The full dataset viewer is not available (click to read why). Only showing a preview of the rows.
An error occurred while generating the dataset All the data files must have the same columns, but at some point there are 2 missing columns ({'answer_text', 'answer_start'}) This happened while the csv dataset builder was generating data using hf://datasets/meghanabhange/chaii/test.csv (at revision b0180dc0172bde58d09ba1af8a0d81a895d2371c) Please either edit the data files to have matching columns, or separate them into different configurations (see docs at https://hf.co/docs/hub/datasets-manual-configuration#multiple-configurations)
Error code:   UnexpectedError

Need help to make the dataset viewer work? Open a discussion for direct support.

id
string
context
string
question
string
answer_text
string
answer_start
int64
language
string
903deec17
ஒரு சாதாரண வளர்ந்த மனிதனுடைய எலும்புக்கூடு பின்வரும் 206 (மார்பெலும்பு மூன்று பகுதிகளாகக் கருதப்பட்டால் 208) எண்ணிக்கையான எலும்புகளைக் கொண்டிருக்கும். இந்த எண்ணிக்கை உடற்கூட்டியல் வேறுபாடுகளைப் பொறுத்து மாறுபடக்கூடும். எடுத்துக்காட்டாக, மிகக் குறைந்த எண்ணிக்கையான மனிதர்களில், ஒரு மேலதிக விலா எலும்பு (கழுத்துவில்) அல்லது ஒரு மேலதிகமான கீழ் முதுகெலும்பு காணப்படுவதுண்டு; இணைந்த சில எலும்புகளைத் தனி எலும்பாகக் கருதாவிடின், ஐந்து இணைந்த திருவெலும்பு; மூன்று (3 - 5) குயிலலகு எலும்புகள் சேர்ந்து 26 எண்ணிக்கையிலான முதுகெலும்புகள் 33 ஆகக் கருதப்படலாம். மனித மண்டையோட்டில் 22 எலும்புகள் (காதுச் சிற்றென்புகளைத் தவிர) உள்ளன; இவை எட்டு மண்டையறை (cranium) எலும்புகளாகவும் 14 முக எலும்புகளாகவும் (facial bones) பிரிக்கப்பட்டுள்ளன. (தடித்த எண்கள் அருகிலுள்ள படத்தில் காணும் எண்களைக் குறிக்கின்றன.) மண்டையறை எலும்புகள் (8) 1 நுதலெலும்பு (frontal bone) 2 சுவரெலும்பு (parietal bone) (2) 3 கடைநுதலெலும்பு (temporal bone) (2) 4 பிடர் எலும்பு (occipital bone) ஆப்புரு எலும்பு (sphenoid bone) நெய்யரியெலும்பு (ethmoid bone) முக எலும்புகள் (14) 7 கீழ்த்தாடை எலும்பு (mandible) 6 மேற்றாடை எலும்பு (maxilla) (2) அண்ணவெலும்பு (palatine bone) (2) 5 கன்ன எலும்பு (zygomatic bone) (2) 9 நாசி எலும்பு (nasal bone) (2) கண்ணீர் எலும்பு (lacrimal bone) (2) மூக்குச் சுவர் எலும்பு (vomer) கீழ் மூக்குத் தடுப்பெலும்பு (inferior nasal conchae) (2) நடுக்காதுகளில் (6): சம்மட்டியுரு (malleus) பட்டையுரு (incus) ஏந்தியுரு (stapes) தொண்டையில் (1): தொண்டை எலும்பு (நாவடி எலும்பு) (hyoid) தோள் பட்டையில் (4): 25. காறை எலும்பு (clavicle) 29. தோள் எலும்பு (scapula) மார்புக்கூட்டில் thorax(25): 10. மார்பெலும்பு (sternum) (1) மேலும் மூன்று என்புகளாகக் கருதப்படலாம்: பிடியுரு (manubrium), உடல் மார்பெலும்பு (body of sternum), வாள்வடிவ நீட்டம் (xiphoid process) 28. விலா எலும்புகள் (rib) (24) முதுகெலும்புத் தூண் (vertebral column) (33): 8. கழுத்து முள்ளெலும்புகள் (cervical vertebra) (7) மார்பு முள்ளெலும்புகள் (thoracic vertebra) (12) 14. நாரிமுள்ளெலும்புகள் (lumbar vertebra) (5) 16. திரிகம் (திருவெலும்பு) (sacrum) வால் எலும்பு (குயிலலகு) (coccyx) மேற்கைகளில் (arm) (1): 11. புய எலும்பு (மேல்கை எலும்பு) (humerus) 26. புய எலும்புப் புடைப்பு (மேல்கை எலும்புப் புடைப்பு) (condyles of humerus) முன்கைகளில் (forearm) (4): 12. அரந்தி (ulna) (2) 13. ஆரை எலும்பு (radius) (2) 27. ஆரை எலும்புத் தலை (head of radius) கைகளில் (hand) (54): மணிக்கட்டுகள் (carpal): படகெலும்பு (scaphoid) (2) பிறைக்குழி எலும்பு (lunate) (2) முப்பட்டை எலும்புtriquetrum) (2) பட்டாணி எலும்பு (pisiform) (2) சரிவக எலும்பு (trapezium) (2) நாற்புறவுரு எலும்பு (trapezoid) (2) தலையுரு எலும்பு (capitate) (2) கொக்கி எலும்பு (hamate) (2) அங்கை முன்னெலும்புகள் (அனுமணிக்கட்டு எலும்புகள்) (metacarpal): (5 × 2) விரலெலும்புகள் (phalange): அண்மை விரலெலும்புகள் (proximal phalanges) (5 × 2) நடு விரலெலும்புகள் (Intermediate phalanges) (4 × 2) தொலை விரலெலும்புகள் (distal phalanges) (5 × 2) இடுப்பு வளையம் (pelvis) (2): 15. இடுப்பெலும்பு (ilium) மற்றும் கீழ் இடுப்பெலும்பு (ischium) கால்கள் (leg) (8): 18. தொடையெலும்பு (femur) (2) 17. இடுப்பு மூட்டு (hip joint) (மூட்டு, எலும்பல்ல) 22. பெரிய தொடையெலும்புக் கொண்டை (greater trochanter of femur) 23. தொடையெலும்புப் புடைப்பு (condyles of femur) 19. சில்லெலும்பு (patella) (2) 20. கால் முன்னெலும்பு (கணைக்காலலுள்ளெலும்பு) (tibia) (2) 21. சிம்பு எலும்பு (கணைக்கால்வெளியெலும்பு) (fibula) (2) காலடிகளில் (52): கணுக்காலெலும்புகள் (tarsal): குதிகால் (calcaneus) (2) முட்டி (talus) (2) படகுரு எலும்பு (navicular bone) (2) உள் ஆப்புவடிவ எலும்பு (2) இடை ஆப்புவடிவ எலும்பு (2) வெளி ஆப்புவடிவ எலும்பு (2) கனசதுர எலும்பு (cuboidal bone) (2) அனுகணுக்காலெலும்புகள் (metatarsal) (5 × 2) விரலெலும்புகள் (phalange): அண்மை விரலெலும்புகள் (proximal phalanges) (5 × 2) நடு விரலெலும்புகள் (intermediate phalanges) (4 × 2) தொலை விரலெலும்புகள் (distal phalanges) (5 × 2) குழந்தை எலும்புக்கூடு குழந்தைகளின் எலும்புக்கூடுகளில் கீழ் வரும் எலும்புகள் மேலதிகமாக உள்ளன: மண்டையறை மற்றும் மண்டையோட்டு எலும்புகள் (21), இவை ஒன்றாகி மண்டையறையை உருவாக்குகின்றன. திரிக முள்ளெலும்புகள் (sacral vertebrae) (4 or 5), வளர்ந்தோரில் இவை ஒன்றாகி திரிகத்தை உருவாக்குகின்றன coccygeal vertebrae (3 to 5), வளர்ந்தோரில் இவை ஒன்றாகி வாலெலும்பை உருவாக்குகின்றன இடுப்பெலும்பு, கீழ் இடுப்பெலும்பு மற்றும் பொச்செலும்பு (pubis), என்பவை வளர்ந்தோரில் ஒன்றாகி இடுப்பெலும்பை உருவாக்குகின்றன பகுப்பு:மனித உடற்கூற்றியல் பகுப்பு:எலும்புகள்
மனித உடலில் எத்தனை எலும்புகள் உள்ளன?
206
53
tamil
d9841668c
காளிதாசன் (தேவநாகரி: कालिदास) சமஸ்கிருத இலக்கியத்தில் சிறந்து விளங்கிய இந்தியக் கவிஞர், நாடகாசிரியர். காளிதாசரைப் பற்றிய முழுமையான வரலாற்றுக்குறிப்புகள் அறியப்படவில்லை.[1] ஆயினும், இவரது படைப்புகளான சாகுந்தலம், மேகதூதம், இரகுவம்சம், குமாரசம்பவம், மாளவிகாக்கினிமித்திரம், விக்கிரமோர்வசியம், ருது சம்ஹாரம் ஆகியவை இந்திய மொழி இலக்கியங்களில் முக்கிய இடம் வகிக்கிறது. இவர் குப்தரகளின் காலத்தில் வாழ்ந்த ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது.[2][3] இவரின் காவியங்கள் இயற்கை அழகை வருணிப்பதாகவும், அக்காலத்தே வாழ்ந்த மக்களின் பண்பாட்டை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது. காலம் காளிதாசன்; இந்தியாவின் புராணக்கதையில் வரும், உஜ்ஜெய்னி நாட்டின் அரசரான விக்ரமாதித்தியன் என்பவரின் கவிஞனாக இருந்ததாக பல பண்டைய, மற்றும் இடைக்கால நூல்கள் கருதுகின்றன. விக்ரமாதித்தியன் என்ற புகழ்பெற்ற அரசர், கி. மு. 1 ஆம் நூற்றாண்டில், மத்திய இந்தியாவின் மால்வாப் பகுதியில் அமைந்துள்ள பழைய நகரமான உஜ்ஜெய்னியை ஆட்சி செய்ததாக கூறப்படுகிறது. அந்த புகழ்பெற்ற விக்ரமாதித்தியன், ஒரு வரலாற்றுப் பெயர் அல்ல என்று ஒரு பகுதியினர் அறிவர். உஜ்ஜைய்னியை விக்ரமாதித்தியன், இரண்டாம் சந்திரகுப்தர் (கி.மு 380 - 415) மற்றும் யசோதர்மன் (கி.மு. 6 ஆம் நூற்றாண்டு) ஆகியோர்கள் ஆட்சி செய்தது குறிப்பிடத்தக்கது.[4] குப்த பேரரசின் ஏதேனும் ஒரு காலக்கட்டத்தில் (அ) மூன்று அரச தலைமுறைகளான சந்திர குப்தர் II [விக்கிரமாதித்யா] (375-413 ஆம் ஆண்டு), குமார குப்தா [மகேந்திராதித்யா] (413-455 ஆம் ஆண்டு), ஸ்கந்த குப்தா [விக்கிரமாதித்யா] (455-467 ஆம் ஆண்டு) வாழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.