மேலச்சொக்கநாதபுரம் மேலச்சொக்கநாதபுரம் (ஆங்கிலம்:Melachokkanathapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டத்தில், போடிநாயக்கனூரிலிருந்து 18 கிமீ தொலைவில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், தமிழ்நாடு - கேரளா எல்கை கோட்டில் அமைந்துள்ள பேரூராட்சி ஆகும். பேரூராட்சியில் முக்கிய சுற்றுலா தளமாக போடி மெட்டு அமைந்துள்ளது. மேலும் இப்பேரூராட்சியில் முக்கிய நீர் ஆதாரமாக கூவலிங்கம் ஆறு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இப்பேரூராட்சி 12,836 மக்கள்தொகையும், 28 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 64 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. மெலட்டூர் மெலட்டூர் (ஆங்கிலம்:Melattur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இதன் பழைய பெயர் மிலட்டூர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7815 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மெலட்டூர் மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மெலட்டூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மேட்டுப்பாளையம் (திருச்சிராப்பள்ளி) மேட்டுப்பாளையம் (ஆங்கிலம்:Mettupalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7,715 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மேட்டுப்பாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியது. மேட்டுப்பாளையம் பேரூராட்சி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் வடகிழக்கில் கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. முக்கிய தொழில் விவசாயம். நகை செய்யும் தொழில் இங்கு சிறப்பானது. மேட்டூர் மேட்டூர் ("Mettur"), என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை நகராட்சி ஆகும். காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பெரிய அணை இங்குள்ளது. அது இந்நகரின் பெயர் கொண்டு மேட்டூர் அணை என அழைக்கப்படுகிறது. இந்நகரின் வாழ்வாதாரமாக அவ்வணை விளங்குகிறது. இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 153 மீட்டர் (501 அடி) உயரத்தில் இருக்கின்றது. காவிரி ஆற்று படுகையில் உள்ள மக்கள் ஆற்று நீரின் ஏற்ற இறக்கத்தினால் மேடான பகுதிக்கு இடம் பெயர்ந்து வாழ தொடங்கினார்கள், மேடான பகுதியில் இருக்கும் ஊர் என்பதால் மேட்டூர் என அழைக்கப்படுகிறது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 53,790 மக்கள் இவ்வூரில் வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மேட்டூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% என்பதைவிட அதிகமாகும். மேட்டூரின் மொத்த மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர். மூவரசம்பேட்டை மூவரசம்பேட்டை (ஆங்கிலம்:Moovarasampettai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். நங்கநல்லூர், திருசூலம், மடிப்பாக்கம், கீழ்கட்டளை ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6084 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். மூவரசம்பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 78% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மூவரசம்பேட்டை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். முதுகுளத்தூர் முதுகுளத்தூர் நகராட்சி (ஆங்கிலம்:"Mudukulathur"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டத்தில் இருக்கம் நகராட்சி ஆகும். இது இராமநாதபுரத்திலிருந்து 45 கிமீ தொலைவிலும், பரமக்குடியிலிருந்து 25 கிமீ தொலைவிலும் உள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகராட்சியில் 3,559 வீடுகளும், 14,789 மக்கள்தொகையும் கொண்டது. இது 23.10 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 87 தெருக்களும் கொண்ட இந்த நகராட்சியானது முதுகுளத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இங்கு நெல் (பாரம்பரிய நெல் ரகங்கள்), பருத்தி, மிளகாய் அதிகமாக விளைகின்றன. இது வறட்சி மாவட்டம் என்பதால் இங்கு சீமைக் கருவேல மரம் (விறகுகளால் தயாரிக்கப்படும் அடுப்புக்கரி தயாரிக்கும் பொருட்டு) முகனையாக வளர்க்கப்படுகிறது. முருகன்பாளையம் முருகன்பாளையம் (ஆங்கிலம்:Muruganpalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரியம் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,431 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். முருகன்பாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 55% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. முருகன்பாளையம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஸ்தாயி ஸ்தாயி (அல்லது "மண்டிலம்") என்பது கருநாடக இசையில் ஏழு ஸ்வரங்களும் நிற்கும் இடத்தை (அல்லது நிலையை)க் குறிக்கும். ஷட்ஜம் முதல் நிஷாதம் வரையிலுள்ள எல்லையை ஒரு ஸ்தாயி என்கிறோம். இது மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1. மந்திரஸ்தாயி (மெலிவு மண்டிலம்) - ஆதார மத்திய ஸ்தாயி ஆகிய ஸட்ஜ சுரத்திலிருந்து கீழ் நோக்கி வரும் "நி த ப ம க ரி ஸ" என்ற ஏழு சுரங்களும் இதில் அடங்கும். 2. மத்தியஸ்தாயி (சமன் மண்டிலம்) - ஆதார மத்திய ஸ்தாயி ஆகிய ஸட்ஜ சுரத்திலிருந்து மேல் நோக்கி போகும் "ஸ ரி க ம ப த நி" வரையிலான ஏழு சுரங்களும் இதில் அடங்கும். 3. தாரஸ்தாயி (வலிவு மண்டிலம்) - இது ஸட்ஜ சுரத்திலிருந்து அதற்கு மேலிருக்கும் "ரி க ம ப த நி" வரையிலான ஏழு சுரங்களும் இதில் அடங்கும். தமிழிசை முறையில் மனிதனுடைய தொண்டையினால் சாதாரணமாகப் பாடக் கூடிய அளவைக் கொண்ட 14 சுரங்களை உடைய நிலையே மூன்று ஸ்தாயிகளென வழங்கியிருக்கின்றார்கள். எமது வழக்கத்தில் இருந்து வரும் கீர்த்தனைகள், கிருதிகள், வர்ணங்கள், மற்றைய உருப்படிகள் யாவும் மேற்கூறிய ஸ்தாயி நிலையிலேயே அமைக்கப்பட்டுள்ளன. தக்க சாரீரமுடைய ஒருவர் 7 சுரங்களை ஒரு நிலையைக் கொண்ட மூன்று ஸ்தாயிகளிலும் பாடுவதாயினும், தாரஸ்தாயியில் நின்று பாட முடியாது. அவ்வாறு பாடினும் அது செவிக்கு இன்பம் அளிக்காது என்பது பொது அனுபவம். ஆனால் எவ் விதிக்கும் விதிவிலக்குகள் இருப்பது போல 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த "ஆத்மநாத பாகவதர்", "ஜன்ஜாமிர்தம் சுப்பராயர்" ஆகிய சில திறமை மிக்க பாடகர்கள் வரப் பிரசாதமான சாரீரத்தைப் பெற்றிருந்தமையால் 3 ஸ்தாயிகளிலும் இலகுவாக கானம் இசைக்கக் கூடியவர்களாக விளங்கினார்கள். பேரியாழிலே மெலிவு, சமன், வலிவு என்னும் மூன்று மண்டிலங்களும் அமைந்திருந்தன என்று சுவாமி விபுலாநந்தர் தமது யாழ்நூல் என்னும் நூலில் கூறுகின்றார். நடுவட்டம் நடுவட்டம் (ஆங்கிலம்:Naduvattam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1953 மீட்டர் (6407 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,706 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். நடுவட்டம் மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 55% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நடுவட்டம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். செங்கிஸ் கான் செங்கிஸ் கான் அல்லது தெமுசின் போர்சிசின் ("Genghis Khan"; – ஆகஸ்ட் 18, 1227) என்பவர் மங்கோலியப் பேரரசைத் தோற்றுவித்த மன்னராவார். கி.பி. 1206 இல் மங்கோலியத் துருக்கிய இனக்குழுக்களை இணைத்து மங்கோலியப் பேரரசை இவர் அமைத்தார். உலக வரலாற்றின் மிகவும் குறிப்பிடத்தக்க இராணுவத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரது இறப்புக்குப் பிறகு இவரது அரசு உலகின் மிகப்பெரிய ஒன்றிணைந்த நிலப் பேரரசு ஆனது. இவர் வடகிழக்கு ஆசியாவின் நாடோடிப் பழங்குடியினர் பலரை இணைத்து, அதன் மூலமாக ஆட்சிக்கு வந்தார். பேரரசு தாபகம் மற்றும் "செங்கிஸ் கான்" ஆகப் பறைசாற்றப்பட்ட பிறகு பெரும்பகுதி ஐரோவாசியாவை வெற்றிகொண்ட மங்கோலியப் படையெடுப்புளைத் தொடங்கினார். இவரது வாழ்நாளில் ஆரம்பிக்கப்பட்ட படையெடுப்புகள் கருப்பு சீனா, காக்கேசியா, குவாரசமியப் பேரரசு, மேற்கத்திய சியா மற்றும் சின் வம்சாவளியினருக்கு எதிரானவை உள்ளிட்டவையாகும். இந்தப் படையெடுப்புகளில் முக்கியமாகக் குவாரசமியா மற்றும் மேற்கத்திய சியாவின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல உள்ளூர் மக்கள் பெரிய அளவில் படுகொலை செய்யப்பட்டனர். இவரது வாழ்வின் இறுதிக்கட்டத்தில், மங்கோலியப் பேரரசானது மத்திய ஆசியா மற்றும் சீனாவின் கணிசமான பகுதிகளை ஆக்கிரமித்திருந்தது. 1 இலட்சம் படைவீரர்களைக் கொண்ட இவரது இராணுவம் 1,000 இலட்சம் மக்களைக் கொண்ட பேரரசை உருவாக்கியது. ஏராளமான நிலப்பகுதிகளைக் கட்டுப்படுத்தியதன் காரணமாக செங்கிஸ் கான் உலக வரலாற்றிலேயே மிகப் பணக்கார மனிதராகவும் கருதப்படுகிறார். செங்கிஸ் கான் இறப்பிற்கு முன், தனக்கு அடுத்த மன்னராக ஒகோடி கானை நியமித்தார். பின்வந்த காலங்களில் இவரது பேரன்கள் இவரது பேரரசைக் கானேடுகளாகப் பிரித்தனர். இவர் மேற்கு சியாவைத் தோற்கடித்த பின்னர் 1227ல் இறந்தார். இவர் மங்கோலியாவில் ஒரு அடையாளமில்லாத இடத்தில் புதைக்கப்பட்டார். இவரது சந்ததியினர் தற்கால சீனா, கொரியா, காக்கேசியா, மத்திய ஆசியா, கிழக்கு ஐரோப்பா மற்றும் தென்மேற்கு ஆசியாவின் கணிசமான பகுதிகள் ஆகியவற்றில் வெற்றிபெறுதல் அல்லது அடிமட்ட மாநிலங்களை உருவாக்குதல் மூலம் மங்கோலியப் பேரரசைப் பெரும்பகுதி ஐரோவாசியாவுக்கு விரிவாக்கினர். இந்தப் படையெடுப்புகளில் பல உள்ளூர் மக்கள் முன்பு போலவே பெரிய அளவில் மீண்டும் படுகொலை செய்யப்பட்டனர். இதன் விளைவாக, செங்கிஸ் கான் மற்றும் அவரது சாம்ராச்சியத்திற்கு உள்ளூர் வரலாற்றில் ஒரு பயபக்தியுடைய புகழ் உள்ளது. தனது இராணுவ சாதனைகளுக்கு அப்பால், செங்கிஸ்கான், பிற வழிகளிலும் மங்கோலியப் பேரரசை முன்னேற்றினார். தான் எழுத்தறிவற்றவராக இருந்தபோதிலும் மங்கோலிய சாம்ராச்சிய எழுத்து முறையாக உய்குர் எழுத்துமுறையைப் பின்பற்ற இவர் காரணமாக இருந்தார். மங்கோலிய சாம்ராச்சியத்தில் இவர் தகுதி அடிப்படையில் பதவி வழங்குவதையும் மத சகிப்புத்தன்மையையும் ஊக்குவித்தார். மேலும் வடகிழக்கு ஆசியாவின் நாடோடி பழங்குடியினரை ஐக்கியப்படுத்தினார். இன்றைய மங்கோலியர்கள் இவரை மங்கோலியாவின் தாபகத் தந்தையாகக் கருதுகின்றனர். இவரது படையெடுப்புகளின் கொடுமைத்தன்மை, மற்றும் பலரை இனப்படுகொலை செய்த ஆட்சியாளராகக் கருதப்பட்டாலும், செங்கிஸ் கான் பட்டுப் பாதையை ஒரு ஒத்திசைவான அரசியல் சூழலின் கீழ்க் கொண்டுவந்ததன் மூலம் புகழப்படுகிறார். இது தொடர்பு மற்றும் வர்த்தகத்தை வடகிழக்கு ஆசியாவிலிருந்து முஸ்லிம் தென்மேற்கு ஆசியா, கிறித்தவ ஐரோப்பாவிற்குக் கொண்டுசேர்த்ததன் மூலம், மூன்று கலாச்சாரப் பகுதிகளின் எல்லைகளை விரிவுபடுத்தியது. 1995ல் அமெரிக்காவின் "வாஷிங்டன் போஸ்ட்" பத்திரிகை இவரை, கடந்த ஆயிரம் ஆண்டுகளின் மிக முக்கியமான மனிதனாகத் தேர்ந்தெடுத்தது. மங்கோலியர்கள் முதன்முதலில் சைபீரியக் காடுகளில் இருந்து மங்கோலியாவிற்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. தெமுசின் தனது தந்தை வழியில் காபூல் கான், அம்பகை மற்றும் கமக் மங்கோலிய கூட்டமைப்புக்குத் தலைமை தாங்கிய ஹோடுலா கானுடன் தொடர்புடையவர். இவர்கள் அனைவரும் கி.பி. 900ல் வாழ்ந்த போடோன்சார் முன்ஹாக்கின் வழிவந்தவர்கள் ஆவர். கி.பி. 1161ல் சுரசன் சின் வம்சத்தவர் மங்கோலியர்களிடமிருந்து பிரிந்து தாதர்களுடன் இணைந்தபோது காபூல் கானைக் கொன்றனர். போர்சிசின் தலைவரும், அம்பகை மற்றும் ஹோடுலா கானின் உறவினரும், தெமுசினின் தந்தையுமான எசுகெய், ஆளும் மங்கோலிய இனத்தின் தலைவராக உருவானார். அம்பகையின் நேரடிச் சந்ததியினரான தாய்சியுடு இனத்தவர் இந்த நிலைப்பாட்டை எதிர்த்தனர். கி.பி. 1161ம் ஆண்டுக்குப் பிறகு தாதர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களானபோது, சின் தாதர்களிடமிருந்து கெரயிடுகளுக்குத் தங்கள் ஆதரவை மாற்றினர். சமகால எழுதப்பட்ட பதிவுகள் இல்லாததால் தெமுசினின் இளமைப் பருவம் பற்றி மிகக் குறைந்த தகவல்களே உள்ளன. இந்த காலகட்டத்தில் உள்ளார்ந்த சில ஆதாரங்களும் பெரும்பாலும் முரண்படுகின்றன. தெமுசினின் முதல்பாதி பெயரான "தெமுர்" என்பது "இரும்பு சார்ந்த" எனப் பொருள்படும் மங்கோலிய வார்த்தையிலிருந்து பெறப்படுகிறது, அதேநேரத்தில் பின்பாதி பெயரான "சின்" என்பது "செயலைக்" குறிக்கிறது, எனவே "தெமுசின்" என்பது "கொல்லன்" எனப் பொருள்படுகிறது. தெமுசின் அநேகமாக ஆசிய நாட்காட்டியின்படி குதிரை வருடமான கி.பி. 1162ல் இளவேனிற்காலத்தில் (மார்ச் முதல் மே வரை) தற்கால மங்கோலியாவின் தலைநகரான உலான் பத்தூருக்கு அருகில், புர்கான் கல்துன் மலை, ஆனன், கெர்லென் ஆறுகளுக்கு அருகில் வடக்கு மங்கோலியாவின் தெலுன் போல்தக்கில் பிறந்திருக்கலாம். மங்கோலியர்களின் இரகசிய வரலாற்றின் அடிப்படையில் தெமுசின் பிறக்கும்போதே கையில் இரத்த கட்டி ஒன்றை இறுக்கிப் பிடித்தபடி பிறந்தார். இது பிற்காலத்தில் அவர் மாபெரும் தலைவனாக வரவுள்ளதைக் குறித்ததாக அறியப்படுகிறது. இவர் கெரயிடு இன தொகுருலின் கூட்டாளியும், கமக் மங்கோலின் முக்கியமான கியாத் இனத் தலைவருமான எசுகெயின் இரண்டாவது மகன் ஆவார். தாய் ஓவலுனின் முதல் மகன் ஆவார். "இரகசிய வரலாறு" படி, தெமுசினின் தந்தை சற்று நேரத்திற்கு முன் பிடித்துக் கொண்டு வந்த தாதர் தலைவரான தெமுசின்-உகேயின் பெயரை தெமுசினுக்கு வைத்தனர். எசுகெய் போர்சிசின் (Боржигин) வம்சாவளியும் மற்றும் ஓவலுன் கொங்கிராடு பழங்குடியினரின் ஒரு பிரிவான ஒலகோனுடு இனத்தையும் சார்ந்தவராவர். மற்ற பழங்குடியினரைப் போலவே, அவர்களும் நாடோடிகளாகவே இருந்தனர். தெமுசினுக்கு கசர், கச்சியுன், தெமுகே என்ற மூன்று தம்பிகளும், தெமுலின் என்ற ஒரு தங்கையும், மற்றும் இவரது தந்தையின் முதல் மனைவி சோச்சிகலின் வழியில் பெக்தர் என்ற ஒரு அண்ணனும், பெலகுதை என்ற ஒரு தம்பியும் இருந்தனர். தெமுசினின் இளவயது வாழ்க்கை பற்றி சிறிய அளவு தகவல்களே உள்ளன. அத்தகவல்களும் தெமுசினின் தந்தை அவரை உயர்மதிப்பில் வைத்திருந்ததாகக் கூறவில்லை. இவரது தந்தை ஒருமுறை இடம்பெயரும்போது இவரை மறந்து விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். பின்னர் தாய்சியுடு இனத்தைச் சேர்ந்த தர்குதை என்பவர் இவரை மீட்டு இவரது குடும்பத்திடம் ஒப்படைத்தார். மங்கோலியாவின் மற்ற நாடோடிகளைப் போலவே தெமுசினின் ஆரம்ப கால வாழ்க்கையும் கடினமாக இருந்தது. இவர் தன் குழந்தைப்பருவத்தில் மொத்தமே சிலநூறு பேரையே பார்த்திருக்க வாய்ப்பிருந்துள்ளது. இவர் எழுத்தறிவு பெறவில்லை. எதிர்காலத்தில் இவர் செய்யப்போகும் சாதனைகளுக்கான எந்த அறிகுறியும் சிறுவயதில் இவரிடம் தென்படவில்லை. சிறுவயதில் இவர் எளிதில் அழுதுவிடக்கூடியவராக இருந்துள்ளார். இவரது தம்பி கசர் இவரைவிட மல்யுத்தத்தில் சிறந்தவர் மற்றும் சிறந்த வில்லாளி. இவரது ஒன்றுவிட்ட அண்ணன் பெக்தர் இவரிடம் அடிக்கடி வம்பிழுப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். சிறுவயது தெமுசினுக்கு நாய்களிடம் பயம் இருந்துள்ளது என்பது இவரது தந்தையின் மூலம் நமக்குத் தெரியவருகிறது. ஆனால் மங்கோலிய நாய்கள் பொதுவாகவே மூர்க்கமானவை. மனிதர்களைக் கொல்லக்கூடிய தன்மை வாய்ந்தவை. இவை மனிதர்களைக் கொன்றதற்கான பதிவுகள் உள்ளன. தெமுசினின் தந்தை இவரது 9ம் வயதில் இவரைவிட 1 வயது மூத்த கொங்கிராடு வம்சத்தைச் சேர்ந்த போர்தே என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயித்தார். இவரைப் பெண் வீட்டில் ஒப்படைத்தார். தெமுசின் மண வயதான 12 வயது வரை, குடும்பத்தின் தலைவரான “தய் சச்சனுக்கு” பணிபுரிவதற்காக அங்கு தங்கினார். திருமணம் ஒருபக்கம் இருந்தாலும் இவரது தந்தை இவரை விட்டு விலக விரும்பியதாலேயே இவரை தொலைதூரத்திற்குக் கூட்டிச் சென்றதாகத் தோன்றுகிறது. வீட்டிற்குச் செல்லும் வழியில், அவரது தந்தை நீண்ட கால மங்கோலிய எதிரிகளான தாதர்களைச் சந்திக்க நேரிட்டது. அவர்கள் அவரை உணவு உண்ண வருமாறு அழைத்து விஷம் வைத்துக் கொன்றனர். இதனை அறிந்து வீட்டிற்கு விரைந்த தெமுசினையும் இவரது குடும்பத்தையும், பெரிய ஆண் இல்லாத குடும்பம் என்ற காரணத்தால் மற்ற குடும்பங்கள் ஒதுக்கி வைத்தன. நியாயம் கேட்ட ஒரு முதியவர் ஈட்டியால் முதுகில் குத்தப்படுகிறார். அவரைக் கண்ட தெமுசின் செய்வதறியாது புலம்புகிறான். இவர்களை ஒதுக்கிவைத்ததற்கு அப்பழங்குடியினரால் அதிகமான 9 பேர்களுக்கு உணவளிக்க முடியாது என்ற ஒரு காரணமும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அடுத்த பல ஆண்டுகளுக்கு, இவரது குடும்பம் வறுமையில் வாழ்ந்தது. பெரும்பாலும் காட்டுப் பழங்கள், காளைப் பிரேதங்கள், மர்மோட்கள், மற்றும் தெமுசினும் அவரது சகோதரர்களும் கொன்ற சிறு விலங்குகள் உள்ளிட்டவற்றை உண்டு வாழ்ந்தது. இந்நிலையில் தெமுசினின் அண்ணன் பெக்தர் குடும்பத்தின் மூத்த ஆண் என்ற காரணத்தால் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தினான். மேலும் ஓவலுனை (அவனது சொந்தத் தாயாக இல்லாத காரணத்தால்) மணம் முடிக்கும் தகுதி பெற்றான். ஒருமுறை தெமுசின் வேட்டையாடிய வானம்பாடியை பெக்தர் எடுத்துக்கொண்டான். மற்றொரு முறை இவர் பிடித்த மீனை எடுத்துக்கொண்டுள்ளான். குடும்பம் உணவின்றித் தவித்த நேரத்தில் இவ்வாறு பெக்தர் செய்தது தெமுசினின் கோபத்தை அதிகப்படுத்தியது. தெமுசின் பின்பக்கம் இருந்தும் இவரது தம்பி கசர் முன்பக்கம் இருந்தும் அம்பெய்து பெக்தரைக் கொன்றனர். ஆச்சரியப்படும் விதமாக பெக்தரின் தம்பி பெலகுதை எந்த எதிர்ப்பும் காட்டாமல் கடைசிவரை தெமுசினுக்கு விசுவாசமாக இருந்தார். கி.பி. 1177ல் தப்பி ஓடும் தெமுசின் 9 நாட்களுக்கு உணவின்றி தெர்குன் உயர்நிலத்தில் உள்ள காடுகளில் அலைந்து திரிகிறார். "எனக்கென ஒரு பெயரை உருவாக்காமல் எவ்வாறு இறப்பது?" என அவருக்குத் தோன்றுகிறது. காட்டில் இருந்து வெளியே வருகிறார். தனது தந்தையின் முன்னாள் கூட்டாளிகளான தாய்சியுடுகளால் அடிமையாக கடத்தப்பட்டு, கேங்கில் (குற்றவாளியின் கழுத்தில் தண்டனையாக சுமத்தப்படும் பலகை) பிணைக்கப்படுகிறார். அங்கிருந்து ஓர் இரவில் சோர்கன் சீரா என்ற இரக்க குணமுடைய ஒரு காவலாளியின் உதவியால் கூடாரத்திலிருந்து விடுவிக்கப்பட்டு ஓர் ஆற்றுப் பிளவில் பதுங்கித் தப்புகிறார். இந்தத் தப்பிப்பு தெமுசினுக்கு நற்பெயரைக் கொடுத்தது. விரைவில், செல்மே மற்றும் பூர்ச்சு அவருடன் இணைந்தனர். அவர்கள் மற்றும் அக்காவலாளியின் மகனான சிலவுன் இறுதியில் செங்கிஸ்கானின் தளபதிகள் ஆகினர். தனது 13ஆம் வயதில் தனது தந்தையின் பதவிக்கு தெமுசின் வந்தபோது அவருக்குக் கிடைத்தது ஆனன் ஆற்றங்கரையில் தரிசான ஒரு சிறு நிலம் தான். அந்நேரத்தில் மங்கோலியாவின் எந்தவொரு பழங்குடியினக் கூட்டமைப்பும் அரசியல்ரீதியாக இணைக்கப்படாமல் இருந்தன. நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் தற்காலிக கூட்டமைப்பை உறுதிப்படுத்தப் பயன்பட்டன. இத்தகைய கடினமான அரசியல் சூழ்நிலை, பழங்குடியினப் போர், திருட்டு, இராணுவ படையெடுப்புகள், ஊழல் மற்றும் தெற்கிலுள்ள சீனா போன்ற வெளிநாடுகளின் இடையூறுடன் நடைபெறும் கூட்டமைப்புகளுக்கு இடையேயான பழிவாங்கல் போன்றவற்றைக் கண்டு தெமுசின் வளர்ந்தார். தெமுசினின் தாய் ஓவலுன் பல பாடங்களை அவருக்குக் கற்றுக் கொடுத்தார். முக்கியமாக மங்கோலியாவின் சிரத்தன்மைக்குத் தேவையான வலிமையான கூட்டமைப்புகளை ஏற்படுத்தல் போன்றவை. ஏற்கனவே தன் தந்தை நிச்சயித்தபடி இரு பழங்குடியினருக்கு இடையே இணைப்பை ஏற்படுத்த தனது 16வது வயதில் கொங்கிராடு பழங்குடியினத்தைச் சேர்ந்த போர்தேயை மணந்தார். திருமணம் நடந்த சில நாட்களில் மெர்கிடு பழங்குடியினரால் போர்தே கடத்தப்பட்டார். தெமுசின் சமுக்கா மற்றும் கெரயிடு பழங்குடியைச் சேர்ந்த தொகுருல் கானின் உதவியுடன் போர்தேயை மீட்டார். 9 மாதங்கள் கழித்து போர்தே, ஒரு மகனைப் பெற்றெடுத்தார். அக்குழந்தையின் உண்மையான தந்தை யார் என்ற குழப்பம் ஏற்பட்டது. தெமுசின் அக்குழந்தைக்கு சூச்சி (மங்கோலிய மொழியில் விருந்தாளி) என்று பெயரிட்டு அரவணைத்துக் கொண்டார். பாரம்பரியப்படி செங்கிஸ் கான் பல திருமணங்கள் செய்து கொண்ட போதிலும் போர்தேவே கடைசிவரை அவரது பேரரசியாக வாழ்ந்தார். மேலும் போர்தேவுக்கு சகதை (1187–1241), ஒகோடி (1189–1241), மற்றும் டொலுய் (1190–1232) என மூன்று ஆண் குழந்தைகளும், கொசின், அழகை, அல்-அல்துன், செச்செயிசென், துமேலுன், டொலை என 6 பெண் குழந்தைகளும் உண்டு. செங்கிஸ் கானுக்கு மற்ற மனைவிகள் மூலம் குழந்தைகள் பிறந்தபோதிலும் அவர்கள் அரசாள்வதில் இருந்து ஒத்துக்கிவைக்கப்பட்டனர். அவர்கள் செங்கிஸ் கானுக்கு ஆட்சியில் உதவிகரமாக இருந்தபோதிலும் அவர்கள் மொத்தம் எத்தனை பேர், அவர்களின் பெயர் என்ன என்பது பற்றி தெளிவான தகவல்கள் இல்லை. 13ம் நூற்றாண்டில் சீனாவுக்கு வடக்கில் இருந்த மங்கோலியப் பீடபூமியானது நைமர்கள், மெர்கிடுகள், தாதர்கள், கமக் மங்கோலியர்கள் மற்றும் கெரயிடுகள் போன்ற பல்வேறு பழங்குடியினக் கூட்டமைப்புகளால் ஆளப்பட்டது. இவர்கள் எப்பொழுதும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். சூறையாடல்கள் மற்றும் பழிவாங்கல்கள் தொடர்ந்து நடைபெற்றது. தெமுசின் தனது தந்தையின் "ஆன்டா"வான (இரத்த சகோதரன்) தொகுருல் கானிடம்(சீன மொழியில் வாங் கான்) தானே ஒரு நட்பாளராக (மற்ற ஆதாரங்களின்படி ஒரு அடிபணிந்தவராக) முன்வந்து சேர்ந்தார். தொகுருல் கெரயிடு இன மக்களின் கான் ஆவார். இவர் சீனப் பட்டமான "வாங் கான்" (அல்லது "ஓங் கான்") என்ற பெயராலும் அறியப்படுகிறார். இப்பட்டத்தை சுரசன் சின் வம்சத்தவர் (1115–1234) கி.பி. 1197ல் இவருக்கு அளித்தனர். இவ்வாறு தான் தெமுசின் தனது இராணுவ வாழ்க்கையைத் தொடங்கினார். இக்கூட்டு மெர்கிடுகள் போர்தேவை கடத்தியபோது ஏற்பட்டதாகும். தெமுசின் தொகுருல் கானிடம் உதவி கூறியபோது அவர் தனது கெரயிடு இனத்தை சேர்ந்த 20,000 படைவீரர்களைக் கொடுத்து உதவினார். மேலும் தெமுசினின் பால்யகால நண்பரும், சதரான் இனத்தின் கானுமாகிய சமுக்காவையும் இதில் சேர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இப்போரில் போர்தே மீட்கப்பட்டார். மெர்கிடுகள் படுதோல்வி அடைந்தனர். எனினும் இறுதியில் தெமுசினுக்கும் சமுக்காவுக்கும் இடையில் பகை ஏற்பட்டது. இதற்குமுன் அவர்கள் இருவரும் இரத்த சகோதரர்களாக ("ஆன்டா") இருந்தனர். ஒருவருக்கொருவர் உண்மையாக எக்காலத்துக்கும் இருப்பதென சபதமெடுத்திருந்தனர். பிரிந்த பிறகு இருவரும் தத்தமது வழியில் முன்னேறத் தொடங்கினர். இருவரும் எதிரிகளாக ஆயினர். சமுக்கா குடும்பப் பின்னணியை வைத்து மற்றவர்களுக்கு பதவிகளைக் கொடுக்க, தெமுசினோ குடும்பப் பின்னணியற்ற தகுதி வாய்ந்தவர்களுக்கு பதவி கொடுத்தார். தெமுசின் எல்லாவிதமான, முக்கியமாக அடித்தட்டு மக்களை ஈர்க்கத் தொடங்கினார். எல்லையற்ற நீல வானமானது இந்த உலகத்தை தெமுசினுக்காக ஒதுக்கி வைத்திருப்பதாக ஷாமன் கொகோசு தெப் தெங்கிரி பிரகடனப்படுத்தினார். தெமுசினின் சக்தி அதிகரிக்கத் தொடங்கியது. கி.பி. 1186ல் மங்கோலியர்களின் கானாக தெமுசின் தேர்ந்தெடுக்கப்பட்டார். தெமுசினின் வளர்ச்சியால் அச்சுறுத்தலுக்குள்ளான சமுக்கா, கி.பி. 1187ல் 30,000 படைவீரர்களுடன் அவரைத் தாக்கினார். தெமுசின் தனது ஆதரவாளர்களைத் திரட்டி தாக்குதலுக்கு எதிராகத் தற்காத்துக் கொள்ள முயன்றார். எனினும் தலன் பல்சுத் எனுமிடத்தில் நடைபெற்ற போரில் தோற்கடிக்கப்பட்டார். வென்றதோடு நில்லாமல் சமுக்கா இப்போரில் பிடிபட்ட சுமார் 70 கைதிகளை ஈவு இரக்கமின்றி நீர்க் கொப்பரையில் அமுக்கினான். இந்நிகழ்வு பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமுக்காவைப் பின்பற்ற நினைத்தவர்கள் அவனிடம் இருந்து விலகினர். தெமுசினின் ரட்சகர் தொகுருல் கான் காரா கிதைக்குச் சென்று பதுங்கினார். இதன்பிறகு 10 ஆண்டுகளுக்கு தெமுசினின் வாழ்க்கை பற்றி சரியான தகவல்கள் இல்லை. ஏனெனில் இக்காலகட்டத்தைப் பற்றி வரலாற்றில் பதிவுகள் எதுவும் எழுதப்படவில்லை. கி.பி. 1197ம் ஆண்டு சின் வம்சத்தினர் கெரயிடுகள் மற்றும் மங்கோலியர்களுடன் சேர்ந்து தங்களது முன்னாள் கூட்டாளிகளான தாதர்களைத் தாக்கினர். தெமுசின் இத்தாக்குதலின் ஒரு பகுதியை ஏற்று நடத்தினார். போரின் முடிவில் தெமுசினும், தொகுருலும் தங்களது பழைய பதவிக்கு சின் வம்சத்தவரால் உயர்த்தப்பட்டனர். தொகுருலுக்கு ஓங் கான் என்ற பட்டமும், தெமுசினுக்கு அதைவிட குறைந்த மதிப்புடைய சவுத் குரி (எல்லைக் காவலன்) என்ற பட்டமும் சின் வம்சத்தவரால் வழங்கப்பட்டது. கி.பி.1200ல் மங்கோலியக் கூட்டமைப்புக்கு (பொதுவாக மங்கோலியர்கள்) மேற்கில் நைமர்களும், வடக்கில் மெர்கிடுகளும், தெற்கில் தாங்குடுகளும், கிழக்கில் சின்களும் முக்கிய எதிரிகளாயிருந்தனர். தெமுசின் தனது ஆட்சியிலும், எதிரிப் பழங்குடியினரை வெல்லும்போதும் பல வழிகளில் மங்கோலியப் பழக்கவழக்கங்களை உடைத்தார். குடும்ப உறவுகள் அடிப்படையில் பதவி வழங்காமல், தகுதி மற்றும் விசுவாசத்தின் அடிப்படையில் பதவிகளை வழங்கினார். விசுவாசமானவர்களுக்கும், யசா சட்டங்களை மதிக்கும் மக்களுக்கும், போர்வீரர்களுக்கும் எதிர்காலத்தில் போர்புரிந்து அதன்மூலம் கிடைக்கும் செல்வத்தைப் பிரித்து அளிப்பதென தெமுசின் உறுதியளித்தார். எதிரிப் பழங்குடியினரை தோற்கடித்தபோது அவர்களது படைவீரர்களை விரட்டிவிடவோ, மக்களை விட்டுவிடவோ செய்யவில்லை. பதிலாக வெல்லப்பட்ட பழங்குடியினரை தனது பாதுகாப்பு வளையத்திற்குள் வரவழைத்தார். அவர்களை தனது இனத்துடன் இணைத்தார். தனது தாயும் போரில் அனாதையான மற்ற இனக் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்குமாறு செய்தார். செங்கிஸ் கானுக்கு அனாதைக் குழந்தைகள் மேலான அனுதாபம் அவரது குழந்தை பருவ அனுபவங்கள் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இத்தகைய 4 குழந்தைகளின் பெயர்கள் நமக்குத் தெரியவருகிறது. அவர்கள் குகு (மெர்கிட் போர்), கொகோசு (ஷாமன் கொகோசு அல்ல) (தாய்சியுட் போர்), சிகி குதுக்து (தாதர் போர்) மற்றும் போராகுல் (சுரசன் போர்). இத்தகைய அரசியல் புதுமைகள் காரணமாக தோல்வியுற்றவர்களுக்கு மத்தியில் கூட தெமுசின் மேல் விசுவாசம் பெருகியது. தெமுசினின் பலம் ஒவ்வொரு வெற்றியின் முடிவிலும் அதிகமாகியது. தொகுருலின் மகனான செங்குமுக்கு தெமுசின் தனது தந்தையுடன் நட்பில் இருப்பது பொறாமையை ஏற்படுத்தியது. அவன் தெமுசினைக் கொல்ல திட்டமிட்டான். தொகுருல் பல தடவை தெமுசினால் காப்பாற்றப்பட்டிருந்தும் தனது மகன் பேச்சைக் கேட்க ஆரம்பித்தார். தெமுசினுடன் ஒத்துழைக்க மறுத்தார். செங்குமின் எண்ணத்தை அறிந்த தெமுசின் அவனையும், அவனது விசுவாசிகளையும் போரிட்டுத் தோற்கடித்தார். ஒருமுறை தெமுசின் தனது மகன் சூச்சிக்கு தொகுருலின் மகளையும், தனது மகளுக்கு செங்குமின் மகனையும் கேட்டார். இதற்காக அனுப்பப்பட்ட தெமுசினின் தூதுவர்களிடம் தெமுசின் தன் வேலைக்காரன் என்றும், தன் மகளை நெருப்பில் எரித்தாலும் எரிப்பேனே தவிர அவன் மகனுக்குக் கொடுக்க மாட்டேன் என்றும் தொகுருல் கூறினார். தான் எவ்வளவு விசுவாசமாக இருந்தபோதிலும் தொகுருல் தன்னை சமமாக நடத்தாததை தெமுசின் உணர்ந்தார். இதன் காரணமாக இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டது. பின் போரானது. தொகுருல் ஏற்கனேவே தெமுசினை எதிர்த்த சமுக்காவுடன் இணைந்தார். எனினும் தொகுருலுக்கும், சமுக்காவுக்கும் இடையிலான பிரச்சினை மற்றும் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலான நட்பு இனங்கள் அவர்களை விட்டுப்பிரிந்த காரணம் போன்றவற்றால் போரில் அவர்களுக்குத் தோல்வியே கிடைத்தத்து. சமுக்கா போர் நடந்து கொண்டிருந்த பொழுது தப்பித்துச் சென்றான். இப்போரின் தோல்வி கெரயிடு இனத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. இறுதியில் இவ்வினம் கலைக்கப்பட்டது. தெமுசினுக்கு எதிரிகளான நைமர்களிடம் சமுக்காவும் அவனது படையினரும் தஞ்சமடைந்தனர். சமுக்காவை அவரது சதரன் இனம், நைமர்கள், தாய்சியுடு, இகிரேஸ், கொரோலாஸ், சல்சியுது, தர்பது, சுல்துஸ், கடசின், பெசுது, மெர்கிடு, ஒயிரடு மற்றும் தாதர்கள் ஆகிய 13 இனப் பழங்குடியினர் ஆதரித்தனர். கி.பி.1201ல் அரசவையான குறுல்த்தாய் சமுக்காவிற்கு காரா கிதையின் ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்பட்ட பட்டமான குர் கான் ("பிரபஞ்ச ஆட்சியாளர்") பட்டத்தை வழங்கியது. கி.பி. 1204ம் ஆண்டின் (எலி வருடம்) இலையுதிர்காலத்தில் தெமுசின் கெர்லான் ஆற்றின் ஓரத்திலே கென்டீ மலைகளை நோக்கித் தனது படைகளுடன் பயணித்தார். மங்கோலியர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருந்தனர். பயணத்தின் காரணமாக வெகுவாகக் களைத்திருந்தனர். இதற்காகச் செங்கிஸ் கானின் ஒரு யோசனை செய்தார். இரவு நேரத்தில் குளிருக்காக 1 நெருப்பிற்குப் பதிலாக 5 நெருப்புகள் மூட்டப்பட்டன. மலை உச்சியில் பாதுகாப்பிற்காக நின்ற நைமர்களின் படைவீரர்கள் இதைக் கண்டனர். தங்கள் தலைவர் "தயங்"கிடம் வானத்திலுள்ள விண்மீன்களை விட அதிகமான எண்ணிக்கையில் நெருப்புகளை மூட்டி மங்கோலியர்கள் குளிர் காய்வதாகக் கூறினர். தயங் அவசரமாக விலகிக் கொள்ள முடிவெடுத்தார். உலகின் 2.4 கோடி சதுர கிலோமீட்டர் (அந்நேரத்தில் மனிதன் கண்டறிந்ததில் 3ல் 1 பங்கு உலகம்) பரப்பளவுள்ள பகுதியை வெல்லப் போகும் அந்தப் படையை சந்தித்த முதல் நபர் சமுக்காதான். இப்போரில் தான் சமுக்கா, தெமுசினின் 4 வேட்டை நாய்களைப் பற்றி "தயங்"கிற்குக் கூறினார். அவர்கள் செபே, செல்மே, சுபுதை மற்றும் குப்லாய் (குப்லாய் கான் அல்ல) ஆவர். பல ஆண்டு யுத்தங்களில் பலர் சமுக்காவை விட்டுப் பிரிந்தனர். கி.பி. 1206ல் சமுக்கா தனது சொந்த படைவீரர்களால் தெமுசினிடம் காட்டிக் கொடுக்கப்பட்டார். "இரகசிய வரலாற்றின்" படி தெமுசின் மீண்டும் சமுக்காவுடன் நட்புக்கொள்ள விரும்பினார். தலைவனைக் காட்டிக் கொடுத்த விசுவசமற்றவர்களுக்கு தனது படையில் இடமில்லை என்று கூறி தெமுசின் அப்படைவீரர்களைக் கொன்றார். நட்பை ஏற்றுக்கொள்ள மறுத்த சமுக்கா, ஒரு வானத்தில் ஒரு சூரியன் தான் இருக்க முடியும் என்று கூறி தனக்கு நல்ல இறப்பை வேண்டினான். வழக்கப்படி இரத்தம் தரையில் விழாமல் இறக்க வேண்டும். முதுகெலும்பை உடைத்ததன் மூலம் சமுக்கா இறந்தார். தெமுசினின் வீரர்களைக் கொப்பரையில் அமுக்கிக் கொன்றிருப்பதற்காக அறியப்பட்டிருந்தும், சமுக்கா இவ்வகையிலான இறப்பை விரும்பினார். நைமர்களுடன் இணைந்த மெர்கிடுகள் தெமுசினின் பாதுகாவலர் சுபுதையால் தோற்கடிக்கப்பட்டனர். சுபுதை எதிர்காலத்தில் செங்கிஸ் கானின் வெற்றிகரமான தளபதிகளுள் ஒருவரானார். நைமர்களின் தோல்வி தெமுசினை மங்கோலிய ஸ்டெப்பியின் ஒரே ஆட்சியாளராக்கியது. அனைத்து கூட்டமைப்புகளும் தெமுசினின் கீழ் வந்தன அல்லது ஒன்றிணைக்கப்பட்டன. செங்கிஸ் கானின் வாழ்க்கையானது நம்பிக்கை துரோகங்களாலும், சூழ்ச்சிகளாலும் நிறைந்திருந்தது. இதற்கு உதாரணமாக அவரது முன்னாள் நண்பனான சமுக்காவுடன் (இவரும் மங்கோலியப் பழங்குடியினருக்குத் தலைவராக முயற்சித்தார்) ஏற்பட்ட மோதல், தொகுருலுடன் (தெமுசின் மற்றும் அவரது தந்தையின் நண்பர்) ஏற்பட்ட மோதல், அவரது மகன் சூச்சி, தெமுசினுக்கும் அவரது தம்பி கசருக்கும் இடையே விரிசல் ஏற்படுத்த நினைத்த முக்கியமான ஷாமன் தெங்கிரியுடன் ஏற்பட்ட மோதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவரது இராணுவ யுக்திகள் தகவல் சேகரிப்பிலும், எதிரிகளின் எண்ணங்களை யூகிப்பதிலும் கவனம் செலுத்தின. இதற்கு அவர் ஒற்றர்களையும், யாம் வழி அமைப்புகளையும் பயன்படுத்தினார். இவர் எதையும் எளிதில் கற்றுக் கொண்டார். தான் எதிர்கொண்ட எதையும் முக்கியமாக முற்றுகைப் போர்முறையைச் சீனர்களிடம் இருந்து கற்றார். இவர் இரக்கமற்றவராக தனது செயல்களில் விளங்கினார். தாதர்களின் படையினரில் குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் உள்ள ஆண்களை அச்சாணிக்கு எதிராக அளவிடும் முறை மூலம் தேர்ந்தெடுத்துக் கொன்றார். இதன் காரணமாக அவர் கி.பி. 1206ல் மெர்கிடுகள், நைமர்கள், மங்கோலியர்கள், கெரயிடுகள், தாதர்கள், உய்குர்கள் மற்றும் பல சிறு பழங்குடியினரை தனது ஆட்சியின் கீழ் இணைத்தார் அல்லது அடிபணியவைத்தார். இது ஒரு மகத்தான சாதனையாக இருந்தது. இதன் மூலம் முன்னர் போரிட்டுக் கொண்டிருந்த பழங்குடிகளை இணைத்து ஒரே அரசியல் மற்றும் இராணுவ சக்தியாக்கினார். இந்த கூட்டமைப்பில் இருந்தவர்கள் ஒட்டுமொத்தமாக மங்கோலியர்கள் என்று அழைக்கப்பட்டனர். மங்கோலியத் தலைவர்களின் அரசவையான குறுல்த்தாயில் தெமுசின் ஒன்றிணைக்கப்பட்ட பழங்குடியினரின் கான் ஆக ஏற்றுக் கொள்ளப்பட்டார். "செங்கிஸ் கான்" என்ற புதிய பட்டம் பெற்றார். இதன் பொருள் பிரபஞ்சத்தின் ஆட்சியாளர் என்பதாகும். ககான் எனும் பட்டமானது இவரது இறப்பிற்குப் பிறகு இவரின் பின்வந்த ஒகோடி கானால் இவருக்கு வழங்கப்பட்டது. ஒகோடி கானுக்கும் இப்பட்டம் வழங்கப்பட்டது. இறப்பிற்குப் பிறகு ஒகோடி கான் யுவான் அரசமரபைத் தோற்றுவித்தவராக அறிவிக்கப்பட்டார். செங்கிஸ் கான் தெங்கிரி மதத்தைப் பின்பற்றினார். எனினும் மற்ற மதங்களிடம் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொண்டார். மற்ற மதங்களில் காணப்படும் தத்துவங்கள் மற்றும் தருமப் பாடங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டார். பௌத்தத் துறவிகள் (ஜென் துறவி ஹையுன் உட்பட), இசுலாமியர்கள், கிறிஸ்தவர்களிடமும் மற்றும் தாவோயியத்தைச் சேர்ந்த சியு சுஜியிடமும் அறிவுரை பெற்றார். நியான் சங் (பிறப்பு 1282) என்பவர் எழுதிய "ஃபொசு லிடை டொங்சை" என்ற நூலின் படி செங்கிஸ்கானின் அரசு பிரதிநிதியான முகலி 1219ல் ஷான்க்ஷி நகரில் போரிட்டுக் கொண்டிருந்தார். அங்கு தான் ஜென் புத்த மதத் துறவியான ஹையுன் (海雲, 1203-1257) வாழ்ந்து வந்தார். முகலியின் சீனத் தளபதிகளுள் ஒருவர் ஹையுன் மற்றும் அவரது குரு ஜோங்குவானின் நன்னடத்தையால் ஈர்க்கப்பட்டார். அத்தளபதி அவர்களை முகலியிடம் அறிமுகப்படுத்தினார். முகலி அவர்களை செங்கிஸ் கானிடம் அழைத்துச் சென்றார். அவர்களைச் சந்தித்தபின் செங்கிஸ் கான் பின்வரும் ஆணையை வெளியிட்டார்: "இவர்கள் உண்மையிலேயே சொர்க்கத்திடம் வழிபடுகிறவர்கள். இவர்களுக்கு உணவு மற்றும் உடை வழங்கித் தலைவர்களாக ஆக்க வேண்டும். நான் இவர்களைப் போன்ற பல பேரை சேர்க்கத் திட்டமிட்டுள்ளேன். சொர்க்கத்திடம் வழிபடும்போது இவர்களுக்கு எந்த சிரமமும் இருக்கக் கூடாது. எனவே இவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தடுக்க நான் இவர்களை "தர்கன்" ஆக்குகிறேன்." செங்கிஸ்கான் ஏற்கனவே ஹையுனை 1214ல் சந்தித்து இருந்தார். மங்கோலிய முறையில் முடி வளர்க்க மறுத்த அவரது பதில் மூலம் செங்கிஸ்கான் ஈர்க்கப்பட்டார். அவரது முறையான மொட்டையை வைத்துக்கொள்ள அனுமதி அளித்தார். 1220ல் தனது குரு ஜோங்குவானின் இறப்பிற்குப் பிறகு செங்கிஸ்கானின் ஆட்சியில் ஹையுன் சான் (சீன ஜென்) பள்ளிக்குத் தலைமை தாங்கினார். 1257 வரை வந்த அனைத்து கான்களாலும் சீனப் புத்த மதத்திற்குத் தலைமைத் துறவியாக தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்டார். 1257ல் மங்கோலியர்களால் நியமிக்கப்பட்ட ஷாவோலின் மடாலயத்தின் மற்றொரு சான் குருவான க்ஷுயேடிங் ஃபுயு தலைமைக் குருவாக நியமிக்கப்பட்டார். 1222ல் செங்கிஸ் கான் தாவோயியக் குருவான சியு சுஜியை (1148-1227) ஆப்கானிஸ்தானுக்கு வரவழைத்துச் சந்தித்தார். தன்னுடைய அழைப்பை ஏற்றதற்கு நன்றி தெரிவித்தார். அவர் தன்னுடன் சாகா வாரத்திற்கான மருந்தை கொண்டு வந்து இருக்கிறாரா என வினவினார். ஆனால் அவரோ சாகா வாரத்திற்கான மருந்து என்று எதுவும் கிடையாது என்று கூறினார். ஆனால் கட்டுப்பாடுகள் மூலம் வாழ்வை நீட்டிக்க முடியும் என்று கூறினார். செங்கிஸ் கான் அவருடைய நேர்மையான பதிலை பாராட்டினார். பின்னர் அவரை எல்லையற்ற சொர்க்கம் என்று அழைப்பது அவரா அல்லது மற்றவர்களால் என்று வினவினார். சியு சுஜி மற்றவர்கள் தான் அவ்வாறு அழைப்பதாக கூறினார். சியு சுஜியை அப்போதிலிருந்து மற்றவர்கள் "நிலைத்த" (Immortal) என்றுதான் அழைக்க வேண்டும் என்று செங்கிஸ் கான் ஆணையிட்டார். அவரை சீனாவில் உள்ள அனைத்து துறவிகளுக்கும் தலைவராக்கினார். சொர்க்கம் சியு சுஜியைத் தன்னிடம் அனுப்பி இருப்பதாகக் குறிப்பிட்டார். செங்கிஸ்கான் இறந்த அதே வருடத்தில் சியு சுஜி பெய்ஜிங்கில் இறந்தார். சியு சுஜியின் கோயில் வெண்முகில் கோயில் என்று ஆனது. புத்த மதத்தினர், கிறிஸ்தவ மதத்தினர் மற்றும் முஸ்லிம்கள் ஆகியவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கும் ஆணை 1368ல் யுவான் அரசமரபு முடியும் வரை தொடர்ந்தது. அனைத்து ஆணைகளும் ஒரே முறையைப் பின்பற்றின மற்றும் செங்கிஸ் கான் முதன்முதலாக இதை அளித்ததைத் சுட்டிக்காட்டின. ஜுவய்னியின் கூற்றுப்படி செங்கிஸ் கான் குவாரசமியப் பேரரசை வென்ற பிறகு முஸ்லிம் மக்களுக்கு மதச் சுதந்திரம் வழங்கினார். ஆனால் ரஷித் அல் தின் என்பவர் ஒரு சில நேரங்களில் அலால் முறையில் மிருகங்களைக் கொல்வதைச் செங்கிஸ் கான் தடை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம்கள் ஒரு விருந்தில் உண்ண மறுத்தபோது குப்லாய் கான் 1280ல் இந்த ஆணையை மீண்டும் வழங்கினார். ஹலால் முறையில் மிருகங்களைக் கொல்வதைத் தடை செய்தார். குப்லாய் கானின் இந்த ஆணை ஒரு தசாப்தத்திற்குப் பிறகு திரும்பப் பெறப்பட்டது. செங்கிஸ் கான் வஹித்-உத்-தின் என்பவரை ஆப்கானிஸ்தானில் சந்தித்தார். அவரிடம் ஒரு மங்கோலிய படையெடுப்பாளர் வருவதை முகமது கணித்தாரா என்று வினவினார். மேலும் காண்க:மங்கோலியப் படையெடுப்புகளும் வெற்றிகளும் செங்கிஸ் கான் போருக்காகத் தன் நாடோடிக் கூட்டத்துடன் அணிவகுத்தால் அவர்கள் கிலோமீட்டர் கணக்கில் பயணம் செய்து போர்புரிய மாட்டார்கள் அட்சரேகை தீர்க்கரேகை கணக்கில் தான் பயணம் செய்து போர்புரிவார்கள். ஆசியா மற்றும் ஐரோப்பாவில் மங்கோலியத் தாக்குதலால் பாதிப்படையாத நாடுகள் வெகு சிலவே. பாதிப்படைந்த நாடுகளின் முழு வரலாற்றின் போக்கும் மாற்றி அமைக்கப்பட்டது. கி.பி. 1206ல் மங்கோலியப் பேரரசு மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு மேற்கில் மேற்கு சியா வம்ச தாங்குடுகளும், கிழக்கிலும், தெற்கிலும் சின் வம்சத்தவரும் இருந்தனர். இதில் சின் வம்சமானது மஞ்சூரிய சுரசன்களால் ஆரம்பிக்கப்பட்டது. சின்கள் வடக்கு சீனாவை ஆண்டனர். பல ஆண்டுகளாக மங்கோலியர்களின்மேல் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். செங்கிஸ் கான் தன் மக்கள், இராணுவம் மற்றும் அரசை மேற்கு சியாவின் (சி சியா) மேல் படையெடுக்க ஆயத்தம் செய்தார். பலம் வாய்ந்த இளம் சின் மன்னர் சியாவின் உதவிக்கு வரமாட்டார் என்பதை சரியாகக் கணித்தார். தாங்குடுகள் உதவிக்கு அழைத்தபோது சின் மன்னர் மறுத்தார். கி.பி. 1211ல் சி சியாவின் ஓலகோய் நகரை செங்கிஸ் கானின் படைகள் முற்றுகையிட்டன. போரானது யாருக்கும் வெற்றி இன்றி பல வாரங்களுக்கு நடந்தது. இந்நிலையில் போரை முடிக்க செங்கிஸ் கான் ஒரு யோசனை செய்தார். செங்கிஸ் கான் 1,000 பூனைகளையும், 10,000 பறவைகளையும் கொடுத்தால் நகர முற்றுகையைக் கைவிடுவதாக கூறினார். எதிரிப் படையும் மகிழ்ச்சியுடன் அதற்கு இசைந்து அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பூனைகளையும், பறவைகளையும் கொடுத்தது. மங்கோலியர்கள் அவற்றின் வால்களில் கம்பளியைக் கட்டி நெருப்பை வைத்து அவிழ்த்து விட்டனர். பூனைகள் இருப்பிடத்தை நோக்கியும், பறவைகள் கூடுகளை நோக்கியும் நகருக்குள் இருந்த தம் இருப்பிடத்திற்கு அவசரமாக சென்றன. இதன் காரணமாக நகர் எங்கும் நெருப்பு பரவியது. இக்குழப்பத்தைப் பயன்படுத்தி அந்நகர் வெல்லப்பட்டது. எனினும் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததாக 17ம் நூற்றாண்டுக்கு முந்தைய எந்த ஒரு நூலிலும் எழுதப்படவில்லை என்று கூறப்படுகிறது. நல்ல அரண்களுடன் இருந்த நகரங்களை ஆரம்பத்தில் சிறு தடங்கல்கள் ஏற்பட்டபோதிலும் செங்கிஸ் கான் கைப்பற்றினார். சி சியாவின் பேரரசரை அடிபணிய வைத்தார். கி.பி. 1211ல் மேற்கு சியாவை வென்ற பிறகு சின் வம்சத்தை வெல்ல நினைத்தார். "எங்களது பேரரசு கடலைப் போல் உள்ளது; உங்களுடையதோ ஒரு கைப்பிடி மண்" என செங்கிஸ் கானைக் குறிப்பிட்டு சின்களின் அரசர் கூறியதாக ஒரு சீன அறிஞர் பதிவிட்டுள்ளார். "நாங்கள் எப்படி உன்னைப் பார்த்து பயப்பட முடியும்?" என்றும் கேட்டார். அவர்களுக்குச் சீக்கிரமே பதில் கிடைத்தது. சின்களின் தளபதி வன்யன் சியுசின் மங்கோலியர்களைத் தாக்க தனக்கு முதலில் கிடைத்த வாய்ப்பை வீணடித்தார். அதற்குப் பதில் மிங்கன் எனும் தூதரை அனுப்பினார். தூதன் கணவாயின் மறு பக்கத்தில் சின் இராணுவம் இருப்பதை உளறினான். எகுலிங்கு என்ற இடத்தில் நடந்த போரில் மங்கோலியர்கள் சின் வீரர்களைக் கொன்றழித்தனர். கி.பி. 1215ல் செங்கிஸ் கான் சின் தலைநகரான சொங்குடுவை (தற்கால பெய்ஜிங்) வென்றார். இதன் காரணமாக சின் மன்னர் சுவாங்சாங் தன் நாட்டின் வட பகுதியை அப்படியே விட்டுவிட்டு ஓடினார். தலைநகரை கைபேங்குக்கு மாற்றினார். ஊக்கமளிக்கும் வகையில் செங்கிஸ் கான் பதுங்கும் புலி கொண்ட தங்க மாத்திரையை தன் தளபதிகள் ஒவ்வொருவருக்கும் வழங்கினார். முகலி வாங்க்னிங்-ஃபூ என்ற நகரை அடிபணிய வைத்தார். இதனுடன் சேர்த்து மங்கோலியர்கள் மொத்தம் 862 நகரங்களைக் கைப்பற்றியிருந்தனர். மஞ்சள் ஆற்றைக் கடக்க தங்களிடம் படகுகள் இல்லாத காரணத்தால் மங்கோலியர்கள் தங்கள் ஈட்டிகளை ஒன்றாக இணைத்து, இடையே உள்ள இடைவெளிகளை கற்கள் மற்றும் மணல் மூலம் நிரப்பி ஒரு பாலத்தைக் கட்டினர். கி.பி. 1232, கி.பி. 1233ல் ஒகோடி கானால் கைபேங்கு கைப்பற்றப்பட்டது. சின் வம்சமானது கி.பி. 1234ல் கைசோவு நகரின் முற்றுகைக்குப் பிறகு வீழ்ந்ததது. கி.பி. 1212 இளவேனிற்காலத்தில் காரா கிதையின் (கருப்பு சீனா) லியாவோ-யங் நகரில், சின் பேரரசிடம் இருந்து ஒரு படை உதவிக்கு வருவதாக வதந்தி பரப்பப்பட்டது. முற்றுகை கைவிடப்பட்டது. உடனடியாக மங்கோலியர்கள் பின்வாங்கி ஓடினர். தங்களது பொருட்கள் மற்றும் கூடாரங்கள் அனைத்தையும் லியாவோ-யங் நகர சுவர்களுக்கு அடியில் விட்டு விட்டு ஓடினர். இரண்டு நாட்களுக்கு இப்படிப் பின்வாங்கினர். பின்னர் வீரர்களுக்குப் புதுக் குதிரைகள் வழங்கப்பட்டது. பின்வாங்கிய வீரர்கள் அனைவரும் ஒரே இரவில் முழுத் தூரத்தையும் கடந்து நகரை நோக்கி முன்னேறினர். இந்தச் செயலுக்குப் பலன் கிடைத்தது. தங்கள் கோட்டைக் கதவுகளைத் திறந்து வைத்துவிட்டு காரா கிதை வீரர்களும், பொதுமக்களும் கைவிடப்பட்ட கூடாரங்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். அவர்களைத் தாண்டிப் புயல்போல் மங்கோலியர்கள் நகருக்குள் புகுந்து வென்றனர். அடுத்த இளவேனிற்காலத்தில் கோட்டைகளை எவ்வாறு கைப்பற்றுவது என்பதை மங்கோலியர்கள் கற்றிருந்தனர். செங்கிஸ் கானின் இளைய மகன் டொலுய் மற்றும் மருமகன் சிகி ஆகியோர் முதல் ஆட்களாகக் கோட்டைச்சுவர் மீது ஏறி மற்ற வீரர்களுக்கு உதாரணமாக விளங்கினர். அந்நேரத்தில் செங்கிஸ் கான் என்ற பெயரைப் பற்றிய பயம் சிறிது சிறிதாக எதிரிகளுக்கு உருவாகிக் கொண்டிருந்தது. மேற்குப் பகுதி தலைநகரான ததுங்-ஃபூவில் இருந்த தளபதி ஹுஷாஹு செங்கிஸ் கான் வருகிறார் என்ற செய்தியை அறிந்ததுமே தப்பித்து ஓடினான். நைமர்கள் கூட்டமைப்பின் தலைவனான குசலுகு செங்கிஸ் கானிடம் தோற்ற பிறகு மேற்கில் சென்று காரா கிதையில் (மேற்கு லியாவோ என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் லியாவோ வம்சத்தின் எஞ்சியவர்களால் இது தோற்றுவிக்கப்பட்டது) ஆட்சி செய்து கொண்டிருந்தார். செங்கிஸ் கான் அவனை வீழ்த்த நினைத்தார். அந்நேரத்தில் மங்கோலியப் படையானது தொடர்ந்து 10 ஆண்டுகள் போரிட்டிருந்தது. மேற்கு சியா மற்றும் சின் வம்சத்தவர்களுக்கு எதிரான இடைவிடாத போரினால் சோர்ந்திருந்தது. எனவே செங்கிஸ் கான், ‘’அம்பு’’ என்றழைக்கப்படும் தனது இளைய தளபதி செபே தலைமையில் வெறும் 2 தியுமன் (20,000) படைவீரர்களை மட்டும் அனுப்பினார். மேலும் அச்சிறு படையைக் கொண்டு மங்கோலியர்கள் குசலுகுவின் ஆதரவாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தினர். இதன் காரணமாக குசலுகுவின் இராணுவம் கசுகரின் மேற்குப் பகுதியில் தோற்கடிக்கப்பட்டது. குசலுகு தப்பித்த போதிலும் அவர் செபேயின் படைவீரர்களால் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார். கி.பி. 1218ம் ஆண்டு வாக்கில் காரா கிதையின் தோல்வியின் காரணமாக மங்கோலியப் பேரரசானது மேற்கில் பால்கசு ஏரி வரை பரவியிருந்தது. இந்த ஏரி குவாரசமியப் பேரரசின் எல்லையில் இருந்தது. குவாரசமியா என்பது ஒரு இசுலாமிய அரசாகும். இது மேற்கில் காசுப்பியன் கடல், பாரசீக வளைகுடா, தெற்கில் அரேபியக் கடல் வரை பரவியிருந்தது. ஆனால், மறுக்கமுடியாதவகையில், காராகிதையின் வெற்றிக்குப் பிறகு மற்ற நாடுகள் மீதான ஆர்வம் செங்கிஸ் கானுக்கு இல்லாமல் போய்விட்டது. 13ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குவாரசமிய வம்சமானது ஷா அலாதின் முகமதுவால் ஆளப்பட்டது. செங்கிஸ் கான் பட்டுப் பாதை வழியாக இதனுடன் வணிகம் செய்ய விரும்பினார். அதற்காக சுமார் 500 பேர் அடங்கிய வணிகக் குழுவை ஒட்டகங்களுடன் உகுனா என்பவரின் தலைமையில் அனுப்பினார். அவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமிய வணிகர்கள். அவர்களில் ஒரு இந்தியரும் முக்கியப் பங்கு வைத்தார். ஆனால் ஒற்றார் நகர ஆட்சியாளரான இனல்சுக் வேவு பார்க்க வந்ததாகக் கூறி அவர்களைத் தாக்கினார். நரகத்தின் கதவுகளைத் திறந்தார். இனல்சுக்குக்கு அறிமுகமான வணிகர் குழுவின் உறுப்பினர் ஒருவர் "ஹயர் கான்" என்ற பட்டத்தைக் கூறி அழைக்காமல் இனல்சுக் என்று பெயரைச் சொல்லி அழைத்துவிட்டதாக ஒரு அபத்தமான காரணத்தையும் இனல்சுக் கூறினார். இனல்சுக் இத்தாக்குதலுக்கு இழப்பீடு வழங்கவோ, குற்றம் புரிந்தவர்களை ஒப்படைக்கவோ மறுத்தார். இதனால் நிலைமை இன்னும் மோசமானது. பாரசீக வரலாற்றாளர் சுவய்னியின் கூற்றுப்படி இத்தாக்குதல் "ஒரு வணிகவண்டியை மட்டும் அழிக்கவில்லை, ஒரு முழு உலகத்தையும் வீணாக்கிவிட்டது". செங்கிஸ் கான் இரண்டாவது முறையாக மீண்டும் 3 தூதுவர்களை (2 மங்கோலியர்கள், 1 இசுலாமியர்) அனுப்பி இனல்சுக்கைச் சந்திக்காமல் ஷாவை நேரடியாக சந்திக்கச் சொன்னார். ஷாவோ மூவருக்கும் மொட்டை அடித்து இசுலாமிய தூதுவனின் தலையை வெட்டி மற்ற இருவரின் கையில் கொடுத்து அனுப்பினார். ஷாவின் இந்தச் செயலை அவரது சொந்த மக்கள் கூட ஆதரித்து இருக்க மாட்டார்கள். செங்கிஸ் கான் புர்கான் கல்துன் மலைக்குச் சென்று மூன்று நாட்களுக்கு உணவு உண்ணாமல் தெங்கிரியை (கடவுள்) வழிபடுகிறார். பின்னர் ஒற்றர்களைப் பயன்படுத்தி குவாரசாமியப் பேரரசைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் கேட்டறிந்தார். வரப்போகும் போருக்கான சகுனங்கள் நல்லவிதமாக இல்லை என்று ஈரானிய குறிசொல்பவர்கள் ஷாவிடம் சொன்னதைக் கூட செங்கிஸ் கான் அறிந்திருந்தார். அந்தளவுக்கு செங்கிஸ் கானின் ஒற்றர்கள் திறமையாகச் செயல்பட்டனர். மங்கோலியர்கள் போருக்காகப் பட்டு உடையை உடுத்தச் செங்கிஸ் கான் அறிவுறுத்தினார். பட்டை அம்புகளால் துளைக்க முடியாது. உடலைத் துளைத்து அம்பு ஒடிந்துவிட்டாலும் பட்டு உடையை வெளியே எடுப்பதன் மூலம் அம்பையும் வெளியே எடுத்துவிடலாம். பட்டுடன் ஊசி நூல்கள் மற்றும் அம்பு நுனியைக் கூர்மையாக்கத் தேவையானவற்றையும் மங்கோலியர்கள் எடுத்துச் சென்றனர். செங்கிஸ் கான் சுமார் 1,00,000 படைவீரர்கள் (10 தியுமன்), தனது முக்கியத் தளபதிகள் மற்றும் தன் மகன்கள் அடங்கிய ஒரு மாபெரும் படையுடன் புறப்பட்டார். ஒரு சில படைகளைச் சீனாவில் விட்டுவிட்டு, ஒகோடி கானை தனக்கு அடுத்த கானாக நியமித்துவிட்டு குவாரசமியாவுக்குப் புறப்பட்டார். ஒவ்வொரு மங்கோலிய வீரனும் 4 குதிரைகளுடன் புறப்பட்டனர். பயணத்தின் போதே குதிரையை மாற்றிப் பயணம் செய்வர். நீண்ட பயணத்தின் ஒருகட்டத்தில் நீர் கிடைக்காத போது மங்கோலியர்கள் தங்கள் குதிரைகளின் கழுத்தில் ஓட்டையிட்டு அவற்றின் இரத்தத்தைக் குடித்தனர். பின் ஓட்டைகளை மூடினர். உலர்த்தப்பட்ட ஆட்டுக்கறியையும் எடுத்துச்சென்றனர். கறியை குதிரை சேணத்திற்குக் கீழ் வைத்துவிடுவர். பயணம் செய்ய செய்ய அவர்கள் உடல் எடையால் கறி அழுத்தி நைந்து மிருதுவாகிவிடும். அதை உண்பர். மங்கோலியக் குதிரைகள் குளிருக்கு ஏற்பத் தகவமைந்தவை. உறைந்த தரையையும் தங்கள் குளம்புகளால் நோண்டி புல்லைச் சாப்பிடக்கூடியவை. எனினும் பயணம் முடிவதற்குள் குளிர் காரணமாக ஏராளமான குதிரைகளும் சில வீரர்களும் இறந்தனர். மங்கோலியர்கள் சுருக்குக் கயிறுகளையும் கொண்டுசென்றனர். 600 வருடங்களுக்குப் பிறகு நெப்போலியன் உருசியா மீது படையெடுத்தபோது கூட மங்கோலியர்களின் வழித்தோன்றல்களான கல்முக்குகள் இதே போன்ற சுருக்குக் கயிறுகளைப் பயன்படுத்தி குதிரைகள் மேல் உட்கார்ந்திருந்த பிரெஞ்சுப் படையினரை சுருக்கிட்டுக் கீழே தள்ளி தரதரவென தரையில் இழுத்துச்சென்றனர். மேலும் மங்கோலியர்கள் ஐரோப்பியர்களுக்கு 100 வருடங்களுக்கு முன்னரே பீரங்கிகளைத் தயாரித்தனர். அதைப் பிரித்து யாக் எருமைகள் மற்றும் ஒட்டகங்கள் மேல் இந்தப் போருக்காக ஏற்றிச்சென்றனர். அதேபோல் ஆறுகளைக் கடக்க ஒகோடி 38க்கும் மேற்பட்ட பாலங்களையும் கட்டினார். பாலம் கட்டாத இடத்தில் மங்கோலியர்கள் தங்கள் குதிரைகளை நீருக்குள் இறக்கி அவற்றின் வால்களைப் பிடித்து ஆற்றைக் கடந்தனர். ஷா அலாதின் குவாரசாமியாவின் கிழக்குப் பகுதியில் செங்கிஸ் கானுக்காகக் காத்திருந்தார். மாதக்கணக்கில் பயணம் செய்ததால் அவர்கள் களைத்திருப்பர். அவர்களை எளிதாக வீழ்த்திவிடலாம் என்று நினைத்திருந்தார். செங்கிஸ் கான், தளபதிகள் மற்றும் அவரது மகன்கள் தலைமையிலான மங்கோலிய இராணுவமானது குவாரசமியாவால் ஆளப்பட்ட பகுதிக்குள் நுழைந்ததன் மூலம் தியான் சான் மலைகளைக் கடந்ததது. படைகளை மூன்றாகப் பிரித்தார். அவரது மகன் சூச்சி முதல் படையுடன் குவாரசமியாவின் வடகிழக்குப் பகுதியை நோக்கி வந்தார். அவரது தளபதி செபே இரண்டாவது படையுடன் இரகசியமாக தென்கிழக்குப் பகுதியை நோக்கி வந்து முதல் படையுடன் சமர்கந்தின் மேல் சிறு தாக்குதலை நடத்தினர். மூன்றாவது படையானது செங்கிஸ் கான் தலைமையில் பயணித்தது. ஷா ஒரு பெரும்படையை செபேவுக்கு எதிராக அனுப்பினார். அப்படை கிளம்பியவுடனேயே ஷாவுக்கு ஒரு செய்தி வந்தது. அது செங்கிஸ் கான் நாட்டின் மேற்குப் பகுதியை தீக்கிரையாக்குவதாக வந்த செய்தி. ஷாவால் நம்பமுடியவில்லை. ஆனால் அகதிகளாக வந்த மக்கள் அதை உறுதிசெய்தனர். செங்கிஸ் கான் இரகசியமாக தன் படையை முன் எந்த இராணுவமும் கடக்காத தொலைவாக சுமார் 3,200 கி.மீ. தொலைவிற்குப் பாலைவனம், மலைகள் மற்றும் புல்வெளி வழியாகக் கூட்டி வந்து யூகிக்க முடியாத வகையில் எதிரி எல்லைகளுக்குப் பின்னால் மேற்குப் பகுதியில் தோன்றினார். அப்பகுதி நாடோடிகளுடன் நட்புக்கொண்டு வழியறிந்து செங்கிஸ் கான் அப்பாலைவனத்தைக் கடந்தார். 650 வருடங்களுக்குப் பிறகு உருசிய இராணுவத்தினர் 650 கி.மீ. அகலமுடைய இப்பாலைவனத்தைக் கடக்க முயன்று தங்கள் குதிரைகள் அனைத்தையும் இழந்தனர். ஆனால் செங்கிஸ்கான் தனது படையினரை திறம்பட வழிநடத்தி அப்பாலைவனத்தைக் கடந்தார். பரந்த பாலைவனத்தைக் கடந்து மரங்களைக் கண்டவுடனேயே மங்கோலியர்கள் அவற்றை வெட்டி ஏணிகள், முற்றுகை இயந்திரங்கள் மற்றும் பிற தாக்குதல் கருவிகளை உருவாக்கினர். மேற்கில் செங்கிஸ் கான், கிழக்கில் சூச்சி, வடக்கில் சகதை மற்றும் ஒகோடி, மற்றும் தெற்கில் செபே என ஷா நான்கு திசைகளிலும் எந்நேரமும் சுற்றி வளைக்கப்படலாம் என்ற சூழ்நிலை உருவானது. ஷாவின் இராணுவம் பல்வேறு உட்பூசல் சண்டைகளால் பிரிந்திருந்தது. அவர் தனது படைகளைச் சிறுசிறு குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு நகரத்தையும் காக்க அனுப்பி வைத்திருந்தார். இப்பிரித்தல் குவாரசமியத் தோல்வியில் முக்கியப் பங்காற்றியது. மங்கோலியர்கள் நெடுதூரப் பயணம் காரணமாகக் களைத்திருந்தபோதும் ஒரு பெரும்படைக்குப் பதிலாக சிறுசிறு படைகளைச் சந்தித்தனர். மங்கோலிய இராணுவம் உயர்ந்த மூலோபாயம் மற்றும் தந்திரோபாயங்கள் மூலமாக சீக்கிரமே ஓற்றார் நகரைக் கைப்பற்றியது. செங்கிஸ் கான் மக்களை மொத்தமாகக் கொல்ல உத்தரவிட்டார். எஞ்சியவர்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். இனல்சுக்கின் காதுகள் மற்றும் கண்களில் காய்ச்சிய வெள்ளி ஊற்றப்பட்டது. போரின் முடிவில் ஷா சரணடையாமல் தப்பினார். செங்கிஸ் கான் சுபுதை மற்றும் செபேயை 20,000 வீரர்கள் மற்றும் 2 ஆண்டு நேரம் வழங்கி அவரைப் பிடிக்க உத்தரவிட்டார். ஷா விசித்திரமான முறையில் தன் ஆட்சிக்குட்பட்ட ஒரு சிறு தீவில் இறந்தார். தான் செய்த தவறுகளின் காரணமாக ஒரு காலத்தில் செல்வச்செழிப்பில் பேரரசனாக வாழ்ந்த ஷா தான் அணிந்திருந்த ஒரே ஒரு சட்டையுடன் பரிதாபகரமாக நிலையில் புதைக்கப்பட்டார். மங்கோலிய வெற்றியானது முன்னெப்போதும் இல்லாத வகையில் ஈவு இரக்கமற்றதாக இருந்தது. சமர்கந்தின் வீழ்ச்சிக்குப் பிறகு தலைநகரம் பொக்காராவுக்கு மாற்றப்பட்டது. செங்கிஸ் கான் அரச கட்டடங்களை மட்டுமின்றி ஊர்கள், மக்கள் ஏன் பெரும்பகுதி விளைநிலங்களைக் கூட அழித்தார். மங்கோலியர்கள் சமர்கந்தைத் தாக்கினர். பிடிக்கப்பட்ட எதிரிகள் உடல்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தினர். பல நாட்களுக்குப் பிறகு மீதமிருந்த சில போர்வீரர்கள், ஷாவின் விசுவாசமான ஆதரவாளர்கள் கோட்டையில் தாக்குப்பிடித்தனர். கோட்டை வீழ்ந்தபிறகு செங்கிஸ் கான் தனது “சரணடை அல்லது இற” விதிமுறையைச் செயல்படுத்த ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது. சமர்கந்தில் ஆயுதத்தைக் கையில் எடுத்த ஒவ்வொரு எதிரி வீரர்களும் வெட்டி வீழ்த்தப்பட்டனர். சமர்கந்தின் மக்கள் நகரைக் காலி செய்ய உத்தரவிடப்பட்டனர். நகரத்துக்கு வெளியே ஒரு சமவெளியில் கூடுவதற்கு உத்தரவிடப்பட்டது. அங்கு அவர்கள் கொல்லப்பட்டனர். வெற்றியைக் குறிக்கக் கொல்லப்பட்டவர்களின் தலைகள் பிரமிடுகளாக அடுக்கப்பட்டன. மங்கோலிய உயர் அதிகாரியான அதா-மாலிக் சுவயனி, ஆக்சசு ஆற்றங்கரையில் தரமேசில் இவ்வாறு எழுதினர், "அனைத்து மக்களும், ஆண்களும் பெண்களும் வெளியே சமவெளிக்கு ஓட்டப்பட்டு, வழக்கப்படிப் பிரிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்". பொக்காராவுக்கு செல்லும் முன் எதிரில் பட்ட சில சிறு நகரங்களை செங்கிஸ் கான் தாக்கினார். இதன்மூலம் உள்ளூர் மக்கள் பொக்காராவுக்கு அகதிகளாக ஓடினர். அவர்கள் நகரங்களை ஆக்கிரமித்தது மட்டுமின்றி மங்கோலியர்கள் பற்றிய பயத்தையும் அதிகப்படுத்தினர். இந்த உத்தியால் பொக்காராவின் துருக்கியப் பாதுகாவலர்கள் பயம் அடைந்தனர். 500 வீரர்களைத் தவிர சுமார் 20,000 வீரர்கள் முக்கிய மங்கோலிய இராணுவம் வருவதற்குள் தப்பித்துவிடலாம் என்று நினைத்து ஓடினர். பொக்காரா அதிகப்படியான பாதுகாப்பின்றி இருந்தது. ஒரு அகழி மற்றும் ஒரு சுவருடன் காணப்பட்டது. இது அனைத்து குவாரசமிய நகரங்களிலும் காணப்பட்ட ஒரு பொதுவான கட்டமைப்பாகும். நகரத் தலைவர்கள் மங்கோலியர்களுக்கு வாயில்களைத் திறந்து விட்டனர். எனினும் துருக்கியப் பாதுகாவலர்களின் ஒரு படை மற்றொரு 12 நாட்களுக்கு நகரின் கோட்டையை நடத்தியது. கோட்டையில் இருந்து தப்பிப்பிழைத்தவர்கள் கொல்லப்பட்டனர். கலைஞர்களும், கைவினைஞர்களும் மங்கோலியாவுக்கு அனுப்பப்பட்டனர். போரில் கலந்து கொள்ளாத இளைஞர்கள் மங்கோலியா இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். மீதமுள்ள மக்கள் அடிமைகளாக அனுப்பப்பட்டனர். மங்கோலிய வீரர்கள் நகரை சூறையாடியபோது, தீ விபத்து ஏற்பட்டு பெரும்பான்மையான நகரம் தரைமட்டமானது. செங்கிஸ் கான் தான் வென்ற எந்த நகரத்துக்குள்ளும் நுழைந்தது கிடையாது. நகரம் வெல்லப்பட்டதும் அதைத் தன் படைவீரர்களிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிடுவார். ஆனால் அவர் பொக்காரா நகரத்துக்குள் முதன்முதலில் நுழைந்தார். அங்கிருந்த பெரிய கட்டடமான கலோன் தூபிப் பள்ளிவாசலைப் பார்த்து "இதுதான் ஷா இருக்கும் இடமா?" என்று கேட்டார். மொழிபெயர்த்தவர் "இல்லை, இது வழிபடும் இடம்" என்றார். செங்கிஸ்கான் வேறெந்த கட்டடத்துக்குள்ளும் அதுவரையில் நுழைந்ததாக வரலாற்றுப் பதிவுகள் கிடையாது. எஞ்சிய மக்களை செங்கிஸ் கான் வரவழைத்தார். அங்கு அவர் கூறியதாவது, மற்ற கட்டடங்கள் அழிக்கப்பட்டபோதும் உயர்ந்த கட்டடமான அந்தப் பள்ளிவாசலை மட்டும் எதுவும் செய்ய வேண்டாம் என்று செங்கிஸ்கான் கூறினர். இதன் காரணமாக அப்பள்ளிவாசல் இன்றும் நிலைத்து நிற்கிறது. இதற்கிடையில், செல்வந்த வர்த்தக நகரமான ஊர்கெஞ்ச் இன்னும் குவாரசமியப் படைகளின் கைகளில் இருந்தது. மங்கோலியப் படையெடுப்பின் மிக கடினமான போரானது ஊர்கெஞ்ச் மீதான தாக்குதல் என நிரூபிக்கப்பட்டது. குவாரசமியப் பாதுகாவலர்கள் ஒரு கடும் தற்காப்பில் ஈடுபட்டு அதன் பிறகுதான் நகரம் வீழ்ந்தது. அவர்கள் பகுதி, பகுதியாகப் போரிட்டனர். மங்கோலியத் தந்திரோபாயங்களை நகரச் சண்டையிடுவதற்கு ஏற்றவகையில் மாற்றியமைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, மங்கோலியச் சேதம் சாதாரண அளவைவிட அதிகமாக இருந்தது. எப்பொழுதும்போல கலைஞர்கள் மங்கோலியாவுக்கு அனுப்பப்பட்டனர். மங்கோலிய வீரர்களுக்கு அடிமைகளாக இளம் பெண்களும், குழந்தைகளும் கொடுக்கப்பட்டனர். மீதமுள்ள மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பாரசீக அறிஞர் அதா-மாலிக் சுவய்னி கூறுகையில், 50,000 மங்கோலிய வீரர்கள் ஒவ்வொருவரும் 24 ஊர்கெஞ்ச் குடிமக்களைக் கொல்ல உத்தரவிடப்பட்டது. அதாவது 12 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர் என்று பொருள்படுகிறது. மனித வரலாற்றில் மிகவும் குருதி தோய்ந்த படுகொலைகளில் ஒன்றாக ஊர்கெஞ்ச் கருதப்படுகிறது. எனினும் நவீன வரலாற்றாளர்களின் கூற்றுப்படி இதற்கெல்லாம் தகுந்த ஆதாரங்கள் கிடையாது. எந்த நகரத்தாலும் மங்கோலியத் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. எந்தக் கோட்டையும் கைப்பற்றப்படாமல் தப்பவில்லை. எந்த வழிபட்டாலும் மக்களைக் காப்பாற்ற முடியவில்லை. எந்த அதிகாரியாலும் பேசியோ அல்லது லஞ்சம் கொடுத்தோ தப்பமுடியவில்லை. எதனாலும் மங்கோலிய இராணுவத்தை தடுக்கவோ ஏன் அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தக் கூட முடியவில்லை. இதற்கிடையில், செங்கிஸ் கான் அவரது மூன்றாவது மகனான ஒகோடி கானை தனது இராணுவப் படையெடுப்புக்கு முன்னரே தனது வாரிசாக தேர்ந்தெடுத்தார். பின்னர் பின்வரும் கான்களும் அவரது நேரடி வம்சாவளியினராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். மேற்கு நோக்கிச் சென்று குவாரசமியாவைப் போர்புரியும்போது, சின் சீனாவில் உள்ள அனைத்து மங்கோலியப் படைகளின் தளபதியாக செங்கிஸ் கான் தனது மிக நம்பகமான தளபதிகளில் ஒருவரான முகலியைத் தேர்ந்தெடுத்து இருந்தார். மிக உயரமான இரு புத்தர் சிலைகளைக் கொண்ட ஆப்கானித்தான் நகரமான பாமியானில் சகதை கானின் மகனான முத்துகன் போரில் உயிரிழந்தார். செங்கிஸ் கானின் கோபத்திற்கு அந்நகர் உள்ளானது. யாரும் அழுகவில்லை. மாறாக உணர்வுகளை கோபமாக போரில் காண்பித்தனர். வளமான அப்பகுதி பாலைவனமானது. மங்கோலியத் தாக்குதலுக்கு உண்டான அந்த இடம் இன்றும் உள்ளூர் அளவில் "சபிக்கப்பட்ட பகுதி" என்று அழைக்கப்படுகிறது. அரல் கடல் முதல் பாரசீகப் பாலைவனம் வரை உள்ள பகுதிகள் பயந்து கிடந்தது. கிசுகிசுப்பில் மட்டுமே தப்பிப்பிழைத்தவர்கள் "அந்த நபரைப்" பற்றி பேசினார்கள். சத்தமாகப் பேசப் பயந்தனர். ஒரு மங்கோலிய குதிரைவீரன் தனி ஆளாக ஒரு கிராமத்திற்குச் சென்று பலரைக் கொன்றுவிட்டு அவர்களுடைய மாடுகளை ஓட்டிச் செல்லலாம். ஒருவர் கூட எதிர்த்து கைகூடத் தூக்க மாட்டார்களாம். அந்த அளவிற்கு எதிர்ப்பதற்கான சக்தியை மக்கள் இழந்திருந்தனர். மின்ஹஜ் அல்-சிராஜ் ஜூஸ்ஜனி என்ற வரலாற்றாசிரியர் கூற்றுப்படி இமாம் ஒருவர் செங்கிஸ் கானிடம் பணியாற்றினார். அவரிடம் செங்கிஸ் கான் இவ்வாறு கூறினார், "ஒரு வலிமையான பெயர் உலகில் எனக்கு பின்னால் நிலைத்திருக்கும்". தயக்கத்துடனே அந்த இமாம் "நீங்கள் ஏராளமான மக்களைக் கொன்று கொண்டிருக்கிறீர்கள், உங்கள் பெயரை நினைவில் வைத்துக் கொள்ள ஒருவர் கூட இல்லாமல் போகலாம்" என்றார். செங்கிஸ் கானுக்கு இமாமின் இந்தப் பதில் பிடிக்கவில்லை. பின்னர் செங்கிஸ் கான் "முழுமையான புரிதலை நீங்கள் கொண்டிருக்கவில்லை என்பது எனக்கு தெளிவாகத் தெரிகிறது மற்றும் நீங்கள் குறைந்த அளவே புரிந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த உலகில் ஏராளமான மன்னர்கள் உள்ளனர். கொள்ளைக்கார ஷாவின் குதிரைக் குளம்பு அடையும் இடம் எல்லாம் பேரழிவு ஏற்படும். இது தவிர உலகின் மற்ற பகுதிகளில் உள்ள மக்கள், மற்றும் நாடுகளின் மன்னர்கள் என் கதையைப் புரிந்துகொள்வார்கள்!" என்றார். கி.பி. 1220ல் குவாரசமியப் பேரரசின் தோல்விக்குப் பிறகு செங்கிஸ் கான் பாரசீகம் மற்றும் ஆர்மீனியாவில் இருந்த படைகளைத் கூட்டிக் கொண்டு மங்கோலியாவுக்குத் திரும்பினார். சுபுதையின் ஆலோசனைப்படி மங்கோலிய இராணுவம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. செங்கிஸ் கான் முதல் இராணுவத்தை ஆப்கானித்தான் மற்றும் வட இந்தியா வழியாக மங்கோலியாவுக்கு வழிநடத்த, மற்றோரு இராணுவம் சுமார் 20,000 (2 தியுமன்) வீரர்களுடன் காக்கேசியா மற்றும் உருசியாவுக்கு, சுபுதை மற்றும் செபே தலைமையில் சென்றது. அவர்கள் ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் வரை சென்றனர். மங்கோலியர்கள் சார்சியா ராச்சியத்தைத் தோற்கடித்தனர். கிரிமியாவில் உள்ள காஃபாவின் செனோவா வர்த்தகக் கோட்டையைத் தாக்கினர். பின் கருங்கடல் அருகே குளிர்காலத்தைக் கழித்தனர். மங்கோலியாவுக்குத் திரும்புகையில், சுபுதையின் படைகள் மங்கோலியர்களைத் தடுக்க வந்த குமான்-கிப்சாக்குகள், ஹலிச்சின் 'தைரிய' மிசுதிசுலாவ் மற்றும் கீவின் மூன்றாம் மிசுதிசுலாவ் தலைமையிலான மோசமாக ஒருங்கிணைக்கப்பட்ட 80,000 கீவ உருசியாவின் துருப்புக்கள் அடங்கியக் கூட்டுப் படைகளைத் தாக்கினர். சுபுதை சிலாவிக் இளவரசர்களுக்கு தூதுவர்களை அனுப்பித் தனியாக அமைதிக்காக அழைப்பு விடுத்தார். ஆனால் தூதுவர்கள் சிரச்சேதம் செய்யப்பட்டனர். கி.