text
stringlengths
3
79k
விளையாட்டு வாழ்க்கைப் புள்ளிவிவரங்கள்
3 ஏப்ரல் 2010 அன்று போட்டியில் விளையாடியது வரை புள்ளிவிவரங்கள் துல்லியமானதாகும்.
கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள சேலில் வாஸ்வே ரோடில் மெக்கெடா வாழ்ந்து கொண்டிருக்கிறார். 12 ஜூலை 2009 அன்று அதிகாலை வழிப்பறி செய்பவர்களால் மெக்கடாவின் இல்லம் தாக்கப்பட்டது. அவர்கள் பணம் மற்றும் நகையை எடுத்துச் சென்றனர். அந்த திருட்டின் போது மெக்கெடாவின் நண்பர் ஒருவருக்கு தலையில் சிறிய காயம் ஏற்பட்டது.
குறிப்புதவிகள்
சுயவிவரம் - ManUtd.com
ரெட்ஸ்டாட்டில் சுயவிவரம்காங்கு கா நியூல் (ஆங்கில மொழி: Kang Ha-neul, 강하늘) (பிறப்பு: பெப்ரவரி 21, 1990) என்பவர் ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் தி ஹெர்ஸ் (2013), மிச்சாங்: இஙகம்ப்லேட் லைப் (2014), மூன் லவ்வேர்ஸ்: ஸ்கேர்லெட் ஹார்ட் ரயீவ் (2016), வென் தி காமெலியா புளூம்சு (2019), இன்சிடெர் (2022) போன்ற தொடர்களிலும், டுவெண்ட்டி (2015), டோங்ஜி: தி போர்ட்ரைட் ஒப் அ பொயட் (2016), நியூ டரியல் (2017), மிட்நைட் ரன்னர்ஸ் (2017), போர்கோட்டேன் (2017), லவ் ரீசெட் (2023) போன்ற திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.
இவர் 2020 ஆம் ஆண்டில், சிறந்த நடிகருக்கான பேக்சாங் கலை விருதைப் பெற்றார் மற்றும் போர்ப்ஸ் கொரியா சிறந்த நட்சத்திர வருடாந்திர பட்டியலில் 23 வது இடத்தைப் பிடித்தார். அத்துடன் 2019 ஆம் ஆண்டின் கேலப் கொரியாவின் தொலைக்காட்சி நடிகருக்கான 2வது இடத்தையும் பெற்றார்.
ஆரம்பகால வாழ்க்கை
இவர் பெப்ரவரி 21, 1990 ஆம் ஆண்டு தென் கொரியாவில் புசான் நகரில் பிறந்தார்.
இவர் தனது தொழில் வாழ்க்கையை இசை நாடகத்தில் தொடங்கினார், குறிப்பாக திரில் மீ (2010), பிரின்சு புஸ்சல் (2011), பிளாக் மேரி பாபின்ஸ் (2012) மற்றும் அசாசின்ஸ் (2012). பின்னர் இவர் டு த பியூட்டிஃபுல் யூ (2012), தி ஹீர்ஸ் (2013) மற்றும் மிச்சாங்: இஙகம்ப்லேட் லைப் (2014) போன்ற தொடர்களில் துணை நடிகராக நடித்தார்.
இவர் 2015 இல் மூன்று படங்களில் தோன்றினார்; இசைத் திரைப்படம் சி'ஈஸ்ட் சி போன், காலப் படமான எம்பயர் ஆப் லஸ்ட் மற்றும் ட்வென்டி. இதற்காக இவர் பல சிறந்த புதிய நடிகருக்கான விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.
தனிப்பட்ட வாழ்க்கை
இவர் தனது கட்டாய இராணுவ சேவையை செப்டம்பர் 11, 2017 அன்று நான்சான் கொரிய இராணுவ பயிற்சி மையத்தில் தொடங்கினார். பின்னர் இவரது நிறைவு விழா அக்டோபர் 24 அன்று நடந்தது, அதில் இவர் அடிப்படை பயிற்சியின் போது இவரது முன்மாதிரியான செயல்திறனுக்காக அங்கீகரிக்கப்பட்டார். பின்னர் பெப்ரவரி 22, 2019 அன்று, இராணுவ மனிதவள நிர்வாகத்தின் கெளரவ தூதராக இவர் நியமிக்கப்பட்டார். இவரது பணி மே 23, 2019 அன்று முடிவடைந்தது.
ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Kang Ha-neulகுத்து, கிடைநிலை அமுக்கிகள் (vertical and horizontal Compressor) ஒற்றை உருளையையோ பல உருளைகளையோ கொண்டு அமையலாம். கோண நிலை அமுக்கிகள் பல உருளைகளை உடையவை. இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிடை அல்லது குத்து அமுக்க உறுப்புகள் அமையலாம்.
அமுக்கி
வளிமம் (gas), ஆவி (vapour) அல்லது இவ்விரண்டின் கலவையின் அழுத்தத்தை உயர்த்தும் எந்திரம் அமுக்க எந்திரம் அல்லது அமுக்கி அல்லது அழுத்தி எனப்படுகிறது. அமுக்கியில் வளிமம் செல்லும்போது அது வளிமத்தின் தன்-பருமனைக் (specific volume) குறைத்து அதற்கு அழுத்தத்தை ஊட்டுகிறது. மைய விலகு விசிறி, அச்சுவழிப் பாய்வு விசிறிகளோடு (fans) ஒப்பிடும்போது அமுக்கிகள் உயர்அழுத்த எந்திரங்களாகும். எந்திர விசிறிகள் குறைந்த அழுத்த எந்திரங்களாகும்.
பல தேவைகளுக்காக வளிமம், ஆவி ஆகியவற்றின் அழுத்தத்தை அதிகரிக்க அமுக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. காற்றமுக்கிகள் பல இடங்களில் மிகப் பரவலாகப் பயன்படுகின்றன. இவை பொருள்களைச் சுமந்து செல்லவும், வண்ணப் பூச்சைத் தெளிக்கவும், வட்டைக்குக் (tyre) காற்றடிக்கவும், தூய்மை செய்யவும். அமுக்கிக் காற்றுக்கருவிகளை இயக்கிப் பாறைகளைத் துளைக்கவும் தேவையான உயரழுத்தக் காற்றைத் தருகின்றன. ஆவியாக்கக் கலனில் (evaporator) உருவாக்கப்பட்ட வளிமத்தைக் குளிர்பதனாக்க அமுக்கி அமுக்குகிறது. அமுக்கிகள் வேதியியல் செயல்முறைகள், வளிமச் செலுத்தம், வளிமச்சுழலிகள் ஆகியவற்றிலும் பிற கட்டுமானப் பணிகளிலும் பயன்படுகின்றன.
அமுக்கத்தை ஏற்படுத்தும் இயக்க முறைகளைப் பொறுத்து அமுக்கிகள் ஊடாட்ட, சுழல் தாரை, மையவிலகு, அச்சுப்பாய்வு அமுக்கிகள் (reciprocal, rotary, jet, centrifugal, axial compressors) என வகைப்படுத்தப்படுகின்றன. அமுக்கப்படும் வளிமத்தின்மேல் எந்திர உறுப்புகள் செயல்படும் முறையைப் பொறுத்து அமுக்கிகள் நேரிடப்பெயர்ச்சி (positive displacement) அல்லது இயங்குநிலை (dynamic) அமுக்கிகள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன. நேரிடப்பெயர்ச்சி அமுக்கிகளில் தொடர்ந்து பாயும் வளிமப்பருமன் ஒரு மூடிய கலனில் கட்டுப்படுத்தப்படுகின்றது. மூடிய கலனில் பருமன் குறையக் குறைய வளிமத்தின் அழுத்தம் உயர்ந்து கொண்டே போகும் இயங்குநிலை அமுக்கிகளில் சுழலும் இதழ்கள் (vanes) அல்லது வாளிகள் (buckets) பாய்மத்துக்கு அழுத்தத்தையும் விரைவையும் (velocity) ஊட்டுகின்றன.
அமுக்கி வகைகள்
அமுக்கி வகைகளில் பல வகைகள் உண்டு. எடுத்துக்காட்டக, பின்வரும் அமுக்கிகள் அதிகம் அன்றாட வாழ்வில் பயனாகின்றன.
ஊடாட்ட அமுக்கிகள்
ஒற்றைக்கட்ட அமுக்கிகள் (Single stage Compressors)
இருகட்ட அமுக்கிகள் (Double stage Compressors)
குத்து, கிடைநிலை அமுக்கிகள் (vertical and horizontal Compressors)
குத்து, கிடைநிலை அமுக்கிகளின் செயற்பாடு
மேற்கோள்கள் தியாகரசனப்பள்ளி ஊராட்சி (Thiyagarasanapalli Gram Panchayat), தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதிக்கும் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 5182 ஆகும். இவர்களில் பெண்கள் 2556 பேரும் ஆண்கள் 2626 பேரும் உள்ளனர்.