[5] ஆரம்பகால வாழ்க்கை காளிதாசன் இந்தியத் துணைக்கண்டத்தில் அமைந்துள்ள இமயமலையின் அருகிலும், மத்திய இந்தியாவின் மால்வாப் பகுதியில் அமைந்துள்ள பழைய நகரமான உஜ்ஜைனிலும், மற்றும் தற்கால ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் பகுதிகளில் இருந்த கலிங்க நாடு போன்ற பல்வேறுப் பகுதிகளில் வாழ்ந்ததாக அறிஞர்கள் ஊகிக்கின்றனர்.[6] மேற்காணும் இந்த தகவல்கள், காளிதாசன் சமசுகிருத மொழியில் இயற்றிய காவியக் கவிதையான குமாரசம்பவம் எனும் நாடகக் கவிதையில், இமயமலைத் தொடர்களையும் காளிதாசரின் விரிவான விளக்கத்தையும் அடிப்படையாக கொண்டுள்ளது. மேலும், அவர் உஜ்ஜைனை ஆழமாக நேசித்த அன்பின் காட்சிகளாக, அவர் இயற்றிய மேகதூதம், மற்றும் இரகுவம்சம் எனும் காவியங்களில் மிகுந்த விளக்கங்கள் காணப்படுகின்றன.[7] காசுமீர் பண்டிதரும், சமசுகிருத அறிஞருமான "லட்சுமி தார் கல்லா" (1891 - 1953) என்பவர், 1926 இல் காளிதாசாவின் பிறப்பு என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார், அது காளிதாசனின் பிறப்பிடத்தை அவரது எழுத்துக்களில் அடிப்படையாகக் கொண்டது. மேலும் அவர் காளிதாசர் காசுமீரில் பிறந்தார் என்றும், ஆனால் தென்திசை நோக்கிச் சென்று உள்ளூர் ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற முயன்றதாகவும் கூறப்படுகிறது.[8][9][10] உஜ்ஜைன் மற்றும் கலிங்காவில் அல்லாத, காசுமீரில் காணப்படும் தாவரம் மற்றும் விலங்கினங்களின் விவரம்: குங்குமப்பூ செடிகள், தேவதாரு மரங்கள், கத்தூரி மான் போன்றவை. காசுமீரில் பொதுவான புவியியல் அம்சங்களின் விவரம்: மலையின் மீதுள்ள சிறிய ஏரிகள், காட்டிடைவெளிகள் முதலியன. கல்லாவின் படி, காசுமீர் இடங்களில் அடையாளம் காணக்கூடிய சில முக்கிய தளங்களைக் குறிப்பிடலாம். இதுபோன்ற தளங்கள் காசுமீருக்கு வெளியே மிகவும் பிரபலமானவை அல்ல, எனவே, காசுமீருடன் நெருங்கிய தொடர்பில்லாதவர் ஒருவருக்குத் தெரிந்திருக்க முடியாது. காசுமீரி வம்சத்தின் சில புராணக் குறிப்புகளில், நகும்பா (காசுமீர் உரை நீலமாத புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது) போன்றவை; காசுமீர் ஒரு ஏரியிலிருந்து உருவாக்கப்படுவது பற்றிய புராணக்கதை (சகுந்தலாவில்) குறிப்பிடப்பட்டுள்ளது. நிலாடா புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த புராணக் கதை, அனந்தா எனும் பழங்குடித் தலைவர், ஒரு பேயைக் கொல்ல ஒரு ஏரியை வடிகட்டி வைத்தார் என கருதப்படுகிறது. அனந்தா எனும் முன்னாள் ஏரி (இப்போது நிலம்) "காசுமீர்" என்று பெயரிடப்பட்டது, அவரது தந்தை காஷியாபாவுக்குப் பிறகு என்பது குறிப்பிடத்தக்கது. கல்லாவின் கூற்றுப்படி, சகுந்தலா பிராட்டியப்சினா தத்துவத்தின் (காசுமீர சைவம் ஒரு கிளை) ஒரு உருவகமான நாடகமாகும். அந்தக் கிளை, அந்த காலகட்டத்தில் காசுமீருக்கு வெளியே தெரியவில்லை என்று கல்லா மேலும் வாதிடுகிறார்.[11] நாட்டுப்புறக் கலைகளின்படி, காளிதாசன் முதலில் ஒரு அறிவார்ந்த நபராகவும், மற்றும் மகிஷபுரியின் இளவரசியை திருமணம் செய்துகொண்டவராகவும் சித்தரிக்கப்படுகிறார்.[12] அவரது மனைவியின் சவாலின் காரணமாக, அவர் ஒரு பெரிய கவிஞராக உருவானதாகவும், மற்றொரு புராணக்கதையின்படி அவர், சிலோன் என அழைக்கப்பட்ட இலங்கையில் குமரதாசனாக விசயம் செய்தார் எனவும், சில துரோகத்தின் காரணமாக காளிதாசன் கொலை செய்யப்பட்டார் என்றும் கருதப்படுகிறது.[13] படைப்புகள் அபிக்ஞான சாகுந்தலம் மகாபாரதத்தின் பகுதி சிறுகதையாகக் கொண்ட சகுந்தலையின் முழுவரலாற்றுக் காதல் காவியம் சாகுந்தலம் ஆகும். வானுலக மங்கை மேனகைக்கும், விசுவாமித்திரருக்கும் பிறந்த புதல்வி சகுந்தலை. விசுவாமித்திரரின் தவத்தைக் கலைக்கவே மேனகை பணிக்கப்பட்டதை அறிந்த விசுவாமித்திரர் மனைவி (மேனகை), சேயை (சகுந்தலை) விட்டு விலகுகிறார். தனக்கு பணிக்கப்பட்ட கெடு முடிந்ததாலும், மேலுலகம் செல்ல வேண்டிய கட்டாயத்தின்படியும் சகுந்தலையை காட்டிலேயே விட்டுவிட்டுச் செல்கிறாள் மேனகை. பறவைகளால் சூழப்பட்டு பாதுகாக்கப்பட்ட சகுந்தலையை கன்வ முனிவர் கண்டெடுத்து வளர்க்கிறார். கானக சோலையில் அவ்வழியே வேட்டையாட வந்த மகத மன்னன் துஷ்யந்தன், சகுந்தலையைக் கண்டு காதலில் விழுகிறான். மேலும் சகுந்தலையை காந்தர்வ மணம் புரிந்து சிலகாலம் வாழ்ந்து, தலைநகரத்தில் ஏற்பட்ட கலகத்தால் கானகம் விடுத்து நாடு செல்கிறான். முன்னர், அடையாளமாக தன் மோதிரத்தை அவளிடம் கொடுத்து விரைவில் திரும்புவதாகவும் உறுதி பூண்டுச் செல்கிறான். காலம் பல கழியவும், முப்பொழுதும் துஷ்யந்தனின் நினைவால் வாழும் சகுந்தலை, ஒருநாள் தம் ஆசிரமத்திற்கு வருகைதரும் துர்வாச முனிவரை வரவேற்கத் தவறுகிறாள். இதனால் கோபங்கொண்ட துர்வாசர் சகுந்தலையை அவள் நினைவிலேயே வாழும் நபர் அவளை மறக்க சபிக்கிறார். இவ்வாறான சூழலில், துஷ்யந்தன் முற்றிலுமாக சகுந்தலையை மறந்துவிடுகிறான். அவனைத்தேடி அவன் நாட்டிற்கு செல்லும் சகுந்தலை அவன் நினைவாக கொடுத்துச் சென்ற மோதிரத்தையும் தொலைத்துவிடுகிறாள். இவர்களுக்கு பரதன் என்னும் மகன் பிறக்கிறான். பல்வேறு இன்னல்களுக்கு பின்னர் துஷ்யந்தனுடன் இணைவதே இதன் இறுதிக்காட்சியாகும். அபிக்ஞான சாகுந்தலம், துஷ்யந்தனின் மோதிரத்தால் (அபிக்ஞ்யானம்) இணைவதையும், பறவைகளால் பாதுகாக்கப்பட்ட சகுந்தலையின் காதலை எடுத்துரைப்பதாலும் இக்காரணத்தலைப்பைப் பெற்றது. இக்காவியம், இயற்கை அழகை வருணிப்பதில் காளிதாசரின் சிறந்த ஆளுமையை எடுத்துரைக்கிறது. இரகுவம்சம் இராமபிரானின் முன்னோரான திலீபன் துவங்கி, ரகு, அயன், தசரதன், இராமன், லவன் - குசன், அவர்தம் வழி வந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகக் கூறும் காவியம் ரகுவம்சம் என காளிதாசரால் பாடப்பெற்றது.[14] மேகதூதம் குபேரனின் அரசவைச் சேவகன் சில கால அலுவல் பணி முடித்து தன் தலைவியைக் காண விரையும் செய்தியை தூதாக மேகத்தின் மூலம் அனுப்புவது மேகதூதம் ஆகும். இது ஏனைய தமிழ் இலக்கியங்களில் உள்ள தூது வகையினை ஒத்ததாகும். காளிதாசன் மேகத்தை வருணிக்கும் இடங்கள், காடு, மலை, ஆறு, ஏரி, மலர் என எல்லா இயற்கை வளங்களின் மீதும் மேகத்தின் பயணங்களை எண்ண ஓட்டங்களாக வருணிக்கிறார்.[15] குமாரசம்பவம் சிவபெருமானின் தவத்தைக் கலைத்ததால் மன்மதனை அவர் எரிப்பது, பார்வதி தேவியார் தவமிருந்து சிவனை அடைதல், முருகப்பெருமானின் பிறப்பு உள்ளிட்டவற்றை எடுத்தியம்புவது குமாரசம்பவம். விக்கிரமோவர்சியம் புரூரவனுக்கும், சுவர்க்க நடனமங்கை ஊர்வசிக்குமுள்ள காதல் காவியம் விக்கிரமோவர்சியம். கேசி என்ற அரக்கனிடமிருந்து ஊர்வசியை மீட்டு, தேவேந்திரனிடம் புரூரவன் ஒப்படைக்கிறான். தேவேந்திரனும் ஊர்வசியை புரூரவனிடமே கொடுத்துவிடுகிறான். சில காலம் இணைந்து வாழ்ந்த இவர்கள் பிரிகின்றனர். இப்பிரிதலினால் ஏற்படும் மன உளைச்சலிருந்து இறுதியாக புரூரவன் மீள்கிறான். மாளவிகாக்கினிமித்திரம் மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள விதிஷாவைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த சுங்கப் பேரரசன் அக்கினிமித்திரன் தனது அரசியின் பணிப்பெண்ணான மாளவிகாவின் மீது காதல் கொள்வதும், பின்னர் மணப்பதுமான காவியம் மாளவிகாக்கினிமித்திரம் ஆகும். இதர படைப்புகள் ருது சம்ஹாரம் - இருது சங்கார காவியம் என தமிழில் தி. சதாசிவ ஐயர் மொழிபெயர்த்துள்ளார்.[16] இக்காவியத்தில் இயற்கையின் பருவகாலங்களை அழகுற பாடியுள்ளார் காளிதாசர். இதனையும் காண்க அக்கினிமித்திரன் கல்ஹானர் சூத்திரகர் விசாகதத்தர் மேற்கோள்கள் மேற்கோள்கள் வெளியிணைப்புகள் by Arthur W. Ryder பகுப்பு:கவிஞர்கள் பகுப்பு:இந்தியக் கவிஞர்கள் பகுப்பு:இந்திய எழுத்தாளர்கள் பகுப்பு:சமசுகிருத இலக்கியம் பகுப்பு:சமசுகிருத நூலாசிரியர்கள் பகுப்பு:சமசுகிருத அறிஞர்கள்
காளிதாசன் எங்கு பிறந்தார்?