பி. 1223ம் ஆண்டில் கல்கா ஆற்றின் அருகே நடந்த போரில் சுபுதையின் படைகள் தங்களை விடப் பெரிய கீவ படையை தோற்கடித்தனர். சமாரா பெண்ட் போரில் அண்டை நாட்டு வோல்கா பல்கேரியர்களால் அவர்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆனால் இந்நிகழ்வைப்பற்றி, மோசுலில் சுமார் 1100 மைல்களுக்கு அப்பால் அரபு வரலாற்றாசிரியரான இபின் அல்-ஆதிர் எழுதிய ஒரு சிறிய பதிவைத் தவிர வேறு வரலாற்றுப் பதிவு எதுவும் இல்லை. மோர்கன், சேம்பர்ஸ், கிரோசெட் போன்றோரின் பல்வேறு வரலாற்று ரீதியான இரண்டாம் நிலை ஆதாரங்கள்- மங்கோலியர்கள் உண்மையில் பல்கேரியர்களைத் தோற்கடித்தனர் என்று கூறுகின்றன - சேம்பர்ஸ் ஒரு படி மேலே சென்று பல்கேரியர்கள், தாங்கள் மங்கோலியர்களைத் தோற்கடித்து அவர்களைத் தங்களின் பிரதேசத்தில் இருந்து வெளியேற்றியதாக (சமீபத்தில் தோற்கடிக்கப்பட்ட) உருசியர்களிடம் கதை கூறினர் என்கிறார். பின்னர் உருசிய இளவரசர்கள் சமாதானத்திற்காகத் தூது அனுப்பினர். சுபுதை அமைதிக்கு ஒப்புக்கொண்டார். ஆனால் இளவரசர்களை மன்னிக்கும் மனநிலையில் அவர் இல்லை. மங்கோலியச் சமுதாயத்தில் பிரபுக்களுக்கான வழக்கமாக இருந்தது போலவே, உருசியப் இளவரசர்களுக்கும் இரத்தமில்லாத மரணம் கொடுக்கப்பட்டது. சுபுதை ஒரு பெரிய மர மேடையைக் கட்டி தனது மற்ற தளபதிகளுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டார். கீவின் மூன்றாம் மிசுதிசுலாவ் உட்பட ஆறு ரஷ்ய இளவரசர்கள் இந்த தளத்தின் கீழ் வைக்கப்பட்டு நசுங்கி மரணமடைந்தனர். பல்கேரியாவின் எல்லைக்கு அப்பால் ஏராளமான பசுமையான மேய்ச்சல் நிலம் உள்ளதை போர்க் கைதிகளிடமிருந்து மங்கோலியர்கள் அறிந்து கொண்டனர். ஹங்கேரியையும், ஐரோப்பாவையும் கைப்பற்றத் திட்டமிட்டனர். இதன் பின்னர் செங்கிஸ் கான் சுபுதையை மங்கோலியாவிற்கு திரும்ப அழைத்தார். சமர்கந்திற்குத் திரும்பும் வழியில் செபே இறந்தார். சுபுதை மற்றும் செபே தலைமையிலான புகழ்பெற்ற குதிரைப்படைப் படையெடுப்பு, அவர்கள் காசுப்பியன் கடல் முழுவதையும் தங்கள் பாதையில் தோற்கடித்தது, இன்றுவரை இணையற்றதாக இருக்கிறது. மேலும் மங்கோலிய வெற்றிகள் பிற நாடுகளுக்கு, குறிப்பாக ஐரோப்பாவிற்குப் பரவியது. இந்த இரண்டு இராணுவ நடவடிக்கைகளும் பொதுவாக அப்பிராந்தியங்களின் அரசியல் மற்றும் கலாச்சாரச் கூறுகளை உணர முயற்சித்த உளவுத்துறை நடவடிக்கைகளாகக் கருதப்படுகின்றன. கி.பி. 1225ல் இரு இராணுவங்களும் மங்கோலியாவுக்குத் திரும்பின. இந்தப் படையெடுப்புகள் வழியில் இருந்த எந்தவொரு எதிர்ப்பையும் அழித்ததன் மூலம் திரான்சோக்சியானா மற்றும் பாரசீகத்தை ஏற்கனவே பலம் வாய்ந்த பேரரசுடன் சேர்த்தன. பின்னர் செங்கிஸ்கானின் பேரன் படு மற்றும் கோல்டன் ஹோர்டின் கீழ் மங்கோலியர்கள் கி.பி. 1237ல் வோல்கா பல்கேரியா மற்றும் கீவ உருசியா ஆகிவற்றைக் கைப்பற்றினர். கி.பி. 1240ல் படையெடுப்பு முடிவடைந்தது. நெப்போலியனும் ஹிட்லரும் உருசியா மீது படையெடுத்ததுதான் அவர்களின் அழிவிற்குக் காரணம் என்று சொல்லப்படுவது உண்டு. அதில் உருசியாவின் கடுங்குளிரும் ஒரு முக்கியப் பங்காற்றியது என்ற கருத்தும் உண்டு. ஆனால் மங்கோலியர்கள் உருசியா மீது குளிர்காலத்தில் படையெடுத்துச் சென்றனர். வென்றனர். குளிர்காலத்தில் தான் ஆறுகள் உறைந்திருந்தன. எனவே மங்கோலியர்களின் குதிரைகள் ஆற்றைக் கடப்பது எளிதாக இருந்தது. அந்நேரத்தில் உருசியா ஒரு ஒன்றிணைந்த பெரிய நாடாக இருக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். பல்வேறு சிறு சிறு அரசுகளாக இருந்த உருசியாவை ஒன்றிணைத்து அதை ஒரு மாநிலமாக்கியது மங்கோலியர்கள் தான். நோவ்கோரோட் கிரானிக்கல் எனும் நூலில் மங்கோலியப் படையெடுப்பு பற்றி பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது: "இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியவில்லை, எங்கு சென்றார்கள் என்றும் தெரியவில்லை; கடவுளுக்குத்தான் தெரியும் நம் பாவங்களுக்குத் தண்டனையாக இவர்களை எங்கிருந்து கூட்டிவந்தார் என்று". கப்பம் கட்டிய தாங்குடுகள் (மேற்கு சியா அல்லது சி சியா) குவாரசமியப் படையெடுப்பின் பொது செங்கிஸ் கானுக்கு ஆதரவாக படைகளை அனுப்பவில்லை. மேற்கு சியாவும், தோற்கடிக்கப்பட்ட சின் வம்சமும் இணைந்து செங்கிஸ் கானுக்கு எதிராக கூட்டணி ஏற்படுத்தினர். மங்கோலியர்கள் திறம்பட பதிலடி கொடுப்பதைத் தவிர்ப்பதற்காக குவாரசமியாவிற்கு எதிரான படையெடுப்பைப் பயன்படுத்தினர். செங்கிஸ் கான் தன் படைவீரன் ஒருவனிடம் "நம்பிக்கை துரோக தாங்குடு அரசு இன்னும் இருக்கிறது" என்று நண்பகலிலும் மாலைப்பொழுதிலும் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தன்னிடம் கூறுமாறு கூறினார். சின் வம்சத் தூதன் ஒருவன் அமைதி உடன்படிக்கை பற்றிப் பேச, பரிசளிக்க ஒரு கிண்ணம் நிறைய அழகிய முத்துக்களுடன் செங்கிஸ் கானிடம் வந்தான். செங்கிஸ் கான் தன் கூடாரத்தின் எதிரில் இருந்த குப்பையில் முத்துக்களை வீசச் சொன்னார். குனிபவர்கள் யார் வேண்டுமானாலும் எடுத்துச் செல்லட்டும் என்றார். பேரரசர்கள் மற்றும் அரசர்கள் பரிசுகளுடன் வந்து அமைதி உடன்படிக்கை செய்வது பின்னர் அவற்றை மீறுவது, இதுவே அவர்களுக்கு வாடிக்கையாகப் போய்விட்டதை அறிந்திருந்தார். தனக்கு வயதாகிவிட்டதை உணர்ந்திருந்தார். துன்பகரமான கனவுகள் தூக்கத்தில் தோன்றி நிம்மதியின்றி இருந்தார். அடிக்கடி "நான் என் கடைசிப் பயணத்தை மேற்கொள்ளப்போகிறேன்" என்றார். கி.பி. 1226ல் மேற்கிலிருந்து திரும்பிய செங்கிஸ் கான் தாங்குடுகளுக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்தார். இவரது படைகள் சீக்கிரமே கெயிசுயி, கன்சோவு மற்றும் சுசோவு (சியாங்சு மாகாணத்தில் உள்ள சுசோவு அல்ல), மற்றும் இலையுதிர் காலத்தில் சிலியாங்புவை கைப்பற்றின. தாங்குடுகளின் படைத்தலைவன் ஒருவன் மங்கோலியர்களை கெலன் மலைப் பகுதியில் போருக்கு அழைத்தான். ஆனால் தோற்கடிக்கப்பட்டான். நவம்பரில் செங்கிஸ் கான் தாங்குடுகளின் லிங்சோவு நகரை முற்றுகையிட்டு வென்றார். மஞ்சள் நதியைக் கடந்து தாங்குடுகளின் உதவி இராணுவத்தை வென்றார். புராணத்தின் படி, இவ்விடத்தில் தான் செங்கிஸ் கான் வானத்தில் 5 விண்மீன்கள் வரிசையாக இருப்பதைக் கண்டார். தனது வெற்றிக்கு நல்ல சகுனமாக இதை எண்ணினார். கி.பி. 1227ல் செங்கிஸ் கானின் படையானது தாங்குடுகளின் தலைநகரான நிங்சியாவை தாக்கி அழித்து மேலும் முன்னேறி லிந்தியாவோ-ஃபு, சினிங் மாகாணம், சின்டு-ஃபு மற்றும் தெசுன் மாகாணம் ஆகியவற்றை இளவேனிற்காலத்தில் கைப்பற்றியது. தெசூனில், தாங்குடு தளபதி மா சியான்லாங் பல நாட்களுக்குக் கடுமையான எதிர்ப்பைக் கொடுத்தார். மேலும் நகர நுழைவாயிலுக்கு வெளியே படையெடுப்பாளர்களுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தினார். மா சியான்லாங் பின்னர் போரில் பெற்ற அம்புக் காயங்கள் காரணமாக இறந்தார். தெசூனை வென்ற பிறகு செங்கிஸ் கான் கடுமையான கோடைக்காலம் காரணமாக லியுபன்சனுக்குச் (குயிங்சுயி ஜில்லா, கன்சு மாகாணத்திற்கு) சென்றார். புதிய தாங்குடு பேரரசர் விரைவில் மங்கோலியர்களிடம் சரணடைந்தார். எஞ்சியிருந்த தாங்குடுகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக சரணடைந்தனர். தாங்குடு பேரரசரின் பெயர் "புர்கான்" ஆகும். இப்பெயருக்குக் கடவுள் என்று பொருள். கொல்லும் முன் அரசரின் பெயரை மாற்றச் சொன்னார் செங்கிஸ் கான். அதன் பின்னரே அரசர் கொல்லப்பட்டார். நம்பிக்கை துரோகம் மற்றும் எதிர்ப்பின் காரணமாக செங்கிஸ் கான் தாங்குடு அரச குடும்பம் முழுவதையும் கொல்ல உத்தரவிட்டார். தாங்குடு பரம்பரை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. செங்கிஸ் கானுக்குப் பின் யார் மன்னன் என்ற கேள்வி அவரது கடைசி ஆண்டுகளில் வயது முதிர்ந்தபோது முக்கியமான பிரச்சினையாக எழத்தொடங்கியது. செங்கிஸ் கானின் மகன் சூச்சியின் உண்மையான தந்தை யார்? என்பது முக்கியமாக சர்சைக்குரியதாக இருந்தது. ஏனெனில் சூச்சி சகோதரர்களில் மூத்தவராக இருந்தார். பாரம்பரிய வரலாற்றுப் பதிவுகளின் படி, சூச்சியின் தந்தை யார்? என்ற சர்ச்சையை சகதை மிகவும் வலுவாக எழுப்பினார். மங்கோலியர்களின் இரகசிய வரலாற்றின் படி, செங்கிஸ் கான் குவாரசமியப் பேரரசின் மீது படையெடுப்பதற்கு முன்பு, சகதை தனது தந்தைக்கும் சகோதரர்களுக்கும் முன்பாக சூச்சியை செங்கிஸ் கானின் வாரிசாக ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று அறிவித்தார். இந்தப் பதட்டத்திற்கு விடையிறுக்கும் வகையிலும், மற்றும் மேலும் பிற காரணங்களுக்காகவும், ஒகோடி வாரிசாக நியமிக்கப்பட்டார். ஒகோடி கான், இயற்பெயர் ஒகோடி (அண். கி.பி. 1185-திசம்பர் 11, 1241), செங்கிஸ் கானின் 3வது மைந்தனும், மங்கோலியப் பேரரசின் 2வது பெரிய கானும் ஆவார். இவர் தந்தை ஆரம்பித்த விரிவாக்கத்தைத் தொடர்ந்தார். மங்கோலியப் பேரரசின் எல்லையை மேற்கு மற்றும் தெற்கு திசைகளில் ஐரோப்பா மற்றும் ஆசியா மீது படையெடுத்து விரிவாக்கி உலகப் பிரபலமானார். செங்கிஸ் கான் அவரது மகன்களுக்கு (குறிப்பாக சகதை மற்றும் சூச்சி ஆகியோருக்கு) இடையேயான மோதல் பற்றி அறிந்து இருந்தார். அவர் இறந்துவிட்டால் அவர்களுக்கு இடையேயான மோதல் குறித்து கவலை கொண்டார். ஆகையால் அவருடைய மகன்களின் மத்தியில் தனது பேரரசைப் பிளவுபடுத்த அவர் தீர்மானித்தார். அவர்கள் அனைவரையும் கான்களாகவும், அவருடைய மகன்களில் ஒருவரை அவரது வாரிசாக நியமிக்கவும் முடிவு செய்தார். சகதை அவரது கோபம் மற்றும் அவதூறான நடத்தை காரணமாக அவநம்பிக்கையாகக் கருதப்பட்டார். ஏனெனில் அவர் தனது தந்தையின் வாரிசாக சூச்சி ஆகவிருந்தால், சூச்சியைப் பின்தொடர மாட்டேன் என்று கூறியிருந்தார். செங்கிஸ் கானின் இளைய மகனான டொலுய், சகோதரர்களில் இளையவராக இருந்தார். அதனால் வாரிசாக நியமிக்கப்படவில்லை. மங்கோலிய கலாச்சாரத்தில் இளைய மகன்களுக்கு அவர்களின் வயது காரணமாக அதிகப் பொறுப்புகள் கொடுக்கப்படுவதில்லை. சூச்சியை வாரிசாக அறிவித்து இருந்தால், சகதை அவருடன் போரிட்டு பேரரசைக் கவிழ்த்துவிடுவார். எனவே, செங்கிஸ் கான் ஒகோடியிடம் அரியணையைக் கொடுக்க முடிவு செய்தார். ஒகோடி, செங்கிஸ் கானால் நம்பகத்தன்மை உள்ளவராகவும், மற்றவர்களுடன் ஒப்பிடும்போது நிலையானவராகவும், நடைமுறை வாழ்க்கை அறிந்தவராகவும், நடுநிலையானவராகவும் இருந்தார். ஒகோடியின் நியமனம் அவரது சகோதரர்களை சமாதானம் செய்யக் கூடிய வகையிலும் இருந்தது. சூச்சி கி.பி. 1226ல் தனது தந்தையின் வாழ்நாளிலேயே இறந்தார். ராட்சநெவ்சுகி போன்ற சில அறிஞர்கள் சூச்சிக்கு செங்கிஸ் கானின் ஒரு உத்தரவினால் இரகசியமாக விஷம் வைக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ளனர். ரசித் அல்-தின் கூறும்போது கி.பி. 1226ம் ஆண்டு இளவேனிற்காலத்தில் தனது மகன்களை மாபெரும் கான் அழைத்தார். அவரது சகோதரர்கள் இந்த உத்தரவை ஏற்றுக் கொண்டபோது, சூச்சி குராசானிலேயே இருந்தார். வரலாற்றாளர் சிசனி கூறும்போது கருத்து வேறுபாடு சூச்சி மற்றும் சகோதரர்களுக்கு இடையே ஊர்கெஞ்ச் முற்றுகைப் போரின்போது சிறு சச்சரவில் இருந்து உருவானது. சூச்சி அழிவில் இருந்து ஊர்கெஞ்சை பாதுகாக்க முயன்றார், ஏனெனில் அது அவருக்கென பரிசாக ஒதுக்கி வைத்திருந்த ஒரு பகுதியில் இருந்தது. சிசனி சூச்சியின் தெளிவான வெளிப்படையான கூற்றுடன் தனது கதையை முடிக்கிறார்: "செங்கிஸ் கான் பல மக்களைப் படுகொலை செய்து, பல நிலங்களை வீணாக்கிவிட்டார். நான் வேட்டையாடும் போது எனது தந்தையைக் கொன்று, சுல்தான் முகமதுவுடன் ஒரு கூட்டணியை உருவாக்கி, இந்த நிலத்தை உயிரோடு கொண்டுவந்து முஸ்லிம்களுக்கு உதவியும் ஆதரவும் வழங்கினால் நான் ஒரு சேவையைச் செய்ததாக இருக்கும்." இந்த திட்டங்களைக் கேட்டதற்குப் பின் செங்கிஸ் கான் தனது மகனுக்கு இரகசியமாக விஷம் வைக்கக் கட்டளையிட்டார் என்று சிசனி கூறுகிறார்; ஆயினும் கி.பி. 1223ல் சுல்தான் முகமது இறந்துவிட்டதால், இந்த கதையின் துல்லியம் கேள்விக்குரியதாகிறது. செங்கிஸ் கான் மேற்கு சியாவின் தலைநகரான இன்சுவானின் வீழ்ச்சியின்போது ஆகத்து கி.பி. 1227ல் இறந்தார். இவரது மரணத்தின் சரியான காரணம் ஒரு மர்மமாகவே உள்ளது. மேற்கத்திய சியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அவர் கொல்லப்பட்டதாகவும், நோய், குதிரையிலிருந்து விழுதல், வேட்டையாடுகையில் அல்லது போரிடும்போது ஏற்பட்ட காயம் போன்ற பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. . மங்கோலியர்களின் இரகசிய வரலாற்றின்படி, செங்கிஸ் கான் அவரது குதிரையிலிருந்து வேட்டையாடும்போது விழுந்து ஏற்பட்ட காயம் காரணமாக இறந்தார். இவர் ஏற்கனவே வயது முதிர்ந்திருந்தார். தனது பயணங்கள் காரணமாகச் சோர்வாக இருந்தார். உக்ரைன் நாட்டு கலிசிய-வோலினிய வரலாற்றுக்கூறின்படி, அவர் போரில் மேற்கத்திய சியாவால் கொல்லப்பட்டதாகக் ஆணித்தரமாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் மார்கோ போலோ செங்கிஸ் கான் தனது இறுதி இராணுவ நடவடிக்கையின்போது அம்பு தாக்கி ஏற்பட்ட தொற்றுக் காரணமாக இறந்தார் என்று எழுதியுள்ளார். பிந்தைய மங்கோலிய வரலாற்றுக்கூறுகள் இவரது மரணத்தைப் போரில் பரிசாகப் பெறப்பட்ட ஒரு மேற்கத்திய சியா இளவரசியுடன் தொடர்புபடுத்துகின்றன. கி.பி. 17ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து வந்த ஒரு வரலாற்றுக்கூறு இக்கதையை மேலும் அதிகப்படியாக அந்த இளவரசி ஒரு சிறிய கத்தியை மறைத்து வைத்து அவரைக் குத்தினாள் என்று கூறுகிறது. ஆனால் சில மங்கோலிய எழுத்தாளர்கள் இந்தக் கதையைப் போட்டியாளர்களான ஓயிராட்களின் உருவாக்கம் எனச் சந்தேகிக்கின்றனர். தன் இறப்பிற்குப் பிறகு எதிரி நாடுகள் மங்கோலியர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தலாம் என்று செங்கிஸ் கானுக்குத் தெரிந்திருந்தது. இதன் காரணமாக மங்கோலியப் படைகள் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட நாடுகளுக்குச் செல்லும் வரை தான் இறந்த விஷயத்தை வெளியில் கூறக்கூடாது என்று சொல்லியிருந்தார். மரணத்திற்கு சில வருடங்களுக்கு முன்பு, செங்கிஸ் கான் தனது இனத்தின் பழக்கவழக்கங்களின்படி, அடையாளம் இல்லாமல் தன்னை புதைக்குமாறு கேட்டுக்கொண்டார். இறந்தபின், இவரது உடல் மங்கோலியாவுக்கு, முன்கூட்டியே கூறியபடி கென்டீ அயிமக்கில் உள்ள பிறந்த இடத்திற்கு திரும்பியது. அங்கு ஆனன் ஆறு மற்றும் புர்கான் கல்துன் மலைக்கு (கென்டீ மலைத் தொடரின் பகுதியில்) அருகில் புதைக்கப்பட்டதாகப் பலரும் கருதுகின்றனர். புராணத்தின் படி, இறுதிச் சடங்கு காவலர்கள் தங்கள் பாதையில் எதிர்ப்பட்ட யாரையும், எவற்றையும் இறுதியாக அவர் எங்கு புதைக்கப்பட்டார் என்பதை மறைப்பதற்காகக் கொன்றனர். தற்போதுள்ள கல்லறையானது அவரது ஞாபகார்த்தமாக அவரது இறப்பிற்குப் பல வருடங்கள் கழித்துக் கட்டப்பட்ட நினைவிடமாகும். கி.பி. 1939ம் ஆண்டில், சீன தேசியவாத இராணுவ வீரர்கள், இக்கல்லறையை சப்பானியப் படைகளிடமிருந்து பாதுகாக்க "ஆண்டவரின் உறைவிடம்" (மங்கோலிய மொழியில் எட்சன் கோரூ) எனும் இடத்தில் இருந்து நகர்த்தி வண்டிகள் மீது 900 கிமீ (560 மைல்) கம்யூனிஸ்ட்-கட்டுப்பாட்டில் இருந்த யானான் பகுதி வழியாக எடுத்துச்செல்லப்பட்டு தோங்சன் தஃபோ தியானில் உள்ள புத்த மடாலயத்தில் பத்து ஆண்டுகள் பாதுகாக்கப்பட்டது. கி.பி. 1949ல் கம்யூனிஸ்ட் துருப்புக்கள் முன்னேறியபோது, தேசியவாத படைவீரர்கள் 200 கிமீ (120 மைல்) தொலைவில் மேற்கு நோக்கி சினிங்கில் உள்ள பிரபல திபெத்திய மடாலயமான கும்பம் (அல்லது தயர் சி) மடாலயத்திற்கு மாற்றினர். ஆனால் அதுவும் விரைவில் கம்யூனிஸ்ட் கட்டுப்பாட்டின் கீழ் விழுந்தது. கி.பி. 1954ம் ஆண்டின் முற்பகுதியில், செங்கிஸ் கானின் சவப்பெட்டி மற்றும் பீடங்கள் மங்கோலியாவில் உள்ள "ஆண்டவரின் உறைவிடத்திற்குத்" திரும்பின. கி.பி. 1956ம் ஆண்டுவாக்கில் அவற்றைப் பாதுகாக்க ஒரு புதிய கோயில் அமைக்கப்பட்டது. கி.பி. 1968ல் சீனப் பண்பாட்டுப் புரட்சியின் போது, சிவப்புக் காவலர்கள் கிட்டத்தட்ட மதிப்புமிக்க எல்லாவற்றையும் அழித்தனர். கி.பி. 1970களில் பீடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. கி.பி. 1989ம் ஆண்டில் செங்கிஸ் கானின் ஒரு பெரிய பளிங்கு சிலை கட்டிமுடிக்கப்பட்டது. அக்டோபர் 6, 2004 அன்று, சப்பானிய-மங்கோலியக் கூட்டு தொல்லியல் ஆய்வானது கிராமப்புற மங்கோலியாவில் செங்கிஸ் கானின் அரண்மனையாக நம்பப்படும் ஒரு அரன்மணையை வெளிப்படுத்தியது. இது உண்மையில் ஆட்சியாளரின் நீண்ட காலமாக இழந்த கல்லறையைக் கண்டறிவதற்கான வாய்ப்பை எழுப்புகிறது. நாட்டுப்புறக் கதையின்படி ஒரு நதி திசை திருப்பப்பட்டு அவரது கல்லறையைக் கண்டுபிடிக்க முடியாதபடி அழித்ததாகக் கூறப்படுகிறது ("உருக்" ஐச் சேர்ந்த சுமேரிய மன்னர் கில்கமேஸ் மற்றும் ஹூனர்களின் தலைவர் அட்டிலா ஆகியோர் புதைக்கப்பட்டதைப் போலவே). மற்ற கதைகள் இவரது கல்லறை பல குதிரைகளை அதன் மீது ஓடவிட்டதன் மூலம் அடையாளமின்றி அழிக்கப்பட்டது என்றும், பிறகு மரங்கள் அதன் மீது நடப்பட்டது என்றும், மற்றும் குளிர்காலத்தில் விழும் பனிக்கட்டிகளும் கல்லறையை மறைத்து அதன் பங்கை ஆற்றின என்றும் கூறுகின்றன. செங்கிஸ் கான் பயன்படுத்தியதாகக் கூறப்படும் பொருட்களை இன்றும் தர்கத் எனப்படும் மக்கள் பாதுகாத்து வருகின்றனர். அவர்கள் 800 வருடங்களாக 36 தலைமுறைகளாக இப்பணியைச் செய்து வருகின்றனர். செங்கிஸ் கான் 129,000-க்கும் அதிகமான படைவீரர்களை விட்டுவிட்டு இறந்தார்; 28,000 வீரர்கள் அவரது பல்வேறு சகோதரர்கள் மற்றும் அவரது மகன்களுக்கு வழங்கப்பட்டனர். இளைய மகனான டொலுய் 100,000-க்கும் அதிகமான வீரர்களைப் பெற்றார். இப்படையானது உயர்மட்ட மங்கோலிய குதிரைவீரர்களின் பெரும்பகுதியைக் கொண்டிருந்தது. பாரம்பரிய வழக்கப்படி, இளைய மகன் தனது தந்தையின் சொத்துக்களை பெறுகிறார். சூச்சி, சகதை, ஒகோடி கான், மற்றும் குலானின் மகனான கெலசியன் ஆகியோர் ஒவ்வொருவரும் 4,000 வீரர்களைப் பெற்றனர். மூன்று சகோதரர்களின் சந்ததியினர் ஒவ்வொருவரும் 3,000 வீரர்களைப் பெற்றனர். மங்கோலியப் பேரரசின் தற்போதைய எல்லைக்குள் சுமார் 300 கோடி மக்கள் வசிக்கின்றனர். 30 நாடுகள் உள்ளன. மங்கோலியப் பேரரசானது செங்கிஸ் கானால் உருவாக்கப்பட்ட குடிமக்கள் மற்றும் இராணுவ சட்டமான "யசா" சட்ட முறையைப் பின்பற்றியது. பதவிகள் இன மற்றும் மாந்த வகைப்பாட்டின் அடிப்படையில் வழங்கப்படாமல் தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட்டன. இதில் செங்கிஸ் கான் மற்றும் அவரது குடும்பத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. மங்கோலிய சாம்ராச்சியம் அதன் அளவைப் போலவே பல்வேறுபட்ட இன மற்றும் பண்பாடுகளைக் கொண்ட சாம்ராச்சியங்களில் ஒன்றாக இருந்தது. பேரரசின் பல்வேறு நாடோடிக் குடிமக்கள் இராணுவ மற்றும் குடிமக்களின் வாழ்க்கையில் தங்களை மங்கோலியர்களாவே கருதினர். இவர்களில் மங்கோலியர்கள், துருக்கியர்கள் உள்ளிட்டோரும் அடங்குவர். மதகுருமார்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. சிலநேரங்களில் அது ஆசிரியர்களுக்கும், மருத்துவர்களுக்கும் நீட்டிப்புச் செய்யப்பட்டது. மங்கோலியப் பேரரசானது சமய சகிப்புத் தன்மையுடன் விளங்கியது. ஏனெனில் மங்கோலியப் பாரம்பரியம் நீண்டகாலமாக மதம் ஒரு தனிப்பட்ட கருத்து என்று வரையறுத்திருந்தது. சட்டம் அல்லது குறுக்கீட்டிற்கு அப்பாற்பட்டது என்று வரையறுத்திருந்தது. செங்கிஸ் கானின் வழிகாட்டியும், எதிர்காலப் பகைவருமான "ஓங் கான்" நெசுதோரியக் கிறித்தவ மதத்தைத் தழுவினார். பல்வேறு மங்கோலிய மக்கள் சாமனிசம், பௌத்தம் மற்றும் கிறித்தவ மதத்தைப் பின்பற்றினர். மத சகிப்புத்தன்மை ஆசியப் புல்வெளியில் நன்கு நிறுவப்பட்ட கருத்தாக இருந்தது. தற்கால மங்கோலிய வரலாற்றாசிரியர்கள் செங்கிஸ் கான் அவருடைய வாழ்நாளின் முடிவில், மாபெரும் யசாவின் கீழ் ஒரு குடிமக்களின் அரசை உருவாக்க முயன்றார் என்று கூறுகின்றனர். இதன்மூலம் அனைத்து தனிநபர்களும் சட்டத்தின் முன் சமம் என்ற கருத்து நிறுவப்பட்டிருக்கும். பெண் உரிமை உள்ளிட்டவை நிலைநாட்டப்பட்டிருக்கும். எனினும், இதற்கோ, சீனர்கள் போன்ற உடல் உழைப்பில்லாத மக்கள் மீது இருந்த பாகுபாடான கொள்கைகளை நீக்கியதற்கோ எந்த ஆதாரமும் இல்லை. மங்கோலியப் பேரரசு மற்றும் குடும்பத்தில் பெண்கள் மிகவும் முக்கியப் பங்காற்றினர். உதாரணமாக, தோரேசின் கதுன், அடுத்த ஆண் ககான் தேர்ந்தெடுக்கப்படும்வரை மங்கோலிய பேரரசை ஆளும் பொறுப்பில் சிறிது காலம் இருந்தார். தற்கால அறிஞர்கள் வர்த்தக மற்றும் தகவல் தொடர்பை ஊக்குவித்ததாகக் கூறப்படும் கொள்கையைப் பாக்ஸ் மங்கோலிகா (மங்கோலிய அமைதி) என்கின்றனர். செங்கிஸ் கான் தான் வென்ற நகரங்களை ஆளத் தகுதி வாய்ந்த பணியாளர்கள் தேவை என்பதை உணர்ந்தார். மேலும் மங்கோலியர்கள் நாடோடிகள் என்பதால் அவர்களுக்கு அதில் அனுபவம் இல்லை என்பதையும் உணர்ந்தார். இதற்காக அவர் எலு சுகை எனும் கிதான் இளவரசரைத் தேர்ந்தெடுத்தார். எலு சுகை சின் மன்னர்களிடம் பணியாற்றிய அனுபவம் பெற்றிருந்தார். சின்களை வென்ற பிறகு மங்கோலிய இராணுவம் எலு சுகையைக் கைது செய்தனர். சின்கள் கிதான்களை வென்று ஆட்சிக்கு வந்திருந்தனர். செங்கிஸ் கான், கிதான் வம்சாவளியைச் சேர்ந்த எலு சுகையிடம் அவரின் மூதாதையர்களுக்காகத் தான் பழிவாங்கிவிட்டதாகக் கூறினார். அவரோ தன் தந்தை சின் வம்சத்திற்காக நேர்மையாக பணியாற்றினார் என்றும், தானும் அவ்வாறே பணியாற்றியதாகவும் கூறினார். மேலும் அவர் சொந்தத் தந்தையை எதிரியாக நினைக்கவில்லை என்றும் கூறினார். அதனால் பழிவாங்குதல் என்ற கேள்வி பொருந்தாது என்றார். இப்பதில் செங்கிஸ் கானைக் கவர்ந்தது. எலு சுகை மங்கோலியப் பேரரசின் பகுதிகளை நிர்வகித்தார். தொடர்ச்சியாக வந்த மங்கோலியக் கான்களின் நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்ந்தார். செங்கிஸ் கான் அரியணை ஏறியபோது மங்கோலியர்கள் உணவுக்கும் உடைக்கும் கஷ்டப்படும் நிலையில் இருந்தனர். மங்கோலியா என்ற ஏழை நாடு செல்வந்த நாடாக மாறியதற்கு முழுமுதல் காரணம் செங்கிஸ் கானின் உழைப்பும் செயலும் தான். ஜாக் வேதர்போர்டின் கூற்றுப்படி தோற்கடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இணைக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை, அல்லது மொத்தப் பரப்பளவு என எதை எடுத்துக் கொண்டாலும் செங்கிஸ் கான் வரலாற்றில் வேறு எந்த மனிதனையும் விட இரு மடங்கு வென்றுள்ளார். 400 வருடங்களாக உரோமானியர்கள் கைப்பற்றியதைவிட அதிக நிலப்பகுதியையும், அதிக மக்களையும் இருபத்து ஐந்தே வருடங்களில் மங்கோலிய இராணுவம் கைப்பற்றியது. செங்கிஸ் கான் காலத்தில் மங்கோலியாவின் மொத்த மக்கட்தொகை வெறும் 7 இலட்சம் மட்டுமே. அந்த 7 இலட்சத்தில் இருந்து கிட்டத்தட்ட 1 இலட்சம் வீரர்களைத் தன் இராணுவத்தில் சேர்த்தார். போரில் வீரர்கள் மரணமடைந்தாலும் வெல்லப்பட்டதில் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட பொருட்களின் பங்கு குடும்பங்களைச் சென்றடைந்தது. மங்கோலியர்கள் பொதுவாகவே நல்ல வில்களை வைத்திருந்தபோதும், ஒவ்வொரு வீரனும் தன் வில்லிற்குப் பொறுப்பெற்றுக் கொண்டனர். ஒவ்வொரு வில்லின் தரமும் வெவ்வேறு அளவில் இருந்தது. அதேநேரம் அவர்கள் எதிர்த்துப் போர்புரிந்த நாகரிகங்களின் இராணுவங்கள் ஆயுதங்களை மொத்தமாகத் தயாரித்தன. செங்கிஸ் கானைப் பொறுத்தவரை விதிகளைப் பின்பற்றி போர்புரிபவர்களுக்கு வெற்றி கிடைப்பதில்லை. விதிகளை உருவாக்கி அதை மற்றவர்களைப் பின்பற்ற வைப்பவர்களுக்குத் தான் வெற்றி கிடைக்கும் என்று அறிந்திருந்தார். செங்கிஸ் கான் முகலி, செபே மற்றும் சுபுதை உள்ளிட்ட அவரது தளபதிகள் மேல் முழுமையான நம்பிக்கை வைத்திருந்தார். அவர்களை நெருக்கமான ஆலோசகர்களாகக் கருதினர். நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்பட்ட அதே சலுகைகளை அவர்களுக்கும் கொடுத்தார். நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மேல் வைத்த நம்பிக்கையை அவர்கள் மேலும் வைத்தார். மங்கோலியப் பேரரசின் தலைநகரமான கரகோரத்தில் இருந்து தொலைவில் அவர்கள் போர் புரியும்போது முடிவுகள் எடுக்க அவர்களுக்கு முழு சுதந்திரம் அளித்து இருந்தார். செங்கிஸ் கான் மத்திய ஆசியாவில் போர்புரிந்தபோது சின் வம்சத்துக்கு எதிரான மங்கோலியப் படைகளுக்குத் தலைமை தாங்கும் பொறுப்பு முகலி என்ற ஒரு நம்பகமான இராணுவ அதிகாரியிடம் வழங்கப்பட்டது. சுபுதை மற்றும் செபே, காக்கேசியா மற்றும் கீவ உருசியா மேல் புகழ்பெற்ற குதிரைப்படைப் படையெடுப்பு எடுக்க அனுமதிக்கப்பட்டனர். இது அவர்கள் தங்கள் சொந்த முயற்சியில் ககான் முன்வைத்த ஒரு யோசனையாகும். செங்கிஸ் கான் கட்டளைத் தீர்மானங்களை எடுப்பதில் தனது தளபதிகளுக்கு ஒரு தன்னாட்சி உரிமையை வழங்கிய அதே நேரத்தில் அவர்களிடமிருந்து நிகரில்லா விசுவாசத்தையும் எதிர்பார்த்தார். செங்கிஸ் கானுக்கு விதிகளை மீறுவது பிடிக்காது. சரணடைந்தவர்களை மங்கோலியர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள். ஒரு முறை சரணடைந்த ஒரு நகரை அவரது மருமகன் ஒருவர் கொள்ளையடித்தார். இதனால் கோபம் கொண்ட செங்கிஸ் கான் அவரைத் தளபதி பொறுப்பிலிருந்து நீக்கி சாதாரண படைவீரனாக்கினார். அடுத்த போரில் படையின் முதல் ஆளாகச் செல்லுமாறு கட்டளையிட்டார். ஆனால் போர் முடிவில் அந்த மருமகன் உயிரோடு திரும்பவில்லை. மங்கோலியப் படையானது முற்றுகைப் போரிலும் சிறந்து விளங்கியது. தாக்குதலுக்குட்பட்ட நகரங்களுக்கு செல்லும் அனைத்து பொருட்கள், நீர் மற்றும் உணவு போன்றவை முடக்கப்பட்டன. நதிகள் அவற்றின் பாதையிலிருந்து நகரங்களுக்குள் திருப்பிவிடப்பட்டன. எதிரிக் கைதிகள் மங்கோலிய இராணுவத்திற்கு முன்னால் கேடயமாகப் பயன்படுத்தப்பட்டனர். புதிய யோசனைகள், நுட்பங்கள் மற்றும் கருவிகள் ஆகியவற்றை வெல்லப்பட்ட மக்களிடமிருந்து பெற்றனர். முக்கியமாக முஸ்லிம் மற்றும் சீன முற்றுகை இயந்திரங்கள் மற்றும் பொறியாளர்கள் நகரங்களைக் கைப்பற்றுவதில் மங்கோலியக் குதிரைப்படைக்குத் துணை நின்றனர். மங்கோலிய இராணுவத்தின் மற்றொரு நிலையான தந்திரோபாயமானது தோல்வியடைந்து ஓடுவது போல் நடிப்பதாகும். இவை எதிரிப் படையின் அமைப்புக்களை உடைக்கப் பயன்பட்டன. இதன் மூலம் பெரும்பகுதி படையில் இருந்து சிறு படைகள் கவர்ந்திழுக்கப்பட்டன. அவர்கள் மங்கோலியர்களைத் துரத்திக் கொண்டு ஓடுவர். மங்கோலியர்கள் ஏற்கனவே ஓர் இடத்தில் தங்கள் படையை மறைத்து வைத்திருப்பர். துரத்தும் எதிரிகள் அவ்விடத்திற்குக் கொண்டுவரப்படுவர். பின் திடீர் தாக்குதல் நடத்தப்படும். எதிரிகள் கொல்லப்படுவர். "யாம்" வழித்தடங்கள் தொலைதொடர்புக்கும், பொருட்களைக் கொண்டு செல்லவும் பேரரசு முழுவதும் ஏற்படுத்தப்பட்டன. இது முந்தைய சீன மாதிரிகளைத் தழுவி ஏற்படுத்தப்பட்டது. இராணுவப் புலனாய்வு மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளைச் சேகரிப்பதற்காக விரைவாகச் செயல்பட செங்கிஸ் கான் இவ்வழித்தடங்கள் மேல் சிறப்பு கவனம் செலுத்தினார். இதற்காக சாம்ராச்சியம் முழுவதும் யாம் வழி நிலையங்கள் நிறுவப்பட்டன. மங்கோலிய இராணுவம் வெடிமருந்தைப் போருக்குப் பயன்படுத்தியது. மங்கோலியர்களின் வெடிமருந்துத் தாக்குதலில் இருந்து தப்பியவர்கள் மங்கோலியர்கள் டிராகன்களைக் கொண்டு தாக்குவதாக செய்திகளை பரப்பினர். கிராகோஸ் என்ற ஆர்மீனிய வரலாற்றாளர் மங்கோலியர்களின் தோற்றத்தைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "அவர்கள் நரகத்தில் இருந்து வந்ததைப்போல் பயமுறுத்தும் தோற்றத்தில் இருந்தனர். அவர்களுக்குத் தாடி இல்லை. எனினும் சிலருக்கு உதட்டுக்கு மேல் மற்றும் தாடையில் சிறிதளவு முடி இருந்தது. அவர்கள் குறுகிய மற்றும் உடனே பார்க்கும் கண்களையும், உயர்ந்த கிரீச்சுக் குரலையும் கொண்டிருந்தனர். கடினமான உடலுடன் அதிக காலம் உயிர்வாழக்கூடியவர்களாக இருந்தனர். அவர்கள் திருட்டை விரும்புவதில்லை. திருட்டில் ஈடுபட்டுப் பிடிபடுபவர்களைக் கொல்கின்றனர்." ஜாக் வெதர்போர்டு என்ற அமெரிக்க மானுடவியலாளர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:" செங்கிஸ் கான் தான் சார்ந்த ஏழைப் பழங்குடியினரில் மிகவும் ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்தவர். அவர் உயர்குடிமக்கள் துரோகம் செய்பவர்கள் என்று உணர்ந்தார்... உயர்குடி மக்கள் காட்டிக்கொடுப்பவர்கள் அதேநேரத்தில் ஏழை மக்கள் அவருக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்று உணர்ந்தார். செங்கிஸ் கான் காட்டுமிராண்டியாக மற்றும் மிகவும் கொடூரமான மனிதனாகச் சித்தரிக்கப்படுவதன் காரணமாக நான் கருதுவது யாதெனில் நகரங்களை அவர் வெல்லும்போது பணக்காரர்களை அப்படியே கொன்றுவிடுவார்... அவர்களால் செங்கிஸ் கானுக்கு எந்தத் தேவையும் கிடையாது; அவர்களுக்குப் வழக்கமாக எழுதப் படிக்கத் தெரியாது, அவர்களுக்கு மருத்துவம் தெரியாது, அவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்கத் தெரியாது, அவர்கள் மதம் சார்ந்தவர்கள் கூடக் கிடையாது, அவர்களுக்கு ஆடை நெய்யவோ அல்லது மட்பாண்டங்கள் செய்யவோ தெரியாது. எனவே செங்கிஸ் கானைப் பொறுத்தவரை அவர்கள் பயனற்றவர்கள் மற்றும் ஆபத்தானவர்கள். எனவே அவர் தான் வென்ற ஒவ்வொரு நகரத்திலும் அவர்களைக் கொன்றார்." மங்கோலியர்களைப் பற்றி நல்லவிதமாக எழுதாத ஜூஸ்ஜனி கூட மங்கோலிய இராணுவத்தின் கடும் கட்டுப்பாடுகளை ஒத்துக்கொள்கிறார். அவரது கூற்றுப்படி "தரையில் கிடைக்கும் குதிரை சாட்டை தன் சொந்த சாட்டையாக இல்லாத பட்சத்தில் அதை வீரர்கள் எடுக்கக் கூடாது. பொய் சொல்லவோ, திருடவோ கூடாது". தனது இறப்பிற்குப் பல வருடங்களுக்கு முன் செங்கிஸ் கான் மங்கோலியப் பேரரசைக் கானேடுகளாகப் பிரித்து தனது மகன்கள் ஒகோடி, சகதை, டொலுய் மற்றும் சூச்சி (செங்கிஸ் கான் இறப்பதற்குப் பல மாதங்களுக்கு முன்பு சூச்சி மரணமடைந்தார். இதனால் அவரது பகுதிகள் அவரது மகன்களான படு மற்றும் ஓர்டா ஆகியோருக்கு பிரித்தளிக்கப்பட்டன.) ஆகியோரிடம் அளித்தார். சகடை இறந்த காரணத்தால் அவரது அரசானது படு மற்றும் ஒர்டாவிடம் பிரித்தளிக்கப்பட்டது. இக்கான்கள் அனைவரும் ஒகோடியை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டனர். கானேடுகள் பேரரசின் பிரிவுகளாக இருந்தன. இவற்றின் கான்கள் பெரிய கானைப் பின்பற்றும்படி எதிர்பார்க்கப்பட்டனர். அந்நேரத்தில் பெரிய கானாக ஒகோடி நியமிக்கப்பட்டிருந்தார். பின்வருவன செங்கிஸ் கானால் பிரிக்கப்பட்ட கானேடுகள்: பொதுவாக மங்கோலியப் பேரரசின் பகுதிகள் முழுவதும் செங்கிஸ் கானால் கைப்பற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. கி.பி. 1227ல் செங்கிஸ் கான் இறந்தபோது மங்கோலியப் பேரரசு காசுப்பியன் கடலிலிருந்து யப்பான் கடல் வரை நீண்டிருந்தது. அதன் விரிவாக்கம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தலைமுறைகளுக்குத் தொடர்ந்தது. செங்கிஸ் கானுக்குப் பின்வந்த ஒகோடி கானின் தலைமையில் விரிவாக்க வேகம் அதன் உச்சத்தை அடைந்தது. மங்கோலியப் படைகள் பாரசீகத்தை அடைந்தன. மேற்கத்திய சியாவிலும், குவாரசமியாவிலும் எஞ்சியவற்றை முடித்தன. சீனாவின் ஏகாதிபத்திய சாங் வம்சத்துடன் மோதின. இறுதியில் கி.பி. 1279ல் சீனா முழுவதையும் கைப்பற்றின. மேலும் உருசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவையும் அடைந்தன. மற்ற குறிப்பிடத்தகுந்த படையெடுப்பாளர்களைப் போலவே செங்கிஸ் கானும், இவருடன் சேர்ந்து படையெடுத்தவர்களில் இருந்து, வெல்லப்பட்டவர்களால் வேறு விதமாகப் பார்க்கப்படுகிறார். எதிர்மறையான கருத்துக்கள் பல்வேறு புவியியல் பிராந்தியங்களிலிருந்து பல கலாச்சாரங்களால் எழுதப்பட்ட வரலாறுகளில் தொடர்கின்றன. மங்கோலியப் படையினரால் வெல்லப்பட்ட பிரதேசங்களில் பொதுமக்கள் முறைப்படுத்தப்பட்டப் படுகொலை செய்யப்பட்டது, கொடூரங்கள் மற்றும் அழிவு ஆகியவற்றை அவர்கள் அடிக்கடி மேற்கோளிடுகின்றனர். செங்கிஸ் கானின் வெற்றிகளின் சாதகமான அம்சங்களையும் மற்ற எழுத்தாளர்கள் குறிப்பிடுகின்றனர். செங்கிஸ் கான் பட்டுப் பாதையை ஒரே அரசியல் அமைப்புக்குள் கொண்டுவந்தார். இதன் காரணமாக ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியா ஆகிய மூன்று பகுதிகளும் தொடர்பு மற்றும் வணிகத்தில் முன்னேற்றம் கண்டன. செங்கிஸ் கான் தன் ஆட்சியில் தகுதி அடிப்படையில் பதவி வழங்கினார். சமய சகிப்புத் தன்மையுடன் விளங்கினார். தன்னுடைய கொள்கைகளை அனைத்து வீரர்களுக்கும் தெளிவுபடுத்தினார். செங்கிஸ் கான் நாட்டின் உருவாக்கத்திற்காகவும், அரசியல் மற்றும் இராணுவ அமைப்புகளை ஏற்படுத்தியதற்காகவும், போர்களில் கண்ட வெற்றிகள் காரணமாகவும் மங்கோலியாவில் நூற்றாண்டுகளாகப் போற்றப்படுகிறார். துருக்கியர் போன்ற மற்ற இனத்தவராலும் மதிக்கப்படுகிறார். இவர் மங்கோலியர்கள் மத்தியில் அசாதாரணமானவராக உருவாகியுள்ளார். மங்கோலியர்கள் இவரை மங்கோலியக் கலாச்சாரத்தின் சின்னமாகக் கருதுகின்றனர். மங்கோலியாவில் கம்யூனிச காலத்தின்போது செங்கிஸ் கான் அடிக்கடி பிற்போக்குத்தனமானவராக விவரிக்கப்பட்டார். இவரைப் பற்றிய நேர்மறைக் கருத்துகள் தவிர்க்கப்பட்டன. கி.பி. 1962ல் இவரது 800வது பிறந்தநாளின்போது இவரது பிறப்பிடத்தில் ஒரு நினைவுச்சின்னம் ஏற்படுத்தப்பட்டது. இவரது 800வது பிறந்த நாளை நினைவுகூரும் ஒரு மாநாடும் நடத்தப்பட்டது. இதற்குச் சோவியத் ஒன்றியத்திலிருந்து விமர்சனம் கிளம்பியது. ஆளும் "மங்கோலிய மக்கள் புரட்சிக் கட்சியின்" மத்தியக் குழுவின் செயலாளர் தோமர்-ஓச்சீர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். கி.பி. 1990களின் முற்பகுதியில், செங்கிஸ் கான் பற்றிய நினைவுகள் ஒரு சக்திவாய்ந்த புத்துயிர் பெற்றன. "மங்கோலிய மக்கள் குடியரசின்" காலத்தில் அதன் அடக்குமுறைக்கு ஒரு பகுதி எதிர்வினையாக இது ஏற்பட்டது. செங்கிஸ் கான் தேசிய அடையாளத்தின் மையமான நபர்களில் ஒருவராக ஆனார். ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொண்டிருந்த பழங்குடியினரை ஐக்கியப்படுத்தியதில் இவரது பாத்திரத்திற்காக மங்கோலியர்களால் இவர் நேர்மறையாகக் கருதப்படுகிறார். உதாரணமாக, மங்கோலியர்கள் அடிக்கடித் தம் நாட்டை "செங்கிஸ் கானின் மங்கோலியா" என்கின்றனர். தங்களைச் "செங்கிஸ் கானின் குழந்தைகள்" என்கின்றனர். முக்கியமாக இளம்வயதினர் செங்கிஸ் கான் "மங்கோலியர்களின் தந்தை" என்கின்றனர். இருப்பினும், இவரது மிருகத்தனமான உணர்வைப் பற்றிய ஒரு வேறுபாடு உள்ளது. மங்கோலியர் அல்லாதவர்கள் எழுதிய வரலாற்று ஆவணங்கள் செங்கிஸ் கானுக்கு எதிராக நியாயமற்ற முறையில் உள்ளன என்று மங்கோலியர்கள் கருதுகின்றனர். இவரது கொலைகள் மிகைப்படுத்தப்படும் அதேநேரத்தில் நேர்மறையான தன்மையும் வெளிப்படுத்தப்படுவதில்லை என்கின்றனர். இன்று மங்கோலியாவில் இவரது பெயர் மற்றும் படங்கள் பொருட்கள், கட்டடங்கள், வீதிகள் மற்றும் பிற இடங்களில் இடம்பெறுகிறது. தினசரிப் பொருட்களான மதுபான பாட்டில்கள் முதல் மிட்டாய் வரை இவர் முகம் காணப்படுகிறது. 500,1000,5000,10000 மற்றும் 20000 மதிப்புள்ள மங்கோலிய தோக்குரோக்கு (₮) பண நோட்டுகளில் இவர் உருவம் காணப்படுகிறது. மங்கோலியாவின் முக்கியமான உலான் பத்தூர் விமான நிலையம் சிங்கிஸ் கான் விமான நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ளது. பெரிய செங்கிஸ் கான் சிலைகள் தலைநகரத்திற்கு அருகிலும், அந்நாட்டுப் பாராளுமன்றத்திற்கு முன்னும் நிற்கின்றன. சாதாரணப்படுத்துதலைத் தவிர்க்க இவரது பெயர் மற்றும் படத்தை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றி மீண்டும் மீண்டும் விவாதங்கள் நடத்தப்படுகின்றன. மங்கோலியாவின் வரலாற்றில் முக்கியத் தலைவர்களில் ஒருவராகச் செங்கிஸ் கான் கருதப்படுகிறார். ஒரு அரசியல் மற்றும் இன அடையாளமாக மங்கோலியர்களின் தோற்றத்திற்கு இவர் காரணமானவராக இருக்கிறார். ஏனென்றால் கலாச்சார ஒற்றுமை கொண்ட பழங்குடியினருக்கு இடையே ஒன்றுபட்ட அடையாளம் இல்லை. இவர் பல மங்கோலியப் பாரம்பரியங்களை வலுப்படுத்தினார். பழங்குடி மக்களுக்கு இடையே இடைவிடாத யுத்தம் நடந்த ஒரு காலப்பகுதியில் நிலைத்தன்மையும், ஒற்றுமையும் வழங்கினார். மங்கோலிய மொழிக்கு முதல் எழுத்துருவம் கொடுத்தவரும் இவரே. முதல் மங்கோலியச் சட்டங்களான இக் சசக்கையும் ("மாபெரும் நிர்வாகம்") இவர்தான் உருவாக்கினார். மங்கோலியா அதிபர் திசகியாகீன் எல்பெக்தோசு, ஊழல் மற்றும் லஞ்சத்தை இக் சசக் கடுமையாகத் தண்டித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அனைத்து குடிமக்களும் நிலை அல்லது செல்வம் சார்ந்து இல்லாமல் சட்டத்தின் கீழ் சமமான பாதுகாப்பைக் கோரிய செங்கிஸ் கானை ஊழல் எதிர்ப்பு முயற்சிகளுக்கு ஆசிரியராகக் கருதுகிறார். செங்கிஸ் கானின் பிறந்தநாளின் 850வது ஆண்டுவிழாவில், அதிபர் "சிங்கிஸ் … நீதியின் தொடக்கம் மற்றும் ஒருங்கிணைப்பானது சட்டத்தின் சமத்துவமேயன்றி, மக்களிடையே உள்ள வேறுபாடுகள் அல்ல என்பதை ஆழமாக உணர்ந்த ஒரு மனிதர். நல்ல சட்டங்கள் மற்றும் விதிகள் ஆடம்பரமான அரண்மனைகளைவிட நீண்ட காலம் வாழ்ந்தன என்பதை அறிந்த ஒரு மனிதர்." சுருக்கமாக, மங்கோலியர்கள் இவரை மங்கோலியப் பேரரசின் தாபகத்தின் அடிப்படை நபராகப் பார்க்கின்றனர். எனவே ஒரு நாடாக மங்கோலியாவிற்கு அடிப்படையானவராவார். கி.பி. 2012 முதல், மங்கோலிய சந்திர நாட்காட்டியின்படி குளிர்காலத்தின் முதல் நாள் (இவரது பிறந்த நாள்) தேசிய விடுமுறையாகக் கடைபிடிக்க எல்பெக்தோசால் ஆணையிடப்பட்டுள்ளது. செங்கிஸ் கான் சீனாவில் இருவேறு விதமாகப் பார்க்கப்படுகிறார். சீனா 65 வருடப் போராட்டத்திற்குப் பிறகு மங்கோலியர்களால் வெல்லப்பட்டது. செங்கிஸ் கான் மற்றும் அவரது வழித்தோன்றல்கள் பற்றிய எண்ணமானது இன்னும் ஒரு கலவையாகவே உள்ளது. சீனாவின் மக்கள்தொகையில் கடுமையான சரிவு ஏற்பட்டது. வடக்கு சீனாவின் மக்கள் தொகை கி.பி. 1195ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 5 கோடியாய் இருந்தது. அது கி.பி. 1235-36ம் ஆண்டின் மங்கோலிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி 85 இலட்சமாகக் குறைந்தது. இக்காலகட்டத்தில் எண்ணிக்கை தெரியாத அளவு மக்கள் தென் சீனாவிற்குக் குடிபெயர்ந்தனர். உள் மங்கோலியாவில் இவருக்கென்று ஒரு நினைவுச்சின்னம் மற்றும் கட்டிடங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இங்கு குறிப்பிடத்தகுந்த அளவிலே மங்கோலிய இனத்தவர் வாழ்கின்றனர். அவர்களது மக்கள்தொகை சுமார் 50 இலட்சம் ஆகும். இது மங்கோலியாவின் மக்கள்தொகையைப் போல் சுமார் இருமடங்கு ஆகும். செங்கிஸ் கான் சீனா முழுவதையும் வெல்லாதபோதும், இவரது பேரன் குப்லாய் கான் சீனா முழுவதையும் வென்றார். யுவான் அரசமரபைத் தோற்றுவித்தார். பொதுவாக யுவான் அரசமரபுதான் சீனா முழுவதையும் மீண்டும் ஒன்றிணைத்தது எனக் கூறப்படுவது உண்டு. செங்கிஸ் கானை ஒரு இராணுவத் தலைவராகவும், அரசியல் நுண்ணறிவு கொண்டவராகவும் போற்றி ஏராளமான கலைப்படைப்புகள் மற்றும் இலக்கியங்கள் உள்ளன. மங்கோலியர்கள் நிறுவிய யுவான் அரசமரபானது, சீன அரசியல் மற்றும் சமூக அமைப்புமுறைகளில் ஒரு அழிக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியது. இது அடுத்தடுத்த தலைமுறைகளிலும் பிரதிபலித்தது. இதற்கு முன் இருந்த சின் வம்சத்தில் இலக்கியங்களானது ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தது. செங்கிஸ் கான் தாவோயிசத் தலைவர் குயி சுசியை ஆதரித்தார். இப்போது ஆப்கானித்தான் என்றழைக்கப்படும் பகுதியில் தனிப்பட்ட முறையில் அவரைச் சந்தித்தார். சின் மற்றும் சாங் மன்னர்கள் அழைத்தபோது அவர்கள் அழைப்பை ஏற்காத குயி சுசி செங்கிஸ் கானின் அழைப்பை ஏற்று சுமார் 5,000 கி.மீ. தூரத்தைக் கடந்துவந்து அவரைச் சந்தித்தார். ஏனெனில் குயி சுசி செங்கிஸ் கானை கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவராகக் கருதினார். பின்னர் வட சீனாவில் உள்ள அனைத்து மத விவகாரங்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை செங்கிஸ் கான் குயி சுசிக்கு வழங்கினார். மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக ஈரானில் செங்கிஸ் கான் கிட்டத்தட்ட அனைவராலும் அழிவுகரமான மற்றும் இனப்படுகொலை செய்த போர்த்தலைவராகக் கண்டிக்கப்படுகிறார். இந்தப் பகுதிகளின் மக்கள்தொகைக்கு பெரும் அழிவை ஏற்படுத்தியவராகக் கருதப்படுகிறார். இசுதீவன் ஆர். வார்த் என்பவர் மங்கோலியப் படையெடுப்புகளைப் பற்றி எழுதியதாவது "ஒட்டுமொத்தமாக, மங்கோலிய வன்முறை மற்றும் அட்டூழியங்கள் ஈரானியப் பீடபூமியின் மக்கள்தொகையில் நான்கில் மூன்று பங்கு வரை கொன்றன, சாத்தியமான முறையிலே 1 முதல் 1.5 கோடி மக்கள். சில வரலாற்றாசிரியர்கள் ஈரானின் மக்கள்தொகை மீண்டும் 20 ஆம் நூற்றாண்டின் மத்தியப்பகுதி வரை அதன் முன்-மங்கோலிய மட்டங்களை அடையவில்லை என மதிப்பிட்டுள்ளனர்." ஆப்கானித்தானில் (மற்ற துருக்கியரல்லாத முஸ்லிம் நாடுகளிலும்) இவர் பொதுவாக எதிர்மறையாகப் பார்க்கப்படுகிறார். எனினும் சில இனங்கள் இருமுகப் போக்கைக் காட்டுகின்றன. ஏனெனில் ஆப்கானித்தானின் கசாரா அங்கு நிலைநிறுத்தப்பட்ட ஒரு பெரிய மங்கோலிய காவற்படையின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது. மெர்வ், சமர்கந்து, ஊர்கெஞ்ச், நிசாபூர், பம்யன், பால்க் மற்றும் ஹெறாத் ஆகிய நகரங்களில் மக்கள் கொல்லப்பட்டனர். இதில் பால்க் ஆரம்பகால ஆரிய நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படுகிறது. கோரசான் மாகாணத்தின் பெரும்பகுதிகள் முழுவதுமாக அழிக்கப்பட்டன. இவரது பேரன் குலாகு கான் வடக்கு ஈரானின் பெரும்பகுதிகளை அழித்தார். பாக்தாத்தைச் சூறையாடியதன் மூலம் இசுலாமின் பொற்காலத்தை முடித்தார். எனினும் அவரது படைகள் எகிப்திய அடிமை வம்சத்தால் தடுக்கப்பட்டன. ஹுலாகுவின் வழிவந்த கசன் கான் அடிமை வம்சத்தைத் தோற்கடித்தார். சிரியாவைத் தன் கட்டுப்பாட்டிற்குள் சிறிது காலம் வைத்து இருந்தார், எனினும் தோற்கடிக்கப்பட்டார். பாரசீக வரலாற்றாசிரியர் ரசித்-அல்-தின் ஹமாதனி எழுதிய வரலாறுகளின்படி, மங்கோலியர்கள் மெர்வில் 70,000க்கும், நிசாபூரில் 90,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். கி.பி. 1237ல் செங்கிஸ் கானின் பேரன் படு கான் கீவிய உருசியாவின் மேல் படையெடுத்தார். மூன்றே வருடங்களில் மங்கோலியர்கள் நோவ்கோரோட் மற்றும் புஸ்கோவ் தவிர கிழக்கு ஐரோப்பாவின் அனைத்து முக்கியமான நகரங்களையும் நிர்மூலமாக்கினர். திருத்தந்தையின் மங்கோலிய பெரிய கானுக்கான தூதரான சியோவனி டி பிலானோ கர்பினி கீவ் வழியாக பெப்ரவரி 1246ல் பயணித்தார். அவர் பின்வருமாறு எழுதியுள்ளார்: ஈரானிய மக்களின் நடுவில் செங்கிஸ் கான், இவரது பேரன் ஹுலாகு மற்றும் தைமூர் ஆகியோர் அழிவை ஏற்படுத்தியவர்களாகக் கருதப்படுகின்றனர். புகழ்பெற்ற முகலாயப் பேரரசர்கள் செங்கிஸ்கானின் பெருமைமிகு வழித்தோன்றல்களாக இருந்தனர். முக்கியமாகத் தைமூரின் வழித்தோன்றல்களாக இருந்தனர். எனினும் அவர்கள் குவாரசமிய ஷாக்கள், துருக்கியர்கள், பாரசீகர்கள், பாக்தாத் மற்றும் டமாஸ்கஸ், நிசாபூர், புகாரா ஆகிய நகரங்களின் குடிமக்கள், நிசாபூரின் அட்டர் போன்ற வரலாற்று நபர்கள் மற்றும் பல குறிப்பிடத்தகுந்த முஸ்லிம்கள் ஆகியோருக்கு எதிரான மங்கோலிய அட்டூழியங்களில் இருந்து தங்களை விலக்கிக் கொண்டனர். எனினும் முகலாயப் பேரரசர்கள் நேரடியாக செங்கிஸ் கான் மற்றும் தைமூரின் மரபை ஆதரித்தனர்; இந்த இருவரின் பெயர்கள் மற்ற புகழ்பெற்ற நபர்களுக்கு வைக்கப்பட்டுள்ளன முக்கியமாகத் தெற்காசியாவின் முஸ்லிம் மக்களிடையே. உருசியா, மத்திய கிழக்கு, கொரியா, சீனா, உக்ரைன், போலந்து மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளின் பெரும்பாலான பகுதிகளில் செங்கிஸ் கான் மற்றும் இவரது அரசானது அழிவின் காரணமாகவும், மக்கள் தொகை இழப்பின் காரணமாகவும் எதிர்மறையாகப் பார்க்கப்படுகிறது. முகலாயப் பேரரசர் பாபரின் தாய் செங்கிஸ் கானின் வழித்தோன்றல் ஆவார். பாரசீக வரலாற்றாளர் மின்ஹஜ் அல்-சிராஜ் ஜூஸ்ஜனி, குவாரசாமியப் பேரரசின் குராசான் பகுதிக்கு வந்த 60 வயது செங்கிஸ் கானின் தோற்றத்தைப் பின்வருமாறு விளக்குகிறார்: "நல்ல உயரமான மனிதன், சக்திவாய்ந்த வலுவான உடற்கட்டமைப்பு, அவரது முகத்தில் சிறிதளவே முடி இருந்தது, அதுவும் நரைத்திருந்தது, பூனை போன்ற கண்களுடன் இருந்தார்" என்கிறார். செங்கிஸ் கானின் பண்புகளாக அவர் "அர்ப்பணிப்புடைய ஆற்றல், பகுத்தறியும் தன்மை, மேதை, புரிந்துகொள்ளும் தன்மை, பிரமிக்கவைக்கும் தன்மை, எளிமை, உறுதி" ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார். மேலும் எதிரிகளைப் பொறுத்தவரை செங்கிஸ் கான் "படுகொலை செய்பவர், வீழ்த்துபவர், துணிச்சல்காரர், இரத்த வெறி கொண்டவர், மற்றும் இரக்கமற்றவர்" என்று குறிப்பிடுகிறார். இவரை நேரில் கண்ட சாங் வம்சத் தூதர் "பெரிய உடம்புடன், அகன்ற நெற்றியுடன், நீளமான தாடியுடன் மற்றவர்களிடம் இருந்து தனித்துவமாக இருந்தார்" என்று செங்கிஸ்கானைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். செங்கிஸ் கான் யாரையும், அவரது படத்தை வரைவதற்கோ, அவரது சிற்பங்களை செதுக்குவதற்கோ அல்லது நாணயத்தின் மீது அவரது உருவப்படத்தை அச்சிடவோ அனுமதித்தது இல்லை. இவர் இறந்து அரை நூற்றாண்டுக்கு இவரது படத்தை வரைய யாருக்கும் தைரியம் வரவில்லை. பெரும்பாலான வரலாற்றாசிரியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உருவப்படமானது தேசிய அரண்மனை அருங்காட்சியகம், தைபே, தைவானில் உள்ளதாகும். இது அவரது இறப்பிற்குப் பிறகு பேரன் குபிலையின் மேற்பார்வையில் வரையப்பட்டதாகும். ஒருவேளை உணவுக்கு வழியற்ற, ஆதரவற்று பனிப்பிரதேசத்தில் விடப்பட்ட ஒரு எழுத்தறிவற்ற சிறுவன் எவ்வாறு நூறாண்டுகளுக்கு மேல் நீடித்த உலக வரலாற்றின் மிகப்பெரிய நிலப் பேரரசை அமைத்தான் என்பது மேற்கத்திய வரலாற்றாசிரியர்களை இன்றும் குழப்பும் விஷயம் ஆகும். செங்கிஸ் கானிடம் மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் தன்மை (charisma) இருந்தது. இவரது பல தளபதிகள் பல்வேறு தருணங்களில் இவரால் கவர்ந்திழுக்கப்பட்டே இவருடன் இணைந்தனர். செங்கிஸ் கானின் வாழ்க்கையில் ஒரு தளபதி கூட இவரைவிட்டு விலகியது கிடையாது. செங்கிஸ் கான் என்றுமே தன் நண்பர்களை ஆபத்தில் விட்டுவிட்டுச் சென்றதோ அல்லது அவர்களுக்குத் கொடுத்த வாக்கைக் காப்பாற்றத் தவறியதோ கிடையாது. செங்கிஸ் கான் மனிதர்களைப் படிப்பதில் ஒப்பற்றவராக விளங்கினார். மனித உளவியலை நன்றாக அறிந்திருந்தார். தன் பேரக்குழந்தைகளிடம் அதிக அன்பு செலுத்தினார். மாடுமேய்ப்பவர்கள் மற்றும் குதிரைமேய்ப்பவர்கள் என்ன உடை உடுத்தினரோ அதையே தான் தானும் உடுத்தினார். அவர்கள் என்ன உணவு உண்டனரோ அதையே தான் தானும் உண்டார். மன்னன் என்பதால் வசதியான வாழ்க்கை வாழவில்லை. ஆடம்பரத்தை வெறுத்தார். எளிமையை விரும்பினார். பல செல்வந்த நாடுகளை வென்றபோதும் அவர் தனக்கென ஒரு வீடு கூட கட்டிக்கொண்டது கிடையாது. ஒரு கூடாரத்தில் பிறந்தார், கூடாரத்திலேயே இறந்தார். சாவோ ஹங் என்ற சாங் வம்சத்துத் தூதர் செங்கிஸ் கானைச் சந்தித்தபோது அவர் பேரரசருக்கான எந்த சிகை அலங்காராமும் இன்றி ஒரு சாதாரண படவீரனைப் போல் உச்சத்தலையில் முடியின்றி, தலையின் முன் பக்கம் மற்றும் இரு பக்கவாட்டிலும் தோள்களில் படும்படி முடியுடன் இருந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார். மங்கோலிய அரசவை ஒரு பெரிய கூடாரத்திற்குள் அமைந்திருந்தது. அந்த அவையில் அணிகலன் எதுவும் இன்றி இருந்த ஒரே நபர் செங்கிஸ் கான் தான். அவர் உடையாக உடுத்தியதும் ஒரு பழைய ஆடையைத்தான். இவ்விஷயத்தில் செங்கிஸ் கான் பிடிவாதமாக இருந்தார். கரகோரம் என்ற தலைநகரை உருவாக்கியபோதும் அங்கு வாழும் எண்ணம் எதுவும் செங்கிஸ் கானுக்கு இல்லை. "ஒருவேளை என் பிள்ளைகள் கல் வீடுகளிலும் சுவர் கொண்ட நகரங்களிலும் வாழலாம். ஆனால் நான் வாழமாட்டேன்" என்றார். கடைசிவரை நாடோடியாக வாழவே ஆசைப்பட்டார். அவரது உள்ளுணர்வின்படி அவர் மக்களுக்குத் தகுந்த வாழ்க்கையும் இதுவாகத்தான் இருந்தது. தங்கள் தலைவனை செங்கிஸ் கானிடம் காட்டிக் கொடுத்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் தங்கள் தலைவனுக்கு விசுவாசமாக செங்கிஸ் கானை எதிர்த்துப் போரிட்டவர்கள் செங்கிஸ் கானால் நல்ல முறையில் நடத்தப்பட்டுள்ளனர். ஏழைகள் யாரேனும் ஆடையின்றி இருந்தால் தான் அணிந்திருக்கும் ஆடையை அவர்களிடம் கழட்டிக்கொடுத்து விடுவார் என்று இவரைப் பற்றிக் கூறப்பட்டது. செங்கிஸ் கானுக்குத் தான் சவாரி செய்யும் குதிரையைக் கொடையாகக் கொடுக்கும் பண்பு இருந்தது. ஒருமுறை அலகுஸ் டிகின் என்ற ஒங்குட் இனத் தலைவர் நைமர்களை எதிர்த்து செங்கிஸ் கானுடன் இணைந்தார். இதன் காரணமாகக் கொல்லப்பட்டார். செங்கிஸ் கான் அக்குடும்பத்தை பழைய நிலைக்கு உயர்த்தினார். அவரின் மகனுக்குப் பணி வழங்கினார். தன் சொந்த மகளை அவனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். எலு லுகோ என்ற கிதான் இளவரசன் குவாரசாமியப் போரில் உயிரிழந்தார். அவரின் விதவை மனைவி செங்கிஸ் கானை அவரின் இறுதிப் போரான கன்சு படையெடுப்பின்போது சந்தித்தார். அவரை கருணையுடன் வரவேற்ற செங்கிஸ் கான் அவரது இரு மகன்களையும் தந்தையைப் போல் பாசத்துடன் நடத்தினார். இச்செயல்கள் அவரினுள் இருந்த ஒரு உன்னதமான மனிதனை நமக்குக் காட்டுகிறது. செங்கிஸ் கானின் மிகவும் அசாதாரணமான பண்புகளில் ஒன்றானது தனது கோபத்தைக் கட்டுப்படுத்தி மற்றவர்களின் பேச்சை கேட்பது ஆகும். செங்கிஸ் கானின் சித்தப்பா இவரிடம் இருந்து விலகி எதிரிகளுடன் இணைந்துகொண்டார். இதனால் கோபமடைந்த செங்கிஸ்கான் அவருக்கு மரண தண்டனை விதித்தார். ஆனால் இவரது நண்பர் பூர்ச்சு, பாதுகாவலர் முகலி மற்றும் தத்தெடுக்கப்பட்ட சகோதரர் சிகி குதுகு ஆகியோர் "உங்களது சொந்த சித்தப்பாவைக் கொல்வது உங்களையே தண்டிப்பதைப் போன்றது. உங்கள் தந்தையின் அடையாளமாக இந்த உலகில் உயிர் வாழ்வது அவர் ஒருவர்தான், அவருக்குப் புரியவில்லை அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்" என்று கூறி செங்கிஸ் கானைக் கண்டித்தனர். செங்கிஸ் கான் அழுக ஆரம்பித்தார். "ஏதோ உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள்" என்று கூறி விட்டு அமைதியாகி விட்டார். மற்றவர்களிடமிருந்து செங்கிஸ் கானை வேறுபடுத்திக் காட்டும் மற்றொரு பண்பானது நீங்கள் எந்த அளவுக்கு அவரிடம் நெருங்கி பழகுகிறீர்களோ அந்த அளவிற்கு அவரை போற்றத்தோன்றும். செங்கிஸ் கான் ஒரு ஆன்மீகவாதி. குழந்தைப் பருவத்தில் இருந்தே ஆன்மீகம் பற்றி அறிந்து வளர்ந்தார். ஒவ்வொரு போருக்கும் முன்னர் தெங்கிரியை (வான் கடவுள்) வழிபட்டுவிட்டுத்தான் போருக்குக் கிளம்புவார். சீனர்கள் செங்கிஸ் கான் தன் இராணுவத்தை ஒரு கடவுளைப் போல் வழிநடத்தினார் என்கின்றனர். அலெக்சாண்டரிடம் அவரது தந்தை உருவாக்கிக் கொடுத்த இராணுவம் இருந்தது. நெப்போலியனிடம் பிரான்ஸ் என்ற ஒரு நாடு இருந்தது. ஆனால் இவை இரண்டுமே செங்கிஸ் கானிடம் இல்லை. இவற்றை செங்கிஸ் கான் அடிமட்டத்தில் இருந்து உருவாக்கினார். மற்ற அனைத்து படையெடுப்பாளர்களும் படித்தவர்கள். அலெக்சாண்டர் அரிஸ்டாட்டிலால் பயிற்றுவிக்கப்பட்டார். ஜூலியஸ் சீசர் பண்டைய கிரேக்கத்தின் முழு அறிவையும் பெற்றிருந்தார். நெப்போலியன் அறிவொளி இயக்கம் மூலம் அறிவு பெற்றார். ஆனால் செங்கிஸ் கானோ தன் சொந்த அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்டார். அலெக்சாண்டர், நெப்போலியன் மற்றும் தைமூரின் பேரரசுகள் அவர்கள் இறந்த உடனேயே சிதறுண்டன. ஆனால் செங்கிஸ் கானின் பேரரசு அவரது இறப்பிற்குப் பிறகு 150 வருடங்களுக்கு மேல் நீடித்தது. இவரது வழித்தோன்றலான அலிம் கான் (பொக்காராவின் அமீர், உஸ்பெக்கிஸ்தான்) 1920ல் சோவியத் புரட்சியால் பதவியிறக்கப்படும் வரை செங்கிஸ் கானும் அவரது வழித்தோன்றல்களும் சுமார் 700 வருடங்களுக்கு உலகின் பல்வேறு நாடுகளை ஆண்டு கொண்டிருந்தனர். தன் 33ம் வயதில் அலெக்சாண்டர் மர்மமான முறையில் பாபிலோனில் இறந்தார். அவர் இறந்த உடனேயே அவரது வீரர்கள் அவரது குடும்பத்தைக் கொன்றுவிட்டு அவரது நிலப்பகுதிகளை எடுத்துக்கொண்டனர். ஜூலியஸ் சீசரோ அவரது நண்பர் புரூட்டஸ் உள்ளிட்டோரால் உரோமானிய செனட்டில் கொல்லப்பட்டார். நெப்போலியனோ தான் போரில் வென்ற பகுதிகளை இழந்து ஒரு கைதியாக ஒரு தன்னந்தனித் தீவில் இறந்தார். ஆனால் கிட்டத்தட்ட 70 வயது செங்கிஸ் கானோ தன் படுக்கையில் அன்பான குடும்பத்தார், நம்பிக்கையான நண்பர்கள் மற்றும் அவர் ஆணையிட்டால் உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்த வீரர்கள் சூழ உயிர்நீத்தார். பாரசீக வரலாற்றாளர் ஜூவைனி "போர்த்தந்திரங்களில் சிறந்தவராகக் கருதப்படும் அலெக்சாண்டர் செங்கிஸ் கான் காலத்தில் வாழ்ந்திருந்தால் தந்திரங்களைப் பொறுத்தவரையில் செங்கிஸ் கானின் குடிமகனாகத்தான் இருந்திருப்பார். வேறுவழியின்றி கண்ணைமூடிக் கொண்டு செங்கிஸ் கானைப் பின்பற்றியிருப்பார்" என்கிறார். சமயசகிப்புத் தன்மையை முதன்முதலில் கொண்டுவந்தது செங்கிஸ் கான் தான். உலகின் முதல் சர்வதேசத் தபால் அமைப்பை ஏற்படுத்தியது செங்கிஸ் கான் தான். அயல்நாட்டுத் தூதர்களுக்கு, தூதர்கள் தன்னுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் எதிரி நாட்டில் இருந்து வந்திருந்தாலும் பாதுகாப்புக் கொடுக்கும் முறையை இவர்தான் முதன்முதலில் செயல்படுத்தினார். இன்றைய ஆங்கிலேயர்களின் அடையாளமாக, நவநாகரிக ஆடையாகக் கருதப்படும் "பேன்ட்கள்" காட்டுமிராண்டிகளாகக் கருதப்படும் மங்கோலியர்களின் ஆடையாகும். இதைச் செங்கிஸ் கானின் படைகள் தான் ஐரோப்பாவுக்கு அறிமுகப்படுத்தின. மங்கோலியர்களின் ஐரோப்பியப் படையெடுப்புக்குப் பின்னர் ஐரோப்பியர்கள் தங்கள் இசைக்கருவிகளை மங்கோலியர்கள் பயன்படுத்திய புல்வெளிப் பகுதி வில்களைக் கொண்டு மீட்ட ஆரம்பித்தனர். ஆச்சரியப்படும்போது பயன்படுத்தப்படும் ஆங்கில வார்த்தை "ஹுரா" (hurray). இதை முதன்முதலில் மங்கோலியர்கள்தான் பயன்படுத்தினர். காகிதம், அச்சிடுதல், திசைகாட்டி மற்றும் வெடிமருந்து ஆகிய நான்கு முக்கியக் கண்டுபிடுப்புகளை ஐரோப்பாவிற்குக் கொண்டு சென்றதில் இவரது இராணுவம் முக்கியப் பங்காற்றியது. இக்கண்டுபிடிப்புகள் ஐரோப்பிய மறுமலர்ச்சி ஏற்பட முக்கியக் காரணமாயின. சலால் அத்-தின் சிந்து நதியைக் கடந்து தில்லியை ஆண்ட இல்டுட்மிஸிடம் அடைக்கலம் கேட்டபோது அவர் அடைக்கலம் தர மறுத்துவிட்டார். இல்டுட்மிஸ் செங்கிஸ் கானின் கோபத்திற்கு ஆளாக விரும்பவில்லை. இந்தியா மங்கோலியப் படையெடுப்புக்கு உள்ளாவதை விரும்பவில்லை. அதேநேரம் இல்டுட்மிஸ் பாக்தாத்தின் கலீப்பிற்கு விசுவாசமாக இருந்தார். சலால் அத்-தின் கலீப்பிற்கு எதிராக இருந்தார். செங்கிஸ் கான் இந்தியா மீது படையெடுக்காததற்கு இன்னொரு காரணம் இந்திய கோடைகால வெப்பம். ஈரப்பதம் காரணமாக வில்கள் வலுவிழந்தன. மங்கோலிய வீரர்கள் வெப்பமண்டல நோய்களால் பாதிக்கப்பட்டனர். செங்கிஸ் கானிடம் இருந்ததோ சிறிய இராணுவம். வீரர்கள் இறக்க ஆரம்பித்தனர். வீரர்கள் இறப்பதை செங்கிஸ் கான் என்றுமே விரும்பியதில்லை. செங்கிஸ் கான் வங்காளம், அசாம், இமயமலை மற்றும் மேற்கு சியா வழியாக மங்கோலியாவிற்குத் திரும்ப விரும்பினார். ஆனால் இல்டுட்மிஸ் அனுமதியும் கொடுக்காமல் மறுக்கவும் இல்லாமல் நழுவினார். செங்கிஸ் கானுக்கு இல்டுட்மிஸின் மனது புரிந்தது. சலால் அத்-தின் ஒருவருக்காக போர் புரிய இல்டுட்மிஸ் விரும்பவில்லை. செங்கிஸ் கானுக்கும் அதே எண்ணம் தான். எனினும் சலால் அத்-தின் குறிப்பிட்ட காலத்திற்கு இந்தியப் பகுதியில் தான் சுற்றித் திரிந்தார். இல்டுட்மிஸ் தன் மகள் ஒருவரையும் சமாதானம் செய்ய அவருக்கு மணம் முடித்துக் கொடுத்தார். மற்றொரு காரணம் இந்தியாவில் புல்வெளிகள் இல்லை. அதனால் மங்கோலியக் குதிரைகளுக்கு உணவளிக்க முடியாது. அதேபோல் வெல்லப்பட்ட பகுதிகளை ஆள மங்கோலியர்களிடம் ஆட்கள் இல்லை. செங்கிஸ் கானுக்கு குறிசொல்பவர்கள் மேல் நம்பிக்கை உண்டு. அவர்களும் இந்தியா மீதான படையெடுப்பைப் பற்றி நல்லவிதமாகச் சொல்லவில்லை. மங்கோலிய வீரர்கள் ஒரு ஒற்றைக்கொம்புக் குதிரையைக் (ஒரு இந்தியக் காண்டாமிருகமாக இருந்திருக்கவே வாய்ப்புகளுண்டு) கண்டதாக செங்கிஸ் கானிடம் கூறினார். இதுவும் நல்ல சகுனமாகப் படவில்லை. இத்தகைய காரணங்களால் செங்கிஸ் கான் இந்தியா மீது படையெடுக்கவில்லை. பல படங்கள், நாவல்கள் மற்றும் பிற தழுவல் படைப்புகள் இவரைப் பற்றி வெளிவந்துள்ளன. தமிழில் இவரது பெயர் செங்கிஸ் கான் என்று உச்சரிக்கப்பட்டாலும் சரியான மங்கோலிய உச்சரிப்பு சிங்கிஸ் கான் ஆகும். குப்லாய் கான் 1271 இல் யுவான் அரசமரபைத் தோற்றுவித்தபோது செங்கிஸ் கானுக்கு தைசு என்ற பட்டத்தைக் கொடுத்தார். நாக்பூர் நாக்பூர் ("Nagpur", ) இந்தியாவின் மகாராஷ்டிரம் மாநிலத்தில் அமைந்துள்ள நாக்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 304 மீட்டர் (997 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,051,320 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். நாக்பூர் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நாக்பூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். நாகூர் (உத்திரப் பிரதேசம்) நாகூர் (ஆங்கிலம்:Nakur), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள Saharanpur மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி பேராயம் ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 261 மீட்டர் (856 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,634 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். நாகூர் மக்களின் சராசரி கல்வியறிவு 56% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 64%, பெண்களின் கல்வியறிவு 47% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. நாகூர் மக்கள் தொகையில் 16% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். நல்லாம்பட்டி நல்லம்பட்டி (ஆங்கிலம்:Nallampatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3670 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். நல்லம்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 54% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 66%, பெண்களின் கல்வியறிவு 42% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. நல்லம்பட்டி மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். நாமகிரிப்பேட்டை நாமகிரிப்பேட்டை ("Namagiripettai"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 273 மீட்டர் (895 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,447 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். நாமகிரிப்பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 67%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. நாமகிரிப்பேட்டை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். நம்பியூர் நம்பியூர் (ஆங்கிலம்:Nambiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 301 மீட்டர் (987 அடி) உயரத்தில் இருக்கின்றது. இங்கு தந்தை பெரியார் அவர்களுக்கு முழு உருவிலான வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,651 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். நம்பியூர் மக்களின் சராசரி கல்வியறிவு 58% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 67%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. நம்பியூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். நம்பியூரில் கீழ்கண்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன நம்பியூரில் கீழ்கண்ட கோவில்கள் உள்ளன நந்தம்பாக்கம் நந்தம்பாக்கம் (ஆங்கிலம்:Nandambakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 21 மீட்டர் (68 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9093 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். நந்தம்பாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 77% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நந்தம்பாக்கம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். நந்தியால் நந்தியால் (ஆங்கிலம்:Nandyal), இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள கர்னூல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 203 மீட்டர் (666 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 151,771 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். நந்தியால் மக்களின் சராசரி கல்வியறிவு 63% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 72%, பெண்களின் கல்வியறிவு 55% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நந்தியால் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். நாங்குநேரி நாங்குநேரி (ஆங்கிலம்:Nanguneri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம்]], நாங்குநேரி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூர் வானமாமலை, தோதாத்ரி ஷேத்ரம், பூலோக வைகுண்டம் என்றும் அறியப்படுகிறது. இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் இந்த திவ்ய தேசத்தை சிரிவரமங்கை நகர் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாங்குநேரி பேரூராட்சிக்கு கிழக்கே திசையன்விளை (25 கிமீ); மேற்கில் களக்காடு (16 கிமீ); வடக்கே திருநெல்வேலி (29 கிமீ); தெற்கே வள்ளியூர் (13 கிமீ) தொலைவிலும் உள்ளது. 17.28 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 66 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1753 வீடுகளும், 6640 மக்கள்தொகையும் கொண்டது. நாங்குநேரி வானமாமலை ஜீயர் மடம் இப்பொருளாதார மண்டலத்திற்காக 2000 ஏக்கர் பரப்பளவிலான மடத்திற்குச் சொந்தமான நிலத்தை அரசுக்குத் தந்தது.