புதிர் (திரைப்படம்) புதிர் இயக்குனர் சித்தலிங்கையா இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் முரளி, சந்தியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 04-சூலை-1986. அன்னை என் தெய்வம் அன்னை என் தெய்வம் இயக்குனர் ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கிய தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் விஜயகாந்த், கே. ஆர். விஜயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 27-செப்டம்பர்-1986. மீண்டும் பல்லவி மீண்டும் பல்லவி இயக்குனர் ஏ. பி. ஜெகதீஷ் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ஜெய்சங்கர், சுஜாதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 28-பிப்ரவரி-1986. ஆயிரம் கண்ணுடையாள் ஆயிரம் கண்ணுடையாள் இயக்குனர் கே.ஷங்கர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பத்மினி, எம். என். நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 21-நவம்பர்-1986. எங்கள் தாய்க்குலமே வருக எங்கள் தாய்குலமே வருக இயக்குனர் வி. என். சம்பந்தம் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சுரேஷ், ஜீவிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சந்திரபோஸ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 03-அக்டோபர்-1986. பிரெஞ்சு மொழி உரிமை ஆவணம் பிரெஞ்சு மொழி உரிமை ஆவணம் (ஆங்கிலம்: The Charter of the French Language, பிரெஞ்சு: La charte de la langue française) என்பது கனடாவின், கியூபெக் மாகாணத்தின் பயன்பாட்டு மொழி தொடர்பான ஒரு முக்கிய சட்ட வெளிப்பாடு ஆகும். கியூபெக் மாகாணத்தில் பெரும்பான்மையிரால் பேசப்படும் பிரெஞ்சு மொழியின், மொழியினரின் உரிமைகளை இது உறுதி செய்கிறது. கியூபெக் மாகாணத்தின் மொழிக் கொள்கையின் முதன்மைப் பகுதி இதுவாகும். இச் சட்டம் பிரெஞ்சு மொழியை வேலையில், கல்வியில் வணிகத்தில், தொடர்பாடலில், அரசில் அன்றாடம் பயன்படுத்தப்படும் மொழியாக ஆக்குவதை நோக்கக் கொண்டது. குறிப்பாக வணிகத்தில், பெயர்ப் பலகையில் இருந்து கணினி மென்பொருள் வரை பிரெஞ்சு மொழிப் பயன்பாட்டை இது கட்டாயப்படுத்துகிறது. கல்வி பிரெஞ்சு மொழி ஊடாகவே வழங்கப்பட வேண்டும் என்பதையும் இச் சட்டம் கட்டாயப்படுத்துகிறது. கனடாவின் பெரும்பான்மை மொழியான ஆங்கிலத்தின் ஆதிக்கத்தில் இருந்து மீள்வதற்கான இத்தகைய கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. கிழக்கு எருசலேம் கிழக்கு எருசலேம் ("East Jerusalem") என்று குறிப்பிடப்படுவது 1948 அரபு-இசுரேல் போரின் பின் யோர்தானினால் இணைத்துக்கொள்ளப்பட்ட மற்றும் ஆறு நாட் போரின் பின்னர் இசுரேலினால் கைப்பற்றப்பட்டு அதனுடன் இணைத்துக் கொள்ளப்பட்ட எருசலேம் பகுதியைக் குறிப்பதாகும். இது எருசலேமில் பழைய நகர் மற்றும் சில யூத, கிறிஸ்தவ, இசுலாம் சமயங்களின் புனித இடங்களான பாறைக் குவிமாடம், மேற்குச் சுவர், அல் அக்சா பள்ளிவாசல், திருக்கல்லறைத் தேவாலயம் ஆகியவற்றை உள்ளடக்கியது. பத்துப்பாட்டு (ஆங்கில மொழிபெயர்ப்பு, 1946) பத்துப்பாட்டு - ஆங்கில மொழிபெயர்ப்பு ("Pattupattu; ten Tamil idylls") என்பது பேராசிரியர் ஜே. வி. செல்லையாவினால் ஆங்கிலத்தில் செய்யுள் வடிவில் எழுதப்பட்ட மொழிபெயர்ப்பு நூலாகும். சங்கத் தமிழ் இலக்கியமான பத்துப்பாட்டின் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு இலங்கையில் 1946 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. பேராசிரியர் செல்லையா வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் அதிபராகப் பணியாற்றியவர். யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் முதலாவது தலைவராகவும் இருந்து சேவையாற்றியவர். அவருடைய இந்த ஆங்கில மொழி பெயர்ப்புக்கு பேராசிரியர் சுவாமி விபுலானந்தர் முன்னுரை எழுதியுள்ளார். இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை தமிழகத்தின் அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடாக வெளியிட எடுக்கப்பட்ட முயற்சி அன்று தோல்வியடைந்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சாராதோரின் நூல்களை வெளியிடப் பல்கலைக்கழகம் நிதியை ஒதுக்கமுடியாது எனக் கூறிவிட்டனர். கரந்தை தமிழ்ச் சங்கம் இதனை அச்சிட முன்வந்திருந்தபோதும், பிற நாட்டவர்களுக்கு தமிழகத்தில் நூல் அச்சிடக் கடுதாசிகள் கொடுக்கப்பட முடியாது எனத் தமிழக அரசு கூறிவிட்டது. பத்துப்பாட்டு மூலமும் உரையும் முதன்முதலாக 1889ஆம் ஆண்டில் உ. வே. சாமிநாதையரால் அச்சு வடிவில் வெளியிடப்பட்டது. அதன் பின்னர், அது பல தடவைகள் மறு பதிப்புக்கள் செய்யப்பட்டுள்ளது. சாமிநாத ஐயரது வெளியீட்டில் பத்துப்பாட்டின் இலக்கியங்களினது ஒழுங்கு அமைப்பானது திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்றவாறு அமைந்திருக்கும் வேளையில், செல்லையாவினது ஆங்கில மொழிபெயர்ப்பில் இலக்கியங்களின் ஒழுங்கானது பட்டினப்பாலை, பொருநராற்றுப்படை, முல்லைப்பாட்டு, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, நெடுநல்வாடை, குறிஞடசிப்பாட்டு, மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம், திருமுருகாற்றுப்படை என்ற ஒழுங்கில் தரப்பட்டுள்ளது. நூலின் ஆரம்பத்தில் "General Introduction" என்பதன்கீழ் பல்வேறு விடயங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு இலக்கியத்தினது ஆரம்பத்திலும் இதைப்போலவே, "Introduction" என்பதன்கீழ் அந்த இலக்கியம் தொடர்பான பல்வேறு விடயங்கள் கூறப்பட்டுள்ளன. முடிவுகளில் குறிப்புக்களும் தரப்பட்டுள்ளன. லிங்கன் (2012 திரைப்படம்) லிங்கன் ("Lincoln") என்பது ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் உருவாக்கி ஐக்கிய அமெரிக்க நாடுகளில் 2012ஆம் ஆண்டு வெளியான வரலாற்று-நாடக முறை திரைப்படம் ஆகும். இதில் டேனியல் டே-லூயிஸ் என்பவர் அமெரிக்க அதிபரான ஆபிரகாம் லிங்கனாகவும் சேல்லி ஃபீல்ட் என்பவர் லிங்கனின் மனைவி மேரி டாட் லிங்கனாகவும் நடித்துள்ளனர். டோரிஸ் கேர்ண்ஸ் குட்வின் என்பவர் ஆபிரகாம் லிங்கனின் வரலாறாக எழுதிய "Team of Rivals: The Political Genius of Abraham Lincoln" என்னும் நூலின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டு "லிங்கன்" திரைப்படம் அமைக்கப்பட்டுள்ளது. ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கையின் இறுதி நான்கு மாதங்களில் நடந்த வரலாற்றுச் சிறப்பான நிகழ்வுகள் இந்த திரைப்படத்தில் விவரிக்கப்படுகின்றன. குறிப்பாக 1865 சனவரி மாதம் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பாராளுமன்றத்தின் கீழவையில், அமெரிக்காவில் நிலவிய அடிமைத்தன முறையை ஒழிக்க சட்டம் இயற்றுவதற்காக லிங்கன் மேற்கொண்ட முயற்சிகள் இந்த வரலாற்றுத் திரைப்படத்தில் உயிரோட்டமாக சித்தரிக்கப்படுகின்றன. படப்பிடிப்பு 2011, அக்டோபர் 17ஆம் நாள் தொடங்கியது. திசம்பர் 19, 2011இல் முடிந்தது. படம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் 2012, நவம்பர் 9ஆம் நாள் வெளியானது. பரவலாக ஐக்கிய அமெரிக்காவில், நவம்பர் 16இல் வெளியானது. 2012, சனவரி 25ஆம் நாள் ஐக்கிய இராச்சியத்திலும் உலகின் பிற இடங்களிலும் வெளியிடுவதாகத் திட்டம் "லிங்கன்" திரைப்படம் பரவலாகப் பாராட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆபிரகாம் லிங்கனாக நடிக்கும் டேனியல் டே-லூயிஸ் மிகச் சிறப்பாக நடித்துள்ளதாகப் புகழ் பெற்றுள்ளார். மிகச்சிறந்த நடிகர் அக்காதெமி விருதினை அவர் பெறுவார் என்று பலர் எதிர்பார்க்கின்றனர். அணுக் கடிகாரம் நுண்ணலை, ஒளி, மற்றும் புற ஊதாக் கதிர்களின் நிறமாலையில் ஏற்படும் மின்னணு மாற்றத்தை காலங்காட்டும் காரணியாகப் பயன்படுத்தும் கடிகாரமே அணுக் கடிகாரம் எனப்படும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகத்துல்லியமான கால அளவீட்டு சாதன வகையே இதுவாகும். இக்கடிகாரமானது இலத்திரன்களையும் (எதிர்மின்னி) மின்காந்த அலைகளையும் மையக் காரணிகளாகக் கொண்டு நேரத்தை அளவிடுகின்றது. அணுவில் பரிமாற்றம் மூலம் நேரத்தை அளக்கும் கருத்தை 1873 இல் முதலில் கூறியவர் ஜேம்ஸ் கிளர்க் மேக்ஸ்வெல் ஆவார். 1879 இல் கெல்வின் ஓர் கருத்தை கூறினார். அணுக்கடிகாரத்தின் செயல்முறை வடிவத்தை 1930 இல் உருவாக்கியவர் இசிடோர் ரபி ஆவார். பொறியாளர் பொறியாளர் (பொறியியலாளர், "engineer") என்பவர் பொறியியலின் கோட்பாடுகளைப் பின்பற்றும் ஒரு தொழில்முறை செயற்பாட்டாளர் ஆவார். மேலும் அறிவியல் அறிவு (scientific knowldge), கணிதம் (mathematics), அறிவுக்கூர்மை (அல்லது) திறமை [ingenuity] ஆகியவற்றுடன் தொடர்புடைய தொழில்நுட்பம் ,சமூகம் ,வணிகம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வுகளை கண்டறிந்து முன்னேற்ற வேண்டும். பொறியியலாளர் உலோகம், வடிவம், அமைப்பு ஆகியவற்றை அறிந்து பாதுகாப்புகள் (safety), நிபந்தனைகள் (regulation), செலவுகள் (cost) போன்ற செயல்முறைகளை வரையரையுடன் திட்டமிட்டு செய்ய வேண்டும். பொறியாளர் அல்லது பொறியியலாளர் என்ற சொல் லத்தீன் மொழிச் சொல்லான ingieniare( "to contrive, devise") என்ற சொல்லில் இருந்து தோன்றியதாகும். [பொறியியலாளர் (கண்டுபிடித்தல் ,உருவாக்குதல்) மற்றும் ingenium ("Cleverness") (புத்திகூர்மை) என்று பொருள்படும் ஒரு பொறியியலாளரின் தொழில் என்பது அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் (scientific discoveries) மற்றும் மனித தேவைகளின்( human needs) மேம்பட்ட வாழ்க்கைக்கு பின்தொடரும் தொழில்நுட்பங்களுக்கும் இடையில் ஓர் இனணப்பை ஏற்படுத்துவதே ஆகும். வடிவமைப்பு (Design) என்பது பெரும்பாலும் வடிவமைப்பு என்றே பொருள்படும். ஆனால் பொறியாளர்கள் வடிவமைப்பை திட்டமிட்டு வடிவமைக்க வேண்டும். பொறியாளர் அல்லது பொறியியலாளர் புதிய தொழில்நுட்பங்களுக்கான தீர்வுகளை வளர்க்க (develop) வேண்டும். பொறியாளரின் திட்டத்தின் செயல்முறையானது தீர்வுகளை வரையறுத்தல் ,பகுப்பாய்வு பிரமாணம் ,நுணுக்கமான ஆராய்ச்சி ,பகுப்பாய்வு தீர்வுகள் மற்றும் முடிவான கருத்தை உருவாக்குதல் போன்றவை அவசியமானது. பொறியியலாளர் அதிக அளவில் நேரத்தை ஆராய்ச்சியின்(Research) மேல் ஈடுபடுத்த வேண்டும். தற்போது 56% பொறியாளர்கள் அவர்களின் நேரத்தை ஆராய்ச்சியின் மேல் ஈடுபடுவதாக அநேக நடத்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. அது உட்பட 14% பொறியாளர்கள் சுறுசுறுப்பாக தகவல்களை தேடுகின்றனர் என்றும் தெரிவிக்கின்றன. பொறியாளர்கள் வேறுபட்ட முக்கியத்துவம் வாய்ந்த வடிவமைப்பைத் (Design) தேர்ந்தெடுப்பதனால் அவர்களின் மேல் நல்லியல்புகள் ஏற்படும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட முடிவுகள் மிக உயர்வானதாக இருப்பது அவசியம். மேலும் அவர்கள் தீர்மானிக்கிற ஒப்பற்ற திட்டமானது கண்டிப்பாக தெரிந்து கொண்டும் மற்றும் புரிந்து கொண்டும் செயல்பட்டால் நல்ல தீர்வு கிடைக்கும். பகுப்பாய்வு (Analysis) என்பது பகுத்து ஆராய்வது ஆகும். பொறியியல் பகுப்பாய்வு என்பது பொறியியலாளர்கள் தாம் படிக்கும் (அ) கற்றுக்கொள்ளும் ஒவ்வொன்றையும் பகுத்து ஆராய வேண்டும்.பொறியியலாளர் பொறியியல்பகுப்பாய்வு (engineering analysis) சோதனையில் உற்பத்திகளை ( production) தொழில்நுட்பத்திற்கு ( techniques) உபயோகிக்க வேண்டும். பகுப்பாய்வு பொறியியலாளர்கள் தொழிற்சாலையில் உற்பத்தி செய்த பொருளை வேறொரிடத்தில் உற்பத்தி செய்யும் போது தோல்வியுற்றால் உற்பத்தி அளவை சோதனை செய்து தொடர்ந்து செயலாற்றி தரத்தை உயர்த்த வேண்டும். மேலும் அவர்கள் முழுமையான திட்டத்திற்கு (Design) ஆகும் நேரம் (cost) மற்றும் பணத்தேவைகளை மதிப்பிட வேண்டும். அறிவியல் பகுப்பாய்வு கொள்கைகள் செயல்முறையின் குணம், அமைப்பின் நிலை ,கண்டுபிடிப்புகளை புலப்படச் செய்வதை பொறியியல் பகுப்பாய்வு உள்ளடக்குகிறது. ஒவ்வொரு பொறியியலின் முக்கியமான பிரிவுகளில் எண்ணற்ற துணைப்பிரிவுகள் பல இருக்கின்றன. உதாரணமாக., குடிசார் பொறியியலில் (civil Engineering),வடிவமைப்பு (structural) பொறியியல், போக்குவரத்து (transportation)பொறியியல் எனவும் பிரிவுகள் இருக்கின்றன. இதை கட்டிடக்கலை பொறியியல் என்றும் அழைப்பர். மேலும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியலில் [Electrical and Electronics Engineering (EEE)] , மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல் கழகம் [Institute of Electrical and Electronics Engineering (IEEE)] ,பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் [ Institution of Engineering and Technology (IET) ] என பிரிவுகள் இருக்கின்றனதற்போதைய ஆாய்வின்படி (investigated ) எப்படி நேரத்தை செலவிடுவது , செய்யப்பட வேண்டிய ( tasks) வேலையை சிறப்பாக செய்ய ,எல்லாவற்றிற்கும் எப்படி நேரத்தை அமைப்பது என்று பொறியாளர்களுக்கு விளக்குகிறது. ஆராய்ச்சியில் குறிப்பிட்டதின் படி நிறைய வழிமுறைகள் தற்போதுள்ள பொறியாளர்களுக்கு தேவை. அவைகள் பொறியாளர்களின் ஆராய்ச்சியின்(Research) படி 62.92% பேர் தொழில்நுட்ப வேலையிலும் (technical work), 40.37% பேர் சமூக வேலையிலும் (social work), 49.66% பேர் அடிப்படை கணினி வேலையிலும் (computer-based work) இருப்பதாக ஆராய்ச்சியில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் பொறியாளர்கள் 37.97%பேர் தொழில்நுட்பம் மற்றும் சமூக வேலை இல்லாமல் (technical and non-social), 15.42% பேர் தொழில்நுட்பம் இல்லாமல் மற்றும் சமூக வேலையிலும் (non-technical and social) , 21.66% பேர் தொழில்நுட்ப வேலையில் இல்லாமல் மற்றும் சமூக வேலையில் இல்லாமலும் (non-technical and non-social) , இவ்வாறு அவர்கள் வேறுபட்ட வகைகளில் வேலைகளில் ஈடுபடுகின்றனர். பொறியாளர்களிடம் நடந்த ஆராய்ச்சியில் 55.8 % பேர் நேரத்தை வேறுபட்ட நடத்தை தகவல்களுக்கு நேரத்தை செலவிடுகின்றனர். பொறியாளர்கள் பொது மக்கள், பணியாளர்கள் ,மற்றவர்களுக்கும் உதவி செய்ய (obligations ) வேண்டும் .வடஅமெரிக்காவில் ( North America ) பொறியாளர்கள் பல்கழைக்கழக பட்டம் பெறும் நிகழ்ச்சியில் கையின் சிறிய விரலில் அணியக்கூடிய இரும்பால் அல்லது துருப்பிடிக்காத உலோகத்தால் செய்யப்பட்ட மோதிரமான இரும்பு மோதிரம் [Iron Ring ] அல்லது பொறியாளர்களின் மோதிரத்தை [Engineer's Ring ] நினைவு கூர்ந்துள்ளனர். 1925 ல் கனடாவில் தொடங்கப்பட்ட மரபு ஒரு வழிபாட்டு முறையாக பொறியாளர்களின் ஓர் அடையாளமாகவும் மற்றும் நினைவூட்டுவதாகவும் பொறியாளர்களின் வேலைக்கு உதவியாக உள்ளது. 1972ல் செய்முறையானது (practice) அமெரிக்காவில் பல கல்லூரிகளில் இணைக்கப்பட்டது. இதனுடைய உறுப்பினர்கள் Order of the Engineer (ஒழுக்கமான பொறியாளர்கள்) பெரும்பாலான பொறியாளர்களின் நிகழ்ச்சிகள் பொறியாளர்கள் கல்வியில் கவனத்தை செலுத்தவும் கணிதம் (mathematics) , இயற்பியல் (physics), வாழ்க்கை அறிவியல் (life science) போன்றவைகளை உள்ளடக்க பிரத்யேகமாக நடத்தப்படுகிறது. மேலும் பல நிகழ்ச்சிகள் பொதுவான பொறியியல் மற்றும் பயன்பாட்டு கணக்குகளை(applied accounting) உள்ளடக்குகிறது. வடிவமைப்பு பயிற்சிகள் ,சில நேரங்களில் தொழிலகம் அல்லது , பயிற்சி வகுப்புகள் அல்லது , இரண்டுமே பாடத்திட்டத்தின் நிகழ்ச்சியாகவே பெரும்பாலும் நடத்தப்படுகின்றன. பொதுவான பயிற்சிகள் பொறியாளர்களுக்கு நேரடியாக வழங்கப்படாது. ஆகையால் அவர்கள் சமூக அறிவியல் அல்லது மனிதத்தன்மைகளை கூடுதலாக அறிந்து கொள்ளலாம். நிறைய நாடுகளில் பொறியாளர்கள் செய்யப்பட வேண்டிய வேலையான பாலங்கள், மின்சக்தி திட்டம் ,தொழிலக உபகரணங்கள் மற்றும் இயந்திர வடிவமைப்பு போன்றவை கண்டிப்பாக உரிமையான பொறியாளர்களின் தொழிலாகும்.UK (United Kingdom)ல் பொறியாளர்களின் செய்முறையானது நிபந்தனைகளற்ற தொழிலாக விளங்குகிறது. ஆனால் நிபந்தனைகளில் கட்டுப்பாடான தலைப்பாக Chartered Engineer (CEng) மற்றும் Incorporated Engineer (IEng) . இந்த தலைப்புகள் கண்டிப்பான வரையரை தேவைகளுக்கு ஆலோசனைக் குழுவின் விதிகளால் உருவாக்கப்படுகின்றன. CEng என்ற தலைப்பு பெரும்பாலும் காமன்வெல்த் நாடுகளிலே பயன்படுத்துகின்றனர். கனடாவில் , ஒவ்வொரு பிரதேசத்திலும் தொழில்கள் சொந்த பொறியாளர் கழகங்களால் கெளரவிக்கப்படுகின்றன. கனடா மற்றும் அமெரிக்காவில் பொறியாளர்கள் செயல்முறைகள் மற்றும் தொழில்பயில உரிமையுள்ள விதிகளால் தொழில் நிபந்தனைகளை செய்கின்றனர். 2002 , மருத்துவர் மற்றும் மருந்தகத்திற்கு அடுத்ததாக மூன்றாவதாக பொறியாளர்களின் தொழில் மற்றும் பொறியாளர்கள் Ontario சமூகத்தில் படித்தனர். பெரும்நிலப்பகுதியான இந்தியா (India), ரஷ்யா (Russia), சீனாவில் (China) ,பொறியியல் முடித்த ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் திறமைகளுடன் உயர்ந்த நுழைவுத் தேர்வு போட்டிகளில் வரும்படி அழைத்துள்ளனர்.எகிப்தின் (in Egypt) கல்வித்திட்டத்தின் படி இரண்டாவது, மரியாதைக்குரியதாக பொறியியல் விளங்குகிறது. பொறியியல் கல்லூரிகள் பொதுவான சான்றிதழின் படி உயர்ந்த மதிப்புத் தேவையாக எகிப்தின் பல்கலைக்கழகம் கருதுகிறது. ஒன்றுபட்ட கலாச்சாரம் அலுவலகம் மற்றும் பல நிறுவனங்களில் புகழ்பெற்றவர் மற்றும் நிர்வாகிகளை ஒப்பிடும் போது அறிவியல் திறமை மற்றும் நவீன தொழில்நுட்பங்களுடன் குறைந்த மதிப்புள்ள மக்களிடமும் அவர்கள் சாரந்து இருக்கிறார்கள். தொழில்நுட்ப வேலைகள் மற்றும் அவர்கள் நிர்வாகிகளின் வேலைகளை உயர்ந்த தன்மதிப்பாக எடுத்துக் கொள்வர். கோலான் குன்றுகள் கோலான் குன்றுகள் (, (, ), அல்லது கோலான் எனப்படுவது கிழக்கு மத்தியதரையில் அமைந்துள்ள இடத்தைக் குறிப்பிடுகின்றது. கோலான் குன்றுகள் பிரதேசம் பின்வரும் தன்மைகளின்படி குறிப்பிடப்படுகின்றது: வன்னி (மரம்) வன்னி ("Prosopis cineraria" அல்லது "Prosopis spicigera") என்பது ஆப்கானித்தான், ஈரான், இந்தியா, ஓமான், பாக்கித்தான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், யெமன் உட்பட மேற்காசியாவிலும் தெற்காசியாவிலும் காணப்படும், அவரையினங்களைச் சேர்ந்த ஒரு பூக்கும் மரமாகும். இது பிற்காலத்தில் இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு, விரவிக் காணப்படுகிறது. இது பல பெயர்களால் இடத்துக்கிடம் அழைக்கப்படுகிறது. அரபியில் கஃப் என்றும், இராச்சசுத்தான் மொழியில் சங்ரி என்றும், பஞ்சாபியில் ஜந்த் என்றும், சிந்தியில் கண்டி என்றும், கன்னடத்தில் வ(b)ன்னி என்றும், சௌங்கிரா, ஜந்த்/ஜந்தி, கர், கெஜ்ரி/கெஜ்ரா, சமி, ஷமி ஆகிய பெயர்களால் மராத்தியிலும் இந்தியிலும் சும்ரி என்று குஜராத்தியிலும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் இராச்சசுத்தான் மாநிலத்தின் மாநில மரமும், பாக்கித்தானின் சிந்து மாகாணத்தின் மாகாண மரமும் ஆகும். இதன் 400 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையானவை என நன்கறியப்பட்ட மிகப் பெரும் மரங்கள் பஹ்ரைன் நாட்டின் பாலைவனங்களில், நீர் அரிதாகக் கிடைத்த நிலையிலுங்கூட ஓங்கி வளர்ந்திருக்கின்றன. வன்னி மரம், பல்வேறு சிறப்புகளை உடைய மரம். வன்னி மரம் வன்னிய இனமக்களின் புனித மரமாகும். சோழ மன்னர்களின் குல மரம் என்னும் சிறப்பு உடையது என்பதனை தஞ்சை பெரியகோவிலிலும், கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள 1000 ஆண்டு பழைமையான இம்மரத்தின் மூலம் அறியலாம். சங்கம் பற்றிய இறையனார் களவியல் – நக்கீரர் உரைக்குறிப்பு ஆஷா ஆஷா இயக்குனர் வி. டி. தியாகராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சுரேஷ், நளினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 11-நவம்பர்-1985. முதலுறு வேக ஈனுலை முதலுறு வேக ஈனுலை ("Prototype Fast Breeder Reactor", PFBR) இந்தியாவில் சென்னையிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள கல்பாக்கத்தில் கட்டமைக்கப்படும் 500மெகாவாட் திறன் கொண்ட வேக ஈனுலை அணுமின் நிலையமாகும். இதன் வடிவமைப்பிற்கு இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR) பொறுப்பேற்றுள்ளது. இது 2013ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3500 கோடி (35 பில்லியன்) ரூபாய்களாக மதிப்பிடப்பட்ட மொத்த செலவீனம் தற்போது 5,677 கோடியாக (56 பில்லியன்) மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வகை அணு உலைகளில் "தோரியம் எரிபொருட் சுழற்சி" பயன்படுத்தப்படுவதால் இந்தியா இந்த ஈனுலையில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது; உலகில் உள்ள உறுதிப்பட்ட தோரியம் இருப்புகளில் இரண்டாமிடத்தை இந்தியா வகிக்கிறது. இருப்பினும் கல்பாக்கத்தில் உள்ள முதலுறு வேக ஈனுலை தோரியம் அல்லாது யுரேனியம்-238ஐப் பயன்படுத்துகிறது. நீர்ம நிலையில் உள்ள சோடியத்தை குளிர்வியாகப் பயன்படுத்துகிறது. இந்த அணு உலையின் வடிவமைப்பு 1980களில் துவங்கியது. ஆசுத்திரியத் தமிழர் ஆசுத்திரியத் தமிழர் ("Tamil Austrian") என்போர் ஆசுதிரிய நாட்டில் குடியுரிமைப் பெற்று வசிக்கும் தமிழர்களாவர். இலங்கையில் நடந்த இன வன்முறைகளைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கும் இலங்கைத் தமிழர் புலம்பெயர்ந்து புகலிடம் பெற்று வாழ்வது போன்றே, குறிப்பிட்ட எண்ணிக்கையான தமிழர் இந்நாட்டிற்கும் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களான இவர்கள் பல்வேறு அமைப்புகளையும் நிறுவி பல்வேறு நிகழ்வுகளையும் செய்து வருகின்றனர்.தமிழ் மொழி சார்ந்த செயல்பாடுகளிலும் இவர்களது பங்களிப்புகள் காணக்கிடைக்கின்றன. நிழல் தேடும் நெஞ்சங்கள் நிழல் தேடும் நெஞ்சங்கள் இயக்குனர் நிவாஸ் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ராஜீவ், வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-நவம்பர்-1982. வெளிச்சத்துக்கு வாங்க வெளிச்சத்துக்கு வாங்க என்பது 1981 ஆம் ஆண்டில் மே மாதம் முதல் திகதி அன்று வெளிவந்த திரைப்படம் ஆகும். விஜயசாரதி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ராஜேஷ், ஊர்மிளா, ரதி தேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன் ஆவார். கிறித்துமசு குடில் கிறித்துமசு குடில் என்பது மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளில் விவரிக்கப்பட்டுள்ளது போல அமைக்கப்படும் இயேசு கிறித்துவின் பிறப்பு நிகழ்வின் முப்பரிமாண சித்தரிப்பை குறிக்கும். இது வீடுகளிலும், ஆலயங்களிலும், பேரங்காடி போன்ற பொது இடங்களிலும் கிறித்துமசு காலங்களில், குறிப்பாக திருவருகைக் கால இறுதி நாட்களில் துவங்கி கிறிஸ்து பிறப்புக் காலம் முழுவதும் காட்சிப்படுத்தப்படும். இதில் குழந்தை இயேசு, மரியாள், யோசேப்பு, இடையர்கள், தேவதூதர்கள், மூன்று அரசர்கள் ஆகியோர் சித்தரிக்கப்படுவர். இவர்களோடு பெத்லகேமின் விண்மீன், ஒட்டகம், ஆடு, காளை, கழுதை முதலிய மிருகங்களும் இடம் பெறும். பெறும்பான்மையாக இந்நிகழ்வு மலைக்குகையிலோ அல்லது மாடடைக்குடிசையிலோ நிகழ்வது போன்று சித்தரிக்கப்பட்டும். இவற்றை செய்ய தாள், அட்டை, கல் என பல்வேறு பொருட்கள் பயன்படுத்தப்படலாம். முதன் முதலில் கி.பி. 1223இல் அசிசியின் பிரான்சிசுவினால் இவ்வகை குடில்கள் உயிருள்ள மிருகங்களாலும், மனிதர்களை மாதிரிகளாகவும் கொண்டு அமைக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது. கிறித்துமசு குடில் சித்தரிக்கப்பட அடிப்படையான நிகழ்வுகள் மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளில் விவரிக்கப்பட்டுள்ளது. லூக்கா நற்செய்தியின்படி வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவு தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்தபோது ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து மெசியாவின் பிறப்பை அறிவித்ததாகவும், பின்னர் அவர்கள் விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். () மத்தேயு நற்செய்தியில் கிழக்கிலிருந்து ஞானிகள் ஆண்டவரின் விண்மீன் எழக் கண்டு எருசலேமுக்கு வந்து, குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.() இவர்கள் மூன்று பேர் என்பதற்கோ அல்லது இவர்கள் இயேசு பிறந்த அதே இரவில் வந்ததாகவோ விவிலியத்தில் இல்லை. ஆயினும் இவ்விரவின் சித்தரிப்பிலேயே இவர்களும் காட்சிப்படுத்தப்படுகின்றார்கள். இயேசு பிறந்த இடத்தில் மிருகங்கள் இருந்ததாக விவிலியத்தில் இல்லை. ஆயினும் குடிலில் காளையும், கழுதையும் காட்சிபடுத்தப்படுகின்றது. எசாயா 1:3இன் படி "காளை தன் உடைமையாளனை அறிந்து கொள்கின்றது; கழுதை தன் தலைவன் தனக்குத் தீனி போடும் இடத்தைத் தெரிந்து கொள்கின்றது; ஆனால் இஸ்ரயேலோ என்னை அறிந்து கொள்ளவில்லை;" என்னும் இறைவாக்கினை சுட்டிக்காட்ட இவை இடம்பெறுகின்றன. மேலும் காளை மீட்பரின் வருகைக்காக இஸ்ரயேல் காத்திருந்ததையும், கழுதை கடவுளுக்கு பணிபுரிய தாழ்ச்சியுடன் ஆயத்தமாய் இருக்கவேண்டும் என்பதையும் புறவினத்தாரையும் குறிக்கின்றது. மேலும் இயேசுவைக்காண கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் ஒட்டகத்தில் வந்தனர் வாந்தனர் என விவிலியத்தில் இல்லை ஆயினும் இவர்கள் பயணித்ததாக ஒட்டகமும் குடிலில் காட்சிப்படுத்தப்படுகின்றது. எசாயா 60:6இல் உள்ளபடி "ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்: மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்: இளம் நாட்டினர் யாவரும் பொன், நறுமணப்பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்." என்னும் இறைவாக்கு ஞானிகளின் வருகையை முன் உரைப்பதாக நம்பப்படுவதால் இவர்கள் ஒட்டகங்களோடு காட்சிப்படுத்தப்படுகின்றனர். திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் வத்திகான் நகரின் புனித பேதுரு சதுக்கத்தில் ஆண்டுதோறும் குடில் வைக்கும் பழக்கத்தை 1982இல் ஏற்படுத்தினார். 2006ஆம் ஆண்டு வத்திக்கான் நகரக்குடிலில் குழல் ஊதுவோர் முதலிய இசைக்கலைஞரின் உருவங்கள் இடம்பெற்றிருந்தன. 2007ஆம் ஆண்டு குடில் பெத்லகேம் அல்லாமல் மத்தேயு நற்செய்தியில் உள்ளது போல இயேசுவின் நாசரேத்து இல்லம் சித்தரிக்கபட்டிருந்தது. 1968முதல் திருவருகைக் கால மூன்றாம் ஞாயிரில் வத்திக்கான் நகர புனித பேதுரு சதுக்கத்தில் திருப்பயணிகள் மற்றும் உரோமை நாட்டு குழந்தைகள் கொண்டுவரும் குடிலில் வைக்கப்பட இருக்கும் திருஉவச்சிலைகளுக்கு திருத்தந்தை ஆசி அளிக்கும் வழக்கமும் உள்ளது. 1978ஆம் ஆண்டு, 50,000 பள்ளிக்குழந்தைகள் இந்நிகழ்வில் கலந்துக்கொன்டனர். இரோசி யமாசிடா இரோசி யமாசிடா ("Prof. Hiroshi Yamashita") என்பவர் யப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பேராசிரியர் ஆவார். இவர் தமிழ் மொழியை சரளமாக பேசக்கூடியவரும் ஆவார். இந்திய மொழிகள் பற்றிய ஆய்வினைச் செய்ய இந்தியா சென்று அங்கே சமசுகிருதம் கற்ற இவர், திராவிட மொழிகள் பற்றி ஆய்வினைச் செய்யும் பொழுது, தமிழ் மொழியின் தொன்மையறிந்து, அதன்மேல் பற்றுக்கொண்டு தமிழ் மொழியை சிறப்பாகக் கற்றவராவர். அத்துடன் தமிழ் மொழியின் ஒலிப்புகளுக்கும் யப்பானிய மொழி ஒலிப்புக்களுக்கும் இடையிலான வேறுபாடுகளையும் ஆய்வு செய்தவராவர். தமிழ் மொழி தொடர்பான பல்வேறு பணிகளையும் செய்து வரும் இவர், உலகின் பல நாடுகளுக்கு பயணித்து தமிழ் மொழி சார்ந்த நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றியும் வருகிறார். அத்துடன் தமிழில் நூல்களை எழுதியும், தமிழ் நாவல்களை யப்பானிய மொழிக்கு மொழிமாற்றம் செய்தும் வருகிறார். அவற்றில் சில தமிழ் நாவல்கள் யப்பானிய மொழியில் வானொலி நாடகங்களாக இடம்பெற்றுள்ளதான தகவல்களும் அறியக்கிடைக்கின்றன. சந்தன மலர்கள் சந்தன மலர்கள் 1980-ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். இதில் சுதாகர், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன். காதல்படம் வேலியில்லா மாமரம் வேலியில்லா மாமரம் 1980-ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன். அலெக்சாண்டர் துபியான்சுகி அலெக்சாண்டர் மிகைலொவிச் துபியான்சுகி ("Alexander Dubyanskiy", , பிறப்பு: ஏப்ரல் 27, 1941) என்பவர் உருசியத் தமிழ்ப் பேராசிரியராவர். இவர் உருசியாவில் மொசுகோ அரசுப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியப் பேராசிரியரும் ஆவார். அத்துடன் தமிழ் மொழி மீது மிகுந்த பற்றுக்கொண்ட இவர், தமிழ் மொழியை சரளமாக பேசவும் கூடியவர். தற்போது மொசுகோ அரசுப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் இந்திய இலக்கியப் பேராசிரியராக பணி புரிந்து வரும் இவர், உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து தமிழ் மொழி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று தமிழ் மொழியின் சிறப்புகளை உரையாடி வருபவர்களில் ஒருவராவார். குறிப்பாக மேல்நாட்டு மொழியாய்வாளர்களிடையே தமிழ் மொழியின் இலக்கியப் பயன்பாட்டிற்கும், பேச்சு வழக்கிற்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகளை எடுத்தியம்புவதுடன், தமிழ்நாட்டு பேச்சு தமிழில் உரையாடவும் கூடியவர். புது யுகம் பிறக்கிறது புது யுகம் பிறக்கிறது 1980-ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். இதில் நளினிகாந்த், வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் வி. குமார். தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1971- 1972 தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. 