காசுமீரில்
2,358
tamil
29d154b56
சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் (Sir Alexander Fleming) (ஆகஸ்ட் 6, 1881 – மார்ச் 11, 1955) நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum) என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார். பெனிசிலின் கண்டுபிடிப்பு உலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிசிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பெனிசிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம். லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன. ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிஸிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. பெனிசிலினைக் கண்டு பிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானிதான் அலெக் ஸாண்டர் ஃப்பௌமிங். பெனிசிலின் உலகெங்கிலும் உள்ள 20 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்கிறது ஒரு மதிப்பீடு. பிறப்பு ஃப்ளெமிங் 1881 ஆகஸ்ட் 6 அன்று ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்தவர்[1]. அவரது இளமைக்கல்வி இயற்கையெழில் சூழ்ந்த மலைப்பகுதியில் அமைந்தது. அங்குதான் இயற்கையை ரசிக்கவும், எதையும் கூர்ந்து நோக்கி அறியவும் அவர் பயிற்சி பெற்றார். பின்னாளில் அவர் பெனிஸிலின் என்ற அற்புத மருந்தைக் கண்டுபிடிக்க இப்பயிற்சியே உதவி செய்தது. தொழில் நுட்ப கல்லுாரி படிப்பை முடித்தபிறகு 16 வயதிலேயே கப்பல் நிறுவனம் ஒன்றில் அவர் அலுவலராகச் சேர்ந்தார். எழுத்தர் பணி அவருக்கு மனநிறைவை அளிக்கவில்லை. தூரத்து உறவினர் ஒருவரிடமிருந்து கிடைத்த சொத்து, அவர் மிகத் தாமதமாக தனது 20 வயதில் மருத்துவக் கல்லூரியில் சேர வழி செய்தது. நோய்க்கிருமிகளுக்கு எதிரான போர் படிப்பை முடித்த பிறகு, நோய்க்கிருமிகளுக்கெதிரான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆல்ம்நாத் ரைட் என்பவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார் ஃப்ளெமிங். ஜெர்மன் விஞ்ஞானி பால் என்ரிக் என்பவர் ‘சிஃபிலிஸ்’ என்ற கொடிய பால்வினை நோய்க்கு ‘ஸல்வார்ஸன்’ என்ற மருந்தைக் கண்டுபிடித்திருந்தார். ரத்தத்தைப் பரிசோதித்து அந்த நோயை எளிதில் கண்டறியும் ஒரு மேம்பட்ட முறையை ஃப்ளெமிங் அறிமுகப்படுத்தினார். நான்கு ஆண்டுகள் நடந்த முதல் உலகப்போரில் ரைட் குழுவினரின் தடுப்பூசி மட்டும் பயன்படுத்தப்பட்டிரா விட்டால், ஆயிரக்கணக்கானோர் டைஃபாய்டு காய்ச்சலுக்கு பலியாகியிருப்பார்கள். போரில் காயமடைந்த வீரர்களுக்கு கார்பாலிக் அமிலம், போரிக் அமிலம், ஹைட்ரஜன் பெராக்ஸைட் போன்ற நச்சுமுறி மருந்துகளையே அக்காலத்தில் பயன்படுத்தி வந்தனர். இந்த மருந்துகள் சிகிச்சைக்கு உதவாததோடு, இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அழித்து மேலும் பலர் இறப்பதற்கே வழிவகுத்தன என்று ஃப்ளெமிங்க் நிரூபித்தார். குறைபாடற்ற நச்சுமுறி மருந்தைக் கண்டுபிடிப்பதில் அவர் கவனம் திரும்பியது. பல்வேறு வகை நுண்ணுயிர்களை தட்டுகளில் வளர்த்து அவற்றின் இயக்கங்களை அவர் ஆராயத் தொடங்கினார். தனது மூக்கிலிருந்து ஒழுகிய நீரிலிருந்தே ஓரிரு சொட்டுகள் எடுத்து பாக்டீரியாக்கள் அடங்கிய தட்டில் வைத்து வளர்த்தபோது, சளித்திரவத்தைச் சுற்றியிருந்த பாக்டீரியாக்கள் மட்டும் அழிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார். இதேபோல் கண்ணீர், உமிழ் நீர், சீழ் போன்ற உடலில் சுரக்கும் பல திரவங்களை எடுத்து ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். இந்த திரவங்கள் அனைத்திற்கும் நோய்க்கிருமிகளை வளராது தடுக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டார். இயற்கையிலேயே அமைந்த இந்த நச்சு முறிபொருளுக்கு ‘லைசோசைம்’ எனப் பெயரிட்டார். காளானிலிருந்து பெனிசிலின் 1928ஆம் ஆண்டில் நுண்ணுயிர்கள் வளர்க்கப்பட்ட ஒரு தட்டை நோக்கிய போது, லைசோசைம் அதுவரை செய்திராத ஒரு செயலை காளான் செய்திருந்ததைத் தற்செயலாகக் கண்டார். கொப்புளங்கள், கட்டிகள், மூக்கு, தொண்டை, தோல் இவற்றில் ஏற்படும் தொற்றுநோய்களை வரவழைக்கும் ஸ்டாபைலொகாக்கி எனப்படும் கிருமிகளை காளான் அழித்திருந்தது. அது மட்டுமல்ல, அந்தக் காளானின் சாரம் வெள்ளை அணுக்களை அழிக்கவில்லை என்றும், வேறு திசுக்களைப் பாதிக்கவில்லை என்றும் சோதித்துத் தெரிந்து கொண்டார். காளானில் பரவிய அப்பொருளுக்கு ‘பெனிசிலின்’ எனப் பெயரிட்டார் ஃப்ளெமிங். [2] ஆனால் பெனிசிலினைப் பெரிய அளவில் அப்போது உற்பத்தி செய்ய இயலவில்லை. ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகியோர் அடங்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் குழுவினர் 14 ஆண்டுகள் கழித்து அதைச் சாதித்தனர். பெனிசிலின் ஒவ்வாமை உடையவர்களுக்கு வேறு பாதுகாப்பான நச்சுக்கொல்லி மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலும் அக்குழுவினர் வெற்றியடைந்தனர். பாராட்டுக்களும் விருதுகளும் 1945ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங், ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகிய மூவருக்கும் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது[3]. ஆறாம் ஜோர்ஜ் மன்னரால் 1944 ஆம் ஆண்டில் நைட் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.[4] 1999 ஆம் ஆண்டில் டைம் சஞ்சிகையால் வெளியிடப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான 100 நபர்களின் பட்டியலில் அலெக்சாண்டர் பிளெமிங்கும் உள்ளடக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டு நிறைவுறும் தறுவாயில் சுவீடனிலிருந்து வெளிவரும் பிரசித்திபெற்ற மூன்று சஞ்சிகைகள் பென்சிலினை கடந்த ஆயிரமாண்டு காலத்தின் சிறந்த கண்டுபிடிப்பாக அறிவித்தன. 2002 ஆம் ஆண்டில் பிபிசியால் மக்களின் வாக்களிப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட பிரித்தானியாவின் முக்கியமான 100 நபர்களின் பட்டியலில் அலெக்சாண்டர் பிளெமிங்கும் உள்ளடக்கப்பட்டார்.[5] அலெக்சாண்டர் பிளெமிங்கின் ஞாபகார்த்தமாக சிறுகோள் படையிலுள்ள ஒரு சிறுகோளுக்கு 91006 பிளெமிங் எனப் பெயரிடப்பட்டது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:1881 பிறப்புகள் பகுப்பு:நோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள் பகுப்பு:ஆங்கிலேய அறிவியலாளர்கள் பகுப்பு:இசுக்கொட்டிய அறிவியலாளர்கள் பகுப்பு:1955 இறப்புகள்
பென்சிலின் கண்டுபிடித்தவர் யார்?
சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங்
0
tamil
41660850a
குழந்தையின் அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும் பாடப்படும் பாட்டு தாலாட்டு (Lullaby) ஆகும். தாலாட்டு நாட்டார் பாடல் வகைகளில் ஒன்று. வாய்மொழி இலக்கியங்களாக வழங்கிவந்த தாலாட்டுக்கள் நாட்டாரியல் ஆய்வாளர்களால் சேகரிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. தாலாட்டுப் பாடல்கள் கிராமிய மக்களின் வாழ்க்கையோடு அவர்களின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்த நாட்டுப் பாடல் வகைகளில் ஒன்று. தாலாட்டுப் பாடல்கள் இனிமையான இசையை உடையன. அவ்விசையில் மயங்கி குழந்தை மெய்ம்மறந்து தூங்குகின்றது. "தால்" என்பது நாவைக் குறிக்கும். நாவினால் ஓசை எழுப்பி குழந்தையை உறங்க வைப்பதே தாலாட்டுதல் எனவும் கூறுவர். தாய் தன் குழந்தையை மடியிலோ, தோளிலோ, கைகளிலோ, தொட்டிலிலோ வைத்து ஆட்டிய வண்ணம் தாலாட்டுவதே வழக்கம். ஆராரோ ஆரிரரோ என்ற சந்தத்தின் மூலம் ஓசை எழுப்புவதால் இது ஆராட்டுதல் என்றும் சொல்லபடும். திண்டிவனம் வட்டாரப் பகுதிகளில் தாலாட்டுப் பாடும் பெண்கள் “லுலுலாயி லுலுலாயி” என்று நாவை அசைத்து,குழந்தையின் கவனத்தைத் தம் பக்கம் இழுத்தே பாடலைப் பாடுகின்றனர். பாடலின் இசை ஓரே மாதிரியாக இல்லை. அவரவர் விருபத்திற்கு ஏற்ப நீட்டிப் படுகின்றனர். தாலாட்டின் தொடக்கத்திலும் இடையிலும் முடிவிலும் ராராரோ, ஆராரோ, ஆரிரரோ என்ற பதங்கள் பயன்படுத்தப் படுகின்றன. நீலாம்பரி என்ற இன்பமூட்டும் இராகத்திலேயே தாலாட்டுப் பாடல்கள் பெரும்பாலும் பாடப் படுவதுண்டு. எனினும் யதுகுலகாம்போதி, சகானா, ஆனந்தபைரவி போன்ற இராகங்களிலும் இவை இசைக்கப் படுகின்றன. தாலாட்டுப் பாடல்களில் குழந்தையின் அருமை, அதன் விளையாட்டுப்பொருள்கள், மாமன் பெருமை, குலப் பெருமை போன்றவை கூறப்படுகின்றன. இத்தாலாட்டுப் பாடல்களில் தத்ரூபமான உவமை, உருவக அணிகள் கையாளப்பட்டுள்ளன.  கொவ்வை இதழ் மகளே - என்  குவிந்த நவரத்தினமே  கட்டிப் பசும்பொன்னே - என்  கண்மணியே கண் வளராய் என்ற தாலாட்டுப் பாடலில் குழந்தையானது நவரத்தினமாகவும், பசும்பொன்னாகவும், கண்மணியாகவும் உருவகிக்கப்பட்டுள்ளமை படித்து இன்புறத்தக்கது. பக்தி இலக்கியங்களிலும் இறைவனை குழந்தையாக பாவித்து தலாட்டுக்கள் பாடப்பட்டுள்ளன. இலக்கியங்களில் தாலாட்டு “ஊமன் தாரட்ட உறங்கிற்றே” என்று முத்தொள்ளாயிராத்தில் தாலாட்ட என்பதைத் தாராட்ட எனக் கையளப்பட்டுள்ளது. கம்பராமாயணத்தில் “பச்சைத் தேரை தாலாட்டும் பண்ணை “ என்று கம்பர் தாலாட்டு என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். தாலாட்டுப் பாடல் ஓசையின் இனிமையைத் திருஞானசம்பந்தர் கீழ்கண்டவாறு பாடுகிறார்.  “பண்ணமரும் மென்மொழியார்  பாலகரைத் தாலாட்டும் ஓசை கேட்டு  விண்ணவர்கள் வியப் பெய்தி  விமானத்தோடும் இயும் மிழலையாமே” பெரியாழ்வார் கீழ்கண்டவாறு தாலாட்டுப் படுகிறார்.  “மாணிக்கம் கட்டி   வயிரம் இடைகட்டி   ஆணிப் பொன் னாற் செய்த   வண்ணச் சிறுதொட்டில் பேணி உனக்குப் பிரமன் விடுதாந்தான்   மாணிக் குறளனே! தாலேலோ!   வையம் அளந்தானே தாலேலோ!” குலசேகர ஆழ்வார் இராகவனைத் தாலாட்டுவது கீழ்கண்டவாறு  தேவரையும் அசுரரையும்  திசைகளையும் படைத்தவனே!  யாவரும் வந்தடி வணங்க  அரங்நகர்த் துயின்றவனே!  கவேரிநல் நதிபாயும்  கணபுறத்தென் கருமணியே!  ஏவரிவெம் சிலைவலவா!  