இங்கு அமைக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலமான நாங்குநேரி பலதுறை சார்ந்த உயர் தொழில் நுட்ப பூங்கா திட்டம் அமைக்கப்பட்டும், அரசால் செயல்படுத்தப்படவில்லை. ஆதிசேடன் இங்கு தவமியற்றி திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றதால் நாகணை சேரி எனவும், மரங்கள் நிறைந்த வனமும் மலையும் சூழ்ந்த இடமாதலின் வானமாமலை எனவும் இங்குள்ள திருக்குளத்தை நான்கு ஏரிகளாக வெட்டியதால் நான்கு + ஏரி= நான்குநேரிஎனவும், அந்த நான்கு ஏரிகளின் கூர்மையான முனைகள் சந்திக்கும் மையப் பகுதியில் அமைந்ததால் நான் + கூர் + நேரி என்பது காலப்போக்கில் நாங்குநேரி என பேச்சு வழக்காயிற்று. இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 141 மீட்டர் (462 அடி) உயரத்தில் இருக்கின்றது. நன்னிலம் நன்னிலம் (ஆங்கிலம்:Nannilam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 7 மீட்டர் (22 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9880 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். நன்னிலம் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நன்னிலம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். நாரணம்மாள்புரம் நாரணம்மாள்புரம் (ஆங்கிலம்:Naranammalpuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது 5 வருவாய் கிராமங்களையும், ஆறு குக்கிராமங்களையும் கொண்டது. 18.13 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 62 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4580 வீடுகளும், 17094 மக்கள்தொகையும் கொண்டது. நரசிம்மநாயக்கன்பாளையம் நரசிம்மநாயக்கன்பாளையம் (ஆங்கிலம்:Narasimhanaickenpalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,005 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். நரசிம்மநாயக்கன்பாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நரசிம்மநாயக்கன்பாளையம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். நரசிங்கபுரம், சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் (ஆங்கிலம்:Narasingapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,555 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். நரசிங்கபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நரசிங்கபுரம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். நாட்டறம்பள்ளி நாட்டறம்பள்ளி (ஆங்கிலம்:Nattrampalli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். நாட்டறம்பள்ளியில் இயங்கும் ஸ்ரீ ராம் சந்திர மிஷன் மற்றும் ஸ்ரீ ராம்கிருஷ்ணா மடம் இங்கு அமைந்துள்ளது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9076 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். நாட்டறம்பள்ளி மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நாட்டறம்பள்ளி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். நாட்டரசன் கோட்டை நாட்டரசன் கோட்டை (ஆங்கிலம்:Nattarasankottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது சிவகங்கைக்கு கிழக்கே 8 கிமீ தொலைவில், காளையார்கோவிலுக்கு அருகில் உள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 1,554 வீடுகளும், 5,860 மக்கள்தொகையும் கொண்டது. இது 18 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும், 65 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 75 மீட்டர் (246 அடி) உயரத்தில் இருக்கின்றது. இங்கு கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இப்பேரூராட்சியில் ஆண்டுதோறும் பொங்கல் தினத்தின் முதல் செவ்வாய் அன்று செவ்வாய் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இங்கு நடைபெறும் வைகாசி விசாக திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். முக்கியமாக 8ஆம் திருவிழா வெள்ளிரதம், இதில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். சோழநாட்டில் பிறந்த கம்பன் "மன்னவனும் நீயோ வளநாடும் உனதோ" என சோழ மன்னனைப் பழித்துப் பாடிவிட்டு, செட்டி நாட்டுப் பகுதிக்கு தனது இறுதிக் காலத்தைக் கழித்த பின் நாட்டரசன் கோட்டையில் மாண்டான் என்று கருதப்படுகிறது. அவரது கல்லறை இங்கு அமைந்திருக்கிறது. கம்பன் தான் இயற்றிய இராம காதையை அரங்கேற்றிய பங்குனி மாதம் அத்த நாளில் இக்கல்லறைக் கோயில் வளாகத்தில் காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழாவின் நிறைவு விழா ஆண்டு தோறும் நடைபெறுகிறது. நவல்பட்டு நவல்பட்டு (ஆங்கிலம்:Navalpattu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,020 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். நவல்பட்டு மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நவல்பட்டு மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். நீடாமங்கலம் நீடாமங்கலம் (ஆங்கிலம்:Needamangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். சங்ககாலத்தில் இந்த ஊர் நீடூர் என்னும் பெயருடன் விளங்கியது. அக்காலத்தில் இது மிழலை நாட்டின் தலைநகர். எவ்வி என்னும் வள்ளல் சங்ககாலத்தில் இதனை ஆண்டுவந்தான். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8725 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். நீடாமங்கலம் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நீடாமங்கலம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். நெய்யூர் கன்னியாகுமாாி மாவட்டத்தில் நெய்யூர் என்ற கிரமாம் உள்ளது.இககிராமம் ஒரு வளரும் கிராமமாகும். . இக்கிராமம் நாகா்கோவிலிருந்து 18 கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது.  இக்கிராமத்தின் அருகில் இரணியல் ரயில்வே சந்திப்பு உள்ளது.இந்த இடத்தின் முக்கிமாக  பிரபலமான நெய்யர் தேவாலயம் ஆகும். இது இந்தியாவில் முதன்முதலில் புற்றுநோய்க்கான ஆராய்ச்சி மையங்களைக் கொண்டது. மதுரை, தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்கள் இந்த நகரத்திற்கு அருகில் உள்ள விமான நிலையங்கள் உள்ளன. நெல்லிக்குப்பம் நெல்லிக்குப்பம் (ஆங்கிலம்:Nellikuppam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 44,191 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். நெல்லிக்குப்பம் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நெல்லிக்குப்பம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். நெருஞ்சிப்பேட்டை நெருஞ்சிப்பேட்டை (ஆங்கிலம்:Nerunjipettai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6372 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். நெருஞ்சிப்பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 53% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 62%, பெண்களின் கல்வியறிவு 43% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. நெருஞ்சிப்பேட்டை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். படைவீடு படைவீடு (ஆங்கிலம்:Padaiveedu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,031 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். படைவீடு மக்களின் சராசரி கல்வியறிவு 55% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 63%, பெண்களின் கல்வியறிவு 46% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. படைவீடு மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.. பத்மனாபபுரம் பத்மனாபபுரம் (ஆங்கிலம்:Padmanabhapuram പദ്മനാഭപുരം), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். பத்மநாப புரம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பழைய தலைநகரம். 1795-இல் திருவிதாங்கூர் மன்னரான ராமவர்மா தலைநகரை பத்மனாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றினர். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 15 மீட்டர் (49 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,051 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பத்மனாபபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 79% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பத்மனாபபுரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். திருவிதாங்கூர் மன்னர்களின் பழைய அரண்மனையான பத்மநாபபுரம் அரண்மனை இவ்வூரின் முக்கியமான சுற்றுலாத் தலமாகும். நுட்பமான மரவேலைப்பாடுகளைக் கொண்டுள்ள இவ் அரண்மனை ஆறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பாலக்கோடு பாலக்கோடு (ஆங்கிலம்:Palakkodu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 533 மீட்டர் (1748 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18,614 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பாலக்கோடு மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பாலக்கோடு மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பாலமேடு பாலமேடு (ஆங்கிலம்:Palamedu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இதன் மக்கள்தொகை 10,493 ஆகும். 4 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 69 தெருக்களும் கொண்ட பாலமேடு பேரூராட்சி, சோழவந்தான் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இவ்வூரில் பால்கோவா மற்றும் ஜல்லிக்கட்டு ஆகியவை பிரசித்தி பெற்றவை ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 227 மீட்டர் (744 அடி) உயரத்தில் இருக்கின்றது. பாலவாக்கம் பாலவாக்கம் (ஆங்கிலம்:Palavakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,369 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பாலவாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பாலவாக்கம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பாளையம் (திண்டுக்கல்) பாளையம் (ஆங்கிலம்:Palayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 15,336 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 25.10 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. இது வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. பாளையம் பேரூராட்சி, திண்டுக்கல் மாவட்ட தலைநகர் திண்டுக்கல்லிருந்து 40 கிமீ வடக்கிலும், கரூரிலிருந்து 35 கி.மீ தெற்கிலும் உள்ளது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,096 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 45% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 55%, பெண்களின் கல்வியறிவு 35% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. பாளையம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பாளையம் என்ற பெயரில் தமிழகத்தில் தோராயமாக ஐநூறு ஊர்கள் உள்ளன என்று சொல்லலாம். பாளையம் என்ற ஊர்கள் அனைத்தும் ஒரு குன்று, அல்லது மலை அடிவாரங்களில் அமைக்கப்பட்டு இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. பாளையக்காரர்கள் என்பவர்கள் போர் வீரர்கள் எனவும் பொருள் கொள்ளலாம். அதாவது, மன்னர்கள் அல்லது குறுநில மன்னர்கள் முந்தைய காலங்களில் போருக்குச் செல்லும் போது, எதிரிகள் எளிதில் தங்களது படையினனத் தாக்கி விடாமலும் அதே சமயம் படையின் இருப்பிடம் எதிரிகளுக்கு தெரியாமல் இருப்பதற்காகவும், இவ்வாறு மலைகளுக்கு அருகில் வீரர்களைத் தங்க வைத்ததாக ஒரு கருத்து நிலவுகிறது. எனவே இவ்வாறு போர் வீரர்கள் தங்க வைக்கப்பட்ட இடங்களெல்லாம் பாளையம் என்று அழைக்கப்பட்டு, தற்போது, அம்மா பாளையம், பெரியம்மா பாளையம், கோபி செட்டி பாளையம்.. எனப் பல வகைப் பாளையங்கள் உள்ளன. பள்ளபட்டி பள்ளபட்டி (ஆங்கிலம்:Pallapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,807 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பள்ளபட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 69%, பெண்களின் கல்வியறிவு 53% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பள்ளபட்டி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பல்லாவரம் பல்லாவரம் (ஆங்கிலம்:Pallavaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னையில் இருக்கும் ஒரு நகராட்சி மற்றும் புறநகர் பகுதி ஆகும். பல்லவர்புரம் என்ற பெயர் பின்னர் பல்லாவரம் என்று மாறியது. இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 16 மீட்டர் (52 அடி) உயரத்தில் இருக்கின்றது. அரசு ஆவணங்களில் பல்லவபுரம் என்றே குறிப்பிடப்படும். இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,16,308 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 1,08,381ஆண்கள், 1,07,927 பெண்கள் ஆவார்கள். பல்லாவரம் மக்களின் சராசரி கல்வியறிவு 93.26% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 95.94%, பெண்களின் கல்வியறிவு 90.57% ஆகும்.பல்லாவரம் மக்கள் தொகையில் 20,936 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பள்ளிக்கரணை பள்ளிக்கரணை (ஆங்கிலம்:Pallikaranai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த பேரூராட்சி பள்ளிக்கரணை பேரூராட்சி. 2012ல் பள்ளிக்கரணை சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுவிட்டது. பள்ளிக்கரணை சென்னை மாநகராட்சியில் 189வது வார்டு, 14வது மண்டலத்தில் உள்ளது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,503 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். பள்ளிக்கரணை மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பள்ளிக்கரணை மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இப்பகுதி வங்கக்கடலை ஒட்டியுள்ளது. இங்கு சதுப்புநிலக்காடுகள் காணப்படுகின்றன. இப்பகுதியின் அலையாத்தித் தாவரங்கள் உயிரியல் சிறப்பு வாய்ந்தவை. இக்காடுகளை பல பறவைகள், நிலநீர் வாழிகள் போன்றவை வாழிடமாகக் கொண்டுள்ளன. பள்ளிப்பட்டு பள்ளிப்பட்டு (ஆங்கிலம்:Pallipattu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 154 மீட்டர் (505 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8650 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பள்ளிப்பட்டு மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பள்ளிப்பட்டு மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். Sai Balaji Vidya Mandir, Nursery & Primary School, R.K.Pet 1)st.marys matriculation school 2)saai sri matriculation higher secondary school Correspondent Name is T.S.M. Gurumurthi பம்மல் பம்மல் (ஆங்கிலம்:Pammal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 49,744 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பம்மல் மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 77% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பம்மல் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பனைமரத்துப்பட்டி பனைமரத்துப்பட்டி அல்லது பனமரத்துப்பட்டி (ஆங்கிலம்:Panaimarathupatti), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8051 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பனைமரத்துப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 68%, பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பனைமரத்துப்பட்டி மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பானஜி பணஜி (ஆங்கிலம்:Panaji, போர்ச்சுகீசியம்:Pangim), இந்தியாவின் கோவா மாநிலத்தின் தலைநகர் ஆகும். இதன் போர்ச்சுகீசிய பெயர் பஞ்சிம் ஆகும். இது வட கோவா மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி மன்றம் ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 58,785 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பணஜி மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 77% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பணஜி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். 1961-ஆம் ஆண்டு இந்தியா பனாஜியை ஒரு படையெடுப்பின் மூலம் இணைந்துக் கொண்டது. 1961 முதல் 1987ஆம் ஆண்டு வரை இந்திய ஆட்சிப் பகுதியாக இருந்த கோவாவின் தலைநகராகவும் 1987-இல் மாநிலமாகத் தரம் உயர்த்தப்பட்ட கோவா மாநிலத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. வட கோவா மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகரமும் இதுவே. பண்ருட்டி (கடலூர்) பண்ருட்டி (ஆங்கிலம்:Panruti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். பலாப்பழத்திற்கும், முந்திரிக்கும் புகழ் பெற்றது பண்ருட்டி. பாட்டெழுதுவதில் சிறந்து விளங்கியதால், பண் உருட்டி, என்பது மறுவி பண்ருட்டி என்று பெயர் பெற்றது. இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 60,323 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பண்ருட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 76.19% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99% விட கூடியதே. பண்ருட்டி மக்கள் தொகையில் 6,257 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். வறண்ட தட்ப வெப்ப காலநிலையைக் கொண்டது. இங்கு செம்மண் மிகுந்துள்ளது. எனவே, பலாவை பயிரிடுகின்றனர். இதை முந்திரி தோப்பிற்கு இடையே ஊடு பயிராக பயிர் செய்ய முடியும். இது ஏப்ரல், மே மற்றும் சூன் மாதங்களில் பலன் தரக்கூடியது. பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம்) பாபநாசம் (ஆங்கிலம்:Papanasam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 106 மீட்டர் (347 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 614 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் ஆண்கள் 312, பெண்கள் 302 ஆவார்கள். பாபநாசம் மக்களின் சராசரி கல்வியறிவு 84.39% ஆகும், இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 78% விட கூடியதே. பாபநாசம் மக்கள் தொகையில் 11.43% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இவ்வூரில் பாண்டிய அரசர்களால் கட்டப்பட்டு, நாயக்க மரபு அரசர்களால் விரிவாக்கப்பட்ட பழம்பெரும் பாபநாசநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் ஒரு வைப்புத் தலமாகும். வழிபட்டோர் : அகத்தியர். பரமக்குடி பரமக்குடி (ஆங்கிலம்:Paramakudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.இது வைகை நதியின் கரையில் அமைந்திருக்கிறது. மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை எண் 49 இன் மத்தியில் உள்ளது. இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 103776 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52704 ஆண்கள், 51072 பெண்கள் ஆவார்கள். பரமக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 78% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பரமக்குடி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பரமக்குடி நகரானது ரயில் மற்றும் பேருந்து வசதிகளின் மூலம் மற்ற ஊர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. கொச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை (NH 49) நகரின் குறுக்கே அமைந்துள்ளது. இங்கிருந்து சென்னை, ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, கோவை, திருப்பதி, ஒக்ஹா, புவனேஸ்வர் , வாரனாசி உள்ளிட்ட நகரங்களுக்கு நேரடி ரயில் வசதி உள்ளது. இங்கிருந்து பெரும்பாலான ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து வசதிகள் உள்ளன.அருகில் உள்ள விமான நிலையம் மதுரை ஆகும். இது பரமக்குடி இல் இருந்து 83கி மீ தொலைவில் உள்ளது. பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிவப்பு குடை மிளகாய் விளைச்சலில் சிறப்பு பெற்றதாகும். இங்கு விளைவிக்கப்படும் பருத்தி இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.மொத்த தமிழகத்திற்குமான மிளகாய் விலை இங்கு தான் நிர்ணயிக்கப்படுகிறது. பரமக்குடி மற்றும் எமனேஸ்வரம் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான சௌராஷ்டிரா இன மக்கள் அசல் பட்டு ஜரிகை மற்றும் அனைத்து வித கைத்தறி சேலைகளை உற்பத்தி செய்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகள் இந்தியா மட்டுமின்றி மலேசியா , சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்ப்படுகிறது. சட்டமன்ற தொகுதி - பரமக்குடி (தனித்தொகுதி); நாடாளுமன்ற தொகுதி - ராமநாதபுரம் பரமத்தி பரமத்தி (ஆங்கிலம்:Paramathi), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,957 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பரமத்தி மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பரமத்தி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். it is on the national highway NH 7 which connects salem and madurai. பரங்கிப்பேட்டை பரங்கிப்பேட்டை (ஆங்கிலம்:Parangipettai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,901 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். பரங்கிப்பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பரங்கிப்பேட்டை மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இவ்வூர் மஹ்மூதுபந்தர், போர்டோநோவோ (புதிய துறைமுக நகரம்) மற்றும் முத்து கிருஷ்ணபுரி என்றும் அறியப்படுகிறது. வங்காள வளைகுடா கடலோரத்தில் அமைந்துள்ள இவ்வூர் போர்ச்சுகீசியர்கள் மற்றும் பிரிட்டிசாரால் காலனி ஆதிக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இது முக்கிய கப்பல் துறைமுகமாகவும் விளங்கியது. ஆசியாவின் முதல் இரும்பு தொழிற்சாலை இங்கு நிறுவப்பட்டிருந்தது. கி.பி. 1781ல் ஆங்கிலேயரை எதிர்த்து ஹைதர் அலி இரண்டாம் மைசூர் போர் புரிந்தார். அதன் நினைவு போர்கொடி கம்பமும், கல்லறைகளும் இன்றும் அழியாச் சின்னங்களாக உள்ளது. பாபா கோயிலும் இங்கு உள்ளது. அண்ணாமலை பல்கலைகழகத்தினால் நிறுவப்பட்டு கடல் சார் ஆராய்ச்சி படிப்புகள் நடைபெற்று வருகின்றது - இதன் கடல்சார் அருங்காட்சியகம் இங்கு பிரசித்தி பெற்றது. இரயில் நிலையம்: விழுப்புரம் - மயிலாடுதுறை கோட்ட பாதையின் இடையே அமைந்துள்ளது. சிதம்பரம் இரயில் நிலையம் இங்கிருந்து 11 கி.மீ தூரத்திலும், கடலூர் சந்திப்பு 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. அருகில் உள்ள விமான நிலையங்கள்: திருச்சிராப்பள்ளி - 145 கி.மீ., சென்னை - 230 கி.மீ. பரங்கிப்பேட்டை கடல்வளம் நிறைந்த பகுதி. இங்கு கடற்கரை கழிமுகம், சதுப்புநிலம் ஆற்று நீரோடைகள் அனைத்தும் காணப்படுகின்றன. இந்த ஊரை கடல் ஆராய்ச்சிக்காக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் விலங்கியல் துறையினர் தேர்ந்தெடுத்து கடல் உயிரின ஆய்வு மையம் ("Marine Biological Station") ஒன்றினை நிறுவினர். இந்த மையத்தில், கடல் உயிரினங்கள் பற்றிய ஓர் அருங்காட்சியகம் இருக்கிறது. இதனைக் காண ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் தினமும் வருகின்றனர். ஒரு கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்புள்ள 10,000 புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சி தொகுப்புகள் அடங்கிய ஒரு நூலகமும் இங்கு இருக்கிறது. ஆய்வுக்காக ஒரு கப்பல் மற்றும் நான்கு படகுகளும் உள்ளன. பரங்கிப்பேட்டையின் (Marine Biological Station) மரைன் பயாலாஜிக்கள் ஸ்டேஷன் தான் இந்தியாவின் கடல் உயிரின ஆய்வுக்காகத் தொடங்கப்பட்ட முதல் ஆய்வு நிலையம் என்பது குறிப்பித்தக்கது. பார்வதிபுரம், ஆந்திரப் பிரதேசம் பார்வதிபுரம் (ஆங்கிலம்:Parvathipuram), இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள விஜயநகரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இதையும் சுற்றியுள்ள ஊர்களையும் இணைத்து பார்வதிபுரம் மண்டலம் உருவாக்கப்பட்டது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 49,692 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பார்வதிபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பார்வதிபுரம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பார்வதிபுரம் மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன. இது ஆந்திர சட்டமன்றத்துக்கு பார்வதிபுரம் சட்டமன்றத் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு அரக்கு மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது. பட்டோடி பட்டோடி (ஆங்கிலம்:Pataudi), இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள Gurgaon மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 240 மீட்டர் (787 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,064 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். பட்டோடி மக்களின் சராசரி கல்வியறிவு 57% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 65%, பெண்களின் கல்வியறிவு 48% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. பட்டோடி மக்கள் தொகையில் 17% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பட்னா பட்னா (ஆங்கிலம்:Patna), இந்தியாவின் பீகார் மாநிலத்தில் அமைந்துள்ள பட்னா மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். பட்னா பீகார் மாநிலத்தின் தலைநகரமாகும். தொன்மைக்காலத்திலிருந்து மக்கள் குடியேறி வசித்து வரும் நகரங்களுள் இதுவும் ஒன்றாகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 50 மீட்டர் (164 அடி) உயரத்தில் இருக்கின்றது. பாடலிபுத்திரம் ("Pāṭaliputra", தேவநாகரி: पाटलिपुत्र),இது பாட்னாவின் பழைய பெயர் ஆகும். கிமு 490 இல் இது அஜாதசத்ருவால் கங்கை ஆற்றின் அருகில் நிறுவப்பட்டது. பின்னர் இது மகத நாட்டின் தலைநகராகவும் விளங்கியது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,376,950 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 54% ஆண்கள், 46% பெண்கள் ஆவார்கள். பட்னா மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பட்னா மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை (ஆங்கிலம்:Pattukkottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 5 மீட்டர் (16 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 65,453 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பட்டுக்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பட்டுக்கோட்டை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பட்டுக்கோட்டை பெயர் காரணம் அறிய முடியவில்லை, எந்த சிற்றரசர்களும் ஆண்டதாக வரலாற்று ஆவணங்களும் கண்டறிய முடியவில்லை. சோழ நாட்டின் ஒரு பகுதியாக இருந்ததற்க்கு எந்த தொல்லியியல் சான்றுகளும் இல்லை. பட்டுக்கோட்டை அருகேயுள்ள மனோரா எனும் சுற்றுலாத்தலம் உள்ளது மேலும் இங்குள்ள அருள்மிகு நாடியம்மன் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.மேலும் இங்கு புகழ்பெற்ற 'கல்யாணசுந்தரம் மணிமண்டபம்' அமைந்துள்ளது. சிதிலமடைந்து புனர்நிர்மாணிக்கப்படும் பட்டுக்கோட்டை ஸ்ரீரங்கநாதசுவாமி திருக்கோயில் பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெருவில் அமைந்துள்ளது இப்போது கோவில் புதிய ஆலயம்மாக மற்ற பட்டு பனிநடை பெற்று வருகிறது . பேரையூர் பேரையூர் (ஆங்கிலம்:Peraiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 150 மீட்டர் (492 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,394 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 5,292 ஆண்கள், 5,102 பெண்கள் ஆவார்கள். பேரையூரில் 1000 ஆண்களுக்கு 964 பெண்கள் உள்ளனர். பேரையூர் மக்களின் சராசரி கல்வியறிவு 79.98% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 87.09%, பெண்களின் கல்வியறிவு 72.77% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட சற்று குறைவானதே. பேரையூர் மக்கள் தொகையில் 1,078 (10.37%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 800 பெண்கள் என்று குறைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 85.33% ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 13.41% கிருஸ்துவர்கள் 1.08%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். பேரையூர் மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 11.33%, பழங்குடியினர் 0.11% ஆக உள்ளனர். பேரையூரில் 2,796 வீடுகள் உள்ளன. பெரம்பலூர் பெரம்பலூர் (ஆங்கிலம்:Perambalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். பெரும் புலியூர் என்று ஒரு தலம். அது மருவி இன்று பெரம்பலூர் என்று ஆகிவிட்டது. பெரும்பல்லூர் என்னும் பெயர் மருவிப் பெரம்பலூர் என்று ஆகியுள்ளது என்று சொல்பவர்களும் உண்டு. இம்மாவட்டத்திலுள்ள வேறு சில ஊரின் பெயர்களை இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த உண்மை விளங்கும். பெரும்பல்லூர் < பெரம்பலூர். குறும்பல்லூர் < குரும்பலூர். இளம்பல்லூர் < இளம்பலூர். இருவூர் < இரூர் (இரு = பெரிய). குறுவூர் < குரூர். (சங்ககாலத்தில் இளம்புல்லூர்க் காவிதி என்னும் புலவர் ஒருவர் இருந்தார்). பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் அரணாரை,சங்குபேட்டை,நான்கு ரோடு, துறை மங்கலம், புதியபேருந்து நிலையம், தீரன் நகர், மின்நகர், ரோஸ் நகர் ஆகியவை அடங்கும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 மீட்டர் (469 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 29,698 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பெரம்பலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெரம்பலூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பேராவூரணி பேராவூரணி (ஆங்கிலம்:Peravurani), தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஓர் நகராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். இவ்வூர், கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 16 மீட்டர் (52 அடி) உயரத்தில் இருக்கின்றது. இது பாராளுமன்றத் தேர்தலுக்கு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியிலும், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பேராவூரணி தொகுதியாகவும் உள்ளது. இங்கு, இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,084 மக்கள் வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள்.பேராவூரணி மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5%ஐ விட கூடியதே. பேராவூரணி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பின்னவாசல் மாரியம்மன் கோவில் மற்றும் பின்னவாசல் சிவன் கோவில். பெரியகுளம் பெரியகுளம் (ஆங்கிலம்:Periyakulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இங்கு 100 ஆண்டு காலம் பழமையும் பெருமையும் வாய்ந்த விக்டோரியா நினைவு ஆண்கள் அரசு மேல் நிலைப் பள்ளி உள்ளது. இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 282 மீட்டர் (925 அடி) உயரத்தில் இருக்கின்றது. பாண்டியர்களின் ஆட்சியில் இருந்த இப்பகுதி பின்பு நாயக்கர் ஆட்சி காலத்தில் தொட்டிய நாயக்கர் இனத்தை சேர்ந்த அப்பாச்சி கவுண்டர் என்பவரால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் கன்னடம், மற்றும் தெலுங்கு பேசும் தொட்டிய நாயக்கர்கள் அதிக அளவில் உள்ளனர் . இந்திய 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 42,039 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பெரியகுளம் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெரியகுளம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர்>ஆவார்கள். போன்ற முக்கிய கோவில்கள் உள்ளது பெரியகுளம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் சோத்துப்பாறை அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு கொடைக்கானல் மலை சிகரத்தில் இருந்து நீர் வருகிறது. இது பெரியகுளம் மக்களின் முக்கிய குடிநீர் தேவையை பூர்த்திச் செய்கிறது. இந்த மலையிலிருந்து சுமார் 7 கீ.மீ தூரத்தில் கன்னக்கரை என்ற ஊரும் அங்கிருந்து சுமார் 10 கீ.மீ தூரத்தில் அகமலை என்ற கிராமமும் உள்ளது. கன்னக்கரை வரை மட்டுமே வாகனங்களில் செல்ல முடியும் அதற்கு மேல் உள்ள அகமலையை அடைய நடந்துதான் செல்ல முடியும். வராக நதி பெரியகுளம் நகரை இரண்டாகப் பிரிக்கிறது. ஒரு பகுதி வடகரை மற்றொரு பகுதி தென்கரை என இரண்டு பிரிவாக பிரிப்பதால் மக்கள் வடகரை, தென்கரை என்று அழைக்கிறார்கள். இந்த நதி சோத்துப்பாறையில் இருந்து உபரி நீராக வருகிறது. இங்கு எப்பொழுதும் நீர் வற்றாமல் ஓடிக்கொண்டே இருப்பதால் இதை வற்றாத நதி என்றும் காலப்போக்கில் வராக நதி என்றும் அழைக்கிறார்கள். இது பெரியகுளம் வழியாக சென்று வடுகபட்டி, மேல் மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் வழியாக சென்று வைகை ஆற்றில் கலக்கிறது. ஊரின் மேற்கு பகுதியில் பாலசுப்புரமணி கோவிலின் பின்பகுதியில் இது உள்ளது. இந்த தொட்டியிலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள கைலாசநாதர் மலைகோயிலில் இருந்து பூமியின் அடிப்பகுதி வழியாக நீர் வருவதாக கூறப்படுகிறது. ஆண்டிற்கு ஒருமுறை இங்கு திருவிழா நடைபெறுகிறது. இங்கு கும்பக்கரை அருவி எனும் நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. இது பெரியகுளம் பேருந்து நிலையத்திலிருந்து சரியாக 9 கி.மீ தூரத்தில் உள்ளது. கும்பக்கரையிலிருந்து சுமார் 18 கி.மீ தூரத்தில் கொடைக்கானல் மலைச் சிகரம் உள்ளது. இங்கு 100 ஆண்டு காலம் பழமையும் பெருமையும் வாய்ந்த விக்டோரியா மகாராணியின் நினைவைப் போற்றும் படி நிறுவப்பட்ட அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி உள்ளது. இப்பகுதி மூன்று பக்கங்களும் மலைகளால் சூழப் பட்டு இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் மனதை மயக்கும் வண்ணம் உள்ளது. வராக நதி எனும் வற்றாத நதி இங்கு உள்ளது.இந்நதி பெரியகுளத்தை,வடகரை மற்றும் தென்கரை என இரு பகுதிகளாக பிரிக்கின்றது. பெரியநாயக்கன்பாளையம் பெரியநாயக்கன்பாளையம் (ஆங்கிலம்:Periyanaickenpalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,921 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். பெரியநாயக்கன்பாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெரியநாயக்கன்பாளையம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பெரியப்பட்டி பெரியப்பட்டி (ஆங்கிலம்:"Periyapatti"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 309 மீட்டர் (1013 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,333 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பெரியப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெரியப்பட்டி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பேரணாம்பட்டு பேரணாம்பட்டு (ஆங்கிலம்:Pernampattu) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். இது ஆந்திரா-தமிழ்நாடு எல்லைக்கு அருகே அமைந்துள்ளது. இவ்வழியே தேசிய நெடுஞ்சாலை 234 அமைந்துள்ளது. இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 51,271 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 25,285 ஆண்கள், 25,986 பெண்கள் ஆவார்கள். பேரணாம்பட்டு மக்களின் சராசரி கல்வியறிவு 79.59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85.35%, பெண்களின் கல்வியறிவு 74.03% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09 % விட கூடியதே. பேரணாம்பட்டு மக்கள் தொகையில் 13.39% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இவர்களில் இந்துக்கள் 36.44%, முஸ்லிம்கள் 61.56%, கிறித்தவர்கள் 1.72% ஆவார்கள். பெருங்குடி பெருங்குடி (ஆங்கிலம்:Perungudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 9 மீட்டர் (29 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 23,481 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். பெருங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெருங்குடி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பெருங்குளம் பெருங்குளம் (ஆங்கிலம்:Perungulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு வரலாற்று புகழ் பெற்ற அருள்மிகு மாயக்கூத்தர் திருக்கோவில் மற்றும் அருள்மிகு திருவழூதீஸ்வரர் திருக்கோவில்கள் அமைந்துள்ளது. இதன் அருகமைந்த ஊர்கள்; கிழக்கில் ஏரல் 5 கிமீ, மேற்கில் ஸ்ரீவைகுண்டம் 10 கிமீ, வடக்கில் சாயர்புரம் 7 கிமீ, தெற்கில் மணவாளக்குறிச்சி 3 கிமீ. இதன் அருகமைந்த தொடருந்து நிலையம், 12 கிமீ தொலைவில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் உள்ளது. 20.48 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 122 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,766 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 7,203 ஆகும் இவ்வூரில், நவதிருப்பதிகளில் ஒன்றானதும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதுமான மாயக்கூத்த பெருமாள் எனும் பழைமையான வைணவத் திருக்கோயிலும், பழைமையான சிவபெருமான் திருக்கோயிலும் அமைந்துள்ளன.சிவபெருமான் திருக்கோயிலில், அம்பாள் சன்னதியில் திருவள்ளுவரின் சிலையும் உள்ளது. பேரூர் பேரூர் (ஆங்கிலம்:Perur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதி ஆகும். இதன் இருப்பிடம் பண்டைய வரலாற்றில் ஆறைநாடு என்னும் பகுதியில் இருந்தது. இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 418 மீட்டர் (1371 அடி) உயரத்தில் இருக்கின்றது. பேரூர் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பேரூரில் ஒரு ஏரி உள்ளது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7937 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பேரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பேரூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பேரூரில் புகழ்பெற்ற சிவன் கோவில் ஒன்றும் உள்ளது. சிவன், பட்டீசுவரனாகவும், பார்வதி பச்சை நாயகியாகவும் எழுந்தருளியுள்ள இந்தக் கோவில் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கனகசபை மண்டபத்திலும், இதர மண்டபங்களிலும் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் காணத்தக்கவை. கோவிலுக்கு எதிரே குளம் ஒன்று உள்ளது. இக்கோவில் கி. மு. முதல் நூற்றாண்டு வாக்கில் கரிகால் சோழனால் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் இக்கோவிலில் உள்ள கனகசபையில் உள்ள ஒரே கல்லால் ஆன சிலைகள் ஆறாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டிருக்கின்றன. இவ்வூரில் தமிழ்க்கல்லூரி ஒன்றும் உள்ளது. பெத்தநாயக்கன்பாளையம் பெத்தநாயக்கன்பாளையம் (ஆங்கிலம்:Pethanaickenpalayam), 13 இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூர் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடமாக உள்ளது. இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,678. மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பெத்தநாயக்கன்பாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 69%, பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெத்தநாயக்கன்பாளையம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.பெத்தநாயக்கன்பாளையம் நகரில் வசிஷ்டநதி விவசாயத்திற்கு பயன்படுகின்றது. பொள்ளாச்சி பொள்ளாச்சி ("Pollachi"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். 'பொருள் ஆட்சி ', 'பொழில்வாய்ச்சி' என்று அழைக்கப்பட்ட ஊர் காலப்போக்கில் மருவி பொள்ளாச்சி என்று தற்பொழுது அழைக்கப்படுகிறது. சோழர் காலத்தில் இவ்வூர் முடிகொண்ட சோழநல்லூர் என்று அழைக்கப்பட்ட வளமான ஊராகும்.பழம்பெரும் சிறப்புகளைக் கொண்டது இந்த பொள்ளாச்சி. இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 293 மீட்டர் (961 அடி) உயரத்தில் இருக்கின்றது. பொள்ளாச்சியின் அருகே ஆழியாறு, ஆனைமலை, வால்பாறை மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலாத் தலங்களும் உள்ளன. இவற்றின் அழகு, பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும். நல்ல வெப்ப நிலை உள்ள இடம். இங்கிருந்து கேரளாவுக்கு 15 நிமிடங்களில் செல்ல முடியும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 88,293 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பொள்ளாச்சி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பொள்ளாச்சி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சேத்துமடை சர்க்கார்பதி மின் நிலையம் பொள்ளாச்சி பகுதி பல வகையான பொருள்களுக்குச் சிறப்புப் பெற்றது. அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது மாட்டுச் சந்தையாகும். தென்தமிழகத்திலேயே மிகவும் பெரிய மாட்டுச் சந்தை பொள்ளாச்சியில் தான் உள்ளது. அதன் பரப்பளவு சுமார் ஒரு ஏக்கர். இந்தச் சந்தையில் இருந்துதான் கேரளா மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளுக்கு மாடுகள் கொண்டு செல்லப் படுகின்றன. தமிழகத்தின் பல பகுதியிலிருந்து பல வகையான மாடுகள் இங்கு விற்பனைக்கு வருகின்றன. இந்த மாடுகளில் பெரும்பகுதி இறைச்சிக்காகக் கேரளா கொண்டு செல்லப் படுகின்றன. இந்தச் சந்தை மாடுகளுக்கு மட்டும் அல்லாமல் ஆடுகள் விற்பனைக்கும் பெயர் பெற்றது. பொள்ளச்சி தமிழ்த் திரையுலகின் பிரபல திரைப்படப் படப்பிடிப்பு தளமாக விளங்குகிறது. இதற்கு, இயற்கை எழில் கொஞ்சும் இயற்கையின் அழகும் சிறப்பான தட்பவெட்ப நிலையும் காரணமாக அமைகின்றன. வெளிப்புற படப்பிடிப்புகளுக்கு வெளிநாடுகளுக்குச் சென்று படம்பிடிப்பதை விட, மிக மிகக் குறைவான செலவிலேயே இங்கே படப்பிடிப்பை நடத்தி விடலாம் என்பது பொள்ளாச்சியின் மற்றொரு சிறப்பம்சம் ஆகும். பொள்ளச்சியில் சிறப்பு வாய்ந்த மற்றொரு பொருள் கருப்பட்டி. இந்த பகுதியில் பெரும்பாலான இடங்களில் தென்னை மரங்களே காணப்படுகின்றன. இவற்றிலிருந்து கள் மற்றும் பதனி இறக்கப்படுகின்றன. இதனுடன் கருப்பட்டியும் தயாரிக்கப்படுகின்றது. தென்னை மரங்கள் இங்கு அதிகமாகக் காணப்படுவதால் இளநீர் மற்றும் தேங்காய்ப் பொருள்களுக்குப் பெயர் பெற்றுக் காணப்படுகின்றது. அமைதியான சுற்றுச் சுழலும் மிதமான தட்பவெட்ப நிலையும் இங்கு நிலவுவதால் இந்தப் பகுதி சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. பொள்ளச்சியின் அருகே இருக்கும் பெரிய அணைக்கட்டுகளும் சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவருகிறது. கலைகள் சிக்காட்டம் எனும் கலை சிறப்புமிக்கதாகும்.இந்த கலைக்குழுக்கள் பொள்ளாசசி பகுதிகளில் மட்டுமே காணப்படும் தனிச்சிறப்புடையது. போளூர் போளூர் (ஆங்கிலம்:Polur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 171 மீட்டர் (561 அடி) உயரத்தில் இருக்கின்றது. இவ்வூரானது திருவண்ணாமலை வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25,492 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். பொருளுர் என்பதே திரிபாக இன்று போளுர் என்று மாறி உள்ளது. போளுரின் மலையில் உள்ள கோயிலின் சிறப்பே போளுரின் சிறப்பாக அமைகிறது. சவ்வாது மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது .பருவத மலை இங்கிருந்து அருகில் உள்ளது.திருவண்ணாமலைக்கு வேலூரிலிருந்து வர வேண்டுமானால் போளுர் வழியாகதான் வர வேண்டும்.போளுரின் அமைவிடம் வட தமிழகமாகும் .போளூரில் விட்டோபா சுவாமிகள் மடம் உள்ளது இது விட்டோபா சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ள இடமாகும். அதன் அருகில் போலாட்சி அம்மன் கோவில் உள்ளது. போக்குவரத்து போளூரில் போக்குவரத்து வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் பேருந்து சேவைகள் நடைபெறுகிறது. போளூரிலிருந்து சென்னைக்கு ஆரணி, ஆற்காடு(தடம் எண் - 202 UD) வழியாகவும் மற்றும் சேத்பட், வந்தவாசி, உத்திரமேரூர்(தடம் எண் - 148) வழியாகவும் அதிகப்படியான பேருந்துகள் சேவைகள் இயக்கப்படுகன்றன. அதுமட்டுமின்றி குறிப்பாக, திருவண்ணாமலை, வேலூர், பெங்களூர், திருப்பூர், ஆரணி, சேலம், திருப்பதி, கோயம்புத்தூர், ஒகேனக்கல், செங்கம், தாம்பரம், செய்யாறு, சேத்பட், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செஞ்சி, ஆத்தூர், திருச்சி, சிதம்பரம், பண்ருட்டி, திருக்கோவிலூர், மதுரை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, பெரம்பலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர், படவேடு, வந்தவாசி, உத்திரமேரூர், கண்ணமங்கலம் மற்றும் துரிஞ்சிகுப்பம், சாத்தனூர் அணை ஆகிய இடங்களுக்கு அதிகப்படியான பேருந்து சேவைகள் உள்ளன. அதுமட்டுமின்றி கிராமப்புறங்களுக்கு நகர பேருந்துகள் இயக்கப்படுகிறது. குறிப்பாக துரிஞ்சிகுப்பம், அவலூர்பேட்டை, பாடகம், மங்கலம், ஆதமங்கலம்புதூர், பர்வதமலை, கலசப்பாக்கம், மன்சுராபாத், இன்னும் அதிகப்படியான ஊர்களுக்கு நகர பேருந்துகள் இயக்கப்படுகிறது. ரயில் போக்குவரத்து போளூரில் ஒரு ரயில் நிலையமும் உள்ளது. புதுச்சேரி - விழுப்புரம் - திருவண்ணாமலை - போளூர் - களம்பூர்(ஆரணி ரோடு) - வேலூர் (காட்பாடி) - திருப்பதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இங்கு தினசரி மற்றும் வாரந்திர ரயில்கள் மற்றும் அனைத்து ரயில்களும் போளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். பொன்னமராவதி பொன்னமராவதி (ஆங்கிலம்:Ponnamaravathi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் மற்றும் பொன்னமராவதி வட்டத்திலுள்ள பேரூராட்சி ஆகும் . இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,710 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். பொன்னமராவதி மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பொன்னமராவதி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். பொன்னமராவதி தாலுகாவின் மேற்கில் எஸ். புதூர், சிங்கம்புணரி மற்றும் கொட்டாம்பட்டி தாலுகாக்களும், தெற்கில் திருப்பத்தூர் தாலுகாவும் அமைந்துள்ளன. புதுக்கோட்டை, நத்தம், காரைக்குடி மற்றும் சிவகங்கை ஆகிய நகரங்கள் பொன்னமராவதிக்கு அருகில் அமைந்துள்ளன. இது புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது. காலநிலை கோடையில் இதன் வெப்பநிலை 30 °C முதல் 42 °C வரை ஆகும். ஜனவரி முதல் மே வரையிலான சராசரி வெப்பநிலை முறையே 27 °C, 27 °C, 30 °C, 33 °C மற்றும் 34 °C ஆகும். திருமயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொன்னமராவதி அருகில் உள்ள வேந்தன்பட்டி,தேனீமலை, குமாரபட்டி போன்ற ஊர்களில் வருடாந்திரம் தை மாதத்தில்ஏறுதழுவல்(ஜல்லிக்கட்டு) நடைபெறுவது வழக்கம்.இவ்விழாவினை காண மாவட்டத்தின் பல இடங்களில் இருந்து மக்கள் இங்கு வருகிறார்கள்.புதுக்கோட்டையிலிருந்து 30கி.மீ தொலைவிலும்,திருமயத்திலிருந்து 24கி.மீ தொலைவிலும் வேந்தன்பட்டி உள்ளது. கட்டபொம்மு,ஊமைத்துரை தங்கியிருந்த ஊர் வேந்தன்பட்டி அருகில் உள்ள குமாரபட்டியாக மருவிய குமாரமங்கலம் பூலாம்பட்டி பூலாம்பட்டி (ஆங்கிலம்:Poolampatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9000 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். பூலாம்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 56% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 66%, பெண்களின் கல்வியறிவு 45% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. பூலாம்பட்டி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். காவிரியின் கரையில் அமைந்திருப்பதால் இந்த கிராமம் பெரிதும் விவசாயத்தையே நம்பியுள்ளது. கரும்பு, நெல், வாழை, மஞ்சள் போன்ற நன்செய் பயிர்கள் அதிகம் விளைகின்றன. பூலாம்பட்டி அருகில் உள்ள தடுப்பணை மூலம் ஆற்றில் விவசாயத்திற்குத் தண்ணீர் தேக்கப்படுகிறது.வெகு சிறிய அளவில் மீன்பிடிப்பும் நடைபெறுகிறது. சில மீனவர்கள் பயணிகளை ஆற்றில் படகு சவாரி அழைத்துச் சென்றும் சம்பாதிக்கின்றனர். Chelwas பூந்தமல்லி பூந்தமல்லி அல்லது பூவிருந்தவல்லி (ஆங்கிலம்:Poonamallee), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.இது சென்னையின் ஒரு புறநகர் பகுதியாகவும் உள்ளது. இது சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 25 மீட்டர் (82 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6,59,922 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50.5% ஆண்கள், 49.5% பெண்கள் ஆவார்கள். பூந்தமல்லி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பூந்தமல்லி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். போத்தனூர் போத்தனூர் (ஆங்கிலம்:Pothanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,967 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். போத்தனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. போத்தனூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். புதுக்கடை (தமிழ்நாடு) புதுக்கடை (ஆங்கிலம்:Pudukadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9012 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். புதுக்கடை மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புதுக்கடை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். புதுப்பாளையம் புதுப்பாளையம் (ஆங்கிலம்:Pudupalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,110 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். புதுப்பாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 53% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புதுப்பாளையம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சி. புதுப்பட்டி சி. புதுப்பட்டி (ஆங்கிலம்:C. Pudupatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது தேனியிலிருந்து 35 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு திராட்சை, தென்னை, வாழை ஆகியவை முக்கிய பயிராகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 11,511 ஆகும். இது 16.98 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 48 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது கம்பம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. புளியங்குடி புளியங்குடி (ஆங்கிலம்:Puliangudi), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இந்த ஊரானது மேற்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் உள்ள ஊர்களில் ஒன்றாகும். மதுரையிலிருந்து கொல்லம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், இராஜபாளையத்திலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், சங்கரன்கோவிலில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஊர் அமைந்துள்ளது. சங்கரன்கோவில், கோவில்பட்டி, தென்காசி, கடையநல்லூர் ஆகிய பெருநகரங்கள் இந்த ஊரின் அருகே அமைந்துள்ளன. புளியங்குடி இந்த ஊரில் எலுமிச்சை பழம் மிகவும் சுவையாகவும் இருக்கும் அதனால் இந்த ஊர் "லெமன் சிட்டி" என்றும் கூட அழைக்கப்படுகிறது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 46,034 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். புளியங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புளியங்குடி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். == கல்வி நிலையங்கள் = மேல்நிலைப் பள்ளிகள் புளியங்குடியில் இரண்டு முக்கிய பேருந்து நிலையங்கள் உள்ளன - மேற்கே சுந்தரலிங்கம் பேருந்து நிலையம் & மவேரியன் இம்மானுவேல் சேகரன் பேருந்து நிலையம், தென்காசி, இராஜபாளையம், சங்கரன்கோவில், திருநெல்வேலி, மதுரை போன்ற இடங்களுக்கு இப்பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. அருகிலுள்ள இரயில் நிலையங்கள் பாம்புகோவில் சந்தை 13 கி.மீ தொலைவில் உள்ளது மற்றும் சங்கரன்கோவில் ரயில் நிலையம் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. புளியங்குடி - சங்கரன்கோவில் = 16 கி.மீ. புளியங்குடி - கடையநல்லூர் = 11 கி.மீ. புளியங்குடி - வாசுதேவநல்லூர் = 06 கி.மீ. புளியங்குடி - தென்காசி = 33 கி.மீ. புளியங்குடி - திருநெல்வேலி= 52 கி.மீ. புளியங்குடி - ராஜபாளையம் = 33 கி.மீ. புளியங்குடி - சிவகிரி = 19 கி.மீ. புளியங்குடி - மதுரை = 113 கிமீ புளியங்குடி - திருச்சி = 230 கி.மீ. புளியங்குடி - சென்னை- 600 கி.மீ. புளியங்குடி - சுரண்டை = 24 கி.மீ. புளியங்குடி நகரில் எலுமிச்சைக்கான தினசரி சந்தை நடைபெறுகிறது. புளியங்குடி அருகிலுள்ள புன்னையாபுரம் கிராமம் எலுமிச்சை விளைவிப்பதில் சிறந்த இடம் வகிக்கின்றது. இப்பகுதி எலுமிச்சை பழத்தில் சாறு (நீர்ப்பதம்) குறைவதற்கு மற்ற எலுமிச்சைகளைவிட அதிக நாட்களாகும் என்பதே இதன் சிறப்பாகும். புரி புரி (ஆங்கிலம்:Puri), இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள புரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். கிருட்டிணன், பலராமர் மற்றும் சுபத்திரை கோயில் கொண்ட புரி ஜெகன்நாதர் கோயில், இந்நகரில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் புரி ஜெகன்நாதர் தேரோட்டம் உலகப் புகழ் பெற்ற நிகழ்வாகும். ஆதிசங்கரர் நிறுவிய நான்கு பீடங்களில் ஒன்றான கோவர்தன மடம் இங்கு அமைந்துள்ளது. இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 0 மீட்டர் (0 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 157,610 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். பூரி மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பூரி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். புத்தூர் (ஆந்திரப் பிரதேசம்) புத்தூர் ("Puttur"), இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இந்த ஊரையும் அருகில் உள்ள ஊர்களையும் இணைத்து புத்தூர் மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 144 மீட்டர் (472 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 29,337 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். புத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புத்தூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இந்த மண்டலத்தின் எண் 44. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு நகரி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த மண்டலத்தில் பதினெட்டு ஊர்கள் உள்ளன. அக்டோபர் 21 யாகூ! சைட் பில்டர் யாகூ! சைட் பில்டர்(Yahoo! site Builder) யாகூவின் இணையத்தளங்களை விருத்தி செய்யவுதவும் ஓர் இலவச மென்பொருளாகும். யாகூ! தேடல் யாகூ! தேடலானது யாகூ!விற்குச் சொந்தமான ஓர் தேடுபொறியாகும். யாகூ! தேடல்கள் உண்மையில் ஓர் பயனர் இடைமுகத்தையே வழங்கி வருகின்றது. தேடலைத் திரைக்குப் பின்னால் வேறுதேடுபொறியூடகாத் (மிக அண்மையில் கூகிள்) தேடலை மேற்கொண்டு தேடல்முடிவுகளைப் பயனருக்கு யாகூ! வர்த்தகச் சின்னத்தில் வெளிப்படுத்தும். ஆரம்பத்தில் இருந்தே வெப்கிறாவ்லிங் (Webcrawling) சேமிப்புக்கள்/சேமிப்பில் இருந்து மீள்வித்தல் ஆகியன யாகூ!வினாற் செய்யப்படவில்லை. 2002 ஆம் ஆண்டில் திரைக்குப் பின்னால் தேடல்களை மேற்கொள்ள உதவிய இன்ங்ரோமி (Inktomi) தேடுபொறியை விலைக்கு வாங்கிக் கொண்டனர். இன்ங்ரோமி யாகூ!விற்கு மாத்திரம் அன்றி வேறுபல இணையத்தளங்களிற்கும் தேடலை மேற்கொள்ளவுதவின. 2003 ஆம் ஆண்டில் "அல்டாவிஸ்டா"(AltaVista) "ஆல்தவெவ்"(AlltheWeb) தேடுபொறிகளை இயக்கிய ஓவர்ரியூவர் நிறுவனத்தையும் விலைக்கு வாங்கினர். எனினும் பல்வேறு தேடுபொறிகளைச் சொந்தமாகக் கொண்டபோதிலும் இதன் பிரதான பக்கத்தில் கூகிள் தேடுபொறியையே உபயோகித்தனர். 2004ஆம் ஆண்டில் இருந்து சொந்தமாக யாகூ! சிலர்ப் (Yahoo! Slurp) என்கின்ற வெப்கிறாவ்லரைப் பாவிக்கத் தொடங்கினர். யாகூ! தேடல்கள் சொந்த ஆய்வுகளுக்கு மேலதிகமாக விலைக்கு வாங்கிய தேடுபொறியுடன் திறமைகளையும் சேர்த்துக்கொண்டது. வேறு நிறுவங்களிற்கும் தேடல்முடிவுகளை அவர்களின் இணையத் தளத்தில் காட்டுவதற்காக விற்கத் தொடங்கினர். யாகூவின் கூகிளின் சேர்த்தியங்குதலானது போட்டியினூடாக அச்சமயத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்தது. கூகிள் தேடல் பெப்ரவரி 7 அக்டோபர் 22 ஆர்க்ஜிஐஎஸ் ஆர்க்ஜிஐஎஸ் (ArcGIS) எஸ்றி (ESRI) நிறுவனத்தால் உருவாக்கப் பட்ட புவியியற் தகவற் தொழில் நுட்ப மென்பொருளாகும். ஆக்ஜிஐஎஸ் ஆக்றீடர்(ArcReader) ஊடாக ஆர்க்வியூ போன்ற மென்பொருட்களூடாக உருவாக்கப்பட்டத் பார்பதற்கும் கேள்விகளைக் (Query) கேட்டு மறுமொழிகள் பெறவும் உதவுகின்றன. ஆக்எடிற்றர் ஆக்வியூவின் எல்லாப் பிரயோகங்களையும் (பயன் முறைகளையும்) கொண்டுள்ளது. இதில் மேம்படுத்தப் பட்ட கருவிகளூடாக ஷேப் கோப்புக்களையும் (Shape Files) மற்றும் நிலவுருண்டையின் தகவல் கிடங்குகளைப் (ஜியோடேற்றாபேசஸ்களையும் (GeoDatabases)) பயன்படுத்தும் வசதி கொண்டது. ஆர்கின்போ ஆர்க்ஜிஐஎஸ்ஸின் மிகவும் கூடுதலான வசதிகளைக் கொண்ட மென்பொருளாகும். இதில் தரவுகளைப் பகுப்பாய்வு செய்தல், தரவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துதல் போன்ற வசதிகள் உண்டு. வழங்கி (சேவர்) முறையிலான ஆர்க்ஜிஐஎஸ் தயாரிப்புக்களும் உள்ளங்கைக் கணினிகளில் பாவிக்ககூடிய ஆர்க்ஜிஐஎஸ் மென்பொருட்களும் உண்டு. பெப்ரவரி 2007 இன்படி மிகவும் அண்மைய பதிப்பு ஆர்க்ஜிஐஎஸ் 9.2 ஆகும். இதன் 9.2 பதிப்பின் பீட்டவானது (beta) வெளிவிடப்பட்டு சோதனைகள் முடிவடைந்து 9.2 இன் இறுதிப்பதிப்பானது 2006ஆம் ஆண்டில் இறுதியில் வெளிவிடப்பட்டது. இது பல புதிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக நேரடியாகவே ஆள்கூறொன்றைத் தந்தால் அந்தவிடத்திற்குச் செல்லும் வசதி. கூகிள் ஏர்த் மென்பொருட்களுடான போட்டிகளே இப்புதிய வசதிகளை அறிமுகப்படுத்தக் காரணம் என நம்பப்படுகின்றது. இன்று ESRI நிறுவனத்தார் வெளிவிடுகின்றன மென்பொருட்களே உலகின் புவியியற் தகவற் தொழில் நுட்பத்தில் முன்னணி வகிக்கின்றன. ஆய்வுகளின் படி புவியியற் தகவற் தொழில் நுட்ப ஆய்வுகளில் ஈடுபடுபவர்களில் உலகில் 77% பயனர்கள் ESRI மென்பொருட்களைப் பயன்படுத்துகின்றனர் பொதுவாக விண்டோஸ் இயங்குதளத்தில் நியம அலகு மொழியாகத் தமிழ் அல்லது ஏனைய இந்திய மொழிகளுடன் ஆர்க்ஜிஐஎஸ் சரிவர இயங்காது.இதைச் சரிசெய்வதற்கு ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் . ஆனால் இவ்வழுவானது தமிழையோ ஏனைய இந்திய மொழிகளைகளையோ தனது தேசப்படங்களில் ஆதரிக்காது என்பதல்ல. இவை யாவும் ஒருங்குறியூடாக இலகுவாக ஆதரிக்கப்படும். இவ்வசதியானது ஆர்க்வியூவில் இல்லை என்பதனையும் கவனிக்க. பெப்ரவரி 6 பெப்ரவரி 8 நா. சண்முகதாசன் நா. சண்முகதாசன் ("N. Shanmugathasan") என அழைக்கப்படும் நாகலிங்கம் சண்முகதாசன் (1920 – 8 பெப்ரவரி 1993) இலங்கைத் தொழிற்சங்கத் தலைவரும், மாவோயிச இடதுசாரி அரசியல்வாதியும் ஆவார். இலங்கை கம்யூனிஸ்டுக் கட்சியின் தொடக்ககால பொதுச் செயலாளராகப் பதவியில் இருந்தவர். சண்முகதாசன் யாழ்ப்பானத்தின் மானிப்பாயைச் சேர்ந்தவர். 1938 ஆம் ஆண்டில் கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் இணைந்து வரலாற்றுத் துறையில் கல்வி கற்கும் போது பொதுவுடைமைக் கொள்கையாளர்களுடன் தொடர்புகள் ஏற்பட்டது. கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் கல்வி பெர்ஶ்றுத் திரும்பிய பிரித்தானியக் கம்யூனிஸ்டுக் கட்சித் தோழர்களுடன் தொடர்புகளைப் பேணினார். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகத் துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டமைக்காகக் கல்லூரியில் இருந்து விலக்கப்பப்பு, மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 1940 இல் பல்கலைக்க்ழக மாணவர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளரானார். 1941 இல் மாணவர் ஒன்றியத்தின் தலைவரானார். பிரித்தானிய ஆதிக்கவாதிகளுக்கும், லங்கா சமசமாஜக் கட்சியின் துரொட்ஸ்கியவாதிகளுக்கும் எதிராக பொதுவுடைமைக் கருத்தில் பற்றுக் கொண்ட மாணவர்களை ஒன்று திரட்டினார். 1943 இல் பல்கலைக்கழகக் கல்வியை முடித்துக் கொண்டு தொழிற் சங்க இயக்கத்திலிணைந்து இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர அங்கத்தவரானார். கட்சி சீன சார்பு - சோவியத் சார்பு என்று பிரிந்ததைத் தொடர்ந்து 1964 இல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பீக்கிங் அணியின் பொதுச் செயலாளரானார். அக்கட்சி சார்பில் 1965 இல் பொதுத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். மக்கள் விடுதலை முன்னணியின் புரட்சியைத் தொடர்ந்து 1971 இல் சண்முகதாசன் கைதாகி ஓராண்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். சிறையிலிருந்த காலத்தில் "ஒரு மார்க்சியவாதியின் பார்வையில் இலங்கை வரலாறு" ("A Marxist looks at the History of Ceylon" என்ற நூலை எழுதினார். சிறீ மகாபோதி சிறீ மகாபோதி ("Sri Maha Bodhi") என்பது இலங்கையின் முதல் தலைநகரமான அனுராதபுரத்தில் உள்ள புனித வெள்ளரசு மரம் ஆகும். புத்தர் இருந்து ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையில் இருந்து வளர்க்கப்பட்டதே இது என்று கூறப்படுகிறது. இது கிமு 288 ஆம் ஆண்டில் நடப்பட்டதாக இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகின்றன. மனிதனால் நடப்பட்டதும், அவ்வாறு நடப்பட்ட காலம் அறியப்பட்டதுமான, மரங்களில், உலகிலேயே மிகப் பழமையான மரம் இதுவே எனச் சொல்லப்படுகிறது. இது நில மட்டத்திலிருந்து 6.5 மீட்டர் உயரமான சமதரையில் நடப்பட்டுள்ளது. சுற்றிலும் பாதுகாப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பௌத்தர்களினால் மிகப் புனிதமாக மதிக்கப்படும் பௌத்த சின்னம் இதுவே என்பதுடன் உலகம் முழுவதிலும் உள்ள பௌத்தர்களாலும் இது பெரிதும் மதிக்கப்படுகின்றது. இதைச் சுற்றியுள்ள சுவர், கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் என்னும் அரசன் காலத்தில், இம் மரத்தைக் காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காகக் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளை கிமு மூன்றாம் நூற்றாண்டில், அசோகப் பேரரசரின் மகளும், பௌத்த பிக்குணியும் ஆன சங்கமித்தை என்பவரால் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த மகாபோதி மரம், அனுராதபுரத்திலிருந்த மகாமேகவண்ண பூங்காவில் இலங்கை அரசன் தேவநம்பியதீசன் என்பவனால் நடப்பட்டது. ருவான்வெலிசாய நாற்பது வருடகாலம் அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட தமிழ் மன்னனான எல்லாளனைப் போரில் வென்று, இலங்கை முழுவதற்கும் அரசனானான் துட்டகைமுனு. இவனால் அமைக்கப்பட்டதே ருவான்வெலிசாய எனப்படும் பெரிய தாது கோபுரம் ஆகும். இது உலகம் முழுவதிலும் உள்ள பௌத்தர்களுக்கு மிகவும் புனிதமானதாக விளங்குகிறது. அக்காலக் கட்டுமானப் பொறியியலில் இது ஒரு குறிப்பிடத்தக்க கட்டிடம் ஆகும். இது, மகாதூப, சுவர்ணமாலி சைத்திய, ரத்னமாலி தாகபா போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது. பண்டைய அனுராதபுரத்தின், "சொலொஸ்மஸ்தானங்கள்" எனப்படும் 16 வணக்கத்துக்கு உரிய இடங்களுள்ளும், "அட்டமஸ்தானங்கள்" எனப்படும் 8 வணக்கத்துக்கு உரிய இடங்களுள்ளும் இது ஒன்றாக விளங்குகிறது. 300 அடி உயரமும், 950 அடி சுற்றளவும் கொண்ட இக் கட்டுமானம், உலகின் மிக உயரமான கட்டுமானச் சின்னங்களுள் ஒன்றாகும். கிராம புத்துணர்வு இயக்கம் கிராம புத்துணர்வு இயக்கம் இந்தியாவின் தமிழ்நாட்டில் கிராமங்களில் உணவு உற்பத்தி, மருத்துவம், கல்வி, விளையாட்டு போன்ற துரைகளை மேம்படுத்தி பூரணமான ஆரோக்கியமான கிராமிய வாழ்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்ட திட்டமாகும். ஈசா அறக்கட்டளை, சமூக சிந்தனையுள்ள தன்னார்வ தொண்டர்களுடன் இணைந்து இத்திட்டத்தை வடிவமைத்துள்ளது. இத்திட்டம் ஆகஸ்ட் 2003 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வாழ்ந்த எண்ணற்ற யோகிகள் மற்றும் ஞானிகளின் ஞானவெளிப்பாட்டால் உருவான தனிச்சிறப்புமிக்க கலாச்சாரத்தை கிராம மக்கள் வாழ்வில் மீண்டும் நடைமுறைக்கு எடுத்துவருவதை நோக்கமாக கொண்ட இத்திட்டத்தை செயல்படுத்த, கீழ்கண்ட அம்சங்களை கொண்ட செயல்திட்டங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. அவைகள்: இலவச நடமாடும் மருத்துவமனைகள் உரிய நேரத்தில், இலவசமாக மருத்துவ வசதி செய்து தருவதோடு, அது குறித்த விழிப்புணர்வையும், வழிபாட்டுதலையும் ஏற்படுத்துகிறது. நாட்டு வைத்தியங்கள் மற்றும் பாரம்பரிய சிகிச்சை முறைகள் மீண்டும் அறிமுகப்படுத்தும் வகையில், உரிய காலத்தில் கிடைக்கக் கூடியதும், சிக்கனமானதுமான மூலிகைத் தோட்டங்களை அமைப்பது குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் அறிவுறுத்தப்படுகின்றன. மேலும் ஆயர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் அலோபதி மருத்துவங்களில் தேர்ச்சிபெற்ற மருத்துவர்கள், இலவச நடமாடும் மருத்துவமனைகள் மூலமாக கிராமங்களில் அடிப்படை ஆரோக்கிய வழிமுறைகளையும், இலவச மருத்துவ சேவைகளையும், இலவச மருந்துகளையும் வழங்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி இலவச யோகப்பயிற்சியும் கிராமப்புற மக்களுக்கு வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கான யோகப்பயிற்சிகளும், கம்ப்யூட்டர் பயிற்சிகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஆண்களுக்கு வலைப்பந்து , பெண்களுக்கு துரோபால் போன்ற விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது. வருடத்திற்கு ஒரு முறை கிராம மக்களுக்கான" கிராம ஒலிம்பிக் போட்டி"களும் நடத்தப்படுகின்றது. விவசாயிகளுக்கு விவசாய கருத்தரங்குகள், விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் விவசாய கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. நாட்டை பசுமையாக்கும் நோக்குடன் ஒவ்வோரு கிராமத்திலும் மரக்கன்றுகள் நடப்படுவது ஊக்குவிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் முலம், கிராம மக்கள் ஓர் ஆரோக்கியமான வாழ்வை பெற வாய்ப்பாக இருக்கிறது. மேலும், அடிப்படைக் கல்வி, சமூக விழிப்புணர்வை ஒரளவுக்கு பெறுகின்றனர். இதனால், நம்பிக்கையற்ற பொருளாதார மற்றும் சமூகச் சூழலில் கிக்குண்ட கிராம மக்களின் வாழ்வில் ஒரு புத்துணர்வு ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முழுமையான வெற்றி இன்னும் சில காலம் சென்ற பின்னரே நுகரப்படும். இத்திட்டதை செயல்படுத்த தேவையான நிதிவுதவி, அந்தந்த பகுதிகளில் இருக்கும் நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்படுகிறது. மேலும் சமூக சிந்தனையுள்ள தன்னார்வ தொண்டர்கள் மற்றும் கிராம மக்கள் ஆகியோர்களின் உதவியோடு நடைமுறைப்படுத்தப் படுகிறது. இத்திட்டத்தின் முதற்பகுதியாக, கோபி, கோவை, சேலம், ஈரோடு மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் துவக்கப்பட்டுள்ளது. படிப்படியாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் உள்ள கிராமங்களில், இத்திட்டம் நடைமுறைப்படுத்த இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த இலக்கு எட்டப்பட்டவுடன், இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட உள்ளது. இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் உள்ள கிராமங்களில் இந்த இலக்கு எட்டப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இறுதியில், ஒரு ஆரோக்கியமான, புத்துணர்வான இந்தியாவை உருவாக்கம் நோக்கோடு இத்திட்டம் அனுகப்படுகிறது. பெப்ரவரி 9 பெப்ரவரி 10 தூபாராமய தூபாராமய என்பது, இலங்கையின் பண்டைக்காலத் தலைநகரமான அனுராதபுரத்தில் உள்ள பௌத்தக் கட்டிடம் ஆகும். அசோகப் பேரரசரின் மகனும் பௌத்த துறவியுமான மஹிந்த தேரர் இலங்கையில் தேரவாத புத்த சமயத்தையும், அது சார்ந்த சைத்திய வணக்கத்தையும் அறிமுகப்படுத்தினார். இவருடைய வேண்டுகோளின்படி இலங்கை அரசனான தேவாநாம்பியதிஸ்ஸவால் கட்டப்பட்டதே தூபாராமய என்னும் இந்தத் தாதுகோபுரம். இதனுள் கௌதம புத்தரின் எலும்பு எச்சம் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இலங்கையில் புத்த சமயம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கட்டப்பட்ட முதல் தாதுகோபுரம் இதுவே எனக் கருதப்படுகின்றது. தொடக்கத்தில் இது நெற்குவியலின் வடிவில் கட்டப்பட்டது. காலத்துக்குக் காலம் அழிவுக்கு உட்பட்டது. இலங்கை அரசனான இரண்டாம் அக்கபோதி காலத்தில் முற்றாகவே அழிவுக்கு உள்ளான இதை அரசன் திருத்தி அமைத்தான். இன்று காணப்படும் தூபாராமய, கி.பி 1862 ஆம் ஆண்டின் மீளமைப்புக் கட்டுமானம் ஆகும். இவ்வாறு காலத்துக்குக் காலம் நடைபெற்ற மீளமைப்புக் கட்டுமானங்களின் முடிவில், இன்று இருக்கும் தாதுகோபுரத்தின் அடிப் பகுதியின் விட்டம் 18 மீட்டர் (59 அடி) ஆகும். உயரம், 3.45 மீட்டர் (11 அடி 4 அங்குலம்). இது 50.1 மீட்டர் (164 அடி 6 அங்குலம்) விட்டம் கொண்ட வட்ட வடிவமான மேடையொன்றின் மையத்தில் அமைந்துள்ளது. நிலத்திலிருந்து மேடைக்குச் செல்ல நாற்புறமும் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மேடையில் தாதுகோபுரத்தைச் சுற்றி இரண்டு வட்ட வடிவ வரிசைகளில் கல் தூண்கள் காணப்படுகின்றன. இத் தூண்கள், பழைய காலத்தில், தாதுகோபுரத்தை மூடிக் கூரையோடு கூடிய கட்டிடம் இருந்ததற்கான சான்று ஆகும். மரத்தாலான இக் கூரை காலப்போக்கில் அழிந்து விட்டதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அக்டோபர் 23 அபயகிரி விகாரை கிமு 2 நூற்றாண்டுகள் முதல், கி.பி 9 ஆம் நூற்றாண்டு வரை இலங்கையின் தலை நகரமாக இருந்த அனுராதபுரம், ஒரு அரசியல் தலைமை இடமாக விளங்கியது மட்டுமன்றிப் பல பௌத்த சமய வணக்கத் தலங்களையும், பௌத்த பிக்குகளுக்கான மடங்களையும் கொண்டிருந்தது. பௌத்த மக்களின் முக்கிய யாத்திரைக்கு உரிய இடமாக விளங்கிய அனுராதபுரம் நகரத்தின் வடக்குப் பகுதியில், உயர்ந்த மதில்களால் சூழப்பட்டு, நீராடுவதற்கான குளங்களையும், அலங்கார வேலைப்பாடுகளைக் கொண்ட அழகிய கட்டிடங்களையும், கொண்ட அபயகிரி விகாரை அமைந்திருந்தது. அனுராதபுரத்திலிருந்த, அவ்வாறான 17 சமய நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிய அபயகிரி விகாரை, அவற்றுள் முக்கியமான ஐந்து விகாரைகளுள் மிகப் பெரியது ஆகும். அபயகிரி விகாரை, பௌத்த துறவிமடக் கட்டிடத் தொகுதியாக விளங்கியது மட்டும் அன்றிப் பௌத்த துறவிகளின் சங்கமாகவும் தொழிற்பட்டது. இது, இலங்கையின், வரலாறு, பாரம்பரியம், வாழ்க்கை முறை முதலானவை தொடர்பான தகவல்களைப் பதிந்து பாதுகாத்தது. கி.மு இரண்டாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இது, கி.பி முதலாம் நூற்றாண்டில், உலகின் பல பகுதிகளையும் சேர்ந்த, பௌத்த அறிஞர்களைக் கவரும் அனைத்துலக நிறுவனம் ஆனது. கிளை நிறுவனங்களூடாக நடைபெற்ற இதன் செயற்பாடுகளின் தாக்கத்தை உலகின் பல பகுதிகளிலும் காண முடியும். கே. வி. எஸ். வாஸ் கே. வி. எஸ். வாஸ் (1912 - ஓகஸ்ட் 30, 1988) இலங்கையின் தலைசிறந்த பத்திரிகையாளராக, எழுத்தாளராக விளங்கியவர். கும்பகோணம் வேதாந்தம் சீனிவாச ஐயங்கார் என்ற இயற்பெயர் கொண்ட கே. வி. எஸ். வாஸ் தமிழ், ஆங்கிலம், சமக்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை கொண்டவர். திருச்சி புனித யோசப்பு கல்லூரியில் கல்வி கற்றுப் பின்னர் பொருளாதாரத்தில் முதுமாணிப் பட்டம் பெற்றார். 15 வயதிலேயே இவரது கத்திச் சங்கம் என்ற சிறுகதை சுதேசமித்திரன் பத்திரிகையில் வெளிவந்தது. "பாப்புலர் மேகசீன்" ("Popular Magazine") என்ற இதழையும் நடத்தினார். 1930 ஆம் ஆண்டில் சுப்பிரமணியம் செட்டியாரால் ஆரம்பிக்கப்பட்ட வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தில் மொழிபெயர்ப்பாளராக இணைந்து 1942 ஆம் ஆண்டில் இலங்கை வந்தார். அவரது அயராத உழைப்பினாலும் எழுத்துத் திறமையினாலும் வீரகேசரி பத்திரிகையின் நிருபராக, உதவி ஆசிரியராக, ஆசிரியராக, பின் 1953 ஆம் ஆண்டில் பிரதம ஆசிரியராகப் படிப்படியாகப் பதவி உயர்வு பெற்றார். அரசியல் தலைவர்கள், தொழிற்சங்க வாதிகள், மற்றும் சமூகப் பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணினார். வீரகேசரி பத்திரிகையில் குந்தளப் பிரேமா (1951), நந்தினி, தாரிணி, பத்மினி, ஆஷா, சிவந்தி மலைச்சாரலிலே, அஞ்சாதே அஞ்சுகமே போன்ற பல துப்பறியும் புதினத் தொடர்களை ரஜனி, வால்மீகி ஆகிய புனைபெயர்களில் எழுதினார். பல ஆன்மீகக் கதைகளும் எழுதினார். இவரது தொடர்கதைகள் பல அக்காலத்திலே வீரகேசரி பிரசுரங்களாக வெளிவந்தன. "ஈழத்தின் கதை" என்ற பெயரில் இலங்கையின் வரலாற்றை ஆனந்த விகடனில் தொடராக எழுதினார். இத்தொடரை 2008 ஆம் ஆண்டில் அவரது மகன் கே. வி. எஸ். மோகன் (கதம்பம் மோகன்) நூலாக வெளியிட்டார். சென்னை த இந்து பத்திரிகைக்கும் மலேசியாவின் தமிழ் நேசன் பத்திரிகைக்கும் 32 ஆண்டுகாலம் இலங்கை நிருபராகப் பணியாற்றினார். கல்கி வார இதழில் "இலங்கைக் கடிதம்" என்ற தலைப்பில் வாராந்தம் இலங்கைச் செய்திகளை வெளியிட்டார். 1975 ஆம் ஆண்டில் வாஸ் பத்திரிகை ஆசிரியர் தொழிலில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் அவர் தொடர்ந்து 1988இல் இறக்கும்வரை பத்திரிகைகளில் எழுதி வந்தார். ஜேதவனாராமய ஜேதவனாராமய என்பது, இலங்கையின் பண்டைய தலை நகரமான அனுராதபுரத்தில் இருக்கும் ஒரு தாது கோபுரம் ஆகும். இது மகாசென் (கி.பி 273-301) என்னும் இலங்கை மன்னனால் கட்டப்பட்டது. கட்டப்பட்டபோது 122 மீட்டர் (400 அடி) உயரம் இருந்திருக்கும் எனக் கருதப்படுகிறது. இதன் அடிப்பகுதியின் விட்டம் 113 மீட்டர் (370 அடி) ஆகும். இத் தூபி, உலகிலேயே மிகப் பெரிய தாதுகோபுரமும், உலகின் இரண்டாவது பெரிய கட்டுமானச் சின்னமும் (monument) ஆகும். எகிப்தில் உள்ள மிகப் பெரிய பிரமிட் மட்டுமே இதனிலும் பெரியது எனக் கருதப்படுகின்றது. இதன் மையப்பகுதி ஒரு பிரம்மாண்டமான மண் குன்று ஆகும். வெளிப்பகுதி செங்கற் கட்டினால் மூடப்பட்டுள்ளது. கி.பி மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தத் தாதுகோபுரம், "சாகலிக்க" எனப்படும் புத்த சமயப் பிரிவைச் சேர்ந்தது. இது அமைந்திருக்கும் நிலத்தின் பரப்பளவு எட்டு ஏக்கர்கள் ஆகும். இதனோடு அமைந்த விகாரை அல்லது விகாரம், 3000 க்கு மேற்பட்ட பௌத்த பிக்குகளுக்கு இடமளித்ததாகக் கூறப்படுகின்றது. ஜே. பி. சந்திரபாபு சந்திரபாபு (J.P.Chandrababu) (ஆகத்து 5, 1927 – மார்ச் 8, 1974) தமிழ்த் திரையுலகின் தலை சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகவும் சிறந்த பாடகராகவும் விளங்கியவர். சந்திரபாபு தூத்துக்குடியில் கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தவர். ஜோசப் பிச்சை என்னும் பெயரிடப்பட்ட இவரை பாபு என்று செல்லமாக அழைத்து வந்தனர். பின்னாளில், சந்திரகுல வம்சத்தில் பிறந்தவர் என்று தமது பெயரைச் சந்திரபாபு என இவர் மாற்றிக் கொண்டார். சந்திரபாபுவின் தந்தை ஒரு விடுதலைப் போராட்ட வீரர். "சுதந்திர வீரன்" என்ற பத்திரிகையை நடத்தி வந்தார். அன்றைய பிரித்தானிய அரசு இவரது சொத்துக்களை பறிமுதல் செய்து, சத்தியாக்கிரக இயக்கத்தில் கலந்து கொண்டமைக்காக 1929 இல் அவரைக் கைது செய்தது. அவர் விடுதலையானவுடன் அவரையும் அவரது குடும்பத்தினரையும் இலங்கைக்கு நாடு கடத்தியது. அங்கு அவர் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் பணியாற்றினார். சந்திரபாபு கொழும்பில் புனித யோசேப்பு கல்லூரியிலும், பின்னர் கொழும்பு அக்குவைனாசு கல்லூரியிலும் கல்வி கற்றார். சந்திரபாபுவின் குடும்பம் 1943 ஆம் ஆண்டில் இந்தியா திரும்பி சென்னையில் குடியேறியது. சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்து வந்தனர். தந்தை தினமணி பத்திரிகையில் பணியாற்றினார். சிறு வயதிலேயே பாடும் திறமை பெற்றிருந்த சந்திரபாபு, ஆங்கிலேயரின் நவநாகரிகப் போக்கினால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தமது 16ஆம் வயதில் சென்னையை அடைந்து திரையுலகில் நுழைய முயற்சிகளை மேற்கொண்டார். ஒரு படத்தளத்தின் உள்ளே சென்று வாய்ப்புத் தேட அனுமதிக்கப்படாததால், தற்கொலைக்கும் முயன்றவர். நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்ட சந்திரபாபு, நீதிபதியின் முன்னால் ஒரு தீக்குச்சி கொண்டு தமது கையைச் சுட்டுக் கொண்டு கூறினார்: "உங்களுக்கு நான் சுட்டுக் கொண்டதுதான் தெரியும்; என் காயத்தை உங்களால் உணர முடியாது. அதுபோலத்தான் என் துயரும்." 1947ஆம் ஆண்டு தன அமராவதி என்னும் திரைப்படம் மூலமாக திரையுலகில் அடியெடுத்து வைத்த சந்திரபாபு விரைவிலேயே முன்னணி நகைச்சுவை நடிகரானார். 1950களில் பெரும் நட்சத்திரங்களாக உருவாகிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அனைவரது திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். சபாஷ் மீனா என்னும் வெற்றிப் படத்தில் இரு வேடம் தாங்கி நடித்த இவருக்கு அவற்றில் ஒரு வேடத்தில் சரோஜாதேவி இணையாக நடித்திருந்தார். அதன் கதாநாயகனான சிவாஜி கணேசனின் ஜோடியாக மாலினி நடித்திருந்தார். இதைப் போலவே புதையல் திரைப்படத்தில், கதாநாயகன் சிவாஜி கணேசனுக்கு ஈடாக, கதாநாயகி பத்மினியைக் காதலித்து ஏமாற்றமுறும் பாத்திரம் ஒன்றில் திறம்பட நடித்திருந்தார். தற்போது சென்னைத் தமிழ் எனவும், அன்றைய நாளில் மெட்றாஸ் பாஷை எனவும் வழங்கிய வட்டார வழக்கைச் சிறப்பாகக் கையாளுவதில் அவர் பெயர் பெற்றிருந்தார். தமது நடிப்பிற்காகவும், பாடல் திறமைக்காகவும் பிரத்தியேகமான ரசிகர் குழாமைக் கொண்டிருந்தார். நகைச்சுவை நடிகரான சந்திரபாபுவின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இல்லை. அவர் மணந்த பெண் தான் வேறொருவரை விரும்புவதாகக் கூறியதால், அந்த பெண்ணின் விருப்பப்படியே அவர் விரும்பும் நபருடன் சந்தோசமாக வாழ, அவரை மரியாதையுடன் அனுப்பி வைத்தவர் சந்திரபாபு. (இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்தே “அந்த 7 நாட்கள்” படத்தின் திரைக்கதையை அமைத்ததாக பின்னாளில் நடிகரும், இயக்குனருமான பாக்கியராஜ் தெரிவித்தார்.) சர்ச்சைகளும் சக நடிகர்களுடனான சச்சரவுகளும் சந்திரபாபுவைச் சூழ்ந்தே இருந்தன. கவலை இல்லாத மனிதன் மற்றும் குமார ராஜா என்னும் இரு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்ததும் இனி நகைச்சுவை நடிகராகப் போவதில்லை என்று அறிவித்தார். ஆயினும், அவை இரண்டுமே வர்த்தக ரீதியாக வெற்றி பெறாததால், மீண்டும் போலீஸ்காரன் மகள் போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை வேடமேற்கத் துவங்கினார். அவர் தாமே கதாநாயகனாக நடித்து, தயாரித்து இயக்கிய தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் திரைப்படத்தின் படுதோல்வியுடன் அவரது திரை வாழ்க்கை அநேகமாக இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது என்றே கூறலாம். 1960களில் நாகேஷ் பின்னர் சோ ஆகியோர் நகைச்சுவை நடிகர்களாக முன்னேறத் துவங்கியதும், சந்திரபாபுவின் திரையுலக வாழ்வில் தேக்கம் உண்டானது. மேலும், அச்சமயம் அவர் மீளாக் குடிக்கும், பெத்தடின் போதைக்கும் அடிமையாகி இருந்தார். இருப்பினும், அடிமைப்பெண், ராஜா, கண்ணன் என் காதலன் (இதில் சோவும் உடன் நடித்தார்) போன்ற ஒரு சில படங்களிலும் நடித்தார். 1975 ஆம் ஆண்டு வெளிவந்த 'பிள்ளைச் செல்வம்' (1974) என்னும் திரைப்படமே இவரது கடைசிப் படமாகும். அது வெளிவருவதற்கு முன்பாகவே 1974ஆம் ஆண்டு இவர் மரணமடைந்தார். [Source: http://www.lakshmansruthi.com/cineprofiles/chandrababu-01.asp] சந்திரபாபுவின் வாழ்க்கை பற்றிய புத்தகம் ஒன்று, "கண்ணீரும் புன்னகையும்" என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது. பலங்களும், பலவீனங்களும் கலந்த மனிதரான சந்திரபாபு திரையுலகம் மறக்க இயாலாத திறமையாளர்களில் ஒருவர். சந்திரபாபு கத்தோலிக்க கிறிஸ்தவர் என்பதால் மாதாவின் மீது அதிக பக்தி கொண்டவர். 20-ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் உலகம் முழுவதும் பாத்திமா மாதாவின் புகழ் பரவிக்கொண்டிருந்த சமயம்.. சந்திரபாபுவும் பாத்திமா மாதாவின்மீது அதிக பற்றுகொண்டவராக இருந்தார்.. அந்த சமயத்தில் பாத்திமா மாதாவின் பெயரால் இந்தியாவில் ஒரு பெரிய தேவாலயம் கட்டும் முயற்சி தென்னிந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களும் சங்கமிக்கும் பகுதியான கிருஷ்ணகிரியில் ( 1958 ) மேற்கொள்ளப்பட்டது.. இந்த தேவாலயம் கட்டுவதற்காக கலைநிகழ்ச்சிகள் நடத்தி பெரும் தொகையை திரட்டிக்கொடுத்தார்.. அந்த தொகையைக்கொண்டே இந்த தேவாலயத்திற்கான அஸ்திவாரப்பணிகள் துவங்கியது.. இதைக்குறிக்கும் வகையில் தூய பாத்திமா அன்னை தேவாலயத்தில் சந்திரபாபுவின் பெயரில் கல்வெட்டு ஒன்றும் பொறிக்கப்பட்டுள்ளது. = குறிப்பிடத்தக்க பாடல்கள் = சந்திரபாபு மேற்கத்திய பாணிப் பாடல்களைப் பாடுவதில் மிகச் சிறந்து விளங்கினார். அவரது பாடல்கள் பலவற்றிற்கு அவரே ஓரளவு இசையமைத்ததாகவும் கூறுவர். சுமார் அரை நூற்றாண்டு கழிந்த பின்னரும் இன்றளவும் ஒலிக்கும் அவரது சில பாடல்கள்: பம்ப்கின் ஹெட் பம்ப்கின் ஹெட் (pumpkin head) (1989) ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். பேய்ப்படம் கிராமப் பகுதியில் வாழ்ந்து வரும் மகனுக்குத் தந்தையான எட் ஹார்லி (லான்ஸ் ஹென்ரிக்சன்) அப்பகுதியில் பலசரக்குக் கடையொன்றினை வைத்து நடத்துபவராவார்.அவர் பலசமயம் ஒரு பயங்கரமான உருவம் ஒன்றினை அக்கிராமத்தின் காட்டு மறைவுகளிடையே பார்த்துள்ளார் இருப்பினும் அது வெறும் பிரம்மையே என்றும் ஒதுங்குகின்றார்.அச்சமயம் நகரத்தில் இருந்து வரும் இளைஞர்களின் இரு சக்கரவண்டியினால் தவறுதலாக அவர் மகன் கொல்லப்படவே கடுங்கோபம் கொள்ளும் எட் ஹார்லி அக்கிராமத்தில் வாழும் சூனியக்காரியின் மூலம் தான் பார்த்த உருவத்தினை வலுவூட்டச் சொல்கின்றார்.அதன் போலவே அவ்வுருவமும் வலுப்பெற்று அவரின் மகனைக் கொன்றவர்கள் ஒவ்வொருவரையும் பழி வாங்குகின்றது. அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்) அறிந்தும் அறியாமலும் இது 2005ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஆர்யா, பிரகாஷ் ராஜ், நவ்தீப், சமிக்சா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். நாகர்கோவிலில் வசித்துவரும் சத்யா (நவ்தீப்) அங்கு சக மாணவர்களுடனும் சுற்றித்திரியும் வேளையில் அழகிய பெண்ணொருவரைக் காண்கின்றார்.அவள் மீது மனதைக் கொடுக்கும் சத்யா பின்னர் சென்னையில் படிப்பதற்காகவும் வருகின்றார்.அங்கு வரும் இவருக்கு ஆச்சரியம் காரணம் அவர் தனது கிராமத்தில் பார்த்த கனவுக்கன்னியைச் சென்னையில் மிக நாகரீகமான முறையில் காண்கின்றார்.இதனைத் தொடர்ந்து காடையனான குட்டியினால் (ஆர்யா) தவறுதலாக சத்யாவின் மனக்கவர்ந்தவள் சுடப்பட்டு காயமடைகின்றாள்.இதனைப் பார்த்த சத்யா குட்டியைக் காவல் துறையினரிடம் காட்டிக்கொடுக்கின்றான்.இதனைத் தொடர்ந்து குட்டியின் தந்தையான ஆதியின் (பிரகாஷ் ராஜ்) காடையர்களால் தேடப்பட்டுப் பின்னர் குட்டியால் மன்னிக்கப்படுகின்றான் சத்யா.இதனைத் தொடர்ந்து சத்யா தனது சகோதரனெனத் தெரிந்து கொள்ளும் குட்டி பின்னர் அவனைத் தன் தந்தையிடமும் அழைத்துச் செல்கின்றான்.இறுதியில் என்ன நடைபெறுகின்றது என்பது திரைக்கதை முடிவு. சண்டக்கோழி சண்டக்கோழி திரைப்படம் (2005) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.இத்திரைப்படம் தொடர்ந்து 200 நாட்கள் திரையில் காண்பிக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. மசாலாப்படம் பாலு (விஷால்) கல்லூரியில் படிக்கும் மாணவன் பரீட்சை நடைபெறுவதற்கு முந்தைய நாள் பதற்றநிலையிலிருக்கும் மாணவர்களைச் சமாதானப்படுத்தும் மாணவன். பின்னர் அவர்களினால் பாராட்டினையும் பெறுகின்றார் பாலு.பின்னர் தனது நண்பன் வேண்டுகோளுக்கிணைய அவனின் சொந்த ஊருக்குச் செல்லும் பாலு, அங்கு நண்பனின் தங்கையான ஹேமாவுடன் (மீரா ஜாஸ்மின்) காதல் கொள்கின்றார்.மேலும் அவ்வூரில் காசி என்பவனான காடையர்களின் தலைவனைப் பற்றியும் அறிந்து கொள்ளும் பாலு அவனின் கூட்டாளிகளினால் ஒருவன் கொலை செய்யப்படுவதனையும் பார்க்கின்றான்.பின்னர் பாலு தன் சொந்த ஊர் திரும்பும் வழியில் காசி ஒருவனை அரிவாளுடன் வெட்டுவதற்குத் துரத்துகின்றான் அச்சமயம் காசியைத் தடுத்து நிறுத்தும் பாலு, அவன் தான் காசி என்பதனை தெரிந்தபிறகு அவனைத் தாக்கவும் செய்கின்றான்.பின்னர் தனது ஊரான மதுரையையும் வந்தடைகின்றான் பாலு.பாலுவைப் பழிவாங்குவதற்காக அலைந்து திரியும் காசியும் மதுரையை வந்தடைகின்றான்.அங்கு மதுரையில் மிகப்பெரிய செல்வாக்குடைய துரையின் மகனே பாலு என்பதனையும் அறிந்து கொள்கின்றான் காசி. ஒன்றிரண்டு முறை கொல்ல முயற்சித்தும் தோல்வியடையும் காசியிடம், மதுரையில் பாலு குடும்பத்திற்கு எதிரான உறவினர் ஒருவர் தன் உதவியை வழங்குகின்றார். கோவில் திருவிழாவில் துரை தவறுதலாக வெட்டப்படவே, காசி அங்கு பாலுவைக் கொல்ல வந்திருப்பதனைத் தெரிந்து கொள்ளும் பாலுவின் தந்தையும் அவரின் காவலாளிகளும் அவ்வூர் மக்கள் பலரும் சேர்ந்து காசியின் குழுவைத் தேடுகின்றனர்.பின்னர் காசிக்கு அடைக்கலம் கொடுத்திருந்தவனை அறிந்து அவ்விடத்திற்கும் செல்கின்றனர்.அங்கு பாலுவுடன் நேருக்கு நேர் மோதும்படியும் காசிக்கு கூறினார் பாலுவின் தந்தையான துறை.பாலு காசியை வெல்கின்றானா என்பதே கதையின் முடிவு. இசுவாகம் ஸ்வாகம் "(My Own)" (1994) ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள மொழித் திரைப்படமாகும்.இத்திரைப்படம் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் 1994 ஆம் ஆண்டு காண்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இரு குழந்தைகளுக்குத் தாயான அன்னபூர்னாவின் குடும்பம் மிகவும் எளிய குடும்பமாகும்.அண்மையில் இறந்து போன தனது கணவருக்குச் சொந்தமான தேனீர்க்கடையில் வரும் வருமானங்களை வைத்து குடும்பச் செலவுகளை ஏற்கும் தாயாக விளங்குகின்றார் அன்னபூர்னா.இவரின் மகனான கண்ணன் பள்ளியில் கவனம் செலுத்தாதனால் பரீட்சையில் தோல்வியடைகின்றான்.இதன் பின்னரும் படிப்பதற்கு இவனால் முடியாது என்பதனை அறிந்து கொள்ளும் அன்னபூர்னா தன் மகனை இராணுவச் சேர்ப்பிற்காக அனுப்புகின்றாள்.அங்கு வேலை கிடைத்து குடும்பத்தில் புது மலர்வு ஏற்படும் என்று எண்ணிய அவள் இராணுவத்தில் மகனைச் சேர்ப்பதற்காக பெருந்தொகையான பணத்தினை இராணுவத் தலைமை அதிகாரிக்கு வழங்குகின்றாள்.பின்னர் அம்முகாமில் ஏற்பட்ட தகராற்றினால் தன் மகன் கொல்லப்படுவதனைக் கேட்டு அறிந்து பதற்றத்துடன் தன் மகனின் உடலைக் கொண்டு செஞ்சிலுவைச் சங்க வாகனத்தில் கொண்டு வருகின்றாள்.தனது சகோதரனையும் தாயையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றாள் அன்னபூர்னாவின் மகள். 1995 பெர்கமோ திரைப்பட கூட்டம் (இத்தாலி) 1994 கேன்ஸ் திரைப்பட விழா (பிரான்ஸ்) 1995 தேசிய திரைப்பட விருது (இந்தியா) 1995 இன்ஸ்புரூக் திரைப்பட விழா (ஆஸ்திரியா) சிகப்பு ரோஜாக்கள் சிகப்பு ரோஜாக்கள் (Red Roses) (1978) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன்,ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. திகில்படம் வியாபாரத்தில் ஈடுபடுபவனாக இருக்கும் திலீப் (கமல்ஹாசன்)இரவு நேரங்களில் பெண்களைக் கண்டால் மனநோயாளிபோன்றதொரு தோற்றம் பெறுகின்றான்.தனது வேலைத்தளத்திலோ மற்றும் பல இடங்களிலும் தனது மனதிற்குப் பிடித்துப் போகும் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் அவர்களை கொலை செய்வதனையும் பழக்கதோஷமாகக் கொண்டிருந்தான் திலீப்.சிறுவயதில் பெண்ணொருவரால் பாலியல் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகும் திலீப் பின்னர் பெண்களைக் கண்டால் வெறுப்பு ஏற்பட்டு அவர்களைக் கற்பழித்துக் கொலையும் செய்வதனையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றான்.இவ்வாறு செய்யும் காட்சிகளைப் படமாக எடுத்துக் கொண்டும் இருப்பார் இவரின் வளர்ப்புத் தந்தையும் இவனது காவலாளியும்.இப்படியே ஒவ்வொரு பெண்ணாக கற்பழித்துப் பின் கொலை செய்து மண்ணிற்கடியில் மூடுவதுமாகவிருந்த திலீப் சாரதாவைச் (ஸ்ரீதேவி) சேலை விற்கும் கடையில் சந்திக்கின்றான்.அவளை மனதார விரும்பவும் ஆரம்பிக்கின்றான்.இதனை அவளிடம் தெரிவித்து பின்னர் அவளை மணப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன.இதற்கிடையில் திலீப்பின் வீட்டில் தங்கியிருக்கும் சாரதா திலீப் எழுதிவந்த ஒன்றைத் தற்செயலாகக் கண்டெடுக்கின்றாள்.பின்னர் திலீப்பைப் பற்றிய கதையினைக் கேட்டு அறிந்து கொள்ளும் சாரதா திடுக்கிட்டுப் போகின்றாள்.மேலும் மழை பெய்த காரணத்தால் மண்ணிற்கடியில் புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் கைகள் தெரிவதனையும் காண்கின்றாள்.பின்னர் திலீப்பின் வளர்ப்புத் தந்தையும் அவன் காவலாளியும் கற்பழிக்கப்பட்டவர்களினைப் பற்றி திரைப்படம் பார்ப்பதனையும் பார்த்து விடுகின்றாள் சாரதா.அவ்வளவு தான் தாமதம் அங்கிருந்து ஓடியே செல்கின்றாள் இதனை அறிந்து கொள்ளும் திலீப் அவளைத் துரத்திச் செல்கின்றான்.ஆனால் இறுதியில் காவல்துறையினரால் கைதும் செய்யப்படுகின்றான். சிந்து பைரவி (திரைப்படம்) சிந்து பைரவி 1985ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுகாசினி, சிவக்குமார் மற்றும் பலர் நடித்திருந்தனர். கருநாடக இசை மேதையாக விளங்குபவரான சிவக்குமார் தனது கச்சேரிப் பயணத்தில் ஒரு சமயம் சுகாசினியைச் சந்திக்கின்றார். சுகாசினியும் அவருக்குச் சவாலாக கருநாடக இசையினை அனைத்து மக்களுக்கும் சென்றடையும்வகையில் தமிழிலும் பாட வேண்டுகின்றார். ஏனெனில் கருநாடக சங்கீதத்தில் பெரும்பாலும் தெலுங்கு மற்றும் வடமொழியின் தொற்றுதல்கள். இவரின் இக்கூற்றினை கோபத்துடன் நோக்கிய சிவக்குமார் பின்னர் சுகாசினையையே பாடவும் அனுமதிக்கின்றார். அந்த மேடையில் பாடி பலரது கைதட்டுதல்களையும் பெறும் சுகாசினியைக் காதலும் செய்கின்றார் சிவக்குமார். இசையின் மீதான ஆர்வம் சற்றும் இல்லாத தனது மனைவியினை வெறுக்கும் சிவக்குமார் பின்னர் சுகாசினியைக் காதல் கொள்ளவும் தொடங்குகின்றார். இவற்றைத் தெரிந்து கொள்ளும் அவர் மனைவி அவருடன் சேருகின்றாரா என்பதே கதையின் முடிவு. பழைய கற்காலம் பழையகற்காலம் என்பது, மனித தொழில்நுட்ப வளர்ச்சிக் கட்டமான கற்காலத்தின் முதல் பகுதியாகும். இது சுமார் 2,000,000 ஆண்டுகளுக்குமுன், மனித மூதாதையர்களான ஹோமோ ஹபிலிஸ் ("Homo habilis") போன்ற ஹொமினிட்டுகள் (hominids) கற்கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கியதுடன் ஆரம்பமானது. இது, இடைக்கற்காலத்துடன் அல்லது, முன்னதாகவே புதியகற்கால வளர்ச்சி இடம்பெற்ற சில பகுதிகளில், Epipaleolithic உடன் முடிவுற்றது. பொதுவாகப் பழையகற்காலத் தொடக்கத்தில் மக்கள், வேட்டையாடுபவர்களாயும், உணவு சேகரிப்போராயும் இருந்தனர். விடயங்களை விளக்குவதற்கு, முறைசாராத பழங்கதைகளைப் பயன்படுத்தியது, இக்காலத்தில் குறிப்பிடத் தகுந்த சிறப்பியல்புகளுள் ஒன்றாகும். இயல்பான தலைவர்களின் கீழ், தற்காலிகமாக ஒழுங்கமைப்பை உருவாக்குவதேயன்றி நிரந்தரமான தலைமையோ, ஆட்சியோ இருக்கவில்லை. ஆண், பெண்களுக்கு இடையே ஏறத்தாழ சமநிலை நிலவியது. ஆண் வேட்டையில் ஈடுபடப் பெண் உணவு சேகரிப்பதிலும், குழந்தைகளைக் கவனிப்பதிலும் ஈடுபட்டாள். இதற்கு மேலுள்ள வேலைகளை இரு பகுதியினரும் பகிர்ந்து செய்ததாகவே தெரிகிறது. அவர்கள் தாவரங்கள், மூலிகைகள் என்பன பற்றிக் குறிப்பிடத்தக்க அறிவைப் பெற்றிருந்தனர். இதனால் அவர்களுடைய உணவு சுகாதாரமானதாக இருக்க முடிந்தது. அவர்களுடைய தொழினுட்பத் திறனை, அவர்கள் உருவாக்கிய, உடைக்கப்பட்ட கற்களினாலும், தீக்கல்லினாலும் ஆன பயன்பாட்டுப் பொருட்கள் ("artifacts"), மரம், களிமண், விலங்குப் பகுதிகளின் பயன்பாடு, ஆகியவற்றின் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது. அவர்களுடைய கருவிகள் பல்வேறுபட்டவை. கத்திகள், கோடரிகள், சுரண்டிகள், சுத்தியல்கள், ஊசிகள், ஈட்டிகள், தூண்டில்கள், கேடயங்கள், கவசங்கள், அம்பு விற்கள் ஆகியவை இவற்றுள் அடங்கும். இக் காலத்தில் பல்வேறு இடங்களில், பனிக்கட்டி வீடுகள், சிறிய மிதவைகள் போன்றவை பற்றி அறிந்திருந்ததுடன், பாம்புகளின் நஞ்சு, ஐதரோசயனிக் அமிலம் (hydrocyanic acid), அல்கலோயிட்டுகள் போன்ற நச்சுப் பொருட்கள் பற்றியும் அறிந்திருந்ததாகத் தெரியவருகிறது. குளிரில் உறையவைத்தல், காயவைத்தல், மெழுகு, களிமண் ஆகியவற்றைப் பயன்படுத்திக் காற்றுப்புகாது அடைத்தல், போன்ற உணவுகள் கெட்டுப்போகாது காக்கும் முறைகள் பற்றிய அறிவும் அவர்களுக்கு இருந்தது. இவர்கள் விவசாயம்,விவசாயம்,தீ,மட்பாண்டம் மற்றும் உலோகங்களைப் பற்றி அறியவில்லை. அக்காலத்துச் சமயம் சிறப்பாக, மனிதர்களைத் தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கும் செயற்பாடுகளைக் கொண்டது. இவற்றுக்காகத் தாயத்துக்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டதுடன், மந்திர, மாயங்கள் சிறப்பிடம் பெற்றிருந்தன. ஐரோப்பாவில், ஓவியங்கள் பழையகற்காலத்தின் முடிவை அண்டியே (கி.மு 35,000) தோற்றம் பெற்றதாகத் தெரிகிறது. பழையகற்கால மனிதர், ஓவியம் வரைதலிலும், செதுக்குவதிலும் ஈடுபட்டிருந்தனர். விலங்குகளை வரைவதிலும், செதுக்குவதிலும் அவர்களுக்கு இருந்த திறன் குறிப்பிடத்தக்க அளவு உயர்வானதாக இருந்தது. அக்காலச் சமூகத்தில், இக் கலைகள், வேட்டையில் வெற்றியையும், பயிர்கள், பெண்கள் தொடர்பில் வளத்தையும் நோக்கியே பயன்படுத்தப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பழையகற்காலம் பொதுவாக மூன்று துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது: சேது (திரைப்படம்) சேது (1999) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், அபிதா,சிவகுமார் மற்றும் பலர் நடித்திருந்தனர். காதல்படம் கல்லூரியில் காடையர்கள் தலைவனாக இருக்கும் சேது (விக்ரம்) என்ற பட்டத்தையுடைய மாணவர் அங்கு புதிதாகக் கல்வி பயில வரும் மாணவியான அபிதாவைக் காதலிக்கின்றார். அவள் மீதிருந்த காதலை வெளிப்படுத்திப் பலமுறை தெரிவிக்கின்றார். இருப்பினும் அபிதா பயத்துடன் காணப்படுகின்றாள். இதனைப் பார்த்த சேதுவும் அபிதாவைக் கடத்திச் சென்று காதலிக்காவிடில் கொன்றுவிடுவேன் எனவும் மிரட்டுகின்றார். இதன்பின்னர் சேதுவைக் காதலிக்கின்றார் அபிதா. இதற்கிடையில் சேதுவின் எதிரிகளினால் சேது தாக்கப்பட்டு மனநோயாளியாகின்றார். பின்னர் மனநோயாளிகள் காப்பகத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுகின்றார். சேதுவிற்காக ஏங்கியிருக்கும் அபிதாவிற்கு அவர் வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இச்சமயம் மனநோயாளிகள் காப்பகத்திலிருந்த சேதுவிற்கு நோய் சிறிதாகக் குறைந்தது. ஆகவே விழித்துக்கொண்ட சேது இரவோடு இரவாக அக்காப்பகத்திலிருந்து தப்பி ஓடுகின்றான். அபிதாவின் வீட்டை நோக்கி ஓடிச் செல்லும் பொழுது அங்கு அபிதா தற்கொலை செய்து கொண்டிருப்பதைக் கண்டு மனம் நொந்து போகின்றான். 2000 தேசிய திரைப்பட விருது (இந்தியா) அபூர்வ சகோதரர்கள் (1989 திரைப்படம்) அபூர்வ சகோதரர்கள் 1989 ஆம் ஆண்டு வெளி வந்து மாபெறும் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படமாகும். சிங்கீதம் ஸ்ரீநிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமலஹாசன், நாகேஷ், கௌதமி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் 1982-ல் வெளியான சகலகலா வல்லவன் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. கருத்தம்மா (திரைப்படம்) கருத்தம்மா (1994) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜா, மகேஷ்வரி போன்ற பலர் நடித்திருந்தனர். கிராமப்படம் 1995 தேசிய திரைப்பட விருது (இந்தியா) பாடலாசிரியர் - வைரமுத்து மஜ்னு மஜ்னு 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாந்த், ரிங்கி கன்னா, ரகுவரன், நாசர் போன்ற பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தினை லண்டன் நகரில் உள்ள தமிழ்த் தொலைக்காட்சி சேவை நிறுவனமான Cee I TV மூலம் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசிய கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது இலங்கையின் முக்கிய இரு கட்சிகளான இலங்கை சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஆறு தேசிய முக்கியத்துவம் நோக்கிய விடயங்களில் ஒரு பொது இணக்கப்பாட்டுக்கமைய இணைந்து செயற்படுவதாக அக்டோபர் 23, 2006 அன்று ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமாகும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை சுதந்திரக் கட்சியின் சார்பாக அதன் பொதுச்செயலர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக அதன் தவிசாளர் மலிக் சமரவிக்ரமவும் கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் கைச்சாத்திட்டனர். காவடியாட்டம் காவடியாட்டம் என்பது முருக வழிபாட்டுடன் தொடர்புடைய ஒரு ஆட்டம் ஆகும். இந்த ஆட்டத்தில் ஆடுபவர் காவடி எனப்படும் பொருளைத் தோளில் வைத்துக்கொண்டு ஆடுவார். இலங்கையிலும், தமிழ் நாட்டிலும், தமிழர் வாழும் பிற நாடுகளிலும் உள்ள முருகன் கோயில்களில் வழிபாட்டின் ஒரு கூறாகக் காவடியாட்டம் இடம்பெறுகிறது. முருகன் கோவிலுக்குச் சென்று காவடி எடுப்பதாக பக்தர்கள் நேர்த்தி வைப்பது உண்டு. கோவில்களில் காவடி எடுப்பதில் இளவயதினரிலிருந்து பெரியவர் வரையிலான பலரும், பங்கேற்பர். வழிபாட்டின் கூறாகத் தோன்றிய காவடியாட்டம் பிற்காலத்தில் தொழில்முறை ஆட்டமாகவும் வளர்ச்சி பெற்றது. எனினும் வழிபாட்டுத் தொடர்பான காவடியாட்டம் அல்லது காவடியெடுத்தல் இன்னும் பரவலாகப் புழக்கத்தில் இருந்து வருகிறது. தொழில்முறைக் காவடியாட்டம் பொதுவாகக் கரகாட்டத்தின் ஒரு துணை ஆட்டமாக இடம் பெற்று வருகின்றது. கா அடி என்பது காவாகச் சுமக்கப்படும் (முருகப்பெருமானின்) திருவடி. கா என்பது இருபுறமும் தொங்கும் சுமை. "காவடியாட்டம்" என்பது "காவடி", "ஆட்டம்" என்னும் இரு சொற்களின் சேர்க்கையால் உருவானது. காவடி என்பது ஆட்டத்துக்கான கருவி என்பதால், இவ்வாட்டத்தின் பெயர் அதற்கான கருவியின் அடியாக எழுந்தது எனலாம். "காவடி" என்னும் சொல் "காவுதடி" என்பது மருவி உருவானதாகக் கருதப்படுகின்றது. சுமை காவுபவர்கள் இலகுவாகச் சுமப்பதற்காக, ஒரு நீண்ட தடியின் இரு முனைகளிலும் சுமைகளைத் தொங்கவிட்டு அத்தடியின் நடுப்பகுதி தோளில் இருக்குமாறு வைத்துச் சுமந்து செல்வர். காவுவதற்கான தடி என்னும் பொருள்பட இத் தடியைக் காவுதடி என அழைப்பர். காவடியின் தோற்றம் சிந்து சமவெளி காலத்தில் உருவாகியிருக்கலாம் என சான்று கிடைக்கிறது. சிந்துவில் கிடைத்த சித்திர வடிவ எழுத்துகளில் காவடி எடுப்பதை போன்ற தோற்றமும் உள்ளது .அதற்கு கொடுக்கப்பட்ட எழுத்து வடிவங்கள் மற்ற வார்த்தைகளுக்கும் பொருந்தி வருவதால் சிந்து எழுத்து தமிழே என்று "சிந்து வெளியில் முந்து தமிழ் " என்ற நூலில் நா.ப.பூரணச்சந்திர ஜீவா பல்வேறு சான்றுகளுடன் விளக்குகிறார். மேலும் சமயத் தொடர்புள்ள விடயங்களின் தோற்றங்கள் தொடர்பில் கதைகள் இருப்பது போலவே காவடியின் தோற்றம் குறித்தும் கதை ஒன்று உள்ளது. இதன்படி, அகத்திய முனிவரின் வேண்டுகோளுக்கு அமைய சூரபத்மனின் நண்பனும் முருக பக்தனுமான இடும்பன், சிவகிரி, சக்திகிரி என்னும் இரண்டு மலைகளைக் காவுதடியில் சுமந்து கொண்டு பொதிகைமலை நோக்கிச் சென்றானாம். பழநியில் சுமையை இறக்கி வைத்துவிட்டுப் இளைப்பாறிப் பின் மீண்டு தூக்க முயற்சித்தபோது தூக்க முடியவில்லையாம். அப்போது சிறுவனாக உருக்கொண்டு வந்த முருகப் பெருமான் மலைமேல் இருந்து இடும்பனைக் கேலி செய்யவே சிறுவனை நோக்கிப் பாய்ந்த இடும்பன் தவறி மலையில் இருந்து உருண்டு இறந்தான். பின்னர் அவனை உயிர்ப்பித்த முருகன், இடும்பனின் கோரிக்கைக்கு இணங்கி, இடும்பன் அங்கே காவல் தெய்வமாக இருக்கவும், கோயிலுக்கு காவுதடி (காவடி) எடுத்துவரும் பக்தர்களின் குறைகள் தீர்ந்துவிடவும் வரம் அளித்தாராம். அதிலிருந்து, முருக வழிபாட்டில் காவடி எடுத்தல் ஒரு அம்சமாக ஆகியது எனவும், அக்காவடியை கோவிலில் இடும்பன் சந்நிதியில் வைத்த பின்னரே எடுப்பது என்னும் வழக்கம் உருவானது என்றும் கூறப்படுகின்றது. இக் கதையில் இருந்து காவடிக்கும், காவுதடிக்கும் உள்ள தொடர்பு புலப்படுவதையும் கவனிக்கலாம். காவடியாட்டத்திற்குப் பயன்படும் கருவியே காவடி எனப்படுகிறது. இது தொடக்கத்தில் சுமை சுமப்பதற்கான நீளமான ஒரு தடியையே (கோல்) குறித்தது. இதன் தொடர்ச்சியாகவே ஒரு நீளமான தடியின் இரண்டு முனைகளிலும், பால், தேன் அல்லது இளநீர் நிரப்பிய குடங்களைத் தொங்கவிட்டுக் காவடி எடுக்கும் வழக்கம் நிலவுகிறது. பூக்கள், வெட்டிவேர், பட்டுத்துணி, மயிலிறகு போன்றவற்றினால் காவடிகள் அழகூட்டப்படுகின்றன. தற்காலத்துக் காவடிகள் பல கூடிய அழகுணர்ச்சியுடன் உருவாக்கப்படுகின்றன. ஆனாலும் இதன் அடிப்படையான பகுதி ஒரு தடியே. இத் தடியின் இரு முனைகளையும் இணைக்கும் வகையில் மரத்தாலும், மெல்லிய பிரம்புகளினாலும் ஆன ஒரு வளைவான அமைப்பு இருக்கும். இதன் மேல் அழகான குஞ்சங்களுடன் கூடிய பட்டுத்துணி போர்த்தப்பட்டிருக்கும். நான்கு மூலைகளிலும் ஏராளமான மயில் இறகுகளைச் சேர்த்துக் கட்டி அழகூட்டியிருப்பர். வளைவுப் பகுதியின் உச்சியிலும் உயரமான கூம்பு வடிவான அலங்காரக் கூறு அமைந்திருக்கும். எனினும், காவடிகள் வேறுபட்ட அலங்காரங்களுடனும் அமைந்திருப்பது உண்டு. பொதுவான காவடி ஏறத்தாழ 3 அடிகள் அகலம் உள்ளதாக இருக்கும். தோளில் வைக்கும்போது இரண்டு பக்கங்களிலும் சற்றுக் கூடுதலாக இருக்கும்படி இது அமையும். இது 5 கிலோ தொடக்கம் 7 கிலோ வரை நிறை கொண்டதாக இருக்கும். ஆனால், சிறுவர்களும் காவடி எடுப்பது உண்டு ஆகையால் அவர்களுக்காக நிறை குறைவான சிறிய காவடிகளும் உருவாக்கப்படுகின்றன. வழிபாட்டுத் தொடர்பான காவடி எடுத்தலில், குறிப்பாக நேர்த்தி வைத்துக் காவடி எடுத்தலில், தங்களை வருத்திக்கொள்ளும் நடைமுறைகளைக் காண முடியும். சிலர் ஏறத்தாழ ஆறு அங்குல நீளம் கொண்ட வெள்ளி வேல்களை ஒரு கன்னத்திலிருந்து மறு கன்னத்தினூடாக வரும்படி குத்திக்கொண்டும், இன்னொரு சிறிய வேலை நாக்கினூடாகக் குத்தியபடியும் காவடி எடுப்பர் இது "அலகு குத்துதல்" எனப்படும். தவிரத் தூண்டில் போல் வளைந்த வெள்ளி ஊசிகள் பலவற்றை முதுகில் வரிசையாகக் குத்தி அந்த ஊசிகளுடன் இணைக்கப்பட்ட கயிறுகளை இன்னொருவர் பிடித்து இழுத்தபடி இருக்கக் காவடி ஆடுவர். இது "செடில் குத்துதல்" எனப்படுகின்றது. இது தவிர உடலின் பல்வேறு பகுதிகளில் வளைந்த வெள்ளி ஊசிகளைக் குத்தி அவற்றுடன் இணைக்கப்பட்ட கயிறுகளின் மூலம் காவடி எடுப்பவரை, சில்லுகள் பொருத்தப்பட்ட வண்டிகளில் கட்டப்பட்ட உயர்ந்த அமைப்புக்களிலிருந்து தொங்கவிட்டபடி ஊர்வலமாகக் கொண்டு செல்வர். காவடி எடுப்பவர் முகம் கீழிருக்கும்படி படுக்கை நிலையில் தொங்கினால் அது "பறவைக் காவடி" எனப்படும். இருக்கும் நிலையில் தொங்குவது "தூக்குக் காவடி" ஆகும். பறவைக் காவடியிலும், தூக்குக் காவடியிலும் காவடி எடுப்பவர் சுமையைத் தோளில் சுமப்பதில்லை. ஆனால், அவரே காவுதடியில் சுமை போல் சுமக்கப்படுவதைக் காணலாம். காவடியாட்டத்துக்கான பின்னணி இசைக் கருவிகளாக நாதசுரமும், தவிலும் விளங்குகின்றன. நாதசுரத்தில் காவடிச் சிந்து இசையை வாசிக்கக் காவடியாட்டம் ஆடுவது மரபு. தற்காலத்தில் ஆடுவதற்கு ஏற்றதாக அமையக்கூடிய சினிமாப் பாடல்களையும் நாதசுரத்தில் வாசிப்பதைக் காணமுடிகிறது. தொழில்முறைக் காவடியாட்டம், தற்போது தனி நிகழ்ச்சியாக அன்றிக் கரகாட்ட நிகழ்வின் ஒரு பகுதியாகவே இடம்பெற்று வருகிறது. இதில் ஆட்டக்காரர் மேற்சட்டை அணியாமல் முருக பக்தனைப்போல் வேடம் புனைந்து ஆடுவார். தொழில்முறைக் காவடியாட்டத்தில், ஆடுபவர், சுழன்றாடுதல், வளைந்தாடுதல், குனிந்தாடுதல், வில்லாடுதல், கைவிரித்து ஆடுதல், வரவேற்க ஆடுதல் என்னும் ஆறு முறைகளைப் பயன்படுத்தி ஆடுவது வழக்கம். தோளின்மீது காவடியை வைத்து ஆடும் மரபு வழிக்குப் புறம்பாக தொழில்முறைக் காவடியாட்டக் கலைஞர்கள் தமது உடலின் பல்வேறு உறுப்புக்களிலும் காவடியை வைத்து ஆடுகிறார்கள். இதைவிட காவடியுடன் ஏணிமீது ஏறுதல் போன்ற சாகசச் செயல்களையும் செய்து காட்டுகிறார்கள். கைகளைப் பயன்படுத்தாமல் காவடியை ஒரு தோளிலிருந்து இன்னொரு தோளுக்கும், தோளிலிருந்து பின்கழுத்துப் பிடரிக்கும், பிடரியிலிருந்து தலை-உச்சிக்கும் ஏற்றி ஆடவைத்துக் காட்டிப் பின்னர் முறையை இறங்கி ஆடச் செய்து காவடிக் கலைஞர் தம் திறமையை வெளிப்படுத்துவர். இந்த வகையில் காவடி ஒரு விளையாட்டு. பால் காவடி பன்னீர்க் காவடி மச்சக் காவடி சர்ப்பக் காவடி பறவைக் காவடி தூக்குக் காவடி kavadi by கும்பமேளா கும்பமேளா (கிண்ணத் திருவிழா) (Kumbh Mela) இந்து சமயத்தினரால் ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நான்கு இடங்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் அலகாபாத், அரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு ஊர்களில் உள்ள ஆற்றுப்படுகையில் நடைபெறும். திரிவேணி சங்கமம் என்பது கங்கை யமுனை ஆறுகளும் கண்ணுக்கு புலப்படாத சரசுவதி ஆறும் கூடும் இடமாகும். இந்த மூன்று ஆறுகளின் கூடல் அலகாபாத்தில் (பிரயாகை) நடைபெறுகிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளா முழு (பூர்ண)கும்பமேளா எனப்படும். மற்ற இடங்களில் நடைபெறும் கும்பமேளாவை விட இது புகழ்பெற்றது. பன்னிரண்டாவது முழு (பூர்ண)கும்பமேளா அதாவது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளா மகா கும்பமேளா எனப்படும். மகா கும்பமேளாவே உலகில் அதிகளவு மக்கள் ஒன்று கூடும் திருவிழாவாகும். வேத நம்பிக்கைகளின்படி, சாகாவரம் தரக்கூடிய அமிருதம் என்ற பானத்தின் துளிகள் வானில் கடவுள் திருமாலின் வாகனமான கருடன் சுமந்துசென்ற பானையிலிருந்து (கும்பம்)இந்த நான்கு இடங்களில் விழுந்ததாக இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால் அவ்விடங்களில் கும்பமேளா நேரத்தில் நீராடுவது தங்கள் அக,புற அழுக்குகளை நீக்கும் என்றும் நம்புகிறார்கள். கும்பமேளாத் திருவிழா பிரயாக்கில் (அலகாபாத்) மகா மாதத்தில் நடைபெறுகின்றது. அதாவது (ஜனவரி / பெப்ரவரி). பலர் அமாவாசை நாளில் நீராடுவது மிகுந்த பலனை அளிப்பதாக நம்பிக்கையுடன் உள்ளார்கள். வியாழன் கோள் ரிசப இராசியில் உள்ள போது சூரியனும் சந்திரனும் மகர இராசியில் இருக்கின்றது. இவ்வமைப்பே அமாவாசை நாளாகும். ஹரித்வாரில், பால்குன் மற்றும் சைத்ரா ஆகிய மாதங்களில் (பெப்ரவரி / மார்ச் / ஏப்ரல்), சூரியன் மேச இராசியில் செல்லும் பொழுது சந்திரன் தனுசு இராசியிலும் வியாழன் கும்ப இராசியிலும் உள்ள போது கும்பமேளா நடைபெறுகின்றது. உஜ்ஜெயின் பகுதியில் இவ்விழா வைகாசி மாதத்தில் அதாவது மே மாதத்தில் சூரியனையும் சந்திரனையும் தவிர மற்றைய கோள்கள் துலா ராசியில் உள்ள போது சூரியனும் சந்திரனும் மேச இராசியிலும் வியாழன் கோள் சிம்ம இராசியிலும் இருக்கும். நாசிக் பகுதியில் நடைபெறும் கும்பமேளாவானது ஸ்ரவணா மாதத்தில் அதாவது ஜூலையில் சூரியனும் சந்திரனும் கடக ராசியில் உள்ளபோது வியாழன் கோள் விருட்சிக இராசியில் உள்ள பொழுது நிகழும். மேலும் ஒருவகை போதைச்சுவை கொண்ட இனிய பானம் விண்ணுலகு அதாவது சொர்க்கம் என்றழைக்கப்படும் இடத்திலிருந்து பூமியில் விழுகின்றது எனக்கூற்றுகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வேதங்கள் தழைத்தோங்கியிருந்தன. அச்சமயம் ஒற்றுமையுடன் இருந்த தேவர்களும் அசுரர்களும் அமிர்த பானத்தினை க்ஷீர சாகர பாற்கடலில் இருந்து எடுக்க முயற்சிக்கும் பொழுது அமிர்த பானமிருந்த கிண்ணத்தினை அசுரர்கள் களவாடிச் செல்கின்றனர். இவர்களைத் துரத்திச் செல்லும் தேவர்களும் பன்னிரண்டு நாட்களும் பன்னிரண்டு இரவுகளும் (12 ஆண்டுகளுக்குச் சமம்) வானுலகில் போர் செய்தனர். அச்சமயம் வானுலகிலிருந்து அமிர்த பானம் சொட்டிக் பூலோகத்திலிருந்த நான்கு இடங்களில் விழுந்ததெனவும் அதனால் கும்பமேளா ஒவ்வொரு பன்னிரண்டு ஆண்டுகளும் இந்து சமயத்தினரால் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அரை கும்பமேளா கொண்டாடப்படுகின்றது. இது அலகாபாத்திலும் ஹரித்துவாரிலும் மட்டும் நடைபெறும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அலகாபாத்தில் முழு (பூர்ண)கும்பமேளா நடைபெறும். கங்கை, யமுனை மற்றும் கற்பனை நதியான சரஸ்வதி கலக்கும் என்று நம்பப்படுகிற அலகாபாத்தின் திரிவேணி சங்கமத்தில் உடல் முழுவதும் திருநீரு பூசியபடி மலர் மாலை மட்டுமே அணிந்தபடி நாகா சாதுக்கள் எனப்படும் நிர்வாண சாதுக்கள் ஹர ஹர மகாதேவா என்று கூவி மந்திர உச்சாடனங்களைச் செய்தவாறே ஊர்வலமாக வந்து கடும் குளிரிலும் புனித நீராடுவர். 2003 ஆம் ஆண்டில் நாசிக்கில் ஜூலை 27 ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் 7 ஆம் திகதிவரை நடைபெற்ற கும்பமேளாவில் 70 மில்லியன் மக்கள் கலந்து கொண்டனர். மேலும் சன நெரிசல்கள் காரணமாக 28 பெண்களும் 11 ஆண்களும் இறந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கோதாவரி நதிக் கரையில் கூடிய மக்கள் கூட்டம் அங்கு நீராடுவர். ராம்குட் என்னும் இடத்தில் சாதுக்கள் முதலில் நீராட அனுமதிக்கப்படுகின்றனர். சாதுக்கள் பின்னர் ஆற்றில் வெங்கல நாணயங்களை எறியும்பொழுது மக்கள் கூட்டம் அந்நாணயங்களைப் பெற முட்டி மோதுவதும் குறிப்பிடத்தக்கது. சாதுக்களினால் வழங்கப்பட்ட அந்நாணயமானது அரிய சக்திகளை உடையதாக மக்கள் இன்றளவிலும் கருதுவது குறிப்பிடத்தக்கது. ஹரித்துவாரில் மகர சங்கிராந்தி நாளான சனவரி 14 அன்று கும்பமேளா துவங்கியது.குளிர் நடுக்கும் அதிகாலையில் கங்கை ஆற்றின் பிரம்மகுண்ட் என்ற இடத்தில் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து வந்த இந்துக்கள் நீராடினர். 2013 நடைபெற்ற கும்பமேளாவில் பெப்ரவரி 10 ல் (தை அமாவாசை அன்று) சுமார் மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் அங்கு புனித நீராடினர் 1954 ல் நடைபெற்ற கும்பமேளாவில் கட்டுக்கடங்காத மக்கள்கூட்ட நெரிசலில் நூற்றுக்கணக்கான மக்கள் நசுங்கி இறந்தனர். ( : ஆங்கிலத்தில்) 2013 பெப்ரவரி 10 ல் நடைபெற்ற மகாகும்பமேளாவில் அலகாபாத் தொடருந்து நிலையத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 36 பக்தர்கள் பலியாயினர் எறும்பு எறும்பு, குழுவாக வாழும் ஆறுகால்கள் கொண்ட ஒரு பூச்சியினமாகும். இவை வியப்பூட்டும் வகையில் குழு அல்லது குமுக ஒழுக்கம் (சமூக ஒழுக்கம்) கொண்ட வாழ்வைக் கொண்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட குமுகத்தில் (சமூகத்தில்) அல்லது குழுவில் உள்ள எறும்புகள் தமக்கிடையே செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வேதிப்பொருள்களைப் பயன்படுத்துகின்றன (chemical communication). இது நுட்பமானதும் மிகவும் சிக்கலானதும், இலகுவில் புரிந்து கொள்ளப்படாததாகவும் இருக்கிறது. உலகின் எல்லாப் பகுதிகளிலும் எறும்புகள் காணப்பட்டாலும், இவற்றில் பெரும்பாலானவை வெப்ப வலயங்களிலேயே வாழ்கின்றன. பல்வேறுபட்ட தரவுகளின்படி, இத்தரவுகள் தங்களுக்குள் சிறிதளவு மாறுபடினும், எறும்பிலுள்ள இனங்களின் (species) எண்ணிக்கை, 2009 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உயர் எல்லையாக, கிட்டத்தட்ட 22,000 இனங்கள் இருப்பதாக அறியப்படுகிறது. இவ்வாறு மிகக்கூடிய எண்ணிக்கையில் இனங்களை உள்ளடக்கி இருப்பதனால், எறும்புகள் உலகின் விரிவாக உயிர்வாழ்வதில் வெற்றி நாட்டிய உயிரினமாகவும் கருதப்படுகிறது. எறும்புகளின் மிகவும் ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் குமுக வாழ்வு, தமது வாழ்விடத்தைத் தமக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் இயல்பு, தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளும் திறன் போன்றவையே எறும்புகளின் வெற்றிக்கான காரணங்களாகக் கருதப்படுகின்றன. பொதுவாக எறும்புகளைக் காண முடியாத இடம் தென் பனிமுனைப் பகுதியாகும். எறும்புகள் ஏறத்தாழ 110 முதல் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான் தனி வகையான உயிரினமாக உருப்பெற்றன எனக் கருதுகின்றார்கள். நிலவுலகில் பூக்கும் நிலைத்திணை(தாவரம்) தோன்றிப் பரவிய பின்னரே (100-140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்) எறும்புகள் பல்வேறு உள்ளினங்களாக வளர்ச்சி பெற்றன. எறும்புகள், உயிரியல் வகைப்பாட்டில் குளவி, (wasps), தேனீ (bees) போன்ற பூச்சிகளையும் உள்ளடக்கிய "உறையுடைய இறகிகள்" (Hymenoptera) என்ற உயிரினவரிசையில் தொகுக்கப்பட்டுள்ளன. இவ்வரிசையில் இருக்கும் ஏனைய உயிரினங்களிலிருந்து எறும்புகள் தமது தனித்தன்மையான உருவவியல் அமைப்புகளாக வளைந்த உணர்விழை அல்லது உணர்உறுப்பு/உணர்கொம்பு, மற்றும் கணுப் போன்ற மிக ஒடுங்கிய இடுப்பு (node-like slender waist) என்பவற்றைக் கொண்டிருப்பதால் வேறுபட்டு, "ஃவோர்மிசிடீ" (Formicidae) என்னும் குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஒர் எறும்புக் குமுகத்தில் அல்லது சமூகத்தில் உள்ள எறும்புகளின் எண்ணிக்கை மிகவும் வேறுபடக் கூடியது. சில குழுக்கள், மிகக் குறைவான எண்ணிக்கையில் தனியன்களைக் கொண்டிருக்கும். அதேவேளை, சில குழுக்கள் பல மில்லியன் எண்ணிக்கையிலான தனியன்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு குழுவிலும் பொதுவாக ஒன்று அல்லது ஒரு சில இனப்பெருக்கத் திறன் கொண்ட அரசி (queen) என அழைக்கப்படும் பெண் தனியன்களும், இனம்பெருக்கும் திறன் கொண்ட சில ‘சோம்பேறிகள்' (drones) என அழைக்கப்படும் ஆண் தனியன்களும், இனம்பெருக்கும் திறனற்ற பெரும் எண்ணிக்கையிலான 'வேலையாட்கள்' (workers), ‘போராளிகள்' (soldiers) ஆகத் தொழிற்படும் பெண் தனியன்களும் காணப்படும். இவற்றில் வேலையாட்களும், போராளிகளுமான இனம்பெருக்கும் திறனற்ற பெண் எறும்புகளே எந்நேரமும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பனவாகும். அரசியும், சோம்பேறிகளும் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டுச் சந்ததியைப் பெருக்குவதில் மட்டும் பங்கெடுக்கின்றன. ஏனைய பூச்சிகளைப் போலவே எறும்புகளும், உடலுக்கு வெளியான எலும்புக்கூட்டையும் (external skeleton), மூன்று சோடிக் கால்களையும், துண்டங்களாலான உடலையும் (segmented body), தலைப் பகுதியில் எண்ணற்ற நுண்ணிய வில்லைகளால் ஆக்கப்பட்ட இரு கூட்டுக் கண்களையும் (compound eyes), தலையின் முன்பகுதியில் இரு உணர்விழை அல்லது உணருறுப்பு / உணர்கொம்புகளையும் (antennae) கொண்டிருக்கின்றன. வளைந்த உணர்கொம்பைக் கொண்டிருப்பதாலும், இவற்றின் இரண்டாவது வயிற்றுத் துண்டமானது மிகவும் ஒடுங்கி, கணுப் போன்ற இடுப்புப் பகுதியைக் கொண்டிருப்பதாலும் இவை ஏனைய பூச்சிகளிலிருந்து தனித்துப் பிரித்தறியக் கூடியனவாக உள்ளன. சில எறும்பினங்களில் இரண்டாவது, மூன்றாவது வயிற்றுத் துண்டங்கள் இணைந்தே இந்த இடுப்புப் பகுதியை உருவாக்கும். கூட்டுக்கண்கள் விரைவான அசைவுகளை இலகுவாக இனம்காண உதவினாலும், பார்வையின் நுணுக்கம் குறைவாகவே இருக்கும். அத்துடன் இவை ஒளியின் அடர்த்தியையும், ஒளியலைகளின் முனைவாக்கத்தையும் (polarization) அறியவல்ல, மூன்று தனிக் கண்களையும் தலையின் முன்புறத்தில் கொண்டிருக்கும் . முதுகெலும்பி விலங்குகளுடன் ஒப்பிடும்போது இவை மந்தமான, அல்லது இடைத்தரமான பார்வையையே கொண்டிருக்கும். இவற்றில் சில முற்றாக குருடானவையாகவும் இருக்கின்றன. அதே வேளை, அவுஸ்திரேலியாவில் இருக்கும் புல்டாகு (Bulldog) என்றழைக்கப்படும் எறும்பு போன்ற, அதிகரித்த பார்வையைக் கொண்ட சில வகை எறும்புகளும் உள்ளன. தலையின் முன்பகுதியில் இருக்கும் வளைந்த உணர்விழைகள் அல்லது உணர்கொம்புகள் வேதிப் பொருட்கள், காற்று மின்சாரம், மற்றும் அதிர்வுகளை அறிந்துணரக் கூடிய உறுப்பாகும். இவை மேலும் தொடுகை (தொடு உணர்வு) மூலம் சைகைகளை வழங்கவும், பெற்றுக் கொள்ளவும் கூடிய உறுப்பாகவும் உள்ளது. தலையின் முன் பகுதியில் மிகவும் வலுவான 'வாயுறுப்பு' எனப்படும் தாடையைக் கொண்டிருக்கிறது. இந்த வாயுறுப்பானது, உணவை காவிச் (பற்றிச்) செல்லவும், பொருட்களை கையாளவும், கூட்டை அமைக்கவும், தமது பாதுகாப்பிற்கும் பயன்படுகின்றது. சில இனங்களில் இப்பகுதியில் காணப்படும் பை போன்ற அமைப்பானது உணவை சேகரித்து வேறு எறும்புக்கோ, குடம்பிகளுக்கோ வழங்குவதற்காக பயன்படுகின்றது. ஆறு கால்களும் உடலின் நடுப்பகுதியில் இணைந்திருக்கும். கால்களின் நுனிப்பகுதியில் காணப்படும் நகம் போன்ற அமைப்பு மேற்பரப்புகளைப் பற்றிப் பிடிக்கவும், ஏறுவதற்கும் உதவும். பொதுவாக அரசியும், ஆண் எறும்புகளும் இரு சோடி மென்சவ்வாலான சிறகுகளைக் கொண்டிருக்கும். அரசிகள் தமது இனப்பெருக்க பறப்பின்போது தமது சிறகுகளை இழந்துவிடும். இனப்பெருக்க பறப்பு என்பது, இனப்பெருக்கத்திற்காக அரசி எறும்பானது, ஆண் எறும்புகளுடன் புணர்ச்சியை நிகழ்த்த மேலே பறப்பதாகும். புணர்ச்சியின் பின்னர் அவை சிறகுகளை இழந்து, கீழே இறங்கி புதிய ஒரு குழுவை அல்லது சமூகத்தை உருவாக்கத் தயாராகிவிடும். இது போன்ற இனப்பெருக்க பறப்பு தேனீக்களிலும் நடைபெறும். எனினும் சில எறும்பு இனக்களில் சிறகுகளற்ற அரசி, ஆண் எறும்புகளும் இருப்பதைக் காணலாம். எறும்புகளின் வயிற்றுத் துண்டங்களே, அவற்றின் முக்கியமான உள்ளுறுப்புக்களைக் கொண்டிருக்கும். இவ்வுள் உறுப்புக்கள் இனப்பெருக்க, மூச்சு, கழிவுத் தொகுதிகளைக் கொண்டன. பெண் எறும்புகளான வேலையாட்களில், முட்டை இடுவதற்கான உறுப்பானது, கொடுக்கு (sting) எனும் அமைப்பாகத் திரிபடைந்திருக்கும். இவ்வமைப்பானது அவற்றின் இரையை அடக்கி கையாள்வதற்கும், தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் பயன்படும். கறையான்கள் உருவவியலில் எறும்புகளை ஒத்திருப்பதால் அவற்றை "வெள்ளை எறும்புகள்" என்றும் அழைக்கின்றனர். உயிரின வேறுபாடு: எறும்புகள் கறையான்களைப் போல காணப்பட்டாலும், உயிரின வகைப்பாட்டின் படி ஆராய்கின்ற போது எறும்புகள், கறையான்களிலிருந்து முற்றிலும் வேறுபடுகின்றன. எறும்பு இனங்களில் பல்லுருத்தோற்றம் அவதானிக்கப்படுகின்றது. சில எறும்பு இனங்களின் குழுக்களில், இனப்பெருக்கும் தன்மையற்ற பெண் எறும்புகளில், உருவம் சார்ந்து வேறுபாடு கொண்ட சாதிகள் காணப்படுகிறது. அவை சிறிய, இடைத்தரமான, பெரிய உருவம் கொண்டனவாக காணப்படும். சில இனங்களில் இடைத்தரமானவை இல்லாமல் சிறியவை, பெரியவை என்று மிகவும் இலகுவாக வேறுபாட்டைக் காட்டும் இரு வகைகள் மட்டுமே இருக்கும். நெசவாளர் எறும்பு இனம் (Weaver ants) இவ்வகையாக இரு முற்றாக வேறுபடுத்தக் கூடிய சிறிய, பெரிய உருவங்களை மட்டும் கொண்டிருக்கும் . வேறு சில இனங்களில் சிறிய, பெரிய உருவங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக வேறுபட்ட அளவில் உருவங்கள் இருக்கும். Pheidologeton diversus என்ற இன எறும்பில் சிறியவற்றிற்கும், பெரியவற்றுக்கும் இடையில் உலர்நிறை வேறுபாடு 500 மடங்கு அதிகமாக இருக்கும். இவற்றில் பெரியவை அசாதாரணமாக பெரிய தலையையும், அதற்கேற்றாற்போல், பலமுள்ள வாயுறுப்பையும் கொண்டிருக்கும். இவை வேலையாட்களாகவே தொழிற்பட்டாலும், மேலதிகமாக போரிடும் வல்லமையைப் பெற்றிருப்பதால், ‘போராளிகள்' என அழைக்கப்படும். வேலையாட்களின் வயதிற்கேற்ப அவற்றின் தொழிற்பாடு மாறுபடும். சில இனங்களில் இளம் வேலையாள் எறும்புகள், தொடர்ந்து உணவு கொடுக்கப்பட்டு, ‘வாழும் உணவு சேமிப்புக் கலம்' போன்று உணவை சேமிக்கும். இப்படிப்பட்ட பலவுருத்தோற்றமானது ஊட்டச்சத்து, ஓமோன்கள் போன்ற சில சூழலியல் காரணிகளினால் ஏற்படும் என முன்னாளில் நம்பப்பட்டது. ஆனால் Acromyrmex sp. இல் இதற்குக் காரணம் பிறப்புரிமையியல் வேறுபாடே காரணம் எனக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 1 கொரிந்தியர் (நூல்) 1 கொரிந்தியர் அல்லது கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் ("First Letter [Epistle] to the Corinthians") என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் ஏழாவதாக அமைந்ததாகும். மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் A' Epistole pros Korinthios (Α' Επιστολή προς Κορινθίους ) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula I ad Corinthios எனவும் உள்ளது . இம்மடலைத் தூய பவுல் கி.பி. 54-55ஆம் ஆண்டுகளில் எழுதியிருக்கலாம் என்பது அறிஞர் கருத்து . திருத்தூதர் பவுலின் பெரிய திருமுகங்களில் ஒன்றான 1 கொரிந்தியர் இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமுடைய அறிவுரைகளை வழங்குகிறது. அன்பு பற்றிய சிறந்த ஒரு கவிதை இம்மடலில் உள்ளது (1 கொரி 12:31ஆ-13:13). பவுல் காலத்தில் கொரிந்து ஒரு பெரிய வணிக நகரமாக விளங்கியது; உரோமையரின் குடியேற்ற நகரமாகவும் திகழ்ந்தது. இங்குப் பல தெய்வங்களுக்கான கோவில்கள் இருந்தன. வழிபாடு சார்ந்த வாணிகமும் தழைத்தோங்கியது. கொரிந்தியரைப் போல இருத்தல் என்னும் கூற்று ஒழுக்கக் கேடாய் வாழ்தலைக் குறித்தது. திருத்தூதர் பவுல் காலத்தில் கொரிந்து நகரில் 700,000 மக்கள் வாழ்ந்தனர்; அவர்களில் மூன்றில் இரு பங்கினர் அடிமை மக்கள். பவுல் தம் இரண்டாம் தூதுரைப் பயணத்தின்போது இங்குத் திருச்சபையை ஏற்படுத்தினார் (காண்க: 1 கொரி 3:6,10; 4:5; திப 18:1-7). அக்கிலா, பிரிஸ்கில்லா தம்பதியருடன் நட்பு கொண்டார். யூதர்களுடன் தொழுகைக் கூடத்தில் விவாதித்தார். பின்னர் பவுல் எபேசு நகரத்தில் நற்செய்திப்பணி ஆற்றியபோது குலோயி வீட்டினர் மூலம் கொரிந்துத் திருச்சபையில் இருந்த பிளவுகள் பற்றிக் கேள்விப்பட்டார் (1:11). மற்றும் கொரிந்திய திருச்சபை பவுலுக்கு ஒரு கடிதம் எழுதிக் கொரிந்தில் காணப்பட்ட சில சிக்கல்களுக்கு விடை கேட்டு இருந்தது (7:1). இக்கடிதம் வழியாகவும், கடிதத்தைக் கொண்டுவந்த மூவர் வாய்மொழி வழியாகவும் (16:17) அறிந்துகொண்ட சிக்கல்களுக்குத் தீர்வு காணும் முறையில் பவுல் இத்திருமுகத்தை வரைந்துள்ளார். இத்திருமுகத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். முதல் பகுதி: பவுல், அப்பொல்லோ, பேதுரு ஆகியோர் மீதிருந்த மிகப்படுத்தப்பட்ட பற்று, கொரிந்தில் பிளவுகளுக்கும் தற்பெருமை பாராட்டுதலுக்கும் வழியமைத்தது (அதிகாரம் 1). இத்தகைய பிளவுகள் கிறிஸ்துவையே பிளவுபட்டவராகக் காட்டுகின்றன என்கிறார் பவுல். கொரிந்தில் காணப்படும் பிளவுகள் அவர்களின் ஆன்மிக முதிர்ச்சியின்மையைக் காட்டுகின்றன என்று கூறுமவர், கொரிந்தியக் கிறித்தவர்கள் மனிதத் தலைவர்களிடமல்ல, மாறாகக் கிறிஸ்துவிடம் கொள்ளும் உறவைப் பற்றியே பெருமை பாராட்ட வேண்டும் என்கிறார் (அதிகாரங்கள் 2-4). இரண்டாம் பகுதி: ஒருவன் தன் தந்தையின் மனைவியையே வைத்துக் கொண்டிருக்கும் அளவுக்கு ஒழுக்கக்கேடு மலிந்திருந்த நிலையில் கிறிஸ்தவர்கள் அதைக் கண்டிக்கவில்லை. அத்தகைய செயலைச் செய்தவனைச் சபையிலிருந்து நீக்குமாறு கட்டளையிடுகிறார் பவுல் (அதிகாரம் 5). மேலும் கிறிஸ்தவர்கள் பொது நீதி மன்றங்களுக்குச் செல்லாமல் தங்களுக்குள்ளே பிணக்குகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் (அதிகாரம் 6). திருமணம், கன்னிமை, மணமுறிவு, மறுமணம் ஆகியவற்றைப் பற்றித் தொடர்ந்து பேசுகிறார் (அதிகாரம் 7). சிலைகளுக்குப் படைத்த உணவை உண்ணலாமா (அதிகாரங்கள் 8-11) என்னும் கேள்விக்குப் பதில் அளிக்கும் நேரத்தில், கிறிஸ்தவ உரிமையும் அன்பின் விதியும் முரண்பட்டு நிற்பதாகத் தோன்றும்போது, மனவலிமையற்ற சகோதரரை முன்னிட்டு உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டும் என்கிறார் பவுல். தொடர்ந்து, ஆண்டவரின் திருவிருந்தில் முறையாகப் பங்கெடுத்தல், ஆவிக்குரிய கொடைகளை முறையாகப் பயன்படுத்தல் பற்றிப் பேசுகிறார் (அதிகாரங்கள் 11-14). மூன்றாம் பகுதி: உயிர் பெற்றெழுதலைப் பற்றிய கொரிந்தியரின் தவறான கண்ணோட்டத்தைப் பவுல் களையப் பார்க்கிறார் (அதிகாரம் 15). இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்தார் என்னும் உண்மையை விளக்கி, உயிர்பெற்றெழுந்த உடல் எவ்வாறிருக்கும் என எடுத்துரைக்கிறார். இறுதியாக, எருசலேம் கிறிஸ்தவர்களுக்காகத் தாம் திரட்டப்போகும் நன்கொடை பற்றிக் கூறி (16:1-4) பல்வேறு அறிவுரைகள் மற்றும் வாழ்த்துகளுடன் திருமுகத்தை முடிக்கிறார் பவுல் (16:5-24). 1 கொரி 5:6 இல் ஏற்கனவே ஒரு மடல் எழுதியிருந்ததாகக் கூறப்படுகிறது. அது நமக்குக் கிடைக்காத நிலையில் இம்மடலையே கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் என்கிறோம். 1 கொரிந்தியர் 12:31ஆ-13:13
"எல்லாவற்றையும்விடச் சிறந்த நெறி ஒன்றை நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன்.
நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும்
அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன்.
இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும்,
மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும்,
அறிவெல்லாம் பெற்றிருப்பினும்,
மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும்
என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை.
என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும்
என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும்
என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை.
அன்பு பொறுமையுள்ளது;
நன்மை செய்யும்;
பொறாமைப்படாது;
தற்புகழ்ச்சி கொள்ளாது;
இறுமாப்பு அடையாது.
அன்பு இழிவானதைச் செய்யாது;
தன்னலம் நாடாது;
எரிச்சலுக்கு இடம் கொடாது;
தீங்கு நினையாது.
அன்பு தீவினையில் மகிழ்வுறாது;
மாறாக உண்மையில் அது மகிழும்.
அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்;
அனைத்தையும் நம்பும்;
அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்;
அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்.
இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்;
பரவசப்பேச்சு பேசும் கொடையும் ஓய்ந்துபோம்;
அறிவும் அழிந்துபோம்.
ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது.
ஏனெனில், நமது அறிவு அரைகுறையானது;
நாம் அரைகுறையாகவே இறைவாக்கும் உரைக்கிறோம்.
நிறைவானது வரும் போது அரைகுறையானது ஒழிந்துபோம்.
நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன்;
குழந்தையின் மனநிலையைப் பெற்றிருந்தேன்;
குழந்தையைப்போல எண்ணினேன்.
நான் பெரியவனானபோது குழந்தைக்குரியவற்றை அறவே விட்டுவிட்டேன்.
ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க் காண்கிறோம்;
ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம்.
இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன்;
அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன்.
ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன.
இவற்றுள் அன்பே தலைசிறந்தது."
நாடுகள் அடிப்படையில் தொல்லியல் களங்களின் பட்டியல் இது நாடுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ள தொல்லியல் களங்களின் பட்டியல் ஆகும். மைக்கேல் டெல் மைக்கேல் டெல் ("Michael Saul Dell", பி. பெப்ரவரி 23, 1965) டெல் நிறுவனத்தின் ("Dell, Inc.)" நிறுவனர்.போர்ஃவ்ஸ் இதழின் கணிப்பின்படி 2006 இன் உலக பணக்காரர்கள் வரிசையில் 41வது இடத்தில் உள்ளார். டெக்சாசில் பிறந்தவரான டெல் ஒரு செல்வந்த யூத குடும்பத்தவர். அவர் தனது 7 வயதில் கால்குலேட்டர் வாங்கினார். தனது பதினைந்தாவது வயதில் தன்னால் முடியுமா என்பதைப் பார்ப்பதற்காகவே ஒரு புதிய அப்பிள் II கணினியை முழுவதுமாகக் கழற்றிப் பூட்டினார். இப்பொழுது தனது மனைவி சூசன் மற்றும் நான்கு பிள்ளைகளுடன் ஒஸ்ற்றினில் வசித்து வருகிறார். பல்கலைக் கழகத்தில் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் "பி.சி'ஸ் லிமிட்டெட்" ("PC's Limited") என்ற நிறுவனத்தைத் தனது அறையில் ஆரம்பித்தார். தனது பத்தொன்பதாவது வயதில் கல்வியை நிறுத்தி முழு நேரமாக நிறுவனத்தில் உழைக்கத் தொடங்கினார். 1987 இல் நிறுவனத்தின் பெயரை "டெல் கம்ப்யூட்டர் கார்ப்பொரேசன்" ("Dell Computer Corporation") என மாற்றினார். 2003 இல் பங்குதாரர்கள் "டெல்" ("Dell, Inc") எனப் பெயரை மாற்ற வாக்களித்தனர். 2004 இல் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகினார். ஆயினும் நிறுவனத் தலைவராகத் தொடர்கிறார். சாம் வோல்ற்றன் சாம் வோல்ற்றன் (தமிழக வழக்கு: சாம் வால்ட்டன்) ("Samuel Moore Walton", மார்ச் 29, 1918 - ஏப்ரல் 6, 1992) அமெரிக்க விற்பனை நிறுவனங்களான வோல் மார்ட் ("Wal-Mart") மற்றும் சாம்ஸ் கிளப் ("Sam's Club") ஆகியவற்றின் நிறுவனர். வோல்ற்றன் குடும்பமே உலகின் மிகவும் பணக்காரக் குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது. வோல் மார்ட் நிறுவனத்தின் முதல் விற்பனை நிலையம் 1962 இல் ஆரம்பிக்கப்பட்டது. படிப்படியாக பரந்து உலகின் மிகப்பெரிய விற்பனை நிலையமாக உருவானது. வோல் மார்ட் அமெரிக்காவில் மட்டுமல்லாது மெக்சிகோ, கனடா, அர்ஜென்டினா, பிரேசில், தென் கொரியா, சீனா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் பரந்துள்ளது. அக்டோபர் 24 டோபியாஸ் உல்ஃப் டோபியாஸ் உல்ஃப் ("Tobias Wolff", பி. 1945, அலபாமா) ஒரு குறிப்பிடத்தக்க நவீன அமெரிக்க எழுத்தாளர். பல ஆண்டுகளாகச் சிறுகதைகளை எழுதி வந்த இவர் நாவல்களையும் எழுதத் தொடங்கியுள்ளார். சிராகூஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உல்ஃப் நியூயோர்க்கில் வசித்து வருகிறார். வியட்நாம் போரில் சிறப்புப் படை அதிகாரியாகப் பணியாற்றிய அனுபவங்களை "In Pharaoah's Army" என்ற தலைப்பில் நினைவுக் குறிப்புக்களாக எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசு வலைத்தளம் தமிழ்நாட்டு அரசின் உத்யோகபூர்வ இணையத்தளம் தமிழ்நாடு அரசு இணையத்தளம் ஆகும். இதன் இணைய முகவரி http://www.tn.gov.in/ ஆகும். இது ஆங்கில மொழியில் பல பயனுள்ள தகவல்களை கொண்டு இயங்குகின்றது. இதன் தமிழ் வடிவம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட, தொழில் நுட்ப ரீதியில் பின்தங்கிய ஒரு நிலையில் இருக்கின்றது. தமிழ்நாடு அரசின் தமிழ்வடிவ முதல் பக்கத்தில் பின்வரும் முக்கிய பிரிவுகள் உள்ளன: இவற்றில், பொதுமக்களுக்கு அதிகம் பயனளிக்கக் கூடியது சேவைகள் பக்கம்தான்.இங்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட தகவல்களே கிடைக்கின்றன. ஆங்கிலத்தில் பல தமிழ்நாட்டு திணைக்களங்களுக்கு இணையத்தளங்கள் இருந்தாலும் அவை தமிழில் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசு அமைப்பின் இணையதளங்களாக மொத்தம் 446 இணையதளங்கள் உள்ளன. இவற்றில் 26 இணையதளங்கள் மட்டுமே தமிழ் மொழியைப் பயன்படுத்தியுள்ளன. மற்ற தளங்கள் அனைத்தும் ஆங்கில மொழியையேப் பயன்படுத்தியுள்ளன. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா போன்ற நாடுகளின் அரச திணைக்களங்கள் முக்கிய தகவல்களை அங்கு வசிக்கும் சிறுபான்மையினரான தமிழர்களுக்கு தமிழில் தந்து கொண்டிருக்கின்றன. தமிழர்கள் அதிகமுள்ள தமிழ்நாட்டில், தமிழ்நாட்டு அரசின் இணையத்தளங்கள் தமிழில் இல்லை என்பது பெரும் குறைதான். தொழில்நுட்ப வகையில் தமிழில் தகவல்களை தருவதற்கு பெரிய தடைகள் எதுவும் இல்லை. இருப்பினும் இத்தளங்கள் தமிழில் செயல்படுத்துவதற்கான முயற்சிகள் இதுவரை செய்யப்படவில்லை என்கிற குறைபாடுகள் இருக்கின்றன. தமிழ்நாட்டு அரச இணையத்தளம் இந்தியாவின் தேசிய தகவல் மையத்தால் வடிவமைப்பு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. தேசிய தகவல் மையத்தின் பிரிவு ஒன்று தமிழ்நாட்டிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் இணைய முகவரி http://www.tn.nic.in/ ஆகும். தமிழ் நாட்டு திணைத்தளங்கள் தேசிய தகவல் மையம் - தமிழ்நாட்டு பிரிவுக்கு தமிழில் தகவல்களை வழங்கும் நிலையில் அந்த தகவல்கள் தமிழில் இணையத்தில் வழங்கப்படுவதற்கு எவ்விதக் கட்டுப்பாடுகளுமில்லை. "we do not assume any legal liability on the completeness, accuracy or usefulness of the contents provided in this web site." என்று Disclaimer (பொறுப்பாகாமை) பகுதியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அரசு தகவல்களுக்கான தளங்களில் இதுபோன்ற குறிப்புகள் தகவல்களின் நம்பகத்தன்மையைக் குறைப்பதாக உள்ளது என்கிற குறைபாடும் உள்ளது. பல தளங்கள் வெளி தகவல்களுக்கு பொறுப்பு ஏற்காமல் இருப்பதும், சில தகவல்களை விரைவாக இற்றைபடுத்த முடியாமல் இருப்பதும் வழக்கம்தான். ஆனால் அரசு தளங்கள் மொத்தத் தகவல்களுக்கும் பொறுப்பை ஏற்காமல் இருப்பது சரியல்ல என்கிற குறைபாடும் உள்ளன. ஆடு ஆடு () ஒரு தாவர உண்ணிப் பாலூட்டி விலங்கு ஆகும். தென்மேற்கு ஆசியா, கிழக்கு ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்ட ஆடு மனிதனால் வெகு காலத்திற்கு முன்பே பழக்கப்பட்ட விலங்குகளில் ஒன்றாகும். 300க்கும் மேலான ஆட்டினங்கள் உள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆடுகள் அவற்றின் இறைச்சி, பால், முடி, தோல் ஆகியவற்றிற்காக வளர்க்கப்பட்டு வருகின்றன. எனினும் தற்காலத்தில் இதனை செல்ல விலங்காகவும் வளர்க்கும் போக்கு உள்ளது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் கணக்கப்படி உலகம் முழுதும் 92.4 கோடி ஆடுகள் உள்ளன. மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கினங்களுள் ஆடும் ஒன்றாகும். அனடோலியாவிலுள்ள சக்ரோஸ் மலைத்தொடர் தான் ஆடுகளின் பூர்வீகம் என்று மரபணு சோதனைகள் நமக்குக் காட்டுகின்றன. ஆடுகளில் இனத்தைப் பொறுத்து உடல் எடை வேறுபடுகிறது. சிறிய ஆடுகள் 20-27 கிலோ எடையில் இருந்து பெரிய ஆடுகளான போயர் ஆடு போன்றன 140 கிலோ எடை வரை வளருகின்றன. பெரும்பாலான ஆடுகளுக்கு இயற்கையாகவே இரண்டு கொம்புகள் உண்டு. அவற்றின் வடிவமும் அளவும் ஆட்டினத்தைப் பொறுத்து மாறுபடும். இவற்றின் கொம்புகள் கெரட்டின் முதலான புரதங்களால் சூழப்பட்ட எலும்புகளால் ஆனவை. ஆட்டின் கொம்புகள் அவற்றின் பாதுகாப்புக்காவும் அவற்றின் ஆதிக்கத்தையும் எல்லையைக் காக்கவும் பயன்படுகின்றன. ஆடுகள் அசை போடும் விலங்குகள் இவை நான்கு அறை கொண்ட இரைப்பையைக் கொண்டுள்ளன. மற்ற அசை போடும் விலங்குகளைப் போலவே இவையும் இரட்டைப் படையிலான குளம்புகளைக் கொண்டுள்ளன. பெட்டையாடுகளின் மடியில் இரு காம்புகள் உள்ளன. எனினும் விதிவிலக்காக போயர் ஆட்டுக்கு மட்டும் எட்டு காம்புகள் வரை இருக்கலாம். ஆடுகளுக்கு கண்ணின் கருமணியானது கிடைமட்டமாக கோடு போன்று காணப்படுகிறது. கிடா, பெட்டையாடு இரண்டுக்குமே தாடி உண்டு. பொதுவாக ஆடுகள் 15 முதல் 18 ஆண்டுகள் உயிர்வாழ்கின்றன. இறைச்சியும் பாலும் பெறுவதற்காக ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. ஆட்டிறைச்சி பொதுவாக தெற்காசிய நாடுகளில் கோழியிறைச்சிக்குப் பிறகு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் பல ஆடுகளின் இனங்கள் உள்ளன. அவை கொடி ஆடு, கன்னி ஆடு, பல்லை ஆடு என்பன. ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கை ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கை என்பது, கி.மு இரண்டாவது ஆயிரவாண்டு அளவில் இந்தோ-ஐரோப்பிய அல்லது ஆரிய மொழி பேசும் இனத்தவர் இந்தியாவுக்குள் நுழைந்தது தொடர்பிலான ஒரு கொள்கை ஆகும். இது பரந்த அளவிலான இந்தோ-ஐரோப்பிய இடப்பெயர்வுடன் தொடர்புள்ளது. இந்தோ-ஆரிய மொழி பேசுவோர் ஐரோப்பாவில் அல்லது மத்திய ஆசியாவில் தோன்றி, உலகில் அவர்கள் இன்று வாழுகின்ற பகுதிகளுக்குப் பரந்து சென்றமை பற்றிய கோட்பாடு இன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது ஆகும். ஆயினும், இந்தியாவுக்குள் அவர்கள் நுழைந்த முறைபற்றிச் சர்ச்சைகள் நிலவுகின்றன. ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கை, அவர்களின் இடப்பெயர்வு வன்முறையோடு கூடிய ஆக்கிரமிப்பு நடவடிக்கை எனக் கருதுகிறது. இந்தோ ஐரோப்பியர், மற்றும் அவர்கள் பேசும் மொழிகள் தொடர்பான ஆராய்ச்சிகள், 1790 இல், வில்லியம் ஜான்ஸ் என்பார், சமஸ்கிருதத்துக்கும், கிரேக்கம், லத்தீன் முதலிய மொழிகளுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றி எடுத்துக்காட்டி அவை முன்னிருந்து அழிந்துபோன இன்னொரு மொழியிலிருந்து தோன்றி இருக்கலாம் என்று எழுதியதிலிருந்தே தொடங்கின. அவர் ஜெர்மானிக் மொழிகளும், செல்ட்டிக் மொழிகளும்கூட அதே மொழியிலிருந்தே தோன்றியிருக்கக்கூடும் எனவும் கருதினார். இது பின் வந்த ஆய்வாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டதுடன், ஸ்லாவிக் மொழிகளும் இதே தொடக்க மொழியிலிருந்தே உருவாகின எனக் கண்டு பிடித்தனர். சில ஆய்வாளர்கள், குறிப்பாக 1808 இல், பிரெட்ரிக் ஸ்கிலேகல் (Friedrich Schlegel) போன்றவர்கள், இந்தியாவே இந்தோ ஐரோப்பியப் பண்பாட்டின் தொடக்க இடமாக இருக்கக்கூடும் எனக் கருதினார். வேறு சில ஆய்வாளர்கள், மொழிகளில் பரவலை, பைபிளில் சொல்லப்பட்ட மனிதத்தோற்றத்தின் அடிப்படையில் பொருத்துவதற்கு முயற்சித்தார்கள். மொழிகளிடையான குழப்பநிலை (Confusion of tongues) மற்றும் பேபெல் கோபுரத்தின் வீழ்ச்சி தொடர்பாக பைபிளில் சொல்லப்பட்ட நிகழ்வுகளை அவர்கள் இந்த ஆய்வுகளுக்குள் பொருத்த முயன்றனர். பைபிளில் சொல்லப்பட்ட ஜஃபேத் (Japheth) என்னும் இனக்குழுவினர், மெசொப்பொத்தேமியா அல்லது அனத்தோலியாவில் இருந்து, காக்கேசசுக்கும் பின்னர் ஐரோப்பாவுக்குள்ளும் சென்றதாகக் கருதப்பட்டது. இது பொது மூலம் ஒன்றைக் கொண்ட மொழிகள் பரவியதோடு ஒத்ததாகக் காணப்பட்டது. அத்துடன், இந்தோ ஆரிய மொழிகளின் தோற்றத்தை இந்தியாவுக்கு மிகவும் அண்மையில் கொண்டு வந்தது. 1840 அளவில், இந்தோ ஐரோப்பிய மொழிகளின் பரவல் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டவர்கள், இந்தியா, இந்தோ ஐரோப்பிய மொழிப் பகுதியின் எல்லையில் இருப்பதையும், மூல இடத்துக்கு அண்மையில் மொழிகள் கூடுதலான பிரிவுகளாக அமைந்திருக்கும் என்ற கோட்பாட்டையும் பயன்படுத்தி, அது ஒரு மூல இடமாக அமைய முடியாது என்று தீர்மானித்தனர். அத்துடன், ஈரானியர்களின் புனித நூல்களில் வடக்கிலுள்ள தாயகம் பற்றிக் குறிப்பிட்டிருப்பதையும், இந்துக்களின், இருக்கு வேதத்தில் உள்ள போர்கள் பற்றிய வர்ணனைகளை முன்வைத்தும், ஆரியர்கள் வடக்கிலிருந்து இந்தியாவுக்குள் வந்தனர் என்று முடிவு எடுத்தனர். இந்தக் கோட்பாடு சிறப்பாக மாக்ஸ் முல்லர் (Friedrich Max Müller) என்னும் மொழியியலாளரின் ஆய்வுகளுடன் தொடர்புபட்டது. இவர்,ஆரியர்கள் பக்ட்ரியாவிலிருந்து அல்லது அதனிலும் வடக்காக மத்திய ஆசியப் புல்வெளிப் பகுதியில் உள்ள ஒரு இடத்திலிருந்து கி.மு 1500 ஆம் ஆண்டளவில் இந்தியாவுக்குள் புகுந்ததாகக் கூறினார். வேதக் கடவுள்களுக்கும், கிரேக்க, ரோம மற்றும் நோர்ஸ் புராணங்களில் காணும் கடவுள்களுக்கும் தொடர்பு கண்ட அவர், ஐரோப்பியப் பண்பாடு மத்திய ஆசியாவைச் சேர்ந்த ஆதி ஆரியர்களிடமிருந்தே தோன்றியிருக்கலாம் எனவும் கணித்தார். இந்தோ ஐரோப்பிய மொழிகளில், அண்ணவினமாதல் (palatalization) போன்ற ஆய்வுகளும், பிற மொழியியல் ஆய்வுகளும், இந்தோ ஐரோப்பிய மொழிகளின் முதன் மொழி இந்தியாவில் தோன்றியிருக்கக்கூடும் என்ற கருத்தை ஆதரிக்கவில்லை. 1920 ஆம் ஆண்டில் சிந்துவெளிப் பண்பாட்டின் அழிபாடுகள் கண்டு பிடிக்கப்பட்டதோடு, இந்தோ ஐரோப்பியர்கள் அல்லது ஆரியர்கள் இந்தியாவில் தோன்றியிருக்கக்கூடும் என்ற கருத்து மேலும் ஆட்டம் கண்டது. சிந்துவெளி நாகரீகம் வீழ்ச்சியடைந்த காலமும், ஆரியர்கள் இந்தியாவுக்குள் புகுந்த காலமும் பொருந்தி வந்தது, ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கைக்கு ஒரு தனியான சான்றாகக் கருதப்பட்டது. போர்களில் இறந்தது போல் காணப்பட்ட பல எலும்புக் கூடுகள் அகழ்வுகளின்போது மேற்பகுதியில் காணப்பட்டமையும், சிந்துவெளியின் வன்முறைமூல வீழ்ச்சிக் கருத்துக்கு உரம் இட்டது. வரலாற்றுக்கான இந்திய ஆய்வு மையத்தைச் சேர்ந்த டி. என். திரிபாதி, பாகிஸ்தான் ஆய்வாளர்கள் டி.என்.ஏ வினைக் கொண்டு செய்த சோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்குப்பகுதி மக்களிடையே ஆரிய திராவிட வேறுபாடுகள் காணப்படவில்லை என்றார். கிறிஸ்துவுக்கு 15,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தனர் எனும் வாதம் தவறானது எனவும் அவர் கருத்து வெளியிட்டார். சிலர் மாக்ஸ் முல்லர் இந்தியர்களது மதமான இந்து மதம் அவர்களை இயக்குகிறது என்று கருதியதாகவும், அதன் பிடியிலிருந்து அவர்கள் வெளியே வந்தால் அவர்களை அடக்குவது சுலபம் என்றென்னி வேண்டுமென்றே இந்த கொள்கையை உருவாக்கியதாகவும் கருதுகின்றனர். இதன் மூலம் ரிக் வேதத்தின் தன்மையை கெடுத்து, இந்தியர்கள் மனதில் பிரிவினைவாத எண்ணத்தை உருவாக்கி அவர்களை ஆளலாம் என்றவர் எண்ணியதாக கூறுகின்றனர். மேற்குறிப்பிட்ட எண்ணத்தில் அவர் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தையும் இக்கொள்கையின் எதிர்வாதத்திற்கு ஆதரமாக காட்டுகின்றனர். வோல் மார்ட் வோல் மார்ட் (தமிழக வழக்கு:வால் மார்ட்) அமெரிக்காவில் அமைந்துள்ள நிறுவனமாகும். இது 2006 இல் விற்பனை அடிப்படையில் எக்சான் மோபில் இற்கு அடுத்ததாக உள்ள உலகின் இரண்டாவது பெரிய நிறுவனமாகும். வோல் மார்ட் நிறுவனத்தின் முதல் விற்பனை நிலையம் 1962 இல் சாம் வோல்ற்றனால் ஆரம்பிக்கப்பட்டது. 1972 இல் நியூ யோர்க் பங்குச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டது. படிப்படியாகப் பரந்து உலகின் மிகப்பெரிய விற்பனை நிலையமாக உருவானது. வோல் மார்ட் அமெரிக்காவில் மட்டுமல்லாது மெக்சிகோ, கனடா, அர்ஜென்டினா, பிரேசில், தென் கொரியா, சீனா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் பரந்துள்ளது. தசரதன் (திரைப்படம்) தசரதன் என்பது 1993ஆம் ஆண்டு ராஜா கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தில் சரத்குமார், ஹீரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் சிவகுமார், சரண்யா மற்றும் காந்திமதி ஆகியோர் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும் நீண்ட நாள், அதிக அளவு வசூல் சாதனை பெற்றுள்ளது கோபி அன்னான் கோபி அன்னான் (ஏப்ரல் 8, 1938 – ஆகத்து 18, 2018) கானாவைச் சேர்ந்தவர். ஐக்கிய நாடுகள் அவையின் ஏழாவது செயலாளராக இருந்தவர். ஜனவரி 1, 1997 இல் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கோபி அன்னான் டிசம்பர் 31, 2006 அன்று ஓய்வு பெற்றார். 2001 இல் அன்னான் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கு கூட்டாக "ஒரு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைதியான உலகத்திற்காக உழைத்ததற்காக " அமைதிக்கான நோபல் பரிசு, விருது வழங்கப்பட்டது. பிப்ரவரி 23, 2012 முதல் 31 ஆகஸ்ட் 2012 வரை, சிரியாவிற்கான ஐ.நா. அரபு லீக் கூட்டுச் சிறப்பு பிரதிநிதியாக இருந்தார் . ஐ.நா.வின் பற்றாக்குறையான பங்களிப்பு குறித்து சலிப்படைந்த கோபி அன்னான் சிறப்பு பிரதிநிதி பதவியில் இருந்து விலகினார். கானாவின் குமசியின் கோபேன்ட்ரோஸ் பகுதியில் பிறந்தார். இவரும் இவரது சகோதரியும் இரட்டையர்களாவர். கானா நாட்டின் கலாசாரப்படி இரட்டையர்கள் கௌரவமாகக் கருதப்படுவர். அவரது மாமாவும் தாத்தாவும் குடியினரின் தலைவர்களாக இருந்தனர். கானா நாட்டில் ஓர் வழக்கமாக குழந்தைகள் பிறந்த நாளினையே அவர்களுக்கு பெயராகச் சூட்டுவர். அவ்வழக்கப்படியே இவருக்கு “கோஃபி”(அதாவது வெள்ளிக்கிழமை அவர்களின் மொழியில்) என்று பெயரிட்டனர். 1954 முதல் 1957 வரை கேப் கோஸ்டிலுள்ள பள்ளியில் கல்வி பயின்றார். 1957இல் தனது பள்ளிக்கல்வியை முடித்தார். அவ்வாண்டு கானா நாட்டிற்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை கிடைத்தது. இவரது இரட்டைச் சகோதரி 1991 இல் மரணமானார். அன்னான் ஆங்கிலம், பிரெஞ்சு, அகான் போன்ற மொழிகளில் பேசத் தெரிந்தவர். 1962 ஆம் ஆண்டு, கோஃபி அன்னான், உலக சுகாதார அமைப்பில் ஒரு பட்ஜெட் அதிகாரியாக தனது பணியை துவங்கினார் . 1974 முதல் 1976 வரை, அவர் கானா சுற்றுலாத்துறை இயக்குநர் பணியாற்றினார் .1980 களின் பிற்பகுதியில், அன்னான் ஐ.நா வேலைக்கு திரும்பினார் . உதவி பொது செயலாளராக மூன்று பதவிகளில் நியமிக்கப்பட்டார் - மனித வள மேலாண்மை மற்றும் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் (1987-1990); திட்டம் திட்டமிடல், பட்ஜெட் மற்றும் நிதி, மற்றும் கட்டுப்பாட்டாளர் (1990-1992) மற்றும் அமைதிசெயல்பாடுகள் (டிசம்பர் 1996 மார்ச் 1993) . 1994 ல் நடந்த ருவாண்டா படுகொலை போது அன்னான் ஐ.நா. அமைதிப்படை நடவடிக்கையை இயக்கினார்.2003 இல் கனடிய முன்னாள் ஜெனரல் ரோமியோ தல்லைரே நிகழக்கூடிய இனப்படுகொலையில் அன்னாநின் செயல்பாடு அதீத செயலற்றதாக இருந்ததாக கூறினார். உருவாண்டா படுகொலைகள் 1994களிலேயே நடத்தப்பட்டன. அப்போது ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைக்கு தலைமை தாங்கியவர் அன்னான். 2003ல் கனடாவின் அதிகாரியான தால்லயிரே இதைப்பற்றி தன் நூலில் எஔதி இருக்கிறார். மார்ச் 1994 இலிருந்து அக்டோபர் 1995 வரை நேருதவிச் செயலராக பணியாற்றினார்.அவர் ஏப்ரல் 1996 ல் முன்னாள் யூகோஸ்லாவியா விற்கு பொது செயலாளரின் சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். 1996 ஆம் ஆண்டு டிசம்பர் 13 இல் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை முந்தைய பொது செயலாளர், டாக்டர் பூட்ரோஸ் பூட்ரோஸ் காளிக்கு பதிலாக கோபி அன்னான் பரிந்துரை செய்யபட்டார் . நான்கு நாட்களுக்கு பின்னர் ஜெனரல் சபையில் வாக்கெடுப்பு மூலம் உறுதிசெய்ய பட்டு , 1 ஜனவரி 1997 முதல் அன்னான் பொது செயலாளராக அவரது பதவிக் காலத்தை துவங்கினார் . ஏப்ரல் 2001 இல், அன்னான் எச்.ஐ. வி / எய்ட்ஸ் தொற்றை கையால ஒரு ஐந்து அம்ச "நடவடிக்கைக்காண அழைப்பு" வெளியிட்டார் ."தனிப்பட்ட முன்னுரிமை" என்று அதை குறிப்பிட்ட அவர் , உலக எய்ட்ஸ் மற்றும் சுகாதார நிதியை முன்மொழிந்தார் .டிசம்பர் 10, 2001 இல் அண்ணன் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கு கூட்டாக "ஒரு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைதியான உலகதிற்காக உழைததர்காக " அமைதிக்கான நோபல் பரிசு, விருது வழங்கப்பட்டது. பெப்ரவரி 2012ல் அன்னான் ஐக்கிய நாடுகளின் அரேபியக் குழுவில் நியமிக்கப்பட்டார். அக்குழு சிரிய நாட்டின் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவரும் எண்ணத்துடன் அமைக்கப்பட்டது. He developed a six-point plan for peace: இவர் அக்குழுவில் இருந்து தன் சிறப்பு உறுப்பினர் பதவியை ஆகத்து 2, 2012ல் விடுத்தார். அதற்கு காரணமாக அசாத் அரசும் சிரிய புரட்சிக் குழுக்களுக்கும் இடையிலுள்ள அமைதிக்கான ஒத்துழைப்பின்மையை காரணம் காட்டினார் மேலும் அனைத்துலக நாடுகளின் ஒத்துழைப்பு சரியாக அமையாதமையாலும் அவற்றின் சார்புடைய செயல்பாடுகளினாலும் அங்கு அமைதியை கொண்டு வர இயலவில்லை என்றும் அறிவித்தார். உடல்நலக் குறைவு காரணமாக சுவிட்சர்லாந்து நாட்டு மருத்துவமனையில் 18 ஆகஸ்டு 2018 அன்று காலமானார். அக்டோபர் 25 யசுனாரி கவபட்டா யசுனாரி கவபட்டா (川端 康成 "Kawabata Yasunari", சூன் 11, 1899 - ஏப்ரல் 16, 1972) நோபல் பரிசு பெற்ற யப்பானிய நாவலாசிரியர் ஆவார். சாகாவில் பிறந்த இவர் சிறுவயதிலேயே நெருங்கிய உறவினர்கள் அனைவரையும் இழந்தவர். செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். 1968 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் யப்பானியரானார். யப்பானிய இலக்கியங்களை ஆங்கிலத்துக்கும் பிற மேலைத்தேய மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பதில் குறிப்பிடத்தக்க ஊக்குவிப்பாளராக இருந்தார். 1972 இல் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் எதுவும் தெளிவாகத் தெரியவரவில்லை. வளரி வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கும், கால்நடைகளை திருடிச்செல்லும் திருடர்களைப் பிடிக்கவும் பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, திகிரி, "பாறாவளை", "சுழல்படை", "படைவட்டம்" என்றும் அழைத்தனர். இது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட பூமராங் வகை ஆயுத வடிவமைப்பை உடையது. பூமராங் எறிந்தவனுக்கே திரும்பி வந்துவிடும். ஆனால் தமிழனால் பயன்படுத்தப்பட்ட வளரி அப்படியல்ல. வளரிகள் பல்வேறு அமைப்பில் அமைந்துள்ளன. சாதாரணமாக வளைந்த இறக்கை வடிவான மரத்தால் செய்யப்பட்ட துண்டாகும். சில வளரிகளின் விளிம்புகள் பட்டையாக கூராக இருக்கும். ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியைப் பயன்படுத்துவது உண்டு. கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி, விசிறி, வீசி விட வேண்டும். சிலவற்றை இரும்பிலும்கூட செய்வார்கள். பட்டையான கூரான வளரியை வீசினால் சுழன்று கொண்டே சென்று, வெட்டுப்படக்கூடிய இலக்காக இருந்தால் சீவித்தள்ளி விடும். வளரிகள் குறிவைத்து எறிவதற்குப் பல முறைகள் உண்டு. பொதுவாக சுழற்றப்பட்டே எறியப்படும். இப்படி எறியப்படும்போது இது செங்குத்தாக அல்லது கிடையாக சுழலும். அல்லது சுழலாமலே செல்லக்கூடும். அதன் சுழற்சி வேகத்திலும் தங்கியுள்ளது. உயிராபத்தை விளைவிப்பதற்கு வளரியானது ஒருவனின் கழுத்தைக் குறிவைத்து எறியப்படும். பொதுவாக கால்களையே தாக்குவதற்கு எறியப்படும். வளரி மான் வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும். பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சிவகெங்கை, மற்றும் தற்போதைய பட்டுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது. வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன. சிவகெங்கையில் ஆட்சியிலிருந்த மருது சகோதரர்கள், மற்றும் அவர்களது படைத்தளபதிகளான வைத்திலிங்க தொண்டைமான் ஆகியோர் வளரியையே ஆயுதமாகப் பாவித்து ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது. சங்க இலக்கியமாகிய புறநானூறு 347ஆம் பாடலில் "மணம் நாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல்" என்ற ஒரு குறிப்பு உள்ளது. அகுதை என்ற குறுநிலத் தலைவன் ஒருவன் "பொன்புனை திகிரி" (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன் என்று புறநானூறு 233-ஆம் பாடலில் ("அகுதைக் கண் தோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ") கூறப்பட்டுள்ளது. தமிழர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது." ஜோன் கால்ஸ்வர்தி ஜோன் கால்ஸ்வர்தி அல்லது ஜான் கால்ஸ்வர்தி ("John Galsworthy", ஆகத்து 14, 1867 - சனவரி 31, 1933) நோபல் பரிசு பெற்ற ஆங்கில நாவலாசிரியர். சட்டம் கற்ற இவர் அதில் ஆர்வமில்லாது தனது குடும்ப வியாபாரத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். 1897 இல் தனது முதற் சிறுகதைத் தொகுப்பைப் புனைபெயரில் வெளியிட்டார். பின்னர் நாடகங்களும் நாவல்களும் எழுதினார். 1932 இல் நோபல் பரிசு பெற்ற இவரது நாவல்கள் சில திரைப்படங்களாக்கப்பட்டுள்ளன. ஹேர்மன் ஹெசே ஹேர்மன் ஹெசே (Hermann Hesse, ஜூலை 2 1877 - ஆகஸ்டு 9, 1962) இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற கவிஞர், நாவலாசிரியர், ஓவியர். 1946 இல் நோபல் பரிசு பெற்றார். கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதிய இவரது Steppenwolf, Siddhartha, The Glass Bead Game ஆகிய படைப்புக்கள் முக்கியமானவை. சித்தார்த்த தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆல்பர்ட் ஹியூபோ ஆல்பர்ட் ஹியூபோ ("Albert HUBO"), ஒரு மனித ரோபோ ஆகும். இது தென் கொரிய ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது. இது ரோபோ உடலையும் புகழ் பெற்ற இயற்பியலாளரான ஐன்ஸ்டீனின் முகத்தையும் கொண்டது. இது நவம்பர் 2005-இல் உருவாக்கப்பட்டது. இதனுடைய தோலானது ஹாலிவுட்டில் பயன்படுத்தப்படும் ஃபிரப்பர் என்னும் பொருளால் உருவாக்கப்பட்டது. இது முகத்தில் உணர்ச்சிகளைக் காட்ட வல்லது. கோபிகா (நடிகை) கோபிகா (பிறப்பு: பிப்ரவரி 1, 1985) தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகையாவார். இவர் இயற்பெயர் "கேர்ளி அண்டோ" ஆகும். இவர் கேரளாவில் பிறந்தார், இவரின் தந்தை ஹன்டோ பிரான்சிஸ் மற்றும் தாய் டெசி ஹன்டோவின் ஆகியோர்கள் ஆவார். தனது பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளிப்படிப்பை கேரளா மாநிலம், திருச்சூரில் உள்ள செயிண்ட் ராப்பெல்ஸில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து முடித்தார். பின்னர் தன் மேற்ப்படிப்பை கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் சமூகத்துவியல் படிப்பை படித்து முடித்தார். அஜிலேஷ் சாக்கோ என்பவரை 2008 ஆம் ஆண்டு மணந்தார். இவர்களது திருமணம் சூலை 27, 2008 அன்று கேரளாவில் நடந்தது. இவர்களுக்கு எமி, எய்தீன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் கழகம் இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் கழகம் (ஆங்கிலம்: Institute of Chartered Accountants of Sri Lanka / ICASL) என்பது இலங்கையில் உள்ள தொழில்சார் கணக்கறிஞர்களின் அதியுயர் குழுவாகும். இந்த கழகமே இலங்கையில் உள்ள தொழில் சார் கணக்காளர்களுக்கு பட்டயக் கணக்கறிஞர் (Chartered Accountant) எனும் பட்டத்தினை வழங்கும் உரிமையினை உடையது. அது மட்டுமல்லாது இலங்கையில் கணக்கீடு தொடர்பான நியமங்களை வகுகின்ற/மாற்றுகின்ற தனியுரிமையினையும் கொண்டுள்ளது. பட்டயக் கணக்கறிஞர் ICASL உத்தியோகபூர்வ இணையத்தளம் வின்டோஸ் டிஃபென்டர் முன்னர் வின்டோஸ் அன்டிஸ்பைவேர் என முன்னர் அறியப்பட்ட வின்டோஸ் டிஃபென்டர் ஸ்பைவேர் என்றழைக்கப்படும் மைக்ரோசாப்ட் இலவச மென்பொருளானது ஒற்றுமென்பொருட்களை வின்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் சேவர் 2003, விண்டோஸ் விஸ்டா இயங்குதளங்களில் இயங்குதல் மற்றும் நிறுவுதல்களைத் தடுத்தும் நீக்கவும் உதவுகின்றது. விஸ்டாவுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்த மென்பொருளானது மைக்ரோசாப்டின் இணையத்தளத்தில் இருந்து இலவசமாகப் பதிவிறக்கப்படக்கூடியது. விண்டோஸ் டிபெண்டர் ஜயண்ட் கம்பனி சாப்ட்வேரினால் உருவாக்கப் பட்ட ஜயண்ட் அண்டிஸ்பைவேரை அடிப்படையாகக் கொண்டது. இதை மைக்ரோசாப்ட் டிசெம்பர் 16, 2004 இல் உள்வாங்கிக் கொண்டது. இதன் பழையமென்பொருளானது விண்டோஸ் 98 போன்ற பழைய இயங்குதளங்களில் இயங்கினாலும் மைக்ரோசாப்டின் உள்வாங்கலின் பின் பழைய இயங்குதளங்களின் ஆதரவு கைவிடப்பட்டது. ஜயண்ட் சாப்வேரின் பங்காளியான சண்பெல்ட் சாப்ட்வேர்ரின் கவுண்டஸ்பைவேர் பழைய இயங்குதளங்களை இன்றளவும் ஆதரித்து வருகின்றது. இதன் பீட்டாப் பதிப்புக்கள் விண்டோஸ் 2000 ஆதரித்தாலும், அக்டோபர் 24, 2006 இல் வெளிவந்த இறுதிப்பதிப்பில் இந்த ஆதரவு விலக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளப்போதும் இது மென்பொருளை நிறுவும் போதுள்ள ஓர் செயற்கையான நிபந்தனை மூலமே இது கட்டுப்படுத்தப்படுவதாகவும் இந்நிபந்தனையை நீக்கிவிட்டால் இவை வின்டோஸ் 2000 இயங்குதளத்திலும் இயங்கக்கூடியதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வின்டோஸ் டிஃபெண்டர் தேர்வுகள் நிகழ்நிலையில் தெர்வு செய்யக் கூடியவை. எம்டன் -மகன் எம்டன் -மகன் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நகைச்சுவைப்படம் / காதல்படம் பலசரக்குக் கடை ஒன்றினை வைத்து நடத்தும் எம்டன் (நாசர்) மிகவும் கோப சுபாவமுடையவர்.சிறிதாக ஏதாவது பிரச்சனையென்றால் அப்பிரச்சனையைப் பெரிதுபடுத்துபவராகவும் திகழ்கின்றார் எம்டன்.தனது மகனான கிருஷ்ணனை கல்லூரியில் மாண்வர்கள் மத்தியில் அவமானப்படுத்தும் வகையில் பேசும் எம்டன் அவரைத் தனது கடையில் கூலியாள் போன்று நடத்துவதும் குறிப்பிடத்தக்கது.திருட்டுப்போன பணத்திற்காக காரணமின்றி கிருஷ்ணாவைத் தாக்கவும் செய்கின்றார் எம்டன்.பின்னர் உண்மை என்பதனைத் தெரிந்து அவருக்கு உணவு ஊட்டவும் செய்கின்றார்.ஒரு முறை இவர் மதுரைக்குச் செல்லும் சமயம் பார்த்து தனது இளம்வயது சிநேகிதியான ஜனனியின் (கோபிகா) ஊருக்கு தனது தாயாருடன் செல்கின்றார்.அங்கு ஜனனியைக் காணது மனம் நொந்து போகும் கிருஷ்ணா பின்னர் ஜனனி வீட்டிலிருந்த தாத்தா இறந்து போகவே அவர்கள் வீட்டிற்கு எம்டன் குடும்பத்தினர் செல்ல நேரிட்டது,அச்சமயம் ஜனனியைச் சந்தித்துக் கொள்ளும் கிருஷ்ணா தனது காதலை வெளிப்படுத்துகின்றார்.இவர்கள் கொஞ்சிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்ட எம்டனும் ஜனனியின் குடும்பத்தாரும் கிருஷ்ணாவையும்,ஜனனியையும் அடித்தனர்.இதற்குப் பிறகு பகை ஏற்படும் இரு குடும்பத்தாரும் இருவரையும் சேர விடாது தடுத்த போதும் ஜனனியும் கிருஷ்ணாவும் சேர்ந்தே வாழ்கின்றனர்.பின்னர் கிருஷ்ணாவின் தாய்மாமனான ஜயாக்கண்னுவின் (வடிவேல்) உதவியினால் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்கின்றனர்.கிருஷ்ணனும் பெரிய தொழில் நிறுவனமொன்றில் வேலை பார்த்து கை நிறையப் பணத்தினையும் சம்பாதித்துக் கொள்கின்றான்.ஆனாலும் தனது தந்தையை மறக்காது அவரிடம் சென்று தன் வீட்டில் வந்து தங்குமாறு கேட்கின்றான்.எம்டன் குடும்பம் கிருஷ்ணன் கூட தங்கியிருக்கின்றனரா என்பது திரைக்கதையின் முடிவு. சமணம் சமணம் என்பது பண்டைய இந்தியாவில் நிலவிய சில சமயக்கோட்பாடுகளைக் குறிக்கும். சமணம் என்ற சொல் ச்ரமண ("śramaṇa") என்ற வடமொழிச்சொல்லின் சிதைவு; ச்ரமண என்றால் தன்னை வருத்துகை என்று பொருள் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சிலக்குழப்பங்களால் சமணம் என்ற சொல்லே ஜைனத்தை மட்டும் குறிக்க தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், தமிழ் மொழி நிகண்டுகளில் சாவகர், அருகர், ஆசீவகர் மூவரையுமே சமணர் என பண்டைய தமிழ் இலக்கிய ஆசிரியர்கள் அடையாளப்படுத்தினர். பிற்கால வரலாற்று ஆசிரியர்கள் பௌத்தம் அஞ்ஞானம், வேதாந்தம் போன்றவற்றையும் சமணம் என்றே அடையாளப்படுத்தினர். திவாகர முனிவரால் கி.பி. 8 நூற்றாண்டில் இயற்றப்பட்ட திவாகர நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டு, ஜைனர்களை(அருகர்) சமணரின் ஒரு பிரிவினராகக் குறிப்பிடுகிறது. அதாவது, சமணர் எனும் சொல் சாவகர், அருகர், ஆசீவகர் ஆகியவர்களைச் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல் எனக் குறிப்பிடுகிறது. திவாகர முனிவரின் மாணாக்கருள் ஒருவரான பிங்கல முனிவர், தான் இயற்றிய பிங்கல நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டில் ஜைனர்களை(அருகர்) சமணரின் ஒரு பிரிவாகக் குறிப்பிடுகிறார். இரட்டைக்காப்பியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களின் படி, இதன்மூலம், சமணத்தின் உட்பிரிவுகளான ஆசீவகம் மற்றும் சாவகம் ஆகிய நெறிகள், பண்டைய தமிழகத்தில் இருந்ததாக அறியப்படுகிறது. சமணத்தில் உள்ள ஜைன நெறி மட்டுமே காப்பியங்கள் மூலம் தன்னை மக்களிடம் ஓரளவிற்கு நிலைநிறுத்திக் கொண்டதனால், சமணத்தில் உள்ள ஜைன நெறியைத் தவிற மற்ற நெறிகள், தங்கள் செல்வாக்கை மக்களிடம் நாளடைவில் இழந்துவிட்டன. இதனாலும், பிற்காலத்தில் ஆசீவகம் ஜைனத்தின் உட்பிரிவு எனும் தவறான ஒரு கண்ணோட்டம் உருவானதாலும் தற்காலத்தில் சமணம் எனும் சொல்லிற்கு ஜைனம் என்ற தவறான பொருள் உருவாகிவிட்டது. இந்தக் குழப்பத்தினால், இன்றுவரை, தமிழ் இலக்கியங்களின் ஆய்வுகள் மற்றும் தொல்லியல் ஆய்வுகளில், சமணர் மற்றும் ஜைனர் ஆகிய சொற்கள், ஒரேப் பொருள் கொண்ட சொற்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு ஆகிய தமிழ் மொழி நிகண்டுகள் மட்டுமல்லாது, ஆகிய கல்வெட்டு மற்றும் இலக்கியச் சான்றுகள், ஆசீவக நெறியையும் ஜைன நெறியையும் பிரித்துக் காட்டுகின்றன. பிறகு, கி.பி. 13 நூற்றாண்டு வாக்கில் ஆசீவக நெறி ஜைன நெறியின் உட்பிரிவு எனும் தவறான ஒரு கண்ணோட்டம் உருவானது. இதற்கான சான்றாக, ஆகிய இலக்கியங்கள் உள்ளன. இந்தத் தவறான கண்ணோட்டத்தினை மயிலை திரு.சீனி. வேங்கடசாமி அவர்கள், தான் இயற்றிய பௌத்தமும் தமிழும் எனும் நூலில் குறிப்பிடுகிறார். மக்களை அதிகம் கவர்ந்த மதங்களில் சமணமும் ஒன்றாகும். ஏனெனில் இம்மதக் கருத்துக்கள் சமூகத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், பின்பற்றுவதற்கும் எளிமையாக இருந்தன. மேலும் இம்மதத்தை அரசர்களும், பேரரசர்களும் பின்பற்றியதால் இந்தியா முழுமையும் இம்மதம் பரவியது. தமிழ்ச் சங்கங்கள் போல சமணமதமும் சமண அவைகள் மூலம் வளர்க்கப்பட்டு, பரப்பப்பட்டது. சமணர் கழுவேற்றம் என்பது நின்றசீர்நெடுமாறன் எனும் மன்னன் மதுரையை ஆண்ட காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வாகும். சமணர்கள் நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரிடம் வாதத்தில் தோற்று கழுவேறினார்கள் என்று பெரியபுராணம் நூலில் உள்ள குறிப்புகள் மூலமாக அறிய முடிகிறது. ஜன்னிய இராகம் ஜன்னிய இராகங்கள் என்பது கருநாடக இசையில் மேளகர்த்தா இராகங்கள் என அழைக்கப்படும் ஜனக இராகங்களிலிருந்து பிறந்தவை. இவை "பிறந்த இராகம்" அல்லது "சேய் இராகம்" என்றும் அழைக்கப்படுகின்றன. பண்டைத் தமிழிசையில் இதற்கு "திறம்" என்றும் பெயர். ஜன்னிய இராகங்கள் கணக்கில் அடங்காதன. இவற்றை 5 பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன: ஆரோகணமும் அவரோகணமும் சம்பூர்ணமாக உள்ள ஜன்னிய இராகம், ஜன்னிய சம்பூர்ண இராகம் ஆகும். உ+ம் : பைரவி ஆரோகணம் : ஸ ரி க ம ப த நி ஸ் அவரோகணம் : ஸ் நி த ப ம க ரி ஸ ஜன்னிய இராகங்களில் ஆரோகணத்திலாவது அல்லது அவரோகணத்திலாவது அல்லது இரண்டிலுமாவது ஒரு ஸ்வரம் அல்லது இரண்டு ஸ்வரங்கள் விலக்கப்பட்டிருக்கும். அதுவே வர்ஜ இராகம் ஆகும். இவ்வாறு விலக்கப்பட்ட ஸ்வரங்களிற்கு "வர்ஜ ஸ்வரங்கள்" எனப்படும். ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் ஒரு ஸ்வரம் வர்ஜமாக இருக்கும் போது (அதாவது ஆறு ஸ்வரங்களைக் கொண்ட ஆரோகண அவரோகணம் உள்ள இராகம்) ஷாடவ இராகம் எனப் படும். உ+ம் : சிறீரஞ்சனி ஆரோகணம் : ஸ ரி க ம த நி ஸ் அவரோகணம் : ஸ் நி த ம க ரி ஸ ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் இரு ஸ்வரங்கள் வர்ஜமாக இருக்கும் போது ஔடவ இராகம் எனப்படும். உ+ம் : மோகனம் ஆரோகணம் : ஸ ரி க ப த ஸ் அவரோகணம் : ஸ் த ப க ரி ஸ அபூர்வமாக மூன்று ஸ்வரங்கள் வர்ஜமாக இருக்கும் போது ஸ்வராந்தர இராகம் எனப்படும். உ+ம் : மகதி ஆரோகணம் : ஸ க ப நி ஸ் அவரோகணம் : ஸ் நி ப க ஸ பண்டைத் தமிழிசையில் ஷாடவ இராகம் "பண்டியம்" என்றும், ஔடவ இராகம் "திறம்" என்றும் ஸ்வராந்தர இராகம் "திரத்திறம்" என்றும் அழைக்கப்படும். சம்பூர்ண, ஷாடவ, ஔடவ கலப்பினால் எட்டு வகையான வர்ஜ இராகங்கள் உண்டாகின்றன. ஒரு ஜன்ய இராகத்தின் ஆரோகணத்தில் அல்லது அவரோகணத்தில் அல்லது இரண்டிலும் சில ஸ்வரங்கள் ஒழுங்கான வரிசையில் இல்லாமல் முன்னும் பின்னுமாக செல்லுமானால் அந்த இராகம் வக்ர இராகம் எனப்படும். வக்ர இராகங்கள் மூன்று வகைப்படும். 1. ஆரோகணம் மட்டும் வக்ரமாக உள்ளமை. உ+ம் : ஆனந்தபைரவி ஆரோகணம் : ஸ க ரி க ம ப த ப ஸ் அவரோகணம் : ஸ் நி த ப ம க ரி ஸ 2. அவரோகணம் மட்டும் வக்ரமாக உள்ளமை. உ+ம் : சிறீராகம் ஆரோகணம் : ஸ ரி ம ப நி ஸ் அவரோகணம் : ஸ் நி ப த நி ப ம ரி க ரி ஸ 3. ஆரோகணமும் அவரோகணமும் வக்ரமாக உள்ளவை. (உபய வக்ர இராகங்கள்) உ+ம் : ரீதிகௌளை ஆரோகணம் : ஸ க ரி க ம நி த ம நி நி ஸ் அவரோகணம் : ஸ் நி த ம க ம ப ம க ரி ஸ தாய் இராகத்திற்கு உரிய ஸ்வர வகைகளை மட்டும் எடுத்துக் கொள்ளும் இராகம் உபாங்க இராகம் எனப்படும். இவை வர்ஜமாகவோ அல்ல்து வக்ரமாகவோ அமையலாம். உ+ம் : ஹம்சத்வனி ஆரோகணம் : ஸ ரி க ப நி ஸ் அவரோகணம் : ஸ் நி ப க ரி ஸ தாய் இராகத்தைச் சேர்ந்த ஸ்வர வகைகளைத் தவிர வேறு ஸ்வரஸ்தானங்களையும் (அன்னிய ஸ்வரங்களை) எடுத்துக்கொள்ளும் இராகம் பாஷாங்க இராகம் எனப்படும். சில பாஷாங்க இராகங்களில் ஆரோகண அவரோகணத்திலேயே அன்னிய ஸ்வரம் இடம் பெறும். உ+ம் : பைரவி ஆரோகணம் : ஸ ரி க ம ப த* நி ஸ் அவரோகணம் : ஸ் நி த ப ம க ரி ஸ இது 20 வது மேளமாகிய நடபைரவியின் ஜன்யமாகும். வேறு சில பாஷாங்க இராகங்களில் ஆரோகண அவரோகணத்தில் அன்னிய ஸ்வரம் இடம் பெறாமல் சஞ்சாரத்தில் மட்டும் வரும். உ+ம் : காம்போஜி பிரயோகம் : ஸ் நி ப த ஸா பாஷாங்க இராகம் மேலும் மூன்று வகைப்படும். அவையாவன : 1. "ஏகான்ய ஸ்வர பாஷாங்க இராகம்" - இது ஒரு ஸ்வரத்தை உடைய இராகமாகும். உ+ம் : முகாரி, பைரவி, காம்போஜி, பிலஹரி 2. "த்வி அன்னிய ஸ்வர பாஷாங்க இராகம்" - இது இரண்டு ஸ்வரங்களை உடைய இராகமாகும். உ+ம் : புன்னாகவராளி, அடாணா 3. "த்ரி அன்னிய ஸ்வர பாஷாங்க இராகம்" - இது மூன்று ஸ்வரங்களை உடைய இராகமாகும். உ+ம் : ஆனந்தபைரவி, ஹிந்துஸ்தான் காபி, ஹிந்துஸ்தான் பெஹாக் அக்டோபர் 26 வில்லியம் கோல்டிங் சர் வில்லியம் கோல்டிங் ("Sir William Gerald Golding", செப்டம்பர் 19, 1911 – ஜூன் 19, 1993) இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய நாவலாசிரியர் ஆவார். இவரது படைப்புக்களில் மிகவும் பிரபலமானது லார்ட் ஆஃவ் தி பிளைஸ் ("Lord of the Flies") என்பதாகும். பட்டப்படிப்பைத் தொடர்ந்த காலத்திலேயே (1934) தனது முதற் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர் 1961 இன் பின்னர் முழுநேர எழுத்தாளரானார். 1980 இல் ரைட்ஸ் ஆஃவ் பேசேஜ்("Rites of Passage") நாவலுக்காக புக்கர் பரிசு பெற்ற இவர் 1983 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசும் பெற்றார். 1988 இல் சர் பட்டம் பெற்றார். 1993 இல் காலமானார். பட்டயக் கணக்கறிஞர் பட்டயக் கணக்கறிஞர் அல்லது பட்டயக் கணக்காளர் (Chartered Accountant) என்பது பொதுநலவாய நாடுகளிலும் அயர்லாந்திலும் உள்ள தனித்தன்மை வாய்ந்த தொழில்சார் கணக்கறிஞர்கள் குழு உறுப்பினர்களின் தகைமையினை விளம்பும் பட்டமாகும். இப் பட்டயக் கணக்கறிஞர்களின் குழு சட்டத்தன்மை உடையது. பட்டயக் கணக்கறிஞர்கள் நிதிக்கணக்கியல், முகாமைக்கணக்கியல், வரிமுறைமை, வணிக நிறுவனச் சட்டம் உட்பட பல கணக்கியல், நிதியியல் துறைகளில் உயர் பணியில் ஈடுபடும் தகைமையினை கொண்டவர்களாவார்கள். சிவகாசி (திரைப்படம்) சிவகாசி (2005) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பேரரசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய்,அசின்,பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மசாலாப்படம் தங்கை மீது பாசம் உள்ளவரகாத் திகழும் சிவகாசி (விஜய்) தனது சிறுவயதிலேயே குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியே குடித்தனம் நடத்துகின்றார் சிவகாசி.ஒரு உணவு விடுதியை நடத்திவரும் சிவகாசி அங்கு வரும் ஹேமாவா விரும்பப்படுகின்றார்.எவ்வளவு எடுத்துக் கூறியும் ஹேமா தன் மனதை மாற்றிக்கொள்ளாது சிவகாசியுடனே தங்கியும் இருக்கின்றார்.பின்னர் தனது குடும்பக் கதையினை ஹேமாவிற்குக் கூறும் சிவகாசி தனது தங்கையினைப் பார்ப்பதற்காக ஹேமாவின் விருப்பத்தின்படி தங்கை வாழும் ஊருக்குச் செல்கின்றார்.அங்கு தனது தங்கையின் குடும்பம் சிவகாசியின் அண்ணனான உடயப்பாவினால் (பிரகாஷ் ராஜ்) நடுத்தெருவுக்குக் கொண்டுவரப்படுவதை அறியும் சிவகாசி தான் யார் என்பதன் உண்மையினை தெரிவிக்காத வண்ணம் அண்ணன் உடயப்பாவிடமிருந்து பல விடயங்களை அரங்கேற்றுகின்றார் சிவகாசி.இறுதியில் தன் அண்ணனுக்குப் போட்டியாக அரசியலில் போட்டியிடும் சிவகாசி அத்தேர்தலில் வெற்றியும் பெறுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. டும் டும் டும் டும் டும் டும் (2001) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அழகம் பெருமாள் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாதவன், ஜோதிகா, விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர். நகரவாசியான ஆதி (மாதவன்) தனது பெற்றோர்களுக்கு நலமில்லை என்ற பொய்யான காரணத்தைக் காட்டி அவனின் பெற்றோர்கள் தங்கியிருக்கும் ஊருக்கு அழைக்கப்படுகின்றான். பதற்றுடன் வரும் அவனும் பின்னர் தனக்கு பெண் பார்த்து வைத்திருப்பதைத் தெரிவிப்பதற்காகவே இவ்வாறு அழைக்கப்பட்டேன் என்பதனையும் தெரிந்து கொள்கின்றான். கிராமத்துப் பெண்ணான கங்கா (ஜோதிகா) மற்றும் ஆதி இருவரும் ஆரம்பத்தில் திருமணம் செய்வதற்கு மறுக்கின்றனர். பின்னர் இருவரும் காதலிக்கின்றனர். சுயம்வரம் (1972 திரைப்படம்) சுயம்வரம் ("One's Own Choice") (1972) ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள மொழித் திரைப்படமாகும்.இத்திரைப்படமே அடூர் கோபாலகிருஷ்ணனின் முதற் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. எழுத்தாளராகத் திகழும் விஷ்வம் அவர் மனைவியான சீதாவுடன் குடித்தனம் நடத்துகின்றார். திடீரென ஏற்படும் பணப்பற்றாக்குறையினால் அவர்கள் வசதிகள் குறையப்பெற்ற பகுதிகளில் வாழவேண்டிய சூழல் ஏற்படுகின்றது. அச்சமயம் விஷ்வத்திற்கு மரத்தொழிற்சாலையில் வேலை கிடைக்கின்றது. மேலும் குழந்தையினைப் பெற்றெடுக்கும் சீதா நோய் வாய்ப்பட்டிருந்த கணவரைப் பலிகொடுக்கின்றார். இதன்பின்னர் விதவைக் கோலம் பூண்டிருக்கின்றார் சீதா. 1973 மாஸ்கோ சர்வதேச திரைப்படவிழா (ரஷ்யா) 1973 சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது (இந்தியா) முடியாட்சி முடியாட்சி ("monarchy") என்பது, அரசின் ஒரு வடிவம் ஆகும். இதில், அதியுயர் அதிகாரம் முழுமையாகவோ அல்லது பெயரளவுக்கோ ஒரு தனிப்பட்டவரிடம் இருக்கும். இவரே அரசின் தலைவராவார். அத்துடன் இவர் நாட்டு மக்களிலும் வேறான தனி உரிமைகளைக் கொண்டிருப்பார். இந்த அரசுத் தலைவர் மன்னர், அரசர் போன்ற பெயர்களால் அழைக்கப்படுவார். முடியாட்சியில் மன்னருக்கான அதிகாரமானது தற்காலத்தில் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. மன்னருக்கு முழுமையான அதிகாரமற்று முற்றிலும் குறியீடாக (கிரீடம் பெற்ற குடியரசு), பகுதியளவு மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரம் (அரசியலமைப்பு முடியாட்சி), முற்றிலும் சர்வாதிகாரம் (முழுமையான முடியாட்சி) என்று வேறுபடுகிறது. பாரம்பரியமாக மன்னர் இப்பதவியில் அவர் தனது வாழ்நாள் முழுவதும் அல்லது பதவியில் இருந்து விலகும் வரை வகிப்பார். அதன்பிறகு மரபுரிமையில் அடுத்த அரசர் பதவிக்கு வருவார்.   ஆனால் தேர்தலின் வழியாகக்கூட முடியாட்சிகளில் மன்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார். முடியாட்சி என்பதற்குத் தெளிவான வரைவிலக்கணம் கிடையாது. ஐக்கிய இராச்சியம், தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள அரசியல்சட்ட முடியாட்சிகளில் அரசுத் தலைவருக்கு முழுமையான அதிகாரம் கிடையாது. இதனால், எல்லையற்ற அரசியல் அதிகாரத்தைக் கொண்டிருத்தல் என்பதை முடியாட்சியை வரையறுக்கும் ஒரு இயல்பாகக் கொள்ள முடியாது. தலைமுறை ஆட்சி ஒரு பொது இயல்பாக இருப்பினும், தேர்வு முடியாட்சிகளும் உள்ளன. எடுத்துக் காட்டாக வத்திக்கானின் அரசராகக் கருதப்படும் திருத்தந்தையை கர்தினால்கள் தேர்வு செய்கின்றனர். சில நாடுகளில் தலைமுறை அரசுரிமை இருந்தாலும் அவை குடியரசாகக் கொள்ளப்படுகின்றன. 19 ம் நூற்றாண்டு வரை முடியரசானது மிகவும் பொதுவான வடிவமாக இருந்தது, ஆனால் இது நீண்டகாலம் நீடிக்கவில்லை. இப்போது பொதுவாக அரசியலமைப்பு முடியாட்சியே நிலவுகிறது.  இதில் மன்னர் ஒரு சட்ட மற்றும் சடங்கு பாத்திரத்தையே வகிக்கிறார், அரசருக்கு குறைந்த அதிகாரம் அல்லது அரசியல் அதிகாரம் இல்லாத நிலையோ உள்ளது:  எழுதப்பட்ட அல்லது எழுதப்படாத அரசியலமைப்பின் கீழ், மற்றவர்கள் ஆளும் அதிகாரத்தை கொண்டுள்ளனர். தற்சமயம் உலகில் 47 நாடுகள் முடியாட்சி முறையைக் கொண்டிருக்கின்றன. இவற்றுள் 19 நாடுகள் பொதுநலவாய நாடுகள் குழுவைச் சேர்ந்தவை. இவை ஐக்கிய இராச்சியத்தின் அரசர் அல்லது அரசியைத் தமது அரசுத் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளன. வத்திக்கான் நகரத்தைத் தவிர, அனைத்து ஐரோப்பிய முடியாட்சிகளும் அரசியலமைப்பு முடியாட்சிகளாகும்,   ஆனால் சிறிய நாடுகளில் உள்ள அரச இறையாண்மையானது பெரிய நாடுகளின் அரசர்களைவிட தங்கள் நாடுகளில் பெரிய அரசியல் செல்வாக்கைக் கொண்டதாக உள்ளது. கம்போடியா, ஜப்பான், மலேசியாவில் மன்னராட்சி என்றாலும், அவர்கள் அதிகாரத்தின் அளவுக்கு கணிசமான மாறுபாடுகள் உள்ளன. அவை அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஆட்சி செய்தாலும், புரூணை, மொராக்கோ, ஓமன், கத்தார், சவூதி அரேபியா, சுவாசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள எந்தவொரு தனித்துவமான அதிகாரத்தையும் விட அதிகமான அரசியல் செல்வாக்கை அரசியலமைப்பாலோ அல்லது பாரம்பரியங்களாலோ மன்னர்களால் தொடர்ந்து பயன்படுத்துவது தொடர்கிறது. முடியாட்சியை ஆங்கிலத்தில் குறிக்கும் சொல்லான "monarch" () என்ற சொல் கிரேக்க மொழிச் சொல்லான μονάρχης, "monárkhēs" இருந்து வருந்தது. தற்போதைய பயன்பாட்டில், முடியாட்சி என்ற சொல் வழக்கமாக பரம்பரை ஆட்சியின் பாரம்பரிய முறைமையை குறிக்கிறது, தேர்ந்தெடுக்கப்பட்ட முடியாட்சிகள் அரிதானதாக இருந்தன. மன்னர் தலைமையின் பட்டப் பெயரைப் பொறுத்து, முடியாட்சியானது பல்வேற நாடுகளில் கிங்டம், பிரின்சிபாலிட்டி, டச்சீ, பேரரசர், பேரரசு, சாம்ரோம், எமிரேட், சுல்தானகம், கஹானேட் போன்றவாறு குறிப்பிடப்படுகிறது. வாரிசு தலைமை அல்லது பரம்பரை அரசாட்சி என்று அறியப்படும் சமூக பரம்ரை ஆட்சிமுறை வடிவமானது வரலாற்றுக்கு முந்தையது. மரபுசார் பழங்காலத்தில் மன்னர் பெரும்பாலும் ஆங்கிலத்தில் "கிங்" (king) என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து, எகிப்திய மற்றும் மெசொப்பொத்தேமியா முடியாட்சிகள், அதேபோல் புரோடோ-இந்தோ-ஐரோப்பிய சமயக் காலங்களில், மன்னர் என்பவர் புனிதத்தன்மை கொண்டவர்கள், அல்லது வழிபாட்டுக்கு உரிய பேரரசர் எனக் கருதப்பட்டனர். இடைக்காலத்தில் ரோமானிய சாம்ராச்சிய மன்னர்கள் கிறித்தவத்தின் பாதுகாப்பாளராகவும் "தெய்வீக உரிமைபடைத்த அரசர்கள்" என்ற கருத்தை உருவாக்க புனித அம்சங்களுடன் இணைக்கப்பட்டனர்.  சீனா, ஜப்பானிய, நேபாள மன்னர்களும் நவீன காலத்திய கடவுளாக வாழ்கின்றனர். பழங்காலத்தில் இருந்து, முடியாட்சியின் ஜனநாயக வடிவங்கள் வேறுபடுகின்றன, அங்கு நிர்வாக சக்திகள் குடிமக்களின் பங்களிப்பு அற்ற அவைகள் மூலம் கையாளப்பட்டன. பழங்கால ஜெர்மனியில், அரசதிகாரம் என்பது முதன்மையான ஒரு புனித அம்சம் கொண்டதாக கருதப்பட்டது, மேலும் அரசர் என்பவர் சில மரபினரின் பரம்பரையின் நேரடி வாரீசாக இருந்தார், அதே சமயம் அவையோர்களால் அவர் அரச குடும்பத்தில் தகுதி வாய்ந்த அங்கத்தினர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1649 இல் இங்கிலாந்தின் பாராளுமன்றம் ஆங்கிலேய முடியாட்சியைத் தற்காலிகமாக தூக்கியெறிந்து, 1776 ஆம் ஆண்டின் அமெரிக்கப்புரட்சி மற்றும் 1792 பிரெஞ்சுப் புரட்சி ஆகியவற்றைத் தொடர்ந்து பாராளுமன்றவாதமும், முடியாட்சி எதிர்ப்புவாதமும் நவீன காலத்தில் எழுச்சியடையத் தொடங்கியது. 19 ம் நூற்றாண்டு அரசியலின் பெரும்பகுதி, முடியாட்சிக்கான எதிர்ப்பு வாதம் மற்றும் முடியாட்சியாளர் பழமைவாதம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள பிளவுகளால் வகைப்படுத்தப்பட்டது. பல நாடுகள் 20 ம் நூற்றாண்டில் முடியாட்சியை அகற்றின, குறிப்பாக முதலாம் உலகப் போரின்போது அல்லது இரண்டாம் உலகப் போரின்போது குடியரசுகளாக மாறின. குடியரசுக்காக வாதிடுதலை குடியரசுக் கட்சியினர் என்று அழைப்பர், அதே நேரத்தில் முடியாட்சிக்கு ஆதரவான வாதத்தை முடியாட்சிவாதிகள் என்று அழைக்கின்றனர். நவீன சகாப்தத்தில், முடியாட்சியானது பெரிய நாடுகளைவிட சிறிய நாடுகளில் கூடுதலாக உள்ளன. முடியாட்சியானது பெரும்பாலும் மரபுரிமை ஆட்சியாக உள்ளது. இந்த ஆட்சியில் மன்னர் தன் ஆயுள் முழுவதும் மன்னராக இருப்பார். (சில முடியாட்சிகளில் மன்னர்களின் வாழ்நாள் முழுவதும் ஆள்தில்லை: உதாரணமாக, மலேசியாவின் யாங் டி பெர்துவான் அகோங் ஐந்து வருட காலத்திற்கு ஆள இயலும்) மேலும் மன்னர் இறக்கும் போது அவரின் குழந்தை அல்லது அவரின் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினர் அதிகாரத்தை அடைவார். வரலாற்று காலத்திலும் நவீன நாளிலும் பெரும்பாலான பேரரசர்கள், அரச குடும்பத்தில் பிறந்து அரசவையை பார்த்து வளர்ந்தவர்களே. பெரும்பாலும் முடியாட்சியினல் எதிர்காலத்தில் மன்னராக்கூடியவர் என்று எதிர்பார்க்கப்படும் வாரீசுக்கு எதிர்கால ஆட்சிப் பொறுப்புகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். ஒரு அரசனால் ஒரு நாட்டின் அரசு ஆளப்படுவதே முடியாட்சி அல்லது மன்னராட்சி எனப்படும். முடியாட்சியை மக்களாட்சியுடன் ஒப்பிட்டு வேறுபாடு காணலாம். முடியாட்சி ஆட்சியமைப்பில் பல குறைகள் உண்டு. நடராசர் சைவர்களின் கடவுள்களான மும்மூர்த்திகளில் ஒருவரும், அவர்களின் முதன்மைக் கடவுளும் ஆகிய சிவனின் இன்னொரு தோற்றமே கூத்தன் (வடமொழி - நடராசர்) திருக்கோலம் ஆகும். நடனக்கலை நூல்களிலே எடுத்தாளப்பட்டுள்ள நடனத்தின் 108 வகைக் கரணங்களிலும் வல்லவனாகக் கூறப்படுகிறது. எனினும், இவற்றுள் ஒன்பது கரணங்களில் மட்டுமே சிவனின் நடனத் தோற்றங்கள் விபரிக்கப்பட்டுள்ளன. பரவலாகக் காணப்படும் நடராசரின் தோற்றம், ஒற்றைக் காலைத் தூக்கி நின்று ஆடும் நிலையாகும். பஞ்சகுண சிவமூர்த்திகளில் நடராசர் ஆனந்த மூர்த்தி என்று அறியப்பெறுகிறார். நடராசர் என்ற சொல்லானது நட + ராசர் என பகுந்து நடனத்துக்கு அரசன் என்ற பொருள் தருகின்றது. "நடராசர்", "நடராஜா", "நடேசன்", "நடராசப் பெருமான்" என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். கூத்தன் என்றால், கூத்து எனும் ஆடல் கலையில் வல்லவன் என்று பொருள். மேலும் ஞான கூத்தன் என்றும் சிவபெருமான் வழங்கப்படுகிறார். சிவபெருமானை சபேசன் என்று அழைக்கின்றார்கள். இதற்கு "சபைகளில் ஆடும் ஈசன்" என்று பொருள். பொற்சபை (கனக சபை), வெள்ளி சபை (ரஜித சபை), தாமிர சபை, ரத்ன சபை, சித்ர சபை என்று ஐந்து சபைகளில் சிவபெருமான் ஆடியதாக புராணங்கள் கூறுகின்றன. இச்சபைகள் பஞ்ச சபைகள் என்று அழைக்கப்படுகின்றன. அம்பலம் என்ற சொல்லிற்கு திறந்தவெளி சபை என்று பொருளாகும். இந்த வகையான அம்பலத்தில் சிவபெருமான் ஆடுவதால் அம்பலத்தான் என்றும் அழைக்கப்படுகிறார். தில்லையாகிய சிதம்பரத்தில் ஆடுவதால் தில்லையம்பலத்தான் என்றும். சிதம்பரமானது பொன்னம்பலமாகியதால் பொன்னம்பலத்தான் என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் அம்பலத்தாடுபவன், அம்பலத்தரசன் என்றும் அழைக்கப்படுகிறார். சைவ ஆகமங்களிலும், சிற்பநூல்களிலும், பல்வேறு சைவ நூல்களிலும் நடராசர் தோற்றத்தின் விபரங்கள் தரப்பட்டுள்ளன. கோயில் கட்டிடச் சிற்பங்களிலும், வணக்கத்துக்குரிய சிலைகளாகவும் காணப்படும் உருவங்களும் நடராசர் தோற்றத்தை விளக்குகின்றன. ஊன்றியிருக்கும் கால், குப்புற விழுந்து கிடக்கும் முயலகன் என்ற அசுரனின் முதுகின்மீது ஊன்றப்பட்டுள்ளது. இடது கால் உடம்புக்குக் குறுக்காகத் தூக்கப் பட்ட நிலையில் உள்ளது. நான்கு கைகளைக் கொண்டுள்ள நடராசர் தோற்றத்தின் வலப்புற மேற் கையில், உடுக்கை எனப்படும் இசைக் கருவியும், இடப்புற மேற் கையில் தீச்சுவாலையும், ஏந்தியிருக்க, வலப்புறக் கீழ்க் கை அடைக்கலம் தரும் நிலையில் ("அபயஹஸ்தம்") உள்ளது. இடது கீழ்க் கை "தும்பிக்கை நிலை" (கஜஹஸ்தம்) எனப்படும் ஒருநிலையில், விரல்கள், தூக்கிய காலைச் சுட்டியபடி அமைந்துள்ளது. மயிலிறகுபோல் வடிவமைக்கப்பட்ட தலை அணி ஒன்றும், பாம்பும் இத் தோற்றத்தின் தலையில் சூடப்பட்டுள்ளது. இவற்றுடன், கங்கையும், பிறையும் சடையில் காணப்படுகின்றன. முடிக்கப்படாத சடையின் பகுதிகள் தலைக்கு இருபுறமும், கிடைநிலையில் பறந்தபடி உள்ளன. இடையில் அணிந்துள்ள ஆடையின் பகுதிகளும் காற்றில் பறக்கும் நிலையில் காணப்படுகின்றன. நடராசர் தோற்றத்தின் பல்வேறு அம்சங்களுக்கான விளக்கங்களும், காரணங்களும் பழங்கதைகள் ஊடாகவும், தத்துவங்களாகவும் சைவ நூல்களிலே காணக்கிடைக்கின்றன. சிவனின் நடனத்தோற்றம் இறைவனின் ஐந்தொழில்களான "படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்" என்னும் ஐந்தொழில்களைக் குறித்து நிற்பதாகச் சைவ நூல்கள் கூறுகின்றன. உடுக்கை, படைத்தலையும், அடைக்கலம் தரும் கை, காத்தலையும், தீச்சுவாலை, அழித்தலையும், தூக்கிய கால்கள் அருளல் ஆகிய முத்தி நிலையைக் குறிப்பதாகவும் கொள்ளப்படுகின்றது. ஒற்றைக் காலில் நின்றாடும் போதும் நடராஜனின் தலை சமநிலையில் நேரக நிற்கிறது. ஆடுவது தாண்டவமானாலும் சிற்சபை வாசனின் முகமோ சாந்த ஸ்வரூபம். இரண்டு காதுகளிலும் வளைந்த காதணிகள். வலது காதில் பாம்பு வடிவ வளையம். இடது காதில் கனிவாய் குழையும் தோடு வளையம். இந்த கோலத்திலும்் உமையும் தன்னில் பாதி என்பதை இது உணர்த்துகிறது. முக்கண்ணனின் நெற்றியில், புருவங்களுக்கு மத்தியில், நெருப்பாய் எரியும் மூன்றாவது கண். முக்காலத்தையும் கடந்த ஞானத்தை குறிக்கிறது. பொன்னம்பலவனின் ஆனந்த தாண்டவத்தில் பல திசைகளிலும் பறக்கிறது அவன் கேசம். கேசத்தி ஒரு சீராக முடிச்சுகளைக் காணலாம். அந்த கேச முடிச்சுகளில் கீழே உள்ளவற்றையும் பார்க்கலாம்! அவற்றில், சேஷநாகம் - கால சுயற்சியையும், கபாலம் - இவன் ருத்ரன் என்பதையும், கங்கை - அவன் வற்றா அருளையும், ஐந்தாம் நாள் பிறைச்சந்திரன் - அழிப்பது மட்டுமல்ல, ஆக்கத்திற்கும் இவனே கர்த்தா என்பதையும் குறிக்கின்றன. பின் இடது கரத்தில் அக்னி, சிவன் - சம்ஹார மூர்த்தி என்பதை காட்டுகிறது. நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர மந்திரத்தின் (ஐந்தெழுத்து மந்திரம்) முதல் எழுத்தான 'ந' வைக் குறிக்கிறது இந்தக் கரம். ஊன்றி நிற்கும் அவனது வலது கால்களோ, 'ம' என்ற எழுத்தை குறிக்கிறது. மேலும் வலது கால், திரோதண சக்தியை காட்டுகிறது. இந்த சக்தியால் தான் மனிதர் உயர் ஞானத்தை தேடலினால் அனுபவ அறிவாக பெறுகிறார். வலது காலின் கீழே இருப்பது 'அபஸ்மாரன்' எனும் அசுரன் - ஆணவத்தினால் மனித மனம் கொள்ளும் இருளைக் குறிக்கிறான். அவனோ நடராஜன் தூக்கிய இடது காலைப் பார்த்து இருக்கிறான் தஞ்சம் வேண்டி. தூக்கிய இடது கால், ஆணவம் மற்றும் மாயை ஆகியவற்றின் பிடியில் இருந்து விடுபட்டு ஆண்டவனின் அனுக்கிரஹத்தினை அடைந்திட வழி வகை செய்யும். முன் இடது கரமோ, பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான 'வா' வை குறிக்கிறது. இந்தக் கரம் யானையின் துதிக்கைபோல் இருக்க, தூக்கிய இடது காலைப் பாரும் - அங்குதான் மாயை அகற்றி அருள் தரும் அனுக்கிரக சக்தி இருக்கிறதென கைகாட்டி சொல்கிறது. பின் வலது கரம், பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான 'சி' யை குறிக்கிறது. அந்தக் கையில்தான் உடுக்கை (டமரு) என்னும் ஒலி எழுப்பும் இசைக் கருவி. இந்த உடுக்கையின் ஒலியில் இருந்துதான் ப்ரணவ நாதம் தோன்றியது என்பார்கள். அடுத்தாக, ஆடல் வல்லானினின் முன் வலது கரமோ, அபயம் அளித்து, 'அஞ்சாதே' என்று அருளும் காட்சி, பஞ்சாக்ஷர மந்திரத்தின் கடைசி எழுத்தான 'ய' வை காட்டுகிறது. நடராஜனின் திருஉடலில் நாகம் ஒன்று தரித்திருப்பதைப் பார்க்கலாம். இந்த நாகம் - சாதரணமாய் சுருண்டு இருக்கும், யோகத்தினால் எழுப்பினால் உச்சி வரை மேலெழும்பிடும் குண்டலினி சக்தியைக் குறிக்கிறது. அவன் இடையை சுற்றி இருக்கும் புலித்தோல், இயற்கையின் சக்தியை காட்டுகிறது. அதற்கு சற்று மேலே கட்டியிருக்கும் இடைத்துணியோ அவன் ஆடலில், இடது பக்கமாய் பறந்து கொண்டிருக்கிறது! பொன்னம்பலம் தன்னில் நின்றாடும் நடன சபேசனை சுற்றி இருக்கும் நெருப்பு வட்டம், அவன் ஞானவெளியில் தாண்டவாமடுவதை காட்டுகிறது. ஒவ்வொரு தீஜ்வாலையிலும் மூன்று சிறிய ஜ்வாலைகளைக் காணலாம். அதன் மேலே 'மகாகாலம்'. அது, காலத்தின், தொடக்கம், நடப்பு மற்றும் முடிவு தனைக் குறித்திடும். நடராஜராஜன் நின்றாடும் 'இரட்டைத் தாமரை' பீடத்தின் பெயர் 'மஹாம்புஜ பீடம்'. இந்த பீடத்திலிருந்துதான் அண்ட சராசரமும் விரிவடைகிறது என்கிறார்கள்! சிவபிரான் ஐந்தொழில்கள் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) அனைத்தையும் வெவ்வேறு வடிவில் நின்று புரிகிறார் என நால்வர் உட்பட பல நாயன்மார்கள் இயம்பியுள்ளனர். இதில் நடராசர் வடிவத்தில் கூத்தராக ஆடும் சிவன் இவ்வைந்தொழில்களையும் ஒருங்கே செய்ய வல்லமை பெற்றவன் என்ற கருத்துண்டு. நடராச உருவத்தின் தத்துவம் பின்வருமாறு: நடராசர் என்றாலே தில்லை என்று அழைக்கப்படும் சிதம்பரம் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். நடனக்கலைகளின் தந்தையான சிவபெருமானின் நடனமாடும் தோற்றம் நடனராசன் எனப்படுகிறது. இது மருவி நடராசன் எனவும் அழைக்கப்படுகிறது. சிவபெருமானில் பலவகையான நடனங்களில் இத்தலத்தில் ஆனந்த தாண்டவம் நிகழ்கின்றது. பஞ்ச சபைகளில் இத்தலம் கனக சபை என்று போற்றப்படுகிறது. அம்பலத்தில் இது பொன்னம்பலமாகும். தில்லையில் நடனமாடும் முன்பு இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை எனும் தலத்தில் நடராசர் தனிமையில் நடனமாடியதாகப் புராணங்கள் சொல்கின்றன. இத்தலத்தை ஆதி சிதம்பரம் என்றும், இத்தல இறைவன் ஆதிசிதம்பரேசுவரர் என்றும் அழைக்கின்றனர்.இங்குள்ள நடராசர் ஐந்தரை அடி உயரம் - முழுவதும் மரகதத் திருமேனி. விலை மதிப்பிட முடியாத ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே காட்சியளிக்கிறார்.மார்கழித் திருவாதிரை அன்று மட்டும் சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, இரவு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அபிஷேக ஆராதனைகள் முடிந்த பின் மீண்டும் சந்தனக்காப்பு சார்த்தப்படும். அக்காப்பிலேயே அடுத்த மார்கழித் திருவாதிரை வரை பெருமான் காட்சித் தருகிறார். அம்பலவாணர் அம்பிகை காண இங்கு அறையில் ஆடிய நடனத்தை தில்லையில் அம்பலத்தில் ஆடினார் என்று சொல்லப்படுகிறது எப்போதும் வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி ஆடும் சிவ பெருமான், இச்செப்புத் திருமேனியில் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி ஆடுகின்றார். ஒரே காலை ஊன்றி ஆடினால் இறைவனுக்குக் கால் வலிக்குமே என்றெண்ணிப் பாண்டிய மன்னன் கால்மாறி ஆடும்படி வேண்டியதால் சிவ பெருமான் கால்மாறி ஆடியதாகக் புராணங்கள் சொல்கின்றன. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தின், சுவாமி சன்னதியில் வெள்ளியம்பலத்தில் கால்மாறி ஆடிய நடராசர் திருமேனி உள்ளது. -திரிக்கூட ராசப்ப கவிராயர் 2004 ஆம் ஆண்டு இந்திய அரசால் ஜெனிவாவில் உள்ள CERN (European Center for Research in Particle Physics) ஆய்வகத்திற்கு ஆறு அடி உயரம் கொண்ட நடராசர் சிலை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நடராசர் நடன கோலத்தில் காட்சி தரும் இச்சிலை அந்த ஆய்வகத்திற்கு இந்தியாவுடன் இருந்த பல்லாண்டு கால தொடர்பை சுட்டிக்காட்டும் பொருட்டு வழங்கப்பட்டது. உலகத்தின் ஆக்கத்திற்கும், அழிவிற்கும் காரணமாக கருதப்படும் இந்த பிரபஞ்ச நடனத்திற்கும், நவீன இயற்பியலுக்கும் உள்ள தொடர்புகளை சுட்டிக்காட்டும் விதமாக முனைவர் ஃப்ரிட்ஜாஃப் காப்ரா (Fritjof Capra) விளக்கியுள்ள சிறப்பு வாய்ந்த வரிகளும் அதில் உள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன. "Hundreds of years ago, Indian artists created visual images of dancing Shivas in a beautiful series of bronzes. In our time, physicists have used the most advanced technology to portray the patterns of the cosmic dance. The metaphor of the cosmic dance thus unifies ancient mythology, religious art and modern physics." அதாவது, "நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்பே இந்திய கலைஞர்கள் சிவபெருமானின் நடன கோலத்தை வெண்கலத்தில் வடித்துள்ளனர். நம்முடைய காலத்தில், இயற்பியல் வல்லுனர்கள் மிக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த பிரபஞ்ச நடனத்தினை வருணித்துள்ளோம். இந்த பிரபஞ்ச நடனத்தின் உருவணி மெய்ஞானத்தையும், அறிவியலையும் ஒன்றினைக்கிறது." என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்து அவர் "TAO OF PHYSICS" என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் இந்து மதத்திற்கும், இயற்பியலுக்கும் உண்டான தொடர்புகளை அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கிருத்தல் வடக்கிருத்தல் என்பது பண்டைய தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் ஒன்றாகும். இதனை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்கு திசை நோக்கி அமர்ந்தவண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர் துறப்பதே வடக்கிருத்தல் எனப் பழந்தமிழர் கொண்டிருந்தனர். முற்காலத் தமிழகத்தில், போர்களின்போது முதுகிலே புண்பட்டவர்கள், அதை அவமானமாகக் கருதுவர். இதனால், அப் போர்க்களத்திலேயே வடக்கு நோக்கியபடி பட்டினி கிடந்து தமது உயிரைப் போக்கிக் கொள்வது உண்டு. கலைக் களஞ்சியம், வடக்கிருத்தலை 'உத்ரக மனம்' என்றும் ' மகாப் பிரத்தானம்' என்றும் கூறுகிறது. வடக்கிருந்து உயிர் துறந்தோருக்கு நடுகல் இட்டு நினைவுச் சின்னமாக வழிபடுவதும் உண்டு. வடக்கிருத்தல் இக்காலத்தில் வழக்கில் இல்லை. வடக்கு நோக்கி உண்ணா நோன்பிருந்து உயிர் துறக்கும் சமண நோன்பு முறை 'சல்லேகனை' எனப்படும். ஆயினும் இது வடக்கிருத்தலை விட வேறுபட்டது. இது ஆண் பெண் இரு பாலருக்கும் பொதுவாகக் காட்டப்படுகிறது. மேலும் நோன்புக்குரிய காரணியாக மன வேதனையைத் தரும் இடையூறு, தீராத நோய், மூப்பு, வற்கடம் ஆகியவை அமைகின்றன. மேலும் 'சல்லேகனை ' வீடு பேறு பெறுவதற்காக நோன்பிருத்தலைக் குறிக்கும். வடக்கிருத்தலின் அடிப்படைக் காரணியாக அமைவன மானம், வீரம், நட்பு, தன்நோக்கம் நிறைவேறாமை என்பனவாக அமையலாம். வீரர், புலவர், மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் எனப் பழந்தமிழர் நம்பினர். வடக்கிருந்து உயிர் நீப்பவர் மறு பிறப்பில் மன்னராகப் பிறாப்பர் என சிறுபஞ்ச மூலம் சுட்டுகிறது.நாணத்தகு நிலை நேர்ந்ததானால் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன. பழங்காலத் தமிழகத்திலே போர்களுக்குக் குறைவு இருக்கவில்லை, முடியுடை மூவேந்தர்கள் எனக் குறிப்பிடப்படும் சேரர், சோழர், பாண்டியர் என்போரும், அவர்களுக்கு அடங்கிய குறுநில மன்னரும், ஒருவருடன் ஒருவர் போரில் ஈடுபட்டனர். வீரம் என்பது ஆண்களுக்கு இருக்க வேண்டிய சிறந்த பண்புகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. புகழ் பெற்ற மன்னர்கள் பெரும் வீரர்களாக இருந்தார்கள். இத்தகைய வீரர்கள் பற்றிப் புலவர்கள் புகழ்ந்து பாடினர். போர் வரும்போது புறமுதுகிடாமல் (பயந்து ஓடாமல்) முன் நின்று போர் செய்வது வீரர்களுக்கும் அவர்களது ஆண்மைக்கும் அடையாளமாகக் கருதப்பட்டது. மார்பிலே புண்பட்டு இறப்பது புகழுக்குரியது, முதுகிலே புண்படுவது, வீரத்துக்குக் களங்கம் என்று கருதப்பட்டது. முதுகிலே புண்படுவது புறமுதுகிட்டதன் விளைவாக இருக்கலாம் என்பதனால் இவ்வாறு கருதப்பட்டது போலும். சங்க காலத் தமிழ் இலக்கியமான புறநானூற்றில் வரும் பாடல்கள் இரண்டில், சேர மன்னனான பெருஞ்சேரலாதன், கரிகால் சோழனுடன் ஏற்பட்ட போரின்போது முதுகில் புண் பட்டதனால் வடக்கிருந்து உயிர் துறந்தது பற்றிய செய்தி வருகிறது.அவ்வாறு வடக்கிருந்து உயிர் விடுவதன் மூலம், வீரர்கள் தங்களுக்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்கிக் கொள்ள முடிந்தது என்பதும், முதுகிலே அம்பெய்தவனுக்கு அது ஒரு களங்கமாகக் கருதப்பட்டது என்பதும் இப்பாடல்கள் மூலம் தெரிய வருகிறது. தன் புதல்வர்கள் செயலுக்கு நாணிய கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் துறந்ததும் காணாமலே அவருடன் நட்புக் கொண்ட புலவர் பிசிராந்தையார் அவனுடன் வந்து வடக்கிருந்து உயிர் விட்ட நட்பின் மாட்சிமையும் புறநாற்றுப் பாடல்கள் மூலம் அறியப்படுகிறது.. மானம், நட்பு காரணமாக உண்ணாமல் வடக்கிருத்தல் சங்ககால வழக்கம். இந்தக் கருத்து மருவி, உண்டும் உண்ணாமலும் இருக்கும் துறவிகளைக் குறிக்கவும் 'வடக்கிருந்தார்' என்னும் சொல் படன்படுத்தப்பட்டுள்ளது. கழாத்தலையார் கழாத்தலையார் அல்லது கழாஅத்தலையார் எனக்குறிப்பிடப்படும இவர் சங்க காலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இப்புலவர் தம் பாடல் ஒன்றில் தன் மகன் வெட்டுண்டு கிடப்பதைப் பார்த்து தன் தலையைக் கழுவாமல் இருந்த ஒருத்தியைக் குறிப்பிடுகியார். இவரது பெயர் தெரியாத நிலையில் இவரை இவரது பாடலில் பயின்றுவரும் தொடரைக்கொண்டு 'கழாஅத்தலையார்' என்றனர். புறநானூற்றில் காணப்படும், 62, 65, 270, 288, 289, 368 ஆம் பாடல்கள் இப்புலவரால் பாடப்பட்டவை. இவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டளவில் வாழ்ந்தவர் எனக் கருதப்படுகின்றது. கோசர் கோசர் என்பவர் பண்டைக்காலத் தென்னிந்தியாவின் குறுநில மன்னர்களாக இருந்தவர்கள். இவர்கள் தொன்மையான குடியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் துளு நாட்டிலும், கொங்கணத்திலும், கொங்கு நாட்டிலும் அதிகாரம் பெற்றிருந்ததோடு தமிழ் நாட்டின் வேறு பல பகுதிகளிலும் இவர்கள் சிற்றரசர்களாக இருந்திருக்கின்றனர். இவர்கள் கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கருதப்படுகிறார்கள். இவர்களைப் பாடிய புலவர்கள், இவர்களுக்குப் பல சிறப்பு அடை மொழிகளைக் கொடுத்துள்ளார்கள். அவற்றுள், முதுகோசர், இளம் கோசர், நான்மொழிக் கோசர், வாய்மொழிக் கோசர், செம்மற் கோசர், நீள்மொழிக் கோசர், ஒன்றுமொழிக் கோசர் போன்றவை அடங்குகின்றன. இவற்றிலிருந்து கோசர்கள் வாய்மை தவறாதவர்கள் என்றும், பல மொழிகளை அறிந்தவர்கள் என்பதும் விளங்குவதாகச் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். வலம்புரி கோசர் அவைக்களம் வலம்புரிச் சங்கு போன்ற அமைப்பினைக் கொண்டிருந்ததால் இவர்கள் இவ்வாறு சிறப்பிக்கப்பட்டுள்ளனர். அடைநெடுங் கல்வியார். இவர்கள் தான் தமிழகத்தின் இருண்ட காலத்தில் தமிழகத்தை ஆண்ட களப்பிரர்கள் என்று தமிழக தொல்பொருள ஆய்வாளர்களான நடன காசிநாதன் போன்றோர் சந்தேகிக்கின்றனர். கோசர் கொங்குமண்டலத்தில் இருந்துகொண்டு அரசாண்டனர். தமிழ் வளர்ந்தோங்கப் பெரிதும் அக்கரை காட்டியவர்கள். இந்திரசித்து இந்திரஜித் இராமாயணக் கதையில் வரும் இராவணனின் மகனாவான். இவனது தாயார் மண்டோதரி. இவன் மந்திர வலிமைப்படைத்தவன். இவன் மேகநாதன் எனவும் அழைக்கப்பட்டான். இந்திரஜித் பிறந்து முதன்முதலில் அழுதபோது இடியும் மின்னலும் ஒரு பெரும் வீரனின் பிறப்பைக் குறித்து உருவாகியமையால் "மேகநாதன்" என்று பெயரிடப்பட்டான். தேவர்களின் அரசனான இந்திரனை வென்று சிறைப்படுத்தியமையால் இந்திரனை வென்றவன் என்று பொருள்படும் இந்திரஜித் என்ற பட்டப்பெயர் இவனுக்கு பிரம்மாவால் வழங்கப்பட்டது. சுலோச்சனா இந்திரஜித்தின் மனைவியாவர். சீதையை மீட்கும் போரில், இந்திரஜித், இலக்குமணால் வீழ்த்தப்படுகிறான். அக்டோபர் 27 சிவப்பு பாண்டா சிவப்பு பாண்டா (Red Panda) (இலத்தீன்: "Ailurus fulgens" நெருப்பு வண்ணப் பூனை) பூனையை விட சற்று பெரிதான, பெரும்பாலும் மரக்கறியே உண்ணும் ஒரு பாலூட்டி விலங்கு ஆகும். கரடிப் பூனை அல்லது ஃபயர்ஃபாக்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் மூங்கிலையே உணவாகக் கொள்கின்றன. அடர்த்தியான முடிகளுடன் காணப்படும் இவை இமயமலையையும் தென் சீனாவையும் பிறப்பிடமாகக் கொண்டவை. இது சிக்கிமின் மாநில விலங்காகும். மக்கள் தொகைக்கோட்பாடு பற்றிய கட்டுரை மக்கள் தொகைக்கோட்பாடு பற்றிய கட்டுரை (An Essay on the Principle of Population) எனும் நூல் 1798 ம் ஆண்டில் வண பிதா.தோமஸ் ரொபர்ட் மால்தஸினால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது.அக்காலகட்டத்தில் மக்கள் தொகை பற்றி ஆராய்ந்து பல நூல்கள் வெளியிடப்பட்டபோதும், மக்கள்தொகைப்பெருக்கமும் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த கணிதரீதியான எதிர்வு கூறலினால் இந்நூல் பலரது கவனத்தை பெற்றுக்கொண்டது. இக் கட்டுரை நூல் பிரித்தானியாவில் மக்கள்தொகைபெருக்கம் குறித்த சர்ச்சைகள் விவாதங்களைக் தோற்றுவித்ததுடன்,மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டமும் (Census Act 1800) நிறைவேறுவதற்கு வழிகோலியது.இச்சட்டதின் பயனாக இங்கிலாந்தினில் 1801 ம் ஆண்டு தொடங்கி இன்றுவரை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுக்கப்பட்டு வருகின்றது. மக்கள்தொகையின் அளவானது பெருக்கல் விருத்தியின் அடிப்படையினில் (உ+ம்:2,4,8,16,32,64) அதிகரித்துச் செல்லும் போக்கு உடையது அதே சமயம் உணவு உற்பத்தியின் அளவு கூட்டல் விருத்தியின் அடிப்படையில்(உ+ம்:1,2,3,4,5,6) அதிகரிக்கும் தன்மையினை கொண்டது இதன் காரணமாக எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறை தோன்றும் என்றும் நாட்டினில் பலவிதமான குழப்பங்கள்,வறுமை,போர் போன்ற அழிவுஅபாயங்கள் ஏற்படும் என்ற மால்தஸ் எதிர்வுகூறலே இந் நூலின் அடிப்படைக் கருத்தாகும். 1798ல் வெளியிடப்பட்ட 1ம் பதிப்பினை தொடர்ந்து 1803 1806, 1807, 1817, மற்றும் 1826ல் தொடர்ச்சியாக 6 பதிப்புக்கள்வரை புதிய விபரங்களுடன் வெளியீட்டார்.1830 ம் ஆண்டில் இவ் 6 பதிப்புக்களின் சாரம்சத்தினை தொகுத்து "A Summary View on the Principle of Population" எனும் நூலாக வெளியீட்டார். 1834ம் ஆண்டில் மால்தஸ் இறந்தார். யாழ்ப்பாண வரலாறு இலங்கையின் வடபகுதியில் உள்ளது யாழ்ப்பாணம். இப் பெயர் தற்காலத்தில் யாழ்ப்பாண நகரத்தையும், யாழ்ப்பாண மாவட்டத்தையும் குறிக்கப் பயன்படுவது என்றாலும், இன்று நாம் யாழ்ப்பாண அரசு என்று குறிப்பது இவற்றிலும் பெரிய ஒரு நிலப்பகுதியை ஆகும். இது வலுவுடன் இருந்த காலத்தில், இன்றைய வடமாகாணம் முழுவதையும், கிழக்கின் பகுதிகளையும், புத்தளம் வரையிலான மேற்குக் கரையோரங்களையும் உள்ளடக்கி இருந்தது. இதனுடைய எல்லை காலத்துக்குக் காலம் மாறி வந்துள்ளது ஆயினும், இதனுடைய தலைமை இடமும், மக்கட்செறிவும் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு உள்ளேயே இருந்து வந்திருக்கிறது. யாழ்ப்பாண வரலாறு என்னும் இந்தக் கட்டுரை யாழ்ப்பாணம் என்பதற்குக் குறிப்பிட்ட எல்லையை வரையறை செய்யாமல், குறிப்பிட்ட காலங்களில் யாழ்ப்பாணம் என்ற சொல்லால் பொதுவாகப் புரிந்து கொள்ளப்பட்ட பகுதிகளினது வரலாற்றைக் கையாளுகின்றது. யாழ்ப்பாண வரலாற்றை வசதி கருதிப் பின்வரும் கட்டங்களாகப் பிரிக்கலாம். யாழ்ப்பாணத்தின், 12 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட வரலாற்றை அறிந்து கொள்வதற்கான சான்றுகள் இன்றுவரை மிக அரிதாகவே காணப்படுகின்றன. பொதுவாக, ஒரு நாட்டின் அல்லது ஒரு பகுதியின் வரலாற்றை வெளிப்படுத்துவனவான, இலக்கியச் சான்றுகள், தொல்லியல் சான்றுகள், வாய்மொழிச் சான்றுகள் முதலியவை போதிய அளவு இல்லை. வேதிச் சேர்மம் வேதிச் சேர்மம் "(Chemical Compound)" என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் சேர்ந்து உருவாகும் ஓர் உறுப்படி ஆகும். ஒரு தனிமத்திலிருந்து குறைந்தபட்சம் இரண்டு அணுக்கள் இவ்வுறுப்படியில் வேதிப் பிணைப்பால் இணைக்கப்பட்டிருக்கும். இரசாயனச் சேர்வை, சேர்வை, சேர்மம் என்னும் பெயர்களாலும் இது அழைக்கப்படும். அணுக்களுக்கிடையில் உருவாகும் பிணைப்புகளின் தன்மையைச் சார்ந்து இச்சேர்மங்கள் நான்கு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அவை, சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டு ஒன்றான சேர்மங்கள், அயனிப்பிணைப்பால் பிணைக்கப்பட்டு ஒன்றான சேர்மங்கள், உலோகப் பிணைப்பால் பிணைக்கப்பட்டு ஒன்றான உலோகமிடைச்சேர்மங்கள், ஈதல் சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டு ஒன்றான அணைவுச்சேர்மங்கள் என்பனவாகும். வேதிச்சேர்மங்கள் யாவும் ஒரு குறிப்பிட்ட அடையாள எண்ணைக் கொண்டுள்ளன. சிஏஎசு எண் எனப்படும் இவ்வடையாள எண்ணை அமெரிக்க வேதியியல் குமுகம் ஒவ்வொரு வேதியியல் பொருளுக்கும் தனித்தனியாக வழங்கிப் பதிவுசெய்கிறது. வேதிச்சேர்மத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தும் வேதியியல் வாய்ப்பாடு, அச்சேர்மத்தின் பகுதிப் பொருள்கள் எவ்விகிதத்தில் சேர்ந்து அச்சேர்மமாக உருவாகின என்பதை வெளிப்படுத்தும். இவ்வாய்ப்பாடுகளில், அனைத்துலக அளவில் தரப்படுத்தப்பட்ட சுருக்கக் குறியீடுகள் தனிமங்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகின்றன. உடன் பயன்படுத்தப்படும் கீழிலக்க எண்கள் அச்சேர்மத்தில் பங்கேற்றுள்ள அணுக்களின் எண்ணிக்கையை வெளிப்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, இரண்டு ஐதரசன் அணுக்களையும் ஒரு ஆக்சிசன் அணுவினையும் கொண்ட நீர் (H2O) ஒரு சேர்மம் ஆகும். எனினும் தனியே ஒரு தனிமம் கொண்ட மூலக்கூறுகளாலான பொருள்களைச் சேர்மமாகக் கருதுவதில்லை. உதாரணமாக, ஐதரசன் வாயு (H2) ஒரு சேர்மம் அல்ல. இதன் தரப்படுத்தப்பட்ட குறியீடு H ஆகும். இங்ஙனமே ஆக்சிசன் அணுவின் தரப்படுத்தப்பட்ட குறியீடு O ஆகும். H2O என்ற வேதி வாய்ப்பாட்டில் கீழிலக்கமாக கொடுக்கப்பட்டுள்ள 2 என்ற எண் இரண்டு ஐதரசன் அணுக்கள் நீர் மூலக்கூறில் இடம்பெற்றுள்ளன என்பதைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஒரு சேர்மத்தை, இரண்டாவது மற்றொரு வேதிச் சேர்மத்துடன் வினைபுரியச் செய்து அதை ஒரு வேதி வினையின் வழியாக வெவ்வேறு சேர்மமாக மாற்ற முடியும். வினையில் ஈடுபடும் இரண்டு சேர்மங்களிலும் உள்ள வேதிப் பிணைப்புகள் இச்செயல்முறையில் பிளவுண்டு பின்னர் மீண்டும் மறுபிணைப்பில் ஈடுபட்டுப் புதிய பிணைப்புகளுடன் ஒரு புதிய சேர்மமாக உருவாகின்றன. புதிய சேர்மம் உருவாதலை formula_1 என்ற திட்டத்தின்படி எழுதலாம். இங்கு A, B, C, மற்றும் D என்பவை தனித்துவமிக்க அணுக்களாகும். இதேபோல AB, CD, AC, மற்றும் BD என்பவை தனித்துவமிக்க சேர்மங்களாகும். ஒரு தனிமம் அதற்கு இணையாக அதே தனிமத்துடன் பிணைப்புகளால் இணைந்து ஒரு உறுப்படியாக உருவாகினால் அவற்றையும் சேர்மம் என்று கருதுவதில்லை. ஏனெனில் அங்கு ஒன்றுக்கு மேற்பட்ட வெவ்வேறு தனிமங்கள் பிணைப்பில் பங்கு கொள்ளவில்லை. உதாரணமாக ஐதரசன் என்ற தனிமத்தில் ஈரணு மூலக்கூறு, இதில் ஐதரசன் என்ற ஓர் அணுவே இரண்டுமுறை சேர்ந்து ஓர் ஈரணுவாக உருவாகியுள்ளது. இவ்வாறே கந்தகத்தையும் கூறலாம், (S8) இல் கந்தக அணுக்கள் எட்டு ஒன்றாக பிணைக்கப்பட்டு பல்லணுவாக உள்ளன. இங்கும் ஓர் அணுவுக்கு மேற்பட்ட அணுக்கள் பங்கு கொள்ளவில்லை. எனவே (S8) ஐயும் சேர்மம் என்று அழைப்பதில்லை. ஒரு நிலையான வேதிவினைக்கூறுகளின் விகிதத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு வகையான தனிமங்களின் அணுக்களைக் கொண்டுள்ள எந்தவொரு வேதிப்பொருளும் சேர்மம் என்று அழைக்கப்படும். தூய்மையான வேதிச்சேர்மங்களைக் கருத்திற் கொண்டு இவ்வரையறையை நோக்கினால் சேர்மம் என்ற சொல்லின் பொருள் எளிமையாக விளங்கும் . இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வகையான அணுக்கள் நிலையான விகிதாச்சாரத்தில் சேர்ந்து உருவாதல் என்ற கொள்கையை தூய்மையான சேர்மங்கள் பின்தொடர்கின்றன. இவற்றை வேதிவினைகளின் மூலமாக குறைந்த அளவு அணுக்கள் கொண்ட சேர்மங்களாக அல்லது பொருட்களாக மாற்ற இயலும் . நிலையான விகிதவியல் அளவுகளில் உருவாகாத சேர்மங்களைப் பொறுத்தவரை அவற்றின் தயாரிப்பை மீள உருவாக்க முடியும். அவற்றின் பகுதிக்கூறுகளும் நிலையான விகித அளவுகளில் இருக்கமுடியும். ஆனால் அவற்றின் விகிதங்கள் முழுவெண்ணாக இருப்பதில்லை. உதாரணமாக, பல்லேடியம் ஐதரைடு சேர்மம் PdHx (0.02 < x < 0.58)] என்ற விகிதத்தில் காணப்படுகிறது . ஒரு தனிப்பட்ட அடையாளம் மற்றும் வரையறுக்கப்பட்ட இரசாயன கட்டமைப்புள்ள இரசாயனச் சேர்மங்கள், வரையறுக்கப்பட்ட இடவெளி அமைப்புடன் வேதிப்பிணைப்புகளால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டு ஒன்றாக இணைந்துள்ள சேர்மங்களை மூலக்கூற்று சேர்மங்கள் என்றும், அயனிப் பிணைக்கப்பட்டு ஒன்றாக இணைந்துள்ளவற்றை உப்புகள் என்றும், உலோகப் பிணைப்பால் பிணைக்கப்பட்டு ஒன்றாக இணைந்துள்ள சேர்மங்களை உலோகமிடைச் சேர்மங்கள் என்றும், ஒருங்கிணைந்த சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டு ஒன்றாக இணைந்துள்ள சேர்மங்களை அனைவுச் சேர்மங்கள் என்றும் அழைக்கிறார்கள் . தூய்மையான வேதித் தனிமங்கள் வேதிச்சேர்மங்கள் என்ற பகுப்பில் பிரிக்கப்படுவதில்லை. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்களைப் பகுதிப் பொருளாக கொண்டிருக்க வேண்டும் என்ற விதியால் இவை ஒதுக்கப்படுகின்றன. பெரும்பாலும் இவற்றை பல அணுக்கள் ஒன்றினைந்த மூலக்கூறுகள் என்று கருதப்படுகின்றன. சில நேரங்களில் சீரற்ற பெயரிடும் முறையும், பொருட்களை வகைப்படுத்தும் பல்வேறு மாறுபடும் வகைப்பாடுகளும் காணப்படுகின்றன. உண்மையாக இவை விகிதவியல் அளவுகளில் உருவாகாத வேதிச் சேர்மங்களிலிருந்து கொடுக்கப்படும் உதாரணங்களாகும். குறிப்பாக இவற்றுக்கு நிலையான விகிதங்கள் தேவைப்படுகின்றன. பல திண்ம வேதியியல் பொருட்கள்- உதாரணமாக பல சிலிக்கேட்டு கனிமங்கள் வேதியியல் பொருட்களாகும். ஆனால், பகுதிக்கூறுகளை எடுத்துக் காட்டக்கூடிய தனிமங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ள நிலையான விகிதத்தில் இணைந்துள்ளதை கூறும் எளிய வேதியியல் வாய்ப்பாடு இவற்றுக்குக் கிடையாது. இருந்தாலும், இப்படிக உருவச் சேர்மங்கள் விகிதவியல் ஒவ்வா சேர்மங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை இராசயனச் சேர்மங்கள் என்பதைக் காட்டிலும் அவற்றுடன் தொடர்புடைய சேர்மங்கள் என அழைக்க வாதிடுவோர் உண்டு. பொதுவாக படிக அமைப்பில் சிக்கியுள்ள பிற தனிமங்களின் இருப்பே, இவற்றின் பகுதிப்பொருட்களின் இயைபில் காணப்படும் வேறுபாட்டிற்கு காரணமாகும். இல்லையெனில் இவையும் உண்மையான வேதிச் சேர்மங்களேயாகும். அல்லது ஓர் அறிந்த சேர்மத்திலிருந்து தோன்றும் படிகக் கட்டமைப்பிலுள்ள வட்டணைக் குலைவு விகிதவியல் ஒவ்வா சேர்மமாகக் கருத காரணமாக அமைகிறது. அத்தகைய விகிதவியல் ஒவ்வா பொருட்களால், பூமியின் மேலடுக்கும் கீழடுக்கும் பெரும்பாலும் உருவாகின்றன. இவை தவிர வேதியியல் முறைப்படி ஒத்துள்ள பிற தனிமங்கள் சில அவற்றில் இடம்பெற்றுள்ள கன அல்லது இலேசான ஓரிடத்தான்களை பொறுத்து விகித அளவுகளில் மாறுபடுகின்றன. ஒரு சேர்மத்திலுள்ள தனிமங்கள் திட்டவட்டமான விகிதத்தில் இடம்பெற்றுள்ளன என்பது அச்சேர்மத்தின் சிறப்பியல்புகளில் ஒன்றாகும். உதாரணமாக நீர் மூலக்கூறில் ஐதரசனும் ஆக்சிசனும் 2:1 என்ற நிலையான விகிதத்தில் கலந்துள்ளன. இவ்வாறு உருவாகும் சேர்மங்கள் அவற்றுக்கென தனியாக சில பண்புகளைக் கொண்டிருக்கின்றன. அவற்றின் பகுதிக்கூறுகள் தங்களின் தனிப்பட்ட பண்புகளை தொடர்ந்து வைத்திருக்காமல் சேர்மத்தின் பண்புகளைப் பெறுகின்றன. உதாரணமாக, எரிக்க முடிகின்ற ஆனால் எரிதலுக்கு துணைபோகாத ஐதரசன் வாயு எரியாத ஆனால் எரிதலுக்கு துணை செய்கின்ற ஆக்சிசனுடன் சேர்ந்து நீரை உருவாக்குகிறது. விளைபொருளான தண்ணீர் எரியவும் எரியாது, எரிதலுக்கும் துணை போகாது. நீர் எனும் சேர்மம் தனக்கே உரிய தனித்துவமான இயல்பைக் காட்டுகின்றதே தவிர அதனை ஆக்கிய தனிமங்களின் இயல்பைக் காட்டவில்லை. ஆக்ஸிஜன் வாயு, ஐதரசனும் வாயு எனினும் நீர் திரவமாகும். இது முற்றிலும் தனித்துவமான இயல்பாகும். அதாவது சேர்மங்கள் எப்போது தனித்துவமான இயல்புகளைக் காட்டுவனவாகும். சேர்மங்களின் இயற்பியல் பண்புகளும் வேதிப்பண்புகளும் அவற்றின் பகுதிக்கூறுகளாக இடம்பெற்றுள்ள தனிமங்களின் பண்புகளில் இருந்து வேறுபட்டிருக்கின்றன. சேர்மங்களும் கலவைகளுக்கும் அல்லது பொருட்களுக்கும் இடையிலுள்ள முக்கியமான வேறுபாடே இச்சிறப்புப் பண்பாகும். பொதுவாக கலவைகளின் பண்புகள், அவற்றினுடைய பகுதிப்பொருட்களின் பண்புகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும். பகுதிக்கூறுகளின் பண்புகள் இழக்கப்படுவதில்லை. ஒரு கலவையிலுள்ள பகுதிப் பொருட்களை எளிய இயற்பியல் முறைகளைக் கொண்டே பிரித்துவிடலாம் என்பது கலவைக்கும் சேர்மத்திற்குமிடையான மற்றொரு வேறுபாடாகும். கையால் எடுத்தல், புடைத்தல், வடிகட்டுதல், ஆவியாக்குதல் அல்லது காந்தப் பிரிப்பு முறை போன்றவை எளிய இயற்பியல் முறைகளாகும். ஆனால் சேர்மங்களின் பகுதிக்கூறுகளை வேதியியல் முறைகளால் மட்டுமே பிரிக்கமுடியும். இரும்பையும் கந்தகத்தையும் வெப்பமேற்றுவதன் மூலம் பெறப்பெடும் இரும்பு(II)சல்ஃபைட்டு சேர்மத்தை ஆக்கும் பகுதிப்பொருட்களான இரும்பையும் சல்பரையும் காந்தத்தின் மூலமோ பிற பௌதிக முறையாலோ பிரித்தெடுக்க முடியாது. ஆனால் வெப்பமேற்றாமல் இயற்பியல் முறையால் கலக்கப்பட்ட இரும்புத்தூள் மற்றும் கந்தகத்தை சாதாரண காந்தத்தின் உதவியுடன் பிரித்தெடுக்கலாம். இவ்வாறே கலவைகளை எளிமையாக இயற்பியல் முறைகளால் உருவாக்கிவிடலாம். ஆனால் சேர்மங்களை உருவாக்க வேதியியல் வினைகளால் மட்டுமே இயலும். சில கலவைகள் சேர்மங்களைப் போல மிகநெருக்கமாக இணைந்து சேர்மங்களின் பண்புகளைப் போலவே சில பண்புகளைப் பெற்று தவறுதலாக சேர்மங்கள் என்று கருதப்படும் வாய்ப்புகளும் ஏற்படுகின்றன. கலப்புலோகங்கள் இதற்குச் சரியான எடுத்துக்காட்டாகும். சில உலோகக் கலவைகள் எளிய இயற்பியல் முறைகளினால் உருவாக்கப்படுகின்றன. சூடுபடுத்தும் செயல் மூலம் திண்மமாகக் காணப்பட்ட உலோகப் பகுதிப்பொருட்களை நீர்மநிலைக்கு மாற்றி ஒன்றாக கலந்து ஒர் உலோகக் கலவை தயாரிக்கப்படுகிறது. உலோகமிடைச் சேர்மங்கள் மற்றும் கார உலோகக் கரைசல்கள் அமோனியாவின் திரவக்கரைசலில் கலந்திருப்பதும் சேர்மத்தைப் போன்ற கலவைக்கு மற்றுமொரு எடுத்துகாட்டாகும். ஒர் இரசாயன வாய்ப்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட வேதியியல் சேர்மத்தில் கலந்துள்ள அணுக்களின் விகிதத்தைப் பற்றிக் கூறும் ஒரு வழிமுறையாகும். தனிமங்களின் குறியீடுகள், எண்கள், சிலசமயங்களில் வேறு குறியீடுகளான அடைப்புக்குறிகள், கோடுகள், காற்புள்ளி, கூட்டல் மற்றும் கழித்தல் குறிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி ஒற்றை வரியாக உருவாக்கப்படுவதே வாய்ப்பாடு ஆகும். பல்வேறு வடிவ வாய்ப்பாடுகளால் சேர்மங்கள் விவரிக்கப்படுகின்றன. வாய்ப்பாடுகள் பல அமைப்புகளில் எழுதப்படுகின்றன. மூலக்கூறுகளாக இருக்கும் சேர்மங்கள், மூலக்கூறு அலகு வாய்ப்பாடுகளால் காட்டப்படுகின்றன. கனிமங்கள், உலோக ஆக்சைடுகள் போன்ற பலபகுதிப் பொருள்கள் அனுபவ வாய்ப்பாட்டால் குறிக்கப்படுகின்றன. உதாரணமாக, சாதாரண மேசை உப்பு NaCl என்ற வாய்ப்பாட்டால் குறிக்கப்படுகிறது. வேதி வாய்ப்பாட்டில் இடம்பெற்றுள்ள தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட சிறப்பு வரிசையின்படி எழுதப்படுகின்றன. இல் முறை என்பது வேதிப்பொருட்களின் மூலக்கூற்று வாய்ப்பாட்டை ஒரு குறிப்பிட்ட வரிசையில் எழுதும் முறையாகும். இம்முறையானது 1900 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த எட்வின். ஏ. இல் என்பாரால் அறிமுகப்படுத்தப்பட்டது . இதுவே மூலக்கூற்று வாய்ப்பாடுகளை எழுதுவதில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் முறையாகும் . இம்முறையில் முதலில் கார்பனின் குறியீடும், பின்னர் ஐதரசனின் குறியீடும், அதன் பின்னர் ஆங்கில நெடுங்கணக்கு வரிசையில் அணுக்களின் பிற குறியீடுகளும் பட்டியலிடப்படுகின்றன. மூலக்கூற்றில் கார்பன் அணு இல்லாவிட்டால் நெடுங்கணக்கு வரிசையின் அடிப்படையில் மூலக்கூற்று வாய்ப்பாடு எழுதப்படும். இம்முறையானது மூலக்கூற்று வாய்ப்பாட்டில் எளிதாக அணு எண்ணிக்கைகளைத் தேடியறிய உதவும். எனினும், பொதுவான இவ்விதிமுறைகளுக்கு சில விதிவிலக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. அயனிச் சேர்மங்களைப் பட்டியலிடும் போது பெரும்பாலும் நேர்மின் அயனிகளை முதலிலும், எதிர்மின் அயனிகளை அடுத்ததாகவும் குறிப்பிட வேண்டும். ஆக்சைடுகளில் ஆக்சிசன் இறுதியாகவே குறிக்கப்படும். பொதுவாக, கரிம அமிலங்கள் வாய்ப்பாட்டுப் பொது விதிகளைப் பின்பற்றுகின்றன. கார்பனும் ஐதரசனும் முதலில் பட்டியலிடப்படுகின்றன. உதாரணமாக முப்புளோரோ அசிட்டிக் அமிலம் அல்லது டிரைபுளோரோ அசிட்டிக் அமிலம் C2HF3O2 என்ற வாய்ப்பாட்டால் குறிக்கப்படுகிறது. டிரைபுளோரோ அசிட்டிக் அமிலத்தின் வாய்ப்பாட்டை CF3CO2H. என்று எழுதுவது போல அமையும் அதிக விவரங்களைக் கொண்ட வாய்ப்பாடுகள் அச்சேர்மத்தின் கட்டமைப்பு விவரத்தினைத் தருகின்றன. பெரும்பாலான கனிம அமிலங்களுக்கும் காரங்களுக்கும் வாய்ப்பாட்டின் பொது விதியிலிருந்து விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. அவை அயனிச் சேர்மங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு விதிகளின்படி நேர்மின் அயனிகள் முதலாகவும், எதிர்மின் அயனிகள் அடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டு பட்டியலிடப்படுகின்றன. ஆனால் இவை அர்ரீனியசு வரையறைகளுக்கு கட்டுப்படுகின்றன. சிறப்பாக குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் கனிம அமிலங்கள் யாவும் ஐதரசனைக் கொண்டே தொடங்குகின்றன. அதே போல கனிமக் காரங்கள் யாவும் ஐதராக்சில் குழுவைக் கொண்டே முடிகின்றன. கனிமச் சேர்மங்களின் வாய்ப்பாடுகள் கட்டமைப்புத் தகவல்கள் எதையும் தருவதில்லை. பொதுப் பயன்பாட்டுக்காக அவற்றின் வாய்ப்பாடுகள் தரப்படுகின்றன. கந்தக அமிலம் H2SO4 என்ற வாய்ப்பாட்டால் குறிப்பிடப்படுகிறது. அதிக விவரங்களைத் தரும் வகையில் எழுதப்படுமேயானால் அதை O2S(OH)2, என எழுதலாம். நடைமுறையில் கந்தக அமிலத்தை இவ்வாறு எழுதுவதில்லை. சேர்மங்கள் பல்வேறு நிலைகளில் இருப்பதற்கான சாத்தியங்கள் கொண்டவையாகும். அனைத்துச் சேர்மங்களும் குறைந்தபட்சம் அவற்றின் தாழ் வெப்பநிலையிலாவது திண்மமாக இருக்க முடியும். மூலக்கூற்றுச் சேர்மங்கள் நீர்மங்களாகவும் வாயுக்களாகவும் சில நிகழ்வுகளில் பிளாசுமாவாகவும் கூடக் காணப்படுகின்றன. அனைத்துச் சேர்மங்களும் சூடுபடுத்தினால் சிதைவடைகின்றன. எந்தக் குறிப்பிட்ட வெப்பநிலையில் சேர்மங்கள் தனித்தனித் துண்டுகளாகச் சிதைகின்றனவோ அந்த வெப்பநிலை சிதைவு வெப்பநிலை எனப்படுகிறது. இச்சிதைவு வெப்பநிலை துல்லியமாக இருப்பதில்லை. ஒவ்வொரு சேர்மத்திற்கும் அழுத்தம், வெப்பநிலை, அடர்த்தி போன்ற காரணிகளால் சிதைவு வெப்பம் மாறுபடுகிறது. வெண் படை நோய் வெண் படை நோய் வெண் குஸ்டம் என்றும் அழைக்கப்படுகிறது. தோலில் நிறமிகளை உற்பத்தி செய்யும் செல்கள் குறைவுபடுகையில் இந்நோய் ஒருவருக்கு வருகிறது. இதனால் தோலில் ஆங்காங்கே வெண்மை நிற புள்ளிகளும் படைகளும் உருவாகின்றன. சில நோயாளிகளுக்கு ஓர் இடத்தில் வருவதுடன் சரி, அதற்க்கு மேல் வருவதில்லை. வேறு சிலருக்கு அது வருடக்கணக்கில் மெல்ல மெல்ல உடல் முலுவதும் பரவிக்கொண்டே இருக்கலாம். வெண் படை உடலுக்கு வேதனை அளிப்பதில்லை, இதற்க்கு தொற்றும் தன்மையும் இல்லை. புதுப்பேட்டை (திரைப்படம்) புதுப்பேட்டை (2006) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.திரைப்பட நடிகர் தனுஸின் சகோதரரான செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தின் ஸ்னேகா,சோனியா அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மகாநகர் மகாநகர் ("The Big City", 1963) ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். கலைப்படம் 1950 ஆம் ஆண்டுகளின் பின்னணியில் நடைபெறும் இத்திரைப்படத்தில் மசூம்தார் (மாதபி முகர்ஜீ) ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.இவரது கணவரின் வருமானம் குடும்பத்திற்குப் போதுமான அளவு இல்லாதுபோகவே இவரும் வேலை செய்யத் தொடங்ககுகின்றார்.வீடு வீடாகச் சென்று பொருட்களை விற்பனை செய்பவராக வேலையொன்றினைப்பெற்று குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியினை ஏற்படுத்துகின்றார்.ஆனாலும் தனது சிறு வயது மகன் தாயாரைக் காணாது மனம் நொந்து போய் வீட்டில் இருப்பதனையும் உணர்கின்றார்.இச்சமயம் வேலை செய்யும் இடத்தில் மிகுந்த வரவேற்பைப்பெறும் மஸூம்தார் வேலை செய்யும் நபர்களுடன் நெருங்கிப்பழகுவதனைத் தற்செயலாகப் பார்த்துவிடும் இவர் கணவரால் ஆரம்பத்தில் சந்தேகப்பார்வையுடன் பார்க்கப்படுகின்றார். அத்தகைகைய காரணங்களினால் தனது மனைவியை வேலை செய்யச் செல்ல வேண்டாமென அவர் கூறுகின்றார். அதே போல் வேலையை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தினை எடுத்துச்செல்லும் சமயம் தனது கணவர் வேலை செய்த வங்கியில் பிரச்சினை ஏற்பட்டு வேலையினை இழக்க நேரிடுகின்றது.அதனால் தனது வேலையினைத் தொடர்ந்து செய்யும் மசூம்தார் தன்னுடன் வேலை செய்த தோழி சுகயீனம் காரணமாக வேலை செய்ய வராததினையும் பொருட்படுத்தாது அவரை வேலைவிட்டு நீக்கிய காரணத்திற்காக தனது தலைமை அதிகாரியிடம் தனது ராஜினாமாக் கடிதத்தினை அளித்துப்பின் வீடு செல்கின்றார். இதய கோவில் இதய கோயில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் , மோகன், ராதா, அம்பிகா மற்றும் கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்து (1985) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். அக்டோபர் 28 பேர்ற் சக்மன் பேர்ற் சக்மன் அல்லது பெர்ட் சாக்மன் (ஆங்கிலம்:Bert Sakmann) (பி. ஜூன் 12, 1942) நோபல் பரிசு பெற்ற செருமானிய உடற்செயலியலாளர். இவர், எர்வின் நேயெருடன் இணைந்து உயிரணு ஒற்றை அயனித்தடங்களின் செயல்பாடு குறித்த ஆய்வுக்காக 1991 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். 1987 இல் செருமனியில் ஆராய்ச்சிக்கான உயர் விருதொன்றையும் பெற்றுள்ளார். செருமனியில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இலங்கை அரசு (ஐ.தே.க) விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை, முதல் சுற்று இலங்கை அரசுக்கும் (ஐக்கிய தேசியக் கட்சி) விடுதலைப் புலிகளுக்குமிடையான முதல் சுற்று பேச்சுவார்தை எனப்படுவது நோர்வே அரசினால் பெப்ரவரி 2002 இல் ஏற்படுத்தப்பட்ட இலங்கை அரசு விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தம், 2002 பின்னர் தாய்லாந்தின் சதாகிப் கடற்படைத்தளத்தில் செப்டம்பர் 16 - 18 திகதிகளில் இடம்பெற்ற முதல் சுற்று நேரடிப் பேச்சுவார்தையையே ஆகும். இந்தச் சுற்றில் பின்வரும் இரு முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பது என முடிவு செய்யப்பட்டது, அவை: இப் பேச்சுவார்த்தைகளில் மேலும் பேசுவது என்றும் முடிவுசெய்யப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப் புலிகளின் தலைமை பிரதிநிதியான பாலசிங்கம் வெளியிட்ட பின்வரும் கருத்து "விடுதலைப் புலிகள் தனிநாடு என்கின்ற கருத்தோடு செயல்படவில்லை" The LTTE doesn’t operate with the concept of a separate state., அவர்கள் விட்டுக்கொடுத்து சமாதான தீர்வு ஒன்றை ஏற்படுத்தி கொள்வதற்கான ஒரு சமிக்கையாக அரசியல் அவதானிகளால் கருதப்பட்டது. இலங்கை அரசு (ஐ.தே.க) விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை, இரண்டாம் சுற்று இலங்கை அரசு (ஐக்கிய தேசியக் கட்சி) விடுதலைப் புலிகளுக்குமிடையான இரண்டாம் சுற்று பேச்சுவார்தை எனப்படுவது நார்வே அரசினால் பெப்ரவரி 2002 இல் ஏற்படுத்தப்பட்ட இலங்கை அரசு விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தம், 2002 பின்னர் தாய்லாந்தின் நாக்ரோன் பத்தொம் நகரில் அக்டோபர் 31 - செப்டம்பர் 3 நாட்களில் இடம்பெற்ற இரண்டாம் சுற்று நேரடிப் பேச்சுவார்தையையே ஆகும். இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப் புலிகளில் தலைமை பிரதிநிதியான பாலசிங்கம் தாங்கள் பொது அரசியலில் ஈடுபடுவதற்கு தாயாராக இருப்பதாக தெரிவித்தார். 1974 தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி தினமான ஜனவரி 10, 1974 இல் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பதினொரு பேர் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு உட்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் ஏற்படுத்திய குழப்ப நிலையினால் மரணம் அடைந்தனர். காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டினால் மின்கம்பிகள் அறுந்து மக்கள் திரண்டிருந்த இடத்தில் விழுந்தமை, ஆயிரக்கணக்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனத் திரண்டிருந்த மக்கள் மத்தியில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியமை, இரவு நேரத்தில் ஏற்பட்ட இக்குழப்பத்தினால் நிகழ்ந்த வாகன விபத்துகள், இந்தக் குழப்பங்களினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் ஏற்பட்ட இதய வலி என்பன இந்த மரணங்களுக்குக் காரணமாயின. இந்த இறப்புகள், பின்னர் தீவிரமாக வெளிப்பட்ட தமிழ்த் தேசியவாத போக்குக்கு உந்திய ஒரு முக்கிய துன்பியல் நிகழ்வு ஆகும். பு. உ. சின்னப்பா புதுக்கோட்டை உலகநாதபிள்ளை சின்னப்பா அல்லது பி. யு. சின்னப்பா, ("P. U. Chinnappa", மே 5, 1916 - செப்டம்பர் 23, 1951), தமிழ்த் திரைப்பட உலகில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல துறைகளிலும் புகழ்பெற்று விளங்கியவர். 1916 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை சமத்தானத்தில் உலகநாத பிள்ளைக்கும் மீனாட்சி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் சின்னசாமி. புதுக்கோட்டை என்ற தனது பிறந்த ஊரையும் சேர்த்து பி. யு. சின்னப்பாவானார். இவருக்குப் பின் உடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். சின்னப்பாவின் தகப்பனார் அப்போது பிரபலமான நாடக நடிகர். அவருடன் சேர்ந்து சிறுவயதிலேயே பாடவும் கற்றுக் கொண்டார். சின்னப்பா புதுக்கோட்டையில் நொண்டி வாத்தியார் பள்ளிக்கூடத்தில் நான்கைந்து ஆண்டுகள் படித்தார். சின்னப்பாவுக்கு இசையில் பெரும் ஆர்வம் இருந்தது. தகப்பனார் மேடையில் பாடும் பாடல்களைக் கேட்டுத் தானும் பாடுவார். கோவில்களில் நடக்கும் கூட்டு வழிபாடுகளில் பாடுவதற்கு இவரை அழைப்பார்கள். இதனால் இவருக்கு படிப்பில் ஆர்வம் செலுத்தவில்லை. பள்ளிக்கூடத்தை விட்டு விலகி சிலம்பம், மல்லு, குஸ்தி ஆகியவையும் பழகினார். குடும்ப நிதி நிலை மோசமடையவே, சின்னப்பா நூல் கடை ஒன்றில் பணியில் அமர்ந்தார். சில நாட்களில் அவ்வேலை பிடிக்காமல், நாடக நிறுவனமொன்றில் சேர முயற்சி செய்தார். டி. டி. சங்கரதாஸ் சுவாமிகளின் "தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா" என்ற நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடித்தார். இக்கம்பெனியில் தான் டி. கே. எஸ். சகோதரர்கள் முக்கிய வேடங்களில் நடித்து வந்தனர். சின்னப்பாவிற்கு சிறு சிறு வேடங்களே கொடுக்கப்பட்டன. "மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி" அப்போது புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரங்கில் தங்கள் நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தனர். பிரகதாம்பாள் தியேட்டரின் முதலாளி நாராயணன் செட்டியார் சின்னப்பாவின் பாடல்களைக் கேட்டிருக்கிறார். அவரின் சிபாரிசில் பாய்சு கம்பனி முதலாளி பழனியப்பா பிள்ளை சின்னப்பாவை 15 ரூபாய் சம்பளத்தில் தனது நாடகக் கம்பனியில் சேர்த்துக் கொண்டார். அவர்களின் நாடகங்களில் நடித்து நல்ல பெயர் வாங்கினார். மிக விரைவிலேயே ராஜபார்ட் போன்ற வேடங்களில் நடித்து புகழ் பெற்றார். அவருடன் அப்போது நாடகங்களில் நடித்தவர்களில் பி. ஜி. வெங்கடேசன், எம். ஜி. இராமச்சந்திரன், எம். கே. ராதா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். தனது 19வது வயதில் நாடகக் கம்பனியில் இருந்து விலகி நன்னய்ய பாகவதர், புதுக்கோட்டை சிதம்பர பாகவதார் போன்றோரிடம் இசைப்பயிற்சி பெற்று இசைக்கச்சேரிகள் செய்து வந்தார். அத்துடன் புதுக்கோட்டையில் இராமநாத ஆச்சாரியாரிடம் சிலம்பம், பாணாத்தடி வீசுதல் ஆகியவைகளை அபிவிருத்தி செய்து கொண்டார். பாரந்தூக்குவதில் இவருக்கு பல விருதுகளும் கிடைத்திருக்கின்றன. எஸ். ஆர். ஜானகியின் நாடகக் கம்பெனியில் சேர்ந்து இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். முதன் முதலில் ஜூபிட்டரின் சவுக்கடி சந்திரகாந்தா மூலம் திரைப்படத்துறையில் புகுந்தார் சின்னப்பா. சுண்டூர் இளவரசனாக அவர் நடித்தார். அத்திரைப்படத்தில் அவர் சின்னசாமி பெயரிலேயே நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 1938 ஆம் ஆண்டில் பஞ்சாப் கேசரி, அனாதைப் பெண், யயாதி போன்ற படங்களில் நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம் சின்னப்பாவை 1940 இல் தனது உத்தம புத்திரன் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க வைத்தார். தமிழில் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த பெருமைக்குரியவர் இவரே. படம் பெரு வெற்றி பெற்றது. மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தினரின் மனோன்மணி (1942) வசூலில் பெரும் வெற்றியடைந்தது. டி. ஆர். ராஜகுமாரியுடன் சேர்ந்து இப்படத்தில் நடித்தார். 1944 ஆம் ஆண்டில் பிருத்விராஜ் படத்தில் தன்னுடன் நடித்த ஏ. சகுந்தலா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ராஜாபகதூர் என்ற பெயரில் ஒரு மகனும் உண்டு. ஜகதலப்பிரதாபனில் பிரதாபனாகத் தோன்றி ஐந்து இசைக்கருவிகளை வாசித்து அமர்க்களப்படுத்தினார். மங்கையர்க்கரசியில் மூன்று வேடங்களில் நடித்தார். இப்படத்தில் அவர் பாடிய "காதல் கனிரசமே.." பாடல் இன்றும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படுகிறது. சின்னப்பா 1951 செப்டம்பர் 23 அன்று இரவு தனது 35ஆவது வயதில் புதுக்கோட்டையில் காலமானார். படம் இறப்பதற்கு முன் இவர் நடித்து வெளிவந்த படம் வனசுந்தரி. கடைசியாக இவர் நடித்துக்கொண்டிருந்த படம் சுதர்சன் இவர் இறந்தபின்னர் வெளிவந்தது. யாழ் பொது நூலகம் எரிப்பு, 1981 யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு சூன் 1 ஆம் திகதி இரவு சிங்கள வன்முறைக் குழுவொன்றால் இடம்பெற்றது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர். நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது. யாழ் நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு, மிக விரைவில் உள்ளூர் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு முழு நூலகமானது. யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன. நூலகத்தின் முதலாவது கட்டடம் 1959 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இலங்கையில் தமிழர் படுகொலைகள், 1956 இலங்கையில் தமிழர் படுகொலைகள், 1956, கொழும்பிலும் பிற இடங்களிலும் 150ற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். ஜூன் 5, 1956 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையில் தனிச் சிங்களச் சட்டத்துக்கு எதிராக காலி முகத்திடலில் சத்தியாக்கிரக முறையில் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பை குழப்பும் விதத்தில் சிங்கள வன்முறைக் குழுக்களால் தாக்கப்பட்டனர். இந்த வன்முறையை தடுக்கப் பார்த்துக் கொண்டிருந்த காவற்துறையினர் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இந்த வன்முறை பரவி கொழும்பிலும் பின்னர் பிற இடங்களிலும் 150 மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதுவே இலங்கை இனப்பிரச்சினையில் தமிழர், சிங்கள், இனங்களுக்கிடையான பிரிவு பின்னர் தீவிரமான வன்முறைகளுக்கு தூண்டுதலான முதல் கொடிய வன்முறை சம்பவம் எனலாம். இதில் மேல்வர்க்க தமிழர்களும் இன ரீதியில் தாக்கப்பட்டது அவர்களைத் தமிழ்த் தேசியத்தின் பக்கம் திருப்பியது. இதன் காரணமாக பல கொழும்பு வாழ் தமிழர்கள் யாழ்ப்பாணத்துக்கு இடம்பெயர்ந்தார்கள். இலங்கை இனக்கலவரம், 1958 இலங்கை இனக்கலவரம், 1958 ("1958 riots in Ceylon") என்பது இலங்கையில் சிறுபான்மையாக வாழும் தமிழருக்கு எதிராக நாடு 1948 இல் விடுதலை பெற்ற பின்னர் நடத்தப்பட்ட முதலாவது நாடு தழுவிய வன்முறை இனக்கலவரம் ஆகும். இவ்வன்முறைகள் 1958 மே 22 முதல் மே 27 வரை இடம்பெற்றன. ஆனாலும், 1958 சூன் 1 இல் அவசரகாலச் சட்டம் அறிவிக்கப்பட்ட பின்னரும் ஆங்காங்கே வன்முறைகள் இடம்பெற்றன. இந்நிகழ்வு பொதுவாக இனக்கலவரம் என அழைக்கப்பட்டாலும், சில இடங்களில் இனவழிப்பாகவே நடத்தப்பட்டது. இவ்வழிப்பில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை கண்டெடுக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கையைக் கொண்டு மதிப்பிடப்பட்டு 70 முதல் 300 வரையென அறிவிக்கப்பட்டது. இக்கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் தமிழர்கள் ஆயினும், தமிழர்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்த காரணத்தினால் சில சிங்களவர்களின் உடமைகளும் சேதமாக்கப்பட்டன. அத்துடன், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் பகுதிகளில் சிங்களவர்கள் சிலர் தமிழர்களால் தாக்கப்பட்டனர். 1956 ஆம் ஆண்டில் சாலமன் பண்டாரநாயக்கா பெரும்பான்மை சிங்களமயமாக்கம் என்ற கொள்கையின் அடிப்படையில் இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றினார். புதிய அரசு சிங்கள மொழியை நாட்டின் ஒரே ஆட்சிமொழியாக அறிவித்து தனிச் சிங்களச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியது. இலங்கையின் கால்வாசிக்கும் அதிகமானோர் தமிழ் பேசுபவர்களாக இருந்தனர். இச்சட்டம் தமிழர்களிடையே எதிர்ப்பைத் தூண்டி விட்டது. தமது, மொழி, கலாச்சாரம், பொருளாதார நிலை இதனால் பாதிக்கப்படும் என அவர்கள் அஞ்சினர். தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள் அறப்போராட்டத்தை ஆரம்பித்தனர். இதனால் இனங்களுக்கிடையே முறுகல் நிலை அதிகரித்தது. இலங்கையின் கிழக்கே கல்லோயா நகரில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனை அடுத்து பிரதமர் பண்டாரநாயக்கா தமிழரசுக் கட்சியைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார், இதன் மூலம் பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம் 1957 ஆம் ஆண்டில் பிரதமருக்கும் தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகத்திற்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம் தமிழர் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழும் நிருவாக மொழியாக இருக்க உடன்பாடு எட்டப்பட்டது. ஆனாலும், சிங்களத் தேசியவாதிகள், மற்றும் பௌத்த துறவிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். குறிப்பாக முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ஜெயவர்தனா தலைமையில் கண்டிக்கு நடைப் பயணம் மேற்கொண்டனர். இவ்வெதிர்ப்பை அடுத்து, பண்டாரநாயக்கா அரசு பண்டா-செல்வா ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தது. இதற்கிடையில், பிரித்தானியக் அரச கடற்படையினர் தமது திருகோணமலைத் தளத்தை மூடியதை அடுத்து 400 தமிழ்த் தொழிலாளர்கள் பணியிழந்தார்கள். இவர்களை சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பொலன்னறுவை மாவட்டத்தில் குடியமர்த்த அரசு திட்டமிட்டது. இந்நடவடிக்கை அம்மாவட்டத்தில் உள்ள சிங்களவர் மத்தியில் எதிர்ப்பைக் கிளப்பியது. சிங்களக் கும்பலகள் அங்கு உருவாகி அங்கு குடியேற வந்த தமிழர்களைத் தாக்கத் தொடங்கியது. "Emergency '58 : the story of the Ceylon race riots" என்ற நூல் தார்சி வித்தாச்சி என்ற ஊடகவியலாளரால் இந்தக் கலவரங்கள் பற்றி எழுதப்பட்டது. அல்பிரட் துரையப்பா படுகொலை யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா ஜூலை 27, 1975 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளாலேயே சுட்டுக்கொல்லப்பட்டார் என்று சந்தேகிக்கப்படுகின்றது. யாழ் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் 11 பேர் கொலை செய்யப்பட்டதுக்கு இவரே காரணம் என கருதி பழிக்கு பழியாக கொல்லப்பட்டார் என்று ஒரு கருத்து நிலவுகின்றது. ராஜீவ் காந்தி படுகொலை ராஜீவ் காந்தி, இந்தியாவின் ஆறாவது பிரதமர் ஆவார். இவர் 21 மே 1991 அன்று தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஒரு குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். அதில் 14 நபர்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் தேன்மொழி ராஜரத்தினத்தால் நடத்தப்பட்டது. இவர் விடுதலை புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் இந்தியா இலங்கை உள்நாட்டு போரில், இந்திய அமைதிப் படையைத் திரும்பப் பெற்றிருந்த காலம். ராஜீவ் காந்தியின் படுகொலை விடுதலை புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் எனக் கருதப்படும் தேன்மொழி ராஜரத்தினத்தால் நடத்தப்பட்டது. பின்னர், அவரது உண்மையான பெயர் காயத்ரி எனத் தெரியவந்தது. ராஜீவ் காந்தி சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு சென்னை வந்து, பின்னர் ஒரு வெள்ளை அம்பாசிடரில் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சார இடங்களை பார்வையிட்டார்.அப்போது அவரை நேர்காணலிட வண்டியில் ஒரு வெளிநாட்டு பத்திரிகையாளர் அவருடன் பயணித்தார். அவர் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பிரச்சார பேரணியை அடைந்த போது, தனது வண்டியை விட்டு வெளியே வந்து மேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். வழியில், அவருக்கு பல நல்விரும்பிகள், காங்கிரஸ் கட்சித் தொழிலாளர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் மாலை அணிவித்தனர். 22:21 மணிக்கு கொலையாளி, தானு, அவரை அணுகி வாழ்த்தினார். அவரது கால்களை தொட கீழே குனியும் போது தனது ஆடையின் அடியே வைத்திருந்த ஆர் டி எக்ஸ் (RDX) வெடிபொருளை வெடிக்கச் செய்தார் தானு. ராஜீவ் காந்தி மற்றும் 14 மற்றவர்களும் அந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் அங்கிருந்த ஒரு புகைப்படக்காரரின் புகைப்பட கருவியில் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாதுகாப்புக் குறைபாடு: உச்ச நீதிமன்றம் ராஜீவ் காந்தியை கொலை செய்ய புலிகளின் முடிவை அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புலிகளை நிராயுதமாக்க இந்திய அமைதிப் படையை அனுப்புவேன் என்று 21-28 ஆகஸ்ட், 1990, சன்டே (Sunday) இதழின் பதிப்பில் அவரது பேட்டியில் கூறியதே காரணம் என்றது. அப்போதைய தமிழ்நாடு ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங், தனது அதிகாரப்பூர்வ நெறிமுறைகளை மீறி, ராஜீவ் காந்தியை தமிழ்நாட்டிற்கு வந்தால் அவரது உயிருக்கு ஆபத்து என்று இருமுறை எச்சரித்தார். ஜூன் 1992 ல் சமர்ப்பிக்கப்பட்ட இறுதி அறிக்கையில், முன்னாள் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இருந்தன என்றும், உள்ளூர் காங்கிரஸ் கட்சி தலைவர்களே இந்த ஏற்பாடுகளை தகர்த்தனர் என்றும் தீர்மானிக்கப்பட்டது. நரசிம்ம ராவ் அரசு முதலில் வர்மாவின் கண்டுபிடிப்புகளை நிராகரித்தது. ஆனால் பின்னர் அழுத்தத்தின் கீழ் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும், எவ்வித நடவடிக்கையும் ஆணையத்தின் பரிந்துரையின்கீழ் எடுக்கப்படவில்லை. புலிகளின் பிரதிநிதிகள் 5 மார்ச், 1991 அன்றும் மார்ச், 14 1991 அன்றும் காந்தியை சந்தித்தனர் என்று சுப்பிரமணியன் சுவாமி எழுதியிருந்தார். படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, விசாரணை காவல்துறை துணை ஆய்வாளர் ராதா வினோத் ராஜு தலைமையிலான ஒரு சிறப்பு புலனாய்வு குழுவிடம் வழங்கப்பட்டது. ராஜீவ் காந்தியின் படுகொலை விடுதலை புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் எனக் கருதப்படும் தேன்மொழி ராஜரத்தினத்தால் நடத்தப்பட்டது. பின்னர், அவரது உண்மையான பெயர் காயத்ரி என்று தெரியப்பட்டது. ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இராஜீவ் காந்தி கொலைக்கும் தன் விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் எந்த தொடர்புமில்லை என பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்விகளில் கூறியுள்ளார். அதே போலவே புலிகளின் ஆலோசகர் அண்டன் பாலசிங்கமும் ராஜீவ் காந்தி கொலையை புலிகள் இயக்கம் செய்யவில்லை என்று அவுட்லுக்கு இந்தியா இதழுக்கு கொடுத்த செவ்வியில் கூறியுள்ளார். இந்திய உச்ச நீதிமன்றம், ராஜீவ் காந்தியின் கொலை தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடத்தப்பட்டது என்றது. தீர்ப்பு மேலும் அக்டோபர் 1987 இல் ஒரு கப்பலில் 12 புலிகளின் தற்கொலைகளையும் , ஒரு உண்ணாவிரத போராட்டத்தில் திலீபன் என்பவரின் மரணத்தையும் குறிப்பிடுகிறது. இச்சம்பவம் ராஜிவ் காந்தியைத் தவிர வேறு யாரையும் கொல்லும் நோக்கம் கொண்டதற்கு சான்று இல்லை என்று சுட்டிக்காட்டியது. மேலும் இது அரசை மிரட்டும் நோக்கம் கொண்டதாக தெரியவில்லை என்று கூறி இது ஒரு தீவிரவாத செயல் அல்ல என்று கூறியது. விசாரணை பயங்கரவாத மற்றும் சீர்கேட்டு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (தடா) கீழ் நடத்தப்பட்டது. சென்னையில் நியமிக்கப்பட்ட தடா நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை அளித்தது. மனித உரிமைகள் குழுக்கள் இவ்விசாரணை நியாயமான விசாரணையின் தரத்தை பூர்த்தி செய்யவில்லை என கண்டனம் தெரிவித்தன. ராஜீவ் காந்தி வழக்கில் ஒப்புதல் வாக்குமூலம் அவர்களுக்கு எதிரான தீர்ப்புக்கு ஒரு முக்கிய அங்கமாக இருந்தது. ஆனால் பின்னர் அவை வற்புறுத்தலின் பேரில் எடுக்கப்பட்டவை என்று அவர்கள் குற்றம் சாட்டினர். உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்த பின் நான்கு பேருக்கு மட்டும் மரணதண்டனை விதிக்கப்பட்டது. முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகிய நான்கு பேருக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதில் சோனியா காந்தியின் பரிந்துரையின் பேரில் நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஆனால் மற்ற மூவரின் கருணை மனுக்கள் ஆகத்து 2011 அன்று குடியரசுத் தலைவரால் மறுக்கப்பட்டன. இவ்வாறு கருணை மனுக்கள் மறுக்கப்பட்ட நிலையில் இவர்களது தூக்குதண்டனையை நிறைவேற்ற செப்டம்பர் 9, 2011 நாள் குறிக்கப்பட்டது. இந்தத் தண்டனையை விலக்கக்கோரி சில அரசியல் மற்றும் திராவிட இயக்கங்கள் போராட்டம் நடத்தின. ஆகஸ்ட் 30, 2011 இல் சென்னை உயர்நீதிமன்றம் இம்மூவரின் தூக்கு தண்டனையை எட்டு வாரங்களுக்கு தடை விதித்தது. இம்மூவரின் தண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைக்க வேண்டுமென்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராஜீவ் கொலை குற்றவாளிகளின் தூக்குதண்டனையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ப. சதாசிவம், ரஞ்சன் கோகாய், சி.கே.சிங் ஆகியோர் கொண்ட அமர்வு பிப்ரவரி 18ஆம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்று தமிழ்நாடு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும், மத்திய அரசு 3 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால், அவர்களை தமிழக அரசே விடுதலை செய்யும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ராஜீவ் காந்தி நினைவிடம் அவ்விடத்தில் கட்டப்பட்டு இன்று சிறு தொழில் நகரமான ஸ்ரீபெரும்புதூரில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருந்துவருகிறது. "மிஷன் 90 டேஸ்"(Mission 90 Days) என்ற திரைப்படம் இச்சம்பவத்தை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டது. இலங்கை அரசு விடுதலைப் புலிகள் 2006 பேச்சுக்கள், இரண்டாம் சுற்று இலங்கை அரசு (இ.சு.க) விடுதலைப் புலிகள் 2006 பேச்சுக்கள், இரண்டாம் சுற்று எனப்படுவது இலங்கை அரசுக்கும் (இலங்கை சுதந்திரக் கட்சி) விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அக்டோபர் 28-29, 2006 திகதிகளில் ஜெனிவாவில் நடைபெற்ற நேரடி பேச்சுவார்த்தைகளைக் குறிக்கும். வட கிழக்கு இலங்கைத் தமிழ் மக்கள் மிகவும் இக்கட்டான ஒரு வாழ்வியல் சூழலில் இருக்கையில் இப்பேச்சுக்கள் நடைபெற்றன. அக்டோபர் 29 சென்னை நூலகம் சென்னை நூலகம்.காம் ("chennailibrary.com") என்பது தமிழ் நூல்களை வழங்கும் தமிழ் இணையத்தளம் ஆகும். 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்ட இந்த இணையத்தளம், தமிழ் இலக்கியங்கள் பலவற்றை ஒருங்குறியில் வாசிக்க வழங்குகின்றது. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு முதலான பழந்தமிழ் நூல்கள் முதல் புதுமைப்பித்தன், கல்கி, ந. பிச்சமூர்த்தி, அறிஞர் அண்ணா போன்ற அண்மைக்கால எழுத்தாளர்களின் நூற்கள் வரையாகப் பரந்தளவிலான நூல்கள் இவ்விணையத்தளத்தில் வெளியிடப்படுகின்றன. இத்தளத்தில் பழந்தமிழ் இலக்கியங்களும், நாட்டுடைமை ஆக்கப்பட்ட தமிழ் படைப்பாளிகளின் நூல்களும் உள்ளன. இத்தளம் செப்டம்பர், 15, 2006ல் தொடங்கப்பட்டது. இதனைத் தொடங்கி நடத்தி வருபவர் கோ. சந்திரசேகரன். இத்தளம் அரசு ஆதரவு பெற்றதல்ல. சந்திரசேகரனின் தனிபட்ட முயற்சியால் உருவானது. இத்தளம் கௌதம் இணைய சேவைகள் (Gowtham Web Services) நிறுவனத்தின் கீழ் உள்ள இணையதளங்களில் ஒன்றாகும். இத்தளம் இந்நிறுவனத்தின் இரண்டாவது தளமாகும். முதல் தளமான சென்னைநெட்வொர்க்.காம் 2001ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. சென்னைநூலகம்.காம் இணையதளம் ஆரம்பிக்கும் முன்னர் வரை தமிழ் நூல்கள் சென்னைநெட்வொர்க்.காம் இணையதளத்தில் தான் வெளியிடப்பட்டு வந்தன. அக்டோபர் 30 சௌமியமூர்த்தி தொண்டமான் சௌமியமூர்த்தி தொண்டமான் (ஆகஸ்டு 30, 1913 - அக்டோபர் 30, 1999) இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களது முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராவார். 86 வது வயதில் இவர் இறக்கும் போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவராகவும் இலங்கை அரசின் அமைச்சரவையில் வயது கூடிய அமைச்சராகவும் காணப்பட்டார். இவர் தொடர்ந்து 21 வருடங்கள் இலங்கை பாராளுமன்றத்தில் அமைச்சராகப் பதவி வகித்தார். தொண்டமானின் தந்தையார் இந்தியாவின் புதுக்கோட்டை பகுதியில் இருந்த அரச பரம்பரை வழி வந்தவராவார். இவர் "முன்ன புத்தூர்" என்ற கிராமத்தில் வசித்து வந்தார். எனினும் அவரது தந்தையின் காலத்தில் அவர்களது குடும்பம் ஏழ்மையில் வாடியது. இதனால் கருப்பையா இலங்கையில் கோப்பி தோட்டத்துக்கு வேலை செய்ய சென்றவர்களுடன் கூட, இலங்கை சென்று அங்கு வேலை செய்து செல்வம் சேர்த்தார். பின்னர் இந்தியா திரும்பிய அவர் தமது கிராமத்தில் சீதாம்மை என்பரை 1903 இல் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு பிறந்த முதல் பெண் குழந்தை சிறிது காலத்தில் இறந்தது. மறுபடி இலங்கை திரும்பிய கருப்பையா இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள வெவண்டன் என்னும் தேயிலை தோட்டத்தை விலைக்கு வாங்கினார். ஒரு வருடத்துக்குப் பிறகு இந்தியா திரும்பிய கருப்பையாவுக்கு மூன்று பெண் குழந்தைகளுக்கு பிறகு ஐந்தாவது குழந்தையாக சௌமியமூர்த்தி 1913 அக்டோபர் 30 இல் பிறந்தார். சௌமியமூர்த்தியின் பிறப்புக்கு பின்னர் உடனடியாக இலங்கை திரும்பிய கருப்பையா, சௌமியமூர்த்தியின் ஏழாவது வயதில் தமது கிராமத்துக்கு திரும்பினார். அவ்வேளையில் தமது தந்தையாருடன் நெருங்கிய தொடர்பை வளர்த்துக் கொண்டார். இலங்கை திரும்பிய கருப்பையா நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சௌமியமூர்த்தியை இலங்கைக்கு தம்முடன் அழைத்துக் கொண்டார். 1924 ஆம் ஆண்டு தமது 11வது அகவையில் இலங்கை வந்த சௌமியமூர்த்தி தமது 14வது அகவை தொடக்கம் கம்பளை புனித அந்திரேயர் கல்லூரியில் சேர்ந்து கல்வி கற்றார். 1927இல், கம்பளை புனித அந்திரேய கல்லூரியில் சௌமியமூர்த்தி இணைந்த அதே வருடத்தில், மகாத்மா காந்தி இலங்கை வந்திருந்தார். அவரின் உரைகளால் சௌமியமூர்த்தி மிகவும் கவரப்பட்டார். முக்கியமாக காந்தி தமது கண்டி உரையில் தோட்ட உரிமையாளர்கள் தங்களது தோட்டங்களில் வேலை செய்யும் பணியாளர் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி அவர்களது தேவைகளை கவனிக்குமாறு கேட்டுக் கொண்டமையானது சௌமியமூர்த்தியின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய விடுதலை இயக்கத்தில் சௌமியமூர்த்தி நாட்டம் அதிகமாக தொடங்கியது. அச்சமயம் நோய்வாய்ப்பட்டிருந்த தந்தையார் அவருக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்தார். இதன்படி 1932 ஆம் ஆண்டு, இந்தியாவில் வசித்த சௌமியமூர்த்தியின் தாயாரும் சகோதரியும் பார்த்த பெண்ணான கோதை என்பவரோடு, மணமகன் இல்லாமலேயே சௌமியமூர்த்தியின் சகோதரி தாலிக்கட்ட திருமணம் முடிந்தது. அதே ஆண்டு இந்தியா திரும்பிய சௌமியமூர்த்தி ஒரு வருடமளவில் அங்கு தங்கியிருந்தார். அக்காலப்பகுதியில் அவரது மகன் இராமநாதன் பிறந்தார். பின்னர் குழந்தையையும் மனைவியையும் இந்தியாவில் விட்டுவிட்டு இலங்கை திரும்பிய சௌமியமூர்த்தி தந்தையாரின் உடல் நிலை பாதிப்பு காரணமாக வெவண்டன் தோட்ட நிர்வாகத்தை தானே பார்த்து வந்தார். 1939ஆம் ஆண்டு உடல் நிலை மிக மோசமாக காணப்பட்ட கருப்பையாவின் வேண்டுகோளுக்கு இணங்க சௌமியமூர்த்தியின் மனைவி கோதையும் மகன் இராமநாதனும் இலங்கை வந்தனர். 1940 இல் கருப்பையா காலமானார். பின்னாளில் இராமநாதன் இலங்கை மத்திய மாகாண அமைச்சராக தேர்தெடுக்கப்பட்டார். 1930களின் ஆரம்ப காலப்பகுதியில் அட்டன் நகரில் "காந்தி சேவா சங்கம்" என்ற சங்கமொன்று இயங்கி வந்தது. இராசலிங்கம், வெள்ளையன் போன்ற இளைஞர்கள் அதில் முக்கிய பங்காற்றி வந்தனர். காந்திய வழிச்சென்ற செல்வந்த வாலிபனான சௌமியமூர்த்தியை இவர்கள் அச்சங்கக் கூட்டம் ஒன்றுக்கு அழைத்தனர். சௌமியமூர்த்தி தனது தந்தைக்கு அரசியல் மீது இருந்த வெறுப்பு காரணமாக முதலில் பங்கு பற்ற மறுத்தாலும் பின்னர் அதில் பங்கேற்றார். மேலும் அப்போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வழிசென்ற இயக்கமான "போஸ் சங்க" கூட்டங்களிலும் பங்கேற்றார். இவற்றில் சௌமியமூர்த்தி உரையாற்றத் தொடங்கினார். ஜூலை 24, 1939 இல் ஜவஹர்லால் நேருவின் கருத்துக்கேற்ப ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இந்திய காங்கிரசின் கம்பளைக் கிளையின் தலைவராக, ஆகஸ்ட் 13 1939 இல் சௌமியமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இது தனது தந்தையின் விருப்பத்துக்கு மாறாகக் காணப்பட்டாலும் இந்தியாவில் இருந்து இலங்கை வந்த வேலையாட்கள் படும் துயரங்களை அறிந்திருந்தபடியால் அவர்களுக்கு சேவை செய்யும் பொருட்டு அப்பதவியை ஏற்றுக் கொண்டார். இலங்கையில் 1930களின் கடைசி பகுதியில் ஏற்பட்ட இந்திய எதிர்ப்பு அலைகள் காரணமாக அதிகளவான தோட்டத் தொழிலாளர்கள் இலங்கை இந்திய காங்கிரசில் இணைந்தனர். இதனால் அவர்களது பிரச்சினைகளை பேச வேண்டிய தேவை இலங்கை இந்திய காங்கிரசுக்கு ஏற்பட்டது. ஆனால் இலங்கை இந்திய காங்கிரஸ் இந்திய தொழிலாளரது பிரச்சினைகளை தோட்ட நிர்வாகத்திடம் கொண்டு சென்ற போது அவர்கள் அரசியல் கட்சியுடன் பேச மறுத்தனர். மாறாக தொழிற்சங்கத்துடன் மட்டுமே பேச முடியுமென வாதிட்டனர். இதனால் 1940 மே மாதம் இலங்கை இந்திய காங்கிரசின் தொழிற்சங்க கிளை ஆம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்ப தலைவராக சௌமியமூர்த்தியும், செயளாலராக பம்பாய் பல்கலைக்கழகத்தின் வர்த்தக பட்டதாரியும், இடதுசாரி கருத்து கொண்டவரான அப்துல் அசீசும் தெரியப்பட்டனர். 1940 செப்டம்பர் 7 - 8 இல் இலங்கை இந்திய காங்கிரசின் தொடக்க விழாவை தலைமை தாங்கி நடத்தினார். இந்நிகழ்வே இவரது வாழ்வின் முதலாவது பிரதான அரசியல் நிகழ்வாகும். இலங்கை இந்திய காங்கிரசின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் கண்டியில் 1942 இல் கூடியபோது தலைமைக்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சௌமியமூர்த்தி அஸீசிடம் தோல்வி கண்டார். எனினும் 1945 ஆம் ஆண்டு நுவரெலியா பொதுக்குழுவில் இலங்கை இந்திய காங்கிரசினதும் அதன் தொழிற்சங்கத்தினதும் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டார். 1946 இல் கேகாலையில் உள்ள தேயிலை தோட்டமொன்றான நவிஸ்மியர் தோட்டத்தில் இருந்த 360 தமிழ் தோட்ட தொழிலாளார் குடும்பங்கள் அருகில் இருந்த சிங்கள கிராமத்தவருக்கு நிலம் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும் எனக் கூறி தோட்டத்தில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அரசால் பணிக்கப்பட்டனர், அவர்களுக்கு வேலையும் மறுக்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த இடத்தில் இருந்து வெளியேற மறுத்தனர். தோட்ட நிர்வாகம் இக்குடும்பத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டது. உடனடியாக செயலில் இறங்கிய சௌமியமூர்த்தி தொண்டமான் சட்ட நடவடிக்கையில் இறங்கியதோடு, இலங்கை இந்திய காங்கிரசின் அட்டன், இரத்தினபுரி, எட்டியாந்தோட்டை, கேகாலை பிரதேச தலைவர்களை அழைத்து அப்பிரதேச தேயிலை, இறப்பர், கோப்பி தோட்டங்களில் வேலை நிறுத்தத்தை அறிவித்தார். மேலும் முழுத்தோட்டத்துறையையும் முடக்க போவதாக அறிவித்தார். வேலை நிறுத்தம் 21 நாட்கள் நீடித்தது. அப்போது விவசாயத்துறை அமைச்சராக இருந்த டி. எஸ். சேனநாயக்கா இந்தியப் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களுக்கு இணங்கினார். பேச்சுக்களில் ஏற்பட்ட இணக்கப்பாடுகளுக்கு ஏற்ப ஆளுனர் மூர் 360 குடும்பங்களையும் மன்னிக்குமாறு பணித்தார். 1947 இல் 95 பாராளுமன்ற அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்காக பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இலங்கை இந்திய காங்கிரஸ் எட்டு ஆசனங்களுக்கு போட்டியிட்டு ஏழு இடங்களை கைப்பற்றியது. சௌமியமூர்த்தி தொண்டமான் நுவரெலியா ஆசனத்தில் போடியிட்டு, 9386 வாக்குகள பெற்றார். இது இரண்டாவதாக வந்த ஜேம்ஸ் இரத்தினத்தை விட 6135 வாக்கு அதிகமாகும். அவர் பாராளுமன்றத்தில் இடசாரி கட்சிகளோடு எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்தார். தொண்டமான் இலங்கையில் முக்கிய அரசியல் சக்தியாக வளரத் தொடங்கிய போது 1948 பெப்ரவரி 4 இல் இலங்கை சுதந்திரம் பெற்றது. இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தின் பிரதமரான டி. எஸ். சேனநாயக்கா இலங்கையில் பிரித்தானிய ஆட்சியின் போது இலங்கை வந்து குடியேறிய இந்திய பாகிஸ்தானிய மக்களது குடியுரிமையை பறிக்கும் சட்டம் ஒன்றை முன்வைத்து நிறைவேற்றினார். சௌமியமூர்த்தி தொண்டமான் இதற்கு எதிராக பாராளுமன்றில் வாதப்பிரதிவாதங்களை செய்தும் பலனற்றுப் போனது. குடியுரிமையைப் பறித்த பின்னர் டி. எஸ். சேனநாயக்கா இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம்-1949 என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்தார். இதன் படி இலங்கை குடியுரிமையை பெற பல தகைமைகள் முன்மொழியப்பட்டிருந்தது. இது சரியான சட்டமாக தெரிந்தாலும் பல நடைமுறைச் சிக்கல்களை கொண்டிந்தது. இதனால் அச்சிக்கல்களைச் சுட்டிக்காட்டி தொண்டமான் இதனைப் பாராளுமன்றில் எதிர்த்தார். இலங்கை இந்திய காங்கிரசின் மத்தியக் குழு யாரும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க கூடாது என தீர்மானித்தது. இதன்படி பெரும்பான்மையான இந்தியர்கள் விண்ணப்பிக்கவில்லை. ஆனால் இலங்கை இந்திய காங்கிரசின் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் தமது பாராளுமன்ற ஆசனங்களை காத்துக் கொள்ளும் பொருட்டு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டனர். டி. எஸ். சேனநாயக்காவின் மரணத்துக்கு பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இதன்போது இந்தியர்கள் குடியுரிமை அற்றவர்களாக இருந்தபடியால் தொண்டமானும் ஏனைய ஆறு பிரதிநிகளும் மீண்டும் பாராளுமன்றம் செல்ல முடியவில்லை. ஏப்ரல் 28, 1952 இல் இலங்கை வாழ் இந்திய மக்களுக்கு குடியுரிமை வழங்குமாறு தொண்டமான் பேரணியொன்றையும் சத்தியாக்கிரகம் ஒன்றையும் நடத்த ஆரம்பித்தார். ஏப்ரல் 29, 1952 இல் அசீசுடன் கூடச் சென்று பிரதமரின் அலுவலக அறைக்கு முன்னதாக சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார். பல சிக்கல்களுக்கு மத்தியில் இதனை தொடர்ந்து செய்தார். பல சந்தர்ப்பங்களில் பொலிசார் அவரை பலவந்தமாக சத்தியாக்கிரக இடத்தில் இருந்து அகற்றினாலும் மீண்டும் அவ்விடத்துக்கு திரும்பினார். பாராளுமன்றம் முன்பாகவும் தமது அகிம்சை போராட்டத்தை தொடர்ந்தார். இப்போராட்டங்கள் காரணமாக அரசு இந்தியர்களை மீண்டும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க கோரியது. இதன் போது 850,000 பேர் குடியுரிமைக்காக விண்ணப்பித்தனர். 1950 களில் இலங்கை இந்திய காங்கிரஸ் சார்பாக எவருமே பாராளுமன்றம் செல்லவில்லை. ஆரம்பத்தில் இருந்தே அசீசுடனான சில கருத்து முரன்பாடுகள் காணப்பட்டாலும் அவை பொது நோக்கு ஒன்றுக்காக பின்தள்ளப்பட்டு வந்தது. அசீஸ் இலங்கை இந்திய காங்கிரசை இடதுசாரிகள் பக்கமாக நகர்த்துகிறார் என்ற குற்றச்சாட்டு தொண்டமானால் முன்வைக்கப்பட்டது. மேலும் அசீஸ் முஸ்லிமாகவும் தமிழ் பேச முடியாதவராகவும் காணப்பட்டார். ஆனால் சௌமியமூர்த்தி பெரும்பான்மையான இந்திய தொழிளாலர்களை போல இந்து தமிழராக காணப்பட்டார். இவர்களின் கருத்து முரண்பாடு 1945இல் இருந்து வெளித்தோன்றியது. 1945 முதல் இலங்கை இந்திய காங்கிரசின் ஒவ்வொரு தலைவர் தெரிவு வாக்கெடுப்பிலும் சௌமியமூர்த்தி அசீசை வெற்றிக் கொண்டார். 1954இல் அட்டனில் நடைபெற்ற இ. இ. கா. பொதுக்கூட்டத்தில் தொண்டமான் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை. அசிஸ் இதில் வெற்றிப்பெற்றார். கட்சிக்குள் பலர் சௌமியமூர்த்திக்கு ஆதரவு நிலை எடுத்தபடியால், டிசம்பர் 13 1955 அசிஸ் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியேற்றப்பட்ட அசீஸ், சனநாயக தொழிளாலர் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். அசீஸ் இ.இ.கா.வின் தலைவராக தெரிவான 1954 அட்டன் பொதுக்குழுவில் இலங்கையில் அப்போது இ.இ.கா.வுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இந்திய சார்பு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை இந்திய காங்கிரசினது பெயர் "இலங்கை சனநாயக காங்கிரஸ்" என்றும் இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிற் சங்கத்தினது பெயர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்றும் மாற்றப்பட்டது. அசீஸ் கட்சியில் இருந்து வெளியேறிய பிறகு சட்டச் சிக்கல்கள் காரணமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) மட்டுமே சௌமியமூர்த்தியின் தலைமையில் கீழ் வந்தது. அது முதல் 1999 இல் அவர் இறக்கும் வரையில் இ.தொ.கா.வின் தலைவராக பதவி வகித்தார். 1956 இல் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டார். மேலும் அதன் செயற்குழுவுக்கும் தெரிவு செய்யப்பட்டார் இப்பதவியை அவர் 1978 இல் அமைச்சராக பதவியேறும் வரையில் தொடர்ந்து வகித்து வந்தார். 1957 இல் இலங்கை சுதந்திர கட்சி தலைமையிலான அரசின் போக்குவரத்து அமைச்சர் மைத்திரிபால சேனாநாயக்கா வாகன எண் தகடுகளில் ஆங்கில எழுத்துக்கு பதிலாக சிங்கள சிறி (ஸ்ரீ) எழுத்து பாவிக்கப்பட வேண்டும் எனப் பணித்தார். இதனால் இலங்கையின் வட்க்கு கிழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைமையில் சிறி-எதிர்ப்பு போராட்டம் வெடித்தது. தெற்கில் சிங்களவரால் தமிழ் பெயர் பலகைகளுக்கு தார் பூசப்பட்டது. இப்போராட்டத்துக்கு மத்திய மலை நாட்டில் இந்திய வம்சாவளியினர் வாழும் பகுதிகளிலும் ஆதரவு கிடைத்தது. இதனால் அப்பகுதிகளில் சிங்கள-தமிழ் கலவரம் மூண்டது. இதன் போது அப்போதைய பிரதமரான எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க தொண்டமான் மத்திய மலைநாட்டின் நகரங்களுக்குச் சென்று நிலைமையை சீர் செய்தார். பின்னர் வெளியிட்ட ஊடக குறிப்பில் மலையக தமிழ் இளைஞ்ஞர்கள் அமைதிகாக்க வேண்ண்டு மெனவும், வடக்கு கிழக்கு தமிழர் பிரச்சினயிலிருந்து மலையக தமிழரது பிரச்சினை வேறுப்பட்டது எனவும் சுட்டிக்காட்டினார். மேலும் யூன் 1957 இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கு எழுதிய கடிதம் மூலம் இலங்கை சுதந்திர கட்சியையும் இலங்கைத் தமிழரசுக் கட்சியையும் பேச்சுகளுக்கு இணங்கச் செய்து, பின்னர் பௌத்த பிக்குகளின் எதிர்ப்பு காரணமாக கிழித்தெறியப்பட்ட பண்டா-செல்வா ஒப்பந்தத்துக்கு வித்திட்டார். டிசம்பர் 23, 1959 இல் அசீசின் சனநாயக தொழிளாலர் காங்கிரசும், இலங்கை தொழிலாளர் காங்கிரசும் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டது. இதன்போது நுவரெலியா ஆசனத்துக்கு போட்டியிட்ட தொண்டமான் தோல்வியுற்று பாராளுமன்ற்றம் செல்ல முடியவில்லை. அம்முறை சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆட்சி அமைத்தார். ஆகஸ்டு 4, 1960 இல் சிறிமாவோ பண்டாரநாயக்கா, தொழிலாளர் பிரதிநிதியாக சௌமியமூர்த்தியை பாராளுமன்றத்துக்கு நியமித்தார். மார்ச் 22,1965 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிட்டார். குதிரைப் பேரினம் குதிரைப் பேரினம் ("Equus") என்பது குதிரை, கழுதை, வரிக்குதிரை முதலான விலங்குவகைகள் உள்ள குழுவைக் குறிக்கும். இரட்டைப்பதிவு கணக்குவைப்பு முறை கணக்கியலில் இரட்டைப்பதிவு கணக்குவைப்பு முறை (Double-entry bookkeeping system) என்பது, வியாபார நிறுவனம் மற்றும் வியாபாரமல்லா நிறுவனங்கள் என்பவற்றில் இடம்பெறும் பலவிதமான நிதிக்கொடுக்கல் வாங்கல் ஊடுசெயல்களைப் பதிவு செய்வதற்கெனப் பின்பற்றப்படும் ஒர் அடிப்படை நியம முறையாகும். நிறுவனங்களின் நிதிநிலமை,நாணய மதிப்பு, பலவகையான வர்த்தக நடவடிக்கையால் ஏற்பட்ட விளைவுகள் என்பனவற்றை கணிப்பதற்கு இம் முறை பெரிதும் உதவுகின்றது. இக் கணக்குவைப்பு(bookkeeping) முறையில் ஒவ்வோர் ஊடுசெயலும் இரு வேறுபட்ட கணக்கேடுகளில் பதியப்படும். காரணம் நிறுவனத்தில் இடம்பெறும் ஒவ்வோர் ஊடுசெயலும் இருவிதமான தாக்கங்களை உண்டு பண்ணும் எனும் அடிப்படை அணுகுமுறையே ஆகும்.உதாரணமாக பொருட்கள் கொள்வனவின் போது ஏற்படும் செலவு தொகை கொள்வனவு க/கு இல் வரவாகவும், அதே தொகை காசு க/கு இல் செலவாகவும் பதியப்படும் இதற்கு மறுவலத்தே விற்பனையின்போது பெறப்பட்ட தொகை காசு க/கு வரவாகவும் விற்பனை க/கு செலவாகவும் பதியப்படும். இங்கு முடிவில் மொத்த வரவு/பற்றுகள் (debit) மொத்த செலவு/கடன்களுக்குச்(credit) சமப்படும். பதிவுகளை மேற்கொள்ள கணக்குஏடுகள் (general ledger) T accounts ஆக அமைக்கப்பட்டு வரவுப்பதிவுகள் (debit ) இடதுபக்கமும்,செலவுப்பதிவுகள் (credit) வலதுபக்கமும் பதியப்படும். =உ= வரலாறு == இரட்டைப்பதிவின் மேம்படுத்தப்படாத எளிய வடிவம் 12ம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டுவருவதாக நம்பப்படுகின்றது.இதன் நீட்சிவடிவம் Amatino Manucci, எனும் வர்த்தகரால் 14ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.இதனைத்தொடர்ந்து 1494ல் துறவியும்,டாவின்சியின் நண்பருமான லூகா பசியோலி என்பவரால் இன்றுள்ளது போன்று இரட்டைப் பதிவுமுறை செம்மை செய்யப்பட்டு ஏனையோருக்கும் புரிந்து பயன்படுத்தும் வகையில் வரையறை செய்து "Summa de arithmetica, geometrica, proportioni et proportionalita" எனும் தனது நூலில் வெளியிட்டார்.இதன் காரணமாகவே லூகா பசியோலி கணக்கியலின் தந்தை என அழைக்கப்படுகின்றார். வணிக நடவடிக்கைகளின்பொழுது பலவகையான மூலஆவணங்கள் (source documents) பரிமாறப்படுவது சதாரணமான வழக்கமாகும்.எடுத்துக்காட்டாக கொள்வனவின்போது கிரயப்பட்டியலும் (invoices) விற்பனையின்போது பற்றுச்சீட்டும் (receipts) வழங்கப்படுவது.இத்தகைய மூல ஆவணங்களில் உள்ள விடயங்களை நாளேடுகளில்(daybook) பதிவது தொடர்பில் சிக்கலான இரட்டை பதிவு முறை கையாளப்படுகின்றது. உதாரணமாக,வணிகமொன்றில் ரூ.1000 பெறுமதியான பொருட்கள் கடனுக்கு கொள்வனவு செய்யும்போது கொள்வனவு க/கு இல் ரூ.1000 வரவு பக்கதில் அதிகரிக்கும்.அதேவேளையில் கடன்கொடுத்தோரின் க/கு இல் ரூ.1000 செலவுபக்கத்தில் அதிகரிக்கும்.அதாவது இங்கு ஒரு விடயமானது இரு வெறுபட்ட கணக்கேடுகளில் பதிவு செய்யப்படுகின்றது.இத்தகைய பதிவுமுறையின் காரணமாக ஒர் நிறுவனத்தில் உள்ள நிதி தொடர்பில் கடன்கொடுத்தோரின் பங்கென்ன,கடன்பட்டோரின் பங்கென்ன,வரி,கூலிகளின் பங்குகளென்ன என்பனவற்றினை இலகுவாக வேறுபடுத்தி அறியமுடியும். நாளேடுகளில் பதியப்பட்ட பதிவுகளும் அவற்றின் தொகைகளும் பின்னர் அந்தந்த உரிய கணக்கேட்டிற்கு(book of accounts) மாற்றியபின்னர் (Posting) அவற்றினை சமப்படுத்தி (balancing) மீதிகள் துணியப்படும்.இம் மீதிகளே பரீட்சை மீதி (trial balance) தயாரிப்பிற்கு பயன்படும்.பரீட்சை மீதி தயாரிப்பின்போது செய்முறைத்தாள் இரு நிரல்களாக பிரிக்கப்பட்டு சமப்படுத்தப்பட்ட கணக்கேடுகளில் வரவு மீதியினைக் காண்பிப்பவை இடதுபக்கமும் செலவு மீதியினைக் காண்பிப்பவை வலதுபக்கமும் நிரல்படுத்தப்படும் இப்பட்டியலே குறிப்பிட்ட திகதியில்(பொதுவாக ஒவ்வொரு மாதமுடிவில்) உள்ள கணக்குகள் சகலவற்றின் மீதியினை விளம்பும்.முடிவில் இருபக்கமும் நிரல்படுத்தப்பட்ட மீதிகள் கூட்டப்படும்போது சமமான தொகையினை காண்பிக்கும்.அவ்வாறு சமப்படாதுவிடின்,இரட்டைப்பதிவின்போது வழுக்கள், தவறுகள், விடுபாடுகள் ஏதெனும் இடம்பெற்றுள்ளதாக கருதப்படும்.இவ்வழுக்களை இல்லாது செய்ய கணக்கீட்டுக்கொள்கைக்கமைவாக கணக்காளரால் செம்மையாக்கம் (adjustments) செய்யப்படும்.முடிவில் தோன்றும் பரீட்சை மீதிகள் நிதிக்கூற்றுக்கள் (financial statements) தயாரிக்க பயன்படுத்தப்படும். பரீட்சை மீதியினைக்கொண்டு தயாரிக்கப்படும் நிதிக்கூற்றுக்களாவன: சொத்தொன்றைக் கொள்வனவு செய்யும்போது (அ-து புதிதாக இயந்திரம் வாங்கும்போது) : கடனுக்கு விற்பனை செய்யும்போது : மேற்கூறிய ஊடுசெயலுக்கு பணம் பெறப்படும்போது கடன்பட்டோரின் க/கு மீதி (பொறுப்பு) குறைவடையும் அதே நேரம் காசு இருப்பு (சொத்து) அதிகரிக்கும். கடன்கொடுத்தொருக்கு கொடுபனவு செய்யும்போது : இரட்டைப்பதிவு கணக்குவைப்பு முறையானது கணக்கீட்டுச் சமன்பாட்டினால் ஆளப்படுகின்றது.கீழ்வரும் சமன்பாட்டிற்கமைவாகவே கணக்கீடுகள் மேற்கொள்ளப்படும் : இச்சமன்பாட்டினை விரித்துக்கூறும்போது பின்வருமாறு காணப்படும் : முடிவாக இதனை எளிய சமன்பாட்டு வடிவில் மாற்றும்போது : மேலே விரித்து எழுதப்பட்ட கணக்கீட்டுச் சமன்பாடானது எக்காலத்திற்கும் உண்மையாகக் காணப்படும்.ஏதெனும் பிழையாக பதிவுகளை மேற்கொண்டால் மாத்திரமே இச்சமன்பாட்டிற்கு ஒழுக பரீட்சிக்கப்படும் கணக்கீடுகள் பிழைக்கும்,மற்றப்படி சமப்படும். கணக்கியலில் வரவு, செலவு என்பது பணக்கொடுக்கல்வாங்கல் சம்பந்தப்பட்டதல்ல,அது T கணக்கேட்டில் கூடிக்குறைந்து செல்லும் தன்மையினைக் கூறிப்பதாகும்.பொதுவாக சொத்துக்கள், செலவீனங்கள் வரவு/பற்றாகவும் பொறுப்புக்கள், உரிமையாண்மை, வருமானங்கள் செலவு/கடனாகவும் இருக்கும்.பேரேடுகளில் வரவு இடதுபக்கமும், செலவு வலபக்கமும் பதியப்படும்.முடிவில் ஏடுகளை செவ்வைபார்க்கும்போது வரவுமீதிகளின் கூட்டுத்தொகையும் செலவுமீதிகளில் கூட்டுத்தொகையும் சமப்படும். வரவும்,செலவும் பின்வருமாறு விளக்கப்படும்: கீழே தரப்பட்டுள்ள பொதுவில் வரவுமீதியினைக் காண்பிக்கும்: கீழே தரப்பட்டுள்ள பொதுவில் செலவுமீதியினைக் காண்பிக்கும்: வரவு செலவிற்கான உதாரணம்: கடனுக்கு கணனிகளை கொள்வனவு செய்யும்போது வரவு = கணனி க/கு (நிலையான சொத்து க/கு). செலவு = கடன்கொடுத்தோர் க/கு (பொறுப்பு க/கு). அக் கணனிக்கொள்வனவிற்காக உரிய பணத்தினைச் செலுத்தும்போது: வரவு = கடன்கொடுத்தோர் க/கு (பொறுப்பு க/கு). செலவு = காசு க/கு (சொத்து க/கு). பதிவுகளின் முடிவில் (பொதுவாக மாதமுடிவில்) சகல ஏடுகளும் சமப்படுத்தப்பட்டு அவற்றின் வரவு அல்லது செலவு மீதிகளைக் கொண்டு பரீட்சைமீதி தயாரிக்கப்படும்.இப் முடிவுற்ற பரீட்சைமீதியானது கணக்குப்பதிவுகளின் பிழையின்மையினை உறுதி செய்யும் நுட்டமாகவும், முடிவுக் கணக்குகளான இலாபநட்டக் க/கு, ஐந்தொகை என்பன தயாரிப்பதற்கான தரவு அட்டவணையாகவும் தொழிற்படும். கீழ்வரும் அட்டவணை வரவு செலவு மீதிகள் மாற்றமடையும் தன்மையினை விளக்குகின்றது."+" அதிகரிப்பினையும், "-" குறைவடைவதனையும் குறிக்கும். ஆங்கில எழுத்து "T" போன்று காணப்படுவதால் இப் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. வரவுகள் நடுக்கோட்டிற்கு இடதுபுறமாகவும் செலவுகள் நடுக்கோட்டிற்கு வலதுபுறமாகவும் பதியப்படும். 0.999... கணிதத்தில் 0.999... (சில நேரங்களில் formula_1 அல்லது formula_2) என்று குறிக்கப்படும் தொடரும் பதின்பகுப்பு எண் மிகத்துல்லியமாக 1 என்ற எண்ணின் மதிப்பைக் கொண்டிருக்கும். இது ஒரு தோராயமான மதிப்பு அல்ல துல்லியமான மதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, "0.999…" என்ற எண்ணும் "1" என்ற குறியீட்டினால் குறிக்கப்படுவதும் ஒரே எண்ணே. இந்த முற்றொருமைக்கு ("identity") பல தரப்பட்ட மக்களுக்காக, பல்வேறு சூழல்களில், பல்வேறு தற்கோள்களுடன் நிறுவல்கள் தரப்பட்டுள்ளன. இந்த ஒப்புமை ("equality") சில நாடுகளில் பல ஆண்டுகளாக பாடத்திட்டத்தில் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. கணிதக் கல்வி பயிற்றுவித்தலைப் பற்றி ஆய்பவர்கள் இவ்வொப்புமையை மாணவர்கள் எவ்வாறு உள்வாங்குகின்றனர் என்பதைப் பற்றிய ஆய்வுகளை நடத்தினர். அவர்கள் கண்டவரை மாணவர்கள் பொதுவாக இதை ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களின் எண்ணத்தில் ஒன்று என்ற எண்ணிற்கும் இந்த எண்ணிற்கும் இடையே வெகுநுண்ணளவு மதிப்புக்கள் இருக்கும் அல்லது எண் கணக்கில் பிழை இருக்கும் என்று கருதுகின்றனர். அல்லது கணித எல்லை என்ற கருத்துருவை அவர்கள் சரிவர புரிந்திராமையாலோ 0.999... என்ற எண்ணிற்கு எவ்வாறாயினும் ஒரு கடைசி இலக்கம் "9" என்று இருக்க வேண்டும் என்ற பிழையான கருத்தினாலோ அவர்களுக்கு இவ்வொப்புமையை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஆனால் மெய்யெண்களை விகிதமுறு எண்களைக் ("rational numbers") கொண்டு உருவாக்கும்பொழுது எளிதில் இவ்வொப்புமையை நிறுவ முடியும். முரணொத்த இம்மெய்மை பதின்பகுப்பு எண் முறைமையில் மட்டுமே ஏற்படுவதல்ல. வேறு சில x &= 0.999\ldots \\ 10 x &= 9.999\ldots \\ 10 x - x &= 9.999\ldots - 0.999\ldots \\ 9 x &= 9 மதியுரையகம் மதியுரையகம் (Think Tank) எனப்படுவது குறிப்பிட்ட விடயங்கள் நோக்கி ஆராய்ச்சி செய்யும் நிறுவனம் அல்லது நிறுவனப்படுத்தப்படாத குழு. இது பொதுவாக வணிக நிறுவனங்கள், ஆய்வுக் கூடங்கள், பல்கலைக்கழகங்கள், அரசியல் கட்சிகள் போன்றவற்றுடன் சேர்ந்து இயங்கும். இவை கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் வழிமுறைகளை வழங்கி அவற்றுக்குரிய குறிக்கோளை முன்னெடுத்துச் செல்ல முயலும். மதியுரையகங்கள் பல வகை உண்டு. இவற்றில் பெரும்பாலானவை அரசியல், சமூகம் சார்ந்த விடயங்களையே கருப்பொருளாக கொள்கின்றன. இவை கொள்கைகளை உருவாக்கி அவற்றை செயலாக்கம் செய்வதெப்படி என்பதை விளக்கி அவற்றின் செயலாக்கத்திலும் பங்கு கொள்கின்றன. ஐக்கிய அமெரிக்காவின் வலதுசாரி மதியுரையகங்கள் இவற்றுக்கு எடுத்துக்காட்டாகும். இந்த நிறுவனங்களில் படிப்பாளர்கள் அல்லது புலமையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், துறைசார் வல்லுனர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோர் பணியாற்றுவார்கள். தமிழ்நாட்டுக் குடிவரவாளர்கள் வேறு பிரதேசங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து வசிப்பவர்களை தமிழ்நாட்டுக் குடிவரவாளர்கள் எனலாம். இவர்களை இருவகைப்படுத்தலாம். இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு குடிவந்தவர்கள்; வெளி நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு குடிவந்தவர்கள். குடிவரவாளர்களை இழிவாக "வந்தேறிகள்" என்றும் சிலர் குறிப்பிடுவதுண்டு. தமிழர்களே ஆபிரிக்காவில் இருந்து வெளிக்கிட்டு மத்திய ஆசியவினூடாக வட இந்தியா வந்து பின்னர் அங்கிருந்து தென் இந்தியாவிற்கு பரிவியதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டின் நீண்ட வரலாற்றில் பலதரப்பட்ட மக்கள் தமிழ்நாட்டுக்கு வந்து குடியமர்ந்தனர். வடநாட்டில் இருந்து வந்த "அந்தணர்கள்", நாயக்கர்கள் போன்றோர். கடல்மூலமாக வந்த வணிக நோக்கமாக வந்த முகமதியர்கள் பலரும் தமிழ்நாட்டில் தங்கினர். இன்றும் தமிழ்நாட்டில் குடிவரவாளர்கள் வர்த்தகம், பாதுகாப்பு, நல்வாழ்வு தேடி பலர் குடிவருகின்றார்கள். தமிழ்நாட்டுக்கு வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். ஜோன் கீற்ஸ் ஜோன் கீற்ஸ் (தமிழக வழக்கு:ஜான் கீட்ஸ், "John Keats", அக்டோபர் 31, 1795 -– பெப்ரவரி 23, 1821) ஆங்கில இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர். இருபத்தாறு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த கீற்ஸ் (கீட்ஸ்) ஆங்கில இலக்கியத்தின் பொற்காலமாகக் கருதப்படும் ரொமான்டிக் காலப்பகுதியின் முக்கிய கவிஞராவார். எனினும் இவருடைய ஆக்கங்களில் மில்ரன் (மில்டன்), ஷேக்ஸ்பியர் ஆகியோரின் எழுத்துக்களின் தாக்கம் இருந்ததாக திறனாய்வாளர்கள் கருதுகின்றனர். இவரது ஆக்கங்களில் "To Autumn" என்ற கவிதை மிகவும் புகழ் பெற்றுள்ளதோடு இலங்கையில் ஆங்கில இலக்கிய மேற்படிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஜான் கீட்ஸ் இரண்டாம் தலைமுறை காதல் கவிஞர்களைச் (ஜார்ஜ் கோர்டன் பைரன் மற்றும் பெர்சி பைச்சு ஷெல்லி) சேர்ந்தவர். அவருடைய படைப்புகள் அவர் இறந்து நான்கு வருடங்களுக்குப் பிறகே வெளியிடப்பட்டது. அவர் வாழ்ந்த பொது அவருடைய படைப்புகள் பெரும் வரவேற்பை பெறாது போனாலும் அவர் இறந்த பிறகு, அவை பெரிதும் போற்றப்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் எல்லோராலும் போற்றப்படும் ஒரு ஆங்கிலக் கவியாகப் புகழ் பெற்றார். அவருடைய படைப்புகள் பல கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் பாதித்துள்ளது. ஜார்ஜ் லூயிஸ் போர்க்ஸ் தனது வாழ்நாளில் கீட்ஸின் கவிதைகளைப் படித்த நாள் அன்று தான் தனக்கு முதல் இலக்கிய அனுபவம் ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். கீட்ஸின் கவிதைகள் பெரும்பாலும் உருவகங்களைக் கொண்டே இயற்றப்பட்டுள்ளது. இது எல்லா காதல் கவிஞர்களுக்கும் பொதுவானதாகும். உருவகங்களைக் கொண்டே உணர்வுகளைத் தூண்டும் விதமாக அந்த கவிதைகள் இயற்றப்பட்டுள்ளன. இன்று அவரது கவிதைகளும் கடிதங்களும் ஆங்கில இலக்கியத்தில் மிகவும் புகழப்படுகின்றது, மற்றும் ஆராய்ச்சிக்கு பயன்படுகின்றது. அவருடைய முக்கியமான படைப்புகள் - "I stood on a little toe hill"-"நான் ஒரு சின்ன குன்றின் மீது ஏறி நின்றேன்" , "Sleep and Poetry"-"தூக்கமும் கவிதையும்" மற்றும் மிகவும் பிரபலமான "On First Looking into Chapman's Homer"-"முதன் முதலில் சாப்மனின் ஹோமரைக் கண்ட பொது" அக்டோபர் 31 அச்சு நாடுகள் அச்சு அணி நாடுகள் என்பவை இரண்டாம் உலகப் போரின் போது நட்பு அணி நாடுகளை எதிர்த்த நாடுகள் ஆகும். நாஜி ஜெர்மனி, பாசிச இத்தாலி, மற்றும் ஜப்பான் அரசு ஆகியவை முதன்மையான அச்சு நாடுகள் ஆகும். இந்நாடுகள் ஒரு நேரத்தில் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் ஆசியா-பசிபிக் ஆகியவற்றின் பெரும்பாலான பகுதிகளில் மேலோங்கியிருந்தன. ஆனால் போரின் முடிவில் அச்சு அணி நாடுகள் பெரும் தோல்வியை அடைந்தன. நட்பு அணி நாடுகளைப் போலவே இக்கூட்டணியிலும் சில நாடுகள் போர் நடைபெற்ற நேரத்தில் சேர்வதும் விலகுவதுமாக இருந்தன. தேசிய விடுதலை முன்னணி (அல்ஜீரியா) தேசிய விடுதலை முன்னணி (அரபு மொழி: جبهة التحرير الوطني, பிரெஞ்சு: Front de Libération Nationale, அல்லது "FLN") அல்ஜீரியா நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1954-ம் ஆண்டு துவக்கப்பட்டது. அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு அல்ஜீரிய தேசிய இளமை ஒன்றியம் (பிரெஞ்சு: Union Nationale de la Jeunesse Algérienne) ஆகும். 2002 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி2 618 003 வாக்குகளைப் (35.3%, 199 இடங்கள்) பெற்றது. 2004 அதிபர் தேர்தலில் இந்த கட்சியைச் சேர்ந்த Ali Benflis அவர்கள் 653 951 வாக்குகளைப் பெற்றார் (6.4%). ஜனநாயகத்துக்கான தேசிய பேரணி ஜனநாயகத்துக்கான தேசிய பேரணி (பிரெ. Rassemblement National Démocratique) அல்ஜீரியா நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். இந்தக் கட்சியின் தலைவர் அஹ்மத் ஔயாஹியா என்பவராவார். 2002 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 610,461 வாக்குகளைப் (8.2%, 47 இடங்கள்) பெற்றது. 2004 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில், கட்சியின் வேட்பாளரான அப்தெல்சிஸ் பௌடெஃப்ளிகா, 8,651,723 வாக்குகள் (85%) பெற்று வெற்றி பெற்றார். அங்கோலா மக்கள் விடுதலை இயக்கம் அங்கோலா மக்களின் விடுதலை இயக்கம் -- தொழிலாளர் கட்சி (போர்த்துக்கீசம்: "Movimento Popular de Libertação de Angola - Partido do Trabalho") அங்கோலா நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1956-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்தக் கட்சி EME என்ற இதழை வெளியிடுகிறது. அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு "அங்கோலா மக்களின் விடுதலை இயக்கத்தின் இளையோர்" (Juventude do Movimento Popular da Libertação de Angola) ஆகும். 1992 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில், கட்சியின் வேட்பாளரான ஹொசே எடுவார்டோ டோஸ் சான்ட்டோஸ், 1 953 335 வாக்குகள் (49.57%) பெற்று வெற்றி பெற்றார். 1992 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி2 124 126 வாக்குகளைப் (53.74%, 129 இடங்கள்) பெற்றது. மனித உரிமைகள் பாதுகாப்புக் கட்சி மனித உரிமைகள் பாதுகாப்புக் கட்சி (Human Rights Protection Party) சமோவா நாட்டிலுள்ள ஓர் அரசியல் கட்சி ஆகும். இந்தக் கட்சியின் தலைவர் Tuila'epa Sailele Malielegaoi என்பவர். 2001 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 30 இடங்கள் பெற்றது. பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி ("Partido Comunista do Brasil") பிரேசில் நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமைக் அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1962-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவர் José Renato Rabelo இருந்தார். இந்தக் கட்சி Vermelho என்ற இதழை வெளியிடுகிறது. அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு União da Juventude Socialista ஆகும். 2002 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி1 967 833 வாக்குகளைப் (2.2%, 12 இடங்கள்) பெற்றது. சிலி கம்யூனிஸ்ட் கட்சி சிலி கம்யூனிஸ்ட் கட்சி ("Partido Comunista de Chile") சிலி நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமைக் அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1912-ம் ஆண்டு Luis Emilio Recabarren என்பவரால் துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவர் Guillermo Tellier இருந்தார். இந்தக் கட்சி El Siglo என்ற இதழை வெளியிடுகிறது. அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Juventudes Comunistas ஆகும். சிலி சமதர்மவாதக் கட்சி சிலி சமதர்மவாதக் கட்சி ("Partido Socialista de Chile") சிலி நாட்டிலுள்ள ஒரு சோசலிச ஜனநாயக அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1933-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரிக்கார்டோ நூஞெசு (Ricardo Núñez). கமிலோ எசுக்கலோனா (Camilo Escalona) இந்தக் கட்சியின் தலைவர். 2005 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 653692 வாக்குகளைப் (10.02%, 15 இடங்கள்) பெற்றது. 2006 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில், கட்சியின் வேட்பாளரான மிச்சேல் பச்லெட் (Michelle Bachelet), 3723019 வாக்குகள் (53.49%) பெற்று வெற்றி பெற்றார். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Juventud Socialista de Chile ஆகும். வெனீசூலா கம்யூனிஸ்ட் கட்சி வெனீசூலா கம்யூனிஸ்ட் கட்சி ("Partido Comunista de Venezuela") வெனீசூலா நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமை அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1931-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவர் Pedro Ortega இருந்தார். இந்தக் கட்சி Tribuna Popular என்ற இதழை வெளியிடுகிறது. அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Juventud Comunista de Venezuela ஆகும். 2005 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 133 686 வாக்குகளைப் (8 இடங்கள்) பெற்றது. இச்டிக்லல் கட்சி இச்டிக்லல் கட்சி ("Parti Istiqlal", حزب الإستقلال) மொரோக்கோ நாட்டிலுள்ள ஒரு தேசியவாத அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Jeunesse du Parti Istiqlal ஆகும். 2002 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 48 இடங்கள் பெற்றது. விடுதலைக்கும் தொழிலுக்குமான கட்சி விடுதலைக்கும் தொழிலுக்குமான கட்சி (Parti de l'Indépendence et du Travail), செனகல் நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமை அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1957-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆமத் டான்சோக்கோ (Amath Dansokho) ஆவார். இந்தக் கட்சி டான் டூலே (Daan Doole) என்ற இதழை வெளியிடுகிறது. அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு (Union de la Jeunesse Démocratique Alboury Ndiaye) ஆகும். 2001 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 1 இடங்கள் பெற்றது. ஆஸ்திரிய மக்கள் கட்சி ஆஸ்திரிய மக்கள் கட்சி ("Österreichische Volkspartei" அல்லது ÖVP) ஆஸ்திரியா நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி 1945 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவர்: வொல்ஃப்கங் ஷிச்செல் இக்கட்சியின் இளையோர் அமைப்பு இளைய மக்கள் கட்சி ("Junge Volkspartei") ஆகும். 2002 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் இக்கட்சி 2,076,833 வாக்குகளை (42.30%) பெற்று 79 இடங்களைக் கைப்பற்றியது. 2004 அதிபர் தேர்தலில் இந்த கட்சியைச் சேர்ந்த பெனிட ஃப்எரெரொ-வல்ட்னெர் அவர்கள் 1,969,326 வாக்குகளைப் பெற்றார் (47.6%). இந்தக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 6 இடங்களைக் கொண்டுள்ளது. ஆஸ்திரிய சமூக ஜனநாயகக் கட்சி ஆஸ்திரிய சமூக ஜனநாயகக் கட்சி ("Sozialdemokratische Partei Österreichs") ஆஸ்திரியா நாட்டிலுள்ள ஒரு சமவுடைமை மக்களாட்சி அரசியல் கட்சி ஆகும். இந்தக்கட்சி 1888-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவர் அல்பிரட் குசென்போவர் ("Alfred Gusenbauer") ஆவார். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு "Sozialistische Jugend Österreich" ஆகும். 2002 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 1,792,499 வாக்குகளைப் (36.51%, 69 இடங்கள்) பெற்றது. 2004 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில், கட்சியின் வேட்பாளரான ஹெயின்ஸ் ஃபிஷர் ("Heinz Fischer"), 2 166 690 வாக்குகள் (52.4%) பெற்று வெற்றி பெற்றார். இந்தக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 7 இடங்களைக் கொண்டுள்ளது. ஆஸ்திரிய சுதந்திரக் கட்சி ஆஸ்திரிய சுதந்திரக் கட்சி ("Freiheitliche Partei Österreichs" அல்லது FPÖ) ஆஸ்திரியா நாட்டிலுள்ள ஒரு தேசியவாத அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி 1956 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவர்: "Heinz-Christian Strache". அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு: "Ring Freiheitlicher Jugend Österreich". 2002 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 491,328 வாக்குகளைப் பெற்று (10.1%) 18 இடங்களைக் கைப்பற்றியது. இந்தக் கட்சி ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் 1 இடத்தைக் கொண்டுள்ளது. ஆஸ்திரியப் பசுமைக் கட்சி ஆஸ்திரியப் பசுமைக் கட்சி ("Die Grünen - Die Grüne Alternative") ஆஸ்திரியா நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி 1986 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவர்: "Alexander Van der Bellen". இந்தக் கட்சி "Planet" என்ற இதழை வெளியிடுகிறது. 2002 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 464,980 வாக்குகளை (9.47%) பெற்று 17 இடங்களைக் கைப்பற்றியது. இந்தக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 2 இடங்களைக் கொண்டுள்ளது. தாராண்மையாளர் மன்றம் தாராண்மையாளர் மன்றம் ("Liberales Forum") ஆஸ்திரியா நாட்டிலுள்ள ஒரு தாராண்மைவாத அரசியல் கட்சி ஆகும். இந்தக் கட்சி 1993-ம் ஆண்டு ஈடு சுமிட்டு என்பவரால் துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவர் அலக்சாண்டர் சாக்கு என்பவராவார். 2002 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் இக்கட்சி 48,083 வாக்குகளைப் (0.98%) பெற்றது. ஆனால் இக்கட்சியால் எந்த இடத்தையும் கைப்பற்ற முடியவில்லை. இந்தக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 1 இடங்களைக் கொண்டுள்ளது. ஆஸ்திரியா கம்யூனிஸ்ட் கட்சி ஆஸ்திரியா கம்யூனிஸ்ட் கட்சி ஆஸ்திரியா நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமைக் அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1918-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்தக் கட்சி Argument என்ற இதழை வெளியிடுகிறது. அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Kommunistische Jugend Österreichs - Junge Linke ஆகும். 2002 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 27 568 வாக்குகளைப் (0.56%) பெற்றது. ஆனால் அக்கட்சியால் எந்த இடத்தையும் கைப்பற்ற முடியவில்லை. சமதர்ம இடதுசாரிக் கட்சி சமதர்ம இடதுசாரிக் கட்சி ("Sozialistische Links Partei") ஆஸ்திரியா நாட்டிலுள்ள ஒரு சோஷலிச அரசியல் கட்சி ஆகும். இக் கட்சி 2000 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவராக "சோனியா குரூஷ்" ("Sonja Grush") இருந்தார். இந்தக் கட்சி "வோர்வார்ட்ஸ்" ("Vorwärts") என்ற இதழை வெளியிடுகிறது. 2002 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 3,906 வாக்குகளைப் (0.08%) பெற்றது. ஆனால் அக்கட்சியால் எந்த இடத்தையும் கைப்பற்ற முடியவில்லை. உழைக்கும் மக்களின் முற்போக்கு கட்சி உழைக்கும் மக்களின் முற்போக்கு கட்சி (Progressive Party of Working People) என்பது சைப்பிரஸ் நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமை அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி கிரேக்க மொழியில் Ανορθωτικό Κόμμα Εργαζόμενου Λαού என அழைக்கப்படுகிறது. கிரேக்கப்பெயரின் முதலெழுத்துக்களைக்கொண்டு சுருக்கமாக AKEL என அழைக்கப்படுகிறது. இந்தக் கட்சி 1926-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டிமிட்ரிஸ் கிரிஸ்டோஃபஸ் (ஆங்:Dimitris Christofias, கிரே: Δημήτρης Χριστόφιας) இருந்தார். இக்கட்சி ஹராவ்கி(Haravghi) என்ற இதழை வெளியிடுகிறது. இக்கட்சியின் இளையோர் அமைப்பு ஈடோன்(EDON) ஆகும். 2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் இக்கட்சி 131 066 வாக்குகளைப் (31.1%, 18 இடங்கள்) பெற்றது. இந்தக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 2 இடங்களைக் கொண்டுள்ளது. 2008 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில், கட்சியின் வேட்பாளரான டிமிட்ரிஸ் கிரிஸ்டோஃபஸ்், 240 604 வாக்குகள் (53.37%) பெற்று வெற்றி பெற்றார். மக்களாட்சித் திரளணி மக்களாட்சித் திரளணி (கிரேக்க மொழி: Δημοκρατικός Συναγερμός) சைப்பிரஸ் நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1976-ம் ஆண்டு கிலாஃப்கோஸ் கிலெரிடெஸ் என்பவரால் துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவர் நீக்கோஸ் அனஸ்தாசியாதிஸ் இருந்தார். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு NEDISY ஆகும். 2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 127 776 வாக்குகளைப் (30.3%, 18 இடங்கள்) பெற்றது. 2002 அதிபர் தேர்தலில் இந்த கட்சியைச் சேர்ந்த கிலாஃப்கோஸ் கிலெரிடெஸ் அவர்கள் 160 724 வாக்குகளைப் பெற்றார் (38.8%). இந்தக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 2 இடங்களைக் கொண்டுள்ளது. மக்களாட்சிக் கட்சி (சைப்பிரஸ்) மக்களாட்சிக் கட்சி (கிரேக்க மொழி: Δημοκρατικό Κόμμα) சைப்பிரஸ் நாட்டிலுள்ள ஒரு தாராண்மைவாத அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1976-ம் ஆண்டு ஸ்பிரோஸ் கிப்ரியானு என்பவரால் துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவர் தாசோஸ் பாப்படொப்புலோஸ் இருந்தார். 2002 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில், கட்சியின் வேட்பாளரான பாப்படொப்புலோஸ், 213 353 வாக்குகள் (51.5%) பெற்று வெற்றி பெற்றார். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு ΝΕΔΗΚ ஆகும். 2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 75 458 வாக்குகளைப் (17.9%, 11 இடங்கள்) பெற்றது. இடங்களைக் கொண்டுள்ளது. 1 இடங்களைக் கொண்டுள்ளது. சமூக ஜனநாயகத்துக்கான இயக்கம் சமூக ஜனநாயகத்துக்கான இயக்கம் (கிரேக்கம்: Κινήμα Σοσιαλδημοκρατών ΕΔΕΚ) சைப்பிரஸ் நாட்டிலுள்ள ஒரு சோசலிச ஜனநாயக அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1970-ம் ஆண்டு வாசொஸ் லிஸ்சாரிடிஸ் (Vasos Lyssaridis) என்பவரால் துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவர் Yannakis Omirou ஆவார். 2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 37 533 வாக்குகளைப் (8.9%, 5 இடங்கள்) பெற்றது. ஐரோப்பிய கட்சி ஐரோப்பிய கட்சி ("Ευρωπαϊκό Κόμμα") சைப்பிரஸ் நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 2005-ம் ஆண்டு துவக்கப்பட்டது. 2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 24 196 வாக்குகளைப் (5.8%, 3 இடங்கள்) பெற்றது. அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Νεολαία Ευρωπαϊκό Κόμμα ஆகும். ஐக்கிய மக்களாட்சிவாதிகள் ஐக்கிய மக்களாட்சிவாதிகள் (கிரேக்க மொழி: Ενωμένοι Δημοκρατές) சைப்பிரஸ் நாட்டிலுள்ள ஒரு தாராண்மைவாத அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1996-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவர் ஜோர்ஜ் வாசிலியூ இருந்தார். 2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 1000 வாக்குகளைப் (1%) பெற்றது. ஆனால் அக்கட்சியால் எந்த இடத்தையும் கைப்பற்ற முடியவில்லை. நேபாளி காங்கிரஸ் நேபாளி காங்கிரஸ் (), (नेपाली कांग्रेस) நேபாளம் நாட்டிலுள்ள ஒரு சோசலிச ஜனநாயகக் அரசியல் கட்சி ஆகும். அக்கட்சி 1950-ம் ஆண்டு நேபாளம் தேசிய காங்கிரஸ் மற்றும் நேபாள சனநாயகக் காங்கிரசு ஆகிய கட்சிகளை இணைத்துத் துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவர் கிரிஜா பிரசாத் கொய்ராலா இருந்தார். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு நேபாள தருண் தள் ஆகும். 1999 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 3214786 வாக்குகளைப் (37.17%, 111 இடங்கள்) பெற்றது. நேபாள பொதுவுடமைக் கட்சி (மார்க்சிய கூட்டு) நேபாள பொதுவுடமைக் கட்சி (மார்க்சிய கூட்டு) ("Communist Party of Nepal (United Marxist)", नेपाल कम्युनिस्ट पार्टी (संयुक्त मार्क्सवादी)) நேபாளம் நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமைக் அரசியல் கட்சி ஆகும். அக்கட்சி 2005-ம் ஆண்டு நேபாள பொதுவுடமைக் கட்சி (கூட்டு)மற்றும் நேபாள பொதுவுடமைக் கட்சி (மார்க்சிய)ஆகிய கட்சிகளை இணைத்துத் துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் Bishnu Bahadur Manandhar இருந்தார். இந்தக் கட்சியின் தலைவர் Prabhu Narayan Chaudhari இருந்தார். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Nepal Progressive Student Federation ஆகும். நேபாள உழைக்கும் விவசாயிகளின் கட்சி நேபாள உழைக்கும் விவசாயிகளின் கட்சி ("Nepal Workers Peasants Party", நேபாளி: नेपाल मजदुर किसान पार्ती) நேபாள நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமைக் அரசியல் கட்சி ஆகும். அக்கட்சி 1976-ம் ஆண்டு ரோஹித் சமுஹாவின் பாட்டாளி புரட்சிகர இயக்கம் மற்றும் கிசான் சமிதி ஆகிய கட்சிகளை இணைத்துத் துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவர் நாராயண் மன் பிஜுக்சே அவார். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு நேபாள புரட்சிகர இளைஞர் சங்கம் ஆகும். 1999 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 48685 வாக்குகளைப் (0.41%, 1 இடம்) பெற்றது. சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி சாண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி (, ) நிக்கராகுவா நாட்டிலுள்ள ஒரு மக்களாட்சிசார் நிகருடைமைக் கொள்கையுள்ள அரசியல் கட்சி ஆகும். 19 ஜூலை 1961 ஆம் ஆண்டு கார்லோஸ் ஃபொன்சேக்கா, சில்வியோ மயோர்கா, தொமாஸ் போர்கே முதலானோரைக் கொண்ட பல்கலைக்கழக மாணவர் குழு தேசிய விடுதலை முன்னணி என்ற அமைப்பைத் தொடங்கியது. இரண்டாண்டுகளுக்குப் பின் 1930 களில் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்த அகுஸ்டோ செஸார் சாண்டினோவின் பெயர் இணைக்கப்பட்டு சாண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி உருவானது. 2001 அதிபர் தேர்தலில் இந்த கட்சியைச் சேர்ந்த டானியல் ஒர்ட்டேகா 876927 வாக்குகளைப் பெற்றார் (43%). 2001 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 915417 வாக்குகளைப் (42.1%, 41 இடங்கள்) பெற்றது. 2011 ஆம் ஆண்டின் தேர்தலில் 60.85% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டானியல் ஒர்ட்டேகா நிக்கராகுவா நாட்டின் அதிபரானார். நிக்கராகுவா கம்யூனிஸ்ட் கட்சி நிக்கராகுவா கம்யூனிஸ்ட் கட்சி ("Partido Comunista de Nicaragua") நிக்கராகுவா நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமைக் அரசியல் கட்சி ஆகும். இது கட்சி 1967 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. 1984 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் 2 இடங்களையும் 1990 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் 2 இடங்களையும் பெற்றது. இந்தக் கட்சி அவான்ஸ் (Avance) என்ற இதழை வெளியிடுகிறது. நிக்கராகுவா மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி நிக்கராகுவா மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி ("Partido Marxista-Leninista de Nicaragua") நிக்கராகுவா நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமைக் அரசியல் கட்சி ஆகும். இந்தக் கட்சியின் தலைவர் இசிடொரொ டெல்லெச் இருந்தார். 1984 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 2 இடங்கள் பெற்றது. 1990 அதிபர் தேர்தலில் இந்த கட்சியைச் சேர்ந்த இசிடொரொ டெல்லெச் அவர்கள் 8135 வாக்குகளைப் பெற்றார் (0.6%). இந்தக் கட்சி "Prensa Proletaria" என்ற இதழை வெளியிடுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி (ஸ்வீடன்) கம்யூனிஸ்ட் கட்சி ("Kommunistiska Partiet") ஸ்வீடன் நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமை அரசியல் கட்சி ஆகும். இது 1970-ம் ஆண்டு இக்கட்சி தொடங்கப்பட்டது. 