பாளையம்(மேல் பாளையம், கீழ் பாளையம்)
பெப்பாலப்பள்ளி
பாரதிபுரம்
சின்ன தியாகரசனப்பள்ளி
சின்னமோதுகுலப்பள்ளி
தொட்டி
இந்திரா நகர்
மாதரசனப்பள்ளி
நல்ராலப்பள்ளி
ஒமுதேப்பள்ளி
பெரியமோதுகுலப்பள்ளி
சிகரப்பள்ளி
சூளேப்பள்ளி
தியாகரசனப்பள்ளி
சான்றுகள் அம்பிகை நேரில் வந்தாள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், ராதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள் ஹைட்ராஞ்ஜியா மேக்ரோபைலா (Hydrangea macrophylla) என்பது ஒரு பூக்கும் தாவரமாகும். இது சப்பானை பூர்வீகமாகக் கொண்ட ஒரு புதர் தாவரமாகும். இது 2 மீ (7 அடி) முதல் 2.5 மீட்டர் (8 அடி) வரையிலான உயரம் வளரக்கூடியது. இத்தாவரத்தில் கோடை மற்றும் இலையுதிர்காலத்தில் இளஞ்சிவப்பு அல்லது நீல பூக்கள் பெரிய கொத்துக்களாகப் பூக்கும். இது அலங்கரிக்கப் பயன்படும் ஒரு செடியாக உலகின் பலபகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. இச் செடி மண்ணின் தன்மைக்கு ஏற்ப வேறுபட்ட நிறமுள்ள பூக்களை பூக்கக்கூடியது.
அமிலத் தன்மையுடைய மண்ணில் வளரும் போது நீல நிறத்திலும்.
காரத் தன்மையுடைய மண்ணில் வளரும் போது ஊதா நிறத்திலும்.
நடுநிலைத் தன்மையுடைய மண்ணில் வளரும் போது வெள்ளை நிறத்திலும் பூக்கும்.
மேற்கோள் ஜார்ஜஸ் ஹென்றி ஜோசப் எடுவர்ட் இலமேத்ர ( 17 சூலை 1894 – 20 ஜூன் 1966) என்பவர் ஒரு பெல்ஜிய உரோமன் கத்தோலிக்க குருவும், வானியலாளரும் மற்றும் லூவேயின் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றியவரும் ஆவார். இவரே முதன் முதலில் அண்டம் விரிவாக்க கோட்பாட்டை '(expansion of the Universe) முன் மொழிந்தவர் ஆவார் மேலும் இவரே முதன் முதலில் ஹபிள் விதியை நிறுவியவர். இவ்விதியை எட்வின் ஹபிள் வெளியிடுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இவர் 1927இல் வெளியிட்டார்.
இவரே முதன் முதலில் அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் பெரு வெடிப்புக் கோட்பாட்டை கூறியவர். ஆயினும் இவர் அதனை இப்பெயரில் அழைக்கவில்லை.
இவர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு கத்தோலிக்க குருவாக இருந்தவர்.
ஆதாரங்கள் பர்பில் (Barbil), கிழக்கு இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கேந்துசர் மாவட்டத்தில் உள்ள நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும். இது மாவட்டத் தலைமையிடமான கேந்துசர் நகரத்திற்கு வடமேற்கே 74.4 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான புவனேஸ்வருக்கு வடமேற்கே 297.2 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. மலைகள் சூழ்ந்த இந்நகரம் கடல்மட்டத்திலிருந்து 477 மீட்டர் உயரத்தில் உள்ளது.
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 15 வார்டுகளும், 15,094 வீடுகளும் கொண்ட பர்பில் நகரத்தின் மக்கள் தொகை 66,540 ஆகும். அதில் ஆண்கள் 34,938 மற்றும் பெண்கள் 31,602 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 905 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 15% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 72.2% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 8,500 மற்றும் 16,291 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 84.27%, இசுலாமியர் 10% கிறித்தவர்கள் 3.21% மற்றும் பிறர் 0.15% ஆகவுள்ளனர்.
பர்பில் நகரத்தைச் சுற்றிலும் இரும்பு கனிமச் சுரங்கங்கள் பெருமளவில் உள்ளது.