1971 - 1972 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 2, 000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1971- 1972 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது. காதல் ஓவியம் காதல் ஓவியம் இயக்குனர் பாரதிராஜா இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கண்ணன், ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 30-ஏப்ரல்-1982. பயணங்கள் முடிவதில்லை பயணங்கள் முடிவதில்லை இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் மோகன், பூர்ணிமா ஜெயராம்ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 26-பிப்ரவரி-1982. இத்திரைப்படத்தின் பாடல்களை இளையராஜா உருவாக்கியுள்ளார். பாடல்களை முத்துலிங்கம், கங்கை அமரன், வைரமுத்து ஆகியோர் இயற்றியுள்ளனர். சிட்டி லைட்சு சிட்டி லைட்ஸ் (City Lights) 1931ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க கருப்பு வெள்ளை பேசும் திரைப்படம். இத்திரைப் படத்தினை எழுதி இயக்கி கதை நாயகனாக நடித்தவர் சார்லி சாப்ளின். பெரு நகரத்தில் நாடோடியாக திரியும் சாப்லின் ஒரு பார்வையற்ற பெண்ணின் மீது காதல் கொள்கிறார். தான் ஒரு செல்வநதர் என நம்பும் அப்பெண்ணின் கண் பார்வை சிகிச்சைக்காக ஒரு கட்டதில் சாப்லின் சிறைச் செல்ல நேரிடுகிறது. சிறையிலிருந்து வெளிவரும் சாப்பிலினை அப்பெண் அடையாளம் கண்டுக்கொண்டாளா? என்பது கதையின் நெகிழ்ச்சியான முடிவு. சாப்பிலினை ஒரு தேர்ந்த நடிகராக வெளிக்காட்டிய இப்படம் இரண்டு ஆண்டு படப்பிடிப்புகளுக்கு பின் 1931ல் வெளிவந்து விமர்சகர்களின் பரவலான பாராட்டுதல்களை பெற்றது. காலத்தால் அழியாத காட்சிகளை கொண்டு முழுமையான நகைச்சுவை படமாக இருந்தப் போதிலும் ஒரு சிறந்த காதல் திரைப்படமாகவும் கொண்டாடப்படுகிறது சிட்டி லைட்ஸ். அடுத்த வாரிசு அடுத்த வாரிசு இயக்குனர் எஸ். பி. முத்துராமன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 07-சூலை-1983. புனலாடல் புனலாடல் உலகெங்கும் நிகழும் விளையாட்டுகளில் ஒன்று. புனல் என்பது ஓடும் நீர். அது நன்னீர். கடல் போன்று உவர்நீர் அன்று. எனவே இதனை ஆற்றுநீர் விளையாட்டு எனலாம். அருவியாடலும் இதனுள் அடங்கும். புனலாடல் பற்றிச் சங்ககால நூல்களில் பல பாடல்கள் விரிவாகச் சொல்கின்றன. அவற்றுள் சில: அருவியில் மகளிர் தோழியரோடு ஆடுதல், சுனையில் ஆடுதல், ஆடவர் மகளிரொடு சேர்ந்து ஆடுதல், ஒருவன் தன் மனைவியோடும் விரும்பிய ஒருத்தியோடும் ஆடுதல் உண்டு. இந்த விளையாட்டு ஆடுதல், பாய்தல் என்னும் வினைச்சொற்களால் குறிப்பிடப்படுவதிலிருந்து இதன் விளையாட்டுப் பாங்கை உணரமுடியும். அணிகலன்களைக் கழற்றி வைத்துவிட்டு ஆடினர். கடலில் ஆடிய பின்னர் உடல் அழுக்கு நீங்கப் புனலாடினர். காவிரியாற்றுக் கழார்த் துறையில் நடந்த நீச்சல் நடனம் குறிப்பிடத்தக்க ஒன்று. வெண்மணி, [[தேனூர்] துறைகளிலும் புனல் விளையாட்டு நிகழ்ந்த்து. [[வைகை]]யாற்றுப் புது வெள்ளத்தில் நடந்த புனல் விளையாட்டுப் பற்றிப் [[பரிபாடல்]] விரிவாகச் சொல்கிறது. [[பகுப்பு:தமிழர் விளையாட்டுகள்]] [[பகுப்பு:நீர் விளையாட்டுகள்]] இந்திய ஆற்றல் கொள்கை இந்திய ஆற்றல் கொள்கை ("energy policy of India") வளர்ந்துவரும் மின் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையிலும் மாற்று ஆற்றல் மூலங்களை வளர்க்கும் வகையிலும் வரையறுக்கப்படுகிறது. குறிப்பாக அணு ஆற்றல், சூரிய ஆற்றல் மற்றும் காற்று ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான முனைவுகள் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்தியாவின் மின்சார உற்பத்தியில் ஏறத்தாழ 70% புதைபடிவ எரிபொருட்களிலிருந்து பெறப்படுகிறது; இதில் நிலக்கரி 40% ஆக முன்னிலையிலும் அடுத்ததாக பாறை எண்ணெய் 24%ஆகவும் இயற்கை எரிவளி 6% ஆகவும் உள்ளன. பெரும்பாலும் புதைபடிவ எரிபொருள் இறக்குமதியையே நம்பியுள்ளது. 2030ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த ஆற்றல் நுகர்வில் 53%க்கும் கூடுதலாக இறக்குமதியை நாடியிருக்க வேண்டி இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. 2009-10இல் 159.26 மில்லியன் டன் பாறை எண்ணெயை இறக்குமதி செய்தது; இது உள்நாட்டு பாறை எண்ணெய்ப் பயன்பாட்டில் 80% ஆகும்.மேலும் நாட்டின் மொத்த இறக்குமதிகளில் 31% எண்ணெய் இறக்குமதியாகும். இந்தியாவின் மின்சார உற்பத்தியின் வளர்ச்சி உள்நாட்டு நிலக்கரித் தட்டுப்பாட்டால் தடைபட்டுள்ளது. இதனால் 2010இல் மின் உற்பத்திக்கான இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 18%ஆக உயர்ந்துள்ளது. விரைவாக வளர்ந்துவரும் இந்தியப் பொருளாதாரத்தின் மின்தேவையை சந்திக்க ஆற்றல் துறையில் பெரும் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் உலகளாவிய ஆற்றல் தேவையில் இரண்டாம் பெரும் சந்தையாக உள்ளது. உலகளாவிய மின் உற்பத்தி வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு 18%ஆக உள்ளது. வளர்கின்ற மின்தேவையையும் புதைபடிவ எரிமங்களின் பற்றாக்குறையையும் கருத்தில் கொண்டு புதுப்பிக்கத்தக்க மற்றும் அணு மின் நிலையங்களில் தனது குவியத்தை செலுத்தி உள்ளது. காற்றுத் திறன் சந்தையில் உலகின் ஐந்தாமிடத்தில் உள்ளது. 2022இல் 20 கிகாவாட் சூரிய மின் உற்பத்தித் திறனை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மின் உற்பத்தியில் அணு மின்நிலையங்களின் பங்கை அடுத்த 25 ஆண்டுகளுக்குள் தற்போதைய 4.2%இலிருந்து 9%ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டில் ஐந்து அணு மின் நிலையங்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.2025க்குள் மேலும் 18 அணு மின் நிலையங்கள் கட்டப்பட உள்ளன. மொத்த நிறுவப்பட்ட திறனளவு (சூன் 2015) சௌம்யா சௌம்யா (பி. ஏப்ரல் 16, 1969) தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். இவர் முதலில் தனது தந்தை ஸ்ரீநிவாசனிடமிருந்து ஆரம்பகால இசைப் பயிற்சி பெற்றார். தொடர்ந்து எஸ். இராமநாதனிடமும், டி. முக்தாவிடமும் இசை பயின்றார். வேதியியல் பட்டதாரியான இவர், 'இந்திய இசையில்' முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். உலகம் முழுவதும் பயணித்து இசை நிகழ்ச்சிகளில் பாடுகிறார்; இசை பற்றிய சொற்பொழிவுகள், பட்டறை, கற்பித்தல் நிகழ்த்தி வருகிறார். இவர் அமெரிக்க ஐக்கிய நாடு, ஐக்கிய இராச்சியம், பிரான்சு, கனடா, ஆஸ்திரேலியா, ஃகொங்கொங், சிங்கப்பூர், நியூசிலாந்து, இலங்கை, மலேசியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். ஒரு நடுப்பகல் மரணம் (புதினம்) ஒரு நடுப்பகல் மரணம்,சுஜாதாவால் குங்குமம் இதழில் எழுதப்பட்டுத் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் கிழக்குப் பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டது. திருமணமாகி இரண்டே நாளில் தேனிலவு சென்ற இடத்தில் கொலை செய்யப்படுகிறார் புது மாப்பிள்ளை. அவரைக் கொன்றது யார், அதன் காரணம் எனக் கண்டறியாமல் விடுவதில்லை என்று தீர்மானம் செய்கிறாள் கொல்லப்பட்டவரின் மனைவி. போலீஸ் அதிகாரிகளும் கொலையாளியைக் கண்டறிய முயற்சி செய்கிறார்கள். கொலை செய்தவன் யார் என்பது வெளிப்பட்டதா என்று செல்லும் கதை. இரா. மணியன் இரா. மணியன் (பிறப்பு: சூன் 1, 1963) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நாகப்பட்டினம் மாவட்டம், நத்தம் எனும் கிராமத்தில் பிறந்தவர். மணலி தமிழ்க் கல்லூரி, சர். தியாகராயர் கல்லூரி, கரந்தைப் புலவர் கல்லூரி, ந.மு. வேங்கடசாமி நாட்டார் கல்லூரி ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் அண்ணா பேரவை, வ.உ.சி. வரலாறு எனப் பல நூல்களை எழுதியுள்ளார். இவர் தமிழ்நாடு அரசின் பாரதியார் விருது பெற்றுள்ளார். இவருடைய ""பெரியார் காவியம்"" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மரபுக்கவிதை வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. கவிமுகில் கவிமுகில் (பிறப்பு: சூன் 16, 1968) எனும் சக்திவேல் ஒரு தமிழக எழுத்தாளர். இவர் தஞ்சாவூர் சோழ மன்னர்களுக்கு ஆத்திமாலை தயாரித்துக் கொடுக்கும் மரபு வழியினர். இவர் கவிமுகில் கவிதைகள், சூரியன் துளிகள், சின்ன உளிகள் என பல கவிதை நூல்களை எழுதியுள்ளார். சில திரைப்படப் பாடல்களையும் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய "பூட்டாங்கயிறு" எனும் புதுக்கவிதை நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. சாம்பல் தகைவிலான் சாம்பல் தகைவிலான் (Ashy Woodswallow, "Artamus fuscus") என்பது தெற்கு ஆசியாவில் காணப்படும் தகைவிலான் வகை பறவையாகும். ஏனைய தகைவிலான் பறவைகள் போன்று இது குறுகிய வளைந்த சொண்டினையும், குறுகழய சதுரமான வாலையும் நீண்ட சிறகினையும் கொண்டது. இது கம்பிகள், உயர் மின்கம்பிகள், உயரமான பட்டும்போன மரங்கள், அல்லது உயரமான பனை வகை மரங்களில் கூட்டமான காணபப்டும். அரசவால் ஈபிடிப்பான் அரசவால் ஈப்பிடிப்பான் (Indian Paradise Flycatcher, ‘’Terpsiphone paradisi‘’) என்பது நடுத்தர அளவிலான ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட பறவையாகும். ஆண் பறவை நீளமான வாலைக் கொண்டு காணப்படும். இவற்றில் சில கருப்பு மற்றும் செந்நிற இறகுகளுடனும், சில வெள்ளை நிற சிறகுககுடனும் காணப்படும். பெண் பறவைகள் குறுகிய வாலுடனும் நெந்நிற இறக்கைகளுடனும் கருப்பு நிற தலையுடனும் காணப்படும். இவை பூச்சிகளை அடர்த்தியான மரங்களின் கீழே பறக்கும்போது பிடித்தும் உண்ணும். இப்பறவை மத்தியப் பிரதேச மாநிலப்பறவையாகும். சா. பாலுச்சாமி சா. பாலுச்சாமி (பிறப்பு: சூன் 16, 1958) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர் சென்னை, தாம்பரம் கிறித்தவக் கல்லூரியில் தமிழ்த் துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மாரிக்கால இரவுகள், மிளகுக் கொடிகள் போன்ற நூல்களை எழுதியிருக்கும் இவர் எழுதிய "”அர்ச்சுனன் தபசு (மாமல்லபுரத்தின் இணையச் சிற்பம்)”" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்நுண்கலைகள் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. கரிச்சான் கரிச்சான் () (Ashy Drongo, "Dicrurus leucophaeus") என்பது "கரிச்சான்" இன பறவையாகும். இது பரவலாக தென் மற்றும் தென்கிழக்காசிய பிரதேசங்களில் காணப்படுகின்றது. வளர்ந்த கரிச்சான் பறவைகள் கடும் சாம்பல் நிறம் கொண்டு, ஆழமாக பிரிக்கப்பட்ட (இரட்டை வால் தோற்றம்) நீண்ட வாலைக் கொண்டது. இதனால் இதை ஊர்ப்புறங்களில் இரட்டைவால் குருவி எனவும் அழைப்பர். இவ்வினங்களில் துணையினங்கள் சாம்பல் நிற இறகு நிறத்தில் காணப்படுகின்றன. சில இனங்கள் தலையில் வெள்ளை குறியுடன் காணப்படுகின்றன. இளம் பறவைகள் மங்கலான பழுப்பு சாம்பல் நிறத்தில் காணப்படும். கரிச்சான்கள் கரையான், வெட்டுக்கிளிகள், குளவி, எறும்பு, புழுக்கள் போன்றவற்றை விரும்பி உண்ணும். கரிச்சான் பறவைகள் தங்கள் வாழ்விட எல்லையை இனப்பெருக்கக் காலத்தில் மிக விழிப்புடன் பாதுகாக்கும். இவற்றின் உத்தரவாதமான இந்தப் பாதுகாப்பை நம்பி புறாக்கள், தவிட்டுக்குருவிகள், கொண்டைக்குருவிகள் போன்றவை கரிச்சான்களின் கூடுகளுக்கு அருகில் தம்முடைய கூட்டை பாதுகாப்புக் கருதி அமைத்துக்கொள்ளும். தன் எல்லைக்குள் வரும் உருவில் பல மடங்கு பெரிய பறவைகளையும் தாக்கக் இவை தயங்காது. சி. செந்தமிழ்ச்சேய் சி. செந்தமிழ்ச்சேய் (பிறப்பு: சூலை 14, 1941) ஒரு தமிழக எழுத்தாளர். விழுப்புரம் மாவட்டம் அரசூரில் பிறந்த இவர் தமிழ்நாடு மின்வாரியத்தில் மேற்பார்வைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் சோலை மலர் எனும் கவிதை நூல் உட்பட ஏழு நூல்களை எழுதியுள்ளார். நாடகக் காப்பியம் படைத்துள்ளார். இவர் எழுதிய ""செம்பியன் தமிழவேள்"" எனும் நாடக நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாடக வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. பெ. மாதையன் பெ. மாதையன் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர் தஞ்சை, தமிழ்ப்பல்கலைக்கழக அகராதித்துறை மற்றும் சேலம் ,பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை ஆகியவற்றில் பேராசிரியராகவும், அகராதித் தயாரிப்புகளில் பதிப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் எழுதிய "“அகத்திணைக் கோட்பாடும் சங்க அகக் கவிதை மரபும்”" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் திறனாய்வு வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. கு. வெ. கி. ஆசான் கு. வெ. கி. ஆசான் (பிறப்பு: டிசம்பர், 1935) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கு. வெ. கிருஷ்ணசாமி எனும் இயற்பெயர் கொண்ட இவர் பொருளாதாரம், அரசியல், வரலாறு ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். சட்டம் படித்தவர். பெரியாரியல் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிய இவர் மொழி உரிமை, வருண சாதி உருவாக்கம் உட்பட 11 நூல்களை எழுதியிருக்கிறார். பெரியார் பேருரையாளர் எனும் பட்டத்தைப் பெற்றிருக்கும் இவர் எழுதிய ""கடவுள் ஒரு பொய் நம்பிக்கை"" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பிற மொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. கருப்புத் தலை சின்னான் கருப்புத் தலை சின்னான் (Black-headed Bulbul, "Pycnonotus atriceps") என்பது மரங்களை அண்டி வாழும் சின்னான் குடும்ப பறவையாகும். இது தென்கிழக்காசிய காடுகளில் காணப்படும். இது அதிகமாக ஒலிவ மஞ்சல் இறகுடன் பளபளப்பான நீல-கருப்பு தலையினைக் கொண்டு காணப்படும். கருப்புத் தலை சின்னான் சிறிய பழங்களையும் பூச்சிகளையும் உணவாகக் கொள்ளும். இது 6-8 பறவைகளைக் கொண்ட சிறிய கூட்டமாகக் காணப்படும். ந. க. மங்கள முருகேசன் ந. க. மங்கள முருகேசன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் 36 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் இரண்டு முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் துணுக்குகள், பேட்டிக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவர் 150க்கும் அதிகமான நூல்களை எழுதியிருக்கிறார். இவர் எழுதிய இரண்டு நூல்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்துள்ளது. ஆர். வி. ஜெபா ராசசேகர் ஆர். வி. ஜெபா ராசசேகர் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கன்னியாகுமரி மாவட்டம் விளாகம் எனும் சிற்றூரில் பிறந்த இவர் மேலூர் அரசுக் கலைக்கல்லூரியில் இயற்பியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். சூரிய ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் இவர் பல பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். இவர் எழுதிய ""காற்று மாசுக்கட்டுப்பாடு மற்றும் மாசுக்கட்டுப்பாடு"" எனும் நூல் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சுற்றுப்புறவியல் வகைப்பாட்டிலும், ""வளமிகு சூரிய ஆற்றல் இயற்பியல்"" எனும் நூல் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் இயற்பியல் வகைப்பாட்டிலும் பரிசு பெற்றிருக்கின்றன. க. திருநாவுக்கரசு க. திருநாவுக்கரசு என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவர் தொடருந்துப் பாதுகாப்புப் படையில் சேர்ந்து இந்திய - சீனப் போரின் போது எல்லைப் பகுதியில் பணியாற்றியவர். சொந்த அச்சகம் ஒன்றை நிறுவி நக்கீரன், நம்நாடு பேசுகிறது போன்ற இதழ்களை சொந்தமாக நடத்திய இவர் ஈழப் பிரச்சனைகளுக்காகப் பல முறை சிறை சென்றிருக்கிறார். முரசொலி நாளேட்டின் செய்தி ஆசிரியராகவும், கட்டுரை ஆசிரியராகவும் பணியாற்றியவர். தமிழ்நாடு அரசின் திரு. வி. க. விருது , ஆழ்வார்கள் மையத்தின் தமிழறிஞர் விருது போன்றவைகளைப் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய "நீதிக்கட்சி வரலாறு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாட்டு வரலாறு வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. செந்தலைப் பஞ்சுருட்டான் செந்தலைப் பஞ்சுருட்டான் (Chestnut-headed Bee-eater, "Merops leschenaulti") என்பது மரங்களை அண்டி வாழும் "மெரோபிடே" குடும்ப பூச்சிகளை உண்ணும் பஞ்சுருட்டான் பறவையாகும். இது இந்திய உபகண்டம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் குறிப்பாக இந்தியாவிலிருந்து தென்கிழக்காசியா வரையான பகுதிகளில் வாழ்விடமாகக் கொண்டுள்ளது. இவ்வினங்கள் ஏனைய பஞ்சுருட்டான்கள் போன்று பிரகாசமாக நிறத்தைக் கொண்ட மெலிதான வடிவம் கொண்ட பறவையாகும். பச்சை நிறத்தை அதிகம் கொண்டும் நீல நிறத்தை பின்பகுதியிலும் வாயிற்றின் கீழ்ப்புறத்திலும் கொண்டும் காணப்படும். அதன் முகமும் தொண்டையும் மஞ்சலுடன் கருப்புக் கோடுகளுடனும் தலையுச்சி மற்றும் பிடறி ஆகிய பகுதிகள் உயர் செந்தவிட்டு நிறத்திலும் காணப்படும். மெல்லிய வளைந்த சொண்டு கருப்பு நிறமாகவிருக்கும். இருபால் பறவைகளும் ஒரே தோற்றத்தில் இருப்பினும், இள வயது பறவைகள் மங்கலான நிறத்தைக் கொண்டு காணப்படும். இவை 18-20செமி நீளமுடையவை. பழுப்பு ஈ பிடிப்பான் பழுப்பு ஈ பிடிப்பான் (Asian Brown Flycatcher, "Muscicapa dauurica") என்பது மரங்களை அண்டி வாழும் "முசிகாபிடே" சிறிய பறவையாகும். இந்தப் பூச்சிகளை உண்டு வாழும் இனம் சப்பான், கிழக்கு சைபீரியா, இமாலயமலைப் பிரதேசங்களில் இனப்பெருக்கு செய்கின்றன. இது ஓர் புலம் பெயரும் பறவையும் குளிர்காலத்தில் வெப்பமண்டலப் பிரதேசங்களான தெற்காசியவிலிருந்து தென்னிந்தியா, இலங்கை, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்குச் செல்கின்றன. பெரிய பச்சைக்கிளி பெரிய பச்சைக்கிளி (Alexandrine Parakeet, "Psittacula eupatria") என்பது கிளி இன வகைளில் ஒன்று ஆகும். இவ்வினக் கிளிகள் பேரரசன் அலெக்சாந்தரின் பெயரைக் கொண்டு ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டன. அலெக்சாந்தர் பஞ்சாப் பகுதி முதல் ஜரோப்பா மற்றும் மத்தியதரைக்கடல் பிரதேசங்களிலிருந்து சில இனப் பறவைகளை ஏற்றுமதி செய்தமைக்காக இப்பெயர் வழங்கப்பட்டது. இக் குறிப்பிட்ட பகுதிகளில் இவ்வினக் கிளிகள் உயர்தரம் மற்றும் அரச முக்கியத்துவம் என்பவற்றுக்கான விலை மதிப்பானவையாகக் கருதப்பட்டன. இவை சாதாரண பச்சைக்கிளிகள் போலவே இருக்கும் இவைகளின் கழுத்தில் வளைய வடிவில் சிவப்பு நிறமும் இறகில் சிவப்பு நிறமும் இடம்பெற்றிருக்கும். சாதாரண கிளிகளைவிட சற்று பெரிதாக இருக்கும். இந்த வேறுபாடுகள்தான் இவற்றை சாதாரண கிளிகளிலிருந்து வேறுபடுத்துகின்றன. இக்கிளிகளை குஞ்சு பருவத்திலிருந்தே வீட்டில் வளர்த்தால் பேசும் திறன் பெறும். மேலும் வளர்பவர்களிடம் அன்பாகப் பழகும். இதனால் இதை வீட்டில் வளர்பர். இக்கிளிகள் அழிய வாய்ப்புள்ள இனமாக இருப்பதால் இந்தியாவில் இவற்றை வளர்ப்பதோ அல்லது விற்பதோ சட்டப்படி குற்றமாகும். Informative websites: Conservation related links: மலை உழவாரன் மலை உழவாரன் (Alpine Swift, "Tachymarptis melba") என்பது உழவாரன் இனப் பறவைகளில் ஒன்றாகும். இவை சிறிய கால்களை உடையன. இதன் மூலம் செங்குத்தான பரப்புக்களை பற்றிப் பிடிக்கின்றன. இதன் அறிவியற் பெயர் புராதன கிரேக்கப் பெயரான "απους" ("apous") என்பதிலிருந்த உருவாகியது. இதன் அர்த்தம் "கால்கள் அற்று" என்பதாகும். இவை ஒருபோதும் தரையில் விருப்பத்தோடு தங்குவதில்லை. இந்த வகைப்பறவைகள் கிழக்கு ஐரோப்பா பகுதியில் அதிகமாக காணப்படுகின்றன. இவை தொடர்ந்து 200 நாட்கள் அதாவது ஆறு மாதங்கள் தரைப்பகுதிக்கு வராமல் பறந்துள்ளதை கண்டுபிடித்துள்ளார்கள். இவை வாழும் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து சகாரா பலைவனத்தைக் கடந்து ஆப்பிரிக்கா வரை வலசை சென்றுள்ளது. த. கனகரத்தினம் த. கனகரத்தினம் என்பவர் இலங்கையைச் சேர்ந்த பன்மொழிப் புலவர். இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மொழி வல்லுநர்களுள் குறிப்பிடத் தக்கவர். தமிழ், சிங்களம், சமசுகிருதம், பாலி, ஆங்கிலம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற இவர் எழுதிய ""செந்தமிழ் வளம் பெற வழிகள்"" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மொழியியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. எஸ். அர்சியா எஸ். அர்ஷியா (பிறப்பு: ஏப்ரல் 14, 1959 இறப்பு: ஏப்ரல் 7,2018) ஒரு தமிழக எழுத்தாளர். மதுரை இசுமாயில்புரத்தில் பிறந்த இவரது இயற்பெயர் சையத் உசேன் பாஷா. பொருளியல் முதுகலைப் பட்டதாரியான இவர் தராசு வார இதழில் செய்தியாளராகப் பணியாற்றினார். பின்னர் புதிய காற்று எனும் இலக்கிய இதழுக்குப் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார். கணையாழி, செம்மலர், தாமரை போன்ற இதழ்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கும் இவர் ஆனந்த விகடன், குமுதம் கல்கி, அமுதசுரபி ஆகிய இதழ்கள் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசுகளைப் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய ""ஏழரைப்பங்காளி வகையறா"" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. 2010ஆம் ஆண்டுக்கான அழகிய நாயகி அம்மாள் விருதும் இந்தப்புதினத்துக்கு வழங்கப்பட்டது. இவரது இரண்டாவது நாவலான பொய்கைக்கரைப்பட்டி மதுரையின் சமகால அரசியலும் பெருவணிகமான ரியல் எஸ்டேட் தொழிலும் கைகோர்க்கும்புள்ளிப்பற்றிப் பேசும் முக்கிய நாவலாகும். அப்பாஸ்பாய்தோப்பு மதுரை வைகைதென்கரையில் உள்ள மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நாவல். கரும்பலகை நாவல் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சனைகளை பேசும் நல்லதொரு நாவலாகும். நிழலற்ற பெருவெளி திப்பு சுல்தான் பாலஸ்தீன் மதுரை நாயக்கர் வரலாறு பாலைவனப்பூ கோமகட்டுமாரு கட்டுரைகள் சரித்திரப் பிழைகள் பாவண்ணன் (1988) பாவண்ணன் எனும் பாஸ்கரன் (பிறப்பு: அக்டோபர் 20, 1988) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இதுவரை 13 சிறுகதைத் தொகுதிகள், 3 நாவல்கள், 3 குறுநாவல்கள், கட்டுரைத் தொகுப்பு, மொழிபெயர்ப்பு நூல்கள் உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். நாவலுக்காக தமிழ்நாடு அரசின் விருதினையும், சிறுகதைக்காக இலக்கியச் சிந்தனைப் பரிசையும், சிறந்த மொழிபெயர்ப்புக்காகச் சாகித்ய அகாதமி விருதினையும் பெற்றுள்ளார். இவர் எழுதிய ""பச்சைக்கிளியே பறந்து வா"" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுவர் இலக்கியம் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. வீரசிங்காதன புராணம் வீரசிங்காதன புராணம் என்னும் நூல் 1319ஆம் ஆண்டு வேலைய தேசிகர் என்பவரால் எழுதப்பட்டது. இதே ஆண்டில் இப் பெயர் கொண்ட நூல் ஒன்றை உமாபதி சிவாசாரியர் எழுதினார் எனவும் தெரியவருகிறது. இது பற்றிய வேறு செய்தி ஏதும் கிடைக்கவில்லை. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005 கன்னம் தூக்கல் கன்னம் தூக்கல் என்பது சங்ககாலத்தில் வேலன் குறி சொல்லப் பயன்படுத்தும் ஓர் உத்தி. இது பற்றிச் சில சங்கப்பாடல்கள் கூறுகின்றன. வேலன் என்பவன் முருகன் பெயரால் சாமியாடிக் குறி சொல்பவன். இவன் குறி சொல்லக் கழங்குக் காய்களையும், கன்னம் என்னும் கோலையும் பயன்படுத்துவான். கன்னக்கோலுக்குப் பொன் பூண் கட்டப்பட்டிருக்கும். இதனைக் குறி சொல்லப்படுபவர் உடம்பின்மேல் தூக்கி ஆடச்செய்வான். இதற்குக் கன்னம் தூக்கல் என்று பெயர். அது ஆடுவதை வைத்துக்கொண்டு குறி சொல்லுவான். எப்படியும் அவன் குறிசொல்லப்படுபவர் மேல் முருகு ஏறிக்கொண்டிருக்கிறான் எனச் சொல்வதாகவே முடியும். இது ஒரு மாய விளையாட்டு. தேவி காலோத்தரம் தேவி காலோத்தரம் 14ஆம் நூற்றாண்டில் காலோத்தர ஆசிரியரால் எழுதப்பட்ட இரண்டு நூல்களில் ஒன்று. வடமொழியில் உள்ள ‘தேவி காலோத்தர ஆகமம்’ 85 சுலோகங்களும், விருத்தியுரையும் கொண்டது. தமிழ்நூல் தேவி காலோத்தரம் இதே பெயர் கொண்ட வடநூலின் மொழிபெயர்ப்பு. இதனைச் சிவாகமங்களின் சாரம் என்பர். சிவன் இதனைப் பார்வதிக்குச் சொன்னதாக நூல் வளர்கிறது. வடமொழி நூல் 85 சுலோகங்களும் விருத்தியுரையும் கொண்டது. ஞானம், ஞானசாரம் என்னும் இரண்டு பகுதிகளைக் கொண்டது. வடமொழி நூல் 'தேவி காலோத்தரம்' 'சுருதி சூக்தி மாலை' என்னும் பெயருடன் தமிழில் எழுதப்பட்ட உரையுடன் வெளிவந்துள்ளது. பதமுத்தி, பரமுத்தி எனச் சிவபதவியை இரண்டாகக் காண்பது வழக்கம். இவற்றில் பரமுத்தி என்பது மேலான முத்தி. இது மீண்டும் பிறக்காமல் இருக்கும் முத்தி. இதனை அடைவதற்குரிய ஆன்மப் பயிற்சி இந்த நூலில் கூறப்படுகிறது. இந்த நூலுக்குப் சில உரைநூல்கள் வெளிவந்துள்ளன. இதன் வடமொழி நூலின் ஞானசார விசாரப்படலம் 85 சுலோகங்களுக்கும் மொழிபெயர்ப்பாக 85 வெண்பாக்கள் இரமணரிசியால் தமிழில் எழுதப்பட்டு வெளிவந்துள்ளது. காலோத்தர ஆசிரியர் காலத்துக்கு முன்பே மற்றொரு தமிழ் மொழிபெயர்ப்பு நூல் தமிழில் இருந்திருக்கிறது. இது 73 விருத்தப் பாடல்களால் ஆனது. எஸ். பி. சொக்கலிங்கம் எஸ். பி. சொக்கலிங்கம் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். அறிவுசார் சொத்துரிமை தொடர்பான வழக்குகளில் கவனம் செலுத்தி வருகிறார். சொத்துரிமை தொடர்பான கருத்தரங்குகளில் விரிவுரையாற்றுவதோடு கட்டுரைகளும் எழுதி வருகிறார். இவர் எழுதிய ""காப்புரிமை"" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சட்டவியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. திரு எஸ். பி. சொக்கலிங்கம் எழுதிய பிற புத்தகங்கள் 1) மதுரை சுல்தாங்கள் - கிழக்கு பதிப்பகம் வெளியீடு 2) பிரபல் கொலை வழக்குகள் - கிழக்கு பதிப்பகம் வெளியீடு 3) நரேந்திர மோடி - வாழ்கை வரலாறு - சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு மா. பா. குருசாமி மா. பா. குருசாமி (பிறப்பு: ஜனவரி 15, 1936) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். விருதுநகர் மாவட்டம், பாறைப்பட்டி எனும் ஊரில் பிறந்த இவர் தற்போது திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். இவர் 130க்கும் அதிகமான நூல்களை எழுதியிருக்கிறார். நல்லாசிரியர் விருது, குறள் படைப்புச் செம்மல், தமிழக அரசின் சிறப்பு முதல்வர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய "“அக்கினிக் குஞ்சு”" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாடகம் (உரைநடை, கவிதை ) வகைப்பாட்டிலும், "காந்தியப் பொருளியல்" எனும் நூல் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பொருளியல் வகைப்பாட்டிலும் பரிசு பெற்றிருக்கின்றன. குறள் கதைகள் எனும் இவரின் நூலில் முப்பது திருக்குறள்களை வள்ளுவர் எந்த சூழலில் எழுதினார் என்பது வள்ளுவர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களாக இடம்பெற்றுள்ளன. வாழ்வியல் நிகழ்வுகளையே வள்ளுவர் குறளாகத் தந்தார் என்ற இவர் கூறுகின்றார். இராம. கி இராம. கி. எனத் தமிழறிஞர்களிடையே நன்கு அறியப்படும் முனைவர். கிருசுணன் இராமசாமி ("Dr. Krishnan Ramasamy") என்பவர் இந்தியா, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழறிஞர். இவர் ஒரு தமிழ்ப் பற்றாளரும், வேர்ச்சொல்லாய்வாளரும், எழுத்தாளரும், மொழியாய்வாளரும் ஆவார். "யூரியா நுட்பியல்" பற்றி ஆய்வுப் பட்டம் பெற்ற ஒரே இந்தியரும் ஆவார். தமிழ்க் கணிமையில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலான பட்டறிவு பெற்றவர். இணையத்தில் தமிழ்க்கணிமை, தமிழ்வளர்ச்சி பற்றிப் பெரிதும் அறியப்பட்டவர். 8 bit குறியீடான TSCII என்னும் தமிழ்க்குறியேற்றம் அனைத்து நாடுகள் அளவில் பதிவு பெற ஒத்துழைத்தவர். தமிழக அரசின் ஒப்புதல் பெற்ற தமிழ் அனையெழுத்துக் குறியேற்றம் (TACE - 16) பற்றிய உரையாடல்களில் பெரிதும் பங்கு பெற்றவர். "உத்தமம்" எனும் உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றத்தில் (INFITT) 2008-2010 ஆகிய இரண்டாண்டு காலம் செயற்குழு உறுப்பினராய் இருந்தவர். தற்பொழுது பொதுக்குழு உறுப்பினராய் இருக்கிறார். இணையத்தில் தமிழ் வரவேண்டும் என்று பாடுபட்ட தமிழறிஞர்கள் மத்தியில் இவரின் பங்கு குறிப்பிடத்தக்கது. இன்று இணையத்தில் புழங்கும் வலைப்பக்கம், பின்னூட்டம், இடுகை போன்ற நூற்றுக்கணக்கான தமிழ் கலைச்சொற்கள் இவரின் தமிழ்ச் சொற்பிறப்பாய்வு அல்லது வேர்ச்சொல்லாய்வு மூலம் தமிழ் இணையவுலகம் பெற்றுக் கொண்டவையாகும். பெரும்பான்மையான தமிழர் சமசுகிருதச் சொற்கள் எனக் கருதிய பல சொற்களின் மூலம் தமிழ் எனத் தன் ஆய்வுகளின் ஊடாக நிறுவி வருபவரும் ஆவர். இவர் கல்லூரியில் கல்வி கற்கும் காலம் முதலே தமிழ் மொழியில் ஆர்வம் கொண்டவர். கதை, கட்டுரை, நாடகம், ஓவியம், மரபுப் பாக்கள் எனத் தமிழ் மொழி சார்ந்த விடயங்களில் கல்லூரியில் விதப்பானவர் எனப் பெயர் பெற்றவர். வேதிப் பொறியியலில் முது நுட்பவியல் படித்து, வேதிப் பொறிஞர், ஆய்வாளர், நிர்வாகி, தொழிற் கட்டுமானர் எனப் பல்வேறு பணியாற்றியவர். “யூரியா நுட்பியல்” பற்றி ஆய்வுப் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் எனும் வரலாற்றுப் பெருமைக்கும் உரியவர். 36 ஆண்டுகாலம் உரம் (fertilizer), வேதியியல் (chemical), பாறைவேதியியல் (Petrochemical) போன்ற தொழிற்துறைகளில் பணியாற்றியுள்ளார். 5000 பேருக்கு மேல் வழிநடத்தி 3500 கோடி பெறுமானமுள்ள ஒரு பாறைவேதியற் புறத்திட்டத்தை (Petrochemical Project) நிர்வாக நெறியாளனாய் (Managing Project) செயற்படுத்தியவர். பல்வேறு நிர்வாகப் பணிகளிற் பங்காற்றிய இவர் இசுபிக் பெட்ரொகெமிக்கல் நிறுவனத்தின் நிர்வாகத் திட்ட நெறியாளராய் (Project Director), 2008 இல் ஓய்வு பெற்றார். பலநாடுகளில் பணியாற்றிப் பின் 1985ம் ஆண்டு மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பினார். பின்னர் வேதி நிறுவன ஆய்வுகளில் பங்காற்றிய இவர் தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றினால் 1997ம் ஆண்டிலிருந்து தமிழ் மொழி சார்ந்த பணிகளை இணையத்தில் முன்னெடுத்தார். தமிழ் இலக்கியம், பாவியல், மொழியியல், சொற்பிறப்பியல், வரலாறு ஆகிய துறைகளில் ஆர்வம் கொண்டவர். இவை தொடர்பான ஆக்கங்கள் இணையத் தளங்களிலும் இவரது வலைப்பதிவிலும் காணக்கிடைக்கின்றன. இணையத்தில் தமிழ் வரவேண்டும் என்று பாடுபட்ட தமிழறிஞர்களில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. தமிழ்க் கணிமையில் கிட்டத்தட்ட 25 ஆண்டுக்கும் மேலான பட்டறிவு பெற்றவர். இணையத்தில் தமிழ்க்கணிமை, தமிழ்வளர்ச்சி பற்றிப் பெரிதும் அறியப்பட்டவர். இணையத்தில் மொழிவளர்ச்சி, ஒருங்குறி, தமிழ்ச் சொற்பிறப்பாய்வு போன்ற விடயங்களில் முன்முனைப்புடன் செயற்பட்டுவருபவர். வளவு எனும் தனது வலைப்பதிவில் 2003ம் ஆண்டு முதல் இவை தொடர்பாகத் தொடர்ந்து எழுதியும் வருகிறார். இணையத்தில் மொழிவளர்ச்சி பற்றி அறிய விழையும் பலரும் அடிக்கடி வலம் வரும் தமிழ் வலைப்பதிவு இது. இணையத்தில் இன்று புழங்கும் பல அருமையான தமிழ்க் கலைச்சொற்கள் உருவாக முன்முனைப்பாக நின்று பங்களித்து வருபவர். மொழியியல் அடிப்படையில் தமிழ் நடை குறித்த இவரது வழிகாட்டல்கள், பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை. மேலும் மொழியியல், தமிழின் வரலாறு, தமிழ் நடை, தமிழின் தொன்மை போன்றவை தொடர்பாகத் தமிழறிஞர்கள், கல்விமான்கள், அறிவியலாளர்கள், பேராசிரியர்கள், மொழியார்வலர்கள் உடன் இணைந்து "தமிழ்.