1970 ஆம் ஆண்டு தொடங்கி 1999 ஆண்டு வரை இக்கட்சியின் தவிசாளராக ஃபிரான்க் பௌடே விளங்கினார். தற்போது, கட்சியின் நடப்பு தவிசாளராக அன்டர்ஸ் கார்ல்சன் இருக்கின்றார். இந்தக் கட்சி "Proletären" என்ற இதழை வெளியிடுகிறது. 1994 இலிருந்து இந்தக் கட்சியின் இளையோர் அமைப்பாக "புரட்சிகராமன கம்யூனிஸ்ட் வாலிபர்கள்" என்ற அமைப்பு தொழிற்பட்டுவருகிறது. 1973 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 8014 வாக்குகளைப் (0.16%) பெற்றது. ஆனால் அக்கட்சியால் எந்த இடத்தையும் கைப்பற்ற முடியவில்லை. இடதுசாரிக் கட்சி (சுவீடன்) இடதுசாரிக் கட்சி ("Vänsterpartiet") ஸ்வீடன் நாட்டிலுள்ள ஒரு சமதர்மவாதி அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1917-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவர் லார்ச் ஒலி இருந்தார். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Ung Vänster ஆகும். 2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 324722 வாக்குகளைப் (5.85%, 22 இடங்கள்) பெற்றது. இந்தக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 2 இடங்களைக் கொண்டுள்ளது. மிதவாதக் கூட்டணிக் கட்சி மிதவாதக் கூட்டணிக் கட்சி (சுவீடிஷ் மொழி: Moderata Samlingspartiet) என்பது ஸ்வீடன் நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1904-ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்தக் கட்சியின் தலைவர் ஃப்ரெடிக் ரெயின்பீல்ட் ஆவார். இதன் இளையோர் அமைப்பு மிதவாத இளைஞர் அணி (Moderata Ungdomsförbundet) எனப்படுகின்றது. 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் 1456014 வாக்குகளைப் (26.23%,) பெற்ற இக் கட்சி 97 இடங்களை வென்றது. இந்தக் கட்சிக்கு ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் 4 இடங்கள் உள்ளன. சுவீடன் மையக் கட்சி மையம் கட்சி ("Centerpartiet") ஸ்வீடன் நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1913-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவர் மௌட் ஒலொஃப்சொன் இருந்தார். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Centerpartiets Ungdomsförbund ஆகும். 2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 437389 வாக்குகளைப் (7.88%, 29 இடங்கள்) பெற்றது. இந்தக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 1 இடங்களைக் கொண்டுள்ளது. கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் ("Kristdemokraterna") ஸ்வீடன் நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1964-ம் ஆண்டு லெவி பெட்ருச் என்பவரால் துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவர் ஜொரன் கெக்லுன்ட் இருந்தார். இந்தக் கட்சி Kristdemokraten என்ற இதழை வெளியிடுகிறது. அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Kristdemokratisk Ungdom ஆகும். 2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 365998 வாக்குகளைப் (6.59%, 24 இடங்கள்) பெற்றது. இந்தக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 2 இடங்களைக் கொண்டுள்ளது. சுவீடன் சமூக ஜனநாயகக் கட்சி சுவீடன் சமூக ஜனநாயகக் கட்சி ("Sveriges Socialdemokratiska Arbetarparti" - சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சி) ஸ்வீடன் நாட்டிலுள்ள ஒரு சோசலிச ஜனநாயக அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி 1889-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவர் ஜுரன் பெர்சொன் ஆவார். "Aktuellt i Politiken" என்ற இதழை இக்கட்சி வெளியிட்டு வருகிறது. அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு "Sveriges Socialdemokratiska Ungdomsförbund" எனப்படுகிறது. 2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 1942625 வாக்குகளைப் (34.99%, 130 இடங்கள்) பெற்றது. ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் இந்தக் கட்சிக்கு 5 இடங்கள் உண்டு. புரட்சிகர சோஷலிசக் கட்சி புரட்சிகர சோஷலிசக் கட்சி ("Revolutionary socialist party") இந்தியாவிலுள்ள ஒரு பொதுவுடமைக் அரசியல் கட்சி ஆகும். இது 1940ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் கே. பஞ்சாக்‌ஷன். இக்கட்சியின் இளையோர் அமைப்பு புரட்சிகர இளைஞர் முன்னணி (Revolutionary Youth Front) ஆகும். 2004 நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இக்கட்சி 1,717,228 வாக்குகளைப் (0.4%) பெற்றது. மக்களவையில் 3 இடங்களையும் வென்றது. இக்கட்சி இந்திய இடது முன்னணியில் அங்கம் வகிக்கிறது. ஐக்கிய ஜனதா தளம் ஐக்கிய ஜனதா தளம் இந்திய நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். ஜனதா தளம் கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக இந்தக் கட்சி மதசார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் என்ற இரு பிரிவுகளாகப் பிரிந்தது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையிலான சமதா கட்சியும் இணைக்கப்பட்டது. சமதாக் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணியுடன் பீகார் மாநில முதல்வராக இருந்தார், 2013, யூலை 16 அன்று இக்கட்சி பாசகவுடனான கூட்டணியை முறித்தது. பதினாறாவது மக்களவை தேர்தலில் இக்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதால் நிதிஷ் குமார் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக சரத் யாதவ் இருந்து வருகிறார். ஐக்கிய ஜனதா தளத்தின் சின்னமாக அம்பு சின்னம் இருந்து வருகிறது. 2004 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 9 924 209 வாக்குகளைப் (2.6%, 8 இடங்கள்) பெற்றது. இந்த கட்சி பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக இருந்தது. ஜூலை 29, 2010 அன்றைய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி இதற்கான மாநில கட்சி என்ற அங்கீகாரம் ஜார்கண்ட் மாநிலத்தில் விலக்கிக்கொள்ளப்படுகிறது. இக்கட்சிக்கா ஒதுக்கப்பட்ட அம்பு சின்னத்தை இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு அங்கு பயன்படுத்த அனுமதித்ததுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி தெலுங்கு தேசம் கட்சி இந்திய நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி 1982-ம் ஆண்டு என். டி. ராமராவ் என்பவரால் துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவராக இப்போது என். சந்திரபாபு நாயுடு (N. Chandrababu Naidu) இருக்கிறார். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு "தெலுகு யுவதா" ஆகும். 2004 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 11,844,811 வாக்குகளைப் (3.0%, 5 இடங்கள்) பெற்றது. ஆந்திர சட்டமன்றத்தில் மொத்தமுள்ள தொகுதிகள் 294 ஆந்திரத்தில் மொத்தமுள்ள மக்களவை தொகுதிகள் 42 இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (Communist Party of India (Marxist)) இந்தியாவிலுள்ள ஒரு இடதுசாரி பொதுவுடமைக் கட்சி ஆகும். இக் கட்சி கேரளா, மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் பலமான ஆதரவை பெற்றுள்ளது. இது இடது கம்யூனிஸ்ட் கட்சி என்றும் சி.பி.எம் என்றும் அழைக்கப்படுகிறது. இது இடது முன்னணியின் ஒரு அங்கமாகும். இக்கட்சியின் தலைமையிலான இடது சாரிக் கட்சிகளின் கூட்டணி கேரளா, திரிபுரா ஆகிய மாநிலத்தி்ல் ஆட்சி புரிகின்றது. இக் கட்சி முதலாளித்துவம், பேரரசுவாதம் மற்றும் உலகமயமாக்கல் ஆகியவற்றை எதிர்த்துவருகிறது. 2018 , ஏப்ரல் 18 முதல் 22 வரை ஹைதராபாத்தில் நடந்த கட்சியின் 22ஆவது காங்கிரசில் சீத்தாராம் யெச்சூரி மீண்டும் பொதுச்செயலராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பொறுப்புக்கும் ஐந்தாவது நபர் இவராவார். 1934இல், மீரட் சதி வழக்கில் தண்டனை பெற்றிருந்தவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் இந்திய பொதுவுடைமைக் கட்சி அகில இந்திய கட்சியாக செயல்படத்தொடங்கியது.இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் பிளவுபடாத இந்திய பொதுவுடமைக் கட்சி நல்ல எழுச்சியை கண்டதுடன், தேபாகா, புன்னப்புரா வயலார், வடக்கு மலபார், வார்லி ஆதிவாசிகள், திரிபுரா பழங்குடி இன மக்கள் எழுச்சி ,தெலுங்கானா உட்பட பல இடங்களில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தியது.இருப்பினும், அது விரைவில் பாராளுமன்ற அரசியலில் பங்குபெற்றது . 1950 இல் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் பொது செயலாளர் மற்றும் கட்சியின் உயர்மட்டத்தில் மிகுந்த செல்வாக்கு மிகுந்தவருமான பி.டி. ரணதேவ், இடதுசாரி புதுமுயற்சி வேட்டலுக்காக படியிறக்கப்பட்டார்.ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் அரசு, சோவியத் ஒன்றியத்துடன் நெருக்கமான உறவு மற்றும் கூட்டணியையும் கொண்டது. இதனால் சோவியத் அரசாங்கம் இந்திய கம்யூனிஸ்ட்டுகள் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு பக்கபலமாக இருக்கவேண்டும் என விரும்பியது. இருப்பினும், இந்திய பொதுவுடைமைக் கட்சியின் பெரும்பகுதியினர் இந்தியா இன்னும் அரை-நிலபிரபுத்துவ நாடாக விளங்குவதாகவும், சோவியத்தின் வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு கொள்கைகளுக்காக வர்க்க போராட்டத்தை கிடப்பில் போட முடியாது எனவும் வாதிட்டனர். மேலும், இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல் போட்டிகளுக்கு எதிராக பகைமையுணர்வை காட்டியது. 1957இல் இந்தியாவின் ஒரே காங்கிரஸ் அல்லாத மாநில அரசான இ.எம்.எஸ்.நம்பூதரிபாட் அமைச்சரவையை ஒன்றிய அரசு தலையிட்டு கலைத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது. இதே வேளையில், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சீனா கம்யூனிஸ்ட் கட்சிக்குமான உறவு கசந்தது. 1960களின் ஆரம்பத்தில் சீனா கம்யூனிஸ்ட் கட்சி, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிகர பாதையில் இருந்தும், மார்க்சிய-லெனினியக் கோட்பாடுகளில் இருந்தும் விலகுவதாக குற்றம்சாட்டியது. எல்லை தகராறு ஏற்பட்டு 1962இல் நடந்த இந்திய-சீன யுத்தத்தினால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. சீனா போரின் போது, இந்திய பொதுவுடைமைவாதிகளில் ஒரு பிரிவினர் இந்திய அரசை ஆதரித்தனர், மற்றோர் பிரிவினர் இது சமதர்ம நாட்டிற்கும் முதலாளித்துவ நாட்டிற்குமான போர் என வாதிட்டனர். இந்த கருத்தியல் ரீதியான வேற்றுமை, கட்சி திட்டம், அதன் செயல்பாட்டு முன்னேற்றம் மற்றும் இந்தியாவின் தற்போதைய நிலைமை ஆகிவற்றின் அடிப்படையில் அமைந்தது. சித்தாந்த ரீதியான இந்த கருத்தியல் வேற்றுமை சர்வதேச அளவில் சீனா மற்றும் சோவியத் அணி என இரு கூறாக பிளவுபட்டு வலதுசாரிகள் என்று சாற்றுரைக்கப்பட்டவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையிலான அரசுடன் கைகோர்க்கும் யோசனையை முன்வைத்தனர். இதை இடதுசாரிகள் என்று சாற்றுரைக்கப்பட்டவர்கள் சி.பி.எம் என பின்னால் பிரிந்தவர்கள் திருத்திவமைக்கப்பட்ட வர்க்க கூட்டணி என்றனர். இந்த தத்துவார்த்த வேற்றுமை தீவிரமடைந்து, சர்வதேச ரீதியிலான சோவியத் சீனா பிரிவுடன் சேர்ந்து சிபிஎம் என புது கட்சியானது. நுற்றுக்கணக்கான பொதுவுடைமை தலைவர்கள் சீனா ஆதரவு நிலைக்காக சிறையிலிடப்பட்டனர். சில தேசியவாதிகள் தங்கள் கருத்தை கட்சி கூட்டத்தில் வெளிபடுத்தியதற்காகவும் கட்சியின் நிலை சீனாவுக்கு ஆதரவு என பேசியவர்கள் சிறையிலிடப்பட்டனர். ஆயிரக்கணக்கான பொதுவுடைமைவாதிகள் தடம் தெரியாமல் ஆக்கப்பட்டனர். சோவியத் தலைமையை ஏற்ற பொதுவுடைமைவாதிகளும், காங்கிரஸ் அரசும் சேர்ந்து கட்சியில் தனது ஆதிகாரத்தை செலுத்த முற்பட்டனர். 1962இல் பொதுவுடைமை கட்சியில் பொது செயலாளர் அஜய் கோஷ் மரணமடைந்தார். அவர் இறப்புக்குப் பின், எஸ். ஏ. டாங்கே தலைவராகவும் ஈ. எம். எஸ். நம்பூதிரிபாட் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இது சமாதானத்திற்கான ஒரு முயற்சி. எஸ்.எ.டாங்கே வலதுசாரிகள் காங்கிரஸ் ஆதரவுக் கொள்கைகளையும், ஈ. எம். எஸ். நம்பூதிரிபாட் இடதுசாரிகள் தொழிலாளி வர்க்கப் போராட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தினர். 11 ஏப்ரல் 1964இல் நடந்த சி.பி.ஐ இன் தேசிய மாநாட்டில் இருந்து, டாங்கே மற்றும் அவரது ஆதவாளர்களின் வலதுசாரிகள் காங்கிரஸ் ஆதரவுக் கொள்கைகளுக்கு எதிரான மற்றும் பொதுவுடைமை கொள்கைக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து 32 மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். இடதுசாரிகளான அந்த 32 மன்ற உறுப்பினர்களும் ஆந்திர பிரதேசத்தில் உள்ள தெனாலியில் ஜூலை 7 முதல் 11 வரை ஒரு மாநாட்டை நடத்தினர். அந்த மாநாட்டில் உள்கட்சி பிரச்சனைகளைப் பற்றி விவாதித்தனர். இந்த மாநாட்டில் 100,000 பொதுவுடைமைவாதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 146 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அந்த மாநாட்டில் சிபிஐயின் 7ஆவது (கட்சி காங்கிரஸ்) தேசிய மாநாட்டை கல்கத்தாவில் அதே வருடத்தில் கூட்டுவதென முடிவெடுக்கப்பட்டது. தெனாலி மாநாட்டில், டாங்கே நடத்திய மாநாட்டை வித்தியாசப்படுத்த சீனா பொதுவுடைமை தலைவர் மாவோவின் உருவப்படம் வைக்கப்பட்டு இருந்தது. தெனாலி மாநாட்டில்,பொதுவுடைமைக் கட்சியின் ஒரு பிரிவை பிரதிநிதித்துவப்படுத்திய மேற்கு வங்காளத்தைச் சார்ந்த இடதுசாரி சீனா ஆதரவு குழுவினர், தங்களுடைய சொந்த வரைவு திட்டத்தை வைத்தனர். அவர்கள் எம்.பசவபுன்னையா தயாரித்த வரைவு திட்டம், வர்க்க போராட்டத்தை மழுங்கடிப்பதாகவும், சீனா மற்றும் சோவியத் இடையேயான தத்வார்த்த பிரச்சனையில் தெளிவான நிலைப்பாடை காட்டவில்லை என்றும் குற்றம்சாற்றினர். தெனாலி மாநாட்டிற்குப் பிறகு சிபிஐயின் இடதுசாரிகள் மாநில மற்றும் மாவட்டம் வாரியிலான கலந்தாய்வை நடத்தினர். மேற்கு வங்கத்தில் நடந்த சில கூட்டங்கள், மிதவாதிகளுக்கும் தீவிரமானவர்களும் இடையே நடந்த உரசல்களினால் போர்களமானது. கல்கத்தாவின் மாவட்ட கலந்தாய்வில் பரிமல் தாஸ் குப்தா(தீவிர இடதுசாரிகளில் முக்கியமானவர்) ஒரு மாற்று வரைவு திட்டதை முன்வைத்தார். மற்றொரு மாற்று திட்டத்தை ஆசிசுல் ஹாக் கல்கத்தா மாவட்ட கலந்தாய்வில் முன்வைத்தார், ஆனால் முதலில் ஹாக் முன்மொழிவதை கலந்தாய்வின் ஏற்பாட்டாளர்கள் தடுத்தனர். கல்கட்டா மாவட்ட கலந்தாய்வில் 42 உறுப்பினர்கள் எம்.பாசவபுன்னையாவின் அதிகாரப்பூர்வ வரைவு திட்டத்தை எதிர்த்தனர். சில்குரி மாவட்ட கலந்தாய்வில், கட்சி திட்டத்தின் முக்கிய வரைவு முன்மொழிவு ஏற்கப்பட்டு சில கூடுதல் அம்சங்கள் மேற்கு வங்காளத்தை சார்ந்த தீவிர இடதுசாரியான சாரு மஜுன்தாரால் சேர்க்கப்பட்டது. இருப்பினும், ஹரிகிருஷ்ண கோனார் (இடதுசாரி தலைவர்களின் பிரதிநிதி) மாசேதுங் வாழ்க என்ற கோஷத்தை கலந்தாய்வில் தவிர்த்தார்.பரிமல் தாஸ் குப்தாவின் ஆவணம் மேற்கு வங்கத்தில் நடந்த இடதுசாரி மாநில கலந்தாய்வில் முன்வைக்கப்பட்டது. குப்தா மற்றும் சிலர் 1951இல் சிபிஐ மாநாட்டில் முன்மொழியப்பட்ட வர்க்க ஆய்வை அமல்படுத்த வலியுறுத்தினர். அவருடைய கோரிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. கல்கத்தா மாநாடு அக்டோபர் 31 முதல் நவம்பர் 7 வரை தெற்கு கல்கத்தாவில் உள்ள தியாகராஜா அரங்கத்தில் நடந்தது. அதே வேளையில் டாங்கே பிரிவினர் சிபிஐயின் கட்சி மாநாட்டை பம்பாயில் நடத்தினர். இதனால் சிபிஐ இரண்டு கட்சிகளாகப் பிரிந்தது. கல்கத்தாவில் கூடிய பிரிவு டாங்கே பிரிவினரிடம் இருந்து தன்னை வேறுபடுத்த “இந்தியப் பொதுவுடைமைக் கட்சி(மார்க்சிஸ்ட்)” என பெயரிட்டுக் கொண்டது. சிபிஎம் தன் சொந்தக் கட்சித் திட்டத்தையும் அமைத்துக் கொண்டனர். பி.சுந்தரையா கட்சியின் பொது செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தத்தில் கல்கத்தா மாநாட்டில் 422 பேர் கலந்துகொண்டனர். இவர்கள் 1,04,421 உறுப்பினர்களை, அதாவது 60 சதம் சிபிஐயின் உறுப்பினர்களை பிரதிநிதிதுவபடுத்துவதாக கூறினர். கல்கத்தா மாநாட்டில் கட்சி இந்திய சாயலில் வர்க்க மதிப்பீட்டை செய்தது, அது இந்திய பெரு முதலாளிகள் தொடர்ச்சியாக பேரரசுவாதத்துடன் கூட்டுவைப்பதாகக் கூறியது. பரிமல் தாஸ் குப்தாவின் மாற்று வரைவுத் திட்டம் கல்கத்தா மாநாட்டில் பரப்பப்படவில்லை. எனினும், சௌரெண் பாசு (டார்ஜீலிங்கை சேர்ந்த தீவிர இடதுசாரி) மற்ற பொதுவுடைமைவாதிகளை போல் ஏன் மாசேதுங்கின் உருவப்படம் வைக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார். அவரின் குறுக்கீடு மாநாட்டில் கலந்துகொண்டவர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றது. கட்சியின் முதல் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் (Members of the Polit Bureau) 2004இல் நடந்த பாராளும்ன்ற தேர்தலில் சிபிஎம் 5.66 சதவித வாக்குகளை பெற்றது. போட்டியிட்ட 69 இடங்களில் 42.31 சதவிதத்தை சராசரியாக பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை சிபிஎம் வெளியில் இருந்து ஆதரித்தது. 2008 ஜூலை 9 இல் அமெரிககாவுடனான அணு ஒப்பந்தத்தின் காரணமாக கூட்டணியில் இருந்து விலகியது. . . 2009 பாராளுமன்ற தேர்தலில் 16 உறுப்பினர்களை கட்சி கொண்டிருந்தது.
2004 இன் நிலவரப்படி கட்சியில் 8,67,763 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
மேற்கு வங்காளம் சோஷலிசக் கட்சி மேற்கு வங்காளம் சோஷலிசக் கட்சி மேற்கு வங்காளம் நாட்டிலுள்ள ஒரு சமதர்மவாதி அரசியல் கட்சி ஆகும். இந்தக் கட்சியின் தலைவர் கிரனமோய் நந்தா இருந்தார். கோட் டிவாரின் மக்களாட்சிக் கட்சி கோட் டிவாரின் மக்களாட்சிக் கட்சி ("Parti Démocratique de la Côte d'Ivoire") ஐவரி கோஸ்ட் (கோட் டிவார்) நாட்டின் ஒரு அரசியல் கட்சி ஆகும். இக் கட்சி 1946-ம் ஆண்டு Félix Houphouët-Boigny என்பவரால் தொடக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவராக ஹென்றி கோனன் பேடீ ("Henri Konan Bédié") என்பவரும் பொதுச் செயலாளராக அல்ஃபொன்சே மாடி ("Alphonse Djédjé Mady") என்பவரும் பணியாற்றுகின்றனர். இந்தக் கட்சி Nouveau Réveil என்ற இதழை வெளியிடுகிறது. இதன் இளையோர் அமைப்பு Forum National des Jeunes du PDCI-RDA ஆகும். 2000 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 94 இடங்கள் பெற்றது. இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள் இரண்டாம் உலகப் போரின் நட்பு அணி நாடுகள் அல்லது "நேச நாடுகள்" ("Allies of World War II") என்பவை இரண்டாம் உலகப் போரின் போது அச்சு அணி நாடுகளை எதிர்த்த நாடுகளைக் குறிக்கும். போர் நடைபெற்ற போது இவை ஐக்கிய நாடுகள் எனப்பட்டன. எனினும் இது தற்போது போருக்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் அவையையே குறிக்கிறது. நட்பு அணி நாடுகளின் வெற்றியை அடுத்து இப்போர் முடிவுக்கு வந்தது. ஐக்கிய இராச்சியம், பிரான்சு ஆகியவை நட்பு அணி நாடுகளில் இருந்த முதன்மையான நாடுகள் ஆகும். நவம்பர் 1 சேர்வை சேர்வை என்ற பட்டம் கொண்ட ஜாதிகள் தமிழ்நாட்டில் முத்தரையர்(முத்துராஜா மற்றும் அம்பலக்காரர் உட்பிரிவினருக்கு மட்டும்), கோனார் (யாதவர்), நாடார் அகமுடையார், தொட்டிய நாயக்கர், வன்னியர் அனைவருக்கும் சேர்வை பட்டம் உண்டு. தெலுங்கு யாதவர்களான கொல்லா, கன்னட மொழி பேசும் வொக்கலிகர்களான கப்பிலியர் கவுண்டர்களுக்கும் சேர்வை என்ற பெயர் இருந்து வருகிறது. சேர்வை என்றால் அரசு சார்ந்த சேவையில் ஈடுபட்ட ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட பணிக்குழுவினர் எனப்படும். அரசு சேவகம்(சேவை)என்பதே சேர்வையாக மருவியது. பொதுவாக மன்னராட்சிக் காலங்களில் கோயில் மற்றும் அரண்மனையில் கோசாலைக்காவல், கணக்காயர், பண்டாரக்காவல், படிக்காவல், மேல்காவல், பல்லக்கு தூக்குதல், பராமரித்தல் மற்றும் பராமரிப்புப்பணி, அக்கசாலைக்காவல் ஆகிய வேலைகளை செய்த மக்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருப்பார்கள். ஒவ்வொரு துறை சார்ந்த சேவை செய்வோரும் ஒரே குழுவாக, அதாவது கோசாலைக்காவல் சேர்வை, பண்டாரக்காவல் சேர்வை என்பது போல தனித்தனியே வழங்கப்பட்டுள்ளனர். மேலும், சேர்வைக்காரர்கள் என்பவர்கள் அந்தந்த சேவைக்குழுவின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள். மன்னராட்சியில் கோவில், அரண்மனை இவற்றில் சேவை செய்தவர்களை அரசாங்கப்பணியாளர், அரச ஊழியம் செய்வோர் என்ற பொருளில் சேர்வை என்று அழைத்தனர். அதே வேளையில், சேர்வை என்ற பட்டம் தளபதிகளுக்கும், சில குறுநில மன்னர்களுக்கும் உண்டு. சேர்வைக்காரர் பட்டம் உள்ளவர்களின் சமுதாயத்தை பொருத்து அவர்களின் பதவியும், பதவியை பொருத்து அவர்களின் அதிகாரமும் மாறுபடும். காதலன் (திரைப்படம்) காதலன் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு தேவா, நக்மா, வடிவேலு மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் பிரேமிக்குடு என்ற பெயரில் தெலுங்கிலும், ஹம்சே ஹாய் முக்காபலா என்ற பெயரில் இந்தியிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. இத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, நக்மாவிற்கு பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. காதல்படம் மாணவர்கள் தலைவராக பதவி வகிக்கும் பிரபு (பிரபு தேவா) ராஜ்புட் வியாபாரியான ரஞ்சித் சிங் ராத்தோட் சிறப்பு விருந்தினராகப் பங்குபெறும் விழாவிற்கு அழைப்புவிடுக்கச் செல்லும் பிரபு அங்கு அவர் மகளான ஸ்ருதியைக் காண்கின்றார். அப்பெண்ணின் அழகில் மயங்கும் பிரபு அவரைத் தனது கனவுக்கன்னியாகவும் தேர்ந்தெடுத்துக் காதலிக்கின்றார். பல பிரச்சனைகளின் பின்னர் இவரும் இவரின் நண்பரும் சேர்ந்து ஸ்ருதியினைப் பற்றிய பல தகவல்களைப் பெற முயற்சிக்கின்றனர். இவரைப் பின்தொடர்ந்து செல்லும் பிரபு அவர்தன் காதலியைக் கவரும் வகையில் பலமுறைகள் முயற்சிகள் செய்தும் தோற்றுப்போகின்றார். இறுதியில் அவர் வீட்டிற்குள்ளேயே சென்று பரத நாட்டியம் ஆடி தன் காதலியின் முகத்தினை வரைந்து காதலியின் மனம் கவர்கின்றார் பிரபு. இந்நிகழ்வைத் தொடர்ந்து பிரபுவைக் காதலிக்கின்றார் ஸ்ருதி. இவர்கள் இருவரின் காதலினை அறியும் ஸ்ருதியின் தந்தையும் பிரபுவின் மீது பொய்வழக்கு போட்டு காவல்துறையில் முறையிடுகின்றார். பிரபுவைக் கைதுசெய்யும் காவல்துறையினர் அவரை காவல்துறையில் பணிபுரியும் அவர் தந்தையின் மூலம் அடித்துக் கொடுமைப்படுத்துகின்றனர். பின்னர் தன் மகனை அடித்துவிட்டோம் என தெரிந்து மனம் நொந்து போகின்றார் பிரபுவின் தந்தை. இதற்கிடையில் ஸ்ருதியின் தந்தையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுமக்களின் மீதான தீவிரவாத தாக்குதலை செய்ய முயலும் ரகுவரன் பின்னைய காலங்களில் அவர் தன்னை ஏமாற்றிவிட்டதனை அறிந்து ஸ்ருதியின் தந்தையைக் கொல்ல முயல்கின்றார். ஸ்ருதியின் தந்தை மற்றும் ஸருதி போன்றவர்களைக் காப்பாற்றும் பிரபு பின்னர் ஸ்ருதியுடன் சேர்கின்றார் என்பதே திரைக்கதை. ஆச்சார்யா (திரைப்படம்) ஆச்சார்யா 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாமி என்று அழைக்கப்படும் நந்தன் (விக்னேஷ்) அந்தணர் குடும்பத்தைச் சேர்ந்தவன்.இளவயதிலேயே ஒவ்வொரு வீடாகச் சென்று உணவு வாங்கி உண்ணும் பழக்கத்தினைக் கொண்டிருக்கும் அவன் சிறிது காலங்களிலேயே தனது தாயாரையும் இழக்க நேரிட்டது.இச்சமயம் ஓர் இஸ்லாமியரின் அரவணைப்பால் எடுத்து வளர்க்கப்படும் நந்தன் ஒருசமயம் வேறொரு ஊருக்குச் செல்ல நேரிட்டது.அப்பொழுது அங்குவரும் இரு திருடர்களால் நந்தன் கொண்டு சென்றிருந்த பை திருடுப்போகின்றது. அதேசமயம் அத்திருடர்கள் பேருந்து நிலையத்தற்கருகிலேயே நித்திரை கொண்டிருந்த நந்தன் மீது சாராயத்தினையும் ஊற்றிவிட்டுச் சென்றனர் அவர்களைப் பிடிப்பதற்காக ஓடிச் செல்லும் நந்தன் வழியில் காவல்துறையினரைக் கண்டு அத்திருடர்களைப் பற்றிக் கூறுகின்றார்.ஆனால் இவர் மீது சாராய வாடை வரவே அவரை காவல்துறையினர் கைது செய்து செல்கின்றனர்.அங்கு பல துன்புறுத்தலின் பின்னர் காவல் துறை அதிகாரிகள் நடந்த உண்மையினைத் தெரிந்து கொள்கின்றனர்.பின்னர் சிறுது காலம் அக்காவல் நிலையத்தில் பணிபுரியும் நந்தன் அங்கிருந்து பெண்ணொருவரின் உதவியை நாடிச் செல்கின்றார்.அப்பகுதிக்கு தலைவிப் பொறுப்பை உடைய அப்பெண்ணும் நந்தன் மீது அன்பு செலுத்துகின்றார்.பின்னர் அங்கு ஏற்படும் கலவரங்களினால் அப்பெண் கொல்லப்படவே கொன்றவர்களைக் பழி தீர்க்கின்றார்கள் நந்தன் மற்றும் அவர் குழுவினர்.இச்செய்தி கேட்டறியும் காவல்துறையின் தலைமைப் பீடத்திலிருந்து வரும் கட்டளையின் படி அங்கு அடாவடித்தனம் செய்யும் அனைவரையும் சுட்டுத்தள்ளுமாறு உத்தரவு கிடைக்கின்றது.அதன்படி ஒவ்வொருவரும் சுட்டுக் கொலை செய்யப்படுவதால்,நந்தன் இவற்றைத் தட்டிக் கேட்கின்றார். இவற்றெல்லாவற்றிற்கும் காரணமான தேவரைக் கைது செய்யவும் காவல்துறையினரிடம் கேட்டுக் கொள்கின்றார்.அதன்படியே காவல்துறையினரும் செய்கின்றனர் இதற்கிடையில் நந்தன் காதலித்த பெண் தேவரைக் கைது செல்லும் வழியில் தேவரின் காவலாளியால் சுட்டுக் கொள்ளப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது. இந்திரா (தமிழ்த் திரைப்படம்) இந்திரா (1996) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். சுஹாசினி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அரவிந்த் சாமி, அனுராதா ஹாசன், ராதாரவி, நாசர் போன்ற பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் டோக்யோவில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. கலைப்படம் / நாடகப்படம் பாடலாசிரியர் - வைரமுத்து நவம்பர் 2 போரியல் கலைச்சொற்கள் இப்பக்கம் போரியல் சார்ந்த தமிழ் கலைச்சொற்களைப் பட்டியலிடுகிறது. போர்களத் தாக்குதல்கள் குறித்தான சில சொற்கள்
இவற்றையும் பாக்க வரிசை.
குணா குணா 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சந்தான பாரதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரேகா, ஜனகராஜ், ரோஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். காதல்படம் மன நோயாளியான குணா (கமல்ஹாசன்) கவிதை ஆற்றல் மிக்கவராவார்.விலை மாதுவாக தொழில் செய்யும் தனது தாயையும் தனது குடும்பத்தாரையும் வெறுக்கும் குணா கனவு தேவதையொருவரைப் பற்றியே உச்சரித்துக் கொண்டிருக்கவும் செய்கின்றார்.அப்பெண்மணிக்கு அபிராமி எனப் பெயரிட்டு அவர் தனக்குக் காதலியாகக் கிடைப்பாரென்றும் நம்பிக்கையுடன் இருக்கின்றார் குணா.அதே சமயம் அவரது தீய மனம் படைத்த நண்பனால் கோயில் உண்டியல் பணத்தினைக் கொள்ளையடிக்கவும் ஒப்புக் கொள்கின்றார்.அக்கோயிலுள் ஒரு அழகிய பெண்ணையும் காண்கின்றார் அவரே தனது அபிராமி என நினைத்து தன்னுடன் கடத்திச் செல்கின்றார்.ஒரு மலை உச்சியில் தங்கியிருந்து அவர் தன் கனவுக்கன்னி எனக்கருதிய அபிராமியை மிகுந்த பாசத்துடன் கவனித்துக்கொள்கின்றார், இவர் காட்டும் அன்பைப் பாராது பலமுறை அந்தப் பெண் அங்கிருந்து தப்பிச் செல்ல முயல்கின்றார். ஆனாலும் தோற்றுப் போகின்றார். இதற்கிடையில் அப்பெண்ணின் தந்தையின் நண்பன் அப்பெண்மணியின் சொத்துக்கள் அனைத்தினையும் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு அவளைக் கொலை செய்ய முயல்கின்றான். ஆனால் குணா அவளைக் காப்பாற்றி மலைக் குகைக்குள் கொண்டு சேர்க்கின்றான். இதற்கிடையில் இருவருக்கும் காதல் மலர்கின்றது.ஆனால் அப்பெண்மணியைத் தேடி வரும் காவல்துறை அதிகாரிகள் குணாவை அழைக்கின்றனர் ஆனால் அவன் அவர்களின் பேச்சுக்களைக் கேட்க மறுக்கின்றான். அதே சமயம் அங்கு வரும் குணாவின் காதலியின் சொத்துக்களை அடைய விரும்பியவன் அவளைச் சுட்டு வீழ்த்துகின்றான்.தனது காதலி மடிந்து கிடப்பதைப் பார்த்த குணா அவள் உடலைத் தூக்கியவாறு தற்கொலை செய்து கொள்கின்றார். இளையராஜா இசையமைத்த இப்படத்தின் பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி ஆவார். சினோபி நோ மோனோ ஷினோபி நோ மோனோ (Shinobi no mono )1962 ஆம் ஆண்டு வெளிவந்த ஜப்பானிய மொழித் திரைப்படமாகும். நாடகப்படம் / தற்காப்புக்கலைப்படம் பண்டைக்கால ஜப்பானில் நடைபெறும் இத்திரைக்கதையில் நீன்ஞா (ninja) குழுவினர் தலைவன் ஒருவன் தனது குழு உறுப்பினர்களை வைத்து அப்பகுதி மன்னர் படைகளினை எதிர்த்துப் போராட ஆயத்தம் செய்கின்றான்.குழுவினருக்கு தனது மாறு வேட முகத்தினை காண்பிக்கும் இவன் கட்டளைப்படியே அனைத்து நீன்ஞா போராளிகளும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராட்டத்தில் இறங்குகின்றனர்.பெரும்பாலும் இரவு நேரங்களில் தாக்குதல்களை நடத்தும் அவ்வீரர்கள் உயிரினும் மேலாகத் தம் போராட்டக் கொள்கையினைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.இச்சமயம் அக்குழுவின் தலைவனைன் மனைவியின் மோகமனத்தின் படி அவளுடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்ளும் நீன்ஞா போராளியொருவனை மாறு வேடம் பூண்டிருக்கும் தலைவன் கண்டுகொள்கின்றான்.தன் மனைவி மீது தகாத உறவு வைத்துக் கொண்டதற்காக அவனைக் கொலை செய்ய முன் வரும் போதும் மன்னித்து அவன் செய்த குற்றத்திற்காக ஷன் என்ற தனது எதிரியினைக் கொலை செய்ய உத்தரவு பிறப்பிக்கின்றான்.அப்போராளியும் அவ்வாறே செய்கின்றான்.மேலும் பல கொலைகளை தன் தலைவன் ஆணைப்படி செய்து முடிக்கும் அப்போராளி இறுதியில் தனக்கு மிக நெருங்கிய சொந்தக்காரர்களை தான் தலைவனாகக் கருதுபவனே கொலையும் செய்திருக்கின்றான் என்பதனை அறிந்து அவனுக்கு எதிராகச் சண்டையிட எத்தனிக்கின்றான்.அச்சமயம் நின்ஞாக்களின் எதிரிகள் படை அவர்களை சுற்றிவளைத்துத் தாக்குதல் நடத்தி அனைத்து நிஞ்ஞாக்களையும் கொன்றொளிக்கின்றனர்,ஆனால் இப்பகுதியில் இருந்து தப்பிச் செல்லும் நிஞ்ஞாப் போராளி தன் காதலியுடன் வாழ்வது குறிப்பிடத்தக்கது. தளபதி (திரைப்படம்) தளபதி (1991) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மணிரத்னம் இப்படத்தை இயக்கினார். ரஜனிகாந்த், மம்முட்டி, அரவிந்த் சாமி, ஷோபனா மற்றும் பலர் நடித்திருந்தனர். நாடகப்படம் சிறுவயதிலேயே தாயாரால் அனாதையாக விடப்படுகின்றார் சூர்யா (ரஜினிகாந்த்). இதனைத் தொடர்ந்து ஏழைகளுடன் வாழ்க்கை நடத்தும் சூர்யா நல்ல மனிதராக உருவெடுக்கின்றார். நல்ல செயல்கள் பல செய்யும் சூர்யா ஒரு சமயம் பெண்ணொருவரைத் தாக்க முற்பட்டவனைத் தாக்கிய பொழுது அவன் இறந்துவிடுகின்றான். இதனால் சூர்யா கைது செய்யப்படுகின்றார். ஆனால் அவரை விடுதலை செய்ய ஏற்பாடு செய்கின்றார் அவ்வட்டாரத் தலைமை அதிகாரத்தினை உடையவரான தேவ்ராஜ் (மம்முட்டி). தனது குழுவில் ஒருவனையே சூர்யா கொன்றுள்ளான் என்பதனைத் தெரிந்தும் அவன் செய்த நல்ல குணத்தினால் காப்பாற்றுகின்றார். பின்னர் இருவரும் நல்ல நண்பர்களாகின்றனர். அச்சமயம் அங்கு புதியதாக பதவியேற்கும் அர்ஜூன் (அரவிந்த் சாமி) தேவ்ராஜின் குற்றச் செயல்களிற்காக அவரைக் கைது செய்ய ஏற்பாடுசெய்ய உத்தரவு பிறப்பிக்கின்றார். சூர்யா இதனை அறிந்து அர்ஜூனைக் கொல்லச் செல்கின்றார். ஆனால் அர்ஜூன் தன் சகோதரர் என அறிந்து செய்வதறியாது திகைத்து நிற்கின்றார். மேலும் அவரின் தாயாரின் கட்டளைப்படி சகோதரனான அர்ஜூனுக்கு கெடுதல் செய்யக் கூடாதென சத்தியம் செய்தவரென்பதால் அவ்வாறு நின்றார். "இராக்கம்மா கையத்தட்டு" பாடல், பி.பி.சி. நடத்திய வாக்கெடுப்பின் படி உலகின் மூன்றாவது சிறந்த பாடலாக தேர்ந்தெடுக்கப்பட்டது. காமராஜ் (திரைப்படம்) காமராஜ் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். தமிழக முதல் அமைச்சராகவும் அரசர்களை உருவாக்குபவர் என்ற பட்டத்தினையும் பெற்ற காமராஜரின் வரலாற்றுப் பின்னணியில் இத்திரைப்படம் வெளிவந்தது. இத்திரைப்படம் விருதுநகரில் உள்ள காமராஜரின் தங்கை மறைந்த .நாகம்மாளின் குடும்பத்தினர்களின் கருத்தையும் காமராஜருடன் அவரின் தங்கை மகன்களின் அனுபவங்களையும் கேட்காமல் எடுக்கப்பட்டதால் காமராஜரின் அரசியல் வாழ்க்கை தவிர அவருடைய தாய், தங்கை, தங்கை மகன்கள், மகள்கள், மருமகள்கள், தங்கை பேரன்மார்கள் என பெரிய குடும்பப் பின்னணி இப்படத்தில் வெளிச்சத்துக்கு வராமலேயே போய்விட்டது. நவம்பர் 3 அதிராஜேந்திர சோழன் அதிராஜேந்திர சோழன் வீரராஜேந்திர சோழனின் மகன் ஆவான். தந்தை இருந்த காலத்திலேயே இவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டப்பட்டது. கி.பி 1070 ஆம் ஆண்டில் வீரராஜேந்திரன் இறக்கவே, அதிராஜேந்திரன் சோழநாட்டுக்கு அரசன் ஆனான். இவனுடைய ஆட்சி மிகவும் குறுகியது. பதவியேற்ற அதே ஆண்டிலேயே, சில மாதங்களில் அவன் இறக்க நேரிட்டது. இவனது இறப்புப் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. வைணவ நூலொன்று இவன் நோய் வாய்ப்பட்டு இறந்ததாகக் கூறினும். அதிராஜேந்திரன் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது. அக்காலத்தில் வைணவர்களுக்கும், சைவர்களுக்கும் இடையில் பிரச்சினைகள் இருந்ததாகத் தெரிகிறது. வைணவர்கள் தொல்லைகளுக்கு ஆளானதாகவும், இதன் காரணமாகக் கலகங்கள் நிகழ்ந்ததாகவும் கருதப்படுகின்றது. அதிராஜேந்திரனின் இறப்புக்கும் இதற்கும் தொடர்பு இருப்பதாகச் சில ஆய்வாளர்கள் ஐயம் வெளியிட்டுள்ளார்கள். வாரிசு எவரும் இன்றி அதிராஜேந்திரன் இறந்தது, சோழ அரசமரபில் முக்கியமான மாற்றத்துக்குக் காரணமானது. அதுவரை, விஜயாலய சோழனின் நேரடி ஆண் வழியினரால் ஆளப்பட்டு வந்த சோழ நாடு,முதலாம் இராஜேந்திரனின் மகள் வழியில், கிழக்குச் சாளுக்கிய அரச மரபில் வந்த இளவரசன் அநபாயச் சாளுக்கியன் கீழ் வந்தது. இவனே முதலாம் குலோத்துங்கன் எனப்பட்டவன். ஜேம்ஸ் பாண்ட் ஜேம்ஸ் பாண்ட் (ஜேம்ஸ் பொண்ட்) அயன் பிளெமிங் என்பவரால் 1952-இல் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை உளவாளி கதாபாத்திரம் ஆகும். இவர் பிரிட்டிஷின் இரகசிய சேவையின் உறுப்பினர் ஆவார். 007 இவரது இரகசிய குறிப்பெண் ஆகும். இக்கதாப்பாத்திரத்தை வைத்துப் பல புத்தகங்கள், திரைப்படங்கள், வானொலி நிகழ்ச்சிகள், காமிக்ஸ் கதைகள், காணொளி விளையாட்டுக்கள் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. இயான் தனது அனைத்துப் படைப்புகளுக்கும் ஒரு மையக் கதாபாத்திரம் வேண்டும் என்பதற்காக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை உருவாக்கினார். பாண்ட் ஒரு கப்பற்படை ஆணையர். மேலும் இவர் எம்.ஐ6 எனப்படும் பிரிட்டிஷ் இரகசிய சேவையின் உறுப்பினர் ஆவார். இரண்டாம் உலகப் போரின் போது தான் சந்தித்த பல கப்பற்படைத் தளபதிகளை அடிப்படையாகக் கொண்டு இக்கதாபாத்திரத்தை இவான் உருவாக்கினார். இவான் ஜேம்ஸ்பாண்டின் கதாபாத்திரத்தைப் பற்றி குறிப்பிடும் போது 'நான் இரண்டாம் உலகப்போரில் சந்தித்த அனைத்துத் தளபதிகள் மற்றும் ஆணையர்களின் கலவையே ஜேம்ஸ்பாண்டின் கதாபாத்திரம்' எனக் குறிப்பிடுகின்றார். நார்வேயிலும் கிரீஸிலும் இரண்டாம் உலகப் போரின் போது ரகசிய உளவாளியாக வேலைப் பார்த்த தனது அண்ணன் பீட்டரை வைத்தும், அண்ணன் நண்பர்களின் நடவடிக்கைகளை வைத்தும் ஜேம்ஸ் பாண்டின் செயல்பாடுகளையும், உடை அலங்காரங்களையும் இவான் உருவாக்கியுள்ளார். கதாபாத்திரத்திற்கு உண்டான பெயரை அமெரிக்க பறவைகள் வல்லுனரான ஜேம்ஸ்பாண்டின் பெயரை வைத்தார். இவான் தனது கதாபாத்திரத்திற்காக எளிமையான மற்றும் மந்தமான உணர்வை தரக்கூடிய ஒரு பெயரைத் தேடி ஜேம்ஸ்பாண்ட் என்று வைத்ததாகக் கூறுகிறார். ஜேம்ஸ் பாண்டின் இதர பழக்கவழக்கங்கள் மற்றும் குணாதிசயங்களை இவான் தனது சொந்த கருத்துக்களின் பிம்பத்தை வைத்தே உருவாக்கியுள்ளார். உதாரணத்திற்கு முட்டை உணவுகள், கால்ஃப் விளையாடுவது, மற்றும் சூதாட்டம் விளையாடுவது ஆகியவை இவானின் விருப்பங்களாகும். அதையே ஜேம்ஸ்பாண்டின் விருப்பங்களாக இவான் சித்திரித்துள்ளார். எழுத்தாளர் அயன் பிளெமிங் ஜேம்ஸ் பாண்டு கதாப்பாத்திரத்தை வைத்து பன்னிரண்டு நாவல்களையும், இரண்டு சிறுகதைகளையும் உருவாக்கியுள்ளார். 1964 ஆம் வருடம் அவர் இறந்தார். 1953 முதல் 1966 வரை உள்ள காலகட்டத்தில் இவானின் புத்தகங்கள் வெளிவந்தன. அவரின் மறைவுக்குப் பின்னர் அதிகாரப்பூர்வமாக கிங்ஸ்லி எமிஸ், கிரிஸ்டோபர் வுட், ஜான் கார்ட்னர், ரேமண்ட் பென்சன், செபஸ்டின் ஃபல்க்ஸ், ஜெஃப்ரி டெவர், வில்லியம் பாய்ட் மற்றும் அந்தோணி கோரோவிட்ஸ் ஆகிய எட்டு எழுத்தாளர்களும் ஜேம்ஸ்பாண்ட் கதாப்பாத்திரத்தை வைத்துப் புத்தகங்கள் எழுதத் தொடங்கினர். இவர்களில்லாமல் சாஃப்ர்லி ஹிக்சான் எனும் எழுத்தாளர் இளம் ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தை வைத்து தொடர்கதைகளை எழுதி வருகிறார், கேத் வெஸ்ட்புரூக் என்பவர் மூன்று நாவல்களை எழுதியுள்ளார். கடைசியாக வந்த இரு ஜேம்ஸ்பாண்ட் புத்தகங்கள் எழுத்தாளர் அந்தோணி கோரோவிட்ஸ் எழுதிய "ட்ரிக்கர் மோர்டிஸ்"(செப்டம்பர் 2015) மற்றும் "ஃபாரெவர் அன்ட் த டே"(மே 2018) ஆகும். ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பல ஆங்கிலத் திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. இத்திரைப்பட தொடர்கள் பல காலமாக வெளிவரும் வெற்றித்தொடர்வரிசையாக அறியப்படுகிறது. இத்தொடர்களின் மொத்த வசூல் மட்டும் 7.040 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகையைத் தாண்டியுள்ளது. இதனால் இதுவரை அதிக வசூலை ஈட்டிய நான்காவது திரைப்படத் தொடராக ஜேம்ஸ்பாண்ட் உள்ளது. இத்திரைப்படத் தொடர் 1962 ஆம் ஆண்டு நடிகர் சியான் கானரி நடித்த "டாக்டர் நோ" என்பதில் தொடங்கி 2015 ஆம் ஆண்டு நடிகர் டேனியல் கிரெய்க் நடித்த "ஸ்பெக்டர்" திரைப்படம் வரை மொத்தம் இருபத்திநான்கு திரைப்படங்களாகும். இத்திரைப்படத் தொடரை இயான் தயாரிப்பாளர்கள் தயாரிக்கின்றனர். 2018 ஆம் ஆண்டு வரை இருபத்திநான்கு ஜேம்ஸ் பாண்டு திரைப்படங்களை இவர்கள் உருவாக்கியுள்ளனர். இரண்டு ஜேம்ஸ் பாண்டு திரைப்படங்கள் வேறு தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பிலும் வெளிவந்துள்ளது. ஜேம்ஸ் பாண்டு திரைப்படங்கள் வெவ்வேறு அம்சங்களால் ரசிகர்களை ஈர்த்தாலும், இசையும் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஜேம்ஸ் பாண்டின் இசை இரண்டு முறை ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. மேலும் பல முறை ஆஸ்கருக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஆறு நடிகர்கள் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளனர். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு: சியான் கானரி ("Sean connery")
ஜார்ஜ் லேசன்பி ("George Lazenby")
ரோஜர் மூர் ("Roger Moore")
திமோத்தி டால்ட்டன் ("Timothy Dalton")
பியர்ஸ் பிராஸ்னன் ("Pierce Brosnan")
டேனியல் கிரெய்க் ("Daniel Craig")
இந்தியாவின் நிறுவனமயமாக்கம் இந்தியாவில் 1991ல் பொருளாதார சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின தொழில்களை நிறுவனப்படுத்துதல் தொடங்கியது. வேளாண்மை, சில்லறை வியாபாரம், மீன்பிடிப்பு, நெசவு உட்பட நீண்ட காலமாக தனிமனித அல்லது சிறுதொழில்களாக இருந்த துறைகளில் பெரு நிறுவனங்கள் ஈடுபடத் துவங்கின. இம்மாற்றமே இந்தியாவின் நிறுவனமயமாக்கம் (Corporatisation of India) என்று அழைக்கப்படுகிறது. இது குறித்து இருவேறு கருத்துகள் நிலவுகின்றன - வெளி நாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி பெறவும் இது இன்றியமையாதது என்று ஒரு சாரரும், இது பாரம்பரிய தொழில் முறைகளை அழித்து, தொழிலாளர்களின் சுரண்டலுக்கு வழிவகுக்கின்றது என இன்னொரு சாரரும் கருதுகின்றனர். வடகொரியாவின் வரலாற்றுக் காலக்கோடு தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் பட்டியல் தமிழீழ விடுதலைப் புலிகளினால் நடத்தப்பட்ட,நடத்தப்பட்டதாகக் கருதப்படும் தாக்குதல்கள்,தாக்குதல் முறியடிப்புச் சமர்களின் பின்னணிகளை இப்பட்டியல் தொகுக்க முனைகின்றது. 2006 | 2005 | 2004 | 2003 | 2002 | 2001 | 2000 | 1999 | 1998 | 1997 | 1996 | 1995 | 1994 | 1993 | 1992 | 1991 | 1990 | 1989 | 1988 | 1987 | 1986 | 1985 | 1984 | 1983
அழகி (2002 திரைப்படம்) அழகி () (2002) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி போன்ற பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாடகப்படம் சண்முகமும் (பார்த்திபன்) தனலட்சுமி (நந்திதா தாஸ்) இருவரும் சிறுவயதில் கிராமச் சூழலில் படித்த மாணவர்கள் தனலக்ஸ்மியை பலமுறை ஆசிரியர்களிடமிருந்து காப்பாற்றும் சண்முகம் அவர் மீது காதல்கொண்டிருந்தார், தனலக்ஸ்மியும் அவர் மீது காதல் கொண்டிருந்தார் ஆனால் குடும்பச் சூழல்கள் காரணமாக இருவரும் பிரிந்து செல்கின்றனர்.தனலட்சுமி ஏழைக் குடியானவனைத் திருமணம் செய்து மிகுந்த இன்னல்களிற்குள் தள்ளப்படுகின்றார். ஆனால் சண்முகமோ வசதி படைத்தவராக வளர்மதி (தேவயானி) என்ற பெண்ணை மணம் செய்து மனநிறைவுடன் வாழ்கின்றார்.திடீரென ஒரு நாள் தனலட்சுமியை ஏழ்மை நிலையில் பார்த்துவிட்ட சண்முகம் அவரைத் தன் வீட்டிற்கு அழைத்துவந்து வேலை ஒன்றும் பெற்றுத் தருகின்றார்.இதன் பின்னர் சண்முகம் குடும்பத்தில் ஏற்படும் மாறுதல்கள் திரைக்கதையின் முடிவாகும். வேவுப்புலிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் எதிரிகளாகக் கருதப்படுபவர்களின் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னரும், எதிரிகளின் படைப் பலம், படைக் கட்டமைப்புக்கள் போன்றவற்றினைத் தெரிந்து தகவல் கொடுக்கவும், மேலும் ஒரு பெரிய தாக்குதல் நடவடிக்கையை நடத்துவதற்கு முன்னர் எதிரியின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்துப் பின் விடுதலைப் புலிகளின் போராளிகள் நடத்தவல்ல சமர்களுக்கான தகவல்களை வழங்குவதற்கும் சமரின் முன்னரே வேவு பார்த்துத் தெரிவிப்பவர்கள் வேவுப் புலிகள் எனப்படுவர். முதல் மரியாதை முதல் மரியாதை (1985) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா| இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்திருந்தனர். கிராமப்படம் / கலைப்படம் வண்ணப்படம் அறம் பிழன்ற பெண்ணைத் தன் உறவினரின் மானம் காக்க மணம் புரிந்துகொண்டாலும் தன் மனைவியால் எப்போதும் நிந்திக்கப்பட்டு வரும் மனிதர் ஊருக்குப் புதிதாக வரும் தன் மகளின் வயதுடைய பெண்மேல் காதல் கொள்கின்றார். அவர்மேல் காதல் கொள்ளும் அறிவார்ந்த அப்பெண்ணும் ஊராரின் வசவுகளை ஏற்று அவருடைய குடும்ப மானம் காக்கக் கொலை செய்து சிறை செல்கின்றாள். அவளுக்கு இழுக்கு வராவண்ணம் அப்பெண்ணின் வீட்டிலேயே வாழ்ந்து தன் இறுதிக்காலத்தில் அவளை மீண்டும் கண்டபின் உயிர் துறக்கின்றார். அன்றில் பறவையைப் போல் அப்பெண்ணும் உயிர் துறக்கின்றார். இந்தப் படத்தின் பிண்ணனி மற்றும் பாடல்களின் இசையைஇளையராஜா இயற்றியிருந்தார். அனைத்துப் பாடல் வரிகளையும் வைரமுத்து இயற்றியிருந்தார். இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே பெரும்புகழ் பெற்று படத்தின் வெற்றிக்குத் துணைபுரிந்தன. 1986 தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா சோனாகச்சி சோனாகச்சிப் பகுதிக்கு விலைமாதுக்களாக வேலை செய்ய முன்வருபவர்களில் பலர் கடத்தப்பட்டும், குடும்ப உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகளினாலும் இங்கு வருகின்றனர். சிறுவயதிலேயே உள்ள மாணவிகள், ஏழ்மைநிலையிலுள்ள பெண்கள் என பல மாநிலங்களிலிருந்தும் கடத்திவரப்பட்ட பெண்களே இத்தகைய விபச்சார நிலையில் தள்ளப்படுகின்றனர். பதினெட்டு வயதிற்கு உட்பட்டவர்கள் பாலியற் தொழிலில் ஈடுபட இந்திய அரசின் சட்டம் அனுமதிப்பதில்லை. அதே வேளை, அண்டை நாடுகளிலிருந்தும் இந்தியாவிற்குள்ளேயிருந்தும் கடத்திவரப்படும் பெண்களில் பெரும்பாலானோர் பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள் ஆவர். 1700 ஆம் ஆண்டுகளில் பிரித்தானிய ராஜாக்களின் காலத்திலேயே இப்பகுதி விலை மாதுக்கள் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தனர். வெளிநாடுகளிலிருந்து படையெடுப்பவர்களாலும், மேலும் உள்நாட்டில் உயர்ந்த சாதியினர் எனக் கருதப்படுபவர்களாலும் பெரிதும் வரவேற்பைப் பெற்ற இப்பகுதி, இன்றளவும் இயங்கி வருகின்றது. இன்று சோனாகச்சியில் வாழும் விலை மாதுக்களும் அவர்கள் குழந்தைகளின் நலன்கருதியும் பல சமூக சேவை அமைப்புகள் எயிட்ஸ் நோயைப் பற்றிய தெளிவான கருத்துக்களினையும் மேலும் பல சுகாதார ஒழுங்குநெறிகளினையும் கற்றுக்கொடுத்து வருகின்றன. தாங்கள் செய்யும் இப்பாலியல் தொழிலை சட்டரீதியாக அரசு அங்கீகாரம் வழங்க போராடி வருகின்றனர். எதிரி (திரைப்படம்) எதிரி 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. எஸ். ரவிகுமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாதவன்,சதா,விவேக் மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மசாலாப்படம் / காதல்படம் நடராஜன் ஐயர் (டெல்லி கணேஷ்) அந்தணராவார். அவர் வீட்டை வாடகைக்கு விடும்பொழுது அவ்வீட்டில் குடிவருபவர்களிடன் பல சட்டங்களைத் தெரிவித்தே பின்னர் அங்கு குடியமத்துவார். அச்சமயம் அங்கு வரும் காடயர்களான கல்லூரி மாணவர்கள் அவரிடன் நல்லவர்களாக நடித்து பின்னர் அவர் வீட்டில் வாடகைப் பகுதியில் குடியமர்கின்றனர். நல்லவர்களாக இருந்தவர்கள் சாராயம், புகை பிடித்தல் போன்ற பல தொழில்களைச் செய்ய ஆரம்பித்தனர். இவற்றைப் பார்த்துப் பயந்துபோன நடராஜன் ஐயர் அவர்களை விரட்டுவதற்கு ஆட்டோ ஓட்டுனர் (விவேக்) ஒருவரின் உதவியை நாடுகின்றார். அவரும் பாட்டில் மணி என்ற காடையன் இருக்கின்றான். அவன் உங்களுக்கு உதவுவான் என்று பொய் கூறினார். அதன்படி பாட்டில் மணியாக தன் நண்பன் சுப்பிரமணியை (மாதவன்)ஏற்பாடு செய்கின்றார். இவர் சொல்கேட்டு பாட்டில் மணி போல் வந்து ஐயர் வீட்டிலிருப்பவர்களைப் பயமுறுத்துகின்றார். இதற்கிடையில் ஐயரின் மகளான காயத்ரி மீது காதல் நெருங்கிப் பழகுகின்றார். இவற்றைப்பார்த்து மனம் நொந்துகொள்ளும் அவர் பாட்டில் மணியை வெளியில் அனுப்புவதற்காகப் பலமுறை முயல்கின்றார். அச்சமயம் நண்பனின் காதலியென நினைத்து பிரியாவைக் (சதாவை) கடத்திச் செல்லும் சுப்பிரமணி பின்னர் பிரியா மீது காதல் கொள்கின்றார் எவ்வாறு பிரியாவை காடையனான அவள் தந்தையிடமிருந்து காப்பாற்றி ஒன்று சேருகின்றார் சுப்பிரமணி என்பதே திரைக்கதை முடிவு. கனடாவில் பால்வினைத் தொழில் கனடாவில் பெண்கள் பால்வினைத் தொழிலுக்கு பல நாடுகளிலுமிருந்து வரவழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.பலர் கடத்தப்பட்டும்,பலர் தங்களின் விருப்பத்தின்படியும் பாலியல் தொழிலுக்குள் உள்நுழைகின்றனர்.கனடாவில் பாலியல்தொழில்கள் பல வடிவமைப்பினைப் பெற்றுள்ளது அவை: இவ்வாறான பலவகையிலும் பாலியல் தொழில் சட்டத்தின்படி குற்றமில்லையென மாற்றம்பெற்றுள்ளது. ஆனாலும் ஒரு விலைமாது விற்கப்படும் உடலை வேறொருவர் அவ்வுடலைப்பெற சட்டம் அனுமதிக்காதிருப்பதும் குறிப்பிடத்தக்கது. கனடாவில் விபச்சாரம் மற்றும் அதனைச் சார்ந்த சட்ட அமைப்புகள் பெரும்பாலான மக்களாலும் புரிந்துகொள்ள இயலாமல் இருப்பதனைக் குறிப்பிட்டுக் கூறலாம்.கனடாவில் அமையப்பெற்றுள்ள சட்ட அமைப்புகளின்படி விலைமாதுக்கள் தங்கள் உடல்களை விற்பதற்குத் தடையேதும் இல்லாதிருக்கின்றது. அதேவேளை விலை மாதுக்களின் உடல்களை வாங்குவதற்கு தடை உள்ளது. இத்தகு சட்டம் நடைமுறையில் உள்ளபொழுதும் பலர் விபச்சாரத் தொழில்களில் ஈடுபடுகின்றனர். ஆனாலும் இத்தகு விபச்சாரத் தொழில்களில் ஈடுபடும் விலை மாதுக்கள் எத்தகு வகையில் தமது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பணச் செலவுகளை எதிர்கொள்கின்றார்கள் என்பது இன்றளவும் கவனிப்பாரற்று இருப்பதும் உண்மை.அதாவது ஒரு விலைமாதுவின் உடலை வாங்க இயலாத சட்டம் இல்லாதபொழுது எந்தவகையிலான பணவலிமையினை நாடி அவர்கள் விபச்சாரத் தொழில்களில் ஈடுபடுகின்றனர் என்பதும் ஒரு கேள்விக்குறியாகவுள்ளது. கூல்டோட் கூல்டோட் (cooltoad) இணையத்தளம் ஒரு பன்முகத் தளமாகவிளங்குகின்றது,மேலும் உலகின் பல பாகத்திலுமுள்ள இசைப்பாடல்களை இலவசமாக பதிவிறக்கம் செய்யமுடியுமான ஒரு தளமாக விளங்குகின்றது. தமிழ், தெலுங்கு, இந்தி,மலையாளம்,ஆங்கிலம் ஆகியப் பலவகை உலக மொழிகளில் அமையப்பெறும் பாடல்களைக் கொண்ட இத்தளத்திலிருந்து அனைத்துப் பாடல்களையும் பயனர்களின் கணினியில் பதிவிறக்கம் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அனிதா பிரதாப் அனிதா பிரதாப் செய்தியாளரும் எழுத்தாளருமான இவர் டைம் இதழ் மற்றும் சி.என்.என் தொலைக்காட்சி சேவை போன்றவற்றில் பணியாற்றியவர். மேலும் போர்ச்சூழல்கள் நிறைந்த பிரதேசங்களில் போராளிகளின் வேண்டுதல்களையும் உயர்ந்த சமூகத்தினால் ஒடுக்கப்படும் சமூகத்தினரின் போராட்டங்கள் பற்றியும் இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான் போன்ற பல பகுதிகளில் சென்று பலதரப்பட்டவர்களையும் பேட்டி எடுத்ததில் பெருமைக்குரியவர். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துப் பேட்டி எடுத்தவரென்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகளின் போர்க்கொள்கைகள் மற்றும் தமிழீழ மக்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளின் இன்னல்கள் போன்றவற்றை தனது அனுபவத்தில் வெளிப்படுத்தும் விதமாக இவரால் வெளியிடப்பட்ட ஜலாண்ட் ஒஃவ் பிளட் ("Island of blood") நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நூல் வெளியீடாகும். 2013ல் சிறிரத்தன என்ற உலக அளவிலான விருது கேரள கலா கேந்திரத்தால் அளிக்கப்பட்டது. கேரளாவிலுள்ள எர்ணாகுளம் மக்களவை தொகுதிக்கு ஆம் ஆத்மி கட்சி சார்பாக 2014 தேர்தலில் போட்டியிட்டார். அனிதா சைமன் என்று கோட்டயத்தில் சிரிய கத்தோலிக குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை டாடா குழுமத்தில் பணியாற்றினார். பல்வேறு இடங்களில் அவர் பணிபுரிந்ததால் குழந்தையாக இருந்தபோது அனிதா பதினொரு ஆண்டுகளில் ஏழு பள்ளிகளில் மாற்றி மாற்றி படிக்க வேண்டியிருந்தது. அவர் கேம்பிரிச் படிப்பை கொல்கத்தாவிலுள்ள லார்டோ பள்ளியில் முடித்தார். அவரது இளங்கலை படிப்பை டெல்லியிலுள்ள மிரண்டா அவுசில் 1978ல் நிறைவு செய்தார். இதழியல் பட்டயத்தை பெங்களூர் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார் அகத்தியம் அகத்தியம், மிகப் பழைமையான தமிழ் இலக்கண நூல் எனக் கருத்தப்படுகின்றது. அகத்தியர் என்பவர் இயற்றிய நூலாதலால் இது அகத்தியம் என்று வழங்கப்படுகின்றது. முதல், இடை, கடை என வரையறுக்கப்படும் முச் சங்க காலங்களிலும் இதுவே, தமிழ் இலக்கணத்துக்கான, முதல் நூலாகத் திகழ்ந்தது என்று ஆய்வாளர் கருதுகின்றனர். இது, பிற்கால இலக்கண நூல்களைப்போல், இயற்றமிழுக்கு மட்டுமன்றி, இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்ததாக நம்பப்படுகின்றது. தற்காலத்தில் அகத்தியத்தின் சில பகுதிகள் மட்டுமே பல்வேறு நூல்களில் இருந்து கிடைத்துள்ளன. இப்பொழுது நமக்குக் கிடைக்கும் மிகப் பழைய தமிழ் நூலான தொல்காப்பியத்துக்கு மூலநூலும் இதுவே ஆகும். சான்று:முனைவர் பாக்யமேரி, வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு,NCBH வெளியீடு,சென்னை-98,முதற்பதிப்பு-ஜூலை-2008. அகத்தியம் 12000 நூற்பாக்களைக் கொண்டிருந்தது.எழுத்து,சொல்,பொருள், யாப்பு, அரசியல், அமைச்சியல்,பார்ப்பனவியல்,சோதிடவியல் முதலான இயல்களை அகத்தியம் கொண்டிருந்தது. சான்று:முனைவர் பாக்யமேரி, வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு,NCBH வெளியீடு,சென்னை-98,முதற்பதிப்பு-ஜூலை-2008. இந்த நூற்பாக்கள் என்பனவற்றில் ஒன்றைப் பெற்று முடிகின்றன. "பெயரினும் வினையினும் பொழிமுதல் அடங்கும்" "வயிர ஊசியும் மயன்வினை இரும்பும் " "செயிரறு பொலிவினைச் செம்மைச்செய் ஆணியும்" "தமக்கமை கருவியும் தாமமை பவைபோல்" "உரைத்திறம் உணர்த்தலும் உரையது தொழிலே" "பலவின் இயைந்தவும் ஒன்றெனப் படுமே" "அடிசில் பொத்தகம் சேனை அமைந்த" "கதவம் மாலை கம்பலம் அனைய" சமைத்த உணவிலும், எழுதிய ஓலைகளைப் பொத்தல் போட்டுக் கட்டிய சுவடியிலும், பலர் சேர்ந்திருக்கும் படையிலும், தாழ்ப்பாள் முதலானவற்றுடன் கூடிய கதவிலும், மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையிலும், மயிர்நூலால் நெய்யப்பட்ட கம்பலத்திலும் பல பொருள்கள் இயைந்திருந்தாலும் அவை ஒன்று எனவே கொள்ளப்படும். "கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம்" "சிங்களம் கொல்லம் கூவிளம் என்னும்" "எல்லையில் புறத்தீவும் ஈழம் பல்லவம்" "கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம்" "கொங்கணம் துளுவம் குடகம் குன்றம் " "என்பன குடபால் இருபுறச் சையத்து" "உடனுறைபு பழகும் தமிழ்த்திரி நிலங்களும்" "முடியுடை மூவரும் இடுநில ஆட்சி" "அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள்" "பதின்மரும் உடனிருப்பு இருவரும் படைத்த" "பன்னிரு திசையில் சொல்நயம் உடையவும்" இந்த நூற்பா திரிசொல் வழங்கும் 15 நாடுகளையும், செந்தமிழ் வழங்கும் 15 நாடுகளையும் பட்டியலிடுகிறது. ஆக மொத்தம் 15 நாடுகள் "ஏழியன் முறைய எதிர்முக வேற்றுமை" "வேறுஎன விளம்பான் பெயரது விகாரமென்று" "ஓதிய புலவனும் உளன்ஒரு வகையான்" "இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன்" "வினைநிலை உரைத்தலும் வினாவிற்கு ஏற்றலும்" "பெயர்கொள வருதலும் பெயர்ப்பய னிலையே" "ஆலும் ஆனும் ஓடும் ஒடுவும்" "சாலும் மூன்றாம் வேற்றுமைத் தனுவே" "ஆறன் உருபே அது ஆது அவ்வும்" "வேறொன்று உரியதைத் தனக்குரிய தையென" "இருபாற் கிழமையின் மருவுற வருமே" "ஐம்பால் உரிமையும் அதன்தற் கிழமை" "மற்றுச்சொல் நோக்கா மரபின அனைத்தும்" "முற்றி நிற்பன முற்றின் மொழியே" "காலமொடு கருத வரினும் மாரை" "மேலைக் கிளவியொடு வேறுபாடு இன்றே" "முற்றுச் சொற்றாம் வினையொடு முடியினும்" "முற்றுச்சொல் என்னும் முறைமையில் திரியா" "காலமும் வினையும் தோன்றிப் பால் தோன்றாது" "பெயர்கொள் ளும்மது பெயரெச் சம்மே" "காலமும் வினையும் தோன்றிப் பால் தோன்றாது" "வினைகொள் ளும்மது வினையெச் சம்மே" "எனைத்துமுற்று அடுக்கினும் அனைத்தும்ஒரு பொருள்மேல்" "நினைத்துக்கொள நிகழும் நிகழ்த்திய முற்றே" "வினையெஞ்சு கிளவியும் பெயரெஞ்சு கிளவியும்" "பலபல அடுக்கினும் முற்றுமொழிப் படியே" "கண்டுபால் மயங்கும் ஐயக் கிளவி" "நின்றோர் வருவோர் என்றுசொல் நிகழக்" "காணா ஐயமும் பல்லோர் படர்க்கை" "உலக வழக்கமும் ஒருமுக் காலமும்" "நிலைபெற உணர்தரு முதுமறை நெறியான்" "அசைநிலை இரண்டினும் பொருண்மொழி மூன்றினும்" "இசைநிறை நான்கினும் ஒருமொழி தொடரும்" இன்னிலை இன்னிலை என்னும் பெயரில் பழம்பாடல்கள் சிலவற்றின் தொகுப்பாக ஒரு நூல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சொர்ணம்பிள்ளையார் என்பவர் இதனைத் தோற்றுவித்தார். வ. உ. சிதம்பரம் பிள்ளையைக் கொண்டு இதற்கு விரிவுரை எழுதி, அவரைக் கொண்டே பதிப்பிக்கவும் செய்தார். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைத் தொகுத்துக்காட்டும் பாடலில் ‘இன்னிலைய காஞ்சி’ என்னும் தொடர் வருகிறது. கைந்நிலை என்னும் நூல் காணப்படாத காலத்தில் 18 என்னும் எண்ணிக்கையைச் சமன்செய்ய இந்த நூல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. யாப்பருங்கல விருத்தி மேற்கோள் பாடல் ஒன்று இதில் இடம்பெற்றுள்ளது இந்தப் பாடலின் காலம் 11ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது. இந்த நூலை உருவாக்கியவர் இந்த நூலின் ஆசிரியர் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பொய்கையார் எனக் குறிப்பிட்டுள்ளார். பாரதம் பாடிய பெருந்தேவனார் இந்த நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடினார் எனவும் கூறுகின்றார். இப்படிக் காட்டுவதன் வாயிலாக இந்த நூலைத் திருக்குறளுக்கும் முந்தியது எனவும் காட்ட முனைந்துள்ளார். இவை அனைத்தும் போலியானவை என இப்பொழுது அறிஞர்கள் உணர்ந்துகொண்டுள்ளனர். இப்பொழுது இந்த நூலை விடுத்து, ‘கைந்நிலை’ நூலைச் சேர்த்து, 18 நூல்களைக் காண்கிறோம்.