தொடருந்து நிலையம்
பர்பில் தொடருந்து நிலையம், ஹவுரா, டாடாநகர், ரூர்கேலா, புவனேஸ்வர், புரி போன்ற நகரங்களுக்கு தொடருந்து சேவைகள் உள்ளது.
வானூர்தி நிலையம்
மேற்கோள்கள் கச்சராயனூர் மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், கச்சராயனூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.
இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. பங்குனி மாதம் 2 நாட்கள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள் வடமளம்பட்டி (VADAMALAMPATTI) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.
மக்கள்வகைப்பாடு
பர்கூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இந்த ஊரானது பர்கூரில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 31 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 255 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1766 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 7063 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 3558, பெண்களின் எண்ணிக்கை 3505 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 65.3% என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.
ஆரம்ப ஆண்டுகள்
இவர், 1812 சூலை 1 அன்று ஜித்தாவில் பிறந்தார். கெய்ரோவில் வளர்க்கப்பட்டார். முகம்மது அலியின் பேரன் என்பதால், தனது மாமா இப்ராகிம் பாஷாவுக்குப் பின் 1848 இல் எகிப்தையும் சூடானையும் ஆட்சி செய்தார்.
அந்த காலகட்டத்தின் முன்னணி வரலாற்றாசிரியரான அல்-ஜபார்த்தியின் கூற்றுப்படி, முதலாம் அப்பாசு கெய்ரோவில் பிறந்தார். அப்போது இவருடைய தந்தை துசுன் பாஷா வாகாபிச இயக்கத்திற்கு எதிராக ஹெஜாஸ் போராடிக் கொண்டிருந்தார். இவரும்,ஒரு இளைஞனாக, சிரியப் போரில் தனது மாமா இப்ராகிம் பாஷாவின் கீழ் லெவண்டில் போராடினார். மன நலம் குன்றியதால் முகம்மது அலி பாஷா 1848 செப்டம்பர் 1 ஆம் தேதி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக அவரது மகன் இப்ராகிம் பாஷா, 1848 செப்டம்பர் 1 முதல் 1848 நவம்பர் 10 ஆம் தேதி தான் இறக்கும் வரை எகிப்து மற்றும் சூடானின் ஆட்சியாளராக சிலகாலம் ஆட்சி செய்தார். இப்ராகிமின் மரணம் அப்பாசை 1848 நவம்பர் 10 முதல் 1849 ஆகத்து 2 வரை (முகம்மது அலி பாஷா இறந்த தேதி) எகிப்து மற்றும் சூடானின் அரசப்பிரதிநிதியாக்கியது. இவர் எகிப்து மற்றும் சூடானின் ஆட்சியாளராக 1854 ஜூலை 13 வரை இருந்தார்.
எகிப்தின் ஆட்சியாளர்
அப்பாஸ் பெரும்பாலும் வெறும் கவர்ச்சிகரமானவர் என்றே வர்ணிக்கப்படுகிறார். இவர் பிற்போக்குத்தனமான, கோபமான மற்றும் அமைதியானவராகக் காணப்பட்டார். மேலும் இவர் தனது பெரும்பாலனா நேரத்தை அரண்மனையிலேயே கழித்தார். இவர் அதிகாரத்தில் இருக்கும் வரை, அவரது தாத்தாவின் பணிகளை அது நல்லதோ அல்லது கெட்டதோ அதை இல்லாததாக்கினார். மற்றவற்றுடன் இவர் வர்த்தக ஏகபோகங்கள், மூடப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் பள்ளிகளை ஒழித்தார். மேலும் பிராந்தியத்தின் இராணுவத்தின் வலிமையை 9,000 வீரர்களாகக் குறைத்தார். நைல் அணையின் கட்டுமானத்தையும் இவர் நிறுத்தி சுயஸ் கால்வாய் அமைப்பதை எதிர்த்தார்.
வெளிநாட்டு உறவுகள்
எகிப்தையும் சூடானையும் செல்வத்தை கொள்ளையடிக்கும் சாகசக்காரர்களுக்கு இவர் அணுக முடியாதவராக இருந்தார். மேலும் அனைத்து வெளிநாட்டு வணிகங்களையும் எதிர்த்தார். இருப்பினும், பிரித்தானிய அரசாங்கத்தின் வற்புறுத்தலின் பேரில், அலெக்சாந்திரியாவிலிருந்து கெய்ரோவுக்கு ஒரு இருப்புப் பாதை அமைக்க அனுமதித்தார். பதிலுக்கு, உதுமானியர்களுடனான ஒரு தகராறில் ஆங்கிலேயர்கள் இவருக்கு உதவினார்கள்.
ஐரோப்பியர்களின் எதிர்மறையான கொள்கைகளாலும், அவர்களின் செல்வாக்கு காரணமாகவும் இவருக்கு அவர்களை பிடிக்காமல் போனது. காலப்போக்கில் இவரது பெயர் மிகைப்படுத்தப்பட்டு, இவர் உண்மையில் இருந்ததை விட மோசமானவராக சித்தரிக்கப்பட்டார். இவர் இறந்த பிறகு எகிப்தில் 1850 இல் 3,000 லிருந்த ஐரோப்பியர்கள் எண்ணிக்கை 1882இல் 90,000 ஆகவும், 1900 வாக்கில் 200,000 ஆகவும் உயர்ந்தது.
கிரிமியப் போர்
கிரிமியப் போரின்போது இவர் துருக்கி சுல்தானுக்கு தனது 12 போர்க்கப்பல்களும், 19,000 துருப்புக்களும், 72 துப்பாக்கிகளையும் கொண்ட தனது கடற்படைக் கப்பலைப் பயன்படுத்த அனுமதித்தார். பின்னர் துருப்புக்களின் எண்ணிக்கை 40,000 ஆக உயர்த்தப்பட்டது.
குதிரை இனப்பெருக்கம்
அப்பாஸின் தனிப்பட்ட விருப்பத்தில்அரேபிய குதிரைகளின் இனப்பெருக்கம் இருந்தது. இது இவரது வாழ்க்கையின் மிகுந்த ஆர்வம் எனக் என்று கூறப்பட்டது. முகம்மது அலி தொடங்கிய இனப்பெருக்கம் திட்டத்தை இவர் தொடர்ந்தார். இவரது வளர்ச்சியும் தரமான குதிரை இனங்களை கையகப்படுத்துவதும் நவீன குதிரை இனப்பெருக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. முகம்மது அலியும், இவரும் தனித்துவமான பண்புகளை அங்கீகரித்தனர். மேலும், பெடோயின் பழங்குடியினரால் வளர்க்கப்பட்ட குதிரையினங்களின் மேல் கவனம் செலுத்தினர். 23 வயதில், இவர் தனது தாத்தாவின் குதிரை வளர்ப்பு திட்டத்தின் பொறுப்பை ஏற்றார். ஆட்சியாளரானதும், இவர் கூடுதல் குதிரைகளைக் குவித்து, விலங்குகளின் வரலாறுகளையும் அவற்றின் இனங்களையும் கவனமாக ஆவணப்படுத்தினார். அவை இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
13 சூலை 1854 இல், இவர் தனது அரண்மனையில் தனது இரண்டு அடிமைகளால் கொலை செய்யப்பட்டார். இவர் தனது ஊழியர்களிடம் காட்டிய கொடுமை கொலைக்கு ஒரு நோக்கம் என்று கூறப்பட்டது. உதாரணமாக, அரேபிய குதிரை வளர்ப்பாளரான லேடி அன்னே பிளண்ட், என்பவரின் கூற்றுப்படி குதிரையின் கால்களை சரியாக பராமரிக்காமல் போனதால் குதிரை பராமரிப்பாளரின் காலில் ஒரு சூடான குதிரை இலாடத்தை கட்டிக்கொள்ள இவர் ஒருமுறை உத்தரவிட்டதாகக் கூறப்பட்டது.
"Abbas I". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 1. (1911). Cambridge University Press.
வெளி இணைப்புகள் நிலைக் குழு என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரு குழுவாகும். இது ஒரு நிலையான, ஒழுங்குமுறைக் குழுவாகும். இது தற்காலிக குழுக்களின்றி ஒவ்வொரு நாடாளுமன்ற அமா்வுக்கும் நிலைக்குழுக்கள் உள்ளன. அவைகள் நடைமுறை விதிகள் குழு, அலுவல் அறிவுரைக் குழு, விதிகள் குழு ஆகியவை அவ்வப்போது நாடாளுமன்ற சட்டத்தின்படி அவ்வபோது அமைக்கப்படுவனவாகும். இந்திய நாடாளுமன்றத்தால் கொடுக்கப்பட்ட வேலையை தானாக முன்வந்து செய்வது மட்டும் அன்றி, சிக்கலான நிலைகளிலும் இதன் பணி இருக்கும். நாடாளுமன்றக் குழுக்களிலே இதன்பணி அற்புதுமானது.
நாடாளுமன்றத்தின் மேலவை, மக்களவை (இந்தியா) ஆகிய இரு அவைகளுக்கும்ம், சில விதிவிலக்குகளுடன் இதே போன்ற குழுக்கள் உள்ளன. இக்குழு உறுப்பினா்ளின்மமர்த்தல், பதவி காலம், செயற்பாடுகள், நடைமுறைகள் ஆகியவை வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த நிலைக் குழுக்கள் ஒவ்வொரு ஆண்டும், அல்லது அவ்வப்போதும் மாநிலங்களவை தலைவா் அல்லது மக்களவையின் தலைவர் அவா்கள் தம்மிடையே கலந்தாலோசித்து தோ்ந்தெடுக்கப்படுவா் அல்லது அமர்த்தப்படுவா்.
இரண்டு வகையான நாடாளுமன்ற குழுக்கள் உள்ளன. அவை நிலைக்குழு, விளம்பரக் குழு என்பனவாகும்.
நிலைக்குழு குழுக்கள் பரந்த முறையில் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன:
மேலவை நிலைக்குழு
மக்களவை நிலைக்குழு
மேலவைக்குக் கீழ் துறை சார்ந்த நிலைக்குழு
மக்களவைக்குக் கீழ் துறை சார்ந்த நிலைக்குழு.
இதன் பணிகள்
செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, நிலைக் குழுக்கள் பின்வரும் பிரிவுகளில் பரவலாக வகைப்படுத்தப்படுகின்றன:
விசாரணை செய்யும் குழுக்கள்
கூா்ந்து ஆராயும், கட்டுப்படுத்தும் குழுக்கள்
அவைகளுக்கான அன்ராடடாலுவல் தொடர்பான குழுக்கள்
அவைக்கான அமைதிக் குழு
நாடாளுமன்றக் கூட்டுக் குழு (இந்தியா)
பொது கணக்குக் குழு (இந்தியா)
நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு (இந்தியா)
பொதுத்துறை நிறுவனங்களுக்கானக் குழு (இந்தியா)
நாடாளுமன்ற நிதிக் குழு (இந்தியா)
மேற்கோள்கள் புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறைகளில் பரிசில் விடை என்பது பாடாண் திணையில் வரும் துறையாகும். புறநானூற்றில் இத்துறைப் பாடல்கள் ஆறு உள்ளன.
இலக்கண நூல் விளக்கம்
தொல்காப்பியம் இதனைக் ‘கொடுபோர் ஏத்திக் கோடார்ப் பழித்தல்’ என்று குறிப்பிடுகிறது.
புறப்பொருள் வெண்பாமாலை பாடாண் படலத்தில் வரும் 48 துறைகளில் இது ஒன்று. வேந்தன் தன்னைப் புகழ்ந்த புலவர் இன்புறும் வண்ணம் பரிசளித்து விடுத்து வைப்பது இத் துறை.
புறநானூற்றுத் திணை, துறை பகுப்புக்களுக்கு மூலமான, மறைந்துபோன பன்னிரு படலம் நூலிலிருந்து இந்தப் பகுப்புப் பெயர் தரப்பட்டுள்ளது.
இலக்கியம்
ஔவையாருடன் சென்ற விறலியர் காட்டுக் கீரை வைத்திருந்தனர். அதனுடன் சேர்த்துச் சமைத்து உண்பதற்காக நாஞ்சில் வள்ளுவனிடம் கொஞ்சம் அரிசி கேட்டனர். அவனோ ஒரு யானையை அவர்களுக்குப் பரிசாக வழங்கினானாம். – இதனை ஔவையார் ‘தேற்றா ஈகை’ (தெளிவில்லாத கொடை) எனக் குறிப்பிடுகிறார்.
வன்பரணர் வல்வில் ஓரியைக் அவன் வேட்டையாடும் காட்டில் கண்டு பாடினார். பாடலின் முடிவில் புலவருடன் சென்ற பாணர் வழக்கம்போல் ‘கோ’ என ஒரு கூட்டிசை எழுப்பினர். அது கேட்ட ஓரி கோ என்பது தன்னைக் குறிக்கும் சொல் என உணர்ந்து நாணினானாம். தான் யார் என்பதை அவர்களுக்குச் சொல்லாமலேயே சென்றுவிட்டானாம்.