நெட்", "தமிழ்-உலகம்", "அகத்தியர்", சந்தவசந்தம்", "பிகேகே", மற்றும் "தமிழ்மன்றம்" போன்ற இணையக் குழுமங்களிலும் முனைப்புடன் எழுதியும் விவாதித்தும் வருபவர் ஆவார். அத்துடன் தமிழ் விக்சனரி குழுமத்திலும் பயனர்கள் கோரும் சொற்களுக்கான கலைச்சொல்லாக்கப் பணியிலும் ஆரம்ப காலம் முதல் உதவி வருபவர்களில் ஒருவராவார். தமிழ் இணைய வரலாற்றில் இவர் உருவாக்கிய கலைச்சொற்களில் நூற்றுக்கணக்கானவை இன்று இணையம் முழுதும் புழங்கும் சொற்களாக நிலை பெற்றவையாகும். அத்துடன் கலைச்சொல்லாக்கங்களின் போது தமிழின் வேர்ச்சொல்லின் வழியே சொற்களை உருவாக்குவதன் அவசியத்தையும் வலியுறுத்தி வருபவராகும். ஆங்கிலம் தோன்றுவதற்கு முன்னரே கிரேக்கம், இலத்தீன் போன்ற ஐரோப்பிய மொழிகளில் தமிழ் மொழியின் செல்வாக்குள்ளது என்பதையும், ஐரோப்பிய மொழிச் சொற்களுக்கும் தமிழுக்கு இடையிலான தொடர்பு ஆராயப்பட வேண்டிய ஒன்று என்பதும் இவருடைய வாதங்களில் தென்படும் கருத்தாகும். தமிழுலகில் சிலரால் முன்வைக்கப்பட்ட உகர ஊகாரச் சீர்திருத்தம், கிரந்த ஒருங்குறியில் தமிழ் எழுத்துச் சேர்ப்பு போன்ற மாற்றங்கள் தமிழ் மொழிக்கு தீங்கானது என்றெடுத்துரைத்த இவர், அதனைக் கடுமையாக எதிர்த்துத் தடுப்பதிலும், தமிழ் வலைப்பதிவுலகில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதிலும் இவரது பங்கு இருந்தது. இவர் எழுதிய சிலம்பின் காலம் எனும் ஆய்வு நூல் 2011ம் ஆண்டு வெளியானது. கிறிஸ்து பிறப்புக் காலம் கிறிஸ்து பிறப்புக் காலம் அல்லது கிறித்துமசுக் காலம் என்பது கிறித்தவ திருச்சபைகளில் கடைப்பிடிக்கப்படுகின்ற திருவழிபாட்டுக் காலங்களுள் ஒன்றாகும். பெறும்பான்மையான கிறித்துவப் பிரிவுகளில் இக்காலம் கிறித்து பிறப்பு பெருவிழாவின் முந்தைய நாளில் துவங்கி திருக்காட்சிப் பெருவிழா வரை உள்ள பன்னிரெண்டு நாட்கள் கொண்டாடப்படுகின்றது. ஆதலால் இக்காலமானது கிறித்துமசு கெரொல்களில் "கிறித்துமசின் பன்னிரெண்டு நாட்கள்" (Twelve Days of Christmas) என அழைக்கப்படுகின்றது. 1970 முதல் நடைமுறைக்கு வந்த கத்தோலிக்க திருச்சபையின் திருப்பலி புத்தகம் மற்றும் திருப்புகழ் மாலையில் கிறித்து பிறப்பு பெருவிழாவின் முந்தைய நாளிலிருந்து ஆண்டவரின் திருமுழுக்கு விழா முடிய கிறிஸ்து பிறப்புக் காலம் என வரையறுக்கப்பட்டுள்ளது. பல சீர்திருத்தத் திருச்சபையினர் இப்பண்ணிரெண்டு நாட்களோடு சேர்த்து திருக்காட்சிப் பெருவிழா முதல் ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா (பெப்ரவரி 2) முடிய 40 நாட்களையும் கிறித்துமசுக் காலமாகக் கொண்டாடுகின்றனர். இக்கலத்தில் கிறித்தவர்கள் தங்களின் வீடுகளையும் ஆலயங்கலையும் கிறித்துமசு மரம், கிறித்துமசு குடில், பெத்லகேமின் விண்மீனைக் குறிக்க அட்டை விண்மீன் முதலியவைகளைக்கொண்டு அலங்கரிப்பர். அகத்தி அகத்தி என்னும் சிறுமரம் தாவரவியலில் (நிலைத்திணை இயலில்) செஸ்பேனியா (Sesbania) இனத்தைச் சேர்ந்ததாகும். இதன் தாவரவியல் பெயர் "செஸ்பேனியா கிராண்டிஃவுளோரா" (Sesbania grandiflora) என்பதாகும். இது கெட்டித்தன்மை இல்லாதது, சுமார் 6. மீட்டரிலிருந்து 10 மீட்டர் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் 15 முதல் 30 செ.மீ. வரை நீளமுடையவை. இம்மரம் இந்தியாவிலோ தென்ஆசியாவிலோ தோன்றியிருக்க வேண்டும் என்று துறையறிஞர்கள் கருதுகிறார்கள். அகத்தி மரம் பிற மரங்களைப் போல் அதிகம் கிளைகள் கிளைத்து வளருவதில்லை. அகத்தி இலைகள் கூட்டிலைகள் ஆகும். ஒவ்வொரு கூட்டிலையிலும் 40 முதல் 60 இலைகள் வரை இருக்கும். பொதுவாக வெப்பமானதும் அதிக ஈரப்பதம் நிறைந்த இடங்களிலும் வளர்கின்றது. அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகிறது. இம்மரத்தின் பல பகுதிகள் மூலிகையாகப் பயன்படுகின்றது. குறிப்பாக தமிழ்நாடு உட்பட தென்னிந்திய சமையலில் அகத்திக்கீரை மற்றும் அகத்தியின் பூவும் சமைத்து உண்ணப்படுகிறது. அகத்திக் கீரையில் 8.4 விழுக்காடு புரதமும் 1.4 விழுக்காடு கொழுப்பும், 3.1 விழுக்காடு தாது உப்புகளும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். மேலும் அகத்திக்கீரையில் மாவுச் சத்து, இரும்புச் சத்து, வைட்டமின் (உயிர்ச்சத்து) ஏ ஆகியவையும் உள்ளன. அகத்தி மரப் பூவை (S. grandiflora ) தென்கிழக்கு ஆசிய நாடுகளான லாவோஸ், இந்தோனேசியாவைச் சேர்ந்த சாவா, வியட்நாம், பிலிப்பைன்ஸில் இல்லோக்காஸ் என்னும் இடம் ஆகிய பகுதிகளில் உணவாக உண்கிறார்கள். தாய்லாந்து மொழியில் இப் பூவை "`தோக் கே" (dok khae) என்றும், வியட்நாம் மொழியில் இதனை "சோ தூவா"(so đũa.) என்றும் அழைக்கின்றனர். இந்தோனேசிய மொழியில் இதனை "'`புங்கா துரி" (bunga turi) அல்லது "கெம்பாங் துரி" (kembang turi) என்றும் அழைக்கின்றனர். இளையோர் அறிவியல் களஞ்சியம்- மணவை பப்ளிகேஷன். -1995 பெத்லகேமின் விண்மீன் கிறித்தவப் பாரம்பரியப்படி பெத்லகேமின் விண்மீன் அல்லது கிறித்துமசு விண்மீன் என்பது கிழக்கிலிருந்து வந்த ஞானிகளுக்கு இயேசுவின் பிறப்பை சுட்டிக்காட்டி அவரின் இல்லத்துக்கு வழி காட்டிய விவிலியத்தில் இடம் பெறும் விண்மீனைக் குறிக்கும். இவ்விண்மீன் விவிலியத்தில் ஆண்டவரின் விண்மீன் என அழைக்கப்படுகின்றது. பல கிறித்தவர்கள் இந்த விண்மீன் மெசியாவின் வருகையின் முன் அடையாளமாகக் காண்கின்றனர். இந்நிகழ்வு ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா என பல கிறித்தவப்பிரிவுகளில் கொண்டாடாப்படுகின்றது. பல வானியல் அறிஞர்கள் இந்த விண்மீன் மீயொளிர் விண்மீன் வெடிப்பு, வால்வெள்ளி அல்லது வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒன்றை ஒன்று கடக்கும் நிகழ்வாக இருக்கலாம் என என்னுகின்றனர். இந்த நிகழ்வு மத்தேயு நற்செய்தியில் மட்டுமே இடம் பெறுகின்றது. இதன்படி கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, ஏரோது அரசனிடம் 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்' என்றார்கள். இதைக் கேட்டதும் ஏரோது மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களை ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் ஆராய்ந்து மீக்கா நூலில் உள்ளது படி மெசியா யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறக்க வேண்டும் என அறிவித்ததால் ஞானிகளை அங்கே அனுப்பி வைத்தான். முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்றது. அங்கே வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டு நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள். சிலம்பின் காலம் (நூல்) சிலம்பின் காலம் எனும் நூல் 2012ம் ஆண்டு கிருசுணன் இராமசாமி என்பவரால் எழுதப்பட்ட ஒரு ஆராய்ச்சி நூலாகும். இந்நூல் தமிழ் இணையக் குழுமங்களிலும், அவரது வலைப்பதிவிலும் எழுதிவந்த கட்டுரைகளை விரிவாக்கி தொகுப்பாக்கம் பெற்ற நூலாகும். இந்த நூல் தமிழினி பதிப்பகத்தாரால் 2012, சனவரி 3ம் நாள் சென்னை கன்னிமாரா நூலக அரங்கில் நடைப்பெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது. நூலைப் பாரதிதாசன் பல்கலைக்கழகப் பெரியார் உயராய்வு மையத்தின் முன்னாள் தலைவர் பேரா. க.நெடுஞ்செழியன் வெளியிட, திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத் (SRM university) துணைவேந்தர் பேரா. பொன்னவைக்கோ முதற்படியைப் பெற்றுக் கொண்டார். அங்கராயநல்லூர் அங்கராயநல்லூர் என்பது தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஒரு கிராமம் ஆகும். இங்கு சுமார் 5000 மக்கள் வசிக்கின்றனர். இது உள்ளாட்சி அமைப்பில் தனி ஊராட்சியாக உள்ளது.இந்தக் கிராமம் ராஜேந்திரசோழன் காலத்தில் எங்கராயர் என்ற குறுநில மன்னனால் ஆட்சி செய்யப்பட்டது. அதனால், எங்கராயர் என்று அழைக்கப்பட்ட கிராமம் இன்று அங்கராய நல்லூர் என்று மாற்றமடைந்துள்ளது. இங்கு முந்திரி, கடலை, போன்ற பயிர்கள் செய்யப்படுகின்றன. ஆக்ரா நகரம், கானா, மேற்கு ஆப்ரிக்கா ஆக்ரா எனப்படும் இந்த நகரம், மேற்கு ஆப்ரிக்காவிலுள்ள கானா என்னும் நாட்டின் தலை நகரமாகும். இதில் கிறிஸ்துவர்கள் அதிகமாக இருந்தாலும், இஸ்லாமிய சமூகத்தினரும் மற்றும் பழங்குடி அமைப்பினரும் இருந்து வருகின்றனர். நகரம் நல்ல மேம்பட்ட வசதியுடன் இருக்கின்றனர். நல்ல சாலை வசதிகள், மேம்பால வசதிகள் போன்றவற்றுடன் கானும் இந்த நகரம், சற்று மேற்கத்திய கலாச்சார வசதிகளுடன், அதாவது, வசதியான வணிக வளாகங்களும், வங்கிகளும், உள்ளன. இந்த நகர வங்கிகளில் டாலர் மற்றும் உள்நாட்டு பணமான சிடியிலும் மக்கள் பரிவரித்தனை செய்யலாம். இங்கு பொருட்களுக்கு விலைப் பட்டியல் கிடையாது. அவர்கள் விற்பனை செய்யும் விலை பொருளில் போடப்படுவதில்லை. எந்தவொரு விலைக்கும் அவரவர் திறமைக்கு ஏற்ப விற்பனை செய்யலாம். இது ஒரு விதத்தில் நுகர்வோருக்கு இடரானாலும், நுகர்வோர் அவரவர் தராதரத்திற்கு ஏற்ற வணிக நிறுவனத்தில் பொருட்கள் வாங்கலாம். இங்கு நிறைய கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்தியா போன்ற நாடுகளிலிருந்தும் சில பல்கழை கழகங்கள் தங்கள் பிரிவுகளைத் துவக்கியுள்ளன. மற்ற ஆப்ரிக்க தேசங்களிலிருந்து மாணவர்கள் இந்நகரம் நோக்கி தங்கள் கல்வித் தேவைக்காக படையெடுக்கின்றனர். இங்குள்ள மக்கள் ஆங்கிலம் சரளமாக பேசுகின்றனர். சுமார் 4 உள்ளூர் மொழிகளும் உள்ளன. இங்கு பொழுது போக்கு என்றால் கடற்கரைகள் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தங்கள் வசதிகளை பொதுமக்களுக்கு நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. மக்கள் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் தங்கள் குடும்பத்துடன் இருக்கின்றனர். ஞாயிறு சர்ச் மற்றும் மசூதிகளுக்குச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். சாலையோர வணிகர்கள் அதிகமாக உள்ளனர். சிறு வணிக நிறுவனங்களுக்கென வங்கிகளில் சிற்சில வசதிகளைச் செய்துள்ளனர். இங்கு மேற்கத்திய கலாச்சாரம் அதிகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதால் பொதுவாக பெண்கள் அதிக சுதந்திரத்துடன் இருக்கின்றனர். தங்களுக்கென வாழ்க்கை அமைத்துக் கொள்ளல் போன்றவற்றில் அவர்கள் சுதந்திரமாக இருக்கின்றனர். ஆனால் அதே சமயத்தில் சில மேற்கத்திய நாடுகளில் காணப்படுவதைப் போல கலாச்சார சீரழிவு என்று சொல்லும் அளவிற்கு மோசமானதாக இல்லை. இங்கு ஒருவர் சுமார் 500 சிடிக்களுடன் தனது குடும்ப வாழ்க்கையை திருப்தியாக நடத்தலாம். 1 சிடி என்பது இன்றைய நிலவரப்படி சுமார் 30இந்திய ரூபாய். இங்கு இரு சக்கர வாகனகளை விட நாலு சக்கர ஊர்திகளே மிகப் பிரபலம். இந்த நாடு, பழைய நாலு சக்கர வாகனங்களின் சந்தை என்றால் மிகையாகாது. இங்கு தொலைபேசிக் கட்டணங்கள் மிகக் குறைவு. இணையப் பயன்பாடு இருந்தாலும், இன்னும் முன்னேற வேண்டும். இங்கு பெட்ரோல் விலை இந்திய நாட்டை விடக் குறைவு. கடல் (திரைப்படம்) கடல் () இயக்குனர் மணி ரத்னம் இயக்கி, தயாரித்து ஃபெப்ரவரி 1 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படம். தமிழின் முதன்மையான எழுத்தாளர் ஜெயமோகன் கதை, வசனம் எழுதியுள்ளார். ஏ. ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து படத்தின் பாடல்கள் திசம்பர் 15,2012 வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் கதை நாயகனாகவும் நடிகை ராதாவின் இளைய மகள் துளசி நாயர் நாயகியாகவும், அர்ஜூன், அரவிந்த் சாமி, லெக்ஷ்மி மஞ்சு, தம்பி ராமையா போன்றோர் முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2013 பிப்ரவரி 1 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் தெலுங்கிலும் மொழிபெயர்க்கப்பட்டு கடலி எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. படா (இயங்குதளம்) படா (Bada) (கொரியம்:바다) கைபேசிக்காக வடிவமைக்கப்பட்ட இயங்குதளம். படா என்றால் கொரிய மொழியில் கடல் என்று பொருள். இது சாம்சங் நிறுவனத்தால் திறந்த மூல இயங்குதளமாக வடிவமைக்கப்பட்டது, இதன் அண்மைய பதிப்பு படா 2.0 ஆகும். பஸ் கண்டக்டர் பஸ் கண்டக்டர் 1986-ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். எஸ். வி. சேகர் நடித்த இப்படத்தை விஜயலிங்கம் இயக்கினார். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ். கள் வடியும் பூக்கள் கள் வடியும் பூக்கள் இயக்குனர் வி. கார்த்திகேயன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ஸ்ரீநாத், நளினி  ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ஷியாம் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 17-சூன்-1983. கீதாஞ்சலி (1985 திரைப்படம்) கீதாஞ்சலி இயக்குனர் கே. ரங்கராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் முரளி, நளினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 12-அக்டோபர்- 1985. ஜப்பானில் கல்யாண ராமன் ஜப்பானில் கல்யாணராமன் இயக்குனர் எஸ். பி. முத்துராமன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கமல்ஹாசன், ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட வருடம் 1985. இத்திரைப்படம் 1979-ஆம் ஆண்டு வெளியான கல்யாணராமன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட கதை கொண்டது. பாடும் பறவைகள் பாடும் பறவைகள் இயக்குனர் வம்சி இயக்கிய திகில் தமிழ்த் திரைப்படம். இதில் கார்த்திக், பானுப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட வருடம் 1988. சர்வ ஞானோத்தர உரை சர்வஞானோத்தர உரை என்னும் நூல் சர்வ ஞானோத்தரம் என்னும் நூலுக்கு எழுதப்பட்ட உரை. உரை எழுதியவர் சிவஞான சிவாமிகள். நூலிலுள்ள 80 பாடல்களுக்கும் உரை எழுதப்பட்டுள்ளது. எழுதப்பட்ட காலம் 16ஆம் நூற்றாண்டு. சிவஞான முனிவர் 'சிவஞான சித்தியார்' என்னும் நூலுக்கு விரிவுரை ஒன்று எழுதியுள்ளார். அது 'சிவஞான பாடியம்' என்னும் பெயரில் வழங்கிவருகிறது. அதில் வரும் 6-ஆம் சூத்திர உரையில் இவ்வுரை இணைந்துள்ளது. உதயகீதம் உதய கீதம் இயக்குனர் வம்சி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் மோகன், ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 13-ஏப்ரல்-1985. யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதுகள், 2010 யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை இணைந்த அமைப்பினர் ஆண்டுதோறும் நாடளாவிய ரீதியில் பல்வேறு துறைகளில் குறித்த ஆண்டில் இலங்கையில் பதிப்பித்து வெளியான நூல்களில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து அவற்றுக்கு விருதுகள் வழங்கி கெளரவித்து வருகின்றனர். தாரியன் நாட்காட்டி தாரியன் நாட்காட்டி செவ்வாயில் பயன்படுத்த எழுதப்பட்ட நாட்காட்டியாகும். விண்வெளி பொறியியலாளர் தாமஸ் காங்கேல் ஆல் 1985 இல் உருவாக்கப்பட்டது. அவர் தன் மகன் தாரியஸ் பெயரினை நாட்காட்டியிற்கு பயன்படுத்தினார். வரும்காலங்களில் மக்கள் செவ்வாய் கிரகத்திற்கு சென்றால் பயன்படுத்தப்பட உருவாக்கப்பட்ட நாட்காட்டி இதுவாகும். செவ்வாய் கிரகத்தில் ஒரு சூரிய நாள் (ஆங்கிலத்தில் சால் என்று குறிப்பிடப்படுகின்றது) பூமியின் நாளினை விட 39 நிமிடங்கள் 35.244 விநாடிகள் கூடுதலாக இருக்கின்றது. ஒரு வருடத்தில் 668.5907 நாட்கள் உள்ளன. ஒரு பத்தாண்டில் ஆறு 669-நாள் ஆண்டுகள் மற்றும் நான்கு 668-நாள் ஆண்டுகள் உள்ளன. 669-நாள் ஆண்டுகள் நெட்டாண்டுகளாக கருதப்படுகின்றன. இந்த நாட்காடியில் பிழை 1400 செவ்வாய் ஆண்டுகளில் 13 நாட்கள் மீதமிருப்பது. ஒரு ஆண்டில் இருபத்தி நான்கு மாதங்கள் உள்ளது. இந்த நாட்காட்டி ஏழு நாள் ஒரு வாரம் வடிவத்தினையே பின்பற்றுகிறது. ஏழு நாட்கள்: விருக்ஸாவின் கடைசி நாள் செவ்வாய் நெட்டாண்டுகளில் மட்டுமே இருக்கின்றது. முல்லா நசுருதீன் முல்லா நசுருத்தீன் (துருக்கியம்: Nasreddin Hoca, , , / ALA-LC: "Naṣraddīn Juḥā", , , "Nasreddīn Hodja", போசாங்கி: Nasrudin Hodža) என்பவர் 13ம் நூற்றாண்டில் சல்ஜூக் பேரரசில் வாழ்ந்த சூபிய விகடன் ஆவார். இவர் தற்போதய துருக்கி நாட்டில் வாழ்திருக்கக் கூடும். இவர் மக்களிடையே மிகவும் புகழ் பெற்ற ஞானியும் மெய்யியளாலரும் ஆவார். இவர் நகைச்சுவை மிக்க துணுக்குகளுக்கும் சிறுகதைகளுக்கும் புகழ் பெற்றவர். இவர் ஆயிரக்கணக்கான கதைகளில் வருகின்றார். பல கதைகளில் இவரின் நகைச்சுவை மிக்க விகடம் புலப்பட்டாலும் பெரும்பான்மையான கதைகளில் இவரே நகைப்புக்குள்ளாகிறார். இவரின் கதைகள் துருக்கி மட்டும் அல்லாது இந்தியா, சீனா, உருசியா போன்ற நாடுகளிலும் புகழ் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5 முதல் 10 வரை இவரின் சொந்த ஊரில் "நசுரதீன் குவாஜா" என்னும் விழா இவரின் பெயரால் சிறப்பிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் 1996 முதல் 1997 வரை உள்ள ஆண்டினை "பன்னாட்டு நசுருதீன் ஆண்டு" (International Nasreddin Year) என அறிவித்தது. இந்து சமய அறநிலையத் துறை இந்து சமய அறநிலையத் துறை தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காக தனித்துறை ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு செயலகம் தலைமைச் செயலகத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் கோவில்களில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இத்துறையின் கட்டுப்பாட்டில் 36,488 கோயில்கள், 56 திருமடங்கள் மற்றும் திருமடங்களுடன் இணைந்த கோயில்கள் 58 உள்ளன. இந்த இந்து சமய நிறுவனங்களுக்கு சொந்தமான அசையா சொத்து 4,78,347.94 ஏக்கர் நிலம், இத்துறையின் கீழுள்ளது. இதன் மூலம் வரும் ஆண்டு வருவாய் உத்தேசமாக 58.68 கோடி மட்டுமே என்று இந்து சமய அறநிலையத் துறை குறிப்பிடுகின்றது. அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிர்வகத்துடன் அரசின் யானைகள் புத்துணர்வு முகாம், அன்னதானத் திட்டம் போன்ற பணிகளையும் இத்துறை செய்கிறது. கிழக்கிந்தியக் கம்பெனி 1810, 1817 ஆம் ஆண்டுகளின் சட்டம் இயற்றி இந்துக் கோயில்களின் நிர்வாகத்தில் நுழைந்தது. பின்னர் கிறிஸ்தவ மிஷினரிகளின் எதிர்ப்பால் 1841 முதல் 1862 வரை கோவில் நிர்வாகத்தில் அரசு விலகிக் கொண்டது. வழிபாட்டிடங்களில் ஊழல் அதிகரித்ததாகக் கூறி, 1863 ஆம் ஆண்டு அறநிலையச் சட்டம் போடப்பட்டு, இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் உட்பட இந்து சமயக் கோயில் நிர்வாகத்தில் அரசு தலையிடத் தொடங்கியது. சென்னை மாகாணத்திலிருந்த நீதிக்கட்சி அரசு காலத்தில் திருக்கோயில்கள் மற்றும் இந்து சமய நிறுவனங்களை மேலாண்மை செய்வதற்காக 1925 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலைய வாரியம் அமைக்கப்பட்டது. சில மாற்றங்களுடன் 1926 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 இல் "மெட்ராஸ் இந்து சமயம் மற்றும் அறநிலையச் சட்டம் 1927" உருவானது. இதன்படி ஒரு தலைவரையும் மூன்று உறுப்பினர்களையும் கொண்டதாக வாரியம் அமைக்கப்பட்டது. இவ்வாரியத்தின் கீழ் நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இந்திய விடுதலைக்குப் பின்னர், ஓய்வுபெற்ற நீதிமன்ற நீதிபதி பி. வெங்கட்ரமணராவ் நாயுடு தலைமையில் ஆறு நபர்கள் கொண்ட குழுவின் அறிக்கையின்படி "மெட்ராஸ் இந்து சமயம் மற்றும் அறநிலையச் சட்டம் 1959" நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் அறநிலைய வாரியங்கள் மாற்றப்பட்டு அறநிலையத் துறை உருவானது. இதன்படி, அறங்காவலர்களால் இயற்றப்படும் தீர்மானங்களுக்கு அரசால் நியமனம் செய்யப்பட்ட நிர்வாக அதிகாரிகள் அனுமதியைப் பெற்று நடைமுறைப்படுத்துவார்கள். இந்து அறநிலையத்துறை அரசாணையின்(எண்.25 ​2008) படி தமிழகத்தில் உள்ள திருக்கோயில் நிலங்களை விற்கவோ,​​ நீண்ட கால குத்தகைக்கு விடவோ தடை உள்ளது.ஆனால் இந்த தடையை விலக்கி வணிக நிறுவனங்களுக்கும் அறக்கட்டளைகளுக்கும் நீண்டகாலக் குத்தகைக்கு விட இந்து அறநிலையத்துறை தமிழக அரசுக்கு 2010 ஆம் ஆண்டு பரிந்துரைத்தது. இச்செயல் விமர்சிக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் திருக்கோயில்களின் அசையாச் சொத்துக்களின் விவரங்கள் இத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இந்த இணையதளத்தில், தூத்துக்குடி மாவட்டத் திருக்கோயில்களின் அசையா சொத்து விவரத் தகவலும் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பின்னரே இணையதளத்தில், தூத்துக்குடி மாவட்டத்தின் சொத்து விவரங்கள் சேர்க்கப்பட்டன. தேனி, நாமக்கல் போன்ற மாவட்டங்களின் சொத்து விவரங்கள் இருப்பினும் அவற்றை தொழில்நுட்பக்கோளாறு காரணமாகப் பார்க்க இயலாது. யு.டி.ஆர் திட்ட செயலாக்கத்தின் போது, இந்து சமய அறநிலையத் துறைக்குக் கீழுள்ள இந்து சமய நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்கள் தனிநபர்களுக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டதாக குற்றம் சாற்றப்பட்டு பின்னர் அந்த நிலங்களை மீட்க மதுரை, கோவை நகரங்களைத் தலைமையாகக் கொண்டு இரு மாவட்ட வருவாய் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கோயில் நிலங்களை மீட்கும் பணி தொடர்ந்து செயல்படுகின்றது. மிகக்குறைவான வாடகையே வசூலிக்கப்படும் திருக்கோயில் சொத்துகளை அனுபவிப்போர் திருக்கோயிலுக்கு வாடகை செலுத்தாமல் இருக்கும் தொகை பல திருக்கோயில்களில் லட்சங்களையும், கோடிகளையும் தாண்டுகின்றது.இவ்வாறு பாக்கி வைப்போரில் முக்கிய பிரமுகர்களும் அடங்குவர். கொடைக்கானலைச் சார்ந்த வி.என்.ஏ.எஸ்.சந்திரன் எனும் பக்தர் 2003 மார்ச்சில் தனது ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக சொத்தை பழனி முருகன் கோயிலுக்குச் சேருமாறு உயில் எழுதி பதிவு செய்து அதன் பிரதியை அறநிலைய துறை ஆணையருக்கு அனுப்பியும் அந்த சொத்துகள் இதுவரை பழனி முருகன் கோயில் கணக்கில் சேர்க்கப்படவில்லை. வால்பாறை, மூணாறு ஆகிய இடங்களில் உள்ள தேயிலை தொழிற்சாலைகள், வி.என்.ஏ.எஸ் காலணி நிறுவன 90 சதவீத பங்குகள் உட்பட பல சொத்துகள் இதில் அடங்கும். நாகர்கோயில் பார்வதிபுரம் கே.பி.சாலையில் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டு விற்கத் திட்டமிடப்பட்டிருந்த திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 10 சென்ட் நிலம் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையர் தலைமையில் மீட்கப்பட்டு ’கோயில் நிலம்’ என்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. அப் (திரைப்படம்) அப்2009 இல் வெளியான அமெரிக்க முக்கோண அசைவூட்டத் திரைப்படமாகும். ஜொனஸ் ரிவேரா ஆல் தயாரிக்கப்பட்டு பீட் டாக்டர் ஆல் இயக்கப்பட்டது. எட்வர்டு அஸ்னர், கிறிஸ்டோபர் பிலம்மர், ஜோர்டன் நாகாய், பாப் பீட்டர்சன் ஆகியோர் குரல் கொடுத்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஐந்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து இரண்டு அகாதமி விருதுகளை வென்றது. லிவிங் திங்ஸ் (இசைத் தொகுப்பு) லிவிங் திங்ஸ், அமெரிக்க ராக் இசைக்குழுவான லிங்கின் பார்க்கின் ஐந்தாவது இசைத்தொகுப்பாகும். இந்த இசைத்தொகுப்பு ஜூன் 20 2012 இல் வெளியிடப்பட்டது. மகேசுவர மூர்த்தங்கள் மகேசுவர மூர்த்தங்கள் என்பவை சைவக் கடவுளான சிவபெருமானின் இருபத்து ஐந்து உருவங்களைக் குறிப்பதாகும். இந்த வடிவங்கள் சிவனது அறுபத்து நான்கு 64 சிவவடிவங்களிலும் இடம்பெருகின்றன. இவ்வடிவங்கள் சிவாலயங்களில் கற்சிலைகளாகவும், பஞ்சலோக சிற்பங்கள் மற்றும் சுதைச் சிற்பங்களாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. சிவாகமங்கள் சிவபெருமானின் 5 முகத்திற்கும் 5 மூர்த்திகளை முன்நிறுத்துகின்றன. இவ்வாறான இருபத்தைந்து மூர்த்தங்களும் மகேசுவர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மகேஸ்வர வடிவங்கள், அமைந்திருக்கும் தலங்கள் அடைப்புக்குறிக்குள் மாவட்டங்கள் சிவ வடிவங்கள் நரசய்யா காவூரி ராமலிங்கம் அப்பல நரசய்யா ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் ஒரிசாவில் பிறந்தவர். தனது தொடக்கக் கல்வியைத் தமிழ்நாட்டில் பயின்றார். இவர் கப்பற் பொறியியலில் பயிற்சி பெற்றவர். 1949 ஆம் ஆண்டில் இந்தியக் கடற்படையில் சேர்ந்து கடற்படைக் கப்பல்களில் பத்தாண்டுகள் பணியாற்றினார். 1963 ஆம் ஆண்டில் கடற்படையில் இருந்து விலகிய பின் இரண்டு ஆண்டுகள் வணிகக் கப்பல்களில் பணியாற்றினார். 1965 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத் துறைமுகத்தில் தலைமைப் பொறியாளராகச் சேர்ந்தார். இக்காலத்தில் இவர் வங்கதேச விடுதலைப்போரிலும் பங்கு கொண்டுள்ளார். 1991ல் ஓய்வு பெற்றார். பின்னர் இந்திய துறைமுகச் சங்கத்தின் ஆலோசகராக இருந்த நரசய்யா உலக வங்கியின் அழைப்பின் பேரில் 1994 ஆம் ஆண்டு கம்போடிய அவசர மறுவாழ்வுத் திட்டப் பணிக்குழுவில் இடம் பெற்றார். 1996 ஆம் ஆண்டுவரை இவர் இத்திட்டத்தில் பணியாற்றினார். அதன் பின்னர் இவர் சென்னையில் வசித்து வருகிறார். இவரது நூற்றுக்கும் மேலான சிறுகதைகள், மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இரண்டாம் சிறுகதைத் தொகுதி திருப்பூர்த் தமிழ்ச் சங்க விருதைப் பெற்றிருக்கிறது. இவர் எழுதிய நான்கு நூல்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்துள்ளது. நூலாசிரியர்களின் காலம் நூலாசிரியர்களின் காலம் என்னும் இத் தொகுப்பில் தமிழில் நூல் செய்த ஆசிரியர் பெயர்கள் நூற்றாண்டு வாரியாக அகர வரிசையில் தரப்பட்டுள்ளன. தொகுத்தவர் மு. அருணாசலம். இதில் நூலின் ஆசியர் பெயர் தெரியாத நிலையில் உள்ளவர்கள் பெயர் நூலின் பெயரோடு உடையார் என்னும் சொல் சேர்க்கப்பட்டு ‘அமிர்தபதியுடையார்’ என்பது போல் குறிக்கப்பெற்றுள்ளன. எண்கள் கி.பி. ஆண்டுகளைக் குறிப்பன. சக ஆண்டுக் குறிப்புகள் தெரியவரும் நூலாசிரியரின் காலம் இதில் துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஏனையவை ஒரு தலைமுறைக்கு 25 ஆண்டுகள் என்னும் கணக்கீட்டில் சமகாலத்தவர், முன் பின் காலத்தவர் முதலானவற்றை ஒப்புநோக்கிக் கணிக்கப்பட்டுள்ளன. இயங்காமை இனிமேல் இல்லை இயங்காமை இனிமேல் இல்லை (ஐடில் நோ மோர் (Idle No More)) என்பது கனடாவில் 2012 டிசம்பர் காலப் பகுதியில் தொடங்கிய ஓரு முதற்குடிமக்கள் எதிர்ப்புப் போராட்ட இயக்கம் ஆகும். பெரும்பாலும் இளையோரால், சமூக வலைப்பின்னல்களை திறனாகப் பயன்படுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கனடாவில் மிகவும் மோசமான முதற்குடிமக்கள் வாழ்நிலையை மேம்படுத்துவது, அவர்களின் உரிமைகளை நடைமுறைப்படுத்துவது, அண்மையில் கொண்டுவரப்பட்ட சட்டங்களை எதிர்ப்பது உட்பட்ட காரணங்களுக்காக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அ. ராமசாமி அ. ராமசாமி திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். கல்விப்புலம் சார்ந்தவராக மட்டுமல்லாமல் நிகழ்காலத் தமிழ் இலக்கியம், அரசியல், கலை, பண்பாடு சார்ந்த சிற்றிதழ்களில் 1983 தொடங்கிக் கட்டுரைகள் எழுதி வருவதன் மூலம் திறனாய்வாளராகவும் அறியப்படுபவர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தச்சபட்டி என்னும் சிற்றூரில் பிறந்த ராமசாமி பட்டப்படிப்பு தொடங்கி முனைவர் பட்டம் வரை தமிழ் இலக்கியக் கல்வி கற்றவர். பள்ளிப்படிப்பு தொடங்கிப் படிப்புக்காகவும் பணிகளுக்காகவும் திண்டுக்கல், மதுரை, புதுச்சேரி, திருநெல்வேலி, வார்சா (போலந்து) போன்ற நகரங்களில் வாழ்ந்த அனுபவங்கள் அவருக்கு உண்டு. மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் படிப்பை முடித்த பின் மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த் துறை(1987-1989), புதுச்சேரி பல்கலைக்கழக நிகழ்கலைப்பள்ளியிலும் (1989-1997) விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். இந்திய அரசின் கலை பண்பாட்டு அமைச்சகம், போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழக இந்தியவியல் துறையில் வருகைதரு பேராசிரியராக இரண்டாண்டுக் காலம் (2011-2013) பணி செய்யத் தேர்வு செய்து அனுப்பியுள்ளது. கல்வித்துறை சார்ந்து மொழிப்புல முதன்மையர், அம்பேத்கரியல் மைய இயக்குநர், நூலகம், நாட்டு நலப்பணித்திட்டம், பதிப்புத்துறை,இளைஞர் நலம் போன்ற அமைப்புகளின் ஆலோசகனை மற்றும் பணிப்பொறுப்புகளையும் கூடுதலாகக் கவனித்த அனுபவம் கொண்டவர். இந்தியப் பல்கலைக்கழகப் பாடத்திட்டக் குழுக்களில் இடம் பெற்று தமிழ் இலக்கியக் கல்வியின் போக்குகளை உருவாக்குவதில் –குறிப்பாக நவீனத் தமிழ் இலக்கியத்திற்கான இடத்தைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திற்குள் கொண்டுவரத் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டவர். இலங்கை, மலேசியப் பல்கலைக் கழகங்களில் கல்விசார் குழுக்களிலும் ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த போது இடதுசாரி இயக்க நோக்கங்கள் கொண்ட வீதி நாடகங்களை அரங்கேற்றிய மதுரை நிஜநாடக இயக்கத்தோடு இணைந்து வீதி நாடகங்களில் செயல்பட்டவர். அதன் தொடர்ச்சியாகப் புதுச்சேரியில் தொடங்கப்பெற்ற சங்கரதாஸ் நிகழ்கலைப் பள்ளியின் ஆசிரியராகி மாணவர்களுக்கு நாடகவியல் கற்பித்ததோடு நாடகங்களையும், நாடகவியல் சார்ந்த விளக்கவியல் கட்டுரைகளையும், விமரிசனக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். நாடகவியலின் நீட்சியாகத் திரைப்படங்களைக் குறித்து எழுதத் தொடங்கி, தமிழ் வெகுமக்கள் சினிமா உருவாக்கும் கருத்தியல் மற்றும் அரசியல் போக்குகளைக் கட்டுடைத்துக் கட்டுரைகளை எழுதும் விமரிசகராக அறியப்படுகிறார். 1990களுக்குப் பின் புதிய அலையாக எழுந்த தமிழ் தலித் எழுத்துக்களைப் பொதுத் தளத்திற்கு அறிமுகம் செய்த எழுத்துகளில் இவரது பங்களிப்பு முக்கியமானது. ஜெய்சங்கர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் ஜெய்சங்கர், ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர். ஜெய்சங்கர் மேடை நாடக நடிகராக இருந்து சினிமாத் துறைக்கு வந்தவர். அதனால் தனது அறிமுகத் திரைப்படத்திலேயே சிறப்பாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றவர். தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் எனவும் தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட் எனவும் ரசிகர்களால் அழைக்கபட்ட இவர் பலதரப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். ஜெய்சங்கர் அதிரடிக் கதாநாயகன், நகைச்சுவைக் கதாநாயகன் கதாபாத்திரம், குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் வில்லனாகவும் பல்வேறு வேடங்களில் 200 க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஜெய்சங்கர் நடித்த தமிழ் திரைப்படங்கள் வரிசை பின்வருமாறு: டானியல் புவர் டானியல் வாரன் புவர் ("Daniel Warren Poor"), சூன் 27, 1789 - பெப்ரவரி 3, 1855) ஒரு கிறித்தவ சமய மதகுரு ஆவார். இலங்கை மற்றும் இந்தியாவில் பல கல்விச்சாலைகளை நிறுவி, நிர்வாகம் செய்தார். இவரின் நினைவாக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நூலகம் உள்ளது. மேலும், இவர் யாழ்ப்பாணக் கல்லூரியின் நிறுவனரும் ஆவார். டானியல் புவர் அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் டென்வெர்சு என்னும் இடத்தில் 1789 யூன் 27 இல் பிறந்தார். ஆண்டோவர் பிலிப்சி அகாதமியில் 1805 இலும் பின்னர் டாட்மவுத் கல்லூரியில் 1811 இலும் படித்துப் பட்டம் பெற்றார். பின்னர் ஆண்டோவர் இறையியல் மதப்பள்ளியில் இணைந்து 1814 இல் இறையியலில் பட்டம் பெற்றார். மாசச்சூசெட்சு நியூபரிபோர்ட்டில் 1815 இல் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 1815 அக்டோபர் 9 இல் சூசன் பல்ஃபிஞ்ச் என்பவரைத் திருமணம் புரிந்தார். இரு வாரங்களுக்குப் பின்னர் 1815 அக்டோபர் 15 இல் "ட்றியட்" என்ற கப்பலில் தனது மனைவியுடனும், மொழியியலாளர் வண. வில்லியம் பென்ட்லி என்பவருடனும் இலங்கை புறப்பட்டார். இவர்களுடன் ஜேம்சு ரிச்சார்ட்ஸ், மெஞ்சமின் மெயிக்சு ஆகிய மதகுருக்களும் அவர்களது மனைவிமாரும், எட்வர்ட் பாரென் என்ற இளம் மதகுருவும் இலங்கை சென்றனர். 1816 மார்ச் 22 இல் கொழும்பு வந்தடைந்த இவர்கள் பின்னர் யாழ்ப்பாணம் சென்றனர். புவரும், எட்வர்ட் பாரனும் 1816 அக்டோபர் 16 இல் தெல்லிப்பழையில் குடியேறினர். விவிலிய ஞானிகள் விவிலிய ஞானிகள், மூன்று அரசர்கள் அல்லது கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் எனப்படுவோர் கிறித்தவ பாரம்பரியப்படி, இயேசுவின் பிறப்புக்கு பின்பு, விண்மீனின் வழிகாட்டுதலால் கிழக்கிலிருந்து வந்து இயேசுவை வணங்கிய குறிப்பிடத்தக்க வெளிநாட்டவர் ஆவர். இவர்கள் கிறித்துமசு குடில் முதலிய கிறிஸ்து பிறப்புக் கால கொண்டாட்டங்களில் முக்கிய இடம் பெறுகின்றார்கள். இவர்கள் மூன்று பேர் என்று விவிலியத்தில் இல்லை. ஆயினும் இவர்கள் இயேசுவுக்கு அளித்த பரிசுகளின் எண்ணிக்கையினை வைத்து இவர்கள் மூவர் என நம்பப்படுகின்றது. இவர்கள் விண்மீனை ஆய்து அறிந்து வந்ததால் இவர்கள் வானியளாலராக இருக்கலாம். இயேசுவின் வருகையின் போது "எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்;" திருப்பாடல்கள் 72:14இல் உள்ள மறைநூல் வாக்கினால் இவர்கள் அரசர்களாக இருப்பர் என நம்பப்படுகின்றது. பரம்பரியப்படி இவர்களின் பெயர்கள்: இவர்கள் வந்த நிகழ்வு மத்தேயு நற்செய்தியில் மட்டுமே இடம் பெறுகின்றது. இதன்படி கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, ஏரோது அரசனிடம் 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்' என்றார்கள். இதைக் கேட்டதும் ஏரோது மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களை ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் ஆராய்ந்து மீக்கா நூலில் உள்ளது படி மெசியா யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறக்க வேண்டும் என அறிவித்ததால் ஞானிகளை அங்கே அனுப்பி வைத்தான். முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்றது. அங்கே வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டு நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள். டோயு செரி டோயு செரி (τ Cet, τ Ceti) சேரசு உடுத்தொகுதியில் உள்ள ஒரு நட்சத்திரமாகும். இது சூரியனை ஒத்த உடுவாக அறியப்பட்ட போதிலும் இதன் திணிவு சூரியனின் திணிவில் 78% ஆகும். இது நமது ஞாயிற்றுத் தொகுதியில் இருந்து 12 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. இதுவே ஒப்பீட்டு ரீதியில் அருகாயுள்ள விண்மீன் ஆகும். சூரியக் குடும்பத்தைப் போலவே தூசிப்படையால் நிறைந்ததாக இது காணப்படுகின்றது. டிசம்பர் 2012, கண்டறியப்பட்ட கோளான HD 10700E உடன் இவ்விண்மீனை ஐந்து கோள்கள் வலம்வருவது கண்டறியப்பட்டுள்ளது. HD 10700E திரவ நீரைக் கொண்டிருப்பதுடன் அதன் தட்பவெப்ப நிலை உயிரினங்கள் வாழப் பொருத்தமானதெனக் கூறப்படுகின்றது. இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள் இந்தியாவில் குழந்தைகள் பகுதி நேர அல்லது முழு நேர அடிப்படையில், பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் நடைமுறை உள்ளது. இந்நடைமுறை அவர்கள் குழந்தைப் பருவத்தைப் பறித்து, அவர்களுடைய உடல் மற்றும் மன வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. வறுமை, நல்ல பள்ளிகள் மற்றும் முறைசாரா பொருளாதாரம் வளர்ச்சி இல்லாமை இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் நடைமுறை இருக்க முக்கிய காரணங்கள் என கருதப்படுகிறது. 2001 ஆம் ஆண்டு இந்திய தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,5-14 வயது குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை, 12.6 மில்லியன் இருக்க வேண்டும் மதிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை இந்தியாவின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல; உலகளவில், 215 மில்லியன் குழந்தைகள் வேலை செய்கின்றனர், பலர் முழுநேரமும். 2001 ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள 12.6 மில்லியனில், 0.12 மில்லியன் குழந்தைகள் அபாயகரமான வேலையில் இருந்தனர். பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், 14 வயதிற்கு கீழ் உள்ள தொழிலாளர்கள் உலகி லேயே அதிக எண்ணிக்கையில் உள்ளதாக யுனிசெபால் மதிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு இந்தியாவில் 60 சதவீதம் குழந்தைத் தொழிலாளர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று மதிப்பிட்டுள்ளது , ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 70 சதவீதம் குழந்தைத் தொழிலாளர் விவசாயம் மற்றும் அதை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. விவசாயம் தவிற, குழந்தைத் தொழிலாளர் இந்திய பொருளாதாரத்தின் அனைத்து முறைசாரா துறைகளிலும் காணப்படுகின்றனர். இந்திய அரசியலமைப்பின் 24ஆம் உறுப்புரை குழந்தை தொழிலாளர் நடைமுறையைத் தடை செய்கிறது. மேலும், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இளம் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு)குழந்தைகள் சட்டம்-2000 மற்றும் குழந்தை தொழிலாளர் (தடை மற்றும் ஒழிப்பு) சட்டம்-1986, குழந்தை தொழிலாளர் நடைமுறையை அடையாளம் கண்டு, நடவடிக்கை எடுக்க மற்றும் தடுக்க சட்ட அடிப்படையை வழங்குகின்றனர். இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 24-ன் படி பதினான்கு வயதிற்குட்பட்ட அனைவரும் குழந்தைகளே. குழந்தைத் தொழிலாளர் (ஒழித்தல் மற்றும் ஒழுங்குபடுத்தல்) சட்டம்1986-ன் படியும் பதினான்கு வயதிற்குட்பட்ட வர்கள் குழந்தைகளாகவே கருதப்படுவர்.ஐக்கிய நாடுகளின் குழந்தைகளின் உரிமை சாசனப் பிரிவு-1 பதினெட்டு வயதிற்குட்பட்டவர்களை குழந்தைகள் என்று வகைப்படுத்துகிறது. இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் பலாத்காரம், கொலை போன்ற குற்றங்களில் ஈடுபடும் பட்சத்தில் அவர்களை 3 ஆன்டுகள் கூர்நோக்கு இல்லத்தில் கண்காணிப்பில் வைக்கவேண்டும், அதாவது 3 ஆண்டுகள் தண்டனை என்று இருந்தது. ஆனால் டெல்லியில் நிறுபயா என்ற மருத்துவ மாணவி கற்பலித்து கொலை செய்யப்பட்ட வழக்கின் மூலம் இந்த சட்டத்தை திருத்தம் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது. அதோடு அவர்களைக் கைது செய்யும் போது காவலர்கள் கடைப்பிடிக்கவேன்டிய முக்கிய அம்சம்பற்றி டெல்லி இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு சட்டத்தைப் பிரப்பித்துள்ளது. அதன்படி சிறாரைக் கைது செய்யும்போது சிறையில் அடைக்கக்கூடாது, கையில் விலங்கிட்டு அழைத்துச் செல்லக்கூடாது, காவல் நிலைய அறையிலோ, சிறையின் அறையிலோ அடைக்கக்கூடாது, தாமதமின்றி குழந்தை நல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும், விசாரணை நடத்த நன்னடத்தை அதிகாரியிடம் தகவல் கொடுக்கவேண்டும், மேலும் சிறாரின் தந்தை அல்லது பாதுகாவலரிடம் உடனே தெரிவிக்க வேன்டும் என்பன இந்த சரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) படி, அவர்களுடைய சுகாதார மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியைப் பாதிக்காத அல்லது தங்கள் கல்வியில் தலையிடாத வேலையில் பங்கேற்கும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர், குழந்தை தொழிலாளர் அல்ல; மாறாக அது பொதுவாக நேர்மறையான ஒன்றாக கருதப்படுகிறது. அத்தகைய பாதிப்பில்லாத வேலை , வீட்டில் பெற்றோற்க்கு உதவுதல், குடும்ப உதவி அல்லது பள்ளி நேரத்திற்கு வெளியே மற்றும் விடுமுறையில் கைப்பணம் ஈட்டுவது உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள், குழந்தைகள் திறமை மற்றும் அனுபவம் பெற்று அவர்களது முதிர் வயது வாழ்வில் சமூகத்தின் ஆக்கப்பூர்வமான உறுப்பினர்களாக தயார்படுத்தி கொள்ள உதவும். சர்வதேச தொழிலாளர் அமைப்பு, குழந்தைகளின் குழந்தை பருவம், அவர்களின் திறனை, கண்ணியத்தை பறிக்கும் வேலை, உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு தடையாக உள்ள வேலையில் ஈடுபடுவதை குழந்தை தொழிலாளர் என வரையறுக்கிறது. மன, உடல், சமூக ரீதியில் அல்லது நெறிமுறையில் ஆபத்தான மற்றும் பள்ளி செல்ல தடையாக உள்ள, அல்லது பள்ளியில் தங்கள் திறனை பாதிக்கின்ற வேலையை அது குறிக்கிறது. யுனிசெப் குழந்தை தொழிலாளரை வித்தியாசமாக வரையறுக்கிறது. 5 முதல் 11 ஆண்டுகள் வயது வரை உள்ள குழந்தை, ஒரு வாரத்தில் குறைந்தது ஒரு மணி நேரம் பொருளாதார செயல்பாடு அல்லது 28 மணி நேரம் வீட்டைச்சேர்ந்த வேலை, 12 முதல் 14 ஆண்டுகள் வயதில் குறைந்தது 14 மணி நேரம் பொருளாதார செயல்பாடு அல்லது வாரத்திற்கு 42 மணி நேரம் வீட்டைச்சேர்ந்த வேலை செய்தால் குழந்தை தொழிலாளர் என வரையறுக்கிறது. இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு-2001 அலுவலகம் 17 ஆண்டுகள் குறைவான வயதுடைய ஒரு குழந்தை பொருளாதார உற்பத்தி நடவடிக்கைகளில் இழப்பீடு, ஊதியம் அல்லது இலாப பங்கு இருந்து அல்லது இல்லாமல் பங்கேற்றால் குழந்தைத் தொழிலாளர் என வரையறுக்கிறது. இத்தகைய பங்கு உடல் அல்லது மன அளவில் இருக்கலாம். இந்திய அரசாங்கம் இரண்டு குழுக்களாக குழந்தை தொழிலாளர்களை வகைப்படுத்துகிறது: முதன்மை தொழிலாளர்கள் வருடத்திற்கு 6 மாதங்கள் அல்லது அதற்கு மேல் வேலை செய்பவர் ஆவர் மற்றும் குறு குழந்தைத் தொழிலாளர்கள் ஆண்டில் எந்த நேரத்திலும் ஆனால் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு வேலை செய்பவர் ஆவர். சில குழந்தை உரிமை ஆர்வலர்கள் பள்ளி செல்லாத ஒவ்வொரு குழந்தையும் மறைமுக குழந்தை தொழிலாளி என வாதிடுகின்றனர். ஆனால் இந்தியாவில், குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் பள்ளிகள், வகுப்பறைகள் மற்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறை பெறும் அளவில் காணப்படுகிறது. ஐந்தில் ஒரு பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்கும் ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற பிறகு, இந்தியா பல அரசியலமைப்பு பாதுகாப்பு மற்றும் குழந்தை தொழிலாளர் சட்டங்கள் நிறைவேற்றியுள்ளது. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் மற்றும் மாநில கொள்கை வழிகாட்டி கோட்பாடுகள் எந்த தொழிற்சாலை அல்லது சுரங்கம் அல்லது வேறு அபாயகரமான வேலையில் 14 வயதுக்கு கீழே உள்ள குழந்தை தொழிலாளர்களை ஈடுபடுத்த தடை செய்யப்பட்டுள்ளது (பிரிவு 24). இந்திய அரசியலமைப்பு, 1960க்குள், ஆறு முதல் 14 வயது குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி வழங்க தேவைப்படும் உள்கட்டமைப்பு மற்றும் வளங்களை ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானித்தது (கட்டுரை 21-A மற்றும் கட்டுரை 45). இந்திய அரசாங்கம் கூட்டாட்சி வடிவம் கொண்டது. குழந்தை தொழிலாளர் பற்றி மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இரண்டும் சட்டம் இயற்ற முடியும். முக்கிய தேசிய சட்ட மேம்பாடுகள் பின்வருமாறு: 1948 தொழிற்சாலைகள் சட்டம்: எந்த தொழிற்சாலையிலும் 14 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்த தடை செய்யப்பட்டுள்ளது. 15-18 வயதுள்ளவர்கள் எந்த தொழிற்சாலையில், எவ்வளவு நேரம், எப்பொழுது வேலையில் ஈடுப்படுத்தப்படலாம் என விதிகள் விதிக்கிறது. 1952 சுரங்க சட்டம்: இந்த சட்டம் 18 வயதுக்கு கீழே உள்ளவர்களை சுரங்கத்தில் வேலையில் அமர்த்த தடை செய்கிறது. 1986 குழந்தை தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டம்: 14 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளை, தீங்கு விளைவிக்கும் வேலைகள் என பட்டியலில் உள்ள தொழில்களில் ஈடுப்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. 2006 மற்றும் 2008 ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. குழந்தைகள் இளம் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) 2000 சட்டம்: இந்த சட்டம் எந்த ஒரு அபாயகரமான வேலையில் அல்லது அடிமைத்தனமாக குழந்தையை வேலைக்கு அமர்த்துவது சிறை தண்டனைக்குறிய குற்றம் என வரையறுக்கிறது. அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் 2009: இந்த சட்டம் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி அளிப்பதை உறுதி செய்கிறது. மேலும், ஒவ்வொரு தனியார் பள்ளியிலுள்ள இடங்களில் 25 சதவீதம் பின்தங்கிய வகுப்பு குழந்தைகள் மற்றும் உடல் சவால் உள்ள குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்தியா 1987 ல் குழந்தை தொழிலாளர் பற்றிய தேசிய கொள்கையை உருவாக்கியது. இந்த கொள்கை, தீங்கு விளைவிக்கும் தொழில்களில் ஈடுப்படும் குழந்தைகளின் மறுவாழ்வுக்கான, படிப்படியான மற்றும் தொடர்நிலை அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள தீர்மானித்தது. சட்டங்களின் கடுமையான அமலாக்கல் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் மூலம் குழந்தை தொழிலாளர் பிரச்சினைக்கான மூல காரணங்களான வறுமை போன்றவற்றை ஒழிப்பதற்க்கு திட்டம் தீட்டியது. இது 1988 ஆம் ஆண்டில், தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் (NCLP) உருவாகுவதற்க்கு வழிவகுத்தது. தற்போது மத்திய அரசு 602 கோடி நிதி ஒதுக்கீட்டின் மூலமாக இந்த சட்ட மற்றும் மேம்பாட்டு முயற்சி தொடர்கிறது. இருந்த போதிலும், குழந்தை தொழிலாளர் என்பது இந்தியாவில் ஒரு பெரிய சவாலாக உள்ளது. மனித வரலாற்றில் மற்றும் வெவ்வேறு கலாச்சாரங்களில், 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் குடும்ப நலனுக்காக பல்வேறு வழிகளில் பங்களித்துள்ளனர். யுனிசெப் வறுமை குழந்தை தொழிலாளர்களை ஊக்குவிக்கும் என தெரிவிக்கிறது. இந்த அறிக்கை, உலகின் வளரும் மற்றும் முழு வளர்ச்சி அடையாத நாடுகளில், கிராமப்புற மற்றும் வறுமை சூழ்ந்த பகுதிகளில், குழந்தைகளுக்கு மாற்று வழி இல்லை என குறிப்பிடுகிறது. பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாத நிலையில், குழந்தை தொழிலாளர் முறை ஒன்றே வழி. ஒரு பிபிசி அறிக்கை, இதேபோல், வறுமை மற்றும் போதிய பொது கல்வி உள்கட்டமைப்பு இல்லாத நிலையே இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களுக்கான காரணங்கள் என குறிப்பிடுகிறது. யூனிசெப் தனது அறிக்கையில், சிறுவர்களை விட சிறுமிகள் இரண்டு மடங்கு அதிகமாக பள்ளியில் இருந்து விலகி வீட்டு வேலை செய்வதாக குறிப்பிடுகிறது. பள்ளியில் சேர்க்கும்பொழுது, குறைந்த வருமானம் கொண்ட பெற்றோர், தங்களின் சக்திக்கேற்ப செலவுகள் மற்றும் கட்டணங்கள் கொண்ட ஒரு பள்ளியை தேர்ந்தெடுக்கின்றனர். இந்தியா உட்பட உலகம் முழுவதும் பெண்களின் கல்விக்கு குறைந்த முன்னுரிமை தரப்படுகிறது. சிறுமிகள் பள்ளிகளில் துன்புறுத்த மற்றும் தொல்லைக்குட்படுத்தப்படுகின்றனர். தரக்குறைவான பாடத்திட்டம் அல்லது பாரபட்சம் காட்டுவதன் மூலம் ஓரங்கட்டப்படுகின்றனர். முற்றிலும் அவர்களின் பாலினம் காரணமாக, பல சிறுமிகள் பள்ளியில் சேர்க்கப்படாமல் அல்லது இடைநிற்றல் காரணமாக குழந்தை தொழிலாளராக ஆக்கப்படுகின்றனர். சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) வறுமையே குழந்தை தொழிலாளர் முறைக்கு மிக பெரிய காரணம் என கூறுகிறது. ஒரு குழந்தையின் வருமானம் அதன் வாழ்விற்கு அல்லது வீட்டு தேவைக்கு மிக முக்கியமான ஒன்று. சில குடும்பங்களில், குழந்தை தொழிலாளர் வருமானம் வீட்டு வருமானத்தில் 25 முதல் 40 சதவீதம் வரை உள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு 2008ல் நடத்திய ஆய்வின்படி, பள்ளிகள் இல்லாமை மற்றும் தரம் குறைந்த பள்ளிகள் குழந்தை தொழிலாளர் முறைக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. பல சமூகங்களில், குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் போதுமான பள்ளி வசதிகள் இல்லை. சில நேரங்களில் பள்ளிகூட வசதி இருந்த போதிலும், அவைகள் மிக தொலைவிலும், சென்றடைய கடினமானதாகவும், கட்டணம் மிக அதிகமாக அல்லது கல்வி தரம் மிகவும் குறைந்ததாக உள்ளன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இப்பள்ளிகளில் சேர்த்து கற்பிப்பது எந்த அளவில் பயனளிக்கும் என வியக்கின்றனர். அரசு நடத்தும் ஆரம்ப பள்ளிகளில் குழந்தைகள் சேர்ந்தாலும், அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்கள் 75% நேரம் கூட பள்ளிக்கு வருவதில்லை. யுனிசெப் அறிக்கையின்படி, இந்தியாவில் 90% குழந்தை தொழிலாளர் அதன் கிராமப்புற பகுதிகளில் இருந்தபோதிலும், அங்கு பள்ளிகளும் அவற்றின் தரமும் வலுவற்ற நிலையில் உள்ளன; இந்திய கிராமப்புற பகுதிகளில், அரசாங்கப் பள்ளிகளுக்கு சுமார் 50% கட்டிடம் இல்லை, 40% பள்ளிகளுக்கு கரும்பலகை இல்லை, புத்தகங்கள் சில பள்ளிகளிலேயே உள்ளன. அரசின் நிதியில் 97%, ஆசிரியர் மற்றும் நிர்வாகிகளுக்கு சம்பளமாக செலவாகிறது. 2012 வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் கட்டுரையின்படி இந்தியாவில் 6-14 வயது குழந்தைகளில் 96% பள்ளியில் சேர்ந்த போதிலும், பள்ளிகளின் உள்கட்டமைப்பு மோசமாக உள்ளது- 81,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஒரு கரும்பலகை கூட இல்லை மற்றும் சுமார் 42,000 அரசு பள்ளிகள் கட்டிடம் இல்லாமல் இயங்குகின்றன. பிக்கரி(Biggeri) மற்றும் மெஹ்ரோத்ரா(Mehrotra) குழந்தை தொழிலாளர்களை ஊக்குவிக்கும் பொருளாதார காரணிகள் பற்றி படித்தார். அவர்கள் இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் உட்பட ஐந்து ஆசிய நாடுகளில் தங்கள் ஆய்வை கவனம் செலுத்தினர். அவர்கள் குழந்தை தொழிலாளர் ஐந்து நாடுகளுக்கும் ஒரு கடுமையான பிரச்சினையாக உள்ளது என்றும், ஆனால் அது ஒரு புதிய பிரச்சினை அல்ல என்றும் கண்டனர். மனித வரலாற்றில் பொருளாதார காரணங்கள் குழந்தை தொழிலாளர் முறையை ஊக்குவித்துள்ளன. அவர்கள் குழந்தை தொழிலாளருக்கான காரணங்கள் தேவை மற்றும் வழங்கலின்படி இருக்கும் என கண்டனர். வறுமை மற்றும் நல்ல பள்ளிகள் கிடைக்கப்பெறாததும் குழந்தை தொழிலாளர்களின் தேவையின் பக்க காரணங்களை விளக்குகின்றன. அதிக வருமானம் தரும் முறைசார்ந்த பொருளாதாரத்தை விட குறைந்த வருமானம் தரும் முறைசாரா பொருளாதாரத்தின் வளர்ச்சி தேவையின் பக்கத்தை விளக்குவதாக கூறினர். இந்தியாவில் கடுமையான தொழிலாளர் சட்டங்கள் மற்றும் பல விதிமுறைகள் ஒழுங்கமைக்கப்பட்ட துறையின் வளர்ச்சியை தடுக்கின்றன. எதிர்பாராத விளைவாக இந்தியாவின் சிக்கலான தொழிலாளர் சட்டங்களினால் வேலைகள் முறைசாரா துறைக்கு மாற்றம் பெற்றுவிட்டன. இதன் விளைவாக, விவசாய துறைக்கு பின்னர் முறைசாரா வர்த்தகம் மற்றும் முறைசாரா சில்லறை வேலை ஆகியவற்றில் குழந்தை தொழிலாளர் ஈடுபடுத்தப்படுகின்றனர். குடும்பத்திற்கு சொந்தமான முறைசாரா துறைகளில், குறைந்த சம்பளத்திற்காகவும், வேலையை விட்டு நீக்குவது எளிது என்ற காரணத்தினாலும் குழந்தை தொழிலாளர் நடைமுறைபடுத்தப்படுகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் கூட பள்ளிநேரம் முடிந்த பிறகு குடும்பம் சார்ந்த உற்பத்தி மற்றும் பொருளாதார வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதாக பிக்கரி மற்றும் மெஹ்ரோத்ரா கண்டறிந்துள்ளனர். மற்ற அறிஞர்கள் கூட நெளிவுதன்மையற்ற இந்திய தொழிலாளர் சந்தையின் கட்டமைப்பு, முறைசாரா பொருளாதாரத்தின் அளவு, தொழிற்சாலைகளின் வளர்ச்சியின்மை மற்றும் நவீன உற்பத்தி தொழில்நுட்பங்கள் இல்லாமை ஆகியவை குழந்தை தொழிலாளர் முறையை ஏற்றுக்கொண்டமைக்கும் தேவையை பாதிக்கும் முக்கிய பொருளாதார காரணிகளாகவும் கூறுகின்றனர். சிக்னோ(Cigno) மற்றும் பலர், அரசாங்கம் நிலம் மறுபகிர்வு திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களின் பொருளாதார சுதந்திரத்தை அதிகரிப்பதற்காக சிறிய அளவில் நிலங்களை கொடுத்தப்பொழுது, திட்டமிடப்படாத விளைவாக குழந்தை தொழிலாளர் முறையை அதிகரித்ததாக கூறுகின்றனர். சிறிய துண்டான நிலங்களில் விலையுயர்ந்த விவசாய உபகரணங்கள் பயன்படுத்த முடியாது என்பதால் அவற்றில் உற்பத்தியை கூட்ட அதிக வேலையாட்கள் தேவைப்பட்டனர். இதில் குழந்தை தொழிலாளர்களும் அதிக அளவில் ஈடுப்படுத்தப்பட்டனர். ஸ்ரீவத்சவா அவர்கள் பிணைக்குழந்தை தொழிலாளர் முறையை கீழ் கண்டவாறு விவரிக்கிறார். இந்த முறையில் குழந்தை அல்லது அதன் பெற்றோர் எழுத்து மூலமான அல்லது வாய்மொழியான ஒப்பந்தம் மூலம் கடன் கொடுத்தவர்க்கு கட்டாயமாக வேலை செய்ய நேரிடுகிறது. கடனைத் திரும்ப செலுத்த குழந்தைகள் வேலைக்கு அனுப்பப்படுகின்றனர். ஸ்ரீவத்சவா, இந்த முறை இந்தியாவில் காலனி ஆதிக்கத்தின் போது தோன்றியதாக கூறுகிறார். இந்தியாவில் கடன் அடிமைத்தனம், நம்பகமான குறைவூதிய தொழிலாளர் பெற ஒரு வழிமுறையாக, காலனித்துவ காலத்தில் தோன்றியதாக ஸ்ரீவத்சவா கூறுகிறார். இது பிராந்திய மொழிகளில் ஹாலி(Hali) அல்லது ஹல்வஹா(Halwaha) அல்லது ஜூரா(Jeura) என அழைக்கப்பட்டது; காலனித்துவ நிர்வாகத்தால் ஒப்பந்த தொழிலாளர் முறை என அழைக்கப்பட்டது. இதில் பிணைக்குழந்தை தொழிலாளர் முறையும் அடங்கியது. காலப்போக்கில், இந்த நீண்ட கால பாரம்பரிய உறவுகள் குறைந்துவிட்டதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கை கூறுகிறது. 1976ஆம் ஆண்டில், குழந்தைகள் உட்பட யாரையும் யாரும் கொத்தடிமையாக பயன்படுத்தக்கூடாது என இந்தியா தடை சட்டத்தை இயற்றியது. தற்போதும் பிணைக்குழந்தை தொழிலாளர் முறை வழக்கத்திலுருப்பதை சான்றுகள் உறைக்கின்றன. 1996இல் இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தனது சிறப்பு அறிக்கையில், தமிழகத்தில் நடத்திய திடீர் சோதனையில் சுமார் 53 குழந்தை தொழிலாளிகளை கண்டுபிடித்ததாக தெரிவிக்கிறது. ஒவ்வொரு குழந்தை அல்லது அதன் பெற்றோர் முன்பணமாக ரூ10,000 முதல் 25,000 வரை பெற்றிருந்தனர். நாளுக்கு 12 முதல் 14 மணி நேரம் வேலை செய்தும் 2 அல்லது 3 ரூபாய் மட்டுமே தினக்கூலியாக பெற்றனர். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கை, கொத்தடிமை குழந்தை தொழிலாளர் அளவை தீர்மானிப்பது கடினம் என தெரிவிக்கிறது, ஆனால் பல்வேறு சமூக ஆர்வலர் குழுக்களின் மதிப்பீடுகள் 2001இல், 350000 வரை இருக்கலாம் என கூறுகின்றன. பிணை தொழிலாளர் (ஒழிப்பு) சட்டம் 1976இல் இந்தியாவில் இயற்றியப்பின்னரும் அதன்கீழ் வழக்கு தொடரப்படுவதில்லை. ஒரு அறிக்கை, ஒரு குழந்தைக்கு குறைவான ஊதியம் வழங்கப்பட்டால் குறைந்தபட்ச கூலி சட்டம்(1948) மற்றும் குழந்தை தொழிலாளர் (தடை மற்றும் சீரமைப்பு) சட்டம்(1986) கீழ் மட்டுமல்லாமல் பிணை தொழிலாளர் (ஒழிப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்வது பற்றி வழக்கறிஞர்களுக்கு மத்திய அரசிடமிருந்து எந்த வழிகாட்டுதலும் இல்லை என தெரிவிக்கிறது. சில அமலாக்க நடவடிக்கைகள் திட்டமிடப்படாத சில விளைவுகளை புரிந்துள்ளன. தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர் வேலை செய்வது சமூக கண்காணிப்பு குழுக்களின் நடவடிக்கைகளால் குறைந்துள்ள போதும், வறுமையால் தற்போதும் ஏழைக்குடும்பத்திலுள்ள குழந்தைகள் வேலை செய்வதை ஓர் அறிக்கை சுட்டி காட்டுகிறது. தொழிற்சாலைகள் தேவைப்படுவோர்க்கு பணம் கொடுத்து அவர்கள் வீட்டில் ஒரு தறியை நிறுவுகிறது. பிறகு அவர் குடும்பத்தினரும், குழந்தைகளும் வீட்டிலேயே வேலையை முடித்து, உற்பத்தியான பொருட்களை தொழிற்சாலையில் கொடுத்து வட்டியை செலுத்தி சிறிது ஊதியமும் பெறுகின்றனர். இவ்வாறு பிணைத்தொழிலாளர் முறை சிறிய நகர தொழிற்சாலைகளிலிருந்து கிராமப்புற வீடுகளுக்கு மாறி வருகிறது. குழந்தை தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பது பொருளாதார நலன் அடிப்படையில் ஒரு கடுமையான பிரச்சினையாக கருதப்படுகிறது. வேலை செல்லும் குழந்தைகளால் தேவையான கல்வி பெற முடியவில்லை. அவர்கள் உணர்வுபூர்வமாக, உளவியல் ரீதியாக, அறிவு சார்ந்த, உடல்ரீதியான வளர்ச்சி பெற வாய்ப்பு கிடைப்பது இல்லை. அபாயகரமான வேலைகளில் ஈடுப்படும் குழந்தைகள் இன்னும் மோசமான நிலையில் உள்ளன. வேலை செல்லும் குழந்தைகள் படிப்பறிவில்லாமல் இருப்பது, அவர்கள் திறமையை கட்டுப்படுத்துவதுடன் அவர்களுக்கும் அவர்களை சார்ந்த சமூகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு பொருளாதாரம் தொடர்ந்து வளர்வதற்கு, படித்த மற்றும் முக்கிய அடிப்படை தொழில் திறமைகளை கொண்ட பணியாளர்கள் தேவை. இன்றைய இளம் தொழிலாளர்கள், நாளைய இந்தியாவின் மனித மூலதனமாவர். இந்தியாவில் குழந்தை தொழிலாளர் பெரும்பாலும்(70%) விவசாயத்தில் ஈடுப்படுகின்றனர். பிறர், முறையான படிப்போ பயிற்சியோ தேவையில்லாத, திறன் குறைவான மற்றும் வேலை அதிகமுள்ள நெசவு, வீட்டு வேலை செய்தல் போன்றவற்றில் ஈடுப்படுத்தப்படுகின்றனர். சர்வதேச தொழிலாளர் அமைப்பின்படி, குழந்தைகளை வேலைக்கு பதிலாக பள்ளிக்கு அனுப்புவதன் மூலம் வளரும் நாடுகளுக்கு பெரும் பொருளாதார நலன்கள் உள்ளன. கல்வி இல்லாமல், அவர்கள் வறுமையிலிருந்து வெளி வர அதிக ஊதியம் தரும் வேலையில் சேர தேவையான ஆங்கில அறிவு மற்றும் தொழில்நுட்ப திறன்களை பெற முடியாது. 1997 ஆம் ஆண்டில், சர்வதேச தொழிலாளர் அமைப்பு உலக வைர தொழிலாளர் கூட்டமைப்புடன் சேர்ந்து ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் இந்தியாவில் வைரத்தொழிலில் குழந்தை தொழிலாளர் முறை தாராளமாக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. 1997ல் சர்வதேச தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு (ICFTU) தனிப்பட்ட ஒரு அறிக்கையில் இந்திய வைரத்தொழிலில் குழந்தை தொழிலாளர் தொடர்ந்து தாராளமாக ஈடுப்படுத்தப்படுவதை கண்டறிந்தது. ஆயினும் அனைவரும் இதற்கு உடன்படவில்லை. தென் குஜராத் வைர தொழிலாளர் சங்கம் என்ற மற்றொரு தொழிற்சங்கம், குழந்தை தொழிலாளர் இருப்பதை ஒப்புக்கொண்டப்போதும், அவர்கள் 1%க்கும் குறைவாகவும் உள்ளூர் தொழில் நெறிகளுக்கு எதிராக வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என கூறியது. சர்வதேச தொழிலாளர் சங்கத்தின் 1997 அறிக்கை படி, ஆண்டுதோறும் உலகின் 70%(எடைபடி) வைரங்கள் இந்தியாவில் பட்டை தீட்டப்படுகின்றன. அத்துடன், உலகிற்கு 95% மரகதம், 85% மாணிக்கம்,65% நீலக்கல் ஆகியவற்றை இந்தியா அளிக்கிறது. இந்தியாவில் இந்த கற்கள் பாரம்பரிய உழைப்பு செறிந்த முறைகளை பயன்படுத்தி உருவக்கப்படுகின்றன. சுமார் 1.5 மில்லியன் மக்கள் இத்தொழிலில் வேலை செய்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் முறைசாரா துறையில் உள்ளனர். இத்தொழில் சிறு அலகுகளாக பிரிந்துள்ளது.ஒவ்வொரு அலகிலும் சொற்ப்ப ஊழியர்களே பணிபுரிகின்றனர். இந்த துறை வளர்ச்சி அடையாமலும் ஒழுங்குப்படுத்தப்படாமலும் பெரும் உற்பத்தியாளர்கள் இல்லாமலும் உள்ளது.இந்த ஏற்பாடு இந்தியாவில் உள்ள சிக்கலான தொழிற்சட்டங்களை தவிர்ப்பதற்காகவே என சர்வதேச தொழிலாளர் அறிக்கை தெரிவிக்கிறது. ஏற்றுமதி ஒப்பந்தம் பல்வேறாக பிரிக்கப்படுகிறது. வேலை பல இடைத்தரகர்கள் மூலம் துணை ஒப்பந்தங்களாக செய்யப்படுகிறது. இந்த சூழலில், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கை, இந்திய வைர மற்றும் மாணிக்கம் துறையில் குழந்தை தொழிலாளரின் சரியான எண்ணிக்கை தெரிந்துக்கொள்ள இயலாது என கூறுகிறது;1997ல் மொத்தமுள்ள 1.5 மில்லியன் தொழிலாளர்களில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 10,000 முதல் 20,000(நூற்றில் ஒருவர்) இருக்கலாம் என கணித்துள்ளனர். கல்வி மிகவும் செலவானதாகவும் அதன் தரம் மதிப்பினை தராததாலும் பெற்றோரே குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்றனர். வளர்ந்த பின்னர் அவ்ர்கள் வைர மற்றும் மாணிக்கம் துறையில் திறமைக்கேற்ப சம்பளம் பெறுகின்றனர் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கை கூறுகிறது. 2005ல் 21 வெவ்வேறு இடங்களில் 663 உற்பத்தி கூடங்களில் நடைப்பெற்ற ஆய்வின்படி இந்தியாவின் வைர மற்றும் மாணிக்கம் துறையில் குழந்தை தொழிலாளர் 0.31% ஆக குறைந்திருப்பதை கண்டனர். தென் இந்தியாவில் உள்ள சிவகாசியில் பட்டாசு உற்பத்தியில் குழந்தை தொழிலாளர் ஈடுப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. 2011 இல், சிவகாசியில் 9,500 க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் இந்தியாவின் 100% பட்டாசு உற்பத்தியை மேற்கொள்கின்றன. இந்த தொழிற்சாலைகளில் சுமாராக ஒன்றுக்கு 15 ஊழியர்கள் வீதம் 150,000 பேர் வேலை செய்கின்றனர். இவைகளில் பெரும்பாலானவை முறைசாரா துறையில் உள்ளவை. மிக சில நிறுவனங்களே பதிவு செய்யப்பட்டு முறைப்படுத்தப்பட்டவையாக உள்ளன. 1989ல், பட்டாசு தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் மோசமாக உள்ளதாகவும் அவற்றில் குழந்தை தொழிலாளர் ஈடுப்படுத்தப்படுவதாகவும் ராஜூ என்பவரின் அறிக்கை கூறுகிறது. சிறிய குடிசைகளில் செயல்படும் முறைசாரா துறையில் இயங்கும் இத்தொழிலில் குழந்தை தொழிலாளர்கள் சர்வசாதாரணமாக ஈடுபடுத்தப்படுகின்றனர். 4 நிறுவனங்கள் மட்டுமே தரம் உயர்த்தப்பட்டு முறைசார்ந்த துறையில் 250 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொண்டுள்ளன; இவைகளில் குழந்தைகள் வேலைக்கு ஈடுபடுத்தப்படவில்லை. மேலும் அங்கு சிறந்த பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் வளங்கள் இருந்தன. சிறிய மற்றும் முறைசாரா துறையில் இயங்கும் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் குழந்தை தொழிலாளர்கள் நீண்ட வேலை நேரம், குறைந்த ஊதியம், பாதுகாப்பற்ற நிலைமைகள் மற்றும் சோர்வான நிலைகளால் பாதிக்கப்பட்டனர். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2002 அறிக்கையின்படி தமிழகத்தின் பட்டாசு தொழிற்சாலைகள், தீப்பெட்டி தொழிற்சாலைகள் மற்றும் ஊதுபத்தி தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். எனினும் அவர்கள் முறை சார்ந்த ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யும் பெரு நிறுவனங்களில் வேலை செய்வதில்லை. உள்நாட்டு சந்தைக்கான பட்டாசு, தீப்பெட்டி மற்றும் ஊதுபத்தி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர் உள்ளனர். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கையின்படி இந்த பொருட்களின் தேவை வளர்ந்துள்ள போதிலும் முறைசார்ந்த மற்றும் பெருநிறுவனங்கள் வளர்ச்சி அடையாத காரணத்தினால் குடிசை தொழிலின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் குழந்தை தொழிலாளரின் தேவை அதிகரித்துள்ளது. இத்தகைய மறைமுக நடவடிக்கைகள் ஆராய்ச்சி மற்றும் பயனுள்ள நடவடிக்கைக்கும் சவாலானவை என சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறுகிறது. மனித உரிமைகள் கண்காணிப்பு அறிக்கையின்படி, சுமார் ஐந்து வயதுடைய இளம் சிறார்கள் பட்டு துறையில் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வீதம் வாரத்திற்கு ஆறு முதல் ஏழு நாட்கள் வரை வேலை பார்க்கின்றனர் என தெரிவிக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் பிணைத்தொழிலாளர்கள். இந்திய அரசு குழந்தை தொழிலாளர்கள் இல்லையென மறுத்தாலும் இவர்களை கர்நாடகம், உத்திரப்பிரதேசம் மற்றும் தமிழ் நாட்டில் காண இயலும். இவர்கள் பட்டுப்பூச்சியின் கூடுகளை சூடான நீரில் அழுத்தியவாறு வைத்துக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இவர்களுக்கு நாளொன்றுக்கு 10 ரூபாய்க்கும் குறைவாகவே ஊதியம் வழங்கப்படுகிறது. 2010ல் ஜெர்மானிய செய்திப்புலனாய்வு அறிக்கை, 1998ல் கர்நாடக மாநிலத்தில் சுமார் 1000 பட்டு தொழிற்சாலைகளில் 10000க்கும் மேற்பட்ட குழந்தைகள் வேலை பார்ப்பதை அரசு சாரா நிறுவனங்கள் கண்டறிந்ததாக தெரிவிக்கிறது. 1994ல் மற்ற இடங்களில் ஆயிரக்கணக்கான பிணை குழந்தை தொழிலாளர்கள் இருந்ததாக கூறுகிறது. ஆனால் இன்று, யூனிசெப் மற்றும் தொண்டு நிறுவனங்களின் ஈடுபாடு காரணமாக குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளதாகவும், மீட்கப்பட்ட குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறது. அதிகாரப்பூர்வ மதிப்பீடுகள் வீடுகள் மற்றும் உணவகங்களில் வேலை பார்க்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 25 லட்சம் என கூறுகின்றன. தொண்டு நிறுவனங்கள் இந்த எண்ணிக்கை 2 கோடிக்கு மேல் இருக்கும் என கூறுகின்றன. 10 அக்டோபர் 2006ல் இந்திய அரசு குழந்தை தொழிலாளர் தடை மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தை விரிவு செய்து வீடுகள், உணவகங்கள், சாலையோர தாபாக்களில் வேலைக்கு அமர்த்த தடை செய்தது. 1979ல் இந்திய அரசு குழந்தைத்தொழிலாளர் மற்றும் அவற்றை சமாளிக்கும் வழிமுறைகளை கண்டறிய குருபதஸ்வாமி குழுவை அமைத்தது. இக்குழுவின் பரிந்துரைகளின்படி 1986ல் இந்திய அரசு குழந்தை தொழிலாளர் தடை மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தை நிறைவேற்றியது. 1987ல் தீங்கு விளைவிக்கக்கூடிய தொழில்களில் ஈடுப்பட்டுள்ள குழந்தைகளின் மறுவாழ்விற்காக ஒரு தேசிய கொள்கை உருவாக்கப்பட்டது. 1988ல் இருந்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சுமார் 100 தொழில் சார்ந்த திட்டங்கள் மூலம் செயலாற்றுகிறது. பச்பன் பச்சாவோ ஆந்தோலன், கேர் இந்தியா, குழந்தை உரிமைகள் மற்றும் நீங்கள், குழந்தை தொழிலாளருக்கு எதிரான உலகளாவிய அணிவகுப்பு போன்ற தொண்டு நிறுவனங்கள் இந்தியாவில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பாடுபட்டு வருகின்றன. பிரதம் இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு நிறுவனம். 1994ல் 'ஒவ்வொரு குழந்தைக்கும் பள்ளியில் கல்வி' என்ற கொள்கையுடன் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் குழந்தை தொழிலாளரை குறைத்திடவும், அவர்களின் பாலினம், மதம் மற்றும் சமூகப்பிண்ணணி பாராமல் அவர்களுக்கு பள்ளிக்கல்வி வழங்க உறுதி கொண்டுள்ளது. 2005ல் பிரதம் சுமார் 500 குழந்தை தொழிலாளர்களை மீட்க காவல்துறை மற்றும் தொழிலாளர் அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்றியது. download ஜூல் வெப்பமாக்கல் விதி ஜூல் வெப்பமாக்குதல் ("Joule heating") என்பது ஒரு கடத்தி மூலம் மின்சாரம் பாயும்போது வெப்பம் உண்டாகும் முறையாகும். இது ஓமிக் வெப்பமாக்குதல் மற்றும் மின் தடை வெப்பமாக்குதல் என்றும் அழைக்கப்படுகிறது. முதலில் இதனை ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல் 1841ம் ஆண்டு ஆய்வு செய்தார். ஜூல் ஒரு நீண்ட கம்பியை குறிப்பிட்ட நிறையுள்ள தண்ணீரில் மூழ்கவைத்து, அதன் வழியே குறிப்பிட்ட மின்னோட்டத்தை 30 நிமிடங்கள் செலுத்தி, அதன் வெப்பநிலை உயர்வை கணக்கிட்டார். மின்சாரம் மற்றும் கம்பியின் நீளத்தை மாற்றியபொழுது உருவாக்கப்பட்ட வெப்பத்தின் அளவானது மின்னோட்டத்தின் இரு மடியையும் கம்பியின் மின் தடையையும் பெருக்கி வரும் அளவிற்கு நேர் விகிதத்தில் இருப்பதாக ஊகித்தார். இந்த உறவு ஜூலின் முதல் விதி என அழைக்கப்படுகிறது. ஆற்றலின் SI அலகு ஜூல் என பெயரிடப்பட்டு. J என்ற குறியீடு கொடுக்கப்பட்டது. பொதுவாக அறியப்பட்ட ஆற்றலின் அலகு வாட் ஒரு ஜூல்/வினாடிக்கு சமமாகும். ஜூல் வெப்பமாக்குதல் என்பது மின்சாரத்தை உருவாக்கும் நகரும் துகள்களுக்கும் (பொதுவாக எலெக்ட்ரான்கள்), கடத்திகளில் உள்ள அனு அயனிகளுக்கு இடையே ஏற்படும் இடைவினை என தற்போது அறியப்படுகிறது. ஒரு மின்சுற்றில் உள்ள மின்னுட்டம் செய்யப்பட்ட துகள்கள் மின்புலத்தினால் விரைவு படுத்தப்பட்டு, அதன் இயக்கசக்தியின்ஒரு பகுதியை அயநிகளுடன் மோதும் பொழுது அயநிகளுக்கு கொடுக்கிறது. அயனிகளின் இயக்க அல்லது அதிர்வு சக்தி அதிகம் ஆகும் பொழுது அது வெப்பமாக வெளிப்பட்டு கடத்தியின் வெப்பநிலை உயர்கிறது. ஆகவே ஆற்றலானது மின்சார விநியோகத்திலிருந்து கடத்திக்கும் வெப்ப தொடர்பில் உள்ள மற்ற பொருட்களுக்கும் மாற்றப்படுகிறது. ஜூல் வெப்பமாக்குதல் ஓம் விதியுடன் தொடர்பின் காரணமாக ஓம் வெப்பமாக்குதல் அல்லது தடை வெப்பமாக்குதல் என அழைக்கப்படுகிறது. இதுவே மின்சார வெப்பமாக்குதல் பற்றிய அனேக நடைமுறை பயன்பாடுகளுக்கு அடிப்படை ஆகிறது. எனினும், வெப்பமூட்டம் என்பது வேண்டப்படாத உப பொருளாக இருக்கும் பயன்பாடுகளில் (உ-ம் மின்மாற்றிகளில் சுமை இழப்பு), ஆற்றல் மாற்று தடை நஷ்டம் என அழைக்கப்படுகிறது. மின்சாரம் அனுப்பும் அமைப்புகளில் அதிக மின் அழுதத்தில் குறைந்த மீன்னோட்டம் செலுத்தி இழப்பீடு குறைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு வீட்டில் உபயோகப்படுத்தப்படும் ரிங் சர்கியுட்களில்(ring circuit) மின் திறன்னானது குறைந்த மின் ஓட்டத்தில் வெளி இடங்களுக்கு செலுத்தப்பட்டு கடத்திகளில் ஜூல் வெப்பமக்குதல் குறைக்கப்படுகிறது. மீக்கடத்துத்திறன் உடைய பொருட்களை உபயோகித்து ஜூல் வெப்பமக்குதளை தவிர்க்க முடியும். ஜான்சன்-நைகுயிஸ்ட் சத்தத்திற்கும்(Johnson–Nyquist noise) ஜுல் வேப்பமக்குதலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. இதனை ஃப்ளக்குடுவேஷன்-டிசிப்பேஷன் தேற்றம்(fluctuation-dissipation theorem) விவரிக்கிறது. ஜூல் வெப்பமக்குதளுக்கு மிகவும் பொதுவான மற்றும் அடிப்படையான சூத்திரம்: இதில் P மின்திறன்(ஆற்றல் ஓர் அலகு நேரத்தில்) மின்னாற்றலில் இருந்து வெப்ப ஆற்றலாக மாற்றப்பட்டது, I மின்தடையாக்கி யில் பாயும் மின்னோட்டம், V மின்தடையாக்கிக் குறுக்கே உள்ள மின்னழுத்த குறைவு. இந்த சூத்திரத்தின் விளக்கம் (P = VI): ஓமின் விதியை பயன்படுத்தும் பொழுது, சூத்திரத்தை சமமான வடிவத்தில் எழுதலாம்: R என்பது மின்தடை. மாறுதிசை மின்னோட்ட சுற்றுகளில் மின்னோட்டம் மாறும் பொழுது, t நேரம் மற்றும் P உடனடியாக மின்னாற்றலில் இருந்து வெப்ப ஆற்றலாக மாற்றப்படும் மின்திறன். மிகவும் பொதுவாக, சராசரி உடனடி மின்திறனை காட்டிலும் சராசரி மின்திறன் உபயோகப்படும்: அங்கு "avg" என்பது ஒன்று அல்லது மேற்பட்ட சுற்றுருகளின் சராசரி என்றாகும் "RMS" ரூட் மீன் ச்குயரை(root mean square) குறிக்கும். இந்த சூத்திரங்கள் பூஜ்யம் ரியாக்டன்ஸ் உள்ள மிந்தடைக்குரியது. ரியாக்டன்ஸ் பூஜியமாக இல்லாவிட்டால் மாற்றபட்ட சூத்திரம்: அங்கு \phi மின்னோட்டத்திற்கும் மின்னழுதத்திற்கும், இடையே உள்ள பேஸ் வித்தியாசம் ,\operatorname{Re} உண்மையான பகுதி, Z சிக்கலான மின்மறுப்பு ஆகும், மற்றும் Y * அட்மிட்டன்சின் காம்ப்ளெக்ஸ் கான்ஜூகேட் (1 / Z *). ஆகும். மேல்நிலை மின்கம்பிகளில் ஜூல் வெப்பமாக்குதல் குறைப்பதற்காக உயர் மின்னழுத்தம் மின் பரப்புதலில் உபயோகப்படுகிறது. அறிய மின்னாற்றல்லானது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அன்றி மின் கம்பிகள் தேவையற்ற வகையில் வெப்பப்படுவதற்கு அல்ல. இவ்வகையான ஜூல் சூtaக்கம் ஒரு வகை மின் பரப்புதல் நஷ்டம் என அழைக்கப்படுகின்றது. மின் உற்பத்தி நிலையம் ஒரு குறிப்பிட்ட மின்னாற்றலை "P" மின் கம்பிகள் மூலம் செலுத்த விரும்புகிறது. ("P" என்பது மின் உற்பத்திநிலயம் உட்பட்ட பகுதிகளில் உபயோகப்படுத்தப் படும் மின் ஆற்றல் ஆகும். ஒரே அளவுள்ள மின்னாற்றலை உயர் மின்னழுத்தம், குறைந்த மின்னோட்டத்திலும் அல்லது குறைந்த மின் அழுத்தம் அதிக மின்னோடத்திலும் செலுத்த முடியும். மின்மாற்றிகள் ஒரு முறையிலிருந்து அடுத்த முறைக்கு நிலை மாற்றிகள் மூலம் மாற்றமுடியும். என்பதால் குறைந்த மின்னோட்டத்தில் அதிக மின் அழுத்தத்தை உபயோகித்து மின் பரப்புதலில் ஜூல் வெப்பமக்குதலை குறைப்பது சிறந்த வழியாகும். மின் தொகுப்பில் உயர் மின் அழுத்தம் உபயோகிப்பதை இது விவரிக்கிறது. P=VI என்பது உயர் மின்னழுத்தம் மின் பரப்புதல் நஷ்டத்தை அதிகமாக்குவதாக தவறாக உணர்த்துகிறது. எனினும் சரியான V உபயோகிக்கனும். V என்பது மின் கம்பியின் இரு முனைகளுக்கு இடையே உள்ள மின்னழுத்த குறைபாடு ஆகும். தெர்மிஸ்டர்கள்(thermistor) மற்றும் மின்தடையாக்கி வெப்பமானிகள் வெப்பநிலைக்கு ஏற்றவாறு மின் தடை மாறும். இவைகள் சில சமையங்களில் ஜூல் வெப்பமாக்குதளுடன் சேர்ந்து உபயோகப்பட்துதப்படுகின்றன. மின்தடையாக்கி வழியாக அதிக மின்னோட்டம் பாயும் பொழுது அதன் வெப்பநிலை அதிகரித்து அதன் மின் தடை மாறுகிறது.ஆகவே இப்பகுதிகளை ,மின்சுட்ட்ருகளை காப்பதற்காக உருகிகள் போன்றும் மின்சுட்ட்ருகளில் பின்நூட்டாகவும் உபயோகிக்களாம். பொதுவாக, சுய வெப்பமூட்டும் ஒரு மின்தடையாக்கி யை நேரியலற்ற மற்றும் ஹைச்டேறேடிக் (hysteretic) சுற்று உறுப்பாக மாற்றலாம். வெப்பத் தொழில்நுட்பப்படி, ஜூல் வெப்பமாக்குதல் செயல் திறன் குணகம் 1. அதாவது ஒரு வாட் மின் திறன் ஒரு வாட் வெப்பமாக மாற்றப்படுகிறது. வெப்ப எக்கியின் குணகம் ஒன்றுக்கு மேற்பட்டு இருக்கலாம். ஏனென்றால் இது வெப்ப ஆற்றலை சுற்றுப்புறத்தில் இருந்தும் எடுத்துக்கொள்கிறது. 2012 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா இந்தியா ஜூலை 27 முதல் 12 ஆகஸ்ட் 2012 வரை, லண்டன், ஐக்கிய ராஜ்யத்தில் நடந்த 2012 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றது. இந்திய ஒலிம்பிக் சங்கம், ஒலிம்பிக் விளையாட்டு வரலாற்றில் நாட்டின் மிக பெரிய குழுவை அனுப்பியது. 83 விளையாட்டு வீரர்கள், 60 ஆண்கள் மற்றும் 23 பெண்கள்,13 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர். குழு அடிப்படையிலான விளையாட்டுகளில், ஆண்கள் ஹாக்கியில் மட்டுமே, இந்தியாவின் பிரதிநித்துவம் இருந்தது. சர்வதேச பளுதூக்குதல் கூட்டமைப்பு ஊக்கமருந்து விவகாரத்தில், வீரர்களுக்கு விதித்த இரண்டு வருட இடைநீக்கத்திற்கு பிறகு இந்தியா ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் பங்கேற்றது. பெய்ஜிங் ஒலிம்பிக்கில், தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா உட்பட பதக்கம் வென்ற பல வீரர்கள், இந்திய அணியில் இடம்பெற்றனர். மல்யுத்த வீரர் மற்றும் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சுஷில் குமார், ஆண்கள் ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்தத்தில் வெள்ளி வென்று மற்றொரு பதக்கம் பெற்றார். இந்திய ஒலிம்பிக் சங்கம் அவருக்கு தொடக்க விழாவில், நாட்டின் கொடியை தாங்கி செல்லும் பெருமைமையை வழங்கியது. இந்த 6 பதக்கங்கள் (2 வெள்ளி, 4 வெண்கலம்) வெற்றி,பதக்க தரவரிசை அடிப்படையில் இந்தியாவின் மிக வெற்றிகரமான ஒலிம்பிக்காக இருந்தது. துப்பாக்கி சுடுதல் மற்றும் மல்யுத்தத்தில் இந்தியா, தலா இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்றது. பெண் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு வரலாற்று மைல்கல்லாக இந்த ஒலிம்பிக் போட்டி அமைந்தது. இறகுப்பந்தாட்டம் விளையாட்டு வீரர் மற்றும் உலக ஜூனியர் சாம்பியன் சாய்னா நேவால் மகளிர் ஒற்றையர் பிரிவில், ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் ஆனார். குத்துச்சண்டையில் மேரி கோம், அரை இறுதி போட்டியில் கிரேட் பிரிட்டனின் நிக்கோல் ஆடம்ஸிடம் தோற்றார், ஆனால் வெண்கலப் பதக்கம் வென்றார். விளையாட்டின்படி லண்டன் ஒலிம்பிக்கில் ஆறு இந்திய வில்லாளர்கள்- 3 ஆண்கள்,3 பெண்கள் தகுதி பெற்றனர். தடகள விளையாட்டுகளில் பதினான்கு இந்திய வீரர்கள் தகுதி பெற்றனர். தடகளப் போட்டிகள் களப் போட்டிகள் தடகளப் போட்டிகள் களப் போட்டிகள் 5 இந்திய இறகுப்பந்தாட்ட வீரர்கள் லண்டன் ஒலிம்பிக்கில் தகுதி பெற்றனர். [5] எட்டு இந்திய குத்துச்சண்டை வீரர்கள் லண்டன் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றனர். இந்திய தேசிய வளைதடிபந்தாட்ட அணி, பிப்ரவரி 26 2012 அன்று, 8-1 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில், பிரான்ஸ் எதிரான தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெற்று, 2012 கோடைகால ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றது. இந்திய அணி பி குழுவில் வைக்கப்பட்டது. வேலை முறை கொண்ட பெயர்ப் பட்டியல்: தலைமை பயிற்சியாளர்: மைக்கேல் நோப்சு கையிருப்பு: குழு விளையாட்டு: ஒலிம்பிக்கில் இந்தியாவின் மிக மோசமான செயல்பாடாக இது இருந்தது இலண்டன் ஒலிம்பிக்கில் ஒரே ஒரு இந்தியர் யுடோ விளையாட்டில் கலந்து கொண்டார் லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்க பதினொரு (ஏழு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள்) இந்தியர்கள் தகுதி பெற்றனர். இந்தியாவின் ககன் நரங்க மற்றும் விஜய் குமார் முறையே வெண்கல மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்ற இந்த ஆண்டு மிக வெற்றிகரமானதாக இருந்தது. இந்திய மேசைப்பந்தாட்டத்தில் 2 கோட்டாக்கள் பெற்றது. இந்தியா வரிப்பந்தாட்டத்தில் 7 கோட்டாக்கள் பெற்றது. இந்திய பளு தூக்குதலில் 2 கோட்டாக்கள் வென்றது. இந்தியா பின்வரும் நிகழ்வுகளில் 5 கோட்டாக்கள் வென்றது. இந்திய அணி இந்திய அரசாங்கத்தின் மூலம் 48.1 மில்லியன் அமெரிக்க மற்றும் தனியார் விளம்பரதாரர்கள் மூலம் கூடுதல் 11 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஆதரவு பெற்றது. விளையாட்டின்படி நிதி பகிர்வு அமெரிக்க டாலர்களில்: சாதாரண உடையில் ஒரு பெண், நாடுகளின் அணிவகுப்பின் போது, இந்திய ஒலிம்பிக் அணியின் தலைமையில் காணப்பட்டார். இது இந்தியா முழுவதும் ஊடக கவனத்தை ஈர்த்தது மற்றும் ஒலிம்பிக் போட்டிகளின் பாதுகாப்பு பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்பெண் பின்னர் மதுரா நாகேந்திரா, லண்டனில் வாழும் ஒரு பெங்களூர் பட்டதாரி மாணவர்,திறப்பு விழாவில் நடனக்குழுவில் உள்ளவர் என அடையாளம் காணப்பட்டார். [24] ஒலிம்பிக் லண்டன் அமைப்பு குழு இச்சம்பவம் தொடர்பாக இந்தியக்குழுவிடம் மன்னிப்பு கேட்டது மற்றும் நாகேந்திரா இந்தியா திரும்பிய பின் தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கேட்டார். குத்துச்சண்டை வீரர் சுமித் சங்வான் லைட் ஹெவிவெயிட் பிரிவில், 32 பேர் சுற்றில் பிரேசிலின் யமகுசி ஃபால்கோ ஃப்ளோரண்டைன் எதிரான போட்டியில், 14-15 என இழந்தார். ஈ.எஸ்.பி.என் வர்ணனையாளர் இதை "பகல் கொள்ளை" என விவரித்தார் . அவர் வெற்றி பெற்றார் என்ற நம்பிக்கையில் நீதிபதிகளின் முடிவை எதிர்த்து விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மகான் வற்புறுத்தலினால் முறையீடு தாக்கல் செய்யப்பட்டு,அது நிராகரிக்கப்பட்டது. குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிருஷ்ணனின் வெற்றி, எதிர்ப்பாளர் எர்ரால் ஸ்பென்ஸின் முறையீட்டால் பின்னர் மாற்றப்பட்டது. விகாஸுக்கு நான்கு தண்டனை புள்ளிகள் வழங்கப்பட்டது மற்றும் ஸ்பென்ஸிற்கு ஆதரவாக 11-13இல் இருந்து 15-13 என புள்ளிகள் மாற்றப்பட்டது. மூன்றாவது சுற்றில் இந்திய வீரர் செய்த ஒன்பது முறைகேடுகளை சுட்டி காட்டி புள்ளிகள் மாற்றப்பட்டன.நடுவர் முடிவே இறுதி என்பதால்,இந்தியர்கள் முறையீடு செய்ய அனுமதிக்கப்படவில்லை. குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமார் சர்ச்சைக்குரிய முறையில், கிரேட் பிரிட்டனின் டாம் ஸ்டாக்கர் எதிராக தனது காலிறுதிக்கு முந்தைய போட்டியை இழந்தார்.சந்தேகத்திற்குரிய தீர்ப்புகள் பல அவருக்கு எதிராக வழங்கப்பட்டன.அவர் குத்துச்சண்டை அரங்கை விட்டு செல்லும் முன் வெளிப்படையாக "மோசடி" என கத்தினார். ஜுவாலா குட்டாவும் அசுவினி பொன்னப்பாவும் இறகுப்பந்தாட்டத்தில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் காலிறுதிக்கு முன்னேற தவறினர்.ஜப்பானின் மிசுகி ஃபுஜி மற்றும் ரெய்கா ககீவா ஜோடி, சீன தைபேயின் செங் வென் ஹ்ஸிங், செயின் யு சின் ஜோடியிடம் தோற்றது. காலிறுதியில் வலுகுறைந்த அணியுடன் விளையாட, ஜப்பான் வேண்டுமென்றே இந்த போட்டியில் தோற்றதாக இந்திய இறகுப்பந்தாட்ட சங்கம் முறையீடு செய்து அது தள்ளுபடி செய்யப்பட்டது. த. கோ. சாந்திநாதன் த. கோ. சாந்திநாதன் என்பவர் ஒரு மருத்துவரும் தமிழக எழுத்தாளரும் ஆவார். திண்டுக்கல் மாவட்டம், கலையம்புத்தூர் எனும் ஊரில் பிறந்த இவர் அரசு மருத்துவராகப் பல்வேறு மருத்துவமனைகளிலும், ஜிசாஸ், சவூதி அரேபியா ஆகிய நாடுகளிலுள்ள பொது மருத்துவமனைகளிலும் பணியாற்றி இருக்கிறார். பல அறிவியல் மாநாடுகளில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ள இவர், மருத்துவம் தொடர்பான 6 நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய "“கண் மருத்துவ நோய்களும் நவீன மருத்துவமும்”" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மருந்தியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கின்றது. குரு. சண்முகநாதன் குரு. சண்முகநாதன் (பிறப்பு: டிசம்பர் 14, 1944)என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருநெல்வேலி மாவட்டம், குருவிகுளம் எனும் ஊரில் பிறந்த இவர் தமிழ்நாடு அரசின் சிறைத்துறையில் நன்னடத்தை அலுவலராகப் பணியாற்றி பணி நிறைவு பெற்றவர். இவர் 10 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய "“நல்லெண்ணெய்யின் மருத்துவ ரகசியங்கள்”" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தமிழ் மருத்துவ நூல்கள் வகைப்பாட்டிலும், இவர் எழுதிய "“நாட்டுப்புறப் பாடல்களும் நல்லெண்ணெயும்”" எனும் நூல் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாட்டுப்புறவியல் வகைப்பாட்டிலும் பரிசு பெற்றிருக்கின்றன. கி. முப்பால்மணி கி. முப்பால்மணி என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். அரசுக் கலைக்கல்லூரிகளில் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் இரு நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய "“தமிழகத் தத்துவச் சிந்தனை மரபுகள்”" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமயம் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. ஜவஹர் சு. சுந்தரம் ஜவஹர் சு. சுந்தரம் (பிறப்பு: சூன் 15, 1934) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். 45 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் 1989 ஆம் ஆண்டு சூலை 31 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சிறந்த முதல்வர் என்ற பட்டமும், தேசிய அளவிலான நல்லாசிரியர் விருதும் பெற்றுள்ளார். இவர் ஈரக்காற்று, தீக்குள் விரலை வைத்தால் போன்ற நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய "“கற்றலும் கற்பித்தலும்”" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கல்வியியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. ம. சுவாமியப்பன் ம. சுவாமியப்பன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பூச்சியியல் துறையில் ஆசிரியராகவும், பதிவாளராகவும் 36 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். 83 ஆய்வுக் கட்டுரைகளும், 25 பொதுக்கட்டுரைகளும், ஒரு நூலும் எழுதியிருக்கிறார். இவர் முனைவர் மா. கல்யாணசுந்தரத்துடன் இணைந்து எழுதிய "“வளம் குன்றா வேளாண்மைக்கு உயிரியல் பூச்சிக் கட்டுப்பாடு”" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வேளாண்மையியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. மா. கல்யாணசுந்தரம் மா. கல்யாணசுந்தரம் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 22 ஆண்டுகளாகப் பூச்சியியல் துறையில் பணியாற்றி வருகிறார். பூச்சியியல் துறையில் 5 நூல்களும், 9 கையேடுகளும், 43 ஆராய்ச்சிக் கட்டுரைகளும், 35 பொதுக்கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். 4 பன்னாட்டுக் கருத்தரங்குகளிலும், 9 தேசிய அளவிலான கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் முனைவர் ம. சுவாமியப்பனுடன் இணைந்து எழுதிய "“வளம் குன்றா வேளாண்மைக்கு உயிரியல் பூச்சிக் கட்டுப்பாடு”" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வேளாண்மையியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. ம. செ. இரபிசிங் ம. செ. இரபிசிங் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் இயக்குநர் (பொறுப்பு) மூதறிவுரையாளராகவும், பனாரசு பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 15 நூல்களை எழுதியுள்ளார். இவருடைய மேற்பார்வையில் 15 பேர் முனைவர் பட்டமும், 23 பேர் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளனர். இவர் தமிழ், சமசுகிருதம், ஆங்கிலம், ஜெர்மனி, மற்றும் மலையாளம் மொழியில் புலமை பெற்றவர். இவர் எழுதிய "“தமிழ் இணையம்/தமிழ் வலைத்தளங்கள்: பங்களிப்பும் பயன்பாடுகளும்”" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமயம் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. வே. பிரபாகரன் (புலவர்) புலவர் வே. பிரபாகரன் (பிறப்பு: சூலை 3, 1949) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். விழுப்புரம் மாவட்டம், மறக்குளம் எனும் சிற்றூரில் பிறந்தவர். கதை, கவிதை என 25 நூல்களை எழுதியுள்ளார். 2007 ஆம் ஆண்டில் நல்லாசிரியர் விருது பெற்ற இவர் ஆட்சிமொழிப் பொன்விழாக் கவிதைப் போட்டியில் பரிசு பெற்றிருக்கிறார். இவர் எழுதிய "“ஒரு பைசாத் தமிழன் அயோத்தி தாச பண்டிதர்”" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் இதழியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. மகாலிங்க மலை மகாலிங்க மலை என்பது திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டம், ஆய்க்குடி ஊராட்சி கம்பிளி கிராமத்தில் உள்ள சிவன் கோயிலொன்றைக் கொண்ட மலையாகும். இங்கு உள்ள சிவலிங்கம் தவிர்த்து பெருங்கற்களும் லிங்கம் போல் உள்ளதால் இது மகாலிங்க மலை என்று பெயர் பெற்றதாகக் கூறுவர். இதை அருணாச்சல சித்தர் என்பவரின் வழி வந்தவர்கள் தற்போது நடத்தி வருகிறார்கள். இங்கு மாலை ஆறு மணிக்கு மேல் பக்தர்கள் செல்வதற்கு வனத்துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற மலைச்சிவன் கோயில்களில் உள்ளது போன்றே இம்மலை லிங்கத்தையும் சித்தர்கள் வழிபடுவதாக நம்பிக்கை உண்டு. இங்கு காணப்ப்டும் ஆட்டுரல்களைச் சித்தர்கள் முற்காலத்தில் மூலிகை தயாரிப்புக்குப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். சித்திரா பௌர்ணமி அன்று இங்கு சிறப்புப்பூஜை நடைபெற்று வருகிறது. தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1975 தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1975 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 2,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் '1975 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள்' மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது. வால்-இ (திரைப்படம்) வால்-இ(WALL-E) 2008இல் வெளியான அமெரிக்க அசைவூட்டத் திரைப்படமாகும். ஜிம் மர்ரிஸ் ஆல் தயாரிக்கப்பட்டு ஆன்ட்ரூ ஸ்டான்டன் ஆல் இயக்கப்பட்டது. பென் பர்ட், எலிஸ்சா நைட், ஜெப் கார்லின், பிரெட் வில்லார்டு, ஜான் ராட்சென்பர்கர், கேத்ய் நஜிமி, சிகர்னி வீவர், மேக்யின்டாக் ஆகியோர் குரல் கொடுத்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆறு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருதை வென்றது. திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாம்புரம் எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவாலயம் ஆகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 59ஆவது சிவத்தலமாகும். இதன் மூலவர் சேஷபுரீஸ்வரர். தாயார் பிரமராம்பிகை. ஆனை தொழுத தலம் திருஆனைக்கா எனவும், எறும்பு தொழுத தலம் திறு எறும்பூர் எனவும் வழங்கப்படுவதுபோல, பாம்பு தொழுத இத்தலம் திருப்பாம்புரம், “பாம்புரம்” எனப் பெயர் கொண்டது. திருஞானசம்பந்தர் தன் தேவாரப் பாடல்களில் இத்தலத்தைப் “பாம்புர நன்னகர்” என்று குறிப்பிடுகிறார். திருநாவுக்கரசர் தம் திருத்தாண்டகத்திலும், சுந்தரர் தம் தேவாரத்திலும் இத்தலத்தைப் புகழ்ந்து பாடியுள்ளனர். அருணகிரிநாதரும் திருப்புகழில் இத்தலத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இத்தலத்தில் ஆதிசேடன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. நாகதோஷம் நீங்கவும், மகப்பேறு வாய்க்கவும், ராகு, கேது போன்ற சந்தர்ப்ப தோஷங்கள் விலகவும் சிறந்த தலம் என வழிபடுவோரால் நம்பப்படுகிறது. நுழைவாயிலை அடுத்து விநாயகர், நந்தி, பலிபீடம் ஆகியவை உள்ளன. அடுத்து ராஜகோபுரம் உள்ளது. மூலவராக லிங்கத்திருமேனியாக சேசபுரீஸ்வரர் உள்ளார். மூலவருக்கு முன்பாக வலது புறம் விநாயகர், இடது புறம் சுப்பிரமணியர் உள்ளனர். மூலவர் சன்னதியை அடுத்து தனியாக வண்டார்குழலி சன்னதி உள்ளது. மூலவர் சன்னதிக்கு மேல் சட்டநாதர் உள்ளார். மூலவர் சன்னதியிலிருந்து வெளியே வந்தபின் மூலவர் சன்னதிக்கு வலப்புறம் மலையீஸ்வரர் சன்னதி சற்று உயர்ந்த தளத்தில் உள்ளது. திருச்சுற்றில் ராஜ விநாயகர் சன்னதி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் சன்னதி, வன்னீஸ்வரர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. திருச்சுற்றில் பைரவர், சூரியன், மகாவிஷ்ணு, பிரம்மா, மாணிக்கவாசகர், சுந்தரர், நாவுக்கரசர், ஞானசம்பந்தர், மகாலிங்கம், சனி பகவான், பாணலிங்கம் ஆகியோர் உள்ளனர். மூலவர் கருவறை கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கை, தட்சிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர். கோயிலுக்கு முன்பாக எதிரில் கோயில் குளம் உள்ளது. நாகராஜனான வாசுகியும், இன்னும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் வழிபட்டு பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுகின்றன. அனந்தன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன்,சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய எட்டு மகா நாகங்கள் மற்றும் நாகராஜரான ஆதிசேடன். எங்க வீட்டுப் பெண் எங்க வீட்டுப் பெண் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாணக்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், விஜய நிர்மலா மற்றும் பலரும் நடித்திருந்தனர். தி கிரேட் மைண்ட் சேலஞ்சு, ஐ.பி.எம் தி கிரேட் மைண்ட் சேலஞ்சு (The Great Mind Challenge) ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் நடைபெறும் மென்பொருள் தொழினுட்பப் போட்டி ஆகும். பொறியியல் மாணவர்களுக்கான இப்போட்டி தற்போது இந்தியாவில் மட்டுமே நடைபெறுகிறது. இப்போட்டி 2003 ஆம் ஆண்டு தொடங்கி 2012 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து நடைபெற்றுள்ளது. இந்தியாவிலேயே அதிக மாணவர்கள் கலந்து கொண்ட போட்டி என்பதால், 2010 ஆம் ஆண்டில் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. பன்னாட்டுத் கணித் தொழினுட்ப வளர்ச்சியிலும், தகவற் தொழினுட்பத்திலும் முன்னிலை வகிக்கும் ஐ.பி.எம் நிறுவனம் நடத்துகிறது. மாணவர்களைத் தொழினுட்ப வளர்ச்சியில் முன்னேற்றவும், கல்வி நிறுவனங்களுக்கு இற்றைப்படுத்தப்பட்ட மென்மங்களை வழங்கவும் இப்போட்டியை 2003 ஆம் ஆண்டு தொடங்கியது. இவ்வமைப்பு இணைய வலைவாசலின் வழியாக மென்பொருள்களின் தரவிறக்கம், பயிற்சி தொடர்பான ஆக்கங்கள் ஆகியவற்றை இலவசமாக வழங்குகிறது. ஐ.பி.எம் நிறுவனம் கல்லூரிப் பாடத்திட்டங்களுக்கு ஏற்ப வளங்களை வழங்கி, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துகிறது. பல்லாயிரக்கணக்கான ,மாணவர்களின் தகவற் தொழினுட்ப மாணவர்களுக்கு தகவற் தொழினுட்பத்தை சிறந்த முறையில் கற்பிக்கவே தி கிரேட் மைண்ட் சேலஞ்சு என்னும் இத்திட்டம் துவங்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் இப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் குழுக்களாய் இணைந்து பங்கேற்க வேண்டும். மெய்ச் சூழல் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் மாணவர்களை நோக்கியே இத்திட்டம் உருவாக்கப்படுகிறது. இப்போட்டியில் பங்கேற்பவர்கள் கட்டாயம் ஐ.பி.எம் தயாரித்த மென்பொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாய விதி. ஒவ்வொரு குழுவிலும் அதிக பட்சமாக நான்கு மாணவர்கள் கலந்து கொள்ளலாம். இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் இப்போட்டிக்கான வலைதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இரு பிரிவுகளாக நடத்தப்படும் இப்போட்டியில் முதற்பிரிவு, அரையிறுதிப் போட்டிக்கானது. வெவ்வேறு ஆண்டுகளில் பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். இதன் முதற்பக்கத்தில் தரமான மென்பொருளுக்கான மென்பொருள் தேவைப்பாடுகளின் குறிப்பை சமர்ப்பிக்க வேண்டும். மற்றோர் பகுதியில், தொழினுட்பம், எக்சு.எம்.எல் பயன்பாடு, உருவாக்கப் பயன்படுத்தும் கருவிகள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும். உள்ளூர் மொழிகளுக்கான ஆதரவு, வெவ்வேறு கணினிகளில் பயன்படுத்தும் வசதி ஆகியவையும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுகின்றன. சிறப்பான 300 திட்டங்களைச் சமர்ப்பித்தவர்கள் நேருக்கு நேர் சந்திப்பிற்கு அழைக்கப்படுவர். இந்நிகழ்விற்கு குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும். வல்லுனர்கள் நிரல்வரிகளின் தன்மையை சோதிப்பார்கள். சிறந்த மூன்று திட்டங்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவை ஐ. பி. எம் நிறுவனத்தின் பிரபலத் திட்டங்களின் அறையில் சேமிக்கப்படுகின்றன. சிறந்த 20 திட்டக் குழுக்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இப்போட்டி முடியும்வரையிலான அனைத்து விதமான உதவிகளும் இணைய வழியில் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் இணையவழிக் கல்வித் திட்டங்களில் இதுவே பெரியதும் ஆகும். உலக சோசலிச வலைதளம் உலக சோசலிச வலைதளம் (World Socialist Web Site) (சுருக்கம்:WSWS), நான்காம் அகிலத்துக்கான அனைத்துலகக் குழுவின் இணைய செய்தி மற்றும் தகவல் தளம் ஆகும். உலகளவிலான முக்கியத் தலைப்புகள் தொடர்பான செய்திகளை இத்தளம் வெளியிடுகிறது. தினசரி செய்திகளில் அரசியல், வரலாறு, அறிவியல் தொடர்பான செய்திகள் வெளியாகின்றன. கலை, இலக்கியம், இசை தொடர்பான கட்டுரைகளும், கருத்துகளும் பதியப்படுகின்றன. உழைப்பாளர் உரிமை, சமூக ஏற்றத்தாழ்வு நிலை குறித்த செய்திகள் வழங்குவதால், ஐக்கிய அமெரிக்காவில் நன்கறியப்படும் தளம் இது. அரபி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, இடாய்ச்சு, இந்தோனேசியம், இத்தாலியம், பாரசீகம், போலியம், போர்த்துகேயம், ரோமானியம், உருசியம், செர்போ-குரோட்டியம், சிங்களம், எசுப்பானியம், தமிழ், துருக்கியம் அகிய மொழிகளில் செய்திகளை வெளியிடுகிறது. நான்காம் அகிலத்துக்கான அனைத்துலக குழு (தமிழ்ப் பதிப்பு) இமாச்சலப் பிரதேச சட்டசபைத் தேர்தல் முடிவுகள், 2012 Read more at:http://tamil.oneindia.in/news/2012/12/20/india-congress-wins-himachal-pradesh-elections-166617.html ஆத்திரையன் பேராசிரியன் ஆத்திரையன் பேராசிரியன் என்பவர் தொல்காப்பியத்துக்குப் பொதுப்பாயிரம் ஒன்று பாடியுள்ளார். பனம்பாரனார் பாடிய சிறப்புப்பாயிரம் தொல்காப்பியரின் உடன்சாலை மாணாக்கரால் அவரது காலத்திலளயே பாடப்பட்டது. ஆத்திரையன் பேராசிரியன் பாடிய பொதுப்பாயிரம் 10 ஆம் நூற்றாண்டில் பாடப்பட்டது. இவர் இதனைப் பாடினார் என்பதையும், பாடியது பொதுப்பாயிரப் பாடல் என்பதையும் தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். பேராசிரியர், ‘ஆத்திரேயன் பேராசிரியன்’ என வேறொருவரைக் குறிப்பிடுவதால் இருவரும் வேறு வேறு புலவர்கள் என்பது தெளிவு. நுண்பொருள்மாலை என்னும் நூல் ‘அத்திரி கோத்திரத்தினர் ஆத்திரேயர்’ என்று இவரைக் குறிப்பிடுகிறது. சிவஞான சுவாமிகள் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் சங்கர நவச்சிவாயர் உரையைத் திருத்தும்போது சிறப்புப் பாயிரத்தை அடுத்து ஆத்திரேயன் பொதுப்பாயிரம் என்று சுட்டி 33 அடிகள் கொண்ட, பொதுப்பாயிரம் பற்றியதான இந்தப் பாயிரப் பாடலைத் தந்துள்ளார். வலம்புரி முத்தின் குலம்புரி பிறப்பும் வான் யாறு அன்ன தூய்மையும், வான் யாறு நிலம் படர்ந்து அன்ன நலம் படர் ஒழுக்கமும் திங்கள் அன்ன கல்வியும், திங்களொடு ஞாயிறு அன்ன வாய்மையும், யாவதும் (5) அஃகா அன்பும், வெஃகா உள்ளமும் துலை நா அன்ன சமனிலை உளப்பட எண்வகை உறுப்பினது ஆகித் திண்ணிதின் வேளாண் வாழ்க்கையும் தாஅள் ஆண்மையும் உலகியல் அறிதலும், நிலைஇய தோற்றமும் (10) பொறையும் நிறையும் பொச்சாப்பு இன்மையும் அறிவும் உருவும் ஆற்றலும் புகழும் சொற்பொருள் உணர்த்தும் சொல்வன்மையும் கற்போர் செஞ்சம் காமுறப்படுதலும் இன்னோர் அன்ன தொன்னெறி மரபினர் (15) பன்னருஞ் சிறப்பின் நல்லாசிரியர் அறனே பொருட்பயன் இன்பு எனும் மூன்றின் திறன் அறி பனுவல் செப்புங்காலை முன்னர்க் கூறிய எண்வகை உறுப்பினுள் ஏற்பன உடையர் ஆகிப் பாற்பட (20) சொல்லிய பொருண்மை சொல்லியாங்கு உணர்தலும் சொல்லிய பொருளொடு சூழ்ந்து நன்கு உணர்தலும் தன்னோர் அன்னோர்க்குத் தான் பயன்படுதலும் செய்ந்நன்றி அறிதலும் தீச் சார்வு இன்மையும் மடி தமுகாற்றம் மானம் பொச்சாப்புக் (25) கடுநோய் சீற்றம் களவே காமம் என்று இவை இனமையும் சென்று வழிபடுதலும் அறத்துறை வழாமையும் குறிப்பு அறிந்து ஒழுகலும் கேட்டவை நினைத்தலும் பாடம் போற்றலும் மீட்டு அவை வினலும் விடுத்தலும் உரைத்தலும் (30) உடையர் ஆகி நடை அறிந்து இயலுநர் நன் மாணாக்கர் என்ப; மண்மிசை தொன்னூற் பரவைத் துணிபு உணர்ந்தோரே. பேராசிரியர் பேராசிரியர் என்னும் பெயரில் பழமையான நூலாசிரியர்கள் ஐவர் இருந்தனர். லைஃப் ஆஃப் பை லைஃப் ஆப் பை என்ற ஆங்கில நாவல் யான் மார்டல் என்பவரால் எழுதப்பட்டு 2001 ஆம் ஆண்டு வெளியானது. பை படேல் என்ற இந்திய, பாண்டிச்சேரி சிறுவனை கதை நாயகனாக கொண்ட இந்த நாவல் ஆன்மீகம் மற்றும் நடைமுறையியல் சார்ந்த கருத்துக்களை அலசுகிறது. பெரும்பாலான பிரித்தானியப் பதிப்பகங்களால் நிராகரிக்கப்பட்டு பின்னர் நாஃப் கனடா பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்நாவல் 2002 ஆம் ஆண்டிற்கான மான் புக்கர் பரிசு பரிசினை 2003 ஆம் ஆண்டு பெற்றது. மேலும் இந்நாவல் புனைவு சார்ந்த பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளது. இந்த நாவல் 2012 ஆம் ஆண்டில் திரைப்பட உருவம் பெற்றது. பேராசிரியர் (யாப்பருங்கல விருத்தி) யாப்பருங்கலம் என்னும் யாப்பிலக்கணம் பற்றிய நூலுக்கு விருத்தியுரை ஒன்று உண்டு. அதனை யாப்பருங்க விருத்தி என்றே குறிப்பிடுவர். அந்த நூலில் சில மேற்கோள்கள் பேராசிரியர் என்னும் ஒருவர் பெயரைச் சுட்டுகின்றன. என்று இவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமலைநாதர் திருமலைநாதர், 16ஆம் நூற்றாண்டில் வடமொழியிலுள்ள "மகாசிவபுராணம்" என்னும் நூலைத் தமிழில் சிவ மகா புராணம் என்னும் நூலாக்கிப் "புராணத் திருமலைநாதர்" எனப் பாராட்டப்பட்டவர். வடமொழியிலிருந்த புராணத்தை இவர் முழுமையாக மொழிபெயர்க்கவில்லை. அதில் காணப்பட்ட சரப புராணம், ததீசி புராணம், வினாவிடைப் புராணம், சிதம்பர புராணம் என்னும் நான்கு பகுதிகள் மட்டுமே இவரால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. அப்பளம் (திரைப்படம்) அப்பளம் என்பது 2011 இல் வெளிவந்த ஒரு மலேசியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத் திரைப்படத்தை அப்டலின் செளகி (Afdlin Shauki) இயக்கினார். இது "பப்படம்" என்று மலாய் மொழியில் வெளிவந்த திரைப்படத்தின் மீளுருவாக்கம் ஆகும். மலேசியாவில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் அப்பளம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிரூபன் மனோகரன் டொக்டர். பேர்ன் ("Dr. Burn") என்று அறியப்படும் அதிரூபன் மனோகரன் ஒரு மலேசியத் தமிழ் சொல்லிசைக் கலைஞர் ஆவார். இவர் 1997 இல் இருந்து இசைத்துறையில் இருக்கிறார். இவர் பரந்த வரவேற்றைப் பெற்ற பாடல்களைப் பாடி இருப்பதோடு, இசைத்தட்டுக்களையும் வெளியிட்டுள்ளார். சுக்கிரவாரப்பட்டி சுக்கிரவாரப்பட்டி (ஆங்கிலம்:Sukkiravarapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி ஊராட்சி ஒன்றியதுக்குட்பட்ட ஊராட்சி ஆகும் . இவ்வூரின் அமைவிடம் 9.30° N 77.47° E ஆகும்.கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 101 மீட்டர் (331 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,081 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50.36% ஆண்கள், 49.64% பெண்கள் ஆவார்கள். சுக்கிரவாரப்பட்டி பட்டாசு தொழிலுக்கு புகழ்பெற்ற ஊராகும்.இங்கு தீப்பெட்டி தொழிற்சாலைகளும் பட்டாசு தொழிற்சாலைகளும், கடதாசித் தொழிற்சாலைகளும் சிறியதும் பெரியதுமாக நிறைய இருக்கின்றன. சுக்கிரவாரப்பட்டி விவசாயமும் கொண்ட ஊராகும். இந்த ஊரில் வசிக்கும் மக்கள் தங்களின் தொழில் திறனை வைத்து திடமான நிலையினை எப்போதும் தக்க வைத்துகொண்டுள்ளனர். இந்தியாவின் தீப்பெட்டி உற்பத்தியிலும், பட்டாசு உற்பத்தியிலும் பெரும் பங்கு சுக்கிரவாரப்பட்டி கிராமப்புறங்களில் தான் தயாராகின்றன. மேலும் கடதாசித் தொழிற்சாலைகளும் இருக்கின்ற காரணத்தினால், இந்த ஊர் மக்களுக்கு முழுமையான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. திருத்தங்கல், சிவகாசி மேலும் திருவில்லிபுத்தூர் போன்ற நகரபகுதிகளை இணைக்கும் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் சுக்கிரவாரப்பட்டி வழியாக இயக்கப்படுகின்றன. சிவ மகா புராணம் சிவ மகா புராணம் என்னும் நூல் 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த திருமலைநாதர் என்பவரால் இயற்றப்பட்ட தமிழ்நூல். இந்த நூலால் இவர் ‘புராணத் திருமலைநாதர்’ என்று சிறப்பு அடைமொழியுடன் வழங்கப்படுகிறார். இந்த நூல் வடமொழியிலுள்ள சிவ புராணத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல். இந்த வடமொழி நூல் முழுவதுமாக மொழிபெயர்க்கப்படவில்லை. சரப புராணம். ததீசி புராணம், வினாவிடைப் புராணம், சிதம்பர புராணம் என்னும் நான்கு பகுதிகள் மட்டுமே திருமலைநாதரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1976 தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1976 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 2,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1976 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது. தகர்க்கா தகர்க்கா எகிப்தின் 25வது வம்சத்தைச் சேர்ந்த ஒரு பாரோவும் வடக்கு சூடானில் இருந்த குஷ் இராச்சியத்தின் அரசனும் ஆவார். தகர்க்கா, நாப்பட்டாவின் நூபிய அரசரும், முதன்முதலாக எகிப்தைக் கைப்பற்றியவருமான பியே என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இவர், இவருக்குப் பின்னர் ஆட்சியில் அமர்ந்த செபித்குவின் ஒன்றுவிட்ட சகோதரர். தகர்க்காவினதும், செபித்குவினதும் வெற்றிகரமான படையெடுப்புக்கள் தகர்க்காவின் வளம் மிக்க ஆட்சிக்கு வழி சமைத்தன. தகர்க்காவின் ஆட்சிக் காலத்தை கிமு 690க்கும் கிமு664க்கும் இடைப்பட்டதாகக் கொள்ள முடியும். இவரது ஆட்சிக் காலத்துக்கான சான்று சேராப்பேயும் கம்பத்தில் இருந்து பெறப்படுகின்றது. தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1977 தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1977 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 2, 000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1977 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது. ராஜா வீட்டுப் பிள்ளை ராஜா வீட்டுப் பிள்ளை இயக்குனர் தாதா மிராசி இயக்கி 1967 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். இதில் ஜெய்சங்கர், ஜெயலலிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எஸ். எம். சுப்பையா நாயுடு. குடும்பத் திரைப்படம் சந்தர்ப்பவசத்தால் தான் பெற்ற மகனைப் பிரிகிறார் ஒரு பணக்காரர். அவர் தொலைத்த பிள்ளை ஏழைத் தாயின் அரவணைப்பில் வளர்கிறான். அந்தப் பணக்காரரின் தங்கை மகள் தனது முறை மாமன் என்று தெரியாமல் அந்த ஏழைத் தாயின் மகனைக் காதலிக்கிறாள். உண்மையை வெளியிட முடியாமலும் சரியான சாட்சிகள் இல்லாமலும் போவதால் பணக்காரரின் மகன் என்று நிரூபிக்க முடியவில்லை. இறுதியில் உண்மை வெளிப்பட்டதா தந்தையும் தனயனும் சேர்ந்தார்களா என்று சொல்லும் கதை. தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1978 தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1978 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 2,000பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1978 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது. தலைப்பிரசவம் (திரைப்படம்) தலைப்பிரசவம் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். குடும்பத் திரைப்படம் எடுப்பார் கைப்பிள்ளை எடுப்பார் கைப்பிள்ளை 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சுபா மற்றும் பலரும் நடித்துள்ளனர். சக்ரவர்த்தி (1977 திரைப்படம்) சக்ரவர்த்தி 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்- பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீப்ரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1979 தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1979 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 2,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1979 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது. தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1980 தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1980 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 2,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1980 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது. பஞ்சாமிர்தம் (1978 திரைப்படம்) பஞ்சாமிர்தம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சங்கீதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கைவரிசை கைவரிசை 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரேம்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சீமா மற்றும் பலரும் நடித்துள்ளனர். அதிசய பிறவிகள் அதிசய பிறவிகள் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கார்த்திக், ராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். நாப்பட்டா நாப்பட்டா பண்டைக்கால நூபியாவில் நைல் ஆற்றின் மேற்குக் கரையில் இருந்த ஒரு நகர-நாடு ஆகும். இது வடக்கு சூடான் நாட்டில் தற்காலத்து கரிமா நகர் இருக்கும் இடத்தில் இருந்தது. கிமு 8 தொடக்கம் 7 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் நூபிய இராச்சியமான குஷ் இராச்சியத்தின் தலை நகரமாக இருந்தது. அக்காலத்தில் இந்த இராச்சியத்தை ஆண்ட வம்சத்தினர் எகிப்தைக் கைப்பற்றினர். இவர்கள் எகிப்தின் 25வது வம்சம் அல்லது நூபிய வம்சம் என அழைக்கப்படுகின்றனர். 25வது வம்சத்தினரின் ஆட்சிக் காலத்தை எகிப்தின் "நாப்பட்டாக் காலம்" எனவும் அழைப்பது உண்டு. கிமு 15 ஆம் நூற்றாண்டில் நூபியாவைக் கைப்பற்றிய மூன்றாம் துத்மோசு நாப்பட்டா நகரை உருவாக்கினார். அருகில் இருந்த செபெல் பர்க்காலையும் கைப்பற்றி அதைப் புதிய இராச்சியத்தின் தென் எல்லை ஆக்கினார். கிமு 1075ல் எகிப்தின் தலைநகராக இருந்த தேபிசின் அமுன் கோவில் தலைமைக் குரு சக்தி வாய்ந்தவராகி மேல் எகிப்தில் பாரோவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தினார். இது மூன்றாம் இடைக் காலத்தின் (கிமு 1075-கிமு 664) தொடக்கம் ஆகும். அதிகாரம் பிளவுபட்டதன் காரணமாக நூபியர் தமது தன்னாட்சியை மீட்டுக்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. இவர்கள் நாப்பட்டாவைத் தலைமை இடமாகக் கொண்டு குஷ் இராச்சியத்தை நிறுவினர். கிமு 750ல், நாப்பட்டா ஒரு வளர்ச்சியடைந்த நகரம். ஆனால், எகிப்து இன்னமும் அரசியல் உறுதிப்பாடின்மையால் தத்தளித்துக்கொண்டு இருந்தது. அரசர் கசுட்டா, இந்த நிலைமையைப் பயன்படுத்தி மேல் எகிப்தைத் தாக்கினார். இவருக்குப் பின்வந்த பியேயும், சபாக்காவும் (கிமு 721-707) இதே கொள்கையையே பின்பற்றினர். இறுதியாக சபாக்கா தனது இரண்டாவது ஆட்சியாண்டில் முழு நைல் பள்ளத்தாக்கையுமே குசிட்டியக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். சபாக்கா, எகிப்திலும், நூபியாவிலும் நினைவுச் சின்னங்களைக் கட்டும் கொள்கையையும் கடைப்பிடித்து வந்தார். குசிட்டிய அரசர்கள் மேல் எகிப்தை ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக் காலமும், முழு எகிப்தையும் கிமு 721 முதல் கிமு 664 வரையான 57 ஆண்டுகளும் ஆண்டனர். 25வது வம்சத்தினரின் ஒற்றுமைப்பட்ட எகிப்து, புதிய இராச்சியக் காலத்து எகிப்தைப் போன்ற அளவினதாக இருந்தது. 25வது வம்ச ஆட்சி பண்டை எகிப்தில் மறுமலர்ச்சிக் காலம் ஒன்றுக்குக் கட்டியம் கூறியது. சமயம், கலைகள், கட்டிடக்கலை என்பன புகழ் பெற்ற பழைய, இடைக்கால, புதிய இராச்சியக் காலத்து வடிவங்களுக்கு மீள்விக்கப்பட்டன. தகர்க்கா போன்ற பாரோக்கள் மெம்பிசு, கர்னாக், காவா, செபெல் பர்க்கால் என்பன உட்பட நைல் பள்ளத்தாக்குப் பகுதி முழுவதும், புதிய கோயில்களையும் நினைவுச் சின்னங்களையும் அமைத்தனர் அல்லது பழையவற்றைப் புதுப்பித்தனர். இடை இராச்சியக் காலத்துக்குப் பின்னர் 25வது வம்ச ஆட்சிக் காலத்திலேயே தற்காலச் சூடானின் பகுதிகள் உட்பட நைல் ஆற்றுப் பகுதி முழுவதும் பரவலாகப் பிரமிடுகள் கட்டப்பட்டன. எனினும், தகர்க்காவின் காலத்திலும், தொடர்ந்த அவரது ஒன்றுவிட்ட சகோதரனான தனுட்டாமுன் ஆட்சிக் காலத்திலும் அசிரியர்களுடன் அடிக்கடி பிணக்குகள் ஏற்பட்டவண்ணம் இருந்தன. கிமு 664ல் இறுதி அடியாக தேபிசு, மெம்பிசு ஆகிய நகரங்களை அசிரியர்கள் பிடித்துக்கொண்டனர். 25வது வம்ச ஆட்சி முடிவுற்றதுடன், அவர்கள் தமது தாய் நிலமான நாப்பட்டாவுக்குப் பின்வாங்கினர். இங்கேயே 25வது வம்ச அரசர்கள் எல்லோரும் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் நைல் பள்ளத்தாக்குக் கண்ட முதல் பிரமிடுகளுக்குக் கீழ் அடக்கம் செய்யப்பட்டனர். நாப்பட்டாவையும், மெரோவையும் மையமாகக் கொண்டு விளங்கிய குஷ் இராச்சியம் கிபி 2 ஆம் நூற்றாண்டு வரையாவது புகழுடன் விளங்கியது. அஸ்திவாரம் அஸ்திவாரம் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. திருநாவுக்கரசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஆட்டோ ராஜா ஆட்டோராஜா 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே.விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், விஜயகாந்த், பாம்பே காயத்ரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். அம்மா இருக்கா அம்மா இருக்கா 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மேஜர் சுந்தரராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சிவகுமார், சுலோக்ஷனா மற்றும் பலரும் நடித்துள்ளனர். என். எஸ். கே. பொன்னையா கவுண்டர் மேல்நிலைப்பள்ளி என். எஸ். கே. பொன்னையா கவுண்டர் மேல்நிலைப்பள்ளி தேனி மாவட்டம், கூடலூர் எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஆகும். இந்தப் பள்ளியில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது. இது இருபாலர் பயிலும் பள்ளி ஆகும். இந்தப் பள்ளியின் தலைமையாசிரியராக பொன். கதிரேசன் இருந்து வருகிறார். நன்றி மீண்டும் வருக நன்றி மீண்டும் வருக 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மௌலி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், பிரதாப் கே. போத்தன், சுஹாசினி மணிரத்னம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ரஜினி காந்த், சில்க் ஸ்மிதா இத்திரைப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். ஒரு வாரிசு உருவாகிறது ஒரு வாரிசு உருவாகிறது 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். மௌலி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், பிரதாப் கே.போத்தன், ஸ்ரீப்ரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர். தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1981 தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1981 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 2, 000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1981 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது. சரப புராணம் சரப புராணம் என்பது சரபம் என்னும் பறவை உருவம் கொண்டு சிவபெருமான் நரசிங்க உருவம் கொண்ட திருமாலை அடக்கிய வடமொழிப் புராணக் கதையைத் தமிழில் கூறும் நூல். 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் திருமலைநாதர் என்பவரால் இது இயற்றப்பட்டது. சரப புராணம் 431 பாடல்கள் கொண்டது. பாயிரம், நரசிங்க உற்பத்திச் சருக்கம், கடவுளர் முறையீடு சருக்கம், வீரபத்திரன் எழுச்சி, அறிவுறுத்திய சருக்கம், சலந்தரன் வதைச் சருக்கம், சக்கரம் பெற்ற சருக்கம், நரசிங்கர் வதை சருக்கம் என ஏழு சருக்கங்களைக் கொண்டது. இந்த நூலில் உள்ள பாடல் ஒன்று. எடுத்துக்காட்டு. நரசிங்கத்தின் அடம்பிடித்த செயல்களை முறையிட்ட தேவர்களின் முன் சிவபெருமான் காட்சி தருகிறார். மாவை சேனாதிராஜா மாவை சேனாதிராஜா ("Mavai Senathirajah") என அழைக்கப்படும் சோமசுந்தரம் சேனாதிராஜா (பிறப்பு: அக்டோபர் 27, 1942) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார். சேனாதிராசா 1942 அக்டோபர் 27 இல் பிறந்தார். வீமன்காமம் பாடசாலையிலும், நடேசுய்வரா கல்லூரியிலும் கல்வி கற்ற பின்னர், இலங்கைப் பல்கலைக்க்ழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றார். சேனாதிராசா இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் செயல்பட்டு 1961 சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் 1962 இல் இணைந்தார். 1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார். 1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு எட்டு வெவ்வேறு சிறைச்சாலைகளில் மொத்தம் ஏழாண்டுகள் சிறையில் கழித்தார். 1972 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவரியின் செயலாளராக நியமிக்கப்பட்டார். சேனாதிராஜா 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈஎன்டிஎல்எஃப்/ஈபிஆர்எல்எஃப்/டெலோ/தவிகூ கூட்டணி சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு கூட்டணியின் வேட்பாளர்களில் 13வதாக வந்து தோல்வியடைந்தார். ஆனாலும், அ. அமிர்தலிங்கம் 1989 சூலை 13 இ படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவரின் இடத்திற்கு சேனாதிராசா தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். 1999 சூலை 29 இல் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றார். 2000-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார். 2001 அக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தவிகூ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற கூட்டமைப்பை நிறுவின. 2001 தேர்தலில் ததேகூ சார்பாக யாழ் மாவடத்தில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார். 2004, 2010, 2015 தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். செப்டம்பர் , 2014இல் சேனாதிராசா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். முரட்டுக்காளை (1980 திரைப்படம்) முரட்டுக்காளை இயக்குனர் எஸ். பி. முத்துராமன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரஜினி காந்த், ரதி அக்னிகோத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 20-திசம்பர்-1980. தனிக்காட்டு ராஜா தனிக்காட்டு ராஜா இயக்குனர் வி.சி.குகநாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 12-மார்ச்-1982. தாய் தங்கை பாசம் தாய் தங்கை பாசம் இயக்குனர் டி. ராஜேந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் டி. ராஜேந்தர், சித்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் டி. ராஜேந்தர் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14- ஏப்ரல்-1995. ஒரு தாயின் சபதம் ஒரு தாயின் சபதம் இயக்குனர் டி. ராஜேந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் டி. ராஜேந்தர், ஸ்ரீவித்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் டி. ராஜேந்தர் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-ஏப்ரல்-1987. சிவஞானம் சிறீதரன் சிவஞானம் சிறீதரன் (பிறப்பு: டிசம்பர் 8, 1968) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். யாழ்ப்பாண மாவட்டம், நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவஞானம் பின்னர் கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சிக்கு இடம் பெயர்ந்தார். ஆசிரியரான இவர் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றினார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த இராணுவத் தளபதியாக இருந்த பிரிகேடியர் தீபன் என்ற வேலாயுதபிள்ளை பகீரதகுமாரின் சகோதரியைத் திருமணம் செய்தார். சிறீதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு 10,057 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2015 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் அதிகப்படியான விருப்பு வாக்குகள் (72,058) பெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார். பதுளை தேர்தல் மாவட்டம் பதுளை தேர்தல் மாவட்டம் ("Badulla Electoral District") எனப்படுவது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் ஊவா மாகாணத்தின் பதுளை நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய அலகாகும். 225 இருக்கைகள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு இத்தேர்தல் மாவட்டத்தில் இருந்து 8 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இம்மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டில் 574,814 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றனர். பதுளை தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள் பின்வருமாறு: தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1982 தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1982 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 2,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1982 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது. தோல் (புதினம்) தோல் திண்டுக்கல் பகுதிகளில் உள்ள தோல் பதனிடும் தொழிலாளர்களின் அவலநிலையை மையமாகக் கொண்டு முற்போக்கு எழுத்தாளர் தானியல் செல்வராசு எழுதியுள்ள தமிழ் புதினமாகும். தோல் பதனிடும் ஆலைத் தொழிலாளர்களின் போராட்டங்கள், இதனால் தொழிலாளர் குடும்பங்களில் ஏற்பட்ட பாதிப்புகளையும் மற்றும் தங்கள் போராட்டத்தின் இறுதியில் வெற்றி பெற்று உரிமைகளை மீட்டதையும் இப்புதினம் விவரிக்கிறது. இவை அப்பகுதிவாழ் மக்களின் வழங்குமொழியிலேயே விவரிக்கப்பட்டுள்ளது. 117 கதைமாந்தரைக் கொண்டு 26 அத்தியாயங்களில் இந்த புதினம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த நாவலின் நீளத்தைக் கண்டு பலரும் பதிப்பிக்காதநிலையில் 2010ஆம் ஆண்டிலேயே இது நண்பரொருவரின் உதவியால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதினத்திற்கு தமிழக அரசு சார்பில் 2011ஆம் ஆண்டிற்கான இலக்கிய விருதும் 2012ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதும் கிடைத்துள்ளன. நுவரெலியா தேர்தல் மாவட்டம் நுவரெலியா தேர்தல் மாவட்டம் ("Nuwara Eliya Electoral District") எனப்படுவது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் மத்திய மாகாணத்தின் நுவரெலியா நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய அலகாகும். 225 இருக்கைகள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு இத்தேர்தல் மாவட்டத்தில் இருந்து 2010 ஆண்டு தேர்தலில் 7 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இம்மாவட்டத்தில் 457,137 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றனர். நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள் பின்வருமாறு: ததீசி புராணம் ததீசி புராணம் திருமலைநாதர் என்பவரால் 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழில் எழுதப்பட்ட நூல். ததீசி முனிவரின் வரலாற்றைக் கூறுவது. வடமொழி சிவபுராணத்தின் பகுதியாகத் ததீசி புராணம் வருகிறது. ததீசி புராணம் 48 விருத்தங்களைப் கொண்ட நூல். இந்தப் புராணத்தின் தொடக்கப் பாடல் சிவபெருமான் சிங்க உருவம் தாங்கிய அரியைக் கொன்று அதன் தோலைப் போர்த்திக்கொண்ட செய்தியைக் கூறியபின் இந்தக் கதையைச் சொல்வதாகக் குறிப்பிடுகிறது. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005 வினாவிடைப் புராணம் வினாவிடைப் புராணம் என்னும் தமிழ்நூல் 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் புராணத் திருமலைநாதர் என்பவரால் இயற்றப்பட்டது. இவரது சிவ மகா புராணம் தொகுப்பில் மூன்றாவதாக வரும் புராணம். இதில் 44 பாடல்கள் உள்ளன. அகத்தியர் கேட்கும் வினாக்களுக்கு முருகப்பெருமான் விடை சொல்வதாக நூல் தொடர்கிறது. சில வினாக்களும் விடைகளும் இப்படி விபூதி அணிந்தது, எருது ஏறியது முதலான வினாக்களுக்கு விடைகள் இந்த நூலில் கூறப்படுகின்றன. வினா விடை நெஸ்டி நெஸ்டி ("Neste") என்பது ஓர் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் ஆகும். இதன் விற்பனை நிறுவனம் பின்லாந்தின் யெஸ்ப்பூ நகரில் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின் முக்கிய கிளை சிங்கப்பூரில் உள்ளது. இது திரவ எரிபொருள்களையும் தயாரிக்கிறது. எண்ணெய்ப் பொருட்களை தயாரித்து, சுத்திகரித்து விற்கிறது. பெற்றோல், டீசல், வானூர்தி எரிபொருள், கப்பல் எரிபொருள், சூடாக்கும் எண்ணெய்கள், திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு ஆகியவற்றைத் தயாரிக்கிறது. பின்லாந்தில் 900 சேவை நிலையங்களையும், பிற நாடுகளில் 240 சேவை நிலையங்களையும் கொண்டுள்ளது. இந்நிறுவனம் பல அறிவுசார் சொத்துரிமைப் பத்திரங்களைப் பெற்றுள்ளது. 2010 இல், சிங்கப்பூரில் டீசல் தயாரிப்பு நிலையத்தை நிறுவியது. ஆண்டுதோறும் 800,000 டன்களை தயாரித்து உலகின் பெரிய நிறுவனம் என்ற பெருமைக்குரியது. டேனியல் செல்வராஜ் தானியல் செல்வராசு ("டி. செல்வராஜ்", பிறப்பு சனவரி 14,1938) ஓர் முற்போக்குத் தமிழ் எழுத்தாளரும் வழக்கறிஞரும் ஆவார். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இவர் நெல்லை தென்கலம் சிற்றூரைச் சேர்ந்த செல்வராஜ் திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். பல்வேறு சிறுகதைகளையும் புதினங்களையும் எழுதியுள்ள இவருக்கு திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த தோல் தொழிலாளர்களின் அவலநிலையை விவரிக்கும் தோல் என்ற படைப்பிற்காக 2012ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் பொதுவுடமைக்கொள்கையில் பிடிப்புடையவர். 200க்கும் மேற்பட்டசிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவை, "நோன்பு" உள்ளிட்ட சில தொகுதிகளாக வெளிவந்துள்ளன. சிறுகதைகளுள் சில: 6 நாவல்கள் எழுதியுள்ளார் 50 ஓரங்க நாடகம் இருவரின் வாழ்க்கை வரலாறு, . இந்தியாவின் மாநிலங்கள் வாரியாக மலையாளம் பேசும் மக்கள் இது 2001 இல் இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் நடுவண் ஆட்சிப்பகுதிகள் சார்ந்த மலையாளிகள் மக்கள்தொகை பற்றிய புள்ளிவிவரங்களாகும். மக்கள்தொகை மதிப்பீடு 2001. மொத்த மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் இணையத்தில் உள்ளன. தகர்க்காவின் இசுபிங்சு தகர்க்காவின் இசுபிங்சு என்பது, பண்டை எகிப்தின் 25வது வம்சத்தைச் (ஏறத்தாழ கிமு 747-656) சேர்ந்த நூபிய பாரோவான தகர்க்காவின் தலையைக் கொண்ட கருங்கல்லாலான "இசுபிங்சு" சிலை ஆகும். "தகர்க்காவின் இசுபிங்சு" தற்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளது. "இசுபிங்சு"கள் மனிதத் தலையையும் விலங்கு உடலையும் கொண்ட உருவங்கள். "தகர்க்காவின் இசுபிங்சு" பாரோவான தகர்க்காவின் பெரும் அதிகாரத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. இதன் தலையணியின் முன் பக்கத்தில் "யுரீயசு" எனப்படும் இரட்டை நாகத் தலைகள் உள்ளன. இது பண்டை எகிப்தில் அரச பதவிக்கு உரிய சின்னம். "இசுபிங்சின்" மார்பணியில் தகர்க்காவின் பெயர் பொறிக்கப்பட்டு உள்ளது. இச்சிலை, குஷ் காலக் கலையின் தலை சிறந்த எடுத்துக்காட்டுகளுள் ஒன்று. இச்சிலை, நூபியாவின் (தற்போதைய சூடான்) காவாவில் உள்ள அமுன் கோயிலின் தென்கிழக்குப் பகுதிக்குக் கிழக்கில் காணப்படும் "T" கோவில் பகுதியில் அகழ்ந்து எடுக்கப்பட்டது. 1930களில் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத் தொல்லியல் குழுவினர் நடத்திய அகழ்வாய்வின் போதே இது கிடைத்தது. இந்தக் கற்கோயில் கிமு 683ல் தகர்க்காவினால் தொடங்கப்பட்டது. பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள முக்கியமான தொல்பொருட்களில் ஒன்றான இது, பிபிசி வானொலியில் ஒலிபரப்பான "100 பொருட்களில் உலக வரலாறு" என்னும் தொடரில் 22வது பொருளாக இடம்பெற்றது. ஆட்டின் வடிவில் அரசர் தகர்க்காவைப் பாதுகாக்கும் அமுன் கடவுட் சிலைகள் ஆட்டின் வடிவில் அரசர் தகர்க்காவைப் பாதுகாக்கும் அமுன் கடவுட் சிலைகள் ஆட்டின் வடிவில் அரசர் தகர்க்காவைப் பாதுகாக்கும் அமுன் கடவுட் சிலைகள் குறைந்தது இரண்டாவது நூபியாவின் காவாவில் இருந்த அமுன் கோயிலில் வைக்கப்பட்டிருந்தன. இந்தக் கற்கோயிலின் கட்டுமானம் கிமு 683 ஆம் ஆண்டில் அரசர் தகர்க்காவினால் தொடங்கப்பட்டது. ஆடு, அமுன் கடவுளுக்குப் புனிதமான விலங்குகளுள் ஒன்று. கர்னாக்கில் உள்ள கோயில் உட்பட அமுன் கோயில்கள் பலவற்றில் ஆடு அல்லது ஆட்டுத் தலை கொண்ட "இசிபிங்சு" சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. இச்சிலைகள் 1930-1 காலப்பகுதியில் நிகழ்ந்த அகழ்வாய்வின் போது பிரான்சிசு லெவெலின் கிரிபித் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டன. கற்கோயிலின் மேற்குப்பக்க அணுகுவழியில், முதலாம் இரண்டாம் கோபுரங்களுக்கு முன்புறம் இரண்டு சோடி மணற்கல் மேடை இணைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் இரண்டிலேயே ஆட்டு வடிவங்கள் காணப்பட்டன. இவற்றுள் ஒன்று பிரித்தானிய அருங்காட்சியகத்திலும், மற்றது ஆக்சுபோர்டில் உள்ள ஆசுமோலிய அருங்காட்சியகத்திலும் உள்ளன. ஆசுமோலிய அருங்காட்சியகத்திலேயே காவாவில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்த பெரும்பாலான தொல்பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளன. பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள சிலை பேராசிரியர் கிரிபித்திடம் இருந்து 1933ல் பெறப்பட்டது. மொழி நல அளவீடுகள் மொழி நல அளவீடுகள் (ஆங்கிலம்: Language Vitality Indicators) என்பது ஒரு மொழியின் பயன்பாடு, பேணல், வளர்சியை மதிப்பீடு செய்யப் பயன்படும் அளவீடுகள் அல்லது காரணிகள் ஆகும். குறிப்பாக அழிவுநிலையில் இருக்கும் மொழிகளின் நிலையை அறியவும், மொழிப் புத்துயிர்ப்புத் திட்டங்களுக்கும் உதவும் வண்ணமும் மொழி நல அளவீடுகள் பயன்படுகின்றன. இந்த அளவீடுகளை மொழிசார் சமூகங்கள், மொழியியலாளர்கள், மொழிப் பேணல், மொழிப் புத்தியிர்ப்பு நடவடிகைகளில் ஈடுபட்டி இருக்கும் யுனெசுக்கோ போன்ற நிறுவனங்கள் உருவாக்கிப் பயன்படுத்துகின்றன. திருச்சூர் வி. இராமச்சந்திரன் திருச்சூர் வி. இராமச்சந்திரன் (பி. 1940) தென்னிந்தியாவைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். இவர் 14ஆவது வயதில் தனது முதல் இசை நிகழ்ச்சியில் பாடினார். 18ஆவது வயதில் அனைத்திந்திய வானொலியின் கலைஞரானார். இராமச்சந்திரன், வேதியியலில் பட்டம் பெற்றவர். 1960ஆம் ஆண்டு முதல் 1965ஆம் ஆண்டு வரை ஜி. என். பாலசுப்பிரமணியத்திடம் மாணவராக இசை பயின்றார். அதற்குப்பிறகு எம். எல். வசந்தகுமாரியிடம் மாணவராக இருந்தார். 1973ஆம் ஆண்டு, சாருமதி எனும் இசைக் கலைஞரை திருமணம் செய்தார். சென்னை மியூசிக் அகாதெமியில் முதல்முறையாக டிசம்பர் 22, 1962ஆம் ஆண்டு பாடும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. ஜி. என். பாலசுப்பிரமணியத்தின் பரிந்துரையின்பேரில் இந்த வாய்ப்பு, இராமச்சந்திரனுக்குக் கிடைத்தது. சரியாக 50 ஆண்டுகள் முடிந்த நிலையில், இந்த அகாதெமியின் பெருமைமிகுந்த விருதான சங்கீத கலாநிதி விருது, சனவரி 1, 2013 அன்று வழங்கப்பட்டது. சரசோதி மாலை சரசோதி மாலை என்பது ஒரு சோதிட நூல். இதனை இயற்றியவர் இலங்கையில் வாழ்ந்த போசராசர். இவர் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓர் அந்தணர். இந்த நூலை இவர் சக ஆண்டு 1232 க்கு இணையான கி.பி. 1310-ல் தம்பை என்னும் ஊரில் வாழ்ந்த பராக்கிரமபாகு என்னும் அரசனின் அவையில் அரங்கேற்றினார் என்று ஒரு பாடல் குறிப்பிடுகிறது. பராக்கிரம பூபன் எனப் பாடல் குறிப்பிடும் அரசன் பராக்கிரம பாகு என்னும் பெயருடன் இலங்கையில் ஆண்ட அரசன்.தம்பை என்னும் ஊர் அன்று ஈழத்திற் காணப்பட்ட தம்பதெனிய என்னும் இராசதானி என ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரிய சக்கரவர்த்தி என்பவன் சிங்கள அரசனின் தலைநகரான அநுராதபுரத்தைக் கைப்பற்றி அங்கிருந்த கருவூலப் பொருள்களை அள்ளிச் சென்றான் என்றும், சிங்களத்தை ஆண்ட பராக்கிரம பாகு அவனிடம் சமாதானம் செய்துகொண்டு, ஆரிய சக்கரவர்த்தி கைப்பற்றிய ஊர்களைத் திரும்பப் பெற்றான் என்றும் கூறுவர். இந்த நூலில் 12 படலங்கள் உள்ளன. இதில் விவாக கால நியதி, அக்கினி, ஆதானம், நெல் விதைத்தல், மகுடன் புனைதற்குரிய திறந்த, யுத்த யாத்திரை, ஆயுர் யோகம், அபிசித்து முகூர்த்தம் போன்ற பல்வேறு விடயங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்த நூலில் பராக்கிரமபாகு மன்னனைப் போற்றிய பல செய்யுள்களும் உள்ளன. சந்தான தீபிகை என்னும் சோதிட நூலை இயற்றிய யாழ்ப்பாணத்து இராமலிங்கையர் என்னும் சோதிடர் இதனைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். குஜராத் சட்டமன்றத் தேர்தல், 2012 குஜராத் சட்டமன்றத் தேர்தல், 2012 என்பது இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை குறிக்கிறது. 13 மற்றும் 17 திசம்பர் 2012ல் இரண்டு கட்டங்களாக இத்தேர்தல் நடைபெற்றது. 20 திசம்பர் 2012ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இத்தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்தியது. குஜராத் சட்டமன்றத்திற்கான 182 உறுப்பினர்களை அம்மாநில மக்கள் தேர்தெடுத்தனர். தற்போதைய முதலமைச்சராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நரேந்திரமோடி 2001லிருந்து முதலமைச்சராக பதவி வகிக்கிறார். குஜராத்தின் முக்கிய எதிர்கட்சியாக தற்போது காங்கிரஸ் உள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இத்தேர்தலில் 71.32 சதவீதம் வாக்குகள் பதிவாகின. முதல் கட்டத்தில் 70.75 சதவீதமும், இரண்டாம் கட்டம் 71.85 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. திசம்பர் 20, 2012 அன்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தற்போதைய ஆளும் பாஜக மூன்றாம் முறையாக அருதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பிஜேபி 115 தொகுதிகளும், காங்கிரஸ் 61 தொகுதிகளும் தேசியவாத காங்கிரஸ் 2, கேசுபாய் பட்டேலின் குஜராத் பரிவர்தன் கட்சிக்கு 3, மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். இடாய்ச்சு வேற்றுமை (இலக்கணம்) இடாய்ச்சு மொழியில் நான்கு வகையான வேற்றுமைகள் உள்ளன. அவை, பயன்படுத்தப்படும் இடங்கள்: ௧. வினைமுற்றுடன் ௨. bleiben, heißen, scheinen, sein, werden, nennen என்னும் வினைச்சொற்களின் பின் வரும் பொழுதும், செயற்பாட்டு வினை வாக்கியங்களிலும். ௩. வினையற்ற பெயர்ச்சொற்களுடனும்(Noun) இடப் பெயர்ச்சொற்களுடனும்(Pronoun) (ஏவல் வாக்கியங்களில் வருவது போன்று). பயன்படுத்தப்படும் இடங்கள்: ௧. இரண்டாம் வேற்றுமையின் செய்யப்படுபொருளை உணர்த்துவதற்கு. ௨. bis, durch, für, gegen, ohne, um மற்றும் wider என்னும் முன்விபக்திகளுக்கு பின். ௩. முன்விபக்தியின்றி ஒரு காலகட்டத்தயோ அல்லது கால அளவையோ குறிக்க. ௪. நகரும் வினைகளுடன் வரும்பொழுது, திசையையோ அல்லது தூரத்தையோ குறிக்க. ௫. வாழ்த்துக்களுடன். ௬. ஆகிய வினைகளுடன் இரண்டு இரண்டாம் வேற்றுமை செய்யப்படுபொருட்கள் வரும். ௭. அளவை குறிக்கும் வினை உரிச்சொற்களுடன். குறிப்பு: entlang என்னும் முன்விபக்தி, இரண்டாம் வேற்றுமையில் பெயர்ச்சொல்லை பின்தொடர்ந்தே வரும். பயன்படுத்தப்படும் இடங்கள்: ௧. நான்காம் வேற்றுமையின் செய்யப்படுபொருளை குறிக்க. ௨. ab, aus, außer, bei, gemäß, laut, mit, nach, seit, von, zu என்னும் சில முன்விபக்திகளுக்கு பின். குறிப்பு: (an)statt, dank, trotz, während, wegen ஆகிய முன்விபக்திகள் நான்காம் வேற்றுமையுடனும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பொதுவாக அவைகளை ஆறாம் வேற்றுமையே தொடர்ந்து வரும். பயன்படுத்தப்படும் இடங்கள்: ஆழ்வார்கள் வைணவ சமயத்தின் முதன்மைத் தெய்வமாகிய திருமாலைப் போற்றித் தமிழ்ச் செய்யுட்களால் பாடியவர்கள் ஆழ்வார்கள் ஆவர். தென்மொழியாம் தமிழ் மொழியில் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (அல்லது) ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர். அவர்களுள், இறைவனை இறைவனாகக் காணாது, இறைவனோடு உறவுமுறையில் வாழ்ந்ததால் ஆண்டாளையும், இறைவனைப் பாடாது ஆசானைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும் வேறு வரிசையில் தொகுத்து, ஆழ்வார்கள் பதின்மர் 10 பேர் மட்டுமே எனக் காட்டுவாரும் உண்டு. இவர்கள் 5 முதல் 9 நூற்றாண்டுக் கால அளவில் வாழ்ந்தவர்கள். மரபுப்படி இறைவனின் குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்களை ஆழ்வார்கள் என்று சொற்பொருள் கூறுவர். ஆயினும் இந்தச் சொல் ஆள்வார் என்றும் வழங்கினதாகவும் பிறகு ஆழ்வார் என்று ஆயினதாகவும் S. பழனியப்பன் என்ற இந்தியவியல்/மொழியியல் ஆய்வாளர் பதிப்பித்துள்ளார். கி.பி. 5-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வைணவம் புத்துயிர் பெறத் தொடங்கியது. திருமால் அழகிலும் குணத்திலும் ஆழ்ந்து நெஞ்சுருக ஆழ்வார்கள் பாடிய ~4000 பாடல்களையும் (பாசுரங்கள்) 10-ஆம் நூற்றாண்டில் நாதமுனி என்பவர் திவ்விய பிரபந்தம் (அ) அருளிச்செயல் என்னும் பெயரில் நூலாகத் தொகுத்தார். பன்னிரு ஆழ்வார்களின் நூல்களே வைணவப் பக்தி இலக்கியங்களாகும். அது காலத்திலும் சிறந்து விளங்குகிறது. நம்மாழ்வாரின் திருவாய்மொழி, தமிழ் வேதம்/ திராவிட வேதம் என்றும் போற்றப்படுகின்றது. திருவாய்மொழிக்கு உருகாதார் ஒருவாய்மொழிக்கும் உருகார் என்ற சிறப்பும் உண்டு. ஆழ்வார்களை வரிசைப்படுத்துவதில் 12,13,14,15 ஆம் நூற்றாண்டுகளில் மாறுபாடுகள் காணப்படுகின்றன. இவை ஆழ்வார்கள் வாழ்ந்த காலத்தோடு தொடர்புடையன அல்ல. 'திருமுடி அடைவு' என்னும் முறைமை மணவாள மாமுனிகள் வரிசையைப் பின்பற்றுகிறது. யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதுகள், 2009 யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை ஆண்டுதோறும் சிறந்த ஈழத்து நூல்களுக்கான விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வருகின்றது. இவ் வகையில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களுக்கான விருது மற்றும் சான்றிதழ்களைப் பெற்ற நூல்களின் விபரங்கள் பின்வருமாறு: எத்னோலொக்கின் விரிவான சீராக்கப்பட்ட தலைமுறையிடை இடையூறு அளவீடு எத்னோலொக்கின் விரிவான சீராக்கப்பட்ட தலைமுறையிடை இடையூறு அளவீடு (Ethnologue's Expanded Graded Intergenerational Disruption Scale) என்பது ஃபிசர்மனின் சீராக்கப்பட்ட தலைமுறையிடை இடையூறு அளவீட்டு முறையையும், யுனெசுகோவின் ஆறு நிலை மொழிகளின் அழிவுநிலை அளவீட்டு முறையையும் இணைத்து விரிவான ஒரு மொழி நல அளவீட்டு முறையாக முன்வைக்கப்படுகிறது. இந்த முறையினை எம். போல் லூவிசு மற்றும் ஃகேரி எப். சிமன்சு ஆகிய மொழி ஆய்வாளர்கள் 2009 ஆம் ஆண்டளவில் "அழிவுநிலையை மதிப்பீடுசெய்தல், பிசுமனின் அளவீட்டை விரிவாக்கல்" என்ற ஆய்வுக்கட்டுரையில் முதலில் முன்வைத்தனர். இந்த அளவீடு எத்னொலோக்கின் உலக மொழிகளின் தரவுத் திரட்டிலும், பல்வேறு மொழியியல் ஆய்வுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. யுனெசுக்கோவின் மொழி நல அளவீடுகள் யுனெசுக்கோவின் மொழி நல அளவீடுகள் என்பது 2002 - 2003 ஆண்டுகள் காலப் பகுதியில் யுனெசுக்கோவினால் கூட்டப்பட்ட மொழி வல்லுனர் குழுவினால் முன்வைக்கப்பட்ட மொழி நல அளவீடுகள் ஆகும். இது ஒன்பது அளவீடுகளை அல்லது காரணிகளைக் கொண்டது. இந்தக் குழு முன்வைத்த மொழிப் பாதுகாப்புக்கான சட்டகத்தில் இது ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1983 தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1983 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 2,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1983 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது. வாய்மைநாதன் வாய்மைநாதன் (பிறப்பு: 1937) என்கிற மு. இராமநாதன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நாகப்பட்டினம் மாவட்டம் தகட்டூர் கிராமத்தில் பிறந்த இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதினம், காவியம், கவிதை, நாடகம், சிறுகதைத் தொகுப்பு என பல வகை நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய "“கப்பலுக்கொரு காவியம்”" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மரபுக்கவிதை வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. எஸ்ஸார்சி எஸ்ஸார்சி (பிறப்பு: மார்ச் 4 1954) என்கிற எஸ். ராமச்சந்திரன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கடலூர் மாவட்டம் தருமநல்லூரில் பிறந்தவர். பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தில் இளநிலைக் கணக்கு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமற்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற இவர் எட்டையபுரம் பாரதி பிறந்த நாள் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, பாரத மாநில வங்கி இலக்கிய விருது போன்றவைகளையும் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய "“நெருப்புக்கு ஏது உறக்கம்”" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. ஜான் கெர்ரி ஜான் போர்பசு கெர்ரி ("John Forbes Kerry", பிறப்பு: திசம்பர் 11, 1943) அமெரிக்க மேலவை (செனட்)டில் மாசச்சூசெட்சிற்சிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். 2004ஆம் ஆண்டிற்கான குடியரசுத் தலைவர் தேர்தலில் அமெரிக்க மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு ஜார்ஜ் வாக்கர் புஷ்ஷிடம் தோற்றவர். அமெரிக்க செனட்டவையில் 23 ஆண்டுகள் அங்கம் வகித்துள்ளார். மேலும் மாசச்சூசெட்சின் துணைநிலை ஆளுநராக மைக்கேல் துகாகிசின் கீழ் பொறுப்பாற்றி உள்ளார். திசம்பர் 21, 2012 அன்று அதிபர் பராக் ஒபாமா கெர்ரியை இலரி கிளின்டனுக்கு அடுத்து வெளியுறவுத் துறை அமைச்சராக அறிவித்துள்ளார். கெர்ரி கொலராடோவிலுள்ள அவுரோராவில் திசம்பர் 11, 1943 அன்று பிறந்தார். யேல் பல்கலைக்கழகத்திலும் பாசுட்டன் சட்டக் கல்லூரியிலும் பட்டப் படிப்பையும் சட்டக் கல்வியையும் முடித்தார். 1970இல் ஜூலியா தோம் என்பவரை மணந்து 1988இல் பிரிந்தார். 1995 முதல் தெரெசா எயின்சு என்பவருடன் இல்லறம் நடத்தி வருகிறார். இவருக்கு இரு மக்களும் இரண்டாம் மனைவியின் மூன்று மக்களும் உள்ளனர். தற்போது பாசுட்டனில் வாழ்ந்து வருகிறார். 2003ஆம் ஆண்டில் இவருக்கு முன்னிற்கும் சுரப்பியில் புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டு முற்றிலும் குணமாக்கப்பட்டது. அ. அய்யாசாமி பேராசிரியர் அ.அய்யாசாமி (பிறப்பு: மார்ச் 1 1940) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். ஈரோடு மாவட்டம் புஞ்சைப் புளியம்பட்டி எனும் ஊரில் பிறந்தவர். பள்ளி ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும், கல்லூரிப் பேராசிரியராகவும் பணியாற்றியவர். முல்லைச்சரம், தாமரை, கல்கி, கணையாழி போன்ற இதழ்களில் கதை, கட்டுரை, கவிதைகள் என பல எழுதியுள்ளார். வானொலியிலும் பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். இவர் எழுதிய வைக்கம் எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாடகம் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. புதுவைத் தமிழ்நெஞ்சன் புதுவைத் தமிழ்நெஞ்சன் (பிறப்பு: 1958) என்கிற அசோகன் என்பவர் ஒரு புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். புதுச்சேரி சண்முகாபுரத்தில் பிறந்த இவர் புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். தமிழ்ச்சீரிதழ்க் காப்பகத்தையும், துளிப்பா நூலகத்தையும் நடத்தி வரும் இவர் தீவின் தாகம், துளிப்பா போன்ற நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய "“மரப்பாச்சி”" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுவர் இலக்கியம் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. ஜெய. ராஜமூர்த்தி ஜெய. ராஜமூர்த்தி (பிறப்பு: அக்டோபர் 8 1964) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நாகப்பட்டினம் மாவட்டம், திருவெண்காடு எனும் ஊரில் பிறந்த இவர் மருத்துவத்தில் பட்டப்படிப்பும், குழந்தைகள் நல மருத்துவத்தில் பட்டயப் படிப்பையும் படித்துள்ளார்.அரசு தலைமைக் குடிமுறை மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வரும் இவர் பட்டிமன்றப் பேச்சாளர், கவிஞர், மற்றும் ஆன்மிகச் சொற்பொழிவாளர் என்று பல இலக்கியப் பணிகளையும் செய்து வருகிறார். “நேசம் விரும்பும் நெருப்புப் பூக்கள்”, “புனித வள்ளலாரின் புரட்சிப்பாதை”, “எனது அம்பறாத் தூணியிலிருந்து” என பல நூல்களை எழுதியிருக்கிறார். இவர் எழுதிய "“வள்ளலாரும் பெரியாரும்”" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் திறனாய்வு வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.திருவெண்காட்டில் வள்ளலார் தமிழ்மன்றத்தின் நிறுவனர் ஆவார். உலகத்தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் திராவிட இயக்கக் கொள்கைகளும் அருட்பாச் சிந்தனையும் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை வாசித்துள்ளார்.சமயவழியில் நடந்து வந்த வழிபாட்டில் இருந்து அங்கிருந்த சபாநடேசர் தீட்சிதரிடமிருந்த வள்ளலார் ஞானசபையை உண்ணா நோன்பிருந்து மீட்டு எடுத்துள்ளார். திருக்குறளை தேசிய நூலாக்க மத்திய நடுவண் அரசை வலியுறுத்தி சென்னையில் தமிழறிஞர் பெருமக்களோடு ஓரு நாள் அடையாள உண்ணாநோன்பிருந்துள்ளார் .தனது உடல் தானமும் செய்துள்ளார். எலும்புப் பிணைப்பு எலும்புப் பிணைப்பு அல்லது மூட்டுப் பிடிப்பு (Ankylosis, anchylosis) என்பது காயம் அல்லது நோய் காரணமாக வழக்கத்திற்குமாறாக மூட்டு எலும்புகளில் ஏற்படும் உறுப்பு இணைவையும், விறைப்பையும் குறிக்கின்றது. இத்தகு விறைப்பு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இருக்கலாம். இவை மூட்டுகளிலுள்ள அல்லது மூட்டுகளுக்கு வெளியிலுள்ள தசை நாண்களிலோ அல்லது தசைக் கட்டமைப்புகளிலோ உள்ள திசுக்களின் அழற்சியின் காரணமாக ஏற்படலாம். சஹாரா பாலைவன எல்லைகளில் வாழும் ஊட்டச்சத்து போதாத குழந்தைகளில் பரவலாகக் காணப்படும் கடைவாய் அழுகல் நோய் (Noma disease) பேசுவதை, சாப்பிடுவதை பாதிக்கும் அளவிற்கு மேல்தாடை, கீழ்த்தாடை எலும்புகளில் எலும்புப் பிணைப்பினை ஏற்படுத்தவல்லது. கடைவாய் அழுகல் நோய் கடைவாய் அழுகல் நோய் (Noma) முகத்தில், குறிப்பாக வாய் மற்றும் கன்னத்தில், உள்ளத் திசுக்களின் அழிவிற்கு வழிவகுக்கும் ஒரு அழுகல் நோயாகும் (gangrenous disease). இந்நோய், வாயழுகல் (cancrum oris) அல்லது அழுகிய வாயழல் (gangrenous stomatitis) என்றும் அழைக்கப்படுகின்றது. கவர்னகிரி கவர்னகிரி (ஆங்கிலம்:Governagiri) தமிழ் நாடு, தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம் மற்றும் ஊராட்சிஒன்றியத்தில் உள்ள ஊர் ஆகும். இந்தியவிடுதலை போராட்ட வீரர் சுந்தரலிங்கம் அவர்கள் இவ்வூரில் பிறந்தார். ச. குருசாமி ச. குருசாமி (பிறப்பு: நவம்பர் 10 1950) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நாமக்கல் மாவட்டம் குட்டாம்பட்டி எனும் ஊரில் பிறந்த இவர் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். தமிழ் சார்ந்த பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். இவர் எழுதிய "“நச்சினார்க்கினியர் உரைநெறி”" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. த. கனகசபை த. கனகசபை என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருச்சிராப்பள்ளியில் வசித்து வரும் இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நிகழ்கலைத்துறையில் களத் தலைவராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.”நாட்டுப்புறப் பாடல்களில் அழகியல் கட்டமைப்பு” என்ற நூலையும், பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். மைசூரிலிரிருந்து வெளியாகும் “மைசூர் முரசு” எனும் இதழின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் எழுதிய "“சங்கத் தமிழிசை”" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நுண்கலைகள் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. திருவேங்கடம் (எழுத்தாளர்) வேங்கடம் என்கிற திருவேங்கடம் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். வந்தவாசியைச் சேர்ந்த இவர் சாவி (எழுத்தாளர்) நடத்திய சாவி இதழின் கடைசி மூன்றாண்டு காலத்தில் உரிமையாளர் மற்றும் பதிப்பாளராக இருந்தார். பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் எழுதிய “வான சாஸ்திரம்” நூல் சிறப்பு பெற்றது. இவர் எழுதிய "“அடேங்கப்பா ஐரோப்பா”" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பயண இலக்கியம் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. அன்புக்கொடி நல்லதம்பி அன்புக்கொடி நல்லதம்பி என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னையில் வசித்து வரும் இவர் வரலாற்றுப் பேராசிரியையாகப் பணியாற்றியவர். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழான 12 ஆம் வகுப்புக்கான வரலாற்றுப் பாடநூல் குழுத் தலைவராகப் பணியாற்றியவர். பல்வேறு நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். நூலகத் தேர்வுக்குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். இவர் எழுதிய "“சமூக விஞ்ஞானி கலைவாணர்”" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வாழ்க்கை வரலாறு வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. இரா. இராமகிருட்டிணன் இரா. இராமகிருட்டிணன் (பிறப்பு: மே 19 1945) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். ஓசூரில் பிறந்த இவர் தெற்கு தொடருந்துவில் தொடர் வண்டி நிலைய பொறுப்பாளராகவும் (ஸ்டேசன் மாஸ்டர்), தொடருந்து துணை நிலை இராணுவப் படையில் சுபேதாராகவும் பணியாற்றியவர். பன்மொழிப் புலமை பெற்ற இவர் தமிழில் முதுகலைப் பட்டமும், ஆய்வியல் நிறைஞர் பட்டமும்,முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவர் எழுதிய தகடூர் வரலாறும் பண்பாடும் எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் “நாட்டுவரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு” எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. இவர் முனைவர் பட்டத்திற்கான ஆய்வினை "தருமபுரி மாவட்டத் திருத்தலங்கள்" என்ற தலைப்பில் செய்துள்ளார். ஆ. ஜெகதீசன் ஆ. ஜெகதீசன் (பிறப்பு: மே 16 1972) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு நடுப்படுகையில் பிறந்தவர். விரிவுரையாளராகப் பணியாற்றி வரும் இவர், தமிழ் இலக்கியத்தில் மனித உரிமைச் சிந்தனைகள், தமிழ் இலக்கியத்தில் கல்வெட்டியல் கூறுகள், சங்க இலக்கிய மதிப்பீடுகள், பாரதி - பாரதிதாசன் சமூகச் சிந்தனைகள் போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய "“இலக்கியத்தில் மனித உரிமைக் கோட்பாடுகள்”" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. ரா. பாலகிருஷ்ணன் ரா. பாலகிருஷ்ணன் (பிறப்பு: செப்டம்பர் 16 1933) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தூத்துக்குடி மாவட்டம் சங்கரன் குடியிருப்பு எனும் ஊரில் பிறந்தவர். இவர் முதலில் ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, பின்னர் தமிழ் நாளேடுகளில் உதவி ஆசிரியர், செய்தி ஆசிரியர், ஆசிரியர் மற்றும் உரிமையாளராகப் பணியாற்றியுள்ளார். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் தமிழ் மொழிப் பதிப்பாசிரியராகவும், முதன்மை ஒருங்கிணைப்புப் பதிப்பாசிரியராகவும் பணியாற்றியவர். புதிய அரசியல் சட்டம், மண்டல், காவிரித் தீர்ப்பு என பல்வேற் நூல்களை இயற்றியுள்ளார். இவர் எழுதிய "“மக்களவைக் கூட்டத்தைத் தமிழகத்தில் நடத்துக”" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சட்டவியல், அரசியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. எஸ். எல். வி. மூர்த்தி எஸ்.எல்.வி. மூர்த்தி (பிறப்பு: ஆகஸ்ட் 18 1945) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னையில் வசித்து வருகிறார். தமிழ் நாளிதழ்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கதை, கட்டுரைகளை எழுதியிருக்கிறார். வெற்றிக்கு வித்திடும் ஆசிரியர்களே, வெற்றிக்கு விரைந்திடு, சவாலே சமாளி போன்ற கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். இவர் எழுதிய "“தொழில் முனைவோர் கையேடு”" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. தமிழ்நாகை தமிழ்நாகை என்கிற கோ. அன்பழகன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நாகப்பட்டினத்தில் பிறந்த இவர் எலும்பு முட நீக்கியல் துறையில் 27 ஆண்டுகள் மருத்துவராகப் பணியாற்றியுள்ளார். “கூந்தல் பனை” எனும் கவிதை நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய "“வலிய எலும்பே வழுவழுப்பான மூட்டே”" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மருந்தியல், உடலியல், நலவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. க. சிவநேசன் க. சிவநேசன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னையில் வசிக்கும் இவர் அரசு கலைக்கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சித்த மருத்துவத்தில் தேர்ச்சி பெற்று, அரசு மருத்துவராகப் பதிவு பெற்று மருத்துவப் பணிகளையும் செய்தவர். இவர் எழுதிய "“சித்த மருத்துவத்தில் வேர், மரம், செடி, கொடி, இலைகளும் அதன் மருத்துவப் பயன்களும்”"எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. பா. சுந்தர் பா. சுந்தர் (பிறப்பு: ஏப்ரல் 24 1959) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருவண்ணாமலையில் பிறந்த இவர் திருச்சிராப்பள்ளியிலுள்ள உருமு தனலட்சுமி கல்லூரியில் தமிழ் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அருள்நெறித் தந்தை அடிகளார், குன்றக்குடி அடிகளார் பணிகள் போன்ற நூல்களை எழுதியுள்ளார். பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள இவர் தமிழாகரர் விருது, சைவ சித்தாந்தக் கலாநிதி விருது, சிவநெறிப் புலவர்மணி விருது போன்றவைகளைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய "“திருநாவுக்கரசர் தேவாரத்தில் சிவ மூர்த்தங்கள்”" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமயம், ஆன்மீகம், அளவையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. மா. கருணாநிதி மார்க்கண்டு கருணாநிதி என்பவர் கல்வியியலாளர். இலங்கை கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். கல்வியியல் தொடர்பான ஆய்வுகளையும் ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். கல்வியியல் துறை தொடர்பாகவும் கலைத்துறை தொடர்பாகவும் மொழிபெயர்ப்புகளையும் மேற்கொண்டுள்ளார். மா.கருணாநிதி. யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் தெற்கில் பிறந்தவர். கொழும்பில் வசிக்கிறார். ஆரம்பக் கல்வியை யா/அல்வாய் சிறீலங்கா வித்தியாசாலையிலும் இடைநிலைக் கல்வியை யா/தேவரையாளி இந்துக் கல்லூரியிலும் உயர்தரத்தை யா/நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்திலும் பயின்றார். பெற்றோர் மார்க்கண்டு செல்லம்மா. பேராதனைப் பல்கலைக்கழக புவியியற் சிறப்புப் பட்டதாரி - 1974 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா - 1984 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வியியலில் முதுகலைமாணி - 1989 கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் - 2001 பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1975-1976 இல் புவியியற்றுறை உதவி விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1977-1983 வரை நுவரெலியா பரிசுத்த திரித்துவக் கல்லூரியில் உதவி ஆசிரியராகவும் 1991 வரைஅக்கல்லூரியிலேயே அதிபராகவும் பணியாற்றினார். பின்னர் 1991 முதல் கொழும்புப் பல்கலைக்கழகக் கல்விப் பீடத்தில் உதவி விரிவுரையாளராகி பேராசிரியராகப் பணியாற்றினார். 2008 முதல் 2014 வரை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் மதிப்பீட்டு நிலையத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றினார். /நூலகம் தளத்தில் மா. கருணாநிதி எழுதிய நூல்கள் உள்ளன. . இரா. தங்கவேலு இரா. தங்கவேலு என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருச்சிராப்பள்ளி, தாயனூரில் தேசிய விதை ஆராய்ச்சி மையத்தில் தாவர நோயியல் முதுநிலை விஞ்ஞானியாகப் பணிபுரிகிறார். இவர் தேசிய அளவில் ஜவஹர்லால் நேரு விருதினை பயிர் நோய்க் கட்டுப்பாடு பிரிவில் முனைவர் பட்டப் படிப்பு ஆராய்ச்சிக்காகப் பெற்றுள்ளார். பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பல ஆராய்ச்சிக் கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். இவர் மு. மு. முஸ்தபாவுடன் சேர்ந்து எழுதிய "“வாழைச் சாகுபடியில் புதிய தொழிநுட்பங்கள்”" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வேளாண்மையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. மு. மு. முஸ்தபா மு. மு. முஸ்தபா என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருச்சிராப்பள்ளி, தாயனூரில் தேசிய விதை ஆராய்ச்சி மையத்தில் இயக்குநராகப் பணிபுரிகிறார். இவர் வாழை அரசன் விருது, கதலி புரஸ்கார் விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பல ஆராய்ச்சிக் கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். இவர் இரா. தங்கவேலுவுடன் சேர்ந்து எழுதிய "“வாழைச் சாகுபடியில் புதிய தொழிநுட்பங்கள்”" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வேளாண்மையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. இரா. கு. ஆல்துரை இரா. கு. ஆல்துரை (பிறப்பு: டிசம்பர் 2 1952) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நீலகிரி மாவட்டம் முத்தோரை அருகிலுள்ள கீழ்கவ்வட்டி எனும் ஊரில் பிறந்தவர். செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தில் சிறப்புநிலைத் தொகுப்பாளராகப் பணியாற்றி வருகிறார். பன்முகப் பார்வையர் பாவாணர், அகரமுதலி வல்லுநர் பாவாணர், அவர்தாம் பாவாணர் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். மொழியியல் சார்ந்த பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் எழுதிய "“படகு - ஒரு திராவிட மொழி”" எனும் நூல் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் எனும் வகைப்பாட்டிலும் "“படகர் அறுவடைத் திருநாள்”" எனும் நூல் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாட்டுப்புறவியல் எனும் வகைப்பாட்டிலும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசுகளைப் பெற்றிருக்கின்றன. அ. விநாயகமூர்த்தி அப்பாத்துரை விநாயகமூர்த்தி ("Appathurai Vinayagamoorthy", டிசம்பர் 19, 1933 - மே 28, 2017) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், வழக்கறிஞரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர். விநாயகமூர்த்தி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினராக இருந்தவர். இக்கட்சியின் தலைவர் குமார் பொன்னம்பலம் 2000 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அக்கட்சியின் தலைவரானார். 2000 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இவர் அக்கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டார். 2001 ஆம் ஆண்டில் குமார் பொன்னம்பலத்தின் மகன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அரசியலில் இறங்கியதும், அக்கட்சியின் தலைமைப்பொறுப்பில் இருந்து விலகினார். 2001 இல் தமிழ்க் காங்கிரசு, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியன இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்றுவித்தனர். 2001 தேர்தலில் ததேகூ சார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவானார். 2004 தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டார். ததேகூ வேட்பாளர்களில் இவர் ஆறாவதாக வந்ததை அடுத்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை. 2010 ஆம் ஆண்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகினார். அத்தோடு தமிழ்க் காங்கிரசும் விலகியது. ஆனாலும், விநாயகமூர்த்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலேயே தொடர்ந்து இருக்கலானார். 2010 தேர்தலில் ததேகூ சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு மீண்டும் நடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.. பூ. மாரி அய்யா பூ. மாரி அய்யா என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தஞ்சாவூர் மாவட்டம், வல்லம், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் விளையாட்டுக் கல்வியியல் துறையில் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். விளையாட்டு, யோகா குறித்து 35க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். வானொலி, தொலைக்காட்சிகளில் விளையாட்டு, யோகா சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளார். இவர் எழுதிய "“அறிந்து கொள்ளுங்கள் - கால்பந்து”" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் விளையாட்டு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. இரா. குமரவேலன் இரா. குமரவேலன் (பிறப்பு: அக்டோபர் 19 1938) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னையில் பிறந்த இவர் சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பன்மொழி அறிவு பெற்றவர். பூங்குன்றன் கவிதைகள், தமிழ் நாடக ஆய்வு, கவிதை நாடகம் - ஒரு கண்ணோட்டம், பொன்னி, தமிழ் நாடக வளர்ச்சி, விடுதலை இயக்கமும் திராவிட இயக்கமும், மணலும் நுரையும் (கலீல் கிப்ரான் - தமிழாக்கம்) என பல நூல்களை எழுதியுள்ளார். கலைமாமணி விருது, நாடகச் செம்மல் விருது போன்ற விருதுகளைப் பெற்றவர். இவர் எழுதிய "“திருக்குறள் - வ. உ. சிதம்பரனார் உரை”" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பிற சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. மொழிக் கூடு மொழிக் கூடு என்பது மொழிப் புத்துயிர்ப்பு மற்றும் கற்றலில் பயன்படும் ஒரு வழிமுறை ஆகும். இது மொழி அமிழ்தல் (language immersion) அணுகுமுறை ஒத்தது, ஆனால் அதை விட கூடுதல் வலுவாக வடிவமைக்கப்பட்டது. இந்த வழிமுறை முதன் முதலில் வெற்றிகரமாக மாவோரி மொழிப் புத்துயிர்ப்பு செயற்திட்டங்களில் பயன்படுத்தப்பட்டது. இதன் பின்னர் இம் முறை அகவாய் மொழிப் புத்துயிர்ப்பின் போதும், தற்போது பிற மொழி புத்துயிர்ப்புத் திட்டங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு மொழிக் கூட்டில் மொழி பேசும் மூத்தோர்கள் குழந்தைகளின் தொடக்க நிலைக் கல்வியில் மொழியை பரிமாறுதலி இலக்காகக் கொண்டு மிக நெருக்கமாக ஈடுபடுவர். மொழி அமிழ்தல் மொழி அமிழ்தல் என்பது ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதற்கான ஒரு வழிமுறை ஆகும். ஒரு மொழியை அது பயன்படும் சூழலில் கூடிய இலகுவாகக் கற்கலாம் என்ற அடிப்படையில் ஒரு மாணவரை அத்தகையை சூழலில் அமிழ்த்தல் மூலம் மொழியைக் கற்றுத்தருவதே இந்த முறையின் அணுகுமுறை ஆகும். மொழி அமிழ்தலின் வடிவமைப்பு பல வகைப்பட்டன. இவற்றில் ஒரு வகை, இலக்கு மொழி ஊடாக அனைத்து பாடக் கல்வியினை மேற்கொள்ளல் ஆகும். இந்த முறையை கனடிய ஆங்கிலேயர்கள் பிரெஞ்சு மொழியைக் கற்க 1960களில் முதலில் பயன்படுத்தினர். இன்னுமொரு வகை, ஒரு மாணவர் மொழி புழங்கும் சூழலுக்குச் சென்று வாழ்ந்து மொழியை கற்றல் ஆகும். இந்த அணுகுமுறை மாணவர் பரிமாற்றத் திட்டங்களில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இம் முறை ஆங்கில மொழிக் கற்பதற்காக கிழக்காசிய நாட்டவர்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. மொழிக் கூடு மொழி அமிழ்தலின் ஒரு நீட்சியாகும். தேபன் கார்டன்ஸ் தேபன் கார்டன்ஸ் (Teban Gardens), சிங்கப்பூரில் உள்ளது. நகரத்தின் மையப் பகுதியில், தேபன் கார்டன்ஸ் உணவகம் அமைந்துள்ளது. சுற்றுப் பகுதியில் குடியிருப்பவர்களுக்கு உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கிறது. ஐயர் ராஜா சமூகக் கூடமும் மூன்று தோட்டங்களும் அமைந்துள்ளன. நீர் விளையாட்டுகள் இங்கு நடைபெறுகின்றன. ஆண்டர்சன் பாலம் ஆண்டர்சன் பாலம், போக்குவரத்து நெரிசலின் காரணமாக, சிங்கப்பூர் ஆற்றின் வடக்கு, தெற்குக் கரைகளை இணைக்கக் கட்டப்பட்ட பாலம் 1994 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 1997 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. நிதி நகரத்தை நகர மண்டபத்துடன் இணைக்கிறது. புல்லர்டன் சிங்கப்பூர், மெர்லியன் பார்க் ஆகியவை அருகில் அமைந்துள்ளன. நவம்பர் 3, 2008 அன்று, நகர மீள்வளர்ச்சிக் குழுவால் பாதுகாப்பு அளிக்க வேண்டிய இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. சிங்கப்பூர் வாகனப் போட்டிகளில் இப்பகுதியும் சேர்க்கப்பட்டுள்ளது. யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதுகள், 2008 யாழ்.இலக்கிய வட்டத்தின் இலங்கை இலக்கியப் பேரவை' 2008,2009 ஆண்டுகளில் நாடு பூராகவும் வெளியாகிய தமிழ் நூல்களை பரிசீலனை செய்து சிறந்த நூல்களுக்கு விருதும், பாராட்டுப் பத்திரமும் வழங்கும் நிகழ்வு ஜூன் மாதம் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு நல்லூர் திருஞானசம்பந்தர் மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு இலங்கை இலக்கிய பேரவைத் தலைவரும் மூத்த இலக்கியவாதியுமான செங்கை ஆழியான் கலாநிதி க.குணராசா தலைமை தாங்கினார். விழாவில் ஆசியுரையை நல்லை ஆதின குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரபரமாச்சாரிய தேசிக சுவாமிகள்,அருட்தந்தை டிக்சன் அடிகளார் ஆகியோர் வழங்கினார்கள். பரிசளிப்பு பேருரையை வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸும் , கவிஞர் ஐயாத்துரை ஞாபகார்த்த விருது வழங்கும் பேருரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த் துறைத்தலைவர் பேராசியர் எஸ்.சிவலிங்கராஜாவும் வழங்கினார்கள்.. சந்திரபானு சந்திரபானு என்பவன் தாய்லாந்து நாட்டு தாமிரலிங்க நாட்டை (ஆட்சி ஆண்டுகள் 1230 - 1263) ஆண்ட அரசனாவான். தென் தாய்லாந்தில் இவன் கட்டிய கோயில் மூலமும் பாண்டியர் கீழ் சில ஆண்டுகள் இலங்கையை ஆண்டதன் மூலமும் அதிகம் அறியப்படுகிறான். மகாவம்சத்தின் படி இவன் தற்போதைய தாய்லாந்து நாட்டின் தாமிரலிங்க அரசை ஆண்ட தமிழ் கடற்கொள்ளையர்களின் தலைவன் ஆவான். இவன் 1247ல் இரண்டாம் பராக்கிரம்மபாகு என்னும் சிங்கள் அரசனை எதிர்த்து தோல்வி அடைந்தான். பின்னர் பாண்டியர் உதவியுடன் சில ஆண்டுகள் வட இலங்கையை ஆண்டு, சில ஆண்டுகள் கழித்து பாண்டிய பேரரசை எதிர்த்தான். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் என்னும் பாண்டிய வேந்தன் தலைமையில் நடந்த போரில் (1262- 1264) இவன் பாண்டியனை எதிர்த்து இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் என்பவனால் கொல்லப்பட்டான். அதன் பிறகு இலங்கையிலுள்ள பாண்டியர் படையை எதிர்க்கும் வேலையும் தாமிரலிங்க அரசும் இவனது மகனான சாவகன் மைந்தன் கீழிருந்தது. இவனுடைய மகனான சாவகன் மைந்தன் (கி.பி. 1255 - 1263) என்பவன் தாய்லாந்து நாட்டு தாமிரலிங்க இளவரசன் ஆவான். இவனது தந்தையான சந்திரபானு தாய்லாந்து நாட்டு தாமிரலிங்க அரசனாயிருந்து பின் 1250களில் பாண்டியர் ஆட்சியின் கீழிருந்த இலங்கையின் மீது படை எடுத்தான். அப்படை எடுப்புக் காலத்தில் தாமிரலிங்கத்தை ஆண்ட இவன் தன் தந்தைக்கு உதவுவதற்கு இலங்கை வந்து அங்குள்ள இரண்டாம் பராக்கிரம பாகு என்ற சிங்கள அரசனால் தோற்கடிக்கப்பட்டான். பின் பாண்டியர் பேரரசனான முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் என்பவனிடம் இவனும் இவன் தந்தையான சந்திரபானுவும் 1258ல் பணிந்து அவனின் கீழ் வடவிலங்கையை ஆண்டனர். அந்த காலத்தில் பாண்டியனுக்கு வரியாக ஆபரணங்களும் யானைகளும் அனுப்பப்பட்டன. இலங்கையின் செல்வ வளத்தை அறிந்த தாமிரலிங்கத்தினர் அதை அடைய எண்ணி பாண்டியப் பேரரசை எதிர்த்து போர் தொடுத்தனர். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் தம்பியான இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் இவர்களை 1262-1264களில் எதிர்கொண்டு சாவகன் தந்தையான சந்திரபானுவைக் கொன்றான். அதை திரிகோணமலையில் பொறித்தும் வைத்தான். அதனால் சாவகன் தன் சேனையுடன் பின்வாங்கி மீண்டும் பாண்டியப் பேரரசை எதிர்க்கத் தருணம் பார்த்திருந்தான். 1270களில் தன் படைவலிமையை அதிகரித்து மீண்டும் பாண்டியர் சேனையுடன் போர் புரிந்து பாண்டியப் பேரரசனான முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் என்பவனால் தோற்கடிக்கப்பட்டான். சாவகர் பாண்டிய அரசின் உதவி பெற்று வடவிலங்கையை ஆண்டு பின் அவர்களின் மேலேயே போர் தொடுத்ததால், சாவகர் மீது நம்பிக்கை இழந்த பாண்டிய அரசு தன் அமைச்சனான குலசேகர சிங்கையாரியன் கீழ் ஆரியச் சக்கரவர்த்திகள் என்ற புதிய யாழ்ப்பாண அரச வம்சத்தை தொடங்கி வடவிலங்கையை ஆள வைத்தது. அதன் பின் சாவகனின் தாய்லாந்து நாட்டு தாமிரலிங்க அரசு மற்ற பக்கத்து அரசுகளால் துண்டாடப்பட்டது. தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1984 தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1984 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 2,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1984 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது. யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதுகள், 2007 யாழ் இலக்கிய வட்டத்தின் 43ஆவது ஆண்டு நிறைவு விழாவும் இலங்கை இலக்கிய பேரவையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழாவும் 2009 மே மாதம்\ பதினேழாம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன மண்டபத்தில் நடைபெற்றது. • கவிதை - இரண்டு கார்த்திகைப் பறவைகள் - எஸ்.புஷ்பானந்தன் • காவியம் - தகுதி நிலையில் எதுவும் கிடைக்கவில்லை • நாடகம் – அரங்கப்படையல்கள் - கலாபூஷணம் க.செல்லத்துரை • சிறுவர் இலக்கியம் - மரம் வெட்டியும் இரு தேவதைகளும் - ஓ.கே.குணநாதன் • சமயம் - வெளிச்சத்தின் வேர்கள் - தமிழ்நேசன் •பல்துறை - பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை - கலாநிதி செ.யோகராசா • மொழிபெயர்ப்பு - பிளேக் கவிதைகள் - வைரமுத்து சுந்தரேசன் சிதம்பர புராணம் சிதம்பர புராணம் என்னும் நூலைப் புராணத் திருமலைநாதர் 1508ஆம் ஆண்டு எழுதிமுடித்தார். இந்த நூலைப் பரஞ்சோதி முனிவர் இயற்றினார் எனக் காட்டும் பதிப்புகளும் உள்ளன இந்த நூலில் 814 பாடல்கள் உள்ளன. காப்புச்செய்யுள், பாயிரம், 9 சருக்கங்கள் என்று இதன் பாகுபாடுகள் அமைந்துள்ளன. இதில் குலோத்துங்க சோழனுக்கும் வணக்கம் சொல்லப்பட்டுள்ளது. இந்தச் சோழன் இரண்டாம் குலோத்துங்கன். இவன் ‘பேரம்பலம் பொன்வேய்ந்த திருநீற்றுச் சோழன் என்று முடிபுனைந்த குலோத்துங்க வளவன்’ எனப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளான். இந்த நூல் சைவ மகா புராணத்தின் பகுதி. 14ஆம் நூற்றாண்டில் முகமதியர் படையெடுப்பால் சைவத்துக்கு நேர்ந்த இன்னல்களுக்குப் பின்னர் பாடப்பட்ட நூல் இது. மறைஞான சம்பந்தர் இயற்றிய சிவதருமோத்தரம், சிவபுண்ணியத் தெளிவு முதலான நூல்களும் இந்தச் சூழலில் தோன்றியவையே. இந்த நூல் மதுரைத் திருஞான சம்பந்தர் ஆதீனப் பதிப்பாக 1856-ல் வெளிவந்துள்ளது. இந்த ஆதீனத்திடம் அன்பு பூண்டிருந்த சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை இதற்கு அச்சுப்பிழை திருத்தி உதவியிருக்கிறார். மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005 யாப்பருங்கல விருத்தி யாப்பருங்கல விருத்தி அல்லது யாப்பருங்கல விருத்தியுரை, அமிர்தசாகரர் எழுதிய யாப்பருங்கலம் நூலுக்கு எழுதப்பட்டுள்ள விரிவுரை. இந்த உரைநூல் எழுதியவர் இன்னார் எனத் தெரியவில்லை. பதிப்புநூல் இந்த உரையைப் பழைய உரை எனப் குறிப்பிடுகிறது. இந்த உரைநூலின் காலம் 11 ஆம் நூற்றாண்டு. இந்த உரை, யாப்பிலக்கணம் பற்றி ஆசிரியர் கூறும் செய்திகளை மட்டும் கூறாமல் அச்செய்திகளோடு தொடர்புள்ள பிறரது செய்திகளையும் ஒப்பிட்டுக் காட்டிக்கொண்டு செல்கிறது. இதன் பயனாக அக்காலத்தில் பயன்பாட்டிலிருந்த பல நூல்களையும், நூலாசிரியர்களையும் அறியமுடிகிறது. தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1985 தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1985 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 2,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1985 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது. பால்வண்ணம் பிள்ளை (சிறுகதை) பால்வண்ணம் பிள்ளை, புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதை. புதுமைப் பித்தனின் சிறுகதைகள் பொழுதுபோக்குப் புனைவு வகையைச் சேர்ந்தவை அல்ல. அவை ஒவ்வொன்றும் சமுதாயப் பிரச்சனைகளை முன்னிறுத்தி அவரது நகைச்சுவையானச் சாடலுடன் அமைந்தவை. இச்சிறுகதையும் ’பால்வண்ணம் பிள்ளை’ என்ற தனி மனிதனிரின் வாழ்க்கையின் சிலநாள் நிகழ்வுகளை அடிப்படைப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. பால்வண்ணம் பிள்ளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர். கையில் மூன்றும் வயிற்றில் ஒன்றுமாக அவரது சந்ததிகள் நான்கு. 35 ரூபாய் மாத வருமானத்துக்காக பயமும் பணிவுமான உழைப்பு. ஆனால் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்று சொல்லக்கூடிய வீண்பிடிவாதத்துடன் அலுவலகத்தில் பசுவாகவும் வீட்டில் ஹிட்லராகவும் இருந்தார். ஒருநாள் அலுவலகத்தில் மெக்சிகோ எங்குள்ளது என்பது குறித்து அவருக்கும் உடன் வேலை பார்க்கும் மற்றொருவருக்குமிடையே ஒரு சின்ன வாக்குவாதம். இவர் தென்னமெரிக்காவில் என்று சொல்ல, மற்றொருவர் புவி வரைபடத்தில் அது வட அமெரிக்காவில் உள்ளது என்றார். வீடு திரும்பிய அவர் வீட்டில் அவர் பள்ளியில் படிக்கும்போது பயன்படுத்திய புவிவரைபடப் புத்தகத்தைத் தேடி எடுத்து தனது கருத்துக்குச் சான்று தேட, அதில் மெக்சிகோ வட அமெரிக்காவில் இருந்தது. அவ்வளவுதான், அவரது கோபம் மனைவியின் மேல் பாய்ந்தது. அந்த சமயம் பார்த்து, குழந்தைகளின் பால் கணக்கு மாதம் நான்கு ரூபாய்க்கு மேல் ஆனதால், ஒரு மாடு வாங்கிவிட்டால் நல்லது என எண்ணிய அவரது மனைவி அவரிடம் மாடு வாங்க சம்மதம் கேட்கப்போக, ”மாடு கீடு வாங்க முடியாது என் புள்ளையெ நீச்சுத்தண்ணியை குடிச்சு வளரும்” என்று சொல்லிவிட்டார். மனது கேட்காத அவரது மனைவி தனது கையில் கிடந்த காப்பை விற்று ஒரு மாடு வாங்கிவிட, பால்வண்ணம் பிள்ளை, தனது வீண் கோபத்தால் அம்மாட்டை என்ன செய்தார் என்பதுதான் கதையின் முடிவு. நடுத்தர மக்களின் வாழ்வின் அவலமும், அறியாமையும். அதன் விளைவும் கேலியான நகைச்சுவையாகச் சொல்லப்பட்டுள்ளது போல மேலோட்டமாகத் தோன்றினாலும் சமுதாய நிலை குறித்த கருத்துக்கள் முன்னிலைப்படுத்தப் படுகின்றன. கதையின் சில பகுதிகள்: லும்பினி பூங்கா லும்பினி பூங்கா ஆந்திரமாநிலம் ஹைதராபாத்தில் ஹுசைன் சாகருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு பூங்கா ஆகும். பிர்லா மந்திர், பிர்லா கோளரங்கம் ஆகியவற்றிற்கு அருகில் அமைந்துள்ள இது ஹைதராபாத் நகரின் சுற்றுலா தலங்களில் முக்கிய இடம் பெறுகிறது. இங்கு உயரமான புத்தர் சிலை, லேசர் அரங்கம் போன்ற பல சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த புத்தர் சிலை தமிழ்நாட்டைச் சேர்ந்த கணபதி சிற்பி அவர்களால் வடிவமைக்கப்பட்டது. 2007 ஆகஸ்ட் 25-ல் இந்த பூங்கா தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளானதில் 44 பேர் கொல்லப்பட்டனர். இந்தியாவின் மின்சாரத்துறை இந்திய மின்சாரத் துறை, 2018 ஜனவரி 31 இன் நிலவரப்படி, 334.40 கிகாவாட் நிறுவனத் திறன் கொன்ட ஒற்றைத் தேசிய மின்கட்டமைப்பாகும். புதுப்பிக்கவல்ல ஆற்றல் மட்டும் மொத்த நிறுவனத் திறனில் 32.2% அளவாக அமைகிறது. நிதியாண்டு 2016-17 இல் இந்திய மின்நிலையங்களால் ஆக்கப்பட்ட மின் ஆற்றல் அளவு 1,236.39 TWh ஆகும். ஆனால், அனைத்து மின்நிலையங்கள் ஆக்கவல்ல மொத்த மின் ஆற்றலின் அளவு 1,433.4 TWh ஆகும். நிதியாண்டு 2016-17 இன் தனியர் ஒருவருக்கான மொத்த நுகர்வு 1,122 kWh ஆகும். இந்தியா மின்னாக்கத்தில் உலகின் மூன்றாம் பெரிய நாடாகும். அதேபோல, இந்தியா மின் நுகர்விலும் உலகின் மூன்றாம் பெரிய நாடாகும். நிதியாண்டு 2015-16 இல் இந்தியாவின் வேளாண்மை மின் நுகர்வு உலக நாடுகள் அனைத்திலும் மிகவும் பேரளவாக (17.89%) அமைந்தது. இந்தியாவில் மின்கட்டணம் குறைவாக இருந்தாலும் தனியருக்கான மின் நுகர்வு உலகின் பல நாடுகளை விட மிகவும் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் மின்னாக்கம் உபரியாக இருந்த போதும் தேவப்படும் அனைத்து மக்களுக்கும் மின்சாரத்தைக் கொண்டுசெல்லும் அகக்கட்டமைப்பு ஏற்பாடு இல்லை. இந்திய மக்கள் அனைவருக்கும் போதுமான மின்சாரம் கிடைக்காத குறையை 2019 மார்ச்சுக்குள் போக்க இந்திய அரசு "அனைவருக்கும் மின்சாரம்" எனும் திட்டத்தைத் தொடங்கியது. இந்தத் திட்டம் தேவையான அகக்கட்டமைப்பை உருவாக்கி தொடர்ந்த, தடங்கல் இல்லாத மின்சாரத்தை அனைத்து வீடுகளுக்கும் தொழிலகங்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் கொன்டுசெல்லும். இது இந்திய அரசும் மாநில அரசுகளும் இந்திய ஒன்றிய பகுதிகளும் இணைந்து தேவையான நிதியைப் பகிர்ந்து ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தை வளர்க்கும் திட்டமாகும். எரிபொருட்களின்படி, இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட திறனளவில், நிலக்கரியால் இயங்கும் மின்நிலையங்களின் பங்கு 58% ஆக உள்ளது. நிலக்கரிக்கு அடுத்தநிலையில் புதுப்பிக்கத்தக்க நீர் மின் ஆற்றல் 19% ஆகவும், பிற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் 32.2% ஆகவும் இயற்கை வளிமம் 7.5% ஆகவும் பங்கு வகிக்கின்றன. இந்திய 2016 ஆம் ஆண்டின் தேசிய மின்சாரத் திட்ட வரைவு 2027 வரை இந்தியாவுக்குப் புதுபிக்கவியலாத மின் நிலையங்கள் தேவையில்லை எனக் கருதுகிறது. ஏனெனில், அப்போதைக்குள் தற்போது கட்டிவரும் 50,025 மெவா நிலக்கரிவழி அனல்மின் நிலையங்களும் 275,000 மெவா புதுபிக்கவல்ல மின் நிலையங்களும் இயக்கத்துக்கு வந்துவிடும் எனக் கூறுகிறது. இந்திய மின்கட்டமைப்பில் ஏற்படும் இழப்பு 2010இல் 32%ஆக இருந்தது. இது உலகின் சராசரியான 15%ஐ விட இருமடங்காகும். இந்த இழப்பிற்கு தொழிற்நுட்பக் காரணங்களன்றி பிற காரணங்களும் உள்ளன. இவற்றில் பிழையான மின்னோட்ட அளவுமானிகளும் மின்திருடலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அரசு இந்த இழப்பினை 2022ஆம் ஆண்டிற்குள் 14.1%ஆக கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளது. கேரளாவில் நடத்தப்பட்ட ஓர் சோதனையோட்டத்தில் பிழையான அளவுமானிகளை மாற்றுவது மூலம் மின்இழப்பை 34% இலிருந்து 29%ஆக குறைக்க முடிந்துள்ளது. மொத்த மின்னாக்க நிறுவனத்திறன் கொள்ளளவு அரசு மின்நிலையங்கள், தனியார் தொழிலக மின்னாக்கம், தனியார் மின்நிலையங்கள் ஆகியவற்றின் நிறுவனத்திறன் கொள்ளளவுகளின் கூட்டலாகும் இங்கு குறிப்பிடும் மொத்த நிறுவனத்திறன் கொள்ளளவு மிகப் பழையவற்றையும் காலாவதியாகி விட்டவற்றையும் கழித்துவரும் மதிப்பாகும். 2017 மார்ச்சு 31 ஆம நாளது வரையிலான (அதாவது, 12 ஆம் ஐந்தாண்டுத் திட்ட முடிவு வரையிலான), புதுப்பிக்கவல்ல மின்னாக்கக் கொள்ளளவு நீங்கலாக, அனல்மின்னாக்கத் திறன் கொள்ளளவு 91,730 மெவா ஆகும். ஆனால் 12 ஆம் ஐந்தாண்டுத், திட்ட இலக்கு 161,403 மெவா ஆகும்.. எனவே, ஏறத்தாழ 70,000 மெவா மின்நிலையங்கள் 2017 மார்ச்சு 31 இல் பல்வேறு கட்டுமானக் கட்டங்களில் உள்ளன. துறைப்பிரிவு வரியாகவும் வகைமை வாரியாகவும் 2017 ஏப்பிரல் 30 ஆம் நாளது வரையிலான மொத்த நிறுவனத்திறன் கீழே வருமாறு. செ. நாகலிங்கம் செல்லப்பா நாகலிங்கம் ("Chellappah Nagalingam" மச, அக்டோபர் 25, 1893 - அக்டோபர் 25, 1958), இலங்கையின் ஒரு முதன்மையான சட்டத்தரணியும், நீதிபதியும் ஆவார். இலங்கை மீயுயர் நீதிமன்றத்தின் ஒரு நீதியரசராக இருந்த அவர், 1954 இல் இலங்கையின் பதில் மகாதேசாதிபதியாகப் பணியாற்றினார். அத்துடன் இலங்கையின் பதில் பிரதம நீதியரசராகவும், பதில் சட்டத்துறைச் செயலாளராகவும், பதில் சட்டமாஅதிபராகவும் பணியாற்றியிருந்தார். அவரே இலங்கையின் மீயுயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் குழாமுக்கு நியமிக்கப்பட்ட முதலாவது இலங்கைத் தமிழரும் ஆவார். நாகலிங்கம் அக்டோபர் 25, 1893 இல் யாழ்ப்பாண மாவட்டத்தில் உரும்பராய் என்ற ஊரில் செல்லப்பா, மீனாட்சி ஆகியோருக்குப் பிறந்தார். இவரது நான்கு சகோதரர்களில் செ. சுந்தரலிங்கம் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். செ. பஞ்சலிங்கம் மருத்துவராகவும், செ. அமிர்தலிங்கம் இலங்கை மீன்பிடித் திணைக்களத்தின் பணிப்பாளராகவும், செ. தியாகலிங்கம் பிரபல வழக்கறிஞராகவும் இருந்தவர்கள். யாழ் பரி யோவான் கல்லூரி, பின்னர் கொழும்பு ரோயல் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற நாகலிங்கம் பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் பயின்று 1917 ஆம் ஆண்டில் வழக்கறிஞர் ஆனார். ஞானம் வைத்திலிங்கம் என்பவரைத் திருமணம் புரிந்த நாகலிங்கத்திற்கு இரன்டு ஆண் பிள்ளைகளும் (யோகலிங்கம், பக்திலிங்கம்), நான்கு பெண்களும் (மகேசுவரி, சர்வேசுவரி, விக்னேசுவரி, நந்தேசுவரி) உள்ளனர். இலங்கை வழக்குரைஞர் கழகத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட நாகலிங்கம் 1937 ஆம் ஆண்டு வரை கொழும்பில் சட்ட வல்லுனராகப் பணியாற்றினார். 1938 இல் கொழும்புக்கான கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1941 முதல் கண்டி மாவட்ட நீதிபதியாகவும், 1946 இல் பதில் சட்டமா அதிபராகவும் பதவியில் இருந்தார். 1946 ஆம் ஆண்டில் மன்னர் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 1947 ஆம் ஆண்டில் பதில் சட்டச் செயலாளராகப் பொறுப்பேற்று இலங்கை அரசாங்க சபையின் அதிகாரபூர்வ உறுப்பினராகவும், அமைச்சரவைப் பதவிக்கு ஒப்பான தகுதியான நீதித்துறைக் குழுமத்திற்கு தலைவராகவும் ஆனார். 1947 இல் மீயுயர் நீதிமன்ற நீதியரசர் ஆனார். இப்பதவியை ஏற்ற முதலாவது தமிழர் இவராவார். பல தடவைகள் இவர் இலங்கையின் பதில் தலைமை நீதிபதியாகப் பதவியில் இருந்திருக்கிறார். 1954 ஆம் ஆண்டில் ஹெர்வால்ட் ராம்ஸ்போத்தம், முதலாம் சோல்பரி பிரபு நாட்டில் இல்லாத போது பதில் மகா தேசாதிபதியாகப் பதவியில் இருந்தார். கொழும்பு இந்துக் கல்லூரியை நிறுவிய "இந்து கல்விக் கழகத்தின்" ஆரம்பகால உறுப்பினராகவும் நாகலிங்கம் சேவையாற்றினார். கபிலர் (திருவள்ளுவமாலைப் பாடல்) கபிலர் என்னும் பெயரில் பல்வேறு காலவகளிங் பல்வேறு புலவர்கள் வாழ்ந்துவந்தனர். அவர்களில் திருவள்ளுவமாலை நூலில் குறிப்பிடப்படும் பாடலைப் பாடிய புலவர் ஒருவர். திருக்குறளின் பெருமைகளைப் போற்றிப் பிற்காலத்தில் சில பாடல்கள் எழுதப்பட்டன. அவற்றையெல்லாம் தொகுத்துத் 'திருவள்ளுவமாலை' என்னும் பெயரில் திருக்குறளின் இணைப்பாகச் சேர்த்து வெளியிட்டுள்ளனர். திருவள்ளுவமாலை நூலின் காலம் கி.பி. 11 ஆம் நூற்றாண்டு. அத் தொகுப்பில் கபிலர் பாடியதாகப் பாடல் ஒன்று வருகிறது. தினையளவு போதாச் சிறுபுன் னீர்நீண்ட பனையளவு காட்டும் படிததான்- மனையளகு வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி திருக்குறள் பனித்துளி போல் சிறியதாயினும், அதில் அடங்கியுள்ள பொருள் பனித்துளிக்குள்ளே நிழலாக அடங்கித் தெரியும் மிகப் பெரிய பனைமரம் போன்றது என்று இந்தப் பாடல் தெரிவிக்கிறது. ஐக்கூ ஐக்கூ அல்லது கைக்கூ அல்லது ஹைக்கூ "(Haiku), " மூன்று வரிகளில் முறையே ஐந்து, ஏழு, ஐந்து அசைகள் என 17 அசைகளைக் கொண்டு அமைக்கப்பெறும் இயைபற்ற ஜப்பானியக் கவிதை வடிவம். ஐக்கூ மிகக்குறைந்த சொற்களைக்கொண்டு நேரடியாகவும் மறைமுகமாவும் அதிக கருத்துக்களை வெளிப்படுத்துகிறது. 17ம் நூற்றாண்டில் "பாசோ" இதனை மேலும் மெருகூட்டப்பட்ட கலையாக உயர்த்தியபோது இவ்வடிவம் தனித்தன்மையடைந்தது. இது ஜப்பானின் மிகப்புகழ் பெற்ற கவிதை வடிவமாக இருந்து வருகிறது. விவரணக்கவிஞர்களும் ஏனையோரும் இதனை ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் பின்பற்றியுள்ளனர். ஜப்பானிய இலக்கிய வரலாற்றின் எடோ காலத்தில்தான் (கி.பி 1603 முதல் 1863 வரை) சீன ஜப்பான் மொழிக் கலவையாக ஐக்கூ கவிதை தோன்றியது. மூன்றே மூன்று அடிகள் 5,7,5 என்ற அசை அமைப்பில் அமைந்தது. ஜப்பானிய இலக்கிய வரலாற்றின் டோக்கியோ காலத்தில் (கி.பி 1863 க்கு அடுத்தது) ஐக்கூ கவிதை பரவலாக அறியப்பட்டு பிரான்சிய மொழி, ஆங்கிலம் எனப் பல மொழிகளில் பரவி தமிழிலும் பரவியது. ஆரம்ப காலத்தில் ஐக்கூ கவிதை ஒக்கூ (hokku, ஃகொக்கூ) என்றே அழைக்கப்பட்டது. பின்னர் ஐகை என்று திரிந்து ஐக்கூ என்றாயிற்று. ஐக்கூ என்றால் "அணுத்தூசி" போன்ற சிறிய கவிதை என்று பொருள் கூறுகின்றனர். இக்கவிதையின் பெயரை ஹொக்கு என்று பாரதியார் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.ஐ+கூ=ஐக்கூ;ஐ=கடுகு;கூ=உலகம் கடுகு போல் சிறிய கவிதை வடிவில் உலகளாவிய கருத்துக்களைச் செறிவுடன் செறித்து வைக்கச் செப்பு போல் இடந்தரும் கவிதை வடிவே ஐக்கூ என்றும் பொருள் கூறுவர். தமிழில் ஐக்கூ கவிதையானது துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்மினிக்கவிதை, வாமனக் கவிதை, அணில் வரிக் கவிதை என்று பலவாறாக அழைக்கப்படுகிறது. ஹைக்கூ கவிதை என்பது முதல் வரியில் 5 அசையையும், இரண்டாவது வரியில் 7 அசையையும், மூன்றாவது வரியில் 5 அசையையும் தாங்கி நிற்கும் மூன்று வரிக் கவிதை. அசை என்னும் சொல் ஆங்கிலத்தில் சிலபிள் (syllable) என்று அழைக்கப்படுகிறது. ஜப்பானிய மொழியில் இதனை ஓன் (音, on)) அல்லது ஓஞ்சி (音字, onji) அழைக்கிறார்கள். இதன் பொருள் ஓர் ஒலித்துகள் (அல்லது அசை). ஆங்கில மொழியியல் துறைக் கலைச்சொல்லில் இதனை "மொரே" (morae) என்கின்றனர். ஜப்பானிய மொழியில் ஒவ்வொரு எழுத்தும் ஓர் அசை என்ற கணக்கில் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. தமிழ் யாப்பிலக்கணத்தில் அசையானது நேரசை, நிரையசை என இருவகைப்படும். ஜப்பானிய மொழியின் ஒஞ்சி என்பது தமிழில் உள்ள நேரசைக்குச் சமம். ஒற்று எழுத்துக்கள் கணக்கில் அடங்கா. (இது ஜப்பானிய மொழிக்கும் தமிழுக்கும் பொருந்தி வரும் விதி!) தொடக்கக் காலத்தில் இந்த 5, 7, 5 என்ற அசை அமைப்பு முறையாக கடைப் பிடிக்கப்பட்டது. காலப் போக்கில் இந்த 5, 7, 5 என்ற அளவுகோலை விட்டுவிட்டார்கள். தமிழ் அசை மரபின் 5, 7, 5 என்ற அசை (நேரசை, நிரையசை) வடிவில் அமைந்த ஐக்கூ கவிதைகளை ