறுவனம் புதிய வாகனம் ஒன்றை நண்கொடையாக வழங்கியுள்ளது. அதன் மூலம் தொலை தூரத்திற்கு இச்சேவை வழங்கும் கருவிகளை எடுத்துச் செல்ல முடியும். தொடங்கப்பட்ட ஒரே ஆண்டில் 1000-த்துக்கும் மேற்பட்டோர் இச்சேவையை பயன்படுத்தியுள்ளனர்.[54] சிகிச்சைமுறைகள் மார்பக புற்றுநோயானது முதலில், அறுவைசிகிச்சை மூலமாகவும் பின்னர் மருந்துகள், கதிரியக்கம் அல்லது இரண்டினாலும் சிகிச்சையளிக்கப்படுகிறது. கண்டறிதல் மற்றும் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சிகிச்சைகள் அதிக தீவிரத்துடன் தரப்படுகின்றன. நல்ல முன் கண்டறிதலுடன் கூடிய ஆரம்பநிலை கான்சர்கள் (DCIS அல்லது நிலை 1 அல்லது நிலை 2) லம்பெக்டோமி மற்றும் கதிரியக்கம் ஆகியவை மூலம் மட்டுமே சிகிச்சையளிக்கப்படுகின்றன.[55] மிகவும் குறைவாக கண்டறியப்பட்ட மற்றும் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் கொண்ட பிந்தைய நிலை கான்சர்கள் அதிதீவிர கீமோதெரபி மூலமாக சிகிச்சையளிக்கப்படுகின்றன. இதில் விரும்பத்தகாத மற்றும் வாழ்வுக்கு ஆபத்தளிக்கக் கூடிய பக்க விளைவுகளும் இருக்கக்கூடும், இவை குணமாவதற்கான வாய்ப்புகள் மற்றும் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகளை குறைப்பதற்காக செய்யப்படுகின்றன. அறுவை சிகிச்சையுடன் கூடிய மருந்துகள் துணை நிலை சிகிச்சை என்று அழைக்கப்படுகின்றன. ஹார்மோன் தெரபி என்பது ஒரு வகையான துணைநிலை சிகிச்சையாகும். சில மார்பக புற்றுநோய்கள தொடர்ந்து வளர்ச்சியடைய, ஈஸ்ட்ரோஜன் தேவைப்படுகிறது. இவற்றை ஈஸ்ட்ரோஜன் ஏற்பிகள் இருப்பதை வைத்தும் (ER+) புரோஜெஸ்ட்ரான் ஏற்பிகள் (PR+) இருப்பதை வைத்தும் அறியலாம் (இவை சில நேரங்களில் மொத்தமாக ஹார்மோன் ஏற்பிகள், HR+ என்று குறிப்பிடப்படுகின்றன). ஈஸ்ட்ரோஜன் உருவாகத்தைத் தடுக்கும் அல்லது ஏற்பிகளை முடக்கும் டமோக்ஸிஃபென் அல்லது அரோமாடாஸ் இன்ஹிபிட்டர்) போன்ற மருந்துகளின் மூலமாக இந்த ER+ கான்சர்களுக்கு சிகிச்சையளிக்க முடியும். நோயின் தீவிரமான நிலைகளுக்கு சிகிச்சையளிக்க கீமோதெரபி தரப்படுகிறது. இவை பொதுவாக இணைத்து தரப்படுகின்றன. மிகப்பொதுவான சிகிச்சை முறைகளில் ஒன்று சைக்ளோபாஸ்மைடு உடன் டோக்ஸோரூபிசின் (அட்ரியாமைசின்) ஆகும், இது CA என்றழைக்கப்படுகிறது; இந்த மருந்துகள் கான்சரில் உள்ள DNA வை அழிக்கின்றன, கூடவே வேகமாக வளரும் சாதாரண செல்களையும் அழிக்கின்றன, இதனால் மிக மோசமான பக்க விளைவுகள் ஏற்படக்கூடும். டோக்சோரூபிசின் மருந்தின் மிக ஆபத்தான பக்கவிளைவு இதய தசைகள் பாதிப்படைவதாகும். டாக்டாக்சல் போன்ற டாக்ஸேன் மருந்துகள், இந்த கூட்டுமருந்துடன் சேர்க்கப்படுகின்றன, அவை CAT என்றழைக்கப்படுகின்றன; டாக்ஸேனானது, கான்சர் செல்களில் உள்ள நுண்குழாய்களைத் தாக்குகிறது. இதேபோன்ற முடிவைத் தரும் , மற்றொரு பொதுவான சிகிச்சை முறையானது, சைக்ளோபாஸ்மைடு, மீதோட்ரெக்சேட் மற்றும் ஃப்ளூரோவ்ராசில் (CMF) ஆகியவையாகும். (கீமோதெரபி என்பது பொதுவாக எந்த மருந்தையும் குறிப்பிடலாம், ஆனால் பொதுவாக பாரம்பரிய ஹார்மோன் அல்லாத சிகிச்சை முறைகளைக் குறிக்கின்றன.) மோனோக்ளோனல் ஆண்டிபாடிகள் ஆகியவை சில நேரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. சில கான்சர் செல்களின் பரப்புகளில் HER2 என்ற ஏற்பிகள் உள்ளன. இந்த ஏற்பியானது, பொதுவாக, ஒரு செல்லை பிளவுற செய்யும் வளர்ச்சி காரணியால் தூண்டப்படுகிறது. வளர்ச்சி காரணி இல்லாத நிலையில் செல்லானது வளர்வதை நிறுத்தி விடுகிறது. மார்பக புற்றுநோயில், HER2 ஏற்பியானது "இயங்கும்" நிலையில் தங்கி விடுகிறது (தொடர்ந்து தூண்டப்படுகிறது). இந்த செல் நிற்காமல் தொடர்ந்து பிளவுறுகிறது. ட்ராடுஸுமாப் (ஹெர்செப்டின்), என்ற மோனாக்ளோனல் ஆன்டிபாடி HER2 உடன் தரப்படும்போது, இந்த வகை கான்சர்களின் பிழைக்கும் வாய்ப்பை அதிகரிக்க உதவுகிறது. பிற மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் செல்லில் உள்ள பிற கான்சர் செயல்பாடுகளைத் தடுக்க பயன்படுகின்றன. ரேடியோதெரபி என்பது கட்டி இருந்த இடத்தில் அறுவை சிகிச்சைக்கு பின்னர் தரப்படுகிறது, இந்த மைக்ரோஸ்கோபிக் கட்டிகள் அறுவை சிகிச்சையிலிருந்து தப்பி விடக்கூடும் கதிரியக்க தெரபியை, வெளிப்புற கற்றை ரேடியோதெரபியாகவும் அல்லது ப்ராச்சிதெரபி (அக ரேடியோதெரபி) ஆகவும் தரப்படலாம். சரியான அளவுக்கு தரப்படும்போது, கதிரியக்கத்தால் புற்று மீண்டும் வரும் வாய்ப்பு, 50-66% குறைகிறது (1/2 - 2/3 வரை ஆபத்து குறைக்கப்படுகிறது).[56] சிகிச்சை முறைகள் தொடர்ந்து தோராயமான, கட்டுப்படுத்தப்பட்ட முயற்சிகளில் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. இந்த மதிப்பாய்வில், தனித்தனி மருந்துகள், கூட்டு மருந்துகள் மற்றும் கதிரியக்க நுட்பங்களும் ஆராயப்படுகின்றன. இதிலிருந்து தனிப்பட்ட மற்றும் தொகுப்பு மருந்துகள் ஒப்பிடப்படுகின்றன. அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் கிளினிக்கல் ஆன்கோலஜி, சான் ஆன்டானியோ ப்ரெஸ்ட் கான்சர் சிம்போசியம்,[57] மற்றும் ஸ்விட்சர்லாந்தில் உள்ள செயின்ட். காலெனில் உள்ள செயின்ட். காலென் ஆன்காலஜி கான்ஃபரன்ஸ் போன்ற அறிவியல் சந்திப்புகளில் ஆண்டுதோறும் சமீபத்திய ஆய்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.[58] இந்த ஆய்வுகள் தொழில்முறை நிபுணர்களாலும், பிற நிறுவனங்களாலும் மதிப்பாய்வு செய்யப்பட்டு, குறிப்பிட்ட சிகிச்சைக் குழுக்கள் மற்றும் ஆபத்து வகையின்படி ஒழுங்கமைக்கப்பட்டு, ஒழுங்குகளாக வரையறுக்கப்படுகின்றன. நோய் முன்கணிப்பு நோய் முன் கணிப்பு என்பது, நோயின் முடிவை முன்னரே அறிவதாகும், பொதுவாக மரணத்தின் (அல்லது பிழைப்பதன்) சதவீதம் , மற்றும் நோய் வளர்ச்சி இல்லாத வாழ்நாள் (PFS) அல்லது நோயின்றி வாழுதல் (DFS) இன் சதவீதம் ஆகியவை ஆகும். இந்த யூகங்கள் ஒத்த வகையான மார்பக புற்றுநோய் நோயாளிகளுடனான அனுபவங்களின் அடிப்படையில் செய்யப்படுகின்றன. ஒரு நோய் முன்கணிப்பு என்பது தோராயமானதே, ஏனெனில் ஒரே மாதிரியான வகைப்பாட்டைக் கொண்ட நோயாளிகளும் வெவ்வேறு கால அளவுக்கு வாழ்வதற்கு வாய்ப்புண்டு மற்றும் வகைப்பாடுகள் எப்போதும் துல்லியமாக இருக்க வாய்ப்பில்லை. 50% நோயாளிகள் வாழக்கூடிய, சராசரி மாதங்களின் (அல்லது ஆண்டுகளின்) எண்ணிக்கையை வைத்து கணக்கிடப்படுகிறது, அல்லது 1, 5, 15 மற்றும் 20 ஆண்டுகளுக்கு பின்னரும் வாழும் நோயாளிகளின் சதவீதம் மூலமாக கணக்கிடப்படுகிறது. நோய் முன்கணிப்பு சிகிச்சை முடிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் நீண்டகாலம் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புடைய நோயாளிகளுக்கு லம்பக்டோமி மற்றும் கதிரியக்கம் அல்லது ஹார்மோன் தெரபி ஆகிய குறைவான தீவிரமுடைய சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன, அதே நேரத்தில், குறைவான பிழைக்கும் வாய்ப்புடைய நோயாளிகளுக்கு தீவிர மாஸ்டெக்டோமி போன்ற அதிதீவிர சிகிச்சைகளும் அல்லது கூடுதல் கீமோதெரபி மருந்துகள் வழங்கப்படுகின்றன. ஸ்டேஜிங், கட்டி அளவு மற்றும் இருப்பிடம், கிரேட் ஆகியவை நோய் முன்கணிப்பு காரணிகளும் அடங்கியுள்ளன. இவற்றின் மூலம் நோய் முறையானதா (மெட்டாஸ்டாஸைஸ்டு, அல்லது உடலின் மற்ற பாகங்களுக்கு கடத்தப்பட்டுள்ளதா என்பது) அல்லது மீண்டும் வரக்கூடியதா மற்றும் நோயாளியின் வயது ஆகியவை அறியப்படுகின்றன. ஸ்டேஜ் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இதில் கருதப்படும் அளவு, பகுதியின் பாதிப்பு, நிணநீர் முடிச்சுகளின் நிலை மற்றும் நோய் வேறு பகுதிகளுக்கு பரவியுள்ளதா என்று அறிய உதவுகிறது. நோய் கண்டறிதலின்போது இந்த ஸ்டேஜ் அதிகமாக இருந்தால், நோயின் முடிவு அதிக மோசமாக இருக்கும். இந்த நிலையானது, நோயானது நிணநீர் முடிச்சுகளுக்கும், மார்பின் சுவர்களுக்கும், தோல் அல்லது அதைத் தாண்டி பரவியுள்ளதா என்பதையும் புற்றுநோய் செல்களின் தீவிரத்தையும் வைத்து அதிகமாகிறது. கான்சர் அல்லாத பகுதிகள் இருப்பது, இயல்பான செல்களைப் போன்ற இயக்கம் (கிரேடிங்) ஆகியவற்றைப் பொருத்து இந்த நிலையானது குறைக்கப்படுகிறது. புற்றுநோய் பரவும் நிலையில் இல்லாத வரை அளவு ஒரு முக்கிய காரணி அல்ல. மார்பகம் முழுவதும், சிட்டு டாக்டல் கார்சினோமா பரவியிருப்பது ஸ்டேஜ் ஜீரோ ஆகும். கிரேடிங் என்பது, எவ்வகையில் பயாப்ஸி செய்யப்பட்டது என்பதையும், வளர்ச்சியடைந்த செல்களின் நடத்தையையும் அடிப்படையாக கொண்டது. இயல்பான கான்சர் செல்களுக்கு நெருக்கமாக இருக்கும் வரை, அவற்றின் வளர்ச்சி மெதுவாக இருந்து, நோயின் முடிவு சிறப்பாக இருக்கும். செல்களை சரியாக வகைப்படுத்த முடியவில்லை என்றால், அவை முதிர்ச்சியடையாதவையாக தோன்றும், மற்றும் இன்னும் வேகமாக பிரிவடையும் மற்றும் அதிக வேகமாக பரவும். அதிகம் வகைப்படுத்தக்கூடியவை 1 கிரேடாகவும், மிதமானவை 2 வது கிரேடாகவும், மோசமாக அல்லது வகைப்படுத்தவே முடியாததாகவும் இருப்பதை 3 அல்லது 4 என்ற கிரேடாகவும் வகைப்படுத்தப்படுகின்றன (இவை பயன்படுத்தப்படும் அளவீட்டை அடிப்படையாக கொண்டது). மெனோபாஸுக்கு பின்பான பெண்களை விட பல காரணிகளின் காரணமாக, இளம்பெண்கள் மோசமான நோயின் முடிவைப் பெற்றுள்ளனர். ஏனெனில் அவர்களின் மார்பகங்கள், அவர்களின் மாதவிடாய் சுழற்சிகளின் காரணமாக அதிக இயக்கத்துடன் உள்ளன. அவர்கள் கைக்குழந்தைகளுக்கு பாலூட்டிக் கொண்டிருக்கலாம், மற்றும் அவர்களின் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களை அறியாதவர்களாக இருக்கின்றனர். எனவே, இளம்பெண்களுக்கு நோய் இருப்பதைக் கண்டறியப்படும்போது கூடுதலாக மேம்பட்ட நிலைகளில் இருக்கின்றனர். இளம்பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மீண்டும் வருவதற்கான ஆபத்துகள் அதிகமாக உயிரியியல் காரணங்களும் இருக்கக்கூடும்.[59] ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஏற்பிகள் கான்சர் செல்களில் இருப்பது, முன்கணிப்பு செய்ய முடியாத போது, சிகிச்சையைக் கட்டமைப்பதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த குறிப்பிட்ட ஏற்பிகளுக்கு பாசிட்டிவாக முடிவைப் பெறாத நபர்களுக்கு ஹார்மோன் தெரபிக்கு பயனளிக்காது. இதேபோன்று, HER2/neu நிலையானது சிகிச்சையின் கால அளவைத் தீர்மானிக்கிறது. HER2/neu -க்கு பாசிட்டிவாக காண்பிக்கும் கான்சர் செல்களைக் கொண்ட நோயாளிகள், தீவிரமான நோய் பாதிப்பைப் பெற்றிருப்பார்கள். அவர்களுக்கு இந்த புரதங்களைத் தாக்கும் ட்ராடுஸுமாப் என்ற மோனோக்ளோனால் ஆன்டிபாடி என்ற மருந்தின் மூலம் சிகிச்சையளிக்கப்படுகின்றன. அல்கலைன் பாஸ்பாடாஸ் உடன் சேர்ந்த, எலிவேட்டட் CA15-3 என்பது மார்பக புற்றுநோய் திரும்பி வரும் வாய்ப்புகளை அதிகரிப்பதாக காண்பிக்கப்பட்டுள்ளன.[60] தொடர்ச்சியான மார்பக புற்றுநோய்களால் தீவிரமாக பாதிக்கப்பட்ட இடது மார்பகம். உளவியல் கூறுகள் புற்றுநோய் இருப்பதாக கண்டறிதல், அதன் அறிகுறிகள், சிகிச்சை மற்றும் தொடர்புடைய சிக்கல்கள் மிகவும் தீவிரமானவை. பெரும்பாலான பெரிய மருத்துவமனைகளில், புற்றுநோய் ஆதரவு குழுக்கள் இயங்கி வருகின்றன, இவற்றின் மூலம் நோயாளிகள் புற்றுநோயிலிருந்து பிழைத்தவர்களுடன் பழகவும், அதன் தன்மைகளை உணர்ந்து கொள்ளவும் உகந்த சூழல் ஏற்படுத்தித் தரப்படுகிறது. ஆன்லைன் கான்சர் ஆதரவுக் குழுக்களும், கான்சர் நோயாளிகளுக்கு மிகவும் பயனளிக்கக் கூடியவையாக உள்ளன, குறிப்பாக, நிச்சயமின்மை, உடலழகு கெடுதல் போன்று புற்றுநோய்களில் பொதுவாக அமைந்த சிக்கல்களை சமாளிக்க உதவுகின்றன. எல்லா மார்பக புற்றுநோய் நோயாளிகளும் ஒரே மாதிரியான சுகவீனத்தை உணர மாட்டார்கள். கான்சர் கண்டறியப்பட்ட பிறகு, வயது போன்ற பல காரணிகள் நோயின் தன்மையைத் தீர்மானிக்கின்றன. ஈஸ்ட்ரோஜன் ஏற்பி பாசிட்டிவ் மார்பக புற்றுநோயைக் கொண்ட மாதவிடாய் நிறுத்தத்திற்கு (மெனோபாஸ்) முன்பான நிலையில் உள்ள பெண்களுக்கு, அவர்களின் மார்பக புற்றுநோயை குணப்படுத்த வழங்கப்படும் பல கீமோதெரபி மருந்துகளின் தூண்டுதலால் முந்தையதாகவே மெனோபாஸ் வரக்கூடும், குறிப்பாக கருப்பை செயல்பாட்டைத் தடுப்பதற்கு பயன்படுத்தப்படும் ஹார்மோன் மருந்துகள் இவற்றை உருவாக்கக் கூடும். அவர்கள் இதனை சமாளித்தே ஆக வேண்டும்.[61] மற்றொரு வகையில், ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் உள்ள காலேஜ் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தின் ஆராய்ச்சியாளர்கள், வயதான பெண்கள், இளம்பெண்களை விட நோயிலிருந்து குணமடைவதற்கு அதிக சிரமம் அடைகின்றனர் என்று கண்டறிந்துள்ளனர்.[62] 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதால், பிழைக்கும் வீதம் குறைகின்றன. எனவே மார்பக புற்றுநோயானது தொடர்ந்து வயது சார்ந்த சிக்கலாக மாறி வருகிறது. இதை சார்ந்த விரிவான ஆய்வும், வெவ்வேறு வயதை சார்ந்தவர்களுக்கு வெவ்வேறு வகையான சிகிச்சை முறைகளும் உருவாக்கப்பட வேண்டும்.[62] நோய் பரவல் உலகளாவிய அளவில், பெண்களுக்கு ஏற்படக்கூடிய புற்றுநோய்களில் தோல் புற்றுநோய்க்கு அடுத்ததாக பொதுவான புற்றுநோயாக மார்பக புற்றுநோய் இருந்து வருகிறது. இது பெண்களுக்கான புற்றுநோய்களில் 16% ஆகும்.[64] இந்த சதவீதமானது குடல் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய்களின் வீதத்தின் இருமடங்காகும். நுரையீரல் புற்றுநோயைப் போல மூன்று மடங்காகும். உலகெங்கும் பெண்களிடையே நுரையீரல் புற்றுநோயால் ஏற்படும் மரணத்தை விடவும், 25% அதிக மரணத்தை இது ஏற்படுத்துகிறது.[10] 2004 -ஆம் ஆண்டில் மட்டும், உலகெங்கும் மார்பக புற்றுநோயால் மரணமடைந்த பெண்களின் எண்ணிக்கை 519,000 ஆகும். (புற்றுநோய் மரணங்களில் 7% ஆகும் மற்றும் ஒட்டுமொத்த மரணங்களில் 1% ஆகும்).[11] 1970களுக்கு பிறகு, உலகெங்கும் மார்பக புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிமாகியுள்ளது, இதற்கு ஒருவகையில் நவீன வாழ்க்கைமுறையும் காரணமாகும்.[65][66] மார்பக புற்றுநோயின் பாதிப்பு உலகெங்கும் பரவலாக வேறுபட்டுள்ளது, குறைவாக வளர்ச்சியடைந்த நாடுகளில் குறைவாகவும், அதிக வளர்ச்சியடைந்த நாடுகளில் அதிகமாகவும் இது இருக்கிறது. பன்னிரண்டு உலக பிராந்தியங்களில், 100,000 பெண்களுக்கு வருடாந்திர வயதால்-தரநிலைப்படுத்தப்பட்ட நோய் தாக்க வீதங்கள்: கிழக்காசியாவில் 18; தென் மத்திய ஆசியாவில், 22; துணை-சஹாரா பகுதியில் 22; தென் கிழக்கு ஆசியாவில் 26; வட ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவில் 28; தென் மற்றும் மத்திய அமெரிக்காவில், 42; கிழக்கு ஐரோப்பாவில், 49; தென் ஐரோப்பாவில், 56; வட ஐரோப்பாவில், 73; ஓஷியானா, 74; மேற்கு ஐரோப்பா, 78; மற்றும் வட அமெரிக்காவில் 90.[67] மார்பக புற்றுநோயானது, வயதுடன் மிகவும் நெருக்கமான தொடர்புடையது, 40 வயதுக்கு குறைவான பெண்களில் 5% பேர் மட்டுமே மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.[68] அமெரிக்கா அமெரிக்காவில் மார்பக புற்றுநோயால் பெண்கள் பாதிக்கப்பட, 8 இல் 1 (12.5%) பெண்ணுக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அதில் 35 இல் 1 (3%) ஒருவர் மரணமடையும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.[69] ஒரு சமீபத்திய ஆய்வு இந்த கணிப்பைத் தவறு எனக்கூறியது, அதில் ஆரோக்கியமான பெண்களில் 6% பேர் மட்டுமே பாதிப்படையும் வாய்ப்புடையவர்களாக இருக்கின்றனர்.[70] அமெரிக்காவில் மார்பக புற்றுநோயின் நோய்த்தாக்க வீதம் உலகிலேயே மிகவும் அதிகமானதாகும்; வெள்ளை பெண்களில் 100,000 பேர்களில் 128.6 பேர்களுக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களில் 100,000 பேர்களில் 112.6 பேர்களுக்கும் ஏற்படுகிறது.[69][71] இதுவே பொதுவாக காணப்படும் புற்றுநோயில் இரண்டாவது இடத்திலும் (தோல் புற்றுநோய்க்கு அடுத்ததாக) புற்றுநோயால் ஏற்படும் மரணங்களில் இரண்டாவது முக்கிய காரணமாகவும் (நுரையீரல் புற்றுநோய்க்கு அடுத்ததாகவும் இருந்து வருகிறது.[69] 2007ஆம் ஆண்டில், அமெரிக்காவில் மட்டும் 40,910 மரணங்கள் மார்பக புற்றுநோயால் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (இது புற்றுநோய் மரணங்களில் 7%; ஒட்டுமொத்த மரணங்களில் 2% ஆகவும் உள்ளது).[22] இந்த எண்ணிக்கையில், 2000 புற்றுநோய் மரணங்களில், வருடம் முழுவதும் இறக்கும் 450-500 ஆண்களும் அடங்குவர்.[72] கடந்த சில ஆண்டுகளாக, அமெரிக்காவில், அமெரிக்க பூர்வீகம் கொண்டவர்கள் மற்றும் அலாஸ்கா பூர்வீகம் கொண்டவர்கள் ஆகியோரில் மார்பக புற்றுநோய் தாக்கம் மற்றும் மரண வீதங்கள் தொடர்ந்து குறைந்து வருகின்றன.[22][73] ஆனாலும், பெண்களிடையே[74] மரணம் ஏற்படுவதற்கான பொதுவான காரணமாக இதய நோய் இருந்தாலும், 2005 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் பெண்களிடையே, மார்பக புற்றுநோயே மிகவும் அஞ்சப்படும் நோயாக இருந்து வருகிறது.[75] பெண்கள் மார்பக புற்றுநோயின் ஆபத்தை ஊதி பெரிதாக்கி பயம் கொள்கின்றனர் என்று பல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.[76] இனம் சார்ந்த சீரின்மை அமெரிக்காவில் வெள்ளையின பெண்களே அதிக அளவில் மார்பக புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டாலும், கருப்பின பெண்களே அதிகமாக மரணமடைகிறார்கள் என்று பல ஆய்வுகள் தெரிவித்தன. நோய் கண்டறியப் பட்ட பின்னரும், கருப்பின பெண்கள் மிகவும் குறைவான அளவே சிகிச்சைப் பெறுகின்றனர்.[77][78][79] இந்த வேற்றுமைகளுக்கு பல காரணங்களை அறிஞர்கள் தெரிவிக்கின்றனர், அதில் கண்டறிதலுக்கான போதுமான அணுகல் இல்லாமை, மிகவும் மேம்பட்ட அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ முறைகள் குறைவாக கிடைப்பது, அல்லது சில ஆப்பிரிக்க அமெரிக்க மக்களில் நோய் ஏற்படுத்தும் சில உயிரியல் ரீதியான பண்புகள்.[80] சில ஆய்வுகளில், மார்பக புற்றுநோய்களில் காணப்படும், இனம் சார்ந்த வேற்றுமைகள், உயிரியல் சார்ந்த வேறுபாடுகளை விடவும் கலாச்சாரம் சார்ந்த வேறுபாடுகளையே சார்ந்திருக்கிறது என்று அறியப்பட்டுள்ளது.[81] உயிரியல் மற்றும் கலாச்சார ரீதியான காரணிகளின் பங்கு தொடர்பான ஆய்வு தற்போது நடந்து வருகிறது.[78][82] இங்கிலாந்து ஆண்டுக்கு, 45,000 நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர் மற்றும் 12,500 பேர் மரணமடைகின்றனர். 60% நோயாளிகள் டாமோக்சிஃபென் கொண்டு சிகிச்சையளிக்கப்படுகின்றனர். இதில் 35% பேர்களிடையே இந்த மருந்து பலனளிக்காமல் போகிறது.[83] வளரும் நாடுகள் வளரும் நாடுகள் வளர்ச்சியடையும்போது, மேற்கத்திய கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறது, இதனால் அவையும் மேற்கத்திய கலாச்சாரத்தையும் அதன் பழக்கவழக்கங்களைப் (கொழுப்பு/ஆல்கஹால் உட்கொள்ளுதல், புகைப்பிடித்தல், வாய்வழி கருத்தடை மருந்துகள், குழந்தை தாங்குதல், பாலூட்டுதல் ஆகியவற்றில் மாறும் வழக்கம், குறைந்த எண்ணிக்கையில் குழந்தைகள் போன்றவை) பின்பற்றுவதால், அங்கு உருவான பல நோய்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகளைப் பெறுகின்றனர். எடுத்துக்காட்டாக, தென் அமெரிக்கா வளர்ச்சியடைய ஆரம்பித்தவுடன் அங்கு மார்பக புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. "தென் அமெரிக்க நாடுகளைப் போன்ற அதிகம் வளராத நாடுகளில் மார்பக புற்றுநோய் என்பது மிகப்பெரிய உடல்நல சிக்கலாகும். அர்ஜெண்டினா, உருகுவே மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில், புற்றுநோய் தொடர்பான மரணங்களுக்கு இதுவே மிக முக்கிய காரணமாக உள்ளது. 2001 ஆம் ஆண்டில் மார்பக புற்றுநோயால் பாதிக்கபட்டோர் மற்றும் மரணமடைந்தோரின் எதிர்பார்க்கப்படும் எண்ணிக்கையானது முறையே தோராயமாக 70,000 மற்றும் 30,000 ஆகும்." [84] ஆனாலும், போதுமான நிதி மற்றும் ஆதாரங்கள் இல்லாததால், மார்பக புற்றுநோயால் பாதிப்படைந்தோருக்கு தொடர்ந்து சிகிச்சை கிடைப்பதில்லை. வரலாறு மனிதர்களில் கண்டறியப்பட்ட மிகவும் பழமையான புற்றுநோய்க் கட்டிகளில் மார்பக புற்றுநோயும் ஒன்றாகும். புற்றுநோயைப் பற்றிய மிகவும் பழமையான விவரணை எகிப்தில் கண்டறியப்பட்டது, அது கிமு 1600 ஐச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. எட்வின் ஸ்மித் பேப்பரஸ் 8 வகையான கட்டிகள் அல்லது புண்களை விவரிக்கிறது, இவற்றுக்கு கவுட்டரிசேஷன் முறைப்படி சிகிச்சை அளிக்கப்பட்டது."இந்த நோயைப்பற்றி எழுதுகையில், "இதற்கு ஒரு சிகிச்சையும் கிடையாது" என்றுரைத்துள்ளது.[85] பல நூற்றாண்டுகளாக, மருத்துவர்கள் இதே மாதிரியான நோய்களை, இதே முடிவுடன் எழுதி வந்தனர். இரத்த ஓட்ட மண்டலத்தைப் பற்றி சிறந்த புரிதலை 17 ஆம் நூற்றாண்டில் பெற்ற பின்னர் அவர்கள் மார்பக புற்றுநோய்க்கும் அக்குள்களில் உள்ள நிணநீர் முடிச்சுகளுக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டனர். பிரஞ்சு சர்ஜன் ஜீன் லூயிஸ் பெடிட் (1674–1750) என்பவரும் பின்னர் ஸ்காட்டிஷ் சர்ஜன் பெஞ்சமின் பெல் (1749–1806) என்பவரும் தான் முதன்முதலாக நிணநீர் முடிச்சுகள், மார்பக திசுக்கள் மற்றும் அதற்கு கீழுள்ள மார்பு தசை ஆகியவற்றை அகற்றினார்கள். இவர்களின் வெற்றிகரமான பணியானது, வில்லியம் ஸ்டிவர் ஹால்ஸ்டெட் என்பவரால் தொடரப்பட்டது, இவர் 1882ஆம் ஆண்டில் மாஸ்டெக்டோமிகளை செய்து வர தொடங்கினார். ஹால்ஸ்டெட் ரேடிகல் மாஸ்டெக்டோமி என்பதில் பெரும்பாலும் இரண்டு மார்பகங்களையும் நிணநீர் முடிச்சுகளும் கீழே இருக்கும் மார்பு தசைகளும் அகற்றப்படும். இதனால் நீண்டகாலத்துக்கு வலியும், முடங்கியிருக்கும் நிலையும் ஏற்படக்கூடும், ஆனால் இதை நீக்குவது கான்சர் மீண்டும் வராமல் தடுப்பதற்கு அவசியமாக இருந்தது.[86] 1970கள் வரையிலும் ரேடிகல் மாஸ்டெக்டோமிகள் ஒரே வழியாக இருந்து வந்தது, அப்போது மெட்டாஸ்டாஸிஸ் என்பதை விரிவாக புரிந்து கொண்டதால், கான்சர் என்பது ஒரு முறையான, அதேநேரத்தில் குறிப்பிட்ட இடம் சார்ந்த நோய் என்று அறியப்பட்டது, மேலும் ஒழுங்கமைக்கும் சில வழிமுறைகள் உருவாக்கப்பட்டு பயனைத் தந்தன. மார்பக புற்றுநோயால் இறந்த மிகப்பிரபலமான பெண்கள் பின்வருமாறு, ராணி தியோடரா, ஜஸ்டானியனின் மனைவி; ஆஸ்திரிய ராணி, பிரான்சின் 14 ஆம் லூயி மன்னரின் தாய்; மேரி வாஷிங்டன், ஜார்ஜின் தாய், மற்றும் ராச்சல் கார்சன், என்ற சுற்றுச்சூழல் ஆய்வாளர்.[87] ஜேனட் லேன்-கிளேய்போன் என்பவரால் மார்பக புற்றுநோய் பரவலைப் பற்றி, முதன்முதலாக கட்டுப்படுத்தப்பட்ட நோய் ஆய்வு செய்யப்பட்டது, அவர் பிரிட்டிஷ் உடல்நல அமைச்சகத்தினால், 1926ஆம் ஆண்டில் ஒரே பின்புலம் மற்றும் வாழ்க்கை முறையை கொண்டவர்களில் 500 மார்பக புற்றுநோய் நோயாளிகள் மற்றும் 500 கட்டுப்படுத்தப்பட்ட நோயாளிகளைப் பற்றிய ஒப்பீட்டு ஆய்வை சமர்ப்பித்தார்.[88][89] சமுதாயமும் கலாச்சாரமும் அறுவை சிகிச்சைக்கு முன்பு, இரண்டாவது கருத்துக்களை கேட்பதற்கான ஏற்பு, குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் அறுவை சிகிச்சை வழிமுறைகள், ஆதரவு குழுக்கள் மற்றும் நோயாளியின் கவனிப்பில் ஏற்பட்டுள்ள பிற முன்னேற்றங்கள் ஆகியவை ஏற்பட்டுள்ளன. இவற்றுக்கு மார்பக புற்றுநோய் ஆலோசனை இயக்கத்தின் செயல்களும் ஓரளவுக்கு காரணமாகும்.[90] அக்டோபர் மாதமானது தேசிய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக ஊடகங்களாலும், நோயிலிருந்து மீண்டவர்களாலும், நோய் பாதிப்பு கொண்டவர்கள், அதனால் இறந்தவர்களின் நண்பர்கள், குடும்பங்கள் ஆகியோரால் அனுசரிக்கப்படுகிறது.[91] புற்றுநோயுடன் போராடும் நோயாளிகளின் போராட்டத்தை நினைவு கூறும் வகையில் ஒரு பிங்க் நிற ரிப்பன் அணியப்படுகிறது.[92] மார்பக புற்றுநோயின் முன்னோடியாக அகதா ஆஃப் சிசிலி என்பவர் கூறப்படுகிறார்.[93] 1991ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், சூசன் ஜி. கோமன் என்பவர் மார்பக புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான பந்தயத்தில் அதில் பங்கேற்றவர்களுக்கு பிங்க் ரிப்பன்களை வழங்கினார்.[94] 1996ஆம் ஆண்டில் நான்சி நிக் என்பவரால் பிங்க் மற்றும் நீல நிற ரிப்பன்கள் வடிவமைக்கப்பட்டன. இவர் ஜான் டபள்யூ. நிக் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பின் நிறுவுனர் மற்றும் தலைவர் ஆவார். இந்த அமைப்பின் நோக்கம் "ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரக்கூடும்! (Men Get Breast Cancer Too!)" என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஆகும்.[95] 2009ஆம் ஆண்டில் அவுட் ஆஃப் தி ஷாடோ, ஏ மேன்ஸ் பிங்க் மற்றும் பிராண்டன் கிரீனிங் ஃபவுண்டேஷன் ஃபார் பிரெஸ்ட் கான்சர் இன் மென் ஆகிய ஆண்கள் மார்பக புற்றுநோய் ஆலோசனைக் குழுக்கள் ஒன்றாக இணைந்து அக்டோபர் மூன்றாம் வாரத்தை "ஆண் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு வாரம்" என்று அறிவித்தன.[96] முன்னெச்சரிக்கைகள் 35 வயதைக் கடந்து விட்ட பெண்களுக்கு இந்த மார்பகப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம். எனவே 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பை இறுக்கமாக அழுத்தும் உடைகளைத் தவிர்த்தல், மிதமான உடற்பயிற்சிகளை தினசரி மேற்கொள்தல், வைட்டமின் சி மற்றும் ஏ ஆகியவை சரியான விகிதத்தில் கலந்த உணவை சாப்பிடுதல், ஆண்டுக்கு ஒரு முறை மகளிர் சிறப்பு மருத்துவர்களிடம் மார்பகப் பரிசோதனை செய்து கொள்வது போன்றவை மார்பகப் புற்று நோய் வராமல் தவிர்க்க உதவும். பாட்டி, அம்மா, பெரியம்மா, சித்தி அல்லது சகோதரி என நெருங்கிய உறவினரில் எவருக்கேனும் புற்று நோயிருந்தால் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. குறிப்புதவிகள் CS1 maint: discouraged parameter (link) Italic or bold markup not allowed in: |publisher= (help); Check date values in: |date= (help)CS1 maint: discouraged parameter (link) Italic or bold markup not allowed in: |publisher= (help)CS1 maint: discouraged parameter (link) Check date values in: |date= (help)CS1 maint: discouraged parameter (link) Unknown parameter |coauthors= ignored (|author= suggested) (help); Check date values in: |date= (help)CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) பகுப்பு:புற்றுநோய்கள் பகுப்பு:மார்பக நோய்கள் பகுப்பு:கூகுள் தமிழாக்க மருத்துவக் கட்டுரைகள்
பயாப்ஸி என்றால் என்ன?
உடல் திசு ஆய்வு
19,591
tamil
dd16913fe
Main Page பிச்சைக்காரன் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் சசி எழுதி, இயக்கும் சண்டை-பரபரப்பு தமிழ்த் திரைப்படம் ஆகும். அருள் (விஜய் ஆண்டனி) திருப்பூர் மாவட்டத்தில் பல்லடத்தை சேர்ந்த பணக்கார வியாபாரி ஆவார். அவரது தாயார் புவனேஷ்வரி (தீபா ராமானுஜம்). அவரது கணவர் ஆரம்ப கால மரணத்தைத் தொடர்ந்து அவர்களின் ஜவுளி தொழிலை கவனித்துக் கொண்டிருக்கிறார். அவினாசி (முத்துராமன்) அவரது மாமனார் ஆவார், அவர் பணத்தாசை கொண்டவர் மற்றும் அருள் சொத்துக்களை அடைய திட்டமிட்டுள்ளார். அருள் பட்டப்படிப்பு முடிந்த பின் வெளிநாட்டில் இருந்து வருகிறார் மற்றும் அவரது தாயிடமிருந்து அனைத்து வணிக பொறுப்புக்களையும் அருள் எடுத்துக் கொள்கிறார். இதற்கிடையில், புவனேஷ்வரி தொழிற்சாலையில் விபத்து ஒன்றினை சந்தித்து அவளை குணப்படுத்த, அமுல் எடுத்த எல்லா முயற்சியும் வீணாகிவிட்டது. இறுதியாக அவரது தாயாரை மீட்க , அருள் ஸ்வாமிஜியை சந்திக்கிறார் 48 நாட்களுக்கு துறவி வாழ்க்கையை வாழ வேண்டும் என்று கூறும் ஸ்வாமிஜி, இதை யாரிடமும் தெரிவிக்க கூடாது என்று கூறுகிறார். அருள் அதனை ஏற்றுக் கொண்டார். எந்த ஒரு தகவலையும் தெரிவிக்காமல், சென்னைக்கு செல்கிறார். அவரது நண்பர் ராஜேஷ் (பகவதி பெருமாள்) மட்டுமே உண்மை அறிந்திருக்கிறார். அருள் ஒரு ஆலயத்தின் முன்பாக ஒரு சில பிச்சைக்காரர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து பிச்சை எடுக்கிறார். அவர் Magizhini (சத்னா தீத்து) சந்திக்கிறார். தனது நல்ல குணங்களை பார்த்து காதல் உருவாகிறது. உண்மையில் அருள் மற்றும் அவரது தாயார் ஆரம்பத்தில் ஒரு திருமணதகவல் தளம் மூலம் ஒரு Magizhini ஐ திருமணம் செய்யஅனுகினர். Magizhini ஒரு சில சூழ்நிலைகளில் அருள் ஐ சந்திக்கிறார் ஆனால் அவர் ஒரு பிச்சைக்காரன் என்று தெரியாமல் பிடித்திருக்கிறது. அவரது தாயார் மற்றும் அருள் இப்போது இல்லாததால் அருள்-ன் வணிகங்களை அவினாஷி எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறார். அருள் ஒரு பிச்சைக்காரர் என்று Magizhini க்கு தெரியவருகிறது, அருள் அவளை ஏமாற்றி விட்டதாகவும், ஆனால் அவரது நல்ல குணங்கள மிகவும் கவர்ந்ததால் இன்னும் அவரைத் தவிர்க்க முடியாது என்று Magizhini உணர்ந்தார். ஒரு நாள் Magizhini தாயார் தனது மடிக்கணினி உள்ள Arul புகைப்படம் பார்க்கிறார் அவர் ஒரு பணக்கார தொழிலதிபர் மற்றும் கூட அவர் ஒரு சில மாதங்களுக்கு முன் திருமணம் வலைத்தளத்தில் மூலம் அவரது புகைப்படங்கள் அனுப்பியுள்ளார். அர்ஜுனையும் ராஜுஷையும் சந்திப்பதற்காக அர்ஜுனை சந்திக்கிறார் மகுஜினி. அதிர்ச்சியடைந்த அர்ஜுனன், அர்ஜுனின் அக்காவின் உயிரைக் காப்பாற்றிக் கொள்வது அவளுடைய தாயைக் காப்பாற்றுவதாகும். ஒரு பிச்சைக்காரர் தனது வாழ்க்கையை முடிக்கும் வரை அர்ஜுனைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று மஜிசினி தீர்மானிக்கிறார்.இதற்கிடையில், ஒரு மனநல சுகாதார மையத்தை நிர்வகிக்கும் டாக்டர்களின் குழு உள்ளது, ஆனால் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளைப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் அருள் ஒரு பிச்சைக்காரனின் உதவியுடன் ஒரு மனநிலை சவாலான பெண்ணாக நடித்துக்கொண்டிருக்கும் ஒரு பிச்சைக்காரனின் உதவியுடன் இதை அறிந்திருக்கிறார். இதை அறிந்த மருத்துவர்கள், அருள் படுகொலை செய்யும்படி கேட்டுஒரு கும்பலை அணுகுவர். அருள் கும்பலிடமிருந்து தப்பிக்க நினைக்கிறான். ஒரு பிச்சைக்காரனின் கடைசி நாளில், அருளை அவினாஷியால் கண்டு பிடிக்கப்பட்டு, அவனைக் கொல்ல முயற்சிக்கிறான், ஆனால் தற்செயலாக, மஜிசினி அவள் கழுத்தில் குத்தி, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஆனால், பிச்சைக்காரர் இன்னும் முடிக்கப்படாததால், அவரது கடைசி நாளான மருத்துவமனைக்கு செலவிட முடியவில்லை. அவரது பிச்சைக்காரன் நண்பர்கள் அருள் உதவ சில பணத்தை கொண்டு வர. அவனஷி பொலிஸால் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜேஷ் தனது தாயை சந்திக்க 48 நாட்களுக்கு பிறகு அருள் பெற்றுள்ளார். அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று தெரிந்து கொள்ளலாம். அருள் தனது தாயின் கைகளை வைத்திருப்பதோடு நீண்ட காலமாக வாழ வேண்டுமென்றும் கெஞ்சுகிறார். திடீரென்று அவர் தனது தாயின் கைகள் நகரும் கையை வைத்திருப்பதைக் காண்கிறார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவரது தாயார் மீட்கப்பட்டு, அருள் மற்றும் மஜிஜினி இருவரும் ஒருவருக்கொருவர் திருமணம் செய்துகொள்கின்றனர். ஒரு பிச்சைக்காரன் கோயில் முன் அபுல்னிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறான், ஆனால் அர்லுல் பிச்சைக்காரனைக் காணாத ஒரு தொலைபேசி அழைப்பில் பிஸியாகிறான். அருள் அம்மையார் பிச்சைக்காரரிடம் பணம் கொடுத்து, ஒரு பிச்சைக்காரனின் வாழ்க்கை மிகவும் பரிதாபகரமானதெனவும், அவர்களை ஒருபோதும் காயப்படுத்தக்கூடாது என்றும் அருள் சொல்கிறார். நம்மைப் போன்றவர்கள் ஒரு பிச்சைக்காரனின் வாழ்க்கை முறையை கூட ஒரு நாள் கூட நடத்த முடியாது என்று அவர் கூறுகிறார். அருள் தனது தாயிடம் பிச்சைக்காரனைக் கவனிக்காததற்காக மன்னிப்புக் கேட்கிறார். அருள் தாயார் தனது மகனின் போராட்டத்தைப் பற்றி சாதாரணமான வாழ்க்கைக்கு திரும்புவதற்கு ஒரு பிச்சைக்காரனைப் பற்றி ஒருபோதும் தெரியாதிருந்தது என்று சமிக்ஞை செய்தார். அவரது கணவர் அருள் பற்றி மகாசினி மிகவும் பெருமைப்படுகிறார்.பட்டப்படிப்பு முடிந்த பின் வெளிநாட்டில் இருந்து வருகிறார் மற்றும் அவரது தாயிடமிருந்து அனைத்து வணிக பொறுப்புக்களையும் அருள் எடுத்துக் கொள்கிறார். இதற்கிடையில், புவனேஷ்வரி தொழிற்சாலையில் விபத்து ஒன்றினை சந்தித்து அருள் எடுத்த எல்லா முயற்சியும் அவளை குணப்படுத்த வீணாகிவிட்டது. இறுதியாக, அருள் 48 நாட்களுக்கு ஆயுர்வேத வாழ்க்கையை வாழ வேண்டும் என்று கூறும் ஸ்வாமிஜியை சந்திக்கிறார், இது அவரது தாயார் மீட்க உதவுகிறது. அருள் இதை யாரும் வெளிப்படக் கூடாது என்று அவர் கூறுகிறார்.அருள் ஷெர்ஷாவை ஏற்றுக் கொண்டார். சென்னையிடமிருந்து எந்த ஒரு தகவலையும் தெரிவிக்காமல், அவரது நண்பர் ராஜேஷ் (பகவதி பெருமாள்) உண்மையை மட்டுமே அறிந்திருக்கிறார். அருள் ஒரு ஆலயத்தின் முன்பாக ஒரு சில பிச்சைக்காரர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து பிச்சைக்காரன் தொடங்குகிறார். அவர் Magizhini (சத்னா தீத்து) சந்தித்து தனது நல்ல தன்மையை பார்த்து பாசம் உருவாகிறது. உண்மையில் அருள் மற்றும் அவரது தாயார் ஆரம்பத்தில் மஜிசினி ஒரு திருமண தளம் மூலம் ஒரு கூட்டணியை அணுக தீர்மானித்தனர். Magizhini ஒரு சில சூழ்நிலைகளில் Arul எதிர்கொள்கிறது மற்றும் அவரது பாத்திரம் அவர் ஒரு பிச்சைக்காரன் என்று தெரியாமல் பிடிக்கும். அருள் மற்றும் அவரது தாயார் இப்போது கிடைக்காததால் அவுலுவின் வணிகங்களை அவினாஷி எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறார். அர்ஜுல் ஒரு பிச்சைக்காரர் என்றும், அபுல் அவளை ஏமாற்றி விட்டதாகவும், ஆனால் அவரது நல்ல தன்மையால் அவள் மிகவும் கவர்ந்ததால் இன்னும் அவரைத் தவிர்க்க முடியாது என்று மஜிஜினி உணர்ந்தார். ஒரு நாள் Magizhini தாயார் தனது மடிக்கணினி உள்ள Arul புகைப்படம் பார்க்கிறார் அவர் ஒரு பணக்கார தொழிலதிபர் மற்றும் கூட அவர் ஒரு சில மாதங்களுக்கு முன் திருமணம் வலைத்தளத்தில் மூலம் அவரது புகைப்படங்கள் அனுப்பியுள்ளார். அர்ஜுனையும் ராஜுஷையும் சந்திப்பதற்காக அர்ஜுனை சந்திக்கிறார் மகுஜினி. அதிர்ச்சியடைந்த அர்ஜுனன், அர்ஜுனின் அக்காவின் உயிரைக் காப்பாற்றிக் கொள்வது அவளுடைய தாயைக் காப்பாற்றுவதாகும். ஒரு பிச்சைக்காரர் தனது வாழ்க்கையை முடிக்கும் வரை அர்ஜுனைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று மஜிசினி தீர்மானிக்கிறார்.இதற்கிடையில், ஒரு மனநல சுகாதார மையத்தை நிர்வகிக்கும் டாக்டர்களின் குழு உள்ளது, ஆனால் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளைப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் அருல் ஒரு பிச்சைக்காரனின் உதவியுடன் ஒரு மனநிலை சவாலான பெண்ணாக நடித்துக்கொண்டிருக்கும் ஒரு பிச்சைக்காரனின் உதவியுடன் இதை அறிந்திருக்கிறார். இதை அறிந்த மருத்துவர்கள், அருள் படுகொலை செய்யும்படி கேட்டு ஒரு கும்பலை அணுகுவார். அருள் அந்த கும்பலிடமிருந்து தப்பிக்க பிச்சைக்காரனாகிறான். ஒரு பிச்சைக்காரனின் கடைசி நாளில், அவுலினி அவினாஷியால் கண்டு பிடிக்கப்பட்டு, அவனைக் கொல்ல முயற்சிக்கிறான், ஆனால் தற்செயலாக, மஜிசினி அவள் கழுத்தில் குத்தி, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஆனால், பிச்சைக்காரர் இன்னும் முடிக்கப்படாததால், அவரது கடைசி நாளான மருத்துவமனைக்கு செலவிட முடியவில்லை. அவரது பிச்சைக்காரன் நண்பர்கள் அபுல் உதவ சில பணத்தை கொண்டு வர. அவனஷி பொலிஸால் கைது செய்யப்பட்டுள்ளார்.ராஜேஷ் தனது தாயை சந்திக்க 48 நாட்களுக்கு பிறகு அருள் பெற்றுள்ளார். அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று தெரிந்து கொள்ளலாம். அருள் தனது தாயின் கைகளை வைத்திருப்பதோடு நீண்ட காலமாக வாழ வேண்டுமென்றும் கெஞ்சுகிறார். திடீரென்று அவர் தனது தாயின் கைகள் நகரும் கையை வைத்திருப்பதைக் காண்கிறார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவரது தாயார் மீட்கப்பட்டு, அருள் மற்றும் மஜிஜினி இருவரும் ஒருவருக்கொருவர் திருமணம் செய்துகொள்கின்றனர். ஒரு பிச்சைக்காரன் கோயில் முன் அபுல்னிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறான், ஆனால் அர்லுல் பிச்சைக்காரனைக் காணாத ஒரு தொலைபேசி அழைப்பில் பிஸியாகிறான். அபுல் அம்மையார் பிச்சைக்காரரிடம் பணம் கொடுத்து, ஒரு பிச்சைக்காரனின் வாழ்க்கை மிகவும் பரிதாபகரமானதெனவும், அவர்களை ஒருபோதும் காயப்படுத்தக்கூடாது என்றும் அருள் சொல்கிறார். நம்மைப் போன்றவர்கள் ஒரு பிச்சைக்காரனின் வாழ்க்கை முறையை கூட ஒரு நாள் கூட நடத்த முடியாது என்று அவர் கூறுகிறார். அபுல் தனது தாயிடம் பிச்சைக்காரனைக் கவனிக்காததற்காக மன்னிப்புக் கேட்கிறார். அபுல் தாயார் தனது மகனின் போராட்டத்தைப் பற்றி சாதாரணமான வாழ்க்கைக்கு திரும்புவதற்கு ஒரு பிச்சைக்காரனைப் பற்றி ஒருபோதும் தெரியாதிருந்தது என்று சமிக்ஞை செய்தார். அவரது கணவர் அருள் பற்றி மகாசினி மிகவும் பெருமைப்படுகிறார். எடுத்துக் கொள்கிறார். இதற்கிடையில், புவனேஷ்வரி தொழிற்சாலையில் விபத்து ஒன்றினை சந்தித்து அமுல் எடுத்த எல்லா முயற்சியும் அவளை குணப்படுத்த வீணாகிவிட்டது. இறுதியாக, அருள் 48 நாட்களுக்கு ஆயுர்வேத வாழ்க்கையை வாழ வேண்டும் என்று கூறும் ஸ்வாமிஜியை சந்திக்கிறார், இது அவரது தாயார் மீட்க உதவுகிறது. அர்லுல் இதை யாரும் வெளிப்படக் கூடாது என்று அவர் கூறுகிறார்.அபுல் ஷெர்ஷாவை ஏற்றுக் கொண்டார். சென்னையிடமிருந்து எந்த ஒரு தகவலையும் தெரிவிக்காமல், அவரது நண்பர் ராஜேஷ் (பகவதி பெருமாள்) உண்மையை மட்டுமே அறிந்திருக்கிறார். அபுல் ஒரு ஆலயத்தின் முன்பாக ஒரு சில பிச்சைக்காரர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து பிச்சைக்காரன் தொடங்குகிறார். அவர் Magizhini (சத்னா தீத்து) சந்தித்து தனது நல்ல தன்மையை பார்த்து பாசம் உருவாகிறது. உண்மையில் அபுல் மற்றும் அவரது தாயார் ஆரம்பத்தில் மஜிசினி ஒரு திருமண தளம் மூலம் ஒரு கூட்டணியை அணுக தீர்மானித்தனர். Magizhini ஒரு சில சூழ்நிலைகளில் Arul எதிர்கொள்கிறது மற்றும் அவரது பாத்திரம் அவர் ஒரு பிச்சைக்காரன் என்று தெரியாமல் பிடிக்கும். அபுல் அபுல் மற்றும் அவரது தாயார் இப்போது கிடைக்காததால் அவுலுவின் வணிகங்களை அவினாஷி எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறார். அர்ஜுல் ஒரு பிச்சைக்காரர் என்றும், அபுல் அவளை ஏமாற்றி விட்டதாகவும், ஆனால் அவரது நல்ல தன்மையால் அவள் மிகவும் கவர்ந்ததால் இன்னும் அவரைத் தவிர்க்க முடியாது என்று மஜிஜினி உணர்ந்தார். ஒரு நாள் Magizhini தாயார் தனது மடிக்கணினி உள்ள Arul புகைப்படம் பார்க்கிறார் அவர் ஒரு பணக்கார தொழிலதிபர் மற்றும் கூட அவர் ஒரு சில மாதங்களுக்கு முன் திருமணம் வலைத்தளத்தில் மூலம் அவரது புகைப்படங்கள் அனுப்பியுள்ளார். அர்ஜுனையும் ராஜுஷையும் சந்திப்பதற்காக அர்ஜுனை சந்திக்கிறார் மகுஜினி. அதிர்ச்சியடைந்த அர்ஜுனன், அர்ஜுனின் அக்காவின் உயிரைக் காப்பாற்றிக் கொள்வது அவளுடைய தாயைக் காப்பாற்றுவதாகும். ஒரு பிச்சைக்காரர் தனது வாழ்க்கையை முடிக்கும் வரை அர்ஜுனைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று மஜிசினி தீர்மானிக்கிறார்.இதற்கிடையில், ஒரு மனநல சுகாதார மையத்தை நிர்வகிக்கும் டாக்டர்களின் குழு உள்ளது, ஆனால் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளைப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் அருல் ஒரு பிச்சைக்காரனின் உதவியுடன் ஒரு மனநிலை சவாலான பெண்ணாக நடித்துக்கொண்டிருக்கும் ஒரு பிச்சைக்காரனின் உதவியுடன் இதை அறிந்திருக்கிறார். இதை அறிந்த மருத்துவர்கள், அபுல் படுகொலை செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு கும்பல் அணுகுமுறையை அணுகுவர். அபுல் கும்பல் இருந்து தப்பிக்க நிர்வகிக்கிறது. ஒரு பிச்சைக்காரனின் கடைசி நாளில், அவுலினி அவினாஷியால் கண்டு பிடிக்கப்பட்டு, அவனைக் கொல்ல முயற்சிக்கிறான், ஆனால் தற்செயலாக, மஜிசினி அவள் கழுத்தில் குத்தி, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஆனால், பிச்சைக்காரர் இன்னும் முடிக்கப்படாததால், அவரது கடைசி நாளான மருத்துவமனைக்கு செலவிட முடியவில்லை. அவரது பிச்சைக்காரன் நண்பர்கள் அபுல் உதவ சில பணத்தை கொண்டு வர. அவனஷி பொலிஸால் கைது செய்யப்பட்டுள்ளார்.ராஜேஷ் தனது தாயை சந்திக்க 48 நாட்களுக்கு பிறகு அருள் பெற்றுள்ளார். அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று தெரிந்து கொள்ளலாம். அருள் தனது தாயின் கைகளை வைத்திருப்பதோடு நீண்ட காலமாக வாழ வேண்டுமென்றும் கெஞ்சுகிறார். திடீரென்று அவர் தனது தாயின் கைகள் நகரும் கையை வைத்திருப்பதைக் காண்கிறார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவரது தாயார் மீட்கப்பட்டு, அருள் மற்றும் மஜிஜினி இருவரும் ஒருவருக்கொருவர் திருமணம் செய்துகொள்கின்றனர். ஒரு பிச்சைக்காரன் கோயில் முன் அபுல்னிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறான், ஆனால் அர்லுல் பிச்சைக்காரனைக் காணாத ஒரு தொலைபேசி அழைப்பில் பிஸியாகிறான். அபுல் அம்மையார் பிச்சைக்காரரிடம் பணம் கொடுத்து, ஒரு பிச்சைக்காரனின் வாழ்க்கை மிகவும் பரிதாபகரமானதெனவும், அவர்களை ஒருபோதும் காயப்படுத்தக்கூடாது என்றும் அருள் சொல்கிறார். நம்மைப் போன்றவர்கள் ஒரு பிச்சைக்காரனின் வாழ்க்கை முறையை கூட ஒரு நாள் கூட நடத்த முடியாது என்று அவர் கூறுகிறார். அபுல் தனது தாயிடம் பிச்சைக்காரனைக் கவனிக்காததற்காக மன்னிப்புக் கேட்கிறார். அபுல் தாயார் தனது மகனின் போராட்டத்தைப் பற்றி சாதாரணமான வாழ்க்கைக்கு திரும்புவதற்கு ஒரு பிச்சைக்காரனைப் பற்றி ஒருபோதும் தெரியாதிருந்தது என்று சமிக்ஞை செய்தார். அவரது கணவர் அருள் பற்றி மகாசினி மிகவும் பெருமைப்படுகிறார்.பட்டப்படிப்பு முடிந்த பின் வெளிநாட்டில் இருந்து வருகிறார் மற்றும் அவரது தாயிடமிருந்து அனைத்து வணிக பொறுப்புக்களையும் ஆருல் எடுத்துக் கொள்கிறார். இதற்கிடையில், புவனேஷ்வரி தொழிற்சாலையில் விபத்து ஒன்றினை சந்தித்து அமுல் எடுத்த எல்லா முயற்சியும் அவளை குணப்படுத்த வீணாகிவிட்டது. இறுதியாக, அருள் 48 நாட்களுக்கு ஆயுர்வேத வாழ்க்கையை வாழ வேண்டும் என்று கூறும் ஸ்வாமிஜியை சந்திக்கிறார், இது அவரது தாயார் மீட்க உதவுகிறது. அர்லுல் இதை யாரும் வெளிப்படக் கூடாது என்று அவர் கூறுகிறார்.அபுல் ஷெர்ஷாவை ஏற்றுக் கொண்டார். சென்னையிடமிருந்து எந்த ஒரு தகவலையும் தெரிவிக்காமல், அவரது நண்பர் ராஜேஷ் (பகவதி பெருமாள்) உண்மையை மட்டுமே அறிந்திருக்கிறார். அபுல் ஒரு ஆலயத்தின் முன்பாக ஒரு சில பிச்சைக்காரர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து பிச்சைக்காரன் தொடங்குகிறார். அவர் Magizhini (சத்னா தீத்து) சந்தித்து தனது நல்ல தன்மையை பார்த்து பாசம் உருவாகிறது. உண்மையில் அபுல் மற்றும் அவரது தாயார் ஆரம்பத்தில் மஜிசினி ஒரு திருமண தளம் மூலம் ஒரு கூட்டணியை அணுக தீர்மானித்தனர். Magizhini ஒரு சில சூழ்நிலைகளில் Arul எதிர்கொள்கிறது மற்றும் அவரது பாத்திரம் அவர் ஒரு பிச்சைக்காரன் என்று தெரியாமல் பிடிக்கும். அபுல் அபுல் மற்றும் அவரது தாயார் இப்போது கிடைக்காததால் அவுலுவின் வணிகங்களை அவினாஷி எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறார். அர்ஜுல் ஒரு பிச்சைக்காரர் என்றும், அபுல் அவளை ஏமாற்றி விட்டதாகவும், ஆனால் அவரது நல்ல தன்மையால் அவள் மிகவும் கவர்ந்ததால் இன்னும் அவரைத் தவிர்க்க முடியாது என்று மஜிஜினி உணர்ந்தார். ஒரு நாள் Magizhini தாயார் தனது மடிக்கணினி உள்ள Arul புகைப்படம் பார்க்கிறார் அவர் ஒரு பணக்கார தொழிலதிபர் மற்றும் கூட அவர் ஒரு சில மாதங்களுக்கு முன் திருமணம் வலைத்தளத்தில் மூலம் அவரது புகைப்படங்கள் அனுப்பியுள்ளார். அர்ஜுனையும் ராஜுஷையும் சந்திப்பதற்காக அர்ஜுனை சந்திக்கிறார் மகுஜினி. அதிர்ச்சியடைந்த அர்ஜுனன், அர்ஜுனின் அக்காவின் உயிரைக் காப்பாற்றிக் கொள்வது அவளுடைய தாயைக் காப்பாற்றுவதாகும். ஒரு பிச்சைக்காரர் தனது வாழ்க்கையை முடிக்கும் வரை அர்ஜுனைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று மஜிசினி தீர்மானிக்கிறார்.இதற்கிடையில், ஒரு மனநல சுகாதார மையத்தை நிர்வகிக்கும் டாக்டர்களின் குழு உள்ளது, ஆனால் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளைப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் அருல் ஒரு பிச்சைக்காரனின் உதவியுடன் ஒரு மனநிலை சவாலான பெண்ணாக நடித்துக்கொண்டிருக்கும் ஒரு பிச்சைக்காரனின் உதவியுடன் இதை அறிந்திருக்கிறார். இதை அறிந்த மருத்துவர்கள், அபுல் படுகொலை செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு கும்பல் அணுகுமுறையை அணுகுவர். அபுல் கும்பல் இருந்து தப்பிக்க நிர்வகிக்கிறது. ஒரு பிச்சைக்காரனின் கடைசி நாளில், அவுலினி அவினாஷியால் கண்டு பிடிக்கப்பட்டு, அவனைக் கொல்ல முயற்சிக்கிறான், ஆனால் தற்செயலாக, மஜிசினி அவள் கழுத்தில் குத்தி, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஆனால், பிச்சைக்காரர் இன்னும் முடிக்கப்படாததால், அவரது கடைசி நாளான மருத்துவமனைக்கு செலவிட முடியவில்லை. அவரது பிச்சைக்காரன் நண்பர்கள் அபுல் உதவ சில பணத்தை கொண்டு வர. அவனஷி பொலிஸால் கைது செய்யப்பட்டுள்ளார்.ராஜேஷ் தனது தாயை சந்திக்க 48 நாட்களுக்கு பிறகு அருள் பெற்றுள்ளார். அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று தெரிந்து கொள்ளலாம். அருள் தனது தாயின் கைகளை வைத்திருப்பதோடு நீண்ட காலமாக வாழ வேண்டுமென்றும் கெஞ்சுகிறார். திடீரென்று அவர் தனது தாயின் கைகள் நகரும் கையை வைத்திருப்பதைக் காண்கிறார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவரது தாயார் மீட்கப்பட்டு, அருள் மற்றும் மஜிஜினி இருவரும் ஒருவருக்கொருவர் திருமணம் செய்துகொள்கின்றனர். ஒரு பிச்சைக்காரன் கோயில் முன் அபுல்னிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறான், ஆனால் அர்லுல் பிச்சைக்காரனைக் காணாத ஒரு தொலைபேசி அழைப்பில் பிஸியாகிறான். அபுல் அம்மையார் பிச்சைக்காரரிடம் பணம் கொடுத்து, ஒரு பிச்சைக்காரனின் வாழ்க்கை மிகவும் பரிதாபகரமானதெனவும், அவர்களை ஒருபோதும் காயப்படுத்தக்கூடாது என்றும் அருள் சொல்கிறார். நம்மைப் போன்றவர்கள் ஒரு பிச்சைக்காரனின் வாழ்க்கை முறையை கூட ஒரு நாள் கூட நடத்த முடியாது என்று அவர் கூறுகிறார். அபுல் தனது தாயிடம் பிச்சைக்காரனைக் கவனிக்காததற்காக மன்னிப்புக் கேட்கிறார். அபுல் தாயார் தனது மகனின் போராட்டத்தைப் பற்றி சாதாரணமான வாழ்க்கைக்கு திரும்புவதற்கு ஒரு பிச்சைக்காரனைப் பற்றி ஒருபோதும் தெரியாதிருந்தது என்று சமிக்ஞை செய்தார். அவரது கணவர் அருள் பற்றி மகாசினி மிகவும் பெருமைப்படுகிறார். நடிப்பு விஜய் ஆண்டனி சட்னா தித்டசு பகவதி பெருமாள் முத்துராமன் பகுப்பு:2016 தமிழ்த் திரைப்படங்கள் பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள் பகுப்பு:இந்திய நாடகத் திரைப்படங்கள்
பிச்சைக்காரன் படத்தின் இயக்குனர் யார்?
சசி
58
tamil
fc36a6c01
யமுனை ஆறு வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். உத்தராஞ்சல் மாநிலத்தில் இமய மலையில் அமைந்துள்ள யமுனோத்ரி தொடங்கும் இந்த ஆறு, தில்லி, ஹரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக ஓடி, உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது. யமுனோத்ரியிலிருந்து அலகாபாத் வரை 1370 கிமீ இவ்வாறு ஓடுகிறது. தில்லி, மதுரா, ஆக்ரா ஆகிய நகரங்கள் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றான தாஜ் மஹால் யமுனையின் கரையில் அமைந்துள்ளது. யமுனை சிலநேரங்களில் ஜமுனா அல்லது ஜம்னா என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு நீளமான நதி ஆகும். இது கங்கை நதியின் இரண்டாவது பொிய கிளை நதியாகும். இக் கிளை நதியானது யமுனோத்ரி என்ற பனிக்கட்டி மலையிலிருந்து உருவாகிறது. இந்நதி இந்தியாவில் உத்ரகாண்ட் ம மாநிலத்தில் கீழ் இமாச்சல மலைப் பகுதியில் உள்ள தென்மேற்கு சாிவில் உள்ள பாந்தர்பூஞ்ச் சிகரத்தில் இருந்து 6387 மீட்டர் உயரத்திலிருந்து உருவாகிறது. இந்த நதியின் மொத்தப் பயணத் தொலைவு 1,376 கிலோ மீட்டர் ஆகும். கங்கை ஆற்றுப் படுகையில் 40.02% நிலப்பகுதியில் இந்நதி பாய்கிறது. இது கங்கை ஆற்றுடன் அலகாபாத்தில் திாிவேணி என்ற இடத்தில் கலப்பதற்கு முன்னதாக கங்கையும் யமுனையும் கலக்கும் இடமான திாிவேணி சங்கமத்தில் 12 வருடத்திற்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறுகிறது. இந்த நதிதான் இந்தியாவிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்படுகிறது. ஆனால் இது நோிடையாக கடலில் கலப்பதில்லை. இது உத்ரகாண்ட், இமாச்சலப்பிரதேசம், ஹாியானா மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற பல மாநிலங்களைக் கடந்து செல்கிறது. முதலில் உத்ரகாண்ட் அதன் பிறகு டெல்லியைக் கடந்து, அதன் பொிய கிளை நதியான டானுடன் கலக்கிறது. சாம்பல் நதி யமுனையின் மிக நீளமான கிளை நதியாகும். இந்நதி சிந்து, பெட்வா, கென் போன்ற ஆற்றுப் படுகையைக் கொண்டிருக்கிறது. கங்கை - யமுனை சமவெளிப் பகுதிக்கும், இந்திய - கங்கைச் சமவெளிப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்நதி மிக செழிப்பான, வளமான பகுதியை உருவாக்குகிறது. 57 மில்லியன் மக்கள் யமுனை நதியால் பயன்பெறுகிறார்கள். இந்த நதி வருடத்திற்கு 10000 கன சதுர இலக்கங்கோடி மீட்டர் தூரம் பயணம் செய்கிறது. இந்த நதி பாசனத்திற்காக 96% பயன்படுத்தப்படுகிறது. டெல்லியின் 70% தண்ணீர்த் தேவை யமனை நதி நீரால் தீர்க்கப்படுகிறது. இந்து மதத்தில் கங்கையைப் போலவே யமுனை நதியும் போற்றி வணங்கப்படுகிறது. இந்து புராணக் கதைகளின்படி யமுனை நதி சூாிய கடவுளின் மகளாகவும், மரணத்தை அளிக்கும் கடவுள் யமனின் தங்கையாகவும் கருதப்படுகிறது. புராணக் கதைகளின்படி யமுனை யாமினாட் எனவும் கருதப்படுகிறது. யமுனை நதியில் நீராடினால் ஒருவர் மரணத்தின் பிடியிலிருந்து விடுபடலாம் என்று நம்பப்படுகிறது. இமாச்சலத்திலிருந்து டெல்லியில் உள்ள விசிராபாத் என்ற இடம் வரை யமுனையின் நீரானது சுத்தமாகவுள்ளது. விசிராபாத் அணைக்கட்டிற்கும் ஓக்லா அணைக்கட்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் 15 இடங்களில் வடிகால் வாயிலாக கழிவு நீ்ர் ஆற்றில் கலந்து ஆற்றை அசுத்தமாக்குகின்றன. வீட்டுக் கழிவுகள், நகராட்சி கழிவுகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் ஆகிய மூன்று முக்கியக் கழிவுகளால் யமுனை நதி அசுத்தப்படுத்தப்படுகிறது. மூலம் (தொகு) யமுனை நதியின் மூலமானது யமுனோத்ரி என்ற பனிக்கட்டி மலையிலிருந்து உருவாகிறது. ஹாித்துவாாின் வடக்கில் உத்ரகாண்ட் மாநிலத்தில், உத்ரகாசி மாவட்டத்தில் கீழ் இமாலயத்தின் தென்கிழக்குச் சாிவில் பாந்தர்பூஞ்ச் சிகரத்திலிருந்து 6387 மீ உயரத்திலிருந்து இது உருவாகிறது. யமுனை நதி கடவுளாகக் கருதப்படுவதால் யமுனைக்கு அர்ப்பணிப்பதற்காக யமுனோத்ரி கோயில் கட்டப்பட்டது. இந்து மதத்தில் யமுனோத்ரி கோயில் புனிதத் தளமாக கருதப்படுகிறது. இக்கோயிலை ஒட்டி 13 கி.மீ. தூரத்திற்கு நடைபாதை உள்ளது. இப்பாதை ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ள "மார்க்கண்டேய" தீர்த்தத்துக்கு செல்கிறது. இங்குதான் முனிவர் மார்க்கண்டேயர், மார்க்கண்டேய புராணத்தை எழுதினார். இவ்விடத்தில் இருந்து யமுனை தெற்கில் பாய்கிறது. கீழ் இமாச்சலம் மற்றும் சிவாலிக் மலைத் தொடர் வழியாக 200 கி.மீ. தூரத்திற்கு தெற்கு நோக்கி பாய்கிறது. இந்த ஆற்றுப் படுகையில் மண்ணியல் அமைப்புகளான செங்குத்தான பாறைகளில், பள்ளத்தாக்குப் பகுதிகள் மற்றும் ஓடைகள் அமைந்துள்ளன. இந்நதியின் நீர் பாயும் மொத்தப் பரப்பளவு 2320 சதுர கி.மீ. ஆகும். இப்பகுதி இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. யமுனையின் முக்கியக் கிளை நதிகளான டான்ஸ், ஹாி-கி-துன் பள்ளத்தாக்கிலிருந்து உருவாகிறது. இது டேராடூனில் கால்சி நதியுடன் இணைந்த பிறகு இதன் கொள்ளளவு யமுனை நதியை விட அதிகமாகும். இந்நதியின் வடிகால் பகுதிகள் இமாச்சலத்தில் உள்ள கிாி-சட்லெஜ் நீ்ர்ப்பிடிப்புப் பகுதிகளும், கார்வாலில் உள்ள யமுனை - பிலிங்னா நீர்ப்பிடிப்புப் பகுதிக்கும் இடையில் அமைந்துள்ளது. சிம்லாவின் தெற்குப் பகுதியும் இந்நதி நீர் பாயும் பகுதியில் அடங்கும். யமுனை நதிப் பள்ளத்தாக்கில் மிக உயரமான பகுதி காலாநாக், இது 6387 மீட்டர் உயரமுடையது. யமுனையின் மற்ற கிளை நதிகளான கிாி, ரிஷிகங்கா, ஹனுமன் கங்கா மற்றும் பாட்டா ஆகியவை யமுனை நதி பள்ளத்தாக்கின் மேல்நீர்ப்பிடிப்புப் பகுதியில் பாய்கின்றன. இங்கிருந்து யமனை நதி டேராடூனின் அருகில் உள்ள டாக் பாதாில் உள்ள டூன் பள்ளத்தாக்குப் பகுதியில் கீழ்நோக்கிப் பாய்கிறது. டாக் பாதர் அணைக்கட்டிலிருந்து நீர், மின்சாரம் எடுப்பதற்காக கால்வாய்க்கு பிாித்து விடப்படுகிறது. சீக்கிய புனித யாத்திரை நகரான போயன்டா சாகிப்பை கடந்து சென்ற பிறகு, ஹாியானாவில் உள்ள யமுனா மாவட்டத்தில் உள்ள தேஜ்வாலாவை அடைகிறது. இங்கு 1873-ல் ஒரு அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து இரண்டு முக்கிய கால்வாய்களான மேற்கு யமுனைக்கால்வாய், கிழக்கு யமுனைக் கால்வாய், கிழக்கு யமுனைக் கால்வாய் உருவாகின்றன. உத்திரபிரதேசம் மற்றும் ஹாியானா ஆகிய இரு மாநிலங்களுக்கு் இக்கால்வாய் யமுனா நகர், கார்னல் மற்று பானிபட் ஆகிய நகரங்களைக் கடந்து கைதர்பூர் சுத்திகாிப்பு ஆலையை அடைகிறது. இங்கிருந்து டெல்லிக்கு நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. யமுனா நகர் மற்றும் பானிபட் ஆகிய நகரங்களில் இருந்து கழிவு நீர் இக்கால்வாயில் கலக்கிறது. 224 கிலோ மீட்டர் கடந்து பல்லா கிராமத்தை அடைந்தபிறகு யமுனை நதியில் சிறு ஓடைகளில் அவ்வப்போது வருகின்ற நீர் கலக்கிறது. வறட்சிக் காலங்களில் இந்த நதி தேஷ்வா முதல் டெல்லி வரை வறண்டு இருக்கும். யமுனை நதி இமாச்சலப்பிரதேசம், உத்ரகாண்ட் மற்றும் அாியானா, டெல்லி, உத்தரபிரதேசம் ஆகியமாநிலங்களுக்கு இடையே எல்லையாக உள்ளது. இந்நதி கங்கை நதிக்கு இணையாக இந்து - கங்கைச் சமவெளி வரை பாய்கிறது. உலகிலேயே மிகப் பொிய வளமான பகுதியான இந்து - கங்கை சமவெளிப் பகுதிக்குப் பிறகு இரு நதிகளும் இணையாகப் பாய்கின்றன. கங்கை - யமுனை சமவெளிப்பகுதி 69,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது. இந்தச் சமவெளிப் பகுதியில் மூன்றில் ஒரு பங்கு விவசாயத்திற்கு பெயர் பெற்றது. பெட்வா நதி== மத்தியப் பிரதேச மாநிலம் ஓசங்காபாதுக்கு வடக்கில் உருவாகி, வட கிழக்காகப் பாய்ந்து, மால்வா பீடபூமி வழியாக உத்தரப்பிரதேச மாநிலம் அமீர்பூர் அருகில் யமுனையில் கலக்கிறது பெட்வா நதி.[1] கென் நதி கென் நதி மத்தியப் பிரதேசம் ஜபல்பூர் அருகில் உருவாகி உத்தரப் பிரதேசம் பதேபூர் அருகில் யமுனையில் கலக்கிறது.[1] யமுனா மேற்கோள்கள் பகுப்பு:இந்திய ஆறுகள் பகுப்பு:இந்து தொன்மவியல் ஆறுகள்
யமுனை ஆற்றின் நீளம் என்ன?
1,376 கிலோ மீட்டர்
880
tamil
df05fa599
இயற்பியலில் (பௌதீகவியலில்) ஒரு பொருளின் அடர்த்தி (ஒலிப்பு) (density) என்பது அப்பொருளானது ஒரு குறிப்பிட்ட பரும அளவில் (கன அளவில்) எவ்வளவு நிறை அல்லது திணிவு கொண்டு உள்ளது என்பதைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக ஒரு கன செண்டி மீட்டர் பரும அளவில் உள்ள தங்கம் 19.32 கிராம் நிறை ஆகும். ஆனால் அதே ஒரு கன செண்டி மீட்டர் பரும அளவு கொண்ட வெள்ளி 10.49 கிராம்தான் உள்ளது. எனவே தங்கத்தின் "அடர்த்தி" வெள்ளியின் அடர்த்தியை விட கூடுதலானது. அடர்த்தி பின்வரும் சமன்பாட்டினால் கொடுக்கப்படும். ρ = m V {\displaystyle \rho ={\frac {m}{V}}} SI அலகுகள்: ρ = (ரோ அல்லது றோ) பொருளின் அடர்த்தி (அலகு: கி.கி/மீ-3, kg·m-3} m = பொருளின் நிறை அல்லது திணிவு (அலகு: கி.கி, kg) V = பொருளின் பரும அளவு (கன அளவு) (அலகு: மீ3) நிறை அல்லது திணிவு, கிராம் அலகிலும், பரும அளவு (கன அளவு) கன செண்டி மீட்டர் (கன சதம மீட்டர்) அலகிலும் இருக்கும்போது அடர்த்தி, ஒரு செண்டி மீட்டருக்கு எவ்வளவு கிராம் என்பதாகும். அலகு: கிராம்/(கன செண்டி மீட்டர்) அல்லது கிராம்/(செண்டி மீட்டர்) 3 அலகில் இருக்கும். சுருக்கமாக கி/செ.மீ3 என எழுதுவது வழக்கம். SI அலகில் கி.கி/மீ3 என எழுதுவது வழக்கம். பல்வேறு பொருள்களின் அடர்த்திகள்: பொருள்அடர்த்தி (கி.கி/மீ3)திடம் இரிடியம்22650ஆஸ்மியம்22610பிளாட்டினம்21450தங்கம்19300டங்க்ஸ்டன்19250யுரேனியம்19050பாதரசம்13580பலேடியம்12023ஈயம்11340வெள்ளி10490செப்பு 8960இரும்பு 7870வெள்ளீயம் 7310டைட்டேனியம் 4507வைரம் 3500அலுமீனியம் 2700மக்னீசியம் 1740திரவம்கடல் நீர் 1025நீர் 1000ஈத்தைல் ஆல்கஹால் 790பெட்ரோல் 730Aerogel 3.0எடுத்துக்காட்டு காற்று1.2 வளியின் அடர்த்தி<i data-parsoid='{"dsr":[2833,2838,2,2]}'>ρ vs. வெப்பநிலை °C T in °C ρ கிகி/மீ³ இல் - 10 1.341 - 5 1.316 0 1.293 + 5 1.269 + 10 1.247 + 15 1.225 + 20 1.204 + 25 1.184 + 30 1.164 வெளி இணைப்புகள் தனிம அட்டவணையில் உள்ள தனிமங்கள் வரிசைப்படுத்துதல் பகுப்பு:இயற்பியல் கணியங்கள்
நீரின் அடர்த்தி எவ்வளவு?
1000
1,393
tamil
89ea74032
புல்லாங்குழல் (புல்லாங்குழல் இசைக்கோப்பு) மிகவும் தொன்மையான வரலாற்றையுடைய ஒரு இசைக்கருவி. உலகின் எல்லாப் பாகங்களிலும் காணப்படும் இது துளைக்கருவி (aero phones) வகையைச் சேர்ந்தது. புல்லாங்குழல்கள் மிகப் பழங்கால இசைக்கருவியாகும். இவற்றில் கையினால்-துளையிடப்பட்ட துளைகள் கொண்ட பழங்கால புல்லாங்குழல்கள் கிடைத்துள்ளன. சுமார் 43,000 முதல் 35,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் வரையான பல புல்லாங்குழல்கள் இன்றைய ஜெர்மனியின் ஸ்வாபியன் ஜுரா பகுதியில் கிடைத்துள்ளன. இந்தப் புல்லாங்குழல்கள் ஐரோப்பாவில் நவீன கால மனிதனுக்கு முந்தைய காலத்தில் இருந்தே வளர்ந்துள்ள ஒரு இசை பாரம்பரியத்தின் சாட்சியாக உள்ளது.[1][2] புல்லாங்குழல்களில் புகழ்பெற்ற பன்சூரி உட்பட குழல்கள், கி.மு. 1500 முதல் இந்திய பாரம்பரிய இசையில் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. இந்து சமயத்தின் ஒரு முதன்மைக் கடவுளான கண்ணன் புல்லாங்குழலைக் கொண்டிருப்பார். பொருளியல் மற்றும் சொல் 1150 - 1500 காலகட்டத்தில், ஆங்கிலத்தில் புல்லாங்குழல் முதன்முதலில் புளூட் (floute) [3] அல்லது else flowte, flo(y)te [4] எனவும், 9 முதல் 14 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் பேசப்பட்ட பழைய பிரெஞ்சு மொழியில் ப்ளாட் (flaute) எனவும், பழைய ஆக்சிதம் மொழியில், அல்லது மற்றும் பழைய பிரெஞ்சு மொழியில் ஃபிளாட் (flaüt), [3] ஃப்ளூட்டெ ( fleüte), ஃப்லாட்டெ ( flaüte), ஃப்ளஹுட் ( flahute) எனவும் அழைக்கப்பட்டது.  இடைக்கால உயர் ஜேர்மன் மொழியில் floite அல்லது இடச்சு மொழியில் fluit எனவும் வழங்கப்பட்டது. புல்லாங்குழலை குறிக்கும் புலூட் (flute) என்ற சொல் முதன்முதலில் 14 ஆம் நூற்றாண்டில் அறியப்படுகிறது. [5] ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியின்படி, இது ஜெஃப்ரி சாசர்ரின் த ஹவுஸ் ஆஃப் ஃபேமில், c.1380 இல் பயன்படுத்தப்பட்டது. [4] இன்று, புல்லாங்குழல் குடும்பத்தைச் சார்ந்த எந்தவொரு கருவியையும் வாசிக்கும் ஒரு இசைக்கலைஞர் ஆங்கிலத்தில் flutist (அமெரிக்காவின் பொதுவான உச்சரிப்பு "FLEW-tist"), [6] அல்லது flautist (ஐக்கிய இராச்சியத்தில் பொதுவாக உச்சரிக்கப்படுவது "FLAW-tist"), [7] அல்லது வெறுமனே ஒரு புலூட் பிளேயர் (flute player) (மிகப் பொதுவாக) என அழைக்கப்படுகிறார். இப்போது கிட்டத்தட்ட வழக்கற்றுப் போன பிற ஆங்கில சொற்கள் ஃப்ளட்டர் (fluter) (15 -19 நூற்றாண்டுகள்) [8][9][10] மற்றும் புளூட்டினிஸ்ட் (flutenist) (17 -18 ஆம் நூற்றாண்டுகள்). [11][12] வரலாறு இதுவரையான காலக்கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புல்லாங்குழலில் பழமையான புல்லாங்குழலானது, ஒரு இளம் குகைக் கரடியின் தொடை எலும்பால் ஆனதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதில் இரண்டு முதல் நான்கு துளைகள்வரை இருந்திருக்கலாம், இது சுலோவியாவின் டிஜீ பேபே பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. மேலும் இது சுமார் 43,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இருப்பினும், இது சர்ச்சைக்குரியதாக உள்ளது.[13][14] 2008 ஆம் ஆண்டில் குறைந்தது 35,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மற்றொரு புல்லாங்குழல் மீண்டும் ஜெர்மனியின் உல்ம் நகருக்கு அருகில் உள்ள, ஹோஹெல் ஃபெல்ஸ் குகையில் காண்டெடுக்கப்பட்டது.[15] இந்தப் புல்லாங்குழலானது ஐந்து துளைகளுடன் V- வடிவ வாயைக் கொண்டதாக உள்ளது. இது ஒரு பிணந்தின்னிக் கழுகின் இறக்கை எலும்பில் செய்யப்பட்டதாகும். இந்தக் கண்டுபிடிப்பில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் 2009 ஆகத்தில் நேச்சர் பத்திரிக்கையில் தங்கள் கண்டுபிடிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். [16] இந்த கண்டுபிடிப்பானது, உலக வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட எந்தவொரு இசைக் கருவியையும்விட பழமையானதாகும், [17] ஜெர்மனியின் ஜியாசென்ஸ்கொஸ்டெர்லேர் குகையில் காண்டெடுக்கப்பட்ட புல்லாங்குழல்கள் வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தின அவை 42,000 முதல் 43,000 ஆண்டுகள் வரை பழமையான காலக்கட்டத்தவையாக கருதப்பட்டன. [2] இலக்கியத்தில் புல்லாங்குழல் இந்தியாவின் பழைய இலக்கியங்களிலே இக்கருவியைப்பற்றிய ஏராளமான குறிப்புக்கள் உண்டு. தமிழின் சங்க இலக்கியங்களும் குழல் பற்றிப்பேசுகின்றன. சிலப்பதிகாரத்தில் உள்ள ஆய்ச்சியர் குரவையிலே கொன்றைக்குழல், ஆம்பர் குழல், முல்லைக்குழல் என 3 வகைக் குழல்களைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்துக்களின் கடவுளான விஷ்ணு பகவானின் அவதாரமான கண்ணனின் கையிலுள்ளதாகச் சித்தரிக்கப்படும் புல்லாங்குழலுக்கு சமய ரீதியான முக்கியத்துவமும் உண்டு. முதன்முதலில் புல்லாங்குழல் வாசித்தவர் முருகன். கிருஷ்ணர் இல்லை. கிருஷ்ணர் காலம் ஐயாயிரம் ஆண்டு. முருகப் பெருமான் ஆதியும் அந்தமும் இல்லாதவர். திருமுருகாற்றுப் படையிலே, “குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்” என வருகிறது. குழல் என்றால் புல்லாங்குழல் என்று அர்த்தம். யாழ் செயற்கை வாத்தியம். குழல் இயற்கை வாத்தியம். “குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்” என்று வள்ளுவர், முதலில் குழலைச் சொல்லிவிட்டுப் பிறகு யாழைச் சொல்லுகின்றார். எது முக்கியமோ அதை முதலில் சொல்லுகின்றார். முருகப்பெருமான் குறிஞ்சி நிலக் கடவுள். குறிஞ்சி நிலத்திலே (மலையிலே) வாழ்கின்ற தெய்வம், மலையிலே விளைகின்ற மூங்கிலை வெட்டி அதைத் துளையிட்டுப் புல்லாங்குழல் வாசித்தாராம் சுப்பிரமணிய சுவாமி.[18] வகைகள் இந்திய புல்லாங்குழல் இந்திய பாரம்பரிய இசை வரலாற்றில் புல்லாங்குழல்கள் முக்கிய இடம் பிடித்துள்ளன.இவை மூங்கிலால் தயாரிக்கப்படுகின்றது.இந்தியர்களின் கடவுளான கிருஷ்ணரே புல்லாங்குழலின் குருவாக கருதப்படுகிறது.மேற்கத்திய புல்லாங்குழலினை விட இவை சாதாரணமாகவே இருக்கின்றன.இந்திய புல்லாங்குழல்களில் இரண்டு வகைகள் உள்ளன.ஒன்று பன்சூரி வகையாகும்.இதில் ஆறு விரல் துளைகளும் ஒரு ஆற்றுவாய் துளையும் இருக்கும்.வட இந்திய ஹிந்துஸ்தானி இசைக்கு இவை பயன்படுகின்றன.மற்றொருவகை வேணு இவை தெனிந்திய கர்நாடக இசைகளில் பயன்படுத்தப்படுகின்றன.இவற்றில் எட்டு விரல் துளைகளும் ஒரு ஆற்றுவாய் துளையும் இருக்கும்.தற்போது தென்னிந்திய புல்லாங்குழலாக கருதப்படுவது 20-ஆம் நூற்றாண்டில் சரப சாஸ்திரி என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஏழு விரல்துளைகள் கொண்ட புல்லாங்குழல் ஆகும். சீனப் புல்லாங்குழல் சீனப் புல்லாங்குழல்கள் டிசி என அழைக்கப்படுகின்றன. இவை பல்வேறு அளவுகளிலும், பல்வேறு அமைப்புக்களிலும் காணப்படுகின்றன. இவற்றின் துளைகளின் எண்ணிக்கை 6 இல் இருந்து 11 வரை வேறுபடுகின்றன. பெரும்பாலானவை மூங்கிலால் தயாரிக்கப்பட்டுள்ள போதிலும் மரம், எலும்பு, இரும்பு ஆகியவற்றாலும் ஆக்கப்பட்டவையும் காணப்படுகின்றன. நவீன சீன இசைநிகழ்ச்சிகளில் காணப்படக்கூடிய புல்லாங்குழல்களாவன பங்டி (梆笛), கூடி (曲笛), சிந்தி (新笛), டாடி (大笛) என்பனவாகும். நிலைக்குத்தாக வைத்து வாசிக்கப்படும் மூங்கிலாலான புல்லாங்குழல் சியாவோ (簫) என அழைக்கப்படுகின்றது. ஜப்பானியப் புல்லாங்குழல் ஜப்பானியப் புல்லாங்குழல்கள் ஜப்பானிய மொழியில் பியூ (fue) (笛) (ஹிரகனா ふえ) என அழைக்கப்படுகின்றன. முடிவுப் பகுதியில் வைத்து வாசிக்கப்படுபவை, குறுக்க்காக வைத்து வாசிக்கப் படுபவை என இரு வகையிலும் பல சங்கீதப் புல்லாங்குழல்கள் ஜப்பானில் காணப்படுகின்றன. சோடினா மற்றும் சுலிங் சோடினா எனப்படுவது முடிவுப் பகுதியில் வைத்து வாசிக்கப்படும் ஒருவகைப் புல்லாங்குழல் ஆகும். இது இந்து சமுத்திரத்தில் உள்ள தென்கிழக்கு ஆபிரிக்காவைச் சேர்ந்த மடகஸ்கார் தீவுகளில் பரவலாகக் காணப்படுகின்றன. தென்கிழக்காசியாவிலும் இந்தோனேசியாவிலும் இது சுலிங் என அழைக்கப்படுகின்றது. சமகாலத்தில் வசித்த பிரசித்தி பெற்ற சோடினா வாசிப்பவரான இரகோடோ பிராவின் (இறப்பு2001) புகைப்படம் அந்நாட்டுப் பணத்தாள் ஒன்றில் அச்சிடப்பட்டுள்ளது. அமைப்பு புல்லாங்குழல், புல் இன வகையான மூங்கில் "மரத்தினால்" செய்யப்படுகின்றது. இதனால் இதற்குப் புல்லாங்குழல் என்று பெயர் ஏற்பட்டது. இளமையும் மூப்புமின்றி நடுவளர்ச்சியுடைய மூங்கில் மரத்தை வெட்டி நிழலிலே ஒராண்டு காலம் வைத்து அதிலிருந்து குழல் செய்வர். சீரான விட்டமுடைய ஒடுங்கிய மூங்கில் குழாயில், வாயினால் ஊதிச் இசையொலி எழுப்புவதற்காக நுனியில் ஒரு துளையும், விரல்களால் மூடித்திறப்பதன் மூலம் இவ் இசையொலியை வெவ்வேறு சுரங்களாக மாற்றி எழுப்ப உதவும் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய பல்வேறு துளைகளையும் கொண்ட எளிமையான கருவியாக இது இருப்பதால், சமுதாயத்தின் எல்லாத் தரப்பிலுள்ளவர்களுக்கும் இலகுவில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் கருவி புல்லாங்குழலின் நீளம் 15 அங்குலம்; சுற்றளவு 3 அங்குலம். இடப்பக்கம் மூடப்பட்டிருக்கும். வலப்பக்கம் திறந்திருக்கும். குழலில் மொத்தமாக 9 துளைகள் உண்டு. வாய் வைத்து ஊதப்படும் முதல் துளைக்கு முத்திரை அல்லது முத்திரைத்துளை என்று பெயர். இத்துளை, மற்ற எட்டு துளைகள் ஒவ்வொன்றுக்கும் நடுவில் உள்ள இடைவெளியை விட சற்றுத் தள்ளி இருக்கும். வாசிக்கும் முறை குழலின் 7 துளைகள் மீது 7 விரல்களை வைத்து வாசிக்க வேண்டும். 8 வது கடைசித்துளை பாவிப்பது இல்லை. இடது கை விரல்களில் கட்டை விரலையும், சிறு விரலையும்நீக்கி எஞ்சியுள்ள 3 விரல்களையும், வலது கை விரல்களில் கட்டை விரலைத்தவிர மற்ற 4 விரல்களையும் 7 துளைகளின் மீது வைத்து, முத்திரத் துளைக்குள் வாயின் வழியாகக் காற்றைச் செலுத்தி, துளைகளை மூடித் திறக்கும்போது இசை பிறக்கின்றது. புல்லாங்குழலின் நீளம், உள்கூட்டின் அளவு கூடும் போது சுருதி குறையும். புல்லாங்குழலில் 7 சுரங்களுக்கு 7 துளைகள் இருந்தாலும் வாசிப்பவரின் மூச்சின் அளவைக் கொண்டே நுட்ப சுரங்களை சரியாக ஒலிக்க முடியும். பல்வேறு குழல்கள் உலகம் முழுவதிலுமுள்ள பல விதமான இசைகளுக்கு ஒத்ததாகப் பல்வேறு சிறிய மாற்றங்களுடன் வெவ்வேறு விதமாகப் புல்லாங்குழல்கள் செய்யப்படுகின்றன பிரபல புல்லாங்குழல் மேதைகள் திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளை டி. ஆர். மகாலிங்கம் டி. ஆர். நவநீதம் என். ரமணி மேற்கோள்கள் வெளியிணைப்புகள் இவற்றையும் பார்க்கவும் பஞ்சமரபு பகுப்பு:காற்றிசைக் கருவிகள் பகுப்பு:துளைக் கருவிகள்
புல்லாங்குழல் எந்த மரத்தில் செய்யப்படுகிறது?
மூங்கில்
6,339
tamil
af0f1f714
Coordinates: வால்ட் டிஸ்னி உலகம் (Walt Disney World) அல்லது வோல்ட் டிஸ்னி உலக ஓய்விடம் சுருக்கமாக டிஸ்னி உலகம் என்பது உலகின் மிக அதிகமானோர் செல்லும் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு ஓய்விடமாகும். இது அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பியூனா விஸ்டா என்ற ஏரியில் அமைந்துள்ளது.[1] வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் பராமரிக்கப்படும் இவ்விடத்தின் பரப்பளவு 30,080 ஏக்கர் (12,173 ஹெக்டயர்; 47 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது. வால்ட் டிஸ்னி உலகில் நான்கு கேளிக்கைப் பூங்காக்களும் மற்றும் இரண்டு நீர்ப் பூங்காக்களும், இருப்பத்து நான்கு ஓய்வு விடுதிகளும் மற்றும் இரு ஆரோக்கிய நீரூற்று மற்றம் உடற்பயிற்சி நிலையங்கள், ஐந்து கோல்ப் விளையாட்டிடங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. மேற்கோள்கள் வெளியிணைப்புக்கள் பகுப்பு:சுற்றுலா பகுப்பு:புளோரிடா
டிஸ்னி வேர்ல்ட் எங்கு உள்ளது?
புளோரிடாவில்
213
tamil
bcf878d3f
ஒரு சாதாரண வளர்ந்த மனிதனுடைய எலும்புக்கூடு பின்வரும் 206 (மார்பெலும்பு மூன்று பகுதிகளாகக் கருதப்பட்டால் 208) எண்ணிக்கையான எலும்புகளைக் கொண்டிருக்கும். இந்த எண்ணிக்கை உடற்கூட்டியல் வேறுபாடுகளைப் பொறுத்து மாறுபடக்கூடும். எடுத்துக்காட்டாக, மிகக் குறைந்த எண்ணிக்கையான மனிதர்களில், ஒரு மேலதிக விலா எலும்பு (கழுத்துவில்) அல்லது ஒரு மேலதிகமான கீழ் முதுகெலும்பு காணப்படுவதுண்டு; இணைந்த சில எலும்புகளைத் தனி எலும்பாகக் கருதாவிடின், ஐந்து இணைந்த திருவெலும்பு; மூன்று (3 - 5) குயிலலகு எலும்புகள் சேர்ந்து 26 எண்ணிக்கையிலான முதுகெலும்புகள் 33 ஆகக் கருதப்படலாம். மனித மண்டையோட்டில் 22 எலும்புகள் (காதுச் சிற்றென்புகளைத் தவிர) உள்ளன; இவை எட்டு மண்டையறை (cranium) எலும்புகளாகவும் 14 முக எலும்புகளாகவும் (facial bones) பிரிக்கப்பட்டுள்ளன. (தடித்த எண்கள் அருகிலுள்ள படத்தில் காணும் எண்களைக் குறிக்கின்றன.) மண்டையறை எலும்புகள் (8) 1 நுதலெலும்பு (frontal bone) 2 சுவரெலும்பு (parietal bone) (2) 3 கடைநுதலெலும்பு (temporal bone) (2) 4 பிடர் எலும்பு (occipital bone) ஆப்புரு எலும்பு (sphenoid bone) நெய்யரியெலும்பு (ethmoid bone) முக எலும்புகள் (14) 7 கீழ்த்தாடை எலும்பு (mandible) 6 மேற்றாடை எலும்பு (maxilla) (2) அண்ணவெலும்பு (palatine bone) (2) 5 கன்ன எலும்பு (zygomatic bone) (2) 9 நாசி எலும்பு (nasal bone) (2) கண்ணீர் எலும்பு (lacrimal bone) (2) மூக்குச் சுவர் எலும்பு (vomer) கீழ் மூக்குத் தடுப்பெலும்பு (inferior nasal conchae) (2) நடுக்காதுகளில் (6): சம்மட்டியுரு (malleus) பட்டையுரு (incus) ஏந்தியுரு (stapes) தொண்டையில் (1): தொண்டை எலும்பு (நாவடி எலும்பு) (hyoid) தோள் பட்டையில் (4): 25. காறை எலும்பு (clavicle) 29. தோள் எலும்பு (scapula) மார்புக்கூட்டில் thorax(25): 10. மார்பெலும்பு (sternum) (1) மேலும் மூன்று என்புகளாகக் கருதப்படலாம்: பிடியுரு (manubrium), உடல் மார்பெலும்பு (body of sternum), வாள்வடிவ நீட்டம் (xiphoid process) 28. விலா எலும்புகள் (rib) (24) முதுகெலும்புத் தூண் (vertebral column) (33): 8. கழுத்து முள்ளெலும்புகள் (cervical vertebra) (7) மார்பு முள்ளெலும்புகள் (thoracic vertebra) (12) 14. நாரிமுள்ளெலும்புகள் (lumbar vertebra) (5) 16. திரிகம் (திருவெலும்பு) (sacrum) வால் எலும்பு (குயிலலகு) (coccyx) மேற்கைகளில் (arm) (1): 11. புய எலும்பு (மேல்கை எலும்பு) (humerus) 26. புய எலும்புப் புடைப்பு (மேல்கை எலும்புப் புடைப்பு) (condyles of humerus) முன்கைகளில் (forearm) (4): 12. அரந்தி (ulna) (2) 13. ஆரை எலும்பு (radius) (2) 27. ஆரை எலும்புத் தலை (head of radius) கைகளில் (hand) (54): மணிக்கட்டுகள் (carpal): படகெலும்பு (scaphoid) (2) பிறைக்குழி எலும்பு (lunate) (2) முப்பட்டை எலும்புtriquetrum) (2) பட்டாணி எலும்பு (pisiform) (2) சரிவக எலும்பு (trapezium) (2) நாற்புறவுரு எலும்பு (trapezoid) (2) தலையுரு எலும்பு (capitate) (2) கொக்கி எலும்பு (hamate) (2) அங்கை முன்னெலும்புகள் (அனுமணிக்கட்டு எலும்புகள்) (metacarpal): (5 × 2) விரலெலும்புகள் (phalange): அண்மை விரலெலும்புகள் (proximal phalanges) (5 × 2) நடு விரலெலும்புகள் (Intermediate phalanges) (4 × 2) தொலை விரலெலும்புகள் (distal phalanges) (5 × 2) இடுப்பு வளையம் (pelvis) (2): 15. இடுப்பெலும்பு (ilium) மற்றும் கீழ் இடுப்பெலும்பு (ischium) கால்கள் (leg) (8): 18. தொடையெலும்பு (femur) (2) 17. இடுப்பு மூட்டு (hip joint) (மூட்டு, எலும்பல்ல) 22. பெரிய தொடையெலும்புக் கொண்டை (greater trochanter of femur) 23. தொடையெலும்புப் புடைப்பு (condyles of femur) 19. சில்லெலும்பு (patella) (2) 20. கால் முன்னெலும்பு (கணைக்காலலுள்ளெலும்பு) (tibia) (2) 21. சிம்பு எலும்பு (கணைக்கால்வெளியெலும்பு) (fibula) (2) காலடிகளில் (52): கணுக்காலெலும்புகள் (tarsal): குதிகால் (calcaneus) (2) முட்டி (talus) (2) படகுரு எலும்பு (navicular bone) (2) உள் ஆப்புவடிவ எலும்பு (2) இடை ஆப்புவடிவ எலும்பு (2) வெளி ஆப்புவடிவ எலும்பு (2) கனசதுர எலும்பு (cuboidal bone) (2) அனுகணுக்காலெலும்புகள் (metatarsal) (5 × 2) விரலெலும்புகள் (phalange): அண்மை விரலெலும்புகள் (proximal phalanges) (5 × 2) நடு விரலெலும்புகள் (intermediate phalanges) (4 × 2) தொலை விரலெலும்புகள் (distal phalanges) (5 × 2) குழந்தை எலும்புக்கூடு குழந்தைகளின் எலும்புக்கூடுகளில் கீழ் வரும் எலும்புகள் மேலதிகமாக உள்ளன: மண்டையறை மற்றும் மண்டையோட்டு எலும்புகள் (21), இவை ஒன்றாகி மண்டையறையை உருவாக்குகின்றன. திரிக முள்ளெலும்புகள் (sacral vertebrae) (4 or 5), வளர்ந்தோரில் இவை ஒன்றாகி திரிகத்தை உருவாக்குகின்றன coccygeal vertebrae (3 to 5), வளர்ந்தோரில் இவை ஒன்றாகி வாலெலும்பை உருவாக்குகின்றன இடுப்பெலும்பு, கீழ் இடுப்பெலும்பு மற்றும் பொச்செலும்பு (pubis), என்பவை வளர்ந்தோரில் ஒன்றாகி இடுப்பெலும்பை உருவாக்குகின்றன பகுப்பு:மனித உடற்கூற்றியல் பகுப்பு:எலும்புகள்
மனித உடம்பில் எத்தனை எலும்புகள் உள்ளன?
208
104
tamil
63f0f1e17
ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் (பிறப்பு ஜூன் 4, 1946, நெல்லூர் மாவட்டம், மெட்ராஸ் மாகாணம் தற்போது ஆந்திரப் பிரதேசம்) புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இசைப் பாடகர் ஆவார். எஸ். பி. பி (S.P.B) என்ற முன்னெழுத்துகளால் பரவலாக அறியப்படுகிறார். 1966இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்படங்களில் பாடத் தொடங்கினார். 1966 முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். திரைப்பட பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர். இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் வழங்கியது.[2] இவருக்கு 2016 ஆம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது.[3][4][5][6] தொடக்கம் 1960களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையிசை உலகில் அறிமுகமான எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னணிப் பாடகராக உள்ளார்.[7][8][9][10][11] இவர் தமிழில் முதலில் பாடியது ஹோட்டல் ரம்பா திரைப்படத்தில் மெல்லிசை மன்னர்௭ம்.௭ஸ்.வி இசையில் எல். ஆர். ஈஸ்வரியோடு இணைந்து அத்தானோடு இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு ௭ன்ற பாடலைப் பாடினார்.[12] ௭திர்பாராத நிலையில் ஹோட்டல் ரம்பா திரைப்படம் வெளியிடப்படவில்லை. அடுத்ததாக சாந்தி நிலையம் படத்தில் வரும் இயற்கையெனும் இளையகன்னி என்ற பாடலைப் பாடினார் . ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண் திரைப்படத்தில் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் வெளிவந்தது.[13][14][15] சாதனைகள் நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.[16][17][18] ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். எஸ். பி. பி. முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. பிலிம்பேர் விருதினை ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார். மேலும் இவர் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றார். இவர் 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார்.[19][20] எஸ் பி பி எந்த பாடகரும் செய்யாத சாதனைகளை இந்திய திரையிசையில் செய்திருக்கிறார். இவர் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி கர்நாடகா, பெங்களூரில் உள்ள பதிவரங்கில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை கன்னட மொழி இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக பாடி சாதனை செய்துள்ளார். மேலும் தமிழ் மொழியில் 19 பாடல்களையும் (ஒரேநாளில்), இந்தி மொழியில் 16 பாடல்களையும் (6மணி நேரத்தில்) பாடி சாதனை செய்திருக்கிறார். இவைகளெல்லாம் இவருடைய குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.[21][22] ஆரம்ப கால வாழ்க்கை பாலசுப்பிரமணியம் எஸ் பி சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக கொணடம்பேட்டை, நெல்லூர் மாவட்டம், ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை எஸ் பி சம்பமூர்த்தி ஹரிஹத கலைஞர் ஆவார். இவர் உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் இருக்கின்றனர். இவர்களில் எஸ். பி. சைலஜா, கிரிஜா[23] இளைய தங்கைகள் ஆவார். சைலஜா 5000க்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய மொழிகளில் பாடியுள்ளார்.[24][25] பாலசுப்பிரமணியம் இசை ஆர்வத்தை இளவயதிலேயே வளர்த்து, தன் தந்தை ஹரிஹதத்தை வாசிக்கும் பொழுது கவனித்து, கற்று, இசை கருவிகளை வாசிக்கவும் தேர்ச்சி பெற்றார். அதில் குறிப்பிடத்தக்க கருவிகள் என்றால் ஹார்மோனியம் மற்றும் புல்லாங்குழல் ஆகும். இவர் பொறியாளர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரி, அனன்டபூரில் மாணவனாக சேர்ந்தார். டைப்பாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னையில் உள்ள வேறொரு கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவருடைய ஆசையோ பாடகனாக வேண்டும் என்பது ஆனால் இவருடைய தந்தையின் ஆசையோ தன் மகன் பொறியாளன் ஆக வேண்டும் என்றிருந்தது. கல்லூரியில் படிக்கும் போதே பல இசை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார். 1964 ஆம் ஆண்டு அமெட்டூர் பாடகர்கள் ஏற்பாடு செய்திருந்த சென்னை மையமாக கொண்ட தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் எஸ் பி பி முதல் பரிசு பெற்றார். ஆரம்பகாலத்தில் மெல்லிசைக் குழு ஒன்று நடத்தி வந்தார்.இதில் பங்கு பெற்றவர்களில் குறிப்பாக இளையராஜா (ஹிட்டார் பிறகு ஹார்மோனியம்), அனிருதா (ஹார்மோனியம்), பாஸ்கர் (percussion) மற்றும் கங்கை அமரன் (ஹிட்டார்) ஆகியோராவர். இவர்களோடு சேர்ந்து எஸ் பி பி இசை நிகழ்ச்சிகளையும் நாடககச்சேரிகளில் பாடல்கள் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். எஸ் பி கோதண்டபானி மற்றும் கண்டசாலா நடுவராக இருந்து பங்குபெற்ற பாட்டுப்போட்டியில் எஸ் பி பி சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[26] அடிக்கடி இசையமைப்பாளர்களை சந்திப்பதும், பாட வாய்ப்பு கேட்பதுமாக இருந்த எஸ் பி பிக்கு முதல் போட்டி பாடல் பி. பி. ஸ்ரீனிவாஸ் பாடிய நிலவே என்னிடம் நெருங்காதே என்ற பாடலாகும்.[27] குடும்ப வாழ்க்கை பாலசுப்பிரமணியம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி பெயர் சாவித்ரி,மகள் பல்லவி, மகன் எஸ். பி. பி. சரண், சரண் சிறந்த பின்னணி பாடகர், நடிகர், சின்னத்திரை தொடர் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு வளர்ந்து வருகிறார்.[28][29] திரையிசை வரலாறு (1960-1970) எஸ் பி பிக்கு முதல் அரங்கேற்ற படம் எஸ். பி. கோதண்டபானி இசையமைத்த தெலுங்கு திரைப்படம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ரமணா (15,திசம்பர், 1966), இத்திரைப்படத்தில் ராவே காவ்ய சுமபாலா ஜவராலா பாடலை பி. சுசீலா மற்றும் பி. பி. ஸ்ரீனிவாஸோடு இணைந்து பாடினார். அரங்கேற்ற பாடலுக்கு பிறகு வெறும் எட்டு நாட்களில் கன்னடம் மொழிப்பாடலை 1966இல் "நகரே அதே ஸ்வர்க" என்ற திரைப்படத்தில், கன்னட நகைச்சுவை நடிகர் டி. ஆர். நரசிம்மராஜுக்கு மாமரவில்லோ கோகிலே ௭ல்லோ பாடலைப் பாடினார். இவர் முதன் முதலில் தமிழ் மொழியில் பாடியது, 1969 ஆம் ஆண்டு ஹோட்டல் ரம்பா திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் ௭ல். ஆர். ஈஸ்வரியோடு இணைந்து அத்தானோடு இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு ௭ன்ற பாடலைப் பாடினார். ௭திர்பாராத நிலையில் ஹோட்டல் ரம்பா திரைப்படம் வெளியிடப்படவில்லை.[12] அடுத்ததாக ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்த சாந்தி நிலையம் திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன் இயற்றிய பாடலை எம். எஸ். விஸ்வநாதன் இசையில் இயற்கையெனும் இளையக்கன்னி பாடலைப் பாடினார்.அதற்குப்பிறகு எம். ஜி. ராமச்சந்திரன் நடித்த அடிமைப் பெண் திரைப்படத்தில் ஆயிரம் நிலவே பாடலையும் பாடினார். மலையாள திரையுலகிற்கு இசையமைப்பாளர் ஜி. தேவராஜன் என்பவரால் கடல்பாலம் என்ற திரைப்படத்தில் "இ கடலும் மறு கடலும்" பாடலை பாடியதன் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். இவர் இந்திய திரையிசையில் செழுமையான வாழ்க்கையை மிக கடின உழைப்பால் உருவாக்கிக் கொண்டார்.[30] இவர் 1970 களில் இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் இணைந்து தமிழ் மற்றும் மலையாள மொழிப்பாடல்களைப் பாடியுள்ளார்.[31][32] தமிழ் திரைப்பட நடிகர்களான எம். ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் என பல நடிகர்களுக்கு 1970களில் பின்னணி பாடியுள்ளார்.[33] இவர் அப்பொழுது பிரபலமாக இருந்த பின்னணிப்பாடகிகளான பி. சுசீலா, எஸ். ஜானகி, வாணி ஜெயராம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இவர்களோடு பல ஜோடிப்பாடல்களை பாடியுள்ளார்.[34] தென்னிந்திய திரையிசையில் வெற்றி கூட்டணியான இளையராஜா, எஸ். பி. பி , எஸ். ஜானகி கூட்டணி 1970களின் கடைசியில் உருவானது.[35][36] 1980-உலகளாவிய வெற்றி எஸ் பி பாலசுப்பிரமண்யம் 1979 இல் வெளிவந்த சங்கராபரணம் திரைப்படப் பாடல்கள் பாடியதன் மூலம் உலகளவில் பிரபலமானார். சங்கராபரணம் தெலுங்கு திரையுலகில் சிறந்த திரைப்படமாக திகழ்கிறது. இத்திரைப்படம் இயக்குனர் கே. விஸ்வநாத்தால் இயக்கப்பட்டது. கே விஸ்வநாத் எஸ் பி பிக்கு பெரியப்பா மகன் ஆவார். இத்திரைப்படத்தின் பாடல்கள் திரையிசை திலகம் கே. வி. மகாதேவனால் கர்நாடக சங்கீதத்தை கொண்டு உருவாக்கப்பட்டது. எஸ் பி பி முறையாக கர்நாடக சங்கீதம் கற்கவில்லை என்றாலும் கேள்வி ஞானத்தை வைத்து சங்கராபரணம் படப்பாடல்களை பாடினார். இத்திரைப்படத்திற்காக இவர் முதல் தேசிய விருதும் பெற்றார்.[37]. இவருக்கு கிடைத்த அடுத்த தேசிய விருது ஏக் தூஜே கே லியே (1981) இந்தி மொழி திரைப்படம் இது இவருடைய முதல் இந்தி திரைப்படம் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரால் எடுக்கப்பட்டது.[38] எஸ் பி பாலசுப்பிரமணியம் தமிழ் திரைப்படங்களுக்கு நிறைய பாடல்களை பாடினார் குறிப்பாக இளையராஜாவின் இசையில் எஸ். ஜானகியோடு இணைந்து ஜோடிப்பாடல்களையும், தனித்தும், சக பின்னணிப்பாடகர்கள் மற்றும் பாடககிகளுடன் சேர்ந்து பல பாடல்களைப் பாடியிருக்கிறார்.[39][40][41] தமிழ் திரையிசையில் இளையராஜா, எஸ் பி பி, எஸ். ஜானகி இம்மூன்று பேரின் வெற்றிப்பாடல்கள் நிறைய உள்ளன. 1983 ஆம் ஆண்டு வெளிவந்த சகார சங்கமம் (தெலுங்கு திரைப்படம்) கிளாசிக்கல் இசையில் அமைத்ததனால் இளையராஜாவுக்கும் எஸ் பி பிக்கும் இந்திய தேசிய விருது கிடைத்தது. 1988 ஆம் ஆண்டு ருத்ரவீணா (தெலுங்கு) திரைப்படத்திற்காக மீண்டும் இவ்விருவருக்கும் இந்திய தேசிய விருது கிடைத்தது. இளையராஜா மட்டுமல்லாது இடைக்காலத்தில் இசையமைத்த எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் பின்னணி பாடியிருக்கிறார்.[42] 1989 ஆம் ஆண்டிலிருந்து எஸ் பி பி பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு பின்னணி பாடிவந்தார். அதிலும் மைனே பியார் க்யா மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இத்திரைப்படத்தில் எல்லா பாடல்களையும் பாடியுள்ளார். எல்லா பாடல்களும் வெற்றி பெற்றது மட்டுமல்லாது தில் தீவானா பாடல் சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருதினையும் இவருக்கு வாங்கி கொடுத்தது. இவர் அடுத்த தலைமுறைக்கும் காதல் ரசனையோடு சல்மான் கான் திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். சல்மான் கான் நடித்த ஹம் ஆப்கே ஹே ஹான் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை குவித்தது இப்படத்தில் லதா மங்கேஷ்கர் உடன் எஸ் பி பி பாடிய திதி தேரா தேவர் தீவானா பாடல் மிகவும் பிரபலமானது இப்பாடலுக்காக லதா மங்கேஷ்கர் பிலிம்பேர் விருது சிறப்பு விருது பெற்றார். இவைகளெல்லாம் பாலசுப்பிரமணியம் ஒரு மிகப்பெரிய இந்தியப் பின்னணிப்பாடகர் என்பதை எடுத்துகாட்டுகிறது.[43][44][45] 1990களில் ௭ஸ் பி பாலசுப்பிரமணியம்1990களில் இசையமைப்பாளர்களான தேவா, வித்யாசாகர், எம். எம். கீரவாணி , எஸ். ஏ. ராஜ்குமார், பரத்வாஜ் போன்றோரின் இசையில் நிறைய பாடல்களைப் பாடினார்.[46] ஆனால் மிகப்பெரிய வெற்றி என்று சொன்னால் அது ஏ. ஆர். ரகுமான் இசையில் பாடிய பாடல்களாகும். ஏ ஆர் ரகுமானின் இசை அரங்கேற்ற படம் ரோஜா இதில் எஸ் பி பி மூன்று பாடல்களைப் பாடினார். ரோஜா திரைப்படத்திற்கு பிறகு நிறைய பாடல்களை ஏ ஆர் ரகுமானின் இசையில் நீண்ட காலமாகவும் பாடிவருகிறார். புதிய முகம் திரைப்படத்தில் "ஜுலை மாதம் வந்தால்" பாடலை அனுபமாவோடு பாடினார். அனுபமாவிற்கு அப்பாடல் அரங்கேற்ற பாடலாகும். கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் "மானூத்து மந்தையிலே மாங்குட்டி" பாடல் நாட்டுப்புற நடையில் வித்தியாசமாகப் பாடினார். டூயட் படத்தில் ஏறத்தாழ எல்லா பாடல்களையும் பாடினார். மின்சார கனவு படத்தில் தங்கத்தாமரை மகளே பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான இந்திய தேசிய விருது எஸ் பி பிக்கு 1996 ஆம் ஆண்டு கிடைத்தது. இதுதான் இவருக்கு கிடைத்த ஆறாவது தேசிய விருதாகும். பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர் அம்சலேகாவின் இசையில் கன்னட திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார். பிரேமலோக திரைப்படத்திற்குப் பிறகு நிறைய பாடல்களை அம்சலேகாவின் இசையில் பாடினார்.இவருடைய ஐந்தாவது தேசிய விருது அம்சலேகாவின் இசையில் பாடியதற்காக கிடைத்தது. கனயோகி பஞ்சக்சரி காவயி (1995) திரைப்படத்தில் உமண்டு குமண்டு பாடலுக்காக, சிறந்த பின்னணிப் பாடகருக்கான இந்திய தேசிய விருது அம்சலேகாவின் ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் இசையில் பாடியதன் மூலம் பெற்றார். 2000ஆம் ஆண்டிற்கு பிறகு எஸ் பி பி 2000ஆம் ஆண்டிற்கு பிறகு இளைய தலைமுறை இசையமைப்பாளர்களான யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ்,டி. இமான், ஜி. வி. பிரகாஷ்குமார், நிவாஸ் கே. பிரசன்னா, அனிருத் ரவிச்சந்திரன் போன்றோரின் இசையமைப்பில் பாடிக்கொண்டிருக்கிறார்.[47][48][49] எஸ் பி பி 2013 ஆம் ஆண்டு வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தில் நடிகர் சாருக்கானுக்காக விஷால்-சேகரின் இசையில் "நிக்கல் நா சாயி சென்னை எக்ஸ்பிரஸ்" தலைப்பு பாடலை பாடியுள்ளார். இப்பாடல் பதினைந்து வருடங்களுக்கு பிறகு இவர் இந்தி திரையிசையில் பாடியதாகும்.[50] பாலசுப்பிரமணியம் 2015ஆம் ஆண்டு சனவரி மாதம் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஆந்திரமாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.[51] இவர் மதங்களை கடந்து பக்திப்பாடல்கள் பல பாடியுள்ளார் இதற்காக 2015ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் "ஹரிவராசனம்" விருது பெற்றுள்ளார்[52][53][54] பின்னணிக்குரல், இசையமைப்பு, நடிப்பு எஸ் பி பி நடிகர் கமல்ஹாசனுக்கு 120 தெலுங்கு திரைப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.[55] கமல் நடித்த தமிழ் திரைப்படம் மன்மத லீலை தெலுங்கில் மனமத லீலா என மொழிமாற்றம் செய்யப்பட்டது அதன்மூலம் எஸ். பி. பி தொடர்ந்து பல நடிகர்களுக்கு பின்னணிக்குரல் கொடுத்துள்ளார் குறிப்பாக கமல்ஹாசன், ரசினிகாந்த், சல்மான் கான், கே. பாக்யராஜ், மோகன், அணில்கபூர், கிரிஸ் கர்ணாட், ஜெமினி கணேசன், அர்ஜுன் சர்சா, நாகேஷ், கார்த்திக் மற்றும் ரகுவரன் ஆகியோருக்கு பல்வேறு மொழிப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.[56] நடிகர் கமலஹாசனுக்கு குரல் ஒன்றிய பின்னணி கொடுப்பவராக திகழ்கிறார். கமல் நடித்த தசாவதாரம் திரைப்படத்தை தெலுங்கில் மாற்றிய போது மொத்தமுள்ள பத்து கதாபாத்திரங்களில் ஏழு கதாபாத்திரங்களுக்கு (பெண் கதாப்பாத்திரம் உட்பட) பின்னணி கொடுத்துள்ளார். இவர் சிறந்த பின்னணிக்குரல் கொடுப்பவருக்கான நந்தி விருதினை அன்னமயா மற்றும் ஸ்ரீ சாய் மகிமா திரைப்படத்திற்கும் பெற்றுள்ளார். 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ ராம ராஜ்ஜியம் (தமிழ்) படத்திற்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்காக பின்னணிக்குரல் கொடுத்துள்ளார். பாலசுப்பிரமணியம் தென்னிந்திய மொழிகளில் எழுபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.[57][58] தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி இந்நான்கு மொழிகளில் நாற்பத்தைந்து திரைப்படத்திற்கு மேல் இசையமைத்துள்ளார்.[59][60][61]. [62] பெற்ற விருதுகள் இந்திய தேசிய விருதுகள் திரைப்பட பட்டியல் நடித்த திரைப்படங்கள் இசையமைத்த திரைப்படங்கள் பின்னணிக்குரல் தந்த திரைப்படங்கள் (இதுவொரு முழுமையான பட்டியல் அல்ல) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மேற்கோள்கள் பகுப்பு:திரைப்படப் பாடகர்கள் பகுப்பு:திரைப்பட நடிகர்கள் பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள் பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகர்கள் பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகர்கள் பகுப்பு:இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்கள் பகுப்பு:தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள் பகுப்பு:தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் பகுப்பு:1946 பிறப்புகள் பகுப்பு:வாழும் நபர்கள் பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள் பகுப்பு:நந்தி விருதுகள் பகுப்பு:பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள் பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் பகுப்பு:தெலுங்கு மக்கள்
ஸ்.பி. பாலசுப்ரமணியம் எந்த துறையில் பெயர் பெற்றவர்?
இந்தியத் திரைப்பட இசைப் பாடகர்
134
tamil
921a348f2
பாலூட்டி (இலங்கை வழக்கு: முலையூட்டி) என்பது தமது குட்டிகளுக்கு பால் கொடுக்கும் ஒரு வெப்ப இரத்த விலங்கினமாகும். இவை உயிர் வாழ்வதற்குத் தேவையான வெப்பம், இவற்றின் உடலின் இயக்கத்தில் இருந்தே உருவாக்கப்படுகிறது. பாலூட்டிகள் தங்களின் தோலினுள் பால் சுரப்பிகளைக் கொண்டுள்ளன. பெரும்பாலான பாலூட்டிகள் நான்கு கால்களைக் கொண்டவை. அவற்றின் தோலின் மீது முடியைக் கொண்டிருக்கும். பெரும்பாலான பாலூட்டிகள், உயிருள்ள குட்டிகளை ஈன்று பேணுகின்றன. மிகச் சில பாலூட்டிகள் மட்டுமே முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றன. பாலூட்டிகள் எனும் வகுப்பில், 2008 ஆம் ஆண்டு அனைத்துலக இயற்கைக் காப்பு ஒன்றியத்தின் (IUCN) கணக்கெடுப்பின்படி, இந்த உலகில் 5488 வகையான பாலூட்டிகள் உள்ளன.[1] இதனைப் பாலூட்டியின அறிஞர்கள், உலகளாவிய நிலையில் 1,700 வகைகளாகத் தொகுத்துள்ளனர். பாலூட்டி இனம், 1,229 பேரினங்களில், 153 குடும்பங்களாகத் தொகுக்கப் பெற்றுள்ளன. இவை 29 வரிசைகளில் அடங்குவதாகவும் அமைந்து உள்ளன[2] புற அமைப்பியல் பாலூட்டிகள் தாம் வாழும் சூழலுக்கு ஏற்ப, தம்மைத் தகவமைத்துக் கொண்டு, வெவ்வேறு தோற்ற இயல்புகளுடன் வாழ்கின்றன. எடுத்துக்காட்டாக, கடலில் வாழும் பாலாட்டியான நீலத் திமிங்கலம், மீனின் உடலமைப்பைக் கொண்டுள்ளது. பாலூட்டிகளின் உடம்பில் உள்ள மயிர்த் தொகுதியும், பால் சுரப்பியும் மற்ற விலங்குகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. பாலூட்டிகளின் உரோமமானது, அவற்றின் உடலில் இருந்து வெப்பம் வெளியேறாமல் இருக்க உதவுகிறது. பால் சுரப்பிகள் என்பன மாறுபாடு அடைந்து வியர்வைச் சுரப்பிகளாகும். பாலுட்டிகளின் குட்டிகள் பிறந்து சில காலம் தாயின் பாலையே குடித்து வளர்கின்றன. சூழ்வித்தகத்தின் மூலக்கூறு அடிப்படையிலான வகைப்பாடு கடந்த சில ஆண்டுகளாக நடைபெறும் டிஆக்சி ரைபோநியூக்கிளிக் அமில (டிஎன்ஏ) பகுப்பாய்வு அடிப்படையிலான மூலக்கூறு ஆய்வுகள் பாலூட்டி குடும்பங்களில் புதிய உறவுகளை தெரிவிக்கின்றன.இந்த கண்டுபிடிப்புகள் பெரும்பாலானவை ரெட்ரோடிரான்ஸ்போசான்களின் (Retrotransposons) இருக்கின்ற அல்லது இல்லாத தரவுகள் மூலம் சுதந்திரமான முறையில் சரிபார்க்கப்படுகின்றன. [3] மூலக்கூறு ஆய்வுகள் அடிப்படையிலான வகைப்பாட்டு முறையானது கிரிட்டாசியசிலிருந்து பிரிந்த சூழ்வித்தக பாலூட்டிகளின் மூன்று முக்கிய குழுக்களான ஆஃப்ரோதேரியா (Afrotheria), செனார்த்ரா (Xenarthra) மற்றும் போரியோயூதேரியா (Boreoeutheria) ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. மமாலியா மோனோட்ரெமேட்டாதெரியா மர்சுபியாலியாபிளாசன்டாலியா அட்லாண்டோஜெனடா அஃப்ரோதெரியா செனார்த்ராபோரியோயுதேரியா உர்ங்கோடோகிளிரெசு உர்ங்கொன்டா கிலிரெசுலவுராசியாதேரியா யுலிபோடிபிலாஸ்கார்டிபெரா சிரோப்தெரா செடார்டியோடாக்டைலா பெரிசோடாக்டைலாபெரே போலிடோட்டா கார்னிவோரா உடற்கூறியல் மற்றும் உருவவியல் தனித்துவமான அம்சங்கள் இளம் உயிரிகளுக்கு ஊட்டமளிக்கும் சிறப்புமிக் பால் சுரப்பிகள் உள்ளிட்ட வியர்வைச் சுரப்பிகளை வைத்து பாலூட்டிகளை அடையாளம் காணலாம்.புதைபடிவங்களை வகைப்படுத்தும் போது மற்ற ஏனைய அம்சங்களும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் பால் சுரப்பிகள் உள்ளிட்ட வியர்வைச் சுரப்பிகள் போன்ற மென்மையான திசு சுரப்பிகள் மற்றும் பல அம்சங்களை புதைபடிவங்களில் காண முடிவதில்லை. பல சிறப்புக்கூறுகள் ஆரம்பகாலத்தில் வாழ்ந்த பாலூட்டி குழு உறுப்பினர் இனங்களில் பகிர்ந்துகொள்ளப்பட்டிருந்தன. தாடை மூட்டு (Jaw joint) நடுச்செவி (Middle ear) மாற்றுப் பற்கள் (Tooth replacement) பற்சிப்பி (Prismatic enamel) பிடரெலும்புக்குமிழ் (Occipital condyles) பாலூட்டிகளின் சிறப்புப் பண்புகள் சிறுத்தையின் தாடை மனிதனின் கீழ் தாடை மனித நடுச்செவியின் தோற்றம் மனித பிடரெலும்புக்குமிழ் (சிவப்பு நிறமிட்ட பகுதி) உயிரியல் தொகுதிகள் வௌவால், ஒட்டகச் சிவிங்கி, திமிங்கலங்கள், மற்றும் மனிதன் உள்ளிட்ட பெரும்பாலான பாலூட்டிகளில் ஏழு கழுத்து முள் எலும்புகள் கானப்படுகிறது.கடற்பசு (manatee) மற்றும் இரு கால் விரல் அசமந்தம் (two-toed sloth) மற்றும் மூன்று கால் விரல் அசமந்தம் (three-toed sloth) போன்ற பாலூட்டிகள் ஒன்பது கழுத்து முள் எலும்புகள் கானப்படுகிறது[4]. அனைத்து பாலூட்டி மூளைகளும் பாலூட்டிகளுக்கே உரித்தான நியோகார்டெக்சு என்ற பெருமூளைப் புறணிப் பகுதியைக் கொண்டிருக்கின்றன[5]. கங்காரு போன்ற பைம்மாவினம் (marsupials) மற்றும் முள்ளெலி போன்ற அடிப்படைப் பாலூட்டியினங்களில் (monotremes) இருப்பதைப் போலல்லாமல் நஞ்சுக்கொடி பாலூட்டியினங்களில் கார்பசு காலோசம் (corpus callosum) என்ற இணைப்பு மெய்யம் கானப்படுகிறது [6]. வாழிடம் பாலூட்டிகள் பல வேறுபட்ட வாழிடங்களில் வாழ்கின்றன. உயர்ந்த மலைகள், காடுகள், பனிப் பகுதிகள், வறண்ட பாலைவனங்கள், கடல், ஆறு போன்ற நீர்நிலைகள் முதலியவற்றில் வாழ்கின்றன. வாழிடத்திற்கு ஏற்றவாறு தம்மைத் தகவமைத்துக் கொள்கின்றன. உயர்ந்த மலைகளில் காணப்படும் வரையாடுகள்; பனிப் பகுதிகளில் வாழும் பனிக் கரடிகள்; பாலைவனங்களில் வாழும் ஒட்டகங்கள்; கடலில் வாழும் திமிங்கலங்கள்; ஆறுகளில் வாழும் நீர்நாய்கள்; காடுகள் அல்லது சமவெளிகளில் வாழும் மான்கள், புலிகள், சிங்கங்கள் போன்றவை அவற்றில் அடங்கும். பாலூட்டி வகைகள் வௌவால் வௌவால் என்பது பறக்கும் ஆற்றலைக் கொண்டது. முதுகெலும்புள்ள (முதுகெலும்பி) பாலூட்டிகளில் பறக்கும் தன்மையைக் கொணட ஒரே விலங்கு. இந்த விலங்கை வவ்வால் என்றும் வாவல் என்றும் அழைப்பர். வௌவால் இனத்தில் 1000-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. பாலூட்டி இனத்திலேயே இவை மட்டும் 20% இருக்கலாம் என்று அறியப்படுகிறது. உயிரினங்களை வகைப் படுத்தும் அறிவியல் துறையாளர்கள், வௌவால் இனத்தை கைச்சிறகிகள் எனப்படும் Chiroptera எனும் வரிசையில் தொகுத்து வைத்துள்ளார்கள். பெரும்பாலான வௌவால்கள், ஏறக்குறைய 70 விழுக்காடு எலியைப் போன்ற சிறு முகம் (குறுமுகம்) கொண்டவையாக இருக்கின்றன. எல்லா வௌவால்களும் பூச்சிகளை உண்பவை. வௌவால்கள் பகல் பொழுது முழுவதும், தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும். சூரியன் மறைந்த பின்னர் இரை தேடி உலவ ஆரம்பிக்கும். இவை இரவு நேரங்களில் மட்டுமே உணவு தேடி உண்ணும். கரடி கரடி (Bear), ஓர் ஊனுண்ணிப் பாலூட்டி விலங்காகும். இவ்வினத்தைச் சேர்ந்த பனிக்கரடிகளும், கொடுங்கரடிகள் (Grizzly bear) எனப்படும் பழுப்பு நிறக்கரடிகளும் ஊனுண்ணிப் பாலூட்டிகளிலேயே மிகப் பெரியவை. ஆசியக் கருங்கரடி போன்ற சில சிறிய வகைக் கரடிகள் அனைத்துண்ணிகளாக உள்ளன. துருவக் கரடிகள் பெரிய உருவத்தைக் கொண்டவை. இவை, பனி படர்ந்த துருவப் பகுதியில், எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் வெண்மை நிறம் கொண்டவை. எஸ்கிமோக்களின் மொழியில் ஆர்க்டோஸ் (Arctos) என்றால் கரடிகளின் பிரதேசம் என்று அர்த்தம். இதனால்தான் வட துருவப் பகுதிக்கு "ஆர்ட்டிக்' என்ற பெயர் வந்தது. ஒட்டகம் ஒட்டகம் என்பது பாலைவனங்களில் வாழும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்கு ஆகும். பொதுவாக, ஒட்டகம் என்று அழைக்கப்படும் ஒட்டகப் பேரினத்தில் ஆறு சிற்றினங்கள் உள்ளன. இவை ஆசியா, வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பாலைநிலங்களைத் தத்தம் தாயகமாகக் கொண்டவை. பொதுவாக, இவை 30 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. பூனை பூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த மற்றோர் ஊனுண்ணி ஆகும். இவை மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப் படுகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் சைவ உணவையும் உண்கின்றன. பண்டைய எகிப்து நாட்டில், பூனைகள் வழிபாட்டு விலங்குகளாகவும் இருந்தன. அவற்றை வீட்டில் வளர்த்து வணங்கி வந்தனர். பூனைகள் இறந்தால் அவற்றிற்கும் பிரமிடுகளைக் கட்டி, அந்தப் பிரமிடுகளுக்குள் பாடம் செய்த எலிகளையும் புதைத்து வைத்தனர். பிரமிடுகளில் அரசர்களுடன் அவர்களுடைய பூனைகளுக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டன. பசு பசு என்பது பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. பசுவினுடைய பாலில் பல சத்துக்கள் நிறைந்து உள்ள காரணத்தினால், மனிதன் அதனை ஒரு முக்கிய உணவுப் பொருளாகக் கருதினான். இந்தியக் கலாச்சாரத்தில், பசு போற்றப்படும் ஒரு விலங்காக உள்ளது. புராணங்களின்படி காமதேனுவும், நந்தினியும் தேவலோகப் பசுக்கள் ஆகும். நாய் நாய் அனைத்துண்ணி பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு இனமாகும். இன்று பெரும்பாலும் மனிதர்களோடு வாழ்கின்றது. ஏறத்தாழ 17,000 [7] ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன், ஓநாய்களைப் பழக்கி, அவற்றை வளர்ப்பு நாய்களாக மாற்றியதாகக் கூறப்படுகிறது. மறைந்த உயிரினப் படிவத்தில் இருந்து பெற்ற டி.என்.ஏ (DNA) இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடிகளைக் கொண்டு, ஆய்வு செய்து பார்த்ததில் 150,000 [8][9] ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே, நாய்கள் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. உசாத்துணை பத்தாம் வகுப்பு அறிவியல் நூல், தமிழ்நாடு அரசு, முதல் பதிப்பு 2011 மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும் *
உலகில் எத்தனை வகையான பாலூட்டிகள் உள்ளன?
5488
610
tamil
56021f924
இந்தியாவில் தொலைத் தொடர்புவருமானம் (மொத்தம்) $ 33,350 மில்லியன்[1] தொலைப்பேசிதொலைப்பேசி சந்தாதாரர்கள் (மொத்தம்) (2012) 960.9 மில்லியன் (மே 2012) நிலைத்த பேசிகள் (மே 2012) 31.53 மில்லியன்நகர் பேசிகள் (2012) 929.37 மில்லியன்மாதாந்திர தொலைப்பேசி சேர்க்கைகள் (நிகர) (மே 2012) 8.35 மில்லியன் தொலைப்பேசி அடர்த்தி (2012)79.28 % ஊரக தொலைப்பேசி அடர்த்தி 33 %[1] 2012இல் திட்டமிட்ட தொலைப்பேசி அடர்த்தி 84 % இணைய அணுக்கம்வீட்டு அணுக்க விழுக்காடு (மொத்தம்), 201210.2% வீடுகளில் (137 மில்லியன்)வீட்டு அகலப்பாட்டை அணுக்க விழுக்காடு1.18% வீடுகளில் (14.31 மில்லியன்)அகலப்பாட்டை இணையப் பயனர்கள்14.31 மில்லியன் (மே 2012)[2]இணையச் சேவை வழங்கிகள் (2012) 155 நாட்டின் குறியீடு அதியுயர் ஆள்களப் பெயர்.இந்தியாஅலை பரப்பல் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்கள் (2009) 1,400 வானொலி ஒலிபரப்பு நிலையங்கள் (1997)800 இந்தியாவின் தொலைத் தொடர்புப் பிணையம் தொலைபேசிப் பயனர்களின் (நிலைத்த மற்றும் நகர்பேசிகள்) மொத்த எண்ணிக்கையின்படி உலகின் இரண்டாவது மிகப்பெரும் பிணையமாக விளங்குகிறது.[3] பெரும் தொலைபேசி நிறுவனங்களாலும் அவற்றிற்கிடையேயான கடும் போட்டியாலும் உலகிலேயே மிகக் குறைந்த அழைப்புக் கட்டணங்களைக் கொண்ட நாடாகவும் விளங்குகிறது. சூன் 2012இல் 137 மில்லியன் இணையப் பயனர்கள் உள்ள இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரும் இணையப் பயனர் தளத்தைக் கொண்டுள்ளது.[4][5] தொலைபேசி, இணையச்சேவை, தொலைக்காட்சி என்பன இந்தியத் தொலைதொடர்புத் துறையின் முதன்மை அங்கங்களாக உள்ளன. நவீனப் படுத்தப்பட்டுவரும் தொலைப்பேசித் துறை அடுத்தத் தலைமுறை பிணையத்திற்கு மாறும்வகையில் அதிநவீன தொலைப்பேசி பிணைய மைய அங்கங்களாக எண்ணிம தொலைப்பேசியகங்கள், நகர்பேசி நிலைமாற்றி மையங்களையும் ஊடக மின்வாயில்களையும் சமிக்ஞை மின்வாயில்களையும் அமைத்து வருகிறது; இவற்றை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் வகையில் ஒளியிழை அல்லது நுண்ணலை வானொலி தொடர் பிணையங்களும் அமைக்கப்படுகின்றன. பிணையத்தின் மையத்துடன் சந்தாதாரர்களை இணைக்கும் அணுக்கப் பிணையம், செப்புக் கம்பிவடங்கள், ஒளியிழை வடங்கள் மற்றும் கம்பியில்லா தொழில்நுட்பங்கள் என பல்வகைப்பட்டு உள்ளது. தொலைக்காட்சித் துறையில் புதிய தொழில்நுட்பமான டி.டி.எச் மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தனியார்த்துறையில் பண்பலை ஒலிபரப்பு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அத்துறை மிகுந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இந்தியத் தொலைத்தொடர்புக்கு நாட்டின் இந்திய தேசிய செயற்கைக்கோள் தொகுதி மிகுந்த உதவியாக உள்ளது. இத்தொகுதி உலகில் உள்நாட்டு செயற்கைக்கோள் தொகுதிகளிலேயே மிகப்பெரும் பிணையங்களில் ஒன்றாக விளங்குகிறது. நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பல்வேறு வகைப்பட்ட தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களால் தொலைப்பேசி, இணையம், வானொலி, தொலைக்காட்சி சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.[6] இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் கீழ் அரசின் தனியுரிமையாக இயங்கிவந்த தொலைத்தொடர்புத் துறை 1990களில் அரசின் தாராளமயமாக்கல் கொள்கைகளால் தனியார்த் துறைக்கு திறந்து விடப்பட்டது; இதன்பிறகு இது விரைவாக வளர்ச்சி யடைந்து உலகின் மிகவும் போட்டி மிகுந்த மற்றும் மிக விரைவாக வளர்ந்து வரும் தொலைத்தொடர்புச் சந்தையாக விளங்குகிறது.[7][8] 2001இல் 37 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டிருந்த இத்துறை 2011இல் 846 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது; கடந்த பத்து ஆண்டுகளில் இருபது மடங்கு வளர்ந்துள்ளது.[1] மே 2012இல் 929.37 மில்லியன் நகர்பேசிப் பயனர்களின் தளத்தைக் கொண்டுள்ள இந்தியா உலகின் மிகுந்த நகர்பேசிகளைக் கொண்ட நாடுகளில் இரண்டாவதாக உள்ளது.[6] சூன் 2012இல் 137 மில்லியன் இணையப் பயனர்களைக் கொண்டுள்ள இந்தியா உலகளவில் இணையப் பயன்பாட்டாளர்களில் மூன்றாவதாக விளங்குகிறது. [4][5] இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் மொத்த வருமானம் 2010-11 நிதியாண்டில் 7% வளர்ச்சி கண்டு ₹283,207 crore (US$40billion) ஆக உள்ளது.[9] தொலைத்தொடர்புத் துறை நாட்டின் சமூக பொருளியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளது. சிற்றூர்ப் பகுதிகளுக்கும் நகரியப் பகுதிகளுக்கும் இடையே இருந்துவந்த எண்ணிமப் பிரிவை குறுக்க குறிப்பிடத்தக்க பங்காற்றி உள்ளது. மேலும் அரசின் வெளிப்படைத் தன்மையை கூட்டும் வண்ணம் மின்னாளுகையை அறிமுகப்படுத்த உதவி உள்ளது. இந்திய சிற்றூர்ப் பகுதி மக்களுக்கு பரவலான மக்கள் கல்வி வழங்க அரசு தற்கால தொலைத்தொடர்பு வசதிகளை பயன்படுத்தி வருகிறது. [10]பேரிடர் காலங்களில் நிவாரண உதவிகளை ஒருங்கிணைக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தொலைத்தொடர்பு சாதனங்களை மாநில/மாவட்ட ஆட்சியாளர்கள் பயன்படுத்துகின்றனர். வரலாறு துவக்கம் இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் வரலாறு தந்தி அறிமுகமான நாளிலிருந்தே துவங்குகிறது. இந்தியாவின் அஞ்சல் மற்றும் தந்தித் துறைகள் உலகிலேயே பழமையான துறைகளில் ஒன்றாகும். 1850இல் கொல்கத்தாவிற்கும் டயமண்டு ஆர்பருக்கும் இடையே முதல் சோதனைமுக தந்தி கம்பித்தடம் இழுக்கப்பட்டது. இது 1851இல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. அப்போது பொதுத்துறை அலுவலகத்தின் ஒரு சிறு மூலையில் புதியதாக உருவாக்கப்பட்ட அஞ்சல் தந்தி துறை இயங்கியது.[11] பின்னர், நவம்பர் 1853இல் கொல்கத்தாவையும் பெஷாவரையும் இணைத்தும் ஆக்ரா, மும்பை, சென்னை, உதகமண்டலம், பெங்களூரு ஆகியவற்றை இணைத்தும் 4,000 miles (6,400km) தொலைவிற்கு தந்திக் கம்பங்கள் நடும் பணி துவக்கப்பட்டது. இதனை முன்னெடுத்துச் சென்ற வில்லியம் ஓ'ஷாஹ்னெசி பொதுத்துறை பொறியாளராவார். தமது காலத்தில் இந்தியாவில் தந்தி மற்றும் தொலைபேசி சேவைகளை மேம்படுத்த இவர் பெரும் பணி ஆற்றியுள்ளார். 1854ஆம் ஆண்டில் தந்திச் சேவைகள் பொதுமக்களுக்கு திறக்கப்பட்ட பின்னர் ஓர் தனித்துறை ஏற்படுத்தப்பட்டது. 1890இல், இரு தொலைபேசி நிறுவனங்கள், (ஓரியன்டல் டெலிபோன் கம்பனி, ஆங்கிலோ-இந்தியன் டெலிபோன் கம்பனி) இந்தியாவில் தொலைபேசி இணைப்பகங்களை நிறுவிட அப்போதைய இந்திய அரசை வேண்டினர். தொலைபேசி சேவை அரசுமயமாக்கப்பட்டு அரசே இச்சேவையை நிறுவிடும் எனக் கூறி அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் 1891இல் அரசு தனது முடிவை மாற்றிக்கொண்டு இங்கிலாந்தின் ஓரியன்டல் டெலிபோன் கம்பனிக்கு கல்கத்தா, பம்பாய், மதராசு மற்றும் அகமதாபாத் நகரங்களில் தொலைபேசி இணைப்பகங்கள் அமைக்க அனுமதித்தது; முதல் முறையாக தொலைபேசிச் சேவை துவங்கியது.[12] 28 சனவரி 28, 1892இல் கல்கத்தா, பம்பாய், மதராசு தொலைபேசி இணைப்பகங்கள் திறக்கப்பட்டன. "மத்திய இணைப்பகம்" எனப் பெயரிடப்பட்ட கல்கத்தா இணைப்பகத்தில் துவக்கத்தில் 93 சந்தாதாரர்கள் இருந்தனர்.[13] வளர்ச்சியும் மைல்கற்களும் 1902க்கு முன் – கம்பிவடத் தந்தி 1902 – முதல் கம்பியில்லாத் தந்தி நிலையம் சாகர் தீவுக்கும் சான்ட்ஹெட்டிற்கும் இடையே நிறுவப்பட்டது. 1907 – முதல் மத்திய மின்கல தொலைபேசிகள் கான்பூரில் நிறுவப்பட்டன. (சந்தாதாரர் வீட்டில் இல்லாது தொலைபேசி இணைப்பகத்தில் மின்கலங்கள் நிறுவப்பட்டிருந்தன) 1913–1914 – முதல் தானியங்கி இணைப்பகம் சிம்லாவில் நிறுவப்பட்டது. 1927 – வானொலி-தந்தி அமைப்பு ஐக்கிய இராச்சியத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே நிறுவப்பட்டது. இந்திய நிலையங்கள் கர்க்கி மற்றும் தௌண்டில் நிறுவப்பட்டன. சூலை 23 அன்று இர்வின் பிரபுவால் மன்னர் ஐந்தாம் ஜார்ஜுடன் வாழ்த்துகள் பரிமாறி துவங்கப்பட்டது. 1933 – வானொலித் தொலைபேசி அமைப்பு இந்தியாவிற்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையே துவங்கப்பட்டது. 1953 – 12 அலைவரிசை காவித் தொலைபன்னல் அமைப்பு அறிமுகமானது. 1960 – முதல் சந்தாதாரர் நேரடி முகப்படுத்தல் தடவழி இலக்னோவிற்கும் கான்பூருக்கும் இடையே துவங்கப்பட்டது. 1975 – முதல் துடிப்பு குறி பண்பேற்ற அமைப்பு மும்பை நகரத்திற்கும் அந்தேரி தொலைபேசி இணைப்பகத்திற்கும் இடையே நிறுவப்பட்டது. 1976 – முதல் எண்ணிம நுண்ணலை இணைப்பக இணைப்பு. 1979 – முதல் ஒளியிழை அமைப்பு புனேயில் உள்ளூர் இணைப்பகங்களை இணைக்க துவங்கப்பட்டது. 1980 – உள்நாட்டு தொலைதொடர்புக்காக முதல் செயற்கைக்கோள் தரை நிலையம் உ.பி.யின் சிகந்தராபாத்தில் நிறுவப்பட்டது. 1983 – முதல் வெளியூர் தடங்களுக்கான தொடரிமக் குறிகை சேமித்த நிரல் கட்டுப்பாட்டு இணைப்பகம் மும்பையில் திவங்கப்பட்டது. 1984 – உள்நாட்டிலேயே எண்ணிம இணைப்பகங்களை வளர்த்தெடுக்கவும் தயாரிக்கவும் சி-டாட் நிறுவனம் துவங்கப்பட்டது. 1995 – வணிக முறையில் இல்லாது முதல் செல்லிடத் தொலைபேசி சேவை ஆகத்து 15, 1995இல் தில்லியில் அறிமுகமானது. 1995 – மும்பை,தில்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் புனேயில் ஆகத்து 15, 1995இல் அறிமுகப் படுத்தப்பட்டது[14] அலைப்பரப்பல் வளர்ச்சி: வானொலி ஒலிபரப்பு 1927இல் அறிமுகமானாலும் 1930இல்தான் அரசுத்துறையில் மேற்கொள்ளப்பட்டது. 1937இல் இந்த அமைப்பிற்கு அனைத்திந்திய வானொலி எனப் பெயர் சூட்டப்பட்டது. 1957 முதல் இது ஆகாசவாணி என அழைக்கப்படுகிறது.[15] 1959இல் குறைந்த நேர தொலைக்காட்சி சேவை அறிமுகப்படுத்தபட்டாலும் முழுநேர ஒளிபரப்பு 1965இல் துவங்கியது. இந்திய அரசின் தகவல் மற்றும் அலைப்பரப்புத் துறை இதனையும் தொலைக்காட்சிச் சேவைகள் வழங்கிய தூர்தர்சனையும் மேற்பார்வையிட்டு வந்தது. 1997இல் ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாக பிரசார் பாரதி அமைக்கப்பட்டது. அனைத்திந்திய வானொலியும் தூர்தர்சனும் இதன் அங்கங்களாக அமைந்தன.[10] தாராளமயமாக்கலுக்கு முந்தைய புள்ளிவிவரங்கள்: பிரித்தானியர் காலத்தில் நாட்டின் அனைத்து முதன்மை நகரங்களும் பேரூர்களும் தொலைபேசிச் சேவையால் இணைக்கப்பட்டிருந்தும் 1948இல் இயங்கிய மொத்த தொலைபேசிகளின் எண்ணிக்கை 80,000ஆக மட்டுமே இருந்தது. விடுதலைக்குப் பிறகு தொலைபேசி வளர்ச்சி ஓர் தகுதிநிலை குறியீடாகவே பார்க்கப்படதால் இந்திய அரசினால் போதுமான நிதியாதரவு தர இயலவில்லை. 1971இல் தொலைபேசிகளின் எண்ணிக்கை 980,000ஆக இருந்தது; 1981இல் இது 2.15 மில்லியனாக உயர்ந்தது; தாராளமயமாக்கப்பட்ட கொள்கை கொணரப்பட்ட 1991ஆம் ஆண்டில் 5.07 மில்லியனாக இருந்தது. இவை பெரும்பாலும் கூடிய மூலதனத்தையும் தொழிலாளர்களையும் சார்ந்த நிலைத்த தொலைபேசிகளாக இருந்தன. தாராளமயமாக்கலும் தனியார் துறைப்படுத்தலும் மேற்சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்பு:இந்தியாவில் தொலைத்தொடர்பு
தொலைபேசி எந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமானது?
சனவரி 28, 1892
5,369
tamil
1d9539cf3
தடித்த எழுத்துக்கள் Part of a series onRenewable energy Biofuel Biomass Biogas Geothermal Hydropower Solar energy Tidal power Wave power Wind power Topics by country Marketing and policy trendsvt சூரிய மின்னாற்றல் (solar power) என்பது சூரிய ஒளியில் இருந்து மின்னாற்றலைப் பெறுவதாகும். இது நேரடியாக ஒளிமின்னழுத்திகளின் செயல்பாட்டின் முறையிலும் மறைமுகமாகச் செறிவூட்டும் அல்லது செறிவான சூரிய ஆற்றல் (CSP) முறையிலும் பெறப்படுகிறது. செறிவூட்டல் முறையில் பரந்த அளவு சூரிய ஒளிக்கற்றைகள் வில்லைகள், மற்றும் கண்ணாடிகளைக் கொண்டு சிறிய ஒளிக்கற்றையாகக் குவிக்கப்பட்டு அதன் மூலம் நீரை ஆவியாக்க வைத்து மின்சாரம் பெறப்படுகிறது. ஒளிமின்னழுத்தி முறையில், ஒளிமின் விளைவைப் பயன்படுத்திச் சூரிய ஒளி நேரடியாக மின்னோட்டமாக மாற்றப்படுகிறது.[1] சூரிய மின் அணுக் கதிர்கள், ஒளிமின்னழுத்திகளுக்குக் கிடைக்கும் போது உண்டாகும் சூரிய ஒளிக்கதிர் ஆற்றலை, மின்னாற்றலாக மாற்றிப் பெறப்படும் மின்சாரத்தின் மூலம் தேவையான மின்தேவையை நிறைவு செய்யப் பயன்படுகிறது. நவீனத் தொழில்நுட்பம் மூலம் ஒளிக்கதிர் மின்னழுத்தியில் உற்பத்தி செய்யப்படும் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. அவை நூறு மெகா வாட் அளவுக்கு மேல் மின் உற்பத்தி செய்யும் திறன் உள்ளவை. இவை தற்போதைய காலத்தில் (2012) அளவுக்கு அதிகமான வளர்ச்சியைப் பெற்றுள்ளன. சூரிய ஒளியானது பகல் நேரங்களில் கிடைப்பதனால், சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின் ஆற்றலை மின்கலத்தில் சேமிப்பதன் மூலம் இரவு நேரங்களிலும் பயன்படுத்தலாம். பயன்பாடுகள் சூரிய ஆற்றல் என்பது சூரிய ஒளியை மின்சக்தியாக மாற்றுவதாகும். ஒளிமின்னழுத்தியங்களைப் பயன்படுத்திச் சூரிய ஒளியை நேரடியாக மின்சக்தியாக மாற்றலாம் அல்லது முழுச்செறிவூட்டும் சூரிய சக்தி (CSP) மூலம் மறைமுகமாக மாற்றலாம். பொதுவாக, சூரியனின் ஆற்றலை நீரில் குவிப்பதன் மூலம் நீர் கொதிக்கவைக்கப்படுகிறது. இம்முறையின் மூலம் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் ஸ்டிர்லிங் இயந்திர டிஷ் மூலம் ஸ்டிர்லிங் சுழற்சி இயந்திரம் போன்ற தொழில்நுட்பங்களை மின் ஆக்கிக்கு சக்தியளிக்கப் பயன்படுத்துகிறது. ஆரம்பகாலத்தில், ஃபோட்டோவோல்டியாக்கள் சிறிய மற்றும் நடுத்தரப் பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது. ஒற்றைச் சூரிய மின்கலம் மூலம் சக்தியளிக்கப்படும் கால்குலேட்டரிலிருந்து, ஒளிமின்னழுத்திய வரிசைகள் மூலம் வீடுகளைத் தற்சார்புடையவையாக மாற்றுவது வரை இவை பயன்படுத்தப்படுகின்றன. சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அதிக நிறுவுதல் செலவை ஏற்படுத்தலாம். இருப்பினும், கற்றல் விகித வரைவுப்படத்தின் காரணமாகக் குறைந்து வருகிறது. சூரிய ஒளிக்கதிர் வீச்சு இடைவிட்டு நிகழக்கூடியது என்பதால், சூரிய சக்தி வழக்கமாக சேமிப்பு வசதியுடனிருக்கும் அல்லது பிற சக்தி வளங்களுடன் தொடர்ச்சியான சக்தியை வழங்க இணைந்திருக்கும். இருப்பினும், உற்பத்தியாளர்/நுகர்வோருக்கு சிறிய அளவில் விநியோகிக்கப்படுகிறது என்றாலும் உபரி அளவீடு இதனை நுகர்வோருக்கு வெளிப்படையானதாகச் செய்கிறது. ஜெர்மனியில், சற்றுப் பேரளவில் பரிசோதனை முறையில் காற்று, இயற்கை எரிவாயு, நீர்-மின்சாரம், சூரிய சக்தி மின் உற்பத்தி என்ற கலப்பில் கூட்டு மின் உற்பத்தி நிலையம் ஒன்று செயல் முறை விளக்கமாக அமைக்கப்பட்டு அதன் விளைவாக 100% மறுசுழற்சி சக்தி வள உருவாக்கம் நிகழ்ந்தது.[2] முழுச்செறிவூட்டும் சூரிய சக்தி ஒரு மரபு வழிக்கதைப்படி ஆர்க்கிமிடீஸ் மெருகூட்டப்பட்ட கவசங்களை சூரிய ஒளியைக் குவிக்கப் பயன்படுத்தி அதைப் படையெடுத்து வரும் உரோமானிய நாட்டுப் படையினர் மீது செலுத்தி அவர்களை சிராகுசிலிருந்து துரத்தியடித்தார்.[3] 1866 ஆம் ஆண்டில், அகஸ்டே மவுசோ முதல் சூரிய நீராவி இயந்திரத்திற்காக, பரவளையத் தொட்டியைப் பயன்படுத்தி நீராவியை உற்பத்தி செய்தார்.[4] செறிவூட்டப்பட்ட சூரிய சக்தி (CSP) அமைப்புகள் வில்லைகளையோ அல்லது கண்ணாடிகளையோ தடங்காண் அமைப்புகளில் பயன்படுத்திப் பெரும் பரப்பிலுள்ள சூரிய ஒளிக்கதிர்கள் குவிக்கப்பட்டுச் சிறிய கற்றையாக்கப்படுகின்றன. குவிக்கப்பட்ட வெப்பமானது மரபு வழிப்பட்ட மின் உற்பத்தி நிலையத்திற்கு வெப்ப மூலமாகப் பயன்படுகிறது. செறிவூட்டப்பட்ட தொழில்நுட்பங்கள் பல வகையானவையாக உள்ளன; பரவளையத் தொட்டி, குவிமைய ஃப்பிரெஸ்னெல் பிரதிபலிப்பான், ஸ்டிர்லிங் டிஷ் மற்றும் சூரிய சக்தி கோபுரம் ஆகியவை மிகவும் மேம்பட்டவையாகும். சூரியனைத் தடமறியவும் ஒளியைக் குவிக்கவும் பல்வேறு உத்திகள் பயன்படுகின்றன. இந்த எல்லா அமைப்புகளிலும் பலனளிக்கக்கூடிய திரவம் ஒன்று குவிக்கப்பட்ட சூரிய ஒளியினால் சூடேற்றப்பட்ட பிறகு மின் உற்பத்திக்கோ அல்லது சக்தி சேமிப்பிற்கோ பயன்படுத்தப்படும்.[5] ஒரு பரவளையத் தொட்டி நீளமான பரவளையப் பிரதிபலிப்பானைக் கொண்டுள்ளது. அந்தப் பிரதிபலிப்பான் குவிய மையக்கோட்டுடன் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஒளிவாங்கியின் மீது ஒளியைக் குவிக்கிறது. ஒளிவாங்கி என்பது பரவளையக் கண்ணாடியின் மத்திக்கு நேர் மேற்பகுதியில் நிலைப்படுத்தப்பட்ட ஒரு குழாயாகும். அதில் பலனளிக்கக்கூடிய திரவம் நிரப்பப்பட்டிருக்கும். ஒளிவாங்கியானது சூரியனை பகலில் ஒற்றை ஊடச்சில் தடம் பற்றி பின்தொடருமாறு அமைக்கப்பட்டுள்ளது. பரவளையத் தொட்டி அமைப்புகள் எவ்வித சூரிய தொழில்நுட்பங்களைக் காட்டிலும் சிறந்த நிலப்பயன்பாட்டுக் காரணியைக் கொடுக்கின்றன.[6] காலிஃபோர்னியாவிலுள்ள SEGS கூடங்கள் மற்றும் நெவெடா (Nevada)மாகாணத்திலுள்ள பவுல்டர் சிட்டியின் (Boulder City) அருகிலுள்ள அசியோனாவின் நெவெடா சோலார் ஒன் ஆகியவை இந்தத் தொழில்நுட்பத்தினை பிரதிநிதித்தும் செய்கின்றன.[7][8] சண்ட்ரோஃப்-முல்க் பரவளையத் தொட்டி மெல்வின் ப்ருயெட்டால் உருவாக்கப்பட்டது. கண்ணாடிகளைச் சுற்றுவதாக வைத்தது ஆர்கிமிடீஸ்சின் கோட்பாட்டின் செல்வாக்கிற்குட்பட்டதாகும்.[9] செறிவூட்டப்பட்ட நேரான ஃப்ரெஸ்னெல் பிரதிபலிப்பான்கள் செறிவூட்டப்பட்ட சூரிய சக்திக் கூடங்களாகும். அவை பரவளைய கண்ணாடிக்கு பதிலாக பலனளிக்கும் வாயு அல்லது திரவத்தைக் கொண்ட இரு குழாய்கள் மீது சூரிய ஒளியைக் குவிக்க மெல்லிய கண்ணாடியைப் பயன்படுத்துகின்றன. இதற்குச் சாதகமாகத் தட்டையான கண்ணாடிகளைப் பயன்படுத்துவது பரவளைய கண்ணாடிகளை விட மிக மலிவானதாகும். மேலும், கூடுதலான பிரதிபலிப்பான்களை அதே அளவு இடத்தில் வைக்கப்படுவதன் மூலம் கிடைக்கின்ற சூரிய வெளிச்சத்தை மிகுதியாக பயன்படுத்த அனுமதிக்கிறது. செறிவூட்டப்பட்ட குவிமைய ஃப்ரனெல் பிரதிபலிப்பான்களை பெரிய அல்லது அதிகக் கச்சிதமான கூடங்களில் பயன்படுத்த இயலும். ஸ்டிர்லிங் சூரிய வட்டில், ஒரு பரவளைய குவிமைய வட்டிலை ஸ்டிர்லிங் வெப்ப இயந்திரத்துடன் இணைத்து சாதாரணமாக மின்சார உற்பத்தி இயந்திரத்தைச் செலுத்துகிறது. ஒளிமின்னழுத்திய மின்கலங்களை விட ஸ்டிர்லிங் சூரியச் சக்தியின் சாதகங்களாக இருப்பவை சூரிய வெளிச்சத்தை மின் சக்தியாக மாற்றும் உயர் திறன் மற்றும் நீண்ட ஆயுளுமாகும். ஒரு சூரிய மின் கோபுரம் வரிசையான தடம் பற்றும் பிரதிபலிப்பான்களின் பயன் கொண்டு (ஹீலியோஸ்டாட்கள்) வெளிச்சத்தை மையக் கோபுரத்தின் மீது அமைந்துள்ள ஒளிவாங்கியில் குவிக்கச் செய்கிறது. மின் கோபுரங்கள் மிகவும் செலவு குறைவானவை; அவை செறிவூட்டப்பட்ட சூரியச சக்தி தொழில்நுட்பங்களுக்குள் அதிகத் திறனையும் மேம்படுத்தப்பட்ட சக்தி சேமிப்புத் தகுதியையும் அளிக்கின்றன.[7] கலிஃபோர்னியாவின் பார்ஸ்டோவின் சோலார் டூ மற்றும் ஸ்பெயினிலுள்ள சான்லுகார் லா மேயோரின் பிளாண்டா சோலார் 10 ஆகியவை இந்தத் தொழில்நுட்பத்தின் எடுத்துக்காட்டுகளாய் விளங்குகின்றன.[7] ஒரு சூரியக் கிண்ணம் என்பது ஓரிடத்தில் நிறுவப்பட்ட கோளவடிவ வட்டில் கண்ணாடியாகும். வட்டிலால் உருவாக்கப்பட்ட வரிசை குவிமையத்தை ஒளிவாங்கி பின் தொடர்கிறது (தடம் பற்றும் பரவளைய கண்ணாடியுடைய நிலைத்த குவிமையத்திற்கெதிரான முறையில்). ஒளிமின்னழுத்தியங்கள் இது அலெக்ஸாண்டர்-எட்மண்ட பெக்கெரெலின் கண்டுபிடிப்பினை அடிப்படையாகக் கொண்டது. அவர் சில பொருட்கள் ஒளியிலிருந்து வரும் ஃபோட்டான் ஒளிக்கற்றைகளால் தாக்கப்படும்போது எலக்டிரான்களை வெளியிடுவதைக் கண்டார். அவை மின்னோட்டத்தை உற்பத்தி செய்கின்றன.[10] 1880 ஆம் ஆண்டுகளில், முதல் சூரிய மின்கலம் சார்ல்ஸ் பிரிட்ஸால் கட்டமைக்கப்பட்டது.[11] இருப்பினும், மூலமுன்மாதிரி செலினிய மின்கலம் அதன் மேல் விழுகிற ஒளியை 1 சதவீதத்திற்கும் குறைவான மின்சாரமாக மாற்றின. எர்னஸ்ட் வெர்னர் வோன் சீமென்ஸ் மற்றும் ஜேம்ஸ் கிளர்க் மாக்ஸ்வெல் ஆகியோர் இந்த கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை அங்கீகரித்தனர்.[12] 1940 ஆம் ஆண்டுகளில் செய்யப்பட்ட ரஸ்ஸெல் ஓஹல்லின் பணியினைத் தொடர்ந்து, ஆய்வாளர்கள் ஜெரால்ட் பியர்ஸ்சன், கால்வின் ஃபுல்லர் மற்றும் டாரில் சாபின் 1954 ஆம் ஆண்டில் சிலிக்கன் சூரிய மின்கலத்தை உருவாக்கினர்.[13] இத்தகைய தொடக்கக்கால சூரிய மின்கலங்கள் 1 வாட் அளவுடையது 286 அமெரிக்க டாலர் விலையையும் 4.5 சதவீதம் முதல் 6 சதவீதம் வரையிலான திறனையும் கொண்டிருந்தன.[14] சூரிய சக்தி அதிகமான சாத்தியங்களை உடையதாகும். ஆனால் 2008 ஆம் ஆண்டில், உலகின் மொத்த சக்தி விநியோகத்தில் 0.02 சதவீதத்திற்கும் குறைவாகவே அளித்தது. பல போட்டியிடும் தொழில்நுட்பங்கள் உள்ளன. அவற்றில் பதினான்கு வகையான ஃபோட்டோவோல்டிக் மின்கலங்கள் உள்ளன. இதில், மெல்லிய பிலிம், மோனோகிறிஸ்டல்லைன் சிலிக்கன், பாலிசிறிஸ்டலலைன் சிலிக்கன் மற்றும் அமோர்பஸ் மின்கலங்கள் போன்றவை உள்ளடங்குகின்றன. அதே போல பலவகையான செறிவூட்டப்பட்ட சூரிய சக்தியும் உள்ளன. எந்தத் தொழில்நுட்பம் மேலாதிக்கம் செலுத்தும் என்பதை அறிவது காலத்திற்கு முற்பட்ட செயலாகும். வெகுமுந்தைய குறிப்பிடத்தக்க சூரிய மின்கலங்களின் பின் அளிப்பு செயற்பாடு 1958 ஆம் ஆண்டில் வான்கார்ட் I விண்கலத்திற்கான மின் வளமாக இருந்தது. அது இரசாயன மின்கலம் தீர்ந்த பிறகும் தொடர்ச்சியாக ஓராண்டிற்கு மேல் தகவல் அனுப்ப விண்கலத்தினை அனுமதித்தது.[15] இப்பணித் திட்டத்தில் சூரிய மின்கலங்களின் வெற்றிகரமான இயக்கம் பல சோவியத் மற்றும் அமெரிக்கர்களின் விண்கலங்களில் பிரதியெடுக்கப்பட்டது. 1960 ஆம் ஆண்டுகளின் இறுதியில், ஃபோட்டோவோல்டிக் விண்கலங்களுக்கு நிலைத்த சக்தி வளமானது.[16] வான்கார்ட் விண்கலத்தில் வெற்றிகரமாக சூரியத் தகடுகள் செயற்படுத்தப்பட்டப் பிறகு 1970 ஆம் ஆண்டுகளின் சக்திச் சிக்கல்கள் வரை, ஃபோட்டோவோல்டிக் சூரியத் தட்டுகள் விண்வெளி ஓடங்களின் பின் சக்தியளிப்புகளில் வெளிப்புற பயன்பாட்டினைப் பெற்றது.[17] ஃபோட்டோவோல்டியாக்கள் டெல்ஸ்டார் போன்ற முந்தைய வணிக ரீதியிலான விண்கலங்களின் வெற்றியில் அவசியமான பங்கினை வகிக்கத் தொடங்கின. மேலும் அவை இன்றைய தகவல்தொடர்புகளின் அடிப்படைக் கட்டமைப்பில் முக்கியமானவையாகத் தொடர்ந்து நீடிக்கின்றன. சூரிய மின்கலங்களின் உயர் விலையானது அதன் உலகளவிலான பயன்பாட்டினை 1960 ஆம் ஆண்டுகளின் முழுவதிலும் கட்டுப்படுத்தியது. இது 1970 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் மாறியது. அப்போது விலை மட்டங்களின் குறைவு மின்வலையற்ற தூரப்பகுதிகளில் ஃபோட்டோவோல்டிக் உற்பத்தியைப் போட்டியிடக் கூடியதாக ஏற்படுத்தின. தொடக்கக்கால புவி சார்ந்த பயன்பாடுகளில் தகவல்தொடர்பு நிலையங்களுக்கு சக்தியளிக்க, தொலைகடல் எண்ணெய் துரப்பணிகள், கப்பல் வழிகாட்டி மிதவைகள் மற்றும் இரயில் பாதை கடப்புகள் ஆகியன இருந்தன.[18] இத்தகைய மின் சாராத செயற்பாடுகள், 2004 ஆம் ஆண்டு வரை உலகம் முழுதும் நிறுவப்பட்ட கொள்திறத்தில் பாதிக்கு மேற்பட்டதைக் கொண்டிருந்தன.[19] 1973 ஆம் ஆண்டின் எண்ணெய் சிக்கல் 1970கள் மற்றும் 1980களின் தொடக்கத்திலும் ஒளிமின்னழுத்திய உற்பத்தியின் துரிதமான அதிகரிப்பினைத் தூண்டியது.[20] அதிகரிக்கும் உற்பத்தியும், அமைப்புச் செயற்பாட்டினுடனான மேம்பாடும் பேரளவு உற்பத்தி மூலம் செலவுக் குறைப்பை விளைவித்தது; ஃபோட்டோவோல்டிக்கின் விலையை 100 அமெரிக்க டாலர்/வாட் என்பதிலிருந்து 1985 ஆம் ஆண்டில் 7 அமெரிக்க டாலர்/வாட்டாகக் குறைத்தது.[21] 1980 ஆம் ஆண்டுகளில் நிதானமாக குறைந்து வந்த எண்ணெய் விலைகள் ஃபோட்டோவோல்டியாக்கின் R&amp;D (ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்கான) நிதியளிப்பின் குறைவிற்கு வழியேற்படுத்தியது. மேலும், 1978 ஆம் ஆண்டின் சக்தி வரிச் சட்டம்தொடர்பான வரி சலுகைகளை நிறுத்தவும் செய்தது. இத்தகைய காரணிகள் 1984 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டிற்கு இடையே வளர்ச்சியை ஏறக்குறைய ஆண்டுத்தோறும் 15 சதவீத அளவிற்கு மிதமாக்கின.[22] 1990 ஆம் ஆண்டுகளின் மத்தியிலிருந்து, ஒளிமின்னழுத்திய துறையின் தலைமை, அமெரிக்காவிலிருந்து ஜப்பான் மற்றும் ஐரோப்பாவிற்கு இடம் பெயர்ந்தது. 1992 - 1994 ஆம் ஆண்டிற்கு இடையில், ஜப்பான் ஆய்வு மற்றும் வளர்ச்சி நிதியை அதிகரித்தது. நிகர அளவை வழிக்காட்டுதல்கள் நிறுவப்பட்டன. மேலும், குடியிருப்புகளில் ஃபோட்டோவோல்டியாக்கை நிறுவுவதை ஊக்குவிக்க ஒரு மானிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.[23] இதன் விளைவாக, அந் நாட்டில் ஃபோட்டோவோல்டியாக்கை நிறுவுவது 1994 ஆம் ஆண்டில் 31.2 மெகாவாடிலிருந்து 1999 ஆம் ஆண்டில் 318 மெகாவாட்டாக உயர்ந்தது. மேலும், உலகம் முழுவதுமான உற்பத்தி வளர்ச்சி 1990 ஆம் ஆண்டுகளில் 30 சதவீதமாக அதிகரித்தது.[24][25] ஜெர்மனி அதன் மறுசுழற்சி எரிசக்தி வளங்கள் சட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளீட்டு கட்டணங்களை மறுஆய்வு செய்ததிலிருந்து உலகம் முழுவதற்குமான முன்னணி ஃபோட்டொவோல்டிக் சந்தையாக மாறியது. ஜெர்மனியில் நிறுவப்பட்ட ஃபோட்டோவோல்டிக் கொள்திறன் 2000 ஆம் ஆண்டில் 100 மெகாவாட்டிலிருந்து 2007 ஆம் ஆண்டின் இறுதியில் ஏறக்குறைய 4,150 மெகாவாட்டாக உயர்ந்தது.[26][27] 2007 ஆம் ஆண்டிற்கு பிறகு, ஸ்பெயின் இது போன்ற உள்ளீட்டு கட்டண கட்டமைப்பை 2004 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொண்டப் பிறகு உலகின் பாதியளவு ஃபோட்டோவோல்டியாக்களை (45%) நிறுவியதால் பெரிய ஃபோட்டோவோல்டிக் சந்தையாக மாறியது. பிரான்ஸ், இத்தாலி, தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகியவை சமீபத்தில் பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்கள் மற்றும் உள்ளூர் சந்தை நிலவரங்களினால் வேகமான வளர்ச்சியைக் கண்டன.[28] வீட்டு ஃபோட்டோவோல்டியாக் கருவிகளின் மின் உற்பத்தி வழக்கமாக கிலோவாட்-பீக் (kWp) அலகுகளாக விவரிக்கப்பட்டுள்ளன. அவற்றில்பெரும்பாலனவை 1லிருந்து 10kW-டிற்குள் வரும்.[29] செறிவூட்டப்பட்ட ஒளிமின்னழுத்தியங்களின் சக்தி சூரியனிலிருந்து மின் உற்பத்தி செய்வதற்கான மற்றொரு புதிய வழிமுறையாகும். செறிவூட்டப்பட்ட ஒளிமின்னழுத்திய அமைப்புகள் மின்சார சக்தி உற்பத்தியினைச் செய்யும் நோக்கில் சூரிய ஒளியினைக் கையாண்டு ஒளிமின்னழுத்தியத்தின் மேற்பரப்பில் ஒருமுகப்படுத்துகின்றன. சூரிய குவிப்பான்களின் அனைத்து வகைகளும் பயன்படுத்தப்படலாம். அவை சூரிய தடப் பற்றியின் மீது ஏற்றப்பட்டிருக்கும். அவ்வாறு இருப்பது சூரியன் வானத்தில் நகர்வதால் குவிமையத்தினை மின்கலத்தின் மீது வைத்திருப்பதற்காகும். தட்டையான தகடு ஒளிமின்னழுத்திய உற்பத்தி குளிர்காலத்தில் 20 சதவீதமும் கோடையில் 50 சதவீதமுமாக அதிகரிக்கலாம்.[30] சோதனை சார்ந்த சூரிய சக்தி ஒரு 'மேல்இழுப்பு' சூரிய கோபுரத்தில் (சூரிய கூண்டு அல்லது சூரிய கோபுரம்) பசுமைக்குடில் உள்ளது அது புனல் வழியே மத்திய கோபுரத்திற்கு செல்கிறது. சூரிய வெளிச்சம், பசுமைக்குடிலின் மீது ஒளிரும் போது உள்ளிருக்கும் காற்று சூடேற்றப்பட்டு விரிவடைகிறது. விரிவடையும் காற்று மத்திய கோபுரத்தை நோக்கி பாய்கிறது, அங்கு ஒரு விசையாழி பாய்கின்ற காற்றினை மின் சக்தியாக மாற்றுகிறது. ஒரு 50கிலோவாட் மூல முன் மாதிரி ஸ்பெயினின் சியுடாட் ரியலில் நிறுவப்பட்டது. எட்டாண்டுகளுக்கு இயக்கப்பட்டு 1989 ஆம் ஆண்டில் செயல்நிலை நீக்கம் செய்யப்பட்டது.[31] வெப்ப நிலை மாற்றத்தால் உண்டாகும் மின்சாரம் அல்லது "வெப்ப நிலை உண்டாக்கி" கருவிகள், ஒத்திராத ஆக்கப்பொருட்களின் மத்தியில் ஒரு வெப்பநிலை வேறுபாட்டை மின்னோட்டமாக மாற்றுகின்றன. 1800 ஆம் ஆண்டுகளில், சூரிய சக்தியை கண்டெடுத்த முன்னோடி மவுசோவினால் முதன் முதலில் சூரியச் சக்தியானது சேமித்து வைக்கப்படும் முறையாக பரிந்துரைக்கப்பட்டது. வெப்ப நிலை மாற்றத்தால் உருவாக்கப்படும் மின்சாரம் சோவியத் யூனியனில் 1930 ஆம் ஆண்டுகளில் மீண்டும் வெளிப்பட்டது.[32] சோவியத் அறிவியலாளர் அப்ராம் லோஃப்பின் இயக்குதலின் கீழ் ஒரு செறிவூட்டப்பட்ட அமைப்பு வெப்ப நிலை மாற்றத்தால் உற்பத்தி செய்யப்படும் சக்தியை 1எச்பி இயந்திரத்தை இயக்கப் பயன்படுத்தினர்.[33] வெப்ப நிலையால் மின்சாரம் செய்யப்படும் உற்பத்தி பின்னர் அமெரிக்க விண்வெளி திட்டத்தில் ஆற்றலை மாற்றியமைக்கும் ஒரு தொழில்நுட்பமாக ஆனது. அது தூர விண்வெளி திட்டங்களான காசினி, கலீலியோ மற்றும் வைகிங் போன்றவற்றிற்கு ஆற்றலளிக்கப் பயன்படுத்தப்பட்டது. இந்த ஆய்வுப்பகுதி, இக்கருவிகளின் திறனை 7 முதல் 8 சதவீதத்திலிருந்து 15 முதல் 20 சதவீதமாக உயர்த்துவதில் கவனம் செலுத்தியது.[34] வளர்ச்சி, நிலைநிறுத்தல் மற்றும் பொருளியல் தொழிற் புரட்சியின்போது உடனிணைந்த கரி பயன்பாட்டின் அதிகரிப்போடு தொடங்கிய சக்தி நுகர்வானது இடைப்பட்ட காலத்தில் நிலையாக மாற்றமடைந்து மரக்கட்டையிலிருந்து கழிவுப்பொருட்களின் பயன்பாட்டிற்கு மாறி பிறகு படிம எரிபொருட்களுக்கு சென்றது. 1860 ஆம் ஆண்டுகளில் சூரியத் தொழில்நுட்பங்களின் தொடக்கக்கால வளர்ச்சியானது, விரைவில் கரியானது பற்றாக்குறையாக மாறக்கூடும் என்ற எதிபார்ப்பின்படி தூண்டப்பட்டதாகும். இருப்பினும், சூரிய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதிகரித்து வந்த கரியின் அளவு, சிக்கனம், கரியின் பயன்பாடு மற்றும் பெட்ரோலியம் போன்றவற்றின் முகாந்திரத்தால் தேங்கியது.[35] 1973 ஆம் ஆண்டின் எண்ணெய்த் தடை மற்றும் 1979 ஆம் ஆண்டு சக்தி சிக்கல் உலகம் முழுவதும் எரிசக்தி கொள்கைகளில் மறு ஒழுங்கினுக்கு காரணியாக்கியது. மேலும், மறுபடியும் புதிதாக்கப்பட்ட கவனத்தை சூரியத் தொழில்நுட்பங்களில் கொண்டு வரச் செய்தது.[36][37] நிலை நிறுத்தல் உத்திகள் ஊக்கமளிப்புத் திட்டங்களில் கவனம் கொண்டது. இவை அமெரிக்காவின் மைய ஃபோட்டோவோல்டியாக் பயன்பாட்டுத் திட்டம் மற்றும் ஜப்பானின் சன்ஷைன் திட்டம் போன்றவையாகும். பிற முயற்சிகளில் உள்ளடங்கியவை அமெரிக்காவில் (SERI தற்போது NREL), ஜப்பானின் (NEDO) மற்றும் ஜெர்மனியின் (பிரான்ஹோஃபெர் சூரிய எரிசக்தி அமைப்புகள் நிறுவனம் ISE) ஆய்வு வசதிகள் நிறுவுதல்கள் ஆகும்.[38] 1970 ஆம் ஆண்டிற்கும் 1983 ஆம் ஆண்டிற்கும் இடையே ஒளிமின்னழுத்திய நிறுவுதல்கள் வேகமாக வளர்ந்தன. ஆனால் 1980 ஆம் ஆண்டுகளில் குறைந்து வந்த எண்ணெய் விலைகள் ஒளிமின்னழுத்திய வளர்ச்சியை 1984 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை மிதமாக்கின.[39] ஃபோட்டோவோல்டியாக்கின் உறபத்தி 2000 ஆம் ஆண்டிலிருந்து வருடத்திற்கு 40 சதவீதமாக சராசரி வளர்ச்சியுடனிருந்தது. 2007 ஆம் ஆண்டின் இறுதியில் நிறுவப்பட்டத் திறன் 10.6 (GW) கிகாவாட்டாக இருந்தது,[19] 2008 ஆம் ஆண்டில் 14.73 (GW) கிகாவாட்டாகியது.[40] 2006 ஆம் ஆண்டிலிருந்து ஃபோட்டோவோல்டியாக்ஸ்சை நிபந்தனையற்ற முறையில் நீண்ட நாள் மின் நுகர்வு உடன்பாடுகளின் கீழ் நிறுவுவது முதலீட்டாளர்களுக்கு சிக்கனமானதாக இருந்தது. 2007 ஆம் ஆண்டில் 50 சதவீத வர்த்தக அமைப்புகள் இந்த விதத்தில் நிறுவப்பட்டன. மேலும் 2009 ஆம் ஆண்டில் இவ்வாறே 90% எதிர்பார்க்கப்படுகிறது.[41][42][43] வணிக ரீதியிலான செறிவூட்டப்பட்ட சூரிய வெப்பமின் சக்தி (CSP) கூடங்கள் முதலில் 1980 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டன.[44] ஸ்பெயினின் 11 மெகாவாட் PS10 சக்தி கோபுரம், 2005 ஆம் ஆண்டின் இறுதியில் முடிவடைந்தது. இது ஐரோப்பாவின் முதல் வணிக ரீதியிலான CSP அமைப்பாகும். மேலும் 2013 ஆம் ஆண்டில் அதே பகுதியில் 300 மெகாவாட் திறனை மொத்தமாக நிறுவிக்கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகிறது.[45] 2009 ஆம் ஆண்டு ஆகஸ்டில், ஃபர்ஸ்ட் சோலார் சீன நாட்டின் இன்னர் மங்கோலியாவின் ஓர்டோஸ் நகரில் 2 கிகாவாட் ஒளிமின்னழுத்திய அமைப்பை நான்கு கட்டங்களாக 2010 ஆம் ஆண்டில் 30 மெகாவாட், 2014 ஆம் ஆண்டில் 970 மெகாவாட், மற்றொரு 1000 மெகாவாட்டை 2019 ஆம் ஆண்டிலும் கட்டுவிக்கத் திட்டங்களை அறிவித்தது. 2009 ஆம் ஆண்டு ஜூன் 9ம் தேதி வரை, வடக்கு குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் புதிய சூரிய வெப்ப மின் சக்தி நிலையம் கட்டுவிக்கப்பட்டு வந்தது. அது முடிவடைந்தால், உலகிலேயே அது தான் பெரிய உற்பத்தி நிலையமாக இருக்கும்.[46] சூரியச் சக்தி நிறுவுதல்கள் சமீபக்கால வருடங்களில் குடியிருப்புப் பகுதிகளிலும் நீடிக்கப்படத் தொடங்கியுள்ளன. இவை அரசுகளின் ஊக்கத் திட்ட அளிப்புகளோடு "பசுமை" சக்தியை ஓர் அதிக பொருளாதார ரீதியிலான வளம்பெறக்கூடிய மாற்றாக ஆக்குகின்றன. 2006 ஆம் ஆண்டு கனடாவில் RESOP (புதுபிக்கக்கூடிய எரிசக்தி நிலையான வழங்கல் திட்டம்) அறிமுகப்படுத்தப்பட்டது.[47] இது 2009 ஆம் ஆண்டில், கிரீன் எனர்ஜி சட்டத்தின் நிறைவேற்றுதலோடு புதுப்பிக்கப்பட்டது. ஓண்டோரியோவின் குடியிருப்பு வீட்டு உரிமையாளர்களை அவர்களின் சூரியத் தகடுகளின் நிறுவுதல்கள் மூலம் உற்பத்திச் செய்யப்பட்ட சக்தியை மீண்டும் மின் வலைக்கு (அதாவது அரசுக்கு) 42¢/kWhற்கு விற்க அனுமதிக்கிறது, அதே சமயம் மின் வலையிலிருந்து சராசரி 6¢/kWh விலையில் சக்தியினை பெறுகிறது (உள்ளீட்டுக் கட்டணங்கள் காண்க).[48] இந்த திட்டம், அரசின் பசுமை அட்டவணையினை உயர்த்த உதவுவதற்காக வரையப்பட்டது மற்றும் சக்திவலைகளின் மீது உச்சக் காலங்களில் அடிக்கடி ஏற்றப்படும் சுமையைக் குறைக்கவுமானது. 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், சிறிய மற்றும் கூரை மீது பொருத்தப்படும் அமைப்பு (≤10kW), முன்மொழியப்பட்ட FIT 80¢/kWh ஆக உயர்த்தப்பட்டது.[49] EPIA வால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்திர சர்வதேச சூரிய ஒளிமின்னழுத்திய முதலீடுகளின் மாநாடு குறிப்பிடுவது: ஒளிமின்னழுத்தியங்கள் ஓர் பாதுகாப்பை, நம்பத்தகுந்த முதலீட்டு பலனளிப்பை, வழமையான அலகு அளவீட்டின்படி 25 முதல் 40 வருடங்கள் வரை நீடிப்பவையாக, முதலீட்டிற்கு இலாபகரமாய் 8 லிருந்து 12 ஆண்டுகள் வரை இருப்பனவற்றை கொடுக்கின்றன என்கிறது.[52] நிதி ஊக்கங்கள் சூரியச் சக்தி உற்பத்திக்காக நிறுவுவனவற்றினை ஆதரிப்பவை சூரிய ஃபோட்டோவோல்டியாக்ஸ்க்கான அதிகரித்து வரும் தேவையை குறிவைத்து, அவை மரபு ரீதியிலான சக்தி உற்பத்திகளுடன் போட்டியிடக் கூடியதாக மாற்றும் நோக்கம் கொண்டவை. மற்றொரு தேவையை உயர்த்தும் புதுமையான கண்டுபிடிப்பு வழி கல்வி நிறுவனங்களின் (பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள்) பசுமை நுகர்வு சக்தியைப் பயன்படுத்திக் கொள்வதாகும். இது உலகம் முழுதும் மரபு சாரா வளங்களுக்குச் சாதகமான சுருள்-விளைவைத் தருகிற ஆற்றல்மிக்க செல்வாக்குடைய வினையூக்கியாகக் காட்டப்படுகிறது.[53] சக்தி சேமிப்பு முறைகள் சூரியச் சக்தி இரவு நேரங்களில் கிடைக்காது என்பதால், தொடர்ச்சியான சக்தி கிடைகின்றபடி செய்யப்பட சக்தி சேமிப்பை ஓர் முக்கிய விஷயமாக்குகிறது.[54] காற்றுச் சக்தி மற்றும் சூரியச் சக்தி இரண்டும் இடைவிட்டுக் கிடைக்கின்ற வளங்களாகும், அதன் பொருள் கிடைக்கின்ற அனைத்து உற்பத்திகளும் அவை கிடைக்கின்றப் போது எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் மற்றும் எப்போது தேவையோ அப்போது பயனாகவோ அல்லது மின் கடத்தி வரிசைகளின் மூலம் எங்கு பயன்படுத்தப்படுமோ அங்கு இடம் மாற்றப்படலாம் என்பதாகும். காற்றுச் சக்தி மற்றும் சூரியச் சக்தி ஆகியவை, குளிர் காலங்களில் அதிக காற்று அனுபவிக்கப்படும் இடங்களிலும் கோடையில் அதிக சூரிய வெளிச்சத்தையும் இணைத்து முழுமையாக்கவல்லவை. ஆனால் சூரியனும் காற்றும் அற்ற நாட்களில் வேறுபாடானது சில வழிவகைகளில் தீர்வுக் காணப்படத் தேவையுள்ளது.[55] சோலார் டூ இந்த சக்தி சேமிப்பு வழிமுறையைப் பயன்படுத்தி அதன் 68 m³ சேமிப்புத் தொட்டியில் போதுமான வெப்பத்தினை தேக்கி வைத்து, முழு உற்பத்தியான 10 MWeஐ சுமார் 99% செய்திறனுடன் 40 நிமிடங்களுக்குக் கொடுக்கிறது.[56] உப்புக்கள் திறன் வாய்ந்த சேமிப்பு வழியாகும் ஏனெனில் அவை குறைவான விலைக் கொண்டவை, குறிப்பிடத் தகுந்த உயர் வெப்பக் கொள்திறன் கொண்டவை, மேலும் வெப்பத்தை மரபு வழிப்பட்ட சக்தி அமைப்புகளின் உடனொத்த வெப்ப நிலைகளை வெளியிடத்தக்கவை, சூரியச் சக்தியின் இடைவிடும் தன்மையை நீக்கும் திறனைக் கொண்டவையாகும். வெப்பத்தின் வடிவத்தில் உபரி சூரியச் சக்தியினை தேக்கி வைத்து, மேலும் இந்த வெப்பத்தை ஓரிரவிற்கும் அல்லது மின்சாரத்தை உற்பத்தி செய்ய சூரியச் சக்தி கிடைக்காத காலங்களின் போதும் பயன்படுத்தலாம். இந்தத் தொழில்நுட்பம் சூரியச் சக்தியினை விரைவாகச் செயலாற்றக் கூடியதாக உருவாக்குகின்ற திறன் படைத்தது, விருப்பப்படும்போது மின்சாரத்தை உற்பத்திச் செய்ய வெப்ப வளமானது என்பதால் பயன்படுத்தப்படலாம். சூரியச் சக்தி நிறுவுதல்கள் வழமையாக பிறசேர்ப்புகளான சேமிப்பு அல்லது இதர சக்தி வளங்களான ஓர் உதாரணத்திற்கு காற்று சக்தியுடன் மற்றும் நீர் மின்சாரத்துடனோ இருக்கும். மின் வலைச் சாராத ஃபோட்டோவோல்டிக் அமைப்புகள் மரபுரீதியாக மின்சக்தியின் மறுசெறிவுக்கு மின்கலங்களை உபரி மின்சாரத்தை சேமிக்க பயன்படுத்தின. மின்வலையுடனான அமைப்புகளில், உபரி மின்சாரம் மின் விநியோக மின் வலைக்கு அனுப்பப்பட முடியலாம். நிகர அளவை திட்டங்கள் இத்தகைய அமைப்புகளுக்கு ஓர் சலுகையினை அவை மின் வலைக்கு அளிக்கும் மின்சாரத்திற்கு அளிக்கின்றன. இந்தச் சலுகை குறை நிரப்பீடாக மின்சாரத்தை மின் வலையிலிருந்து அமைப்பு தேவையினை நேர் கொள்ள முடியாதபோது கொடுக்கப்படுவது, மின்வலையை திறன்மிக்க சேமிப்பு பின்னணி இயக்க ஏற்பாடாகப் பயன்படுத்துகிறது. சலுகைகள் பொதுவாக மாதத்திற்கு மாதம் நீடிக்கப்படுவதாகும் மற்றும் எவ்வித மீதமிருக்கும் உபரியும் ஆண்டுத்தோறும் தீர்க்கப்படும்.[57] இறைக்கப்பட்ட-சேமிப்பு நீர் மின்சார கிடங்குகள் உபரி மின்சாரம் கிடைக்கும்போது போது மின்சாரத்தை இறைக்கப்படும் நீர் வடிவத்தில், கீழ் நிலையிலுள்ள உயர்த்தப்பட்ட நீர் தேக்கத்திலிருந்து அதிக உயர் நீர் தேக்கத்தில் தேக்கிவைக்கின்றன. சக்தியானது தேவை அதிகரித்து நீரை திறந்துவிடும்போது மீட்கப்படுகிறது: இறைப்பு ஓர் விசையாழியாகிறது, மற்றும் இயக்குதசை ஓர் நீர் மின்சார சக்தி மின் ஆக்கியாகவும் ஆகின்றது.[58] சக்தி வளங்களை ஓர் சக்திக் கூடத்தில் கூட்டிணைப்பது கிடங்கு விஷயங்களையும் குறிவைக்கின்றன. காஸெல் பல்கலைகழகத்தின் சூரிய சக்தி அளிப்பு தொழில்நுட்ப நிறுவனம் முன்மாதிரி சோதனையாக மாற்று மின் சக்தியினைக் கொடுக்க முற்றிலும் மரபு சாரா வளங்களிலிருந்து ஓர் கூட்டுச் சக்திக் கூடத்தை சூரிய, காற்று, கழிவுப் பொருட்கள் வாயு மற்றும் நீர்க்கிடங்கு போன்றவற்றின் இணைப்பாக நடத்தியது.[59] குறிப்புகள் புற இணைப்புகள் சூரிய வெப்பச் சக்தி தொழில் 2007 இல் ஏற்றத்தை அனுபவித்தது, அது உலகம் முழுமைமைக்குமான 100 மெகா வாட் புதிய கொள்திறனுடன் இருந்தது. பகுப்பு:ஆற்றல் பகுப்பு:மேற்கோள் வழுவுள்ள பக்கங்கள்-கூகுள் தமிழாக்கம்
சூரிய சக்தியைக் கண்டுபிடித்தவர் யார்?
அலெக்ஸாண்டர்-எட்மண்ட பெக்கெரெலின்
6,533
tamil
c08039cde
பொம்மை (doll), ஒரு விளையாட்டுப் பொருள் ஆகும். பொதுவாக, பொம்மைகள் குழந்தைகளுடனும் வளர்ப்பு விலங்குகளுடனும் தொடர்புபடுத்திப் பார்க்கப்பட்டாலும், சில சமயங்களில் பெரியவர்களும் வீட்டில் வளர்க்கப்படாத விலங்குகளும் கூட பொம்மைகளுடன் விளையாடுவதைக் காணலாம். பொம்மையாக பயன்படுத்துவதற்காகவே பல விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. என்றாலும், வேறு முதன்மைப் பயன்பாடு உடைய பொருட்களும் பொம்மை போல் பயன்படுத்தப்படுவதை காணலாம். சில பொம்மைகள், பொம்மை விரும்பிகளால் சேகரிப்பதற்காக மட்டுமே இருக்கின்றன. அவற்றை விளையாடப் பயன்படுத்துவது இல்லை. எனினும் சிலர் விளையாடுவதற்காகவும் பயன்படுத்துகின்றனர். உலகை அறிந்து கொள்ளவும் வளர்ச்சி அடையவும் விளையாட்டுகளும் பொம்மைகளும் உதவுகின்றன. குழந்தைகள், பொம்மைகளைக் கொண்டு உலகை அறிந்து கொள்ளவும், தங்கள் உடல் வலுவைக் கூட்டவும், வினை - விளைகளை அறியவும், தொடர்புகளைப் புரிந்து கொள்ளவும், பெரியவர்களாக வளரும் போது தங்களுக்குத் தேவைப்படும் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் செய்கின்றனர். பெரியவர்கள், சமூகத் தொடர்புகளை பெருக்கிக் கொள்ளவும், குழந்தைகளுக்குக் கற்றுத் தரவும், தங்கள் சிறுவயதில் கற்ற பாடங்களை நினைவூட்டிக் கொள்ளவும், மனதுக்கும் உடலுக்கும் பயிற்சி அளிக்கவும், அன்றாடம் பயன்படுத்தாமல் போகக் கூடிய திறன்களில் பயிற்சி எடுக்கவும், தங்கள் வாழிடத்தை அழகூட்டவும் பொம்மைகளைப் பயன்படுத்துகின்றனர். வெறும் கேளிக்கை, விளையாட்டு என்பவற்றைத் தாண்டி, பொம்மைகளும் அவை பயன்படுத்தப்படும் முறைகளும் வாழ்வின் பல கூறுகளில் தாக்கத்தை உருவாக்குகின்றன. பொம்மைகள் களிமண், நெகிழி, காகிதம், மரம், உலோகம் முதலானவற்றால் செய்யப்படுகின்றன. பொம்மைகள், முன் வரலாற்றுக் காலம் தொட்டே பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. குழந்தைகள், விலங்குகள், போர் வீரர்கள் ஆகியோரை உருவகிக்கும் பொம்மைகள், தொல்லியல் ஆய்வுக்களங்களில் காணக் கிடைத்திருக்கின்றன. 2004ஆம் ஆண்டு நடந்த தொல்லியல் ஆய்வின் மூலம் சுமார் 4000 வருட பழமையான கல் பொம்மை இத்தாலியத் தீவுகளுள் ஒன்றான பான்தலேரியா கிராமத்தில் கண்டறியப்பட்டது. இருப்பினும் இது விளையாட்டிற்குப் பயன்படுத்தப்பட்டதா?, என்பதற்கான சான்றுகள் இல்லை.[1] வரலாறு குழந்தைகளின் விருப்பப் பொருளான பொம்மைகள், உலகின் கலை, பண்பாடு, அறிவியல், சமூகம் மற்றும் காலம் சார்ந்து பல ஆண்டுகளாக மேம்பாடடைந்துள்ளது. பொம்மைகளின் வரலாறு மிகச்சரியாகக் கணிக்க இயலாவிடினும் பல்வேறு மாற்றம், படிமங்கள் சார்ந்து அவற்றின் கால அளவைகளைக் கண்டறியலாம். பொம்மைகள் சிறார்களின் விளையாட்டிற்கு மட்டுமின்றி கற்றல், மாயம், ஆன்மிகம், சடங்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிந்துவெளி நாகரிகத்தில் (கி.மு 3010 - 1500) வண்டி, ஊதல், நூலினால் இயக்கபடும் சாயும் குரங்கு பொம்மைகள் சிறார்கள் பயன்படுத்தியுள்ளதற்கான படிமங்கள் உள்ளன. [2] எகிப்திய சிறார்கள் துடுப்பு பொம்மைகளை கி.மு 2040 - 1750 களில் பயன்படுத்தியுள்ளனர். கல், மட்பாண்டம், மரம் ஆகியவற்றால் செய்யப்பட்ட கை, கால்கள் அசைக்கும் படியான பொம்மைகளைப் பயன்படுத்தியுள்ளதற்கான ஆய்வுகள் உள்ளன.[3] பண்டைய கிரேக்க சிறுமிகள் கி.பி 100ஆம் ஆண்டில் பொம்மைகள் வைத்திருந்ததாக பண்டைய கதைகள் குறிப்பிடுகின்றன. கிரேக்க சிறுமிகள் தங்கள் திருமணச் சடங்கின் போது தங்களின் விளையாட்டு பொம்மைகளைக் கடவுளுக்கு அற்பணிக்கும் சடங்குகளும் இருந்து வந்தன.[4][5] ரோமானிய பொம்மைகள் களிமண், யானைத் தந்தம், மரம், துணிகள் போன்றவற்றால் செய்யப்பட்டிருந்தன. உரோமானிய சிறார்களின் கல்லறைகளில் பொம்மைகள் கண்டறியப்பட்டுள்ளன. இக்காலத்தைப் போன்று சிறார்கள் பொம்மைகளுக்கும் ஆடைகளை உடுத்தியுள்ளது அறியப்படுகிறது. கி.பி 300 களில் முழுதும் துணியால் செய்யப்பட்ட ரேக் (Rag) பொம்மைகளையும் உரோம சிறார்கள் பயன்படுத்தியுள்ளனர்.[6] ஆப்பிரிக்க பழங்குடிகளான கானா சுற்றுவட்டார மக்கள், அகுவாபா (Akuaba) எனும் மரத்தாலான பெரும் தலைகளுடைய பொம்மைகள் தாய்வழி மகளுக்கு சீதனமாகவும் சடங்குப் பொருளாகவும் கொடுக்கின்றனர். அசாந்தி எனும் பழங்குடிகளின் அகுவாபா பொம்மைகள் தட்டையான தலையுடன் காணப்படும். சப்பானிய நாட்டு பாரம்பரிய பொம்மைகள் டோகு காலம் (கி.மு 8000-200 வரையிலும்) களிமண்ணால் செய்யப்பட்டவை, ஹனிவா இறுதிக்காலம் (கி.பி 300-600 வரையிலும்) சுட்ட மண்பொம்மைகள் என வேறுபட்டிருந்தன. பதினொன்றாம் நூற்றாண்டு வரையிலும் சப்பானில் பொம்மைகள் சிறார்களின் விளையாட்டிற்கும், சமய சடங்கில் பாதுகாப்பிற்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்தன. தென்னிந்தியாவிலுள்ள கொலுவைப் போன்று ஹினமட்சுரி விழாவின் போது சப்பானிய மரபு பொம்மைகள் வரிசைக்கிரமமாக படிகளில் அடுக்கி வைக்கப் படுகின்றன. இப்பொம்மைகள், வைக்கோல், மரத்தால் செய்யப்பட்டு வண்ணமிடப்பட்டு பரந்த ஆடைகளை பல்லடுக்குகளில் அணிவித்து காட்சிக்கு வைக்கின்றனர். கோள வடிவிலான, கருவிழியற்ற வெண்ணிறத்தலையும், சிவப்பு உடலுமான தருமா பொம்மைகளும் இதில் அடங்கும். இப்பொம்மைகள் தென்னிந்தியாவிலிருந்து சென்று சென் புத்த மதத்தைப் பரப்பியவரும், குங்ஃபூ கலையின் தந்தையுமான பல்லவ வம்சாவழி போதி தருமரை நினைவுறுத்தும் விதமாக உள்ளன. மரத்தால் செய்யப்பட்ட கோகேசி பொம்மைகள் கைகால்களற்று உருளை வடிவ உடலுடன் சிறுமிகளைப் போன்று பிரதிபலிக்கின்றன. ருஷ்யா வில் 1890களில் செதுக்கப்பட்ட மாத்ரியோஸ்கா பொம்மைகள் ஒன்றனுள் ஒன்றாக துளைக்கப்பட்ட மரப்பேழையுள் கூடு போன்று அமைந்திருக்கும். தீய சக்திகளாக உருவகிக்கும் உருவ பொம்மை எரித்தல் முறை ஆப்பிரிக்க, அமெரிக்க பழங்குடிகள், ஐரோப்பிய பண்பாடுகளுள் காணப்படுகின்றன. இந்தியாவில் தசரா அல்லது ராவண வதம் இம்முறைப்படியே நடக்கிறது. பொம்மைகளின் உருவத்தை ஒரு நபருடன் ஒப்பிட்டு சிறுசிறு ஆணிகளால் குத்திட்டு அப்பொம்மையை துன்புறுத்தல் மூலம் சூனியங்கள் செய்யும் முறை பல நாடுகளின் மாயங்கள் செய்பவர்களால் கடைபிடிக்கப்படுகிறது. இதன் உண்மை நிலை ஆய்வுக்குட்பட்டது. பண்பாடு பொம்மைகள் சிறார்களின் விளையாட்டு சாதானமாக மட்டுமின்றி, ஒரு நாட்டின் பண்பாடு அல்லது கலையின் பிரதி பிம்பமாகவும் விளங்குகிறது. பொம்மைகளைக் கொண்டு சமயம், காலம், சமூகம், பழக்க வழக்கம் போன்றவைகளைக் கணிக்க இயலும். குழந்தைகளின் திறன் மேம்பாடு பொம்மைகள் சிறார்களைக் கவருவதோடு அவர்களின் விடாமுயற்சி, ஆர்வம், ஊக்கம், வெற்றி, பெருமிதம், தன்னிறைவு உள்ளிட்ட பண்புகளை செப்பனிடுவதாகவும் உள்ளன. குழந்தைகள் விளையாட்டு மூலம் பல திறன்களை வளர்த்துக்கொள்கின்றனர். இதன் மூலம் தொடர்பறி கற்றல் முறைமை எளிதாக நினைவில் கொள்ள உதவுகிறது. பொம்மைகள் குழந்தைகளின் கணிதம், வரலாறு, சமூக அறிவியல் ஆகியவற்றின் கற்றல் முறையை எளிமையாக்குகின்றன. பாலினம் பொம்மைகளுக்கு பாலின வேறுபாடுகள் உண்டு. அவற்றைப் பயன்படுத்தும் சிறார்களின் (சிறுவர், சிறுமியரின்) பயன்பாடுகள் கொண்டும், பொம்மைகளின் உருவ அமைப்புகளின் படியும் பாலின வேறுபாட்டை அறிய இயலும். பொருளாதாரம் சிறார்களின் பொம்மைகள் அவர்களின் விருப்பத் தேர்வு, அனைவராலும் அறியப்பட்ட பிரபலம், நவீன சந்தைப்படுத்தல் (அ) புதுவரவு, கையிருப்பு போன்ற காரணிகளால் மிகப்பெரும் பொருளாதாரச் சந்தையினையும் அதிகம் உற்பத்தி செய்யவேண்டிய கட்டாயத்தையும் கொணர்கிறது. பார்பி பொம்மை (Barbie dall), டெடி கரடிக்குட்டி பொம்மைகள் உலகப் பிரசித்தி பெற்றன. இவற்றின் சந்தை மதிப்பு இன்றளவும் பல மாதிரிகளுள் வேறுபடும். ஒவ்வொரு நாடு மற்றும் இனத்தின் பண்பாட்டைக் கொண்டு இப்பொம்மைகளின் அலங்காரங்கள் மாறுபடும். இந்திய பொம்மைகள் நவராத்திரி வழிபாடும் பொம்மைகளும் கொலு[7] என்பது இந்து சமயத்தில் தெய்வ மற்றும் சான்றோர்களின் சிறிய பொம்மைகளை படிப்படியாக வைத்து ஒன்பது இரவுகளுக்கு நவசக்தி விழாவில் வழிபாடு நடத்துவதாகும். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற தென்னிந்திய மாநிலங்களில் நவராத்திரியின் போது தெய்வ சிற்றுருக்கள் வரிசையாக முறைப்படுத்தப் பட்டிருக்கும். மகளிரின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் விதமாக பொம்மைகளின் அமைப்பு மற்றும் அலங்காரங்கள் இருக்கும். புராணகால கதைமாந்தர்களை சித்தரிக்கும் வகையில் பொம்மைகள் இருக்கும், குறிப்பாக தசாவதார பொம்மைகள் (திருமாலின் பத்து அவதாரங்கள்), முப்பெருந்தேவியர் (கலைமகள்,மலைமகள்,திருமகள்), விநாயகர், சிவன், பிரம்மா, முருகன் உள்ளிட்ட கடவுள்களின் சிற்றுருக்கள் முறைப்படி அடுக்கப்பட்டிருக்கும். இத்தோடு மரப்பாச்சி பொம்மைகள், தஞ்சாவூர் - தலையாட்டி பொம்மைகளும் இக்கொலுவில் இடம் பெறும். கொலுவானது இந்தியாவின் பல இடங்களிலுள்ள பொம்மைகளை ஒருசேர அடுக்கி அதன் பெருமைகளை உரைக்கும் விழா ஆகும். பொதுவாக, எட்டிகொபக்கா (ஆந்திரா), கொண்டபல்லி (ஆந்திரா), கின்னல் (கர்நாடகா), சன்ன பட்டினம் (கர்நாடகா), தஞ்சை (தமிழ்நாடு) போன்ற பல்வேறு இடங்களிலுருந்து மர மற்றும் களிமண் பொம்மைகள் பாரம்பரியமாக பயன்படுத்தப் படுகின்றன. இந்திய நடனக் கலைகளைப் பறைசாற்றும் விதமாக பரதம், கதகளி, தாண்டியா, ஒடிசி, கரகாட்டம், பொய்க்கால் குதிரை, போன்ற நடன அமைப்பைக் கொண்ட நடன பொம்மைகளும் இடம் பெறும். சமூக மாதிரி வடிவங்களாக சிறுசிறு பொம்மைகள் பல்வேறு விழாக்கள், அலுவலகங்கள், சமூகக் கூடங்கள், தொழில் நிலையங்கள் போன்றவற்றின் மாதிரிகளாகவும் இடம் பெற்றிருக்கும். தஞ்சை பொம்மைகள் தஞ்சையின் சிறப்பு வாய்ந்த கலை நுட்பம் மற்றும் கலை வல்லமைக்கு தலையாட்டி பொம்மைகள் சான்றாகும். தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மண்ணில் செய்யப்பட்டு பலவகை வண்ணம் பூசப்பட்ட இவ்வகைப் பொம்மைகளின் தலை சிறிய கம்பியினால் செங்குத்தாக நிலைநிறுத்தப்பட்டு ஆடிய வண்ணம் இருக்கும். இதனால் இக்காரணப்பெயர் பெற்றது. உடலின் அடிப்பாகம் சம்மணமிடப்பட்டு அல்லது சமதளத்தில் தலை மட்டும் உச்சியில் தணித்து ஆடிய வண்ணம் இருக்கும். சான்றாக செட்டியார், செட்டிச்சி பொம்மைகள் சம்மணமிட்டு சிரித்த வண்ணம் தலையை அசைத்த வண்ணமிருக்கும். சாய்ந்தாடும் பொம்மை தலை, உடல் ஆகியன ஒன்றிணைத்து கூம்பு வடிவில் சாய்ந்து ஆடும் வண்ணம் அமைக்கப் பட்டிருக்கும். இப்பொம்மைகள் அடிப்பாகம் அரைக்கோள வடிவிலிருக்கும். மேலும் இதனுள் அதிக எடையுள்ள சிறிய கோலிக்குண்டு ஒன்றும் உள்ளது. மேற்பாகம் கூம்பு போன்றும் செங்குத்தாக நிறுத்தப்படுவதால் ஆடும் நிலைப்பாட்டுடன் எவ்வாறு அசைத்தாலும் அசைந்தாடும். புவியீர்ப்பு விசையின் காரணமாக இறுதியில் நேர் செங்குத்தாக நிலை நிறுத்தப்படும். நடன மங்கை பொம்மை தலை, உடல் ஆகியன தனித்தனி கம்பிகளால் தனித்துவிடப்பட்டு சாய்ந்து ஆடும் வண்ணம் அமைக்கப் பட்டிருக்கும். இப்பொம்மைகள் தலைப்பாகம் தனிக்கம்பியுடனும், அடிப்பாகம் கூம்பு போன்றும் செங்குத்தாக நிறுத்தப்படுவதால் இவை அசைந்தாடும். தலை, உடல், பாதம் என அனைத்தும் தனிதிருக்கும் நடன மங்கை பொம்மை வகை கடலூர், புதுச்சேரி, காஞ்சிபுரம் போன்ற இடங்களிலிருந்து தருவிக்கப் படுகிறது. இந்திய அரசால் 2008-09ஆம் ஆண்டு தலையாட்டி பொம்மைகளுக்கு புவிசார் குறியீடு பெற்றது குறிப்பிடத்தக்கது.[8] மரப்பாச்சி பொம்மைகள் மரப்பாச்சி பொம்மைகள், இருபதாம் நூற்றாண்டின் மையப்பகுதியில் தமிழகத்தில் குழந்தைகள் பயன்படுத்திய ஈட்டி மரத்தால் செய்யப்பட்ட மருத்துவ குணம் கொண்ட பொம்மைகளாகும். இப்பொம்மைகள் பல்வேறு குடும்ப உறவுகளை விளக்கும் விதமாகவும், கடவுளின் சிற்றுருவாகவும் அமைந்திருக்கும். வண்ண சாயம் பூசப்பட்டும், வண்ணம் அற்றும் இரு வகைகளில் உள்ளன. மேலும் பல்வேறு அலங்கார ஆபரணமிட்டு சிறுமியர் விளையாடி மகிழ்வர். இம்மரப்பாச்சி பொம்மைகளில் திருமண மணமகன், மணமகள் பொம்மைகள் மிகவும் பிரசித்தி பெற்றன. சன்னப்பட்டின பொம்மைகள் கர்நாடக மாநிலத்தின் சன்னபட்டின கிராமத்தில் பல வருடங்களாக தயாரிக்கப்பட்டு வரும் இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் பொம்மைகள் சன்னபட்டின பொம்மைகள் ஆகும். இவை பலவகை வண்ணங்களுடன் யானை மரம் (அ) தந்த மரம், நூக்க மரம், மற்றும் சந்தன மரத்தால் (அரிதாக) செய்யப்படுபவை. பாவாஸ் மியான் சன்னப்பட்டின பொம்மைகளின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவர் தாம் கற்றுணர்ந்த சப்பானிய தொழில்நுட்பப் மூலம் பொம்மைகளைத் தயாரித்தார். பின்னர் இந்திய கலை மற்றும் ரசனைகளுக்கேற்ப உள்ளூர் கைவினைக் கலைஞர்களின் உதவியால் பொம்மைகளை உருவாக்கினார். வகைகள் கட்டுமான பொம்மைகள் கட்டிட வடிவிலான ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்படும் பொம்மைகள் இவ்வகையிலானவை. சிறுசிறு அச்சுகள் ஒன்று சேர்ந்து ஒரு உருவ அமைப்பைத் தாங்குதல் போன்று வடிவம் பெறும். கைப்பாவைகள் (அ) சிற்றுருக்கள் மனித, விலங்கு, கற்பனைக் கதாபாத்திரம், போன்றனவற்றின் சிற்றுருக்கள் அல்லது சிறிய கையடக்கப் பாவைகள் இவ்வகையின. வண்டி வடிவங்கள் (அ) சிறுத்தேர் பொம்மைகள் சக்கரங்கள் பொருத்தப்பட்டு ஓரிடத்திலிருந்து சிறு வடத்தின் மூலம் இழுத்துச்செல்ல இயலும் வண்டிகள் மற்றும் சிறிய தேர்வகைப் பொருத்தப்பட்ட பொம்மைகள். பொதுவாக ஆண் சிறார்களால் அதிகம் விரும்பப்படுவதும் ஆண்பாற் பிள்ளைத்தமிழின் சிறுத்தேர் விளையாட்டுடன் இப்பொம்மைகள் ஒப்பு நோக்கப்படுகின்றன. தானியங்கி பொம்மைகள் உரோபட்டுகள் எனப்படும் எந்திர தானியங்கிகள் மின்கல மின்னூட்டம் மூலம் பொம்மைகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட அசைவு சமிக்ஞைகள், சிறு ஒளி விளக்குகள், ஒலிப்பான்கள் மூலம் குழந்தைகளைக் கவருகின்றன. அசைவுறும் பொம்மைகள் தானாக அசையும் படியான எந்திர பொம்மைகள் சாவிகள் மூலமாக எந்திர சக்கரம் அல்லது சுருள்களினால் சுழற்றப்படுகின்றன. இதனால் இவை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு ஓடல், தாவல், சுழலுதல், உருளுதல் போன்ற முறைகள் மூலம் அசைகின்றன. பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் பொம்மைகள் இரும்பு, பஞ்சு, நெகிழிகளால் அதிகம் செய்யப்படுவதால் அதன் பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியன கவனத்தில் கொள்ள வேண்டும். குழந்தைகள் உட்கொள்ளா வண்ணம் தடுக்க வேண்டும். பழைய பொம்மைக்கழிவுகள் முறைப்படி நீக்க வேண்டும். பொம்மைகளின் தன்மை, கூரிய முனைகள், துருக்கம்பிகள், ரசாயண பூச்சு, கிருமித்தொற்று ஆகியவற்றால் பாதிப்பு ஏற்படா வண்ணம் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும். விலங்கு மாதிரியுருக்கள் காட்டில் வாழும் விலங்குகளை மாதிரியாக வைத்து பல்வேறு பொம்மைகள் தயாரிக்கப் படுகின்றன. இவற்றின் மூலம் காடுகளின் மாதிரிகளை எளிதில் உருவாக்க இயலும். குழந்தைகளுக்கும் தொடர்புபடுத்தி கற்றல் முறை மூலம் காட்டு சூல்நிலை மண்டலத்தை எடுத்துக்காட்டாக விளக்க இயலும். மேலும் பார்க்க விளையாட்டுப் பொருட்கள் பட்டியல் டெடி கரடிக்குட்டி மேற்கோள்கள் *
ஆப்பிரிக்க பழங்குடிகளின் பொம்மை பெயர் என்ன?
அகுவாபா
3,289
tamil
0ddbdb4b5
19ம் நூற்றாண்டு கிரிகோரியன் நாட்காட்டிப்படி ஜனவரி 1, 1801 இல் ஆரம்பித்து டிசம்பர் 31, 1900 இல் முடிவடைந்தது. முக்கிய நிகழ்வுகள் 1801: பிரித்தானியாவும், அயர்லாந்து இராச்சியமும் இணைந்தன. 1808-09: சுவீடனிடம் இருந்து ரஷ்யா பின்லாந்தைக் கைப்பற்றியது. 1810கள்-1820கள்: பல இலத்தீன் அமெரிக்க காலனித்துவ நாடுகள் ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் நாடுகளிடம் இருந்து விடுதலை பெற்றன. 1812 - இலங்கையில் உருளைக் கிழங்கு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது. 1818 - இலங்கையில் இருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு முதல் தடவையாக தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டது. 1819: பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி நவீன சிங்கப்பூர் நகரத்தை உருவாக்கியது. 1823-87: பிரித்தானியா பர்மாவைக் கைப்பற்றியது. 1826 - யாழ்ப்பாணம் நல்லூரில் வண. ஜோசப் நைட் என்பவரால் அச்சியந்திரசாலை ஆரம்பிக்கப்பட்டது.முத்திவழி என்ற முதலாவது தமிழ் நூல் இங்கு அச்சிடப்பட்டது. 1830: பிரான்ஸ் அல்ஜீரியாவைக் கைப்பற்றியது. 1848: கம்யூனிச விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. 1865: அமெரிக்க உள்நாட்டு போரில் ஐக்கிய அமெர்க்க மாநிலங்கள் வெற்றி. 1874: பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டது. 1880-1902: போவர் போர். 1895-1896: எதியோப்பியா இத்தாலியைப் போரில் வென்றது. 1899-1913: பிலிப்பீன்ஸ் - ஐக்கிய அமெரிக்கா போர். இறப்புகள் 1827 - முத்துக்குமாரப் புலவர், இலங்கை, அராலியைச் சேர்ந்த புலவர். 19 ஆம் நூற்றாண்டின் கண்டுபிடிப்புகள் 1835 ஆம் ஆண்டில் மின்சார ரிலே, 1837 ஆம் ஆண்டில் தந்தி மற்றும் 1876 ஆம் ஆண்டில் முதல் தொலைபேசி அழைப்பு , 1878 ஆம் ஆண்டில் முதல் செயல்பாட்டு ஒளி விளக்கு போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டதன.[1][2][3] தொழிற்புரட்சி கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், மின்சாரம் மற்றும் உலோகம் போன்ற துறைகளில் 20 ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்ததில் 19 ஆம் நூற்றாண்டு பெரும்பங்கு வகித்தது.[4] தொழில்துறைபுரட்சி கிரேட்பிரிட்டனில் தொடங்கி ஐரோப்பா கண்டம், வட அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு பரவியது. விக்டோரியா சகாப்தம் சிறு குழந்தைகளின் ஆலைகளில் தொழிற்சாலைகளிலும் சுரங்கங்களிலும் பயன் பெற்றது. அதேபோல் மனத்தாழ்மை மற்றும் பாலின பாத்திரங்கள் தொடர்பான கடுமையான சமூக நெறிகள் இருந்தன. ஜப்பானின் முதல் சீன-ஜப்பானிய போரில் கிங் வம்சத்தின் கீழ், சீனாவை தோற்கடிப்பதற்கு முன்னர், மீஜி ரெஸ்டாரேசனைத் தொடர்ந்து விரைவான நவீனமயமாக்கல் திட்டத்தை ஜப்பான் மேற்கொண்டது. மருத்துவத்தில் பங்களிப்பு மருத்துவத்தில் முன்னேற்றங்கள் மற்றும் மனித உடற்கூறியல் மற்றும் நோய் தடுப்பு பற்றிய புரிதல் 19 ஆம் நூற்றாண்டில் நடந்தது, மேலும் மேற்கத்திய உலகில் துரிதமாக அதிகரிக்கும் மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஐரோப்பாவின் மக்கள் தொகை 19 ஆம் நூற்றாண்டில் இருமடங்காக இருந்தது, அது தோரயமாக 200 மில்லியன் முதல் 400 மில்லியனுக்கு மேல் இருந்தது. போக்குவரத்து பல நூற்றாண்டுகளாக நில போக்குவரத்தில் முதல் பெரிய முன்னேற்றத்தை வழங்கியது. மக்கள் வாழவும் பொருட்களை வாங்கவும் செய்தனர். உலகெங்கிலும் உள்ள நாடுகளில் முக்கிய நகரமயமாக்கல் இயக்கங்களுக்கு எரிபொருளை வழங்கியது. இந்த நூற்றாண்டில் உலகம் முழுவதிலும் உள்ள பல நகரங்கள் ஒரு மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட மக்களின் எண்ணிக்கையைக் கடந்தது. லண்டன் உலகின் மிகப்பெரிய நகரமாகவும் பிரிட்டிஷ் பேரரசின் தலைநகரமாகவும் ஆனது. அதன் மக்கள்தொகை 1800 ல் ஒரு மில்லியனிலிருந்து 1.7 மில்லியனாக அதிகரித்தது. இந்த நூற்றாண்டின் ஆபிரிக்கா மற்றும் ஆசியாவின் பரந்த விரிவாக்கங்கள் உட்பட பூமியின் கடைசி மீதமுள்ள நிலக்கீழ் நிலவுகள் ஆராயப்பட்டன. நகரங்களின் வளர்ச்சி 19 ஆம் நூற்றாண்டில் புதிய குடியேற்ற அடித்தளங்களை பரவலாக உருவாக்கியதில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அவை வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா முழுவதும் குறிப்பாக பரவலாக இருந்தன. இது இரண்டு கண்டங்களின் மிகப்பெரிய நகரங்களில் கணிசமான அளவு நூற்றாண்டில் சில புள்ளிகளில் நிறுவப்பட்டது. அமெரிக்காவில் உள்ள சிகாகோ மற்றும் ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் முந்தைய தசாப்தங்களில் இல்லாதவை. ஆனால், நூற்றாண்டின் இறுதியில் முறையே அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் பேரரசுகளில் இரண்டாம் பெரிய நகரங்களாக வளர்ந்தது. 19 ஆம் நூற்றாண்டில் சுமார் 70 மில்லியன் மக்கள் ஐரோப்பாவை விட்டு வெளியேறினர். இது அமெரிக்காவின் பெரும்பாலான நாடுகளுக்கு மாறியது.[5] அடிமை முறை ஒழிப்பு சட்டம் அடிமைத்தனம் உலகெங்கிலும் மிகப் பெரிய அளவில் குறைக்கப்பட்டது. ஹெய்டியில் ஒரு வெற்றிகரமான அடிமை கிளர்ச்சியைத் தொடர்ந்து, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவை பார்பரி கடற் படையினருக்கு எதிரான போரை முடுக்கிவிட்டு, ஐரோப்பியர்கள் அடிமைப்படுத்தப்படுவதை நிறுத்துவதில் வெற்றி பெற்றன. இங்கிலாந்தின் அடிமை முறை ஒழிப்பு சட்டம் பிரிட்டிஷ் ராயல் கடற்படைக்கு உலகளாவிய அடிமை வர்த்தகத்தை முடிவுக்கு கொண்டு வரச் செய்தது. அடிமைத்தனத்தை அகற்றுவதற்காக நூற்றாண்டின் முதல் காலனித்துவப் பேரரசு 1834 ஆம் ஆண்டில் பிரிட்டிஷாரைக் கொண்டிருந்தது. அவர்களுடைய உள்நாட்டுப் போரை தொடர்ந்து அமெரிக்காவின் 13 வது திருத்தம் 1865 ல் அடிமைத்தனத்தை ஒழித்தது, பிரேசில் அடிமைத்தனம் 1888 ல் அகற்றப்பட்டது. இதேபோல் ரஷ்யாவில் பாரிசு ஒழிக்கப்பட்டது. விளையாட்டு 19 ஆம் நூற்றாண்டில், ஸ்பெயினில், குறிப்பாக பிரிட்டனில், பல விளையாட்டுகளின் விரைவான உருவாக்கம், வளர்ச்சி மற்றும் குறியீட்டுப் பெயரைக் கண்டது. 19 ஆம் நூற்றாண்டின் போது கால்பந்து, பேஸ்பால் மற்றும் பல விளையாட்டுகளும் உருவாக்கப்பட்டன. அதே நேரத்தில் கிரிக்கெட் விளையாட்டை உலகின் பல்வேறு பகுதிகளுக்கு பிரிட்டிஷ் பேரரசு உதவியது. மேலும், இந்த காலக்கட்டத்தில் பெண்மணிகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தலைப்பாக இருந்தனர், அங்கு பெண்கள் தங்கள் கணுக்கால்களைக் காட்டியதால் இழிவுபடுத்தப்பட்டனர். இது பால்கன் பிரிவின் ஒட்டோமான் ஆட்சியின் வீழ்ச்சியைக் குறிக்கிறது. இது இரண்டாவது ரஷ்ய-துருக்கியப் போரின் விளைவாக சேர்பியா, பல்கேரியா, மொண்டெனேகுரோ மற்றும் ருமேனியாவை உருவாக்கவும் வழிவகுத்தது. பகுப்பு:நூற்றாண்டுகள் பகுப்பு:2-ஆம் ஆயிரமாண்டு
பேஸ்பால் முதலில் எந்த நாட்டில் துவங்கப்பட்டது?
பிரிட்டனில்
1,698
tamil
6d0ffae10
புதன் கோள் (Mercury) சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோளாகும். மேலும் இது சூரியக் குடும்பத்தில் மிகச்சிறிய கோளாகும். இது ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 88 நாள்கள் எடுத்துக்கொள்கிறது. புவியிலிருந்து காணும்போது இது 116 நாட்கள் எடுத்துக் கொள்வதைப் போலத் தோன்றும். இதற்கு இயற்கை நிலவுகள் எதுவும் அறியப்படவில்லை. [lower-alpha 1] இந்தக் கோளுக்கு மேற்கத்தியப் பண்பாட்டில் உரோமை தூதுக் கடவுளான மெர்க்குரியின் பெயிரிடப்பட்டுள்ளது. இந்தியப் பண்பாட்டில் அறிவுக்கு காரணமாகும் புதன் என்ற கடவுளின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சூரியனிடமிருந்து புதனின் கோணப்பிரிகை (angular separation from the sun) குறைவாக (அதிகபட்சமாகவே 28.3oதான்) உள்ளதால், பெரும்பாலும் சூரியனின் பொலிவு காரணமாக புதனை காண்பது அரிது. எனவே தான் நம் சான்றோர் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுவர். காலை அல்லது மாலை கருக்கல் நேரமே புதனைக் காண்பதற்கு சரியான தருணம். புதனில் சூரிய வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ள வளிமண்டலம் இல்லாதமையால் மற்றெந்தக் கோள்களையும் விட புதனின் கோள்பரப்பு பெரும் வெப்பநிலை மாற்றங்களைக் காண்கின்றது; கோள்நடுக்கோடு அருகே பகல் நேரத்தில் 700K (427°C; 800°F) ஆகவும் இரவுநேரத்தில் 100K (−173°C; −280°F) ஆகவும் உள்ளது. முனையங்களில் (துருவங்களில்) எப்போதுமே குளிர்ச்சியாக 180K (−93°C; −136°F) கீழுள்ளது. புதனின் அச்சு சூரியக் குடும்பத்திலேயே மிகக் குறைந்த சாய்வைக் (ஏறத்தாழ ​1⁄30 பாகை) கொண்டுள்ளது. ஆனால் இதன் சுற்றுப்பாதையின் வட்டவிலகல் மிகக் கூடியதாக உள்ளது. [lower-alpha 2] பெரும்பாலான மற்றக் கோள்களைப் போல இங்கு பருவங்கள் ஏற்படுவதில்லை. புதன் ஞாயிற்று அண்மைநிலையில் சூரியனிடமிருந்து இருக்கும் தொலைவை விட ஞாயிற்றுச் சேய்மைநிலையில் 1.5 மடங்குத் தொலைவில் உள்ளது. புதன் சூரியக் குடும்பத்திலேயே மிகவும் தனித்துவமான முறையில் சூரிய ஈர்ப்பில் பிணைந்து சுற்றுகின்றது. நிலைத்த விண்மீன்களிலிருந்து காணும்நிலையில் தனது சுற்றுப்பாதையில் இரண்டு சுற்றுக்கள் வரும் காலத்தில் தன்னைச் சுற்றி மூன்று முறை சுற்றிக் கொள்கின்றது.[13] சுற்றுப்பாதையில் சுழலும் குறியீட்டச்சு கொண்டுள்ள சூரியனிலிருந்து காணும்போது, இரண்டு புதனாண்டுகளுக்கு ஒருமுறை தன்னைச் சுற்றிக் கொள்கின்றது. புதனில் இருக்கும் கூர்நோக்கருக்கு ஒருநாள் இரண்டு ஆண்டுகளாகும். தோற்றத்தில் கிட்டத்தட்ட பூமியின் நிலவை ஒத்தது புதன். இது வெட்டவெளியுடன் கூடிய பல பெரும்பள்ளங்களைக் (craters) கொண்டு விளங்குகிறது. புவிநிலவைப் போலவே புதனும் வளிமண்டலம் அற்று உள்ளது. ஆனால், புவிநிலவைப் போலன்றி, புதனுக்கு இரும்பாலான பெரிய உள்ளகம் உள்ளது. இதன் காரணமாக ஓரளவு காந்தப்புலமும் புதனுக்கு உண்டு. புதனைப்பற்றி அவ்வளவாக அறியப்படவில்லை என்றே கூற வேண்டும். புதனை நெருங்கிய இரண்டு விண்கலங்களில் முதலாவது மாரினர் 10 (Mariner 10). இது 1974–1975 காலகட்டத்தில் புதனை நெருங்கி அதன் புறப்பரப்பில் 45% வரை படமெடுத்தது (mapped). இரண்டாவதாக அனுப்பப்பட்ட மெசஞ்சர் 2008 சனவரியில் புதனருகில் பறந்த போது மேலும் 30% படமெடுத்தது. இது மீண்டும் 2009ல் புதனை நெருங்கியது. அதன்பின் 2011 மார்ச் 18 இல் புதனின் சுற்றுப்பாதையில் புகுத்தப்பட்டு (Orbital insertion) புதனின் துணைக்கோளாக மாறியது. உட்கட்டமைப்பு புதன் கோள் சூரியக் குடும்பத்தின் நான்கு புவிநிகர் கோள்களில் ஒன்றாகும். புவியைப் போன்றே பாறைகளால் ஆனது. சூரியக் குடும்பத்தின் மிகச்சிறிய கோள் இது வாகும். இதன் நிலநடுக் கோட்டின் ஆரம் 2,439.7கிமீ.[14] புதனில் அண்ணளவாக 70% உலோகமும், 30% சிலிக்கேட்டுப் பொருளும் காணப்படுகிறது.[15] சூரியக் குடும்பத்தின் இரண்டாவது பெரிய அடர்த்தியான கோளான இதன் அடர்த்தி 5.427கி/செமீ3. இது புவியின் அடர்த்தியான 5.515கி/செமீ3.[14] ஐ விட சிறிது குறைவாகும். காந்தப் புலமும் காந்தமண்டலமும் சிறிய அளவினதாக இருந்தாலும் மெதுவான 59-நாள்-தன்சுற்றுகையைக் கொண்டிருந்தாலும் புதனில் குறிப்பிடத்தக்க, பரப்பெங்குமான, காந்தப் புலம் நிலவுகின்றது. மாரினர் 10 எடுத்த அளவைகளின்படி புதனின் காந்தப்புலம் புவியினுடையதை விட 1.1% வலிமையுள்ளதாக இருக்கிறது. புதனின் கோள்நடுக்கோட்டில் உள்ள காந்தப் புலத்தின் வலிமை ஆகும்.[16][17] புவியைப் போலவே, புதனின் காந்தப் புலமும் இருமுனையி.[18] ஆனால் புவியைப் போலன்றி புதனின் காந்த முனையங்கள் கோளின் சுழல் அச்சுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்துள்ளன.[19] மாரினர் 10 மற்றும் மெசஞ்சர் விண்துருவிகளிலிருந்து பெறப்பட்ட அளவைகளிலிருந்து இந்தக் காந்தப் புலத்தின் வலிமையும் வடிவமும் நிலையாக உள்ளன.[19] புவியைப் போன்றே இங்குள்ள காந்தப் புலமும் மின்னாக்கி விளைவால் உருவாகியுள்ளது.[20][21] இந்த மின்னாக்கி விளைவு கோளின் இரும்புமிக்க நீர்ம கருவகத்தின் சுற்றோட்டத்தால் ஏற்படுகின்றது. கோளின் மிகுந்த சுற்றுப்பாதை விலகலின் காரணமாக ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் கருவகத்தை நீர்மநிலையில் வைத்திருக்க உதவுகின்றது.[22] புதனின் வலிதான காந்தப்புலம் சூரியக் காற்றை கோளைச் சுற்றி திசைவிலகிச் செல்ல வைக்கின்றது. இதனால் கோளைச் சுற்றிலும் காந்தமண்டலம் ஒன்று உருவாகியுள்ளது. இது சிறிய அளவினதாக இருந்தாலும் சூரியக் காற்றை பிடிக்க போதுமானதாக உள்ளது. இது கோளின் மேற்பரப்பு விண்வெளியால் தேய்தலுக்கு வழிவகுக்கின்றது.[19]மாரினர் 10 எடுத்த கூர்நோக்குகளின்படி கோளின் இரவுப் பகுதியில் உள்ள காந்த மண்டலத்தில் குறைந்த ஆற்றல் பிளாசுமா கண்டறியப்பட்டுள்ளது. கோளின் காந்த வால்பகுதியில் ஆற்றலுள்ள துகள்களின் திரள்கள் கண்டறியப்பட்டுள்ளன; இது கோளின் காந்த மண்டல செயற்பாட்டுத் திறனை சுட்டுகின்றது.[18] அக்டோபர் 6, 2008இல் தனது இரண்டாவது முறை பறப்பின்போது மெசஞ்சர் புதனின் காந்தப் பலம் மிகவும் "கசிவுடையதாக" கண்டது.[23] புவியில் இருந்து புவியில் இருந்து புதனை பார்க்கும் போது அது அதிக நீட்சியின் பகுதியில் இருக்கும் போது பார்த்தால் தெளிவாகத் தெரிய வாய்ப்புண்டு. மேற்கதிக நீட்சியின் போது சூரியனுக்கு மேற்கில் இருக்கும் போது சூரிய உதய்த்துக்கு முன்னரும், கிழக்கதிக நீட்சியின் போது சூரியனுக்கு கிழக்கில் இருக்கும் போது சூரிய அஸ்தமனத்துக்கு பின்னரும் மட்டுமே புவியில் இருந்து இதன் அதிக பகுதிகளை (அரைப் பகுதியிலேயே சூரிய ஒளி படும். புவியில் இருந்து பார்க்கும் போது ஒளி படும் பகுதியிலும் பாதியையே பார்க்க முடியும்.) நோக்க முடியும் என்பது இயற்பியல் வழக்கு. ஆனால் இந்த இயற்பியல் வழக்கின் படிப் பார்த்தாலும் புதனின் அதிகப் பகுதிகளை தெளிவாகப் பார்க்க முடியாது. அதன் காரணம் புதனின் தோற்ற ஒளிர்மையே ஆகும். அதனால் புதனின் குவிகோடுகள் வளைந்த நிலையில் இருக்கும் போதே புதனை எளிதாக பார்க்க முடியும். அதாவது கிழக்கதிக நீட்சிக்கு சில நாட்கள் முன்னரும், மேற்கதிக நீட்சிக்கு சில நாட்கள் பின்னருமே இதை தெளிவாக மானிடர்களின் வெற்றுக் கண்களால் நோக்க முடியும். புதனில் மானிடக் குடியேத்தின் சாத்தியங்கள் நிலவை ஒத்த புதன் மானிடர் குடியேற்றம் என்ற நோக்கில் பார்க்கும் போது நிலவில் மானிடர் குடியேறுவதற்கு தேவைப்படும் விடயங்களே இங்கும் தேவைப்படுகின்றன. மேலதிகமாக சூரியனின் வெப்பத்தில் இருந்து தப்புவதற்கான வெப்பக் கேடயங்களும் தேவைப்படும். இதற்கான கண்க்கிடப்பட்ட நகரும் குடியேற்றத்தையும் உருவாக்க வேண்டும். (வலது பக்கம் இருக்கும் படத்தைப் பார்க்க) இங்கு இருக்கும் சூரிய எரிசக்தி மிகவும் அதிகம் என்பதால் மின்சாரத்தை எளிதாக பெற முடியும். புவியில் சூரிய மின்தடுகளை வைத்து பெரும் மின்சாரத்தை விட இங்கு ஆறரை மடங்கு அதிகமாக மின்சாரத்தைப் பெற முடியும் என்பது இதன் அனுகூலமாகும். நீராதாரம் புதன் கிரகத்தில் நீர் பனிக்கட்டியாக அதன் துருவங்களில் உள்ளது. இவை பல கோடி ஆண்டுகளாக சூரிய வெளிச்சம் இல்லாத இடங்களாக இருந்ததால் இன்றும் ஆவியாகாமல் உள்ளது. புதன் கிரகத்தின் வட துருவத்தில்ல் உள்ள ஆழமான பள்ளங்களில் காணப்படுகின்ற எராளமான அளவிலான பனிக்கட்டிகள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நட்சத்திரங்களால் வந்து விழுந்த பனிக்கட்டி உருண்டைகளே என்று கருதப்படுகிறது. தடைகள் இதில் மானிடர் குடியேற்றம் நடக்க அதிக நுட்பங்களை உருவாக்குதல், இதற்கான வெப்பக் கேடயங்களை தயாரிக்கும் முறையை கண்டறிந்து உருவாக்குதல், இக்கோளில் இருந்து வேறு கோளுக்கு செல்ல மிக அழுத்தமும் வேகமும் தரக்கூடிய விண்கலன்களை உருவாக்குதல் போன்றவை புதனில் மானிடர் குடியேறுவதற்கு பெரும் தடைகளாய் உள்ளன. குறிப்புகள் மேற்கோள்கள் உசாத்துணைகள் வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம், ISBN 978-81-89936-22-8. வெளியிணைப்புகள் Media related to Mercury (planet) at Wikimedia Commons and from the USGS planetary nomenclature page World's search engine that supports நாசா வேல்ட் வின்ட், Celestia, and other applications. flash animation 5 சூன் 2013 – APOD பகுப்பு:கோள்கள் பகுப்பு:புவியொத்த கோள்கள் பகுப்பு:சூரியக் குடும்பம் பகுப்பு:இயங்குபடம் உள்ள கட்டுரைகள்
சூரியனுக்கு நெருக்கமான கிரகம் எது
புதன்
0
tamil
4b69614bc
விலங்குகள் (Animals), அனிமாலியா (Animalia) அல்லது மீடாசொவா (Metazoa) இராச்சியத்தின் பெரும்பாலும் பலசெல் கொண்ட, மெய்க்கருவுயிரி உயிரினங்களின் ஒரு மிகப் பெரும் பிரிவாகும். அவை வளர்ச்சியுறுகையில் அவற்றின் உடல் திட்டம் இறுதியில் நிலைபெறுகிறது. சில தங்களது வாழ்க்கையின் பிற்பகுதியில் உருமாற்ற நிகழ்முறைக்குள் செல்கின்றன. அநேக விலங்குகள் இடம்பெயரும் தன்மையுடையவை. அவற்றால் தன்னிச்சையாகவும் சுதந்திரமாகவும் நகர முடியும். பல விலங்குகள் கொன்றுண்ணிப் பழக்க முடையவையாகவும் உள்ளன. அதாவது தங்கள் வாழ்க்கைக்கு அவை பிற உயிரினங்களை சாப்பிட்டாக வேண்டும். பல அறியப்பட்ட விலங்கு தொகுதிகள் புதைபடிவ பதிவுகளில் சுமார் 542 மில்லியன் வருடங்களுக்கு முன்னதாக கேம்பிரியன் வெடிப்பு சமயத்தில் கடல்வாழ் இனங்களாகக் காட்சியளிக்கின்றன. பெயர்வரலாறு "அனிமல்" என்ற ஆங்கில வார்த்தை அனிமலே என்கிற இலத்தீன் வார்த்தையில் இருந்து பிறந்ததாகும். இது அனிமா என்னும் முக்கிய மூச்சு அல்லது ஆன்மா எனப் பொருள் கொண்ட வார்த்தையில் இருந்து தோற்றம் செய்யப்பட்டது. அன்றாட பேச்சுவழக்குப் பயன்பாட்டில், இந்த வார்த்தை பொதுவாக மனிதரல்லாத விலங்குகளைக் குறிக்கிறது. விலங்கு ராச்சியம் (Kingdom Animalia) என்னும் இந்த வார்த்தையின் உயிரியல் வரையறை மனிதன் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களையும் குறிக்கிறது. பண்புகள் பிற உயிரினங்களில் இருந்து தங்களைத் தனித்துக் காட்டும் பல பண்புகளை விலங்குகள் கொண்டுள்ளன. விலங்குகள் யூகார்யோடிக்குகளாகவும் பலசெல் உயிரினங்களாகவும்[3] உள்ளன (ஆயினும் காணவும் மிக்சோசோவா). இவை அவற்றை பாக்டீரியாக்கள் மற்றும் அநேக ஓர்செல் உயிரினங்களில் இருந்து பிரிக்கின்றன. இவை கொன்றுண்ணி பழக்கமுடையவை.[4] பொதுவாக ஒரு உள்ளறையில் உணவு செரித்தல் நிகழ்பவை. இது தாவரங்கள் மற்றும் பாசி வகைகளில் இருந்து அவற்றை பிரிக்கின்றன (சில கடற்பாசிகள் ஒளிச்சேர்க்கைதிறனும் நைட்ரஜன் நிலைப்பாட்டு திறனும் கொண்டிருக்கின்றன என்றாலும்).[5] உறுதியான செல் சுவர்கள் இல்லாதிருக்கும் வகையில் இவை தாவரங்கள், பாசிகள் மற்றும் பூஞ்சைகளில் இருந்தும் வேறுபடுகின்றன.[6] எல்லா விலங்குகளும் குறிப்பிட்ட வாழ்க்கை கட்டங்களில் இடம்பெயர்பவையே [7] என்று சொல்லலாம். அநேக விலங்குகளில், முளைக்கருவானது ஒரு கருக்கோளம் என்னும் கட்டத்திற்கு செல்கிறது. இது விலங்குகளுக்கு மட்டுமேயான தனித்துவமான பண்பாகும். உடலமைப்பு விலங்குகள் தனித்தனி திசுக்களாகப் பிரிக்கப்பட்ட உடலமைப்புகளைக் கொண்டிருக்கின்றன. ஆயினும் கடற்பாசிகள் (துளையுடலிகள் (Porifera) தொகுதி) மற்றும் பிளகோசோவா ஆகிய மிகக் குறிப்பிடத்தக்க சில விதிவிலக்குகளும் உண்டு. சுருங்கக் கூடியதும் நகர்வை கட்டுப்படுத்தத்தக்கதுமான தசைகள், மற்றும் சமிக்ஞைகளை அனுப்புகிறதும் பரிசீலிப்புக்குட்படுத்துவதுமான நரம்பு மண்டலத் திசு ஆகியவை இந்த உடலமைப்பில் அடங்கும். பொதுவாக ஒரு உள்ளமைந்த செரிமான அறையும் ஒன்று அல்லது இரண்டு திறப்புகளுடன் அமைந்திருக்கும். இந்த வகை ஒழுங்கமைப்புடன் கூடிய விலங்குகள் மெடாசோவான்கள் (பலசெல் உயிரினங்கள்) என்று அழைக்கப்படுகின்றன. அல்லது முந்தையது பொதுவாக விலங்குகளைக் குறிப்பிடப் பயன்படும் இடங்களில் இமெடாசோவான்கள் (eumetazoans) என்று அழைக்கப்படுகின்றன. இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சி ஏறக்குறைய எல்லா விலங்குகளுமே ஒரு வகை பால்முறை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. அவை ஒரு சில சிறப்பியல்பான இனப்பெருக்க செல்களைக் கொண்டுள்ளன. இவற்றில் சிறிய நகரும் விந்தணுக்கள் அல்லது பெரிய நகரா சினை முட்டைகளை உருவாக்க குன்றல் பிரிவு(meiosis) நடக்கிறது. இவை ஒன்றிணைந்து கருமுட்டைகளை (zygotes) உருவாக்கி, அவை புதிய தனிஉயிர்களாய் வளர்ச்சியுறுகின்றன. பாலில்லா இனப்பெருக்கத் திறனையும் பல விலங்குகள் கொண்டிருக்கின்றன. (பார்தெனோஜெனிசிஸ் மூலம்) இனப்பெருக்க திறனுடைய முட்டைகள் கலவியின்றி உற்பத்தி செய்யப்படுகின்றன, அல்லது சில சந்தர்ப்பங்களில் சிறுகூறாகல் (fragmentation) மூலமாகவும் இது நடைபெறுகின்றது. ஒரு கருமுட்டையானது கருக்கோளம் (blastula) என்னும் ஒரு உள்ளீடற்ற கோளத்திற்குள் ஆரம்பத்தில் வளர்கிறது. இது மறுஒழுங்கமைவுக்கும் வேறுபாட்டிற்கும் (differentiation) உள்ளாகிறது. கடற்பாசிகளில், கருக்கோள லார்வாக்கள் ஒரு புதிய இடத்திற்கு நீந்திச் சென்று ஒரு புதிய கடற்பாசி இனமாக உருவாகிறது. பல பிற குழுக்களில், கருக்கோளமானது இன்னும் சிக்கலான மறுஒழுங்கமைவுக்குள் உட்செல்கிறது. இது முதலில் உள்மடிந்து ஒரு செரிமான அறை, மற்றும் இரண்டு தனியான நுண்ணுயிர் அடுக்குகள் – ஒரு வெளிப்புற எக்டோதெர்ம் (புற அடுக்கு) மற்றும் ஒரு உள்முக என்டோதெர்ம் (அக அடுக்கு) – கொண்ட ஒரு ஈரடுக்கு கருக்கோளத்தை (gastrula) உருவாக்குகிறது. இந்த திசு அடுக்குகள் பின் வேறுபாட்டிற்கு உள்ளாகி, திசுக்கள் மற்றும் உறுப்புகளாக உருவாகின்றன. உணவு மற்றும் சக்திக்கான ஆதாரம் மிருகவேட்டை என்பது வேட்டையாடும் விலங்கு (வேட்டையாடுகிற ஒரு கொன்றுண்ணி பழக்க விலங்கு) தனது இரையை (தாக்குதலுக்கு இலக்காகும் உயிரினம்) உணவாகக் கொள்ளும் ஒரு உயிரியல் பரிமாற்ற நிகழ்வாகும். வேட்டை விலங்குகள் தங்களது இரையை உண்ணுவதற்கு முன்னர் அவற்றைக் கொல்லலாம் அல்லது கொல்லாமலும் போகலாம். ஆனால் மிருகவேட்டை எப்போதும் இரை இறப்பதில் முடியும். நுகர்வில் இன்னொரு முக்கிய பிரிவு பிணந்திண்ணி (detritivory) வகை ஆகும். அதாவது இறந்த உறுப்பாக்கமுடைய உணவை நுகர்வது. சமயங்களில் இரண்டு உண்ணும் பழக்கத்திற்கும் இடையில் பேதம்பிரிப்பது சிரமமாகி விடும். உதாரணமாக ஒட்டுண்ணி உயிர்வகைகள் ஒரு உயிரினத்தை வேட்டையாடி உண்கின்றன. பின் சிதைவுறும் அந்த உடலை தமது வழித்தோன்றல்களுக்கு உணவாக்கும் வகையில் அதன் மீது தங்களது முட்டைகளை இடுகின்றன. ஒன்று மற்றொன்றின் மீது அளிப்பதான தேர்ந்தெடுத்த அழுத்தங்கள் வேட்டையாடும் விலங்குக்கும் இரைக்கும் இடையில் பரிணாமரீதியான ஆயுதப் போட்டிக்கு இட்டுச் சென்றிருக்கிறது. இது பல்வேறு மிருகவேட்டை-எதிர்ப்பு தகவமைவுகளுக்கு வழிவகுத்துள்ளது. அநேக விலங்குகள் சூரிய ஒளி சக்தியில் இருந்து மறைமுகமாக உணவைப் பெறுகின்றன. தாவரங்கள் இந்த சக்தியை ஒளிச்சேர்க்கை எனும் ஒரு நிகழ்முறையைப் பயன்படுத்தி சூரிய ஒளியை எளிய சர்க்கரைகளாக மாற்றிப் பயன்படுத்துகின்றன. கரியமில வாயு (CO2) மற்றும் நீர் (H2O) மூலக்கூறுகளுடன் தொடங்கி, ஒளிச்சேர்க்கையானது சூரிய ஒளி சக்தியை குளுகோஸ் (C6H12O6) பிணைப்புகளில் சேகரிக்கப்படும் வேதியியல் சக்தியாக மாற்றி பிராண வாயுவை (O2) வெளியிடுகிறது. இந்த சர்க்கரைகள் பின் கட்டுமான அடுக்குகளாகப் பயன்பட்டு, தாவரம் வளர அனுமதிக்கின்றன. விலங்குகள் இந்த தாவரங்களை உண்ணும்போது (அல்லது தாவரங்களை உண்டிருக்கக் கூடிய பிற விலங்குகளை உண்கையில்), தாவரத்தால் உருவாக்கப்பட்ட சர்க்கரைகள் விலங்கினால் பயன்படுத்தப்படுகிறது. அவை நேரடியாக விலங்கு வளர பயன்படுத்தப்படலாம், அல்லது உடைக்கப்பட்டு, சேகரிக்கப்பட்ட சூரிய ஒளி சக்தியை வெளியிட்டு, விலங்குக்கு நகர்வுக்கு அவசியமான சக்தியை கொடுக்கலாம். இந்த நிகழ்முறை கிளைகோலைசிஸ் என்று அழைக்கப்படும். மூல ஆதாரங்கள் மற்றும் புதைபடிவ பதிவு விலங்குகள் பொதுவாக ஒரு சவுக்குயிர் யூகார்யோட்டில் இருந்து பரிணாமமுற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவற்றின் மிக நெருங்கிய வாழும் உறவினர்களாகக் கருதப்படுவது சோவனொஃபிளாகெல்லேட்டுகள் என்கிற, சில கடற்பாசிகளின் சோவனொசைட்டுகளை ஒத்த உருவமைப்பியல் கொண்ட கழுத்துப்பட்டியுடனான சவுக்குயிர்களாகும் (flagellates). செல்கூறு ஆய்வுகள் விலங்குகளை ஒபிஸ்தோகோன்ட்ஸ் என்னும் சிறப்புகுழுவில் வகைப்படுத்துகின்றன. இதில் சோவனொஃபிளாகெல்லேட்டுகள், பூஞ்சைகள் மற்றும் கொஞ்சம் சிறிய ஒட்டுண்ணி வகை ஒருசெல் உயிரினங்கள் ஆகியவை அடங்கும். அநேக விலங்குகளின் முதிர்ந்த விந்தணுவில் இருப்பது போன்று நகரும் செல்களில் கசையிழைகள் (flagellum) பிற்பக்க அமைவு கொண்டிருப்பதில் இருந்து இந்த பெயர் வருகிறது. பிற யூகார்யோட்டுகள் முற்பக்க கசையிழைகள் கொண்டிருக்க விழைகின்றன. விலங்குகளை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய முதல் புதைவுகள் கேம்ப்ரியன் காலத்துக்கு முந்தைய காலத்தினதாய் தோன்றுகின்றன. இவை சுமார் 610 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த புதைவுகளாகும். ஆயினும், இவை பிற்கால புதைவுகளுடன் தொடர்புபடுத்த கடினமானவையாக உள்ளன. சில நவீன விலங்கு தொகுதிகளுக்கு முன்னறிவிப்பினை குறித்ததாய் இருந்தாலும் கூட அவை தனித்தனியான குழுக்களைச் சேர்ந்தவையாக இருக்கலாம்; அவை விலங்குகளே அல்ல என்பதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளது. அவை தவிர, அநேக அறியப்பட்ட விலங்கு தொகுதிகள் சுமார் 542 மில்லியன் வருடங்களுக்கு முன்னதாக கேம்ப்ரியன் காலத்தில் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் தோற்றம் செய்கின்றன. கேம்ப்ரியன் வெடிப்பு என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வானது, வெவ்வேறு குழுக்கள் இடையிலான ஒரு துரித விலகுபாதையைக் குறிக்கிறதா அல்லது புதைவடிவத்தை சாத்தியமாக்கிய சூழ்நிலைகளிலான ஒரு மாற்றத்தைக் குறிக்கிறதா என்பது இன்னமும் விவாதிக்கப்படும் ஒன்றாகவே உள்ளது. ஆயினும் புதைபடிவங்கள் மூலம் ஆதிகாலத்து வாழ்க்கை வடிவங்களை ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்களும் (paleontologists) மற்றும் நிலநூல் வல்லுநர்களும் முன்னர் கருதப்பட்டதை விட வெகு முன்னதாகவே, சாத்தியமான அளவில் ஏறக்குறைய 1 பில்லியன் வருடங்களுக்கும் முன்னதாக, விலங்குகள் இருந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர். தோனியன் சகாப்தத்தில் காணப்பட்ட தடங்கள் மற்றும் பொந்துகள் போன்ற புதைவு சுவடுகள், மெடோசோவான்கள் போன்ற டிரிப்ளோபிளாஸ்டிக் புழுக்கள் ஏறக்குறைய மண்புழுக்கள் அளவுக்கு பெரியதாகவும் (சுமார் 5 மிமீ அகலம்) சிக்கலானதாகவும் இருந்திருக்கலாம் என்பதை சுட்டிக் காட்டுகின்றன.[8][9][10] விலங்குத் தொகுதிகள் துளையுடலிகள் (Porifera) கடற்பாசிகள் (துளையுடலிகள்) ஆரம்பத்தில் பிற விலங்குகளிடம் இருந்து பிரிந்து தோன்றியதாகத் தான் வெகு காலம் கருதப்பட்டு வந்தது. மேலே குறிப்பிட்டதைப் போல, அவற்றில் பிற பல விலங்கு தொகுதிகளில் காணப்படும் சிக்கலான உடலமைப்பு இல்லாதிருக்கிறது. அவற்றின் செல்கள் வகையீடுற்றவை. ஆனால் அநேக சந்தர்ப்பங்களில் தனித்தனி திசுக்களாக ஒழுங்கமைக்கப்படாததாய் இருக்கிறது. கடற்பாசிகள் ஒட்டிவாழ்பவை. பொதுவாக நீரை துளைகள் வழியே இழுப்பதின் மூலம் உணவு உட்கொள்கின்றன. ஆயினும் 2008 ஆம் ஆண்டில் 21 இனங்களில்[11] 150 மரபணுக்களில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று சிகை ஜெல்லிக்கள் தான் விலங்குகளின், குறைந்தபட்சம் அவற்றின் 21 தொகுதிகளின், அடிப்படையான வழிமரபாய் இருக்கலாம் என்று வெளிப்படுத்துகிறது. இரண்டுக்கும் தனித்தனி திசுக்கள் உண்டு, ஆனால் அவை உறுப்புகளாக ஒழுங்கமைக்கப்படவில்லை. புற அடுக்கு (ectoderm) மற்றும் அகஅடுக்கு (endoderm) ஆகிய இரண்டு முக்கிய நுண்ணியிர் அடுக்குகள் மட்டுமே உண்டு. அவற்றுக்கு இடையில் செல்கள் மட்டும் சிதறிக் காணப்படும். உள்ளபடியே, இந்த விலங்குகள் சில சமயங்களில் ஈரடுக்கு (diploblastic) விலங்குகள் என்று அழைக்கப்படுகின்றன. சின்னஞ்சிறு பிளாகோசோவான்கள் ஒத்தவையாக இருக்கும். ஆனால் அவற்றுக்கு நிரந்தரமான செரிமான அறை ஒன்று இருக்காது. எஞ்சிய விலங்குகள் பைலேடரியா என்னும் ஒற்றைத்தொகுதி குழுவை உருவாக்குகின்றன. அநேக பாகத்திற்கு, அவை இருசமபக்க ஒத்தமைவுடையவையாக இருக்கின்றன. பெரும்பாலும் உணவு உட்கொள்ளும் மற்றும் புலனுணர்வு உறுப்புகளுடனான சிறப்பியல்பான தலையைக் கொண்டுள்ளன. உடம்பு மூவடுக்கு கொண்டதாக இருக்கிறது. அனைத்து மூன்று நுண்ணுயிர் அடுக்குகளும் நன்கு-வளர்ச்சியடைந்தவையாக இருக்கின்றன. திசுக்கள் நல்ல வகைப்பட்ட உறுப்புகளை உருவாக்குகின்றன. செரிமான அறை இரண்டு திறப்புகளைக் கொண்டுள்ளது. ஒரு வாய் மற்றும் ஒரு மலத்துவாரம், கொயலம் (coelom) அல்லது சூடோகொயலம் (pseudocoelom) என்னும் இன்னொரு உள்முக உடல் துவாரமும் உள்ளது. ஆயினும் இந்த பண்புகளில் ஒவ்வொன்றுக்கும் விதிவிலக்குகள் உண்டு – உதாரணமாக முதிர்ந்த முட்தோலிகள் (echinoderm) ஆரவகையில் இருசமபக்கம் ஒத்தவையாக இருக்கும். சில ஒட்டுண்ணி புழுக்கள் மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட உடல் அமைப்புகளைக் கொண்டிருக்கும். பைலேடரியாவுக்கு உள்ளான உறவுகள் மீதான நமது புரிதலில் மரபணு ஆய்வுகள் குறிப்பிடத்தக்க மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளன. அநேகமானவை டியூடெரோஸ்டோம்கள் மற்றும் புரோடோஸ்டோம்கள் என்னும் இரண்டு முக்கிய வம்சாவளியைச் சேர்ந்தவையாகத் தோன்றுகின்றன. டியூடெரோஸ்டோம்கள் டியூடெரோஸ்டோம்கள் புரோடோஸ்டோம்கள் என்று அழைக்கப்படும் பிற பைலேடரியாக்களில் இருந்து பல வழிகளில் வேறுபடுகின்றன. இரண்டிலுமே ஒரு முழுமையான செரிமான பாதை உண்டு. ஆயினும், புரோடோஸ்டோம்களில் ஆரம்ப துவாரம் (ஆர்சென்டெரான்) வாயாக வளர்ச்சியுறுகிறது, மலத்துவாரம் தனியாக உருவாகிறது. டியூடெரோஸ்டோம்களில் இது தலைகீழாய் நடக்கிறது. டியூடெரோஸ்டோம்கள் ஒரு வயிற்றுப்பக்கத்தை விட, முதுகுப்பக்க நரம்பு நாணை கொண்டுள்ளன. மற்றும் அவற்றின் முளைக்கருக்கள் ஒரு வேறுபட்ட பிளவுக்குள் உட்செல்கின்றன. இவையெல்லாம் டியூடெரோஸ்டோம்களும் புரோடோஸ்டோம்களும் தனித்தனியான, ஒற்றைத்தொகுதி வம்சாவளிகள் என்பதைக் காட்டுகின்றன. டியூடெரோஸ்டோம்களின் முக்கிய தொகுதி முட்தோலிகள் (Echinodermata) மற்றும் முதுகெலும்புள்ளவை (Chordate)ஆகியவை. முந்தையது ஆரவடிவில் இருசமபக்கம் ஒத்தவை, நட்சத்திர மீன், கடல் முள்ளெலி, மற்றும் கடல் வெள்ளரிகள் போன்ற கடல்நீரில் மட்டும் வாழ்கின்றவை. பிந்தையவை முதுகெலும்பு கொண்ட விலங்குகளான வெர்டிப்ரேட்டுகள் வகையினால் ஆதிக்கம் செலுத்தப்பட்டவையாகும். இவற்றில் மீன், நீர்நில வாழ்விகள், ஊர்வன, பறவைகள், மற்றும் பாலூட்டிகள் ஆகியவை அடங்கும். சடோநாதா அல்லது அம்பு புழுக்களும் டியூடெரோஸ்டோம்களாக இருக்கலாம். ஆனால் சமீபத்திய ஆய்வுகள் அவற்றின் புரோடோஸ்டோம் தொடர்புகளை கூறுகின்றன. எக்டிசாசோவா எக்டிசாசோவாக்கள் புரோடோஸ்டோம்கள் ஆகும். இவை சிறகுதிர்ப்பது அல்லது தோலுரிவதன் (ecdysis) மூலம் வளரும் பொதுவான பழக்கத்தால் இந்த பெயரிடப்பட்டன. மிகப்பெரும் விலங்கு தொகுதியான கணுக்காலிகள் (Arthropoda) இதற்கு சொந்தமானதே. இதில் பூச்சிகள், சிலந்திகள், நண்டுகள் மற்றும் அவற்றின் உறவினங்கள் அடக்கம். இந்த அனைத்து உயிரினங்களும் பொதுவாக இணை ஒட்டுறுப்புகளுடன் உடல் தொடர்ச்சியான பிரிவுகளாகப் பகுக்கப்பட்டு கொண்டுள்ளன. ஓனிகோபோரா மற்றும் டார்டிகிராடா ஆகிய இரண்டு சிறு தொகுதிகளும் கணுக்காலிகளின் (Arthropoda) நெருங்கிய உறவினங்கள். இவை இதே பண்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. எக்டிசாசோவாக்கள் நெமடோடா அல்லது உருளைப்புழுக்களையும் அடக்கியிருக்கின்றது. இவை இரண்டாவது மிகப்பெரிய விலங்கு தொகுதியாகும். உருளைப்புழுக்கள் பொதுவாக நுண்ணுயிர்களாக இருப்பதோடு, ஏறக்குறைய நீர் இருக்கும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் காணப்படக்கூடியவை. ஏராளமானவை முக்கியமான ஒட்டுண்ணிகள். நெமடோமார்பா அல்லது குதிரைமுடி புழுக்கள், மற்றும் கினோரின்ஜா, பிரியபுலிடா, மற்றும் லோரிசிஃபெரா ஆகியவை அவற்றுக்குத் தொடர்புடைய சிறு தொகுதிகள் ஆகும். இந்த பிரிவுகள் சூடோகொயலம் (pseudocoelom) என்று அழைக்கப்படுகிற ஒரு குறைந்துபட்ட கொயலமைக் கொண்டுள்ளன. புரோடோஸ்டோம்களின் எஞ்சிய இரண்டு பிரிவுகளும் சில சமயங்களில் ஒன்றாக ஸ்பைரலியா என்று ஒரே பிரிவாக பகுக்கப்படுகின்றது. காரணம் இரண்டிலுமே முளைக்கருக்கள் சுருள் பிளவுடன் உருவாகின்றன. பிளாட்டிசோவா பிளாட்டிசோவாவில் தட்டைப்புழுவினம் (Platyhelminthes), தட்டைப்புழுக்கள் ஆகிய தொகுதிகள் அடக்கம். இவை ஆரம்பத்தில் மிக ஆதி காலத்து பைலேட்டரியா வகைகளில் சிலவாகக் கருதப்பட்டன. ஆனால் அவை அதனை விட சிக்கலான மூதாதையரிடம் இருந்து வளர்ச்சியுற்றிருக்கலாம் என்பதாக இப்போது கருதப்படுகிறது.[12] ஒட்டுயிர் தட்டைப் புழுக்கள் (flukes) மற்றும் நாடாப்புழுக்கள் போன்ற ஏராளமான ஒட்டுண்ணிகள் இந்த குழுவில் அடங்கியுள்ளன. தட்டைப் புழுக்கள் உடற்குழியற்றவை.[13] பிற பிளாட்டிசோவா தொகுதிகள் பெரும்பாலும் நுண்ணுயிரி வகைகளாக உடற்குழி உள்ளவை (pseudocoelomate) களாக இருக்கின்றன. இவற்றில் மிகப் பிரதானமானவை ரோடிஃபெரா உயிரினங்கள் ஆகும். இவை நீர்ப்புற சூழ்நிலைகளில் மிகச் சாதாரணமாய் காணப்படும். இவற்றில் அகான்தோசெபாலா அல்லது ஊசிமுனைத்-தலை புழுக்கள், நதோஸ்டோமுலிதா, மைக்ரோநதோசோவா, மற்றும் சாத்தியமான அளவில் சைக்ளிஃபோரா ஆகியவையும் அடங்கும்.[14] இந்த பிரிவுகள் எல்லாம் சிக்கலான தாடைகள் கொண்டிருப்பதைப் பகிர்ந்து கொள்கின்றன. இதிலிருந்து இவை நாதிஃபெரா (Gnathifera) என்று அழைக்கப்படுகின்றன. லோபோட்ரோசாசோவா லோபோட்ரோசாசோவா மெல்லுடலிகள் (Mollusca) மற்றும் வத்தசைப்புழுக்கள் (Annelida) ஆகிய இரண்டு மிக வெற்றிகரமான விலங்கு தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது.[15][16] விலங்கு தொகுதியில் இரண்டாவது மிகப்பெரியதான முன்னையதில், நத்தைகள், கிளிஞ்சல்கள், மற்றும் கடற்கணைகள் ஆகியவை அடக்கம். பிந்தையதில் மண்புழுக்கள் மற்றும் அட்டைகள் போன்ற கூறுபிரிந்த புழுக்கள் அடங்கியிருக்கின்றன. இந்த இரண்டு பிரிவுகளும் அவற்றில் பொதுவாக இருக்கும் ட்ராகோபோர் லார்வாக்களின் காரணமாக நெடுங்காலமாக நெருங்கிய உறவினங்களாக கருதப்படுகின்றன. ஆனால் வத்தசைப்புழுவினம் (Annelida) கணுக்காலிகளுக்கு (Arthropoda) நெருங்கியவையாகக் கருதப்படுகின்றன.[17] ஏனென்றால் இரண்டும் கூறுபட்ட உடல் கொண்டவை.[18] லோபோட்ரோசாசோவா நெமர்டியா அல்லது ரிப்பன் புழுக்கள், சிபுன்குலா, மற்றும் லோபோபோர் என்று அழைக்கப்படும் வாயைச் சுற்றி அமைந்த ஒரு பிசிர் உரோம அமைப்பு விசிறியைக் கொண்டிருக்கும் பல தொகுதிகள் ஆகியவற்றையும் அடக்கியிருக்கிறது.[19] அவை மரபுவழியாக லோபோபோரேட்டுகள் என்று ஒன்றாக பிரிக்கப்பட்டு வந்தன.[20] ஆனால் இப்போது அவை பாராபைலெடிக் என்றும்,[21] சில நெமர்டியாவுக்கு நெருக்கமானவை என்றும், சில மெல்லுடலிகள் (Mollusca) மற்றும் வத்தசைப்புழுக்களுக்கு (Annelida) நெருக்கமானவை என்றும் கருதப்படுகிறது.[22][23] புதைபடிவ பதிவுகளில் பிரதானமாகக் காணப்படும் பிராசியோபோடா அல்லது விளக்கு கூடுகள், என்டோபிராக்டா, போரோனிடா, மற்றும் சாத்தியமான அளவில் பிரையோசோவா அல்லது பாசி விலங்குகளும் இவற்றில் அடங்குகின்றன.[24] மாதிரி உயிரினங்கள் விலங்குகளில் காணப்படும் பெரும் பன்முகத்தன்மை காரணமாக, தேர்ந்தெடுத்த ஒரு சிறு எண்ணிக்கையிலான உயிரின வகைகளை ஆய்வு செய்து, பல்வேறு விஞ்ஞானிகளது வேலைகளுக்கு இடையே இணைப்புகளை ஏற்படுத்தி, பொதுவாக விலங்குகள் எப்படி செயல்படுகின்றன என்பது குறித்த முடிவுகளுக்கு அதிலிருந்து தேற்றம் செய்து கொள்வது தான் விஞ்ஞானிகளுக்கு பொருளாதார ரீதியாக கூடுதல் உகந்ததாக இருக்கிறது. வளர்ப்பதும் பராமரிப்பதும் எளிது என்பதால், பழப் பூச்சியான ட்ராசோபிலா மெலனோகாஸ்டர் மற்றும் நெமடோடெ கெனோஹப்டிடிஸ் எலிகான்ஸ் ஆகியவை தான் மிகவும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்ட பலசெல் விலங்கு (metazoan) மாதிரி உயிரினங்களாக இருக்கின்றன. இவை தான் மரபணு ரீதியாக குறியீடு பிரிக்கப்பட்ட முதல் வாழ்க்கை வடிவங்களாகவும் இருக்கின்றன. அவற்றின் மரபணுத் தொகுதியின் நிலை இதற்கு வசதி செய்தது. ஆனால் அதன் மறுபக்க பிரச்சினை என்னவென்றால் பல மரபணுக்கள், இன்ட்ரான்கள் மற்றும் மரபணு இணைப்புகள் காணாதிருக்கும். இந்த எக்டிஸோசோவாக்கள் பொதுவாக விலங்குகளின் மூலம் குறித்து கொஞ்சம் தான் கற்றுத்தர முடியும். சூப்பர்ஃபைலத்திற்குள்ளாக இந்த வகை பரிணாமத்தின் நீட்சியானது தற்போது வளர்ந்து கொண்டிருக்கும் கிரஸ்டசீன், வத்தசைபுழுவினம், மற்றும் மெல்லுடலிகள் மரபணுத் திட்டங்களின் மூலம் தெரிய வரும். ஸ்டார்லெட் கடல் அனிமோன் மரபணுத்தொகுதியின் ஆய்வானது, இமெடாசோவாவுக்கென பிரத்யேகமான 1500 பழமைப்பட்ட மரபணுக்களின் வருகையை விளக்குவதில் கடற்பாசிகள், பிளாகோசோவாக்கள், மற்றும் சோவனோஃபிளாகெல்லேட்டுகள் இவையும் குறியீட்டு வரிசைப்படுத்தப்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளன.[25] ஓஸ்கரெல்லா கார்மெலா கடற்பாசி மீது செய்யப்பட்ட ஒரு ஆய்வானது, கடற்பாசிகள் மற்றும் இமெடாசோவா விலங்குகளின் பொதுவான மூதாதையரின் மரபணு அமைப்பு முன்னர் அனுமானித்திருந்ததை விட மிகவும் சிக்கலானதாக இருந்தது என்று தெரிவிக்கிறது.[26] விலங்குகள் ராச்சியத்திற்கு சொந்தமான பிற மாதிரி உயிரினங்களில் எலி (Mus musculus) மற்றும் வரிக்குதிரைமீன் (Danio rerio) ஆகியவை அடக்கம். வகைப்பாட்டு வரலாறு வாழும் உலகத்தை அரிஸ்டாட்டில் விலங்குகள் மற்றும் தாவரங்கள் எனப் பிரித்தார். இதனைத் தொடர்ந்து காலக்கிரம வகைப்படுத்தலில் கரோலஸ் லினீயஸ் (Carl von Linné) வகைப்படுத்தல் வந்தது. அப்போது முதல் உயிரியல் நிபுணர்கள் பரிணாம உறவுகளில் அழுத்தம் கொடுக்கத் துவங்கியிருக்கிறார்கள். அதனால் இந்த குழுக்கள் ஒருவகையில் கட்டுப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன. உதாரணமாக, நுண்ணியிர் ஒரு செல் விலங்குகள் (protozoa), அவை நகர்பவை என்பதால், ஆரம்பத்தில் விலங்குகள் எனக் கருதப்பட்டன. ஆனால் இப்போது அவை தனி வகையாகக் கருதப்படுகின்றன. லினீயஸின் ஆரம்ப வகைப்பாட்டில், விலங்குகள் மூன்று ராச்சியங்களில் ஒன்றாக, வெர்மெஸ் (Vermes), இன்செக்டா (Insecta), மீன்கள் (Pisces), நீர் நில வாழுயிர் (Amphibia), பறவையினம் (Aves), மற்றும் மம்மாலியா (Mammalia) ஆகிய பகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அது முதல் கடைசி நான்கும் கார்டேடா (Chordata) என்னும் ஒற்றை தொகுதிக்குள் கொண்டுவரப்பட்டன. பல பிற வடிவங்கள் பிரிக்கப்பட்டு விட்டன. மேற்கண்ட பட்டியல்கள் இந்த பிரிவு குறித்த நமது தற்போதைய புரிதலைக் குறிப்பிடுகிறது. ஆயினும் மூலத்திற்கு மூலம் சில வேறுபாடுகள் உள்ளது. கூடுதல் பார்வைக்கு விலங்கு நடத்தை மிருக உரிமைகள் விலங்குகளின் பெயர்களின் பட்டியல் நியூரான்கள் எண்ணிக்கையின் படி விலங்குகளின் பட்டியல் தாவரம் குறிப்புதவிகள் குறிப்புகள் நூற்பட்டி கிளாஸ் நீல்சன். Animal Evolution: Interrelationships of the Living Phyla (இரண்டாம் பதிப்பு). ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக பிரஸ், 2001. நட் ஸ்கிமிட்-நீல்சன். Animal Physiology: Adaptation and Environment . (5th edition). கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பிரஸ், 1997. புற இணைப்புகள் - மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் விலங்குகள் தரவுத்தளம், பாகுபாட்டியல் பகுப்புகள், படங்கள் மற்றும் பிற தகவல்களைக் காட்டுகிறது. - உலகின் அபாயத்திற்குட்பட்டிருக்கும்/பாதுகாக்கப்பட்டிருக்கும் உயிரினங்கள் மற்றும் இங்கிலாந்தின் பொதுவான உயிரின வகைகள் குறித்த தரவுத்தளம். மீனில் இருந்து நான்கு கால் விலங்குகளின் பரிணாமம் குறித்தது. பகுப்பு:விலங்குகள் பகுப்பு:உயிரியல்
உருளைப்புழு எந்த தொகுதியை சேர்ந்தது?
நெமடோடா
12,028
tamil
90299b7e0
ஆபிரிக்க ஒன்றியம் (African Union) 54 ஆபிரிக்க நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பு ஆகும். இவ்வமைப்பில் உள்ளடங்காத ஒரேயொரு ஆபிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த நாடு மொரோக்கோ ஆகும். இவ்வமைப்பு 26 மே 2001 இல் அடிஸ் அபாபாவில் உருவாக்கப்பட்டு 9 யூலை 2002 இல் தென்னாபிரிக்காவில்[1] ஆபிரிக்க ஒன்றியத்திற்கான அமைப்பிற்குப் (OAU) பதிலாக நிறுவப்பட்டது. ஒரே அரசியல், பொருளாதார, பாதுகாப்பு குடையின் கீழ் ஆபிரிக்க நாடுகளை கொண்டுவருவதே ஆபிக்க ஒன்றியத்தின் தொலை நோக்கு திட்டமாகும். ஆபிரிக்காக் கண்டத்தில் மக்களாட்சியை நிறுவுவது, மனித உரிமைகளை பாதுகாப்பது, தாங்குதிற பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது, உள்ளூர் சண்டைகளுக்கு இணக்கம் காண்பது, ஆபிரிக்க பொது சந்தையை உருவாக்குவது ஆகியவை இவ் ஒன்றியத்தின் நோக்கங்கள் ஆகும். அங்கத்துவம் ஆபிரிக்காவிலும் ஆபிரிக்காவை அண்டிய கடற்பரப்பிலும் மேற்கு சகாராப் பிரதேசத்திலும் உள்ள நாடுகள் ஆபிரிக்க ஒன்றியத்தில் அங்க்த்துவம் வகிக்கின்றன. மொரோக்கோ ஒருதலைப்பட்சமாகச் சேர்த்துக்கொள்ளாமல் விடப்பட்டதுடன் தற்போது நான்கு நாடுகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன. பின்வரும் நாடுகள் ஆபிரிக்க ஒன்றியத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.[2] இடைநீக்கம் செய்யப்பட்ட அங்கத்தவர்கள் – 2013 எகிப்திய ஆட்சி கவிழ்ப்பின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.[3] – 2009 மலகாஸி அரசியல் நெருக்கடியின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.[4] – 2012 கினி பிசாவு ஆட்சி கவிழ்ப்பின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.[5] – 2012-13 மத்திய ஆபிரிக்கக் குடியரசு மோதலின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.[6] பார்வையாளர் அங்கத்தவர்கள் – அடிஸ் அபாவில் 2 பெப்ரவரி 2012 இல் நடைபெற்ற 18 ஆவது ஆப்பிரிக்க ஒன்றிய உச்சிமாநாட்டில் எய்ட்டி பார்வையாளர் அங்கத்தவர் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டது. அதன் பின்னர் ஒன்றியத்தின் உறூப்பினராக முறையான கோரிக்கை விடுத்தது.[7] – பொருத்தமான உடன்படிக்கைகள் மே 2013 இல் நிறைவேற்றப்பட்ட பின்னர் 14 நவம்பர் 2013 இல் கசகஸ்தான் பார்வையாளர் அங்கத்தவர் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டது. வெளியுறவுத்துறை அமைச்சரான எர்லன் இட்ரிசோவ் ஆபிரிக்க ஒன்றியத்தில் கசகஸ்தான் குடியரசின் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.[8] முன்ன்னர் உறுப்பினர்கள் – [9][10][11] உச்சி மாநாடுகள் 2013 விசேட ஆப்பிரிக்க ஒன்றிய உச்சி மாநாடானது ஐ.சி.சி உடனான ஆபிரிக்காவின் தொடர்பு குறித்தது எனக் கூறப்பட்டது. இவ்வுச்சி மாநாடானது ஐ.சி.சி அமைப்பானது ஆப்பிரிக்க ஒன்றியத்தின் பதவியில் அமர்ந்திருக்கும் தலைவர்களுக்கு எதிரான சில தண்டனைகளைக் கைவிடவும், அவை தொடர்பான சர்ச்சைகள் ஆபிரிக்கர்களை இலக்குவைத்து உருவாக்கப்பட்டன என்ற அழைப்பிற்குச் செவிசாய்க்காமல் பற்றற்று இருந்தமையாலும் இது குறித்து முடிவு எடுக்கக் கூட்டப்பட்டது.[12] மொழிகள் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அரசியலைப்புச் சட்டத்திற்கு அமைவாக இதனுடைய வேலை மொழிகளாக அரபிக், ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் போர்த்துக்கீசம் ஆகியவற்றுடன் முடிந்தவரையில் ஆபிரிக்க மொழிகளும் காணப்படுகின்றன.[13] 2011 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆப்பிரிக்க ஒன்றியத்தின் மொழிகளுக்கான ஆபிரிக்க அக்கடமி ஆபிரிக்க மக்களிடையே ஆபிரிக்க மொழிகளின் பயன்பாடு மற்றும் நிலைப்பேறுடைமையைப் பேணுகின்றது. ஆப்பிரிக்க ஒன்றியம் 2006 ஆம் ஆண்டை ஆபிரிக்க மொழிகளுக்கான வருடம் எனப் பிரகடனப்படுத்தியது.[14][15] தலைவர்களின் பட்டியல் குறிகாட்டிகள் a புள்ளிவிவரங்கள் 2009 ஆம் அண்டுக்குரியவை. b புள்ளிவிவரங்கள் 2006 ஆம் அண்டுக்குரியவை. c புள்ளிவிவரங்கள் 2010 ஆம் அண்டுக்குரியவை. d தென் சூடான் உள்ளடங்கலாக. e புள்ளிவிவரங்கள் 2007 ஆம் அண்டுக்குரியவை. f AU total used for indicators 1 through 3; AU weighted average used for indicator 4; AU unweighted average used for indicators 5 through 12. g ஜிபூட்டி, லிபியா, சோமாலியா மற்றும் மேற்கு சகாரா ஆகிய நாடுகளின் தரவுகள் சேர்க்கப்படவில்லை. h தென் சூடானின் தரவுகள் சேர்க்கப்படவில்லை. Note: The colors indicate the country's global position in the respective indicator. For example, a green cell indicates that the country is ranked in the upper 25% of the list (including all countries with available data). மேற்கோள்கள் நூற்பட்டியல் , AfriMAP and Oxfam GB, 2010 AfriMAP, AFRODAD and Oxfam GB, January 2007 The New African Initiative and the African Union: A Preliminary Assessment and Documentation by Henning Melber, Publisher: Nordiska Afrikainstitutet, Sweden; ISBN 91-7106-486-9; (October 2002) "The African Union, NEPAD and Human Rights: The Missing Agenda" Human Rights Quarterly Vol.26, No.4, November 2004. வெளி இணைப்புக்கள் official site in Durban, South Africa, website created by SA government in Maputo, Mozambique , Addis Ababa, Ethiopia , Abuja, Nigeria in Sirte, Libya. in Khartoum, Sudan. in Banjul, the Gambia. in Banjul, the Gambia, website created by the host government. , Addis Ababa, Ethiopia , Accra, Ghana , Addis Ababa, Ethiopia , Sharm El Sheikh, Egypt , Addis Ababa, Ethiopia , Sirte, Libya பிற தொடர்புடைய தளங்கள் The Africa Governance Monitoring and Advocacy Project of the Open Society Institute Page on the AU and NEPAD– many useful links Background on Union Government debate at Curlie Radio France Internationale in English Radio France Internationale in English பகுப்பு:அமைப்புகள் பகுப்பு:ஆப்பிரிக்க அமைப்புகள்
ஆபிரிக்க ஒன்றியம் எந்த ஆண்டு உருவானது?
26 மே 2001
192
tamil
a126ac396
முதுகெலும்பிலி (Latin: Invertebrata) முதுகெலும்பு இல்லாத ஓர் உயிரினம். உலகில் உள்ள உயிரினங்களில் முதுகெலும்பில்லாத உயிரினங்களே அதிகம் சுமார் 10 லட்சம் உயிரினங்களில் 8 லட்சத்துக்கு மேற்பட்டவை முதுகெலும்பு இல்லாதவைகளாகும். முதுகெலும்பு இல்லாத உயிரினங்களை பல பகுதிகளாக பகுத்துள்ளனர் அறிவியல் அறிஞர்கள். அவற்றுள் புரோட்டோசோவா ஒரே உயிரணுவால் இயங்கும் இனமாகும். மற்ற உயிரினங்கள் செய்யும் சுவாசித்தல்,உணவு உண்ணல், உணவை ஜீரணித்தல், எஞ்சும் கழிவுப் பொருட்களை வெளியயேற்றுதல் ஆகிய அனைத்துப் பணிகளையும் ஓரணுவுக்குள்ளே செய்கின்றது. ஆனால், இந்த ஓரணு உயிரினங்கள் அளவில் மிக நுண்ணியவைகளாக இருப்பதால் அவற்றை மைக்ரோ ஸ்கோப் மூலமாகத் தான் பார்க்க முடியும். இவற்றில் சிலவற்றில் மேற்பகுதி சற்று கடினத் தன்மை கொண்ட ஓடுகளால் அமைந்தது. இந்த நுண்ணுயிரிகளின் இறந்த தொகுதியே கடலில் கிடைக்கும் சீமைச் சுண்ணாம்பு ஆகும். புரோட்டோசோவா உயிரினங்கள் ஒவ்வொன்றும் இரண்டிரண்டாய் பிரிந்து தனித்தனி உயிர்களாய் பெருக்கமடைகின்றன. புரோட்டோசோவா உயிரினங்களில் 30 ஆயிரம் வகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. வகைப்பாடுகள் அனலிட்டு - வழைதசை புழுக்கள்: en:Annelid கணுக்காலி — en:Arthropod குழியுடலி - en:Cnidaria முட்தோலி - en:Echinoderm மெல்லுடலி - en:Mollusca உருளைப்புழு Nematoda en:Nematomorpha — தட்டைப்புழுக்கள் — en:Platyhelminthes புரையுடலி - en:Porifera மெல்லுடலிகள் முதுகெலும்பில்லாத உயிரினங்களில் மற்றோரு வகை பவளப் பூச்சிகள், கடல் சாமந்தி, ஜெல்லி மீன் போன்றவைகளாகும். நாடாப்புழு, ஈரல் புழு போன்றவை தட்டைப் புழுக்கள் எனும் வேறு வகையைச் சார்ந்தது. கொக்கிப் புழு, நாக்குப் புழு, நரம்பு சிலந்திப் புழு போன்றவை உருண்டைப் புழு என்ற மற்றோர் வகையைச் சார்ந்தததாகும். கிளிஞ்சல், நத்தை போன்றவை சுண்ணாம்புப் பொருளால் மூடப்பட்ட மெல்லுடலிகளாகும். பிற முதுகெலும்பிகள் ஆக்டோபஸ் எனும் எண்காலிகள் போன்றவையும் இவ்வகையைச் சார்ந்தது. நட்சத்திரமீன், கடல் வெள்ளரி போன்ற கடல் வாழ் உயிரினங்களும் முதுகெலும்பில்லாதவைகளே. முதுகெலும்பில்லாத உயிரினங்களில் மிகப் பெரியவை கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி, வண்டு ஆகும். முதுகெலும்பில்லா உயிரினங்களில் நன்மை அளிப்பவையும், தீமை அளிப்பவையும் உண்டு. பட்டுப்பூச்சி, தேனீ, அரக்குப் பூச்சி போன்றவை நன்மை செய்பவை. விசத்தன்மை கொண்ட பாம்புகள்,பூச்சிகள் ஏராளம் உள்ளன. பகுப்பு:முதுகெலும்பிலிகள்
முதுகெலும்பு அல்லாத விலங்கு இனங்கள் எத்தனை உள்ளன?
8 லட்சத்துக்கு
165
tamil
7d2ed1f64
அ. இர. ரகுமான் (அல்லா இரக்கா இரகுமான், பிறப்பு: ஜனவரி 6, 1966), புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார். மேலும் இத்திரைப்பட இசைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும் , பாஃப்டா விருதும் கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரேயாவார். இவருக்கு 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்ம பூசண் விருது அளிக்கப்பட்டது. இவர் ஆசியாவின் மொசார்ட் என்றும் அழைக்கப்படுகிறார்[1]. [2009] ஆம் ஆண்டு 81ஆம் ஆஸ்கார் விருதுகளுக்காக அமைத்த மாபெரும் மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று அவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திரச் சொல்லைப் பாடினார்.[2] 2017 ஆம் ஆண்டு இவருக்கு தமிழ் ரத்னா விருது வழங்கி அமெரிக்கா தமிழ் சங்கம் கவுரவித்துள்ளது.[3] வாழ்க்கைக் குறிப்பு ரகுமான் 1966 சனவரி 6 ஆம் திகதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். அருணாச்சலம் சேகர் திலீப் குமார் என்பது இவரது இயற்பெயர் ஆகும். இசையுலகப் பயணத்தை 1985 இல் ஆரம்பித்தார். இவரின் குடும்பம் இசை சார்ந்தது. இவரின் தந்தை சேகர் மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். அதன் பின் குடும்பத்தில் வருமானம் இல்லாத நிலையில் தன் தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்குவிட்டு அந்த வருமானத்தில் பியானோ, ஆர்மோனியம் மற்றும் கித்தார் வாசிக்கக் கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்டார். 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காகச் சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார். இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா, அமின் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். 1992 இல் தனது வீட்டிலேயே இசைக் கலையகத்தை அமைத்தார். இதே ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம், இவருடய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கித் தந்தது. பின்னர் 1997ல் மின்சாரக் கனவும், 2002 லகான் இந்தி படமும், 2003-இல் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் இவருக்குத் தேசிய விருதுகள் வாங்கித் தந்தன. முத்து திரைப்படம் சப்பானில் வெற்றி பெற்று, இவரது புகழ் உலகமெங்கும் பரவத் தொடங்கியது. 2012 இல் இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலேயே நவீன தொழில்நுட்ப ரெகார்டிங் ஸ்டுடியோவாக உள்ளது. இசையில் ஆரம்ப காலம் ரகுமான் தனது ஒன்பதாது வயதில் தந்தையை இழந்ததால், விளம்பரங்களுக்கு இசையமைத்தார். திரிலோக் மற்றும் சாரதா ஆகியோருடன் இணைந்து விளம்பரப் படங்களை இவர் தயாரித்தார். அதன் மூலம் ரகுமான் வெகுவாக அறியப்பட்டார். பூஸ்ட், ஏசியன் பெயின்ட்ஸ், ஏர்டெல், லியோ காபி ஆகிய 300க்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களுக்கு ரகுமான் இசையமைத்தார். படைப்புகள் திரைப்பட இசையமைப்புகள் குறிப்பு: "ஆண்டு", பன்மொழித் திரைப்படமாயின், எந்த மொழியில் அத்திரைப்படம் முதலில் வெளியானதோ, அந்த ஆண்டைக் குறிக்கும். பின் வரும் பிற மொழித் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்: 1993 யோதா (மலையாளம்) 1999 Return of the Thief of Baghdad (ஆங்கிலம்) 2003 Tian di ying xiong (சீன மொழி) 1999- பிஸா- ஹிந்தி) (ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைப்பு). திரைப்படமல்லாத இசையமைப்புகள் Return of the Thief of Baghdad (2003) தீன் இசை மாலை (1989) (திலீப் குமார் என்ற பெயரில்) செட் மீ ஃப்ரீ (1991) வந்தே மாதரம் (1997) ஜன கண மன (2000) பாம்பே ட்ரீம்ஸ் (2002) (இசை நாடகம்) இக்னைட்டட் மைன்ட்ஸ் (2003) (இசைத்தொகுப்பு வெளியிடப்படாத நேரடி இசை நிகழ்ச்சி) ராகாஸ் டான்ஸ்(2004) (வனேசா மே நடனத்திலிருந்து) இவர் பெற்ற விருதுகள் இசைத்துறையில் ஏ.ஆர். ரகுமானின் 20 ஆண்டுகாலப் பங்களிப்பைப் பெருமைப்படுத்தும் வகையில் அவருக்கு, அமெரிக்காவின் பெர்க்லீ இசைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க உள்ளது[4]. 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளருக்காகவும் சிறந்த பாடலுக்காகவும் ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் மொரீசியசு நாட்டின் விருது, மலேசிய விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது, தேசிய திரைப்பட விருது, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது, தமிழக அரசு திரைப்பட விருது (ஆறு முறை), பிலிம்பேர் விருது (13 முறை), பிலிம்பேர் சவுத் விருது (12 முறை - அதில் 9 முறை தொடர்ந்து பெற்றார்), ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது, 2009ஆம் ஆண்டு வெளியான "ஸ்லம்டாக் மில்லினியர்" படத்திற்காக கோல்டன் குளோப் விருது, பெப்டா விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார். மிடில்செக்ஸ் பல்கலைக்கழகமும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமும் வழங்கிய மதிப்புறு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். ரங் தே பசந்தி, லகான், சாத்தியா, தால் ஆகிய திரைப்படங்களுக்காக ஐ.ஐ.எஃப்.ஏ விருது பெற்றுள்ளார். சிகரமாக, இந்தியக் குடிமக்களுக்கான மூன்றாம் உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு இவருக்கு அளிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டில் இவருக்கு இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருதும் வழங்கப்பட்டது. ஸ்வரலயா யேசுதாஸ் விருது(2006), மத்தியப்பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது (2004) ஆகிய மாநில விருதுகளைப் பெற்றுள்ளார். ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகம் இவருக்கு உலகப் பங்களிப்புக்கான மதிப்புறு விருதை வழங்கியுள்ளது. இந்திய அணியின் நல்லெண்ணத் தூதர் ரியோ டி ஜனேரோ 2016 ஓலிம்பிக் விளையாட்டுக்கள் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்காக ஏ. ஆர். ரகுமான் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டார்.[5] மேற்கோள்கள் வெளி இணைப்புகள் at AllMusic [ A. R. Rahman] at பில்போர்ட் (இதழ்) NAMM Oral History Program (2013) பகுப்பு:ஏ. ஆர். ரகுமான் பகுப்பு:பத்ம பூசண் விருது பெற்ற தமிழர்கள் பகுப்பு:1966 பிறப்புகள் பகுப்பு:சென்னை நபர்கள் பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் பகுப்பு:1967 பிறப்புகள் பகுப்பு:வாழும் நபர்கள் பகுப்பு:பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள் பகுப்பு:இந்திய முஸ்லிம்கள் பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்
2009ஆம் ஆண்டில் 2 ஆஸ்கார் விருதை வென்ற இந்திய இசையமைப்பாளர் யார்?
அ. இர. ரகுமான்
0
tamil
cf1e93819
குளிர்காய்ச்சல் நோயுடன் தொடர்பில்லாவிடினும், இரைப்பைக் காய்ச்சல் என்றும் அழைக்கப்படும் இரைப்பைக் குடல் அழற்சி , வயிறு மற்றும் சிறு குடல் ஆகிய இரண்டுடனும் தொடர்பு கொண்ட இரைப்பைப் பாதையின் வீக்கம் ஆகும். இதனால் தீவிரமான வயிற்றுப் போக்கு விளைகிறது. (இரைப்பை அழற்சி மற்றும் குடல் அழற்சி ஆகியவற்றையும் காணவும்). இது ஒருவரிலிருந்து மற்றவருக்கு மாசடைந்த உணவு மற்றும் நீர் வழியான தொடர்பு மூலம் பெயர்கிறது. பெரும்பாலும் சில வகையான நச்சுயிரிகளின் தொற்று காரணமாகவும், சில நேரங்களில் நுண்ணுயிர் மற்றும் அவற்றின் நச்சுத் தன்மையாலும், ஒட்டுண்ணிகளாலும் அல்லது உணவு அல்லது மருந்திற்கான ஒரு ஒவ்வாமை எதிர்விளைவு காரணமாகவும் இந்த வீக்கம் உருவாகிறது. உலகெங்கும், இரைப்பைக் குடலழற்சிக்குச் சரியான சிகிச்சை கிடைக்கப் பெறாததன் காரணமாக ஒவ்வொரு வருடமும்[1] ஐந்திலிருந்து எட்டு மில்லியன் மக்கள் வரை உயிரிழக்கின்றனர். ஐந்து வயதிற்கும் குறைவான சிசுக்கள் மற்றும் குழந்தைகளின் மரணத்திற்கு இதுவே முதன்மையான காரணமாக உள்ளது.[2] உணவு மூலமான நோய் என்பதனால் உருவாகும் இரைப்பைக் குடல் அழற்சிகளில் குறைந்தது 50 சதவிகிதம் நோரோ நச்சுயிரி என்பதனால் உருவாகின்றன.[3] மற்றொரு 20 சதவிகிதம் மற்றும் குழந்தைகளில் தீவிரமான அளவில் நோய் உண்டாவதற்குப் பெரும்பான்மையான காரணமாக ரோட்டோ நச்சுயிரி உள்ளது. முக்கியமான இதர நச்சுயிரிகளில் அடினோ நச்சுயிரி மற்றும் ஆஸ்டிரோ நச்சுயிரி ஆகியவையும் அடங்கும்.[4] பலவகையான நுண்ணுயிர்களும் இரைப்பைக் குடல் அழற்சியை உருவாக்கலாம். இவற்றில் சால்மொனெல்லா , ஷிகெல்லா , ஸ்டாஃபில்லோக்கஸ் , காபிலோபாக்டர் ஜெஜுனி , கிளாஸ்ட்ரோடியம் , ஈஸ்செர்ச்சியா கோலி , யெர்சினியா, விப்ரியோ கோலெரே|விப்ரியோ கோலெரே மற்றும் பல அடங்கும். முறையாக சமைக்காத உணவு, மீண்டும் மீண்டும் சூடாக்கிய மாமிச உணவுகள், கடலுணவு, பால்பொருட்கள் போன்றவை சில வேளைகளில் இத்தொற்றிற்குக் காரணமாகின்றன. ஒவ்வொரு உயிரினமும் சற்றே வேறுபட்ட அறிகுறிகளை வெளிக்காட்டுகின்றன. ஆனால், அனைத்தின் விளைவும் வயிற்றுப் போக்கில்தான் முடிகிறது. பெருங்குடலின் வீக்கமான பெருங்குடல் அழற்சி என்பதும் ஏற்படலாம். ஆபத்துக் காரணிகளில், முறையாக சமைக்காத உணவுகள் அல்லது மாசுற்ற நீர் ஆகியவற்றை உட்கொள்ளுதல் மற்றும் மோசமான நிலையில் கழிவுகள் அகற்றப்படும் இடங்களில் வசிப்பது அல்லது அவ்விடங்களுக்குப் பயணப்படுவது ஆகியவை அடங்கும். மழைக்காலங்களில் ஆற்றில் ஓடும் நீர் மாசுறும் காரணத்தினால், நதியில் நீந்துபவர்களுக்கு இது வருவதும் பொதுவானதே.[5] நோய் வகைப்பாடு தொற்று நோயான இரைப்பைக் குடல் அழற்சியானது பல்வேறு வகைப்பட்ட நுண்ணுயிர்களாலும் நச்சுயிரிகளாலும் உருவாகிறது. தொற்று நோயான இரைப்பைக் குடல் அழற்சியை மிகவும் நம்பிக்கையோடு கண்டறிய இயலாத ஒரு நோய் என்றே கருத வேண்டும். ஊடுருவும் தொற்று காரணமாக, சில முறைகள் இளகிய மலம் மற்றும் வாந்தி எடுத்தல் ஆகியவை உருவாகலாம். இவற்றின் காரணம் குளிர்காய்ச்சல், நுண்ணுயிரிகள் இரத்தவோட்டத்தில் நுழைவதால் உருவாகும் செப்டிசெமியா, சிறு நீர்ப்பாதைத் தொற்று, ஏன் மூளைக் காய்ச்சல் என்பதாகக் கூட இருக்கலாம். குடல் வால் அழற்சி, குடலேற்றம் மற்றும் ஹிர்ஸ்ஸ்ப்ரங்க் நோய் ஆகிய அறுவை சிகிச்சை தேவைப்படும் சில நிலைகளும் மருத்துவரைத் தவறான முடிவு எடுக்கத் தூண்டிவிடக் கூடும். தைராய்ட் நோய், அடிசன் நோய் போன்ற உட்சுரப்பிக் கோளாறுகளும் வயிற்றுப் போக்கினை உருவாக்கலாம். கணைய முழுமையின்மை, சிறு குத நோய்க்குறித் தொகுதி, விப்பிள் நோய், கோலியாக் நோய் மற்றும் மலமிளக்கிகளின் தவறான பயன்பாடு ஆகியவற்றைச் சாத்தியக் கூறுகளிலிருந்து விலக்கி விட வேண்டும்.[6] நுண்ணுயுர்சார் இரைப்பைக் குடல் அழற்சி இரைப்பைக் குடல் அழற்சியினை உருவாக்கும் நுண்ணுயுர்களின் பட்டியலுக்கு, மேலே காண்க: நுண்ணுயிர் எதிர் மருத்துவங்களால் சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளிகளில் பெருங்குடல் மென்தோல் அழற்சி வயிற்றுப் போக்கிற்கு முக்கியமான காரணமாகும். ஒரு குழந்தைக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு மருத்துவ மனையில் சேர்ப்பது அவசியம் என்னும் அளவில் தீவிரமானதாக இருக்குமாயின், அது நுண்ணுயிரால் உருவானதா அல்லது நச்சுயிரியினால் உருவானதா என வேறுபடுத்துவது அவசியம். ஷிகெல்லா , காம்பிலோபேக்டர் போன்ற நுண்ணுயிர்களும் கியார்டியா போன்ற ஒட்டுண்ணிகளும் நுண்ணுயிர் எதிர் மருத்துவங்கள் கொண்டு சிகிச்சை அளிக்கப்படலாம். பயணர் வயிற்றுப் போக்கு என்பது நுண்ணுயிர் காரணமாக உருவாகும் வயிற்றுப் போக்கிற்கு வழமையான ஒரு எடுத்துக் காட்டு. நச்சுயிரிசார் இரைப்பைக் குடல் அழற்சி ரோட்டோ நச்சுயிரி, நோரோ நச்சுயிரி, அடினோ நச்சுயிரி மற்றும் ஆஸ்டிரோ நச்சுயிரி ஆகியவை இரைப்பைக் குடல் அழற்சியை உருவாக்கும் நச்சுயிரிகளாகும். நச்சுயிரிகள் நுண்ணுயிர் எதிர் மருந்துகளுக்குப் பதிலிறுப்பதில்லை. இத்தொற்று அடைந்த குழந்தைகள் சில நாட்களுக்குப் பிறகு முழுவதுமாக குணமடைந்து விடுகின்றனர்.[7] இரைப்பைக் குடல் அழற்சிக்காக மருத்துவ மனையில் சேர்க்கப்படும் குழந்தைகள் முறையாக ரோட்டோ ஏ நச்சுயிரிக்காக சோதிக்கப்படுகின்றனர். இதன் மூலம், ரோட்டோ நச்சுயிரி தடுப்பூசி நிரல்களுக்குத் தேவையான கொள்ளை நோய் பற்றிய தகவல்களைச் சேகரிக்க முடிகிறது.[8][9] நோரோ நச்சுயிரிக்காகவும் இக்குழந்தைகள் முறையாக சோதிக்கப்படுகின்றனர். இது மிகவும் தீவிரமான ஒரு தொற்றாகும். இது மேலும் பரவாமல் தடுக்க இத்தொற்று கண்டவர்களை மற்ற நோயாளிகளிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும். எதிர் மின்ம நுண்ணோக்காடி மற்றும் பாலக்ரிமைட் மின்சுமைப் பெயர்ச்சி போன்ற பிற முறைமைகளும் ஆராய்ச்சிக் கூடங்களில் பயன்படுத்தப்படுகின்றன.[10][11] அறிகுறிகளும் குறிகளும் இரைப்பைக் குடல் அழற்சியானது பொதுவாக வயிற்று வலி அல்லது பிடிப்புகள், வயிற்றுப் போக்கு மற்றும்/ அல்லது வாந்தி எடுத்தல் உடனான சிறு குதக் குடலின் வீக்கமற்ற தொற்று அல்லது குதம் வீக்கமுள்ள தொற்று கொள்வது ஆகியவற்றை ஈடுபடுத்துகிறது.[1][6][12][13] இந்நிலை பொதுவாக தீவிரமாகவே துவங்கி, சாதாரணமாக ஒன்று முதல் ஆறு நாட்கள் வரை நீடித்துப் பின் தானாகவே அடங்கி விடுகிறது. குமட்டல் மற்றும் வாந்தி எடுத்தல் வயிற்றுப் போக்கு பசியின்மை காய்ச்சல் தலைவலிகள் அசாதாரணமான காற்றுப் பிரிதல் அடிவயிற்றில் வலி அடிவயிற்றுப் பிடிப்புகள் காபிலோபேக்டர் , சால்மோனெல்லா , ஷிகெல்லா அல்லது சில வகையான இரத்தவியல் சார்ந்த ஈஸ்ச்செர்ச்சியா கோலி போன்ற அமீபாக்களின் மூலம் உருவான தொற்றினை சுட்டிக்காட்டுவதான இரத்தம் தோய்ந்த மலம்: வயிற்றுக் கடுப்பு.[4] மயக்கமுறுதல் மற்றும் பலவீனம் சிசுக்களுக்கு மிகவும் குறைவாக உணவளிப்பதே இதன் பிரதான காரணமாக உள்ளது. வயிற்றுப் போக்கு பொதுவானதாக இருந்து, வாந்தி எடுத்தல் இதைத் தொடரக் கூடும். நச்சுயிரி காரணமாக உருவாகும் வயிற்றுப் போக்கு அடிக்கடி வருகின்ற நீர்ம மலங்களை உண்டாக்குகிறது. இரத்தப் போக்கு கொண்ட வயிற்றுப் போக்கு நுண்ணுயிர் காரணமாக உருவான பெருங்குடல் அழற்சியைச் சுட்டிக் காட்டுவதாக இருக்கக் கூடும். சில நேரங்களில், வயிறு காலியாக இருக்கும்போது கூட பித்த நீர் வாந்தி எடுப்பதைத் தூண்டக் கூடும். இரைப்பைக் குடல் அழற்சி கொண்ட ஒரு குழந்தை சோம்பல், தூக்கமின்மையால் அவதி, மெல்லிய காய்ச்சல், நீரிழப்பு (இதில் வறண்ட சளி போன்ற மென் தோல் அடங்கும்), மிகை இதயத் துடிப்பு, தோல் விறைப்புக் குறைவு, தோல் நிறம் மாற்றமடைதல், அமிழ்ந்த உச்சிக்குழி, அமிழ்ந்த கண்விழிகள், கண்ணைச் சுற்றிலும் கருவளையம், மிகக் குறைவான உறுப்பு வழி செலுத்துதல் மற்றும் இறுதியாக நரம்பதிர்ச்சி போன்ற அறிகுறிகளைக் கொண்டு இருக்கும். நோய் கண்டறிதல் அறிகுறிகள், முழுமையான ஒரு மருத்துவ வரலாறு மற்றும் ஒரு உடற்பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையிலேயே இரைப்பைக் குடல் அழற்சி நோய் கண்டறியப்படுகிறது. துல்லியமான ஒரு மருத்துவ வரலாறு, நோயாளியின் குடும்பத்தில் இருக்கும் பிற உறுப்பினர்களுக்கு நோயை ஒத்த அறிகுறிகள் இருப்பது அல்லது இல்லாதிருப்பதைச் சுட்டிக் காட்டப் பயனுள்ள தகவல்களை அளிக்கும். நோயாளி மலம் கழிக்கும் நேரம், அதன் அடுக்கு நிகழ்வு மற்றும் விபரம் மற்றும் அவர் வாந்தி எடுக்கும் அனுபவம் கொண்டிருக்கிறாரா என்பவையும் பொருத்தமானவை. இந்த வினாக்கள் மருத்துவர் நோயாளியைச் சோதிக்கையில் வழக்கமாகக் கேட்பவையாகும்.[14] எளிய இரைப்பைக் குடல் அழற்சி கொண்டுள்ள நோயாளிகளில் பெரும்பான்மையோருக்குக் குறிப்பிட்ட நோய் கண்டறியும் பரிசோதனைகள் தேவைப்படுவதில்லை. காய்ச்சல், இரத்தம் சேர்ந்த மலம் மற்றும் வயிற்றுக் கடுப்பு போன்ற அறிகுறிகள் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கும் மேலாக இருப்பின், மலப் பரிசோதனை மூலம் குளோஸ்டிரிடியம் டிஃபிசைல் மற்றும் சல்மொனெல்லா, ஷிகெல்லா, காம்பிலோபேக்டர் மற்றும் எண்டரோடாக்சிக் எஸ்ச்செர்ச்சியா கோலி போன்ற நுண்ணுயிர்கள் இருக்கின்றனவா எனப் பரிசோதித்துப் பார்ப்பது அறிவுடமையாகும். ஒட்டுண்ணிகள், கருவுறாத முட்டைகள் மற்றும் நீர்க்கட்டிகளைக் கண்டறியவும் நுண்ணோக்கிப் பரிசோதனை உதவும். இரைப்பைக் குடல் அழற்சியைக் கண்டறிவதில் ஒரு முழுமையான மருத்துவ வரலாறு உதவலாம். ஒரு நோயாளியின் முழுமையான மற்றும் துல்லியமான மருத்துவ வரலாற்றில் அவரது பயண வரலாறு, நச்சுகளுக்கு வெளிப்பாடு அல்லது இதர உறுத்திகள், உணவுப் பழக்கத்தில் மாற்றம், உணவு தயாரிப்பு அல்லது சேமிப்பு வழக்கங்கள் மற்றும் மருத்துவங்கள் ஆகியவை அடங்கும். பயணம் செய்யும் நோயாளிகள் பானங்கள் மற்றும் உணவு ஆகியவற்றில் உள்ள ஈ.கோலி தொற்றுகள் மற்றும் ஒட்டுண்ணித் தொற்றுகளுக்கு வெளிப்படலாம். மாசுற்ற நீரில் நீந்துதல் அல்லது ஐயத்திற்கு இடமான மலை ஊற்று அல்லது கிணறுகள் ஆகியவற்றில் உள்ள புது நீரை அருந்துதல் ஆகியவை கியார்டியா மூலம் பெறும் தொற்றினை உண்டாக்கலாம். இது வயிற்றுப் போக்கை உருவாக்கும் நீரில் காணப்படும் ஒரு உயிரினமாகும். அரைகுறையாக சமைக்கப்பட்ட அல்லது முறையற்று சேமிக்கப்பட்ட உணவுக்கு நோயாளி வெளிப்படும் வேளைகளில் நச்சு உணவினால் நோய் உண்டானதா என்பதையும் பரிசீலிக்க வேண்டும். நோயை உண்டாக்கும் நுணணுயிரின் வகையைப் பொறுத்து, இதன் பின் விளைவுகள் இரண்டு முதல் 72 மணி நேரங்கள் வரை உருவாகலாம். முறையான நோய் கண்டறிதல் மற்றும் திறன் மிக்க சிகிச்சைத் திட்டம் ஆகியவற்றிற்கு, எந்தத் தொற்றின் காரணமாக நோய் உருவானது என்பதை அறிவது அவசியம். நோயாளிகள் தங்களது அண்மைய மருத்துவங்களில் பரந்து பட்ட அல்லது பல்வேறான நுண்ணுயிர் எதிர் மருந்துகளைப் பயன்படுத்தியுள்ளனரா என அறிய மருத்துவர் விரும்பலாம். அவ்வாறு இருந்தால், இரைப்பைப் பாதையின் உறுத்தலுக்கு அவையே காரணமாக இருக்கலாம். உடற்பரிசோதனையின்போது, தொற்றிற்கான இதர சாத்தியங்களை மருத்துவர் ஆராய்வார். குடல்வால் நோய், பித்தச்சவ்வுப்பை நோய், கணைய அழற்சி, பதுங்கழல் போன்ற மருத்துவ நிலைகள் இதனை ஒத்த அறிகுறிகளை உருவாக்கலாம். ஆனால், உடற்பரிசோதனையினை மேற்கொள்கையில், இத்தகைய நிலைகளில் மென் அடிவயிறு புலப்படும். இரைப்பைக் குடல் அழற்சியில் இவ்வாறு இருக்காது. இரைப்பைக் குடல் அழற்சியினைக் கண்டறிவது என்பது பிரதானமாக ஒரு விலக்கு-நடைமுறையே. ஆகவே, இரைப்பைக் குடல் அழற்சியை நோயினைக் கண்டறிய இயலாத அரிதான நேரங்களில், இரைப்பைக் கோளாறுகள் இல்லை என்பதை உறுதி செய்யப் பல பரிசோதனைகள் செய்யப்படலாம். இவற்றில் குதப் பரிசோதனை, முழு இரத்த அணுக் கணக்கு, மின்பகுளி மற்றும் சிறுநீரகச் செயல்பாடு பரிசோதனைகள் ஆகியன அடங்கும். இருப்பினும், அறிகுறிகள் தீர்மானமாகத் தென்படுகையில், இரைப்பைக் குடல் அழற்சியைக் கண்டறிய, குறிப்பாக நோயாளி உயர்-நிலை ஆபத்து மிகுந்த பகுதிகளுக்கு பயணப்பட்டிருக்கையில், மலப் பரிசோதனையைத் தவிர வேறு பரிசோதனைகளுக்கு அவசியம் இல்லை. தடுப்பு முறைகள் ரோட்டோ நச்சுயிரித் தடுப்பூசி அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 2000 ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான இரைப்பைக் குடல் அழற்சி நிகழ்வெண்ணிக்கையைக் குறைத்துள்ளது.[15] நோய் எதிர்ப்புச் சக்தியின் மூலமும் இரைப்பைக் குடல் அழற்சியினைத் தடுக்கலாம்.[16] அமெரிக்க ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் 2006ஆம் ஆண்டில் ரோட்டடெக் என்னும் ரோட்டோ நச்சுயிரி ஒன்றினை ஆறு முதல் 32 வாரங்கள் வரையிலான சிசுக்களுக்கு, அவை நச்சுயிரி சார் இரைப்பைக் குடல் அழற்சி நோய் பெறாமல் இருப்பதற்காக, அளிக்கலாம் என அங்கீகரித்தது.[17] இருப்பினும், இத்தடுப்பூசிகளால் குளிர் காய்ச்சலை ஒத்த அறிகுறிகள் விளையலாம். சல்மொனெல்லி டைஃபி மற்றும் விபிரியோ காலரா ஆகிய நச்சுயிரிகளுக்கு பலவகையான தடுப்பூசிகள் கிடைக்கப் பெறுகின்றன. இவை உயர்-நிலை ஆபத்து உள்ள இடங்களுக்குப் பயணப்படும் மக்களுக்குச் செலுத்தப்படுகின்றன. இருப்பினும், ரோட்டோ நச்சுயிரிகள் தவிர இதர நச்சுயிரிகளால் உருவாகும் இரைப்பைக் குடல் அழற்சிக்குத் தற்போது கிடைக்கப்பெறும் தடுப்பூசிகள் திறனுள்ளவையாக இல்லை. முறையான சுகாதாரம் சார்ந்த வழிமுறைகளை, குறிப்பாக இத்தகைய நோய்க்கு ஏதுவான நிலையில் இருப்பவர்கள், கடைப்பிடிப்பதன் மூலம் இந்நோயைத் தடுக்க இயலும். உணவு உண்பதற்கு முன்பும், கழிவறையைப் பயன்படுத்திய பிறகும் அல்லது கழிவாடைகளை மாற்றிய பின்னரும் சுத்தமாகக் கைகளைக் கழுவிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், மாசுற்ற உணவு அல்லது பானங்களை அருந்தாமல் இருத்தலும் வேண்டும். நச்சுயிரினால் வரும் இரைப்பைக் குடல் அழற்சி நோய் ஒரு கடுமையான தொற்றாகும். இதனால், கூட்டமடர்ந்த சந்தைகள், திரையரங்குகள், கடைத்தெருக்கள் ஆகியவற்றைத் தவிர்ப்பதும் இந்நோய்க்கு பலவீனமான எதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கு உதவக் கூடும். இரைப்பைக் குடல் அழற்சியினைத் தடுக்க, முறையாகச் சமைக்கப்பட்டு, சேமிக்கப்பட்ட உணவினையை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும், மாசுற்ற ஆடைகளை வெளுப்பதும் நுண்ணுயிர் பரவுதலைத் தடுக்கும். இதற்கு மறுபுறமாக, மாசுற்ற இடங்களில் இல்லத்தில் பயன்படும் குளோரின் கொண்டு வெளுத்தல் என்னும் அடிப்படையிலான பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலமும் தொற்றிற்கான வாய்ப்புக்களைக் குறைக்கலாம்.[18] நிர்வகித்தல் இரைப்பைக் குடல் அழற்சி பொதுவாகத் தீவிரமானதாகவும், தானாகவே தீர்ந்து விடுவதாகவும் உள்ள ஒரு நோய். இதற்கு மருந்து சார்ந்த சிகிச்சை தேவைப்படுவதில்லை.[19] சிகிச்சையின் நோக்கம் இழந்துபட்ட நீர்மங்கள் மற்றும் மின்பகுளிகள் ஆகியவற்றை மீண்டும் அளிப்பதே. குழந்தைகளில் இத்தகைய மிதமானது முதல் நடுத்தரமான நீரிழப்புகளைச் சமன்படுத்த வாய்வழி வறட்சி நீக்கல் சிகிச்சை முறையே விரும்பத்தக்கதாகும்.[20] இருப்பினும், குழந்தைகளில் மெட்டோகுளோப்ரமைட் மற்றும் ஓண்டாஸ்டிரான் ஆகியவை பலன் அளிக்கக் கூடும்.[21] வறட்சி நீக்கல் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஆகிய இருவருக்குமே வறட்சி நீக்கல் அதாவது இழந்துபட்ட நீர் மற்றும் மின்பகுளிகளை மீண்டும் அளிப்பதே முதன்மையான சிகிச்சை. நோயாளிக்கு வாய்வழி வறட்சி நீக்கல் சிகிச்சை அளிப்பதன் மூலம் இது விரும்பத்தக்க வகையில் சாத்தியமாகிறது. இருப்பினும், நோயாளியின் நினவு நிலை குறைந்தாலோ அல்லது குடல் அடைப்பு தென்பட்டாலோ, சிரைவழியாகச் செலுத்துவதும் அவசியமாகலாம்.[22][23] கோதுமை அல்லது அரிசியிலிருந்து உருவாக்கப்படும் நுணுக்கமான- மாவுச்சத்து அடிப்படையிலான வாய் வழி வறட்சி நீக்க உப்புக்கள் (Oral Rehydration Salts - ஓஆர்எஸ்) எளிய சர்க்கரை அடிப்படையிலான ஓஆர்எஸ் பொருட்களை விட அதிகத் திறன் கொண்டவையாகக் காணப்படுகின்றன.[24] ஐந்து வயதிற்கும் கீழான குழந்தைகளுக்கு மென்பானங்கள் மற்றும் பழரசங்கள் போன்ற சர்க்கரை மிகுந்த பானங்கள் பரிந்துரைக்கப்படுவதில்லை. காரணம், இவை வயிற்றுப் போக்கினை அதிகரிக்கக் கூடும் என்பதேயாகும்.[19] குறிப்பிட்ட ஓஆர்எஸ் கிடைக்கப் பெறவில்லை எனில் அல்லது அது ருசிக்கவில்லை எனில், வெறும் நீரினைக் கூடப் பயன்படுத்தலாம்.[19] உணவு முறைமை வாய்வழி வறட்சி நீக்கல் கரைசல் அளித்தபின், தாய்ப்பால் பெறும் குழந்தைகளுக்குத் தேவையின்பேரில் தாய்ப்பால் அளிப்பதும், கலவை முறை உணவு பெறும் குழந்தைகளுக்கு அவை தமது கலவை உணவை உடனடியாகத் தொடர்வதும் பரிந்துரைக்கப்படுகின்றன. மாவுச்சத்து - அற்ற அல்லது மாவுச்சத்து குறைந்த கலவைகள் பொதுவாகத் தேவைப்படுவதில்லை.[25] பாதியளவு திட அல்லது திட உணவு பெறும் குழந்தைகள் தங்களது வழக்கமான உணவினையே வயிற்றுப் போக்கின் நிகழ்வுகளின் போதும் பெறலாம். எளிய சர்க்கரை மிகுந்த உணவுகள் தவிர்க்கப்படவேண்டும். காரணம், சவ்வூடு பரவுச் சுமையானது வயிற்றுப் போக்கினை அதிகரிக்கலாம். ஆகவே, மென் பானங்கள், பழ ரசங்கள் மற்றும் இதர அதிக சர்க்கரை கொண்டுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.[25] உணவைத் தவிர்ப்பது என்பது பரிந்துரைக்கப்படுவதில்லை. மாறாக, உடனடியாக, வழமையான உணவுப் பழக்கத்தை மேற்கொள்வதே ஊக்குவிக்கப்படுகிறது.[26] பிராட் உணவு முறை (BRAT) (அதாவது வாழைப்பழங்கள், சோறு, ஆப்பிள் பழச்சாறு, வாட்டடை ஆகியவை கொண்ட உணவு) தற்போது பரிந்துரைக்கப்படுவதில்லை. காரணம், இதில் உள்ள சத்துக்கள் போதுமானவையாக இல்லாதிருப்பதும் மற்றும் வழமையான உணவினை விட அதிகப் பலன்கள் ஒன்றும் இதில் இல்லை என்பதுமேயாகும்.[27] மருத்துவங்கள் வாந்தியடக்கிகள் வாந்தி எடுக்கும் குழந்தைகளுக்கு வாந்தியடக்கிகள் பலன் அளிக்கலாம். சிரைவழியாக நீர்மங்கள் செலுத்துதல், மருத்துவ மனையில் சேர்த்தல் மற்றும் வாந்தி எடுத்தல் ஆகியவற்றின் குறைவான எண்ணிக்கையுடன் ஓண்டஸ்டிரான் மருந்தின் ஒரு மருந்தளவு தொடர்புற்றுள்ளது.[28][29][30] மெட்டோகுளோபிரமைட் மருந்தும் பலன் அளிக்கலாம்.[31] நுண்ணுயிர்- எதிர்வினைப் பொருட்கள் நுண்ணுயிர் எதிர்வினைப் பொருட்கள் பொதுவாக இரைப்பைக் குடல் அழற்சிக்குப் பயன்படுத்தப்படுவதில்லை. ஆயினும், சில நேரங்களில் (வயிற்றுக் கடுப்பு[32] போன்ற) அறிகுறிகள் மிகவும் தீவிரமாக இருந்தாலோ அல்லது நுண்ணுயிர்தான் காரணம் என தனிமைப்படுத்தப்பட்டால் அல்லது ஐயம் இருந்தால், இவை பயன்படுத்தப்படுகின்றன.[33] இவ்வாறு நுண்ணுயிர் எதிர் வினைப் பொருட்களை அளிப்பது என்று முடிவாகி விட்டால், பெரும்பாலும், ஃப்ளூரோகுவினோலோன் அல்லது மாக்ரோலைட் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.[12] நுண்ணுயிர் எதிர்வினைப் பொருட்களால் பொதுவாக உருவாகும் பெருங்குடல் மென்தோல் அழற்சி இதற்குக் காரணமான மருந்தை நிறுத்துவதன் மூலமும், மெட்ரோனிடஜோல் அல்லது வாங்கோமைசின் கொண்டு சிகிச்சை அளிப்பதன் மூலமும் மேலாண்மை செய்யப்படுகிறது.[12][13] இயக்க-எதிர்ச் செயலிகள் கருத்தாக்க ரீதியாக இயக்க எதிர்ச் செயலி மருந்துகளால் சிக்கல்கள் உருவாகலாம். இருப்பினும், மருந்தக அனுபவங்கள் இத்தகைய நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டவில்லை.[6][12] இரத்தப் போக்குள்ள வயிற்றுப் போக்கு அல்லது காய்ச்சலும் கூடிய வயிற்றுப் போக்கு கொண்டுள்ளவர்களுக்கு இவை அளிக்கப்படுவதில்லை.[1] ஓபியாட் என்பதன் ஒத்த பொருளான லோபர்மைட் வயிற்றுப் போக்கிற்கான அறிகுறி அடிப்படையில் அமைந்த மருத்துவமாகும்.[12] குழந்தைகளில் இது மூளையின் முதிராத குருதித் தடுப்பானைத் தாண்டி நச்சு விளைக்கக் கூடும் என்பதால், அவர்களுக்கு இதைப் பரிந்துரைப்பதில்லை. மூவிணைத் திறன் மருந்தான பிஸ்மத் மற்றும் சாலிசிலேட்டுகள் கொண்ட நீர்மத்தில், கரையாத பல்கூட்டுப் பொருளான பிஸ்மத் சப்சாலிசிலேட் (பிஎஸ்எஸ்) மிதமான-நடுத்தர நிகழ்வுகளில் பயன்படலாம்.[6][12] மாற்று மருந்து உயிரிய ஆதரவுப் பொருட்கள் இரைப்பைக் குடல் அழற்சியின் பல்வேறு வடிவங்களைத் தடுப்பதிலும், சிகிச்சை அளிப்பதிலும், சில வகையான உயிரிய ஆதரவுப் பொருட்கள் பலன் அளிக்கின்றன.[27] நொதித்தலுக்கு உட்படுத்தப்பட்ட (கட்டித்தயிர் போன்ற) பால் பொருட்களும் அறிகுறிகளின் கால அளவினைக் குறைக்கின்றன.[34] துத்தநாகம் உலக சுகாதார நிறுவனம், குழந்தைகளும் சிசுக்களும் இரைப்பைக் குடல் அழற்சி துவங்கிய பின்னர் இரண்டு வாரங்கள் வரையிலும் இணைப்புணவாக துத்தநாகம் பெற வேண்டும் என பரிந்துரைக்கிறது.[35] இருப்பினும், இத்தகைய இணைப்புணவினால் பலன் ஏதும் இருப்பதாக 2009ஆம் ஆண்டு நிகழ்த்திய ஒரு சோதனையில் தெரியவரவில்லை.[36] சிக்கல்கள் நீரிழப்பு என்பது வயிற்றுப் போக்கு காரணமாக ஏற்படும் பொதுவான ஒரு சிக்கல். நீர் அருந்தாமல் இருப்பது அல்லது பழரசம்/ பானங்கள் ஆகியவற்றைச் செலுத்துதல் ஆகியவற்றின் மூலம் அது மேலும் மோசமடையலாம்.[37] பாலைப் பிரதானமாகக் கொண்டுள்ள சர்க்கரையான மாவுச்சத்து முறையற்று உட்கொள்ளப்படுவதனால் இது உருவாகலாம். வயிற்றுப் போக்கினை அதிகரிப்பினும்[38], தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி விடக் கூடாது. நோய்ப்பரவு இயல் ஒவ்வொரு வருடமும், ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் ரோட்டோ நச்சுயிரி இரைப்பைக் குடல் அழற்சியின் 11 மில்லியன் நிகழ்வுகள் மற்றும் ஏறத்தாழ அரை மில்லியன் மரணங்களை உருவாக்குகிறது. இவற்றில் 82 சதவிகிதம் உலகின் ஏழை நாடுகளிலேயே நிகழ்கிறது.[39] 1980ஆம் ஆண்டு பல்வேறு காரணங்களினாலும் விளைந்த இரைப்பைக் குடல் அழற்சியினால் 4.6 மில்லியன் குழந்தைகள் மரணம் அடைந்தனர். இவற்றில் பெரும்பான்மையானவை மூன்றாம் உலகில் நிகழ்ந்தவையே.[13] போதுமான அளவு பாதுகாப்பான நீர் மற்றும் கழிவு நீர் சுத்தகரிப்பு ஆகியவை இல்லாமையே இரைப்பைக் குடல் அழற்சித் தொற்று பரவுதலுக்குப் பங்களிக்கின்றன. தற்போது மரண விகிதங்கள் பெருமளவு குறைந்து, வருடத்திற்குச் சுமார் 1.5 மில்லியன் என்னும் கணக்கிலாக 2000ஆம் ஆண்டில் குறைந்து விட்டன. உலகெங்கும் வாய்வழி வறட்சி நீக்கல் சிகிச்சை அறிமுகமானதே இதற்கு முக்கிய காரணமாகும்.[40] வளர்ந்த நாடுகளில் நிகழ்வுகளின் எண்ணிக்கையானது ஒரு குழந்தைக்கு ஒரு வருடத்திற்கு 1-2.5 என்பதாக உள்ளது. இந்த வயதுக் குழந்தைகள் மருத்துவ மனையில் சேர்க்கப்படுவதற்கு இதுவே முதன்மையான காரணமாகவும் உள்ளது. வயது, வாழும் சூழல், சுகாதாரம் மற்றும் கலாசார ரீதியான வழக்கங்கள் ஆகியவை முக்கிய காரணிகள். தட்பவெப்ப நிலையைப் பொறுத்து நோயின் மூலக் காரணிகள் மாறுபடும். மேலும், குளிர் காலங்களிலும், மித வெப்ப பருவ நிலைகள் மற்றும் வெப்ப மண்டலங்களில் வேனிற்காலங்களிலும் இரைப்பைக் குடல் அழற்சியின் பெரும்பான்மையான நிகழ்வுகள் உருவாகின்றன.[13] வரலாறு 20ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் "இரைப்பைக் குடல் அழற்சி" என்னும் சொல் பொதுவான பயன்பாட்டில் இல்லை. தற்போது இரைப்பைக் குடல் நோய் எனக் கண்டறியப்படுவது, அக்காலங்களில், மேலும் குறிப்பாக , குடற்காய்ச்சல், அல்லது "காலரா மொபஸ்" போன்றவையாகவோ அல்லது குறைவான அளவில் , "குடல் இறுக்கம்", "முகு நிலை", "ஒழுக்கி", "சூலை", "குதப் பிரச்சினை" என்பனவாகவோ அறியப்பட்டன.[41] அண்மைக்காலம் வரையிலும் இரைப்பைக் குடல் நோய் என்பது குறிப்பான ஒரு நோயாகக் கண்டறியப்படவில்லை என்பதை, வரலாற்றாசிரியர்கள், பரம்பரை இயலாளர்கள் மற்றும் இதர ஆராய்ச்சியாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். 1850ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் ஒன்பதாம் நாள் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபர் ஜாச்சாரி டெய்லர் இரைப்பைக் குடல் அழற்சி காரணமாக இறந்தார்.[42] குறிப்புதவிகள் புற இணைப்புகள் CS1 maint: discouraged parameter (link) பகுப்பு:அழற்சி பகுப்பு:மேற்கோள் வழுவுள்ள பக்கங்கள்-கூகுள் தமிழாக்கம் பகுப்பு:வயிற்றுவலி நோய்கள் பகுப்பு:கூகுள் தமிழாக்க மருத்துவக் கட்டுரைகள்
இரைப்பைக் காய்ச்சல் எந்த வகையான நோய்?
தொற்று
437
tamil
003332744
தமிழ்நாட்டில் பல்வேறு மொழிகளை பேசிவரும் மக்கள் வசித்து வருகின்றனர்.அவர்களின் எண்ணிக்கை மொழிவாரியாக கீழே தரப்பட்டுள்ளன. தமிழ் இந்தியாவில் மொத்தம் 6,07,93,814 மக்கள் தமிழ் மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 5,57,98,916 மக்கள் வசித்து வருகின்றனர். தெலுங்கு இந்தியாவில் மொத்தம் 7,40,02,856 மக்கள்தெலுங்கு மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 35,27,594 மக்கள் வசித்து வருகின்றனர். கன்னடம் இந்தியாவில் மொத்தம் 3,79,24,011 மக்கள் கன்னடம் மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 10,45,238 மக்கள் வசித்து வருகின்றனர். உருது இந்தியாவில் மொத்தம் 5,15,36,111 மக்கள் உருது மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 942,299 மக்கள் வசித்து வருகின்றனர். மலையாளம் இந்தியாவில் மொத்தம் 3,30,66,392 மக்கள் மலையாளம் மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 5,57,705 மக்கள் வசித்து வருகின்றனர். சௌராட்டிரம் இந்தியாவில் மொத்தம் 10,60,91,617 மக்கள் சௌராட்டிர மொழியை பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 9,02,621 மக்கள் வசித்து வருகின்றனர். இந்தி இந்தியாவில் மொத்தம் 42,20,48,642 மக்கள் இந்தி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 1,89,474 மக்கள் வசித்து வருகின்றனர். மராத்தி இந்தியாவில் மொத்தம் 7,19,36,894 மக்கள் மராத்தி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 60,614மக்கள் வசித்து வருகின்றனர். ஆங்கிலம் இந்தியாவில் மொத்தம் 2,26,449 மக்கள் ஆங்கிலம் மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 25,151 மக்கள் வசித்து வருகின்றனர். வங்காளம் இந்தியாவில் மொத்தம் 8,33,69,769 மக்கள் வங்காளம் மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 8,805 மக்கள் வசித்து வருகின்றனர். சிந்தி இந்தியாவில் மொத்தம் 25,35,485 மக்கள் சிந்தி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 7,375 மக்கள் வசித்து வருகின்றனர். ஒரியா இந்தியாவில் மொத்தம் 3,30,17,446 மக்கள் ஒரியா மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 6,154 மக்கள் வசித்து வருகின்றனர். பஞ்சாபி இந்தியாவில் மொத்தம் 2,91,02,477 மக்கள் பஞ்சாபி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 5,696 மக்கள் வசித்து வருகின்றனர். கொங்கணி இந்தியாவில் மொத்தம் 24,89,015 மக்கள் கொங்கணி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 4,657 மக்கள் வசித்து வருகின்றனர். நேபாளி இந்தியாவில் மொத்தம் 28,71,749 மக்கள் நேபாளி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 4,323 மக்கள் வசித்து வருகின்றனர். துளு இந்தியாவில் மொத்தம் 17,22,768 மக்கள் துளு மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 1,872 மக்கள் வசித்து வருகின்றனர் அசாமிய இந்தியாவில் மொத்தம் 1,31,68,484 மக்கள் அசாமிய மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 527 மக்கள் வசித்து வருகின்றனர். அரபி இந்தியாவில் மொத்தம் 51,728 மக்கள் அரபி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 404 மக்கள் வசித்து வருகின்றனர் மணிப்பூரி இந்தியாவில் மொத்தம் 14,66,705 மக்கள் மணிப்பூரி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 370 மக்கள் வசித்து வருகின்றனர். காஷ்மீரி இந்தியாவில் மொத்தம் 55,27,698 மக்கள் காஷ்மீரி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 277 மக்கள் வசித்து வருகின்றனர். தோர்கி இந்தியாவில் மொத்தம் 22,82,589 மக்கள் தோர்கி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 140 மக்கள் வசித்து வருகின்றனர். மைதிலி இந்தியாவில் மொத்தம் 1,21,79,122 மக்கள் மைதிலி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 79 மக்கள் வசித்து வருகின்றனர். சந்த்தாளி இந்தியாவில் மொத்தம் 64,69,600 மக்கள் சந்த்தாளி மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 61 மக்கள் வசித்து வருகின்றனர். சமஸ்கிருதம் இந்தியாவில் மொத்தம் 14,135 மக்கள் சமஸ்கிருதம் மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 50 மக்கள் வசித்து வருகின்றனர். போடோ இந்தியாவில் மொத்தம் 13,50,478 மக்கள் போடோ மொழியை பேசி வருகின்றனர்.அவர்களில் தமிழ்நாட்டில் 29 மக்கள் வசித்து வருகின்றனர். பழங்குடிமொழிகள் தமிழ்நாட்டில் ஆதி மொழியை 298 நபர்களும், பிலிமொழியை 708 நபர்களும், கொடகுமொழியை 111 நபர்களும், காரோமொழியை 17 நபர்களும், கோண்டிமொழியை 30 நபர்களும், ஹாலம்மொழியை 10 நபர்களும், கர்பிமொழியை 29 நபர்களும், காந்தேசிமொழியை 67 நபர்களும், காரியாமொழியை 14 நபர்களும், கோண்ட்மொழியை 20 நபர்களும், கோடமொழியை 262 நபர்களும், கோர்வாமொழியை 14 நபர்களும், குரூக்மொழியை 76 நபர்களும், லஹவ்லிமொழியை 33 நபர்களும், லஹண்டாமொழியை 37 நபர்களும், லுசாய்மொழியை 82 நபர்களும், முண்டாமொழியை 30 நபர்களும், முண்டாரிமொழியை 14 நபர்களும், நிகோபரிசிமொழியை 25 நபர்களும், பார்ஜிமொழியை 10 நபர்களும், பார்சிமொழியை 8 நபர்களும், தாடோமொழியை 56 நபர்களும், திபேதிமொழியை 191 நபர்களும் பேசி வருகின்றனர் ஆதாரம் பகுப்பு:தமிழ்நாடு பகுப்பு:இந்திய மொழிகள்
தமிழ்நாட்டில் பேசப்படும் மொழி எது?
தமிழ்
0
tamil
fd235557c
செம்பருத்தி அல்லது செவ்வரத்தை (Hibiscus rosa-sinensis) என்பது இந்தியா,இலங்கை போன்ற வரள்வலய இடங்களில் வளரும் தாவர இனம் ஆகும். இது செடி இனத்தை சார்ந்தது. இதன் பூமருத்துவ குணங்களை கொண்டதாகும். இது கிழக்கு ஆசியாவில் தோன்றிய ஒரு தாவரமாகும். இது சீன ரோஜா எனவும் அழைக்கப்படுகிறது[1] . இது மலேசியாவின் தேசிய மலராகும். இது பொதுவாக அழகுத்தாவரமாக வளர்க்கப்படுகிறது. ஆயுர்வேதத்தில் இது ஜபா புஸ்பா, ருத்ர புஷ்ப, ரக்த கார்பாச என்றும் அழைக்கப்படுகிறது பதியமுறை இனப் பெருக்கம் இச்‌செடி விதைகளின் மூலம் இனப்பெருக்கம் செய்வதில்லை. தண்டுத் துண்டம் மூலம் பதியமுறையில் எளிதாக இனம் பெருக்கலாம். ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி ரோசா-சினென்சிஸ் பெரும்பாலான மற்ற இனங்கள் போல் குரோமோசோம்களின் மேற்பட்ட முழு செட், உள்ளன இதில் பலதொகுதியாக்கும் இயல்பு எனப்படும் மரபணு பண்பு, பல தாவர இனங்கள் ஒன்றாகும். பலதொகுதியாக்கும் இயல்பு ஒரு பக்க விளைவு பிள்ளைகள் பற்றிய பீநோடைப் அடிப்படையில் முன் போயிருக்கிறார்கள் என்று அனைத்து தலைமுறைகளின் சிறப்பியல்புகளை அனைத்து (அல்லது எந்த) ஒரு சாத்தியமான சீரற்ற வெளிப்பாடு அனுமதிக்கிறது, பெற்றோர், அல்லது உண்மையில் எந்த மூதாதையர் இருந்து வேறுபட்டு இருக்கும் ஒரு நிலையில் உள்ளது. இந்த பண்பு கொண்ட, எச் ரோசா-சினென்சிஸ் புதிய பெயரிடப்பட்ட வகைகள் உருவாக்கி பல விளைவாக புதிய நாற்றுகள் மற்றும் பெரும்பாலும் பளிச்சென தனிப்பட்ட மலர்கள் வெளிப்படுத்துகின்றன மற்றும் தீர்ப்பு போட்டிகள் பிடித்து, கடந்து வந்த பொழுதுபோக்காக மற்றும் recross வகைகள் பிரபலமாக உள்ளது. மரபணு வாய்ப்புகளை சேர்க்க, ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி ரோசா-சினென்சிஸ் வெற்றிகரமாக குளிர்-ஹார்டி கலப்பினங்கள் (குளிர், ஹார்டி ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி பயிரிடு பார்க்க) உற்பத்தி, குளிர் எதிர்ப்பு ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி moscheutos மற்றும் பல வட அமெரிக்க ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி இனங்கள் கலப்பினம். பெரும்பாலும் இந்த சிலுவைகள் சந்ததி மலட்டு இருக்கிறது, ஆனால் சில இன்னும் மாறும் சிக்கலான மற்றும் இறுதியான ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி ரோசா-சினென்சிஸ் வகைகள் ஒரு கிட்டத்தட்ட வரம்பற்ற வாய்ப்பு அதிகரிக்கும், வளமான இருக்கும். இது மேலும் குளிர் பகுதிகளில் தொலைவுகளுக்கு உட்பட உலகம் முழுவதும் இந்த வெப்பமண்டல தாவரங்கள் பயிற்சி இந்த பொழுதுபோக்கு மேலும் உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புக்கள், சங்கங்கள், வெளியீடுகள், மற்றும் கையேடுகள் உருவாக்கிய பொழுதுபோக்காக,,, கவர்கிறது பயன்கள் இச்செடியின் பூக்கள் தலை முடி அழகுக்காக பல வழிகளில் பயன்படுகிறது. இதனை பசிபிக் தீவுகளில் உணவாகவும் மக்கள் உட்கொள்கின்றனர். சீன மருத்துவ முறைகளிலும் இந்தப் பூ பயன்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் அழகுப்பொருளாகவும், தலையில் சூடிக்கொள்ளவும், கடவுளை வழிபடவும் இந்த செடியின் பூ பயன்படுகிறது. காலணிகளை பொலிவூட்டவும் இந்த பூவின் இதழ்களை பயன்படுத்தலாம். ஜமாய்க்காவில் இந்தப் பூவை வயிற்றில் உண்டான கருவை கலைக்கவும் பயன்படுத்துகின்றனர். மருத்துவக் குணங்கள் செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை. வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணமாக்கும். (பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.) கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் கருஉருவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. (செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.) மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கும். (செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, தலையிடி, மயக்கம் போன்றவை குறையும்.) வெள்ளைப்படுதலைக் குணமாக்கும். (செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும். விற்பனை இச் செடி இரசியா போன்ற குளிர் நாடுகளில் காலநிலைமாற்றங்களை தாண்டி வளரக்கூடியது. எனவே இது வீடுகளில் அலங்காரச்செடியாக வளர்க்கப்படுகின்றது. இரு மீற்றர் (மீட்டர்) வளர்ந்த செடி அங்கு 250$-க்கு விற்கப்படுகின்றது. பூக்கள் பூக்கள் பல நிறங்களிலும், பல அடுக்கு இதழ்களை கொண்டதாகவும் காணப்படுகின்றன. இது தவிர கலப்புப் பிறப்பாக்கம் மூலமும் பல்நிற பூக்களை உருவாக்க முடியும். மேற்கோள்கள் பகுப்பு:மூலிகைகள் பகுப்பு:மலர்கள் பகுப்பு:மெய்யிருவித்திலையிகள்
செம்பருத்தியின் உயிரியலில் பெயர் என்ன?
Hibiscus rosa-sinensis
31
tamil
e55cb82d5
கல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இது காவிரி மீது கட்டப்பட்டுள்ளது. இது திருச்சிக்கு மிக அருகில் உள்ளது. இந்த அணை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி ஆறு முக்கொம்பில் வடபுறமாக கொள்ளிடம்,தென்புறமாக காவிரி என இரண்டாகப் பிரிகிறது.இவ்விடத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் மேலணை கட்டப்பட்டுள்ளது. காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் இடையில் திருவரங்கம் ஆற்றுத்தீவு உள்ளது. அங்கிருந்து காவிரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது. அங்கு காவிரி ஆறானது உள்ளாறு(கொள்ளிடம்), காவிரி , வெண்ணாறு, புது ஆறு, என 4 ஆகப் பிரிகிறது. உள்ளாறு(கொள்ளிடம்) மீண்டும் கொள்ளிடத்தில் இணைகிறது. காவிரி இவ்வாறு கல்லணை கட்டப்பட்டுள்ளது. பாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புது ஆறு ஆகியவற்றிலும், வெள்ளக் காலங்களில் கொள்ளிடத்திலும் தண்ணீர் கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும். அதாவது வெள்ள காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரிக்கு இடது புறம் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் (முக்கொம்பில் காவிரியில் இருந்து பிரிந்த கிளை ஆறு ) திருப்பி விடப்படும். எனவே தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல இலட்சம் ஏக்கர் நிலம் வெள்ளத்தில் இருந்து காப்பற்றப்படுகிறது. வரலாறு இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் 2 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.[1][2][3][4] தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிக பழமையானது எனவும், தற்போதும் புழக்கத்தில் உள்ளது எனவும் அறியப்படுகிறது. இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப்படுகிறது.[5] கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி உயரம் 18 அடி. இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. அணை கட்டப்பட்ட தொழில்நுட்பம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான். ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டனர். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன. அதன் மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசி இரண்டயும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர். இதுவே இவ்வணையினைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாகும். சர் ஆர்தர் காட்டன் பங்களிப்பு இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கில பொறியாளர் கல்லணையை பல ஆண்டுகாலம் ஆராய்ந்தார். கல்லணை பலகாலம் மணல் மேடாகி நீரோட்டம் தடைப்பட்டது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தொடர்ச்சியாக வெள்ளத்தாலும் வறட்சியாலும் வளமை குன்றியது. இந்த சூழலில் 1829 இல் காவிரி பாசன பகுதி தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் சர் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்டார். இவர்தான் பயனற்று இருந்த கல்லணையில் தைரியமாக சிறு சிறு பகுதியாய் பிரித்து எடுத்து மணல் போக்கிகளை அமைத்தார். அப்போது, கல்லணைக்கு அமைக்கப்பட்ட அடித்தளத்தை ஆராய்ந்த அவர் பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் உலகுக்கு எடுத்துக் கூறினார். கல்லணைக்கு கிரான்ட் அணைகட் என்ற பெயரையும் சூட்டினார்.[6] அணை பற்றிய பொறியியல் ஆய்வு முதல் முறையாக இந்த ஆய்வறிக்கை தில்லி இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Delhi) மேற்கொண்ட பண்டைய நூல்கள் மற்றும் கல்வெட்டுகளின் விரிவான பொறியியல் ஆய்வு மற்றும் ஆய்வுகூடத்தில் உருவகப்படுத்துதல் பற்றி தெரிவித்துள்ளது. காப்பகத் தேடல், கள ஆய்வுகள், நேரடி நில அளவை மற்றும் நீரோட்டம் பற்றிய தரவுகள் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டது. விநோதமான வடிவத்தில் கட்டப்பட்ட இந்தக் கல்லணை வண்டல் மண் அணையில் படிந்து விடாமல் கிளை ஆறான கொள்ளிடத்தில் நீரோட்டத்தில் அடித்துக்கொண்டு ஓடுவது அதிகரிக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இப்பகுதியில் பாசனத்துக்கு முதன்மையான ஆறு காவிரி. கி.பி.1800-லேயே 6 லட்சம் ஏக்கர்களுக்கு பாசனம் செய்து கொண்டிருந்தது. சாதாரண காலங்களில் காவிரி நீரை ஆழமாகவும் வேகமாகவும் ஓடும் கொள்ளிடத்தில் இருந்து தடுத்து வைப்பதுதான் கல்லணையின் முக்கிய செயல்பாடு. ஆனால் வெள்ளம் வந்தால் அதைப் பாதுகாப்பாக காவிரியில் இருந்து கொள்ளிடத்தில் திருப்பி கடலில் கொண்டு சேர்க்க வழி செய்வதுவும்தான். அதன் அருகே வேறு எந்தக் கட்டமைப்பின் உதவியும் இல்லாமல் கல்லணை இந்த செயல்பாட்டை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாகச் செய்து கொண்டிருந்தது. ஆங்கிலேயப் பொறியாளர்கள் மூலத்திட்டத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் பல மாற்றங்களை மேற்கொண்டனர். பல தசாப்தங்களாக வண்டல் மண் பிரச்சினையுடன் போராடினர். ஒரு ஆங்கிலேயப் பொறியாளர் எழுதுகிறார் (Baird Smith, 1856); "கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் வண்டல் மண்ணுடன் ஒரு இடைவிடாத போராட்டம் இருந்தது. ஆற்றின் பல பகுதிகளில் இருந்து ஆட்களை வைத்து தூர் வாரப்பட்டது. அதிக செலவில் நீண்ட கரைகள் கட்டப்பட்டன. எனினும் எல்லா முயற்சிகளும், பலனற்றுப் போய்விட்டன. ஆற்றின் படுகை தொடர்ந்து ஏற்றம் கண்டது." நல்ல காலமாக மாற்றங்களுக்கு முன்பிருந்த கல்லணையை 1776-ல் செய்யப்பட்ட ஒரு பதிவில் இருந்து உய்த்துணர இயலும். இப்பதிவு அணைக்கட்டின் விசித்திரமான சிறப்பியல்புகளைக் குறிப்பிட்டுள்ளது. கல்லணை ஒரு முனையில் இருந்து மறு முனை வரை இரண்டு அல்லது மூன்று வளைவுகளுடன் காணப்பட்டது. அதன் முகடு மட்டமாக இல்லாமல் சாய்வாக இருந்தது - கிழக்கு முனையை விட மேற்கு முனை அதிக உயரம். அது குறுக்கிலும் சாய்வாக இருந்தது - சில பகுதிகளில் இது ஓர் ஒழுங்கான மற்றும் சீரான சாய்வாக இருந்தது, மற்ற பகுதிகளில் ஒழுங்கற்ற 3 அல்லது 4 படிகள். இறுதியாக, அணை நெடுகிலும் சுமார் ¾ அங்குல கனத்துக்கு வழுவழுப்பான சுண்ணாம்புக் கலவை பூசப்பட்டிருந்தது. இந்தப் பூச்சு பெரும்பாலும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது மாற்ற வேண்டும். மேலும், முன்பக்கம் கரடுமுரடாக சமநிலையற்று இருந்தது. ஆனால் இதுவே மிக அனுகூலமாக இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இடையறாமல் வண்டல் மண் நீர்மக்குழம்பாகி அணையின் முன்பக்கச் சுவரை அரிக்காமல் பாதுகாப்பாக இருந்தது. கரிகால சோழன் மணிமண்டபம் பல நூற்றாண்டுகளை கடந்தும் உறுதியோடு நிற்கும் கல்லணை தமிழர்களின் கட்டுமான திறனை பறை சாற்றி கொண்டிருக்கிறது. பழைமையான இந்த அணையை கட்டிய கரிகால சோழனை கெளரவிக்க கல்லணையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் இடது கரை ஓரத்தில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் யானை மீது கரிகால சோழன் அமர்ந்த நிலையில் சிலை வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. [7] கல்லணை பற்றி சங்க கால சான்றுகள் சங்ககாலத்தில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளிற் பாய்ச்சிச் செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக் கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. படங்கள் ஆகத்து 2018 அன்று கல்லணையிலுருந்து வெளியேற்றப்படும் நீர். கர்நாடகம் மற்றும் கேரளாவில் பெய்த மழையால் வெள்ளக் காட்சி காவேரியில் காணப்பட்டது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அணைகள் பகுப்பு:தமிழ்நாட்டில் உள்ள அணைகள் பகுப்பு:திருச்சி மாவட்ட சுற்றுலாத் தலங்கள் பகுப்பு:காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைகள் பகுப்பு:சோழர் கட்டிடக்கலை
கல்லணை கட்டியது யார்?
கரிகாலன்
1,099
tamil
435b4e597
நாணயம் (Currency) என்பது பொருட்களையும் சேவைகளையும் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு "பரிமாற்ற அலகு" ஆகும். பணம் என்பது ஒரு பரிமாற்ற ஊடகமும், பெறுமானத்தைத் தன்னுள் அடக்கியுள்ள ஒன்றும் ஆகையால், நாணயமும் பணத்தின் ஒரு வடிவம் ஆகும். நாணயம் என்பது நாணயத்தாள், உலோக நாணயம் (நாணயக் குற்றி) என்னும் இரண்டு வடிவங்களில் உள்ளன. பெரும்பாலும் ஒவ்வொரு நாடும் தனது நாணயத்தின் உற்பத்தியிலும் வழங்கலிலும் தனியுரிமை கொண்டுள்ளன. இவ்வாறு வெவ்வேறு நாணயங்களைக் கொண்ட நாடுகளிடையே வணிகத்துக்கு உதவுவதற்காக நாணய மாற்று விகிதங்கள் உள்ளன. இவ்விகிதங்கள் ஒரு குறிப்பிட்ட நாணயம் பிற நாணயங்களுக்கு எதிராக என்ன பெறுமதியைக் கொண்டுள்ளது என்பதை முடிவு செய்ய உதவுகிறது. நாணயங்கள் அவை பயன்படுத்தும் நாணய மாற்றுவிகித முறையைப் பொறுத்து இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை, மிதக்கும் நாணயங்கள், நிலைத்த நாணயங்கள் என்பனவாகும். தமது நாணயங்கள் மீது கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ள நாடுகள் அதனை மத்திய வங்கிகள் மூலமாகவோ அல்லது நிதி அமைச்சகங்கள் மூலமாகவோ செயற்படுத்துகின்றன. பண்டைய கால தமிழர் நாணயங்கள் வரலாறு அரச மரபினர் பயன்படுத்திய நாணயங்கள் தமிழகத்தில் பல்வேறு அரச மரபினர்கள் பயன்படுத்திய நாணயங்கள் பொன்னாலும், வெள்ளியாலும், செம்பாலும் செய்யப்பட்டன. அவ்வகை நாணயங்கள் அக்கம், மாடை, கழஞ்சு, அன்றாடு நற்காசு, கருங்காசு, ஈழக்காசு என அழைக்கப்பட்டன. தமிழ் இலக்கியங்களில் தமிழக மன்னர்கள் புலவர்களையும், பாணர்களையும் ஆதரித்தனர் என இலக்கியங்கள் வாயிலாகவும், ஆற்றுப்படை நூல்கள் வாயிலாகவும் அறியமுடிகின்றது. இவ்வாறு புலவர்களும், பாணர்களும் அரசனை வாழ்த்திக் கூறும்போது அவர்களுக்கு மன்னர்களால் பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. பரிசுப் பொருள்களுடன் பொற்காசுகளும் வழங்கப்பட்டுள்ளன. [1] சங்க காலம் காசுகள் சங்க காலம் தொடங்கி பல்வேறு நிலைகளில் பல்வேறு வடிவங்களில் காணப்பட்டு வந்துள்ளன. சங்க கால அரசர் காலத்தில் வெளியிட்ட காசுகள் புலி, யானை முதலிய உருவங்களுடன் காணப்பட்டன. இந்நாணயங்களில் கழஞ்சு என்பது சங்க காலத்தில் எடுத்தலளவையாகப் பயன்படுத்தப்பட்டன. சங்க கால அரசர் காலத்தில்வெளியிட்ட காசுகள் புலி, யானை முதலிய உருவங்களுடன் காணப்பட்டன. பிற்காலத்தில் நாணயங்கள் அளவான கழஞ்சு பயன்படுத்தப்பட்டுள்ளதை கல்வெட்டினால் அறியலாம். சங்க காலத்தில் ரோம் நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையிலான வியாபாரம் நடைபெற்றதற்குச்சான்றாக ரோமானியக் காசுகள் தமிழகத்தில் அகழாய்வுகளில் கிடைத்துள்ளன. [2]. தமிழகத்தில் கிடைத்த காசுகளில் திண்ணன், எதிரான் சேந்தன் என்ற பிராமி எழுத்துக்களோடு கிடைத்துள்ளன. இது திண்ணன், சேந்தன் என்ற சங்க காலப் பெயர்களைத் தாங்கியுள்ளன. சேந்தன் என்பவர் பற்றி அகநானூற்றுப் பாடலில் அறியமுடிகிறது[1]. வடிவம் சதுரமாக வெளியிடப்பட்ட காசுகளில் மரம் (தரு), யானை, திருமறு (ஸ்ரீவத்சம்) முதலிய வடிவங்கள் பொறிக்கப்பட்டன. இக்காசு வட இந்தியாவில் புராணா எனவும், தென்னிந்தியாவில் காணம் எனவும் வழங்கப்பட்டன. [1] உலக நாணயங்கள் வரலாறு ஆரம்ப கால நாணயங்கள் கி.மு. 2000 இல் நடந்த இரண்டு அடிப்படை கண்டுபிடிப்புகளில் இருந்து நாணயம் உருவானது. முதலில் பண்டைய மெசொப்பொத்தேமியாவிலுள்ள சுமேரியாவிலும், பின்னர் பண்டைய எகிப்திலும் கோவில் வளாகங்களில் சேமித்து வைக்கப்பட்ட தானியங்களைப் பிரதிநிதித்துவம் செய்வதில் முதலில் பணம் என்பது ரசீதாக கிடைத்தது. நாணயத்தின் முதல் கட்டத்தில், பொருட்களின் வடிவத்தில் சேமிக்கப்பட்ட மதிப்புகளை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக உலோகங்கள் குறியீடுகளாகப் பயன்படுத்தப்பட்டன. இது 1500 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்து வரும் செழிப்பான வர்த்தகத்தின் அடித்தளமாக அமைந்தது. இருப்பினும், அண்மைய கிழக்கு வர்த்தக அமைப்பின் சரிவு ஒரு குறைபாட்டைச் சுட்டிக்காட்டியது: ஒரு காலகட்டத்தில், மதிப்பைச் சேமித்து வைக்க பாதுகாப்பான இடம் இல்லை, சுழற்சியடையும் ஊடகத்தின் மதிப்பு, அந்த அங்காடியை பாதுகாத்துள்ள படைகள் போல் அமைந்து இருக்கும். அந்த இராணுவப்படைகளின் நம்பகத்தன்மை இருக்கும் இடம் வரைக்குமே வர்த்தகம் சென்றடைய முடியும் என்றிருந்தது. வெண்கலக் காலத்தின் பிற்பகுதியில், கிழக்கு நடுநிலம் (மத்தியதரைக்கடலுக்குக் கிழக்காக உள்ள நாடுகள்) முழுவதும் வணிகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பல ஒப்பந்தங்கள் இடப்பட்டன. இவை வடமேற்கில் மினோவன், கிரீட் மற்றும் மைசீன் (Mycenae) போன்ற இடங்களிலிருந்து, தென்கிழக்கில் ஈலாம் மற்றும் பகுரைன் ஆகிய இடங்கள்வரை பரவியிருந்தன. இந்த வணிகப் பரிமாற்றங்களில் என்ன வகையான நாணயங்கள் பயன்படுத்தப்பட்டது என்பது தெரியாமல் இருந்தாலும், இவை சைப்ரஸில் உற்பத்தி செய்யப்பட்ட, எருது போன்ற விலங்குகளின் தோல் அமைப்பை ஒத்த, இங்காட்கள் என்று அழைக்கப்படும் செப்பு நாணயங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கடல் கொள்ளை, மற்றும் வெண்கலக்கால வீழ்ச்சி தொடர்பான திடீர்ச் சோதனைகள் அதிகரிப்பு இங்காட்கள் நாணய அமைப்பை முடிவுக்குக் கொண்டுவந்ததாக நம்பப்படுகிறது. கி.மு 10ஆம், 9ஆம் நூற்றாண்டுகளில் வந்த போனீசியா வணிகம் மீண்டும் உலோக நாணயங்களையும், செழிப்பையும் கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து கிரேக்க, பின்னர் பேர்சியன் நாணயங்கள் உருவாகின. ஆப்பிரிக்காவில், மணிகள் (beads), இங்காட்கள், தந்தம், பல்வேறு வகையான ஆயுதங்கள், கால்நடைகள், மணிலா நாணயம், மற்றும் ஓச்சர் மற்றும் பிற நில ஆக்சைட்டுக்கள் உட்பட பல வகையான மதிப்புக்கள் நாணயங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 15 ஆம் நூற்றாண்டில் இருந்து அடிமைகளை விற்கும்போது பயன்படுத்தப்பட்ட நாணயங்களில், மேற்கு ஆப்பிரிக்காவின் மணிலா வளையங்களும் இருந்தன. ஆபிரிக்க நாணயங்கள் தற்போதும் அதன் பல்வேறு வகைகளில் இருக்கின்றன. உலகின் சில இடங்களில் தற்போதும் சில இடங்களில் பண்டமாற்று முறையும் நடைமுறையில் உள்ளது[3]. நாணயக்காலம் இந்தக் காலகட்டத்தில், உலோகமானது (முதலில் வெள்ளி, பிறகு ஒரே சமயத்தில் வெள்ளியும் தங்கமும், ஒரு காலத்தில் வெண்கலம்) மதிப்பை நிர்ணயிக்கும் நாணயமானது. இப்போது நாம் செம்பு உலோகம் மற்றும் விலைமதிப்புக் குறைந்த உலோகங்கள் ஆகியவற்றை நாணயங்களாகக் கொண்டிருக்கிறோம். உலோகம் வெட்டப்பட்டு, எடையிடப்பட்டு, நாணயங்களாக முத்திரை குத்தப்படுகின்றன. நாணயத்தை எடுத்துக் கொள்ளும் தனிமனிதன் ஒரு குறிப்பிட்ட எடையில் விலைமதிப்பற்ற உலோகத்தைப் பெற்றுக் கொண்டிருப்பதாக உறுதி செய்ய வேண்டும். கள்ள நாணயங்கள் உருவாக்கப்படுவதைத் தவிர்க்க, அவர்கள் வழிமுறையை உருவாக்கினர். இது வங்கி அமைப்புக்கள் உருவாக உதவின. ஆர்க்கிமிடீசு தத்துவம் அடுத்த ஒரு முறையை உருவாக்கியது. நாணயங்கள் இப்போது இலகுவான முறையில் உலோகத்தின் அளவையிட்டுச் சோதிக்கப்படலாம். இதனால் நாணயத்தில் ஏதாவது மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பினும், அவற்றின் உண்மையான மதிப்பை தீர்மானிக்க முடியும். நாணயத்தைப் பயன்படுத்தும் மிகப்பெரும் பொருளாதாரங்கள் பல செம்பு, வெள்ளி, தங்கம் போன்ற பலவகை உலோகங்களால் ஆன நாணயங்களைக் கொண்டிருந்தன. பெரிய கொள்முதல், இராணுவம் மற்றும் அரச நடவடிக்கைகளுக்கான கட்டணங்கள் போன்றவற்றிற்குத் தங்க நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன. அவை பெரும்பாலும் பொருள் சார்ந்ததாக அன்றி, கணக்கின் அளவீடுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. வெள்ளி நாணயங்கள் நடுத்தர பரிமாற்றங்களுக்கும், வரி, கட்டணம், ஒப்பந்தங்கள் மற்றும் வருவாய் ஆகியவற்றிற்கான கணக்கின் அலகாகவும் பயன்படுத்தப்பட்டன.செம்பு, வெள்ளி, அல்லது பல உலோக கலவைகளால் செய்த நாணயங்கள் ஆகியவற்றை தினசரி பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்பட்டது.இந்த முறை மகாஜனபாடர்களின் காலத்திலிருந்து பண்டைய இந்தியாவில் பயன்படுத்தப்பட்டது. மூன்று உலோகங்களின் மதிப்பில் சரியான விகிதம் வெவ்வேறு காலங்களிலும் வெவ்வேறு இடங்களிலும் வேறுபட்டது. எடுத்துக்காட்டாக, ஸ்பெயினின் வெற்றிக்குப் பிறகு புதிய உலகில் வெள்ளி அதிகரித்தது போல, மத்திய ஐரோப்பாவின் ஹார்ஸ் (Harz) மலைகளில் வெள்ளி சுரங்கங்கள் திறக்கப்பட்டு வெள்ளி அதிகளவில் பெறப்பட்டபோது, வெள்ளியின் மதிப்புக் குறைந்தது. இருப்பினும், அரிதாகக் கிடைக்கும் தங்கத்தின் மதிப்பு வெள்ளியைவிட அதிகமாகவும், வெள்ளியின் மதிப்பு செம்பைவிட அதிகமாகவும் தொடர்ந்து இருந்து வந்தது. காகித பணம் நவீன காலத்திற்கு முந்தைய சீனாவில், கடனும், அதிகளவு எண்ணிக்கையான செப்பு நாணயங்களைவிடச் சிக்கல்தன்மை குறைந்த பரிமாற்ற ஊடகமாக இருந்தமையும், காகிதப் பணம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு வழிவகுத்தது, எ.கா. வங்கித்தாள். அவற்றின் அறிமுகம், சிறிது சிறிதாக தாங் அரசமரபின் பிற்பகுதியில் இருந்து, (618-907) இருந்து சொங் அரசமரபு (960-1279) வரை நீடித்தது. வணிகர்களின் அதிகளவான உலோக நாணயங்களின் வைப்புத் தொகைக்கு ஈடாக, மொத்த விற்பனையாளர்களால் வழங்கப்பட்ட உறுதி செய்யப்பட்ட தாள்களால் இந்த முறை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தத் தாள்கள் ஒரு சிறிய வட்டார பிராந்தியத்தில் தற்காலிக பயன்பாட்டிற்கு செல்லுபடியாகும். 10 ஆம் நூற்றாண்டில், சொங் அரசமரபு அரசாங்கம், அதன் தனிஉரிமை கொண்ட உப்புத் தொழிற்துறையில், வணிகர்களிடையே இத்தகைய தாள்களைப் பரப்பத் தொடங்கியது. சாங் அரசாங்கம் இத்தகைய தாள்களை வெளியிடுவதற்கான உரிமையை பல கடைகளுக்கு வழங்கியது. பின்னர், 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சொங் அரசாங்கம் அந்தக் கடைகளை தாமே கையகப்படுத்தி, அரசினால் வெளியிடப்படும் நாணயத்தை உருவாக்கியது. ஆனாலும் இத்தகைய தாள்கள் மட்டும் செல்லுபடியாவதாகவும், தற்காலிகமாகமானதாகவுமே இருந்தன. 13 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலேயே, ஒரு நிலையான மற்றும் சீரான அரசுப் பத்திரமான காகிதப் பணம் தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளத்தக்க நாணயமாக மாறியது. 11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஏற்கனவே பரவலான முறையாக இருந்த மரக்குற்றி மூலம் அச்சிடுதலும், அதன் பின்னர் வந்த ஷெங்கின் நகர்தல் வகை அச்சிடுதலும், நவீன காலத்திற்கு முந்தைய சீனாவில், காகிதப் பணம் மிக அதிகளவில் உற்பத்தியாக உதவின. அதே வேளை, இடைக்கால இஸ்லாமிய உலகில், 7-12 ஆம் நூற்றாண்டுகளில், ஒரு நிலையான உயர் மதிப்பு நாணயத்தின் (தினார்) விரிவாக்க அளவுகளின் அடிப்படையில், ஒரு தீவிரமான பணவியல் பொருளாதாரம் உருவாக்கப்பட்டது. வைப்பு[4], காசோலை, உறுதிப்படுத்தப்பட்ட காகிதத்தாள்[5], சேமிப்புக் கணக்குகள், பரிவர்த்தனைக் கணக்குகள், அறக்கட்டளை, நாணய மாற்று வீதம், கடனளிப்பு, வைப்பு மற்றும் கடன் பரிமாற்றங்கள்[6], வைப்பு மற்றும் கடனுக்கான வங்கி நிறுவனங்கள் [6] என்பன இஸ்லாமிய பொருளியலாளர்கள், வணிகர்கள், வியாபாரிகள் போன்றவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஐரோப்பாவில், 1661 ஆம் ஆண்டில் சுவீடனில் ஒரு ஒழுங்கு முறையில் முதலில் காகிதப் பணம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும் வாசிங்டன் இர்விங் என்பவரால், ஸ்பெயினில் முற்றுகையில், கிரேனாடாவை வென்ற போது, முன்னரே காகிதப் பணம் அவசரகாலப் பயன்பாடாகப் பதிவுசெய்யப்பட்டிருந்க்கிறது. சுவீடனில் செப்பு அதிகளவில் நிறைந்திருந்ததால், அதன் குறைந்த மதிப்பு அசாதாரணமாக பெரிய நாணயங்களை (பல கிலோ எடையுள்ளவை) உருவாக்கும் தேவையை ஏற்படுத்தியது. காகித நாணயத்தின் நன்மைகள் ஏராளமாக இருந்தன: தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றைக் கொண்டு செல்வதற்கான தேவை குறைக்கப்பட்டது; தங்கம் அல்லது வெள்ளி கடன்களை வட்டிக்கு வசூலிக்கச் செய்தது, ஏனென்றால் அந்தக் கருவி (தங்கம் அல்லது வெள்ளி) கடன் வாங்கியவரை வேறு ஒருவரிடமிருந்து மீட்டெடுக்காத வரை, அது நாணயத்தின் ஒரு பகுதியை கடன் மற்றும் பிரத்தியேக ஆதரவு வடிவங்களுக்குள் அனுமதித்தது. இது கூட்டு-பங்கு நிறுவனங்களில் பங்கு விற்பனைக்கு உதவியது, மற்றும் காகிதத்தில் அந்த பங்குகளை மீட்டெடுப்பது. வங்கி நோட்டுகளின் காலம் ஒரு பணத்தாள் (பொதுவாக அமெரிக்காவில் மற்றும் கனடாவில் உள்ள ஒரு பில் என அழைக்கப்படுகிறது) ஒரு வகை நாணயம், பொதுவாக பல சட்டவாக்கங்களில் சட்ட ஒப்பந்தமாக பயன்படுத்தப்படுகிறது. நாணயங்களுடன், பணத்தாள்களும் பணத்தின் வடிவத்தை உருவாக்குகின்றன. வங்கிக் கணக்குகள் பெரும்பாலும் காகிதத்தில் உள்ளன, ஆனால் 1988 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் உலகின் முதலாவது பாலிமர் நாணயத்தை உருவாக்கியது, பாலிமர் நாணயங்களின் ஆயுட்காலம் அதிகரிக்கிறது மற்றும் கள்ளப்பணத்தைத் தடுக்கிறது. மேற்கோள்கள் இவற்றையும் பார்க்கவும் சங்ககாலத் தமிழக நாணயவியல் பணம் பகுப்பு:பொருளியல் பகுப்பு:தமிழக நாணயவியல் பகுப்பு:தமிழர் பண்பாடு
உலகின் முதலாவது காகிதப் பணம் எந்த நாட்டில் பயன்படுத்தப்பட்டது?
சுவீடனில்
8,796
tamil
b53b67d39
ரேடியம் (Radium) என்பது Ra என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கதிர்வீச்சு இயல்புள்ள ஒரு தனிமமாகும். இதன் அணு எண் 88 ஆகும். இதன் அணுநிறை 226 ஆகும். தனிம வரிசை அட்டவணையின் நெடுங்குழு 2 இல் இடம்பெற்றுள்ள ஆறாவது தனிமம் ரேடியம் ஆகும். காரமண் உலோகம் என்றும் இதை வகைப்படுத்துவர். தூய்மையான ரேடியம் வெள்ளியைப் போல வெண்மை நிறமுடையதாக உள்ளது. ஆனால் காற்றில் வெளிப்பட நேர்ந்தால் ரேடியம் ஆக்சிசனுக்குப் பதிலாக நைட்ரசனுடன் உடனடியாக வினைபுரிந்து ரேடியம் நைட்ரைடு (Ra3N2) என்ற கருப்பு நிற மேற்பரப்பு அடுக்காக உருவாகிறது. ரேடியத்தின் அனைத்து ஐசோடோப்புகளும் அதிகமான கதிரியக்கத் தன்மையுடையனவாகும். இவற்றில் ரேடியம் -226 என்ற ஐசோடோப்பு அதிக நிலைப்புத்தன்மை கொண்டதாக உள்ளது. இதனுடைய அரை ஆயுள் காலம் 1600 ஆண்டுகளாகும். கதிரியக்கச் சிதைவடைந்து இந்த ஐசோடோப்பு ரேடான் வாயுவாக, குறிப்பாக ரேடான் - 222 என்ற ஐசோடோப்பாக மாறுகிறது. ரேடியம் சிதைவடையும்போது அயனியாக்கும் கதிர் ஒரு விளைபொருளாகும். இது ஒளிரும் வேதிப்பொருட்களை கிளர்வூட்டி கதிரியக்க ஒளிர்வைத் தருகிறது. ரேடியம் குளோரைடு வடிவத்தில் ரேடியம் 1898 ஆம் ஆண்டு மேரிகியூரி மற்றும் பியரிகியூரி தம்பதியரால் கண்டறியப்பட்டது. பிரஞ்சு அறிவியல் அகாதமியில் யுரேனைட்டு என்ற கனிமத்திலிருந்து ரேடியம் தனித்துப் பிரித்தெடுக்கப்பட்டு ஐந்து நாட்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்டது. மேரிகியூரியும் ஆன்றே -லூயிசு டெபியர்ன் ஆகியோர் 1911 ஆம் ஆண்டு ரேடியம் குளோரைடை மின்னாற்பகுப்பு செய்து ரேடியத்தை அதனுடைய உலோக நிலையில் தயாரித்தனர்[1] இயற்கையில் ரேடியம் யுரேனியம் மற்றும் தோரியம் தாதுக்களில் மிகச்சிறிய அளவில் காணப்படுகிறது. வாழும் உயிரினங்களுக்கு ரேடியம் ஒன்றும் அத்தியாவசியமான தேவையாக இல்லை. இதன் கதிரியக்க மற்றும் இரசாயன வினைத்திறன் காரணமாக உயிர் வேதியியல் செயல்முறைகளில் இணைந்திருக்கும்போது, ஆரோக்கியத்திற்கு பாதகமான விளைவுகள் ஏற்படலாம். அணுக்கரு மருத்துவத்தில் பயன்படுவதைத் தவிர்த்து ரேடியத்திற்கு என வேறு வணிகப்பயன்பாடுகள் ஏதுமில்லை. முன்னர் இது கதிர் ஒளி வீசுகின்ற சாதனங்களுக்கான கதிரியக்க ஆதாரமாக பயன்படுத்தப்பட்டது. மேலும் இது பிணி நீக்கும் மருந்தாக கருதப்பட்டு கதிரியக்க போலி மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டது. இன்று இத்தகைய பயன்பாடுகளுக்காக ரேடியம் பயன்படுத்தப்படுவதில்லை. ஏனெனில் ரேடியத்தின் நச்சுத்தன்மை இன்று உணரப்பட்டுவிட்டது. எனவே குறைந்த நச்சுத்தன்மை கொண்ட ஐசோடோப்புகள் இக்கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றன. பண்புகள் அறியப்பட்டுள்ள காரமண் உலோகங்களில் மிகவும் கனமான உலோகம் ரேடியம் ஆகும். மற்றும் அக்குழுவில் இடம்பெற்றுள்ள ஒரே கதிரியக்க உலோகமும் இதுவேயாகும். ரேடியத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் பேரியம் தனிமத்தின் பண்புகளை ஒத்ததாக உள்ளது. தூய ரேடியம் ஓர் ஆவியாகக் கூடிய தனிமமாகும். இதன் இலேசான இணை தனிமங்களாகக் கருதப்படும் கால்சியம், இசுட்ரோன்சியம் மற்றும் பேரியம் ஆகியவை சிறிய மஞ்சள் நிறத்தில் இருந்தாலும் இது வெள்ளியைப் போல வெண்மை நிறத்துடன் காணப்படுகிறது. இதனுடைய நிறம் காற்றில் விரைவாக மங்கிவிடுகிறது. காற்றுடன் வினைபுரிந்து ரேடியம் நைட்ரைடு கருப்பு படலமாக இதன் மேற்பரப்பில் உருவாகிறது. ரேடியத்தின் உருகு நிலை 700 பாகை செல்சியசு வெப்ப நிலை அல்லது 960 பாகை செல்சியசு வெப்பநிலை இவற்றில் ஒன்றாக இருக்கலாம். மற்றும் இதனுடைய கொதி நிலை 1737 பாகை செல்சியசு வெப்பநிலை ஆகும். இவ்விரு அளவுகளும் பேரியத்தைக் காட்டிலும் குறைவான அளவுகளாக உள்ளன. தனிமவரிசை அட்டவணையின் ஆவர்த்தன போக்குகளுக்கு உட்பட்டதாகவும் இந்த அளவுகள் உள்ளன[2] . அட்டவணையின் மேலிருந்து கீழாகச் செல்லும்போது நெடுங்குழு 2 இன் தனிமங்கள் இத்தகைய போக்கையே காட்டுகின்றன. பேரியம் மற்றும் கார உலோகங்களைப் போல ரேடியம் சாதாரண வெப்ப நிலை மற்றும் அழுத்தத்தில் பொருள் மைய கனசதுர வடிவில் படிகமாகிறது. ரேடியம்-ரேடியம் பிணைப்பின் பிணைப்பு இடைவெளி 514.8 பைக்கோ மீட்டர்களாகும். இதன் அடர்த்தி 5.5 கிராம்/செ.மீ3 ஆகும். இது பேரியத்தின் அடர்த்தியைக் காட்டிலும் அதிகமாகும். ரேடியம்-பேரியம் அடர்த்தி வீதம் ரேடியம்-பேரியம் அணு நிறை வீதத்துடன் ஒப்பிட்டு நோக்கத்தக்கதாக உள்ளது. ஏனெனில் இரண்டு தனிமங்களும் ஒரே மாதிரியான படிகக் கட்டமைப்பில் படிகமாகியுள்ளன. ஐசோடோப்புகள் நிறை எண்கள் 202 முதல் 234 வரை உள்ள 33 ஐசோடோப்புகளை ரேடியம் கொண்டுள்ளது. இவை அனைத்தும் கதிரியக்கச் செயல்பாடு கொண்டவையாகும். அரை ஆயுட்காலம் 11.4 நாட்களைக் கொண்ட 223Ra, அரை ஆயுட்காலம் 3.64 நாட்களைக் கொண்ட 224Ra , அரை ஆயுட்காலம் 1600 ஆண்டுகள் கொண்ட 226Ra, அரை ஆயுட்காலம் 5.75 ஆண்டுகள் கொண்ட 228Ra என்ற நான்கு ஐசோடோப்புகளும் தோரியம்-232, யுரேனியம்-235, மற்றும் யுரேனியம்-238 போன்ற ஐசோடோப்புகளின் சிதைவுச் சங்கிலியிலிருந்து இயற்கையாகத் தோன்றுகின்றன. 223Ra ஐசோடோப்பு யுரேனியம்-235 ஐசோடோப்பிலிருந்தும், 226Ra ஐசோடோப்பு யுரேனியம்-235 ஐசோடோப்பிலிருந்தும், மற்ற இரண்டு ஐசோடோப்புகளும் தோரியம் 232 ஐசோடோப்பிலிருந்தும் உருவாகின்றன. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் at The Periodic Table of Videos (University of Nottingham) பகுப்பு:தனிமங்கள் பகுப்பு:காரக்கனிம மாழைகள்
ரேடியத்தை கண்டுபிடித்தவர் யார்?
மேரிகியூரி மற்றும் பியரிகியூரி தம்பதியரால்
990
tamil
3fe627e15
கடல் (ஒலிப்பு) அல்லது ஆழி(Sea), உலகப் பெருங்கடல் (World ocean), அல்லது வெறுமனே பெருங்கடல் (Ocean) என்பது புவியின் பரப்பில் 70 விழுக்காட்டை ஆக்கிரமித்துள்ள உப்பான நீர் கொண்ட இணைந்த (connected) நீர்நிலை ஆகும். இது புவியின் பருவநிலையை நிலைப்படுத்துவதோடு நீர் சுழற்சி, கரிமச் சுழற்சி, நைட்ரஜன் சுழற்சி ஆகியவற்றிலும் முதன்மைப் பங்காற்றுகிறது. பழங்காலங்களிலிருந்து கடலில் பயணங்கள் செய்யப்பட்டும் தேடல்கள் நடந்தும் வந்தாலும், அறிவியல் அடிப்படையிலான கடலியல் அல்லது பெருங்கடலியல் என்பது பெரும்பாலும் பசிபிக் பெருங்கடலை ஜேம்ஸ் குக் 1768க்கும் 1779க்கும் இடைப்பட்ட காலத்தில் கண்டறிந்து ஆராய்ந்ததிலிருந்துதான் தொடங்குகிறது. கடல் எனும் சொல்லானது பெருங்கடலின் சிறிய, பகுதியளவு நிலத்தால் சூழப்பட்ட பகுதிகளைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது."கடல்" என்ற சொல்லாவது, கடத்தற்கு அரியதென்று பொருள்படும். ஆழி, விரிநீர், பெருநீர், பருநீர், முதலானும் குறிக்கப்படுகிறது. கடல் நீரில் மிக அதிகளவு கரைந்துள்ள திடப்பொருள் சோடியம் குளோரைடு (சாதாரண உப்பு) ஆகும். மேலும் இந்நீரில் மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற உப்புகளும் மேலும் பல தனிமங்களும் உள்ளன. இதில் சில குறைந்த செறிவுத்தன்மையுடன் காணப்படுகின்றன. உவர்ப்புத் தன்மை (salinity) இடத்திற்கேற்றார்போல் வெகுவாக வேறுபடுகிறது. கரைக்கு அருகிலும் கழிமுகப் பகுதியிலும் (ஆறும் கடலும் கலக்கும் இடம்) ஆழக்கடல் பகுதியிலும் உவர்ப்புத் தன்மை குறைவாகக் காணப்படுகிறது. எவ்வாறேனும், பெருங்கடல்களில் கரைந்திருக்கும் உப்புகளின் "ஒப்புமை" வீதங்கள் பொதுவாக ஒன்றாகவே இருக்கின்றன; பெரிதாக மாறுவதில்லை. கடல் பரப்பின் மீது வீசும் காற்றினால் அலைகள் உருவாகின்றன. இவை ஆழக்குறைவான நீரை அடையும்போது கொந்தளிப்புடன் உடைந்து சிதறுகின்றன. வீசும் காற்றின் உராய்வின் மூலமாக பரப்பு நீரோட்டங்கள் உருவாகின்றன. இது பெருங்கடல்கள் முழுவதும் மெதுவான ஆனால் நிலையான ஒரு நீரோட்டத்தை ஏற்படுத்துகிறது. இந்த நீர்ச்சுழலின் திசைகள் கண்டங்களின் வடிவங்கள், புவியின் சுழற்சி (சுழலகற்சி விளைவு; Coriolis effect) போன்ற காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன. உலகளாவிய இயங்கு பட்டை என்று அறியப்படும் ஆழ்கடல் நீரோட்டங்கள், அருகில் இருக்கும் துருவங்களில் இருந்து அனைத்து பெருங்கடல்களுக்கும் குளிர் நீரை எடுத்துச் செல்கின்றன. ஓதங்கள் தினமும் இருமுறை கடல்மட்டத்திலிருந்து உயர்ந்து தாழ்கின்றன. இந்த ஏற்ற இறக்கமானது புவியின் சுழற்சியினாலும் புவியைச் சுற்றும் நிலவின் ஈர்ப்பு விசையினாலும் மிகக்குறைந்த அளவு சூரியனாலும் ஏற்படுகின்றன. ஓதங்கள் விரிகுடாக்களிலோ கழிமுகங்களிலோ அதிக வீச்சுடன் இருக்கும். அழிவுத்தன்மை கொண்ட ஆழிப்பேரலைகள் கடலடி நிலநடுக்கங்களால் ஏற்படுகின்றன. இந்த நிலநடுக்கங்கள் கடலடியில் ஏற்படும் கண்டத்தட்டு நகர்வு, எரிமலை வெடிப்பு, பெரும் நிலச்சரிவு அல்லது பெரிய விண்வீழ்கற்களால் ஏற்படுகின்றன. வைரசுகள், பாக்டீரியங்கள், புரோடிஸ்ட்கள், பாசிகள், தாவரங்கள், பூஞ்சைகள் இவற்றுடன் விலங்குகள் போன்ற பெரும் அளவிலான உயிரினங்கள் கடலில் வாழ்கின்றன. இந்த உயிரிகள் சூரியஒளி அதிகம் படும் பரப்பு நீர் முதல் சூரிய ஒளியே படாத அதிக அழுத்தத்திலும் குளிர்ச்சியிலும் இருட்டிலும் இருக்கும் அதிஆழ நீர் வரை பரவியுள்ளன. குறுக்குக் கோடு வாக்கில் (latitude) கடலின் தன்மையும் மாறுகிறது. எடுத்துக்காட்டாக, ஆர்க்டிக் பனிக்கு அடியில் குளிர் நீரையும் வெப்ப மண்டலப் பகுதிகளில் வண்ணமயமான பவளப் பாறைகளையும் கடல் கொண்டுள்ளது. முதன்மையான பல உயிரினக் குழுக்கள் கடலில்தான் சிறந்துவந்தன (evolved). மேலும், உயிரும் கடலிலேயே தோன்றியிருக்கக்கூடும். கடல் மக்களுக்குக் கணிசமான அளவு உணவுப் பொருட்களைத் தருகிறது. இதில் முதன்மையானதாக மீன், ஆளிகள், கடல்வாழ் பாலூட்டிகள், கடல்பாசி போன்றவை அடங்கும். கடல்பாசிகள் காட்டில் அறுவடை செய்யப்பட்டோ நீருக்கடியில் வளர்க்கப்பட்டோ கிடைக்கின்றன. வணிகம், பயணம், கனிமப் பிரித்தெடுப்பு, திறன் ஆக்கம் (power generation), போர், ஓய்வுநேரச் செயல்பாடுகளான நீச்சல், அலைச்சறுக்கு (surfing), பாய்மரப் பயணம் (sailing), கருவியுதவியுடன் குதித்தல் (scuba diving) போன்றவற்றுக்கும் கடல் பயன்படுகிறது. மாசுபாட்டினால் கடல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. வரலாறு முழுதும் கடல் பல பண்பாடுகளிலும் பெரிதும் உதவியுள்ளது. கடல் ஓமரின் ஒடிசி போன்ற இலக்கியங்களிலும் முதன்மையான கூறாக இருந்திருக்கிறது. இது கடல்சார் ஓவியத்திலும், அரங்கங்களிலும், பண்டைய இசையிலும் பெரும்பங்காக இருந்து வந்துள்ளது. வரையறை கடல் புவியின் அனைத்துப் பெருங்கடல் நீரையும் உடனிணைத்த ஓர் அமைப்பாகும். இவ்வமைப்பில் "பெருங்கடல்கள்" என்று அழைக்கப்படும் அட்லாண்டிக், பசிபிக், இந்தியப் பெருங்கடல், தென்முனைப் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல் ஆகிய ஐந்தும் அடங்கும்.[1] "கடல்" எனும் சொல் குறிப்பாக குறைந்த அளவு கடல்நீரைக் கொண்டவற்றைக் குறிப்பிடப் பயன்படுகின்றது. அதாவது செங்கடல், கருங்கடல் போன்றவை. கடலைக் குறிக்கும் பிற சொற்கள் தமிழில் கடலானது அரலை, அரி, அலை, அழுவம், அளம், அளக்கர், ஆர்கலி, ஆலந்தை, ஆழி, ஈண்டுநீர், உரவுநீர், உவர், உவரி, உவா, ஓதம், ஓதவனம், ஓலம், கயம், கலி, கார்கோள், கிடங்கர், குண்டுநீர், குரவை, சக்கரம், சலதரம், சலநிதி, சலராசி, சலதி, சுழி, தாழி, திரை, துறை, தெண்டிரை, தொடரல், தொன்னீர், தோழம், நரலை, நிலைநீர், நீத்தம், நீந்து, நீரகம், நிரதி, நீராழி, நெடுநீர், நெறிநீர், பரப்பு, பரவை, பரு, பாரி, பாழி, பானல், பிரம்பு, புணர்ப்பு, புணரி, பெருநீர், பௌவம், மழு, முந்நீர், வரி, வலயம், வளைநீர், வாரி, வாரிதி, வீரை, வெண்டிரை, வேழாழி, வேலை என பல சொற்களால் தமிழில் கடல் குறிப்பிடப்படுகிறது.[2][3] கடலின் இயற்பியல் சூரியக் குடும்பத்தில் நீர்ம நிலையில் (திரவ நிலை) புறப்பரப்பில் நீரைக் கொண்டுள்ள ஒரே கோள் புவியே ஆகும்.[4](p22) ஆனால், சூரியக் குடும்பத்திற்கு வெளியில் உள்ள புவியை ஒத்த கோள்களில் பெருங்கடல்கள் இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.[5] புவியின் புறப்பரப்பின் 70 விழுக்காட்டிற்கும் மேலாக கடல் நீரால் சூழப்பட்டுள்ளது.[4](p7) புவியின் 97.2 விழுக்காடு நீரானது கடலிலேயே காணப்படுகிறது. இது கிட்டத்தட்ட 1,360,000,000 cubic kilometres (330,000,000cumi) என்ற அளவுக்குச் சமம்.[6] மீதி 2.15 விழுக்காடு நீரானது பனியாறுகளிலும், கடல் மேல் உறைந்த பனிக்கட்டியிலும் அடங்கியுள்ளது. 0.65 விழுக்காடு நீரானது நீராவி, பிற நன்னீர் ஏரிகள், ஆறுகள், நிலத்தடி நீர் மற்றும் காற்றிலும் உள்ளது.[6] விண்வெளியிலிருந்து பார்க்கும்போது நமது கோள் நீல நிற கோலி போன்று காட்சியளிக்கும்.[7] அறிபுனை எழுத்தாளர் ஆர்தர் சி. கிளார்க் நமது புவியில் கடலே ஓர் ஆதிக்கமான அம்சமாக இருப்பதால் "புவி (Earth)" என்று அழைப்பதற்குபதில் "பெருங்கடல் (Ocean)" என்று இதனை அழைக்கலாம் என்று கூறினார்.[4](p7) பெருங்கடல் இயற்பியல் (Physical Oceanography) அல்லது கடல் இயற்பியல், என்பது கடலின் புறவியல் (இயற்பியல்) பண்புகளான வெப்பநிலை-உவர்ப்புத் தன்மை கட்டமைப்பு, கலப்பு, அலைகள், உள்ளக அலைகள், புறப்பரப்பு ஓதங்கள். உள்ள்க ஓதங்கள், சுழற்சிகள் ஆகியவற்றைப் பற்றிய படிப்பு ஆகும்.[4](pp14–17)[8] சுழற்சிகள் (currents), ஓதங்கள், அலைகள் வடிவிலான நீரின் இயக்கமானது கடற்கரையோரப் பகுதிகளில் பருவநிலை மாற்றம் போன்றவற்றுக்குக் காரணமாக உள்ளது.[9] கடலின் புவியியல் என்பது பெருங்கடல் வடிகால்களின் வடிவத்தையும் அவற்றின் நீட்சியையும், மேலும் கடலில் முடியும் நிலப்பகுதியின் கரைகளையும் பற்றிய படிப்பாகும். கடல் படுகையின் வடிவமைப்பும் அதன் நீட்சியும் புவியிலுள்ள பொருட்கள் எதனால் செய்யப்பட்டுள்ளன என்பதை அறிய உதவுகின்றன. மேலும், இவற்றின் மூலம் கண்ட நகர்வு, நிலநடுக்க பாதிப்புள்ள பகுதிகள், எரிமலைப் பகுதிகளின் செயல்பாடுகள், படிவுப் பொருட்களின் மூலம் படிவுப் பாறைகள் உருவான விதம் ஆகியவற்றைப் பற்றி அறிய முடிகிறது.[9] கடல் நீர் கடலிலுள்ள நீரானது 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த புவியின் எரிமலைகளினால் உருகிய பாறைகளில் இருந்து வெளிப்பட்ட பொருள்களினால் உருவானது என்று எண்ணப்பட்டது.[4](pp24–25) ஆனால், அண்மைய ஆய்வுகள் புவியின் நீரானது விண்வீழ்கற்களிலிருந்து வந்திருக்கலாம் என்று கூறுகின்றன.[10] பெருங்கடல்கள் உப்பு நீரைக் கொண்டுள்ளது. உப்புக் கனிமங்கள் நிலத்திலிருந்து ஆறுகள் வழியாக கடலில் கலப்பதால், கடல்நீர் உப்புத் தன்மைக் கொண்டுள்ளது. வளிமண்டலத்தில் உள்ள கரியமிலவாயு, மழை நீருடன் கலந்து சிறிது அமிலத் தன்மையாக மாறி, பின் மலைநீர் ஆறாக உருவமாறி, மலைப் பாறைகள் மற்றும் மண்னில் உள்ள பலவகையான உப்பு முதலிய கனிமங்களுடன் கலந்து இறுதியாக கடலில் கலப்பதாலும் கடல் நீர், அருந்த முடியாத அளவிற்கு உப்புநீராக மாறுகிறது. மேலும் கடலுக்கடியில் உள்ள எரிமலைகள் நீராவியை கக்குவதாலும், எரிமலைகள் வெடிப்பதாலும், புவிக்கடியில் உள்ள உப்புக் கனிமங்கள் கடலில் கலப்பதால் கடல்நீர் உப்புத் தன்மையாக மாறுகிறது.[11] இதனால் கடல் நீர் உவர்ப்பு தன்மையாக உள்ளது. உவர்ப்புத் தன்மை பொதுவாக ஆயிரத்தில் இத்தனை பகுதிகள் (parts per thousand - இது ‰ குறி கொண்டோ "/ மில்லியன்" என்றோ குறிப்பிடப்படுகிறது) என்று அளக்கப்படுகிறது. ஒரு திறந்த பெருங்கடலின் ஒரு லிட்டர் நீரில் 35 கிராம் திடப்பொருளைக் கொண்டுள்ளது. அது 35‰ என்று குறிப்பிடப்படுகிறது. (பெருங்கடலின் 90% நீரானது 34‰ முதல் 35‰ வரையிலான உவர்ப்புத் தன்மையைப் பெற்றுள்ளன[12]). நடுநிலக் கடல் சிறிது அதிகமாக 37‰ என்ற அளவைக் கொண்டுள்ளது. அந்த நீரில் சாதாரண உப்பு, சோடியம், குளோரைடு ஆகியவை 85 விழுக்காட்டு அளவில் உள்ளன. மேலும் அதில் மக்னீசியம், கால்சியம் ஆகியவற்றின் உலோக அயனிகளும், சல்ஃபேட், கார்பனேட், புரோமைடு போன்றவற்றின் எதிர்மின் அயனிகளும் கரைந்துள்ளன. பல்வேறு கடல்களில் வெவ்வேறு உவர்ப்புத் தன்மை காணப்பட்ட போதிலும் ஒப்புமை பங்கீட்டளவு உலகம் முழுதும் நிலையான ஒன்றாகவே உள்ளது.[13][14] கடல் நீர் மனித சிறுநீரகங்களுக்கு மிகவும் ஆபத்தானது. அதிலுள்ள அதிகப்படியான உப்பினை அவற்றால் சுத்திகரிப்பு செய்யமுடியாது.[15] ஆனால், எதிர்மறையாக நிலம் சூழப்பட்ட அதிஉவர் ஏரிகள் (hypersaline lakes) சிலவற்றில், எடுத்துக்காட்டிற்கு சாக்கடல் ஆனது ஒரு லிட்டரில் 300 கிராம் கரைந்த திடப்பொருள்களைக் கொண்டுள்ளது (அதாவது 300‰) மேற்பரப்பு நீரின் ஆவியாதல் வீதம் (உயர் வெப்பநிலை, காற்று வீசும் வீதம், அலை இயக்கத்தினால் அதிகரிக்கும்), வீழ்படிவாக்கும் திறம், கடல் பனி உருகுதல் அல்லது உறைதல், பனியாறு உருகுதல், புதிய ஆற்று நீர் உள்புகுதல், வெவ்வேறு உவர்ப்புத் தன்மை கொண்ட நீர்நிலைகளின் கலப்பு ஆகியவற்றால் கடலின் உவர்ப்புத் தன்மை மாறுகிறது. எடுத்துக்காட்டாக, பால்டிக் கடலின் குளிர்ச்சியான சூழலுள்ள குறைந்த ஆவியாகும் தன்மை, நிறைய ஆறுகளின் கலப்பு இவைமட்டுமன்றி, வடக்குக் கடலில் இருந்து குளிர்ந்த நீர் அடிக்கடி இக்கடலில் வந்து நிரம்புதல் போன்றவற்றால் இதன் அடி அடுக்கு அடர்வானதாக மாறி அதன் பரப்பு அடுக்குகளுடன் கலக்க முடியாமல் போகிறது. அதனால் மேல்மட்ட அடுக்கின் உவர்ப்புத் தன்மை 10இலிருந்து 15‰ வரை மட்டுமே உள்ளது. மேலும் அதன் கழிமுகப் பகுதிகளில் இன்னும் குறைவானதாக இருக்கிறது.[16] வெதுவெதுப்பான செங்கடல் அதிகபட்ச ஆவியாதல் அளவையும் ஆனால் குறைவான வீழ்படிவாதல் பண்பையும் பெற்றிருக்கிறது; சில ஆறுகளும் அதனுள் கலக்கின்றன. மேலும், ஆதாம் வளைகுடாவுடன் கலக்கும் பாப்-எல்-மாண்டெப் ஆனது மிகவும் குறுகலாக உள்ளது. எனவே அதன் சராசரி உவர்ப்புத் தன்மை 40 ‰ என்ற அளவில் உள்ளது.[17] கடலின் வெப்பநிலை அதன் பரப்பில் விழும் சூரிய ஒளியைப் பொறுத்தது. வெப்பமண்டலப் பகுதிகளில் உச்சியில் சூரியன் இருக்கும்பொழுது அதன் வெப்பநிலை 30°C ஆக இருக்கும். ஆனால், துருவப் பகுதிகளில் கடல் வெப்பநிலை கடலிலுள்ள பனியுடன் ஒரு சமநிலையில் உள்ளது. அது எப்போதும் -2°C என்ற அளவில் உள்ளது. பெருங்கடல்களில் தொடர்ச்சியான ஒரு நீரோட்டம் இருந்துகொண்டே இருக்கிறது. வெதுவெதுப்பான பரப்பு நீரோட்டங்கள் வெப்பமண்டலத்தை விட்டு விலகுகையில் குளிர்கின்றன. குளிர்வதால் அந்நீரின் அடர்த்தி அதிகரிக்கிறது. அதனால், அது கீழே செல்கிறது. அந்தக் குளிர் நீர் ஆழக் கடல் நீரோட்டத்தின் காரணமாக மீண்டும் நிலநடுக்கோட்டினருகில் வருகிறது. இந்த சுழற்சி முழுவதும் வெப்பநிலை அடர்த்தி மாற்றங்களால் நிகழ்கிறது. உலகம் முழுவதும் அடி ஆழக்கடல் வெப்பநிலை -2°C முதல் 5°C வரை இருக்கலாம்.[18] பெருங்கடல்கள் அத்திலாந்திக் பெருங்கடல் உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடல் இதுவாகும். இதன் மொத்தப் பரப்பு 106,4 மில்லியன் சதுர கிலோ மீட்டர் ஆகும். இது பூமியின் பரப்பில் சராசரியாக இருபது சதவிகிதம் ஆகும். இதன் மேற்கு பகுதியில் வட அமெரிக்க, தென் அமெரிக்க கண்டங்களும், கிழக்கு எல்கையில் ஐரோப்பாவும், ஆப்பிரிக்காவும் அமைந்துள்ளன. இக்கடலின் மிக ஆழமான பகுதி ப்யூரிடோ ரிகோ ஆகும். அட்லாண்டிக் கடலின் சராசரி ஆழம் 28,232 அடிகள் ஆகும். இதன் சராசரி ஆழம் 10,936 அடிகள் ஆகும். தென்முனைப் பெருங்கடல் . அன்டார்க்டிக் நிலபரப்பைச் சூழ்ந்துள்ள கடல்பரப்பு ஆகும். இது பனிபாறைகள் நிரம்பிய ஒரு குளிர்ந்த கடல் ஆகும். இங்கு பத்து டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் இரண்டு டிகிரி செல்சியஸ் வரையிலான தட்பவெட்ப நிலை நிலவுகிறது. இங்கு பனிப்பாறைகள் கடல் மட்டத்திற்கு கீழ் பல நூறு அடிகளுக்கு மிதந்துக் கொண்டிருக்கிறது. மார்ச் மாதங்களில் பனிப்பாறைகளின் பரப்பளவு 26 லட்சம் சதுர கி.மீ. ஆக இருக்கும். செப்டம்பர் மாதத்தில் இதன் பரப்பு குறைந்து 19.8 லட்சம் சதுர கி.மீ ஆக ஆகி விடுகிறது. இக்கடல் ராஸ் கடல், அமுன்ட்சென் கடல், வெடல் கடல் மற்றும் அன்டார்க்டிகா விரிகுடாக்களையும், இன்னும் பல விரிகுடாக்களையும் தன்னகத்தேக் கொண்டுள்ளது. உலகின் நான்காவது பெருங்கடலாக விளங்குவது அன்டார்க்டிக் பெருங்கடல். இது பல நேரங்களில் தெற்கு பெருங்கடல் என அழைக்கப்படுகிறது. 2000 - ஆம் ஆண்டில் சர்வதேச நீர்பரப்பு ஆய்வு மையம் இக்கடலின் எல்லையை விரிவுபடுத்தி 60 டிகிரி தெற்கு ரேகைக்கு தெற்கே உள்ள கடல் பகுதிகளை அன்டார்க்டிக்காவுடன் இணைத்தது. தற்போது இதன் மொத்த பரப்பளவு இரண்டு கோடியே மூன்று லட்சத்து இருபத்தியேழாயிரம் சதுர கி.மீ. ஆகும். 4,000 முதல் 5,000 மீட்டர் ஆழம் காணப்படுகிறது. இக்கடல் பகுதிகளில் மிகப் பெருமளவில் எண்ணெய் வளமும், இயற்கை எரிவாயு வளமும் நிறைந்துள்ளன. சீல் எனப்படும் கடல் சிங்கங்களும், திமிங்கலங்களும் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன. ஆர்டிக் பெருங்கடல் ஆர்க்டிக் பெருங்கடல், உலகிலுள்ள பெருங்கடல்களுள் சிறியது. இது முழுவதுமாக ஆர்க்டிக் வட்டத்திற்கு மேல் அமைந்துள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 14,090,000 சதுர கி.மீ. ஆகும். இதன் சராசரி ஆழம் 3,658 மீ. இதன் மிக அதிகபட்ச ஆழம் 4,665 மீ. ஆகும். இப்பெருங்கடல் முழுவதுமாக நிலப்பரப்பால் சூழப்பட்டுள்ளது. அலாஸ்கா - ரஷ்யா இடையே அமைந்துள்ள பேரிங் நீரிணையம், கிரீன்லாந்து - கனடா இடையே அமைந்துள்ள டேவிஸ் நீரிணையம், கிரீன்லாந்து - ஐரோப்பா இடையே அமைந்துள்ள டென்மார்க் நீரிணையம், நார்வேஜியன் கடல் போன்றவை ஆர்க்டிக் பெருங்கடலை வெளி உலகுடன் இணைக்கின்றன. ஆர்க்டிக் பெருங்கடல் பூமி அடித்தட்டின் அடிப்படையில் இரு பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. அவை யுரேசியன் தட்டு, வட அமெரிக்கத் தட்டு ஆகும். ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் கடல்களுக்கு இடையில் அவற்றின் விளிம்புகள் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றன. ஆர்க்டிக்கை சுற்றியுள்ள நிலப்பரப்புகளும், மூழ்கியுள்ள தட்டுப்பகுதிகளும் வெளி நீர் உட்புகாதவாறு தடுக்கின்றன. எனவே, இக்கடல் குளிர்ந்த நீர் நிறைந்த ஒரு நீர்த்தேக்கம் போல் உள்ளது. ஆர்க்டிக் பெருங்கடலின் மையப்பகுதி நிரந்தரமாக பத்து அடி ஆழத்திற்கு பனிக்கட்டியாக உறைந்துள்ளது. வெயில் மாதங்களில் பனிக்கட்டிகளை சுற்றி நீர் சூழ்ந்து அவை மிதக்க துவங்கிவிடும். குளிர் மாதங்களில் வெயில் மாதங்களில் இருந்ததைப் போன்று இருமடங்கு அதிக பரப்பில் பனிக்கட்டி உறைந்து விடுகிறது. ஆர்டிக் பெருங்கடல் அலைகளே இல்லாத பெருங்கடலாகும். இதில் கப்பற்பயணம் செய்ய முடியாது. குளிர்காலத்தில் உறைபனியாகவும், இதரப்பருவங்களில் பனிக்கட்டித் துண்டங்கள் மிதக்கும் பகுதியாகவும் இது விளங்குகிறது. 130 இலட்சம் ச.கி.மீ.க்கும் அதிகமான இடத்தை நிரப்பிக் கொண்டிருப்பதாலேயே பெருங்கடல் என்ற சிறப்புடன் இது அழைக்கப்படுகிறது.[19] இந்தியப் பெருங்கடல் உலகிலுள்ள ஐந்து பெருங்கடல்களுள் பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு அடுத்தபடியாக பெரிய கடலாக விளங்குவது இந்திய பெருங்கடல் ஆகும். தெற்கே தெற்கு பெருங்கடலும், மேற்கே ஆப்பிரிக்காவும், வடக்கே ஆசியாவும், கிழக்கே ஆஸ்திரேலியாவும் இப்பெருங்கடலின் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் மொத்த பரப்பளவு 6,85,56,000 சதுர கி.மீ. ஆகும். சர்வதேச நீர்பரப்பு ஆய்வு மையம் இரண்டாயிரமாண்டில் இந்திய பெருங்கடலின் எல்லைகளை வரையறை செய்தது. அதன்படி இந்திய பெருங்கடலின் தெற்கே 60 டிகிரிக்கு கீழ் உள்ள பகுதி பிரிக்கப்பட்டு தெற்கு பெருங்கடலின் (அன்டார்க்டிக்) எல்லை விரிவாக்கப்பட்டது. இந்திய பெருங்கடலின் மிக ஆழமான பகுதி ஜாவா நீர்வழி ஆகும். இதன் ஆழம் 7,258 மீட்டர் ஆகும். இக்கடலில் அதிகமாக பெட்ரோலியப் பொருள்களும், இயற்கை எரிவாயுக்களும் இயற்கையாக, மிகுதியாக காணப்படுகின்றன. உலக பெட்ரோலிய பொருள்கள் உற்பத்தியில் 40 சதவிகிதம் இந்தியப் பெருங்கடலிலிருந்து கிடைக்கிறது. மீன் போன்ற கடல் உணவுப் பொருள்கள் அதிக அளவில் கிடைப்பது இக்கடலின் மற்றுமொரு இயற்கை வளமாகும். இந்திய பெருங்கடல் நாடுகள் உட்பட ரஷ்யா, ஜப்பான், தென்கொரியா, தாய்வான் நாட்டு மீன்பிடி கப்பல்கள் இதை தங்கள் மீன்பிடித் தளமாக பயன்படுத்துகின்றன. இந்திய பெருங்கடல் முக்கியமான கடல்பாதைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆசியா பகுதிகளை இது ஐரோப்பாவுடன் இணைக்கிறது பசிபிக் பெருங்கடல் உலகின் மிகப்பெரும் பரப்பளவை தன்னகத்தே கொண்ட பெருங்கடல் பசிபிக் (Pacific Ocean) ஆகும். பசிபிக் என்பதன் லத்தின் பொருள் அமைதியான கடல் என்பதாகும். வடக்கே ஆர்க்டிக் கடல் முதல் தெற்கே தென்கடல் வரை இது பரந்து விரிந்துள்ளது. மேற்கில் ஆஸ்திரேலியாவும், ஆசியாவும், கிழக்கே அமெரிக்கக் கண்டங்களும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. பதினாறு கோடியே தொண்ணுத்திரெண்டு லட்சம் ச.கி.மீ. பரப்பளவில் இக்கடல் அமைந்துள்ளது. சுமாராக 62 புள்ளி 2 கோடி கனசதுர கி.மீ. நீரை இக்கடல் கொண்டுள்ளது. உலக நீர் இருப்பில் 46 சதவிகிதத்தையும், உலகின் மொத்தப் பரப்பளவில் 30 சதவிகிதத்தையும் இக்கடல் கொண்டுள்ளது. உலகிலேயே பெரிய கடல் பசிபிக் பெருங்கடலாகும். பூமியின் பரப்பளவில் 35.25 சதவிகிதம் கொண்டது. உலகிலேயே ஆழம் கூடிய மிண்டானா பகுதி இதிலுள்ளது. இதன் ஆழம் 11,516 மீட்டர். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான தீவுகளும் இக்கடலில் தான் உள்ளன. வடமேற்கு பசிபிக் கடலில் உள்ள மரியானா ட்ரென்ச் என்ற பகுதியே உலகிலேயே ஆழமான கடல் பகுதி ஆகும். இதன் ஆழம் 10,911 மீட்டர். பசிபிக்கின் சராசரி ஆழம் 4028 முதல் 4188 மீட்டர் ஆகும். இக்கடலில் சுமார் 25,000 தீவுகள் உள்ளன. பெரும்பாலான தீவுகள் தென் பசிபிக்கிலேயே கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் சில கடலில் மூழ்கி உள்ளன. பெரும்பாலானவை உயரமான தீவுகள். தற்போது பூமி தட்டின் நகர்வினால் பசிபிக் கடல் சுருங்கி வருகிறது. மாறாக அட்லாண்டிக் கடல் விரிவடைந்து வருகிறது. சராசரியாக ஆண்டிற்கு அரை கிலோ மீட்டர் சுருங்குகிறது. பசிபிக் கடலின் மேற்கு எல்லையில் பல கடல்கள் அமைந்துள்ளன. அவை செலிபஸ் கடல் (Celebes Sea), கோரல் கடல் (Coral Sea), கிழக்குச் சீன கடல், ஜப்பான் கடல், தென் சீன கடல், சுலு கடல் (Sulu Sea), பிலிபைனி கடல் (Philippine Sea), டாஸ்மான் கடல் (Tasman Sea) மற்றும் மஞ்சள் கடல் போன்றவை ஆகும். கடல்கள் அரபிக்கடல் இந்தியாவிற்கு மேற்கே அமைந்துள்ள கடல் பகுதி அரபிக்கடல் என அழைக்கப்படுகிறது. இது பண்டைக் காலத்திலும், இடைக்காலத்திலும் பச்சிம் சமுத்திரம் என அழைக்கப்பட்டது. இக்கடலின் கிழக்கே இந்தியாவும், மேற்கே சவுதி அரேபியாவும் - ஆப்பிரிக்காவும், வடக்கே ஈரானும் - பாகிஸ்தானும், தெற்கே இந்தியப் பெருங்கடலும் அமைந்துள்ளன. இக்கடலின் மிக அகலமான பகுதி ஏறத்தாழ 2400 கி.மீ. ஆகும். தெற்கில் இக்கடல் இந்தியப் பெருங்கடலுடன் கலப்பதால் இதன் தெற்கு எல்லையை அறுதியிட்டு கூற இயலாது. சிந்து, நர்மதை, தபதி ஆறுகள் இக்கடலில் கலக்கின்றன. ஓமன் வளைகுடா இதனை பாரசீக வளைகுடாவுடனும், ஏடன் வளைகுடா இதனைச் செங்கடலுடனும் இணைக்கின்றன. இக்கடலின் கரையில் ஏடன், கராச்சி, பம்பாய், கொச்சி போன்ற பெரிய துறைமுகங்களும், பல புகழ்பெற்ற நகரங்களும் அமைந்துள்ளன. ஆரல் கடல் ஆரல் கடல் ( Aral sea ) என்பது துர்க்கிஸ்தான் பகுதியில் காஸ்பியன் கடலுக்குக் கிழக்கே 240 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மிகப் பெரியதோர் உப்புநீர் ஏரியாகும். இந்த ஏரி உலகிலேயே நில உட்பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய நீர்நிலை ஆகும். இதன் மொத்த பரப்பளவு 66,459 சதுர கி.மீ. ஆகும். இது 17 முதல் 68 மீட்டர் ஆழமுடையது. ஆரல் கடலில் பல தீவுகள் அமைந்துள்ளன. அமுதாரியா (Amu Darya), சைர் தாரியா ( Syr Darya ) ஆகிய ஆறுகள் இக்கடலில் கலக்கின்றன. அயோனியன் கடல் அயோனியன் கடல் ( Ionian Sea ) என்பது மத்தியத் தரைக்கடலின் ஆழமிக்க பகுதியாகும். இக்கடல் இத்தாலியையும் - சிசிலியையும், அல்பேனியாவிலிருந்தும் - கிரீசிலிருந்தும் பிரிக்கிறது. இக்கடலையும் அட்ரியாடிக் (Adriatic) கடலையும் ஆட்ராண்டோ நீர்ப்பிரிவு ( Strait of Otranto ) இணைக்கிறது. இக்கடலின் அகலம் 676 கி.மீ. ஆகும். சில பகுதிகளில் இக்கடலின் ஆழம் 5093 மீட்டர் ஆகும். இன்லான்ட் கடல் ஜப்பான் நாட்டில் பசிபிக் பெருங்கடலில் கால்வாய் போன்று அமைந்துள்ளது இன்லான்ட் கடல் (Inland sea). இது தென் ஜப்பானில் ஹான்சிகோக், கியூஸ் ஆகிய தீவுகளுக்கிடையில் உள்ளது. ஆழம் குறைந்த இக்கடலில் 950 க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. இதன் மொத்த நீளம் 9505 கி.மீ. ஆகும். இது குறுகிய கால்வாய் ஒன்றின் மூலம் ஜப்பான் கடலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்லான்ட் கடலின் கடற்கரைகளில் மக்கள் தொகை மிகுதி. இக்கடல் இயற்கை எழிலுடன் புகழ்பெற்று விளங்குகிறது. வங்காள விரிகுடா இந்தியாவின் கிழக்கே எல்லையாக அமைந்திருப்பது வங்காள விரிகுடா (Bay of Bengal) ஆகும். இது 21 லட்சத்து 73 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்தியப் பெருங்கடலின் வடகிழக்கே இக்கடல் அமைந்துள்ளது. இதன் மேற்கே இந்தியாவும், இலங்கையும் எல்லையாக உள்ளன. வடக்கே பங்களாதேசமும், மியான்மரும் (பர்மா), கிழக்கே பெனின்சுலாவும், தெற்கே இலங்கையின் தென் முனையும், இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவு வரையிலான கடலும் வங்காள விரிகுடாவின் எல்லைகளாக உள்ளன. இக்கடலின் மேற்கே பல முக்கியமான ஆறுகள் கலக்கின்றன. மகாநதி, கோதாவரி, கிரிஷ்ணா மற்றும் காவேரி போன்றவையே அவையாகும். வடக்கே பிரம்மபுத்திரா ஆறும் இக்கடலில் கலக்கின்றன. இக்கடலில் அமைந்துள்ள ஒரே தீவுக் கூட்டம் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகும். இதன் சராசரி ஆழம் 2,600 மீட்டர் ஆகும். இக்கடலின் அதிகபட்ச ஆழம் 4,694 மீட்டர். வங்காள விரிகுடாவில் எண்ணெய் வளமும், இயற்கை எரிவாயு வளமும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அதிகமான கனிமவளம் நிறைந்த மண் இக்கடலில் நிறைந்துள்ளது. இங்கு அதிகமான மீன் வளம் உள்ளதால் கடற்கரை நாடுகளும், ஜப்பான் நாடும் மீன்பிடித்தலில் ஈடுபடுகின்றன. இக்கடல் பல பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த கடல்வழிகளைக் கொண்டுள்ளது. அவை பல சர்வதேச துறைமுகங்களை பங்களாதேஷ், இலங்கை மற்றும் இந்தியாவின் கிழக்கு துறைமுகங்களுடன் இணைக்கின்றன. பெருங்கடல் வாரியாக கடல்களின் பட்டியல் அட்லாண்டிக் பெருங்கடல் அர்கெந்தீனக் கடல் பபின் குடா சென். லாரன்ஸ் வளைகுடா ஃபண்டி வளைகுடா கரிபியன் கடல் மெக்சிக்கோ வளைகுடா சர்கசோ கடல் வடகடல் சேஸபீக் குடா பால்டிக் கடல் மத்திய பால்டிக் கடல் போத்னியா வளைகுடா போத்னியா குடா போத்னியக் கடல் பின்லாந்து வளைகுடா ஹெப்ரைட்ஸ் கடல் ஐரிஷ் கடல் செல்டிக் கடல் ஆங்கிலக் கால்வாய் மத்தியதரைக் கடல் ஏட்ரியாட்டிக் கடல் ஈஜியன் கடல் மிர்தூன் கடல் கிரீட் கடல் திரேசியன் கடல் அல்போரன் கடல் மர்மரா கடல் கருங்கடல் அசோவ் கடல் கட்டாலன் கடல் அயோனியன் கடல் லிகுரியக் கடல் திர்ரேனியக் கடல் சித்ரா வளைகுடா அன்டார்டிக் பெருங்கடல் வேட்டெல் கடல் ரோஸ் கடல் கிரேட் ஆத்திரேலிய பைட் சென். வின்சன்ட் வளைகுடா ஸ்பென்சர் வளைகுடா ஸ்காட்டியாக் கடல் அமுன்சென் கடல் பெல்லிங்க்ஷுசென் கடல் டேவிஸ் கடல் ஆர்க்டிக் பெருங்கடல் ஹட்சன் குடா ஜேம்ஸ் குடா பேரன்ட்ஸ் கடல் காராக் கடல் பியூபோர்ட் கடல் அமுன்சென் வளைகுடா கிறீன்லாந்து கடல் நோர்வே கடல் சுக்சிக் கடல் லப்டேவ் கடல் கிழக்கு சைபீரியக் கடல் வெண் கடல் லிங்கன் கடல் இந்தியப் பெருங்கடல் செங்கடல் ஏடென் குடா பாரசீக வளைஇகுடா ஓமான் வளைகுடா அரபிக்கடல் வங்காள விரிகுடா அந்தமான் கடல் திமோர் கடல் பசிபிக் பெருங்கடல் சிலியன் கடல் பெரிங் கடல் அலாஸ்கா வளைகுடா சலிஷ் கடல் கலிபோர்னிய வளைகுடா ஒக்கொட்ஸ் கடல் ஜப்பான் கடல் செடோ உள்நாட்டுக் கடல் கிழக்கு சீனக் கடல் தெற்கு சீனக் கடல் சூலு கடல் செலேபெஸ் கடல் மிண்டானோக் கடல் பிலிப்பைன் கடல் கமோட்ஸ் கடல் ப்லோரெஸ் கடல் பண்டா கடல் அரபுராக் குடல் தீமோர் கடல் தாஸ்மான் கடல் மஞ்சள் கடல் பொகாய்க் கடல் கோரல் கடல் கார்பெண்டாரிய வளைகுடா பிஸ்மார்க் கடல் சொலொமன் கடல் செரம் கடல் ஹல்மஹெறக் கடல் மொலுக்கக் கடல் சாக்கடல் ஜாவாக் கடல் தாய்லாந்து வளைகுடா நிலம் சூழ் கடல்கள் ஆரல் கடல் காஸ்பியன் கடல் சாக்கடல் கலிலேயக் கடல் சால்டன் கடல் உப்புப் பேரேரி மேலும் பார்க்க பெருங்கடல் கடலியல் உசாத்துணை மேற்கோள்கள் * பகுப்பு:நீர்நிலைகள் பகுப்பு:மேற்கோள் வழு-ref குறிச்சொல்லுக்கு உரையில்லாதவை
பசிபிக் பெருங்கடல்லின் அதிகபட்ச ஆழம் எவ்வளவு?
10,911
15,830
tamil
533e6b68b
கடல் (ஒலிப்பு) அல்லது ஆழி(Sea), உலகப் பெருங்கடல் (World ocean), அல்லது வெறுமனே பெருங்கடல் (Ocean) என்பது புவியின் பரப்பில் 70 விழுக்காட்டை ஆக்கிரமித்துள்ள உப்பான நீர் கொண்ட இணைந்த (connected) நீர்நிலை ஆகும். இது புவியின் பருவநிலையை நிலைப்படுத்துவதோடு நீர் சுழற்சி, கரிமச் சுழற்சி, நைட்ரஜன் சுழற்சி ஆகியவற்றிலும் முதன்மைப் பங்காற்றுகிறது. பழங்காலங்களிலிருந்து கடலில் பயணங்கள் செய்யப்பட்டும் தேடல்கள் நடந்தும் வந்தாலும், அறிவியல் அடிப்படையிலான கடலியல் அல்லது பெருங்கடலியல் என்பது பெரும்பாலும் பசிபிக் பெருங்கடலை ஜேம்ஸ் குக் 1768க்கும் 1779க்கும் இடைப்பட்ட காலத்தில் கண்டறிந்து ஆராய்ந்ததிலிருந்துதான் தொடங்குகிறது. கடல் எனும் சொல்லானது பெருங்கடலின் சிறிய, பகுதியளவு நிலத்தால் சூழப்பட்ட பகுதிகளைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது."கடல்" என்ற சொல்லாவது, கடத்தற்கு அரியதென்று பொருள்படும். ஆழி, விரிநீர், பெருநீர், பருநீர், முதலானும் குறிக்கப்படுகிறது. கடல் நீரில் மிக அதிகளவு கரைந்துள்ள திடப்பொருள் சோடியம் குளோரைடு (சாதாரண உப்பு) ஆகும். மேலும் இந்நீரில் மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற உப்புகளும் மேலும் பல தனிமங்களும் உள்ளன. இதில் சில குறைந்த செறிவுத்தன்மையுடன் காணப்படுகின்றன. உவர்ப்புத் தன்மை (salinity) இடத்திற்கேற்றார்போல் வெகுவாக வேறுபடுகிறது. கரைக்கு அருகிலும் கழிமுகப் பகுதியிலும் (ஆறும் கடலும் கலக்கும் இடம்) ஆழக்கடல் பகுதியிலும் உவர்ப்புத் தன்மை குறைவாகக் காணப்படுகிறது. எவ்வாறேனும், பெருங்கடல்களில் கரைந்திருக்கும் உப்புகளின் "ஒப்புமை" வீதங்கள் பொதுவாக ஒன்றாகவே இருக்கின்றன; பெரிதாக மாறுவதில்லை. கடல் பரப்பின் மீது வீசும் காற்றினால் அலைகள் உருவாகின்றன. இவை ஆழக்குறைவான நீரை அடையும்போது கொந்தளிப்புடன் உடைந்து சிதறுகின்றன. வீசும் காற்றின் உராய்வின் மூலமாக பரப்பு நீரோட்டங்கள் உருவாகின்றன. இது பெருங்கடல்கள் முழுவதும் மெதுவான ஆனால் நிலையான ஒரு நீரோட்டத்தை ஏற்படுத்துகிறது. இந்த நீர்ச்சுழலின் திசைகள் கண்டங்களின் வடிவங்கள், புவியின் சுழற்சி (சுழலகற்சி விளைவு; Coriolis effect) போன்ற காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன. உலகளாவிய இயங்கு பட்டை என்று அறியப்படும் ஆழ்கடல் நீரோட்டங்கள், அருகில் இருக்கும் துருவங்களில் இருந்து அனைத்து பெருங்கடல்களுக்கும் குளிர் நீரை எடுத்துச் செல்கின்றன. ஓதங்கள் தினமும் இருமுறை கடல்மட்டத்திலிருந்து உயர்ந்து தாழ்கின்றன. இந்த ஏற்ற இறக்கமானது புவியின் சுழற்சியினாலும் புவியைச் சுற்றும் நிலவின் ஈர்ப்பு விசையினாலும் மிகக்குறைந்த அளவு சூரியனாலும் ஏற்படுகின்றன. ஓதங்கள் விரிகுடாக்களிலோ கழிமுகங்களிலோ அதிக வீச்சுடன் இருக்கும். அழிவுத்தன்மை கொண்ட ஆழிப்பேரலைகள் கடலடி நிலநடுக்கங்களால் ஏற்படுகின்றன. இந்த நிலநடுக்கங்கள் கடலடியில் ஏற்படும் கண்டத்தட்டு நகர்வு, எரிமலை வெடிப்பு, பெரும் நிலச்சரிவு அல்லது பெரிய விண்வீழ்கற்களால் ஏற்படுகின்றன. வைரசுகள், பாக்டீரியங்கள், புரோடிஸ்ட்கள், பாசிகள், தாவரங்கள், பூஞ்சைகள் இவற்றுடன் விலங்குகள் போன்ற பெரும் அளவிலான உயிரினங்கள் கடலில் வாழ்கின்றன. இந்த உயிரிகள் சூரியஒளி அதிகம் படும் பரப்பு நீர் முதல் சூரிய ஒளியே படாத அதிக அழுத்தத்திலும் குளிர்ச்சியிலும் இருட்டிலும் இருக்கும் அதிஆழ நீர் வரை பரவியுள்ளன. குறுக்குக் கோடு வாக்கில் (latitude) கடலின் தன்மையும் மாறுகிறது. எடுத்துக்காட்டாக, ஆர்க்டிக் பனிக்கு அடியில் குளிர் நீரையும் வெப்ப மண்டலப் பகுதிகளில் வண்ணமயமான பவளப் பாறைகளையும் கடல் கொண்டுள்ளது. முதன்மையான பல உயிரினக் குழுக்கள் கடலில்தான் சிறந்துவந்தன (evolved). மேலும், உயிரும் கடலிலேயே தோன்றியிருக்கக்கூடும். கடல் மக்களுக்குக் கணிசமான அளவு உணவுப் பொருட்களைத் தருகிறது. இதில் முதன்மையானதாக மீன், ஆளிகள், கடல்வாழ் பாலூட்டிகள், கடல்பாசி போன்றவை அடங்கும். கடல்பாசிகள் காட்டில் அறுவடை செய்யப்பட்டோ நீருக்கடியில் வளர்க்கப்பட்டோ கிடைக்கின்றன. வணிகம், பயணம், கனிமப் பிரித்தெடுப்பு, திறன் ஆக்கம் (power generation), போர், ஓய்வுநேரச் செயல்பாடுகளான நீச்சல், அலைச்சறுக்கு (surfing), பாய்மரப் பயணம் (sailing), கருவியுதவியுடன் குதித்தல் (scuba diving) போன்றவற்றுக்கும் கடல் பயன்படுகிறது. மாசுபாட்டினால் கடல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. வரலாறு முழுதும் கடல் பல பண்பாடுகளிலும் பெரிதும் உதவியுள்ளது. கடல் ஓமரின் ஒடிசி போன்ற இலக்கியங்களிலும் முதன்மையான கூறாக இருந்திருக்கிறது. இது கடல்சார் ஓவியத்திலும், அரங்கங்களிலும், பண்டைய இசையிலும் பெரும்பங்காக இருந்து வந்துள்ளது. வரையறை கடல் புவியின் அனைத்துப் பெருங்கடல் நீரையும் உடனிணைத்த ஓர் அமைப்பாகும். இவ்வமைப்பில் "பெருங்கடல்கள்" என்று அழைக்கப்படும் அட்லாண்டிக், பசிபிக், இந்தியப் பெருங்கடல், தென்முனைப் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல் ஆகிய ஐந்தும் அடங்கும்.[1] "கடல்" எனும் சொல் குறிப்பாக குறைந்த அளவு கடல்நீரைக் கொண்டவற்றைக் குறிப்பிடப் பயன்படுகின்றது. அதாவது செங்கடல், கருங்கடல் போன்றவை. கடலைக் குறிக்கும் பிற சொற்கள் தமிழில் கடலானது அரலை, அரி, அலை, அழுவம், அளம், அளக்கர், ஆர்கலி, ஆலந்தை, ஆழி, ஈண்டுநீர், உரவுநீர், உவர், உவரி, உவா, ஓதம், ஓதவனம், ஓலம், கயம், கலி, கார்கோள், கிடங்கர், குண்டுநீர், குரவை, சக்கரம், சலதரம், சலநிதி, சலராசி, சலதி, சுழி, தாழி, திரை, துறை, தெண்டிரை, தொடரல், தொன்னீர், தோழம், நரலை, நிலைநீர், நீத்தம், நீந்து, நீரகம், நிரதி, நீராழி, நெடுநீர், நெறிநீர், பரப்பு, பரவை, பரு, பாரி, பாழி, பானல், பிரம்பு, புணர்ப்பு, புணரி, பெருநீர், பௌவம், மழு, முந்நீர், வரி, வலயம், வளைநீர், வாரி, வாரிதி, வீரை, வெண்டிரை, வேழாழி, வேலை என பல சொற்களால் தமிழில் கடல் குறிப்பிடப்படுகிறது.[2][3] கடலின் இயற்பியல் சூரியக் குடும்பத்தில் நீர்ம நிலையில் (திரவ நிலை) புறப்பரப்பில் நீரைக் கொண்டுள்ள ஒரே கோள் புவியே ஆகும்.[4](p22) ஆனால், சூரியக் குடும்பத்திற்கு வெளியில் உள்ள புவியை ஒத்த கோள்களில் பெருங்கடல்கள் இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.[5] புவியின் புறப்பரப்பின் 70 விழுக்காட்டிற்கும் மேலாக கடல் நீரால் சூழப்பட்டுள்ளது.[4](p7) புவியின் 97.2 விழுக்காடு நீரானது கடலிலேயே காணப்படுகிறது. இது கிட்டத்தட்ட 1,360,000,000 cubic kilometres (330,000,000cumi) என்ற அளவுக்குச் சமம்.[6] மீதி 2.15 விழுக்காடு நீரானது பனியாறுகளிலும், கடல் மேல் உறைந்த பனிக்கட்டியிலும் அடங்கியுள்ளது. 0.65 விழுக்காடு நீரானது நீராவி, பிற நன்னீர் ஏரிகள், ஆறுகள், நிலத்தடி நீர் மற்றும் காற்றிலும் உள்ளது.[6] விண்வெளியிலிருந்து பார்க்கும்போது நமது கோள் நீல நிற கோலி போன்று காட்சியளிக்கும்.[7] அறிபுனை எழுத்தாளர் ஆர்தர் சி. கிளார்க் நமது புவியில் கடலே ஓர் ஆதிக்கமான அம்சமாக இருப்பதால் "புவி (Earth)" என்று அழைப்பதற்குபதில் "பெருங்கடல் (Ocean)" என்று இதனை அழைக்கலாம் என்று கூறினார்.[4](p7) பெருங்கடல் இயற்பியல் (Physical Oceanography) அல்லது கடல் இயற்பியல், என்பது கடலின் புறவியல் (இயற்பியல்) பண்புகளான வெப்பநிலை-உவர்ப்புத் தன்மை கட்டமைப்பு, கலப்பு, அலைகள், உள்ளக அலைகள், புறப்பரப்பு ஓதங்கள். உள்ள்க ஓதங்கள், சுழற்சிகள் ஆகியவற்றைப் பற்றிய படிப்பு ஆகும்.[4](pp14–17)[8] சுழற்சிகள் (currents), ஓதங்கள், அலைகள் வடிவிலான நீரின் இயக்கமானது கடற்கரையோரப் பகுதிகளில் பருவநிலை மாற்றம் போன்றவற்றுக்குக் காரணமாக உள்ளது.[9] கடலின் புவியியல் என்பது பெருங்கடல் வடிகால்களின் வடிவத்தையும் அவற்றின் நீட்சியையும், மேலும் கடலில் முடியும் நிலப்பகுதியின் கரைகளையும் பற்றிய படிப்பாகும். கடல் படுகையின் வடிவமைப்பும் அதன் நீட்சியும் புவியிலுள்ள பொருட்கள் எதனால் செய்யப்பட்டுள்ளன என்பதை அறிய உதவுகின்றன. மேலும், இவற்றின் மூலம் கண்ட நகர்வு, நிலநடுக்க பாதிப்புள்ள பகுதிகள், எரிமலைப் பகுதிகளின் செயல்பாடுகள், படிவுப் பொருட்களின் மூலம் படிவுப் பாறைகள் உருவான விதம் ஆகியவற்றைப் பற்றி அறிய முடிகிறது.[9] கடல் நீர் கடலிலுள்ள நீரானது 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த புவியின் எரிமலைகளினால் உருகிய பாறைகளில் இருந்து வெளிப்பட்ட பொருள்களினால் உருவானது என்று எண்ணப்பட்டது.[4](pp24–25) ஆனால், அண்மைய ஆய்வுகள் புவியின் நீரானது விண்வீழ்கற்களிலிருந்து வந்திருக்கலாம் என்று கூறுகின்றன.[10] பெருங்கடல்கள் உப்பு நீரைக் கொண்டுள்ளது. உப்புக் கனிமங்கள் நிலத்திலிருந்து ஆறுகள் வழியாக கடலில் கலப்பதால், கடல்நீர் உப்புத் தன்மைக் கொண்டுள்ளது. வளிமண்டலத்தில் உள்ள கரியமிலவாயு, மழை நீருடன் கலந்து சிறிது அமிலத் தன்மையாக மாறி, பின் மலைநீர் ஆறாக உருவமாறி, மலைப் பாறைகள் மற்றும் மண்னில் உள்ள பலவகையான உப்பு முதலிய கனிமங்களுடன் கலந்து இறுதியாக கடலில் கலப்பதாலும் கடல் நீர், அருந்த முடியாத அளவிற்கு உப்புநீராக மாறுகிறது. மேலும் கடலுக்கடியில் உள்ள எரிமலைகள் நீராவியை கக்குவதாலும், எரிமலைகள் வெடிப்பதாலும், புவிக்கடியில் உள்ள உப்புக் கனிமங்கள் கடலில் கலப்பதால் கடல்நீர் உப்புத் தன்மையாக மாறுகிறது.[11] இதனால் கடல் நீர் உவர்ப்பு தன்மையாக உள்ளது. உவர்ப்புத் தன்மை பொதுவாக ஆயிரத்தில் இத்தனை பகுதிகள் (parts per thousand - இது ‰ குறி கொண்டோ "/ மில்லியன்" என்றோ குறிப்பிடப்படுகிறது) என்று அளக்கப்படுகிறது. ஒரு திறந்த பெருங்கடலின் ஒரு லிட்டர் நீரில் 35 கிராம் திடப்பொருளைக் கொண்டுள்ளது. அது 35‰ என்று குறிப்பிடப்படுகிறது. (பெருங்கடலின் 90% நீரானது 34‰ முதல் 35‰ வரையிலான உவர்ப்புத் தன்மையைப் பெற்றுள்ளன[12]). நடுநிலக் கடல் சிறிது அதிகமாக 37‰ என்ற அளவைக் கொண்டுள்ளது. அந்த நீரில் சாதாரண உப்பு, சோடியம், குளோரைடு ஆகியவை 85 விழுக்காட்டு அளவில் உள்ளன. மேலும் அதில் மக்னீசியம், கால்சியம் ஆகியவற்றின் உலோக அயனிகளும், சல்ஃபேட், கார்பனேட், புரோமைடு போன்றவற்றின் எதிர்மின் அயனிகளும் கரைந்துள்ளன. பல்வேறு கடல்களில் வெவ்வேறு உவர்ப்புத் தன்மை காணப்பட்ட போதிலும் ஒப்புமை பங்கீட்டளவு உலகம் முழுதும் நிலையான ஒன்றாகவே உள்ளது.[13][14] கடல் நீர் மனித சிறுநீரகங்களுக்கு மிகவும் ஆபத்தானது. அதிலுள்ள அதிகப்படியான உப்பினை அவற்றால் சுத்திகரிப்பு செய்யமுடியாது.[15] ஆனால், எதிர்மறையாக நிலம் சூழப்பட்ட அதிஉவர் ஏரிகள் (hypersaline lakes) சிலவற்றில், எடுத்துக்காட்டிற்கு சாக்கடல் ஆனது ஒரு லிட்டரில் 300 கிராம் கரைந்த திடப்பொருள்களைக் கொண்டுள்ளது (அதாவது 300‰) மேற்பரப்பு நீரின் ஆவியாதல் வீதம் (உயர் வெப்பநிலை, காற்று வீசும் வீதம், அலை இயக்கத்தினால் அதிகரிக்கும்), வீழ்படிவாக்கும் திறம், கடல் பனி உருகுதல் அல்லது உறைதல், பனியாறு உருகுதல், புதிய ஆற்று நீர் உள்புகுதல், வெவ்வேறு உவர்ப்புத் தன்மை கொண்ட நீர்நிலைகளின் கலப்பு ஆகியவற்றால் கடலின் உவர்ப்புத் தன்மை மாறுகிறது. எடுத்துக்காட்டாக, பால்டிக் கடலின் குளிர்ச்சியான சூழலுள்ள குறைந்த ஆவியாகும் தன்மை, நிறைய ஆறுகளின் கலப்பு இவைமட்டுமன்றி, வடக்குக் கடலில் இருந்து குளிர்ந்த நீர் அடிக்கடி இக்கடலில் வந்து நிரம்புதல் போன்றவற்றால் இதன் அடி அடுக்கு அடர்வானதாக மாறி அதன் பரப்பு அடுக்குகளுடன் கலக்க முடியாமல் போகிறது. அதனால் மேல்மட்ட அடுக்கின் உவர்ப்புத் தன்மை 10இலிருந்து 15‰ வரை மட்டுமே உள்ளது. மேலும் அதன் கழிமுகப் பகுதிகளில் இன்னும் குறைவானதாக இருக்கிறது.[16] வெதுவெதுப்பான செங்கடல் அதிகபட்ச ஆவியாதல் அளவையும் ஆனால் குறைவான வீழ்படிவாதல் பண்பையும் பெற்றிருக்கிறது; சில ஆறுகளும் அதனுள் கலக்கின்றன. மேலும், ஆதாம் வளைகுடாவுடன் கலக்கும் பாப்-எல்-மாண்டெப் ஆனது மிகவும் குறுகலாக உள்ளது. எனவே அதன் சராசரி உவர்ப்புத் தன்மை 40 ‰ என்ற அளவில் உள்ளது.[17] கடலின் வெப்பநிலை அதன் பரப்பில் விழும் சூரிய ஒளியைப் பொறுத்தது. வெப்பமண்டலப் பகுதிகளில் உச்சியில் சூரியன் இருக்கும்பொழுது அதன் வெப்பநிலை 30°C ஆக இருக்கும். ஆனால், துருவப் பகுதிகளில் கடல் வெப்பநிலை கடலிலுள்ள பனியுடன் ஒரு சமநிலையில் உள்ளது. அது எப்போதும் -2°C என்ற அளவில் உள்ளது. பெருங்கடல்களில் தொடர்ச்சியான ஒரு நீரோட்டம் இருந்துகொண்டே இருக்கிறது. வெதுவெதுப்பான பரப்பு நீரோட்டங்கள் வெப்பமண்டலத்தை விட்டு விலகுகையில் குளிர்கின்றன. குளிர்வதால் அந்நீரின் அடர்த்தி அதிகரிக்கிறது. அதனால், அது கீழே செல்கிறது. அந்தக் குளிர் நீர் ஆழக் கடல் நீரோட்டத்தின் காரணமாக மீண்டும் நிலநடுக்கோட்டினருகில் வருகிறது. இந்த சுழற்சி முழுவதும் வெப்பநிலை அடர்த்தி மாற்றங்களால் நிகழ்கிறது. உலகம் முழுவதும் அடி ஆழக்கடல் வெப்பநிலை -2°C முதல் 5°C வரை இருக்கலாம்.[18] பெருங்கடல்கள் அத்திலாந்திக் பெருங்கடல் உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடல் இதுவாகும். இதன் மொத்தப் பரப்பு 106,4 மில்லியன் சதுர கிலோ மீட்டர் ஆகும். இது பூமியின் பரப்பில் சராசரியாக இருபது சதவிகிதம் ஆகும். இதன் மேற்கு பகுதியில் வட அமெரிக்க, தென் அமெரிக்க கண்டங்களும், கிழக்கு எல்கையில் ஐரோப்பாவும், ஆப்பிரிக்காவும் அமைந்துள்ளன. இக்கடலின் மிக ஆழமான பகுதி ப்யூரிடோ ரிகோ ஆகும். அட்லாண்டிக் கடலின் சராசரி ஆழம் 28,232 அடிகள் ஆகும். இதன் சராசரி ஆழம் 10,936 அடிகள் ஆகும். தென்முனைப் பெருங்கடல் . அன்டார்க்டிக் நிலபரப்பைச் சூழ்ந்துள்ள கடல்பரப்பு ஆகும். இது பனிபாறைகள் நிரம்பிய ஒரு குளிர்ந்த கடல் ஆகும். இங்கு பத்து டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் இரண்டு டிகிரி செல்சியஸ் வரையிலான தட்பவெட்ப நிலை நிலவுகிறது. இங்கு பனிப்பாறைகள் கடல் மட்டத்திற்கு கீழ் பல நூறு அடிகளுக்கு மிதந்துக் கொண்டிருக்கிறது. மார்ச் மாதங்களில் பனிப்பாறைகளின் பரப்பளவு 26 லட்சம் சதுர கி.மீ. ஆக இருக்கும். செப்டம்பர் மாதத்தில் இதன் பரப்பு குறைந்து 19.8 லட்சம் சதுர கி.மீ ஆக ஆகி விடுகிறது. இக்கடல் ராஸ் கடல், அமுன்ட்சென் கடல், வெடல் கடல் மற்றும் அன்டார்க்டிகா விரிகுடாக்களையும், இன்னும் பல விரிகுடாக்களையும் தன்னகத்தேக் கொண்டுள்ளது. உலகின் நான்காவது பெருங்கடலாக விளங்குவது அன்டார்க்டிக் பெருங்கடல். இது பல நேரங்களில் தெற்கு பெருங்கடல் என அழைக்கப்படுகிறது. 2000 - ஆம் ஆண்டில் சர்வதேச நீர்பரப்பு ஆய்வு மையம் இக்கடலின் எல்லையை விரிவுபடுத்தி 60 டிகிரி தெற்கு ரேகைக்கு தெற்கே உள்ள கடல் பகுதிகளை அன்டார்க்டிக்காவுடன் இணைத்தது. தற்போது இதன் மொத்த பரப்பளவு இரண்டு கோடியே மூன்று லட்சத்து இருபத்தியேழாயிரம் சதுர கி.மீ. ஆகும். 4,000 முதல் 5,000 மீட்டர் ஆழம் காணப்படுகிறது. இக்கடல் பகுதிகளில் மிகப் பெருமளவில் எண்ணெய் வளமும், இயற்கை எரிவாயு வளமும் நிறைந்துள்ளன. சீல் எனப்படும் கடல் சிங்கங்களும், திமிங்கலங்களும் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன. ஆர்டிக் பெருங்கடல் ஆர்க்டிக் பெருங்கடல், உலகிலுள்ள பெருங்கடல்களுள் சிறியது. இது முழுவதுமாக ஆர்க்டிக் வட்டத்திற்கு மேல் அமைந்துள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 14,090,000 சதுர கி.மீ. ஆகும். இதன் சராசரி ஆழம் 3,658 மீ. இதன் மிக அதிகபட்ச ஆழம் 4,665 மீ. ஆகும். இப்பெருங்கடல் முழுவதுமாக நிலப்பரப்பால் சூழப்பட்டுள்ளது. அலாஸ்கா - ரஷ்யா இடையே அமைந்துள்ள பேரிங் நீரிணையம், கிரீன்லாந்து - கனடா இடையே அமைந்துள்ள டேவிஸ் நீரிணையம், கிரீன்லாந்து - ஐரோப்பா இடையே அமைந்துள்ள டென்மார்க் நீரிணையம், நார்வேஜியன் கடல் போன்றவை ஆர்க்டிக் பெருங்கடலை வெளி உலகுடன் இணைக்கின்றன. ஆர்க்டிக் பெருங்கடல் பூமி அடித்தட்டின் அடிப்படையில் இரு பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. அவை யுரேசியன் தட்டு, வட அமெரிக்கத் தட்டு ஆகும். ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் கடல்களுக்கு இடையில் அவற்றின் விளிம்புகள் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றன. ஆர்க்டிக்கை சுற்றியுள்ள நிலப்பரப்புகளும், மூழ்கியுள்ள தட்டுப்பகுதிகளும் வெளி நீர் உட்புகாதவாறு தடுக்கின்றன. எனவே, இக்கடல் குளிர்ந்த நீர் நிறைந்த ஒரு நீர்த்தேக்கம் போல் உள்ளது. ஆர்க்டிக் பெருங்கடலின் மையப்பகுதி நிரந்தரமாக பத்து அடி ஆழத்திற்கு பனிக்கட்டியாக உறைந்துள்ளது. வெயில் மாதங்களில் பனிக்கட்டிகளை சுற்றி நீர் சூழ்ந்து அவை மிதக்க துவங்கிவிடும். குளிர் மாதங்களில் வெயில் மாதங்களில் இருந்ததைப் போன்று இருமடங்கு அதிக பரப்பில் பனிக்கட்டி உறைந்து விடுகிறது. ஆர்டிக் பெருங்கடல் அலைகளே இல்லாத பெருங்கடலாகும். இதில் கப்பற்பயணம் செய்ய முடியாது. குளிர்காலத்தில் உறைபனியாகவும், இதரப்பருவங்களில் பனிக்கட்டித் துண்டங்கள் மிதக்கும் பகுதியாகவும் இது விளங்குகிறது. 130 இலட்சம் ச.கி.மீ.க்கும் அதிகமான இடத்தை நிரப்பிக் கொண்டிருப்பதாலேயே பெருங்கடல் என்ற சிறப்புடன் இது அழைக்கப்படுகிறது.[19] இந்தியப் பெருங்கடல் உலகிலுள்ள ஐந்து பெருங்கடல்களுள் பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு அடுத்தபடியாக பெரிய கடலாக விளங்குவது இந்திய பெருங்கடல் ஆகும். தெற்கே தெற்கு பெருங்கடலும், மேற்கே ஆப்பிரிக்காவும், வடக்கே ஆசியாவும், கிழக்கே ஆஸ்திரேலியாவும் இப்பெருங்கடலின் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் மொத்த பரப்பளவு 6,85,56,000 சதுர கி.மீ. ஆகும். சர்வதேச நீர்பரப்பு ஆய்வு மையம் இரண்டாயிரமாண்டில் இந்திய பெருங்கடலின் எல்லைகளை வரையறை செய்தது. அதன்படி இந்திய பெருங்கடலின் தெற்கே 60 டிகிரிக்கு கீழ் உள்ள பகுதி பிரிக்கப்பட்டு தெற்கு பெருங்கடலின் (அன்டார்க்டிக்) எல்லை விரிவாக்கப்பட்டது. இந்திய பெருங்கடலின் மிக ஆழமான பகுதி ஜாவா நீர்வழி ஆகும். இதன் ஆழம் 7,258 மீட்டர் ஆகும். இக்கடலில் அதிகமாக பெட்ரோலியப் பொருள்களும், இயற்கை எரிவாயுக்களும் இயற்கையாக, மிகுதியாக காணப்படுகின்றன. உலக பெட்ரோலிய பொருள்கள் உற்பத்தியில் 40 சதவிகிதம் இந்தியப் பெருங்கடலிலிருந்து கிடைக்கிறது. மீன் போன்ற கடல் உணவுப் பொருள்கள் அதிக அளவில் கிடைப்பது இக்கடலின் மற்றுமொரு இயற்கை வளமாகும். இந்திய பெருங்கடல் நாடுகள் உட்பட ரஷ்யா, ஜப்பான், தென்கொரியா, தாய்வான் நாட்டு மீன்பிடி கப்பல்கள் இதை தங்கள் மீன்பிடித் தளமாக பயன்படுத்துகின்றன. இந்திய பெருங்கடல் முக்கியமான கடல்பாதைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆசியா பகுதிகளை இது ஐரோப்பாவுடன் இணைக்கிறது பசிபிக் பெருங்கடல் உலகின் மிகப்பெரும் பரப்பளவை தன்னகத்தே கொண்ட பெருங்கடல் பசிபிக் (Pacific Ocean) ஆகும். பசிபிக் என்பதன் லத்தின் பொருள் அமைதியான கடல் என்பதாகும். வடக்கே ஆர்க்டிக் கடல் முதல் தெற்கே தென்கடல் வரை இது பரந்து விரிந்துள்ளது. மேற்கில் ஆஸ்திரேலியாவும், ஆசியாவும், கிழக்கே அமெரிக்கக் கண்டங்களும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. பதினாறு கோடியே தொண்ணுத்திரெண்டு லட்சம் ச.கி.மீ. பரப்பளவில் இக்கடல் அமைந்துள்ளது. சுமாராக 62 புள்ளி 2 கோடி கனசதுர கி.மீ. நீரை இக்கடல் கொண்டுள்ளது. உலக நீர் இருப்பில் 46 சதவிகிதத்தையும், உலகின் மொத்தப் பரப்பளவில் 30 சதவிகிதத்தையும் இக்கடல் கொண்டுள்ளது. உலகிலேயே பெரிய கடல் பசிபிக் பெருங்கடலாகும். பூமியின் பரப்பளவில் 35.25 சதவிகிதம் கொண்டது. உலகிலேயே ஆழம் கூடிய மிண்டானா பகுதி இதிலுள்ளது. இதன் ஆழம் 11,516 மீட்டர். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான தீவுகளும் இக்கடலில் தான் உள்ளன. வடமேற்கு பசிபிக் கடலில் உள்ள மரியானா ட்ரென்ச் என்ற பகுதியே உலகிலேயே ஆழமான கடல் பகுதி ஆகும். இதன் ஆழம் 10,911 மீட்டர். பசிபிக்கின் சராசரி ஆழம் 4028 முதல் 4188 மீட்டர் ஆகும். இக்கடலில் சுமார் 25,000 தீவுகள் உள்ளன. பெரும்பாலான தீவுகள் தென் பசிபிக்கிலேயே கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் சில கடலில் மூழ்கி உள்ளன. பெரும்பாலானவை உயரமான தீவுகள். தற்போது பூமி தட்டின் நகர்வினால் பசிபிக் கடல் சுருங்கி வருகிறது. மாறாக அட்லாண்டிக் கடல் விரிவடைந்து வருகிறது. சராசரியாக ஆண்டிற்கு அரை கிலோ மீட்டர் சுருங்குகிறது. பசிபிக் கடலின் மேற்கு எல்லையில் பல கடல்கள் அமைந்துள்ளன. அவை செலிபஸ் கடல் (Celebes Sea), கோரல் கடல் (Coral Sea), கிழக்குச் சீன கடல், ஜப்பான் கடல், தென் சீன கடல், சுலு கடல் (Sulu Sea), பிலிபைனி கடல் (Philippine Sea), டாஸ்மான் கடல் (Tasman Sea) மற்றும் மஞ்சள் கடல் போன்றவை ஆகும். கடல்கள் அரபிக்கடல் இந்தியாவிற்கு மேற்கே அமைந்துள்ள கடல் பகுதி அரபிக்கடல் என அழைக்கப்படுகிறது. இது பண்டைக் காலத்திலும், இடைக்காலத்திலும் பச்சிம் சமுத்திரம் என அழைக்கப்பட்டது. இக்கடலின் கிழக்கே இந்தியாவும், மேற்கே சவுதி அரேபியாவும் - ஆப்பிரிக்காவும், வடக்கே ஈரானும் - பாகிஸ்தானும், தெற்கே இந்தியப் பெருங்கடலும் அமைந்துள்ளன. இக்கடலின் மிக அகலமான பகுதி ஏறத்தாழ 2400 கி.மீ. ஆகும். தெற்கில் இக்கடல் இந்தியப் பெருங்கடலுடன் கலப்பதால் இதன் தெற்கு எல்லையை அறுதியிட்டு கூற இயலாது. சிந்து, நர்மதை, தபதி ஆறுகள் இக்கடலில் கலக்கின்றன. ஓமன் வளைகுடா இதனை பாரசீக வளைகுடாவுடனும், ஏடன் வளைகுடா இதனைச் செங்கடலுடனும் இணைக்கின்றன. இக்கடலின் கரையில் ஏடன், கராச்சி, பம்பாய், கொச்சி போன்ற பெரிய துறைமுகங்களும், பல புகழ்பெற்ற நகரங்களும் அமைந்துள்ளன. ஆரல் கடல் ஆரல் கடல் ( Aral sea ) என்பது துர்க்கிஸ்தான் பகுதியில் காஸ்பியன் கடலுக்குக் கிழக்கே 240 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மிகப் பெரியதோர் உப்புநீர் ஏரியாகும். இந்த ஏரி உலகிலேயே நில உட்பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய நீர்நிலை ஆகும். இதன் மொத்த பரப்பளவு 66,459 சதுர கி.மீ. ஆகும். இது 17 முதல் 68 மீட்டர் ஆழமுடையது. ஆரல் கடலில் பல தீவுகள் அமைந்துள்ளன. அமுதாரியா (Amu Darya), சைர் தாரியா ( Syr Darya ) ஆகிய ஆறுகள் இக்கடலில் கலக்கின்றன. அயோனியன் கடல் அயோனியன் கடல் ( Ionian Sea ) என்பது மத்தியத் தரைக்கடலின் ஆழமிக்க பகுதியாகும். இக்கடல் இத்தாலியையும் - சிசிலியையும், அல்பேனியாவிலிருந்தும் - கிரீசிலிருந்தும் பிரிக்கிறது. இக்கடலையும் அட்ரியாடிக் (Adriatic) கடலையும் ஆட்ராண்டோ நீர்ப்பிரிவு ( Strait of Otranto ) இணைக்கிறது. இக்கடலின் அகலம் 676 கி.மீ. ஆகும். சில பகுதிகளில் இக்கடலின் ஆழம் 5093 மீட்டர் ஆகும். இன்லான்ட் கடல் ஜப்பான் நாட்டில் பசிபிக் பெருங்கடலில் கால்வாய் போன்று அமைந்துள்ளது இன்லான்ட் கடல் (Inland sea). இது தென் ஜப்பானில் ஹான்சிகோக், கியூஸ் ஆகிய தீவுகளுக்கிடையில் உள்ளது. ஆழம் குறைந்த இக்கடலில் 950 க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. இதன் மொத்த நீளம் 9505 கி.மீ. ஆகும். இது குறுகிய கால்வாய் ஒன்றின் மூலம் ஜப்பான் கடலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்லான்ட் கடலின் கடற்கரைகளில் மக்கள் தொகை மிகுதி. இக்கடல் இயற்கை எழிலுடன் புகழ்பெற்று விளங்குகிறது. வங்காள விரிகுடா இந்தியாவின் கிழக்கே எல்லையாக அமைந்திருப்பது வங்காள விரிகுடா (Bay of Bengal) ஆகும். இது 21 லட்சத்து 73 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்தியப் பெருங்கடலின் வடகிழக்கே இக்கடல் அமைந்துள்ளது. இதன் மேற்கே இந்தியாவும், இலங்கையும் எல்லையாக உள்ளன. வடக்கே பங்களாதேசமும், மியான்மரும் (பர்மா), கிழக்கே பெனின்சுலாவும், தெற்கே இலங்கையின் தென் முனையும், இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவு வரையிலான கடலும் வங்காள விரிகுடாவின் எல்லைகளாக உள்ளன. இக்கடலின் மேற்கே பல முக்கியமான ஆறுகள் கலக்கின்றன. மகாநதி, கோதாவரி, கிரிஷ்ணா மற்றும் காவேரி போன்றவையே அவையாகும். வடக்கே பிரம்மபுத்திரா ஆறும் இக்கடலில் கலக்கின்றன. இக்கடலில் அமைந்துள்ள ஒரே தீவுக் கூட்டம் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகும். இதன் சராசரி ஆழம் 2,600 மீட்டர் ஆகும். இக்கடலின் அதிகபட்ச ஆழம் 4,694 மீட்டர். வங்காள விரிகுடாவில் எண்ணெய் வளமும், இயற்கை எரிவாயு வளமும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அதிகமான கனிமவளம் நிறைந்த மண் இக்கடலில் நிறைந்துள்ளது. இங்கு அதிகமான மீன் வளம் உள்ளதால் கடற்கரை நாடுகளும், ஜப்பான் நாடும் மீன்பிடித்தலில் ஈடுபடுகின்றன. இக்கடல் பல பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த கடல்வழிகளைக் கொண்டுள்ளது. அவை பல சர்வதேச துறைமுகங்களை பங்களாதேஷ், இலங்கை மற்றும் இந்தியாவின் கிழக்கு துறைமுகங்களுடன் இணைக்கின்றன. பெருங்கடல் வாரியாக கடல்களின் பட்டியல் அட்லாண்டிக் பெருங்கடல் அர்கெந்தீனக் கடல் பபின் குடா சென். லாரன்ஸ் வளைகுடா ஃபண்டி வளைகுடா கரிபியன் கடல் மெக்சிக்கோ வளைகுடா சர்கசோ கடல் வடகடல் சேஸபீக் குடா பால்டிக் கடல் மத்திய பால்டிக் கடல் போத்னியா வளைகுடா போத்னியா குடா போத்னியக் கடல் பின்லாந்து வளைகுடா ஹெப்ரைட்ஸ் கடல் ஐரிஷ் கடல் செல்டிக் கடல் ஆங்கிலக் கால்வாய் மத்தியதரைக் கடல் ஏட்ரியாட்டிக் கடல் ஈஜியன் கடல் மிர்தூன் கடல் கிரீட் கடல் திரேசியன் கடல் அல்போரன் கடல் மர்மரா கடல் கருங்கடல் அசோவ் கடல் கட்டாலன் கடல் அயோனியன் கடல் லிகுரியக் கடல் திர்ரேனியக் கடல் சித்ரா வளைகுடா அன்டார்டிக் பெருங்கடல் வேட்டெல் கடல் ரோஸ் கடல் கிரேட் ஆத்திரேலிய பைட் சென். வின்சன்ட் வளைகுடா ஸ்பென்சர் வளைகுடா ஸ்காட்டியாக் கடல் அமுன்சென் கடல் பெல்லிங்க்ஷுசென் கடல் டேவிஸ் கடல் ஆர்க்டிக் பெருங்கடல் ஹட்சன் குடா ஜேம்ஸ் குடா பேரன்ட்ஸ் கடல் காராக் கடல் பியூபோர்ட் கடல் அமுன்சென் வளைகுடா கிறீன்லாந்து கடல் நோர்வே கடல் சுக்சிக் கடல் லப்டேவ் கடல் கிழக்கு சைபீரியக் கடல் வெண் கடல் லிங்கன் கடல் இந்தியப் பெருங்கடல் செங்கடல் ஏடென் குடா பாரசீக வளைஇகுடா ஓமான் வளைகுடா அரபிக்கடல் வங்காள விரிகுடா அந்தமான் கடல் திமோர் கடல் பசிபிக் பெருங்கடல் சிலியன் கடல் பெரிங் கடல் அலாஸ்கா வளைகுடா சலிஷ் கடல் கலிபோர்னிய வளைகுடா ஒக்கொட்ஸ் கடல் ஜப்பான் கடல் செடோ உள்நாட்டுக் கடல் கிழக்கு சீனக் கடல் தெற்கு சீனக் கடல் சூலு கடல் செலேபெஸ் கடல் மிண்டானோக் கடல் பிலிப்பைன் கடல் கமோட்ஸ் கடல் ப்லோரெஸ் கடல் பண்டா கடல் அரபுராக் குடல் தீமோர் கடல் தாஸ்மான் கடல் மஞ்சள் கடல் பொகாய்க் கடல் கோரல் கடல் கார்பெண்டாரிய வளைகுடா பிஸ்மார்க் கடல் சொலொமன் கடல் செரம் கடல் ஹல்மஹெறக் கடல் மொலுக்கக் கடல் சாக்கடல் ஜாவாக் கடல் தாய்லாந்து வளைகுடா நிலம் சூழ் கடல்கள் ஆரல் கடல் காஸ்பியன் கடல் சாக்கடல் கலிலேயக் கடல் சால்டன் கடல் உப்புப் பேரேரி மேலும் பார்க்க பெருங்கடல் கடலியல் உசாத்துணை மேற்கோள்கள் * பகுப்பு:நீர்நிலைகள் பகுப்பு:மேற்கோள் வழு-ref குறிச்சொல்லுக்கு உரையில்லாதவை
உலகின் மிகப்பெரிய கடல் எது?
பசிபிக் பெருங்கடலாகும்
15,525
tamil
b06af2b09
புதன் கோள் (Mercury) சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோளாகும். மேலும் இது சூரியக் குடும்பத்தில் மிகச்சிறிய கோளாகும். இது ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 88 நாள்கள் எடுத்துக்கொள்கிறது. புவியிலிருந்து காணும்போது இது 116 நாட்கள் எடுத்துக் கொள்வதைப் போலத் தோன்றும். இதற்கு இயற்கை நிலவுகள் எதுவும் அறியப்படவில்லை. [lower-alpha 1] இந்தக் கோளுக்கு மேற்கத்தியப் பண்பாட்டில் உரோமை தூதுக் கடவுளான மெர்க்குரியின் பெயிரிடப்பட்டுள்ளது. இந்தியப் பண்பாட்டில் அறிவுக்கு காரணமாகும் புதன் என்ற கடவுளின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சூரியனிடமிருந்து புதனின் கோணப்பிரிகை (angular separation from the sun) குறைவாக (அதிகபட்சமாகவே 28.3oதான்) உள்ளதால், பெரும்பாலும் சூரியனின் பொலிவு காரணமாக புதனை காண்பது அரிது. எனவே தான் நம் சான்றோர் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுவர். காலை அல்லது மாலை கருக்கல் நேரமே புதனைக் காண்பதற்கு சரியான தருணம். புதனில் சூரிய வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ள வளிமண்டலம் இல்லாதமையால் மற்றெந்தக் கோள்களையும் விட புதனின் கோள்பரப்பு பெரும் வெப்பநிலை மாற்றங்களைக் காண்கின்றது; கோள்நடுக்கோடு அருகே பகல் நேரத்தில் 700K (427°C; 800°F) ஆகவும் இரவுநேரத்தில் 100K (−173°C; −280°F) ஆகவும் உள்ளது. முனையங்களில் (துருவங்களில்) எப்போதுமே குளிர்ச்சியாக கீழுள்ளது. புதனின் அச்சு சூரியக் குடும்பத்திலேயே மிகக் குறைந்த சாய்வைக் (ஏறத்தாழ பாகை) கொண்டுள்ளது. ஆனால் இதன் சுற்றுப்பாதையின் வட்டவிலகல் மிகக் கூடியதாக உள்ளது. [lower-alpha 2] பெரும்பாலான மற்றக் கோள்களைப் போல இங்கு பருவங்கள் ஏற்படுவதில்லை. புதன் ஞாயிற்று அண்மைநிலையில் சூரியனிடமிருந்து இருக்கும் தொலைவை விட ஞாயிற்றுச் சேய்மைநிலையில் 1.5 மடங்குத் தொலைவில் உள்ளது. புதன் சூரியக் குடும்பத்திலேயே மிகவும் தனித்துவமான முறையில் சூரிய ஈர்ப்பில் பிணைந்து சுற்றுகின்றது. நிலைத்த விண்மீன்களிலிருந்து காணும்நிலையில் தனது சுற்றுப்பாதையில் இரண்டு சுற்றுக்கள் வரும் காலத்தில் தன்னைச் சுற்றி மூன்று முறை சுற்றிக் கொள்கின்றது.[13] சுற்றுப்பாதையில் சுழலும் குறியீட்டச்சு கொண்டுள்ள சூரியனிலிருந்து காணும்போது, இரண்டு புதனாண்டுகளுக்கு ஒருமுறை தன்னைச் சுற்றிக் கொள்கின்றது. புதனில் இருக்கும் கூர்நோக்கருக்கு ஒருநாள் இரண்டு ஆண்டுகளாகும். தோற்றத்தில் கிட்டத்தட்ட பூமியின் நிலவை ஒத்தது புதன். இது வெட்டவெளியுடன் கூடிய பல பெரும்பள்ளங்களைக் (craters) கொண்டு விளங்குகிறது. புவிநிலவைப் போலவே புதனும் வளிமண்டலம் அற்று உள்ளது. ஆனால், புவிநிலவைப் போலன்றி, புதனுக்கு இரும்பாலான பெரிய உள்ளகம் உள்ளது. இதன் காரணமாக ஓரளவு காந்தப்புலமும் புதனுக்கு உண்டு. புதனைப்பற்றி அவ்வளவாக அறியப்படவில்லை என்றே கூற வேண்டும். புதனை நெருங்கிய இரண்டு விண்கலங்களில் முதலாவது மாரினர் 10 (Mariner 10). இது 1974–1975 காலகட்டத்தில் புதனை நெருங்கி அதன் புறப்பரப்பில் 45% வரை படமெடுத்தது (mapped). இரண்டாவதாக அனுப்பப்பட்ட மெசஞ்சர் 2008 சனவரியில் புதனருகில் பறந்த போது மேலும் 30% படமெடுத்தது. இது மீண்டும் 2009ல் புதனை நெருங்கியது. அதன்பின் 2011 மார்ச் 18 இல் புதனின் சுற்றுப்பாதையில் புகுத்தப்பட்டு (Orbital insertion) புதனின் துணைக்கோளாக மாறியது. உட்கட்டமைப்பு புதன் கோள் சூரியக் குடும்பத்தின் நான்கு புவிநிகர் கோள்களில் ஒன்றாகும். புவியைப் போன்றே பாறைகளால் ஆனது. சூரியக் குடும்பத்தின் மிகச்சிறிய கோள் இது வாகும். இதன் நிலநடுக் கோட்டின் ஆரம் 2,439.7கிமீ.[14] புதனில் அண்ணளவாக 70% உலோகமும், 30% சிலிக்கேட்டுப் பொருளும் காணப்படுகிறது.[15] சூரியக் குடும்பத்தின் இரண்டாவது பெரிய அடர்த்தியான கோளான இதன் அடர்த்தி 5.427கி/செமீ3. இது புவியின் அடர்த்தியான 5.515கி/செமீ3.[14] ஐ விட சிறிது குறைவாகும். காந்தப் புலமும் காந்தமண்டலமும் சிறிய அளவினதாக இருந்தாலும் மெதுவான 59-நாள்-தன்சுற்றுகையைக் கொண்டிருந்தாலும் புதனில் குறிப்பிடத்தக்க, பரப்பெங்குமான, காந்தப் புலம் நிலவுகின்றது. மாரினர் 10 எடுத்த அளவைகளின்படி புதனின் காந்தப்புலம் புவியினுடையதை விட 1.1% வலிமையுள்ளதாக இருக்கிறது. புதனின் கோள்நடுக்கோட்டில் உள்ள காந்தப் புலத்தின் வலிமை 300 நானோடெஸ்லா (nT]) ஆகும்.[16][17] புவியைப் போலவே, புதனின் காந்தப் புலமும் இருமுனையி.[18] ஆனால் புவியைப் போலன்றி புதனின் காந்த முனையங்கள் கோளின் சுழல் அச்சுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்துள்ளன.[19] மாரினர் 10 மற்றும் மெசஞ்சர் விண்துருவிகளிலிருந்து பெறப்பட்ட அளவைகளிலிருந்து இந்தக் காந்தப் புலத்தின் வலிமையும் வடிவமும் நிலையாக உள்ளன.[19] புவியைப் போன்றே இங்குள்ள காந்தப் புலமும் மின்னாக்கி விளைவால் உருவாகியுள்ளது.[20][21] இந்த மின்னாக்கி விளைவு கோளின் இரும்புமிக்க நீர்ம கருவகத்தின் சுற்றோட்டத்தால் ஏற்படுகின்றது. கோளின் மிகுந்த சுற்றுப்பாதை விலகலின் காரணமாக ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் கருவகத்தை நீர்மநிலையில் வைத்திருக்க உதவுகின்றது.[22] புதனின் வலிதான காந்தப்புலம் சூரியக் காற்றை கோளைச் சுற்றி திசைவிலகிச் செல்ல வைக்கின்றது. இதனால் கோளைச் சுற்றிலும் காந்தமண்டலம் ஒன்று உருவாகியுள்ளது. இது சிறிய அளவினதாக இருந்தாலும் சூரியக் காற்றை பிடிக்க போதுமானதாக உள்ளது. இது கோளின் மேற்பரப்பு விண்வெளியால் தேய்தலுக்கு வழிவகுக்கின்றது.[19]மாரினர் 10 எடுத்த கூர்நோக்குகளின்படி கோளின் இரவுப் பகுதியில் உள்ள காந்த மண்டலத்தில் குறைந்த ஆற்றல் பிளாசுமா கண்டறியப்பட்டுள்ளது. கோளின் காந்த வால்பகுதியில் ஆற்றலுள்ள துகள்களின் திரள்கள் கண்டறியப்பட்டுள்ளன; இது கோளின் காந்த மண்டல செயற்பாட்டுத் திறனை சுட்டுகின்றது.[18] அக்டோபர் 6, 2008இல் தனது இரண்டாவது முறை பறப்பின்போது மெசஞ்சர் புதனின் காந்தப் பலம் மிகவும் "கசிவுடையதாக" கண்டது.[23] புவியில் இருந்து புவியில் இருந்து புதனை பார்க்கும் போது அது அதிக நீட்சியின் பகுதியில் இருக்கும் போது பார்த்தால் தெளிவாகத் தெரிய வாய்ப்புண்டு. மேற்கதிக நீட்சியின் போது சூரியனுக்கு மேற்கில் இருக்கும் போது சூரிய உதய்த்துக்கு முன்னரும், கிழக்கதிக நீட்சியின் போது சூரியனுக்கு கிழக்கில் இருக்கும் போது சூரிய அஸ்தமனத்துக்கு பின்னரும் மட்டுமே புவியில் இருந்து இதன் அதிக பகுதிகளை (அரைப் பகுதியிலேயே சூரிய ஒளி படும். புவியில் இருந்து பார்க்கும் போது ஒளி படும் பகுதியிலும் பாதியையே பார்க்க முடியும்.) நோக்க முடியும் என்பது இயற்பியல் வழக்கு. ஆனால் இந்த இயற்பியல் வழக்கின் படிப் பார்த்தாலும் புதனின் அதிகப் பகுதிகளை தெளிவாகப் பார்க்க முடியாது. அதன் காரணம் புதனின் தோற்ற ஒளிர்மையே ஆகும். அதனால் புதனின் குவிகோடுகள் வளைந்த நிலையில் இருக்கும் போதே புதனை எளிதாக பார்க்க முடியும். அதாவது கிழக்கதிக நீட்சிக்கு சில நாட்கள் முன்னரும், மேற்கதிக நீட்சிக்கு சில நாட்கள் பின்னருமே இதை தெளிவாக மானிடர்களின் வெற்றுக் கண்களால் நோக்க முடியும். புதனில் மானிடக் குடியேத்தின் சாத்தியங்கள் நிலவை ஒத்த புதன் மானிடர் குடியேற்றம் என்ற நோக்கில் பார்க்கும் போது நிலவில் மானிடர் குடியேறுவதற்கு தேவைப்படும் விடயங்களே இங்கும் தேவைப்படுகின்றன. மேலதிகமாக சூரியனின் வெப்பத்தில் இருந்து தப்புவதற்கான வெப்பக் கேடயங்களும் தேவைப்படும். இதற்கான கண்க்கிடப்பட்ட நகரும் குடியேற்றத்தையும் உருவாக்க வேண்டும். (வலது பக்கம் இருக்கும் படத்தைப் பார்க்க) இங்கு இருக்கும் சூரிய எரிசக்தி மிகவும் அதிகம் என்பதால் மின்சாரத்தை எளிதாக பெற முடியும். புவியில் சூரிய மின்தடுகளை வைத்து பெரும் மின்சாரத்தை விட இங்கு ஆறரை மடங்கு அதிகமாக மின்சாரத்தைப் பெற முடியும் என்பது இதன் அனுகூலமாகும். நீராதாரம் புதன் கிரகத்தில் நீர் பனிக்கட்டியாக அதன் துருவங்களில் உள்ளது. இவை பல கோடி ஆண்டுகளாக சூரிய வெளிச்சம் இல்லாத இடங்களாக இருந்ததால் இன்றும் ஆவியாகாமல் உள்ளது. புதன் கிரகத்தின் வட துருவத்தில்ல் உள்ள ஆழமான பள்ளங்களில் காணப்படுகின்ற எராளமான அளவிலான பனிக்கட்டிகள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நட்சத்திரங்களால் வந்து விழுந்த பனிக்கட்டி உருண்டைகளே என்று கருதப்படுகிறது. தடைகள் இதில் மானிடர் குடியேற்றம் நடக்க அதிக நுட்பங்களை உருவாக்குதல், இதற்கான வெப்பக் கேடயங்களை தயாரிக்கும் முறையை கண்டறிந்து உருவாக்குதல், இக்கோளில் இருந்து வேறு கோளுக்கு செல்ல மிக அழுத்தமும் வேகமும் தரக்கூடிய விண்கலன்களை உருவாக்குதல் போன்றவை புதனில் மானிடர் குடியேறுவதற்கு பெரும் தடைகளாய் உள்ளன. குறிப்புகள் மேற்கோள்கள் உசாத்துணைகள் வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம், ISBN 978-81-89936-22-8. வெளியிணைப்புகள் Media related to Mercury (planet) at Wikimedia Commons and from the USGS planetary nomenclature page World's search engine that supports நாசா வேல்ட் வின்ட், Celestia, and other applications. flash animation 5 சூன் 2013 – APOD பகுப்பு:கோள்கள் பகுப்பு:புவியொத்த கோள்கள் பகுப்பு:சூரியக் குடும்பம் பகுப்பு:இயங்குபடம் உள்ள கட்டுரைகள்
மிக சிறிய கோள் எது?
புதன்
0
tamil
8e1a26300
மீன் (fish) நீரில் வாழும் முதுகெலும்பு உள்ள ஒரு விலங்கு ஆகும். மீன்களை நான்கு கால்கள் இல்லா முதுகெலும்புள்ள நீர் வாழ் உயிரினம் என வரையறை செய்யலாம். மீன்களின் முன், பின் புறங்கள் குவிந்த அமைப்புடையவை. உடலானது தலை, உடல், வால் என மூன்று தனித்தனிப் பகுதிகளைக் கொண்டுள்ளன. இவற்றிற்கு தனியாக கழுத்துப்பகுதி இல்லை. இவை இணைத்துடுப்புகளாலும், நடுமுதுகுத் துடுப்புகளாலும் நீந்திச் செல்கின்றன. பெரும்பாலான மீன்கள் புறவெப்ப (குளிர்-இரத்த விலங்குகள்) தன்மையுடையன. அதாவது சுற்றுசூழலுக்கு ஏற்ப அதன் உடல் வெப்பத்தை மாற்றிக்கொள்ளுதல். ஆனாலும் வெள்ளை சுறா, டுனா போன்ற சில பெரிய விலங்குகளும் அதிக மைய வெப்பநிலையைத் தாங்கிக்கொள்ளும் ஆற்றலுடையன.[1][2] இவை நீரிலேயே மூச்சுவிட்டு உணவுண்டு தன் இனம் பெருக்கி வாழும் உயிரினம். பல் வேறு வகையான மீன்கள் நன்னீரிலும், உப்பு நீரிலும் வாழ்கின்றன. மீனின் வகைகள் அளவாலும், நிறத்தாலும், வடிவத்தாலும் மிகவும் வேறுபடுவன. நீராதாரம் பெரும்பான்மையான மீனின் வாழிடங்களாகும். மீனினங்கள் பெரும்பாலான நீர்வாழ் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளன. சில மீன்கள் ஆழம் குறைவான சிறு குட்டைகளிலும், சில வகைகள் ஆழ் கடல்களில், ஒளி புகா பேராழத்திலும் வாழ்பவை. உயரமான மலை நீரோடைகள் (எ.கா., கேர், கட்ஜன்) இருந்து தாழ்ந்த, ஆழ்ந்த கடல்களின் ஆழத்திலும் (எ.கா., கல்பர்ஸ் (குள்ள மீனினம், தூண்டி மீன்), என கிட்டத்தட்ட அனைத்து நீர் சூழல்களிலும் அவை காணப்படுகின்றன. சுமார் 33,100 மீன் சிற்றினங்கள், மற்ற எந்த ஒரு முதுகெலும்பிகளிலும் இல்லாத அளவிற்கு உயிரினப்பல்வகைமையைக் கொண்டுள்ளன.[3] உலகப்பொருளாதாரத்தில், மனிதர்களுக்கு உணவுப்பொருளாக மீன்வளம் ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. பெரும்பாலான உலக நாடுகளின் வணிக, வாழ்வாதாரம் மீன்பிடித்தல் ஆகும். மேலும் உணவுக்காகவும், அழகுக்காகவும் மீன் வளர்த்தல் ஒரு மாபெரும் துறையாக உருவெடுத்துள்ளது. மீன்கள், மீன் பிடிப்பவர்களால் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளாகவும், பொதுமக்கள் கண்டுகளிக்கும் மீன்காட்சியங்களில் அழகுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. பல்வேறு பண்பாடுகளில் மீனானது புனித தெய்வமாக, பண்பாட்டுச் சின்னமாக, சமய அடையாளங்களாகவும் திகழ்கிறது. பல்வேறு காலக்கட்டங்களில் கதை, இலக்கியம், காவியம், வானுடவியல், வரலாறு, போன்றவற்றில் முக்கியப் பாத்திரமாகவும் திகழ்ந்துள்ளது. பரிணாமம் (அ) கூர்ப்பு வகைப்பாட்டியலில் மீன் ஒரு ஒற்றைத்தொகுதியைச் சார்ந்து முன்னிலைப்படுத்துவதில்லை, ஏனெனில் மீனின் பரிணாம வளர்ச்சி ஒரே நிகழ்வாகக் கொள்ள இயலாது. முதுகெலும்பிலிகளிலிருந்து முதுகெலும்புள்ளவைகளின் கூர்ப்பு நுழைவாயிலாக மீனினம் விளங்குகின்றன. இவை முதுகெலும்பிகளின் ஆதிவுயிரினமாகக் கொள்ளப்படுகிறது.[4] புதைபடிவ பதிவுகளில் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து மீனினத்தின் ஆதிவுயிரி, சிறிய அளவில், கவசம் கொண்டு, தாடைகளற்றதாக இருந்தது. இதற்கு ஆஸ்ட்ரகோடர்ம்ஸ் என்று பெயர். ஆனால் தற்போது தாடையற்ற பல்வேறு மீனினங்கள் பெரும்பாலும் அழிந்துவிட்டன. லாம்பயர்ஸ் தாடையுள்ள மீன்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகிறது. முதல் தாடையுள்ள மீனினம் பிளாக்கோடெர்மி படிமத்திலிருந்து பெறப்பட்டது. தாடையுள்ள முதுகெலும்பிகளின் பன்முகத்தன்மை அவற்றின் பரிணாமத் தேவை, நன்மைகளைக் கருத்தில் கொண்டு பரிணாம வளர்ச்சியடைந்திருக்கலாம் என கருதப்படுகிறது. மீன் தாடையின் பரிணாம வளர்ச்சி உணவு விழுங்கல், வேட்டையாடல், கடிக்கும் ஆற்றல், மேம்பட்ட சுவாசம், அல்லது அதன் காரணிகளின் கலவையாக இருந்திருக்கலாம். மீன் ஒரு பவளப்பாறை போன்று பாம்பு வடிவ உயிரினத்திலிருந்து பரிணமித்து உருவாகியிருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது. ஏனெனில் மீனின் இளவுயிரி தோற்றத்தில் ஆதிமீன் இனத்தைப் போன்றது. மீன்களின் ஆதிவுயிரிகள் இளவுயிரியைப் போன்றே இருந்திருக்கக் கூடும். ஏனெனில் இன்றும் சில கடற்பீச்சிகளின் (சீ-ஸ்கர்ட்ஸ்) தோற்றம் முதிருயிரி, இளவுயிரிலிருந்து எவ்வித மற்றமும் அடைவதில்லை. தாடையற்றமீன்கள் ஹைபரார்சியா (லாம்பயர் மீன்கள்) ?†யூகோனோலோன்டா (விலாங்கு போன்ற மீன்வகை)unnamed †தெரஸ்பிடோமார்ஃபி (தாடையற்ற மீன்கள்) ?†திலோடொன்டி (தாடையற்ற செதிலுள்ள மீன்கள்)unnamed ?†அனாஸ்பிடா (தாடையற்ற ஆதி லாம்பயர் மீன்கள்)unnamed †காலிஸ்பிடா (தாடையற்ற எலுப்புச்சட்டக மீன்கள்)unnamed ?†பிடுரியாஸ்பிடா (பெரிய முன்னீட்டி முற்கொண்ட கவசத்துடன் கூடிய தாடையற்ற மீனினம்) †ஆஸ்டியோஸ்ட்ரெசி (தாடையற்ற வலுவான எலுப்புச்சட்டக மீன்கள்) நதொஸ்டொமெட்டா → தொடர்ச்சி கீழ்வருமாறு தாடையுள்ளமீன்கள் †பிளாகோடெர்மி (கவச மீன்கள்)unnamed அகாந்தொடியன்ஸ் and கோண்ட்ரித்யஸ் (குருத்தெலும்பு மீன்கள்)ஆஸ்டெய்தியஸ்எலும்புமீன்கள் அக்டினொடெரிஜீ கதிர்முள் மீன்கள் &lt;தற்போதைய அதிகபட்ச மீனினங்கள் இவ்வகையின சார்கோப்டெரிஜீகதுப்புத்துடுப்புமீன்கள் ?†ஆனிகோடொன்டிஃபார்மிஸ் கதுப்புத்துடுப்பு மீன்கள் ஆக்டினிஸ்டியா (சீலகாந்து மீன்கள்)unnamed †போரோலுபிஃபார்மிஸ் கதுப்புத்துடுப்பு மீன்கள் திப்னாய் (நுரையீரல் சுவாச மீன்கள்)unnamed †ரைசோடோன்டிடே (வேட்டையாடும் கதுப்புத்துடுப்பு மீன்கள்) †ட்ரிஸ்டிகொப்டெரிடே (நாற்காலுருக்கொண்டவை) டெட்ராபோடா (நாற்காலிகள்) வகைப்பாடு மீனின வகைப்பாடு இணை ஒற்றைத்தொகுதிக் குழுவில் வகைப்படுத்தப்படுகிறது, ஏனெனில் டெட்ராபோடுகள் எனும் நாற்காலிகளும் பழைய முறையில் வகைப்படுத்தப்பட்டன. இக் காரணத்திற்காக, பழைய குறிப்புகளில் காணப்படும் மீன்களுக்கென்ற தனி வகுப்பு முறையாக பயன்படுத்தப்படவில்லை. மரபுவழி வகைப்பாடு மீன் வகைகளை மூன்று வகுப்புகளாகவும், சில நேரங்களில் வகைப்பட்டியல் கிளையின் கீழ் அழிவுற்ற இனங்களுடன் வகைப்படுத்தவும் செய்கின்றன. சில நேரங்களில் அவை அவற்றின் சொந்த வகுப்புகளாகவும் உள்ளன: [5][6] வகுப்பு அக்னதா (தாடையற்ற மீன்) துணைவகுப்பு சைக்ளொஸ்டொமெட்டா (ஹேக்மீன், லேம்பெரெகள்) துணைவகுப்பு ஆஸ்ட்ரகோடெர்மி (கவசமுடைய தாடையற்ற மீன்) † வகுப்பு கோண்ட்ரிக்தியஸ் (குறுத்தெலும்புடைய மீன்) துணைவகுப்பு எலாஸ்மோப்ரான்கீ (சுறாக்கள், திருக்கை மீன்கள்) துணைவகுப்பு ஹோலோசெஃபாலி (கைமிராக்கள், அழிந்த மீன்இனங்கள்) வகுப்பு ப்ளாகொடெர்மி (கவச மீன்கள்) † வகுப்பு அகாந்தோடீ (முற் சுறாக்கள், சில சமயங்களில் எலும்பு மீனினத்துள் வகைப்படுத்தப்படும்)† வகுப்பு ஆஸ்டெய்தியஸ் (எலும்பு மீன்) துணைவகுப்பு அக்டினோட்டெரிகீயை (கதிர்-முள் மீன்கள்) துணைவகுப்பு சார்கோப்டெரிகீயை (சதைப்பற்றுள்ள கதுப்பு மீன்கள், நாற்காலிகளின் ஆதியினம்) மேலே குறிப்பிட்டுள்ள வகைப்பாடு பொதுவாக நுணுக்கமின்றி மேலோட்டமான குழுக்காளாக எடுத்தாளப்பட்டுள்ளன. இதில் கோண்ட்ரிக்தியஸின் முன்னொடிகளாக அக்னதன்கள் உள்ளன. இவை ஒருசேர அகாந்தோடீயன்களாகவும், ஆஸ்டெய்தியஸின் முன்னோடிகளாகவும் இருந்துள்ளன. புதிய வகைப்பாட்டுத் தொகுதியில் இவை மேலும் நுணுக்கமாக வகைப்படுத்தப்படுகிறது. அவை கீழ்வருமாறு: வகுப்பு மிக்ஸினி (ஹேக் மீன்கள்) வகுப்பு தெரஸ்பிடோமர்பி † (முந்தைய தாடையற்ற மீன்கள்) வகுப்பு திலொடொன்டி † வகுப்பு அனஸ்பிடா † வகுப்பு ஹைபெரோயார்சியா பெட்ரோமைசோன்டிடே (லம்பேரி மீன்கள்) வகுப்பு கோனடோன்ட்டா †வரிசை வகுப்பு செபால்லொஸ்பிடோமார்ஃபி † (முந்தைய தாடையற்ற மீன்) (தரமறியப்படாதது) கலெஸ்பிடா † (தரமறியப்படாதது) பிடுரியாஸ்பிடா † (தரமறியப்படாதது) ஆஸ்ட்ரியொஸ்டெசி † உள்தொகுதி நதொஸ்டொமெடா (தாடையுள்ள முதுகெலும்பிகள்) வகுப்பு ப்ளாகொடெர்மி † (கவச மீன்) வகுப்பு கோண்ட்ரிச்தையிஸ் (குருத்தெலும்புடைய மீன் (சுறா) வகுப்பு அகாந்தோடீ † (முற்சுறா) பெருவகுப்பு ஆஸ்டியைதியிஸ் (எலும்புள்ள மீன்) வகுப்பு ஆக்டினொதெரிஜி (கதிர்முள் மீன்) துணைவகுப்பு கோன்ட்ரோஸ்டீ வரிசை ஆசிபென்செரிஃபார்மிஸ் (கோழிமீன் (ஸ்டர்ஜியன்) &amp; துடுப்பு மீன்கள்) வரிசை பாலிப்டெரிஃபார்மிஸ் (நாண் மீன்கள் &amp; பிச்சர் மீன்கள்). துணைவகுப்பு நியோப்டெரிஜீ உள்வகுப்பு ஹோலோஸ்டீ (கதிர் &amp; வில் கதுப்பு மீன்கள்) உள்வகுப்பு டீலியோஸ்டீ (பரவலாக காணப்படும் பொதுவான கதுப்பு மீன்கள்) வகுப்பு சார்கோப்டெரிஜீ (துடுப்புக்கதுப்பு மீன்கள்) துணைவகுப்பு அக்டின்சியா (சீலகாந்து மீன்கள்) துணைவகுப்பு திப்னாய் (நுரையீரல் மீன்கள்) † – அழிந்த வகையினத்தைக் குறித்தல் தொல்லுயிராய்வாளர்கள் கோனடோன்ட்டா வகுப்பினங்கள் முதுகெலும்பிகளின் முதன்மை விலங்காகக் கருதுகின்றனர். மீனினப் பல்வகைமை அக்னதா (பசிபிக் ஹேக் மீன்கள்) கோண்ட்ரிக்தியஸ் மீன்கள் (சுறாக்கள்) அக்டினோட்டெரிகீயை (பழுப்பு நன்னீர் மீன்கள்) சார்கோப்டெரிகீயை (சீலொகாந்துகள்) உடற்கூற்றியல் மற்றும் உடற்செயலியல் உடலமைப்பு மீனின் உடலமானது, தலை, நடுவுடல், வால் என மூன்று பகுதிகளைக் கொண்டது. இவற்றில் மிகப்பெரும்பாலானவை உடலில் செதில்களைக் கொண்டவை. சில தட்டையாகவும் சில உருண்டையாகவும், சில முள்ளுடம்புடனும், சில புழு போலவும் இருக்கும். பிலிப்பைன்சு நாட்டில் உள்ள நீர்நிலைகளில் வாழும் குட்டிக் கோபி என்னும் சிறு மீன் வகை சுமார் 13 மில்லி மீட்டர் நீளம் தான் இருக்கும். ஆனால் திமிங்கிலச்சுறாமீன் என்னும் மீன் சுமார் 18 மீட்டர் (60 அடி) நீளம் கொண்டிருக்கும். திமிங்கிலச்சுறா மீன் சுமார் 14 மெட்ரிக் டன் எடை கொண்டிருக்கும் (அதாவது இரண்டு யானையின் எடை இருக்கும்). சில மீன்கள் கண்ணைக் கவரும் சிவப்பு, மஞ்சள், நீல நிறங்களிலும் சில இனங்கள் உடல் முழுதும் பல நிறக் கோலங்களையும், கோடுகளையும், திட்டுகளையும் கொண்டவையாக இருக்கும். சுவாச மண்டலம் இவை செவுள்கள், நுரையீரலால் சுவாசிக்கின்றன. செவுள்கள் 5-7 இணைகள் செவுள் பிளவுகளைக் கொண்டுள்ளன. செவுள்களின் மீது செவுள்மூடி காணப்படுகிறது. காற்று சுவாசம் சில மீன்கள் நுரையீரலைக் கொண்டு சுவாசிக்கின்றன. இரத்தச் சுழற்சி மண்டலம் மீன் ஒரு மூடிய-வளைய இரத்த ஓட்ட அமைப்பைக் கொண்டுள்ளது. இதயம் உடல் முழுவதும் ஒரு வளையத்துள் இரத்தத்தை இயக்குகிறது. பெரும்பாலான மீன்களில், இதயத்தில் நான்கு பகுதிகளைக்கொண்டுள்ளன, இதில் இரண்டு அறைகள், நுழைவுப்பகுதி மற்றும் வெளியேறும் பகுதி என நான்கு கூறுகளாக உள்ளன. இதன் முதல் பகுதி சைனஸ் வெனோசஸ் ஆகும். இது ஒரு மெல்லிய தசையறையைக் கொண்டுள்ளது. இது சிரைகளிலிருந்து இரத்தத்தை இரண்டாவது பகுதிக்கு கடத்துகின்றது. தமனி ஒரு கூறு புகவிடும் தன்மையது. இது மூன்றாம் பகுதியான சிரைக்கு இரத்தத்தை அனுப்புகிறது. நான்காவது பகுதிக்கு இரத்தத்தை முடுக்குவது பல்பஸ் அர்ட்ரியோஸஸ் எனும் பகுதி ஆகும். இதன் மூலம் இரத்தம் ஆக்ஸிஜனேற்றத்திற்கான ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது. உணவுச்செரிமான மண்டலம் உணவுப்பாதையில் தெளிவான இரைப்பை, கணையம், போன்ற உறுப்புகள் உண்டு. கழிவு நீக்க மண்டலம் சிறுநீரகம் மீசோநெஃப்ரிக் வகையைச் சார்ந்தது. தோல் - செதில்கள் செதில்கள் பிளக்காய்டு, சைக்ளாய்டு, டீனாய்டு, கேனாய்டு எனப் பலவகைகள் உண்டு. மத்திய நரம்பு மண்டலம் உணர்வு உறுப்புகள் பெரும்பாலான மீனினங்கள் மேம்பட்ட உணர்வு உறுப்புகளைக் கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட எல்லா பகல் வேளையிலும் ஒரு மனிதனைப் போன்றே வண்ணன்களை அறியும் பார்வைத்திறன்களை மீன்கள் பெற்றுள்ளன. பல மீனினங்கள் சுவை, மணம் அறியும் திறன் பெற்ற அசாதாரண உணர்வுறுப்புகளான வேதிவுணர்விகளை (கீமோரெசப்டார்ஸ்) கொண்டுள்ளன. பெரும்பாலான மீன்களின் உணர்திறன் அவற்றின் பக்கவாட்டு கோடு களில் உள்ளன, இது மென்மையான நீரோட்டங்களையும், அதிர்வுகளையும் கண்டறிந்து, அருகிலுள்ள மீன், இரையை அணுகத்தூண்டுகிறது. கெளுத்தி, சுறா மீன்களில் சிறப்பானதொரு லோரன்ஜினி அம்பல்லே எனும் உணர்வுறுப்பைக் கொண்டிருக்கின்றன. அவை உறுப்புகளில் பலவீனமான மில்லிவோல்ட் மின்னோட்டங்களையும் கண்டறியும் திறன் பெற்றவை. ஏனெனில் தென் அமெரிக்க பகுதியில் வாழும் சில மின்சார மீன்கள் (ஜிம்னோடிஃபார்ம்ஸ்) பலவீனமான சில மின்னோட்டங்களை உருவாக்கலாம், அவை வழியறிதல் மற்றும் சமூகத் தொடர்புகளுக்காக பயன்படுத்துகின்றன. மீன்கள் உள்ளத்தில் வரைபடமாக இடங்கள், சமிக்ஞைகள், அடையாளங்கள், அமைவிடச்சின்னங்கள், போன்றவற்றை நினைவுகூர்கின்றன. இவற்றின் சிறப்பான நினைவகம் மற்றும் காட்சி பாகுபாடறியும் திறன் ஆகியன அறிவியல் அதிசயங்களாகும். கேட்டல் திறன் பெரும்பாலான மீனினங்களில் கேட்டல் திறன் மிக முக்கிய உணர்திறன் ஆகும். அவற்றின் பக்கவாட்டு கோடுகளினாலும், அவற்றின் காதுகளைப் பயன்படுத்தியும் மீன்கள் உணர்வு ஒலிகளை அறிந்துகொள்கின்றன. மீன்களுக்கு காதுகள் இருந்தாலும், பல மீன்களால் நன்றாக கேட்க இயலுவதில்லை. பார்வைத்திறன் பெரும்பாலான விலங்குகளுக்கு பார்வைத்திறன் ஒரு முக்கிய உணர்திறனாகும். மீன்களுக்கும் நிலவாழ் முதுகெலும்பிகளான பறவைகள், பாலூட்டிகளைப் போன்ற, அதேசமயத்தில் ஒப்புமையில் பெரிய கோளவடிவ வில்லைகளாக இருக்கின்றன. இவற்றின் விழித்திரை (ரெடினாக்கள்) பொதுவாக தண்டு, கூம்பு வடிவமுடையவை. இதனால் இருள் [ஸ்கோட்டோபிக்] மற்றும் ஒளியறிதல் திறன், சில சிற்றினங்கள் வண்ணமறியும் திறனும் பெற்றுள்ளன. சில மீன்கள் புற ஊதாக்கதிரையும், சில மீன்கள் துருவமுனைப்பு ஒளியியும் காண இயலும். தாடையற்ற மீன்களுள், லேம்ப்ரே மீன் இனங்கள் நன்கு வளர்ந்த கண்களைக் கொண்டன. அதேவேளையில் ஹேக் மீனினம் மட்டும் பழமையான ஒளிநேர்ப்பகுதியைக் கொண்டிருக்கின்றன. மீன் பார்வைதிறன் காட்சி சூழலுக்குத் தகுந்தாற்போல் மாற்றிக்கொள்கின்றன. உதாரணமாக ஆழ்கடல் மீன்கள் இருண்ட சூழலுக்குத் தகுந்தாற்போல் மிகவும் பொருத்தமாக பார்வைத்திறனைக் கொண்டுள்ளன. வெப்பத் தகவமைப்பு மீன்களின் உடல் வெப்பநிலையானது தான் வாழும் சூழ்நிலையின் வெப்பத்தைப் பொறுத்து இருக்கும். தனக்கென தனி வெப்பநிலை கொண்டிரா. எனவே மீன்களை சூழ்வெப்பநிலை விலங்குகள் என்று சொல்வர். சில வெப்ப மண்டல நாடுகளின் நீர்நிலைகளிலும், சில மீன் இனங்கள் கடுங்குளிர்ப்பகுதியான ஆர்ட்டிக் பெருங்கடல் போன்ற பகுதிகளிலும் வாழ்கின்றன. இனப்பெருக்க அமைப்பு மீன்கள் முட்டையிட்டு படிநிலைகளில் குஞ்சுகளைப் பெறுபவை. இவற்றில் ஒரு பாலினக் கருவுறல் உடலினுள்ளோ அல்லது வெளிபுறத்திலோ நிகழலாம். எ.கா. சுறா, கட்லா அழிவுறும் நிலை எக்கச்சக்கமாக மீன்களைப் பிடித்தல் கடல் எச்சங்கள், கதிரியக்கக் கழிவுகள் புவி வெப்பமடைதல் நீர் மாசுபாடு முக்கியத்துவம் மீன் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இவற்றின் ஏற்றுமதி, இறக்குமதி வணிகச் சந்தையில் பெரும்பங்காற்றுகின்றன. இந்தியாவிலிருந்து பெரும்பான்மையான மீன்கள் பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உணவிற்காக மீன் வளர்த்தல் - பெரும்பாலான கடல் மீன்களும், நன்னீர் மீன்களும் உணவிற்காக பிடிக்கப்பட்டு சமைத்து உண்ணப்படுகின்றன. சாளை, நெத்திலி, கிழாத்தி, வாளை, நவரை, இறால் போன்றவை உணவிற்காக பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் கடல் மீன் வகைகளாகும். மீன் வளர்ப்பு - மீன் வளர் தொழில்நுட்பம் அழகுக்காகவும், உணவுக்காகவும் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. மீன் பிடித்தல் பல நாடுகளில் பொழுதுபோக்கு அம்சமாக விளங்குகிறது. பண்பாட்டு அடையாளங்கள் - மீன் சில மதங்களில் கடவுளாகவும் (மச்ச அவதாரம் - திருமால்), பண்பாட்டுச் சின்னமாகவும் (பாண்டிய நாட்டின் கொடி - மீன் கொடி) விளங்குகின்றன. மீன் வகைகள் பட்டியல் முதன்மைக் கட்டுரை: மீன் வகைகள் பட்டியல் மீன்கள் சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றின என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். மீன்களிலே பொதுவாக நான்கு பெரும் பிரிவுகள் உள்ளன: வலுவான எலும்புகள் கொண்ட மீன்வகைகள் (சுமார் 20,000 வகைகள்), குருத்தெலும்பு கொண்ட எளிய வகை மீன்கள்.(சுமார் 50 வகைகள்) , குருத்தெலும்பு கொண்ட சுறாமீன்கள், மற்றும் திருக்கை மீன்கள் முதலியன (சுமார் 600 வகைகள்) செதில் இல்லா குருத்தெலும்பு உள்ள எளிய மீன் வகைகள் (விலாங்கு, ஆரல் முதலானவை; சுமார் 50 வகைகள்) * பகுப்பு:நீர்வாழ் உயிரினங்கள் பகுப்பு:முதுகெலும்பிகள் மேற்கோள்கள்
மீன் சுவாசிக்க பயன்படும் உறுப்பின் பெயர் என்ன
செவுள்கள், நுரையீரலால்
8,038
tamil
d05eef777
பேங்காக் (Bangkok) தாய்லாந்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது தாய்லாந்தின் மொழியில், குருங் தேப் மஹா ந கொன் (กรุงเทพมหานคร) என வழங்கப்படுகிறது. இதில் குருங் தேப் என்ற தாய்ச் சொல்லின் பொருள், "தேவதைகளின் நகரம்" என்பதாகும். மத்திய தாய்லாந்தின் சாவோ பிரயா ஆற்றுப் படுகையில் 1,568.7 square kilometres (605.7sqmi) பரப்பளவில் அமைந்துள்ள பேங்காக்கில் 9 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இது தாய்லாந்தின் மக்கள்தொகையில் 12.6 விழுக்காடு ஆகும். பேங்காக் பெருநகர மண்டலம் எனப்படும் சுற்றுப்புறப் பகுதிகளையும் சேர்த்து 14 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். 15ஆம் நூற்றாண்டில் அயூத்தியா இராச்சியத்தில் சிறு வணிகத்துறையாக இருந்த பேங்காக் படிப்படியாக வளர்ச்சியுற்று இரண்டு தலைநகரங்களின் அமைவிடமாக விளங்கியது; 1768இல் தோன்புரி மற்றும் 1782இல் ரத்தனகோசின். பத்தொன்பதாம் நூற்றாண்டில் சயாம் என அழைக்கப்பட்ட தாய்லாந்தின் நவீனப்படுத்துதலின் மையமாக பேங்காக் இருந்தது. அக்காலத்தில் மேற்கத்திய தாக்கம் மிகுந்திருந்தது. இருபதாம் நூற்றாண்டில் வரையற்ற மன்னராட்சி நீக்கப்பட்டு பல புரட்சிகளை சந்தித்த தாய்லாந்தின் அரசியல் போராட்டங்களின் மையமாக பேங்காக் அமைந்திருந்தது. 1960களிலிருந்து 1980கள் வரையிலான காலத்தில் மிக விரைவான வளர்ச்சியை கண்டது. தாய்லாந்தின் அரசியல், பொருளியல், கல்வி, ஊடகம் மற்றும் நவீன சமூகம் ஆகியவற்றில் பேங்காக்கின் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. 1980களிலும் 1990களிலும் ஏற்பட்ட ஆசிய பொருளாதார வளர்ச்சியை ஒட்டி பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் ஆசிய மண்டல தலைமையகங்களை பேங்காக்கில் நிறுவின. இதனால் இந்த மண்டலத்தில் பேங்காக் ஓர் முக்கிய நிதிய, வணிக விசையாக விளங்குகிறது. மேலும் பன்னாட்டுப் போக்குவரத்து மற்றும் நலத்துறை நிறுவனங்களின் அச்சுமையமாகவும் விளங்குகிறது. கலை, கவின்கலை, மனமகிழ் நிகழ்வுகளுக்கான மண்டல மையமாகவும் உருவெடுத்து வருகிறது. இங்குள்ள பரபரப்பான சாலை வாழ்க்கையும் பண்பாட்டுச் சுவடுகளும் பரவலாக அறியப்பெற்ற சிவப்பு விளக்கு மாவட்டங்களும் தனிக் கவர்ச்சியைக் கொடுத்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும் அரண்மனை, வாட் அருண், வாட் ஃபோ போன்ற புத்தமதக் கோவில்கள் இவற்றிலிருந்து வேறுபட்ட ஆவலைத் தூண்டுகின்றன. இவற்றால் பேங்காக் உலகின் மிகக்கூடிய சுற்றுலாப் பயணிகளை உடைய நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. மாஸ்டர்கார்டு வெளியிடும் உலகளாவிய வருகைபெறும் நகரங்களின் பட்டியலில் இலண்டன், பாரிசை அடுத்து மூன்றாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலாக் குறித்த உலகளாவியத் துறையிதழ் ஒன்றில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக உலகின் சிறந்த நகரமாக பெயரிடப்பட்டுள்ளது. இன்று, தெற்கிழக்காசியாவில், மிக முக்கியமான வர்த்தக மையமாக பேங்காக் விளங்குவதோடு, பல சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்துள்ள பயண நுழைவாயிலாகவும் விளங்குகின்றது. இங்கு மிகவும் உயர்ந்த செலவில் அலங்கரிப்பட்டுள்ள 400 புத்தர் கோயில்கள் காணப்படுவதோடு, ஆசியாவிலேயே மிகப் பெரியளவான விற்பனை வளாகங்களும் காணப்படுகின்றன. அத்தோடு இங்கு ஆறு பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இங்கு காணப்படும் எண்ணிலடங்கா கால்வாய்களினால், மிதக்கும் சந்தைகள் பலதையும் உருவாக்கின்ற தளமாகவிருக்கிறது. இதனால், பேங்காக், "கிழக்கின் வெனிசு" என்று வழங்கப்படுவதுமுண்டு. போதிய நகரமைப்பு திட்டமிடல் மற்றும் கட்டுப்பாடு இல்லாது விரைவான வளர்ந்துள்ள பேங்காக் சரியான கட்டமைப்பு அமைப்புகள் இன்றி அமைந்துள்ளது. போதிய சாலைகள் இல்லாததாலும் மிகுதியான தனியார் ஊர்திகள் பயன்பாட்டினாலும் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. தாய் விரைவுவழி அமைப்பு அமைக்கப்பட்டபோதும் இச்சிக்கல் இன்றும் தீரவில்லை. 1990களில் இதனால் மிகுந்த காற்று மாசடைதல் உண்டானது. இதற்கு தீர்வாக நான்கு விரைவுத் தொடருந்து வழிகள் அமைக்கப்பட்டு இயக்கத்தில் உள்ளன; மேலும் பல வழிகள் கட்டமைக்கப்பட்டும் திட்டமிடப்பட்டும் வருகின்றன. பெயர் பேங்காக் (บางกอก என்ற சொல்லின் சொற்பிறப்பியல் தெளிவாக இல்லை. பேங் என்ற தாய்ச்சொல்லிற்கு "ஓடையிலமைந்த சிற்றூர்",[1] என்றும் இதன் பெயர் பேங் கோ (บางเกาะ),( கோ</i>வின் பொருள் "தீவு", இப்பகுதியில் பல ஆறுகளும் கால்வாய்களும் ஏற்படுத்திய நிலப்பகுதியை குறிக்க) என்பதிலிருந்து வந்திருக்கலாமென்றும் கருதப்படுகிறது.[2] பேங்காக் என்பது பேச்சுவழக்குப் பெயராக இருந்திருக்கலாம்; ஆனால் இதுவே வெளிநாட்டுப் பயணிகளால் பயன்படுத்தபடத் துவங்கி பரவலான பயன்பாட்டால், பேங்காக் பெருநகர நிர்வாகம் போன்ற சொல்லாட்சிகளில், அலுவல்முறையாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பேங்காக்கின் முழுமையான அலுவல்முறைப் பெயர், குருங் தேப் மஹாந கொன் அமன் ரத்டனகொசின் மஹிந்தரயுத்தய மகாடிலோக் போப் நோப்ப்ஹராத் ராட்சதனி புரிறோம் உடோம்ரட்சநிவேட் மகாசதன் அமன் பிமன் அவதான் சதித் சக்கதட்டிய விட்சனுகம் பிரசித் (Audio file " Th Bangkok ceremonial name.ogg " not found) என்பதாகும். 168 இலத்தீன் எழுத்துக்களை கொண்ட பேங்காக்கின் பெயரே, உலகின் நகரமொன்றின் மிக நீளமான பெயராகும் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. தாய்லாந்தின் மொழியில் 139 எழுத்துருக்களைக் கொண்டுள்ளது. பெரும்பாலும் பாலியிலும் சமசுகிருதத்திலும் வேர்ச்சொற்களைக் கொண்ட இப்பெயரின் மொழிமாற்றம் இவ்வாறுள்ளது: தேவதைகளின் நகரம், அழியாதவர்களின் பெருநகரம், நவரத்தினங்களினாலான சீர் நகரம்,மன்னரின் நகரம், அரச மாளிகைகளின் நகரம், அவதார கடவுளரின் இல்லம், இந்திரனின் ஆணையால் விசுவகர்மனால் கட்டப்பட்டது.[3] பன்னாட்டளவில் பேங்காக் என்ற பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் பொதுவாக குருங் தேப் (தேவதைகளின் நகரம்) என்று அழைக்கின்றனர். தானுந்து உரிமப்பட்டைகளில் குருங் தேப் மகா நகொன் என்று குறிக்கப்படுகிறது. சகோதர நகரங்கள் பேங்காக் நகரம் 2013 நிலவரப்படி 15 நாடுகளிலுள்ள 23 நகரங்களுடன் சகோதர நகரமாகவும் நட்பு நகரமாகவும் உடன்பாடு கண்டுள்ளது.[4] அவை: வாசிங்டன், டி. சி., ஐக்கிய அமெரிக்கா, 1962 முதல், 2002இல் புதுப்பிக்கப்பட்டது[5][6] பெய்ஜிங், சீனா, 1993 முதல்[7] புடாபெஸ்ட், அங்கேரி, 1997 முதல்[8] பிரிஸ்பேன், ஆத்திரேலியா, 1997 முதல்[9] மாஸ்கோ, உருசியா, 1997 முதல்[10] சென் பீட்டர்ஸ்பேர்க், உருசியா, 1997 முதல்[11][12] மணிலா, பிலிப்பைன்சு, 1997 முதல்[13][14] ஜகார்த்தா, இந்தோனேசியா, 2002 முதல்[15] ஹனோய், வியட்நாம், 2004 முதல்[16] வியஞ்சான், லாவோசு, 2004 முதல்[17] அஸ்தானா, கசகசுத்தான், 2004 முதல்[18] சவுசோ, சீனா, 2005 முதல்[19][20] புகோக்கா, சப்பான், 2006 முதல்[21] சியோல், தென் கொரியா, 2006 முதல்[22] குவாங்சோ, சீனா, 2009 முதல்[23][24] லோசான், சுவிட்சர்லாந்து, 2009 முதல்[25] பூசன், தென் கொரியா, 2011 முதல்[26] சோங்கிங், சீனா, 2011 முதல்[27] தியான்ஜின், சீனா, 2012 முதல்[28] அங்காரா, துருக்கி, 2012 முதல்[29] ஜோர்ஜ் டவுன், பினாங்கு, மலேசியா, 2012 முதல்[30] ஐச்சி, சப்பான், 2012 முதல்[31] புனோம் பென், கம்போடியா, 2013 முதல்[32] காலநிலை மேற்சான்றுகள் நூற்தொகுப்பு CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) CS1 maint: discouraged parameter (link) வெளி இணைப்புகள் பகுப்பு:ஆசியத் தலைநகரங்கள் பகுப்பு:தாய்லாந்து நாட்டிலுள்ள ஊர்களும் நகரங்களும்
பாங்காக் நகரத்தின் பரப்பளவு என்ன?
1,568.7 square kilometres
282
tamil
b0638a766
யப்பான் (ஜப்பான்; Japan) அல்லது சப்பான் என்பது ஆசியக் கண்டத்தில் உள்ள பல தீவுகளாலான நாடாகும். இது பசிபிக்குப் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் உள்ளது. இது சூரியன் உதிக்கும் நாடு என்றும் அழைக்கப்படுகிறது. தோக்கியோ இதன் தலைநகராகும். சப்பான் மொத்தம் 6852 தீவுகளை உள்ளடக்கியது. ஒக்கைடோ, ஒன்சூ, சிகொக்கு, கியூசூ ஆகியன சப்பானின் முக்கியமான, மற்றும் 97 சதவீத நிலப்பரப்பை உள்ளடக்கிய நான்கு பெரிய தீவுகளாகும்.மேலும் இது 12.6 கோடி மக்கட்தொகையுடன் உலகின் 10 வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் இது உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாகவும் விளங்குகிறது.மற்றும் உலகின் அதிகபட்ச சராசரி வாழ்நாளை கொண்ட நாடாகவும் விளங்குகின்றது.மேலும் உலகத்தின் 5 வது அதிகபட்ச இராணுவ செலவை கொண்டுள்ளதெனினும் இது தன் தற்காப்புகென்றே பயன்படுத்துகின்றது. நாட்டுப் பெயர் யப்பானிய மொழியில் அந்நாட்டின் பெயர் (日本国), "நிகோன் கொகு அல்லது "நிப்பொன் கொகு" என உச்சரிக்கப் பட்டது. இது சூரியன் எழும் நாடு என்ற பொருளாக சீனாவுக்கு கிழக்கே இருக்கிற நாடு என்றும், சூரியன் இருக்கிற மாதிரி வாழ்கின்ற நாடு என்றும் குறிப்பிடுகிறது. கி. பி. 645ஆம் ஆண்டு நிகோன் (日本) என்ற பெயர் முதலில் யப்பானின் பெயராக பயன்பட்டது. 734 ஆண்டு சட்டப்படி இது யப்பானின் பெயராக நிறுவப்பட்டது. யப்பானிய சட்டத்தில் வரையறுக்கப்பட்ட ஆங்கிலப் பெயர் ஜப்பான் (Japan) என்பாதாகும். இருப்பினும் அண்மைக்காலமாக நிப்பொன் என்ற பெயரும் அஞ்சல் தலைகளிலும், நாணயங்களிலும் காணக்கூடியதாக உள்ளது. சப்பான் என்ற ஆங்கில பெயரும், வேறு மொழியின் பொன் (பிரெஞ்சு மொழி), யாபன் ; (இடாய்ச்சு மொழி), ஜப்போனெ ; இத்தாலிய மொழி), ஹபொன் (Japón ; எசுப்பானிய மொழி), இபோனிய (Япония ; உருசிய மொழி), ஈபுன் (ญี๋ปุ่น ; தாய் மொழி) முதலிய பெயர்களும், முன்காலத்தில் சீனாவில் யப்பான் நாட்டுடைய கன் எழுத்துக்களான "日本国" ஆனது "ஜிபங்கு" அல்லது "ஜபங்கு" என்று உச்சரித்த வழக்கத்திலிருந்து தோன்றின என்பது பொதுவான கருத்தாகும். (சப்பானில் இராகனா, கட்டாகானா, காஞ்சி ஆகிய மூன்று எழுத்துருக்களை பயன்படுத்துகின்றனர்) இப்பொழுதும் சில நாடுகளில் யப்பான் நாட்டுடைய கன் எழுத்தை அவ்வவ் நாடுகளின் மொழி வழக்கிற்கேற்ப உச்சரிக்கப்படுகிறது. உதாரணமாக, ரீபென் (日本 ; சீன மொழி), இள்பொன் (일본 ; கொரிய மொழி), நியத்பான் (Nhật Bản ; வியட்னாம் மொழி) போன்றவற்றைக் குறிப்பிடலாம். சப்பானிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் நிறைய தொடர்புகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன . இரண்டு மொழிகளும் ஒரே மாதிரி இலக்கண கட்டமைப்புகளை கொண்டுள்ளன என்று சொல்லப்படுகிறது. யமதொ (大和 ; やまと ), "அசிஅரனோ நகட்சு குனி" (葦原中国 ; あしはらのなかつくに ),சின்சூ (神州 ; しんしゅう),ஒன்ச்சோ(本朝 ; ほんちょう) என்ற பெயர்கள் யப்பானிய மொழியில் யப்பான் நாட்டை குறிக்கும் வெவ்வேறு சொற்களாகும். 1889 தொடக்கம் 1946 ஆம் ஆண்டு வரை "தைநிஹொன் தேகொகு" (大日本帝國 ; だいにほんていこく ; மா யப்பான் பேரரசு) என்ற பெயர் யப்பான் நாட்டின் சட்டப்படியான பெயராக இருந்தது. வரலாறு வரலாற்றுக்கு முந்திய காலமும் பழங்காலமும் கி.மு. 30000 காலப்பகுதியில் காணப்பட்ட பழங்கற்காலப் பண்பாடு ஜப்பானின் அறியப்பட்ட முதலாவது குடியிருப்பைக் கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஏறத்தாழ கிமு 14,000 ஆண்டுக் காலப் பகுதியில் இருந்து இடைக் கற்காலமும் பின்னர் வேடர்-உணவு சேகரிப்போர் பண்பாட்டைக் கொண்ட புதிய கற்காலமும் காணப்பட்டது. இப் பண்பாட்டினரில் தற்கால அய்னு மக்களினதும், யமாட்டோ மக்களதும் முன்னோர்களும் உள்ளடங்கி இருந்தனர். குழி வாழிடங்களும், திருத்தமற்ற வேளாண்மையும் இக்காலப் பண்பாட்டின் பண்புகள். இக்காலத்தைச் சேர்ந்த அலங்கரிக்கப்பட்ட மட்பாண்டங்களிற் சில உலகில் இன்று கிடைக்கும் மிகப் பழைய மட்பாண்டங்களுக்கு எடுத்துக் காட்டுகளாக உள்ளன. கிமு 300 ஆம் ஆண்டளவில் யயோய் மக்கள் யப்பானியத் தீவுகளுக்குள் வரத் தொடங்கி யோமொன் மக்களுடன் கலந்து வாழ்ந்தனர். கிமு 500 அளவில் தொடங்கிய யயோய் காலத்தில், ஈர-நெல் வேளாண்மை, ஒரு புதிய வகை மட்பாண்டம் என்பன அறிமுகமானதுடன், சீனாவிலிருந்தும் கொரியாவில் இருந்தும் உலோகவியலும் அறிமுகமானது. முதலாவது நிரந்தர தலைநகரம் நாராவில் கி.பி. 710ல் அமைக்கப்பட்டது. அரசும் அரசியலும் யப்பான் அதன் பேரரசருக்கு மிகவும் குறைவான அதிகாரங்களே வழங்கும் அரசியற்சட்ட முடியாட்சி ஆகும். சடங்குசார் தலைவர் என்ற அளவில், பேரரசர் என்பவர் "நாட்டினதும், மக்களுடைய ஒருமைப்பாட்டினதும் குறியீடு" என யப்பானின் அரசியல் சட்டம் வரைவிலக்கணம் கூறுகிறது. அதிகாரம் முக்கியமாகப் பிரதம அமைச்சரிடமும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிடமும் உள்ளது. அதேவேளை இறைமை மக்களிடம் உள்ளது.[1] தற்போதைய பேரரசர் அக்கிகிட்டோ ஆவார். இவருக்கு அடுத்த நிலையில், முடிக்குரிய இளவரசராக நாருகிட்டோ உள்ளார். யப்பானின் சட்டவாக்க அமைப்பு, தேசிய டயெட் எனப்படும் இரு அவைகளைக் கொண்ட நாடாளுமன்றம் ஆகும். இது, 480 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையையும், 242 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சிலர் அவையையும் உள்ளடக்கியது. பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவையும், கவுன்சிலர் அவை உறுப்பினர்கள் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் மக்களால் தெரிவு செய்யப்படுகின்றனர். 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை உண்டு.[2] பிரதம அமைச்சரே அரசின் தலைவர் ஆவார். தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களிலிருந்து நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்படும் ஒருவரைப் பிரதம அமைச்சராகப் பேரரசர் நியமிப்பார். பிரதம அமைச்சர் நாட்டின் அமைச்சர்களைத் தெரிவு செய்வதற்கும், பதவியில் இருந்து நீக்குவதற்குமான அதிகாரம் உடையவர். மாவட்டங்கள் சப்பானின் மாவட்டங்கள் "டொ" "டோ" "ஃகூ" "கென்" என்ற நான்கு விதத்தின் பேரால் அழைக்கப்பட்டுள்ளன. "டொ" எனப்படுகிறது தோக்கியோடொ மட்டும், "டோ" எனப்படுகிறது ஒக்கைடோ மட்டும், "ஃகூ" எனப்படுகிறது ஓசகாகூவும் கியோத்தோகூவும், "கென்"எனப்படுகிறது மற்ற 43 மாவட்டங்கள் ஆகும். முக்கியமான தீவுகளும், அங்குள்ளே அல்லது அங்கு பக்கத்திலே இருக்கிற மாவட்டங்களும், கீழே காட்டப்பட்டுள்ள மாதிரி மாவட்டங்களுடைய இருப்பிடங்கள், பெயரின் முன்னே இருக்கிற எண்ணால் காட்டப்பட்டுள்ளன. புவியியல் யப்பான், பசிபிக் கடற்கரையில் இருந்து கிழக்காசியா வரை பரந்துள்ள 6,852 தீவுகளைத் தன்னுள் அடக்கியுள்ளது.[3][4] இந்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லாத் தீவுகளும் உட்பட்ட அனைத்துப் பகுதிகளும் அகலக்கோடுகள் 24° - 46°வ, நெடுங்கோடு 122° - 146°கி என்பவற்றுக்கு இடையே அமைந்துள்ளது. வடக்கில் இருந்து தெற்காக யப்பானின் முக்கியமான தீவுகள் ஒக்கைடோ, ஒன்சூ, சிக்கோக்கு, கியூசூ என்பன. ஒக்கினாவா தீவை உள்ளடக்கிய ரியூகியூ தீவுகள் கியூசூ தீவுக்குத் தெற்கே சங்கிலித் தொடராக அமைந்துள்ளன. இவை ஒருங்கே யப்பானியத் தீவுக்கூட்டங்கள் எனப் பெயர் பெறுகின்றன.[5] ஏறத்தாழ யப்பானின் 73% நிலப்பகுதி காடாக அல்லது மலைப் பகுதிகளாக இருப்பதுடன், வேளாண்மை, தொழில் துறை, குடியிருப்பு ஆகிய தேவைகளுக்கு உதவாததாக உள்ளது.[2][6] இதனால், மக்கள் வாழக்கூடிய கரையோரப் பகுதிகளின் மக்கள் தொகை அடர்த்தி மிகவும் கூடுதலாக உள்ளது. யப்பான், உலகின் மிகக் கூடிய மக்கள் அடர்த்தி கொண்ட நாடுகளில் ஒன்று.[7] யப்பானியத் தீவுகள் பசிபிக் தீ வளையத்தில் உள்ள எரிமலை வலயத்தில் அமைந்துள்ளன. இத் தீவுகள் பெரும்பாலும், நடுச் சிலூரியக் காலம் முதல் பிளீசுட்டோசீன் காலம் வரையிலான பல நூறு மில்லியன் ஆண்டுகளாக இடம் பெற்ற பெரிய பெருங்கடல் நகர்வுகளின் விளைவாக உருவானவை. இந்நகர்வு, தெற்கே பிலிப்பைன் கடல் தட்டு அமூரியக் கண்டத்தட்டு, ஒக்கினாவாக் கண்டத்தட்டு ஆகியவற்றுக்குக் கீழ் நகர்ந்ததனாலும், வடக்கே பசிபிக் தட்டு ஒக்கோட்சுக்கு தட்டுக்குக் கீழ் நகர்ந்ததினாலும் ஏற்பட்டது. முன்னர் யப்பான் யூரேசியக் கண்டத்தின் கிழக்குக் கரையுடன் ஒட்டியிருந்தது. முற்கூறிய தட்டுக்களின் கீழ் நகர்வு, 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், இன்றைய யப்பான் நிலப் பகுதிகளைக் கிழக்குப் புறமாக இழுத்து இடையே யப்பான் கடலை உருவாக்கியது.[8] யப்பானில் 108 செயற்படும் எரிமலைகள் உள்ளன. பெரும்பாலும் சுனாமியை உருவாக்கும் பேரழிவைத் தருகின்ற நிலநடுக்கங்கள் ஒவ்வொரு நூற்றாண்டிலும் பல தடவைகள் ஏற்படுகின்றன.[9] 1923 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தோக்கியோ நிலநடுக்கத்தினால் 140,000 பேர் இறந்தனர்.[10] 1995 பெரும் ஆன்சின் நில நடுக்கமும், 2011 மார்ச்சு 11 ஆம் தேதி ஏற்பட்ட 9.0 அளவிலான 2011 தோகோக்கு நிலநடுக்கமும்[11] அண்மைக் காலத்தில் இடம்பெற்றவை. 2011 ஆம் ஆண்டின் நிலநடுக்கத்தில் போது பெரிய சுனாமியும் உருவானது.[12] 2012 மே 24 ஆம் தேதியும் 6.1 அளவிலான நிலநடுக்கம் வடகிழக்கு யப்பானின் கரையோரத்தைத் தாக்கியது. எனினும், இதோடு சுனாமி எதுவும் ஏற்படவில்லை. உள்கட்டமைப்பு 2005-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சப்பானின் பாதி ஆற்றல் தேவை பெட்ரோலியத்தின் மூலமும் ஐந்தில் ஒரு பகுதி நிலக்கரி மூலமும் 14% இயற்கைவளி மூலமும் பெறப்படுகிறது. அணு மின்சாரம் நாட்டின் கால் பங்கு மின்தேவையை ஈடுசெய்கிறது. சப்பானில் சாலைப்போக்குவரத்து நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது. 1.2 மில்லியன் தொலைவிற்கான நல்ல சாலைகள் இடப்பட்டுள்ளன. சுங்கச்சாலைகளும் பயன்பாட்டில் உள்ளன. 12-க்கும் மேற்பட்ட தொடர்வண்டி நிறுவனங்கள் உள்ளூர், வெளியூர் தொடர்வண்டி வசதிகளை அளிக்கின்றன. பெருநகரங்களை சின்கான்சென் (=புல்லட் ரயில்) ரயில்கள் இணைக்கின்றன. சப்பானிய ரயில்கள் நேரந்தவறாமைக்குப் பெயர்பெற்றவை. சப்பானில் 173 வானூர்தி நிலையங்கள் உள்ளன. நகரிடைப் போக்குவரத்திற்கு வானூர்தி விரும்பப்படுகிறது. ஆசியாவின் சந்தடி மிக்க வானூர்தி நிலையமான அனீதா நிலையம் சப்பானிலேயே உள்ளது. யோக்கோகாமா, நகோயா துறைமுகங்கள் ஆகியன பெரிய துறைமுகங்கள் ஆகும். பண்பாடு ஹனாமி (花見 ) என்றழைக்கப்படும் "பூப் பார்த்தல் " வழக்கத்தை சப்பானியர்கள் மிகவும் முக்கியமானதாக கருதுகிறார்கள். இளவேனிற்காலத்தின் ஆரம்பத்தில் செர்ரி என்ற ஒரு வகையான பூ சப்பானில் பூத்துக் குலுங்கும் . சப்பானின் பகுதிக்கு ஏற்றவாறு பூப் பூக்கும் காலம் மார்ச் கடைசி வாரத்தில் இருந்து மே முதல் வாரம் வரை மாறுபடும். ஊடகங்கள் பூப்பூக்கும் காலநிலையை கணித்துக் கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் பூத்துக் குலுங்கும் இடம் பற்றிய விவரங்களையும் வெளியிடுகின்றனர்.இந்த பூக்கள் பூக்கும் பூங்கா பூத்திருக்கும் நேரங்களில் விடுமுறை நாட்களில் விழாக்கோலம் பூண்டிருப்பதால் பூங்காவில் அமர்வதற்கு இடம் கிடைக்க கடினம். ஆதலால் முந்திய நாள் இரவே சென்று நல்ல இடம் பார்த்து அமரும் விரிப்புகளை விரித்து போட்டு எல்லைக்கையிறு கட்டி விட்டு வருவர். நல்ல அமரும் இடம் கண்டுபிடித்து அடையாளக்குறியிட்டு வருவது குழுவில் உள்ள இளையோரின் பொறுப்பே ஆகும்.சப்பானியர்கள் நண்பர்களுடன் அல்லது உடன் வேலை பார்ப்பவர்களுடன் அல்லது குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக சென்று கண்டு கழிப்பர் . பூத்திருக்கும் மரங்களின் அடியில் கூட்டமாக அமர்ந்து கதை பேசி , இசை இசைத்து பாட்டுப் பாடி , நடனம் ஆடி , மது அருந்தி உணவு உண்டு பொழுது போக்குவர். பொதுவாக இது ஒரு முழு நாள் நிகழ்ச்சியாக கருதப்படுகிறது. இரவு நேரங்களிலும் கொண்டாடும் வழக்கமும் உள்ளது. இரவு நேரங்களிலும் கொண்டாடுவதற்கு ஏற்றவாறு பூங்கா முழுவதும் மின் விளக்குகள் வசதிகள் செய்யப்பட்டிருக்கும். பூங்காவில் பூப்பூத்திருக்கும் வேளைகளில் தின்பண்டங்கள் விற்கும் தற்காலிய கடைகள் நிறைய விரிக்கப்பட்டிருக்கும். ஆங்கில வருடத்தின் முதல் நாளன்று கோவிலுக்கு செல்லும் வழக்கம் பெரிதும் பின்பற்றப்படுகிறது . ஹத்சுமொடே ( 初詣 ) என்று இந்த வழக்கம் அழைக்கப்படுகிறது. மதங்கள் சின்த்தோவும், புத்த மதமும் சப்பானின் முக்கிய மதங்களாகும். கிறித்துவ மதமும் சிறுபான்மையான மக்களால் பின்பற்றப்படுகிறது. விளையாட்டு பாரம்பரிய விளையாட்டான சுமோ சப்பானின் தேசிய விளையாட்டாக மதிக்கப்படுகிறது. தற்காப்புக் கலைகளாக சூடோ, கராத்தே போன்றவையும் வழமையில் உள்ளன. கோல்ப் விளையாட்டும் ஒரு புகழ்பெற்ற விளையாட்டாகும்.சப்பானிய மக்கள் கால்பந்து விளையாட்டை பெரிதும் ஈடுபாட்டுடன் விளையாடுகிறார்கள் . குறிப்புகள் மேலும் பார்க்க கிமி ஙா யொ சாமுராய் வெளியிணைப்புகள் அரசாங்கம் , official site of the Prime Minister of Japan and His Cabinet , official site of the Imperial House பொதுத் தகவல்கள் from UCB Libraries GovPubs at Curlie பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் entry profile from BBC News from the OECD Wikimedia Atlas of Japan from International Futures பகுப்பு:ஆசிய நாடுகள் பகுப்பு:கிழக்கு ஆசிய நாடுகள் பகுப்பு:தீவு நாடுகள் பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
ஜப்பான் நாட்டின் தலைநகரம் எது?
தோக்கியோ
203
tamil
8998a0a37
கிலோகிராம் (குறுக்கம்: கிகி) என்பது சீர்தரம் செய்யப்பட்ட அனைத்துலக முறை அலகுகளில் உள்ள அடிப்படையான நிறை அலகு.[2] ஒரு கிலோகிராம் நிறை என்பது பிளாட்டினம்-இரிடியம் கலவையால் செய்யப்பட்டு பிரான்ஸ் நாட்டில் செவ்ரே என்ற இடத்தில் மிகவும் பாதுகாப்பாக சீரான வெப்ப அழுத்த நிலைகளில் வைக்கப்பட்டுள்ள ஒரு பொருளின் நிறை ஆகும். இப்பொருளை Le Grand K (லெ ‘கிரான்) என்று பிரெஞ்சு மொழியிலும், IPK அல்லது International Prototype Kilogram (அனைத்துலக முதலுருக் கிலோகிராம் என்று பொருள்படும் இன்ட்டர்நேசனல் புரோட்டோ டைப் கிலோகிராம்) என்று ஆங்கிலத்திலும் அழைக்கிறார்கள். ஒரு கிலோகிராம் என்பது சற்றேறக்குறைய ஒரு லிட்டர் நீரின் நிறையை ஒத்தது. உலகில் உள்ள நிறைகள் எல்லாமும் ஒப்பீடு செய்யும் முதன்மை சீர்தர அளவு இந்த கிலோகிராம் என்பது. அடிப்படையான அனைத்துலக முறை அலகுகளில் இது ஒன்றுதான் கிலோ போன்ற முன்னொட்டு கொண்ட அலகு. அதே போல இது ஓர் அலகு மட்டுமே இயற்கையான இயற்பியல் அடிப்படை நிகழ்வு அல்லாமல், ஒரு குறிப்பிட்ட புறப்பொருளின் அடிப்படையில் அமைந்த அலகு. அன்றாட வாழ்வில் ஒரு கிலோகிராம் என்பது ஒரு நிறை என்றாலும், புவியின் ஈர்ப்பால் ஏற்படும் ஒருகிலோகிராம் எடையோடு நினைத்துப் புழங்குவது வழக்கம். ஆனால் நிறை (இலங்கையில் திணிவு) என்பது உண்மையில் எடை அல்ல. எடை என்பது ஒரு பொருளின் நிறை மீது செலுத்தும் புவி ஈர்ப்பு விசை ஆகும். இந்த விசையை நியூட்டன் என்னும் அலகால் அளப்பர். எனவே நிறை அல்லது திணிவு என்பது பொருளின் இயல் தன்மை, பொருண்மைத்தன்மை. ஒரு பொருளின் நிறை என்பது அப்பொருள் மீது எந்த விசையைச் செலுத்தினாலும், அந்த விசையினால் அப்பொருள் கொள்ளும் முடுக்கத்தின் அளவை தீர்மானம் செய்யும் இயல்தன்மை எனலாம். ஒரு கிலோகிராம் நிறை மீது ஒரு நியூட்டன் விசையைச் செலுத்தினால், ஒரு மீ/நொ2 முடுக்கம் கொள்ளும். சொல்லினக்கணம் மற்றும் பயன்பாடு கிலோகிராம் (kilogramme or kilogram) எனும் சொல் பிரான்சிய மொழியிலிருந்து கொண்டுவரப்பட்ட சொல்லாகும் (பிரான்சிய சொல் kilogramme). இது பிரான்சு மொழிக்கு கிரேக்கத்திலிருந்து வந்தது. ஆயிரம் எனும் கருத்தைத் தரக்கூடிய "χίλιοι" (சிளியோய், ஆங்கிலம் chilioi) எனும் சொல்லும், ஒரு சிறியளவு நிறை எனும் கருத்தைத் தரக்கூடிய "γράμμα" (கிரம்மா, ஆங்கிலம் gramma) இணைந்ததால் பெறப்பட்ட சொல்லாகும்.[3]கிலோகிராம் (kilogramme) எனும் சொல் பிரான்சிய சட்டத்தில் 1795 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது.[4] பிரான்சிய மொழியில் கிலோகிராம் எனும் சொல் எவ்வாறு உச்சரிக்கப்பட்டதோ அவ்வாறே ஐக்கிய அரபு இராச்சியத்திலும் 1797ஆம் ஆண்டு ஆங்கிலத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்ட போதும் உச்சரிக்கப்பட்டது.[5] ஐக்கிய அரபு இராச்சியத்தில் உச்சரிக்கப்பைடவாறே அமெரிக்காவிலும் அச்சொல் உச்சரிக்கப்பட்டது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் கிலோகிராம் என்றும் கிலோக்ராமே என்றும் உச்சரிக்கப்பட்டது, ஆனாலும் கிலோகிராம் என உச்சரிப்பது அதிகமாக வழக்கத்தில் இருந்து வந்தது.[6]கிலோகிராம் எனும் உச்சரிப்பு தற்போது அதிக சர்வதேச அமைப்புக்களால் அங்கீகரிக்கப்பட்ட உச்சரிப்பு முறையாகும். 19 ஆம் நூற்றாண்டில் பிரான்சிய சொல்லான கிலோ (kilo), எனும் கிலோகிராமே (kilogramme) எனும் சொல்லின் குறு எழுத்துமுறை ஆங்கில மொழிக்குள் கொண்டுவரப்பட்டது.கிலோ எனும் சொல்லும் கிலோகிராம் எனும் ஒரே பொருளையே தருகிறது.[7] அமெரிக்காவின் காங்கிரஸ் மெட்ரிக் முறையை 1866 அறிமுகப்படுத்திய போது அந்தக்காங்கிரஸ் கிலோ எனும் சொல்லை கிலோகிராமின் மாற்றுப்பெயராக பயன்படுத்த அனுமதி அளித்தது,[8] ஆனால் 1990 ஆம் ஆண்டு கிலோ என்னும் சொல் பயன்பாடு பற்றிய கருத்தை மீளப்பெற்றது. [9] அனைத்துலக முதலுருக் கிலோகிராம் 1889 ஆம் ஆண்டு முதல் பொருளின் நிறையை கிலோகிராம் பெருமமாக அழைப்பது சர்வதேச முதலுருக் கிலோகிராம் என வரையறுக்கப்பட்டுள்ளது. இதனை தொழிற்முறை எடை அளவுகள் ஆய்வியலில் "IPK" (international prototype kilogram) என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சர்வதேச முதலுருக் கிலோகிராமானது "Pt‑10Ir" என்றழைக்கப்படும் பிளாட்டினம் உலோகக் கலவையால் ஆனது. இக்கலவையில் 90% "பிளாட்டினம் மற்றும் 10% இரிடியம் உள்ளது. இக்கலவை செவ்வட்டவுருளையாக மாற்றப்பட்டு (உயரம்=விட்டம்) மேற்ப்பரப்பு பகுதி 39 மி.மீட்டர் குறைக்கப்படுகிறது.10% இரிடியம் கூடுதலாக சேர்க்கப்படுவதால் பிளாட்டினத்தின் பண்பு மேம்படுத்தப்பட்டு அதன் கடின மற்றும் உறுதித்தன்மை தக்க வைத்துக்கொள்ளப்படுவதுடன் கீழ்கண்ட நற்பண்புகளையும் பெற்றிருக்கின்றன. ஆக்ஸிஜனேற்றத்திற்கான எதிர்ப்புத்திறன் மிக அதிக அடர்த்தி (கிட்டத்தட்ட காரீயத்தை போல இருமடங்கு அடர்த்தி மற்றும் தண்ணீரின் அடர்த்தியை போல 21 மடங்கு அடர்த்தி) திருப்தி மின் மற்றும் வெப்ப கடத்துத்திறன் மற்றும் குறைந்த அளவு காந்த ஏற்புத் திறன் அனைத்துலக முன்மாதிரிக் கிலோகிராம் நகல்கள் அனைத்துலக முன்மாதிரிக் கிலோகிராமின் பல்வேறு நகல்கள் கீழ்கண்டவாறு உலகின் பல்வேறு நாடுகளில் பாதுகாக்கப்படுகின்றன. IPK அமைந்திருக்கும் பிரன்சின் செயின்ட்-கிளவுடு ஆறு சகோதரி நகல்கள் K1, 7, 8(41),32, 43 and 47 என்ற எண்ணிடப்பட்டவை [Note 1] .[10] பிரான்சின் செயின்ட்-கிளவுடு எனுமிடத்தில் பாதுகாக்கப்படுகிறது. பத்து செயல் நகல்கள், எட்டு (9, 31, 42′, 63, 77, 88, 91, மற்றும் 650[Note 2]) அன்றாடப் பயன்பாட்டுக்கும் மற்றும் இரண்டு (25 and 73) சிறப்புப் பயன்பாட்டுக்கும் .[11] பிரான்சின் செயின்ட்-கிளவுடு எனுமிடத்தில் பாதுகாக்கப்படுகிறது. தேசிய முதலுரு, பின்வரும் நாடுகளான [12] [13][14][15] ஆஸ்திரேலியா (44 and 87), ஆஸ்திரியா (49), பெல்ஜியம் (28 and 37), பிரேசில் (66), கனடா (50 and 74), சீனா (60 and 64; 75 ஹாங் காங்கிலும், செக் குடியரசு (67), டென்மார்க் (48), எகிப்து (58), பின்லாந்து (23), பிரான்சு (35), செருமனி (52, 55 and 70), அங்கேரி (16), இந்தியா (57), இந்தோனேசியா (46), இசுரேல் (71), இத்தாலி (5 and 76), சப்பான் (6 and 94), கசகஸ்தான், கென்யா (95), மெக்சிகோ (21, 90 and 96), நெதர்லாந்து (53), வடகொரியா (68), நார்வே (36), பாகிஸ்தான் (93), போலந்து (51), போர்ச்சுக்கல் (69), ரொமானியா (2), ரசியா (12 and 26[16]), செர்பியா (11 and 29), சிங்கப்பூர் (83), சுலோவாக்கியா (41 and 65), தென் ஆப்பிரிக்கா (56), தென் கொரியா (39, 72 and 84), ஸ்பெயின் (24 and 3), சுவீடன் (40 and 86),[17] சுவிச்சர்லாந்து (38 and 89), தைவான் (78), தாய்லாந்து (80), துருக்கி (54[18]), இங்கிலாந்து (18,[19] 81 and 82) and the அமெரிக்கா (20,[20] 4, 79, 85 and 92). ஆகியவற்றில் பாதுகாக்கப்படுகிறது. சில கூடுதல் நகல்கள் தேசிய அமைப்பு சார்பற்ற நிறுவனங்களான பாரிசிலுள்ள பிரெஞ்சு அறிவியல் மன்றம் French Academy of Sciences (34) மற்றும் துரினில் உள்ள ஜி.கொலனெட்டி எடை ஆய்வியல் நிறுவனம் (the Istituto di Metrologia G. Colonnetti) (62).[21] குறிப்புகள் கிலோ ஆனது ஐக்கிய நாடுகள் பயன்படுத்தும் ஒலியியல் அகரத்தில் K ஐக் குறிப்பிடுகின்றது. கிலோ அனைத்துலக முறையலகுகளில் முறையில் 103 அல்லது 1000 ஐக் குறிப்பிடுகின்றது. எடுத்துக் காட்டாக 1000 கிராம், ஒரு கிலோகிராம் 1000 மீட்டர், ஒரு கிலோமீட்டர் 1000 வாட்டு, ஒரு கிலோவாட்டு 1000 ஜூல் (சூல்), ஒரு கிலோஜூல் (ஒரு கிலோ சூல்). 1795 இல் முறையாகப் பயன்பாட்டுக்கு வந்தது (இதற்கு முன்னரும் பாவனையில் இருந்தது). இது கிரேக்க மொழியில் ஆயிரத்தைக் குறிக்கும் χίλιοι ("khilioi") என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும். கணினியில் இதன் பயன்பாடு கணினியில் கிலோபைட் ஆனது 210 அல்லது 1024 பைட்டைக் குறிக்கும். இதனால் 1000 இருந்து வேறுபடுத்த பலரும் சிறிய k இற்குப் பதிலாகக் K ஐப் பொதுவாகப் பாவிக்கின்ற போதிலும் எல்லாரும் இந்நடைமுறையைப் பின்பற்றுவதில்லை. ஹாட்டிஸ்க் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் 1000 பைட்களை ஒரு கிலோபைட் என்றே எடுத்துக் கொள்கின்றனr எனினும் விண்டோஸ் 1024 பைட்டையே 1 கிலோபைட்டை என எடுத்துக் கொள்வதால் ஹாட்டிஸ்க் தயாரிப்பாளர்களின் கூறும் கொள்ளவானது பிழையாகக் கூடுதல் இட வசதியிருப்பதாகக் பிழையான விளக்கத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில் கிலோபைட்டை 1000 ஆகவோ அல்லது 1024 ஆகவோ கருதினால் வழுவீதம் 2.4% வீதமே இதுவே பின்னர் ரேராபைட்டாகும் போது 10% ஆகின்றது. SI பெருக்கங்கள் வெளி இணைப்புகள் National Institute of Standards and Technology (NIST): The U.K.’s National Physical Laboratory (NPL): NPL: NPL: Metrology in France: Australian National Measurement Institute: International Bureau of Weights and Measures (BIPM): NZZ Folio: NPL: BBC: மேற்கோள் பகுப்பு:SI அடிப்படை அலகுகள் பகுப்பு:நிறை அலகுகள் பகுப்பு:மெட்ரிக் அலகுகள் பகுப்பு:அலகுகள்
ஒரு கிலோவில் எத்தனை கிராம் எடை உள்ளது?
1000
5,895
tamil
6ccfab41d
சாக்கிரட்டீசு (Socrates) (கி.மு 470/469 – கி.மு 399, பிப்ரவரி 15 ) [1] ஏதென்சைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர் (தத்துவஞானி) ஆவார். இவர் எப்போது பிறந்தார் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவருடைய சீடர் பிளேட்டோவும் [2] புகழ்பெற்ற தத்துவஞானி ஆவார். கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீசு போற்றப்படுகிறார்.மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர் சாக்ரடீசு என்பது இவருடைய சிறப்பாகும். சாக்ரடீசு நன்னெறித் துறையில் அவரது பங்களிப்புக்கு புகழ்பெற்றவராக விளங்குகிறார் என்பது பிளாட்டோவின் உரையாடல்கள் மூலம் சித்தரிக்கப்படுகிறது. சாக்ரடீசு முரண்நகை மற்றும் சாக்ரடீசு வழிமுறை ஆகிய தத்துவக் கருத்துகளுக்காக தத்துவ அறிஞர் சாக்ரடீசு அறியப்படுகிறார். பிந்தைய கருத்து பொதுவாக பரவலான விவாதங்களில் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது, இது ஒரு வகையான கற்பித்தலும் ஆகும், இம்முறையில் தொடர்ச்சியான கேள்விகளுக்கு தனிப்பட்ட பதில்களைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், அடிப்படை நுண்ணறிவை ஊக்குவிப்பதற்காகவும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒளிர்வுக் கோட்பாடு தொடர்பான முக்கியமானதும் நிலையானதுமான கோட்பாடுகளுக்கு பிளாட்டோவின் சாக்ரடீசு பங்களித்திருக்கிறார். மேலும் இவருடைய கருத்தியலும் அணுகுமுறையும் தொடர்ந்து வந்த மேற்கத்திய தத்துவத்திற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அளித்துள்ளன. சாக்ரடீசு புதிர் சாக்ரடீசு எழுதிய படைப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இதனால் அவரைப்பற்றியும், அவருடைய தத்துவங்கள் பற்றியுமான தகவல்கள் இரண்டாம்நிலை ஆதாரங்களில் தங்கியிருக்கின்றன. மேலும், இந்த ஆதாரங்களின் உள்ளடக்கங்களுக்கு இடையிலான நெருக்கமான ஒப்பீடு சில முரண்பாடுகளை அம்பலப்படுத்துகிறது, இதனால் உண்மையான சாக்ரடீசைப் பற்றிய ஆழமான உண்மைகளை அறிந்துகொள்ளும் சாத்தியக்கூறுகள் பற்றிய கவலைகள் உருவாகின்றன. இந்த ஐயமே சாக்ரடீசு புதிர் [3] அல்லது சாக்ரடீசு வினா [4][5] எனப்படுகிறது. சாக்ரடீசு மற்றும் அவரது சிந்தனைகளைப் புரிந்து கொள்ள விரும்பும் ஒருவர், முதலில் பிளாட்டோவின் படைப்புகளைப் படித்துத் தெளிய வேண்டும். இவையே சாக்ரடீசின் வாழ்க்கை மற்றும் தத்துவங்களுக்கு முக்கியமான மூலங்களாக உள்ளன[6] செனொபானின் படைப்புகளும் இத்தகையதே ஆகும்.[7].. இந்தப் படைப்புகள் சாக்ரடிகோய் லோகோ அல்லது சாக்ரடிக் உரையாடல்கள் எனப்படுகின்றன. இவற்றில் சாக்ரடீசு சம்பந்தமான வெளிப்படையான உரையாடல்களின் அறிக்கைகள் உள்ளன[8][9]. சாக்ரடீசின் வாழ்க்கை தொடர்பான உண்மைகளை கண்டுபிடிப்பதற்கு கிடைக்கும் பண்டைய ஆதாரங்களில் செனொபான் தவிர பெரும்பாலும் தத்துவ மற்றும் வியத்தகு நூல்களாகவே இருக்கின்றன. சாக்ரடீசின் சமகாலத்திய எந்தவொரு நேரடியான வரலாறும் இல்லை. கிடைக்கபெற்ற ஆதாரங்களின் வேறுபாடுகள் விளைவித்த அனைத்து கருத்துகளுக்கும் இடையில் இரண்டு காரணிகள் சாக்ரடீசு தொடர்பான அனைத்து மூலங்களிலிருந்தும் வெளிப்படுகின்றன. அவர் அசிங்கமானவராக இருந்திருக்கலாம் என்றும், சாக்ரடீசு ஒரு புத்திசாலித்தனமான அறிவைக் கொண்டவராக இருந்தார் என்றும் தெரிகிறது [10][11]. சாக்ரடீசின் பிறப்பு மற்றும் ஆரம்ப காலம் சாக்ரடீஸ் எப்போது பிறந்தார் என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை . 2450 ஆண்டு களுக்கு முன்பு அதாவது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ்.இவர் கிரேக்க நகரமான ´ஏதென்ஸ்´இல் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு சிற்பி. இவரது தாயார் ஒரு மருத்துவச்சி. உலகில் எந்த மதமும் தோன்றாத அந்த காலக்கட்டத்திலேயே தன் சுய முயற்சியால் மனித அறிவின் தோற்றம், தர்க்க சாஸ்திரம் ஆகியவற்றில் திறன் பெற்று விளங்கினார். கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகின்றார். கேள்விகேட்கும் திறன் சிறுவனாக இருந்தபோதே சாக்ரடீஸ் கேள்விகள் கேட்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். எதைப்பற்றியும் கேள்வி கேட்டு, அது பற்றிய உண்மையை அறிந்துகொள்வதே சாக்ரடீசின் வழக்கமாகும். நீதி, நியாயம், ஆத்மா, கடவுள், சமூகம், அரசு, வழக்கம் என எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தினார் சாக்ரடீஸ். சாக்ரடீஸ் பொது இடங்களில் மக்களைச் சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும், அதிக நேரங்களை செலவிட்டார். ஆனால் மற்றவர்கள் சக்ரடீஸிடம் கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாகப்பதில் அளிக்காமல் சாக்ரடீஸ் கேள்வி எழுப்புவார். ஏதாவது ஒரு பிரச்சினையை மையமாகக் கொண்டு மக்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு, அவர்களிடமிருந்தே பதிலைக் கேட்டு, அந்தப் பிரச்சினையை எழுப்பியவர்களே காரணத்தைப் புரிந்து கொள்ளுமாறு செய்வார் சாக்ரடீஸ். பிரச்சினையின் காரணத்தைத் தமது கேள்வியின் மூலம் உணரச்செய்த சாக்ரடீஸ், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் கேள்விகளைக் கேட்டார். இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள் தெளிவு பெற்றனர்; பிரச்சினையைப் புரிந்தனர். அதற்கான காரணத்தையும் அறிந்தனர். அதைப் போக்குவதற்குச் செய்ய வேண்டியவற்றையும் அவர்கள் உணர்ந்தனர். இதனால், ஏதென்ஸ் மக்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கெல்லாம் சாக்ரடீஸிடம் தெளிவு கிடைக்கும் என்று நம்பினர். சாக்ரடீஸின் எழுத்துக்களும், சொற் பொழிவுகளும் மக்களைச் சிந்திக்க வைத்தது; செயல்களில் ஈடுபடவும் அவர்களைத் தூண்டியது சாக்ரடீசின் மாணவர் சாக்ரடீஸின் இந்தக் கேள்வி கேட்கும் முறை ஏதென்ஸ் நகர இளைஞர்களைக் கவர்ந்தது. இளைஞர்கள் மத்தியில் சாக்ரடீஸ் எப்போதும் காட்சி தந்தார். சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருந்தது.அவரின் கேள்வி கேட்கும் பழக்கம் இளைஞர்களிடமும் தொற்றிக் கொண்டது.கிரேக்க சமூகத்தில் காலகாலமாக கடைப்பிடித்து வந்த மூடக் கொள்கைகளையெல்லாம் சாக்ரடீஸை சிந்திக்க வைத்த தல்லாமல், மெல்ல இளைஞர்களையும் மாற்ற ஆரம்பித்திருந்தது.இதுபோல் சாக்ரடீசின் கொள்ககளால் ஈர்க்கப்பட்டு பிளேட்டோவும் சாக்ரடீசுடன் சேர்ந்தார்.பின் நாளில் இவரும் உலக புகழ் பெற்ற தத்துவஞானி ஆனார். சாக்ரடீசின் மீது பழி இளைஞர்களையும் மாற்ற ஆரம்பித்தது ஏதென்ஸ் அரசுக்கு தெரியவந்தது.சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருப்பது சிலருக்கு எரிச்சலைத் தந்தது.சாக்ரடீஸ் தினம்தோறும் இளைஞர்களி டம் உரையாடியது கிரேக்க ஆட்சியாளர்களை கோபப்படுத்தியது. அவர் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன . அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் என்ற மேடைப் பேச்சாளனும் சாக்ரடீஸ் மீது வழக்குத் தொடுத்தனர். இதற்கு சாக்ரடீஸ் மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பே காரணமாகும். இளைஞர்களைத் தூண்டி விடுவதாகவும், மத எதிர்ப்பைக் கிளப்பி விடுவதாகவும், தனக்குப் பெருமை சேர்ப்பதற்காக சாக்ரடீஸ் தவறான வழிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்காகவும், அதன் வழியாக ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் சாக்ரடீஸ் மீது அனிடஸூம், லைகோனும், மெலிட்டஸூம் குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர். மரண தண்டனை எண்ணற்ற குற்றச்சாட்டுகளையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது . அப்போது மெலிடஸ் என்பவன் சாக்ரடீஸ் மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இளைஞர்களைக் கெடுக்கிறார், கிரேக்கர்கள் தொழுது வணங்கும் கடவுள்களைத் தூற்றி, ஒரு புதுக்கடவுளைத் தானே உருவாக்குகிறார், வானத்தைப் பற்றியும் நிலத்தைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார் (ஏனெனில் அக்காலக்கட்டத்தில் கிரேக்கர்கள் இயற்கையையே கடவுளாக வழிபட்டனர்). சந்திரனை மண் என்றும் , சூரியனைக் கல் என்றும் சொல்கிறார். புதிய மதக் கோட்பாடுகளைப் புகுத்துகிறார். சாக்ரடீஸ் மிகவும் தீயவர். இவருக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்று கூறினான் . இதற்கு பதில் அளித்த சாக்ரடீஸ், 'என்னை வழக்கு மன்றத்தில் நிறுத்திய என் எதிரிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி குறுக்கு விசாரணை செய்ய நான் விரும்பவில்லை. என்னுடைய நியாயமான எதிரிகள் அநீதியும் அறிவின்மையும் தான். நான் கல்லையும் மண்ணையும் ஆண்டவன் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறேன். ஆண்டவனைப் பற்றியும் அவனுடைய படைப்பைப் பற்றியும் ஆராய்ச்சி செய்வது நாத்திகம் என்றால் ஆண்டவனை ஒப்புக்கொள்ள எங்கே மறுத்து விடுவார்களோ என்று பயப்படுவது அதை விட நாத்திகம்' என்றார். இதன் பின்னர் நீதி மன்றத்தில் தீர்ப்பு கூறும் தருணம் வந்தது. மரணம், மன்னிப்பு என்ற இரண்டு பெட்டிகள் வைக்கப்பட்டன . நீதிக் குழுவின் உறுப்பினர்கள் 501பேர் வாக்குப்பதிவு செய்யத் தொடங்குகின்றனர். 220 பேர் சாக்ரடீஸை மன்னித்து விடுமாறும், 281 பேர் மரண தண்டனை அளிக்கவும் வாக்களித்தனர். நீதிபதிகள் சாக்ரடீஸ் குற்றவாளி தான் என்று தீர்ப்புக்கூறி அவருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை சாக்ரடீஸையே அறிவிக்கும்படி அறிவித்தனர். தாம் எந்தவிதக் குற்றமும் செய்யவில்லை என்றும்; தம் தாய் திரு நாட்டிற்குத் தமது செயல்களின் மூலம் நன்மையே செய்ததாகவும், அதன் பொருட்டு இந்த நீதிமன்றம் தமக்குத் தண்டணைக்குப் பதிலாக பாராட்டும், பரிசும்தான் கொடுத்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டார் சாக்ரடீஸ். ஆனால் தண்டனை வழங்குவதாக இந்த நீதி மன்றம் முடிவு செய்தால், அது அபராதத் தொகையாக இருக்க வேண்டும் என்றும்; அந்த அபராதத் தொகையைத் தமது நண்பர்கள் அரசுக்குச் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் நீதிமன்றத்தில் சாக்ரடீஸ் முழங்கினார். சாக்ரடீஸ் தமது செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பார் என்று நீதிபதிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக அவர் நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தது நீதிபதிகளுக்கு எரிச்சலையே ஊட்டியது. அதனால் சாக்ரடீஸை விஷம் கொடுத்துக் கொல்ல வேண்டும் என்று கி.மு. 339ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இறப்பு சில காரணங்களினால் 30 நாட்கள் கழித்து தண்டனை நிறைவேற்றப்படும் என்றும், அதுவரை சாக்ரடீஸின் காலை சங்கிலியால் பிணைத்து வைக்க வேண்டும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.பின் தண்டனையை நிறைவேற்றும் நாள் வந்தது .விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ், “இனி நான் செய்ய வேண்டியது என்ன?” என்றார். அதற்கு, “கோப்பையில் உள்ள விஷத்தை முழுவதுமாக நீங்கள் குடிக்க வேண்டும. குடித்து முடித்ததும் சிறைக்குள்ளேயே நீங்கள் நடந்து கொண்டிருக்க வேண்டும். உங்கள் கால்கள் செயல் இழக்கும் போது படுத்துக்கொள்ள வேண்டும்” என்றான் சிறைப்பணியாளன். கண் கலங்காமல், சிரித்த முகத்துடன் ஒரு கோப்பை விஷத்தையும் குடித்து முடித்தார் சாக்ரடீஸ். அதைக் கண்ட நண்பர்கள் அனைவரும் அழுது தீர்த்தனர். “பெண் மக்களைப் போன்று நீங்களும் ஏன் கண்ணீர் சிந்துகிறீர் கள்?” என்று சிரித்தபடி கேட்டுவிட்டு,சாக்ரடீஸ் நடக்கத் தொடங்கினார். சிறிது நேரம் நடந்து முடிந்ததும், அவர் மல்லாந்து படுத்துக் கொண்டார்.விஷம் கொடுத்த பணியாளன், சாக்ரடீஸின் கால்களை அமுக்கியபடி, “நான் உங்களை கால்களை அமுக்குவது உங்களுக்குத் தெரிகிறதா?” என்றான்.“இல்லை” என்றார் சாக்ரடீஸ்.சிறிது நேரத்தில் அவர் விழிகள் மூடின. சாக்கிரட்டீசின் முறை சாக்ரட்டீசிய முறை அல்லது எலன்க்கோசு (elenchos) முறை என அறியப்படுகின்ற இவருடைய மெய்யியல் ஆராய்வு முறையே, மேற்கத்திய சிந்தனைகளுக்கு இவரது முக்கியமான பங்களிப்பாகும். இந்த முறையை அவர் பெரும்பாலும் முக்கியமான நல்லொழுக்க எண்ணக்கருக்களை மெய்த்தேர்வு செய்வதில் (பரிசோதிப்பதில்) பயன்படுத்தினார். இதற்காக, சாக்கிரட்டீசு, அறநூல் அல்லது நல்லொழுக்கத் தத்துவத்தினதும் அதனால் பொதுப்படையான தத்துவஞானத்தினது தந்தையுமாக, ஊற்றுக்கண்ணுமாகக் கருதப்பட்டுவருகிறார். மேற்கோள்கள் புற இணைப்புகள் at Curlie at the Indiana Philosophy Ontology Project on In Our Time at the BBC Project Gutenberg e-texts on Socrates, amongst others: (see also Wikipedia articles on Dialogues by Plato) , such as the Memorablia and Hellenica. at பகுப்பு:கிமு 399 இறப்புகள் பகுப்பு:கிமு 470 பிறப்புகள் பகுப்பு:கிரேக்க மெய்யியலாளர்கள் பகுப்பு:குடியியற் சட்டமறுப்பு
சாக்ரடீஸ் எப்படி இறந்தார்?
விஷம்
8,026
tamil
3742b3620
எண் (Number) என்பது எண்ணுதல், அளவிடுதல் மற்றும் சிட்டையிடுதலுக்குப் பயன்படும் ஒரு கணிதப் பொருளாகும். கணிதத்துறையில் பலவகையான எண்கள் உள்ளன. எண்களுக்கான இயல் எண்கள் (1, 2, 3, 4, ...) எண்களுக்கான அடிப்படை எடுத்துக்காட்டாகும்.[1] எண்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் குறியீடானது எண்ணுரு எனப்படும்.[2] மனிதன் தோன்றிய காலத்திலேயே அவன் கைவிரல்களை எண்ண எப்பொழுது தானே கற்றுக்கொண்டானோ அன்றே 'எண்' என்ற கருத்து உண்டானதாகக் கொள்ளலாம். எண்களின் கருத்து வளர்ச்சியே கணிதவியலின் தோற்றம் ஆகும். கணிதத்தில், பல நூற்றாண்டுகளாக பூச்சியம்[3] எதிர்ம எண்கள்,[4] விகிதமுறு எண்கள் ({{math|1/2, ), மெய்யெண்கள்,[5] (]], π), சிக்கல் எண்கள் [6] [4] என எண்களின் தொகுப்பு நீட்சியடைந்தது. எண்கணிதத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், அடுக்கேற்றம் ஆகிய கணிதச் செயலிகளின் மூலம் எண்கள் கணிக்கிடப்படுகின்றன. எண் கோட்பாட்டில் எண்களின் பண்புகள் விளக்கப்படுகிறது. எண் என்ற கருத்துரு தொன்மக் காலம் தொட்டு தமிழர்களிடம் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப; இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" என்ற திருவள்ளுவர் குறளும், "எண் எழுத்து இகழேல்" என்ற ஒளவையார் கூற்றும் பழந்தமிழர் சிந்தனையில் எண்ணுக்கும், எழுத்துக்கும் தொன்றுதொட்டு தந்த முக்கியத்துவத்தை விளக்குகின்றன. வகைப்பாடு இயல் எண், மெய் எண் போன்ற எண் தொகுப்புகள் அல்லது கணங்களாக எண்கள் வகைப்படுத்தப்படுகின்றன.[7] எண்களின் முக்கிய வகைப்பாடுகள்: இயல் எண்கள் நடைமுறையில் மிகவும் பழக்கமான எண்கள், எண்ணுவதற்குப் பயன்படும் எண்கள் இயற்கை எண்களாகும். இவைகளை இயல் எண்கள் அல்லது இயலெண்கள் என்றும் குறிப்பிடலாம். இவை 1, 2, ... என்பன. இவ்வெண் தொகுதி (கணம்) என்னும் சிறப்பெழுத்தால் கணிதத்தில் குறிக்கப்படுகின்றது. முழு எண்கள் இயல் எண்களுடன் பூச்சியம் மற்றும் எதிர்ம எண்களையும் (-1, -2, -3, ...) சேர்த்து, முழு எண்கள் கணம் அமைகிறது. இக்கணத்தின் குறியீடு ஆகும். முழு எண்கள் மூன்று வகைப்படும்: மிகை எண்கள் அல்லது நேர்ம எண்கள்: 1, 2, 3, ... பூச்சியம் அல்லது சூனியம்: 0 குறை எண்கள் அல்லது எதிர்ம எண்கள்: -1, -2, -3, ... இம்முழு எண்களின் கணம் இயல் எண்களின் கணமான ஐ உள்ளடக்கியது. அதாவது விகிதமுறு எண்கள் அரை, கால், ஒன்றேமுக்கால் என்பன போன்று முழு எண்களால் ஆன விகிதங்களால் குறிப்பிடப்படுவன ஒரு வகுகோட்டின் மேலும் கீழுமாக முழு எண்களால் குறிப்பிடப்படும் வகுனி எண்கள் அல்லது விகிதமுறு எண்கள் (rational numbers) எனப்படும். இவை அரை கால், வீசம் போன்ற கீழ்வாய் எண்களாக அல்லது குறைஎண்களாக (பின்னங்கள், பிள்வங்கள்) இருக்கலாம், அல்லது 7/3, 21/6 என்பன போன்று ஒன்றின் மிகையான எண் அளவைக்குறிக்கும் எண்களாகவும் இருக்கலாம். இவ் வகுனி எண்கள் கணம் என்னும் எழுத்தால் குறிக்கப்படுகின்றது. இந்த விகிதமுறு கணம் முழு எண்களின் கணமான ஐ உள்ளடக்கியது. அதாவது . மெய்யெண்கள் எல்லா எண்களும் விகிதமுறு எண்களல்ல என்பது முதலிய எண்களின் உதாரணம் கொண்டு கணித ஆய்வாளர்கள் கிரேக்க கணிதகாலத்திலிருந்தும், இந்துக்களின் சுல்வசூத்திர</b>ங்களிலிருந்தும் தெரிந்து வைத்திருந்தனர். ஆனால் என்ற விகிதமுறு எண்கள் கணத்தையும் உள்ளடக்கி ஒரு மிகப்பெரிய எண்கணம் என்பதொன்று உண்டென்றும் அதுதான் நாம் வாழ்க்கையில் சந்திக்கும் எல்லா எண்களையும் உள்ளடக்கியது என்றும் மனிதன் ஐயமறத் தெரிந்துகொள்வதற்கு 19வதுநூற்றாண்டு வரையில் காத்திருக்கவேண்டியதாயிற்று. என்றகணத்தின் உறுப்புகளுக்கு மெய் எண்கள் என்றும், உள்ளது உள்ளபடி இருப்பதால் உள்ளக எண்கள் என்றும் பெயர்கள் உண்டு. இதனில், விகிதமுறு எண்களை எடுத்துவிட்டால், இதர எண்கள் விகிதமுறா எண்கள் எனப்படும். விகிதமுறா எண்கள் இரண்டு வகைப்படும்: இயற்கணித எண்கள், விஞ்சிய எண்கள். கலப்பெண்கள்(Complex numbers) இதற்குமேலுள்ள எண்கணங்களெல்லாம் கணித இயலர்களின் படைப்புகளே. எடுத்துக்காட்டாக, செறிவெண்கள் (பலக்கெண், அல்லது சிக்கலெண் என்னும் ஒருவகை எண்களுக்குக் கணிதத்திலும் அதன் எல்லா பயன்பாடுகளிலும் முக்கிய இடமுண்டு. சிக்கலெண்களின் கணம் என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது. ஒவ்வொரு சிக்கலெண்ணிலும் ஒரு உள்ளகப் பகுதியும் (மெய்ப்பகுதி) ஒரு அமைகணப் பகுதியும் (கற்பனைப் பகுதி) உண்டு. இலுள்ள ஒவ்வொரு எண் z ம் a + ib என்ற உருவத்தில் இருக்கும். இங்கு a யும் b யும் மெய்யெண்கள். a க்கு z இன் உள்ளகப் பகுதி அல்லது மெய்ப்பகுதி என்றும் b க்கு z இன் அமைகணப் பகுதி அல்லது கற்பனைப் பகுதி என்றும் பெயர். இதில், i என்பது கற்பனை அலகு ஆகும். இவ்வெண் வகைகளின் தொடர்பு கீழே காட்டியவாறு உள்ளது: பகா எண்கள் பகா எண் என்பது 1 மற்றும் அதே எண்ணைத் தவிர வேறு நேர் வகுத்திகள் இல்லாத, 1 ஐ விடப் பெரிய இயல் எண்ணாகும். 1 மற்றும் அதே எண்ணைத் தவிர வேறு வகுத்திகள் கொண்ட பிற இயல் எண்கள் (1 நீங்கலாக) கலப்பெண்கள் (composite numbers) என அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இயல் எண் 11 ஒரு பகா எண். அதற்கு 1 ஐத் தவிர வேறு வகுத்திகள் இல்லை. இயல் எண் 6 ஒரு கலப்பெண். ஏனெனில் இதன் வகுத்திகள்: 1, 2, 3, 6. கணிதத்தில் மட்டுமல்லாது, அறிவியலைச் சார்ந்த மிகப்பல பிரிவுகளிலும், பகா எண் என்ற கருத்து எண்களைப் பற்றிய பற்பல உறவுகளில் பங்களிக்கிறது. எண் கோட்பாட்டில் பகா எண் முக்கிய பங்குவகிக்கிறது. எண்கள் தோன்றிய காலத்திலிருந்தே பகா எண் என்ற கருத்துள்ள பெயர் இருந்திருக்காவிட்டாலும், கருத்தளவில் அது மனிதனின் எண்ணத்தில் தோன்றியிருக்க வேண்டும் என்றும், அத்தோன்றலே அறிவியலின் தொடக்கம் என்ற கருத்தும் உள்ளது. பகா எண்களைப் பற்றிச் சில கருத்துக்கள் ஆய்வு செய்யப்பட முடியாமலே பல நூற்றாண்டுகள் சென்றபிறகு, தற்காலத்தில் கணினிகளின் உதவியால் அவை மீண்டும் பெரிய அளவிலே ஆய்வு செய்யப்பட்டு வெற்றியும் தந்து கொண்டிருக்கின்றது. இலக்கங்கள் இலக்கங்கள் அல்லது எண்ணுருக்கள் என்பவை எண்களிலிருந்து வேறுபட்டவை. இலக்கங்கள் எண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குறியீடுகளாகும். பல வகையான எண் முறையினங்கள் புழக்கத்தில் உள்ளன. முதன்முதலில் எகிப்தியர்கள் மறையீட்டு எண்ணுருக்களைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து கிரேக்கர்கள் எண்களை ஐயோனிய மற்றும் டோரிக் (Ionian and Doric) எழுத்துக்களோடு எண்களைத் தொடர்புபடுத்தினர்.[8] எழுத்துக்களின் சேர்ப்பாக அமைந்த ரோம என்ணுருக்கள், 14 ஆம் நூற்றாண்டின் பிற்காலத்தில் அராபிய எண்ணுருக்கள் அறிமுகமாகும் முன்னரான இடைக்காலம் வரை ஐரோப்பாவில் முக்கியப் பயன்பாட்டில் இருந்தது. அராபிய எண்ணுருக்களே இன்றுவரை உலகில் அதிகம் பயன்பாட்டில் உள்ளன.[9] கிட்டத்தட்ட கிபி 500 இல் பண்டைய இந்தியக் கணிதவியலாளர்களால் கண்டறியப்பட்ட பூச்சியத்தால் அராபிய எண்ணுருக்கள் அதிகப் பயனுள்ளதாக அமைந்தது.[9] காப்ரேகர் எண்கள் இந்தியக் கணிதவியலாளர் கப்ரேகர் கண்டுபிடித்த கப்ரேகர் எண்கள் என்பவை கணிதத்தில் குறிப்பிடத்தக்கவையாகும். எடுத்துக்காட்டாக, 703 என்பது ஒரு கப்ரேகர் எண்ணாகக் குறிப்பிடப்பெறுகிறது. இவ்வெண்ணின் சிறப்பியல்புகளாவது, இந்த எண்ணின் வர்க்கம், அதாவது இந்த எண்ணை இதே எண்ணால் பெருக்கிவரும் பெருக்கற்பலனை, இரு பகுதிகளாக வகைப்படுத்தி, அவ்விரு பகுதிகளின் கூட்டற்பலன் என்பது மூல எண்ணாக, அதாவது 703 ஆகவே அமையும். 703 X 703 = 494209 பெருக்கற்பலன் 494209 இன் இரு பகுதிகள் என்பவை 494 மற்றும் 209 இவ்விரு பகுதிகளின் கூட்டற்பலன்: 494 + 209 = 703 வரலாறு விலங்கின் எலும்புகளே முதலில் எண் முறைமைக்கு மானுடத்தால் பயன்படுத்தப்பட்டது.[10] வரலாற்றில் முதலில் மதிப்பாக எண்களைப் பயன்படுத்தியவர்கள் மெசொப்பொத்தேமியர்கள் ஆவர். இவர்கள் கி. மு. 3400 ஆண்டுகளின் வாக்கில் அறுபதின்ம எண் முறையைப் பயன்படுத்தினர். எகிப்தியர்கள் கி. மு. 3100 ஆண்டுகளின் வாக்கில் பதின்ம எண் முறையைப் பயன்படுத்தினர்.[11] பாபிலோனியர்களும், எகிப்தியர்களும் சுழியத்தை (0) சொல்லாகவும் இந்தியர்கள் சுழியத்தை சூன்யம் என்ற சொல்லாகவும் பயன்படுத்தினர்.[12] எதிர்ம எண்கள் கிமு 100 முதல் கிமு 50 வரையிலான காலக்கட்டங்களில் சீனாவில் எதிர்மறை எண்களின் சுருக்கத் தொகுப்புகள் உணரப்பட்டன. ஒன்பது இயல்களை உள்ளடக்கிய கணிதக் கலை நூலில் எண்களைக் குறிக்க பல்வேறு வழிமுறைகள் கையாளப்பட்டுள்ளன. நேர்ம எண்களைக் குறிப்பிட சிவப்புக் கோல்கள் பயன்படுத்தப்பட்டன. கருமையான கோல்கள் எதிர்ம எண்களைக் குறிப்பிடுவதற்கு பயன்பட்டன.[13] மேற்கத்தியப் பயன்பாட்டில் இவ்வெண்கள் பற்றிய முதல் குறிப்புகள் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் கிரேக்க நாட்டில் காணப்பட்டன. தைபோபாண்டசு (Diophantus) இன் அரித்மேட்டிகாவில் (Arithmetica) 4x + 20 = 0 என்கிற ஒரு சமன்பாட்டின் தீர்வாக எதிர்ம எண் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இச்சமன்பாடானது ஒரு அபத்தமான தீர்வை தந்தது என்றும் கூறியது. கி.பி. 600 காலக்கட்டங்களில் எதிர்ம எண்கள் இந்தியாவில் கடன்கள் குறித்த பிரதியாதலில் பயன்படுத்தப்பட்டன. கி.பி. 628 இல் இந்தியக் கணிதவியலாளரான பிரம்மகுப்தரின் ”பிராமசுபுத சித்தாந்தா” (Brāhmasphuṭasiddhānta) வானது, தைபோபாண்டசின் முந்தைய குறிப்புகள் பற்றி அதிக வெளிப்படைத்தன்மையுடன் விவாதித்தது. பிரம்மகுப்தர் எதிர்ம எண்களைப் பயன்படுத்தித் தோற்றுவித்த, பொதுவாக நான்கு பகுதிகளை உள்ளடக்கிய இருபடி வாய்ப்பாடு (Quadratic formula), தற்காலத்திலும் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. எனினும், இந்தியாவில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் பாசுகரர் என்பார் இருபடிச் சமன்பாடுகளுக்கான எதிர்ம மூலங்களை அளித்தார். மேலும் அவர் எதிர்ம மதிப்பானது எடுத்துக்கொள்ளப்படமாட்டாது எனவும் கூறினார். எதிர்ம மூலங்களின் போதாமையின் காரணமாக, மக்கள் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. ஐரோப்பியக் கணிதவியல் அறிஞர்களுள் பெரும்பாலோனோர் பதினேழாம் நூற்றாண்டு வரை, எதிர்ம எண்கள் பற்றிய கருத்தினை எதிர்த்தனர். இருந்தபோதிலும், பிபோனாச்சி (Fibonacci), நிதி சம்மந்தப்பட்ட பிரச்சினைகளில் எதிர்மத் தீர்வுகளை அனுமதித்தார். அங்கு, அவை முதலில் கடன்களாகக் ( Liber Abaci , 1202 இல் 13 ஆவது அத்தியாயம் ) கொள்ளப்பட்டன. அதன்பின்னர், நட்டங்களுக்குப் பதிலீடாகக் கருதப்பட்டன. அதேவேளையில், சீனர்கள், நேர்ம எண்களின் வலக்கோடி பூச்சியமற்ற எண்ணுருவின் ஊடாக மூலைவிட்டக் கோடு வரைந்து அந்த நேர்ம எண்களுக்குரிய எதிர்ம எண்களைக் குறிப்பிட்டனர்.[14] பதினைந்தாம் நூற்றாண்டில் நிக்கோலோ சூகுத் (Nicolas Chuquet) என்பவர், ஐரோப்பியக் கணிதச் செயற்பாடுகளில் முதன்முதலாக எதிர்ம எண்களின் பயன்பாட்டைக் கொண்டுவந்தார். அவ்வெண்களை அடுக்குகளாக (Exponents) உபயோகப்படுத்தினார். ஆனாலும், அவற்றை அபத்த எண்கள் (Absurd numbers) என்று குறிப்பிட்டார். விஞ்சிய எண்கள் விஞ்சிய எண்களின் இருப்பதை லியோவில் (Liouville) 1844, 1851 களில் முதன்முதலாக நிறுவினார். 1873 இல் கெர்மைத் (Hermite) என்பார், e ஒரு விஞ்சிய எண் என்று நிரூபித்தார். 1882 இல் லிண்டெமன் (Lindemann) என்பதை ஒரு விஞ்சிய எண் என நிரூபணம் செய்தார். முடிவாக, காண்டர் (Cantor) என்பவர், மெய் எண்களின் தொகுப்பை எண்ணுறா முடிவிலி (Uncountably infinite) கணம் என்று எடுத்துரைத்தார். ஆனால், இயற்கணித எண்களின் தொகுப்பை எண்ணுரு முடிவிலி (Countably infinite) எனக் குறிப்பிட்டார். ஆகவே, விஞ்சிய எண்கள் எண்ணுறா முடிவிலிகளாக உள்ளன. முடிவிலி முடிவிலி பற்றிய கணிதக் கருத்தானது, பண்டைய இந்திய வேதநூலான எசுர்வேதத்தில் குறிப்பிடப் பெற்றுள்ளது. அதில் எடுத்துரைக்கும் ஒரு கருத்தாவது, முடிவிலியிலிருந்து ஒரு பகுதியை அகற்றினாலோ, முடிவிலியில் ஒன்றை சேர்த்தாலோ முடிவிலியானது மாற்றம் அடையாது நீடித்திருக்கும் என்பதாகும். கி.மு. 400 இல் சமண சமய கணிதவியலாளர்களிடையே, அவர்தம் மெய்யியல் கல்வியின் குறிப்பிடத்தக்கப் பாடமாக முடிவிலி அமைந்திருந்தது. அவர்கள் முடிவிலியினை ஐந்து வகையாக வகைப்படுத்தியிருந்தனர். அவையாவன: ஒற்றை திசை முடிவிலி இரு திசை முடிவிலி பரப்பு முடிவிலி யாண்டு முடிவிலி நிலைத்த முடிவிலி இவற்றையும் பார்க்கவும் தமிழ் எண்கள் எண் அமைப்பு எண்களின் பட்டியல் கணித மாறிலிகள் ஒற்றை, இரட்டை எண்கள் பகா எண்கள் சிறிய எண்கள் பெரிய எண்கள் அளவு (எண்கள்) அடிப்படையிலான வரிசை பதினறும எண்கள் பல்வேறு மொழிகளில் எண்கள் எண்ணுருக்கள் (Numerals) விகிதமுறு எண்கள் விகிதமுறா எண்கள் hyperreal numbers surreal numbers p-adic numbers மேற்கோள்களும் குறிப்புகளும் வெளி இணைப்புகள் பகுப்பு:எண்கள் பகுப்பு:குலக்கோட்பாடு
எந்த நாடு எண் முறையை கண்டுபிடித்தது?
மெசொப்பொத்தேமியர்கள்
6,307
tamil
f90629c00
யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (~ 70 ஆண்டுகள்). மனிதர்கள் தவிர்ந்த மற்றைய விலங்குகளில் இதுவே அதிக நாட்கள் வாழும் தரைவாழ் விலங்கு ஆகும். யானைகள் மிகவும் வலிமையானவை. வேட்டை விலங்குகளும் காட்டுயிர்களின் உணவுப் படிநிலையில் உயர்நிலையிலுள்ளவைகளுமான சிங்கம் (அரிமா), புலி முதலியனவும் நெருங்க முடியாத வலிமை கொண்டவை. சிங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து, தனியாக வர நேரிடும் களைத்த அல்லது இளைத்த யானையைக் கொல்லும். ஆனால், இவ்வகை நிகழ்வுகள் மிகமிகக் குறைவே. யானைகள் குடும்பமாக வாழும். மேலும், இவை அதிக ஞாபக சக்தி கொண்டவை. யானைகளில் மூன்று சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன. அவை, ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், ஆசிய யானைகள் ஆகும். இவைகளுக்கிடையே சிறப்பான வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக, எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள்வரை உயிர்வாழ்கின்றன. ஆண் யானைக்குக் களிறு என்று பெயர். பெண் யானைக்குப் பிடி என்று பெயர். யானையின் குட்டியைக் கன்று என்றோ, குட்டியானை என்றோ சொல்வர். யானை உரக்க எழுப்பும் ஒலியைப் பிளிறுதல் என்பர். யானையினங்கள் ஆப்பிரிக்க யானைகள் ஆசிய யானைகளைவிட உருவத்தில் பெரியவை. பெரிய காது மடல்களைக் கொண்டுள்ளன. ஆப்பிரிக்க யானைகளில் ஆண், பெண் இரண்டும், தந்தங்களைக் கொண்டுள்ளன. ஆனால், ஆசியப் பெண் யானைகளில் தந்தம் அரிதாகவே காணப்படுகிறது. ஆப்பிரிக்க யானைகளின் முதுகுப்புறம், தலைக்கு அடுத்துச் சற்று உள்நோக்கி வளைந்தும், புடைத்த நெற்றி மேடுகள் இல்லாமல் சமமாகவும் இருக்கும். இவற்றின் துதிக்கையின் நுனியில் இரண்டு இதழ்கள் இருக்கும். ஆனால், முன்னங்கால்களில் நான்கு அல்லது ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் மூன்று நகங்களும் இருக்கும். ஆசிய யானைகளின் முதுகு சற்று உயர்ந்து மேடாக இருக்கும். நெற்றியில் இரு மேடுகளும், காது மடல்கள் சிறியனவாகவும் இருக்கும். துதிக்கை நுனியில் ஒரே ஓர் இதழும் இருக்கும் (மேல் புறம்). முன்னங்கால்களில் ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் நான்கு நகங்களும் இருக்கும். உணவும் வாழிடமும் யானைகள் இலையுண்ணிகள் அல்லது தாவர உண்ணிகள் ஆகும். இவை மூங்கில், கரும்பு போன்றவற்றை விரும்பி உண்கின்றன. இவை ஒரு நாளைக்கு 16 மணிநேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. மேலும், இவற்றின் செரிமானத் திறன் மிகவும் மந்தமானது. எனவே, இவை உண்பதில் 40 விழுக்காடே செரிமானம் ஆகிறது. எனவே, இவை நிறைய உணவு உட்கொள்ள நேரிடுகிறது. நன்கு வளர்ந்த யானைகள் நாள் ஒன்றுக்குச் சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன. உடலமைப்பு ஆண் யானைகள் பொதுவாக 3 மீட்டர் உயரமும் 6000 கிலோகிராம் எடையும் கொண்டவை. யானையின் தோல் மிகவும் தடிப்பானது. சுமார் 3 செ.மீ தடிப்பு இருக்கும். எனினும், மெத்தெனவே இருக்கும். இதனால், கொசு முதலியனவும் கடிக்கும். யானை வலுவான நான்கு கால்களைக் கொண்டிருக்கிறது. யானை பருமனான உடலைக் கொண்டிருந்தாலும் மலை மீதும், நெடுங்குத்தான இடங்களிலும் திறம்பட ஏறவும் இறங்கவும் வல்லது. "ஆனைக்கும் அடி சறுக்கும்" என்னும் பழமொழி, யானையின் நெடுங்குத்தான ஏற்ற இறக்கங்களில் அதன் நடைத்திறனைக் குறிப்பிட்டு எழுந்ததாகும். தும்பிக்கை யானையின் சிறப்பான உறுப்பு அதன் தும்பிக்கை. இது யானைகளில் மட்டுமே சிறப்பாகக் காணப்படுகின்றது. ஒருசில விலங்குகளிலே முன் மூக்குப் பகுதி சற்று நீண்டு இருந்தாலும் (நெடுமூக்குக் குரங்கு போல்), தும்பிக்கை போலும் நீண்ட உறுப்புடைய விலங்குகள் இல்லை. தும்பிக்கையானது மொத்தம் 40,000 தசைகளால் ஆனது. இது எல்லாப்புறங்களிலும் வளையக்கூடியது. தும்பிக்கையின் நுனியில் யானை மூச்சுவிடும் மூக்குத் துளைகளும், சின்னஞ்சிறிய, மிகவும் நுண்ணுணர்வு உள்ள விரல் நீட்சியும் இருக்கின்றன.[1] தும்பிக்கையால் சிறு குச்சி முதல் பெரிய மரம் வரை தூக்க முடியும். இவை பொதுவாக உணவை எடுப்பதற்கும் நீர் பருகுவதற்கும் உதவுகின்றன. பகை விலங்குகளின் தாக்குதலையும் யானை தும்பிக்கையால் எதிர்த்து முறியடிக்கிறது. கழுத்து குட்டையாக இருப்பதால் தும்பிக்கையின் முக்கியத்துவம் மிகப் பெரியது. தந்தம் யானைகள் இரண்டு தந்தங்களைக் கொண்டுள்ளன. இவைகளுக்கு யானைக் கோடு என்று பெயர். இந்த யானைக் கோடானது ஆசிய இந்திய யானைகளில் ஆண் யானைகளுக்கு (களிறுக்கு) மட்டுமே உண்டு பெண் யானைகளுக்குக் (பிடிக்குக்) கிடையா. ஆனால் ஆப்பிரிக்கக் காட்டு யானைகளில் ஆண் பெண் ஆகிய இருபால் யானைகளுக்கும் (களிறு, பிடி ஆகிய இரண்டிற்கும்) கோடு உண்டு. சுமத்ரா போர்னியோ பகுதிகளில் வாழும் யானை, இலங்கையின் யானைகளில் ஆண் பெண் (களிறு, பிடி) ஆகிய இருபால் விலங்குகளுக்கும் பெரும்பாலும் யானைக் கோடு கிடையா. யானைக் கோடானது யானையின் கடைவாய்ப் பற்களின் நீட்சியாகும். இதனால் இவைகளுக்கு யானைகளின் எயிறு அல்லது தந்தம் என்றும் பெயர் (எயிறு, தந்தம் என்றால் பல் என்று பொருள்). தந்தங்கள் 3 மீட்டர் (10 அடி) வரை வளரக்கூடியவை. மேலும் இவை 90 கிலோகிராம் எடை வரை இருக்கலாம். இத் தந்தங்கள் வியாபாரத்திற்காகவும் பயன்படுகின்றன. பல யானைகளைக்கொன்று எடுக்கப்பட்ட ஆறு டன் தந்தங்களை எதியோப்பியா நாடு 2015 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் தீயிட்டு அழித்தது.[2] தோல் யானையின் தோல் மிகவும் தடிப்பானது. உடலின் பெரும்பாலான பகுதிகளில் தடித்த தோல் காணப்படுகிறது. தோலின் தடிமன் ஏறத்தாழ இரண்டரை சென்டிமீட்டர் இருக்கும். எனினும் இதன் வாயைச் சுற்றியும் காதின் உட்பகுதியிலும் தோல் மெல்லியதாக உள்ளது. பொதுவாக ஆசிய யானைகளின் தோல் ஆப்பிரிக்க யானைகளை விட கூடுதலான முடியைக் கொண்டுள்ளது. யானைகள் பொதுவாக சேற்றையோ மண்ணையோ உடல் முழுதும் பூசிக் கொள்கின்றன. இது யானைச் சமூகத்தின் ஒரு முக்கியக் குணம் ஆகும். இது யானையின் தோலை சூரிய வெப்பத்தில் இருந்தும் கதிர் வீச்சில் இருந்தும் காத்துக் கொள்ள உதவுகிறது. யானையின் தோல் தடித்து இருப்பினும் இதன் உணர்திறன் அதிகம். இதனாலேயே யானைகள் சேற்றையோ அல்லது குளித்த பின் மண்ணை வாரித் தூற்றிக் கொள்கின்றன. கால்கள் யானையின் பெரிய உடலைத் தாங்குதற்கு ஏற்ப இவை வலிமையான கால்களைக் கொண்டுள்ளன. இவற்றின் கால்கள் செங்குத்தாக இருப்பதாலும் அகன்ற பாதங்கள் இருப்பதாலும் இவை நிற்பதற்கு தசையாற்றல் அதிகம் தேவையில்லை. எனவே இவற்றால் நீண்ட நேரம் இளைப்பாறாமல் நிற்க இயலும். ஆப்பிரிக்க யானைகள் நோயுற்றாலோ அல்லது காயம் பட்டாலோ தவிர பெரும்பாலும் அமர்வதில்லை. ஆனால் ஆசிய யானைகள் அடிக்கடி இளைப்பாறுகின்றன. யானை அகன்ற வட்டமான அடியைக் (பாதம்) பெற்றுள்ளது. ஆப்பிரிக்க யானைக்கு பின்னங்கால்களில் மூன்று உகிர்களும் (நகங்கள்) முன்னங்கால்களில் நான்கும் உள்ளன. ஆசிய யானைக்கு பின்னங்கால்களில் நான்கும் முன்னங்கால்களில் ஐந்துமாக உகிர்கள் உள்ளன. யானைகளால் நன்கு நீந்தவும் ஏறவும் முடியும். இவற்றால் குதிக்க இயலாது. காதுகள் யானைகள் நன்கு பெரிய அகன்ற மடல் போன்ற காதுகளைக் கொண்டுள்ளன. இவை யானையின் உடல் வெப்பநிலையைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. யானையின் காதுகள் இரத்த நாளங்கள் நிரம்பியனவாய் உள்ளன. வெப்பம் மிகுந்த இரத்தம் காதுகளில் பாயும் போது சுற்றுப்புறக் காற்று பட்டு குளிர்கிறது. பின் இது உடலுக்குள் சென்று வெப்பநிலையைக் குறைக்கிறது. இரத்தச் சுழற்சியின் காரணமாக இச்செயல் தொடர்ந்து நிகழ்ந்து வெப்பநிலை கட்டுக்குள் வைக்கப்படுகிறது. இதனாலேயே யானைகள் எப்போதும் காதுகளை அசைத்துக் கொண்டே இருப்பதைக் காணலாம். வளர்ந்த யானைக்காதுகளின் மேல் ஓரம் ஆசிய யானைக்கு வெளிப்புறம் மடிந்து இருக்கும், ஆப்பிரிக்க யானைக்கு உட்புறம் சுருண்டிருக்கும்.[3] அறிவாற்றல் தரையில் வாழும் விலங்குகளில் யானையின் மூளையே மிகவும் பெரியதாகும். இது ஐந்து கிலோ கிராமுக்கும் சற்று கூடிய எடையைக் கொண்டது. யானைகள் நினைவாற்றல் மிக்கன. விலங்குகளில் முதனிகளுக்கும் டால்பின்களுக்கும் அடுத்து யானைகளே அறிவாற்றல் நிரம்பியவையாகக் கருதப்படுகின்றன. மனிதர்களுக்கு அடுத்தபடியாக அறிவிற்சிறந்தவையாக யானைகள் கூறப்படுகின்றன. யானைகளின் மூளையும் அமைப்பிலும், நுட்பத்திலும் சிறந்தவை. கருவிகளைப் பயன்படுத்தவும் கற்றுக் கொள்கின்றன. பொதுவாக யானை இரக்கவுணர்ச்சி கொண்டது.[4] புலன் உணர்வு யானைகள் மிகச்சிறந்த கேட்கும் திறனையும் மோப்பத் திறனையும் பெற்றுள்ளன. யானையின் கண் சற்று கிட்டப்பார்வை கொண்டது. எனவே, ஒரு யானை தன் பார்வையை விட கூர்மையான கேட்பு சக்தியையும், நுட்பமான மோப்பத்திறனையுமே நம்பி வாழ்கிறது.[5] இவற்றின் தும்பிக்கையும் உணர்திறன் மிக்கது. இவற்றின் காதுகள் மட்டுமன்றி தும்பிக்கையும் அதிர்வுகளை உணர வல்லது. இவற்றின் பாதங்கள் மிகக் குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளையும் உணர வல்லன. சமூக வாழ்க்கை களிறுகளின் சமூக வாழ்க்கை முறையும் பிடிக்களின் வாழ்க்கை முறையும் வேறுபட்டது. களிறுகள் தான் பருவம் எய்தும் வரை தன் தாய் உள்ள குழுவோடு வாழும், பின் பெரும்பாலும் தனியாகவே வாழ்கின்றன. ஆனால் பிடிகள் நன்கு பிணைப்பான குடும்பமாக தாய், சகோதரி, மகள் என வாழ்கின்றன. இனப்பெருக்க காலங்களில் பருவமெய்திய பிடியும் தனித்துக்காணப்படும். தன்னுணர்வு யானைகள் தன்னுணர்வு கொண்டவை. இது கண்ணாடிச் சோதனை மூலம் நிறுவப்பட்டுள்ளது. யானைகள் முன் கண்ணாடியை வைக்கும் போது இவை தங்களை அடையாளம் கண்டுகொள்கின்றன. இத்திறன் இதுவரை மதிமாக்கள், சில குரங்கினங்கள், டால்பின்களில் மட்டுமே கண்டறியப் பட்டுள்ளது.யானைகள் ஒருவர் சுட்டிக்காட்டுவதைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவை என்று சிம்பாப்வேயில் பழக்கப்பட்ட யானைகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.[6] இனப்பெருக்கம் யானையின் சினைக்காலம் 22 மாதங்கள் ஆகும். இதுவே பாலூட்டிகளில் மிக நீண்ட சினைக்காலம் ஆகும். பொதுவாக இவை ஒரேயொரு கன்றையே ஈனுகின்றன. இரட்டைகள் பிறப்பது மிகவும் அரிது. பிறந்த யானைக் கன்றானது 90 – 115 கிலோகிராம் எடை வரை இருக்கும். யானை ஈனும் முன்னும், ஈனும் பொழுதும், ஈன்ற பின்னரும் அதனைச் சுற்றிலும் மற்ற வளர்ந்த யானைகள் இருந்து மிகவும் உதவுகின்றன. யானைக்கன்று பிறந்ததில் இருந்து, அது யானைக் கூட்டத்தாலேயே வளர்க்கப்படுகின்றது. அச்சுறுத்தல்கள் வேட்டையாடுதல் யானைகளுக்கு முக்கியமான அச்சுறுத்தல் வேட்டையாடுதல் ஆகும். யானைகள் அவற்றின் தந்தங்களுக்காக வேட்டை ஆடப்படுகின்றன. பெரியவையும், நீண்ட காலம் வாழுவனவும், குறைவான வேகத்தில் இனம் பெருகுவனவுமான யானைகளுக்கு, அளவு மீறி வேட்டையாடுதல் பெரும் பாதிப்பை எற்படுத்துகின்றது. இவை பெரிதாக இருப்பதனால் எளிதில் மறைந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு யானையும் வளர்ந்து இனம் பெருக்குவதற்குப் பல ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வொரு யானைக்கும் சராசரியாக நாளொன்றுக்கு 140 கிலோகிராம் (300 இறாத்தல்) இலை தழைகள் தேவைப்படுகின்றது. புலி, சிங்கம் போன்ற பெரிய கோண்மாக்கள் அழிக்கப்படுவதாலும் யானைகளின் உணவுக்குப் போட்டியாக உள்ள சிறய தாவர உண்ணிகள் பெருகி தாவரங்களைப் பெருமளவில் அழிப்பதால் யானைகளுக்கு உணவு பெறுவது கடினமாகின்றது. யானைகள் மனிதனால் கொல்லப்படுவதைத் தவிர பிற விலங்குகளால் உணவுக்காகக் கொல்லப்படுவது அரிது. வாழிடம் சுருங்குதல் யானைகளின் வாழிடங்கள் அழிக்கப் படுவதும் மற்றொரு முக்கியமான அச்சுறுத்தல் ஆகும். மனிதர் வேளாண்மை விரிவாக்கத்துக்காக யானைகளின் வாழிடங்களான காடுகளை அழித்துவருகிறார்கள். இது மனிதர்களின் நலனுக்கும் யானைகளின் நலன்களுக்குமிடையே முரண்பாடுகளை உருவாக்குகின்றது. எடுத்துக்காட்டாக யானைகள் புதிய வேளாண்மைக் குடியேற்றங்களுக்குள் நுழைந்து பயிர்களை அழித்துவிடுவதுடன் மக்களுக்கு உயிராபத்தையும் ஏற்படுத்துகின்றன. இவ்வாறான முரண்பாடுகளால், இலங்கையில் சராசரியாக ஆண்டொன்றுக்கு 150 யானைகளும், 100 மனிதர்களும் இறப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. காடழிப்பு யானைகளின் வாழிடத்தையும் குறைக்கின்றது. ஆசிய யானைகளின் அழிவுக்கான முதன்மைக் காரணம் வாழிடங்கள் இழக்கப்படுவதே என்று கூறப்படுகிறது. யானைகள் வாழ்வதற்கு பெரிய அளவிலான காட்டுப்பகுதிகள் தேவைப்படுகின்றன. ஏனெனில், யானைகள் கூட்டமாக ஒரு பகுதிக்குள் புகுந்து மரங்களையும் செடி கொடிகளையும் பெருமளவில் அழித்து உண்கின்றன. பின்னர் வேறிடத்துக்குச் செல்கின்றன. இவ்வாறு புதிய இடங்களுக்குச் சென்று அழிக்கப்பட்ட காடுகள் மீண்டும் வளர்ந்ததும் திரும்பவும் அதே இடத்துக்கு வந்து உணவைப் பெறுகின்றன. வாழிடங்களின் அளவு குறையும் போது, மிக விரைவிலேயே உணவு முடிவடைந்து விடுகிறது.[7] மனிதர்களும் யானைகளும் யானைகள், மனிதர்களினால் சட்டத்துக்கு அமைவாகவும், எதிராகவும் கொல்லப்படுவதனால், யானைகளின் உடலமைப்பில் எதிர்பாராத விளைவுகளும் ஏற்படுகின்றன. ஆப்பிரிக்காவில் தந்தங்களுக்காக வேட்டையாடுபவர்கள், பெரிய தந்தங்களுள்ள யானைகளையே வேட்டையாடுவதால் எஞ்சியிருக்கும் யானைகள் சிறிய தந்தங்கள் உள்ளவையாக அல்லது தந்தங்கள் இல்லாதவையாக உள்ளன. புதிதாகப் பிறக்கும் குட்டிகளும் இவற்றின் மூலமாகவே பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரிப்பதால் புதிய தலைமுறைகளில் தந்தமில்லாத் தன்மையை உருவாக்கும் மரபணுக்கள் கூடுதலாகிப் பெருமளவிலான தந்தமில்லா யானைகள் பிறப்பதற்கு வழியேற்படுகிறது. 1930ல் 1% ஆக இருந்த இவ்வாறான யானைகளின் தொகை இப்போது சில பகுதிகளில் 30% வரை அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் தந்தமில்லாத் தன்மை என்பது ஒரு அரிதான இயல்புப் பிறழ்வாக இருந்த நிலை மாறி இப்போது பொதுவான மரபுவழி இயல்பாக மாறிவருகிறது. இறப்பு இருதயக் கோளாறு, மாரடைப்பு, மூளையில் இரத்தக்கட்டி போன்றவற்றால் யானைகள் இறக்கக்கூடும்.[8] சங்க இலக்கியங்களில் யானை தமிழ் சங்க இலக்கியங்களில் யானையை, 170க்கும் மேற்பட்ட பெயர்களில் குறிப்பிடுகிறார்கள்.விரிவாக காணலாம். அவைகளில் சில வருமாறு; 1. யானை, 2. வேழம், 3. களிறு, 4. பிளிறு, 5. கலபம், 6. மாதங்கம், 7. கைமா, 8.உம்பல் - , 9. வாரணம், 10. அஞ்சனாவதி, 11. அத்தி, 12. அத்தினி, 13. அரசுவா, 14. அல்லியன், 15. அனுபமை, 16. ஆம்பல், 17. ஆனை, 18. இபம், 19. இரதி, 20. குஞ்சரம் / இராசகுஞ்சரம், 21. இருள், 22. தும்பு, 23. வல் விலங்கு, 24.கரி, 25.அஞ்சனம்,26.நாகம் (கதநாகம்), 27. பழமொழிகளும் சொலவடைகளும் தமிழில் யானை பற்றிய பழமொழிகளும் சொலவடைகளும் இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. பழமொழிகள் யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன். யானைக்கும் அடி சறுக்கும். யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே யானை கறுத்தாலும் ஆயிரம் பொன் சொலவடைகள் யானைப்பசிக்கு சோளப்பொரியா? யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டது போல துணை நூற்பட்டியல் Check date values in: |date= (help) மேற்கோள்கள் இவற்றையும் காண்க யானையின் தமிழ்ப்பெயர்கள் குருவாயூர் கேசவன் புற இணைப்புகள் * பகுப்பு:ஒலிக்கோப்பு உள்ள கட்டுரைகள்
பெண் யானை தமிழ் மொழியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பிடி
944
tamil
d9f96ea92
பாபிலோன் (Babylon) அரமேயம்: בבל, Babel; Arabic: بَابِل‎, Bābil; Hebrew: בָּבֶל‎, Bavel; Classical Syriac: ܒܒܠ‎, Bāwēl) தற்கால ஈராக் நாட்டின் மெசொப்பொத்தேமியா பகுதியில் யூப்ரடீஸ் ஆற்றின் இடது மற்றும் வலது கரையில் கிமு 1800 முதல் கிமு 6ம் நூற்றாண்டு முடிய செழித்திருந்த பண்டைய நகரம் ஆகும். பபிலோனியா இராச்சியத்தின் தலைநகரமாக பாபிலோன் நகரம் விளங்கியது. கிமு 2300ல், பாபிலோன் நகரம், அக்காடியப் பேரரசில் சிறு நகரமாகவே இருந்தது. கிமு 19ம் நூற்றாண்டில் முதல் பாபிலோனியாவின் முதல் வம்சத்தவர்களின் நகர அரசாக பாபிலோன் நகரம் விளங்கியது. பபிலோனியா மன்னர் அம்முராபி பாபிலோன் நகரத்தை விரிவாக்கி, அதனை தனது தலைநகராக் கொண்டார். அம்முராபிக்குப் பின்னர் பாபிலோன் நகரம், அசிரிய மக்களின் பழைய அசிரியப் பேரரசு, காசிட்டுகள் மற்றும் ஈலாம் இராச்சியத்தின் ஒரு பகுதியாக விளங்கியது. பாபிலோன் நகரம் அழிக்கப்பட்டப் பின்னர் மீண்டும் புது அசிரியப் பேரரசில் (கிமு 609 – 539) பாபிலோன் நகரம் மீண்டும் புதிதாக கட்டப்பட்டு, அதன் தலைநகரங்களில் ஒன்றாக விளங்கியது. பாபிலோனின் தொங்கு தோட்டம் உலகப் புகழ்பெற்றதாகும். புது அசிரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின், பாபிலோன் நகரம், கிமு 626 முதல் கிமு 539 முடிய புது பாபிலோனியப் பேரரசின் தலைநகரானது. பின்னர் பாரசீகத்தின், அகாமனிசியப் பேரரசு, செலூக்கியப் பேரரசு, பார்த்தியப் பேரரசு, உரோமைப் பேரரசு மற்றும் சசானியப் பேரரசின் கீழ் வந்தது. கிமு 1770 - கிமு 1671 மற்றும் கிமு 612 - கிமு 320 காலகட்டங்களில் பாபிலோன் நகரம் உலகின் பெரும் நகரங்களில் ஒன்றாக, 900 ஹெக்டேர் பரப்பளவுடன் விளங்கியது.[2][3][4] பாபிலோன் நகரத்தின் சிதிலங்கள், ஈராக் நாட்டின் பபில் ஆளுநனரகத்தின், ஹில்லா எனும் பகுதியில், பாக்தாத் நகரத்திற்கு தெற்கே 85 கிமீ தொலைவில் உள்ள டெல் தொல்லியல் களத்தில் களிமண் - செங்கற்களாலான சிதைந்த கட்டிடங்களுடன் காணப்படுகிறது. பாபிலோன் தொல்லியல் களத்தில், கிமு 6ம் நூற்றாண்டின் ஆப்பெழுத்துகளுடன் கூடிய சுட்ட களிமண் பலகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ள்து.[5] புவியியல் பண்டைய பாபிலோன் நகரத்தின் சிதிலங்கள், யூப்ரடீஸ் ஆற்றின் மேற்கே ஈராக் நாட்டின், பபில் ஆளுநகரத்தில், பாக்தாத் நகரத்திற்கு தெற்கு 85 கிமீ தொலைவில் ஹில்லா எனும் ஊரின் டெல் தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[6] ஆதாரங்கள் பண்டைய பாபிலோன் நகரத்தின் வரலாற்றுக் குறிப்புகள், ஈராக் நாட்டின் உரூக், நிப்பூர் மற்றும் ஹரதும் தொல்லியல் களங்களில் கிடைத்த கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் அறியப்படுகிறது. புது பாபிலோனிய நகரம் தொடர்பான செய்திகள் தொல்லியல் அகழாய்வுகள் மூலமும், எரோடோட்டசு, இசுட்ராபோ போன்ற பண்டைய கிரேக்க வரலாற்று அறிஞர்கர்கள் மூலமும் கிடைக்கப்பெற்றுள்ளது.[7] துவக்க கால ஆதாரங்கள் கிமு மூவாரயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய அக்காதியம் மற்றும் சுமேரிய இலக்கியங்களில் பாபிலோன் நகரம் குறித்தான குறிப்புகள் கிடைக்கப்பெறுகிறது. அக்காடியப் பேரரசர் சார் - காளி - சர்ரி (Šar-kali-šarri) காலத்திய ஆப்பெழுத்துகளில் வடிக்கப்பட்ட சுடுமண் பலகைகளில், பாபிலோன் நகரத்தில் அன்னுநிதம் மற்றும் இலபா தெய்வங்களுக்கு எழுப்பட்ட கோயில்களின் அடிக்கல் குறித்தான குறிப்புகள் உள்ளது. வரலாறு கிமு 19ம் நூற்றாண்டில் தெற்கு மெசோபத்தோமியாவை, கிழக்கு செமிடிக் மொழிகள் பேசிய வடக்கு லெவண்ட் நாடோடி மக்களான அமோரைட்டு மக்கள் பபிலோனியாவைக் கைப்பற்றி, பாபிலோன் நகர அரசை நிறுவினர். பழைய பாபிலோனிய காலம் கிமு 21 – 20ம் நூற்றாண்டுகளில் வடக்கு லெவண்ட் பகுதியிலிருந்து தெற்கு மெசபத்தோமியாவின் பாபிலோன் பகுதிக்கு எலமைட்டு மக்களுடன் குடியேறிய, அமோரிட்டு மக்களை, பழைய அசிரியப் பேரரசு ஆட்சியினர் தடுத்து நிறுத்தினர். அசிரியர்கள் ஆசியா மைனரை கைப்பற்றுவதற்கு தங்கள் கவனத்தை திருப்பிய வேளையில், அமோரிட்டு மக்கள் பாபிலோனில் தங்கள் குடியேற்றங்களை நிறுவினர். துவக்க காலத்தில் பாபிலோன் ஒரு நகர அரசாக இருந்தது. அம்முராபி (கிமு 1792–1750) பாபிலோன் நகர அரசாக ஆவதற்கு முன்னர், அசிரியா, ஈலாம், லார்சா மற்றும் இசின் ஆட்சியாளர்களின் கீழ் பாபிலோன் நகரம் இருந்தது. பாபிலோன் மன்னர் அம்முராபி ஈலாம், மாரி, எல்பா பகுதிகளைக் கைப்பற்றி ஆண்டார். பாபிலோன் நகர அரசு மன்னராக அம்முராபி பபிலோனியா இராச்சியத்தை நிறுவினார். பின்னர் பாபிலோன் பழைய அசிரியப் பேரரசின் கீழ் வந்ததது. மத்திய கால பாபிலோன் கிமு 1595ல் பாபிலோன் நகரம் இட்ட்டைட்டுக்களால் வெல்லப்பட்டது. பண்டைய பாரசீக காசிட்டு மக்களின் கீழ் பாபிலோன் நகரம், கிமு 1160 வரை, 435 ஆண்டுகள் இருந்தது. பின்னர் காசிட்டு மக்களின் பாபிலோன், பழைய அசிரியப் பேரரசில் (கிமு 1365–1053) வரை இருந்தது. அசிரியப் பேரரசர் முதலாம் துக்குல்தி - நினுர்தா கிமு 1235ல் பாபிலோனில் முடிசூட்டிக் கொண்டார். கிமு 1155ல் அசிரியர்களும், ஈலாமிரியர்களும் பாபிலோன் நகரத்தின் மீது நடத்திய தொடர்தாக்குதல்களால், பாபிலோனை விட்டு காசிட்டு மக்கள் வெளியேறினர். பின்னர் அக்காடியப் பேரரசின் ஆட்சியின் கீழ் முதல் முறையாக பாபிலோன் சென்றது. பின்னர் மீண்டும் அசிரியர்கள் ஆட்சியில் பாபிலோன் ஒரு சிற்றரசாக விளங்கியது. கிமு 11ம் நூற்றாண்டில் லெவண்ட் பகுதியிலிருந்து வந்த மேற்கு செமிடிக் மொழி பேசிய ஆர்மீனியர்களும், கிமு 9ம் நூற்றாண்டில் சால்டியர்களும் பாபிலோன் நகரைக் கைப்பற்றியாண்டனர். புது அசிரியப் பேரரசில் புது அசிரியப் பேரரசர் சென்னாசெரிப் [9] ஆட்சிக் காலத்தில் (கிமு 705 – 681), ஈலமைட்டுகள் உதவியுடன் உள்ளூர் தலைவன் இரண்டாம் மர்துக்-அப்லா-இதின்னா (Marduk-apla-iddina II) நடத்திய கலவரங்களில் பாபிலோன் நகரம் முற்றாக அழிக்கப்பட்டது. கிமு 689ல் பாபிலோன் நகரக் கோட்டைச் சுவர்களும், கோயில்களும், அரண்மனைகளும் முற்றிலும் அழிக்கப்பட்டது. ஈசர்ஹத்தோன் (கிமு 681–669) ஆட்சியில் பாபிலோன் நகரம், மீண்டும் எழுப்பட்டது. பாபிலோனை ஆண்ட அசூர்பனிபால் ஆட்சிக்கு எதிராக, நினிவே நகரத்தின் ஆளுநரும், அவரது தம்பியுமான சாமாஸ்-சும்- உகின், தெற்கு மெசொப்பொத்தேமியாவில் வாழ்ந்த ஈலமைட்டுகள், சால்டியர்கள், பாரசீகர்கள், யூதர்கள், மற்றும் அரபு மக்கள் உதவியுடன் கிமு 625ல் உள்நாட்டுப் போரை நடத்தி பாபிலோன் நகரத்தைக் கைப்பற்றினார்கள். அசிரியர்கள் பெரும்படையுடன் பாபிலோன் நகரத்தை நீண்ட நாட்கள் முற்றுகையிட்டு, மீண்டும் பாபிலோனை புது அசிரியப் பேரரசில் இணைத்தனர். பாபிலோன் நகர ஆளுநராக கந்தாலுனு என்பவரை, புது அசிரியப் பேரரசால் நியமிக்கப்பட்டார். அசூர்-பனிபால் ஆட்சிக்கு பின்னர் வந்த புது அசிரியப் பேரரசர்களின் ஆட்சிக் காலத்தில், பாபிலோனில் ஏற்பட்ட தொடர் உள்நாட்டுப் போரால் கிமு 608 பாபிலோனை ஆண்ட புது அசிரியப் பேரரசு முடிவிற்கு வந்தது.[10] புது பாபிலோனியப் பேரரசில் - கிமு 626 முதல் 539 முடிய புது அசிரியப் பேரரசர் அசூர்-பனிபால் கிமு 627ல் இறந்த பிறகு, கிமு 626ல் நடந்த அசிரிய உள்நாட்டுப் போரின் போது, பபிலோனியாவின் 11வது வம்சத்தின் முதலாமர் நபோபேலசர் எனும் நபு-அப்லா-உசூர், மீடியர்கள், பாரசீகர்கள், சிதியர்கள் துணையுடன் பாபிலோன் மற்றும் நினிவே[12] நகரங்களைக் கைப்பற்றி புது பாபிலோனியப் பேரரசை அமைத்தார். பாபிலோன் நகரம் புது பாபிலோனியப் பேரரசின் தலைநகரமாகயிற்று. புது பாபிலோனியப் பேரரசில் கிமு 629 முதல் பாபிலோன் நகரம் தன்னாட்சியுடன் ஆண்ட போது, சுமேரிய-அக்காடிய பண்பாட்டுகளின்படி கோயில்களை கட்டினர். அரமேயம் மொழி மக்களின் பேச்சு மொழியானது. அக்காதியம் ஆட்சி மொழியானது. அக்காடியர்களின் ஆப்பெழுத்து முறை சீரமைக்கப்பட்டடது. அக்காடிய வழக்கப்படி, அரசகுடும்பப் பெண் கோயில் பூசாரியாக நியமிக்கப்பட்டனர். இரண்டாம் நெபுகாத்நேசர் பாபிலோனின் தொங்கு தோட்டம் அமைத்தார். இரண்டாம் நெபுகாத்நேசர் யூதர்களை பாபிலோனை விட்டு வெளியேற்றினார். பாரசீகப் படையெடுப்பு பாபிலோனியாவின் வீழ்ச்சி 87 ஆண்டுகள் ஆண்ட புது பாபிலோனியப் பேரரசை, கிமு 539ல் ஓபிஸ் போரில் அகாமனிசியப் பேரரசர் சைரசு கைப்பற்றி தனது பேரரசில் இணைத்துக் கொண்டார். அகாமனிசியப் பேரரசில் புது பாபிலோனியப் பேரரசும், அசிரியப் பேரரசும் சிற்றரசுகளாக விளங்கியது.[13][7][14][15] ஹெலனியக் காலம் ஹெலனியக் காலத்தில் கிமு 331ல் அகாமனிசியப் பேரரசின் இறுதிப் பேரரசரை, பேரரசர் அலெக்சாந்தர் வெற்றி கொண்டு பாபிலோன் நகரை கைப்பற்றினார்.[16] கிமு 323ல் அலெக்சாந்தர் பாபிலோன் அரண்மனையில் இறந்த பிறகு, ஹெலனியக் காலத்தில் அலெக்சாந்தர் கைப்பற்றிய இராச்சியங்களை அவரது படைத்தலைவர்கள் செலுக்கஸ் நிக்கோடர் உள்ளிட்ட கிரேக்கப் படைத்தலைவர்கள் பிரித்துக் கொண்டு ஆண்டனர். மேற்காசியா, நடு ஆசியா உள்ளிட்ட பகுதிகள் செலுக்கஸ் நிக்கோத்தரின் செலுக்கியப் பேரரசில் வந்ததது. மீண்டும் பாரசீகப் பேரரசில் பாரசீகத்தின் பார்த்தியப் பேரரசு மற்றும் சசானியப் பேரரசுகளின் ஆட்சியில் ஒன்பது நூற்றாண்டுகளாக, கிபி 650 வரை பாபிலோன் மற்றும் அசிரியா ஒரு மாகாணாக விளங்கியது. பாபிலோன் நகரத்தினர் தமது பண்பாடு மற்றும் அரமேய மொழியை போற்றி காத்தனர். கிபி 1 – 2ம் நூற்றாண்டுகளில் பாபிலோனில் கிறித்தவம் அறிமுகமாகியது. இசுலாமிய படையெடுப்புகள் கிபி 7ம் நூற்றாண்டின் இறுதியில் மெசொப்பொத்தேமியாவையும், பாபிலோனையும் இசுலாமியர்களின் உதுமானியப் பேரரசு கைப்பற்றி, பெரும்பாலான பாபிலோனிய மக்களை இசுலாமிற்கு சமய மாற்றம் செய்தனர். இசுலாமுக்கு மதம் மாற மறுத்த பாபிலோனிய யூதர்கள் மற்றும் கிறித்தவர்கள் மீது ஜசியா வரி செலுத்தக் கட்டாயப்படுத்தப்பட்டதால், அவர்கள் பாபிலோனை விட்டு வெளியேறினர். கிபி 10ம் நூற்றாண்டில் பபிலோனியாவின் பாபிலோன் நகரத்தில் யூதர்களின் சிதிலமடைந்த கோயில் மட்டும் இருந்தது.[17] மத்தியகால அரபு இலக்கியங்களில் பாபிலோன் நகரத்தைப் பற்றிய குறிப்புகளில், பாக்தாத் நகரத்திலிருந்து பாஸ்ரா நகரத்திற்கு செல்லும் வழியில் பாபிலோன் நகரம் இருந்ததாக கூறப்படுகிறது.[18][19] நவீன காலத்தில் கிபி 18ம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாட்டவர்கள் உள்ளிட்ட பிரித்தானிய இந்தியாவின் தொல்லியல் அறிஞர்கள் பபிலோனியா மற்றும் மொசபத்தோமியாவின் பாக்தாத் மற்றும் பஸ்ரா நகரங்களில் அகழாய்வுகள் மேற்கொண்டனர். அகழாய்வில் கிடைத்த அரிய தொல்பொருட்கள் பெர்லின் போன்ற அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைத்தனர். ஈராக் அரசு 1920ல் நவீன ஈராக் அரசு அமைந்ததிலிருந்து பாபிலோனின் தொல்பொருட்களின் உருவங்களை அஞ்சல் தலைகள் மற்றும் அஞ்சலட்டைகளில் பொறித்தனர். 1960ல் இஷ்தர் கோயிலின் நுழைவுவாயிலினை பிரதி எடுத்து மக்களின் காட்சிக்கு வைத்தனர். 14 பிப்ரவரி 1978ல் ஈராக்கில் சதாம் உசேன் அரசு ஆட்சி அமைத்த பிறகு பாபிலோன், நினிவே, ஊர், நிம்ருத் நகர சிதிலமடைந்த தொல்லியல் களங்களை சீரமைத்தார். இரண்டாம் நெபுகாத்நேசர் கட்டிய சிதிலமடைந்த அரண்மனைகளை சீரமைத்தார். விவிலியத்தில் பாபிலோன் நகரம் பாபேல் என்பது பாபிலோனிய நகரத்திற்கு தொடக்கத்தில் கொடுக்கப்பட்ட எபிரேய பெயராகும். இது பாபேல் கோபுரம் இருந்த இடமாகும். பெயரின் தொடக்கம் பற்றி ஆதியாகமம் 11:9 இல் கூறப்பட்டுள்ளது. அதன்படி பாபேல் என்ற பெயரானது குழப்பம் என பொருளுடைய "பாபல்" என்ற எபிரேய மொழி சொல்லின் மருவலாகும் என்பது விவிலிய கருத்தாகும். ஆனால் இது. அக்காத் மொழியில் "கடவுளின் வாயில்" எனப்பொருள்படும் "பப்-இலு" வின் மருவலாகும் என்பது ஆய்வாளரின் கருத்தாகும். ஆதியாகமம் 10:10[20] இல் பாபேல் நிம்ரோத் அரசனின் வசிப்பிடம் என குறிப்பிடுகிறது. மேலும் ஆதியாகமம் 11:1-9[21] இல் ஊழிவெள்ளத்துக்கு பின்பு மனிதர் பேழை தங்கிய மலையிலிருந்து வெளியேறி சமவெளி ஒன்றில் தங்கினார்கள். அங்கு அவர்கள் விண்ணை எட்டும் மிக உயரமான கோபுரம் ஒன்றை கட்டினார்கள். இது பாபேல் கோபுரம் எனப்பட்டது. பின் வந்த காலங்களில் பாபேல் என்பது பொதுவான கிரேக்க பதமான பபிலோனுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனையும் காண்க பாபிலோனியா இராச்சியம் புது பாபிலோனியப் பேரரசு பாபிலோனின் தொங்கு தோட்டம் மெசொப்பொத்தேமியா பழைய அசிரியப் பேரரசு மத்திய அசிரியப் பேரரசு புது அசிரியப் பேரரசு எப்லா இராச்சியம் மேற்கோள்கள் உசாத்துணை Cancik-Kirschbaum, Eva, Margarete van Ess, &amp; Joachim Marzahn, eds. (2011). Babylon: Wissenskultur in Orient und Okzident. Berlin/Boston: De Gruyter. ISBN978-3-11-022212-8. Finkel, I. L. and M. J. Seymour, eds. Babylon. Oxford University Press, 2009. ISBN0-19-538540-3 . Exhibition organized by British Museum, Musée du Louvre &amp; Réunion des Musées Nationaux, and Staatliche Museen zu Berlin. Liverani, Mario. Imagining Babylon: The Modern Story of an Ancient City. Translated from Italian to English by Ailsa Campbell. Boston: De Gruyter, 2016. ISBN978-1-61451-602-6. Originally published as Immaginare Babele in 2013. CS1 maint: ref=harv (link) Seymour, Michael John. The Idea of Babylon: Archaeology and Representation in Mesopotamia. Volume I: Text. PhD dissertation accepted at University College, London, 2006. Vedeler, Harold Torger. A Social and Economic Survey of the Reign of Samsuiluna of Babylon (1794–1712 BC). PhD dissertation accepted at Yale, May 2006. மேலும் படிக்க and (paperback) – originally published in German Rich, Claudius: 1815. . Third Edition, 1818. 1818. . 1839. Narrative of a journey to the site of Babylon in 1811. Posthumous compilation. வெளி இணைப்புகள் , Issued in connection with an exhibition held Nov. 18, 2008-Mar. 15, 2009, Metropolitan Museum of Art, New York Osama S. M. Amin, "", Ancient History Et Cetera, 17 November 2014. Video of reconstructed palace: பகுப்பு:விவிலிய இடங்கள் பகுப்பு:ஈராக் பகுப்பு:பண்டைய நகரங்கள் பகுப்பு:ஆசியாவின் முன்னாள் நாடுகள் பகுப்பு:மெசொப்பொத்தேமிய நாகரிகங்கள் பகுப்பு:தொல்லியற்களங்கள் பகுப்பு:பண்டைய வரலாறு
பாபிலோன் நகரம் எந்த நாட்டில் உள்ளது?
ஈராக்
126
tamil
2cc2c08f1
இந்தியக் குடியரசு நாள் (Republic Day of India) இந்திய ஆட்சிமைக்கான ஆவணமாக இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும்.[1] இந்தியாவின் முக்கிய தேசிய விடுமுறை நாட்களில் இதுவும் ஒன்று. வரலாறு 1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர சனவரி 26 ஆம் நாள் விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்றைய நாளில் நகர்ப்புறங்களிலும் சிற்றூர்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்தியடிகள் கீழே கண்டவாறு பரிந்துரைத்த விடுதலை நாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்[2]: "பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்." 28 ஆம் நாள் ஆகஸ்து மாதம் 1947 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4 ஆம் நாள் அரசியமைப்பு சட்டவாக்கயவையில் சமர்ப்பித்தது. 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 166 நாட்கள் பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக சனவரி 24 ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இரண்டு கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது. அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950ஆம் ஆண்டில், விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய விடுதலை நாளான சனவரி 26ஆம் நாளை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது.[2][3] 1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. கொண்டாடும் முறை தேசியத் தலைநகரில் நாட்டின் தலைநகர் தில்லியில் இந்தியப் பிரதமர், மறைந்த இந்தியப்படை வீரர்களுக்காக இந்தியா கேட்டில் உள்ள அமர்சோதிக்கு வீரவணக்கம் செலுத்துவதுடன் தொடங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மூவண்ணக் கொடியை ஏற்றி படைவீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிடுகிறார். தலைநகர் தில்லியில் குடியரசு நாள் அன்று குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும். கடந்த ஆண்டில் நாட்டுக்கு மிகப்பெரும் சேவை புரிந்த படைவீரர்களுக்கான பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்படுகின்றன. மாநிலத் தலைநகரங்களில் மாநிலங்களில் மாநில ஆளுநர் கொடியேற்றுவதுடன் காவலர் அணிவகுப்பையும், அரசுத்துறை மிதவைகளையும், பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் பார்வையிடுகிறார். சிறந்த காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. குடியரசு நாள் கொண்டாட்டங்கள் ஒளியூட்டப்பட்ட ராஷ்டிரபதி பவன். மூவண்ணங்களுடனான ஊதுபைகளைக் காணலாம். சிறப்பு விருந்தினர் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாளன்று சிறப்பு விருந்தினர் ஒருவர் அழைக்கப்படுவார். Since 1950, India has been hosting head of state or government of another country as the state guest of honour for Republic Day celebrations in New Delhi. During 1950–1954, Republic Day celebrations were organised at different venues (like Irwin Amphitheatre, Kingsway, Red Fort and Ramlila Maidan). It was only starting 1955 when the parade in its present form was organised at Rajpath.[4] The guest country is chosen after a deliberation of strategic, economic and political interests. During 1950s–1970s, a number of NAM and Eastern Bloc countries were hosted by India. In 1968 and 1974, India played host to two countries on the same Republic Day.By region, the invitations break up as follows:List of chief guestsNotes தொடர்புடைய பக்கங்கள் இந்திய வரலாறு இந்தியாவின் விடுதலை நாள் பின்வாங்கு முரசறை மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:இந்தியாவின் சிறப்பு நாட்கள் பகுப்பு:ஜனவரி சிறப்பு நாட்கள்
இந்தியாவில் குடியரசுதினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?
சனவரி 26ஆம்
1,473
tamil
100b36cfa
உதுமானியப் பேரரசு (ஒத்தமான் பேரரசு, Ottoman Empire, 1299–1922, துருக்கி: Osmanlı Devleti 'உஸ்மான்லி தவ்லத்தி' அல்லது Osmanlı İmparatorluğu) என்பது துருக்கியர்களால் ஆளப்பட்ட ஒரு பேரரசு ஆகும். இது துருக்கியப் பேரரசு எனவும் அழைக்கப்பட்டது. இப்பேரரசு கி.பி. 1299ஆம் ஆண்டு துருக்கிய வம்சத்தைச் சேர்ந்த உஸ்மான் பே என்பவரின் தலைமையின் கீழ் வடமேற்கு அனத்தோலியாவில் உருவாக்கப்பட்டது. சுல்தான் இரண்டாம் முஹம்மதால் கி.பி.1453இல் கைப்பற்றப்பட்ட பின்னர் ஒத்தமான் இராச்சியம்,பேரரசாக மாற்றப்பட்டது.[1][2][3] இப்பேரரசு உச்ச கட்டத்தில் இருந்த போது (16ஆம் – 17ஆம் நூற்றாண்டுகளில்) இப்பேரரசின் ஆட்சி தென்கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு, மற்றும் வட ஆபிரிக்கா என மூன்று கண்டங்களில் மேற்கே ஜிப்ரால்ட்டர் நீரிணை முதல் கிழக்கே கஸ்பியன் கடல் மற்றும் பாரசீக வளைகுடா, ஆஸ்திரியா, சிலவாக்கியா, உக்ரேனின் பல பகுதிகள், சூடான், எரித்திரியா, தெற்கே சோமாலியா மற்றும் யமன் வரை பரவியிருந்தது. உதுமானியப் பேரரசு மொத்தம் 29 மாகாணங்களைக் கொண்டிருந்தது. பெயர் உதுமானிய துருக்கிய மொழியில் பேரரசு என்பது தவ்லத் ஏ ஆலிய்யிஏ உஸ்மானிய்யி (دَوْلَتِ عَلِيّه عُثمَانِیّه) அல்லது உஸ்மான்லி தவ்லத்தீ (عثمانلى دولتى) என்ற பதத்தால் குறிப்பிடப்படுகின்றது.நவீன துருக்கி மொழியில் இது 'Osmanlı Devleti அல்லது Osmanlı İmparatorluğu' என்பதால் அறியப்படுகின்றது. சில மேற்கத்திய பதிவுகளில் இது "ஒத்தமான்" மற்றும் "துருக்கி" என்ற இரு பெயர்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரட்டையாக எழுதும் இம்முறை 1920-1923 காலப்பகுதயில்,அங்காரா நகரை தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட துருக்கியில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் அன்றிலிருந்து துருக்கி(Turkey) என்ற தனித்த சொல் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வரலாறு எழுச்சி (1299-1453) துருக்கிய செல்ஜூக்ரும் சுல்தான் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் கி.பி.1300இல் உதுமானியர்களின் முன்னோடிகள் வாழ்ந்த அனத்தோலியா பகுதி ஒரு சீரற்ற சுதந்திரப் பிரதேசமாகப் பிரிந்ததுடன் பல துருக்கிய மாநிலங்கள் காஸி குடியரசுகள் (Ghazi Emirates) என அழைக்கப்பட்டன. இதில் ஒரு காஸி குடியரசு முதலாம் உஸ்மானால் (1258[4] –1326) நிர்வகிக்கப்பட்டது. உஸ்மான் என்ற பெயரிலிருந்து ஒத்மான்ன் என்ற பெயர் பெறப்பட்டு பின்னர் அது ஒத்தமான் என அறியப்பட்டது. முதலாம் உஸ்மான், துருக்கியக் குடியிருப்புக்களை பைசாந்தியப் பேரரசின் (Byzantine Empire) முனைப்பகுதியை நோக்கி விரிவுபடுத்தினார். முதலாம் உஸ்மானின் மறைவுக்குப் பின் வந்த நூற்றாண்டில் உதுமானிய ஆட்சி கிழக்கு மத்தியதரைக் கடல் மற்றும் ஃபல்கேன் வழியாக விரிவடைய ஆரம்பித்தது. உஸ்மானின் மகன் உர்ஹான் 1324இல் பூர்சா நகரைக் கைப்பற்றியதுடன் அதை உதுமானிய மாநிலத்தின் புதிய தலைநகராக மாற்றினார். அதாவது பூர்சா நகரின் வீழ்ச்சியினால் வடமேற்கு அனத்தோலியா பகுதியின் கட்டுப்பாட்டை பைசாந்தியப் பேரரசிடம் (Byzantine Empire) இழந்தது. முக்கிய நகரான தெஸ்சாலுன்கி 1387இல் வெனேடியன்ஸ்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. 1389இல் கொசோவோ உதுமானியர்களால் வெற்றிகொள்ளப்பட்டதன் மூலம் பிராந்தியத்தின் மீதான செர்பியர்களின் அதிகாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் இது உதுமானியர்கள் ஐரோப்பாவில் தடம் பதிப்பதற்கும் காரணமாக அமைந்தது. 1396இல் நிகழ்ந்த நிகோபொலிஸ் போரில் மத்திய காலத்தின் சிலுவைப்படை எனக் கருதப்படும் பெரும் படையினரால் துருக்கிய உதுமானியர்களின் வெற்றியைத் தடுக்கமுடியவில்லை. ஃபல்கேன் மீதான துருக்கிய ஆட்சியின் விரிவாக்கம் கான்ஸ்டண்டினோப்பிள் நகரை கைப்பற்றும் நோக்கத்திற்குக் காரணமாக அமைந்தது. விரிவாக்கம் மற்றும் உச்சநிலை (1453–1566) இரண்டாம் முராத் என்பவரின் மகனான இரண்டாம் முகம்மத் ஆடசிப் பிரதேசத்தையும் இராணுவத்தையும் மறுசீரமைத்ததுடன் 29 மே 1453 அன்று கான்ஸ்டண்டினோப்பிள் நகரைக் கைப்பற்றினார். உதுமானிய அரசாங்கத்தை ஏற்றுக் கொண்டதற்கு பரிமாற்றாக மரபுவழி கிறிஸ்தவ தேவாலயங்களை அவற்றின் நிலங்களில் தன்னாட்சியாக இயங்குவதற்கு இரண்டாம் முகம்மத் அனுமதி வழங்கினார். ஏனெனில் ஐரோப்பிய ஆட்சி மாநிலங்களுக்கும் இறுதி பைசாந்திய இராச்சியத்துக்கும் (Byzantine Empire) இடையே மோசமான உறவு நிலவிவந்தது. பெரும்பான்மையான மரபுவழி மக்கள் வெனேடியன் அரசை விடவும் விருப்பத்துடன் உதுமானிய அரசாங்கத்தை ஏற்றுக் கொண்டார்கள்.[5] 15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் உதுமானியப் பேரரசு ஒரு விரிவடையும் காலத்தினுள் நுழைந்தது. இக்காலப்பகுதயில் பேரரசு மிகச்சிறந்த வளர்ச்சியைக் கண்டதுடன் ஆடசிப் பொறுப்புத் திறமையுள்ள உறுதியான சுல்தான்களிடம் வந்தது. உதுமானியப் பேரரசின் கட்டுப்பாட்டுப் பகுதியின் பாதைகள் வழியாகவே ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டங்களுக்கு இடையிலான வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் இந்த பேரரசு பொருளாதாரத்திலும் தழைத்தோங்கியது.[6] சுல்தான் முதலாம் சலீம் (1512–1520) பாரசீகத்தின் சபாவித் வம்ச ஆட்சியாளர் ஷா இஸ்மாயிலை சால்டிரன் யுத்தத்தில் தோல்வியடையச் செய்து உதுமானியப் பேரரசின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை விரிவுபடுத்தினார்.[7] முதலாம் சலீம் உதுமானிய அரசாங்கத்தை எகிப்தில் நிறுவியதுடன் கடற்படை ஒன்றை உருவாக்கி செங்கடலில் நிலைநிறுத்தினார். உதுமானியப் பேரரசின் இந்த விரிவாக்கத்திற்குப் பின்னர் பலம்மிக்க பேரரசு என்ற போட்டித் தன்மை போர்த்துக்கேய பேரரசுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் துவங்கியது.[8] முதலாம் சுலைமான்(1520-1566) 1521இல் பெல்கிரேட் நகரைக் கைப்பற்றினார், ஹங்கேரி பேரரசின் மத்திய மற்றும் வட பகுதிகள் உதுமானிய-ஹங்கேரி போரில் வெற்றி கொள்ளப்பட்டன.[9] 1526இல் வரலாற்று முக்கியத்துவம் மிக்க முஹாக்ஸ் போரில் வெற்றி பெற்ற பின்னர் இன்றைய ஹங்கேரி (மேற்குப் பகுதி தவிர்ந்த) ஏனைய மத்திய ஐரோப்பா நிலப்பகுதிகளில் உதுமானிய ஆட்சி நிறுவப்பட்டது. முதலாம் சுலைமானின் ஆட்சியின் இறுதிப்பகுதியில் பேரரசின் மொத்த மக்கள்தொகை ஏறத்தாழ ஒன்றரை கோடி பேர் என்றாகி மூன்று கண்டங்களுக்கும் மேலாக பரந்து காணப்பட்டதுடன் பேரரசின் சக்தி வாய்ந்த கடற்படை ஒன்று மத்திய தரைக்கடலின் பல பகுதிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.[10] தேக்கமும் சீர்திருத்தமும் (1566–1827) 1566க்குப் பிறகு பேரரசு தேக்கநிலையில் வீழ்ச்சியடையத் தொடங்கியதாக ஸ்டீபன் லீ கூறுகிறார். இடையிடையே சில காலங்களில் மீண்டு வருவதும் சீர்திருத்தமும் நிகழ்ந்து வந்தன. இந்த வீழ்ச்சி விரைவு பெற்று 1699இல் மிகக் கடுமையான நிலையை அடைந்தது.[11] பல வரலாற்றாளர்கள் இக்கூற்றை மறுத்தாலும் பலரும் "மோசமான சுல்தான்கள், திறமையற்ற முதலமைச்சர்கள், வலுவற்ற போர்க் கருவிகள்' பற்றாத படைகள், ஊழல் அலுவலர்கள், பேராசை பிடித்த முதலீட்டாளர்கள், வலுவான எதிரிகள், துரோகமிழைத்த நண்பர்கள்" ஆகிய காரணிகள் ஒத்தமான் பேரரசின் வீழ்ச்சிக்கு வழிவகுத்ததாகக் கூறுகின்றனர்.[12] தலைமையின் தோல்வியே முதன்மையான காரணம் எனக் கூறும் லீ 1292 முதல் 1566 வரை ஆண்ட பத்து சுல்தான்களில் ஒருவரைத் தவிர அனைவரும் மிகுந்த திறமை உள்ளவர்களாக இருந்தனர் என்கிறார். 1566 முதல் 1703 வரை ஆண்ட 13 சுல்தான்கள் இருவரைத் தவிர மற்றோர் ஈடுபாடின்றியும் திறமையின்றியும் இருந்தனர் என்கிறார் இவர்.[13] மிகவும் மையப்படுத்தப்பட்ட அமைப்பில் மைய அரசின் தோல்வி வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. இதன் நேரடி விளைவாக மாகாண பிரபுக்கள் வலுபெற்று கான்ஸ்டாண்டிநோபிளை தவிர்க்கத் தொடங்கினர். ஐரோப்பிய எதிரிகளும் வலுபெற்று வந்தனர். உதுமானியப் படைகள் மேம்படுத்தப்படாமல் இருந்தன.[14][15] இறுதியாக உதுமானியப் பொருளாதாரம் சீர் குலைந்தது. போர் விளைவாக ஏற்பட்ட பணவீக்கம், உலக வணிகத்தின் திசை மாற்றங்கள், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் போன்றவை பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தன.[16] வீழ்ச்சியும் நவீனமயமாக்கலும் (1828–1908) டான்சிமாத் காலத்தில் (1839–1876) அரசு மேற்கொண்ட தொடர் சீர்திருத்தங்களால் படைகள் நவீனப்படுத்தப்பட்டன. வங்கி முறைமை மேம்படுத்தப்பட்டது. ஓரினச் சேர்க்கை குற்றமற்றதாக ஆக்கப்பட்டது. சமயச் சட்டங்களுக்கு மாற்றாக சமயச்சார்பற்ற சட்டங்கள் உருவாகின.[17] கலைஞர்களுக்கு நவீனத் தொழிலகங்கள் கட்டப்பட்டன. உதுமானிய அஞ்சல் அமைச்சகம் அக்டோபர் 23, 1840இல் நிறுவப்பட்டது.[18][19] சாமுவெல் மோர்சுக்கு தந்தி கண்டுபிடித்ததற்காக 1847இல் ஆக்கவுரிமை வழங்கப்பட்டது.[20] இதனையடுத்து முதல் தந்தி தடம் இஸ்த்தான்புல் (கான்ஸ்டான்டினோப்பிள்) - அட்ரியனோப்பிள் - சும்னு இடையே அமைக்கப்பட்டது.[21] இந்தக் காலத்தின் உச்சமாக அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் அரசியலமைப்பு சார்ந்த அரசு இரண்டு ஆண்டுகளே நீடித்தது. உயர்கல்வி பெற்றிருந்த பேரரசின் கிறித்தவக் குடிமக்கள், முஸ்லிம் பெரும்பான்மையை விட பொருளாதாரத்தில் முன்னேறியிருந்தனர். இது முஸ்லிம்களிடையே மனக்கசப்பை உருவாக்கியது.[22] 1861இல் உதுமானியக் கிறிஸ்தவர்களுக்கு 571 முதல்நிலை மற்றும் 94 இரண்டாம்நிலை பள்ளிகள் இருந்தன. இவற்றில் 140,000 மாணவர்கள் படித்தனர்.[22][22] 1911இல் இஸ்தான்புல்லில் இருந்த 654 மொத்த விற்பனை நிறுவனங்களில் 528 கிரேக்க இனத்தவர்களுக்கு உரிமையாக இருந்தன.[22] பலமிழந்து வந்த உதுமானியப் பேரரசின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் தங்களது தாக்கத்தை நிலைநிறுத்த ஐரோப்பிய அரசுகள் நடத்திய நீண்ட போராட்டத்தின் ஓர் அங்கமே கிரீமியப் போர் (1853–1856) ஆகும். இந்தப் போரினால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் ஆகஸ்டு 4, 1854இல் உதுமானியப் பேரரசு 5 மில்லியன் பவுண்டுகளை வெளிநாடுகளிலிருந்து கடனாகப் பெற்றது.[23][24] மேலும் இப்போரின் விளைவாக 200,000 கிரீமிய டாடார்கள் உதுமானியப் பேரரசிற்குள் குடி புகுந்தனர்.[25] காக்கேசியப் போர்களின் இறுதியில் 90 விழுக்காடு காக்கேசியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.[26] இதனால் காக்கேசியாவின் வடக்கில் தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேறிய இவர்கள் உதுமானியப் பேரரசில் தஞ்சம் புகுந்தனர்.[27][28][29] சில மதிப்பீடுகளின்படி மொத்தமாக பதினைந்து லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர்.[30] 1876இல் பல்கேரிய எழுச்சியின்போது 100000 பேர் கொல்லப்பட்ட பாசி-பசூக்.[31] 1877-78இல் நடந்த ரஷ்ய-துருக்கிப் போரில் ரஷ்யா வென்றது. இதன் விளைவாக உதுமானியப் பேரரசு ஐரோப்பிய நிலப்பகுதிகளை இழந்தது. பல்கேரியா உதுமானியப் பேரரசில் தன்னாட்சி பெற்ற குறுமன்னராட்சியாக நிறுவப்பட்டது. ரோமானியாவிற்கு முழு விடுதலை வழங்கப்பட்டது. செர்பியாவும் மொண்டெனேகுரோவும் விடுதலை பெற்றன. 1878இல் ஆஸ்திரியா-ஹங்கேரி தன்னிச்சையாக உதுமானியப் பேரரசின் மாகாணங்களான பொஸ்னிய-எர்செகொவினாவையும் நோவி பாசரையும் கையகப்படுத்தியது. இதை உதுமானிய அரசு எதிர்த்தபோதும் அதன் படைகள் மூன்றே வாரத்தில் தோற்றன. பெர்லின் பேராயத்தில் பால்கன் தீபகற்பத்தில் உதுமானியப் பேரரசின் நிலப்பகுதிகள் மீட்கப்பட பிரித்தானியப் பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரைலி உதவினார். இதற்கு எதிர் உதவியாக பிரித்தானியாவிற்கு சைப்ரஸ் வழங்கப்பட்டது.[32] உராபிக் கலவரத்தை அடக்க உதுமானியாவிற்கு உதவுவதாகக் கூறி 1882இல் எகிப்திற்கு படைகளை அனுப்பிய பிரித்தானியா அப்பகுதியின் கட்டுப்பாட்டையும் பெற்றது. 1894 முதல் 1896 வரை நடைபெற்ற அமீதியப் படுகொலைகளில் 3 லட்சம் வரையிலான ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டனர்.[33] இவ்வாறு சுருங்கிய உதுமானியப் பேரரசில் ஃபால்கனிய முஸ்லிம்கள் ஃபால்கன் அல்லது அனடோலியா பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.[34] 1923இல் அனடோலியா மற்றும் கிழக்கு திராஸ் ஆகியவை மட்டுமே முஸ்லிம் பகுதிகளாக இருந்தன.[35] தோல்வியும் கலைப்பும் (1908–1922) சனஜூலை 3, 1908இல் இளந்துருக்கியர் புரட்சிக்குப் பிறகு இரண்டாம் முறை அரசியலமைப்பு சார்ந்த அரசை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1876ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டமும் நாடாளுமன்றமும் திருத்தி அமைக்கப்படும் என சுல்தான் அறிவித்தார். அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அரசியல் மற்றும் படைத்துறை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதுவே உதுமானியப் பேரரசு கலைக்கப்பட துவக்கமாகவும் அமைந்தது. குடிமக்களின் சிக்கல்களுக்கிடையே ஆஸ்திரியா-ஹங்கேரி 1908இல் பொஸ்னியா எர்செகோவினாவைக் கைப்பற்றியது. ஆனால் போரைத் தவிர்க்க ஆக்கிரமித்திருந்த நோவி பசாரிலிருந்து தனது படைகளை பின்வாங்கிக் கொண்டது. இத்தாலி-துருக்கியப் போரின் போது (1911–12) உதுமானியா லிபியாவை இழந்தது. ஃபால்கன் சங்க நாடுகள் உதுமானியா மீது போர் தொடுத்தன. இந்தப் போர்களில் (1912–13) உதுமானியப் பேரரசு தோற்றது. இதன் விளைவாக கிழக்கு திராஸ் தவிர பால்கன் நிலப்பகுதிகளை இழந்தது உதுமானியப் பேரரசு. வரலாற்றுச் சிறப்புமிகு உதுமானியத் தலைநகரமான எடிர்னேயையும் இழந்தது. மதம் சார்ந்த கலவரங்களுக்கு அஞ்சி ஏறத்தாழ 4 லட்சம் முஸ்லிம்கள் தற்காலத் துருக்கிக்கு இடம் பெயர்ந்தனர். இவர்களில் பலர் வாந்திபேதி கொள்ளைநோயால் பயணத்தின்போதே இறந்தனர்.[36] 1821 முதல் 1922 வரை ஃபால்கன் நாடுகளில் நடைபெற்ற முஸ்லிம் இன அழிப்பில் பல லட்சம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். பலர் வெளியேற்றப்பட்டனர்.[37][38][39] 1914 வாக்கில் பெரும்பாலான ஐரோப்பாவிலிருந்தும் வடக்கு ஆபிரிக்காவிலிருந்தும் உதுமானியப் பேரரசு துரத்தப்பட்டது. இருப்பினும் பேரரசின் ஆட்சியில் ஒன்றரை கோடி மக்கள் தற்கால துருக்கியிலும் 45 லட்சம் மக்கள் சிரியா, பாலஸ்தீனம் மற்றும் ஜோர்டானிலும் 25 லட்சம் மக்கள் ஈராக்கிலுமாக வாழ்ந்திருந்தனர். இது தவிர 55 லட்சம் மக்கள் அராபியத் தீபகற்பத்தில் உதுமானியப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தனர்.[40] நவம்பர் 1914இல் மைய சக்திகள் தரப்பில் உதுமானியப் பேரரசு முதல் உலகப் போரில் பங்கேற்றது. போரின் துவக்கத்தில் உதுமானியப் பேரரசுக்கு கலிப்பொலி போர்த்தொடர் போன்ற குறிப்பிடத்தக்க வெற்றிகள் கிடைத்தபோதும் ரஷ்யாவிற்கு எதிராக காக்கஸ் போரில் தோல்வியடைந்தது. உதுமானியப் பேரரசுக்கு எதிராக ஐக்கிய அமெரிக்க நாடுகள் போர் அறிவிக்கவில்லை.[41] 1915இல் ரஷ்யப் படைகள் பழைய ஆர்மீனியாவினுள் நுழைந்தன.[42] இதற்கு ஆர்மீனியர்கள் ஒத்துழைப்பு நல்கியதால் உதுமானியப் பேரரசு ஆர்மீனியர்களை வெளியேற்றவும் கொல்லவும் முற்பட்டது. இது ஆர்மீனிய இனப்படுகொலை என அறியப்படுகின்றது.[43] கிரேக்க, அசிரிய சிறுபான்மையினர் மீதும் இனப்படுகொலை நிகழ்வுகள் நடந்தேறின.[44] 1916இல் ஏற்பட்ட அரபுப் புரட்சி மத்திய கிழக்கில் உதுமானியப் பேரரசுக்கு எதிராக மாறியது. இறுதி உடன்பாட்டின்படி உதுமானியப் பேரரசு பிரிக்கப்பட்டது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் 90 லட்சம் துருக்கிய-முஸ்லிம் அகதிகள் காக்கேசியா, கிரீமியா, பால்கன் குடா, நடுநிலக் கடல் தீவுகளிலிருந்து அனத்தோலியாவுக்கும் கிழக்கு திராசிற்கும் இடம் பெயர்ந்தனர்.[45] கான்ஸ்டான்டிநோப்பிளின் முற்றுகையும் இஸ்மீர் முற்றுகையும் துருக்கிய தேசிய இயக்கத்தை முன்னிலைப்படுத்தியது. முஸ்தபா கமால் தலைமையில் இவ்வியக்கம் துருக்கிய விடுதலைப் போரை (1919–22) வென்றது. 1918 முதல் 1922 வரை ஆண்டுவந்த கடைசி சுல்தான் ஆறாம் முகம்மது நாட்டை விட்டு நவம்பர் 17, 1922இல் வெளியேறினார். துருக்கி தேசியப் பேரவை அக்டோபர் 29, 1923இல் துருக்கி குடியரசை நிறுவியது. மார்ச் 3, 1924இல் கலீஃபகமும் கலைக்கப்பட்டது.[46] மேற்கோள்கள் வெளி இணைப்புகள் * பகுப்பு:இசுலாமியப் பேரரசுகள் பகுப்பு:ஆபிரிக்காவின் முன்னாள் நாடுகள் பகுப்பு:ஆசியாவின் முன்னாள் நாடுகள் பகுப்பு:ஐரோப்பாவின் முன்னாள் நாடுகள்
உதுமானியப் பேரரசின் கடைசி மன்னர் யார்?
ஆறாம் முகம்மது
12,449
tamil
bb2749840
செவ்வாய் (Mars) சூரியக்குடும்பத்தில் உள்ள ஒரு கோள் ஆகும். இது சூரியனிலிருந்து நான்காவது கோளாக உள்ளது.இக்குடும்பத்தில் மிகச்சிறிய கோளான புதனுக்கு அடுத்ததாக இரண்டாவது சிறிய கோளாக செவ்வாய் இருக்கிறது. மேனாட்டினர் இக்கோளுக்கு போர்க்கடவுளின் பெயரைச் சூட்டியுள்ளனர். இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு இக்கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது.[13] இதனாலேயே இதற்குச் செவ்வாய் என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு புவிசார் கோளான இதன் மேற்பரப்பு சந்திரனில் உள்ளதுபோல் கிண்ணக் குழிகளையும், புவியில் உள்ளது போன்ற எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், பனிமூடிய துருவப் பகுதிகளையும் கொண்டது. செவ்வாயின் சுழற்சிக்காலமும், பருவ மாற்றங்களும் புவிக்கு உள்ளதைப் போன்றவையே. சூரிய மண்டலத்துள் மிக உயரமான ஒலிம்பசு மலையும், மிகப்பெரிய செங்குத்துப் பள்ளத்தாக்குகளுள் ஒன்றான மரினர் பள்ளத்தாக்கும் செவ்வாயிலேயே உள்ளன. 1965 ஆம் ஆண்டில் செவ்வாய்க்கு அண்மையாக மரினர் 4 வெற்றிகரமாகப் பறந்து செல்லும்வரை, செவ்வாய்க் கோளின் மேற்பரப்பில் நீர்ம நீர் இருக்கும் என நம்பினர். கோளின் துருவப் பகுதிகளுக்கு அருகில் குறித்த கால அடிப்படையில் மாற்றம் அடைகின்ற கறுப்பு, வெள்ளை அடையாளங்களே இவ்வாறான நம்பிக்கைக்குக் காரணமாக இருந்தன. இவை கடல்களும், கண்டங்களுமாக இருக்கலாம் என எண்ணினர். மேற்பரப்பில் காணப்பட்ட நீண்ட கருமையான கீறல்கள் நீர்ப்பாசனக் கால்வாய்களாக இருக்கலாம் என்றும் கருதப்பட்டது. பின்னர் இதை ஒரு ஒளியியல் மாயத்தோற்றம் என விளக்கினர். ஆனாலும், ஆளில்லாப் பயணங்களின் மூலம் திரட்டப்பட்ட நிலவியற் சான்றுகள், ஒரு காலத்தில் செவ்வாயில் பெருமளவு நீர் இருந்தது என்பதைக் காட்டுகின்றன.[14] இது, போபோசு, டெய்மோசு என்னும் இரண்டு நிலவுகளைக் கொண்டுள்ளது. இவை சிறிய, ஒழுங்கற்ற வடிவம் கொண்டவை. செவ்வாயின் டிரோசான் சிறுகோளான 5261 யுரேக்காவைப்போல் இவை செவ்வாயின் ஈர்ப்பினால் கவரப்பட்ட சிறுகோள்களாக இருக்கலாம். இயற்பியல் பண்புகள் செவ்வாயின் விட்டம் புவியின் விட்டத்தின் அரைப்பங்கு அளவு கொண்டது. இதன் அடர்த்தி புவியினதைக் காட்டிலும் குறைவானது. செவ்வாய் புவியின் கனவளவின் 15%க்குச் சமமான கனவளவையும், புவியின் திணிவின் 11%க்குச் சமமான திணிவையும் கொண்டது. இதன் மேற்பரப்பின் பரப்பளவு, புவியின் உலர் நிலப்பகுதியின் பரப்பளவைக் காட்டிலும் சற்றே குறைவானது.[7] செவ்வாய் புதன் கோளிலும் பெரியதும் திணிவு கூடியதும் ஆகும். ஆனால், புதன், செவ்வாயிலும் கூடிய அடர்த்தி கொண்டது. நிலவியல் செவ்வாய், சிலிக்கன், ஆக்சிசன், உலோகங்கள், இன்னும் பிற பாறைகளை உருவாக்கும் தனிமங்களைக் கொண்ட கனிமங்களாலான ஒரு புவிசார் கோள். செவ்வாயின் மேற்பரப்பு பெரும்பாலும் தோலெயிட்டிக் பசாற்றுக் கற்களால் ஆனது.[15] எனினும் சில பகுதிகள் பொதுவான பசாற்றுக் கற்களிலும் கூடிய சிலிக்காச் செறிவு கொண்டது. இது புவியின் எரிமலைப் படிகப் பாறையைப் போலவோ, சிலிக்காக் கண்ணாடியைப் போலவோ இருக்கக்கூடும். குறைவான ஒளிதெறிதிறன் கொண்ட பகுதிகளில் சரிவுவகை களிக்கற் செறிவுகளும், குறிந்த ஒளிதெறிதிறன் கொண்ட வடபகுதியில் வழமையான செறிவில் தகட்டுச் சிலிக்கேற்றுகளும், உயர்-சிலிக்கன் கண்ணாடியும் காணப்படுகின்றன. தென்பகுதி மேட்டு நிலங்களின் சில பகுதிகளில் கண்டறியக்கூடிய அளவில் உயர்-சிலிக்கன் பைரொட்சீன்கள் காணப்படுகின்றன. ஆங்காங்கே ஏமட்டைட்டு, ஆலிவைன்கள் என்பனவும் உள்ளன.[16] மண் பீனிக்சு இறங்குகலம் அனுப்பிய தகவல்கள், செவ்வாயின் மண் காரத்தன்மை கொண்டது எனவும், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், குளோரைடு போன்ற தனிமங்களைக் கொண்டது எனவும் காட்டுகின்றன. புவியிலுள்ள தோட்டங்களில் காணப்படும் இவை தாவர வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. இறங்குகலச் சோதனைகளின் படி மண் பி.எச் 8.3 கொண்டதுடன், பேர்குளோரேட்டு உப்புக்களையும் கொண்டது எனத் தெரிகிறது. செவ்வாயில் கீறல்கள் பொதுவாகக் காணப்படுவதுடன், கிண்ணக்குழிகள், பள்ளத்தாக்குகள் என்பவற்றின் சரிவுகளில் புதிய கீறல்களும் தோன்றுகின்றன. முதலில் கடுமையான நிறத்துடன் காணப்படும் இக் கீறல்கள் காலம் செல்லச் செல்ல மங்கலான நிறத்தை அடைகின்றன. சில வேளைகளில் சிறியனவாகத் தோன்றும் இக் கீறல்கள் பின்னர் பல நூறு மீட்டர்களுக்கு விரிவடைகின்றன. இக்கீறல்கள் தமது பாதையில் காணும் பாறைகள், பிற தடைகள் போன்றவற்றின் விளிம்போடு செல்வதையும் காண முடிகிறது. நீரியல் தாழ்வான பகுதிகளில் குறைந்த நேரத்துக்கு நீர் திரவ நிலையில் இருக்கக்கூடுமாயினும், குறைந்த வளியமுக்கம் காரணமாகச் செவ்வாயின் மேற்பரப்பில் திரவ நீர் இருப்பது சாத்தியம் இல்லை. இரண்டு துருவங்களிலும் காணப்படும் பனி மூடிகள் பெரும்பாலும் நீரினால் ஆனதாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. தென் துருவப் பனி மூடியில் உள்ள பனிக்கட்டி உருகினால் உருவாகக்கூடிய நீர் செவ்வாயின் முழு மேற்பரப்பையும் 11 மீட்டர்களுக்கு மூடுவதற்குப் போதுமானதாக இருக்கும். செவ்வாயில் தெரியும் நிலத்தோற்றங்கள், ஒரு காலத்தில் அதன் மேற்பரப்பில் நீர்ம நீர் இருந்திருக்கக்கூடும் என்பதைக் காட்டுகின்றன. வெளிப்போக்குக் கால்வாய்கள் என அறியப்பட்ட பாரிய நீள்வடிவ நீரரிப்பு நிலங்கள், சுமார் 25 இடங்களில் செவ்வாய் மேற்பரப்புக்குக் குறுக்கே வெட்டிச் செல்கின்றன. நிலத்தடி நீத்தேக்கங்களில் இருந்து வெளியேறிய, பேரழிவை ஏற்படுத்திய நீர் வழிந்தோடியபோது ஏற்பட்ட மண்ணரிப்புத் தடங்களே இவை என நம்பப்படுகின்றது. எனினும் சிலர் இவை பனியாறுகள் அல்லது எரிமலைக் குழம்புகளினால் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று நம்புகின்றனர். இவற்றுள் மிகப் பிந்திய கால்வாய்கள் சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான் தோன்றின. பிற பகுதிகளில் காணப்படும் இத்தகைய காய்வாய் வலையமைப்புக்களில் வடிவத்தில் இருந்து, செவ்வாயின் தொடக்க காலத்தில் பெய்த மழையினால் அல்லது பனிக்கட்டி மழையினால் ஏற்பட்ட வழிந்தோடிய அடையாளங்களாக இவை இருக்கலாம் எனக் கருதுகின்றனர். செவ்வாயின் தட்பவெப்பம் செவ்வாயின் மேற்பரப்பின் வெப்பநிலை +27 முதல் -126 டிகிரி வரை உள்ளது. (பூமியில் +58 முதல் -88.3 வரை). ஆனால் சூரியனிடமிருந்து பூமியை விட தூரத்திலிருப்பதால் சராசரி வெப்பநிலை -48 டிகிரி சென்டிகிரேடு. இதனுடைய காற்று மண்டலம் மிகவும் மெல்லியது, பெரும்பாலும் கார்பன்-டை-ஆக்ஸைடு கொண்டது. டெலஸ்கோப்பில் பார்த்தால் மிகச் சிவப்பாகத் தெரியும். அதனால் தான் செவ்வாய் என்றும் ஆங்கிலத்தில் the red planet என்றும் அழைக்கப்படுகிறது. பூமியைப் போன்றே துருவங்கள் பனிப்பிரதேசங்களாக இருக்கின்றன. இங்கு ஐஸ் என்பது பெரும்பாலும் 'ட்ரை ஐஸ்' எனப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடாகும். மேலும் செவ்வாய் கிரகத்தின் வட துருவத்தில் மிகப்பெரிய பனிப்பள்ளம் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் (டிசம்பர்-2018) இந்த பனிப்பள்ளத்தில் 5,905 அடி தடிமன் உள்ள பிரம்மாண்ட ஐஸ்பாறைகளைச் சுற்றி தண்ணீரும் உள்ளது[]. பனிப்பாறை ஐரோப்பாவைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் செவ்வாய் கிரக ஆராய்ச்சியின்போது இந்த பனிப்பாறை கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் வடதுருவத்தில் தனது ஆய்வினை மேற்கொள்ளும் போது இந்த பனிப்பாறையானது இதன் கேமராவில் சிக்கியிருக்கிறது.[]. வட துருவத்தில் சுமார் 50.1 மைல் நீளமும் 1.2 மைல் அகலமும் உள்ள மிகப்பெரிய பள்ளத்தாக்கு ஒன்று அமைந்திருக்கிறது. இதற்கு கொரோலோவ் (Korolev crater) பள்ளத்தாக்கு என்று பெயரிடப்பட்டிருக்கிறது. புகழ்பெற்ற விண்வெளித்துறை பொறியாளரான Sergei Korolev வின் நினைவாக இந்தப்பெயர் சூட்டப்பட்டது. ஸ்புட்னிக், வோஸ்டாக் போன்ற விண்வெளி ஆராய்ச்சித்துறையில் மைல்கல் பதித்த திட்டங்களில் தலைமை ராக்கெட் ஏவுதளப் பொறியாளராகப் பணியாற்றியவர் கொரோலோவ். பீகிள்2 - பிரிட்டனின் செவ்வாய் பயணம் ஏற்கனவே 1997ம் ஆண்டு அமெரிக்காவின் பாத்ஃபைண்டர் வாகனம் செவ்வாயில் இறக்கிவிடப்பட்டுள்ளது. பிரிட்டனின் பீகிள்2 வாகனம், செவ்வாயில் பழமையான குன்றுகளுக்கும், வடக்கு சமவெளிக்கும் இடைப்பட்ட 'இசிடிஸ் ப்ளானிட்டியா' என்ற சமதளப் பிரதேசத்தில் இறக்கிவிட ஐரோப்பிய வான்வெளி ஏஜன்சி (ESA) டிசம்பர் 2000ல் நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பீகிள்2வை ESAவின் 'மார்ஸ் எக்ஸ்பிரஸ்' என்கிற ராக்கெட் ஜூன் 2003ல் கஜகஸ்தானில் உள்ள (ரஷ்ய) பைக்கானூர் காஸ்மோடிரோம் தளத்தில் இருந்து ஏவப்படும். பீகிள்2-வின் குறிக்கோள் செவ்வாயில் உயிர்கள் இருக்கின்றதா அல்லது எப்போதாவது இருந்ததா? என்ற கேள்விக்கு முடிவான விடை காண்பதே. அதற்கு 'இசிடிஸ் ப்ளாண்டியா' தான் மிகச் சிறந்த இடம், முன்பு எப்போதாவது செவ்வாயில் உயிர்கள் இருந்தால் அதன் பாஸில்கள் கிடைக்க இங்கு அருமையான வாய்ப்பு உள்ளது என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். பீகிள்2 செவ்வாயில் பாதுகாப்பாக தரையிறங்க 'ஏர் பேக்குகள்' உபயோகிக்கப்படும். செவ்வாயில் தரையில் படும் போது இந்த ஏர் பேக்குகள் பந்து போல் எம்பி விழுந்து நிலைத்து நின்ற பின் அதனுள் இருக்கும் வாயு வெளியேற்றப்பட்டு வாகனம் சேதமின்றி வெளிவரும். ரோவர் - அமெரிக்காவின் மற்றொரு செவ்வாய் ஆய்வுத் திட்டம் பீகிள்2 திட்டம் ஒரு புறமிருக்க, அமெரிக்கா இரண்டு ரோபோட்களை 2004ம் ஆண்டு செவ்வாயில் இறக்கிவிடத் திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு 'ரோவர்'களுமே முக்காலத்தில் அங்கு நீர், அதாவது திரவ வடிவில் நீர் ஆதாரங்களைத் தேடும் உபகரணங்களைப் பெற்றிருக்கும். திரவ வடிவில் நீரென்றால் அது நிச்சயம் 0 – 100 டிகிரிக்குள் தான் இருக்க முடியும். மேலும் நீரில் ஆக்ஸிஜனும் இருக்குமென்பதால் அதில் உயிர்கள் (ஒரு செல் உயிர்கள், பாக்டீரியாக்கள் முதல் பல வித உயிரினங்கள்) உண்டாகி வாழந்திருக்ககூடிய சாத்தியங்கள் அதிகமாக உண்டு. பூமியில் உயிரினம் முதன்முதலில் தோன்றியதே நீரில் தான் என்று நம்பப்படுகிறது. செவ்வாயில் தரையிறங்க வாய்ப்பான 185 இடங்கள் பட்டியலில் தொடங்கி தற்போது 30 மிக முக்கியமான இடங்கள் பட்டியலாகக் குறுக்கப்பட்டுள்ளது. இதில் சேதமின்றித் தரையிறங்க வாய்ப்பான இடம் என்பதை விட விஞ்ஞான ரீதியாக சான்றுகள் கிடைக்க வாய்ப்பான இடம் என்பதற்குத்தான் முக்கியத்துவம் அளிப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஏவுவதற்கு ஒரு வருடம் முன்பாக இறங்கும் இடம் பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும். தற்போது செவ்வாயைச் சுற்றிக் கொண்டிருக்கும் 'மார்ஸ் க்ளோபல் சர்வேயர்' எனும் விண்கலம் அனுப்பும் தகவல்கள் இதற்கு மிகவும் உதவிகரமாக இருப்பதாகள் அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ரோவர் பயணத் திட்டங்கள் அமெரிக்காவில் ப்ளோரிடா மாகாணத்தில் கேப் காணவெரல் தளத்திலிருந்து முதல் ரோவர் ரோபோட் மே 30, 2003 லும், இரண்டாவது அதே வருடம் ஜூன் 27லிலும் ஏவப்படும். செவ்வாயில் முறையே 2004ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதியிலும், பெப்ரவரி 8ம் தேதியிலும் தரையிறங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரோவர்கள் தற்போது MER-A மற்றும் MER-B என்றும் அழைக்கப்படுகிறது. (MER – Mars Exploration Rover). இரண்டு ரோவர்களும் ஒரு செவ்வாய் தினத்திற்கு (24.62 மணிகள்) 100 மீட்டர் தூரம் வரை பயணம் செய்யும். ஆரோக்கியம் நல்லபடியாக இருந்தால் இவை 2004 ஏப்ரல் மாதத்தைத் தாண்டிக் கூட வேலை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்புகள் உசாத்துணை வெளி இணைப்புகள் பகுப்பு:புவியொத்த கோள்கள் பகுப்பு:இயங்குபடம் உள்ள கட்டுரைகள்
சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் கிரகம் எது?
செவ்வாய்
0
tamil
ecc19a740
நோபெல் பரிசு (Nobel Prize) அல்லது நோபல் பரிசு (பழைய வழக்கு) என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு. மார்ச் 2005 வரை 770 நோபெல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சிலர் இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ள மறுத்ததும் உண்டு. இது வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது. முதல் பரிசு 1901 ல் வழங்கப்பட்டது. சில ஆண்டுகள் ஒரு பரிசு கூட அறிவிக்கப்படாமல் போனதும் உண்டு. எனினும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசு அறிவிக்கப்படும். நோபெல் பரிசு, திரும்பப் பெறத்தக்கதல்ல. இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல் மற்றும் அமைதி ஆகியவையே ஆல்ஃபிரட் நோபெல் அவர்களின் உயில் படி ஏற்படுத்தப்பட்ட பரிசுகளாகும். பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு 1968 ல் சுவீடன் நடுவண் வங்கியினால் அதன் 300 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது. பரிசு பெறும் ஒவ்வொருவரும், ஒரு தங்கப்பதக்கமும் ஒரு பட்டயமும், நோபெல் அறக்கட்டளையின் அவ்வருட வருமானத்தைப் பொறுத்து பரிசுப் பணமும் பெறுவர். வரலாறு ஆல்ஃபிரட் நோபல் (கேட்க 1833, அக்டோபர் 21 அன்று சுவீடனிலுள்ள ஸ்டாக்ஹோம் நகரில் பிறந்தார். அவரது குடும்பம் ஒரு பொறியியலாளர் குடும்பமாகும்[1]. இவரது வாழ்நாளில் வேதியாளராயும் பொறியாளராயும் கண்டுபிடிப்பாளராயும் விளங்கினார். 1894-ஆம் ஆண்டு போஃபர்சு இரும்பு மற்றும் எஃகு ஆலையை நோபல் வாங்கினார். அதனை பெரும் ஆயுத உற்பத்தி தொழிற்சாலையாக மாற்றினார். பலவித புகையற்ற ராணுவ வெடிபொருட்களுக்கு முன்னோடியான பாலிஸ்டிக்-கை இவர்தான் கண்டுபிடித்தார். இதுவே பிரித்தானியத் தயாரிப்பான புகையற்ற வெடிபொருளான கார்டைட்-டுக்கும் முன்னோடியாகும். அதைச் சார்ந்து ஒரு பதிப்புரிமை வழக்கும் நோபலால் தொடரப்பட்டிருந்தது. நோபல் தன் வாழ்நாளில் மிகப்பெருமளவில் செல்வம் சேர்த்தார். அவரது வருமானத்தில் பெரும்பகுதி அவரது 355 கண்டுபிடிப்புகளால் கிடைத்தது, அவற்றுள் முக்கியமானது டைனமைட் ஆகும்.[2]. 1888-ல் ஒரு பிரெஞ்சு செய்தித்தாளில் "மரணத்தின் வியாபாரி இறப்பு" என்ற தனது இறப்புச் செய்தி கண்டு அதிர்ந்தார். ஆனால் அப்போது இறந்தவர் ஆல்ஃபிரடின் சகோதரரான லுட்விக் ஆவார். ஆனால் அச்செய்தி நோபலை துணுக்குறச் செய்தது, தான் இறந்தபிறகு எவ்வாறு நினைவில் வைக்கப்படுவோம் என்று தீவிரமான சிந்தனைக்கு ஆளானார். இதுவே அவரை தன்னுடைய உயிலை மாற்றி எழுதச் செய்தது.[3]. 63 வயதான போது திசம்பர் 10,1895 அன்று இத்தாலியின் சான் ரெமோ மாளிகையில் ஆல்ஃபிரட் நோபல் காலமானார்[4]. அனைவரும் பெருத்த வியப்புக்கு உள்ளாகும் வகையில் நோபலின் கடைசி உயிலில், தனது சொத்தின் பெரும்பகுதி 'மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு' பங்களித்தவர்களுக்கு இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் பரிசு வழங்க பயன்படுத்தப்படவேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார்[5]. நோபல் தன் வாழ்நாளில் பல உயில்களை எழுதியிருந்தார். அவரது கடைசி உயில் நவம்பர் 27, 1895 அன்று பாரிசிலிருந்த சுவீடன்-நார்வே மன்றத்தில் எழுதப்பட்டு அவரால் கையொப்பமிடப்பட்டிருந்தது[6][7]. தனது சொத்தில் 94%-தினை, 31 மில்லியன் சுவீடன் குரோனார்(2008 மதிப்பின்படி 150 மில்லியன் யூரோ, 186 அமெரிக்க டாலர்கள்), ஐந்து நோபல் பரிசுகளை வழங்குவதற்காக எழுதி வைத்தார்.[8]. அவரது உயிலின் மீதிருந்த ஐயங்களால் ஏப்ரல் 26, 1897 அன்றுதான் நார்வேயின் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது[9]. நோபலின் உயிலை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களால், ராக்னார் சோல்மான் மற்றும் ருடோல்ஃப் லியெக்விஸ்ட், அவரது சொத்தை பரமாரிக்கவும் பரிசுகள் வழங்குதலை ஒழுங்குபடுத்த/முறைப்படுத்தவும் "நோபல் அறக்கட்டளை" அமைக்கப்பெற்றது.[10] நோபலின் குறிப்புகளின்படி, அமைதிக்கான நோபல் பரிசை வழங்க நார்வே நோபல் குழு அமைக்கப்பெற்றது, அதன் உறுப்பினர்கள் உயில் அங்கீகரிக்கப்பட்ட சில நாட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பின்னர், ஏனைய பரிசுகளை வழங்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டன. அவை கரோலின்சுகா நிறுவனம் (சூன் 7), சுவீடன் சங்கம் (சூன் 9), ராஜாங்க சுவீடன் அறிவியற் கழகம் (சூன் 11).[11] எவ்வாறு பரிசுகள் வழங்கப்படவேண்டுமென்ற விதிமுறைகள் நோபல் அறக்கட்டளையால் அங்கீகரிக்கப்பட்டபின், மன்னர் ஆஸ்கர் II -வினால் 1900-ல் பிரகடனப்படுத்தப்பட்டன.[5] 1905-ஆம் ஆண்டு நார்வேயும் சுவீடனும் பிரிந்தன. அதன் பின்னர், அமைதிக்கான நோபல் பரிசை அளிப்பதன் பொறுப்பு நார்வேயின் வசமும் மற்ற பரிசுகளை வழங்கும் பொறுப்பு சுவீடனிலிருக்கும் அமைப்புகளின் வசமும் உள்ளது.[9] நோபல் அறக்கட்டளை நோபல் பரிசுகளின் நிதி மூலங்களையும் அதன் நிர்வாகத்தையும் கவனிக்க சூன் 29, 1900 அன்று "நோபல் அறக்கட்டளை" ஒரு தனியார் நிறுவனமாக ஆரம்பிக்கபபட்டது.[12] நோபெலின் உயிலின்படி, அறக்கட்டளையின் முதற்கடமை நோபெல் விட்டுச்சென்ற சொத்தினை பாதுகாப்பதாகும். சகோதரர்கள் ராபர்ட் மற்றும் லுட்விக் நோபெல் அசர்பெய்ஜானிலிருந்த எண்ணெய் நிறுவனங்களில் பெருமளவு முதலீடு செய்திருந்தனர். சுவீடன் நாட்டு வரலாற்றாசிரியரான இ. பார்கென்கிரன், நோபெல் குடும்ப வரலாற்றுத் தொகுப்புகளை நேரில் பார்வையிட்டவர், அவரின் கூற்றுப்படி பாகு-விலிருந்து நோபெலின் முதலீடுகளை திரும்பப் பெற்றதே பரிசுகளை வழங்க ஆரம்பத்தில் மிக்க உறுதுணையாயிருந்தது.[13] நோபெல் அறக்கட்டளையின் மற்றொரு பணி, பரிசுகளை உலக அளவில் கொண்டு சேர்ப்பதும் பரிசு வழங்கல் நிர்வாகத்தை மேற்பார்வையிடுவதுமாகும். அறக்கட்டளை பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுப்பதில் எந்த பங்கும் எடுப்பதில்லை.[14][15] பல வகைகளில் இந்த அறக்கட்டளை ஒரு முதலீட்டுக் குழுமமாகவே செயல்படுகிறது, நோபெலின் சொத்தை முதலீடாகக் கொண்டு பரிசு வழங்கவும் அதன் நிர்வாகத்துக்குமான நிதியை அது உற்பத்தி செய்கிறது. 1946-லிருந்து சுவீடனில் அனைத்து வித வரிகளிலிருந்தும் நோபெல் அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப்பட்டது. 1953-லிருந்து ஐக்கிய அமெரிக்காவிலும் அனைத்து வித வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டது.[16] 1980-களிலிருந்து இதன் முதலீடுகள் பெரும் லாபமீட்டிவருகின்றன. திசம்பர் 31, 2007-படி நோபெல் அறக்கட்டளையின் சொத்து மதிப்பு 3.628 பில்லியன் சுவீடன் குரோனார்கள் (560 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆகும்.[17] விதிகளின்படி, அறக்கட்டளையானது ஸ்டாக்ஹோமைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும். மேலும், சுவீடன் அல்லது நார்வே நாட்டின் குடிமக்கள் ஐவர் இந்த அறக்கட்டளையின் உறுப்பினர்களாக இருப்பர். அறக்கட்டளையின் தலைவர், மன்னருக்கான ஆலோசனைக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார். மற்ற நான்கு உறுப்பினர்களும் நோபல் பரிசுகளுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் அமைப்புகளின் அறங்காவலர்களால் தேர்ந்தெடுக்ககப்படுவர். அறக்கட்டளை உறுப்பினர்களிடையே அதன் செயற்குழு இயக்குனரும், ஒரு துணை இயக்குனர் மன்னருக்கான ஆலோசனைக் குழுவாலும், மேலும் இரு இணை இயக்குனர்கள் அமைப்புகளின் அறங்காவலர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுவர். எனினும், 1995-லிருந்து அனைத்து உறுப்பினர்களும் நோபல் பரிசு அமைப்புகளின் அறங்காவலர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இயக்குனர் மற்றும் துணை இயக்குனரும் அறக்கட்டளை உறுப்பினர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அறக்கட்டளை உறுப்பினர்கள் தவிர்த்து, நோபல் அறக்கட்டளையானது அனைத்து பரிசு வழங்கும் அமைப்புகள்(சுவீடன் ராஜாங்க அறிவியற் கழகம், கரோலின்சுகா நிறுவனம், சுவீடன் கழகம், நார்வே நோபெல் கழகம்), அவற்றின் அறங்காவலர்கள் மற்றும் தணிக்கையாளர்களை உள்ளடக்கியது.[17] முதல்முறை வழங்கப்பட்ட பரிசுகள் நோபல் அறக்கட்டளை நிறுவப்பட்டு அதன் விதிமுறைகளும் வகுக்கப்பட்ட பின்னர், நோபல் கழகங்கள் பரிசுகளுக்கான முதல் முறை வழங்கப்படப்போகும் முன்மொழிவுகளைத் தயார் செய்தன. அதன் பின்னர் தெரிவு செய்யப்பட்ட பட்டியல்கள் பரிசு வழங்கும் கழகங்களுக்கு அனுப்பப்பட்டன. பரிசுகளின் நம்பகத்தன்மையைக் கூட்டும் வகையில், நார்வே நோபல் கழகம் புகழ்பெற்ற யார்கன் லொவ்லான்ட், யார்ன்ஸ்ட்யெர்ன் யார்ன்சன் மற்றும் யொகானசு ஸ்டீன் ஆகியோரை பரிசு வழங்கும் குழுவில் நார்வே நோபல் கழகம் நியமித்தது.[18] 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வளர்ந்துவந்த அமைதி இயக்கங்களிலிருந்த புகழ்பெற்ற இருவருக்கு பரிசு வழங்குவதற்கு நோபல் கழகம் முடிவு செய்தது: ஃபிரடெரிக் பாசி (உலக நாடுகளின் கூட்டமைப்பின் துணை நிறுவனர்) மற்றும் யென்றி டூனான்ட் (உலகளாவிய செஞ்சிலுவைக் கழக நிறுவனர்)..[19][20][21] இயற்பியலில் நோபல் பரிசுக்கு தகுதியுடையவர்களாக நோபல் கழகம் இருவரைத் தேர்ந்தெடுத்தது: எக்ஸ்- கதிர்களைக் கண்டுபிடித்த வில்யெம் கொன்றாடு ரான்ட்ஜன் மற்றும் கேதோடு கதிர்களைக் கண்டறிந்தவரான பிலிப் லெனார்டு. சுவீடன் அறிவியற் கழகம் ரான்ட்ஜனை பரிசுக்குரியவராகத் தேர்ந்தெடுத்தது.[19][20][21] 19-ஆம் நூற்றாண்டின் இறுதிகளில் பல வேதியியலாளர்கள் முக்கியமான கண்டுபிடிப்புகளையும் முன்னேற்றங்களையும் செய்திருந்தனர். ஆகையால் பரிசு வழங்கப்பட வேண்டும் எனும்படியான வகையில் தகுதிப்பட்டியலை தயாரிக்கவே பரிசு வழங்கும் கழகம் தள்ளப்பட்டது.[22] இத்துறையில் 20 முன்மொழிவுகள் வைக்கப்பட்டன. அவற்றுள் 11 யாகோபசு வான் கா-வுக்கானவை.[23] முடிவில் யாகோபசு வான் கா-வுக்கு வேதியியல்-வெப்ப இயக்கவியலில் அவரின் பங்களிப்புக்கு நோபல் பரிசு தரப்பட்டது..[24][25] முதல் நோபல் இலக்கியப்பரிசுக்கு சல்லி புருதோமை, சுவீடன் கழகம் தேர்ந்தெடுத்தது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த 42 எழுத்தாளர்கள், கவிஞர்கள் இதனை எதிர்த்துப் போராடி தமது அதிருப்தியைத் தெரிவித்தனர், அவர்கள் லியோ டால்ஸ்டாய்தான் வெல்லுவார், அவரே பரிசுக்கு மிகச் சரியானவர் என எண்ணினர்.[26] சிலர், பர்டன் பெல்டுமான் உட்பட, சல்லி புருதோம் ஒரு சாதாரண கவிதான் என்ற எண்ணங்கொண்டிருந்தனர். பர்டன் பெல்டுமான், பரிசு வழங்கும் கழகத்தினர் விக்டோரிய இலக்கிய ஆவலர்கள் போலும், ஆதலால் தான் விக்டோரிய கவிக்கு பரிசு கொடுத்திருக்கின்றனர், என்று குற்றஞ்சாட்டினார்.[27] மருத்துவத்துவத்துக்கான நோபல் பரிசு யெர்மானிய உடலியங்கியல் மற்றும் நுண்ணியிரியியலாளரான எரிக் வான் பெரிங்-குக்கு வழங்கப்பட்டது. 1890-களில் எரிக் வான் பெரிங் டிப்தீரியாவுக்கான நஞ்செதிரியைக் கண்டறிந்தார், அதுநாள் வரையிலும் டிப்தீரியாவால் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்து கொண்டிருந்தனர்.[28][29] இரண்டாம் உலகப்போர் 1938 மற்றும் 1939-ல் அடால்ஃப் ஹிட்லர்-இன் மூன்றாம் செல்வம், நோபல் பரிசு வென்ற மூவரை (ரிச்சர்டு குன், அடால்ஃப் பிரைட்ரிச் யொகான் பியூட்டெனான்ட் மற்றும் யெர்கார்டு டொமாக்) பரிசினைப் பெற்றுக்கொள்ள விடவில்லை..[30] ஆனால், ஒவ்வொருவரும் பின்னர் அவர்களது பட்டயத்தையும் பரிசினையும் பெற்றுக்கொண்டனர்.[31] சுவீடன் இரண்டாம் உலகப் போரின்போது நடுவுநிலைமையை வகித்தாலும் நோபல் பரிசுகள் இடைவெளிவிட்டு விட்டு கொடுக்கப்பட்டன. 1939-ல் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கும் தரப்படவில்லை. 1940-42 காலகட்டத்தில், நார்வே யெர்மனியால் கைப்பற்றப்பட்டிருந்தது, எந்த துறையிலும் பரிசு வழங்கப்படவில்லை. அதற்கடுத்த ஆண்டு அமைதி மற்றும் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகளைத் தவிர ஏனையவை தரப்பட்டன.[32] நார்வே கைப்பற்றப்பட்ட பின்னர் மூன்று நோபெல் அறக்கட்டளை உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பியோடினர். ஆசுலோவிலிருந்த நோபல் கழக மாளிகை சுவீடன் நாட்டு சொத்து என்று நோபல் கழகம் அறிக்கை விட்டதன் காரணத்தால் அங்கிருந்த மற்ற அறக்கட்டளை உறுப்பினர்கள் நாசிக்களின் நெருக்குதலுக்கு உள்ளாகியிருப்பர். ஆதலால் அக்கழக மாளிகை யெர்மானிய ராணுவத்திடமிருந்து தப்ப ஒரு புகலிடமாக இருந்தது, ஏனெனில் யெர்மனியுடன் சுவீடன் போரில் ஈடுபடவில்லை.[33] அங்கிருந்த அறக்கட்டளை உறுப்பினர்கள் நோபெல் கழகத்தின் வேலைகளை தொடர்ந்து கவனித்து வந்தாலும் பரிசுகள் எதுவும் வழங்கப்படவில்லை. 1944-ல் நோபல் அறக்கட்டளை, வெளிநாட்டுக்குத் தப்பிய மூன்று உறுப்பினர்களும் சேர்த்து, முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன, அமைதிக்கான நோபல் பரிசு எப்போதும் போல இனி வழங்கப்படுமென அறிவித்தனர்.[30] பொருளாதார அறிவியலுக்கான பரிசு 1968-ஆம் ஆண்டு சுவீடன் நடுவண் வங்கியானது தனது 300-வது வருட கொண்டாட்டத்தின்போது, ஒரு பெரும் தொகையை நோபல் அறக்கட்டளைக்கு அளித்து நோபலின் பெயரில் ஒரு பரிசினை ஏற்படுத்த வைத்தது. அதற்கடுத்த வருடம் நோபல் நினைவு பொருளாதார அறிவியல் பரிசு வழங்கப்பட்டது. பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு சுவீடன் ராஜாங்க அறிவியற் கழகத்தின் பொறுப்பில் விடப்பட்டது. முதல் பொருளாதாரத்துக்கான பரிசினைப் பெற்றவர்கள் யான் டின்பெர்கன் மற்றும் ராக்னர் ஃபிரிச் ஆவர். அவர்கள் "பொருளாதார செயற்பாடுகளுக்கான இயங்கு படிமங்களை உருவாக்கி அதை வெற்றிகரமாக செயற்படுத்தியும் உள்ளனர்" என்பது நோபல் குழுவின் குறிப்பு.[34][35] ஒரு நோபெல் பரிசாக இல்லாவிட்டாலும் இது ஏனைய நோபெல் பரிசுகளோடே அடையாளப்படுத்தப்படுகிறது. பரிசுக்குரியவர்களும் மற்ற நோபெல் பரிசுக்குரியவர்கள் அறிவிக்கப்படும்போதே அறிவிக்கப்படுகிறார்கள். பொருளாதார அறிவியலின் பரிசு சுவீடனின் நோபல் பரிசு வழங்கும் விழாவிலேயே வழங்கப்படுகிறது.[36] இந்த பரிசினை சேர்த்த பின்னர், நோபல் அறக்கட்டளைக் குழு கூடி விவாதித்து இனி ஏதும் புதிய பரிசுகளை வழங்குவதில்லையென முடிவெடுத்தது.[37] விருது வழங்கும் முறை விருது வழங்கும் முறை அனைத்து நோபல் பரிசுகளுக்கும் ஒத்ததாக உள்ளது; முக்கிய வேறுபாடு என்னவென்றால் யார் அவர்களை ஒவ்வொருவராக பரிந்துரை செய்வது என்பதாகும்.[38] பரிந்துரைகள் 3000 தனிநபர்களுக்கு பற்றிய பரிந்துரையை வடிவங்கள் நோபல் கமிட்டி மூலம் அனுப்பப்படுகின்றன, பொதுவாக செப்டம்பர் மாதம் பரிசுகள் வழங்கப்படுவதற்க்கு ஒரு ஆண்டின் முன்னதாகவே அனுப்பப்படும். அமைதிக்கான நோபல் பரிசுக்கான விசாரணை, அரசாங்கங்கள், சர்வதேச நீதிமன்ற உறுப்பினர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி தலைவர்கள், முன்னாள் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் மற்றும் நார்வே நோபல் கமிட்டியின் தற்போதைய அல்லது முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோருக்கு அனுப்பப்படுகின்றன. பரிந்துரையை வடிவங்கள் திரும்பி வருவதற்கான காலக்கெடு விருது ஆண்டின் ஜனவரி 31 ஆக உள்ளது. நோபல் பரிசு குழு, இந்த வடிவங்கள் மற்றும் கூடுதல் பெயர்களில் இருந்து சுமார் 300 திறன் பெற்றவர்களை பரிந்துரைக்கும். தேர்வு நோபல் பரிசு குழு, பின்னர் தொடர்புடைய துறைகளில் நிபுணர்களின் ஆலோசனை பிரதிபலிக்கும் ஒரு அறிக்கை உருவாக்குகிறது. இது, ஆரம்ப வேட்பாளர்கள் பட்டியலை சேர்த்து, பரிசு வழங்கும் நிறுவனங்களில் சமர்ப்பிக்கப்படும். இது, ஒரு பெரும்பான்மை வாக்குகளை ஒவ்வொரு துறையில் பரிசு பெற்றவர்களின் தேர்வைச் சந்திக்கின்றது. அதிகபட்சமாக மூன்று பரிசு பெற்றவர்கள் மற்றும் இரண்டு வெவ்வேறு படைப்புகள் உடையவர்கள் ஒவ்வொரு விருதுக்கான தேர்வாக இருக்கலாம். நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கூடிய அமைதி பரிசு தவிர, விருதுகளை தனி நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட முடியும். அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லையெனில், அதற்கான பணத்தை அறிவியல் சார்ந்த பரிசுகளுக்கு இடையே பிரித்து தரப்படும். இதுபோல இதுவரை 19 முறை நடந்துள்ளது. விருது வழங்கும் விழா வருடந்தோறும் நோபெல் அவர்களின் நினைவு தினமான டிசம்பர் மாதம் பத்தாம் நாள் அன்று, அமைதிக்கான நோபெல் பரிசு தவிர மற்ற அனைத்து நோபெல் பரிசுகளும், சுவீடனில் உள்ள ஸ்டோக்ஹோம் நகரத்தில் வழங்கப்படுகின்றன. பரிசு பெறுவோரின் சொற்பொழிவு, இந்நிகழ்ச்சியின் முன்தினம் நடை பெறுவது வழக்கம். அதே டிசம்பர் பத்தாம் நாள், நோர்வேயில் உள்ள ஒஸ்லோ நகரில், அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கும் விழா மற்றும் பரிசு பெறுவோரின் சொற்பொழிவும் நடைபெறும். ஆல்ஃபிரட் நோபெல் உயில் எழுதும் சமயத்தில் நோர்வேவும் சுவிடனும் ஒரே கூட்டுப்பிரதேசமாக இருந்ததால், நோர்வேயில் அமைதிக்கான பரிசும், சுவிடனில் மற்ற பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியும், இதனையொட்டி நடைபெறும் விழாக்களும், சமீப காலமாக உலகளாவிய நிகழ்ச்சியாக விளங்குகின்றன. நோபல் பரிசும் தமிழரும் நோபல் பரிசினை இதுவரை மூன்று தமிழர் பெற்றுள்ளனர். இந்தப் பெருமைக்குரியோர் ச. வெ. இராமன் (1930), சுப்பிரமணியன் சந்திரசேகர் (1983), வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (2009) ஆவர். இவற்றையும் பார்க்கவும் நோபல் பரிசு சர்ச்சைகள் நோபெல் பரிசு பெற்றவர்கள் பட்டியல் அமைதிக்கான நோபெல் பரிசு இயற்பியல் நோபல் பரிசு பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு விக்கிமுலம்:இயற்பியலுக்கான நோபெல் பரிசு விரிவுரைகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் — அதிகாரப்பூர்வ தளம் of the of the — an unofficial site பகுப்பு:நோபெல் பரிசு பகுப்பு:பரிசுகளும் விருதுகளும்
நோபல் பரிசு எந்த ஆண்டு முதல் முதலில் வழங்கப்பட்டது?
1901
557
tamil
b2ad5b6d2
இந்தியாவில் 29 மாநிலங்களும், டெல்லி தேசிய தலைநகரப் பகுதி உள்ளிட்ட 7 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும் உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பாண்டிச்சேரி, டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் நடுவண் அரசினால் நியமிக்கப்படும் ஆளுனர்களைக் கொண்ட, குடியரசுத்தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும். 1956 ஆம் ஆண்டில், மாநிலங்கள் மீளமைப்புச் சட்டத்தின் கீழ் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதன் பின்னர், வட இந்தியப் பகுதிகளில் சில புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. மாநிலங்களும், ஒன்றியப் பகுதிகளும், மாவட்டங்கள் என்ற சிறிய நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆளுமை பகுதிகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல் பிரதேசம் அசாம் பீகார் சத்தீஸ்கர் கோவா குஜராத் அரியானா இமாசலப் பிரதேசம் ஜம்மு காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகம் கேரளம் மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரம் மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ் நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரப் பிரதேசம் உத்தரகண்ட் மேற்கு வங்காளம் யூனியன் பிரதேசங்கள் என்றழைக்கப்படும் ஒன்றிய பகுதிகள்: அந்தமான் நிக்கோபார் தீவுகள் சண்டிகர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தாமன், தியு லட்சத்தீவுகள் தில்லி புதுச்சேரி மாநிலங்களும் அவற்றின் தலைநகரங்களும் இந்திய மாநிலங்களின் உருவாக்கம் தற்போதைய இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், பூட்டான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியிருந்த பிரித்தானிய இந்தியா இரண்டு விதமான துணை அரசியல் அலகுகளைக் கொண்டிருந்தது. மாகாணங்கள், வைஸ்ராயினால் நியமிக்கப்பட்ட, ஆளுனர் அல்லது சிறப்பு ஆணையர் தரத்திலுள்ள பிரித்தானிய அதிகாரிகளால் நேரடியாக ஆளப்பட்டன. சமஸ்தானங்கள், பிரித்தானியரின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட உள்ளூர் பரம்பரை ஆட்சியாளர்களால் ஆளப்பட்டு வந்தன. பிரித்தானிய இந்தியா 15 மாகாணங்களைக் கொண்டிருந்தது: அஜ்மேர்-மேர்வாரா, அசாம், பலுச்சிஸ்தான், வங்காளம், பிகார், பம்பாய், மத்திய மாகாணங்களும், பெராரும், கூர்க், டெல்லி, மதராசு, வடமேற்கு எல்லை, ஒரிசா, பஞ்சாப், சிந்து, மற்றும் ஐக்கிய மாகாணங்கள். பிரித்தானிய இந்தியாவில், பல்வேறு அளவுகளில் பல சமஸ்தானங்களும் இருந்தன. இவற்றுள், ஒரு கோடிக்கு மேல் மக்கள்தொகையைக் கொண்ட ஐதராபாத் தொடக்கம், மிகச் சிறிய சமஸ்தானங்கள் வரை அடங்கி இருந்தன. இவற்றை விட வேறு இரு ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவில் சில நிலப்பகுதிகளை ஆண்டு வந்தன. போத்துக்கீச இந்தியா, கோவா, தமனும் தியுவும், தட்ராவும் நாகர் ஹவேலியும் ஆகிய கரையோரப் நிலப்பகுதிகளையும், பிரெஞ்சு இந்தியா, சண்டர்நகர், ஏனாம், பாண்டிச்சேரி, காரைக்கால், மாகே ஆகிய ஐந்து நிலப்பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தன. 1947ல் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது, மேற்படி மாகாணங்களும், சமஸ்தானங்களும், இரு நாடுகளுக்கும் இடையே பங்கிடப்பட்டன. பஞ்சாப், வங்காளம் ஆகிய இரண்டும் மட்டும், சமய அடிப்படையில் பிரித்து வழங்கப்பட்டன. ஐதராபாத்தின் இசுலாமிய ஆட்சியாளர் சுதந்திரமாக இருக்க முயன்றார் என்றாலும், இந்தியப் படை தலையிட்டு அதனை இந்தியாவுடன் இணைத்தது. ஜம்மு காஷ்மீருக்கு இரு நாடுகளுமே உரிமை கோரின. பெரும்பான்மை மக்கள் இசுலாமியர்களாக இருந்தார்கள். இந்துவாக இருந்த ஜம்மு காஷ்மீரின் ஆட்சியாளர் நாட்டை இந்தியாவுடன் இணைத்தார். 1950 ல், இந்திய அரசியல் சட்டம் நடப்புக்கு வந்ததுடன், பலவகையான மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. முன்னர் மாகாணங்களாயிருந்த, பிரிவு A மாநிலங்கள், ஆளுனராலும், தெரிவுசெய்யப்பட்ட சட்டசபையாலும் ஆளப்பட்டன. இந்தப் பிரிவில் அடங்கிய ஒன்பது மாநிலங்களாவன: அசாம், மேற்கு வங்காளம், பீகார், பம்பாய், மத்தியப் பிரதேசம் (முன்னர் மத்திய மாகாணங்களும், பெராரும்), மதராஸ், ஒரிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் (முன்னாள் ஐக்கிய மாகாணங்கள்). சென்னை மாகாணத்திலிருந்து தெலுங்கு பேசும் பகுதிகளை பிரித்து தனியாக ஆந்திர மாநிலம் உருவாக்கப்படவேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையின் ஒருபகுதியாக பொட்டி சிறீராமலு என்பவர் 58 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க 1953 அக்டோபர் 01 ஆம் நாள் ஆந்திரம் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. அதே ஆண்டில் பாசல் அலி என்பவரைத் தலைவராகவும் பணிக்கர், குன்சுரு போன்ற உறுப்பினர்களைக் கொண்ட மாநில மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் மொழியை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களை சீரமைக்க அறிவுறுத்தியது. இந்தக் குழுவின் பரிந்துரைகளின் பேரில் 1956 ஆம் ஆண்டில் மாநில சீரமைப்புச் சட்டம் நிறைவேற்றப் பட்டது. இந்தியா 14 மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. இதே அடிப்படையில் மகாராஷ்டிராவில் இருந்து குஜராத் (1960) பிரிக்கப்பட்டது. பின்னர் வந்த ஆண்டுகளில் மேலும் பல மாநிலங்கள் உருவாயின. 1963ல் நாகாலாந்து, 1966ல் அரியானா, 1971ல் இமாச்சலப் பிரதேசம், 1972ல் திரிபுரா, மேகலா மற்றும் மணிப்பூர், 1975ல் சிக்கிம், 1987ல் மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 2000 ஆவது ஆண்டில் சத்தீஸ்கர், உத்திராஞ்சல் மற்றும் ஜார்கண்ட் என மேலும் மூன்று மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 2014 ஆவது ஆண்டில் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலம் இந்தியாவின் 29 ஆவது மாநிலமாகும். இவற்றையும் பார்க்கவும் சனத்தொகை அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல் வெளியிணைப்புகள் பகுப்பு:இந்திய ஆட்சிப் பிரிவுகள் * பகுப்பு:இந்தியப் பட்டியல்கள்
இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?
29
12
tamil
b80726212
மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் இயங்கும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல், சமிபாடு (செரிமானம்), இதயத்துடிப்பு, கொட்டாவி[1] போன்ற செயற்பாடுகளையும்,[2] விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மற்ற எல்லா உயிர்களையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது. மனிதனின் மூளை, மற்ற பாலூட்டிகளின் மூளையின் பொது வடிவத்தினை பலவாறு ஒத்திருப்பினும், அவற்றின் மூளைகளைக் காட்டிலும் உடல் எடை-மூளை அளவு விகிதத்தில் குறைந்தது ஐந்து மடங்கு பெரியது. இதற்குக் காரணம், மனித மூளையின் நன்கு விரிவடைந்த பெருமூளைப் புறணிப் (cerebral cortex) பகுதியாகும். நரம்பிழையத்தால் (neural tissue) உருவாகி, பல தொடர் மடிப்புகளை கொண்ட இப்பகுதி மனிதனின் முன்மூளையில் அமைந்துள்ளது. குறிப்பாக, பிற விலங்குகளில் இருந்து மனிதனைப் பிரித்துக்காட்டும் சிறப்பு செயல்பாடுகளான, தற்கட்டுப்பாடு, திட்டமிடல், பகுத்தறிதல், கற்றறிதல் ஆகியவற்றிக்குக் காரணமான மூளையின் முன் மடல்கள் மனித மூளையில் நன்கு விரிவடைந்து காணப்படுகின்றன. மேலும், கண் பார்வைக்குக் காரணமான பகுதியும் மனித மூளையில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது. மூளையின் படிவளர்ச்சியில், மிக முந்திய சிறிய பாலுட்டியான மூஞ்சூறில் இருந்து மனிதக் குரங்கு வழியாக உயர்நிலை விலங்கினங்களில் ஒன்றான மனிதன் வரை மூளை-உடல் அளவு விகிதம் படிப்படியாக உயர்ந்துள்ளது; இதை மூளைப் பருமனாக்கம் (encephalisation) என்று அழைக்கின்றனர். மனித மூளையில் உள்ள சுமார் 50–100 பில்லியன் (5000-10000 கோடி) நரம்பணுக்களில் (1011), சுமார் 10 பில்லியன் நரம்பணுக்கள் (1010) புறணிக் கோபுர உயிரணுக்கள் (cortical pyramidal cells) ஆகும். இவ்வுயிரணுக்கள் தமக்குள் சமிக்கைகளை (குறிகைகளை) அனுப்பி கொள்ள ஏறத்தாழ 100 டிரிலியன் (1014) நரம்பிணைப்புகளைப் பயன்படுத்துகின்றன. மனித மூளை, தடிப்பான மண்டையோட்டின் எலும்புகளாலும், மூளை முதுகுத் தண்டுநீர்மம் (cerebrospinal fluid) என்னும் நீர்மத்தாலும், அதிர்வுகளிலிருந்தும், வெளிச் சேதங்களிலிருந்தும், குருதி-மூளை வேலி (blood-brain barrier) என்னும் அமைப்பின் மூலம் இரத்த மண்டத்திலிருந்தும், இரத்தம் மூலம் பரவும் நோய்களில் இருந்தும் தீங்குறாமல் பெரிதும் பாதுகாக்கப்படுகிறது. ஆனாலும், அதன் மென்மையான தன்மையால் பல வகை நோய்களாலும், சேதங்களாலும் தீங்குகள் ஏற்படுவது தவிர்க்க இயலாதது. பொதுவாக மூளையில் ஏற்படும் சேதங்கள், உள் தலை காயங்கள் (closed head injuries) எனப்படும் வகையை சார்ந்த, தலையில் ஏற்படும் காயம், மூளையில் இரத்த தடை ஏற்படுவதால் ஏற்படும் பக்கவாதம் (stroke), நரம்பு நச்சுகள் (neurotoxin) எனப்படும் வேதியியல் நச்சுப் பொருட்களால் பாதிக்கப்படுதல் ஆகியன குறிப்பிடத் தக்கவை. மூளை தொற்றுநோய்களால் பாதிக்கப்படுவது மிக அரிதானது. ஏனெனில், இரத்த மண்டலத்தில் கலந்து உடல் உறுப்புக்களைத் தாக்கக் கூடிய பெரும்பாலான பாக்டீரியா கிருமிகளை, மனித மூளையில் குருதி-மூளை வேலி என்ற அமைப்பு வடிகட்டி விடுவதன் மூலம், மூளை தொற்றுநோய் நுண்ணுயிரிகளில் இருந்து பெரும்பாலும் பாதுகாக்கப் படுகிறது. இருப்பினும், மூளை பாக்டடீரியாவால் அரிதாக தாக்கப்படும் போது, பிறஒருளெதிரி (antibodies) மூலம் சிகிச்சை அளிப்பது மிக கடினமானதாகிறது. ஏனெனில் இதே குருதி-மூளை வேலி அமைப்பு நோய் எதிர்ப்பு மருந்துகளையும் தடுத்து நிறுத்தி விடுவதே காரணம். தீநுண்மம் (வைரசு) எளிதாக குருதி-மூளை வேலியை தாண்ட வல்லவை. இவை இரத்தத்தில் உள்ள வெண்குருதியணுக்களுடன் சேர்ந்து தாண்டுகின்றன. இவை தவிர பொதுவாகக் காணப்படும் பல மரபியல் நோய்களும் மூளையைத் தாக்க வல்லவை. அவற்றுள், நடுக்குவாதம் (பார்கின்சன் நோய்), உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமே நரம்பு மண்டலத்தை தாக்கும் மல்டிபிள் சுகுலோரோசிஸ் (multiple sclerosis) ஆகியவை முக்கியமானவை. உளவியல் நோய்களான உளச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை, மந்த அறிவு ஆகியவையும் மூளையில் ஏற்படும் மாற்றங்களால் தோன்றுகின்றன. அமைப்பு மாந்தரில் ஒரு சராசரி ஆணின் மூளை சுமார் 1.5 கிலோகிராம் எடையும்,[3] 1260 கன சென்டிமீட்டர் அளவும் உடையது. பெண்ணின் மூளை சுமார் 1130 கன சென்டிமீட்டர் (cc) அளவுடையது.[4] மனிதன் உயிருடன் இருக்கும்போது, மூளையின் வெளிப்பரப்பு அடர்த்தியான சாம்பல் நிறத்திலும், உள்நிறை மஞ்சள், வெள்ளை நிறமாகவும் காணப்படுகிறது. வலது புறத்தில் உள்ள புகைப்படத்தில் மூளையின் நடுவில் கிடைமட்ட குறுக்குவெட்டு தோற்றம் காட்டப்பட்டுள்ளது. இப்படத்தில் பெருமூளைப் புறணியையும் (மடிப்புகள் நிறைந்த பகுதி) வெண்பொருளையும் காணலாம். கோடிக்கணக்கான மயலின் உடைய நரம்பிழைகள் (myelinated fibre) வெண்பொருளையும், பெருமூளைப் புறணியையும் இணைக்கின்றன. 20 வயதான ஆணின் மூளையில் உள்ள மயலின் உடைய நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 176,000 கிலோமீட்டர். அதே வயதில் பெண்ணின் மூளையில் உள்ள மயலின் உடைய நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 149,000 கிலோமீட்டர்.[5] மூளையின் மேல் பகுதியில், மடிப்புகளை உடைய பெருமூளைப் புறணிப் பகுதி, இரண்டு அரைக் கோளங்களாக அமைந்திருப்பதால், அவை பெருமூளை அரைக்கோளங்கள் (cerebral hemispheres) என்று அறியப்படுகின்றன. இப்பகுதியே மூளையின் பெரிய பகுதி.[6] பெருமூளை அரைக்கோளங்களுக்குக் கீழே அவற்றை இணைத்தவாறு அமைந்துள்ள தண்டுப் பகுதி மூளைத்தண்டு என்று அழைக்கப்படுகிறது. மூளையின் பின்பகுதியில், பெருமூளைப் புறணிக்கு கீழே, மூளைத்தண்டிற்கு பின்பகுதியில் உள்ள பகுதி சிறுமூளை (cerebellum) என்று அறியப்படுகிறது. இப்பகுதியில் கிடைவாக்கில் வரிவரியான பள்ளம் போன்ற அமைப்பு உள்ளமையால், மூளையின் மற்ற பகுதிகளை விட தோற்றத்தில் மாறுபட்டதாக காணப்படுகிறது. மற்ற பாலூட்டி இனங்களிலும் காணப்படும் சிறுமூளை, மூளையின் சிறிய பகுதிகளில் ஒன்று. மேலும், பொதுவான விதியாக ஓர் உயிரினத்தின் சிறுமூளை எவ்வளவு சிறிதாக உள்ளதோ, அதே அளவு அதன் பெருமூளைப் புறணி பகுதி குறைந்த மடிப்புகளை கொண்டதாக இருக்கும். எலி, சுண்டெலியின் பெருமூளைப் புறணி பகுதி மடிப்புக்களே இன்றி வழுவழுப்பான பகுதியாக இருப்பது இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக அமையும். பாலூட்டிகளில் மிகப்பெரியதான திமிங்கலமும், ஓங்கிலும் (dolphin) மனிதனை விட மிக அதிகமான மடிப்புகளைப் பெருமூளைப் புறணிப் பகுதியில் கொண்டுள்ளன. மனித மூளையின் சிறப்பு வேறுபாடு மிகப் பெரிய அளவிலான பெருமூளைப் புறணிப் பகுதியாகும். மனிதனில் மிகப்பெரிதாக இருப்பதால் அது மூளையின் ஏனைய பகுதிகளை முழுவதும் மறைத்தவாறு காணப்படுகிறது. மனிதனின் சிறுமூளை மற்ற பாலூட்டிகளை விட அளவில் பெரியது. மனிதனின் பெருமூளைப் புறணி அளவில் மட்டுமல்லாது மூளையின் செயல் பாட்டிலும் பெரும் பங்கு வகிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு எலியின் பெருமூளைப் புறணிப் பகுதி அறுவை முறையில் அகற்றப்பட்ட நிலையிலும், அவ்வுயிரினத்தால் நடக்கவும், உண்ணவும், வெளிப்புற மாற்றங்களை உணரவும் இயலும். ஆனால் பெருமூளைப் புறணி பாதிப்படைந்த நிலையில் உள்ள ஓர் மனிதன், நிரந்தர ஆழ்மயக்க (coma) நிலைக்கு உட்படுவான். பெருமூளைப் புறணி தோராயமாக ஈடான வலது-இடது அரைக் கோளங்களாக பிரிக்கப்படுகிறது.உடற்கூறு வல்லுநர்கள் ஒவ்வொரு அரைக் கோளத்தையும் நான்கு மடல்களாக பிரிக்கின்றனர். அவையாவன, முன் மடல் (frontal lobe), சுவர் மடல் (parietal lobe), பக்க மடல் (temporal lobe), மற்றும் பிடரி மடல் (occipital lobe). இப்பிரிவுகளின் பெயர்கள் அப்பிரிவுகளின் அருகில் இருக்கும் மண்டையோட்டு எலும்புகளின் பெயருக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பெருமூளைப் புறணி பகுதி, ஓர் அகலமான பெரிய நரம்பணு இழைய விரிப்பை பல மடிப்புகளாக மடிப்பதன் மூலம் சுருக்கி குறுகிய மண்டையோட்டினுள் வைத்தது போன்ற வடிவத்தையுடையது. ஒவ்வொரு பெருமூளைப் புறணி அரைக்கோளத்தில் உள்ள நரம்பணு இழையத்தை மடிப்புகளை அகற்றி விரித்தால் அவற்றின் பரப்பளவு சுமார் 1.3 சதுர அடியாகும்.[7] உடற்கூறு வல்லுநர்கள் இத்தகைய மடிப்புகளால் ஏற்படும் பள்ளத்தை வரிப்பள்ளம் (sulcus) எனவும், ஒவ்வொரு வரிப்பள்ளத்துக்கும் இடையே உள்ள வழுவழுப்பான பகுதியை மடிமேடு (gyrus) எனவும் குறிப்பிடுகின்றனர். பொதுவாக எல்லா மனிதர்களின் மடிப்புகளும் ஏறத்தாழ ஒரே வடிவத்தைக் கொண்டிருப்பினும், வேறுபாடுகளை அறியத்தக்க அளவில் அவை வடிவத்திலும், மதிப்புகளின் அமைவிடத்திலும் சில மாறுதல்களைக் கொண்டு தனித்தன்மையுடன் விளங்குகின்றன. இருப்பினும், சில பெரிய மடிப்புகளை எல்லா மாந்தரிடமும் காண இயலும். பெருமூளைப் புறணியின் வெவ்வேறு பகுதிகள், வெவ்வேறான புலனறிவுத் திறன்களை (எ.கா, பார்த்தல், கேட்டல், உணர்தல்) கற்று ஆளும் திறனை பெற்றுள்ளன. இதனை பல்வேறு வழிகளின் மூலம் உறுதிப்படுத்த இயலும்: மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதி சேதமடைதல், ஒரு குறிப்பிட்ட புலனை மட்டுமே பாதித்தல், காந்த ஒத்ததிர்வு வரைவு (magnetic resonance imaging) நுட்பத்தின் சிறப்பு வரைவு முறையான வினைசார் காந்த ஒத்ததிர்வு வரைவு (functional magnetic resonance imaging அல்லது fMRI) மூலம் ஓர் குறிப்பிட்ட புலனையும் அதனை ஆளும் மூளையின் குறிப்பிட்ட பகுதியையும் அறிதல், பெருமூளைப் புறணியின் இழைய கட்டமைப்பை ஆராய்தல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. உடற்கூறு வல்லுனர்களின் கருத்துப்படி நுண்ணோக்கி துணை கொண்டு பெருமூளைப் புறணி இழையத்தை சுமார் 6 அடுக்குகளாக பிரிக்க இயலும். ஆயினும், பெருமூளையின் அனைத்து இடங்களிலும் இவ்வடுக்குகளை பிரித்துக் காண இயலாது. பல உடற்கூறு வல்லுனர்கள் புறணியில் உள்ள இவ்வடுக்குகளை வரைபடமாக குறித்துள்ளனர். இவர்களில் முதன்மையானவராக அறியப்படும் பிராட்மேன் மூளையின் பல்வேறு பாகங்களை 52 பிரிவுகளாக குறித்துள்ளார். (பின்னாளில் உடற்கூறு வல்லுநர்கள் அதனை மேலும் பல உட்பிரிவுகளாக பிர்த்துள்ளனர்). இடவிளக்கவியல் இயக்கப் புறணி முதன்மை இயக்கப் புறணி (primary motor cortex) என்ற பட்டையான நரம்பு இழையம் படத்தில் காட்டியுள்ளபடி நடு வரிப்பள்ளத்தின் (central sulcus) முன்புற ஓரத்தில் அமைந்துள்ள ஒரு இயக்கப் புறணி (motor cortex) ஆகும். இயக்கப் புறணிகள் உடம்பில் உள்ள, மனிதனின் விருப்பத்துக்கேற்ப இயங்கக் கூடிய தசைகளுக்கு ஆணைகளை அனுப்பி கட்டுப்படுத்தும் பகுதிகளாகும். வலது புறத்தில் உள்ள வரைபடம் மூலம் மூளையின் இயக்கப் புறணிகளில் ஒன்றான முதன்மை இயக்கப் புறணியில், உடம்பில் உள்ள பாகங்களின் இயக்க கட்டுப்பாட்டு பகுதிகளை வரிசை முறையே ஒழுங்கு படுத்தி இருப்பதை அறிய முடிகிறது. அதாவது, முதலில் கால் பாதம், அதை தொடர்ந்து கால்கள், தொடை, அடிவயிறு என்று உடம்பில் பாகங்கள் எவ்வரிசையில் அமைந்துள்ளனவோ, அதே வரிசையில் மூளையிலும் அவற்றின் கட்டுப்பாட்டு பகுதிகள் அமைக்கப் பட்டுள்ளன. புறணியின் ஒரு பகுதியை மின்கிளர்ச்சியூட்டினால், அப்பகுதி கட்டுப்படுத்தும் உடல் உறுப்பின் தசையில் இறுக்கம் ஏற்படுவதையும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். ஆயினும், ஒவ்வொரு உறுப்பும் வெவ்வேறு அளவு புறணி நரம்பிழையத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக,மனிதனின் தலையில் உள்ள உறுப்புகளை கட்டுப்படுத்தும் புறணி நரம்பிழையம், முதுகினை கட்டுப்படுத்தும் புறணி நரம்பிழையத்தை விட மூன்று மடங்கு அளவில் பெரிது. எந்த அளவு ஒரு உடல் உறுப்பினை கட்டுப்படுத்தும் புறணி நரம்பிழையம் செரிவுமிக்கதாக (பெரிய அளவினை உடையதாக) அமைந்துள்ளதோ, அதே அளவு அவ்வுறுப்பின் இயக்க கட்டுப்பாடும், புலன் பாகுபடுத்தி அறியும் திறனும் அமையும். இக்காரணத்தால், மனிதனின் உதடு, நாக்கு, விரல்கள், முக தசைகள் ஆகிய அவயங்கள் சிறிதாக இருப்பினும் பல நுண்ணிய செயல்பாடுகளை ஆற்றுவதால் ( எ.கா, நாக்கு,உதடு - பேசுதல்) அவற்றைக் குறிக்கும் புறணி நரம்பிழையத்தின் அளவு பெரிதாக அமைந்துள்ளது. பார்வைப் புறணி மனிதனின் பார்வைக்கான புறணி நரம்பிழைய அமைப்புகள், கண்ணின் பின்புறம் அமைந்துள்ள விழித்திரையின் (retina) அமைப்பினை ஒத்துள்ளன. மனிதனின் கண்ணை வந்தடையும் ஒளியினை சமிக்கைகளாக மாற்றும் விழித்திரையின் ஒவ்வொரு நரம்பணுவும், இப்பகுதியில் சில புறணி நரம்பணுக்களால் குறிக்கப்படுகின்றன. அதிலும், விழித்திரையின் நடுவில் உள்ள நரம்பணுக்களுக்கு (பார்வையின் நடுவில் இருக்கும் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில்) விழித்திரையின் ஓரத்தில் உள்ள நரம்பணுக்களை விட அதிக அளவு பார்வை புறணி நரம்பணுக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பெருமூளைப் புறணியில் உள்ள பார்வைப் புறணியில் (visual cortex) விழித்திரையினில் விழும் ஒரு காட்சியின் தோற்றங்களை பல்வேறு கோணங்களில் ஆராய நூற்றுக்கணக்கான வெவ்வேறு விழித்திரை ஒப்புருவ வரைவுகள் (retinotopic maps) உள்ளன. இவற்றின் மூலம் ஒரு தோற்றம், ஒரே நேரத்தில் பல கோணங்களில் ஆராயப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப் படுகிறது. முதன்மைப் பார்வைப் புறணி (primary visual cortex) (பிராட்மேன் வகைப்பாட்டில் 17வது பகுதி), கண்ணில் இருந்து வரும் நரம்பு சமிக்கைகளை முன்மூளை உள்ளறை (thalamus) வழியே நேரடியாகப் பெறுகிறது. இப்பகுதி பெறப்பட்ட தோற்ற சமிக்கைகளில் உள்ள முக்கிய சிறப்பியல்புகளை (visual feature) எளிதாக பிரித்தெடுக்க வல்லது. முன்மூளை உள்ளறை முன்மூளையில் உள்ள கோள வடிவிலான, சாம்பல் நிற பொருளாலான, இரண்டு பெரிய அறைகளை குறிக்கும். இவை பெருமூளைப் புறணிக்கு புலன்களில் இருந்து வரும் சமிக்கைகளை தம் வழியே அனுப்புகின்றன. காட்சியில் இருந்து பொருளின் நிறம், இயக்கம், வேகம், வடிவம் ஆகியவற்றை முதன்மைப் பார்வைப் புறணிக்கு அடுத்து ஆராயும் பார்வை புறணிகள் கண்டறிகின்றன. கேட்டல் புறணி கேட்டல் புலன் பகுதி, இடமகன்ற தொனியொழுங்கு முறையில் அமைக்கப்பட்ட ஒப்பு வரைவுகளைக் (tonotopic maps) கொண்டது. இடமகன்ற தொனியொழுங்கு முறை என்பது மனிதன் கேட்கும் ஒவ்வொரு மாறுபட்ட தொனியும் (ஒலி அதிர்வெண்ணும்), கேட்டல் புறணியின் வெவ்வேறு இடத்தை கிளர்ச்சி அடையச் செய்தல் ஆகும். சுருக்கமாக, தொனியின் அதிர்வெண்ணைக் கொண்டு, இடமகன்ற வெளியில் ஒழுங்கு படுத்துதல் என்ற பொருள்படும். கேட்டல் புறணியின் பல்வேறு பகுதிகளில் நிகழும் கிளர்ச்சிகளின் மொத்தக் கூட்டு தரும் இணைவுப் பொருத்தம் (combination) ஒரு சொல்லை உருவாக்கும். ஒலிகள் அவை தரும் அதிர்வெண்ணை (அதாவது, உச்ச சுருதி அல்லது தாழ்ந்த சுருதி) கொண்டே பிரித்துணரப் படுகின்றன. பார்வை அமையம் (visual system) போன்றே, கேட்டல் பகுதியிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடமகன்ற தொனியொழுங்கு முறையில் அமைக்கப்பட்ட புறணி ஒப்பு வரைவுகள் (tonotopic cortical maps) உள்ளன. ஒவ்வொரு ஒப்பு வரைவும் வெவ்வேறு வகையில் ஒலியினை ஆராய விழைகின்றன. வினை இடமறிதல் வினை இடமறிதல் என்பது மூளையின் ஒவ்வொரு கட்டுப்பாட்டு பகுதியையும், அது கட்டுப்படுத்தும் உறுப்பின் செயல்பாடுகளையும் கண்டறிந்து அவற்றை ஒன்றுடன் ஒன்று பொருத்துதல் எனலாம். பெருமூளையின் ஒவ்வொரு அரைக் கோளமும், உடம்பின் ஒரு பாகத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும், வலது பக்க மூளை உடம்பின் இடப்பக்க உறுப்புகளையும், இடப்பக்க மூளை உடம்பின் வலப்பக்க உறுப்புகளையும் கட்டுப்படுத்துவது குறிப்பிடத்தக்கது. இதே முறையிலேயே, மூளைக்கும், முதுகுத் தண்டுக்கும் இடையே உள்ள இயக்க இணைப்புகளும் (motor connections), புலன் இணைப்புகளும் (sensory connections), மூளைத்தண்டின் நடுப்பகுதியில், வலது இடதாகவும், இடது வலமாகவும் இடம் மாறுகின்றன. கலைச் சொற்கள் frontal lobe - முன் மடல் parietal lobe -சுவர் மடல் temporal lobe -பக்க மடல் occipital lobe -பிடரி மடல் cerebellum - சிறுமூளை cerebral hemispheres - பெருமூளை அரைக்கோளங்கள் cerebral - பெருமூளை cortex - புறணி (புறத்தே இருப்பதால் புறணி) cerebral cortex - பெருமூளைப் புறணி nerve tissue - நரம்பிழையம் myelinated fiber - மயலின் உடைய நரம்பிழை white matter - வெண் பொருள் grey matter - சாம்பல் நிறப் பொருள் closed head injuries - உள் தலை காயங்கள் brain stem - மூளைத்தண்டு coma - ஆழ்மயக்கம் sulcus -வரிப்பள்ளம் gyrus -மடிமேடு functional magnetic resonance imaging அல்லது fMRI - வினைசார் காந்த ஒத்ததிர்வு வரைவு primary motor cortex- முதன்மை இயக்கப் புறணி thalamus - முன்மூளை உள்ளறை hypothalamus - முன்மூளை கீழுள்ளறை இவற்றையும் பார்க்கவும் உடல் உறுப்புக்கள் மனித மண்டையோடு முள்ளந்தண்டு மேற்கோள்கள் மேலும் படிக்க Unknown parameter |coauthors= ignored (|author= suggested) (help) Unknown parameter |coauthors= ignored (|author= suggested) (help) Unknown parameter |coauthors= ignored (|author= suggested) (help) Unknown parameter |coauthors= ignored (|author= suggested) (help) Unknown parameter |coauthors= ignored (|author= suggested) (help); Cite journal requires |journal= (help) Simon, Seymour (1999). The Brain. HarperTrophy. ISBN 0-688-17060-9 Thompson, Richard F. (இரண்டாயிரம்.The Brain: An Introduction to Neuroscience. Worth Publishers. ISBN 0-7167-3226-2 Campbell, Neil A. and Jane B. Reece. 2005<i data-parsoid='{"dsr":[19468,19479,2,2]}'>Biology. Benjamin Cummings. ISBN 0-8053-7171-0 வெளி இணைப்புகள் ScienceDaily – an article by Hans Moravec — Provided by New Scientist. About differences between female and male brains. பகுப்பு:மூளை பகுப்பு:நரம்பியல் பகுப்பு:விலங்கின உடற்கூற்றியல் en:Human brain
மனித முளை எந்த நிறத்தில் இருக்கும்?
வெளிப்பரப்பு அடர்த்தியான சாம்பல் நிறத்திலும், உள்நிறை மஞ்சள், வெள்ளை
3,726
tamil
a5ddec2d9
ஜலாலுதீன் முகமது அக்பர் (உருது: جلال الدین محمد اکبر, ஜலால் உத்-தீன் முகம்மத் அக்பர்), அல்லது பேரரசர் அக்பர் (Akbar, 15 அக்டோபர் 1542 – 27 அக்டோபர் 1605),[3][4] முகலாயப் பேரரசின் மன்னராக 1556 முதல் இறக்கும் வரை பதவியில் இருந்தவர். ஹிமாயுன், ஹமீதா பானு இவர்களுக்கு பிறந்தவர் தான் அக்பர், இவரது தந்தை மன்னர் நசிருதீன் ஹுமாயூன் இறந்ததை அடுத்து தனது 13வது அகவையில் ஆட்சிக்கு வந்தார். இவரே முகலாயப் பேரரசின் மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவர் எனக் கருதப்படுபவர். இவரின் இயற்பெயர் ஜலாலுதீன் அக்பர் [5][6]. இவரது ஆட்சிக் காலத்தில் ஆப்கானிய மன்னர் ஷேர் ஷா சூரியின் வழித்தோன்றல்களின் இராணுவத் தாக்குதல்களை முறியடித்தார். முகலாயப் பேரரசுப் படைகள் இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஹேமு என்பவனின் படைகளை பானிபாட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் 1556 இல் தோற்கடித்தன[7][8][9].பேரரசர் அக்பர் வலிமைமிக்க ராஜபுத்திர்ர்களின் குடும்பத்தைச் சார்ந்த இளவரசிகளை மணந்து அதன் மூலம் அவர்களின் நட்பை பலப்படுத்தினார்.[8][10] அக்பர் ஒரு சிறந்த கலைஞர் ஆவார். அவர் ஒரு சிறந்த போர் வீரர் ,கலைஞானி ,தச்சு வேலை, கொல்ல வேலைகள் தெரிந்திருந்ததோடு, போர்க்கருவிகளையும் கலை நுணுக்கத்துடன் சேமித்து வைத்துக் கையாளத் தெரிந்த போர் வீரரும் ஆவார். அவர் பேரரசர் மட்டுமல்லாமல் பரந்த மனம் படைத்தவர். அவர் சிறந்த கண்டுபிடிப்பாளர். விலங்குகளைப் பயிற்றுவிக்கும் நல்ல பயிற்சியாளர். தனது ஆட்சியின் போது அவர் ஆயிரக்கணக்கான காட்டு வகைப் பூனைகளைச் சிறந்த முறையில் தானாகவே பயிற்றுவித்தார். அவர் சிறந்த போர்க் காலணி நாடாக்களைத் தயாரிப்பதில் வல்லவர். அவர் சிறந்த தொழில் நுட்ப கலைஞர் மற்றும் தத்துவஞானியும் ஆவார்.[11] கலைகளுக்கு அவர் ஆற்றிய சேவை காலம் காலமாக சொல்லப்படவேண்டிய ஒன்று ஆகும். அக்பர் பல இலக்கியங்களை ஒரு சேரத் தொகுப்பதற்கு வழி வகை செய்தார். அவைகளில் அக்பர் நாமா அயினி அக்பரி போன்றவைகளும் அடங்கும். மொகலாய வழியில் வந்து சேர்ந்த பல கலைகளைப் பற்றிய தகவல்களையும் தொகுப்பதற்கு வழி வகை செய்தார். பல கலை நுணுக்கங்களுடன், பலரும் புகழும் கட்டங்களை கட்டினார். அவர் முதன் முதலில் இழையில் ஆன வீட்டை கட்டினார். மற்றும் அசையும் உருவ முறைகளையும் கண்டு பிடித்தார் [11].அக்பர் மத சம்பந்தமான வாதங்களை சீக்கிய மதத்தினருக்கும், முஸ்லிம் அறிஞர்களுக்கும் இந்து சமயத்தினருக்கும் , இடையே நடத்தினார் . கார்வக கொள்கையை உடையவர்களிடமும் மற்றும் போர்த்துக்கலில் (Portugal) இருந்து வந்த யேசு சபையினருடனும், இசுலாமிய அறிஞர்களுடனும் வாதம் செய்ய வைத்தார். அவர் தனது புதிய மதக் கொள்கையை "தீன் இலாஹி" என பெயர் இட்டு அழைத்தார். அதற்கு "தெய்வீக நம்பிக்கை" என்று பொருள் ஆகும் . இந்த மதம் தனித்துவம் வாய்ந்த கொள்கைகளை உடையதாக இருந்தது . அவருக்குப் பிறகு இந்த மதம் சார்ந்த கொள்கைகள் மறைந்து போயின. அவருடைய மனைவி அக்பரின் மறைவுக்கு பின் இந்த மத கொள்கையைப் பின்பற்றினார்.[8][12] அக்பர் எனும் பெயர் பிறந்த போது அக்பர் பதுருதின் மொகம்மத் அக்பர் என அழைக்கப்பட்டார். ஏனெனில் அவர் பௌர்ணமி = இரவில் பிறந்ததால் அவ்வாறு அழைக்கப்பட்டார். அரபி மொழியில்பத்ரு முழு நிலவு என்று பொருள்) ஹுமாயுன்காபூலைத் தனது வசம் கொண்டு வந்த பிறகு அக்பரின் பிறந்த தேதியும், பிறந்த போது வைக்கப்பட்ட பெயரும் மாற்றி வைக்கப்பட்டது. பெயரானது தீய சக்திகளைத் துரத்தி அடிக்கும் வகையில் மாற்றி வைக்கப்பட்டது.[13] அரபி மொழியில் அக்பர் என்றால் "மிகப் பெரிய" என்று பொருள். உண்மையில் அக்பர் என்ற பெயர், அவருடைய தாய் வழித் தாத்தாவான சாகித் அலி அக்பர் ஜமி என்பவருடைய பெயரைத் தொடர்ந்து கொடுக்கப்பட்டது. இளமை காலம் பேரரசர் அக்பர் அக்டோபேர் 15,1542 அன்று இப்போதைய பாகிஸ்தானில் சிந்து மாநிலம் அமர்கோட்டில் உள்ள ராஜபுதனக் கோட்டையில் பிறந்தார். அப்பொழுது முகலாயப் பேரரசர் உமாயூன் மற்றும் உமாயூனின் இளைய மனைவியான ஹமிதா பானுவும் ஆகியோர் அங்கே அடைக்கலமாக இருந்தார்கள். உமாயூன் பாஸ்துன் (ஆப்கனிஸ்தான்) தலைவன் ஷெர்ஷா சூரியுடனான போரில் தோல்வியுற்று நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.[14] உமாயூனும் மனைவியும் பாரசீகத்துக்குச் சென்றபோது அக்பர் தனது பெற்றோர்களுடன் செல்லவில்லை. அவர் தற்போது மத்தியப் பிரதேசம் என அழைக்கப்படும் ரேவா பகுதியில் இருந்த முகுந்த்பூர் கிராமத்தில் வளர்ந்தார். அக்பரும் இளவரசர் ராம் சிங்கும், இளமைக் காலத்தில் நல்ல நண்பர்களாகப் பழகி வளர்ந்து வந்தார்கள். பிற்காலத்தில் ராம் சிங் ரேவாவின் மகாராஜாவாக ஆனார். கடைசிக் காலம் வரை இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். சிறிது காலத்தின் பின்னர் அக்பர் இன்றைய ஆப்கானிசுத்தானின் ஒரு பகுதியாகிய அன்றைய சஃபாவிட் பேரரசுக்குச் சென்றார். அங்கே அவர் தனது மாமாவான அஸ்கரியாவால் வளர்க்கப்பட்டார். அக்பர் இளமைக் காலத்தில் வேட்டையாடவும், ஓடவும் போரிடவும் கற்றிருந்தார். ஆனால் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளவில்லை. இதுதான் பாபரிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காண்பித்தது.[15] இருந்த போதிலும் அக்பர் மிக சிறந்த விஷயங்கள் அறிந்த ஆட்சியாளர் ஆக மாறினார்.அவர் கலைகள், கட்டடக்கலை, இசை, இலக்கியம், காதல் மற்றும் பரந்த பார்வையுடன் மற்றவர் கருத்தை ஆதரிக்கும் குணத்தையும் கொண்டு சிறந்த ஆட்சியாளராக இருந்தார். இஸ்லாம் ஷாவின் (ஷெர் கான் சூரியின் மகன்) ஆட்சி ஏற்பை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில் உமாயூன் டெல்லியை மீண்டும் 1555-ல் வெற்றி கொண்டார். அவர் ஷா தஹ்மாஸ் கொடுத்த பாரசீகப் படையினரில் ஒரு பகுதியை வழி நடத்திச் சென்று வெற்றி பெற்றார். சில மாதங்கள் கடந்து உமாயூன் இறந்தார். பைராம் கான், அக்பர் ஆட்சி ஏற்பதற்கான ஆயத்தங்களைச் செய்வதற்காக உமாயூனின் இறப்பைத் தந்திரமாகச் சில நாட்கள் மறைத்தார். அக்பர் தனது தந்தையை தொடர்ந்து பிப்ரவரி 14,1556 கிரகேரியன் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். முகலாயப் பேரரசை மீட்பதற்காகச் சிக்கந்தர் ஷாவுடன் நடை பெற்ற போருக்கு நடுவிலேயே இது நடைபெற்றது. பஞ்சாப்பில் உள்ள காலநொவ்ரில் வைத்து 13 வயது அக்பருக்கு பைரம் கானால் முடிசூட்டப்பட்டது. தங்க நிற உடையணிந்து அக்பர் புதிதாக அமைக்கப்பட்ட ஒரு மேடையில் அமர்த்தப்பட்டார்.[16] அக்பர் ஷாஹன்ஷா (பாரசீக மொழியில் இதற்கு " அரசர்" என பொருள் ஆகும்) என அறிவிக்கப்பட்டார். அக்பரின் ஆட்சி ஆரம்ப கால வெற்றிகள் அக்பர் ஷெர்ஷா பரம்பரையிடமிருந்து வந்த அச்சுருத்தலை விலக்க வேண்டுமென்று முடிவு கொண்டு இருந்தார். மற்றும் மூவரில் பலசாலியான பஞ்சாபின் சிக்கந்தர் ஷா சூரியின் படையை வெற்றி கொள்ள வேண்டும் என முடிவு செய்திருந்தார். டெல்லியை அக்பர் டர்டி பைக் கான் ஆட்சியின் கீழ் கொடுத்தார். சிக்கந்தர் ஷா சூரீ பெரிதாக எந்த ஒரு தொல்லையும் கொடுத்ததில்லை. பெரும்பாலும் அக்பர் அவரை நெருங்கிய போதெல்லாம் படையோடு பின் வாங்கினார். இவ்வாறு இருந்த போதிலும் டெல்லியின் மீது இந்து அரசரான ஹெமு என்ற ஹெமு விக்கிரமாதித்யா அக்டோபர் 6 - ம் நாள் 1556 -ல் படை எடுத்து ஆக்ராவை ஆக்கிரமித்தார். பின்னர் டெல்லியையும் ஆக்கிரமித்தார். தன்னை இந்தியாவின் பேரரசராக அறிவித்தார். டர்டி பைக் கான் நகரத்தை விட்டே ஓடினார். ஹெமு விக்கிரமாதித்யா அக்டோபர் 1553 முதல் அக்டோபர் 1556 வரை தொடர்ந்து 22 வெற்றிகளை பெற்றார். தன்னை பேரரசர் அல்லது "ராஜா விக்கிரமாதித்யா " என அழைத்து கொண்டது அல்லாமல், ஹிந்து ராஜ்யத்தை உருவாக்கினார். டெல்லியின் ஆக்கிரமிப்பு பற்றி சீக்கிரமே அக்பருக்கு தகவல் எட்டியது. அக்பர் காபூலை விட்டு கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டார். ஆனால் பைராம் கான் வலியுறுத்தலின்படி அக்பர் டெல்லியை கைப்பற்ற விரைந்தார். படை குழுவினரின் உற்சாகத்திற்க்காக யாரேனும் ஒருவர் நெருப்பை கொண்டு வான வேடிக்கைகள்காட்டி போர் படையினர் உற்சாகம் அடையும்படி செய்ய வேண்டும் என கட்டளையிட்டார். அது மட்டுமல்லாமல் ஹெமுவை போல் உருவம் செய்து அதை துப்பாக்கி தூள்களினால் நிரப்பி நெருப்பை வைக்கும்படியும் கட்டளையிட்டார். டர்டி பைக் மற்றும் அவரது பின் வாங்கும் படையினரும் அக்பரோடு இணைந்தார்கள். அவர்கள் அக்பரை காபூலுக்கு சென்று படையை பின் வாங்குமாறு அறிவுறுத்தினார். ஆனால் அக்பர் அதை மறுத்து விட்டார். டர்டி பைக்யின் கோழைத்தனத்தை கண்டு பைராம் கான் அப்துல் பாசில் மற்றும் ஜஹாங்கிர் உதவியோடு அவரை தீர்த்து கட்டினார். அப்துல் பாசில் மற்றும் ஜஹாங்கிர் ஆகியோர் பைராம் கான் தலை மறைவு ஆனது எதிரியை விரட்டவே அவ்வாறு செய்தார் என நம்பினார்கள். அக்பரின் படை ஹெமு விக்ரமாதித்யாவின் வித விதமான படைகளை வடக்கு டெல்லியில் நடை பெற்ற இரண்டாவது பானிபட் போரில் தோற்கடித்தனர். சந்தர்ப்பவசமாக ஹெமுவின் கண்களில் ஒரு அம்பு பட்டது. ஹெமு சுயநினைவு இல்லா நிலையில் கொண்டு வரப்பட்டு தலை கொய்யப்பட்டார். ஒரு சில தகவலின்படி பைராம் கான் ஹெமுவை கொன்றதாகவும் ஆனால் அக்பர் காஸி என்ற சொல்லை பயன்படுத்தியதாகவும், ஹெமுவை கொன்றதாகவும் சொல்லப்படுகிறது. காஸி என்ற வார்த்தைக்கு விசுவாசத்துக்கு சொந்தமான போர்வீரன் என்று பொருள். இந்த சொல் அக்பரின் தாத்தாவான டிமுர் முதல் அவரது தந்தை பாபர் வரை இந்த சொல்லை ஹிந்துக்களிடம் போரிடும் போது பயன்படுத்தினார்கள். ஹெமுவின் உடல் துண்டு துண்டாக்கப்பட்டது. அவருடைய தலை டெல்லியின் டர்வாஷாவிற்கு வெளியே தொங்கவிட பட்டது. ஹெமுவின் மேலுடல் புரான குயில்லாவிற்கு வெளியே தொங்கவிடப்பட்டது. இது டெல்லியில் தற்போதைய பிரகதி மைதானுக்கு எதிரே உள்ளது. வெற்றிக்கு காரணமாக தன்னை காண்பித்து கொண்டு அதாவது காஸி என்ற சொல்லை பயன்படுத்திக்கொண்டு அக்பர் ஒரு வெற்றி தூணை சரணடைந்த ராஜா ஹேமச்சந்திர விக்கிரமதித்யாவின் தலையையும், மற்றும் கலகக்கார படை வீரர்களின் தலையையும் கொண்டு எழுப்பினார். இதை பாபர் செய்தது போலவே செய்தார். இதை போன்ற படங்கள் புது டெல்லியில் உள்ள தேசிய பொருட்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றி மூலம் அக்பர் 1500 போர் யானைகளை தன்வசம் கொண்டதாகவும் இதை சிக்கந்தர்ஷாவை கொண்டு மன்கோட்டின் பாதுகாப்பு அரணாக பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. சிக்கந்தர் சரணடைந்ததாகவும் பின்னர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சிக்கந்தர் கடைசி இரண்டு வருடங்கள் அக்பரால் கொடுக்கப்பட்ட மிகபபெரிய விளை நிலங்கள் கொண்ட ஒரு கட்டிட வளாகத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 1557-ல் வங்கத்தில் நடை பெற்ற ஒரு போரில் ஆதில் ஷா , சிக்கந்தர் ஷாவின் சகோதரர் கொல்லப்பட்டார். பைராம் கான் அக்பர் ஆட்சி பொறுப்பை ஏற்கும் போது 13 வயது நிரம்பியவராக இருந்தார்.ஆதலால் அவருடைய படைத்தளபதி அவர் சார்பாக அக்பர் குறித்த வயது வரும் வரை ஆட்சி பொறுப்பை நடத்தினார். பைராம் கான் பாதக்ஷானின் டர்கி மொழி பேசும் இனத்தவரான அவர் அக்பரின் அரசாட்சிக்கு ஏமாற்றுகாரர்களால் ஏற்பட்ட இடையூறுகளை வெற்றிகரமாக கையாண்டார் . மொகலாய படையை முன்னேற்றப்பாதையில் ஒழுங்குபடுத்தினார். அவர் ஆட்சி பொறுப்பு பொதுவாக ஓர் இடத்தில் நடுநாயகமாக வைக்கப்பட்டு மற்றும் எல்லை விரிவாக்கங்கள் தலை நகரின் கட்டளைப்படி நடை பெறவும் உறுதி செய்தார். இந்த நடைமுறைகள் மொகலாய அரசின் புதிய பகுதிகளை ஒருங்கிணைப்பதற்கு உதவியது. இருந்த போதிலும் பைராம் கானின் செயல்களுக்கு ஒட்டு மொத்தமாக மரியாதை இல்லை. பல பேர் அவரின் முடிவை குறித்து கொண்டிருந்தார்கள். அவரின் நேரடியான ஆட்சி பொறுப்பை கை பிடிப்பதற்க்காக அவ்வாறு செய்தார்கள். அவருடைய மதத்தை பற்றி மிகவும் அதிகமாக எழுத்துக்கள் மூலம் விமர்சிக்கப்பட்டது . பெரும்பாலும் சன்னி முஸ்லிம் இனத்தவரை கொண்டு ஆரம்ப கால நீதி மன்றங்கள் இயங்கின, மற்றும் பை ராமின் சியா கொள்கை வெறுக்கப்பட்டது. பைராம் அதை அறிந்தவராக இருந்தார். இருந்த போதிலும் அதை தடுப்பதற்க்காக சியா ஷேக் கடை என்பவரை அரசுக்கு நிர்வாக தளபதியாக, மிகவும் அதிகமான முக்கியத்துவம் நிறைந்த பணியாக கருதப்படும் பணியில் நியமித்தார். மேலும் பைராம் ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை, அக்பரை காட்டிலும் அதிக செலவுள்ள ஆடம்பரமான வாழ்கையை வாழ்ந்தார். பைராமை கடுமையாக எதிர்த்தவர்களில் அக்பரின் அத்தையும் தலைமை தாதிகையுமான மகம் அங்கா மற்றும் அக்பரின் வளர்ப்பு தாயின் மகனுமான ஆதாம் கானும் அடங்குவார்கள். மகம் கூர்மையாகவும் கட்டுப்பாடு உடையவராகவும் கருதப்பட்டார் மற்றும் ஆட்சியை தனது மகன் மூலம் நடத்த முடியும் என்று நம்பினார். மார்ச் 1560 - ல் இருவரும் அக்பரை சந்திப்பதற்கு நிர்பந்ததித்தார்கள். பைராமை ஆக்ராவில் விட்டு விட்டு டெல்லியில் சந்திக்கும்படி வழி வகை செய்தார்கள். அக்பர் மக்களால் முழு ஆட்சி அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு வலியுறுத்தப்பட்டார், மற்றும் பைராம்கானை ஆட்சி அதிகாரத்திலிருந்து நீக்கவும் வலியுறுத்தப்பட்டார். அக்பர் பைராமின் ஹஜ் புனித யாத்திரையான மெக்காவிற்கு செல்வதற்க்காக செலவு செய்வதற்கு வலியுறுத்தப்பட்டார். அது முக்கியமாக பைராமை நாட்டை விட்டு துரத்தும் செயலை செயல்படுத்தவதற்கு செய்யப்பட செயல் ஆகும். பைராம் டெல்லியில் இருந்து வந்த இந்த செய்தியை கேட்டு கொதிப்படைந்தார். இருந்த போதிலும் அக்பருக்கு விசுவாசமானவராக இருந்தார். அக்பர் படைத்தளபதியை சந்திப்பதற்கு மறுத்த போதிலும் ஆதாம் கானால் அனுப்பப்பட்ட ராணுவ படையை சந்தித்தார். இந்த படை அக்பரின் அனுமதியோடு அனுப்பப்பட்டது. இந்த படை மொகலாய பகுதிகளிலிருந்து அவரை பாதுகாப்பதற்கு அனுப்பப்பட்டது. பைராம் இதை கடைசி வாய்ப்பாக பார்த்து, படையை தாக்கினார். ஆனால் அவரை பிடித்து அக்பரின் முன் துரோகத்திர்க்காக குற்ற தண்டனை பெறுவதற்க்காக நிறுத்தப்பட்டார். பைராம் கானின் ராணுவ மேதைத்தனம் மொகலாயர்கள் இந்தியாவில் நிலங்களை ஆட்கொள்வதற்கு உதவி செய்தது. பைராம் கான் ஹுமாயுன் மற்றும் அக்பருக்கு விசுவாசத்தோடு நடந்து கொண்டார். அதன் மூலம் ஒரு வலிமையான அரசாங்கம் உருவாதற்கு வழி வகை செய்தார். ஆனால் இப்போது அக்பர் முன்பு ஒரு சிறை கைதியாக ஆகி உள்ளார். மகம் அங்கா அக்பருக்கு பைராமை கொல்லும்படி வலியுறுத்தினார். அங்காவின் வலியுறுத்தல் இருந்த போதிலும் அக்பர் தனது படை தளபதிக்கு முழு மரியாதை கொடுத்தார். அவருக்கு மரியாதை சிறப்புகள் செய்தார். அவருக்கு முறையான ஹஜ் யாத்திரை செய்வதற்கு வேண்டிய பண உதவிகளை செய்வதற்கு ஒத்து கொண்டார். இருந்த போதிலும் பைராமின் ஹஜ் யாத்திரையை தொடர்ந்து ,பைராம் காம்பாட் துறைமுக நகரத்தை அடையும் முன்பு ஆப்கான் கொலையாளியால் கொல்லப்பட்டார். அந்த ஆப்கான் கொலையாளியின் தந்தை ஐந்து வருடங்களுக்கு முன்பு பைராம்மால் வழி நடத்தி செல்லப்பட்ட ஒரு யுத்தத்தில் கொலை செய்யப்பட்டார். பைராம் ஜனவரி 31, 1561 அன்று இறந்தார். விரிவாக்கம் அக்பர் இவ்வாறு சொன்னார் " ஒரு அரசர் வெற்றியை நோக்கம் கொண்டவராக இருக்க வேண்டும்.அவனது அண்டை நாட்டவர்களை ஆயுதம் கையில் ஏந்தி பயம் கொண்டவர்களாக இருக்க செய்ய வேண்டும் என்றார். மொகலாய அரசு விரிவாக்கத்தில் மால்வா (1562), குஜராத் (1572) , வங்கம் (1574) , காபூல் (1581) ,காஷ்மீர்காஷ்மீர் (1586) மற்றும் காண்டேஷ் (1601) ஆகியவைகள் மற்ற பகுதிகளில் வெற்றி கொண்டவைகளில் அடங்கும். அக்பர் தான் வெற்றி பெற்ற ஒவ்வொரு மாகாணத்திலும் அவருடைய அதிகாரத்தின் கீழ் ஒரு ஆளுனரை நியமித்தார். அக்பர் தனது நீதி மன்றம் டெல்லியின் நகர் பகுதியோடு நெருங்கி இருப்பதை விரும்பவில்லை. அவர் நீதிமன்றம் ஆக்ராவிற்கு அருகே பதேபூர் சிக்ரிக்கு மாற்றப்ப்படுமாறு பணித்தார். ஆனால் இந்த இடத்தை இடம் பொருந்தாத காரணத்தால், அதற்கு உபயோகபடுத்த முடியாமல் போகவும், அவர் ஒரு குழுவினரை அமைத்து அதன் மூலம் நகரத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொண்டார். அவர் வர்த்தகத்தை விரிவாக்கியும் மற்றும் அதை ஊக்குவித்தார். அக்பரின் வரிகொள்கைகள் மிகவும் குறிப்படவேண்டியவை . மொகலாய அரசின் அடுத்தடுத்த தலைமுறைகள் ஒரு வலிமையான பொருளாதார அமைப்பை இதன் மூலம் பெற்றது.அவருடைய அதிகாரிகள் ஒரு விரிவான ஒரு நில ஆவணத்தை தெளிவாகவும் துல்லியமாகவும் ஒவ்வொரு நிலத்தின் மண் தன்மை , நீர் ஆதாரத்தன்மை , மற்றும் பலவைகளை கொண்டு அவற்றின் விலையை மற்ற பல தாவரங்களின் இருப்பையும் அவற்றின் பயன்பாட்டையும் பொறுத்து நிர்ணயித்தார்கள். இது முந்தைய நில வரி முறைகளான எகிப்தைய ,ரோமானிய முறைகளை பார்க்கும் போது ஒரு தெளிவான முன்னேற்றம் ஆகும் . முந்தைய வரிமுறைகளான இவைகள் நில வரிகளை அறுவடையின் உள்ளார்ந்த ஒரு பகுதியாக கொண்டிருந்தது. அக்பரின் புதிய நில வரியானது நிலத்தின் மதிப்பை அறியுமாறு செய்தது ,நிலத்தின் மேல் முதலீடுகளை ஊக்குவித்தது மற்றும் நிலத்தின் பயன்பாட்டு திறனை அதிகமாக பயன்படுத்தி கொள்வது என இரு வகையான முன்னேற்றங்களை கொடுத்தது. பொருளாதார முன்னேற்றத்திற்க்காக மதிப்பிற்குரிய பேரரசரான குயிங் நூறு ஆண்டுகளுக்கு பின்னர் இதை போன்று ஒரு நடவடிக்கையை சீனாவில் எடுத்து இதை போன்று ஒரு வெற்றியை பெற்றார். பதேபூர் சிக்ரி 1571 -ல் அக்பர் ஒரு சுவர் கொண்ட தலை நகரமான "பதேபூர் சிக்ரியை" (பதேபூர் என்பதற்கு வெற்றியின் தலை நகரம் என்று பொருள்)ஆக்ரா அருகே உருவாக்கினார் அங்கே அக்பரின் மூத்த மனைவிமார்களுக்கு மிகப் பெரிய செயற்கையான ஏரிகளையும் , ஆடம்பரமான நீர் நிரப்பிய பகுதிகளையும் அங்கு உருவாக்கினார். இருந்த போதிலும் நகரமானது சீக்கிரமே ஒதுக்கப்பட்டது மற்றும் தலை நகரானது லாகூர்க்கு மாற்றப்பட்டது பதேபூர் சிக்ரியின் நீர் ஆதாரம் போதுமானதாக இல்லை அல்லது மோசமான தரத்தோடு இருந்தது என்று சொல்லலாம்.அல்லது பல வரலாற்றுக்கு அறிஞர்கள் கருத்துப்படி அக்பர் தனது அரசாங்கத்தின் வட மேற்கு பகுதிக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆதலால் தனது தலை நகரத்தை வடமேற்கு பகுதிக்கு மாற்றிக்கொண்டார் என கூறுகிறார்கள். 1599 -ல் அக்பர் மீண்டும் தனது தலை நகரத்தை ஆக்ராவிற்கு மாற்றினார். அங்கிருந்து தனது இறப்பு காலம் வரை ஆட்சி செய்தார். அக்பரின் அவையில் இருந்த நவரத்தினங்கள் எனும் ஒன்பது ரத்தினங்கள் அபுல் பசல் - இவர்தான் அக்பரின் விஸியார் ஆவார்.இவர்தான் அக்பர் நாமாவின் ஆசிரியர் ஆவார்.இது அதிகாரபூர்வமாக அக்பரின் ஆட்சி பற்றி மூன்று அதிகாரங்களில் விவரிக்கிறது. மூன்றாவது அதிகாரம் அயினி அக்பரி என அழைக்கப்படுகிறது மற்றும் இது பெர்சியாவின் மொழி வழக்கிலிருந்து மொழி பெயர்ப்பு செய்யப்பட்டதாகும்.[17] அவர் பைசியின் சகோதரர் ஆவார் மற்றும் அக்பரின் அவைப்புலவரும் ஆவார். பைசி அக்பரின் அவையில் முக்கிய புலவர் ஆவார். இவர் அக்பரின் சுயசரிதை எழுதிய அபுல் பசலின் சகோதரர் ஆவார். இவர் பெர்சியா மொழியில் அழகான கவிதைகளை எழுதினார். அவர் காலத்தவர் கூற்றுப்படி இவர் கிட்டத்தட்ட 100 கவிதை சார்ந்த இலக்கியங்களை எழுதியதாக கூறப்படுகிறது. அவர் பெர்சியன் புலவரான நேஷாமியை போன்று பன்ச் கன்ச் எனப்படும் ஐந்து இலக்கிய குவியல்களை படைக்க வேண்டுமென்று இருந்தார். ஆனால் ஐந்திற்கு மூன்று இலக்கியங்களை முடித்தவுடன் இறந்தார். அவர் இறுதியில் நல் யு டமன் , மக்சன் யுல்-அத்வர் மற்றும் பில்கிஸ்வா சல்மான் ஆகியவற்றைகளை படைத்தார். இவைகள் நேஷாமியின் லயலா வா மஞ்சுன் , மஸ்கன் யுல்-அஸ்ரர் மற்றும் ஷிரின்வா குஸ்ராவு ஆகியவைகளை ஒத்து இருந்தன. அக்பர் அவரிடம் உள்ள மேதைத்தனத்தை மிகவும் மதித்தார் மற்றும் அவரை தனது மகனுக்கு ஆசிரியராக நியமித்தார். தனது அவையில் உள்ள ஒன்பது நவரத்தினங்களுள் அவருக்கு ஒரு இடம் கொடுத்தார். ஒன்பது நவரத்தினங்கள் "நவ் ரத்தினங்கள்" என அழைக்கப்படுகிறது. அவர் குரானை பற்றி விளக்கவுரை ஒன்றை எழுதினார் மற்றும் லீலாவதி எனும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட கணித இலக்கியத்தை பெர்சியன் மொழியில் மொழி பெயர்த்தார். அவரது தந்தை முபாராக் நகோரி ஒரு தத்துவ அறிஞர் மற்றும் கிரீஸ் இலக்கிய அறிஞரும் மற்றும் இஸ்லாமிய தத்துவ அறிஞரும் ஆவார். மியன் தான்சென் - அக்பர் அவையில் உள்ள ஒரு இசை கலைஞர் ஆவர். அவர் மிக சிறந்த இசை அமைப்பாளராக கருதப்படுகிறார். அவர் ஒரு அசாதரணமாக இயற்கையில் வரம் கொடுக்கப்பட்ட ஒரு பாடும் கலைஞர் ஆவார். அவர் பல பாடும் இசை வகைகளை தொகுத்தவர் ஆவார்.அவர் ஒரு இசைக்கருவியாளரும் கூட ஆவார் . அவர் ராபப் எனும் இசைக்கருவி மூலம் பாடும் இசையை , பிரபலப்படுத்தினார்.(மத்திய ஆசியாவில் தோன்றியது) பீர்பால் அரசால் அதிகம் மதிக்கப்படும் பதவியில், மொகலாய அவையில் அக்பரின் நிர்வாகத்தை கவனித்து கொண்டு இருந்தார். அவர் அக்பர் அதிகம் நம்பும் நபர்களில் ஒருவராக இருந்தார். அக்பரை தவிர தீன்இலாஹி மதத்தில் நம்பிக்கைக்கு உடைவராக அக்பரின் அவையில் இருந்த ஒரே ஒருவர் ஆவார். பீர்பால் அக்பரின் அவையில் ராணுவம் மற்றும் நிர்வாகத்தை நிர்வகித்து வந்தார். மற்றும் அவர் அக்பரின் மிகச் சிறந்த நண்பரும் ஆவார். அக்பர் பீர்பாலை அவரின் புத்திசாலித்தனத்துக்கும் மற்றும் நகைசுவை உணர்வுக்கும் பிக சிறந்த மரியாதையை கொடுத்து வைத்து ருந்தார்.அவர்கள் இவ்வாறாக நகைச்வையாக தகவல்களை பரிமாறிக் கொண்டார்கள் இவர்களை பற்றியும் மற்றும் அது சார் விசயங்களும் கலாச்சாரத்தில் உள்ளவைகளே கதைகளாக கூறப்ப்படுகின்றன. இந்த பரிவர்த்தனைகளும் மற்றும் கதைகளும், மதிப்பு மிக்க கலாச்சாரத்தின் நம்பிக்கையையும் அவற்றின் பெருமையையும் கூறுகின்ற தனித்துவம் பெற்றவைகளாக ஆகி விட்டன. ராஜா தோடர் மால் - அக்பரின் அவையில் நிதிமந்திரியாக உயர்வு பெற்று இருந்தார். டோடர் மால் அக்பரின் மொகலாய அரசின் நிதி நிலைமை துறையை சரி செய்தார். அவர் பஞ்சாப்பை சேர்ந்த காட்ரி (காட்டரீ/காட்டரி) சமுதாயத்தை சேர்ந்தவர் ஆவார். டோடர் மால் தனது நிபுணத்துவத்தை கொண்டு ஷெர்ஷாவின் பணி பற்றிய கொள்கையில் முன்னேற்றத்தை காட்டினார். ராஜா மான்சிங் - தற்போது ஜெய்பபூர் என அழைக்கப்படும் ஆம்பரின் கச்சாவாக இனத்தை சேர்ந்த ராஜாவாக இருந்தார். அவர் அக்பரின் நம்பிக்கைக்குரிய ராணுவ படைத்தளபதியாக இருந்தார். இருந்த போதிலும் அவர் ஸ்ரீ கிருஷ்ண பக்தராக இருந்தார். அக்பரின் தீன் இலாஹி மதத்தை பின் பற்றாமல் இருந்தார். அப்துல் ரஹீம் கான்-இல்-கானா- இவர் அக்பரின் அவையில் ஒரு புலவராக மற்றும் (திவான்) ஆகவும் இருந்தார் மற்றும் அக்பரின் நவரத்தினங்கள் என அழைக்கப்படும் அக்பரின் முக்கிய ஒன்பது மந்திரிகளில் ஒருவராக இருந்தார். அவர் ஹிந்தி மொழியில் இரண்டு வரி கவிதைகளை எழுதுவதை பற்றியும் ,மற்றும் ஜோதிட சம்பந்தமான புத்தகங்களுக்காகவும் அறியப்பட்டிருந்தார்.[18] அவரது பெயரால் அழைக்கப்படும் கான்கானா கிராமம் பஞ்சாப் மாநிலத்தில் வடமேற்கு இந்தியா பகுதியில் உள்ள நவன்ஷார் மாவட்ட பகுதியில் உள்ளது. பகீர் அஸியோ டின்- (பகீர் என்றால் முனிவர் அல்லது கட்டுப்பாடு என்று உருதுவில் அர்த்தம் ஆகும்) -இவர் அக்பரின் நெருங்கிய வட்டத்தில் ஒருவராகவும் மற்றும் முக்கிய ஆலோசகராகவும் கருதப்படுகிறார். அக்பர் இவர் அறிவுரையை மிக்க மதிப்பு மிக்கதாக கருதுகிறார். முல்லோ தோ பியாஸா - மொகலாய அரசர் அக்பரின் முக்கிய ஆலோசர்களில் ஒருவர் ஆவார். அக்பர் அவரின் ஆலோசனையை பெரிதும் கருத்தில் கொண்டார் மற்றும் அவரை மொகலாய அரசின் ஒன்பது நவரத்தினங்கள் என அழைக்கப்படும் ஒன்பது ரத்தினங்களில் ஒன்றாக கருதினார் .அவர் அவரது புத்திசாலித்தனத்துக்கு பெயர் பெற்றவராக அறியப்பட்டார். அவர் பீர்பாலுக்கு மிகவும் நெருங்கிய நிலையில் போட்டியாளராக இருந்தார். அனால் முடிவில் தோற்று போனார். தனித்துவம் அக்பர் அறிவுமிக்க ஆட்சியாளராகவும் மற்றும் நடவடிக்கைகளை வைத்து கணிக்கும் ஒரு சிறந்த நீதிபதியாகவும் இருந்தார். அவரது மகனும் மற்றும் அவரது வாரிசான ஜஹாங்கிர் அக்பரின் நினைவாக எழுதியவைகளில் அக்பரை பற்றி பெருமையுடன் கூறுகிறார் மற்றும் எண்ணற்ற சம்பவங்களை கூறி அவருடைய பண்புகளை விளக்குகிறார்.[19] ஜஹாங்கரின் கூற்றுப்படி அக்பர் கோதுமையின் மஞ்சள் நிறத்தை ஒத்து இருப்பார் என கூறுகிறார். ஆண்டனி டி மன்செர்ரட் என்ற கத்தோலினியா கிறித்தவர் அக்பரின் அமைச்சரவையை பார்த்த அவரின் கூற்றுப்படி அக்பர் வெள்ளை நிறமாக இருந்ததாக கூறுகிறார். அக்பர் மிகவும் உயரமானவர் கிடையாது ஆனால் சக்தி மிக்க திறனாய்ந்த உயிரோட்டமான விழிப்போடு இருப்பார் அவர் பல வகையான வீரத்திற்கு பேர் பெற்றவராக அறியப்பட்டார். அக்பரின் 19 வயதில் மால்வாவில் இருந்து ஆக்ராவிற்கு திரும்பும் போது ஒரு சம்பவம் நடைபெற்றது. அக்பர் தனது பாதுகாவலர்களை தாண்டி முன்னதாக வந்து கொண்டி இருந்தார். அப்பொழுது ஒரு பெண் புலியும் அதன் குட்டிகளும் புதரை விட்டு வெளியே அக்பர் செல்லும் பாதைக்கு குறுக்கே வந்தது. பெண் புலி பாய்ந்த போது பேரரசர் ஒரே வாள் வீச்சில் கொன்றதாக கூறப்படுகிறது. அவருடன் வந்த காவலர்கள் பேரரசர் இறந்த பெண்புலிக்கு அருகே அமைதியாக நிற்பதை பார்த்தனர்.[20] இதே போன்று ஒத்த நிகழ்ச்சி பார் மால் (ராஜ்புட் மாநிலத்தின் ஆம்பூர் இளவரசர்) தனது மகன் மற்றும் பேரன் மற்றும் ஊழியம் கொடுக்கப்பட்ட நபர்களுடன் அக்பருக்கு ராஜ மரியாதையை செலுத்தும் பொருட்டு யானைகளுக்கு அருகே உள்ள ஒரு மிக்க மதிப்பு மிக்க ஒரு இடத்துக்கு செல்லும் போது வந்த ராஜபுத்திரர்கள் அக்பர் யானை மீது ஏறி யானை தனது முழங்கால்கள் கீழே பட உட்கார்ந்ததை கண்டார்கள். அபுல் பசல் மற்றும் கடுமையாக விமர்சிக்கும் படயுனி அக்பரை வலிமைமிக்க ஒரு மனிதராக விமர்சிக்கின்றனர். அவருடைய போர்த்திறன் மற்றும் வீரத்திற்கு அவர் நன்கு அறியப்படிருந்தார். மாசிடோனின் அலெக்சாண்டர் போல அரசியல் சூழ்நிலைக்கு அப்பாற்பட்டு எப்பொழுதும் தனது உயிரை பணயம் வைக்க தயாராக இருந்தார். மழைக்காலங்களில் அடிக்கடி தனது குதிரையுடன் வெள்ளம் நிரம்பிய ஆற்றுக்குள் சென்று ஆற்றை பாதுகாப்பாக கடப்பார்.மிக அரிதாகவே கடுமையாக நடப்பார். தனது உறவினர்களிடம் மிகவும் பாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. தனது சகோதரர் மற்றும் கலகக்காரர் ஆன ஹகிமை மன்னித்தார். அனால் சில சந்தர்ப்பங்களில் மட்டுமே குற்றவாளிகளிடம் கடுமையாக நடந்து கொண்டார். தனது தாய் மாமாவான முஸ்ஸாம் மற்றும் வளர்ப்பு சகோதரரான ஆதம் கான் ஆகியோரிடம் சில சந்தர்பங்களில் கடுமையாக நடந்து கொண்டார். தனது உணவு வழக்கத்தில் மிகவும் சரியாகவே இருந்தார். அயினி அக்பரி அக்பர் பயணத்தின் போது அல்லது உறைவிடத்தில் இருக்கும் போது கங்கை நீரை அருந்தியதாக கூறுகிறது. கங்கை நதி நீரை அக்பர் அழிவற்ற தன்மை உடையதாக அக்பர் கூறுகிறார். சிறப்பு நபர்கள் சொரனிலும் மற்றும் ஹரித்வாரிலும் தங்கி தண்ணீரை அடைத்த கூஜாக்களில் நிரப்பி அக்பருக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.[21]ஜஹாங்கிரின் நினைவுகளின்படி அக்பர் பழங்களில் நாட்டமும் மற்றும் இறைச்சிகளின் மீது சிறிது ஆர்வமும் கொண்டிருந்தார் என கூறுகிறார். பின்னர் இறைச்சி உண்பதை தனது பிந்தைய வயதில் நிறுத்தி விட்டார் என்று கூறுகிறார். அவர் மத சகிப்புத்தன்மையை அவரது முந்தைய அரசர்களை விடவும் , பிந்தைய அரசர்களையும் விட அதிகம் பெற்றிருந்தார். ஜஹாங்கிர் எழுதியதாவது. பறந்து விரிந்த இந்த தெய்வீக உலகத்தில் வெவ்வேறு வகையினருக்கும் மற்றும் வெவ்வேறு மத நம்பிக்கையை பின்பற்றுவருக்கும் அன்பெனும் ஆட்படுதலுக்கு வழி வகை உள்ளது என்கிறார். சன்னி இன முஸ்லிம்களும் ஷியா வகை முஸ்லிம்களும் ஒரு தொழுகை கூடத்தில் சந்தித்தனர். பிராங்க்ஸ் மற்றும் ஜுஸ் வகை கிறித்தவர்களும் ஒரு தேவாலயத்தில் சந்தித்தனர்.அவரவர்கள் பிராத்தனை முறைப்படி வழிபாடுகளை நடத்தினார்கள்.[19] அவருடைய கொள்கைப்படி மொழி பேசும் தன்மை குறைதல் பற்றிய சோதனைப்படி பேச்சு என்பது கேட்டலில் இருந்து வருகிறது என்றார். குழந்தைகள் பேசாமல் அனுமதிக்கப்பட்டால் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்றும் அவர்கள் வயது ஆக ஆக முற்றிலும் பேசாத நிலையை அடைகிறார்கள் என்றும் கூறினார்.[22] அக்பர் மூன்றாவது தலைமுறை மொகலாய அரசரான அவர் 1542-1605 எ.டி. என்ற கால கட்டத்தில் வாழ்ந்தார். அக்பர் எல்லா மொகலாய அரசர்களிலும் பாரபட்சமற்ற தன்மைக்க்காகவும் அவருடைய குண நலனுக்காகவும் மிக தலை சிறந்தவராக புகழப்படுகிறார். ஹிந்துக்களோடு உறவு அக்பரின் ஆட்சி மிக நன்றாக அவரது அவையில் உள்ள அபுல் பசலால் அக்பர் நாமவிலும் அயினி அக்பரிலும் விவரிக்கப்பட்டுள்ளது. அபுல் பசல் பல வரலாற்றுக்கு ஆசிரியர்களால் தவறுதலாக எழுதப்பட்ட உண்மைகளை , அதுவும் அரசரின் ஆட்சி மற்றும் அவர் மற்ற சமுதாயத்தினரிடம் கொண்ட உறவுகளை பற்றி மிகவும் பெருமைபடுத்தும் வகையில் மிக மிக நல்ல முறையில் தாக்கம் கொடுத்து கூறுகிறார். மற்ற அதே சமயத்தை சேர்ந்தவைகளான பாதயுனி, ஷேக் ஷாதா ரஸிடி மற்றும் ஷேக் அஹமத் சிருண்டி ஆகியவைகள் அவை நடப்பு தாக்கத்தை ஒட்டி இல்லாமல் எழுதப்பட்டது. எனவே இவைகள் குறைவாகவே அக்பரை புகழ்கின்றன.வரலாற்று ஆசிரியரான வின்சென்ட் எ ஸ்மித் முடிவுரைப்பது என்னவென்றால் அக்பரை குறைவாக புகழும் விமர்சர்கர்கள் ,அக்பரின் எண்ணமான நல்ல செயலை அவர் வெற்றி கொண்டவர்களுக்கு செய்வது பற்றி முட்டாள்தனமாக பொறுக்க முடியாத வகையில் கூறுகிறார்கள் என்று கூறுகிறார்.[23] அக்பரின் ராஜபுத்திர மனைவிகள் அக்பர் கச்சவாக ராஜ்புட் இனத்தை சார்ந்த அமேரின் ராஜா பார்மலை (தற்போதைய ஜெய்ப்பூர்) அவரது மகளான ஹர்கா பாயை மணமுடிப்பதற்கு சம்மதித்து சாந்தப்படுத்தினார். இந்த திருமணம் வரலாற்று சுவடுகளின்படி மிக முக்கியமான திருப்பு முனையாக இருந்தது. ஏனெனில் இந்த திருமணம்தான் ஹிந்து மற்றும் முஸ்லிம் இனத்தவர்களுக்கிடையே இந்தியாவில் நடை பெற்ற ஆடம்பரமான திருமணமாகும். ஹர்காபாய் மரியம்- யு்ஷ்- ஷமானி என கிறித்தவராகினார். அவரது திருமணத்திற்கு பின்பு அவர் அவரது குடும்பத்தினரால் தாழ்ந்த வகை சாதியினராக கருதப்பட்டார். அவர் தனது 61 வருட திருமண வாழ்க்கையில் ஆம்பரை/ஜெய்ப்பூரை பார்க்கவில்லை.[24] அவருடைய நிலைமை மொகலாய குடும்பத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படாத நிலையிலேயே இருந்தது மற்றும் அவருக்கு முக்கியமான பொறுப்பு எதுவும் ஆக்ராவிலோ அல்லது டெல்லியிலோ கொடுக்கப்படவில்லை. இவ்வாறு இருந்த போதிலும் பாயானாவுக்கு அருகே பாரத்பூர் மாவட்டத்தில் ஒரு மிகச்சிறிய கிராமம் கொடுக்கப்பட்டது. அங்கே தனது இறப்பு வரை தனது காலத்தை கழித்தார்.[24] அவர் 1623-ல் இறந்தார் மற்றும் அவருடைய சமாதி ஆக்ராவுக்கு அருகே உள்ளது. ராஜபுத்திர பெண்கள் டெல்லியின் ஆடம்பரமான அரசட்சிக்குள் புகுந்த பிறகு முஸ்லீமாக மாறுகிறார்கள் மற்றும் அவர்கள் முஸ்லிம் கல்லறைகளில் புதைக்கபடுகிறார்கள். அவர்கள் திருமணத்திற்கு பிறகு தங்களது பெற்றோரையோ அல்லது அவர்களோடு உணவு அருந்தவோ முடியாது. [59] அதை தொடர்ந்து ஒரு மசூதியானது மரியம்-உஷ்-ஷமானி நினைவாக ஜஹாங்கிரால் பாகிஸ்தானில் உள்ள லாகூரில் எழுப்பப்பட்டது. அது மரியம்-உஷ்-ஷமானி மசூதி என அழைக்கப்படுகிறது.[25] அவர் முஸ்லிம் அரசராய் பெற்று தருபவர் தரும் ஒரு முஸ்லிம் அரசியாக இருக்கவேண்டு என்பதால் அந்த பெயர் கொடுக்கப்பட்டது மற்ற ராஜபுத்திர அரசுகளும் அதன் பிறகு திருமண உறவுகள் டெல்லியின் அரசரோடு செய்தது. இந்து முறைப்படி அடுத்தடுத்த ராஜா வாரிசுகள் எப்பொழுதும் இந்துவாக இருப்பது எப்பொழுதும் உற்சாகபடுத்தப்பட்டது. ஆதலால் ஹிந்து பரம்பரையில் ஹிந்து இளவரசிகளை அரசியல் காரணங்ககளுக்காக திருமணம் செய்து கொள்வதில் எந்த வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. ராஜபுத்திரர்கள் மொகலாய அரசர்களுக்கு தங்களது புதல்விகளை கொடுத்ததில்லை இருந்த போதிலும் மொகலாயர்களை சரி சமமமாக மதித்தனர். அவர்கள் எப்பொழுதும் மொகலாயர்களுடன் உணவு அருந்தவதில்லை அல்லது முஸ்லிம் பெண்களை தங்களது முறைப்படியான மனைவிகளாக ஏற்று கொண்டதில்லை.[26] இரண்டு ராஜபுத்திர அரசர்கள் எப்பொழுதும் அக்பருக்கு எதிராக இருந்தனர். மேவாரின் சிஸோதியாஸ் மற்றும் ரந்தம்போரின் ஹடாஸ் (சௌஹான்ஸ்). அக்பரின் ஆட்சியில் மற்றொரு திருப்புமுனை என்னவென்றால் அமரின் ராஜா மான் சிங் I அக்பரோடு ஹடாவின் தலைவரான சுர்ஜன் ஹடாவை ஒரு நட்புறவு முறைக்காக சந்திப்பதற்கு சென்றான். சுர்ஜன் பாதி மனதோடு அந்த நட்புறவை ஒரு நிபந்தனையோடு ஒத்துக்கொண்டான். அந்த நிபந்தனை என்னவென்றால் அக்பர் தனது மகள்களை திருமணம் செய்து கொள்ளாத பட்சத்தில் அந்த நட்புறவை ஏற்பதாக சொன்னான். சுர்ஜன் பின்னர் தனது இருப்பிடத்தை பனாரசுக்கு மாற்றிக் கொண்டான் . சுர்ஜன் ஹடாவின் மகனான போஜா ஹடா தனது பேத்தியின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். (தனது மகளின் மகள் அதவாது அவரது மகள் இளவரசர் ஜகத் சிங்க்கு மான் சிங்க் I -ன் மகனான அவருக்கு மணம் முடிக்கப்பட்டாள்). ஜஹாங்கிரோடு தனது பேத்தியின் திருமணம் நடைபெறுவது குறித்து ஜஹாங்கிர்க்கு எதிராக போவதற்கு போஜ் முடிவு எடுத்தான்.[27] போ்ஜின் மறைவுக்கு பின் அவரது பேத்தி ஜஹாங்கிரோடு திருமணம் முடிக்கபட்டாள் ராஜா மான் சிங்கின் ஒரு புதல்வியும் ஜஹாங்கிரோடு திருமணம் செய்யப்பட்டார் . ஆனால் அந்த புதல்வி தற்கொலை செய்து கொண்டாள்.[28] ராஜ்புத்தின் மதிப்பு மிக்கவர்கள் தங்கள் அரசர்கள் மொகலாயர்களின் மகள்களை திருமணம் செய்து கொள்வதை விரும்பவில்லை. ரத்தோர் கல்யாண்தாஸ் மோடா ராஜா உதை சிங்கை கொல்வதற்கு பயமுறுத்தினார் (ஜோத்பூர்) மற்றும் ஜஹாங்கிரையும் பயமுறுத்தினார். ஏனெனில் உதைசிங்க் ரத்தோர் கல்யாண்தாஸின் மகளான ஜோதா சிங்கை ஜஹாங்கிருக்கு மணம் செய்ய முடிவு செய்திருந்தார். அக்பர் இதை கேட்டதும் தனது மதிப்பு மிக்க படைகளை சிவானாவில் கல்யாண்தாஸை தாக்குவதற்காக அனுப்பினார். கல்யாண்தாஸ் மற்றும் தனது சிவானா படைகளில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோருடன் தங்களை தாங்களே மாய்த்து கொண்டனர்.[29] ராஜ்புத் அரசோடு உறவு வைத்து கொண்டதில் அக்பர் தனது எல்லையை பல தூரங்களுக்கு விரிவுபடுத்தினார். ராஜ்புத் அரசர்கள் மொகாலய அரசை அடுத்து 130 வருடங்களுக்கு எதிர்த்தனர். அவுரங்கசீப்பின் இறப்பை தொடர்ந்து மொகலாய அரசின் வீழ்ச்சி வரை அவரை தொடர்ந்து எதிர்த்தனர். அக்பர் ராஜபுதிரர்களை மிகவும் நம்பினார். ஏனெனில் அவரால் பிடிக்கப்பட்ட ராஜபுத்திரர்களை நீண்ட காலமாக மரியாதையுடன் அன்புடன் (மூத்த மகனை போல) வைத்திருந்தார். இருந்த போதிலும் மேவாரின் மகாரானா பிரதாப் சிங் அக்பரின் அதிகாரத்தை ஏற்க மறுத்தார். தனது முடிவு வரையிலும் அக்பரை ரானா பிரதாப் சிங்க் எதிர்த்தார். அவர் அக்பரை ஒரு வெளி நாட்டிலிருந்து வந்தவராகவே கருதினார். பிரதாப் ராஜபுத்திர வழக்கமான தனது புதல்விகளை மொகலாயர்களுக்கு கொடுப்பதையும் மற்றும் ராஜபுத்திர படை வீரர்களை உதவிக்கு கொடுப்பதையும் நிறுத்தினார். மார்வார் மற்றும் ஆம்பர் (தங்களது புதல்விகளை மொகலாயர்களுக்கு கொடுக்கும் வழக்கம் உள்ளவர்கள்) இனத்தவர்கள் அந்த வழக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் ராஜஸ்தான் சிறுபான்மை இனத்தவர்களான அவர்கள் மிக்க தைரியத்துடன் டெல்லியின் கீழ் பணியும் அதிகாரிகளாக மாறினார்கள் ஆனால் இவர்கள் எல்லாம் பிரதாப்பை பயமுறுத்தியவர்கள் ஆவார்கள். அதிக படை வீரர்களை நியமித்ததன் மூலம் பொறாமையையும் வெறுப்பும் ராணாவின் படைக்குள் ஏற்பட்டது . ஆதலால் ஒரு காரியத்தை எத்தனிக்கும் விசயங்களில் செயல்பாடு இழந்தவர்களாக இருந்தார்கள். ஹிந்து வம்சத்தினரின் ஒவ்வொரு ராஜச்தகானில் உள்ள இளவரசரும் கொள்கைகளிலிரு்ந்து மாறு படும்பொழுது அந்த இனத்தாருடன் உடனான திருமண உடன்பாடுகளில் ஈடுபடுவதை விட்டார். பிரதாப்பின் கொடுக்கவேண்டிய முழு மரியாதை என்பதை சொல்லவேண்டுமென்றால் அவரால் ராஜபுத்திரர்கள் மொகலாய அரசோடு மட்டும் அல்லாமல் அவர்களின் சகோதர அரசுகளான மார்வார் மற்றும் ஆம்பர் ஆகியோருடனும் திருமண உறவு கொள்ள மறுத்தனர் என்பதை கூற வேண்டும் . ராஜ்புத்தின் அரசர்களான புக்கேட் சிங் மற்றும் சவாய் ஜெய் சிங்கின் கடிதங்களின்படி பழைய கொள்கையான திருமண கொள்கையை விட்டது ராஜ்புத்திரர்களை புகழின் உச்சிக்கு எடுத்து சென்றதாக கூறினார்கள். மேவார் தனது அழிவு பாதையை பழைய திருமண கொள்கையை கடைபிடித்தத்தான் மூலம் தேடிக்கொண்டு விட்டது. ஆதலால் திருமண கொள்கை தூய்மைபடுத்தப்படவேண்டும். ராஜபுத்திரர்களை உருவாக்கும் பொருட்டும் இருக்க வேண்டும் மற்றும் இந்த முறை நடை முறைக்கு வரும் எப்பொழுது வரும் என்றால் ராஜபுத்திரர்கள் பழைய கொள்கையை விட்டுகொடுக்கும் பட்சத்தில் என்றார். (மொகலாயர்களுக்கு தங்களது பெண்களை கொடுப்பது) .இந்த பழைய திருமண கொள்கை ராஜபுத்திரர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாமையை உருவாக்கிவிட்டது.[30] பாதுகாக்கப்பட்ட ஹிந்து கோவில்கள் அக்பர் ஒரு தங்க குடையை ஒரு சிலைக்கு கொடுத்தது சிதைக்கப்பட்டது. அவர் மசூதியை இந்து கோவில் ஆக சம்மதித்தார். அந்த கோவிலானது முன்னர் அழிக்கப்பட்டு மசூதியாக மாற்றப்பட்டது.[31]சைக் அஹமத் ஸிர்ஹின்டி அக்பரின் சமகாலத்தவரான அவர் அக்பரை கோவில்களை காத்ததுக்காக அக்பரை பாராட்டவில்லை. ஆனால் தங்கள் மதத்தோடு மற்ற மதத்தையும் நம்புவர்கள், (ஹிந்துக்களை) மசூதிகளை இடித்து கோவில்களை கட்டியதற்கான பெருமை அவர்களை சேரும் என்கிறார்.[32] அழிக்கப்பட்ட ஹிந்து கோவில்கள் பாபர் மற்றும் ஹுமாயுன் கொள்கைக்கு மாறாக ஹிந்து கோவில்களை இடிப்பதில் கொண்டிருந்தார். பாயாஸிட் பியட் என்ற ஹுமாயுனின் தனி காப்பாளரின் கூற்றுப்படி அக்பர் மசூதி மற்றும் மதராசவுக்காக இரண்டு கிராமங்களை கொடுத்ததாக கூறுகிறார். இவைகள் ஹிந்து கோவில்களை இடித்து கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவைகள் டோடர் மால் என்பவரின் கீழ் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது . டோடர் அக்பரின் அவையில் இருந்த ஒரு ஹிந்து மந்திரி (விசிர்) ஆவார்.[31] அக்பரின் காலத்தில் டோடர் மால் எளிமையானவராக (சதா-லா ) கருதப்பட்டார். ஏனெனில் தான் தொழுத விக்கிரங்ககளின் இழப்பிற்காக மிகவும் அழுதார்.அவர் ஹிந்து வழக்கங்களை கண்மூடித்தனமாகவும் குறுகிய தன்மையுடனும் நடப்பதை கொண்டிருந்தார்.[33] கங்கை யமுனா நதிகளுக்கிடையேயே உள்ள டோப் பகுதியில் உள்ள இந்து கோவில்களில் உள்ள தங்க விக்கிரங்களின் அழிவுக்கு அக்பரின் படைகளே காரணம் ஆகும்.[31] வரலாற்று ஆசிர்யர்களான அப்ட் அல்-குவாதிர் பதொனி என்பவரின் கூற்றுப்படி அக்பரின் ஆட்சியில் நாகர்கொட்டில் அதாவது கங்க்ரா அருகே 200 பசுக்கள் அழிக்கப்பட்டன. மற்றும் ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர் . கோவில்கள் அழிக்கப்பட்டன.[31] சித்தூரின் மூன்றவாது எல்லை குறிப்பீட்டின் போது கோவில்கள் இடிக்கப்பட்டன. மொய் நுட்டின் கிறிஸ்டியின் நினைவாக ஆஜ்மீரில் செப்பு மெழுகு குச்சிகள் அக்பரால் வழங்கப்பட்ட பிறகு அவைகள் காளிகா கோவில் இடிப்புக்கு பிறகு அக்பரால் எடுத்து செல்லப்பட்டன. இவைகள் சிட்டோரின் மூன்றாவது எல்லை குறியீடு சமயத்தில் நடைபெற்றது.[34] ஜேசுடின் தந்தையான மான்செரெட்,அக்கியுவைவா மற்றும் என்ரிக்குயு ஆகியோர்கள் அக்பரின் அவைக்கு ஆரம்ப கால வருடமான 1580 -ல் வந்தார்கள். அவர்களின் குறிப்புப்படி மற்றும் மதம் சார்ந்ததை பற்றி கூறும்போது இஸ்லாமியர்கள் பல ஹிந்து கோவில்களை அவர்களின் இஷ்டப்படி இடித்து விட்டார்கள். அந்த இடித்த இடத்தில் இஸ்லாமியர்களின் சமாதிகளையும் இஸ்லாமியர்களின் நினைவிடங்களும் கட்டப்பட்டன. அவர்கள் முனிவர்களை போல வணங்கப்பட்டனர் .[35] மான்செர்ரேட் அரசரின் மகனான முரட்டிற்கு கல்வி கற்பித்தார். ஜிஹாத்திற்கு எதிரான ஹிந்து அரசர்கள் அக்பரின் ஆட்சி காலத்தில் பாரம்பரியமான இஸ்லாமியர்களால் அக்பர் ஒரு பக்தியான இஸ்லாமாக கருதப்பட்டார். மற்றும் அதில் இருந்து வரும் ஊடுருவலை தடுப்பவராக கருதப்பட்டார்.[36] ரிஸ்குல்லா முஸ்டகி நன்கு அறியப்பட்ட டெல்லியின் இஸ்லாமிய அறிஞரான அவர் 1580 - ல் எழுதப்பட்ட கூற்றுப்படி அக்பர் கடவுளால் இஸ்லாமை காப்பதற்கு அனுப்பப்பட்டவர் என்றும் அதிலும் ஹெமுவால் ஒடுக்கப்பட்ட இஸ்லாமை காப்பதற்கு அனுப்பப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது [37]. அக்பர் இஸ்லாமை இந்தியா முழுவதும் ஒரு புனித போரை (ஜிஹாத்) ஹிந்து அரசர்களுக்கு எதிராக எழுப்பினார் சித்தூரின் 1567-சிஇ , 8000 ல் ராஜ்புத்தில் நடைபெற்ற மூன்றாவது குறிப்புப்படி ராஜபுத்திரர்கள்கோட்டைக்கு உள்ளேயே ஹிந்து கோவில்களை காப்பதற்கு இருந்ததாக கூறப்படுகிறது. அக்பரின் குதிரைப்படை சமவெளியில் தாக்குதல் தொடுத்த போது இவ்வாறு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த 8000 நபர்கள் அக்பரின் படையை எதிர்த்து ஹிந்து கோவில்களை தாக்குதலில் இருந்து மீட்கும் பொருட்டு கடைசி நபர் வரை இறந்ததாக கூறப்படுகிறது. இதை தவிர 30000 -த்துக்கும் மேலான ஆயுதமில்லா நபர்கள் அக்பரின் படையினால் [38] ரத்த வெள்ளத்தில் மிதந்ததாக கூறப்படுகிறது.[38] இது அவரின் ஆணைப்படி பிப்ரவரி 24,1568 சி இ -ல் நடந்ததாக கூறப்படுகிறது. கர்தனியான் கான்னே யுத்தத்தை வெற்றிபெற்றதை ,ஈககுஸ்டிரைன் ரோமன் வீரர்களிடமிருந்து எடுத்த மோதிரங்களை வைத்து அளவிடுகிறார். அக்பர் இந்த வெற்றியை ராஜபுத்திர வீரர்களிடம் இருந்த மதிப்பு மிக்க ரிப்பன்களை வைத்து அளவிடுகிறார் மற்றும் சித்தூர் வீரர்களிடமிருந்தும் பெறப்பட்ட ரிப்பன்களையும் வைத்து அளவிடுகிறார். இவைகள் 74.5 மனிதர்கள் என்று கூறப்படுகிறது. மனிதர்கள் ( இது யூனிட் இந்தியாவில் 40 கே ஜி என்று எடை கணக்கில் கூறப்படுகிறது இதை இந்த நடவடிக்கையை விவரிக்கும் நினைவாக 74.5 என்ற எண்ணை ராஜஸ்தானில் கருதுகிறார்கள். "சித்தூரின் பாவச் செயலாக " இதை கருதுகிறார்கள் .அக்பர் செய்த பாவச் செயலாக இதை கருதுகிறார்கள்.[39] அக்பர் இந்த வெற்றியை சித்தூர் மற்றும் ரந்தம்போர் முழுதும் ,ஒரு புது நகரத்தை உருவாக்கியதற்கு ஆன அடித்தளத்தை போட்டு ,கொண்டாடியதாக கூறப்படுகிறது. ஆக்ராவின் டபியு.எஸ்.ட்பியு என புது நகரம் என 1569 -ல் கருதப்பட்டது. இது பதேபூர் சிக்ரி என அழைக்கப்பட்டது (வெற்றியின் நகரம் ) [40] அக்பர் தனது வெற்றியின் மூலம் பெருமிதம் உயர்த்தி கொண்டவராய் மேலும் பரந்த ஆக்கிரமிப்பு செய்து இஸ்லாமின் பெருமைமிக்க வீரராய் மற்றும் தீவிரமாக இஸ்லாமிய கொள்கையை பதே நாமா -இ -சித்தூர் என பெயரிட்டு , ஆஜ்மீரின் சித்தூரை வெற்றி பெற்ற பிறகு பரப்பினார். ஆக்ரா போகும் வழியில் அங்கு சில காலம் தங்கி ரம்ஜான் 10,975/மார்ச் 9 1568- ல் அந்த கொள்கையை வெளியிட்டார். அப்பொழுது ஒரு மத கொள்கையை (ஹிந்துக்கள்) விட அதிக கொள்கையையை கொண்டவர்கள் வெறுக்கபட்டர்கள் மிக்க திறமைமிக்கவராய் , ஒரு மத கொள்கையை விட அதிகம் கொண்டவர்களை (ஹிந்துக்கள்) அக்பர் அழித்தார். இது கடமை தவறாத முஜாஹித்துக்குக்கள் மூலம் அவர்களின் இடி முழக்கம் கொண்ட வெற்றியை தரும் வளைந்த அரிவாளால் கொண்டு வரப்பட்டது. "சண்டை இடு அல்லா அவற்றை நல்ல வெற்றிகளாக உன் கையில் தருவார். அவர்களை தாழ்த்தி உனக்கு அவர்கள் மீது வெற்றியை பெறச் செய்வார்.[98] மேலும் ஜிஹாத்திர்க்கு ஆக இந்தியாவின் ஹிந்து அரசர்களுக்களுக்கு எதிராக அழைக்கப்பட்ட விடுப்பின் குரல் உயர்த்தப்பட்டது. மற்றபடி ஹிந்து கோவில்களை இடிப்பதற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இது எனது கடவுளின் கருணையால் நடந்தது. அவர் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேனா என்று முயற்சி செய்யலாம். நாம் நமது நம்மின் நல்ல முயற்சியை போரிலும் (கிஸா )மற்றும் மதப்பணியான ஜிஹாத்திலும் ஈடற்ற என்றும் நமது வெற்றியை அதிகரிக்க செய்யும் அல்லாவின் உதவியால் நமது சுற்றியுள்ளவர்களையும் கோட்டைகளையும் ,பழக்க வழக்கங்களையும், நகரங்களையும் ஹிந்துக்களிடமிருந்து வெற்றிபெற்றவர்களாய் இருக்கிறோம். அல்லா அவர்களை ஒதுக்கி அவர்களை ஒழிக்கலாம். ஆதலால் இஸ்லாமியத்தை பற்றி எல்லா இடத்திலும் தன்மை மேம்பட்டு பலவித கொள்கையினால் ஏற்படும் இருள் விலக வேண்டும். மற்றும் வாளால் ஏற்படும் பாவ செயல்கள் நீங்க வேண்டும். சிலைகள் உள்ள இடங்களை நாம் சிதைப்போம் மற்றும் இந்தியாவில் இது போன்ற செயல்களை செய்வோம்.[41] ஜிஷ்யாவின் தீவிர கொள்கையான 1575 - ல் வெளியானது மிக முக்கியத்துவம் பெற்றதாகும்.[42] அப்ட் அல்-குவாதிர் பாதனி அப்பொழுது அக்பரின் அவையில் தலைமை மத தலைவர் அல்லது மத போதனை தலைவராக மாநிலத்துக்கு இருந்த போது அக்பருடன ஓர் பேட்டியின் பொது , அதாவது அக்பரின் சேனை ரானா பிரதாப்பை நோக்கி 1576 -ல் விரைந்த போது இவர் இவ்வாறு சொன்னார் " மதிப்பு மிக்க இஸ்லாய்மியத்தோடு இந்துத்துவத்தின் ரத்தத்தை விட்டு விட்டு வருமாறு கூறுகிறேன்" ஆக்பர் பாதனியின் விளக்கத்தை கண்டு மற்றும் அவரது இஸ்லாய்மிய மதப்பற்றும் ஆற்றும் கடமையை கண்டும் அவருக்கு கை நிறைய தங்கக்காசுகளை அள்ளி அவரது மகிழ்ச்சிக்கு அடையாளமாக பாதனியிடம் கொடுத்தார்.[43] அக்பர் தனது கடிதத்தில் தான் இஸ்லாமின் மிக வெற்றி பெற்ற வீரர் என்று 1579 - ல் அப்துல்லாஹ் கான் எனும் டுரானை சேர்த்தவர்க்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார் நிலங்களும் இடங்களும் உள்ள (இந்தியாவில் ) இருந்து இஸ்லாமிய சூரியனை குதிரை குளம்புகளாலும், உலகத்தை வெற்றி கொள்ளும் இளவரசர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது. இங்கு அவர்களுடைய வாள் மின்னாது மற்றபடி அவைகள் முஸ்லீம்களின் வாழும் இடமாகவும் அவர்களின் நம்பிக்கைக்கு உரிய வீடு (முஸ்லீம்) ஆகவும் மாறி உள்ளது.தேவாலயங்களும் ஒரு மதத்திற்கு மேல் நம்பிக்கைக்கு வைக்கும் உள்ளவர்களின் கோவில்களும் (ஹிந்துக்கள்) அவைகளின் வழி வருபவைகளும் மசூதிகளாகவும் மற்றும் புனித சின்னமாக , ஆசாரத்தை பிரதிபலிப்பவைகளாக உள்ளன. கடவுள (அல்லா) புகழப்படவேண்டியவர் .[44] ஹிந்துக்களின் மீதான வரி விதிப்புகள் ஜிஸ்யா எனும் வரி 1562 - ல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் அவை மீண்டும் 1575 -ல் கொண்டு வரப்பட்டது. மீண்டும் அது 1580 -ல் வரி விதிக்கப்பட்டது.[45] இந்த வரியானது முஸ்லிம் அரசர்களால் ஒரு ஆயுதமாக இந்துக்கள் இஸ்லாமியத்தை தழுவதற்கு பயன்படுத்தப்பட்டது. இது இந்துக்களின் மீது விதிக்கப்பட்ட வரியாக உள்ளது. முஸ்லிம்களுக்கு இந்த வரி கிடையாது.[46] இந்த வரியானது ஹிந்துக்களின் மீது இடப்பட்ட சுமை ஆக இருந்தது. அவர்களின் இஸ்லாமியத்தை தழுவினால் அவர்களின் உயிர் தப்பும் இல்லேயேல் இந்துக்களின் உயிர்கள் பலி கொடுக்கப்பட்டது. பிரோஸ் ஷா துக்ளக் என்பவர் எவ்வாறு மத மாற்றத்துக்கு ஜிஸ்யா உதவியது என்று விளக்குகிறார். நான் என்னால் நம்பமுடியாத (ஒரு மதத்திற்கு மேல் நம்பிக்கை கொண்டவர்கள்) மக்களை கடவுளால் காக்கப்படும் மதத்திற்கு தழுவவும் நம்பிக்கையை தொடர்ந்து முஸ்லிம் ஆகும் பட்சத்தில் அவர்களுக்கு ஜிஸ்யா வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கபடவேண்டும் என்றார். பல எண்ணிக்கையில் ஆன முஸ்லிம்கள் தங்களை தாங்களாகவே இஸ்லாமியத்தை ஏற்று மரியாதை அடைந்து கொண்டார்கள்.[47] அக்பரின் இந்துக்களின் மீதான வரி விதிப்பான ஜிஸ்யாவும் மற்றும் கோவில்களுக்கு போய் வரும் இறைப்பணிக்கான வரியும் தற்காலிகமாக இருந்தது.அனால் உண்மையில் எந்த வித பயனும் அதனால் இந்துக்களுக்கு இருந்ததில்லை.[48] அக்பர் பற்றி இந்துக்களின் கருத்துக்கள் அக்பர் பல ஹிந்துக்களை அவர்களின் இஷ்டத்திற்கு [49] மாறாக அவர்களை முஸ்லீம்களாக மாற்றினார். மற்றும் முக்கிய இந்துக்களின் புனித இடங்களை இஸ்லாமிய இடங்களாக மாற்றினார். எடுத்துக்கட்டாக பிரயாக்கை அலஹாபாத் [50] ஆக 1583 -ல் மாற்றினார்.[51] அக்பரின் ஆட்சியின் போது அவரின் படைத்தளபதியான ஹுசைன் கானின் "டுக்கிரியா" முஸ்லிம் அல்லாதவர்களை (ஹிந்துக்கள்) முறையற்ற பகுதிகளை [52] கொண்டு பல்வேறு நிறங்களில் ஆன துணிகளை தோள்பட்டைகளிலிலும் அல்லது கைகளிலும் அணிவிக்கப்பட்டனர்.[53] வரலாற்று அறிஞரான தசரத ஷர்மாவின் கூற்றுப்படி நாங்கள் அக்பரின் ஆட்சி பற்றி நாங்கள் அக்பர் நாமா போன்றவைகளின் மூலம் நாங்கள் அக்பரின் ஆட்சியை நாங்கள் சிறந்ததாக காண்பிக்க விரும்புகிறோம் ,மற்றும் அக்பருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை விட அதிகம் காண்பிக்க விரும்புகிறோம் என்றார்.[54] சம காலத்தில் இயற்றப்பட்ட "தல்பத் விலாஸ் " ஆகிய வேலைப்பாடுகளை பார்க்கும் போது அக்பர் ஹிந்துக்களை மிகவும் கேவலமாக நடதிகிறார் என்று தெரிகிறது.[55] அக்பர் குமரஹ் வேட்டையை பேரா-ரோஹ்தாஸ் கிர்ஜாகா பகுதியில் வேட்டையை தொடங்கிய போது பல ஹிந்துக்கள் ) ராஜ்புத்தின் முக்கியமானவர்கள் ஜீலம் நதிக்கரையில் ஒதுக்கப்பட்டார்கள்.அக்பர் அங்கு வந்த போது ராஜ்புத்தின் முக்கியமானவர்களான ஹிந்துக்கள் அவரை சந்திப்பதற்கு சென்றனர். அவர்களில் டன்ஹாஜி சிறிது தாமதமாக வந்தார். அக்பர் அவரை சாட்டையை கொண்டு அவரை அவரே அடித்தார். இளம் ராஜ்புத் இளவரசரான பிரிதிவிதிபா அவரது மாமாவால் விளையாடுவதற்கு அனுபதிக்கப்பட்டார். அக்பர் பிரிதிவிதிபாவின் மாமாவை சாட்டையால் அனுமதிக்க உத்தரவு இட்டார். இதனால் இந்த மனம் நொந்த சம்பவத்தால் அந்த ராஜ்புத் தன்னை தானே குத்து வாளால் மூன்று முறை குத்திக்க்கொண்டார். அக்பரை மேலும் குழப்பத்திற்கு ஆக்குவதர்க்காக அவர் இவ்வாறு செய்தார். ஆனால் அக்பர் அவருடைய முடிவை யானை மிதித்து கொன்றதாக சொல்லுப்படி கட்டளையிட்டார். பிக்கானரின் டல்பட் சிங்க் மற்றும் அவரது சகாக்கள் அக்பரை ராஜபுத்திரரின் உடலை அடக்கம் செய்து சந்திக்க சென்ற போது அவர் "ஹிந்துக்கள் பசுக்களை உண்ணட்டும்" என்பதை உரக்க குரலில் கூறுவதை பார்த்தார்கள் அக்பர் இந்துக்களை இவ்வாறு நடத்துவது பற்றி மஹாரானா பிரதாப் சிங்க்கை அடைந்த போது அக்பருக்கு கொடுக்க வேண்டிய சரியான அவமரியாதையை பற்றி சிந்தித்தார்.[55] அதன் பிறகு ஹிந்துக்கள் அக்பரை பற்றி இருந்ததில்லை அல்லது அக்பர் உயர் பதவிக்களில் ஹிந்துக்களை வைத்ததில்லை. இது அக்பரின் படைத்தளபதியான மான் சிங்க் விஸ்வநாத் கோவில் கட்டுவதற்கு மறுப்பு தெரிவித்த போது தெள்ளத் தெளிவாக தெரிந்தது. இது அக்பரின் அனுமதியோடு நடந்தது ஆகும். ஹிந்துக்கள் இந்த கோவிலை புறக்கணித்தனர். ஏனெனில் மான் சிங்கின் குடும்பம் அக்பரோடு திருமண உறவு கொண்டிருந்தார்கள்.[56] அக்பரின் ஹிந்து படைத்தளபதிகள் அக்பரின் உத்தரவு இல்லாமல் கோவில்களை கட்டியதில்லை. வங்கத்தில் மான் சிங் 1595 - ல் ஒரு கோவிலை கட்ட தொடங்கினார். ஆனால் அக்பர் அதை மாற்றும்படி உத்தரவிட்டார். [57] அக்பர் மீதான வெறுப்பு ஹிந்து இன தலைவரான ராஜா ராம் அக்பரின் புதைக்கப்பட்ட இடத்துக்கு ஆக்ராவில் உள்ள சிக்கந்த்ராவிற்கு கலகம் செய்ததை தொடர்ந்து வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது. ஆனால் அவரது முயற்சி ஒரு அபுல்பசி எனும் பௌஜிடாரால் முறியடிக்கப்பட்டது. அதன் பிறகு சிறிது காலம் பிறகு ராஜா ராம் சிக்கன்த்ராவில் 1688 -ல் [58] மீண்டும் தோன்றினார். ஷைஸ்டா கான் என்ற ஆளுநர் பதவியில் அவர் வருவதற்கு முன்பு அக்பரின் சவக்கிடங்கை தாக்கினார். மற்றும் முக்கிய பொருட்களாக உள்ள தங்கம், வெள்ளி, ராஜா வரவேற்பு விருப்புகள், விளக்குகள் மற்றும் பல வகைகள் எடுத்து செல்லப்பட்டன. அவரால் எடுத்து செல்ல முடியாதவைகள் அழிக்கப்பட்டன. ராஜாராம் மற்றும் அவரது ஆட்கள் அக்பரின் எலும்புகளை எடுத்தார்கள் மற்றும் அவைகளை கொளுத்தினார்கள். இது முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கல்லறை மூலம ஏற்பட்ட மனஉளைச்சல் ஆகும்.[59] மிகப்பெரிய செப்பு வாசல் கதவுகளையும் உடைத்தும் ,மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்களையும் எடுத்தும் ,மற்றும் அவர்களால் கொண்டு செல்ல முடியாதவைகளை அழித்தும் சென்றனர். மற்றும் அவர்களுடைய மொகலாய மன்னர்களுக்கு எதிரான் கோபம் மேலும் அதிர்ச்சி தரக்ககூடிய வகையில் கோபமாக உருவெடுத்தது. அக்பரின் எலும்புகளை எடுத்தவர்களாய் அவர்கள் அவைகளை தீயிலும் மற்றும அவைகளை எரிக்கவும் செய்தனர்.[60] முஸ்லீம்களோடான உறவு. 1567 -ல் அக்பர் மிர் முர்டாஷா ஷை ரி பி ஷிரசியின் கல்லறை தோண்டி எடுக்கப்பட்டது. ஏனெனில் அதன் தோற்றம் அமீர் குசரு உடைய கல்லறைக்கு முறையற்றதாக இருந்ததால் அவ்வாறு செய்யப்பட்டது என்று கருதப்படுகிறது. ஏனெனில் மிர் ஓர் ஷியா முஸ்லிம் இனத்தவர். சன்னி முஸ்லீம் இனத்தவருக்கு அருகே புதைக்க முடியாது என்று காரணத்தால் அவ்வாறு கூறப்பட்டது.[61] 1572 -ல் அக்பர் ஒரு பிரஞ்சுகாரரை அப்துல் சமத்துக்கு அனுப்பினார். அப்துல் சமத் ராணுவ மற்றும் நிர்வாகத்துக்கு வழி நடத்தும் தலைவர் ஆவார் . இது பார்கானாவில் உள்ள கடவுள் மறுப்பு கொள்கையை அழித்து வரும்படி அனுப்பினார். இது அக்பருக்கு ஷி இஸ்ம் பற்றிய தவறான கருத்தை கூறுகிறது.[61] அக்பர் மஹடவி இயக்கத்தை 1573- ல் அமுக்கினார். அவருடைய குஜராத்தில் நடைபெற்ற இயக்கத்தில் இதை கடுமையாக செய்தார். மஹடவியின் மியன் முஸ்தபா பன்டகி கைது செய்யப்பட்டார் மற்றும் அதன் பிறகு தொடர்ந்து நீதிமன்றதுக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் மரணமடைய செய்யப்பட்டார்.[61] ஓட்டோமான் அரசுடன் உறவு அக்பர் ஒரு ஹஜ் குழுவை புனித நகரமான மெக்காவிற்கும் மற்றும் மெடினாவிற்கும் அக்டோபர் 1576 -ல் அனுப்பினார் . இதை சூரத்தின் துறைமுக நகரத்தில் இருந்து அனுப்பினார். மதிப்பு மிக்க பெண்கள் குழுவும் இந்த பயணத்தை மேற்கொண்டு புனித நகரத்தை 1577 -ல் குறித்த நேரத்தில் அடைந்ததுமேலும் பல நான்கு குழுக்களை 1577 முதல் 1580 வரை பல பரிசுகளால் நிரப்பி இஸ்லாமின் சதாகத்திற்கு அதாவது மிக முக்கிய தலைமையான மெக்காவிற்கும் மற்றும் மெடினாவிற்கும் அனுப்பப்பட்டனர். இந்த குழுக்களை சேர்ந்த புனித யாத்திரர்கள் ஏழ்மையாக இருந்தனர். இவர்கள் அதிகமாக அங்கு தங்கியதால் நகரங்களுக்கு பளு அதிகம் ஆனது.[62]ஓட்டோமான் அதிகாரிகள் யாத்திரர்களை வீடு திரும்புமாறு கேட்டு கொண்டனர். மதிப்பு மிக்க பெண்கள் குழுவை சேர்ந்தவர்கள் ஹிஜஜ்ஜை விட்டு வீடு திரும்ப வேண்டாமென்று இருந்தார்கள். ஆனால் ஒட்டோமானின் அரசர் வேண்டுகோள்படி அவர்கள் வீடு திரும்ப வலியுறுத்தப்பட்டார்கள் அக்பரின் மதிப்பு மிக்க பெண்கள் குழுவை மனம் கோணச் செய்த அடெனின் ஆளுநரால் அவர்கள் 1580 - ல் வீடு திரும்ப நேர்ந்தது. இதனால் ஹஜ் புனித யாத்திரைக்கு பெண்கள் குழுவை அனுப்புவதை , இனி செய்யாதவாறு இருக்க இந்த நிகழ்ச்சி அவரை வலியுறுத்தியது. அதுவும் சதாகுயட் எனும் மெக்காவிற்கும் மெடினாவிற்கும் அனுப்பவதை தடை செய்ய வேண்டும் என்று அவரை வலியுறுத்தியது. ஆதலால் அக்பர் குழம்பியவராய் கலிப் ஆக அல்லது சன்னி முஸ்லிம் இனத்தாரின் தனி நிகர் தலைவராக வேண்டுமென்று நினைத்தார். இதை தொடர்ந்து "மஹ்சர் " எனும் ஒரு ஓளிமயமான எழுத்துக்களால் ஆன "உலமா " இஸ்லாமிய அறிஞர்களால் செப்டம்பர் மாதம் 1579 - ல் இதை உறுதியாக்க கை எழுத்து போடப்பட்டது. மஹசரின் உறுதிமொழிகள் அக்பர் காலத்துக்கும் காலிபா ஆவார் காலிபாவின் மதிப்பானது முஜ்டாஹிட் விட அதிகமானது முஜ் டாஹட்திற்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் அக்பர் ஏதாவது ஒரு கருத்தை முடிவு செய்ய வேண்டும் மற்றும் அக்பர் [[நாஸ் ( இஸ்லாம் )|நாசிர்க்கு]] எதிரான இல்லாத கட்டளைகளை கொடுக்கலாம் 1579 -ல் அக்பர் மதரீதியான பிரச்சாரங்களையும் மற்றும் மதரீதியான காரியங்களையும் செய்ய ஆரம்பித்தார். முறையான போதகராகவும் மற்றும் மேடை அமைத்தும் வாசகங்களை வாசித்தார். இந்த வாசகங்கள் பைசியினால் இயற்றப்பட்டது மற்றும் ஷைக் முபாரக்கின் மூத்த மகனால் இயற்றப்பட்டது. அந்த கால கட்ட சமயத்தில் அவர் மெக்காவின் புனிததன்மையை பற்றி ஆன நம்பிக்கையை இழந்துவிட்டதாக குறிப்பு உரைக்க ஆரம்பித்தார்.[63] 1584 முதல் அக்பர் எமேன் எனும் ஓட்டோமான் துறைமுகத்தை போர்ச்சுகீசியர்களின் உதவியோடு தாக்குவதற்கு கடுமையாக கருதினார். 1584 -ல் ஒரு தொடர்பை ஏற்படுத்துவதர்க்காக மொகலாய அரசின் தூதுவர் எப்பொழுதும் கோவாவில் நிலையாக அமர்த்தப்பட்டனர். 1587 -ல் போர்ச்சுகீசியர்களின் துறைமுக படையானது யேமென் மற்றும் ஹபாஷை தாக்குவதற்கு சென்ற தோற்கடிக்கபட்டது. மற்றும் தலைவன் டோகொண்டோ பிரினோ சிறை பிடிக்கபட்டான். இவ்வாறாக மொகலாய மற்றும் போர்ச்சுகீசிய உறவு முடிவுக்கு வந்தது.[64] கிறித்தவர்கள் உடன் உறவு 1603 -ல் பிர்மன் என்ற கிருத்தவ பாதிரியார்களால் கொடுக்கப்பட்ட வேண்டுகோள் ஏற்கப்பட்டது. இதன்படி யாரும் தங்கள் விருப்பப்படி மத மற்றம் செய்து கொள்ளலாம்.[65] பாதிரியார்கள் பிரமனோடு மற்று ஆயுதங்கள் உடன் தங்கள் பணியை மேற்கொள்ள சிரமப்பட்டார்கள். ஸ்டான்ச் முஸ்லிம் அதிகாரிகள் லாகூரின் மதிப்பு மிக்க தலைவர்களாய் இருந்த போது குலிச்சி கான் மிக்க தந்திரமாய் பல கிறித்தவர்களை ஓட செய்தார். பாதிரியார் பின்ஹிரோ இறப்பை கண்டு பயந்து ஓடினார்.[66] இஸ்லாமை கைவிடுதல் இஸ்லாமை [67] விட்ட பிறகு இவர் புது மத இயக்கம் ஒன்றை துவங்கினார் . தீன் இலாஹி எனும் எல்லா மத கொள்கைகளையும் இணைத்து (முக்கியமாக இந்துமதம் , முஸ்லிம்மதம் மற்றும் சீக்கியத்துவம் , கிறித்தவ கருத்துக்கள் , ஜெயின் கொள்கை, ஸொரஸ்டிரியானிஸம்) அவற்றின் வேறுபாடுகளை வைத்து வெவ்வேறு பகுதிகளை பிரித்தார். அக்பர் இஸ்லாமை தவிர மற்ற மதங்களை சகிக்கும் தன்மை உடையவராக இருந்தார். உண்மையில் அவர் சகித்து கொண்டு மட்டும் அல்லாமல் மத மற்றும் தத்தவ ரீதியான கருத்துகளையும் பற்றி விவாதம் நடத்தினார். இது இபாடட் கானா எனும் வழிபாட்டு வீட்டை பதேபூர் சிக்ரியில் உருவாக்குவதற்கு உதவியது. 1575 -ல் இருந்து பெற்ற கலந்துரையாடல்களின் கருத்துக்கள் மற்றும் அவர் வழி நடத்திய விஷயங்கள் இவற்றிலிருந்து அக்பர் ஒரு கருத்தை வலியுறுத்தினார். அதாவது எந்த ஒரு மதமும் உண்மையை பிரதிபலிக்கும் மதமாக தங்களை கருத முடியாது. இது அவரை தீன் இலாஹி உருவாக்க 1581 -ல் வழி வகை செய்தது. பல முஸ்லீம் போதகர்களில் அவற்றில் வங்கத்தின் காடி மற்றும் செமினால் சபிய், ஆகியோர் மற்றும் சாயக் அஹமத் ஸிர்ஹன்டி இதை அபத்தம் என கூறினர். தீன் இலாஹி ஒரு நீதியான கருத்து ஆகும். இது ஆசை, உணர்வுகளின் உணர்வு தன்மை, வெறுத்து ஒதுக்குதல் தன்மை, கர்வம் கொள்ளுதல் ஆகியவற்றை தடுக்கிறது. நல்லவைகள் செய்தல், முன்னெச்சரிக்கையாய் இருத்தல், சுய கட்டுப்பாடு, மற்றும் அன்பாக இருத்தல் ஆகியவைகளே முக்கிய கொள்கைகளாக பண்புகளாக கருத்தில் கொள்ள வேண்டும். ஆத்மாவானது இறைவனை [68] நினைத்து தன்னை சுத்திகரிப்பதற்கு உற்சாகப்படுத்தப்படுகிறது. இதில் புனிதமான கருத்துக்கள் அல்லது போதனைக்காக அதிகார வர்க்கங்களோ கிடையாது.[69] தீன் இலாஹி அக்பரின் மதரீதியான கருத்துக்கள், தத்துவம்,இயற்கை வழிபாடு முறை , ஆகியவற்றை கொண்டது. இது எந்த ஒரு கடவுளையோ அல்லது பிரதிபலிக்கும் கொள்கையோ கொண்டது இல்லை. ஊடகங்கள் கருத்து 2008 -ல் அசுடோஷ் கௌரிகெர் அக்பரின் கதையை விவரிக்கும் ஒரு படத்தை வெளியிட்டார் மற்றும் அவரது மனைவி ஹிரா குன்வரி (ஜோதா பாய் என்று தெரியப்படும் ) ஜோதா அக்பர் எனும் தலைப்பு கொடுத்து வெளியிட்டார். அக்பரது கதாப்பாத்திரத்தை ஹிரித்திக் ரோஷன் செய்திருந்தார் . ஐஸ்வரியா ராய் ஜோதா பாத்திரத்தை செய்தார். 1960 -ல் வெளியிடப்பட்ட விருது பெற்ற படமான மொஹல் இ ஆஸாம் (புகழ் பெற்ற மொகலாயர்) என்ற படத்தில் பிரிதிவி ராஜ் அவரது கத பாத்திரத்தை செய்தார். அக்பர் மற்றும் பீர்பால் ஆகியோர்கள் பற்றை ஹிந்தி தொடரான அக்பர்-பீர்பால் எனும் ஸீ டிவியில் வெளியான 1990 - ல் தொடரில் அக்பரின் கதாப்பாத்திரம் விக்ரம் கோக்ஹலேவால் நடித்து படமாக்கப்பட்டது. இப்பொழுது அக்பர்-பீர்பால் ஸி-குஜராத் மொழியில் ஒலி பரப்பப்படுகிறது. ஆனால் குஜராத் மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தொலை காட்சி தொடரான 'அக்பர் தி கிரேட்' என்ற சஞ்சய் கானின் அந்த தொடர் டிடியில் தேசிய அலை வரிசையில் 1990 -ல் ஒலி பரப்பட்டபட்டது. சற்றே கதையாக்கப்பட்ட ஒரு நாவலில் அதாவது கிம் ஸ்டான்லியின் 2002 - ல் "தி இயர்ஸ் ஆப ரைஸ் அண்ட் சால்ட் " எனும் நாவலில் அக்பர் ஒரு முக்கிய துணை கதாப் பாத்திரமாக வருகிறார். அக்பர் சல்மான் ருஷ்டியின் 2008 வருட நாவலான "தி என்சான்ட்ரெஸ் ஆப புளோரன்ஸ் " அமர்தியா சென் தனது புத்தகமான "தி "ஆர்குமேண்டடிவ் இந்தியன் " மற்றும் "வயலென்ஸ்" மற்றும் "ஐடென்டி" மற்றும் மிகவும் ஒரு எடுத்துக்காட்டாக கூறுகிறார். பெர்ட்ரைஸ் ஸ்மால் அவரது வரலாற்றுக்கு சிறப்பு மிக்க பாத்திரங்களை கொண்ட தனது நாவல்களில் முக்கியமான தனது காதல் நாவல்களில் முக்கிய பாத்திரங்களாக குறிப்பிடுவார். அதே போல அக்பரையும் குறுப்பிட தவற வில்லை. அவரது முக்கிய இரண்டு நாவல்களில் முக்கியமான கதா பாத்திரமாக கருதப்பட்டுள்ளார். மற்றும் அவரது மூன்றாவது நாவலில் அக்பரை பற்றி குறிப்பிடுகிறார். அனால் இந்த நாவலில் அக்பர் அவரது இறப்புக்கு பின் குறிப்பிடபடுகிறார். இந்த "திஸ் ஹார்ட் ஒப் மைன் " என்ற நாவலில் சில காலங்களுக்கு நாற்பதாவது துணைவியாக கருதப்படுகிறார். மற்றும் வைல்ட் ஜாஸ்மின் மற்றும் டார்லிங் ஜாஸ்மின் ஆகியவற்றில் தனது இங்கிலாந்து மகளை சுற்றி வருவதாக கூறப்படுகிறது. அவரது முடிவு ஒரு துரதிஸ்டவசமான ஒன்றாக இந்திய மற்றும் பெர்சியா மக்களுக்கு கருதப்படுகிறது. அக்பர் ஒரு சிறந்த மதிப்பு மிக்க இந்தியாவின் அல் மனிதராக கருதப்படுகிறார். புகழ் வாய்ந்த விளையாட்டான "தி ஏஜ் ஆஇப் எம்பயர்ஸ் 111: தி ஆசியன் டைனாச்டீஸ் " ஆகியவற்றில் உள்ளார். வயலின் இசை "II கிராஸோ மொஹல்" என்ற புனை பெயரிட்ட இசையானது அந்தோனியோ விவல்டியால் 1720 -களில் வெளியிடப்பட்டது மற்றும் அவரது வழக்கமான தொகுப்புகளில் ஆர் வி 208 என குறியிடப்பட்டுள்ளது. அவர் அக்பரின் ஆட்சி பற்றி மறைமுகமாக ஆதரிக்கிறார். குணால் பாசுவின் தி மினியேச்சுரிஸ்ட் எனும் கதை ஒரு இளம் வர்ணம் பூசும் கலைஞர் , அக்பரின் ஆட்சியின் போது அவர் பற்றிய வர்ணனைகளை தனது சொந்த அக்பர் நாமாவை போல விவரிக்கிறார். கூடுதல் பார்வைக்கு அக்பர்நாமா மேற்கோள்கள் வெளி இணைப்புகள் - - பகுப்பு:முகலாய அரசர்கள் பகுப்பு:1542 பிறப்புகள் பகுப்பு:1605 இறப்புகள் பகுப்பு:இசுலாமியப் பேரரசர்கள் பகுப்பு:அக்பர் பகுப்பு:முகலாய அரசர்கள் பகுப்பு:இந்தியப் பேரரசர்கள்
இந்தியப் பேரரசர் அக்பர் எப்போது இறந்தார்?
1623
24,511
tamil
355bba0a8
பைக்கால் ஏரி (Russian:о́зеро Байка́л, tr.Ozero Baykal,IPA:[ˈozʲɪrə bɐjˈkɑl]; Russian Buryat: Байгал нуур, Mongolian: Байгал нуур Baygal nuur சொற்பொருள் விளக்கம், மங்கோலிய மொழியில், "இயற்கை ஏரி" [3]) என்பது உருசியாவின் (ரஷ்யாவின்) தென் சைபீரியாவில் இர்கூத்க்க் மாகாணத்தின் வடமேற்கு மற்றும் புரியாத்தியா குடியரசின் தென்கிழக்கிலுமாக இவற்றிற்கு நடுவில் உள்ள நன்னீர்ப் பேரேரி (மிகப்பெரிய ஏரி) ஆகும். இது உலகில் உள்ள ஏரிகள் யாவற்றினும் மிக ஆழமான ஏரி.[4] இதன் ஆழம் 1,642m (5,387ft),[1] மிக அதிகளவு 23,615.39 கிமீ 3 (5,670 cu mi) தூய நீரும் கொண்ட ஏரி இதுவே.[1] இது உலகில் உள்ள ஏரிகள் யாவிலும் தெளிவான, [5] உலகில் உள்ள ஏரிகள் யாவற்றினும் மிகப்பழைய ஏரியும் ஆகும்.[6] இது - 25 மில்லியன் ஆண்டுகள பழமையானதாக கருதப்படுகிறது. [7] இது பரப்பளவில் உலகின் ஏழாவது மிகப் பெரிய ஏரியாக உள்ளது. உலகில் நீர்ம வடிவில் நிலத்தின் மேற்புறத்தில் உள்ள தூய்மையான நீரில் 20% இந்த ஓர் ஏரியில் உள்ளது.[8] [9] உருசியாவின் நன்னீரில் 90% இவ்வேரியில் உள்ளது. இது ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால் 1996இல் உலக பாரம்பரியக் களம் என்று அறிவித்து பாதுகாக்கப்படுகின்றது. [10]. பைக்கால் ஏரியில் உள்ள நீரின் அளவானது அமெரிக்காவில் உள்ள ஐந்து பேரேரிகளில் உள்ள மொத்த நீரின் அளவைக்காட்டிலும் அதிகமானது,[11] ஆனால் அமெரிக்கப் பேரேரிகளின் ஆழம் குறைவானதால், அமெரிக்கப் பேரேரிகளை ஒப்பிடும்பொழுது பைக்கால் ஏரியின் நீர்ப்பரப்பின் அளவு குறைவு. பைக்கால் ஏரியானது 636 கிலோமீட்டர் நீளமும், அதிக அளவாக 80 கிலோ மீட்டர் அகலமும் கொண்டுள்ளது. மொத்தப் பரப்பளவு 31,494 சதுர கிலோ மீட்டர் கொண்டது. பெரிதும் சிறிதுமாய் சுமார் 300 ஆறுகள் இவ்வேரிக்கு நீர் கொண்டு வருகின்றன. இவற்றுள் ஆறு பெரிய ஆறுகள் குறிப்பிடத்தக்கன. அவையாவன: சிக்கோய் (Chikoy), கில்லோ (Khiloh), உடா (Uda), பார்குசின் (Barguzin) வட அங்காரா (Upper Angara). இவ்வேரியில் சுமார் 22 சிறு தீவுகளும் உண்டு. இத்தீவுகளுள் பெரியது ஒல்க்கோன் என்னும் தீவு ஆகும். இத்தீவு 72 கி.மீ நீளம் கொண்டதாகும். பைக்கால் பேரேரி சுமார் 25-30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகின்றது. டாங்கனிக்கா ஏரி போன்று பைக்கால் ஏரியின் 31,722 (12,248 சதுர மைல்) பரப்பு ஒரு நீண்ட பிறை வடிவம் கொண்ட, பண்டைய பிளவுப்பள்ளதாக்கால் உருவானது. பைக்காலில் , இவ்வேரியில் வாழும் உயிரினங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தன. இங்குள்ள உயிரினங்களில் மூன்றில் இரண்டு பங்கிற்க்கு மேல் வேறெங்கும் காண இயலாதன. இப் பேரேரியில் 1085 வகையான நீர்வாழ்ச் செடிகொடி இனங்களும் 1550 நீர்வாழ் விலங்கினங்களும் இருப்பதாக அறிந்துள்ளனர்.மேலும் இந்த ஏரியின் கிழக்குப் பகுதியானது பர்யாட் பழங்குடியினரின் வாழிடமாக உள்ளது,[12][13] இவர்கள் ஆடுகள், ஒட்டகங்கள், கால்நடைகள் மற்றும் செம்மறி ஆடுகளையும் வளர்க்கின்றனர்.[13] மிகப்பழைய ஏரியாகையால் உயிரின வளர்ச்சியின் வரலாற்றை அறிய பெருந்துணையாய் இருப்பது என்று பேணப்படுகின்றது. 1996 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பகுதியாக அறிவிக்கப்பட்ட. இப்பகுதியில் குளிர்காலத்தில் குறைந்தபட்ச சராசரி வெப்பநிலை -19 டிகிரி செல்சியஸ் (-2 ° F),கோடையில் அதிகபட்சமாக 14° சி (57 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் நிலவுகிறது.[14] பைக்கால் ஏரி "ஏரிகளின் மூத்த சகோதரி" என்றும் அழைக்கப்படுகிறது. வரலாறு பைக்கால் பகுதி, சில நேரங்களில் பைக்காலியா என அழைக்கப்படுவதுண்டு, இப்பகுதி மனித வாழ்விடத்தில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இப்பகுதியில் அறியப்பட்ட ஒரு தொல்குடியான குரிஸ்கான்கள், இரண்டு இனக்குழுக்களான புரியாட்கள் மற்றும் யக்குட்ஸ் ஆகியோரின் முன்னோடியாக அறியப்படுகின்றனர். பைக்கால் ஏரியானது சீன வரலாற்று உரைகளில் "வட கடல்" (北海 Běihǎi) என அழைக்கப்பட்டது.[15] இது ஹான் வம்ச பேரரசசின் வடக்கு சைபீரியன் டைகாவில் இருந்து தெற்கில் க்சியாங்னு பிரதேசம் வரை அமைந்துள்ளது என ஹான்-ஹண் போர் குறிப்பில் காணப்படுகிறது. 17 ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவின் ஐரோப்பிய பகுதி விரிவாக்கத்திற்க்கு பின் ஏரி பற்றி ஐரோப்பியர்கள் அறிந்துகொண்டனர். பைக்கால் ஏரியை அடைந்த முதல் ரஷியன் ஆய்வுப்பணி குழு 1643 ஆண்டு குர்பாட் இவனொவ் (Kurbat Ivanov) ஆகும்.[16]:டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே 1896 மற்றும் 1902 இடையே . பைக்கால் ஏரியின் தென்மேற்கு இறுதியில் சுற்றி 200 பாலங்கள் மற்றும் 33 சுரங்கங்களுடன் கட்டப்பட்டது. அதன் நிறைவு வரை பல ஆண்டுகள் போர்ட் பைக்காலில் இருந்து மைசோவயா (Mysovaya) பயணம் செய்ய ஏரி முழுவதும் தொடர்வண்டி இயக்கப்பட்டது. 1920 ல் இராணுவ வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிரேட் சைபீரிய பனி படைஅணிவகுப்பின் போது குளிரில் பலர் இறந்தனர். 1956 ல் அங்காரா (Angara) நதியின் இர்குட்ஸ்க் அணை உடைப்பின் மூலம் 1.4 மீ (4.6 அடி) ஏரியின் மட்டம் உயர்த்தது. ரயில்வே கட்டப்பட்ட போது ட்ரிசென்கோ (f.k.Drizhenko) தலைமையில் ஒரு பெரிய ஏரிப்படுகை நீரின் புவியியல் ஆய்வு மூலம் முதல் விரிவான எல்லைக்கோட்டு வரைபடம் உறுவாக்கப்பட்டது. ஆராய்ச்சி அரசு அல்லது அரசு நிறுவனங்கள் தொடர்புடைய பல அமைப்புக்கள் பைக்கால் ஏரியின் இயற்கை ஆராய்ச்சி திட்டங்களை நடத்தி வருகின்றனர். பைக்கால் ஆராய்ச்சி மையம் என்ற ஒரு தன்னிச்சையான ஆராய்ச்சி அமைப்பு பைக்கால் ஏரியின் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி திட்டங்களினை நடத்தி வருகிறது.[17] ஜூலை 2008 ல், ரஷ்யா தனது தனிப்பட்ட சுற்றுச்சூழல் பற்றிய புவியியல் மற்றும் உயிரியல் சோதனைகள் நடத்த பைக்கால் ஏரியில் 1,592 மீ (5,223 அடி) ஆழத்தில் இறங்க, மீர்-1 மற்றும் மீர்-2 என்ற இரண்டு சிறிய நீர்மூழ்கிகள் அனுப்பப்பட்டது. உண்மையில் வெற்றிகரமான அறிக்கை எனினும், அவர்களின் 1.580 மீ (5,180 அடி) ஆழத்தையே அடைந்தனர்,[18] ஆனால் அதிகபட்ச நீர் ஆழத்தை அடையும் உலக சாதனையை நிகழ்த்த இயலவில்லை. அந்த சாதனையை தற்போது 1,637 மீ (5371அடி) வரை சென்று ரஷியன் விஞ்ஞானி அனடோலி சாகல்விச் அடைந்தார். பொருளாதாரம் இது "சைபீரியாவின் முத்து" புனைப்பெயரிட்டு அழைக்கப்படுகிறது.இது சுற்றுலா மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்க்கிறது. இர்குட்ஸ்க்-ல் உள்ள விக்டர் க்ரிக்ரோவ் இங்கு மூன்று விடுதிகள் கட்ட திட்டமிட்டுள்ளர்.2007 ஆம் ஆண்டில், ரஷியன் அரசாங்கம் பைக்கால் பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டது.ராஷ்டம் என்ற சர்வதேச யுரேனியம் ஆலை பைக்கால் பகுதியில் $2.5 பில்லியன் முதலீட்டில் ஒரு ஆய்வக உருவாக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.இது அங்ரஷ்க் நகரில் 2,000 வேலைவாய்ப்ப்புகளை உருவாக்கும். சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பேகல்ஷ்க் காகித மற்றும் காகிதகூழ் தொழிற்சாலை 1966 ல் கட்டப்பட்ட பேகல்ஷ்க் காகித மற்றும் காகிதகூழ் தொழிற்சாலையானது குளோரின் கொண்டு காகித வெளுக்கும் கழிவுகளை நேரடியாக பைக்கால் கரையில் கொட்டியதால் பலத்த எதிர்ப்பு கிளம்பியது பிறகு தொழில் நஷ்டம் காரணமாக 2008 நவம்பரில் மூடப்பட்டது.2009 இல் மார்ச் மாதம் ஆலை உரிமையாளர் காகித ஆலை மீண்டும் இயங்குவதாக அறிவித்தது இதற்க்கு உள்ளூர் மக்களிடையே கடும் எதிர்ப்பு அலை கிளம்பியது எனினும் 2010 ஜனவரி 4 ஆம் தேதி உற்பத்தியை மீண்டும் தொடர்ந்தது. 13 ஜனவரி 2010 ல் அதிபர் விளாடிமிர் புட்டின் ஒரு சிறிய நீர்மூழ்கி இருந்து ஏரியை பார்வையிட்டு பைக்கால் நல்ல நிலையில் உள்ளது என அறிவித்தார். கிழக்கு சைபீரிய பசிபிக் பெருங்கடல் எண்ணெய் குழாய் ரஷிய அரசு எண்ணெய் குழாய்கள் நிறுவனமான ட்ரான்ஸ்னெஃப்ட்(Transneft) ஏரி கரையில் 800 மீட்டர் ( 2,600 அடி ) அழத்தில் தீவிர நிலஅதிர்வு செயல்பாட்டு அபாயம் உள்ள பகுதியில் ஒரு எண்ணெய் குழாய் அமைக்க திட்டமிட்டுள்ளது.இதற்க்கு ரஷ்யாவில் சுற்று சூழல் ஆர்வலர்கள்,பைக்கால் குழாய் எதிர்ப்பு குழுவினர் மற்றும் உள்ளூர் குடிமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.எண்ணெய் கசிவு சுற்றுசூழலில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சுகின்றனர்.ரஷியன் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இது போன்ற சுற்று சூழல் ஆபத்துக்களை தவிர்க்க மாற்று வழியில் 40 கிலோமீட்டர் வடக்கில் ட்ரான்ஸ்னெஃப்ட் திட்டத்தை மாற்ற உத்தரவிட்டார். வேலை ஜனாதிபதி புட்டினின் ஒப்புதல் பெற்ற இரண்டு நாட்களுக்கு பிறகு பைக்கால் ஏரியின் மாற்று பாதையில் இருந்து குழாயின் கட்டுமானம் தொடங்கியது. முன்மொழியப்பட்டுள்ள அணு ஆலை 2006 இல் , ரஷியன் அரசாங்கம் ஏரியின் கரையில் இருந்து 95 கி.மீ. ( 59 மைல்) தூரத்தில் அங்ரஸ்க் நகரில் ஏற்கனவே உள்ள அணு ஆராய்ச்சி மையத்தில் உலகின் முதல் சர்வதேச யுரேனியம் செறிவூட்டல் மையம் கட்டுவதற்கான திட்டங்களை அறிவித்தது.எனினும் எதிர்ப்பாளர்கள் அந்த பகுதியில் இது ஒரு பேரழிவுக்கு காரணமாக இருக்கும் எனவே இத்திட்டதை மறுபரிசீலனை செய்ய அரசை வலியுறுத்தி வருகின்றனர். செறிவூட்டலின் பின்னர் ,பெறப்பட்ட கதிரியக்க பொருள் மட்டும் 10 சதவிகித யுரேனியம் மட்டுமே சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும், மீதமுள்ள 90 சதவீத யுரேனியம் பைக்கால் ஏரியின் சேமிப்பு பகுதியில் விட்டுவைக்கப்படும். உசாத்துணை வெளி இணைப்புகள் பகுப்பு:ஆசிய ஏரிகள் பகுப்பு:உருசியாவின் புவியியல் பகுப்பு:உருசியாவின் உலகப் பாரம்பரியக் களங்கள்
உலகின் தூய்மையான ஏரி எது?
பைக்கால்
0
tamil
b62f6eedc
ஆத்திரேலியா, ஆஸ்திரேலியா அல்லது அவுஸ்திரேலியா (Australia) என்பது உலகின் மிகச்சிறிய கண்டமாகவும் உலகின் மிகப்பெரும் தீவாகவும் உள்ள பெருநிலப்பரப்பையும், தாஸ்மானியா தீவு, இந்திய, பசிபிக் பெருங்கடல்களில் உள்ள சில சிறிய தீவுகளையும் உள்ளடக்கிய நாடு. இது பொதுநலவாய ஆஸ்திரேலியா (Commonwealth of Australia) என அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறது. எந்த நாட்டுடனும் இதற்கு நில எல்லை கிடையாது. இந்தோனீசியா, கிழக்குத் திமோர், பப்புவா நியூ கினி ஆகிய நாடுகள் இதன் வடக்கேயும், சொலமன் தீவுகள், வனுவாட்டு, நியூ கலிடோனியா ஆகியன வடகிழக்கேயும், நியூசிலாந்து தென்கிழக்கேயும் இதன் அயல் நாடுகளாக அமைந்துள்ளன. கிட்டத்தட்ட 42,000 ஆண்டுகளாக ஆஸ்திரேலியப் பழங்குடிகள் ஆஸ்திரேலியப் பெரு நிலப்பரப்பில் வாழ்ந்து வருவதாக வரலாறு சொல்கிறது[1]. அவ்வப்போது வடக்கில் இருந்து மீனவர்களும், பின்னர் 1606 இல் டச்சு நாடுகாண் பயணிகள் ஐரோப்பாவில் இருந்தும் இங்கு வந்து போன பின்னர்[2], 1770 இல் ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் வந்திறங்கிய ஆங்கிலேயர் அதனை ஐக்கிய இராச்சியத்துக்கென உரிமை கொண்டாடினர். ஆரம்பத்தில் ஆங்கிலேய, ஸ்கொட்டியக் குற்றவாளிகளின் குடியேற்றத் திட்டமாக ஜனவரி 26, 1788 இல் நியூ சவுத் வேல்ஸ் என்ற குடியேற்றப் பகுதி உருவாக்கப்பட்டது. பின்னர் மக்கள் தொகை பெருக, ஆஸ்திரேலியாவின் மேலும் பல புதிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு 19ம் நூற்றாண்டின் காலப்பகுதியில் சுயாட்சி கொண்ட மேலும் ஐந்து பிரித்தானியக் குடியேற்றப் பகுதிகள் அமைக்கப்பட்டன. ஜனவரி 1, 1901 இல் ஆறு தனித்தனியான குடியேற்றப் பகுதிகளும் ஒன்றிணைந்து பொதுநலவாய ஆஸ்திரேலியா என்ற திறந்த மக்களாட்சி அரசியலமைப்புடன் கூட்டமைப்பு அரசை உருவாக்கின. இதன் தலைநகரம் கான்பரா ஆகும். பரப்பளவில் ஆறாவது பெரிய நாடாக இருப்பினும் இதன் மக்கள்தொகை வெறும் 23.2 மில்லியன்கள் (2.32 கோடி, 2013 மதிப்பீட்டின் படி[3]) மட்டுமே. இவர்களில் 60 விழுக்காட்டினர் பெருநிலப்பரப்பில் மாநிலத் தலைநகரங்களை அண்டி வாழ்கின்றனர். ஆஸ்திரேலியா மேற்கத்திய பொருளாதார முறைகளைப் பின்பற்றுகிறது. ஆள்வீத வருமானம் வலுவான பொருளாதார நாடுகளுக்கு இணையானது. தொழிலாளிகளில் 5% மட்டும் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். எண்ணெய் வளமும், கனிம வளமும் மிகுந்த நாடு. பெயர்க் காரணம் ஆஸ்திரேலியா என்ற பெயர் Australis என்ற இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து உருவானது. தெற்கே என்பது இதன் கருத்து. 1521 இல் எசுப்பானியர் பசிபிக் பெருங்கடலில் பயணம் செய்த முதலாவது ஐரோப்பியர் ஆவர். ஆங்கில மொழியில் முதன் முதலாக ஆஸ்திரேலியா என்ற சொல் 1625 இல் பயன்படுத்தப் பட்டது.[4]. சக்கார்த்தாவில் நிலை கொண்டிருந்த டச்சு கிழக்கிந்தியக் கம்பனியினர் 1638 இல் தெற்கே தாம் புதிதாகக் கண்டுபிடித்த இடத்திற்கு Australische என்ற பெயரை இட்டனர். ஆஸ்திரேலியாவை முதன் முதலில் சுற்றி வந்த மத்தியூ பிலிண்டேர்ஸ் என்ற பிரித்தானிய மாலுமி 1814 இல் தனது A Voyage to Terra Australis என்ற நூலில் "ஆஸ்திரேலியா" என்ற பெயரைப் பயன்படுத்தியதில் இருந்து இப்பெயர் பரவலாக வழக்கூன்றியது. நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் லக்லான் மக்குவாரி 1817, டிசம்பர் 12 இல் இப்பெயரை காலனித்துவ அரசுக்கு பரிந்துரைத்தார்[5]. 1824 இல் இப்பெயர் ஏற்பு பெற்றது. ஆஸ்திரேலிய ஆங்கிலத்தில் "ஆஸ்திரேலியா" əˈstɹæɪljə, -liːə, -jə என்றவாறு பலுக்கப்படுகிறது[6]. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து ஆஸ்திரேலியா நாட்டை உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் ஓஸ் (Oz) என்றும், ஆஸ்திரேலியர்களை "ஒசி" (Aussie) எனவும் சுருக்கமாக அழைக்கப்படுகிறார்கள். வரலாறு ஆஸ்திரேலியப் பழங்குடிகள் ஆஸ்திரேலியாவின் முதல் மனிதர் குடியேறியது 42,000 முதல் 48,000 ஆண்டுகளுக்கு முன்னர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[7]. இவர்கள் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடிகளின் மூதாதையர் என அறியப்படுகிறது. இவர்கள் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் லெக்முங்கோ (Laje Mungo) என்னுமிடத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கற்காலத்திற்கு முன்பிருந்து மனிதர்கள் வசித்தாலும் அவர்கள் தற்போதைய தென்கிழக்காசியத் தீவுகளிலிருந்து மிகப்பழங்காலத்தில் பிரிந்தவர்களாகத் நம்பப்படுகிறது. மரபணு மற்றும் மொழி அடிப்படையில் இப்பழங்குடிகளின் உறவும் தொடர்பும் (பிற நாட்டினத்தவர்களுடன்) உறுதிப்படவில்லை. இப்பழங்குடினரில் பெரும்பான்மையானோர் வேட்டையாடுபவர்கள். குயின்ஸ்லாந்தின் தூர-வடக்கிலும், டொரெஸ் நீரிணைத் தீவுகளிலும் வாழும் பழங்குடியினர் மெலனேசியர்கள். இவர்களின் பண்பாடு, வாழ்க்கை முறை ஏனைய பழங்குடியினரை விட வேறுபட்டவை. ஐரோப்பியரின் வருகை ஆஸ்திரேலியப் பெரும்பரப்பை முதன் முதலில் வந்தடைந்த ஐரோப்பியர் டச்சு மாலுமியான வில்லெம் ஜான்சூன் என்பவர். இவர் கேப் யோர்க் தீபகற்பத்தின் கரையை 1606 இல் கண்டார். 17ம் நூற்றாண்டு காலகட்டத்தில் டச்சுக் காரர் மேற்கு மற்றும் வடக்குக் கரைகளில் வந்திறங்கி அப்பகுதிக்கு புதிய ஒல்லாந்து (Nova Hollandia) எனப் பெயரிட்டனர். ஆனாலும் அவர்கள் அங்கு குடியேற முயலவில்லை. 1770 ஆம் ஆண்டில், இங்கிலாந்து கப்டன் ஜேம்ஸ் குக் தனது பசிபிக் பயணத்தின் போது ஆஸ்திரேலியாவில் கிழக்குக் கரையில் தரையிறங்கி அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டு பெரிய பிரித்தானியாவுக்காக அதனை உரிமை கோரினான். இவனது கண்டுபிடிப்புகள் பின்னர் அங்கு பிரித்தானியாவின் குற்றவாளிகளின் குடியேற்றத்தை ஆரம்பிக்க ஏதுவாக இருந்தது. நியூ சவுத் வேல்ஸ் என்ற முடியாட்சிக் குடியேற்றம் ஆர்தர் பிலிப் என்பவரால் ஜாக்சன் துறையில் ஜனவரி 26, 1788 இல் அமைக்கப்பட்டது. இந்நாள் பின்னர் ஆஸ்திரேலியா நாள் என்ற பெயரில் ஆஸ்திரேலியாவின் தேசிய நாளாக ஆக்கப்பட்டது. வான் டியெமனின் நிலத்தில் (தற்போதைய தாஸ்மானியா) 1803 இல் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டு 1825 இல் தனியான குடியேற்ற நாடாக ஆக்கப்பட்டது.[8] ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியை (சுவான் ஆற்றுக் குடியேற்றம்) 1829 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியம் அதிகாரபூர்வமாக உரிமை கோரியது. 1832 இல் இப்பகுதி மேற்கு ஆஸ்திரேலியா எனப் பெயர் பெற்றது. 1836 இல் தெற்கு ஆஸ்திரேலியா, 1851 இல் விக்டோரியா, 1859 இல் குயின்ஸ்லாந்து ஆகிய தனியான குடியேற்றப் பகுதிகள் நியூ சவுத் வேல்சில் இருந்து பிரித்து அமைக்கப்பட்டன. 1911 ஆம் ஆண்டில் தெற்கு ஆஸ்திரேலியாவில் இருந்து வட மண்டலம் பிரிக்கப்பட்டு தனி மாநிலமாகியது. தெற்கு ஆஸ்திரேலியா, விக்டோரியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன பிரித்தானியக் குற்றவாளிகளின் குடியேற்றங்களாக ஆரம்பிக்கப்படவில்லை. ஆனாலும் விக்டோரியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன பின்னர் குற்றவாளிகளை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தன[9] ஏற்கனவே குடியேறியவர்களின் எதிர்ப்பினை அடுத்து நியூ சவுத் வேல்சிற்கு குற்றவாளிகள் அனுப்பப்படுவது 1848 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது[10]. 1788 இல் முதன்முதலாக ஐரோப்பியர்கள் இங்கு குடியேறியபோது அண்ணளவாக 350,000 பழங்குடிகள் இக்கண்டத்தில் வசித்து வந்தனர்[11]. அப்போது 500 வகையான பழங்குடியினர் இக்கண்டத்தில் தங்கள் சொந்த மொழியுடன் வாழ்ந்து வந்தனர். இவர்களின் தொகை அடுத்த 150 ஆண்டுகளில் பெருமளவு குறைய ஆரம்பித்தது. தொற்று நோய், கட்டாய மீள்குடியேற்றம், பண்பாட்டு சீரமைப்பு போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகிறது[12]. பழங்குடிகளின் குடும்பங்களில் இருந்து அவர்களின் பிள்ளைகள் கட்டாய வெளியேற்றமும் இவ்வீழ்ச்சிக்குக் காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்[13]. 1967 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மக்கள் வாக்கெடுப்பை அடுத்து நடுவண் அரசு பழங்குடிகள் தொடர்பாக கொள்கை மாற்றங்களுக்கும் புதிய சட்டங்கள் இயற்றுவதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டது. தலைமுறைகளாக நிலஉரிமை (native title) 1992 வரை ஆஸ்திரேலியாவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை. ஆஸ்திரேலிய மேல் நீதிமன்றத்தில் விசாரணக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட புகழ்பெற்ற மாபோ எதிர் குயின்ஸ்லாந்து வழக்கை அடுத்து ஐரோப்பிய ஆக்கிரமிப்பில் இருந்த நிலங்கள் முன்னர் terra nullius ("வெற்று நிலம்") ஆகக் கருதப்பட்டமை மாற்றப்பட்டு தலைமுறைகளாக நிலம் வைத்திருந்தோருக்கு நில உரிமை வழங்கப்பட்டது. கூட்டாட்சி 1855 - 1890 காலப்பகுதியில், ஆறு குடியேற்றப் பகுதிகளும் தனித்தனியே தமது அரசாங்கங்களை அமைத்துக் கொண்டு பிரித்தானியப் பேரரசுக்குள் இருந்தவாறே தமது உள்ளூர் விடயங்களைத் தாமே கவனித்துக் கொள்ளத் தொடங்கின. லண்டனில் அமைந்திருந்த காலனித்துவ நிர்வாகம் குறிப்பாக வெளிநாட்டலுவல்கள், பாதுகாப்பு, பன்னாட்டுக் கப்பற்துறை போன்றவற்றைக் கவனித்தது. 1901, ஜனவரி 1 இல், ஆஸ்திரேலியக் கூட்டமைப்பு நிறுவப்பட்டது. பிரித்தானிய இராச்சியத்திற்குள் அடங்கிய "பொதுநலவாய ஆஸ்திரேலியா" பிறந்தது. 1911 ஆம் ஆண்டில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் ஒரு பகுதி ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம் என்ற பெயரில் தனிப் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டு கூட்டமைப்பின் தலைநகரம் கான்பரா 1927 ஆம் ஆண்டில் இங்கு அமைக்கப்பட்டது. அதுவரையில் மெல்பேர்ண் நகரம் கூட்டமைப்பின் தற்காலிகத் தலைநகரமாக இருந்தது. தெற்கு ஆஸ்திரேலியாவின் பகுதியாக இருந்த வட மண்டலம் என்ற பிரதேசம் 1911 இல் தனியாகப் பிரிக்கப்பட்டு நடுவண் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. முதலாம் உலகப் போரில் ஆஸ்திரேலியா தன்னிச்சையுடன் போரில் ஈடுபட்டது[14]. கலிப்பொலி போரில் ஆஸ்திரேலியர்களின் பங்களிப்பு இந்நாட்டு இராணுவத்தினரின் முதலாவது பெரும் போர்ப் பங்கெடுப்பு ஆகும். இப்போரில் அவர்கள் தோல்வியடைந்தாலும், இந்நடவடிக்கை நாடொன்றின் எழுச்சியாக பெரும்பாலான ஆஸ்திரேலியர்களால் கணிக்கப்படுகிறது. ஐக்கிய இராச்சியத்தில் 1931 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 ஆஸ்திரேலியாவுக்கும், ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் இருந்த அரசிய்யலமைப்புத் தொடர்புகளைப் பேணி வந்தாலும் 1942 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட உப சட்டம் 1931 சட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. 1942 இல் இரண்டாம் உலகப் போரின் போது ஆசியாவில் ஐக்கிய இராச்சியத்தின் அதிர்ச்சித் தோல்விகளும், ஜப்பானியப் பேரரசின் முற்றுகையும் ஆஸ்திரேலியாவை ஐக்கிய அமெரிக்காவுடன் அணி சேர வாய்ப்பாக இருந்தது. 1951 ஆம் ஆண்டில் இருந்து ஐக்கிய அமெரிக்காவுடன் அன்சஸ் என்ற பாதுகாப்பு உடன்பாட்டை ஆஸ்திரேலியா ஏற்படுத்திக் கொண்டது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஐரோப்பாவில் இருந்து மக்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற வாய்ப்பளிக்கப்பட்டது. வெள்ளை ஆஸ்திரேலியா கொள்கை முடிவுக்கு வந்ததை அடுத்து 1970களில் இருந்து ஆசியா மற்றும் ஐரோப்பா அல்லாத மற்ற நாடுகளில் இருந்து மக்கள் இங்கு குடியேற ஊக்குவிக்கப்பட்டனர். இதனையடுத்து ஆஸ்திரேலியாவின் மக்கள் பரம்பல், பண்பாடு, மற்றும் தன்னடையாளம் ஆகியவற்றில் பெரும் மாற்றம் ஏற்படலாயின. ஆஸ்திரேலியாவுக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் இருந்து வந்த அரசியல் சட்ட இணைப்பு 1986 இல் ஆஸ்திரேலிய சட்டம் 1986 நிறைவேற்றப்பட்டதை அடுத்து மேலும் பிளவடைந்தது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து ஆஸ்திரேலிய மாநிலங்களில் பிரித்தானியாவின் பங்கு முடிவுக்கு வந்தது. ஐக்கிய இராச்சியத்தின் பிரிவி கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்யப்படுவது நிறுத்தப்பட்டது[15]. ஆஸ்திரேலியாவைக் குடியரசாக மாற்றுவதற்காக 1999 இல் நடத்தப்பட்ட அனைத்து மக்கள் வாக்கெடுப்பில் 54 விழுக்காட்டினர் எதிராக வாக்களித்தனர். அரசியல் பொதுநலவாய ஆஸ்திரேலியா நடுவண் ஆட்சியைக் கொண்ட நாடாளுமான்ற மக்களாட்சி அமைப்பாகும். இரண்டாம் எலிசபெத் ஆஸ்திரேலியாவின் மகாராணி ஆவார். நடுவண் ஆட்சியில் ஒரு பொது ஆளுநரையும், அந்தந்த மாநிலங்களுக்குத் தனித்தனியே ஆளுநர்களையும் அரசி தனது சார்பில் நியமித்துள்ளார். அரசியலமைப்பின் படி பொது ஆளுநர் பல நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டிருந்தாலும், அவர் பொதுவாக ஆஸ்திரேலிய பிரதமரின் ஆலோசனைக்கேற்பவே தனது அதிகாரங்களை நிறைவேற்றுகிறார். ஒரே ஒரு முறை மட்டும், 1975 ஆம் ஆண்டில் பொது-ஆளுநர் தன்னிச்சையாக அன்றைய விட்லமின் அரசை நீக்கியிருந்தார்[16]. ஆஸ்திரேலியாவில் மொத்தம் மூன்று அரசு சட்ட அமைப்புகள் செயற்படுகின்றன: சட்டமன்றம்: பொதுநலவாய நாடாளுமன்றம். இதில் அரசி, செனட் அவை, மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். அரசியின் சார்பில் பொது-ஆளுநர் பங்கு பற்றுகிறார். நிறைவேற்று அவை: நடுவண் நிறைவேற்றுப் பேரவை, இதில் பிரதமர், மற்றும் அமைச்சரவை அங்கத்தவர்கள் அங்கம் வகிக்கின்றனர். சட்டம்: ஆஸ்திரேலியாவின் உயர் நீதிமன்றம் மற்றும் நடுவண் நீதிமன்றங்கள். ஐக்கிய இராச்சியத்தின் பிரிவி கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்வது 1986 ஆம் ஆண்டில் இருந்து நிறுத்தப்பட்டது. இரு அவைகளைக் கொண்ட ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் செனட் அவையில் (மேலவை) 76 உறுப்பினர்களும், பிரதிநிதிகள் அவையில் (கீழவை) 150 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கீழவை உறுப்பினர்கள் ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் இருந்து ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மேலவைக்கு ஒவ்வோர் மாநிலமும் 12 உறுப்பினர்களையும், ஆஸ்திரேலியத் தலைநகர்ப் பிரதேசம், வட மண்டலம் ஆகிய இரு பிரதேசங்களிலும் இருந்து இருவருமாக பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இரு அவைகளுக்கும் தேர்தல்கள் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெறுகின்றன. கீழவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி அரசை அமைக்கும். அதன் தலைவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். மாநிலங்களும் பிரதேசங்களும் Western Australia Northern Territory South Australia Queensland New South Wales Australian Capital Territory Victoria Tasmania Indian Ocean Timor Sea Gulf of Carpentaria Arafura Sea Great Australian Bight Tasman Sea Bass Strait Coral Sea ● ● ● ● ● ● ● ● South Pacific Ocean Southern Ocean Great Barrier Reef அவுஸ்திரேலியா மொத்தம் ஆறு மாநிலங்களையும், இரண்டு மண்டலங்களையும், வேறு சில சிறிய பிராந்தியங்களையும் தன்னகத்தே கொண்ட நாடு. மாநிலங்களாவன: நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோறியா, தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா, தாஸ்மானியா எனபனவாகும். வட மண்டலம், ஆஸ்திரேலிய தலைநகர் மண்டலம் என்பன இரண்டு பிரதான மண்டலங்களாகும். மண்டலங்களின் செயற்பாடுகள் பொதுவாக மாநிலங்களினதை ஒத்திருந்தாலும், மண்டலங்களின் அரசமைப்புச் சட்டவிதிகளை நடுவண் அரசு (அவுஸ்திரேலிய அரசாங்கம்) மாற்றியமைக்க முடியும். அதே வேளையில் மாநில அரசுகளின் சட்டங்களின் 51வது (சிறப்பு) சட்ட விதிகளை மட்டுமே நடுவண் அரசு மாற்ற முடியும். மருத்துவமனைகள், கல்வி, காவல்துறை, சட்டம், பாதைகள், பொது போக்குவரத்து, உள்ளூராட்சி சபைகள் (local government) போன்றவை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன. ஒவ்வொரு மாநிலமும் மண்டலங்களும் தமக்கென தனியான சட்டசபைகளை (நாடாளுமன்றங்களை) கொண்டுள்ளன. இவற்றில் வட மண்டலம், ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம், குயின்ஸ்லாந்து என்பன ஒரு சட்டசபையையும், ஏனைய மாநிலங்கள் கீழவை, மேலவை என இரு சபைகளையும் கொண்டுள்ளன. மாநிலங்களின் அரசுத் தலைவர் முதல்வர் (Premier) எனவும், மண்டலங்களின் தலைவர் முதலமைச்சர் (Chief Minister) எனவும் அழைக்கப்படுகின்றனர். மகாராணி தனது பிரதிநிதியாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநரையும், வட மண்டலத்தில் நிர்வாகியையும் நியமிப்பார். ஆஸ்திரேலியாவில் சில சிறிய பிரதேசங்களும் உள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஜேர்விஸ் குடா பிரதேசம் என்ற கடற்படைத் தளம் நடுவண் அரசினால் நிர்வகிக்கப்படுகிறது. இவற்றைவிட பின்வரும் பிரதேசங்கள் ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் உள்ளன: நோர்போக் தீவு கிறிஸ்மஸ் தீவு கொக்கோஸ் (கீலிங்) தீவுகள் ஆஷ்மோர் கார்ட்டியர் தீவுகள் பவளக் கடல் தீவுகள் ஹேர்ட் தீவு மற்றும் மக்டொனால்ட் தீவுகள் ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் மண்டலம் புவியியல் ஆஸ்திரேலியா இந்தோ அவுஸ்திரேலிய புவித்தட்டில் இந்திய, பசிபிக் பெருங்கடல்களால் சூழப்பட்டு, ஆசியா கண்டத்தை அரபுரா, மற்றும் திமோர் கடல்களால் பிரிக்கப்பட்டுள்ளது. 7,617,930 சதுர கிலோமீட்டர்[17] பரப்பளவுடைய இந்நாட்டின் பெரும்பகுதி பாலைநிலங்கள் ஆகும். ஆஸ்திரேலியாவின் பெரு நிலப் பரப்பு 34,218 கிமீ கரையோரப் பகுதியை (தீவுப் பகுதிகளைத் தவிர்த்து) கொண்டுள்ளது[18]. உலகின் மிகப் பெரும் பவளப் பாறைத் தொடர்[19] பெரும் தடுப்புப் பவளத்திட்டு, ஆஸ்திரேலியாவின் வடகிழக்குக் கடற்கரையை அண்டிக் காணப்படுகிறது. இதன் நீளம் 2000 கிமீ விட அதிகமானதாகும். மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஆகுஸ்டஸ் மலை உலகின் பெரிய ஒருகற்பாறை (monolith) எனக் கருதப்படுகிறது[20]. 2,228 மீ உயரமான கொஸ்கியஸ்கோ மலை ஆஸ்திரேலியாவின் பெரு நிலப்பரப்பில் உள்ள அதி உயரமான மலை ஆகும். பெரு நிலப்பரப்புக்கு வெளியே உள்ள ஹேர்ட் தீவு மற்றும் மக்டொனால்ட் தீவுகள் பிரதேசத்தில் உள்ள மோசன் மலை 2,745 மீ உயரமானது. ஆஸ்திரேலியா மிகத் தட்டையான கண்டமாகும். பழையதும் வளங்குறைந்ததுமான மண்ணைக் கொண்ட இது மனிதர் வாழும் கண்டங்களில் மிக வரண்டதுமாகும். பெரும்பாலான அவுஸ்திரேலியர்கள் நாட்டின் தென்கிழக்குக் கடற்கரையை அண்டியே வாழ்கிறார்கள். நாட்டின் வடக்குப் பகுதி வெப்பவலயப் பிரதேசமாகும். இங்கு மழைக்காடுகள், மரநிலங்கள், புல்வெளிகள், அலையாத்திக் காடுகள், மற்றும் பாலைநிலங்கள் என்பன உண்டு. அண்மைக்காலங்களில் ஆஸ்திரேலியாவில் காலநிலை மாற்றம் ஒரு பெரும் பிரச்சினையாக உருவாகியுள்ளது[21]. கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் மழைவீழ்ச்சி அதிகரித்துக் காணப்பட்டாலும்[22], ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை காணப்படுகிறது. நகரங்களில் மக்க்க்ள்தொகை அதிகரிப்பு, மற்றும் உள்ளூர் வரட்சி காரணமாக பல நகரங்களிலும் நீர்க்கட்டுப்பாடு அமுலில் உள்ளது[23]. குடிமதிப்பியல் தற்போதைய (2008) மதிப்பீட்டான 21.3மில்லியன் ஆஸ்திரேலியர்களின் பெரும்பான்மையானோர் காலனித்துவக் காலத்திலும், கூட்டாட்சிக்கு முன்னரும் ஐரோப்பாவில் இருந்து வந்தவர்களின் வழித்தோன்றல்களாகும். இவர்களில் பெரும்பான்மையானோர் பிரித்தானியத் தீவுகளில் இருந்து குடியேறியோராவர். இன்றும் ஆஸ்திரேலியர்களில் பெரும்பான்மையானோர் பிரித்தானியரும் ஐரிய மக்களும் ஆவர். முதலாம் உலகப் போர்க் காலத்தில் இருந்து ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை நான்கு மடங்காகவே உயர்ந்தது[25]. இதனால் குடியேற்றத் திட்டத்துக்கு ஆதரவு வலுத்தது. இரண்டாம் உலகப் போரை அடுத்தும், அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டு வரையும், கிட்டத்தட்ட 5.9மில்லியன் மக்கள் புதிதாகக் குடியேறினார்கள். அதாவது கிட்டத்தட்ட ஏழு ஆஸ்திரேலியர்களுக்கு இருவர் வெளிநாட்டில் பிறந்தவர்களாயினர்[26]. குடியேறியோரில் பெரும்பான்மையானோர் ஏதாவதொரு துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர்[27], ஆனாலும் குடும்ப உறுப்பினர்களும், அகதிகளும் குடியேற அனுமதிக்கப்பட்டது[27]. 2001 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி, வெளிநாட்டில் பிறந்தோரில் பெரும்பான்மையானோர் ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து, இத்தாலி, வியட்நாம், மற்றும் சீனா ஆகிய நாடுகளில் பிறந்தோராவர்[28]. 1973 ஆம் ஆண்டில் வெள்ளை ஆஸ்திரேலியா கொள்கை கைவிடப்பட்டதை அடுத்து, பல்கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு இனங்களுக்கிடையே ஒற்றுமையை வளர்க்க அரசு மட்டத்தில் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன[29]. 2005–06 காலப்பகுதியில், 131,000 பேருக்கு மேல் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் ஆசியா, மாற்றும் ஓசியானியா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்[30]. 2006–07 காலப்பகுதியில் குடியேற்றப்படுவோரின் எண்ணிக்கை 144,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது[31]. 2008-9 காலப்பகுதியில் 300,000 பேர்களைக் குடியமர்த்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் குடியேறிய எண்ணிக்கைகளில் மிகப் பெரியதாகும்[32]. 2001 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்பில் உள்ள பழங்குடியினரின் எண்ணிக்கை (ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மற்றும் டொரெஸ் நீரிணை மக்கள்) 410,003 ஆக இருந்தது. இது நாட்டின் முழுத் தொகையில் 2.2% ஆகும். இது 1976 ஆம் ஆண்டில் இருந்ததை விட 115,953 பேர் அதிகமாகும். கைதுகள், வேலையில்லாமை, படிப்பறிவின்மை, போன்றவை ஆஸ்திரேலியப் பழங்குடியினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆகும். இவர்களின் சராசரி வாழ்வுக்காலம் ஏனைய பழங்குடியினரல்லாத ஆஸ்திரேலியர்களை விட 17 ஆண்டுகள் வரை குறைவாகும்[33]. ஏனைய வளர்ச்சியடைந்த நாடுகளைப் போலவே, ஆஸ்திரேலியாவின் குடிமக்கள் வயது முதிர்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். கூடுதலானோர் ஓய்வுதியம் பெறுவோராகவும், சிறிய அளவினரே தொழில் பார்ப்போராகக் காணப்படுகின்றனர். 2004 ஆண்டில் மக்களின் சராசரி வயது 38.8 ஆண்டுகளாக இருந்தது[34]. ஆஸ்திரேலியர்களில் பெரும் எண்ணிக்கையானோர் (2002-03 காலத்தில் 759,849)[35] தமது பிறந்த நாட்டை விட்டு வெளியே வசித்து வந்தனர். vt Largest populated areas in Australia 2019 data from Australian Bureau of Statistics[36] Rank Name State Pop. Rank Name State Pop. Sydney Melbourne 1 Sydney NSW 5,312,163 11 Geelong Vic 275,794 Brisbane Perth 2 Melbourne Vic 5,078,193 12 Hobart Tas 236,136 3 Brisbane Qld 2,514,184 13 Townsville Qld 181,668 4 Perth WA 2,085,973 14 Cairns Qld 153,951 5 Adelaide SA 1,359,760 15 Darwin NT 147,255 6 Gold Coast–Tweed Heads Qld/NSW 693,671 16 Toowoomba Qld 138,223 7 Newcastle–Maitland NSW 491,474 17 Ballarat Vic 107,652 8 Canberra–Queanbeyan ACT/NSW 462,136 18 Bendigo Vic 100,991 9 Sunshine Coast Qld 341,069 19 Albury–Wodonga NSW/Vic 93,603 10 Wollongong NSW 306,034 20 Launceston Tas 87,382 மொழி ஆங்கிலம் இங்கு ஒரு தேசிய மொழியாகும்[37]. பெரும்பான்மையானோர் ஆஸ்திரேலிய ஆங்கிலம் பேசுகின்றனர். இது பிரித்தானிய ஆங்கில மொழியை ஒத்திருந்தாலும் ஆஸ்திரேலியர்களுக்கென தனிப்பட்ட சில உச்சரிப்பையும், சொற்தொகுதியையும் கொண்டுள்ளது. இலக்கணமும் எழுத்துக்கூட்டலும் பிரித்தானியாவின் ஆங்கிலத்துடன் ஒத்தது. 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, 80 விழுக்காட்டினோரின் வீட்டில் பேசும் மொழி ஆங்கிலம் ஆகும். அதற்கடுத்தபடியாக சீனம் (2.1%), இத்தாலியம் (1.9%), மற்றும் கிரேக்கம் (1.4%). இங்கு குடியேறியோரின் பெரும்பான்மையோர் இரண்டு மொழி பேசுபவர்கள் ஆவர். ஐரோப்பியர்கள் இங்கு குடியேறிய காலத்தில் கிட்டத்தட்ட 200 அல்லது 300 மொழிகள் பேசும் பழங்குடியினர் வாழ்ந்து வந்ததாக நம்பப்படுகிறது. இவற்றில் 70 மட்டுமே இன்று வழக்கிலுள்ளது. கிட்டத்தட்ட 50,000 (0.25%) மக்களின் முதல் மொழி ஒரு பழங்குடி மொழியாக உள்ளது. சமயம் ஆத்திரேலியாவில் அரச மதம் எதுவுமில்லை. 2006 கணக்கெடுப்பின்படி, 64% ஆஸ்திரேலியர்கள் தாம் கிறித்தவர்கள் என அடையாளப்படுத்தியுள்ளனர். இவர்களில் 26% ரோமன் கத்தோலிக்கத்தையும், 19% ஆங்கிலிக்கத்தையும் பின்பற்றுகிறார்கள். 19% விழுக்காட்டினர் எம்மதத்தையும் சேர்ந்தவர்கள் அல்லர் என இனங்காட்டியுள்ளனர். 12% விழுக்காட்டினர் தம்மை மத ரீதியாக அடையாளம் காட்டவில்லை. கிறித்தவர்களுக்கு அடுத்த படியாக 2.1% பௌத்தர்களும், 1.7% இசுலாமியர்களும், 0.8% இந்துக்களும் 0.5% யூதர்களும் வாழ்கின்றனர். மொத்தமாக 6% இற்கும் குறைவானோரே கிறித்தவம் அல்லாத சமயத்தைச் சேர்ந்தவர்கள்[38]. ஏனைய மேற்கத்தைய நாடுகளைப் போலவே இங்கும் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு குறைந்தளவினரே செல்கின்றனர். 1.5மில்லியன் மக்கள் வாரந்தோறும் தேவாலயங்களுக்குச் செல்கின்றனர். இது மொத்த மக்கள் தொகையில் 7.5% ஆகும்[39]. கல்வி ஆஸ்திரேலியாவில் 6 வயதில் இருந்து 15 வயது வரை (தெற்கு ஆஸ்திரேலியாவில் 16 வயது, மேற்கு ஆஸ்திரேலியா, மற்றும் குயின்ஸ்லாந்தில் 17 வயது) பள்ளிப் படிப்பு கட்டாயம் ஆகும். இது வயது வந்தோரின் படிப்பறிவை 99% ஆகக் காட்டுகிறது. தற்போது ஆஸ்திரேலியாவின் கல்விமுறை உலக நாடுகளில் எட்டாவது இடத்தை வகிக்கின்றது[40]. மொத்தம் 38 அரச பல்கலைக்கழகங்கள் இங்குள்ளன. அத்துடன் அரச மானியத்தில் இயங்கும் பல தனியார் பல்கலைக்கழகங்களும் உள்ளன. இவற்றைவிட அவ்வவ் மாநிலங்களில் அரச தொழிநுட்பக் கல்லூரிகள் இயங்குகின்றன. பல்வேறு தொழிற்துறை, மற்றும் தொழில் பழகுநர்களுக்கான கல்வி இங்கு வழங்கப்படுகின்றது. 25 முதல் 65 வயது வரையான ஆஸ்திரேலியர்களில் 58 விழுக்காட்டினர் தொழில்துறை அல்லது மேற்படிப்புக்கான சான்றிதழ்கள் பெற்றுள்ளனர்[33]. சுகாதாரம் 2006 ஆம் ஆண்டுத் தரவுகளின் படி, ஆத்திரேலியர்களின் சராசரி வாழ்வுக் காலம் ஆண்களுக்கு 78.7 ஆண்டுகளாகவும், பெண்களுக்கு 83.5 ஆண்டுகளாகவும் உள்ளன[41]. உலகிலேயே தோல் புற்றுநோய் அதிகமாக உள்ள நாடு ஆத்திரேலியாவே,[42], அதேவேளை இறப்புகளையும் நோய்களையும் தவிர்க்கக்கூடிய மிகப்பெரும் காரணியாக அமைவது புகையிலை பிடித்தல் விளங்குகிறது[43]. வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே அதிகமான உடற் பருமன் உள்ளோர் ஆத்திரேலியாவிலேயே உள்ளனர்[44]; அதே வேளை எயிட்ஸ் நோய் பரவாமல் வெற்றிகரமாகத் தடுத்த நாடுகளில் ஆத்திரேலியாவும் ஒன்று[45][46]. ஆஸ்திரேலியத் தமிழர் ஆஸ்திரேலியாவிற்கு 1970 ஆண்டில் இருந்து தமிழர்கள் புலம் பெயரத் தொடங்கினார்கள். அதற்கு முன்னர் தொழில் அனுமதி பெற்றுச் சிலர் வந்துள்ளனர். 1971க்கு முன்னர் மொத்தம் 162 தமிழர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார்கள் என அரசின் மதிப்பீடு தெரிவிக்கிறது[47]. முதன் முதலில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர் கமால் எனப்படும் கே. கமலேஸ்வரன் என்பவர். தமிழ் அவுஸ்திரேலியர்களின் எண்ணிக்கை 1971 இல் 202 ஆக இருந்து 1991 இல் 11,376 ஆக அதிகரித்தது. இதில் 60 வீதத்தினர் ஈழத் தமிழர்கள். அரசின் குடிமதிப்பின்படி 1996 இல் தமிழரின் எண்ணிக்கை 18,690 ஆகவும், 2001இல் 24,067 ஆகவும் உயர்ந்தது[48]. இவர்களில் 50 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வசிக்கின்றனர். இலங்கையை விட இந்தியா, தென்னாபிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், பீஜி போன்ற நாடுகளிலிருந்தும் வசதி வாய்ப்புகளை எதிர்பார்த்து அவுஸ்திரேலியாவில் குடியேறினர். பண்பாடு 1788 ஆம் ஆண்டில் இருந்து, ஆஸ்திரேலியாவின் பண்பாடு அடிப்படையில் ஆங்கிலோ-கெல்ட்டியர்களை ஒத்திருந்தது. ஆனாலும் இயற்கை சுற்றுச் சூழல், மற்றும் பழங்குடிகளின் பண்பாடு ஆகியன ஆஸ்திரேலியாவிற்கெனத் தனியான சில பண்பாடுகளை வரையறுத்தது. 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து ஆஸ்திரேலிய பண்பாட்டில் அமெரிக்காவின் பிரபலமான பண்பாடு (குறிப்பாக தொலைக்காட்சி, திரைப்படம்), ஆஸ்திரேலியாவின் அயல் ஆசிய நாடுகள், ஆங்கிலம் பேசாத நாடுகளில் இருந்தான புலம்பெயர்வு ஆகியவற்றினால் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலிய ஓவியக்கலை வரலாறு பழங்குடியினரின் குகை ஓவியங்களில் இருந்து ஆரம்பிக்கின்றது[49]. ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் மரபு பெரும்பாலும் செவிவழியே கர்ணபரம்பரைக் கதைகளாலும், சடங்குகளினாலுமே பரப்பப்பட்டு வந்துள்ளன. பழங்குடியினரின் இசை, நடனம், ஓவியம் போன்றவை சமகாலத்தைய ஆஸ்திரேலியப் பண்பாட்டில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியது. எமிலி கிங்வாரேய், கோர்டன் பென்னெட் போன்ற பிரபலமான ஓவியர்கள் பழங்குடியினரைச் சேர்ந்தவர்கள். ஆஸ்திரேலிய தேசிய கூடம் மற்றும் பல மாநிலங்களிலும் உள்ள கலைக்கூடங்களில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஓவியத் திரட்டுகள் உள்ளன. ஊடகங்கள் ஆஸ்திரேலியாவில் இரண்டு பொதுத் தொலைக்காட்சி சேவைகளும் (ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், மற்றும் பல்கலாச்சார சிறப்பு ஒலிபரப்புச் சேவை) மூன்று தனியார் தொலைக்காட்சிச் சேவைகளும் இயங்குகின்றன. இவற்றை விட பல தனியார் கம்பியிணை (cable), மற்றும் பல இலாப-நோக்கில்லா தொலைக்காட்சிக் சேவைகளும் உள்ளன. மாநிலத் தலைநகரங்கள் ஒவ்வொன்றிலும் தனித்தனியே புதினப் பத்திரிகைகளை வெளியிடுகின்றன. தேசிய அளவில் இரண்டு நாளிகைகள் வெளிவருகின்றன. எல்லைகளற்ற செய்தியாளர்களின் (Reporters Without Borders) 2008 அறிக்கையின் படி, ஆஸ்திரேலியாவின் ஊடகச் சுதந்திரம் 25வது நிலையில் உள்ளது. நியூசிலாந்து 7வது நிலையிலும், ஐக்கிய அமெரிக்கா 48வது நிலையிலும் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கான இவ்வளவு குறைந்த மதிப்பீட்டிற்கு இந்நாட்டில் பெரும்பாலான பத்திரிகை நிறுவனங்கள் இரண்டு பெரும் வர்த்தக நிறுவனங்களான நியூஸ் கார்ப்பரேசன், மற்றும் ஜோன் ஃபெயார்பாக்ஸ் நிறுவனங்களைச் சார்ந்தே இருப்பது காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது[50]. விளையாட்டு ஆஸ்திரேலியாவில் 15 அகவைக்கு மேலானோரில் 23.5 விழுக்காட்டினர் ஏதாவதொரு குழு விளையாட்டுக்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்[33]. துடுப்பாட்டம், ஹாக்கி, வலைப்பந்தாட்டம், ரக்பி லீக், மற்றும் துடுப்பு படகோட்டம், நீச்சல் போன்ற விளையாட்டுக்களில் ஆஸ்திரேலியா சர்வதேச மட்டத்தில் புகழ் பெற்று விளங்குகிறது. 1956, 2000 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றன. 2000 ஆம் ஆண்டில் இருந்து பதக்கங்களைஇ வென்ற நாடுகளின் பட்டியலில் முதல் ஆறு நாடுகளுக்குள் ஆஸ்திரேலியா அடங்குகிறது[51]. டென்னிஸ் போட்டிகளில் ஆஸ்திரேலிய ஓப்பன் கிராண்ட் சிலாம் போட்டிகள் உலகப் புகழ் பெற்றவை[52]. உயிர்ப் பல்வகைமை ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான இடங்கள் பகுதி-வரண்ட அல்லது பாலைவனங்களாக இருதாலும், இதன் வாழ்விடங்கள் மலைச்சாரல்கள் தொடக்கம் வெப்பவலய மழைக்காடுகளை உள்ளடக்கியது. கடுமையான வானிலை மாற்றங்கள், புவியியல் ரீதியாக நீண்ட காலம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை போன்ற காரணிகளினால், ஆஸ்திரேலியாவின் உயிரியத் துணைத்தொகுதி (biota) தனித்தன்மையையும் பல்வேறு வகைகளையும் கொண்டுள்ளது. இங்கு வளரும் பூக்கும் செடிகொடிகளில் 85%, பாலூட்டி விலங்குகளில் 84%, பறவையினங்களிலே 45%, மீன் போன்ற நீரின வாழினங்களில் 89% வேறு எங்கும் காணவியலா, முற்றிலும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தனி இனங்கள் ஆகும்[53]. கங்காரு, கோவாலா, வால்லரு ஆகியன சில அவுஸ்திரேலிய உயிரினங்களாகும். ஆஸ்திரேலியாவிலேயே உலகில் மிக அதிகமான ஊரும் விலங்குகள் உள்ளன. இங்கு கிட்டத்தட்ட 755 வகையான ஊர்வன உள்ளன[54]. பொருளாதாரம் thumbnail|right|மேற்கு ஆஸ்திரேலியாவின் கால்கூர்லி நகரில் அமைந்துள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரும் தங்கச் சுரங்கம் ஆஸ்திரேலிய டாலர் ஆஸ்திரேலியாவின் நாணயம் ஆகும். இது ஆஸ்திரேலியா தவிர கிறிஸ்மஸ் தீவுகள், கொக்கோஸ் (கீலிங்) தீவுகள், நோர்போக் தீவு, மற்றும் பசிபிக் தீவுகளான கிரிபட்டி, நவூரு, துவாலு ஆகியவற்றிலும் அதிகாரபூர்வ நாணயம் ஆகும். அவுஸ்திரேலியா மேற்கு நாடுகளையொத்த கலப்புப் பொருளாதார அமைப்புடையது. ஐக்கிய நாடுகளின் 2007 ஆம் ஆண்டுக்கான மனித அபிவிருத்திச் சுட்டெண்ணில் மூன்றாவது இடத்திலும் தி எக்கணமிஸ்ட் இதழின் 2005 ஆம் ஆண்டு உலக வாழ்க்கைத்தரச் சுட்டெண்ணில் ஆறாமிடத்திலும் உள்ளது. 2007 இல் அவுஸ்திரேலியாவில் வேலையில்லாதோர் தொகை 4.6 % ஆகும். மொ.உ.உ (GDP) ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி, மற்றும் பிரான்சை விட சற்று அதிகமாகும். அத்துடன் தி எக்கணமிஸ்ட் இதழின் உலகில் மக்கள் வசதியாக வாழக்கூடிய நகரங்களின் பட்டியலில் (2008) மெல்பேர்ண் 2வது, பேர்த் 4வது, அடிலெயிட் 7வது, சிட்னி 9வது இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டன[55]. மேற்கோள்கள் பகுப்பு:முன்னாள் பிரித்தானியக் குடியேற்றங்கள் பகுப்பு:ஓசியானிய நாடுகள் பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
சிட்னி நகரம் எந்த நாட்டில் உள்ளது?
அவுஸ்திரேலியா
32
tamil
27b9d6da1
செவ்வாய் (Mars) சூரியக்குடும்பத்தில் உள்ள ஒரு கோள் ஆகும். இது சூரியனிலிருந்து நான்காவது கோளாக உள்ளது.இக்குடும்பத்தில் மிகச்சிறிய கோளான புதனுக்கு அடுத்ததாக இரண்டாவது சிறிய கோளாக செவ்வாய் இருக்கிறது. மேனாட்டினர் இக்கோளுக்கு போர்க்கடவுளின் பெயரைச் சூட்டியுள்ளனர். இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு இக்கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது.[13] இதனாலேயே இதற்குச் செவ்வாய் என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு புவிசார் கோளான இதன் மேற்பரப்பு சந்திரனில் உள்ளதுபோல் கிண்ணக் குழிகளையும், புவியில் உள்ளது போன்ற எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், பனிமூடிய துருவப் பகுதிகளையும் கொண்டது. செவ்வாயின் சுழற்சிக்காலமும், பருவ மாற்றங்களும் புவிக்கு உள்ளதைப் போன்றவையே. சூரிய மண்டலத்துள் மிக உயரமான ஒலிம்பசு மலையும், மிகப்பெரிய செங்குத்துப் பள்ளத்தாக்குகளுள் ஒன்றான மரினர் பள்ளத்தாக்கும் செவ்வாயிலேயே உள்ளன. 1965 ஆம் ஆண்டில் செவ்வாய்க்கு அண்மையாக மரினர் 4 வெற்றிகரமாகப் பறந்து செல்லும்வரை, செவ்வாய்க் கோளின் மேற்பரப்பில் நீர்ம நீர் இருக்கும் என நம்பினர். கோளின் துருவப் பகுதிகளுக்கு அருகில் குறித்த கால அடிப்படையில் மாற்றம் அடைகின்ற கறுப்பு, வெள்ளை அடையாளங்களே இவ்வாறான நம்பிக்கைக்குக் காரணமாக இருந்தன. இவை கடல்களும், கண்டங்களுமாக இருக்கலாம் என எண்ணினர். மேற்பரப்பில் காணப்பட்ட நீண்ட கருமையான கீறல்கள் நீர்ப்பாசனக் கால்வாய்களாக இருக்கலாம் என்றும் கருதப்பட்டது. பின்னர் இதை ஒரு ஒளியியல் மாயத்தோற்றம் என விளக்கினர். ஆனாலும், ஆளில்லாப் பயணங்களின் மூலம் திரட்டப்பட்ட நிலவியற் சான்றுகள், ஒரு காலத்தில் செவ்வாயில் பெருமளவு நீர் இருந்தது என்பதைக் காட்டுகின்றன.[14] இது, போபோசு, டெய்மோசு என்னும் இரண்டு நிலவுகளைக் கொண்டுள்ளது. இவை சிறிய, ஒழுங்கற்ற வடிவம் கொண்டவை. செவ்வாயின் டிரோசான் சிறுகோளான 5261 யுரேக்காவைப்போல் இவை செவ்வாயின் ஈர்ப்பினால் கவரப்பட்ட சிறுகோள்களாக இருக்கலாம். இயற்பியல் பண்புகள் செவ்வாயின் விட்டம் புவியின் விட்டத்தின் அரைப்பங்கு அளவு கொண்டது. இதன் அடர்த்தி புவியினதைக் காட்டிலும் குறைவானது. செவ்வாய் புவியின் கனவளவின் 15%க்குச் சமமான கனவளவையும், புவியின் திணிவின் 11%க்குச் சமமான திணிவையும் கொண்டது. இதன் மேற்பரப்பின் பரப்பளவு, புவியின் உலர் நிலப்பகுதியின் பரப்பளவைக் காட்டிலும் சற்றே குறைவானது.[7] செவ்வாய் புதன் கோளிலும் பெரியதும் திணிவு கூடியதும் ஆகும். ஆனால், புதன், செவ்வாயிலும் கூடிய அடர்த்தி கொண்டது. நிலவியல் செவ்வாய், சிலிக்கன், ஆக்சிசன், உலோகங்கள், இன்னும் பிற பாறைகளை உருவாக்கும் தனிமங்களைக் கொண்ட கனிமங்களாலான ஒரு புவிசார் கோள். செவ்வாயின் மேற்பரப்பு பெரும்பாலும் தோலெயிட்டிக் பசாற்றுக் கற்களால் ஆனது.[15] எனினும் சில பகுதிகள் பொதுவான பசாற்றுக் கற்களிலும் கூடிய சிலிக்காச் செறிவு கொண்டது. இது புவியின் எரிமலைப் படிகப் பாறையைப் போலவோ, சிலிக்காக் கண்ணாடியைப் போலவோ இருக்கக்கூடும். குறைவான ஒளிதெறிதிறன் கொண்ட பகுதிகளில் சரிவுவகை களிக்கற் செறிவுகளும், குறிந்த ஒளிதெறிதிறன் கொண்ட வடபகுதியில் வழமையான செறிவில் தகட்டுச் சிலிக்கேற்றுகளும், உயர்-சிலிக்கன் கண்ணாடியும் காணப்படுகின்றன. தென்பகுதி மேட்டு நிலங்களின் சில பகுதிகளில் கண்டறியக்கூடிய அளவில் உயர்-சிலிக்கன் பைரொட்சீன்கள் காணப்படுகின்றன. ஆங்காங்கே ஏமட்டைட்டு, ஆலிவைன்கள் என்பனவும் உள்ளன.[16] மண் பீனிக்சு இறங்குகலம் அனுப்பிய தகவல்கள், செவ்வாயின் மண் காரத்தன்மை கொண்டது எனவும், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், குளோரைடு போன்ற தனிமங்களைக் கொண்டது எனவும் காட்டுகின்றன. புவியிலுள்ள தோட்டங்களில் காணப்படும் இவை தாவர வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. இறங்குகலச் சோதனைகளின் படி மண் பி.எச் 8.3 கொண்டதுடன், பேர்குளோரேட்டு உப்புக்களையும் கொண்டது எனத் தெரிகிறது. செவ்வாயில் கீறல்கள் பொதுவாகக் காணப்படுவதுடன், கிண்ணக்குழிகள், பள்ளத்தாக்குகள் என்பவற்றின் சரிவுகளில் புதிய கீறல்களும் தோன்றுகின்றன. முதலில் கடுமையான நிறத்துடன் காணப்படும் இக் கீறல்கள் காலம் செல்லச் செல்ல மங்கலான நிறத்தை அடைகின்றன. சில வேளைகளில் சிறியனவாகத் தோன்றும் இக் கீறல்கள் பின்னர் பல நூறு மீட்டர்களுக்கு விரிவடைகின்றன. இக்கீறல்கள் தமது பாதையில் காணும் பாறைகள், பிற தடைகள் போன்றவற்றின் விளிம்போடு செல்வதையும் காண முடிகிறது. நீரியல் தாழ்வான பகுதிகளில் குறைந்த நேரத்துக்கு நீர் திரவ நிலையில் இருக்கக்கூடுமாயினும், குறைந்த வளியமுக்கம் காரணமாகச் செவ்வாயின் மேற்பரப்பில் திரவ நீர் இருப்பது சாத்தியம் இல்லை. இரண்டு துருவங்களிலும் காணப்படும் பனி மூடிகள் பெரும்பாலும் நீரினால் ஆனதாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. தென் துருவப் பனி மூடியில் உள்ள பனிக்கட்டி உருகினால் உருவாகக்கூடிய நீர் செவ்வாயின் முழு மேற்பரப்பையும் 11 மீட்டர்களுக்கு மூடுவதற்குப் போதுமானதாக இருக்கும். செவ்வாயில் தெரியும் நிலத்தோற்றங்கள், ஒரு காலத்தில் அதன் மேற்பரப்பில் நீர்ம நீர் இருந்திருக்கக்கூடும் என்பதைக் காட்டுகின்றன. வெளிப்போக்குக் கால்வாய்கள் என அறியப்பட்ட பாரிய நீள்வடிவ நீரரிப்பு நிலங்கள், சுமார் 25 இடங்களில் செவ்வாய் மேற்பரப்புக்குக் குறுக்கே வெட்டிச் செல்கின்றன. நிலத்தடி நீத்தேக்கங்களில் இருந்து வெளியேறிய, பேரழிவை ஏற்படுத்திய நீர் வழிந்தோடியபோது ஏற்பட்ட மண்ணரிப்புத் தடங்களே இவை என நம்பப்படுகின்றது. எனினும் சிலர் இவை பனியாறுகள் அல்லது எரிமலைக் குழம்புகளினால் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று நம்புகின்றனர். இவற்றுள் மிகப் பிந்திய கால்வாய்கள் சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான் தோன்றின. பிற பகுதிகளில் காணப்படும் இத்தகைய காய்வாய் வலையமைப்புக்களில் வடிவத்தில் இருந்து, செவ்வாயின் தொடக்க காலத்தில் பெய்த மழையினால் அல்லது பனிக்கட்டி மழையினால் ஏற்பட்ட வழிந்தோடிய அடையாளங்களாக இவை இருக்கலாம் எனக் கருதுகின்றனர். செவ்வாயின் தட்பவெப்பம் செவ்வாயின் மேற்பரப்பின் வெப்பநிலை +27 முதல் -126 டிகிரி வரை உள்ளது. (பூமியில் +58 முதல் -88.3 வரை). ஆனால் சூரியனிடமிருந்து பூமியை விட தூரத்திலிருப்பதால் சராசரி வெப்பநிலை -48 டிகிரி சென்டிகிரேடு. இதனுடைய காற்று மண்டலம் மிகவும் மெல்லியது, பெரும்பாலும் கார்பன்-டை-ஆக்ஸைடு கொண்டது. டெலஸ்கோப்பில் பார்த்தால் மிகச் சிவப்பாகத் தெரியும். அதனால் தான் செவ்வாய் என்றும் ஆங்கிலத்தில் the red planet என்றும் அழைக்கப்படுகிறது. பூமியைப் போன்றே துருவங்கள் பனிப்பிரதேசங்களாக இருக்கின்றன. இங்கு ஐஸ் என்பது பெரும்பாலும் 'ட்ரை ஐஸ்' எனப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடாகும். மேலும் செவ்வாய் கிரகத்தின் வட துருவத்தில் மிகப்பெரிய பனிப்பள்ளம் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் (டிசம்பர்-2018) இந்த பனிப்பள்ளத்தில் 5,905 அடி தடிமன் உள்ள பிரம்மாண்ட ஐஸ்பாறைகளைச் சுற்றி தண்ணீரும் உள்ளது[]. பனிப்பாறை ஐரோப்பாவைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் செவ்வாய் கிரக ஆராய்ச்சியின்போது இந்த பனிப்பாறை கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் வடதுருவத்தில் தனது ஆய்வினை மேற்கொள்ளும் போது இந்த பனிப்பாறையானது இதன் கேமராவில் சிக்கியிருக்கிறது.[]. வட துருவத்தில் சுமார் 50.1 மைல் நீளமும் 1.2 மைல் அகலமும் உள்ள மிகப்பெரிய பள்ளத்தாக்கு ஒன்று அமைந்திருக்கிறது. இதற்கு கொரோலோவ் (Korolev crater) பள்ளத்தாக்கு என்று பெயரிடப்பட்டிருக்கிறது. புகழ்பெற்ற விண்வெளித்துறை பொறியாளரான Sergei Korolev வின் நினைவாக இந்தப்பெயர் சூட்டப்பட்டது. ஸ்புட்னிக், வோஸ்டாக் போன்ற விண்வெளி ஆராய்ச்சித்துறையில் மைல்கல் பதித்த திட்டங்களில் தலைமை ராக்கெட் ஏவுதளப் பொறியாளராகப் பணியாற்றியவர் கொரோலோவ். பீகிள்2 - பிரிட்டனின் செவ்வாய் பயணம் ஏற்கனவே 1997ம் ஆண்டு அமெரிக்காவின் பாத்ஃபைண்டர் வாகனம் செவ்வாயில் இறக்கிவிடப்பட்டுள்ளது. பிரிட்டனின் பீகிள்2 வாகனம், செவ்வாயில் பழமையான குன்றுகளுக்கும், வடக்கு சமவெளிக்கும் இடைப்பட்ட 'இசிடிஸ் ப்ளானிட்டியா' என்ற சமதளப் பிரதேசத்தில் இறக்கிவிட ஐரோப்பிய வான்வெளி ஏஜன்சி (ESA) டிசம்பர் 2000ல் நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பீகிள்2வை ESAவின் 'மார்ஸ் எக்ஸ்பிரஸ்' என்கிற ராக்கெட் ஜூன் 2003ல் கஜகஸ்தானில் உள்ள (ரஷ்ய) பைக்கானூர் காஸ்மோடிரோம் தளத்தில் இருந்து ஏவப்படும். பீகிள்2-வின் குறிக்கோள் செவ்வாயில் உயிர்கள் இருக்கின்றதா அல்லது எப்போதாவது இருந்ததா? என்ற கேள்விக்கு முடிவான விடை காண்பதே. அதற்கு 'இசிடிஸ் ப்ளாண்டியா' தான் மிகச் சிறந்த இடம், முன்பு எப்போதாவது செவ்வாயில் உயிர்கள் இருந்தால் அதன் பாஸில்கள் கிடைக்க இங்கு அருமையான வாய்ப்பு உள்ளது என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். பீகிள்2 செவ்வாயில் பாதுகாப்பாக தரையிறங்க 'ஏர் பேக்குகள்' உபயோகிக்கப்படும். செவ்வாயில் தரையில் படும் போது இந்த ஏர் பேக்குகள் பந்து போல் எம்பி விழுந்து நிலைத்து நின்ற பின் அதனுள் இருக்கும் வாயு வெளியேற்றப்பட்டு வாகனம் சேதமின்றி வெளிவரும். ரோவர் - அமெரிக்காவின் மற்றொரு செவ்வாய் ஆய்வுத் திட்டம் பீகிள்2 திட்டம் ஒரு புறமிருக்க, அமெரிக்கா இரண்டு ரோபோட்களை 2004ம் ஆண்டு செவ்வாயில் இறக்கிவிடத் திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு 'ரோவர்'களுமே முக்காலத்தில் அங்கு நீர், அதாவது திரவ வடிவில் நீர் ஆதாரங்களைத் தேடும் உபகரணங்களைப் பெற்றிருக்கும். திரவ வடிவில் நீரென்றால் அது நிச்சயம் 0 – 100 டிகிரிக்குள் தான் இருக்க முடியும். மேலும் நீரில் ஆக்ஸிஜனும் இருக்குமென்பதால் அதில் உயிர்கள் (ஒரு செல் உயிர்கள், பாக்டீரியாக்கள் முதல் பல வித உயிரினங்கள்) உண்டாகி வாழந்திருக்ககூடிய சாத்தியங்கள் அதிகமாக உண்டு. பூமியில் உயிரினம் முதன்முதலில் தோன்றியதே நீரில் தான் என்று நம்பப்படுகிறது. செவ்வாயில் தரையிறங்க வாய்ப்பான 185 இடங்கள் பட்டியலில் தொடங்கி தற்போது 30 மிக முக்கியமான இடங்கள் பட்டியலாகக் குறுக்கப்பட்டுள்ளது. இதில் சேதமின்றித் தரையிறங்க வாய்ப்பான இடம் என்பதை விட விஞ்ஞான ரீதியாக சான்றுகள் கிடைக்க வாய்ப்பான இடம் என்பதற்குத்தான் முக்கியத்துவம் அளிப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஏவுவதற்கு ஒரு வருடம் முன்பாக இறங்கும் இடம் பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும். தற்போது செவ்வாயைச் சுற்றிக் கொண்டிருக்கும் 'மார்ஸ் க்ளோபல் சர்வேயர்' எனும் விண்கலம் அனுப்பும் தகவல்கள் இதற்கு மிகவும் உதவிகரமாக இருப்பதாகள் அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ரோவர் பயணத் திட்டங்கள் அமெரிக்காவில் ப்ளோரிடா மாகாணத்தில் கேப் காணவெரல் தளத்திலிருந்து முதல் ரோவர் ரோபோட் மே 30, 2003 லும், இரண்டாவது அதே வருடம் ஜூன் 27லிலும் ஏவப்படும். செவ்வாயில் முறையே 2004ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதியிலும், பெப்ரவரி 8ம் தேதியிலும் தரையிறங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரோவர்கள் தற்போது MER-A மற்றும் MER-B என்றும் அழைக்கப்படுகிறது. (MER – Mars Exploration Rover). இரண்டு ரோவர்களும் ஒரு செவ்வாய் தினத்திற்கு (24.62 மணிகள்) 100 மீட்டர் தூரம் வரை பயணம் செய்யும். ஆரோக்கியம் நல்லபடியாக இருந்தால் இவை 2004 ஏப்ரல் மாதத்தைத் தாண்டிக் கூட வேலை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்புகள் உசாத்துணை வெளி இணைப்புகள் பகுப்பு:புவியொத்த கோள்கள் பகுப்பு:இயங்குபடம் உள்ள கட்டுரைகள்
செவ்வாய் கோளின் வடிவம் என்ன?
ஒழுங்கற்ற
1,511
tamil
aa89f5dfe
எசுப்பானியா (Spain, /ˈspeɪn/(listen) ஸ்பெயின்; Spanish: España, pronounced[esˈpaɲa](listen)) என்றழைக்கப்படும் எசுப்பானியா இராச்சியம் (Kingdom of Spain, Spanish: Reino de España) ஐரோப்பா கண்டத்தின் தென்மேற்குப்பகுதியில் உள்ள ஐபீரியத் தீவக்குறையில் (தீபகற்பம்) அமைந்துள்ள இறைமையுள்ள ஒரு நாடு. ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாகவும் இது உள்ளது. இதன் தலைநகரம் மாட்ரிட். இந்நாட்டினரின் மொழி எசுப்பானிய மொழி. இது உலகில் இரண்டாவது அதிகம் பேசப்படும் மொழியாகும். இந்நாட்டில் ஐரோப்பிய யூரோ நாணயம் பொதுப் பயன்பாட்டில் உள்ளது. பார்சிலோனா இங்குள்ள மற்றொரு பெரிய நகரமாகும். இதன் அமைவிடம் காரணமாக வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் இப்பகுதி பல வெளிச் செல்வாக்குகளுக்கு உட்பட்டு வந்துள்ளது. அரகானின் அரசர் இரண்டாம் பேர்டினன்டுக்கும், காசுட்டைலின் அரசி முதலாம் இசபெல்லாவுக்கும் இடையே நடந்த திருமணத்தையும், 1492 ஆம் ஆண்டில் ஐபீரியத் தீவக்குறை மீளக் கைப்பற்றப்பட்டதையும் தொடர்ந்து 15 ஆம் நூற்றாண்டில் எசுப்பானியா ஒரு ஒன்றிணைந்த நாடாக உருவானது. நவீன காலத்தில் இது ஒரு உலகப் பேரரசாக உருவாகி உலகின் பல பகுதிகளிலும் தனது செல்வாக்குப் பகுதிகளை உருவாக்கியது. இதனால், உலகில் எசுப்பானிய மொழியைப் பேசுபவர்களின் எண்ணிக்கை இன்று ஏறத்தாழ 500 மில்லியனாக உள்ளது. எசுப்பானியா, அரசியல்சட்ட முடியாட்சியின் கீழ் அமைந்ததும், நாடாளுமன்ற முறையில் அமைந்ததுமான ஒரு குடியரசு நாடு. வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றான எசுப்பானியா, மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவின் அடிப்படையில் உலகின் 12 ஆவது பெரிய நாடாக விளங்குகிறது. 2005 ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி, உலகின் 10 ஆவது கூடிய வாழ்க்கைத் தரக் குறியீட்டு எண்ணைக் கொண்ட இது உயர்ந்த வாழ்க்கைத் தரம் உடைய ஒரு நாடு. இது ஐக்கிய நாடுகள் அவை, நேட்டோ, பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பு, உலக வணிக அமைப்பு ஆகியவற்றினது உறுப்பு நாடாகவும் உள்ளது. பெயர் எசுப்பானியர் தமது நாட்டை எஸ்ப்பானா (España) என்று அழைக்கின்றனர். ஆங்கிலத்தில் இதை ஸ்பெயின் (Spain) என அழைப்பர். இப்பெயர்களின் தோற்றம் குறித்து வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இதன் நிலப்பகுதியைக் குறிக்கும் ஐபீரியா என்பதற்குப் பழைய உரோமர் வழங்கிய பெயர் ஹிஸ்பானியா (Hispania) என்பது. இது, எசுப்பானியாவைக் குறிக்க வழங்கிய ஹெஸ்ப்பீரியா என்பதன் கவிதை வழக்காக இருக்கலாம் என்கின்றனர். கிரேக்கர்கள், "மேற்கு நிலம்" அல்லது "சூரியன் மறையும் நிலம்" என்ற பொருளில் இத்தாலியை ஹெஸ்ப்பீரியா என்றும் இன்னும் மேற்கில் உள்ள எசுப்பானியாவை ஹெஸ்ப்பீரியா அல்ட்டிமா என்றும் அழைத்தனர். புனிக் மொழியில் இஸ்பனிஹாட் என்னும் சொல்லுக்கு "முயல்களின் நிலம்" அல்லது "விளிம்பு" என்னும் பொருள் உண்டு. அட்ரியனின் ஆட்சிக்காலத்தில் இப்பகுதியில் வெளியிடப்பட்ட நாணயங்களில் ஒரு பெண்ணுருவத்தின் காலடியில் முயலின் உருவம் உள்ளது. இதனால் இப்பகுதியை முயலுடன் தொடர்புபடுத்தி "முயல்களின் நிலம்" என்ற பொருளில் அல்லது நடுநிலக் கடலின் விளிம்பில் உள்ளதால் "விளிம்பு" என்னும் பொருளில் வழங்கிய இஸ்பனிஹாட் என்னும் சொல்லிலிருந்து எஸ்ப்பானா என்னும் சொல் உருவாகி இருக்கலாம் என்பது சிலரது கருத்து. "விளிம்பு" அல்லது "எல்லை" எனப் பொருள்படும் பாசுக்கு மொழிச் சொல்லான எஸ்ப்பான்னா என்பதே எஸ்ப்பானா என்பதன் மூலம் என்பாரும் உள்ளனர். ஆன்ட்டோனியோ டெ நெப்ரிசா என்பவர் ஹிஸ்பானியா என்பது "மேற்குலகின் நகரம்" என்னும் பொருள் கொண்ட ஐபீரிய மொழிச் சொல்லான ஹிஸ்பாலிஸ் (Hispalis) என்பதில் இருந்து தோன்றியிருக்கலாம் என்னும் கருத்தை முன்வைத்துள்ளார். வரலாறு ஐபீரியா அல்லது இபேரியா எனப்படும் மூவலந்தீவின் (தீபகற்பத்தின்) பல்வேறு பழங்குடியினரும் ஐபீரியர் அல்லது இபேரியர்கள் என்று அழைக்கப்பட்டனர். கிமு 8ம் நூற்றாண்டுக்குப் பிறகு செல்டிக் பழங்குடியினரும், அதன் பின் ஃபினீசியர்களும், கிரேக்கர்களும் கார்தாகினியர்களும் நடுத்தரைக் கடற்பகுதிகளில் வெற்றிகரமாக குடிபுகுந்து வணிக மையங்களை உருவாக்கி பல நூற்றாண்டுக்காலம் வாழ்ந்து வந்தனர். ரோமானியர்கள் கிமு 2 ம் நூற்றாண்டில் இபேரியன் மூவலந்தீவிற்கு வந்தனர். இரண்டு நூற்றாண்டு காலம் செல்டிக் மற்றும் இபேரிய பழங்குடியினரிடம் போரிட்டு கடற்கரை வியாபார மையங்களை இணைத்து "இசுப்பானியா"வை உருவாக்கினர். ரோமானிய பேரரசிற்கு இசுப்பானியா உணவு,ஆலிவ் எண்ணை,ஒயின் மற்றும் மாழைகளை (உலோகங்களை) அளித்து வந்தது. மத்தியகாலத் தொடக்கப் பகுதியில் இது செருமானிக்கு ஆட்சியின் கீழ் வந்தது எனினும் பின்னர் வட ஆப்பிரிக்காவிலிருந்து வந்த இசுலாமியர்கள் இப்பகுதியைக் கைப்பற்றிக்கொண்டனர். காலப்போக்கில் இதன் வடபகுதியில் பல சிறிய கிறித்தவ அரசுகள் தோன்றிப் படிப்படியாக எசுப்பானியாவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன. இதற்குப் பல நூற்றாண்டுக் காலம் எடுத்தது. கொலம்பசு அமெரிக்காவை அடைந்த அதே ஆண்டில் ஐபீரியத் தீவக்குறையில் இருந்த கடைசி இசுலாமிய அரசும் வீழ்ச்சியுற்றது. தொடர்ந்து எசுப்பானியாவை மையமாகக் கொண்டு உலகம் தழுவிய பேரரசு ஒன்று உருவானது. இதனால் எசுப்பானியா ஐரோப்பாவின் மிகவும் வலிமை பொருந்திய நாடாகவும், ஒன்றரை நூற்றாண்டுக் காலம் உலகின் முதன்மை வல்லரசுகளில் ஒன்றாக இருந்ததுடன் மூன்று நூற்றாண்டுக் காலம் உலகின் மிகப்பெரிய கடல்கடந்த பேரரசு ஆகவும் விளங்கியது. தொடர்ச்சியான போர்களும், பிற பிரச்சினைகளும் எசுப்பானியாவை ஒரு தாழ்வான நிலைக்கு இட்டுச் சென்றன. எசுப்பானியாவை நெப்போலியன் கைப்பற்றியது பெரும் குழப்பநிலையை ஏற்படுத்திற்று. இது, விடுதலை இயக்கங்களைத் தோற்றுவித்துப் பேரரசைப் பல துண்டுகளாகப் பிரித்ததுடன், நாட்டிலும் அரசியல் உறுதியின்மையை உண்டாக்கியது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் உள்நாட்டுப் போர் ஏற்பட்டு எசுப்பானியாவில் சர்வாதிகார ஆட்சி ஏற்பட வழிவகுத்தது. இக்காலத்தில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டதாயினும் இறுதியில் ஆற்றல் மிக்க பொருளாதார வளர்ச்சியையும் எசுப்பானியா கண்டது. காலப்போக்கில் அரசியல் சட்ட முடியரசின் கீழான நாடாளுமன்ற முறை உருவானதுடன் குடியாட்சி மீள்விக்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டில் எசுப்பானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்துகொண்டது. முன்வரலாறும், உரோமருக்கு முந்திய மக்களும் அட்டப்புவேர்க்கா (Atapuerca) என்னும் இடத்தில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் 1.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே ஐபீரியத் தீவக்குறையில் ஒமினிட்டுகள் வாழ்ந்ததைக் காட்டுகின்றன. நவீன மனிதர் ஏறத்தாழ 32,000 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கில் இருந்து ஐபீரியத் தீவக்குறையை அடைந்தனர். இத்தகைய மனிதக் குடியிருப்புக்களைச் சார்ந்த தொல்பொருட்களில் வடக்கு ஐபீரியாவின் கான்டபிரியாவில் உள்ள ஆல்ட்டமிரா குகையில் காணப்படும் வரலாற்றுக்கு முந்தியகால ஓவியங்கள் புகழ் பெற்றவை. இவ்வோவியங்கள் கிமு 15,000 ஆண்டளவில் குரோ-மக்னன்களால் வரையப்பட்டவை. எசுப்பானியா நாட்டின் தற்போதைய மொழிகள், மதம், சட்ட அமைப்பு போன்றவை ரோமானிய ஆட்சிக்காலத்திலிருந்து உருவானவை. ரோமானியர்களின் நூற்றாண்டுகள் நீண்ட இடையூறற்ற ஆட்சிக்காலம் இன்னும் எசுப்பானியா நாட்டின் பண்பாட்டில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. புவியியல் 504,782 கிமீ² (194,897 ச. மைல்) பரப்பளவு கொண்ட எசுப்பானியா உலகின் 51 ஆவது பெரிய நாடு. இது பிரான்சு நாட்டிலும் ஏறத்தாழ 47,000 கிமீ² (18,000 ச மைல்) சிறியதும், ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலும் 81,000 கிமீ² (31,000 ச மைல்) பெரியதும் ஆகும். எசுப்பானியா அகலக்கோடுகள் 26° - 44° வ, நெடுங்கோடுகள் 19° மே - 5° கி ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது. எசுப்பானியாவின் மேற்கு எல்லையில் போர்த்துக்கலும்; தெற்கு எல்லையில் பிரித்தானியாவின் கடல் கடந்த ஆட்சிப்பகுதியான சிப்ரால்ட்டர், மொரோக்கோ என்பனவும் உள்ளன. இதன் வடகிழக்கில் பைரனீசு மலைத்தொடர் வழியே பிரான்சுடனும், சிறிய நாடான அன்டோராவுடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது. ஜெரோனா என்னும் இடத்தில் பைரனீசை அண்டி எசுப்பானியாவுக்குச் சொந்தமான லிவியா என்னும் சிறிய நகரம் ஒன்று பிரான்சு நாட்டினால் சூழப்பட்டு உள்ளது. தீவுகள் நடுநிலக் கடலில் உள்ள பலேரிக் தீவுகள், அத்திலாந்திக் பெருங்கடலில் உள்ள கனரித் தீவுகள், சிப்ரால்ட்டர் நீரிணையின் நடுநிலக் கடற் பக்கத்தில் உள்ள பிளாசாசு டி சொபரானியா (இறைமையுள்ள இடங்கள்) என அழைக்கப்படும் மனிதர் வாழாத பல தீவுகள் ஆகியனவும் எசுப்பானியாவின் ஆட்சிப் பகுதிக்குள் வருகின்றன. மலைகளும் ஆறுகளும் எசுப்பானியாவின் தலைநிலம் உயர் சமவெளிகளையும், மலைத் தொடர்களையும் கொண்ட மலைப் பகுதியாகும். பைரனீசுக்கு அடுத்ததாக முக்கியமான மலைத்தொடர்கள் கோர்டிலேரா கன்டாபிரிக்கா, சிசுட்டெமா இபேரிக்கோ, சிசுட்டெமா சென்ட்ரல், மொன்டெசு டி தொலேடோ, சியேரா மோரேனா, சிசுட்டெமா பெனிபெட்டிக்கோ என்பன. ஐபீரியத் தீவக்குறையில் உள்ள மிக உயரமான மலைமுகடு சியேரா நெவாடாவில் உள்ள 3,478 மீட்டர் உயரமான முல்காசென் ஆகும். ஆனாலும், எசுப்பானியாவில் உள்ள உயரமான இடம் கனரித் தீவுகளில் காணப்படும் உயிர்ப்புள்ள எரிமலையான தெய்டே ஆகும். இது 3,718 மீட்டர் உயரமானது. மெசெட்டா சென்ட்ரல் என்பது எசுப்பானியாவின் தீவக்குறைப் பகுதியின் நடுவில் அமைந்துள்ள பரந்த சமவெளி. எசுப்பானியாவில் பல முக்கியமான ஆறுகள் ஓடுகின்றன. இவற்றுள், தகுசு, எப்ரோ, டுவேரோ, குவாடியானா, குவாடல்கிவீர் என்பனவும் அடங்குகின்றன. கடற்கரைப் பகுதிகளை அண்டி வண்டற் சமவெளிகள் காணப்படுகின்றன. இவற்றுள் பெரியது அண்டலூசியாவில் உள்ள குவாடல்கிவீர் ஆற்றின் வண்டற் சமவெளி ஆகும். ஆட்சி எசுப்பானியா சர்வாதிகார ஆட்சியில் இருந்து குடியாட்சிக்கு மாறியதன் விளைவே 1978 ஆம் ஆண்டின் எசுப்பானிய அரசியல் சட்டம் ஆகும். எசுப்பானியாவின் அரசமைப்புச் சட்ட வரலாறு 1812 ஆம் ஆண்டில் தொடங்கியது. குடியாட்சிக்கு மாறுவதற்கான அரசியல் சீர்திருத்தங்கள் மிக மெதுவாக இடம் பெற்றதனால் பொறுமை இழந்த எசுப்பானியாவின் அப்போதைய அரசர் முதலாம் வான் கார்லோஸ் அப்போது பிரதமராக இருந்த கார்லோசு அரியாசு நவாரோ என்பவரை நீக்கிவிட்டு, அடோல்ஃப் சுவாரெசு என்பவரை அப்பதவியில் அமர்த்தினார். தொடர்ந்து 1977 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் அரசியல் சட்டவாக்க சபையாகச் செய்ற்பட்டுப் புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கியது. 1978 டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி இடம்பெற்ற தேசிய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில், புதிய சட்டம் 88% வாக்குகளைப் பெற்றது. இந்த அரசியல் சட்டத்தின்படி, எசுப்பானியா 17 தன்னாட்சிச் சமூகங்களையும், 2 தன்னாட்சி நகரங்களையும் உள்ளடக்குகிறது. எசுப்பானியாவில் அரச மதம் என்று எதுவும் கிடையாது. எவரும் தாம் விரும்பும் மதத்தைக் கைக்கொள்ளுவதற்கான உரிமை உண்டு. அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் வெளி இணைப்புகள் பகுப்பு:எசுப்பானியா பகுப்பு:ஐரோப்பிய நாடுகள் பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
ஸ்பெயின் நாட்டின் தலைநகரம் எது?
மாட்ரிட்
357
tamil
b0c00fa85
அணுக்கரு உலை (Nuclear reactor) அணு உலை என்பது அணுக்கரு தொடர்வினையைத் தொடங்கி முழுமையான கட்டுப்பாட்டோடு நிகழ்த்தும் ஓர் அமைப்பாகும். இதற்கு எதிர்மாறாக அணுகுண்டு ஒன்றில் கட்டுப்பாடற்ற முறையில் மிகக்குறைந்த நேரத்தில் அணுக்கருத் தொடர்வினை ஏற்படுவதால் வெடிப்பு ஏற்படுகிறது. அணுக்கரு உலைகள் மின்னாற்றலை உருவாக்க பேரளவில் பயன்படுத்தப்படுகின்றன. அணுக்கரு உலையில் இருந்து வெளியேறும் ஆற்றல் வெப்ப வடிவில் வெளிவருகின்றது. அணுக்கரு உலையில் வெளிவரும் வெப்ப ஆற்றல் உண்டாக்கும் நீராவி நீராவிச்சுழலிகளை இயக்குகிறது. இவை கப்பல்களை இயக்கவும் மின் நிலையங்களில் மின்னாக்கியை இயக்கவும் உதவுகின்றன.மேலும் இந்நீராவி தொழிலகச் செயல்முறைகளுக்கு வெப்பம் தரவும் அறைகளைச் சூடுபடுத்தவும் பயன்படுகிறது. அணுக்கரு உலைகள் ஓரகத் தனிமங்களை உருவாக்கவும் அணுக்கரு மருத்துவத்துக்கும் அணுக்கருப் படைக்கலன்களை உருவாக்கவும் அமைக்கப்படுகின்றன.சில ஆராய்ச்சிக்காகவும் உயராற்றல் புளூட்டோனியத்தை உண்டாக்கவும் பயன்படுகின்றன.இப்போது உலகின் பல நாடுகளில் 450 க்கும் மேற்பட்ட அணுக்கரு மின் நிலையங்கள் மின்னாக்கத்துக்கு இயங்கி வருகின்றன.[1] முதலாவது அணுக்கரு உலை ஐக்கிய அமெரிக்காவின் சிக்காகோ பல்கலைக்கழகத்தின் உலோகவியல் ஆய்வகத்தில் CP1 என்ற சிக்காகோ உலை-1 (Chicago Pile-1) என்ற பெயரில் 1942 இல் என்றிகோ பெர்மியின் தலைமையில் உருவாக்கப்பட்டது. இயங்குமுறை வழக்கமாக அனல்மின் நிலையங்களில் நிலக்கரிபோன்ற புதைபடிவ எரிபொருளை எரிப்பதால் கிடைக்கும் வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி மின்னாக்கம் நடைபெறுகிறது; அணுக்கரு மின் நிலையங்களில் அணுக்கரு உலைகளின் வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி மின்னாக்கம் நடக்கிறது. அணுப்பிளவு வினை யுரேனியம்-235 அல்லது புளூட்டோனியம்-239 போன்ற பிளவுபடத் தக்க பெரிய அணுக்கரு நொதுமியை உறிஞ்சினால் அவை பிளவு வினைக்கு ஆட்பட்டன. அவ்வினையில் அது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எடைகுறைந்த அணுக்கருக்களாக பிளவுண்டது. அப்போது பிளவுபொருள்களும் இயங்காற்றலும் காமாக் கதிர்களும் விடுபட்டு இயங்கும் நொதுமிகளும் வெளியிடப் பட்டன. இந்த நொதுமிகளில் ஒரு பகுதி. பிறகு பிற அணுக்களால் உறிஞ்சபட்டு மேலும் பிளவு நிகழ்ச்சிகளைக் கிளரச் செய்யும். இப்படியே தொடர்ந்து நிகழும் இந்தத் தொடர்வினை அணுக்கருத் தொடர்வினை எனப்படும். இந்த அணுக்கருத் தொடர்வினையைக் கட்டுபடுத்த, [[நொதுமி நச்சுகளும் நொதுமித் தணிப்பான்களும் பயன்படுகின்றன. இவை பிளவு வினையில் ஈடுபடவல்ல நொதுமிகளை மாற்றி வினைவேகத்தைக் குறைக்கின்றன.[2] கண்காணிப்பு வழி பாதுகாப்பற்ற நிலைமைகள் அறிந்தவுடனே பிளவு வினையைத் தானாகவும் கையால் இயக்கியும் கட்டுபடுத்தலாம் அல்லது நிறுத்தி விடலாம்.[3] வழக்கமான பயன்பாட்டில் தணிப்பான்களாக எடைகுறைந்த நீர் (உலக அணுக்கரு உலைகளில் 74.8% ),திண்மக் கரியதை ( graphite) (20% உலைகள்) அடர்நீர் (5% உலைகள்). சில செய்முறை உலைகளில் மாற்றுத் தணிப்பான்களாக பெரில்லியமும் நீரகக் கரிமங்களும் பயன்படுத்தியுள்ளனர்.[2] வெப்ப உருவாக்கம் அணுக்கரு உலை பலவழிகளில் வெப்பத்தை உருவாக்குகிறது: பிளவுபடு பொருள்களின் இயக்க ஆற்றல், அருகில் உள்ள அணுக்களோடு மொத்தும்போது வெப்ப ஆற்றலாக மாறுகிறது. அணுப்பிளவில் உருவாகிய காமாக் கதிர்களை உலை உறிஞ்சி வெப்ப ஆற்றலாக மாற்றுகிறது. நொதுமி உறிஞ்சலால் செயல் ஊக்கமுற்ற பிளவுபடு பொருள்களின் கதிரியக்கச் சிதைவும் வெப்பத்தை உருவாக்குகிறது. இந்த வெப்ப வாயில் உலையைச் செயல்பாட்டில் இருந்து நிறுத்திய பிறகும் சிறிது நேரம் தொடரும். அணுக்கரு வினைகளால் மாற்றப்படு யுரேனியம்-235 (U-235) இன் ஒருகிலோகிராம் பொருண்மை தோராயமாக, ஒரு கிலோகிராம் அளவு நிலக்கரியை எரிக்குபோது கிடைக்கும் ஆற்றலைப் போல மூன்று மில்லியன் மடங்கு ஆற்றலைத் தருகிறது. (ஒரு கிலோகிராம் யுரேனியம்-235 பொருண்மைக்கு 7.2×1013 ஜூல்கள்:ஒரு கிலோகிராம் நிலக்கரி பொருண்மைக்கு 2.4×107 ஜூல்கள்).[4][5] குளிர்த்தல் வழக்கமாக, அணுக்கரு உலையின் குளிர்த்தியாக நீரே பயன்படுகிறது. மாற்றாக, சிலவேளைகளில் வளிம்மோ நீர்ம சோடியம் போன்ற நீர்மப் பொன்மமோ (நீர்ம உலோகமோ) உருகிய உப்போ கூடப் பயன்படுவதுண்டு. இந்தக் குளிர்த்தி உலையூடாக செலுத்தும்போது அது அணுக்கரு அகடு வெளியிடும் வெப்பத்தை உறிஞ்சுகிறது. இப்படி உறிஞ்சிய வெப்பம் பின்னர் நீராவியை உருவாக்க பயன்படுகிறது. அழுத்தமூட்டிய நீர் உலைகளைப் போல, பெரும்பாலான உலைகளில் குளிர்த்தும் அமைப்பு புறநிலையாக உலையமைப்பில் இருந்து தனையாகப் பிரித்துவைக்கப் படுகிறது. உலை வெப்பம் இந்த அமைப்பில் உள்ள நீரை அழுத்தமூட்டிய நீராவியாக மாற்றுகிறது. இந்த அழுத்தமூட்டிய நீராவி நீராவிச் சுழலியை இயக்குகிறது. என்றாலும் சில உலைகளில் நீராவிச் சுழலிக்கான நீராவியைப் பெர உலைகளே நேரடியாக நீரைக் கொதிக்கவைக்கின்றன; கொதிநீர் உலைகளில் இம்முறை பயன்படுகிறது.[6] வினைதிறக் கட்டுபாடு உலையின் திறன் வெளியீடு, நொதுமிகள் கூடுதலாக அணுப்பிளவை உருவாக்கு எண்ணீக்கையைக் கட்டுபடுத்தி, கட்டுபடுத்தப்படுகிறது. கட்டுபாட்டுத் தண்டுகள் நொதுமிகலை உறிஞ்சும் நொதுமிநச்சால் செய்யப்படுகின்றன. கூடுதல் நொதுமிகள் கட்டுபாட்டுத் தண்டால் உறிஞ்சப்பட்டால் பிளவு வினையை நிகழ்த்த குறைந்த அளவு நொதுமிகளே எஞ்சும்.கட்டுபாட்டுத் தண்டை உலைக்குள் ஆழமாக நுழைத்தால் திறன் வெளியீடு குறையும்.அதை வெளியே இழுத்தால் திறன் வெளியீடு கூடும். மின்னாக்கம் அணுப்பிளவு வெளியிடும் ஆற்றல் வெப்பத்தை உருவாக்குகிறது. இதன் ஒரு பகுதியை பயனுள்ள ஆற்றலாக மாற்றலாம். இந்த வெப்ப ஆற்றலைப் பயன்கொள்ளும் வழக்கமான முறை இவ்வெப்பத்தைப் பயன்படுத்தி நீரைக் கொதிக்கவைத்து அழுத்தமூட்டிய நீராவியைப் பெறுவதாகும். இந்த அழுத்தமூட்டிய நீராவியால் நிர்ரவிச் சுழலியை இயக்கி அதனுடன் இணைந்துள்ள மின்னாக்கிவழி மின்சாரத்தை உருவாக்கலாம்.[7] தொடக்கநிலை அணுக்கரு உலைகள் நொதுமி 1932 இல் கண்டுபிடிக்கப்பட்டது. நொதுமிகளால் தணிக்கப்படும் அணுக்கரு வினைகளால் உருவாகும் அணுக்கருத் தொடர்வினை, அதன் பிறகே 1993 இல் அங்கேரிய அறிவியலார் இலியோ சுசிலார்டு முயற்சியால் நடைமுறையில் இயல்வதானது.இவர் அடுத்த ஆண்டில் இலண்டன் அட்மிரால்ட்டி அலுவலகத்தில் பணிபுரியும்போது அணுக்கரு உலைக்கான உரிமம் கோரி விண்னப்பம் செய்தார்.[8] நிலைய உறுப்புகள் அணுக்கரு மின் நிலையங்களின் பொதுவான உறுப்புகள்: அணுக்கரு எரிபொருள் அணுக்கரு உலை அகடு நொதுமித் தணிப்பான் நொதுமி நச்சு நொதுமி வாயில் குளிர்த்தி கட்டுபாட்டுத் தண்டுகள் உலைக்கலன் கொதிகலன் ஊட்டுநீர் எக்கி நீராவிக்கலன் (இது கொதிநீர் உலைகளில் தேவைப்படாது) நீராவிச்சுழலி மின்னாக்கி செறிகலன் குளிர்த்தும் கோபுரம்/குளிர்கூண்டு கதிர்க்கழிவு அமைப்பு (கதிரியக்கக் கழிவுப்பொருளைக் கையாளும் அமைப்பு) எரிபொருள் மீளூட்ட்த் தளம் பயன்படுத்திய எரிபொருள் குவை அணுக்கருக் காப்பு அமைப்புகள் உலைக் காப்பு அமைப்பு (RPS) நெருக்கடிநேர டீசல் மின்னாக்கிகள் நெருக்கடிநேர உலையகடு குளிர்த்தும் அமைப்புகள் (ECCS) தேக்கநிலை நீர்ம கட்டுபாட்டு அமைப்பு (நெருக்கடிநேர போரான் பீய்ச்சல், கொதிநீர் உலைகளில் மட்டும்) முதன்மைச் சேவை நீர் அமைப்பு (ESWS) சிறைப்புக் கட்டிடம் கட்டுபாட்டு அறை நெருக்கடிநேர இயக்க அறை/ஏந்தகம் அணுக்கரு பயிற்சி நிலையம் (usually contains a Control Room simulator) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் - ஜெயபரதனின் கட்டுரை பகுப்பு:அணு உலைகள் பகுப்பு:இந்தியாவில் அணுசக்தி
அணு உலையை கண்டுபிடித்தவர் யார்?
என்றிகோ பெர்மியின்
1,143
tamil
8b75845a9
யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (~ 70 ஆண்டுகள்). மனிதர்கள் தவிர்ந்த மற்றைய விலங்குகளில் இதுவே அதிக நாட்கள் வாழும் தரைவாழ் விலங்கு ஆகும். யானைகள் மிகவும் வலிமையானவை. வேட்டை விலங்குகளும் காட்டுயிர்களின் உணவுப் படிநிலையில் உயர்நிலையிலுள்ளவைகளுமான சிங்கம் (அரிமா), புலி முதலியனவும் நெருங்க முடியாத வலிமை கொண்டவை. சிங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து, தனியாக வர நேரிடும் களைத்த அல்லது இளைத்த யானையைக் கொல்லும். ஆனால், இவ்வகை நிகழ்வுகள் மிகமிகக் குறைவே. யானைகள் குடும்பமாக வாழும். மேலும், இவை அதிக ஞாபக சக்தி கொண்டவை. யானைகளில் மூன்று சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன. அவை, ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், ஆசிய யானைகள் ஆகும். இவைகளுக்கிடையே சிறப்பான வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக, எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள்வரை உயிர்வாழ்கின்றன. ஆண் யானைக்குக் களிறு என்று பெயர். பெண் யானைக்குப் பிடி என்று பெயர். யானையின் குட்டியைக் கன்று என்றோ, குட்டியானை என்றோ சொல்வர். யானை உரக்க எழுப்பும் ஒலியைப் பிளிறுதல் என்பர். யானையினங்கள் ஆப்பிரிக்க யானைகள் ஆசிய யானைகளைவிட உருவத்தில் பெரியவை. பெரிய காது மடல்களைக் கொண்டுள்ளன. ஆப்பிரிக்க யானைகளில் ஆண், பெண் இரண்டும், தந்தங்களைக் கொண்டுள்ளன. ஆனால், ஆசியப் பெண் யானைகளில் தந்தம் அரிதாகவே காணப்படுகிறது. ஆப்பிரிக்க யானைகளின் முதுகுப்புறம், தலைக்கு அடுத்துச் சற்று உள்நோக்கி வளைந்தும், புடைத்த நெற்றி மேடுகள் இல்லாமல் சமமாகவும் இருக்கும். இவற்றின் துதிக்கையின் நுனியில் இரண்டு இதழ்கள் இருக்கும். ஆனால், முன்னங்கால்களில் நான்கு அல்லது ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் மூன்று நகங்களும் இருக்கும். ஆசிய யானைகளின் முதுகு சற்று உயர்ந்து மேடாக இருக்கும். நெற்றியில் இரு மேடுகளும், காது மடல்கள் சிறியனவாகவும் இருக்கும். துதிக்கை நுனியில் ஒரே ஓர் இதழும் இருக்கும் (மேல் புறம்). முன்னங்கால்களில் ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் நான்கு நகங்களும் இருக்கும். உணவும் வாழிடமும் யானைகள் இலையுண்ணிகள் அல்லது தாவர உண்ணிகள் ஆகும். இவை மூங்கில், கரும்பு போன்றவற்றை விரும்பி உண்கின்றன. இவை ஒரு நாளைக்கு 16 மணிநேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. மேலும், இவற்றின் செரிமானத் திறன் மிகவும் மந்தமானது. எனவே, இவை உண்பதில் 40 விழுக்காடே செரிமானம் ஆகிறது. எனவே, இவை நிறைய உணவு உட்கொள்ள நேரிடுகிறது. நன்கு வளர்ந்த யானைகள் நாள் ஒன்றுக்குச் சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன. உடலமைப்பு ஆண் யானைகள் பொதுவாக 3 மீட்டர் உயரமும் 6000 கிலோகிராம் எடையும் கொண்டவை. யானையின் தோல் மிகவும் தடிப்பானது. சுமார் 3 செ.மீ தடிப்பு இருக்கும். எனினும், மெத்தெனவே இருக்கும். இதனால், கொசு முதலியனவும் கடிக்கும். யானை வலுவான நான்கு கால்களைக் கொண்டிருக்கிறது. யானை பருமனான உடலைக் கொண்டிருந்தாலும் மலை மீதும், நெடுங்குத்தான இடங்களிலும் திறம்பட ஏறவும் இறங்கவும் வல்லது. "ஆனைக்கும் அடி சறுக்கும்" என்னும் பழமொழி, யானையின் நெடுங்குத்தான ஏற்ற இறக்கங்களில் அதன் நடைத்திறனைக் குறிப்பிட்டு எழுந்ததாகும். தும்பிக்கை யானையின் சிறப்பான உறுப்பு அதன் தும்பிக்கை. இது யானைகளில் மட்டுமே சிறப்பாகக் காணப்படுகின்றது. ஒருசில விலங்குகளிலே முன் மூக்குப் பகுதி சற்று நீண்டு இருந்தாலும் (நெடுமூக்குக் குரங்கு போல்), தும்பிக்கை போலும் நீண்ட உறுப்புடைய விலங்குகள் இல்லை. தும்பிக்கையானது மொத்தம் 40,000 தசைகளால் ஆனது. இது எல்லாப்புறங்களிலும் வளையக்கூடியது. தும்பிக்கையின் நுனியில் யானை மூச்சுவிடும் மூக்குத் துளைகளும், சின்னஞ்சிறிய, மிகவும் நுண்ணுணர்வு உள்ள விரல் நீட்சியும் இருக்கின்றன.[1] தும்பிக்கையால் சிறு குச்சி முதல் பெரிய மரம் வரை தூக்க முடியும். இவை பொதுவாக உணவை எடுப்பதற்கும் நீர் பருகுவதற்கும் உதவுகின்றன. பகை விலங்குகளின் தாக்குதலையும் யானை தும்பிக்கையால் எதிர்த்து முறியடிக்கிறது. கழுத்து குட்டையாக இருப்பதால் தும்பிக்கையின் முக்கியத்துவம் மிகப் பெரியது. தந்தம் யானைகள் இரண்டு தந்தங்களைக் கொண்டுள்ளன. இவைகளுக்கு யானைக் கோடு என்று பெயர். இந்த யானைக் கோடானது ஆசிய இந்திய யானைகளில் ஆண் யானைகளுக்கு (களிறுக்கு) மட்டுமே உண்டு பெண் யானைகளுக்குக் (பிடிக்குக்) கிடையா. ஆனால் ஆப்பிரிக்கக் காட்டு யானைகளில் ஆண் பெண் ஆகிய இருபால் யானைகளுக்கும் (களிறு, பிடி ஆகிய இரண்டிற்கும்) கோடு உண்டு. சுமத்ரா போர்னியோ பகுதிகளில் வாழும் யானை, இலங்கையின் யானைகளில் ஆண் பெண் (களிறு, பிடி) ஆகிய இருபால் விலங்குகளுக்கும் பெரும்பாலும் யானைக் கோடு கிடையா. யானைக் கோடானது யானையின் கடைவாய்ப் பற்களின் நீட்சியாகும். இதனால் இவைகளுக்கு யானைகளின் எயிறு அல்லது தந்தம் என்றும் பெயர் (எயிறு, தந்தம் என்றால் பல் என்று பொருள்). தந்தங்கள் 3 மீட்டர் (10 அடி) வரை வளரக்கூடியவை. மேலும் இவை 90 கிலோகிராம் எடை வரை இருக்கலாம். இத் தந்தங்கள் வியாபாரத்திற்காகவும் பயன்படுகின்றன. பல யானைகளைக்கொன்று எடுக்கப்பட்ட ஆறு டன் தந்தங்களை எதியோப்பியா நாடு 2015 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் தீயிட்டு அழித்தது.[2] தோல் யானையின் தோல் மிகவும் தடிப்பானது. உடலின் பெரும்பாலான பகுதிகளில் தடித்த தோல் காணப்படுகிறது. தோலின் தடிமன் ஏறத்தாழ இரண்டரை சென்டிமீட்டர் இருக்கும். எனினும் இதன் வாயைச் சுற்றியும் காதின் உட்பகுதியிலும் தோல் மெல்லியதாக உள்ளது. பொதுவாக ஆசிய யானைகளின் தோல் ஆப்பிரிக்க யானைகளை விட கூடுதலான முடியைக் கொண்டுள்ளது. யானைகள் பொதுவாக சேற்றையோ மண்ணையோ உடல் முழுதும் பூசிக் கொள்கின்றன. இது யானைச் சமூகத்தின் ஒரு முக்கியக் குணம் ஆகும். இது யானையின் தோலை சூரிய வெப்பத்தில் இருந்தும் கதிர் வீச்சில் இருந்தும் காத்துக் கொள்ள உதவுகிறது. யானையின் தோல் தடித்து இருப்பினும் இதன் உணர்திறன் அதிகம். இதனாலேயே யானைகள் சேற்றையோ அல்லது குளித்த பின் மண்ணை வாரித் தூற்றிக் கொள்கின்றன. கால்கள் யானையின் பெரிய உடலைத் தாங்குதற்கு ஏற்ப இவை வலிமையான கால்களைக் கொண்டுள்ளன. இவற்றின் கால்கள் செங்குத்தாக இருப்பதாலும் அகன்ற பாதங்கள் இருப்பதாலும் இவை நிற்பதற்கு தசையாற்றல் அதிகம் தேவையில்லை. எனவே இவற்றால் நீண்ட நேரம் இளைப்பாறாமல் நிற்க இயலும். ஆப்பிரிக்க யானைகள் நோயுற்றாலோ அல்லது காயம் பட்டாலோ தவிர பெரும்பாலும் அமர்வதில்லை. ஆனால் ஆசிய யானைகள் அடிக்கடி இளைப்பாறுகின்றன. யானை அகன்ற வட்டமான அடியைக் (பாதம்) பெற்றுள்ளது. ஆப்பிரிக்க யானைக்கு பின்னங்கால்களில் மூன்று உகிர்களும் (நகங்கள்) முன்னங்கால்களில் நான்கும் உள்ளன. ஆசிய யானைக்கு பின்னங்கால்களில் நான்கும் முன்னங்கால்களில் ஐந்துமாக உகிர்கள் உள்ளன. யானைகளால் நன்கு நீந்தவும் ஏறவும் முடியும். இவற்றால் குதிக்க இயலாது. காதுகள் யானைகள் நன்கு பெரிய அகன்ற மடல் போன்ற காதுகளைக் கொண்டுள்ளன. இவை யானையின் உடல் வெப்பநிலையைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. யானையின் காதுகள் இரத்த நாளங்கள் நிரம்பியனவாய் உள்ளன. வெப்பம் மிகுந்த இரத்தம் காதுகளில் பாயும் போது சுற்றுப்புறக் காற்று பட்டு குளிர்கிறது. பின் இது உடலுக்குள் சென்று வெப்பநிலையைக் குறைக்கிறது. இரத்தச் சுழற்சியின் காரணமாக இச்செயல் தொடர்ந்து நிகழ்ந்து வெப்பநிலை கட்டுக்குள் வைக்கப்படுகிறது. இதனாலேயே யானைகள் எப்போதும் காதுகளை அசைத்துக் கொண்டே இருப்பதைக் காணலாம். வளர்ந்த யானைக்காதுகளின் மேல் ஓரம் ஆசிய யானைக்கு வெளிப்புறம் மடிந்து இருக்கும், ஆப்பிரிக்க யானைக்கு உட்புறம் சுருண்டிருக்கும்.[3] அறிவாற்றல் தரையில் வாழும் விலங்குகளில் யானையின் மூளையே மிகவும் பெரியதாகும். இது ஐந்து கிலோ கிராமுக்கும் சற்று கூடிய எடையைக் கொண்டது. யானைகள் நினைவாற்றல் மிக்கன. விலங்குகளில் முதனிகளுக்கும் டால்பின்களுக்கும் அடுத்து யானைகளே அறிவாற்றல் நிரம்பியவையாகக் கருதப்படுகின்றன. மனிதர்களுக்கு அடுத்தபடியாக அறிவிற்சிறந்தவையாக யானைகள் கூறப்படுகின்றன. யானைகளின் மூளையும் அமைப்பிலும், நுட்பத்திலும் சிறந்தவை. கருவிகளைப் பயன்படுத்தவும் கற்றுக் கொள்கின்றன. பொதுவாக யானை இரக்கவுணர்ச்சி கொண்டது.[4] புலன் உணர்வு யானைகள் மிகச்சிறந்த கேட்கும் திறனையும் மோப்பத் திறனையும் பெற்றுள்ளன. யானையின் கண் சற்று கிட்டப்பார்வை கொண்டது. எனவே, ஒரு யானை தன் பார்வையை விட கூர்மையான கேட்பு சக்தியையும், நுட்பமான மோப்பத்திறனையுமே நம்பி வாழ்கிறது.[5] இவற்றின் தும்பிக்கையும் உணர்திறன் மிக்கது. இவற்றின் காதுகள் மட்டுமன்றி தும்பிக்கையும் அதிர்வுகளை உணர வல்லது. இவற்றின் பாதங்கள் மிகக் குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளையும் உணர வல்லன. சமூக வாழ்க்கை களிறுகளின் சமூக வாழ்க்கை முறையும் பிடிக்களின் வாழ்க்கை முறையும் வேறுபட்டது. களிறுகள் தான் பருவம் எய்தும் வரை தன் தாய் உள்ள குழுவோடு வாழும், பின் பெரும்பாலும் தனியாகவே வாழ்கின்றன. ஆனால் பிடிகள் நன்கு பிணைப்பான குடும்பமாக தாய், சகோதரி, மகள் என வாழ்கின்றன. இனப்பெருக்க காலங்களில் பருவமெய்திய பிடியும் தனித்துக்காணப்படும். தன்னுணர்வு யானைகள் தன்னுணர்வு கொண்டவை. இது கண்ணாடிச் சோதனை மூலம் நிறுவப்பட்டுள்ளது. யானைகள் முன் கண்ணாடியை வைக்கும் போது இவை தங்களை அடையாளம் கண்டுகொள்கின்றன. இத்திறன் இதுவரை மதிமாக்கள், சில குரங்கினங்கள், டால்பின்களில் மட்டுமே கண்டறியப் பட்டுள்ளது.யானைகள் ஒருவர் சுட்டிக்காட்டுவதைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவை என்று சிம்பாப்வேயில் பழக்கப்பட்ட யானைகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.[6] இனப்பெருக்கம் யானையின் சினைக்காலம் 22 மாதங்கள் ஆகும். இதுவே பாலூட்டிகளில் மிக நீண்ட சினைக்காலம் ஆகும். பொதுவாக இவை ஒரேயொரு கன்றையே ஈனுகின்றன. இரட்டைகள் பிறப்பது மிகவும் அரிது. பிறந்த யானைக் கன்றானது 90 – 115 கிலோகிராம் எடை வரை இருக்கும். யானை ஈனும் முன்னும், ஈனும் பொழுதும், ஈன்ற பின்னரும் அதனைச் சுற்றிலும் மற்ற வளர்ந்த யானைகள் இருந்து மிகவும் உதவுகின்றன. யானைக்கன்று பிறந்ததில் இருந்து, அது யானைக் கூட்டத்தாலேயே வளர்க்கப்படுகின்றது. அச்சுறுத்தல்கள் வேட்டையாடுதல் யானைகளுக்கு முக்கியமான அச்சுறுத்தல் வேட்டையாடுதல் ஆகும். யானைகள் அவற்றின் தந்தங்களுக்காக வேட்டை ஆடப்படுகின்றன. பெரியவையும், நீண்ட காலம் வாழுவனவும், குறைவான வேகத்தில் இனம் பெருகுவனவுமான யானைகளுக்கு, அளவு மீறி வேட்டையாடுதல் பெரும் பாதிப்பை எற்படுத்துகின்றது. இவை பெரிதாக இருப்பதனால் எளிதில் மறைந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு யானையும் வளர்ந்து இனம் பெருக்குவதற்குப் பல ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வொரு யானைக்கும் சராசரியாக நாளொன்றுக்கு 140 கிலோகிராம் (300 இறாத்தல்) இலை தழைகள் தேவைப்படுகின்றது. புலி, சிங்கம் போன்ற பெரிய கோண்மாக்கள் அழிக்கப்படுவதாலும் யானைகளின் உணவுக்குப் போட்டியாக உள்ள சிறய தாவர உண்ணிகள் பெருகி தாவரங்களைப் பெருமளவில் அழிப்பதால் யானைகளுக்கு உணவு பெறுவது கடினமாகின்றது. யானைகள் மனிதனால் கொல்லப்படுவதைத் தவிர பிற விலங்குகளால் உணவுக்காகக் கொல்லப்படுவது அரிது. வாழிடம் சுருங்குதல் யானைகளின் வாழிடங்கள் அழிக்கப் படுவதும் மற்றொரு முக்கியமான அச்சுறுத்தல் ஆகும். மனிதர் வேளாண்மை விரிவாக்கத்துக்காக யானைகளின் வாழிடங்களான காடுகளை அழித்துவருகிறார்கள். இது மனிதர்களின் நலனுக்கும் யானைகளின் நலன்களுக்குமிடையே முரண்பாடுகளை உருவாக்குகின்றது. எடுத்துக்காட்டாக யானைகள் புதிய வேளாண்மைக் குடியேற்றங்களுக்குள் நுழைந்து பயிர்களை அழித்துவிடுவதுடன் மக்களுக்கு உயிராபத்தையும் ஏற்படுத்துகின்றன. இவ்வாறான முரண்பாடுகளால், இலங்கையில் சராசரியாக ஆண்டொன்றுக்கு 150 யானைகளும், 100 மனிதர்களும் இறப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. காடழிப்பு யானைகளின் வாழிடத்தையும் குறைக்கின்றது. ஆசிய யானைகளின் அழிவுக்கான முதன்மைக் காரணம் வாழிடங்கள் இழக்கப்படுவதே என்று கூறப்படுகிறது. யானைகள் வாழ்வதற்கு பெரிய அளவிலான காட்டுப்பகுதிகள் தேவைப்படுகின்றன. ஏனெனில், யானைகள் கூட்டமாக ஒரு பகுதிக்குள் புகுந்து மரங்களையும் செடி கொடிகளையும் பெருமளவில் அழித்து உண்கின்றன. பின்னர் வேறிடத்துக்குச் செல்கின்றன. இவ்வாறு புதிய இடங்களுக்குச் சென்று அழிக்கப்பட்ட காடுகள் மீண்டும் வளர்ந்ததும் திரும்பவும் அதே இடத்துக்கு வந்து உணவைப் பெறுகின்றன. வாழிடங்களின் அளவு குறையும் போது, மிக விரைவிலேயே உணவு முடிவடைந்து விடுகிறது.[7] மனிதர்களும் யானைகளும் யானைகள், மனிதர்களினால் சட்டத்துக்கு அமைவாகவும், எதிராகவும் கொல்லப்படுவதனால், யானைகளின் உடலமைப்பில் எதிர்பாராத விளைவுகளும் ஏற்படுகின்றன. ஆப்பிரிக்காவில் தந்தங்களுக்காக வேட்டையாடுபவர்கள், பெரிய தந்தங்களுள்ள யானைகளையே வேட்டையாடுவதால் எஞ்சியிருக்கும் யானைகள் சிறிய தந்தங்கள் உள்ளவையாக அல்லது தந்தங்கள் இல்லாதவையாக உள்ளன. புதிதாகப் பிறக்கும் குட்டிகளும் இவற்றின் மூலமாகவே பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரிப்பதால் புதிய தலைமுறைகளில் தந்தமில்லாத் தன்மையை உருவாக்கும் மரபணுக்கள் கூடுதலாகிப் பெருமளவிலான தந்தமில்லா யானைகள் பிறப்பதற்கு வழியேற்படுகிறது. 1930ல் 1% ஆக இருந்த இவ்வாறான யானைகளின் தொகை இப்போது சில பகுதிகளில் 30% வரை அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் தந்தமில்லாத் தன்மை என்பது ஒரு அரிதான இயல்புப் பிறழ்வாக இருந்த நிலை மாறி இப்போது பொதுவான மரபுவழி இயல்பாக மாறிவருகிறது. இறப்பு இருதயக் கோளாறு, மாரடைப்பு, மூளையில் இரத்தக்கட்டி போன்றவற்றால் யானைகள் இறக்கக்கூடும்.[8] சங்க இலக்கியங்களில் யானை தமிழ் சங்க இலக்கியங்களில் யானையை, 170க்கும் மேற்பட்ட பெயர்களில் குறிப்பிடுகிறார்கள்.விரிவாக காணலாம். அவைகளில் சில வருமாறு; 1. யானை, 2. வேழம், 3. களிறு, 4. பிளிறு, 5. கலபம், 6. மாதங்கம், 7. கைமா, 8.உம்பல் - , 9. வாரணம், 10. அஞ்சனாவதி, 11. அத்தி, 12. அத்தினி, 13. அரசுவா, 14. அல்லியன், 15. அனுபமை, 16. ஆம்பல், 17. ஆனை, 18. இபம், 19. இரதி, 20. குஞ்சரம் / இராசகுஞ்சரம், 21. இருள், 22. தும்பு, 23. வல் விலங்கு, 24.கரி, 25.அஞ்சனம்,26.நாகம் (கதநாகம்), 27. பழமொழிகளும் சொலவடைகளும் தமிழில் யானை பற்றிய பழமொழிகளும் சொலவடைகளும் இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. பழமொழிகள் யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன். யானைக்கும் அடி சறுக்கும். யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே யானை கறுத்தாலும் ஆயிரம் பொன் சொலவடைகள் யானைப்பசிக்கு சோளப்பொரியா? யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டது போல துணை நூற்பட்டியல் Check date values in: |date= (help) மேற்கோள்கள் இவற்றையும் காண்க யானையின் தமிழ்ப்பெயர்கள் குருவாயூர் கேசவன் புற இணைப்புகள் * பகுப்பு:ஒலிக்கோப்பு உள்ள கட்டுரைகள்
யானையின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
70 ஆண்டுகள்
175
tamil
b0f49103a
பெங்களூர் (Kannada: ಬೆಂಗಳೂರು) கர்நாடக மாநிலத்தின் தலைநகராகும். கர்நாடகாவின் தென்கிழக்கு பகுதியில் தக்காண பீடபூமியில் அமைந்துள்ள இந்நகரம் மக்கள்தொகையின் அடிப்படையில் இந்தியாவின் மூன்றாவது பெருநகரமாகவும்[1] நகர்ப்புற மக்கள்தொகை அடர்த்தியில் ஐந்தாவது பெரியதாகவும் திகழ்கிறது. நவீன பெங்களூரின் சிற்பியாக பலர் கருதும் முதலாம் கெம்பெ கவுடா இந்த இடத்தில் ஒரு செங்கல்-கலவை கோட்டையைக் கட்டி இதனை விஜயநகர சாம்ராச்சிய பிராந்தியமாக நிறுவிய 1537 ஆம் ஆண்டு முதல் தான் இந்நகரத்தின் நவீன வரலாறானது துவங்குவதாக பலர் கருதுகின்றனர். பிரித்தானிய ஆட்சியின் போது, இது தென்னிந்தியாவில் காலனி ஆட்சி மையமாக ஆனது. இன்று, ஒரு பெரிய வளரும் பெருநகரமாக, இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற பல கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் தாயகமாக பெங்களூரு திகழ்கிறது. ஏராளமான பொதுத்துறை கனரக தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்கள், விண்வெளி, தொலைத்தொடர்பு, மற்றும் பாதுகாப்பு துறை நிறுவனங்கள் இந்நகரில் அமைந்துள்ளன. தகவல் தொழில்நுட்பத்துறை வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியில் நாட்டின் முன்னணியில் திகழும் தனது பெருமைமிகு நிலையின் காரணமாக, பெங்களூரு இந்தியாவின் 'சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.[2] மக்கள்பரவலில் பன்முகத்தன்மை கொண்டதான பெங்களூரு பெரும் பொருளாதார மையமாகத் திகழ்வதோடு இந்தியாவில் மிகத் துரிதமாய் வளரும் பெரு நகரமாகவும் உள்ளது. 2015ஆம் ஆண்டு பெங்களுரு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[3] பெயர்வரலாறு பெங்களூரு என்ற நகரப் பெயரின் ஆங்கிலவயமாக்க பிரயோகமான பெங்களூர் என்னும் பெயர் தான் சில ஆண்டுகள் முன்பு வரை பயன்படுத்தப்பட்டு வந்தது. "பெங்களூரு" என்கிற பெயருக்கான முதல்முதல் குறிப்பு ஒன்பதாம் நூற்றாண்டு மேற்கு கங்க வம்சத்தின் "வீரக் கல்" (ஒரு மாவீரனின் சிறப்பம்சங்களைப் போற்றும் கல் எழுத்துக்கள்) ஒன்றில் செதுக்கப்பட்டுள்ள எழுத்துக்களில் காணத்தக்கதாய் இருக்கிறது. பெகரில் கண்டெடுக்கப்பட்ட இந்த கல்வெட்டில், "பெங்களூரு" என்பது 890 ஆம் ஆண்டில் யுத்தம் நடந்த ஒரு இடமாகக் குறிப்பிடப்படுகிறது. கங்க சாம்ராச்சியத்தின் ஒரு பகுதியாக இந்த இடம் இருந்தது. இது பெங்கவால்-உரு, அதாவது ஹலெகன்னடாவில் (பழைய கன்னடம்) "காவலர்களின் நகரம்" என்று அழைக்கப்பட்டது.[4] தி ஹிந்து பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரை கூறுகிறது:[5]கிபி 890 காலத்தியதாக இருக்கும் ஒரு கல்வெட்டு, பெங்களூரு 1,000 வருடங்களுக்கும் பழமையானது என்று காண்பிக்கிறது. ஆனால் இக்கல்வெட்டு நகருக்கருகில் பெகுரில் பார்வதி நாகேஸ்வரா கோவிலில் கவனிப்பாரின்றி இருக்கிறது...ஹலே கன்னட (பழைய கன்னடம்) மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த கல்வெட்டு எழுத்துக்கள் 890 ஆம் ஆண்டின் பெங்களூரு போர் ஒன்றைக் குறிப்பிடுகிறது. இதனை வரலாற்று ஆசிரியரான ஆர்.நரசிம்மச்சார் தனது கர்நாடிகா கல்லெழுத்துவியல் (தொகுதி. 10 துணைச்சேர்ப்பு) தொகுப்பில் பதிவு செய்திருந்தும் கூட, அதனை பாதுகாக்க இதுவரை எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. சொல்வழக்கு கதையாக இருந்தாலும் கூட பிரபலமான பழைய சம்பவம் ஒன்று இவ்வாறு நினைவு கூர்கிறது: 11 ஆம் நூற்றாண்டின் ஹோய்சாலா அரசரான இரண்டாம் வீர வல்லாளர், வேட்டையாட சென்ற போது காட்டில் வந்த வழியை மறந்து விட்டார். பசியிலும் களைப்பிலும் இருந்த போது, ஒரு ஏழை கிழவியை அவர் சந்தித்தார். அந்த கிழவி அவருக்கு அவித்த பயிறு பரிமாறினார். ராஜா நன்றியுடன் "பென்ட-கால்-உரு" (Kannada: ಬೆಂದಕಾಳೂರು) (வார்த்தை அர்த்தத்தில், "அவித்த பீன்ஸ்களின் நகரம்") என்று அந்த இடத்திற்கு பெயரிட்டார். அது இறுதியில் "பெங்களூரு" என்று ஆனது.[6][7] 11, டிசம்பர் 2005 அன்று, பெங்களூர் என்கிற பெயரை பெங்களூரு என்று பெயர்மாற்றம் செய்வதற்கு ஞானபீட விருது வென்ற யூ.ஆர். அனந்தமூர்த்தி அளித்திருந்த ஒரு யோசனையை ஏற்றுக் கொண்டதாக கர்நாடக அரசு அறிவித்தது.[8] 27, செப்டம்பர் 2006 அன்று புருகத் பெங்களூரு மகாநகர பலிகே (BBMP) உத்தேசிக்கப்பட்ட பெயர் மாற்றத்தை அமல்படுத்த தீர்மானம் நிறைவேற்றியது.[9] கர்நாடகா அரசாங்கத்தால் அந்த தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதிகாரப்பூர்வமாக நவம்பர் 1, 2006 முதல் பெயர் மாற்றத்தை அமலாக்க முடிவு செய்யப்பட்டது.[10][11] ஆயினும், மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து ஒப்புதல் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதங்களின் காரணமாக இந்த நிகழ்முறை சற்று முடங்கியது.[12] வரலாறு மேலைக் கங்கர்களின் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆட்சிக்கு பிறகு, கிபி 1024 ஆம் ஆண்டு சோழர் களால் பெங்களூரு கைப்பற்றப்பட்டு பின் 1070 ஆம் ஆண்டில் சாளுக்கிய-சோழர்களின் வசம் சென்றது. 1116 ஆம் ஆண்டில், ஹோய்சாளப் பேரரசு சோழர்களை தூக்கியெறிந்ததோடு தனது ஆட்சியை பெங்களூருக்கும் நீட்டித்தது. நவீன பெங்களூரு விஜயநகர சாம்ராச்சியத்தின் குத்தகைதாரர்களில் ஒருவரான முதலாம் கெம்பெ கவுடாவினால் நிறுவப்பட்டது. இவர் செங்கல்-கலவை கோட்டை ஒன்றையும் நந்தி கோயில் ஒன்றையும் நவீன பெங்களூருவின் அருகாமையில் 1537 ஆம் ஆண்டில் கட்டினார். புதிய நகரத்தை கெம்பெ கவுடா "கந்துபூமி" அல்லது "நாயகர்களின் பூமி" என்று குறிப்பிட்டார்.[7] பெங்களூரு கோட்டைக்குள்ளாக, நகரம் சிறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது - ஒவ்வொன்றும் ஒரு "பேட்டெ" (பேட்டை) என்றழைக்கப்பட்டது. நகரம் இரண்டு முக்கிய வீதிகளைக் கொண்டிருந்தது. சிக்கபேட்டெ வீதி கிழக்கு-மேற்காக சென்றது, தொட்டபேட்டெ வீதி வடக்கு-தெற்காக சென்றது. இவை குறுக்கிட்ட இடம் பெங்களூரின் இதயமான தொட்டபேட்டெ சதுக்கத்தை உருவாக்கியது. கெம்பெ கவுடாவுக்கு அடுத்து வந்த, இரண்டாம் கெம்பெ கவுடா, பெங்களூரின் எல்லைகளாக அமைந்த நான்கு புகழ்பெற்ற கோபுரங்களைக் கட்டினார்.[13] விஜயநகர ஆட்சியின் போது, பெங்களூரு "தேவராயநகர" மற்றும் "கல்யாணபுரா" ("மங்கள நகரம்") என்றும் அழைக்கப்பட்டது. விஜயநகரப் பேரரசு வீழ்ந்த பின், பெங்களூரின் ஆட்சி பல கைகளுக்கு மாறியது. 1638 ஆம் ஆண்டில், ரனதுல்லா கான் தலைமையிலான ஒரு பெரும் பீஜப்பூர் படை ஷாஜி போன்ஸ்லேவுடன் இணைந்து மூன்றாம் கெம்பெ கவுடாவைத் தோற்கடித்தது. பெங்களூரு ஷாஜிக்கு கொடையாகக் கொடுக்கப்பட்டது. 1687 ஆம் ஆண்டில், முகலாய தளபதியான காசிம் கான் ஷாஜியின் மகனான எகோஜியைத் தோற்கடித்து, பெங்களூரை மைசூரின் சிக்கதேவராஜ உடையாருக்கு (1673-1704) 300,000 ரூபாய்க்கு விற்று விட்டார்.[14][15] 1759 ஆம் ஆண்டில் இரண்டாம் கிருஷ்ணராஜ உடையார் இறந்த பிறகு, மைசூர் ராணுவத்தின் படைத் தளபதியாக இருந்த ஹைதர் அலி தன்னை மைசூரின் உண்மையான ஆட்சியாளராக பிரகடனப்படுத்திக் கொண்டார். பின்னர் ஆட்சி மைசூர்ப் புலி என்று அழைக்கப்பட்ட ஹைதர் அலியின் மகனான திப்பு சுல்தான் வசம் சென்றது. நான்காம் ஆங்கிலேய-மைசூர் போரில் (1799) திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டு மரணத்தை தழுவிய பிறகு இறுதியில் பெங்களூரு பிரித்தானிய இந்திய சாம்ராச்சியத்துடன் இணைக்கப்பட்டது. பிரித்தானியர்கள் பெங்களூரு "பீடெ"யின் நிர்வாகக் கட்டுப்பாட்டை மைசூர் பேரரசரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு, கன்டோன்மென்டை மட்டும் தங்கள் பரிபாலனத்தின் கீழ் வைத்துக் கொண்டனர். மைசூர் ராச்சியத்தின் 'இருப்பிடம்' முதலில் மைசூரில் 1799 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. பின் இது 1804 ஆம் ஆண்டில் பெங்களூருக்கு மாற்றப்பட்டது. இந்த காலத்தில் மதராஸ் பிரசிடென்சியில் இருந்து தொழிலாளர்களை பணியமர்த்தி பின் அவர்களை கன்டோன்ட்மென்ட் பகுதிக்கு மாற்றுவது பிரித்தானியருக்கு சுலபமானதாக இருந்தது. மைசூர் ராஜ்ஜியம் தனது தலைநகரை மைசூர் நகரத்தில் இருந்து பெங்களூருக்கு 1831 ஆம் ஆண்டில் மாற்றியது.[16] இந்த காலகட்டத்தின் இரண்டு முக்கிய வளர்ச்சிகள் நகரின் துரித வளர்ச்சிக்கு பங்களித்தது: அவற்றுள் ஒன்று தந்தி இணைப்புகளின் அறிமுகம் மற்றையது 1864 ஆம் ஆண்டின் மதராசுக்கான இரயில் இணைப்பாகும். 19 ஆம் நூற்றாண்டில் பெங்களூரு ஒரு இரட்டை நகரமாய் ஆனது. "பெடெ" வாசிகள் பெரும்பாலும் கன்னடத்தினராக இருந்தார்கள். பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட "கன்டோன்ட்மென்ட்" பகுதி குடியிருப்புவாசிகள் பெருமளவில் தமிழர்களாக இருந்தனர்.[17] 1898 ஆம் ஆண்டில் பெங்களூரில் பிளேக் தொற்றுநோய் பரவியது. இது அந்நகரின் மக்கள்தொகையை பெருமளவு குறைத்தது. மல்லேஸ்வரா மற்றும் பசவனகுடியின் புதிய விரிவாக்க பகுதிகள் 'பெடெ'யின் வடக்கு மற்றும் தெற்கில் உருவாக்கப்பட்டன. தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தொலைபேசி கம்பிகள் இடப்பட்டன. 1898 ஆம் ஆண்டில் ஒரு சுகாதார அதிகாரியும் நியமனம் செய்யப்பட்டார். 1906 ஆம் ஆண்டில், இந்தியாவில் முதன்முதலில் மின்சாரத்தை பெற்ற நகரமாக பெங்களூரு ஆனது. சிவசமுத்திரத்தில் அமைந்துள்ள நீர்மின் ஆலையில் இருந்து மின்சாரம் பெறப்பட்டது. இந்தியாவின் தோட்ட நகரமாக பெங்களூரின் புகழ் 1927 ஆம் ஆண்டில் நான்காம் கிருஷ்ணராஜ உடையாரின் ஆட்சியின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களின் போது துவங்கியது. நகரை அழகுபடுத்துவதற்காக பூங்காக்கள், கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனைகள் கட்டப்பட்டன. 1947 ஆகஸ்டு மாதத்தில் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, மைசூர் மகாராஜா அரசபிரமுகராக இருந்த புதிய மைசூர் ராச்சியத்தில் தான் பெங்களூரு தொடர்ந்தது. பொதுத் துறை வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி ஆகியவை மாநிலத்தின் பிற பகுதியில் இருந்து கன்னடத்தினர் நகருக்குள் குடியேறுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியது. 1941-51 மற்றும் 1971-81 தசாப்தங்களில் பெங்களூரு துரித வளர்ச்சியை கண்டது. இது வடக்கு கர்நாடகாவில் இருந்து ஏராளமானோர் இந்நகரில் குடியேற வழி செய்தது. 1961 ஆம் ஆண்டுவாக்கில், 1,207,000 மக்கள்தொகையுடன் இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமாக பெங்களூரு ஆகியிருந்தது.[13] தொடர்ந்து வந்த சகாப்தங்களில், நகரில் பல தனியார் நிறுவனங்கள் தோன்றியதைத் தொடர்ந்து பெங்களூரின் உற்பத்தி தளம் தொடர்ந்து விரிவாக்கம் கண்டு வந்தது. பெங்களூரு தனது நில விற்பனைச் சந்தையில் 1980கள் மற்றும் 1990களில் பெரும் வளர்ச்சியைக் கண்டது. நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மூலதன முதலீட்டாளர்கள் பெங்களூரின் பெருமளவிலான காலி மனைகள் மற்றும் வீடுகளை பலமாடி அடுக்கங்களாக மாற்றியதால் இந்த வளர்ச்சி உத்வேகம் பெற்றது.[18] 1985 ஆம் ஆண்டில், டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனம் தான் பெங்களூரில் தனது தளத்தை அமைத்த முதல் பன்னாட்டு நிறுவனமாகும். பிற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் பின்தொடர்ந்தன. 20 ஆம் நூற்றாண்டின் இறுதிவாக்கில், பெங்களூரு தன்னை இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்காக உறுதியாக நிறுவிக் கொண்டிருந்தது . புவியியல் தென்னிந்திய மாநிலமான கர்நாடகத்தின் தென்கிழக்கில் பெங்களூரு அமைந்துள்ளது. இது மைசூர் பீடபூமியின் (இருதய பகுதியில் கேம்பிரியனுக்கு முந்தைய பரந்த தக்காண பீடபூமியின் ஒரு பகுதி) 920 மீ (3,018 அடி) சராசரி உயரத்தில் அமைந்துள்ளது. இது 741 கிமீ² (286 மைல்²).[19] பரப்பளவில் அமைந்துள்ளது. பெங்களூரு நகரத்தின் பெரும் பகுதி கர்நாடகத்தின் பெங்களூரு நகர மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுற்றியிருக்கும் கிராமப் பகுதிகள் பெங்களூரு கிராம மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். பழைய பெங்களூரு கிராம மாவட்டத்தில் இருந்து ராமநகரா என்னும் புதிய மாவட்டத்தை கர்நாடகா அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கிறது. நகரின் வழியாய் ஓடும் பெரிய ஆறு எதுவும் இல்லை. ஆயினும் வடக்கில் 60 கிமீ தொலைவில் (37 மைல்கள்) நந்தி மலையில் ஆர்க்காவதி ஆறும் தென்பெண்ணை ஆறும் சந்தித்துக் கொள்கின்றன. அர்காவதி ஆற்றின் சிறு கிளைநதியான விருட்சபவதி ஆறு நகருக்குள்ளாக பசவனகுடியில் தோன்றி நகரின் வழியே பாய்கிறது. பெங்களூரின் பெரும் கழிவுகளை அர்க்காவதி மற்றும் விருட்சபவதி ஆறுகள் சேர்ந்து தான் சுமக்கின்றன. 1922 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஒரு கழிவுநீர் அமைப்பு நகரின் 215 கிமீ² (133 மைல்²) தூரத்திற்கு பரந்து அமைந்து பெங்களூரின் சுற்றளவில் அமைந்துள்ள ஐந்து கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களை இணைக்கிறது.[20] 16 ஆம் நூற்றாண்டில், நகரின் நீர்த்தேவைகளை நிறைவு செய்வதற்காக முதலாம் கெம்பெ கவுடா பல ஏரிகளைக் கட்டினார். கெம்பம்புதி கெரே தான் இந்த ஏரிகளில் மிகவும் முதன்மையானதாக இருந்தது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில், நகருக்கு நீர் விநியோகம் செய்வதற்கு சர் மிர்சா இஸ்மாயில் (மைசூர் திவான், கிபி 1926-41) மூலம் நந்தி ஹில்ஸ் வாட்டர்ஒர்க்ஸ் நிறுவப்பட்டது. தற்போது நகருக்கான நீர் வழங்கலில் சுமார் 80% பங்கினை காவிரி நதி அளிக்கிறது. எஞ்சிய 20% திப்பகொண்டனஹல்லி மற்றும் ஹெசராகட்டா ஆகிய அர்காவதி ஆற்றின் நீர்த்தேக்கங்கள் மூலம் பெறப்படுகிறது.[21] பெங்களூரு ஒரு நாளைக்கு 800 மில்லியன் லிட்டர்கள் (211 மில்லியன் அமெரிக்க கேலன்கள்) நீரைப் பெறுகிறது. இது வேறு எந்த ஒரு இந்திய நகரத்தைக் காட்டிலும் அதிகமானதாகும்.[22] ஆயினும், பெங்களூரு சில சமயங்களில் குறிப்பாக கோடைப் பருவங்களின் போது நீர்ப்பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. பெங்களூரு ஏராளமான நன்னீர் ஏரிகள் மற்றும் குளங்களைக் கொண்டிருக்கிறது. மடிவாலா குளம், ஹெப்பல் ஏரி, அல்சூர் ஏரி மற்றும் சாங்க்கி குளம் ஆகியவை அவற்றில் பெரியவையாகும். வண்டல் படிவுகளின் வண்டல் மற்றும் மணல் அடுக்குகளில் இருந்து நிலத்தடிநீர் தோன்றுகிறது. நகரத்தின் தாவர வகைகளைப் பொறுத்த வரை பெரும் எண்ணிக்கையில் இலையுதிர் வகை மரங்களும் சிறு எண்ணிக்கையில் தென்னை மரங்களும் உள்ளன. பெங்களூரு நிலவதிர்வு மண்டலத்தில் இரண்டாம் அடுக்கு பகுதியாக (ஒரு ஸ்திரமான மண்டலம்) வகுக்கப்பட்டிருந்தாலும், 4.5 ரிக்டர் அளவுக்கான பெரிய பூகம்பங்களை இது கண்டிருக்கிறது.[23] காலநிலை அதிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் காரணத்தால், பெங்களூரு ஆண்டுமுழுவதும் பெரும்பாலும் ரம்மியமான காலநிலையையே கொண்டிருக்கிறது, ஆயினும் அவ்வப்போதான வெப்ப அலைகள் கோடையில் அசவுகரியத்தை உண்டுபண்ணத்தக்கனவாக இருக்கின்றன.[24] ஜனவரி மாதம் மிகவும் குளிர்ந்த மாதமாக இருக்கிறது. சராசரி குறைந்த வெப்பநிலை 15.1°C ஆக இருக்கும். ஏப்ரல் மாதம் மிகவும் வெப்பமான மாதமாக இருக்கிறது. சராசரி உயர்ந்த வெப்பநிலையாக 33.6°C இருக்கும்.[25] பெங்களூரில் மிக அதிகமாகப் பதிவான வெப்பநிலை 38.9°C ஆகும். மிகவும் குறைந்தபட்சமாக 7.8°C (1884 ஜனவரி) பதிவாகியிருக்கிறது.[26][27] குளிர்கால வெப்பநிலைகள் அபூர்வமாகத் தான் 12°C க்கு கீழ் சரியும். கோடை வெப்பநிலைகள் அபூர்வமாகத் தான் 36-37°C (100°F) க்கு அதிகமாக இருக்கும். வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவக்காற்று இரண்டில் இருந்தும் பெங்களூரு மழைப்பொழிவைப் பெறுகிறது. செப்டம்பர், அக்டோபர் மற்றும் ஆகஸ்டு ஆகியவை முறையே மிகவும் மழைப்பொழிவு மிகுந்த காலங்களாகும்.[25] ஓரளவு அடிக்கடி நிகழும் இடிமின்னலுடனான புயல் மழையால் கோடை வெப்பம் சரிக்கட்டப்படுகிறது. இது மின்துண்டிப்பு மற்றும் உள்ளூர் வெள்ளப்போக்கிற்கும் அவ்வப்போது காரணமாகிறது. 24 மணி நேர காலத்தில் 179 millimetres (7.0in) பதிவான மிக அதிக மழைப்பொழிவு அக்டோபர் 1, 1997 அன்று பதிவானது.[28] நகர நிர்வாகம் புருகத் பெங்களூரு மகாநகர பலிகே (BBMP) தான் நகரத்தின் நிர்வாகத்திற்கான பொறுப்பில் இருக்கிறது.[29] புருகத் பெங்களூரு மகாநகர பலிகே பெருநகர மாமன்றம் மூலம் நடத்தப்படுகிறது. மாமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு வார்டுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மாமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. மாமன்றத்தின் ஒரு மேயர் மற்றும் ஆணையர் இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் இருந்து ஒருவருக்கோ அல்லது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் வேட்பாளர் ஒருவருக்கோ இந்த இடம் ஒதுக்கப்படுகிறது. பெங்களூரின் துரித வளர்ச்சியானது போக்குவரத்து நெருக்கடி மற்றும் உள்கட்டுமான பழமைப்படல் ஆகியவை தொடர்பான பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. இவை பெங்களூரு மகாநகர பாலிகேவுக்கு தீர்ப்பதற்கு சவாலளிக்கும் பிரச்சினைகளாக உள்ளன. 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த பெங்களூரின் இயற்பியல், உயிரியல் மற்றும் சமூகபொருளாதார அளவீடுகள் குறித்த பெதெல்ல சுற்றுச்சூழல் மதிப்பீடு அமைப்பு (BEES), பெங்களூரின் தண்ணீர் தரம் மற்றும் பிராந்திய மற்றும் நீர்ப்புற சூழலமைப்பு ஏறக்குறைய உன்னதமானவை யாக இருப்பதாக சுட்டிக் காட்டியது. நகரின் சமூக பொருளாதார அளவீடுகள் (போக்குவரத்து நெரிசல், வாழ்க்கைத் தரம்) ஆகியவை குறைந்த மதிப்பெண்களே பெற்றன.[30] நகரின் திட்டமிடப்படாத வளர்ச்சியானது பெரும் போக்குவரத்து நெருக்கடியில் விளைந்தது. மேற்பால அமைப்பு கட்டுவதன் மூலமும் ஒருவழிப்பாதைகள் மூலமும் இந்த பிரச்சினையைத் தீர்க்க மாநகராட்சி முனைந்தது. சில மேற்பாலங்களும் ஒருவழிப் பாதைகளும் போக்குவரத்து நெருக்கடியான சூழலை ஓரளவுக்குக் குறைக்க உதவினாலும் நகர போக்குவரத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு அவற்றால் ஈடு கொடுக்க முடியவில்லை.[30] 2005 ஆம் ஆண்டில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு இரண்டும் தங்களது வருடாந்திர நிதி ஒதுக்கீட்டில் பெங்களூரின் உள்கட்டுமான மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க தொகையை ஒதுக்கின.[31] நகர வளர்ச்சித் திட்டங்களை வடிவமைப்பதிலும் செயல்படுத்துவதிலும் பெங்களூரு வளர்ச்சி கழகம் (BDA) மற்றும் பெங்களூரு திட்டப் பணிப்படை (BATF) ஆகியவற்றுடன் இணைந்து பெங்களூரு மகாநகர பாலிகே செயல்படுகிறது. ஒரு நாளைக்கு 3,000 டன்கள் திடக்கழிவினை பெங்களூரு உருவாக்குகிறது. இதில் 1,139 டன்கள் சேகரிக்கப்பட்டு கர்நாடகா கழிவுர மேம்பாட்டு வாரியம் போன்ற கழிவுரப் பிரிவுகளுக்கு அனுப்பப்படுகின்றன. எஞ்சிய திடக் கழிவுகள் நகராட்சியால் திறந்த வெளிகளிலோ அல்லது நகருக்கு வெளியே சாலையோரங்களிலோ கொட்டப்படுகின்றன.[32] போக்குவரத்து காவல்துறை, நகர ஆயுதப்படை காவல்துறை, மத்திய குற்றவியல் பிரிவு மற்றும் நகர குற்றவியல் ஆவணப் பிரிவு உள்ளிட்ட ஆறு புவியியல் மண்டலங்களை பெங்களூரு நகர காவல்துறை (BCP) கொண்டுள்ளது. அத்துடன் இரண்டு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்பட 86 காவல் நிலையங்களையும் இயக்குகிறது.[33] கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் என்கிற வகையில் கர்நாடகா உயர்நீதி மன்றம், கர்நாடகா சட்டமன்றம் மற்றும் கர்நாடக ஆளுநர் இல்லம் ஆகிய முக்கிய மாநில அரசாங்க அமைப்புகளின் இருப்பிடங்கள் பெங்களூரில் அமைந்துள்ளன. இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு மூன்று உறுப்பினர்களையும், கர்நாடகா சட்ட மன்றத்திற்கு 28 உறுப்பினர்களையும் பெங்களூரு பங்களிப்பு செய்கிறது.[34] பெங்களூரில் மின்சார ஒழுங்கு கர்நாடகா மின் விநியோக நிறுவனம் (KPTCL) மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தியாவில் பல நகரங்களைப் போலவே, பெங்களூரிலும் அறிவிக்கப்பட்ட மின்தடை உள்ளது. குறிப்பாக கோடைக் காலங்களில். வீட்டுத் தேவைகள் மற்றும் பெருநிறுவனத் தேவைகள் இரண்டின் நுகர்வையும் பூர்த்தி செய்வதற்கு மின்சாரம் வழங்கும் நிறுவனங்களுக்கு இது அவசியமாகிறது. பொருளாதாரம் பெங்களூரின் பொருளாதாரம் (2002-03 மொத்த மாவட்ட வருவாய்) அதனை இந்தியாவின் ஒரு பிரதான பொருளாதார மையமாக ஆக்குகிறது.[35] 10.3% பொருளாதார வளர்ச்சியுடன், பெங்களூரு தான் இந்தியாவில் மிகத்துரித வளர்ச்சியுறும் முக்கிய பெரு நகரமாக இருக்கிறது.[36] தவிரவும், பெங்களூரு தான் இந்தியாவின் நான்காவது பெரிய துரித நகர்வு நுகர்வு பொருள் (FMCG) சந்தையாக இருக்கிறது.[37] மிக உயர்ந்த சொத்துமதிப்பு கொண்ட தனிநபர்கள் எண்ணிக்கையில் மூன்றாவது பெரிய மையமாக திகழும் இந்நகரம் 10,000 க்கும் அதிகமான டாலர் மில்லியனர்களைக் கொண்டுள்ளது. அத்துடன் முதலீடு செய்யத்தக்க உபரியைக் கொண்டுள்ள சுமார் 60,000 பெரும் பணக்காரர்களையும் கொண்டுள்ளது.[38] 2001 வாக்கில், அந்நிய நேரடி முதலீட்டில் பெங்களூரின் பங்களிப்பு இந்திய நகரங்களில் நான்காவது பெரியதாகும்.[39] 1940 ஆம் ஆண்டில் சர் மிர்சா இஸ்மாயில் மற்றும் சர் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா ஆகிய தொழில்துறை முன்னோடிகள் பெங்களூரின் வலிமையான உற்பத்தி மற்றும் தொழில்துறை அடித்தளத்தை அபிவிருத்தி செய்வதில் முக்கிய பங்கை ஆற்றினார்கள். பல பொதுத்துறை நிறுவனங்களின் தலைமையகங்கள் பெங்களூரில் அமைந்துள்ளன. 1972 ஜூன் மாதத்தில், விண்வெளித் துறையின் கீழ் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) உருவாக்கப்பட்டு அதன் தலைமையகம் இந்நகரில் அமைந்தது. இன்போசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய இந்தியாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய மென்பொருள் நிறுவனங்கள் தங்களது தலைமையகங்களை பெங்களூரில் கொண்டுள்ளன. நகரில் அமைந்துள்ள ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் காரணமாக பெங்களூரு இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. இவை இந்தியாவின்₹144,214 crore (US$20billion)2006-07 தகவல்தொழில்நுட்ப சேவை ஏற்றுமதியில் 33% பங்களிப்பு செய்தன.[40] தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியானது நகருக்கு பிரத்தியேக சவால்களையும் அளித்திருக்கிறது. நகரத்தின் உள்கட்டமைப்பில் மேம்பாட்டைக் கோரும் நகரின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், கர்நாடகத்தின் கிராமப் பகுதி மக்களையே தங்கள் பிரதான வாக்கு வங்கிகளாகக் கொண்டிருக்கும் மாநில அரசாங்கத்திற்கும் இடையே சிலசமயங்களில் கருத்து மோதல்கள் ஏற்படுகின்றன.[41] இந்தியாவில் உயிரித் தொழில்நுட்பம் தொடர்பான துறைகளின் மையமாக பெங்களூரு விளங்குகிறது. 2005 ஆம் ஆண்டில், இந்தியாவின் 265 உயிரிதொழில்நுட்ப நிறுவனங்களில் சுமார் 47% இங்கு அமைந்திருந்தன; இந்தியாவின் மிகப்பெரிய உயிரிதொழில்நுட்ப நிறுவனமான பயோகான் நிறுவனமும் இதில் அடங்கும்.[42][43] போக்குவரத்து பெங்களூரில் புதிதாகக் கட்டப்பட்ட பெங்களூரு சர்வதேச விமான நிலையம் (ATA குறியீடு: BLR) 24 மே 2008 முதல் தனது செயல்பாட்டைத் துவக்கியது. முன்னதாக நகருக்கு எச்ஏஎல் விமானநிலையம் சேவையாற்றி வந்தது. இது இந்தியாவின் நான்காவது பரபரப்பான விமானநிலையமாக இருந்தது.[44][45][46] ஏர் டெக்கான் மற்றும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தங்களது தலைமையகங்களை பெங்களூரில் கொண்டுள்ளன.[47] நம்ம மெட்ரோ என்றழைக்கப்படும் துரித போக்குவரத்து அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. நிறைவுறுகையில் இது 41 நிறுத்தங்களை அடக்கி, தரைக்கு மேலும், தரைக்குகீழும் ஆன தொடர்வண்டி வலைப்பின்னலைக் கொண்டிருக்கும்.[48] இந்திய ரயில்வே மூலம் பெங்களூரு நாட்டின் பிற நகரங்களுடன் நல்ல இணைப்பைப் பெற்றிருக்கிறது. ராஜதானி எக்ஸ்பிரஸ் நகரை இந்திய தலைநகரான புது டெல்லியுடன் இணைக்கிறது. இருப்புப் பாதை வழியே கர்நாடகாவின் அநேக நகரங்கள், மற்றும் மும்பை, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத், மற்றும் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுடனும் பெங்களூரு இணைக்கப்பட்டுள்ளது.[49] ஆட்டோக்கள் என்றழைக்கப்படும் மூன்று சக்கர, கருப்பு மற்றும் மஞ்சள் நிற தானியங்கி மூவுருளி உந்து போக்குவரத்துக்கு பிரபலமானதாகும்.[50]] மீட்டர் பொருத்தப்பட்டுள்ள இவை மூன்று பயணிகள் வரை சுமந்து செல்லும். சற்று கூடுதல் கட்டணத்தில் வாடகை மகிழுந்து சேவைகளும் உண்டு.[50] பெங்களூரு பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (BMTC) மூலம் இயக்கப்படும் பேருந்துகளும் நகரில் பொதுப் போக்குவரத்துக்கான ஒரு வழியாக இருக்கின்றது.[51] பயணிகள் இந்த பேருந்துகளில் பயணிக்கும் போது டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். அடிக்கடி பயணம் செய்யும் பயணிகளுக்கு பேருந்து முன் அனுமதிச் சீட்டு வசதியையும் போக்குவரத்துக் கழகம் வழங்குகிறது. முக்கிய தடங்களில் குளிரூட்டப்பட்ட, சிவப்பு வண்ண வால்வோ பேருந்துகளையும் இப்போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது.[51] பெங்களூரை கர்நாடகாவின் பிற பகுதிகள் மற்றும் பிற மாநிலங்களுடன் இணைக்கும் வகையில் கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் 6,600 பேருந்துகளை 5,700 கால அட்டவணை நேரங்களில் இயக்கி வருகிறது.[52] மக்கள் வாழ்வியல் பெங்களூரு நகரம் மக்கள்தொகையில் இந்தியாவின் மூன்றாவது பெரிய நகரமாகவும் உலகின் 28வது பெரிய நகரமாகவும் திகழ்கிறது. 2009 ஆம் ஆண்டு மக்கள்தொகை 5,300,000 இருந்ததாய் மதிப்பிடப்பட்டது.[53] 1991-2001 காலத்தில் புது டெல்லிக்கு அடுத்து மிகத் துரித வளர்ச்சி கண்ட இந்திய பெருநகரம் பெங்களூரு ஆகும். இந்த பத்தாண்டுகளில் வளர்ச்சி விகிதம் 38% ஆக இருந்தது. பெங்களூருவாசிகள் ஆங்கிலத்தில் பெங்களூரியன்ஸ் என்றும் கன்னடத்தில் பெங்களூரினவாரு என்றும் குறிப்பிடப்படுகிறார்கள். கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள் நகர மக்கள்தொகையில் சுமார் 39% ஆக இருக்கிறார்கள்.[54][55] நகரத்தின் பன்முகக் கலாச்சார இயல்பால் பிற மாநிலங்களில் இருந்து மக்கள் பெங்களூரு வந்து குடியேறுகின்றனர்.[56] நகரின் மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 14.3% இருக்கிறார்கள். கன்னடம் மற்றும் ஆங்கிலம் தவிர தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகியவை நகரில் பேசப்படும் பிற முக்கிய மொழிகளாக உள்ளன.[57] 2001 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, பெங்களூரு மக்கள்தொகையில் 79.37% பேர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். இது ஏறக்குறைய தேசிய சராசரியை ஒட்டி இருக்கிறது.[58] முஸ்லீம்கள் மக்கள்தொகையில் 13.37% பேர் இருக்கிறார்கள். இதுவும் ஏறக்குறைய தேசிய சராசரி அளவை ஒட்டியே உள்ளது. கிறிஸ்தவ மற்றும் சமண மதத்தவர்கள் மக்கள்தொகையில் முறையே 5.79% மற்றும் 1.05% இருக்கிறார்கள். இது இம்மதங்களின் தேசிய சராசரிகளை விட இருமடங்காகும். ஆங்கிலோ இந்தியர்களும் நகரில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலுள்ள பிரிவினராக உள்ளனர். பெங்களூரு மக்கள்தொகையில் பெண்கள் 47.5% உள்ளனர். மும்பைக்கு பிறகு இந்திய பெருநகரங்களில் பெங்களூரு தான் இரண்டாவது பெரிய எழுத்தறிவு விகிதம் (83%) கொண்ட நகரமாய் உள்ளது. பெங்களூரு மக்கள்தொகையில் சுமார் 10% சேரிகளில்[59] வாழ்கிறார்கள். மும்பையுடனும் மற்றும் நைரோபி போன்ற வளரும் நாடுகளின் பிற நகரங்களுடனும் ஒப்பிடுகையில் இது குறைந்த அளவேயாகும்.[60] இந்தியாவின் 35 பெரிய நகரங்களில் பதிவாகும் மொத்த குற்றங்களில் பெங்களூரு 9.2% பங்களிப்பை கொண்டிருப்பதாக 2004 தேசிய குற்றப் பதிவுகள் கழகம் சுட்டிக் காட்டுகிறது. டெல்லி மற்றும் மும்பை முறையே 15.7% மற்றும் 9.5% பங்களிக்கின்றன.[61] பண்பாடு பெங்களூரு "இந்தியாவின் தோட்ட நகரம்"[62] என்று அழைக்கப்படுகிறது. இதற்குக் காரணம் இங்கு லால் பாக் மற்றும் கப்பன் பார்க் உள்ளிட்ட பல பொதுப் பூங்காக்கள் உள்ளன. பழைய மைசூர் சாம்ராச்சியத்தின் பாரம்பரிய கொண்டாட்ட அடையாளமான தசரா தான் அரசாங்க பண்டிகை ஆகும். பெரும் உற்சாகத்துடன் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. "கரக சக்தியோத்சவா" அல்லது பெங்களூரு கரகா என்றழைக்கப்படும் பெங்களூரின் மிக முக்கியமான பழமையான பண்டிகைகளை நகரம் கொண்டாடுகிறது.[63] "தீபங்களின் பண்டிகை"யான தீபாவளி மக்கள்வாழ்க்கைமுறை மற்றும் மத எல்லைகளைக் கடந்து கொண்டாடப்படும் மற்றுமொரு முக்கிய பண்டிகையாகும். பிற பாரம்பரிய இந்திய பண்டிகைகளான விநாயகர் சதுர்த்தி, உகாதி, சங்கராந்தி, ஈத் உல்-பித்ர், மற்றும் கிறிஸ்துமஸ் ஆகியவையும் இங்கு கொண்டாடப்படுகின்றன. கன்னட திரை உலகின் தாயகமாக பெங்களூரு விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80 கன்னட திரைப்படங்கள் இங்கிருந்து வெளியாகின்றன.[64]. மறைந்த நடிகரான டாக்டர். ராஜ்குமார் கன்னடத் திரையுலகிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தவர்களில் மிக முக்கியமான ஒருவர் ஆவார். சமையல்கலையின் பன்முகத்தன்மை பெங்களூரின் சமூக மற்றும் பொருளாதார பன்முகத்தன்மையை பிரதிபலிப்பதாய் உள்ளது. ரோட்டோரக் கடையினர், தேநீர்க்கடையினர், மற்றும் தென்னிந்திய, வட இந்திய, சீன மற்றும் மேற்கத்திய துரித உணவுகள் நகரில் மிகவும் பிரபலம் பெற்றுத் திகழ்கின்றன. உடுப்பி உணவகங்கள் மிகவும் பிரபலம் பெற்றவையாய் உள்ளன. இவை முதன்மையாக பிராந்திய சைவ உணவுகளை வழங்குகின்றன. இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனத்தின் முக்கிய மையமாகவும் பெங்களூரு திகழ்கிறது. பாரம்பரிய இசை மற்றும் நடனக் கச்சேரிகள் ஆண்டு முழுவதிலும் குறிப்பாக ராமநவமி மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாக்களின் போது பரவலாக நடத்தப்படுகின்றன. நகரில் உற்சாகமான கன்னட நாடக இயக்கமும் இருக்கிறது. ரங்க சங்கரா போன்ற அமைப்புகள் இதனை முன்னெடுத்துச் செல்கின்றன. சர்வதேச ராக் கச்சேரிகள் நடப்பதற்கான முதன்மை இடங்களில் ஒன்றாகவும் பெங்களூர் ஆகியுள்ளது.[65] விளையாட்டு மட்டைப்பந்து தான் பெங்களூரின் மிகப் பிரபல விளையாட்டுகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. இந்திய மட்டைப்பந்து அணியின் முன்னாள் தலைவர்களான ராகுல் டிராவிட் மற்றும் அனில் கும்ப்ளே, மற்றும் ராபின் உத்தப்பா மற்றும் இன்னும் பலர் உள்பட ஏராளமான தேசிய மட்டைப்பந்து வீரர்கள் பெங்களூரில் இருந்து வந்துள்ளனர். பல சிறுவர்கள் சாலைகளிலும் நகரின் பல பொது இடங்களிலும் சாலையோர கிரிக்கெட் விளையாடுவதைக் காணலாம். பெங்களூரின் முதன்மையான உலகளாவிய மட்டைப்பந்து மைதானமாக எம். சின்னசுவாமி அரங்கம் உள்ளது. இது 40,000[66] பேர் அமரும் இடம் கொண்டதாகும். 1987 துடுப்பாட்ட உலகக்கிண்ணம், 1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் மற்றும் 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் ஆகியவற்றின் ஆட்டங்கள் இங்கு நடந்துள்ளன. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிளையணியான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் பிரீமியர் ஹாக்கி லீக் (PHL) கிளையணியான பெங்களூரு ஹை-ஃபிளையர்ஸ் ஆகியவை நகரில் அமைந்துள்ளன. இந்தியாவின் டேவிஸ் கோப்பை டென்னிஸ் அணி உறுப்பினர்களான மகேஷ் பூபதி[67] மற்றும் ரோகன் போபன்னா[68] ஆகியோரும் பெங்களூரில் தான் வசிக்கிறார்கள். நகரில் ஆண்டுதோறும் பெண்கள் டென்னிஸ் கழகத்தின் பெங்களூரு ஓபன் போட்டிகள் நடக்கின்றன. செப்டம்பர் 2008 துவங்கி, ஆண்டுதோறும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் டென்னிஸ் ஓபன் ஏடிபி போட்டிகளும் பெங்களூரில் நடைபெறுகின்றன.[69] தேசிய நீச்சல் வெற்றிவீரரான நிஷா மிலெட், உலக ஸ்னூக்கர் வெற்றிவீரரான பங்கஜ் அத்வானி மற்றும் முன்னாள் அனைத்து இங்கிலாந்து ஓபன் பூப்பந்து வெற்றிவீரரான பிரகாஷ் படுகோனே ஆகியோரும் பெங்களூரில் இருந்து வரும் பிற விளையாட்டு பிரபலங்களில் அடங்குவர். கல்வி 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை, பெங்களூரில் கல்வி என்பது பிரதானமாக மதத் தலைவர்களால் நடத்தப்பட்டதால் அந்த மதத்து மாணவர்களுக்கு மட்டுமேயானதாக இருந்தது.[70] மும்மடி கிருஷ்ணராஜா உடையார் ஆட்சியின் போது மேற்கத்திய கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பெங்களூரில் இரண்டு பள்ளிகள் நிறுவப்பட்டன. இதனையடுத்து, வெஸ்லியன் மிஷன் 1851 ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை நிறுவியது. 1858 ஆம் ஆண்டில் பெங்களூரு உயர்நிலைப் பள்ளி அரசாங்கத்தால் துவக்கப்பட்டது.[71] சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில், இளம் குழந்தைகளுக்கான பள்ளிகள் மாற்றம் கண்டுள்ளன.[72] இடைநிலைக் கல்வி பள்ளி இறுதித் தேர்வு சான்றிதழ் (எஸ்எஸ்எல்சி), இடைநிலைக் கல்விக்கான இந்திய சான்றிதழ் மற்றும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் போன்ற கல்வி வாரியங்கள் ஏதேனும் ஒன்றின் கீழ் ஆரம்ப கல்வி மற்றும் இடைநிலைக் கல்வியை வழங்கும் பல்வேறு பள்ளிகள் பெங்களூரில் உள்ளன.[73] பெங்களூரு பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகவோ அல்லது தனியார் பள்ளிகளாகவோ (அரசு உதவி பெறும் மற்றும் பெறாத பள்ளிகள்) உள்ளன.[74] தங்களது இடைநிலைக் கல்வியை முடித்த பிறகு, மாணவர்கள் பொதுவாக பல்கலைக்கு முந்தைய பியுசி படிப்பை கலை, வணிகம் அல்லது அறிவியல் ஆகிய மூன்று பிரிவுகளில் ஒன்றில் மேற்கொள்கிறார்கள்.[75] தேவையான படிப்பை முடித்தபிறகு, பல்கலைக்கழகங்களில் பொது அல்லது தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர்கள் பதிவு செய்து படிப்பைத் தொடரலாம். 1964 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பெங்களூரு பல்கலைக்கழகம் சுமார் 500 கல்லூரிகளுக்கு இணைப்புத் தொடர்பு வழங்குகிறது. மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 300,000 க்கும் அதிகமாக இருக்கிறது. பெங்களூருக்கு உள்ளேயே இந்த பல்கலைக்கழகம் ஞானபாரதி மற்றும் மத்திய கல்லூரி என இரண்டு வளாகங்களைக் கொண்டுள்ளது.[76] 1909 ஆம் ஆண்டில் பெங்களூரில் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் கழகம் தான் இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் படிப்புக்கான முதன்மை நிறுவனமாகும்.[77] இந்திய பல்கலைக்கழக தேசிய சட்டப் பள்ளி (NLSIU), இந்திய மேலாண்மை நிறுவனம் பெங்களூரு (ஐஐஎம்-பி) மற்றும் இந்திய புள்ளியியல் ஆய்வு நிறுவனம் ஆகிய தேசியப் புகழ்பெற்ற நிறுவனங்களும் பெங்களூரில் அமைந்துள்ளன. இந்தியாவின் முதன்மையான மனநல சுகாதார நிறுவனமும் பெங்களூரில் தான் அமைந்துள்ளது.[77] முதன்மையான மனநல சுகாதார நிறுவனமான மனநல சுகாதாரம் மற்றும் நரம்பியல் அறிவியலுக்கான தேசிய நிறுவனம் (NIMHANS) பெங்களூரில் அமைந்துள்ளது. ஊடகங்கள் முதல் அச்சகம் பெங்களூரில் 1840 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது.[78] 1859 ஆம் ஆண்டில் பெங்களூரு ஹெரால்டு பத்திரிகை பெங்களூரில்[79] வெளியிடப்படும் முதல் வாரமிருமுறை ஆங்கில இதழாக வெளியானது. 1860 ஆம் ஆண்டில் மைசூர் விருட்டினா போதினி பெங்களூரில் விற்பனையாகும் முதல் கன்னட செய்தித்தாளானது.[78] தற்போது விஜய கர்நாடகா மற்றும் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகியவை தான் முறையே கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் பெங்களூரில் மிக அதிக அளவில் விற்பனையாகும் பத்திரிகைகளாக இருக்கின்றன. இவற்றுக்கு நெருக்கமாக பிரஜாவாணி மற்றும் டெக்கான் ஹெரால்டு ஆகியவை வருகின்றன.[80][81] இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஒலிபரப்பு நிறுவனமான அனைத்து இந்திய வானொலி தனது பெங்களூரு நிலையத்தில் இருந்து 1955 ஆம் ஆண்டில் ஒளிபரப்பைத் துவக்கியது.[82] ரேடியோ சிட்டி தான் பெங்களூரில் ஒலிபரப்பான முதல் தனியார் பண்பலை வானொலியாகும்.[83] சமீப வருடங்களில், ஏராளமான பண்பலை நிலையங்கள் பெங்களூரில் இருந்து தங்கள் ஒலிபரப்பைத் துவக்கியுள்ளன.[84] நவம்பர் 1, 1981 அன்று தூர்தர்ஷன் தனது ஒளிபரப்பு மையத்தை இங்கு நிறுவி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் துவங்கியது.[85] தூர்தர்ஷனின் பெங்களூரு அலுவலகத்தில் 1983 ஆம் ஆண்டில் ஒரு தயாரிப்பு மையம் நிறுவப்பட்டது. இதனையடுத்து 19 நவம்பர் 1983 முதல் கன்னடத்தில் ஒரு செய்தி நிகழ்ச்சியை அறிமுகப்படுத்த முடிந்தது.[85] 15, ஆகஸ்டு 1991 அன்று தூர்தர்ஷன் கன்னட செயற்கைக்கோள் சேனல் ஒன்றையும் துவக்கியது. அது இப்போது டிடி சந்தனா என்று பெயரிடப்பட்டுள்ளது.[85] 1991 செப்டம்பர் மாதத்தில் ஸ்டார் டிவியின் சேனல்கள் ஒளிபரப்பைத் துவக்கியபோது தனியார் செய்தித் தொலைக்காட்சிகள் பெங்களூரில் கால்பதித்தன.[86] பெங்களூரில் பார்க்க முடிகிற செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை சென்ற வருடங்களில் மிகுந்த வளர்ச்சி கண்டிருந்தாலும்[87], இந்த வளர்ச்சி தொலைக்காட்சி அலைவரிசை விநியோகஸ்தர்கள் இடையே அவ்வப்போது மோதல்களுக்கும் இட்டுச் செல்கிறது.[88] பெங்களூரில் துவங்கிய முதல் இணைய சேவை வழங்குநர் பெங்களூரு STPI ஆகும். இந்நிறுவனம் 1990களின் ஆரம்பத்திலேயே இணைய சேவைகளை வழங்கத் துவங்கியிருந்தது.[89] ஆயினும் இந்த இணைய சேவை பெருநிறுவனங்களுக்கு மட்டுமே அதிகம் பயன்பட்டதாய் இருந்தது. 1995 ஆம் ஆண்டின் இறுதியில் VSNL பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தத்தக்க தொலைபேசிக் கம்பிவழி இணைய சேவைகளை அறிமுகப்படுத்திய பின் தான் இந்நிலை மாறியது.[90] இப்போது பெங்களூரு தான் இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையிலான அகலப்பட்டை இணைய இணைப்புகள் கொண்ட நகரமாக உள்ளது.[91] கூடுதல் பார்வைக்கு பெங்களூரு சுற்றுலாத் தளங்கள் கர்நாடகா நம்ம மெட்ரோ குறிப்புகள் கூடுதல் வாசிப்பு ஹசன், ஃபஸ்லுல். நூற்றாண்டுகளின் வழி பெங்களூரு. பெங்களூரு: வரலாற்று வெளியீடுகள், 1970. பிளங்கெட், ரிச்சார்டு. தென்னிந்தியா. லோன்லி பிளானட், 2001. ISBN 1-86450-161-8 ஹன்டன், காட்டன், பர்ன், மெயர். . 2006ஆக்ஸ்போர்டு கிளாரென்டன் பிரஸ். 1909. "பெங்களூரு." . 1911 பதிப்பு. ஹயவதன ராவ், தி மைசூர் ஸ்டேட் கெசெட்டர், 1929 புற இணைப்புகள் பகுப்பு:கர்நாடக மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் பகுப்பு:இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள் பகுப்பு:கர்நாடகாவிலுள்ள மாநகரங்கள் பகுப்பு:பெங்களூர் பகுப்பு:மேற்கோள் வழுவுள்ள பக்கங்கள்-கூகுள் தமிழாக்கம்
இந்தியாவின் மின்னணு நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?
பெங்களூரு
709
tamil
0e4f1c353
ஆத்திரேலியா, ஆஸ்திரேலியா அல்லது அவுஸ்திரேலியா (Australia) என்பது உலகின் மிகச்சிறிய கண்டமாகவும் உலகின் மிகப்பெரும் தீவாகவும் உள்ள பெருநிலப்பரப்பையும், தாஸ்மானியா தீவு, இந்திய, பசிபிக் பெருங்கடல்களில் உள்ள சில சிறிய தீவுகளையும் உள்ளடக்கிய நாடு. இது பொதுநலவாய ஆஸ்திரேலியா (Commonwealth of Australia) என அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறது. எந்த நாட்டுடனும் இதற்கு நில எல்லை கிடையாது. இந்தோனீசியா, கிழக்குத் திமோர், பப்புவா நியூ கினி ஆகிய நாடுகள் இதன் வடக்கேயும், சொலமன் தீவுகள், வனுவாட்டு, நியூ கலிடோனியா ஆகியன வடகிழக்கேயும், நியூசிலாந்து தென்கிழக்கேயும் இதன் அயல் நாடுகளாக அமைந்துள்ளன. கிட்டத்தட்ட 42,000 ஆண்டுகளாக ஆஸ்திரேலியப் பழங்குடிகள் ஆஸ்திரேலியப் பெரு நிலப்பரப்பில் வாழ்ந்து வருவதாக வரலாறு சொல்கிறது[1]. அவ்வப்போது வடக்கில் இருந்து மீனவர்களும், பின்னர் 1606 இல் டச்சு நாடுகாண் பயணிகள் ஐரோப்பாவில் இருந்தும் இங்கு வந்து போன பின்னர்[2], 1770 இல் ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் வந்திறங்கிய ஆங்கிலேயர் அதனை ஐக்கிய இராச்சியத்துக்கென உரிமை கொண்டாடினர். ஆரம்பத்தில் ஆங்கிலேய, ஸ்கொட்டியக் குற்றவாளிகளின் குடியேற்றத் திட்டமாக ஜனவரி 26, 1788 இல் நியூ சவுத் வேல்ஸ் என்ற குடியேற்றப் பகுதி உருவாக்கப்பட்டது. பின்னர் மக்கள் தொகை பெருக, ஆஸ்திரேலியாவின் மேலும் பல புதிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு 19ம் நூற்றாண்டின் காலப்பகுதியில் சுயாட்சி கொண்ட மேலும் ஐந்து பிரித்தானியக் குடியேற்றப் பகுதிகள் அமைக்கப்பட்டன. ஜனவரி 1, 1901 இல் ஆறு தனித்தனியான குடியேற்றப் பகுதிகளும் ஒன்றிணைந்து பொதுநலவாய ஆஸ்திரேலியா என்ற திறந்த மக்களாட்சி அரசியலமைப்புடன் கூட்டமைப்பு அரசை உருவாக்கின. இதன் தலைநகரம் கான்பரா ஆகும். பரப்பளவில் ஆறாவது பெரிய நாடாக இருப்பினும் இதன் மக்கள்தொகை வெறும் 23.2 மில்லியன்கள் (2.32 கோடி, 2013 மதிப்பீட்டின் படி[3]) மட்டுமே. இவர்களில் 60 விழுக்காட்டினர் பெருநிலப்பரப்பில் மாநிலத் தலைநகரங்களை அண்டி வாழ்கின்றனர். ஆஸ்திரேலியா மேற்கத்திய பொருளாதார முறைகளைப் பின்பற்றுகிறது. ஆள்வீத வருமானம் வலுவான பொருளாதார நாடுகளுக்கு இணையானது. தொழிலாளிகளில் 5% மட்டும் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். எண்ணெய் வளமும், கனிம வளமும் மிகுந்த நாடு. பெயர்க் காரணம் ஆஸ்திரேலியா என்ற பெயர் Australis என்ற இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து உருவானது. தெற்கே என்பது இதன் கருத்து. 1521 இல் எசுப்பானியர் பசிபிக் பெருங்கடலில் பயணம் செய்த முதலாவது ஐரோப்பியர் ஆவர். ஆங்கில மொழியில் முதன் முதலாக ஆஸ்திரேலியா என்ற சொல் 1625 இல் பயன்படுத்தப் பட்டது.[4]. சக்கார்த்தாவில் நிலை கொண்டிருந்த டச்சு கிழக்கிந்தியக் கம்பனியினர் 1638 இல் தெற்கே தாம் புதிதாகக் கண்டுபிடித்த இடத்திற்கு Australische என்ற பெயரை இட்டனர். ஆஸ்திரேலியாவை முதன் முதலில் சுற்றி வந்த மத்தியூ பிலிண்டேர்ஸ் என்ற பிரித்தானிய மாலுமி 1814 இல் தனது A Voyage to Terra Australis என்ற நூலில் "ஆஸ்திரேலியா" என்ற பெயரைப் பயன்படுத்தியதில் இருந்து இப்பெயர் பரவலாக வழக்கூன்றியது. நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் லக்லான் மக்குவாரி 1817, டிசம்பர் 12 இல் இப்பெயரை காலனித்துவ அரசுக்கு பரிந்துரைத்தார்[5]. 1824 இல் இப்பெயர் ஏற்பு பெற்றது. ஆஸ்திரேலிய ஆங்கிலத்தில் "ஆஸ்திரேலியா" əˈstɹæɪljə, -liːə, -jə என்றவாறு பலுக்கப்படுகிறது[6]. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து ஆஸ்திரேலியா நாட்டை உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் ஓஸ் (Oz) என்றும், ஆஸ்திரேலியர்களை "ஒசி" (Aussie) எனவும் சுருக்கமாக அழைக்கப்படுகிறார்கள். வரலாறு ஆஸ்திரேலியப் பழங்குடிகள் ஆஸ்திரேலியாவின் முதல் மனிதர் குடியேறியது 42,000 முதல் 48,000 ஆண்டுகளுக்கு முன்னர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[7]. இவர்கள் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடிகளின் மூதாதையர் என அறியப்படுகிறது. இவர்கள் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் லெக்முங்கோ (Laje Mungo) என்னுமிடத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கற்காலத்திற்கு முன்பிருந்து மனிதர்கள் வசித்தாலும் அவர்கள் தற்போதைய தென்கிழக்காசியத் தீவுகளிலிருந்து மிகப்பழங்காலத்தில் பிரிந்தவர்களாகத் நம்பப்படுகிறது. மரபணு மற்றும் மொழி அடிப்படையில் இப்பழங்குடிகளின் உறவும் தொடர்பும் (பிற நாட்டினத்தவர்களுடன்) உறுதிப்படவில்லை. இப்பழங்குடினரில் பெரும்பான்மையானோர் வேட்டையாடுபவர்கள். குயின்ஸ்லாந்தின் தூர-வடக்கிலும், டொரெஸ் நீரிணைத் தீவுகளிலும் வாழும் பழங்குடியினர் மெலனேசியர்கள். இவர்களின் பண்பாடு, வாழ்க்கை முறை ஏனைய பழங்குடியினரை விட வேறுபட்டவை. ஐரோப்பியரின் வருகை ஆஸ்திரேலியப் பெரும்பரப்பை முதன் முதலில் வந்தடைந்த ஐரோப்பியர் டச்சு மாலுமியான வில்லெம் ஜான்சூன் என்பவர். இவர் கேப் யோர்க் தீபகற்பத்தின் கரையை 1606 இல் கண்டார். 17ம் நூற்றாண்டு காலகட்டத்தில் டச்சுக் காரர் மேற்கு மற்றும் வடக்குக் கரைகளில் வந்திறங்கி அப்பகுதிக்கு புதிய ஒல்லாந்து (Nova Hollandia) எனப் பெயரிட்டனர். ஆனாலும் அவர்கள் அங்கு குடியேற முயலவில்லை. 1770 ஆம் ஆண்டில், இங்கிலாந்து கப்டன் ஜேம்ஸ் குக் தனது பசிபிக் பயணத்தின் போது ஆஸ்திரேலியாவில் கிழக்குக் கரையில் தரையிறங்கி அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டு பெரிய பிரித்தானியாவுக்காக அதனை உரிமை கோரினான். இவனது கண்டுபிடிப்புகள் பின்னர் அங்கு பிரித்தானியாவின் குற்றவாளிகளின் குடியேற்றத்தை ஆரம்பிக்க ஏதுவாக இருந்தது. நியூ சவுத் வேல்ஸ் என்ற முடியாட்சிக் குடியேற்றம் ஆர்தர் பிலிப் என்பவரால் ஜாக்சன் துறையில் ஜனவரி 26, 1788 இல் அமைக்கப்பட்டது. இந்நாள் பின்னர் ஆஸ்திரேலியா நாள் என்ற பெயரில் ஆஸ்திரேலியாவின் தேசிய நாளாக ஆக்கப்பட்டது. வான் டியெமனின் நிலத்தில் (தற்போதைய தாஸ்மானியா) 1803 இல் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டு 1825 இல் தனியான குடியேற்ற நாடாக ஆக்கப்பட்டது.[8] ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியை (சுவான் ஆற்றுக் குடியேற்றம்) 1829 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியம் அதிகாரபூர்வமாக உரிமை கோரியது. 1832 இல் இப்பகுதி மேற்கு ஆஸ்திரேலியா எனப் பெயர் பெற்றது. 1836 இல் தெற்கு ஆஸ்திரேலியா, 1851 இல் விக்டோரியா, 1859 இல் குயின்ஸ்லாந்து ஆகிய தனியான குடியேற்றப் பகுதிகள் நியூ சவுத் வேல்சில் இருந்து பிரித்து அமைக்கப்பட்டன. 1911 ஆம் ஆண்டில் தெற்கு ஆஸ்திரேலியாவில் இருந்து வட மண்டலம் பிரிக்கப்பட்டு தனி மாநிலமாகியது. தெற்கு ஆஸ்திரேலியா, விக்டோரியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன பிரித்தானியக் குற்றவாளிகளின் குடியேற்றங்களாக ஆரம்பிக்கப்படவில்லை. ஆனாலும் விக்டோரியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன பின்னர் குற்றவாளிகளை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தன[9] ஏற்கனவே குடியேறியவர்களின் எதிர்ப்பினை அடுத்து நியூ சவுத் வேல்சிற்கு குற்றவாளிகள் அனுப்பப்படுவது 1848 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது[10]. 1788 இல் முதன்முதலாக ஐரோப்பியர்கள் இங்கு குடியேறியபோது அண்ணளவாக 350,000 பழங்குடிகள் இக்கண்டத்தில் வசித்து வந்தனர்[11]. அப்போது 500 வகையான பழங்குடியினர் இக்கண்டத்தில் தங்கள் சொந்த மொழியுடன் வாழ்ந்து வந்தனர். இவர்களின் தொகை அடுத்த 150 ஆண்டுகளில் பெருமளவு குறைய ஆரம்பித்தது. தொற்று நோய், கட்டாய மீள்குடியேற்றம், பண்பாட்டு சீரமைப்பு போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகிறது[12]. பழங்குடிகளின் குடும்பங்களில் இருந்து அவர்களின் பிள்ளைகள் கட்டாய வெளியேற்றமும் இவ்வீழ்ச்சிக்குக் காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்[13]. 1967 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மக்கள் வாக்கெடுப்பை அடுத்து நடுவண் அரசு பழங்குடிகள் தொடர்பாக கொள்கை மாற்றங்களுக்கும் புதிய சட்டங்கள் இயற்றுவதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டது. தலைமுறைகளாக நிலஉரிமை (native title) 1992 வரை ஆஸ்திரேலியாவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை. ஆஸ்திரேலிய மேல் நீதிமன்றத்தில் விசாரணக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட புகழ்பெற்ற மாபோ எதிர் குயின்ஸ்லாந்து வழக்கை அடுத்து ஐரோப்பிய ஆக்கிரமிப்பில் இருந்த நிலங்கள் முன்னர் terra nullius ("வெற்று நிலம்") ஆகக் கருதப்பட்டமை மாற்றப்பட்டு தலைமுறைகளாக நிலம் வைத்திருந்தோருக்கு நில உரிமை வழங்கப்பட்டது. கூட்டாட்சி 1855 - 1890 காலப்பகுதியில், ஆறு குடியேற்றப் பகுதிகளும் தனித்தனியே தமது அரசாங்கங்களை அமைத்துக் கொண்டு பிரித்தானியப் பேரரசுக்குள் இருந்தவாறே தமது உள்ளூர் விடயங்களைத் தாமே கவனித்துக் கொள்ளத் தொடங்கின. லண்டனில் அமைந்திருந்த காலனித்துவ நிர்வாகம் குறிப்பாக வெளிநாட்டலுவல்கள், பாதுகாப்பு, பன்னாட்டுக் கப்பற்துறை போன்றவற்றைக் கவனித்தது. 1901, ஜனவரி 1 இல், ஆஸ்திரேலியக் கூட்டமைப்பு நிறுவப்பட்டது. பிரித்தானிய இராச்சியத்திற்குள் அடங்கிய "பொதுநலவாய ஆஸ்திரேலியா" பிறந்தது. 1911 ஆம் ஆண்டில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் ஒரு பகுதி ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம் என்ற பெயரில் தனிப் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டு கூட்டமைப்பின் தலைநகரம் கான்பரா 1927 ஆம் ஆண்டில் இங்கு அமைக்கப்பட்டது. அதுவரையில் மெல்பேர்ண் நகரம் கூட்டமைப்பின் தற்காலிகத் தலைநகரமாக இருந்தது. தெற்கு ஆஸ்திரேலியாவின் பகுதியாக இருந்த வட மண்டலம் என்ற பிரதேசம் 1911 இல் தனியாகப் பிரிக்கப்பட்டு நடுவண் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. முதலாம் உலகப் போரில் ஆஸ்திரேலியா தன்னிச்சையுடன் போரில் ஈடுபட்டது[14]. கலிப்பொலி போரில் ஆஸ்திரேலியர்களின் பங்களிப்பு இந்நாட்டு இராணுவத்தினரின் முதலாவது பெரும் போர்ப் பங்கெடுப்பு ஆகும். இப்போரில் அவர்கள் தோல்வியடைந்தாலும், இந்நடவடிக்கை நாடொன்றின் எழுச்சியாக பெரும்பாலான ஆஸ்திரேலியர்களால் கணிக்கப்படுகிறது. ஐக்கிய இராச்சியத்தில் 1931 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 ஆஸ்திரேலியாவுக்கும், ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் இருந்த அரசிய்யலமைப்புத் தொடர்புகளைப் பேணி வந்தாலும் 1942 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட உப சட்டம் 1931 சட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. 1942 இல் இரண்டாம் உலகப் போரின் போது ஆசியாவில் ஐக்கிய இராச்சியத்தின் அதிர்ச்சித் தோல்விகளும், ஜப்பானியப் பேரரசின் முற்றுகையும் ஆஸ்திரேலியாவை ஐக்கிய அமெரிக்காவுடன் அணி சேர வாய்ப்பாக இருந்தது. 1951 ஆம் ஆண்டில் இருந்து ஐக்கிய அமெரிக்காவுடன் அன்சஸ் என்ற பாதுகாப்பு உடன்பாட்டை ஆஸ்திரேலியா ஏற்படுத்திக் கொண்டது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஐரோப்பாவில் இருந்து மக்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற வாய்ப்பளிக்கப்பட்டது. வெள்ளை ஆஸ்திரேலியா கொள்கை முடிவுக்கு வந்ததை அடுத்து 1970களில் இருந்து ஆசியா மற்றும் ஐரோப்பா அல்லாத மற்ற நாடுகளில் இருந்து மக்கள் இங்கு குடியேற ஊக்குவிக்கப்பட்டனர். இதனையடுத்து ஆஸ்திரேலியாவின் மக்கள் பரம்பல், பண்பாடு, மற்றும் தன்னடையாளம் ஆகியவற்றில் பெரும் மாற்றம் ஏற்படலாயின. ஆஸ்திரேலியாவுக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் இருந்து வந்த அரசியல் சட்ட இணைப்பு 1986 இல் ஆஸ்திரேலிய சட்டம் 1986 நிறைவேற்றப்பட்டதை அடுத்து மேலும் பிளவடைந்தது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து ஆஸ்திரேலிய மாநிலங்களில் பிரித்தானியாவின் பங்கு முடிவுக்கு வந்தது. ஐக்கிய இராச்சியத்தின் பிரிவி கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்யப்படுவது நிறுத்தப்பட்டது[15]. ஆஸ்திரேலியாவைக் குடியரசாக மாற்றுவதற்காக 1999 இல் நடத்தப்பட்ட அனைத்து மக்கள் வாக்கெடுப்பில் 54 விழுக்காட்டினர் எதிராக வாக்களித்தனர். அரசியல் பொதுநலவாய ஆஸ்திரேலியா நடுவண் ஆட்சியைக் கொண்ட நாடாளுமான்ற மக்களாட்சி அமைப்பாகும். இரண்டாம் எலிசபெத் ஆஸ்திரேலியாவின் மகாராணி ஆவார். நடுவண் ஆட்சியில் ஒரு பொது ஆளுநரையும், அந்தந்த மாநிலங்களுக்குத் தனித்தனியே ஆளுநர்களையும் அரசி தனது சார்பில் நியமித்துள்ளார். அரசியலமைப்பின் படி பொது ஆளுநர் பல நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டிருந்தாலும், அவர் பொதுவாக ஆஸ்திரேலிய பிரதமரின் ஆலோசனைக்கேற்பவே தனது அதிகாரங்களை நிறைவேற்றுகிறார். ஒரே ஒரு முறை மட்டும், 1975 ஆம் ஆண்டில் பொது-ஆளுநர் தன்னிச்சையாக அன்றைய விட்லமின் அரசை நீக்கியிருந்தார்[16]. ஆஸ்திரேலியாவில் மொத்தம் மூன்று அரசு சட்ட அமைப்புகள் செயற்படுகின்றன: சட்டமன்றம்: பொதுநலவாய நாடாளுமன்றம். இதில் அரசி, செனட் அவை, மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். அரசியின் சார்பில் பொது-ஆளுநர் பங்கு பற்றுகிறார். நிறைவேற்று அவை: நடுவண் நிறைவேற்றுப் பேரவை, இதில் பிரதமர், மற்றும் அமைச்சரவை அங்கத்தவர்கள் அங்கம் வகிக்கின்றனர். சட்டம்: ஆஸ்திரேலியாவின் உயர் நீதிமன்றம் மற்றும் நடுவண் நீதிமன்றங்கள். ஐக்கிய இராச்சியத்தின் பிரிவி கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்வது 1986 ஆம் ஆண்டில் இருந்து நிறுத்தப்பட்டது. இரு அவைகளைக் கொண்ட ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் செனட் அவையில் (மேலவை) 76 உறுப்பினர்களும், பிரதிநிதிகள் அவையில் (கீழவை) 150 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கீழவை உறுப்பினர்கள் ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் இருந்து ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மேலவைக்கு ஒவ்வோர் மாநிலமும் 12 உறுப்பினர்களையும், ஆஸ்திரேலியத் தலைநகர்ப் பிரதேசம், வட மண்டலம் ஆகிய இரு பிரதேசங்களிலும் இருந்து இருவருமாக பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இரு அவைகளுக்கும் தேர்தல்கள் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெறுகின்றன. கீழவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி அரசை அமைக்கும். அதன் தலைவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். மாநிலங்களும் பிரதேசங்களும் Western Australia Northern Territory South Australia Queensland New South Wales Australian Capital Territory Victoria Tasmania Indian Ocean Timor Sea Gulf of Carpentaria Arafura Sea Great Australian Bight Tasman Sea Bass Strait Coral Sea ● ● ● ● ● ● ● ● South Pacific Ocean Southern Ocean Great Barrier Reef அவுஸ்திரேலியா மொத்தம் ஆறு மாநிலங்களையும், இரண்டு மண்டலங்களையும், வேறு சில சிறிய பிராந்தியங்களையும் தன்னகத்தே கொண்ட நாடு. மாநிலங்களாவன: நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோறியா, தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா, தாஸ்மானியா எனபனவாகும். வட மண்டலம், ஆஸ்திரேலிய தலைநகர் மண்டலம் என்பன இரண்டு பிரதான மண்டலங்களாகும். மண்டலங்களின் செயற்பாடுகள் பொதுவாக மாநிலங்களினதை ஒத்திருந்தாலும், மண்டலங்களின் அரசமைப்புச் சட்டவிதிகளை நடுவண் அரசு (அவுஸ்திரேலிய அரசாங்கம்) மாற்றியமைக்க முடியும். அதே வேளையில் மாநில அரசுகளின் சட்டங்களின் 51வது (சிறப்பு) சட்ட விதிகளை மட்டுமே நடுவண் அரசு மாற்ற முடியும். மருத்துவமனைகள், கல்வி, காவல்துறை, சட்டம், பாதைகள், பொது போக்குவரத்து, உள்ளூராட்சி சபைகள் (local government) போன்றவை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன. ஒவ்வொரு மாநிலமும் மண்டலங்களும் தமக்கென தனியான சட்டசபைகளை (நாடாளுமன்றங்களை) கொண்டுள்ளன. இவற்றில் வட மண்டலம், ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம், குயின்ஸ்லாந்து என்பன ஒரு சட்டசபையையும், ஏனைய மாநிலங்கள் கீழவை, மேலவை என இரு சபைகளையும் கொண்டுள்ளன. மாநிலங்களின் அரசுத் தலைவர் முதல்வர் (Premier) எனவும், மண்டலங்களின் தலைவர் முதலமைச்சர் (Chief Minister) எனவும் அழைக்கப்படுகின்றனர். மகாராணி தனது பிரதிநிதியாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநரையும், வட மண்டலத்தில் நிர்வாகியையும் நியமிப்பார். ஆஸ்திரேலியாவில் சில சிறிய பிரதேசங்களும் உள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஜேர்விஸ் குடா பிரதேசம் என்ற கடற்படைத் தளம் நடுவண் அரசினால் நிர்வகிக்கப்படுகிறது. இவற்றைவிட பின்வரும் பிரதேசங்கள் ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் உள்ளன: நோர்போக் தீவு கிறிஸ்மஸ் தீவு கொக்கோஸ் (கீலிங்) தீவுகள் ஆஷ்மோர் கார்ட்டியர் தீவுகள் பவளக் கடல் தீவுகள் ஹேர்ட் தீவு மற்றும் மக்டொனால்ட் தீவுகள் ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் மண்டலம் புவியியல் ஆஸ்திரேலியா இந்தோ அவுஸ்திரேலிய புவித்தட்டில் இந்திய, பசிபிக் பெருங்கடல்களால் சூழப்பட்டு, ஆசியா கண்டத்தை அரபுரா, மற்றும் திமோர் கடல்களால் பிரிக்கப்பட்டுள்ளது. 7,617,930 சதுர கிலோமீட்டர்[17] பரப்பளவுடைய இந்நாட்டின் பெரும்பகுதி பாலைநிலங்கள் ஆகும். ஆஸ்திரேலியாவின் பெரு நிலப் பரப்பு 34,218 கிமீ கரையோரப் பகுதியை (தீவுப் பகுதிகளைத் தவிர்த்து) கொண்டுள்ளது[18]. உலகின் மிகப் பெரும் பவளப் பாறைத் தொடர்[19] பெரும் தடுப்புப் பவளத்திட்டு, ஆஸ்திரேலியாவின் வடகிழக்குக் கடற்கரையை அண்டிக் காணப்படுகிறது. இதன் நீளம் 2000 கிமீ விட அதிகமானதாகும். மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஆகுஸ்டஸ் மலை உலகின் பெரிய ஒருகற்பாறை (monolith) எனக் கருதப்படுகிறது[20]. 2,228 மீ உயரமான கொஸ்கியஸ்கோ மலை ஆஸ்திரேலியாவின் பெரு நிலப்பரப்பில் உள்ள அதி உயரமான மலை ஆகும். பெரு நிலப்பரப்புக்கு வெளியே உள்ள ஹேர்ட் தீவு மற்றும் மக்டொனால்ட் தீவுகள் பிரதேசத்தில் உள்ள மோசன் மலை 2,745 மீ உயரமானது. ஆஸ்திரேலியா மிகத் தட்டையான கண்டமாகும். பழையதும் வளங்குறைந்ததுமான மண்ணைக் கொண்ட இது மனிதர் வாழும் கண்டங்களில் மிக வரண்டதுமாகும். பெரும்பாலான அவுஸ்திரேலியர்கள் நாட்டின் தென்கிழக்குக் கடற்கரையை அண்டியே வாழ்கிறார்கள். நாட்டின் வடக்குப் பகுதி வெப்பவலயப் பிரதேசமாகும். இங்கு மழைக்காடுகள், மரநிலங்கள், புல்வெளிகள், அலையாத்திக் காடுகள், மற்றும் பாலைநிலங்கள் என்பன உண்டு. அண்மைக்காலங்களில் ஆஸ்திரேலியாவில் காலநிலை மாற்றம் ஒரு பெரும் பிரச்சினையாக உருவாகியுள்ளது[21]. கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் மழைவீழ்ச்சி அதிகரித்துக் காணப்பட்டாலும்[22], ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை காணப்படுகிறது. நகரங்களில் மக்க்க்ள்தொகை அதிகரிப்பு, மற்றும் உள்ளூர் வரட்சி காரணமாக பல நகரங்களிலும் நீர்க்கட்டுப்பாடு அமுலில் உள்ளது[23]. குடிமதிப்பியல் தற்போதைய (2008) மதிப்பீட்டான 21.3மில்லியன் ஆஸ்திரேலியர்களின் பெரும்பான்மையானோர் காலனித்துவக் காலத்திலும், கூட்டாட்சிக்கு முன்னரும் ஐரோப்பாவில் இருந்து வந்தவர்களின் வழித்தோன்றல்களாகும். இவர்களில் பெரும்பான்மையானோர் பிரித்தானியத் தீவுகளில் இருந்து குடியேறியோராவர். இன்றும் ஆஸ்திரேலியர்களில் பெரும்பான்மையானோர் பிரித்தானியரும் ஐரிய மக்களும் ஆவர். முதலாம் உலகப் போர்க் காலத்தில் இருந்து ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை நான்கு மடங்காகவே உயர்ந்தது[25]. இதனால் குடியேற்றத் திட்டத்துக்கு ஆதரவு வலுத்தது. இரண்டாம் உலகப் போரை அடுத்தும், அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டு வரையும், கிட்டத்தட்ட 5.9மில்லியன் மக்கள் புதிதாகக் குடியேறினார்கள். அதாவது கிட்டத்தட்ட ஏழு ஆஸ்திரேலியர்களுக்கு இருவர் வெளிநாட்டில் பிறந்தவர்களாயினர்[26]. குடியேறியோரில் பெரும்பான்மையானோர் ஏதாவதொரு துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர்[27], ஆனாலும் குடும்ப உறுப்பினர்களும், அகதிகளும் குடியேற அனுமதிக்கப்பட்டது[27]. 2001 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி, வெளிநாட்டில் பிறந்தோரில் பெரும்பான்மையானோர் ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து, இத்தாலி, வியட்நாம், மற்றும் சீனா ஆகிய நாடுகளில் பிறந்தோராவர்[28]. 1973 ஆம் ஆண்டில் வெள்ளை ஆஸ்திரேலியா கொள்கை கைவிடப்பட்டதை அடுத்து, பல்கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு இனங்களுக்கிடையே ஒற்றுமையை வளர்க்க அரசு மட்டத்தில் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன[29]. 2005–06 காலப்பகுதியில், 131,000 பேருக்கு மேல் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் ஆசியா, மாற்றும் ஓசியானியா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்[30]. 2006–07 காலப்பகுதியில் குடியேற்றப்படுவோரின் எண்ணிக்கை 144,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது[31]. 2008-9 காலப்பகுதியில் 300,000 பேர்களைக் குடியமர்த்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் குடியேறிய எண்ணிக்கைகளில் மிகப் பெரியதாகும்[32]. 2001 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்பில் உள்ள பழங்குடியினரின் எண்ணிக்கை (ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மற்றும் டொரெஸ் நீரிணை மக்கள்) 410,003 ஆக இருந்தது. இது நாட்டின் முழுத் தொகையில் 2.2% ஆகும். இது 1976 ஆம் ஆண்டில் இருந்ததை விட 115,953 பேர் அதிகமாகும். கைதுகள், வேலையில்லாமை, படிப்பறிவின்மை, போன்றவை ஆஸ்திரேலியப் பழங்குடியினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆகும். இவர்களின் சராசரி வாழ்வுக்காலம் ஏனைய பழங்குடியினரல்லாத ஆஸ்திரேலியர்களை விட 17 ஆண்டுகள் வரை குறைவாகும்[33]. ஏனைய வளர்ச்சியடைந்த நாடுகளைப் போலவே, ஆஸ்திரேலியாவின் குடிமக்கள் வயது முதிர்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். கூடுதலானோர் ஓய்வுதியம் பெறுவோராகவும், சிறிய அளவினரே தொழில் பார்ப்போராகக் காணப்படுகின்றனர். 2004 ஆண்டில் மக்களின் சராசரி வயது 38.8 ஆண்டுகளாக இருந்தது[34]. ஆஸ்திரேலியர்களில் பெரும் எண்ணிக்கையானோர் (2002-03 காலத்தில் 759,849)[35] தமது பிறந்த நாட்டை விட்டு வெளியே வசித்து வந்தனர். மொழி ஆங்கிலம் இங்கு ஒரு தேசிய மொழியாகும்[36]. பெரும்பான்மையானோர் ஆஸ்திரேலிய ஆங்கிலம் பேசுகின்றனர். இது பிரித்தானிய ஆங்கில மொழியை ஒத்திருந்தாலும் ஆஸ்திரேலியர்களுக்கென தனிப்பட்ட சில உச்சரிப்பையும், சொற்தொகுதியையும் கொண்டுள்ளது. இலக்கணமும் எழுத்துக்கூட்டலும் பிரித்தானியாவின் ஆங்கிலத்துடன் ஒத்தது. 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, 80 விழுக்காட்டினோரின் வீட்டில் பேசும் மொழி ஆங்கிலம் ஆகும். அதற்கடுத்தபடியாக சீனம் (2.1%), இத்தாலியம் (1.9%), மற்றும் கிரேக்கம் (1.4%). இங்கு குடியேறியோரின் பெரும்பான்மையோர் இரண்டு மொழி பேசுபவர்கள் ஆவர். ஐரோப்பியர்கள் இங்கு குடியேறிய காலத்தில் கிட்டத்தட்ட 200 அல்லது 300 மொழிகள் பேசும் பழங்குடியினர் வாழ்ந்து வந்ததாக நம்பப்படுகிறது. இவற்றில் 70 மட்டுமே இன்று வழக்கிலுள்ளது. கிட்டத்தட்ட 50,000 (0.25%) மக்களின் முதல் மொழி ஒரு பழங்குடி மொழியாக உள்ளது. சமயம் ஆத்திரேலியாவில் அரச மதம் எதுவுமில்லை. 2006 கணக்கெடுப்பின்படி, 64% ஆஸ்திரேலியர்கள் தாம் கிறித்தவர்கள் என அடையாளப்படுத்தியுள்ளனர். இவர்களில் 26% ரோமன் கத்தோலிக்கத்தையும், 19% ஆங்கிலிக்கத்தையும் பின்பற்றுகிறார்கள். 19% விழுக்காட்டினர் எம்மதத்தையும் சேர்ந்தவர்கள் அல்லர் என இனங்காட்டியுள்ளனர். 12% விழுக்காட்டினர் தம்மை மத ரீதியாக அடையாளம் காட்டவில்லை. கிறித்தவர்களுக்கு அடுத்த படியாக 2.1% பௌத்தர்களும், 1.7% இசுலாமியர்களும், 0.8% இந்துக்களும் 0.5% யூதர்களும் வாழ்கின்றனர். மொத்தமாக 6% இற்கும் குறைவானோரே கிறித்தவம் அல்லாத சமயத்தைச் சேர்ந்தவர்கள்[37]. ஏனைய மேற்கத்தைய நாடுகளைப் போலவே இங்கும் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு குறைந்தளவினரே செல்கின்றனர். 1.5மில்லியன் மக்கள் வாரந்தோறும் தேவாலயங்களுக்குச் செல்கின்றனர். இது மொத்த மக்கள் தொகையில் 7.5% ஆகும்[38]. கல்வி ஆஸ்திரேலியாவில் 6 வயதில் இருந்து 15 வயது வரை (தெற்கு ஆஸ்திரேலியாவில் 16 வயது, மேற்கு ஆஸ்திரேலியா, மற்றும் குயின்ஸ்லாந்தில் 17 வயது) பள்ளிப் படிப்பு கட்டாயம் ஆகும். இது வயது வந்தோரின் படிப்பறிவை 99% ஆகக் காட்டுகிறது. தற்போது ஆஸ்திரேலியாவின் கல்விமுறை உலக நாடுகளில் எட்டாவது இடத்தை வகிக்கின்றது[39]. மொத்தம் 38 அரச பல்கலைக்கழகங்கள் இங்குள்ளன. அத்துடன் அரச மானியத்தில் இயங்கும் பல தனியார் பல்கலைக்கழகங்களும் உள்ளன. இவற்றைவிட அவ்வவ் மாநிலங்களில் அரச தொழிநுட்பக் கல்லூரிகள் இயங்குகின்றன. பல்வேறு தொழிற்துறை, மற்றும் தொழில் பழகுநர்களுக்கான கல்வி இங்கு வழங்கப்படுகின்றது. 25 முதல் 65 வயது வரையான ஆஸ்திரேலியர்களில் 58 விழுக்காட்டினர் தொழில்துறை அல்லது மேற்படிப்புக்கான சான்றிதழ்கள் பெற்றுள்ளனர்[33]. சுகாதாரம் 2006 ஆம் ஆண்டுத் தரவுகளின் படி, ஆத்திரேலியர்களின் சராசரி வாழ்வுக் காலம் ஆண்களுக்கு 78.7 ஆண்டுகளாகவும், பெண்களுக்கு 83.5 ஆண்டுகளாகவும் உள்ளன[40]. உலகிலேயே தோல் புற்றுநோய் அதிகமாக உள்ள நாடு ஆத்திரேலியாவே,[41], அதேவேளை இறப்புகளையும் நோய்களையும் தவிர்க்கக்கூடிய மிகப்பெரும் காரணியாக அமைவது புகையிலை பிடித்தல் விளங்குகிறது[42]. வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே அதிகமான உடற் பருமன் உள்ளோர் ஆத்திரேலியாவிலேயே உள்ளனர்[43]; அதே வேளை எயிட்ஸ் நோய் பரவாமல் வெற்றிகரமாகத் தடுத்த நாடுகளில் ஆத்திரேலியாவும் ஒன்று[44][45]. ஆஸ்திரேலியத் தமிழர் ஆஸ்திரேலியாவிற்கு 1970 ஆண்டில் இருந்து தமிழர்கள் புலம் பெயரத் தொடங்கினார்கள். அதற்கு முன்னர் தொழில் அனுமதி பெற்றுச் சிலர் வந்துள்ளனர். 1971க்கு முன்னர் மொத்தம் 162 தமிழர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார்கள் என அரசின் மதிப்பீடு தெரிவிக்கிறது[46]. முதன் முதலில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர் கமால் எனப்படும் கே. கமலேஸ்வரன் என்பவர். தமிழ் அவுஸ்திரேலியர்களின் எண்ணிக்கை 1971 இல் 202 ஆக இருந்து 1991 இல் 11,376 ஆக அதிகரித்தது. இதில் 60 வீதத்தினர் ஈழத் தமிழர்கள். அரசின் குடிமதிப்பின்படி 1996 இல் தமிழரின் எண்ணிக்கை 18,690 ஆகவும், 2001இல் 24,067 ஆகவும் உயர்ந்தது[47]. இவர்களில் 50 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வசிக்கின்றனர். இலங்கையை விட இந்தியா, தென்னாபிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், பீஜி போன்ற நாடுகளிலிருந்தும் வசதி வாய்ப்புகளை எதிர்பார்த்து அவுஸ்திரேலியாவில் குடியேறினர். பண்பாடு 1788 ஆம் ஆண்டில் இருந்து, ஆஸ்திரேலியாவின் பண்பாடு அடிப்படையில் ஆங்கிலோ-கெல்ட்டியர்களை ஒத்திருந்தது. ஆனாலும் இயற்கை சுற்றுச் சூழல், மற்றும் பழங்குடிகளின் பண்பாடு ஆகியன ஆஸ்திரேலியாவிற்கெனத் தனியான சில பண்பாடுகளை வரையறுத்தது. 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து ஆஸ்திரேலிய பண்பாட்டில் அமெரிக்காவின் பிரபலமான பண்பாடு (குறிப்பாக தொலைக்காட்சி, திரைப்படம்), ஆஸ்திரேலியாவின் அயல் ஆசிய நாடுகள், ஆங்கிலம் பேசாத நாடுகளில் இருந்தான புலம்பெயர்வு ஆகியவற்றினால் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலிய ஓவியக்கலை வரலாறு பழங்குடியினரின் குகை ஓவியங்களில் இருந்து ஆரம்பிக்கின்றது[48]. ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் மரபு பெரும்பாலும் செவிவழியே கர்ணபரம்பரைக் கதைகளாலும், சடங்குகளினாலுமே பரப்பப்பட்டு வந்துள்ளன. பழங்குடியினரின் இசை, நடனம், ஓவியம் போன்றவை சமகாலத்தைய ஆஸ்திரேலியப் பண்பாட்டில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியது. எமிலி கிங்வாரேய், கோர்டன் பென்னெட் போன்ற பிரபலமான ஓவியர்கள் பழங்குடியினரைச் சேர்ந்தவர்கள். ஆஸ்திரேலிய தேசிய கூடம் மற்றும் பல மாநிலங்களிலும் உள்ள கலைக்கூடங்களில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஓவியத் திரட்டுகள் உள்ளன. ஊடகங்கள் ஆஸ்திரேலியாவில் இரண்டு பொதுத் தொலைக்காட்சி சேவைகளும் (ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், மற்றும் பல்கலாச்சார சிறப்பு ஒலிபரப்புச் சேவை) மூன்று தனியார் தொலைக்காட்சிச் சேவைகளும் இயங்குகின்றன. இவற்றை விட பல தனியார் கம்பியிணை (cable), மற்றும் பல இலாப-நோக்கில்லா தொலைக்காட்சிக் சேவைகளும் உள்ளன. மாநிலத் தலைநகரங்கள் ஒவ்வொன்றிலும் தனித்தனியே புதினப் பத்திரிகைகளை வெளியிடுகின்றன. தேசிய அளவில் இரண்டு நாளிகைகள் வெளிவருகின்றன. எல்லைகளற்ற செய்தியாளர்களின் (Reporters Without Borders) 2008 அறிக்கையின் படி, ஆஸ்திரேலியாவின் ஊடகச் சுதந்திரம் 25வது நிலையில் உள்ளது. நியூசிலாந்து 7வது நிலையிலும், ஐக்கிய அமெரிக்கா 48வது நிலையிலும் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கான இவ்வளவு குறைந்த மதிப்பீட்டிற்கு இந்நாட்டில் பெரும்பாலான பத்திரிகை நிறுவனங்கள் இரண்டு பெரும் வர்த்தக நிறுவனங்களான நியூஸ் கார்ப்பரேசன், மற்றும் ஜோன் ஃபெயார்பாக்ஸ் நிறுவனங்களைச் சார்ந்தே இருப்பது காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது[49]. விளையாட்டு ஆஸ்திரேலியாவில் 15 அகவைக்கு மேலானோரில் 23.5 விழுக்காட்டினர் ஏதாவதொரு குழு விளையாட்டுக்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்[33]. துடுப்பாட்டம், ஹாக்கி, வலைப்பந்தாட்டம், ரக்பி லீக், மற்றும் துடுப்பு படகோட்டம், நீச்சல் போன்ற விளையாட்டுக்களில் ஆஸ்திரேலியா சர்வதேச மட்டத்தில் புகழ் பெற்று விளங்குகிறது. 1956, 2000 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றன. 2000 ஆம் ஆண்டில் இருந்து பதக்கங்களைஇ வென்ற நாடுகளின் பட்டியலில் முதல் ஆறு நாடுகளுக்குள் ஆஸ்திரேலியா அடங்குகிறது[50]. டென்னிஸ் போட்டிகளில் ஆஸ்திரேலிய ஓப்பன் கிராண்ட் சிலாம் போட்டிகள் உலகப் புகழ் பெற்றவை[51]. உயிர்ப் பல்வகைமை ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான இடங்கள் பகுதி-வரண்ட அல்லது பாலைவனங்களாக இருதாலும், இதன் வாழ்விடங்கள் மலைச்சாரல்கள் தொடக்கம் வெப்பவலய மழைக்காடுகளை உள்ளடக்கியது. கடுமையான வானிலை மாற்றங்கள், புவியியல் ரீதியாக நீண்ட காலம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை போன்ற காரணிகளினால், ஆஸ்திரேலியாவின் உயிரியத் துணைத்தொகுதி (biota) தனித்தன்மையையும் பல்வேறு வகைகளையும் கொண்டுள்ளது. இங்கு வளரும் பூக்கும் செடிகொடிகளில் 85%, பாலூட்டி விலங்குகளில் 84%, பறவையினங்களிலே 45%, மீன் போன்ற நீரின வாழினங்களில் 89% வேறு எங்கும் காணவியலா, முற்றிலும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தனி இனங்கள் ஆகும்[52]. கங்காரு, கோவாலா, வால்லரு ஆகியன சில அவுஸ்திரேலிய உயிரினங்களாகும். ஆஸ்திரேலியாவிலேயே உலகில் மிக அதிகமான ஊரும் விலங்குகள் உள்ளன. இங்கு கிட்டத்தட்ட 755 வகையான ஊர்வன உள்ளன[53]. பொருளாதாரம் thumbnail|right|மேற்கு ஆஸ்திரேலியாவின் கால்கூர்லி நகரில் அமைந்துள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரும் தங்கச் சுரங்கம் ஆஸ்திரேலிய டாலர் ஆஸ்திரேலியாவின் நாணயம் ஆகும். இது ஆஸ்திரேலியா தவிர கிறிஸ்மஸ் தீவுகள், கொக்கோஸ் (கீலிங்) தீவுகள், நோர்போக் தீவு, மற்றும் பசிபிக் தீவுகளான கிரிபட்டி, நவூரு, துவாலு ஆகியவற்றிலும் அதிகாரபூர்வ நாணயம் ஆகும். அவுஸ்திரேலியா மேற்கு நாடுகளையொத்த கலப்புப் பொருளாதார அமைப்புடையது. ஐக்கிய நாடுகளின் 2007 ஆம் ஆண்டுக்கான மனித அபிவிருத்திச் சுட்டெண்ணில் மூன்றாவது இடத்திலும் தி எக்கணமிஸ்ட் இதழின் 2005 ஆம் ஆண்டு உலக வாழ்க்கைத்தரச் சுட்டெண்ணில் ஆறாமிடத்திலும் உள்ளது. 2007 இல் அவுஸ்திரேலியாவில் வேலையில்லாதோர் தொகை 4.6 % ஆகும். மொ.உ.உ (GDP) ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி, மற்றும் பிரான்சை விட சற்று அதிகமாகும். அத்துடன் தி எக்கணமிஸ்ட் இதழின் உலகில் மக்கள் வசதியாக வாழக்கூடிய நகரங்களின் பட்டியலில் (2008) மெல்பேர்ண் 2வது, பேர்த் 4வது, அடிலெயிட் 7வது, சிட்னி 9வது இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டன[54]. மேற்கோள்கள் பகுப்பு:முன்னாள் பிரித்தானியக் குடியேற்றங்கள் பகுப்பு:ஓசியானிய நாடுகள் பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
ஆஸ்திரேலியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?
ஆறு
1,317
tamil
61d0ffb7e
புவியின் வளிமண்டலம் என்பது பூமியின் ஈர்ப்புச் சக்தியினால் அதனைச் சூழ்ந்து இருக்கும்படி அமைந்துள்ள பல்வேறு வாயுக்களின் படலமாகும். இது ஐந்தில் நான்கு பங்கு நைட்ரஜனையும், ஐந்தில் ஒரு பங்கு ஆக்ஸிஜனையும் மிகக் குறைந்த அளவில் கரியமில வாயு உட்பட்ட மேலும் பல வாயுக்களையும் கொண்டுள்ளது. சூரியக் கதிர்வீச்சிலிருக்கும் புறஊதாக் கதிர்களை உறிஞ்சிக் கொள்வதன் மூலமும், பகல், இரவு நேரங்களுக்கு இடையேயான வெப்பநிலை வேறுபாடுகளைக் குறைப்பதன் மூலமும் வளிமண்டலம் பூமியில் உயிர் வாழ்வைக் காத்து வருகிறது. வளிமண்டலத்துக்குச் சடுதியாக முடிவடையும் ஒரு எல்லை கிடையாது. வளிமண்டலத்தின் அடர்த்தி படிப்படியாகக் குறைந்து வந்து இல்லாமல் போய் விடுகிறது. வளிமண்டலத்துக்கும், ஆகாய வெளிக்கும் இடையே வரையறுக்கப்பட்ட எல்லை எதுவும் இல்லை. வளிமண்டலத்தின் முக்கால் பகுதித் திணிவு புவியின் மேற்பரப்பிலிருந்து 11 கிலோமீட்டர் தூரத்துக்குள் அடங்கியுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 80.5 கி.மீட்டர்களுக்கு மேல் செல்லும் எவரும் விண்வெளிவீரர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். விண்வெளியிலிருந்து திரும்பும் போது வளிமண்டலத்தின் பாதிப்புப் புலப்படத் தொடங்குமிடம் 120 கிமீ உயரத்தில் உள்ளதாகவும் கருதப்படுகிறது. 100 கிமீ உயரத்திலுள்ள கர்மான் கோடு எனப்படும் கோடும் வளிமண்டலத்துக்கும் விண்வெளிக்கும் இடையிலான எல்லையாகக் கருதப்படுவதுண்டு. ஆக்கும் கூறுகள் புவியின் வளிமண்டலம் நைதரசன் மற்றும் ஒக்சிஜன் ஆகியவற்றையே கூடுதலாகக் கொண்டுள்ளது. இதனைத் தவிர ஆர்கன், காபனீரொட்சைட்டு, நீராவி மற்றும் பல வாயுக்கள் புவியின் வளிமண்டலத்தை ஆக்குகின்றன. வளிமண்டலப் படைகள் புவியின் வளிமண்டலமானது ஐந்து படைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன அடிவளிமண்டலம் (Troposphere) படைமண்டலம் (Stratosphere) இடை மண்டலம் (mesosphere) வெப்ப வளிமண்டலம் (thermosphere) புறவளி மண்டலம் (exosphere) அடிவளிமண்டலம் அடிவளிமண்டலம் (Troposphere) என்பது புவியின் வளிமண்டலத்தின் மிகவும் கீழேயுள்ள அடுக்கு ஆகும். வளிமண்டலத்தின் மொத்தத் திணிவின் 75 வீதமும்; நீராவி, தொங்கல் நிலையில் உள்ள தூசித் துணிக்கைகள் ஆகியவற்றின் 99 வீதமும் அடிவளிமண்டலத்திலேயே உள்ளன. இந்த அடுக்கில் வெப்பச்சுற்றுத் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் உள்ளது. நிலநடுக்கோட்டுப் பகுதியில் அடிவளிமண்டலத்தின் சராசரித் தடிப்பு சுமார் 17 கிலோமீட்டர் (10 மைல்கள்) ஆகும். வெப்பவலயப் பகுதிகளில் இதன் தடிப்பு 20 கிலோமீட்டர் (12 மைல்கள்) அளவுக்குப் பரந்துள்ளது. துருவப் பகுதிகளில் கோடையில் 7 கிலோமீட்டர் (4 மைல்கள்) அளவாகக் காணப்படும் இதன் தடிப்பு மாரி காலங்களில் தெளிவற்றதாக உள்ளது. படைமண்டலம் படைமண்டலம் (Stratosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் இரண்டாவதாக உள்ள அடுக்கு ஆகும். இது அடிவளிமண்டலத்திற்கும் இடை மண்டலத்திற்கும் நடுவே காணப்படுகின்றது.இதிலேயே ஓசோன் படலம் காணப்படுகின்றது இடை மண்டலம் இடை மண்டலம் (mesosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் மூன்றாவதாக உள்ள அடுக்கு ஆகும். இது படை மண்டலத்திற்கும் வெப்ப மண்டலத்திற்கும் நடுவே காணப்படுகின்றது. வெப்ப வளிமண்டலம் வெப்ப வளிமண்டலம் (thermosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் நான்காவதாக உள்ள அடுக்கு ஆகும். இது இடை மண்டலத்திற்கும் புறவளி மண்டலத்திற்கும் நடுவே காணப்படுகின்றது. புறவளி மண்டலம் புறவளி மண்டலம் (exosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் ஐந்தாவதாக உள்ள அடுக்கு ஆகும். வெப்பநிலையும் வளிமண்டலப் படலங்களும் வளிமண்டல வெப்பநிலை புவி மேற்பரப்பிலிருந்தான உயரத்துடன் வேறுபடுகின்றது; வெப்பநிலைக்கும், உயரத்துக்கும் இடையிலான கணிதத் தொடர்பும் வெவ்வேறு வளிமண்டலப் படலங்களிடையே வேறுபடுகின்றது: அடிவளிமண்டலம்/ மாறன் மண்டலம் (troposphere): மேற்பரப்பிலிருந்து 7 கிமீ தொடக்கம் 17 கிமீ வரை, அகலாங்குகள் மற்றும் காலநிலை சார்ந்த காரணிகளைப் பொறுத்து உயரத்துடன் வெப்பநிலை குறைவடைகின்றது. வளியிலுள்ள வாயுக்களில் 90% காணப்படும் படைமண்டலம்/மீவளிமண்டலம் (Stratosphere): அடிவளிமண்டலத்துக்கு மேல் 50 கி.மீ வரை உயரம் அதிகரிக்க வெப்பநிலை கூடுகின்றது. ஓசோன் படை இம்மண்டலத்தில் காணப்படும். இடை மண்டலம் (mesosphere): 50 கி.மீட்டரிலிருந்து 80 - 85 கிமீ வரையான பகுதிக்குள் உயரம் அதிகரிக்க வெப்பநிலை குறைகின்றது. வெப்ப வளிமண்டலம் (thermosphere): 80 - 85 கிமீ முதல் 640+ கிமீ வரை வெப்பநிலை உயரத்துடன் அதிகரிக்கின்றது. வானொலி அலைகள் இம்மண்டலத்தில் தெறிப்படைந்து பூமியை அடையும் செய்மதிகள் இம்மண்டலத்திலேயே அதிகளவில் காணப்படும். புறவளி மண்டலம் (exosphere) மேற்படி பகுதிகளுக்கிடையான எல்லைகள் அடிவளி எல்லை (tropopause), அடுக்கெல்லை (stratopause), இடையெல்லை (mesopause) எனப்படுகின்றன. பூமியின் மேற்பரப்பில் வளிமண்டலத்தின் சராசரி வெப்பநிலை 14°C ஆகும். அழுத்தம் முதன்மைக் கட்டுரை: வளிமண்டல அழுத்தம் வளிமண்டல அழுத்தம் என்பது வளியின் நிறையின் நேரடியான விளைவாகும். புவி மேற்பரப்பின் மேலுள்ள வளியின் அளவும் அதன் நிறையும் இடத்துக்கு இடமும், நேரத்தை ஒட்டியும் வேறுபடுவதன் காரணமாக வளியமுக்கமும் இடத்தையும் நேரத்தையும் பொறுத்து வேறுபடுகின்றது. சுமார் 5 கிமீ உயரத்தில் வளிமண்டல அழுத்தம் ~50% வீழ்ச்சியடைகின்றது. (இன்னொரு வகையில் கூறுவதானால் சுமார் வளிமண்டலத் திணிவின் 50% கீழுள்ள 5 கிமீக்குள் அடங்கி விடுகின்றது). கடல் மட்டத்தில் சராசரி வளி அமுக்கம் சுமார் 101.3 கிலோபாஸ்கல்கள் (ஏறத்தாழ சதுர அங்குலத்துக்கு 14.7 இறாத்தல்கள்) ஆகும். ஆய்வுகள் வளிமண்டலத்தில் கார்பன்டைஆக்சைடின் அளவு 400 மில்லியனில் ஒரு பகுதிகளாக அதிகரித்துள்ளதாக மௌனா லோவ கண்காணிப்பகத்தில் உள்ள நேசனல் ஓசோனிக் அன்டு அட்மாஸ்பியரிக் அட்மினிஸ்டிரேசனின் அறிவியலாளர்கள் மே 9, 2013 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.[1] உசாத்துணைகள் , by J. Vercheval (viewed 1 Apr 2005) இவற்றையும் பார்க்கவும் வளி புவி வெப்ப நிலை அதிகரிப்பு அடிவளிமண்டலம் வெப்ப வலயம் மேற்கோள்கள் வெளியிணைப்புகள் பகுப்பு:வளிமண்டலம் பகுப்பு:சூழல் மண்டலம் பகுப்பு:புவி பகுப்பு:புவியின் கட்டமைப்பு பகுப்பு:புவியின் வளிமண்டலம்
பூமியின் வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் அளவு என்ன?
ஐந்தில் ஒரு பங்கு
168
tamil
3a2c5c469
மின்ணணு வாக்குப்பதிவு இயந்திரம் (Electronic voting machine) சில நாடுகளில் தேர்தல்களின் போது வாக்காளர்களின் வாக்கைப் பதிவு செய்ய நடைமுறையில் இருக்கும் கருவியாகும். பதிவான தகவல்களைச் சேமித்து வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை வெளிக்காட்டும் இயந்திரமாகும். தற்போது இந்தியா, பிரேசில் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் வரலாறு சுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் ஓட்டுச் சீட்டு முறையிலேயே, தேர்தல் நடைமுறைகள் நடத்தப்பட்டு வந்தன. பின்பு தொழிற்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன் பட்டுக்கு வந்தன. இந்திய தேர்தலில் ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்துவதில் எற்படும் சிக்கல்களையும் கால விரயம், பண விரயம் ஆகியவற்றைத் குறைக்கவும், நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நடவடிக்கையாகவும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. இதை அறிமுகப்படுத்தும் முன் சம்பத், இந்திரேசன், ராவ் கசர் பாதா ஆகியோரைக் கொண்ட தொழில்நுட்ப குழுவின் கருத்து கேட்கப்பட்டது. அக்குழு ஒருமனதாக பரிந்துரை செய்த பிறகே, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனும் ஆலோசிக்கப்பட்டது. கேரளாவில் 1982ம் ஆண்டு நடந்த பரூர் இடைத்தேர்தலின் போது, சோதனை முயற்சியாக 50 ஓட்டுச் சாவடிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில் நாடு முழுவதும் 10 லட்சத்து 75 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மத்திய அரசு நிறுவனங்களான பாரத் மின்னணு நிறுவனம், இந்திய மின்னணு கழகம் ஆகியவை இந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந் திரங்களை தயாரித்து தேர்தல் ஆணையத்துக்கு வழங்குகி வருகின்றன. பயன்பாடு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தால், ஒரு ஓட்டுச் சாவடிக்கு மிகக்குறைவான அளவு ஓட்டுச்சீட்டுகளே தேவைப்படுவதால், காகிதம் மற்றும் அச்சிடும் செலவு வெகுவாகக் குறைந்தது. 1996ம் ஆண்டு பொதுத் தேர்தலில் 8,800 டன்னும், 1999ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு 7,700 டன்னும் காகிதம் பயன்பாடு குறைக்கப்பட்டது. உபயோகிக்கும் முறை இந்த இயந்திரம், கட்டுப் பாட்டு கருவி், ஓட்டுப்பதிவு கருவி என இரு பகுதிகளைக் கொண்டது. கட்டுப்பாட்டு கருவி மூன்றாவது வாக்குப்பதிவு அலுவலர் இருக்கும் இடத்திலும், ஓட்டுப்பதிவு கருவி வாக்காளர் ஓட்டளிக்கும் மறைவான இடத்திலும் இருக்கும். இந்த இரு கருவிகளும் பத்து மீட்டர் நீளமுள்ள மின்னிணைப்பு வடம் (கேபிள்) மூலம் இணைக்கப்பட்டிருக்கும். ஒரு வாக்காளர் வேட்பாளருக்கான பொத்தானை அழுத்தியதும், அந்த வேட்பாளருக்கான ஓட்டுப்பதிவாகி விடும். அதன்பின் கட்டுப்பாட்டு பிரிவிலுள்ள ஓட்டு பொத்தானை மூன்றாவது வாக்குப்பதிவு அலுவலர் மீண்டும் அழுத்தினால் தான், இயந்திரம் அடுத்த ஓட்டை பதிவு செய்யத்தயாராகும். இயந்திரத்தின் சாவி பதிவு செய்யப்படும்போது, தேதியும், நேரமும் பதிவாகி விடும். ஓட்டுப்பதிவு முடிந்ததும், மூடுவதற்கான பொத்தானை அழுத்திவிட்டால் இயந்திரம் எந்த புள்ளிவிவரத்தையும் ஏற்காது. மொத்தம் என்ற பொத்தானை அழுத்தினால், அதுவரை பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கையை காட்டும். இதை 17-ஏ படிவத்தில் உள்ள வாக்காளர் பதிவு புத்தகத்துடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாம். சிறப்பு அம்சங்கள் ஓட்டுப்பதிவின் போது இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால், அதற்கு பதில் புதிய இயந்திரத்தை அப்பகுதிக்கான மண்டல அதிகாரி பொருத்துவார். பழுதான இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்கள் அதன் 'மெமரி'யில் அப்படியே இருக்கும் என்பதால், முதலில் இருந்து ஓட்டுப்பதிவை நடத்த வேண்டியதில்லை. இந்த இயந்திரம் ஒரு நிமிடத்திற்கு ஐந்து ஓட்டுகளுக்கு மேல் பதிவு செய்யாது. யாராவது ஓட்டுச் சாவடியை கைப்பற்ற முயன்றால், தலைமை அலுவலர் 'முடிவு' பொத்தானை அழுத்தி ஓட்டுப்பதிவை நிறுத்திவிட முடியும். பார்லிமென்ட், சட்டசபை இரண்டிற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால், இரண்டிற்கும் தனித்தனி இயந்திரம் பயன்படுத்தப்படும். 'முடிவு' பகுதி முத்திரையிடப்படா விட்டால், ஒரு குறிப்பிட்ட ஓட்டுச் சாவடியின் முடிவுகளை குறிப்பிட்ட நாளில் ஓட்டு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் முன்னரே தெரிந்து கொள்ள இயலும். இதனால், முத்திரை இடப் பட்ட பட்டையிலோ, காகித்திலோ தேர்தல் அதிகாரி மைய தலைவரின் முத்திரைகளுடன், வேட்பாளர் அல்லது அவரது பிரதிநிதி கையொப்பம் இடுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார். ஓட்டு எண்ணும் மையத்தில், 'முடிவு' பொத்தானை அழுத்தியதும், அதன் திரையில்அந்த சாவடியில் பதிவான மொத்த ஓட்டுகள், ஒவ்வொரு வேட்பாளருக்கும் கிடைத்துள்ள ஓட்டுகள் வரிசையாக தோன்றும். ஓட்டு எண்ணும் மைய அலுவலர்களை தவிர, வேட்பாளர்களின் பிரதிநிதிகளும் இதை குறித்துக் கொள்வர். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும், அந்தச் சுற்றின் முடிவுகளும், மொத்த கூட்டுத் தொகையும் அறிவிக்கப்படும். சுற்று அடிப்படையிலான முடிவுகளை மொத்தமாக கூட்டி, இறுதி முடிவு அறிவிக்கப்படும். சர்ச்சைகளை இந்தியாவில் சில அரசியல் கட்சிகள் இம்முறையை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்துள்ளன. அதை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்து வருகின்றது. முறைகேடுகளுக்கு வழிவகுப்பதை நிருபிக்கும் நிலையில் அதை சரி செய்ய தயாராக இருக்கிறது என்று அறிவித்துள்ளது. எந்த அரசியல் கட்சியும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்யமுடியும் என்று நிருபிக்கவில்லை. பிற நாடுகளில் பயன்பாடு தற்போது இந்தியா, பிரேசில் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில நாடுகள் இதில் பதிவு செய்யும் தகவல்களை மாற்ற முடியும் என்று காரணம் கூறி இம்முறையை ஏற்க தயங்கி வருகின்றன. வெளி இணைப்புகள் பகுப்பு:தேர்தல் பகுப்பு:கருவிகள்
இந்தியாவில் முதல் முறையாக எந்த ஆண்டு வாக்களிக்க இயந்திரம் பயன்படுத்தப்பட்டது?
1982
1,223
tamil
dea207ce0
நோபெல் பரிசு (Nobel Prize) அல்லது நோபல் பரிசு (பழைய வழக்கு) என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு. மார்ச் 2005 வரை 770 நோபெல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சிலர் இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ள மறுத்ததும் உண்டு. இது வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது. முதல் பரிசு 1901 ல் வழங்கப்பட்டது. சில ஆண்டுகள் ஒரு பரிசு கூட அறிவிக்கப்படாமல் போனதும் உண்டு. எனினும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசு அறிவிக்கப்படும். நோபெல் பரிசு, திரும்பப் பெறத்தக்கதல்ல. இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல் மற்றும் அமைதி ஆகியவையே ஆல்ஃபிரட் நோபெல் அவர்களின் உயில் படி ஏற்படுத்தப்பட்ட பரிசுகளாகும். பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு 1968 ல் சுவீடன் நடுவண் வங்கியினால் அதன் 300 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது. பரிசு பெறும் ஒவ்வொருவரும், ஒரு தங்கப்பதக்கமும் ஒரு பட்டயமும், நோபெல் அறக்கட்டளையின் அவ்வருட வருமானத்தைப் பொறுத்து பரிசுப் பணமும் பெறுவர். வரலாறு ஆல்ஃபிரட் நோபல் (கேட்க 1833, அக்டோபர் 21 அன்று சுவீடனிலுள்ள ஸ்டாக்ஹோம் நகரில் பிறந்தார். அவரது குடும்பம் ஒரு பொறியியலாளர் குடும்பமாகும்[1]. இவரது வாழ்நாளில் வேதியாளராயும் பொறியாளராயும் கண்டுபிடிப்பாளராயும் விளங்கினார். 1894-ஆம் ஆண்டு போஃபர்சு இரும்பு மற்றும் எஃகு ஆலையை நோபல் வாங்கினார். அதனை பெரும் ஆயுத உற்பத்தி தொழிற்சாலையாக மாற்றினார். பலவித புகையற்ற ராணுவ வெடிபொருட்களுக்கு முன்னோடியான பாலிஸ்டிக்-கை இவர்தான் கண்டுபிடித்தார். இதுவே பிரித்தானியத் தயாரிப்பான புகையற்ற வெடிபொருளான கார்டைட்-டுக்கும் முன்னோடியாகும். அதைச் சார்ந்து ஒரு பதிப்புரிமை வழக்கும் நோபலால் தொடரப்பட்டிருந்தது. நோபல் தன் வாழ்நாளில் மிகப்பெருமளவில் செல்வம் சேர்த்தார். அவரது வருமானத்தில் பெரும்பகுதி அவரது 355 கண்டுபிடிப்புகளால் கிடைத்தது, அவற்றுள் முக்கியமானது டைனமைட் ஆகும்.[2]. 1888-ல் ஒரு பிரெஞ்சு செய்தித்தாளில் "மரணத்தின் வியாபாரி இறப்பு" என்ற தனது இறப்புச் செய்தி கண்டு அதிர்ந்தார். ஆனால் அப்போது இறந்தவர் ஆல்ஃபிரடின் சகோதரரான லுட்விக் ஆவார். ஆனால் அச்செய்தி நோபலை துணுக்குறச் செய்தது, தான் இறந்தபிறகு எவ்வாறு நினைவில் வைக்கப்படுவோம் என்று தீவிரமான சிந்தனைக்கு ஆளானார். இதுவே அவரை தன்னுடைய உயிலை மாற்றி எழுதச் செய்தது.[3]. 63 வயதான போது திசம்பர் 10,1895 அன்று இத்தாலியின் சான் ரெமோ மாளிகையில் ஆல்ஃபிரட் நோபல் காலமானார்[4]. அனைவரும் பெருத்த வியப்புக்கு உள்ளாகும் வகையில் நோபலின் கடைசி உயிலில், தனது சொத்தின் பெரும்பகுதி 'மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு' பங்களித்தவர்களுக்கு இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் பரிசு வழங்க பயன்படுத்தப்படவேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார்[5]. நோபல் தன் வாழ்நாளில் பல உயில்களை எழுதியிருந்தார். அவரது கடைசி உயில் நவம்பர் 27, 1895 அன்று பாரிசிலிருந்த சுவீடன்-நார்வே மன்றத்தில் எழுதப்பட்டு அவரால் கையொப்பமிடப்பட்டிருந்தது[6][7]. தனது சொத்தில் 94%-தினை, 31 மில்லியன் சுவீடன் குரோனார்(2008 மதிப்பின்படி 150 மில்லியன் யூரோ, 186 அமெரிக்க டாலர்கள்), ஐந்து நோபல் பரிசுகளை வழங்குவதற்காக எழுதி வைத்தார்.[8]. அவரது உயிலின் மீதிருந்த ஐயங்களால் ஏப்ரல் 26, 1897 அன்றுதான் நார்வேயின் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது[9]. நோபலின் உயிலை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களால், ராக்னார் சோல்மான் மற்றும் ருடோல்ஃப் லியெக்விஸ்ட், அவரது சொத்தை பரமாரிக்கவும் பரிசுகள் வழங்குதலை ஒழுங்குபடுத்த/முறைப்படுத்தவும் "நோபல் அறக்கட்டளை" அமைக்கப்பெற்றது.[10] நோபலின் குறிப்புகளின்படி, அமைதிக்கான நோபல் பரிசை வழங்க நார்வே நோபல் குழு அமைக்கப்பெற்றது, அதன் உறுப்பினர்கள் உயில் அங்கீகரிக்கப்பட்ட சில நாட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பின்னர், ஏனைய பரிசுகளை வழங்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டன. அவை கரோலின்சுகா நிறுவனம் (சூன் 7), சுவீடன் சங்கம் (சூன் 9), ராஜாங்க சுவீடன் அறிவியற் கழகம் (சூன் 11).[11] எவ்வாறு பரிசுகள் வழங்கப்படவேண்டுமென்ற விதிமுறைகள் நோபல் அறக்கட்டளையால் அங்கீகரிக்கப்பட்டபின், மன்னர் ஆஸ்கர் II -வினால் 1900-ல் பிரகடனப்படுத்தப்பட்டன.[5] 1905-ஆம் ஆண்டு நார்வேயும் சுவீடனும் பிரிந்தன. அதன் பின்னர், அமைதிக்கான நோபல் பரிசை அளிப்பதன் பொறுப்பு நார்வேயின் வசமும் மற்ற பரிசுகளை வழங்கும் பொறுப்பு சுவீடனிலிருக்கும் அமைப்புகளின் வசமும் உள்ளது.[9] நோபல் அறக்கட்டளை நோபல் பரிசுகளின் நிதி மூலங்களையும் அதன் நிர்வாகத்தையும் கவனிக்க சூன் 29, 1900 அன்று "நோபல் அறக்கட்டளை" ஒரு தனியார் நிறுவனமாக ஆரம்பிக்கபபட்டது.[12] நோபெலின் உயிலின்படி, அறக்கட்டளையின் முதற்கடமை நோபெல் விட்டுச்சென்ற சொத்தினை பாதுகாப்பதாகும். சகோதரர்கள் ராபர்ட் மற்றும் லுட்விக் நோபெல் அசர்பெய்ஜானிலிருந்த எண்ணெய் நிறுவனங்களில் பெருமளவு முதலீடு செய்திருந்தனர். சுவீடன் நாட்டு வரலாற்றாசிரியரான இ. பார்கென்கிரன், நோபெல் குடும்ப வரலாற்றுத் தொகுப்புகளை நேரில் பார்வையிட்டவர், அவரின் கூற்றுப்படி பாகு-விலிருந்து நோபெலின் முதலீடுகளை திரும்பப் பெற்றதே பரிசுகளை வழங்க ஆரம்பத்தில் மிக்க உறுதுணையாயிருந்தது.[13] நோபெல் அறக்கட்டளையின் மற்றொரு பணி, பரிசுகளை உலக அளவில் கொண்டு சேர்ப்பதும் பரிசு வழங்கல் நிர்வாகத்தை மேற்பார்வையிடுவதுமாகும். அறக்கட்டளை பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுப்பதில் எந்த பங்கும் எடுப்பதில்லை.[14][15] பல வகைகளில் இந்த அறக்கட்டளை ஒரு முதலீட்டுக் குழுமமாகவே செயல்படுகிறது, நோபெலின் சொத்தை முதலீடாகக் கொண்டு பரிசு வழங்கவும் அதன் நிர்வாகத்துக்குமான நிதியை அது உற்பத்தி செய்கிறது. 1946-லிருந்து சுவீடனில் அனைத்து வித வரிகளிலிருந்தும் நோபெல் அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப்பட்டது. 1953-லிருந்து ஐக்கிய அமெரிக்காவிலும் அனைத்து வித வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டது.[16] 1980-களிலிருந்து இதன் முதலீடுகள் பெரும் லாபமீட்டிவருகின்றன. திசம்பர் 31, 2007-படி நோபெல் அறக்கட்டளையின் சொத்து மதிப்பு 3.628 பில்லியன் சுவீடன் குரோனார்கள் (560 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆகும்.[17] விதிகளின்படி, அறக்கட்டளையானது ஸ்டாக்ஹோமைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும். மேலும், சுவீடன் அல்லது நார்வே நாட்டின் குடிமக்கள் ஐவர் இந்த அறக்கட்டளையின் உறுப்பினர்களாக இருப்பர். அறக்கட்டளையின் தலைவர், மன்னருக்கான ஆலோசனைக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார். மற்ற நான்கு உறுப்பினர்களும் நோபல் பரிசுகளுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் அமைப்புகளின் அறங்காவலர்களால் தேர்ந்தெடுக்ககப்படுவர். அறக்கட்டளை உறுப்பினர்களிடையே அதன் செயற்குழு இயக்குனரும், ஒரு துணை இயக்குனர் மன்னருக்கான ஆலோசனைக் குழுவாலும், மேலும் இரு இணை இயக்குனர்கள் அமைப்புகளின் அறங்காவலர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுவர். எனினும், 1995-லிருந்து அனைத்து உறுப்பினர்களும் நோபல் பரிசு அமைப்புகளின் அறங்காவலர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இயக்குனர் மற்றும் துணை இயக்குனரும் அறக்கட்டளை உறுப்பினர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அறக்கட்டளை உறுப்பினர்கள் தவிர்த்து, நோபல் அறக்கட்டளையானது அனைத்து பரிசு வழங்கும் அமைப்புகள்(சுவீடன் ராஜாங்க அறிவியற் கழகம், கரோலின்சுகா நிறுவனம், சுவீடன் கழகம், நார்வே நோபெல் கழகம்), அவற்றின் அறங்காவலர்கள் மற்றும் தணிக்கையாளர்களை உள்ளடக்கியது.[17] முதல்முறை வழங்கப்பட்ட பரிசுகள் நோபல் அறக்கட்டளை நிறுவப்பட்டு அதன் விதிமுறைகளும் வகுக்கப்பட்ட பின்னர், நோபல் கழகங்கள் பரிசுகளுக்கான முதல் முறை வழங்கப்படப்போகும் முன்மொழிவுகளைத் தயார் செய்தன. அதன் பின்னர் தெரிவு செய்யப்பட்ட பட்டியல்கள் பரிசு வழங்கும் கழகங்களுக்கு அனுப்பப்பட்டன. பரிசுகளின் நம்பகத்தன்மையைக் கூட்டும் வகையில், நார்வே நோபல் கழகம் புகழ்பெற்ற யார்கன் லொவ்லான்ட், யார்ன்ஸ்ட்யெர்ன் யார்ன்சன் மற்றும் யொகானசு ஸ்டீன் ஆகியோரை பரிசு வழங்கும் குழுவில் நார்வே நோபல் கழகம் நியமித்தது.[18] 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வளர்ந்துவந்த அமைதி இயக்கங்களிலிருந்த புகழ்பெற்ற இருவருக்கு பரிசு வழங்குவதற்கு நோபல் கழகம் முடிவு செய்தது: ஃபிரடெரிக் பாசி (உலக நாடுகளின் கூட்டமைப்பின் துணை நிறுவனர்) மற்றும் யென்றி டூனான்ட் (உலகளாவிய செஞ்சிலுவைக் கழக நிறுவனர்)..[19][20][21] இயற்பியலில் நோபல் பரிசுக்கு தகுதியுடையவர்களாக நோபல் கழகம் இருவரைத் தேர்ந்தெடுத்தது: எக்ஸ்- கதிர்களைக் கண்டுபிடித்த வில்யெம் கொன்றாடு ரான்ட்ஜன் மற்றும் கேதோடு கதிர்களைக் கண்டறிந்தவரான பிலிப் லெனார்டு. சுவீடன் அறிவியற் கழகம் ரான்ட்ஜனை பரிசுக்குரியவராகத் தேர்ந்தெடுத்தது.[19][20][21] 19-ஆம் நூற்றாண்டின் இறுதிகளில் பல வேதியியலாளர்கள் முக்கியமான கண்டுபிடிப்புகளையும் முன்னேற்றங்களையும் செய்திருந்தனர். ஆகையால் பரிசு வழங்கப்பட வேண்டும் எனும்படியான வகையில் தகுதிப்பட்டியலை தயாரிக்கவே பரிசு வழங்கும் கழகம் தள்ளப்பட்டது.[22] இத்துறையில் 20 முன்மொழிவுகள் வைக்கப்பட்டன. அவற்றுள் 11 யாகோபசு வான் கா-வுக்கானவை.[23] முடிவில் யாகோபசு வான் கா-வுக்கு வேதியியல்-வெப்ப இயக்கவியலில் அவரின் பங்களிப்புக்கு நோபல் பரிசு தரப்பட்டது..[24][25] முதல் நோபல் இலக்கியப்பரிசுக்கு சல்லி புருதோமை, சுவீடன் கழகம் தேர்ந்தெடுத்தது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த 42 எழுத்தாளர்கள், கவிஞர்கள் இதனை எதிர்த்துப் போராடி தமது அதிருப்தியைத் தெரிவித்தனர், அவர்கள் லியோ டால்ஸ்டாய்தான் வெல்லுவார், அவரே பரிசுக்கு மிகச் சரியானவர் என எண்ணினர்.[26] சிலர், பர்டன் பெல்டுமான் உட்பட, சல்லி புருதோம் ஒரு சாதாரண கவிதான் என்ற எண்ணங்கொண்டிருந்தனர். பர்டன் பெல்டுமான், பரிசு வழங்கும் கழகத்தினர் விக்டோரிய இலக்கிய ஆவலர்கள் போலும், ஆதலால் தான் விக்டோரிய கவிக்கு பரிசு கொடுத்திருக்கின்றனர், என்று குற்றஞ்சாட்டினார்.[27] மருத்துவத்துவத்துக்கான நோபல் பரிசு யெர்மானிய உடலியங்கியல் மற்றும் நுண்ணியிரியியலாளரான எரிக் வான் பெரிங்-குக்கு வழங்கப்பட்டது. 1890-களில் எரிக் வான் பெரிங் டிப்தீரியாவுக்கான நஞ்செதிரியைக் கண்டறிந்தார், அதுநாள் வரையிலும் டிப்தீரியாவால் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்து கொண்டிருந்தனர்.[28][29] இரண்டாம் உலகப்போர் 1938 மற்றும் 1939-ல் அடால்ஃப் ஹிட்லர்-இன் மூன்றாம் செல்வம், நோபல் பரிசு வென்ற மூவரை (ரிச்சர்டு குன், அடால்ஃப் பிரைட்ரிச் யொகான் பியூட்டெனான்ட் மற்றும் யெர்கார்டு டொமாக்) பரிசினைப் பெற்றுக்கொள்ள விடவில்லை..[30] ஆனால், ஒவ்வொருவரும் பின்னர் அவர்களது பட்டயத்தையும் பரிசினையும் பெற்றுக்கொண்டனர்.[31] சுவீடன் இரண்டாம் உலகப் போரின்போது நடுவுநிலைமையை வகித்தாலும் நோபல் பரிசுகள் இடைவெளிவிட்டு விட்டு கொடுக்கப்பட்டன. 1939-ல் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கும் தரப்படவில்லை. 1940-42 காலகட்டத்தில், நார்வே யெர்மனியால் கைப்பற்றப்பட்டிருந்தது, எந்த துறையிலும் பரிசு வழங்கப்படவில்லை. அதற்கடுத்த ஆண்டு அமைதி மற்றும் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகளைத் தவிர ஏனையவை தரப்பட்டன.[32] நார்வே கைப்பற்றப்பட்ட பின்னர் மூன்று நோபெல் அறக்கட்டளை உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பியோடினர். ஆசுலோவிலிருந்த நோபல் கழக மாளிகை சுவீடன் நாட்டு சொத்து என்று நோபல் கழகம் அறிக்கை விட்டதன் காரணத்தால் அங்கிருந்த மற்ற அறக்கட்டளை உறுப்பினர்கள் நாசிக்களின் நெருக்குதலுக்கு உள்ளாகியிருப்பர். ஆதலால் அக்கழக மாளிகை யெர்மானிய ராணுவத்திடமிருந்து தப்ப ஒரு புகலிடமாக இருந்தது, ஏனெனில் யெர்மனியுடன் சுவீடன் போரில் ஈடுபடவில்லை.[33] அங்கிருந்த அறக்கட்டளை உறுப்பினர்கள் நோபெல் கழகத்தின் வேலைகளை தொடர்ந்து கவனித்து வந்தாலும் பரிசுகள் எதுவும் வழங்கப்படவில்லை. 1944-ல் நோபல் அறக்கட்டளை, வெளிநாட்டுக்குத் தப்பிய மூன்று உறுப்பினர்களும் சேர்த்து, முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன, அமைதிக்கான நோபல் பரிசு எப்போதும் போல இனி வழங்கப்படுமென அறிவித்தனர்.[30] பொருளாதார அறிவியலுக்கான பரிசு 1968-ஆம் ஆண்டு சுவீடன் நடுவண் வங்கியானது தனது 300-வது வருட கொண்டாட்டத்தின்போது, ஒரு பெரும் தொகையை நோபல் அறக்கட்டளைக்கு அளித்து நோபலின் பெயரில் ஒரு பரிசினை ஏற்படுத்த வைத்தது. அதற்கடுத்த வருடம் நோபல் நினைவு பொருளாதார அறிவியல் பரிசு வழங்கப்பட்டது. பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு சுவீடன் ராஜாங்க அறிவியற் கழகத்தின் பொறுப்பில் விடப்பட்டது. முதல் பொருளாதாரத்துக்கான பரிசினைப் பெற்றவர்கள் யான் டின்பெர்கன் மற்றும் ராக்னர் ஃபிரிச் ஆவர். அவர்கள் "பொருளாதார செயற்பாடுகளுக்கான இயங்கு படிமங்களை உருவாக்கி அதை வெற்றிகரமாக செயற்படுத்தியும் உள்ளனர்" என்பது நோபல் குழுவின் குறிப்பு.[34][35] ஒரு நோபெல் பரிசாக இல்லாவிட்டாலும் இது ஏனைய நோபெல் பரிசுகளோடே அடையாளப்படுத்தப்படுகிறது. பரிசுக்குரியவர்களும் மற்ற நோபெல் பரிசுக்குரியவர்கள் அறிவிக்கப்படும்போதே அறிவிக்கப்படுகிறார்கள். பொருளாதார அறிவியலின் பரிசு சுவீடனின் நோபல் பரிசு வழங்கும் விழாவிலேயே வழங்கப்படுகிறது.[36] இந்த பரிசினை சேர்த்த பின்னர், நோபல் அறக்கட்டளைக் குழு கூடி விவாதித்து இனி ஏதும் புதிய பரிசுகளை வழங்குவதில்லையென முடிவெடுத்தது.[37] விருது வழங்கும் முறை விருது வழங்கும் முறை அனைத்து நோபல் பரிசுகளுக்கும் ஒத்ததாக உள்ளது; முக்கிய வேறுபாடு என்னவென்றால் யார் அவர்களை ஒவ்வொருவராக பரிந்துரை செய்வது என்பதாகும்.[38] பரிந்துரைகள் 3000 தனிநபர்களுக்கு பற்றிய பரிந்துரையை வடிவங்கள் நோபல் கமிட்டி மூலம் அனுப்பப்படுகின்றன, பொதுவாக செப்டம்பர் மாதம் பரிசுகள் வழங்கப்படுவதற்க்கு ஒரு ஆண்டின் முன்னதாகவே அனுப்பப்படும். அமைதிக்கான நோபல் பரிசுக்கான விசாரணை, அரசாங்கங்கள், சர்வதேச நீதிமன்ற உறுப்பினர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி தலைவர்கள், முன்னாள் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் மற்றும் நார்வே நோபல் கமிட்டியின் தற்போதைய அல்லது முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோருக்கு அனுப்பப்படுகின்றன. பரிந்துரையை வடிவங்கள் திரும்பி வருவதற்கான காலக்கெடு விருது ஆண்டின் ஜனவரி 31 ஆக உள்ளது. நோபல் பரிசு குழு, இந்த வடிவங்கள் மற்றும் கூடுதல் பெயர்களில் இருந்து சுமார் 300 திறன் பெற்றவர்களை பரிந்துரைக்கும். தேர்வு நோபல் பரிசு குழு, பின்னர் தொடர்புடைய துறைகளில் நிபுணர்களின் ஆலோசனை பிரதிபலிக்கும் ஒரு அறிக்கை உருவாக்குகிறது. இது, ஆரம்ப வேட்பாளர்கள் பட்டியலை சேர்த்து, பரிசு வழங்கும் நிறுவனங்களில் சமர்ப்பிக்கப்படும். இது, ஒரு பெரும்பான்மை வாக்குகளை ஒவ்வொரு துறையில் பரிசு பெற்றவர்களின் தேர்வைச் சந்திக்கின்றது. அதிகபட்சமாக மூன்று பரிசு பெற்றவர்கள் மற்றும் இரண்டு வெவ்வேறு படைப்புகள் உடையவர்கள் ஒவ்வொரு விருதுக்கான தேர்வாக இருக்கலாம். நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கூடிய அமைதி பரிசு தவிர, விருதுகளை தனி நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட முடியும். அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லையெனில், அதற்கான பணத்தை அறிவியல் சார்ந்த பரிசுகளுக்கு இடையே பிரித்து தரப்படும். இதுபோல இதுவரை 19 முறை நடந்துள்ளது. விருது வழங்கும் விழா வருடந்தோறும் நோபெல் அவர்களின் நினைவு தினமான டிசம்பர் மாதம் பத்தாம் நாள் அன்று, அமைதிக்கான நோபெல் பரிசு தவிர மற்ற அனைத்து நோபெல் பரிசுகளும், சுவீடனில் உள்ள ஸ்டோக்ஹோம் நகரத்தில் வழங்கப்படுகின்றன. பரிசு பெறுவோரின் சொற்பொழிவு, இந்நிகழ்ச்சியின் முன்தினம் நடை பெறுவது வழக்கம். அதே டிசம்பர் பத்தாம் நாள், நோர்வேயில் உள்ள ஒஸ்லோ நகரில், அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கும் விழா மற்றும் பரிசு பெறுவோரின் சொற்பொழிவும் நடைபெறும். ஆல்ஃபிரட் நோபெல் உயில் எழுதும் சமயத்தில் நோர்வேவும் சுவிடனும் ஒரே கூட்டுப்பிரதேசமாக இருந்ததால், நோர்வேயில் அமைதிக்கான பரிசும், சுவிடனில் மற்ற பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியும், இதனையொட்டி நடைபெறும் விழாக்களும், சமீப காலமாக உலகளாவிய நிகழ்ச்சியாக விளங்குகின்றன. நோபல் பரிசும் தமிழரும் நோபல் பரிசினை இதுவரை மூன்று தமிழர் பெற்றுள்ளனர். இந்தப் பெருமைக்குரியோர் ச. வெ. இராமன் (1930), சுப்பிரமணியன் சந்திரசேகர் (1983), வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (2009) ஆவர். இவற்றையும் பார்க்கவும் நோபல் பரிசு சர்ச்சைகள் நோபெல் பரிசு பெற்றவர்கள் பட்டியல் அமைதிக்கான நோபெல் பரிசு இயற்பியல் நோபல் பரிசு பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு விக்கிமுலம்:இயற்பியலுக்கான நோபெல் பரிசு விரிவுரைகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் — அதிகாரப்பூர்வ தளம் of the of the — an unofficial site பகுப்பு:நோபெல் பரிசு பகுப்பு:பரிசுகளும் விருதுகளும்
நோபல் பரிசை நிறுவியவர் யார்?
ஆல்ஃபிரட் நோபல்
1,197
tamil
fd2c78c3f
அமேசான் ஆறு (Amazon River) (இலங்கை வழக்கு: அமேசன் ஆறு   பொதுவாக சுருக்கமாக அமேசான் (US: /ˈæməzɒn/ or UK: /ˈæməzən/; Spanish மற்றும் Portuguese: Amazonas) தென் அமெரிக்க கண்டத்திலுள்ள ஒரு ஆறாகும். இது உலகின் இரண்டு நீளமான ஆறுகளில் ஒன்று. மற்றொன்று நைல் ஆறு. அமேசான் ஆறு கொணரும் நீரின் அளவில் உலகின் பெரிய ஆறாகும்.   மற்றும் சில ஆசிரியர்களின் கூற்றின்படி, உலகின் நீண்ட ஆறாகும். இதன் அளவு மிசிசிப்பி, நைல், மற்றும் யாங்சே ஆகிய நதிகளின் மொத்த அளவை விட அதிகம். இதன் நீளம் 6400 கி.மீ.கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறாகும். இதன் மொத்த அளவு அடுத்த எட்டு பெரிய ஆறுகளின் நன்னீரின் அளவை விட அதிகமாகும். இந்த ஆற்றின் ஓட்டம் பலமுறை மாறியுள்ளது. முதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த இந்த ஆறு அண்டெஸ் மலையின் வளர்ச்சியினால் கிழக்கு நோக்கிப் பாய்கிறது. அமேசான் ஆறு எந்த இடத்திலும் பாலம் மூலமாக கடக்கப்படுவதில்லை. இதற்கு காரணம் இதன் அகலம் அல்ல, தற்கால பொறியாளர்களால் இதன் குறுக்கே பாலம் கட்டமுடியும். எனினும் ஆற்றின் பெரும் பகுதி வெப்பமண்டல மழைக்காடுகள் வழியாக பாய்வதாலும் அங்கு சில நகரங்களே உள்ளதாலும் பாலத்தின் தேவை ஏற்படவில்லை. பல்வேறு அளவைகளின் படி அமேசான் ஆறே உலகில் பெரியதாக இருந்தாலும் நீளத்தை பொறுத்தமட்டில் இது நைல் ஆற்றைவிட சிறிது குறைவு என்பது பெரும்பாலான புவியிலாளர்களின் கணிப்பு. எனினும் இதை பிரேசில் மற்றும் பெரு நாட்டை சேர்ந்த சில அறிவியலாளர்கள் ஏற்க மறுக்கிறார்கள். இந்த ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு ஏறத்தாழ ஒரு விநாடிக்கு 209,000 கன மீட்டர்—தோராயமாக ஆண்டுக்கு 6,591 கியூபிக் கிலோமீட்டர் ஆகும், இது இதற்கடுத்த ஏழு மிகப்பெரிய ஆறுகள் வெளியேற்றும் ஆறுகளைவிட கூடுதலாக உள்ளது- உலகின் ஆற்றில் கலக்கும் மொத்த ஆறுகளின் நீரில் அமேசானின் பங்கு 20% ஆகும்.[1]  அமேசான் கால்வாய் உலகின் மிகப்பெரிய வடிகால் பகுதி ஆகும், இது சுமார் 7,050,000 சதுர கிலோமீட்டர் (2,720,000 சதுர மைல்) பரப்பளவில் உள்ளது. அமேசான் பாயும் நாடுகள் இதன் தலைத் துணை ஆறுகளின் உருவாக்கம் பெரு, எக்குவடோர் நாடுகளில் இருந்தாலும், இதன் பெரும்பாலான ஆற்று படுக்கை பகுதி பிரேசில் நாட்டில் அமைந்துள்ளது.Đ அமேசான் ஆறு ஆயிரத்திற்கும் மிகுதியான துணையாறுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் 17 ஆறுகள் 1000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டன. வடிநிலம் அமேசானின் வடிகால் பகுதியே உலகின் மிகப்பெரியதாகும். இது தோராயமாக தென் அமெரிக்காவின் பரப்பில் 40 விழுக்காடு ஆகும். இதன் ஒரு நீர்பிடிப்பு பகுதி உள் ஆண்டிய மேட்டுநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி பசிபிக் பெருங்கடலுக்கு அருகில் உள்ளது. அமேசான் ஆறினால் அட்லாண்டிக் பெருங்கடலில் சேரும் நீரின் அளவு மிக அதிகமாகும். மழைக்காலத்தில் வினாடிக்கு 300,000 கன மீட்டர் அளவு வரை நீர்வரத்தும் 1973-1990 வரையான காலப்பகுதியில் தோராயமாக 209,000 கன மீட்டர் அளவும் நீர்வரத்து இருந்தது. அமேசான் வடிநிலமானது தென் அமெரிக்காவின் மற்றொரு பெரிய ஆறான ஓரினோகோவின் வடிநிலத்துடன் காசிகியுயர் கால்வாய் மூலம் இணைக்கப்படுகிறது. அதனால் இதை இயற்கையாக அமைந்த நீர் இணைப்பு என்பார்கள். கால்வாய் என்று சொன்னாலும் காசிகியுயர் என்பது மேல் ஓரினோ ஆற்றின் கிளை ஆறாகும். இது தெற்காக ஓடி அமேசானின் துணை ஆறாகிய ரியோ நீக்ரோ ஆற்றுடன் கலக்கிறது. தோற்றம் பெரு, ஈக்வடார் நாடுகளில் அமேசான் ஆறு பல ஆற்றுத்தொகுதிகள் உடைய பெரிய ஆற்று அமைப்பாகும். பல நேரடியாக மரானான், உகயாலி போன்ற ஆறுகளில் கலக்கிறது. மரானா, பாஸ்டாச, நுகுரே போன்ற பல ஆறுகள் முதன்மை அமேசான் ஆற்றில் கலக்கின்றன. பெரு நாட்டின் ஆண்டீய மலைத்தொடரில் உள்ள பனி மூடிய நவாடோ மிசிமி சிகரத்தின் பனிஏரியில் அமேசான் உருவாவதாக ௧௯௯௧, 20012007ம் ஆண்டுகளில் நிறுவப்பட்டது. இது டிடிகாகா ஏரிக்கு மேற்கிலும் லிமாவுக்கு தென் கிழக்கிலும் உள்ளது. நவாடோ மிசிமியிலிருந்து வரும் நீரானது குபிராடாஸ் கார்குசன்டா மற்றும் அபாசேடா ஆறுகளில் கலக்கிறது இவை உகயாலி ஆற்றின் துணை ஆறாகிய ரியோ அபுரிமாக் உடன் இணைகிறது. உகயாலி மரானான் உடன் இணைந்து முதன்மை அமேசான் ஆற்றை உருவாக்குகிறது. இந்த இடத்தையே பெரும்பாலான புவியியலாளர்கள் முதன்மை அமேசான் உருவாகும் இடமாக கருதுகிறார்கள். இங்குள்ள ஆற்றை பிரேசிலில் சோலிமோஸ் டாஸ் ஆகுஅஸ் என அழைக்கிறார்கள். ஆயிரம் மைல்கள் கடந்த பின் கரிய நிறமுடைய நீரினை உடைய ரியோ நீக்ரோ மண் நிறமுடைய அமேசானுடன் இணைகிறது. ஆறு மைல் வரையில் இரண்டும் கலக்காமல் அடுத்தடுத்து ஓடுகின்றன. வெள்ளம் அனைத்து அமேசான் துணை ஆறுகளிலும் ஓரே சமயத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதில்லை. பெரும்பாலானவற்றில் நவம்பர் மாதத்தில் வெள்ளம் ஏற்படத்துவங்கி ஜூன் வரை நீடிக்கும். ரியோ நீக்ரோவில் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் வெள்ளம் ஏற்பட துவங்கி ஜூன் மாத வாக்கில் வெள்ளம் குறையத்தொடங்கும். மெடிரிரா மற்ற அமேசான் துணை ஆறுகளில் வெள்ளம் ஏற்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே வெள்ளம் ஏற்பட்டு குறையந்துவிடும். மழைக்காலத்தில் ஆற்றின் ஆழம் சராசரியாக 40 அடியாகும். முதன்மை ஆறு தோராயமாக ஒன்று முதல் ஆறு மைல் அகலம் உடையது. பெரிய கடலில் செல்லும் கலங்கள் இதில் மனவுஸ் வரை செல்லலாம். சிறிய 3000 டன் அல்லது 9000 டன் எடையுடைய கலங்கள் மற்றும் கலத்தின் கீழ் பாகம் நீர் நிலையிலிருந்து 18 அடி வரை இருந்தால் அவை ஆற்றில் 3600 கிமீ வரை செல்லலாம். கழிமுகம் இதன் கழிமுகத்தின் அகலம் தொடர்பாக நிபுணர்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது அதற்கு காரணம் கழிமுகத்தின் புவியியல் அமைப்பாகும். பாரா ஆறு அமேசானுடன் சேர்த்து கணக்கிடப்படுகிறது. சில முறை பாரா ஆறு டோகன்டின்ஸ் (Tocantins) ஆற்றின் தனிப்பட்ட கீழ் பகுதியாக கணக்கிடப்படுகிறது., தனிப்பட்ட பாரா ஆற்றின் கழிமுகம் பெரியதாகும். பாரா மற்றும் அமேசான் ஆறுகள் பல்வேறு ஆற்று கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு இடையில் மரஜா (Marajó)தீவு அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுவிட்சர்லாந்து நாட்டு அளவுக்கு பெரியதாகும். காட்டு உயிர்கள் உலகின் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு அமேசான் காடுகளில் வசிக்கின்றன. அமேசான் ஆற்றுப்படுகையும் மழைக்காடுகளும் 5.4 மில்லியன் சதுர கி.மீ (2.1 மில்லியன் சதுர மைல்) க்கும் மேலானதாகும். அமேசான் ஆற்றில் 3,000 க்கும் அதிகமான மீன் வகைகள் கண்டறியப்பட்டுள்ளது. அமேசான் ஆற்று டால்பின் அமேசான் மற்றும் ஒரினோகோ ஆற்றுப் பகுதியில் வசிக்கிறது. இதுவே ஆற்று டால்பின் வகைகளில் மிகப்பெரியதாகும். இது ௦௦ அடி வரை வளரக்கூடியது. இங்கு அதிகளவில் பிரன்கா என்ற மீன் வகை காணப்படுகிறது. இவை கூட்டமாக வாழும். இவை மாடு, மான் போன்ற உயிரினங்களை தாக்ககூடியவை. மனிதர்களும் தாக்கப்பட்டுள்ளார்கள். எனினும் சில வகை பிரன்காக்களை மனிதர்களை தாக்குகின்றன. குறிப்பாக சிவப்பு வயிற்று பிரான்கா மனிதரை தாக்கும் வகையாகும். அனகோண்டா வகை பாம்புகள் அமேசான் படுகையின் கரையில் காணப்படுகிறது. இது பெரிய பாம்பினங்களில் ஒன்றாகும். இவை பெரும்பாலும் நீரிலேயே வாழ்கின்றன. இதன் மூக்கு பகுதி மட்டும் நீர் மட்டத்துக்கு வெளியே இருக்கும். அமேசான் மழைக்காடுகள் முதன்மைக் கட்டுரை: அமேசான் மழைக்காடு அண்டெஸ் மலைத்தொடரின் கிழக்கில் இருந்து அமேசான் மழைக்காடு தொடங்குகிறது. இதுவே உலகின் மிகப்பெரிய மழைக்காடும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். இது உலகில் வெளியடப்படும் கார்பன்-டை-ஆக்சைடு வளியை பெருமளவில் உட்கொள்ளும் திறன் வாய்ந்தது. இந்த மழைக்காடுகளைக் காப்பது இந்நாட்களில் முக்கிய விடயமாக இருக்கிறது. மிகவும் ஈரப்பதம் கொண்ட அமேசான் படுகை இம்மழைக்காடுகளுக்கு அரணாக விளங்குகிறது. இப்பகுதியில் அமேசான் ஆறும் இதன் நூற்றுக்கணக்கான துணையாறுகளும் மிகவும் மெதுவாக ஓடி பின் கடலில் கலக்கின்றன. உயிரியல் வளம் மிக்க இம்மழைக்காடு, 25 இலட்சம் வகையான பூச்சியினங்களுக்கும் ஆயிரக்கணக்கான தாவர வகைகளுக்கும் ஏறத்தாழ இரண்டாயிரம் பறவைகள், பாலூட்டிகள் ஆகியவற்றிற்கும் இருப்பிடமாக விளங்குகிறது. உலகின் மொத்தப் பறவையினங்களில் ஐந்தில் ஒரு பகுதி இக்காடுகளில் வசிக்கின்றன. அமேசான் காடுகள் பெரும்பாலும் பிரேசில் நாட்டில் அமைந்துள்ளதால், அந்நாடு உல்கிலே உருசியாவிற்கு அடுத்த இரண்டாவது பெரிய காடு வளத்தை (பரப்பளவில் 4,776,980 ச.கி.மீகள்)கொண்டதாக உள்ளது. மேற்கோள்கள் பகுப்பு:தென் அமெரிக்க ஆறுகள்
அமேசான் நதி எங்கு உள்ளது?
தென் அமெரிக்க
154
tamil
9ce215934
சாக்கிரட்டீசு (Socrates) (கி.மு 470/469 – கி.மு 399, பிப்ரவரி 15 ) [1] ஏதென்சைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர் (தத்துவஞானி) ஆவார். இவர் எப்போது பிறந்தார் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவருடைய சீடர் பிளேட்டோவும் [2] புகழ்பெற்ற தத்துவஞானி ஆவார். கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீசு போற்றப்படுகிறார்.மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர் சாக்ரடீசு என்பது இவருடைய சிறப்பாகும். சாக்ரடீசு நன்னெறித் துறையில் அவரது பங்களிப்புக்கு புகழ்பெற்றவராக விளங்குகிறார் என்பது பிளாட்டோவின் உரையாடல்கள் மூலம் சித்தரிக்கப்படுகிறது. சாக்ரடீசு முரண்நகை மற்றும் சாக்ரடீசு வழிமுறை ஆகிய தத்துவக் கருத்துகளுக்காக தத்துவ அறிஞர் சாக்ரடீசு அறியப்படுகிறார். பிந்தைய கருத்து பொதுவாக பரவலான விவாதங்களில் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது, இது ஒரு வகையான கற்பித்தலும் ஆகும், இம்முறையில் தொடர்ச்சியான கேள்விகளுக்கு தனிப்பட்ட பதில்களைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், அடிப்படை நுண்ணறிவை ஊக்குவிப்பதற்காகவும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒளிர்வுக் கோட்பாடு தொடர்பான முக்கியமானதும் நிலையானதுமான கோட்பாடுகளுக்கு பிளாட்டோவின் சாக்ரடீசு பங்களித்திருக்கிறார். மேலும் இவருடைய கருத்தியலும் அணுகுமுறையும் தொடர்ந்து வந்த மேற்கத்திய தத்துவத்திற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அளித்துள்ளன. சாக்ரடீசு புதிர் சாக்ரடீசு எழுதிய படைப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இதனால் அவரைப்பற்றியும், அவருடைய தத்துவங்கள் பற்றியுமான தகவல்கள் இரண்டாம்நிலை ஆதாரங்களில் தங்கியிருக்கின்றன. மேலும், இந்த ஆதாரங்களின் உள்ளடக்கங்களுக்கு இடையிலான நெருக்கமான ஒப்பீடு சில முரண்பாடுகளை அம்பலப்படுத்துகிறது, இதனால் உண்மையான சாக்ரடீசைப் பற்றிய ஆழமான உண்மைகளை அறிந்துகொள்ளும் சாத்தியக்கூறுகள் பற்றிய கவலைகள் உருவாகின்றன. இந்த ஐயமே சாக்ரடீசு புதிர் [3] அல்லது சாக்ரடீசு வினா [4][5] எனப்படுகிறது. சாக்ரடீசு மற்றும் அவரது சிந்தனைகளைப் புரிந்து கொள்ள விரும்பும் ஒருவர், முதலில் பிளாட்டோவின் படைப்புகளைப் படித்துத் தெளிய வேண்டும். இவையே சாக்ரடீசின் வாழ்க்கை மற்றும் தத்துவங்களுக்கு முக்கியமான மூலங்களாக உள்ளன[6] செனொபானின் படைப்புகளும் இத்தகையதே ஆகும்.[7].. இந்தப் படைப்புகள் சாக்ரடிகோய் லோகோ அல்லது சாக்ரடிக் உரையாடல்கள் எனப்படுகின்றன. இவற்றில் சாக்ரடீசு சம்பந்தமான வெளிப்படையான உரையாடல்களின் அறிக்கைகள் உள்ளன[8][9]. சாக்ரடீசின் வாழ்க்கை தொடர்பான உண்மைகளை கண்டுபிடிப்பதற்கு கிடைக்கும் பண்டைய ஆதாரங்களில் செனொபான் தவிர பெரும்பாலும் தத்துவ மற்றும் வியத்தகு நூல்களாகவே இருக்கின்றன. சாக்ரடீசின் சமகாலத்திய எந்தவொரு நேரடியான வரலாறும் இல்லை. கிடைக்கபெற்ற ஆதாரங்களின் வேறுபாடுகள் விளைவித்த அனைத்து கருத்துகளுக்கும் இடையில் இரண்டு காரணிகள் சாக்ரடீசு தொடர்பான அனைத்து மூலங்களிலிருந்தும் வெளிப்படுகின்றன. அவர் அசிங்கமானவராக இருந்திருக்கலாம் என்றும், சாக்ரடீசு ஒரு புத்திசாலித்தனமான அறிவைக் கொண்டவராக இருந்தார் என்றும் தெரிகிறது [10][11]. சாக்ரடீசின் பிறப்பு மற்றும் ஆரம்ப காலம் சாக்ரடீஸ் எப்போது பிறந்தார் என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை . 2450 ஆண்டு களுக்கு முன்பு அதாவது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ்.இவர் கிரேக்க நகரமான ´ஏதென்ஸ்´இல் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு சிற்பி. இவரது தாயார் ஒரு மருத்துவச்சி. உலகில் எந்த மதமும் தோன்றாத அந்த காலக்கட்டத்திலேயே தன் சுய முயற்சியால் மனித அறிவின் தோற்றம், தர்க்க சாஸ்திரம் ஆகியவற்றில் திறன் பெற்று விளங்கினார். கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகின்றார். கேள்விகேட்கும் திறன் சிறுவனாக இருந்தபோதே சாக்ரடீஸ் கேள்விகள் கேட்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். எதைப்பற்றியும் கேள்வி கேட்டு, அது பற்றிய உண்மையை அறிந்துகொள்வதே சாக்ரடீசின் வழக்கமாகும். நீதி, நியாயம், ஆத்மா, கடவுள், சமூகம், அரசு, வழக்கம் என எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தினார் சாக்ரடீஸ். சாக்ரடீஸ் பொது இடங்களில் மக்களைச் சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும், அதிக நேரங்களை செலவிட்டார். ஆனால் மற்றவர்கள் சக்ரடீஸிடம் கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாகப்பதில் அளிக்காமல் சாக்ரடீஸ் கேள்வி எழுப்புவார். ஏதாவது ஒரு பிரச்சினையை மையமாகக் கொண்டு மக்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு, அவர்களிடமிருந்தே பதிலைக் கேட்டு, அந்தப் பிரச்சினையை எழுப்பியவர்களே காரணத்தைப் புரிந்து கொள்ளுமாறு செய்வார் சாக்ரடீஸ். பிரச்சினையின் காரணத்தைத் தமது கேள்வியின் மூலம் உணரச்செய்த சாக்ரடீஸ், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் கேள்விகளைக் கேட்டார். இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள் தெளிவு பெற்றனர்; பிரச்சினையைப் புரிந்தனர். அதற்கான காரணத்தையும் அறிந்தனர். அதைப் போக்குவதற்குச் செய்ய வேண்டியவற்றையும் அவர்கள் உணர்ந்தனர். இதனால், ஏதென்ஸ் மக்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கெல்லாம் சாக்ரடீஸிடம் தெளிவு கிடைக்கும் என்று நம்பினர். சாக்ரடீஸின் எழுத்துக்களும், சொற் பொழிவுகளும் மக்களைச் சிந்திக்க வைத்தது; செயல்களில் ஈடுபடவும் அவர்களைத் தூண்டியது சாக்ரடீசின் மாணவர் சாக்ரடீஸின் இந்தக் கேள்வி கேட்கும் முறை ஏதென்ஸ் நகர இளைஞர்களைக் கவர்ந்தது. இளைஞர்கள் மத்தியில் சாக்ரடீஸ் எப்போதும் காட்சி தந்தார். சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருந்தது.அவரின் கேள்வி கேட்கும் பழக்கம் இளைஞர்களிடமும் தொற்றிக் கொண்டது.கிரேக்க சமூகத்தில் காலகாலமாக கடைப்பிடித்து வந்த மூடக் கொள்கைகளையெல்லாம் சாக்ரடீஸை சிந்திக்க வைத்த தல்லாமல், மெல்ல இளைஞர்களையும் மாற்ற ஆரம்பித்திருந்தது.இதுபோல் சாக்ரடீசின் கொள்ககளால் ஈர்க்கப்பட்டு பிளேட்டோவும் சாக்ரடீசுடன் சேர்ந்தார்.பின் நாளில் இவரும் உலக புகழ் பெற்ற தத்துவஞானி ஆனார். சாக்ரடீசின் மீது பழி இளைஞர்களையும் மாற்ற ஆரம்பித்தது ஏதென்ஸ் அரசுக்கு தெரியவந்தது.சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருப்பது சிலருக்கு எரிச்சலைத் தந்தது.சாக்ரடீஸ் தினம்தோறும் இளைஞர்களி டம் உரையாடியது கிரேக்க ஆட்சியாளர்களை கோபப்படுத்தியது. அவர் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன . அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் என்ற மேடைப் பேச்சாளனும் சாக்ரடீஸ் மீது வழக்குத் தொடுத்தனர். இதற்கு சாக்ரடீஸ் மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பே காரணமாகும். இளைஞர்களைத் தூண்டி விடுவதாகவும், மத எதிர்ப்பைக் கிளப்பி விடுவதாகவும், தனக்குப் பெருமை சேர்ப்பதற்காக சாக்ரடீஸ் தவறான வழிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்காகவும், அதன் வழியாக ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் சாக்ரடீஸ் மீது அனிடஸூம், லைகோனும், மெலிட்டஸூம் குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர். மரண தண்டனை எண்ணற்ற குற்றச்சாட்டுகளையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது . அப்போது மெலிடஸ் என்பவன் சாக்ரடீஸ் மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இளைஞர்களைக் கெடுக்கிறார், கிரேக்கர்கள் தொழுது வணங்கும் கடவுள்களைத் தூற்றி, ஒரு புதுக்கடவுளைத் தானே உருவாக்குகிறார், வானத்தைப் பற்றியும் நிலத்தைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார் (ஏனெனில் அக்காலக்கட்டத்தில் கிரேக்கர்கள் இயற்கையையே கடவுளாக வழிபட்டனர்). சந்திரனை மண் என்றும் , சூரியனைக் கல் என்றும் சொல்கிறார். புதிய மதக் கோட்பாடுகளைப் புகுத்துகிறார். சாக்ரடீஸ் மிகவும் தீயவர். இவருக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்று கூறினான் . இதற்கு பதில் அளித்த சாக்ரடீஸ், 'என்னை வழக்கு மன்றத்தில் நிறுத்திய என் எதிரிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி குறுக்கு விசாரணை செய்ய நான் விரும்பவில்லை. என்னுடைய நியாயமான எதிரிகள் அநீதியும் அறிவின்மையும் தான். நான் கல்லையும் மண்ணையும் ஆண்டவன் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறேன். ஆண்டவனைப் பற்றியும் அவனுடைய படைப்பைப் பற்றியும் ஆராய்ச்சி செய்வது நாத்திகம் என்றால் ஆண்டவனை ஒப்புக்கொள்ள எங்கே மறுத்து விடுவார்களோ என்று பயப்படுவது அதை விட நாத்திகம்' என்றார். இதன் பின்னர் நீதி மன்றத்தில் தீர்ப்பு கூறும் தருணம் வந்தது. மரணம், மன்னிப்பு என்ற இரண்டு பெட்டிகள் வைக்கப்பட்டன . நீதிக் குழுவின் உறுப்பினர்கள் 501பேர் வாக்குப்பதிவு செய்யத் தொடங்குகின்றனர். 220 பேர் சாக்ரடீஸை மன்னித்து விடுமாறும், 281 பேர் மரண தண்டனை அளிக்கவும் வாக்களித்தனர். நீதிபதிகள் சாக்ரடீஸ் குற்றவாளி தான் என்று தீர்ப்புக்கூறி அவருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை சாக்ரடீஸையே அறிவிக்கும்படி அறிவித்தனர். தாம் எந்தவிதக் குற்றமும் செய்யவில்லை என்றும்; தம் தாய் திரு நாட்டிற்குத் தமது செயல்களின் மூலம் நன்மையே செய்ததாகவும், அதன் பொருட்டு இந்த நீதிமன்றம் தமக்குத் தண்டணைக்குப் பதிலாக பாராட்டும், பரிசும்தான் கொடுத்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டார் சாக்ரடீஸ். ஆனால் தண்டனை வழங்குவதாக இந்த நீதி மன்றம் முடிவு செய்தால், அது அபராதத் தொகையாக இருக்க வேண்டும் என்றும்; அந்த அபராதத் தொகையைத் தமது நண்பர்கள் அரசுக்குச் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் நீதிமன்றத்தில் சாக்ரடீஸ் முழங்கினார். சாக்ரடீஸ் தமது செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பார் என்று நீதிபதிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக அவர் நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தது நீதிபதிகளுக்கு எரிச்சலையே ஊட்டியது. அதனால் சாக்ரடீஸை விஷம் கொடுத்துக் கொல்ல வேண்டும் என்று கி.மு. 339ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இறப்பு சில காரணங்களினால் 30 நாட்கள் கழித்து தண்டனை நிறைவேற்றப்படும் என்றும், அதுவரை சாக்ரடீஸின் காலை சங்கிலியால் பிணைத்து வைக்க வேண்டும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.பின் தண்டனையை நிறைவேற்றும் நாள் வந்தது .விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ், “இனி நான் செய்ய வேண்டியது என்ன?” என்றார். அதற்கு, “கோப்பையில் உள்ள விஷத்தை முழுவதுமாக நீங்கள் குடிக்க வேண்டும. குடித்து முடித்ததும் சிறைக்குள்ளேயே நீங்கள் நடந்து கொண்டிருக்க வேண்டும். உங்கள் கால்கள் செயல் இழக்கும் போது படுத்துக்கொள்ள வேண்டும்” என்றான் சிறைப்பணியாளன். கண் கலங்காமல், சிரித்த முகத்துடன் ஒரு கோப்பை விஷத்தையும் குடித்து முடித்தார் சாக்ரடீஸ். அதைக் கண்ட நண்பர்கள் அனைவரும் அழுது தீர்த்தனர். “பெண் மக்களைப் போன்று நீங்களும் ஏன் கண்ணீர் சிந்துகிறீர் கள்?” என்று சிரித்தபடி கேட்டுவிட்டு,சாக்ரடீஸ் நடக்கத் தொடங்கினார். சிறிது நேரம் நடந்து முடிந்ததும், அவர் மல்லாந்து படுத்துக் கொண்டார்.விஷம் கொடுத்த பணியாளன், சாக்ரடீஸின் கால்களை அமுக்கியபடி, “நான் உங்களை கால்களை அமுக்குவது உங்களுக்குத் தெரிகிறதா?” என்றான்.“இல்லை” என்றார் சாக்ரடீஸ்.சிறிது நேரத்தில் அவர் விழிகள் மூடின. சாக்கிரட்டீசின் முறை சாக்ரட்டீசிய முறை அல்லது எலன்க்கோசு (elenchos) முறை என அறியப்படுகின்ற இவருடைய மெய்யியல் ஆராய்வு முறையே, மேற்கத்திய சிந்தனைகளுக்கு இவரது முக்கியமான பங்களிப்பாகும். இந்த முறையை அவர் பெரும்பாலும் முக்கியமான நல்லொழுக்க எண்ணக்கருக்களை மெய்த்தேர்வு செய்வதில் (பரிசோதிப்பதில்) பயன்படுத்தினார். இதற்காக, சாக்கிரட்டீசு, அறநூல் அல்லது நல்லொழுக்கத் தத்துவத்தினதும் அதனால் பொதுப்படையான தத்துவஞானத்தினது தந்தையுமாக, ஊற்றுக்கண்ணுமாகக் கருதப்பட்டுவருகிறார். மேற்கோள்கள் புற இணைப்புகள் at Curlie at the Indiana Philosophy Ontology Project on In Our Time at the BBC Project Gutenberg e-texts on Socrates, amongst others: (see also Wikipedia articles on Dialogues by Plato) , such as the Memorablia and Hellenica. at பகுப்பு:கிமு 399 இறப்புகள் பகுப்பு:கிமு 470 பிறப்புகள் பகுப்பு:கிரேக்க மெய்யியலாளர்கள் பகுப்பு:குடியியற் சட்டமறுப்பு
உலகில் முதல் தத்துவஞானி யார்?
சாக்ரடீசு
430
tamil
40d3566db
இலத்தீன் அமெரிக்கா (Latin America, எசுப்பானியம்: América Latina or Latinoamérica, போர்த்துக்கேயம்: América Latina, பிரெஞ்சு: Amérique latine, இடாய்ச்சு: Latijns-Amerika) எனப்படுவது அமெரிக்க கண்டங்களில் உள்ள ரோமானிய மொழிகள் வழக்கத்தில் இருக்கும் பகுதிகளை குறிப்பதாகும். எசுப்பானியம், போர்த்துக்கேயம் மற்றும் பிரெஞ்ச் ஆகியவை இங்கு அதிக அளவில் பேசப்படுகின்றன[3][4]. இதன் மொத்த பரப்பு ஏறேக்குறைய 21,069,500 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். இது மொத்த புவியின் பரப்பில் 3.9 சதமும், நிலப்பரப்பின் அளவில் 14.1 சதமும் ஆகும். 2013 வரையிலான இதன் மக்கள் தொகை 59 கோடி ஆகும்[5]. மற்றும் இதன் கூட்டு உள்நாட்டு உற்பத்தி 7368 பில்லியன்[6]. அர்செண்டினா, பொலிவியா, பிரேசில், சிலி, கொலம்பியா, கோசுடா ரிகா, கூபா, டொமினிகன் குடியரசு, ஈகுவடார், எல் சால்வடோர், குவாத்தமாலா, எயித்தி, ஓண்டுரசு, மெக்சிகோ, நிகரகுவா, பனாமா, பராகுவே, பெரு, உருகுவே மற்றும் வெனிசுலா ஆகியவை இலத்தீன் அமெரிக்காவின் பகுதிகலாக உள்ளன. வரலாறு காலனியாதிக்கத்தின் முந்தைய வரலாறு இலத்தீன் அமெரிக்காவில் மனிதர்கள் வாழ்ததற்கான அடையாளங்களின் மிகவும் பழமையானவை, தெற்கு சிலி பகுதிகளில் கானக்கிடைக்கின்றன. இவை சுமார் 14000 வருடங்களுக்கு முந்தயவை. இதன் பிறகான முதல் குடியேற்றம் லாசு வேகாசு கலாச்சாரம் ஆகும்[7]. இது 8000 முதல் 4600 ஆண்டுகளுக்கு இடையில் ஈக்குவடார் நாட்டில் ஏற்பட்டது. தொடர்ந்து கொலம்பியா, பொலிவியா, பெரு ஆகிய நாடுகளிலும் பழங்குடிகளின் குடியேற்றங்கள் அமைந்தன. பிற்பாடு இலத்தின் அமெரிக்க பகுதிகள் பல நாகரீக குழுக்கள் உருவாகின. ஆசுடெக்குகள், டால்டெக்குகள், கரீபியர், டூபி, மாயா மற்றும் இன்கா ஆகிய குழுக்கள் இவர்களின் முக்கியமானவர்கள். குறிப்பாக ஆசுடெக் மக்கள் இலத்தீன் அமெரிக்க பகுதிகளில் அதிகம் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களாக இருந்தனர். இவர்களின் ஆட்சி, அமெரிக்காவின் எசுப்பானியர்களின் வருகையோடு முடிவு பெற்றது. ஐரோப்பிய காலனியாக்கம் 1492ல் கொலம்பசு அமெரிக்காவை அடைந்ததில் இருந்து, இலத்தீன் அமெரிக்காவின் ஐரோப்பிய காலனி ஆதிக்கம் தொடங்கியது. எர்னான் கோட்டெஸ் தலைமையிலான எசுப்பானிய படை ஒன்று வட அமெரிக்க பகுதிகளில் இருந்த ஆசுடெக் நகரங்களை முற்றுகையிட்டு அழித்தனர். போலவே பிரான்சிஸ்கோ பிசாரோ தலைமையிலான படை ஒன்று தென் அமெரிக்க பகுதிகளில் இருந்த இன்கா பேரரசை கைப்பற்றி அழித்தது. இதன் மூலம் வடக்கு மற்றும் தென் மேற்கு அமெரிக்க பகுதிகள் எசுப்பானிய பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. மேலும் குடியேற்றங்களை உருவாக்குவதில், எசுப்பானியா மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகளுக்கிடையில் ஏற்ப்பட்ட பினக்குகளின் முடிவில், 1494ல் இரு காலனிகளுக்கு இடையிலான எல்லைக் கோடு தீர்மானிக்கப்பட்டது. இதன் மூலம், இலத்தீன் அமெரிக்காவின் வடக்கு மற்றும் மேற்கு கரை பகுதிகள் எசுப்பானிய பேரரசின் கீழும், கிழக்குக் கரைப் பகுதி போர்த்துக்கலின் கீழும் கொண்டுவரப்பட்டன. இவர்களை தொடர்ந்து பிரித்தானியா, பிரான்சு மாற்றும் ஆலந்து ஆகிய நாடுகள் அமெரிக்காவை ஆக்கிரமித்து தமது குடியேற்றங்களை அங்கு உருவாக்கின. இதன் மூலம் பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் அலாசுகா முதல் சிலி வரை அமெரிக்காவின் அனைத்து பகுதிகளும் ஐரோப்பிய குடியேற்றங்களாக மாற்றப்பட்டன. பழங்குடிகளின் அழிவு தொடர் குடியேற்றங்களின் மூலம் அமெரிக்க பழங்குடிகளின் கலாச்சாரம் நசுக்கப்பட்டு, ஐரோப்பிய காலாச்சாரம் பரப்பட்டது. உரோமன் கத்தோலிக்கம் அறிவிக்கப்படாத அரசு சமயமானது. கத்தோலிக்க சபைகள் ஆட்சி அதிகாரம் மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் வலுவானதாக இருந்தன. இதன் மூலம் அமெரிக்க பழங்குடிகளின் சமய உரிமை மறுக்கப்பட்டு, கிருத்துவத்துக்கு மதம் மாற நிர்பந்திக்கப்பட்டனர். மேலும் ஐரோப்பியர்களின் மூலம் பரவிய பெரியம்மை மற்றும் தட்டம்மை போன்ற கொள்ளை நோய்களின் மூலம் மிகப்பெரும் அளவிலான பழங்குடிகள் மாண்டனர். இவ்வாறு இறந்தவர்களின் எண்ணிக்கைப் பற்றிய விபரங்கள் இன்றைக்கு சரிவர கிடைப்பதில்லை. இருப்பினும் மொத்த பழங்குடிகளின் மக்கள் தொகையில் 25% முதல் 85% வரை இறந்திருக்காலாம் என நம்பப்படுகின்றது. மீதம் இருந்த பழங்குடிகளும் காலனியவாதிகளின் சுரங்கங்களில் கட்டாய வேலை வாங்கப்பட்டனர். இந்த காலக்கட்டத்தில் ஏற்பட்ட இனக்கலப்பின் மூலம் மெசுடொசோ எனப்பட்ட புதிய ஐரோப்பிய-அமெரிக்க கலப்பு இனம் தோன்றத்தொடங்கியது. காலனியாதிக்கம் முடிவுக்கு வந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலத்தீன் அமெரிக்காவின் பெரும்பான்மையினராக மெசுடொசோக்களே இருந்தனர். விடுதலைப் போராட்டம் 1804ல் எயித்தியில் டூசான் லூவர்சூர் தலைமையிலான அடிமைகளின் கிளர்ச்சியை தொடர்ந்து, அந்த நாடு பிரான்சிடமிருந்து விடுதலை அடைந்தது. தொடர்ந்து அந்த நாட்டில் அடிமை முறை ஒழிக்கப்பட்டதுடன் சுதந்திர கூட்டாச்சி அமைக்கப்பட்டது. இது மற்ற இலத்தீன் அமெரிக்க நாடுகளில் விடுதலைப் போராட்டங்கள் தோன்ற தூண்டுதலாக இருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் எசுப்பானிய மேலாதிக்கத்துக்கு எதிரான கலகங்கள் தோன்றத் தொடங்கின. தாய் நாட்டில் பிறந்த எசுப்பானியார்கள் உயர் சாதியினர் எனவும், இலத்தீன் அமெரிக்காவில் பிறந்த எசுப்பானியர்கள் கிரியோலோ அல்லது கீழ் சாதியினர் எனவும் பாகுபடுத்தப்பட்டனர். இது அங்கு விடுதலைப் போர் ஏற்பட தூண்டுகோலாக அமைந்தது. மிகுவேல் கோசுடிலா, சிமோன் பொலிவார், யோசே சான் மார்ட்டின் ஆகியோர் முறையே மெக்சிகோ, வெனிசுலா மற்றும் அர்சென்டினா ஆகிய பகுதிகளில் மக்களை திரட்டி விடுதலைப் போரில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் அரச படையினரால் மக்கள் எழுச்சி அடக்கப்பட்டாலும் சிமோன் பொலிவார், யோசே சான் மார்ட்டின் போன்ற இளந்தலைமுறை தளபதிகளால் மக்கள் போராட்டம் மேலும் வலுவடைந்தது. தொடர்ந்த எழுச்சிகளின் பலனாக 1825க்கும் உள்ளாகவே போர்டோ ரிகோ மற்றும் கூபா தவிர்த்த அனைத்து எசுப்பானிய காலனிய பகுதிகலும் விடுதலையடைந்தன. 1822ல் சுதந்தர பிரேசிலில் சட்டத்திற்குட்ட முடியாட்சி ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. அதே ஆண்டு மெக்சிகோவின் இராணுவ தளபதி அகசுடின் தி டுபைட் தலைமையில் முடியாட்சி அமைக்கப்பட்டது. இறுப்பினும் சிறிது காலத்திலேயே இது கலைக்கப்பட்டு 1823ல் மெக்சிகோ குடியரசு மலர்ந்தது. மக்கள் பரம்பல் இனக்குழுக்கள் இலத்தீன் அமெரிக்கா பல்லின மக்கள் பரம்பலை கொண்ட ஒரு பிரதேசம். இந்த இனங்களின் பரவல் நாட்டுக்கு நாடு வேறுபடும். தாயக அமெரிக்கர்கள், ஆசியர்கள், ஆப்பிரிக்கர்கள், மெசுடொசோக்கள் (ஐரோப்பிய-தாயக அமெரிக்கர்களின் கலப்பு இனம்), முலாட்டோக்கள் (ஐரோப்பிய-ஆப்பிரிக்கர்களின் கலப்பு இனம்), ஐரோப்பியர்கள் (குறிப்பாக எசுப்பானிய மற்றும் போர்த்துக்கேய நாட்டவர்) மற்றும் சாம்போக்கள் (தாயக அமெரிக்கர்கள்-ஆப்பிரிக்கர்களின் கலப்பு இனம்) ஆகிய இனங்கள் இலத்தீன் அமெரிக்காவில் அதிகம் காணப்படுகின்றன. மொழி எசுப்பானியம் மற்றும் போர்த்துக்கேயம் ஆகிய இரண்டும் இலத்தீன் அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழிகள் ஆகும். மொத்த மக்கள் தொகையில் 60% பேர் எசுப்பானிய மொழியையும், 34% பேர் போர்த்துக்கேய மொழியையும், 6% பேர் மற்ற மொழிகளான கெச்வா, மாயன், குவாரனி, ஐமரா, நாகவற் மொழி, ஆங்கிலம், இடாய்ச்சு, பிரெஞ்ச் மற்றும் இத்தாலிய மொழிகளை பேசுகின்றனர். போர்த்துக்கேய மொழி பிரேசில் நாட்டில் மட்டும் பேசப்படுகின்றது. அதைத் தவிர்த்த மற்ற அனைத்து இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் எசுப்பானியம் ஆட்சி மொழியாக உள்ளது. பிரெஞ்ச், எயித்தி மற்றும் கயானா ஆகிய நாடுகளில் பேசப்படுகின்றது. அமெரிக்க பழங்குடி மொழிகள் பெரு, குவாத்தமாலா, பொலிவியா, பராகுவே மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் அதிக அளவில் பேசப்படுகின்றன. பனாமா, ஈகுவடார், பிரேசில், கொலம்பியா, வெனிசுலா, அர்செண்டினா மற்றும் சிலி ஆகிய நாடுகளிலும் குறிப்பிடத்தகுந்த அளவில் பேசப்படும் இவை பிற நாடுகளில் மிகக் குறைந்த அளவே பேசப்படுகின்றன. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது மெக்சிகோ, அதிக அளவில் பழங்குடி மொழி பேசுவோரைக் கொண்டுள்ளதாக உள்ளது. உருகுவே பழங்குடி மொழி வழக்கில் இல்லாத ஒரே இலத்தீன் அமெரிக்க நாடாகும். மதம் கிறித்தவம், இலத்தீன் அமெரிக்காவின் மிகப் பெரும்பான்மையான மதம் ஆகும்[8]. இவர்களில் 70% பேர் உரோமன் கத்தோலிக்கர்கள். பிரேசில், பனாமா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளில் சீர்திருத்தத் திருச்சபை சீரான வளர்ச்சியை கொண்டுள்ளது. இதைத் தவிர்த்த பழங்குடியினர் நம்பிக்கை, யூதம், இசுலாம் போன்றவை சிறிய அளவு மக்களால் கடைபிடிக்கபடுகின்றது. கலாச்சாரம் இலத்தீன் அமெரிக்க கலாச்சாரம் என்பது அமெரிக்க பூர்வீக குடிகள், ஐரோப்பியர்கள் மற்றும் ஆப்பிரிக்கர்களின் காலாச்சார கலவை ஆகும். பண்பாடு மற்றும் வாழ்க்கை முறையில் பூர்வீக குடிகளின் முறைகளும், சமயம், கலை, ஓவியம் போன்றவற்றில் ஐரோப்பிய தாக்கமும் அதிகம். இசை, நடனம் ஆகியவவை ஆப்பிரிக்க கலாச்சாரத்தை ஒத்ததாக உள்ளன. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் by Benjamin Dangl, The Nation, March 4, 2009] – Interview with Michael Reid of The Economist] பகுப்பு:கண்டங்கள்
மெக்சிகோ நாட்டில் அதிகம் பேசப்படும் மொழி எது?
பழங்குடி மொழி
6,206
tamil
f135db96c
சர்தார் வல்லப்பாய் படேல் (ஆகத்து 10, 1875 - டிசம்பர் 15, 1950) (Sardar Vallabhbhai Jhaverbhai Patel, குஜராத்தி: વલ્લભભાઈ પટેલ, இந்தி: सरदार वल्लभभाई पटेल) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். குஜராத் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார்.[1] சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லப்பாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டார். வாழ்க்கை வரலாறு சர்தா வல்லபாய் படேல் லேவா படேல் சமூகத்திலிருந்து ஒரு குஜராத்தி குடும்பத்தில் பிறந்தார். சர்தார் வல்லபாய் படேலின் சொந்த ஊர் கரம்சாத் ஆகும். இவருக்கு சோமாபாய், நர்சிபாய் மற்றும் விதால்பாய் பட்டேல் என்ற மூன்று அண்ணன்களும், காசிபாய் என்ற தம்பியும் தைபா என்ற தங்கையும் உடன் பிறந்தவர்கள் ஆவார். அவரது தந்தை சுவாமிநாராயணனின் சம்ப்ரதாயின் ஒரு பக்தராக இருந்தார். அவரது தந்தை 20 கிமீ தொலைவில் உள்ள சுவாமிநாராயண் கோயிலுக்கு நடந்தே அழைத்துச் செல்வார். அது அவரது உடலை கட்டுகோப்பாகவும் வலிமையாகவும் உருவாக்க உதவியது. படேல் தனது 22 வயதில் தன்னுடைய மெட்ரிக்குலேசன் கல்வியில் தேர்ச்சி அடைந்தார். பட்டேல் தனக்குள்ளாகவே வழக்கறிஞர் ஆக வேண்டும் என தீர்மானித்து இங்கிலாந்து சென்று வழக்குரைஞர் படிப்பு படித்தார். அவர் மற்ற வழக்குரைஞர்களின் புத்தகங்களை வாங்கி படித்து இரண்டு ஆண்டுகளில் தேர்ச்சி அடைந்தார். சாதனைகள் சோமநாதபுரம் கோயிலை கே. எம். முன்ஷியுடன் இணைந்து மீண்டும் எழுப்ப காரணமாக இருந்தவர். அகமதாபாத்தில் வக்கீல் தொழில் நடத்தியபோது உள்ளூர் மக்களின் பிரச்சினைகளுக்கு உதவி, பிரபலமானார். 1917-ம் ஆண்டு மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார். சுதேசி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது காந்திஜியின் உரையைக் கேட்டவர், வக்கீல் தொழிலை உதறி சுதேசி இயக்கத்தில் இணைந்தார். • குஜராத்தில் கேடா என்ற இடத்தில் பயங்கர பஞ்சம். ஆங்கிலேய அரசிடம் வரி விலக்கு கேட்டு விவசாயிகள் போரா டினர். அரசு பணியாததால் காந்தி, படேல் தலைமையில் வரிகொடாமைப் போராட்டம் வெடித்தது. அரசு பணிந்தது. வரி ரத்தானது. படேலின் முதல் வெற்றி இது! • பார்டோலி என்ற இடத்தில் விவசாயிகள் நலன் காக்க நடைபெற்ற மற்றொரு சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் படேலுக்கு வெற்றி கிடைத்தது. அப்போதிருந்து மக்களால் ‘சர்தார்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். அதன் பிறகு போராட்டங்களும் சிறைவாசமும் அவருக்கு வாடிக்கையாகிப் போனது. • வட்டமேஜை மாநாட்டு தோல்விக்குப் பிறகு காந்தி, படேல் கைது செய்யப்பட்டனர். எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது இருவருக்கும் நெருக்கம் வளர்ந்தது. • சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்டார். இந்திய விவசாயிகளின் ஆன்மாவாக கருதப்பட்டார். நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் பணியாற்றினார். • நாடு முழுவதும் ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்துகொண்டிருந்த 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்ததுதான் உள்துறை அமைச்சராக அவர் ஆற்றிய முதல் பணி. வி.பி.மேனனுடன் இணைந்து அகண்ட பாரதத்தை அமைத்தார். • அகண்ட பாரதம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. அந்த இலக்குக்காக சகல வழிகளையும் பின்பற்றினார். சர்ச்சைகள், எதிர்ப்புகள் எழுந்தாலும் இரும்பு மனிதராக நின்று சமாளித்தார். • 75-ம் வயதில் இறந்தார். 1991-ல் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஒற்றுமைக்கான சிலை இவருடைய நினைவாக குஜராத் மாநிலத்தில் ஓடும் நர்மதா நதிக்கரையில், பட்டேலின் 143 வது பிறந்த நாளில் ஒற்றுமைக்கான சிலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.[2] இதுவே உலகின் மிக உயரமான சிலையாகும் (182 அடி). மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு:இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் பகுப்பு:1875 பிறப்புகள் பகுப்பு:1950 இறப்புகள் பகுப்பு:குஜராத் மக்கள் பகுப்பு:1ஆவது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு:காந்தியவாதிகள் பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
இந்தியாவின் இரும்பு மனிதர் யார்?
சர்தார் வல்லப்பாய் படேல்
0
tamil
35984f9a5
யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (~ 70 ஆண்டுகள்). மனிதர்கள் தவிர்ந்த மற்றைய விலங்குகளில் இதுவே அதிக நாட்கள் வாழும் தரைவாழ் விலங்கு ஆகும். யானைகள் மிகவும் வலிமையானவை. வேட்டை விலங்குகளும் காட்டுயிர்களின் உணவுப் படிநிலையில் உயர்நிலையிலுள்ளவைகளுமான சிங்கம் (அரிமா), புலி முதலியனவும் நெருங்க முடியாத வலிமை கொண்டவை. சிங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து, தனியாக வர நேரிடும் களைத்த அல்லது இளைத்த யானையைக் கொல்லும். ஆனால், இவ்வகை நிகழ்வுகள் மிகமிகக் குறைவே. யானைகள் குடும்பமாக வாழும். மேலும், இவை அதிக ஞாபக சக்தி கொண்டவை. யானைகளில் மூன்று சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன. அவை, ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், ஆசிய யானைகள் ஆகும். இவைகளுக்கிடையே சிறப்பான வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக, எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள்வரை உயிர்வாழ்கின்றன. ஆண் யானைக்குக் களிறு என்று பெயர். பெண் யானைக்குப் பிடி என்று பெயர். யானையின் குட்டியைக் கன்று என்றோ, குட்டியானை என்றோ சொல்வர். யானை உரக்க எழுப்பும் ஒலியைப் பிளிறுதல் என்பர். யானையினங்கள் ஆப்பிரிக்க யானைகள் ஆசிய யானைகளைவிட உருவத்தில் பெரியவை. பெரிய காது மடல்களைக் கொண்டுள்ளன. ஆப்பிரிக்க யானைகளில் ஆண், பெண் இரண்டும், தந்தங்களைக் கொண்டுள்ளன. ஆனால், ஆசியப் பெண் யானைகளில் தந்தம் அரிதாகவே காணப்படுகிறது. ஆப்பிரிக்க யானைகளின் முதுகுப்புறம், தலைக்கு அடுத்துச் சற்று உள்நோக்கி வளைந்தும், புடைத்த நெற்றி மேடுகள் இல்லாமல் சமமாகவும் இருக்கும். இவற்றின் துதிக்கையின் நுனியில் இரண்டு இதழ்கள் இருக்கும். ஆனால், முன்னங்கால்களில் நான்கு அல்லது ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் மூன்று நகங்களும் இருக்கும். ஆசிய யானைகளின் முதுகு சற்று உயர்ந்து மேடாக இருக்கும். நெற்றியில் இரு மேடுகளும், காது மடல்கள் சிறியனவாகவும் இருக்கும். துதிக்கை நுனியில் ஒரே ஓர் இதழும் இருக்கும் (மேல் புறம்). முன்னங்கால்களில் ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் நான்கு நகங்களும் இருக்கும். உணவும் வாழிடமும் யானைகள் இலையுண்ணிகள் அல்லது தாவர உண்ணிகள் ஆகும். இவை மூங்கில், கரும்பு போன்றவற்றை விரும்பி உண்கின்றன. இவை ஒரு நாளைக்கு 16 மணிநேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. மேலும், இவற்றின் செரிமானத் திறன் மிகவும் மந்தமானது. எனவே, இவை உண்பதில் 40 விழுக்காடே செரிமானம் ஆகிறது. எனவே, இவை நிறைய உணவு உட்கொள்ள நேரிடுகிறது. நன்கு வளர்ந்த யானைகள் நாள் ஒன்றுக்குச் சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன. உடலமைப்பு ஆண் யானைகள் பொதுவாக 3 மீட்டர் உயரமும் 6000 கிலோகிராம் எடையும் கொண்டவை. யானையின் தோல் மிகவும் தடிப்பானது. சுமார் 3 செ.மீ தடிப்பு இருக்கும். எனினும், மெத்தெனவே இருக்கும். இதனால், கொசு முதலியனவும் கடிக்கும். யானை வலுவான நான்கு கால்களைக் கொண்டிருக்கிறது. யானை பருமனான உடலைக் கொண்டிருந்தாலும் மலை மீதும், நெடுங்குத்தான இடங்களிலும் திறம்பட ஏறவும் இறங்கவும் வல்லது. "ஆனைக்கும் அடி சறுக்கும்" என்னும் பழமொழி, யானையின் நெடுங்குத்தான ஏற்ற இறக்கங்களில் அதன் நடைத்திறனைக் குறிப்பிட்டு எழுந்ததாகும். தும்பிக்கை யானையின் சிறப்பான உறுப்பு அதன் தும்பிக்கை. இது யானைகளில் மட்டுமே சிறப்பாகக் காணப்படுகின்றது. ஒருசில விலங்குகளிலே முன் மூக்குப் பகுதி சற்று நீண்டு இருந்தாலும் (நெடுமூக்குக் குரங்கு போல்), தும்பிக்கை போலும் நீண்ட உறுப்புடைய விலங்குகள் இல்லை. தும்பிக்கையானது மொத்தம் 40,000 தசைகளால் ஆனது. இது எல்லாப்புறங்களிலும் வளையக்கூடியது. தும்பிக்கையின் நுனியில் யானை மூச்சுவிடும் மூக்குத் துளைகளும், சின்னஞ்சிறிய, மிகவும் நுண்ணுணர்வு உள்ள விரல் நீட்சியும் இருக்கின்றன.[1] தும்பிக்கையால் சிறு குச்சி முதல் பெரிய மரம் வரை தூக்க முடியும். இவை பொதுவாக உணவை எடுப்பதற்கும் நீர் பருகுவதற்கும் உதவுகின்றன. பகை விலங்குகளின் தாக்குதலையும் யானை தும்பிக்கையால் எதிர்த்து முறியடிக்கிறது. கழுத்து குட்டையாக இருப்பதால் தும்பிக்கையின் முக்கியத்துவம் மிகப் பெரியது. தந்தம் யானைகள் இரண்டு தந்தங்களைக் கொண்டுள்ளன. இவைகளுக்கு யானைக் கோடு என்று பெயர். இந்த யானைக் கோடானது ஆசிய இந்திய யானைகளில் ஆண் யானைகளுக்கு (களிறுக்கு) மட்டுமே உண்டு பெண் யானைகளுக்குக் (பிடிக்குக்) கிடையா. ஆனால் ஆப்பிரிக்கக் காட்டு யானைகளில் ஆண் பெண் ஆகிய இருபால் யானைகளுக்கும் (களிறு, பிடி ஆகிய இரண்டிற்கும்) கோடு உண்டு. சுமத்ரா போர்னியோ பகுதிகளில் வாழும் யானை, இலங்கையின் யானைகளில் ஆண் பெண் (களிறு, பிடி) ஆகிய இருபால் விலங்குகளுக்கும் பெரும்பாலும் யானைக் கோடு கிடையா. யானைக் கோடானது யானையின் கடைவாய்ப் பற்களின் நீட்சியாகும். இதனால் இவைகளுக்கு யானைகளின் எயிறு அல்லது தந்தம் என்றும் பெயர் (எயிறு, தந்தம் என்றால் பல் என்று பொருள்). தந்தங்கள் 3 மீட்டர் (10 அடி) வரை வளரக்கூடியவை. மேலும் இவை 90 கிலோகிராம் எடை வரை இருக்கலாம். இத் தந்தங்கள் வியாபாரத்திற்காகவும் பயன்படுகின்றன. பல யானைகளைக்கொன்று எடுக்கப்பட்ட ஆறு டன் தந்தங்களை எதியோப்பியா நாடு 2015 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் தீயிட்டு அழித்தது.[2] தோல் யானையின் தோல் மிகவும் தடிப்பானது. உடலின் பெரும்பாலான பகுதிகளில் தடித்த தோல் காணப்படுகிறது. தோலின் தடிமன் ஏறத்தாழ இரண்டரை சென்டிமீட்டர் இருக்கும். எனினும் இதன் வாயைச் சுற்றியும் காதின் உட்பகுதியிலும் தோல் மெல்லியதாக உள்ளது. பொதுவாக ஆசிய யானைகளின் தோல் ஆப்பிரிக்க யானைகளை விட கூடுதலான முடியைக் கொண்டுள்ளது. யானைகள் பொதுவாக சேற்றையோ மண்ணையோ உடல் முழுதும் பூசிக் கொள்கின்றன. இது யானைச் சமூகத்தின் ஒரு முக்கியக் குணம் ஆகும். இது யானையின் தோலை சூரிய வெப்பத்தில் இருந்தும் கதிர் வீச்சில் இருந்தும் காத்துக் கொள்ள உதவுகிறது. யானையின் தோல் தடித்து இருப்பினும் இதன் உணர்திறன் அதிகம். இதனாலேயே யானைகள் சேற்றையோ அல்லது குளித்த பின் மண்ணை வாரித் தூற்றிக் கொள்கின்றன. கால்கள் யானையின் பெரிய உடலைத் தாங்குதற்கு ஏற்ப இவை வலிமையான கால்களைக் கொண்டுள்ளன. இவற்றின் கால்கள் செங்குத்தாக இருப்பதாலும் அகன்ற பாதங்கள் இருப்பதாலும் இவை நிற்பதற்கு தசையாற்றல் அதிகம் தேவையில்லை. எனவே இவற்றால் நீண்ட நேரம் இளைப்பாறாமல் நிற்க இயலும். ஆப்பிரிக்க யானைகள் நோயுற்றாலோ அல்லது காயம் பட்டாலோ தவிர பெரும்பாலும் அமர்வதில்லை. ஆனால் ஆசிய யானைகள் அடிக்கடி இளைப்பாறுகின்றன. யானை அகன்ற வட்டமான அடியைக் (பாதம்) பெற்றுள்ளது. ஆப்பிரிக்க யானைக்கு பின்னங்கால்களில் மூன்று உகிர்களும் (நகங்கள்) முன்னங்கால்களில் நான்கும் உள்ளன. ஆசிய யானைக்கு பின்னங்கால்களில் நான்கும் முன்னங்கால்களில் ஐந்துமாக உகிர்கள் உள்ளன. யானைகளால் நன்கு நீந்தவும் ஏறவும் முடியும். இவற்றால் குதிக்க இயலாது. காதுகள் யானைகள் நன்கு பெரிய அகன்ற மடல் போன்ற காதுகளைக் கொண்டுள்ளன. இவை யானையின் உடல் வெப்பநிலையைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. யானையின் காதுகள் இரத்த நாளங்கள் நிரம்பியனவாய் உள்ளன. வெப்பம் மிகுந்த இரத்தம் காதுகளில் பாயும் போது சுற்றுப்புறக் காற்று பட்டு குளிர்கிறது. பின் இது உடலுக்குள் சென்று வெப்பநிலையைக் குறைக்கிறது. இரத்தச் சுழற்சியின் காரணமாக இச்செயல் தொடர்ந்து நிகழ்ந்து வெப்பநிலை கட்டுக்குள் வைக்கப்படுகிறது. இதனாலேயே யானைகள் எப்போதும் காதுகளை அசைத்துக் கொண்டே இருப்பதைக் காணலாம். வளர்ந்த யானைக்காதுகளின் மேல் ஓரம் ஆசிய யானைக்கு வெளிப்புறம் மடிந்து இருக்கும், ஆப்பிரிக்க யானைக்கு உட்புறம் சுருண்டிருக்கும்.[3] அறிவாற்றல் தரையில் வாழும் விலங்குகளில் யானையின் மூளையே மிகவும் பெரியதாகும். இது ஐந்து கிலோ கிராமுக்கும் சற்று கூடிய எடையைக் கொண்டது. யானைகள் நினைவாற்றல் மிக்கன. விலங்குகளில் முதனிகளுக்கும் டால்பின்களுக்கும் அடுத்து யானைகளே அறிவாற்றல் நிரம்பியவையாகக் கருதப்படுகின்றன. மனிதர்களுக்கு அடுத்தபடியாக அறிவிற்சிறந்தவையாக யானைகள் கூறப்படுகின்றன. யானைகளின் மூளையும் அமைப்பிலும், நுட்பத்திலும் சிறந்தவை. கருவிகளைப் பயன்படுத்தவும் கற்றுக் கொள்கின்றன. பொதுவாக யானை இரக்கவுணர்ச்சி கொண்டது.[4] புலன் உணர்வு யானைகள் மிகச்சிறந்த கேட்கும் திறனையும் மோப்பத் திறனையும் பெற்றுள்ளன. யானையின் கண் சற்று கிட்டப்பார்வை கொண்டது. எனவே, ஒரு யானை தன் பார்வையை விட கூர்மையான கேட்பு சக்தியையும், நுட்பமான மோப்பத்திறனையுமே நம்பி வாழ்கிறது.[5] இவற்றின் தும்பிக்கையும் உணர்திறன் மிக்கது. இவற்றின் காதுகள் மட்டுமன்றி தும்பிக்கையும் அதிர்வுகளை உணர வல்லது. இவற்றின் பாதங்கள் மிகக் குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளையும் உணர வல்லன. சமூக வாழ்க்கை களிறுகளின் சமூக வாழ்க்கை முறையும் பிடிக்களின் வாழ்க்கை முறையும் வேறுபட்டது. களிறுகள் தான் பருவம் எய்தும் வரை தன் தாய் உள்ள குழுவோடு வாழும், பின் பெரும்பாலும் தனியாகவே வாழ்கின்றன. ஆனால் பிடிகள் நன்கு பிணைப்பான குடும்பமாக தாய், சகோதரி, மகள் என வாழ்கின்றன. இனப்பெருக்க காலங்களில் பருவமெய்திய பிடியும் தனித்துக்காணப்படும். தன்னுணர்வு யானைகள் தன்னுணர்வு கொண்டவை. இது கண்ணாடிச் சோதனை மூலம் நிறுவப்பட்டுள்ளது. யானைகள் முன் கண்ணாடியை வைக்கும் போது இவை தங்களை அடையாளம் கண்டுகொள்கின்றன. இத்திறன் இதுவரை மதிமாக்கள், சில குரங்கினங்கள், டால்பின்களில் மட்டுமே கண்டறியப் பட்டுள்ளது.யானைகள் ஒருவர் சுட்டிக்காட்டுவதைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவை என்று சிம்பாப்வேயில் பழக்கப்பட்ட யானைகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.[6] இனப்பெருக்கம் யானையின் சினைக்காலம் 22 மாதங்கள் ஆகும். இதுவே பாலூட்டிகளில் மிக நீண்ட சினைக்காலம் ஆகும். பொதுவாக இவை ஒரேயொரு கன்றையே ஈனுகின்றன. இரட்டைகள் பிறப்பது மிகவும் அரிது. பிறந்த யானைக் கன்றானது 90 – 115 கிலோகிராம் எடை வரை இருக்கும். யானை ஈனும் முன்னும், ஈனும் பொழுதும், ஈன்ற பின்னரும் அதனைச் சுற்றிலும் மற்ற வளர்ந்த யானைகள் இருந்து மிகவும் உதவுகின்றன. யானைக்கன்று பிறந்ததில் இருந்து, அது யானைக் கூட்டத்தாலேயே வளர்க்கப்படுகின்றது. அச்சுறுத்தல்கள் வேட்டையாடுதல் யானைகளுக்கு முக்கியமான அச்சுறுத்தல் வேட்டையாடுதல் ஆகும். யானைகள் அவற்றின் தந்தங்களுக்காக வேட்டை ஆடப்படுகின்றன. பெரியவையும், நீண்ட காலம் வாழுவனவும், குறைவான வேகத்தில் இனம் பெருகுவனவுமான யானைகளுக்கு, அளவு மீறி வேட்டையாடுதல் பெரும் பாதிப்பை எற்படுத்துகின்றது. இவை பெரிதாக இருப்பதனால் எளிதில் மறைந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு யானையும் வளர்ந்து இனம் பெருக்குவதற்குப் பல ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வொரு யானைக்கும் சராசரியாக நாளொன்றுக்கு 140 கிலோகிராம் (300 இறாத்தல்) இலை தழைகள் தேவைப்படுகின்றது. புலி, சிங்கம் போன்ற பெரிய கோண்மாக்கள் அழிக்கப்படுவதாலும் யானைகளின் உணவுக்குப் போட்டியாக உள்ள சிறய தாவர உண்ணிகள் பெருகி தாவரங்களைப் பெருமளவில் அழிப்பதால் யானைகளுக்கு உணவு பெறுவது கடினமாகின்றது. யானைகள் மனிதனால் கொல்லப்படுவதைத் தவிர பிற விலங்குகளால் உணவுக்காகக் கொல்லப்படுவது அரிது. வாழிடம் சுருங்குதல் யானைகளின் வாழிடங்கள் அழிக்கப் படுவதும் மற்றொரு முக்கியமான அச்சுறுத்தல் ஆகும். மனிதர் வேளாண்மை விரிவாக்கத்துக்காக யானைகளின் வாழிடங்களான காடுகளை அழித்துவருகிறார்கள். இது மனிதர்களின் நலனுக்கும் யானைகளின் நலன்களுக்குமிடையே முரண்பாடுகளை உருவாக்குகின்றது. எடுத்துக்காட்டாக யானைகள் புதிய வேளாண்மைக் குடியேற்றங்களுக்குள் நுழைந்து பயிர்களை அழித்துவிடுவதுடன் மக்களுக்கு உயிராபத்தையும் ஏற்படுத்துகின்றன. இவ்வாறான முரண்பாடுகளால், இலங்கையில் சராசரியாக ஆண்டொன்றுக்கு 150 யானைகளும், 100 மனிதர்களும் இறப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. காடழிப்பு யானைகளின் வாழிடத்தையும் குறைக்கின்றது. ஆசிய யானைகளின் அழிவுக்கான முதன்மைக் காரணம் வாழிடங்கள் இழக்கப்படுவதே என்று கூறப்படுகிறது. யானைகள் வாழ்வதற்கு பெரிய அளவிலான காட்டுப்பகுதிகள் தேவைப்படுகின்றன. ஏனெனில், யானைகள் கூட்டமாக ஒரு பகுதிக்குள் புகுந்து மரங்களையும் செடி கொடிகளையும் பெருமளவில் அழித்து உண்கின்றன. பின்னர் வேறிடத்துக்குச் செல்கின்றன. இவ்வாறு புதிய இடங்களுக்குச் சென்று அழிக்கப்பட்ட காடுகள் மீண்டும் வளர்ந்ததும் திரும்பவும் அதே இடத்துக்கு வந்து உணவைப் பெறுகின்றன. வாழிடங்களின் அளவு குறையும் போது, மிக விரைவிலேயே உணவு முடிவடைந்து விடுகிறது.[7] மனிதர்களும் யானைகளும் யானைகள், மனிதர்களினால் சட்டத்துக்கு அமைவாகவும், எதிராகவும் கொல்லப்படுவதனால், யானைகளின் உடலமைப்பில் எதிர்பாராத விளைவுகளும் ஏற்படுகின்றன. ஆப்பிரிக்காவில் தந்தங்களுக்காக வேட்டையாடுபவர்கள், பெரிய தந்தங்களுள்ள யானைகளையே வேட்டையாடுவதால் எஞ்சியிருக்கும் யானைகள் சிறிய தந்தங்கள் உள்ளவையாக அல்லது தந்தங்கள் இல்லாதவையாக உள்ளன. புதிதாகப் பிறக்கும் குட்டிகளும் இவற்றின் மூலமாகவே பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரிப்பதால் புதிய தலைமுறைகளில் தந்தமில்லாத் தன்மையை உருவாக்கும் மரபணுக்கள் கூடுதலாகிப் பெருமளவிலான தந்தமில்லா யானைகள் பிறப்பதற்கு வழியேற்படுகிறது. 1930ல் 1% ஆக இருந்த இவ்வாறான யானைகளின் தொகை இப்போது சில பகுதிகளில் 30% வரை அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் தந்தமில்லாத் தன்மை என்பது ஒரு அரிதான இயல்புப் பிறழ்வாக இருந்த நிலை மாறி இப்போது பொதுவான மரபுவழி இயல்பாக மாறிவருகிறது. இறப்பு இருதயக் கோளாறு, மாரடைப்பு, மூளையில் இரத்தக்கட்டி போன்றவற்றால் யானைகள் இறக்கக்கூடும்.[8] சங்க இலக்கியங்களில் யானை தமிழ் சங்க இலக்கியங்களில் யானையை, 170க்கும் மேற்பட்ட பெயர்களில் குறிப்பிடுகிறார்கள்.விரிவாக காணலாம். அவைகளில் சில வருமாறு; 1. யானை, 2. வேழம், 3. களிறு, 4. பிளிறு, 5. கலபம், 6. மாதங்கம், 7. கைமா, 8.உம்பல் - , 9. வாரணம், 10. அஞ்சனாவதி, 11. அத்தி, 12. அத்தினி, 13. அரசுவா, 14. அல்லியன், 15. அனுபமை, 16. ஆம்பல், 17. ஆனை, 18. இபம், 19. இரதி, 20. குஞ்சரம் / இராசகுஞ்சரம், 21. இருள், 22. தும்பு, 23. வல் விலங்கு, 24.கரி, 25.அஞ்சனம்,26.நாகம் (கதநாகம்), 27. பழமொழிகளும் சொலவடைகளும் தமிழில் யானை பற்றிய பழமொழிகளும் சொலவடைகளும் இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. பழமொழிகள் யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன். யானைக்கும் அடி சறுக்கும். யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே யானை கறுத்தாலும் ஆயிரம் பொன் சொலவடைகள் யானைப்பசிக்கு சோளப்பொரியா? யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டது போல துணை நூற்பட்டியல் Check date values in: |date= (help) மேற்கோள்கள் இவற்றையும் காண்க யானையின் தமிழ்ப்பெயர்கள் குருவாயூர் கேசவன் புற இணைப்புகள் * பகுப்பு:ஒலிக்கோப்பு உள்ள கட்டுரைகள்
ஆப்பிரிக்க யானைகளின் சராசரி ஆயுட்காலம் என்ன?
70
175
tamil
205310030
இயற்பியலில் (பௌதீகவியலில்) ஒரு பொருளின் அடர்த்தி (ஒலிப்பு) (density) என்பது அப்பொருளானது ஒரு குறிப்பிட்ட பரும அளவில் (கன அளவில்) எவ்வளவு நிறை அல்லது திணிவு கொண்டு உள்ளது என்பதைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக ஒரு கன செண்டி மீட்டர் பரும அளவில் உள்ள தங்கம் 19.32 கிராம் நிறை ஆகும். ஆனால் அதே ஒரு கன செண்டி மீட்டர் பரும அளவு கொண்ட வெள்ளி 10.49 கிராம்தான் உள்ளது. எனவே தங்கத்தின் "அடர்த்தி" வெள்ளியின் அடர்த்தியை விட கூடுதலானது. அடர்த்தி பின்வரும் சமன்பாட்டினால் கொடுக்கப்படும். ρ = m V {\displaystyle \rho ={\frac {m}{V}}} SI அலகுகள்: ρ = (ரோ அல்லது றோ) பொருளின் அடர்த்தி (அலகு: கி.கி/மீ-3, kg·m-3} m = பொருளின் நிறை அல்லது திணிவு (அலகு: கி.கி, kg) V = பொருளின் பரும அளவு (கன அளவு) (அலகு: மீ3) நிறை அல்லது திணிவு, கிராம் அலகிலும், பரும அளவு (கன அளவு) கன செண்டி மீட்டர் (கன சதம மீட்டர்) அலகிலும் இருக்கும்போது அடர்த்தி, ஒரு செண்டி மீட்டருக்கு எவ்வளவு கிராம் என்பதாகும். அலகு: கிராம்/(கன செண்டி மீட்டர்) அல்லது கிராம்/(செண்டி மீட்டர்) 3 அலகில் இருக்கும். சுருக்கமாக கி/செ.மீ3 என எழுதுவது வழக்கம். SI அலகில் கி.கி/மீ3 என எழுதுவது வழக்கம். பல்வேறு பொருள்களின் அடர்த்திகள்: பொருள்அடர்த்தி (கி.கி/மீ3)திடம் இரிடியம்22650ஆஸ்மியம்22610பிளாட்டினம்21450தங்கம்19300டங்க்ஸ்டன்19250யுரேனியம்19050பாதரசம்13580பலேடியம்12023ஈயம்11340வெள்ளி10490செப்பு 8960இரும்பு 7870வெள்ளீயம் 7310டைட்டேனியம் 4507வைரம் 3500அலுமீனியம் 2700மக்னீசியம் 1740திரவம்கடல் நீர் 1025நீர் 1000ஈத்தைல் ஆல்கஹால் 790பெட்ரோல் 730Aerogel 3.0எடுத்துக்காட்டு காற்று1.2 வளியின் அடர்த்தி<i data-parsoid='{"dsr":[2833,2838,2,2]}'>ρ vs. வெப்பநிலை °C T in °C ρ கிகி/மீ³ இல் - 10 1.341 - 5 1.316 0 1.293 + 5 1.269 + 10 1.247 + 15 1.225 + 20 1.204 + 25 1.184 + 30 1.164 வெளி இணைப்புகள் தனிம அட்டவணையில் உள்ள தனிமங்கள் வரிசைப்படுத்துதல் பகுப்பு:இயற்பியல் கணியங்கள்
இரும்பின் அடர்த்தி எவ்வளவு?
7870
1,243
tamil
23ca67910
|- ! 105Ag | syn | 41.2 d | ε | 105Pd |- | γ | - |- ! 106mAg | syn | 8.28 d | ε | 106Pd |- | γ | - |- ! 107Ag | 51.839% | stable வெள்ளி (ஜெர்மன்: Silber, பிரெஞ்சு: Argent, ஸ்பானிஷ்: Plata, ஆங்கிலம்: Silver, சில்வர் (IPA: ) ஒரு வேதியியல் தனிமம். இதன் வேதியியல் குறியீடு Ag என்பதாகும். இக்குறியீடு வெள்ளியின் இலத்தீன் மொழிப் பெயராகிய ஆர்கெண்ட்டம் (Argentum) என்பதில் இருந்து உருவானது. இதன் அணுவெண் 47, மற்றும் இதன் அணுக்கருவினுள் 60 நொதுமிகள் உள்ளன.மேலும் இதன் அணு நிறை 107.86 amu ஆகும் வரலாறு வெள்ளி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்பட்டு வருகிறது. இது பொதுவாக தங்கதிற்க்கு அடுத்து இரண்டாவது மடிப்பு வாய்ந்ததாக கருதப்பட்டது. ரோமர்களின் பணமாக வெள்ளி பயன்படுத்தப்பட்டது.மேலும் வெள்ளி நோய் தொற்றுக்கள் மற்றும் சிதைவுகளை தடுக்க பயன்படுத்தப்படுகிறது. ஐசோடோப்புகள் இயற்கையாகத் தோன்றும் வெள்ளியில் 107Ag மற்றும் 109Ag, 109Ag என்ற இரண்டு நிலையான ஐசோடோப்கள் உள்ளன. 107Ag ஐசோடோப்பு இயற்கையில் சற்று அதிகமாக காணப்படுகிறது. கிட்டத்தட்ட தனிமவரிசை அட்டவணையில் அரிதாகவே இந்த அளவுக்கு அதிகமாக இயற்கையில் கிடைக்கும் ஐசோடோப்புகள் உள்ளன. இதன் அணு எடை 107.8682(2) அணுநிறை அலகுகளாகும்[1][2]. வெள்ளி சேர்மங்களில் இந்த அளவு மிகமுக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக ஆலைடுகளின் எடையறி பகுப்பாய்வில் இந்த அளவு முக்கியமாகக் கருதப்படுகிறது. இரண்டு ஐசோடோப்புகளும் விண்மீன்களில் எசு-செயல்முறையிலும் மீயொளிர் விண்மீன்களில் ஆர்-செயல்முறையிலும் உற்பத்தி செய்யப்படுகின்றன[3]. வெள்ளி தனிமத்தைப் பொறுத்தவரையில் ஒட்டுமொத்தமாக 28 வகையான கதிரியக்க ஐசோடோப்புகள் விவரிக்கப்படுகின்றன. இவற்றில் 41.29 நாட்களை அரைவாழ்வுக்காலமாகக் கொண்டுள்ள 105Ag ஐசோடோப்பு அதிக நிலைப்புத் தன்மை கொண்டதாக உள்ளது. 111Ag ஐசோடோப்பு 7.45 நாட்களும் 112Ag 3.13 மணி நேரமும் அரைவாழ்வுக் காலமாகக் கொண்டுள்ளன. மேலும், வெள்ளி தனிமமானது எண்ணற்ற உட்கரு மாற்றியன்களைப் பெற்றுள்ளது. இவற்றில் 108mAg 418 ஆண்டுகள் அரைவாழ்வுக் காலமும், 110mAg 249.79 நாட்கள் அரைவாழ்வுக் காலமும் 106mAg 8.28 நாட்கள் அரைவாழ்வுக் காலமும் கொண்டுள்ளன. எஞ்சியிருக்கும் பிற கதிரியக்க ஐசோடோப்புகள் யாவும் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான அரைவாழ்வுக் காலத்தை மட்டுமே கொண்டுள்ளன. இதிலும் பெரும்பாலானவை 3 நிமிடத்திற்கும் குறைவான அரைவாழ்வுக் காலத்தைக் கொண்டவையாக உள்ளன [4]. வெள்ளி ஐசோடோப்புகள் ஒப்பீட்டு அணுநிறை அளவு 92.950 93Ag முதல் அணுநிறை அளவு 129.950 130Ag வரை காணப்படுகின்றன. நிலைப்புத் தன்மை மிகுந்த 107Ag ஐசோடோப்புக்கு முன்னர் உள்ளவை எலக்ட்ரான் பிடிப்பு முறை சிதைவை முதன்மையாகக் கொண்டும், இதற்கு பின்னர் உள்ளவை பீட்டா சிதைவு முறையை முதன்மையாகக் கொண்டும் உருவாகின்றன[5]. இவ்வாறு உருவாகும் 107Ag ஐசோடோப்புக்கு முன்னரான சிதைவு விளைபொருட்கள் பல்லேடியம் (தனிமம் 46) மற்றும் பின்னரான சிதைவு விளைபொருட்கள் காட்மியம் ( தனிமம் 48) ஐசோடோப்புகளாகும். பலேடியம் ஐசோடோப்பான 107 Pd யானது 107Ag ஐசோடோப்பின் பீட்டா சிதைவால் உருவாகிறது. இதன் அரைவாழ்வுக் காலம் 6.5 மில்லியன் ஆண்டுகளாகும். இரும்பு விண்கற்களில் மட்டுமே போதுமான அளவுக்கு இந்த பலேடியம் வெள்ளி ஐசோடோப்பு விகிதங்கள் காணப்படுகின்றன. கதிரியக்கச் சிதைவு 107Ag சாண்டா கிளாரா விண்வீழ் கல்லில் 1978 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது[6]. பண்புகள் இயற்பியல் பண்புகள் வெள்ளி ஒரு மென்மையான உலோக உள்ளது.மேலும் இது பணமாகவோ அல்லது நகைகள் பயன்படுத்தப்படும் மதிப்புமிக்க உலோகமாக உள்ளது இது பெரும்பாலும் தங்கத்துடனோ அல்லது வேறு சில உலோகங்களுடனோ அவற்றை கடினமாக்க கலக்கப்படுகிறது. மிவும் பளபளப்பு வாய்ந்த நீலம் கலந்த வெள்ளை நிறம் உடையது இது ஒரு சிறந்த மின்கடத்தியாக உள்ளது. வெள்ளியின் அங்கிலப்பெயரான சில்வர் ஆங்கில மொழியில் இருந்து மட்டுமே எடுக்கப்பட்ட வார்த்தைகளில் ஒன்றாகும்.இது மதிப்புமிக்கதானதால் உலகம் முழுவதும் வெள்ளி நாணயங்கள் மற்றும் பார்கள் கடைகளில் வாங்கி விற்கப்படும். இத்தனிமம் மிகஅதிகமான தகடாக்க தன்மை கொண்ட ஒரு உலோகம்.வெள்ளியில் செய்த குவளை, உணவுத் தட்டு, கிண்ணம் போன்ற பாத்திரங்களைப் பலரும் பார்த்திருப்பதால் இது நன்கு அறியப்பட்ட, நன்கு தட்டி கொட்டி, தகடாக்க வல்ல ஒரு மாழையாகும் இரசாயன பண்புகள் இது வினைதிறன் மிகவும்குறைவான உலோகம் இது அமிலங்கள் கரையும் திறனை அதிகமாக கொண்டதல்ல எனினும் நைட்ரிக் அமிலம் இதை கரைக்கின்றது.கரைத்து வெள்ளி நைட்ரேடை உருவாக்கும். இது பொட்டாசியம் டை குரோமேற்றுடன் அல்லது பொட்டாசியம் பர்மாங்கனேட் போன்ற வலுவான ஆக்ஸிஜனேற்றம் பொருளுடன் எந்த வினைபுரியும் செய்வதில்லை. இது எளிதில் அரிக்கப்படுவதில்லை.காற்றுடன் ஹைட்ரஜன் சல்பைட் இருக்கும் போது மட்டுமே அது வினைபுரிந்து ஒரு வெள்ளி ஆக்ஸைடு என்ற கருப்பு படலத்தை உருவாக்குகிறது வெள்ளியின் +1 மற்றும் +2 சேர்மங்கள்: வெள்ளியின் சேர்மங்களில் +1 அதிகம் உள்ளது.ஒரு சில கலவைகள் +2 நிலையில் உள்ளது எனினும் இவை மிகுந்த விஷத்தன்மை வாய்ந்ததாகும் மேலும் அவை மிகவும் வலுவான ஆக்ஸிஜனேற்ற காரணிகளாக உள்ளன. வெள்ளியின் சேர்மங்கள், பழுப்பு கருப்பு, மஞ்சள், சாம்பல், அல்லது நிறமற்றதாக இருக்கலாம்.பொதுவாக வெள்ளி சேர்மங்கள் கிருமிநாசினிகளாக உள்ளன. வெள்ளி (|) சேர்மங்கள் வெள்ளி (|) சேர்மங்கள் சிறந்த ஆக்ஸிஜனேற்ற காரணிகளாக உள்ளன.அவை மிகவும் விலை உயர்ந்தவை.அவை வெளிர் மஞ்சள் நிற வெள்ளி புரோமைடு, மஞ்சள் நிற வெள்ளி கார்பனேட், மஞ்சள் வெள்ளை நிற வெள்ளி குளோரைடு, மஞ்சள் பழுப்பு நிற வெள்ளி (|) ஃப்ளோரைடு, நிறமற்ற வெள்ளி அயடேற்று, மஞ்சள் நிற வெள்ளி அயடைடு, நிறமற்ற வெள்ளி நைட்ரேட், பழுப்பு அல்லது கறுப்பு நிற வெள்ளி ஆக்சைடு, கருப்பு நிற வெள்ளி சல்பைட், வெள்ளி (||) சேர்மங்கள் வெள்ளி (||) சேர்மங்களும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற முகவர்களாகும் மற்றும் அரிதானவை ஆகும். வெள்ளி (||) ஃப்ளோரைடு, வெள்ளை அல்லது சாம்பல் நிற மிகவும் வலுவான ஆக்ஸிஜனேற்ற முகவராகும். வெள்ளி தனிமம் செம்பு, தங்கம், துத்தநாகம் போன்ற தனிமங்களுடன் சேர்ந்து உலோகக் கலைவைகளை உருவாக்குகிறது. நிகழ்தல் மற்றும் பிரித்தெடுத்தல் பூமியின் மேற்பரப்பில் வெள்ளி ஒரு லட்சத்திற்கு 0.08 பாகங்களாகக் காணப்படுகிறது. இது கிட்டத்தட்ட பாதரசத்தின் அளவைப் போலவே உள்ளது. பெரும்பாலும் சல்பைட் தாதுக்களில் வெள்ளி காணப்படுகிறது. அகாண்டைட்டு மற்றும் அர்ச்செண்டைட்டு போன்றவை முக்கியமான வெள்ளியின் தாதுக்களாகும். இயற்கையாக வெள்ளி தங்கத்துடன் உலோகக்கலவையாகவும் மற்றும் ஆர்சனிக், கந்தகம், அந்திமனி அல்லது குளோரின் போன்றவற்றுடன் கலந்த தாதுப்பொருளாகவும் கிடைக்கின்றது. அர்சென்டைட், குளொரார்கைரைட் மற்றும் பைரார்கைரைட் போன்றவை வெள்ளியின் தாதுக்கள். பயன்கள் தனிமமாக பயன்கள் வெள்ளி உலகமெங்கும் பணமாகவும் நகையாகவும் மற்றும் பல விஷயங்கள் மூலம் உலகம் முழுவதும் உள்ள பல ஆயிரக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது சாம்பல் வண்ணத்தில் தெரிந்தாலும் கூட ஒரு வெள்ளை உலோகம் என அழைக்கப்படுகிறது.வெள்ளி பாத்திரங்களை செய்ய பயன்படுத்தப்படுகிறது. அது ஒரு கலவையாக செயற்கை பற்கள் தயாரிக்கவும் பற்களின் இடைவெளியை நிரப்பவும் பயன்படும்.மேலும் வெள்ளி ஒரு வினை ஊக்கியாக பயன்படுகிறது. சேர்மமாக அதன் பயன்கள் வெள்ளி சேர்மங்கள் பல கிருமிநாசினிகளாக உள்ளன. இது பாக்டீரியா கொல்லவும் மற்றும் மற்ற சில பயனுகாவும் பயன்படுகிறது. இது மின்சேமிப்பு களங்களில் வெள்ளி ஆக்சைடாக பயன்படுத்தப்படுகிறது.அவைகள் புகைப்படம் எடுக்கும் இழைகளில் பயன்படுத்தப்படுகின்றன. அவர்கள் ஆடையில் வாசனை குறைக்க பயன்படுகிறது. சில வெள்ளி கலவைகள் தீக்காயங்கள் ஆற உதவும் என்று கிரீம்கள் பயன்படுத்தப்படுகின்றன. தனியாகவும், துணைவிளைப்பொருளாகவும் இது இயற்கையில் தனியாகவும் ஆர்செண்ட்டைட், குளோரார்கைரைட் ஆகிய கனிமங்களில் இருந்தும் கிடைக்கின்றது. வெள்ளிதான் யாவற்றினும் அதிக மின்கடத்துமையும், வெப்பக்கடத்துமையும் கொண்ட தனிமம் (தனிம மாழை). செப்பு, தங்கம், ஈயம், துத்தநாகம் முதலான தனிமங்களைக் கனிமங்களில் இருந்து பிரித்து எடுக்கையில் வெள்ளி கூடவே கிடக்கும் ஒரு துணைவிளைப்பொருளாக உள்ளது. பாதுகாப்பு வெள்ளியினால் மனிதர்களுக்கு ஒரு பெரிய ஆபத்து ஏதும் இல்லை.எனினும் வெள்ளி கலவைகள் நச்சு தன்மை வாய்ந்தது.இதனால் பாதிக்கப்பட்டவரின் தோல் நீல நிறமாக மாறும்.ஆனால் கூழ்மவெள்ளி, மிகக்குறைந்த அளவில் ஒரு பொதுவான ஹோமியோபதி மருந்தாக பயன்படுகிறது. உலகில் வெள்ளி இருப்பும் பிரித்தெடுப்பும் வெள்ளி உண்மையில் தங்கத்தை விட அதிக பயன்கொண்டதாகும். மேலும் 1990 முதல் ஒவ்வொரு ஆண்டும் தோண்டி எடுக்கப்பட்ட அளவை விட அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது எனவே உலகில் சேமித்து வைக்கப்பட்டுள்ள வெள்ளி வேகமாக ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. வெள்ளி விற்கும் நிறுவனங்களிடம் இருந்து அதை பயன் படுத்தும் நிறுவனங்கள் அதன் விலைகளை செயற்கையாக குறைந்து பெறுகிறது. இதுவே மறைவற்ற குறைவான விற்பனை என அழைக்கப்படுகிறது. உலகின் வெள்ளி சேமிக்கப்படும் அனைத்து வெள்ளியும் காலியான பின் முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கள் பங்கு வெள்ளியை கேட்க தொடங்கும் போது வெள்ளி விலை மிக அதிகமாக உயரும். வெள்ளியின் விலை ஜூன் 2010 ல் அவுன்ஸ் ஒன்றிற்கு 18 அமெரிக்க டாலர்கள் வரை ஆகும். வெள்ளியின் விலை டிசம்பர் 2010 ல் அவுன்ஸ் ஒன்றிற்கு 28 அமெரிக்க டாலர்கள் வரை அதிகரித்துள்ளது. 99.9% தூய்மையான வெள்ளி தனிமம் வர்த்தக ரீதியாகக் கிடைக்கிரது. 2014 ஆம் ஆண்டில் மெக்சிகோ உலக வெள்ளி தனிமம் உற்பத்தியில் 5000 டன் வெள்ளியை உற்பத்தி செய்து முதலிடம் பிடித்தது. இந்நாட்டைத் தொடர்ந்து சீனா 4060 டன்களும் பெரு 3780 டன்களும் உற்பத்தி செய்தன [7]. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ஐக்கிய அமெரிக்காவின் உலகளாவிய புள்ளிக் குறிப்புகள், USGS பகுப்பு:தனிமங்கள் பகுப்பு:உலோகங்கள் பகுப்பு:மின் கடத்திகள் பகுப்பு:அரிய உலோகங்கள் பகுப்பு:பிறழ்வரிசை மாழைகள் பகுப்பு:தாண்டல் உலோகங்கள் பகுப்பு:உயர் உலோகங்கள் பகுப்பு:கனசதுரக் கனிமங்கள் பகுப்பு:தாயகத் தனிமக் கனிமங்கள்
வெள்ளியின் லத்தீன் பெயர் என்ன?
ஆர்கெண்ட்டம்
332
tamil
35577c181
ஐசக் நியூட்டன் (டிசம்பர் 25, 1642 – மார்ச் 20, 1727)[5], ஒரு ஆங்கிலக் கணிதவியலாளரும், அறிவியலாளரும், தத்துவஞானியும் ஆவார். அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் பெரிதும் ஆய்வுகள் மேற்கொண்டவர் நியூட்டன். இது நாள் வரை வாழ்ந்த அறிவியலாளர்களுள் மிகவும் செல்வாக்கு உள்ளவர்களுள் ஒருவராகவும், அறிவியல் புரட்சியில் முக்கியமான ஒருவராகவும் இவர் இருந்தார். 1687ல் ஈர்ப்பு சம்பந்தமான விளக்கங்களை உள்ளடக்கிய, Philosophiae Naturalis Principia Mathematica என்னும் நூலை வெளியிட்டார். இவருடைய இயக்க விதிகள் மூலம், மரபார்ந்த விசையியல் (classical mechanics) என்னும் துறைக்கு வித்திட்டார். கோட்பிறைட் வில்ஹெல்ம் லீப்னிஸ் என்பவருடன் சேர்ந்து, வகையீட்டு நுண்கணிதத் துறையின் உருவாக்கத்தில் பங்கு கொண்டார். நியூட்டனின் பிரின்சிப்பியா</i>விலேயே, பின்வந்த மூன்று நூற்றாண்டுகளில் பௌதீக அண்டம் தொடர்பான அறிவியலாளரின் நோக்கில் ஆதிக்கம் செலுத்திய, இயக்க விதிகள், பொது ஈர்ப்பு ஆகியவை உருவாக்கம் பெற்றன. இது புவியில் பொருட்களின் இயக்கங்களையும், அண்டவெளியில் உள்ள கோள்கள் முதலிய பொருட்களின் இயக்கங்களையும் ஒரே கோட்பாடுகளின் அடிப்படையில் விபரிக்கலாம் என விளக்கியது. நியூட்டன் நடைமுறைச் சாத்தியமான முதலாவது தெறிப்புத் தொலைநோக்கியை உருவாக்கியதுடன், முப்பட்டைக் கண்ணாடி வெள்ளொளியைப் பிரித்துப் பல நிற ஒளிகளைக் கொண்ட நிறமாலையாகத் தரும் கவனிப்பை அடிப்படையாகக்கொண்டு நிறக் கோட்பாடு ஒன்றையும் உருவாக்கினார். ஒலியின் வேகம் குறித்தும் இவர் ஆய்வுகள் செய்தார். நுண்கணிதத்தில் இவரது ஆய்வுகளுக்குப் புறம்பாக, ஒரு கணிதவியலாளராக, அடுக்குத் தொடர் குறித்த ஆய்வுகளுக்கும் இவர் பங்களிப்புச் செய்துள்ளார். இளமை ஐசக் நியூட்டன் 1642 ஆம் ஆண்டு கிரிஸ்துமஸ் தினத்தன்று (டிசம்பர்-25) இங்கிலாந்தில் லிங்கன்ஷயர் கவுண்டியில், கோல்ஸ்டர்வேர்த்துக்கு அருகிலுள்ள வூல்ஸ்தோர்ப் என்னும் ஒரு சிற்றூரில் ஒரு சராசரி விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே இவரது தந்தையார் இறந்துவிட்டார். இரண்டு ஆண்டுகள் கழிய நியூட்டனை அவரது பாட்டியின் கவனிப்பில் விட்டுவிட்டு, தாயாரும் தனது புதிய கணவருடன் வாழச் சென்றுவிட்டார். கல்வி நியூட்டன் கிராந்தாம் கிறமர் பாடசாலையில் பயின்றார். ஆரம்பத்தில் அவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை. ஆனால் ஒருமுறை தன்னைக் கேலி செய்த வயதில் தன்னைவிட பெரிய சிறுவனை நையப் புடைத்த பின் தன்னம்பிக்கை அதிகரித்து நன்றாக படிக்கத் தொடங்கினார். சிறுவயதிலிருந்தே நியூட்டனுக்கு அறிவியலில் ஈடுபாடு இருந்தது, தண்ணீரிலும் வேலை செய்யும் கடிகாரத்தை அவர் சிறுவயதிலேயே உருவாக்கினார். அவருக்குப் பதினான்கு வயதானபோது குடும்ப ஏழ்மையின் காரணமாகப் பள்ளிப் படிப்பைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. நியூட்டனின் கல்வி ஆசையை அறிந்துகொண்ட அவரது மாமன் 1661ல், அவரைப் புகழ்பெற்ற கேம்பிறிஜ், திரித்துவக் கல்லூரியில் சேர்த்தார். அக்காலத்தில் கல்லூரியின் கற்பித்தல், அரிஸ்ட்டாட்டிலைப் பின்பற்றியதாகவே இருந்தது. ஆனால் நியூட்டன், டெஸ்கார்ட்டஸ், கலிலியோ, கோப்பர்னிக்கஸ் மற்றும் கெப்ளர் போன்ற அக்காலத்து நவீன தத்துவ வாதிகளுடைய கருக்களையும் கற்கவிரும்பினார். 1665 ல், ஈருறுப்புத் தேற்றத்தைக் கண்டுபிடித்ததுடன், பிற்காலத்தில் நுண்கணிதம் என வழங்கப்பட்ட, புதிய கணிதக் கோட்பாடொன்றை உருவாக்கத் தொடங்கினார். 1665ல் இவர் பட்டம் பெற்றதும், பெருங் கொள்ளைநோய் காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அடுத்த இரண்டுவருடங்கள் வீட்டிலிருந்தபடியே, நுண்கணிதம், ஒளியியல், ஈர்ப்பு என்பவை பற்றி ஆராய்ந்தார். மிகச்சிறப்பாகக் கற்றுத் தேர்ந்து 1665 ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார் நியூட்டன். அவரது பல்கலைக்கழக நாட்கள் பற்றிய குறிப்புகள் அவ்வுளவாக இல்லை. ஆனால் அவர் பட்டம் பெற்ற இரண்டு ஆண்டுகளில் அவரது அறிவியல் மூளை அபரிமிதமாக செயல்படத் தொடங்கியது. நவீன கணிதத்தின் பல்வேறு கூறுகளை அவர் கண்டுபிடித்தார். Generalized binomial theorem, infinitesimal calculus போன்ற நவீன கணிதத்தின் பிரிவுகள் அவர் கண்டுபிடித்தவைதான். வளைந்த பொருள்களின் பரப்பையும் கெட்டியான பொருள்களின் கொள்ளளவையும் கண்டுபிடிக்கும் முறைகள் அவர் வகுத்துத் தந்தவையே. பணிகள் 1667 ஆம் ஆண்டு தனது 25-ஆவது வயதில் நியூட்டன் டிரினிடி கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். டிரினிடி கல்லூரியில் அவருக்கு கெளரவ பொறுப்பு வழங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளை அவர் முழுநேரமாக பல்வேறு ஆராய்ச்சிகளில் செலவிட்டார். ஒளியின் தன்மைப் பற்றி ஆழமாக ஆராய்ந்ததோடு தொலைநோக்கிகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தினார். ஓராண்டில் அவர் ஓர் தொலைநோக்கியையும் உருவாக்கினார். அதன்மூலம் ஜூபிடர் கோலின் நிலவுகளை அவரால் பார்க்க முடிந்தது. இன்றைய நவீன தொலைநோக்கிகள் நியூட்டனின் அந்த முதல் தொலைநோக்கியின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றன. 1669 ஆம் ஆண்டு டிரினிடி கல்லூரியில் கணக்கியல் பேராசிரியராக நியூட்டன் பொறுப்பேற்றார். அதன்பின் பிரசித்திப் பெற்ற ராயல் சொசைட்டியில் அவர் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட்டார். கண்டுபிடிப்புகள் புவிசார் மற்றும் விண்வெளிசார் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் இயற்கை விதிகளை முதன்முதலில் விளக்கியவர் இவரேயாவார். இவர் அறிவியல் புரட்சியுடனும், சூரியமையக் கோட்பாட்டின் வளர்ச்சியுடனும் தொடர்புபட்டிருந்தார். கோள்களின் இயக்கத்துக்கான கெப்ளரின் விதிகள் தொடர்பில் கணிதரீதியான நிறுவல்களை வழங்கியதில் நியூட்டனுக்கும் பங்கு உண்டு. வால்வெள்ளி போன்ற விண்பொருட்களின் சுற்றுப்பாதைகள் நீள்வட்டமாக மட்டுமின்றி, பரவளைவாகவும், அதிபரவளைவாகவும்கூட இருக்கலாம் எனவும் வாதித்து, மேற்படி விதிகளை விரிவாக்கினார். ஒளியியல் ஆய்வுகள் பட்டகம் (Prism) எனப்படும் முக்கோணத்தில் ஒளி விழும்போது ஏற்படும் விளைவுகளை அவர் கண்டறிந்தார். ஒரு பட்டகத்தின் (prism) ஊடே கதிரவனின் ஒளிக்கதிர் செல்லும்போது அது ஏழு வண்ணங்களாகப் பிரிவதைச் செய்முறையில் விளக்கினார். மேலும், பல வண்ணங்களைக் கொண்ட நியூடன் தகட்டைச் (Newton’s disc) சுழற்றும்போது அது வெண்மை நிறம் கொண்டதாக மாறுவதையும் செய்து காட்டினார். வெண்ணிற ஒளி, பல நிற ஒளிகளின் சேர்க்கையென முதலில் விளக்கியவரும் இவரேgeshopan. வண்ணங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அவர் ஒரு கண்ணை மூடிக்கொண்டு மறு கண்ணால் சூரியனை பார்த்துக்கொண்டே இருந்தார். திடீரென்று வண்ணங்கள் மாறத்தொடங்கின. ஆனால் நியூட்டனுக்கு அந்த கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் பல நாட்கள் இருட்டறையில் இருந்து கண்களின் முன் மிதந்த புள்ளிகளை அகற்ற வேண்டியிருந்தது. ஒளியின் இமிசன் கோட்பாடு நியூட்டன் வகுத்து தந்ததுதான். வெகுதொலைவில் உள்ள ஓர் ஒளிரும் பொருளிலிருந்து வெளியாகும் துகள்கள் பரவெளியில் வினாடிக்கு நூற்றி தொன்னூராயிரம் மைல் வேகத்தில் விரைந்து வருவதுதான் ஒளியாக நமக்குத் தெரிகிறது என்பதுதான் அந்தக்கோட்பாடு. ஒளி, துணிக்கைகளால் ஆனது என்ற வாதங்களுக்காகவும் இவர் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார். பார்க்க: அலை-துணிக்கை இருமைத்தன்மைஇரண்டு துணிக்கைளுக்கிடையிலான ஈர்ப்பு விசையானது அவற்றின் திணிவுகளுக்கு நேர்விகிதசமனெனவும் அவற்றுக்கிடையிலான துாரத்துக்கு நேர்மாறுவிகிதசமனெனவும் கருத்தறிவித்தார். ஈர்ப்பு விதி கண்டுபிடிப்பு நியூட்டன் ஆப்பிள்(அப்பிள்) மரமொன்றின் கீழ் இருந்தபோது, அப்பிள் பழமொன்று அவர் தலையில் விழுந்ததாகவும், இது அவர் சிந்தனையைக் கிளறி, புவிசார்ந்த, விண்வெளி சார்ந்த ஈர்ப்புபற்றிய எண்ணக்கரு உதித்ததாகவும் கதை நிலவுகிறது. இது அவரது சொந்தக் கதையான, வூல்ஸ்தோர்ப் மனோரின்யின் யன்னலோரம் இருந்து ஆப்பிள் மரத்திலிருந்து விழுந்ததைக் கவனித்த கதையை மிகைப் படுத்திக் கூறியதாகும் எனக் கருதப்படுகிறது. நியூட்டனின் கதையும், பிற்காலத்தில் அவரால் கட்டப்பட்டது என்பது பலருடைய கருத்து. 1667 ல், தனது கண்டுபிடிப்புக்கள் குறித்த முடிவிலித் தொடர்கள் மூலமான பகுப்பாய்வு பற்றி (De Analysi per Aequationes Numeri Terminorum Infinitas) என்ற நூலினையும் பின்னர் தொடர்களினதும், பிளக்ஸியன்களினதும் வழிமுறைகள் பற்றி (De methodis serierum et fluxionum ) என்ற நூலினையும் வெளியிட்டார். நியூட்டனும், லீப்னிசும் நுண்கணிதக் கோட்பாடுகளைத் தனித்தனியே உருவாக்கியதுடன், வெவ்வேறு குறியீடுகளையும் பயன்படுத்தினார்கள். நியூட்டன் அவருடைய வழிமுறைகளை லீப்னிசுக்கு முன்னரே உருவாக்கியிருந்தும், பின்னவருடைய குறியீடுகளும்,வகையீட்டு வழிமுறை"யும், மேம்பட்டதாகக் கருதப்பட்டுப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. நியூட்டன், அவர் காலத்தைச் சேர்ந்த மிகத் திறமையான அறிவியலாளருள் ஒருவராக இருந்தும், அவருடைய கடைசி 25 வருடங்கள், லீப்னிசுடனான பிரச்சினைகளால் பாழாக்கப்பட்டது. லீப்னிஸ் தன்னுடைய கண்டுபிடிப்புக்களைத் திருடியதாக அவர் குற்றஞ்சாட்டி வந்தார். நியூட்டனுக்கு தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தான் தூண்களாக இருந்தன. அவருடைய கோட்பாடுகள் வன்மையாக எதிர்க்கப்பட்ட போதெல்லாம் அவர் மனம் தளர்ந்து விடவில்லை. தன்னம்பிக்கையோடு தனது ஆராய்ச்சிகளை தொய்வின்றி தொடர்ந்தார். 1669 ல், கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார். இவருடைய இந்தப்பதவி இவர், கல்லூரியின் ஆய்வாளாராக(Fellow) நீடிப்பதற்குத் தேவாலயத்துக்குச் செல்லவேண்டுமென்ற விதியிலிருந்து விலக்குப் பெற்றதுடன், அவருடைய எதிர்-திரி(கிறி?)த்துவவாதக் கருத்துக்கள் காரணமாக மரபுவாதத் தேவாலயத்துடன் ஏற்படவிருந்த முரண்பாடுகளையும் தவிர்த்துக்கொண்டார். விசை பற்றிய கோட்பாடுகள் எல்லாப் பொருள்களும் ஒன்றையொன்று ஈர்க்கும் தன்மையுடையன; அந்த ஈர்ப்பு விசை இரு பொருள்களுடைய நிறைகளின் பெருக்கலுக்கு நேர் விகிதத்திலும், அவ்விரு பொருள்களின் இடையே உள்ள தூரத்தின் வர்க்கத்திற்கு எதிர் விகிதத்திலும் இருக்கும். ஒவ்வொரு வினைக்கும், அதற்கு எதிர்த் திசையிலிருந்து சமமான எதிர் வினை நிகழும். ஒரு நிலையான பொருளை நகர்த்துவதற்கு, புற விசை இன்றியமையாதது. நியூட்டனின் நூல்கள் நியூட்டன் அறிவுச்செல்வத்தை சேர்த்து வைத்திருப்பதை உணர்ந்த அவரது நண்பர் ஹேய்லி அவற்றையெல்லாம் புத்தமாக வெளியிட நியூட்டனுக்கு ஊக்கமூட்டினார். அதன்பலனாக 1687 ஆம் ஆண்டு "Mathematical Principles of Natural Philosophy" என்ற புத்தகம் வெளியானது. "Principia" என்றும் அழைக்கப்பட்ட அந்த புத்தகம்தான் இதுவரை வெளியிடப்பட்டிருக்கும் அறிவியல் நூல்களிலேயே மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது. 1692 ஆம் ஆண்டு முதல் 1694 ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகள் நியூட்டன் கடுமையான நோய்வாய்ப்பட்டார். அவருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சினையும், தூக்கமின்மை பிரச்சினையும் ஏற்பட்டது. நியூட்டனுக்கு புத்தி பேதலித்து விட்டதாக வதந்திகள் பரவின. ஆனால் பின்னர் நன்கு குணமடைந்து பல்கலைக்கழகப் பணிகளில் ஈடுபட்டார். நூல்கள் மெத்தேட் ஆஃப் ஃபிளக்சியான்ஸ் (Method of Fluxions) (1671) ஆப்டிக்ஸ் (Opticks) (1704) அரித்மெட்டிகா யுனிவர்சலிஸ் (Arithmetica Universalis) (1707) சிறப்புகள் 1703 ஆம் ஆண்டில் நியூட்டன் ராயல் சொசைட்டியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 25 ஆண்டுகள் அவர் ஒவ்வொரு ஆண்டுமே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. 1705 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ராணி (Queen Anne) கேம்ஃப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு வருகை மேற்கொண்டபோது நியூட்டனுக்கு 'சர்' பட்டம் வழங்கி சிறப்பித்தார்.ஐசாக் நியூட்டன் இயற்பியல் துறையில் மிகப்பெரிய சாதனை புரிந்திருந்தபோதும் தம் சாதனையைப்பற்றி பின்வருமாறு கூறுகிறார். நான் இவ்வுலகிற்கு எவ்வாறிருப்பினும் என்னில் பொருத்தமட்டில் நானொரு கடற்கரையில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவன்,மென்மையான கூழாங்கல்லையும் அழகிய சங்கையும் கண்டுள்ளேன்,ஆனால் விரிந்து பரந்துள்ள பெருங்கடலோ என் கண்முன்னே காணப்படாமல் உள்ளது." இறுதிக்காலம் இங்கிலாந்தின் மிகச் சிறந்த விஞ்ஞானியாக இன்றும் கருதப்படும் "சர் ஐசக் நியூட்டன்" நோய்வாய்ப்பட்டு 1727 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி இயற்கை எய்தினார். லண்டனில் புகழ்பெற்ற "Westminster Abbey"-யில் அடக்கம் செய்யப்பட்டார். மனித குலத்தின் மிகச் சிறந்த விலை மதிப்பில்லா மாணிக்கம் (The Best and Invaluable Gem of Mankind) என்று அவர் கல்லறையில் பொறிக்கப்பட்டது. நியூட்டனுக்கு பலர் அஞ்சலி செலுத்தினாலும் போப் எழுதிய அஞ்சலி மிக ஆழமானது. இந்த வாசகம் நியூட்டன் பிறந்த அறையில் இன்றும் பொறிக்கப்பட்டிருக்கிறது! உசாத்துணை வெளி இணைப்பு பகுப்பு:1642 பிறப்புகள் பகுப்பு:1727 இறப்புகள் பகுப்பு:கிறித்தவ சித்தர்கள் பகுப்பு:ஆங்கிலேய அறிவியலாளர்கள் பகுப்பு:பிரித்தானிய இயற்பியலாளர்கள் பகுப்பு:ஆங்கிலேயக் கணிதவியலாளர்கள் பகுப்பு:மேற்கோள் வழு-ref குறிச்சொல்லுக்கு உரையில்லாதவை பகுப்பு:ஆங்கிலேய வானியலாளர்கள் பகுப்பு:ஆங்கிலேயக் கண்டுபிடிப்பாளர்கள் பகுப்பு:ஆங்கிலேய இயற்பியலாளர்கள்
ஐசக் நியூட்டன் எப்போது பிறந்தார்?
டிசம்பர் 25, 1642
16
tamil
fb428c206
எகிப்து வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடு. கெய்ரோ இந்நாட்டின் தலைநகர் ஆகும். இது உலகின் 15வது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகும். மேற்கே லிபியாவையும், தெற்கே சூடானையும், கிழக்கே காசாக் கரை மற்றும் இஸ்ரேலையும் எல்லையாகக் கொண்ட எகிப்தின் பரப்பளவு சுமார் 1,001,450 சதுர கி.மீ. வடக்குக் கரையில் மத்தியதரைக் கடலும் கிழக்குக் கரையில் செங்கடலும் எகிப்தின் எல்லைகளாக உள்ளன. எகிப்தின் சினாய் தீபகற்பம் தென்மேற்கு ஆசியாவில் உள்ளதால், இந்நாடு இருகண்ட நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. எகிப்தின் ஜீவ நதியாக நைல் நதி பாய்கிறது. நைல் நதிக் கரையிலிருக்கும் விவசாய நிலங்களைத் தவிர பெரும்பாலான நிலங்கள் பாலைவனங்களாகவே உள்ளன. ஆப்பிரிக்காவிலும் மையக் கிழக்கிலும் உள்ள நாடுகளுள் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளுள் எகிப்தும் ஒன்று. 82.2 மில்லியன்[2] மக்களைக் கொண்ட இந்நாட்டின் பெரும்பாலானவர்கள், நைல் நதிக்கரையில் இருக்கும் 40,000 சதுர கிலோமீட்டர் (15,000 சதுர மைல்) பரப்பளவு கொண்ட நிலப்பகுதியிலேயே வாழ்கின்றனர். இப்பகுதிகளிலேயே வேளாண்மை செய்யக்கூடிய நிலங்கள் காணப்படுவதுடன் கெய்ரோ, அலெக்சாந்திரியா, லூக்சூர் போன்ற பெரிய நகரங்களும் அடங்குகின்றன. மிகப் பெரிய சகாராப் பாலைவனப் பகுதிகளில் குறைவான மக்களே வாழ்கின்றனர். எகிப்தில் வாழ்பவர்களுள் ஏறத்தாழ அரைப் பங்கினர் நகர்ப்புறப் பகுதிகளிலேயே வாழ்கின்றனர். இந்நாட்டுக்கு விடுதலை 1922இல் வழங்கப்பட்டு 1953இல் அறிவிக்கப்பட்டது. பண்டைக் காலத்தில் சிறப்புற்று விளங்கிய எகிப்தின் பழங்காலத்து மன்னர்களால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பிரமிடுகள் உலகப்புகழ் பெற்றவை. எகிப்தில் உள்ள நினைவுச் சின்னங்களான கிசா பிரமிடுத் தொகுதி, பெரிய இசுஃபிங்சு என்பன பண்டை எகிப்து நாகரிகக் காலத்தைச் சேர்ந்தவை. மெம்பிசு, தீபை, கர்னாக் போன்ற இடங்களில் உள்ள பண்டைய அழிபாடுகளும், லூக்சூருக்கு வெளியே உள்ள மன்னர்களின் பள்ளத்தாக்குப் பகுதியும் பெருமளவில் தொல்லியல் ஆய்வாளர்களின் கவனத்தைக் கவர்பவை. மையக்கிழக்கில் எகிப்தின் பொருளாதாரமே மிகக் கூடிய பல்வகைத்தன்மை கொண்டது. இந்நாட்டில் சுற்றுலாத்துறை, வேளாண்மை, தொழிற்றுறை, சேவைத்துறை என்பன ஏறத்தாழ ஒரேயளவு உற்பத்தி அளவைக் கொண்டவை. வரலாறு வரலாற்றுக்கு முந்திய காலம் நைல் ஆற்றங்கரைப் பகுதிகளிலும், பாலைவனச் சோலைகளிலும் வரலாற்றுக்கு முந்திய காலப் பாறைச் செதுக்கற் சான்றுகள் உள்ளன. கிமு 10 ஆவது ஆயிரவாண்டில் வேடுவர்-உணவுசேகரிப்போர், மீன்பிடிப்போர் பண்பாடுகள் உருவாயின. காலநிலை மாற்றத்தால் அல்லது அளவு மீறிய மேய்ச்சல் நிலப் பயன்பாட்டினால், அல்லது இரண்டினாலும், கிமு 8000 ஆண்டளவில் மேய்ச்சல் நிலங்கள் பாலவனங்களாக மாறத் தொடங்கிச் சகாராப் பாலைவனம் உருவானது. தொடக்ககால இனக்குழுக்கள் நைல் ஆற்றங்கரைகளை அண்டி இடம் பெயர்ந்து, நிலையான வேளாண்மைப் பொருளாதாரத்தையும், மையப்பட்ட சமூகத்தையும் உருவாக்கினர்.[3] ஏறத்தாழ கிமு 6000 ஆண்டளவில், நைல் ஆற்றங்கரையில் புதிய கற்காலப் பண்பாடு உருவானது.[4] புதியகற்காலத்தில், மேல் எகிப்திலும், கீழ் எகிப்திலும், பல வம்சங்களுக்கு முற்பட்ட பண்பாடுகள் தனித்தனியாக வளர்ச்சியடைந்தன. பாடேரியப் பண்பாடும், தொடராக உருவான நக்காடாப் பண்பாடுகளும் வம்ச ஆட்சி எகிப்துக்கு முன்னோடிகள் எனக் கருதப்படுகின்றன. கீழ் எகிப்தின் மிகப் பழைய களமான மெரிம்டா, பாடேரியப் பண்பாட்டுக்கு 700 ஆண்டுகள் முந்தியது. ஒரேகாலக் கீழ் எகிப்தியப் பண்பாடுகளைச் சேர்ந்தோர் தமது தெற்கு எகிப்திய அயலவர்களுடன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது. தனித்துவமான பண்பாடுகளைக் கொண்ட இவர்கள் வணிகம் மூலமான தொடர்புகளைக் கொண்டிருந்தனர். மிகவும் பழைய எகிப்தியப் படவெழுத்துக்கள், கிமு 3200 ஆண்டுக் காலப் பகுதியைச் சேர்ந்த, வம்சங்களுக்கு முற்பட்ட மூன்றாம் நக்காடாக் கால மட்பாண்டங்களில் காணப்படுகின்றன.[5] பண்டை எகிப்து கிமு 3150ல், மெனெசு மன்னர், கீழ் எகிப்தையும், மேல் எகிப்தையும் இணைத்து ஒன்றுபட்ட எகிப்து இராச்சியத்தை உருவாக்கினார். இதைத் தொடர்ந்து அடுத்த மூன்று ஆயிரவாண்டுகளுக்கு பல வம்சங்கள் வரிசையாக எகிப்தை ஆண்டன. எகிப்தியப் பண்பாடு இந்த நீண்ட காலப் பகுதியில் செழித்திருந்ததோடு, சமயம், கலைகள், மொழி, பழக்க வழக்கங்கள் போன்றவை தொடர்பில் தனித்துவமான எகிப்தியப் பண்பாடாகவே இருந்தது. ஒன்றுபட்ட எகிப்தின் முதல் இரண்டு வம்ச ஆட்சிகளும், கிமு 2700 தொடக்கம் 2200 வரையான பழைய இராச்சியக் காலத்தின் அடிப்படைகளை அமைத்தன. இக்காலத்தில், மூன்றாம் வம்சக் காலத்து யோசர் (Djoser) பிரமிடு, நாலாம் வம்ச கிசா பிரமிடுகள் உட்பட்ட பல பிரமிடுகள் கட்டப்பட்டன. முதல் இடைக்காலம், 15 ஆண்டுகளை உள்ளடக்கிய அரசியல் கிளர்ச்சிகளைக் கொண்ட காலமாகக் காணப்படுகின்றது. நைல் ஆற்றில் கூடிய நீர் வரத்தும், அரசின் உறுதிப்பாடும் நடு இராச்சியப் பகுதியில், நாட்டில் புதிய செழிப்பைத் திரும்பவும் கொண்டுவந்தன. இது, கிமு 2040 ஆம் ஆண்டில் மூன்றாம் அமெனெம்கத் காலத்தில் உயர் நிலையை எட்டியது. இரண்டாம் ஒற்றுமையின்மைக் காலம் எகிப்தை வெளியாரான செமிட்டிய ஐக்சோசுக்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தது. கிமு 1650ல், ஐக்சோசியர்கள் கீழ் எகிப்தின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றி அவாரிசு என்னும் புதிய தலைநகரையும் நிறுவினர். முதலாம் அகுமோசு என்பவன் மேல் எகிப்திலிருந்து படையெடுத்து வந்து பதினெட்டாவது வம்ச ஆட்சியை உருவாக்கினான். இவன் தலைநகரை மெம்பிசில் இருந்து தேபிசுக்கு இடம் மாற்றினான். கிமு 1550 முதல் 1070 வரையிலான புதிய இராச்சியக் காலம் பதினெட்டாவது வம்ச ஆட்சியுடன் தொடங்குகிறது. இக்காலத்தில் எகிப்து ஒரு பன்னாட்டு வல்லரசாக வளர்ந்தது. இது தெற்கே நூபியாவில் உள்ள தொம்போசு வரை விரிவடைந்ததுடன், கிழக்கில் லேவந்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கி ஒரு பேரரசானது. இக் காலத்திலேயே மிகப் புகழ் பெற்ற பாரோக்களான, அட்செப்சுத், மூன்றாம் துத்மோசு, அக்கெனாத்தென், அவனுடைய மனைவி நெபெர்தீத்தி, துட்டங்காமுன், இரண்டாம் ராமேசசு போன்றோர் எகிப்தை ஆண்டனர். வரலாற்றுச் சான்றுடன் கூடிய முதல் ஓரிறைக் கொள்கை தொடர்பான வெளிப்பாடு இக் காலத்திலேயே காணப்படுகிறது. இது அத்தெனியம் எனப்படுகிறது. பல்வேறு நாடுகளுடனான தொடர்புகள் எகிப்துக்குப் புதிய எண்ணக்கருக்கள் வருவதற்கு உதவின. பிற்காலத்தில் லிபியர், நூபியர், அசிரியர் போன்றோர் எகிப்தின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றியுள்ளனர். எனினும், எகிப்தின் தாயக மக்கள் அவர்களைத் துரத்திவிட்டுத் தமது நாட்டை மீளக் கைப்பற்றினர். பாரோக்களின் ஆட்சி முப்பதாவது வம்ச ஆட்சியுடன் முடிவுக்கு வந்தது. கிமு 343ல் எகிப்தை பாரசீகத்தவர் கைப்பற்றினர். கடைசி அரசனான இரண்டாம் நெக்தானெபோ போரில் தோல்வியுற்று அரசை இழந்தான். அரசியல் 2011 எகிப்திய மக்கள் புரட்சி 25 சனவரி 2011 அன்று அதிபர் ஓசுனி முபாரக்கின் ஆட்சியை எதிர்த்து மிகப்பரவலாகக் கலகங்கள் தோன்றின. விரைவில் இது மாபெரும் குடியியல் எதிர்ப்புப் போராட்டமாக மாறி, பெருமளவில் மக்கள் பங்கேற்க ஆரம்பித்தனர். 29 சனவரி அன்று நிலைமை கட்டுக்கடங்காமல் போவதை உணர்ந்த முபாரக் அரசு, ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. ஆனால், மக்கள் இதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராடினர். 11 பெப்ருவரி 2011 அன்று கெய்ரோவை விட்டு வெளியேறிய முபாரக், தன் அதிபர் பதவியை விட்டுக் கொடுத்தார். 01.02.2011 திகதி சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தலைநகர் கோய்ரோவிலும் இரண்டாவது தலைநகராக கருதப்படும் அலெக்சாந்திரா நகரிலும் ஓன்று கூடி முபாரக் மீதான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தனர். அத்துடன் இப்போரட்டக்காரர்களுக்கு ஆதரவாக சர்வதேச நாடுகள் பலவற்றிலும் மக்கள் ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இந் நிலையில் எகிப்து மக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் நேற்று முன்தினம் தேசிய தொலைகாட்சியில் தோன்றி உரையாற்றிய முபாரக் பதவி விலகவோ நாட்டை விட்டு வெளியேறப் போவதோ இல்லை எனவும் ஆனால் அரசியல் மறுசீரமைப்புக்கு தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் முபாரக்கின் இந்த மறு மொழிக்கு இணங்க மறுத்த போராட்டக்காரர்கள் தொடர்ந்து தம் போராட்டத்தை தொடர்ந்தனர். 01.02.2011 தொடர்ந்து ஒன்றுகூடிய அளவுக்கதிகமான போராட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் வன்முறையை பிரயோகிக்காது ஆதரவு வழங்கியதுடன் பாதுகாப்பையும் வழங்கி இருந்தனர். இந்நிலையில் 02.02.2011 திகதி உத்தியோகபூர்வ அறிவித்தல் ஒன்றை விடுத்த எகிப்து இராணுவம் ஆர்ப்பாட்டக்காரர்களை வீடுகளுக்கு செல்லுமாறு நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநிறுத்த ஒத்துழைப்பு நல்குமாறும் வேண்டுகோள் விடுத்தது. இருப்பினும் எதிர்க்கட்சியினர் இதற்கு இணங்க மறுத்ததுடன் முபாரக் பதவி விலகும் வரை தாம் வீட்டுக்கு செல்லப் போவதில்லை எனவும் தெரிவித்தனர். இருப்பினும் எகிப்து ஜனாதிபதி ஒசுனி முபாரகிற்கு ஆதரவானோரும் கொய்ரோவில் ஒன்று கூடியதை அடுத்து இரு தரப்பினருக்கிடையில் மோதல் வெடித்தது. இதில் பலர் மரணமடைந்தும் காயப்பட்டும் இருந்தனர். இதேவேளை எகிப்தில் தற்போது அமுலிலிருக்கும் பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் இறுதியாக நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகளை மீள்பரிசீலனைக்குட்படுத்தவும் எகிப்திய ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார். இதற்கிடையில் போராட்டம் மற்றும் வன்முறைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் எகிப்தின் சில பகுதிகளில் ஊரடங்கு சட்டமும் அமுல்படுத்தப்பட்டது. இருப்பினும் அதனையும் மீறி மக்கள் வீதியில் கூட்டம் கூட்டமாக குழுமி நிற்பதும் ஐவேளை தொழுகைகளையும் வீதிகளிலேயே நிறைவேற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. எகிப்தியத் துணைத்தலைவர் ஒமார் சுலைமான் 11 பெப்ரவரி அன்று முபாரக் பதவி இறங்கியதையும் படைத்துறை உயர்மட்டக்குழுவிடம் ஆட்சியை ஒப்படைத்ததையும் அறிவித்தார். பிற நாடுகளின் கருத்துகள் எகிப்து போராட்டங்களுக்கு பிற நாடுகளில் நல்ல ஆதரவும், மத்திய கிழக்காசியாவில் மக்களாட்சியற்ற நாடுகளில் ஆட்சியாளர்களின் கண்டனமும் கிடைத்தது. போராட்டத்துக்கு தமது ஆதரவை தெரிவிக்கும் முகமாக உலகின் பல நாடுகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் எகிப்திய துதுவராலயங்களுக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் ஜோர்தானின் இம்லாமிய எதிர்க்கட்சி இயக்கம், எகிப்து போன்ற போராட்டம் தமது நாட்டில் வரவேண்டும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ள போதிலும், தமது நாட்டிலும் அரசியல் மறுசீரமைப்பு தேவை என்று கோரியுள்ளது. எகிப்தில் நடக்கிற நிகழ்வுகள் “ஒரு தோற்று நோயைப் போன்றது” என்று கூறியுள்ள சிரியாவின் அதிபர் பஸர் அல் ஆசாத், அவற்றை தலைவர்கள் சரியாக கையாள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேற்கோள்கள் மேலும் பார்க்க தொல்பழங்கால எகிப்தியக் கட்டிடக்கலை பகுப்பு:வடக்கு ஆப்பிரிக்க நாடுகள் பகுப்பு:முன்னாள் பிரித்தானியக் குடியேற்றங்கள் பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
எகிப்து நாட்டின் தலைநகரம் எது?
கெய்ரோ
55
tamil
d75178d00
கதிரவ அமைப்பு (Solar System) அல்லது சூரியக் குடும்பம் என்பது கதிரவனுக்கும் அதைச் சுற்றி வரும் பொருட்ளுக்கும் இடையே உள்ள ஈர்ப்புவிசைப் பிணைப்பால் உருவான ஒரு அமைப்பாகும். இது கதிரவனைச் சுற்றி வரும் எட்டு கோள்களையும், ஐந்து குறுங்கோள்களையும் உள்ளடக்கியது ஆகும் என்று உலகளாவிய வானியல் ஒன்றியம் வரையறுத்துள்ளது. இந்த அமைப்பில் கதிரவனை நேரடியாக சுற்றி வரும் பெரிய அளவு கொண்ட கோள்களும் சிறிய அளவு கொண்ட குறுங்கோள் மற்றும் சிறு கதிரவ அமைப்பு பொருட்கள் போன்றவையும், கதிரவனை மறைமுகமாக சுற்றி வரும் துணைக்கோள்களும் அடங்கும். 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரு மிகப்பெரிய மூலக்கூறு மேகத்தில் ஏற்பட்ட ஈர்ப்புவிசை சுருக்கம் காரணமாக கதிரவ அமைப்பு உருவானது. இந்த அமைப்பின் எடையில் பெரும்பகுதியை கதிரவனே கொண்டுள்ளது. அதற்கடுத்து மிக அதிக எடை கொண்டது வியாழன் கோளாகும். புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் ஆகிய நான்கு உட்கோள்கள், புவியொத்த கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பொதுவாக பாறைகள் மற்றும் உலோகங்கள் ஆகியவற்றால் உருவானவையாகும். ஏனைய நான்கு புறக்கோள்களும் புவியொத்த கோள்களை விட நிறைமிக்கனவாகும். அவற்றில் மிகப்பெரிய கோள்களான வியாழன் மற்றும் சனி போன்றவை பெரும்பாலும் ஐதரசன் மற்றும் ஈலியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளதால் வளிமப் பெருங்கோள்கள் என்றும் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்றவை மீதேன், அமோனியா போன்ற உயர் உருகு நிலை கொண்ட பொருட்களைக் கொண்டுள்ளதால் பனிப பெருங்கோள்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. அனைத்தும் தனித்தனி நீள்வட்ட சுற்றுப்பாதைகளில் (Orbital path) கதிரவனைச் சுற்றிவருகின்றன. கதிரவ அமைப்பு சிறு பொருட்களையும் கொண்டுள்ளது. செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கிடையே அமைந்துள்ள சிறுகோள் பட்டை அகக்கோள்களைப் போல் உலோகங்கள் மற்ரும் தனிமங்களையே பெரும்பாலும் கொண்டுள்ளது, இதில் சியரீசு குறுங்கோள் அமைந்துள்ளது. பனிக்கட்டிகளால் உருவான கைப்பர் பட்டை நெப்டியூனின் வட்டப்பாதையில் அமைந்துள்ளது. இதில் புளுட்டோ, அவுமியா, மேக்மேக் மற்றும் ஏரிஸ் ஆகிய குறுங்கோள்கள் அமைந்துள்ளன. இந்த இரு பகுதிகளைத் தவிர, பல்வேறு சிறு சிறு பொருட்களும் தடையின்றிப் பயணித்து வருகின்றன. ஆறு கோள்களையும், குறைந்தபட்சம் நான்கு குறுங்கோள்களையும் பல சிறு பொருட்களையும் துணைக்கோள்கள் சுற்றி வருகின்றன. இவை நிலவுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. புறக்கோள்கள் ஒவ்வொன்றையும் தூசு மற்றும் சிறு பொருட்களால் ஆன ஒரு கோள் வளையம் சுற்றியுள்ளது. கதிரவ அமைப்பு பால்வெளிப் பேரடையின் மையத்தில் இருந்து 26,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஓரியன் கையில் அமைந்துள்ளது. கண்டு பிடிப்பும் ஆய்வுப் பயணமும் பல்லாயிரம் ஆண்டுகளாக மனித இனம் கதிரவ அமைப்பைப் பற்றி புரிந்துகொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ இல்லை. அவர்கள் புவியானது அசைவற்றது எனவும் அண்டத்தின் நடுவில் இருப்பது எனவும் நம்பி வந்தனர். கண்ணுக்கு புலப்படும் வான் வழியே பயணிக்கின்ற தெய்வீகப் பொருட்களை விட புவி வேறுபட்ட வகையைச் சேர்ந்தது என்று கருதிவந்தனர். இந்திய கணிதமேதையும் வான சாஸ்திர வல்லுனரும் ஆன ஆரியபட்டா மற்றும் கிரேக்க தத்துவ அறிஞர் அரிசுடாட்டில் ஆகிய இருவரும் ஆய்வு ஊக செய்தியாக அண்டம்[5] பற்றி மறுவரிசைப் படுத்தினர். அரிச்சுடார்க்கசு என்ற அறிஞர் கதிரவனை மையமாகக் கொண்ட முறையை ஊகித்தார். இருப்பினும் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் என்பவர்தான் கதிரவ அமைப்பில் மையப்பகுதியில் கதிரவன் அமைந்துள்ளது என்பதை கணித பூர்வமாக அறிவித்தவர். 17ஆம் நூற்றாண்டில் கலீலியோ கலிலி, எனபவர் கதிரவனில் கதிரவ புள்ளிகள் இருப்பதையும் வியாழனை நான்கு நிலவுகள் சுற்றி வருவதையும் கண்டறிந்தார். அவரது கண்டுபிடிப்புகளைப் பின்பற்றி கிறித்தியான் ஐகன்சு என்பவர் சனியைச் சுற்றி வரும் டைடன் என்ற நிலவையும் சனியைச் சுற்றியுள்ள கோள் வட்டத்தையும் கண்டறிந்தார். 1705ஆம் ஆண்டு எட்மண்டு ஏலி என்பவர் ஒரு வால்வெள்ளி 74-75 வருடங்களுக்கு ஒருமுறை ஒரே பொருளையே மீண்டும் வந்தடைவதை உணர்ந்தார். இதுவே கோள்களைத் தவிர மற்ற பொருட்களும் கதிரவ அமைப்பில் உள்ளது என்பதற்கான முதல் சான்றாக விளங்கியது. 1838ஆம் ஆண்டு பிரீட்ரிக் பெசல் என்பவர் முதன்முறையாக இடமாறு தோற்றப் பிழை வாயிலாக கதிரவனுக்கும் மற்றொரு விண்மீனுக்கும் இடையில் உள்ள நம்பத் தகுந்த தொலைவைக் கண்டறிதார். அதன்பிறகு நோக்கீட்டு வானியல் மற்றும் ஆளில்லா விண்கலங்கள் ஆகியவற்றின் வளர்ச்சி, கதிரவ அமைப்பில் உள்ளவற்றைக் குறித்து விரிவாக ஆய்வு செய்ய உதவியது. அமைப்பு கதிரவன் மற்றும் புவி இடையே உள்ள தொலைவு ஒரு வானியல் அலகு ஆகும். கதிரவன் கதிரவன் என்பது கதிரவ அமைப்பின் மையத்தில் உள்ள ஒரு விண்மீன் ஆகும். இதன் நிறை (332,900 புவி நிறைகள்) கதிரவ அமைப்பின் மொத்த நிறையில் 99.86 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. இது தன் உள்ளகத்தில் இருக்கும் ஐட்ரசன் அணுக்களை ஈலியத்துடன் இணைப்பதன் மூலம் மாபெரும் ஆற்றலை வெளியிடுகிறது. அந்த ஆற்றல் பெரும்பாலும் மின்காந்த கதிர்வீச்சு மூலம் விண்வெளிக்குள் கதிர்வீசப்படுகிறது. கதிரவன் என்பது ஒரு G-வகை முதன்மை வரிசை விண்மீன் ஆகும். +4.83 என்ற தனி ஒளி அளவைக் கொண்டுள்ள கதிரவன், ஏறக்குறைய பால் வழியில் உள்ள 85% விண்மீன்களை விட ஒளிர்வுமிக்கதாகும். அந்த விண்மீன்களில் பெரும்பாலனாவை செங்குறுமீன்கள் ஆகும். கதிரவன் ஒரு உலோகசெறிவு மிக்க விண்மீன் வகையை சார்ந்தது. கதிரவ அமைப்பின் உட்பகுதி நான்கு உட்கோள்கள் அல்லது புவியொத்த கோள்கள் அடர்ந்த பாறைப்படலங்களாக உள்ளன. அவற்றில் இரு கோள்கள் தனித்தனி நிலவுகளைக் கொண்டுள்ளன. இவற்றுக்கு கோள் வளையங்கள் கிடையாது. இவை பெரும்பாலும் உயர் உருகுநிலை கொண்ட உலோகங்கள் அதாவது மணல்சத்து உப்புக்களை வெளிப்புறத்திலும் இரும்பு, நிக்கல் போன்ற உலோகங்களை மையப்பகுதியிலும் கொண்டுள்ளன. நான்கு கோள்களில் வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய மூன்றையும் கட்டுறுதியான வளிக்கோளங்கள் சூழ்ந்திருக்கினறன. இவற்றில் அழுத்தமான எரிமலை முகடுகளும் கட்டுமானக் கலையுடன் நேர்த்தியான மேல்பரப்பும் அமைந்துகிடக்கின்றன. அதில் பிளவுண்டபள்ளத் தாக்குகள் மற்றும் எரிமலைகள் உள்ளன. உட்கோள் என்ற பெயரை தாழ்ந்த கோள் என்ற பெயருடன் குழப்பம் ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது. தாழ்ந்த கோள் எனப்படுபவை புவியை காட்டிலும் கதிரவனுக்கு அருகில் உள்ள புதன் மற்றும் வெள்ளி ஆகும். புதன் புதன் கதிரவனுக்கு மிக அருகில் உள்ள கோளும் கதிரவ அமைப்பில் உள்ள கோள்களில் மிகச்சிறியதும் ஆகும். இது கதிரவனிலிருந்து 0.4 வானியல் அலகு தொலைவில் உள்லது. இதற்கு இயற்கைத் துணைக்கோள்கள் கிடையாது. இது புவியமைப்பு அம்சங்களுக்காக பெயர் பெற்றதாகும். அழுத்தமான எரிமலைவாய்களில் தொங்கும் கூடல் வாய்கள் அமைந்துள்ளன. அவைகள் ஒருவேளை கடல் தோன்றிய காலத்தில் நிகழ்ந்த ஒடுக்கத்தால் உருவாகியிருக்கக்கூடும்[6]. புதனின் வளிமண்டலம் புறக்கணிக்கத்தக்கதாகும். அதில் உள்ள அணுக்கள் மேற்பரப்பில் கதிரவன் காற்றால் தாக்கப்பட்டு வெடிக்கும்[7]. இது மையப்பகுதியில் இரும்பு உலோகம் அதிகமாக உள்ளது. அதன் மெல்லிய 'மூடகம்' பற்றி இதுவரை விளக்கப்படவில்லை. தற்காலிகக் கோட்பாடுகள்ன்படி, அதன் வெளிப்பகுதி அடுக்குகள் பெரும் பயன்விளைவால் முற்றிலும் களையப்பட்டுள்ளது அல்லது அது திரண்டு உருவாக்குவதை இளம் கதிரவனின் எரிசக்தி தடுத்து வந்துள்ளது[8][9]. வெள்ளி வெள்ளி என்பது அளவில் புவியை ஒத்திருக்கும் ஒரு கோளாகும். இது கதிரவனிலிருந்து 0.7 வானியல் அலகு தூரத்திலுள்ளது. இது புவியைப்போல் இரும்பு மையத்தைச் சுற்றி பருமனான மணல் சத்து (சிலிகேட்) மூடகத்தைக் கொண்டுள்ளது. இது புவியை விட வறண்டும் ஒன்பது மடங்குகள் அடர்த்தியான வளிமண்டலத்தையும் கொண்டுள்ளது. இதற்கு இயற்கை துணைக்கோள்கள் கிடையாது. இது மிகமிக வெப்பமான கிரகமாகும். இதன் மேற்பரப்பு வெப்பநிலை 400 °செல்சியசை எளிதில் அடைந்துவிடக்கூடியது. இதற்கு அதன் வளிமண்டலத்தில் பைங்குடில் வளிமங்கள் அதிகமாக இருப்பதே காரணமாகும்[10]. நடப்பு மண்ணியல் நடவடிக்கைகள் அங்கு புவியியல் நடைபெறுவதற்குரிய உறுதியான தடயங்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. அதன் வளிமண்டலம் வெறுமையாகாமல் தடுக்க அதற்கு காந்தப்புலம் எதுவும் இல்லை. எனவே அதன் வளிமண்டலம் எரிமலை வெளியேற்றங்களால் தொடர்ந்து நிரப்பப்படுகிறது [11]. புவி புவி (1 வாஅ) உட்கோள்களில் மிகப்பெரியதும் மிக அடர்த்தியானதும் ஆகும். இதில் மட்டுமே புவியியல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அண்டத்தில் புவி ஒன்றில் மட்டும் தான் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.[12][12][12][12][12][12][12][12][12][8][7] புவியொத்த கோள்களில் இது ஒன்றுதான் திரவ நீர்க்கோளம் பெற்றுள்ளது. இத்தனிச்சிறப்பு இதற்கு மட்டுமே இருக்கின்றது. மேலும் புவியில் காணப்படும் 'ண்டத்தட்டு'இயக்கவியல் அதன் தனிச்சிறப்பை கூடுதலாக்குகின்றது. புவியின் வளிமண்டலம் மற்ற கோள்களின் வளிமண்டலங்களைக் காட்டிலும் வேறுபாடாக உள்ளது. உயிரினங்கள் வாழத் தேவையான 21 சதவீதம் ஆக்சிசனைக் கொண்டிருப்பதால் இத்தகைய வேறுபாடுகள் தோன்றியுள்ளன[13]. அதற்கு நிலவு என்ற ஒரேயொரு இயற்கை துணைக்கோள் உண்டு. அந்த நிலவே கதிரவ அமைப்பில் அமைந்துள்ள புவியொத்த கோள்களின் துணைக்கோள்களில் பெரியது எனப் பெயர் பெற்றுள்ளது. செவ்வாய் செவ்வாய் (1.5 வாஅ) என்பது புவி மற்றும வெள்ளி ஆகிய இரண்டைக் காட்டிலும் சிறிய கோளாக உள்ளது. அது கொண்டுள்ள வளிமண்டலத்தில் கரியமில வாயுவே அதிகம் உள்ளது. அதில் பரந்து காணக்கிடக்கும் 'ஒலம்பஸ் மான்ஸ்' போன்ற எரிமலைகள் மற்றும் 'வாலிஸ் மேரினாரிஸ்' போன்ற பிளந்த பள்ளத்தாக்குகளும் காணப்படுகின்றன. அவைகள் அதன் புவியியல் நடவடிக்கைகளை எடுத்துக்காட்டுகின்றன.[14] அதன் சிகப்புநிறம் அதில் உள்ள இரும்பு ஆக்ஸைடுகளால்[15] ஏற்பட்டதாகும். செவ்வாய் கோளுக்கு இரண்டு சிறிய இயற்கை துணைக்கோள்கள் உள்ளன. அவைகள் 'டைமோஸ்' மற்றும் 'போபோஸ்' என்றழைக்கப் பெறுகின்றன.[16][17] கதிரவ அமைப்பின் வெளிப்பகுதி கதிரவ அமைப்பின் வெளிப்புறப் பகுதி வளிமப் பெருங்கோள்கள் (gas giants) மற்றும் அவற்றின் துணைக்கோள்களுக்கு தாயகமாக அமைந்துள்ளது. பல குறுகிய ஆயுள் கொண்ட வால்மீன்கள் ('சென்டார்கள்' எனும் விண்மீன் குழுக்கள் உள்பட) சுற்றி வருகின்றன. கதிரவனிடமிருந்து மிக நீண்ட தூரம் வெளிப்புறத்தில் அமைந்து இருப்பதால் இவை விரைந்து ஆவியாகும் தண்ணீர், அமோனியா, மீதேன் ஆகியவற்றால் நிரம்பியுள்ளன. ஆனால் உட்புற கதிரவ குடும்பத்தில் உள்ள பாறைகள் குளிர்ந்த நிலையில் திடமாகவே இருக்கச்செய்கின்றன. வெளிப்புறக் கோள்கள் கதிரவ அமைப்பில் நான்கு வெளிப்புறக் கோள்கள் அல்லது பெருங்கோள்கள் உள்ளன. இவை மொத்தமாக 99 சதவீதம் பொருண்மையுடன் கதிரவனின் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. வியாழன் மற்றும் சனி கோள்களில் அதிகபட்சமாக ஹைட்ரஜன், ஹீலியம் இருக்கின்றன. யுரேனசு மற்றும் நெப்டியூனில் அதிக பட்சம் பனிக்கட்டிகள் உள்ளன. எனவே வானியலாளர்கள் இவைகளை 'பனி அரக்கர்கள்' என்று தனியாக வகைப்படுத்துகின்றனர்.[18] நான்கு பெருங்கோள்களுக்கும் கோள் வளையங்கள் இருப்பினும் சனியின் வளையத்தை மட்டும் புவியிலிருந்து எளிதாகக் காண இயலும். வியாழன் வியாழன் (5.2 வாஅ) 318 மடங்கு புவியின் நிறையைக் கொண்டுள்ள கோளாகும். அது 2.5 மடங்குகள் பிற கோள்களின் மொத்த பொருண்மையை காட்டிலும் அதிகமானதாகும். இது ஐட்ரசன் மற்றும் ஈலியம் இரண்டாலும் உருவாகியுள்ளது. இதன் வலிமையான உள்வெப்பம் பல நிரந்தர அம்சங்களை வளிமண்டலம், முகில்திரள்கள், 'பெரிய செந்நிற இடம்' என்று அறியப்படுத்தியுள்ளன. வியாழன் அறுபத்து மூன்று அறியப்பட்ட நிலவுகளைக் கொண்டுள்ளது. இதில் மிகப்பெரிய நிலவுகளான கனிமீடு, கலிஸ்டோ, அயோ, மற்றும் ஐரோப்பா ஆகிய நான்கும் புவியொத்த கோள்களை ஒத்துள்ளன. எரிமலைச் செயற்பாடு, உள்ளிட வெப்பமூட்டல் இரண்டிலும் ஒத்திருக்கும் அம்சங்கள் காணலாம்.[19] 'கனிமீடு' நிலவு கதிரவ அமைப்பில் உள்ள புதன் கோளை விட அளவில் பெரியதாகும். சனி சனி (9.5 வாஅ) தனது வளையத்தால் அறியப்படும் கோளாகும் வியாழனினை ஒத்த அம்சங்கள் அதன் வளிக்கோளம் மற்றும் காந்தக்கோளத்தில்  உள்ளன. வியாழனின் கொள்ளளவில் 60 சதவீதத்தை சனி கொண்டுள்ளது. ஆனால் நிறையைப் பொறுத்த மட்டில் மூன்றாவதாக உள்ளது. கதிரவ அமைப்பில் உள்ள கோள்களில் சனி மட்டுமே நீரை விட அடர்த்தி குறைந்த கோள் ஆகும். இதற்கு 60 அறியப்பட்ட துணைக்கோள்கள் உள்ளன. அவற்றில் 'டைட்டான்' மற்றும் 'என்சடலாடஸ்' ஆகிய நிலவுகளில் புவியியல் தொடர்பான செயல்பாடுகள் நடப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. அதிகம் பனிப்படலம் இருப்பினும்! [20] கதிரவ அமைப்பின் இரண்டாவது மிகப்பெரிய நிலவான டைட்டன், புதன் கோளைவிடப் பெரியதும் கதிரவ அமைப்பில் கணிசமான வளிமண்டலம் கொண்டுள்ள ஒரே துணைக்கோளும் ஆகும். யுரேனசு யுரேனசு (19.6 வாஅ) 14 புவிப்பொருண்மைகள் கொண்ட வெளிப்புற கிரகங்களுள் மிக மென்மையானதாகும். தனிச்சிறப்பான அம்சமாக அமைவது, எல்லா கோள்களைக் காட்டிலும் கதிரவனை அது அதன் வட்டப்பாதையில் அதன் பக்கமாகவே சுற்றிவலம் வருவதேயாகும். ஞாயிறு செல்லும் மார்க்கத்தில் தொண்ணூறு டிகிரி ஊடு அச்சில் சாய்வுநிலை- அதாவது ஒருக்கணித்துக் கொண்டு செல்வதேயாகும். பிற வாயு அரக்கர்களைக் காட்டிலும் இது மிகக்குளிர்ந்த மையப்பகுதியைக் கொண்டுள்ளது. அண்ட வெளியில் மிகக்குறைந்த வெப்பத்தையே கதிர்வீச்சாக வெளியிடுகிறது[21] யுரேனசு 27 அறியப்பட்ட துணைக்கோள்களைக் கொண்டுள்ளது. அதில் பெரிய நிலவான டைட்டன் புவிவியல் செயல்பாட்டுடன் உள்ளது. நெப்டியூன் யுரேனசைக் காட்டிலும் சிறிதாக இருந்தாலும் நெப்டியூன் (30 வாஅ) புவியை விட பதினேழு மடங்கு நிறையைக் கொண்டுள்ளதால் அதிக அடர்த்தியுடன் உள்ளது.  இதன் உள்வெப்ப கதிர்வீச்சு வியாழன் மற்றும் சனியை விட அதிகமாக உள்ளது.[22] நெப்டியூன் பதினான்கு அறியப்பட்ட துணைக்கோள்களைக் கொண்டுள்ளது. அதில் பெரிய 'டிரைட்டன்' புவியியல் செயல்பாட்டுடன் உள்ளது. மேலும் வெந்நீர் ஊற்றுகள், நீர்ம நைட்ரஜன் [23] கொண்டுள்ளன. டிரைட்டன் மட்டும் தான் வட்டப்பாதையில் பின்னோக்கிச்செல்லும் ஒரேயொரு நிலவாகும். நெப்டியூன் அதன் வட்டப்பாதையில் ஏராளமான சிறுகோள்களைக் கொண்டுள்ளது. நெப்டியூன் டிரோசன்கள் என்று அழைக்கப்படும் அவை ஒன்றுக்கு ஒன்று சரி விகிதத்தில் ஒலியலை அதிர்வுகள் கொண்டதாக உள்ளன நெப்டியூனுக்கு அப்பால் உள்ள பகுதி நெப்டியூனின் சுழற்சிப் பாதைக்கு அப்பால் உள்ள பகுதியில் கைப்பர் பட்டையும் புளூட்டோ உள்ளிட்ட பல்வேறு குறுங்கோள்களும் உள்ளன. சில நேரங்களில் இது கதிரவ அமைப்பின் மூன்றாம் பகுதி என்றும் அழைக்கப்படுகிறது. கைப்பர் பட்டை கைப்பர் பட்டை (Kuiper belt) என்பது பனிப்பொருட்களைக் கொண்ட ஒரு பகுதி ஆகும் . இது கதிரவனில் இருந்து 30 வானியல் அலகுகள் தொடக்கம் 50 வானியல் அலகுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ளது(30AU-50AU). இது கதிரவ அமைப்பு உருவாகிய பின் மீதமான சிறு பொருட்களால் ஆனது. இப்பகுதியிலேயே புளூட்டோ, ஹௌமியா மற்றும் மேக்மேக் போன்ற குறுங்கோள்கள் உள்ளன. இங்குள்ளவை அனைத்தும் நீர் மற்றும் உறைந்துள்ள, எரியக்கூடிய மெதேன், அமோனியாவால் ஆனவை. குறிப்புகள் புற இணைப்புகள் கல்வி சஞ்சிகைகள் கட்டுரைகள் சூரிய குடும்பபொருள்கள் * பகுப்பு:கோள் தொகுதிகள்
நமது சூரிய மண்டலத்தில் எத்தனை கிரகங்கள் உள்ளன?
எட்டு கோள்களையும், ஐந்து குறுங்கோள்களையும்
196
tamil
f18b5f1c5
கிறித்தோபர் கொலம்பசு (Christopher Columbus) (1451–1506) இத்தாலிய நாடுகாண் பயணியும் வணிகரும் காலனித்துவவாதியும் ஆவார். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை (எசுப்பானியா நாட்டுக் கொடியுடன்) வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார். அவர் இத்தாலியின் செனோவா என்ற குடியரசைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது.[1][2][3][4] எசுப்பானியப் பேரரசின் கத்தோலிக்க பேரரசர்களின் ஆட்சியில் கொலம்பசு நான்கு கடற்பயணங்களை அத்திலாந்திக்கு பெருங்கடலைக் கடந்து மேற்கொண்டுள்ளார். இந்தக் கடற்பயணங்களும் லா எசுப்பானியோலா தீவில் இவர் நிரந்தரக் குடியேற்றம் அமைக்க மேற்கொண்ட முயற்சிகளும் புதிய உலகம் என அழைக்கப்பட்ட அமெரிக்காக்களில் எசுப்பானிய குடியேற்றத்தைத் துவக்கின. புதிய வணிக வழிகளைக் கண்டறிந்து குடியேற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற மேற்கத்திய பேரரசுவாத போக்கு மற்றும் ஐரோப்பிய இராச்சியங்களிடையேயான பொருளியல்நிலை போட்டியில் கிழக்கத்திய இந்தியாவை எட்ட கொலம்பசு மேற்கில் பயணித்து உலகைச் சுற்றி இந்தியாவை அடைய முன்மொழிந்தார். இதற்கு எசுப்பானிய அரசரின் ஆதரவைப் பெற்ற கொலம்பசு 1492இல் மேற்கில் பயணித்து புதிய உலகத்தை கண்டறிந்தார். பகாமாசு தீவுக்கூட்டங்களில் தாம் பின்னர் சான் சால்வதோர் எனப் பெயரிட்ட தீவில் வந்திறங்கினார். மேலும் மேற்கொண்ட மூன்று கடற்பயணங்களில் கொலம்பசு பெரிய மற்றும் சிறிய அண்டிலிசு தீவுகளையும் வெனிசுவேலா, நடு அமெரிக்காவின் கரிபியக் கடலோரப் பகுதிகளையும் கண்டறிந்து அவற்றை எசுப்பானியப் பேரரசுக்கு உரியதாக உரிமை கோரினார். கொலம்பசு அமெரிக்காவை அடைந்த முதல் ஐரோப்பியரல்லர்; 11வது நூற்றாண்டிலேயே லீப் எரிக்சன் தலைமையேற்ற நோர்சு குழு வட அமெரிக்காவில் இறங்கியுள்ளது.[5]) இருப்பினும் இவரது கடற்பயணங்களே அமெரிக்காக்களுடனான ஐரோப்பாவின் முதல் நிரந்தர தொடர்பை ஏற்படுத்தியது; இவற்றை அடுத்தே பல நூற்றாண்டுகளுக்கு ஐரோப்பியர்களின் நாடுகாணுதல், கைப்பற்றுதல், குடியேற்றவாதம் தொடர்ந்தன. எனவே இவரது கண்டறிதல் தற்கால மேற்கத்திய உலகின் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்தது.[1] இதுவரை ஐரோப்பியர்கள் கண்டறியாத புதிய கண்டத்தை வந்தடைந்துள்ளோம் என்பதை ஏற்றுக்கொள்ளாத கொலம்பசு இங்கு வாழ்ந்திருந்த மக்களை இன்டியோசு ("இந்தியர்களுக்கான" எசுப்பானியச் சொல்) என்றே அழைத்தார்.[6][7][8] அமெரிக்காவில் குடியேற்றப்பகுதிகளுக்கு நிர்வாக அதிகாரிகளை நியமித்தது தொடர்பான எசுப்பானிய பேரரசருடனான பிணக்கு காரணமாக 1500இல் லா எசுப்பானியோலாவின் ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னால் நீண்ட வழக்காடலுக்குப் பின்னர் கொலம்பசும் அவரது வாரிசுகளும் கோரிய உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. கொலம்பசின் வரலாற்று முக்கியத்துவம் கொலம்பசு ஆசியாவிற்கு, குறிப்பாக இந்தியாவிற்கு புதிய வழியைக் கண்டுபிடிக்க முயன்று, கடைசியில் அவர் அடைந்தது இந்தியா என்றே நம்பினார். கொலம்பசு அமெரிக்காவைக் கண்டுபிடித்தவராகக் கருதப்படுகின்றார். அவருடைய கடுமையான ஈடுபாட்டின் காரணமாக அமெரிக்காவைப் பற்றி ஐரோப்பா தெரிந்து கொள்ள வழிவகுத்தது. அத்தோடு இன்றைக்கு பல்வேறு கண்டங்களின் உறவிற்கும் அவருடைய கண்டுபிடிப்பே காரணமாகும். உண்மையாக கொலம்பசு அமெரிக்காவை அடைந்த முதல் மனிதர் இல்லை . ஏனென்றால் அங்கே ஏற்கனவே மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதை அவர் கண்டறிந்தார். முதல் ஐரோப்பியரும் அல்லர். ஏனென்றால் வைக்கிங்கள்,வட ஐரோப்பாவிலிருந்து 11ஆம் நூற்றாண்டிலேயே வட அமெரிக்காவிற்குச் சென்றுள்ளனர். இருந்தாலும், கொலம்பசின் பயணமே ஐரோப்பியர்களின் அமெரிக்கக் குடியேற்றத்திற்கு அடிப்படையாகும். அதுவே உரேசியா மற்றும் ஆப்பிரிக்காவை அமெரிக்காவுடன் இணைத்ததற்கு முக்கிய காரணமாகும். இளமைக்காலம் கொலம்பசு இத்தாலியின் துறைமுக நகரான ஜெனோவாவில் 1451-ல் பிறந்தார்.[9] அவருடைய தந்தை டொ மினிகோ கொலம்போ, ஒரு கம்பளித்துணி வியாபாரி. தாய் சுசான்னா போன்டனாரோசா. கொலம்பசிற்கு மூன்று சகோதரர்கள்,ஒரு சகோதரி. 1471-இல் கொலம்பசு எசுபெனோலா ஃபினான்சியர்சு நடத்திய ஒரு கப்பலில் சேர்ந்தார். அவர் கியோஸ் கியோசு (ஏஜியன் கடல்-இல் உள்ள ஒரு தீவு) பகுதியைச் சுற்றி வந்த அக்கப்பலில் ஒரு வருடம் வேலை செய்தார். சில நாட்கள் நாடு திரும்பிய பின் மறுபடியும் கியோசுப் பகுதியில் மற்றோர் ஆண்டு வேலை செய்தார்.[10] இக்கால கட்டத்தில் ஏகயன் துருக்கியர் வசம் இருந்தது(இவர்கள் கான்ஸ்டான்டினோபில்-ஐ மே 29, 1453 இல் கைப்பற்றியிருந்தனர்). 1476-இல் கொலம்பசு ஒரு வணிகப் பயணத்தை அட்லாண்டிக் கடலின் மீது மேற்கொண்டார். இந்தக் கப்பல் கேப் ஆஃப் செயின்ட் வின்சென்ட் இன் பிரெஞ்சு பிரைவெட்டீயெர்ஸ்-ஆல் தாக்கப்பட்டது. கொலம்பஸ் கப்பல் எரிந்து போய் அவர் ஆறு மைல்கள் நீந்திக் கரை சேர்ந்தார். 1477-இல் கொலம்பசு லிஸ்பன் நகரில் வாழ்ந்தார். போர்த்துக்கல் கடல் தொடர்பான நடத்தைகளுக்கு ஒரு மையமாக இங்கிலாந்து, அயர்லாந்து, ஐசுலாந்து, மடீயெரா, த அசோர்சு, ஆப்பிரிக்காக்குச் செல்லும் கப்பல்களுடன் விளங்கியது. கொலம்பசின் உடன்பிறந்தார் பார்த்தலோமியோ லிசுபனில் ஒரு வரைபடங்களை உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவ்வமயம் இவ்விரு உடன்பிறந்தவர்களும் வரைபடங்கள் வரைபவர்களாகவும், புத்தகங்களைச் சேமிப்பவர்களாகவும் விளங்கினர். கொலம்பசு வணிகக் கடற்பயணியாக போர்ச்சுகீசிய கப்பல்களில் மாறினார். 1477-ல் ஐசுலாந்துக்கும், 1478-இல் மடியெராவிற்கும் சர்க்கரை வாங்கவும், மேற்கு ஆப்பிரிக்க கடலோரங்களுக்கு 1482லும் 1485-இலும், போர்ச்சுகீசிய வணிக எல்லையான ஸாவோ ஜார்ஜ் டா மைனா என்ற கினியாக் கரைக்கும் சென்றார்.[1] கொலம்பசு பிலிப்பா பெரெசிட்டெல்லோ எ மோனிசு என்ற போர்ச்சுகீசியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்(1479-இல்). அவர்களுக்கு தியெகோ என்ற ஒரு மகன் பிறந்தான். பிலிப்பா 1485-இல் காலமானார். கொலம்பசு பின்னர் பீட்ரிஸ் என்ரிகுவெசு என்ற பெண்ணைத் திருமணம் செய்து (1488-இல்) கொண்டார்.[11] அவர்களுக்கு பெர்டினான்ட் என்ற மகன் பிறந்தான். கொலம்பஸின் தாய் நாடு ? கொலம்பஸின் தாய் நாடு பற்றிய உறுதியான விவரம் இன்னும் தெரியவில்லை.பொதுவாக அவர் இத்தாலியில் உள்ள ஜெனொவாவைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறார். 1470க்கு முன்னரான கொலம்பஸின் வரலாறு சரியாக அறியப்படவில்லை.தன் வாழ்விலுள்ள ஏதோ ஒரு மர்மத்தைக் காப்பதற்காகவே, தன் தாய் நாடு பற்றிய விவரங்களை ரகசியமாக வைத்திருந்தார் என்று கூறுவோரும் உண்டு.கொலம்பஸ் பிழையற்ற ஸ்பானிய மொழியில் எழுத வல்லவர் என்பது மட்டுமின்றி, அவர் இத்தாலியர்களுக்கு எழுதிய கடிதங்கள் கூட ஸ்பானிய மொழியிலேயே இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. தேசிய உணர்வுகளின் எழுச்சிக்குப் பின்னரே,கொலம்பஸின் தாய் நாடு பற்றிய உண்மை விவாதத்திற்குரியதானது; கொலம்பஸ் கண்டுபிடிப்புகளின் ஐநூறாவது ஆண்டுவிழாக் கொண்டாட்டம் 1892ல் நடந்தது; அதுவரை கொலம்பஸின் தாய் நாடு பற்றிய சர்ச்சை இருந்ததில்லை.அவர் ஜெனோவா நாட்டைச் சேர்ந்தவர் என்பது இத்தாலிய அமெரிக்கர்களுக்கு பெருமைக்குரிய விடயமாக இருந்தது. நியூ யார்க் நகரத்தில், எதிரெதிர் இசுப்பானிக்கு மற்றும் இத்தாலிய சமூகக் குழுக்களால் கொலம்பஸின் உருவச் சிலைகள் செய்யப்பட்டு, கொலம்பஸ் வட்டம் மற்றும் மையப் பூங்கா போன்ற முக்கிய இடங்களில் அவை நிறுவப்பட்டன. சில பாசுக்கு வரலாற்று ஆய்வாளர்கள் கொலம்பஸ் பாசுக்கைச் சேர்ந்தவர் என்று கூறுகின்றனர். இன்னும் சிலர், அவர் கிறித்தவ சமயத்திற்கு மாறிய எசுப்பானிய யூதர் என்றும், யூத சமயத்தை ரகசியமாக பின்பற்றும் பல எசுப்பானிய யூதர்களைப் போல அவரும் பின்பற்ற எண்ணி தன் தாய் நாடு பற்றிய விவரங்களை மறைத்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர். வேறு சிலர், அவர் ஜெனொவா ஆட்சியின் கீழ் இருந்த, தேச எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பெயர் போன கோர்சிகா தீவைச் சேர்ந்தவர் என்றும், அதனால் தன் அடையாளத்தை மறைத்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர். சிலர் அவர் காத்தலோனியா அல்லது கிரீஸ் அல்லது போர்த்துக்கல்-ஐச் சேர்ந்தவர் என்று கூறுகின்றனர். சிந்தனைத் தோற்றம் 1480-இல், கொலம்பசு மேற்காக அட்லாண்டிக் ஊடாக இண்டீசுவிற்கு (குத்து மதிப்பாக தெற்கு மற்றும் கிழக்கு (ஆசியா) ) செல்வதற்கு ஒரு திட்டத்தை வகுத்தார். இது தெற்கு மற்றும் கிழக்கு வழியாக (ஆப்பிரிக்கா) செல்வதைவிட விரைவான வழி என்று அவர் நம்பினார். இத்திட்டத்திற்கு அவர் உதவி பெறுவது மிகக் கடியதாக இருந்ததாகத் தெரிகிறது(ஏனென்றால் அப்போதைய ஐரோப்பியர், புவி தட்டையானது என்று நம்பினர்). ஆனால் அக்காலத்தைய கடற்பயணிகள், வழிகாட்டிகள் புவி உருண்டையானது என்று அறிந்திருந்தனர். இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் கொலம்பசு இண்டீசிற்கு எவ்வளவு தூரம் என்பதை அறுதியிடாததுதான். பல ஐரோப்பியர் தாலமி-யின் கருத்தான பெரு நிலப்பரப்பு(உரேசியாவும் ஆப்பிரிக்காவும் சேர்ந்து) 180 பாகை புவி அளவையும், மீதம் 180 பாகை நீர் அளவையும் கொண்டதாக நம்பினர். (உண்மையில் இது 120 பாகை நிலப்பகுதி, மீதம் அறியப்படாத பகுதி). கொலம்பசு டி'ஐல்லியின் அளவீடுகளை, அதாவது 225 பாகை நிலம், 135 பாகை நீர் என்பது, ஏற்றுக்கொண்டார். அதிலும் குறிப்பாக கொலம்பசு 1 பாகை என்பது எல்லோராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட அளவைவிட சற்று குறைவாகவே அவர் எடுத்துக்கொண்டார். கடைசியாக கொலம்பசின் வரைபடம் உரோமன் மைல் அளவில் (5000 அடிகளைக்கொண்டதாக), கடல் மைல் (6,082.66 அடி புவிநடுக்கோட்டுப் பகுதியில்) அளவைவிட இருந்தது. கொலம்பசு கேனரித் தீவுகளிலிருந்து சப்பான் 2,700 மைல்கள் இருப்பதாகத் தீர்மானித்தார். உண்மையில் இத்தொலைவு 13,000 மைல்கள், பெரும்பாலான ஐரோப்பிய கடற்பயணிகளும் வழிகாட்டிகளும் இண்டீசு என்பது தொலைதூரத்தில் இருப்பதாகத் தயங்கி வந்தனர். கடற்பயணங்கள் 1492க்கும் 1503க்கும் இடையே கொலம்பசு எசுப்பானிவிலிருந்து நான்கு முறை அமெரிக்காக்களுக்கு பயணித்துள்ளார். இந்த நான்கு பயணங்களுக்கும் காசுட்டில் இராச்சியமே புரவலளித்தது. இவை ஐரோப்பியக் கண்டுபிடிப்பு காலத்திற்கும் அமெரிக்கக் கண்டங்களின் குடிமைப்படுத்தலுக்கும் துவக்கமாக அமைந்தன. எனவே இவை மேற்கத்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும்.[12] சான்றுகள் எதிராக இருந்தபோதிலும் கொலம்பசு எப்போதும் தாம் கண்டறிந்த நிலப்பகுதிகள் மார்க்கோ போலோவாலும் பிற ஐரோப்பிய சுற்றுலாப்பயணிகளாலும் விவரிக்கப்பட்ட ஆசியாவைச் சேர்ந்தவை என்றே உறுதியாக இருந்தார்.[12] இந்த மறுப்புதான் புதிய கண்டங்களுக்கு இவர் பெயரை வைக்காது பிளாரென்சின் தேடலாய்வாளர் அமெரிகோ வெஸ்புச்சியின் பெயரை ஒட்டி அமெரிக்கா என பெயரிட அமைந்த காரணங்களில் ஒன்றாயிற்று.[13] முதல் பயணம் கொலம்பசு முதலில் தன்னுடைய திட்டத்தை போர்ச்சுக்கல் அரச சபையில் 1485-இல் தெரிவித்தார். ஆனால் அரசரின் நிபுணர்கள் கொலம்பசின் வழி கொலம்பசு நினைப்பதை விடப் பெரியது என நம்பினர். அதனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். கொலம்பசு பின்னர் எசுப்பானியா அரசவையை நாடினார். ஆனால் பல நாட்கள் அலைக்கழிக்கப்பட்ட பின்னர் 1492-இல் அவர்களுடைய ஒப்புதலைப் பெற்றார். எசுப்பானிய அரசரும் அரசியும்( பெர்டினான்ட் ஆப் ஆரகன், காசிட்டைலின் இசபெல்லா) அப்போது தான் கடைசி முசுலிம் கோட்டையான கிரானாடா-வைக் கைப்பற்றியிருந்தனர். அவர்கள் பயணத்திற்கான செலவை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தனர். செலவில் பாதியைத் தனியாரிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு ஏற்கெனவே கொலம்பசு திட்டம் வகுத்திருந்தார். கொலம்பசு அலைகடலின் தளபதி என்று பட்டம் சூட்டப்பட்டு, புதிதாகக் கண்டுபிடிக்கும் தீவுகளுக்கு அவரே ஆளுநர் என்ற உறுதிமொழியும், வருவாயில் பெரும்பங்கை அவருக்குக் கொடுக்கவும் அரசவை ஒப்புக்கொண்டது. அவ்வாண்டு ஆகத்து 3 அன்று, கொலம்பசு பாலோசில் இருந்து மூன்று கப்பல்களில் சாண்டா மரியா, நின்யா, பின்டா புறப்பட்டார்[14]. முதலில் அவர் கேனரித் தீவுகளை அடைந்தார். அங்கே ஒரு மாதம் தங்கினார். பின்னர் பெரும் பயணத்தைத் துவக்கினார். அவர் தன்னுடைய குறிப்பேடுகளில் தான் பயணித்த தூரத்தை விடக்குறைவான தூரத்தையே பதிவு செய்து தன்னுடைய மாலுமிகளை ஏமாற்றினார். இன்றைக்கும் அவர் முதலில் அடைந்த தீவு எது என்பதில் சர்ச்சை இருந்தாலும், அவர் பகாமாஸ்-இல் ஒரு தீவையே அடைந்திருக்க வேண்டும் என்பது உறுதி. அவர் அக்டோபர் 12, 1492-இல் கரையேறினார். அவர் அங்கிருந்த அமெரிக்கப் பழங்குடிகளை எதிர்கொண்டார். அவர்கள் டையனோ அல்லது ஆராவாக், மிகவும் அமைதியானவர்களாகவும், நட்புணர்வுடனும் விளங்கினர். அக்டோபர் 14, 1492 குறிப்பில் கொலம்பசு எசுப்பானியாவின் அரசர் பெர்டினான்டு, அரசி இசபெல்லா ஆகியோருக்கு டையாகுட்;நோ பற்றி பின்வருமாறு எழுதினார். "அரசர் விரும்பினால், அவர்கள் அனைவரையும் காஸ்டைலுக்குக் கொண்டு வரமுடியும்;அல்லது,அவர்களது தீவிலேயே பிணையாளிகளாக ஆக்கமுடியும்.அவர்களில் ஐம்பது பேரை உங்களுடைய பொறுப்பில் விடுகிறேன். நீங்கள் அவர்களை வைத்து என்ன செய்ய வேண்டுமோ செய்யலாம்." கொலம்பசு அவருடைய முதல் பயணத்தில், கியூபாவிலும், லா எசுப்பானியோலா விலும் பயணத்திருந்தார்(அக்டோபர் 28-இல்).சாண்டா மரியா தரை தட்டியதால், அதை அவர் கைவிட வேண்டியதாயிற்று. கொலம்பசு லா நாவிடாட் என்ற குடியேற்றத்தை அங்கே அமைத்து அங்கே தன்னுடன் வந்த 39 பேரை விட்டு விட்டார். சனவரி 4, 1493-இல் அவர் நாடு திரும்பப் பயணப்பட்டார்.ஆனால், புயல் காரணமாக அவர் போர்ச்சுகல்லில் இறங்க வேண்டியதாயிற்று. அப்போது போர்ச்சுகல்லுக்கும், காஸ்டைலுக்குமான உறவு மிகவும் மோசமாக இருந்த படியால் அங்கே அவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். பின்னர் மார்ச் 15-இல் அவர் எசுப்பானியாவை அடைந்தார். அங்கே அவர் தான் கொண்டு வந்த தங்கம் மற்றும் கொண்டு வந்த அமெரிக்கப்பழங்குடிகள் ஆகியவற்றை அரசவையில் ஒப்படைத்தார். அங்கே அதுவரை அறியப்படாதிருந்த புகையிலையையும், அன்னாசியையும் அன்னாக்கு ஆகியவைகளைப்பற்றி அங்கே விளக்கினார். அங்கே அவர் ஒரு மாவீரராக வரவேற்கப்பட்டார். அவருடைய கண்டுபிடிப்பு பற்றிய செய்தி உலகெங்கும் பரவியது. இரண்டாம் பயணம் அவர் தனது இரண்டாம் பயணத்தை (1493–1496)-இல் செப்டெம்பர் 24 1493-இல் துவக்கினார். டையனோ ஆதிவாசிகளை வசப்படுத்தவும், அத்தீவுகளைக்குடியேற்ற நாடுகளாக்கவும் 17 கப்பல்களில்,1200 பேருடன் வேண்டிய கருவிகளுடன் கிளம்பினார். இந்த முறை அவர் முன்னைவிட தெற்காகச் சென்றார். முதலில் டொமினிக்கா-வையும், பின்னர் வடக்காகக் கிளம்பி, குவாடெலோப், மோன்ட்செர்ராட், ஆன்டிகுவா மற்றும் நேவிஸ் ஆகிய சிறிய ஆன்டில்லெஸ்-இல் உள்ள தீவுகளைக் கண்டறிந்து அவற்றிற்கு அப்பெயர்களைச் சூட்டினார். அத்தீவுகளில் இறங்கி அவற்றை ஸ்பெயினின் பகுதிகளாக கன்னித் தீவுகள் மற்றும் பியுர்டோ ரிகோ போல தானே கூறிக்கொண்டார். பின்னர் அவர் லா எசுப்பானியோலா-விற்குச்சென்று, அங்கே அவர் விட்டுச் சென்றவர்கள் அங்குள்ள ஆதிவாசிகளுடன் சண்டையில் ஈடுபட்டு கொல்லப்பட்டதை அறிந்தார். லா எசுப்பானியோலா தீவுகளில் வடகடற்கரையில் உள்ள இசபெல்லா தீவுகளில்(இங்கே முதன்முதலில் தங்கத்தைக்கண்டார்), இவர் குடியேற்றங்களை அமைத்தார். ஆனால் இங்கே இவர் நினைத்தது போல தங்கம் அவ்வளவாகக்கிட்டவில்லை. பின்னர் இவர் இசபெல்லாத்தீவின் உட்பகுதியில் தங்கத்தைத்தேடி சிறிது கிடைப்பதை அறிந்தார். அங்கே ஒரு சிறு கோட்டையைக் கட்டினார். கியூபா-வின் தென் கடற்கரையில் பயணித்து, பின்னர் அது ஒரு தீபகற்பம், தீவு அல்ல என்பதை அறிந்தார். பின்னர் ஜமைக்காவைக் கண்டுபிடித்தார். தன்னுடைய இரண்டாம் பயணத்தின் போது பெர்டினான்ட் மற்றும் இஸபெல்லாவினால் அங்குள்ள குடிகளிடம் நட்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தார். ஆனால் கொலம்பஸ் தன் இரண்டாம் பயணத்தில் அரசருக்கு ஒரு கடிதம் அனுப்பி அங்குள்ள குடிகளை அடிமைப்படுத்த உரிமை வழங்குமாறு கேட்டார். ஏனென்றால் கரிப்-இலிருந்த குடிகள் முரடர்களாக இருப்பதாக அவர் உணர்ந்திருந்தார். அவருடைய வேண்டுகோள் மறுக்கப்பட்ட போதிலும் கொலம்பஸ் பிப்ரவரி, 1495 -இல் கொலம்பசு ஆராவக்-ஐச்சேர்ந்த 1600 பேரை பிணையாளிகளாக்கினார். 550 பேர் எசுபானியாவுக்குக் கப்பலில் அனுப்பப்பட்டனர். அவர்களில் 200 பேர் கப்பலிலேயே இறந்தனர் (நோயால் இருக்கக்கூடும்). எசுப்பானியாவை அடைந்த பாதிப் பேர் நோய்வாய்ப்பட்டிருந்தனர். ஆனால் எசுப்பானியா வந்தவர்கள் மறுபடியும் கப்பலில் திருப்பி அனுப்பப்பட்டனர். இவ்வாறாக அமெரிக்கக் குடிகளை வளைத்து அடிமைகளாக்குவது எசுப்பானியர்களுக்கும், அங்குள்ள குடிகளுக்குமான சண்டைகளுக்கு வழிவகுத்தது. கொலம்பசின் பயணத்தின் மிக முக்கியக் குறிக்கோள் தங்கமே. அதற்காக எயிட்டி-இலுள்ள சிகாவோ தீவுகளில் இருந்த குடிகளை ஒரு திட்டத்திற்கு ஆட்படுத்தினார். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட தங்கத்தைக் கொண்டு வரவேண்டுமென்று அவர்களை மிரட்டினார். அவ்வாறு கொண்டு வராதவர்களின் கைகள் வெட்டப்படும் என்றும் மிரட்டினார்.அப்படியிருந்தும் அவரால் அவ்வளவாக தங்கத்தைப் பெற முடியவில்லை. அவர் தன்னுடைய எசுப்பானிய அரசருக்கான கடிதங்களில் கொத்தடிமைப்படுத்துவதன் அவசியத்தை அடிக்கடி வலியுறுத்தினார். ஆனால் அவையாவும் அரசரால் மறுக்கப்பட்டன. அரச குடும்பத்தினர் அமெரிக்கக்குடிகள் கத்தோலிக்கத்திருச்சபையின் எதிர்கால உறுப்பினர்களாக அவர்கள் விரும்பினர். குறிப்பாக, கொலம்பஸ் என்கோமியென்டா எனப்படும் எசுப்பானியர்களின் 'அமெரிக்க குடிகளை கிறித்துவர்களாக மாற்றினால் அவர்களை வேலைக்கு வைத்துக்கொள்ளலாம்' திட்டத்தைத் தன்னலக் கண்ணோட்டத்துடன் பயன்படுத்தினார். இந்தத் திட்டம் அமெரிக்கக்குடிகள் கொத்தடிமைகளாக மாற வழிவகுத்தது. சில சமயங்களில் இந்தியக்குடிகள் சாகும்வரை வேலை செய்தனர். சில சமயங்களில் அவர்கள் ஐரோப்பியர்களால் அவர்களுக்குப் பரப்பப்பட்ட நோயினாலும் ஊட்டச்சத்துக் குறைவாலும் இறந்தனர். கொலம்பசிற்கு முன்னதான மக்கள் தொகை பற்றி பல்வேறு கருத்துக்கள் உள்ளன. 1496-இல் பார்த்தலோமே டி லாஸ் காஸாஸ் ஒரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தினார். 3,000,000 டையனோக்கள் இருந்ததாக அது தெரிவிக்கிறது. 1514-இல் எடுக்கப்பட்ட ஒரு எசுப்பானியக் கணக்கெடுப்பு 22,000 டையனோக்கள் இருந்ததாகத் தெரிவிக்கின்றது. 1542-இல் 200 பேர் மட்டுமே இருந்ததாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது. கொலம்பசு தன்னுடைய உடன்பிறந்தவர்களை இந்தக்குடியிருப்புகளுக்கு அதிகாரிகளாக நியமித்து விட்டு ஹிஸ்பானியோலாவை விட்டு ஐரோப்பாவிற்கு மார்ச் 10, 1496 -இல் புறப்பட்டார். அவருடைய உடன்பிறந்தவர்களும் மற்ற எசுப்பானியர்களும் என்கோமியென்டா என்னும் கொலம்பசின் திட்டத்தை அமெரிக்கா முழுவதும் செயல்படுத்தினர். கொலம்பசு அவர் கண்டுபிடித்த தீவுகளின் ஆளுநராக அமர்த்தப்பட்டார். அத்தோடு அட்லாண்டிக் கடலில் பல்வேறு பயணங்களை அவர் மேற்கொண்டார். அவர் மிகப்பெரும் கடல் பயணியாக இருந்தபோதிலும் அவர் ஒரு மோசமான நிர்வாகியாகக் கருதப்பட்டார். அதனால் அவர் 1500-ல் ஆளுநர் பதவியிலிருந்து இறக்கப்பட்டார். மூன்றாம் பயணம் மற்றும் கைதுப்படலம் 1498-இல் கொலம்பஸ் மூன்றாம் முறையாக புதிய உலகிற்கு, இளம் பார்த்தலோமி டி லாஸ் காஸாஸ்(இவர் பின்னர் கொலம்பஸின் குறிப்புக்களை தந்தவர்) உடன் , கிளம்பினார். இந்த முறை அவர் ட்ரினிடாட் தீவுகளை ஜுலை 31இல் கண்டுபிடித்தார். அத்தோடு தென் அமெரிக்காவின் நிலப்பகுதியையும் கண்டுபிடித்தார். அங்கே அவர் ஒரினோகோ ஆற்றையும் கண்டார். முதலில் இந்த நிலப்பரப்புக்கள் புதிய கண்டம் என்று கூறியவர், பின்னர் அவை ஆசியாவின் பகுதிகள் என்று மாற்றிச் சொன்னார். ஸ்பானிய குடியேற்றவாசிகள், கொலம்பஸின் புதிய உலகைப்பற்றிய மிகைப்படுத்திய கூற்றுக்களால் ஏமாந்து போனார்கள்.கொலம்பஸ் குடியேற்றவாசிகளுக்கும், அமெரிக்கக்குடிகளுக்கும் இடையிலான சண்டைகளைத்தீர்க்க வேண்டியவரானார்.தன்னுடைய பேச்சைக் கேளாத ஸ்பெயின் நாட்டவர்களைத் தூக்கிலிடவும் செய்தார். இதனால் ஸ்பெயினுக்குத் திரும்பிய பலர் கொலம்பஸைப் பற்றி அவதூறாகக் குற்றம் சாட்டினர். அரசரும் அரசியும், பிரான்சிஸ்கோ டி போபடில்லா என்ற ஒரு அரச நிர்வாகியை 1500-இல் அனுப்பினர். இவர் வந்து கொலம்பஸ் மற்றும் அவரது சகோதரர்களைக் கைது செய்து ஸ்பெயினுக்கு அனுப்பினர். கொலம்பஸ் தன்னுடைய கைவிலங்கை ஸ்பெயின் திரும்பும்வரை கழற்ற மறுத்தார்.அப்போது அவர் ஸ்பெயின் அரசருக்கு ஒரு விரிவான கடிதம் ஒன்றை எழுதினார். அவர் ஸ்பெயினில் விடுவிக்கப்பட்டாலும், அவருடைய ஆளுநர் பட்டம் திரும்பத் தரப்படவில்லை. அத்தோடு வேதனையான விடயமாக, போர்த்துகீசியர்கள் இன்டீசுக்கான போட்டியில் வெற்றியும் பெற்றனர்: வாஸ்கோ ட காமா செப்டெம்பர் 1499-இல் இந்தியாவிற்குப்பயணம் மேற்கொண்டு திரும்பினார்(ஆப்பிரிக்கா வழியாக கிழக்கில் பயணித்து). கடைசிப்பயணமும் வாழ்வின் கடைசிக்கட்டமும் கொலம்பஸ் தனது கடைசிப் பயணத்தை 1502-1504-இல்(ஸ்பெயினைவிட்டு மே 9, 1502) மேற்கொண்டார். இந்தப் பயணத்தில், தன்னுடைய இளைய மகன் பெர்டினான்டுவையும் கூட்டிக்கொண்டு சென்றார். இப்போது நடு அமெரிக்கா-வின் பெலிஸ்-இலிருந்து பனாமா வரை பயணித்தார். 1502-இல் இப்போது ஹோன்டுராஸ் எனப்படும் தீவின் கரையில் ஒரு சரக்குக் கப்பலை எதிர்கொண்டார். இது ஸ்பானியர்களின் மீசோ அமெரிக்கா நாகரிகத்தின் அமெரிக்கக்குடிகள் உடனான முதல் சந்திப்பாகும். பிறகு கொலம்பஸ் ஜமைக்காவில் ஒரு வருடம் தவிக்கவேண்டியதாயிற்று. பிறகு அவர் இரண்டு பேரை கேனோவில் ஹிஸ்பேனியோலாவிற்கு உதவி கேட்டு அனுப்பி வைத்தார். இந்நிலையில் அவர் அமெரிக்கக்குடிகளிடம் மிகக் சரியாக சந்திரகிரகணத்தைக் கணித்துச்சொல்லி அவர்களது நன்மதிப்பைப்பெற்றார். கடைசியாக அவருக்கு உதவி கிடைத்ததூ. அதன்பின் ஸ்பெயினுக்கு 1504-இல் திரும்பச்சென்றார். கொலம்பஸ் கிறிஸ்துவரல்லாதவர்களைக் கிறிஸ்துவர்களாக்குவதற்காகவே இவ்வாறு கடற்பயணம் செய்வதாகச் சொல்லி வந்தார். தனது முதிர்ந்த வயதில் மிகவும் ஆன்மீகவாதியாக மாறினார்.அவர் தனக்கு தெய்வக்குரல் கேட்பதாகக் கூடச்சொல்லி வந்தார். ஜெருசலேம் நகரை மீட்கும் சிலுவைப்போரில் ஈடுபடப்போவதாகக் கூறி, பிரான்சிஸ்கன் அணிந்து வந்தார். தன்னுடைய கண்டுபிடிப்புகளை சொர்க்கம் என்றும் அவை கடவுளின் திட்டமென்றும் கூறிவந்தார். தனது கடைசிக் காலத்தில் கொலம்பஸ் தனக்கு ஸ்பானிய அரசிடமிருந்து பத்து விழுக்காடு புதிய தீவுகளிலிருந்து லாப ஈட்டுத்தொகை வழங்க வேண்டுமென்று கேட்டு வந்தார். ஆனால் ஸ்பானிய அரசர் இதை நிராகரித்தார். மே 20, 1506-இல் கொலம்பஸ் இறந்தார். அப்போது கூட தான் கண்டுபிடித்தது, ஆசியாவின் கிழக்குக்கரை என்று உறுதியாக நம்பினார். அவருடைய இறப்பின் பின்கூட அவரது பயணம் தொடர்ந்தது. முதலில் வல்லாடோலிட்இலும், பின் செவில்-இலும் பின்னர் அவருடைய மகன் டியெகோ, அப்போதைய ஹிஸ்பானியோலாவின் ஆளுநர், அவரது முயற்சியில் ஸாண்டா டோமிங்கோவிற்கு அவரது உடல் 1542-இல் கொண்டு வரப்பட்டது. 1795-இல் பிரெஞ்சு அதைக்கைப்பற்றியதால், ஹவானாவிற்கு மாற்றப்பட்டது. 1898 போருக்குப்பிறகு கியூபா தனித்த நாடானதும், அவருடைய உடல் மறுபடியும் ஸ்பெயினுக்குக் கொண்டுவரப்பட்டு செவிஜா (Seville) ஆலயத்தில் வைக்கப்பட்டது. ஆனால் பலர் இன்னும் அவரது உடல் ஸாண்டா டோமிங்கோ வில் இருப்பதாக நம்புகின்றனர். பின்னாள் வாழ்க்கை மதமாற்றத்தை தனது கடலோடிப் பயணங்களின் ஒரு நோக்கமாக கொலம்பசு மொழிந்திருந்தாலும் தனது பிந்தைய நாட்களிலேயே மிகவும் சமயப்பற்று மிக்கவராக விளங்கினார். தனது மகன் டியாகோ மற்றும் நண்பர் காசுபர் கொர்ரிசியோவின் உதவியுடன் கொலம்பசு இரு நூல்களை வெளியிட்டார்: தமக்கும் தமது வாரிசுகளுக்கும் எசுப்பானிய அரசு தரவேண்டிய உரிமைகளை விவரித்த புக் ஆவ் பிரிவிலேசசு (1502), தனது கடலோடிப் பயணங்களின் சாதனைகளை விவிலிய முன்மொழிதலாக கருதி எழுதப்பட்ட புக் ஆவ் பிரொபெசீசு (1505).[12][17] புதிய நிலப்பகுதிகளிலிருந்து பெறப்படும் அனைத்து இலாபத்திலிருந்தும் 10% தமக்கு சேர வேண்டும் என எசுப்பானிய அரசரை வேண்டினார்; ஆனால் ஆளுநர் பதவியிலிருந்து அவரை விலக்கிய பிறகு அந்த உடன்பாடு முடிவுக்கு வந்தது என்று அரசர் இந்த கோரிக்கையை நிராகரித்தார். கொலம்பசின் மறைவிற்குப் பின்னரும் அவருடைய வாரிசுகள் அரசர் மீது வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு மிக நீண்டதாக இருந்தது. இந்த வழக்குகள் கொலம்பிய சட்டவழக்குகள் (pleitos colombinos) எனப்படுகின்றன. உடல்நலக் கேடும் மறைவும் தமது கடைசி கடற்பயணத்தின் திரும்பும்வழியில் கடுமையானப் புயலை எதிர்கொண்டார்; 41 அகவைகள் நிறைந்த கொலம்பசிற்கு அச்சமயம் கீல்வாதம் பற்றியது. தொடர்ந்த ஆண்டுகளில் இன்ஃபுளுவென்சா மற்றும் பிற நோய்களால் அவதிப்பட்டார். கீல்வாதத்தின் கடுமையும் கூடியது. இதனால் பல மாதங்களுக்கு படுத்த படுக்கையில் இருந்தாக வேண்டியதாயிற்று. இந்த நோய்களே பதினான்கு ஆண்டுகளில் அவரது மறைவிற்கு காரணமாயின. கொலம்பசின் வாழ்முறையையும் நோய் உணர்குறிகளையும் கொண்டு தற்கால மருத்துவர்கள் அவருக்கு நேர்ந்தது கீல்வாதமல்ல என்றும் ரீய்ட்டரின் கூட்டறிகுறி என்றும் கருதுகின்றனர்.[18][19] ரீய்ட்டரின் கூட்டறிகுறி குடல் தொற்றுக்களால் ஏற்படும் ஓர் மூட்டு நோயாகும்; இது கிளமிடியா அல்லது கொணோறியா போன்ற பாலுறவு பரவு நோய்களிலிருந்தும் வந்திருக்கலாம். அவருடைய கடற்பயணங்களில் எங்காவது உணவு நச்சுமை தொற்றி இந்நோய் வந்திருக்கலாம் என டெக்சாசு மருத்துவ பள்ளியின் பேராசிரியரும் வாதவியலாளருமான மரு. பிராங்க் சி. ஆர்னெட் கருதுகிறார்.[18] மே 20, 1506இல் தமது 54வது அகவையில் கொலம்பசு எசுப்பானியாவிலுள்ள வல்லாடோலிடில் இறந்தார். கொலம்பசின் உடல் முதலில் வல்லாடோலிடில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பின்னர் லா எசுப்பானியோலாவின் ஆளுநராக இருந்த அவரது மகன் டியாகோவின் உயில்படி செவீயாவின் லா கார்துஜாவிலுள்ள ஓர் தேவாலயத்திற்கு மாற்றப்பட்டது. 1542இல் காலனித்துவ சான்டோ டோமிங்கோவிற்கு (தற்கால டொமினிக்கன் குடியரசு) மாற்றப்பட்டது. 1795இல், லா எசுப்பானியோலாவை பிரான்சு கையகப்படுத்தியபோது மீண்டும் கூபாவின் அவானாவிற்கு மாற்றப்பட்டது. 1898இல் எசுப்பானிய அமெரிக்கப் போரை அடுத்து கூபா விடுதலை பெற்றபோது மூண்டும் எசுப்பானியாவிற்கே கொண்டு செல்லப்பட்டு செவீயா பெருங்கோயிலில்[21] அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் வைக்கப்பட்டது. 1877இல் சான்டோ டொமிங்கோவில் "டான் கிறித்தோபர் கொலம்பசு" என்று குறியிடப்பட்ட ஈயப்பெட்டி கிடைத்தது; இதனுள்ளே எலும்பு துண்டுகளும் துப்பாக்கி இரவையும் இருந்தன. இதனால் தவறான உடலெச்சங்கள் அவானாவிற்கு மாற்றப்பட்டதோ என்ற குழப்பத்தை தீர்க்க சூன் 2003இல் செவீயாவிலிருந்த உடலின் டி. என். ஏ. கூறுகள் கொலம்பசின் தம்பி, மகன் ஆகியோரின் டி. என். ஏ கூறுகளுடன் ஒப்பிடப்பட்டன. துவக்கத்தில் கொலம்பசின் வயதிற்கும் உடற்கட்டுக்கும் தொடர்புபடுத்தக்கூடிய அளவில் எலும்புகள் இல்லை எனத் தோன்றியது;[22] டி.என். ஏ கிடைப்பதும் கடினமாக இருந்தது; இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடியின் சிறு கூறுகளே கிடைத்தன. இந்த இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி கூறுகள் கொலம்பசின் உடன்பிறப்பின் கூறுகளுடன் ஒத்திருந்தன; இருவரும் ஒரே அன்னைக்குப் பிறந்தவர்களாக உறுதி செய்யப்பட்டது.[23] இச்சான்றும், பிற மானிடவியல், வரலாற்று பகுப்பாய்வுகளும் கொண்டு செவீயாவிலுள்ள எச்சங்கள் கொலம்பசினுடையதே என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வந்தனர்.[24] சான்ட்டோ டொமிங்கோவில் இருந்த அதிகாரிகள் அங்கிருந்த உடலெச்சத்தை ஆய்வு செய்ய அகழ்ந்தெடுக்க அனுமதிக்கவில்லை; இதனால் அங்கிருப்பது கொலம்பசின் உடலின் பாகங்களாக என்பதை உறுதி செய்ய முடியவில்லை.[24][25] சான்டோ டொமிங்கோவில் இந்த கல்லறை "கொலம்பசு கலங்கரைவிளக்கத்தில்" (Faro a Colón) உள்ளது. கொலம்பஸ் குறித்த முரண்பட்ட கருத்துருவங்கள் கொலம்பஸின் நடவடிக்கைகள் மற்றும் சாதனைகளையும் தாண்டி, அவர் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்படுகிறார்; ஒரு சின்னமாகவும் சகாப்தமாகவும் மாறியுள்ளார்.அவரைப் பற்றிய யூகங்கள், ஒரு கோணத்தில் அவரை ஒரு வரலாற்று நாயகனாகவும் மற்றொரு கோணத்தில் அவரை ஒரு மனித குல எதிரியாகவும் சித்தரிக்கின்றன. புதிய நிலப்பகுதிகளுக்கு ஐரோப்பியர்களின் வருகையும், அதன் பின்னர் பரவலான கிறிஸ்தவ மற்றும் ரோமன் கத்தோலிக்க நம்பிக்கைகளைப் பற்றிய ஒருவரின் கருத்தைக் பொறுத்து,கொலம்பஸ் நல்ல விதமாகவும் மோசமாகவும் சித்தரிக்கப்படுகிறார். கொலம்பஸ் - ஓர் இணையற்ற நாயகன் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டடைந்து 400 ஆண்டுகள் ஆன 1892 வாக்கில், கொலம்பஸை கொண்டாடும் போக்கு அதன் உச்சத்தை அடைந்தது. ஐக்கிய அமெரிக்க மாநிலங்களிலும் லத்தீன் அமெரிக்காவிலும் அவருடைய உருவச் சிலைகள் நிறுவப்பட்டன. தன் சம காலத்தவர்களைப் போலன்றி,கொலம்பஸ் மட்டுமே உலகம் உருண்டையானது என்று கருதினார் என்ற வாதம் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டு வந்தது.இந்த வாதம், கொலம்பஸ் மிகவும் முற்போக்கானவர் என்றும் சிறந்த அறிவாளர் என்றும் எடுத்துரைக்கப் பயன்பட்டது. கொலம்பஸ், மரபை மீறி, கிழக்குப் பகுதியைச் சென்றடைய மேற்கு நோக்கிப் பயணம் மேற்கொண்டது, அமெரிக்கப் பாணிப் படைப்பூக்கத்திற்குச் சான்றாகக் கொண்டாடப்பட்டது. குறிப்பாக, ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் வாழ்ந்து வந்த கத்தோலிக்க, இத்தாலிய-அமெரிக்க, இஸ்பானிக்க சமூகத்தினர் கொலம்பஸின் புகழைப் பரப்புவதில் முனைப்புடன் இருந்தனர். அமெரிக்க ஆதிக்கக் கலாச்சாரத்தால் ஒடுக்கப்பட்ட இச்சமூகத்தினர், நடுநிலக்கடற் பகுதிக் கத்தோலிக்கர்களாலும் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுக்கு சிறந்த பங்காற்ற முடியும் என்பதை எடுத்துக்காட்டும் முகமாக கொலம்பஸின் சாதனைகளை சுட்டிக்காட்டினர். கொலம்பஸ் - மனித குல எதிரி கொலம்பஸ் ஒரு முரண்பட்ட மனிதர். சிலர், குறிப்பாக அமெரிக்கப் பழங்குடிகள், அவரை அமெரிக்கா மீதான ஐரோப்பாவின் சுரண்டல் மற்றும் மேற்கிந்தியத்தீவுகளின் கொத்தடிமை இவற்றிற்கு நேரடியான அல்லது மறைமுகமான காரணமாகக் கருதுகின்றனர். பார்த்தலோம் டி லாஸ் காசாஸ் எனும் சமயத் தலைவர் கொலம்பஸ் செய்த கொடுமைகளைப் பற்றி எழுதியிருந்தார் என்றாலும், 1960களுக்குப் பிறகே, அவரை ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் அக்கிரமங்களின் - கொத்தடிமைப்படுத்தல், இனப்படுகொலை, பண்பாட்டுச் சிதைப்புகள் - சின்னமாகக் கருதும் போக்கு பரவலானது.ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் அனைத்து தவறுகளுக்கும் கொலம்பஸை குற்றம் சாட்ட இயலாது என்றாலும், 1493-1500ல் ஸ்பெயின் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வைஸ்ராய் (அரச சார்பாளர்) ஆகவும் ஆளுநராகவும் அவர் செய்த கொடுஞ்செயல்கள், அவரை இனப்படுகொலைகளுக்காகக் குற்றஞ்சாட்ட போதுமான காரணம் என்று சிலர் கருதுகின்றனர். சமீப காலங்களில்,கொலம்பஸின் சாதனைகள் பற்றிய பிரச்சாரமும் கொலம்பஸ் தினக் கொண்டாட்டங்களும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன. 1992ல் கொலம்பஸ் முதல் கடல் பயணம் தொடங்கிய 500வது ஆண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் தொடர்ச்சியாக அக்டோபர் 2002ல், வெனிசுலா அதிபர் குகொ சவெஸ் கொலம்பஸ் தினத்தை "உள்நாட்டு எதிர்ப்பு நாள்" என்று பெயர் மாற்றும் தீர்மானத்தில் கையெழுத்திட்டார். நினைவுக் கொண்டாட்டம் 1492இல் கொலம்பசு அமெரிக்காக்களில் வந்திறங்கிய நாள் அக்டோபர் 12 கனடா தவிர்த்த அனைத்து அமெரிக்க நாடுகளிலும் எசுப்பானியாவிலும் கொண்டாடப்படுகிறது. எசுப்பானியாவில் இது பியஸ்டா நாசியோனல் டெ எசுப்பானா யி டியா டெ லா இஸ்பானியட் எனக் கொண்டாடப்படுகிறது. பல இலத்தீன் அமெரிக்க நாடுகள் இதனை டியா டெ லா ராசா எனக் கொண்டாடுகின்றனர். ஐக்கிய அமெரிக்காவில் இது கொலம்பசு நாள் எனவும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரின் இரண்டாவது திங்களன்றும் கொண்டாடப்படுகின்றது. 1893இல் சிக்காகோவில் நடந்த உலக கொலம்பியக் கண்காட்சியில் கொலம்பசு வந்திறங்கிய நானூறாவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.[26] ஆறு மாதங்கள் நடந்த இக்கண்காட்சிக்கு 27 மில்லியனுக்கும் கூடுதலான மக்கள் வருகை தந்தனர். ஐக்கிய அமெரிக்க அஞ்சல் துறையும் இக்கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு 16 தபால்தலைகள் அடங்கிய நினைவு தபால்தலைத் தொகுப்பை வெளியிட்டது; இவை கொலம்பசு, அரசி இசபெல்லா, மற்றும் அவரது கடற்பயணங்களின் வெவ்வேறு நிலைகளை குறித்தனவாக இருந்தன. ஒரு சென்ட் மதிப்பிலிருந்து 5 டாலர் மதிப்பில் இவை இருந்தன. இந்த நினைவுத் தபால்தலைகள் மிகவும் புகழ்பெற்று ஏராளமாக விற்கப்பட்டன. ஆறு மாதகாலத்தில் மொத்தமாக இரண்டு பில்லியன் தபால்தலைகள் விற்கப்பட்டன; இதில் இரண்டு சென்ட் மதிப்பிலான "கொலம்பசின் வந்திறங்கல்" தபால்தலை 72% ஆகும்.[27] 1992இல், 500வது நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டமாக இரண்டாம் முறை இத்தகையத் தபால்தலைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. இவை முதல்முறை தபால்தலைகளின் நகலாக இருப்பின்ம் வலது மூலையில் தேதி மட்டும் மாற்றப்பட்டிருந்தன. ஐக்கிய அமெரிக்காவுடன் இத்தாலி, போர்த்துகல் மற்றும் எசுப்பானியாவும் இத்தபால்தலைகளை அந்நாட்டு செலாவணியில் வெளியிட்டன.[28] மரபுவழி எச்சம் அமெரிக்க, ஐரோப்பிய இலக்கியங்களில் பரவலாக கொலம்பசு "அமெரிக்காவைக் கண்டறிந்தவர்" என்ற கருத்து இருப்பினும் உண்மையில் முதலில் கண்டறிந்தவர்கள் இங்கு பல காலமாக வாழ்ந்திருந்த உள்ளூர் குடிகளாகும். கொலம்பசு முதல் ஐரோப்பியர் கூடக் கிடையாது; வைக்கிங்குகள் தான் முதலில் வந்திறங்கிய ஐரோப்பியர்கள். ஆனால் கொலம்பசு தான் அமெரிக்காவை ஐரோப்பாவில் பிரபலப்படுத்தியவர். மேற்கத்திய கவனத்திற்கு புதிய நிலப்பகுதியைக் கொண்டு வந்ததன் மூலம் புவியின் இரு முதன்மையான நிலப்பகுதிகளுக்கிடையேயும் அங்கு வாழ்பவர்களிடையேயும் நிலைத்த தொடர்பை துவங்கி வைத்தார். வரலாற்றாளர் மார்ட்டின் துகார்டு "கொலம்பசின் பெருமை அமெரிக்காவை முதலில் சென்றடைந்தவர் என்பதல்ல, அங்கு முதலில் தங்கியவர் என்பதாகும்" எனக் கூறியுள்ளார்.[30] கொலம்பசு தாம் கண்டறிந்த நிலப்பகுதி ஆசியாவின் அங்கமென்றே இறுதி வரை எண்ணியிருந்ததாக வரலாற்றாளர்கள் பொதுவாக கருதியபோதும்[31] கிர்க்பாட்றிக் சேல் கொலம்பசின் புக் ஆவ் பிரிவிலேஜசில் புதிய கண்டத்தைக் கண்டதாக குறிப்பிட்டுள்ளதாக சுட்டுகிறார்.[32] தவிரவும், மூன்றாம் கடற்பயணத்தின் பதிவேடுகளில் "பரியா நிலம்" , "இதுவரை காணாத" கண்டம் எனக் குறிப்பிட்டுள்ளார்.[33] அதேவேளையில் கொலம்பசின் மற்ற ஆவணங்களில் சியாவை சென்றடைந்ததாகவே குறிப்பிட்டுள்ளார்; 1502இல் திருத்தந்தை ஆறாம் அலெக்சாண்டருக்கு எழுதியக் கடிதத்தில் கூபா ஆசியாவின் கிழக்குக் கடலோரம் எனக் குறிப்பிட்டுள்ளார்.[34] மேலும் புதிய கண்டமான தென்னமெரிக்கா ஓரியன்ட்டின் இறுதியிலிருக்கும் பூலோக சொர்க்கம் என்றார்.[33] எனவே, அவருடைய உண்மையான கருத்துக்கள் என்னவென்று அறுதியாகத் தெரியவில்லை. கொலம்பசின் முதல் கடற்பயணத்திற்குப் பின்னர் அமெரிக்காவிற்குப் பயணித்த அமெரிகோ வெஸ்புச்சி தான் முதலில் இந்த நிலப்பகுதி ஆசியா அல்லவென்றும் யூரேசியர்களுக்கு இதுவரைத் தெரியாத புதிய கண்டம் என்றும் கூறியவர். செருமன் நிலப்பட வரைவாளர் மார்ட்டின் வால்ட்சிமுல்லருக்கு இந்த முடிவை எட்ட 1502-04இல் வெளியான அமெரிகோ வெஸ்புச்சியின் பயணப்பதிவேடுகளே மூலமாக அமைந்தன. கொலம்பசு இறந்த அடுத்த ஆண்டு, 1507இல் வெளியிட்ட தமது உலக நிலப்படத்தில் வால்ட்சிமுல்லர் அமெரிக்கா என்று புதிய கண்டத்தை அழைத்திருந்தார்; இது வெஸ்புச்சியின் இலத்தீனப் பெயரான "அமெரிகசு" என்பதலிருந்து வந்தது. பலகாலமாக, பிரித்தானியர்கள் கொலம்பசை அல்லாது வெனிசிய ஜான் கபோட்டை முதல் தேடலாளராக கொண்டாடினர். ஆனால் புதிய நாடாக வளர்ந்து வந்த ஐக்கிய அமெரிக்காவில் கபோட் தேசிய அங்கீகாரம் பெறவில்லை. குடிமைபடுத்திய காலங்களிலிருந்தே அமெரிக்காவில் கொலம்பசிற்கான வழிபாடு வளர்ந்தது. அமெரிக்காவிற்கு கொலம்பியா என்ற பெயர் 1738இல் பிரித்தானிய நாடாளுமன்ற விவாதங்களில் இடம் பெற்றது.[36] அமெரிக்கப் புரட்சிக்குப் பின்னர் புதிய உலகைக் கண்டறிந்தவர் கொலம்பசு என்றக் கருத்தாக்கம் அமெரிக்கா முழுமையிலும் பரவியது. ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசுத் தலைநகருக்கும் (கொலம்பியா மாவட்டம்), இரண்டு மாநிலங்களின் தலைநகரங்களுக்கும் (ஒகையோ, தென் கரொலைனா), கொலம்பியா ஆற்றுக்கும் கொலம்பசின் பெயர் சூட்டப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவிற்கு வெளியே 1819இல் தற்கால கொலொம்பியாவின் முன்னோடிக்கு கிரான் கொலொம்பியா எனப் பெயரிடப்பட்டது. பல நகரங்கள், ஊர்கள், கவுன்ட்டிகள், சாலைகள், அங்காடி வளாகங்கள் இவரதுப் பெயரைத் தாங்கி உள்ளன. 1866இல் கத்தோலிக்க திருச்சபையால் புனிதராக கருதப்பட நியமிக்கப்பட்டார். இத்தகைய வழிபாட்டின் உச்சமாக 1892இல் அமெரிக்காவை அடைந்த 400வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. சிக்காகோவில் கொலம்பியக் கண்காட்சியும் நியூயார்க் நகரத்தில் கொலம்பசு வட்டமும் நிறுவப்பட்டன. மேற்கோள்கள் நூற்பட்டியல் Cohen, J.M. (1969) The Four Voyages of Christopher Columbus: Being His Own Log-Book, Letters and Dispatches with Connecting Narrative Drawn from the Life of the Admiral by His Son Hernando Colon and Others. London UK: Penguin Classics. in Cook, Sherburn and Woodrow Borah (1971) Essays in Population History, Volume I. Berkeley CA: University of California Press Crosby, A. W. (1987) The Columbian Voyages: the Columbian Exchange, and their Historians. Washington, DC: American Historical Association. Fuson, Robert H. (1992) The Log of Christopher Columbus. International Marine Publishing Keen, Benjamin (1978) The Life of the Admiral Christopher Columbus by his Son Ferdinand, Westport CT: Greenwood Press. Morison, Samuel Eliot, Christopher Columbus, Mariner, Boston, Little, Brown and Company, 1955 CS1 maint: postscript (link) CS1 maint: ref=harv (link) Sale, Kirkpatrick The Conquest of Paradise: Christopher Columbus and the Columbian Legacy, Plume, 1991 Turner, Jack (2004), Spice: The History of a Temptation, New York: Random House. CS1 maint: ref=harv (link) வெளி இணைப்புகள் at Project Gutenberg at Internet Archive at LibriVox (public domain audiobooks) பகுப்பு:நாடுகாண் பயணிகள் பகுப்பு:இத்தாலியர் பகுப்பு:1451 பிறப்புகள் பகுப்பு:1506 இறப்புகள்
அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் யார்?
கொலம்பசு
12
tamil
b44364311
வெள்ளைப் புலி (White tiger) என்பது அரியவகை மரபணுவுடன் கூடிய ஒருவகை புலி வகையாகும். வெள்ளைப் புலிகள் அதன் வரிகளுடன் கூடிய வெண்மை நிறத்தைப் பெற இந்த மரபணுவே காரணமாகும். வெள்ளைப் புலிகள் செம்மஞ்சள் நிறப்புலிகளுடனும் இனப்பெருக்கம் செய்யும். இதனால் அவற்றின் ரோமங்கள் செம்மஞ்சள் நிறத்தில் உருவாகிவிடும். ஒரேயொரு விதிவிலக்கு என்னவென்றால், செம்மஞ்சள் நிற புலிகள் ஏற்கனவே ஒரு கலப்பினப் புலியாக இருக்கும்பட்சத்தில், ஒவ்வொரு குட்டியும் அரிய வகை வெள்ளைப்புலியாகவோ அல்லது செம்மஞ்சள் நிற புலியாகவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கக்கூடிய 50% வாய்ப்பு இருக்கிறது. இரண்டு வேறுபட்ட கருமுட்டைகளைக் கொண்ட புலிகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் போது, அவற்றின் வழிதோன்றல்கள் வெள்ளைப் புலிகளாக இருக்க 25% வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் செம்மஞ்சள் நிற கலப்பின புலிகளாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. 1970ஆம் ஆண்டில், ஷாசி மற்றும் ரவி என்று பெயரிடப்பட்ட செம்மஞ்சள் நிற புலிகள் ஜோடி, அலிப்போர் மிருகக்காட்சிசாலையில் 13 குட்டிகளை ஈன்றன; அவற்றின் மூன்று வெள்ளைப் புலிக்குட்டிகளாகும்.[4] இரண்டு வெள்ளை புலிகள் இனப்பெருக்கம் செய்தால், 100 சதவீதம் அவற்றின் குட்டிகள் ஒத்தப்புணரி வெள்ளைப் புலிகளாகவே இருக்கும். ஒரேகுடும்பத்தைச் சேர்ந்தவைகளுக்கு இடையிலான புணர்ச்சியானது, ஒத்தப்புணரித்தன்மையை அதிகரிக்கிறது. வெள்ளை மரபணுக்கள் இல்லாத செம்மஞ்சள் நிற புலிகளோடு ஒப்பிடும் போது, பிறக்கும் போதும் சரி, பருவமடைந்த நிலையிலும் சரி வெள்ளைப் புலிகள் அளவில் மிகவும் பெரிதாக இருக்கின்றன.[5] அவற்றின் வித்தியாசமான நிற அமைப்பிற்கு அப்பாற்பட்டு, அளவில் பெரிதாக இருப்பதும் அவற்றிற்கு ஒருவகையில் ஆதாயமாகவே இருக்கின்றன. இத்தன்மை அவற்றை பயங்கரமாக எடுத்துக்காட்டுகின்றன. 1960-களில் புதுடெல்லி மிருகக்காட்சிசாலையின் இயக்குனர், கைலாஷ் ஷன்கலா கூறுகையில், "வெள்ளை மரபணு தேவையில்லை என்றாலும் கூட, அதன் கூட்டத்திடையே ஓர் அளவிற்கு மரபணுவைத் தக்க வைத்திருப்பதும் அவசியமாகும்" என்றார்.[6] தற்போது, உலகளவில் பலநூறு வெள்ளைப்புலிகள் பிடிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சுமார் 100 புலிகள் இந்தியாவில் இருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. வெள்ளைப்புலிக்கான அரியவகை மரபணுக்கள் வங்காளப் புலிகளிடம் இருந்து மட்டும் தான் வந்ததா அல்லது பிற சைபீரிய மூதாதையர்களிடம் இருந்தும் வந்ததா என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. வெள்ளைப்புலிகளின் இந்த வித்தியாசமான நிறஅமைப்பின் காரணமாக, இவை மிருகக்காட்சிசாலைகளிலும், ஏனைய பொழுதுபோக்கு மையங்களிலும் மிகவும் பிரபலமாகி வருகின்றன. இரண்டு வெள்ளைப்புலிகளை உயிர்கலப்பு செய்விப்பதிலும், அவற்றை வித்தைகளைச் செய்து காட்ட பயிற்சி அளிப்பதிலும் சீய்க்ஃபெரட் &amp; ராய் மிகவும் பிரபலமானவர்கள். ரோன் ஹாலிடே, ஜாய் ஹாலிடே மற்றும் சக் லிஜ்ஜா ஆகிய முப்பெரும்குழு புலிகளைக் கொண்டு வித்தைக் காட்டும் நிகழ்ச்சி ஒன்றை HBO ஆவணப்படமாக செய்தார்கள். அவர்கள் ஒரு வெள்ளைப்புலியுடன் இந்த நிகழ்ச்சியை நடத்திய போது அதில் இரண்டு நபர்கள் கொல்லப்பட்டார்கள். காடுகளில் வெள்ளைப்புலிகள் 1909, நவம்பர் 15-ல், Journal Of The Bombay Natural History என்பதில் ஒரு கட்டுரை வெளியானது. ஒரிசாவில் உள்ள தென்கனால் மாவட்டத்தின் முலின் துணை-பிரிவு காட்டில் ஒரு வெள்ளைப் பெண்புலி சுட்டுக்கொல்லப்பட்டதாக அந்த கட்டுரை குறிப்பிட்டது. இந்த அறிவிப்பு முன்னதாக, 1909 மே மாதமே, Indian Forester என்பதில், காட்டிலாக்கா அதிகாரி திரு. பாவிஸ் சிங்கினால் வெளியிடப்பட்டிருந்தது. ஓர் எருமையைக் கொல்வதற்கான முயற்சியில் அந்த வெள்ளைநிறப் பெண்புலி சுடப்பட்டுவிட்டதாகவும், அப்போது அது "எவ்வித நோயின் அறிகுறியும் இல்லாமல் நல்ல நிலையில் இருந்ததாகவும்" தெரிவிக்கப்பட்டிருந்தது. Col. F.T. பொல்லக், பர்மா மற்றும் அசாம்களில் நடக்கும் காட்டு விளையாட்டுக்கள் என்பதில் எழுதுகையில், "விம்போல் தெருவில் எட்வின் வார்டுகளில் ஒரு புலியின் பருத்த தோலை நான் பார்த்திருக்கிறேன். மேலும் கோஸ்யாஹ் மற்றும் ஜின்தெஹ் மலையின் துணை ஆய்வாளர் திரு. ஷாத்வாலும் கூட இரண்டு முழு வெள்ளை நிறத்திலான தோல்களை வைத்திருக்கிறார்" என்றார். இந்தியாவில் மிருக விளையாட்டு (1907) என்ற புத்தகத்தில் திரு. லெடெக்கர் வெள்ளைப் புலிகளின் சுமார் ஐந்து வகையான தோல்களைப் பற்றி எழுதியுள்ளார்."[7] 1820-ல் இலண்டனின் எட்சீற்றர் சேன்ஜில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு வெள்ளைப்புலி தான் ஐரோப்பாவிலேயே முதல் வெள்ளைப்புலி ஆகும். இந்திய மிருகங்கள் பற்றிய புத்தகம் என்பதில் S.H. பிரேட்டர் எழுதுகையில், "முழுவதும் வெள்ளையாக இருக்கும் அல்லது சிறிதளவிற்கு வெள்ளையாக இருக்கும் புலிகள் பொதுவாக மத்திய இந்தியாவின் திறந்தவெளி வறண்ட காடுகள் சிலவற்றில் காணப்படுவதில்லை" என்று குறிப்பிட்டார்.[8] வெள்ளைப்புலிகளால் காடுகளில் உயிர்வாழ முடியாது என்பது வெறும் கட்டுக்கதை தான். ரீவாவிற்கு அருகிலுள்ள சிறப்பு மண்டலத்தில் இருக்கும் காடுகளுக்குள் பிடிபட்ட-கலப்பின வெள்ளைப் புலிகளை மீண்டும் கொண்டு போய்விட இந்தியா திட்டமிட்டது.[9] மத்திய இந்தியாவில் காட்டு விலங்குகள் என்ற புத்தகத்தில் A.A. உடுன்பார் பிரேன்டர் எழுதுகையில், "வெள்ளைப்புலிகள் எப்போதாவது தான் கண்ணில் தென்படுகின்றன. ரீவா அரசு பகுதியிலும், மாண்டலா மற்றும் பிலாஸ்பூர் மாவட்டங்களின் சந்திப்புகளிலும், அமர்கன்தக்கிற்கு அருகில் இந்த மிருகங்கள் வழக்கமாக இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. 1919-ஆம் ஆண்டு நான் கடைசியாக மாண்டலாவில் இருந்த போது, ஒரு வெள்ளைப்பெண் புலியும், இரண்டு மூன்று வளர்ந்த வெள்ளைப்புலி குட்டிகளும் இருந்தன. 1915-ஆம் ஆண்டு ஓர் ஆண் வெள்ளைப்புலி ரீவா அரசால் பிடிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டது. இந்திய காவல்துறையில் பணியாற்றிய திரு.ஸ்காட்டால் எழுதப்பட்ட மிருகங்களைப் பற்றிய விபரங்கள், பம்பாய் இயற்கை வரலாற்று சமூகத்தின் இதழின் இருபத்தி ஏழாவது தொகுதியின் எண் 47-ல் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது" என்று குறிப்பிட்டார்.[10] Journal Of The Bombay Natural History இதழில் இடம்பெற்றிருக்கும் இதரபிற குறிப்புகள்: "ரீவாவின் கூண்டில் இருந்த ஒரு வெள்ளைப்புலி, 1915 டிசம்பரில் சோஹாக்பூருக்கு அருகில் இருந்த காடுகளில் பிடிக்கப்பட்டது. அப்போது அதற்கு ஏறத்தாழ இரண்டு வயது இருக்கும். அந்த புலியோடு தொடர்புபட்ட மேலும் இரண்டு வெள்ளைப்புலிகளும் தெற்கு ரீவாவில் இருந்தன. ஆனால் இவற்றின் தாய் ஒரு வெள்ளைப்புலி கிடையாது என்று நம்பப்பட்டது... சுமார் 10 அல்லது 12 ஆண்டுகளுக்கு முன்னர், தெற்கு ரீவா, சோஹான்பூர் தாலுக்காவில் ஒரு வெள்ளைப்புலி ஒரு சீக்கியரால் கொல்லப்பட்டது. சாஹ்தோல் மற்றும் அன்னுப்பூர், B.N.Ry. ஆகிய இடங்களுக்கு அருகில் முரசடித்தப்போது மேலும் இரண்டு புலிகளும் பார்வைக்குத் தட்டுப்பட்டன. ஆனால் முந்தைய நீதிமன்ற ஆணைகளின்படி அவற்றை கொல்லக்கூடாது என்று இருந்தது. அன்னுப்பூரில் (பிலாம் துன்காரி காட்டில்) இருந்த ஒன்று, சிறைக்கூண்டில் இருந்த ஒன்றின் உடன்பிறப்பு என்று கூறப்பட்டது. இந்த வெள்ளைப்புலிகள் மத்திய மாவட்டங்களுக்கு அருகில் சுற்றிக் கொண்டிருப்பதாக தெரிகிறது."[11][12] பர்மா மற்றும் மேகாலயாவின் ஜின்தேஹ் மலைகளில் வெள்ளைப்புலிகள் இருந்ததற்கான ஆதாரங்கள், 1900-ஆம் ஆண்டுகளில் பொல்லாக்கால் உருவாக்கப்பட்ட அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. 1892 மற்றும் 1922-க்கு இடையில், பூனா, மேல் அசாம், ஒரிசா, பலிஸ்பூர் மற்றும் கூச் பிகார் ஆகிய இடங்களில் வெள்ளைப்புலிகள் சுட்டு கொல்லப்பட்டன. 1920கள் மற்றும் 1930களிலும் பல்வேறு பகுதிகளில் வெள்ளைப்புலிகள் சுட்டு கொல்லப்பட்டன. அதே காலகட்டத்தில் பிகாரிலும் பதினைந்து புலிகள் சுட்டுக்கொல்லப்பட்டன. 1943-ஆம் ஆண்டு வடக்கு சீனாவில் இருந்த வெள்ளைப்புலிகள் குறித்து விக்டர் H. சஹாலேன் நிறைய குறிப்பிட்டிருந்தார்.[13] எவ்வாறிருப்பினும், வெள்ளைப்புலிகள் வெளிறிய உயிரிகள் கிடையாது. வடக்கு சீனா மற்றும் கொரியாவிலும் வெள்ளைப்புலிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன.[14][15] இரண்டு செம்மஞ்சள் நிற குட்டிகளைக் கொண்டிருந்த ஒரு வெள்ளைப் பெண் புலியை ஜிம் கோர்பெட் காட்டில் படமெடுத்தார். இந்த படம் 1957-ஆம் ஆண்டு ஜிம் கோர்பெட்டினால் எழுதப்பட்டிருந்த புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். வெள்ளைப்புலிகள் காடுகளிலும் உயிர் வாழக்கூடியவை; அத்துடன் இனப்பெருக்கமும் செய்யக்கூடியவை என்பதற்கு இது மற்றொரு ஆதாரமாக இருக்கிறது. பந்தவ்கார்ஹ் தேசிய பூங்காவின் வலைத்தளத்தில், வெள்ளைப்புலிகளின் படங்கள் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. அந்த வலைத்தளம் குறிப்பிடுவதாவது, "பந்தவ்கார்ஹின் காடுகள், முந்தைய ஆண்டுகளில் வெள்ளைப்புலிகளின் காடுகளாக இருந்தன" என்று குறிப்பிடுகிறது. இன்று, பந்தவ்கார்ஹில் 46 முதல் 52 வரையிலான செம்மஞ்சள் புலிகள் இருக்கின்றன. இது இந்தியாவிலேயே எந்த தேசிய பூங்காவிலும் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையாகும்.[16] வெள்ளை சைபீரியன் புலிகள் இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் காட்டு சைபீரிய புலிக்கூட்டம் ஏறக்குறைய வழக்கத்தில் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டது. ஒரு வெள்ளை வங்காளப்புலியின் இயற்கையான பிறப்பு இன்றும் கூட காட்டில் மிகவும் அரிய நிகழ்வாக தான் இருக்கிறது. 10,000 காட்டுப்புலிகள் பிறந்தால் அவற்றில் சுமார் ஒன்றேயொன்று தான் ஒரு வெள்ளைப்புலியாக இருக்க சாத்தியம் இருப்பதாக கணிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன. வெள்ளைப்புலியானது ஒரு துணைஉயிரின புலியாக கருதப்படுவதில்லை, மாறாக இப்போதிருக்கும் துணைஉயிரின புலிகளின் ஒரு சடுதிமாற்றத்தால் ஏற்பட்ட மாற்றமாகவே கருதப்படுகின்றன. வெள்ளைப்புலிகளின் பிரபலத்தன்மையால், அது பார்வையாளர்களை மிருகக்காட்சிசாலைக்குக் கவர்ந்திழுக்கிறது. அத்துடன் அது புலிகள் மற்றும் அவற்றின் சூழ்நிலைகள் பற்றிய விழிப்புணர்வை உயர்த்தவும் உதவுவதாக நம்பப்படுகிறது. வரிகள் இல்லாத வெள்ளைப்புலிகளும், தங்கநிற வரிகளுடனான புலிகளும் மரபணு கூடுதலாக இருக்கும்பட்சத்தில் ஒரு வெள்ளைப்புலியின் மீதிருக்கும் வரிகளைக் கூட அது நீக்கிவிடக்கூடும். இதன் மூலம் அது முற்றிலுமாக வெள்ளை நிற மிருகமாக தோற்றமளிக்கும். 1820-ல் இங்கிலாந்தின் எக்சிட்டெர் சேலன்ஜில் இதுபோன்ற ஒரு புலி பொதுமக்களின் காட்சிக்கு கொண்டு வரப்பட்டது. "ஒரு வெள்ளைநிற புலியின் வரிகள் சிலநேரங்களில் ஒளியால் பிரதிபலிக்காமல், ஒளியின் சில குறிப்பிட்ட கோணங்களில் மட்டும் பிரதிபலிக்கும். மற்ற நிலைகளில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும்" என்று ஜார்ஜஸ் கூவியர் குறிப்பிடுகிறார்.[17] இயற்கைவாதியான ரிச்சர்டு லெடெக்கர் கூறுகையில், "இலேசான நிறத்துடனும், அதன் வழக்கமான வரிகள் சில பகுதிகளில் மங்கலாக பார்வைக்குத் தெரியும் வகையிலும் இருந்த ஒரு வெள்ளைப் புலி, சுமார் 1820-ஆண்டு எக்சிட்டெர் சேன்ஜின் பழைய மிருகக்காட்சிசாலையில் பொதுமக்களின் பார்வைக்குக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது" என்று தெரிவித்தார்.[18] சின்சின்னாட்டி மிருகக்காட்சிசாலையில் இருந்த பீம் மற்றும் சுமித்ரா என்ற இரண்டு புலிகளின் குட்டிகளில் நான்கில் ஒன்று வரிகள் இல்லாமலேயே பிறந்தன. வரிகளைக் கொண்டிருந்த வெள்ளைநிற குட்டிகள், உலகெங்கிலும் இருக்கும் மிருகக்காட்சிசாலைகளுக்கு விற்கப்பட்டன. செக் குடியரசு, ஸ்பெயின் மற்றும் மெக்சிகோ போன்ற தொலைதூரங்களில் இருக்கும் மிருகக்காட்சிசாலைகளிலும் வரியில்லா வெள்ளைப்புலிகள் காணப்படுகின்றன. அரங்க மேஜிக்காரர்களான ஷெக்ஃபெரெட் &amp; ராய் ஆகிய இருவரும் முதன்முதலில் வரியில்லாத புலிகளைத் தேர்ந்தெடுத்து புணர்ச்சியில் ஈடுபடுத்த முயற்சி செய்தார்கள்; அவர்கள் சின்சின்னாட்டி மிருகக்காட்சிசாலையில் இருந்து வெள்ளைநிற வங்காளப்புலிகளையும் (சுமுரா, மந்த்ரா, மிரேஜ் மற்றும் அக்பர்-காபூல்) மற்றும் கௌடலாஜாரா, மெக்சிகோ (விஷ்ணு மற்றும் ஜஹான்) ஆகியவற்றுடன் அப்பொல்லோ என்றழைக்கப்பட்ட வரியில்லாத சைபீரியன் புலியையும் வாங்கினார்கள்.[19] 2004-ல், நீல நிற கண்களுடன், வரியில்லாத வெள்ளைப்புலி ஒன்று ஸ்பெயினின் அலிகேண்டில் ஒரு காட்டுவாழ் முகாமில் பிறந்தது. சாதாரண செம்மஞ்சள் நிற வங்காளப்புலிகள் தான் அதன் பெற்றோர்கள். அந்த குட்டிக்கு ஆர்டிக்கோ (Artico) (அதாவது, "ஆர்டிக்") என்று பெயரிடப்பட்டது. பீம் மற்றும் சுமித்தாவின் ஒரு மகளான சிய்ங்ஃபெரெய்ட்டும், ராயின் வரியில்லா வெள்ளைப் பெண்புலியான சித்தாராவும் பிரசவிப்பதற்கு முன்னால் வரைக்கும், வரியில்லாத வெள்ளைப்புலிகள் மலடுகளாகவே கருதப்பட்டன. வெள்ளைப் புலிகளிலிருந்து வழக்கத்தில் இல்லாத மங்கிய-செம்மஞ்சள் நிறப் புலிகளும் தோன்றின. இவை "தங்கநிற வரிகளுடனான புலிகள்" என்று அழைக்கப்பட்டன. இவை அரியவகையாக இருப்பதால், வரிகள் இல்லாத வெள்ளைப் புலிகளின் மரபணுக்களைக் கொண்ட செம்மஞ்சள் நிற புலிகளாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இந்தியாவில் இருக்கும் சில வெள்ளைப் புலிகள் மிகவும் வெளிறியத்தன்மையுடன் வெள்ளைக்கும், செம்மஞ்சளுக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கின்றன. வரலாற்று ஆவணங்கள் 1960-ஆம் ஆண்டிற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே ரீவாவின் வேட்டைக்காரர்கள் நாளேட்டில் 9 வெள்ளைப் புலிகளைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. பம்பாய் இயற்கை வரலாற்று சமூகத்தின் இதழின் குறிப்புப்படி, 1907-ஆம் ஆண்டு முதல் 1933-ஆம் ஆண்டுக்குள் 17 வெள்ளைப்புலிகள் சுட்டுக்கொல்லப்பட்டன. 1959-ஆம் ஆண்டு வரையில் காடுகளில் இருந்து 35 வெள்ளைப்புலிகளை ஈ.பி. ஜீ கணக்கெடுத்திருக்கிறார். இதற்கு மேலும் பல அசாமில் கணக்கிடப்படாமல் இருந்தன. அங்கே அவர் தேயிலை தோட்டம் வைத்திருந்தார். எவ்வாறிருப்பினும், அசாம் அதன் அடர்ந்த காடுகளுக்காக கருப்பு புலிகளுக்கு உகந்த வசிப்பிடமாக கருதப்பட்டது என்று ஜீ குறிப்பிட்டார். காட்டில் இருந்த சில வெள்ளைப்புலிகள், சிவப்புநிற வரிகளையும் கொண்டிருந்தன. இவை "சிவப்பு புலிகள்" என்று அழைக்கப்பட்டன. 1900-களின் தொடக்கத்தில் அசாமின் தேயிலை தோட்டத்தில் இரண்டு வெள்ளைப்புலிகள் சுட்டு கொல்லப்பட்டன. ஆர்தர் லூக், "இட்ரின்கானுவின் புலிகள்" (1954) என்பதில் எழுதுகையில் வெள்ளைப்புலிகள் குறித்து குறிப்பிடுகிறார். சில பகுதிகளில், இந்த புலிகள் அப்பகுதிக்கான பாரம்பரியத்தையும் உருவாக்குகின்றன. சீனாவில், மேற்கின் கடவுள், பைஹூ (ஜப்பானில் பியோக்கோ மற்றும் கொரியாவில் பியாக்-ஹோ ) என்று போற்றப்படுகின்றன. தென்கொரியாவில், ஒரு வெள்ளைப்புலியானது கொடியில் டியாகியூக் சின்னமாக பதிக்கப்படுகிறது - வெள்ளைப்புலி கொடூரத்தைக் குறிக்கிறது, எதிரில் இருக்கும் டிரேகன் நன்மையைக் குறிக்கிறது. இந்தியாவில், ஒரு வெள்ளைப் புலியானது இந்து கடவுளின் திரு அவதாரமாகவும், அதை கொன்றவர் யாரும் ஓர் ஆண்டுக்குள் இறந்துவிடுவார்கள் என்றும் நம்பப்பட்டது. ஜாவாவில் வெள்ளைப்புலியானது மறைந்து போன இந்து அரசர்களுடனும், ஆவிகளுடனும், ஆன்மாக்களுடனும் தொடர்புபடுத்தப்பட்டிருந்ததாக கருதப்பட்டது. இது பதினேழாம் நூற்றாண்டு நீதிமன்றத்தில் பாதுகாப்பு முத்திரையாகவும் இருந்தது. கருமையான வரிகளுடன் கூடிய வெள்ளைப்புலிகள் இந்திய காடுகளில் மொகலாய சாம்ராஜ்ஜிய காலங்களின் (1556 - 1605) போது பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அக்பரின் 1590-ஆம் ஆண்டு ஓவியத்தில், குவாலியருக்கு அருகில் வேட்டையாடும் போது, நான்கு புலிகள் வரைந்து காட்டப்படுகின்றன. அவற்றில் இரண்டு வெள்ளைப்புலிகள்.[12] நீங்கள் இந்த ஓவியத்தை, , என்ற வலைத்தளத்தில் பார்க்கலாம். இந்தியாவின் வெவ்வேறு இடங்களில் 1907-ஆம் ஆண்டிலிருந்து 1933-க்குள் வெள்ளைப்புலிகளைப் பற்றிய சுமார் 17 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஜனவரி 22, 1939-ஆம் ஆண்டில், நேபாளின் பிரதம மந்திரி நேபாளின் தேராயில் உள்ள பார்தா முகாமில் ஒரு வெள்ளைப்புலியைச் சுட்டுக் கொன்றார். கடைசியாக பார்க்கப்பட்ட காட்டு வெள்ளைப்புலி 1958-ல் சுட்டுக்கொல்லப்பட்டது. மேலும் அதிலிருந்து உருவான சடுதிமாற்ற உயிரினம் காட்டில் இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.[9] அப்போதிருந்து இந்தியாவின் காடுகளில் வெள்ளைப்புலிகள் இருப்பதாக வதந்திகள் பரப்பப்படுகின்றன. இருந்தும் எதுவும் நம்பும்படியாக இல்லை. ஜிம் கோர்பெட் எடுத்த படத்தில்(1946)[20] இரண்டு செம்மஞ்சள் புலிக்குட்டிகளுடன் ஒரு வெள்ளைப் பெண்புலியும் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. வெள்ளைப்புலிகள் காடுகளில் உயிர் வாழ்ந்ததாகவும், இனப்பெருக்கம் செய்ததாகவும் அதில் எடுத்துக்காட்டப்பட்டிருந்தது. இந்த படம், "இந்தியாவின் மனித-உண்பிகள்" (1984) என்ற ஒரு நேஷனல் ஜியோகிராபிக் ஆவணப் படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தது. இது கோர்பெட்டின் வாழ்க்கையைப் பற்றியும், அதே தலைப்பில் அவருடைய 1957 புத்தகத்தின் அடித்தளத்தில் எடுக்கப்பட்டிருந்தது. 1965-ல், மர்ஜோரி மெர்ரிவெதர் போஸ்டிடம் (Marjorie Merriweather Post) ஒரு வெள்ளைப்புலியின் தோலினால் செய்யப்பட்ட ஒரு பழைய ஆசனம் இருந்தது. இது வாஷிங்டன் டி.சி-யில் இருந்த அவருடைய ஹில்வுட் பண்ணையில் இருந்தது. தற்போது இது அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகிறது. இந்த பொருளின் வண்ணப் புகைப்படம் லைஃப் இதழின் நவம்பர் 5, 1965 இதழில் வெளியிடப்பட்டது.[21] நேஷனல் ஜியோகிராபிக் பத்திரிக்கையின் அக்டோபர் 1975-ஆம் ஆண்டு இதழில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பாதுகாப்பு மந்திரி அவருடைய அலுவலகத்தில் ஒரு பதப்படுத்தப்பட்ட வெள்ளைப்புலியின் புகைப்படம் வெளியிடப்பட்டது.[22] நடிகர் சீசர் ரோமிரோவும் ஒரு வெள்ளைப்புலியின் தோலை வைத்திருந்தார். வெகுஜன கலாச்சாரம் இலக்கியங்கள், ஒளிப்பட விளையாட்டுக்கள், தொலைக்காட்சிகள், மற்றும் குழந்தைகளுக்கான கதைப் புத்தகங்களில் வெள்ளைபுலிகள் அதிகமாக இடம்பெறுகின்றன. ஸ்வீடனின் கென்ட் ராக் இசைக்குழுவை இதற்கோர் எடுத்துக்காட்டாகக் கூறலாம். 2002-ல் அவர்களால் வெளியிடப்பட்ட வாபென்&amp;ஆம்யுனிஷன் (Vapen &amp; ammunition) என்ற இசைத்தொகுப்பின் அட்டை படத்தில் அக்குழு வெள்ளைப் புலியை வெளியிட்டிருந்தது. அமெரிக்காவின் பிரபல சின்த்-ராக் இசைக்குழுவான தி கில்லர்ஸ் என்பதால் ஒளிப்பதிவு செய்யப்பட்ட, ‘’மனிதர்கள்’’ என்ற பாடலில் வெள்ளைப் புலியும் இடம்பெற்றிருந்தது. 1980-ல் இருந்து ஓர் அமெரிக்க கிளாம் மெட்டல் (glam metal) வாத்தியக்குழுவின் பெயராகவும் வெள்ளைப் புலி இருந்து வந்தது. அரவிந்த் அடிகாவின் ‘’வெள்ளைப் புலி’ என்ற நாவல் 2008-ல் புக்கர் பரிசை வென்றது. அதில் வரும் முக்கிய கதாபாத்திரமும் தன்னைத்தானே வெள்ளை புலி என்று குறிப்பிட்டுக் கொள்வதாக எழுதப்பட்டிருக்கிறது. அவர் குழந்தை பருவத்தில் தனிச்சிறப்புடன் இருந்ததாலும், மற்றவர்களை விட அவர் துடிப்பாக இருந்ததாலும் அக்கதையில் அவருக்கு அந்த புனைப்பெயர் அளிக்கப்படுகிறது. ஜூ தைகூன் (Zoo Tycoon) மற்றும் வார்கிராஃப்ட் யூனிவர்ஸ் (Warcraft universe) ஆகியவை வெள்ளைப் புலிகளைக் குறிப்பிடும் விளையாட்டுகளாகும். மைட்டி மார்ஃபின் பவர் ரேஞ்சர்கள் மற்றும் ஜப்பானிய சூப்பர் சென்டாய் தொடர்கள் இரண்டுமே வெள்ளைப் புலியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவற்றின் அடிப்படையில் தான் பவர் ரேஞ்சர்கள் தொடர் அமைக்கப்பட்டிருந்தது. Power Rangers: Wild Force என்பதிலிருந்து எடுக்கப்பட்ட தி ஒயிட் ரேஞ்சரிலும், அதன் எதிர்பலமான சென்டாய்யும் கூட வெள்ளை புலியின் சக்திகளைக் கொண்டிருக்கிறது. கனடாவின் ஒனடாரியோவிலுள்ள, பௌமேன்வில்லே மிருகக்காட்சிசாலையில் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு வெள்ளைப் புலி, அனிமார்ப்ஸ் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க பயன்படுத்தப்பட்டது. குறிப்புதவிகள் வெளி இணைப்புகள் பகுப்பு:புலிகள்
வெள்ளை புலி புத்தகம் எந்த ஆண்டு வெளியானது?
2008
15,084
tamil
c9d4e1651
தாவரம் (Plant) அல்லது நிலைத்திணை என்பது மரம், செடி, கொடி, புற்கள் போன்றவற்றைக் குறிக்கும் ஒரு பெரும் உயிரினப் பிரிவாகும். இவ்வகை உயிரினங்கள் ஓரிடத்திலுருந்து மற்றோர் இடத்திற்கு தானே நகராமல் இருப்பதால் இவைகளை நிலைத்திணை என்பர். சுமார் 350,000 தாவர வகைகள் உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது. இவற்றுள் 287,655 இனங்கள் வரை அடையாளம் காணப்பட்டுள்ளன. பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த மரங்கள், செடிகள், கொடிகள், புற்கள் போன்றவை மட்டுல் அல்லாமல் பன்னங்கள் (ferns), பாசிகள் (ஆங்கிலத்தில் அல்கே என்பர்), போன்றவையும் தாவரங்களே. அடையாளம் காணப்பட்ட தாவரங்களுள் ஏறத்தாழ 258,650 பூக்கும் தாவர வகைகள். 18,000 பிரயோபைட்டுகள். பயன்கள் இந்த பூமியில் உள்ள நிலப்பரப்பு முழுவதும் ஏன் நீரிலும் கூட வாழ்ந்து இந்த உலகத்தில் மற்ற உயிரினங்கள் வாழ வழி செய்பவை தாவரங்கள். தாவரங்களின் அளவுகளும் மிகச் சிறிய நீரில் நேரடியாக வாழும் பாசி வகைகளில் இருந்து 100 மீட்டர் (330 அடி) உயரத்திற்கு மேல் செல்லும் 'சிகொயா' மரங்கள் வரை பல்வேறு வகைகளில் நிறைந்துள்ளன. இவற்றில் மிகச் சிலவற்றை மட்டுமே நாம் உணவு, உடை, மருந்து, உறைவிடம் ஆகியவற்றிற்காக பயன்படுத்துறோம். அவற்றில் முக்கியமானவை அரிசி, கோதுமை, பருத்தி, சோளம், புகையிலை போன்றவை. பல நாடுகளின் பொருளாதாரம் மற்றும் அரசும் கூட இதைப் பொறுத்தே நிலை பெறுகிறது. இதைவிட முக்கியமாக பில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த தாவரங்களின் பச்சையத்தால் தான் இப்போது நாம் பயன்படுத்தும் பெட்ரோல், மண்ணெண்ணை, டீசல் ஆகியவை கிடைக்கிறன என்பதை பார்க்கும் போது தொழில் உலகின் அடித்தளமே தாவரங்கள் தான் என்று கூறினால் கூட மிகையாகாது. மேலும் பில்லியன் வருடங்களாகவே தாவரங்கள் காற்றில் வெளிப்படுத்திய ஆக்சிசன் பெருகப் பெருக விலங்குகள் முன்னேற்றமடைந்து உயர்வகைகள் தோன்றத் துவங்கின. தாவரங்களால் மண் சரிவு, மண் அரிப்பிலிருந்து பாதுகாக்கவும், மண் வளம், மழை வளம், சுகமான தட்பவெப்பநிலை ஆகியவற்றை நிலைப்படுத்தவும் முடியும் என்பதைக் காணும் போது மனித வாழ்க்கைக்கு தாவரங்களின் மிக ஆதாரமான பங்கை உணரலாம். உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் அடிப்படையாகத் தாவரங்கள் இருக்கின்றன. வரைவிலக்கணம் கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில்(384 கி.மு. – 322 கி.மு.) எல்லா உயிரினங்களையும், தாவரங்கள் (நிலைத்திணை), விலங்குகள் (நகர்திணை) என இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்தார். 18 ஆம் நூற்றாண்டில் லின்னேயசின் முறைப்படி(Linnaeus' system), இவை வெஜிட்டபிலியா (Vegetabilia), அனிமலியா (Animalia) என்னும் இரண்டு இராச்சியங்கள் (Kingdoms) ஆகின. வெஜிட்டபிலியா இராச்சியம் பின்னர் பிளாண்ட்டே (Plantae) என அழைக்கப்பட்டது. காலப்போக்கில் பிளாண்ட்டே இராச்சியத்தில் ஆரம்பத்தில் அடக்கப்பட்ட பல வகைகள் தொடர்பற்றவையாக இருப்பது அறியப்பட்டது. பூஞ்சணங்களும், பல வகை பாசிகளும் (அல்காக்கள்) வெவ்வேறு இராச்சியப் பிரிவுக்கு மாற்றப்பட்டன. இருந்தாலும் இவை பல சூழ்நிலைகளில், தாவரங்களாகவே இன்றளவும் கருதப்பட்டு வருகின்றன. கருத்துருக்கள் தாவரங்கள் என்று கூறும்போது அவை பின்வரும் மூன்று கருத்துருக்களில் ஒன்றால் குறிப்பிடப்படுகின்றன. அவையாவன: நிலத் தாவரங்கள்: இவை எம்பிரையோபைட்டா, மீட்டாபைட்டா போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. பச்சைத் தாவரங்கள்: இதற்கு விரிடிபைட்டா, குளோரோபினாட்டா போன்ற பெயர்களும் உண்டு. இதற்குள் முன்னர் குறிப்பிட்ட நிலத்தாவரங்களும் அடங்குகின்றன. அவற்றுடன், கரோபைட்டா, குளோரோபைட்டா என்பனவும் அடங்கும். ஆர்க்கீபிளாஸ்டிடா: பிளாஸ்டிடா, பிரிமோபிளாண்டா போன்ற பெயர்களாலும் அழைக்கப்படும் இதற்குள் பச்சைத் தாவரங்கள் அனைத்தும் அடங்குவதுடன் ரொடோபைட்டா, குளுக்கோபைட்டா என்பனவும் அடங்குகின்றன. தாவர வகைப்பாடு உயிரியல் வகைப்பாட்டின்படி, தொடக்ககால வகைப்பாட்டியலாளர்கள் தாவரங்களின் வெளிப்புற உடற் பண்புகளுக்கு அதிக முன்னுரிமைக் கொடுத்தனர். அதன் பின்பு வந்த அறிஞர்கள்(குறிப்பாக லின்னேயஸ் ) தாவரங்களின் மலர் பண்புகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஏனெனில், மலரின் பண்புகள் மாறுபடாமல் நிலைப்புத் தன்மையுடனும், நிரந்தரமாகவும் இருக்கின்றன. மேலும் பூக்கும் தாவரங்களை ஒருவித்திலைத் தாவரம், இருவித்திலைத் தாவரம் என்று இரு வகையாகவே பிரித்திருந்தனர். தொடக்ககால பல்வேறு விதமான வகைப்பாடுகள், மூன்று முறைகளில் பிரிக்கப்பட்டன. செயற்கை முறை - (எ.கா) லின்னேயஸ் முறை-7300 சிற்றினங்களுடன் விவரித்தார். இயற்கை முறை - (எ.கா) பெந்தம்-கூக்கர் வகைப்பாடு மரபுவழி முறை - (எ.கா) அடால்ஃப் எங்ளர்(1844-1930), கார்ல் பிராண்டல்(1849-1893) இருவரும் கூறினர். பரிசோதனை வகைப்பாட்டியல் - கேம்ப் என்பவரும், கில் என்பவரும் 1943 ஆம் ஆண்டு, இதனைக் கொண்டு வந்தனர் பெயரிடல் தாவரங்களுக்கான பெயரிடல், கீழ்கண்ட அமைப்புகளால் கட்டுப்படுத்தப் படுகிறது. தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை (International Code of Botanical Nomenclature), வளர்க்கும் தாவரங்களுக்கான அனைத்துலகப் பெயரிடல் நெறிமுறை (International Code of Nomenclature for Cultivated Plants) தற்காலத்தில் 2009 ஆம் ஆண்டின் பூக்குந்தாவரக் கூர்ப்பொழுங்குக் குழு III முறை (APG III system - Angiosperm Phylogeny Group III system) என்பதன் படி, இவை எட்டு குழுக்களாக வகைப்படுத்தப்படுகின்றன. அவைபின்வருமாறு;- அம்பொரெல்லா (Amborella) அல்லியம் (Nymphaeales) அவுத்திரோபியன் (Austrobaileyales) பசியவணி (Chloranthales) மூவடுக்கிதழிகள் (Magnoliidae) ஒருவித்திலையிகள் (Monocotyledonae) மூலிகைக்கொம்புகள் (Ceratophyllum) மெய்யிருவித்திலையிகள் (Eudicotyledonae) பல்வகைமை தாவரக் கலம் தாவரக் கலங்கள் கரு உள்ள கலங்களாகும். இவற்றில் ஒளித்தொகுப்புக்குத் தேவையான பச்சையம் காணப்படுவது ஒரு சிறப்பம்சமாகும். இவற்றில் விலங்குக் கலங்களில் காணப்படாத பல விசேட அமைப்புக்கள் உள்ளன. கலச்சுவர், பச்சையவுருமணி, பெரிய புன்வெற்றிடம் ஆகியன தாவரக்கலங்களின் சிறப்பம்சங்களாகும். மேலும் பார்க்க விலங்குகள் ஊனுண்ணித் தாவரம் தாவரவியல் காட்சியகம் பனை மரங்கள் (ஆசியப் பனை) பனை மரத்திலிருந்து இறக்கிய நுங்கு ஆந்திராவில் மஞ்சள் கிழங்கு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:தாவரங்கள்
உலகில் எத்தனை தாவர இனங்கள் உள்ளன?
350,000
234
tamil
5502c73af
மெக்சிக்கோ (எசுப்பானியம்: México, "மெஹிக்கோ") வட அமெரிக்கக் கண்டத்திலுள்ள ஒரு கூட்டாட்சி அரசமைப்புக் குடியரசு நாடாகும். முறைப்படி இது ஐக்கிய மெக்சிக்க நாடுகள் என அழைக்கப்படுகிறது.[1] ஐக்கிய அமெரிக்க நாடுகள் இதன் வடக்கு எல்லையாக அமைந்துள்ளது. தெற்கிலும், மேற்கிலும் பசிபிக் பெருங்கடல் உள்ளது. தென்கிழக்கு எல்லையில் குவாத்தமாலா, பெலிசே ஆகிய நாடுகளும் கரிபியக் கடலும் உள்ளன. கிழக்கு எல்லையில் மெக்சிக்கோ குடா அமைந்துள்ளது.[2] ஏறத்தாழ இரண்டு மில்லியன் சதுர கிலோமீட்டர் (760,000 சதுர மைல்களுக்கு மேல்)[3] பரப்பளவு கொண்ட மெக்சிக்கோ, பரப்பளவு அடிப்படையில் அமெரிக்கக் கண்டத்திலுள்ள ஐந்தாவது பெரிய நாடும், உலகில் 13 ஆவது பெரிய விடுதலை பெற்ற நாடும் ஆகும். 113 மில்லியன் மக்கள் தொகையுடன்[4] உலகின் 11 ஆவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாகவும் இது விளங்குவதுடன், உலகில் அதிக மக்கள் எசுப்பானிய மொழி பேசும் நாடும் இதுவாகும். இதன் தலைநகரம் மெக்சிகோ நகரம். மெக்சிக்கோவின் கூட்டாட்சி அமைப்பில் 31 மாநிலங்கள் இணைந்துள்ளன. இவற்றோடு தலைநகரம் கூட்டாட்சி மாவட்டமாக இருக்கிறது. கொலம்பசுக்கு முற்பட்ட மெக்சிக்கோவில் பல பண்பாடுகள் முதிர்ச்சியுற்று, ஒல்மெக், தோல்ட்டெக், தியோத்திகுவாக்கான், சப்போட்டெக், மாயா, அசுட்டெக் போன்ற நாகரீகங்களாக உயர்நிலை அடைந்தன. 1521 ஆம் ஆண்டில், மெக்சிக்கோவின் பகுதிகளை எசுப்பெயின் கைப்பற்றித் தனது தளமான மெக்சிக்கோ-தெனோச்தித்லானில் இருந்து குடியேற்றங்களை நிறுவியது. இப்பகுதிகள் புதிய எசுப்பெயினின் வைசுராயகமாக நிர்வாகம் செய்யப்பட்டது. 1821 ஆம் ஆண்டில் இக் குடியேற்றநாட்டின் விடுதலை ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், இந்த ஆட்சிப்பகுதிகள் மெக்சிக்கோ ஆக மாறின. விடுதலைக்குப் பிற்பட்ட காலத்தில், பொருளாதார உறுதியின்மை, மெக்சிக்கோ-அமெரிக்கப் போர், அமெரிக்காவிடம் ஆட்சிப்பகுதிகள் இழப்பு, உள்நாட்டுப் போர், இரண்டு பேரரசுகள் உருவாக்கம், ஒரு உள்ளூர் சர்வாதிகாரம் போன்றவற்றுக்கு மெக்சிக்கோ முகம் கொடுக்கவேண்டி இருந்தது. சர்வாதிகாரம் 1910 ஆம் ஆண்டின் மெக்சிக்கப் புரட்சிக்கு வித்திட்டது. இதைத் தொடர்ந்து 1917 ஆம் ஆண்டின் அரசியல் சட்டம் உருவானதுடன், தற்போதய அரசியல் முறைமையும் நடைமுறைக்கு வந்தது. சூலை 2000 ஆவது ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் முதல் முறையாக எதிக் கட்சியான நிறுவனப் புரட்சிக் கட்சி சனாதிபதி பதவியைக் கைப்பற்றியது. மெக்சிகோ அதிபராக அக் கட்சியைச் சேர்ந்த என்ரிக் பீனா நீட்டோ பதவி ஏற்றுள்ளார்.[5] மெக்சிக்கோ உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களுள் ஒன்று என்பதுடன், இது ஒரு பிரதேச வல்லரசும், நடுத்தர வல்லரசும் ஆகும். அத்துடன், மெக்சிக்கோவே இலத்தீன் அமெரிக்க நாடுகளுள், பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பின் முதலாவது உறுப்பு நாடு ஆகும். இது, 1994 ஆம் ஆண்டிலிருந்து இவ்வமைப்பின் உறுப்பினராக இருந்து வருகிறது. மெக்சிக்கோ ஒரு மேல்-நடுத்தர வருமானமுள்ள நாடாக உலக வங்கியால் கணிக்கப்படுகிறது. இது புதுத் தொழில்மய நாடாக இருப்பதுடன், வளர்ந்துவரும் ஆற்றல் வாய்ந்த நாடாகவும் உள்ளது. மெக்சிக்கோ 13 ஆவது பெரிய பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியையும், 11 ஆவது பெரிய வாங்கும் திறன் சமநிலையையும் கொண்டுள்ளது. இந்நாட்டின் பொருளாதாரம் அதன் வட அமெரிக்கச் சுதந்திர வணிக ஒப்பந்தக் கூட்டாளிகளின் பொருளாதாரங்களுடன், சிறப்பாக ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரத்துடன், வலுவாகப் பிணைந்துள்ளது. நாட்டிலுள்ள மொத்த யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களங்களின் எண்ணிக்கையின் அடைப்படையில் மெக்சிக்கோ உலகில் ஆறாவது இடத்திலும், அமெரிக்கக் கண்டத்தில் முதலாவது இடத்திலும் உள்ளது. இங்கே மொத்தம் 31 உலக பாரம்பரியக் களங்கள் உள்ளன. 2007 ஆம் ஆண்டில் மெக்சிக்கோவுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை உலகில் 10 ஆவது பெரியது. அவ்வாண்டில் 21.4 மில்லியன் பயணிகள் வந்தனர். 2006 ஆம் ஆண்டிலிருந்து, மெக்சிக்கோ, போதைப்பொருள் போரின் நடுவே இருந்து வருகிறது. இதனால், 60,000 பேர்வரை இறந்துள்ளனர். சொற்பிறப்பு புதிய எசுப்பெயின் என்று அழைக்கப்பட்ட பகுதிகள் எசுப்பெயினிடம் இருந்து விடுதலை பெற்ற போது, புதிய நாட்டின் பெயரை அதன் தலைநகரமான மெக்சிக்கோ நகரத்தின் பெயரைத் தழுவி வைப்பது என முடிவு செய்தனர். மெக்சிக்கோ நகரம், 1524 ஆம் ஆண்டில், பண்டைய அசுட்டெக் தலைநகரமான மெக்சிக்கோ-தெனோச்தித்லானின் மேல் நிறுவப்பட்டது. இப்பெயர் நௌவாத்தில் மொழியில் இருந்து வந்தது ஆயினும், இச் சொல்லின் பொருள் தெளிவாகத் தெரியவில்லை. "மெஹிகோ" (Mēxihco) என்பது, நௌவாத்தில் மொழியில், அசுட்டெக் பேரரசின் மையப்பகுதியான, மெக்சிக்கோ பள்ளத்தாக்கு, அதன் மக்கள், சூழவுள்ள பகுதிகள் என்பவற்றைக் குறித்தது. இது, விடுதலைக்கு முன்னர் புதிய எசுப்பெயினின் ஒரு பிரிவாக இருந்தது. இச்சொல், பொதுவாக பள்ளத்தாக்கைக் குறிக்கும் ஒரு இடப்பெயராகவே கருதப்படுகிறது. இது பின்னர் அசுட்டெக் முக்கூட்டமைப்பைக் குறிக்கும் இனப்பெயராகவும் பயன்பட்டது. மறு தலையாகவும் இது இருந்திருக்கக்கூடும். பின்னொட்டு -கோ என்பது நௌவாத்தில் மொழியில் இடவேற்றுமை உருபு. இதன் சேர்க்கை ஒரு சொல்லை இடப்பெயர் ஆக்குகிறது. அரசாங்கத்தின் அமைப்பைப் பொறுத்து நாட்டின் பெயரும் மாறி வந்துள்ளது. இரண்டு காலப் பகுதிகளில் (1821-1823, 1863-1867) இது "மெக்சிக்கப் பேரரசு" (இம்பீரியோ மெக்சிக்கானோ - Imperio Mexicano) என அழைக்கப்பட்டது. மூன்று கூட்டாட்சி அரசமைப்புக்களிலும் (1824, 1857, 1917) இதன் பெயர் "ஒன்றிய மெக்சிக்க நாடுகள்" (Estados Unidos Mexicanos) என்னும் பெயர் பயன்பட்டது. 1836 ஆம் ஆண்டின் அரசமைப்புச் சட்டத்தில் இதன் பெயர் "மெக்சிக்கோக் குடியரசு" எனக் குறிப்பிடப்பட்டது. புவியியல் மெக்சிக்கோ, அகலக்கோடுகள் 14° and 33°வ, நெடுங்கோடுகள் 86°, 119°மே என்பவற்றுக்கு இடையே வட அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது. ஏறத்தாழ மெக்சிக்கோவின் நிலப்பகுதிகள் முழுவதும் வட அமெரிக்கக் கண்டத்தட்டின்மீது உள்ளது. பாகா கலிபோர்னியா தீவக்குறையின் சில பகுதிகள் மட்டும் பசிபிக் கண்டத்தட்டிலும், கொக்கோசு கண்டத்தட்டிலும் உள்ளன. புவியியற்பியலின்படி, சில புவியியலாளர்கள், தெகுவாந்த்தப்பெக் குறுநிலத்துக்குக் கிழக்கே உள்ள பகுதியை நடு அமெரிக்காவுக்குள் அடக்குவர்.[6] புவியரசியலின்படி மெக்சிக்கோ முழுவதும், கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றுடன் வட அமெரிக்காவுக்குள் அடங்குவதாகவே கொள்ளப்படுகிறது.[7] 1,972,550 சதுர கிலோமீட்டர் (761,606 சதுர மைல்) மொத்தப் பரப்பளவு கொண்ட மெக்சிக்கோ பரப்பளவின் அடிப்படையில் உலகின் 14 ஆவது பெரிய நாடு. அத்துடன், ஏறத்தாழ 6,000 சதுர கிலோமீட்டர் (2,317 சதுர மைல்) பரப்பளவு கொண்டனவும், பசுபிக் பெருங்கடல், மெக்சிக்கக் குடா, கரிபியன், கலிபோர்னியக் குடா ஆகியவற்றில் அமைந்துள்ள பல தீவுகளும் இந்நாட்டுள் அடங்குகின்றன. மெக்க்சிக்கோவின் நிலப் பகுதியில் மிகவும் அதிகமான தூரத்தில் இருக்கும் இரு புள்ளிகளுக்கு இடையிலான தூரத்தின் அடிப்படையில், மெக்சிக்கோவின் நீளம் 3219 கிலோமீட்டர்களுக்கும் (2,000 மைல்) அதிகமாகும். மெக்சிக்கோ அதன் வடக்கில், ஐக்கிய அமெரிக்காவுடன் 3,141 கிலோமீட்டர்கள் (1,952 மைல்) நீளமான பொது எல்லையைக் கொண்டுள்ளது. தெற்கில் இது, குவாத்தமாலாவுடன், 871 கிமீ (541 மைல்) நீளமான எல்லையையும், பெலிசேயுடன் 251 கிமீ (156 மைல்) நீளமான எல்லையையும் கொண்டிருக்கிறது. மெக்சிக்கோவில் வடக்கிலிருந்து தெற்குவரை, சியேரா மாட்ரே ஓரியென்டல், சியேரா மாட்ரே ஒக்சிடென்டல் என்னும் இரண்டு மலைத் தொடர்கள் உள்ளன. இது வடக்கு வட அமெரிக்காவில் இருந்து தொடங்கும் பாறை மலைகளின் தொடர்ச்சி ஆகும். கிழக்கிலிருந்து வடக்கே நாட்டுக்குக் குறுக்காக அதன் நடுப்பகுதியில் சியேரா நெவாடா எனப்படும் எரிமலைப் பகுதி காணப்படுகிறது. சியேரா மாட்ரே டெல் சூர் எனப்படும் நான்காவது மலைத்தொடர் ஒன்று, மிச்சோக்கானில் இருந்து, வாக்சாக்கா (Oaxaca) வரை செல்கிறது.[8] எனவே பெரும்பாலான, மெக்சிக்கோவின் வடக்கிலும் நடுவிலும் உள்ள பகுதிகள் உயர்ந்த பகுதிகளாக உள்ளன. மிகவும் கூடிய உயரங்கள் டிரான்சு-மெக்சிக்க எரிமலைப் பகுதியில் காணப்படுகின்றன. இவற்றுள், பிக்கோ டி ஒரிசாபா (5,799 மீ, 18,701 அடி), போபோகட்டப்பெத்தில் (5,462 மீ, 17,920 அடி), இசுத்தக்சிவத்தில் (5,286 மீ, 17,343 அடி), நெவாடோ டி தொலூக்கா (4,577 மீ, 15,016 அடி) என்பன முக்கியமானவை. இந்த நான்கு ஒயரப் பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள பள்ளத்தாக்குகளில், மூன்று முக்கியமான நகரப் பகுதிகள் அமைந்துள்ளன. இவை, தொலூக்கா, பெரு மெக்சிக்கோ நகரம், புவேப்லா என்பன.[8] நிர்வாகப் பிரிவுகள் Gulf of Mexico Pacific Ocean Central America United States of America Mexico City AG Baja California Baja California Sur Campeche Chiapas Chihuahua Coahuila Colima Durango Guanajuato Guerrero HD Jalisco EM Michoacán MO Nayarit Nuevo León Oaxaca Puebla Querétaro Quintana Roo San Luis Potosí Sinaloa Sonora Tabasco Tamaulipas TL Veracruz Yucatán Zacatecas "ஒன்றிய மெக்சிக்க நாடுகள்" என்பன சுதந்திரமானவையும், இறைமை உள்ளனவுமான 31 மாநிலங்களின் கூட்டமைப்பு ஆகும். இவ்வாறு அமைந்த ஒன்றியம், மெக்சிக்கக் கூட்டாட்சி மாவட்டங்கள் மீதும், பிற ஆட்சிப்பகுதிகள் மீதும் குறிப்பிட்ட அளவு அதிகாரம் கொண்டதாக உள்ளது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனியான அரசமைப்புச் சட்டம், மாநில ஆட்சிச்சபை (congress), நீதித்துறை என்பன உள்ளன. மாநில ஆளுனரை ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் மூலம் மக்கள் நேரடியாகத் தேர்ந்து எடுக்கின்றனர். மாநில ஆட்சிச்சபைக்குரிய உறுப்பினர்களையும் மக்களே மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தெரிவு செய்கின்றனர்.[9] கூட்டாட்சி மாவட்டம் என்பது நடுவண் அரசினால் நிர்வகிக்கப்படும் ஒரு சிறப்பு அரசியல் பிரிவு. இது எந்தவொரு மாநிலத்துக்கும் சொந்தமானது அல்ல. இதற்கு வரையறுக்கப்பட்ட உள்ளூர் ஆட்சி அதிகாரங்களே உள்ளன.[10] மாநிலங்கள் முனிசிப்பாலிட்டிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதுவே எல்லா அரசியல் பிரிவுகளுள்ளும் மிகவும் சிறியது. இது மக்களால் தெரிவு செய்யப்படும் மேயர் அல்லது முனிசிப்பாலிட்டித் தலைவரால் ஆளப்படுகிறது.[11] மேற்கோள்கள் பகுப்பு:வட அமெரிக்க நாடுகள் பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
மெக்சிகோ நாட்டின் பரப்பளவு என்ன?
இரண்டு மில்லியன் சதுர கிலோமீட்டர்
431
tamil
63e0197cb
கணிப்பொறி மென்பொருள் அல்லது மென்பொருள் என்பது கணிப்பொறி நிரல்கள் மற்றும் கணிப்பொறிகளால் படிக்கவும் எழுதப்படவும் முடிகின்ற மற்றும் பிற வகைப்பட்ட தகவல் போன்ற எண்ணிம முறையில் சேமிக்கப்படும் தரவு என்று முதன்மையாகப் பயன்படுத்தப்படுகின்ற பொதுவான ஒரு சொல்லாகும். இன்று இந்தச் சொல் திரைப்படச் சுருள், நாடாக்கள் மற்றும் பதிவுப்பொருட்கள் போன்று வழக்கமாக கணிப்பொறியோடு தொடர்புகொண்டிராத தரவையும் உள்ளடக்கியிருக்கிறது..[1] இந்த சொற்பதம் வன்பொருள் (அதாவது உடலியல் சாதனங்கள்) என்ற பழைய சொல்லுக்கு முரணாக இருக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது; வன்பொருள் என்பதற்கு முரணாக மென்பொருள் என்பது கண்ணுக்குப் புலப்படாதது, அதாவது "தொட இயலாதது" என்பதைக் குறிக்கிறது.[2]. மென்பொருள் என்பதும் சிலசமயங்களில் மிகவும் குறுகலான பொருளிலேயே, அதாவது பயன்பாட்டு மென்பொருட்கள் என்பதாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டுகள்: பயன்பாட்டு மென்பொருள், பயனர்களுக்கு பயன்மிக்க வேலையை செய்துதரும் வேர்ட் பிராசஸர்கள் போன்றவை. தளநிரல், உடனிணைக்கப்பட்ட முக்கியப் பலகைகள் அல்லது மற்ற வகைப்பட்ட ஒருங்கிணைந்த வன்பொருள் கடத்திகளிலான மின்னனுரீதியில் நிரல்படுத்தப்பட்ட நினைவக சாதனங்களுக்கான, மென்பொருள் நிரல்படுத்தப்பட்ட உறைவிடம். மையநிரல், விநியோகிகப்பட்ட அமைப்புக்களைக் கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் செய்கிறது. அமைப்பு மென்பொருள் கணக்கீட்டு மூலாதாரங்களைக் மற்றும் பயனர்களுக்கான வசதிவாய்ப்பினை வழங்கும் இயங்கு தளங்களைக் கொண்டிருக்கிறது . மென்பொருள் பரிசோதனை என்பது மேம்படுத்தல் மற்றும் நிரல்படுத்தலின் செயற்களம் சார்ந்தது. மென்பொருள் பரிசோதனை என்பது பரிசோதனைக்கான பல முறைகளையும் உள்ளிட்டிருக்கிறது என்பதுடன் தனிநபராலோ அல்லது குழுவினராலோ பயன்படுத்தப்படுவதற்கு வெளியிடப்படும் முன்னர் மென்பொருள் தயாரிப்பைப் பொருத்தமானது என்று பிரகடனப்படுத்துகிறது. சோதனைநிரல், இது எல்லா பயனீடுகளுக்கும் ஒரு பொதுச் சொல்லாகவோ கொள்கலன் சொல்லாகவோ இருக்கிறது என்பதுடன் மென்பொருள் தொகுதியைச் சோதிப்பதற்கு இணையாகச் செயல்படும் பயன்பாட்டு மென்பொருளாகவும் இருக்கிறது, ஆனால் அவசியம் இவை செயல்பாட்டு நோக்கங்களுக்காக பங்களிக்கும் விருப்பத்தேர்வாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இதேபோன்று, சோதனைநிரல் நிலைப்படுத்தப்பட்ட உருவரை அல்ல ஆனால் பயன்பாட்டு மென்பொருள் அல்லது அதனுடைய துணைத்தொகுதிகளுக்கான வேலைச் சூழலாகும். வீடியோ கேம்கள் (வன்பொருள் பகுதியைத் தவிர்த்து) வலைத்தளங்கள் மேலோட்டப் பார்வை மென்பொருள் என்பது இலக்க முறையில் சேமி்க்கப்பட்ட தரவு கொண்டிருக்கக்கூடிய பல்வேறு வடிவங்கள் மற்றும் பாத்திரங்களை உள்ளடக்கியிருக்கிறது என்பதுடன் கணிப்பொறியில் (அல்லது அதேபோன்ற அமைப்பில்) செயல்படுவது, இந்தத் தரவு சிபியூ விற்கான குறியெழுத்தாகவோ அல்லது பிற பொருள் விளக்கியாகவோ பயன்படுத்தப்படுகிறதா அல்லது இது மற்ற வகைப்பட்ட தகவலைக் குறிக்கிறதா என்பது பொருட்டல்ல. இவ்வாறு மென்பொருள் என்பது வழக்கமான நிரலாக்க மொழிகள், உரையாக்க மொழிகள், நுண்குறியெழுத்து அல்லது எஃப்பிஜிஏ போன்ற பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி மேம்படுத்தப்படக்கூடிய பரந்த அளவிலான தயாரிப்புகளை உடனிணைத்துக்கொண்டதாக இருக்கிறது. இவ் வகையான மென்பொருள், ஹெச்டிஎம்எல், பிஹெச்பி, பெர்ல், ஜேஎஸ்பி, ஏஎஸ்பி.நெட், எக்ஸ்எம்எல், போன்ற மொழிகள் மற்றும் வடிவமைப்புப் பணிகளில் உருவாக்கப்படும் வலைப் பக்கங்கள் மற்றும் சி, சி++, ஜாவா, சி# அல்லது ஸ்மால்டாக் போன்ற மொழிகளில் உருவாக்கப்பட்ட ஓபன்ஆபீஸ், மைக்ரோசாஃப்ட் வேர்ட் போன்ற டெஸ்க்டாப் பயன்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிறது. பயன்பாட்டு மென்பொருள் வழக்கமாக லினக்ஸ் அல்லது மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் போன்ற உள்ளுறையும் இயங்கு தளங்களில் செயல்படுகின்றன. மென்பொருள் (அல்லது தளநிரல்) வீடியோ கேம்களிலும் வாகனங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் பிற நுகர்வோர் மின்னணு சாதனங்களின் லாஜிக் அமைப்புக்களின் உருவரையாக்க பாகங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. கணிப்பொறி மென்பொருள் என்பது மென்பொருளை சேமித்தும் செயல்நிறைவேற்றவும் (அல்லது செயல்படுத்தவும்) தேவைப்படும் உள்ளார்ந்த உள்ளிணைப்புகள் மற்றும் சாதனங்களை உடனிணைந்துக் கொண்டுள்ள கணினி வன்பொருள் (வன்பொருள்) என்பதிலிருந்து வேறுபடுத்திக் காட்டப்படுவதற்கென்றே இவ்வாறு அழைக்கப்படுகிறது. மிகக்குறைந்த அளவில் செயல்நிறைவேற்ற குறியெழுத்து தனிப்பட்ட நிகழ்ப்படுத்திக்கென்றே உள்ள இயந்திர மொழி்க் குறிப்புகளை உள்ளிட்டிருக்கிறது. ஒரு இயந்திர மொழி முன்பிருந்த நிலையிலிருந்து கணிப்பொறியின் நிலையை மாற்றும் நிகழ்படுத்தி அறிவுறுத்தல்களைக் குறிப்பிடும் பைனரி மதிப்புக் குழுக்களை உள்ளிட்டதாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட தொடராக்கத்தில் கணினியின் நிலையை மாற்றுவதற்காக அறிவுறுத்தல்களின் தொடர்வரிசைக்கு நிரலாக்கங்கள் கட்டளையிடுகின்றன. இது வழக்கமாக இயந்திர மொழியைக் காட்டிலும் மனிதர்களுக்கு பயன்படுத்த சுலபமாகவும் மிகுந்த பயன்மிக்கதாகவும் இருக்கும் (இயற்கை மொழிகள் போன்று) உயர் மட்ட நிரலாக்க மொழிகளில் எழுதப்படுகின்றன. உயர்மட்ட மொழிகள் இயந்திர மொழி இலக்கு குறியெழுத்திற்கு தொகுக்கப்படுகின்றன அல்லது பொருள் விளக்கம் செய்யப்படுகின்றன. மென்பொருளானது தொகுப்பு மொழியிலும் எழுதப்படலாம், குறிப்பாக இயற்கை மொழி அகரவரிசையைப் பயன்படுத்தும் இயந்திர மொழியின் நினைவூட்டு வெளிப்பாடு. தொகுப்பு மொழி ஒரு தொகுப்பி வழியாக ஆப்ஜெக்ட் குறியெழுத்தாக தொகுப்பாக்கம் செய்யப்பட வேண்டும். "மென்பொருள்" என்ற சொல் இந்தப் பொருளில் முதன்முறையாக 1958 இல் ஜான் டபிள்யு.டர்க்கி அவர்களால் பயன்படுத்தப்பட்டது.[3] கணினி அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியலில் கணினி மென்பொருள் என்பது எல்லா கணினி நிரல்களுமாகும். மிகவும் நவீன மென்பொருளுக்கு அடிப்படையாக உள்ள கோட்பாடு 1935 ஆம ஆண்டில் ஆலன் டூரிங் அவர்களால், அவருடைய எண்ஸ்டைடங்ஸ்பிராப்ளத்திற்கான (முடிவுசெய்யும் கணிதம்) பயன்பாட்டுடன் கூடிய கணக்கிடக்கூடிய எண்கள் கட்டுரையில் முதல்முறையாக முன்மொழியப்பட்டிருக்கிறது.[4] மென்பொருள் வகைகள் நடைமுறை கணினி அமைப்புகள் மென்பொருள் அமைப்புகளை மூன்று முக்கிய வகைகளாகப் பிரிக்கின்றன: அமைப்பு மென்பொருள், நிரலாக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள், இருப்பினும் இந்த வேறுபாடு விதிகளுக்கு உட்படாது என்பதுடன் தெளிவற்றதாகவே இருந்து வருகிறது. அமைப்பு மென்பொருள் அமைப்பு மென்பொருள் கணிப்பொறி வன்பொருளையும் கணிப்பொறி அமைப்பையும் செயல்படுத்த உதவுகிறது. இது பின்வரும் இணைகளை உள்ளடக்கியிருக்கிறது: சாதன இயக்கிகள் இயங்கு தளம் சர்வர்கள் பயனீடுகள் விண்டோ சிஸ்டம்ஸ் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட கணினியின் விவரங்கள் தொடர்ந்து சிக்கலானதாகவே இருப்பதிலிருந்து பயன்பாடுகள் நிரலாக்குநருக்கான சுமையைக் குறைப்பதே அமைப்பு மென்பொருளின் நோக்கமாகும், இது தகவல்தொடர்பு சாதனங்கள், அச்சிடும் சாதனங்கள், சாதன வாசிப்பான்கள், காட்சியமைப்புகள் மற்றும் விசைப்பலகைகள் போன்ற துணைப்பொருட்களையும், நினைவகம் மற்றும் நிகழ்படுத்தியை பாதுகாப்பான மற்றும் நிலைப்படுத்தப்பட்ட முறையாக கணிப்பொறி மூலாதாரங்களுக்கான பிரிப்பு ஆகியவற்றையும் உள்ளடக்கியிருக்கிறது. உதாரணங்கள்- விண்டோஸ் எக்ஸ்பி, லினக்ஸ், மற்றும் மேக் ஓஎஸ் எக்ஸ். நிரலாக்க மென்பொருள் நிரலாக்க மென்பொருள் வழக்கமாக கணிப்பொறி நிரலாக்கங்களை எழுதுவதில் நிரலாக்குனருக்கு உதவுவதற்கென்று கருவிகள் மற்றும் மிகவும் வசதியான முறையில் வேறுபட்ட நிரலாக்க மொழிகளைப் பயன்படுத்தும் மென்பொருளையும் வழங்குகின்றன. இந்தக் கருவிகளில் உள்ளடங்குவன: தொகுப்பிகள் டீபக்கர்கள் இண்டர்பிரட்டர்கள் லின்கர்கள் டெக்ஸ்ட் எடிட்டர்கள் ஒரு ஒருங்கிணைந்த உருவாக்கச் சூழல் என்பது (ஐடிஇ) இந்த செயல்பாடுகள் அனைத்தையும் கையாள்வதற்கு முயற்சிக்கும் ஒற்றைப் பயன்பாடாக இருக்கிறது. பயன்பாட்டு மென்பொருள் பயன்பாட்டு மென்பொருள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட (நேரடியாக கணினி மேம்பாடு தொடர்புடையது) வேலைகளை செய்துமுடிக்க பயனர்களுக்கு உதவுகிறது. வழக்கமான பயன்பாடுகளில் உள்ளவை: தொழில்துறை தானியக்கம் தொழில் மென்பொருள் வீடியோ கேம்ஸ் நுண்ணலகு ரசாயனம் மற்றும் திடநிலை இயற்பியல் மென்பொருள் தகவல்தொடர்புகள் (அதாவது இணையத்தளம் மற்றும் அதில் உள்ளடக்கப்பெறும் அனைத்தும்) தரவுத்தளங்கள் கல்வித்துறை மென்பொருள்( தற்போது இவை இந்தியாவில் பிரபலமடைந்து வருகின்றன ) மருத்துவ மென்பொருள் இராணுவ மென்பொருள் மூலக்கூறு மாதிரியாக்க மென்பொருள் இமேஜ் எடிட்டிங் வீடியோ எடிடிங் ஸ்பிரெட்ஷீட் போலியாக்க மென்பொருள் வேர்ட் பிராசஸிங் முடிவெடுத்தல் மென்பொருள் முப்பரிமான வரைகலை மென்பொருள் கணக்குப் பதிவியல் மென்பொருள் சம்பளப் பட்டியல் மென்பொருள் பரந்துவிரிந்த தலைப்புகளுக்கான பயன்பாட்டு மென்பொருள் இருப்பதுடன் அவற்றில் தாக்கமேற்படுத்தவும் செய்கின்றன. மென்பொருள் தலைப்புகள் கட்டுமானம் நிரலாக்குனர்களைக் காட்டிலும் பயனர்கள் இவற்றைப் வேறுபட்ட விதத்தில் பார்க்கின்றனர். நவீன பொதுப்பயன்பாட்டு கணினிகளை (எம்பட்டட் சிஸ்டம்கள், அனலாக் கணினிகள் மற்றும் சூப்பர் கணினிகளுக்கு எதிரானதாக), தளம், பயன்பாடு மற்றும் பயனர் மென்பொருள் என மூன்று அடுக்குகளிலான மென்பொருள் பல்வேறுவிதமான வேலைகளைச் செய்வதை பயன்படுத்துனர்கள் காண்கின்றனர்: . தளம் மென்பொருள்: தளம் என்பது தளநிரல், சாதன இயக்கிகள், ஒரு இயங்கு தளம் மற்றும் வகைமாதிரியாக ஒரு கிராபிக்கல் பயனர் இடைமுகம் ஆகியவற்றை உள்ளிட்டிருக்கிறது, இது மொத்தத்தில் கணினி மற்றும் அதனுடைய துணைப்பொருட்களோடு (உடனிணைந்த சாதனம்) ஒருங்கிணைந்த முறையில் பயனர் செயல்படுவதற்கு உதவுகிறது. தளம் மென்பொருள் கணிப்பொறியுடன் இணைந்தே வருகிறது. ஒரு பிசியில் நீங்கள் சாதாரணமாக தளம் மென்பொருளை மாற்றிக்கொள்வதற்கான திறன் உங்களுக்கு இருக்கிறது. பயன்பாட்டு மென்பொருள்: மென்பொருளை பற்றி நினைக்கையில், பெரும்பாலான பயனர்கள் பயன்பாட்டு மென்பொருள் அல்லது பயன்பாடுகளை தான் நினைக்கிறார்கள். ஆஃபீஸ் ஸ்யூட் மற்றும் வீடியோ கேம்ஸ் ஆகியவை வகைமாதிரியான உதாரணங்களாகும். பயன்பாட்டு மென்பொருள் எப்பொழுதும் கணிப்பொறி வன்பொருளிலிருந்து தனித்தே வாங்கப்படுகிறது. சிலநேரங்களில் பயன்பாடுகள் கணிப்பொறியுடன் சேர்ந்தே வருகின்றன, ஆனால் அது தனிப்பட்ட பயன்பாடுகளாகத்தான் செயல்படும் என்ற உண்மையை மாற்றிவிடுவதில்லை. பயன்பாடுகள் வழக்கமாக இயங்கு தளத்திலிருந்து தனித்திருக்கும் நிரல்களாகும், இருப்பினும் அவை குறிப்பிட்ட தளங்களுக்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான பயனர்கள் இருமமாக்கிகள், தரவுத்தளங்கள் மற்றும் இதர "அமைப்பு மென்பொருள்" ஆகியவற்றை பயன்பாடுகள் என்றே நினைத்துக்கொண்டிருக்கின்றனர். பயனர்-எழுதிய மென்பொருள்: இறுதிப் பயனர் மேம்படுத்துனர், பயனரின் குறிப்பிட்ட தேவைகளை பூர்த்திசெய்வதற்கு அமைப்புக்களை வடிவமைக்கிறார். பயனர் மென்பொருள் ஸ்பிரெட்ஷீட் டெம்ப்லட்டுகள், வேர்ட் பிராசஸரை உள்ளிட்டிருக்கிறது [தளம் மென்பொருள்: தளம் என்பது தளநிரல், சாதன இயக்கிகள், ஒரு இயங்குதளம் மற்றும் வகைமாதிரியாக கிராபிகல் பயனர் இடைமுகம் ஆகியவற்றை உள்ளிட்டிருக்கிறது, மொத்தத்தில் இது பயனரை கணிப்பொறியோடும் அதனுடைய துணைப்பொருட்களோடும் (உடனிணைந்த சாதனம்) ஒருங்கிணைந்து செயல்பட அனுமதிக்கிறது. தளம் மென்பொருள் கணி்னியுடன் இணைந்தே வருகிறது. ஒரு பிசியில் தள மென்பொருளை மாற்றுதற்கான திறன் உங்களுக்கு வழங்கப்படுகிறது. மின்னஞ்சல் பிரிப்பான்கள்கூட ஒருவகையான பயனர் மென்பொருளாகும். பயனர்கள் இந்த மென்பொருளை தாங்களாகவே உருவாக்கிக்கொள்கின்றனர் என்பதோடு இது எவ்வளவு முக்கிமானது என்பதையும் மேற்பார்வையிடுகின்றனர். தன்னியல்பான பயன்பாட்டு பேக்கேஜ்களில் பயனர் எழுதிய மென்பொருள் எவ்வளவு திறனோடு ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்து பல பயனர்களும் அசலான பேக்கேஜ்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களால் சேர்க்கப்பட்டவற்றிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை பயனர்கள் தெரிந்துகொண்டிராமல் இருக்கலாம். ஆவணமாக்கல் பெரும்பாலான மென்பொருள்களும் மென்பொருள் ஆவணமாக்கலைக் கொண்டிருப்பதால் ஒரு நிரல் என்ன செய்கிறது மற்றும் அதைப் பயன்படுத்துவது எப்படி என்பதை இறுதிப் பயனர் புரிந்துகொள்கிறார். தெளிவான ஆவணமாக்கம் இல்லாமல் மென்பொருள் பயன்படுத்துவதற்கு கடினமானதாக இருக்கலாம் - குறிப்பாக இது ஃபோட்டோஷாப் அல்லது ஆட்டோகேட் போன்று மிகவும் சிறப்புவாய்ந்த மற்றும் சிக்கலான மென்பொருளாக இருக்கும்போது அவ்வாறு ஏற்படலாம். மேம்படுத்துனர் ஆவணமாக்கலும் இருக்கலாம், குறியெழுத்துக்கள் குறிப்புகளாகவோ மற்றும்/அல்லது தனித்தனி ஆவணங்களாகவோ இருக்கலாம் என்பதோடு இந்த நிரல்கள் எவ்வாறு செயல்படுகின்றன மற்றும் எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதையும் விவரமாக தெரிவிக்கின்றன. நூலகம் ஒரு செயல்நிறைவேற்றக்கூடியது என்பது நேரடி செயல்நிறைவேற்றத்திற்கு எப்போதுமே போதுமான அளவிற்கு முழுமையடையச் செய்வதில்லை. மென்பொருள் நூலகங்கள் பிற பயன்பாடுகளோடு இணைந்திருக்கக்கூடிய செயல்பாடுகள் மற்றும் செயல்பாட்டின் தொகுப்புக்களை உள்ளிட்டிருக்கின்றன. இயங்கு தளங்கள் உள்ளிட்டிருக்கும் பல நிலைப்படுத்தப்பட்ட மென்பொருள் நூலகங்கள் மற்றும் பயன்பாடுகள் ஆகியவை அவற்றின் சொந்த நூலகங்களுக்குள்ளாகவே விநியோகிக்கப்பட்டவையாக இருக்கின்றன. தரநிலை மென்பொருளானது வெவ்வேறு நிரலாக்க மொழிகள், இயங்கு தளங்கள் மற்றும் செயல்பாட்டு சூழல்களில் வடிவமைக்கப்படுகின்றன என்பதால் மென்பொருள் தரநிலை தேவைப்படுகிறது, இதனால் வெவ்வேறு மென்பொருள்கள் ஒன்றையொன்று புரிந்துகொள்ளவும் தகவலைப் பரிமாறிக்கொள்ளவும் செய்கின்றன. உதாரணத்திற்கு, ஒரு மின்னஞ்சல் மைக்ரோசாஃப்ட் அவுட்லுக்கிலிருந்து அனுப்பப்படுகிறது என்றால் அது யாஹூ!மெயில் மற்றும் நிலையெதிர் மாறாகவும் படிக்கப்படுவதாக இருக்க வேண்டும். செயல்படுத்துதல் கணிப்பொறி மென்பொருள் "கணிப்பொறியின் சேமிப்பகத்திற்குள்ளாக" (வன் வட்டு, நினைவகம் அல்லது ரேம்) பதிவேற்றம் செய்யப்படுகிறது. மென்பொருள் ஏற்றப்பட்டவுடன் கணிப்பொறியானது மென்பொருளை செயல்படுத்தும் திறனைப் பெறுகிறது. இது பயன்பாட்டு மென்பொருளிலிருந்து அமைப்பு மென்பொருள் ஊடாக அறிவுறுத்தல்களை முடிவில் இயந்திர குறியெழுத்தாக பெறும் வன்பொருளுக்கு எடுத்துச்செல்கிறது. ஒவ்வொரு அறிவுறுத்தலும் ஒரு செயல்பாட்டை கணிப்பொறி மேற்கொள்வதற்கு காரணமாக அமைகிறது - தரவை நகர்த்திச்செல்லல், கணக்கிடுதல் அல்லது அறிவுறுத்தல்களின் கட்டுப்பாட்டு ஓட்டத்தை மாற்றுவது ஆகியன இதில் அடங்கும். தரவு நகர்தல் என்பது நினைவகத்திலுள்ள ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது. சிலநேரங்களில் இது சிபியூவில் தரவு அணுகலை உயர்வேக திறனுள்ளதாக ஆக்குவதற்கு தரவை நினைவகத்திலிருந்து பதிவுகளுக்கு மாற்றுவதோடும் தொடர்புகொண்டிருக்கிறது. தரவை நகர்த்துவது குறிப்பாக பெரும் அளவிற்கானதாக மாற்றுவது செலவு மிகுந்ததாக இருக்கலாம். எனவே, இது சிலநேரங்களில் தரவிற்குப் பதிலாக "பாய்ண்டர்களைப்" பயன்படுத்துவதன் மூலம் தவிர்க்கப்படுகிறது. கணக்கிடுதல்கள் மாறுபடும் தரவுக் கூறுகளின் மதிப்பை அதிகரிக்கச் செய்வது போன்ற எளிய செயல்பாடுகளையும் உள்ளிட்டதாக இருக்கிறது. மிகவும் சிக்கலான கணக்கீடுகள் பல செயல்பாடுகள் மற்றும் தரவுக் கூறுகளோடு ஒன்றிணைந்த நிலையில் தொடர்புகொண்டதாக இருக்கலாம். தரமும் நம்பகத்தன்மையும் மென்பொருளின் தரம் முக்கியமானது, குறிப்பாக மைக்ரோசாஃப்ட் ஆபீஸ், மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் போன்ற வர்த்தக மற்றும் அமைப்பு மென்பொருள்களுக்கு. மென்பொருள் பிழையானதாக (பக் கொண்டிருந்தால்) இது ஒருவருடைய வேலையை அழித்தும் சிதைத்தும் விடலாம் என்பதுடன் எதிர்பாராத செயல்களையும் செய்துவிடலாம். தவறுகளும் பிழைகளும் "பக்ஸ்" என்றழைக்கப்படுகின்றன. பல பக்ஸ்களும் மென்பொருள் சோதனையின் வழியாக கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன (டீபக் செய்யப்படுகிறது). இருப்பினும், மென்பொருள் சோதனை எப்போதாவதுதான் -அவ்வாறு இருந்தால்- ஒவ்வொரு பக்கையும் அழிக்கிறது; சில நிரலாக்குனர்கள் "ஒவ்வொரு நிரலாக்கமும் குறைந்தது ஒரு பக்காவது இல்லாமல் இருக்காது"(லூபேர்ஸ்கி விதி) என்று கூறுகின்றனர். எல்லா முக்கியமான நிறுவனங்களும், மைக்ரோசாஃப்ட், நோவல் மற்றும் சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் போன்றவை, சோதனையிடுவதற்கு மட்டுமேயான குறிப்பிட்ட இலக்கோடு மென்பொருள் சோதிப்பு துறைகளை வைத்திருக்கின்றன. மென்பொருளானது யூனிட் டெஸ்டிங், ரெக்ரஸன் டெஸ்டிங் மற்றும் இதர வழிமுறைகள் மூலமாக பரிசோதிக்கப்படுகின்றன, சோதிக்கப்படும் குறியாக்கம் அதிகமாக இருக்கலாம் என்பதால் இவை கைமுறையாகவோ அல்லது மிகவும் பொதுவாக தானியங்கி ரீதியாகவோ செய்யப்படுகின்றன. உதாரணத்திற்கு நாசா பல இயங்கு தளங்கள் மற்றும் தகவல்தொடர்பு செயல்பாடுகளுக்கு மிகவும் கடுமையான மென்பொருள் பரிசோதிப்பு நடைமுறைகளை வைத்திருக்கிறது. நாசா அடிப்படையிலான பல செயல்பாடுகள் மென்பொருள் எனப்படும் கட்டளை நிரல்கள் வழியாக ஒன்றோடொன்று செயல்பட்டும் அடையாளம் காண்பபடவும் செய்கின்றன. இது நாஸாவில் பணிபுரியும் பல பயனர்களையும் ஒட்டுமொத்தமாக செயல்பாட்டு அமைப்புக்களை மதிப்பிட அனுமதிக்கிறது. கட்டளை மென்பொருளைக் கொண்டிருக்கும் நிரல்கள் வன்பொருள் பொறியியல் மற்றும் அமைப்புச் செயல்பாடுகளை ஒன்றிணைத்து மிகவும் சுலபமாக செயல்படுத்துவதற்கு உதவுகின்றன. உரிமம் மென்பொருளின் உரிமம் உரிமமளிக்கப்பட்ட சூழலில் அந்த மென்பொருளைப் பயன்படுத்துவதற்கான உரிமையைப் பயனருக்கு அளிக்கிறது. சில மென்பொருட்கள் கடையிலிருந்து வாங்கும்போது உரிமத்துடன் வருகிறது அல்லது வன்பொருளுடன் வரும்போது ஓஇஎம் உரிமத்துடன் வருகிறது. பிற மென்பொருள்கள் இலவச மென்பொருள் உரிமத்துடன் வருகின்றன என்பதுடன், பெறுநருக்கு மென்பொருளை மேம்படுத்துவதற்கும் விநியோகிப்பதற்குமான உரிமைகளையும் வழங்குகிறது. மென்பொருளானது இலவசநிரல் அல்லது பகிர்வுநிரல் போன்ற வடிவத்திலும் வருகின்றன. காப்புரிமைகள் மென்பொருள்கள் காப்புரிமை பெற்றவையாக இருக்கலாம்; இருப்பினும், மென்பொருள் காப்புரிமைகள் குறித்து மென்பொருள் துறையில் பல்வேறுவிதமான கண்ணோட்டங்கள் நிலவுவதால் அது முரண்பாடுகள் உள்ளதாக இருக்கிறது. மென்பொருள் காப்புரிமைகள் மீதான முரண்பாடு என்னவெனில் ஒரு மென்பொருள் கொண்டிருக்கும் குறிப்பிட்ட செயல்முறை அல்லது உத்தி மற்றவர்களால் போலிசெய்ய முடியாதது என்பதுடன் அதனுடைய தீவிரத்தன்மையைப் பொறுத்து அறிவுசார் சொத்தாகவும் காப்புரிமை மீறலாகவும் கருதப்படுகிறது. வடிவம் மற்றும் நடைமுறைப்படுத்தல் மென்பொருளை வடிவமைத்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் மென்பொருளின் சிக்கல்தன்மையைப் பொறுத்து அமைகிறது. உதாரணத்திற்கு, மைக்ரோசாஃப்ட் வேர்ட் மென்பொருளின் வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் மைக்ரோசாஃப்ட் நோட்பேடைக் காட்டிலும் மிக அதிகமான நேரத்தை எடுத்துக்கொள்ளும், ஏனென்றால் இவை ஒவ்வொன்றிலும் உள்ள செயல்பாடுகள் வெவ்வேறு விதமானவை. இந்த நிகழ்முறையையும் நிரலை தொகுக்கச் செய்வதையும் எளிதாக்கக்கூடிய எக்லிப்ஸ், இமேக்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் விஷுவல் ஸ்டுடியோ போன்ற ஒருங்கிணைந்த மேம்பாட்டுச் சூழலில் (ஐடிஇ) மென்பொருள் சாதாரணமாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது (குறியாக்கம்/எழுதுதல்/நிரலாக்கம்). பல்வேறு பிரிவுகளில் குறிப்பிட்டுள்ளபடி, மென்பொருள் என்பது ஜிடிகே+, ஜாவாபீ்ன்ஸ் அல்லது ஸ்விங் போன்ற உள்ளுறையும் மென்பொருளை வழங்கும் இருந்துவரும் மென்பொருள் மற்றும் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (ஏபிஐ) ஆகியவற்றில் உருவாக்கப்படுவதாகும். நூலகங்கள் (ஏபிஐகள்) வேறுபட்ட நோக்கங்களுக்காக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, ஜாவாபீன்ஸ் நூலகம் நிறுவனப் பயன்பாடுகளை வடிவமைக்கப் பயன்படுத்தப்படுகிறது, விண்டோஸ் ஃபார்ம்ஸ் நூலகம் மைக்ரோசாஃப்ட் வேர்ட் போன்ற வரைகலை சார்ந்த பயனர் இடைமுகத்தை (ஜியுஐ) வடிவமைக்கப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் விண்டோஸ் கம்யூனிகேஷன் ஃபவுண்டேஷன் வலைத்தள சேவைகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. குயிக்சார்ட், ஹாஷ்டேபில், அரே மற்றும் பைனரி ட்ரீ போன்ற உள்ளுறையும் கணி்ப்பொறி நிரலாக்க கருத்தாக்க மென்பொருளை உருவாக்குவதற்கு பயன்மிக்கதாக இருக்கலாம். ஒரு நிரல் வடிவமைக்கப்படும்போது அது ஏபிஐயை நம்பியிருக்கிறது. உதாரணத்திற்கு ஒரு பயனர் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் டெஸ்க்டாப் பயன்பாட்டை வடிவமைக்கிறார் என்றால் அவர் அந்த டெஸ்க்டாப் பயன்பாட்டை உருவாக்குவதற்கு .நெட் விண்டோஸ் ஃபார்ம்ஸ் நூலகத்தைப் பயன்படுத்தலாம் என்பதோடு அதை அவர் அதன் ஏபிஐயை பின்வருவது போல் அழைப்பார் form1.Close() மற்றும் form1.Show() [5] இது பயன்பாட்டை திறப்பதற்கும் மூடுவதற்கும் என்பதோடு அது கொண்டிருக்க வேண்டிய கூடுதல் செயல்பாடுகளையும் எழுதுவார். இந்த ஏபிஐகள் இல்லாமல் நிரலாக்குனர் இந்த ஏபிஐகளை தானாகவே எழுதவேண்டியிருக்கும். சன் மைக்ரோசிஸ்டம்ஸ், நோவல் மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் அவர்களுடைய சொந்த ஏபிஐகளை வழங்குகின்றன என்பதால் பல பயன்பாடுகளும் தங்களுக்குள் நிறைய ஏபிஐகளைக் கொண்டிருக்கும் சொந்த மென்பொருள் நூலகங்களைப் பயன்படுத்தி எழுதப்படுகின்றன. சிறப்பு பொருளாதார குணவியல்புகளைப் பெற்றிருக்கும் மென்பொருள் மற்ற சிக்கனமான பொருள்களிலிருந்து வேறுபடும் வடிவம், உருவாக்கம் மற்றும் விநியோகிப்பைக் கொண்டதாக இருக்கிறது.[6][7] ஒரு மென்பொருளை உருவாக்குபவர், நிரலாக்குனர், மென்பொருள் பொறியாளர், மென்பொருள் மேம்படுத்துனர் அல்லது கோட் மங்கி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுவது அனைத்தும் ஒரே பொருளையே கொண்டிருக்கின்றன. நிறுவனமும் அமைப்புக்களும் மென்பொருளானது மென்பொருள் துறை எனப்படும் தனக்கேயுரிய தொழில்துறையைக் கொண்டிருக்கிறது என்பதுடன் இது மென்பொருளை உருவாக்கும் பல்வேறு நிறுவனங்கள், நபர்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டிருப்பதோடு அதன் விளைவாக உலகில் பல மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் நிரலாக்குனர்களை வழங்கியிருக்கிறது. மென்பொருள் நிதித்துறை, தேடுதல், கணிதம், விண்வெளி ஆராய்ச்சி, விளையாட்டு மற்றும் சுரங்கம் போன்ற பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது என்பதால் இதுபோன்ற மென்பொருள் நிறுவனங்களும் நபர்களும் குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்கின்றனர். உதாரணத்திற்கு, மின்னணுக் கலைகள் வீடியோ கேம்களையே பிரதானமாக உருவாக்குகின்றன. மென்பொருள் விற்பனை செய்வதும் ஒரு இலாபம் மிகுந்த துறையாக இருக்கிறது. உதாரணத்திற்கு, மைக்ரோசாஃப்டின் நிறுவனரான பில் கேட்ஸ் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் மென்பொருள் நிரல்களை விற்பனை செய்ததன் மூலமே 2009 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருந்தார். இதே போன்றுதான் லேரி எல்லிஸன் தனது ஆரக்கிள் தரவுத்தளம் மென்பொருள் மூலமாக பணக்காரராக இருக்கிறார். கட்டற்ற மென்பொருள் இயக்கம், குனூ, மொஸிலா ஃபயர் ஃபாக்சு போன்ற இலாப நோக்கமற்ற மென்பொருள் நிறுவனங்களும் இருக்கின்றன. டபிள்யு3சி, ஐஇடிஎஃப் போன்ற மென்பொருள் தரநிலை நிறுவனங்களும் இருக்கின்றன என்பதோடு மற்றவர்கள் எக்ஸ்எம்எல், ஹெச்டிஎம்எல், மீயுரை பரிமாற்ற நெறிமுறை அல்லது கோப்புப் பரிமாற்ற நெறிமுறை போன்ற தரநிலைகளின் மூலமாக பல மென்பொருள்களும் செயல்படுகின்றன மற்றும் ஒன்றோடொன்று ஒத்துழைப்பு அளிப்பதற்கான மென்பொருள் தரநிலைக்கு கொண்டுவர முயற்சிக்கின்றனர். மைக்ரோசாஃப்ட், ஆரக்கிள், நோவல், எஸ்ஏபி, சிமண்டெக், அடோப் சிஸ்டம்ஸ் மற்றும் கோரல் ஆகியவை சில பிரபலமான நன்கறியப்பட்ட மென்பொருள் நிறுவனங்களாகும். குறிப்புகள் பகுப்பு:மென்பொருள் பகுப்பு:கணினியியல் பகுப்பு:கணினி அறிவியல்
ஆலன் டூரிங் மென்பொருளை எப்போது கண்டுபிடித்தார்?
1935
4,847
tamil
f64641ba1
யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (~ 70 ஆண்டுகள்). மனிதர்கள் தவிர்ந்த மற்றைய விலங்குகளில் இதுவே அதிக நாட்கள் வாழும் தரைவாழ் விலங்கு ஆகும். யானைகள் மிகவும் வலிமையானவை. வேட்டை விலங்குகளும் காட்டுயிர்களின் உணவுப் படிநிலையில் உயர்நிலையிலுள்ளவைகளுமான சிங்கம் (அரிமா), புலி முதலியனவும் நெருங்க முடியாத வலிமை கொண்டவை. சிங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து, தனியாக வர நேரிடும் களைத்த அல்லது இளைத்த யானையைக் கொல்லும். ஆனால், இவ்வகை நிகழ்வுகள் மிகமிகக் குறைவே. யானைகள் குடும்பமாக வாழும். மேலும், இவை அதிக ஞாபக சக்தி கொண்டவை. யானைகளில் மூன்று சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன. அவை, ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், ஆசிய யானைகள் ஆகும். இவைகளுக்கிடையே சிறப்பான வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக, எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள்வரை உயிர்வாழ்கின்றன. ஆண் யானைக்குக் களிறு என்று பெயர். பெண் யானைக்குப் பிடி என்று பெயர். யானையின் குட்டியைக் கன்று என்றோ, குட்டியானை என்றோ சொல்வர். யானை உரக்க எழுப்பும் ஒலியைப் பிளிறுதல் என்பர். யானையினங்கள் ஆப்பிரிக்க யானைகள் ஆசிய யானைகளைவிட உருவத்தில் பெரியவை. பெரிய காது மடல்களைக் கொண்டுள்ளன. ஆப்பிரிக்க யானைகளில் ஆண், பெண் இரண்டும், தந்தங்களைக் கொண்டுள்ளன. ஆனால், ஆசியப் பெண் யானைகளில் தந்தம் அரிதாகவே காணப்படுகிறது. ஆப்பிரிக்க யானைகளின் முதுகுப்புறம், தலைக்கு அடுத்துச் சற்று உள்நோக்கி வளைந்தும், புடைத்த நெற்றி மேடுகள் இல்லாமல் சமமாகவும் இருக்கும். இவற்றின் துதிக்கையின் நுனியில் இரண்டு இதழ்கள் இருக்கும். ஆனால், முன்னங்கால்களில் நான்கு அல்லது ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் மூன்று நகங்களும் இருக்கும். ஆசிய யானைகளின் முதுகு சற்று உயர்ந்து மேடாக இருக்கும். நெற்றியில் இரு மேடுகளும், காது மடல்கள் சிறியனவாகவும் இருக்கும். துதிக்கை நுனியில் ஒரே ஓர் இதழும் இருக்கும் (மேல் புறம்). முன்னங்கால்களில் ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் நான்கு நகங்களும் இருக்கும். உணவும் வாழிடமும் யானைகள் இலையுண்ணிகள் அல்லது தாவர உண்ணிகள் ஆகும். இவை மூங்கில், கரும்பு போன்றவற்றை விரும்பி உண்கின்றன. இவை ஒரு நாளைக்கு 16 மணிநேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. மேலும், இவற்றின் செரிமானத் திறன் மிகவும் மந்தமானது. எனவே, இவை உண்பதில் 40 விழுக்காடே செரிமானம் ஆகிறது. எனவே, இவை நிறைய உணவு உட்கொள்ள நேரிடுகிறது. நன்கு வளர்ந்த யானைகள் நாள் ஒன்றுக்குச் சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன. உடலமைப்பு ஆண் யானைகள் பொதுவாக 3 மீட்டர் உயரமும் 6000 கிலோகிராம் எடையும் கொண்டவை. யானையின் தோல் மிகவும் தடிப்பானது. சுமார் 3 செ.மீ தடிப்பு இருக்கும். எனினும், மெத்தெனவே இருக்கும். இதனால், கொசு முதலியனவும் கடிக்கும். யானை வலுவான நான்கு கால்களைக் கொண்டிருக்கிறது. யானை பருமனான உடலைக் கொண்டிருந்தாலும் மலை மீதும், நெடுங்குத்தான இடங்களிலும் திறம்பட ஏறவும் இறங்கவும் வல்லது. "ஆனைக்கும் அடி சறுக்கும்" என்னும் பழமொழி, யானையின் நெடுங்குத்தான ஏற்ற இறக்கங்களில் அதன் நடைத்திறனைக் குறிப்பிட்டு எழுந்ததாகும். தும்பிக்கை யானையின் சிறப்பான உறுப்பு அதன் தும்பிக்கை. இது யானைகளில் மட்டுமே சிறப்பாகக் காணப்படுகின்றது. ஒருசில விலங்குகளிலே முன் மூக்குப் பகுதி சற்று நீண்டு இருந்தாலும் (நெடுமூக்குக் குரங்கு போல்), தும்பிக்கை போலும் நீண்ட உறுப்புடைய விலங்குகள் இல்லை. தும்பிக்கையானது மொத்தம் 40,000 தசைகளால் ஆனது. இது எல்லாப்புறங்களிலும் வளையக்கூடியது. தும்பிக்கையின் நுனியில் யானை மூச்சுவிடும் மூக்குத் துளைகளும், சின்னஞ்சிறிய, மிகவும் நுண்ணுணர்வு உள்ள விரல் நீட்சியும் இருக்கின்றன.[1] தும்பிக்கையால் சிறு குச்சி முதல் பெரிய மரம் வரை தூக்க முடியும். இவை பொதுவாக உணவை எடுப்பதற்கும் நீர் பருகுவதற்கும் உதவுகின்றன. பகை விலங்குகளின் தாக்குதலையும் யானை தும்பிக்கையால் எதிர்த்து முறியடிக்கிறது. கழுத்து குட்டையாக இருப்பதால் தும்பிக்கையின் முக்கியத்துவம் மிகப் பெரியது. தந்தம் யானைகள் இரண்டு தந்தங்களைக் கொண்டுள்ளன. இவைகளுக்கு யானைக் கோடு என்று பெயர். இந்த யானைக் கோடானது ஆசிய இந்திய யானைகளில் ஆண் யானைகளுக்கு (களிறுக்கு) மட்டுமே உண்டு பெண் யானைகளுக்குக் (பிடிக்குக்) கிடையா. ஆனால் ஆப்பிரிக்கக் காட்டு யானைகளில் ஆண் பெண் ஆகிய இருபால் யானைகளுக்கும் (களிறு, பிடி ஆகிய இரண்டிற்கும்) கோடு உண்டு. சுமத்ரா போர்னியோ பகுதிகளில் வாழும் யானை, இலங்கையின் யானைகளில் ஆண் பெண் (களிறு, பிடி) ஆகிய இருபால் விலங்குகளுக்கும் பெரும்பாலும் யானைக் கோடு கிடையா. யானைக் கோடானது யானையின் கடைவாய்ப் பற்களின் நீட்சியாகும். இதனால் இவைகளுக்கு யானைகளின் எயிறு அல்லது தந்தம் என்றும் பெயர் (எயிறு, தந்தம் என்றால் பல் என்று பொருள்). தந்தங்கள் 3 மீட்டர் (10 அடி) வரை வளரக்கூடியவை. மேலும் இவை 90 கிலோகிராம் எடை வரை இருக்கலாம். இத் தந்தங்கள் வியாபாரத்திற்காகவும் பயன்படுகின்றன. பல யானைகளைக்கொன்று எடுக்கப்பட்ட ஆறு டன் தந்தங்களை எதியோப்பியா நாடு 2015 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் தீயிட்டு அழித்தது.[2] தோல் யானையின் தோல் மிகவும் தடிப்பானது. உடலின் பெரும்பாலான பகுதிகளில் தடித்த தோல் காணப்படுகிறது. தோலின் தடிமன் ஏறத்தாழ இரண்டரை சென்டிமீட்டர் இருக்கும். எனினும் இதன் வாயைச் சுற்றியும் காதின் உட்பகுதியிலும் தோல் மெல்லியதாக உள்ளது. பொதுவாக ஆசிய யானைகளின் தோல் ஆப்பிரிக்க யானைகளை விட கூடுதலான முடியைக் கொண்டுள்ளது. யானைகள் பொதுவாக சேற்றையோ மண்ணையோ உடல் முழுதும் பூசிக் கொள்கின்றன. இது யானைச் சமூகத்தின் ஒரு முக்கியக் குணம் ஆகும். இது யானையின் தோலை சூரிய வெப்பத்தில் இருந்தும் கதிர் வீச்சில் இருந்தும் காத்துக் கொள்ள உதவுகிறது. யானையின் தோல் தடித்து இருப்பினும் இதன் உணர்திறன் அதிகம். இதனாலேயே யானைகள் சேற்றையோ அல்லது குளித்த பின் மண்ணை வாரித் தூற்றிக் கொள்கின்றன. கால்கள் யானையின் பெரிய உடலைத் தாங்குதற்கு ஏற்ப இவை வலிமையான கால்களைக் கொண்டுள்ளன. இவற்றின் கால்கள் செங்குத்தாக இருப்பதாலும் அகன்ற பாதங்கள் இருப்பதாலும் இவை நிற்பதற்கு தசையாற்றல் அதிகம் தேவையில்லை. எனவே இவற்றால் நீண்ட நேரம் இளைப்பாறாமல் நிற்க இயலும். ஆப்பிரிக்க யானைகள் நோயுற்றாலோ அல்லது காயம் பட்டாலோ தவிர பெரும்பாலும் அமர்வதில்லை. ஆனால் ஆசிய யானைகள் அடிக்கடி இளைப்பாறுகின்றன. யானை அகன்ற வட்டமான அடியைக் (பாதம்) பெற்றுள்ளது. ஆப்பிரிக்க யானைக்கு பின்னங்கால்களில் மூன்று உகிர்களும் (நகங்கள்) முன்னங்கால்களில் நான்கும் உள்ளன. ஆசிய யானைக்கு பின்னங்கால்களில் நான்கும் முன்னங்கால்களில் ஐந்துமாக உகிர்கள் உள்ளன. யானைகளால் நன்கு நீந்தவும் ஏறவும் முடியும். இவற்றால் குதிக்க இயலாது. காதுகள் யானைகள் நன்கு பெரிய அகன்ற மடல் போன்ற காதுகளைக் கொண்டுள்ளன. இவை யானையின் உடல் வெப்பநிலையைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. யானையின் காதுகள் இரத்த நாளங்கள் நிரம்பியனவாய் உள்ளன. வெப்பம் மிகுந்த இரத்தம் காதுகளில் பாயும் போது சுற்றுப்புறக் காற்று பட்டு குளிர்கிறது. பின் இது உடலுக்குள் சென்று வெப்பநிலையைக் குறைக்கிறது. இரத்தச் சுழற்சியின் காரணமாக இச்செயல் தொடர்ந்து நிகழ்ந்து வெப்பநிலை கட்டுக்குள் வைக்கப்படுகிறது. இதனாலேயே யானைகள் எப்போதும் காதுகளை அசைத்துக் கொண்டே இருப்பதைக் காணலாம். வளர்ந்த யானைக்காதுகளின் மேல் ஓரம் ஆசிய யானைக்கு வெளிப்புறம் மடிந்து இருக்கும், ஆப்பிரிக்க யானைக்கு உட்புறம் சுருண்டிருக்கும்.[3] அறிவாற்றல் தரையில் வாழும் விலங்குகளில் யானையின் மூளையே மிகவும் பெரியதாகும். இது ஐந்து கிலோ கிராமுக்கும் சற்று கூடிய எடையைக் கொண்டது. யானைகள் நினைவாற்றல் மிக்கன. விலங்குகளில் முதனிகளுக்கும் டால்பின்களுக்கும் அடுத்து யானைகளே அறிவாற்றல் நிரம்பியவையாகக் கருதப்படுகின்றன. மனிதர்களுக்கு அடுத்தபடியாக அறிவிற்சிறந்தவையாக யானைகள் கூறப்படுகின்றன. யானைகளின் மூளையும் அமைப்பிலும், நுட்பத்திலும் சிறந்தவை. கருவிகளைப் பயன்படுத்தவும் கற்றுக் கொள்கின்றன. பொதுவாக யானை இரக்கவுணர்ச்சி கொண்டது.[4] புலன் உணர்வு யானைகள் மிகச்சிறந்த கேட்கும் திறனையும் மோப்பத் திறனையும் பெற்றுள்ளன. யானையின் கண் சற்று கிட்டப்பார்வை கொண்டது. எனவே, ஒரு யானை தன் பார்வையை விட கூர்மையான கேட்பு சக்தியையும், நுட்பமான மோப்பத்திறனையுமே நம்பி வாழ்கிறது.[5] இவற்றின் தும்பிக்கையும் உணர்திறன் மிக்கது. இவற்றின் காதுகள் மட்டுமன்றி தும்பிக்கையும் அதிர்வுகளை உணர வல்லது. இவற்றின் பாதங்கள் மிகக் குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளையும் உணர வல்லன. சமூக வாழ்க்கை களிறுகளின் சமூக வாழ்க்கை முறையும் பிடிக்களின் வாழ்க்கை முறையும் வேறுபட்டது. களிறுகள் தான் பருவம் எய்தும் வரை தன் தாய் உள்ள குழுவோடு வாழும், பின் பெரும்பாலும் தனியாகவே வாழ்கின்றன. ஆனால் பிடிகள் நன்கு பிணைப்பான குடும்பமாக தாய், சகோதரி, மகள் என வாழ்கின்றன. இனப்பெருக்க காலங்களில் பருவமெய்திய பிடியும் தனித்துக்காணப்படும். தன்னுணர்வு யானைகள் தன்னுணர்வு கொண்டவை. இது கண்ணாடிச் சோதனை மூலம் நிறுவப்பட்டுள்ளது. யானைகள் முன் கண்ணாடியை வைக்கும் போது இவை தங்களை அடையாளம் கண்டுகொள்கின்றன. இத்திறன் இதுவரை மதிமாக்கள், சில குரங்கினங்கள், டால்பின்களில் மட்டுமே கண்டறியப் பட்டுள்ளது.யானைகள் ஒருவர் சுட்டிக்காட்டுவதைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவை என்று சிம்பாப்வேயில் பழக்கப்பட்ட யானைகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.[6] இனப்பெருக்கம் யானையின் சினைக்காலம் 22 மாதங்கள் ஆகும். இதுவே பாலூட்டிகளில் மிக நீண்ட சினைக்காலம் ஆகும். பொதுவாக இவை ஒரேயொரு கன்றையே ஈனுகின்றன. இரட்டைகள் பிறப்பது மிகவும் அரிது. பிறந்த யானைக் கன்றானது 90 – 115 கிலோகிராம் எடை வரை இருக்கும். யானை ஈனும் முன்னும், ஈனும் பொழுதும், ஈன்ற பின்னரும் அதனைச் சுற்றிலும் மற்ற வளர்ந்த யானைகள் இருந்து மிகவும் உதவுகின்றன. யானைக்கன்று பிறந்ததில் இருந்து, அது யானைக் கூட்டத்தாலேயே வளர்க்கப்படுகின்றது. அச்சுறுத்தல்கள் வேட்டையாடுதல் யானைகளுக்கு முக்கியமான அச்சுறுத்தல் வேட்டையாடுதல் ஆகும். யானைகள் அவற்றின் தந்தங்களுக்காக வேட்டை ஆடப்படுகின்றன. பெரியவையும், நீண்ட காலம் வாழுவனவும், குறைவான வேகத்தில் இனம் பெருகுவனவுமான யானைகளுக்கு, அளவு மீறி வேட்டையாடுதல் பெரும் பாதிப்பை எற்படுத்துகின்றது. இவை பெரிதாக இருப்பதனால் எளிதில் மறைந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு யானையும் வளர்ந்து இனம் பெருக்குவதற்குப் பல ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வொரு யானைக்கும் சராசரியாக நாளொன்றுக்கு 140 கிலோகிராம் (300 இறாத்தல்) இலை தழைகள் தேவைப்படுகின்றது. புலி, சிங்கம் போன்ற பெரிய கோண்மாக்கள் அழிக்கப்படுவதாலும் யானைகளின் உணவுக்குப் போட்டியாக உள்ள சிறய தாவர உண்ணிகள் பெருகி தாவரங்களைப் பெருமளவில் அழிப்பதால் யானைகளுக்கு உணவு பெறுவது கடினமாகின்றது. யானைகள் மனிதனால் கொல்லப்படுவதைத் தவிர பிற விலங்குகளால் உணவுக்காகக் கொல்லப்படுவது அரிது. வாழிடம் சுருங்குதல் யானைகளின் வாழிடங்கள் அழிக்கப் படுவதும் மற்றொரு முக்கியமான அச்சுறுத்தல் ஆகும். மனிதர் வேளாண்மை விரிவாக்கத்துக்காக யானைகளின் வாழிடங்களான காடுகளை அழித்துவருகிறார்கள். இது மனிதர்களின் நலனுக்கும் யானைகளின் நலன்களுக்குமிடையே முரண்பாடுகளை உருவாக்குகின்றது. எடுத்துக்காட்டாக யானைகள் புதிய வேளாண்மைக் குடியேற்றங்களுக்குள் நுழைந்து பயிர்களை அழித்துவிடுவதுடன் மக்களுக்கு உயிராபத்தையும் ஏற்படுத்துகின்றன. இவ்வாறான முரண்பாடுகளால், இலங்கையில் சராசரியாக ஆண்டொன்றுக்கு 150 யானைகளும், 100 மனிதர்களும் இறப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. காடழிப்பு யானைகளின் வாழிடத்தையும் குறைக்கின்றது. ஆசிய யானைகளின் அழிவுக்கான முதன்மைக் காரணம் வாழிடங்கள் இழக்கப்படுவதே என்று கூறப்படுகிறது. யானைகள் வாழ்வதற்கு பெரிய அளவிலான காட்டுப்பகுதிகள் தேவைப்படுகின்றன. ஏனெனில், யானைகள் கூட்டமாக ஒரு பகுதிக்குள் புகுந்து மரங்களையும் செடி கொடிகளையும் பெருமளவில் அழித்து உண்கின்றன. பின்னர் வேறிடத்துக்குச் செல்கின்றன. இவ்வாறு புதிய இடங்களுக்குச் சென்று அழிக்கப்பட்ட காடுகள் மீண்டும் வளர்ந்ததும் திரும்பவும் அதே இடத்துக்கு வந்து உணவைப் பெறுகின்றன. வாழிடங்களின் அளவு குறையும் போது, மிக விரைவிலேயே உணவு முடிவடைந்து விடுகிறது.[7] மனிதர்களும் யானைகளும் யானைகள், மனிதர்களினால் சட்டத்துக்கு அமைவாகவும், எதிராகவும் கொல்லப்படுவதனால், யானைகளின் உடலமைப்பில் எதிர்பாராத விளைவுகளும் ஏற்படுகின்றன. ஆப்பிரிக்காவில் தந்தங்களுக்காக வேட்டையாடுபவர்கள், பெரிய தந்தங்களுள்ள யானைகளையே வேட்டையாடுவதால் எஞ்சியிருக்கும் யானைகள் சிறிய தந்தங்கள் உள்ளவையாக அல்லது தந்தங்கள் இல்லாதவையாக உள்ளன. புதிதாகப் பிறக்கும் குட்டிகளும் இவற்றின் மூலமாகவே பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரிப்பதால் புதிய தலைமுறைகளில் தந்தமில்லாத் தன்மையை உருவாக்கும் மரபணுக்கள் கூடுதலாகிப் பெருமளவிலான தந்தமில்லா யானைகள் பிறப்பதற்கு வழியேற்படுகிறது. 1930ல் 1% ஆக இருந்த இவ்வாறான யானைகளின் தொகை இப்போது சில பகுதிகளில் 30% வரை அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் தந்தமில்லாத் தன்மை என்பது ஒரு அரிதான இயல்புப் பிறழ்வாக இருந்த நிலை மாறி இப்போது பொதுவான மரபுவழி இயல்பாக மாறிவருகிறது. இறப்பு இருதயக் கோளாறு, மாரடைப்பு, மூளையில் இரத்தக்கட்டி போன்றவற்றால் யானைகள் இறக்கக்கூடும்.[8] சங்க இலக்கியங்களில் யானை தமிழ் சங்க இலக்கியங்களில் யானையை, 170க்கும் மேற்பட்ட பெயர்களில் குறிப்பிடுகிறார்கள்.விரிவாக காணலாம். அவைகளில் சில வருமாறு; 1. யானை, 2. வேழம், 3. களிறு, 4. பிளிறு, 5. கலபம், 6. மாதங்கம், 7. கைமா, 8.உம்பல் - , 9. வாரணம், 10. அஞ்சனாவதி, 11. அத்தி, 12. அத்தினி, 13. அரசுவா, 14. அல்லியன், 15. அனுபமை, 16. ஆம்பல், 17. ஆனை, 18. இபம், 19. இரதி, 20. குஞ்சரம் / இராசகுஞ்சரம், 21. இருள், 22. தும்பு, 23. வல் விலங்கு, 24.கரி, 25.அஞ்சனம்,26.நாகம் (கதநாகம்), 27. பழமொழிகளும் சொலவடைகளும் தமிழில் யானை பற்றிய பழமொழிகளும் சொலவடைகளும் இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. பழமொழிகள் யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன். யானைக்கும் அடி சறுக்கும். யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே யானை கறுத்தாலும் ஆயிரம் பொன் சொலவடைகள் யானைப்பசிக்கு சோளப்பொரியா? யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டது போல துணை நூற்பட்டியல் Check date values in: |date= (help) மேற்கோள்கள் இவற்றையும் காண்க யானையின் தமிழ்ப்பெயர்கள் குருவாயூர் கேசவன் புற இணைப்புகள் * பகுப்பு:ஒலிக்கோப்பு உள்ள கட்டுரைகள்
ஆண் யானை சராசரி எத்தனை மீட்டர் உயரம் இருக்கும்
3
2,284
tamil
8bec90e6c
தன்னியக்க வங்கி இயந்திரம் அல்லது தன்னியக்க காசளிப்பு இயந்திரம் எனப்படுவது பணம் வைப்பது, பெறுவது, கணக்கைப் பார்ப்பது போன்ற சில பணிகளை வாடிக்கையாளரே செய்ய ஏதுவாக்கும் ஒரு கணினி மயப்படுத்தப்பட்ட இயந்திரம். இந்தக் கருவி வங்கியில் வழமையாக காசாளாரால் செய்யப்பட்டு வந்த பல பணிகளை இயந்திரமாக்கி, தன்னியக்கமாக்கியது. பொதுவாக இந்த இயந்திரத்தில் ஒரு கணக்கு அட்டையை இட்டு, வாடிக்கையாளரே தமது வேலையை செய்து விடுவர். இந்த இயந்திரம் 1967 ம் ஆண்டு முதல் ஐக்கிய இராச்சியத்தில் பரந்த பயன்பாட்டுக்கு வந்தது. ஏ.டி.எம். (ATM) எனப்படும் தானியங்கி பணப் பட்டுவாடா எந்திரத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் (சூன் 23 1925 – மே 20 2010) ஆவார்.மனைவியின் ஏடிஎம் அட்டையை கணவன் பயண்படுத்துவது சட்டப்படி தவறு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.[1] சான்றுகள் பகுப்பு:கருவிகள் பகுப்பு:வங்கியியல் பகுப்பு:தன்னியக்கம் பகுப்பு:பதிகணினியியல்
தானியங்கி டெல்லர் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்?
ஜான் ஷெப்பர்ட் பேரோன்
603
tamil
88c1aa393
கலைக்களஞ்சியம் (ஒலிப்பு) (Encyclopedia)[1] என்பது எழுத்து வடிவில் உள்ள அறிவுத்தொகுப்பு ஆகும். கலைக்களஞ்சியங்கள் பல துறை அறிவை உள்ளடக்கியதாகவோ, ஒரு குறிப்பிட்ட துறைக்கெனத் தனிப்பட அமைந்ததாகவோ, அல்லது ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதி, இனம் குறித்தோ அமையலாம்.[2] கலைக்களஞ்சியத்தில் உள்ள தகவல்கள் அகர வரிசையிலோ, துறை வாரியாகவோ தொகுக்கப்பட்டிருக்கும். அகர வரிசையில் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சியங்களே அதிகம் பயன்பாட்டில் உள்ளன.[3] சமூக தலைமைப்பண்பு 18 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் பிரான்சிய (பிரெஞ்சு) மொழியில் கலைக்களஞ்சியம் ஒன்றை வெளியிட்ட டெனிசு டிடேரோ (Denis Diderot) என்பார் கலைக்களஞ்சியம் பற்றிப் பின்வருமாறு கூறினார்: கலைக்களஞ்சியத்தின் நோக்கம் உலகம் முழுதும் பரந்துள்ள அறிவைச் சேமித்து மக்களுக்குப் பயன்படுமாறு தொகுத்தலும், நமக்குப் பின்வரும் தலைமுறையினருக்கு அவற்றைக் கையளிப்பதும் ஆகும். இது முந்திய நூற்றாண்டுகளின் பணிகள் பிற்காலத்தவருக்குப் பயன்படாமல் போவதைத் தடுப்பதுடன், நமது இளந் தலைமுறையினர் நல்லமுறையில் கற்பிக்கப்படுவதற்கும், மகிழ்வுடன் வாழ்வதற்கும் உதவும். அத்துடன், நாம் இறப்பதற்கு முன், பின் வரும் காலங்களில் வாழவுள்ள மனித குலத்துக்கு நாம் செய்யும் தொண்டும் இது அமையும்.—Diderot[4] இயல்புகள் இன்றைய கலைக்களஞ்சியங்கள் 18 ஆம் நூற்றாண்டில் அகரமுதலிகளில் இருந்து உருவானவை. அகரமுதலிகள் பொதுவாக சொற்களையும் அவற்றுக்கான பொருள்களையும் தருகின்றன. அத்துடன், சில வேளைகளில் அச் சொற்களின் பின்புலங்களையும், தொடர்புள்ள பிற தகவல்களையும் குறைந்த அளவில் உள்ளடக்குவதும் உண்டு. சொல்லின் பொருள்களைத் தந்த போதும், அதன் முழுமையான விளக்கம், தனிச்சிறப்பு, பயன்பாட்டு எல்லைகள், பரந்த அறிவுத் துறையில் அச் சொல் எவ்வாறான தொடர்புகளைக் கொண்டுள்ளது போன்றவை குறித்த தகவல்கள் பயனர்களுக்குக் கிடைப்பதில்லை. மேற்குறித்த தேவைகளைக் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு, கலைக்களஞ்சியங்கள் ஒவ்வொரு தலைப்பையும் எடுத்துக்கொண்டு அதுபற்றி ஆழமான தகவல்களைத் தருவதுடன் அத்துறை தொடர்பாகக் கிடைக்கக்கூடிய எல்லா அறிவுச் செல்வங்களையும் தொகுத்துத் தர முயல்கிறது. கலைக்களஞ்சியங்கள் நிலப்படங்கள், விளக்கப்படங்கள், உசாத்துணைகள், புள்ளித்தகவல்கள் போன்றவற்றையும் உள்ளடக்குகின்றன. கடந்த காலங்களில் கலைக்களஞ்சியங்களும், அகரமுதலிகளும், அவற்றில் எழுதவுள்ள உள்ளடக்கங்களில் துறைபோகக் கற்ற வல்லுனர்களைக் கொண்டு எழுதப்பட்டன. ஒரு கலைக்களஞ்சியத்தை நான்கு தலைமையான கூறுகள் வரையறுக்கின்றன. அவை: உள்ளடக்கம், எல்லை, ஒழுங்குபடுத்தும் முறை, உருவாக்கும் முறை என்பன. கலைக்களஞ்சியங்கள் பொதுவானவையாக இருக்கலாம். இவை, ஒவ்வொரு துறையிலும் உள்ள தலைப்புக்களில் கட்டுரைகளைக் கொண்டிருக்கும் (எ.கா: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்). கலைக்களஞ்சியங்கள் ஒரு குறிப்பிட்ட துறை எல்லைக்குள் அடங்கும் விடயங்களில் மட்டும் கவனம் செலுத்துவது உண்டு. இவை மருத்துவக் கலைக்களஞ்சியம், மெய்யியல் கலைக்களஞ்சியம், சட்டத்துறைக் கலைக்களஞ்சியம் என்ற வகையில் அமையும். இவற்றில் உள்ளடக்கப்படும் ஆக்கங்களின் ஆழ அகலங்கள் அவற்றின் பயனர்களின் தன்மையைப் பொருத்து அமையும். கலைக்களஞ்சியங்கள் ஒரு சான்றுகோளாக அமையத்தக்க உசாத்துணை ஆக்கமாக அமைய வேண்டும் எனில் அது முறைப்படியான ஒழுங்கு ஒன்றில் அமைய வேண்டும். கடந்த காலங்களில் அச்சில் வெளிவந்த கலைக்களஞ்சியங்கள் இரண்டு தலைமையான முறைகளில் ஒன்றில் ஒழுங்குபடுத்தப்பட்டன. இவை அகரவரிசை முறை, வகைகளின் படிமுறையமைப்பு முறை என்பனவாகும். முதல் முறையே இன்று மிகப் பொதுவாகக் கையாளப்படும் முறையாகும். சிறப்பாகப் பொதுக் கலைக்களஞ்சியங்கள் இம்முறையிலேயே ஒழுங்கமைக்கப் படுகின்றன. தற்காலத்தில் மின்னணு ஊடகங்கள் ஒரே நேரத்தில் பல முறைகளில் உள்ளடக்கங்களை ஒழுங்கமைக்கும் வசதிகளை அளிக்கின்றன. அத்துடன் மின்னணு ஊடகங்கள் முன்னர் நினைத்தும் பார்த்திராத தேடல் வசதிகள், இணைப்பு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குகின்றன. தற்காலத்தில் ஏற்பட்டுள்ள பல்லூடகங்கள், தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சி பல்வேறு வகையான தகவல்களைச் சேகரித்தல், சரிபார்த்தல், ஒன்றாக்குதல், வெளிப்படுத்துதல் போன்றவைகளில் பெருமளவிலான தாக்கங்களை எற்படுத்தி வருகின்றன. எளிமையாகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அமைந்த எவ்ரித்திங்2, என்கார்ட்டா, எச்2ஜி2, விக்கிப்பீடியா போன்றவை புதிய வடிவிலான கலைக்களஞ்சியங்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். அகரமுதலிகள் என்று பெயரிடப்பட்ட சில ஆக்கங்கள் உண்மையில் கலைக்களஞ்சியங்களை ஒத்தவை. சிறப்பாக, குறிப்பிட்ட துறைகளுக்காகத் தனிப்பட அமைந்த அகரமுதலிகள் இவ்வாறாக அமைவதுண்டு. எடுத்துக்காட்டாக, ஆங்கிலத்தில் உள்ள இடைக்காலத்துக்கான அகரமுதலி (Dictionary of the Middle Ages), அமெரிக்கக் கடற்போர்க் கப்பல்கள் அகரமுதலி (Dictionary of American Naval Fighting Ships), பிளாக்கின் சட்டத்துறை அகரமுதலி (Black's Law Dictionary) என்பவற்றைக் கூறலாம். வரலாறு மூத்த பிளினி கி.பி முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த உரோம அரசியலாளரான மூத்த பிளினியால் எழுதப்பட்ட இயற்கை வரலாறு என்று பொருள்படும் நாட்சுராலிசு இசுட்டோரியா (Naturalis Historia) என்னும் இலத்தீன் மொழி ஆக்கமே இன்று கிடைப்பவற்றுள் மிகவும் பழமையான கலைக்களஞ்சிய ஆக்கம் ஆகும். இயற்கை வரலாறு, கலையும் கட்டிடக்கலையும், மருத்துவம், புவியியல், நிலவியல், போன்றவை தொடர்பான 37 பிரிவுகளைக் கொண்ட நூலொன்றை இவர் தொகுத்தார். 100 ஆக்குனர்களால் எழுதப்பட்ட 2000 வெவ்வேறு ஆக்கங்களில் இருந்து 20,000 குறிப்புகளைத் தொகுத்துள்ளதாகவும், தனது சொந்த பட்டறிவிலிருந்தும் பலவற்றை உள்ளடக்கி உள்ளதாகவும் அவர் தனது முன்னுரையில் தெரிவித்துள்ளார். இது கிபி 77 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. சிறப்புவாய்ந்த இந்த ஆக்கம் பெரியதும், விரிவானதும் ஆகும். இது, இயற்கையோடு தொடர்புள்ள அனைத்து அறிவுத்துறை மற்றும் கலைகள் ஆகியவற்றின் முழுமையான தொகுப்பாக விளங்கியது எனலாம். பிளினி பின்வருமாறு கூறினார்: இயற்கை உலகம் அல்லது வாழ்க்கை என்னும் என்னுடைய தலைப்பு வரண்டது. மிகக் குறைந்த அளவுக்கு மதிக்கப்படும் ஒரு துறை. பட்டிக்காட்டுத்தனமான சொற்களையோ அந்நியமான காட்டுமிராண்டித் தனமான சொற்களையோ தான் வருத்ததுடன் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அத்துடன் இதற்கான பாதை எழுத்தாளர்களால் ஏற்கனவே செழுமை ஆக்கப்பட்டதோ அல்லது எவராவது இவ்வழியில் செல்வதற்கு விருப்பப்பட்டதோ இல்லை. எங்களில் எவரும் இதற்கு முயன்றதும் இல்லை, அல்லது ஒரு கிரேக்கனாவது தனியாக இத் தலைப்பின் எல்லாப் பிரிவுகளையும் கையாண்டதும் இல்லை. இதே போன்ற பழைய ஆக்கங்கள் பல இருந்திருந்தாலும், இருண்ட காலத்தையும் தாண்டி நிலைத்திருந்த நூல் இது மட்டுமே. உரோமர் காலத்தில் இது மிகவும் புகழ் பெற்றிருந்தது. இதன் பல படிகள் உருவாக்கப்பட்டு ஐரோப்பா முழுவதிலும் பரவியிருந்தது. முதலில் அச்சேறிய செந்நெறிக்கால (classical period) நூல்களில் ஒன்றாக 1469 ஆம் ஆண்டில் இது பதிப்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து உரோமானியர் காலத்தைப் பற்றிய தகவல்களுக்கான உசாத்துணை நூலாகப் பெயர்பெற்றிருந்தது. சிறப்பாக, உரோமக் கலை, உரோமத் தொழில்நுட்பம், உரோமப் பொறியியல், போன்றவற்றுக்காக இது பெயர் பெற்றிருந்ததுடன்; மருத்துவம், கனிமவியல், விலங்கியல், தாவரவியல், நிலவியல் போன்ற துறைகள் தொடர்பான தகவல்களுக்காகவும் இது பெரிதும் வேண்டப்பட்ட நூலாக இருந்தது. இடைக் காலம் இடைக் காலத்தின் தொடக்கத்தில் சிறந்த அறிஞராக விளங்கிய செவில் ஊரைச் சேர்ந்த செயின்ட் இசிடோர் என்பவர் இடைக் காலத்தின் முதல் கலைக்களஞ்சியமான எட்டிமோலொச்சியே (Etymologiae - கிபி 630) என்னும் நூலை ஆக்கினார். இதில் அவர் தமது காலத்தில் இருந்த பழையனவும் புதியனவுமான எல்லா அறிவுத் துறை தொடர்பான தகவல்களையும் தொகுத்தார். இது 20 தொகுதிகளில் 448 பிரிவுகளை உள்ளடக்கியதாக இருந்தது. இத்தொகுப்பு, இதன் சிறப்புத்தன்மைக்காக மட்டுமன்றி, இதில் எடுத்தாளப்பட்ட பிற ஆக்கியோர்களின் மேற்கோள்கள், அவர்களது ஆக்கங்களிலிருந்து எடுத்த பகுதிகள் என்பனவற்றுக்காகவும் பெறுமதி வாய்ந்தது. இவர் இவ்வாறு தொகுக்காமல் போயிருப்பின் பல அரிய நூல்கள் பற்றிய தகவல்களே இன்று கிடைக்காமல் போயிருக்கும். பார்த்தொலோமியசு ஆங்கிலிக்கசு என்பவர் 1240 இல் ஆக்கிய கலைக்களஞ்சியமே இடைக்காலத்தின் நடுப்பகுதியில் அதிகமாக வாசிக்கப்பட்ட கலைக்களஞ்சியமாகும். எனினும் பிந்திய இடைக் காலத்தில் 1260 ஆம் ஆண்டளவில் வின்சென்ட் என்பவரால் ஆக்கப்பட்ட கலைக்களஞ்சியம் 3 மில்லியன் சொற்களைக் கொண்டதாக விளங்கியது. இசுலாமும் பாரசீகமும் இடைக் காலத்தில் ஆக்கப்பட்ட முசுலிம்களின் தொடக்க அறிவுத் தொகுப்புக்கள் பல விரிவான ஆக்கங்களை உள்ளடக்கியிருந்ததுடன், இன்று அறிவியல் முறை, வரலாற்று முறை, மேற்கோள் என்று அழைக்கப்படும் பல துறைகளில் பெரிய வளர்ச்சிகளையும் கண்டிருந்தன. கிபி 960 ஆம் ஆண்டளவில், பாசுராவைச் சேர்ந்த தூய்மையின் உடன்பிறப்புகள் (Brethren of Purity) எனப்பட்டோர் தூய்மையின் உடன்பிறப்புகளின் கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதில் ஈடுபட்டிருந்தனர். இவற்றுள், அபு பக்கர் அல் ராசி ஆக்கிய அறிவியல் கலைக்களஞ்சியம், முத்தாசிலிட்டே அல் கிண்டி எழுதிய 270 நூல்கள், இபின் சீனாவின் மருத்துவக் கலைக்களஞ்சியம் என்பன முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை. சீனா 11 ஆம் நூற்றாண்டளவில் சோங் வம்சத்தின் தொடக்க காலத்தில் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சிய ஆக்கமான சோங்கின் பெரிய நான்கு நூல்கள் என்னும் ஆக்கம் அக்காலத்தின் பாரிய அறிவுத்துறை சார்ந்த பணியாகும். இவற்றுள் கடைசி நூல் 1000 தொகுதிகளில் 9.4 மில்லியன் சீன மொழி எழுத்துக்களைக் கொண்டது. சீன வரலாறு முழுவதும் பல கலைக்களஞ்சிய ஆக்குனர்கள் காணப்படுகின்றனர். இவர்களுள் அறிவியலாளரும், அரசியலாளருமான ஷென் குவோ (1031–1095); அரசியலாளரும், கண்டுபிடிப்பாளரும், உழவியலாளரும் ஆன வாங் சென் (1290–1333); சோங் யின்சியாங் (1587–1666) போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். மிங் வம்சத்தைச் சேர்ந்த சீனப் பேரரசரான யொங்கிள் என்பவர் யொங்கிள் கலைக்களஞ்சியம் என்னும் கலைக் களஞ்சியம் ஒன்றைத் தொகுப்பித்தார். 1408 ஆம் ஆண்டில் தொகுக்கப்பட்ட இது உலகின் மிகப் பெரிய கலைக்களஞ்சியங்களுள் ஒன்று. இது கையால் எழுதப்பட்ட 11,000 தொகுதிகளையும், 370 மில்லியன் சீன மொழி எழுத்துக்களையும் கொண்டது. 17 – 19 ஆம் நூற்றாண்டுகள் பொதுத் தேவைக்கானவையும், பரவலாகப் பயன்பட்டவையுமான கலைக்களஞ்சியன் குறித்த தற்கால எண்ணக்கரு 18 ஆம் நூற்றாண்டின் கலைக்களஞ்சியங்களுக்கும் முற்பட்டவை. எனினும், சேம்பர்சின் சைக்கிளோப்பீடியா அல்லது கலை மற்றும் அறிவியல் அகரமுதலி (Cyclopaedia, or Universal Dictionary of Arts and Sciences – 1728), டிடேரோ மற்றும் டி'அலம்பேர்ட்டின் என்சைக்கிளோபீடியே (Encyclopédie – 1751), பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம், கான்வசேசன்ஸ் லெக்சிக்கன் (Conversations-Lexikon) என்பனவே முதலில் இன்றைய கலைக்களஞ்சியங்களின் வடிவத்தில் அமைந்ததுடன், விரிவான வீச்செல்லைகளைக் கொண்ட தலைப்புக்களுடனும், ஆழமான விளக்கங்களுடனும் இவை அமைந்திருந்தன. பிரெஞ்சு மறுமலர்ச்சியின் கலைக்களஞ்சியவியல், மனிதனுக்குத் தெரிந்த எல்லாவற்றையுமே உள்ளடக்கத் தேவையில்லை என்றும், தேவையானவற்றை மட்டுமே உள்ளடக்க வேண்டும் என்னும் அடிப்படையிலும் அமைந்திருந்தது. அவசியமானது எது என்பது பல அளபுருக்களின் (criteria) அடிப்படையில் முடிவு செய்யப்பட்டதனால், வேறுபட்ட அளவுகளைக் கொண்ட கலைக்களஞ்சிய ஆக்கங்கள் உருவாயின. அளபுருக்கள் பெரும்பாலும் ஒழுக்கநெறிகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன. இந்த அணுகுமுறையினால் கலைக்களஞ்சியவியலாளர்கள் பல சிக்கல்களை எதிர்நோக்கினர். இவற்றுள் எதை உள்ளடக்கக்கூடாது என்று எப்படி முடிவு செய்வது, கட்டமைப்புக்குள் அடக்க முடியாதிருந்த அறிவுத்துறைகளை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட அறிவுகளை எவ்வாறு கையாள்வது, முன்னைய அமைப்பில் இவை ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் போன்றவை இத்தகைய சிக்கல்களுக்குள் உள்ளடங்கி இருந்தன. இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவரும், மெய்யியலாளருமான சர் தாமஸ் பிரவுண் (Thomas Browne) என்பவர் 1646 ஆம் ஆண்டில் சியூடோடாக்சியா எப்பிடமிக்கா (Pseudodoxia Epidemica) என்னும் கலைக்களஞ்சியத்தை வெளியிட்டார். இவர் தனது கலைக்களஞ்சியத்தை மறுமலர்ச்சிக்காலத்தில் பரவலாகக் கையாளப்பட்ட "படைப்பின் அளவுத்திட்டம்" எனச் சொல்லப்பட்ட ஒரு படிமுறை அமைப்பு முறையில் ஒழுங்கமைத்திருந்தார். இதன்படி, தலைப்புகள் கனிமம், காய்கறி, விலங்குகள், மனிதன், கோள்கள், அண்டம் என்னும் வரிசையில் கீழிருந்து மேலாக அமைந்திருந்தன. பிரவுணின் தொகுப்பு ஐந்து பதிப்புக்களைக் கண்டது. ஒவ்வொரு பதிப்பும் திருத்தப்பட்டும் புதிய தகவல்கள் சேர்த்தும் வெளிவந்தன. கடைசிப் பதிப்பு 1672 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 18 ஆம் நூற்ராண்டின் முற்பகுதியிலும் படித்த ஐரோப்பியர்களுடைய வீடுகளில் காணப்பட்ட இது பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. தற்காலத்தில் மிகவும் பழக்கமான அகரவரிசையில் ஒழுங்குபடுத்தும் முறையை அறிமுகப்படுத்தியவர் ஜான் ஹரிஸ் (John Harris) என்பவராவார். 1704 இல் வெளியிடப்பட்ட இவரது நூலின் தலைப்பு லெக்சிக்கன் டெக்னிக்கம் அல்லது கலைகளுக்கும் அறிவியல்களுக்குமான ஆங்கில அகரமுதலி: கலை தொடர்பான சொற்களை மட்டுமன்றி கலைகளையே விளக்குகிறது. (Lexicon Technicum: Or, A Universal English Dictionary of Arts and Sciences: Explaining not only the Terms of Art, but the Arts Themselves). தலைப்பில் குறிப்பிட்டபடியே கலை மற்றும் அறிவியல் தொடர்பான சொற்களை மட்டுமன்றி கலைகள், அறிவியல்கள் பற்றிய விளக்கங்களையும் இந்நூல் உள்ளடக்கி இருந்தது. வேதியியல் பற்றி சர் ஐசாக் நியூட்டன் எழுதிப் பதிப்பிக்கப்பட்ட ஒரே ஆக்கம் இதன் 1710 ஆம் ஆண்டுப் பதிப்பில் உள்ளது. இது தலைமையாக அறிவியலையே முதன்மைப்படுத்தியது. 18 ஆம் நூற்றாண்டில் "அறிவியல்" என்பதால் புரிந்துகொள்ளப்பட்டவை பற்றி இதன் உள்ளடக்கங்கள் அமைந்திருந்ததோடு, கலைத்துறை மற்றும் நுண்கலைத்துறைகள் சார்ந்த தலைப்புக்களும் இருந்தன. எடுத்துக்காட்டாக சட்டம், வணிகம், இசை போன்ற துறைகள் சார்ந்த தலைப்புக்களில் 1200 பக்கங்கள் வரை இருந்தன. இதைக் கலைக்களஞ்சியம் என்பதைவிடக் கலைக்களஞ்சியத் தன்மை கொண்ட அகரமுதலியாகக் கருதலாம். இவற்றையும் பார்க்கவும் தமிழ்க் கலைக்களஞ்சியம் விக்கிப்பீடியா பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் , encyclopedia of Hindu Dharma (includes Wikipedia) – Biographical errors in encyclopedias and almanacs – Diderot's article on the Encyclopedia from the original பிரெஞ்சு கலைக்களஞ்சியம். – First Renaissance encyclopedia – Online Comprehensive Science Encyclopedia – CNET article University of Wisconsin– Stout listing by category , 1728, with the 1753 supplement , 1851, Francis Lieber ed. (Boston: Mussey &amp; Co.) at the University of Michigan Making of America site , articles and illustrations from 9th ed., 1875–89, and 10th ed., 1902–03. , 11th ed., 1911, at the LoveToKnow site. *
டெனிசு டிடேரோ எந்த மொழியில் கலைக்களஞ்சியம் வெளியிட்டார்?
பிரெஞ்சு
480
tamil
de70eee33
அனைத்துலக முறை அலகுகள்(SI) குழுமத்தினரால் நிர்ணயித்தபடி, நேரத்தின் அடிப்படை அலகு, நொடி அல்லது வினாடி ஆகும். இதன் குறியீடு மற்றும் சுருக்கக் குறியீடு பின்வருமாறு: குறியீடு: (ஆங்கிலம்: s; தமிழ்: வி அல்லது வினாடி அல்லது நொடி) சுருக்கக் குறியீடு: (சுருக்கக் குறியீடு: ஆங்கிலம்: s; தமிழ்: வி).[1][2] மணிநேரத்தினை முதல் முறையாக அறுபது பிரிவுகளகப் பிரிக்கும்போது நிமிடங்கள் கிடைக்கின்றன. மணிநேரத்தினை முதல் முறையாகப் பிரித்துக் கிடைக்கும் நிமிடங்களை இரண்டாவது முறையாக அறுபது பிரிவுகளகப் பிரிக்கும்போது நொடிகள் அல்லது வினாடிகள் கிடைக்கின்றன. இரண்டாவது முறையாகப் பிரித்தலை ஆங்கிலத்தில் 'Second' - 'செகண்டு' என்கிறோம்.[3] சீசியம் (அணு நிறை:133) அணு இயல்நிலையில் இரண்டு மீ நுண் மட்டங்களுக்கு இடையே  நிலைமாற்றம் கொள்ளும்போது தோன்றும் கதிர்வீச்சுக்கான காலம் 9 192 631 770 கால அளவுகள் ஆகும். இதுவே SI அலகில் நொடி அல்லது வினாடி எனப்படுகிறது.[1][4] நொடி (அல்லது வினாடி) என்பது காலத்தை அளவிடப் பயன்படும் அடிப்படை அலகு.[5] 60 நொடிகள் = 1 நிமிடம் (மணித்துளி) ஆகும்.[6] வரையறை வரலாறு ஆரம்பகால நாகரிகங்கள்: ஆரம்ப கால நாகரிகங்கள் ஒரு நாளை சிறு பிளவுகளாக்கி பகுத்துக் கூறுகளுக்கு தனித்தனி பெயரிட்டன. ஆனால் கூறாகிய நேரத்தின் சிறு பகுதிக்கு வினாடி அல்லது நொடி என்ற வார்த்தையை யாரும் முறையாக பயன்படுத்தவில்லை.  கி.மு. 2000ல் எகிப்தியர்கள் ஒரு நாளை பகல் பன்னிரண்டு மணிநேரம் என்றும், இரவு பன்னிரண்டு மணிநேரம் என்றும், சமமாகப் பிரித்திருந்தனர். எனவே பருவகால மாறுபாடுகளுக்கு ஏற்ப பகல் மற்றும் இரவுகளில் மணிநேர நீளத்தின் அளவுகளும் வேறுபட்டன. ஹெலனிய கால வானியலாளர்களான ஹிப்பார்க்கஸ் (கி.மு 150 கி.மு.) மற்றும் தொலெமி (சி.டி. 150) ஆகியோர், மணிநேரத்தை அறுபது பகுதிகளாகப் (அறுபதிற்குரிய பின்னங்களின் கீழ் எண் அமைப்பு) பிரித்தனர். ஒரு சராசரி மணி நேரத்தை (1/24 நாள்) என்றும், ஒரு மணி நேரத்தின் எளிய பின்னக்கூறுகள் (1/4, 2/3, முதலியன) என்றும், மற்றும் நேரக் கோணத்தை (1/360 நாள் அல்லது அதற்குச் சமமான நான்கு நவீன நிமிடங்கள்) என்றும் பயன்படுத்தினர்.[7] கி.மு. 300 க்குப் பின்னர் பபிலோனியர்கள் அறுபதிற்குரிய பின்னங்களின் கீழான முறையைப் பயன்படுத்தி ஒரு நாளை திட்டமிட்டனர். அடுத்துள்ள ஒவ்வொரு துணைப்பிரிவும் அறுபதுகளால் பிரிக்கப்பட்டது. அதாவது  1/60, 1/60, 1/60 என்று, அறுபதின் விசைமடங்காகக் கணக்கிடப்படுகிறது.  இதன் துல்லியத் தன்மை  2 மைக்ரோ வினாடிகளுக்குச் சமமானதாகும்.[8]   பாபிலோனியர்கள் மணிநேரத்தை பயன்படுத்தவில்லை. ஆனால் 120 நவீன நிமிடங்கள் கொண்ட இரட்டை கால அளவு பயன்படுத்தப்பட்டது. ஒரு கால அளவு-நான்கு நீடித்த நிமிடங்களாக கணிக்கப்பட்டது. ஒரு பார்லிகார்ன் என்பது 3 1/3 நவீன வினாடிகள் நீடிக்கும் (நவீன ஹீப்ரூவின் காலண்டர் வளைவு),[9] ஆனால், அறுபதிற்குரிய பின்னங்களின் கீழ்  சிறிய அலகுகளாகப் பிரித்தெடுக்கப்படவில்லை. சந்திர சுழற்சியின் துணைப்பிரிவுகளின் அடிப்படையில்: சிர்கா 1000, பாரசீக அறிஞர் அல்-பிருனி அரபு மொழியில் வினாடி அல்லது நொடி என்ற முறையைப் பயன்படுத்தியுள்ளார். இரண்டு அமைவாதைகளுக்கு இடையே உள்ள காலத்தை வாரங்கள், நாட்கள், மணிநேரம், நிமிடங்கள், வினாடிகள், மூன்றாவது மற்றும் நான்காவது பிற்பகல் ஞாயிறு எனப் பிரித்துள்ளார்.[10] 1267 ஆம் ஆண்டில், இடைக்கால விஞ்ஞானி ரோஜர் பேகன், லத்தீன் மொழி அறிக்கையில், மூன்றாவது மற்றும் நான்காவது முழு நிலா எனப்படும் பூரணைகளுக்கு இடையேயான பிரிவைக் கொண்டு மணிநேரங்கள் (ஹொரே-horae), நிமிடங்கள்(மினுடா-minuta), விநாடிகள்(செகுண்டா-secunda), மூன்றாவது(டெர்ஷியா-tertia) மற்றும் நான்காவது(குவார்டா-quarta) ஆகியவற்றை குறிப்பிட்ட நாட்காட்டியில் வரையறுத்தார்.[11] நவீன நொடிகள் அல்லது வினாடிகள், பின்வருமாறு தசம எண்களைப் பயன்படுத்தி பிரிக்கப்பட்டு வருகின்றன - மூன்றாவது குறியீட்டு சொல்  (1⁄60 வினாடிப்பகுதி) பிற மொழிகளிலும்  நொடிகள் அல்லது வினாடிகள் என்ற வார்த்தைப் பயன்பாடு உள்ளது. உதாரணம்: போலிய மொழி (டர்க்ஜா-tercja) மற்றும் துருக்கிய மொழி (சலிசெ-salise). இயந்திர கடிகாரங்களின் அடிப்படையில்: 16 ஆம் நூற்றாண்டின் கடைசியில்,  நொடிகளைக் காட்டப் பயன்படும் ஆரம்பகால கடிகாரங்கள் தோன்றின.  இயந்திரக் கடிகாரங்கள் உருவானதன் பின் நொடிகள் அல்லது வினாடிகளைத் துல்லியமாக அளப்பது எளிதானது.  இது சூரிய மணிகாட்டி மூலம் காட்டப்படும் உத்தேச நேரத்திற்கு எதிரானது. ஃப்ரேமர்ஸ்டார்ஃப் (Fremersdorf)  சேகரிப்பில் ஆர்ஃபியஸை (Orpheus) சித்தரிக்கும் கடிகாரம், சுருள் வில்லுடன் விநாடிகளைக் குறிக்கக்கும் கையுடன் கூடிய உந்துதல் கடிகாரம் ஆகியவை மக்களை மிகவும் கவர்ந்தன. இதன் தொடக்க காலம் 1560 நிறைவுறு காலம்  1570.[12]:417–418[13] 16 ஆம் நூற்றாண்டின் மூன்றாம் காலாண்டில், தகி-அல்-தின் (Taqi al-Din) ஒவ்வொரு 1/5 நிமிடத்தையும் காட்டும் ஒரு கடிகாரம்  உருவாக்கினார்.[14] 1579ல் ஹோஸ்த் பர்கி (Jost Bürgi) ஹெஸ்ஸ (Hesse) நாட்டின் வில்லியமுக்கு வினாடிகளைக் காட்டும் ஒரு கடிகாரம் செய்தார்.[12]:105}} 1581ல் டைக்கோ பிராகி மறுசீரமைக்கப்பட்ட  கடிகாரங்களை உருவாக்கினார். அதனைத் தன் வானியல் ஆய்வு மையங்களில் பயன்படுத்தினார். அவை நிமிடங்களையும் நொடிகளையும் காட்டின. எனினும், அவை வினாடிகளை கணிக்கப் போதுமான துல்லியத்துடன் இல்லை. 1587 ஆம் ஆண்டில், டைக்கோ தனது நான்கு கடிகாரங்கள், நான்கு வினாடிகள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வேறுபடுத்திக் காட்டியதாகk குறை கூறினார்.seconds.[12]:104 1644 ஆம் ஆண்டில், மரின் மெர்சென் (Marin Mersenne) 39.1 அங்குல நீளம் (0.994) ஊசலைப் பயன்படுத்தி வினாடிகளைக் கணக்கிட்டார். அது, திட்ட புவியீர்ப்பு முடுக்கத்துடன் செயல்பட்டது. ஊசல் முன்னோக்கிச் செல்ல ஒரு விநாடியும், மீண்டும் பின்னோக்கிச் செல்ல ஒரு விநாடியும், ஆகும் எனத் துல்லியமாக கணக்கிட்டு செயல்படுத்தினார்[15] 1670 ஆம் ஆண்டில், லண்டன் கடிகார தயாரிப்பாளர் வில்லியம் கிளெமெண்ட் (William Clement) இந்த வினாடி ஊசலை, கிறித்தியான் ஐகன்சின் அசல் ஊசல் கடிகாரத்துடன் இணைத்தார்.[16]  1670 முதல் 1680 வரை, கிளெமெண்ட் தனது கடிகாரங்களுக்கு பல மேம்பாடுகளைச் செய்தார்.  1832 இல், கார்ல் பிரீடிரிக் காஸ் தனது மில்லிமீட்டர்-மில்லிகிராம்-வினாடி தரப்படுத்தப்பட்ட முறை அலகுகளில், நேரத்தின் அடிப்படை  அலகு வினாடி என முன்மொழிந்தார். 1862ஆம் ஆண்டு, அறிவியல் முன்னேற்றத்திற்கான பிரிட்டிஷ் கூட்டமைப்பினர், (BAAS-British Association for the Advancement of Science) "விஞ்ஞானத்தின் அடிப்படையில், அனைத்து மாந்தர்களும் சூரிய நேரத்தின் சராசரி அடிப்படை அலகு நேரம் வினாடி என்ற கால அளவைப் பயன்படுத்த வேண்டும்" என ஒப்புக் கொண்டுள்ளனர்.[17] ஒரு வருடத்தின் ஒரு பகுதி என்ற அடிப்படையில்:  புவியின் இயக்கம் சார்ந்த, நியூகோம்பின் (Newcomb) சூரிய இயக்க அட்டவணையில் (1895) ந்ப்டிகள் பற்றி விவரிக்கப்பட்டது. 1750க்கும் 1892க்கும் இடைப்பட்ட  காலத்தில் வானியல் கண்காணிப்புகளை அடிப்படையாகக் கொண்டு,  சூரிய இயக்கத்தின் மதிப்பை மதிப்பிடுவதற்கான ஒரு சூத்திரம் உருவாக்கப்பட்டது.[18] குறிப்பாக, 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் பயன்படுத்தப்பட்ட அட்டவணைகள் நியூகொம்ஸின் சூரிய இயக்கத்தை ஒட்டியவை. (1900 முதல் 1983 வரை). மேலும், எர்னெசுட்டு வில்லியம் பிரவுனின் நிலவு அட்டவணைகள் 1923 முதல் 1983 வரை பயன்படுத்தப்பட்டன. சீசியம் நுண்ணலை அணு கடிகாரத்தின் அடிப்படையில்: பல ஆண்டுகளின் வேலைகளைத் தொடர்ந்து  இங்கிலாந்தின்  டெடிங்டன், தேசிய இயற்பியல் ஆய்வகத்திலிருந்து லூயிஸ் எஸென் (Louis Essen) மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டு கடற்படையின் வானியல் நிலையத்திலிருந்து வில்லியம் மார்கோவிட்ஸ் (William Markowitz) ஆகியோர், சீசியம் அணுவின் மீ நுண் நிலைமாற்ற அதிர்வெண் மற்றும் கோளியல் காலம் ஆகியவற்றுக்கு இடையேயான உறவை உறுதிப்படுத்தினர்.[19] இதில், டபிள்யூ. டபிள்யூ. வி. (WWV) வானொலி நிலையத்திலிருந்து பெறப்பட்ட சமிக்ஞைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொதுவான காட்சி அளவீட்டு முறை பயன்படுத்தப்பட்டது.[20] அவர்கள் கோளியல் காலம் (ET), நொடி அல்லது வினாடி, தேர்ந்தெடுக்கப்பட்ட சீசியம் அணுவின் அதிர்வெண் ஆகியவை ஒரே அளவிலான 9,192,631,770 ± 20 சுழற்சிகளைப் பெற்றுள்ளன என்பதை கண்டறிந்து உறுதி செய்தனர்.[19]  (SI வினாடி ஏற்கெனவே ஏற்கப்பட்டது. SI வினாடியானது, சராசரி சூரிய காலத்தின் வினாடி மதிப்பைக் காட்டிலும் சிறிது குறுகியதாக இருந்தது.[21][22]) சார்பியல் ரீதியாக, SI வினாடி மதிப்பு பூமிவடிவத்தின் மற்றும் சுழற்சியின்  சரியான நேரமாக வரையறுக்கப்படுகிறது.[23] முன்மொழியப்பட்ட ஒளியியல் அணு கடிகாரத்தின் அடிப்படையில்: லட்லோ எட் ஆல் (Ludlow et al) மேற்கோள்: இன்று, நுண்ணலைப் பகுதியில் செயல்படும் அணு கடிகாரங்களுக்கு, ஒளியியல் அணு கடிகாரங்கள் ஒரு சவாலாக அமையும்.[24] கனடிய தேசிய ஆராய்ச்சி கவுன்சில் 2.5 × 10-11 "ஒப்பீட்டளவில் நிச்சயமற்றது" என்பதைக் குறிக்கிறது.  அயோடின் (அணு எடை 127) மூலக்கூறை அடிப்படையாகக் கொண்டிருக்கும் அணு கடிகாரத்திற்கு பதிலாக, ஸ்ட்ரான்சியம் (அணு எடை 88) அயனி பொறியைப் பயன்படுத்துவதை ஆதரிக்கிறது.[25] நிச்சயமற்ற நிலைகள் நுண்ணலைப் பகுதியில் உள்ள NIST-F1 சீசியம் அணுக் கடிகாரத்தை எதிர்த்து நிற்கின்றன, அதிர்வெண் அடிப்படையில் ஒரு நாளின் பகுதிகள் சராசரியாக பத்தின் அடுக்கு பதினாறு என்று மதிப்பிடப்படுகின்றன.[26][27] ஒரு நொடி என்பது துல்லியமான நிலைநாட்டலின் படி கீழ்க்காணுமாறு குறிப்பிடப்படும். சீசியம்-133 என்னும் அணு, தன் அடி நிலையில் இருக்கும் பொழுது அதன் அணுக்கருவில் உள்ள காந்தப்புலனின் விளைவால் நிகழும் மீ நுண் ஆற்றல் வேறுபாடுகளின் அடிப்படையில் ஒரு நொடி என்பது விளக்கபடுகின்றது. ஒரு நொடி என்பது அசையாது 0 K (கெல்வின்) வெப்பநிலையில் இருக்கும் ஒரு சீசியம்-133அணுவின் அடி நிலையில் உள்ள இரு வேறு மிக நுண்ணிய ஆற்றல் இடைவெளிகளுக்கிடையே நிகழும் 192 631 770 அலைவுகளின் கால அளவு ஆகும். ஒரு நாளில் 3600 விநாடிகள் உள்ளன. ஒரு நாளில் 24 மணி நேரமும், ஒரு மணி நேரத்தில் 60 நிமிடங்களும், ஒரு நிமிடத்தில் 60 செக்கன்களும் உள்ளன. எனவே ஒரு விநாடி 24 செக்கன்களுக்குச் சமமாகும். Notes and references பகுப்பு:SI அடிப்படை அலகுகள் பகுப்பு:கால அளவுகள்
ஒரு நாளில் எத்தனை மணி நேரம் உள்ளது?
24
1,621
tamil
4109d6286
Main Page த டா வின்சி கோட் ஒரு 2003ஆம் ஆண்டு அமெரிக்க எழுத்தாளர் டான் பிரவுனால் எழுதப்பட்ட மர்மத்-துப்பறிவுப் புனைவு நாவலாகும். அதில் பாரிஸின் லோவ்ரி மியூசியத்தில் நடந்த கொலையை துப்பறிவதில் குறியீட்டு முறைவியலாளர் ராபர்ட் லாங்டன் மற்றும் சோபி நிவியு ஆகியோர் ஈடுபடுகையில் பிரையரி ஆஃப் சீயோன் மற்றும் ஓபஸ் டீ இடையே உள்ள சண்டையை கண்டறிகிறார்கள், அதன் மூலம் நாசரேத்தூராராகிய இயேசு கிறிஸ்துவுக்கு மகதலேனா மரியாளுடன் திருமணமாகி ஒரு குழந்தைக்கு தகப்பனாகவும் இருப்பதற்கு சாத்தியங்கள் உள்ளதாகவும் கண்டறிகிறார்கள். நாவலின் தலைப்பு பல விஷயங்களைக் குறிக்கிறது, கொலை செய்யப்பட்டவரின் உடல் லோவ்ரியின் டெனான் விங்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அது லியனார்டோ டா வின்சியின் பிரபல வரைபடமான விட்ரூவியன் மேன் போல் நிர்வாணமாக அமைக்கப்பட்டு, அதில் மறைக்கப்பட்ட செய்தியாக உடலில் எழுதிவைக்கப்பட்டு அவரது இரத்தத்தாலேயே அவரது வயிற்றில் ஐங்கோணம் ஒன்றும் வரையப்பட்டிருந்தது. இந்த நாவல் மூலம் காலங்காலமாக உள்ள பரிசுத்த கிரெயில் மற்றும் கிறிஸ்தவ வரலாற்றில் மகதலேனாவின் பங்கை பற்றிய யூகத்தின் மூலம் பரவலான ஆர்வம் தூண்டப்பட்டது. ரோமன் கத்தோலிக்க சபையை தாக்குவதாக கிறிஸ்தவ பிரிவுகள் இப்புத்தகத்தை ஒட்டுமொத்தமாக பழித்து தடை செய்தார்கள். அதன் வரலாற்று மற்றும் அறிவியல் துல்லியமற்றத்தன்மைக்காகவும் அது விமர்சிக்கப்பட்டது. இந்த புத்தகம் உலகமெங்கும் 80 மில்லியன் புத்தகங்கள் விற்பனையான சிறப்பு விற்பனைப்புத்தகமாகவும், 44 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதுவும் ஆகும். துப்பறிதல், திகில் மற்றும் முரண்பாட்டு புதின வகைகளை ஒன்றிணைத்து, ராபர்ட் லாங்டன் என்ற கதாப்பாத்திரத்துடன் வெளியிடப்படும் பிரவுனின் இரண்டாவது நாவலாகும், அவரது முதலாவது நாவல், 2000 ஆண்டு வந்த நாவலான ஏஞ்சல்ஸ் &amp; டெமான்ஸ் ஆகும். நவம்பர் 2004இல் 160 விளக்கப்படங்களுடன் ஒரு சிறப்பு விளக்கப்பட பதிப்பு ஒன்றை ராண்டம் ஹவுஸ் வெளியிட்டது. 2006இல், சோனியின் கொலம்பியா படங்கள் மூலம் திரைப்பட வடிவாக்கம் ஒன்றும் வெளியிடப்பட்டது. கதை சுருக்கம் இந்த புத்தகத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மதக் குறியீட்டு முறைவியல் பேராசிரியராக உள்ள ராபர்ட் லாங்டனின் முயற்சிகளாக பாரிசில் உள்ள லோவ்ரியின் மியூசியத்தில் பிரபல அருங்காட்சியகக் காப்பாளரான ஜாக்கியூஸ் சோவனீரின் கொலையாளியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். மறைக்கப்பட்ட சூன்யமானதும் அவருடைய உடலின் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. சானியரின் பேத்தியான சோபி நிவியு மற்றும் லாங்டன் ஆகியோர் அசாத்தியமான புதிர்களை கண்டறிந்து லியானார்டோ டா வின்சியின் கலைச்செயல்களில் மறைந்துள்ள ரகசியக் குறியீடுகளை கண்டுபிடித்து மிரள வைக்கிறார்கள். மர்மத்தை அவிழ்ப்பதில் பிறழ்சொற்கள் (Anagrams) மற்றும் எண் புதிர்கள் உள்ளிட்ட சிக்கல் நிறைந்த அறிவுப் புதிர்களின் தொடர்ச்சியான விஷயங்களுக்கு தீர்வு தேவைப்படுகிறது. ஒட்டுமொத்த தீர்வும் பரிசுத்த கிரெயில் மற்றும் பிரயாரி ஆஃப் சீயோன் என அழைக்கப்படும் மர்மச் சமுதாயம் மற்றும் நைட் டெம்பிளர்ஸ் ஆகியவை இருக்கக்கூடிய இடத்திற்கு மிக நெருக்கமான தொடர்புடையதாக கண்டறியப்படுகிறது. கதையில் ஓபஸ் டீ எனப்படும் ரோமக் கத்தோலிக்க இயக்கமும் வருகிறது. விவரங்கள் சைலஸால் (த டீச்சர் என்று மட்டும் அறியப்படும் ஒருவருக்கு பதிலாக வருபவர்) கொலை செய்யப்பட்ட பிரையரி ஆஃப் சீயோனின் முக்கியத் தலைவரான ஜாக்கியூஸ் சானியரின், (அந்த நேரத்தில் யாருக்கும் தெரியப்படாமல்) கொலையில், பரிசுத்த கிரெயிலுக்கு வழிகாட்டும் கருப்பொருளான " திறவுகோல் கல்"லின் இருப்பிடத்தை பிடிப்பதாகக் கதை தொடங்குகிறது. சானியர் தன் உடலிலும் அருகிலும் விட்டுச்சென்ற குறியீடை கண்டுபிடிக்க உதவ கொலை நடந்த இடத்திற்கு பாரீசில் பேருரை ஆற்ற வந்திருக்கும் ராபர்ட் லாங்டனை போலீஸ் அழைக்கிறது. லாங்டன் தான் கொலையின் முக்கிய குற்றவாளியாக இருப்பார் என தலைமை துப்பறிவாளர், பிஜு பேச் சந்தேகப்படுகிறார். போலீஸ் குறிகண்டறியும் துப்பறிவாளராக சோபி நிவியூ கொலைச் சம்பவ இடத்திற்கு வருகையில் லாங்டன் மீது நம்பிக்கை கொள்கிறார். ஜாக்கியூஸ் சானியர் நிவியூவின் தாத்தா ஆவார். நார்மாண்டியில் உள்ள அவர்களது வீட்டிற்கு நிவியூ, விடுதி பள்ளியில் இருந்து விடுமுறைக்கு திடீர் பயணம் சென்ற போது, அவருக்கு (ஹைரோஸ் காமோஸ்) எனப்படும் பேகன் பாலியல் சடங்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அது வரை இருவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கின்றனர். (அவர் உணர்ந்தவை கதை முழுவதும் பலமுறை குறிப்பிடப்பட்டு எடுத்துரைக்கப்பட்டுள்ளது, ஆனால், அவர் எதைப் பார்த்தாரோ அதனை கதையின் முடிவுக்கு அருகில் ராபர்ட்டிடம் சொல்லும் வரை யாருக்கும் தெரியப்படுத்தப்படவில்லை). சானியரின் உடலுக்கு அருகில் லாங்டனும் நிவியுவும் ஒரு மறைக்கப்பட்ட சூன்யத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். இந்த ரகசியங்கள் இரண்டாவதாக உள்ள ரகசியங்களின் தொகுப்பு ஒன்றுக்கு வழிவகுக்கிறது. தன் தாத்தாவின் ரகசியங்களைக் கண்டறிகையில், நிவியு ரகசியத் திறவுகோளை கொண்ட பெயிண்டிங்கைப் பார்க்கிறார், அந்த திறவுகோளுக்கு பின் பிரையரி ஆஃப் சீயோனுக்குரிய முகவரியும் சின்னங்களும் இருப்பதையும் பார்க்கிறார்கள். இணைந்து செயல்பட்டு, லாங்டனும் நிவியுவும் போலீஸை ஏமாற்றி, அவ்விடத்தில் இருந்து வெளியேறி திறவுகோளின் ரகசியத்தைக் கண்டறியச் செல்கிறார்கள். ஜூரிக்கில் உள்ளா டெபாசிட்டரி வங்கியின் பாரிஸ் கிளையில் உள்ள பாதுகாப்பு வைப்புப் பெட்டியின் திறவுகோளைத் திறக்கிறது. வங்கியில் உள்ள சானியரின் கணக்கு எண்ணில் முதல் எட்டு எண்கள் ஃபிபோனாக்சி எண்களாக உள்ள 10-இலக்க எண்ணைக் காட்டுகின்றது: 1 1 2 3 5 8 13 21 பாதுகாப்பு வைப்புப் பெட்டியின் உள்ளே ஒரு பெரிய கிரிப்டெக்சாக உள்ள திறவுகோள் கல் ஒன்றைக் காண்கிறார்கள், அது ரகசிய செய்திகளை பரப்புவதற்காக லியோனார்டோ டா வின்சியால் கண்டறியப்பட்ட ஒரு உருளைபோல் உள்ளது. அதனை திறப்பதற்கு சுற்றக்கூடிய கருவிகளின் பொருத்தத்தை சரியான வரிசையில் அமைக்க வேண்டும். கிரிப்டெக்ஸை வலுக்கட்டாயமாக திறந்தால் உள்ளே பொதித்து வைக்கப்பட்ட வினிகரின் குழல் ஒன்று உடைந்து கசிந்து பாபிரஸின் மேல் எழுதி வைக்கப்பட்டிருக்கும் செய்தியை அழித்துவிடும். பெரிய கிரிப்டெக்ஸை கொண்டுள்ள ரோஸ்வுட் பெட்டியில் கிரிப்டெக்ஸின் ரகசியங்கள் கொண்ட பொருத்தமும் அடங்கியிருக்கும், அது லியானோர்டாவின் குறிப்புகளில் எழுதப்பட்ட அதே முறையில் பின்னோக்கிய எழுத்துரை அமைக்கப்பட்டிருந்தது. துப்பாக்கி முனையில் சைலசிடம் சானியர் கூறிய விதிமுறைகள் அப்பட்டமான பொய்யாகும், அதாவது புனித சல்பைசின் ஆலயத்தில் திறவுகோல் கல் புதைக்கப்பட்டதாகவும், அது பழங்கால "ரோஸ்-லைனுக்கு" (கிரீன்விச் மறு அமைப்பு செய்யப்படுவதற்கு முன் பாரீஸ் வழியாக கடந்து சென்ற பழைய பிரைம் மெரிடியன்) மிக அருகில் உள்ள நான்கு முனை கோபுரத்துக்கு அருகில்) உள்ளதாகக் கூறப்பட்டது. நான்கு முனை கோபுரத்துக்கு அருகில் உள்ள செய்தியில் யோபு புத்தகத்தின் (38:11அ)வில் உள்ளதைக் குறிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது, அதாவது "இம்மட்டும் வா, மிஞ்சி வராதே" என்பதாகும். (KJV) சைலஸ் இதனைப் படிக்கையில், அவன் ஏமாற்றப்படுவதாக உணர்கிறான். போலீசால் இன்னும் துரத்தப்பட்டாலும், லாங்டனும் நிவியுவும் திறவுகோல் கல்லை எடுத்துக் கொண்டு சார் லீ டீபிங் (பரிசுத்த கிரெயில் பற்றிய நிபுணரும் லாங்டனின் நண்பர்) என்பவரிடம் சென்றனர். டீபிங்கின் தனியார் விமானத்தில் பறந்தபடி, கிரிப்டெக்ஸை எப்படி திறப்பது என்பதை கண்டுபிடித்தார்கள், ஆனால் அந்த பெரிய கிரிப்டெக்சில் இரண்டாவது சிறிய கிரிப்டெக்ஸ் அடங்கியிருந்தது, அதில் அதன் பொருத்தம் அடங்கிய இரண்டாவது புதிர் தெரியவந்தது. "ஒரு போப்பின் காவலாளி குறுக்கிடும்" கல்லறையின் மீது இருக்கும் விண்மீனைக் கண்டடையும்படி புதிர் சொல்கிறது, அது வரலாற்று இடைக்கால போர்வீரனைக் குறிக்கவில்லை, ஆனால் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் புதைக்கப்பட்டுள்ள சர் ஐசக் நியூட்டனின் கல்லறையைக் குறிக்கிறது, அது அலெக்சாண்டர் போப்பால் (A. போப்) இறங்கல் புகழுரை பெற்றதாகும். பின்னர் டீபிங் ஜாக்கியூஸ் சானியரைக் கொல்ல சைலசை அனுப்பிய அந்த டீச்சர் என்பது தெரியவருகிறது, அவரிடம் பிரையரி ஆஃப் சீயோனின் தலைவர்களின் அடையாளங்கள் தொடர்பான தகவல் அவரிடம் இருப்பதாகவும், அவர் தான் அவர்களது அலுவலகங்களை வேவு பார்த்து அவர்களைக் கொல்ல சைலசை நியமித்ததாகவும் தெரியவருகிறது. ரெமி அவருடைய ஒருங்கிணைப்பாளர். தன் அடையாளத்தை மறைத்து கிரெயிலைக் கண்டுபிடிக்க பிஷப் ஆரிங்கரோசாவிடம் தொடர்பு கொண்டு அந்த திட்டத்துக்கு பண உதவி செய்ததும் டீபிங் தான். ஆரிங்கரோசாவிடம் கிரெயிலைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை, ஆனால் அதனைக் கண்டுபிடிக்க ஓபஸ் டீயின் தீர்வைப் பயன்படுத்திக் கொள்கிறார். நியமிக்கப்பட்ட நேரத்தில் கிரெயிலின் ரகசியத்தை உலகுக்கு வெளியிடும் உறுதியை பிரையரி ஆஃப் சீயோன் முறித்துவிட்டதாக டீபிங் நம்புகிறார். கிரெயிலின் ஆவணங்களை திருடுவதற்கு திட்டமிட்டு தானே உலகுக்கு வெளிப்படுத்திவிடத் திட்டமிடுகிறார். லாங்டனும் சோபி நிவியுவும் அவருடைய வீட்டில் இருப்பதாக சைலசிடம் அவர் தான் தகவல் தருகிறார். தன் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டாம் என நினைத்ததால் அவர்களிடம் இருந்து திறவுகோள் கல்லை பறித்துக் கொள்ளவில்லை. அவருடைய வீட்டில் வைத்து திறவுகோல் கல்லை பறிக்கும்படி சைலசை கேட்டுக் கொண்டார், ஆனால் கிரிப்டெக்ஸ் குறியீட்டைக் கண்டறிய லாங்டன் மற்றும் சோபியின் உதவி தேவை என்பதால் அவரே சைலசின் ஆர்வத்தை நிறுத்தி வைக்கிறார். அதன் தொடர்ச்சியாக, வங்கியில் இருந்து தப்பிக்கையில் லாங்டன் திருடிவந்த பின்தொடர் கருவியின் மூலம் கண்டுபிடித்து வீட்டைச் சோதனையிட போலீஸ் வருகிறது. லண்டனின் டெம்பிள் சர்ச்சுக்கு நிவியூவையும் லாங்டனையும் அழைத்துச் சென்றார் டீபிங், அதில் மேற்கொண்டு செல்ல வழியில்லை என்பதை அறிந்திருந்தும், ரெமி மூலம் திறவுகோல் கல்லை கடத்திப் பெற்றுக்கொண்டு, அதன் மூலம் லாங்டன் மற்றும் நிவியுவிடம் தன் நிஜப் பாத்திரத்தை வெளிப்படுத்தாமலும் இருக்கலாம் என முயற்சிக்கிறார். தன் செயல்பாடுகளின் தடம் அனைத்தையும் அழிக்க, ரெமிக்கு கடலைப் பருப்புகளில் கடுமையான ஒவ்வாமை இருப்பது தெரிந்தும், பிரான்சு நாட்டு போதைப் பொருளான காக்னக் கலந்த கடலைப் பருப்பு பொடியை ரெமிக்கு கொடுத்து அவனைக் கொல்கிறார் டீபிங். அதனால் காப்புப் பிறழ்ந்த அதிர்ச்சியால் ரெமி இறக்கிறான். தன் அடையாளத்தை மறைத்தபடி ஓபஸ் டீயின் லண்டன் தலைநகரில் சைலஸ் ஒழிந்திருப்பதாக போலீசுக்கு தகவல் டெரிவிக்கிறார் டீபிங். வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் டீபிங் உடனான சச்சரவின் காரணமான சந்தேகத்தை அடுத்து, டீபிங் முன்பு அழிப்பதற்கு முன் இரண்டாவது கிரிப்டெக்ஸை ரகசியமாக பிரித்து அதற்குள் இருப்பவற்றை அகற்றிவிடுகிறார், லாங்டன். இரண்டாவது கிரிப்டெக்ஸ் மற்றும் கிரெயிலின் இரண்டாவது இருப்பிடத்தை பற்றிய உள்ளிருந்தவற்றைப் பற்றி தன்னிடம் சொல்லும்படி வீணாகக் கெஞ்சிக் கொண்டிருக்கையில், டீபிங் கைது செய்யப்பட்டு அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். பிஷப் ஆரிங்கரோசா தன் தவறை ரகசியமாக அழைத்து சொன்னபின் நிவியுவும் லாங்டனும் நிரபராதிகள் என்பதை அறிந்து கொள்கிறார், பெசு பேக். நிவியுவையும் லாங்டனையும் கைது செய்வதற்கான வாரண்டுகளை ரத்து செய்கிறார் ஃபேக். ஓபஸ் டீயின் லண்டன் தலைமையிடத்துக்கு வெளியே போலீசிடம் இருந்து தப்புகையில் ஆரிங்கரோசாவை தெரியாமல் சைலஸ் சுட்டுவிடுகிறான். தன்னைப் போல் வேடமிட்டு செய்யப்பட்ட மாபெரும் தவறை உணர்ந்து, பிரையரி ஆஃப் சீயோனின் கொலை செய்யப்பட்ட தலைவர்களின் குடும்பங்களுக்கு தன் பெட்டியில் இருந்த ஈட்டுப் பத்திரங்களை கொடுத்துவிடும்படி பெசு ஃபேக்கிடம் ஆரிங்கரோசா சொல்கிறார். மரணக் காயங்களின் காரணத்தால் இறந்து போகிறான் சைலஸ். டேவிட்டின் நட்சத்திரத்தின் கீழ் தரையில் (இரு இடைக்குறுகிடும் முக்கோணங்களான "கத்தி" மற்றும் கிண்ணம்," அதாவது., ஆண் மற்றும் பெண் சின்னங்கள்) கிரெயில் ஒரு காலத்தில் புதைக்கப்பட்டிருந்தாலும், இரண்டாவது திறவுகோல் கல்லில் இருந்த இறுதிச் செய்தி ரோஸ்லின் சேப்பலைக் குறிக்கவில்லை. ரோஸ்லின் சேப்பலின் டோசன்டாக இருப்பது சோஃபியின் நெடுநாளாக காணாமல் போன சகோதரன். குழந்தையாக இருக்க்கையில் ஒரு கார் விபத்தில் தன் பெற்றோர்கள் மற்றும் பாட்டியுடன் பலியாகிவிட்டதாக சோஃபிக்கு சொல்லப்பட்டிருந்தது. ரோஸ்லின் சாப்பலின் காப்பாளராக இருப்பது நெடுநாட்களாக காணாமல் போயிருந்த சோஃபியின் பாட்டியான மேரி சாவல், அவர்தான் ஜாக்கியூஸ் சானியரின் மனைவி. அவர் தான் ஜாக்கியூஸ் சானியருடன் பாலியல் சடங்கில் பங்கேற்ற அந்த பெண்மணி. அதோடு சோஃபி இயேசு கிறிஸ்து மற்றும் மகதலேனா மரியாளின் சந்ததியில் தோன்றியவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அவருடைய உயிருக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும்படி பிரையரி ஆஃப் சீயோன் அவரைப் பற்றிய அடையாளங்களை மறைத்து விட்டது. பிரையரி ஆஃப் சீயோனின் அனைத்து நான்கு தலைவர்களும் இறந்துவிட்ட போதும், அந்த இயக்கத்தைய்ம் அதன் ரகசியத்தையும் தொடர்ந்து நிலைநிறுத்தக்கூடிய (வெளிப்படுத்தாமை) தற்செயல் திட்டங்கள் இருப்பதாலும், ரகசியம் இன்னும் காப்பாற்றப்படுகிறது. இறுதிச் செய்தியின் நிஜ அர்த்தமாவது கிரெயில் தற்போது சிறிய பிரமிடுக்கு பின்னால் புதைக்கப்பட்டிருப்பதாகும் (அதாவது, ஆண் குறியீடான "பிளேடு", லோவ்ரியின் தலைகீழான கண்ணாடி பிரமிடுக்கு கீழே நேரடியாக (அதாவது, "கிண்ணம்" ஒரு பெண் குறியீடு உள்ளது, அதனை உடைத்துக் கொண்டுதான் பெசு ஃபேக்கிடம் இருந்து முதன்முதலில் லாங்டனும் சோஃபியும் தப்பித்து சென்றனர். அது "ரோஸ்லினுக்கு" இணையான "ரோஸ் லைனுக்கு" அருகில் இருக்க்கிறது. புத்தகத்தின் கடைசி பக்கங்களின் புதிருக்கான இறுதிப் புதிரை லாங்டன் கண்டுபிடிக்கிறார், ஆனால் அதனை யாரிடமும் சொல்வதற்கு அவர் முற்படவில்லை. மேற்கொண்ட விவாதத்திற்கு லா பிரமிடு இன்வர்சீயைப் பாருங்கள். கதாப்பாத்திரங்கள் கதைக்களத்தை இயக்கக்கூடிய முதன்மை கதாப்பாத்திரங்கள் இவையே. சிலருடைய பெயர்கள் குழப்பங்கள், அனகிராம்கள் அல்லது மறைந்துள்ள ரகசியங்களையும் கொண்டிருக்கின்றன: ராபர்ட் லாங்டன் ஜாக்கியூஸ் சானியர் சோஃபி நிவியு பெசு ஃபேக் சைலஸ் மேனுவல் ஆரிங்கரோசா ஆண்ட்ரி வெர்நட் லீ டீபிங் ரெமி லெகாலுடெக் ஜெரோம் கோல்லட் மேரி சாவல் செயிண்ட்-கிளேர் பமீளா கெட்டம் பரிசுத்த கிரெயில் ரகசியம் நாவலில் சோபி நிவியுவிடம் லீ டீபிங், லியோனார்டோ டா வின்சியின் "இறுதி இராப்போசனம்" வரைபடத்தில் இயேசுவுக்கு வலது பக்கத்தில் இருப்பது அப்போஸ்தலர் யோவான் அல்ல, அது மகதலேனா மரியாள் என விளக்கமளிக்கிறார். நாவலில் இயேசு கிறிஸ்துவின் மனைவி மகதலேனா என்றும், இயேசு சிலுவையில் அறையப்படுகையில் அவருடைய குழந்தைக்காக கர்ப்பமாக இருந்த்தாக வருகிறது. லியோனார்டோவின் வரைபடத்தில் கிண்ணம் இல்லாமல் இருப்பதன் காரணம் மேரி மகதலேனா தான் என்றும் உண்மையிலேயே பரிசுத்த கிரெயில் என்பது இயேசுவின் இரத்தத்தை கொண்டிருக்கும் மரியாளால் சுமக்கப்படும் குழந்தை தான் என அவருக்குத் தெரியும் என்று லீ டீபிங் சொல்கிறார். இதனைப் பற்றி லீ டீபிங் மேலும் குறிப்பிடுகையில், இந்த விஷயம் "V" என்னும் எழுத்து வடிவத்தை ஆதரிப்பதாக இருப்பதாக கூறுகிறார், அதாவது இயேசுவுக்கும் மேரிக்கும் இடையில் உள்ள "V" என்னும் சின்னம் புனிதமான பெண்மையைக் குறிக்கிறது. அப்போஸ்தலர் யோவான் வரைபடத்தில் இல்லாமல் போனது மகதலேனா மேரியைக் குறியிடுவதற்காக இயேசுவின் பிரியமான சீடரான யோவான் மூலம் குறிப்பிடுவதற்காகத் தான். அவர்களுடைய உடைகளின் வண்ணங்கள் பயன்பாடும் தலைகீழாக்கப்பட்டுள்ளதாக புத்தகம் குறிப்பிடுகிறது: ராயல் புளூ முனையுடனான சிகப்பு அங்கியை இயேசு அணிந்துள்ளார்; ஜான்/மேரி சிகப்பு முனை கொண்ட ராயல் புளூ அங்கியை அணிந்துள்ளார் — அது ஒருவகையில் திருமணமான இரு பாதிகளின் உடன்பாடைக் குறிக்கிறது. நாவலின் படி, பரிசுத்த கிரெயிலின் ரகசியங்களை, பிரையரி ஆஃப் சீயோன் பின்வருமாறு வைத்துள்ளது: பரிசுத்த கிரெயில் என்பது ஒரு பொருளாக உள்ள கிண்ணம் அல்ல, அது கிறிஸ்துவின் ரத்த வாரிசை சுமக்கும் மகதலேனா மரியாள். பழைய பிரஞ்சு உச்சரிப்புப்படி பரிசுத்த கிரெயில் என்பது சான் கிரியல், அதாவது அது சாங் ரியல் என ஒலிப்பது, அதற்கு பழைய பிரஞ்சில் "ராஜ இரத்தம்" என்று பொருள். இரத்தவாரிசை சோதிப்பதற்கான ஆவணங்கள் கிரெயில் பீடத்தில் உள்ளது, அதில் மகதலேனா மரியாளின் உண்மையான எலும்புகளும் உள்ளது. மகதலேனா மரியாளின் கிரெயில் பீடம் பிரையரி ஆஃப் சீயோனில் ஒரு ரகசிய மறைவிடத்தில் வைக்கப்பட்டுள்ளது, அது ரோஸ்லின் சாப்பலுக்கு பின்னால் கூட இருக்கலாம். மேரி மகதலேனா மற்றும் இயேசுவின் இரத்தவம்சத்தைப் பற்றிய உண்மையை அந்த ஆலயம் 2000 வருடங்களாக மறைத்து வைத்துள்ளது. இது அவர்கள் புனிதமான பெண்மையின் வல்லமையை எண்ணி அஞ்சுவதால், ஏனென்றால் அது ஒரு அப்போஸ்தலராக புனித பீட்டரின் முதன்மைத்துவத்தை எதிர்ப்பதாக இருக்கும் என்பதால். மகதலேனா மரியாள் ராஜ குலத்தை சார்ந்தவர் (யூத வம்சத்தில் பெஞ்சமீன் கோத்திரத்தின் வழியாக) டேவிட்டின் வம்சத்தில் வந்த இயேசுவின் மனைவியுமாவார். அவர்களின் உண்மையான உறவை மறைக்க திருச்சபையால் கண்டுபிடிக்கப்பட்ட அவதூறான கூற்று தான் அவர் ஒரு விபச்சாரி என்பதாகும். சிலுவையில் அறையப்படுகையில் அவர் கர்ப்பமாக இருந்தார். சிலுவையில் அறையப்பட்டபின், காவுலுக்கு சென்று, மார்சீலின் யூதர்களோடு அடைக்கலம் பெற்றார். அவருக்கு சாரா என்றொரு பெண் குழந்தை பிறந்தது. இயேசுவுக்கும் மேரி மகதலேனாவுக்கும் பிறந்த சந்ததி தான் பிரான்சின் மெரோவிங்கியன் சாம்ராஜ்யமாக உருவானது. 1099 ஆம் ஆண்டு சிலுவைப் போராளிகளால் ஜெருசலேம் கைப்பற்றப்பட்ட போது அச்சந்ததி இருந்தது என்பது தான் அந்த ஆவணங்களில் இருந்த ரகசியமாகும் (எருசலேம் பேரரசு என்பதைப் பாருங்கள்). ரகசியத்தைக் காப்பாற்ற நியமிக்கப்பட்டவர்கள் தான்பிரையரி ஆஃப் சீயோனும் நைட்ஸ் டெம்ப்ளரும். லியனார்டோ டா வின்சியின் பணிகளுக்கும் கிரெயிலின் ரகசியமும் தொடர்புபடுத்தப்படுவது தான் நாவலில் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது: லியனார்டோ பிரையரி ஆஃப் சீயோனின் உறுப்பினராக இருந்தவர், அதனால் அவருக்கு கிரெயிலின் ரகசியம் தெரியும். த லாஸ்ட் சப்பரில் ரகசியம் வெளியிடப்பட்டது, அது மேஜையின் மீது கோப்பைகள் எதுவும் வைக்கப்படவில்லை என்பதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். கிறிஸ்துவை அடுத்து அமர்ந்திருக்கும் உருவம் ஆண் அல்ல அது ஒரு பெண், அவருடைய மனைவி மகதலேனா மரியாள். அந்த வேலைப்பாடின் பல உருவாக்கங்கள், ஒரு பிந்தைய மாற்றத்தில் இருந்து வந்தவையும் அவளின் பெண்மைக் குணங்களை பழித்துச் சொல்வனவாயும் வந்தன. மோனாலிசாவின் பால் மாற்றும் வடிவம் இயேசுவுக்கும் மகதலேனா மரியாளுக்கும் இடையே உள்ள பரிசுத்த ஐக்கியத்தை உருவப்படுத்தும் ஆண் பெண் பரிசுத்த இணைவை பிரதிபலிக்கிறது. ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் உரிய சர்வலோக சக்திகளின் இடையே உள்ள ஜோடித்துவம் திருச்சபையின் ஓங்கி வளர்ந்துள்ள ஆதிக்கத்துக்கு பெரும் அச்சுருத்தலாகவே இருந்து வந்தது. மோனா லிசா என்ற பெயரே "ஆமோன் லைசா" என்பதன் ஆனக்ராமாகும், அது பழங்கால எகிப்திய மதத்தின் தாய் தந்தையரான (ஆமுன் மற்றும் ஐசிஸ் ஆகியோரைக்) குறிப்பிடுவதாகும். இயேசு தகப்பனாக இருப்பதற்கான சாத்தியம் இருப்பதையும் பலவகையான எழுத்தாளர்கள் சந்தேகிக்கிறார்கள். அவருக்கு குறைந்தது மூன்று குழந்தைகளாவது இருக்கும், சிலுவையில் அறையப்படுவதற்கு முன் பிறந்த தாமார் என்றொரு மகள், இயேசுவுக்கு இரண்டு மகன்கள் (புதிய ஏற்பாட்டின்படி ஜீசஸ் ஜஸ்டஸ் மற்றும் ஜோசபிஸ் ஆகிய இருவரும் உயிர்த்தெழுதலுக்கு பின் பிறந்தனர். அவர்களுடைய பெயர்கள் சதிகார எழுத்தாளர்களின் பொதுவான கலாச்சாரத்திலும் இடம்பெற்று வந்தாலும், இருபது ஆண்டுகள் முன்புதான், பரிசுத்த இரத்தம் மற்றும் பரிசுத்த கிரெயில் எழுதப்படுகையில் , இந்த பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. த டா வின்சி கோடின் மர்மமாக மையத்தில் இருக்கும் ராஜ வம்சத்தைச் சேர்ந்த ஜோசப்களின் குடும்பமான, அமினாடாப் டெல் கிரால்லின் தாத்தாவான "ஃபிஷர் கிங்கின்" முதலாவதும் அவர்தான். கிரெயிலின் காதலில் குறிப்பிடப்படும் சந்ததிகள் மிக குறைவான சந்ததிகளை பதிவு செய்வதாகத் தோன்றினாலும், தந்தையர்கள் அவர்களின் 40 வயதுகளில் தொடர்ந்து குழந்தைகள் பிறந்துள்ளனர். வரவேற்பு பிரவுனின் நாவல் 2004ஆம் ஆண்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, ஜே.கே.ரௌலிங்கின் ஹரி பொட்டர் அன்ட் த ஆடர் ஆப் த ஃபீனிக்ஸ் புத்தகம் மட்டுமே அதனை முறியடித்தது.[1] முதியோர்க்கான புதின வகைப்பிரிவில் புக் சென்சின் 2004 ஆம் ஆண்டுக்கான புக் ஆஃப் த இயர் விருதை வென்றது. அதன் மூலம் த நியூயார்க் டைம்ஸ் , பீப்பில் , மற்றும் த வாஷிங்டன் போஸ்ட் அகியவற்றில் இருந்து பல சாதகமான விமர்சனங்களும் அதைப் போன்ற குட்டிப் புத்தகங்களும் வெளியாயின. அதோடு, ரேமண்ட் கோரி'யின் த லாஸ்ட் டெம்ப்ளர் மற்றும் ஸ்டீவ் பெரி'யின் த டெம்ப்ளர் லெகசி உட்பட அதனைப் போன்ற பல நாவல்களையும் த டாவின்சி கோட் ஈர்த்தது. 2008 ஆம் ஆண்டு 15 ஆயிரம் ஆஸ்திரேலிய வாசகர்களிடம் எடுக்கப்பட்ட சர்வேயில், இது வரை எழுதப்பட்ட மிகச் சிறந்த 101 புத்தகங்களின் பட்டியலில் நான்காவதாக வந்தது.[2] இப்புத்தகம் அதன் இலக்கிய மதிப்பு மற்றும் வரலாற்றைச் சித்தரித்துள்ள விதம் குறித்த எண்ணற்ற நேர்மறையான மதிப்புரைகள் கொண்ட கருவைக் கொண்டிருந்த போதும், விமர்சகர்களால் பொதுவாக வரவேற்கப்படவில்லை. அதன் எழுத்து மற்றும் வரலாற்றுத் துல்லியத்தன்மைக்காக த நியூ யார்க்கர் ,[3] த நியூ யார்க் டைம்ஸ் ,[4] மற்றும் சாலன்.காம்,[5] மற்றும் பலவற்றில் கடுமையாக கண்டனத்துடன் விமர்சிக்கப்பட்டது. விமர்சனம் துல்லியமற்ற வரலாறு கிறிஸ்தவத்தின் மைய கருத்துகள், கத்தோலிக்க திருச்சபையின் வரலாறு, ஐரோப்பிய கலையின் குறிப்புகள், வரலாறு மற்றும் கலையின் துல்லியமற்ற விளக்கத்தினால் இப்புத்தகம் முதலில் வெளியிடப்பட்ட போது கடும் விமர்சனம் உருவானது. கத்தோலிக்க மற்றும் மற்ற கிறிஸ்தவ சமூகத்தினரால் பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களையே இப்புத்தகம் பெற்றது. இந்த புத்தகத்தை பிரசுரிக்கும் முன் இன்னும் அதிக ஆராய்ச்சியை பிரவுன் மேற்கொண்டிருக்க வேண்டும் என பல விமர்சகர்கள் தெரிவித்தனர். பிப்ரவரி 22, 2004 அன்று நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் எழுத்தாளர் லாரா மில்லரால் எழுதப்பட்ட கட்டுரை ஒன்று "த லாஸ்ட் வேர்டு: த டா வின்சி கான்" என்ற தலைப்பில் வெளியானது.[4] டா வின்சி கோடை மில்லர் பல்வேறு கட்டங்களில் தாக்கி எழுதியிருந்தார், அதில் அவர் இப்புத்தகம் ஒரு "மோசமான புரளியின் அடிப்படையில்" உருவானதாகவும், "முட்டாள்தனமாக தரமிடப்பட்டதாகவும்" "போலி"யானது என்றும் குறிப்பிட்டிருந்தார், அதோடு [[பியர் பிளாண்டர்டின்[]] புனைவுகளையே இப்புத்தகம் வெகுவாக சார்ந்திருப்பதாக குறிப்ப்பிட்டிருந்தார் (பிளாண்டர்டு அதனை உருவாக்கும் முன் பிரையரி ஆஃப் சீயோன் என்று ஒன்றே இல்லை) அவர் அது போன்ற மோசடிகளை செய்ததற்காகவே குற்றம் சாட்டப்பட்டு 1953இல் கைது செய்யப்பட்டவராவார். பிரவுனின் எழுத்தை உரு வேறுபடுத்தும் புனையப்பட்ட வரலாறு என விமர்சகர்கள் குற்றம்சாட்டினர். உதாரணத்திற்கு, மார்சியா ஃபோர்டு எழுதியது: Regardless of whether you agree with Brown's conclusions, it's clear that his history is largely fanciful, which means he and his publisher have violated a long-held if unspoken agreement with the reader: Fiction that purports to present historical facts should be researched as carefully as a nonfiction book would be.[6] ரிச்சர்டு அபேன்ஸ் எழுதியது: The most flagrant aspect… is not that Dan Brown disagrees with Christianity but that he utterly warps it in order to disagree with it … to the point of completely rewriting a vast number of historical events. And making the matter worse has been Brown's willingness to pass off his distortions as ‘facts' with which innumerable scholars and historians agree.[6] டான் பிரவுன் புத்தகத்தில் குறிப்பிட்டதையடுத்து 1099 இல் உருவாக்கப்பட்ட "த பிரையரி ஆஃப் சீயோன் — ஒரு ஐரோப்பிய ரகசியக் கூட்டம் — ஒரு நிஜ இயக்கம் தான்". பிரையரி ஆஃப் சீயோன் என்பதே திரு. பியர் பிளான்டர்டால் 1956இல் உருவாக்கப்பட்ட ஒரு புரளி தான். இந்த நாவலில் குறிப்பிடப்பட்ட "கலைப்பனி, கட்டிடக்கலை, ஆவணங்கள் ... மற்றும் ரகசிய சடங்குகள் அனைத்துமே துல்லியமானவை என இதன் ஆசிரியர் வலியுறுத்தினாலும், இந்த புத்தகம் குறிப்பிடும் பகுதிகளின் அந்தந்த துறை அறிஞர்கள் அனைவராலுமே எதிர்ப்பை சந்தித்துள்ளது. எந்த ஒரு குறிப்பின் துல்லியத்தன்மையையும் நியாயப்படுத்துவது ஏன் கடினம் என்பதை விளக்கும் எண்ணற்ற புத்தகங்கள் வெளியாயின, அதே நேரம் த டா வின்சி கோடில் கருத்துத் திருட்டு என குற்றம்சாட்டிய இரண்டு வழக்குகள் நடந்து கொண்டிருந்தன. பிப்ரவரி 2006இல் காப்புரிமை அத்துமீறலின் முதல் வழக்கு த ஹோலி பிளட் அன்ட் த ஹோலி கிரெயில் புத்தகத்தின் ஆசிரியர்களால் பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் வழக்காக்கப்பட்டது, அந்த புத்தகத்தில் மேரி மகதேலனாவை நாசரேத்தாராகிய இயேசுவின் மனைவியாகவும் அவருடைய குழந்தையின் தாயாகவும் சித்தரித்து புனைந்து எழுதியது டான் பிரவுனின் படைப்பிலும் வந்துள்ளது. இரண்டாவது வழக்காக அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்காவில் த வேட்டிகன் பாய்ஸ் புத்தகத்தின் ஆசிரியரான ஜாக் டன்னால் ஏற்படுத்தப்பட்டு இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. மூன்றாவது ஆசிரியராக லீவிஸ் பெர்டியுவின் 1983இல் முதன்முதலாக வெளியான த டா வின்சி லெகசி மற்றும் 2000வது ஆண்டு முதன்முதலாக வெளியிடப்பட்ட டாட்டர் ஆஃப் காட் என்ற அவரது இரு நாவல்களும் பிரவுனால் கருத்துத்திருட்டு செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தகம் மற்றும் திரைப்படத்தின் விநியோகத்தை தடுக்க முயற்சித்தார். இருந்த போதும் நியூயார்க்கின் அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி ஜார்ஜ் டேனியல்ஸ் 2005இல் பெர்டியுவை கண்டித்தார், அவர் குறிப்பிடுகையில் "எந்த ஒரு நியாயமான சராசரி பார்வையாளரும் த டாவின்சி கோட் டாட்டர் ஆஃப் காடுக்கு ஒற்றுமையுடையதாக இருப்பதாக ஒத்துக்கொள்ள மாட்டார்" என்றும் பொதுவான நிலையில் சில சாதாரண ஒற்றுமையான கூறுகள் அல்லது பாதுகாக்கப்ப்பட்டிராத சிந்தனைகள் மட்டுமே உள்ளன" என்றார்.[7] அமெரிக்க 2ம் நிலை சர்கியூட் நீதிமன்றத்தில் முதல் தீர்ப்பை எதிர்த்து பெர்டியு மேல்முறையீடு செய்த போது, திரு பெர்டியுவின் வாதங்கள் "சரியானவை அல்ல" என தள்ளுபடி செய்தது.[8] தன் வலைத்தளத்தின் மூலம் உண்மையை விளக்கி பல முரண்பாடான கருத்துகளை தாமே சரிசெய்கிறார் டான் பிரவுன்: புனைவியல் கதாப்பாத்திரங்களால் விவாதிக்கப்படும் பழங்கால கதைகள் எதுவானாலும் "த ஃபேக்ட்" பக்கத்தில் எந்த அறிக்கையும் செய்யப்படுவதில்லை. அச்சிந்தனைகளை விளக்கிச் சொல்லும் பொறுப்பு வாசகர்களுக்கே விடப்பட்டது".[9] அதில் "இந்த நிஜ கூறுகள் புனைவியல் கதாப்பாத்திரங்களால் விளக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது", "இந்த கதாப்பாத்திரங்களால் விளக்கப்படும் கோட்பாடுகளில் சில கோட்பாடுகள் சிறப்பானவையாகத்தான் இருக்கும் என்பது எனது நம்பிக்கையாகும்" மற்றும் "த டா வின்சி கோடின் பின் இருக்கும் ரகசியமானது சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளதும் அதனை புறக்கணிப்பது எனக்கு முக்கியமானதுமாக இருக்கிறது" என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. புத்தகத்தில் உண்மையாகவே கொடுக்கப்பட்டிருப்பது என்ன என்பது பற்றிய குழப்பம் ஏன் தொடரும் என்பதும் தெளிவாகவே புரிகிறது. பிரவுன் தன் புத்தகத்தின் வரலாற்று தகவலின் துல்லியத்தன்மை பற்றி ஆரம்பத்தில் கூறிய அறிவிப்புகள், கொஞ்சம் கடுமையானதாகவே இருந்தது. 2003இல், அவருடைய நாவலை விளம்பரப்படுத்த வந்த போது, பேட்டிகளில் அவருடைய நாவலில் உள்ள வரலாற்றில் எந்தெந்த பகுதிகள் நிஜமாகவே நடந்தவை என கேட்கப்பட்டார். அதற்கு அவர் "நிச்சயமாக அவை அனைத்துமே". 2003இல் CNNஇன் மார்டின் சேவிட்ஜ் நடத்திய பேட்டியிலும், அதன் வரலாற்றுப் பின்னணியில் எந்தளவுக்கு உண்மை உள்ளது எனக் கேட்கப்பட்டார். அதற்கு அவர், "99% உண்மை ... பின்னணி அனைத்துமே உண்மை தான்" என்றார். ஏபிசி செய்திகளின் சிறப்பு நிகழ்ச்சியில் எலிசபெத் வர்காஸ், இந்த புத்தகத்தை ஒரு புனைவியல் அற்ற நூலாக வித்தியாசமாக எழுதியிருந்தால் என்னவாகியிருக்கும் எனக் கேட்டதற்க்கு, "அது அப்படியாகும் என நான் நினைக்கவில்லை" என பதிலளித்தார்.[10] மிக சமீபத்தில் பிரவுன் பேட்டிகளை தவிர்த்து வருகிறார், அதோடு தன் சில பொது அறிக்கைகளில் தன் கூற்றுகளின் துல்லியத்தன்மை பற்றி பேசுகையில் சுற்றுப்புறத்துக்கு ஏற்ப பேசுகிறார். நாவலின் துல்லியத்தன்மை பற்றிய அவருடைய கூற்றுகளுக்கு எதிரான துறைரீதியான விமர்சனங்கள் தவிர வேறு எந்த முந்தைய கருத்துகளில் இருந்தும் அவர் பின்வாங்கவே இல்லை. 2005இல், யூகே டிவி பிரபலம் டோனி ராபின்சன் டான் பிரவுனின் முக்கிய வாதங்களோடு பாய்கன்ட், லே, மற்றும் லிங்கன் ஆகியோரின் வாதங்களோடு எதிர்ப்புரை விளக்கத்தினை திருத்தி உரைநடையாகத் தொகுத்தார், "த ரியல் டா வின்சி கோட்" என்ற பெயரில், சேனல் 4 பிரிட்டிஷ் டிவியில் திரையிட்டார். த டா வின்சி கோட் புத்தகத்தில் "நிஜ உண்மை" என பிரவுனால் காட்டப்பட்ட முக்கிய கதாநாயகர்கள் பலரின் நீளமான பேட்டியோடு அந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அர்னாடு டி சேடின் மகனான ஜெரார்டு டி சேட் குறிப்பாக வகைப்படுத்தி கூறுகையில் தன் தந்தையும் பிளான்டர்டும் இணைந்து தான் பிரையரி டி சீயோன் இருப்பதையும் இயேசுவின் வம்சம் கோட்பாடின் முக்கியத் தூணாக இருந்தனர் என்றார் - அந்நிகழ்ச்சியில் அர்னார்டு டே சீயோன் குறிப்பிடுகையில் "அப்பட்டமாக, அது ஒரு புரட்டு" என்றார். அந்நிகழ்ச்சியில் ரோஸ்லின் சேப்பலுக்கும் கிரெயிலுக்கும் உள்ள தொடர்பையும் பிரான்சில் மகதலேனா மரியாள் இருந்ததாக உள்ள கட்டுக்கதைகளுக்கும் உள்ள தொடர்பையும் குறித்து கடுமையான சந்தேகம் ஏற்படுத்தப்பட்டது. ஆரம்ப கால கிறிஸ்தவத்தின் சித்தரிப்பு த ட வின்சி கோடைப் பொறுத்தவரையில் ரோம அரசன் கான்ஸ்டான்டைன் நாஸ்டிசஸத்தில் இயேசு தூய்மையான மனிதராக சித்தரிக்கப்பட்டதற்காக அதனை ஒடுக்கினான். நாவலின் விவாதம் பின்வருமாறு.[11] ரோம சாம்ராஜ்யத்தின் ஒரே மதமாக கிறிஸ்தவத்தை மாற்ற விருப்பப்பட்டார் கான்ஸ்டான்டைன். பாகனிய தலைவர்களைப் போன்ற ஒரு கடவுளின் அவதாரமாகக் மட்டும் காட்டினால் கிறிஸ்தவம் பாகன்களுக்கு பொருந்தும் என எண்ணினார். நாஸ்டிக் சுவிசேஷங்களின்படி இயேசு ஒரு முழுக்கமுழுக்க மனித தீர்க்கதரிசி மட்டுமே, கடவுளின் அவதாரம் இல்லை. எனவே இயேசுவின் தோற்றத்தை மாற்ற, நாஸ்டிக் சுவிசேஷங்களை கான்ஸ்டான்டைன் அழித்து, மத்தேயு, மாற்கு, லூக்கா, மற்றும் யோவான் ஆகிய சுவிசேஷங்களை பரப்பினார், அதில் இயேசு ஒரு தெய்வீகமிக்கவராக அல்லது பாதுயளவு இறைத்துவத்தோடு இருந்ததாக சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மையில், நாஸ்டிசம் இயேசுவை முழுக்கமுழுக்க மனிதனாக சித்தரிக்கவில்லை.[12] சில நாஸ்டிக் எழுத்துக்கள் இயேசு தன் சீடர்களுடன் முழுமையான மனித ரூபத்தில் உரையாடிக் கொண்டிருந்ததாக காட்டுகின்றன, அதில் மேரி சுவிசேஷம், ஒரு எடுத்துக்காட்டு, ஆனால் பொதுவான நாஸ்டிக்கின் இயேசுவைப் பற்றிய உருவாக்கம் தெளிவாகவே தரப்படவில்லை. பல நாஸ்டிக் எழுத்துகள் கிறிஸ்துவை சுத்தமான தெய்வீகத்தன்மையுடன் காண்பிக்கின்றன மனித உடல் ஒரு முழு மாயையானது என்றும் கூறப்பட்டுள்ளது (டோஸ்டிசம் எனபதைப் பார்க்கவும்).[13] சில நாஸ்டிக் பிரிவுகள் ஆவியை தீயசக்தியாக கருதியதால் கிறிஸ்துவை இப்படியாகவே பார்த்தார்கள், எனவே ஒரு தெய்வீக சக்தி மனித உடல் எடுத்து வரமுடியாது என நம்பினார்கள்.[14] த டா வின்சி கோட் நிசேயா பிரமானத்தின் தீர்மானத்தையும் சித்தரிக்கிறது, அதன் மூலம் கிறிஸ்துவின் முழு மனித மற்றும் இறை கருத்துகளை ஒரு நெருக்கமான ஓட்டாக கருதினர், அதே நேரம் பல எழுத்தாளர்கள் அதனை எதிர்த்தார்கள்.[15][16] இலக்கிய விமர்சனம் இந்நாவல் இலக்கிய வட்டாரங்களிலும் அதன் கலை அல்லது இலக்கியச் சிறப்புக் குறைவாலும், பிரிட்டிஷ் மற்றும் பிரஞ்ச் கதாப்பாத்திரங்களின் ஒரேமாதிரியான சித்தரிப்புக்காக பெரும் விமர்சனங்களை சந்தித்தது. சல்மான் ருஷ்டி ஒரு பேருரையின் போது, "கெட்ட நாவல்களுக்கு ஒரு கெட்ட பெயரை வங்கித் தரும் கெட்ட நாவலான 'த டாவின்சி கோடை' வைத்து என்னிடம் தொடங்காதீர்கள்" என்றார்.[17] ஸ்டீபன் பிரை பிரவுனின் எழுத்துகளை "முழுக்க முழுக்க கழிவு நீர்" என்றும் "கெட்டுப்போன தன்மையின் அழுகியச் சாறு" என்றும் குறிப்பிட்டுள்ளார். ஜூன் 14, 2006இல் ஒரு நேரடி ஒளிபரப்பு அரட்டையின் போது, "பரிசுத்த கிரெயில் மற்றும் மேசான்கள் மற்றும் கத்தோலிக்க திருச்சபை குறித்த சதி மற்றும் அதன் மொத்த சரிவையும் பற்றிய இந்த புத்தகங்கள் அனைத்தையும் வெறுக்கிறேன் எனத் தெளிவுபடுத்தினார். அதாவது, கலையிலும் வரலாற்றிலும் ஆர்வமுடையதும் அற்புதமானதும் கொண்டவை நிறைய உள்ளன. கடந்த காலத்தின் மோசமானவற்றை பற்றி சிந்திக்க ஆசைப்படுவதும் அதைக் குறித்து ஏதாவது ஒரு முட்டாள்தனமான வகையில் உயர்வாக உணர்வதும் மனிதவர்க்கத்தின் மிக சோம்பலான மோசமானதாக செயல்படுகிறது" என்றார்.[18] 2005இல் மெயின் பல்கலைக்கழக வரவேற்புறையில், சிறப்பு விற்பனைப் புத்தக எழுத்தாளரான ஸ்டீபன் கிங் டான் பிரவுனின் புத்தகத்தையும் "ஜோக்ஸ் பார் த ஜான்" என்ற புத்தகத்தையும் சம அளவில் வைத்து, இது போன்ற இலக்கியமானது "கிராஃப்ட்ட மேகரோனி மற்றும் சீஸ் போன்றதற்கு அறிவுப்பூர்வ சமமானது" என விவரித்தார்.[19] த நியூ யார்க் டைம்ஸ் புத்தகத்தின் அடிப்படையில் திரைப்படத்தை விமர்சிக்கையில் "ஒரு ஆங்கில வார்த்தையை எவ்வாறு எழுதக்கூடாது என்பது பற்றிய டான் பிரவுனின் சிறப்பு விற்பனை முன்னோடி" என குறிப்பிட்டது.[20] "குறைசொல்லமுடியாத குப்பை" என்றும் "சிதைக்கப்பட்ட நடை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.[3] லாங்வேஜ் லாகில் மொழி வல்லுநர் ஜெஃப்ரி புல்லம் மற்றும் பலர் டான் பிரவுனின் எழுத்துகளைப் பற்றி சிக்கலான பல பதிவுகளை பதிவு செய்தனர், அதில் பிரவுனை "இலக்கிய வரலாற்றிலேயே மிக மோசமான கட்டுரை நடையாளர்களில்" ஒருவர் என்றும் பிரவுனின் "எழுத்து மோசமானது மட்டுமல்ல; அது வியப்பூட்டத்தக்க, குழப்பம்நிறைந்த, சிந்தனையற்ற, கிட்டத்தட்ட மோசமான புனைதிறமிக்கதாக இருக்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளனர். ரோஜர் ஈபர்ட் அதனை "சிறிதளவு நளினமும் நடையும் கொண்டு எழுதப்பட்ட வேகவைக்கும்பானை" என விவரித்தார், அதோடு அதனை "ஒரு உட்கிளர்ச்சி ஏற்படுத்தக்கூடிய கதைக்களத்தை அளிக்கக்கூடியது" என்றும் விவரித்தார்.[21] பகடிகள் 2005 ஆடம் ராபர்ட்ஸ் இப்புத்தகத்தை த வா டின்சி காட் என்றும் டோபி கிளிமண்ட்ஸ் இதனை த ஆஸ்டி ஸ்புமேண்ட் கோட் என்றும் பகடி செய்தனர். 2005இன் இறுதியில் காத் &amp; கிம் என்ற ஆஸ்திரேலிய தொலைக்காட்சி தொடரின் சுழற்சியில் வந்த தொலைக்காட்சித் திரைப்படத்தில் திரைப்பட பதிப்பு டா காத் அன்ட் கிம் கோட் என்ற பெயரில் பகடி செய்யப்பட்டது. 2006 பிபிசி நிகழ்ச்சியான டெட் ரிங்கர்ஸில் டா வின்சி கோடை, டா ரால்ஃப் ஹாரிஸ் கோட் என்ற பெயரில் பகடி செய்தனர். பிரபல தென் ஆப்பிரிக்க அரசியல் கார்டூன் கலைஞரான சாபிரோ அவரது துண்டுச் சேகரிப்புகள் அடங்கிய புத்தகத்தை டா ஜூமா கோட் என்ற பெயரில் வெளியிட்டார், அதில் முன்னாள் துணை அதிபர் ஜேகப் ஜூமா வைப் பகடி செய்திருந்தார். 2007 சவுத் பார்க் பாகமான "பண்டாஸ்டிக் ஈஸ்டர் ஸ்பெஷல் " மற்றும் ராபர்ட் ராங்கினின் நாவலான {{2}த டா-டா-டி-டா-டா கோடில் இப்புத்தகம் பகடி செய்யப்பட்டிருந்தது. எபிக் மூவி என்ற திரைப்படத்தில் லூசி மற்றும் சைலஸ் கதாப்பாத்திரங்கள் பகடி செய்யப்பட்டிருந்தன. த டாவின்சி கோட் திரைப்படத்தின் துவக்கத்தில் அனாதையான லூசியை சைலஸ் துரத்துவதைப் போல், ஒரு மியூசியத்தில் சோபி நிவியூவை பகடி செய்து இந்த படத்தின் முதல் காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது. படம் முழுவதும் சைலஸ் லத்தீன் மொழியில் பேசுகிறார். பகடியின் காரணமாக அவருடைய பேச்சின் மொழிபெயர்ப்புகள் தவறானவையாக உள்ளன (எடு சைலஸ் "எத் து ப்ரூட்? என்று" அஸ்லோவிடம் சொல்வது படத்தில் "நான் ரிக் ஜேம்ஸ், பிச்!" என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது). ஸ்ஜைபிர் ஜனா மேடஜ்கி (ஜேன் மேடஜ்கோ'வின் சைபர் ) என்ற போலிஷ் பகடி டரியஸ் ரிகோஸ் என்பவரால் சொல்லப்படுகிறது. கோ(ஸ்)மிக்ஸ்னா பியூட்ரைனா: ஸ்ஜைபிர் ஜனா மேடஜ்கி II என்ற தொடர் (கா[ஸ்]மிக் டோர் பிரேம்: ஜேன் மேடஜ்கோ'வின் சைபர் II ) 2008இல் வெளியானது. மனிதகுலத்தின் மாபெரும் ரகசியத்தை தீர்க்க முயற்சிக்கும் இன்ஸ்பெக்டர் ஜோசஃப் ஸ்வைன்டி முக்கிய கதாப்பாத்திரமாக வருகிறார் பியாஸ்ட் சாம்ராஜ்யத்தின் -பொறுப்பாளராக (நாஜ்வீக்ஸா டாஜம்னிகா லுட்ஜ்கோஸ்கி ). அமெரிக்கன் டேட் பாகமான பிளாக் மிஸ்டரி மந்தில் இந்த புத்தகம் பகடிசெய்யப்பட்டது. ஸ்டான் தேடும் முரண்பாடான உண்மையாக மேரி டாட் லிங்கன் உருவாக்கியது ஜார்ஜ் வாஷிங்டன் கார்வரை அல்ல வேர்க்கடலை பட்டர் என்று அமைக்கப்படிருந்தது. 2008 2008இல் தட் மிட்சல் அன்ட் வெப் லுக் என்ற அதன் இரண்டாம் தொடரை பகடி செய்த போது காட்சியில் மீண்டும் மீண்டும் வரும் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு புனைவுத் திரைப்படத்தின் டிரெயிலராக "த நம்பர்வாங் கோட்" அமைக்கப்பட்டது. மார்ச் 2008இல், அயர்லாந்து பதிவர் டிவெண்டி மேஜர்,[22] தன் முதல் புத்தகமான த ஆர்டர் ஆஃப் த பீனிக்ஸ் பார்க்[23] கில் பகடிக் கூறுகளாக வைத்தார்[23] ஈர்ப்பும் தாக்கங்களும் மாற்று மத வரலாற்றின் தேடலின் ஒரு பகுதியாக நாவல் அமைகிறது. அதன் முதன்மை ஆதார புத்தகம் லின் பிக்நெட் மற்றும் கிளைவ் பிரின்சின் த டெம்ப்ளர் ரெவலேசன் மற்றும் மார்கரட் ஸ்டார்பேர்டின் புத்தகங்களின் நீதிமன்ற வழக்கின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டது. முந்தைய நாவல் ஒரு இயேசுவின் வம்சாவழி என்னும் கருவை ஏற்கனவே பயன்படுத்தியிருந்தது: 1980இல் வெளியான லிஸ் கிரீனால் எழுதப்பட்ட த டிரிமர் ஆஃப் த வைன் (அந்த சமயத்தில் ரிச்சர்டு லேவின் சகோதரியும் மைக்கேல் பாய்கண்டின் தோழி). த ஹோலி பிளட் அன்ட் த ஹோலி கிரெயில் (அதன் 60வது அத்தியாயத்தில் பலருக்கு மத்தியில் வெளிப்படையாக பெயரிடப்பட்டது), தன்னுடைய முதனிலை ஆராய்ச்சி பொருளாக இருக்க முடியாது என டான் பிரவுனால் குறிப்பிடப்பட்டது. தன் உத்வேகத்துக்கான ஆதாரங்களாக மேற்கண்ட புத்தகங்கள் இருந்தன என்ற ஒப்புதலை அளித்தபடி, டான் பிரவுனின் த டாவின்சி கோட் புத்தகத்தில் அதன் கதைக்களத்தின் முக்கியக் கருத்தை மீறிச் செல்கிறது, அதாவது: மெரோவிங்கிய பிரான்சின் அரசர்கள் இயேசு கிறிஸ்துவுக்கும் மகதலேனா மரியாளுக்கும் பிறந்த வம்சாவழியினர் ஆவர். ரிச்சர்டு லே மற்றும் மைக்கேல் பாய்கென்ட் ஆகியோரைக் குறிப்பிடும் வண்ணம், (த ஹோலி பிளட் அன்ட் த ஹோலி கிரெயில் புத்தகத்தின் இரு ஆசிரியர்கள்), தன் கதையின் முக்கிய கிரெயில் நிபுணருக்கு "லீ டீபிங்" எனப் பெயரிட்டுள்ளார் பிரவுன் ("பாய்கன்ட் லே"யின் ஒரு அனக்ராம்). நீதிமன்ற வழக்கின் போது பிரவுன் இதனை உறுதி செய்தார். லிங்கனும் குறிப்பிடப்படுகிறார் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், அதாவது லீ டீபிங் என்ற கதாபாத்திரத்திற்கு கடுமையாக நொண்டக்கூடிய மருத்துவ பிரச்சனைகள் ஏற்படுவதாக வருவதால், லிங்கனுக்கு அப்படி ஒரு சுகவீனம் இருந்தது தமக்கு தெரியாது என்றும் அது எதேச்சையாக குறிப்பட்டதே என்று விளக்கமளித்தார். ஜூலை 12, 2006இல் உயர் நீதிமன்றத்தின் முன் தோற்கும் முன், மைக்கேல் பாய்கன்டும் ரிச்சர்டு லேயும் மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் முன் தோற்றிருந்தனர்.[24][25] வழக்கை அடுத்து, இந்த விளம்பரம் ஒரு வழியில் த ஹோலி பிளட் அன்ட் த ஹோலி கிரெயில் புத்தகத்தின் யூகே விற்பனையில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தை ஏற்படுத்தியது[26] 1996இல் புரோக்கன் ஸ்வார்டு: த ஷேடொ ஆஃப் த டெம்ப்ளர்ஸ் என்ற வீடியோ கேமிலும் சில குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் ஏற்பட்டன. வெளியீட்டு விவரங்கள் இந்த புத்தகம் முதலில் கட்டியான உரையிலே, 40க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[27] ஆடியோ கேசட், CD, மற்றும் ஈ-புத்தகம் உட்பட மாற்று வடிவமைப்புகளும் அடங்கும். மிக சமீபத்தில், டிரேடு பேப்பர்பேக் பதிப்பு என திரைப்படத்தை ஒத்து மார்ச் 2006இல் வெளியிடப்பட்டது. பிரதான ஆங்கில-மொழி (கட்டி உறை) பதிப்புகளில்: (யூஎஸ்) த டாவின்சி கோட் , ஏப்ரல் 2003 (முதல் பதிப்பு), டபுள் டே, ஐஎஸ்பிஎன் 0-385-50420-9. த டாவின்சி கோட், சிறப்பு விளக்க பதிப்பு , நவம்பர் 2, 2004, டபுள்டே, ஐஎஸ்பிஎன் 0-385-51375-5 (ஜனவரி 2006 உடன், 576,000 நகல்கள் விற்கப்பட்டுள்ளன). (யூகே) த டா வின்சி கோட் , ஏப்ரல் 2004, கோர்கி அடல்ட். ISBN 0-552-14951-9. (யூகே) த டா வின்சி கோட்: விளக்கப் பதிப்பு , அக்டோபர் 2, 2004, பண்டம் பிரஸ். ISBN 0-593-05425-3. (யுஎஸ்/கனடா) த டா வின்சி கோட் (டிரேடு பேப்பர்பேக் பதிப்பு), மார்ச் 2006, ஆங்கர் புத்தகங்கள். மார்ச் 28, 2006இல், ஆங்கர் புத்தகங்கள் இப்புத்தகத்தின் 5 மில்லியன் பேப்பர்பேக் நகல்களை வெளியிட்டது, பிராட்வே புத்தகங்கள் த டா வின்சி கோட் சிறப்பு விளக்கப் பதிப்பின் 200,000 பேப்பர் பேக் நகல்களை வெளியிட்டது. மே 19இல், படம் வெளியிடப்பட்ட நாளில், திரைக்கதை ஆசிரியர் அகிவா கோல்ட்ஸ்மேனால் ரான் ஹோவர்டு மற்றும் டான் பிரவுனின் அறிமுகங்களுடன் த டாவின்சி கோடின் விளக்கத் திரைக்கதை: பிரதான திரைச் சித்திரத்தின் திரையாக்கக் காட்சிகளுக்குப் பின்னால் டபுள்டே மற்றும் பிராட்வே புத்தகங்கள் மூலம் வெளியிடப்பட்டது. அதில் பட ஸ்டில்கள், திரைக்குப் பின்னால் போட்டோக்கள் மற்றும் முழு ஸ்கிரிப்ட் அடங்கியுள்ளது. கட்டிஉறையின் 25000 நகல்களும் பேப்பர் பேக் பதிப்பில் 200,000 நகல்களும் இருந்தன.[28] புதிர்கள் புக் ஜாக்கெட் நாவலின் விளம்பரப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க பதிப்பின் புக்ஜாக்கெட்டில் சில கலைப் பணிகள் இருகும், அதில் குறியீடுகளும் இருக்கும், அதனை தீர்த்துவைக்கும் வாசகருக்கு ஆசிரியரின் வலைத்தளத்தின் வழியாக ஒரு பரிசு கொடுக்கப்படும். பல ஆயிரம் மக்கள் குறியீடுகளைக் கண்டுபிடித்தபோது, 2004 இன் துவக்கத்தில் வெற்றியாளர் யார் என சீட்டுக் குழுக்கிப் போட்டு எடுக்கப்பட்டு, குட் மார்னிங் அமெரிக்கா நிகழ்ச்சியில் நேரலை தொலைக்காட்சியில் பெயர் அறிவிக்கப்பட்டது. அதற்கான பரிசு பாரிசுக்கு ஒரு பயணம் மறைக்கப்பட்ட ஐந்து புதிர்கள் வெளியிடல்: புக் ஜாக்கெட் பற்றிய புத்தகத்தில் அட்சக்கோடு மற்றும் நீளவாக்கு துணைப்புள்ளிகள் மாற்று வாக்கில் எழுதப்பட்டிருக்கும், அடர் சிவப்பின் மீது இளஞ்சிவப்பு. அட்சக்கோட்டுக்கு ஒரு டிகிரி சேர்த்தால், கிரிப்டோஸ் என்னும் மர்ம சிலை இருக்கும் இடமான வடக்கு விர்ஜீனியாவின் மத்திய புலனாய்வு நிறுவனத்தின் தலைமையகம் கிடைக்கும். சிலையின் இரண்டாம் பகுதி உரையை குறிநீக்குகையில் இந்த துணைப்புள்ளிகள் எடுக்கப்பட்டன (பாகம் 4 இன்னும் தீர்க்கப்பட்வில்லை). துணைப்புள்ளிகள் ஏன் ஒரு டிகிரி டிகிரி தள்ளி இருக்கின்றன என பிரவுனிடம் கேட்டதற்கு. "அது ஒரு திட்டமிடப்பட்ட குழப்பம்" என பதிலளித்தார். புக் ஜாக்கெட்டில் தடித்த எழுத்துகள் உள்ளன. புத்தக மடிப்புகளுக்குள் மறைக்கப்பட்ட உரையில் ஒரு ரகசிய செய்தி உள்ளது. செய்தி: விதவையின் மகனுக்கு எந்த உதவியும் இல்லையா (ஃபிரிமேசன்ரி என்பதைப் பார்க்கவும்). "WWவிற்கு மட்டும் தெரியும்" என்ற வார்த்தைகளஈ புத்தக உறையில் பார்க்கலாம். புத்தக உறையின் கிழிந்த பகுதியில் அந்த சொற்றொடர் தலைகீழாக இருக்கும். இது கிரிப்டாஸ் சிலையின் பாகம் 2 -க்கான குறிப்பாகவும் இருக்கும்.[29] எண்களுடனான ஒரு வட்டம், டபுள்டே லோகோவுக்கும் பார்கோடுக்கும் இடையில், ஒரு ரகசிய செய்தியை வெளியிடும். இவை சீசர் பெட்டி வடிவமைப்பில் அமைக்கப்பட்ட சுருக்கெழுத்துகளாக உள்ள அத்தியாய எண்கள். இது முதல் கிரிப்டெக்சில் உள்ள புதிராக புத்தகத்தின் உறையில் தலைகீழாக எழுதப்பட்டு இருக்கும். தன் வலைத்தளம் மற்றும் நேரில் குறிப்பிடுகையில் தன் அடுத்த நாவலான த லாஸ்ட் சிம்பலின் கருப்பொருள் பற்றிய உதவிக்குறிப்புகள் புக் ஜாக்கெட்டில் உள்ள புதிர்களில் இருப்பதாக குறிப்பிட்டார். இது அவருடைய முந்தைய நாவல்களின் கருப்பொருளை மீண்டும் மீண்டும் உரைக்கிறது. உதாரணத்திற்கு, டிசப்சன் பாயிண்ட் டில் ஒரு மறைக்கப்பட்ட செய்தி இருந்தது, அதை தீர்க்கையில் த டாவின்சி கோட் நிலைத்திருக்கும் என்று பிரவுன் கூறியிருந்தார். த டா வ்ன்சி கோடின் எளிதாக்கப்பட்ட சீனப் பதிப்பில் உறையில் ஒரு ரகசிய உரை கொடுக்கப்பட்டது, அதனை கொஞ்சம் எளிதாகவே பார்த்துவிடலாம். அதில்: "13-3-2-1-1-8-5 ஓ, டிராகோனிய பிசாசே! ஓ, நொண்டிச் சாமியே! குறிப்பு. ராபர்ட் லாங்டனைக் கண்டுபிடி." இது முழு நாவலின் கதைக்களத்தையும் தொடங்கி வைக்கும் மியூசியத்தில் கிடந்த பிணத்துக்கு அருகில் கண்ணுக்கு தெரியாத மையில் பல குறியாக்கப்பட்ட உதவிக்குறிப்பு. பக்கங்கள் கீழே பட்டியலிடப்பட்ட இந்த புதிர்கள் அனைத்தும் த டாவின்சி கோடின் பெரிய சந்தையான அமெரிக்க பேப்பர்பேக் பதிப்பின் பக்கத் தலைப்புகளில் காணப்பட்டன. பக்கம் 60: "டான் பிரவுனின்" இடத்தில் "ஆங்க் பென்டைல்" ("கத்திக் கைப்பிடி"யின் ஆனக்ராம்" பக்கம் 95: "டா வின்சியின்" இடத்தில் "டி லாங்க்ஸ்" ("மெழுகுதிரிகளின்" ஆனக்ராம்) பக்கம் 138: "டான் பிரவுனின்" இடத்தில் "டாஸ் பிரில்லி" ("பில்லியர்ட்ஸின்" ஆனக்ராம்) பக்கம் 141: "டா வின்சி"யின் இடத்தில் "லா சஃப்ரெட்" (சரி/தவறின்" ஆனக்ராம்) பக்கம் 155: பக்க எண்ணின் இடத்தில் "ஸோஸ்" பக்கம் 192: "டான் பிரவுனின்" இடத்தில் "ரியோன் டிகால்டோ" ("தங்க விகிதத்தின் ஆனக்ராம் பக்கம் 217: "டா வின்சி"யின் இடத்தில் "டி யிசோசி" ("ஒடிசி"யின் ஆனக்ராம்") பக்கம் 262: "டான் பிரவுனின்" இடத்தில் "மெர் ரீவ்" ("வெர்மியரின்" ஆனக்ராம்) பக்கம் 322: மூன்று ஸ்டார்கள் பக்க எண்ணால் மாற்றியமைக்கப்படும் பக்கம் 138இல் உள்ள உள்ளடக்க்க உரையில் "அதனைக் கிழித்து திறந்த போது, நான்கு பாரீஸ் போன் எண்களை பார்த்தாள்" என்ற வாக்கியத்தில் "எண்கள்" என்ற வார்த்தை வழக்கமான செரிஃப் எழுத்து வடிவத்துக்கு பதில் புத்தகம் முழுவதும் மத்தியநாடுகள் எழுத்துவடிவத்தில் தடித்து எழுதப்பட்டு உள்ளது. திரைப்படம் நாவலைத் திரைப்படமாக்கும் உரிமையை கொலம்பியா பிக்சர்ஸ் பெற்று அகிவா கோல்ட்ஸ்மேனின் எழுத்தில் அகடமி விருது பெற்ற இயக்குனர் ரான் ஹோவர்டின் இயக்கத்தில் திரைப்படமாக்கியது. மே 19, 2006இல் ராபர்ட் லாங்டனாக டாம் ஹாங்க்ஸ், சோபி நிவியுவாக ஆட்ரி டௌடோவும், லீ டீபிங்காக இயான் மெக்கெல்லனும் நடித்து படம் திரைக்கு வந்தது. படம் திரைக்கு வந்த முதல் வார இறுதியில் $77,073,388 பெற்று 2006ஆம் ஆண்டில் மொத்தம் $217,536,138 வசூலானது, அதுவே 2006ஆம் ஆண்டின் ஐந்தாவது பெரிய வசூலாக அமைந்தது. உலகெங்கிலும் படம் நல்ல ஓட்டத்தைப் பெற்று, உலகளவில் $758,239,852 பெற்றுள்ளது. நவம்பர் 14, 2006இல் படத்தின் டிவிடி வெளியிடப்பட்டது. மேலும் பார்க்க மிகச் சிறந்த விற்பனை பெற்ற புத்தகங்கள் பைபிளின் சதிக் கோட்பாடு கிறிஸ்தவப் பெண்ணியம் காண்ஸ்டாண்டீனிய பெயர்ச்சி டெஸ்போசைனி ராய்த்ஸ் &amp; வேர்ல்ட்ஸ் ஸ்மித்தி கோட் த டா வின்சி கேம் த ஜீசஸ் ஸ்குரோல் குறிப்புதவிகள் வெளி இணைப்புகள் பகுப்பு:1998 புதினங்கள்
தி டாவின்சி காடே புத்தகத்தை எழுதியவர் யார்?
டான் பிரவுனால்
65
tamil
bf7019559
இயற்கணிதம் அல்லது அட்சரகணிதம் (Algebra, அரபு மொழியில் al-jabr[1]) கணிதத்தின் ஒரு முக்கியமான பிரிவு ஆகும். எண் கோட்பாடு, வடிவவியல், பகுவியல் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. பொதுவாக இயற்கணிதம் என்பது கணித வடிவங்களைப் பற்றியும், அவற்றை ஆளும் விதிகளைப் பற்றியும் படிப்பதாகும்.[2][3] கணிதம், அறிவியல், பொறியியல் மட்டுமல்லாது மருத்துவம், பொருளியல் போன்றவற்றுக்கும் அடிப்படை இயற்கணிதம் அத்தியாவசியமாகும். இயற்கணிதத்தின் முன்னோடிகளாக அல்-குவாரிசுமி (780 – 850) மற்றும் ஓமர் கய்யாம் (1048–1131) போன்றோர் அறியப்படுகின்றனர்.[4] இயற்கணிதம் எண்களை மட்டும் அடிப்படையாகக்கொண்டு கணிப்பிடும் எண்கணிதத்திற்கு அடுத்த படியாகும். முதலில் கணிதத்தில் எண்கணிதமே கற்பிக்கப்படுகின்றன. ஆகையால் எண்கணிதமே உண்மையில் கணிதத்தின் அரிச்சுவடியாகும். எண்கணிதம் மற்றும் இயற்கணிதம் இரண்டிற்குமுள்ள முக்கிய வேறுபாடு, இயற்கணிதத்தில் கையாளப்படும் மாறிகளும் பொது வடிவத்திற்கான எண்களிற்கான மாறிலிகளுமே. மாறிகளை உபயோகித்து நுண்மமாக (abstract) சிந்தித்து செய்யப்படும் கணிப்புக்களை அடிப்படை இயற்கணிதம் கொண்டுள்ளது. எண்கணிதத்தில் எண்கள் மற்றும் அவற்றைக் கொண்டு செய்யப்படும் அடிப்படைச் செயல்கள் விவரிக்கப்படுகின்றன. அடிப்படை இயற்கணிதத்தில் எண்களுக்குப் பதிலாக x, y போன்ற மாறிகளும், a, b போன்ற மாறிலிகளும் பயன்படுத்தப்பட்டு கணிதச் செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.[5] எடுத்துக்காட்டாக, E = m c 2 {\displaystyle E=mc^{2}} என்ற சமன்பாட்டில், E {\displaystyle E} and m {\displaystyle m} எழுத்துகள் மாறிகளாகும், c {\displaystyle c} மாறிலி ஆகும். மேலும் இயற்கணிதம் மேன்மேலும் உயர்நிலைக்குச்செல்ல இது விரிவடைந்து பல்வேறு பெயர்களில் பிரிந்து செல்லுகின்றன. இயற்கணிதத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளும் கணிதவியலாளர் இயற்கணிதவியலாளர் (algebraist) எனப்படுகிறார். அட்சர கணித பிரதியீட்டு முறை அட்சர கணிதம் என்பது எண்கணித கணிப்பீடுகளுடன் மேலும் பல வரையறைகளுடன் பலவகையான கணிப்பீடுகளை கொண்டது. இதில் எண்களிற்குப்பதிலாக எழுத்துக்களை பிரதி செய்து விடையாக பொதுவான வடிவத்தை - அச்சை - சூத்திரங்களை - வாய்பாட்டை எழுதமுடியும். இன்னுமொரு விசேசித்த வித்தியாசம் என்னவென்றால் இது மறை எண்களை - எதிர் எண்களை உள்ளடக்கிய கணிப்பீட்டை கொண்டது. முன்னர் எண்களிற்குப் பதிலாக தமிழ் எழுத்தக்களையும் தற்போது ஆங்கில, கிரேக்க, இலத்தீன் எழுத்துக்களை பயன்படுத்துகிறோம். பொருள் - விபரம் ஒன்றே. 5 + 5 + 5 = 3 x 5 (மூன்று முறை ஐந்து ) 5 + 5 + 5 = 3 x 5 (மூன்று முறை ஐந்து ). இவை முழுவதும் தெளிவான எண்களில் இருப்பதால் இதனை நாம் 3 x 5 = 15 என்று கணக்கிட முடியும். ஆனால் அட்சர கணிதத்தில் இது மூன்று முறை ஒரே பெறுமதியான எண் கூட்டப்படுவதாகவே கொள்ளப்படும். இதன்படி 5 + 5 + 5 என்பதை a + a + a என எழுதலாம். இதன் பொருள் ஒரு எண் மூன்று முறை கூட்டப்படுகின்றன. இதன் விடையை விளங்கிக்கொள்ள அட்சர கணிதத்தில் உள்ள a ஐ எண்கணிதத்திற்குரிய முறையில் ஒரு தேங்காய் என்று மாற்றி - பிரததியீடு செய்வோம். இப்பொழுது ஒரு தேங்காய் + ஒரு தேங்காய் + ஒரு தேங்காய் என எழுதலாம். விடை மூன்று தேங்காய்கள். அட்சர கணிதத்தில் ஒரு தேங்காய் என்பது தேங்காய் என்று ஒரு என்ற சொல் நீக்கப்பட்டு ஒருமைச் சொல்லாகவே எழுதப்படும். விடையாகிய மூன்று தேங்காய்கள் என்பதும் மூன்று தேங்காய் என்று ஒருமைச் சொல்லாகவே எழுதப்படும். இரண்டு நிலையிலும் தேங்காய் என்று ஒருமைச் சொல்லாகவே வருவதனால் அவற்றை வேறுபடுத்த ஒன்று என்ற முழுமை நிலைக்கு எழுத்தின் முன்னே 1 என்று எழுதப்படுவதில்லை . ஏனைய எல்லா நிலைக்கும் எழுத்தின் முன்னாலே அதன் எண்ணிககை காண்பிக்கவேண்டும். பொருளிற்கோ பன்மை காண்பிக்கப்படுவதில்லை. ஆகவே ஒரு தேங்காய் + ஒரு தேங்காய் + ஒரு தேங்காய் என்பது தேங்காய் + தேங்காய் + தேங்காய் என எழுதலாம். = மூன்று தேங்காய். (விடை) இப்பொழது எண்கணிதத்திற்குரிய விடையை அட்சர கணிதத்தில் கொடுக்கவேண்டும். அட்சர கணிதத்தில் இருந்து எண்கணிதத்திற்கு வர a என்பதை தேங்காய் என மாற்றி பிரதி செய்தோம். இப்பொழுது எதிர் வழியாக செல்வதற்கு எண்கணிதத்தில் இருந்து அட்சர கணிதத்திற்கு வர தேங்காய் என்பதை a என மாற்றி பிரதி செய்யவேண்டும்.) மூன்று தேங்காய் = மூன்று a (தேங்காய் என்பது a என மாற்றி பிரதி செய்யப்பட்டுள்ளது ) = 3 a (மூன்று என்பது 3 என மாற்றி பிரதி செய்யப்பட்டுள்ளது ) 3 a = 3 x a இது ஒரு இடை நிலை. இதுவே விளக்கமாகும். 3 a என்பதே விடையாகும். இங்கே பெருக்கல் அடையாளமாகிய தர அடையாளம் எழுதப்படுவதில்லை. மூன்று தேங்காய் என்பதில் எப்படி தர அடையாளம் தவிர்க்கப்பட்டுள்ளதோ அதேபோல் அட்சர கணிதத்தில் எண்ணிற்கும் எழுத்திற்கும் இடையில் தர அடையாளம் தவிர்க்கப்பட்டவேண்டும். . மூன்று தரம் தேங்காய் என்பதை மூன்று தேங்காய் என்றே தரம் - தர என்பதை தவிர்த்தே சொல்லுகிறோம். தேங்காய் மூன்று என்று வளம்மாறி பேசுவதில்லை. மூன்று தேங்காய் என்பதில் முதலில் மூன்று என்ற எண்ணும் பின்னர் தேங்காய் என்ற சொல்லும் வருகிற ஒழுங்கின்படி அட்சர கணிதத்தில் முதலில் எண்ணும் பின்னர் எழுத்தும் எழுதப்படவேண்டும் . 3a என்பதை a3 என்று வளம்மாறி முடிவு விடையாக எழுதுவது தவறாகும். இடைவரியில் a x 3 (a தர 3)என்று எழுதி கணிக்கப்படலாம். திசை எண்கள். அட்சர கணிதத்தில் அடுத்த அதி முக்கிய விடயம் திசையெண்களாகும். இது பூச்சியத்தை நியமமாகக்கொண்டு பூச்சியத்திலும் அதிகமான, உயர்வான எண்களை நேர் எண்</font>களாக வகைப்படுத்துகிறது. இவைகள் நாம் பயன்படுத்துகின்ற 1, 2, 3, 4, .... போன்றவற்றுடன் இவற்றிற்கு இடைப்பட்ட உடைப்பெண் ( விகிதம், பின்னம், தசமம் ) களுமாகும். இவற்றை முற்குறி எதுவுமின்றி சாதாரணமாக எழுதுவதைப்போன்றோ அல்லது இலக்கத்தின் முன்னே, மேல் அரைப்பகுதிக்குள் சக என்று அடையாளமிட்டோ எழுதலாம். இந்த "+" சக என்ற முற்குறி கணிப்பீட்டை கூறாமல் நேர்த்திசையை குறிப்பிடும். இதற்கு எதிரானது எதிர்திசை அல்லது மறைதிசை எனப்படும். இதன்படி பூச்சியத்திலும் குறைவான, தாழ்வான எண்கள் மறை எண்</font>களாகும். 'மறை எண்கள் கட்டாயமாக " - " சய என்ற முற்குறியிட்டு எழுதப்படவேண்டும்.' இதற்கு முன்னே ஒன்றும் இல்லாவிடின் " - " சய என்ற முற்குறி மட்டுமே போதுமானது. இதற்கு முன்னே ஏதாவது கணிப்பீட்டை கூறும் அடையாளம் இருப்பின் அந்த இலக்கமும் அதன் முற்குறியும் அடைப்புக்குறிக்குள் எழுதப்படவேண்டும். முற்குறி இலக்கத்தின் முன்னே, மேல் அரைப்பகுதிக்குள் எழுதப்படும். முற்குறி எதுவும் இல்லாவிடின் அவ்வேண் சக என்ற முற்குறிகொண்ட நேர் எண்ணாகும். ஓர் இலக்கத்தின் முன்னே அடுத்தடுத்து வரும் முற்குறியையும் கணிப்பீட்டுக் குறியையும் அதனதன் எதிர் அடையாளமாக மாற்றும்போது அதன் தொகுதியின் பெறுமதி மாறாது. பூச்சியம் திசையெண்ணில் அடங்காது. வரலாறு எண்களைப்பற்றித் தோன்றிய மனிதனின் எண்ணப்பாதைகளெல்லாம் 1, 2, 3, ... இவைகளினுடைய பரஸ்பர உறவுகளை ஆய்வதில் தான் தொடங்கின. அத்தோன்றல்களின் முதல் பரிமளிப்பு இயற்கணிதம் என்ற பிரிவில் அடங்கும். எண்களைப் பற்றிய சில தேற்றங்கள் கிரேக்க காலத்திய யூக்ளீடின் நூல்களிலும் டயோஃபாண்டஸின் ஆய்வுகளிலும் இருந்தன. ஆனாலும் இயற்கணிதத்தைச் சார்ந்து முதன்முதலில் எழுதப்பட்ட நூல் இந்தியாவில் ஆரியபட்டர் என்ற கணித வல்லுனரால் 5ம் நூற்றாண்டில்)எழுதப்பட்டது. இது பீஜகணிதம் என்று பெயர்கொண்டது. டயோஃபாண்டஸின் 4வது நூற்றாண்டின் ஆய்வுகளைத்தழுவி 9வது நூற்றாண்டில் ஆல்-க்வாரிஜ்மி என்பவர் Hisab al-dschabr wa-l-muqabala என்ற பாரசீக நூலை எழுதினார். பிற்காலத்தில் 13ம் நூற்றாண்டில் "al-jabr" என்ற தலைப்பைக் கொண்ட அரேபிய நூல் இந்தப் பாரசீக நூலிலிருந்து கண்டெடுக்கப்பட்டவை என்று கூறிப் பிரசுரிக்கப்பட்டது. இதன் பெயரை வைத்து இந்தக் கணிதத் துறைக்கு அல்ஜீப்ரா என்ற பெயர் ஏற்பட்டது. 17ம் நூற்றாண்டில் இதனுடைய இலத்தீன் மொழிபெயர்ப்பு Ludus algebrae et almucgrabalaeque என்ற பெயரில் வெளிவந்தது. இதற்குப் பிறகு உலகளாவிய நிலையில் இயற்கணித ஆய்வுகள் முன்னேறின. கிரேக்க காலத்திய இயற்கணிதம் இயற்கணிதம் என்பது ஒரு மொழி. பற்பல குறியீடுகளும் அவைகளை ஒன்றுக்கொன்று எப்படி உறவாட விட வேண்டும் என்பதற்கு சிற்சில விதிகளும் கொண்டதுதான் இயற்கணிதம். ஆனால் இந்தமாதிரி மொழியொன்று பயன்படுவதற்கு அம்மொழிக்கு சரியான குறியீட்டுமுறை (notation) இருந்தாகவேண்டும். அங்குதான் கிரேக்க கணிதம் தவறியது. அவர்களுக்கு எல்லாமே வடிவியல்தான். வடிவியலில் அபாரமான திறமை பெற்றிருந்தார்கள். எண்கள் கூட அவர்களுக்கு ஒருநேர்கோட்டின் அளவுகளே. அதனால் இயற்கணித வழக்கமான 'மாறி' என்ற கருத்து அவர்களுடைய எண்ணங்களுடன் ஒத்துப்போகவில்லை. ( x + y ) 2 , ( x − y ) 2 {\displaystyle (x+y)^{2},(x-y)^{2}} க்கு வாய்பாடுகள், x 2 − y 2 = ( x + y ) ( x − y ) {\displaystyle x^{2}-y^{2}=(x+y)(x-y)} போன்ற முற்றொருமை உறவுகள் அவர்கள் வடிவியல் மூலம் அறிந்திருந்தார்கள். ஆனாலும் இயற்கணித மாறிகள் மூலம் உறவுகள் உண்டாக்கி அந்த உறவுகளைச் சமாளிக்க அவர்களிடம் நோக்கமோ, சாதனமோ ஏற்படவில்லை. இயற்கணிதத்தில் அவர்களுடைய முன்னேற்றம் மிகக்குறைவாக இருந்ததற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அதுதான் அவர்களுக்கு முடிவிலிகளைப் பற்றி இருந்த அச்சம்.ஆர்கிமிடீஸ் பை ( π {\displaystyle \pi } ) யினுடைய மதிப்பைக்கண்டுபிடிப்பதற்குப் பயன்படுத்திய முறைக்கு வெளிப்படுத்துகை முறை (Method of exhaustion) என்று பெயர். திருப்பித் திருப்பி ஒரு பலகோணத்தின் பக்கங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டே போய் அதனுடைய சுற்றளவை விட்டத்தின் நீளத்தால் ஒவ்வொரு முறையும் வகுத்து π {\displaystyle \pi } க்கு மதிப்புகள் கண்டுபிடித்துக் கொண்டுப்போகும் முறைதான் அது. (வட்டத்தின் சுற்றளவு / விட்டம் ) என்பது (உள்வரைவுச்சம பலகோணத்தின் சுற்றளவு / விட்டம்) இனுடைய 'எல்லை' என்ற கருத்து 'முடிவிலி' என்ற கருத்தோடு முடிச்சிடப்பட்டிருக்கிறது. முடிவிலியின் மேலுள்ள பயத்தால் இந்த 'எல்லை'க்கருத்தை அவர்கள் தங்களுடைய எல்லைக்குள் விடவில்லை போலும்! பழையகால இந்தியாவில் இயற்கணிதம் எண்களை எழுதுவதில் இடமதிப்புத் திட்டத்தை உருவாக்கி வருங்காலக் கணிதக் குறியீட்டுமுறைக்கு அடிகோலியது பழையகால இந்தியா. ஸ்புஜித்வஜர் (3ம் நூற்றாண்டு) எழுதிய 'யவனஜாதகம்' என்ற நூலில் இவ்விடமதிப்புத் திட்டம் பயன்படுத்தப் பட்டிருப்பதைப் பார்க்கலாம். அந்நூலே, காணாமல் போய்விட்ட கிரேக்க ஜோஸிய முறையைப் பற்றி இரண்டாவது நூற்றாண்டில் இந்தியாவில் எழுதப்பட்ட ஒரு உரைநடை நூலின் செய்யுள் நடைமாற்றம்தான். கிறிஸ்து சகாப்தத்தின் முதல் சில நூற்றாண்டுகளில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் பாக்ஷாலி கையெழுத்துப்பிரதி (70 பக்கங்கள் கொண்டது) ஒன்று 1881 இல் தற்போது பாகிஸ்தானில் உள்ள பெஷாவருக்கருகே கண்டுபிடிக்கப்பட்டது. அதனில் தசம இடமதிப்புத்திட்டமும், சுழிக்குப்பதில் ஒரு புள்ளியும், சரளமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பின்னங்கள், வர்க்கமூலங்கள், நேரியல் ஒருங்கமைச் சமன்பாடு, இருபடியச் சமன்பாடுகள், கூட்டுத்தொடர், பெருக்குத்தொடர்—இவை இடம் பெறுகின்றன. இன்னும் இந்த நூலில், இந்தியாவிலிருந்து அராபியர்கள் எடுத்துச்சென்று 'தங்கமயமான விதி' (Golden Rule) என்று அவர்களால் பெயர் சூட்டப்பட்ட அடிப்படைக் கணித விதி விவரிக்கப் பட்டிருக்கின்றது. கொடுப்பினை-பயன்-இச்சை விதி என்று இதற்குப் பெயரிடலாம். இதைத்தான் ஆங்கிலத்தில் Rule of Three என்று சொல்கிறார்கள். இது என்ன சொல்கிறதென்றால், இவ்வளவு கொடுப்பினை இவ்வளவு பயனைக் கொடுத்தால், இவ்வளவு இச்சை எவ்வளவு பயனைக்கொடுக்கும்? இதற்கு விடை காண விதி: கொடுப்பினை - பயன் - இச்சை இம்மூன்றையும் இந்த வரிசையில் எழுது. நடுவிலுள்ளதை கடைசியில் உள்ளதால் பெருக்கி முதலில் உள்ளதால் வகு. இதுதான் விடை! கொடுப்பினை, இச்சை இரண்டும் ஒரே அலகைச்சார்ந்தது. பயன் வேறு அலகைச்சார்ந்ததாக இருக்கலாம். தேரவியலாச் சமன்பாடுகள் (Indeterminate Equations) முதன்முதலில் இந்தியக்கணிதத்தில் எழுத்தில் காணப்படுவது இந்தப் பாக்ஷாலி கையெழுத்துப் பிரதியில் தான். இச்சமன்பாடுகளைப்பற்றி கிரேக்கநாட்டு டயொஃபாண்டஸ் 4ம் நூற்றாண்டில் ஆய்வுகள் செய்திருந்தாலும், இந்தியக்கணித நிபுணர்கள் பிரம்மகுப்தர் (7ம் நூற்றாண்டு), பாஸ்கரர் I (600 - 680), பாஸ்கரர் II (1114-1185) தேரவியலாச் சமன்பாடுகளைப் பற்றிப் பற்பல தீர்வு முறைகளைக் கண்டுபிடித்து எழுதியுள்ளனர். பாஸ்கரர் II வின் சக்ரவாள முறை இன்றும் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளின் பெரும் பங்களிப்பு 1619இல் டெகார்டெ வடிவியலை இயற்கணிதச் செயல்பாடாக மாற்றக்கூடிய பகுமுறை வடிவகணிதத்தை அரங்கேற்றினார். வடிவியல் தேற்றங்களை இயற்கணிதக் குறியீடுகளைக்கொண்டு, வடிவங்களையே பார்க்க அவசியமில்லாதபடி, நிறுவமுடியும் என்ற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததால், இயற்கணிதத்தின் பயன்பாடும் தேவைகளும் அதிகப்பட்டன. இந்நூற்றாண்டில்தான் நியூட்டனுடைய வகையீட்டு நுண்கணிதம் கண்டுபிடிக்கப் பட்டது. அதன்படி ஒரு தொடர் வரைவின் சரிவு அச்சார்பின் வகையீட்டுக்கெழுவாக இருக்கும் என்ற முக்கியமான கண்டுபிடிப்பு ஏற்பட்டது. இதனால் பற்பல வரைவுகளின் பண்புகள் அலசப்படத் தொடங்கின. இயற்பியலிலும் பொறியியலிலும் அன்றாட நடைமுறையில் தேவைப்பட்ட சார்புகளின் பெரும, சிறும மதிப்புகள் நுண்கணிதத்தைக் கொண்டு ஆய்வுகளுக் குட்பட்டவுடனே, எல்லாக் கணக்கீடுகளும் கடைசியில் இயற்கணிதச் செயல்பாடுகளில் வந்து முடிந்தன. இயற்கணிதத்தில் பல கணித இயலர்கள் ஈடுபட்டதற்கு இதெல்லாம் காரணமாக அமைந்தன. இயற்கணிதத்தில் ஈடுபாடு என்றவுடனே முதலில் தட்டுப்படும் பிரச்சினை சமன்பாடுகளின் தீர்வு தான். முதற்கண் இயற்கணிதச் சமன்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் சரியான முழுத்தீர்வு கண்டுபிடிக்கும் முயற்சியே இயற்கணித ஆய்வுகளின் குறிக்கோளாக அமைந்தது. இப்பிரச்சினைக்கு ஒரு மாபெரும் கடைத்தீர்வு 19வது நூற்றாண்டில் தான் கிடைத்தது. ஆனால் இந்த நான்கு நூற்றாண்டுகளில் இயற்கணிதம் இவ்வொரு பிரச்சினையின் தேடுதலினால் கிடைத்த இடைத்தேர்வுகளாலேயே வானளாவிய பெரிய பிரிவாக மலர்ந்து விட்டது. பட்டியல் இந்த வளர்ச்சிக்கு அடிகோலியவர்களின் பட்டியல் எழுதி மாளாது. முக்கியமானவர்கள் (கால வரிசைப்படி): கார்டானோ (1501-1576), (இத்தாலி) 1545 இல் முப்படி, நாற்படிச்சமன்பாடுகளுக்கு தீர்வுகள் பிரசுரித்தார். வியேடா (1540-1603), (பிரான்ஸ்) π {\displaystyle \pi } க்கு ஒரு முடிவிலாப் பெருக்கீடு கண்டுபிடித்தவர். பல புது குறியீட்டுகளை அறிமுகப்படுத்தி அதில் வெற்றி பெறாவிட்டாலும் சிலரால் தற்கால இயற்கணிதத்தின் தந்தை என்று போற்றப்பட்டவர். ஃபெர்மா (பிரான்ஸ்) (1601-1665), எண் கோட்பாட்டில் பல ஆய்வுகளைத் தொடங்கிவைத்தவர். அவர் பெயரைத் தாங்கி நிற்கும் ஒரு தேற்றம் மூன்று நூற்றாண்டுகளாக யாராலும் உண்மையா பொய்யா என்று நிறுவமுடியாமல், எண் கோட்பாட்டையும் மற்றும் இயற்கணிதத்தையுமே ஒரு ஆலமரமாக வளரச்செய்யும் மந்திரமாக இருந்தது. ஐசக் நியூட்டன் (1642-1727) (இங்கிலாந்து) கணித வரலாற்றிலேயே இமாலயப் பங்களிப்புக்குரியவரான மூவரில் ஒருவர். அவருடைய நுண்கணிதம், ஈர்ப்புக் கோட்பாடு, போன்ற மற்ற கண்டுபிடிப்புகளைத் தவிர, இயற்கணிதத்தில் அவருக்கு உரியது: ஈருறுப்புத்தேற்றம்; அடுக்குத் தொடர் பற்றிய ஆய்வுகள். லெப்னீட்ஸ் (ஜெர்மனி)(1646-1716), இன்றைய கணினிகளுக்கெல்லாம் அடிப்படையான ஈரம்ச அமைப்பு அவரிடமிருந்துதான் வந்தது. இன்றைய நிகழ்தகவுக் கோட்பாட்டிற்குத் தந்தை. தன்னிச்சையாக நுண்கணிதத்தைக் கண்டுபிடித்து இன்றைய குறியீட்டுமுறையை அறிமுகப்படுத்தியவர். ஜாகொப் பெர்னொவிலி (1654-1705)(சுவிட்சர்லாந்து) சேர்வியலிலும் நிகழ்தகவுக் கோட்பாடிலும் பல தேற்றங்களுக்குக் காரணமானவர். இவர் பெயரை வைத்துத்தான் பெர்னொவிலி எண்கள் என்று வழங்கப்படுகின்றன. ஆய்லர் (1707-1783), (சுவிட்சர்லாந்து, ரஷ்யா, ஜெர்மனி) இவருடைய பங்களிப்பில்லாத கணிதப்பிரிவே கிடையாது. சார்பு முதலிய பல கணிதக் குறியீட்டுகளுக்கும் இவர்தான் காரணம். எண் கோட்பாட்டில் பகுவியல் முறைகளை அறிமுகப்படுத்தினார். நாற்படிச் சமன்பாடுகளின் தீர்வுக்குப் புது முறைகளை அறிவித்தார். தொடரும் பின்னங்கள், மிகைபெருக்குத் தொடர்கள் போன்ற பல துறைகளையும் வளர்த்தவர். பகா எண் தேற்றம் என்று பிற்காலத்தில் வரப்போகும் மாபெரும் தேற்றத்திற்கும், இருபடிய நேர் எதிர்மை விதிக்கும் அடிகோலியவர். கோலக் கோட்பாட்டின் தந்தை. அவருடைய இயற்கணிதநூல் பல்லுறுப்புச் சமன்பாடுகளின் தீர்வைப்பற்றி பல வாய்பாடுகள் கொடுக்கிறது. லாக்ரான்ஞ்சி (1736-1813), (இத்தாலி) எண் கோட்பாட்டிற்கும் நிகழ்தகவுக் கோட்பாட்டிற்கும் முக்கிய பங்களிப்புகள் அளித்தவர். காஸ் (1777-1855), (ஜெர்மனி) எண்கோட்பாட்டிற்கு மிகப்பெரிய பங்களிப்பு. சிக்கலெண்களின் பல்லுறுப்புச் சமன்பாடு ஒவ்வொன்றுக்கும் ஒரு மூலமாவது இருந்தாகவேண்டும் என்ற இயற்கணித அடிப்படைத் தேற்றம் இவருடையதே. கோஷி (1789-1857), (பிரான்ஸ்). இவருடைய பன்முனைப்பங்களிப்புகளில், இயற்கணிதத்தையும், ஏன், கணிதத் துறையையுமே 20ம் நூற்றாண்டில் மாற்றி அமைக்கப்போகிற பதிலீடுக் கோட்பாட்டைத்தான் (Theory of Substitutions) இங்கு குறிப்பிடவேண்டும். வரிசைமாற்றுக் குலம் என்று 20வது நூற்றாண்டின் தொடக்கத்தில் இது நுண்புல இயற்கணிதத்தைத் துவங்கி வைத்தது. கணிதத்தில் புழங்கும் பொருள்கள் எண்களாகவோ சார்புகளாகவோ இருக்கத் தேவையில்லை. அவைகள் ஒன்றுக்கொன்று என்ன உறவுகள் கொண்டாடுகின்றன என்பதை வைத்துக் கணித அமைப்புகளை உண்டாக்கி, அந்த நுண்புலப்படியில் தேற்றங்களை உருவாக்கி,அந்த ஒரே தேற்றத்தையே பற்பல சூழ்நிலையிலுள்ள வெவ்வேறு பயன்பாடுகளில் செயலாக்குவது இருபதாவது நூற்றாண்டிற்குப் பிறகு கணித மரபாகவே ஆகிவிட்டது. இதற்கு ஒரு விதத்தில் வித்திட்டவர் கோஷி. கால்வா (1811-1832),(பிரான்ஸ்) இருபது வயதுக்குள் கணிதத்தில் பெரிய சாதனையைச்செய்து கால்வா கோட்பாடு என்று இன்றும் ஆய்வுச்சாலையில் கணிதவியலர்கள் ஈடுபட்டிருக்கும் கணிதப்பிரிவு இவரால் ஏற்பட்டது. இதுதான் பல நூற்றாண்டுகளாக எல்லா கணிதவியலர்களையும் ஆட்டிப்படைத்த ஐந்துபடிச்சமன்பாடுத்தீர்வுக்கு கடைத்தீர்ப்பு கொடுத்தது. ஏபெல் (1802-1829), ஜாகோபி (1804-1851), ஹாமில்டன் (1805-1865), சில்வெஸ்டர் (1814-1897), கெய்லி (1821-1895) இயற்கணிதத்தின் இதர முகங்கள் இயற்கணிதத்தின் இன்னொரு முகம் எண் கோட்பாடு. கிரேக்கர்கள் காலத்திலிருந்தே எண்களைப் பற்றிய சிறிய பெரிய பிரச்சினைகள் கணிதத்தில் ஈடுபட்டவர்கள் எல்லோரையும் ஈர்த்தன. அன்றிலிருந்து இன்றுவரை எண்கோட்பாட்டில் மனிதன் கண்ட ஒவ்வொரு முன்னேற்றமும் கணிதத் துறையின், முக்கியமாக இயற்கணிதத் துறையின், தொடுவானத்தை விரிவாக்கிக் கொண்டே போயின. தற்காலத்தில் எண் கோட்பாடே கணிதத்தின் மிகப் பெரிய பிரிவுகளில் ஒன்றாகி விட்டதால் இதைப்பற்றிய தனிக்கட்டுரையில் பார்க்கவும். மற்றொரு முகமான குலக் கோட்பாடும் அப்படி ஒரு பெரிய பிரிவுதான். இருந்தாலும் அது எப்படி உண்டாயிற்று என்று சொல்வதால், இருபதாவது நூற்றாண்டில் ஏற்பட்ட மாபெரும் நுண்புல இயற்கணித வளர்ச்சியின் வேர்களைக் காணலாம். மேற்கோள்கள் துணைநூல்கள் Eli Maor. e: The story of a number. 1994. Princeton University Press. Princeton, NJ ISBN 0-691-03390-0. Paul J. Nahin. An Imaginary tale. The Story of .1998. Princeton University Press. Princeton, NJ. ISBN 0-691-02795-1. E.T. Bell. Men of Mathematics.1937. Simon &amp; Schuster, New York, NY . ISBN 0-671-46401-9 பகுப்பு:மேற்கோள் வழு-ref குறிச்சொல்லுக்கு உரையில்லாதவை
இயற்கணிதம் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
19வது நூற்றாண்டில்
11,450
tamil
a7292ab0f
{{IPA}}, formats symbols of the International Phonetic Alphabet {{PUA}}, marks characters from the Private Use Area that should be retained {{transl}}, generic romanization {{script}}, scripts in Unicode navigation box {{unichar}}, formats a Unicode character description {{Unicode templates}}, a navbox linking to multiple Unicode templates{{Template disambiguation}} should never be transcluded in the main namespace.) இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்று. இது கிழக்கில் தமிழ் நாட்டையும், வடக்கில் கர்நாடகத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. மேற்கில் அரபுக் கடல் உள்ளது. மலையாளம் கேரளாவின் முதன்மையான மொழியாகும். தமிழ் பேசுவோரும் அதிகமாக காணப்படுகினறனர். கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரம். பிற குறிப்பிடத்தக்க நகரங்கள் கொச்சி,கோழிக்கோடு திருச்சூர் மற்றும் கோட்டயம் ஆகும். இந்திய மாநிலங்களில் கல்வியறிவு (எழுத்தறிவு) விகிதத்தில் கேரளம் முதலிடம் வகிக்கிறது. பெயர்க் காரணம் கேரளா என்ற சொல், தமிழ்ச் சொல்லான “சேரளம்” (மலைச் சரிவு) அல்லது சேர நாடு என்பதிலிருந்து தோன்றியது என்பது அறிஞர்களின் கூற்று.[9][10] இன்றைய கேரளா, வரலாற்று காலத்தில் “சேர நாடு” என்று அழைக்கப்பட்டு வந்தது. 3ஆம் நூற்றாண்டு பேரரசர் அசோகரின் கல்வெட்டில் கேரளா - “கேரளபுத்திரர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[11] மேலும், ரோமானிய வணிகன் பெரிபுளீஸின் நிலவரைபடத்தில், இன்றைய கேரளப் பகுதியை சேரபுத்ரா என்று குறிப்பிடுகின்றார். கேரள மக்கள் மலையாளிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.[12] மலையில் (மேற்கு தொடர்ச்சி மலைகள்) வாழ்பவர்கள் என்பது அதன் பொருள் ஆகும். சிறப்புகள் 5 ஏப்ரல் 1957ல் ஜனநாயக முறைப்படி, ஆசியாவிலேயே முதன் முதலாக கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த முதல் மாநிலம் ஆதி சங்கரர் (கி.பி.788-820) பிறந்த இடம் காலடி இந்திய செவ்வியல் நடன வடிவம் "கதகளி"யின் பிறப்பிடம் இரப்பர் உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி மாநிலம் இந்தியாவின் நறுமணத் தோட்டம் களரிப்பயிற்று தற்காப்புக் கலையின் பிறப்பிடம் இந்தியாவின் முதல் டிஜிட்டல் மாநிலம்[13] வளைகுடா நாடுகளில் பணி புரியும் இந்தியர்களில் கேரள மாநிலத்தவர்கள் அதிகமாக உள்ளனர். அதனால் வெளிநாட்டு செலாவணி கேரளத்திற்கு கூடுதலாக கிடைக்கிறது. புவியமைப்பு 38,852 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தின் கிழக்கே மேற்கு தொடர்ச்சி மலைகள்; மேற்கில் அரபிக் கடல்; தென்கிழக்கில் தமிழ்நாடு; வடகிழக்கில் கர்நாடகம் எல்லைகளாக அமைந்துள்ளது. ஆறுகள் நெய்யாறு, பம்பை, மணிமலை, பெரியாறு, பாரதப்புழை, சித்தாறு மற்றும் மூவாற்றுப்புழை ஆகியவை கேரளத்தின் முக்கிய ஆறுகள். வரலாறு பரசுராமரின் கோடரி கடலைப் பிளந்த தால் தோன்றிய நாடு கேரளம் என்பது புராணக் கதை.இதனை பார்க்கவ சேத்திரம் என்றும் பரசுராம சேத்திரம் என்றும் வழங்குகின்றனர்.[14] போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என பல ஐரோப்பியர் கேரளத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டினர். 1947வாக்கில் கேரளம் திருவிதாங்கூர், கொச்சி மற்றும் மலபார் என மூன்று சமஸ்தானங்களாக இருந்தது. மலபார் சீரமைப்புச் சட்டம் 1956ன் படி, திருவிதாங்கூர், கொச்சி மற்றும் மலபார் பகுதிகள் இணைக்கப்பட்டு, நவம்பர் 1956ல் இன்றைய கேரளம் உதயமானது. பொருளாதாரம் விவசாயம் முக்கிய தொழில். உணவுப் பொருள் சாகுபடியை விட பணப்பயிர் சாகுபடி அதிகரித்து வருகிறது. பாரம்பரிய தொழில்களான கைத்தறி, கயிறு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு போன்ற தொழில்களும் சிறப்பாக நடைபெறுகிறது. ஆட்சிப் பிரிவுகள் கேரளம் பதினான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருவன: காசர்கோடு கண்ணூர் வயநாடு கோழிக்கோடு மலைப்புரம் பாலக்காடு திருச்சூர் எர்ணாகுளம் இடுக்கி ஆலப்புழா கோட்டயம் பத்தனம்திட்டா கொல்லம் திருவனந்தபுரம் கேரளத்தில் 63 வட்டங்களும், 1634 வருவாய் ஊராட்சிகளும், 978 ஊராட்சிகளும் ஐந்து நகராட்சிகளும் உள்ளன. அரசியல் இது இருபது மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[15] கேரள சட்டமன்றத்திற்காக, கேரளத்தை 140 தொகுதிகளாகப் பிரித்துள்ளனர்.[15] மக்கள் தொகையியல் 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கேரளா மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 33,406,061 ஆக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 4.91% விகிதம் ஆக உயர்துள்ளது. மக்கள்தொகையில் ஆண்கள் 16,027,412 மற்றும் பெண்கள் 17,378,649 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1084 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 860 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 94.00% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 96.11% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 92.07% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3,472,955 ஆக உள்ளது.[16] சமயம் இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 18,282,492 (54.73 %) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 8,873,472 (26.56 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 6,141,269 (18.38 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள்தொகை 3,814 (0.01 %) ஆகவும், சமண சமய மக்கள்தொகை 4,489 (0.01 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 4,752 (0.01 %) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 7,618 (0.02 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 88,155 (0.26 %) ஆகவும் உள்ளது. மொழி இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான மலையாத்துடன், தமிழ், கன்னடம், உருது மற்றும் கொங்கணி மொழிகள் பேசப்படுகிறது. கலைகள் கூடியாட்டம், கதகளி, கேரள நடனம், மோகினியாட்டம், தெய்யம், துள்ளல் ஆகியவை கேரளத்தின் நாட்டிய வகைகளாகும். வர்மக்கலை, களரி போன்ற தற்காப்புக் கலைகளும் கேரளத்திலிருந்து தோன்றியவையே. செண்டை மேளம் புகழ் பெற்றது. சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்கள் சுற்றுலா தலங்கள் தேக்கடி, பெரியார் தேசியப் பூங்கா, மூணார், வயநாடு, ஆலப்புழாவின் கட்டு வள்ளம்,கொச்சி மற்றும் கொல்லம்.[17] ஆன்மிக தலங்கள் சபரிமலை, ஆற்றுக்கால் பகவதி கோவில், சோட்டானிக்கரை பகவதி கோயில், ஆறு அய்யப்பன் கோயில்கள்,மீன்குளத்தி பகவதி கோயில்,குருவாயூர் குருவாயூரப்பன் கோயில், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் மற்றும் மங்கலதேவி கண்ணகி கோவில் ஆகும். வைணவத் திருத்தலங்கள் 108 வைணவத் திருத்தலங்களில் 11 வைணவத் திருத்தலங்கள் கேரளத்தில் அமைந்துள்ளது. அவைகள்: திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில், திருவனந்தபுரம் மாவட்டம் திருக்கடித்தானம், கோட்டயம் மாவட்டம் திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில், எர்ணாகுளம் மாவட்டம் திருமூழிக்களம், எர்ணாகுளம் மாவட்டம் திருப்புலியூர், ஆலப்புழா மாவட்டம் திருச்செங்குன்றூர், ஆலப்புழா மாவட்டம் திருவண்வண்டூர், ஆலப்புழா மாவட்டம் திருவல்லவாழ், பத்தனம்திட்டா மாவட்டம் திருவாறன்விளை, பத்தனம்திட்டா மாவட்டம் திருவித்துவக்கோடு, திருச்சூர் மாவட்டம் திருநாவாய், மலப்புறம் மாவட்டம் விழாக்கள் ஓணம் மற்றும் விஷு கேரளத்தின் முக்கிய பண்டிகைகளாகும். கிறிஸ்துமஸும் ரமலான் பெருநாளும் இங்கு கொண்டாட படுகிறது. மேலும் திருச்சூர் பூரம் திருவிழா, பெண்களின் ஐயப்பன் கோயில் எனப்படும் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில் மகம் திருவிழா, மகர விளக்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. இறைச்சி கேரள மாநிலத்தின் கால்நடை பராமரிப்புத் துறையின் தகவல்படி 2009–2010 ஆண்டில் மட்டும் 61 லட்சம் பசு உட்பட்ட கால்நடைகள் தமிழகம் மூலம் கேரளாவிற்கு இறைச்சிக்காகக் கொண்டு வரப்பட்டன. 18 லட்சம் கால்நடைகள் சோதனையை மீறிக் கடத்தப்பட்டவை.[18] மேலும் பார்க்க கேரள அரசு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் (தமிழில்) பகுப்பு:கேரளம்bs
கேரளாவில் பேசப்படும் மொழி எது?
மலையாத்துடன், தமிழ், கன்னடம், உருது மற்றும் கொங்கணி
4,486
tamil
e0090c270
கால்வாய் எனப்படுவது நீர்ப்பாசனத்துக்காக கால்வாய்கள், கப்பல் போக்குவரத்துக்கான கால்வாய்கள் என இருவகைப்படும். போக்குவரத்துக்கான கால்வாய்கள் செயற்கையாக அமைக்கப்படும் நீரிணைகள் ஆகும். இரு கடற்பகுதிகள், ஆற்றுப் பகுதிகள், அல்லது ஏரிப் பகுதிகளை இணைப்பதாக வெட்டப்படும் இவை கடற்போக்குவரத்துத் தூரத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு வெட்டப்படுபவை ஆகும். சுயஸ் கால்வாய், பனாமாக் கால்வாய் போன்றன கப்பற் போக்குவரத்துக்காக வெட்டப்பட்ட குறிப்பிடத்தக்க கால்வாய்களாகும். வரலாறு கால்நடை விலங்கால் செலுத்தப்படும் வண்டி போக்குவரத்து திறன் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் தான் இருந்தது. கோவேறு கழுதை பூட்டப்பட்ட வண்டியில் அதிகபட்சம் 8 டன் [1] 250 pounds (113kg) என்ற அளவில் உள்ள எடைகொண்ட சரக்குப் பொருட்களை சில நாட்களுக்கோ அல்லது வாரங்களுக்கோ சுமக்க முடியும்.[1] இது மிகச் சிறிய இடைவெளிகளுக்கும், காலத்திற்கும் பொருத்தமானது தவிர, வண்டிகள் செல்ல சாலைகள் தேவை. இதற்கு பதிலாக பழங்காலத்தில் எளிமையான, மலிவான போக்குவரத்திற்கு கால்வாய் பொருத்தமானதாக இருந்திருக்கிறது. பண்டைய வரலாறு அறியப்பட்ட பழமையான கால்வாய்களில் முதன்மையானது நீர்ப்பாசனக் கால்வாய்கள், இவைகள் பண்டைய மெசொப்பொத்தேமியாவில் சுமார் கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது, இப்போது ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் உள்ளது. சிந்து சமவெளி நாகரீகம், பண்டைய இந்தியாவில், கிர்னார் என்னும் இடத்தில் கட்டப்பட்ட நீர்த்தேக்கங்கள் உள்ளிட்ட நவீன பாசன மற்றும் சேமிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டது.[2] எகிப்து நாட்டில் உள்ள கால்வாய்கள் குறைந்தபட்சம் பெப்பி I மேரி]] (கி.மு 2332-2283 ஆட்சி காலத்தில்) அஸ்வான் அருகிலுள்ள நைல் மீது கடந்து செல்ல ஒரு கால்வாய் கட்டினார்.[3] பண்டைய சீனா வரலாற்றில், நதிப் போக்குவரத்திற்கான பெரிய கால்வாய்கள் கி.மு 481-221 வரையான காலத்தில் உருவாக்கப்பட்டது. பண்டைய சரித்திர ஆசிரியரான சிவா கியான் கூற்றுப்படி, மிக நீளமான கால்வாய் ஹாங்கா காௗ என்னும் இடத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கால்வாய் சாங், ஜாங், சென், காய், காவ் மற்றும் வேய் போன்ற பகுதிகளை இனைத்திருக்கிறது.[4] இன்றும் உலகின் மிக நீளமான கால்வாய், மற்றும் மிக மிக உயரமான ஒரு கால்வாய்களில் மிக நீண்ட கால்வாய் சீனாவின் பெரும் கால்வாய் இருந்து வருகிறது. இன்றும் பயன்பாட்டில் உள்ளது.[5] கிரேக்க பொறியியலாளர்கள் கி.மு.3 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே கால்வாய் தடுப்புகளைப் முதன்முதலாக பயன்படுத்தி இருந்தனர், இந்தத் தடுப்புகள் மூலம் அவர்கள் பண்டைய சூயஸ் கால்வாயில் நீர் ஓட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்தனர்.[6][7][8] முக்கியத்துவம் வரலாற்று ரீதியாக கால்வாய்கள் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி, மற்றும் ஒரு நாகரிகத்தின் வளர்ச்சி ஆகியவற்றிற்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 1855 ஆம் ஆண்டில் லேஹீ கால்வாய் 1.2 மில்லியன் டன் சுத்தமான எரியும் அனல்மின் நிலக்கரி சுரங்கத்தை நடத்தியது; சுமார் ஒரு நூற்றாண்டிற்கு செயல்பட்டு வந்த இந்தக் கால்வாய் 1930 களில் இதை உருவாக்கிய் நிறுவனத்தால் இதன் சேவை நிறுத்தப்பட்டது. நமது நவீன காலத்தில் சில கால்வாய்கள் இன்னும் செயல்படுகின்றன, அவை பொருளாதாரத்திற்குத் தேவையான உந்து சக்தியாக இருந்திருக்கிறது, உண்மையில் நகரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்குதல் ஆகியவற்றிற்கு கால்வாய்களின் தேவை இருந்தது. நிலக்கரி மற்றும் தாதுக்கள் போன்ற மொத்த மூலப்பொருட்களின் போக்குவரத்து நீர் போக்குவரத்து இல்லாமல் கடினமானதாகவும் பிற போக்குவரத்து செலவை ஒப்பிடும்போது ஓரளவு குறைவாகவும் இருக்கிறது. 17 மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் போது அதிகரித்த இயந்திரமயமாக்கல் சுழற்சியின் விளைவாக தொழில்துறை வளர்ச்சிகள் மற்றும் புதிய உலோகங்கள் இத்தகைய மூலப்பொருட்களுக்கு எரிபொருளாக கால்வாய்கள் செயல்பட்டது. புதிய ஆராய்ச்சி துறைகளில், புதிய தொழிற்சாலைகள் மற்றும் பொருளாதார முன்னேற்றதிற்கு வழிவகுத்தது, எந்தவொரு தொழில்மயமான சமுதாயத்திற்கும் வாழ்க்கை தரத்தை உயர்த்த கால்வாய்களின் தேவை முக்கியமானதாகும். பெரும்பாலான கப்பல் கால்வாய்கள் உள்ளிட்ட எஞ்சியிருக்கும் கால்வாய்கள் இன்று முதன்மையாக சரக்கு மற்றும் பெரிய கப்பல் போக்குவரத்துத் தொழில்களுக்கு சேவை செய்கின்றன, அதேசமயம் முன்னர் உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்துக்கு உதவிய கால்வாய்கள் பின்நாட்களில் கைவிட்ப்பட்டும், பாராமரிப்பில்லாமலும், நீரோட்டம் மின்றி தூர்ந்துபோயிற்று. அதேசமயம் அணைகள் வெள்ள நீரை கட்டுப்படுத்தவும் சேமிக்கவும் மற்றும் உல்லாச படகு போக்குவரத்துக்காகவும் பயன்படுத்தப்பட்டது. 1850 களின் நடுவில் அமெரிக்காவில் முதன்முதலாக துவங்கிய கால்வாய் கப்பல் போக்குவரத்து முதன்முதலில் அதிகரித்தது, நாளைடைவில் கால்வாய் போக்குவரத்து, விலை மலிவான இரயில் போக்குவரத்து வந்தவுடன் குறைந்து முற்றிலும் கைவிடப்பட்டது. 1880 களின் முற்பகுதியில், இரயில் போக்குவரத்துடன் பொருளாதாரரீதியாக போட்டியிடும் திறனைக் கொண்ட கால்வாய்கள் வரைபடத்தில் இருந்து வந்தன. அடுத்த இரண்டு தசாப்தங்களில், நிலக்கரி ஏற்றுமதி அதிகப்படியாக குறைந்து எண்ணெயை எரிபொருளாக கொண்டு வெப்ப உற்ப்பத்தியின் தொடக்கம், மற்றும் நிலக்கரியின் தேவை இதனால் குறைந்து. பின்னர், முதலாம் உலகப் போருக்குப் பிறகு, மோட்டார் வண்டிகள் வந்தபோது, சிறிய அமெரிக்கா கரைகள் கொண்ட கால்வாய்கள் மற்றும் பல ரயில்களுடனான சரக்கு போக்குவரத்து பத்து-மைல்களில் நிலையான சரிவைக் கண்டது, நெகிழ்வுத்தன்மை மற்றும் செங்குத்தான சரிவுகளில் சரக்குகளை எடுத்துச் செல்லக்கூடிய தன்மையால் சாலை போக்குவரத்து நெடுகிலும் அதிகரித்தது, மேலும் குளிர்காலத்தில் செயல்பட முடியாத சரக்கு இரயில் போக்குவரத்துக்கு பதிலாக சாலை போக்குவரத்து அதிகரித்தது. கட்டுமானம் கால்வாய்கள் கீழ் உள்ள மூன்று வழிகளில் ஒன்று அல்லது மூன்றின் கலவையாக, கிடைக்கக்கூடிய தண்ணீர் மற்றும் கிடைக்கக்கூடிய பாதையைப் பொறுத்து இருக்கும்: மனிதனால் உருவாக்கப்பட்ட நீரோடைகள் கால்வாய்கள் இயற்கையான நீரோடைகள் இல்லாத இடத்திலும் செயற்கையாக உருவாக்க முடியும். எப்படி என்றால்? கால்வாய்கள் செயற்கையாக ஆழமாக தோண்டப்பட்டும் மற்றும் அதன் கரைகள் கல், சிமின்ட் கான்கிரீட் கலவைகளால் பலப்படுத்தப்பட்டும் உருவாக்க முடியும். கால்வாயிற்கான தண்ணீர் வெளிப்புற மூலத்திலிருந்து நீரோடைகள் அல்லது நீர்த்தேக்கங்கள் போன்றவற்றில் இருந்து வழங்க வேண்டும். புதிய நீர்வழி பாதைகளில் தடுப்புகள், தூக்கி அல்லது மின் தூக்கிகல் (elevators) போன்ற நுட்பமான பொறியியல் வேலைகள் மூலம், கால்வாய்களில் கப்பல்கள் உயர்த்தப்படுவதற்காகவும் குறைப்பதற்காகவும் கட்டப்பட்டுள்ளன. எ.கா. ஒரு உயர்ந்த நிலத்தின் மீது பள்ளத்தாக்குகளை இணைக்கும் கால்வாய்கள், கால்வாய் டூ மிடி, கால்வாய் டி ப்ரைரே மற்றும் பனாமா கால்வாய் போன்றவை. தற்போதுள்ள ஏரியின் அடிவாரத்தில் உள்ள மணற்பகுதியை தூர்வாறி ஆழப்படுத்தி துளைப்பதன் மூலம் ஒரு கால்வாய் கட்டப்பட முடியும். கால்வாய் ஆழபடுத்தல் முடிந்ததும், ஏரியின் நீர் குறைக்கப்பட்டு கால்வாய்குள் நீர் நிரபப்படும் இதன் மூலம் சுற்றியுள்ள பகுதியின் நீரை வடிப்பதற்கு வடிகால்வாயாகவும் மற்றும் நீர் வழிப் போக்குவரத்திற்கும் பயன்படும். எ.கா. லேஜ் வார்ட் (nl). ஒரு ஏரிக்குள் இரண்டு இணை அணைக்கரைகள் உருவாக்கவும், புதிய கால்வாயை கரைகளின் இடையில் அமைக்கவும், பின்னர் ஏரியின் மீதமுள்ள நீரை வடிகட்டவும், இதனால் கால்வாய்குள் மட்டும் அதிக நீர் இருக்கும் மற்றும் ஏரியின் பிற பகுதியில் நீர் வடிகட்டப்படும். கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள் உள்ள வடக்கு கடல் கால்வாய் இந்த முறையில் தான் கட்டப்பட்டன. கால்வாய் மற்றும் நீர் வழி போக்குவரத்து அமைத்தல் ஒரு இயற்கை நீரோடையை கால்வாயாக மாற்றம் செய்தால் அதில் எளிதாக கணிக்கக்கூடிய கட்டுப்படுத்தப்பட்ட நீர் வழிப்போக்குவரத்தை உருவாக்க முடியும். இது எப்படி சாத்தியம் என்றால்? நீரோடையின் பாதையைத் ஆழப்படுத்தி தடுப்புகள் அமைத்து திசை திருப்புவதும், மாற்றுவதன் மூலமும் கட்டுப்படுத்துவதன் மூலம் நீரின் ஓட்டம் சீராக மாற்றப்படுகிறது. இதன் மூலம் சரக்குகளை சிறிய படகுகள் மற்றும் பெரிய கப்பல்கள் கொண்டு மிக எளிதாக எடுத்துச் செல்ல இயலும். எ.கா. வடகிழக்கு பென்சில்வேனியாவின் நிலக்கரிப் பகுதி, பாஸ்ஸோ சாவ்ன், கால்வாய் டி மைன்ஸ் டி ஃபெர் லா லாஸ் மோஸெல்லெ மற்றும் ஐசென் நதி ஆகியவற்றில் உள்ள லேஹி கால்வாய் அடங்கும். பக்கவாட்டு கால்வாய்கள் இயற்கை நீரோடைகளை கால்வாயாக மாற்றம் செய்ய இயலாத போது அதன் அருகில் பக்கவாட்டில் இணையான செயற்கையாக கால்வாய் அமைத்து இரண்டாவது நீரோட்டத்திற்கு வழி ஏற்படுத்தித் தருவது. இது பக்கவாட்டு கால்வாய் என்று அழைக்கப்படுகிறது. இயற்கை நீரோடைகள் சில சமயங்களில் தொடர்ச்சியான வளைவுகள், குதிரை குழம்பு வடிவ வளைவுகள் கொண்டதாகவும் சீர்படுத்த முடியாத அளவில் இருக்கும் பொழுது பக்கவாட்டு கால்வாய்களால் எளிதாக சீரான நீரோட்டப் பாதை கொண்டதாக கட்டமைக்க முடியும் அவ்வாறு அமைக்கப்படும் கால்வாய்க்கு தேவையான நீர் ஆதாரமாய் இயற்கை நீரோடை செயல்படும். எ.கா. சாசபீக் மற்றும் ஓஹியோ கால்வாய், கால்வாய் லாடெரல் லா லா லோயர், கேரோன் லேட்னல் கேனல் மற்றும் ஜூலியானா கால்வாய் ஆகியவை இதில் அடங்கும். நீர் பாசானக் கால்வாய்கள் ஆற்று நீர் பாசானக் கால்வாய்கள், வரத்துக் கால்வாய், மாறுகால் கால்வாய், பாசனக் கால்வாய் அல்லது கழனிக்கால் என மூன்று வகைப்படும்.[9] வரத்துக் கால்வாய் (Supply Channel) ஆறுகளில் குறிப்பிட்ட வளைவுகளில் மட்டுமே வரத்துக் கால்வாய்களின் தலைப்பகுதி வெட்டப்படும். அவ்வாறு வெட்டும் போது ஆற்றிலிருந்து தண்ணீர் மட்டுமே கால்வாய்க்குள் செல்லும். மணல் புகாமல் தடுக்கப்படும். மேலும் ஆற்றில் நீர்வரத்து குறையும் காலத்தில் கூட, தடையின்றி கால்வாய்க்குள் தண்ணீர் செல்லும். இதற்கு உதாரணமாக இருக்கிறது வைகை ஆற்றில் இருந்து வட ஏரிக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் கால்வாய். மறுகால் அல்லது வெள்ள வடிகால் கால்வாய் (Surplus Channel) வெள்ளக் காலங்களில் ஏரிகளின் உபரி நீரை கலிங்கல் வழியாக வெளியேற்றும் கால்வாய்தான் மறுகால்வாய். இவற்றின் கொள்ளளவும் ஏரியின் நீர்வரத்துக் கால்வாயின் கொள்ளளவும் சமமாக இருக்கும். நீர்வரத்தும் நீர் வெளியேற்றமும் சரிசமமாக அமைந்து வெள்ளப் பெருக்கை தடுக்க உதவும். பாசனக் கால் அல்லது கழனிக்கால் (Distribution Channel) ஏரி மடையின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்ட இக்கால்வாய்கள் மூலம் பாசன நிலங்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பபடும். நிலங்களின் அளவுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட இந்த கால்வாய்கள் கண்ணாறு, வதி, பிலாறு என அழைக்கப்பட்டது. மிதக்கும் நகரங்கள் கால்வாய்கள் வெனிஸ் நகரத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது, பல (கால்வாய்) மிதக்கும் நகரங்கள் "வெனிஸ் ஆஃப் ..." என்ற பெயரிடப்பட்டது. நகரம் சதுப்பு தீவுகளில் கட்டப்பட்டுள்ளது, கட்டடங்களை ஆதரிக்கும் மரச்சட்டங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது, மனிதனால் இந்த நகரம் செயற்கையாக உருவாக்கப்பட்டதாகும். தீவுகளுக்கு ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு; 12 ஆம் நூற்றாண்டில், வெனிஸ் ஒரு சக்தி வாய்ந்த நகரமாக இருந்தது. ஆம்ஸ்டர்டாம் நகரமும் வெனிஸ் போன்று கட்டப்பட்டது. 1300 ஆம் ஆண்டுகளில் இது ஒரு நகரமாக மாறியது. பல கால்வாய்கள் ஆம்ஸ்டர்டாமின் பலமான ஒரு பகுதியாக கட்டப்பட்டன. நகரம் விரிவடைந்து, வீடுகள் கால்வாய்களை ஒட்டியே கட்டப்பட்டது. விரிவான கால்வாய் கட்டமைப்புடன் உள்ள மற்ற நகரங்கள்: நெதர்லாந்தில் உள்ள ஆல்மாமார், அமர்ஸ்போர்ட், போல்வார்ட், பிரெய்ல், டெல்ஃப்ட், டென் பாஷ், டோக்மும், டார்ட்ரெச்ச்ட், என்குயூஜன், ஃபிரான்கெர், கௌடா, ஹார்லெம், ஹர்லிங்கென், லீவார்டன், லெய்டன், ஸ்னெக் மற்றும் யூட்ரெட்ச் நகரங்கள்; பிரஜி மற்றும் ஜெண்ட்ஸ் ப்ளாண்டர்ஸ், பெல்ஜியம்; இங்கிலாந்தில் பர்மிங்காம்; ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்; போர்ச்சுகில் ஏவிரோ; ஜெர்மனியில் ஹாம்பர்க் மற்றும் பெர்லின்; ஃபோர்ட் லாடெர்டேல் மற்றும் கேப் கோரல், புளோரிடா, அமெரிக்கா மற்றும் லாஹோர் பாக்கிஸ்தான். லிவர்பூல் கடல் வானிப நகரம் இங்கிலாந்தின் லிவர்பூலின் மையப்பகுதியில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களமாக உள்ளது, இங்கு முக்கியமாக குடியிருப்பு மற்றும் பொழுதுபோக்கு பயன்பாட்டிற்காக ஊடுருவிவரும் நீர்வழிகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன. மேற்கோள்கள் பகுப்பு:கால்வாய்கள் பகுப்பு:வேளாண்மை
உலகின் மிகப்பெரிய கால்வாய் எது?
பெரும்
1,928
tamil
1d98a456f
அமேசான் ஆறு (Amazon River) (இலங்கை வழக்கு: அமேசன் ஆறு   பொதுவாக சுருக்கமாக அமேசான் ( or ; Spanish மற்றும் Portuguese: Amazonas) தென் அமெரிக்க கண்டத்திலுள்ள ஒரு ஆறாகும். இது உலகின் இரண்டு நீளமான ஆறுகளில் ஒன்று. மற்றொன்று நைல் ஆறு. அமேசான் ஆறு கொணரும் நீரின் அளவில் உலகின் பெரிய ஆறாகும்.   மற்றும் சில ஆசிரியர்களின் கூற்றின்படி, உலகின் நீண்ட ஆறாகும். இதன் அளவு மிசிசிப்பி, நைல், மற்றும் யாங்சே ஆகிய நதிகளின் மொத்த அளவை விட அதிகம். இதன் நீளம் 6400 கி.மீ.கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறாகும். இதன் மொத்த அளவு அடுத்த எட்டு பெரிய ஆறுகளின் நன்னீரின் அளவை விட அதிகமாகும். இந்த ஆற்றின் ஓட்டம் பலமுறை மாறியுள்ளது. முதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த இந்த ஆறு அண்டெஸ் மலையின் வளர்ச்சியினால் கிழக்கு நோக்கிப் பாய்கிறது. அமேசான் ஆறு எந்த இடத்திலும் பாலம் மூலமாக கடக்கப்படுவதில்லை. இதற்கு காரணம் இதன் அகலம் அல்ல, தற்கால பொறியாளர்களால் இதன் குறுக்கே பாலம் கட்டமுடியும். எனினும் ஆற்றின் பெரும் பகுதி வெப்பமண்டல மழைக்காடுகள் வழியாக பாய்வதாலும் அங்கு சில நகரங்களே உள்ளதாலும் பாலத்தின் தேவை ஏற்படவில்லை. பல்வேறு அளவைகளின் படி அமேசான் ஆறே உலகில் பெரியதாக இருந்தாலும் நீளத்தை பொறுத்தமட்டில் இது நைல் ஆற்றைவிட சிறிது குறைவு என்பது பெரும்பாலான புவியிலாளர்களின் கணிப்பு. எனினும் இதை பிரேசில் மற்றும் பெரு நாட்டை சேர்ந்த சில அறிவியலாளர்கள் ஏற்க மறுக்கிறார்கள். இந்த ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு ஏறத்தாழ ஒரு விநாடிக்கு 209,000 கன மீட்டர்—தோராயமாக ஆண்டுக்கு 6,591 கியூபிக் கிலோமீட்டர் ஆகும், இது இதற்கடுத்த ஏழு மிகப்பெரிய ஆறுகள் வெளியேற்றும் ஆறுகளைவிட கூடுதலாக உள்ளது- உலகின் ஆற்றில் கலக்கும் மொத்த ஆறுகளின் நீரில் அமேசானின் பங்கு 20% ஆகும்.[1]  அமேசான் கால்வாய் உலகின் மிகப்பெரிய வடிகால் பகுதி ஆகும், இது சுமார் 7,050,000 சதுர கிலோமீட்டர் (2,720,000 சதுர மைல்) பரப்பளவில் உள்ளது. அமேசான் பாயும் நாடுகள் இதன் தலைத் துணை ஆறுகளின் உருவாக்கம் பெரு, எக்குவடோர் நாடுகளில் இருந்தாலும், இதன் பெரும்பாலான ஆற்று படுக்கை பகுதி பிரேசில் நாட்டில் அமைந்துள்ளது.Đ அமேசான் ஆறு ஆயிரத்திற்கும் மிகுதியான துணையாறுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் 17 ஆறுகள் 1000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டன. வடிநிலம் அமேசானின் வடிகால் பகுதியே உலகின் மிகப்பெரியதாகும். இது தோராயமாக தென் அமெரிக்காவின் பரப்பில் 40 விழுக்காடு ஆகும். இதன் ஒரு நீர்பிடிப்பு பகுதி உள் ஆண்டிய மேட்டுநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி பசிபிக் பெருங்கடலுக்கு அருகில் உள்ளது. அமேசான் ஆறினால் அட்லாண்டிக் பெருங்கடலில் சேரும் நீரின் அளவு மிக அதிகமாகும். மழைக்காலத்தில் வினாடிக்கு 300,000 கன மீட்டர் அளவு வரை நீர்வரத்தும் 1973-1990 வரையான காலப்பகுதியில் தோராயமாக 209,000 கன மீட்டர் அளவும் நீர்வரத்து இருந்தது. அமேசான் வடிநிலமானது தென் அமெரிக்காவின் மற்றொரு பெரிய ஆறான ஓரினோகோவின் வடிநிலத்துடன் காசிகியுயர் கால்வாய் மூலம் இணைக்கப்படுகிறது. அதனால் இதை இயற்கையாக அமைந்த நீர் இணைப்பு என்பார்கள். கால்வாய் என்று சொன்னாலும் காசிகியுயர் என்பது மேல் ஓரினோ ஆற்றின் கிளை ஆறாகும். இது தெற்காக ஓடி அமேசானின் துணை ஆறாகிய ரியோ நீக்ரோ ஆற்றுடன் கலக்கிறது. தோற்றம் பெரு, ஈக்வடார் நாடுகளில் அமேசான் ஆறு பல ஆற்றுத்தொகுதிகள் உடைய பெரிய ஆற்று அமைப்பாகும். பல நேரடியாக மரானான், உகயாலி போன்ற ஆறுகளில் கலக்கிறது. மரானா, பாஸ்டாச, நுகுரே போன்ற பல ஆறுகள் முதன்மை அமேசான் ஆற்றில் கலக்கின்றன. பெரு நாட்டின் ஆண்டீய மலைத்தொடரில் உள்ள பனி மூடிய நவாடோ மிசிமி சிகரத்தின் பனிஏரியில் அமேசான் உருவாவதாக ௧௯௯௧, 20012007ம் ஆண்டுகளில் நிறுவப்பட்டது. இது டிடிகாகா ஏரிக்கு மேற்கிலும் லிமாவுக்கு தென் கிழக்கிலும் உள்ளது. நவாடோ மிசிமியிலிருந்து வரும் நீரானது குபிராடாஸ் கார்குசன்டா மற்றும் அபாசேடா ஆறுகளில் கலக்கிறது இவை உகயாலி ஆற்றின் துணை ஆறாகிய ரியோ அபுரிமாக் உடன் இணைகிறது. உகயாலி மரானான் உடன் இணைந்து முதன்மை அமேசான் ஆற்றை உருவாக்குகிறது. இந்த இடத்தையே பெரும்பாலான புவியியலாளர்கள் முதன்மை அமேசான் உருவாகும் இடமாக கருதுகிறார்கள். இங்குள்ள ஆற்றை பிரேசிலில் சோலிமோஸ் டாஸ் ஆகுஅஸ் என அழைக்கிறார்கள். ஆயிரம் மைல்கள் கடந்த பின் கரிய நிறமுடைய நீரினை உடைய ரியோ நீக்ரோ மண் நிறமுடைய அமேசானுடன் இணைகிறது. ஆறு மைல் வரையில் இரண்டும் கலக்காமல் அடுத்தடுத்து ஓடுகின்றன. வெள்ளம் அனைத்து அமேசான் துணை ஆறுகளிலும் ஓரே சமயத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதில்லை. பெரும்பாலானவற்றில் நவம்பர் மாதத்தில் வெள்ளம் ஏற்படத்துவங்கி ஜூன் வரை நீடிக்கும். ரியோ நீக்ரோவில் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் வெள்ளம் ஏற்பட துவங்கி ஜூன் மாத வாக்கில் வெள்ளம் குறையத்தொடங்கும். மெடிரிரா மற்ற அமேசான் துணை ஆறுகளில் வெள்ளம் ஏற்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே வெள்ளம் ஏற்பட்டு குறையந்துவிடும். மழைக்காலத்தில் ஆற்றின் ஆழம் சராசரியாக 40 அடியாகும். முதன்மை ஆறு தோராயமாக ஒன்று முதல் ஆறு மைல் அகலம் உடையது. பெரிய கடலில் செல்லும் கலங்கள் இதில் மனவுஸ் வரை செல்லலாம். சிறிய 3000 டன் அல்லது 9000 டன் எடையுடைய கலங்கள் மற்றும் கலத்தின் கீழ் பாகம் நீர் நிலையிலிருந்து 18 அடி வரை இருந்தால் அவை ஆற்றில் 3600 கிமீ வரை செல்லலாம். கழிமுகம் இதன் கழிமுகத்தின் அகலம் தொடர்பாக நிபுணர்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது அதற்கு காரணம் கழிமுகத்தின் புவியியல் அமைப்பாகும். பாரா ஆறு அமேசானுடன் சேர்த்து கணக்கிடப்படுகிறது. சில முறை பாரா ஆறு டோகன்டின்ஸ் (Tocantins) ஆற்றின் தனிப்பட்ட கீழ் பகுதியாக கணக்கிடப்படுகிறது., தனிப்பட்ட பாரா ஆற்றின் கழிமுகம் பெரியதாகும். பாரா மற்றும் அமேசான் ஆறுகள் பல்வேறு ஆற்று கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு இடையில் மரஜா (Marajó)தீவு அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுவிட்சர்லாந்து நாட்டு அளவுக்கு பெரியதாகும். காட்டு உயிர்கள் உலகின் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு அமேசான் காடுகளில் வசிக்கின்றன. அமேசான் ஆற்றுப்படுகையும் மழைக்காடுகளும் 5.4 மில்லியன் சதுர கி.மீ (2.1 மில்லியன் சதுர மைல்) க்கும் மேலானதாகும். அமேசான் ஆற்றில் 3,000 க்கும் அதிகமான மீன் வகைகள் கண்டறியப்பட்டுள்ளது. அமேசான் ஆற்று டால்பின் அமேசான் மற்றும் ஒரினோகோ ஆற்றுப் பகுதியில் வசிக்கிறது. இதுவே ஆற்று டால்பின் வகைகளில் மிகப்பெரியதாகும். இது ௦௦ அடி வரை வளரக்கூடியது. இங்கு அதிகளவில் பிரன்கா என்ற மீன் வகை காணப்படுகிறது. இவை கூட்டமாக வாழும். இவை மாடு, மான் போன்ற உயிரினங்களை தாக்ககூடியவை. மனிதர்களும் தாக்கப்பட்டுள்ளார்கள். எனினும் சில வகை பிரன்காக்களை மனிதர்களை தாக்குகின்றன. குறிப்பாக சிவப்பு வயிற்று பிரான்கா மனிதரை தாக்கும் வகையாகும். அனகோண்டா வகை பாம்புகள் அமேசான் படுகையின் கரையில் காணப்படுகிறது. இது பெரிய பாம்பினங்களில் ஒன்றாகும். இவை பெரும்பாலும் நீரிலேயே வாழ்கின்றன. இதன் மூக்கு பகுதி மட்டும் நீர் மட்டத்துக்கு வெளியே இருக்கும். அமேசான் மழைக்காடுகள் முதன்மைக் கட்டுரை: அமேசான் மழைக்காடு அண்டெஸ் மலைத்தொடரின் கிழக்கில் இருந்து அமேசான் மழைக்காடு தொடங்குகிறது. இதுவே உலகின் மிகப்பெரிய மழைக்காடும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். இது உலகில் வெளியடப்படும் கார்பன்-டை-ஆக்சைடு வளியை பெருமளவில் உட்கொள்ளும் திறன் வாய்ந்தது. இந்த மழைக்காடுகளைக் காப்பது இந்நாட்களில் முக்கிய விடயமாக இருக்கிறது. மிகவும் ஈரப்பதம் கொண்ட அமேசான் படுகை இம்மழைக்காடுகளுக்கு அரணாக விளங்குகிறது. இப்பகுதியில் அமேசான் ஆறும் இதன் நூற்றுக்கணக்கான துணையாறுகளும் மிகவும் மெதுவாக ஓடி பின் கடலில் கலக்கின்றன. உயிரியல் வளம் மிக்க இம்மழைக்காடு, 25 இலட்சம் வகையான பூச்சியினங்களுக்கும் ஆயிரக்கணக்கான தாவர வகைகளுக்கும் ஏறத்தாழ இரண்டாயிரம் பறவைகள், பாலூட்டிகள் ஆகியவற்றிற்கும் இருப்பிடமாக விளங்குகிறது. உலகின் மொத்தப் பறவையினங்களில் ஐந்தில் ஒரு பகுதி இக்காடுகளில் வசிக்கின்றன. அமேசான் காடுகள் பெரும்பாலும் பிரேசில் நாட்டில் அமைந்துள்ளதால், அந்நாடு உல்கிலே உருசியாவிற்கு அடுத்த இரண்டாவது பெரிய காடு வளத்தை (பரப்பளவில் 4,776,980 ச.கி.மீகள்)கொண்டதாக உள்ளது. மேற்கோள்கள் பகுப்பு:தென் அமெரிக்க ஆறுகள்
உலகின் மிகப்பெரிய நதி எது?
நைல்
220
tamil
e358d41e6
இசை (ஒலிப்பு) (music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அருஞ்சாதனம் இசை. இசையை சிரவண கலை எனவும் அழைப்பர். சங்கீதம் என்பது செவிக்கு இன்பம் தரும் தொனி(ஒலி)களைப் பற்றிய கலையாகும். இசையை வடமொழியில் நாதம் என அழைப்பர். இசை இன்று பல்வேறு பயன்களைத் தருகின்றது. தற்போது படித்தவர் முதல் பாமரர் வரை இசை பரவி நிற்கின்றது. இணையத்தில் அன்றாடம் பார்க்கப்படும் காணொளிகளில் இருபது விழுக்காடு இசை சம்பந்தமாகப் பார்க்கப்படும் காணொளிகளாகும்[1]. வரலாறு தொல்பொருளியல் ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட பல பொருட்களில் இருந்து, பண்டைய காலத்தில் இசை எவ்வாறு இருந்தது என்பதை ஊகித்தறிய முடிகிறது. பழைய கற்காலத்தில் மனிதர்கள் எலும்புகளில் துளைகளையிட்டு புல்லாங்குழல் போன்றவற்றைப் பயன்படுத்தி வந்துள்ளனர். ஏழு துளைகள் கொண்ட புல்லாங்குழல், மேலும் சில வகையான நரம்புகள் கொண்ட இசைக்கருவிகள் என்பன, தொல்பொருளாய்வில் சிந்துவெளி நாகரிகம் இருந்த காலத்திலிருந்து பெறப்பட்டிருக்கின்றன.[2] இந்தியா மிகப் பழமையான இசை மரபைக் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக இருப்பதாக அறியப்படுகிறது[3]. மிகப் பழமையானவையும், மிக அதிகளவிலான பழைய கற்கால இசைக்கருவிகள் சீனாவில் இருப்பதாக அறியப்படுகிறது. அவை 7000 – 6600 கி.மு விலானவையாக இருக்கின்றன[4]. மொழியில் இசை மொழியின் பேச்சு வடிவமும், எழுத்து வடிவமும் இயல். பண் இசைத்துப் பாடுவது இசை. நடித்துக் காட்டுவது நாடகம். நாடகத்தைப் பழந்தமிழ் கூத்து எனக் குறிப்பிடுகிறது. கூத்து என்பது பண்ணிசைக்கு ஏற்பக் காலடி வைத்து ஆடும் ஆட்டம். நாடகம் என்பது கதை நிகழ்வைக் காட்டும் தொடர் கூத்து. சங்ககாலத்தில் கூத்து ஆடியவரைக் கூத்தர் என்றனர். நாடகம் ஆடியவரைப் பொருநர் என்றனர். இசை முறைகள் உலகில் பல்வேறு இசை முறைகள் வழங்கி வருகின்றன. அவையாவன: இந்திய இசை ஐரோப்பிய இசை பாரசீக இசை கிரேக்க இசை எகிப்திய இசை சீன இசை அரபு இசை இந்த ஒவ்வொன்றும் பல்வேறு அம்சங்களைத் தன்னுள் கொண்டுள்ளன. இவற்றுள் சிறப்பான சில அம்சங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்திய இசை இந்தியா ஒரு மிகப் பெரிய நாடு. நூற்றுக்கணக்கான இனங்கள் /இனக்குழுக்களையும், மொழிகளையும், பண்பாடுகளையும் தன்னகத்தே அடக்கியது. இதனால் இப் பண்பாடுகளின் வெளிப்பாடுகளாகவுள்ள இசை, நடனம், நாடகம் முதலிய கலைகளும் பல்வேறு விதமான வேறுபாடுகளுடன் நாடு முழுவதும் பரந்துள்ளன. இவற்றுள் இசை மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவின் இசைவடிவங்களுட் பல தொன்மையான வரலாற்றைக் கொண்டவை. நூற்றாண்டுகளினூடாக சீர்செய்யப்பட்டு வளமான முதிர்ந்த நிலையிலுள்ளவை. உலகம் முழுவதிலும் அறியப்பட்டவை. இவற்றைவிட ஏராளமான கிராமிய, உள்ளூர் இசை மரபுகள், அந்தந்தப் பிரதேசத்துச் சமூக, பொருளாதார, ஆன்மீகத் தேவைகளோடு இணைந்து பயிலப்பட்டு வருவனவாக உள்ளன. பின்வருவன இந்தியாவின் முக்கிய இசை மரபுகளுட் சிலவாகும். கருநாடக இசை இந்துஸ்தானி இசை கசல் கவ்வாலி கிராமிய இசை பழந்தமிழ் இசை கருநாடக இசை கருநாடக இசை அல்லது பண்ணிசை தென்னிந்திய இசை வடிவமாகும். உலகின் தொன்மையான இசைவடிவங்களிலொன்றாகக் கருதப்படுகின்றது. தமிழகத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகும்.[5] செம்மொழியில் ஏழிசை என: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி மற்றும் தாரம் என அழைக்கப்பட்டதையே தமிழ்மொழியில் வடமொழிக் கலப்பு ஏற்பட்டபோது இந்த ஏழு இசைகளைச் ‘ஸ்வரம்’ என்றனர்..[6]கருநாடக இசை இராகம், தாளம் என்னுமிரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற இவ்வேழு ஸ்வரங்களும் ஸ - ரி - க - ம - ப - த - நி என்னும் எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. கிராமிய இசை கிராமிய இசை கிராமங்களில் வசிக்கும் சாதாரண மக்கள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்ட ஒருவகை இசையாகும். இவற்றுக்கு நாடோடி இசை, நாட்டுப்பாடல்கள் என்ற பெயர்களும் உண்டு. "மண்வாசனை வீசும் கிராமிய இசையை தமிழகமெங்கும் தவழவிட்டவர் இளையராஜா. கிராமிய மெட்டு, கிராமிய இசைக் கருவிகள் ஆனால் மேற்கத்திய பாணியில் வாத்தியங்களின் ஒருங்கிணைப்பு என்று இசைக்கலைஞனின் கற்பனையில் உச்சத்தில் நின்று பாடல்களை வழங்கியவர் இளையராஜா." கிராமிய இசைக் கருவிகள் எக்காளம் திருச்சின்னம் கஞ்சிரா பூசாரிக் கைச்சிலம்பு தவண்டை உடுக்கை தம்பட்டம் பழந்தமிழ் இசை பழந்தமிழ் இசை என்பது தமிழரின் மரபு வழியான மிகப் பழைமையான இசைச் செல்வமாகும். பழந்தமிழிசை எனக் குறிப்பிடும் போது ஐரோப்பியர் ஆட்சிக்கு முற்பட்ட காலத் தமிழ் மொழியின் இசை நடை, சிறப்புகள், பெற்ற மாற்றங்கள் ஆகியவை இங்கு குறிப்பிடப்படுகிறது. சங்கத்தமிழானது இயல், இசை, நாடகம் என மூன்று வகையாகும். இதில் இசை என்பது தமிழிசையாகும். பழந்தமிழ் மக்கள் வேறு இன மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதற்கு முன்பே இசையும் அதோடு இணைந்த கூத்தும் உருவாகி வளரத் தொடங்கின. இசை, கூத்து ஆகியவற்றின் கலை நுட்பங்களை விளக்கும் இலக்கணத் தமிழ் நூல்கள் எழுந்தன. இந்நூல்கள் எழுதப்பட்ட காலம் முச்சங்க காலம் என அறியப்படுகிறது. இம்முச்சங்க காலம் இற்றைக்கு ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. எனவே தமிழர் இசையும் கூத்தும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செவ்விய கலைகளாக விளங்கின என உறுதியாகக் கொள்ளலாம். இந்துஸ்தானி இசை இந்துஸ்தானி இசை வட இந்தியாவில் வழக்கத்தில் இருக்கும் சங்கீதப் பாரம்பரியமாகும். கருநாடக இசை போலவே இங்கும் தாளம், இராகம் முக்கியமான அங்கங்களாகும். வேத காலம் தொட்டு கி.பி. 13ம் நூற்றாண்டு வரை இந்தியா முழுதும் ஒரே இசை மரபு மட்டுமே காணப்பட்டது. வட இந்தியாவை முகம்மதியர் கைப்பற்றிய பின்னர், பாரசீக, அரேபிய இசைக்கலப்பினால் இந்துஸ்தானிய இசை உருவாகியது. இவ்விசையும் கர்நாடக இசையும் சாமகானத்திலிருந்தே தோன்றியவை ஆகும். 13ம் நூற்றாண்டில் சாரங்கதேவரின் காலத்தின் பின் இஸ்லாமியர்கள் வடஇந்தியாவைக் கைப்பற்றிய பின் இந்தியாவின் கலாசாரங்களில் ஏற்பட்ட மாற்றங்களைப் போல இந்திய இசையிலும் மாற்றங்கள் ஏற்பட்டன.பாரசீகக் கலையுடன் இருந்த தொடர்பே இந்துஸ்தானிய இசைக்கும் கர்னாடக இசைக்கும் இடையே ஏற்பட்ட இடைவெளிக்குக் காரணமாகும். இந்திய இசையின் தனித்தன்மைகள் இந்திய இசை தனி இசை (melody)யை ஆதாரமாகக் கொண்டது. மேற்கத்திய இசை கோர்வை இசை (harmony)யை ஆதாரமாகக் கொண்டது. இந்திய இசையின் இராக அமைப்பு, பகைச்சுரங்களைக் கொண்ட மேளங்கள் 40ம், பகைச்சுரங்கள் இல்லாத மேளங்கள் 32ம் இன்று கருநாடக இசையில் கையாளப்படுகின்றன. ஆனால் இவற்றிற்கெல்லாம் முன்னோடியாக இருந்தவை தேவாரப் பண்கள் ஆகும். இந்திய இசை வரலாற்றிலேயே இராக தாளத்துடன் நமக்குக் கிடைக்கப்பட்ட மிகப் பழமையான இசை வடிவம் தேவாரம் ஆகும். எண்ணற்ற இராகங்களுக்குத் தேவாரப் பண்களே ஆதாரமாயிருந்தன. தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் இந்தியா முழுவதும் ஒரே வகையான இசைதான் இருந்தது. அக்காலத்தில் இந்துஸ்தானி, கர்நாடகம் என்று பிரிவு ஏற்படவில்லை. எனவே இந்திய இசைக்கே ஓர் அடிப்படியாக இருப்பது பண்கள் என்று கூறலாம். இசை நூல்கள் தமிழ்ச் சூழலில் பண்டைக் காலத்தில் இருந்த முச்சங்கங்கள் இசையைப் பேணி வளர்த்தன.இசை நூல்கள் பல இயற்றப்பட்டன. அவை காலத்தால் அழிந்துபோயின.இவ்வாறு மறைந்த நூல்களாக முதுநாரை,முதுகுருகு,சிற்றிசை,பேரிசை, பெருநாரை,பெருங்குருகு,பஞ்ச பாரதீயம்,பரதம்,அகத்தியம்,செயிற்றியம், குணநூல் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. தொல்காப்பியம்,எழுத்ததிகாரம் 33 ஆவது நூற்பாவான, 'அளபிறந்து யிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உள வென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்'என்பதில் சுட்டப்படும் 'நரம்பின் மறை'யை இசைநூலாகக் கொள்கின்றனர். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார்,கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டில் இசை நுணுக்கம்(சிகண்டியார்), இந்திரகாளியம் (யாமளேந்திரர்),பஞ்ச மரபு(அறிவனார்),பரத சேனாபதியம்(ஆதிவாயிலார்), மதிவாணர் நாடகத் தமிழ்(பாண்டியன் மதிவாணனார்)ஆகிய நூல்கள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இவற்றுள் பஞ்ச மரபு இன்றும் உள்ளது. இருபதாம் நூற்றாண்டில் பல்வேறு இசை நூல்கள் ஆராய்ச்சியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன.அவற்றுள் குறிப்பிடத்தக்கவை ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம்,விபுலானந்தரின் யாழ் நூல்,எஸ்.இராமநாதனின் [[சிலப்பதிகாரத்து இசை நுணுக்கம்]],குடந்தை ப.சுந்தரேசனாரின் [[இசைத் தமிழ்ப் பயிற்சி நூல்]], மதுரை பொன்னுசாமி பிள்ளையின் பூர்வீக சங்கீத உண்மை ஆகியவையாகும். ஏழு சுரங்களும் அவற்றின் விளக்கமும் ஸ ரி க ம ப த நி, என்பவை ஏழு சுரங்களாகும். இவற்றை சப்தசுரங்கள் என்பர். சப்தசுரங்கள் ஏழும் தனது இயற்கையான சுர நிலைகளில் இருந்து சற்றே உயர்ந்தோ அல்லது தாழ்ந்தோ ஒலிக்கும் போது அவை அந்தந்த சுரங்களின் துணை சுரமாகின்றன. அடிப்படை இசை ஒலிப்பெயர்கள் 1.குரல் 2.துத்தம் 3.கைக்கிளை 4.உழை 5.இளி 6.விளரி 7.தாரம் இவற்றிற்குரிய உயிர் எழுத்துக்கள் ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ. இவை வடமொழியில், 1.சட்ஜம்-ஸ 2.ரிஷபம்-ரி 3.காந்தாரம்-க 4.மத்தியமம்-ம 5.பஞ்சமம்-ப 6.தைவதம்-த 7.நிஷாதம்-நி என்று குறிப்பிடப்படுகின்றன.இந்த ஏழு இசை ஒலிகளும் சுரங்கள் என அழைக்கப்படுகின்றன. சுரங்களின் வளர்ச்சி ஏழு சுரங்களும் பின்னர் பன்னிரு சுரங்களாக வளர்ச்சிப் பெற்றன.இவற்றுள் குரலும்(ஸ),இளியும்(ப)வகை பெறா சுரங்களாகும்.ஏனைய துத்தம்(ரி),கைக்கிளை(க),உழை(ம), விளரி(த),தாரம்(நி) ஆகிய இரு வகைபெறும் சுரங்களாகும்.இவ்வாறு பன்னிரு சுரங்கள் உருவாகின. ஆங்கில மொழியில் Sharp,Flat என்பதுபோல் தமிழில் நிறை-குறை எனவும், வன்மை-மென்மை எனவும்,ஏறிய-இறங்கிய எனவும் குறிக்கப்பெறும்.வடமொழியில் கோமள-தீவிர என்று அழைக்கப்படுகின்றன.ஏழிசை அல்லது பன்னிரு இசைநிலைத் தொகுப்புகளை ஒரு மண்டிலம் என்று வழங்குவர்.இயக்கு,ஸ்தாயி,தானம் ஆகியவை இதன் வேறுபெயர்களாகும். பன்னிரு இசைநிலைத் தொகுப்புகள் 1.குரல் -வகைபெறா சுரம்-குறியீடு(ஸ) 2.துத்தம்-குறை துத்தம்(தமிழில்)-சுத்த ரிஷபம்(வட மொழியில்)-ரி1 3.துத்தம்-நிறை துத்தம்-சதுஸ்ருதி ரிஷபம்-ரி2 4.கைக்கிளை-குறை கைக்கிளை-சாதாரண காந்தாரம்-க1 5.கைக்கிளை-நிறை கைக்கிளை-அந்தர காந்தாரம்-க2 6.உழை-குறை உழை-சுத்த மத்தியமம்-ம1 7.உழை-நிறை உழை-பிரதி மத்தியமம்-ம2 8.இளி-வகைபெறா சுரம்-ப 9.விளரி-குறை விளரி-சுத்த தைவதம்-த1 10.விளரி-நிறை விளரி-சதுசுருதி தைவதம்-த2 11.தாரம்-குறை தாரம்-கைசிகி நிஷாதம்-நி1 12.தாரம்-நிறை தாரம்-காகலி நிஷாதம்-நி2 இது சமன்,மெலிவு,வலிவு,சமன் மண்டிலம், மத்திய ஸ்தாயி எனவும்,மெலிவு மண்டிலம், மந்த்ர ஸ்தாயி எனவும், வலிவு மண்டிலம், தாரஸ்தாயி எனவும் மூவகைப்படும்.மெலிவில் நான்கு சுரங்களும்(ம ப த நி மற்றும் நான்கு கீழ்ப்புள்ளிகள்),சமனில் ஏழு சுரங்களும்(ஸ ரி க ம ப த நி),வலிவில்(ச ரி க மற்றும் மூன்று மேல் புள்ளிகள்) என பதினான்கு சுரங்கள் இசைக் குறிப்பில் குறிக்கப்பெறும். பாலையும் பண்ணும் பாலை என்பது பகுப்பு ஆகும்.எழுவகைப் பாலைகள் உள்ளன.ஏழிசையின் பகுப்பானது ஆயம்,சதுரம்,திரிகோணம்,வட்டம் ஆகிய நான்கு வகைகளில் அமைகின்றன.வட்டப் பாலை எனப்படுவது முழுமையாக ஒரு வட்டத்தில் பன்னிரண்டு கோணம் அமைத்து அதில் ஏழு கோணத்தைக் கொண்டு உறழ்வதாகும். சுரங்கள் ஏழும் பன்னிரண்டு இராசிகளில் வல,இட முறையாக உறழப்படுவதால் ஏழு பெரும்பாலைகள் உருவாகின்றன. அவையாவன: 1.குரல் குரலாயது-செம்பாலை-அரிகாம்பதி ராகம். 2.துத்தம் குரலாயது-படுமலைப் பாலை-நடபைரவி ராகம். 3.கைக்கிளை குரலாயது-செவ்வழிப் பாலை-பஞ்சமமில்லாத தோடி ராகம். 4.உழை குரலாயது-அரும்பாலை-சங்கராபரணம் ராகம். 5.இளி குரலாயது-கோடிப்பாலை-கரகரப்ரியா ராகம். 6.விளரி குரலாயது-விளரிப்பாலை- தோடி ராகம் 7.தாரம் குரலாயது-மேற்செம்பாலை-கல்யாணி ராகம். இராகம் என்னும் வடமொழிச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல் பண் ஆகும். பண் எனப்படுவது இனிமையான இசைத் தொடருடைய ஒலி உருவ அமைப்பாகும். உசாத்துணை நூல்கள் முனைவர் இ.அங்கயற்கண்ணி, தமிழக இசையும் ஆய்வும், கலையகம் வெளியீடு,தஞ்சாவூர்-7, முதற்பதிப்பு:டிசம்பர்-2002 Colles, Henry Cope (1978). The Growth of Music: A Study in Musical History, 4th ed., London: Oxford University Press. ISBN 0-19-316116-8 ( at Google Books) Small, Christopher (1977). Music, Society, Education. John Calder Publishers, London. ISBN 0-7145-3614-8 மேற்கோள்கள் * பகுப்பு:மகிழ்கலை பகுப்பு:பண்பாடு
மேற்கத்திய இசை எந்த கோர்வை இசை?
இந்திய இசை
1,651
tamil
5e1fb4dd5
நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் அல்லது நிக்கோலசு கோப்பர்னிக்கசு (/koʊˈpɜːrnɪkəs,kə-/;[2][3][4] Niklas Koppernigk; Polish: Mikołaj Kopernik;[5] German: Nikolaus Kopernikus; பிப்ரவரி 19, 1473 - மே 24, 1543) ஒரு வானியலாளரும், கணிதவியலாளரும், பொருளியலாளருமாவார். கதிரவனை மையமாகக் கொண்ட புரட்சிகரமான கொள்கையை வகுத்துத் தந்து வானியலில் புதிய ஒரு வளர்ச்சிக்கு வித்திட்டவர். 15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிலவியிருந்த பூமியை மையமாகக் கொண்டே பிற கோள்கள் இயங்குகின்றன என்ற கொள்கையை மாற்றிக் கதிரவனை மையமாகக் கொண்டே கோள்கள் இயங்குகின்றன என உலகிற்குக் காட்டியவர். கிரேக்க நாட்டின் சிறந்த வானியல் அறிஞரான தாலமி கி.பி. 140இல், புவிமையக் கொள்கையை விளக்கும் மிகச் சிறந்த அமைப்பை வகுத்தார். அக்காலத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இக்கொள்கை பல நூற்றாண்டுகளாக மாற்றம் அடையவில்லை. பின்பு அரிசுட்டாட்டில் என்ற கிரேக்க வானவியலாளர், புவி உட்பட அனைத்தும் கதிரவனைச் சுற்றி வருகின்றன என்று ஆராய்ந்து கூறினார், ஆனால், இக்கொள்கை மத நம்பிக்கைகளுக்கு முரணானதெனக் கருதப்பட்டதால், அக்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் சூரியனை மையமாகக் கொண்டே கோள்கள் இயங்குகின்றன என்று ஆராய்ந்து கூறினார். இவர் போலந்தில் பிறந்தவர். சிலர், இவர் செருமானிய வம்சாவளியைச் சேர்ந்த போலந்து நாட்டவர் என்றும் கருதுகிறார்கள். இவர் ஐரோப்பிய மறுமலர்ச்சியில் பெரும் பங்கு வகித்த பலதுறை நிபுனர், கணிதவியலாளர், வானியலாளர், சட்டத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற சட்ட நிபுணர், மருத்துவர், நான்கு மொழிகள் அறிந்திருந்த மொழிபெயர்ப்பாளர், பழங்கலை அறிஞர், கலைஞர்[6], கத்தோலிக்க குரு, ஆளுனர், அரசு தூதர் மற்றும் பொருளியலாளர் ஆவார். வாழ்க்கைச் சுருக்கம் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் போலந்து நாட்டின் ராயல் புருசியாவில் தோர்ன் என்ற நகரில் 1473 பிப்ரவரி 19ஆம் நாள் பிறந்தார்.[7][8] இவரது தந்தை கிராக்கொவ் நகரில் பெரிய வணிகர் ஆவார். தாயார் பார்பரா வாட்சன்ராட் தோர்ன், நகரின் மிகப்பெரிய செல்வந்தரின் மகள். இத்தம்பதிகளுக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர் நிக்கோலாஸ். இவரது தந்தை கிராக்கொவ் நகரிலிருந்து தோர்ன் நகருக்கு இடம்பெயர்ந்து அங்கு ஒரு மரியாதைக்குரிய குடிமகனாக இருந்தார். செம்பு வியாபாரம் செய்து செல்வந்த வணிகராகத் திகழ்ந்த இவர், நிக்கோலாசுக்குப் பத்து வயதாகும்போது காலமானார். இவரது தாயார் பார்பரா வாட்சன்ராட் பற்றி அதிகம் அறியக் கிடைக்கவில்லை. எனினும், கணவருக்கு முன்னரே இவர் இறந்து விட்டதாகக் கருதப்படுகிறது. தந்தையாரின் மறைவுக்குப் பின்னர், நிக்கோலாசும் அவரது மூன்று உடன்பிறப்புக்களும் (ஒரு சகோதரன், இரண்டு சகோதரிகள்) அவர்களது தாய்மாமனொருவரால் வளர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. இறுதி வரை இவர் திருமணமே செய்யாது தனது ஆய்விலேயே தனது முழுக் கவனத்தையும் செலுத்தி வந்தார். இலத்தீன், இடாய்ச்சு, போலந்து, இத்தாலியம், கிரேக்கம் ஆகிய மொழிகளில் இவர் தேர்ச்சி பெற்றிருந்தார். 1491இல் கோப்பர்னிக்கஸ் கிராக்கோவ் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்றார். இங்கே தான் அவருக்கு வானியலுடன் பழக்கம் ஏற்பட்டது. இவரது ஆசிரியராக இருந்த அல்பேர்ட் புருட்செவ்ஸ்கி (அல்பேர்ட் பிளார்) என்பவரின் உதவியால் அவருக்கு வானியலில் ஆர்வம் ஏற்பட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், மேலும் சில காலம் தோர்னில் தங்கியிருந்த பின்னர், இத்தாலிக்குச் சென்று அங்குள்ள பொலொக்னாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். அவரது கல்விக்குப் பண உதவி புரிந்த அவரது மாமனார், கோப்பர்னிக்கஸ் ஒரு பேராயராகவும் வரவேண்டுமென விரும்பினார். அங்கே படித்துக்கொண்டிருந்தபோது, பிரபல வானியலாளராக இருந்த ஆசிரியர் டொமெனிக்கோ மரியா நோவரா டா பெராராவைச் சந்தித்தார். கோப்பர்னிக்கஸ் அவரிடம் படித்ததோடு அவருடைய சீடராகவும், உதவியாளராகவும் ஆனார். கோப்பர்னிக்கஸ் காலத்திற்கு முன்பு இருந்த வானியற்கொள்கைகள் தாலமி தாலமியின் கொள்கையில் கதிரவனும் கோள்களும் புவியை பெரிய வட்டப்பரிதிகளில் சுற்றி வருவதாகக் கூறப்பட்டது. இதனை ஆங்கிலத்தில் different என்பர். இந்தப் பரிதிகளின் மேல் சிறிய வட்டப்பாதைகளில் கோள்கள் சுற்றிக் கொண்டே செல்கின்றன. இந்தச் சிறிய பரிதிகள் மேல்மிசை வட்டங்கள் (epicycle) என வழங்கப்பட்டன. அரிசுட்டாட்டில் அரிசுட்டாட்டில், பூமி உட்பட அனைத்தும் கதிரவனைச் சுற்றி வருகின்றன என ஆராய்ந்து கூறினார். நிலம், நீர், காற்று, நெருப்பு என்ற தத்துவங்களை அவர் ஒப்புக்கொண்டார். இவர் புவிக்கும் நிலவுக்கும் இடையில் புதன், வெள்ளி, சூரியன், செவ்வாய், வியாழன் என்ற நிலையான கோள்கள் உள்ளன என்றும், இவை புவியை மையமாகக் கொண்டு நிலையான ஒரு கிடைமட்ட வட்டப்பாதையில் இயங்குகின்றன என்றும் கூறினார். கோப்பர்னிக்கஸ் கொள்கை கோப்பர்னிக்கசின் சூரிய மையக் கொள்கை எளிமையானது. எனினும் கிரேக்கர்களுடைய சிந்தனைகளின் தாக்கம் இவருடைய கொள்கையிலும் இருந்தது. கோப்பர்னிக்கஸ் கொள்கையின் படி கோள்களின் பெரிய வட்டமும், சிறிய வட்டப்பரிதிகளும் சூரியனை மையமாகக் கொண்டவை. கோள்களின் பின்னோக்கிய நகர்வையும் அவற்றின் ஒளி வேறுபாடுகளையும் விளக்கச் சிறிய வட்டப் பரிதிகளையும் தனது கொள்கையில் புகுத்தியிருந்தார். அது மட்டுமின்றி விண்மீன்கள் வெகுதொலைவில் வானக் கூரையில் அமைந்திருப்பதாகவும் இவர் குறிப்பிட்டார். கோப்பர்னிக்கசின் சுழற்சிக் கொள்கை கோப்பர்னிக்கசின் சுழற்சிக் கொள்கை ஏழு பகுதிகளைக் கொண்டது. வானக் கோளத்திற்குப் பொதுவானதோர் மையம் இல்லை (குறிப்பாகப் பூமி தான் அனைத்திற்கும் மையம் என்பது தவறு.). புவியின் மையம் பேரண்டத்தின் மையம் அல்ல. அது புவி ஈர்ப்பு மையமும் சந்திரனின் சுழற்சிப் பாதையின் மையமுமே ஆகும். அனைத்துக் கோள்களும் சூரியனையே சுற்றி வருகின்றன. புவியிலிருந்து சூரியன் உள்ள தொலைவு புவியிலிருந்து வெகுதொலைவில் உள்ள விண்மீன்கள் இருக்கும் வான்கூரையின் (firmament) தொலைவுடன் ஒப்பிடும்போது கட்புலனாகாத அளவு சிறியதாக இருக்கிறது. புவி, தனது அச்சில் தினசரி சுழல்கிறது. புவியின் சுழற்சி காரணமாகவே தொலைவில் உள்ள விண்மீன்கள் நகருவதாகத் தோன்றுகின்றன, உண்மையில் விண்மீன்கள் அசைவுறாத வானக்கூரையில் நிலையாக அமைந்துள்ளன. சூரியனின் நகர்வு உண்மையில் சூரியனின் நகர்வல்ல. புவி நகர்வதால் தோன்றும் உணர்வு. கோள்களின் பின்னோக்கிய நகர்வுத் தோற்றமும் முன்னோக்கிய நகர்வுத் தோற்றமும் அவற்றினுடையதல்ல. அவை புவியின் நகர்வால் உருவாக்கப்படுபவையே. அறிவியலாளர் ஏற்பு கோப்பர்நிக்கசின் கருத்து அக்காலப் பொது மக்களாலும் வானியலாளர்களாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை "புவி பேரண்டத்தின் மையமல்ல. சூரியனைச் சுற்றும் கோள்கள்போலப் புவியும் ஒரு சாதரணக் கோள் தான்" என்பதை மதவாதிகளும் வானவியலாளர்களும் ஏற்கவில்லை. மேலும் அவரது நூலான ஆன் தி ரிவலூஷன்ஸ் ஆஃப் தி ஹெவென்லி பாடீஸ் (On The Revolutions of The Heavenly Bodies) இலத்தீன் மொழியில் இருந்ததால், பெரும்பாலான மக்களால் அதனைப் படித்துணர முடியவில்லை. இதனால் இவரது நூல் பெருமையடையாமலே இருந்தது. இத்தாலிய வானியல் அறிஞர்களான கலீலியோ கலிலி (கி. பி. 1564-1642) புரூனோ போன்றோர் கோப்பர்நிக்கசின் கொள்கைகளை ஏற்று அதனை நிறுவும் முயற்சியில் இறங்கியவுடன் தான் உலகின் பார்வை கோப்பர்நிக்கசின் நூல்மேல் விழுந்தது. அதில் உள்ள மத நம்பிக்கைகளுக்கு எதிரான கொள்கைகள் மதவாதிகளால் உணரப்பட்டன. நூல் வெளிவந்து 73 ஆண்டுகள் கழித்தே கி. பி. 1616இல் இந்நூல் தடை செய்யப்பட்டது. 18ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இத்தடை விலக்கப்படவில்லை. பன்முகச் சாதனையாளர் கோப்பர்னிக்கஸ் ஒரு மருத்துவராகவும், ஒரு நீதிபதியாகவும், ஆளுநராகவும், பொருளாதார நிபுணராகவும், கணிதவியலாளராகவும் விளங்கியதுடன் கத்தோலிக்க மத குருவாகவும் இருந்தார். எனினும் மதக் கொள்கைகளுக்கு எதிரான சூரிய மையக் கொள்கையை அவர் வெளியிடத் தயங்கவில்லை. மறைவு கோப்பர்னிக்கஸ் 1543இல் இறக்கும் சந்தர்ப்பத்தில் பக்கவாதம் தாக்கிக் ஆழ்மயக்க நிலையில் இருந்தார். ஆழ்நிலை மயக்கத்தில் அவர் இருந்தபோது அவரது நூல் அச்சிட்டு எடுத்துவரப்பட்டு அவரது கரங்களில் வைக்கப்பட்டது, உடனே அவர் தனது ஆழ்மயக்க நிலையிலிருந்து மீண்டு, விழிப்புணர்வு பெற்றுத் தனது வாழ்நாள் சாதனையான அந்நூலைப் பார்த்தபின் தான் இறந்தார் என்று கூறப்படுகிறது.[9] பெருமைகள் கோப்பர்நீசியம் 14 சூலை 2009 அன்று செருமனியில் இரசாயன மூலகமான கோப்பர்நீசியத்தைக் கண்டுபிடித்தனர். அப்போது அம்மூலகம் 112 ஆம் மூலகமாகக் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில், உனுன்பியம் என்ற தற்காலிகப் பெயரை இட்டதுடன் பின்னர் அம்மூலகத்திற்கு நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸின் ஞாபகார்த்தமாக கோப்பர்நீசியம் (Cn) எனும் பெயரை வைப்பதற்குப் பரிந்திரை செய்யப்பட்டது. பின்னர் ஐயூபேக்கு 2010, பெப்ரவரி 19 ஆம் நாள் அதிகாரபூர்வமாக அப்பெயரை ஏற்றுக் கொண்டுள்ளது[10] 55 காங்கிரி ஏ 2014 சூலையின் உலகளாவிய வானியல் ஒன்றியம், ஒருசில வெளிக்கோள்களுக்கும் அவற்றின் உடுக்களுக்கும் முறையான பெயர்களைச் சூட்டுவதற்கான திட்டம் ஒன்றைச் செயற்படுத்தியது. இத்திட்டத்தில் பல புதிய பெயர்களினை உடுக்கள், வெளிக்கோள்களுக்கு இடுவதற்காகத் தேர்தல் நடாத்தப்பட்டது..[11] அவற்றில் 55 காங்கிரி ஏ எனும் உடுவிற்கு கோப்பர்னிக்கசின் பெயர் சூட்டப்பட்டதாக திசம்பர், 2015 இல் ஐஏயு அறிவித்தது.[12] நாட்காட்டி எபிஸ்கோப்பல் தேவாலயத்தின் நாட்காட்டியான புனிதர்களின் நாட்காட்டியில் 23 மே எனும் நாளில் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸும் ஜொகான்னஸ் கெப்லரும் புனிதர்களாகக் குறிக்கப்பட்டுள்ளனர்.[13] நூல் ஸ்விட்லானா அசரோவா கோப்பர்னிக்கஸினை பற்றி பூமியை நகர்த்தியவர், சூரியனை நிறுத்தியவர்" (Mover of the Earth, Stopper of the Sun) எனும் நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.][14][15] ஜோன் பன்விலி, 1975 ஆம் ஆண்டில் டொக்டர் கோப்பர்னிக்கஸ் எனும் நாவலை எழுதியுள்ளார். அந்நாவலில் கோப்பர்னிக்கஸின் வாழ்க்கை, அவர் வாழ்ந்த அபோதைய 16ஆம் நூற்றாண்டு உலகம் பற்றி சித்தரிக்கப்பட்டுள்ளது. படக்காட்சியகம் கடவுளுடனான உரையாடல் கோப்பர்னிக்கஸ் நூலின் முதற்பக்கம் கோபர்னிக்கசின் ஊனுடலின் எச்சம் கோப்பர்னிக்கசின் சிலை மேற்கோள்கள் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் பற்றிக் கட்டுரை, அறிவியல் ஒளி-சனவரி 2007 இதழ். முனைவர் ஐயம்பெருமாள்-செயல் இயக்குநர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், சென்னை-25. வெளி இணைப்புகள் பகுப்பு:போலந்து அறிவியலாளர்கள் பகுப்பு:வானியலாளர்கள் பகுப்பு:செருமானிய வானியலாளர்கள் பகுப்பு:செருமானிய அறிவியலாளர்கள் பகுப்பு:போலந்து வானியலாளர்கள் பகுப்பு:1473 பிறப்புகள் பகுப்பு:1543 இறப்புகள்
சூரிய மையக் கோட்பாட்டை நிரூபித்தவர் யார்?
கோப்பர்னிக்கஸ்
11
tamil
50966a18d
மெக்சிக்கோ (எசுப்பானியம்: México, "மெஹிக்கோ") வட அமெரிக்கக் கண்டத்திலுள்ள ஒரு கூட்டாட்சி அரசமைப்புக் குடியரசு நாடாகும். முறைப்படி இது ஐக்கிய மெக்சிக்க நாடுகள் என அழைக்கப்படுகிறது.[1] ஐக்கிய அமெரிக்க நாடுகள் இதன் வடக்கு எல்லையாக அமைந்துள்ளது. தெற்கிலும், மேற்கிலும் பசிபிக் பெருங்கடல் உள்ளது. தென்கிழக்கு எல்லையில் குவாத்தமாலா, பெலிசே ஆகிய நாடுகளும் கரிபியக் கடலும் உள்ளன. கிழக்கு எல்லையில் மெக்சிக்கோ குடா அமைந்துள்ளது.[2] ஏறத்தாழ இரண்டு மில்லியன் சதுர கிலோமீட்டர் (760,000 சதுர மைல்களுக்கு மேல்)[3] பரப்பளவு கொண்ட மெக்சிக்கோ, பரப்பளவு அடிப்படையில் அமெரிக்கக் கண்டத்திலுள்ள ஐந்தாவது பெரிய நாடும், உலகில் 13 ஆவது பெரிய விடுதலை பெற்ற நாடும் ஆகும். 113 மில்லியன் மக்கள் தொகையுடன்[4] உலகின் 11 ஆவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாகவும் இது விளங்குவதுடன், உலகில் அதிக மக்கள் எசுப்பானிய மொழி பேசும் நாடும் இதுவாகும். இதன் தலைநகரம் மெக்சிகோ நகரம். மெக்சிக்கோவின் கூட்டாட்சி அமைப்பில் 31 மாநிலங்கள் இணைந்துள்ளன. இவற்றோடு தலைநகரம் கூட்டாட்சி மாவட்டமாக இருக்கிறது. கொலம்பசுக்கு முற்பட்ட மெக்சிக்கோவில் பல பண்பாடுகள் முதிர்ச்சியுற்று, ஒல்மெக், தோல்ட்டெக், தியோத்திகுவாக்கான், சப்போட்டெக், மாயா, அசுட்டெக் போன்ற நாகரீகங்களாக உயர்நிலை அடைந்தன. 1521 ஆம் ஆண்டில், மெக்சிக்கோவின் பகுதிகளை எசுப்பெயின் கைப்பற்றித் தனது தளமான மெக்சிக்கோ-தெனோச்தித்லானில் இருந்து குடியேற்றங்களை நிறுவியது. இப்பகுதிகள் புதிய எசுப்பெயினின் வைசுராயகமாக நிர்வாகம் செய்யப்பட்டது. 1821 ஆம் ஆண்டில் இக் குடியேற்றநாட்டின் விடுதலை ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், இந்த ஆட்சிப்பகுதிகள் மெக்சிக்கோ ஆக மாறின. விடுதலைக்குப் பிற்பட்ட காலத்தில், பொருளாதார உறுதியின்மை, மெக்சிக்கோ-அமெரிக்கப் போர், அமெரிக்காவிடம் ஆட்சிப்பகுதிகள் இழப்பு, உள்நாட்டுப் போர், இரண்டு பேரரசுகள் உருவாக்கம், ஒரு உள்ளூர் சர்வாதிகாரம் போன்றவற்றுக்கு மெக்சிக்கோ முகம் கொடுக்கவேண்டி இருந்தது. சர்வாதிகாரம் 1910 ஆம் ஆண்டின் மெக்சிக்கப் புரட்சிக்கு வித்திட்டது. இதைத் தொடர்ந்து 1917 ஆம் ஆண்டின் அரசியல் சட்டம் உருவானதுடன், தற்போதய அரசியல் முறைமையும் நடைமுறைக்கு வந்தது. சூலை 2000 ஆவது ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் முதல் முறையாக எதிக் கட்சியான நிறுவனப் புரட்சிக் கட்சி சனாதிபதி பதவியைக் கைப்பற்றியது. மெக்சிகோ அதிபராக அக் கட்சியைச் சேர்ந்த என்ரிக் பீனா நீட்டோ பதவி ஏற்றுள்ளார்.[5] மெக்சிக்கோ உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களுள் ஒன்று என்பதுடன், இது ஒரு பிரதேச வல்லரசும், நடுத்தர வல்லரசும் ஆகும். அத்துடன், மெக்சிக்கோவே இலத்தீன் அமெரிக்க நாடுகளுள், பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பின் முதலாவது உறுப்பு நாடு ஆகும். இது, 1994 ஆம் ஆண்டிலிருந்து இவ்வமைப்பின் உறுப்பினராக இருந்து வருகிறது. மெக்சிக்கோ ஒரு மேல்-நடுத்தர வருமானமுள்ள நாடாக உலக வங்கியால் கணிக்கப்படுகிறது. இது புதுத் தொழில்மய நாடாக இருப்பதுடன், வளர்ந்துவரும் ஆற்றல் வாய்ந்த நாடாகவும் உள்ளது. மெக்சிக்கோ 13 ஆவது பெரிய பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியையும், 11 ஆவது பெரிய வாங்கும் திறன் சமநிலையையும் கொண்டுள்ளது. இந்நாட்டின் பொருளாதாரம் அதன் வட அமெரிக்கச் சுதந்திர வணிக ஒப்பந்தக் கூட்டாளிகளின் பொருளாதாரங்களுடன், சிறப்பாக ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரத்துடன், வலுவாகப் பிணைந்துள்ளது. நாட்டிலுள்ள மொத்த யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களங்களின் எண்ணிக்கையின் அடைப்படையில் மெக்சிக்கோ உலகில் ஆறாவது இடத்திலும், அமெரிக்கக் கண்டத்தில் முதலாவது இடத்திலும் உள்ளது. இங்கே மொத்தம் 31 உலக பாரம்பரியக் களங்கள் உள்ளன. 2007 ஆம் ஆண்டில் மெக்சிக்கோவுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை உலகில் 10 ஆவது பெரியது. அவ்வாண்டில் 21.4 மில்லியன் பயணிகள் வந்தனர். 2006 ஆம் ஆண்டிலிருந்து, மெக்சிக்கோ, போதைப்பொருள் போரின் நடுவே இருந்து வருகிறது. இதனால், 60,000 பேர்வரை இறந்துள்ளனர். சொற்பிறப்பு புதிய எசுப்பெயின் என்று அழைக்கப்பட்ட பகுதிகள் எசுப்பெயினிடம் இருந்து விடுதலை பெற்ற போது, புதிய நாட்டின் பெயரை அதன் தலைநகரமான மெக்சிக்கோ நகரத்தின் பெயரைத் தழுவி வைப்பது என முடிவு செய்தனர். மெக்சிக்கோ நகரம், 1524 ஆம் ஆண்டில், பண்டைய அசுட்டெக் தலைநகரமான மெக்சிக்கோ-தெனோச்தித்லானின் மேல் நிறுவப்பட்டது. இப்பெயர் நௌவாத்தில் மொழியில் இருந்து வந்தது ஆயினும், இச் சொல்லின் பொருள் தெளிவாகத் தெரியவில்லை. "மெஹிகோ" (Mēxihco) என்பது, நௌவாத்தில் மொழியில், அசுட்டெக் பேரரசின் மையப்பகுதியான, மெக்சிக்கோ பள்ளத்தாக்கு, அதன் மக்கள், சூழவுள்ள பகுதிகள் என்பவற்றைக் குறித்தது. இது, விடுதலைக்கு முன்னர் புதிய எசுப்பெயினின் ஒரு பிரிவாக இருந்தது. இச்சொல், பொதுவாக பள்ளத்தாக்கைக் குறிக்கும் ஒரு இடப்பெயராகவே கருதப்படுகிறது. இது பின்னர் அசுட்டெக் முக்கூட்டமைப்பைக் குறிக்கும் இனப்பெயராகவும் பயன்பட்டது. மறு தலையாகவும் இது இருந்திருக்கக்கூடும். பின்னொட்டு -கோ என்பது நௌவாத்தில் மொழியில் இடவேற்றுமை உருபு. இதன் சேர்க்கை ஒரு சொல்லை இடப்பெயர் ஆக்குகிறது. அரசாங்கத்தின் அமைப்பைப் பொறுத்து நாட்டின் பெயரும் மாறி வந்துள்ளது. இரண்டு காலப் பகுதிகளில் (1821-1823, 1863-1867) இது "மெக்சிக்கப் பேரரசு" (இம்பீரியோ மெக்சிக்கானோ - Imperio Mexicano) என அழைக்கப்பட்டது. மூன்று கூட்டாட்சி அரசமைப்புக்களிலும் (1824, 1857, 1917) இதன் பெயர் "ஒன்றிய மெக்சிக்க நாடுகள்" (Estados Unidos Mexicanos) என்னும் பெயர் பயன்பட்டது. 1836 ஆம் ஆண்டின் அரசமைப்புச் சட்டத்தில் இதன் பெயர் "மெக்சிக்கோக் குடியரசு" எனக் குறிப்பிடப்பட்டது. புவியியல் மெக்சிக்கோ, அகலக்கோடுகள் 14° and 33°வ, நெடுங்கோடுகள் 86°, 119°மே என்பவற்றுக்கு இடையே வட அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது. ஏறத்தாழ மெக்சிக்கோவின் நிலப்பகுதிகள் முழுவதும் வட அமெரிக்கக் கண்டத்தட்டின்மீது உள்ளது. பாகா கலிபோர்னியா தீவக்குறையின் சில பகுதிகள் மட்டும் பசிபிக் கண்டத்தட்டிலும், கொக்கோசு கண்டத்தட்டிலும் உள்ளன. புவியியற்பியலின்படி, சில புவியியலாளர்கள், தெகுவாந்த்தப்பெக் குறுநிலத்துக்குக் கிழக்கே உள்ள பகுதியை நடு அமெரிக்காவுக்குள் அடக்குவர்.[6] புவியரசியலின்படி மெக்சிக்கோ முழுவதும், கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றுடன் வட அமெரிக்காவுக்குள் அடங்குவதாகவே கொள்ளப்படுகிறது.[7] 1,972,550 சதுர கிலோமீட்டர் (761,606 சதுர மைல்) மொத்தப் பரப்பளவு கொண்ட மெக்சிக்கோ பரப்பளவின் அடிப்படையில் உலகின் 14 ஆவது பெரிய நாடு. அத்துடன், ஏறத்தாழ 6,000 சதுர கிலோமீட்டர் (2,317 சதுர மைல்) பரப்பளவு கொண்டனவும், பசுபிக் பெருங்கடல், மெக்சிக்கக் குடா, கரிபியன், கலிபோர்னியக் குடா ஆகியவற்றில் அமைந்துள்ள பல தீவுகளும் இந்நாட்டுள் அடங்குகின்றன. மெக்க்சிக்கோவின் நிலப் பகுதியில் மிகவும் அதிகமான தூரத்தில் இருக்கும் இரு புள்ளிகளுக்கு இடையிலான தூரத்தின் அடிப்படையில், மெக்சிக்கோவின் நீளம் 3219 கிலோமீட்டர்களுக்கும் (2,000 மைல்) அதிகமாகும். மெக்சிக்கோ அதன் வடக்கில், ஐக்கிய அமெரிக்காவுடன் 3,141 கிலோமீட்டர்கள் (1,952 மைல்) நீளமான பொது எல்லையைக் கொண்டுள்ளது. தெற்கில் இது, குவாத்தமாலாவுடன், 871 கிமீ (541 மைல்) நீளமான எல்லையையும், பெலிசேயுடன் 251 கிமீ (156 மைல்) நீளமான எல்லையையும் கொண்டிருக்கிறது. மெக்சிக்கோவில் வடக்கிலிருந்து தெற்குவரை, சியேரா மாட்ரே ஓரியென்டல், சியேரா மாட்ரே ஒக்சிடென்டல் என்னும் இரண்டு மலைத் தொடர்கள் உள்ளன. இது வடக்கு வட அமெரிக்காவில் இருந்து தொடங்கும் பாறை மலைகளின் தொடர்ச்சி ஆகும். கிழக்கிலிருந்து வடக்கே நாட்டுக்குக் குறுக்காக அதன் நடுப்பகுதியில் சியேரா நெவாடா எனப்படும் எரிமலைப் பகுதி காணப்படுகிறது. சியேரா மாட்ரே டெல் சூர் எனப்படும் நான்காவது மலைத்தொடர் ஒன்று, மிச்சோக்கானில் இருந்து, வாக்சாக்கா (Oaxaca) வரை செல்கிறது.[8] எனவே பெரும்பாலான, மெக்சிக்கோவின் வடக்கிலும் நடுவிலும் உள்ள பகுதிகள் உயர்ந்த பகுதிகளாக உள்ளன. மிகவும் கூடிய உயரங்கள் டிரான்சு-மெக்சிக்க எரிமலைப் பகுதியில் காணப்படுகின்றன. இவற்றுள், பிக்கோ டி ஒரிசாபா (5,799 மீ, 18,701 அடி), போபோகட்டப்பெத்தில் (5,462 மீ, 17,920 அடி), இசுத்தக்சிவத்தில் (5,286 மீ, 17,343 அடி), நெவாடோ டி தொலூக்கா (4,577 மீ, 15,016 அடி) என்பன முக்கியமானவை. இந்த நான்கு ஒயரப் பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள பள்ளத்தாக்குகளில், மூன்று முக்கியமான நகரப் பகுதிகள் அமைந்துள்ளன. இவை, தொலூக்கா, பெரு மெக்சிக்கோ நகரம், புவேப்லா என்பன.[8] நிர்வாகப் பிரிவுகள் Gulf of Mexico Pacific Ocean Central America United States of America Mexico City AG Baja California Baja California Sur Campeche Chiapas Chihuahua Coahuila Colima Durango Guanajuato Guerrero HD Jalisco EM Michoacán MO Nayarit Nuevo León Oaxaca Puebla Querétaro Quintana Roo San Luis Potosí Sinaloa Sonora Tabasco Tamaulipas TL Veracruz Yucatán Zacatecas "ஒன்றிய மெக்சிக்க நாடுகள்" என்பன சுதந்திரமானவையும், இறைமை உள்ளனவுமான 31 மாநிலங்களின் கூட்டமைப்பு ஆகும். இவ்வாறு அமைந்த ஒன்றியம், மெக்சிக்கக் கூட்டாட்சி மாவட்டங்கள் மீதும், பிற ஆட்சிப்பகுதிகள் மீதும் குறிப்பிட்ட அளவு அதிகாரம் கொண்டதாக உள்ளது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனியான அரசமைப்புச் சட்டம், மாநில ஆட்சிச்சபை (congress), நீதித்துறை என்பன உள்ளன. மாநில ஆளுனரை ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் மூலம் மக்கள் நேரடியாகத் தேர்ந்து எடுக்கின்றனர். மாநில ஆட்சிச்சபைக்குரிய உறுப்பினர்களையும் மக்களே மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தெரிவு செய்கின்றனர்.[9] கூட்டாட்சி மாவட்டம் என்பது நடுவண் அரசினால் நிர்வகிக்கப்படும் ஒரு சிறப்பு அரசியல் பிரிவு. இது எந்தவொரு மாநிலத்துக்கும் சொந்தமானது அல்ல. இதற்கு வரையறுக்கப்பட்ட உள்ளூர் ஆட்சி அதிகாரங்களே உள்ளன.[10] மாநிலங்கள் முனிசிப்பாலிட்டிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதுவே எல்லா அரசியல் பிரிவுகளுள்ளும் மிகவும் சிறியது. இது மக்களால் தெரிவு செய்யப்படும் மேயர் அல்லது முனிசிப்பாலிட்டித் தலைவரால் ஆளப்படுகிறது.[11] மேற்கோள்கள் பகுப்பு:வட அமெரிக்க நாடுகள் பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
மெக்சிகோ நகரம் எந்த கண்டத்தில் உள்ளது?
வட அமெரிக்க
46
tamil
f24f8a41d
எம். ஜி. ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், சனவரி 17, 1917 – திசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர். எம். ஜி. சக்கரபாணிக்குத் தம்பியான இவர்,[1] தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார். காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.[2] சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார். இவர் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருதினை பெற்றவர்.[3] தனிப்பட்ட வாழ்க்கை இளமைப்பருவம் இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் (1880 - 5/08/1952) [4]) மகனாகப் பிறந்தார்.[5][6] அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் வழக்கறிஞராக கேரளாவில் பணிபுரிந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப் படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமாவார். காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். இல்லறம் முதல் திருமணம் எம்.ஜி.ஆர் முதலில் தங்கமணியை மணந்தார். பிரசவத்திற்காகத் தாய் ஊருக்குச் சென்ற தங்கமணிக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பின் தங்கமணியும் உடல்நலக் குறைவினால் இறந்தார். இரண்டாவது திருமணம் அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் எம்.ஜி.ஆர். இருவருக்கும் குழந்தைகள் இல்லை. பின்னர் சதானந்தவதி நோய்க் காரணமாக இறந்தார்.[7] மூன்றாவது திருமணம் ம. கோ. இரா. இரண்டாவது கதாநாயகனாகத் தியாகராஜ பாகவதர் தயாரித்த ராஜ முக்தி படத்தில் நடித்தார். அப்படத்தில் வைக்கம் நாராயணி ஜானகி என்னும் வி. என். ஜானகி கதாநாயகியாக நடித்தார். அவர் ம. கோ. இரா.வின் முதல் மனைவியான தங்கமணி சாயலில் இருந்தார். இதனால் ஜானகியின் மீது ம. கோ. இரா.விற்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அவ்வீர்ப்பு மோகினி படத்தில் சேர்ந்து நடித்தபொழுது இருவரும் நெருங்கிப் பழகினர். 1950 ஆம் ஆண்டில் மருதநாட்டு இளவரசி படத்தில் கதைத் தலைவனாக ம. கோ. இரா.வும் கதைத்தலைவியாக ஜானகியும் நடிக்கும்பொழுது காதலாக மாறியது. அக்காலகட்டத்தில் ம. கோ. இரா.வால் ஜானகிக்கு எழுதப்பட்ட காதற்கடிதங்கள் ஜானகியின் முதற்கணவரான கணபதிபட்டிக் கைகளில் கிடைத்தன. கணபதிபட்டிற்கும் ஜானகிக்கும் இடையில் சண்டை முற்றியது. ஜானகி நள்ளிரவொன்றில் தன் மகனுடன் தனது வீட்டைவிட்டு வெளியேறி, அப்பொழுது லாயிட்ஸ் சாலையில் (தற்பொழுது அவ்வை சண்முகம் சாலை) குடியிருந்த ம. கோ. இரா.வின் வீட்டிற்கு அடைக்கலம் தேடிவந்தார். ம. கோ. இரா. அவரைத் தனது வீட்டிற்கு எதிரே இருக்கும் தெருவில் ஒரு வீட்டில் குடிவைத்தார். கேரளாவில் ஒரு கோவிலில் சில நண்பர்கள் முன்னிலையில் ம. கோ. இரா.வும் ஜானகியும் மாலை மாற்றிக் கொண்டனர். ஜானகிக்கு மகனான அப்பு என்ற சுரேந்திரனை ம. கோ. இரா. தன் வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டார்.[8] இத்திருமணத்தை ம. கோ. இரா.வின் அண்ணனும் நடிகருமான ம. கோ. சக்ரபாணியும், குடும்ப நண்பரும் நடிகருமான சி. டி. இராஜகாந்தமும் ஏற்க மறுத்தனர். எனினும் ம. கோ. இரா.வின் இரண்டாம் மனைவி சதானந்தவதி உயிரோடு இருந்ததால் தம் திருமணத்தைப் பதிவுசெய்து கொள்ளாமலேயே ம. கோ. இரா.வும் ஜானகியும் உடனுறைந்தனர் (Lived Together). 12 ஆண்டுகள் கழித்து 1962 பிப்ரவரி 25 ஆம் நாள் சதானந்தவதி மறைந்த பின்னர் சூன் 14ஆம் நாள் ம. கோ. இரா.வும் ஜானகியும் சட்டப்படி தம் திருமணத்தைப் பதிவு செய்துகொண்டனர். இருவரும் லாயிட்சு சாலை வீட்டிலிருந்து வெளியேறி இராமவரம் தோட்டத்திற்குச் சென்று குடியேறினர்.[9] வளர்ப்பு குழந்தைகள் மூன்று திருமணங்கள் என்றாலும் எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் இல்லை.[10] எனவே ஜானகி- கணபதிபட் ஆகிய இருவருக்கும் பிறந்த அப்பு என்ற சுரேந்திரனையும் ஜானகியின் தம்பியாகிய மணி என்னும் நாராயணன் குழந்தைகளாகிய லதா (ராஜேந்திரன்), கீதா (மதுமோகன்), சுதா (கோபாலகிருஷ்ணன்). ஜானகி (சிவராமன்), தீபன் ஆகிய ஐவரையும் தன் வளர்ப்புப் பிள்ளைகளாகத் தத்தெடுத்துக் கொண்டார்.[9] கல்வி உதவி எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன் மற்றும் சினிமாவில் வலம் வந்த கோவை சரளா என்று எம்.ஜி.ஆர் 25ல் ஆனந்த விகடன் இதழ் குறிப்பிட்டுள்ளது. செல்லப் பிராணிகள் எம்.ஜி.ஆர் ராஜா-ராணி என்ற பெயர்களுடைய இரண்டு சிங்கங்களை வளர்த்தார். ராணி சிங்கம் இறந்துவிட ராஜா சிங்கமும் உடல் தளர்ந்திருந்தது. அது தனியாக இருக்க வேண்டாமென வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அளித்தார். நெடுநாட்கள் வாழ்ந்த ராஜா மறைந்த போது, அதன் உடலைத் தகுந்த ஆவணத்துடன் பெற்று, பாடம் செய்து தன் தி.நகர் வீட்டில் வைத்துக் கொண்டார். சிங்கங்களைத் தவிர எம்.ஜி.ஆர் தனது வீடு அமைந்திருந்த ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும் வளர்த்தார். இவற்றைக் கவனிக்க தனி மருத்துவரைப் பணியமர்த்தியிருந்தார்.[11] சிறுகுட்டியாக எம்.ஜி.ஆரிடம் இருந்த கரடி வளர்ந்ததும் மருத்தவரின் உதவியுடன் மூக்கில் சங்கிலி இணைக்க ஏதுவாகத் துளையிட முயன்றபோது எதிர்பாராத விதமாக இறந்துவிட்டது. இதை நடிகர் சங்கத்தின் நாளிதழில் ஒரு பேட்டியின் போது வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் எம்.ஜி.ஆர். திரைப்பட வாழ்க்கை 1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை. இச்சம்பவத்திற்குப் பின்னார் முதன் முதலாக வெளிவந்த காவல்காரன் திரைப்படமானது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971 ஆம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான ரிக்சாக்காரன் படத்தில் நடித்ததற்காகக் கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது. அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகும். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார். அரசியல் வாழ்க்கை இவர் ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். கருணாநிதியுடன் நட்பாக இருந்தார். சி. என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேறினார். 1972-இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழமாக மாறியது. முதன் முதலாகப் போட்டியிட்ட திண்டுக்கல் பகுதியில் பெரும் வெற்றி பெற்றது. திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984ல் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் எம்.ஜி.ஆர். 1984 இல் இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். மறைவிற்குப் பின் அவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவரது கட்சி 1988-இல் பிரிந்து 1989-இல் இணைந்தது. 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் 2011 முதல் இன்று வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெ. ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்திருக்கிறது. இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் திராவிடக் கட்சியில் இருந்தபோதிலும் தமிழ்நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள்.[12] இவர் இறந்து 29 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.[13] இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த பெரும் செல்வாக்கைக் காட்டுகிறது. திட்டங்கள் சத்துணவுத் திட்டம் விதவை ஆதரவற்ற பெண்களுக்குத் திருமண உதவி தாலிக்கு தங்கம் வழங்குதல் மகளிருக்கு சேவை நிலையங்கள் பணிபுரியும் பெண்களுக்குத் தங்கும் விடுதிகள் தாய் சேய் நல இல்லங்கள் இலவச சீருடை வழங்குதல் திட்டம் இலவச காலணி வழங்குதல் திட்டம் இலவச பற்பொடி வழங்குதல் திட்டம் இலவச பாடநூல் வழங்குதல் திட்டம் வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம்.[14] தமிழ் பல்கலைக் கழகம் நிறுவுதல் 1921ம் ஆண்டு தமிழ் மொழிக்கு எனத் தனியே ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய உமாமகேசுவரனார் பிறந்த தஞ்சையில், தீர்மானம் இட்ட அறுபது ஆண்டுகள் கழித்து தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவினார் எம்.ஜி.ஆர். தமிழ்மொழி, தமிழர்களின் கலை, இசை, நாடகம், ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், மொழியியல், வரலாறு, புவியியல், மெய்யியல், கடலியல், சித்த மருத்துவம், கைவினைக் கலை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழை மேம்படுத்த, தமிழர்களின் மரபுப் பெருமையைப் பரப்ப, 1981 இல் அன்று முதலமைச்சராகயிருந்த திரு.எம்.ஜி. இராமச்சந்திரன் முன் முயற்சியில் தமிழக அரசால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது. முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் 13 சூன், 1981 இல் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இப்பல்கலைக்கழகத்தின் உடனடித் தேவைக்கும், எதிர்கால விரிவாக்கத்திற்கும் 1000 ஏக்கர் நிலம் தேவை என முடிவு செய்யப்பட்டது. 1981 ஆகத்து 1 ஆம் நாள் தமிழக ஆளுநர் மூலம் “தமிழ்ப் பல்கலைக் கழக அவசரச் சட்டம் 1981” பிறப்பிக்கப்பட்டு தமிழ்ப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ் பல்கலைக் கழகத்திற்கு 972.7 ஏக்கர் நிலத்தை எம்.ஜி.ஆர் தலைமயினான அரசு கையகப்படுத்தி ஒதுக்கியது.[15] தமிழ் ஈழம் குறித்த நிலைப்பாடு இலங்கையில் இருக்கும் கண்டியில் பிறந்தமையால் தமிழ் ஈழம் குறித்தான ஆர்வமும், செயல்பாடுகளும் எம்.ஜி.ஆரிடம் அதிகம் காணப்பட்டன. ஈழத்திற்காக வெளிப்படையான ஆதரவினை எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக இருக்கும் போது தந்தார். பழ நெடுமாறன் கருத்து 1980களில் ஈழப்போராட்டம் தீவிரமடைந்த போது அதற்கு ஆதரவளித்தார் எம். ஜி. ஆர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழர்களுக்கென்று தனி நாடு அமைய வேண்டுமென்றும் அவர் விரும்பினார் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். பிரபாகரனின் தலைமையிலான புலிகளின் போராட்டத்துக்குத் தேவையான ஆயுதங்கள் வாங்க ரூ.7 கோடி சொந்தப் பணத்தை தந்தார் என நெடுமாறன் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் பற்றிப் பிரபாகரன் விடுதலைப் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் வெளிப்படையான ஆதரவு அளித்தார் எம்.ஜி.ஆர். ஆயுதம் வாங்கி இலங்கை கொண்டு சென்று தமிழ்மக்களை காப்பாற்ற, முதலில் இரண்டு கோடி ரூபாயை தந்தார். அந்த உதவி இல்லையென்றால் இந்தளவிற்கு இயக்கம் வளர்ந்திருக்க இயலாது என்று பிரபாகரன் பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் எம்.ஜி.ஆரை அண்ணன் என்றே அழைத்ததாகவும் கூறியிருக்கிறார். மத்திய அரசு விடுதலை புலிகளுக்கு நெருக்கடி கொடுத்த காலக்கட்டத்திலும், பெரிய தொகையைக் கொடுத்து உதவி செய்தார். மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றே எம்.ஜி.ஆர் தன் நிலையை பற்றிப் பிரபாகரனிடம் கூறியுள்ளார்.[16] எம்.ஜி.ஆர் உயிர் பிரிவதற்கு ஒரு வாரம் முன்புகூட ரூ. 40 லட்சம் வரை புலிகளுக்கு உதவியாக வழங்கியதாகப் பிரபாகரனே கூறியுள்ளார். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிரபாகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் ”தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்பிய மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்” என்று கூறியுள்ளார்.[17] எம்.ஜி.ஆரின் ஈழக்கனவுப் பற்றி ஆன்டன் பாலசிங்கம் 1984 ஆம் ஆண்டு அளவில் எம்.ஜி.ஆருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ஏற்பட்ட தோழமைப் பற்றி ஆன்டன் பாலசிங்கம் விடுதலை கட்டுரைத்தொகுதியில் தந்துள்ளார். "எதிர்பாராத விதமாக எம்.ஜி.ஆருக்கும் விடுதலை இயக்கத்திற்குமான உறவு மலர்ந்தது. தலைவர் பிரபாகரனின் தலைமைப் பண்பும், வீரமும் எம்.ஜி.ஆரைக் கவர்ந்தது. அது நாளடைவில் நட்பாக மாறியது." என்று விடுதலை கட்டுரைத் தொகுதியில் தந்திருக்கிறார். இயக்குனர் சீமான் நம்பிக்கை "முன்னாள் தமிழக முதல்வர் அமரர். எம்.ஜி.ஆர். போன்று ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்தவர்கள் யாருமில்லை. அவர் மட்டும் மேலும் 10 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்குத் தனி நாடு கிடைத்திருக்கும். அது நடக்காததுதான் வரலாற்று துயரம்" என்று இயக்குனரும் நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது தெரிவித்தார்.[18] எழுத்துகள் நாடோடி மன்னன் புத்தகம் எம்.ஜி.ஆர் தானே தயாரித்த நாடோடி மன்னன் திரைப்படத்தினைப் பற்றிப் புத்தகம் எழுதியுள்ளார்.[19] இந்தப் புத்தகத்தில் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரைப் பற்றியும் எழுதியுள்ள எம்.ஜி.ஆர், படத்தின் கதை, அதை தானே தயாரிக்கவேண்டிய நிலை என பல விஷயங்களை எழுதியுள்ளார். இந்தப்படம் வெளிவந்தபின் வெற்றி அடைந்தால் தாம் ஒரு மன்னன் என்றும், தோல்வியுற்றால் தாம் ஒரு நாடோடி என்றும் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருந்தார்.[20] சுயசரிதைத் தொடர் ‘நான் ஏன் பிறந்தேன்?’ - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர். அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை.[21] சிறப்பு விருதுகளும் பட்டங்களும் எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரன் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும். விருதுகள் பாரத் விருது - இந்திய அரசு அண்ணா விருது - தமிழ்நாடு அரசு பாரத ரத்னா விருது - இந்திய அரசு பத்மசிறீ விருது - இந்திய அரசு (ஏற்க மறுப்பு) சிறப்பு முனைவர் பட்டம் - அரிசோனா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (ஏற்க மறுப்பு), சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு) வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம். திரைச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும் இதயக்கனி - அறிஞர் அண்ணா புரட்சி நடிகர் - கலைஞர் மு. கருணாநிதி நடிக மன்னன் - சென்னை ரசிகர்கள் (சி.சுப்பிரமணியம் அவர்களால் வழங்கப்பட்டது.) மக்கள் நடிகர் - நாகர்கோவில் ரசிகர்கள் பல்கலை வேந்தர் - சிங்கப்பூர் ரசிகர்கள் மக்கள் கலைஞர் - காரைக்குடி ரசிகர்கள் கலை அரசர் - விழுப்புரம் முத்தமிழ்க் கலை மன்றம் கலைச்சுடர் - மதுரை தேகப்பயிற்சிக் கலை மன்றம் கலை மன்னர் - நீதிபதி ராஜமன்னார் கலை மன்னன் - சென்னை ரசிகர்கள் கலை வேந்தர் - மலேசிய ரசிகர்கள் திரை நாயகன் - சேலம் ரசிகர்கள் பொதுச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும் கொடுத்துச் சிவந்த கரம் - குடந்தை ரசிகர்கள் கலியுகக் கடவுள் - பெங்களூர் விழா நிருத்திய சக்கரவர்த்தி - இலங்கை ரசிகர்கள் பொன்மனச் செம்மல் - கிருபானந்த வாரியார் மக்கள் திலகம் - தமிழ்வாணன் வாத்தியார் - திருநெல்வேலி ரசிகர்கள் புரட்சித்தலைவர் - கே. ஏ. கிருஷ்ணசாமி இதய தெய்வம் - தமிழ்நாடு பொதுமக்கள் மக்கள் மதிவாணர் - இரா. நெடுஞ்செழியன் ஆளவந்தார் - ம. பொ. சிவஞானம் செயல்பாடுகள் 1. சனவரி 1986 அன்று அண்ணாவின் பவள விழாவின் நினைவாக அமைக்கப்பட்ட அண்ணா வளைவினை திறந்துவைத்தார் எம்.ஜி.ஆர்.[22] 7.47 லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட இது, எம்.ஜி.ஆரின் அலோசனையால் 54 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது. இந்த வளைவை ஸ்தபதி கணபதி 105 நாட்களில் கட்டி முடித்தார். எம்.ஜி.ஆர் நினைவிடங்கள் எம்.ஜி.ஆர் சமாதி தமிழ்நாடு அரசு எம். ஜி. ஆர் நினைவாகச் சென்னையில் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்துக்கு அருகில் அவரது உடல் புதைக்கப்பட்டது. அந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.ஜி.ஆரின். மார்பளவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களும், அவருடைய சில பொருட்களும் மக்களின் பார்வைக்கு தனி கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன. தாமரை மலர் விரிந்த நிலையில் இருப்பது போன்ற அமைப்பின் நடுவே அவர் உடல் வைக்கப்பட்டுள்ள சமாதி உள்ளது. சமாதியின் அருகே நினைவுத்தூண் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில், பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தொண்டர்களும் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த நினைவிடத்திற்கு வருகை தந்து தங்களின் அன்பு தலைவருக்கு மரியாதை செலுத்துகின்றனர்.[23] சென்னை கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் தினமும் அன்னதானம் வழங்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் சி. கிருஷ்ணன் (ஓமலூர்) மார்ச் 2012 பட்ஜெட் மீதான விவாதத்தின் போது கோரிக்கை விடுத்தார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஏழைகளுக்காகப் பாடுபட்டவர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் ஏழைகளுக்குக் கோவில் போன்றது. அதனால் கோவில்களில் வழங்கப்படுவதைப் போல அன்னதானம் எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் வழங்க வேண்டும் என்று கூறினார்.[24] டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் சென்னை தியாகராய நகரில் உள்ள ஆற்காடு முதலித் தெருவில் அமைந்துள்ளது டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம். எம்.ஜி.ஆர் இந்த இல்லத்தினை தனது அலுவலகமாகப் பயன்படுத்தி வந்தார். இல்லத்தின் முன்புறம் டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் எனும் அரைவட்ட வடிவிலான பெயர்ப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலையொன்று அழகிய சிறு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.ஜி.ஆர் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்திய TMX 4777 எண்ணுள்ள அம்பாசிடர் கார் வைக்கப்பட்டுள்ளது.[25] மேலும் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட பரிசு பொருள்களும், அவர் பயன்படுத்திய பொருள்களும் இந்த இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளன. அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம் திருநின்றவூர் நத்தம் மேடு கிராமத்தில் உள்ள செல்லியம்மன் சாலையில் 1800 சதுர அடி மனையில் எம்.ஜி.ஆருக்கான ஆலையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, புதுப்பேட்டையை சேர்ந்தவர் கலைவாணன் மற்றும் சாந்தி தம்பதியினர் இந்தக் கோவிலை அமைத்துப் பாதுகாவலர்களாக உள்ளார்கள். 15.08.11 அன்று எம்.ஜி.ஆர் கோவிலுக்குக் கும்பாபிசேகமும், உற்சவர் சிலைக்குப் பக்தர்கள் 108 குடங்களில் பால் அபிசேகமும் நடந்தது.[26] மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும் புகழ்பெற்ற நடிகருமான எம்.ஜி.ஆருக்கு தமிழகம் முழுவதிலும் பல ஊர்களில் கோயில்கள் உள்ளன என்று 30, மே 2011ல் வெளிவந்த நக்கீரன் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.[27] படத்தொகுப்பு எம்.ஜி.ஆர் நினைவிடம், மெரினா-சென்னை எம்.ஜி.ஆர் அன்னை சத்தியபாமாவிற்காக கட்டிய கோவில் எம்.ஜி.ஆரின் நினைவகம், சென்னை இவற்றையும் பார்க்கவும் கா. ந. அண்ணாதுரை மு. கருணாநிதி ஜெ. ஜெயலலிதா தமிழகத் திரைப்படத்துறை எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கை எம்.ஜி.ஆரின் திரைப்பட வாழ்க்கை திருச்சியைத் தலைநகராக மாற்றும் திட்டம் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு, 1967 எம். ஜி. ஆர். திரை வரலாறு ஆதாரங்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:தமிழ்நாட்டு முதலமைச்சர்கள் பகுப்பு:1917 பிறப்புகள் பகுப்பு:1987 இறப்புகள் பகுப்பு:எம். ஜி. ஆர் பகுப்பு:இந்திய நடிகர்-அரசியல்வாதிகள் பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள் பகுப்பு:நாடகக் கலைஞர்கள் பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்
எம்.ஜி.ஆர் எப்போது தமிழ்நாடு மாநில முதல்வராக ஆனார்?
1977
165
tamil