இராகவே தாலே லோ” பாரதியார் கீழ்கண்டவாறு,  “காட்டில் விலங்கறியும் கைக்குழந்தை தானறியும்   பாட்டின் சுவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார்” என்று கைக்குழந்தை தாலாட்டுப் பாடலின் சுவையை அறியும் என்றும் படுகின்றனர்.[1] கண்ணதாசன் கீழ்கண்டவறு தனது கிருஷ்ண காணத்தில்[2] ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ அவன் வாய்நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின் ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ (ஆயர்பாடி…) பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவனுறங்க மண்டலமே உறங்குதம்மா ஆராரோ மண்டலமே உறங்குதம்மா ஆராரோ (ஆயர்பாடி…) நாகப்படம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில் தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ அவன் மோக நிலை கூட ஒரு யோக நிலை போலிருக்கும் யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ (ஆயர்பாடி…) கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும் அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ அவன் பொன்னழகைப் பார்ப்பதற்க்கும் போதை முத்தம் பெறுவதற்க்கும் கன்னியரே கோபியரே வாரீரோ கன்னியரே கோபியரே வாரீரோ (ஆயர்பாடி…) ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ ஆரடிச்சு நீயழுதாய் கண்மணியே கண்ணுறங்கு கண்ணே யடிச்சாரார் கற்பகத்தைத் தொட்டாரார் தொட்டாரைச் சொல்லியழு தோள் விலங்கு போட்டு வைப்போம் அடிச்சாரைச் சொல்லியழு ஆக்கினைகள் செய்து வைப்போம் மாமன் அடித்தானோ மல்லி பூச் செண்டாலே அண்ணன் அடித்தானோ ஆவாரங் கொம்பாலே பாட்டி அடித்தாளோ பால் வடியும் கம்பாலே ஆராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ ஆரடிச்சு நீயழுதாய் கண்மணியே கண்ணுறங்கு அறிமுகம் தாயின் அன்பையும், சேயைச் சுற்றி எழும் கற்பனையையும் பாடலாக வழங்கும் பாட்டுருவம் தாலாட்டாகும். பணக்காரர் வீட்டிலும் தாய் குழந்தையைத் தாலாட்டுகிறாள். ஏழை எளியவரான மீன் பிடிப்பவரும், உழவரும், பண்டாரமும், தட்டாரும், கருமாரும், தச்சரும், கொத்தரும் தங்கள் இல்லங்களில் பிறந்த குழந்தைகளுக்குத் தமிழிசையால் அமுதூட்டித் தாலாட்டுகிறார்கள். காட்டு வெள்ளம் போல் வரும் தாயின் மன எழுச்சியைத் தாலாட்டில் கண்ட ஆழ்வார்கள் பிற்கால கவிஞர்கள் முதலியோர் இப்பாடல் வகைக்கு மெருகேற்றி, பிள்ளைத் தமிழாகவும், தேவர் தேவியர் தாலாட்டுகளாகவும், யாப்பிலக்கணக் கட்டுக்கோப்பில் அடக்கிப் பாடல்கள் இயற்றியுள்ளனர். தெய்வத் தாலாட்டிற்கு விளைநிலம் மக்கள் தாலாட்டுக்களே. சில தாலாட்டுப் பாடல்களில் உண்மையான குழந்தையையும், அதில் தாலாட்டும் தாயும் நம் கண் முன்னே வருகிறார்கள். பாடல் 1 பச்சை இலுப்பை வெட்டி பவளக்கால் தொட்டிலிட்டு பவளக்கால் தொட்டிலிலே பாலகனே நீயுறங்கு கட்டிப் பசும் பொன்னே - கண்ணே நீ சித்திரப் பூந்தொட்டிலிலே சிரியம்மா சிரிச்சிடு - கண்ணே நீ சித்திரப் பூந் தொட்டிலிலே. இன்னும் சில தாலாட்டுப் பாடல்களில் உறவினரின் பெருமைகள் எல்லாம் வருகின்றன. இவற்றில் மாமன் பெருமையைக் கூறும் பாடல்களே அதிகம். மாமனைக் கேலி செய்து பாடும் நகைச்சுவைப் பாடல்களும் உள்ளன. பாடல் 2 உசந்த தலைப்பாவோ 'உல்லாச வல்லவாட்டு' நிறைந்த தலை வாசலிலே வந்து நிற்பான் உன் மாமன் தொட்டிலிட்ட நல்லம்மாள் பட்டினியாப் போராண்டா பட்டினியாய் போற மாமன்-உனக்கு பரியம் கொண்டு வருவானோ? பாடல் 3 பால் குடிக்கக் கிண்ணி, பழந்திங்கச் சேணாடு நெய் குடிக்கக் கிண்ணி, முகம் பார்க்கக் கண்ணாடி கொண்டைக்குக் குப்பி கொண்டு வந்தான் தாய்மாமன். பாடல் 4 ஆனை விற்கும் வர்த்தகராம்-உன் மாமன் சேனைக் கெல்லாம் அதிகாரியாம் சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்கு சின்னச் சட்டை கொடுத்தானோ உனக்கு பட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப் பல வர்ணச் சட்டைகளும் பட்டுப் புடவைகளும் கண்ணே-உனக்கு கட்டிக் கிடக் கொடுத்தானோ! பொன்னால் எழுத்தாணியும்-கண்ணே உனக்கு மின்னோலைப் புஸ்தகமும் கன்னாரே! பின்னா ரேன்னு-கண்ணே கவிகளையும் கொடுத்தானோ ! பாடல் 5 ஐரை மீனும், ஆரமீனும்-கண்ணே அம்புட்டுதாம் அப்பனுக்கு வாளை மீனும், வழலை மீனும்-கண்ணாட்டி விதம்விதமா அம்புட்டிச்சாம், அரண்மனைக்கு ஆயிரமாம் ஆயிரமும் கொண்டுபோய்-கண்ணாட்டி அப்பன் விற்று வீடுவர அண்டை வீடும், அடுத்த வீடும்-கண்ணாட்டி ஆச்சரியப் பட்டார்களாம், பிரித்த மீனு ஆயிரத்தில்-கண்ணே நான் பிரியமாக ஆறெடுத்தேன் அயலூரு சந்தையிலே-கண்ணே நான் ஆறு மீனை விற்றுப் போட்டேன். அரைச் சவரன் கொண்டுபோய்-கண்ணே அதை அரை மூடியாய்ச் செய்யச் சொன்னேன். அரை மூடியை அரைக்குப் போட்டு கண்ணே நான் அழகு பார்த்தேன், ஆலத்தியிட்டு அத்தை மாரும் அண்ணி மாரும்-கண்ணே உன் அழகைப் பார்த்து அரண்டார்களே. அத்திமரம் குத்தகையாம் ஐந்துலட்சம் சம்பளமாம் சாமத்தலை முழுக்காம்-உங்கப்பாவுக்குச் சர்க்கார் உத்தியோகமாம். பாடல் 6 ஆராரோ ஆரிரரோ ஆறு ரண்டும் காவேரி, காவேரி கரையிலயும் காசி பதம் பெற்றவனே! கண்ணே நீ கண்ணுறங்கு! கண்மணியே நீ உறங்கு! பச்சை இலுப்பை வெட்டி, பவளக்கால் தொட்டிலிட்டு, பவளக்கால் தொட்டிலிலே பாலகனே நீ உறங்கு! நானாட்ட நீ தூங்கு! நாகமரம் தேரோட! தேரு திரும்பி வர! தேவ ரெல்லாம் கை யெடுக்க! வண்டி திரும்பி வர! வந்த பொண்கள் பந்தாட! வாழப் பழ மேனி! வைகாசி மாங்கனியே! கொய்யாப் பழ மேனி! - நான் பெத்த கொஞ்சி வரும் ரஞ்சிதமே! வாசலிலே வன்னிமரம்! வம்மிசமாம் செட்டி கொலம்! செட்டி கொலம் பெத்தெடுத்த! சீராளா நீ தூங்கு! சித்திரப் பூ தொட்டிலிலே! சீராளா நீ தூங்கு! கொறத்தி கொறமாட! கொறவ ரெல்லாம் வேதம் சொல்ல! வேதஞ் சொல்லி வெளியே வர! வெயிலேறி போகுதையா! மாசி பொறக்கு மடா! மாமன் குடி யீடேற! தையி பொறக்குமடா - உங்க தகப்பன் குடி யீடேற! ஆராரோ ஆரிரரோ கண்ணே நீ கண்ணுறங்கு! பாடல்7 ஓடும் மான் கண்ணோ என் கண்ணே நீ கவரிமான் பெற்ற கண்ணோ புள்ளி மான் கண்ணோ என் கண்ணே நீ புத்திமான் பெற்ற கண்ணோ முத்தோ ரத்தினமோ என் கண்ணே நீ தூத்துக்குடி முத்தினமோ... முல்லை மலரோ என் கண்ணே நீ அரும்புவிரியா தேன்மலரோ.. கண்ணே கண்ணுறங்கு கனியமுதே நீ உறங்கு.... பாடல் 8 மார்கழி மாசத்திலேதான் - கண்ணே நீ மாராசாவைப் பார்க்கையிலே தைப் பொங்கல் காலத்திலே - கண்ணே நீ தயிரும், சோறும் திங்கையிலே மாசி மாசக் கடைசியிலே - கண்ணே நீ மாமன் வீடு போகையிலே பங்குனி மாசத்திலே - கண்ணே நீ பங்குச் சொத்தை வாங்கையிலே சித்திரை மாசத் துவக்கத்திலே - கண்ணே நீ சீர் வரிசை வாங்கையிலே, வைகாசி மாசத்திலே - கண்ணே நீ வயலைச் சுற்றிப் பார்க்கையிலே ஆனி மாசக் கடைசியிலே - கண்ணே நீ அடியெடுத்து வைக்கையிலே அகஸ்மாத்தா ஆவணியில் - கண்ணே நீ அரண்மனைக்குப் போகையிலே ஐப்பசி மாசமெல்லாம் கண்ணே - நீ அப்பன் வீடு தங்கையிலே கார்த்திகை மாசத்திலும் - கண்ணே கடவுளுக்குக் கையெடடி மேற்கோள்கள் பகுப்பு:தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள்
தமிழ்நாட்டில் குழந்தைகளை தூங்க வைக்க பாடும் பாடல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தாலாட்டு
68
tamil
b29c82c22
சூரியக் குடும்பம் சூரியக் குடும்பம் (Solar System) அல்லது சூரியத் தொகுதி என்பது சூரியனையும் சூரியனின் ஈர்ப்புவிசையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து பருப்பொருட்களையும் உள்ளடக்கிய ஒரு தொகுதி ஆகும். இச் சூரியத்தொகுதி கதிரவனைச் சுற்றி வரும் எட்டு கோள்களையும், இக்கோள்களின் 162 (இதுவரை தெரிந்த கணக்கெடுப்பின்படி) துணைக்கோள்களையும், சிந்து குறுங்கோள்களையும், அக்குறுங்கோள்களின் துணைக்கோள்களையும் மற்றும் ஆயிரக்கணக்கான பிற வான்பொருட்களையும் உள்ளடக்கியது. வால்வெள்ளி, எரிகற்கள், விண்கற்கள் மற்றும் நாள்மீன்களுக்கு இடையே உள்ள விண்துகள்கள் போன்றவையும் சூரியத் தொகுதியில் காணப்படுகின்றன. சூரியன் சூரியனும் ஒரு விண்மீனே. இது பூமிக்கு மிக அருகில் உள்ள விண்மீன்(கோள்கள் வேறு விண்மீன்கள் வேறு). இது ஒரு நெருப்புக்கோளம். எனவே, இதன் அருகில் செல்லவே முடியாது. இது பூமியைப் போலப் பல மடங்கு பெரியது. பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ளது. சூரியன், சூரிய மண்டலத்தின் மையத்தில் உள்ள, சூரிய மண்டலத்தின் ஆதாரமான விண்மீன் ஆகும். பூமி உள்பட பல கோள்களும், கோடிக்கணக்கான விண்கற்களும், வால்வெள்ளிகளும், அண்டத்தூசி ஆகியனவும் பல்வேறு கோளப் பாதைகளில் சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரியனின் எடை மட்டுமே சூரிய மண்டலத்தின் நிறையில் 98.6 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள சராசரி தொலைவு சுமார் 149 ,600 ,000 கிலோமீட்டர்கள். சூரியனில் இருந்து ஒரு ஒளிக்கற்றை பூமியை வந்தடைய சுமார் 8 நிமிடங்கள், 19 வினாடிகளில் கடக்கிறது. கதிரவன் பெருமளவில் ஹைட்ரஜன் (சுமார் 74% நிறை, மற்றும் 92% கனவளவு) மற்றும் ஹீலியம் (சுமார் 24% நிறை, 7% கனவளவு) ஆகியவற்றையும், சிறிய அளவில் பிற தனிமங்களான, இரும்பு, நிக்கல், ஆக்சிசன், சிலிக்கன், கந்தகம், மக்னீசியம், கரிமம், நியான், கல்சியம், குரோமியம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. புதன் இது சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள். எனவே இது மிகவும் வெப்பமாக இருக்கும். இதனை ஆங்கிலத்தில் மெர்க்கூரி என்று அழைக்கின்றனர். அனைத்துக் கிரகங்களுக்குள்ளும் புதனே மிகச் சிறிய கிரகமாகும். இக்கிரகத்தின் விட்டம் 4800 கிலோ மீற்றராகும். இது சந்திரனைவிட சிறிய பருமனுடையது. புதன் சூரியனை ஒரு முறை சுற்றிவர 88 செல்கின்றன. நாம் வாழுகின்ற பூமியானது இருபத்து நான்கு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை தன்னைத்தானே சுற்றுவதினால் புவியின் எல்லாப் பகுதிகளுக்கும் இரவு, பகல் மாறி மாறிக்கிடைக்கின்றது. ஆனால் புதனில் நீண்டநாட்களுக்கு இரவும் பகலும் மாறிமாறி வருகின்றன. புதன் சூரியனுக்கு அருகில் இருக்கும்போது கதிரவனின் ஒளி படுகின்ற பகுதியின் வெப்பநிலை சுமார் 400 பாகை செல்ஸியஸ் ஆகவும் தூரத்தில் இருக்கும் வேளையில் ஏறத்தாழ 280 பாகை செல்ஸியஸாகவும் தென்படுகின்றது என வானிலை ஆய்வாளர் கூறுகின்றனர். பூமிக்கும் சூரியனுக்கும் இடையே புதன் ஒரே நேர் கோட்டில் வலம்வரும்போது அது சூரிய பிம்பத்திற்குக் குறுக்காக ஒருசிறு கரும்புள்ளியாக ஊர்ந்து செல்லும். இதனைக் கிரகணம் என்று கூறுவதற்குப் பதிலாக புதசந்திரணம் என்று அழைக்கின்றனர். வெள்ளி சூரியனிலிருந்து இரண்டாவது கோள் வெள்ளி. இது மிகவும் வெப்பமான கோள். இதில் காரீயம் கூட உருகிவிடும். பூமிக்கு மிக அருகில் உள்ள கோள் இது. இதை அதிகாலையில் வானத்தில் பார்க்கலாம். இக்கிரகம் பருமனிலும் திணிவிலும் பூமியை ஓரளவிற்கு ஒத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இதனுடைய விட்டம் 12320 கிலோ மீற்றராகும். இது சூரியனை ஒருமுறை சுற்றிவர 224 நாட்கள் ஆகின்றது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரு நேர்கோட்டில் வரும்போது இதுவும் கரும்புள்ளியாகதான் தோற்றமளிக்கும். இந்நிகழ்வை சுக்கிர சந்திரணம் என அழைப்பார்கள். இது வெகு அபூர்வமாக நிகழுகின்றது. இறுதியாக இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு ஜூன் எட்டாம் திகதி நடைபெற்றது. அடுத்ததாக எதிர்வரும் 2012 ஆண்டு ஜூன் 06 நிகழும் என்று வானியலாளர் கூறுகின்றனர். எட்டு ஆண்டுகள் இடைக்காலத்தைக் கொண்ட இச்சுக்கிரசந்தரணம் இரண்டாயிரத்துப் பன்னிரெண்டுக்குப் பின்னர் நூற்றாண்டு காலப் பகுதியைக் கடந்ததும் நிகழுமாம், இக்கிரகத்தைச் சுற்றி வென்நிற மேகப்படலம் பரிணமித்துள்ளது. இதனால் சுக்கிரனின் மேற்பரப்பைத் துல்லியமாக ஆராய்வதில் சிக்கல் நிலை தோற்றியுள்ளது. பூமி சூரியக் குடும்பத்தில் மூன்றாவது கோள்தான் நமது பூமி. இது ஒரு பாறைக்கோளம். பூமியைக் காற்று மண்டலம் சூழ்ந்துள்ளது. இதன் மேற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு நீர் உள்ளது. காற்றும் நீரும் உள்ளதால் உயிரினங்கள் இங்கு வாழ முடிகிறது. பூமி உருண்டை வடிவமென ஏற்றுக்கொண்டாலும் அது சரியான உருண்டை வடிவாக அமைந்திருக்கவில்லை. இருதுருவங்களும் சிறிது தட்டையாகவும், கற்பனைக் கோடான பூமத்திய ரேகைப்பகுதியில் சற்று பருத்தும் காணப்படுகின்றது.. பூமத்திய ரேகையின் ஊடாகச் செல்லும் விட்டம் 12742 கிலோ மீற்றரரும் துருவங்கள் இரண்டிற்குமிடையில் உள்ள விட்டம் 12713 கிலோ மீற்ரராகும். பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதுடன் 365,2563 நாட்களில் சூரியனையும் ஒரு முறை சுற்றி வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி அளவில் பூமியானது சூரியனுக்கு அருகில் வருகின்றது. பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிவரும் நேரத்தை ஒரு நாளென்றும் சூரியனை ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் ஒரு வருடமென்றும் கொள்ளப்படுகின்றது. பூமி தன்னைத்தானே சுற்றுவதினால் இரவு, பகல் உண்டாவதும், சூரியனைச் சுற்றி வருவதனால் பருவ காலங்களும் ஏற்படுகின்றன. செவ்வாய் செவ்வாய் நான்காவது கோளாகும். இதைச் சிவப்புக் கோள் என்றும் அழைப்பர். செவ்வாயின் ஒருநாள் என்பது 24.5 மணி நேரம் செவ்வாயில் உயிரினங்கள் இருக்கக்கூடும் இதுவரை மெய்ப்பிக்கப்படவில்லை. செவ்வாய் சூரியனை ஒருமுறை சுற்றிவருவதற்கு 687 நாட்கள் எடுக்கின்றது. தன்னைத்தானே சுற்ற 24 மணி 37 நிமிடங்களும் ஆகின்றது. ஆகவே புவியைப் போலவே அங்கும் இரவு பகல் மாறிமாறி உண்டாகும். பூமியின் அச்சு இருபத்து மூன்று அரை பாகை சரிந்துள்ளது. செவ்வாய் தன்னைத்தானே சுற்றும் அச்சு இருபத்து நான்கு பாகையில் சரிந்துள்ளமையினால் பருவகாலம் புவியை ஒத்ததாகவே காணப்படுகிறது. செவ்வாய் சூரியனைச் சுற்ற எடுக்கும் காலம் ஏறக்குறைய பூமி கதிரவனைச் சுற்ற எடுக்கும் காலப்பகுதியைக் காட்டிலும் இருமடங்காக உள்ளதினால் காலநிலையும் இருமடங்காகின்றது. தொலைநோக்கி வாயிலாக செவ்வாயை உற்று நோக்கும் வேளையில் அது செம்மஞ்சள் நிறமாகத் தோன்றும். வியாழன் ஐந்தாவது கோள்தான் வியாழன். இதுவே கோள்களில் மிகப்பெரியது. இதன் பருமன் ஏனைய கிரகங்களை விட பெரிதாக உள்ளதினால் இதனை ‘ராட்சத கிரகம்’ என அழைக்கப்படுகின்றது. வியாழன் பூமியைப் போல 1300 மடங்கு பெரியது. வியாழன் வாயுக்களால் ஆனது. வியாழனில் ஒரு பெரிய சிவப்புப் பகுதி உள்ளது. மெல்லிய மங்கலான வளையம் ஒன்று வியாழனைச் சூழ்ந்துள்ளது. இவ்வளையம் பனிக்கட்டி மற்றும் தூசுகளால் ஆனது. இது தன்னைத்தானே ஒருமுறை சுற்ற 9 மணித்தியாலங்களும் 55 நிமிடங்களும் ஆகின்றது. ஆகவே இந்த ராட்சத கிரகம் பூமியை விட எவ்வளவு வேகமாகச் சுழலுகின்றது என்பதைக் கற்பனை பண்ணிப்பார்க்கலாம். அதேவேளை வியாழன் சூரியனை ஒருமுறை சுற்றிவர பதினொரு வருடங்களும் முந்நூற்று பதினைந்து நாட்களும் எடுக்கின்றது. வியாழனிலிருந்து கிடைக்கப்பெற்ற நிறமாலையை விஞ்ஞானிகள் ஆராய்ந்து பார்த்தபோது அங்கு அம்மோனியா, மெதேன் போன்ற வாயுக்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். நாம் வாழுகின்ற பூமிக்கு ஒரே ஒரு உபகிரகம் உள்ளது. ஆனால் வியாழனுக்கு பதினாறு உபகிரகங்கள் சுற்றிவருவதாக அண்மையில் கண்டிபிடித்துள்ளனர். சனி சனி ஆறாவது கோள். இது இரண்டாவது பெரியகோள். வியாழனைப் போன்று சனியும் வாயுக்களால் ஆனது. சனியைச் சுற்றித் தட்டையான வட்ட வடிவமான மிகப்பெரிய வளையங்கள் உள்ளன. இவற்றை வைத்தே சனியை அடையாளம் காண இயலும். இந்தப் பெரிய சனிக் கோளைத் தண்ணீரில் போட்டால் மிதக்குமாம்! ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஏனெனில் சனியில் உள்ள வாயுக்கள் நீரைவிட (அடர்த்தி குறைந்தவை) இலேசானவை. சனியின் நிறம் மஞ்சள். சூரியனை ஒருமுறை சுறறிவர 29.5 ஆண்டுகள் ஆகின்றன. யுரேனஸ் ஏழாவது கோள் யுரேனஸ். இதுவும் வியாழன் சனியைப் போன்று வாயுக்களால் ஆனதே. இதனைச் சுற்றியும் வளையங்கள் உள்ளன. யுரேனஸ் ஆகும். 1781 ஆண்டுவரை சூரிய குடும்பத்தில் ஆறு கிரகங்களே உள்ளன என்று நம்பியிருந்தனர். வில்லியம் ஹர்ஷா என்னும் விஞ்ஞானியினால் யுரேனஸ் என்ற கிரகம் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டதாம். இதன் விட்டம் 48000 கிலோ மீற்றராகும். தன்னைத்தானே சுற்ற பத்து மணி நாற்பத்து எட்டு நிமிடங்கள் எடுக்கின்றது. சூரியனை ஒருமுறை சுற்ற 84 வருடங்கள் செல்கின்றது. யுரேனெஸ்ஸிற்கு ஐந்து உப கிரகங்கள் உள்ளன. நெப்டியூன் நெப்டியூன் எட்டாவது கோளாகும். இதைத் தொலைநோக்கியில் பார்க்கும்பொழுது நீலம் கலந்த பச்சை நிறத்தில் தெரியும். இக்கிரகம் 1846 ஆண்டு பெர்லின் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்த விஞ்ஞானிகளினால் கண்டுபிடிக்கப்பட்டது. 165 ஆண்டுகளுக்கு ஒருமுறை இது சூரியனைச் சுற்றி வருகின்றது. தன்னைத்தானே சுற்ற பதினைந்து மணி நாற்பது நிமிடங்களும் செல்லும். இக்கிரகம் சூரியனிலிருந்து மிகவும் தொலைவில் நிலைகொண்டுள்ளதினால் எப்பொழுதும் குளிராகவே காணப்படுகின்றது. இதற்கு இரண்டு உபகிரகங்கள் உள்ளன. இவ் உபகிரகங்களில் ஒன்று ஆறு நாட்களுக்கு ஒருமுறை தாய்க்கிரகத்தை எதிர்த்திசையில் வலம் வருகின்றது. நெப்ரியூனை வெறுங்கண்களால் முடியாது. சூரியனுக்கும் ஒரு குடும்பம் வானத்தில் சூரியனை மையமாக வைத்துக்கொண்டு அதனைச் சுற்றிச் சுழன்று வரும் கோள்களை - அவற்றில் முக்கியமாக நம் கண்களுக்குப் புலப்படும் கோள்களை சூரியக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். நாம் வாழுகின்ற பூமியும் சூரிய குடும்பத்தைச் சேர்ந்ததுதான். ஏனெனில் பூமியும் சூரியனை மையமாகக் கொண்டு சுழன்று வருகின்றது. சூரியக் குடும்பத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் கோள்களிடையே ஆச்சரியப்படும் விதத்தில் ஓர் ஒழுங்குமுறை அமைந்திருக்கின்றது. கிரகங்கள் எனப்படும் பெருங்கோள்கள் அனைத்துமே சூரியனின் மத்திய ரேகைத் தடத்தில் சூரியனை வலம் வருகின்றன. பெருங்கோள்கள் அனைத்துமே ஒரே திசையில் சூரியனைச் சுற்றி வலம் வருவது வியப்பூட்டும் விஷயமாகும். யுரேனஸ் என்று குறிப்பிடப்படும் கோளைத் தவிர மற்ற கோள்கள் ஒவ்வொன்றும், கடிகாரமுள் சுற்றும் திசைக்கு எதிர்ப்புறமாக தன்னைத்தானே சுற்றிக் கொள்கின்றன. சூரியனும் அதே திசையில் தன்னைத் தானே சுற்றிக்கொள்கின்றது. சூரியனுக்கு என்று கோள்களினால் ஆன ஒரு குடும்பம் எவ்வாறு தோன்றியிருக்கக் கூடும் என்பது குறித்து பல கருத்துகள் கூறப்படுகின்றன. சூரியனுக்கு ஏற்பட்ட ஒரு பெரிய அதிர்ச்சி காரணமாக சூரியனின் பகுதிகளில் சில சிறு சிறு துண்டுகளாக உடைந்து தனித்தனி கோள்களாக சூரியனை வலம் வரத் தொடங்கின என்பது ஒரு கருத்து. சூரியன் மற்றொரு கோளுடன் மோதியதன் காரணமாக புதுக்கோள்கள் தோன்றி, சூரியனைச் சுற்றத் தொடங்கின என்பது மற்றொரு கருத்து. புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் எச்.டி. 10180 என்ற நட்சத்திரம் குறித்து கடந்த 6 ஆண்டுகளாக சிலியில் உள்ள லாசில்லா என்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 3.6 மீட்டர் டெலஸ்கோப் உதவியுடன் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 7 கிரகங்களுடன் புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு இந்த நிலையில் எச்.டி. 10180 நட்சத்திரத்தை சுற்றி ஒரு புதிய சூரிய குடும்பத்தை கண்டுபிடித்தனர். அதில் 7 கிரகங்கள் உள்ளன. அவற்றில் 5 கிரகங்கள் மிக தெளிவாக தெரிகின்றன. அதில் ஒன்று சனி கிரகம் போன்ற தோற்றத்தில் உள்ளது. இவை தவிர மிக சிறிய அளவில் வெளி கிரகங்களும் உள்ளன. இந்த புதிய சூரிய குடும்பம் பூமியில் இருந்து 127 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. இது தற்போதுள்ள சூரிய குடும்பம் போன்றே உள்ளது. அது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாக விஞ்ஞானி கிறிஸ்டோபே லோவிஸ் தெரிவித்துள்ளார். [1] [2]
பூமியின் அருகில் உள்ள விண்மீன் எது?
