{ "chapters": [ "கடவுள் வாழ்த்து", "வான் சிறப்பு", "நீத்தார் பெருமை", "அரண் வலியுறுத்தல்", "இல்வாழ்க்கை", "வாழ்க்கைத் துணைநலம்", "மக்கட்பேறு", "அன்புடைமை", "விருந்தோம்பல்", "இனியவை கூறல்", "செய்ந்நன்றி அறிதல்", "நடுவு நிலைமை", "அடக்கமுடைமை", "ஒழுக்கமுடைமை", "பிறனில் விழையாமை", "பொறையுடைமை", "அழுக்காறாமை", "வெஃகாமை", "புறங்கூறாமை", "பயனில சொல்லாமை", "தீவினையச்சம்", "ஒப்புரவறிதல்", "ஈகை", "புகழ்", "அருளுடைமை", "புலால் மறுத்தல்", "தவம்", "கூடா ஒழுக்கம்", "கள்ளாமை", "வாய்மை", "வெகுளாமை", "இன்னா செய்யாமை", "கொல்லாமை", "நிலையாமை", "துறவு", "மெய்யுணர்தல்", "அவா அறுத்தல்", "ஊழ்", "இறைமாட்சி", "கல்வி", "கல்லாமை", "கேள்வி", "அறிவுடைமை", "குற்றங்கடிதல்", "பெரியாரைத் துணைக்கோடல்", "சிற்றினம் சேராமை", "தெரிந்து செயல்வகை", "வலியறிதல்", "காலம் அறிதல்", "இடன் அறிதல்", "தெரிந்து தெளிதல்", "தெரிந்து வினையாடல்", "சுற்றந் தழால்", "பொச்சாவாமை", "செங்கோன்மை", "கொடுங்கோன்மை", "வெருவந்த செய்யாமை", "கண்ணோட்டம்", "ஒற்றாடல்", "ஊக்கம் உடைமை", "மடி இன்மை", "ஆள்வினை உடைமை", "இடுக்கண் அழியாமை", "அமைச்சு", "சொல்வன்மை", "வினைத்தூய்மை", "வினைத்திட்பம்", "வினைசெயல்வகை", "தூது", "மன்னரைச் சேர்ந்தொழுகல்", "குறிப்பறிதல்", "அவை அறிதல்", "அவை அஞ்சாமை", "நாடு", "அரண்", "பொருள் செயல் வகை", "படைமாட்சி", "படைச் செருக்கு", "நட்பு", "நட்பாராய்தல்", "பழைமை", "தீ நட்பு", "கூடா நட்பு", "பேதைமை", "புல்லறிவாண்மை", "இகல்", "பகைமாட்சி", "பகைத்திறம் தெரிதல்", "உட்பகை", "பெரியாரைப் பிழையாமை", "பெண்வழிச் சேரல்", "வரைவின் மகளிர்", "கள்ளுண்ணாமை", "சூது", "மருந்து", "குடிமை", "மானம்", "பெருமை", "சான்றாண்மை", "பண்புடைமை", "நன்றியில் செல்வம்", "நாணுடைமை", "குடிசெயல் வகை", "உழவு", "நல்குரவு", "இரவு", "இரவச்சம்", "கயமை", "தகையணங்குறுத்தல்", "குறிப்பறிதல்", "புணர்ச்சி மகிழ்தல்", "நலம் புனைந்துரைத்தல்", "காதற் சிறப்புரைத்தல்", "நாணுத் துறவுரைத்தல்", "அலர் அறிவுறுத்தல்", "பிரிவாற்றாமை", "படர்மெலிந் திரங்கல்", "கண்விதுப்பழிதல்", "பசப்புறு பருவரல்", "தனிப்படர் மிகுதி", "நினைந்தவர் புலம்பல்", "கனவுநிலை உரைத்தல்", "பொழுதுகண்டு இரங்கல்", "உறுப்புநலன் அழிதல்", "நெஞ்சோடு கிளத்தல்", "நிறையழிதல்", "அவர்வயின் விதும்பல்", "குறிப்பறிவுறுத்தல்", "புணர்ச்சி விதும்பல்", "நெஞ்சோடு புலத்தல்", "புலவி", "புலவி நுணுக்கம்", "ஊடலுவகை" ], "kurals": [ { "chapter": "கடவுள் வாழ்த்து", "kural": [ "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி", "பகவன் முதற்றே உலகு." ], "number": 1, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.", "en": "As the letter A is the first of all letters, so the eternal God is first in the world." } }, { "chapter": "கடவுள் வாழ்த்து", "kural": [ "கற்றதனால் ஆய பயனென்கொல்", "வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்." ], "number": 2, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?", "en": "What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?" } }, { "chapter": "கடவுள் வாழ்த்து", "kural": [ "மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்", "நிலமிசை நீடுவாழ் வார்." ], "number": 3, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்", "en": "They who are united to the glorious feet of Him who passes swiftly over the flower of the mind, shall flourish long above all worlds." } }, { "chapter": "கடவுள் வாழ்த்து", "kural": [ "வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு", "யாண்டும் இடும்பை இல." ], "number": 4, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை", "en": "To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come." } }, { "chapter": "கடவுள் வாழ்த்து", "kural": [ "இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்", "பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு." ], "number": 5, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை", "en": "The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God." } }, { "chapter": "கடவுள் வாழ்த்து", "kural": [ "பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க", "நெறிநின்றார் நீடுவாழ் வார்." ], "number": 6, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்", "en": "Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses." } }, { "chapter": "கடவுள் வாழ்த்து", "kural": [ "தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்", "மனக்கவலை மாற்றல் அரிது." ], "number": 7, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்", "en": "Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable." } }, { "chapter": "கடவுள் வாழ்த்து", "kural": [ "அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்", "பிறவாழி நீந்தல் அரிது." ], "number": 8, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்", "en": "None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue." } }, { "chapter": "கடவுள் வாழ்த்து", "kural": [ "கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்", "தாளை வணங்காத் தலை." ], "number": 9, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே", "en": "The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation." } }, { "chapter": "கடவுள் வாழ்த்து", "kural": [ "பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்", "இறைவன் அடிசேரா தார்." ], "number": 10, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்", "en": "None can swim the great sea of births but those who are united to the feet of God." } }, { "chapter": "வான் சிறப்பு", "kural": [ "வான்நின்று உலகம் வழங்கி வருதலால்", "தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று." ], "number": 11, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்", "en": "By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia." } }, { "chapter": "வான் சிறப்பு", "kural": [ "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்", "துப்பாய தூஉம் மழை." ], "number": 12, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே", "en": "Rain produces good food, and is itself food." } }, { "chapter": "வான் சிறப்பு", "kural": [ "விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து", "உள்நின்று உடற்றும் பசி." ], "number": 13, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்", "en": "If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world" } }, { "chapter": "வான் சிறப்பு", "kural": [ "ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்", "வாரி வளங்குன்றிக் கால்." ], "number": 14, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்", "en": "If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease." } }, { "chapter": "வான் சிறப்பு", "kural": [ "கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே", "எடுப்பதூஉம் எல்லாம் மழை." ], "number": 15, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்", "en": "Rain by its absence ruins men; and by its existence restores them to fortune." } }, { "chapter": "வான் சிறப்பு", "kural": [ "விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே", "பசும்புல் தலைகாண்பு அரிது." ], "number": 16, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்", "en": "If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen." } }, { "chapter": "வான் சிறப்பு", "kural": [ "நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி", "தான்நல்கா தாகி விடின்." ], "number": 17, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்", "en": "Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain)." } }, { "chapter": "வான் சிறப்பு", "kural": [ "சிறப்பொடு பூசனை செல்லாது வானம்", "வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு." ], "number": 18, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது", "en": "If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be ofered in this world, to the celestials." } }, { "chapter": "வான் சிறப்பு", "kural": [ "தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்", "வானம் வழங்கா தெனின்." ], "number": 19, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.", "en": "If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world." } }, { "chapter": "வான் சிறப்பு", "kural": [ "நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்", "வான்இன்று அமையாது ஒழுக்கு." ], "number": 20, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது", "en": "If it be said that the duties of life cannot be discharged by any person without water, so without rain there cannot be the flowing of water." } }, { "chapter": "நீத்தார் பெருமை", "kural": [ "ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து", "வேண்டும் பனுவல் துணிவு." ], "number": 21, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன.", "en": "The end and aim of all treatise is to extol beyond all other excellence, the greatness of those who, while abiding in the rule of conduct peculiar to their state, have abandoned all desire." } }, { "chapter": "நீத்தார் பெருமை", "kural": [ "துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து", "இறந்தாரை எண்ணிக்கொண் டற்று." ], "number": 22, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்.", "en": "To describe the measure of the greatness of those who have forsaken the two-fold desires, is like counting the dead." } }, { "chapter": "நீத்தார் பெருமை", "kural": [ "இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்", "பெருமை பிறங்கிற்று உலகு." ], "number": 23, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது", "en": "The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, shines forth on earth (beyond all others)." } }, { "chapter": "நீத்தார் பெருமை", "kural": [ "உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்", "வரனென்னும் வைப்பிற்கோர் வித்து." ], "number": 24, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, \nநாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்", "en": "He who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of heaven." } }, { "chapter": "நீத்தார் பெருமை", "kural": [ "ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்", "இந்திரனே சாலுங் கரி." ], "number": 25, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்", "en": "Indra, the king of the inhabitants of the spacious heaven, is himself, a sufficient proof of the strength of him who has subdued his five senses." } }, { "chapter": "நீத்தார் பெருமை", "kural": [ "செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்", "செயற்கரிய செய்கலா தார்." ], "number": 26, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.", "en": "The great will do those things which is d ifficult to be done; but the mean cannot do them." } }, { "chapter": "நீத்தார் பெருமை", "kural": [ "சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்", "வகைதெரிவான் கட்டே உலகு." ], "number": 27, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.", "en": "The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, hearing and smell." } }, { "chapter": "நீத்தார் பெருமை", "kural": [ "நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து", "மறைமொழி காட்டி விடும்." ], "number": 28, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.", "en": "The hidden words of the men whose words are full of effect, will shew their greatness to the world." } }, { "chapter": "நீத்தார் பெருமை", "kural": [ "குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி", "கணமேயும் காத்தல் அரிது." ], "number": 29, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்.", "en": "The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a moment, cannot be resisted." } }, { "chapter": "நீத்தார் பெருமை", "kural": [ "அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்", "செந்தண்மை பூண்டொழுக லான்." ], "number": 30, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.", "en": "The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness." } }, { "chapter": "அரண் வலியுறுத்தல்", "kural": [ "சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு", "ஆக்கம் எவனோ உயிர்க்கு." ], "number": 31, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?", "en": "Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess ?" } }, { "chapter": "அரண் வலியுறுத்தல்", "kural": [ "அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை", "மறத்தலின் ஊங்கில்லை கேடு." ], "number": 32, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை", "en": "There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it." } }, { "chapter": "அரண் வலியுறுத்தல்", "kural": [ "ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே", "செல்லும்வாய் எல்லாஞ் செயல்." ], "number": 33, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.", "en": "As much as possible, in every way, incessantly practise virtue." } }, { "chapter": "அரண் வலியுறுத்தல்", "kural": [ "மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்", "ஆகுல நீர பிற." ], "number": 34, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே.", "en": "Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show." } }, { "chapter": "அரண் வலியுறுத்தல்", "kural": [ "அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்", "இழுக்கா இயன்றது அறம்." ], "number": 35, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.", "en": "That conduct is virtue which is free from these four things, viz, malice,desire, anger and bitter speech." } }, { "chapter": "அரண் வலியுறுத்தல்", "kural": [ "அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது", "பொன்றுங்கால் பொன்றாத் துணை." ], "number": 36, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்.", "en": "Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undying friend." } }, { "chapter": "அரண் வலியுறுத்தல்", "kural": [ "அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை", "பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை." ], "number": 37, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்.", "en": "The fruit of virtue need not be described in books; it may be inferred from seeing the bearer of a palanquin and the rider therein." } }, { "chapter": "அரண் வலியுறுத்தல்", "kural": [ "வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்", "வாழ்நாள் வழியடைக்கும் கல்." ], "number": 38, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.", "en": "If one allows no day to pass without some good being done, his conduct will be a stone to block up the passage to other births." } }, { "chapter": "அரண் வலியுறுத்தல்", "kural": [ "அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம்", "புறத்த புகழும் இல." ], "number": 39, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா", "en": "Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise." } }, { "chapter": "அரண் வலியுறுத்தல்", "kural": [ "செயற்பால தோரும் அறனே ஒருவற்கு", "உயற்பால தோரும் பழி." ], "number": 40, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.", "en": "That is virtue which each ought to do, and that is vice which each should shun." } }, { "chapter": "இல்வாழ்க்கை", "kural": [ "இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்", "நல்லாற்றின் நின்ற துணை." ], "number": 41, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.", "en": "He will be called a (true) householder, who is a firm support to the virtuous of the three orders in their good path." } }, { "chapter": "இல்வாழ்க்கை", "kural": [ "துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்", "இல்வாழ்வான் என்பான் துணை." ], "number": 42, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்க்கும் உதவுபவன்", "en": "He will be said to flourish in domestic virtue who aids the forsaken, the poor, and the dead." } }, { "chapter": "இல்வாழ்க்கை", "kural": [ "தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு", "ஐம்புலத்தாறு ஓம்பல் தலை." ], "number": 43, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.", "en": "The chi ef (duty of the householder) is to preserve the five-fold rule (of conduct) towards the manes, the Gods, his guests, his relations and himself." } }, { "chapter": "இல்வாழ்க்கை", "kural": [ "பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை", "வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்." ], "number": 44, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ஒருகாலும் அழிவதில்லை.", "en": "fears vice (in the acquisition of property) and shares his food (with others)." } }, { "chapter": "இல்வாழ்க்கை", "kural": [ "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை", "பண்பும் பயனும் அது." ], "number": 45, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.", "en": "If the married life possess love and virtue, these will be both its duty and reward." } }, { "chapter": "இல்வாழ்க்கை", "kural": [ "அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்", "போஒய்ப் பெறுவ தெவன்?" ], "number": 46, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு அறவழிகளில் நடத்தினால் இல்லறத்திற்கு மாறான பிற வழிகளில் போய்ப் பெறும் பயன்தான் என்ன?", "en": "What will he who lives virtuously in the domestic state gain by going into the other, (ascetic) state ?" } }, { "chapter": "இல்வாழ்க்கை", "kural": [ "இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்", "முயல்வாருள் எல்லாம் தலை." ], "number": 47, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கடவுளை அறியவும், அடையவும் முயல்பவருள் மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு வாழ்பவனே முதன்மையானவன்.", "en": "Among all those who labour (for future happiness) he is greatest who lives well in the household state." } }, { "chapter": "இல்வாழ்க்கை", "kural": [ "ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ் க்கை", "நோற்பாரின் நோன்மை உடைத்து." ], "number": 48, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மற்றவர்களை அவர்களின் வழியில் வாழச்செய்து, தானும் அறத்திலிருந்து விலகாமல், மனைவியுடன் வாழும் வாழ்க்கை, துறவறத்தார் காட்டும் பொறுமையிலும் வலிமை மிக்கது.", "en": "The householder who, not swerving from virtue, helps the ascetic in his way, endures more than those who endure penance." } }, { "chapter": "இல்வாழ்க்கை", "kural": [ "அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்", "பிறன்பழிப்ப தில்லாயின் நன்று." ], "number": 49, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறம் என்று சிறப்பிக்கப்பட்டது, மனைவியுடன் வாழும் வாழ்க்கையே; துறவற வாழ்க்கையும், பிறரால் பழிக்கப்படாமல் இருக்குமானால் நல்லது.", "en": "The marriage state is truly called virtue. The other state is also good, if others do not reproach it." } }, { "chapter": "இல்வாழ்க்கை", "kural": [ "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்", "தெய்வத்துள் வைக்கப் படும்." ], "number": 50, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.", "en": "He who on earth has lived in the conjugal state as he should live, will be placed among the Gods who dwell in heaven." } }, { "chapter": "வாழ்க்கைத் துணைநலம்", "kural": [ "மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்", "வளத்தக்காள் வாழ்க்கைத் துணை." ], "number": 51, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.", "en": "She who has the excellence of home virtues, and can expend within the means of her husband, is a help in the domestic state." } }, { "chapter": "வாழ்க்கைத் துணைநலம்", "kural": [ "மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை", "எனைமாட்சித் தாயினும் இல்." ], "number": 52, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நல்ல குணமும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்வாழ்க்கை எத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பெறாததே.", "en": "If the wife be devoid of domestic excellence, whatever (other) greatness be possessed, the conjugal state, is nothing." } }, { "chapter": "வாழ்க்கைத் துணைநலம்", "kural": [ "இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்", "இல்லவள் மாணாக் கடை?" ], "number": 53, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நல்ல குணமும் நல்ல செயல்களும் உடையவனாய் மனைவி அமைந்துவிட்டால் ஒருவனுக்கு இல்லாததுதான் என்ன? அமையாவிட்டால் அவனிடம் இருப்பதுதான் என்ன?", "en": "If his wife be eminent (in virtue), what does (that man) not possess ? If she be without excellence, what does (he) possess ?" } }, { "chapter": "வாழ்க்கைத் துணைநலம்", "kural": [ "பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்", "திண்மைஉண் டாகப் பெறின்." ], "number": 54, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?", "en": "What is more excellent than a wife, if she possess the stability of chastity ?" } }, { "chapter": "வாழ்க்கைத் துணைநலம்", "kural": [ "தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்", "பெய்யெனப் பெய்யும் மழை." ], "number": 55, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.", "en": "If she, who does not worship God, but who rising worships her husband, say, “let it rain, “ it will rain." } }, { "chapter": "வாழ்க்கைத் துணைநலம்", "kural": [ "தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற", "சொற்காத்துச் சோர்விலாள் பெண்." ], "number": 56, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.", "en": "She is a wife who unweariedly guards herself, takes care of her husband, and preserves an unsullied fame." } }, { "chapter": "வாழ்க்கைத் துணைநலம்", "kural": [ "சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்", "நிறைகாக்கும் காப்பே தலை." ], "number": 57, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன? பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது.", "en": "What avails the guard of a prison ? The chi ef guard of a woman is her chastity." } }, { "chapter": "வாழ்க்கைத் துணைநலம்", "kural": [ "பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்", "புத்தேளிர் வாழும் உலகு." ], "number": 58, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.", "en": "If women shew reverence to their husbands, they will obtain great excellence in the world where the gods flourish." } }, { "chapter": "வாழ்க்கைத் துணைநலம்", "kural": [ "புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்", "ஏறுபோல் பீடு நடை." ], "number": 59, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை.", "en": "The man whose wife seeks not the praise (of chastity) cannot walk with lion-like stately step, before those who revile them." } }, { "chapter": "வாழ்க்கைத் துணைநலம்", "kural": [ "மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்", "நன்கலம் நன்மக்கட் பேறு." ], "number": 60, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே.", "en": "The excellence of a wife is the good of her husband; and good children are the jewels of that goodness." } }, { "chapter": "மக்கட்பேறு", "kural": [ "பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த", "மக்கட்பேறு அல்ல பிற." ], "number": 61, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை.", "en": "Among all the benefits that may be acquired, we know no greater benefit than the acquisition of intelligent children." } }, { "chapter": "மக்கட்பேறு", "kural": [ "எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்", "பண்புடை மக்கட் பெறின்." ], "number": 62, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய பிறவிகள்தோறும் துன்பங்கள் தொடமாட்டா.", "en": "The evils of the seven births shall not touch those who abtain children of a good disposition, free from vice." } }, { "chapter": "மக்கட்பேறு", "kural": [ "தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்", "தம்தம் வினையான் வரும்." ], "number": 63, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும்.", "en": "Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf." } }, { "chapter": "மக்கட்பேறு", "kural": [ "அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்", "சிறுகை அளாவிய கூழ்." ], "number": 64, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.", "en": "The rice in which the little hand of their children has dabbled will be far sweeter (to the parent) than ambrosia." } }, { "chapter": "மக்கட்பேறு", "kural": [ "மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்", "சொற்கேட்டல் இன்பம் செவிக்கு." ], "number": 65, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம்", "en": "The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear." } }, { "chapter": "மக்கட்பேறு", "kural": [ "குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்", "மழலைச்சொல் கேளா தவர்." ], "number": 66, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.", "en": "“The pipe is sweet, the lute is sweet,” say those who have not heard the prattle of their own children." } }, { "chapter": "மக்கட்பேறு", "kural": [ "தந்தை மகற்காற்று நன்றி அவையத்து", "முந்தி இருப்பச் செயல்." ], "number": 67, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.", "en": "The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned." } }, { "chapter": "மக்கட்பேறு", "kural": [ "தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து", "மன்னுயிர்க் கெல்லாம் இனிது." ], "number": 68, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது.", "en": "That their children should possess knowledge is more pleasing to all men of this great earth than to themselves." } }, { "chapter": "மக்கட்பேறு", "kural": [ "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்", "சான்றோன் எனக்கேட்ட தாய்." ], "number": 69, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்.", "en": "The mother who hears her son called “a wise man” will rejoice more than she did at his birth." } }, { "chapter": "மக்கட்பேறு", "kural": [ "மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை", "என்நோற்றான் கொல் எனும் சொல்." ], "number": 70, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர், இப்பிள்ளையைப் பெறுவதற்கு இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே.", "en": "(So to act) that it may be said “by what great penance did his father beget him,” is the benefit which a son should render to his father." } }, { "chapter": "அன்புடைமை", "kural": [ "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்", "புன்கணீர் பூசல் தரும்." ], "number": 71, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்.", "en": "Is there any fastening that can shut in love ? Tears of the afectionate will publish the love that is within." } }, { "chapter": "அன்புடைமை", "kural": [ "அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்", "என்பும் உரியர் பிறர்க்கு." ], "number": 72, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்", "en": "Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others." } }, { "chapter": "அன்புடைமை", "kural": [ "அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு", "என்போடு இயைந்த தொடர்பு." ], "number": 73, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பெறுவதற்கு அரிய உயிருக்கு நம் உடம்போடு உண்டாகிய தொடர்பு, அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று அறிந்தவர் கூறுவர்", "en": "They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in a former birth)." } }, { "chapter": "அன்புடைமை", "kural": [ "அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்", "நண்பு என்னும் நாடாச் சிறப்பு." ], "number": 74, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்", "ta_salamon": "சாலமன் பாப்பையா : குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும் உண்டாக்கும்", "en": "Love begets desire: and that (desire) begets the immeasureable excellence of friendship." } }, { "chapter": "அன்புடைமை", "kural": [ "அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து", "இன்புற்றார் எய்தும் சிறப்பு." ], "number": 75, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இவ்வுலகில் வாழ்ந்து இன்பம் அடைந்தவர் பெறும் சிறப்பே அன்பு கொண்டு இல்வாழ்க்கை நடத்தியதன் பயன்தான் என்று அறிந்தோர் கூறுவர்", "en": "They say that the felicity which those who, after enjoying the pleasure (of the conjugal state) in this world, obtain in heaven is the result of their domestic state imbued with love." } }, { "chapter": "அன்புடைமை", "kural": [ "அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்", "மறத்திற்கும் அஃதே துணை." ], "number": 76, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவோர் அறியாதவரே; மறத்திற்கும் கூட அதுவே காரணம் ஆகும்.", "en": "The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice." } }, { "chapter": "அன்புடைமை", "kural": [ "என்பி லதனை வெயில்போலக் காயுமே", "அன்பி லதனை அறம்." ], "number": 77, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்.", "en": "Virtue will burn up the soul which is without love, even as the sun burns up the creature which is without bone, i.e. worms." } }, { "chapter": "அன்புடைமை", "kural": [ "அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்", "வற்றல் மரந்தளிர்த் தற்று." ], "number": 78, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.", "en": "The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert." } }, { "chapter": "அன்புடைமை", "kural": [ "புறத்துறுப் பெல்லாம் எவன்செய்பு ம் யாக்கை", "அகத்துறுப்பு அன்பி லவர்க்கு." ], "number": 79, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : குடும்பத்திற்கு அக உறுப்பாகிய அன்பு இல்லாவதர்களுக்கு வெளி உறுப்பாக விளங்கும் இடம், பொருள், ஏவல் என்பன என்ன பயனைத் தரும்?", "en": "Of what avail are all the external members (of the body) to those who are destitute of love, the internal member." } }, { "chapter": "அன்புடைமை", "kural": [ "அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு", "என்புதோல் போர்த்த உடம்பு." ], "number": 80, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும் இல்லை என்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தியது போன்றது ஆகும்", "en": "That body alone which is inspired with love contains a living soul: if void of it, (the body) is bone overlaid with skin." } }, { "chapter": "விருந்தோம்பல்", "kural": [ "இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி", "வேளாண்மை செய்தற் பொருட்டு." ], "number": 81, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்", "ta_salamon": "சாலமன் பாப்பையா : வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம்.", "en": "The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality." } }, { "chapter": "விருந்தோம்பல்", "kural": [ "விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா", "மருந்தெனினும் வேண் டற்பாற் றன்று." ], "number": 82, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று", "ta_salamon": "சாலமன் பாப்பையா : விருந்தினர் வீட்டிற்கு வெளியே இருக்கத் தான் மட்டும் தனித்து உண்பது, சாவைத் தடுக்கும் மருந்தே என்றாலும், விரும்பத் தக்கது அன்று", "en": "It is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortality." } }, { "chapter": "விருந்தோம்பல்", "kural": [ "வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை", "பருவந்து பாழ்படுதல் இன்று." ], "number": 83, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.", "en": "The domestic life of the man that daily entertains the guests who come to him shall not be laid waste by poverty." } }, { "chapter": "விருந்தோம்பல்", "kural": [ "அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து", "நல்விருந்து ஓம்புவான் இல்." ], "number": 84, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.", "en": "Lakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guests." } }, { "chapter": "விருந்தோம்பல்", "kural": [ "வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி", "மிச்சில் மிசைவான் புலம்." ], "number": 85, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : விருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா?", "en": "Is it necessary to sow the field of the man who, having feasted his guests, eats what may remain ?" } }, { "chapter": "விருந்தோம்பல்", "kural": [ "செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்", "நல்வருந்து வானத் தவர்க்கு." ], "number": 86, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்", "ta_salamon": "சாலமன் பாப்பையா : வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்.", "en": "He who, having entertained the guests that have come, looks out for others who may yet come, will be a welcome guest to the inhabitants of heaven." } }, { "chapter": "விருந்தோம்பல்", "kural": [ "இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்", "துணைத்துணை வேள்விப் பயன்." ], "number": 87, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்", "ta_salamon": "சாலமன் பாப்பையா : விருந்தினரைப் பேணுவதும் ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும் விருந்தினரின் தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும்.", "en": "The advantages of benevolence cannot be measured; the measure (of the virtue) of the guests (entertained) is the only measure." } }, { "chapter": "விருந்தோம்பல்", "kural": [ "பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி", "வேள்வி தலைப்படா தார்." ], "number": 88, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர்", "ta_salamon": "சாலமன் பாப்பையா : விருந்தினரைப் பேணி, அந்த யாகத்தின் பயனைப் பெறும் பேறு அற்றவர். செல்வத்தைச் சிரமப்பட்டுக் காத்தும் அதனை இழக்கும் போது, இப்போது எந்தத் துணையும் இல்லாதவராய்ப் போனோமே என்று வருந்துவர்.", "en": "Those who have taken no part in the benevolence of hospitality shall (at length lament) saying, “we have laboured and laid up wealth and are now without support.”" } }, { "chapter": "விருந்தோம்பல்", "kural": [ "உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா", "மடமை மடவார்கண் உண்டு." ], "number": 89, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.", "en": "That stupidity which excercises no hospitality is poverty in the midst of wealth. It is the property of the stupid." } }, { "chapter": "விருந்தோம்பல்", "kural": [ "மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து", "நோக்கக் குநழ்யும் விருந்து." ], "number": 90, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும்.", "en": "As the Anicham flower fades in smelling, so fades the guest when the face is turned away." } }, { "chapter": "இனியவை கூறல்", "kural": [ "இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்", "செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்." ], "number": 91, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.", "en": "Sweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous." } }, { "chapter": "இனியவை கூறல்", "kural": [ "அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து", "இன்சொலன் ஆகப் பெறின்." ], "number": 92, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது", "en": "Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind." } }, { "chapter": "இனியவை கூறல்", "kural": [ "முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம்", "இன்சொ லினதே அறம்." ], "number": 93, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்.", "en": "Sweet speech, flowing from the heart (uttered) with a cheerful countenance and a sweet look, is true virtue." } }, { "chapter": "இனியவை கூறல்", "kural": [ "துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்", "இன்புறூஉம் இன்சொ லவர்க்கு." ], "number": 94, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.", "en": "Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech." } }, { "chapter": "இனியவை கூறல்", "kural": [ "பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு", "அணியல்ல மற்றுப் பிற." ], "number": 95, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா", "en": "Humility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments)." } }, { "chapter": "இனியவை கூறல்", "kural": [ "அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை", "நாடி இனிய சொலின்" ], "number": 96, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.", "en": "If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase." } }, { "chapter": "இனியவை கூறல்", "kural": [ "நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று", "பண்பின் தலைப்பிரியாச் சொல்." ], "number": 97, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும்.", "en": "That speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world)." } }, { "chapter": "இனியவை கூறல்", "kural": [ "சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்", "இம்மையும் இன்பம் தரும்." ], "number": 98, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும் .", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.", "en": "Sweet speech, free from harm to others, will give pleasure both in this world and in the next." } }, { "chapter": "இனியவை கூறல்", "kural": [ "இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ", "வன்சொல் வழங்கு வது?" ], "number": 99, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?", "en": "Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields ?" } }, { "chapter": "இனியவை கூறல்", "kural": [ "இனிய உளவாக இன்னாத கூறல்", "கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று." ], "number": 100, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது .", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.", "en": "To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe." } }, { "chapter": "செய்ந்நன்றி அறிதல்", "kural": [ "செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்", "வானகமும் ஆற்றல் அரிது." ], "number": 101, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது", "en": "(The gift of) heaven and earth is not an equivalent for a benefit which is conferred where none had been received." } }, { "chapter": "செய்ந்நன்றி அறிதல்", "kural": [ "காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்", "ஞாலத்தின் மாணப் பெரிது." ], "number": 102, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்", "en": "A favour conferred in the time of need, though it be small (in itself), is (in value) much larger than the world." } }, { "chapter": "செய்ந்நன்றி அறிதல்", "kural": [ "பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்", "நன்மை கடலின் பெரிது." ], "number": 103, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும் .", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்.", "en": "If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea." } }, { "chapter": "செய்ந்நன்றி அறிதல்", "kural": [ "தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்", "கொள்வர் பயன்தெரி வார்." ], "number": 104, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்", "en": "Though the benefit conferred be as small as a millet seed, those who know its advantage will consider it as large as a palm yra fruit." } }, { "chapter": "செய்ந்நன்றி அறிதல்", "kural": [ "உதவி வரைத்தன்று உதவி உதவி", "செயப்பட்டார் சால்பின் வரைத்து." ], "number": 105, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவர் நமக்குச் செய்த உதவிக்குத் திரும்ப நாம் செய்வது, அவர் செய்த உதவியின் காரணம், பொருள், காலம் பார்த்து அன்று; உதவியைப் பெற்ற நம் பண்பாட்டுத் தகுதியே அதற்கு அளவாகும்.", "en": "The benefit itself is not the measure of the benefit; the worth of those who have received it is its measure." } }, { "chapter": "செய்ந்நன்றி அறிதல்", "kural": [ "மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க", "துன்பத்துள் துப்பாயார் நட்பு." ], "number": 106, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது .", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.", "en": "Forsake not the friendship of those who have been your staff in adversity. Forget not be benevolence of the blameless." } }, { "chapter": "செய்ந்நன்றி அறிதல்", "kural": [ "எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்", "விழுமந் துடைத்தவர் நட்பு." ], "number": 107, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தம் துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழு பிறப்பிலும் நல்லவர் எண்ணுவர்", "en": "(The wise) will remember throughout their seven-fold births the love of those who have wiped away their afliction." } }, { "chapter": "செய்ந்நன்றி அறிதல்", "kural": [ "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது", "அன்றே மறப்பது நன்று." ], "number": 108, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்", "en": "It is not good to forget a benefit; it is good to forget an injury even in the very moment (in which it is inflicted)." } }, { "chapter": "செய்ந்நன்றி அறிதல்", "kural": [ "கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த", "ஒன்றுநன்று உள்ளக் கெடும்." ], "number": 109, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : முன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்.", "en": "Though one inflict an injury great as murder, it will perish before the thought of one benefit (formerly) conferred." } }, { "chapter": "செய்ந்நன்றி அறிதல்", "kural": [ "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை", "செய்ந்நன்றி கொன்ற மகற்கு." ], "number": 110, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை", "en": "He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit." } }, { "chapter": "நடுவு நிலைமை", "kural": [ "தகுதி எனவொன்று நன்றே பகுதியால்", "பாற்பட்டு ஒழுகப் பெறின்." ], "number": 111, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதும்.", "en": "That equity which consists in acting with equal regard to each of (the three) divisions of men [enemies, strangers and friends] is a pre-eminent virtue." } }, { "chapter": "நடுவு நிலைமை", "kural": [ "செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி", "எச்சத்திற் கேமாப்பு உடைத்து." ], "number": 112, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்", "en": "The wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterity." } }, { "chapter": "நடுவு நிலைமை", "kural": [ "நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை", "அன்றே யொழிய விடல்." ], "number": 113, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நன்மையே தருவதாக இருந்தாலும் நீதியை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே விட்டு விடுக.", "en": "Forsake in the very moment (of acquisition) that gain which, though it should bring advantage, is without equity." } }, { "chapter": "நடுவு நிலைமை", "kural": [ "தக்கார் தகவிலர் என்பது அவரவர்", "எச்சத்தாற் காணப்ப படும்." ], "number": 114, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இவர் நீதியாளர், இவர் நீதியற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம், புகழ், பிள்ளைகளின் ஒழுக்கம் ஆகியவற்றால் அறிந்து கொள்ளலாம்.", "en": "The worthy and unworthy may be known by the existence or otherwise of good offsprings." } }, { "chapter": "நடுவு நிலைமை", "kural": [ "கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்", "கோடாமை சான்றோர்க் கணி." ], "number": 115, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.", "en": "Loss and gain come not without cause; it is the ornament of the wise to preserve evenness of mind (under both)." } }, { "chapter": "நடுவு நிலைமை", "kural": [ "கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்", "நடுவொரீஇ அல்ல செயின்." ], "number": 116, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.", "en": "Let him whose mind departing from equity commits sin well consider thus within himself, “I shall perish.”" } }, { "chapter": "நடுவு நிலைமை", "kural": [ "கெடுவாக வையாது உலகம் நடுவாக", "நன்றிக்கண் தங்கியான் தாழ்வு." ], "number": 117, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நீதி என்னும் அறவாழ்வு வாழ்ந்தும் ஒருவன் வறுமைப்பட்டுப் போவான் என்றால், அதை வறுமை என்று உயர்ந்தோர் எண்ணவேமாட்டார்.", "en": "The great will not regard as poverty the low estate of that man who dwells in the virtue of equity." } }, { "chapter": "நடுவு நிலைமை", "kural": [ "சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்", "கோடாமை சான்றோர்க் கணி." ], "number": 118, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : முதலில் சமமாக நின்று பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்துக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களால் அமைந்து ஓரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோராகிய நீதிபதிகளுக்கு அழகாம்.", "en": "To incline to neither side, but to rest impartial as the even-fixed scale is the ornament of the wise." } }, { "chapter": "நடுவு நிலைமை", "kural": [ "சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா", "உட்கோட்டம் இன்மை பெறின்." ], "number": 119, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி.", "en": "Freedom from obliquity of speech is rectitude, if there be (corresponding) freedom from bias of mind." } }, { "chapter": "நடுவு நிலைமை", "kural": [ "வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்", "பிறவும் தமபோல் செயின்." ], "number": 120, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்.", "en": "The true merchandize of merchants is to guard and do by the things of others as they do by their own." } }, { "chapter": "அடக்கமுடைமை", "kural": [ "அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை", "ஆரிருள் உய்த்து விடும்." ], "number": 121, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.", "en": "Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell)." } }, { "chapter": "அடக்கமுடைமை", "kural": [ "காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்", "அதனினூஉங் கில்லை உயிர்க்கு." ], "number": 122, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் ‌காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அடக்கத்தைச் செல்வமாக எண்ணிக் காக்க; அதைக் காட்டிலும் பெரிய செல்வம் வேறு இல்லை.", "en": "Let self-control be guarded as a treasure; there is no greater source of good for man than that." } }, { "chapter": "அடக்கமுடைமை", "kural": [ "செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து", "ஆற்றின் அடங்கப் பெறின்." ], "number": 123, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.", "en": "Knowing that self-control is knowledge, if a man should control himself, in the prescribed course, such self-control will bring him distinction among the wise." } }, { "chapter": "அடக்கமுடைமை", "kural": [ "நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்", "மலையினும் மாணப் பெரிது." ], "number": 124, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.", "en": "More lofty than a mountain will be the greatness of that man who without swerving from his domestic state, controls himself." } }, { "chapter": "அடக்கமுடைமை", "kural": [ "எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்", "செல்வர்க்கே செல்வம் தகைத்து." ], "number": 125, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : செருக்கு இல்லாமல் அடக்கமாக வாழ்வது எல்லார்க்குமே நல்லதுதான்; அவ் எல்லாருள்ளும் செல்வர்களுக்கு அது மேலும் ஒரு செல்வமாக விளங்கும்.", "en": "Humility is good in all; but especially in the rich it is (the excellence of) higher riches." } }, { "chapter": "அடக்கமுடைமை", "kural": [ "ஒருநம்யுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்", "எழுநம்யும் ஏமாப் புடைத்து." ], "number": 126, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால், அது அவனுக்குப் பிறவி தோறும் ஏழு பிறப்பிலும் - அரணாக இருந்து உதவும்.", "en": "Should one throughout a single birth, like a tortoise keep in his five senses, the fruit of it will prove a safe-guard to him throughout the seven-fold births." } }, { "chapter": "அடக்கமுடைமை", "kural": [ "யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்", "சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு." ], "number": 127, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.", "en": "Whatever besides you leave unguarded, guard your tongue; otherwise errors of speech and the consequent misery will ensue." } }, { "chapter": "அடக்கமுடைமை", "kural": [ "ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்", "நன்றாகா தாகி விடும்." ], "number": 128, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தீய ‌சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும்.", "en": "If a man’s speech be productive of a single evil, all the good by him will be turned into evil." } }, { "chapter": "அடக்கமுடைமை", "kural": [ "தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே", "நாவினாற் சுட்ட வடு." ], "number": 129, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது.", "en": "The wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never heal." } }, { "chapter": "அடக்கமுடைமை", "kural": [ "கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி", "அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து." ], "number": 130, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கல்வி கற்று மனத்துள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறம் அவன் வழியில் நுழைந்து காத்து இருக்கும்.", "en": "Virtue, seeking for an opportunity, will come into the path of that man who, possessed of learning and self-control, guards himself against anger." } }, { "chapter": "ஒழுக்கமுடைமை", "kural": [ "ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்", "உயிரினும் ஓம்பப் படும்." ], "number": 131, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும்.", "en": "Propriety of conduct leads to eminence, it should therefore be preserved more carefully than life." } }, { "chapter": "ஒழுக்கமுடைமை", "kural": [ "பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்", "தேரினும் அஃதே துணை." ], "number": 132, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எதனாலும், அழிந்து போகாமல் ஒழுக்கத்தை விரும்பிக் காத்துக்கொள்க; அறங்கள் பலவற்றையும் ஆய்ந்து, இம்மை மறுமைக்குத் துணையாவது எது எனத் தேர்வு செய்தால் ஒழுக்கமே துணையாகும்.", "en": "Let propriety of conduct be laboriously preserved and guarded; though one know and practise and excel in many virtues, that will be an eminent aid." } }, { "chapter": "ஒழுக்கமுடைமை", "kural": [ "ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்", "இழிந்த பிறப்பாய் விடும்." ], "number": 133, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும்.", "en": "Propriety of conduct is true greatness of birth, and impropriety will sink into a mean birth." } }, { "chapter": "ஒழுக்கமுடைமை", "kural": [ "மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்", "பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்." ], "number": 134, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.", "en": "A Brahman though he should forget the Vedas may recover it by reading; but, if he fail in propriety of conduct even his high birth will be destroyed." } }, { "chapter": "ஒழுக்கமுடைமை", "kural": [ "அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை", "ஒழுக்க மிலான்கண் உயர்வு." ], "number": 135, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்குலம் என்பதும் இல்லை.", "en": "Just as the envious man will be without wealth, so will the man of destitute of propriety of conduct be without greatness." } }, { "chapter": "ஒழுக்கமுடைமை", "kural": [ "ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்", "ஏதம் படுபாக் கறிந்து." ], "number": 136, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒழுக்கம் இழந்தால் தனக்குக் குலத்தாழ்வு உண்டாகும் என அறியும் மன உறுதி உடைய பெரியோர், கடினமே என்றாலும் ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார்.", "en": "Those firm in mind will not slacken in their observance of the proprieties of life, knowing, as they do, the misery that flows from the transgression from them." } }, { "chapter": "ஒழுக்கமுடைமை", "kural": [ "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்", "எய்துவர் எய்தாப் பழி." ], "number": 137, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.", "en": "From propriety of conduct men obtain greatness; from impropriety comes insuferable disgrace." } }, { "chapter": "ஒழுக்கமுடைமை", "kural": [ "நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்", "என்றும் இடும்பை தரும்." ], "number": 138, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும்.", "en": "Propriety of conduct is the seed of virtue; impropriety will ever cause sorrow." } }, { "chapter": "ஒழுக்கமுடைமை", "kural": [ "ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய", "வழுக்கியும் வாயாற் சொலல்." ], "number": 139, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.", "en": "Those who study propriety of conduct will not speak evil, even forgetfully." } }, { "chapter": "ஒழுக்கமுடைமை", "kural": [ "உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்", "கல்லார் அறிவிலா தார்" ], "number": 140, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : முந்திய அறநூல்கள் கூறியவற்றுள் இன்றைக்குப் பொருந்தாதவற்றை விலக்கியும், கூறாதனவற்றுள் பொருந்துவனவற்றை ஏற்றும் வாழக் கல்லாதவர், பல்வேறு நூல்களைக் கற்றவரே என்றாலும் அறிவில்லாதவரே.", "en": "Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant." } }, { "chapter": "பிறனில் விழையாமை", "kural": [ "பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து", "அறம்பொருள் கண்டார்கண் இல்." ], "number": 141, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இவ்வுலகில் அறத்தையும், பொருளையும் கற்று அறிந்தவரிடம் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை இல்லை.", "en": "The folly of desiring her who is the property of another will not be found in those who know (the attributes of) virtue and (the rights of) property." } }, { "chapter": "பிறனில் விழையாமை", "kural": [ "அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை", "நின்றாரின் பேதையார் இல்." ], "number": 142, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பாவ வழியில் நடக்கும் மனிதருள் எல்லாம், அடுத்தவன் மனைவியை விரும்பி அவன் வாசலில் நிற்கும் மூடனைப் போன்ற கடை நிலை மனிதர் வேறு இல்லை", "en": "Among all those who stand on the outside of virtue, there are no greater fools than those who stand outside their neighbour’s door." } }, { "chapter": "பிறனில் விழையாமை", "kural": [ "விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்", "தீமை புரிந்து ஒழுகு வார்." ], "number": 143, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன்னைச் சந்தேகப்படாதவரின் வீட்டிற்குள் நுழைந்து, அடுத்தவரின் மனைவியுடன் தவறான தொடர்பு கொண்டு வாழ்பவன், இறந்து போனவனே அன்றி உயிருடன் வாழ்பவன் அல்லன்", "en": "Certainly they are no better than dead men who desire evil towards the wife of those who undoubtingly confide in them." } }, { "chapter": "பிறனில் விழையாமை", "kural": [ "எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்", "தேரான் பிறனில் புகல்." ], "number": 144, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அடுத்தவன் மனைவியை விரும்பித் தன் பிழையைச் சிறிதும் எணணாமல் அவ்வீட்டில் நுழைபவன் எத்தனைப் பெருமை உடையவனாய் இருந்துதான் என்ன?", "en": "However great one may be, what does it avail if, without at all considering his guilt, he goes unto the wife of another ?" } }, { "chapter": "பிறனில் விழையாமை", "kural": [ "எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்", "விளியாது நிற்கும் பழி." ], "number": 145, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், ‌எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான்.", "en": "He who thinks lightly of going into the wife of another acquires guilt that will abide with him imperishably and for ever." } }, { "chapter": "பிறனில் விழையாமை", "kural": [ "பகைபாவம் அச்சம் பழியென நான்கும்", "இகவாவாம் இல்லிறப்பான் கண்." ], "number": 146, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.", "en": "Hatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbour’s wife." } }, { "chapter": "பிறனில் விழையாமை", "kural": [ "அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்", "பெண்மை நயவா தவன்." ], "number": 147, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான்", "en": "He who desires not the womanhood of her who should walk according to the will of another will be praised as a virtuous house-holder." } }, { "chapter": "பிறனில் விழையாமை", "kural": [ "பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு", "அறனொன்றோ ஆன்ற வொழுக்கு." ], "number": 148, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத ‌பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அடுத்தவன் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும்", "en": "That noble manliness which looks not at the wife of another is the virtue and dignity of the great." } }, { "chapter": "பிறனில் விழையாமை", "kural": [ "நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்", "பிறர்க்குரியாள் தோள்தோயா தார்." ], "number": 149, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அச்சந்தரும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளும் அடைவதற்கு உரியவர் எவர் என்றால், அடுத்தவனுக்கு உரியவளின் தோளைச் சேராதவரே", "en": "Is it asked, “who are those who shall obtain good in this world surrounded by the terror-producing sea ?” Those who touch not the shoulder of her who belongs to another." } }, { "chapter": "பிறனில் விழையாமை", "kural": [ "அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்", "பெண்மை நயவாமை நன்று." ], "number": 150, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறம் செய்யாமல் பாவத்தையே செய்பவனாக இருந்தாலும் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவிமேல் ஆசைப்படாமல் இருப்பது நல்லது.", "en": "Though a man perform no virtuous deeds and commit (every) vice, it will be well if he desire not the womanhood of her who is within the limit (of the house) of another." } }, { "chapter": "பொறையுடைமை", "kural": [ "அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை", "இகழ்வார்ப் பொறுத்தல் தலை." ], "number": 151, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்", "en": "To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues." } }, { "chapter": "பொறையுடைமை", "kural": [ "பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை", "மறத்தல் அதனினும் நன்று." ], "number": 152, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட நல்லது.", "en": "Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that." } }, { "chapter": "பொறையுடைமை", "kural": [ "இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்", "வன்மை மடவார்ப் பொறை." ], "number": 153, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப் பொறுத்துக் கொள்வது", "en": "To neglect hospitality is poverty of poverty. To bear with the ignorant is might of might." } }, { "chapter": "பொறையுடைமை", "kural": [ "நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை", "போற்றி யொழுகப் படும்." ], "number": 154, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சான்றாண்மை நம்மைவிட்டு விலகக்கூடாது என விரும்பினால் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும்", "en": "If you desire that greatness should never leave, you preserve in your conduct the exercise of patience." } }, { "chapter": "பொறையுடைமை", "kural": [ "ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்", "பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து." ], "number": 155, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர்.", "en": "(The wise) will not at all esteem the resentful. They will esteem the patient just as the gold which they lay up with care." } }, { "chapter": "பொறையுடைமை", "kural": [ "ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்", "பொன்றுந் துணையும் புகழ்." ], "number": 156, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்; பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.", "en": "The pleasure of the resentful continues for a day. The praise of the patient will continue until (the final destruction of) the world." } }, { "chapter": "பொறையுடைமை", "kural": [ "திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து", "அறனல்ல செய்யாமை நன்று." ], "number": 157, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கொடியவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், பதிலுக்குத் தானும் செய்தால் அவர் வருந்துவாரே என வருந்தி, அறம் அல்லாதவற்றைச் செய்யாது இருப்பது நல்லது", "en": "Though others inflict injuries on you, yet compassionating the evil (that will come upon them) it will be well not to do them anything contrary to virtue." } }, { "chapter": "பொறையுடைமை", "kural": [ "மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்", "தகுதியான் வென்று விடல்." ], "number": 158, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.", "en": "Let a man by patience overcome those who through pride commit excesses." } }, { "chapter": "பொறையுடைமை", "kural": [ "துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்", "இன்னாச்சொல் நோற்கிற் பவர்." ], "number": 159, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நெறி கடந்து தீய சொற்களால் திட்டுபவரையும் பொறுத்துக் கொள்பவர். இல்வாழ்க்கையில் வாழ்ந்தாலும் துறவியைப் போலத் தூயரே.", "en": "Those who bear with the uncourteous speech of the insolent are as pure as the ascetics." } }, { "chapter": "பொறையுடைமை", "kural": [ "உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்", "இன்னாச்சொல் நோற்பாரின் பின்." ], "number": 160, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்.", "en": "Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speechof others." } }, { "chapter": "அழுக்காறாமை", "kural": [ "ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து", "அழுக்காறு இலாத இயல்பு." ], "number": 161, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உள்ளத்துள் பொறாமை இல்லாமல் வாழும் குணத்தை, ஒருவன் தனக்கு உரிய ஒழுக்கமாகக் கொள்க.", "en": "Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct." } }, { "chapter": "அழுக்காறாமை", "kural": [ "விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்", "அழுக்காற்றின் அன்மை பெறின்." ], "number": 162, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எவர் இடத்தும் பொறாமை கொள்ளாதிருப்பதை ஒருவன் பெற்றால் சீரிய சிறப்புகளுள் அது போன்றது வேறு இல்லை.", "en": "Amongst all attainable excellences there is none equal to that of being free from envy towords others." } }, { "chapter": "அழுக்காறாமை", "kural": [ "அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்", "பேணாது அழுக்கறுப் பான்." ], "number": 163, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறர் உயர்வு கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன், அறத்தால் வரும் புண்ணியத்தை வேண்டா என மறுப்பவன் ஆவான்", "en": "Of him who instead of rejoicing in the wealth of others, envies it, it will be said “he neither desires virtue not wealth.”" } }, { "chapter": "அழுக்காறாமை", "kural": [ "அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்", "ஏதம் படுபாக்கு அறிந்து." ], "number": 164, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுத‌ை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார்", "en": "(The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds." } }, { "chapter": "அழுக்காறாமை", "kural": [ "அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்", "வழுக்காயும் கேடீன் பது." ], "number": 165, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பொறாமை உடை‌யவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும்", "en": "To those who cherish envy that is enough. Though free from enemies that (envy) will bring destruction." } }, { "chapter": "அழுக்காறாமை", "kural": [ "கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்", "உண்பதூஉம் இன்றிக் கெடும்." ], "number": 166, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுகிறவனின் குடும்பம், உடுக்கவும், உண்ணவும் இல்லாமல் அலையும்.", "en": "He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and rainment." } }, { "chapter": "அழுக்காறாமை", "kural": [ "அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்", "தவ்வையைக் காட்டி விடும்." ], "number": 167, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.", "en": "Lakshmi envying (the prosperity) of the envious man will depart and introduce him to her sister." } }, { "chapter": "அழுக்காறாமை", "kural": [ "அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்", "தீயுழி உய்த்து விடும்." ], "number": 168, "section": "அறத்துப்பால்", "meaning": { "en": "Envy will destroy (a man’s) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come.)", "ta_mu_va": "மு.வ : பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்" } }, { "chapter": "அழுக்காறாமை", "kural": [ "அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்", "கேடும் நினைக்கப் படும்." ], "number": 169, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பொறாமை கொண்ட மனத்தவனின் உயர்வும், அது இல்லாத நல்லவனின் தாழ்வும் பற்றி ஆராய்க", "en": "The wealth of a man of envious mind and the poverty of the righteous will be pondered." } }, { "chapter": "அழுக்காறாமை", "kural": [ "அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்", "பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்." ], "number": 170, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை", "en": "Never have the envious become great; never have those who are free from envy been without greatness." } }, { "chapter": "வெஃகாமை", "kural": [ "நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்", "குற்றமும் ஆங்கே தரும்." ], "number": 171, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும்.", "en": "If a man departing from equity covet the property (of others), at that very time will his family be destroyed and guilt be incurred." } }, { "chapter": "வெஃகாமை", "kural": [ "படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்", "நடுவன்மை நாணு பவர்." ], "number": 172, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணிப் பழி தரும் செயல்களை, நீதிக்கு அஞ்சுபவர் செய்ய மாட்டார்.", "en": "Those who blush at the want of equity will not commit disgraceful acts through desire of the profit that may be gained." } }, { "chapter": "வெஃகாமை", "kural": [ "சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே", "மற்றின்பம் வேண்டு பவர்." ], "number": 173, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறத்தால் வரும் நிலையான இன்பங்களை விரும்புவோர் நிலையில்லாத இன்பத்தை விரும்பிப் பிறர் பொருளைக் கவரும் அறம் இல்லாத செயல்களைச் செய்ய மாட்டார்.", "en": "Those who desire the higher pleasures (of heaven) will not act unjustly through desire of the trifling joy. (in this life.)" } }, { "chapter": "வெஃகாமை", "kural": [ "இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற", "புன்மையில் காட்சி யவர்." ], "number": 174, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்‌.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஏதும் இல்லாத ஏழையாய் இருக்கிறோமோ என எண்ணி, ஐம்புலன் ஆசைகளையும் வென்ற பேர் அறிஞர், பிறர் பொருளைக் கவரமாட்டார்.", "en": "The wise who have conquered their senses and are free from crime, will not covet (the things of others), with the thought “we are destitute.”" } }, { "chapter": "வெஃகாமை", "kural": [ "அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்", "வெஃகி வெறிய செயின்." ], "number": 175, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறர் பொருள் மீது, ஆசை கொண்டு எவரிடத்திலும் அறிவற்ற செயல்களைச் செய்தால் செய்பவரின் கூரிய, பல நூல் பயின்று பரந்த அறிவினால் அவருக்கு ஆகும் பயன்தான் என்ன?", "en": "What is the advantage of extensive and accurate knowledge if a man through covetousness act senselessly towards all ?" } }, { "chapter": "வெஃகாமை", "kural": [ "அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்", "பொல்லாத சூழக் கெடும்." ], "number": 176, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அருளை விரும்பிக் குடும்ப வாழ்வில் இருப்பவன், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டுப் பொல்லாதது செய்தால், அவன் கெட்டுப் போவான்.", "en": "If he, who through desire of the virtue of kindness abides in the domestic state i.e., the path in which it may be obtained, covet (the property of others) and think of evil methods (to obtain it), he will perish." } }, { "chapter": "வெஃகாமை", "kural": [ "வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்", "மாண்டற் கரிதாம் பயன்." ], "number": 177, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறர் பொருளை அவர் விரும்பாதிருக்க, நாம் விரும்பிப் பெற்று அனுபவிக்கும்போது அதன் பயன் நல்லதாக இல்லை என்று அறிவதால், பிறர் பொருளைக் கவர்வதற்கு விரும்ப வேண்டா.", "en": "Desire not the gain of covetousness. In the enjoyment of its fruits there is no glory." } }, { "chapter": "வெஃகாமை", "kural": [ "அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை", "வேண்டும் பிறன்கைப் பொருள்." ], "number": 178, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே.", "en": "If it is weighed, “what is the indestructibility of wealth,” it is freedom from covetousness." } }, { "chapter": "வெஃகாமை", "kural": [ "அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்", "திறன்அறிந் தாங்கே திரு." ], "number": 179, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதே அறம் என்னும் அறிவுடையோரின் பெருமையை அறிந்து, திருமகள் தானே அவரிடம் போய் இருப்பாள்.", "en": "Lakshmi, knowing the manner (in which she may approach) will immediately come to those wise men who, knowing that it is virtue, covet not the property of others." } }, { "chapter": "வெஃகாமை", "kural": [ "இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்", "வேண்டாமை என்னுஞ் செருக்கு." ], "number": 180, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வி‌ளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பின் வி‌ளைவை எண்ணாமல் அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது நமக்கு அழிவைக் கொடுக்கும்; அதற்கு ஆசைப்படாத செல்வமோ வெற்றியைக் கொடுக்கும்‌.", "en": "To covet (the wealth of another) regardless of consequences will bring destruction. That greatness (of mind) which covets not will give victory." } }, { "chapter": "புறங்கூறாமை", "kural": [ "அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்", "புறங்கூறான் என்றல் இனிது." ], "number": 181, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது", "en": "Though one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him “he does not backbite.”" } }, { "chapter": "புறங்கூறாமை", "kural": [ "அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே", "புறனழீஇப் பொய்த்து நகை." ], "number": 182, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறம் என்பதே இல்லை என அடித்துப் பேசிப் பாவத்தைச் செய்வதைக் காட்டிலும் ஒருவனைக் காணாதபோது புறம்பேசிக் காணும்போது பொய்யாகச் சிரிப்பது பெருங்கேடு.", "en": "To smile deceitfully (in another’s presence) after having reviled him to his destruction (behind his back) is a greater evil than the commission of (every other) sin and the destruction of (every) virtue." } }, { "chapter": "புறங்கூறாமை", "kural": [ "புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்", "அறங்கூற்றும் ஆக்கத் தரும்." ], "number": 183, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்‌‌.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்.", "en": "Death rather than life will confer upon the deceitful backbiter the profit which (the treatises on) virtue point out." } }, { "chapter": "புறங்கூறாமை", "kural": [ "கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க", "முன்னின்று பின்நோக்காச் சொல்." ], "number": 184, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சணியம் இல்லாமல் பேசினாலும், அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவை எண்ணாமல் அவனைப் பற்றிப் பேச வேண்டா.", "en": "Though you speak without kindness before another’s face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it." } }, { "chapter": "புறங்கூறாமை", "kural": [ "அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்", "புன்மையாற் காணப் படும்." ], "number": 185, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாததன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறத்தைப் பெரிதாகப் பேசும் ஒருவன் மனத்தால் அறவோன் அல்லன் என்பதை அவன் புறம்பேசும் இழிவினைக் கொண்டு கண்டுகொள்ளலாம்.", "en": "The emptiness of that man’s mind who (merely) praises virtue will be seen from the meanness of reviling another behind his back." } }, { "chapter": "புறங்கூறாமை", "kural": [ "பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்", "திறன்தெரிந்து கூறப் படும்." ], "number": 186, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும்.", "en": "The character of the faults of that man who publishes abroad the faults of others will be sought out and published." } }, { "chapter": "புறங்கூறாமை", "kural": [ "பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி", "நட்பாடல் தேற்றா தவர்." ], "number": 187, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கூடி மகிழுமாறு இனியன பேசி நட்பை வளர்க்கத் தெரியாதவர், புறம்பேசி நண்பர்களையும் பிரித்து விடுவர்.", "en": "Those who know not to live in friendship with amusing conversation will by back-biting estrange even their relatives." } }, { "chapter": "புறங்கூறாமை", "kural": [ "துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்", "என்னைகொல் ஏதிலார் மாட்டு." ], "number": 188, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன்னோடு நெருக்கமானவர்களின் குற்றத்தையும் அவர் இல்லாத நேரம் பேசும் இயல்புடையவர்கள், அயலார் காரியத்தில் என்னதான் பேசமாட்டார்கள்!", "en": "What will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends ?" } }, { "chapter": "புறங்கூறாமை", "kural": [ "அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்", "புன்சொல் உரைப்பான் பொறை." ], "number": 189, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்‌சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறர் இல்லாதபோது அவரைப் பழிக்கும் இழிசொற்களைப் பேசுபவனின் உடல் பாரத்தை இவனையும் சுமப்பதே என் தருமம் என்றெண்ணி இப்பூமி சுமக்கிறது போலும்!", "en": "The world through charity supports the weight of those who reproach others observing their absence." } }, { "chapter": "புறங்கூறாமை", "kural": [ "ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்", "தீதுண்டோ மன்னும் உயிர்க்கு." ], "number": 190, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்ட‌ோ?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : புறம்பேச அடுத்தவர் குற்றத்தைப் பார்ப்பவர், பேசும் தம் குற்றத்தையும் எண்ணினால், நிலைத்து இருக்கும் உயிர்க்குத் துன்பமும் வருமோ?", "en": "If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men ?" } }, { "chapter": "பயனில சொல்லாமை", "kural": [ "பல்லார் முனியப் பயனில சொல்லுவான்", "எல்லாரும் எள்ளப் படும்." ], "number": 191, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.", "en": "He who to the disgust of many speaks useless things will be despised by all." } }, { "chapter": "பயனில சொல்லாமை", "kural": [ "பயனில பல்லார்முன் சொல்லல் நயனில", "நட்டார்கண் செய்தலிற் றீது." ], "number": 192, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.", "en": "To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends." } }, { "chapter": "பயனில சொல்லாமை", "kural": [ "நயனிலன் என்பது சொல்லும் பயனில", "பாரித் துரைக்கும் உரை." ], "number": 193, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.", "en": "That conversation in which a man utters forth useless things will say of him “he is without virtue.”" } }, { "chapter": "பயனில சொல்லாமை", "kural": [ "நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்", "பண்பில்சொல் பல்லா ரகத்து." ], "number": 194, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.", "en": "The words devoid of profit or pleasure which a man speaks will, being inconsistent with virtue, remove him from goodness." } }, { "chapter": "பயனில சொல்லாமை", "kural": [ "சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில", "நீர்மை யுடையார் சொலின்." ], "number": 195, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.", "en": "If the good speak vain words their eminence and excellence will leave them." } }, { "chapter": "பயனில சொல்லாமை", "kural": [ "பயனில் சொல் பராட்டு வானை மகன்எனல்", "மக்கட் பதடி யெனல்." ], "number": 196, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்.", "en": "Call not him a man who parades forth his empty words. Call him the chaf of men." } }, { "chapter": "பயனில சொல்லாமை", "kural": [ "நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்", "பயனில சொல்லாமை நன்று." ], "number": 197, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது.", "en": "Let the wise if they will, speak things without excellence; it will be well for them not to speak useless things." } }, { "chapter": "பயனில சொல்லாமை", "kural": [ "அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்", "பெரும்பயன் இல்லாத சொல்." ], "number": 198, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்.", "en": "The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them." } }, { "chapter": "பயனில சொல்லாமை", "kural": [ "பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த", "மாசறு காட்சி யவர்." ], "number": 199, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.", "en": "Those wise men who are without faults and are freed from ignorance will not even forgetfully speak things that profit not." } }, { "chapter": "பயனில சொல்லாமை", "kural": [ "சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க", "சொல்லிற் பயனிலாச் சொல்." ], "number": 200, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சொற்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லவேண்டா.", "en": "Speak what is useful, and speak not useless words." } }, { "chapter": "தீவினையச்சம்", "kural": [ "தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்", "தீவினை என்னும் செருக்கு." ], "number": 201, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர்.", "en": "Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin." } }, { "chapter": "தீவினையச்சம்", "kural": [ "தீயவை தீய பயத்தலால் தீயவை", "தீயினும் அஞ்சப் படும்." ], "number": 202, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.", "en": "Because evil produces evil, therefore should evil be feared more than fire." } }, { "chapter": "தீவினையச்சம்", "kural": [ "அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய", "செறுவார்க்கும் செய்யா விடல்." ], "number": 203, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.", "en": "To do no evil to enemies will be called the chi ef of all virtues." } }, { "chapter": "தீவினையச்சம்", "kural": [ "மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்", "அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு." ], "number": 204, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்.", "en": "Even though forgetfulness meditate not the ruin of another. Virtue will meditate the ruin of him who thus meditates." } }, { "chapter": "தீவினையச்சம்", "kural": [ "இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்", "இலனாகும் மற்றும் பெயர்த்து." ], "number": 205, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய்.", "en": "Commit not evil, saying, “I am poor”: if you do, you will become poorer still." } }, { "chapter": "தீவினையச்சம்", "kural": [ "தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால", "தன்னை அடல்வேண்டா தான்." ], "number": 206, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : துன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது.", "en": "Let him not do evil to others who desires not that sorrows should pursue him." } }, { "chapter": "தீவினையச்சம்", "kural": [ "எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை", "வீயாது பின்சென்று அடும்." ], "number": 207, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும்.", "en": "However great be the enmity men have incurred they may still live. The enmity of sin will incessantly pursue and kill." } }, { "chapter": "தீவினையச்சம்", "kural": [ "தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை", "வீயாது அஇஉறைந் தற்று." ], "number": 208, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறர்க்குத் தீமை செய்தவர் அழிவது, அவரை அவரது நிழல் விடாது கால்களின் கீழே தங்கியிருப்பது போலாம்.", "en": "Destruction will dwell at the heels of those who commit evil even as their shadow that leaves them not." } }, { "chapter": "தீவினையச்சம்", "kural": [ "தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்", "துன்னற்க தீவினைப் பால்." ], "number": 209, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செயய வேண்டா.", "en": "If a man love himself, let him not commit any sin however small." } }, { "chapter": "தீவினையச்சம்", "kural": [ "அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்", "தீவினை செய்யான் எனின்." ], "number": 210, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.", "en": "Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path." } }, { "chapter": "ஒப்புரவறிதல்", "kural": [ "கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு", "என் ஆற்றுங் கொல்லோ உலகு." ], "number": 211, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறர்க்கு உதவுவது, அவ்வுதவியைப் பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று; ஒருவர் செய்ததற்குத் திரும்பச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் மழை தரும் மேகங்களுக்கு இந்த உலகம் திரும்ப என்ன செய்துவிட முடியும்?", "en": "Benevolence seeks not a return. What does the world give back to the clouds ?" } }, { "chapter": "ஒப்புரவறிதல்", "kural": [ "தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு", "வேளாண்மை செய்தற் பொருட்டு." ], "number": 212, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.", "en": "All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence." } }, { "chapter": "ஒப்புரவறிதல்", "kural": [ "புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே", "ஒப்புரவின் நல்ல பிற." ], "number": 213, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தேவர்கள் உலகத்திலும் இப்பூவுலகிலும், உழைக்க முடியாதவர்க்கு உதவுவது போன்ற வேறு நல்ல செயல்களைப் பெறுவது கடினம்.", "en": "It is difficult to obtain another good equal to benevolence either in this world or in that of the gods." } }, { "chapter": "ஒப்புரவறிதல்", "kural": [ "ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்", "செத்தாருள் வைக்கப் படும்." ], "number": 214, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.", "en": "He truly lives who knows (and discharges) the proper duties (of benevolence). He who knows them not will be reckoned among the dead." } }, { "chapter": "ஒப்புரவறிதல்", "kural": [ "ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்", "பேரறி வாளன் திரு." ], "number": 215, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும்.", "en": "The wealth of that man of eminent knowledge who desires to exercise the benevolence approved of by the world, is like the full waters of a city-tank." } }, { "chapter": "ஒப்புரவறிதல்", "kural": [ "பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்", "நயனுடை யான்கண் படின்." ], "number": 216, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறரால் விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், உண்ணத் தகும், கனிதரும் மரம் ஊருக்கு உள்ளே பழுத்திருப்பதைப் போல எல்லார்க்கும் பொதுவாகும்.", "en": "The wealth of a man (possessed of the virtue) of benevolence is like the ripening of a fruitful tree in the midst of a town." } }, { "chapter": "ஒப்புரவறிதல்", "kural": [ "மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்", "பெருந்தகை யான்கண் படின்." ], "number": 217, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பெரும் பண்பாளனிடம் சேரும் செல்வம், எல்லா உறுப்புகளாலும் மருந்து ஆகிப் பயன்படுவதிலிருந்து தப்பாத மரம் போலப் பொதுவாகும்.", "en": "If wealth be in the possession of a man who has the great excellence (of benevolence), it is like a tree which as a medicine is an infallible cure for disease." } }, { "chapter": "ஒப்புரவறிதல்", "kural": [ "இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்", "கடனறி காட்சி யவர்." ], "number": 218, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள்.", "en": "The wise who know what is duty will not scant their benevolence even when they are without wealth." } }, { "chapter": "ஒப்புரவறிதல்", "kural": [ "நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர", "செய்யாது அமைகலா வாறு." ], "number": 219, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான்.", "en": "The poverty of a benevolent man, is nothing but his inability to exercise the same." } }, { "chapter": "ஒப்புரவறிதல்", "kural": [ "ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்", "விற்றுக்கோள் தக்க துடைத்து." ], "number": 220, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இருப்பதைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டால், நாளை நமக்குத் தீமை வருமே என்று சொன்னால், தன்னையே விலையாகக் கொடுத்து அந்தத் தீமை வாங்கத்தக்கதே.", "en": "If it be said that loss will result from benevolence, such loss is worth being procured even by the sale of one’s self." } }, { "chapter": "ஈகை", "kural": [ "வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்", "குறியெதிர்ப்பை நீர துடைத்து." ], "number": 221, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை; பிற எல்லாம் கொடுத்ததைத் திரும்பப் பெறும் நோக்கம் உடையதே.", "en": "To give to the destitute is true charity. All other gifts have the nature of (what is done for) a measured return." } }, { "chapter": "ஈகை", "kural": [ "நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்", "இல்லெனினும் ஈதலே நன்று." ], "number": 222, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது தீமை; ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதால் விண்ணுலகம் கிடைக்காது என்றாலும் கொடுப்பதே நல்லது.", "en": "To beg is evil, even though it were said that it is a good path (to heaven). To give is good, even though it were said that those who do so cannot obtain heaven." } }, { "chapter": "ஈகை", "kural": [ "இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்", "குலனுடையான் கண்ணே யுள." ], "number": 223, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஏழை என்று மற்றவரிடம் சொல்லாதிருப்பதும்,, ஏதும் அற்றவர்க்குத் தருவதும் நல்ல குடும்பத்தில் பிறந்தவனிடம் மட்டுமே உண்டு.", "en": "(Even in a low state) not to adopt the mean expedient of saying “I have nothing,” but to give, is the characteristic of the mad of noble birth." } }, { "chapter": "ஈகை", "kural": [ "இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்", "இன்முகங் காணும் அளவு." ], "number": 224, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே.", "en": "To see men begging from us in disagreeable, until we see their pleasant countenance." } }, { "chapter": "ஈகை", "kural": [ "ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை", "மாற்றுவார் ஆற்றலின் பின்." ], "number": 225, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : வல்லவர்க்கு மேலும் வலிமை, தமது பசியைப் பொறுத்துக் கொள்வதே அந்த வலிமையும், பிறர் பசியைப் போக்குபவரின் வலிமைக்கு அடுத்துத்தான் வலிமையாய் அமையும்.", "en": "The power of those who perform penance is the power of enduring hunger. It is inferior to the power of those who remove the hunger (of others)." } }, { "chapter": "ஈகை", "kural": [ "அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்", "பெற்றான் பொருள்வைப் புழி." ], "number": 226, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.", "en": "The removal of the killing hunger of the poor is the place for one to lay up his wealth." } }, { "chapter": "ஈகை", "kural": [ "பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்", "தீப்பிணி தீண்டல் அரிது." ], "number": 227, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது.", "en": "The fiery disease of hunger shall never touch him who habitually distributes his food to others." } }, { "chapter": "ஈகை", "kural": [ "ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை", "வைத்திழக்கும் வன்க ணவர்." ], "number": 228, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இல்லாதவர்க்குக் கொடுப்பதால் கொடுப்பவரும் பெறுபவரும் முகத்தாலும் மனத்தாலும் மகிழ்ச்சி அடைவர். பிறர்க்குக் கொடுக்காமல் பொருளைச் சேமித்து வைத்துப் பிறகு அதை இழந்துவிடும் கொடியவர்கள் அம்மகிழ்சியை அறியார்களோ?", "en": "Do the hard-eyed who lay up and lose their possessions not know the happiness which springs from the pleasure of giving ?" } }, { "chapter": "ஈகை", "kural": [ "இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய", "தாமே தமியர் உணல்." ], "number": 229, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.", "en": "Solitary and unshared eating for the sake of filling up one’s own riches is certainly much more unpleasant than begging." } }, { "chapter": "ஈகை", "kural": [ "சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்", "ஈதல் இயையாக் கடை." ], "number": 230, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.", "en": "Nothing is more unpleasant than death: yet even that is pleasant where charity cannot be exercised." } }, { "chapter": "புகழ்", "kural": [ "ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது", "ஊதியம் இல்லை உயிர்க்கு." ], "number": 231, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.", "en": "Give to the poor and live with praise. There is no greater profit to man than that." } }, { "chapter": "புகழ்", "kural": [ "உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று", "ஈவார்மேல் நிற்கும் புகழ்." ], "number": 232, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சொல்வார் சொல்வன எல்லாம், இல்லை என்று வருபவர்க்குத் தருபவர்மேல் சொல்லப்படும் புகழே.", "en": "Whatsoever is spoken in the world will abide as praise upon that man who gives alms to the poor." } }, { "chapter": "புகழ்", "kural": [ "ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்", "பொன்றாது நிற்பதொன் றில்." ], "number": 233, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை.", "en": "There is nothing that stands forth in the world imperishable, except fame, exalted in solitary greatness." } }, { "chapter": "புகழ்", "kural": [ "நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்", "போற்றாது புத்தேள் உலகு." ], "number": 234, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது..", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன்னில் வாழும்அறிஞரைப் போற்றாமல், இந்த நில உலகில்நெடும்புகழ் பெற்று வாழந்தவரையே தேவர் உலகம் பேணும்‌.", "en": "If one has acquired extensive fame within the limits of this earth, the world of the Gods will no longer praise those sages who have attained that world." } }, { "chapter": "புகழ்", "kural": [ "நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்", "வித்தகர்க் கல்லால் அரிது." ], "number": 235, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும் அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பூத உடம்பின் வறுமையைப் புகழுடம்பின் செல்வமாக்குவதும், பூத உடம்பின் அழிவைப் புகழுடம்பின் அழியாத் தன்மை ஆக்குவதும், பிறர்க்கு ஈந்து, தாம் மெய் உணர்ந்து, அவா அறுத்த வித்தகர்க்கு ஆகுமே அன்றி மற்றவர்க்கு ஆவது கடினம்.", "en": "Prosperity to the body of fame, resulting in poverty to the body of flesh and the stability to the former arising from the death of the latter, are achievable only by the wise." } }, { "chapter": "புகழ்", "kural": [ "தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்", "தோன்றலின் தோன்றாமை நன்று." ], "number": 236, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்‌பதே நல்லது.", "en": "If you are born (in this world), be born with qualities conductive to fame. From those who are destitute of them it will be better not to be born." } }, { "chapter": "புகழ்", "kural": [ "புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை", "இகழ்வாரை நோவது எவன்?" ], "number": 237, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணர் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?", "en": "Why do those who cannot live with praise, grieve those who despise them, instead of grieving themselves for their own inability." } }, { "chapter": "புகழ்", "kural": [ "வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்", "எச்சம் பெறாஅ விடின்." ], "number": 238, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாது போனால், இந்த உலகத்தவர்க்கு அதுவே பழி என்று அறிந்தோர் கூறுவர்.", "en": "Not to beget fame will be esteemed a disgrace by the wise in this world." } }, { "chapter": "புகழ்", "kural": [ "வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா", "யாக்கை பொறுத்த நிலம்." ], "number": 239, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்.", "en": "The ground which supports a body without fame will diminish in its rich produce." } }, { "chapter": "புகழ்", "kural": [ "வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய", "வாழ்வாரே வாழா தவர்." ], "number": 240, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிர‌ோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.", "en": "Those live who live without disgrace. Those who live without fame live not." } }, { "chapter": "அருளுடைமை", "kural": [ "அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்", "பூரியார் கண்ணும் உள." ], "number": 241, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்தது அருள் என்னும் செல்வமே. பொருட்செல்வம் இழிந்த மனிதரிடமும் உண்டு.", "en": "The wealth of kindness is wealth of wealth, in as much as the wealth of property is possessed by the basest of men." } }, { "chapter": "அருளுடைமை", "kural": [ "நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்", "தேரினும் அஃதே துணை." ], "number": 242, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நல்லநெறியில் வாழ்ந்து, நமக்கு உதவும் அறம் எது என ஆய்ந்து, அருளுடன் வாழ்க; எல்லாச் சமய நெறிகளால் ஆய்ந்தாலும் அருளே நமக்குத் துணையாகும்.", "en": "Stand) in the good path, consider, and be kind. Even considering according to the conflicting tenets of the different sects, kindness will be your best aid, (in the acquisition of heavenly bliss.)" } }, { "chapter": "அருளுடைமை", "kural": [ "அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த", "இன்னா உலகம் புகல்." ], "number": 243, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை.", "en": "They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness." } }, { "chapter": "அருளுடைமை", "kural": [ "மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப", "தன்னுயிர் அஞ்சும் வினை." ], "number": 244, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது.", "en": "(The wise) say that the evils, which his soul would dread, will never come upon the man who exercises kindness and protects the life (of other creatures)" } }, { "chapter": "அருளுடைமை", "kural": [ "அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்", "மல்லன்மா ஞாலங் கரி." ], "number": 245, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று.", "en": "This great rich earth over which the wind blows, is a witness that sorrow never comes upon the kind-hearted." } }, { "chapter": "அருளுடைமை", "kural": [ "பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி", "அல்லவை செய்தொழுகு வார்." ], "number": 246, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அருள் இல்லாமல் தீமைகளைச் செய்து வாழ்பவரைப் பொருளையும் இழந்து தாம் துன்பம் அடைந்ததையும் மறந்தவர் என்று அறிஞர் கூறுவர்.", "en": "(The wise) say that those who neglect kindness and practise cruelties, neglected virtue (in their former birth), and forgot (the sorrows which they must suffer.)" } }, { "chapter": "அருளுடைமை", "kural": [ "அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு", "இவ்வுலகம் இல்லாகி யாங்கு." ], "number": 247, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை.", "en": "As this world is not for those who are without wealth, so that world is not for those who are without kindness." } }, { "chapter": "அருளுடைமை", "kural": [ "பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்", "அற்றார்மற் றாதல் அரிது." ], "number": 248, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பொருள் இல்லாமல் ஏழையாய்ப் போனவர் திரும்பவும் செல்வத்தால் பொலிவு பெறலாம்; அருள் இல்லாமல் போனவரோ, போனவர்தாம்; மீண்டும் அருள் உள்ளவராய் ஆவது கடினம்.", "en": "Those who are without wealth may, at some future time, become prosperous; those who are destitute of kindness are utterly destitute; for them there is no change." } }, { "chapter": "அருளுடைமை", "kural": [ "தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்", "அருளாதான் செய்யும் அறம்." ], "number": 249, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனத்துள் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், ஞானம் இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும்.", "en": "f you consider, the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdom." } }, { "chapter": "அருளுடைமை", "kural": [ "வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின்", "மெலியார்மேல் செல்லு மிடத்து." ], "number": 250, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : (அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அருள் இல்லாதவள், தன்னைவிட எளிய மனிதரைத் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட பலசாலி தன்னைத் துன்புறுத்த வந்தால் அவருக்கு முன் தான் அஞ்சி நிற்பதாக எண்ணிப் பார்க்க.", "en": "When a man is about to rush upon those who are weaker than himself, let him remember how he has stood (trembling) before those who are stronger than himself." } }, { "chapter": "புலால் மறுத்தல்", "kural": [ "தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்", "எங்ஙனம் ஆளும் அருள்?" ], "number": 251, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன் உடம்பை வளர்ப்பதற்காக இன்னோர் உடம்பைத் தின்பவன் மனத்துள் இரக்கம் எப்படி இருக்கும்?", "en": "How can he be possessed of kindness, who to increase his own flesh, eats the flesh of other creatures." } }, { "chapter": "புலால் மறுத்தல்", "kural": [ "பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி", "ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு." ], "number": 252, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பொருளால் பயன் பெறுவது அதைப் பாதுகாக்காதவர்க்கு இல்லை; அது போல, இரக்கத்தால் பயன்பெறுவது இறைச்சி தின்பவர்க்கு இல்லை.", "en": "As those possess no property who do not take care of it, so those possess no kindness who feed on flesh." } }, { "chapter": "புலால் மறுத்தல்", "kural": [ "படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்", "உடல்சுவை உண்டார் மனம்." ], "number": 253, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கத்தியைத் தன் கையில் பிடித்திருப்பவரின் மனம், இரக்கத்தை எண்ணிப் பாராதது போலப் பிறிதொரு உடலைச் சுவைத்து உண்டவரின் மனமும் இரக்கத்தை எணணாது.", "en": "Like the (murderous) mind of him who carries a weapon (in his hand), the mind of him who feasts with pleasure on the body of another (creature), has no regard for goodness." } }, { "chapter": "புலால் மறுத்தல்", "kural": [ "ருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்", "பொருளல்லது அவ்வூன் தினல்." ], "number": 254, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இரக்கம் எது என்றால் கொலை செய்யாமல் இருப்பதே; இரக்கம் இல்லாதது எது என்றால் கொலை செய்வதே; பாவம் எது என்றால் இறைச்சியைத் தின்பதே", "en": "If it be asked what is kindness and what its opposite, the answer would be preservation and destruction of life; and therefore it is not right to feed on the flesh (obtained by taking away life)." } }, { "chapter": "புலால் மறுத்தல்", "kural": [ "உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண", "அண்ணாத்தல் செய்யாது அளறு." ], "number": 255, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இறைச்சியைத் தின்னாது இருத்தல் என்னும் அறத்தின்மேல் உயிர்நிலை இருக்கிறது. இதை மீறித் தின்னும் உயிர்களை நரகம் விழுங்கும்; வெளியே விடவும் செய்யாது.", "en": "Not to eat flesh contributes to the continuance of life; therefore if a man eat flesh, hell will not open its mouth (to let him escape out, after he has once fallen in)." } }, { "chapter": "புலால் மறுத்தல்", "kural": [ "தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்", "விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்." ], "number": 256, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தின்பதற்காகவே கொலை செய்பவர் இல்லை என்றால், இறைச்சியை விலைக்குத் தருபவரும் உலகில் எங்கும் இருக்கமாட்டார்.", "en": "If the world does not destroy life for the purpose of eating, then no one would sell flesh for the sake of money." } }, { "chapter": "புலால் மறுத்தல்", "kural": [ "உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்", "புண்ணது உணர்வார்ப் பெறின்." ], "number": 257, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இறைச்சி, இன்னோர் உடம்பின் புண்; அறிந்தவர் அதை உண்ணக்கூடாது.", "en": "If men should come to know that flesh is nothing but the unclean ulcer of a body, let them abstain from eating it." } }, { "chapter": "புலால் மறுத்தல்", "kural": [ "செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்", "உயிரின் தலைப்பிரிந்த ஊன்." ], "number": 258, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார்.", "en": "The wise, who have freed themselves from mental delusion, will not eat the flesh which has been severed from an animal." } }, { "chapter": "புலால் மறுத்தல்", "kural": [ "அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்", "உயிர்செகுத் துண்ணாமை நன்று." ], "number": 259, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : (மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய) அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது.", "en": "Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee etc., in a thousand sacrifices." } }, { "chapter": "புலால் மறுத்தல்", "kural": [ "கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி", "எல்லா உயிருந் தொழும்." ], "number": 260, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.", "en": "All creatures will join their hands together, and worship him who has never taken away life, nor eaten flesh." } }, { "chapter": "தவம்", "kural": [ "உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை", "அற்றே தவத்திற் குரு." ], "number": 261, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும்", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறரால் தனக்குச் செய்யப்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது, துன்பம் செய்தவர்க்கும் துன்பம் செய்யாதிருப்பது என்னும் இவ்வளவுதான், தவம் என்பதன் இலக்கணம்.", "en": "The nature of religious discipline consists, in the endurance (by the ascetic) of the suferings which it brings on himself, and in abstaining from giving pain to others." } }, { "chapter": "தவம்", "kural": [ "தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை", "அஃதிலார் மேற்கொள் வது." ], "number": 262, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : முற்பிறப்பில் தவ நோக்கம் பெற்றிருந்தவர்க்கே இப்பிறப்பில் தவம் செய்ய நேரும். அத்தகைய நோக்கம் இல்லாதவர், இப்போது தவத்தை மேற்கொள்வதும் வீண்தான்.", "en": "Austerities can only be borne, and their benefits enjoyed, by those who have practised them (in a former birth); it will be useless for those who have not done so, to attempt to practise them (now)." } }, { "chapter": "தவம்", "kural": [ "துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்", "மற்றை யவர்கள் தவம்." ], "number": 263, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ", "ta_salamon": "சாலமன் பாப்பையா : துறவு மேற்கொண்டவர்களுக்கு உதவ எண்ணி, மற்றவர்கள் தவம் செய்வதை மறந்து இருப்பார்கள் போலும்.", "en": "It is to provide food etc, for the ascetics who have abandoned (the desire of earthly possessions) that other persons have forgotten (to practise) austerity ?" } }, { "chapter": "தவம்", "kural": [ "ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்", "எண்ணின் தவத்தான் வரும்." ], "number": 264, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பகைவர்களை மாற்றவும், நண்பர்களைப் பெருக்கவும் எண்ணினால், தவத்தால் அதைச் செய்ய முடியும்.", "en": "If (the ascetic) desire the destruction of his enemies, or the aggrandizement of his friends, it will be effected by (the power of) his austerities." } }, { "chapter": "தவம்", "kural": [ "வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்", "ஈண்டு முயலப் படும்." ], "number": 265, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும்.", "en": "Religious dislipline is practised in this world, because it secures the attainment of whatever one may wish to enjoy (in the world to come)." } }, { "chapter": "தவம்", "kural": [ "தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்", "அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு." ], "number": 266, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தவத்தைச் செய்பவரே தமக்குரிய செயலைச் செய்தவர்; மற்றவர்களோ ஆசை வலைப்பட்டு வீணானவற்றைச் செய்தவர் ஆவர்.", "en": "Those discharge their duty who perform austerities; all others accomplish their own destruction, through the entanglement of the desire (of riches and sensual pleasure)." } }, { "chapter": "தவம்", "kural": [ "சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்", "சுடச்சுட நோற்கிற் பவர்க்கு." ], "number": 267, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நெருப்பு சுடச்சுடப் பொன்னின் ஒளி பெருகுவது போலத் துன்பம் வருத்த வருத்தத் தவம் செய்பவர்க்கு ஞானம் பெருகும்.", "en": "Just as gold is purified as heated in the fire, will those shine, who have endured the burning of pain (in frequent austerities)." } }, { "chapter": "தவம்", "kural": [ "தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய", "மன்னுயி ரெல்லாந் தொழும்." ], "number": 268, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன் உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும் இல்லாதவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழும்.", "en": "All other creatures will worship him who has attained the control of his own soul." } }, { "chapter": "தவம்", "kural": [ "கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்", "ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்." ], "number": 269, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும்", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும்.", "en": "Those who have attained the power which religious discipline confers, will be able also to pass the limit of Yama, (the God of death)." } }, { "chapter": "தவம்", "kural": [ "இலர்பல ராகிய காரணம் நோற்பார்", "சிலர்பலர் நோலா தவர்." ], "number": 270, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறர் செய்யும்தீமைகளைப் பொறுத்துக் கொள்வதும், அவர்க்குத் தீமை செய்யாது இருப்பதும் ஆகிய தவத்தைச் செய்பவர் சிலர்; செய்யாதவர் பலர்; ஏதுமற்ற ஏழைகள் பலராக இருப்பதற்கு இதுவே காரணம்.", "en": "Because there are few who practise austerity and many who do not, there are many destitute and few rich in this world." } }, { "chapter": "கூடா ஒழுக்கம்", "kural": [ "வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்", "ஐந்தும் அகத்தே நகும்." ], "number": 271, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : வஞ்ச மனத்தவனின் திருட்டு நடத்தையைக் கண்டு அவன் உடம்போடு கலந்து இருக்கும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும் தமக்குள் சிரிக்கும்.", "en": "The five elements (of his body) will laugh within him at the feigned conduct of the deceitful minded man." } }, { "chapter": "கூடா ஒழுக்கம்", "kural": [ "வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்", "தான்அறி குற்றப் படின்." ], "number": 272, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன் மீது தன் நெஞ்சமே குற்றம் சொல்லுமானால் மேலான நிலையினால் வரும் பலன்தான் என்ன?", "en": "What avails an appearance (of sanctity) high as heaven, if his mind sufers (the indulgence) of conscious sin." } }, { "chapter": "கூடா ஒழுக்கம்", "kural": [ "வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்", "புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று." ], "number": 273, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கெட்டவன் நல்லவன் போல நடிப்பது, பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மேய்ந்தது போலாகும்.", "en": "The assumed appearance of power, by a man who has no power (to restrain his senses and perform austerity), is like a cow feeding on grass covered with a tiger’s skin." } }, { "chapter": "கூடா ஒழுக்கம்", "kural": [ "தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து", "வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று." ], "number": 274, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மேலான நிலையில் இருந்தும் கீழான செயல்களைச் செய்வது, வேட்டை ஆடுபவர் புதருக்குப் பின் மறைந்து நின்று பறவைகளைப் பிடிப்பது போலாம்.", "en": "He who hides himself under the mask of an ascetic and commits sins, like a sportsman who conceals himself in the thicket to catch birds." } }, { "chapter": "கூடா ஒழுக்கம்", "kural": [ "பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று", "ஏதம் பலவுந் தரும்." ], "number": 275, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பற்றுக்களைத் துறந்தோம் என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம் என்ன செய்தோம் என்ன செய்தோம் என்று வருந்தும் படியான துன்பம் பலவும் தரும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எத்தகைய பற்றுகளும் இல்லாதவர் என்று வாயால் சொல்லிச் செயலால் தவறாக வாழ்பவரின் வாழ்க்கை, பிறகு ஏன் அப்படிச் செய்தோம் ஏன் அப்படிச் செய்தோம் என்று வருந்தும்படி பல துன்பங்களையும் தரும்.", "en": "The false conduct of those who say they have renounced all desire will one day bring them sorrows that will make them cry out, “Oh! what have we done, what have we done.”" } }, { "chapter": "கூடா ஒழுக்கம்", "kural": [ "நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து", "வாழ்வாரின் வன்கணார் இல்." ], "number": 276, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனத்துள் எதையும் வெறுக்காமல், வெளியே வெறுத்தவர் போல் ஏமாற்றி வாழும் மனிதரைக் காட்டிலும் கொடியவர், இவ்வுலகத்தில் இல்லை.", "en": "Amongst living men there are none so hard-hearted as those who without to saking (desire) in their heart, falsely take the appearance of those who have forsaken (it)." } }, { "chapter": "கூடா ஒழுக்கம்", "kural": [ "புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி", "முக்கிற் கரியார் உடைத்து." ], "number": 277, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : புறத்தில் குன்றிமணிப்போல் செம்மையானவராய் காணப்பட்டாராயினும் அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உணடு.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : குன்றிமணியின் மேனியைப் போல் வெளித் தோற்றத்தில் நல்லவராயும், குன்றிமணியின் மூக்கு கறுத்து இருப்பதுபோல் மனத்தால் கரியவராகவும் வாழ்வோர் இவ்வுலகில் இருக்கவே செய்கின்றனர்.", "en": "(The world) contains persons whose outside appears (as fair) as the (red) berry of the Abrus, but whose inside is as black as the nose of that berry." } }, { "chapter": "கூடா ஒழுக்கம்", "kural": [ "மனத்தது மாசாக மாண்டார் நீராடி", "மறைந்தொழுகு மாந்தர் பலர்." ], "number": 278, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனம் முழுக்க இருட்டு; வெளியே தூய நீரில் குளித்து வருபவர்போல் போலி வெளிச்சம் - இப்படி வாழும் மனிதர் பலர் இருக்கின்றனர்.", "en": "There are many men of masked conduct, who perform their ablutions, and (make a show) of greatness, while their mind is defiled (with guilt)." } }, { "chapter": "கூடா ஒழுக்கம்", "kural": [ "கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன", "வினைபடு பாலால் கொளல்." ], "number": 279, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : வடிவால் நேரானது என்றாலும் செயலால் அம்பு கொடியது. கழுத்தால் வளைந்தது ஆயினும் செயலால் யாழ் இனிது. அதனால் தோற்றத்தால் அன்றிச் செயலால் மனிதரை எடை போடுக.", "en": "As, in its use, the arrow is crooked, and the curved lute is straight, so by their deeds, (and not by their appearance) let (the uprightness or crookedness of) men be estimated." } }, { "chapter": "கூடா ஒழுக்கம்", "kural": [ "மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்", "பழித்தது ஒழித்து விடின்." ], "number": 280, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உயர்ந்தோர் வெறுத்தவற்றை மனத்தால் ஒதுக்கிவிட்ட பின் தலைமுடியைச் சிரைத்தல், நீள வளர்த்தல் என்பன பற்றி எண்ண வேண்டா.", "en": "There is no need of a shaven crown, nor of tangled hair, if a man abstain from those deeds which the wise have condemned." } }, { "chapter": "கள்ளாமை", "kural": [ "எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்", "கள்ளாமை காக்கதன் நெஞ்சு." ], "number": 281, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூடத் திருட நினைக்கக்கூடாது.", "en": "Let him, who desires not to be despised, keep his mind from (the desire of) defrauding another of the smallest thing." } }, { "chapter": "கள்ளாமை", "kural": [ "உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்", "கள்ளத்தால் கள்வேம் எனல்." ], "number": 282, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே, அதானால் பிறன் பொருளை அவன் அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அடுத்தவர் பொருளை அவருக்குத் தெரியாமல் திருடுவோம் என்று மனத்தால் நினைப்பதும் தீமையானது.", "en": "Even the thought (of sin) is sin; think not then of crafiily stealing the property of another." } }, { "chapter": "கள்ளாமை", "kural": [ "களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து", "ஆவது போலக் கெடும்." ], "number": 283, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.", "en": "The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase." } }, { "chapter": "கள்ளாமை", "kural": [ "களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்", "வீயா விழுமம் தரும்." ], "number": 284, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.", "en": "The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow." } }, { "chapter": "கள்ளாமை", "kural": [ "அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்", "பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்." ], "number": 285, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அருளைப் பெரிதாகக்கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக்கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அடுத்தவர் பொருளைத் திருட எண்ணி, அவர் தளரும் நேரத்தை எதிர்பார்த்து இருப்போர், அருள் மீது பற்று உள்ளவராய் வாழ முடியாது.", "en": "The study of kindness and the exercise of benevolence is not with those who watch for another’s forgetfulness, though desire of his property." } }, { "chapter": "கள்ளாமை", "kural": [ "அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்", "கன்றிய காத லவர்." ], "number": 286, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உயிர்களை நேசிக்கும் ஆசை இல்லாதவரே அடுத்தவர் பொருளைத் திருடும் பேராசை உடையவர் ஆவர்.", "en": "They cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud others." } }, { "chapter": "கள்ளாமை", "kural": [ "களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்", "ஆற்றல் புரிந்தார்கண்ட இல்." ], "number": 287, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உயிர்களை நேசிக்கும் ஆசை கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத் திருடும் இருண்ட அறிவு இராது.", "en": "That black-knowledge which is called fraud, is not in those who desire that greatness which is called rectitude." } }, { "chapter": "கள்ளாமை", "kural": [ "அளவற஧ந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்", "களவறிந்தார் நெஞ்சில் கரவு." ], "number": 288, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உயிர்களை நேசிக்கும் உள்ளத்துள் அறம் நிலைத்து இருப்பது போல, அடுத்தவர் பொருளைத் திருட எண்ணுபவன் உள்ளத்துள் வஞ்சகம் இருக்கும்.", "en": "Deceit dwells in the mind of those who are conversant with fraud, even as virtue in the minds of those who are conversant with rectitude." } }, { "chapter": "கள்ளாமை", "kural": [ "அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல", "மற்றைய தேற்றா தவர்." ], "number": 289, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : களவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அடுத்தவர் பொருளைத் திருடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாதவர் தகுதி அற்ற அந்தச் செயல்களாலேயே அழிந்து போவார்.", "en": "Those, who are acquainted with nothing but fraud, will perish in the very commission oftransgression." } }, { "chapter": "கள்ளாமை", "kural": [ "கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்", "தள்ளாது புத்தே ளுளகு." ], "number": 290, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : திருடுபவரை அவரது உயிரும் வெறுக்கும்; திருடாதவரையோ தேவர் உலகமும் வெறுக்காது.", "en": "Even their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraud." } }, { "chapter": "வாய்மை", "kural": [ "வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்", "தீமை இலாத சொலல்." ], "number": 291, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.", "en": "Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others)." } }, { "chapter": "வாய்மை", "kural": [ "பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த", "நன்மை பயக்கும் எனின்." ], "number": 292, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம்.", "en": "Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault." } }, { "chapter": "வாய்மை", "kural": [ "தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்", "தன்நெஞ்சே தன்னைச் சுடும்." ], "number": 293, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டா. சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும்.", "en": "Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt)." } }, { "chapter": "வாய்மை", "kural": [ "உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்", "உள்ளத்து ளெல்லாம் உளன்." ], "number": 294, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான்.", "en": "He who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men." } }, { "chapter": "வாய்மை", "kural": [ "மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு", "தானஞ்செய் வாரின் தலை." ], "number": 295, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான்.", "en": "He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities." } }, { "chapter": "வாய்மை", "kural": [ "பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை", "எல்லா அறமுந் தரும்." ], "number": 296, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும் தரும்.", "en": "There is no praise like the praise of never uttering a falsehood: without causing any sufering, it will lead to every virtue." } }, { "chapter": "வாய்மை", "kural": [ "பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற", "செய்யாமை செய்யாமை நன்று." ], "number": 297, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும்.", "en": "If a man has the power to abstain from falsehood, it will be well with him, even though he practise no other virtue." } }, { "chapter": "வாய்மை", "kural": [ "புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை", "வாய்மையால் காணப் படும்." ], "number": 298, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும்.", "en": "Purity of body is produced by water and purity of mind by truthfulness." } }, { "chapter": "வாய்மை", "kural": [ "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்", "பொய்யா விளக்கே விளக்கு." ], "number": 299, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : (புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்.", "en": "All lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wise." } }, { "chapter": "வாய்மை", "kural": [ "யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்", "வாய்மையின் நல்ல பிற." ], "number": 300, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சிறந்தவை என்று நான் கண்டு அறிந்த நூல்களுள் சொல்லப்பட்டவற்றுள், உண்மையைவிட, நல்லதாகச் சொல்லப்பட்ட அறம் வேறு ஒன்றும் இல்லை.", "en": "Amidst all that we have seen (described) as real(excellence), there is nothing sogood as truthfulness." } }, { "chapter": "வெகுளாமை", "kural": [ "செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்", "காக்கின்என் காவாக்கால் என்?" ], "number": 301, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே கோபம் கொள்ளாதவன்; பலிக்காத இடத்தில் கோபத்தைத் தடுத்து என்ன? தடுக்காமல் விட்டுத்தான் என்ன?", "en": "He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?" } }, { "chapter": "வெகுளாமை", "kural": [ "செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்", "இல்அதனின் தீய பிற." ], "number": 302, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை.", "en": "Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil." } }, { "chapter": "வெகுளாமை", "kural": [ "மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய", "பிறத்தல் அதனான் வரும்." ], "number": 303, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.", "en": "Forget anger towards every one, as fountains of evil spring from it." } }, { "chapter": "வெகுளாமை", "kural": [ "நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்", "பகையும் உளவோ பிற." ], "number": 304, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?", "en": "Is there a greater enemy than anger, which kills both laughter and joy ?" } }, { "chapter": "வெகுளாமை", "kural": [ "தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்", "தன்னையே கொல்லுஞ் சினம்." ], "number": 305, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபம் கொள்ளாமல் காக்கவும், காக்க முடியாது போனால் உடையவரையே சினம் கொல்லும்.", "en": "If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him." } }, { "chapter": "வெகுளாமை", "kural": [ "சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்", "ஏமப் புணையைச் சுடும்." ], "number": 306, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சேர்ந்தவரைக் கொல்லி எனப்படும் கோபம், சேர்ந்தவரை மட்டும் அன்று; சேர்ந்தவர்க்குத் துணையாக இருப்பவரையும் எரித்துவிடும்.", "en": "The fire of anger will burn up even the pleasant raft of friendship." } }, { "chapter": "வெகுளாமை", "kural": [ "சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு", "நிலத்தறைந்தான் கைபிழையா தற்று." ], "number": 307, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : (தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.", "en": "Destruction will come upon him who ragards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail." } }, { "chapter": "வெகுளாமை", "kural": [ "இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்", "புணரின் வெகுளாமை நன்று." ], "number": 308, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பல சுடரை உடைய பெருநெருப்பு நம் மீது பட்டது போன்ற தீமையை ஒருவன் நமக்குச் செய்தாலும், நம்மால் கோபம் கொள்ளாதிருக்க முடியுமானால் அது நம் உடலுக்கும் நல்லது.", "en": "Though one commit things against you as painful (to bear) as if a bundle of fire had been thrust upon you, it will be well, to refrain, if possible, from anger." } }, { "chapter": "வெகுளாமை", "kural": [ "உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்", "உள்ளான் வெகுளி எனின்." ], "number": 309, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான்.", "en": "If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of." } }, { "chapter": "வெகுளாமை", "kural": [ "இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்", "துறந்தார் துறந்தார் துணை." ], "number": 310, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பெருங்கோபம் கொண்டவர் இருந்தாலும் இறந்தவரைப் போன்றவரே; கோபத்தை விட்டுவிட்டவர். இறக்க வேண்டியவரே என்றாலும் சாவைத் தவிர்த்தவர் போன்றவரே.", "en": "Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death)." } }, { "chapter": "இன்னா செய்யாமை", "kural": [ "சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா", "செய்யாமை மாசற்றார் கோள்." ], "number": 311, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும்கூட அடுத்தவர்க்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.", "en": "It is the determination of the spotless not to cause sorrow to others, although they could (by so causing) obtain the wealth which confers greatness." } }, { "chapter": "இன்னா செய்யாமை", "kural": [ "கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா", "செய்யாமை மாசற்றார் கோள்." ], "number": 312, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.", "en": "It is the determination of the spotless not to do evil, even in return, to those who have cherished enmity and done them evil." } }, { "chapter": "இன்னா செய்யாமை", "kural": [ "செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்", "உய்யா விழுமந் தரும்." ], "number": 313, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத் தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை அது நமக்குத் தரும்.", "en": "In an ascetic inflict suffering even on those who hate him, when he has not done them any evil, it will afterwards give him irretrievable sorrow." } }, { "chapter": "இன்னா செய்யாமை", "kural": [ "இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண", "நன்னயஞ் செய்து விடல்." ], "number": 314, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.", "en": "The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides." } }, { "chapter": "இன்னா செய்யாமை", "kural": [ "அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்", "தந்நோய்போல் போற்றாக் கடை." ], "number": 315, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?", "en": "What benefit has he derived from his knowledge, who does not endeavour to keep of pain from another as much as from himself ?" } }, { "chapter": "இன்னா செய்யாமை", "kural": [ "இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை", "வேண்டும் பிறன்கண் செயல்." ], "number": 316, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தீமை எனத் தான் அறிந்தவற்றை அடுத்தவர்க்குச் செய்யாது இருக்க வேண்டும்.", "en": "Let not a man consent to do those things to another which, he knows, will cause sorrow." } }, { "chapter": "இன்னா செய்யாமை", "kural": [ "எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்", "மாணாசெய் யாமை தலை." ], "number": 317, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா திருப்பதே உயர்ந்தது.", "en": "It is the chief of all virtues not knowingly to do any person evil, even in the lowest degree, and at any time." } }, { "chapter": "இன்னா செய்யாமை", "kural": [ "தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ", "மன்னுயிர்க்கு இன்னா செயல்." ], "number": 318, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்?", "en": "Why does a man inflict upon other creatures those suferings, which he has found by experience are sufferings to himself ?" } }, { "chapter": "இன்னா செய்யாமை", "kural": [ "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா", "பிற்பகல் தாமே வரும்." ], "number": 319, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.", "en": "If a man inflict sorrow upon others in the morning, it will come upon him unsought in the very evening." } }, { "chapter": "இன்னா செய்யாமை", "kural": [ "நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்", "நோயின்மை வேண்டு பவர்." ], "number": 320, "section": "அறத்துப்பால்", "meaning": { "en": "Sorrow will come upon those who cause pain to others; therfore those, who desire to be free from sorrow, give no pain to others.", "ta_mu_va": "மு.வ : துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : செய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை செய்யமாட்டார்." } }, { "chapter": "கொல்லாமை", "kural": [ "அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்", "பிறவினை எல்லாந் தரும்." ], "number": 321, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்.", "en": "Never to destroy life is the sum of all virtuous conduct. The destruction of life leads to every evil." } }, { "chapter": "கொல்லாமை", "kural": [ "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்", "தொகுத்தவற்றுள் எல்லாந் தலை." ], "number": 322, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.", "en": "The chief of all (the virtues) which authors have summed up, is the partaking of food that has been shared with others, and the preservation of the mainfold life of other creatures." } }, { "chapter": "கொல்லாமை", "kural": [ "ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்", "பின்சாரப் பொய்யாமை நன்று." ], "number": 323, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை.", "en": "Not to destroy life is an incomparably (great) good next to it in goodness ranks freedom from falsehood." } }, { "chapter": "கொல்லாமை", "kural": [ "நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்", "கொல்லாமை சூழும் நெறி." ], "number": 324, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.", "en": "Good path is that which considers how it may avoid killing any creature." } }, { "chapter": "கொல்லாமை", "kural": [ "நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்", "கொல்லாமை சூழ்வான் தலை." ], "number": 325, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : வாழ்க்கை நிலைக்கு அஞ்சி மனத் துறவு கொண்டவருள் எல்லாம் கொலை செய்வதால் வரும் பாவத்திற்கு அஞ்சி வாழ்பவன் உயர்ந்தவன் ஆவான்.", "en": "Of all those who, fearing the permanence of earthly births, have abandoned desire, he is the chief who, fearing (the guilt of) murder, considers how he may avoid the destruction of life." } }, { "chapter": "கொல்லாமை", "kural": [ "கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்", "செல்லாது உயிருண்ணுங் கூற்று." ], "number": 326, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கொலை செய்யாமல் வாழ்வதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவனின் வாழ்நாளின்மேல் உயிர் உண்ணும் கூற்று குறுக்கிடாது.", "en": "Yama, the destroyer of life, will not attack the life of him, who acts under the determination of never destroying life." } }, { "chapter": "கொல்லாமை", "kural": [ "தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது", "இன்னுயிர் நீக்கும் வினை." ], "number": 327, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன் உயிரையே இழக்க நேர்ந்தாலும், பிற இன்னுயிரை அதன் உடம்பிலிருந்து போக்கும் செயலைச் செய்யவேண்டா.", "en": "Let no one do that which would destroy the life of another, although he should by so doing, lose his own life." } }, { "chapter": "கொல்லாமை", "kural": [ "நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்", "கொன்றாகும் ஆக்கங் கடை." ], "number": 328, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : வேள்விகளில் கொலை செய்வதால் நன்மை வரும், செல்வம் பெருகும் என்றாலும், பிற உயிரைக் கொல்வதால் வரும் செல்வத்தைச் சான்றோர் இழிவானதாகவே எண்ணுவர்.", "en": "The advantage which might flow from destroying life in sacrifice, is dishonourable to the wise (who renounced the world), even although it should be said to be productive of great good." } }, { "chapter": "கொல்லாமை", "kural": [ "கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்", "புன்மை தெரிவா ரகத்து." ], "number": 329, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்கள், அத்தொழிலின் தீமையை அறியாதவர் என்றாலும், அறிந்த பெரியோர் மனத்துள் அவர்கள் கீழான செயல் செய்பவராய் எண்ணப்படுவார்.", "en": "Men who destroy life are base men, in the estimation of those who know the nature of meanness." } }, { "chapter": "கொல்லாமை", "kural": [ "உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்", "செல்லாத்தீ வாழ்க்கை யவர்." ], "number": 330, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நோய் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறப்பில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தோர் கூறுவர்.", "en": "(The wise) will say that men of diseased bodies, who live in degradation who separated the life from the body of animals (in a former birth)" } }, { "chapter": "நிலையாமை", "kural": [ "நில்லாத வற்றை நிலையின என்றுணரும்", "புல்லறி வாண்மை கடை." ], "number": 331, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது.", "en": "That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise)." } }, { "chapter": "நிலையாமை", "kural": [ "கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம்", "போக்கும் அதுவிளிந் தற்று." ], "number": 332, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நாடக அரங்கிற்கு கூட்டம் வருவது போல் சிறுகச் சிறுக செல்வம் சேரும். நாடகம் முடிந்ததும கூட்டம் கலைவது போல் மொத்தமாய்ப் போய்விடும்.", "en": "The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is like the breaking up of that assembly." } }, { "chapter": "நிலையாமை", "kural": [ "அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்", "அற்குப ஆங்கே செயல்." ], "number": 333, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நிலையாத இயல்பினை உடையது செல்வம்; அது கிடைத்தால் நிலையான அறங்களைச் செய்க.", "en": "Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable." } }, { "chapter": "நிலையாமை", "kural": [ "நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும்", "வாளது உணர்வார்ப் பெறின்." ], "number": 334, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால் நாள் என்பது ஒரு கால அளவுகோல்காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நாள் என நமக்குத் தோன்றும் காலம், நம் உயிரைப் பிளந்து செல்லும் வாளே; அறிஞர்க்குத்தான் இது விளங்கும்.", "en": "Time, which shows itself (to the ignorant) as if it were something (real) is in the estimation of the wise (only) a saw which cuts down life." } }, { "chapter": "நிலையாமை", "kural": [ "நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை", "மேற்சென்று செய்யப் படும்" ], "number": 335, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நாவை அடைத்து விக்கல் வருவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.", "en": "Let virtuous deeds be done quickly, before the biccup comes making the tongue silent." } }, { "chapter": "நிலையாமை", "kural": [ "நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்", "பெருமை உடைத்துஇவ் வுலகு." ], "number": 336, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.", "en": "This world possesses the greatness that one who yesterday was is not today." } }, { "chapter": "நிலையாமை", "kural": [ "ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப", "கோடியும் அல்ல பல." ], "number": 337, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை.ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உயிரும் உடம்பும் இணைந்திருந்தும் உ‌டம்பின் நிலையற்ற தன்மையை ஒரு கணப்பொழுதும் அறிய இயலாதவர் கோடிக்கும் மேலான நினைவுகளை எண்ணி நிற்பர்.", "en": "Innumerable are the thoughts which occupy the mind of (the unwise), who know not that they shall live another moment." } }, { "chapter": "நிலையாமை", "kural": [ "குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே", "உடம்பொடு உயிரிடை நட்பு." ], "number": 338, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.", "en": "The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves empty." } }, { "chapter": "நிலையாமை", "kural": [ "உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி", "விழிப்பது போலும் பிறப்பு." ], "number": 339, "section": "அறத்துப்பால்", "meaning": { "en": "Death is like sleep; birth is like awaking from it.", "ta_mu_va": "மு.வ : இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு." } }, { "chapter": "நிலையாமை", "kural": [ "புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்", "துச்சில் இருந்த உயிர்க்கு." ], "number": 340, "section": "அறத்துப்பால்", "meaning": { "en": "It seems as if the soul, which takes a temporary shelter in a body, had not attained a home.", "ta_mu_va": "மு.வ : (நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!" } }, { "chapter": "துறவு", "kural": [ "யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்", "அதனின் அதனின் இலன்." ], "number": 341, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.", "en": "Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain." } }, { "chapter": "துறவு", "kural": [ "வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின்", "ஈண்டுஇயற் பால பல." ], "number": 342, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல; இன்பங்களை விரும்பினால் துறவு கொள்க.", "en": "After a man has renounced (all things), there will still be many things in this world (which he may enjoy); if he should desire them, let him, while it is time abandon. (the world)." } }, { "chapter": "துறவு", "kural": [ "அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்", "வேண்டிய வெல்லாம் ஒருங்கு." ], "number": 343, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஆசைகளைப் பிறப்பிக்கும் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; அவற்றை அடக்குவதற்குத் தனக்குரிய அனைத்தையும் விட்டு விட வேண்டு்ம்.", "en": "Let the five senses be destroyed; and at the same time, let everything be abandoned that (the ascetic) has (formerly) desired." } }, { "chapter": "துறவு", "kural": [ "இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை", "மயலாகும் மற்றும் பெயர்த்து." ], "number": 344, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தவம் செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உடைமை ஏதும் இல்லாதிருப்பது துறவின் இயல்பு. உடைமைகளை வைத்திருப்பதோ ஆசை என்னும் மயக்கத்தை மறுபடியும் தரும்.", "en": "To be altogether destitute is the proper condition of those who perform austerities; if they possess anything, it will change (their resolution) and bring them back to their confused state." } }, { "chapter": "துறவு", "kural": [ "மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்", "உற்றார்க்கு உடம்பும் மிகை." ], "number": 345, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பை‌யே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்கு?", "en": "What means the addition of other things those who are attempting to cut of (future) births, when even their body is too much (for them)." } }, { "chapter": "துறவு", "kural": [ "யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு", "உயர்ந்த உலகம் புகும்." ], "number": 346, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை மனத்துள் இருந்து அறுத்து விட்டவன், வானவர்க்கும் மேலான வீட்டுலகத்தை அடைவான்.", "en": "He who destroys the pride which says “I”, “mine” will enter a world which is dificult even to the Gods to attain." } }, { "chapter": "துறவு", "kural": [ "பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்", "பற்றி விடாஅ தவர் க்கு." ], "number": 347, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா.", "en": "Sorrows will never let go their hold of those who give not up their hold of desire." } }, { "chapter": "துறவு", "kural": [ "தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி", "வலைப்பட்டார் மற்றை யவர்." ], "number": 348, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : முற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஆசைகளை முழுவதுமாக விட்டு விட்டவரே நல்வாழ்விற்கு முயன்றவர். விடாதவரோ மயங்கி, பிறவி வலைக்குள் அகப்பட்டவரே.", "en": "Those who have entirely renounced (all things and all desire) have obtained (absorption into God); all others wander in confusion, entangled in the net of (many) births." } }, { "chapter": "துறவு", "kural": [ "பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று", "நிலையாமை காணப் படும்." ], "number": 349, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும்.", "en": "At the moment in which desire has been abandoned, (other) births will be cut of; when that has not been done, instability will be seen." } }, { "chapter": "துறவு", "kural": [ "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்", "பற்றுக பற்று விடற்கு." ], "number": 350, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே.", "en": "Desire the desire of Him who is without desire; in order to renounce desire, desire that desire." } }, { "chapter": "மெய்யுணர்தல்", "kural": [ "பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்", "மருளானாம் மாணாப் பிறப்பு." ], "number": 351, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும்.", "en": "Inglorious births are produced by the confusion (of mind) which considers those things to be real which are not real." } }, { "chapter": "மெய்யுணர்தல்", "kural": [ "இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி", "மாசறு காட்சி யவர்க்கு." ], "number": 352, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்.", "en": "A clear, undimmed vision of things will deliver its possessors from the darkness of future births, and confer the felicity (of heaven)." } }, { "chapter": "மெய்யுணர்தல்", "kural": [ "ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்", "வானம் நணிய துடைத்து." ], "number": 353, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சந்தேகத்திலிருந்து விலகி மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்தவருக்கு, அவர் வாழும் பூமியை விட, விரும்பும் வான உலகம் மிக அருகில் இருப்பதாகும்.", "en": "Heaven is nearer than earth to those men of purified minds who are freed from from doubt." } }, { "chapter": "மெய்யுணர்தல்", "kural": [ "ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே", "மெய்யுணர்வு இல்லா தவர்க்கு." ], "number": 354, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனம் அடங்கக் கற்றவர் என்றாலும், உண்மையை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஒரு பயனும் இல்லை.", "en": "Even those who have all the knowledge which can be attained by the five senses, will derive no benefit from it, if they are without a knowledge of the true nature of things." } }, { "chapter": "மெய்யுணர்தல்", "kural": [ "எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்", "மெய்ப்பொருள் காண்பது அறிவு." ], "number": 355, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத்தோற்றத்தை மட்டும் கண்டுமங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வு.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எந்தப் பொருளானாலும், அது எப்படிக் காட்சி தந்தாலும், அப்பொருளின் வெளித்தோற்றத்தைக் காணாமல், உள்ளடக்கமாகிய உண்மைப் பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.", "en": "(True) knowledge is the perception concerning every thing of whatever kind, that that thing is the true thing." } }, { "chapter": "மெய்யுணர்தல்", "kural": [ "கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்", "மற்றீண்டு வாரா நெறி." ], "number": 356, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.", "en": "They, who in this birth have learned to know the True Being, enter the road which returns not into this world." } }, { "chapter": "மெய்யுணர்தல்", "kural": [ "ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்", "பேர்த்துள்ள வேண்டா பிறப்பு." ], "number": 357, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பெரியவர்களிடம் கேட்டவற்றை மனத்துள் முழுமையாகக் கொண்டு, இடைவிடாமல் மெய்ப்பொருளை உணர்பவருக்குத் ‌திரும்பவும் ஒரு பிறவி இருக்கும் என்று எண்ண வேண்டா.", "en": "Let it not be thought that there is another birth for him whose mind having thoroughly considered (all it has been taught) has known the True Being." } }, { "chapter": "மெய்யுணர்தல்", "kural": [ "பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்", "செம்பொருள் காண்பது அறிவு." ], "number": 358, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறவி என்னும் அறியாமையிலிருந்து விலகப் பிறவாமை என்னும் செவ்விய பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.", "en": "True knowledge consists in the removal of ignorance; which is (the cause of) births, and the perception of the True Being who is (the bestower of) heaven." } }, { "chapter": "மெய்யுணர்தல்", "kural": [ "சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்", "சார்தரா சார்தரு நோய்." ], "number": 359, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்க்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எல்லாப் பொருள்களுக்கும் இடமாகிய மெய்ப்பொருளை உணர்ந்து பற்றின்றி வாழ்ந்தால், பற்ற வரும் துன்பங்கள் ஒழுக்க உணர்வை அழி்த்துப் பற்ற மாட்டா.", "en": "He who so lives as to know Him who is the support of all things and abandon all desire, will be freed from the evils which would otherwise cleave to him and destroy (his efforts after absorption." } }, { "chapter": "மெய்யுணர்தல்", "kural": [ "காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்", "நாமம் கெடக்கெடும் நோய்." ], "number": 360, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : விருப்பு, வெறுப்பு, மயக்கம் என்னும் இம்மூன்றன் பெயருங்கூட உள்ளத்திற்குள் இல்லாது போனால், அவற்றால் வரும் துன்பங்களும் இல்லாமல் போகும்.", "en": "If the very names of these three things, desire, anger, and confusion of mind, be destroyed, then will also perish evils (which flow from them)." } }, { "chapter": "அவா அறுத்தல்", "kural": [ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்", "தவாஅப் பிறப்பீனும் வித்து." ], "number": 361, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.", "en": "(The wise) say that the seed, which produces unceasing births, at all times, to all creatures, is desire." } }, { "chapter": "அவா அறுத்தல்", "kural": [ "வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது", "வேண்டாமை வேண்ட வரும்." ], "number": 362, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.", "en": "If anything be desired, freedom from births should be desired; that (freedom from births) will be attained by desiring to be without desire." } }, { "chapter": "அவா அறுத்தல்", "kural": [ "வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை", "ஆண்டும் அஃதொப்பது இல்." ], "number": 363, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரான ஒன்று இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எந்தப் பொருளையும் விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் வேறு ஒன்று இல்லை; வான் உலகத்திலும் இதற்கு ஒப்பானது இல்லை.", "en": "There is in this world no excellence equal to freedom from desire; and even in that world, there is nothing like it." } }, { "chapter": "அவா அறுத்தல்", "kural": [ "தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது", "வாஅய்மை வேண்ட வரும்." ], "number": 364, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்‌.", "en": "Purity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the love of truth." } }, { "chapter": "அவா அறுத்தல்", "kural": [ "அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்", "அற்றாக அற்றது இலர்." ], "number": 365, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஆசை இல்லாதவரே எதுவும் இல்லாதவர்; மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார்.", "en": "They are said to be free (from future birth) who are freed from desire; all others (who, whatever else they may be free from, are not freed from desire) are not thus free." } }, { "chapter": "அவா அறுத்தல்", "kural": [ "அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை", "வஞ்சிப்ப தோரும் அவா." ], "number": 366, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே. அதனால் ஆசை உண்டாகி விடாமல் அஞ்சி வாழ்வதே அறம்.", "en": "It is the chief duty of (an ascetic) to watch against desire with (jealous) fear; for it has power to deceive (and destroy) him." } }, { "chapter": "அவா அறுத்தல்", "kural": [ "அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை", "தான்வேண்டு மாற்றான் வரும்." ], "number": 367, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஆசையை முழுவதுமாக அறுத்து ஒழித்து விட்டால், தான் விரும்பும் வண்ணமே அழியாமல் வாழ்வதற்கான செயல் உண்டாகும்.", "en": "If a man thoroughly cut of all desire, the deeds, which confer immortality, will come to him, in the path in which he seeks them." } }, { "chapter": "அவா அறுத்தல்", "kural": [ "அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்", "தவாஅது மேன்மேல் வரும்." ], "number": 368, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.", "en": "There is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly come, more and more." } }, { "chapter": "அவா அறுத்தல்", "kural": [ "இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்", "துன்பத்துள் துன்பங் கெடின்." ], "number": 369, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.", "en": "Even while in this body, joy will never depart (from the mind,in which) desire, that sorrow of sorrows, has been destroyed." } }, { "chapter": "அவா அறுத்தல்", "kural": [ "ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே", "பேரா இயற்கை தரும்." ], "number": 370, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆ‌சையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும்.", "en": "The removal of desire, whose nature it is never to be satisfied, will immediately confer a nature that can never be changed." } }, { "chapter": "ஊழ்", "kural": [ "ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்", "போகூழால் தோன்றும் மடி." ], "number": 371, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும்.", "en": "Perseverance comes from a prosperous fate, and idleness from an adverse fate." } }, { "chapter": "ஊழ்", "kural": [ "பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்", "ஆகலூழ் உற்றக் கடை." ], "number": 372, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தாழ்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு மனிதனைப் பேதை ஆக்கும்; உயர்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு விரிவு பெறும்.", "en": "An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledge." } }, { "chapter": "ஊழ்", "kural": [ "நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்", "உண்மை யறிவே மிகும்." ], "number": 373, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பேதை ஆக்குவதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், நுட்பமான கருத்துக்களை உடைய பல நூல்களைக் கற்றாலும் இயல்பான அறிவே இருக்கும். ( அறிவு விரிவ பெறாது)", "en": "Although (a man) may study the most polished treatises, the knowledge which fate has decreed to him will still prevail." } }, { "chapter": "ஊழ்", "kural": [ "இருவேறு உலகத்து இயற்கை திருவேறு", "தெள்ளிய ராதலும் வேறு." ], "number": 374, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதியும், அறிஞரை ஆக்கும் விதியும் வேறு வேறாம்.", "en": "There are (through fate) two different natures in the world, hence the difFerence (observable in men) in (their acquisition of) wealth, and in their attainment of knowledge." } }, { "chapter": "ஊழ்", "kural": [ "நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்", "நல்லவாம் செல்வம் செயற்கு." ], "number": 375, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நாம் பணத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சியில் காலம், இடம், தொழில் ஆகியவை சரியாக இருந்தாலும், தீய விதி குறுக்கிட்டால் நட்டம் உண்டாகும். அவை சரியாக இல்லை என்றாலும் நல்ல விதி வருமானால் லாபம் உண்டாகும்.", "en": "In the acquisition of property, every thing favourable becomes unfavourable, and (on the other hand) everything unfavourable becomes favourable, (through the power of fate)." } }, { "chapter": "ஊழ்", "kural": [ "பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்", "சொரியினும் போகா தம." ], "number": 376, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்கள் வருந்திக்காப்பாற்றினாலும் நில்லாமல் போகும் தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகா.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம் நம்மிடம் தங்காது. வேண்டா என்று நாமே வெளியே தள்ளினாலும் விதி இருந்தால் செல்வம் நம்மை விட்டுப் போகமாட்டாது.", "en": "Whatever is not conferred by fate cannot be preserved although it be guarded with most painful care; and that, which fate has made his, cannot be lost, although one should even take it and throw it away." } }, { "chapter": "ஊழ்", "kural": [ "வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி", "தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது." ], "number": 377, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஊழ் ஏற்ப்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.", "en": "Even those who gather together millions will only enjoy them, as it has been determined by the disposer (of all things)." } }, { "chapter": "ஊழ்", "kural": [ "துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால", "ஊட்டா கழியு மெனின்." ], "number": 378, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.", "en": "The destitute will renounce desire (and become ascetics), if (fate) do not make them sufer the hindrances to which they are liable, and they pass away." } }, { "chapter": "ஊழ்", "kural": [ "நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்", "அல்லற் படுவ தெவன்?" ], "number": 379, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நல்வினை விளையும் போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றனர், தீவினை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நல்லது நடக்கும்போது மட்டும் நல்லது என அனுபவிப்பவர், தீயது நடக்கும்போது மட்டும் துன்பப்படுவது ஏன்?", "en": "How is it that those, who are pleased with good fortune, trouble themselves when evil comes, (since both are equally the decree of fate) ?" } }, { "chapter": "ஊழ்", "kural": [ "ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று", "சூழினுந் தான்முந் துறும்." ], "number": 380, "section": "அறத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?", "en": "What is stronger than fate ? If we think of an expedient (to avert it), it will itself be with us before (the thought)." } }, { "chapter": "இறைமாட்சி", "kural": [ "படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்", "உடையான் அரசருள் ஏறு." ], "number": 381, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடையதே அரசுகளில் சிங்கம் போன்றது.", "en": "He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings." } }, { "chapter": "இறைமாட்சி", "kural": [ "அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்", "எஞ்சாமை வேந்தர்க் கியல்பு." ], "number": 382, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அநீதிக்கும் பகைவர்க்கும் பயப்படாதிருப்பது, வேண்டுவோர்க்கு வேண்டிய கொடுப்பது, வரும் முன்காக்கும் அறிவு, ஆபத்து வந்த பின் தளராத ஊக்கம் - இந்நான்கிலும் குறையாமல் இருப்பது ஆளுவோரின் இயல்பாக இருக்க வேண்டும்.", "en": "Never to fail in these four things, fearlessness, liberality, wisdom, and energy, is the kingly character." } }, { "chapter": "இறைமாட்சி", "kural": [ "தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்", "நீங்கா நிலனான் பவர்க்கு." ], "number": 383, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது.", "en": "These three things, viz., vigilance, learning, and bravery, should never be wanting in the ruler of a country." } }, { "chapter": "இறைமாட்சி", "kural": [ "அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா", "மானம் உடைய தரசு." ], "number": 384, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தனக்குச் சொல்லப்பட்ட அறத்திலிருந்து விலகாமல், அறமற்ற கொடுமைகள் தன் நாட்டில் நடைபெறாமல் விலக்கி, வீரத்தில் தவறாமல் நின்று மானத்தைப் பெரிதாக மதிப்பதே அரசு.", "en": "He is a king who, with manly modesty, swerves not from virtue, and refrains from vice." } }, { "chapter": "இறைமாட்சி", "kural": [ "இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த", "வகுத்தலும் வல்ல தரசு." ], "number": 385, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பொருள் வரும் வழிகளை உருவாக்குவது வந்த பொருள்களைத் தொகுப்பது, தொகுத்தவற்றைப் பிறர்கவராமல் காப்பது, காத்தவற்றை அறம், பொருள், இன்பம் நோக்கிச் செலவிடுவது என்னும் இவற்றில் திறமை மிக்கதே அரசு.", "en": "He is a king who is able to acquire (wealth), to lay it up, to guard, and to distribute it." } }, { "chapter": "இறைமாட்சி", "kural": [ "காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்", "மீக்கூறும் மன்னன் நிலம்" ], "number": 386, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நீதி வேண்டி வருபவர் காண்பதற்கு எளியனாய், எவர் இடத்தும் கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால், ஆளுவோனின் ஆட்சிப் பரப்பு விரிவடையும். (அவர் கட்சி வெற்றி பெறும்தொகுதிகள் கூடும்)", "en": "The whole world will exalt the country of the king who is easy of access, and who is free from harsh language." } }, { "chapter": "இறைமாட்சி", "kural": [ "இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்", "தான்கண் டனைத்திவ் வுலகு." ], "number": 387, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இனியச் சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இனிய சொல்லுடன் பிறர்க்குக் கொடுக்கவும், அவர்களைக் காக்கவும் ஆற்றல் பெற்ற அரசிற்கு அது எண்ணிய எல்லாவற்றையும் இவ்வுலகம் தரும்.", "en": "The world will praise and submit itself to the mind of the king who is able to give with afability, and to protect all who come to him." } }, { "chapter": "இறைமாட்சி", "kural": [ "முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு", "இறையென்று வைக்கப் படும்." ], "number": 388, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும்.", "en": "That king, will be esteemed a God among men, who performs his own duties, and protects (his subjects)." } }, { "chapter": "இறைமாட்சி", "kural": [ "செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்", "கவிகைக்கீழ்த் தங்கும் உலகு." ], "number": 389, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : குறைகூறுவோறின் சொற்களைக் செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இடித்துக் கூறும் தகுதி மிக்க பெரியோரின் சொற்கள் தனக்கு ஏற்பன அல்ல என்றாலும் வருவது எண்ணிப் பொறுத்துக் கொள்ளும் பண்புள்ள அரசின் குடைக் கீழ், இந்த உலகமே தங்கும்.", "en": "The whole world will dwell under the umbrella of the king, who can bear words that embitter the ear." } }, { "chapter": "இறைமாட்சி", "kural": [ "கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்", "உடையானாம் வேந்தர்க் கொளி." ], "number": 390, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடுப்பது, எதிர் கட்சியினரிடமும் இனிதாய்ப்போசுவது, நீதி விளங்கும் ஆட்சி செய்வது, மக்களைப் பாதுகாப்பது இவை நான்கையும் உடையதே அரசுகளுக்கு விளக்குப் போன்றது.", "en": "He is the light of kings who has there four things, beneficence, benevolence, rectitude, and care for his people." } }, { "chapter": "கல்வி", "kural": [ "கற்க கசடறக் கற்பவை கற்றபின்", "நிற்க அதற்குத் தக." ], "number": 391, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க.", "en": "Let a man learn thoroughly whatever he may learn, and let his conduct be worthy of his learning." } }, { "chapter": "கல்வி", "kural": [ "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும்", "கண்ணென்ப வாழும் உயிர்க்கு." ], "number": 392, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : வாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று அறிந்தவர் கூறுவர்.", "en": "Letters and numbers are the two eyes of man." } }, { "chapter": "கல்வி", "kural": [ "கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு", "புண்ணுடையர் கல்லா தவர்." ], "number": 393, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர்.", "en": "The learned are said to have eyes, but the unlearned have (merely) two sores in their face." } }, { "chapter": "கல்வி", "kural": [ "உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்", "அனைத்தே புலவர் தொழில்." ], "number": 394, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மற்றவர்கள் கூடி வரும்போது, மனம் மகிழ அவர்களுடன் கலந்து பேசி, இனி இவரை எப்போது, எவ்வாறு சந்திக்கப் போகிறோம் என்று அவர்கள் எண்ணுமாறு பிரிவது கற்று அறிந்தவரின் செயல்.", "en": "It is the part of the learned to give joy to those whom they meet, and on leaving, to make them think (Oh! when shall we meet them again.)" } }, { "chapter": "கல்வி", "kural": [ "உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்", "கடையரே கல்லா தவர்." ], "number": 395, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : செல்வர் முன்னே ஏழைகள் நிற்பது போல் ஆசிரியர் முன்னே, விரும்பிப் பணிந்து கற்றவரே உயர்ந்தவர்; அப்படி நின்று கற்க வெட்கப்பட்டுக் கல்லாதவர், இழிந்தவரே.", "en": "The unlearned are inferior to the learned, before whom they stand begging, as the destitute before the wealthy." } }, { "chapter": "கல்வி", "kural": [ "தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்", "கற்றனைத் தூறும் அறிவு." ], "number": 396, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும்.", "en": "Water will flow from a well in the sand in proportion to the depth to which it is dug, and knowledge will flow from a man in proportion to his learning." } }, { "chapter": "கல்வி", "kural": [ "யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்", "சாந்துணையுங் கல்லாத வாறு." ], "number": 397, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா ஊரும் சொந்த ஊராம். இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன்?", "en": "How is it that any one can remain without learning, even to his death, when (to the learned man) every country is his own (country), and every town his own (town) ?" } }, { "chapter": "கல்வி", "kural": [ "ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு", "எழுமையும் ஏமாப் புடைத்து." ], "number": 398, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் - எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்.", "en": "The learning, which a man has acquired in one birth, will yield him pleasure during seven births." } }, { "chapter": "கல்வி", "kural": [ "தாமின் புறுவது உலகின் புறக் கண்டு", "காமுறுவர் கற்றறிந் தார்." ], "number": 399, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தம் மனத்தை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு கற்று அறிந்தவர்கள் மேலும் கற்கவே விரும்புவார்கள்.", "en": "The learned will long (for more learning), when they see that while it gives pleasure to themselves, the world also derives pleasure from it." } }, { "chapter": "கல்வி", "kural": [ "கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு", "மாடல்ல மற்றை யவை." ], "number": 400, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல.", "en": "Learning is the true imperishable riches; all other things are not riches." } }, { "chapter": "கல்லாமை", "kural": [ "அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய", "நூலின்றிக் கோட்டி கொளல்." ], "number": 401, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டிஆடினார் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற நூல்களைக் கல்லாதவர், கற்றவர் அவையில் பேசுவது, கட்டம் போடாமல் தாயம் உருட்டுவது போலாம்.", "en": "To speak in an assembly (of the learned) without fullness of knowledge, is like playing at chess (on a board) without squares" } }, { "chapter": "கல்லாமை", "kural": [ "கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்", "இல்லாதாள் பெண்காமுற் றற்று." ], "number": 402, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : (கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : படிக்காதவன் கற்றவர் அவையில் பேச ஆசைப்டுபடுவது, இரு முலையும் வளர்ச்சி பெறாத பெண் ஒருத்தி உடலுறவு கொள்ள ஆசைப்பட்டது போலாம்.", "en": "The desire of the unlearned to speak (in an assembly), is like a woman without breasts desiring (the enjoyment of ) woman-hood." } }, { "chapter": "கல்லாமை", "kural": [ "கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்", "சொல்லா திருக்கப் பெறின்." ], "number": 403, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே.", "en": "The unlearned also are very excellent men, if they know how to keep silence before the learned." } }, { "chapter": "கல்லாமை", "kural": [ "கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்", "கொள்ளார் அறிவுடை யார்." ], "number": 404, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.", "en": "Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge." } }, { "chapter": "கல்லாமை", "kural": [ "கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து", "சொல்லாடச் சோர்வு படும்." ], "number": 405, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசும் மதிப்பு ( கற்றவரிடம்) கூடிபேசும் போது அப்பேசினால் கெடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.", "en": "The self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (of the learned)" } }, { "chapter": "கல்லாமை", "kural": [ "உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்", "களரனையர் கல்லா தவர்." ], "number": 406, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.", "en": "The unlearned are like worthless barren land: all that can be said of them is, that they exist." } }, { "chapter": "கல்லாமை", "kural": [ "நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்", "மண்மாண் புனைபாவை யற்று." ], "number": 407, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நுண்ணிய, சிறந்த பல நூல்களிலும் நுழைந்த அறிவு இல்லாதவனின் உடல் வளர்ச்சியும் அழகும், மண்ணால் சிறப்பாகச் செய்யப்பட்ட பொம்மையின் அழகு போன்றதாகும்.", "en": "The beauty and goodness of one who is destitute of knowledge by the study of great and exquisite works, is like (the beauty and goodness) of a painted earthen doll." } }, { "chapter": "கல்லாமை", "kural": [ "நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே", "கல்லார்கண் பட் ட திரு." ], "number": 408, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள \nவறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது.", "en": "Wealth, gained by the unlearned, will give more sorrow than the poverty which may come upon the learned." } }, { "chapter": "கல்லாமை", "kural": [ "மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்", "கற்றார் அனைத்திலர் பாடு." ], "number": 409, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.", "en": "The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they may have been born in a low caste." } }, { "chapter": "கல்லாமை", "kural": [ "விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்", "கற்றாரோடு ஏனை யவர்." ], "number": 410, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : விலங்கை நோக்க மக்கள் எவ்வளவு வேறுபட்டவரோ, சிறந்த நூலைக் கற்றவரை நோக்கக் கல்லாதவர் அவ்வளவு வேறுபட்டவர்.", "en": "As beasts by the side of men, so are other men by the side of those who are learned in celebrated works." } }, { "chapter": "கேள்வி", "kural": [ "செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்", "செல்வத்து ளெல்லாந் தலை." ], "number": 411, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : செவியால் கேட்டுப் பெறும் செல்வமே சிறந்த செல்வம்; இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.", "en": "Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chi ef of all wealth." } }, { "chapter": "கேள்வி", "kural": [ "செவுக்குண வில்லாத போழ்து சிறிது", "வயிற்றுக்கும் ஈயப் படும்." ], "number": 412, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : செவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.", "en": "When there is no food for the ear, give a little also to the stomach." } }, { "chapter": "கேள்வி", "kural": [ "செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்", "ஆன்றாரோ டொப்பர் நிலத்து." ], "number": 413, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : செவி உணவாகிய கேள்வியைப் பெற்றிருப்பவர் இப்பூமியில் வாழ்பவரே என்றாலும், வேள்வித் தீயில் கொடுக்கப்படும் நெய் முதலிய உணவைப் பெறும் விண்ணுலகத் தேவர்க்குச் சமமாவர்.", "en": "Those who in this world enjoy instruction which is the food of the ear, are equal to the Gods, who enjoy the food of the sacrifices." } }, { "chapter": "கேள்வி", "kural": [ "கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு", "ஒற்கத்தின் ஊற்றாந் துணை." ], "number": 414, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கல்லாதவனே என்றாலும் கற்றவர் கூறும் சிறந்த செய்திகளைக் கேட்க வேண்டும்; அப்படிக் கேட்பது அவனுக்கு நெருக்கடி வரும்போது பிடிப்பதற்கு ஏற்ற துணையாக உதவும்.", "en": "Although a man be without learning, let him listen (to the teaching of the learned); that will be to him a staf in adversity." } }, { "chapter": "கேள்வி", "kural": [ "இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே", "ஒழுக்க முடையார்வாய்ச் சொல்." ], "number": 415, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது போல் துன்ப நேரத்தில் உதவும்.", "en": "The words of the good are like a staf in a slippery place." } }, { "chapter": "கேள்வி", "kural": [ "எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்", "ஆன்ற பெருமை தரும்." ], "number": 416, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சிறிது நேரமே என்றாலும் உறுதி தரம் நற்பொருளைக் கேட்க வேண்டும். அதுகூட நிறைந்த பெருமையைத் தரும்.", "en": "Let a man listen, never so little, to good (instruction), even that will bring him great dignity." } }, { "chapter": "கேள்வி", "kural": [ "பிழைத் துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்", "தீண்டிய கேள்வி யவர்." ], "number": 417, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நுண்ணிதாக ஆராய்ந்து அறிந்து, கேள்வி ஞானத்தால் நிறைந்தவர், பிழைபட உணர்ந்தபோதும், அறிவற்ற சொற்களைச் சொல்லமாட்டார்.", "en": "Not even when they have imperfectly understood (a matter), will those men speak foolishly, who have profoundly studied and diligently listened (to instruction)." } }, { "chapter": "கேள்வி", "kural": [ "கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்", "தோட்கப் படாத செவி." ], "number": 418, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.", "en": "The ear which has not been bored by instruction, although it hears, is deaf." } }, { "chapter": "கேள்வி", "kural": [ "நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய", "வாயின ராதல் அரிது." ], "number": 419, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.", "en": "It is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not received choice instruction." } }, { "chapter": "கேள்வி", "kural": [ "செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்", "அவியினும் வாழினும் என்?" ], "number": 420, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : செவியால் நுகரப்படும் சுவைகளை உணராமல், வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே அறியும் மனிதர் இருந்தால் என்ன? இறந்தால்தான் என்ன?", "en": "What does it matter whether those men live or die, who can judge of tastes by the mouth, and not by the ear ?" } }, { "chapter": "அறிவுடைமை", "kural": [ "அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்", "உள்ளழிக்க லாகா அரண்." ], "number": 421, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை.", "en": "Wisdom is a weapon to ward off destruction; it is an inner fortress which enemies cannot destroy." } }, { "chapter": "அறிவுடைமை", "kural": [ "சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ", "நன்றின்பால் உய்ப்ப தறிவு." ], "number": 422, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனம் சென்ற வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் நடத்துவது அறிவு.", "en": "Not to permit the mind to go where it lists, to keep it from evil, and to employ it in good, this is wisdom." } }, { "chapter": "அறிவுடைமை", "kural": [ "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்", "மெய்ப்பொருள் காண்ப தறிவு." ], "number": 423, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.", "en": "To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom." } }, { "chapter": "அறிவுடைமை", "kural": [ "எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்", "நுண்பொருள் காண்ப தறிவு." ], "number": 424, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி, தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமானப் பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அரிய கருத்துகளைக்கூடக் கேட்பவர்க்கு விளங்கும்படி எளியனவாகவும், அவர் மனங் கொள்ளும்படியும் சொல்லும்; பிறர் சொல்லும் கருத்து நுண்ணியது என்றாலும் அதை எளிதாக விளங்கிக் கொள்ளும்; இது அறிவு.", "en": "To speak so as that the meaning may easily enter the mind of the hearer, and to discern the subtlest thought which may lie hidden in the words of others, this is wisdom." } }, { "chapter": "அறிவுடைமை", "kural": [ "உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்", "கூம்பலும் இல்ல தறிவு." ], "number": 425, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கி கொள்வது சிறந்த அறிவு, முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாத அறிவு.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உலகை நட்பாக்கிக் கொள்வது அறிவு; நட்பின் ஆரம்பத்தில் பெரிதாக மகிழ்வதும், நாளடைவில் வாடுவதும் இல்லாது. எப்போதும் ஒரே சீராக இருப்பது அறிவு.", "en": "To secure the friendship of the great is true wisdom; it is (also) wisdom to keep (that friendship unchanged, and) not opening and closing (like the lotus flower)." } }, { "chapter": "அறிவுடைமை", "kural": [ "எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு", "அவ்வ துறைவ தறிவு." ], "number": 426, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.", "en": "his is to wisely live and well. To live as the world lives, is wisdom." } }, { "chapter": "அறிவுடைமை", "kural": [ "அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்", "அஃதறி கல்லா தவர்." ], "number": 427, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.", "en": "The wise are those who know beforehand what will happen; those who do not know this are the unwise." } }, { "chapter": "அறிவுடைமை", "kural": [ "அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது", "அஞ்சல் அறிவார் தொழில்." ], "number": 428, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்படுவது அறிவாளிகளின் செயல்.", "en": "Not to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be feared." } }, { "chapter": "அறிவுடைமை", "kural": [ "எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை", "அதிர வருவதோர் நோய்." ], "number": 429, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து காக்கும் அறிவை உடையோர்க்கு, அவர் நடுங்க வரும் துன்பமே இல்லை.", "en": "No terrifying calamity will happen to the wise, who (foresee) and guard against coming evils." } }, { "chapter": "அறிவுடைமை", "kural": [ "அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்", "என்னுடைய ரேனும் இலர்." ], "number": 430, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஏதும் இல்லாதவரானாலும் அறிவுடையார் எல்லாவற்றையும் உடையவரே; எதைப் பெற்றவராய் இருந்தாலும், அறிவு இல்லாதவர் ஏதும் இல்லாதவரே.", "en": "Those who possess wisdom, possess every thing; those who have not wisdom, whatever they may possess, have nothing." } }, { "chapter": "குற்றங்கடிதல்", "kural": [ "செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்", "பெருக்கம் பெருமித நீர்த்து." ], "number": 431, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தான் என்னும் அகங்காரம், கோபம், பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம் மேன்மையானது.", "en": "Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust." } }, { "chapter": "குற்றங்கடிதல்", "kural": [ "இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா", "உவகையும் ஏதம் இறைக்கு." ], "number": 432, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நியாயமாகத் தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடாதிருப்பது, பெரியோர் என்று தெரிந்தும் தம் பதவிப் பெருமை கருதி வணங்காதிருப்பது, தீயவற்றில் மகிழ்வது - இவை ஆட்சியாளர்க்குக் குற்றங்களாம்.", "en": "Avarice, undignified pride, and low pleasures are faults in a king." } }, { "chapter": "குற்றங்கடிதல்", "kural": [ "தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்", "கொள்வர் பழிநாணு வார்." ], "number": 433, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பழிபாவங்களுக்கு அஞ்சி, நானும் பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே குற்றம் வந்தாலும், அதனைப் பனை என மிகப்பெரிய அளவாகக் கொள்வர்.", "en": "Those who fear guilt, if they commit a fault small as a millet seed, will consider it to be as large as a palm yra tree." } }, { "chapter": "குற்றங்கடிதல்", "kural": [ "குற்றமே காக்க பொருளாகக் குற்றமே", "அற்றந் த்ரூஉம் பகை." ], "number": 434, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அரசிற்கு அழிவுதரும் பகை மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காப்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும்.", "en": "Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy." } }, { "chapter": "குற்றங்கடிதல்", "kural": [ "வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்", "வைத்தூறு போலக் கெடும்." ], "number": 435, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தனக்கு ஒரு குற்றம் வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத அரசு, நெருப்பிற்கு முன் வைக்கப்பட்ட வைக்கோல் போல அழிந்துபோகும்.", "en": "The prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fire." } }, { "chapter": "குற்றங்கடிதல்", "kural": [ "தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்", "என்குற்ற மாகும் இறைக்கு?" ], "number": 436, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை \nஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : முதலில் தன் குற்றத்தைக் கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க அரசிற்குக் குற்றம் ஏதும் வராது!", "en": "What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others." } }, { "chapter": "குற்றங்கடிதல்", "kural": [ "செயற்பால செய்யா திவறியான் செல்வம்", "உயற்பால தன்றிக் கெடும்." ], "number": 437, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : செல்வத்தால் தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைப் பொருள்மீது கொண்ட பற்றினால் செய்யாமல், கஞ்சனாய் வாழும் ஆட்சியாளனின் செல்வம் வீணே கெட்டு, அழிந்து போகும்.", "en": "The wealth of the avaricious man, who does not expend it for the purposes for which he ought to expend it will waste away and not continue." } }, { "chapter": "குற்றங்கடிதல்", "kural": [ "பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்", "எண்ணப் படுவதொன் றன்று." ], "number": 438, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : செலவிட வேண்டியவற்றிற்குச் செலவிடாமல் செல்வத்தின் மீது ஆசை கொண்ட கஞ்ச மனத்தைப் பெற்றிருப்பது குற்றங்கள் எல்லாவற்றிலும் கொடிய குற்றமாகும்.", "en": "Griping avarice is not to be reckoned as one among other faults; (it stands alone - greater than all)." } }, { "chapter": "குற்றங்கடிதல்", "kural": [ "வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க", "நன்றி பயவா வினை." ], "number": 439, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே.", "en": "Let no (one) praise himself, at any time; let him not desire to do useless things." } }, { "chapter": "குற்றங்கடிதல்", "kural": [ "காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்", "ஏதில ஏதிலார் நூல்." ], "number": 440, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தன் விருப்பம் பிறர்க்கு தெரியாதபடி விருப்பமான வற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தான் செய்ய எண்ணியவற்றைப் பிறர் முன்னதாகவே அறிந்துவிடாதபடி காத்தால், அவனை அழிக்க எண்ணும் பகைவர் எண்ணம் பழுதுபடும்.", "en": "If (a king) enjoys, privately the things which he desires, the designs of his enemies will be useless." } }, { "chapter": "பெரியாரைத் துணைக்கோடல்", "kural": [ "அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை", "திறனறிந்து தேர்ந்து கொளல்." ], "number": 441, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை, அதன் அருமையையும், அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுக.", "en": "Let (a king) ponder well its value, and secure the friendship of men of virtue and of mature knowledge." } }, { "chapter": "பெரியாரைத் துணைக்கோடல்", "kural": [ "உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்", "பெற்றியார்ப் பேணிக் கொளல்." ], "number": 442, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : வந்த துன்பங்களைப் போக்கும் வழி அறிந்து போக்கி, அவை திரும்பவும் வராமல் முன்னதாகவே காக்கும் ஆற்றல் மிக்கவரை, அவருக்கு வேண்டியதைச் செய்து, துணையாகப் பெறுக.", "en": "Let (a king) procure and kindly care for men who can overcome dificulties when they occur, and guard against them before they happen." } }, { "chapter": "பெரியாரைத் துணைக்கோடல்", "kural": [ "அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்", "பேணித் தமராக் கொளல்." ], "number": 443, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : துறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகளுள் எல்லாம் அரிது.", "en": "To cherish great men and make them his own, is the most difficult of all difficult things." } }, { "chapter": "பெரியாரைத் துணைக்கோடல்", "kural": [ "தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்", "வன்மையு ளெல்லாந் தலை." ], "number": 444, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மை ஆனதாகும்.", "en": "So to act as to make those men, his own, who are greater than himself is of all powers the highest." } }, { "chapter": "பெரியாரைத் துணைக்கோடல்", "kural": [ "சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்", "சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்." ], "number": 445, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரைக் ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன்னைச் சூழ இருப்பவரைக் கண்ணாகக் கொண்டு அரசு இயங்குவதால் அப்படியே சூழும் துறைப் பெரியவரையே துணையாகக் கொள்க.", "en": "As a king must use his ministers as eyes (in managing his kingdom), let him well examine their character and qualifications before he engages them." } }, { "chapter": "பெரியாரைத் துணைக்கோடல்", "kural": [ "தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்", "செற்றார் செயக்கிடந்த தில்." ], "number": 446, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது.", "en": "There will be nothing left for enemies to do, against him who has the power of acting (so as to secure) the fellowship of worthy men." } }, { "chapter": "பெரியாரைத் துணைக்கோடல்", "kural": [ "இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே", "கெடுக்குந் தகைமை யவர்." ], "number": 447, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தீயன கண்டபோது நெருங்கிச் சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொண்டு செயல்படுபவரைக் கெடுக்கக் கூடியவர் எவர்?", "en": "Who are great enough to destroy him who has servants that have power to rebuke him ?" } }, { "chapter": "பெரியாரைத் துணைக்கோடல்", "kural": [ "இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்", "கெடுப்பா ரிலானுங் கெடும்." ], "number": 448, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும்.", "en": "The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there be no one to destroy him." } }, { "chapter": "பெரியாரைத் துணைக்கோடல்", "kural": [ "முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்", "சார்பிலார்க் கில்லை நிலை." ], "number": 449, "section": "பொருட்பால்", "meaning": { "en": "There can be no gain to those who have no capital; and in like manner there can be no permanence to those who are without the support of adherents.", "ta_mu_va": "மு.வ : முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : முதல் இல்லாதவர்களுக்கு அதனால் வரும் லாபம் இல்லை, அதுபோலவே தன்னைத் தாங்கும் துறைப் பெரியவர் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை." } }, { "chapter": "பெரியாரைத் துணைக்கோடல்", "kural": [ "பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே", "நல்லார் தொடர்கை விடல்." ], "number": 450, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : துறைப் பெரியவர் நட்பைப் பெறாமல் அதை விட்டுவிடுவது, தனியனாய் நின்று, பலரோடும் பகை கொள்வதைக் காட்டிலும், பல பத்து மடங்கு தீமை ஆகும்.", "en": "It is tenfold more injurious to abandon the friendship of the good, than to incur the hatred of the many." } }, { "chapter": "சிற்றினம் சேராமை", "kural": [ "சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்", "சுற்றமாச் சூழ்ந்து விடும்." ], "number": 451, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர்.", "en": "(True) greatness fears the society of the base; it is only the low - minded who will regard them as friends." } }, { "chapter": "சிற்றினம் சேராமை", "kural": [ "நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு", "இனத்தியல்ப தாகும் அறிவு." ], "number": 452, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.", "en": "As water changes (its nature), from the nature of the soil (in which it flows), so will the character of men resemble that of their associates." } }, { "chapter": "சிற்றினம் சேராமை", "kural": [ "மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்", "இன்னான் எனப்படுஞ் சொல்." ], "number": 453, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மக்களுக்கு இயல்பான அறிவு அவர்தம் மனததால் உண்டாகும்; ஆனால், ஒருவன் இப்படிப்பட்டவன் என்று பெரியோர் சொல்லும் சொல் அவன் சார்ந்த இனம் காரணமாகவே உண்டாகும்.", "en": "The power of knowing is from the mind; (but) his character is from that of his associates." } }, { "chapter": "சிற்றினம் சேராமை", "kural": [ "மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு", "இனத்துள தாகும் அறிவு." ], "number": 454, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்.", "en": "Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companions." } }, { "chapter": "சிற்றினம் சேராமை", "kural": [ "மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்", "இனந்தூய்மை தூவா வரும்." ], "number": 455, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்ப்படும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனத்தூய்மை, செய்யும் செயல் சிறப்பு ஆகிய இரண்டும், ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையை ஆதாரமாகக் கொண்டே பிறக்கும்.", "en": "Chaste company is the staf on which come, these two things, viz, purity of mind and purity of conduct." } }, { "chapter": "சிற்றினம் சேராமை", "kural": [ "மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு", "இல்லைநன் றாகா வினை." ], "number": 456, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனத்தால் நல்லவர்க்கு அவர் விட்டுச் செல்வனவே நல்லவை; இனத்தால் நல்லவர்க்கோ நல்லதாக அமையாத செயல் என்று எதுவுமே இல்லை.", "en": "To the pure-minded there will be a good posterity. By those whose associates are pure, no deeds will be done that are not good." } }, { "chapter": "சிற்றினம் சேராமை", "kural": [ "மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்", "எல்லாப் புகழும் தரும்." ], "number": 457, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.", "en": "Goodness of mind will give wealth, and good society will bring with it all praise, to men." } }, { "chapter": "சிற்றினம் சேராமை", "kural": [ "மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு", "இனநலம் ஏமாப் புடைத்து." ], "number": 458, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், நல்ல குணம் உடையவர்க்கு இனநலம் பாதுகாப்பாக இருக்கும்.", "en": "Although they may have great (natural) goodness of mind, yet good society will tend to strengthen it." } }, { "chapter": "சிற்றினம் சேராமை", "kural": [ "மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்", "இனநலத்தின் ஏமாப் புடைத்து." ], "number": 459, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும்.", "en": "Future bliss is (the result) of goodness of mind; and even this acquires strength from the society of the good." } }, { "chapter": "சிற்றினம் சேராமை", "kural": [ "நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்", "அல்லற் படுப்பதூஉம் இல்." ], "number": 460, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.", "en": "There is no greater help than the company of the good; there is no greater source of sorrow than the company of the wicked." } }, { "chapter": "தெரிந்து செயல்வகை", "kural": [ "அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்", "ஊதியமும் சூழ்ந்து செயல்." ], "number": 461, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : (ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க.", "en": "Let a man reflect on what will be lost, what will be acquired and (from these) what will be his ultimate gain, and (then, let him) act." } }, { "chapter": "தெரிந்து செயல்வகை", "kural": [ "தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு", "அரும்பொருள் யாதொன்றும் இல்" ], "number": 462, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும் \nஎண்ணிப்பார்த்துச் செய்கின்றவர்க்கு அறிய பொருள் ஒன்றும் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தாம் தேர்ந்துகொண்ட நிருவாகச் சுற்றத்தோடு ஒரு செயலை ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்பவர்க்குச் செய்ய முடியாத செயல் என்று எதுவும் இல்லை.", "en": "There is nothing too dificult to (be attained by) those who, before they act, reflect well themselves, and thoroughly consider (the matter) with chosen friends." } }, { "chapter": "தெரிந்து செயல்வகை", "kural": [ "ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை", "ஊக்கார் அறிவுடை யார்." ], "number": 463, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : வரும் லாபத்தை எண்ணி, இருக்கும் முதலையும் இழந்துவிடுவதற்கு ஏற்ற செயலை அறிவுள்ளவர் செய்யமாட்டார்.", "en": "Wise men will not, in the hopes of profit, undertake works that will consume their principal." } }, { "chapter": "தெரிந்து செயல்வகை", "kural": [ "தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்", "ஏதப்பாடு அஞ்சு பவர்." ], "number": 464, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இழிவு தருவதாகியக் குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் (இன்ன ஊதியம் பயிக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தனக்கு அவமானம் என்னும் குற்றம் வரும் என்று பயப்படுபவர், நம்பிக்கை இல்லாத செயலைச் செய்யத் தொடங்கமாட்டார்.", "en": "Those who fear reproach will not commence anything which has not been (thoroughly considered) and made clear to them." } }, { "chapter": "தெரிந்து செயல்வகை", "kural": [ "வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்", "பாத்திப் படுப்பதோ ராறு." ], "number": 465, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத்தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : முறையாகத் திட்டமிடாது ஒரு செயலைத் தொடங்குவது, வளரும் நிலத்திலே எதிர் அணியினரை நிலைபெறச் செய்யும் வழியாகும்.", "en": "One way to promote the prosperity of an enemy, is (for a king) to set out (to war) without having thoroughly weighed his ability (to cope with its chances)." } }, { "chapter": "தெரிந்து செயல்வகை", "kural": [ "செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க", "செய்யாமை யானுங் கெடும்." ], "number": 466, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும்.", "en": "He will perish who does not what is not fit to do; and he also will perish who does not do what it is fit to do." } }, { "chapter": "தெரிந்து செயல்வகை", "kural": [ "எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்", "எண்ணுவம் என்பது இழுக்கு." ], "number": 467, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : (செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக் கொள்வோம் என்பது குற்றம்.", "en": "Consider, and then undertake a matter; after having undertaken it, to say “We will consider,” is folly." } }, { "chapter": "தெரிந்து செயல்வகை", "kural": [ "ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று", "போற்றினும் பொத்துப் படும்." ], "number": 468, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒரு செயலை முடிக்கும் வழி அறியாது தொடங்கினால், பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல் கெட்டுப் போகும்.", "en": "The work, which is not done by suitable methods, will fail though many stand to uphold it." } }, { "chapter": "தெரிந்து செயல்வகை", "kural": [ "நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்", "பண்பறிந் தாற்றாக் கடை." ], "number": 469, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அவர் அவர் குணநலன்களை அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும்.", "en": "There are failures even in acting well, when it is done without knowing the various dispositions of men" } }, { "chapter": "தெரிந்து செயல்வகை", "kural": [ "எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு", "கொள்ளாத கொள்ளாது உலகு." ], "number": 470, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன் தகுதிக்குப் பொருந்தாத வழிமுறைகளைச் செய்தால் மக்கள் அதை இகழ்வர்; அதனால் மக்கள் இகழாத வழிமுறைகளை எண்ணிச் செய்ய வேண்டும்.", "en": "Let a man reflect, and do things which bring no reproach; the world will not approve, with him, of things which do not become of his position to adopt." } }, { "chapter": "வலியறிதல்", "kural": [ "வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்", "துணைவலியும் தூக்கிச் செயல்." ], "number": 471, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க.", "en": "Let (one) weigh well the strength of the deed (he purposes to do), his own strength, the strength of his enemy, and the strength of the allies (of both), and then let him act." } }, { "chapter": "வலியறிதல்", "kural": [ "ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்", "செல்வார்க்குச் செல்லாதது இல்." ], "number": 472, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தம்மால் செய்யமுடியும் செயலையும் அதைச் செய்வதற்கு ஏற்ற ஆற்றலையும் அறிந்து அதையே மனத்துள் சிந்தித்துச் செயலாற்றுவார்க்கு, முடியாதது ஒன்றும் இல்லை.", "en": "There is nothing which may not be accomplished by those who, before they attack (an enemy), make themselves acquainted with their own ability, and with whatever else is (needful) to be known, and apply themselves wholly to their object." } }, { "chapter": "வலியறிதல்", "kural": [ "உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி", "இடைக்கண் முரிந்தார் பலர்." ], "number": 473, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தம் ஆற்றலை அறியாமல், ஒரு வேகத்தில் செயலைச் செய்யத் தொடங்கித் தொடரமுடியாமல் இடையே விட்டுக் கெட்டவர் பலர்.", "en": "There are many who, ignorant of their (want of) power (to meet it), have haughtily set out to war, and broken down in the midst of it." } }, { "chapter": "வலியறிதல்", "kural": [ "அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை", "வியந்தான் விரைந்து கெடும்." ], "number": 474, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறருடன் மனங்கலந்து பழகாமல், தன் சொந்த பலத்தையும் அறியாமல் தன்னைப் பெரிதாக எண்ணியவன் விரைவில் அழிவான்.", "en": "He will quickly perish who, ignorant of his own resources flatters himself of his greatness, and does not live in peace with his neighbours." } }, { "chapter": "வலியறிதல்", "kural": [ "பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்", "சால மிகுத்துப் பெயின்." ], "number": 475, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.", "en": "The axle tree of a bandy, loaded only with peacocks’ feathers will break, if it be greatly overloaded." } }, { "chapter": "வலியறிதல்", "kural": [ "நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்", "உயிர்க்கிறுதி ஆகி விடும்." ], "number": 476, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒரு மரக்கிளையின் நுனியில் ஏறிவிட்டவர், அந்த அளவையும் கடந்து மேலும் ஏற முயன்றால், அம் முயற்சியே அவர் உயிருக்கு முடிவாகிவிடும்.", "en": "There will be an end to the life of him who, having climbed out to the end of a branch, ventures to go further." } }, { "chapter": "வலியறிதல்", "kural": [ "ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்", "போற்றி வழங்கு நெறி." ], "number": 477, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும்.", "en": "Let a man know the measure of his ability (to give), and let him give accordingly; such giving is the way to preserve his property." } }, { "chapter": "வலியறிதல்", "kural": [ "ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை", "போகாறு அகலாக் கடை." ], "number": 478, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) \nவிரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.", "en": "Even though the income (of a king) be small, it will not cause his (ruin), if his outgoings be not larger than his income." } }, { "chapter": "வலியறிதல்", "kural": [ "அளவற஧ந்து வாழாதான் வாழ்க்கை உளபோல", "இல்லாகித் தோன்றாக் கெடும்." ], "number": 479, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன் சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, இருப்பது போல் காட்சி தந்து இல்லாமல் அழிந்துவிடும்.", "en": "The prosperity of him who lives without knowing the measure (of his property), will perish, even while it seems to continue." } }, { "chapter": "வலியறிதல்", "kural": [ "உளவரை தூக்காத ஒப்புர வாண்மை", "வளவரை வல்லைக் கெடும்." ], "number": 480, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பொருளாதார நிலையை எண்ணாது பிறர்க்குச் செய்யும் உபகாரத்தால் ஒருவனது செல்வத்தின் அளவு, விரைவில் கெடும்.", "en": "The measure of his wealth will quickly perish, whose liberality weighs not the measure of his property." } }, { "chapter": "காலம் அறிதல்", "kural": [ "பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்", "வேந்தர்க்கு வேண்டும் பொழுது." ], "number": 481, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன்னைவிடப் பலமுள்ள கோட்டானைக் காக்கை பகலில் வென்றுவிடும்; ஆகவே பகைவரை வெல்ல எண்ணுபவர்க்கு அதற்கு ஏற்ற காலம் அவசியம்.", "en": "A crow will overcome an owl in the day time; so the king who would conquer his enemy must have (a suitable) time." } }, { "chapter": "காலம் அறிதல்", "kural": [ "பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்", "தீராமை ஆர்க்குங் கயிறு." ], "number": 482, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும்.", "en": "Acting at the right season, is a cord that will immoveably bind success (to a king)." } }, { "chapter": "காலம் அறிதல்", "kural": [ "அருவினை யென்ப உளவோ கருவியான்", "காலம் அற஧ந்து செயின்." ], "number": 483, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : (செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?", "en": "Is there anything dificult for him to do, who acts, with (the right) instruments at the right time ?" } }, { "chapter": "காலம் அறிதல்", "kural": [ "ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்", "கருதி இடத்தாற் செயின்." ], "number": 484, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : (செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.", "en": "Though (a man) should meditate (the conquest of) the world, he may accomplish it if he acts in the right time, and at the right place." } }, { "chapter": "காலம் அறிதல்", "kural": [ "காலம் கருதி இருப்பர் கலங்காது", "ஞாலம் கருது பவர்." ], "number": 485, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.", "en": "They who thoughtfully consider and wait for the (right) time (for action), may successfully meditate (the conquest of) the world." } }, { "chapter": "காலம் அறிதல்", "kural": [ "ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்", "தாக்கற்குப் பேருந் தகைத்து." ], "number": 486, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சண்டையிடும் ஆட்டுக்கடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும்.", "en": "The self-restraint of the energetic (while waiting for a suitable opportunity), is like the drawing back of a fighting-ram in order to butt." } }, { "chapter": "காலம் அறிதல்", "kural": [ "பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து", "உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்." ], "number": 487, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறிவுடையவர் ( பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார், (வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தம்பகைவர் அடாது செய்தால் அவர் அறியத் தம் பகைமையை அறிவுடையவர், விரைந்து வெளியே காட்டமாட்டார், ஆனால், ஏற்ற காலம் நோக்கிச் சினத்தை மனத்திற்குள் வைத்திருப்பர்.", "en": "The wise will not immediately and hastily shew out their anger; they will watch their time, and restrain it within." } }, { "chapter": "காலம் அறிதல்", "kural": [ "செறுநரைக் காணின் சுமக்க இறுவரை", "காணின் கிழக்காம் தலை." ], "number": 488, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி அழிந்தபோவர்.", "en": "If one meets his enemy, let him show him all respect, until the time for his destruction is come; when that is come, his head will be easily brought low." } }, { "chapter": "காலம் அறிதல்", "kural": [ "எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே", "செய்தற் கரிய செயல்." ], "number": 489, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அடைவதற்கு அரியதை அடைவதற்கு ஏற்ற காலம் வந்து விட்டால் அப்பொழுதே தான் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து கொள்க.", "en": "If a rare opportunity occurs, while it lasts, let a man do that which is rarely to be accomplished (but for such an opportunity)." } }, { "chapter": "காலம் அறிதல்", "kural": [ "கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்", "குத்தொக்க சீர்த்த இடத்து." ], "number": 490, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒடுங்கி இருக்க வேண்டிய நேரத்தில் கொக்கைப் போல் ஒடுங்கிக் காத்து இரு. செயற்படும் நேரம் வந்தபோது கொக்கு தவறாமல் தன் இரையைக் குத்திப் பிடிப்பதுபோல் பிழையின்றிச் செய்து முடி.", "en": "At the time when one should use self-control, let him restrain himself like a heron; and, let him like it, strike, when there is a favourable opportunity." } }, { "chapter": "இடன் அறிதல்", "kural": [ "தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்", "இடங்கண்ட பின்அல் லது." ], "number": 491, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை இகழவும் கூடாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பகைவரை வளைத்து வெல்லும் இடத்தைக் காணும் முன் எந்தச் செயலையும் தொடங்க வேண்டா; பகைவரை அற்பர் என்று இகழவும் வேண்டா.", "en": "Let not (a king) despise (an enemy), nor undertake any thing (against him), until he has obtained (a suitable) place for besieging him." } }, { "chapter": "இடன் அறிதல்", "kural": [ "முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்", "ஆக்கம் பலவுந் தரும்." ], "number": 492, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும் கொடுக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பகை உணர்வுகள் நிறைந்தும், ஆற்றலில் மிகுந்தும் இருப்பவர்க்குப் பாதுகாப்பான இடத்துள் இருப்பது பல பயன்களையும் தரும்.", "en": "Even to those who are men of power and expedients, an attack in connection with a fortification will yield many advantages." } }, { "chapter": "இடன் அறிதல்", "kural": [ "ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து", "போற்றார்கண் போற்றிச் செயின்." ], "number": 493, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர்,", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பலம் இல்லாதவர் என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து, தம்மையும் காத்து, பகைவரோடு மோதுபவர், பலம் உள்ளவராய்ப் பகையை அழிப்பர்.", "en": "Even the powerless will become powerful and conquer, if they select a proper field (of action), and guard themselves, while they make war on their enemies." } }, { "chapter": "இடன் அறிதல்", "kural": [ "எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து", "துன்னியார் துன்னிச் செயின்." ], "number": 494, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஏற்ற இடத்தை அறிந்து அதைச் சூழ்ந்து செயல் செய்வார் என்றால், அவரை வெல்ல எண்ணிய பகைவர். அவ் எண்ணத்தில் தோல்வி அடைவர்.", "en": "If they who draw near (to fight) choose a suitable place to approach (their enemy), the latter, will have to relinquish the thought which they once entertained, of conquering them." } }, { "chapter": "இடன் அறிதல்", "kural": [ "நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்", "நீங்கின் அதனைப் பிற." ], "number": 495, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீரிலிருந்து விலகிவந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : முதலை நீரில் வெற்றி பெறும்; நீரைவிட்டு வெளியே வந்தால் அதனை மற்றவை வெல்லும்.", "en": "In deep water, a crocodile will conquer (all other animals); but if it leave the water, other animals will conquer it." } }, { "chapter": "இடன் அறிதல்", "kural": [ "கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்", "நாவாயும் ஓடா நிலத்து." ], "number": 496, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : வலிய சக்கரங்களை உடைய நெடிய தேர்கள் கடலில் ஒடமாட்டா; கடலில் ஓடும் கப்பல்கள் நிலத்தில் ஓடமாட்டா.", "en": "Wide chariots, with mighty wheels, will not run on the ocean; neither will ships that the traverse ocean, move on the earth." } }, { "chapter": "இடன் அறிதல்", "kural": [ "அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை", "எண்ணி இடத்தால் செயின்." ], "number": 497, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : (செய்யும் வழிவகைகமைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : செய்யும் செயலை இடைவிடாமல் எண்ணி, இடம் அறிந்து செயதால், பகைக்குப் பயப்படாத மனஉறுதி போதும்; வேறு துணை தேவை இல்லை.", "en": "You will need no other aid than fearlessness, if you thoroughly reflect (on what you are to do), and select (a suitable) place for your operations." } }, { "chapter": "இடன் அறிதல்", "kural": [ "சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்", "ஊக்கம் அழிந்து விடும்." ], "number": 498, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் ஓடி இருக்கும் இடந்தேடிப் போனால், போனவனின் பெருமை அழியும்.", "en": "The power of one who has a large army will perish, if he goes into ground where only a small army can act." } }, { "chapter": "இடன் அறிதல்", "kural": [ "சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்", "உறைநிலத்தோடு ஒட்டல் அரிது." ], "number": 499, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனிதர்கள் வலிமையான கோட்டையும், மிகுந்த பலமும் இல்லாதவர்தாம் என்றாலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தாக்குவது கடினம்.", "en": "It is a hazardous thing to attack men in their own country, although they may neither have power nor a good fortress." } }, { "chapter": "இடன் அறிதல்", "kural": [ "காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா", "வேலாள் முகத்த களிறு." ], "number": 500, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நில்த்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பாகனுக்கு அடங்காததும், தன்னை எதிர்த்துப் பிடித்த வீரனைத் தன் தந்தத்தால் தாக்கித் தூக்கியதுமான ஆண்யானை, கால் புதையும் சேற்றில் சிக்கிக் கொண்டால், நரிகூட அதைக் கொன்றுவிடும்.", "en": "A fox can kill a fearless, warrior-faced elephant, if it go into mud in which its legs sink down." } }, { "chapter": "தெரிந்து தெளிதல்", "kural": [ "அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்", "திறந்தெரிந்து தேறப் படும்." ], "number": 501, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறத்தைக் காக்க அரசைக் கவிழ்ப்போம், சம்பள உயர்வு தராத அரசைக் கவிழ்ப்போம், உனக்காகவே வாழும் பெண் இவள் என்பது போல் கூறி அறம், பணம், பெண் என்னும் மூன்று பொய்க் காரணங்களால் சோதிப்பது, அவனது உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது போல் நடிப்பது என இந்நான்கு சோதனைகளால் ஒருவனின் மன இயல்பை ஆராய்ந்து அவனைப் பதவிக்குத் தேர்வு செய்ய வேண்டும்.", "en": "Let (a minister) be chosen, after he has been tried by means of these four things, viz,-his virtue, (love of) money, (love of) sexual pleasure, and tear of (losing) life." } }, { "chapter": "தெரிந்து தெளிதல்", "kural": [ "குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்", "நாணுடையான் சுட்டே தெளிவு." ], "number": 502, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.", "en": "(The king’s) choice should (fall) on him, who is of good family, who is free from faults, and who has the modesty which fears the wounds (of sin)." } }, { "chapter": "தெரிந்து தெளிதல்", "kural": [ "அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்", "இன்மை அரிதே வெளிறு." ], "number": 503, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இல்லாமல் இராது.", "en": "When even men, who have studied the most dificult works, and who are free from faults, are (carefully) examined, it is a rare thing to find them without ignorance." } }, { "chapter": "தெரிந்து தெளிதல்", "kural": [ "குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்", "மிகைநாடி மிக்க கொளல்." ], "number": 504, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, \nமிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவனின் குணங்களை ஆராய்ந்து அவனிடம் இருக்கும் குற்றங்களையும் ஆராய்ந்து இரண்டிலும் எவை அதிகமாக இருக்கின்றன என்பதையும் ஆராய்ந்து குணங்களின் மிகுதியைக் கொண்டே அவனைப் பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.", "en": "Let (a king) consider (a man’s) good qualities, as well as his faults, and then judge (of his character) by that which prevails." } }, { "chapter": "தெரிந்து தெளிதல்", "kural": [ "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்", "கருமமே கட்டளைக் கல்." ], "number": 505, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : (மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைக் கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உயர்ந்த குணத்தையும் சிறுமைக் குணத்தையும் உரசிக்கண்டு அறிவதற்கு ஏற்றக் கட்டளைக்கல் அவரவர் செய்யும் செயல்களே.", "en": "A man’s deeds are the touchstone of his greatness and littleness." } }, { "chapter": "தெரிந்து தெளிதல்", "kural": [ "அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்", "பற்றிலர் நாணார் பழி." ], "number": 506, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உறவு பலம் இல்லாதவரைப் பதவிகளுக்குத் தெரிவு செய்வதைத் தவிர்க்கவும் ஏன் எனில், அவர்களுக்குப் பந்த பாசம் இல்லை. பழிக்கு வெட்கப்படவுமாட்டார்.", "en": "Let (a king) avoid choosing men who have no relations; such men have no attachment, and thereforehave no fear of crime." } }, { "chapter": "தெரிந்து தெளிதல்", "kural": [ "காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்", "பேதைமை எல்லாந் தரும்." ], "number": 507, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித்தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையும் கெடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறியவேண்டியவற்றை அறியாதவர்களை அவர்கள் மீதுள்ள அன்பு காரணமாகப் பதவியில் அமர்த்துவது அறியாமை பலவற்றையும் தரும்.", "en": "To choose ignorant men, through partiality, is the height of folly." } }, { "chapter": "தெரிந்து தெளிதல்", "kural": [ "தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை", "தீரா இடும்பை தரும்." ], "number": 508, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தினால் அச்செயல் நீங்காத துன்பத்தைத் தரும்.", "en": "Sorrow that will not leave even his posterity will come upon him chooses a stranger whose character he has not known." } }, { "chapter": "தெரிந்து தெளிதல்", "kural": [ "தே றற்க யாரையும் தேராது தேர்ந்தபின்", "தேறுக தேறும் பொருள்." ], "number": 509, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம் \nதெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா.", "en": "Let (a king) choose no one without previous consideration; after he has made his choice, let him unhesitatingly select for each such duties as are appropriate." } }, { "chapter": "தெரிந்து தெளிதல்", "kural": [ "தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்", "தீரா இடும்பை தரும்." ], "number": 510, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காதத் துன்பத்தைக் கொடுக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவனை ஆராயாமல் பதவியில் அமர்த்துவதும், அமர்த்தியபின் அவன்மீதே சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும்.", "en": "To make choice of one who has not been examined, and to entertain doubts respecting one who has been chosen, will produce irremediable sorrow." } }, { "chapter": "தெரிந்து வினையாடல்", "kural": [ "நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த", "தன்மையான் ஆளப் படும்." ], "number": 511, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒரு செயலை நம்மிடம் செய்யக் கொடுத்தால் அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது நன்மையோ அதையே செய்ய வேண்டும்.", "en": "He should be employed (by a king), whose nature leads him to choose the good, after having weighed both the evil and the good in any undertaking." } }, { "chapter": "தெரிந்து வினையாடல்", "kural": [ "வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை", "ஆராய்வான் செய்க வினை." ], "number": 512, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பொருள் வரும் வழியை விரிவாக்கி, வந்த பொருளால் மேலும் செல்வத்தை வளர்த்து, அப்போது அதனாலும் வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கக் கூடியவன் பணியாற்றுக.", "en": "Let him do (the king’s) work who can enlarge the sources (of revenue), increase wealth and considerately prevent the accidents (which would destroy it)." } }, { "chapter": "தெரிந்து வினையாடல்", "kural": [ "அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்", "நன்குடையான் கட்டே தெளிவு." ], "number": 513, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நிர்வாகத்தின்மேல் அன்பு, நிர்வாகத்திற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான செயல்களைச் செய்யும்போது உறுதி, பணியில் பொருள் வந்தால் அதன்மீது ஆசை இன்மை இந்த நான்கையும் உடையவனிடத்தே பதவி தருவதுதான் தெளிவு.", "en": "Let the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, a clear mind and freedom from covetousness." } }, { "chapter": "தெரிந்து வினையாடல்", "kural": [ "எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்", "வேறாகும் மாந்தர் பலர்." ], "number": 514, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும்(செயலை மேற்க்கொண்டு செய்யும் போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உண்டு.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எல்லா வகையிலும் ஆராய்ந்து உரிய பதவி வழங்கிய பின்னும், செயல் திறத்தால், எதிர்பார்த்த அளவு இல்லாத மாந்தர் பலராவர்.", "en": "Even when (a king) has tried them in every possible way, there are many men who change, from the nature of the works (in which they may be employed)." } }, { "chapter": "தெரிந்து வினையாடல்", "kural": [ "அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்", "சிறந்தானென்று ஏவற்பாற் றன்று." ], "number": 515, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : (செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி ஒருச் செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : செய்யும் வழிமுறைகளை அறிந்து தடை வந்தாலும் செய்யும் திறமை உடையவனிடம் அன்றி . இவன் நம்மவன் (கட்சி இனம்) என்று எண்ணி, ஒரு செயலை ஒப்படைக்கக்கூடாது.", "en": "(A king’s) work can only be accomplished by a man of wisdom and patient endurance; it is not of a nature to be given to one from mere personal attachment." } }, { "chapter": "தெரிந்து வினையாடல்", "kural": [ "செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு", "எய்த உணர்ந்து செயல்." ], "number": 516, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக் காலத்தோடு பொறுந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : முதலில் ஒரு செயலைச் செய்ய வேண்டியவனின் தகுதிகளை எண்ணி அவன் செய்ய வேண்டிய செயலின் தகுதியையும் எண்ணி பிறகு அவனையும் அச்செயலையும் செய்யப்படும் காலத்தோடு பொருத்தி எண்ணிச் செயல் செய்க.", "en": "Let (a king) act, after having considered the agent (whom he is to employ), the deed (he desires to do), and the time which is suitable to it." } }, { "chapter": "தெரிந்து வினையாடல்", "kural": [ "இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து", "அதனை அவன்கண் விடல்." ], "number": 517, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.", "en": "After having considered, “this man can accomplish this, by these means “, let (the king) leave with him the discharge of that duty." } }, { "chapter": "தெரிந்து வினையாடல்", "kural": [ "வினைக் குரிமை நாடிய பின்றை அவனை", "அதற்குரிய னாகச் செயல்." ], "number": 518, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவனை ஒரு பதவிக்கு உரியவனாக நியமித்த பிறகு, அப்பதவிக்கு உரிய செயல்களை அவனே செய்யுமாறு விட்டுவிடுக.", "en": "Having considered what work a man is fit for, let (the king) employ him in that work." } }, { "chapter": "தெரிந்து வினையாடல்", "kural": [ "வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக", "நினைப்பானை நீங்கும் திரு." ], "number": 519, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன் பதவியில் செயல்திறம் உடையவன் நிர்வாகத்திற்கு வேண்டியவனாக இருக்க, அவனை ஒழிக்க எண்ணிக் கோள் மூட்டுவார் சொல்லை நிர்வாகம் கேட்குமானால் அந்த நிர்வாகத்தை விட்டுச் செல்வத் திருமகள் நீக்குவான்.", "en": "Prosperity will leave (the king) who doubts the friendship of the man who steadily labours in the discharge of his duties." } }, { "chapter": "தெரிந்து வினையாடல்", "kural": [ "நாடோ றும் நாடுக மன்னன் வினைசெய்வான்", "கோடாமை கோடா துலகு." ], "number": 520, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.", "en": "Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly." } }, { "chapter": "சுற்றந் தழால்", "kural": [ "பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்", "சுற்றத்தார் கண்ணே உள." ], "number": 521, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவன் பிடிமானம் ஏதும் இல்லாமல் எல்லாம் இழந்த நிலையில் இருந்தபோதும், அவனுடன் தங்களுக்கு உள்ள பழந்தொடர்பைக் கூறுவது சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு.", "en": "Even when (a man’s) property is all gone, relatives will act towards him with their accustomed (kindness)." } }, { "chapter": "சுற்றந் தழால்", "kural": [ "விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா", "ஆக்கம் பலவும் தரும்." ], "number": 522, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவனுக்கு அன்பு நீங்காத சுற்றம் மட்டும் அமைந்து விடுமானால், அவனுக்கு அது வளர்ச்சி குறையாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்.", "en": "If (a man’s) relatives remain attached to him with unchanging love, it will be a source of ever- increasing wealth." } }, { "chapter": "சுற்றந் தழால்", "kural": [ "அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்", "கோடின்றி நீர்நிறைந் தற்று." ], "number": 523, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, \nகுளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சுற்றத்தாரோடு மனந்திறந்து உறவாடாதவன் வாழ்க்கை, கரை இல்லாத குளப்பரப்பில் நீர் நிறைந்திருப்பது போன்றது.", "en": "The wealth of one who does not mingle freely with his relatives, will be like the filling of water in a spacious tank that has no banks." } }, { "chapter": "சுற்றந் தழால்", "kural": [ "சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்", "பெற்றத்தால் பெற்ற பயன்." ], "number": 524, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன் சுற்றத்தால் தான் சூழப்படும்படி அவர்களைத் தழுவி வாழ்வதே ஒருவன் செல்வத்தைப் பெற்றதன் பயன் ஆகும்.", "en": "To live surrounded by relatives, is the advantage to be derived from the acquisition of wealth." } }, { "chapter": "சுற்றந் தழால்", "kural": [ "கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய", "சுற்றத்தால் சுற்றப் படும்." ], "number": 525, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்யவல்லவனானால் ஒருவன் தொடர்ந்த பலச் சுற்றத்தால் சூழப்படுவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவன் தன் சுற்றத்தார்க்கு வேண்டியதைக் கொடுத்தும், அவர்களிடம் இனிய சொற்களைச் சொல்லியும் வருவான் என்றால், பல்வகைச் சுற்றத்தாராலும் அவன் சூழப்படுவான்.", "en": "He will be surrounded by numerous relatives who manifests generosity and affability." } }, { "chapter": "சுற்றந் தழால்", "kural": [ "பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்", "மருங்குடையார் மாநிலத்து இல்." ], "number": 526, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவன் பெருங்கொடையை உடையவனாய், சினத்தை விரும்பாதவனாய் இருப்பான் என்றால் அவனைப் போலச் சுற்றம் உடையவர் உலகில் இல்லை.", "en": "No one, in all the world, will have so many relatives (about him), as he who makes large gift, and does not give way to anger." } }, { "chapter": "சுற்றந் தழால்", "kural": [ "காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்", "அன்னநீ ரார்க்கே உள." ], "number": 527, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : காக்கை தன் உணவை மறைக்காமல், தன் இனத்தைச் சத்தமிட்டு அழைத்து உண்ணும்; இதுபோன்ற குணம் உடையவர்க்கே செல்வமும் உள ஆகும்.", "en": "The crows do not conceal (their prey), but will call out for others (to share with them) while they eat it; wealth will be with those who show a similar disposition (towards their relatives)." } }, { "chapter": "சுற்றந் தழால்", "kural": [ "பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்", "அதுநோக்கி வாழ்வார் பலர்." ], "number": 528, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சுற்றத்தார் எல்லாரையும் ஒன்று போலவே எண்ணாமல், அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆட்சியாளன் உபசரிப்பான் என்றால், அச்சிறப்பை எண்ணி அவனை விடாமல் வாழும் சுற்றத்தார் பலராவர்.", "en": "Many relatives will live near a king, when they observe that he does not look on all alike, but that he looks on each man according to his merit." } }, { "chapter": "சுற்றந் தழால்", "kural": [ "தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்", "காரணம் இன்றி வரும்." ], "number": 529, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : முன் சுற்றத்தாறாக இருந்து பின் ஒருக் காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : முன்பு தன் அரசியல் இயக்கத்தில் இருந்து, ஆட்சியாளனிடம் உள்ள ஒழுக்கமின்மை காரணமாகப் பிரிந்து போனவர்கள், ஆட்சியாளனிடம் அந்தக் குற்றம் இல்லாது போனதைக் கண்டு அவர்களாகவே திரும்ப வருவர்.", "en": "Those who have been friends and have afterwards forsaken him, will return and join themselves (to him), when the cause of disagreement is not to be found in him." } }, { "chapter": "சுற்றந் தழால்", "kural": [ "உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்", "இழைத் திருந்து எண்ணிக் கொளல்." ], "number": 530, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தன்னிடமிருந்து பிரிந்து சென்று பின் ஒருக் காரணம்பற்றித் திரும்பிவந்தவனை, அரசன் அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ள வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒரு காரணமும் இல்லாமல், தானே இயக்கத்தை விட்டுப் பிரிந்து போன ஒருவன் ஏதோ ஒரு காரணத்தோடு திரும்ப வந்தாள் என்றால், ஆட்சியாளன் பொறுத்து இருந்து, ஆராய்ந்து அவனைச் சேர்த்துக் கொள்க.", "en": "When one may have left him, and for some cause has returned to him, let the king fulfil the object (for which he has come back) and thoughtfully receive him again." } }, { "chapter": "பொச்சாவாமை", "kural": [ "இறந்த வெகுளியின் தீதே சிறந்த", "உவகை மகிழ்ச்சியிற் சோர்வு." ], "number": 531, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது.", "en": "More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy." } }, { "chapter": "பொச்சாவாமை", "kural": [ "பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை", "நிச்ச நிரப்புக் கொன் றாங்கு." ], "number": 532, "section": "பொருட்பால்", "meaning": { "en": "Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledge.", "ta_mu_va": "மு.வ : நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நித்த வறுமை அறிவைக் கொன்றுவிடுவது போல, மறதி புகழைக் கெடுத்துவிடும்." } }, { "chapter": "பொச்சாவாமை", "kural": [ "பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து", "எப்பால்நூ லோர்க்கும் துணிவு." ], "number": 533, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மறதியை உடையவர்க்குப் புகழ் உடைமை இல்லை; இது இவ்வுலகத்தில் எந்தத் துறை நுகர்வோர்க்கும் முடிவான கருத்தாகும்.", "en": "Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world." } }, { "chapter": "பொச்சாவாமை", "kural": [ "அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை", "பொச்சாப் புடையார்க்கு நன்கு." ], "number": 534, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்து பயன் இல்லை, அதுபோல் மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனத்துள் பயம் உள்ளவர்க்கு எத்தகைய பாதுகாப்பாலும் பயன் இல்லை. அதுபோலவே மறதி உடையவர்க்கும் பாதுகாப்பால் பயன் இல்லை.", "en": "Just as the coward has no defence (by whatever fortifications ha may be surrounded), so the thoughtless has no good (whatever advantages he may possess)." } }, { "chapter": "பொச்சாவாமை", "kural": [ "முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை", "பின்னூறு இரங்கி விடும்." ], "number": 535, "section": "பொருட்பால்", "meaning": { "en": "The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwards repent for his fault.", "ta_mu_va": "மு.வ : வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : துன்பங்கள் வரும் முன்பே அவற்றைத் தடுக்காமல் மறந்திருந்தவன், பின் அவை வந்தபோது தடுக்க முடியாமல் தன் பிழையை எண்ணி வருந்துவான்." } }, { "chapter": "பொச்சாவாமை", "kural": [ "இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை", "வாயின் அதுவொப்பது இல்." ], "number": 536, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காதத் தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எவரிடத்திலேனும் எப்போதும் விடாமல் மறதி இல்லாத குணம் மட்டும் இருக்கும் என்றால், அதைப் போன்ற நன்மை வேறு இல்லை.", "en": "There is nothing comparable with the possession of unfailing thoughtfulness at all times; and towards all persons." } }, { "chapter": "பொச்சாவாமை", "kural": [ "அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்", "கருவியால் போற்றிச் செயின்." ], "number": 537, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மறதி இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.", "en": "There is nothing too dificult to be accomplished, if a man set about it carefully, with unflinching endeavour." } }, { "chapter": "பொச்சாவாமை", "kural": [ "புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது", "இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்." ], "number": 538, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சான்றோர் புகழ்ந்து சொல்லியச் செயல்களைப் போற்றிச் செய்யவேண்டும், அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவர்க்கு ஏழுப் பிறப்பிலும் நன்மை இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உயர்ந்தோர் புகழ்ந்து சொன்னவற்றை விரும்பிக் கடைப்பிடிக்க வேண்டும். கடைப்பிடிக்க மறந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை.", "en": "Let (a man) observe and do these things which have been praised (by the wise); if he neglects and fails to perform them, for him there will be no (happiness) throughout the seven births." } }, { "chapter": "பொச்சாவாமை", "kural": [ "இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்", "மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து." ], "number": 539, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்க வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தம் மகிழ்ச்சியில் மனவலிமை பெறும்பொழுது எல்லாம் முற்காலத்தில் மகிழ்ச்சியால் மறதி கொண்டு அழிந்தவர்களை நினைவிற் கொள்க.", "en": "Let (a king) think of those who have been ruined by neglect, when his mind is elated with joy." } }, { "chapter": "பொச்சாவாமை", "kural": [ "உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்", "உள்ளியது உள்ளப் பெறின்." ], "number": 540, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நினைத்ததைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க முடியுமானால் நினைத்ததை நினைத்தபடியே அடைவது எளிது.", "en": "It is easy for (one) to obtain whatever he may think of, if he can again think of it." } }, { "chapter": "செங்கோன்மை", "kural": [ "ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்", "தேர்ந்துசெய் வஃதே முறை." ], "number": 541, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : குடிமக்கள் செய்யும் குற்றத்தை ஆய்ந்து எவரிடத்தும் விருப்பு, வெறுப்பு இல்லாமல், நடுநிலையோடு நூல்வழி ஆராய்ந்து, குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதே நேர்மையான ஆட்சி.", "en": "To examine into (the crimes which may be committed), to show no favour (to any one), to desire to act with impartiality towards all, and to inflict (such punishments) as may be wisely resolved on, constitute rectitude." } }, { "chapter": "செங்கோன்மை", "kural": [ "வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்", "கோல் நோக்கி வாழுங் குடி." ], "number": 542, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.", "en": "When there is rain, the living creation thrives; and so when the king rules justly, his subjects thrive." } }, { "chapter": "செங்கோன்மை", "kural": [ "அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்", "நின்றது மன்னவன் கோல்." ], "number": 543, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறிவை வளர்த்துக் கொள்பவர்தம் ஞான நூல்களுக்கும், அறத்திற்கும் அடிப்படையாய் இருப்பது ஆளுவோரின் நேர்மையான ஆட்சியே.", "en": "The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described." } }, { "chapter": "செங்கோன்மை", "kural": [ "குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்", "அடிதழீஇ நிற்கும் உலகு." ], "number": 544, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்.", "en": "The world will constantly embrace the feet of the great king who rules over his subjects with love." } }, { "chapter": "செங்கோன்மை", "kural": [ "இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட", "பெயலும் விளையுளும் தொக்கு." ], "number": 545, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும்.", "en": "Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justice." } }, { "chapter": "செங்கோன்மை", "kural": [ "வேலன்று வென்றி தருவது மன்னவன்", "கோலதூஉங் கோடா தெனின்." ], "number": 546, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும்.", "en": "It is not the javelin that gives victory, but the king’s sceptre, if it do no injustice." } }, { "chapter": "செங்கோன்மை", "kural": [ "இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை", "முறைகாக்கும் முட்டாச் செயின்." ], "number": 547, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி \nசெய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும்.", "en": "The king defends the whole world; and justice, when administered without defect, defends the king." } }, { "chapter": "செங்கோன்மை", "kural": [ "எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்", "தண்பதத்தான் தானே கெடும்." ], "number": 548, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி முறை செய்யாத அரசன், தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும் ) தானே கெடுவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி தேடுவார் சொல்வதைப் பலவகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தித் தானே அழிவான்.", "en": "The king who gives not facile audience (to those who approach him), and who does not examine and pass judgment (on their complaints), will perish in disgrace." } }, { "chapter": "செங்கோன்மை", "kural": [ "குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்", "வடுவன்று வேந்தன் தொழில்." ], "number": 549, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அயலவர் அழிக்காமல் குடிமக்களையும் தன்னையும் காத்து, குடிகளின் குறைகளைக் களைந்து நேரிய ஆட்சி செய்வது, ஆட்சியாளருக்குக் குறை ஆகாது. அது அவர் தொழில்.", "en": "In guarding his subjects (against injury from others), and in preserving them himself; to punish crime is not a fault in a king, but a duty." } }, { "chapter": "செங்கோன்மை", "kural": [ "கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்", "களைகட் டதனொடு நேர்." ], "number": 550, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச் சமம்.", "en": "For a king to punish criminals with death, is like pulling up the weeds in the green corn." } }, { "chapter": "கொடுங்கோன்மை", "kural": [ "கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு", "அல்லவை செய்தொழுகும் வேந்து." ], "number": 551, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு அவர்களைத் துன்புறுத்தித் தவறாக ஆளும் அரசு பகைகொண்டு பிறரைக் கொலை செய்பவரைக் காட்டிலும் கொடியது.", "en": "The king who gives himself up to oppression and acts unjustly (towards his subjects) is more cruel than the man who leads the life of a murderer." } }, { "chapter": "கொடுங்கோன்மை", "kural": [ "வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்", "கோலொடு நின்றான் இரவு." ], "number": 552, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம்.", "en": "The request (for money) of him who holds the sceptre is like the word of a highway robber who stands with a weapon in hand and says “give up your wealth”." } }, { "chapter": "கொடுங்கோன்மை", "kural": [ "நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்", "நாடொறும் நாடு கெடும்." ], "number": 553, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நாட்டில் நடக்கும் தீமைகளை நாளும் பார்த்து, ஆராய்ந்து, ஏற்ற நீதியை வழங்காத ஆட்சியாளன் தன் பதவியை நாளும் இழப்பான்.", "en": "The country of the king who does not daily examine into the wrongs done and distribute justice, will daily fall to ruin." } }, { "chapter": "கொடுங்கோன்மை", "kural": [ "கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்", "சூழாது செய்யும் அரசு." ], "number": 554, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : (ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மேல்வருவதை எண்ணாது, தவறாக ஆள்பவன் தன் செல்வத்தையும், செல்வம் தரும் குடிமக்களையும் சேர்ந்தே இழந்துவிடுவான்.", "en": "The king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose at once both his wealth and his subjects." } }, { "chapter": "கொடுங்கோன்மை", "kural": [ "அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே", "செல்வத்தைத் தேய்க்கும் படை" ], "number": 555, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : (முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.", "en": "Will not the tears, shed by a people who cannot endure the oppression which they sufer (from their king), become a saw to waste away his wealth ?" } }, { "chapter": "கொடுங்கோன்மை", "kural": [ "மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்", "மன்னாவாம் மன்னர்க் கொளி." ], "number": 556, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அரசர்க்கு புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும், அஃது இல்லையானால் அரசர்க்கு புகழ் நிலைபெறாமல் போகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஆட்சியாளர்க்குப் புகழ் நிலைத்திருக்கக் காரணம் நேர்மையான ஆட்சியே. அந்த ஆட்சி இல்லை என்றால் புகழும் நிலைத்திருக்காது.", "en": "Righteous government gives permanence to (the fame of) kings; without that their fame will have no endurance." } }, { "chapter": "கொடுங்கோன்மை", "kural": [ "துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்", "அளியின்மை வாழும் உயிர்க்கு." ], "number": 557, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மழை இல்லாது போனால் எத்தகைய துயரத்தை மக்கள் அடைவார்களோ, அத்தகைய துயரத்தை, நேர்மையில்லாத ஆட்சியின் கீழும் அடைவார்கள்.", "en": "As is the world without rain, so live a people whose king is without kindness." } }, { "chapter": "கொடுங்கோன்மை", "kural": [ "இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா", "மன்னவன் கோற்கீழ்ப் படின்." ], "number": 558, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தவறாக ஆள்பவரின் ஆட்சிக்குக் கீழ் ஏழையாய் வாழ்வதைக் காட்டிலும் பணக்காரனாய் வாழ்வது துன்பம்.", "en": "Property gives more sorrow than poverty, to those who live under the sceptre of a king without justice" } }, { "chapter": "கொடுங்கோன்மை", "kural": [ "முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி", "ஒல்லாது வானம் பெயல்." ], "number": 559, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்.", "en": "If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers." } }, { "chapter": "கொடுங்கோன்மை", "kural": [ "ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்", "காவலன் காவான் எனின்." ], "number": 560, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். ஞானியர் நூல்களை மறந்துவிடுவர்.", "en": "If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the vedas." } }, { "chapter": "வெருவந்த செய்யாமை", "kural": [ "தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்", "ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து." ], "number": 561, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தவறு செய்வோரைக் கண்டு, நடுநிலையில் நின்று ஆய்ந்து, அத்தவற்றை அவர் திரும்பவும் செய்யாமல் இருக்கத் தவற்றுக்கு ஏற்பத் தண்டிப்பதே ஆட்சி.", "en": "He is a king who having equitably examined (any injustice which has been brought to his notice), suitably punishes it, so that it may not be again committed." } }, { "chapter": "வெருவந்த செய்யாமை", "kural": [ "கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்", "நீங்காமை வேண்டு பவர்." ], "number": 562, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும் போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நெடுங்காலம் ஆட்சி செய்ய விரும்புபவர் தண்டிக்கும்போது கடுமையாகத் தண்டிப்பவர்போல தொடங்கி வரம்பு கடவாமல் செய்க.", "en": "Let the king, who desires that his prosperity may long remain, commence his preliminary enquires with strictness, and then punish with mildness." } }, { "chapter": "வெருவந்த செய்யாமை", "kural": [ "வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்", "ஒருவந்தம் ஒல்லைக் கெடும்." ], "number": 563, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : குடிகள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : குடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி.", "en": "The cruel-sceptred king, who acts so as to put his subjects in fear, will certainly and quickly come to ruin." } }, { "chapter": "வெருவந்த செய்யாமை", "kural": [ "இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்", "உறைகடுகி ஒல்லைக் கெடும்." ], "number": 564, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நம்மை ஆளுவோர் மிகவும் கொடியவர் என்று குடிமக்களால் சொல்லப்படும் கொடுஞ் சொல்லைப் பெற்ற ஆட்சி அதன் ஆட்சிக் காலம் குறைந்து விரைவி்ல் அழியும்.", "en": "The king who is spoken of as cruel will quickly perish; his life becoming shortened." } }, { "chapter": "வெருவந்த செய்யாமை", "kural": [ "அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்", "பேஎய்கண் டன்னது உடைத்து." ], "number": 565, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன்னைக் காண வருவார்க்கு நேரம் தருவதில் இழுத்தடிப்பும், கண்டால் முகக்கடுப்பும் உடையவரின் பெருஞ்செல்வம், பூதத்தால் கைக்கொள்ளப்பட்டது போன்றதாம்.", "en": "The great wealth of him who is dificult of access and possesses a sternness of countenance, is like that which has been obtained by a devil." } }, { "chapter": "வெருவந்த செய்யாமை", "kural": [ "கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்", "நீடின்றி ஆங்கே கெடும்." ], "number": 566, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீடித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சுடுசொல்லையும், முகதாட்சண்யம் இன்மையும் உடைய அரசின் பெருஞ்செல்வம், பெருகாமல் உடனே அழியும்.", "en": "The abundant wealth of the king whose words are harsh and whose looks are void of kindness, will instantly perish instead of abiding long, with him." } }, { "chapter": "வெருவந்த செய்யாமை", "kural": [ "கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்", "அடுமுரண் தேய்க்கும் அரம்." ], "number": 567, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்கு காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கடுமையான சொற்களும், வரம்பு மீறிய தண்டனையும் அரசின் பகையை வெல்லுதற்கு ஏற்ற ஆயுதத்தைத் தேய்த்துக் குறைக்கும் அரம் ஆகும்.", "en": "Severe words and excessive punishments will be a file to waste away a king’s power for destroying (his enemies)." } }, { "chapter": "வெருவந்த செய்யாமை", "kural": [ "இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்", "சீறிற் சிறுகும் திரு." ], "number": 568, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன் உடன் அமைச்சர்களுடன் கலந்து பேசிச் செயற்படாத அரசு, தன்னைச் சினவழி நடத்தித் தவறு வரும்போது அமைச்சர்களைச் சினந்தால், அரசின் செல்வம் நாளும் குறையும்.", "en": "The prosperity of that king will waste away, who without reflecting (on his afairs himself), commits them to his ministers, and (when a failure occurs) gives way to anger, and rages against them." } }, { "chapter": "வெருவந்த செய்யாமை", "kural": [ "செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்", "வெருவந்து வெய்து கெடும்." ], "number": 569, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : முன்னமே தக்கவாறு அரண் செய்து கொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நெருக்கடி வருவதற்கு முன்பே தான் தப்பித்துக் கொள்ளப் பாதுகாப்புச் செய்துகொள்ளாத ஆட்சி, நெருக்கடி வந்தபோது பாதுகாப்பு இல்லாததால் அஞ்சி, விரைவில் அழியும்.", "en": "The king who has not provided himself with a place of defence, will in times of war be seized with fear and quickly perish." } }, { "chapter": "வெருவந்த செய்யாமை", "kural": [ "கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது", "இல்லை நிலக்குப் பொறை." ], "number": 570, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக் கொள்ளும், அது தவிர நிலத்திற்கு சுமை வேறு இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மக்கள் அஞ்சும்படி தண்டனை தரும் ஆட்சி, நீதி நூல்களைக் கல்லாதவரின் துணையுடன் நிற்கும் நாட்டிற்கு அக்கூட்டத்தாரைவிடப் பெரிய சுமை வேறு இல்லை.", "en": "The earth bears up no greater burden than ignorant men whom a cruel sceptre attaches to itself (as the ministers of its evil deeds)." } }, { "chapter": "கண்ணோட்டம்", "kural": [ "கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை", "உண்மையான் உண்டிவ் வுலகு." ], "number": 571, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : முகம் பார்த்தல் என்னும் பேரழகு மனிதருள் இருப்பதால்தான் மக்கள் வாழ்க்கை தொடர்கின்றது.", "en": "The world exists through that greatest ornament (of princes), a gracious demeanour." } }, { "chapter": "கண்ணோட்டம்", "kural": [ "கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்", "உண்மை நிலக்குப் பொறை." ], "number": 572, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது, கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்திற்குச் சுமையே தவிர வேறு பயனில்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மக்கள் வாழ்க்கை கண்ணோட்டத்தால்தான் இயங்குகின்றது அக்கண்ணோட்டம் இல்லாதவர் வாழ்வது இப்பூமிக்கு பாரமே.", "en": "The prosperity of the world springs from the kindliness, the existence of those who have no (kindliness) is a burden to the earth." } }, { "chapter": "கண்ணோட்டம்", "kural": [ "பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்", "கண்ணோட்டம் இல்லாத கண்." ], "number": 573, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பாடப்படும் பாடலுக்குப் பொருந்தவில்லை என்றால் ராகத்தால் என்ன பயன்? அதுபோல கண்ணோட்டம் இல்லை என்றால் கண்ணால்தான் என்ன பயன்?", "en": "Of what avail is a song if it be inconsistent with harmony ? what is the use of eyes which possess no kindliness." } }, { "chapter": "கண்ணோட்டம்", "kural": [ "உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்", "கண்ணோட்டம் இல்லாத கண்." ], "number": 574, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன் உண்டு?", "en": "Beyond appearing to be in the face, what good do they do, those eyes in which is no well-regulated kindness ?" } }, { "chapter": "கண்ணோட்டம்", "kural": [ "கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்", "புண்ணென்று உணரப் படும்" ], "number": 575, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே, அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவன் கண்ணிற்கு அணியும் நகை கண்ணோட்டமே; அந்த நகை மட்டும் இல்லை என்றால் அது புண் என்று பெரியோரால் அறியப்படும்.", "en": "Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two sores." } }, { "chapter": "கண்ணோட்டம்", "kural": [ "மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ", "டியைந்துகண் ணோடா தவர்." ], "number": 576, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கண்ணோட்டதிற்க்கு உரிய கண்ணோடுப் பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் (கண் இருந்தும் காணாத ) மரத்தினைப் போன்றவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கண் பெற்றிருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் இயங்கினாலும் மண்ணோடு சேர்ந்து இயங்காமல் நிற்கும் மரம் போன்றவரே.", "en": "They resemble the trees of the earth, who although they have eyes, never look kindly (on others)." } }, { "chapter": "கண்ணோட்டம்", "kural": [ "கண்ணோட் டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்", "கண்ணோட்டம் இன்மையும் இல்." ], "number": 577, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே ஆவர், கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்லா திருத்தலும் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரே; கண் இருப்பவர் கண்ணோட்டம் இல்லாதவராக இருப்பதும் இல்லை.", "en": "Men without kind looks are men without eyes; those who (really) have eyes are also not devoid of kind looks." } }, { "chapter": "கண்ணோட்டம்", "kural": [ "கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு", "உரிமை உடைத்திவ் வுலகு." ], "number": 578, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்க வல்லவர்க்கு இவ்வுலகம் உரிமை உடையது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தம் செயலுக்குச் சேதம் வராமல் கண்ணோட்டம் கொள்ளும் ஆற்றல் உடையவர்க்கு இந்த உலகம் சொந்தமாகும்.", "en": "The world is theirs (kings) who are able to show kindness, without injury to their afairs, (administration of justice)." } }, { "chapter": "கண்ணோட்டம்", "kural": [ "ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்", "பொறுத்தாற்றும் பண்பே தலை." ], "number": 579, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து ( அவர் செய்த குற்றத்தைப்) பொருத்துக் காக்கும் பண்பே சிறந்தது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்திலும் கண்ணோட்டம் கொண்டு, அவர்தம் பிழையைப் பொறுக்கும் பண்பே சிறந்தது.", "en": "Patiently to bear with, and show kindness to those who grieve us, is the most excellent of all dispositions." } }, { "chapter": "கண்ணோட்டம்", "kural": [ "பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க", "நாகரிகம் வேண்டு பவர்." ], "number": 580, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எல்லாராலும் விரும்பத்தக்க நாகரிகத்தை விரும்புபவர், தமக்கு நெருக்கமானவர் நஞ்சையே தருகிறார் என அறிந்தும் கண்ணோட்டம் காரணமாக அதை உண்டு அவருடன் பழகுவர்.", "en": "Those who desire (to cultivate that degree of) urbanity which all shall love, even after swallowing the poison served to them by their friends, will be friendly with them." } }, { "chapter": "ஒற்றாடல்", "kural": [ "ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்", "தெற்றென்க மன்னவன் கண்." ], "number": 581, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒற்று, புகழும் தெளிவும் உள்ள நீதிநூல் இவ்விரண்டும் ஆட்சியாளரின் இரு கண் என்று அறிக.", "en": "Let a king consider as his eyes these two things, a spy and a book (of laws) universally esteemed." } }, { "chapter": "ஒற்றாடல்", "kural": [ "எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்", "வல்லறிதல் வேந்தன் தொழில்." ], "number": 582, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பகைவர், நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்திலும் நிகழ்வான எல்லாவற்றையும், எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது அரசின் வேலை.", "en": "It is the duty of a king to know quickly (by a spy) what all happens, daily, amongst all men." } }, { "chapter": "ஒற்றாடல்", "kural": [ "ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்", "கொற்றங் கொளக்கிடந்தது இல்." ], "number": 583, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றிபெறத்தக்க வழி வேறு இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எல்லார் இடத்தும் நிகழ்வனவற்றை ஒற்றரைக் கொண்டு அறிந்து, நடப்பை தெரிந்து கொள்ளாத ஆட்சி, நிலைத்து வெற்றி பெற வேறொரு வழியே இல்லை.", "en": "There is no way for a king to obtain conquests, who knows not the advantage of discoveries made by a spy." } }, { "chapter": "ஒற்றாடல்", "kural": [ "வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு", "அனைவரையும் ஆராய்வது ஒற்று." ], "number": 584, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்றுக்கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அரசுப் பணியாளர், ஆளும் கட்சி, அதன் எதிர்கட்சியினர், அயலவர் என்று அனைவரின் சொல், செயல் கொண்டு அவர்தம் மனக்கருத்தை அறிபவரே ஒற்றர்.", "en": "He is a spy who watches all men, to wit, those who are in the king’s employment, his relatives, and his enemies." } }, { "chapter": "ஒற்றாடல்", "kural": [ "கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்", "உகாஅமை வல்லதே ஒற்று." ], "number": 585, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண் பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனதிலுள்ளதை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவன்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறர் சந்தேகப்படாத வேடத்‌தோடு சென்று, சந்தேகப்பட்டுச் சினந்தால் அஞ்சாது நின்று, சாமதானபேத தண்டம் என எந்த உபாயம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாத வல்லமை பெற்றவரே ஒற்றர்.", "en": "A spy is one who is able to assume an appearance which may create no suspicion (in the minds of others), who fears no man’s face, and who never reveals (his purpose)." } }, { "chapter": "ஒற்றாடல்", "kural": [ "துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து", "என்செயினும் சோர்விலது ஒற்று." ], "number": 586, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : துறந்தவரின் வடிவத்தை உடையவராய், அறிய இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து (ஐயுற்றவர்) என்ன செய்தாலும் சோர்ந்து விடாதவரே ஒற்றர் ஆவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : செல்ல முடியாத இடங்களுக்கும் கூடத் துறவியர் வேடத்தில் சென்று, அறிய வேண்டுவற்றை அறிந்து, அங்கே பிடிபட்டால், பிடித்தவர் எத்தகைய துன்பம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாதவரே ஒற்றர்.", "en": "He is a spy who, assuming the appearance of an ascetic, goes into (whatever place he wishes), examines into (all, that is needful), and never discovers himself, whatever may be done to him." } }, { "chapter": "ஒற்றாடல்", "kural": [ "மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை", "ஐயப்பாடு இல்லதே ஒற்று." ], "number": 587, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மறைந்த செய்திகளையும் கேட்டறிய வல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணிய வல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ரகசியமாக நடந்த செயல்களையும் அவற்றைச் செய்தவர் வாயாலேயே கேட்டு அறியும் ஆற்றல் படைத்தவராய், கேட்டவற்றுள் எத்தகைய சந்தேகமும் இல்லாதவராய் இருப்பவரே ஒற்றர்.", "en": "A spy is one who is able to discover what is hidden and who retains no doubt concerning what he has known." } }, { "chapter": "ஒற்றாடல்", "kural": [ "ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்", "ஒற்றினால் ஒற்றிக் கொளல்." ], "number": 588, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்தச் செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டு வரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்றுக் கொள்ள வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஓர் ஒற்றர் கொண்டு வந்த செய்தியை இன்னும் ஓர் ஒற்றர் தரும் செய்தியோடு சரி பார்த்துக் கொள்க.", "en": "Let not a king receive the information which a spy has discovered and made known to him, until he has examined it by another spy." } }, { "chapter": "ஒற்றாடல்", "kural": [ "ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்", "சொற்றொக்க தேறப் படும்." ], "number": 589, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆள வேண்டும், அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர் மூவரின் சொல் ஒத்திருந்தால் அவை உண்மை எனத் தெளியப்படும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒற்றரை இயக்கும்போது ஓர் ஒற்றரை இன்னுமோர் ஒற்றர் அறிந்துகொள்ளாதபடி இயக்குக; ஒரு காரியத்திற்கு மூவர் சொல்லும் ஒன்றுபோலவே இருந்தாலும் அதையும் ஆய்ந்து பிறகு ஏற்றுக்கொள்க.", "en": "Let a king employ spies so that one may have no knowledge of the other; and when the information of three agrees together, let him receive it." } }, { "chapter": "ஒற்றாடல்", "kural": [ "சிறப்பறிய ஒற்ற஧ன்கண் செய்யற்க செய்யின்", "புறப்படுத்தான் ஆகும் மறை." ], "number": 590, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒற்றனிடத்தில் செய்யும் சிறப்பைப் பிறர் அறியுமாறு செய்யக்கூடாது, செய்தால் மறைபொருளைத்தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மறைவாக நிகழ்வனவற்றைஅறிந்து சொல்லும் ஒற்றருக்குப் பரிசு தருக; மறைவாகவே தருக; ஊர் அறியத் தருவது மறைவையும் ஒற்றரையும் தானே வெளிப்படுத்தியது போல் ஆகும்.", "en": "Let not a king publicly confer on a spy any marks of his favour; if he does, he will divulge his own secret." } }, { "chapter": "ஊக்கம் உடைமை", "kural": [ "உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார்", "உடையது உடையரோ மற்று." ], "number": 591, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஊக்கம் உடையவரே எல்லாவற்றையும் உடையவர்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதை உடையவர் என்றாலும் உடையவர் ஆவாரே?", "en": "Energy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess ?" } }, { "chapter": "ஊக்கம் உடைமை", "kural": [ "உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை", "நில்லாது நீங்கி விடும்." ], "number": 592, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும், மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மன ஊறுதியே நிலையான உடைமை; செல்வம் உடைமையோ நிலைத்திராமல் நீங்கிவிடும்.", "en": "The possession of (energy of) mind is true property; the possession of wealth passes away and abides not." } }, { "chapter": "ஊக்கம் உடைமை", "kural": [ "க்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்", "ஒருவந்தம் கைத்துடை யார்." ], "number": 593, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஊக்கத்தை உறுதியாகத் தம்கைப் பொருளாக உடையவர், ஆக்கம்( இழந்து விட்டக்காலத்திலும்) இழந்து விட்டோம் என்று கலங்க மாட்டார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஊக்கத்தைத் தம் கைவசம் கொண்டவர், செல்வத்தை இழந்தாலும், இழந்து விட்டோமோ என்று மனம் கலங்க மாட்டார்.", "en": "They who are possessed of enduring energy will not trouble themselves, saying, “we have lost our property.”" } }, { "chapter": "ஊக்கம் உடைமை", "kural": [ "க்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா", "ஊக்க முடையா னுழை." ], "number": 594, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவன் முகவரியை அறிந்து செல்லும்.", "en": "Wealth will find its own way to the man of unfailing energy." } }, { "chapter": "ஊக்கம் உடைமை", "kural": [ "வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்", "உள்ளத் தனையது உயர்வு." ], "number": 595, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும், மக்களின் ஊக்கத்தை அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நீர்ப்பூக்களின் அடிக்காம்பின் நீளம் நீரின் அளவே. அது போல மக்களின் உயர்வும் அவர்களின் மன ஊக்கத்தின் அளவே.", "en": "The stalks of water-flowers are proportionate to the depth of water; so is men’s greatness proportionate to their minds." } }, { "chapter": "ஊக்கம் உடைமை", "kural": [ "உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது", "தள்ளினுந் தள்ளாமை நீர்த்து." ], "number": 596, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நினைப்பது எல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கட்டும். அவ்வுயர்வான எண்ணம் ஒருவேளை வேறு காரணங்களால் நிறைவேறாது போனாலும், பெரியோர் நம்மைப் பாராட்டுவர். ஆகவே, அது நிறைவேறியதாகவே கருதப்படும்.", "en": "In all that a king thinks of, let him think of his greatness; and if it should be thrust from him (by fate), it will have the nature of not being thrust from him." } }, { "chapter": "ஊக்கம் உடைமை", "kural": [ "சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்", "பட்டுப்பா டூன்றுங் களிறு." ], "number": 597, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன்மீது அம்புகள் புதைந்து புண்பட்டபோதும் யானை தளராமல் தன் பெருமையை நிலைநிறுத்தும்; இதுபோல ஊக்கம் உடையவர் தமக்கு கேடு வந்த போதும் ஊக்கம் இழக்கமால் தம் பெருமையை நிலைநிறுத்துவர்.", "en": "The strong minded will not faint, even when all is lost; the elephant stands firm, even when wounded by a shower of arrows." } }, { "chapter": "ஊக்கம் உடைமை", "kural": [ "உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து", "வள்ளியம் என்னுஞ் செருக்கு." ], "number": 598, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஊக்கம் இல்லாதவர் இவ்வுலகில் யாம் வண்மை உடையேம் என்றுத் தம்மைத் தான் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாடடார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஊக்கம் இல்லாதவர் பிறர்க்கு உதவும் வள்ளல் யாம் என்னும் மன உயர்வைப் பெறமாட்டார்.", "en": "Those who have no (greatness of) mind, will not acquire the joy of saying in the world, “we have excercised liaberality “." } }, { "chapter": "ஊக்கம் உடைமை", "kural": [ "பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை", "஦வ்ருஉம் புலிதாக் குறின்." ], "number": 599, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்.", "en": "Although the elephant has a large body, and a sharp tusk, yet it fears the attack of the tiger." } }, { "chapter": "ஊக்கம் உடைமை", "kural": [ "உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்", "மரம்மக்க ளாதலே வேறு." ], "number": 600, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவனுக்கு வலிமையானது ஊக்க மிகுதியே, அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே, (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஊக்க மிகுதியே ஒருவனுக்குத் திண்ணிய அறிவு. அவ்வூக்கம் இல்லாதவர் வடிவத்தால் மக்கள்; மனத்தாலோ வெறும் மரமே.", "en": "Energy is mental wealth; those men who are destitute of it are only trees in the form of men." } }, { "chapter": "மடி இன்மை", "kural": [ "குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்", "மாசூர மாய்ந்து கெடும்." ], "number": 601, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படிய படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவனிடம் சோம்பல் என்னும் இருள் நெருங்கினால் அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும்.", "en": "By the darkness, of idleness, the indestructible lamp of family (rank) will be extinguished." } }, { "chapter": "மடி இன்மை", "kural": [ "மடியை மடியா ஒழுகல் குடியைக்", "குடியாக வேண்டு பவர்." ], "number": 602, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்க வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தாம் பிறந்த குடும்பத்தை நல்ல குடும்பமாக உயர்த்த விரும்புபவர் சோம்பலைச் சோம்பலாக எண்ணி முயற்சி செய்க.", "en": "Let those, who desire that their family may be illustrious, put away all idleness from their conduct." } }, { "chapter": "மடி இன்மை", "kural": [ "மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த", "குடிமடியும் தன்னினும் முந்து." ], "number": 603, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்துவிடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : விட்டுவிட வேண்டிய சோம்பலைத் தனக்குள்ளே கொண்டு வாழும் அறிவற்றவன் பிறந்த குடும்பம் அவனுக்கும் முன்பே அழிந்துவிடும்.", "en": "The (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive laziness will perish, even before he is dead." } }, { "chapter": "மடி இன்மை", "kural": [ "குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து", "மாண்ட உஞற்றி லவர்க்கு." ], "number": 604, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்கு குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சோம்பலில் வீழ்வதால் சிறந்தவற்றையேச் செய்யும் முயற்சியே இல்லாதவரின் குடும்பமும் அழியும் குற்றமும் பெருகும்.", "en": "Family (greatness) will be destroyed, and faults will increase, in those men who give way to laziness, and put forth no dignified exertions." } }, { "chapter": "மடி இன்மை", "kural": [ "நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்", "கெடுநீரார் காமக் கலன்." ], "number": 605, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறியத் தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : காலம் தாழ்த்தி செய்வது, மறதி, சோம்பல், ஓயாத் தூக்கம் இவை நான்கும் அழிவை நாடுவார் விரும்பி ஏறும் சிறு படகாகும்.", "en": "Procrastination, forgetfulness, idleness, and sleep, these four things, form the vessel which is desired by those destined to destruction." } }, { "chapter": "மடி இன்மை", "kural": [ "படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்", "மாண்பயன் எய்தல் அரிது." ], "number": 606, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நாட்டை ஆளும் தலைவருடைய உறவுத் தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நிலம் முழுவதும் ஆண்ட மன்னர்களின் செல்வம் எல்லாம் சேர்ந்திருந்தாலும், சோம்பலை உடையவர் நல்ல பயனை அடைவது அரிது.", "en": "It is a rare thing for the idle, even when possessed of the riches of kings who ruled over the whole earth, to derive any great benefit from it." } }, { "chapter": "மடி இன்மை", "kural": [ "இடிபுரிந்து எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்து", "மாண்ட உஞற்றி லவர்." ], "number": 607, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சோம்பலை விரும்பி மேற்க் கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர் பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலைமை அடைவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சோம்பலில் வீழ்வதால் சிறந்த முயற்சி செய்யாதவர், நண்பர்களால் முதலில் இடித்துச் சொல்லப்பட்டு, பின்பு அவர் இழந்து பேசும் சொல்லையும் கேட்பர்.", "en": "Those who through idleness, and do not engage themselves in dignified exertion, will subject themselves to rebukes and reproaches." } }, { "chapter": "மடி இன்மை", "kural": [ "மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு", "அடிமை புகுத்தி விடும்." ], "number": 608, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : குடும்பத்தானுக்குச் சோம்பல் சொந்தமானால் அது அவனை அவனுடைய பகைவரிடத்தில் அடிமை ஆக்கிவிடும்.", "en": "If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies." } }, { "chapter": "மடி இன்மை", "kural": [ "குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்", "மடியாண்மை மாற்றக் கெடும்." ], "number": 609, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்தக் குற்றம் தீர்ந்து விடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவன் சோம்பலுக்கு அடிமையாவதை விட்டுவிட்டால், அவனது குடும்பத்திற்குள் வந்த சிறுமைகள் அழிந்துவிடும்.", "en": "When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear." } }, { "chapter": "மடி இன்மை", "kural": [ "மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்", "தாஅய தெல்லாம் ஒருங்கு." ], "number": 610, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்.", "en": "The king who never gives way to idleness will obtain entire possession of (the whole earth) passed over by him who measured (the worlds) with His foot." } }, { "chapter": "ஆள்வினை உடைமை", "kural": [ "அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்", "பெருமை முயற்சி தரும்." ], "number": 611, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்,", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி தரும்.", "en": "Yield not to the feebleness which says, “this is too dificult to be done”; labour will give the greatness (of mind) which is necessary (to do it)." } }, { "chapter": "ஆள்வினை உடைமை", "kural": [ "வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை", "தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு." ], "number": 612, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும், ஆகையால் தொழில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே. அவ்வாறு விட்டுவிடுபவரை இந்த உலகமும் விட்டுவிடும்.", "en": "Take care not to give up exertion in the midst of a work; the world will abandon those who abandon their unfinished work." } }, { "chapter": "ஆள்வினை உடைமை", "kural": [ "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே", "வேளாண்மை என்னுஞ் செருக்கு." ], "number": 613, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை, நிலைபெற்றிருக்கிறது.", "en": "The lustre of munificence will dwell only with the dignity of laboriousness or efforts." } }, { "chapter": "ஆள்வினை உடைமை", "kural": [ "தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை", "வாளாண்மை போலக் கெடும்." ], "number": 614, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : முயற்சி இல்லாதவன் உதவிசெய்பவனாக இருத்தல், பேடி தன் கையில் வாளை எடுத்தும் ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : முயற்சி இல்லாதவன், பிறர்க்கு உதவுவேன் என்பது, படை கண்டு நடுங்கும் பேடி, களத்துள் நின்று தன் கை வாளைச் சுழற்றுதல் போல ஒரு பயனும் இல்லாமல் போகும்.", "en": "The liberality of him, who does not labour, will fail, like the manliness of a hermaphrodite, who has a sword in its hand." } }, { "chapter": "ஆள்வினை உடைமை", "kural": [ "இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்", "துன்பம் துடைத்தூன்றும் தூண்." ], "number": 615, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்க்கொண்டச் செயலை முடிக்க விரும்புகிறவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இன்பத்தை விரும்பாதவனாய்ச் செயல் செய்வதையே விரும்புபவன், தன் உறவும் நட்புமாகிய பாரத்தின் துன்பத்தைப் போக்கி, அதைத் தாங்கும் தூண் ஆவான்.", "en": "He who desires not pleasure, but desires labour, will be a pillar to sustain his relations, wiping away their sorrows." } }, { "chapter": "ஆள்வினை உடைமை", "kural": [ "முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை", "இன்மை புகுத்தி விடும்." ], "number": 616, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.", "en": "Labour will produce wealth; idleness will bring poverty." } }, { "chapter": "ஆள்வினை உடைமை", "kural": [ "மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்", "தாளுளான் தாமரையி னாள்." ], "number": 617, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவான். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பர்.", "en": "They say that the black Mudevi (the goddess of adversity) dwells with laziness, and the Latchmi (the goddess of prosperity) dwells with the labour of the industrious." } }, { "chapter": "ஆள்வினை உடைமை", "kural": [ "பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து", "ஆள்வினை இன்மை பழி." ], "number": 618, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.", "en": "Adverse fate is no disgrace to any one; to be without exertion and without knowing what should be known, is disgrace." } }, { "chapter": "ஆள்வினை உடைமை", "kural": [ "தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்", "மெய்வருத்தக் கூலி தரும்." ], "number": 619, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.", "en": "Although it be said that, through fate, it cannot be attained, yet labour, with bodily exertion, will yield its reward." } }, { "chapter": "ஆள்வினை உடைமை", "kural": [ "ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்", "தாழாது உஞற்று பவர்." ], "number": 620, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர்,(செயலுக்கு இடையூறாக வரும்)ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்யும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்.", "en": "They who labour on, without fear and without fainting will see even fate (put) behind their back." } }, { "chapter": "இடுக்கண் அழியாமை", "kural": [ "இடுக்கண் வருங்கால் நகுக அதனை", "அடுத்தூர்வது அஃதொப்ப தில்." ], "number": 621, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நாம் அறியாமலே நமக்கு ஒரு துன்பம் வந்தால் அப்போது மனம் தளராமல் மனத்துள் மகிழ்க; அந்தத் துன்பத்தைத் தோற்கடிக்க அம்மகிழ்ச்சியைப் போல் ஆற்றல் மிக்கது வேறொன்றும் இல்லை.", "en": "If troubles come, laugh; there is nothing like that, to press upon and drive away sorrow." } }, { "chapter": "இடுக்கண் அழியாமை", "kural": [ "வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்", "உள்ளத்தின் உள்ளக் கெடும்." ], "number": 622, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்.", "en": "A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow." } }, { "chapter": "இடுக்கண் அழியாமை", "kural": [ "இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு", "இடும்பை படாஅ தவர்." ], "number": 623, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : வரும் துன்பத்திற்குத் துன்பப்படாத மன ஊக்கம் உள்ளவர். துன்பத்திற்குத் துன்பம் தருவர்.", "en": "They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow." } }, { "chapter": "இடுக்கண் அழியாமை", "kural": [ "மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற", "இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து." ], "number": 624, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தடைபட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்றத் துன்பமே துன்பப்படுவதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : செல்லும் வழிகளில் எல்லாம் வண்டியை இழுத்துச் செல்லும் காளையைப் போன்று மனந்தளராமல் செல்ல வல்லவனுக்கு வந்த துன்பமே துன்பப்படும்.", "en": "Troubles will vanish (i.e., will be troubled) before the man who (struggles against dificulties) as a buffalo (drawing a cart) through deep mire." } }, { "chapter": "இடுக்கண் அழியாமை", "kural": [ "அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற", "இடுக்கண் இடுக்கட் படும்." ], "number": 625, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒன்றனுக்குப் பின் ஒன்றாகத் தொடர்ந்து துன்பம் வந்தாலும், மனம் தளராதவனுக்கு வந்த அவ்வகைத் துன்பம் துன்பப்படும்.", "en": "The troubles of that man will be troubled (and disappear) who, however thickly they may come upon him, does not abandon (his purpose)." } }, { "chapter": "இடுக்கண் அழியாமை", "kural": [ "அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று", "ஓம்புதல் தேற்றா தவர்." ], "number": 626, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : செல்வம் வந்த போது இதைப்பெற்றோமே என்று பற்றுக்கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்த போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பணம் இருந்த காலத்தில் மனக்கஞ்சம் இல்லாமல் பிறர்க்கு வழங்கியவர், இல்லாத காலத்தில் வரும் துன்பத்தினால் ஏழையாகி விட்டோமே என்று வருந்துவாரோ?", "en": "Will those men ever cry out in sorrow, “we are destitute” who, (in their prosperity), give not way to (undue desire) to keep their wealth." } }, { "chapter": "இடுக்கண் அழியாமை", "kural": [ "இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்", "கையாறாக் கொள்ளாதாம் மேல்." ], "number": 627, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம் வந்த போது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உடம்பு துன்பத்திற்கு இடமாவதே என்று தெளிந்த மேன்மக்கள், உடம்பிற்கு வந்த துன்பத்தைப் துன்பமாக எண்ணி மனந் தளரமாட்டார்.", "en": "The great will not regard trouble as trouble, knowing that the body is the butt of trouble." } }, { "chapter": "இடுக்கண் அழியாமை", "kural": [ "இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்", "துன்பம் உறுதல் இலன்." ], "number": 628, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்த போது துன்ப முறுவது இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உடம்பிற்கு இன்பம் விரும்பாதவனாய், அதற்கு வரும் துன்பத்தை இயல்புதானே என்பவன், மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.", "en": "That man never experiences sorrow, who does not seek for pleasure, and who considers distress to be natural (to man)." } }, { "chapter": "இடுக்கண் அழியாமை", "kural": [ "இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்", "துன்பம் உறுதல் இலன்." ], "number": 629, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இன்பம் வந்திக் காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன் துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவது இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன் உடலுக்கு இன்பம் வரும்போது அதை மனத்தால் விரும்பாதவன், துன்பம் வரும்போது மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.", "en": "He does not suffer sorrow, in sorrow who does not look for pleasure in pleasure." } }, { "chapter": "இடுக்கண் அழியாமை", "kural": [ "இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்", "ஒன்னார் விழையுஞ் சிறப்பு." ], "number": 630, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக்கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவன் செயல் செய்யும்போது துன்பம் வந்தால் மனம் தளராமல் அதையே இன்பம் எனக் கொள்வான் என்றால், பகைவராலும் மதிக்கப்படும் சிறப்பு அவனுக்கு உண்டாகும்.", "en": "The elevation, which even his enemies will esteem, will be gained by him, who regards pain as pleasure." } }, { "chapter": "அமைச்சு", "kural": [ "கருவியும் காலமும் செய்கையும் செய்யும்", "அருவினையும் மாண்டது அமைச்சு." ], "number": 631, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : செயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும் வகையும் செய்யப்படும் அறியச் செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒரு செயலைச் செய்யத் தேவையான பொருள்கள், செய்வதற்கு ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய அனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே அமைச்சர்.", "en": "The minister is one who can make an excellent choice of means, time, manner of execution, and the difficult undertaking (itself)." } }, { "chapter": "அமைச்சு", "kural": [ "வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு", "ஐந்துடன் மாண்டது அமைச்சு." ], "number": 632, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அஞ்சாமையும், குடிபிறப்பும், காக்கும் திறனும், கற்றறிந்த அறிவும் முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப்பெற்றவன் அமைச்சன்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : செயலுக்கு ஏற்ற மன உறுதி, மக்களைக் காத்தல், உரிய நீதி நூல்களைக் கற்றல், கற்றாரிடம் கேட்டு அறிதல், முயற்சி ஆகிய ஐந்தையும் உடையவரே அமைச்சர்.", "en": "The minister is one who in addition to the aforesaid five things excels in the possession of firmness, protection of subjects, clearness by learning, and perseverance." } }, { "chapter": "அமைச்சு", "kural": [ "பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்", "பொருத்தலும் வல்ல தமைச்சு." ], "number": 633, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பகைவர்ககு துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்து கொண்டவரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலும் வல்லவன் அமைச்சன்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நாட்டிற்கு நெருக்கடி வரும்போது பகையானவரைப் பிரித்தல், தம்முடன் இருப்பவரைக் கொடையாலும் இன்சொல்லாலும் பிரியாமல் காத்தல், தேவைப்பட்டால் முன்னே நம்முடன் இருந்து பிரிந்தவரைச் சேர்த்துக் கொள்ளுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.", "en": "The minister is one who can efect discord (among foes), maintain the good-will of his friends and restore to friendship those who have seceded (from him)." } }, { "chapter": "அமைச்சு", "kural": [ "தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்", "சொல்லலும் வல்லது அமைச்சு." ], "number": 634, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : (செய்யத்தக்க செயலை) ஆராய்தலும், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவாகக் கருத்தைச் சொல்லுதலும் வல்லவன் அமைச்சன்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒரு செயலைப் பற்றி பலவகையிலும் ஆராய்ந்து அறிதல், வாய்ப்பு வரும்போது ஆராய்ந்தபடி செய்தல், நன்மை தருவனவற்றையே உறுதியாகச் சொல்லுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.", "en": "The minister is one who is able to comprehend (the whole nature of an undertaking), execute it in the best manner possible, and ofer assuring advice (in time of necessity)." } }, { "chapter": "அமைச்சு", "kural": [ "அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்", "திறனறிந்தான் தேர்ச்சித் துணை." ], "number": 635, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறத்தை அறிந்தவனாய், அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறத்தை அறிந்து கல்வியால் நிறைந்து, அடக்கமான சொல்லை உடையவராய், எப்போதும் செயலாற்றும் முறைகளைத் தெரிந்தவரே கலந்து முடிவு எடுப்பதற்கு ஏற்ற துணையாவார்.", "en": "He is the best helper (of the king) who understanding the duties, of the latter, is by his special learning, able to tender the fullest advice, and at all times conversant with the best method (of performing actions)." } }, { "chapter": "அமைச்சு", "kural": [ "மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்", "யாவுள முன்நிற் பவை." ], "number": 636, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இயல்பான நுண்ணறிவோடு செயற்கை ஆகிய நூல் அறிவையும் உடைய அமைச்சருக்கு எதிராக, மிகுந்த நுட்பமான சூழ்ச்சிகள் என்று எவை நிற்கமுடியும்?", "en": "What (contrivances) are there so acute as to resist those who possess natural acuteness in addition to learning ?." } }, { "chapter": "அமைச்சு", "kural": [ "செயற்கை அற஧ந்தக் கடைத்தும் உலகத்து", "இயற்கை அறிந்து செயல்." ], "number": 637, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளைச் அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்யவேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பல்வேறு மொழி நாட்டு நூல்களின் வழி, புதிய செயல் திறங்களை அறிந்திருந்தாலும், தன் நாட்டின் இயற்கை மக்கள் இயல்பு ஆகியவற்றை அறிந்து அவற்றிற்கு ஏற்பச் செய்க.", "en": "Though you are acquainted with the (theoretical) methods (of performing an act), understand the ways of the world and act accordingly." } }, { "chapter": "அமைச்சு", "kural": [ "அறிகொன்று அறியான் எனினும் உறுதி", "உழையிருந்தான் கூறல் கடன்." ], "number": 638, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறிவுறுத்துவாரின் அறிவையையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறல் க‌டமையாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறிந்து சொல்பவர் அறிவையும் மதியாமல், செய்யவேண்டிய வழிகளைத் தாமும் தெரியாமல், ஆட்சியாளர் இருந்தால், அக்குற்றம் கண்டு கோபம் கொள்ளாமல், அஞ்சாமல், அவருக்கு நன்மை தருவதைக் கூற வேண்டியது அமைச்சர் கடமையாகும்.", "en": "Although the king be utterly ignorant, it is the duty of the minister to give (him) sound advice." } }, { "chapter": "அமைச்சு", "kural": [ "பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்", "எழுபது கோடி உறும்." ], "number": 639, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும், நாட்டு நலனை எண்ணாமல் தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்கட்சிக்காரருக்குச் சமம் ஆவார்.", "en": "Far better are seventy crores of enemies (for a king) than a minister at his side who intends (his) ruin." } }, { "chapter": "அமைச்சு", "kural": [ "முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்", "திறப்பாடு இலாஅ தவர்." ], "number": 640, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : (செயல்களைச் முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே எண்ணி வைத்திருந்தும் (செய்யும் போது) குறையானவைகளையேச் செய்வர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : செயல்திறம் இல்லாத அமைச்சர், செய்ய வேண்டியவற்றை முறையாக எண்ணி வைத்திருந்தாலும், அவற்றைச் செய்யும்போது அரைகுறையாகவே செய்வார்.", "en": "Those ministers who are destitute of (executive) ability will fail to carry out their projects, although they may have contrived aright." } }, { "chapter": "சொல்வன்மை", "kural": [ "நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்", "யாநலத்து உள்ளதூஉம் அன்று." ], "number": 641, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நாவினால் பேசிக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை என்னும் சிறப்பு வேறு எந்தச் சிறப்பிலும் அடங்காத தனிச்சிறப்பாகும்.", "en": "The possession of that goodness which is called the goodness of speech is (even to others) better than any other goodness." } }, { "chapter": "சொல்வன்மை", "kural": [ "ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்", "காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு." ], "number": 642, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்க்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அவரவர் சொல் திறந்தாலேயே நன்மையும், தீமையும் வருவதால், பேசும் பேச்சில் பிழை வராமல் விழிப்புடன் பேசுக.", "en": "Since (both) wealth and evil result from (their)speech, ministers should most carefully guard themselves against faultiness therein." } }, { "chapter": "சொல்வன்மை", "kural": [ "கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்", "வேட்ப மொழிவதாம் சொல்." ], "number": 643, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சொல்லும் போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நண்பர்களைப் பிரிக்காமல் சேர்க்கும் தன்மையதாய்ப் பகைவரும் கேட்க விரும்புவதாய்ப் பேசவது சொல்லாற்றல். ( முன்பு கேட்டவர் மீண்டும் கேட்க, இதுவரை கேளாதவரும் விரும்பிக் கேட்கப் பேசுவது என்றும் கூறலாம்)", "en": "The (minister’s) speech is that which seeks (to express) elements as bind his friends (to himself) and is so delivered as to make even his enemies desire (his friendship)." } }, { "chapter": "சொல்வன்மை", "kural": [ "திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்", "பொருளும் அதனினூஉங்கு இல்." ], "number": 644, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும், அத் தகைய சொல்வன்மையை விடச் சிறந்த அறமும் பொருளும் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எவரிடம் பேசகிறோமோ அவர் குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், தோற்றம், வயது ஆகிய தகுதிகளை அறிந்து பேச்சு; அப்படிப் பேசுவதைவிட உயர்ந்த அறமும் பொருளும் வேறு இல்லை.", "en": "Understand the qualities (of your hearers) and (then) make your speech; for superior to it, there is neither virtue nor wealth." } }, { "chapter": "சொல்வன்மை", "kural": [ "சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை", "வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து." ], "number": 645, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வேறோரு சொல் அந்தச் சொல்லை வெல்லும் சொல்லாக இல்லாதிருந்தால் அறிந்த பிறகே சொல்லக்கருதியதைச் சொல்லவேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தாம் சொல்லும் சொல்லை வெல்ல, வேறொரு சொல் இல்லை என்பதை அறிந்து சொல்லுக.", "en": "Deliver your speech, after assuring yourself that no counter speech can defeat your own." } }, { "chapter": "சொல்வன்மை", "kural": [ "வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்", "மாட்சியின் மாசற்றார் கோள்." ], "number": 646, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பிறர் விரும்பும் படியாகத் தாம் சொல்லின் பிறர் சொல்லும் போது அச் சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் மாசற்ற சிறப்புடையவரின் கொள்கையாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறரிடம் பேசும்போது அவர் திரும்பவும் நம் பேச்சைக் கேட்க விரும்புமாறு பேச்சு; மற்றவர் பேச்சைக் கேட்கும் போது அவரது சொற்குற்றம் பரவாமல் பொருளை மட்டுமே பார்க்க; இதுவே மனக்குற்றம் அற்றவர்களின் சிறந்த கொள்கை.", "en": "It is the opinion of those who are free from defects in diplomacy that the minister should speak so as to make his hearers desire (to hear more) and grasp the meaning of what he hears himself." } }, { "chapter": "சொல்வன்மை", "kural": [ "சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை", "இகல்வெல்லல் யார்க்கும் அரிது." ], "number": 647, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தான் கருதியவற்றை நன்கு சொல்ல வல்லவனாய் சொல்லும் போது சோர்வு இல்லாதவனாய், அஞ்சாதவனாய் உள்ளவனை மாறுபாட்டால் வெல்வது யார்க்கும் முடியாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தான் எண்ணியதைப் பிறர் ஏற்கச் சொல்லும் ஆற்றல் உள்ளவன், சொல்லும் செய்தி கடினமானது என்றாலும் சோர்வு இல்லாதவன், கேட்பவர் பகையாளர் என்றாலும் அஞ்சாதவன் இவன்மீது பகைகொண்டு வெல்வது எவர்க்கும் கடினமே.", "en": "It is impossible for any one to conquer him by intrique who possesses power of speech, and is neither faulty nor timid." } }, { "chapter": "சொல்வன்மை", "kural": [ "விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது", "சொல்லுதல் வல்லார்ப் பெறின்." ], "number": 648, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கருத்துக்களை ஒழுங்காகக் கோர்த்து இனியாக சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சொல்லும் செய்திகளை வரிசைபடக் கோத்து இனிதாகச் சொல்லும் ஆற்றலை உடையவர் என்றால், அவர் சொல்வனவற்றை உலகம் விரைந்து ஏற்றுக் கொள்ளும்.", "en": "If there be those who can speak on various subjects in their proper order and in a pleasing manner, the world would readily accept them." } }, { "chapter": "சொல்வன்மை", "kural": [ "பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற", "சிலசொல்லல் தேற்றா தவர்." ], "number": 649, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : குற்றமற்றவையாகியச் சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், உண்மையாகவே பலச் சொற்களைச் சொல்லிக்கொண்டிருக்க விரும்புவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : குற்றமற்ற சில சொற்களால் சொல்லும் ஆற்றல் இல்லாதவர், பலபல சொற்களைப் பேச விரும்புவர்.", "en": "They will desire to utter many words, who do not know how to speak a few faultless ones." } }, { "chapter": "சொல்வன்மை", "kural": [ "இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது", "உணர விரித்துரையா தார்." ], "number": 650, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தாம் கற்ற நூற்ப் பொருளைப் பிறர் உணருமாறு விரிந்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர், கொத்தாக மலர்ந்தும் மணக்காத மலர் போன்றவர்.", "en": "Those who are unable to set forth their acquirements (before others) are like flowers blossoming in a cluster and yet without fragrance." } }, { "chapter": "வினைத்தூய்மை", "kural": [ "துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்", "வேண்டிய எல்லாந் தரும்." ], "number": 651, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நல்ல துணை, செல்வம் தரும்; செயல் சுத்தமோ நாம் விரும்பிய எல்லாவற்றையும் தரும்.", "en": "The efficacy of support will yield (only) wealth; (but) the efficacy of action will yield all that is desired." } }, { "chapter": "வினைத்தூய்மை", "kural": [ "என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு", "நன்றி பயவா வினை." ], "number": 652, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.", "en": "Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future)." } }, { "chapter": "வினைத்தூய்மை", "kural": [ "ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை", "ஆஅதும் என்னு மவர்." ], "number": 653, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உயர்ந்து விடவேண்டும் என்று முயல்பவர் தாம் வாழும் காலத்துத் தம் மேன்மையை அழிக்கும் செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.", "en": "Those who say, “we will become (better)” should avoid the performance of acts that would destroy (their fame)." } }, { "chapter": "வினைத்தூய்மை", "kural": [ "இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்", "நடுக்கற்ற காட்சி யவர்." ], "number": 654, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அசைவற்ற ‌தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்தில் சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்க்காகவும்) இழிவானச் செயல்களைச் செய்யமாட்டார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தடுமாற்றம் இல்லாது தெளிந்த அறிவினை உடையவர் தாம் துன்பப்பட நேர்ந்தாலும் இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.", "en": "Those who have infallible judgement though threatened with peril will not do acts which have brought disgrace (on former ministers)." } }, { "chapter": "வினைத்தூய்மை", "kural": [ "எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்", "மற்றன்ன செய்யாமை நன்று." ], "number": 655, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பிறகு நினைத்து வருந்துவதற்குக் காரணமானச் செயல்களைச் செய்யக் கூடாது, ஒரு கால் தவறிச் செய்தாலும் மீண்டும் அத் தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என்ன இப்படிச் செய்து விட்டோமே என்று வருந்தும் படியான செயல்களைச் செய்யாது விடுக; ஒருவேளை தவறாகச் செய்துவிட்டால், திரும்பவும் அதைச் செய்யாது இருப்பது நல்லது.", "en": "Let a minister never do acts of which he would have to grieve saying, “what is this I have done”; (but) should he do (them), it were good that he grieved not." } }, { "chapter": "வினைத்தூய்மை", "kural": [ "ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற் க", "சான்றோர் பழிக்கும் வினை." ], "number": 656, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன்னைப் பெற்றவனின் பசியைக் காண நேர்ந்தாலும் அதைப் போக்கப் பெருமக்கள் பழிக்கும் செயல்களைச் செய்யாது விடுக.", "en": "Though a minister may see his mother starve; let him do not act which the wise would (treat with contempt)." } }, { "chapter": "வினைத்தூய்மை", "kural": [ "பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்", "கழிநல் குரவே தலை." ], "number": 657, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பழியை ஏற்று அடைந்த செல்வத்தைக் காட்டிலும், பெரியோர் அனுபவிக்கும் வறுமையே உயர்ந்தது.", "en": "Far more excellent is the extreme poverty of the wise than wealth obtained by heaping up of sinful deeds." } }, { "chapter": "வினைத்தூய்மை", "kural": [ "கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்", "முடிந்தாலும் பீழை தரும்." ], "number": 658, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கிவிடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கும், அச் செயல் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : வேண்டா என்று உயர்ந்தோர் விலக்கிய செயல்களைத் தாமும் விலக்காது, பொருள் சேர்க்க எண்ணிச் செய்தவர்க்கு, அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பத்தையே தரும்.", "en": "The actions of those, who have not desisted from doing deeds forbidden (by the great), will, even if they succeed, cause them sorrow." } }, { "chapter": "வினைத்தூய்மை", "kural": [ "அழக் கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்", "பிற்பயக்கும் நற்பா லவை." ], "number": 659, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும், நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும்", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறர் அழ அவரிடம் இருந்து கவர்ந்த பொருள் எல்லாம் நாம் அழ, நம்மை விட்டுப் போய்விடும். செயல் சுத்தத்தால் பெற்ற பொருளை நாம் இழந்தாலும் அவை நமக்குத் திரும்பவும் பலன் கொடுக்கும்.", "en": "All that has been obtained with tears (to the victim) will depart with tears (to himself); but what has been by fair means; though with loss at first, will afterwards yield fruit." } }, { "chapter": "வினைத்தூய்மை", "kural": [ "சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்", "கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று." ], "number": 660, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வஞ்சனையான வழியால் பொருளைச்சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்தில் நீரை விட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தீய செயல்களால் பொருளைத் திரட்டி, அதைக் காப்பது, சுடாத பச்சைமண் பானையில் நீரை ஊற்றி அதைச் சேமிப்பது போலாம்.", "en": "(For a minister) to protect (his king) with wealth obtained by foul means is like preserving a vessel of wet clay by filling it with water." } }, { "chapter": "வினைத்திட்பம்", "kural": [ "வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்", "மற்றைய எல்லாம் பிற." ], "number": 661, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவை எல்லாம் வேறானவை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற்றவை உறுதி எனப்படமாட்டா.", "en": "Firmness in action is (simply) one’s firmness of mind; all other (abilities) are not of this nature." } }, { "chapter": "வினைத்திட்பம்", "kural": [ "ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்", "ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்." ], "number": 662, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்த பின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பழுதுபடும் செயல்களைச் செய்யாது இருப்பது, பழுதுபட்டாலும் மனம் தளராமல் இருப்பது இவ்விரண்டும் நீதிநூல் பல ஆய்ந்தவர்களின் கோட்பாடு என்று கூறுவர்.", "en": "Not to perform a ruinous act, and not to be discouraged by the ruinous termination of an act, are the two maxims which, the wise say, from the principles of those who have investigated the subject." } }, { "chapter": "வினைத்திட்பம்", "kural": [ "கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்", "எற்றா விழுமந் தரும்." ], "number": 663, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : செய்யும் செயலை முடிவில் வெளிப்படும் படியாக செய்யும் தகுதியே ஆண்மையாகும், இடையில் வெளிபட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒரு செயலை முடிவில் வெளிப்படுத்துவதே ஆளுமை, இடையிலேயே வெளிப்படுத்தினால் அது செயலைச் செய்பவனுக்கு நீங்காத துன்பத்தைத் தரும்.", "en": "So to perform an act as to publish it (only) at its termination is (true) manliness; for to announce it beforehand, will cause irremediable sorrow." } }, { "chapter": "வினைத்திட்பம்", "kural": [ "சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்", "சொல்லிய வண்ணம் செயல்." ], "number": 664, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.", "en": "To say (how an act is to be performed) is (indeed) easy for any one; but far dificult it is to do according to what has been said." } }, { "chapter": "வினைத்திட்பம்", "kural": [ "வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்", "ஊறெய்தி உள்ளப் படும்." ], "number": 665, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : செயல் திறனால் பெருமைபெற்று உயர்ந்தவரின் வினைத் திட்பமானது நாட்டை ஆளும் அரசனிடத்திலும் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எண்ணங்களால் சிறந்து, பெருமை மிக்கவர்களின் செயல் உறுதி. அரசு வரை செல்வதால் மற்றவர்களாலும் மதிக்கப்படும்.", "en": "The firmness in action of those who have become great by the excellence (of their counsel) will, by attaining its fulfilment in the person of the king, be esteemed (by all)." } }, { "chapter": "வினைத்திட்பம்", "kural": [ "எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்", "திண்ணியர் ஆகப் பெறின்." ], "number": 666, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எண்ணப்படியே அடைவார்.", "en": "If those who have planned (an undertaking) possess firmness (in executing it) they will obtain what they have desired even as they have desired it." } }, { "chapter": "வினைத்திட்பம்", "kural": [ "உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு", "அச்சாணி அன்னார் உடைத்து." ], "number": 667, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிப் போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர், அவர்களுடைய உருவின் சிறுமையைக்கண்டு இகழக் கூடாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அச்சாணி சிறியது எனினும் உருளுகின்ற பெரிய தேருக்கு அது உதவுவது போல, மன உறுதி உடையவர்கள் வடிவத்தால் சிறியர் எனினும் செயலால் பெரியர் என்பதால் அவரை இகழக்கூடாது.", "en": "Let none be despised for (their) size; (for) the world has those who resemble the linch-pin of the big rolling car." } }, { "chapter": "வினைத்திட்பம்", "kural": [ "கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது", "தூக்கங் கடிந்து செயல்." ], "number": 668, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதிக்காமல் செய்க.", "en": "An act that has been firmly resolved on must be as firmly carried out without delay." } }, { "chapter": "வினைத்திட்பம்", "kural": [ "துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி", "இன்பம் பயக்கும் வினை." ], "number": 669, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : (முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க.", "en": "Though it should cause increasing sorrow (at the outset), do with firmness the act that yield bliss (in the end)." } }, { "chapter": "வினைத்திட்பம்", "kural": [ "எனைத்திட்பம் எய் தியக் கண்ணும் வினைத்திட்பம்", "வேண்டாரை வேண்டாது உலகு." ], "number": 670, "section": "பொருட்பால்", "meaning": { "en": "The great will not esteem those who esteem not firmness of action, whatever other abilities the latter may possess.", "ta_mu_va": "மு.வ : வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எத்தனை வகை உறுதி உடையவராக இருந்தாலும் செயல் உறுதி இல்லாதவரை உயர்ந்தோர் மதிக்கமாட்டார்." } }, { "chapter": "வினைசெயல்வகை", "kural": [ "சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு", "தாழ்ச்சியுள் தங்குதல் தீது." ], "number": 671, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும், அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்து நிற்பது குற்றமாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஓர் ஆலோசனையின் முடிவு, செயலைச் செய்யும் துணிவைப் பெறுவதே, பெற்ற அத்துணிவைச் செயலாக்கக் காலம் தாழ்த்தினால் அது தீமையாகும்.", "en": "When counsel takes a resolve strong Weak delay of action is wrong" } }, { "chapter": "வினைசெயல்வகை", "kural": [ "தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க", "தூங்காது செய்யும் வினை." ], "number": 672, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காலந்தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்ந்தே செய்ய வேண்டும், காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்யவேண்டிய செயல்களைச் செய்ய காலந்தாழ்த்தக் கூடாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : காலந்தாழ்த்திச் செய்யவேண்டிய செயல்கள் என்றால் காலந்தாழ்த்துக; காலம் தாழத்தாது செய்ய வேண்டிய செயல்கள் என்றால் காலம் தாழ்த்த வேண்டா.", "en": "Delay such acts as need delay Delay not acts that need display" } }, { "chapter": "வினைசெயல்வகை", "kural": [ "ஙல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்", "செல்லும்வாய் நோக்கிச் செயல்." ], "number": 673, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இயலுமிடத்தில் எல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது, இயலாவில்லையானால் பயன்படும் இடம் நோக்கியாவது செய்ய வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒரு செயலைச் செய்யும்போது சாம, தான, பேத, தண்டம் என்னும் எல்லா உபாயங்களிலும் தண்டம் என்னும் உபாயம் கொண்டு செய்வது நல்லது. அது பலன் அளிக்காத போது, பிற மூன்றினுள் ஏற்ற ஒன்று கொண்டு செய்க.", "en": "Direct action is good whenever feasible, but when it is not, seek other means of success." } }, { "chapter": "வினைசெயல்வகை", "kural": [ "வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்", "தீயெச்சம் போலத் தெறும்." ], "number": 674, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை இரண்டிலும் மிச்சம் இருந்தால் அவை தீயின் மிச்சம் போல வளர்ந்து அழிக்கும் (ஆதலால் எதையும் முழுமையாகச் செய்க)", "en": "Reflect on this: Both efforts and enemies, if left unfinished, Can destroy like an unextinguished fire" } }, { "chapter": "வினைசெயல்வகை", "kural": [ "பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்", "இருள்தீர எண்ணிச் செயல்." ], "number": 675, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வேண்டிய பொருள், ஏற்றக்கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போது தனக்கும் தன் எதிரிக்கும் இருக்கும் செல்வம், சாதனங்கள், ஏற்ற காலம், செயல்திறம், பொருத்தமான இடம் ஆகிய ஐந்தையும் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் சிந்தித்துச் செய்க.", "en": "Before acting resolve all doubts through consideration of these five: Cost, means, time, place and the action itself." } }, { "chapter": "வினைசெயல்வகை", "kural": [ "முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்", "படுபயனும் பார்த்துச் செயல்." ], "number": 676, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்த போது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒரு செயலைச் செய்யும்போது அது முடிவதற்கான முயற்சி, இடையில் வரும் தடை, முடியும்போது அடையும் பெரும்பயன் ஆகியவற்றை எண்ணிப் பார்த்துச் செய்க.", "en": "Discern a deed's outcome, obstacles and opulent earnings Successful effort affirms - then act." } }, { "chapter": "வினைசெயல்வகை", "kural": [ "செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை", "உள்ளறிவான் உள்ளம் கொளல்." ], "number": 677, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : செயலைச் செய்கின்றவன் செய்ய வேண்டிய முறை, அச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடையக் கருத்தைத் தான் ஏற்றுக் கொள்ளவதாகும்", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவன் அதைச் செய்யும் முறையாவது, அச்செயலை இதற்கு முன்பு செய்திருப்பவனின் கருத்தை அறிந்து கொள்வதேயாகும்.", "en": "The way to accomplish any task is to ascertain The inmost thoughts of an expert in that task." } }, { "chapter": "வினைசெயல்வகை", "kural": [ "வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்", "யானையால் யானையாத் தற்று." ], "number": 678, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒரு செயலைச் செய்யும் போது அச் செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒரு செயலைச் செய்யும்போதே இன்னொரு செயலையும் செய்து கொள்வது மதநீர் வழியும் யானையால் இன்னொரு யானையைப் பிடிப்பது போலாம்.", "en": "Just as one elephant may be used to tether another, So one task may be the means of accomplishing another." } }, { "chapter": "வினைசெயல்வகை", "kural": [ "நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே", "ஒட்டாரை ஒட்டிக் கொளல்." ], "number": 679, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பகைவராக உள்ளவரைப் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளல், நண்பர்க்கு உதவியானவற்றை செய்தலைவிட விரைந்து செய்யத்தக்கதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒரு செயலைச் செய்யும்போது நண்பர்களுக்கு நல்லது செய்வதைக் காட்டிலும் தன் பகைவர்களோடு நட்புக் கொள்வது விரைந்து செய்யப்படவேண்டியது.", "en": "Rather than bestow kind favors on friends, Hasten to befriend your unkind enemies." } }, { "chapter": "வினைசெயல்வகை", "kural": [ "உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்", "கொள்வர் பெரியார்ப் பணிந்து." ], "number": 680, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வலிமை குறைந்தவர், தம்மை சார்ந்துள்ளவர் நடுங்குவதற்காக தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்ககுமானால் வலிமைமிக்கவரைப் பணிந்தும் ஏற்றுக் கொள்வர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சிறிய இடத்தில் வாழ்பவர், தம்மிலும் பெரியவர் எதிர்த்து வரும்போது அவரைக் கண்டு தம்மவர் நடுங்குவதற்கு அஞ்சி அப்பெரியவரைப் பணிந்து ஏற்றுக் கொள்வர்.", "en": "Fearing their people's inner apprehensions, Men of minor realms bow before mightier rulers, accepting terms." } }, { "chapter": "தூது", "kural": [ "அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்", "பண்புடைமை தூதுரைப்பான் பண்பு." ], "number": 681, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நாட்டு மக்கள், அரசு, உறவு இவற்றின் மீது அன்பும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், அரசு விரும்பும் பண்பும் கொண்டிருப்பவரே தூதர்.", "en": "The qualification of an ambassador are affection (for his relations) a fitting birth, and the possession of attributes pleasing to royalty." } }, { "chapter": "தூது", "kural": [ "அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு", "இன்றி யமையாத மூன்று." ], "number": 682, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அன்பு நாட்டிற்கு நல்லது அறியும் அறிவு, அடுத்தவரிடம் பேசும்போது தேர்ந்து எண்ணிச் சொல்லும் சொல்லாற்றல் இவை மூன்றும் தூதர்க்கு இன்றியமையாதன.", "en": "Love (to his sovereign), knowledge (of his afairs), and a discriminating power of speech (before other sovereigns) are the three sine qua non qualifications of an ambassador." } }, { "chapter": "தூது", "kural": [ "நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்", "வென்றி வினையுரைப்பான் பண்பு." ], "number": 683, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அனைத்து அரசியல் அறத்தை, நீதி நூல்களை அறிந்தவர்களுக்குள்ளே அதிகம் அறிந்தவனாய் ஆவது, ஆயுதபலம் கொண்ட பகை அரசரிடையே, தன் நாட்டுக்கு நலம் தேடிச் செல்லும் தூதரின் பண்பாகும்.", "en": "To be powerful in politics among those who are learned (in ethics) is the character of him who speaks to lance-bearing kings on matters of triumph (to his own sovereign)." } }, { "chapter": "தூது", "kural": [ "அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்", "செறிவுடையான் செல்க வினைக்கு." ], "number": 684, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இயற்கை அறிவு, விரும்பத்தக்கத் தோற்றம், ஆராய்ச்சி உடையக் கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இயல்பான நல்லறிவு, காண்பவர் விரும்பும் தோற்றம், பலரோடும் பலகாலமும் ஆராய்ந்த கல்வி இம்மூன்றையும் நிறையப் பெற்றுச் சொல்ல வேண்டியதைத் தானே எண்ணிச் சொல்லும் திறம் படைத்தவன் தூதர் பணிக்குச் செல்க.", "en": "He may go on a mission (to foreign rulers) who has combined in him all these three. viz., (natural) sense, an attractive bearing and well-tried learning." } }, { "chapter": "தூது", "kural": [ "தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி", "நன்றி பயப்பதாந் தூது." ], "number": 685, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பலவற்றைத் தொகுத்து சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அடுத்த அரசிடம் சொல்லவேண்டியவற்றைத் தொகுத்துச் சொல்லியும், வெறுப்பு ஊட்டக் கூடியவற்றை விலக்கியும், இனிய சொற்களால் மனம் மகிழக் கூறியும், தம் சொந்த நாட்டிற்கு நன்மையைத் தேடி தரவேண்டியது தூதரின் பண்பாகும்.", "en": "He is an ambassador who (in the presence of foreign rulers) speaks briefly, avoids harshness, talks so as to make them smile, and thus brings good (to his own sovereign)." } }, { "chapter": "தூது", "kural": [ "கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்", "தக்கது அறிவதாம் தூது." ], "number": 686, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல் கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்திற்க்குப் பொருத்தமானதை அறிகின்றவனே தூதன்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அனைத்து நூல்களையும் கற்றதோடு மட்டும் அல்லாமல், பகை அரசு மனங்கொள்ளுமாறு அவற்றைச் சொல்லவும், ஏற்காதவர் சினந்தால் அவர் பார்வைக்கு அஞ்சாமல், ஏற்பச் செய்யத் தக்க தந்திரவழியை அறிவதும் தூதரின் பண்பாகும்.", "en": "He is an ambassador who having studied (politics) talks impressively, is not afraid of angry looks, and knows (to employ) the art suited to the time." } }, { "chapter": "தூது", "kural": [ "கடனறிந்து காலங் கருதி இடனறிந்து", "எண்ணி உரைப்பான் தலை." ], "number": 687, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து , அதை செய்வதற்கு ஏற்றக்காலத்தை எதிர்நோக்கி தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தம் நாட்டிற்காக அடுத்த அரசிடம் தாம் ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, சொல்ல வேண்டியதை முன்னதாகவே மனத்துள் திட்டமிட்டு, ஏற்ற நேரம் பார்த்துக் கடமையைச் செய்வதற்குப் பொருத்தமான இடத்தையும் கண்டு சொல்பவனே தூதருள் தலைமையானவன்.", "en": "He is chief (among ambassadors) who understands the proper decorum (before foreign princes), seeks the (proper) occasion, knows the (most suitable) place, and delivers his message after (due) consideration." } }, { "chapter": "தூது", "kural": [ "தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்", "வாய்மை வழியுரைப்பான் பண்பு." ], "number": 688, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பணத்தின் மீதும் அயல் பெண்கள் மீதும் ஆசை இல்லாமல் இருக்கும் நேர்மை, அடுத்த அரசின் அமைச்சர்களின் துணை, நல்லனவே எண்ணிச் செய்யும் துணிவு இம் மூன்றையும் உண்மையாகவே பெற்றிருப்பதே கூறியது கூறும் தூதரின் பண்பு.", "en": "The qualifications of him who faithfully delivers his (sovereign’s) message are purity, the support (of foreign ministers), and boldness, with truthfulness in addition to the (aforesaid) three." } }, { "chapter": "தூது", "kural": [ "விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்", "வாய்சேரா வன்கணவன்." ], "number": 689, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : குற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தம் அரசு சொல்லிவிட்ட செய்தியை அடுத்த அரசிடம் சொல்பவன், அங்கே சந்திக்க நேரும் ஆபத்திற்கு அஞ்சி, வாய் தவறியும் தவறான செய்தியையோ, இழிவான சொற்களையோ சொல்லிவிடாத ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும்.", "en": "He alone is fit to communicate (his sovereign’s) reply, who possesses the firmness not to utter even inadvertently what may reflect discredit (on the latter)." } }, { "chapter": "தூது", "kural": [ "இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற் கு", "உறுதி பயப்பதாம் தூது." ], "number": 690, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும் அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித்தருபவரே நல்ல தூதர்.", "en": "He is the ambassador who fearlessly seeks his sovereign’s good though it should cost him his life (to deliver his message)." } }, { "chapter": "மன்னரைச் சேர்ந்தொழுகல்", "kural": [ "அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க", "இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்." ], "number": 691, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர் போல இருக்க வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனம் மாறுபடும் இயல்புடைய ஆட்சியாளரைச் சார்ந்து பழகுவோர், அவரிடம் கிட்ட நெருங்காமலும் விட்டு விலகாமலும் இடைநிலை நின்று பழகுக.", "en": "Ministers who serve under fickle-minded monarchs should, like those who warm themselves at the fire, be neither (too) far, nor (too) near." } }, { "chapter": "மன்னரைச் சேர்ந்தொழுகல்", "kural": [ "மன்னர் விழைப விழையாமை மன்னரால்", "மன்னிய ஆக்கந் தரும்." ], "number": 692, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அரசர் விரும்புகின்றவர்களைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஆட்சியாளருடன் பழகுபவர் ஆட்சியாளர் எவற்றை விரும்புகிறாரோ அவற்றை விரும்பாமல் இருப்பது, அவருக்கு ஆட்சியாளரால் நிலைத்த செல்வத்தைக் கொடுக்கும்.", "en": "For ministers not to cover the things desired by their kings will through the kings themselves yield them everlasting wealth." } }, { "chapter": "மன்னரைச் சேர்ந்தொழுகல்", "kural": [ "போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்", "தேற்றுதல் யார்க்கும் அரிது." ], "number": 693, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : .( அரசரைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால் அரியத் தவறுகள் நேராமல் காத்துக்கொள்ள வேண்டும், ஐயுற்றபின் அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் முடியாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஆட்சியாளருடன் பழகுவோர் தம்மைக் காக்கக் கருதினால் மோசமான பிழைகள் தம் பங்கில் நேர்ந்து விடாமல் காக்க; பிழைகள் நேர்ந்துவிட்டதாக ஆட்சியாளர் சந்தேகப் பட்டுவிட்டால் அவரைத் தெளிவிப்பது எவர்க்கும் கடினம்.", "en": "Ministers who would save themselves should avoid (the commission of) serious errors for if the king’s suspicion is once roused, no one can remove it." } }, { "chapter": "மன்னரைச் சேர்ந்தொழுகல்", "kural": [ "செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்", "ஆன்ற பெரியா ரகத்து." ], "number": 694, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வல்லமை அமைந்த பெரியாரிடத்தில் (மற்றொருவன்) செவியை நெருங்கிச் சொல்லுதல் உடன் சேர்ந்து நகைத்தலும் செய்யாமல் ஒழுகவேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மேன்மை மிக்க பெரியவர் அருகே இருக்கும்போது, பிறருடன் காதருகே மெல்லப் பேசுவதையும் அடுத்தவர் முகம் பார்த்துக் கண்சிமிட்டிச் சிரிப்பதையும் செய்யாது நடந்துகொள்க.", "en": "While in the presence of the sovereign, ministers should neither whisper to nor smile at others." } }, { "chapter": "மன்னரைச் சேர்ந்தொழுகல்", "kural": [ "எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை", "விட்டக்கால் கேட்க மறை." ], "number": 695, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : (அரசர் மறைபொருள் பேசும் போது) எப்பொருளையும் உற்றுக் கேட்காமல் தொடர்ந்து வினவாமல் அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஆட்சியாளர் பிறருடன் ரகசியம் பேசம்போது காதுகொடுத்துக் கேட்காதே; என்ன பேச்சு என்று நீயாகக் கேளாதே; அதைப் பற்றி ஆட்சியாளரே சொன்னால் கேட்டுக் கொள்க.", "en": "(When the king is engaged) in secret counsel (with others), ministers should neither over-hear anything whatever nor pry into it with inquisitive questions, but (wait to) listen when it is divulged (by the king himself)." } }, { "chapter": "மன்னரைச் சேர்ந்தொழுகல்", "kural": [ "குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில", "வேண்டுப வேட்பச் சொலல்." ], "number": 696, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அரசருடையக் குறிப்பை அறிந்து தக்கக் காலத்தை எதிர்நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறுச் சொல்ல வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஆட்சியாளருக்கு எதையேனும் சொல்ல விரும்பினால், ஆட்சியாளரின் அப்போதைய மனநிலையை அறிந்து தான் சொல்லக் கருதிய செய்திக்கு ஏற்ற சமயத்தையும் எண்ணி ஆட்சியாளருக்கு வெறுப்புத் தராததும், வேண்டியதும் ஆகிய காரியத்தை அவர் விரும்புமாறு சொல்லுக.", "en": "Knowing the (king’s disposition and seeking the right time, (the minister) should in a pleasing manner suggest things such as are desirable and not disagreeable." } }, { "chapter": "மன்னரைச் சேர்ந்தொழுகல்", "kural": [ "வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்", "கேட்பினும் சொல்லா விடல்." ], "number": 697, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்ட போதிலும் சொல்லாமல் விட வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஆட்சியாளருக்குப் பயன்தரும் செய்திகளை அவர் கேட்காத போதும் சொல்லுக; பயன் தராத செய்திகளை எப்போதும் சொல்லாது விடுக.", "en": "Ministers should (always) give agreeable advice but on no occasion recommend useless actions, though requested (to do so)." } }, { "chapter": "மன்னரைச் சேர்ந்தொழுகல்", "kural": [ "இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற", "ஒளியோடு ஒழுகப் படும்." ], "number": 698, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : (அரசரை) எமக்கு இளையவர், எமக்கு இன்ன முறை உடையவர் என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஆட்சியாளருடன் பழகும்போது இவர் என்னைக் காட்டிலும் வயதில் சிறியவர்; இவர் உறவால் எனக்கு இன்ன முறை வேண்டும் என்று எண்ணாமல், ஆட்சியாளர் இருக்கும் பதவியை எண்ணி அவருடன் பழகுக.", "en": "Ministers should behave in accordance with the (Divine) light in the person of kings and not despise them saying, “He is our junior (in age) and connected with our family!”." } }, { "chapter": "மன்னரைச் சேர்ந்தொழுகல்", "kural": [ "கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்", "துளக்கற்ற காட்சி யவர்." ], "number": 699, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர் யாம் அரசரால் விரும்பப்பட்டோம் என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சலனம் அற்ற அறிவை உடையவர்கள், தாம் ஆட்சியாளரால் மிகவும் மரியாதைக்கு உரியவர்கள் என்று எண்ணி, ஆட்சியாளர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.", "en": "Those whose judgement is firm will not do what is disagreeable (to the sovereign) saying (within themselves) “We are esteemed by the king “." } }, { "chapter": "மன்னரைச் சேர்ந்தொழுகல்", "kural": [ "பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்", "கெழுதகைமை கேடு தரும்." ], "number": 700, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : யாம் அரசர்க்கு பழைமையானவராய் உள்ளோம் எனக்கருதித் தகுதி அல்லாதவற்றைச் செய்யும் உரிமை கேட்டைத்தரும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஆட்சியாளருடன் நமக்கு நீண்ட நாள் பழக்கம் உண்டு என்று எண்ணித் தீய செயல்களைச் செய்யும் மனஉரிமை ஒருவருக்குக் கெடுதியையே தரும்.", "en": "The (foolish) claim with which a minister does unbecoming acts because of his (long) familiarity (with the king) will ensure his ruin." } }, { "chapter": "குறிப்பறிதல்", "kural": [ "கூறாமை நோக்க஧க் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்", "மாறாநீர் வையக் கணி." ], "number": 701, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர் கருதிய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்திற்க்கு ஓர் அணிகலன் ஆவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவன் வாயால் சொல்லாமல் இருக்க, அவனுடைய முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவன் மனக்கருத்தை அறிந்து கொள்பவன், எப்போதும் வற்றாத கடலால் வளைக்கப்பட்ட இவ்வுலகத்தவர்க்கு ஆபரணம் போன்றவன்.", "en": "The minister who by looking (at the king) understands his mind without being told (of it), will be a perpetual ornament to the world which is surrounded by a never-drying sea." } }, { "chapter": "குறிப்பறிதல்", "kural": [ "ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்", "தெய்வத்தோ டொப்பக் கொளல்." ], "number": 702, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத் தோடு ஒப்பாக கொள்ள வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அடுத்தவனின் மனக்கருத்தைச் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கண்டுகொள்ளும் ஆற்றல் உள்ளவனைத் தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டும்.", "en": "He is to be esteemed a god who is able to ascertain without a doubt what is within (one’s mind)." } }, { "chapter": "குறிப்பறிதல்", "kural": [ "குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்", "யாது கொடுத்தும் கொளல்." ], "number": 703, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : (முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ள குறிப்பை உணர வல்லவரை நாட்டின் உறுப்புக்களுள் எதைக் கொடுத்தாவது துணையாக பெற்றுக்கொள்ள வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தான் குறிப்புச் செய்ய, அதைக் கண்டு பிறர் முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவர் மனக்கருத்தைக் கண்டு சொல்லும் திறம் மிக்கவரைத் தன்னிடம் இருக்கும் செல்வங்களுள் எதைக் கொடுத்தேனும் துணையாக வைத்துக் கொள்ள வேண்டும்.", "en": "The king should ever give whatever (is asked) of his belongings and secure him who, by the indications (of his own mind) is able to read those of another." } }, { "chapter": "குறிப்பறிதல்", "kural": [ "குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை", "உறுப்போ ரனையரால் வேறு." ], "number": 704, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் மனதில் கருதியதை அவன் கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர் ஆவார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவன் மனத்துள் நினைப்பதை அவன் சொல்லாமலேயே அறியம் ஆற்றல் உடையவரோடு அந்த ஆற்றல் இல்லாதவர் உறுப்பால் ஒத்தவர்; அறிவால் வேறுபட்டவர் ஆவார்.", "en": "Those who understand one’s thoughts without being informed (thereof) and those who do not, may (indeed) resemble one another bodily; still are they different (mentally)." } }, { "chapter": "குறிப்பறிதல்", "kural": [ "குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்", "என்ன பயத்தவோ கண்?" ], "number": 705, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : (முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக்குறிப்பை உணராவிட்டால், ஒருவனுடைய உறுப்புகளுள் கண்கள் என்னப் பயன்படும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவன் குறிப்பைக் கண்ட பின்பும் அவன் மனக்கருத்தை அறியமுடியவில்லை என்றால், உறுப்புகளுள் சிறந்த கண்களால் என்ன நன்மை?", "en": "Of what use are the eyes amongst one’s members, if they cannot by their own indications dive those of another ?." } }, { "chapter": "குறிப்பறிதல்", "kural": [ "அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்", "கடுத்தது காட்டும் முகம்." ], "number": 706, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தன்னை அடுத்தப் பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல், ஒருவனுடைய நெஞ்சில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன் அருகே இருக்கும் பொருளின் நிறத்தைக் காட்டும் பளிங்கினைப்போல் ஒருவனது மனத்தே நிகழ்வதை அவன் முகம் காட்டும்.", "en": "As the mirror reflects what is near so does the face show what is uppermost in the mind." } }, { "chapter": "குறிப்பறிதல்", "kural": [ "முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்", "காயினும் தான்முந் துறும்." ], "number": 707, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் விருப்பம் கொண்டாலும், வெறுப்புக் கொண்டாலும் அவனுடைய முகம் முற்ப்பட்டு அதைத் தெரிவிக்கும், அம் முகத்தைவிட அறிவு மிக்கது உண்டோ.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவன் மனத்தால் விரும்பினாலும் வெறுத்தாலும் அதை வெளிக்காட்டுவதில் முந்தி நிற்கும் முகத்தைக் காட்டிலும் அறிவு மிக்கது வேறு உண்டோ?", "en": "Is there anything so full of knowledge as the face ? (No.) it precedes the mind, whether (the latter is) pleased or vexed." } }, { "chapter": "குறிப்பறிதல்", "kural": [ "முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி", "உற்ற துணர்வார்ப் பெறின்." ], "number": 708, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உள்ளக் குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப் பெற்றால், (அவரிடம் எதையும் கூறாமல்) அவறுடைய முகத்தை நோக்கி நின்றால் போதும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன் மனத்தைக் குறிப்பால் அறிந்து தான் எண்ணியதை அறிபவரைத் துணையாகப் பெற்றால், அவர்களின் முகத்தை அவன் பார்த்து நின்றாலே போதும்.", "en": "If the king gets those who by looking into his mind can understand (and remove) what has occurred (to him) it is enough that he stand looking at their face." } }, { "chapter": "குறிப்பறிதல்", "kural": [ "பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்", "வகைமை உணர்வார்ப் பெறின்." ], "number": 709, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கண்பார்வையின் வேறுபாடுகளை உணரவல்லவரைப் பெற்றால்( ஒருவனுடைய மனதில் உள்ள) கையையும் நட்பையும் அவனுடைய கண்களே சொல்லி விடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அடுத்தவர்களின் பார்வை வேறுபடுவதைக் கொண்டே அவர்தம் மனக்கருத்தை அறியும் ஆற்றல் உடையவர்க்கு, பகைமையையும் நட்பையும் அவர்கள் சொல்லவில்லை என்றாலும் அவர்தம் கண்களே சொல்லிவிடும்.", "en": "If a king gets ministers who can read the movements of the eye, the eyes (of foreign kings) will (themselves) reveal (to him) their hatred or friendship." } }, { "chapter": "குறிப்பறிதல்", "kural": [ "நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்", "கண்ணல்லது இல்லை பிற." ], "number": 710, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : யாம் நுட்பமான அறிவுடையேம் என்று பிறர் கருத்தை அறிபவரின் அளக்குங்கோல், ஆராய்ந்து பார்த்தால் அவனுடையக் கண்களே அல்லாமல் வேறு இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நாங்கள் நுண் அறிவை உடையவர்கள் என்று கூறிக்கொள்பவர், பிறர் மனக்கருத்தை அளந்து அறியப் பயன்படுத்தும் அளவு கருவி எது என்று ஆய்ந்து பார்த்தால் அது கண்ணே அன்றி வேறு இல்லை.", "en": "The measuring-rod of those (ministers) who say “we are acute” will on inquiry be found to be their (own) eyes and nothing else." } }, { "chapter": "அவை அறிதல்", "kural": [ "அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்", "தொகையறிந்த தூய்மை யவர்." ], "number": 711, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்றச் சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : செஞ்சொல் பொருள் வெளிப்படையான சொல் தாய் இலக்கணச் சொல்.(வெளிப்படையான பொருளை விட்டுவிட்டு வேறொன்றை உணர்த்தும் சொல் ஊர் தூங்குகிறது) குறிப்புச் சொல் வெளிப்படையான பொருளை விட்டுவிட்டுக் குறிப்பால் வேறொரு பொருள் தருவது பொன்காக்கும் பூதம் அவன்) ஆகிய சொற்களின் கூட்டத்தை அறிந்த மனத்தூய்மையை உடையவர். தமக்கும் மேலான கல்வியாளர் கூடியிருக்கும் அவை. சமமானவர் அவை. குறைவான கல்வியாளர் அவை என அவற்றின் தரம் அறிந்து அங்கே பேசும் திறத்தை ஆராய்ந்து பேசுக.", "en": "Let the pure who know the arrangement of words speak with deliberation after ascertaining (the nature of) the court (then assembled)." } }, { "chapter": "அவை அறிதல்", "kural": [ "இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்", "நடைதெரிந்த நன்மை யவர்." ], "number": 712, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சொற்களின் தன்மையை ஆராய்ந்த நன்மை உடையவர், அவையின் செவ்வியை ஆராய்ந்து நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மூவகைச் சொற்களும் பொருள் தரும் போக்கை நன்கு தெரிந்து கொண்ட நல்லறிவு படைத்தவர், சொற்குற்றமும் பொருட்குற்றமும் வந்துவிடாமல், கேட்போர் விரும்பிக் கேட்கும் நிலைமையையும் மிகத் தெளிவாக அறிந்து பேசுக.", "en": "Let the good who know the uses of words speak with a clear knowledge after ascertaining the time (suited to the court)." } }, { "chapter": "அவை அறிதல்", "kural": [ "அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்", "வகையறியார் வல்லதூஉம் இல்." ], "number": 713, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அவையின் தன்மை அறியாமல் சொல்லுதலை மேற்கொள்கின்றவர், சொற்களின் வகை அறியாதவரே, அவர் சொல்லவல்லதும் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தம் பேச்சைக் கேட்கும் சபையின் இயல்பை அறியாமல் தொடர்ந்து பேசத் தொடங்குபவர், சொற்களின் கூறம் தெரியாதவர்; சொல்லும் திறமும் இல்லாதவர்.", "en": "Those who undertake to speak without knowing the (nature of the) court are ignorant of the quality of words as well as devoid of the power (of learning)." } }, { "chapter": "அவை அறிதல்", "kural": [ "ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்", "வான்சுதை வண்ணம் கொளல்." ], "number": 714, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறிவிற் சிறந்தவரின் முன் தானும் அறிவிற் சிறந்தவராக நடந்து கொள்ள வேண்டும், அறிவில்லாதவர் முன் தாமும் வெண் கண்ணம் போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன்னிலும் மேலான தனக்குச் சமமான அறிஞர் கூடியுள்ள அவையில் தன் நூல் அறிவும் சொல்வன்மையும் வெளிப்படப் பேசுக; தன் அறிவிலும் குறைவான மக்கள் கூடியுள்ள அவையில் அவருக்கு விளங்கும்படி இறங்கிப் பேசுக.", "en": "Ministers should be lights in the assembly of the enlightned, but assume the pure whiteness of mortar (ignorance) in that of fools." } }, { "chapter": "அவை அறிதல்", "kural": [ "நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்", "முந்து கிளவாச் செறிவு." ], "number": 715, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறிவு மிகுந்தவரிடையே முந்திச் சென்று பேசாத அடக்கம் ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும நல்லது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன் அறிவினுக்கும் மேலான அறிஞர் கூடியுள்ள அவையில் அவர் பேசுவதற்கு முன்பாகப் பேசாமல் அடங்கி இருப்பது, நல்லது என்று சொல்லப்பட்ட குணங்களுள் எல்லாம் நல்லது.", "en": "The modesty by which one does not rush forward and speak in (an assembly of) superiors is the best among all (one’s) good qualities." } }, { "chapter": "அவை அறிதல்", "kural": [ "ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்", "ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு." ], "number": 716, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : விரிவான அறிவுத்துறைகளை அறிந்து உணர்கின்றவரின் முன்னே குற்றப்படுதல், ஒழுக்கநெறியிலிருந்து நிலைத் தளர்ந்து கெடுவதைப் போன்றதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பலதுறை நூல்பொருள்களைக் கேட்டு உணரும் திறம் மிக்கவர்முன்னே ஆற்றல்மிக்க பேச்சாளன் சொல்லால் சிறுமைப்படுவது மேலான நெறியிலிருந்து நிலைதவறி விழுவதைப் போல ஆகும்.", "en": "(For a minister) to blunder in the presence of those who have acquired a vast store of learning and know (the value thereof) is like a good man stumbling (and falling away) from the path (of virtue)." } }, { "chapter": "அவை அறிதல்", "kural": [ "கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்", "சொல்தெரிதல் வல்லார் அகத்து." ], "number": 717, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : குற்றமறச்சொற்களை ஆராயவதில் வ ல்ல அறிஞர்களிடத்தில் பல நூல்களைக் கற்றறிந்தவரின் கல்வியானது நன்றாக விளங்கித் தொன்றும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சொற்களைப் பிழை இல்லாமல் பொருள் அறியும் ஆற்றல் படைத்தவர் கூடிய அவையில் பேசும்போது, பலவகை நூல்களையும் கற்று, அவற்றின் சிறப்பை அறிந்த பேச்சாளரின் கல்வித்திறம் அனைவருக்கும் விளங்கும்.", "en": "The learning of those who have read and understood (much) will shine in the assembly of those who faultlessly examine (the nature of) words." } }, { "chapter": "அவை அறிதல்", "kural": [ "உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்", "பாத்தியுள் நீர்சொரிந் தற்று." ], "number": 718, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறர் சொல்லாமலேயே தாமே பலவற்றையும் அறிந்து கொள்ளும் அறிவுத் திறம் உடையவர் கூடியுள்ள அவையில் பேசுவது வளரும் பயிர் நிற்கும் பாத்தியில் நீரினைப் பாய்ச்சியது போலாம்.", "en": "Lecturing to those who have the ability to understand (for themselves) is like watering a bed of plants that are growing (of themselves)." } }, { "chapter": "அவை அறிதல்", "kural": [ "புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்", "நன்குசலச் சொல்லு வார்." ], "number": 719, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைப் மனதில் பதியுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக் கூடாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நல்லவர் கூடி இருந்த அவையில் நல்ல பொருள்களைக் கேட்பவர் மனம் ஏற்கப் பேசும் திறம் படைத்த பேச்சாளர், அவற்றை ஏற்கும் திறம் அற்ற சிறியோர் கூடி இருக்கும் அவையில் மறந்தும் பேச வேண்டா.", "en": "Those who are able to speak good things impressively in an assembly of the good should not even forgetfully speak them in that of the low" } }, { "chapter": "அவை அறிதல்", "kural": [ "அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்", "அல்லார்முன் கோட்டி கொளல்." ], "number": 720, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தன் இனத்தார் அல்லாதவரின் கூட்டத்தில் முன் ஒரு பொருளைப்பற்றி பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தமக்குச் சமம் அற்றவர் கூடியுள்ள அவையில் எதையும் பேச வேண்டா; பேசினால் அப்பேச்சு சாக்கடையுள் கொட்டிய அமிழ்தம் போல ஆகும்.", "en": "To utter (a good word) in the assembly of those who are of inferior rank is like dropping nectar on the ground." } }, { "chapter": "அவை அஞ்சாமை", "kural": [ "வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்", "தொகையறிந்த தூய்மை யவர்." ], "number": 721, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சொற்களின் தூய்மை தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவறின் அவையில் வாய்ச் சோர்ந்து பிழை சொல்லமாட்டார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சொல்லின்வகைகளை அறிந்துமனத்தால் சுத்தமானவர்கள், கற்றவர் அவை, கல்லாதவர் அவை என அறிந்து பேசும்போது, பயத்தால் சொல் குற்றப்படமாட்டார்கள்.", "en": "The pure who know the classification of words having first ascertained the nature (of the court) will not (through fear) falter in their speech before the powerful body." } }, { "chapter": "அவை அஞ்சாமை", "kural": [ "கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்", "கற்ற செலச்சொல்லு வார்." ], "number": 722, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கற்றவரின் முன் தாம் கற்றவைகளைச் அவருடைய மனதில் பதியுமாறுச் சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தாம் கற்றவற்றை எல்லாம் பயப்படாமல் கற்றவர் அவையில் அவர் மனம் கொள்ளச் சொல்லும் திறம் பெற்றவர், கற்றவர் எல்லாரிலும் நன்கு கற்றவர் என்று பலராலும் சொல்லப்படுவார்.", "en": "Those who can agreeably set forth their acquirements before the learned will be regarded as the most learned among the learned." } }, { "chapter": "அவை அஞ்சாமை", "kural": [ "பகையகத்துச் சாவார் எளியர் அரியர்", "அவையகத்து அஞ்சா தவர்." ], "number": 723, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர், கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பகைவர்களுக்கிடையே பயப்படாமல் புகுந்து சாவோர் பலர் உண்டு;பேசுவோர் சிலரேயாவார்.", "en": "Many indeed may (fearlessly) die in the presence of (their) foes; (but) few are those who are fearless in the assembly (of the learned)." } }, { "chapter": "அவை அஞ்சாமை", "kural": [ "கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற", "மிக்காருள் மிக்க கொளல்." ], "number": 724, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கற்றவரின் முன் தான் கற்றவைகளை அவருடைய மனதில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம்மிகுதியான கல்வியைக் அறிந்து கொள்ள வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பலதுறை நூல்களையும் கற்றவர் அவையில், அவர்கள் மனங் கொள்ளுமாறு, தான் கற்றவற்றை எல்லாம் சொல்லுக; தான் கற்றவற்றிற்கும் மேலானவற்றை மிகவும் கற்றவரிடமிருந்து அறிந்து கொள்க.", "en": "(Ministers) should agreeably set forth their acquirements before the learned and acquire more (know ledge) from their superiors (in learning)." } }, { "chapter": "அவை அஞ்சாமை", "kural": [ "ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா", "மாற்றங் கொடுத்தற் பொருட்டு." ], "number": 725, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடைகூறும் பொருட்டாக நூல்களைக் கற்க்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பெரியோர் அவையில் பயப்படாமல் பதில் சொல்வதற்கு, சொல்இலக்கண வழியில் பலவகைப் பிரமாணங்களைச் சொல்லும் தர்க்க சாஸ்திரத்தை விரும்பிக் கற்றுக் கொள்க.", "en": "In order to reply fearlessly before a foreign court, (ministers) should learn logic according to the rules (of grammar)." } }, { "chapter": "அவை அஞ்சாமை", "kural": [ "வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்", "நுண்ணவை அஞ்சு பவர்க்கு." ], "number": 726, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு, நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நெஞ்சுறுதி இல்லாதவர்க்கு வாளால் என்ன பயன்? அறிவுத்திறம் மிக்க அவைகண்டு பயப்படுபவர்க்குத் தர்க்க சாஸ்திர நூலால் பயன் என்ன?", "en": "What have they to do with a sword who are not valiant, or they with learning who are afraid of an intelligent assembly ?" } }, { "chapter": "அவை அஞ்சாமை", "kural": [ "பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து", "அஞ்சு மவன்கற்ற நூல்." ], "number": 727, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் உள்ள கூர்மையான வாள் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கற்றவர் கூடிய அவையில் பேசப் பயப்படுபவன் கற்ற நூல், பகைமுன்னே நடுங்கும் பேடியின் கையில் இருக்கும் வாளுக்குச் சமம்.", "en": "The learning of him who is diffident before an assembly is like the shining sword of an hermaphrodite in the presence of his foes." } }, { "chapter": "அவை அஞ்சாமை", "kural": [ "பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்", "நன்கு செலச்சொல்லா தார்." ], "number": 728, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நல்ல அறிஞரின் அவையில் நல்லப் பொருளைக் கேட்பவர் மனதில் பதியுமாறு சொல்ல முடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நல்லனவற்றை நல்லவர் கூடிய அவையில் அவர் மனங் கொள்ளச் சொல்லத் தெரியாதவர், பலதுறை நூல்களைக் கற்றிருந்தாலும் உலகிற்குப் பயன்படாதவரே.", "en": "Those who cannot agreeably speak good things before a good assembly are indeed unprofitable persons inspite of all their various acquirements." } }, { "chapter": "அவை அஞ்சாமை", "kural": [ "கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்", "நல்லா ரவையஞ்சு வார்." ], "number": 729, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நூல்களைக் கற்றிந்த போதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரை விடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நூல்களைக் கற்றும் அவற்றின் பயனை அறிந்தும், நல்லவர் கூடிய அவையைக் கண்டு பயந்து அங்கே செல்லாதவர், படிக்காதவரைவிடக் கீழானவர் என்று சொல்லுவர்.", "en": "They who, though they have learned and understood, are yet afraid of the assembly of the good, are said to be inferior (even) to the illiterate." } }, { "chapter": "அவை அஞ்சாமை", "kural": [ "உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்", "கற்ற செலச்சொல்லா தார்." ], "number": 730, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளைக் (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்ல முடியாதவர், உயிரோடு வாழ்ந்தலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அவையைப் பார்த்துப் பயந்து, படித்தவற்றை அவைக்கு ஏற்பச் சொல்லத் தெரியாதவர், வாழ்ந்தாலும் வாழாதவர்க்குச் சமமே.", "en": "Those who through fear of the assembly are unable to set forth theirlearning in an interesting manner, though alive, are yet like the dead." } }, { "chapter": "நாடு", "kural": [ "தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்", "செல்வரும் சேர்வது நாடு." ], "number": 731, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : குறையாத உற்பத்தியைத் தரும் உழைப்பாளர்களும், அற உணர்வு உடையவர்களும், சுயநலம் இல்லாத செல்வரும் சேர்ந்து வாழ்வதே நாடு.", "en": "A kingdom is that in which (those who carry on) a complete cultivation, virtuous persons, and merchants with inexhaustible wealth, dwell together." } }, { "chapter": "நாடு", "kural": [ "பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்", "ஆற்ற விளைவது நாடு." ], "number": 732, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மிகுந்த பொருளை உடையது; அதனால் அயல்நாட்டாரால் விரும்பப்படுவது; பெரும் மழை, கடும் வெயில், கொடு விலங்கு, தீய பறவைகள், முறையற்ற அரசு ஆகிய கேடுகள் இல்லாதது; அதிக விளைச்சலை உடையது; இதுவே நாடு.", "en": "A kingdom is that which is desire for its immense wealth, and which grows greatly in prosperity, being free from destructive causes." } }, { "chapter": "நாடு", "kural": [ "பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு", "இறையொருங்கு நேர்வது நாடு." ], "number": 733, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : (மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால்) சுமை ஒரு சேரத் தன் மேல் வரும் போது தாங்கி, அரசனுக்கு இறைபொருள் முழுதும் தர வல்லது நாடாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : போர், இயற்கை அழிவு ஆகியவற்றால் மக்கள் பிற நாடுகளில் இருந்து வந்தால் அந்த பாரத்தையும் தாங்கும்; தன் அரசிற்குத் தான் தரவேண்டிய வரியையும் மகிழ்வோடு தரும்; இதுவே நாடு.", "en": "A kingdom is that which can bear any burden that may be pressed on it (from adjoining kingdoms) and (yet) pay the full tribute to its sovereign." } }, { "chapter": "நாடு", "kural": [ "உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்", "சேரா தியல்வது நாடு." ], "number": 734, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு.", "en": "A kingdom is that which continues to be free from excessive starvation, irremediable epidemics, and destructive foes." } }, { "chapter": "நாடு", "kural": [ "பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்", "கொல்குறும்பும் இல்லது நாடு." ], "number": 735, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பல வகை மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சாதி, சமய, அரசியல், கருத்து முரண்பாடுகளால் வளரும் பல்வேறு குழுக்கள், கூட இருந்தே குழி பறிக்கும் சொந்தக் கட்சியினர், அரசை நெரக்கடிக்கு உள்ளாக்கும் சிறு கலகக்காரர்கள் (ரௌடிகள், தாதாக்கள், வட்டாரப் போக்கிரிகள்) ஆகியோர் இல்லாது இருப்பதே நாடு.", "en": "A kingdom is that which is without various (irregular) associations, destructive internal enemies, and murderous savages who (sometimes) harass the sovereign." } }, { "chapter": "நாடு", "kural": [ "கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா", "நாடென்ப நாட்டின் தலை." ], "number": 736, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பகைவரால் கெடுக்கப் படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலைமையானது என்று கூறுவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பகைவரால் கெடுதலை அறியாததாய், அறிந்தாலும் வளம் தருவதில் குறையாததாய் இருப்பதையே நாடுகளில் சிறந்தது என்று அறிந்தோர் கூறுவர்.", "en": "The learned say that the best kingdom is that which knows no evil (from its foes), and, if injured (at all), sufers no diminution in its fruitfulness." } }, { "chapter": "நாடு", "kural": [ "இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்", "வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு." ], "number": 737, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஆற்றுநீரும், ஊற்றுநீரும் உயரமும் அகலமும் உடைய வாய்ப்பான மலையும், மழை நீரும், அழிக்க முடியாத கோட்டையும் நாட்டிற்குத் தேவையான உறுப்புகளாம்.", "en": "The constituents of a kingdom are the two waters (from above and below), well situated hills and an undestructible fort." } }, { "chapter": "நாடு", "kural": [ "பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்", "அணியென்ப நாட்டிவ் வைந்து." ], "number": 738, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நோய் இல்லாமை, செல்வம், விளைச்சல், மகிழ்ச்சி, நல்ல காவல் இவை ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு என்று நூலோர் கூறுவர்.", "en": "Freedom from epidemics, wealth, produce, happiness and protection (to subjects); these five, the learned, say, are the ornaments of a kingdom." } }, { "chapter": "நாடு", "kural": [ "நாடென்ப நாடா வளத்தன நாடல்ல", "நாட வளந்தரு நாடு." ], "number": 739, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன் மக்கள் சிரமப்படாமல் இருக்க அதிக உற்பத்தியைத் தருவதே நாடு என்று நூலோர் கூறுவர்; தேடிவருந்திப் பெறும் நிலையில் இருப்பது நாடு அன்று.", "en": "The learned say that those are kingdom whose wealth is not laboured for, and those not, whose wealth is only obtained through labour." } }, { "chapter": "நாடு", "kural": [ "ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே", "வேந்தமை வில்லாத நாடு." ], "number": 740, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள் எல்லாம் அமைதிருந்த போதிலும் அவற்றால் பயன் இல்லாமல் போகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மேலே சொல்லப்பட்ட எல்லாம் இருந்தாலும் குடிமக்கள் மீது அன்பு இல்லாத அரசு அமைந்துவிட்டால் அதனால் ஒரு நன்மையும் இல்லை.", "en": "Although in possession of all the above mentioned excellences, these are indeed of no use to a country, in the absence of harmony between the sovereign and the sujects." } }, { "chapter": "அரண்", "kural": [ "ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்", "போற்று பவர்க்கும் பொருள்." ], "number": 741, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : (படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னை புகழிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறர்மேல் படை எடுத்துச் செல்பவர்க்கும் சிறந்தது அரண்; பிறருக்குப் பயந்து உள்ளிருப்பவர்க்கும் அதுவே சிறந்தது.", "en": "A fort is an object of importance to those who march (against their foes) as well as to those who through fear (of pursuers) would seek it for shelter." } }, { "chapter": "அரண்", "kural": [ "மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்", "காடும் உடைய தரண்." ], "number": 742, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தெளிந்த நீர், வெட்ட வெளியான நிலம், உயர்ந்த மலை, அடர்ந்த காடு என்னும் இவையே நீர் அரண், நில அரண், மலை அரண், காட்டு அரண் என இயற்கை அரண்களாகும்.", "en": "A fort is that which has everlasting water, plains, mountains and cool shady forests." } }, { "chapter": "அரண்", "kural": [ "உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்", "அமைவரண் என்றுரைக்கும் நூல்." ], "number": 743, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பகைவர் ஏற முடியாத உயரம், காவலர் நிற்க இயங்க வசதியான அகலம், இடிக்கமுடியாத வலிமை, கடக்க முடியாத பொறிகளின் அருமை, இந்நான்கையும் மிகுதியாக உடைய கோட்டையையே செயற்கை அரண் என்று நூல்கள் கூறும்.", "en": "The learned say that a fortress is an enclosure having these four (qualities) viz., height, breadth, strength and inaccessibility." } }, { "chapter": "அரண்", "kural": [ "சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை", "ஊக்கம் அழிப்ப தரண்." ], "number": 744, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காக்க வேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்துவந்த பகைவரிருடைய ஊக்கத்தை அழிக்க வல்லது அரண் ஆகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : காவல் செய்யவேண்டிய இடம் சிறியதாயும், கோட்டையின் சுற்றுப் பெரியதாயும், சண்டையிட வரும் பகைவர்க்கு மலைப்பைத் தருவதாயும் அமைவது அரண்.", "en": "A fort is that which has an extensive space within, but only small places to be guarded, and such as can destroy the courage of besieging foes." } }, { "chapter": "அரண்", "kural": [ "கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்", "நிலைக்கெளிதாம் நீரது அரண்." ], "number": 745, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பகைவரால் கைப்பற்ற முடியாததாய், தன்னிடம் உணவுபொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதர்க்கு எளிதாகிய தன்மை உடையது அரண்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பலநாள் முற்றுகையிட்டாலும் பகைவரால் கைப்பற்ற முடியாதது ஆகி, உள்ளிருப்பார்க்கு வேண்டிய உணவையும் உடையதாய் உள்ளிருப்போர் போரிட வாய்ப்பாகவும் இருப்பதே அரண்.", "en": "A fort is that which cannot be captured, which abounds in suitable provisions, and afords a position of easy defence to its inmates." } }, { "chapter": "அரண்", "kural": [ "எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்", "நல்லாள் உடையது அரண்." ], "number": 746, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தன்னிடம் (உள்ளவர்க்கு) எல்லாப் பொருளும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல விரர்களை உடையது அரண் ஆகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உள்ளிருப்போர்க்குத் தேவையான பொருள் எல்லாம் இருப்பதாய், வெளியே இருந்து அழிக்க முயலும் பகைவரை வெல்ல உதவும் வீரரைப் பெற்றதாய் இருப்பதே அரண்.", "en": "A fort is that which has all (needful) things, and excellent heroes that can help it against destruction (by foes)." } }, { "chapter": "அரண்", "kural": [ "முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்", "பற்றற் கரியது அரண்." ], "number": 747, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : முற்றுகையிட்டும் முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : முழுவதுமாகச் சூழ்ந்து கொண்டாலும் சூழாமல் வலு இழந்த இடத்தில் நெருங்கிப் போரிட்டாலும் உள்ளிருப்போரில் சிலரை ஐந்தாம் படை ஆக்கினாலும், பகைவரால் கைப்பற்றுவதற்கு அரியதே அரண்.", "en": "A fort is that which cannot be captured by blockading, assaulting, or undermining it." } }, { "chapter": "அரண்", "kural": [ "முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்", "பற்றியார் வெல்வது அரண்." ], "number": 748, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : முற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும், (உள்ளிருந்தவர் பற்றிய) பற்றை விடாமலிருந்து வெல்வதற்கு உரியது அரண் ஆகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கோட்டைக்குள் இருப்போர் தாம் இருக்கும். இடத்தை விட்டுவிடாமல் நின்று படைமிகுதியால் சூழ்ந்து கொண்ட பகைவரையும் பொருது, வெல்வதே அரண்.", "en": "That is a fort whose inmates are able to overcome without losing their ground, even abler men who have besieged it." } }, { "chapter": "அரண்", "kural": [ "முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து", "வீறெய்தி மாண்ட தரண்." ], "number": 749, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : போர் முனையில் பகைவர் அழியும் படியாக (உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமைப் பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : போர் தொடங்கிய உடனே பகைவர் அழியும்படி உள்ளிருப்போர் செய்யும் போர்த்திறத்தால் சிறந்த விளங்குவதே அரண்.", "en": "A fort is that which derives excellence from the stratagems made (by its inmates) to defeat their enemies in the battlefield." } }, { "chapter": "அரண்", "kural": [ "எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி", "இல்லார்கண் இல்லது அரண்." ], "number": 750, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எத்தகைய பெருமையை உடையதாக இருந்த போதிலும், செயல்வகையால் சிறப்பு இல்லாதவரரிடத்தில் அரண் பயனில்லாததாகும். பொருள் செயல்வகை", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எத்தனை சிறப்புகளை உடையது என்றாலும் வெல்லும் பகை அறிந்து செயல்படும் திறம் இல்லாதவர் இருந்தால், அரண் இருந்தும் இல்லாததே ஆகும்.", "en": "Although a fort may possess all (the above-said) excellence, it is, as it were without these, if its inmates possess not the excellence of action." } }, { "chapter": "பொருள் செயல் வகை", "kural": [ "பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்", "பொருளல்லது இல்லை பொருள்." ], "number": 751, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தகுதி அற்றவரையும்கூடத் தகுதி உடையவராக ஆக்கிவிடும் தகுதி உடையது, பணமே அன்றி வேறொன்றும் இல்லை.", "en": "Besides wealth there is nothing that can change people of no importance into those of (some) importance." } }, { "chapter": "பொருள் செயல் வகை", "kural": [ "இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை", "எல்லாரும் செய்வர் சிறப்பு." ], "number": 752, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வார், செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்பு செய்வர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பணம் இல்லாதவரை எல்லாரும் இகழ்வர். செல்வரையோ எல்லாரும் பெருமைப்படுத்துவர்.", "en": "All despise the poor; (but) all praise the rich." } }, { "chapter": "பொருள் செயல் வகை", "kural": [ "பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்", "எண்ணிய தேயத்துச் சென்று." ], "number": 753, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தா விளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பணம் எனப்படும் அணையா விளக்கு அயல்நாட்டிற்குள்ளும் சென்று பகையாகிய இருளைப் போக்கும்.", "en": "The imperishable light of wealth goes into regions desired (by its owner) and destroys the darkness (of enmity therein)." } }, { "chapter": "பொருள் செயல் வகை", "kural": [ "அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து", "தீதின்றி வந்த பொருள்." ], "number": 754, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நேரிய வழிகை அறிந்து, தீமை ஏதும் செய்யாமல் சம்பாதிக்கப்பட்ட பணம் அறத்தையும் தரம்; இன்பத்தையும் தரும்.", "en": "The wealth acquired with a knowledge of the proper means and without foul practices will yield virtue and happiness." } }, { "chapter": "பொருள் செயல் வகை", "kural": [ "அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்", "புல்லார் புரள விடல்." ], "number": 755, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறர்மீது இரக்கமும் அன்பும் இல்லாமல் சேர்க்கும் பணச் சேமிப்பை ஏற்காது விட்டு விடுக", "en": "(Kings) should rather avoid than seek the accumulation of wealth which does not flow in with mercy and love." } }, { "chapter": "பொருள் செயல் வகை", "kural": [ "உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்", "தெறுபொருளும் வேந்தன் பொருள்." ], "number": 756, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும் பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : வாரிசுதாரர் இல்லாமல் வந்த பொருள் வெளிநாட்டு பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி தன் பகைவர் தனக்குக் கட்டும் கப்பம் என்னும் இவை எல்லாம் அரசிற்கு உரிய பொருள்களாம்.", "en": "Unclaimed wealth, wealth acquired by taxes, and wealth (got) by conquest of foes are (all) the wealth of the king." } }, { "chapter": "பொருள் செயல் வகை", "kural": [ "அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்", "செல்வச் செவிலியால் உண்டு." ], "number": 757, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அன்பினால் பெறப்பட்ட அருள் என்றுக் கூறப்படும் குழந்தை, பொருள் என்றுக் கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அன்பு பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தை, பொருள் எனப்படும் இன்பம் தரும் வளர்ப்புத் தாயால் வளரும்.", "en": "The child mercy which is borne by love grows under the care of the rich nurse of wealth." } }, { "chapter": "பொருள் செயல் வகை", "kural": [ "குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்று", "உண்டாகச் செய்வான் வினை." ], "number": 758, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தால், மலையின் மேல் ஏறி யானைப் போரைக் கண்டாற் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன் கையிலே பணம் இருக்க ஒரு செயலைச் செய்யத் தொடங்குவது, ஒருவன் மலை மேல் ஏறி நின்று யானைச் சண்டையைக் கண்டது போலாம்.", "en": "An undertaking of one who has wealth in one’s hands is like viewing an elephant-fight from a hill-top." } }, { "chapter": "பொருள் செயல் வகை", "kural": [ "செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்", "எஃகதனிற் கூரிய தில்." ], "number": 759, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் பொருளை ஈட்டவேண்டும், அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்க வல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எதையும் சாதிக்க எண்ணுவோர் பணத்தைச் சம்பாதியுங்கள்; பகைவரின் அகங்காரத்தை அறுக்கும் கூரிய ஆயுதம், பணத்தைவிட வேறு இல்லை.", "en": "Accumulate wealth; it will destroy the arrogance of (your) foes; there is no weapon sharper than it." } }, { "chapter": "பொருள் செயல் வகை", "kural": [ "ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்", "ஏனை இரண்டும் ஒருங்கு." ], "number": 760, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு, மற்ற அறமும் இன்பமுமாகிய இரண்டும் ஒரு சேரக்கைகூடும் எளிய பொருளாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நல்ல வழியில் மிகுதியாகப் பணம் சேர்த்தவர்க்கு மற்ற அறமும் இன்பமும் எளிதாக் கிடைக்கும் பொருள்களாகும்.", "en": "To those who have honestly acquired an abundance of riches, the other two, (virtue and pleasure) are things easy (of acquisition)." } }, { "chapter": "படைமாட்சி", "kural": [ "உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்", "வெறுக்கையுள் எல்லாம் தலை." ], "number": 761, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை, அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தரைப்படை, கப்பல் படை, விமானப்படை, காவல்துறை என நாட்டைக் காப்போர் பிரிவினால் நிறைந்து, போர்க்களத்தில் புண்பட அஞ்சாது, பகைவரை வெல்லும் படையே ஆட்சியாளரின் செல்வத்துள் எல்லாம் முதன்மையான செல்வம் ஆகும்.", "en": "The army which is complete in (its) parts and conquers without fear of wounds is the chief wealth of the king." } }, { "chapter": "படைமாட்சி", "kural": [ "உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்", "தொல்படைக் கல்லால் அரிது." ], "number": 762, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : போரில் அழிவு வந்தவிடத்தில் வலிமைக் குன்றினாலும், இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டுப் பெருமை உடையபடைக்கு அல்லாமல் முடியாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தம் அரசுக்கு ஓர் அபாயம் வரும்போது, தாம் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும்‌, தமக்கு ஏற்படும் அழிவிற்கு அஞ்சாது நின்று போரிடும் வீரம், பரம்பரை பரம்பரையாக வாழும் சொந்த நாட்டு மக்களுக்கே அன்றி, மற்றவர்க்கு வருவது கடினம்.", "en": "Ancient army can alone have the valour which makes it stand by its king at the time of defeat, fearless of wounds and unmindful of its reduced strength." } }, { "chapter": "படைமாட்சி", "kural": [ "ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை", "நாகம் உயிர்ப்பக் கெடும்." ], "number": 763, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எலியாகிய பகைக்கூடி கடல் போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்ப்படும், பாம்பு மூச்சு விட்ட அளவில் அவைக் கெட்டழியும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பாம்பென நிற்கும் சிறுபடை முன் கடல் என வீரர்கள் திரண்டிருந்தாலும், திரண்டவர்கள் மனத்தால் எலியாக இருந்தால் என்ன ஆகும்? பாம்பு மூச்சு விட்ட அளவிலேயே எலிப்படை அத்தனையும் அழியும்.", "en": "What if (a host of) hostile rats roar like the sea ? They will perish at the mere breath of the cobra." } }, { "chapter": "படைமாட்சி", "kural": [ "அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த", "வன்க ணதுவே படை." ], "number": 764, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : (போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : போரில் தோற்காமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை.", "en": "That indeed is an army which has stood firm of old without sufering destruction or deserting (to the enemy)." } }, { "chapter": "படைமாட்சி", "kural": [ "கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்", "ஆற்ற லதுவே படை." ], "number": 765, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எமனே சினங்கொண்டு தன் மேல் எதிர்த்து வந்தாலும் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்க்கும் ஆற்றல் உடையதே படையாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எமனே எதிர்த்து வந்தாலும், கூடி நின்று எதிர்த்துச் சண்டை இடும் ஆற்றலை உடையதே படை.", "en": "That indeed is an army which is capable of ofering a united resistance, even if Yama advances against it with fury." } }, { "chapter": "படைமாட்சி", "kural": [ "மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்", "எனநான்கே ஏமம் படைக்கு." ], "number": 766, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்கு சிறந்தவையாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : வீரம், மானம், நல்ல வழியில் நடத்தல், அரசி்ன நம்பிக்கைக்கு உரியது ஆதல் எனும் நான்கும் படைக்கு காவல் அரண்களாகும்.", "en": "Valour, honour, following in the excellent-footsteps (of its predecessors) and trust-worthiness; these four alone constitute the safeguard of an army." } }, { "chapter": "படைமாட்சி", "kural": [ "தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த", "போர்தாங்கும் தன்மை அறிந்து." ], "number": 767, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தன் மேல் எதிர்த்து வந்த பகைவரின் போரைத்தாங்கி, வெல்லும் தன்மை அறிந்து அவனுடைய தூசிப்படையை எதிர்த்துச் செல்லவல்லதே படையாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன்மீது வந்த பகைவரின் போரைத் தடுக்கும் முறையை அறிந்து அவர்களில் முதலாவதாக வந்து சண்டையிடும் காலாட்படை ( தூசிப்படை, தேர்ப்படை, கொடிப்படை, முன்னணிச் சேனை என்றும் பெயர்) தன்மீது வராமல் தடுப்பதே படை.", "en": "That is an army which knowing the art of warding of an impending struggle, can bear against the dust-van (of a hostile force)." } }, { "chapter": "படைமாட்சி", "kural": [ "அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை", "படைத்தகையால் பாடு பெறும்." ], "number": 768, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : போர் செய்யும் வீரமும்( எதிர்ப்பைத் தாங்கும்) ஆற்றலுமும் இல்லையானால் படைத்தன்னுடைய அணிவகுப்பால் பெருமை பெறும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பகைவர் மேல் சென்று வெல்லும் வீரமும், பகைவர் வந்தால் தடுக்கும் பயிற்சியும் ஆற்றலும் படைக்கு இல்லை என்றாலும், அது தன் கட்டுப்பாடான அணிவகுப்பின் காட்சி அழகால் பெருமை பெறும்.", "en": "Though destitute of courage to fight and strength (to endure), an army may yet gain renown by the splendour of its appearance." } }, { "chapter": "படைமாட்சி", "kural": [ "சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்", "இல்லாயின் வெல்லும் படை." ], "number": 769, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றி பெறும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எண்ணிக்கையில் சிறுமை, அரசி்ன் மீது மனத்தை விட்டு விலகாத வெறுப்பு, வறுமை இவை எல்லாம் இல்லை என்றால் அந்தப் படை வெற்றி பெறும்.", "en": "An army can triumph (over its foes) if it is free from diminution; irremediable aversion and poverty." } }, { "chapter": "படைமாட்சி", "kural": [ "நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை", "தலைமக்கள் இல்வழி இல்." ], "number": 770, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமைதாங்கும் தலைவர் இல்லாத போது படைக்குப் பெருமை இல்லையாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சிறந்த வீரர்கள் அதிகம் இருந்தாலும், படைக்கு நல்ல தலைவன் இல்லை என்றால் அந்தப் படை போரில் நிலைத்து நிற்காது.", "en": "Though an army may contain a large number of permanent soldiers, itcannot last if it has no generals." } }, { "chapter": "படைச் செருக்கு", "kural": [ "என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை", "முன்நின்று கல்நின் றவர்." ], "number": 771, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நின்று கல்வடிவாய் நின்றவர் பலர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பகைவர்கேள! என் அரசின் முன்னே போரிட நிற்காதீர்; உங்களைப் போலவே இதற்கு முன்பு பலர் நின்றனர்; எல்லாம் மறைந்து இப்போது நடுகல்லில் சிலையாக நிற்கின்றனர்.", "en": "O my foes, stand not before my leader; (for) many are those who did so but afterwards stood (in the shape of) statues." } }, { "chapter": "படைச் செருக்கு", "kural": [ "கான முயலெய்த அம்பினில் யானை", "பிழைத்தவேல் ஏந்தல் இனிது." ], "number": 772, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : காட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதை விட, எதிர்த்து வரும் யானையின் மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது.", "en": "It is more pleasant to hold the dart that has missed an elephant than that which has hit hare in the forest." } }, { "chapter": "படைச் செருக்கு", "kural": [ "பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்", "ஊராண்மை மற்றதன் எஃகு." ], "number": 773, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பகைவரை எதிர்த்து நிற்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர், ஒரு துன்பம் வந்த போது பகைவர்க்கும் உதவிச் செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பகைவர் மீது இரக்கம் காட்டாமல் இருப்பதை மிகுந்த ஆண்மை என்பர்; ஆனால், அந்தப் பகைவர்க்கு ஒரு தாழ்வு வரும்போது அவர் மீது இரக்கம் கொண்டு, அவர் தாழ்ச்சியைப் போக்க உதவுவது ஆளுமையை மேலும் சிறப்பிக்கும்.", "en": "The learned say that fierceness (incontest with a foe) is indeed great valour; but to become a benefactor in case of accident (to a foe) is the extreme (limit) of that valour." } }, { "chapter": "படைச் செருக்கு", "kural": [ "கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்", "மெய்வேல் பறியா நகும்." ], "number": 774, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன்னை எதிர்த்து வந்த யானையின் மீது தன் கையிலிருந்த வேலை எறிந்து விட்டவன், அடுத்து வருகி்ன்ற யானை மீது எறிவதற்காகத் தன் மார்பில் பதிந்து நின்ற வேலைப் பறித்துக் கொண்டே மகிழ்வான்.", "en": "The hero who after casting the lance in his hand on an elephant, comes (in search of another) will pluck the one (that sticks) in his body and laugh (exultingly)." } }, { "chapter": "படைச் செருக்கு", "kural": [ "விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்", "ஒட்டன்றோ வன்க ணவர்க்கு." ], "number": 775, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பகைவரைச் சினந்து பார்க்கும் கண், அவர்கள் எறியும் வேலைப் பார்த்து மூடித் திறந்தாலும், சிறந்த வீரர்க்கு அதுவே புறங் கொடுத்தலாகும்.", "en": "Is it not a defeat to the valiant to wink and destroy their ferocious look when a lance in cast at them (by their foe) ?" } }, { "chapter": "படைச் செருக்கு", "kural": [ "விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்", "வைக்கும்தன் நாளை எடுத்து." ], "number": 776, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வீரன் தன் கழிந்த நாட்களைக் கணக்கிட்டு, விழுப்புண் படாத நாட்களை எல்லாம் பயன் படாமல் தவறிய நாட்களுள் சேர்ப்பான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒரு வீரன் தன் கடந்த நாள்களை எண்ணி எடுத்து, அவற்றுள் முகத்திலும் மார்பிலும் போரின்போது புண்படாத நாள்களைப் பயனில்லாமல் கழிந்த நாள்களாகக் கருதுவான்", "en": "The hero will reckon among wasted days all those on which he had not received severe wounds." } }, { "chapter": "படைச் செருக்கு", "kural": [ "சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்", "கழல்யாப்புக் காரிகை நீர்த்து." ], "number": 777, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பரந்து நிற்க்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலை காலில் கட்டிக்கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தம்முடன் சொர்க்கத்திற்கு வராது பூமியில் மட்டு் நிலைத்து நிற்கும் புகழை விரும்பி, உயிரையும் விரும்பாத வீரர், தம் கால்களில் வீரக்கழலைக் கட்டுவது அவர்க்கு அழகே.", "en": "The fastening of ankle-ring by those who disire a world-wide renown and not (the safety of) their lives is like adorning (themselves)." } }, { "chapter": "படைச் செருக்கு", "kural": [ "உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்", "செறினும் சீர்குன்றல் இலர்." ], "number": 778, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : போர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : போர் வந்தால் தம் உயிர்க்கு அஞ்சாது செல்லும் வீரர், அப்போரை வேண்டா என்று அரசு சினந்து தடுத்தாலும், தம் வீரத்தில் குறைய மாட்டார்.", "en": "The heroes who are not afraid of losing their life in a contest will not cool their ardour, even if the king prohibits (their fighting)." } }, { "chapter": "படைச் செருக்கு", "kural": [ "இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே", "பிழைத்தது ஒறுக்கிற் பவர்." ], "number": 779, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தாம் உரைத்த சூள் தவராத படி போர் செய்து சாக வல்லவரை, அவர் செய்தப் பிழைக்காக தண்டிக்க வல்லவர் யார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தாம் சொன்ன சபதம் நிறைவேறாமல் போனாலும், அதற்காகவே போர்க் களத்தில் தோற்றவர் என்று எவர் இகழ்ந்து பேசுவார்?", "en": "Who would reproach with failure those who seal their oath with their death ?" } }, { "chapter": "படைச் செருக்கு", "kural": [ "புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு", "இரந்துகோள் தக்கது உடைத்து." ], "number": 780, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : வீரர்களின் வீரச்செயலை எல்லாம் எண்ணிப் பார்க்கும் கண்களோடு ஆட்சியாளர் நிற்க, அந்தப்போரில் சாகும் வாய்ப்பைப் பெற்றவரின் சாவு, பிறரிடம் கேட்டுப் பெறத்தக்க சிறப்பினை உடையது.", "en": "If (heroes) can so die as to fill with tears the eyes of their rulers, such a death deserves to be obtained even by begging." } }, { "chapter": "நட்பு", "kural": [ "செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்", "வினைக்கரிய யாவுள காப்பு." ], "number": 781, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எவை உண்டு? அதைச் சம்பாதித்து விட்டால் பிறர் புக முடியாதபடி நம்மைக் காப்பதற்கு அரிய பொருள் வேறு எவை உண்டு?", "en": "What things are there so dificult to acquire as friendship ? What guards are there so dificult to break through by the efforts (of one’s foes) ?" } }, { "chapter": "நட்பு", "kural": [ "நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்", "பின்னீர பேதையார் நட்பு." ], "number": 782, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறை, நாளும் வளர்வதுபோல, அறிவுடையார் நட்பு வளரும்; முழு நிலவு தேய்வது போலப் பேதைகளின் நட்பு தேயும்.", "en": "The friendship of the wise waxes like the new moon; (but) that of fools wanes like the full moon." } }, { "chapter": "நட்பு", "kural": [ "நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்", "பண்புடை யாளர் தொடர்பு." ], "number": 783, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : படிக்கும்போது எல்லாம் மகிழ்ச்சி தரும் நூலின் இன்பம் போல நல்ல குணமுள்ளவரோடு கொண்ட நட்பு அவரோடு பழகும் போதெல்லாம் மகிழ்ச்சி தரும்.", "en": "Like learning, the friendship of the noble, the more it is cultivated, the more delightful does it become." } }, { "chapter": "நட்பு", "kural": [ "நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்", "மேற்செனறு இடித்தற் பொருட்டு." ], "number": 784, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்ப்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவனோடு நட்புக் கொள்வது சிரித்து மகிழ மட்டும் அன்று; நண்பனிடம் வேண்டாத செயல் இருக்கக் கண்டபோது விரைந்து கண்டித்துப் புத்தி சொல்வதற்கும் ஆம்.", "en": "Friendship is to be practised not for the purpose of laughing but for that of being beforehand in giving one another sharp rebukes in case of transgression." } }, { "chapter": "நட்பு", "kural": [ "புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்", "நட்பாங் கிழமை தரும்." ], "number": 785, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்ல. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும்.", "en": "Living together and holding frequent intercourse are not necessary (for friendship); (mutual) understanding can alone create a claim for it." } }, { "chapter": "நட்பு", "kural": [ "முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து", "அகநக நட்பது நட்பு." ], "number": 786, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு.", "en": "The love that dwells (merely in the smiles of the face is not friendship; (but) that which dwells deep in the smiles of the heart is true friendship." } }, { "chapter": "நட்பு", "kural": [ "அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்", "அல்லல் உழப்பதாம் நட்பு." ], "number": 787, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவுவந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அழிவு தரும் வழிகளில் நண்பன் சென்றால் தடுத்து, நல்ல வழியில் அவனைச் செலுத்தி அவனுக்குக் கேடு வரும் என்றால் அதை அவனுடன் பகிர்வது நட்பு.", "en": "(True) friendship turns aside from evil (ways) makes (him) walk in the (good) way, and, in case of loss if shares his sorrow (with him)." } }, { "chapter": "நட்பு", "kural": [ "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே", "இடுக்கண் களைவதாம் நட்பு." ], "number": 788, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு.", "en": "(True) friendship hastens to the rescue of the afflicted (as readily) as the hand of one whose garment is loosened (before an assembly)." } }, { "chapter": "நட்பு", "kural": [ "நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி", "ஒல்லும்வாய் ஊன்றும் நிலை." ], "number": 789, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நட்பின் அரியணை எது என்றால், எப்போதும் மாறாமல் முடிந்தபோது எல்லாம் ஒருவர்க்கு ஒருவர் உதவுவதேயாம்.", "en": "Friendship may be said to be on its throne when it possesses the power of supporting one at all times and under all circumstances, (in the practice or virtue and wealth)." } }, { "chapter": "நட்பு", "kural": [ "இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று", "புனையினும் புல்லென்னும் நட்பு." ], "number": 790, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இவர் எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத் தன்மையுடையேம் என்று புனைந்துரைத்தாலும் நட்பு சிறப்பிழந்து விடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இவர் எமக்கு இத்தனை அன்பு உடையவர்; நாமும் இவர்க்கு இப்படியே என்று ஒருவரை ஒருவர் அலங்காரமாகப் பாராட்டிச் சொன்னாலும் நட்பு அற்பமானதாகப் போய்விடும்.", "en": "Though friends may praise one another saying, “He is so intimate with us, and we so much (with him)”; (still) such friendship will appear mean." } }, { "chapter": "நட்பாராய்தல்", "kural": [ "நாடாது நட் டலிற் கேடில்லை நட்டபின்", "வீடில்லை நட்பாள் பவர்க்கு." ], "number": 791, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது வேறு இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : விரும்பி நட்புச் செய்தவர்க்கு ஒருவருடன், நட்புக் கொண்ட பின் அந்த நட்பை விடுவது கடினம். அதனால் முன்பே ஒருவரைப் பற்றி நன்கு அறியாமல் நட்புக் கொள்வதைக் காட்டிலும் கேடு தருவது வேறு இல்லை.", "en": "As those who are of a friendly nature will not forsake (a friend) after once loving (him), there is no evil so great as contracting a friendship without due inquiry." } }, { "chapter": "நட்பாராய்தல்", "kural": [ "ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை", "தான்சாம் துயரம் தரும்." ], "number": 792, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்க்குக் காரணமானத் துயரத்தை உண்டாக்கிவிடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவனது குணத்தையும் குற்றத்தையும் நன்கு எண்ணி நட்புக் கொள்ளாதவனுக்கு, அந்த நட்பு இறுதியில் அவன் சாவதற்கு ஏற்ற துன்பத்தைத் தரும்.", "en": "The friendship contracted by him who has not made repeated inquiry will in the end grieve (him) to death." } }, { "chapter": "நட்பாராய்தல்", "kural": [ "குணமும் குடிமையும் குற்றமும் குன்றா", "இனனும் அறிந்தியாக்க நட்பு." ], "number": 793, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவனது குணம், குடும்பப் பிறப்பு, குற்றம், குறையாத சுற்றம் ஆகியவற்றை அறிந்து நட்புக் கொள்க.", "en": "Make friendship (with one) after ascertaining (his) character, birth, defects and the whole of one’s relations." } }, { "chapter": "நட்பாராய்தல்", "kural": [ "குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்", "கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு." ], "number": 794, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும்.", "en": "The friendship of one who belongs to a (good) family and is afraid of (being charged with) guilt, is worth even purchasing." } }, { "chapter": "நட்பாராய்தல்", "kural": [ "அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய", "வல்லார்நடபு ஆய்ந்து கொளல்." ], "number": 795, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நன்மை இல்லாதச் சொற்களைக் கண்டபோது வருந்தும்படியாக இடிந்துச் சொல்லி, உலகநடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ப்து கொள்ள வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நாம் தவறு செய்ய எண்ணினால் நம் மனம் நோகச் சொல்லியும் செய்து விட்டால் கண்டித்தும், உலக வழக்கினை அறிந்து செய்யும் ஆற்றலைப் பெற்றும் உள்ளவரை அறிந்து அவர் நட்பைக் கொள்க.", "en": "You should examine and secure the friendship of those who can speak so as to make you weep over a crime (before its commission) or rebuke you severely (after you have done it) and are able to teach you (the ways of) the world." } }, { "chapter": "நட்பாராய்தல்", "kural": [ "கேட்டினும் உண்டோ ர் உறுதி கிளைஞரை", "நீட்டி அளப்பதோர் கோல்." ], "number": 796, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கேடு வந்த போதும் ஒருவகை நன்மை உண்டு, அக் கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டிஅளந்து பார்ப்பதொரு கோலாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எவன் நமக்கு உற்ற நண்பன் என்பதை நீட்டி அளந்து கொள்ளும் அறிவு நம் துன்பத்தில் உண்டு.", "en": "Even in ruin there is some good; (for) it is a rod by which one may measure fully (the afection of one’s) relations." } }, { "chapter": "நட்பாராய்தல்", "kural": [ "ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்", "கேண்மை ஒரீஇ விடல்." ], "number": 797, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவறுடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறிவில்லாதவரோடு கொண்ட நட்பை விட்டு விடுவது, ஒருவனுக்கு இலாபம்.", "en": "It is indead a gain for one to renounce the friendship of fools." } }, { "chapter": "நட்பாராய்தல்", "kural": [ "உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க", "அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு." ], "number": 798, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும், அதுபோல் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உற்சாகம் குறைவதற்கான செயல்களை எண்ண வேண்டா; நம் துன்பக் காலத்தில் நம்மைக் கைவிட்டு விடுபவரின் நட்பைக் கொள்ள வேண்டா.", "en": "Do not think of things that discourage your mind, nor contract friendship with those who would forsake you in adversity." } }, { "chapter": "நட்பாராய்தல்", "kural": [ "கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை", "உள்ளினும் உள்ளஞ் சுடும்." ], "number": 799, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கெடும்போது நம்மைக் கைவிட்டவரின் நட்பை நாம் சாகின்ற போது நினைத்தாலும் நம் நெஞ்சம் சுடும்.", "en": "The very thought of the friendship of those who have deserted one at the approach of adversity will burn one’s mind at the time of death." } }, { "chapter": "நட்பாராய்தல்", "kural": [ "மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்", "ஒருவுக ஒப்பிலார் நட்பு." ], "number": 800, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும், ஒத்தபண்பை இல்லாதவறுடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : குற்றம் அற்றவரோடு நட்புக் கொள்க; உலகோடு ஒத்து வராதவரின் நட்பை விலை கொடுத்தாவது விட்டு விடுக.", "en": "Continue to enjoy the friendship of the pure; (but) renounce even with a gift, the friendship of those who do not agree (with the world)." } }, { "chapter": "பழைமை", "kural": [ "பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்", "கிழமையைக் கீழ்ந்திடா நட்பு." ], "number": 801, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பழைமை என்று சொல்லப்படுவதன் பொருள் என்ன என்றால், நெடுங்கால நண்பர் நம்மீது உரிமை எடுத்துக் கொண்டு பிழைபட நடந்தாலும் அதைப் பொருட்படுத்தாத நட்பு எனலாம்.", "en": "Imtimate friendship is that which cannot in the least be injured by (things done through the) right (of longstanding intimacy)." } }, { "chapter": "பழைமை", "kural": [ "நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு", "உப்பாதல் சான்றோர் கடன்." ], "number": 802, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நட்பிற்க்கு உறுப்பாவது நண்பனுடைய உரிமைச் செயலாகும், அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நண்பர்கள் உரிமையுடன் செய்வதே நட்பிற்கு உறுப்பாகும். அவ்வுரிமையை எண்ணி மகிழ்வதே சான்றோர்க்கு நீதியாகும்.", "en": "The constituents of friendship are (things done through) the right of intimacy; to be pleased with such a right is the duty of the wise." } }, { "chapter": "பழைமை", "kural": [ "பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை", "செய்தாங்கு அமையாக் கடை." ], "number": 803, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பழகியவர் உரிமைப்பற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்தது போலவேக் கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய நட்பு என்ன பயன் தரும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், நண்பர் உரிமையாகச் செய்துவிட்டதைத் தானும் விரும்பிச் செய்தது போலவே காட்டவில்லை என்றால், நெடுங்காலமாகக் கொண்ட நட்பு என்ன பயனைத் தரும்?", "en": "Of what avail is long-standing friendship, if friends do not admit as their own actions done through the right of intimacy ?" } }, { "chapter": "பழைமை", "kural": [ "விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்", "கேளாது நட்டார் செயின்." ], "number": 804, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச் செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தம் நண்பர் உரிமை எடுத்துக் கொண்டு தம்மைக் கேளாமலேயே ஒரு காரியத்தைச் செய்தால் அக்காரியத்தைத் தாம் அறிந்திருந்தாலும் நண்பரால் விரும்பிச் செய்யப்படுவது என்பதனால் அறிவுடையார் அதை ஏற்றுக் கொள்ளவே செய்வர்.", "en": "If friends, through the right of friendship, do (anything) without being asked, the wise will be pleased with them on account of its desirability." } }, { "chapter": "பழைமை", "kural": [ "பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க", "நோதக்க நட்டார் செயின்." ], "number": 805, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வருந்ததக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நாம் வருந்தத்தக்கவற்றை நம் நண்பர் செய்வார் என்றால், அதற்கு அறியாமை மட்டுந்தானா, பெரும் உரிமையும் காரணம் என்று அறிக.", "en": "If friends should perform what is painful, understand that it is owing not only to ignorance, but also to the strong claims of intimacy." } }, { "chapter": "பழைமை", "kural": [ "எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்", "தொல்லைக்கண் நின்றார் தொடர்பு." ], "number": 806, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உரிமை வாழ்வின் எல்லையில் நின்றவர், தமக்கு அழிவுநேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவு கொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிட மாட்டார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நட்பின் எல்லையைக் கடக்காமல் வரம்பிற்குள்ளேயே நின்றவர், தம்முடன் நெடுங்காலமாக நட்புக் கொண்டவரால் கெடுதிகள் என்றாலும் அவரது நட்பினை விடமாட்டார்.", "en": "Those who stand within the limits (of true friendship) will not even in adversity give up the intimacy of long-standing friends." } }, { "chapter": "பழைமை", "kural": [ "அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்", "வழிவந்த கேண்மை யவர்." ], "number": 807, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அன்புடன் தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர், அழிவுதரும் செயல்களை பழகியவர் செய்த போதிலும் தம் அன்பு நீங்காமலிருப்பர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தம் நண்பர் தமக்கு அழிவு தருவனவற்றையே செய்தாலும் நெடுங்காலமாக நட்பை உடையவர் நண்பர்மீது தாம் கொண்ட அன்பை விட்டுவிடமாட்டார்.", "en": "Those who have (long) stood in the path of afection will not give it up even if their friends cause (them) their ruin." } }, { "chapter": "பழைமை", "kural": [ "கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு", "நாளிழுக்கம் நட்டார் செயின்." ], "number": 808, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும், கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந்த நண்பர் தவறுசெய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நண்பன் உரிமை எடுத்துச் செய்து பிழையை அடுத்தவர் எடுத்துக்காட்டியும் ஏற்றுக் கொள்ளாத நட்புரிமை உடையவர்க்கு நண்பன் பிழை செய்யும் நாள் பயனுள்ள நாளாம்.", "en": "To those who understand that by which they should not listen to (tales about) the faults of their friends, that is a (profitable) day on which the latter may commit a fault." } }, { "chapter": "பழைமை", "kural": [ "கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை", "விடாஅர் விழையும் உலகு." ], "number": 809, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உரிமை கெடாமல் தொன்று தொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உரிமையை விடாது நெடுங்காலமாக வரும் நட்பினை உடையவர் கேடு செய்தாலும் அந்த நட்பை விட்டு விடாதவரை, அவரது நட்புள்ளம் குறித்து உலகம் விரும்பும்.", "en": "They will be loved by the world, who have not forsaken the friendship of those with whom they have kept up an unbroken long-standing intimacy." } }, { "chapter": "பழைமை", "kural": [ "விழையார் விழையப் படுப பழையார்கண்", "பண்பின் தலைப்பிரியா தார்." ], "number": 810, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : (தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர்", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பழைய நண்பர்கள் பிழையே செய்தாலும், அவருடன் பகை கொள்ளாது நம் நட்பை விடாதவர், பகைவராலும் விரும்பப்படுவர்.", "en": "Even enemies will love those who have never changed in their affection to their long-standing friends." } }, { "chapter": "தீ நட்பு", "kural": [ "பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை", "பெருகலிற் குன்றல் இனிது." ], "number": 811, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உயிரால் உருகுவார்போல் நடிக்கும், உள்ளத்துள் நல்ல பண்பு இல்லாதவரின் நட்பு வளர்வதைவிடக் குறைவது நல்லது.", "en": "The decrease of friendship with those who look as if they would eat you up (through excess of love) while they are really destitute of goodness is far better than its increase." } }, { "chapter": "தீ நட்பு", "kural": [ "உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை", "பெறினும் இழப்பினும் என்?" ], "number": 812, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தமக்கு பயன் உள்ள போது நட்பு செய்து பயன் இல்லாத போது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன பயன், இழந்தாலும் என்ன பயன்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தமக்குப் பயனிருந்தால் நட்புக் கொண்டும், பயன் இல்லை என்றால் நட்பை விலக்கியும் வாழ்வதில் தமக்கு இணை இல்லாதவராய் இருப்பாரின் நட்பைப் பெற்றென்ன இழந்தென்ன?", "en": "Of what avail is it to get or lose the friendship of those who love when there is gain and leave when there is none ?" } }, { "chapter": "தீ நட்பு", "kural": [ "உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது", "கொள்வாரும் கள்வரும் நேர்." ], "number": 813, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலை மகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இவரிடம் நட்புக் கொள்வதால் தமக்கு என்ன கிடைக்கும் என்று எண்ணிப் பார்ப்பவரின் நட்பும், தமக்குத் தரும் கூலியை ஏற்றுக் கொள்ளும் பாலியல் தொழிலாளரும் திருடர்களும் ஒருவருக்கொருவர் சமமானவர்களே.", "en": "Friendship who calculate the profits (of their friendship), prostitutes who are bent on obtaining their gains, and thieves are (all) of the same character." } }, { "chapter": "தீ நட்பு", "kural": [ "அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்", "தமரின் தனிமை தலை." ], "number": 814, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : போர் வந்த போது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் உறவை விட, ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே சிறந்தது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : போர்க்களத்தே நம்மை வீழ்த்திவிட்டுப் போய்விடும் கல்வியற்ற குதிரையைப் போன்றவரின் நட்பைக் காட்டிலும் தனிமையாக இருப்பதே முதன்மையானது.", "en": "Solitude is more to be desired than the society of those who resemble the untrained horses which throw down (their riders) in the fields of battle." } }, { "chapter": "தீ நட்பு", "kural": [ "செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை", "எய்தலின் எய்தாமை நன்று." ], "number": 815, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதை விட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நாம் பல வகையில் உதவி செய்தாலும் நமக்குப் பாதுகாப்பாக இராத அற்பர்களின் நட்பு, இருப்பதிலும் இல்லாதிருப்பதே நல்லது.", "en": "It is far better to avoid that to contract the evil friendship of the base who cannot protect (their friends) even when appointed to do so." } }, { "chapter": "தீ நட்பு", "kural": [ "பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்", "ஏதின்மை கோடி உறும்." ], "number": 816, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பை விட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறிவற்றவனின் மிக நெருக்கமான நட்பைக் காட்டிலும் அறிவுடையார்களின் பகை, கோடி நன்மையாம்.", "en": "The hatred of the wise is ten-million times more profitable than the excessive intimacy of the fool." } }, { "chapter": "தீ நட்பு", "kural": [ "நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்", "பத்தடுத்த கோடி உறும்." ], "number": 817, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : (அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பை விட, பகைவரால் வருவன பத்துகோடி மடங்கு நன்மையாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சிரித்துச் செல்லும் இயல்பினராகிய நட்பைக் காட்டிலும், பகைவரால் வருவன பத்துக் கோடி மடங்கு நன்மையாம்.", "en": "What comes from enemies is a hundred million times more profitable than what comes from the friendship of those who cause only laughter." } }, { "chapter": "தீ நட்பு", "kural": [ "ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை", "சொல்லாடார் சோர விடல்." ], "number": 818, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : முடியும் செயலையும் முடியாத படி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் செய்யாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தம்மால் செய்யக்கூடிய உதவியையும் செய்ய முடியாதவர் போல் நடித்துச் செய்யாமல் விடுபவரின் நட்பை அவரிடம் சொல்லாமலேயே விட்டுவிடுக.", "en": "Gradually abandon without revealing (beforehand) the friendship of those who pretend inability to carry out what they (really) could do." } }, { "chapter": "தீ நட்பு", "kural": [ "கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு", "சொல்வேறு பட்டார் தொடர்பு." ], "number": 819, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சொல் ஒன்று, செயல் வேறாக இருப்பவரின் நட்பு கனவிலும் கூடத் துன்பமானதாகும்.", "en": "The friendship of those whose actions do not agree with their words will distress (one) even in (one’s) dreams." } }, { "chapter": "தீ நட்பு", "kural": [ "எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ", "மன்றில் பழிப்பார் தொடர்பு." ], "number": 820, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து, பலர் கூடிய மன்றத்தில் பழித்து பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விட வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நம் வீட்டுக்குள் வந்து நட்புக் கொண்டாடிப் பலர் இருக்கும் சபையில் நம்மைப் பழிப்பவரின் தொடர்பைச் சிறிதளவும் சேரவிட வேண்டா.", "en": "Avoid even the least approach to a contraction of friendship with those who would love you in private but ridicule you in public." } }, { "chapter": "கூடா நட்பு", "kural": [ "சீரிடம் காணின் எறிதற்குப் பட் டடை", "நேரா நிரந்தவர் நட்பு." ], "number": 821, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோல் தோன்றினாலும் பொருளை வெட்டி எறிவதற்குத் துணை செய்யும் பட்டடை போன்றது.", "en": "The friendship of those who behave like friends without inward afection is a weapon that may be thrown when a favourable opportunity presents itself." } }, { "chapter": "கூடா நட்பு", "kural": [ "இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்", "மனம்போல வேறு படும்." ], "number": 822, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : வேண்டியவர் போலத் தோன்றி, மனத்தால் வேண்டாதவராக இருப்பவரோடு உண்டான நட்பு பாலியல் தொழிலாளர் மனம் போல வேறுபடும்.", "en": "The friendship of those who seem to be friends while they are not, will change like the love of women." } }, { "chapter": "கூடா நட்பு", "kural": [ "பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்", "ஆகுதல் மாணார்க் கரிது." ], "number": 823, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனத்தால் பொருந்தாதவர்கள் நல்ல பல நூல்களைக் கற்றபோதும் மனந்திருந்தி நல்ல நண்பர் ஆவது அரிது.", "en": "Though (one’s) enemies may have mastered many good books, it will be impossible for them to become truly loving at heart." } }, { "chapter": "கூடா நட்பு", "kural": [ "முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா", "வஞ்சரை அஞ்சப் படும்." ], "number": 824, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நாம் காணும்போது முகத்தால் இனிதாகச் சிரித்து, மனத்தால் எப்போதும் பகைவராய் வாழும் வஞ்சகர்களுக்கு அஞ்சவேண்டும்.", "en": "One should fear the deceitful who smile sweetly with their face but never love with their heart." } }, { "chapter": "கூடா நட்பு", "kural": [ "மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்", "சொல்லினால் தேறற்பாற்று அன்று." ], "number": 825, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனத்தால் நம்மோடு சேராதவரை எந்தக் காரியத்திலும் அவர்களின் சொல்லைக் கண்டு நம்ப முடியாது.", "en": "In nothing whatever is it proper to rely on the words of those who do not love with their heart." } }, { "chapter": "கூடா நட்பு", "kural": [ "நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்", "ஒல்லை உணரப் படும்." ], "number": 826, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நண்பர்களைப் போல், நன்மை தருவனவற்றைச் சொன்னாலும், நம்மோடு மனத்தால் கூடாதவர்களின் சொற்கள் நன்மை தராதனவே என்று விரைவில் அறிந்து கொள்ளலாம்.", "en": "Though (one’s) foes may utter good things as though they were friends, once will at once understand (their evil, import)." } }, { "chapter": "கூடா நட்பு", "kural": [ "சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்", "தீங்கு குறித்தமை யான்." ], "number": 827, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்தலைக்குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக் கூடாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : வில் வளைவது தீமை செய்யவே, பகைவர் வணங்கிப் பேசும் சொற்களும் அத்தன்மையவே; அதனால் அவர்தம் சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டா.", "en": "Since the bending of the bow bespeaks evil, one should not accept (as good) the humiliating speeches of one ‘s foes." } }, { "chapter": "கூடா நட்பு", "kural": [ "தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்", "அழுதகண் ணீரும் அனைத்து." ], "number": 828, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுதுசொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பகைவர் தொழும் கைக்குள்ளும் ஆயுதம் மறைந்திருக்கும்; அவர் அழுது சிந்தும் கண்ணீரும் அப்படிப்பட்டதே.", "en": "A weapon may be hid in the very hands with which (one’s) foes adore (him) (and) the tears they shed are of the same nature." } }, { "chapter": "கூடா நட்பு", "kural": [ "மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து", "நட்பினுள் சாப்புல்லற் பாற்று." ], "number": 829, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச் செய்து அகத்தில் இகழ்கின்றவரைத் தாமும் அந் நட்பில் நகைத்து மகிழுமாறு செய்து அத் தொடர்பு சாகுமாறு நடக்க வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : வெளியில் நண்பராய்ப் பெரிதுபடக் காட்டி, மனத்தே நம்மை இகழ்ந்து மகிழ்பவரை நாமும் வெளியில் அவரைச் சிரிக்க வைத்து, மனத்தே அம்மகிழ்ச்சி அழியும்படி போலி நண்பராகலாம்.", "en": "It is the duty of kings to afect great love but make it die (inwardly); as regard those foes who shew them great friendship but despise them (in their heart)." } }, { "chapter": "கூடா நட்பு", "kural": [ "பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு", "அகநட்பு ஒரீஇ விடல்." ], "number": 830, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பகைவர் நண்பராகும் காலம் வரும் போது முகத்தளவில் நட்பு கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்த போது அதையும் விட வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நம் பகைவர் நம்முடன் நண்பராக வாழும் காலம் வந்தால் நாமும் அவருடன் முகத்தால் நட்புக் கொண்டு மனத்தால் அந்நட்பை விட்டுவிட வேண்டும்.", "en": "When one’s foes begin to affect friendship, one should love them with one’s looks, and, cherishing no love in the heart, give up (even the former)." } }, { "chapter": "பேதைமை", "kural": [ "பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு", "ஊதியம் போக விடல்." ], "number": 831, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறியாமை என்பது என்ன என்றால், அது ஒருவன் தனக்குத் தீமை தருவதை ஏற்றுக் கொண்டு, இலாபத்தை விட்டு விடுவதே ஆம்.", "en": "Folly is one (of the chief defects); it is that which (makes one) incur loss and forego gain." } }, { "chapter": "பேதைமை", "kural": [ "பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை", "கையல்ல தன்கட் செயல்." ], "number": 832, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறியாமையுள் எல்லாம் அறியாமை என்பது, ஒருவன் தனக்கு நன்மை தராதவை மேல் எல்லாம், விருப்பம் கொள்வதே ஆகும்.", "en": "The greatest folly is that which leads one to take delight in doing what is forbidden." } }, { "chapter": "பேதைமை", "kural": [ "நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்", "பேணாமை பேதை தொழில்" ], "number": 833, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தீமைக்கு வெட்கப்படாதிருப்பது, விரும்ப வேண்டியவற்றை விரும்பாதிருப்பது, எவரிடத்தும் அன்பு இல்லாதிருப்பது, காக்க வேண்டிய எதையும் காவாதிருப்பது ஆகியவை அறிவற்றவரின் செயல்கள் ஆகும்.", "en": "Shamelessness indifference (to what must be sought after), harshness, and aversion for everything (that ought to be desired) are the qualities of the fool." } }, { "chapter": "பேதைமை", "kural": [ "ஓதி உணர்ந்தும் பிறர் க்குரைத்தும் தானடங்காப்", "பேதையின் பேதையார் இல்." ], "number": 834, "section": "பொருட்பால்", "meaning": { "en": "There are no greater fools than he who, though he has read and understood (a great deal) and even taught it to others, does not walk according to his own teaching.", "ta_mu_va": "மு.வ : நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாதப் பேதைப் போல் வேறு பேதையர் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : படித்தும், படித்தவற்றை உணர்ந்தும், மற்றவர்க்குச் சொல்லியும், அவற்றின்படி வாழாதவரைக் காட்டிலும் அறிவற்றவர் வேறு இல்லை." } }, { "chapter": "பேதைமை", "kural": [ "ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்", "தான்புக் கழுந்தும் அளறு." ], "number": 835, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறிவற்றவன் தான் பிறந்த ஒரு பிறவியிலேயே, அடுத்து வரும் பிறவிகள்தோறும் தான் புகுந்து வருந்தி அனுபவிக்கும் நரகத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையவன் ஆவான்.", "en": "A fool can procure in a single birth a hell into which he may enter and sufer through all the seven births." } }, { "chapter": "பேதைமை", "kural": [ "பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்", "பேதை வினைமேற் கொளின்." ], "number": 836, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : செய்யும் வழி தெரியாத அறிவற்றவன் ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் செயலும் கெட்டு, அவனும் கெட்டுப் போவான்.", "en": "If the fool, who knows not how to act undertakes a work, he will (certainly) fail. (But) is it all ? He will even adorn himself with fetters." } }, { "chapter": "பேதைமை", "kural": [ "ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை", "பெருஞ்செல்வம் உற்றக் கடை." ], "number": 837, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பேதை பெருஞ் செல்வம் அடைந்த போது ( அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறிவற்றவன் பெருஞ்செல்வத்தை அடைந்தபோது பிறர் அதை அனுபவிக்க, அவன் உறவினர் பசித்திருப்பர்.", "en": "If a fool happens to get an immense fortune, his neighbours will enjoy it while his relations starve." } }, { "chapter": "பேதைமை", "kural": [ "மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்", "கையொன்று உடைமை பெறின்." ], "number": 838, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறிவற்றவன் தன்னிடம் ஒன்றைச் சொந்தமாகப் பெறுவது, முன்பே பிடித்துப் பிடித்தவன், கள்ளால் மயங்கியும் நிற்பது போல் ஆகும்.", "en": "A fool happening to possess something is like the intoxication of one who is (already) giddy." } }, { "chapter": "பேதைமை", "kural": [ "பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்", "பீழை தருவதொன் றில்." ], "number": 839, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, ஆகையால் பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறிவற்றவர்கள் தமக்குள் கொண்ட நட்பில் பிரிவு வந்தால், அவர்களுக்குத் துன்பம் ஒன்றும் இல்லை. அவர்கள் கொண்ட நட்பு அவ்வளவு இனிமையானது!", "en": "The friendship between fools is exceedingly delightful (to each other): for at parting there will be nothing to cause them pain." } }, { "chapter": "பேதைமை", "kural": [ "கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்", "குழாஅத்துப் பேதை புகல்." ], "number": 840, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாதக் காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சான்றோர் கூடியிருக்கும் இடத்துள் அறிவற்றவன் நுழைவது, கழுவாத காலைப் படுக்கைமேல் வைத்தது போலாகும்.", "en": "The appearance of a fool in an assembly of the learned is like placing (one’s) unwashed feet on a bed." } }, { "chapter": "புல்லறிவாண்மை", "kural": [ "அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை", "இன்மையா வையா துலகு." ], "number": 841, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறியாமையே இல்லாமைப் பலவற்றுளளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இல்லாமை பலவற்றுள்ளும் இல்லாமை, அறிவு இல்லாமல் இருத்தலே, பிற இல்லாமையைப் பெரியோர் இல்லாமையாகக் கருதமாட்டார்.", "en": "The want of wisdom is the greatest of all wants; but that of wealth the world will not regard as such." } }, { "chapter": "புல்லறிவாண்மை", "kural": [ "அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்", "இல்லை பெறுவான் தவம்." ], "number": 842, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறிவில்லாதவவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்கு காரணம், வேறொன்றும் இல்லை, அப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறிவற்றவன் மனம் மகிழ்ந்து ஒன்றைப் பிறர்க்குத் தந்தால், அது பெறுகின்றவன் செய்த நல்வினையே.", "en": "(The cause of) a fool cheerfully giving (something) is nothing else but the receiver’s merit (in a former birth)." } }, { "chapter": "புல்லறிவாண்மை", "kural": [ "அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை", "செறுவார்க்கும் செய்தல் அரிது." ], "number": 843, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறிவு அற்றவர், தாமே நம்மை வருத்திக் கொள்ளும் வருத்தம், பகைவராலும்கூட அவருக்குச் செய்வது அரிது.", "en": "The suffering that fools inflict upon themselves is hardly possible even to foes." } }, { "chapter": "புல்லறிவாண்மை", "kural": [ "வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை", "உடையம்யாம் என்னும் செருக்கு." ], "number": 844, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறிவின்மை என்று சொல்லப்படுவது என்ன என்று கேட்டால், அது தம்மைத் தாமே நல அறிவு உடையவரென்று என்னும் மயக்கமே ஆகும்.", "en": "What is called want of wisdom is the vanity which says, “We are wise”." } }, { "chapter": "புல்லறிவாண்மை", "kural": [ "கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற", "வல்லதூஉம் ஐயம் தரும்." ], "number": 845, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறிவில்லாதவர் தாம் கற்காத நூல்களை கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறிவற்றவர், தாம் படிக்காத நூல்களையும் படித்தவர் போலப் பேசிச்செயற்படுவது, அவர் உணமையிலேயே நன்கு அறிந்த நூல்களின் மேலும் சந்தேகத்தைப் பிறர்க்கு உண்டாக்கும்.", "en": "Fools pretending to know what has not been read (by them) will rouse suspicion even as to what they have thoroughly mastered." } }, { "chapter": "புல்லறிவாண்மை", "kural": [ "அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்", "குற்றம் மறையா வழி." ], "number": 846, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தம்மிடம் உள்ள குற்றத்தை அறிந்து அதைப் போக்காதவர், ஆடையால் தம்உடம்பை மறைக்கக் கருதுவதும் அறிவின்மையே.", "en": "Even to cover one’s nakedness would be folly, if (one’s) faults were not covered (by forsaking them)." } }, { "chapter": "புல்லறிவாண்மை", "kural": [ "அருமறை சோரும் அறிவிலான் செய்யும்", "பெருமிறை தானே தனக்கு." ], "number": 847, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறிவற்றவன் அரிய புத்திமதியையும் ஏற்றுக் கொள்ளான்; அதனால் அவன் தனக்குத் தானே பெரும் துன்பத்தைச் செய்து கொள்வான்.", "en": "The fool who neglects precious counsel does, of his own accord, a great injury to himself." } }, { "chapter": "புல்லறிவாண்மை", "kural": [ "ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்", "போஒம் அளவுமோர் நோய்." ], "number": 848, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தனக்கு நன்மையானவற்றை பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறிவற்றவன் பிறர் சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் அறியமாட்டான்; அவனது உயிர் போகும் வரைக்கும் இப்பூமிக்கு அவன் ஒரு நோயே.", "en": "The fool will not perform (his duties) even when advised nor ascertain them himself; such a soul is a burden (to the earth) till it departs (from the body)." } }, { "chapter": "புல்லறிவாண்மை", "kural": [ "காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்", "கண்டானாம் தான்கண்ட வாறு." ], "number": 849, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான், அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுடையவனாகத் தோன்றுவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறிவற்றவனுக்கு அறிவு காட்ட முயல்பவன் அறிவற்றவனால் அறிவற்றவனாய் எண்ணப்படுவான்; அறிவற்றவன் தான் அறிந்ததே அறிவாக எண்ணுவான்.", "en": "One who would teach a fool will (simply) betray his folly; and the fool would (still) think himself “wise in his own conceit”." } }, { "chapter": "புல்லறிவாண்மை", "kural": [ "உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து", "அலகையா வைக்கப் படும்." ], "number": 850, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இருக்கிறது என்று உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான்.", "en": "He who denies the existence of what the world believes in will be regarded as a demon on earth." } }, { "chapter": "இகல்", "kural": [ "இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்", "பண்பின்மை பார஧க்கும் நோய்." ], "number": 851, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய் இகழ் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எல்லா உயிர்களிடத்திலும் இணங்கிச் சேராமல் இருக்கும் தீய குணத்தை வளர்க்கும் நோயே, மனவேறுபாடு என்று கூறுவர்.", "en": "The disease which fosters the evil of disunion among all creatures is termed hatred by the wise." } }, { "chapter": "இகல்", "kural": [ "பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி", "இன்னாசெய் யாமை தலை." ], "number": 852, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும் தான் இகழ் கொண்டு அவர்க்கு துன்பம் செய்யாதிருத்தல் சிறந்ததாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நம்மோடு இணங்கிப் போக முடியாமல் ஒருவன் நமக்கு வெறுப்புத் தருவனவற்றைச் செய்தாலும், அவனைப் பகையாக எண்ணித் தீமை செய்யாதிருப்பது சிறந்த குணம்.", "en": "Though disagreeable things may be done from (a feeling of) disunion, it is far better that nothing painful be done from (that of) hatred." } }, { "chapter": "இகல்", "kural": [ "இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்", "தாவில் விளக்கம் தரும்." ], "number": 853, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்ப நோயை நீக்கி விட்டால் அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனவேறுபாடு என்னும் துன்பம் தரும் நோயை மனத்திலிருந்து நீக்கினால், அது ஒருவனுக்குக் கெடாத, அழியாத புகழைக் கொடுக்கும்.", "en": "To rid one-self of the distressing dtsease of hatred will bestow (on one) a never-decreasing imperishable fame." } }, { "chapter": "இகல்", "kural": [ "இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்", "துன்பத்துள் துன்பங் கெடின்." ], "number": 854, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது அவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தை கொடுக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : துன்பங்கள் எல்லாவற்றிலும் மிகக் கொடிதான மனவேறுபாடு எனும் துன்பம், ஒருவனது உள்ளத்துள் இல்லை என்றால், அது அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் சிறந்த இன்பத்தைத் தரும்.", "en": "If hatred which is the greatest misery is destroyed, it will yield the greatest delight." } }, { "chapter": "இகல்", "kural": [ "இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே", "மிக்லூக்கும் தன்மை யவர்." ], "number": 855, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இகலை எதிர்த்து நிற்காமல் அதன் எதிரே சாய்ந்து நடக்க வல்லவரை வெல்லக் கருதுகின்ற ஆற்றல் உடையவர் யார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன் மனத்துள் வேறுபாடு தோன்றும்போது அதை வளர்க்காமல் அதற்கு எதிராக நடக்கும் வலிமை மிக்கவரை வெல்ல எண்ணுபவர் யார்?", "en": "Who indeed would think of conquering those who naturally shrink back from hatred ?" } }, { "chapter": "இகல்", "kural": [ "இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை", "தவலும் கெடலும் நணித்து." ], "number": 856, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிபோதலும் அழிதலும் விரைவவில் உள்ளனவாம்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறருடன் மனவேறுபாடு கொண்டு வளர்வது நல்லதே என்பவன் வாழ்க்கை, அழியாமல் இருப்பதும் சிறிது காலமே; அழிந்து போவதும் சிறிது காலத்திற்குள்ளேயாம்.", "en": "Failure and ruin are not far from him who says it is sweet to excel in hatred." } }, { "chapter": "இகல்", "kural": [ "மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்", "இன்னா அறிவி னவர்." ], "number": 857, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இகலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர் வெற்றி பொருந்துதலுக்குக் காரணமான உண்மைப் பொருளை அறியமாட்டார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனவேறுபாட்டோடு கேடான அறிவையும் உடையவர், வெற்றி தரும் நீதிநூற் பொருளை அறியமாட்டார்.", "en": "Those whose judgement brings misery through its connection with hatred cannot understand the triumphant nature of truth." } }, { "chapter": "இகல்", "kural": [ "இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை", "மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு." ], "number": 858, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல் ஒருவனுக்கு ஆக்கமாகும், அதனை எதிர்த்து வெல்லக்கருதினால் கேடு அவனிடம் வரக் கருதும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனவேறுபாடு தோன்றும்போது அதை வரவேற்காமல் இருப்பது ஒருவனுக்குச் செல்வமாகும்; வரவேற்பது கேட்டையே வரவேற்ப‌தாகும்.", "en": "Shrinking back from hatred will yield wealth; indulging in its increase will hasten ruin." } }, { "chapter": "இகல்", "kural": [ "இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை", "மிகல்காணும் கேடு தரற்கு." ], "number": 859, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருதமாட்டான், தனக்கு கேடு தருவிக்கொள்ளும் போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவனுக்கு நன்மை வரும் போது காரணம் இருந்தாலும் மனவேறுபாடு கொள்ள மாட்டான்.தனக்குத் தானேகேட்டை விளைவிக்க எண்ணுபவன், காரணம் இல்லாவிட்டாலும் மனவேறுபாடு கொள்ள எண்ணுவான்.", "en": "At the approach of wealth one will not think of hatred (but) to secure one’s ruin, one will look to its increase." } }, { "chapter": "இகல்", "kural": [ "இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்", "நன்னயம் என்னும் செருக்கு." ], "number": 860, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும்,அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மன வேறுபாட்டால் துன்பம் எல்லாம் உண்டாகும். நல்லிணக்க நட்பால், நீதி என்னும் செல்வச் செருக்கு உண்டாகும்.", "en": "All calamities are caused by hatred; but by the delight (of friendship) is caused the great wealth of good virtues." } }, { "chapter": "பகைமாட்சி", "kural": [ "வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா", "மெலியார்மேல் மேக பகை." ], "number": 861, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட மெலியவர் மேல் பகைக் கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பகைவர் நம்மிலும் வலியர் என்றால் அவரை எதிர்ப்தைத் தவிர்த்து விடுக; மெலியர் என்றால் உடனே எதிர்த்துச் செல்க.", "en": "Avoid offering resistance to the strong; (but) never fail to cherish enmity towards the weak." } }, { "chapter": "பகைமாட்சி", "kural": [ "அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்", "என்பரியும் ஏதிலான் துப்பு." ], "number": 862, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதடனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மக்களிடத்தில் அன்பு இல்லாத, வலுவான துணையும் இல்லாத, ஆற்றலும் அற்ற அரசின்மீது ஆற்றல் மிக்க பகை வந்தால், அப்பகையின் வலி‌மையை எப்படி அழிக்க முடியும்?", "en": "How can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome the might of his foe ?" } }, { "chapter": "பகைமாட்சி", "kural": [ "அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்", "தஞ்சம் எளியன் பகைக்கு." ], "number": 863, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால் , அவன் பகைவர்க்கு மிக எளியவன்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பயப்பட வேண்டாததற்குப் பயப்பட்டு, அறிய வேண்டியவற்றை அறியாத, பிறரோடு இணங்கிப் போகாத, எவர்க்கும் எதுவும் தராத அரசு, பகைவரால் தோற்கடிக்கப்படுவதற்கு மிக எளிது.", "en": "In the estimation of foes miserably weak is he, who is timid, ignorant, unsociable and niggardly." } }, { "chapter": "பகைமாட்சி", "kural": [ "நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்", "யாங்கணும் யார்க்கும் எளிது." ], "number": 864, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கோபம் குறையாத, ரகசியங்களைக் காக்கத் தெரியாத அரசைத் தோற்கடிப்பது எப்போதும், எங்கும், எவர்க்கும் எளிது.", "en": "He who neither refrains from anger nor keeps his secrets will at all times and in all places be easily conquered by all." } }, { "chapter": "பகைமாட்சி", "kural": [ "வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்", "பண்பிலன் பற்றார்க்கு இனிது." ], "number": 865, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் நல்வழியை நோக்காமல் பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால் அவன் பகைவர்க்கும் எளியனவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நீதி நூல்கள் ‌சொல்லும் வழியைப் படித்து அறியாத, நல்லனவற்றைச் செய்யாத, அவை தெரியாமலே செயலாற்றுவதால் வரும் வழியையும் எண்ணாத, நல்ல பண்புகளும் இல்லாத அரசின் பகைமை, பகைவர்க்கு இனிது.", "en": "(A) pleasing (object) to his foes is he who reads not moral works, does nothing that is enjoined by them cares not for reproach and is not possessed of good qualities." } }, { "chapter": "பகைமாட்சி", "kural": [ "காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்", "பேணாமை பேணப் படும்." ], "number": 866, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நன்மை தீமை, வேண்டியவர் வேண்டாதார் என்றெல்லாம் எண்ணாது, கோபம் மிக்க, மேலும் மேலும் பெருகும் பெண்ணாசையை உடைய அரசின் பகைமை, பிறரால் விரும்ப்படும்.", "en": "Highly to be desired is the hatred of him whose anger is blind, and whose lust increases beyond measure." } }, { "chapter": "பகைமாட்சி", "kural": [ "கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து", "மாணாத செய்வான் பகை." ], "number": 867, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும் பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒரு செயலைத் தொடங்கி விட்டு, அதன் நலத்திற்குப் பொருந்தாதவற்றைச் செய்யும் அரசின் பகைமையைச், சிலவற்றை அழியக் கொடுத்தாவது உறுதியாகப் பெற வேண்டும்.", "en": "It is indeed necessary to obtain even by purchase the hatred of him who having begun (a work) does what is not conductive (to its accomplishment)." } }, { "chapter": "பகைமாட்சி", "kural": [ "குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு", "இனனிலனாம் ஏமாப் புடைத்து." ], "number": 868, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனானால் அவன் துணை இல்லாதவன் ஆவான், அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நல்ல குணங்கள் இல்லாமல் குற்றங்கள் பலவும் உடைய அரசிற்குத் துணை இல்லாது போகும். துணை இல்லாது இருப்பதே அந்த அரசின் பகைவர்க்கு பலம்.", "en": "He will become friendless who is without (any good) qualities. and whose faults are many; (such a character) is a help to (his) foes." } }, { "chapter": "பகைமாட்சி", "kural": [ "செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா", "அஞ்சும் பகைவர்ப் பெறின்." ], "number": 869, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறிவு இல்லாத அஞ்சும் இயல்புடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்து பகை கொள்பவர்க்கு இன்பங்கள் தொலைவில் நீங்காமல் இருக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நீதியை அறியும் அறிவற்ற, எதற்கும் அஞ்சுகிற பகைவரைப் பெற்றால், அத்தகைய பகைவரைப் பெற்றவர்களை விட்டுச் சிறந்த நன்மைகள் விலக மாட்டா.", "en": "There will be no end of lofty delights to the victorious, if their foes are (both) ignorant and timid." } }, { "chapter": "பகைமாட்சி", "kural": [ "கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்", "ஒல்லானை ஒல்லா தொளி." ], "number": 870, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கல்வி கற்காதவனைப் பகைத்துக்கொள்ளும் எளிய செயலைச் செய்ய இயலாத ஒருவனிடம் எக்காலத்திலும் புகழ் வந்து பொருந்தாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நீதி நூல்களைக் கல்லாதவனைப் பகைப்பதால் கிடைக்கும் பொருள் சிறிது எனினும், அதை விரும்பாத அரசுக்கு ஒருபோது் புகழ் சேராது.", "en": "The light (of fame) will never be gained by him who gains not the trifling reputation of having fought an unlearned (foe)." } }, { "chapter": "பகைத்திறம் தெரிதல்", "kural": [ "பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்", "நகையேயும் வேண்டற்பாற்று அன்று." ], "number": 871, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது போக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பகை எனப்படும் பண்பற்ற ஒன்று, விளையாட்டிலும் கூட் விரும்பத்தக்கது அன்று.", "en": "The evil of hatred is not of a nature to be desired by one even in sport." } }, { "chapter": "பகைத்திறம் தெரிதல்", "kural": [ "வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க", "சொல்லேர் உழவர் பகை." ], "number": 872, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை கொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகை கொள்ளக் கூடாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : விலலை ஆயுதமாகக் கொண்ட வீரரோடு பகை கொண்டாலும், சொல்லை ஆயுதமாகக் கொண்ட எழுத்தாளரோடு பகை கொள்ள வேண்டா.", "en": "Though you may incur the hatred of warriors whose ploughs are bows, incur not that of ministers whose ploughs are words." } }, { "chapter": "பகைத்திறம் தெரிதல்", "kural": [ "ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்", "பல்லார் பகைகொள் பவன்." ], "number": 873, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தாரை விட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன்னந் தனியனாக இருந்து கொண்டு, பலரையும் பகைவர்களாகப் பெறும் ஆட்சியாளன் பித்தரிலும் அறிவற்றவன்.", "en": "He who being alone, incurs the hatred of many is more infatuated than even mad men." } }, { "chapter": "பகைத்திறம் தெரிதல்", "kural": [ "பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்", "தகைமைக்கண் தங்கிற்று உலகு." ], "number": 874, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பகையையும் நட்பாக செய்து கொண்டு நடக்கும், பண்புடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பகையையும் நட்பாக மாற்றி, அவருடன் இணைந்து வாழும் குணம் உடைய ஆட்சியாளரின் பெருமைக்குள் இவ்வுலகம் அடங்கும்.", "en": "The world abides in the greatness of that good-natured man who behaves so as to turn hatred into friendship." } }, { "chapter": "பகைத்திறம் தெரிதல்", "kural": [ "தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்", "இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று." ], "number": 875, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தமக்கோ உதவும் நண்பர் இல்லை; தம்மைப் பகைப்பவரோ இருவர்; அப்போது தனியாக இருக்கும் ஆட்சியாளர், தம்மைப் பகைக்கும் இருவருள் ஒருவனை இனிய நட்பாக மாற்றிக் கொள்க.", "en": "He who is alone and helpless while his foes are two should secure of them as an agreeable help one (to himself)." } }, { "chapter": "பகைத்திறம் தெரிதல்", "kural": [ "தேற஧னும் தேறா விடினும் அழிவின்கண்", "தேறான் பகாஅன் விடல்." ], "number": 876, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இதற்கு முன் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும் அழிவு வந்த காலத்தில் அவனைத் தெளியாமலும் நீங்காமலும் வாளாவிட வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவனது பகையை முன்பே தெரிந்தோ தெரியாமலோ இருந்தாலும், நெருக்கடி வந்தபோது, அவனை நெருங்காமலும் விலக்காமலும் விட்டு விடுக.", "en": "Though (one’s foe is) aware or not of one’s misfortune one should act so as neither to join nor separate (from him)." } }, { "chapter": "பகைத்திறம் தெரிதல்", "kural": [ "நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க", "மென்மை பகைவர் அகத்து." ], "number": 877, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக் கூடாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நம் பலம் இன்மையை, தாமாக அறியாத நண்பர்களிடம் சொல்ல வேண்டா; பகைவர்களிடமோ அதைக் காட்டிக் கொள்ளவோ வேண்டா.", "en": "Relate not your sufering even to friends who are ignorant of it, nor refer to your weakness in the presence of your foes." } }, { "chapter": "பகைத்திறம் தெரிதல்", "kural": [ "வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்", "பகைவர்கண் பட்ட செருக்கு." ], "number": 878, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாவே அழியும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒரு செ‌யலைச் செய்ய வேண்டிய முறையை அறிந்து, நம்மைப் பலப்படுத்துவதுடன் ரகசியங்களையும் நாம் காத்துக் கொண்டால், பகைவர் தங்கள் மனத்துள் நம்மை எதிர்க்க எண்ணிய ‌செருக்கு அழியும்‌.", "en": "The joy of one’s foes will be destroyed if one guards oneself by knowing the way (of acting) and securing assistance." } }, { "chapter": "பகைத்திறம் தெரிதல்", "kural": [ "இளைதாக முள்மரம் கொல்க களையுநர்", "கைகொல்லும் காழ்த்த இடத்து." ], "number": 879, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : முள் மரத்தை இளையதாக இருக்கும் போதே வெட்ட வேண்டும், காழ்ப்பு ஏறி முதிர்ந்த போது வெட்டுகின்றவரின் கையை அது வருத்தும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நம்மை அழி்க்க எண்ணும் முள் மரத்தை அது வளரும்போதே அழி்த்து விடுக; வளர்ந்து விட்டால் அழிக்க எண்ணுபவரின் கையை அது அழிக்கும்.", "en": "A thorny tree should be felled while young, (for) when it is grown it will destroy the hand of the feller." } }, { "chapter": "பகைத்திறம் தெரிதல்", "kural": [ "உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்", "செம்மல் சிதைக்கலா தார்." ], "number": 880, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பகைத்தவருடையத் தலைமையைக் கொடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சு விடும் அளவிற்கும் உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நம்மைப் பகைப்பவரின் செருக்கை ஏளனமாய் எண்ணி அழிக்காமல் விடுபவர், மூச்சு விடும் நேரத்திற்குள் பகைவரால் நிச்சயம் அழிக்கப்பவர்.", "en": "Those who do not destroy the pride of those who hate (them) will certainly not exist even to breathe." } }, { "chapter": "உட்பகை", "kural": [ "நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்", "இன்னாவாம் இன்னா செயின்." ], "number": 881, "section": "பொருட்பால்", "meaning": { "en": "Shade and water are not pleasant, (if) they cause disease; so are the qualities of (one’s) relations not agreeable, (if) they cause pain.", "ta_mu_va": "மு.வ : இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும், அதுபோலவே சுற்றத்தாறின் தன்மைகளும் துன்பம் தருவானால் தீயனவே ஆகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நிழலும் நீரும் முதலில் இனியவாக இருந்தாலும், பிறகு துன்பம் தருவனவே. அதபோல, நெருக்கமான உறவும் சொந்தக் கட்சிக்காரரும் கூடப் பழக்கத்தில் இனியவராக இருந்து, செயலில் துன்பம் தந்தால் அது பெருந் துன்பமே." } }, { "chapter": "உட்பகை", "kural": [ "வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக", "கேள்போல் பகைவர் தொடர்பு." ], "number": 882, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை, ஆனால் உறவினரைப் போல் இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : வாளைப்போல் வெளிப்படையாகத் தெரியும் பகைவர்க்கு அஞ்ச வேண்டா; நண்பரைப்போல் வெளியில் காட்டி மனத்துள் பகைவராக‌வே இருப்போரின் தொடர்புக்கு அஞ்சுக.", "en": "Fear not foes (who say they would cut) like a sword; (but) fear the friendship of foes (who seemingly act) like relations." } }, { "chapter": "உட்பகை", "kural": [ "உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து", "மட்பகையின் மாணத் தெறும்." ], "number": 883, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும், தளர்ச்சி வந்த போது மட்கலத்தை அறுக்கும் கருவி போல் அந்த உட்பகை தவறாமல் அழிவு செய்யும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உட்பகைக்கு அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்க; காக்காது போனால் நமக்குத் தளர்வு வந்தபோது, மண்கலத்தை அறுக்கும் கைக்கருவிபோல உட்பகையானவர் நம்மை உறுதியாக அழித்து விடுவர்.", "en": "Fear internal enmity and guard yourself; (if not) it will destroy (you) in an evil hour, as surely as the tool which cuts the potter’s clay." } }, { "chapter": "உட்பகை", "kural": [ "மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா", "ஏதம் பலவும் தரும்." ], "number": 884, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மனம் திறந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது அவனுக்குச் சுற்றம் சிர்படாமைக்கு காரணமான குற்றம் பலவற்றைத் தரும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : புறத்தே நட்பானவர் போல் தோன்றி அகத்தே திருந்ததாத உட்பகை உண்டானால், அது நம் சுற்றமும் நம் கட்சிக்காரரும் நம் வசப்படாதிருக்கும்படி பல சிக்கல்களையும் உண்டாக்கும்.", "en": "The secret enmity of a person whose mind in unreformed will lead to many evils causing disafection among (one’s) relations." } }, { "chapter": "உட்பகை", "kural": [ "உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்", "ஏதம் பலவும் தரும்." ], "number": 885, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு இறக்கும் வகையான துன்பம் பலவற்றையும் கொடுக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உறவு முறையை உடையவனே ( சொந்தக் கட்சிக்காரனே) உட்பகையானால், அது சாவோடு கூடிய குற்றம் பலவற்றையும் உண்டாக்கும்.", "en": "If there appears internal hatred in a (king’s) family; it will lead to many a fatal crime." } }, { "chapter": "உட்பகை", "kural": [ "ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்", "பொன்றாமை ஒன்றல் அரிது." ], "number": 886, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன்னுடன் இருப்பவரின் பகை தோன்றுமானால், ஆட்சியின் அழிவைத் தடுக்க ஒருபோதும் முடியாது.", "en": "If hatred arises among (one’s) own people, it will be hardly possible (for one) to escape death." } }, { "chapter": "உட்பகை", "kural": [ "செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே", "உட்பகை உற்ற குடி." ], "number": 887, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : செப்பின் இணைப்பைப் போல புறத்தே பொருந்தி இருந்தாலும், உட்பகை உண்டான குடியில் உள்ளவர் அகத்தே பொருந்தி இருக்கமாட்டார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : செப்பு, மூடியோடு சேர்ந்து இருப்பதுபோல் உட்பகை கொண்ட குடும்பமும், கட்சியும், அரசும் வெளியே சேர்ந்து இருந்தாலும் உள்ளத்துள் சேரவே மாட்டா.", "en": "Never indeed will a family subject to internal hatred unite (really) though it may present an apparent union like that of a casket and its lid." } }, { "chapter": "உட்பகை", "kural": [ "அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது", "உட்பகை உற்ற குடி." ], "number": 888, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உட்பகை உண்டான குடி அரத்தினால் தேய்க்கப் பட்ட இரும்பு போல் வலிமை குறைக்கப் பட்டு தேய்ந்து போகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அரத்தால் தேய்க்கப்படும் இரும்பு தேய்வது போல, உட்பகை கொண்ட குடு்ம்‌பமும் கட்சியும் அரசும் தமக்கும் பொருது தம் பலம் இழக்கும்.", "en": "A family subject to internal hatred will wear out and lose its strength like iron that has been filed away." } }, { "chapter": "உட்பகை", "kural": [ "எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்", "உட்பகை உள்ளதாங் கேடு." ], "number": 889, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எள்ளின் பிளவு போல உட்பகை சிறியதாக இருக்கலாம்; என்றாலம் உட்பகை உள்ள கட்சிக்குள்ளேயே அதன் கேடும் இருக்கிறதாம்.", "en": "Although internal hatred be as small as the fragment of the sesamum (seed), still does destruction dwell in it." } }, { "chapter": "உட்பகை", "kural": [ "உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்", "பாம்போடு உடனுறைந் தற்று." ], "number": 890, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அகத்தில் உடண்பாடு இல்லாதவருடன் குடிவாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனப்பொருத்தம் இல்லா‌தவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிசைக்குள்ளே பாம்புடன் சேர்ந்து வாழ்வது போலாகும்.", "en": "Living with those who do not agree (with one) is like dwelling with a cobra (in the same) hut." } }, { "chapter": "பெரியாரைப் பிழையாமை", "kural": [ "ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்", "போற்றலுள் எல்லாம் தலை." ], "number": 891, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எடுத்துக் கொண்ட செயல்களை இனிது முடிப்பவரின் வலிமைகளை அவமதியாமல் இருப்பது, தமக்குத் தீங்கு ஏதும் வராமல் காப்பவர் செய்யும் காவல்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.", "en": "Not to disregard the power of those who can carry out (their wishes) is more important than all the watchfulness of those who guard (themselves against evil)." } }, { "chapter": "பெரியாரைப் பிழையாமை", "kural": [ "பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்", "பேரா இடும்பை தரும்." ], "number": 892, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பெரியவர்களை மதிக்காமல் நடந்தால், அப்பெரியவர்களால் தீராத துன்பம் வரும்.", "en": "To behave without respect for the great (rulers) will make them do (us) irremediable evils." } }, { "chapter": "பெரியாரைப் பிழையாமை", "kural": [ "கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்", "ஆற்று பவர்கண் இழுக்கு." ], "number": 893, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அழிக்க வேண்டுமானால் அவ்வாறே செய்து முடிக்க வல்லவரிடத்தில் தவறு செய்தலை, ஒருவன் கெட வேண்டுமானால் கேளாமலேச் செய்யலாம்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவன் தான் அழிய எண்ணினால் பிறரை அழிப்பதைச் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தவர்களிடம், நீதிநூல்கள் சொல்லும் வழிகளையும் எண்ணிப் பாராமல் பிழை செய்க.", "en": "If a person desires ruin, let him not listen to the righteous dictates of law, but commit crimes against those who are able to slay (other sovereigns)." } }, { "chapter": "பெரியாரைப் பிழையாமை", "kural": [ "கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு", "ஆற்றாதார் இன்னா செயல்." ], "number": 894, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறிவு, செல்வம், படை ஆகிய மூன்று வகை ஆற்றலும் உடையவர்க்கு, அவை இல்லாதவர் முதலில் தீமை செய்வது தாமே எமனைக் கைநீட்டி அழைப்பதைப் போன்றது.", "en": "The weak doing evil to the strong is like beckoning Yama to come (and destroy them)." } }, { "chapter": "பெரியாரைப் பிழையாமை", "kural": [ "யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்", "வேந்து செறப்பட் டவர்." ], "number": 895, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மிக்க வலிமை உள்ள அரசனால் வெகுளப்பட்டவர், அவனிடமிருந்து தப்புவதற்க்காக எங்கே சென்றாலும் எங்கும் வாழ முடியாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பகைவர்க்குக் கடும் வலிமை காட்டும் ஆட்சியாளரால் கோபிக்கப்பட்டவர், ஆட்சியாளருக்கு அஞ்சி, எங்கே போனாலும் எங்கும் வாழ முடியாது.", "en": "Those who have incurred the wrath of a cruel and mighty potentate will not prosper wherever they may go." } }, { "chapter": "பெரியாரைப் பிழையாமை", "kural": [ "எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்", "பெரியார்ப் பிழைத்தொழுகு வார்." ], "number": 896, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர் பிழைத்து வாழ முடியும், ஆற்றல் மிகுந்த பெரியவரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பி பிழைக்க முடியாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தீயால் சுடப்பட்டாலும் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் பெரியவர்களை அவமதித்து வாழ்பவர் பிழைக்கவேமாட்டார்.", "en": "Though burnt by a fire (from a forest), one may perhaps live; (but) never will he live who has shown disrespect to the great (devotees)." } }, { "chapter": "பெரியாரைப் பிழையாமை", "kural": [ "வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்", "தகைமாண்ட தக்கார் செறின்." ], "number": 897, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தகுதியால் சிறப்புற்ற பெரியவர் ஒருவனை வெகுண்டால் அவனுக்கு பலவகையால் மாண்புற்ற வாழ்க்கையும் பெரும் பொருளும் இருந்தும் என்ன பயன்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : குணங்களால் சிறந்த பெரியவர்கள் சினங்கொள்வார் என்றால், பலத்தால் சிறந்த வாழ்க்கையும், பெரும்பொருளும் எதற்கு ஆகும்?", "en": "If a king incurs the wrath of the righteous great, what will become of his government with its splendid auxiliaries and (all) its untold wealth ?" } }, { "chapter": "பெரியாரைப் பிழையாமை", "kural": [ "குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு", "நின்றன்னார் மாய்வர் நிலத்து." ], "number": 898, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மலை போன்ற பெரியவர் கெட நினைத்தால். உலகில் அழியாமல் நிலைபெற்றாற் போல் உள்ளவரும் தம் குடியோடு அழிவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மலை ஒத்த ஆற்றல் உடைய பெரியவர், ஒருவரை அழிக்க எண்ணிவிட்டால், அவர் எண்ணிய அளவிலேயே இப்பூமியில் நிலைபெற்று வாழ்பவர் போன்றோரும், தம் குடியோடும்கூட அழிவர்.", "en": "If (the) hill-like (devotees) resolve on destruction, those who seemed to be everlasting will be destroyed root and branch from the earth." } }, { "chapter": "பெரியாரைப் பிழையாமை", "kural": [ "ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து", "வேந்தனும் வேந்து கெடும்." ], "number": 899, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உயர்ந்த கொள்கையுடைய பெரியவர் சீறினால் நாட்டை ஆளும் அரசனும் இடை நடுவே முறிந்து அரசு இழந்து கெடுவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உயர்ந்த கொள்கையை உடைய பெரியோர் சினம் கொள்வார் என்றால், ஆட்சியாளனும்கூடத் தன் பதவியை இடையிலேயே இழந்து கெடுவான்.", "en": "If those of exalted vows burst in a rage, even (Indra) the king will sufer a sudden loss and be entirely ruined." } }, { "chapter": "பெரியாரைப் பிழையாமை", "kural": [ "இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்", "சிறந்தமைந்த சீரார் செறின்." ], "number": 900, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர் வெகுண்டால் அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள் உடையவரானாலும் தப்பி பிழைக்க முடியாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மிகச் சிறந்த சீர்களை உடையவர் சினந்தால் மிகப்பெரும் பலங்களைச் சார்வாக உடையவரே என்றாலும் தப்பமாட்டார்.", "en": "Though in possession of numerous auxiliaries, they will perish who are-exposed to the wrath of the noble whose penance is boundless." } }, { "chapter": "பெண்வழிச் சேரல்", "kural": [ "மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்", "வேண்டாப் பொருளும் அது." ], "number": 901, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர், சிறந்த பயனை அடையமாட்டார், கடமையைச் செய்தலை விரும்புகின்றவர் வேண்டாத பொருளும் அதுவே.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனைவியை விரும்பி அவள் சொல்லையே கேட்டு வாழ்பவர் சிறந்த அறப்பயனை அடையமாட்டார், செயல் ஆற்ற விரும்புவார் விரும்பாத இன்பம் அது.", "en": "Those who lust after their wives will not attain the excellence of virtue; and it is just this that is not desired by those who are bent on acquiring wealth." } }, { "chapter": "பெண்வழிச் சேரல்", "kural": [ "பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்", "நாணாக நாணுத் தரும்." ], "number": 902, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்கச் செயலாக நாணத்தைக் கொடுக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன் ஆண்மையை எண்ணாமல் மனைவியின் விருப்பத்தையே விரும்புபவன் வசம் இருக்கும் செல்வம், ஆண்களுக்கு எல்லாம் வெட்கம் தருவதுடன் அவனுக்கும் வெட்கம் உண்டாக்கும்.", "en": "The wealth of him who, regardless (of his manliness), devotes himself to his wife’s feminine nature will cause great shame (to ali men) and to himself;" } }, { "chapter": "பெண்வழிச் சேரல்", "kural": [ "இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்", "நல்லாருள் நாணுத் தரும்." ], "number": 903, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும் போது நாணத்தைச் தரும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனைவியிடம் பணிந்து போகும் பயம் ஒருவனிடம் இருந்தால், இது இல்லாத நல்லவர் முன்னே அவனுக்கு எப்போதும் வெட்கத்தைக் கொடுக்கும்.", "en": "The frailty that stoops to a wife will always make (her husband) feel ashamed among the good." } }, { "chapter": "பெண்வழிச் சேரல்", "kural": [ "மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்", "வினையாண்மை வீறெய்த லின்று." ], "number": 904, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.", "en": "The undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss), will never be applauded." } }, { "chapter": "பெண்வழிச் சேரல்", "kural": [ "இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்", "நல்லார்க்கு நல்ல செயல்." ], "number": 905, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.", "en": "He that fears his wife will always be afraid of doing good deeds (even) to the good." } }, { "chapter": "பெண்வழிச் சேரல்", "kural": [ "இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்", "அமையார்தோள் அஞ்சு பவர்." ], "number": 906, "section": "பொருட்பால்", "meaning": { "en": "They that fear the bamboo-like shoulders of their wives will be destitute of manliness though they may flourish like the Gods.", "ta_mu_va": "மு.வ : மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தேவர்களைப் போல வாழ்ந்தாலும் மனைவியின் மூங்கில் போன்ற தோளுக்குப் பயப்படுபவர், ஆண்மையால் வரும் பெருமை இல்லாதவரே." } }, { "chapter": "பெண்வழிச் சேரல்", "kural": [ "பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்", "பெண்ணே பெருமை உடைத்து." ], "number": 907, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனைவி ஏவ, அதையே செய்து நடக்கும் ஆண்மையைக் காட்டிலும், வெட்கப்படுதலை உடைய பெண் தன்மையே சிறந்தது.", "en": "Even shame faced womanhood is more to be esteemed than the shameless manhood that performs the behests of a wife." } }, { "chapter": "பெண்வழிச் சேரல்", "kural": [ "நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்", "பெட் டாங்கு ஒழுகு பவர்." ], "number": 908, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தமது நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்க மாட்டார், அறத்தையும் செய்ய மாட்டார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தம் மனைவி விரும்பியபடியே வாழ்பவர், தம் நண்பர்க்கு ஏற்பட்ட குறையைப் போக்கமாட்டார் நல்லதும் செய்யமாட்டார்.", "en": "Those who yield to the wishes of their wives will neither relieve the wants of (their) friends nor perform virtuous deeds." } }, { "chapter": "பெண்வழிச் சேரல்", "kural": [ "அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்", "பெண்ஏவல் செய்வார்கண் இல்." ], "number": 909, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறச் செயலும் அதற்க்கு காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அறச்செயலும் சிறந்த பொருட்செயலும், பிற இன்பச் செயல்களும் மனைவி சொல்லைக் கேட்டுச் செய்பவரிடம் இருக்கமாட்டா.", "en": "From those who obey the commands of their wives are to be expected neither deeds of virtue, nor those of wealth nor (even) those of pleasure." } }, { "chapter": "பெண்வழிச் சேரல்", "kural": [ "எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்", "பெண்சேர்ந்தாம் பேதைமை இல்." ], "number": 910, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நன்றாக எண்ணுதல், பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சிந்திக்கும் மனமும் செல்வமும் உடையவர்களிடம் மனைவி சொல்லை மட்டுமே கேட்டுச் செய்யும் அறியாமை ஒருபோதும் இராது.", "en": "The foolishness that results from devotion to a wife will never be found in those who possess a reflecting mind and a prosperity (flowing) therefrom." } }, { "chapter": "வரைவின் மகளிர்", "kural": [ "அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்", "இன்சொல் இழுக்குத் தரும்." ], "number": 911, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அன் பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்கு துன்பத்தைக் கொடுக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அன்பால் நம்மை விரும்பாது, பொருள் பெறவே விரும்பும் பாலியல் தொழிலாளரின் இனிய சொற்கள் துன்பமே தரும்.", "en": "The sweet words of elegant braceleted (prostitutes) who desire (a man) not from afection but from avarice, will cause sorrow." } }, { "chapter": "வரைவின் மகளிர்", "kural": [ "பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்", "நயன்தூக்கி நள்ளா விடல்." ], "number": 912, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கிடைக்க கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனிய சொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவனிடம் உள்ள செல்வத்தை அடையும்வரை நல்லவராய்ப் பேசும், பண்பு இல்லாத பாலியல் தொழிலாளரின் ஒழுக்கத்தை நன்கு எண்ணி, அவரைச் சேராது விடுக.", "en": "One must ascertain the character of the ill-natured women who after ascertaining the wealth (of a man) speak (as if they were) good natured-ones, and avoid intercourse (with them)." } }, { "chapter": "வரைவின் மகளிர்", "kural": [ "பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்", "ஏத஧ல் பிணந்தழீஇ அற்று." ], "number": 913, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யானத் தழுவல், இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பொருளையே விரும்பும் பாலியல் தொழிலாளரின் போலித் தழுவல், இருட்டு அறையில் முன்பு அழியாத பிணத்தைத் தழுவுவது போலாம்.", "en": "The false embraces of wealth-loving women are like (hired men) embracing astrange corpse in a dark room." } }, { "chapter": "வரைவின் மகளிர்", "kural": [ "பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்", "ஆயும் அறிவி னவர்." ], "number": 914, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்த மாட்டார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அருளோடுகூடப் பொருள்தேடும் அறிவினை உடையவர், வெறும் பொருளையே தேடும் பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.", "en": "The wise who seek the wealth of grace will not desire the base favours of those who regard wealth (and not pleasure) as (their) riches." } }, { "chapter": "வரைவின் மகளிர்", "kural": [ "பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்", "மாண்ட அறிவி னவர்." ], "number": 915, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இயல்பாகிய மதிநலத்தால் சிறந்த அறிவினை உடையவர், பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.", "en": "Those whose knowledge is made excellent by their (natural) sense will not covet the trfling delights of those whose favours are common (to all)." } }, { "chapter": "வரைவின் மகளிர்", "kural": [ "தந்நலம் பார஧ப்பார் தோயார் தகைசெருக்கிப்", "புன்னலம் பாரிப்பார் தோள்." ], "number": 916, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அழகு முதலியவற்றால் செருக்கு கொண்டு தம் புன்மையான நலத்தை விற்கும் பொது மகளிரின் தோளை, தம் நல்லோழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தம் திறமையில் செருக்குக் கொண்டு, தம் உடல் அழகைப் பலருக்கும் தந்து பணம் பெற விரும்பும் பாலிய தொழிலாளரின் தோளை, அறிவினால் தம் புகழைப் பரப்ப விரும்பும் பெரியோர் தீண்டமாட்டார்.", "en": "Those who would spread (the fame of) their own goodness will not desire the shoulders of those,who rejoice in their accomplishments and bestow their despicable favours (on all who pay)." } }, { "chapter": "வரைவின் மகளிர்", "kural": [ "நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்", "பேணிப் புணர்பவர் தோள்." ], "number": 917, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறுபொருளை விரும்பிக்கூடும் போது மகளிரின் தோளைப் பொருந்துவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறவற்றைப் பெறும் பொருட்டு மன ஆசை கொண்டு, அதற்காகவே உடம்பால் புணரும் பாலியல் தொழிலாளரின் தோளை மன அடக்கம் இல்லாதவரே தீண்டுவர்.", "en": "Those who are destitute of a perfectly (reformed) mind will covet the shoulders of those who embrace (them) while their hearts covet other things." } }, { "chapter": "வரைவின் மகளிர்", "kural": [ "ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப", "மாய மகளிர் முயக்கு." ], "number": 918, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு அணங்கு தாக்கு(மோகினி மயக்கு) என்று கூறுவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : வஞ்சிப்பதில் வல்ல பாலியல் தொழிலாளரின் தழுவலை, வஞ்சனையைக் கண்டு அறியும் அறிவற்றவர், காமம் ஊட்டி உயிர் கவரும் தெய்வத்தின் தாக்குதல் என்பர்.", "en": "The wise say that to such as are destitute of discerning sense the embraces of faithless women are (as ruinous as those of) the celestail female." } }, { "chapter": "வரைவின் மகளிர்", "kural": [ "வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்", "பூரியர்கள் ஆழும் அளறு." ], "number": 919, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒழுக்க வரையரை இல்லாத பொது மகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : வேறுபாடு கருதாது பொருள் தருவார் எவரையும் தழுவும் பாலியல் தொழிலாளரின் மெல்லிய தோள்கள், அறிவற்ற கீழ்மக்கள் புகுந்து மூழ்கும் நரகம் ஆகும்.", "en": "The delicate shoulders of prostitutes with excellent jewels are a hell into which are plunged the ignorant base." } }, { "chapter": "வரைவின் மகளிர்", "kural": [ "இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்", "திருநீக்கப் பட்டார் தொடர்பு." ], "number": 920, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இருவகைப்பட்ட மனம் உடைய பொது மகளிரும், கள்ளும் சூதுமாகிய இவ் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உள்ளம் ஓரிடமும், உடம்பு ஓரிடமுமாக இருமனம் கொண்ட பாலிய் தொழிலாளர், கள், சூதாட்டம் இவை எல்லாம் திருமகளால் விலக்கப்பட்டவருக்கு நட்பாகும்.", "en": "Treacherous women, liquor, and gambling are the associates of such as have forsaken by Fortune." } }, { "chapter": "கள்ளுண்ணாமை", "kural": [ "உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்", "கட்காதல் கொண்டொழுகு வார்." ], "number": 921, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : போதைப் பொருள் மீத எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார். வாழும் காலத்து மரியாதையும் இழந்த போவார்கள்.", "en": "Those who always thirst after drink will neither inspire fear (in others) nor retain the light (of their fame)." } }, { "chapter": "கள்ளுண்ணாமை", "kural": [ "உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்", "எண்ணப் படவேண்டா தார்." ], "number": 922, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கள்ளை உண்ணக் கூடாது, சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : போதைப் பொருளைப் பயன்படுத்தவேண்டா; பயன்படுத்த எண்ணினால் சான்றோரால் மதிக்கப்பட வேண்டா என்பவர் பயன்படுத்துக.", "en": "Let no liquor be drunk; if it is desired, let it be drunk by those who care not for esteem of the great." } }, { "chapter": "கள்ளுண்ணாமை", "kural": [ "ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்", "சான்றோர் முகத்துக் களி." ], "number": 923, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பெற்றதாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும், அப்படியானால் குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது எண்ணவாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : போதைப் பொருளைப் பயன்படுத்துவது தாய் முன்பே கொடுமை; நிலைமை இப்படி இருக்கச் சான்றோர் முன்பு எப்படி மகிழ்ச்சியாகும்?", "en": "Intoxication is painful even in the presence of (one’s) mother; what will it not then be in that of the wise ?" } }, { "chapter": "கள்ளுண்ணாமை", "kural": [ "நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்", "பேணாப் பெருங்குற்றத் தார்க்கு." ], "number": 924, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தக்காத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் செய்வாள்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : போதைப் பொருளைப் பயன்படுத்துதல் என்னும் பெருங் குற்றத்தைச் செய்வார்க்கு, நாணம் என்னும் நல்ல பெண் முதுகு காட்டிப் போய் விடுவாள்.", "en": "The fair maid of modesty will turn her back on those who are guilty of the great and abominable crime of drunkenness." } }, { "chapter": "கள்ளுண்ணாமை", "kural": [ "கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து", "மெய்யறி யாமை கொளல்." ], "number": 925, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : விளைப் பொருள் கொடுத்து கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : விலை கொடுத்தத் தன்னை அறியாத உடல் மயக்கத்தை வாங்குவது செயல் செய்யும் அறிவில்லாமை.", "en": "To give money and purchase unconsciousness is the result of one’s ignorance of (one’s own actions)." } }, { "chapter": "கள்ளுண்ணாமை", "kural": [ "துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்", "நஞ்சுண்பார் கள்ளுண் பவர்." ], "number": 926, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவுமயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உறங்குபவர், இறந்துபோனவரிலும் வேறுபட்டவர் அல்லர்; அதுபோலவே, எப்போதும் போதைப் பொருளைப் பயன்படுத்துபவர் நஞ்சு உண்பவரிலும் வேறுபட்டவர் அல்லர்.", "en": "They that sleep resemble the deed; (likewise) they that drink are no other than poison-eaters." } }, { "chapter": "கள்ளுண்ணாமை", "kural": [ "உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்", "கள்ளொற்றிக் கண்சாய் பவர்" ], "number": 927, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பட்டு எந்நாளும் சிரிக்கப்படும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : போதைப் பொருளை மறைந்திருந்து பயன்படுத்தி மயங்குபவரை ஊருக்குள் வாழ்பவர் அறிந்து எப்போதும் இகழ்ந்து சிரிப்பர்.", "en": "Those who always intoxicate themselves by a private (indulgence in) drink; will have their secrets detected and laughed at by their fellow-townsmen." } }, { "chapter": "கள்ளுண்ணாமை", "kural": [ "களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து", "ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்." ], "number": 928, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கள்ளுண்பவன் யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : போதைப் பொருளைப் பயன்படுத்தி அறியேன் என்று பிறர்முன் சொல்வதை விட்டுவிடுக. ஏனெனில் மனத்துக்குள் மறைத்தது, நிதானம் தவறும்போது பெரிதாக வெளிப்பட்டு விடும்.", "en": "Let (the drunkard) give up saying “I have never drunk”; (for) the moment (he drinks) he will simply betray his former attempt to conceal." } }, { "chapter": "கள்ளுண்ணாமை", "kural": [ "களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்", "குளித்தானைத் தீத்துரீஇ அற்று." ], "number": 929, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டி தெளிவித்தல், நீரின் கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்கு கொண்டு தேடினாற் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : போதைப் பொருளைப் பயன்படுத்துபவனைத் திருத்தப் பல்வேறு காரணம் காட்டுவது நீருக்குள் மூழ்கி இருப்பவனைத் தீப்பந்தத்தால் தேடுவதுபோல் ஆகும்.", "en": "Reasoning with a drunkard is like going under water with a torch in search of a drowned man." } }, { "chapter": "கள்ளுண்ணாமை", "kural": [ "கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்", "உள்ளான்கொல் உண்டதன் சோர்வு." ], "number": 930, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் தான் கள் உண்ணாத போது கள்ளுண்டு மயங்கினவளைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : போதைப் பொருளை ஒருவன் பயன்படுத்தாத போது, அதைப் பயன்படுத்தி இருப்பவனைப் பார்த்துத் தான் பயன்படுத்தும்போது தனக்கும் இத்தகைய நிலைதானே உண்டாகும் என்று எண்ணிப் பார்க்கமாட்டானோ?", "en": "When (a drunkard) who is sober sees one who is not, it looks as if he remembered not the evil efects of his (own) drink." } }, { "chapter": "சூது", "kural": [ "வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்", "தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று." ], "number": 931, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுகினாற் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : வெற்றி பெறும் ஆற்றல் இருந்தாலும் சூதாடுவதை விரும்ப வேண்டா. அதில் பெறும் வெற்றி, தூண்டிலின் முள்ளில் இருக்கும் உணவை மீன் விழுங்கியது போன்றதாம்.", "en": "Though able to win, let not one desire gambling; (for) even what is won is like a fish swallowing the iron in fish-hook." } }, { "chapter": "சூது", "kural": [ "ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்", "நன்றெய்தி வாழ்வதோர் ஆறு." ], "number": 932, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒரு பொருள் பெற்று நூறு மடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒன்றைப் பெற்று, நூற்றினை இழந்துபோகும் சூதாடுபவர்க்கும் நல்லதைப் பெற்று வாழம் ஒரு வழி உண்டாகுமோ?", "en": "Is there indeed a means of livelihood that can bestow happiness on gamblers who gain one and lose a hundred ?" } }, { "chapter": "சூது", "kural": [ "உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்", "போஒய்ப் புறமே படும்." ], "number": 933, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் ஒரு பொருளை இடைவிடாமல் கூறி சூதாடினால், பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சூதாட்டத்தில் பெற்ற லாபத்தை ஓயாமல் சொல்லிச் சூதாடினால் உள்ள பொருளும், அதனால் வரும் லாபமும் அடுத்தவர் வசம் அகப்பட்டுவிடும்.", "en": "If the king is incessantly addicted to the rolling dice in the hope of gain, his wealth and the resources thereof will take their departure and fall into other’s hands." } }, { "chapter": "சூது", "kural": [ "சிறுமை பலசெய்து சீரழ஧க்கும் சூதின்", "வறுமை தருவதொன்று இல்." ], "number": 934, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைபோல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : துன்பங்கள் பல தந்த,நம் புகழையும் அழிக்கும் சூதைப் போல் நமக்கு வறுமை தருவது வேறு ஒன்றும் இல்லை.", "en": "There is nothing else that brings (us) poverty like gambling which causes many a misery and destroys (one’s) reputation." } }, { "chapter": "சூது", "kural": [ "கவறும் கழகமும் கையும் தருக்கி", "இவறியார் இல்லாகி யார்." ], "number": 935, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகிவிடுவார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சூதாட்டத்தையும் சூதாடும் இடத்தையும் சூதாடும் திறம் படைத்த கையையும் பெருமையாக எண்ணிச் சூதாட்டத்தை இறுகப் பிடித்துக் கொண்டவர் பொருளால் இல்லாதவராகிப் போனது முன்பும் உண்டு.", "en": "Penniless are those who by reason of their attachment would never forsake gambling, the gambling-place and the handling (of dice)." } }, { "chapter": "சூது", "kural": [ "அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்", "முகடியான் மூடப்பட் டார்." ], "number": 936, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சூதாட்டம் என்னும் மூதேவியால் மூடப்பட்டவர் வயிறும் நிறையாமல், துன்பத்தையும் அனுபவிப்பர்.", "en": "Those who are swallowed by the goddess called “gambling” will never have their hunger satisfied, but suffer the pangs of hell in the next world." } }, { "chapter": "சூது", "kural": [ "பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்", "கழகத்துக் காலை புகின்." ], "number": 937, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால் அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சூதாடு களத்துக்குள் காலம் கழிக்கப் புகுந்தால், அது பழஞ்செல்வத்தையும் அழிக்கும். நல்ல குணங்களையும் கெடுக்கும்.", "en": "To waste time at the place of gambling will destroy inherited wealth and goodness of character." } }, { "chapter": "சூது", "kural": [ "பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து", "அல்லல் உழப்பிக்கும் சூது." ], "number": 938, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சூது உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சூதாட்டம் பொருளை அழிக்கும். பொய்யைச் சொல்லச் செய்யும்; மன இரக்கத்தைக் கெடுக்கும்; துன்பத்தையும் தரும்.", "en": "Gambling destroys property, teaches falsehood, puts an end to benevolence, and brings in misery (here and hereafter)." } }, { "chapter": "சூது", "kural": [ "உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்", "அடையாவாம் ஆயங் கொளின்." ], "number": 939, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சூதாட்டத்தை விரும்பினால் மரியாதை, கல்வி, செல்வம், உணவு, உடை என்ற ஐந்தும் சேரமாட்டா.", "en": "The habit of gambling prevents the attainment of these five: clothing, wealth, food, fame and learning." } }, { "chapter": "சூது", "kural": [ "இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்", "உழத்தொறூஉம் காதற்று உயிர்." ], "number": 940, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம் போல், உடல் துன்பப்பட்டு வருந்ந வருந்த உயிர் மேன்மேலும் காதல் உடையதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : துன்பத்தை அனுபவிக்கும் போதெல்லாம் இந்த உடம்பின் மேல் உயிருக்குக் காதல் பெருகுவது போல, சூதாடிப் பொருளை இழந்து துன்பப்படும் போதெல்லாம் சூதாட்டத்தின் மேல் ஆசை பெருகும்.", "en": "As the gambler loves (his vice) the more he loses by it, so does the soul love (the body) the more it suffers through it." } }, { "chapter": "மருந்து", "kural": [ "மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்", "வளிமுதலா எண்ணிய மூன்று." ], "number": 941, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மருத்துவ நூலோர் சொல்லும் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றாம் ஒருவனின் உணவாலும், செயலாலும் அவற்றுக்கு ஒத்து இல்லாது. மிகுந்தோ, குறைந்தோ இருந்தால் நோய் உண்டாகும்.", "en": "If (food and work are either) excessive or deficient, the three things enumerated by (medical) writers, flatulence, biliousness, and phlegm, will cause (one) disease." } }, { "chapter": "மருந்து", "kural": [ "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது", "அற்றது போற்றி உணின்." ], "number": 942, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.", "en": "No medicine is necessary for him who eats after assuring (himself) that what he has (already) eaten has been digested." } }, { "chapter": "மருந்து", "kural": [ "அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு", "பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு." ], "number": 943, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : முன்பு உண்டது சீரணமாகிவிட்டது தெரிந்தால், அடுத்து உண்பதைத் தேவையான அளவு அறிந்து உண்க; அப்படி அளவாக உண்பதே இந்த உடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலம் கொண்டு செல்லும் வழி.", "en": "If (one’s food has been) digested let one eat with moderation; (for) that is the way to prolong the life of an embodied soul." } }, { "chapter": "மருந்து", "kural": [ "அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல", "துய்க்க துவரப் பசித்து." ], "number": 944, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : முன்பு உண்டது சீரணமாகிவிட்டதை அறிந்து நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும் ஒவ்வாத உணவினை விலக்கி, வேண்டியவற்றை உண்க.", "en": "(First) assure yourself that your food has been digested and never fail to eat, when very hungry, whatever is not disagreeable (to you)." } }, { "chapter": "மருந்து", "kural": [ "மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்", "ஊறுபாடு இல்லை உயிர்க்கு." ], "number": 945, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவன் உடம்பிற்கு ஒவ்வொத உணவுகளை விலக்கி உண்டால், அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை.", "en": "There will be no disaster to one’s life if one eats with moderation, food that is not disagreeable." } }, { "chapter": "மருந்து", "kural": [ "இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்", "கழிபேர் இரையான்கண் நோய்." ], "number": 946, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : குறைவாக உண்பதே நல்லது என்று அறிந்து உண்பவனிடம் இன்பம் விலகாமல் இருப்பது போல் மிக அதிகமாக விழுங்குபவனிடம் நோய் விலகாமல் இருக்கும்.", "en": "As pleasure dwells with him who eats moderately, so disease (dwells) with the glutton who eats voraciously." } }, { "chapter": "மருந்து", "kural": [ "தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்", "நோயள வின்றிப் படும்." ], "number": 947, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும்.", "en": "He will be aflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health)." } }, { "chapter": "மருந்து", "kural": [ "நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்", "வாய்நாடி வாய்ப்பச் செயல்." ], "number": 948, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும்.", "en": "Let the physician enquire into the (nature of the) disease, its cause and its method of cure and treat it faithfully according to (medical rule)." } }, { "chapter": "மருந்து", "kural": [ "உற்றான் அளவும் பிணியளவும் காலமும்", "கற்றான் கருதிச் செயல்." ], "number": 949, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மருத்துவ நூலை நன்கு கற்ற மருத்துவர், நோயாளியின் நோயைப் போக்க முயலும்போது, நோயாளியின் வயது, அந்நோய் வந்திருக்கும் காலம், நோயைப் போக்கத் தனக்குத் தேவையாகும் காலம் ஆகியவற்றை எண்ணிச் செயல்பட வேண்டும்.", "en": "The learned (physician) should ascertain the condition of his patient; the nature of his disease, and the season (of the year) and (then) proceed (with his treatment)." } }, { "chapter": "மருந்து", "kural": [ "உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று", "அப்பால் நாற் கூற்றே மருந்து." ], "number": 950, "section": "பொருட்பால்", "meaning": { "en": "Medical science consists of four parts, viz., patient, physician, medicine and compounder; and each of these (again) contains four sub-divisions.", "ta_mu_va": "மு.வ : நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும்." } }, { "chapter": "குடிமை", "kural": [ "இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்", "செப்பமும் நாணும் ஒருங்கு." ], "number": 951, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நடுவு நிமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவனிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சிறந்த குடும்பத்தில் பிறந்தவரிடம் மனம், சொல், செயல் மூன்றின் சுத்தமும், நாணமும் இயல்பாக இருப்பது போல் மற்றவரிடம் இருக்கமாட்டா.", "en": "Consistency (of thought, word and deed) and fear (of sin) are conjointly natural only to the high-born." } }, { "chapter": "குடிமை", "kural": [ "ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்", "இழுக்கார் குடிப்பிறந் தார்." ], "number": 952, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உயர் குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நல்ல குடும்பத்தில் பிறந்தவர் ஒழுக்கம், உண்மை, நாணம் என்னும் இம்மூன்றிலிருந்தும் விலகமாட்டார்.", "en": "The high-born will never deviate from these three; good manners, truthfulness and modesty." } }, { "chapter": "குடிமை", "kural": [ "நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்", "வகையென்ப வாய்மைக் குடிக்கு." ], "number": 953, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்லப் பண்புகள் என்பர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு முகமலர்ச்சி, இருப்பதைக் கொடுத்தல், இனிமையாகப் பேசுதல், கேலி பேசாமை என்னும் நான்கும் உரிய குணங்களாம்.", "en": "A cheerful countenance, liberality, pleasant words, and an unreviling disposition, these four are said to be the proper qualities of the truly high-born." } }, { "chapter": "குடிமை", "kural": [ "அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்", "குன்றுவ செய்தல் இலர்." ], "number": 954, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்கு காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கோடி கோடியாகச் செல்வத்தைப் பெற்றாலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் தம் குடும்பப் பெருமை குறைவதற்கான செயல்களைச் செய்யமாட்டார்.", "en": "Though blessed with immense wealth, the noble will never do anything unbecoming." } }, { "chapter": "குடிமை", "kural": [ "வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி", "பண்பில் தலைப்பிரிதல் இன்று." ], "number": 955, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தாம் பிறர்க்குக் கொடுத்துதவும் வன்மை வறுமையால் சுருங்கிய போதிலும், பழம் பெருமை உடைய குடியில் பிறந்தவர் தம் பண்பிலிருந்து நீங்குவதில்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தொடர்ந்து வரும் நல்ல குடியில் பிறந்தவர் தம் பொருள் கொடுத்துக் குறைந்துவிட்டபோதும், கொடுக்கும் பண்பிலிருந்து விலகமாட்டார்.", "en": "Though their means fall off, those born in ancient families, will not lose their character (for liberality)." } }, { "chapter": "குடிமை", "kural": [ "சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற", "குலம்பற்றி வாழ்தும் என் பார்." ], "number": 956, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைக் கொண்டு தகுதியில்லாதவற்றைக் செய்யமாட்டார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : குற்றம் இல்லாமல் வரும் தம் குடும்ப மரபோடு வாழ்வோம் என்பவர், வறுமை வந்தபோதும், வஞ்சகம் கொண்டு, பொருந்தாத செயல்களைச் செய்யமாட்டார்.", "en": "Those who seek to preserve the irreproachable honour of their families will not viciously do what is detrimental thereto." } }, { "chapter": "குடிமை", "kural": [ "குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்", "மத஧க்கண் மறுப்போல் உயர்ந்து." ], "number": 957, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உயர் குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் ஏதேனும் குறை இருந்தால் அது நிலாவில் தெரியும் களங்கம் போல் பெரிதாகத் தெரியும்.", "en": "The defects of the noble will be observed as clearly as the dark spots in the moon." } }, { "chapter": "குடிமை", "kural": [ "நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்", "குலத்தின்கண் ஐயப் படும்." ], "number": 958, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவனுடைய நல்லப் பண்புகளுக்கிடையில் அன்பற்றத் தன்மைக் காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப் பிறப்பு பற்றி ஐயப்பட நேரும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நல்ல குடும்பத்திலிருந்து வருகின்றவனிடம் அன்பு இல்லாது இருந்தால் அக்குடும்பத்தைச் சேர்ந்தவன் தானா என்று அவனை இந்த உலகம் சந்தேகப்படும்.", "en": "If one of a good family betrays want of affection, his descent from it will be called in question." } }, { "chapter": "குடிமை", "kural": [ "நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்", "குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்." ], "number": 959, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும், அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச் சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும்; அதுபோலக் குடும்பத்தின் இயல்பை அதில் பிறந்தவர் பேசும் சொல் காட்டும்.", "en": "As the sprout indicates the nature of the soil, (so) the speech of the noble indicates (that of one’s birth)." } }, { "chapter": "குடிமை", "kural": [ "நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்", "வேண்டுக யார்க்கும் பணிவு." ], "number": 960, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவனாக வேண்டும், குடியின் உயர்வு வேண்டுமானால் எல்லோரிடத்தும் பணிவு வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவன் தனக்கு நன்மை வேண்டும் என்று எண்ணினால் அவனிடம் நாணம் இருக்க வேண்டும். நற்குடும்பத்தவன் என்ற பெயர் வேண்டும் என்றால், எல்லாரிடமும் பணிவு இருக்க வேண்டும்.", "en": "He who desires a good name must desire modesty; and he who desires (the continuance of) a family greatness must be submissive to all." } }, { "chapter": "மானம்", "kural": [ "இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்", "குன்ற வருப விடல்." ], "number": 961, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விட வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒன்று இல்லாமல் எதுவும் நடைபெறாது என்னும் அளவிற்கு அது முக்கியமானது; ஆனாலும் அதைச் செய்தால் குடும்பத்திற்கு இழிவு வரும் என்றால் அந்த ஒன்றைச் செய்யாதே.", "en": "Actions that would degrade (one’s) family should not be done; though they may be so important that not doing them would end in death." } }, { "chapter": "மானம்", "kural": [ "சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு", "பேராண்மை வேண்டு பவர்." ], "number": 962, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தோடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : புகழுடன் தன் குடும்பப் பெருமையை நிலைநாட்ட விரும்புபவர் புகழுக்குரியவற்றைச் செய்யும்போதும் தம் குடும்பப் பெருமைக்கு ஏற்காத இழிவுகளைச் செய்யமாட்டார்.", "en": "Those who desire (to maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake of fame." } }, { "chapter": "மானம்", "kural": [ "பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய", "சுருக்கத்து வேண்டும் உயர்வு." ], "number": 963, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நல்ல குடும்பத்தில் பிறந்து மானம் காக்க எண்ணுவோர் செல்வம் நிறைந்த காலத்தில் பிறரிடம் பணிவுடனும், வறுமை வந்த காலத்தில் தாழ்ந்து விட்டுக் கொடுக்காமலும் நடந்து கொள்ள வேண்டும்.", "en": "In great prosperity humility is becoming; dignity, in great adversity." } }, { "chapter": "மானம்", "kural": [ "தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்", "நிலையின் இழிந்தக் கடை." ], "number": 964, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நல்ல குடும்பத்தில் பிறந்தவர் மானம் காக்காமல் தம் உயர்ந்த நிலையை விட்டுவிட்டுத் தாழ்ந்தால், தலையை விட்டு விழுந்த மயிரைப் போன்றவர் ஆவார்.", "en": "They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head." } }, { "chapter": "மானம்", "kural": [ "குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ", "குன்றி அனைய செயின்." ], "number": 965, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நல்ல குடும்பத்தில் பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போவார்.", "en": "Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing." } }, { "chapter": "மானம்", "kural": [ "புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று", "இகழ்வார்பின் சென்று நிலை." ], "number": 966, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மதியாமல் இகழ்கின்றவரின் பின் சென்று பணிந்து நிற்க்கும் நிலை, ஒருவனுக்கு புகழும் தராது, தேவருலகிலும் செலுத்தாது, வேறு பயன் என்ன.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உயிர் வாழும் பொருட்டு மானத்தை விட்டுவிட்டுத் தம்மை இகழ்பவர் பின்னே சென்று வாழும் வாழ்வு, இம்மைக்குப் புகழ் தராது. மறுமைக்கு விண்ணுலகிலும் சேர்க்காது; வேறு என்னதான் தரும் அது?", "en": "Of what good is it (for the high-born) to go and stand in vain before those who revile him ? it only brings him loss of honour and exclusion from heaven." } }, { "chapter": "மானம்", "kural": [ "ஒட் டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே", "கெட்டான் எனப்படுதல் நன்று." ], "number": 967, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இகழுபவர் பின்னே சென்று அவர் தரும் பொருளை, பதவியைப் பெற்று உயிர்வாழ்வதைக் காட்டிலும் அவன் இறந்துபோனான் என்று சொல்லப்படுவது அவனுக்கு நல்லதாம்.", "en": "It is better for a man to be said of him that he died in his usual state than that he eked out his life by following those who disgraced him." } }, { "chapter": "மானம்", "kural": [ "மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை", "பீடழிய வந்த இடத்து." ], "number": 968, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : குடும்பப் பெருமைக்கான மானம் அழிய நேர்ந்தபோது இறந்து போகாமல் இந்த உடம்பைக் காத்துவாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்து ஆகுமோ?", "en": "For the high-born to keep their body in life when their honour is gone will certainly not prove a remedy against death." } }, { "chapter": "மானம்", "kural": [ "மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்", "உயிர்நீப்பர் மானம் வரின்." ], "number": 969, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மயிர்எலாம் இழந்துவிட்டால் உயிர் வாழ முடியாத கவரிமான் (சாமரம்) போன்றவர் தம் குடும்பப் பெருமை எல்லாம் அழிய நேர்ந்தால் உயிர் வாழமாட்டார்.", "en": "Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (even one of) its hairs." } }, { "chapter": "மானம்", "kural": [ "இளிவரின் வாழாத மானம் உடையார்", "ஒளிதொழுது ஏத்தும் உலகு." ], "number": 970, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தனக்கு இகழ்ச்சி வரும்போது உயிர்வாழாத மானம் மிக்க மனிதரின் புகழ் வடிவைப் பெரியோர் தொழுது பாராட்டுவர்.", "en": "The world will (always) praise and adore the fame of the honourable who would rather die than sufer indignity." } }, { "chapter": "பெருமை", "kural": [ "ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு", "அஃதிறந்து வாழ்தும் எனல்." ], "number": 971, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று எண்ணுதலாம்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவனுக்குப் பெருமை, பிறர் செய்ய முடியாத நல்ல செய்வேன் என்று எண்ணும் மன ஊக்கமே; அவ்வூக்கம் இல்லாமல் வாழ்வேன் என்று எண்ணுவது கேவலமே.", "en": "One’s light is the abundance of one’s courage; one’s darkness is the desire to live destitute of such (a state of mind.)" } }, { "chapter": "பெருமை", "kural": [ "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா", "செய்தொழில் வேற்றுமை யான்." ], "number": 972, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.", "en": "All human beings agree as regards their birth but difer as regards their characteristics, because of the d ifferent qualities of their actions." } }, { "chapter": "பெருமை", "kural": [ "மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்", "கீழல்லார் கீழல் லவர்." ], "number": 973, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நல்ல பண்புகள் ( பெருமைகள்) இல்லாதவர் உயர்ந்த பதவியில் இருந்தாலும் பெருமைக்கு உரியவர் அல்லர்; சிறிய பதவியில் இருந்தாலும் உயர்வான பண்புகளை உடையவர் பெருமை குறைந்தவர் அல்லர்.", "en": "Though (raised) above, the base cannot become great; though (brought) low,the great cannot become base." } }, { "chapter": "பெருமை", "kural": [ "ஒருமை மகளிரே போலப் பெருமையும்", "தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு." ], "number": 974, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப்போல் பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன் கணவனை அன்றிப் பிறரிடம் மனத்தாலும் உறவு கொள்ளாத பெண்களின் சிறப்பைப் போல,சிறந்து நெறிகளிலிருந்து தவறி விடாமல் தன்னைக் காத்துக்கொண்டு வாழ்பவனுக்கே பெருமை உண்டு.", "en": "Even greatness, like a woman’s chastity, belongs only to him who guards himself." } }, { "chapter": "பெருமை", "kural": [ "பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்", "அருமை உடைய செயல்." ], "number": 975, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்க்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர்.", "en": "(Though reduced) the great will be able to perform, in the proper way, deeds dificult (for others to do)." } }, { "chapter": "பெருமை", "kural": [ "சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்", "பேணிக் கொள் வேம் என்னும் நோக்கு." ], "number": 976, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பெரியாரை விரும்பிப் போற்றுவோம் எண்ணும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பெருமைக்கு உரியவர்களைப் பின்பற்றி அவர் மரபைக் காப்போம் என்னும் நல்லெண்ணம் சிறியவர் மனத்துள் இராது.", "en": "It is never in the nature of the base to seek the society of the great and partake of their nature." } }, { "chapter": "பெருமை", "kural": [ "இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்", "சீரல் லவர்கண் படின்." ], "number": 977, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சிறப்பு நிலையும் தனக்கு பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்பட்டால், வரம்பு மீறிய செயலை உடையதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பணம், படிப்பு, பதவி ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடையவரிடம் சேர்ந்தால், அவர்களின் செயல்கள் அகங்காரத்தோடு வருவனவாம்.", "en": "Even nobility of birth, wealth and learning, if in (the possession of) the base, will (only) produce everincreasing pride." } }, { "chapter": "பெருமை", "kural": [ "பணியுமாம் என்றும் பெருமை சிறுமை", "அணியுமாம் தன்னை வியந்து." ], "number": 978, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்.", "en": "The great will always humble himself; but the mean will exalt himself in self-admiration." } }, { "chapter": "பெருமை", "kural": [ "பெருமை பெருமிதம் இன்மை சிறுமை", "பெருமிதம் ஊர்ந்து விடல்." ], "number": 979, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பெருமை பண்பு செருக்கு இல்லாமல் வாழ்தல், சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லா‌மலேயே பெருமைப்பட்டுக் கொள்வது சிறுமை.", "en": "Freedom from conceit is (the nature of true) greatness; (while) obstinacy therein is (that of) meanness." } }, { "chapter": "பெருமை", "kural": [ "அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்", "குற்றமே கூறி விடும்." ], "number": 980, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பெருமைக்குரியவர் பிறர் பெருமைகளைச் சொல்லி அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்; சிறுமைக்கு உரியவர்‌களோ பிறர் பெருமைகளை மறைத்துக் குறைகளை மட்டுமே கூறிவிடுவர்.", "en": "The great hide the faults of others; the base only divulge them." } }, { "chapter": "சான்றாண்மை", "kural": [ "கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து", "சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு." ], "number": 981, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நாம் செய்யத்தக்க கடமை இது என்று சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் இயல்பாக இருக்கும் என்று கூறுவர்.", "en": "It is said that those who are conscious of their duty and behave with a perfect goodness will regard as natu ral all that is good." } }, { "chapter": "சான்றாண்மை", "kural": [ "குணநலம் சான்றோர் நலனே பிறநலம்", "எந்நலத்து உள்ளதூஉம் அன்று." ], "number": 982, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவறுடைய பண்புகளின் நலமே, மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சான்றோர் என்பவர்க்கு அழகு, குறங்களால் ஆகிய அழகே; பிற புற அழகெல்லாம் எந்த அழகிலும் சேரா.", "en": "The only delight of the perfect is that of their goodness; all other (sensual) delights are not to be included among any (true) delights." } }, { "chapter": "சான்றாண்மை", "kural": [ "அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு", "ஐந்துசால் ஊன்றிய தூண்." ], "number": 983, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மற்றவரிடம் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், சேர்த்ததைப் பிறர்க்கும் வழங்கும் ஒப்புரவு, நெடுங்காலப் பழக்கத்தாரிடம் முக தாட்சண்யம், உண்மை பேசுதல் என்னும் ஐந்தும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்கள்.", "en": "Affection, fear (of sin), benevolence, favour and truthfulness; these perfect are the five pillars on which goodness rests." } }, { "chapter": "சான்றாண்மை", "kural": [ "கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை", "சொல்லா நலத்தது சால்பு." ], "number": 984, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது, சால்பு பிறருடையத் தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிற உயிர்களைக் கொல்லாதிருப்பது தனத்திற்கு அழகு; பிறர் குறைகளைப் பேசாதிருப்பது சான்றாண்மைக்கு அழகு.", "en": "Penance consists in the goodness that kills not , and perfection in the goodness that tells not others’ faults." } }, { "chapter": "சான்றாண்மை", "kural": [ "ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்", "மாற்றாரை மாற்றும் படை." ], "number": 985, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும், அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒரு செயலைச் செய்து முடிப்பவர் திறமை, தம்முடன் பணி ஆற்றுபவரிடம் பணிந்து வேலை வாங்குதலே; சான்றாண்மை தம் பகைவரையும் நண்பராக்கப் பயன்படுத்தும் ஆயுதமும் அதுவே.", "en": "Stooping (to inferiors) is the strength of those who can accomplish (an undertaking); and that is the weapon with which the great avert their foes." } }, { "chapter": "சான்றாண்மை", "kural": [ "சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி", "துலையல்லார் கண்ணும் கொளல்." ], "number": 986, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சான்றாண்மையை உரைத்துப் பார்த்துக் கண்டு அறியப்படும் உரைகல் எதுவென்றால், சிறியவர்களிடம் கூடத் தன் தோல்வியை ஒத்துக் கொள்வதே ஆகும்.", "en": "The touch-stone of perfection is to receive a defeat even at the hands of one’s inferiors." } }, { "chapter": "சான்றாண்மை", "kural": [ "இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்", "என்ன பயத்ததோ சால்பு." ], "number": 987, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தமக்குத் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யா விட்டால் சான்றான்மையினால் பயன்தான் என்ன?", "en": "Of what avail is perfect goodness if it cannot do pleasing things even to those who have pained (it) ?" } }, { "chapter": "சான்றாண்மை", "kural": [ "இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்", "திண்மை உண் டாகப் பெறின்." ], "number": 988, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது.", "en": "Poverty is no disgrace to one who abounds in good qualities." } }, { "chapter": "சான்றாண்மை", "kural": [ "ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு", "ஆழி எனப்படு வார்." ], "number": 989, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சான்றாண்மை எனப்படும் கடலுக்குக் கரை எனப்படும் சான்றோர், காலம் மாறினாலும் தாம் மாறமாட்டார்.", "en": "Those who are said to be the shore of the sea of perfection will never change, though ages may change." } }, { "chapter": "சான்றாண்மை", "kural": [ "சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்", "தாங்காது மன்னோ பொறை." ], "number": 990, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சான்றோரின் சால்பு நிறைந்த பண்பு குறைபடுமானால் இந்தப் பெரிய நிலவுலகமும் தன் பாரத்தைத் தாங்க முடியாமற் போய் விடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சான்றோர் தம் சான்றாண்மைப் பண்பிலிருந்து விலகிக் குறைவுபடுவார் என்றால், இப்பூவுலகம் தன் பாரம் தாங்காமல் அழியும்.", "en": "If there is a defect in the character of the perfect, (even) the great world cannot bear (its) burden." } }, { "chapter": "பண்புடைமை", "kural": [ "எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்", "பண்புடைமை என்னும் வழக்கு." ], "number": 991, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று கூறுவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எவரும் தன்னை எளிதாகக் கண்டு பேசும் நிலையில் வாழ்ந்தால், பண்புடைமை என்னும் நல்வழியை அடைவது எளிது என்று நூலோர் கூறுவர்.", "en": "If one is easy of access to all, it will be easy for one to obtain the virtue called goodness." } }, { "chapter": "பண்புடைமை", "kural": [ "அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்", "பண்புடைமை என்னும் வழக்கு." ], "number": 992, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ் விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எல்லாரிடமும் அன்புள்ளவனாக வாழ்வது. உலகத்தோடு ஒத்து வாழும் குடும்பத்தில் பிறந்திருத்தல் இவை இரண்டும் பண்புடைமை என்னும் நல்ல வழிகளாகும்.", "en": "Affectionateness and birth in a good family, these two constitute what is called a proper behaviour to all." } }, { "chapter": "பண்புடைமை", "kural": [ "உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க", "பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு." ], "number": 993, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று, பொருந்தத்தக்கப் பண்பால் ஒத்திருத்தலே கொள்ளத்தக்க ஒப்புமையாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உறுப்புக்களின் தோற்றத்தால் பிறருடன் ஒத்திருப்பது ஒப்பு ஆகாது; உள்ளத்துடன் இணையும் பண்பால் பிறருடன் ஒத்திருப்பதே ஒப்பு ஆகும்.", "en": "Resemblance of bodies is no resemblance of souls; true resemblance is the resemblance of qualities that attract." } }, { "chapter": "பண்புடைமை", "kural": [ "யனொடு நன்றி புரிந்த பயனுடையார்", "பண்புபா ராட்டும் உலகு." ], "number": 994, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்லப் பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபவரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர்.", "en": "The world applauds the character of those whose usefulness results from their equity and charity." } }, { "chapter": "பண்புடைமை", "kural": [ "நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்", "பண்புள பாடறிவார் மாட்டு." ], "number": 995, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும், பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்லப் பண்புகள் உள்ளன.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : விளையாட்டில் விளையாட்டிற்காகக்கூட ஒருவனை இகழ்ந்து ஏளனமாகப் பேசுவது அவனுக்கு மன வருத்தத்தைத் தரும்; அதனால் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறியும் திறம் உள்ளவர்கள், பகைவர்களிடம் கூட ஏளனமாகப் பேசார்.", "en": "Reproach is painful to one even in sport; those (therefore) who know the nature of others exhibit (pleasing) qualities even when they are hated." } }, { "chapter": "பண்புடைமை", "kural": [ "பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்", "மண்புக்கு மாய்வது மன்." ], "number": 996, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது, அஃது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்து போகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பண்புடையவர்கள் வாழ்வதால்தான் மக்கள் வாழ்க்கை எப்போதும் நிலைத்து இருக்கிறது. அவர்கள் மட்டும் வாழாது போவார் என்றால். மனித வாழ்க்கை மண்ணுக்குள் புகுந்து மடிந்து போகும்.", "en": "The (way of the) world subsists by contact with the good; if not, it would bury itself in the earth and perish." } }, { "chapter": "பண்புடைமை", "kural": [ "அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்", "மக்கட்பண்பு இல்லா தவர்." ], "number": 997, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர் அரம் போல் கூர்மையான அறிவுடையவரானாலும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனிதப்பண்பு இல்லாதவர்கள் அரம் போல அறிவுக்கூர்மை படைத்தவர் என்றாலும் ஓர் அறிவு படைத்த மரத்தைப் போன்றோரே.", "en": "He who is destitute of (true) human qualities (only) resembles a tree, though he may possess the sharpness of a file." } }, { "chapter": "பண்புடைமை", "kural": [ "நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்", "பண்பாற்றார் ஆதல் கடை." ], "number": 998, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நட்பு கொள்ள முடியாதவராய்த் தீயவைச் செய்கின்றவரிடத்திலும் பண்பு உடையவராய் நடக்க முடியாமை இழிவானதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தம்முடன் நட்புச் செய்யாமல் பகைமை கொண்டு தீமையே செய்பவர்க்கும் கூடப் பண்பற்றவராய் வாழ்வது இழுக்கே.", "en": "It is wrong (for the wise) not to exhibit (good) qualities even towards those who bearing no friendship (for them) do only what is hateful." } }, { "chapter": "பண்புடைமை", "kural": [ "நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்", "பகலும்பாற் பட்டன்று இருள்." ], "number": 999, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நல்ல பண்பு இல்லாததால் மற்றவர்களுடன் கலந்து பேசி மனம் மகிழும் இயல்பு இல்லாதவர்க்கு, இந்தப் பெரிய உலகம் இருள் இல்லாத பகல் பொழுதிலும் கூட இருளிலே இருப்பது போலவாம்.", "en": "To those who cannot rejoice, the wide world is buried darkness even in (broad) day light." } }, { "chapter": "பண்புடைமை", "kural": [ "ண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்", "கலந்தீமை யால்திரிந் தற்று." ], "number": 1000, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நல்ல பண்பு இல்லாதவன் அடைந்த பெரும் செல்வம், பாத்திரக் கேட்டால் அதிலுள்ள நல்ல பால் கெட்டுப் போவது போலாம்.", "en": "The great wealth obtained by one who has no goodness will perish like pure milk spoilt by the impurity of the vessel." } }, { "chapter": "நன்றியில் செல்வம்", "kural": [ "வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்", "செத்தான் செயக்கிடந்தது இல்." ], "number": 1001, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நூகராமல் இறந்து போனால் அவன் அந்த பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன் வீடு நிறையப் பெரும்பொருள் சேர்த்து வைத்திருந்தும், கஞ்சத்தனத்தால் அதை அனுபவிக்காதவனுக்கு அப்பொருளால் பயன் இல்லை. ஆதலால் அவன் இருந்தாலும் இறந்தவனே.", "en": "He who does not enjoy the immense riches he has heaped up in his house, is (to be reckoned as) dead, (for) there is nothing achieved (by him)." } }, { "chapter": "நன்றியில் செல்வம்", "kural": [ "பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்", "மருளானாம் மாணாப் பிறப்பு" ], "number": 1002, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் இறுகப்பற்றிய மயக்கத்தால் சிறப்பில்லாத பிறவி உண்டாம்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பொருளால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்று எண்ணி அதைத் தேடிய பின் தானும் அனுபவிக்காமல், பிறர் தேவைக்கும் அதைத் தராமல் கஞ்சனாக வாழ்பவனின் மயக்கத்தால் அவனுக்கு முழுமையற்ற பேய்ப்பிறப்பு உண்டாகும்.", "en": "He who knows that wealth yields every pleasure and yet is so blind as to lead miserly life will be born a demon." } }, { "chapter": "நன்றியில் செல்வம்", "kural": [ "ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்", "தோற்றம் நிலக்குப் பொறை." ], "number": 1003, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்கு பாரமே ஆகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மற்றவரைவிட நாம் அதிகம் பொருள் சேர்க்க வேண்டும் என்று பொருள் சேர்ப்பதையே விரும்பிப் புகழை விரும்பாத மனிதரின் பிறப்பு இப்பூமிக்குப் பாரமே.", "en": "A burden to the earth are men bent on the acquisition of riches and not (true) fame." } }, { "chapter": "நன்றியில் செல்வம்", "kural": [ "எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்", "நச்சப் படாஅ தவன்." ], "number": 1004, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறர்க்கு ஏதும் வழங்காதவன் ஆதலால் எவராலும் விரும்பப்படாத அவன், தன் காலத்திற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி நிற்கப்போவது என்று எதை எண்ணுவான்?", "en": "What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come) ?" } }, { "chapter": "நன்றியில் செல்வம்", "kural": [ "கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய", "கோடியுண் டாயினும் இல்." ], "number": 1005, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தேவைப்படுவோர்க்குக் கொடுப்பதும், தேவை கண்டு தாம் அனுபவிப்பதும் இல்லாதவர்க்குப்பல மடங்காக அடுக்கிய கோடிப் பொருள் இருந்தாலும் இல்லாததே ஆகும்.", "en": "Those who neither give (to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing immense riches." } }, { "chapter": "நன்றியில் செல்வம்", "kural": [ "ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று", "ஈதல் இயல்பிலா தான்." ], "number": 1006, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தானும் நுகராமல் தக்கவற்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தானும் அனுபவிக்காமல், தகுதியானவர்க்குத் தரும் மனப்பாங்கும் இல்லாமல் வாழ்பவனிடம் இருக்கும் பெரும் செல்வம் ஒரு நோயே.", "en": "He who enjoys not (his riches) nor relieves the wants of the worthy is a disease to his wealth." } }, { "chapter": "நன்றியில் செல்வம்", "kural": [ "அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்", "பெற்றாள் தமியள்மூத் தற்று." ], "number": 1007, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடையச் செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஏதும் இல்லாதவர்க்கு ஏதாவது ஒன்றைக் கொடுத்து உதவாதவன் செல்வம், மிகுந்த அழகு பெற்ற பெண், திருமணமாகாமலே முதுமை அடைந்தது போலாம்.", "en": "The wealth of him who never bestows anything on the destitute is like a woman of beauty growing old without a husband." } }, { "chapter": "நன்றியில் செல்வம்", "kural": [ "நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்", "நச்சு மரம்பழுத் தற்று." ], "number": 1008, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தாற் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எவராலும் விரும்பப்படாதவனின் செல்வம் ஊரின் நடுவே நின்ற நச்சு மரம் பழுத்தது போலாம்.", "en": "The wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of a town." } }, { "chapter": "நன்றியில் செல்வம்", "kural": [ "அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய", "ஒண்பொருள் கொள்வார் பிறர்." ], "number": 1009, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பிறரிடம் செலுத்தும் அன்பையும் விட்டுத் தன்னையும் வருத்தி அறத்தையும் போற்றாமல் சேர்த்து வைத்தப் பெரும் பொருளைப் பெற்று நுகர்பவர் மற்றவரே.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறர்க்கு ஈயாமல் அன்பை விட்டு விலகி, எதையும் அனுபவிக்காமல் தன்னை வருத்தி, அறத்தை எண்ணாது சேர்த்த பொருளை மற்றவர் அனுபவிப்பர்.", "en": "Strangers will inherit the riches that have been acquired without regard for friendship, comfort and charity." } }, { "chapter": "நன்றியில் செல்வம்", "kural": [ "சீருடைச் செல்வர் சிறுதுனி மார஧", "வறங்கூர்ந் தனையது உடைத்து." ], "number": 1010, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : புகழ் பொருந்திய செல்வர் உற்ற சிறிய வறுமை உலகத்தைக் காக்க வல்ல மேகம் வறுமை மிகுந்தாற் போன்ற தன்மை உடையது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறர்க்குக் கொடுத்துப் புகழ்மிக்கவர் ஆகிய செல்வர்கள் சிறிது காலம் வறுமைப்பட நேர்ந்தால், அது மழை தரம் மேகமே வறுமைப்பட்டது போலாம்.", "en": "The short-lived poverty of those who are noble and rich is like the clouds becoming poor (for a while)." } }, { "chapter": "நாணுடைமை", "kural": [ "கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்", "நல்லவர் நாணுப் பிற." ], "number": 1011, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும், பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு வகையானவை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இழிவான செயல்களுக்கு வெட்கப்படுவதே அனைவர்க்கும் பொதுவான நாணம்; மற்றொன்று அழகிய நெற்றி கொண்ட பெண்களின் இயல்பான வெட்கம் ஆகும்.", "en": "True modesty is the fear of (evil) deeds; all other modesty is (simply) the bashfulness of virtuous maids." } }, { "chapter": "நாணுடைமை", "kural": [ "ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல", "நாணுடைமை மாந்தர் சிறப்பு." ], "number": 1012, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும், எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை, மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உணவு, உடை இன்னும் பிற சிறப்புகள், எல்லா மனிதர்க்கும் ஒன்றே; நல்ல மனிதர்க்குச் சிறப்பாவது நாண் உடைமையே.", "en": "Food, clothing and the like are common to all men but modesty is peculiar to the good." } }, { "chapter": "நாணுடைமை", "kural": [ "ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்", "நன்மை குறித்தது சால்பு." ], "number": 1013, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை, சால்பு என்பது நாணம் என்று சொல்லப்படும் நல்லப் பண்பை இருப்பிடமாகக் கொண்டது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எல்லா உயிர்களும் உடம்பை இடமாகக் கொண்டுள்ளன; அதுபோல், சான்றாண்மையும், நாணம் என்னும் நல்ல குணத்தை இடமாகக் கொண்டுள்ளது.", "en": "As the body is the abode of the spirit, so the excellence of modesty is the abode of perfection." } }, { "chapter": "நாணுடைமை", "kural": [ "அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்", "பிணிஅன்றோ பீடு நடை." ], "number": 1014, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ, அந்த அணிகலம் இல்லையானால் பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நாணம்‌ இருப்பது சான்றோர்க்கு ஆபரணம்; அது மட்டும் இல்‌லை என்றால் அவர்கள் நடக்கும் பெருமித நடை பார்ப்பவர்க்கு நோயாம்.", "en": "Is not the modesty ornament of the noble ? Without it, their haughtiness would be a pain (to others)." } }, { "chapter": "நாணுடைமை", "kural": [ "பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு", "உறைபதி என்னும் உலகு." ], "number": 1015, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பிறர்க்கு வரும் பழிக்காகவும், தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் நாணத்திற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தமக்கு வரும் பழிக்கு மட்டும் அன்றி, பிறர்க்கு வரும் பழிக்கும் வெட்கப்படுவோர், நாணம் வாழும் இடம் என்று உலகத்தவர் கூறுவர்.", "en": "The world regards as the abode of modesty him who fear his own and other’s guilt." } }, { "chapter": "நாணுடைமை", "kural": [ "நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்", "பேணலர் மேலா யவர்." ], "number": 1016, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நாணமாகிய வேலியை தமக்கு காவலாகச் செய்து கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கை விரும்பி மேற்கொள்ள மாட்டார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பெரியவர்கள் தனக்குப் பாதுகாப்பாக நாணத்தைக் கொள்வாரே அல்லாமல், இந்தப் பெரிய உலகத்தைக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.", "en": "The great make modesty their barrier (of defence) and not the wide world." } }, { "chapter": "நாணுடைமை", "kural": [ "நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்", "நாண்துறவார் நாணாள் பவர்." ], "number": 1017, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நாணத்தை தமக்கரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விட மாட்டார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நாணத்தின் சிறப்பை அறிந்து அதன் வழி நடப்பவர் நாணமா, உயிரா,என்ற நெருக்கடி வரும்போது உயிரையே விடுவர்; உயிரைக் காக்க நாணத்தை விடமாட்டார்‌.", "en": "The modest would rather lose their life for the sake of modesty than lose modesty for the sake of life." } }, { "chapter": "நாணுடைமை", "kural": [ "பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்", "அறம்நாணத் தக்கது உடைத்து." ], "number": 1018, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மற்றவர் வெட்கப்படும் ஒன்றிற்கு ஒருவன் வெட்கப்படாமல் அதைச் செய்வான் என்றால், அறம் வெட்கப்படும் குற்றம் அவனிடம் இருக்கிறது.", "en": "Virtue is likely to forsake him who shamelessly does what others are ashamed of." } }, { "chapter": "நாணுடைமை", "kural": [ "குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்", "நாணின்மை நின்றக் கடை." ], "number": 1019, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் கொள்கை தவறினால் , அத் தவறு அவனுடையக் குடிப் பிறப்பைத் கெடுக்கும், நாணில்லாத தன்மை நிலைப் பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவன் ஒழுக்கம் கெட்டால் அவன் குடும்பப் பிறப்பு கெடும்; அவனே நாணம் இல்லாது நின்றால் அவன் நலம் எல்லாம் கெடும்.", "en": "Want of manners injures one’s family; but want of modesty injures one’s character." } }, { "chapter": "நாணுடைமை", "kural": [ "நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை", "நாணால் உயிர்மருட்டி அற்று." ], "number": 1020, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மனத்துள் வெட்கம் இல்லாதவர்களின் நடமாட்டம், மரத்தால் செய்த பொம்மைக்கு உயிர் ஊட்டியிருப்பதாகக் காட்டி மயக்கியது போலாம்.", "en": "The actions of those who are without modesty at heart are like those of puppet moved by a string." } }, { "chapter": "குடிசெயல் வகை", "kural": [ "கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்", "பெருமையின் பீடுடையது இல்." ], "number": 1021, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செயல் செய்யாமல் விடமாட்டேன் என மன உறுதிகொள்ளும் பெருமையைக் காட்டிலும் மேலான பெருமை வேறு இல்லை.", "en": "There is no higher greatness than that of one saying. I will not cease in my effort (to raise my family)." } }, { "chapter": "குடிசெயல் வகை", "kural": [ "ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்", "நீள்வினையால் நீளும் குடி." ], "number": 1022, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : முயற்சி, நிறைந்த அறிவு என்னும் இரண்டுடன் இடைவிடாத செயல் செய்யக் குடும்பமும் நாடும் உயரும்.", "en": "One’s family is raised by unti ring perseverance in both efort and wise contrivances." } }, { "chapter": "குடிசெயல் வகை", "kural": [ "குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்", "மடிதற்றுத் தான்முந் துறும்." ], "number": 1023, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.", "en": "The Deity will clothe itself and appear before him who resolves on raising his family." } }, { "chapter": "குடிசெயல் வகை", "kural": [ "சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்", "தாழாது உஞற்று பவர்க்கு." ], "number": 1024, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஆக வேண்டிய செயலை விரைந்து செய்பவருக்கு அச்செயலைச் செய்து முடிக்கும் திறம் அவர் நினைக்காமலே கிடைக்கும்.", "en": "Those who are prompt in their eforts (to better their family) need no deliberation, such eforts will of themselves succeed." } }, { "chapter": "குடிசெயல் வகை", "kural": [ "குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்", "சுற்றமாச் சுற்றும் உலகு." ], "number": 1025, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தவறானவற்றைச் செய்யாமல் தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்து வாழ்பவனை உயர்ந்தோர் தம் சுற்றமாக ஏற்பர்.", "en": "People will eagerly seek the friendship of the prosperous soul who has raised his family without foul means." } }, { "chapter": "குடிசெயல் வகை", "kural": [ "நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த", "இல்லாண்மை ஆக்கிக் கொளல்." ], "number": 1026, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது அவன் பிறந்த வீட்டையும் நாட்டையும் ஆளும் தன்மையைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொள்வதோ.", "en": "A man’s true manliness consists in making himself the head and benefactor of his family." } }, { "chapter": "குடிசெயல் வகை", "kural": [ "அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்", "ஆற்றுவார் மேற்றே பொறை." ], "number": 1027, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : போர்க்களத்தில் பலரிடையே பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப் போல் குடியில் பிறந்தவரிடையிலும் தாங்க வல்லவர் மேல் தான் பொறுப்பு உள்ளது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : போர்க்களத்திலே எதிர்த்து நின்று சண்டை செய்வது அஞ்சாத வீரர்க்கே ஆவது போல, ஒரு குடும்பத்திலும் நாட்டிலும் அவற்றை உயரச் செய்பவரே, அவற்றின் சுமையைத் தாங்கவும் முடியும்.", "en": "Like heroes in the battle-field, the burden (of protection etc.) is borne by those who are the most eficient in a family." } }, { "chapter": "குடிசெயல் வகை", "kural": [ "குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து", "மானங் கருதக் கெடும்." ], "number": 1028, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை, சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமைக் கெடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்ய ஆசைப்படுவர் சோம்பி, தம் பெருமையை எண்ணி இருந்தால் எல்லாம் கெட்டுப் போகும். அதனால் அவர்க்குக் கால நேரம் என்று இல்லை.", "en": "As a family sufers by (one’s) indolence and false dignity there is to be so season (good or bad) to those who strive to raise their family." } }, { "chapter": "குடிசெயல் வகை", "kural": [ "இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்", "குற்ற மறைப்பான் உடம்பு." ], "number": 1029, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தன் குடிக்கு வரக்குடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன்னால், விலங்குளால், பருவ மாற்றங்களால் துன்பப்படும் வீட்டையும், நாட்டையும் அத்துன்பங்களில் இருந்து காக்க முயல்பவனின் உடம்பு, துன்பத்திற்கு மட்டுமே கொள்கலமோ? இன்பத்திற்கும் இல்லையோ?", "en": "Is it only to sufering that his body is exposed who undertakes to preserve his family from evil ?" } }, { "chapter": "குடிசெயல் வகை", "kural": [ "இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்", "நல்லாள் இலாத குடி." ], "number": 1030, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : துன்பம் வந்த போது உடனிருந்து தாங்க வல்ல நல்ல ஆள் இல்லாத குடி, துன்பமாகிய கோடாரி அடியில் வெட்டி வீழ்த்த விழுந்துவிடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : துன்பம் வரும் போது முட்டுக் கொடுத்துத் தாங்கும் நல்ல பிள்ளைகள் இல்லாத வீடும், நாடும் துன்பமாகிய கோடாரி அடிப்பகுதியை வெட்டச் சாயும் மரம் போல் விழுந்து விடும்.", "en": "If there are none to prop up and maintain a family (in distress), it will fall at the stroke of the axe of misfortune." } }, { "chapter": "உழவு", "kural": [ "சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்", "உழந்தும் உழவே தலை." ], "number": 1031, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது.", "en": "Agriculture, though laborious, is the most excellent (form of labour); for people, though they go about (in search of various employments), have at last to resort to the farmer." } }, { "chapter": "உழவு", "kural": [ "உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது", "எழுவாரை எல்லாம் பொறுத்து." ], "number": 1032, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உழவுத் தொழிலைச் செய்ய முடியாமல் பிற தொழிலைச் செய்யச் செல்வோர் எல்லாரையும், உழவர்களே தாங்குவதால் அவர்களே இந்த உலகத்தவர்க்கு அச்சாணி ஆவர்.", "en": "Agriculturists are (as it were) the linch-pin of the world for they support all other workers who cannot till the soil." } }, { "chapter": "உழவு", "kural": [ "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்", "தொழுதுண்டு பின்செல் பவர்." ], "number": 1033, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர்.", "en": "They alone live who live by agriculture; all others lead a cringing, dependent life." } }, { "chapter": "உழவு", "kural": [ "பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்", "அலகுடை நீழ லவர்." ], "number": 1034, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நெல் வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உழுவதால் தானிய வளமும் அதனால் அருளும் உடைய உழவர்கள், தம் ஆட்சியாளர்களின் குடை நிழலை அயலக ஆட்சியாளரின் கீழ் வாழும் மக்களும் விரும்பும்படி செய்வர்.", "en": "Patriotic farmers desire to bring all other states under the control of their own king." } }, { "chapter": "உழவு", "kural": [ "இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது", "கைசெய்தூண் மாலை யவர்." ], "number": 1035, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கையால் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர், பிறரிடம் சென்று இரக்கமாட்டார், தம்மிடம் இரந்தவர்க்கு ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தம் கையால் உழுது உண்ணும் இயல்பை உடையவர் பிறரிடம் பிச்சை கேட்கமாட்டார்; தம்மிடம் கேட்டு வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கவும் செய்வர்.", "en": "Those whose nature is to live by manual labour will never beg but give something to those who beg." } }, { "chapter": "உழவு", "kural": [ "உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்", "விட்டேம்என் பார்க்கும் நிலை." ], "number": 1036, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உழுபவர் கை மட்டும் வேலை செய்யாது மடங்கிவிட்டால், எல்லாரும் விரும்பும் உணவையும், நாம் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவியரும்கூட அவரது அறத்தில் நிலைத்து நிற்க முடியாது.", "en": "If the farmer’s hands are slackened, even the ascetic state will fail." } }, { "chapter": "உழவு", "kural": [ "தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்", "வேண்டாது சாலப் படும்." ], "number": 1037, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தில் பயிர் செலுத்தி செழித்து விளையும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உழுத மண்ணை, ஏறத்தாழ 35 கிராம் புழுதி, 8.75 கிராம் புழுதி ஆகும்படி காய விட்டுப் பிறகு பயிர் செய்தால் ஒரு கைப்பிடி அளவு எருவும் இடாமலேயே கூட அந்தப் பயிர் அதிகம் விளையும்.", "en": "If the land is dried so as to reduce one ounce of earth to a quarter, it will grow plentifully even without a handful of manure." } }, { "chapter": "உழவு", "kural": [ "ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்", "நீரினும் நன்றதன் காப்பு." ], "number": 1038, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்துக் களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல்காத்தல் நல்லது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உழுவதைக் காட்டிலும் உரம் இடுவது நல்லது; நீர்ப் பாய்ச்சுவதைக் காட்டிலும் களை எடுத்தபிறகு பயிரைக் காவல் செய்வது நல்லது.", "en": "Manuring is better than ploughing; after weeding, watching is better than watering (it)." } }, { "chapter": "உழவு", "kural": [ "செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து", "இல்லாளின் ஊடி விடும்." ], "number": 1039, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால் அந் நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கிவிடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நிலத்திற்கு உரியவன் நாளும் நிலத்திற்குச் சென்று செய்ய வேண்டியதைச் செய்யாது சோம்பி இருந்தால், கடமை ஆற்றாத கணவனை முதலில் மனத்தால் வெறுத்துப் பின் அவனோடு ஊடி விடும் மனைவியைப் போல நிலமும் முதலில் வாடிப் பிறகு பலன் தராமல் போய்விடும்.", "en": "If the owner does not (personally) attend to his cultivation, his land will behave like an angry wife and yield him no pleasure." } }, { "chapter": "உழவு", "kural": [ "இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்", "நிலமென்னும் நல்லாள் நகும்." ], "number": 1040, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நிலமகள் என்னும் நல்ல பெண், நாம் ஏதும் இல்லாத ஏழை என்று சோம்பி இருப்பவரைக் கண்டால் தனக்குள் ஏளனமாய்ச் சிரிப்பாள்.", "en": "The maiden, Earth, will laugh at the sight of those who plead poverty and lead an idle life." } }, { "chapter": "நல்குரவு", "kural": [ "இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்", "இன்மையே இன்னா தது." ], "number": 1041, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே.", "en": "There is nothing that aflicts (one) like poverty." } }, { "chapter": "நல்குரவு", "kural": [ "இன்மை எனவொரு பாவி மறுமையும்", "இம்மையும் இன்றி வரும்." ], "number": 1042, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இல்லாமை என்ற ஒரு பாவி ஒருவனிடத்தில் சேர்ந்தால், அவன் பிறர்க்குக் கொடுக்க இல்லாதவன் ஆவதால் அவனுக்கு மறுமை இன்பமும் இல்லை; தானே அனுபவிக்க ஏதும் இல்லாததால் இம்மை இன்பமும் இல்லை.", "en": "When cruel poverty comes on, it deprives one of both the present and future (bliss)." } }, { "chapter": "நல்குரவு", "kural": [ "தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக", "நல்குரவு என்னும் நசை." ], "number": 1043, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால், அவனுடைய பழைமையானக் குடிப் பண்பையும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இல்லாமை என்று சொல்லப்படும் மன ஆசை எவரிடம் இருக்கிறதோ, அவரின் பழம் குடும்பப் பெருமையையும் சிறந்த பாராட்டுக்களையும் அது மொத்தமாக அழித்து விடும்.", "en": "Hankering poverty destroys at once the greatness of (one’s) ancient descent and (the dignity of one’s) speech." } }, { "chapter": "நல்குரவு", "kural": [ "இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த", "சொற்பிறக்கும் சோர்வு தரும்." ], "number": 1044, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் கூட, இல்லாமை வந்து விட்டால், இழிவான சொற்களைச் சொல்லும் தளர்ச்சியை உண்டாக்கி விடும்.", "en": "Even in those of high birth, poverty will produce the fault of uttering mean words." } }, { "chapter": "நல்குரவு", "kural": [ "நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்", "துன்பங்கள் சென்று படும்." ], "number": 1045, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இல்லாமை என்னும் துன்பத்திற்குள் எல்லா வகைத் துன்பங்களும் அடங்கும்.", "en": "The misery of poverty brings in its train many (more) miseries." } }, { "chapter": "நல்குரவு", "kural": [ "நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்", "சொற்பொருள் சோர்வு படும்." ], "number": 1046, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்னப் போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால் அவர் சொல் மதிக்கப் பெறாது.", "en": "The words of the poor are profitless, though they may be sound in thought and clear in expression." } }, { "chapter": "நல்குரவு", "kural": [ "அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்", "பிறன்போல நோக்கப் படும்." ], "number": 1047, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நியாயமான காரணங்கள் இல்லாத இல்லாமை ஒருவனுக்கு இருந்தால், பெற்ற தாய் கூட அவனை அந்நியனாகவே பார்ப்பாள்.", "en": "He that is reduced to absolute poverty will be regarded as a stranger even by his own mother." } }, { "chapter": "நல்குரவு", "kural": [ "இன்றும் வருவது கொல்லோ நெருநலும்", "கொன்றது போலும் நிரப்பு." ], "number": 1048, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?", "en": "Is the poverty that almost killed me yesterday, to meet me today too ?" } }, { "chapter": "நல்குரவு", "kural": [ "நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்", "யாதொன்றும் கண்பாடு அரிது." ], "number": 1049, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : யோக வலிமையால் நெருப்பிற்குள் படுத்து உறங்கவும் முடியும்; ஆனால், பசிக் கொடுமைக்குள் சிறிது கூடக் கண் மூட முடியாது.", "en": "One may sleep in the midst of fire; but by no means in the midst of poverty." } }, { "chapter": "நல்குரவு", "kural": [ "துப்புர வில்லார் துவரத் துறவாமை", "உப்பிற்கும் காடிக்கும் கூற்று." ], "number": 1050, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்க கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உண்ண, உடுத்த ஏதம் இல்லாதவர் இல்லறத்தை முழுமையாகத் துறந்து விடாதிருப்பது, பிறர் வீட்டில் இருக்கும் உப்புக்கும் கஞ்சித் தண்ணீருக்கும் எமனாம்.", "en": "The destitute poor, who do not renounce their bodies, only consume their neighbour’s salt and water." } }, { "chapter": "இரவு", "kural": [ "இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்", "அவர்பழி தம்பழி அன்று." ], "number": 1051, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம் இரக்க வேண்டும், அவர் இல்லை என்று ஒளிப்பாரானால் அது அவர்க்கு பழி, தமக்கு பழி அன்று.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஏதும்‌ இல்லா நிலையில், எவரிடம் ஏற்பது இழிவாகாது என்று தோன்றுகிழதோ அவரிடம் பிச்சை ஏற்கலாம்; அவர் தர மறுத்து, மறைத்தால் பழி அவர்க்கே; இரப்பவர்க்கு அன்று.", "en": "If you meet with those that may be begged of, you may beg; (but) if they withhold (their gift) it is their blame and not yours." } }, { "chapter": "இரவு", "kural": [ "இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை", "துன்பம் உறாஅ வரின்." ], "number": 1052, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இரந்து கேட்ட பொருள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்பது கூட ஒருவனுக்கு இன்பமே.", "en": "Even begging may be pleasant, if what is begged for is obtained without grief (to him that begs)." } }, { "chapter": "இரவு", "kural": [ "கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று", "இரப்புமோ ரேஎர் உடைத்து." ], "number": 1053, "section": "பொருட்பால்", "meaning": { "en": "There is even a beauty in standing before and begging of those who are liberal in their gifts and understand their duty (to beggars).", "ta_mu_va": "மு.வ : ஒளிப்பு இல்லாத நெஞ்சும், கடைமையுணர்ச்சியும், உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒளிவு மறைவு இல்லாத மனம் உடையவராய், இது என்கடமை என்று அறிபவர் முன்னே நின்று, ஒன்றை அவரிடம் கேட்பதும் கேட்பவர்க்கு அழகுதான்." } }, { "chapter": "இரவு", "kural": [ "இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்", "கனவிலும் தேற்றாதார் மாட்டு." ], "number": 1054, "section": "பொருட்பால்", "meaning": { "en": "To beg of such as never think of withholding (their charity) even in their dreams, is in fact the same as giving (it oneself);", "ta_mu_va": "மு.வ : உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒளிவு மறைவு என்பதைக் கனவிலும் எண்ணிப் பாராதவரிடம் சென்று, ஒன்றைக் கேட்பதும், பிறர்க்குக் கொடுப்பதைப் போன்றதே." } }, { "chapter": "இரவு", "kural": [ "கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று", "இரப்பவர் மேற்கொள் வது." ], "number": 1055, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவர் முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று ஒளித்துக்கூறாத நன்மைகள் உலகத்தில் இருப்பதால் தான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கண் எதிரே நின்று, வறுமைப்பட்டவர் வாயால் கேட்காமல் கண்ணால் கேட்கத் தொடங்குவது, ஒளிவுமறைவு இல்லாமல் அவருக்குக் கொடுப்பவர் இவ்வுலகத்தில் இருப்பதால்தான்.", "en": "As there are in the world those that give without refusing, there are (also) those that prefer to beg by simply standing before them." } }, { "chapter": "இரவு", "kural": [ "கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை", "எல்லாம் ஒருங்கு கெடும்." ], "number": 1056, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இருப்பதை மறைப்பதாகிய நோய் இல்லாதவரைக் கண்டால், இல்லாமையாகிய நோய் எல்லாம் மொத்தமாக அழியும்.", "en": "All the evil of begging will be removed at the sight of those who are far from the evil of refusing." } }, { "chapter": "இரவு", "kural": [ "இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்", "உள்ளுள் உவப்பது உடைத்து." ], "number": 1057, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை அடையும் தன்மையுடையதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அவமதிக்காமல், இழிவாகப் பேசாமல் எடுத்துக் கொடுப்பவரைக் கண்டால், பிச்சை கேட்பவரின் மனம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை கொள்ளும்.", "en": "Beggars rejoice exceedingly when they behold those who bestow (their alms) with kindness and courtesy." } }, { "chapter": "இரவு", "kural": [ "இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்", "மரப்பாவை சென்றுவந் தற்று." ], "number": 1058, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிச்சை ஏற்பார் என்பவர் இல்லாது போய் விட்டால், குளி்ர்ந்த பெரிய இவ்வுலகத்தில் வாழ்பவரின் வாழ்க்கை, வெறும் மரப்பொம்மைகளின் போக்குவரத்தாகவே ஆகிவிடும்.", "en": "If there were no beggars, (the actions done in) the cool wide world would only resemble the movement of a puppet." } }, { "chapter": "இரவு", "kural": [ "ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்", "மேவார் இலாஅக் கடை." ], "number": 1059, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவனிடத்தில் என்ன புகழ் உண்டாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தம்மிடம் வந்து ஒன்றைப் பிச்சையாகக் கேட்பவர் இல்லாதபொழுது, கொடுக்கும் மனம் உள்ளவர்க்குப் புகழ் ஏது?", "en": "What (praise) would there be to givers (of alms) if there were no beggars to ask for and receive (them)." } }, { "chapter": "இரவு", "kural": [ "இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை", "தானேயும் சாலும் கரி." ], "number": 1060, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருக்க வேண்டும், அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிச்சை ஏற்பவன் அது கிடைக்காதபோது கோபங்கொள்ளக்கூடாது; வேண்டும்பொழுது பொருள் கிடைக்காது என்பதற்கு அவனுக்கு ஏற்பட்டுள்ள துன்பமே போதுமான சான்றாகும்.", "en": "He who begs ought not to be angry (at a refusal); for even the misery of (his own) poverty should be a sufficient reason (for so doing)." } }, { "chapter": "இரவச்சம்", "kural": [ "கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்", "இரவாமை கோடி உறும்." ], "number": 1061, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒளிவு மறைவு இல்லாமல், மனம் மகிழ்ந்து பிறர்க்குக் கொடுக்கும் இயல்பு உள்ளவரிடத்திலும் ஒன்றைக் கேட்கா திருப்பது கோடி நன்மையாகும்.", "en": "Not to beg (at all) even from those excellent persons who cheerfully give without refusing, will do immense good." } }, { "chapter": "இரவச்சம்", "kural": [ "இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து", "கெடுக உலகியற்றி யான்." ], "number": 1062, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால், இந்த உலகைப் படைத்தவன் அங்கும் இங்கும் அலைந்து கெடுவானாக.", "en": "If the Creator of the world has decreed even begging as a means of livelihood, may he too go abegging and perish." } }, { "chapter": "இரவச்சம்", "kural": [ "இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்", "வன்மையின் வன்பாட்ட தில்." ], "number": 1063, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வறுமைத் துன்பத்தை இரப்பதன் வாயிலாகத் தீர்ப்போம், என்று கருதி முயற்சியைக் கைவிட்ட வன்மையைப் போல் வன்மையானது வேறு இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இல்லாமையால் வரும் துன்பத்தை (உழைத்துப் போக்காது) பிச்சை எடுத்துப் போக்கிக் கொள்ளலாம் என்று எண்ணும் கொடுமையிலும் கொடுமை வேறு இல்லை.", "en": "There is no greater folly than the boldness with which one seeks to remedy the evils of poverty by begging (rather than by working)." } }, { "chapter": "இரவச்சம்", "kural": [ "இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்", "காலும் இரவொல்லாச் சால்பு." ], "number": 1064, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வாழ வழி இல்லாத போதும் இரந்து கேட்க உடன்படாத சால்பு, உலகத்தில் இடமெல்லாம் கொள்ளாத அவ்வளவு பொருமையுடையதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஏதும் இல்லாமல் வறுமை உற்றபோதும் பிறரிடம் சென்று பிச்சை கேட்கச் சம்மதியாத மன அடக்கம், எல்லா உலகும் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையை உடையது.", "en": "Even the whole world cannot suficiently praise the dignity that would not beg even in the midst of destitution." } }, { "chapter": "இரவச்சம்", "kural": [ "தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது", "உண்ணலின் ஊங்கினிய தில்." ], "number": 1065, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தெளிந்த நீர் போல் சமைத்த கூழே ஆனாலும், முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நீரே மிகுதியாக இருக்கச் சமைக்கப்பட்ட கஞ்சியே என்றாலும், உழைத்த வரவில் உண்பதைக் காட்டிலும் மேலான மகிழ்ச்சி இல்லை.", "en": "Even thin gruel is ambrosia to him who has obtained it by labour." } }, { "chapter": "இரவச்சம்", "kural": [ "ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு", "இரவின் இளிவந்த தில்." ], "number": 1066, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பசுவிற்குத் தண்ணீர் வேண்டும் என்று பிறரிடம் பிச்சையாகக் கேட்டாலும் அதுவும் பிச்சையாதலால், நம் நாவிற்கு அதைவிடக் கேவலம் வேறு இல்லை.", "en": "There is nothing more disgraceful to one’s tongue than to use it in begging water even for a cow." } }, { "chapter": "இரவச்சம்", "kural": [ "இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்", "கரப்பார் இரவன்மின் என்று." ], "number": 1067, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இரந்து கேட்பதனால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்க வேண்டுடாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிச்சை எடுத்துத்தான் ஆகவேண்டும் என்றால், தம்மிடம் இருப்பதை மறைப்பாரிடம் பிச்சை எடுக்க வேண்டா என்று, பிச்சை எடுப்பவரிடம் எல்லாம் நாம் பிச்சை கேட்கின்றேன்.", "en": "I beseech all beggars and say, “If you need to beg, never beg of those who give unwillingly.”" } }, { "chapter": "இரவச்சம்", "kural": [ "இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்", "பார்தாக்கப் பக்கு விடும்." ], "number": 1068, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இரத்தல் என்னும் காவல் இல்லாத மரக்கலம் உள்ளதை ஒளித்துவைக்கும் தன்மையாகிய வன்னிலம் தாக்கினால் உடைந்து விடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : வறுமைக் கடலைக் கடந்துவிட ஏறிய பிச்சை என்னும் வலு இல்லாத தோணி இருப்பதை மறைத்தல் என்னும் பாறையில் மோதப் பிளந்துபோகும்.", "en": "The unsafe raft of begging will split when it strikes on the rock of refusal." } }, { "chapter": "இரவச்சம்", "kural": [ "இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள", "உள்ளதூஉம் இன்றிக் கெடும்." ], "number": 1069, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இரத்தலின் கொடுமையை நினைத்தால் உள்ளம் கரைந்து உருகும், உள்ளதை ஒழிக்கும் கொடுமையை நினைத்தால் உருகுமளவும் இல்லாமல் அழியும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறரிடம் போய்ப் பிச்சை ஏற்று நிற்கும் கொடுமையை எண்ணினால் என் உள்ளம் உருகும். இக்கொடுமையைப் பார்த்த பிறகும் இல்லை என்று மறைப்பவர் கொடுமையை எண்ணினால் உருகும் உள்ளமும் இல்லாது அழிந்துவிடும்.", "en": "To think of (the evil of) begging is enough to melt one’s heart; but to think of refusal is enough to break it." } }, { "chapter": "இரவச்சம்", "kural": [ "கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்", "சொல்லாடப் போஒம் உயிர்." ], "number": 1070, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இரப்பவர் இல்லை என்று சொல்கின்ற அளவிலேயே உயிர் போகின்றதே, உள்ளதை இல்லை என்று ஒளிப்பவர்க்கு உயிர் எங்கு ஒளிந்திருக்குமோ.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இல்லை என்று சொல்வதைக் கேட்ட உடனே பிச்சை எடுப்பவரிடமிருந்து போய் விடும் உயிர், இல்லை என்று சொல்பவர்க்கு மட்டும் போகாமல் எங்கே போய் ஒளிந்து கொள்கிறது?", "en": "Saying “No” to a beggar takes away his life. (but as that very word will kill the refuser) where then would the latter’s life hide itself ?" } }, { "chapter": "கயமை", "kural": [ "மக்களே போல்வர் கயவர் அவரன்ன", "ஒப்பாரி யாங்கண்ட தில்." ], "number": 1071, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கயவர் வெளித்தோற்றத்தில் மனிதரைப் போலவே இருப்பர்; விலங்கு பறவை போன்ற பிற இனங்களில் அவருக்கு ஒப்பானவரை நான் கண்டது இல்லை.", "en": "The base resemble men perfectly (as regards form); and we have not seen such (exact) resemblance (among any other species)." } }, { "chapter": "கயமை", "kural": [ "நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்", "நெஞ்சத்து அவலம் இலர்." ], "number": 1072, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நன்மை அறிந்தவரை விடக் கயவரே நல்ல பேறு உடையவர், ஏன் என்றால், கயவர் தம் நெஞ்சில் எதைப் பற்றியும் கவலை இல்லாதவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நல்லது கெட்டதை அறிந்தவரைக் காட்டிலும் கயவர் செல்வம் உடையவர் ஆவர்; காரணம், கயவர் நல்லத கெட்டது என்ற கவலையே நெஞ்சில் இல்லாதவர்.", "en": "The low enjoy more felicity than those who know what is good; for the former are not troubled with anxiety (as to the good)." } }, { "chapter": "கயமை", "kural": [ "தேவர் அனையர் கயவர் அவருந்தாம்", "மேவன செய்தொழுக லான்." ], "number": 1073, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தம்மைக் கட்டுப்படுத்துவார் இல்லாமல் தாம் விரும்பியபடி எல்லாம் செய்து வாழ்வதால், கயவர் தேவரைப் போன்றவராவர்.", "en": "The base resemble the Gods; for the base act as they like." } }, { "chapter": "கயமை", "kural": [ "அகப்பட்டி ஆவாரைக் காணின் அவர஧ன்", "மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்." ], "number": 1074, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கீழ் மக்கள் தமக்கு கீழ் பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரை விடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தனக்கும் கீழாகத் தான் விரும்பியபடி எல்லாம் வாழும் நாய் போன்றவரைக் கண்டால் அவரைக் காட்டிலும் மேலாகத் தன் நிலையைக் காட்டி கயமை, இறுமாப்புக் கொள்ளும்.", "en": "The base feels proud when he sees persons whose acts meaner than his own." } }, { "chapter": "கயமை", "kural": [ "அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்", "அவாவுண்டேல் உண்டாம் சிறிது." ], "number": 1075, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கீழ் மக்களின் ஆசாரத்திற்கு காரணமாக இருப்பது அச்சமே, எஞ்சியவற்றில் அவா உண்டானால் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கயவர்களிடம் நல்ஒழுக்கம் இருந்தால் ஆட்சியைப் பற்றிய பயமே காரணம் ஆகும். அதையும் மீறி அவர்கள் ஆசைப்படும் பொருள் கிடைப்பதாக இருந்தால் அதனாலும் கொஞ்சம் ஒழுக்கம் இருக்கும்.", "en": "(The principle of) behaviour in the mean is chiefly fear; if not, hope of gain, to some extent." } }, { "chapter": "கயமை", "kural": [ "அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட", "மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்." ], "number": 1076, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கயவர், தாம் கேட்டறிந்த மறைப்பொருளைப் பிறர்க்கு வலிய கொண்டுபோய்ச் சொல்லுவதலால், அறையப்படும் பறை போன்றவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தாம் அறிந்த ரகசியங்களைப் பிறரிடம் வலியச் சென்று சொல்லுவதால், அடிக்கப்படும் பறையைப் போன்றவர் கயவர்.", "en": "The base are like a drum that is beaten, for they unburden to others the secrets they have heard." } }, { "chapter": "கயமை", "kural": [ "ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்", "கூன்கையர் அல்லா தவர்க்கு." ], "number": 1077, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும் படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும் உதற மாட்டார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தாடையை உடைக்கும் முறுக்கிய கை இல்லாதவர்க்குக் கயவர், தாம் உண்டு கழுவிய ஈரக் கையைக்கூட உதறமாட்டார்.", "en": "The mean will not (even) shake of (what sticks to) their hands (soon after a meal) to any but those who would break their jaws with their clenched fists." } }, { "chapter": "கயமை", "kural": [ "சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்", "கொல்லப் பயன்படும் கீழ்." ], "number": 1078, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அணுகி குறைச் சொல்லுகின்ற அளவிலேயே சான்றோர் பயன்படுவர், கரும்புபோல் அழித்துப் பிழிந்தால் தான் கீழ்மக்கள் பயன்படுவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இல்லாதவர் சென்று தம் நிலையைச் சொன்ன அளவில், சான்றோர் இரங்கிக் கொடுப்பர்; கயவர்களோ கரும்பைப் பிழிவதுபோல் பிழிந்தால்தான் கொடுப்பர்.", "en": "The great bestow (their alms) as soon as they are informed; (but) the mean, like the sugar-cane, only when they are tortured to death." } }, { "chapter": "கயமை", "kural": [ "உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்", "வடுக்காண வற்றாகும் கீழ்." ], "number": 1079, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கீழ் மகன் பிறர் உடுப்பதையும், உண்பதையும் கண்டால் அவர் மேல் பொறாமை கொண்டு, வேண்டும் என்றே குற்றம் காண வல்லவனாவான்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிறர் நன்கு உடுத்த, உண்ணக் கண்டால், அவர்மீத குற்றம் காணும் ஆற்றலை உடையவர் கயவர்.", "en": "The base will bring an evil (accusation) against others, as soon as he sees them (enjoying) good food and clothing." } }, { "chapter": "கயமை", "kural": [ "எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்", "விற்றற்கு உரியர் விரைந்து." ], "number": 1080, "section": "பொருட்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கயவர், எதற்கு உரியவர், ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காக தம்மை பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர் ஆவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தமக்கு லாபமோ நட்டமோ வரும் என்றால் தம்மைப் பிறர்க்கு அடிமை ஆக்குவர்; இதற்கு அன்றி வேறு எந்தத் தொழிலுக்குக் கயவர் உரியர் ஆவர்?", "en": "The base will hasten to sell themselves as soon as a calamity has befallen them. For what else are they fitted ?" } }, { "chapter": "தகையணங்குறுத்தல்", "kural": [ "அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை", "மாதர்கொல் மாலும் என் நெஞ்சு." ], "number": 1081, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அதோ பெரிய கம்மல்அணிந்து இருப்பது தெய்வமா? நல்லமயிலா? பெண்ணா? யார் என்று அறிய முடியாமல் என் மனம் மயங்குகிறது.", "en": "Is this jewelled female a celestial, a choice peahen, or a human being ? My mind is perplexed." } }, { "chapter": "தகையணங்குறுத்தல்", "kural": [ "நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு", "தானைக்கொண் டன்ன துடைத்து." ], "number": 1082, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என் பார்வைக்கு எதிராக அவள் என்னைப் பார்ப்பது, தானே தாக்கி எவரையும் கொல்லும் ஒரு தெய்வம், தாக்குவதற்குப் படைகளையும் கூட்டி வந்ததது போல் இருக்கிறது.", "en": "This female beauty returning my looks is like a celestial maiden coming with an army to contend against me." } }, { "chapter": "தகையணங்குறுத்தல்", "kural": [ "பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்", "பெண்டகையால் பேரமர்க் கட்டு." ], "number": 1083, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன், இப்பொழுது கண்டறிந்தேன், அது பெண் தனமையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எமன் என்று நூலோர் சொல்ல முன்பு கேட்டிருக்கிறேன்; பார்த்தது இல்லை; இப்போது தெரிந்து கொண்டேன். பெண்ணிற்கே உரிய நல்ல குணங்களுடன் பெரிதாய்ப் போரிடும் கண்களையும் உடையது தான் எமன்.", "en": "I never knew before what is called Yama; I see it now; it is the eyes that carry on a great fight with (the help of) female qualities." } }, { "chapter": "தகையணங்குறுத்தல்", "kural": [ "கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்", "பேதைக்கு அமர்த்தன கண்." ], "number": 1084, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பெண்மைக் குணம் மிக்க இப்பெண்ணின் கண்களுக்கு அவற்றைப் பார்ப்பவர் உயிரைப் பறிக்கும் தோற்றம் இருப்பதால் அவள் குணத்திற்கும் அறிவிற்கும் மாறுபட்டு போர் செய்கின்றன.", "en": "These eyes that seem to kill those who look at them are as it were in hostilities with this feminine simplicity." } }, { "chapter": "தகையணங்குறுத்தல்", "kural": [ "கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்", "நோக்கமிம் மூன்றும் உடைத்து." ], "number": 1085, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எமனோ. கண்ணோ, பெண்மானோ, இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கிறது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என்னை துன்புறுத்துவது எமனா? என் மேனி எங்கும் படர்வதால் கண்ணா? ஏதோ ஒரு பயம் தெரிவதால் பெண்மானா? இப்பெண்ணின் பார்வை இம்மூன்று குணங்களையும் பெற்றிருக்கிறது.", "en": "Is it Yama, (a pair of) eyes or a hind ?- Are not all these three in the looks of this maid ?" } }, { "chapter": "தகையணங்குறுத்தல்", "kural": [ "கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்", "செய்யல மன்இவள் கண்." ], "number": 1086, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும் படியான துன்பத்தைச் செய்யமாட்டா.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அதோ வளைந்து இருக்கும் புருவங்கள் வளையாமல் நேராக நின்று தடுத்தால், அவள் கண்கள், எனக்கு நடுக்கம் தரும் துன்பத்தை தரமாட்டா.", "en": "Her eyes will cause (me) no trembling sorrow, if they are properly hidden by her cruel arched eye-brows." } }, { "chapter": "தகையணங்குறுத்தல்", "kural": [ "கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்", "படாஅ முலைமேல் துகில்." ], "number": 1087, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மாதருடைய சாயாத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகப்படாம் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அந்தப் பெண்ணின் சாயாத முலைமேல் இருக்கும் சேலை, கொல்லம் மதம் பிடித்த ஆண் யானையின் முகபடாம் போன்று இருக்கிறது.", "en": "The cloth that covers the firm bosom of this maiden is (like) that which covers the eyes of a rutting elephant." } }, { "chapter": "தகையணங்குறுத்தல்", "kural": [ "ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்", "நண்ணாரும் உட்குமென் பீடு." ], "number": 1088, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்க்கு காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : களத்தில் முன்பு என்னை அறியாதவரும் அறிந்தவர் சொல்லக் கேட்டு வியக்கும் என் திறம், அவள் ஒளி பொருந்திய நெற்றியைக் கண்ட அளவில் அழிந்துவிட்டதே.", "en": "On her bright brow alone is destroyed even that power of mine that used to terrify the most fearless foes in the battlefield." } }, { "chapter": "தகையணங்குறுத்தல்", "kural": [ "பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு", "அணியெவனோ ஏதில தந்து." ], "number": 1089, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பெண்மானைப் போன்ற அச்சப் பார்வையையும் உள்ளத்தில் நாணத்தையும் நகைகளாகக் கொண்டிருக்கும் இவளுக்கு வேறு வேறு வகைப்பட்ட நகைகளை அணிவித்திருப்பது எதற்காகவோ?", "en": "Of what use are other jewels to her who is adorned with modesty, and the meek looks of a hind ?" } }, { "chapter": "தகையணங்குறுத்தல்", "kural": [ "உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்", "கண்டார் மகிழ்செய்தல் இன்று." ], "number": 1090, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : காய்ச்சப்பட்ட கள், உண்டவர்க்கே மகிழ்ச்சி தரும்; காதலைப் போல், காண்பவருக்கும் அது மகிழ்ச்சி தருவது இல்லை.", "en": "Unlike boiled honey which yields delight only when it is drunk, love give spleasure even when looked at." } }, { "chapter": "குறிப்பறிதல்", "kural": [ "இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு", "நோய்நோக்கொன் றந்நோய் மருந்து." ], "number": 1091, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இவளின் மையூட்டப்பட்ட கண்களில் என்மேல் இரண்டு நோக்கம் இருப்பது தெரிகிறது. ஒரு நோக்கம் எனக்கு துன்பம் தெரிகிறது. மற்றொன்று அந்தத் துன்பத்திற்கு மருந்து ஆகிறது.", "en": "There are two looks in the dyed eyes of this (fair one); one causes pain, and the other is the cure thereof." } }, { "chapter": "குறிப்பறிதல்", "kural": [ "கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்", "செம்பாகம் அன்று பெரிது." ], "number": 1092, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று, அதைவிடப் பெரிய பகுதியாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நான் பார்க்காதபோது, என்னைக் களவாக பார்க்கும் இவளின் சிறு பார்வை, காதலில் சரி பாதி அன்று அதற்கு மேலாம்.", "en": "A single stolen glance of her eyes is more than half the pleasure (of sexual embrace)." } }, { "chapter": "குறிப்பறிதல்", "kural": [ "நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்", "யாப்பினுள் அட்டிய நீர்." ], "number": 1093, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : என்னை நோக்கினாள், யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நான் பார்க்காதபோது, என்னைப் பார்த்தாள்; பார்த்து நாணத்தால் தலைகுனிந்தாள்; இந்த செயல் எங்களுக்குள் காதல் பயிர் வளர அவள் ஊற்றிய நீராகும்.", "en": "She has looked (at men) and stooped (her head); and that (sign) waters as it were (the corn of) our love." } }, { "chapter": "குறிப்பறிதல்", "kural": [ "யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்", "தான்நோக்கி மெல்ல நகும்." ], "number": 1094, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நான் அவளை பார்க்கும்போது தலைகுனிந்து நிலத்தைப் பார்ப்பாள், நான் பார்க்காதபோதோ என்னைப் பார்த்து மெல்ல தனக்குள்ளே சிரிப்பாள்.", "en": "When I look, she looks down; when I do not, she looks and smiles gently." } }, { "chapter": "குறிப்பறிதல்", "kural": [ "குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்", "சிறக்கணித்தாள் போல நகும்" ], "number": 1095, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத் தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப் பார்த்து தனக்குள் மகிழ்வாள்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நேரே பார்க்காமல் ஒரு கண்ணை மட்டும் சுருக்கி பார்ப்பவள் போல என்னைப் பார்த்துப் பார்த்துப் பிறகு தனக்குள் தானே மகிழ்வாள்.", "en": "She not only avoids a direct look at me, but looks as it were with a half-closed eye and smiles." } }, { "chapter": "குறிப்பறிதல்", "kural": [ "உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்", "ஒல்லை உணரப் படும்." ], "number": 1096, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : (பேசினேன்) அவள் யாரே எவரோ என்று பதில் சொன்னாள்; சொன்னாலும், மனத்தில் பகை இல்லாத அவளது சொல்லின் பொருள் விரைவில் அறியப்படும்.", "en": "Though they may speak harshly as if they were strangers, the words of the friendly are soon understood." } }, { "chapter": "குறிப்பறிதல்", "kural": [ "செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்", "உறாஅர்போன்று உற்றார் குறிப்பு." ], "number": 1097, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பகை கொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர் போல் பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார் போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : (ஆம். இப்போது தெரிகிறது) கோபம் இல்லாமல் பேசும் பேச்சும், பகைவர் போன்ற பார்வையும், யாரே போலத் தோன்றி நட்பாவார் காட்டும் அடையாளங்கள்.", "en": "Little words that are harsh and looks that are hateful are (but) the expressions of lovers who wish to act like strangers." } }, { "chapter": "குறிப்பறிதல்", "kural": [ "அசையியற்கு உண்டாண்டோ ர் ஏஎர்யான் நோக்கப்", "பசையினள் பைய நகும்." ], "number": 1098, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : யான் நோக்கும் போது அதற்காக அன்பு கொண்டவனாய் மெல்லச் சிரிப்பாள், அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : யாரோ எவரோ போல அவள் பேசிய பின்பும் நான் அவளைப் பார்க்க, அவள் மனம் நெகிழ்ந்து மனத்திற்குள் மெல்ல சிரித்தாள்; அச்சிரிப்பிலும் அவளுக்கு ஏதோ ஒரு குறிப்பு இருப்பது தெரிகிறது.", "en": "When I look, the pitying maid looks in return and smiles gently; and that is a comforting sign for me." } }, { "chapter": "குறிப்பறிதல்", "kural": [ "ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்", "காதலார் கண்ணே உள." ], "number": 1099, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள இயல்பாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : முன்பின் தெரியாதவர் போல, பொதுவாக பார்த்தப் பேசுவது காதலர்களிடம் இருக்கும் குணந்தான்.", "en": "Both the lovers are capable of looking at each other in an ordinary way, as if they were perfect strangers." } }, { "chapter": "குறிப்பறிதல்", "kural": [ "கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்", "என்ன பயனும் இல." ], "number": 1100, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கண்களோடு கண்கள் நோக்காமல் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : காதலரில் ஒருவர் கண்ணோடு மற்றொருவர் கண்ணும் பார்வையால் பேசிவிட்டால் அதற்கு பிறகு வாய்ச் சொற்களால் ஒரு பயனும் இல்லை.", "en": "The words of the mouths are of no use whatever, when there is perfect agreement between the eyes (of lovers)." } }, { "chapter": "புணர்ச்சி மகிழ்தல்", "kural": [ "கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்", "ஒண்தொடி கண்ணே உள." ], "number": 1101, "section": "காமத்துப்பால்", "meaning": { "en": "The (simultaneous) enjoyment of the five senses of sight, hearing, taste, smell and touch can only be found with bright braceleted (women).", "ta_mu_va": "மு.வ : கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : விழியால் பார்த்து, செவியால்கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் மோந்து, உடம்பால் தீண்டி என் ஐம்பொறிகளாலும் அனுபவிக்கும்படும் இன்பம் ஒளிமிக்க வளையல்களை அணிந்த மனைவியிடம் மட்டுமே உண்டு." } }, { "chapter": "புணர்ச்சி மகிழ்தல்", "kural": [ "பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை", "தன்நோய்க்குத் தானே மருந்து." ], "number": 1102, "section": "காமத்துப்பால்", "meaning": { "en": "The remedy for a disease is always something diferent (from it); but for the disease caused by this jewelled maid, she is herself the cure.", "ta_mu_va": "மு.வ : நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நோய்களுக்கு மருந்து பெரும்பாலும், அந்நோய்களுக்கு மாறான இயல்பை உடையவையே. ஆனால் இவள் தந்த நோய்க்கு இவளே மருந்து." } }, { "chapter": "புணர்ச்சி மகிழ்தல்", "kural": [ "தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்", "தாமரைக் கண்ணான் உலகு." ], "number": 1103, "section": "காமத்துப்பால்", "meaning": { "en": "Can the lotus-eyed Vishnu’s heaven be indeed as sweet to those who delight to sleep in the delicate arms of their beloved ?", "ta_mu_va": "மு.வ : தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல் இனிமை உடையதோ.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?" } }, { "chapter": "புணர்ச்சி மகிழ்தல்", "kural": [ "நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்", "தீயாண்டுப் பெற்றாள் இவள்?" ], "number": 1104, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன்னை நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும் ஒரு தீயை என் உள்ளத்தில் ஏற்ற, இவள் அதை எங்கிருந்து பெற்றாள்?", "en": "From whence has she got this fire that burns when I withdraw and cools when I approach ?" } }, { "chapter": "புணர்ச்சி மகிழ்தல்", "kural": [ "வேட் ட பொழுதின் அவையவை போலுமே", "தோட் டார் கதுப்பினாள் தோள்." ], "number": 1105, "section": "காமத்துப்பால்", "meaning": { "en": "The shoulders of her whose locks are adorned with flowers delight me as if they were the very sweets I have desired (to get).", "ta_mu_va": "மு.வ : மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான பொருள்களை நினைத்து விரும்பிய பொழுது அவ்வப் பொருள்களைப் போலவே இன்பம் செய்கின்றன.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நாம் விரும்பும் பொருள்கள் விரும்பியபொழுது விரும்பியவாறே இன்பம் தருவது போல, பூச்சூடிய கூந்தலை உடைய இவள் தோள்கள் இவளுடன் எப்போது கூடினாலும் இன்பம் தருகின்றன." } }, { "chapter": "புணர்ச்சி மகிழ்தல்", "kural": [ "உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு", "அமிழ்தின் இயன்றன தோள்." ], "number": 1106, "section": "காமத்துப்பால்", "meaning": { "en": "The shoulders of this fair one are made of ambrosia, for they revive me with pleasure every time I embrace them.", "ta_mu_va": "மு.வ : பொருந்து போதெல்லாம் உயிர் தளிர்க்கும் படியாகத் தீண்டுதலால் இவளுக்கு தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இவளை அணைக்கும்போது எல்லாம் வாடிக் கிடந்த என் உயிர் தளிர்க்கும்படி என்னைத் தொடுவதால், இவளின் தோள்கள் அமிழ்தத்தில் செய்யப்பட்டவை போலும்." } }, { "chapter": "புணர்ச்சி மகிழ்தல்", "kural": [ "தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்", "அம்மா அரிவை முயக்கு." ], "number": 1107, "section": "காமத்துப்பால்", "meaning": { "en": "The embraces of a gold-complexioned beautiful female are as pleasant as to dwell in one’s own house and live by one’s own (earnings) after distributing (a portion of it in charity).", "ta_mu_va": "மு.வ : அழகிய மா நிறம் உடைய இவளுடைய தழுவுதல், தம்முடைய வீட்டிலிருந்து தாம் ஈட்டிய பொருளைப் பகுந்து கொடுத்து உண்டாற் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அழகிய மா நிறப் பெண்ணாகிய என் மனைவியிடம் கூடிப் பெறும் சுகம், தன் சொந்த வீட்டில் இருந்து கொண்டு, தன் உழைப்பில் வந்தவற்றைத் தனக்குரியவர்களுடன் பகிர்ந்து உண்ண வரும் சுகம் போன்றது." } }, { "chapter": "புணர்ச்சி மகிழ்தல்", "kural": [ "வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை", "போழப் படாஅ முயக்கு." ], "number": 1108, "section": "காமத்துப்பால்", "meaning": { "en": "To ardent lovers sweet is the embrace that cannot be penetrated even by a breath of breeze.", "ta_mu_va": "மு.வ : காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இறுக அணைத்துக் கிடப்பதால் காற்றும் ஊடே நுழைய முடியாதபடி கூடிப் பெறும் சுகம், விரும்பிக் காதலிப்பார் இருவர்க்கும் இனிமையானதே." } }, { "chapter": "புணர்ச்சி மகிழ்தல்", "kural": [ "ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்", "கூடியார் பெற்ற பயன்." ], "number": 1109, "section": "காமத்துப்பால்", "meaning": { "en": "Love quarrel, reconciliation and intercourse - these are the advantages reaped by those who marry for lust.", "ta_mu_va": "மு.வ : ஊடுதல், ஊடலை உணர்ந்து விடுதல், அதன்பின் கூடுதல் ஆகிய இவை காதல் வாழ்வு நிறைவேறப் பெற்றவர் பெற்ற பயன்களாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : படுக்கைக்குப் போகுமுன் சிறு ஊடல் செய்தல், தவறு உணர்ந்து சமாதானம் ஆதல், அதன்பின் கூடல் இவை அல்லவா திருமணம் செய்து கொண்டவர் பெற்ற பயன்கள்!" } }, { "chapter": "புணர்ச்சி மகிழ்தல்", "kural": [ "அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்", "செறிதோறும் சேயிழை மாட்டு." ], "number": 1110, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல்,நூற் பொருள்களை அறிய அறிய அறியாதமைக் கண்டாற் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நூல்களாலும் நுண் அறிவாலும் அறிய அறிய முன்னைய நம் அறியாமை தெரிவதுபோல, நல்ல அணிகளை அணிந்திருக்கும் என் மனைவியுடன் கூடக் கூட அவள் மீது உள்ள என் காதற்சுவையும் புதிது புதிதாகத் தெரிகிறது.", "en": "As (one’s) ignorance is discovered the more one learns, so does repeated intercourse with a well-adorned female (only create a desire for more)." } }, { "chapter": "நலம் புனைந்துரைத்தல்", "kural": [ "நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்", "மென்னீரள் யாம்வீழ் பவள்." ], "number": 1111, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லியத் தன்மை கொண்டவள்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அனிச்சம் பூவே! நீ எல்லாப் பூக்களிலுமே மென்மையால் சிறந்த இயல்பை உடையை வாழ்ந்து போ! ஒன்று உனக்குத் தெரியுமா? என்னால் விரும்பப்படும் என் மனைவி உன்னைக் காட்டிலும் மென்மையானவள்!", "en": "May you flourish, O Anicham! you have a delicate nature. But my beloved is more delicate than you." } }, { "chapter": "நலம் புனைந்துரைத்தல்", "kural": [ "மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்", "பலர்காணும் பூவொக்கும் என்று." ], "number": 1112, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன, என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நெஞ்சே நான் ஒருவனே காணும் என் மனைவியின் கண்கள், பலருங் காணும் பூக்களைப் போல் இருக்கும் என்று எண்ணி மலர்களைக் கண்டு மயங்குகிறாயே! (இதோ பார்)", "en": "O my soul, fancying that flowers which are seen by many can resemble her eyes, you become confused at the sight of them." } }, { "chapter": "நலம் புனைந்துரைத்தல்", "kural": [ "முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்", "வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு." ], "number": 1113, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேன், முத்தே பல், இயற்கை மணமே மணம், வேலே மை உண்ட கண்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மூங்கில் போன்ற தோளை உடைய அவளுக்கு மேனி இளந்தளிர்; பல்லோ முத்து; உடல் மணமோ நறுமணம்; மையூட்டப் பெற்ற கண்களோ வேல்!", "en": "The complexion of this bamboo-shouldered one is that of a shoot; her teeth, are pearls; her breath, fragrance; and her dyed eyes, lances." } }, { "chapter": "நலம் புனைந்துரைத்தல்", "kural": [ "காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்", "மாணிழை கண்ணொவ்வேம் என்று." ], "number": 1114, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், இவளுடைய கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : குவளைப் பூக்களால் காண முடியுமானால், சிறந்த அணிகளைப் பூண்டிருக்கும் என் மனைவியின் கண்ணைப் போல தாம் இருக்கமாட்டோம் என்று எண்ணி நாணத்தால் தலைகுனிந்து நிலத்தைப் பார்க்கும்.", "en": "If the blue lotus could see, it would stoop and look at the ground saying, “I can never resemble the eyes of this excellent jewelled one.”" } }, { "chapter": "நலம் புனைந்துரைத்தல்", "kural": [ "அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு", "நல்ல படாஅ பறை." ], "number": 1115, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினால், அவற்றால் நொந்து வருத்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என் மனைவி தன் மென்மையை எண்ணாமல் அனிச்சம்பூவை அதன் காம்பின் அடிப்பகுதியைக் களையாமல் அப்படியே சூடிவிட்டாள். அதனால் நொந்து வருந்தும் இவள் இடுப்பிற்கு நல்ல மங்கல ஒலி இனி ஒலிக்காது.", "en": "No merry drums will be beaten for the (tender) waist of her who has adorned herself with the anicham without having removed its stem." } }, { "chapter": "நலம் புனைந்துரைத்தல்", "kural": [ "மதியும் மடந்தை முகனும் அறியா", "பதியின் கலங்கிய மீன்." ], "number": 1116, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அதோ, நிலாவிற்கும் என் மனைவியின் முகத்திற்கும் வேறுபாடு தெரியாது நட்சத்திரங்கள், தாம் இருந்த இடத்திலிருந்து இடம் விட்டுக் கலங்கித் திரிகின்றன!", "en": "The stars have become confused in their places not being able to distinguish between the moon and the maid’s countenance." } }, { "chapter": "நலம் புனைந்துரைத்தல்", "kural": [ "அறுவாய் நிறைந்த அவிர்மத஧ க்குப் போல", "மறுவுண்டோ மாதர் முகத்து." ], "number": 1117, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளது போல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ.இல்லையே.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நட்சத்திரங்கள் ஏன் கலங்க வேண்டும்? தேய்ந்து முழுமை பெறும் ஒளிமிக்க நிலாவில் இருப்பது போல என் மனைவியின் முகத்தில் மறு ஏதும் உண்டா என்ன?", "en": "Could there be spots in the face of this maid like those in the bright full moon ?" } }, { "chapter": "நலம் புனைந்துரைத்தல்", "kural": [ "மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்", "காதலை வாழி மத஧." ], "number": 1118, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : திங்களே! இம் மாதரின் முகத்தைப் போல உண்ணால் ஒளி வீச முடியுமானால், நீயும் இவள் போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நிலவே! நீ வாழ்க! என் மனைவியின் முகம்போல் நான் மகிழும்படி ஒளிவீசுவாய் என்றால் நீயும் என் காதலைப் பெறுவாய்.", "en": "If you can indeed shine like the face of women, flourish, O moon, for then would you be worth loving ?" } }, { "chapter": "நலம் புனைந்துரைத்தல்", "kural": [ "மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்", "பலர்காணத் தோன்றல் மதி." ], "number": 1119, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நிலவே மலர் போன்ற கண்ணை உடைய என் மனைவியின் முகம் போல ஆக நீ விரும்பினால் நான் மட்டும் காணத் தோன்று; பலரும் காணும்படி தோன்றாதே.", "en": "O moon, if you wish to resemble the face of her whose eyes are like (these) flowers, do not appear so as to be seen by all." } }, { "chapter": "நலம் புனைந்துரைத்தல்", "kural": [ "அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்", "அடிக்கு நெருஞ்சிப் பழம்." ], "number": 1120, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உலகம் மென்மைக்குச் சொல்லும் அனிச்சம் பூவும், அன்னப் பறவையின் இளஞ்சிறகும், என் மனைவியின் பாதங்களுக்கு நெருஞ்சிப்பழம் போல வருத்தம் தரும்.", "en": "The anicham and the feathers of the swan are to the feet of females, like the fruit of the (thorny) Nerunji." } }, { "chapter": "காதற் சிறப்புரைத்தல்", "kural": [ "பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி", "வாலெயிறு ஊறிய நீர்." ], "number": 1121, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என்னிடம் மெல்லிதாகப் பேசும் என் மனைவியின் வெண்மையான பற்களிடையே ஊறிய நீர், பாலோடு தேனைக் கலந்த கலவை போலும்!", "en": "The water which oozes from the white teeth of this soft speeched damsel is like a mixture of milk and honey." } }, { "chapter": "காதற் சிறப்புரைத்தல்", "kural": [ "உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன", "மடந்தையொடு எம்மிடை நட்பு." ], "number": 1122, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என் மனைவிக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு, உடம்பிற்கும் உயிருக்கும் இடையே எத்தகைய உறவோ அத்தகையது.", "en": "The love between me and this damsel is like the union of body and soul." } }, { "chapter": "காதற் சிறப்புரைத்தல்", "kural": [ "கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்", "திருநுதற்கு இல்லை இடம்." ], "number": 1123, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என் கருமணிக்குள் இருக்கும் பாவையே! நீ அதை விட்டுப் போய்விடு; நான் விரும்பும் என் மனைவிக்கு என் கண்ணுக்குள் இருக்க இடம் போதவில்லை.", "en": "O you image in the pupil (of my eye)! depart; there is no room for (my) fair-browed beloved." } }, { "chapter": "காதற் சிறப்புரைத்தல்", "kural": [ "வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்", "அதற்கன்னள் நீங்கும் இடத்து." ], "number": 1124, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஆராய்ந்து அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள், பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என் மனைவி, நான் அவளுடன் கூடும்போது உயிருக்கு உடம்பு போன்றிருக்கிறாள். அவளைப் பிரியும்போது உயிர் உடம்பை விட்டுப் பிரிவது போன்றிருக்கிறாள்.", "en": "My fair-jewelled one resembles the living soul (when she is in union with me), the dying soul when she leaves me." } }, { "chapter": "காதற் சிறப்புரைத்தல்", "kural": [ "உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்", "ஒள்ளமர்க் கண்ணாள் குணம்." ], "number": 1125, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : போர் செய்யும் பண்புகளை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும் ஆனால் ஒரு போதும் மறந்ததில்லையே.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒளியுடன் கூடிய கண்களை உடைய என் மனைவியின் குணங்களை நான் மறந்தால் அல்லவா அவளை நினைப்பதற்கு? மறப்பதும் இல்லை. அதனால் நினைப்பதும் இல்லை.", "en": "If I had forgotten her who has bright battling eyes, I would have remembered (thee); but I never forget her. (Thus says he to her maid)." } }, { "chapter": "காதற் சிறப்புரைத்தல்", "kural": [ "கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா", "நுண்ணியர்எம் காத லவர்." ], "number": 1126, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போக மாட்டார், கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்த மாட்டார், அவர் அவ்வளவு நுட்பமானவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என் அன்பர் என் கண்ணை விட்டுப் போகமாட்டிடார்; ஒருவேளை நான் அறியாமல் இமைத்தால் வருந்தவும் மாட்டார். பிறர் அறிய முடியாத நுட்பத் தன்மையர் அவர்.", "en": "My lover would not depart from mine eyes; even if I wink, he would not sufer (from pain); he is so ethereal." } }, { "chapter": "காதற் சிறப்புரைத்தல்", "kural": [ "கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்", "எழுதேம் கரப்பாக்கு அறிந்து." ], "number": 1127, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என் கண்ணுக்குள் அவர் இருப்பதால் கண்ணுக்கு மை தீட்டும் நேரம் அவர் மறைய நேரும் என்பதை அறிந்து மையும் தீட்டமாட்டேன்.", "en": "As my lover abides in my eyes, I will not even paint them, for he would (then) have to conceal himself." } }, { "chapter": "காதற் சிறப்புரைத்தல்", "kural": [ "நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்", "அஞ்சுதும் வேபாக் கறிந்து." ], "number": 1128, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சு கின்றோம்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என்னவர் என் நெஞ்சிலேயே வாழ்வதால் சூடாக உண்டால் அது அவரைச் சுட்டுவிடும் என்று எண்ணி உண்ணப் பயப்படுகிறேன்.", "en": "As my lover is in my heart, I am afraid of eating (anything) hot, for I know it would pain him." } }, { "chapter": "காதற் சிறப்புரைத்தல்", "kural": [ "இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே", "ஏதிலர் என்னும் இவ் வூர்." ], "number": 1129, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கண் இமைத்தால் காதலர் மறைந்து போதலை அறிகின்றேன், அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்லுவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என் கண்கள் இமைத்தால் உள்ளிருக்கும் என்னவர் மறைவதை அறிந்து நான் கண்களை இமைப்பதில்லை. இதை விளங்கிக் கொள்ளாத உறவினர் அவரை அன்பற்றவர் என்கின்றனர்.", "en": "I will not wink, knowing that if I did, my lover would hide himself; and for this reason, this town says, he is unloving." } }, { "chapter": "காதற் சிறப்புரைத்தல்", "kural": [ "உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்", "ஏதிலர் என்னும் இவ் வூர்." ], "number": 1130, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார், ஆனால் அதை அறியாமல் பிரிந்து வாழ்கின்றார், அன்பில்லாதவர் என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என்னவர் எப்போதும் என் நெஞ்சிற்குள்ளேயே மகிழ்ந்து இருக்கிறார். இதை அறியாத உறவினர் அவருக்கு அத்தனை அன்பு இல்லை என்கின்றனர்.", "en": "My lover dwells in my heart with perpetual delight; but the town says he is unloving and (therefore) dwells afar." } }, { "chapter": "நாணுத் துறவுரைத்தல்", "kural": [ "காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்", "மடலல்லது இல்லை வலி." ], "number": 1131, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : காதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் இல்லை.", "en": "To those who after enjoyment of sexual pleasure suffer (for want of more), there is no help so eficient as the palm yra horse." } }, { "chapter": "நாணுத் துறவுரைத்தல்", "kural": [ "நோனா உடம்பும் உயிரும் மடலேறும்", "நாணினை நீக்கி நிறுத்து." ], "number": 1132, "section": "காமத்துப்பால்", "meaning": { "en": "Having got rid of shame, the sufering body and soul save themselves on the palm yra horse.", "ta_mu_va": "மு.வ : (காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : காதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன." } }, { "chapter": "நாணுத் துறவுரைத்தல்", "kural": [ "நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்", "காமுற்றார் ஏறும் மடல்." ], "number": 1133, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நாணமும் ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; இன்றோ காதலர் ஏறும் மடலைப் பெற்றிருகிறேன்.", "en": "Modesty and manliness were once my own; now, my own is the palmyra horse that is ridden by the lustful." } }, { "chapter": "நாணுத் துறவுரைத்தல்", "kural": [ "காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு", "நல்லாண்மை என்னும் புணை." ], "number": 1134, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஆம்; நாணம், ஆண்மை என்னும் படகுகளைக் காதலாகிய கடும் வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது.", "en": "The raft of modesty and manliness, is, alas, carried-of by the strong current of lust." } }, { "chapter": "நாணுத் துறவுரைத்தல்", "kural": [ "தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு", "மாலை உழக்கும் துயர்." ], "number": 1135, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மாலைப் பொழுதுகளில் நான் அடையும் மயக்கத்தையும் அதற்கு மருந்தாகிய மடல் ஏறுதலையும், மலை போல வளையல் அணிந்திருக்கும் அவளே எனக்குத் தந்தாள்.", "en": "She with the small garland-like bracelets has given me the palmyra horse and the sorrow that is endured at night." } }, { "chapter": "நாணுத் துறவுரைத்தல்", "kural": [ "மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற", "படல்ஒல்லா பேதைக்கென் கண்." ], "number": 1136, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அவள் குணத்தை எண்ணி என் கண்கள் இரவெல்லாம் உறங்குவதில்லை. அதனால் நள்ளிரவிலும்கூட மடல் ஊர்வது பறிறயே எண்ணுவேன்.", "en": "Mine eyes will not close in sleep on your mistress’s account; even at midnight will I think of mounting the palm yra horse." } }, { "chapter": "நாணுத் துறவுரைத்தல்", "kural": [ "கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்", "பெண்ணின் பெருந்தக்க தில்." ], "number": 1137, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அதுதான் அவள் பெருமை; கடல் போலக் கரையில்லாத காதல் நோயை அவளும் அனுபவித்தாலும் மடல் ஊராது பொறுத்திருக்கும் பெண் பிறவியைப் போலப் பெருமையான பிறவி இவ்வுலகத்தில் வேறு இல்லை.", "en": "There is nothing so noble as the womanly nature that would not ride the palmyra horse, though plunged a sea of lust." } }, { "chapter": "நாணுத் துறவுரைத்தல்", "kural": [ "நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்", "மறையிறந்து மன்று படும்." ], "number": 1138, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இவள் மன அடக்கம் மிக்கவள்; பெரிதும் இரக்கப்பட வேண்டியவள் என்று எண்ணாமல் இந்த காதல் எங்களுக்குள் இருக்கும் இரகசியத்தைக் கடந்து ஊருக்குள்ளேயும் தெரியப்போகிறது.", "en": "Even the Lust (of women) transgresses its secrecy and appears in public, forgetting that they are too chaste and liberal (to be overcome by it)." } }, { "chapter": "நாணுத் துறவுரைத்தல்", "kural": [ "அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்", "மறுகின் மறுகும் மருண்டு." ], "number": 1139, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும் தானே அம்பலும் அலருமாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறது.", "en": "My lust, feeling that it is not known by all, reels confused in the streets (of this town)." } }, { "chapter": "நாணுத் துறவுரைத்தல்", "kural": [ "யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்", "யாம்பட்ட தாம்படா ஆறு." ], "number": 1140, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நான் பார்க்க, இந்த அறிவற்ற மக்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். அப்படிச் சிரிக்க காரணம், நான் அனுபவித்த துன்பங்களை அவர்கள் அனுபவிக்காததே!", "en": "Even strangers laugh (at us) so as to be seen by us, for they have not suffered." } }, { "chapter": "அலர் அறிவுறுத்தல்", "kural": [ "அலரெழ ஆருயிர் ந஧ற்கும் அதனைப்", "பலரறியார் பாக்கியத் தால்." ], "number": 1141, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : (எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஊருக்குள் பலர் எங்கள் காதலைப் பற்றிப் பேசுவதால்தான் அவளை இன்னும் பெறாத என் உயிரும் நிலைத்து இருக்கிறது; பேசும் பலரும் இதை அறியமாட்டார்; இது நான் செய்த பாக்யம்.", "en": "My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware of." } }, { "chapter": "அலர் அறிவுறுத்தல்", "kural": [ "மலரன்ன கண்ணாள் அருமை அறியாது", "அலரெமக்கு ஈந்ததிவ் வூர்." ], "number": 1142, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மலர் போன்ற கண்களை உடையவளை நான் சந்திக்க வாய்ப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஊர் எங்கள் காதலைப் பேசியே எங்களுக்கு நன்மை செய்துவிட்டது.", "en": "Not knowing the value of her whose eyes are like flowers this town has got up a rumour about me." } }, { "chapter": "அலர் அறிவுறுத்தல்", "kural": [ "உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்", "பெறாஅது பெற்றன்ன நீர்த்து." ], "number": 1143, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஊரார் எல்லோரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ, (பொருந்தும்) அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றார் போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எங்களக்குள் காதல் இருப்பதை இந்த ஊர் அறிந்து பேசியதும் நல்லதே, (திருமணத்தைச்) செய்ய முடியுமா என்றிருந்த நிலை போய்ச் செய்தது போல் ஆயிற்று.", "en": "Will I not get a rumour that is known to the (whole) town ? For what I have not got is as if I had got it (already)." } }, { "chapter": "அலர் அறிவுறுத்தல்", "kural": [ "கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்", "தவ்வென்னும் தன்மை இழந்து." ], "number": 1144, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஊரார் பேச்சினால் எங்கள் காதல் வளர்கிறது; இந்தப் பேச்சு மட்டும் இல்லை என்றால் அது சுவையற்றுச் சப்பென்று போயிருக்கும்.", "en": "Rumour increases the violence of my passion; without it it would grow weak and waste away." } }, { "chapter": "அலர் அறிவுறுத்தல்", "kural": [ "களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்", "வெளிப்படுந் தோறும் இனிது." ], "number": 1145, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கள் உண்பவர்களுக்குக் குடித்து மகிழும்போது எல்லாம் கள் உண்பது இனிதாவது போல் எங்கள் காதல் ஊருக்குள் பேசப்படும்போது எல்லாம் மனத்திற்கு இனிதாய் இருக்கின்றது.", "en": "As drinking liquor is delightful (to one) whenever one is in mirth, so is lust delightful to me whenever it is the subject of rumour." } }, { "chapter": "அலர் அறிவுறுத்தல்", "kural": [ "கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்", "திங்களைப் பாம்புகொண் டற்று." ], "number": 1146, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நான் அவரைப் பார்த்ததும் பேசியதும் கொஞ்சமே! ஆனால் இந்த ஊரார் பேச்சோ நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் ஊர் முழுக்கப் பரவிவிட்டதே!", "en": "It was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent." } }, { "chapter": "அலர் அறிவுறுத்தல்", "kural": [ "ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்", "நீராக நீளும்இந் நோய்." ], "number": 1147, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின் தடைச்சொல் நீராக என் காதல் பயிர் வளரும்.", "en": "This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother." } }, { "chapter": "அலர் அறிவுறுத்தல்", "kural": [ "நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்", "காமம் நுதுப்பேம் எனல்." ], "number": 1148, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இந்த ஊரார் தங்கள் அலரால் எங்கள் காதலை அழித்து விடுவோம் என்று எண்ணுவது, நெய்யை ஊற்றியே நெருப்பை அணைப்போம் என்பது போலாம்.", "en": "To say that one could extinguish passion by rumour is like extinguishing fire with ghee." } }, { "chapter": "அலர் அறிவுறுத்தல்", "kural": [ "அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்", "பலர்நாண நீத்தக் கடை." ], "number": 1149, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அலர் பேசிய பலரும் வெட்கப்படும்படி இன்று அவர் என்னை விட்டுப் போகும்போது, பயப்படாதே, உன்னைப் பிரியேன் என்று சொல்லிவிட்டார். இனிப் பலரும் பேசும் பேச்சுக்கு நான் வெட்கப்படலாமா?", "en": "When the departure of him who said “fear not” has put me to shame before others, why need I be ashamed of scandal." } }, { "chapter": "அலர் அறிவுறுத்தல்", "kural": [ "தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்", "கெளவை எடுக்கும்இவ் வூர்." ], "number": 1150, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக்கூறுகின்றனர், அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நான் விரும்பிய அவரைப் பற்றித்தான் இவ்வூர் பேசுகிறது. இனி என் காதலரும் நான் விரும்பியபோது என்னைத் திருமணம் செய்வார்.", "en": "The rumour I desire is raised by the town (itself); and my lover would if desired consent (to my following him)." } }, { "chapter": "பிரிவாற்றாமை", "kural": [ "செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்", "வல்வரவு வாழ்வார்க் குரை." ], "number": 1151, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர்வாழ வல்லவர்க்குச் சொல்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என்னைப் பிரிவதில்லை என்றால் என்னிடம் சொல். சீக்கிரம் வருவேன் என்பதை எல்லாம் நீ வரும்போது உயிரோடு இருப்பார்களே அவர்களிடம் சொல்.", "en": "If it is not departure, tell me; but if it is your speedy return, tell it to those who would be alive then." } }, { "chapter": "பிரிவாற்றாமை", "kural": [ "இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்", "புன்கண் உடைத்தால் புணர்வு." ], "number": 1152, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அவருடைய பார்வை முன்பு இன்பம் உடையதாக இருந்தது, இப்போது அவருடைய கூட்டம் பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம் உடையதாக இருக்கின்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அவர் பார்வை எனக்கு மகிழ்ச்சிதான். அவர் செயலோ பிரியப் போகிறார் என்ற அச்சத்தைத் தந்து கொண்டிருக்கிறதே!", "en": "His very look was once pleasing; but (now) even intercourse is painful through fear of separation." } }, { "chapter": "பிரிவாற்றாமை", "kural": [ "அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்", "பிரிவோ ரிடத்துண்மை யான்." ], "number": 1153, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறிவுடைய காதலரிடத்தும் பிரிவு ஒரு காலத்தில் உள்ள படியால் அவர் பிரியேன் என்று சொல்லும் உறுதி மொழியை நம்பித் தெளிவது அரிது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எல்லாம் அறியும் ஆற்றல் உடைய அவரும் ஒருநேரம் பிரிவார் என்றால், என்மீது அவர் கொண்டிருக்கும் அன்பை அறிந்து கொள்ள முடியவில்லை.", "en": "As even the lover who understands (everything) may at times depart, confidence is hardly possible." } }, { "chapter": "பிரிவாற்றாமை", "kural": [ "அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்", "தேறியார்க்கு உண்டோ தவறு." ], "number": 1154, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டா என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என்னை மணந்தபோதே என்மீது அன்பு காட்டிப் பயப்படாதே, உன்னைப் பிரியமாட்டேன் என்று சொல்லி என்னைத் தேற்றிய அவர் சொல்லை, நான் நம்பியது தவறோ?", "en": "If he who bestowed his love and said “fear not” should depart, will it be the fault of those who believed in (his) assuring words ?" } }, { "chapter": "பிரிவாற்றாமை", "kural": [ "ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்", "நீங்கின் அரிதால் புணர்வு." ], "number": 1155, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என் உயிரைக் காக்க எண்ணினால் அதைக் காப்பதற்கு உரிய அவர், என்னை விட்டுப் பிரிவதைத் தவிர்க்க வேண்டும். மீறிப் பிரிந்தால் நான் இனி அவரைச் சேர்வது அரிது.", "en": "If you would save (my life), delay the departure of my destined (husband); for if he departs, intercourse will become impossible." } }, { "chapter": "பிரிவாற்றாமை", "kural": [ "பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்", "நல்குவர் என்னும் நசை." ], "number": 1156, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பிரிவைப்பற்றி தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால் , அத்தகையவர் திரும்பிவந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நான் வேலையின் பொருட்டுப் பிரியப் போகிறேன் என்று அவரே என்னிடம் சொல்லும் அளவிற்குக் கொடியவர் என்றால், அவர் பிரிவைத் தாங்க முடியாத என் மீது அன்பு காட்டுவார் என்னும் என் எதிர்பார்ப்பு பயனற்றது.", "en": "If he is so cruel as to mention his departure (to me), the hope that he would bestow (his love) must be given up." } }, { "chapter": "பிரிவாற்றாமை", "kural": [ "துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை", "இறைஇறவா நின்ற வளை." ], "number": 1157, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : என் மெலிவால் முன் கையில் இறை கடந்து கழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அவர் என்னைப் பிரிய திட்டமிடுகிறார் என்பதை என் முன் கையிலிருந்து கழலும் வளையல்கள் எனக்குத் தெரிவிக்க மாட்டாவோ?", "en": "Do not the rings that begin to slide down my fingers forebode the separation of my lord ?" } }, { "chapter": "பிரிவாற்றாமை", "kural": [ "இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்", "இன்னாது இனியார்ப் பிரிவு." ], "number": 1158, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது, இனியக் காதலரின் பிரிவு அதை விடத் துன்பமானது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உறவானவர் இல்லாத ஊரிலே வாழ்வது கொடுமை; என் உயிர்க்கு இனியவரைப் பிரிவது அதைவிடக் கொடுமை.", "en": "Painful is it to live in a friendless town; but far more painful is it to part from one’s lover." } }, { "chapter": "பிரிவாற்றாமை", "kural": [ "தொடிற்சுடின் அல்லது காமநோய் போல", "விடிற்சுடல் ஆற்றுமோ தீ." ], "number": 1159, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காமநோய் போல் தன்னை விட்டு நீங்கிய பொழுது சுடவல்லதாகுமோ.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தீ தன்னைத் தொட்டவரைத்தான் சுடும்; காதல் நோயைப் போல அதை விட்டு அகன்றாலும் சுடுமோ?", "en": "Fire burns when touched; but, like the sickness of love, can it also burn when removed ?" } }, { "chapter": "பிரிவாற்றாமை", "kural": [ "அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்", "பின்இருந்து வாழ்வார் பலர்." ], "number": 1160, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பிரிய முடியாத பிரிவிற்கு உடன்பட்டு,( பிரியும் போது) துன்பத்தால் கலங்குவதையும், விட்டு பிரிந்த பின் பொருத்திருந்து பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் உலகில் பலர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : சம்பாதிப்பதற்குக் கணவன் பிரிந்தால் அவன் பிரிவைத் தாங்கிக் கொண்டு, பிரிவுத் துன்பத்தையும், விட்டுவிட்டு, அரிய செயலாற்றி உயிர் வாழும் பெண்கள் பலர் இருக்கின்றனர்.", "en": "As if there were many indeed that can consent to the impossible, kill their pain, endure separation and yet continue to live afterwards." } }, { "chapter": "படர்மெலிந் திரங்கல்", "kural": [ "மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு", "ஊற்றுநீர் போல மிகும்." ], "number": 1161, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுவது போல் மிகுகின்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என் காதல் துன்பத்தை மற்றவர் அறிந்துவிடக்கூடாது என்று மறைக்கவே செய்தேன்; ஆனாலும் இறைக்க இறைக்க ஊற்றுநீர் பெருகுவது போல மறைக்க மறைக்க என் துன்பமும் பெருகவே செய்கிறது.", "en": "I would hide this pain from others; but it (only) swells like a spring to those who drain it." } }, { "chapter": "படர்மெலிந் திரங்கல்", "kural": [ "கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு", "உரைத்தலும் நாணுத் தரும்." ], "number": 1162, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை, நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இந்தத் துன்பத்தை என்னால் மறைக்கவும் முடியவில்லை. துன்பத்தைத் தந்த இவருக்கு (எழுத்தில் தொலைபேசியில்) இதைச் சொல்லவும் வெட்கமாக இருக்கிறது.", "en": "I cannot conceal this pain, nor can I relate it without shame to him who has caused it." } }, { "chapter": "படர்மெலிந் திரங்கல்", "kural": [ "காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்", "நோனா உடம்பின் அகத்து." ], "number": 1163, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : துன்பத்தைப் பொருக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருப்பக்கமாக தொங்குகின்றன.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : காதல் துன்பத்தையும், அவரிடம் சொல்ல முடியாமல் நான்படும் வெட்கத்ததையும் தாங்க முடியாத என் உடம்பில், என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு அதன் ஒரு புறத்தில் காதல் நோயும், மறுமுனையில் வெட்கமும் தொங்குகின்றன.", "en": "Both) lust and shame, with my soul for their shoulder pole balance themselves on a body that cannot bear them." } }, { "chapter": "படர்மெலிந் திரங்கல்", "kural": [ "காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்", "ஏமப் புணைமன்னும் இல்." ], "number": 1164, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காமநோயாகிய கடல் இருக்கின்றது. ஆனால் அதை நீந்திக்கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான ‌தோணியோ இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : காதல் துன்பம், வெட்கம், இவ்விரண்டிலும் என்னுள் மிகுந்திருப்பது காதல் துன்பம் என்னும் கடலே; அதைக் கடக்கப் பாதுகாப்பான படகுதான் இல்லை.", "en": "There is indeed a flood of lust; but there is no raft of safety to cross it with." } }, { "chapter": "படர்மெலிந் திரங்கல்", "kural": [ "துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு", "நட்பினுள் ஆற்று பவர்." ], "number": 1165, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ( இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச் செய்வதில் வல்லவர். ( துன்பம் தரும் பகையை வெல்லும்) வலிமை வேண்டும்போது என்ன ஆவாரோ?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இன்பம் தருவதற்குரிய நட்பிலேயே துன்பத்தைத் தரம் இவர், பகைமையில் என்னதான் செய்வாரோ?", "en": "He who can produce sorrow from friendship, what can he not bring forth out of enmity ?" } }, { "chapter": "படர்மெலிந் திரங்கல்", "kural": [ "இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்", "துன்பம் அதனிற் பெரிது." ], "number": 1166, "section": "காமத்துப்பால்", "meaning": { "en": "The pleasure of lust is (as great as) the sea; but the pain of lust is far greater.", "ta_mu_va": "மு.வ : காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : காதல் மகிழ்ச்சி கடல்போலப் பெரிது; ஆனால் பிரிவினால் அது துன்பம் செய்யத் தொடங்கிவிட்டால் அத்துன்பம் கடலைக் காட்டிலும் பெரிது." } }, { "chapter": "படர்மெலிந் திரங்கல்", "kural": [ "காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்", "யாமத்தும் யானே உளேன்." ], "number": 1167, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காமம் என்னும்‌ வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : காதல் துன்பமாகிய கடலை நீந்தியும் என்னால் கரை காண முடியவில்லை. நள்ளிரவுப் பொழுதினும் உறங்காமல் நான் தனியாகவே இருக்கிறேன்.", "en": "I have swam across the terrible flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still I live." } }, { "chapter": "படர்மெலிந் திரங்கல்", "kural": [ "மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா", "என்னல்லது இல்லை துணை." ], "number": 1168, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பாவம் இந்த இரவு! இது எல்லா உயிர்களையும் தூங்கச் செய்துவிட்டுத் தனியாகவே இருக்கிறது. இதற்கு என்னைத் தவிர வேறு துணை இல்லை!", "en": "The night which graciously lulls to sleep all living creatures, has me alone for her companion." } }, { "chapter": "படர்மெலிந் திரங்கல்", "kural": [ "> கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்", "நெடிய கழியும் இரா." ], "number": 1169, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ( பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையை விடத் தாம் கொடியவை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இப்போதெல்லாம் இரவுகள் கழிவதற்கு நெடும்பொழுது ஆகிறது; என்னைப் பிரிந்து போன என் கணவரின் கொடுமையிலும் இவை மிகக் கொடுமையாக இருக்கின்றன.", "en": "The long nights of these days are far more cruel than the heartless one who is torturing me." } }, { "chapter": "படர்மெலிந் திரங்கல்", "kural": [ "உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்", "நீந்தல மன்னோஎன் கண்." ], "number": 1170, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல முடியுமானால், என்‌ கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என் மனம் போலவே என் கண்களும் என்னவர் இருக்கும் ஊருக்குச் செல்ல முடியுமானால், அவை கண்ணீர் வெள்ளத்தில் நீந்தமாட்டா.", "en": "Could mine eyes travel like my thoughts to the abode (of my absent lord), they would not swim in this flood of tears." } }, { "chapter": "கண்விதுப்பழிதல்", "kural": [ "கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்", "தாம்காட்ட யாம்கண் டது." ], "number": 1171, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தணியாத காதல் துன்பத்தை நான் அறிந்ததே இந்தக் கண்கள் எனக்கு அவரைக் காட்டியதால்தானே? இப்போது அவரைக் காட்டு என என்னிடம் அழுவது எதற்கு?", "en": "As this incurable malady has been caused by my eyes which showed (him) to me, why should they now weep for (him)." } }, { "chapter": "கண்விதுப்பழிதல்", "kural": [ "தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்", "பைதல் உழப்பது எவன்?" ], "number": 1172, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : வரப்போவதை அறியாமல் அன்று அவரை எனக்குக் காட்டிய என் மை தீட்டப்பட்ட கண்கள், இன்று இது நம்மால் வந்தது; நாம்தாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணாமல் துன்பப்படுகின்றனவே எதற்காக?", "en": "The dyed eyes that (then) looked without foresight, why should they now endure sorrow, without feeling sharply (their own fault)." } }, { "chapter": "கண்விதுப்பழிதல்", "kural": [ "கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்", "இதுநகத் தக்க துடைத்து." ], "number": 1173, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அன்றைக்கு அவரை வேகமாகப் பார்த்துவிட்டு, இன்றைக்குத் தனியாக இருந்து இந்தக் கண்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.", "en": "They themselves looked eagerly (on him) and now they weep. Is not this to be laughed at ?" } }, { "chapter": "கண்விதுப்பழிதல்", "kural": [ "பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா", "உய்வில்நோய் என்கண் நிறுத்து." ], "number": 1174, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் நீர் வறண்டு விட்டன.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மை தீட்டப்பட்ட இந்தக் கண்கள் நான் தப்பிக்கவும், வாழவும் முடியாத காதல் துன்பத்தை எனக்குத் தந்துவிட்டுத் தாமும் அழ முடியாமல் நீர் வற்றிப் போய்விட்டன.", "en": "These painted eyes have caused me a lasting mortal disease; and now they can weep no more, the tears having dried up." } }, { "chapter": "கண்விதுப்பழிதல்", "kural": [ "படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்", "காமநோய் செய்தஎன் கண்." ], "number": 1175, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று உறங்க முடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கடலைவிடப் பெரிதாகும் காதல் துன்பத்தை எனக்குத் தந்த கண்கள், தாமும் தூங்காமல், துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.", "en": "Mine eyes have caused me a lust that is greater than the sea and (they themselves) endure the torture of sleeplessness." } }, { "chapter": "கண்விதுப்பழிதல்", "kural": [ "ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்", "தாஅம் இதற்பட் டது." ], "number": 1176, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எமக்கு இந்தக் காமநோயைஉண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எனக்கு இந்தக் காதல் துன்பத்தைத் தந்த கண்கள் தாமும் தூங்காமல் அழுவது நன்றாகத்தான் இருக்கிறது.", "en": "The eyes that have given me this disease have themselves been seized with this (sufering). Oh! I am much delighted." } }, { "chapter": "கண்விதுப்பழிதல்", "kural": [ "உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து", "வேண்டி அவர்க்கண்ட கண்." ], "number": 1177, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : விரும்பி மகிழ்ந்து விடாமல் அன்று அவரைக் கண்ட கண்களின் உள் இருக்கும் கண்ணீர் எல்லாம் இன்று வருந்தி வருந்தி வற்றிப் போகட்டும்!", "en": "The eyes that became tender and gazed intently on him, may they sufer so much as to dry up the fountain of their tears." } }, { "chapter": "கண்விதுப்பழிதல்", "kural": [ "பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்", "காணாது அமைவில கண்." ], "number": 1178, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உள்ளத்தால் என்னை விரும்பாமல் வாயால் மட்டுமே விரும்பியவர் நன்றாக இருக்கட்டும்; ஆனால், அவரைக் காண முடியாமல் என் கண்கள் தூங்காமல் இருக்கின்றன.!", "en": "He is indeed here who loved me with his lips but not with his heart but mine eyes sufer from not seeing him." } }, { "chapter": "கண்விதுப்பழிதல்", "kural": [ "வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை", "ஆரஞர் உற்றன கண்." ], "number": 1179, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கி‌டையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அவர் வராதபோது வரவை எதிர்பார்த்துத் தூங்குவதில்லை. வந்தபோதோ, எப்போது பிரிவாரோ என்று அஞ்சி் தூங்குவதில்லை; இரண்டு வழியிலும் என் கண்களுக்குத் தூங்க முடியாத துன்பந்தான்.", "en": "When he is away they do not sleep; when he is present they do not sleep; in either case, mine eyes endure unbearable agony." } }, { "chapter": "கண்விதுப்பழிதல்", "kural": [ "மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்", "அறைபறை கண்ணார் அகத்து." ], "number": 1180, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அடிக்கப்படும் பறைபோன்று மனத்துள் இருப்பதை அழுது வெளியே காட்டிவிடும் எம்போன்ற பெண்களின் ரகசியத்தை அறிந்து கொள்வது இவ்வூரில் இருப்பவர்க்கு எளிது.", "en": "It is not dificult for the people of this place to understand the secret of those whose eyes, like mine, are as it were beaten drums." } }, { "chapter": "பசப்புறு பருவரல்", "kural": [ "நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்", "பண்பியார்க்கு உரைக்கோ பிற." ], "number": 1181, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்; பிரிந்தபின் பசலை உற்ற என் தன்மையை வேறு யார்க்குச் சென்று சொல்வேன்?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என்னை விரும்பிய என்னவர் பிரியச் சம்மதித்த நான், அவர் பிரிவைத் தாங்காமல் பசலை கொண்ட என் மேனியின் இயல்பை யாரிடம் போய்ச் சொல்வேன்?", "en": "I who (then) consented to the absence of my loving lord, to whom can I (now) relate the fact of my having turned sallow." } }, { "chapter": "பசப்புறு பருவரல்", "kural": [ "அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்", "மேனிமேல் ஊரும் பசப்பு." ], "number": 1182, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இந்தப் பசலை அவர் எனக்குத் தந்தது என்னும் பெருமையினால் என் மேனி எங்கும் படருகின்றன.", "en": "Sallowness, as if proud of having been caused by him, would now ride on my person." } }, { "chapter": "பசப்புறு பருவரல்", "kural": [ "சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா", "நோயும் பசலையும் தந்து." ], "number": 1183, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாக ‌‌கொடுத்து விட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அவர் என்னைப் பிரிகிறபோதே உள்ளத் துன்பத்தையும் பசலையையும் எனக்குக் கொடுத்துவிட்டு அவற்றுக்கு ஈடாக என் அழகையும் வெட்கத்தையம் கொண்டு போய்விட்டார்.", "en": "He has taken (away) my beauty and modesty, and given me instead disease and sallowness." } }, { "chapter": "பசப்புறு பருவரல்", "kural": [ "உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்", "கள்ளம் பிறவோ பசப்பு." ], "number": 1184, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நான் நினைப்பதெல்லாம் அவரைத்தான். சொல்வது எல்லாம் அவர் குணங்களைத்தாம்; இருந்தும் இந்தப் பசலை வந்துவிட்டதே; இது வஞ்சகம் அல்லவா?", "en": "I think (of him); and what I speak about is but his excellence; still is there sallowness; and this is deceitful." } }, { "chapter": "பசப்புறு பருவரல்", "kural": [ "உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்", "மேனி பசப்பூர் வது." ], "number": 1185, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து படர்கிறது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : முன்பும்கூட, அந்தப் பக்கம் என் அன்பர் போயிருப்பார்; இந்தப் பக்கம் என் மேனி பசலை கொண்டு விடும். முன்பே அப்படி என்றால் இப்போது எப்படி இருக்கும்?", "en": "Just as my lover departed then, did not sallowness spread here on my person ?" } }, { "chapter": "பசப்புறு பருவரல்", "kural": [ "விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்", "முயக்கற்றம் பார்க்கும் பசப்பு." ], "number": 1186, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப் போலவே, தலைவனுடைய தழுவுதலின் ‌சோர்வைப் பார்த்துக் காத்திருக்கினறது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : விளக்கு மெலிவதைப் பார்த்து நெருங்கும் இருட்டைப் போல என்னவரின் தழுவல் நெகிழ்வதைப் பார்த்துக் காத்திருந்த பசலை வரும்.", "en": "Just as darkness waits for the failing light; so does sallowness wait for the laxity of my husband’s intercourse." } }, { "chapter": "பசப்புறு பருவரல்", "kural": [ "புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்", "அள்ளிக்கொள் வற்றே பசப்பு." ], "number": 1187, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை நிறம் அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவி விட்டதே!", "ta_salamon": "சாலமன் பாப்பையா : முன்னொரு சமயம் நான் அவரைத் தழுவிக் கிடந்தேன்; கொஞ்சம் விலகினேன்; அவ்வளவுதான்; இந்தப் பசலை என்னை அப்படியே அள்ளிக் கொள்வது போல் வந்துவிட்டது.", "en": "I who was in close embrace just turned aside and the moment I did so, sallowness came on me like something to be seized on." } }, { "chapter": "பசப்புறு பருவரல்", "kural": [ "பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்", "துறந்தார் அவர்என்பார் இல்." ], "number": 1188, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இவள் பிரிவால் வருத்திப் பசலை நிறம் அடைந்தாள் என்ற பழி சொல்வதே அல்லாமல், இவளைக் காதலர் விட்டுப் பிரிந்தார் என்று சொல்பவர் இல்லையே!", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இங்கோ இவள் பசலை உற்றாள் என்று சொல்கிறார்களே தவிர, இந்தப் பெண்ணை விட்டுவிட்டு அவர் போய்விட்டாரே என்று சொல்பவர் ஒருவரும் இல்லை.", "en": "Besides those who say “she has turned sallow” there are none who say “he has forsaken her”." } }, { "chapter": "பசப்புறு பருவரல்", "kural": [ "பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்", "நன்னிலையர் ஆவர் எனின்." ], "number": 1189, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையுடையவர் ஆவார் என்றால், என்னுடைய மேனி உள்ளபடி பசலை நிறம் அடைவதாக.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இந்தப் பிரிவிற்கு நான் சம்மதிக்கும்படி செய்து பிரிந்தவர்தாம் நல்லவர் என்றால், என் மேனி மேலும் பசலை அடைந்து விட்டுப் போகட்டும்!", "en": "If he is clear of guilt who has conciliated me (to his departure) let my body sufer its due and turn sallow" } }, { "chapter": "பசப்புறு பருவரல்", "kural": [ "பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்", "நல்காமை தூற்றார் எனின்." ], "number": 1190, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் பிரிந்து வருத்துதலைப் பிறர் தூற்றாமல் இருப்பாரானால், யான் பசலை உற்றதாக பெயர் எடுத்தல் நல்லதே.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என்னைச் சம்மதிக்கச் செய்து பிரிந்தவர் இன்னும் வராமல் இருப்பதை எண்ணி அவரை ஏசாமல், இவளே பசலை ஆயினாள் என்று இம்மக்கள் சொல்லுவர் என்றால் அப்படி ஓரு பெயரைப் பெறுவதும் நல்லதே.", "en": "It would be good to be said of me that I have turned sallow, if friends do not reproach with unkindness him who pleased me (then)." } }, { "chapter": "தனிப்படர் மிகுதி", "kural": [ "தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே", "காமத்துக் காழில் கனி." ], "number": 1191, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தாம் விரும்புபவராலேயே விரும்பப்பட்ட பெண்கள்தாம் காதல் இன்பம் என்னும் விதை இல்லாத கனியைப் பெற்றவர் ஆவர்.", "en": "The women who are beloved by those whom they love, have they have not got the stone-less fruit of sexual delight ?" } }, { "chapter": "தனிப்படர் மிகுதி", "kural": [ "வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு", "வீழ்வார் அள஧ க்கும் அளி." ], "number": 1192, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர் வாழ்கினறவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அவர் இன்றி வாழ முடியாத மனைவிக்கு, அவள் இன்றி அமையாத கணவர் காட்டும் அன்பு, தன்னை நோக்கி உயிர்வாழும் உலகத்தவர்க்கு வானம் உரிய நேரம் மழை தந்தது போலாம்.", "en": "The bestowal of love by the beloved on those who love them is like the rain raining (at the proper season) on those who live by it." } }, { "chapter": "தனிப்படர் மிகுதி", "kural": [ "வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே", "வாழுநம் என்னும் செருக்கு." ], "number": 1193, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காதலரால் விரும்பப்படுகின்றவர்க்கும் ( பிரிவுத் துன்பம் இருந்தாலும்) மீண்டும் வந்தபின் வாழ்வோம் என்று இருக்கும் செருக்குத் தகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தாம் விரும்பும் கணவனால் விரும்பப்பட்ட பெண்ணுக்கே (எப்படியும் விரைவில் அவர் வருவார் என்ற உறுதியினால்) வாழ்வோம் என்னும் செருக்கு, பொருத்தமாக இருக்கும்.", "en": "The pride that says “we shall live” suits only those who are loved by their beloved (husbands)." } }, { "chapter": "தனிப்படர் மிகுதி", "kural": [ "வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்", "வீழப் படாஅர் எனின்." ], "number": 1194, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தாம் விரும்பும் காதலரால் விரும்பப்படாவிட்டால் உலகத்தாரால் விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர் அல்லர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தாம் விரும்பும் கணவனால் விரும்பப்படாதவளாக மனைவி இருந்துவிடுவாளானால், அவள் தீவினை வசப்பட்டவளே.", "en": "Even those who are esteemed (by other women) are devoid of excellence, if they are not loved by their beloved." } }, { "chapter": "தனிப்படர் மிகுதி", "kural": [ "நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ", "தாம்காதல் கொள்ளாக் கடை." ], "number": 1195, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல் கொள்ளாதபோது, நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நாம் காதலித்தவர் நம்மைக் காதலிக்கவில்லை என்றால் நமக்கு எத்தகைய மகிழ்ச்சியைத் தருவார்?", "en": "He who is beloved by me, what will he do to me, if I am not beloved by him ?" } }, { "chapter": "தனிப்படர் மிகுதி", "kural": [ "ஒருதலையான் இன்னாது காமம்காப் போல", "இருதலை யானும் இனிது." ], "number": 1196, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஆண், பெண் என்னும் இரு பக்கத்தில் ஒரு பக்கம் மட்டுமே காதல் இருந்தால் அது கொடுமை காவடியின் பாரத்தைப் போல இருபக்கமும் இருந்தால்தான் இனிது.", "en": "Lust, like the weight of the KAVADI, pains if it lies in one end only but pleases if it is in both." } }, { "chapter": "தனிப்படர் மிகுதி", "kural": [ "பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்", "ஒருவர்கண் நின்றொழுகு வான்." ], "number": 1197, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ( காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல்) ஒருவரிடத்தில் மட்டும் காமன் நின்று இயங்குவதால், என்னுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அறியானோ?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஆண், பெண் இருவரிடமும் இருந்து செயல் ஆற்றாமல் ஒருவரிடம் மட்டுமே போரிடும் காமன், இன்னொருவரின் மேனி நிற வேறுபாட்டால் வரும் துன்பத்தையும் வருத்தத்தையும் அறிய மாட்டானோ?", "en": "Would not cupid who abides and contends in one party (only) witness the pain and sorrow (in that party)?" } }, { "chapter": "தனிப்படர் மிகுதி", "kural": [ "வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து", "வாழ்வாரின் வன்கணார் இல்." ], "number": 1198, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் ( பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப் போல் வன்கண்மை உடையவர் இல்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தம்மால் விரும்பப்படும் கணவனிடமிருந்து ஓர் இன்சொல் கூடப் பெறாமல் உயிர் வாழும் மனைவியைப் போன்ற கொடியவர் இவ்வுலகத்தில் வேறு இல்லை.", "en": "There is no one in the world so hard-hearted as those who can live without receiving (even) a kind word from their beloved." } }, { "chapter": "தனிப்படர் மிகுதி", "kural": [ "நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு", "இசையும் இனிய செவிக்கு." ], "number": 1199, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : யான் விரும்பிய காதலர் மீண்டு வந்து அன்பு செய்யமாட்டார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைக் ‌கேட்பதும் என் செவிக்கு இன்பமாக இருக்கின்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நான் காதலிக்கும் என் கணவர் என்மீது அன்பற்றவர்தாம் என்றாலும், அவரிடம் இருந்து வரும் எந்தச் சொல்லும் என் செவிக்கு இனிமையானதே.", "en": "Though my beloved bestows no love on one, still are his words sweet to my ears." } }, { "chapter": "தனிப்படர் மிகுதி", "kural": [ "உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்", "செறாஅஅய் வாழிய நெஞ்சு." ], "number": 1200, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நெஞ்சமே! நீ வாழி! அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச் சொல்கின்றாய்! அதை விட எளிதாகக் கடலைத் தூர்ப்பாயாக.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நெஞ்சே நீ வாழ்க! பாவம், நீ ஏன் உன்னோடு உறவில்லாதவர்க்கு உன் அளவற்ற துன்பத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறாய்? (அதற்குப் பதில்) உன்னைத் துன்புறுத்தும் கடலைத் தூர்க்க முயற்சி செய்; அது முடியும்.", "en": "Live, O my soul, would you who relate your great to strangers, try rather to fill up your own sorrow sea (of sorrow)." } }, { "chapter": "நினைந்தவர் புலம்பல்", "kural": [ "உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்", "கள்ளினும் காமம் இனிது." ], "number": 1201, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் ) கள்ளை விட காமம் இன்பமானதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : முன்பு என் மனைவியுடன் கூடி அனுபவித்த இன்பத்தைப் பிரிந்திருக்கும் போது நினைத்தாலும் அது நீங்காத பெரு மகிழ்ச்சியைத் தருவதால் குடித்தால் மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளைக் காட்டிலும் காதல் இன்பமானது.", "en": "Sexuality is sweeter than liquor, because when remembered, it creates a most rapturous delight." } }, { "chapter": "நினைந்தவர் புலம்பல்", "kural": [ "எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்", "நினைப்ப வருவதொன்று ஏல்." ], "number": 1202, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நாம் விரும்புபவரைப் பிரிவிலும் நினைத்தால் பிரிவுத் துன்பம் வராது. அதனால் என்ன ஆனாலும் சரி, காதல் இனியதுதான்.", "en": "Even to think of one’s beloved gives one no pain. Sexuality, in any degree, is always delightful." } }, { "chapter": "நினைந்தவர் புலம்பல்", "kural": [ "நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்", "சினைப்பது போன்று கெடும்." ], "number": 1203, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எனக்குத் தும்மல் வருவது போல் வந்து அடங்கி விடுகிறது. அவர் என்னை நினைக்கத் தொடங்கி, நினைக்காமல் விடுவாரோ?", "en": "I feel as if I am going to sneeze but do not, and (therefore) my beloved is about to think (of me) but does not." } }, { "chapter": "நினைந்தவர் புலம்பல்", "kural": [ "யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து", "ஓஒ உளரே அவர்." ], "number": 1204, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோ‌மோ?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என் நெஞ்சத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். அவர் நெஞ்சத்தில் நானும் இருப்பேனா?", "en": "He continues to abide in my soul, do I likewise abide in his ?" } }, { "chapter": "நினைந்தவர் புலம்பல்", "kural": [ "தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்", "எம்நெஞ்சத்து ஓவா வரல்." ], "number": 1205, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தம் நெஞ்சத்தில் என்னை விலக்கிவிட்ட அவர், என் நெஞ்சத்தில் மட்டும் ஓயாமல் வருவதற்கு வெட்கப் படமாட்டாரோ?", "en": "He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mine." } }, { "chapter": "நினைந்தவர் புலம்பல்", "kural": [ "மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடி யான்", "உற்றநாள் உள்ள உளேன்." ], "number": 1206, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன்?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அவரோடு கூடி வாழ்ந்த நாள்களின் நினைவுகளை நினைப்பதால்தான் நான் இன்னும் உயிர் வாழ்கிறேன். இல்லை என்றால், வேறு எதனால் வாழ்வேன்?", "en": "I live by remembering my (former) intercourse with him; if it were not so, how could I live ?" } }, { "chapter": "நினைந்தவர் புலம்பல்", "kural": [ "மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்", "உள்ளினும் உள்ளம் சுடும்." ], "number": 1207, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ( காதலரை ) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அந்த நாள்களின் நினைவுகளை மறவாமல் நினைத்தாலும் என் நெஞ்சு சுடும்; அப்படி இருக்க மறந்தால் வாழ்வது எப்படி?", "en": "I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live, if I should ever forget it ?" } }, { "chapter": "நினைந்தவர் புலம்பல்", "kural": [ "எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ", "காதலர் செய்யும் சிறப்பு." ], "number": 1208, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங்கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அவரை நான் எப்படி எண்ணினாலும் கோபப்படமாட்டார்; அன்புள்ள அவர் எனக்குத் தரும் இன்பம் அத்தகையது அன்றோ!", "en": "He will not be angry however much I may think of him; is it not so much the delight my beloved affords me ?" } }, { "chapter": "நினைந்தவர் புலம்பல்", "kural": [ "விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்", "அளியின்மை ஆற்ற நினைந்து." ], "number": 1209, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைத்து என் இனிய உயிர் அழிகின்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நம் உயிர் வேறு அல்ல; ஒன்றே என்று முன்பு சொன்ன அவரின் இப்போதைய கருணையற்ற தன்மையை அதிகம் எண்ணி, என் உயிர் போய்க்கொண்டே இருக்கிறது.", "en": "My precious life is wasting away by thinking too much on the cruelty of him who said we were not different." } }, { "chapter": "நினைந்தவர் புலம்பல்", "kural": [ "விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்", "படாஅதி வாழி மதி." ], "number": 1210, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தி்ங்களே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!", "ta_salamon": "சாலமன் பாப்பையா : திங்களே! பிரியாமலிருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!", "en": "May you live, O Moon! Do not set, that I mine see him who has departed without quitting my soul." } }, { "chapter": "கனவுநிலை உரைத்தல்", "kural": [ "காதலர் தூதொடு வந்த கனவினுக்கு", "யாதுசெய் வேன்கொல் விருந்து." ], "number": 1211, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என் மன வேதனையை அறிந்து அதைப் போக்க, என்னவர் அனுப்பிய தூதை என்னிடம் கொண்டு வந்த கனவிற்கு நான் எதை விருந்தாகப் படைப்பேன்?", "en": "Where with shall I feast the dream which has brought me my dear one’s messenger ?" } }, { "chapter": "கனவுநிலை உரைத்தல்", "kural": [ "கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு", "உயலுண்மை சாற்றுவேன் மன்." ], "number": 1212, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன்.", "en": "If my fish-like painted eyes should, at my begging, close in sleep, I could fully relate my suferings to my lord." } }, { "chapter": "கனவுநிலை உரைத்தல்", "kural": [ "நனவினால் நல்கா தவரைக் கனவினால்", "காண்டலின் உண்டென் உயிர்." ], "number": 1213, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.", "en": "My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours." } }, { "chapter": "கனவுநிலை உரைத்தல்", "kural": [ "கனவினான் உண்டாகும் காமம் நனவினான்", "நல்காரை நாடித் தரற்கு." ], "number": 1214, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நேரில் வந்து அன்பு செய்யாதவரை அவர் இருக்கும் இடம் போய் அவரைத் தேடிக்கொண்டு வந்து தருவதால் கனவில் எனக்கு இன்பம் உண்டாகிறது.", "en": "There is pleasure in my dream, because in it I seek and obtain him who does not visit me in my wakefulness." } }, { "chapter": "கனவுநிலை உரைத்தல்", "kural": [ "நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்", "கண்ட பொழுதே இனிது." ], "number": 1215, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்‌பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : முன்பு அவரை நேரில் கண்டு அனுபவித்ததும் சரி, இப்போது கனவில் அவரைக் கண்டு அனுபவிப்பதும் இரண்டுமே எனக்கு இன்பந்தான்.", "en": "I saw him in my waking hours, and then it was pleasant; I see him just now in my dream, and it is (equally) pleasant." } }, { "chapter": "கனவுநிலை உரைத்தல்", "kural": [ "நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்", "காதலர் நீங்கலர் மன்." ], "number": 1216, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கண்ணால் காண்பது என்றொரு கொடிய பாவி இல்லை என்றால் கனவிலே வந்து கூடிய என்னவர் என்னைப் பிரிய மாட்டார்.", "en": "Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me." } }, { "chapter": "கனவுநிலை உரைத்தல்", "kural": [ "நனவினால் நல்காக் கொடியார் கனவனால்", "என்எம்மைப் பீழிப் பது." ], "number": 1217, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நேரில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடிய மனிதர் கனவில் மட்டும் நாளும் வந்து என்னை வருத்துவது ஏன்?", "en": "The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams?" } }, { "chapter": "கனவுநிலை உரைத்தல்", "kural": [ "துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்", "நெஞ்சத்தர் ஆவர் விரைந்து." ], "number": 1218, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழி்த்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகிறார்‌.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என் நெஞ்சில் எப்போதும் வாழும் என்னவர் நான் உறங்கும் போது என் தோளின் மேல் கிடக்கிறார். விழித்துக் கொள்ளும் போதோ வேகமாக என் நெஞ்சிற்குள் நுழைந்து கொள்கிறார்.", "en": "When I am asleep he rests on my shoulders, (but) when I awake he hastens into my soul." } }, { "chapter": "கனவுநிலை உரைத்தல்", "kural": [ "நனவினால் நல்காரை நோவர் கனவினால்", "காதலர்க் காணா தவர்." ], "number": 1219, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத கா‌தலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இன்னும் திருமணம் ஆகாத, ஆகிக் கணவனைப் பிரிந்து அறியாத இந்தப் பெண்கள், கனவில் காதலனைக் கண்டு அறியாதவர், ஆதலால், அவர்கள் அறிய நேரில் வந்து என்னிடம் அன்பு காட்டாத என்னவரை அன்பற்றவர் என்று ஏசுகின்றனர்.", "en": "They who have no dear ones to behold in their dreams blame him who visits me not in my waking hours." } }, { "chapter": "கனவுநிலை உரைத்தல்", "kural": [ "நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்", "காணார்கொல் இவ்வூ ரவர்." ], "number": 1220, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நனவில் நம்‌மை விட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்து பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டார் என்று என்னவரை ஏசும் இவ்வூர்ப் பெண்கள், அவர் நாளும் என் கனவில் வருவதைக் கண்டு அறியாரோ?", "en": "The women of this place say he has forsaken me in my wakefulness. I think they have not seen him visit me in my dreams." } }, { "chapter": "பொழுதுகண்டு இரங்கல்", "kural": [ "மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்", "வேலைநீ வாழி பொழுது." ], "number": 1221, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பொழுதே! நீ வாழ்க! முன்பெல்லாம் வருவாயே அந்த மாலையா நீ என்றால் இல்லை; திருமணம் செய்து கொண்ட பெண்களின் உயிரை வாங்கும் பொழுது நீ.", "en": "Live, O you evening are you (the former) evening? No, you are the season that slays (married) women." } }, { "chapter": "பொழுதுகண்டு இரங்கல்", "kural": [ "புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்", "வன்கண்ண தோநின் துணை." ], "number": 1222, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மயங்கிய மாலைப்‌பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்‌றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பகலும் இரவுமாய் மயங்கும் மாலைப்பொழுதே! என்னைப் போலவே நீயும் ஒளி இழந்த கண்ணோடு இருக்கிறாயே; உன் கணவரும் என் கணவரைப் போல் கொடியவரோ?", "en": "A long life to you, O dark evening! You are sightless. Is your help-mate (also) as hard-hearted as mine." } }, { "chapter": "பொழுதுகண்டு இரங்கல்", "kural": [ "பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்", "துன்பம் வளர வரும்." ], "number": 1223, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அவர் என்னைப் பிரிவதற்கு முன்பு என்முன் வரவே நடுக்கம் எய்தி மேனி கறுத்து வந்த இந்த மாலைப் பொழுது இப்போது எனக்குச் சாவு வரும்படி தோன்றி, அதற்கான துன்பம் பெருகும்படி நாளும் வருகின்றது.", "en": "The evening that (once) came in with trembling and dimness (now) brings me an aversion for life and increasing sorrow." } }, { "chapter": "பொழுதுகண்டு இரங்கல்", "kural": [ "காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து", "ஏதிலர் போல வரும்." ], "number": 1224, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது ( என் உயிரைக் கொள்ள) வருகின்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அவர் என்னைப் பிரியாமல் என்னுடன் இருந்தபோது எல்லாம் என் உயிர் வளர வந்த இந்த மாலைப் பொழுது, அவர் என்னைப் பிரிந்து இருக்கும் இப்போது, கொலைக் காலத்திற்கு வரும் கொலையாளிகள் போலக் கருணை இல்லாமல் வருகிறது.", "en": "In the absence of my lover, evening comes in like slayers on the field of slaughter." } }, { "chapter": "பொழுதுகண்டு இரங்கல்", "kural": [ "காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்", "மாலைக்குச் செய்த பகை?" ], "number": 1225, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : காலைக்கு நான் செய்த நன்மை என்ன? மாலைக்கு நான் செய்த தீமை என்ன?", "en": "What good have I done to morning (and) what evil to evening?" } }, { "chapter": "பொழுதுகண்டு இரங்கல்", "kural": [ "மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத", "காலை அறிந்த திலேன்." ], "number": 1226, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : முன்பு எனக்கு மகிழ்ச்சி தந்த மாலைப்பொழுது இப்படித் துன்பம் தரும் என்பதை, என்னை மணந்த காதலர் என்னைப் பிரிவதற்கு முன்பு நான் அறிந்தது கூட இல்லை.", "en": "Previous to my husband’s departure, I know not the painful nature of evening." } }, { "chapter": "பொழுதுகண்டு இரங்கல்", "kural": [ "காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி", "மாலை மலரும்இந் நோய்." ], "number": 1227, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது.", "en": "This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening." } }, { "chapter": "பொழுதுகண்டு இரங்கல்", "kural": [ "அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்", "குழல்போலும் கொல்லும் படை." ], "number": 1228, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும்‌ மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும்‌‌ படையாகவும் வருகின்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : முன்பு இனிதாய் ஒலித்த ஆயனின் புல்லாங்குழல் இப்போது நெருப்பாய்ச் சுடும் மாலைப் பொழுதிற்கு் தூதானது மட்டும் அன்றி, என்னைக் கொல்லும் ஆயுதமுமாகிவிட்டது.", "en": "The shepherd’s flute now sounds as a fiery forerunner of night, and is become a weapon that slays (me)." } }, { "chapter": "பொழுதுகண்டு இரங்கல்", "kural": [ "பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு", "மாலை படர்தரும் போழ்து." ], "number": 1229, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இதற்கு முன்பு நான் மட்டும்தான் மயங்கித் துன்புற்றேன்; இனிப் பார்த்தவர் எல்லாம் மதி மயங்கும்படி மாலைப் பொழுது வரும்போது இந்த ஊரே மயங்கித் துன்பப்படும்.", "en": "When night comes on confusing (everyone’s) mind, the (whole) town will lose its sense and be plunged in sorrow." } }, { "chapter": "பொழுதுகண்டு இரங்கல்", "kural": [ "பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை", "மாயும்என் மாயா உயிர்." ], "number": 1230, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ( பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அவர் என்னைப் பிரிந்தபோது பொறுத்துக் கொண்ட என் உயிர், பொருள் மயக்கமே பெரிதாக உடைய அவரை நினைத்து மயங்கும் இந்த மாலைப் பொழுதில் மடிகின்றது.", "en": "My (hitherto) unextinguished life is now lost in this bewildering night at the thought of him who has the nature of wealth." } }, { "chapter": "உறுப்புநலன் அழிதல்", "kural": [ "சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி", "நறுமலர் நாணின கண்." ], "number": 1231, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணி விட்டன.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பிரிவைப் பொறுக்காத சிறுமை என்னோடு இருக்கப் பிரிவைப் பொறுத்துக் கொண்டு தொலைவில் சென்று அவரை எண்ணி அழுவதால், கண்கள் ஒளி இழந்துவிட்டன. முன்பு கண்களைக் கண்டு வெட்கப்பட்ட மண மலர்களுக்கு இப்போது கண்கள் வெட்கப்பட்டுவிட்டன.", "en": "While we endure the unbearable sorrow, your eyes weep for him who is gone afar, and shun (the sight of) fragrant flowers" } }, { "chapter": "உறுப்புநலன் அழிதல்", "kural": [ "நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்", "பசந்து பனிவாரும் கண்." ], "number": 1232, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பசந்து, நீர் சிந்தும் கண்கள், நான் விரும்பியவர் என்னை விரும்பவில்லை என்பதைப் பிறர்க்குச் சொல்லும் போலும்!", "en": "The discoloured eyes that shed tears profu sely seem to betray the unkindness of our beloved." } }, { "chapter": "உறுப்புநலன் அழிதல்", "kural": [ "தணந்தமை சால அறிவிப்ப போலும்", "மணந்தநாள் வீங்கிய தோள்." ], "number": 1233, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், ( இப்போது மெலிந்தும்) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அவர் என்னை மணந்தபோது இன்பத்தால் பருத்த என் தோள்கள், இன்று மெலிந்து அவர் என்னைப் பிரிந்திருப்பதை மற்றவர்க்குத் தெரிவிக்கும்.", "en": "The shoulders that swelled on the day of our union (now) seem to announce our separation clearly (to the public)." } }, { "chapter": "உறுப்புநலன் அழிதல்", "kural": [ "பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்", "தொல்கவின் வாடிய தோள்." ], "number": 1234, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அவர் என்னைப் பிரிந்ததால் பழைய இயற்கை அழகை இழந்த என் தோள்கள், இப்போது வளையல்களும் கழலும்படி மெலிந்திருக்கின்றன.", "en": "In the absence of your consort, your shoulders having lost their former beauty and fulness, your bracelets of pure gold have become loose." } }, { "chapter": "உறுப்புநலன் அழிதல்", "kural": [ "கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு", "தொல்கவின் வாடிய தோள்." ], "number": 1235, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு, வாடிய தோள்கள் (என் துன்பம் உணராத) கொடியவரி்ன கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : வளையல்கள் கழல, முன்னைய இயற்கை அழகையும் இழந்த என் தோள்கள் கொடிய அவரின் கொடுமையைப் பேசுகின்றன.", "en": "The (loosened) bracelets, and the shoulders from which the old beauty has faded, relate the cruelty of the pitiless one." } }, { "chapter": "உறுப்புநலன் அழிதல்", "kural": [ "தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்", "கொடியர் எனக்கூறல் நொந்து." ], "number": 1236, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : வளையல்கள் கழன்று தோள்கள் மெலிய, அவரைக் கொடுமையானவர் என்று அவை நொந்து பேசுவதைக் கேட்டு நான் வருந்துகிறேன்.", "en": "I am greatly pained to hear you call him a cruel man, just because your shoulders are reduced and your bracelets loosened." } }, { "chapter": "உறுப்புநலன் அழிதல்", "kural": [ "பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்", "வாடுதோட் பூசல் உரைத்து." ], "number": 1237, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நெஞ்சே! கொடுமையானவராகிய அவரிடம் சென்று என் மெலியும் தோள்களினால் ஏற்பட்டுள்ள வெற்றுரைகளைச் சொல்லி நீ பெருமை பெறுவாயோ?", "en": "Can you O my soul! gain glory by relating to the (so-called) cruel one the clamour of my fading shoulders?" } }, { "chapter": "உறுப்புநலன் அழிதல்", "kural": [ "முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது", "பைந்தொடிப் பேதை நுதல்." ], "number": 1238, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தழுவிய கை‌களைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, ( அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : முன்பு அவளை நான் இறுகத் தழுவி, அது அவளுக்கு வருத்தம் தருமோ என்று மெல்லக் கையை விட அதற்கே பொன் வளையங்களை அணிந்த அப்பேதையின் நெற்றியின் நிறம் ஒளி குறைந்ததே!", "en": "When I once loosened the arms that were in embrace, the forehead of the gold-braceleted women turned sallow." } }, { "chapter": "உறுப்புநலன் அழிதல்", "kural": [ "முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற", "பேதை பெருமழைக் கண்." ], "number": 1239, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தழுவுதலுக்கு இடையே குளி்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்தன.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : (அப்படி) நான் கையை மெல்ல எடுத்ததால் எங்கள் தழுவலுக்கு இடையே குளிர்ந்த சிறுகாற்று நுழைந்தது. இந்த இடைவெளியைக்கூடப் பொறுக்காமல் அவளுடைய பெரிய குளிர்ந்த கண்கள் நிறம் இழந்தன. இப்போது அவை எப்படி இருக்கின்றனவோ?", "en": "When but a breath of breeze penetrated our embrace, her large cool eyes became sallow." } }, { "chapter": "உறுப்புநலன் அழிதல்", "kural": [ "கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே", "ஒண்ணுதல் செய்தது கண்டு." ], "number": 1240, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய க்ண்களில் பசலையும் துன்பம் அடைந்து விட்டது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : குளிர்ந்த சிறுகாற்று இடையே நுழைந்ததைக் கண்டு நெற்றி, நிற வேறுபாடு அடைந்தது. அதன் மென்மையைப் பார்த்து வெட்கப்பட்ட கண்ணும் துன்பம் உற்றதே!", "en": "Was it at the sight of what the bright forehead had done that the sallowness of her eyes became sad?" } }, { "chapter": "நெஞ்சோடு கிளத்தல்", "kural": [ "நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்", "எவ்வநோய் தீர்க்கும் மருந்து." ], "number": 1241, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நெஞ்சே! எதனாலும் தீராத என் நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை எண்ணிப் பார்த்துச் சொல்லமாட்டாயா?", "en": "O my soul, will you not think and tell me some medicine be it what it may, that can cure this incurable malady?" } }, { "chapter": "நெஞ்சோடு கிளத்தல்", "kural": [ "காதல் அவரிலர் ஆகநீ நோவது", "பேதைமை வாழியென் நெஞ்சு." ], "number": 1242, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என் நெஞ்சே நீ வாழ்ந்து போ; அவர் நம்மீது அன்பு இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவர் வரவை எண்ணி வருந்துவது மூடத்தனமே.", "en": "May you live, O my soul! While he is without love, for you to sufer is (simple) folly." } }, { "chapter": "நெஞ்சோடு கிளத்தல்", "kural": [ "இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்", "பைதல்நோய் செய்தார்கண் இல்." ], "number": 1243, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நெஞ்சே (என்னுடன்) இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்? இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம் இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை இல்லையே!", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நெஞ்சே! அவர் இருக்கும் இடத்திற்கும் போகாமல், இங்கே இறந்தும் போகாமல், இங்கிருந்தபடியே அவர் வருவதை எண்ணி நீ வருந்துவது ஏன்? நமக்கு இந்தத் துன்ப நோயைத் தந்தவர்க்கு நம்மீது இரக்கப்படும் எண்ணம் இல்லை.", "en": "O my soul! why remain (here) and suffer thinking (of him)? There are no lewd thoughts (of you) in him who has caused you this disease of sorrow" } }, { "chapter": "நெஞ்சோடு கிளத்தல்", "kural": [ "கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்", "தின்னும் அவர்க்காணல் உற்று." ], "number": 1244, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நெஞ்சே! நீ அவரைக் காணச் சென்றால் என் கண்களையும் உடன் கொண்டு செல். அவற்றை விட்டுவிட்டு நீ போய் விடுவாயானால் அவரைக் காண விரும்பும் என் கண்கள் என்னைத் தின்பன போல வருந்தும்.", "en": "O my soul! take my eyes also with you, ( if not), these would eat me up (in their desire) to see him." } }, { "chapter": "நெஞ்சோடு கிளத்தல்", "kural": [ "செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்", "உற்றால் உறாஅ தவர்." ], "number": 1245, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணிக் கைவிட முடியும‌ோ?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நெஞ்சே! நான் அவர்மீது அன்பு காட்டியும், என்மீது அன்பு காட்டாத அவரை, நம்மை வெறுத்தவர் என்று எண்ணிக் கைவிடும் உள்ள உறுதி எனக்கு உண்டோ?", "en": "O my soul! can he who loves not though he is beloved, be forsaken saying he hates me (now)?" } }, { "chapter": "நெஞ்சோடு கிளத்தல்", "kural": [ "கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்", "பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு." ], "number": 1246, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : என் நெஞ்சே! ஊடியபோது கூடி ஊடல் உணர்த்த வல்ல காதலரைக் கண்டபோது நீ பிணங்கி உணர மாட்டாய்; பொய்யான சினங்கொண்டு காய்கினறாய்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என் நெஞ்சே! நான் அவருடன் ஊடினால் அந்த ஊடலை என்னுடன் கூடி நீக்கவல்ல என் அன்பரைக் கண்டால் பொய்யாகவாவது கொஞ்சம் ஊடிப் பிறகு ஊடலை விட்டுக் கூடமாட்டோம். இப்போது அதையும் விட்டுவிட்டு அவரைக் கொடியவர் எனப் பொய்யாக வெறுப்பது போல் இருக்கின்றாய்; இதை விடுத்து அவரிடம் போயேன்.", "en": "O my soul! when you see the dear one who remove dislike by intercourse, you are displeased and continue to be so. Nay, your displeasure is (simply) false." } }, { "chapter": "நெஞ்சோடு கிளத்தல்", "kural": [ "காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே", "யானோ பொறேன்இவ் விரண்டு." ], "number": 1247, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டு விடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நல்ல நெஞ்சே! ஒன்று காதல் விருப்பத்தை விடு; அல்லது நாணத்தை விடு; இரண்டையுமே விடமுடியாது என்பது உன் எண்ணம் என்றால், ஒன்றிற்கொன்று வேறுபட்ட இந்த இரண்டையும் சேர்த்துத் தாங்கும் ஆற்றல் எனக்கு இல்லை.", "en": "O my good soul, give up either lust or honour, as for me I can endure neither." } }, { "chapter": "நெஞ்சோடு கிளத்தல்", "kural": [ "பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்", "பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு." ], "number": 1248, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : என் நெஞ்சே! பிரிவுத் துன்பத்தால் வருந்தி அவர் வந்து அன்பு செய்ய வில்லையே என்று ஏங்கி பிரிந்தவரின் பின் செல்கின்றாய் பேதை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என் நெஞ்சே! நம் பிரிவுத் துன்பத்தை அவர் அறியார். அதனால் வருந்தி அவர் நம்மீது அன்பு காட்டாமல் இருக்கின்றார் என்று எண்ணி, நம் நிலையை அவர்க்குக் கூறுவதற்காக, அவர் பின்னே ஏங்கிச் செல்லும் நீ ஏதும் அறியாத பேதையே!", "en": "You are a fool, O my soul! to go after my departed one, while you mourn that he is not kind enough to favour you." } }, { "chapter": "நெஞ்சோடு கிளத்தல்", "kural": [ "உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ", "யாருழைச் சேறியென் நெஞ்சு." ], "number": 1249, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என் நெஞ்சே! நம் அன்பர் நம் மனத்திற்குள்ளேயே இருக்க, நீ அவரைத் தேடி எவரிடம் போகிறாய்?", "en": "O my soul! to whom would you repair, while the dear one is within yourself?" } }, { "chapter": "நெஞ்சோடு கிளத்தல்", "kural": [ "துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா", "இன்னும் இழத்தும் கவின்." ], "number": 1250, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நம்மோடு பொருந்தி இருக்காமல் கைவிட்டுச சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நம்மைக் கலவாமல் பிரிந்து போனவரை நாம் நம் மனத்திற்குள்ளேயே கொண்டிருப்பதால் முன்பு இழந்த புற அழகை மட்டுமே அன்று இருக்கும் அக அழகையும் இழக்கப் போகிறோம்.", "en": "If I retain in my heart him who has left me without befriending me, I shall lose even the (inward) beauty that remains." } }, { "chapter": "நிறையழிதல்", "kural": [ "காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்", "நாணுத்தாழ் வீழ்த்த கதவு." ], "number": 1251, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய கோடாலி உடைத்து விடுகிறதே.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நாணம் என்னும் தாழ்பாளைக் கோத்திருக்கும் நிறை எனப்படும் கதவைக் காதல் விருப்பமாகிய கோடரி பிளக்கின்றதே!", "en": "The axe of lust can break the door of chastity which is bolted with the bolt of modesty." } }, { "chapter": "நிறையழிதல்", "kural": [ "காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை", "யாமத்தும் ஆளும் தொழில்." ], "number": 1252, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது. அது என் நெஞ்சத்தை நள்ளிரவில் ஏவல் கொண்டு ஆள்கிறது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எல்லாரும் வேலையின்றி உறங்கும் நடுச்சாமத்திலும் என் நெஞ்சத்தைத் தண்டித்து வேலை வாங்குவதால் காதல் என்று சொல்லப்படும் ஒன்று இரக்கமற்றதாக இருக்கிறது.", "en": "Even at midnight is my mind worried by lust, and this one thing, alas! is without mercy." } }, { "chapter": "நிறையழிதல்", "kural": [ "மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்", "தும்மல்போல் தோன்றி விடும்." ], "number": 1253, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : யான் காமத்தை என்னுள்‌ளே மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவே என் குறிப்பின்படி நிற்காமல் தும்மல் போல் தானே வெளிப்பட்டு விடுகிறது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என் காதல் ஆசையை நான் மறைக்கவே எண்ணுவேன்; ஆனால், அது எனக்கும் தெரியாமல் தும்மலைப் போல் வெளிப்பட்டு விடுகிறது.", "en": "I would conceal my lust, but alas, it yields not to my will but breaks out like a sneeze." } }, { "chapter": "நிறையழிதல்", "kural": [ "நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்", "மறையிறந்து மன்று படும்." ], "number": 1254, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : யான் இதுவரையில் நிறையோடிருப்பதாக எண்ணிக கொண்டிருந்தேன். ஆனால் என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இன்றுவரை நான் என்னை மன அடக்கம் உடையவள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்றோ என் காதல் ஆசை, மறைத்தலைக் கடந்து ஊரவர் அறிய வெளிப்பட்டுவிட்டது.", "en": "I say I would be firm, but alas, my malady breaks out from its concealment and appears in public." } }, { "chapter": "நிறையழிதல்", "kural": [ "செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்", "உற்றார் அறிவதொன்று அன்று." ], "number": 1255, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தம்மை வெறுத்து நீங்கியவரின் பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும் பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் தன்மையது அனறு.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன்னைப் பிரிந்து சென்றவர் பின்னே செல்லாது, தானும் அவரை விட்டுப் பிரிந்து நிற்கும் மன அடக்கத்தைக் காதல் நோயை அறியாதவர் பெற முடியும். அறிந்தவரால் பெற முடியாது.", "en": "The dignity that would not go after an absent lover is not known to those who are sticken by love." } }, { "chapter": "நிறையழிதல்", "kural": [ "செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ", "எற்றென்னை உற்ற துயர்." ], "number": 1256, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வெறுத்து நீங்கிய காதலரின் பின் செல்ல விரும்பிய நிலையில் இருப்பதால் என்னை அடைந்த இந்த காமநோய் எத்தன்மையானது? அந்‌தோ!", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என்னைப் பிரிந்து சென்றவர் பின்னே நான் போய்ச் சேர வேண்டும் என்று என்னைப் பிடித்த இந்தக் காதல் நோய் தூண்டுவதால் இது மிகமிகக் கொடியது.", "en": "The sorrow I have endured by desiring to go after my absent lover, in what way is it excellent?" } }, { "chapter": "நிறையழிதல்", "kural": [ "நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்", "பேணியார் பெட்ப செயின்." ], "number": 1257, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால். நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமல் இருப்போம்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என்னால் விரும்பப்பட்டவர் காதல் ஆசையில் நான் விரும்பியதையே செய்தபோது, நாணம் என்று சொல்லப்படும் ஒன்றை அறியாமலேயே இருந்தேன்.", "en": "I know nothing like shame when my beloved does from love (just) what is desired (by me)." } }, { "chapter": "நிறையழிதல்", "kural": [ "பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்", "பெண்மை உடைக்கும் படை." ], "number": 1258, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நம்முடைய பெண்மையாகிய அரணை அழிக்கும் படையாக இருப்பது, பல மாயங்களில் வல்ல, கள்வனான காதலரடைய பணிவுடைய மொழி அன்றோ?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என் மன அடக்கமாகிய கோட்டையை அழிக்கும் ஆயுதம், பல பொய்த் தொழிலும் வல்ல இந்த மனத்திருடனின் பணிவான சொற்கள் அன்றோ!", "en": "Are not the enticing words of my trick-abounding roguish lover the weapon that breaks away my feminine firmness?" } }, { "chapter": "நிறையழிதல்", "kural": [ "புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ் சம்", "கலத்தல் உறுவது கண்டு." ], "number": 1259, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விட்டு அவரோடு கூடுவதை கண்டு தழுவினேன்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அவர் வந்தபோது ஊடல் கொள்ளலாம் என்று எண்ணி, அவர்முன் நில்லாது அப்பால் போனேன்; நான் போன போதும், என் நெஞ்சம் அடக்கம் இல்லாமல் அவரோடு கலக்கத் தொடங்குவதைக் கண்டு இனி அது முடியாது என்று அவரைத் தழுவினேன்.", "en": "I said I would feign dislike and so went (away); (but) I embraced him the moment I say my mind began to unite with him!" } }, { "chapter": "நிறையழிதல்", "kural": [ "நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ", "புணர்ந்தூடி நிற்பேம் எனல்." ], "number": 1260, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கொழுப்பைத் தீயில் இட்டால் போன்ற உருகும் நெஞ்சுடைய என்னைப் போன்றவர்க்கு, இசைந்து ஊடி நிற்போம் என்று ஊடும் தன்மை உண்டோ?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கொழுப்பைத் தீயிலே போட்டால் அது உருகுவது போலத் தம் காதலரைக் கண்டால் மன அடக்கம் இன்றி உருகும் நெஞ்சினையுடைய பெண்களுக்கு, அவர் கூடவும், நாம் ஊடவும் பின்பு ஏதும் தெரியாத நிலையிலேயே நிற்போம் என்ற நிலை உண்டாகுமோ?", "en": "Is it possible for those whose hearts melt like fat in the fire to say they can feign a strong dislike and remain so?" } }, { "chapter": "அவர்வயின் விதும்பல்", "kural": [ "வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற", "நாளொற்றித் தேய்ந்த விரல்." ], "number": 1261, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அவர் என்னைப் பிரிந்து போன நாள்களைச் சுவரில் குறித்துத் தொட்டு எண்ணுவதால் என் விரல்கள் தேய்ந்து விட்டன; அவர் வரும் வழியைப் பார்த்து என் கண்களும் ஒளி இழந்து, நுண்ணியவற்றைக் காணும் திறனில் குறைந்து விட்டன.", "en": "My finger has worn away by marking (on the wall) the days he has been absent while my eyes have lost their lustre and begin to fail." } }, { "chapter": "அவர்வயின் விதும்பல்", "kural": [ "இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்", "கலங்கழியும் காரிகை நீத்து." ], "number": 1262, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தோழி! காதலரின் பிரிவால்துன்புற்று வருந்துகின்ற இன்றும் அவரை மறந்து விட்டால், அழகு கெட்டு என் தோள் மேல் அணிந்துள்ள அணிகள் கழலுமாறு நேரும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒளிரும் நகை அணிந்தவனே! என் காதலரை நான் இன்று மறந்தால் என்னைவிட்டு அழகு மிகுதியும் நீங்க, என் தோளும் வளையல்களை இழக்கும்.", "en": "O you bright-jewelled maid, if I forget (him) today, my shoulders will lose their beauty even in the other life and make my bracelets loose." } }, { "chapter": "அவர்வயின் விதும்பல்", "kural": [ "உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்", "வரல்நசைஇ இன்னும் உளேன்." ], "number": 1263, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாகக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்ற காதலர், திரும்பி வருதலைக் காண விரும்பியே இன்னும் யான் உயிரோடு இருக்கின்றேன்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என்னுடன் இன்பம் நுகர்வதை விரும்பாமல், நான் துணையாவதையும் வெறுத்துத் தன் ஊக்கத்தையே துணையாக எண்ணி, வெற்றி பெறுவதையே விரும்பி என்னைப் பிரிந்தவர், அவற்றை இகழ்ந்து என்னிடம் திரும்ப வருவதை நான் விரும்புவதால் இவ்வளவு காலமும் இருக்கிறேன்.", "en": "I still live by longing for the arrival of him who has gone out of love for victory and with valour as his guide." } }, { "chapter": "அவர்வயின் விதும்பல்", "kural": [ "கூடிய காமம் பிர஧ந்தார் வரவுள்ளிக்", "கோடுகொ டேறுமென் நெஞ்சு." ], "number": 1264, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : முன்பு கூடியிருந்த காதலைக் கைவிட்டுப் பிரிந்த அவருடைய வருகை‌யைநினைத்து என் நெஞ்சம் மரத்தின் கிளைகளின் மேலும் ஏறிப் பார்க்கின்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என்னைப் பிரிந்து போனவர் மிகுந்த காதலுடன் என்னிடம் வருவதை எண்ணி, என் நெஞ்சு வருத்தத்தை விட்டுவிட்டு மகிழ்ச்சியில் கிளை பரப்பி மேலே வளர்கிறது.", "en": "My heart is rid of its sorrow and swells with rapture to think of my absent lover returning with his love." } }, { "chapter": "அவர்வயின் விதும்பல்", "kural": [ "காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்", "நீங்கும்என் மென்தோள் பசப்பு." ], "number": 1265, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என் கண்கள் முழுக்க என் கணவரை நான் காண்பேனாகுக; அவரைக் கண்டபின் என் மெல்லிய தோளின் வாடிய நிறம் தானாக நீங்கும்.", "en": "May I look on my lover till I am satisfied and thereafter will vanish the sallowness of my slender shoulders." } }, { "chapter": "அவர்வயின் விதும்பல்", "kural": [ "வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்", "பைதல்நோய் எல்லாம் கெட." ], "number": 1266, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்பநோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்ப நோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.", "en": "May my husband return some day; and then will I enjoy (him) so as to destroy all this agonizing sorrow." } }, { "chapter": "அவர்வயின் விதும்பல்", "kural": [ "புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்", "கண்அன்ன கேளிர் விரன்." ], "number": 1267, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : என்னுடைய கண்போன்ற காதலர் வருவாரானால், யான் அவரோடு ஊடுவேனோ? அல்லது அவரைத் தழுவுவேனோ? அவரோடு கூடுவேனோ?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கண்போல் சிறந்த என் துணைவர் வந்தால் அவர் நெடுநாள் பிரிந்திருந்ததற்காக ஊடுவேனா? அவர் பிரிவைத் தாங்க முடியாமல் அவரைத் தழுவுவேனா? அல்லது இரண்டு செயல்களையும் கலந்து செய்வேனா?", "en": "On the return of him who is as dear as my eyes, am I displeased or am I to embrace (him); or am I to do both?" } }, { "chapter": "அவர்வயின் விதும்பல்", "kural": [ "வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து", "மாலை அயர்கம் விருந்து." ], "number": 1268, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அரசன் இச் செயலில் முனைந்து நின்று வெற்றி பெறுவானாக; அதன்பின் யாம் மனைவியோடு கூடியிருந்து அனறு வரும் மாலைப் பொழுதிற்கு விருந்து செய்வோம்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அரசு போர் செய்து வெற்றி பெறட்டும்; நானும் மனைவியோடு கூடி மாலைப்பொழுதில் விருந்து உண்பேனாகுக.", "en": "Let the king fight and gain (victories); (but) let me be united to my wife and feast the evening." } }, { "chapter": "அவர்வயின் விதும்பல்", "kural": [ "ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்", "வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு." ], "number": 1269, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பி வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல ( நெடிதாக) கழியும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தொலைதூரம் சென்று தன் கணவன் வரும் நாளை எண்ணி வருந்தும் பெண்களுக்கு ஒருநாள் பலநாள் போல நெடிதாகத் தோன்றும்.", "en": "To those who sufer waiting for the day of return of their distant lovers one day is as long as seven days." } }, { "chapter": "அவர்வயின் விதும்பல்", "kural": [ "பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்", "உள்ளம் உடைந்துக்கக் கால்." ], "number": 1270, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : துன்பத்தைத் தாங்காமல் மனம் உடைந்து அழிந்து விட்டால், நம்மைத் திரும்பப்‌ பெறுவதனால் என்ன? பெற்றக்கால் என்ன? பெற்றுப் பொருந்தினாலும் என்ன?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என் பிரிவைத் தாங்காமல் உள்ளம் உடைய, அவளுக்கு ஒன்று ஆகிவிட்டால் அதன் பிறகு அவள் என்னைப் பெறுவதால் ஆவது என்ன? பெற்றால்தான் என்ன? உடம்போடு கலந்தால்தான் என்ன? ஒரு பயனும் இல்லை.", "en": "After (my wife) has died of a broken heart, what good will there be if she is to receive me, has received me, or has even embraced me?" } }, { "chapter": "குறிப்பறிவுறுத்தல்", "kural": [ "கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்", "உரைக்கல் உறுவதொன் றுண்டு." ], "number": 1271, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக் கூடிய செய்தி ஒன்று இருக்கிறது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நீ சொல்லாது மறைத்தாலும், மறைக்க உடன்படாமல், உன் மை தீட்டப் பெற்ற கண்களே எனக்குச் சொல்ல விரும்பும் செய்தி ஒன்று உண்டு.", "en": "Though you would conceal (your feelings), your painted eyes would not, for, transgressing (their bounds), they tell (me) something." } }, { "chapter": "குறிப்பறிவுறுத்தல்", "kural": [ "கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்", "பெண்நிறைந்த நீர்மை பெரிது." ], "number": 1272, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கண் நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் உடைய என் காதலிக்குப் பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும் இயல்பு மிகுதியாக உள்ளது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என் கண் நிறைந்த அழகையும், மூங்கிலைப் போன்ற தோளையும் உடைய இப்பேதைக்குப் பெண்கள் எல்லாரிடமும் இருக்கும் குண மேன்மையிலும் அதிக மேன்மை இருக்கிறது.", "en": "Unusually great is the female simplicity of your maid whose beauty fills my eyes and whose shoulders resemble the bamboo." } }, { "chapter": "குறிப்பறிவுறுத்தல்", "kural": [ "மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை", "அணியில் திகழ்வதொன்று உண்டு." ], "number": 1273, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ( கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கோக்கப்பட்ட பளிங்கிற்குள் கிடந்து வெளியே தெரியும் நூலைப் போல இவளின் அழகிற்குள் கிடந்து வெளியே தெரியும் குறிப்பு ஒன்று உண்டு.", "en": "There is something that is implied in the beauty of this woman, like the thread that is visible in a garland of gems." } }, { "chapter": "குறிப்பறிவுறுத்தல்", "kural": [ "முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை", "நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு." ], "number": 1274, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அரும்பு தோன்றும்போது அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கி இருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.", "en": "There is something in the unmatured smile of this maid like the fragrance that is contained in an unblossomed bud." } }, { "chapter": "குறிப்பறிவுறுத்தல்", "kural": [ "செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்", "தீர்க்கும் மருந்தொன்று உடைத்து." ], "number": 1275, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காதலி என்னை நோக்கி செய்து விட்டுச் சென்ற கள்ளமான குறிப்பு, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் மருந்து ஒன்று உடையதாக இருக்கின்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நெருங்கி வளையல்களை அணிந்த என் மனைவி நான் மட்டுமே அறிய மறைத்துக் காட்டும் ஒரு குறிப்பில் என் பெருங்கவலையைத் தீர்க்கும் மருந்து ஒன்றும் உண்டு.", "en": "The well-meant departure of her whose bangles are tight-fitting contains a remedy that can cure my great sorrow." } }, { "chapter": "குறிப்பறிவுறுத்தல்", "kural": [ "பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி", "அன்பின்மை சூழ்வ துடைத்து." ], "number": 1276, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல்கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அவரைப் பிரிந்து இருந்ததால் ஏற்பட்ட துன்பத்தினைப் பெரிதும் பொறுத்துக் கொண்டு இப்போது நான் மகிழும் வண்ணம் அவர் என்னைக் கூடுவது அவரது அன்பின்மையை எண்ணிப் பார்க்கச் செய்கிறது.", "en": "The embrace that fills me with comfort and gladness is capable of enduring (my former) sorrow and meditating on his want of love." } }, { "chapter": "குறிப்பறிவுறுத்தல்", "kural": [ "தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்", "முன்னம் உணர்ந்த வளை." ], "number": 1277, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : குளிர்ந்த துறையை உடைய காதலன் பிரிந்த பிரிவை நம்மை விட முன்னம‌ே நம்முடைய வளையல்கள் உணர்ந்து கழன்று விட்டனவே!", "ta_salamon": "சாலமன் பாப்பையா : குளிர்ந்த துறைகளுக்குச் சொந்தக்காரரான அவர் என்னை உடலால் கூடி உள்ளத்தால் பிரிந்திருப்பதை என்னைக் காட்டிலும் என் கை வளையல்கள் முன்னமே அறிந்துவிட்டன.", "en": "My bracelets have understood before me the (mental) separation of him who rules the cool seashore." } }, { "chapter": "குறிப்பறிவுறுத்தல்", "kural": [ "நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்", "எழுநாளேம் மேனி பசந்து." ], "number": 1278, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : எம்முடைய காதலர் நேற்றுதான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என் காதலர் நேற்றுத்தான் என்னைப் பிரிந்து போனார்; அப்பிரிவிற்கு வாடி என் மேனியின் நிறம் வேறுபட்டு ஏழு நாள்களாகிவிட்டன.", "en": "It was but yesterday my lover departed (from me); and it is seven days since my complexion turned sallow." } }, { "chapter": "குறிப்பறிவுறுத்தல்", "kural": [ "தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி", "அஃதாண் டவள்செய் தது." ], "number": 1279, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நீ என்னைப் பிரிந்தால் இவை என்னுடன் இருக்கமாட்டா என்று கை வளையல்களைப் பார்த்தாள். துணையாக தன் மெல்லிய தோள்களும் மெலியும் என அவற்றைப் பார்த்தாள்; இவை இரண்டும் நடக்காதபடி நீர் நடந்து கொள்ள வேண்டும் என்று தன் பாதங்களையும் பார்த்தாள், பிரிந்தால் நானும் உடன் வருவேன் என்ற ஒரு குறிப்பும் இதனுள் இருக்கிறது.", "en": "She looked at her bracelets, her tender shoulders, and her feet; this was what she did there (sign ificantly)." } }, { "chapter": "குறிப்பறிவுறுத்தல்", "kural": [ "பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்", "காமநோய் சொல்லி இரவு." ], "number": 1280, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கண்ணினால் காமநோயைத் தெரிவித்துப் பிரியாமல் இருக்குமாறு இரத்தல், பெண் தன்மைக்கு மேலும் பெண் தன்மை உடையது என்று கூறுவர்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பெண்கள் தம் காதல் நோயைக் கண்ணாலேயே சொல்லி அதைத் தீர்க்கும்படி வேண்டுவது பெண்மை. மேலும் ஒரு பெண்மையைக் கொண்டிருப்பதாகும் என்பர் அறிந்தோர்.", "en": "To express their love-sickness by their eyes and resort to begging bespeaks more than ordinary female excellence." } }, { "chapter": "புணர்ச்சி விதும்பல்", "kural": [ "உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்", "கள்ளுக்கில் காமத்திற் குண்டு." ], "number": 1281, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்‌லை; காமத்திற்கு உண்டு", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நினைத்த அளவிலே உணர்வு அழியாமல் உள்ளம் கிளர்தலும், பார்த்த அளவிலே உணர்வு அழிய உள்ளம் கிளர்தலும் கள் உண்பவர்க்கு இல்லை; காதல் வசப்பட்டவர்க்கே உண்டு.", "en": "To please by thought and cheer by sight is peculiar, not to liquor but lust." } }, { "chapter": "புணர்ச்சி விதும்பல்", "kural": [ "தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத் துணையும்", "காமம் நிறைய வரின்." ], "number": 1282, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச் சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பெண்களுக்குக் காதல் மிகப் பெரிதாகுமானால், கணவனோடு மிகச் சிறிதளவும் ஊடாமல் இருக்க வேண்டும்.", "en": "If women have a lust that exceeds even the measure of the palmyra fruit, they will not desire (to feign) dislike even as much as the millet." } }, { "chapter": "புணர்ச்சி விதும்பல்", "kural": [ "பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்", "காணா தமையல கண்." ], "number": 1283, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை.", "en": "Though my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him." } }, { "chapter": "புணர்ச்சி விதும்பல்", "kural": [ "ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து", "கூடற்கண் சென்றது என் னெஞ்சு." ], "number": 1284, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தோழி! காதலரைக் காண்டுபதற்கு முன், அவர் செய்த தவற்றை எண்ணி ஊட நினைத்தேன்; அவரைப் பார்த்த பிறகு, அதை மறந்து, அவருடன் கூடவே என் மனம் சென்றது.", "en": "O my friend! I was prepared to feign displeasure but my mind forgetting it was ready to embrace him." } }, { "chapter": "புணர்ச்சி விதும்பல்", "kural": [ "எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்", "பழிகாணேன் கண்ட இடத்து." ], "number": 1285, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : மை தீட்டும் நேரத்தில் தீட்டு் கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : முன்பு பார்த்திருந்தும் மை தீட்டும்போது அஞ்சனக் கோலைக் காணாத கண்களைப் போல, கணவனின் தவற்றை அவர் இல்லாதபோது எண்ணி இருந்தும், நேரில் அவரைக் கண்ட போது காணேன்.", "en": "Like the eyes which see not the pencil that paints it, I cannot see my husband’s fault (just) when I meet him." } }, { "chapter": "புணர்ச்சி விதும்பல்", "kural": [ "காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்", "காணேன் தவறல் லவை." ], "number": 1286, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காதலரைக் யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : கணவனை நான் காணும்போது அவரது தவறுகளைக் காணேன்; காணாதபோதோ, தவறுகளைத் தவிரப் பிறவற்றைக் காணேன்.", "en": "When I see my husband, I do not see any faults; but when I do not see him, I do not see anything but faults." } }, { "chapter": "புணர்ச்சி விதும்பல்", "kural": [ "உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்", "பொய்த்தல் அறிந்தென் புலந்து." ], "number": 1287, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓட் நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் ன்னெ?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன்னை இழுத்துக் கொண்டு போகும் என்று தெரிந்தும், ஓடும் வெள்ளத்துள் பாய்பவர் செயலைப் போல, என் சினம் பலன் அளிக்காது என்று தெரிந்தும் அவருடன் ஊடல் கொண்டு ஆவது என்ன?", "en": "Like those who leap into a stream which they know will carry them of, why should a wife feign dislike which she knows cannot hold out long?" } }, { "chapter": "புணர்ச்சி விதும்பல்", "kural": [ "இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்", "கள்ளற்றே கள்வநின் மார்பு." ], "number": 1288, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கள்வ! இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு மேன்‌மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : வஞ்சகரே! தன்னை உண்டு மகிழ்ந்தவர்க்கு எளிமை வரத்தக்க தீமையைச் செய்தாலும், அவரால் மேலும் மேலும் விரும்பப்படும் கள்ளைப் போன்றது எனக்கு உன் மார்பு. இத்தனையும் அவளுக்கு மட்டுந்தானா? அவன் எதுவுமே நினைக்கவில்லையா? அவள் நினைவுகளை அவளின் பார்வையிலேயே படித்துவிட்டான். அவளைத் தேற்றுகிறான்.", "en": "O you rogue! your breast is to me what liquor is to those who rejoice in it, though it only gives them an unpleasant disgrace." } }, { "chapter": "புணர்ச்சி விதும்பல்", "kural": [ "மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்", "செவ்வி தலைப்படு வார்." ], "number": 1289, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : காதல் இன்பம் மலரைவிட மென்மையானது. அதை அறிந்து அனுபவிப்பதற்கு ஏற்ற இடம், காலம், தேவையானவை எல்லாம் பெற்றுக் காதல் இன்பத்தின் நலனை அனுபவிப்பவர் இவ்வுலகில் சிலரே", "en": "Sexual delight is more delicate than a flower, and few are those who understand its real nature." } }, { "chapter": "புணர்ச்சி விதும்பல்", "kural": [ "கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்", "என்னினும் தான்விதுப் புற்று." ], "number": 1290, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கண் பார்வையின் அளவில் பிணங்கி, என்னை விடத் தான் விரைந்து தழுவுதலை விரும்பி, ( பிணங்கிய நிலையையும் மறந்து) கலந்து விட்டாள்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன் கண் அளவில் என்னோடு ஊடி, என்னைத் தழுவுவதை என்னைக் காட்டிலும் அவள் விரைந்து விரும்புவதால், ஊடலை மறந்து கூடிவிட்டாள்", "en": "She once feigned dislike in her eyes, but the warmth of her embrace exceeded my own." } }, { "chapter": "நெஞ்சோடு புலத்தல்", "kural": [ "அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே", "நீஎமக்கு ஆகா தது." ], "number": 1291, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நெஞ்சே! அவருடைய நெஞ்சு நம்மை எண்ணாது அவருக்கே துணையாய் நிற்பதை அறிந்தும், நீ எனக்குத் துணை ஆகாமல் அவரையே நினைக்கக் காரணம் என்ன?", "en": "O my soul! although you have seen how his soul stands by him, how is it you do not stand by me?" } }, { "chapter": "நெஞ்சோடு புலத்தல்", "kural": [ "உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்", "செறாஅரெனச் சேறியென் நெஞ்சு." ], "number": 1292, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என் நெஞ்சே! என்மீது அன்பு இல்லாதவரை உள்ளபடியே நீ அறிந்திருந்தும் நாம் போனால் அவர் கோபப்படமாட்டார் என்று எண்ணி நீ அவரிடமே செல்லுகின்றாய்!", "en": "O my soul! although you have known him who does not love me, still do you go to him, saying “he will not be displeased." } }, { "chapter": "நெஞ்சோடு புலத்தல்", "kural": [ "கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ", "பெட்டாங்கு அவர்பின் செலல்." ], "number": 1293, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நெஞ்சே! நீ உன் விருப்பத்தின்படியே அவர் பின் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் அழிந்தவர்‌க்கு நண்பர் இல்லை என்னும் எண்ண‌மோ?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நெஞ்சே! நீ என்னிடம் இல்லாமல் உன் விருப்பப்படியே அவரிடம் செல்லக் காரணம், இந்த உலகத்தில் கெட்டுப் போனவர்களுக்கு நண்பர் இல்லை என்பதனாலோ?", "en": "O my soul! do you follow him at pleasure under the belief that the ruined have no friends?" } }, { "chapter": "நெஞ்சோடு புலத்தல்", "kural": [ "இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே", "துனிசெய்து துவ்வாய்காண் மற்று." ], "number": 1294, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நெஞ்‌சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நெஞ்சே! நீ அவரைப் பார்க்கும்போது இன்பம் நுகர எண்ணுகிறாயே தவிர, அவர் தவறுகளை எண்ணி ஊடி, பிறகு உறவு கொள்ள எண்ணமாட்டாய். ஆதலால் இனி இது போன்றவற்றை உன்னோடு யார் ஆலோசனை செய்வார்? நான் செய்யமாட்டேன்.", "en": "O my soul! you would not first seem sulky and then enjoy (him); who then would in future consult you about such things?" } }, { "chapter": "நெஞ்சோடு புலத்தல்", "kural": [ "பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்", "அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு." ], "number": 1295, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ( காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை நினைத்து அஞ்சும்; ( இவ்வாறாக) என் நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என் கணவர் என்னைப் பிரிந்து இருந்தபோது அவர் இல்லாததற்குப் பயப்படும்; அவர் வந்துவிட்டால், பிரிவாரே என்று பயப்படும். ஆகவே என் நெஞ்சம் நீங்காத துன்பத்தைப் பெற்றிருக்கிறது.", "en": "My soul fears when it is without him; it also fears when it is with him; it is subject to incessant sorrow." } }, { "chapter": "நெஞ்சோடு புலத்தல்", "kural": [ "தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்", "தினிய இருந்ததென் நெஞ்சு." ], "number": 1296, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.", "en": "My mind has been (here) in order to eat me up (as it were) whenever I think of him in my solitude." } }, { "chapter": "நெஞ்சோடு புலத்தல்", "kural": [ "நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்", "மாணா மடநெஞ்சிற் பட்டு." ], "number": 1297, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காதலனை மறக்க முடியாத என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்து விடடேன்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாத, என் நிலையில்லாத மடநெஞ்சோடு கூடி, நான் நாணத்தையும் மறந்துவிட்டேன்.", "en": "I have even forgotten my modesty, having been caught in my foolish mind which is not dignified enough to forget him." } }, { "chapter": "நெஞ்சோடு புலத்தல்", "kural": [ "எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்", "உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு." ], "number": 1298, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உயரின் மேல் காதல் கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை இகழ்ந்தால் இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உயிர்மேல் காதலை உடைய என் நெஞ்சு, நாமும் அவரை இகழ்ந்தால் பிறகு நமக்கும் இழிவுவரும் என்று எண்ணி, அவர் வரவையும் கலவியையுமே நினைத்து நின்றது.", "en": "My soul which clings to life thinks only of his (own) gain in the belief that it would be disgraceful for it to despise him." } }, { "chapter": "நெஞ்சோடு புலத்தல்", "kural": [ "துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய", "நெஞ்சந் துணையல் வழி." ], "number": 1299, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகா விட்டால், வேறு யார் துணையாவார்?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒருவரது துன்பத்திற்குத் தாம் உரிமையாகப் பெற்றிருக்கும் தம் நெஞ்சமே துணையாகாதபோது, வேறு யார் துணையாவார்?", "en": "Who would help me out of one’s distress, when one’s own soul refuses help to one?" } }, { "chapter": "நெஞ்சோடு புலத்தல்", "kural": [ "தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய", "நெஞ்சம் தமரல் வழி." ], "number": 1300, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஒருவர்க்கு தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.", "en": "It is hardly possible for strangers to behave like relations, when one’s own soul acts like a stranger." } }, { "chapter": "புலவி", "kural": [ "புல்லா திராஅப் புலத்தை அவர் உறும்", "அல்லல்நோய் காண்கம் சிறிது." ], "number": 1301, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே; ஊடல் செய்.", "en": "Let us witness awhile his keen suffering; just feign dislike and embrace him not." } }, { "chapter": "புலவி", "kural": [ "உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது", "மிக்கற்றால் நீள விடல்." ], "number": 1302, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உணவின் அளவிற்கு ஏற்ப உப்பின் அளவு அமைவதை போல், கலவி இன்பத்திற்கு வேண்டும் அளவிற்கு ஏற்ப ஊடல் அமையட்டும்; அதை அளவு கடந்து கொஞ்சம் நீட்டினாலும், உப்பின் அளவைக் கூட்டுவது போல் ஆகும்.", "en": "A little dislike is like salt in proportion; to prolong it a little is like salt a little too much." } }, { "chapter": "புலவி", "kural": [ "அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்", "புலந்தாரைப் புல்லா விடல்." ], "number": 1303, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரத்தினாற் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன்னுடன் ஊடல் கொண்ட மனைவியின் ஊடலை நீக்கிக் கூடாமல் போவது, ஏற்கனவே துன்பப்பட்டவர்களுக்கு மேலும் அதிகத் துன்பத்தைக் கொடுத்தது போலாம்.", "en": "For men not to embrace those who have feigned dislike is like torturing those already in agony." } }, { "chapter": "புலவி", "kural": [ "ஊடி யவரை உணராமை வாடிய", "வள்ளி முதலரிந் தற்று." ], "number": 1304, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது, முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம்.", "en": "Not to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root." } }, { "chapter": "புலவி", "kural": [ "நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை", "பூஅன்ன கண்ணார் அகத்து." ], "number": 1305, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சம் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நல்ல குணங்களால் உயர்ந்தவருக்கு அழகு தருவது, பூப்போன்ற கண்ணை உடைய மனைவியின் மனத்தே நடக்கும் ஊடலின் மிகுதியே.", "en": "An increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbands." } }, { "chapter": "புலவி", "kural": [ "துனியும் புலவியும் இல்லாயின் காமம்", "கனியும் கருக்காயும் அற்று." ], "number": 1306, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : வளர்ந்த ஊடலாகிய துனியும், இளம் ஊடலாகிய புலவியும் இல்லாது போய்விட்டால், காதல் நிறைந்த இல்லறம், முதிர்ந்த பழமும் இளங்காயும் போல் ஆகிவிடும்.", "en": "Sexual pleasure, without prolonged and short-lived dislike, is like too ripe, and unripe fruit." } }, { "chapter": "புலவி", "kural": [ "ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது", "நீடுவ தன்று கொல் என்று." ], "number": 1307, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இனிக் கலவி நீளுமோ நீளாதோ என்று எண்ணுவதால், இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு.", "en": "The doubt as to whether intercourse would take place soon or not, creates a sorrow (even) in feigned dislike." } }, { "chapter": "புலவி", "kural": [ "நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்", "காதலர் இல்லா வழி." ], "number": 1308, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : இவர் நமக்காக வருந்தினார் என்று அவ் வருத்தத்தை அறியும் அன்பரைப் பெறாதபோது, ஒருவர் வருந்துவதால் என்ன பயன்?", "en": "What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow?" } }, { "chapter": "புலவி", "kural": [ "நீரும் நிழலது இனிதே புலவியும்", "வீழுநர் கண்ணே இனிது." ], "number": 1309, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது.", "en": "Like water in the shade, dislike is delicious only in those who love." } }, { "chapter": "புலவி", "kural": [ "ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்", "கூடுவேம் என்பது அவா." ], "number": 1310, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஊடல் கொண்ட‌போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஊடி, என் நெஞ்சை வாட விட்டிருப்பவனோடும் கூடுவோம் என்று என் நெஞ்சம் முயல்வதற்குக் காரணம் ஆசையே.", "en": "It is nothing but strong desire that makes her mind unite with me who can leave her to her own dislike." } }, { "chapter": "புலவி நுணுக்கம்", "kural": [ "பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்", "நண்ணேன் பரத்தநின் மார்பு." ], "number": 1311, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் ‌பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : பெண் விரும்பியே! நீ வீதி வழி வரும் குணங்கெட்ட பெண்கள் எல்லாரும் உன் மார்பைத் தம் கண்ணால் பொதுவாக உண்பர்; அதனால் அவர்களின் எச்சிலாகிய உன் மார்பை நான் இனிச் சேரேன்.", "en": "You are given to prostitution; all those who are born as womankind enjoy you with their eyes in an ordinary way. I will not embrace you." } }, { "chapter": "புலவி நுணுக்கம்", "kural": [ "ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை", "நீடுவாழ் கென்பாக் கறிந்து." ], "number": 1312, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நான் அவரோடு ஊடிப் பேசாமல் இருந்தேன்; நீடு வாழ்க, என்று சொல்லி அவரோடு பேசுவேன். என்று எண்ணி, வேண்டும் என்றே தும்மினார்! நானா பேசுவேன்? (ஆனாலும் வாழ்த்தினாள்)", "en": "When I continued to be sulky he sneezed and thought I would (then) wish him a long life." } }, { "chapter": "புலவி நுணுக்கம்", "kural": [ "கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்", "காட்டிய சூடினீர் என்று." ], "number": 1313, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒரு மாற்றம் கருதி, ஒருமுறை, மரத்திலே மலர்ந்த பூவை மாலையாக்கிச் சூடினேன். அதற்கு அவள், நீர் விரும்பும் எவளுக்கோ அடையாளம் காட்டிச் சூடினீர் என்று சினந்து நின்றாள்.", "en": "Even if I were adorned with a garland of branch-flowers, she would say I did so to show it to another woman." } }, { "chapter": "புலவி நுணுக்கம்", "kural": [ "யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்", "யாரினும் யாரினும் என்று." ], "number": 1314, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; ய‌ாரை விட...? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : காதலர் எவரைக் காட்டிலும் நாம் மிகுந்த காதல் உடையவர்கள் என்றேன்; அதற்கு அவள் நான் பலரையும் காதலிப்பதாகவும், அவர்களுள் இவள்மீது அதிகக் காதல் உடையவன் என்று சொன்னதாகவும் எண்ணி, எவளைக் காட்டிலும் எவளைக் காட்டிலும் என் மீது காதல் உடையீர் என்று ஊடினாள்.", "en": "When I said I loved her more than any other woman, she said “more than others, yes, more than others,” and remained sulky." } }, { "chapter": "புலவி நுணுக்கம்", "kural": [ "இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்", "கண்நிறை நீர்கொண் டனள்." ], "number": 1315, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : காதல் மிகுதியில் இந்தப் பிறவியில் நான் உன்னைப் பிரியேன் என்று சொன்னேன்; அப்படி என்றால் அடுத்த பிறவியில் பிரியப்போவதாக எண்ணிக் கண் நிறைய நீரினைக் கொண்டாள்.", "en": "When I said I would never part from her in this life her eyes were filled with tears." } }, { "chapter": "புலவி நுணுக்கம்", "kural": [ "உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்", "புல்லாள் புலத்தக் கனள்." ], "number": 1316, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நினைத்தேன் என்று கூறி‌னேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : எப்போதும் உன்னைத்தான் எண்ணினேன் என்றேன். சில சமயம் மறந்து ஒரு சமயம் நினைத்ததாக எண்ணி அப்படியானால் என்னை இடையில் மறந்திருக்கிறீர் என்று சொல்லித் தழுவத் தொடங்கியவள், விட்டுவிட்டு ஊடத் தொடங்கினாள்.", "en": "When I said I had remembered her, she said I had forgotten her and relaxing her embrace, began to feign dislike." } }, { "chapter": "புலவி நுணுக்கம்", "kural": [ "வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்", "யாருள்ளித் தும்மினீர் என்று." ], "number": 1317, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : யான் தும்மினேனாக; அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்?", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நான் தும்ம, அவள் இயல்பாகவே வாழ்த்தினாள்; அப்படி வாழ்த்தியவளே மறுபடியும் நீர் இப்போது எவள் உம்மை நினைத்ததால் தும்மினீர், என்று கேட்டு ஊடி அழுதாள்.", "en": "When I sneezed she blessed me, but at once changed (her mind) and wept, asking, “At the thought of whom did you sneeze?”" } }, { "chapter": "புலவி நுணுக்கம்", "kural": [ "தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்", "எம்மை மறைத்திரோ என்று." ], "number": 1318, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான் தும்மலை அடக்கிக் கொள்ள உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ என்று அழுதாள்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அடுத்தமுறை தும்மல் வர அதனை வெளிப்படுத்தாமல் நான் அடக்கினேன்; அதைப் பார்த்து யாரோ உமக்கு வேண்டியவர்கள் உம்மை நினைப்பதை நான் அறிந்துவிடக்கூடாது என்று எனக்கு மறைக்கிறீரோ, என்று ஊடி அழுதாள்.", "en": "When I suppressed my sneezing, she wept saying, “I suppose you (did so) to hide from me your own people’s remembrance of you”." } }, { "chapter": "புலவி நுணுக்கம்", "kural": [ "தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்", "இந்நீரர் ஆகுதிர் என்று." ], "number": 1319, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று ‌சொல்லிச் சினம் கொள்வாள்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும். நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று சொல்லி சினம் கொள்வாள்.", "en": "Even when I try to remove her dislike, she is displeased and says, “This is the way you behave towards (other women).”" } }, { "chapter": "புலவி நுணுக்கம்", "kural": [ "நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்", "யாருள்ளி நோக்கினீர் என்று." ], "number": 1320, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அவளுடைய அழகை நி‌னைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும், நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கின்றீர்? என்று சினம் கொள்வாள்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என் பேச்சிலும், செயலிலும் அவள் கோபம் கொள்வதால், பேசாமல், அவள் உறுப்புகளின் அழகை எண்ணி அவற்றையே பார்த்திருப்பேன். அதற்கு எவள் உறுப்புப் போல் இருக்கிறதென்று என் மேனியைப் பார்க்கிறீர். என்று சொல்லிச் சினப்பாள்.", "en": "Even when I look on her contemplating (her beauty), she is displeased and says, “With whose thought have you (thus) looked on my person?”" } }, { "chapter": "ஊடலுவகை", "kural": [ "இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்", "வல்லது அவர்அள஧க்கு மாறு." ], "number": 1321, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லது ஊடல்.", "en": "Although my husband is free from defects, the way in which he embraces me is such as to make me feign dislike." } }, { "chapter": "ஊடலுவகை", "kural": [ "ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி", "வாடினும் பாடு பெறும்." ], "number": 1322, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஊடல் காரணமாக என்னிடம் தோன்றும் சிறு துன்பத்தினால் அவர் என்மீது காட்டும் பேரன்பு வாடினாலும் பெருமை பெறும்.", "en": "His love will increase though it may (at first seem to) fade through the short-lived distress caused by (my) dislike." } }, { "chapter": "ஊடலுவகை", "kural": [ "புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு", "நீரியைந் தன்னார் அகத்து." ], "number": 1323, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நிலத்தோடு நீர் கலந்தாற்போன்ற ஒற்றுமையை உடைய என்னவரோடு ஊடிப் பெறும் இன்பத்தைப் போலத் தேவர்கள் நாட்டு இன்பம் இருக்குமோ?", "en": "Is there a celestial land that can please like the feigned dislike of those whose union resembles that of earth and water?" } }, { "chapter": "ஊடலுவகை", "kural": [ "புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்", "உள்ளம் உடைக்கும் படை." ], "number": 1324, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : என்னவரைத் தழுவிக் கொண்டு, விடாமல் இருப்பதற்குக் காரணமாகிய ஊடலில் அதற்குமேலே சென்று என் உறுதியையும் உடைக்கும் ஆயுதம் இருக்கிறது.", "en": "In prolonged dislike after an embrace there is a weapon that can break my heart." } }, { "chapter": "ஊடலுவகை", "kural": [ "தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்", "அகறலின் ஆங்கொன் றுடைத்து." ], "number": 1325, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஆண்கள் மீது தவறு இல்லை என்றாலும் தவறு செய்தவராகவே நின்று, மனைவியால் ஊடப்பட்டு தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோள்களைக் கூடப் பெறாதபோது, அந்த ஊடலிலும் ஓர் இன்பம் இருக்கிறது.", "en": "Though free from defects, men feel pleased when they cannot embrace the delicate shoulders of those whom they love." } }, { "chapter": "ஊடலுவகை", "kural": [ "உணலினும் உண்டது அறல்இனிது காமம்", "புணர்தலின் ஊடல் இனிது." ], "number": 1326, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : உண்பதைவிட உண்டது செரிப்பது இனியது; அதுபோலக், கூடிக் கலப்பதை விட ஊடுவது காதலுக்கு இனியது.", "en": "To digest what has been eaten is more delightful than to eat more; likewise love is more delightful in dislike than intercourse" } }, { "chapter": "ஊடலுவகை", "kural": [ "ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்", "கூடலிற் காணப் படும்." ], "number": 1327, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவார்; அந்த வெற்றியைக் கூடிப் பெறும் இன்பத்தில் அறியலாம்.", "en": "Those are conquerors whose dislike has been defeated and that is proved by the love (which follows)." } }, { "chapter": "ஊடலுவகை", "kural": [ "ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்", "கூடலில் தோன்றிய உப்பு." ], "number": 1328, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமோ.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : நெற்றி வியர்க்கும்படி கலவியில் தோன்றும் சுகத்தை இன்னுமொரு முறை இவளுடன் ஊடிப் பெறுவோமா?", "en": "Will I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire?" } }, { "chapter": "ஊடலுவகை", "kural": [ "ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப", "நீடுக மன்னோ இரா." ], "number": 1329, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : ஒளிமிகும் அணிகளை அணிந்த இவள் இன்னும் என்னோடு ஊடட்டும், அப்போது அதிக நேரம் இருக்கும்படி நான் வேண்டிக்கொள்ள, இந்த இரவு விடியாது நீளட்டும்.", "en": "May the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her!" } }, { "chapter": "ஊடலுவகை", "kural": [ "ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்", "கூடி முயங்கப் பெறின்." ], "number": 1330, "section": "காமத்துப்பால்", "meaning": { "ta_mu_va": "மு.வ : காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.", "ta_salamon": "சாலமன் பாப்பையா : காதல் நுகர்ச்சிக்கு இன்பம் ஊடுதலே அவ்வூடலுக்கும் இன்பம், அளவு அறிந்து ஊடலை நீக்கிக் கூடித் தழுவுதலே.", "en": "Dislike adds delight to love; and a hearty embrace (thereafter) will add delight to dislike." } } ], "sections": [ "அறத்துப்பால்", "பொருட்பால்", "காமத்துப்பால்" ] }