சூரியனும்
585
tamil
d419db018
மின்னணுவியல் (Electronics) மின்னணுக்கள் அல்லது மின்னன்கள் வழி மின் ஆற்றலைக் கட்டுபடுத்தும் அறிவியல் புலமாகும். இலத்திரனியல் அல்லது மின்னணுவியல் மின்குமிழ், கடிகாரம், தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, கணினி போன்ற அன்றாட வாழ்வில் பயன்படும் பல கருவிகளின் இயக்கத்துக்குப் பயன்படும் அடிப்படைத் தொழில்நுட்பம் ஆகும். மின்னணுவியல் தகவல்களைத் தேக்கவும் கையாளவும் பயன்படுகிறது. அதாவது, மின்ஆற்றலைக் கொண்டு மின்குறிகைகளை உருவாக்கலாம். மின்குறிகைகளால் தகவல்களை பதிலீடு செய்யலாம். இந்த மின்குறிகைகளை அல்லது தகவல்களை மின்னணுவியல் கருவிகளால் தேக்கலாம் அல்லது கணிக்கலாம். இந்தப் புலத்தில் வெற்றிடக் குழல்கள், திரிதடையங்கள், இருமுனையங்கள், நுண் தொகுப்புச்சுற்றுக்களும் ஒளிமின்னன் கருவிகளும் உணரிகளும் போன்ற செயல்படு மின்கூறுகளும் மின்தடையம், மின்தேக்கி, மின்தூண்டிகள் போன்ற செயலறு மின்கூறுகளால் ஆகிய மின்சுற்றுகளும் பெரும் பங்காற்றுகின்றன. எனவே பொதுவாக மின்னனியல் கருவிகளில் செயல்முனைவான அரைக்கடத்திகளும் செயலறு மின்சுற்று உறுப்புகளும் அமையும். இந்தச் சுற்றே மின்னணுவியல் சுற்று எனப்படுகிறது. மின்னணுவியல் இயற்பியலின் பிரிவாகவும் மின்பொறியியலின் பிரிவாகவும் கருதப்படுகிறது.[1][2] செயல்படு மின்கூறுகளின் நேர்பாங்கற்ற நடத்தையும் அவற்றின் மின்னன்களின் பாய்வைக் கட்டுப்படுத்தும் பண்பும் மிக நலிவுற்ற குறிகை அலைகளைக் கூட வலுப்படுத்த உதவுகின்றன; இப்பயன்பாடு தகவல் பதப்படுத்தல், தொலைத்தொடர்பு, குறிகைச் செயலாக்கம் அல்லது பதப்படுத்தல் ஆகிய துறைகளில் பெரும் பங்காற்றுகிறது. மேலும் இக் கருவிகளை நிலைமாற்றிகளாகவும் பயன்படுத்தலாம்; இப்பயன்பாடு எண்ணிமத் தகவல் பதப்படுத்தலில் பயனாகிறது. ஒருங்கிணைப்புச் சுற்றுத் தொழில்நுட்பங்கள், பொதியல்சுற்றுத் தொழில்நுட்பங்கள், பல்வேறு இணைப்புத் தொழில்நுட்பங்கள் ஆகியவை, மின்சுற்றுப் பலகை]]களின் மின்சுற்றுச் செயல்பாட்டை முழுமையாக்கிக் கலவையான மின்கூறுகள் வழியாக ஓர் ஒருங்கியமாக அல்லது ஓர் அமைப்பாகச் (System) செயல்படச் செய்கின்றன. மின்னியல், மின்பொறியியல், மின்னணுவியல் மின்னணுவியல் என்பது மின்னியல், மின்பொறியியல் ஆகியவற்றிலிருந்து வேறுபட்ட து; மின்பொறியியல் பொதுவாக மின்னாக்கம், மின்செலுத்தம், மின்பகிர்மானம் ஆகியவற்றையும் மின்னழுத்தம் அல்லது மின்னோட்டம்ஆகியவற்றின் நிலைமாற்றல், தேக்கிவைத்தல் பற்றியும் மின் ஆற்றலை பிற ஆற்றல் வடிவங்களுக்கும் மற்ற ஆற்றல் வடிவங்களிலிருந்து மின் ஆற்றலுக்கும் மாற்றுவதைப் பற்றியும் கருப்பொருளாக்க் கொண்டுள்ளது. இவற்றின் கூறுகளாக மின்கம்பிகள், மின் இயக்கிகள், மின்னியற்றிகள், மின்கலங்கள், நிலைமாற்றிகள், உணர்த்திகள், மின்மாற்றிகள், மின்தடையங்கள் அமைகின்றன. மின்னியலில் இருந்தான மின்னணுவியலின் பிரிவினை மின்னணுவியல் மிகைப்பிகள் நலிவுற்ற குறிகைகளின் வீச்சையும் திறனையும் மிகுக்கப் பயன்படுத்தத் தொடங்கிய 1906 இல் இருந்து தொடங்கியது எனலாம். 1950 வரை இதன் முதன்மைப் பயன்பாடு வானொலி சார்ந்த அலைபரப்பிகள், அலைவாங்கிகள் ஆகியவற்றிலும் அதற்குப் பயன்பட்ட வெற்றிடக் குழல்களிலும் மட்டுமே இருந்தமையால் இத்துறை தொடக்கத்தில் "வானொலி தொழில்நுட்பம்" என்றே அழைக்கப்பட்டு வந்தது. இன்று, பெரும்பாலான மின்னணுவியல் கருவிகள் குறைக்கடத்திகளைப் பயன்படுத்தி மின்னன்களைக் கட்டுப்படுத்துகின்றன. குறைகடத்திக் கருவிகளின் அறிவியலும் தொழில்நுட்பமும் திண்மப்பொருள் இயற்பியலின் பிரிவாகக் கருதப்படுகிறது; நடைமுறை இடர்களுக்குத் தீர்வாக மின்னனியல் மின்சுற்றுக்களின் வடிவாக்கமும் உருவாக்கமும் மின்னணுவியல் பொறியியல் துறையாக உருமாறியது. மின்னணுவியல் கிளைப்பிரிவுகள் மின்னணுவியல் கீழுள்ள கிளைப்பிரிவுகளாக அமைகிறது: எண்ணிம அல்லது எண்ணியல் மின்னணுவியல் ஒப்புமை மின்னணுவியல் நுண்மின்னணுவியல் சுற்றதர் வடிவமைப்பு ஒருங்கிணைந்த மின்சுற்றதர்கள் ஒளிமின்னணுவியல் செங்கடத்திக் (அரைக்கடத்திக்) கருவிகள் பொதியல் சுற்றதர்கள் மின்னனியல் உறுப்புகளின் வரலாறு தொடக்கநிலை மின்னனியல்உறுப்புகளாக வெற்றிடக் குழல்கள் (வெம்மின்னணுக் கவாடங்கள்) அமைந்தன.[3] இருபதாம் நூற்றாண்டின் முதல் அரைப்பகுதியில் இவைதாம் மின்னனியல் புரட்சிக்கு வழிவகுத்தன.[4][5] இவை வானொலி, தொலைக்காட்சி, இசைத்தட்டுகள், இராடார் (வீவாணி-வீச்சும் வாக்கும் காணி), நெடுந்தொலைவுத் தொலைபேசி ஆகிய தொழில்நுட்ப அமைப்புகளுக்கும் மேலும் பல நுட்பங்களுக்கும் வழிவகுத்தன. இவை 1980 கள் வரை நுண்ணலை உயர்திறன் செலுத்த்த்துக்கும் தொலைக்கட்சி அலைவாங்கிகளுக்கும் அடிப்படை உறுப்புகளாக அமைந்தன.[6] 1980 களில் இவற்றின் இடத்தைத் திண்மநிலைக்கருவிகள் கைப்பற்றின. சிறப்புப் பயன்பாடுகளான உயர்திறன் வானொலி அலைவெண் மிகைப்பிகளிலும் எதிர்முனைக் கதிர்க்குழல்களிலும் சிறப்பு ஒலியியல் கருவியாகிய கிதார் மிகைப்பிகளிலும் குழிக்காந்த மிகைப்பி போன்ற நுண்ணலைக் கருவிகளிலும் வெற்றிடக் குழல்கள் தாம் இன்றும் பயன்பாட்டில் உள்ளன. 1955 ஏப்பிரலில் IBM 608 எனும் கணக்கீட்டுக் கருவியில் IBM நிறுவனம் முதலில் திரிதடையங்களைப் பயன்படுத்தியது. வணிகச் சந்தையில் புழங்கிய முதல் அனைத்துத் திரிதடையக் கணக்கீட்டுக் கருவி இதுவேயாகும்.[7][8] IBM 608 கணக்கீட்டுக் கருவியில் 3000 க்கும் மேற்பட்ட ஜெர்மேனியத் திரிதடையங்கள் பயன்பட்டன. தாமசு ஜே. வாட்சன் இளவல் IBM பொருள்களில் திரிதடையங்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்ற ஆணையை வழங்கினார். அப்போதிலிருந்தே கணினி தருக்கத்திலும் பிற இணைகருவிகளிலும் திரிதடையங்கள் மட்டுமே பயன்படலாயின. மின்னணுவியல் தொழில்நுட்பத்தின் அடிப்படைக் கருவியான திரிதடையம். கண்டுபிடித்த பின்னரே இத்துறை மாபெரும் வளர்ச்சி பெற்றது.கீழே சில மின்னனியல் வரலாற்று நிகழ்வுகள் தரப்படுகின்றன. 1897 - அணுத் துகள்களில் ஒன்றான மின்னனைக் (electron) ஜெ. ஜெ. தாம்சன். கண்டுபிடித்தார். 1904 - ஜான் அம்புரோசு பிளெமிங் வெப்பமின்னணுக் குழலைக் கண்டுபிடித்தார். இது செயற்பாட்டில் திரிதடையங்ளை ஒத்த மும்முனையம் ஆகும். 1947 - வில்லியம் ஷாக்லி, ஜான் பர்டீன், வால்டர் பிராட்டைன் ஆகியோர் திரிதடையத்தைக் கண்டுபிடித்தனர். 1940-1950 - கணினி உருவாக்கம் 1959 - ஜாக் கில்பி ஒருங்கிணைந்த சில்லு கண்டுபிடித்தார். 2000 - மீநுண் திரிதடையம் மின்னணுவியல் கருவிகளும் உறுப்புகளும் thumbnail| மின்னணு உறுப்புகள் மின்னணுக் கூறு என்பது ஒரு இலத்திரனியல் அமைப்பில் எதிர்பார்க்கப்படுகின்ற வகையில் அவ்வமைப்பு செயல்பட ஏதுவாக இலத்திரன்களையோ அதன் தொடர்புடைய புலங்களையோ பாதிக்கின்ற உளதாம் பொருளாகும். இக்கூறுகள் பொதுவாக மற்றக்கூறுகளுடன் குறிப்பிட்ட செயற்பாட்டை (காட்டாக பெருக்கி, வானொலி பெறும் கருவி, அல்லது அலையியற்றி) நிகழ்த்துமாறு இணைக்கப்பட்டிருக்கும். (பொதுவாக மின்சுற்றுப் பலகையில் பற்றவைக்கப்பட்டிருக்கும்.) மின்னணுக்கூறுகள் தனியாகவோ அல்லது சற்றே சிக்கலான ஒருங்கிணைந்த சில்லு போன்ற தொகுதிகளாகவோ பொதியப்படலாம். சில பரவலான மின்னணுக்கூறுகள்: மின்தேக்கிகள், மின்தூண்டிகள், மின்தடையங்கள், இருமுனையங்கள், திரிதடையங்கள் ஆகியனவாகும். மின்னணுக்கூறுகளை செயல்படு கூறுகள் என்றும் ( திரிதடையங்கள்,இருமுனையங்கள்) செயலறு கூறுகள் (மின்தடையங்கள்,மின்தேக்கிகள்) வகைப்படுத்தப்படுகின்றன. வெற்றிடக் குழல்கள் துவக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இலத்திரனிய கூறுகளில் ஒன்றாகும். இவை நடு1980கள் வரை முதன்மை செயல்படு கூறுகளாக இருந்தன.[6] 1980களிலிருந்து திண்மநிலைக் கருவிகள் இவற்றிற்கு மாற்றாக அமைந்துள்ளன. இன்றும் வெற்றிடக் குழல்கள் உயராற்றல் பெருக்கிகள், எதிர்முனைக் கதிர்க்குழாய்கள், வல்லுநர் ஒலிக்கருவிகள், நுண்ணலைக் கருவிகள் போன்ற சில சிறப்புப் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. மின்சுற்று வகைகள் மின்சுற்றுக்களும் இலத்தினியக் கூறுகளும் இருவகையாகப் பிரிக்கப்படலாம்: அலைமருவி மற்றும் எண்மருவி. ஒரு குறிப்பிட்ட கருவியில் இவற்றில் ஏதேனும் ஒருவகையிலோ அல்லது இரண்டும் கலந்துமோ பயன்படுத்தப்படலாம். ஒப்புமை மின்சுற்றுக்கள் வானொலிப் பெட்டிகள் போன்ற பெரும்பாலான அலைமருவி இலத்தினிய சாதனங்கள் சில அடிப்படையான மின்சுற்றுக்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இவற்றில் மின் அழுத்தத்தின் வீச்சு எவ்வித இடைவெளியும் இன்றி தொடர்ந்திருக்கும். எண்ணிம முறை (எண்மருவி)யில் மின் அழுத்தம் படிப்படியாக இடைவெளியுடன் இருக்கும். ஒரேஒரு இலத்தினியக் கூறு கொண்ட அலைமருவிச் சுற்றிலிருந்து பல கூறுகளை அடக்கிய சிக்கலான சுற்றுக்கள் வரை பல்லாயிரக்கணக்கான அலைமருவிச் சுற்றுக்கள் உள்ளன. இவை சில நேரங்களில் நேரியல் சுற்றுக்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. இருப்பினும் மின்னதிர்வு கலக்கிகள், அலைமாற்றிகள் போன்றவற்றில் இவை நேரியல் அல்லாத தன்மையைக் கொண்டுள்ளன. அண்மைக்கால சுற்றுக்களில் முழுமையும் அலைமருவி சுற்றுக்கள் காணப்படுவதில்லை. பெரும்பாலும் எண்மச் சுற்றுக்களே காணப்படுகின்றன.சில குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமே அலைமருவி முறையில் அமைக்கப்படுகின்றன; இவை கலப்பு மின்சுற்றுக்கள் எனப்படுகின்றன. எண்ணிம மின்சுற்றுக்கள் எண்மருவி சுற்றுக்களில் மின்னழுத்தம் பலதனித்தனி மதிப்புகளில் இருக்கும். காட்டாக, 1 வோல்ட், 1.5 வோல்ட், 2 வோல்ட் என்று பயன்படுத்தப்படும். இவற்றிற்கு இடையேயான 1.25 வோல்ட் போன்றவை இருக்காது. பூலியன் ஏரணம் என்ற கணிதவகையின் நிகழ் சார்பாள அமைப்பாக இவை விளங்குகின்றன. அனைத்து எண்ணிம கணினிகளும் இந்த ஏரணத்தின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. பல எண்ணிம மின்சுற்றுக்கள் ஈரியல் எண்முறையில் இரண்டு மின்னழுத்த நிலைகளுடன், "0" மற்றும் "1" இயங்குகின்றன. பெரும்பாலும் ஏரணம் "0" கீழ்நிலை மின்னழுத்தமாகவும் ( "தாழ்" எனப்படும்) ஏரணம் "1" உயர்நிலை மின்னழுத்தமாகவும் ( "உயர்" எனப்படும்) உள்ளது. கணினிகள், இலத்திரனிய கைக்கடியாரங்கள், நிரலேற்பு தருக்கக் கட்டுப்படுத்திகள் எண்ணிம முறை மின்சுற்றுக்களைக் கொண்டு உருவாக்கப்படுவன ஆகும். எண்ணிமச் சுற்றதரின் கட்டமைப்புக் கூறுகள்: தருக்க அல்லது அளவையியல் வாயில்கள் கூட்டிகள் Flip-flopகள் எண்ணிகள் செயலாக்கப் பதிவகங்கள் பன்மைப்படுத்திகள் சுகிமிடு தொடங்கிகள் எண்ணிம உயர்நிலை ஒருங்கிணைப்புக் கருவிகள்: நுண்செயலிகள் நுண்கட்டுபடுத்திகள் சிறப்புப் பயன்பட்டு ஒருங்கிணைந்த சுற்றதர்கள் (ASIC) எண்ணிமக் குறிகைச் செயலாக்கி (DSP) கள நிரலாக்க வாயில் அணிகள் (FPGA) வெப்பச் சிதர்வும் மேலாண்மையும் இவற்றையும் பாக்க இலத்திரனியல் கலைச்சொற்கள் மின்காந்தவியல் தலைப்புகள் பட்டியல் மேற்கோள்கள் பகுப்பு:மின்னணுவியல்
திரிதடையங்களைப் பயன்படுத்திய முதல் நிறுவனம் எது?
IBM
4,171
tamil
c29e29ab6
அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் ( Alexander Graham Bell, மார்ச் 3, 1847 - ஆகஸ்ட் 2, 1922) ஓர் அறிவியலாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர், ஆசிரியர் மற்றும் அறிவியல் அறிஞர் ஆவார். தொலைபேசியைக் கண்டுபிடித்ததற்காக அறியப்படுகிறார். தனது இளமையில் பிரித்தானியக் குடிமகனாக இருந்தார். பின்னர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்."[1][2] இவரது தாயாரும் மனைவியும் செவிடராதலினால் இவரது ஆய்விற்கு இது ஓர் உந்துசக்தியாக அமைந்திருக்கலாம்.[3] இவரது ஆய்வுகள் ஊடாக 1876 ஆம் ஆண்டு தொலைபேசி உருவாக்கப்பட்டது. இவர் பெல் தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார். வாழ்க்கை இளமை அலெக்சாண்டர் பெல் ஸ்கொட்லாந்தில் எடின்பேர்க்கில் 3 மார்ச் 1847 ஆம் ஆண்டு பிறந்தார்.[4] அவருடைய குடும்ப நண்பரான அலெக்சாண்டர் கிரகாம் என்பவரின் மேல் மிகுந்த மதிப்பு கொண்டு அவருடைய பெயரையும் சேர்த்து அலெக்சாண்டர் கிரகாம் பெல் என்று இவருக்குப் பெயர் சூட்டப்பட்டது.[5][N 1][6] அலெக்சாண்டருக்கு மெல்வில்லி ஜேம்ஸ் பெல் (1845–70) , எட்வர்டு ஜேம்ஸ் பெல்(1848–67) என்ற இரண்டு சகோதரர்கள். இவர்கள் இருவரும் காசநோயால் மரணமடைந்து விட்டனர்.[7] இவருடைய தந்தை அலெக்சாண்டர் மெல்வில்லி பெல் ஒரு பேராசிரியர். தாயார் எலிசா கிரேஸ் ஆவார்.[N 2] லண்டனில் வசித்த அவருடைய தாத்தா, டப்ளினில் உள்ள அவருடைய மாமா, எடின்பர்க்கில் உள்ள அவருடைய தந்தை அலெக்சாண்டர் மெல்வில்லி பெல் ஆகிய அனைவரும் பணி முறையாக நாவன்மை பயிற்றுவிப்பவர்களாகத் (Professed elocutions) திகழ்ந்து வந்தனர். கண்பார்வை அசைவுகளினால் பல்வேறு உணர்வுகளை எவ்வாறு காட்டுவது? உதடுகளின் அசைவைக் கொண்டு ஒருவர் பேசுவதைக் காது கேளாதோர் எவ்வாறு புரிந்து கொள்வது? என்பதைப் பற்றியெல்லாம் பெல்லின் தந்தை பல நூல்களை எழுதியுள்ளார்.[8][9] எட்டு வயதிலேயே கிரகாம் நன்றாகப் பியானோ வாசிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார்.[8] பத்து வயதான போது அவருக்குப் பள்ளி செல்ல நாட்டமில்லாமல் போனது.[10] இலத்தீன், கிரேக்க மொழிகளைப் படிப்பதைவிட பியானோ வாசிப்பதிலும், ஒலி அலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் தனது நேரத்தைப் போக்கினார்[11] . பேச்சை மின் ஒலியாக மாற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது வந்த காது கேளாத பெண்ணை விரும்பி அவளையே திருமணம் செய்துகொண்டார். பணிகள் கிரகாம் பெல்லின் குடும்பம் கனடாவிற்குக் குடி பெயர்ந்தது.[13] போஸ்டன் நகரத்தில் வசித்த போது காது கேளாதோர் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி தருவதற்காக பெல் ஒரு பள்ளிக் கூடத்தை ஏற்படுத்தினார்.[14][15][16] அதில் பேச்சுமுறை பற்றிய அடிப்படைகளைக் கற்பித்தார்[17] .அவரது ஆய்வுமுறை, அறிவாற்றல் எங்கும் பரவியதால், பாஸ்டன் பலகலைக் கழகம் பேச்சு அங்கவியல் பேராசிரியராக இவரை பணியில் அமர்த்தியது. ஆய்வு பியானோவில் ஒலி எழுப்பி மின்சாரம் மூலமாக அந்த இசையை ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அணுப்பினார் பெல். தந்தி முறையில் வெறும் ஒலிகள் மட்டுமே அனுப்பப்பட்டன. பேச்சுகளையும் அந்த முறையில் அனுப்பலாமே என்று கிரகாமுக்கு 18 வயதிலேயே தோன்றியது. அதனால் அந்த முயற்சிகளில் ஈடுபடார்[18] . அக்காலத்தில் மனிதனின் பேச்சொலிகளை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு தந்திகள் மூலம் அனுப்பப்பட்டு வந்தது. அந்த முறைகள் இவருடைய ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாயிருந்தன. 1875 இல் இந்த முயற்சிகள் ஓரளவு வெற்றி பெற்றன. முதலில் தெளிவில்லாத பேச்சொலிகளை அனுப்ப முடிந்தது. 1876 ஆம் ஆண்டு உலகின் முதல் தொலைபேசி பேசியது பெல் அவருடைய உதவியாளர் வாட்சன் என்பவரிடம் பேசினார். அவர் முதலில் தொலைபேசியில் பேசிய சொற்றொடர் " வாட்சன் இங்கே வாருங்கள். உங்களைக் காண வேண்டும்."(Watson, come here, I want to see you)என்பதுதான்.[19] இந்த சொற்களை வாட்சனால் தெளிவாகக் கேட்க முடிந்தது.[20] ஆனால் பெல் கண்டுபிடித்த தொலைபேசியைப் பற்றி யாரும் அக்கறை கொள்ளவில்லை அதனால் அவர் மிகவும் சோர்வடைந்தார். பிலெடெல்பியாவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் தனது தொலைபேசியைப் பார்வைக்கு வைத்தார். அங்கு வந்த பிரேசில் நாட்டு மன்னர் அதை வியப்போடு எடுத்துப் பயன்படுத்திய பின்னர் தான் தொலைபேசியின் பெருமை எங்கும் பரவியது. அமெரிக்காவில் உள்ள தனது மாமனாரின் உதவியுடன் 1876 மார்ச்சு 7 ஆம் தேதி தொலைபேசிக்கான காப்புரிமையைப் பெற்றார்.[21] [22][23] 1877 இல் தன் உதவியாளர் வாட்சனுடன் சேர்ந்து "பெல் தொலைபேசி கம்பனி" என்ற பெயரில் தொலைபேசி நிறுவனம் ஒன்றை நிறுவினார். தொலைபேசியைக் கண்டுபிடித்ததற்காக பிரெஞ்சு அரசு அவருக்கு வழங்கிய 50,000 பிராங்க் பரிசுத் தொகையைக் கொண்டு வோல்டா ஆய்வுச் சாலை (Volta Laboratory) என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவினார்.[24] கண்டு பிடிப்புகள் பெல் தொலைபேசியுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அரசு நிறுவனத்தின் மூலம் பொட்டோ போன்[25][26][27], ஆடியோ மீட்டர்[28][29][30][31], மெட்டல் டிடக்டர்[32], இன்டக்‌ஷன் பேலன்ஸ், வாக்ஸ் ரிகார்டிங் சிலிண்டர், கிராமபோன் போன்ற கருவிகளைக் கண்டு பிடித்தார். பெல் விமானம் கண்டு பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால் அது அவருக்கு வெற்றி தரவில்லை. ஆனால் சில கண்டுபிடிப்புகளைச் செய்தார். விமானத்தின் எய்லிரான் என்ற பகுதியைக் கண்டுபிடித்தவர் பெல் ஆவார். பிற்காலத்தில் கடல் விமானத்தைச் சீர்திருத்தி அமைப்பதில் வெற்றி கண்டார்.[33] ஆடுகள் வளர்க்கும் முயற்சியில் புதுமையைப் புகுத்தினார். ஒவ்வொரு முறையும் இரட்டைக் குட்டிகளை ஈடும் பெண் ஆடுகளை உருவாக்கவும் திட்டமிட்டார். பாலைவனங்களில் நாடுகாண முற்படும் படைவீரர்களுகு, காற்றிலுள்ள மிகுந்த ஈரத்தை வடிகட்டி உதவக் கூடிய அரிய கருவியைக் கண்டுபிடித்தார். காது கேளாதோருக்குப் பேச்சுப் பயிற்சியை வளர்ப்பதற்கான சங்கம் ஒன்றை நிறுவினார்[34]. கண் தெரியாதவர்களுக்குப் பிரெய்ல் முறையைக் கண்டு பிடித்த ஹெலன் கெல்லருக்கு பெல் பல உதவிகளைச் செய்துள்ளார்.[35] ஒலியியல் அடிப்படையில் உலக ஆங்கிலம் என்பதை உருவாக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினார். தனிப்பட்ட முறையிலும், பிற அறிவியலறிஞர்களுடன் சேர்ந்தும் 59 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை பெல் பெற்றுள்ளார் என்பது அவருடைய வரலாற்றில் மிக முக்கியமான அம்சமாகும். சிறப்புகள் 1882 இல் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். 1888 இல் உலக புவியியல் கழகத்தை(National Geograph Society) ஆரம்பித்த உறுப்பினர்களில் ஒருவராகவும், அந்தக் கழகத்தின் இரண்டாவது தலைவராகவும் விளங்கினார்.[36] He has been described as one of the most influential figures in human history.[37] பிரெஞ்சு அரசு வழங்கிய 'லெஜியன் ஆப் ஆனர்'(Legion of Honour) விருது Acedemic Francise விருது[38] வோல்டா பரிசு[39][40][41][42][43][44] ராயல் சொசைட்டி ஆப் ஆர்ட்ஸ்(லண்டன்), ஆல்பெர்ட் பதக்கம்(1902) உர்ஸ்பர்க் பல்கலைக் கழகம் வழங்கிய முனைவர் பட்டம் எடிசன் பதக்கம்(1914) போன்ற பல்வேறு சிறப்புகளையும் விருதுகளையும் பெற்றார். மறைவு அமெரிக்காவில் உள்ள பாடக் என்ற ஊரில் 1922 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி அலெக்சாண்டர் கிரகாம் பெல் காலமானார்.[45] அவர் மறைந்த தினத்தன்று அமெரிக்காவில் உள்ள தொலைபேசிகள் அனைத்தும் 5 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.[46] காப்புரிமைகள் Improvement in Transmitters and Receivers for Electric Telegraphs, filed March 1875, issued April 1875 (multiplexing signals on a single wire) Improvement in Telegraphy, filed February 14, 1876, issued March 7, 1876 (Bell's first telephone patent) Improvement in Telephonic Telegraph Receivers, filed April 1876, issued June 1876 Improvement in Generating Electric Currents (using rotating permanent magnets), filed August 1876, issued August 1876 Electric Telegraphy (permanent magnet receiver), filed January 15, 1877, issued January 30, 1877 Apparatus for Signalling and Communicating, called Photophone, filed August 1880, issued December 1880 Aerial Vehicle, filed June 1903, issued April 1904 அடிக்குறிப்பு மேற்கோள்கள் துணை நூல்கள் Alexander Graham Bell (booklet). Halifax, Nova Scotia: Maritime Telegraph & Telephone Limited, 1979. Ayers, William C., Therese Quinn and David Stovall, eds. The Handbook of Social Justice in Education. London: Routledge, 2009. ISBN 978-0-80585-928-7. Bell, Alexander Graham. Washington, D.C.: Sanders Printing Office, 1898. Bethune, Jocelyn. Halifax, Nova Scotia, Canada: Nimbus Publishing, 2009. ISBN 978-1-55109-706-0. Bruce, Robert V. . Ithaca, New York: Cornell University Press, 1990. ISBN 0-8014-9691-8. Black, Harry. Canadian Scientists and Inventors: Biographies of People who made a Difference. Markham, Ontario, Canada: Pembroke Publishers Limited, 1997. ISBN 1-55138-081-1. Boileau, John. Fastest in the World: The Saga of Canada's Revolutionary Hydrofoils. Halifax, Nova Scotia, Canada: Formac Publishing Company Limited, 2004. ISBN 0-88780-621-X. Dunn, Andrew. Alexander Graham Bell (Pioneers of Science series). East Sussex, UK: Wayland (Publishers) Limited, 1990. ISBN 1-85210-958-0. Eber, Dorothy Harley. Genius at Work: Images of Alexander Graham Bell. Toronto, Ontario, Canada: McClelland and Stewart, 1982. ISBN 0-7710-3036-3. Evenson, A. Edward. The Telephone Patent Conspiracy of 1876: The Elisha Gray— Alexander Bell Controversy. Jefferson, North Carolina: McFarland Publishing, 2000. ISBN 0-7864-0138-9. Gray, Charlotte. Reluctant Genius: Alexander Graham Bell and the Passion for Invention. New York: Arcade Publishing, 2006. ISBN 1-55970-809-3. Grosvenor, Edwin S. and Morgan Wesson. Alexander Graham Bell: The Life and Times of the Man Who Invented the Telephone. New York: Harry N. Abrahms, Inc., 1997. ISBN 0-8109-4005-1. Groundwater, Jennifer. Alexander Graham Bell: The Spirit of Invention. Calgary, Alberta, Canada: Altitude Publishing, 2005. ISBN 1-55439-006-0. Lusane, Clarence. Hitler's Black Victims: The Historical Experiences of Afro-Germans, European Blacks, Africans, and African Americans in the Nazi Era. Hove, East Sussex, UK: Psychology Press, 2003. ISBN 978-0-415932-950. Hart, Michael H. The 100: A Ranking of the Most Influential Persons in History. New York: Citadel, 2000. ISBN 0-89104-175-3. Mackay, James. Sounds Out of Silence: A life of Alexander Graham Bell. Edinburgh: Mainstream Publishing Company, 1997. ISBN 1-85158-833-7. MacKenzie, Catherine. Whitefish, Montana: Kessinger Publishing, 2003. ISBN 978-0-7661-4385-2. MacLeod, Elizabeth. Alexander Graham Bell: An Inventive Life. Toronto, Ontario, Canada: Kids Can Press, 1999. ISBN 1-55074-456-9. Matthews, Tom L. Always Inventing: A Photobiography of Alexander Graham Bell. Washington, D.C.: National Geographic Society, 1999. ISBN 0-7922-7391-5. Micklos, John Jr. Alexander Graham Bell: Inventor of the Telephone. New York: Harper Collins Publishers Ltd., 2006. ISBN 978-0-06-057618-9. Miller, Don and Jan Branson. Washington, D.C.: Gallaudet University Press, 2002. ISBN 978-1-56368-121-9. Mims III, Forest M. Fiber Optics Weekly Update(Information Gatekeepers), February 10–26, 1982, pp.6–23. Mullett, Mary B. New York: Rogers and Fowle, 1921. Parker, Steve. Alexander Graham Bell and the Telephone(Science Discoveries series). New York: Chelsea House Publishers, 1995. ISBN 0-7910-3004-0. Petrie, A. Roy. Alexander Graham Bell. Don Mills, Ontario: Fitzhenry & Whiteside Limited, 1975. ISBN 0-88902-209-7. Phillips, Allan. Into the 20th Century: 1900/1910 (Canada's Illustrated Heritage). Toronto, Ontario, Canada: Natural Science of Canada Limited, 1977. ISBN 0-919644-22-8. Ross, Stewart. Alexander Graham Bell (Scientists who Made History series). New York: Raintree Steck-Vaughn Publishers, 2001. ISBN 0-7398-4415-6. Shulman, Seth. The Telephone Gambit: Chasing Alexander Bell's Secret. New York: Norton & Company, 2008. ISBN 978-0-393-06206-9. Toward, Lilias M. Toronto, Ontario, Canada: Methuen, 1984. ISBN 0-458-98090-0, ISBN 978-0-458-98090-1. Town, Florida. Alexander Graham Bell. Toronto, Ontario, Canada: Grolier Limited, 1988. ISBN 0-7172-1950-X. Tulloch, Judith. The Bell Family in Baddeck: Alexander Graham Bell and Mabel Bell in Cape Breton. Halifax, Nova Scotia, Canada: Formac Publishing Company Limited, 2006. ISBN 978-0-88780-713-8. Walters, Eric. The Hydrofoil Mystery. Toronto, Ontario, Canada: Puffin Books, 1999. ISBN 0-14-130220-8. Webb, Michael, ed. Alexander Graham Bell: Inventor of the Telephone. Mississauga, Ontario, Canada: Copp Clark Pitman Ltd., 1991. ISBN 0-7730-5049-3. Winfield, Richard. Never the Twain Shall Meet: Bell, Gallaudet, and the Communications Debate. Washington, D.C.: Gallaudet University Press, 1987. ISBN 0-913580-99-6. Wing, Chris. Alexander Graham Bell at Baddeck. Baddeck, Nova Scotia, Canada: Christopher King, 1980. Winzer, Margret A. Washington, D.C.: Gallaudet University Press, 1993. ISBN 978-1-56368-018-2. வெளியிணைப்புகள் erected in honor both Bell and the Invention of the Telephone in Brantford, Ontario's Alexander Graham Bell Gardens at the at the comprises a selection of 4,695 items (totaling about 51,500 images) containing correspondence, scientific notebooks, journals, blueprints, articles, and photographs documenting Bell's invention of the telephone and his involvement in the world's first telephone company, his family life, his interest in the education of the deaf and his aeronautical and other scientific works Photophone, very clear description; published as "On the Production and Reproduction of Sound by Light" in the American Journal of Sciences, Third Series, vol. XX, No. 118, October 1880, pp.305–324 and as "Selenium and the Photophone" in Nature, September 1880 இவற்றையும் பார்க்கவும் தொலைபேசி பகுப்பு:அமெரிக்க அறிவியலாளர்கள் பகுப்பு:அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர்கள் பகுப்பு:1847 பிறப்புகள் பகுப்பு:1922 இறப்புகள் பகுப்பு:பிரித்தானியக் கண்டுபிடிப்பாளர்கள் பகுப்பு:அமெரிக்க இயற்பியலாளர்கள் பகுப்பு:அமெரிக்க அறியொணாமையியலாளர்கள் பகுப்பு:வானூர்தியியல் முன்னோடிகள் பகுப்பு:கனடிய இயற்பியலாளர்கள்
தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் யார்?
அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்
0
tamil
2a5ba78e2
"முதல் உலகப்போர் என்பது உலகம் தழுவிய (...TRUNCATED)
"முதலாம் உலகப்போர் எப்பொழுது துவங்கி(...TRUNCATED)
1914ம்
1,070
tamil
10ff95f4c
"இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் (...TRUNCATED)
"இந்தியாவில் மனித உரிமை ஆணையம் எப்போ(...TRUNCATED)
அக்டோபர் 12, 1993
90
tamil
7a6e807d7
"நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 சூலை 1918 – 5 (...TRUNCATED)
"நெல்சன் மண்டேலா எத்தனை ஆண்டுகள் சிற(...TRUNCATED)
27
494
tamil
End of preview.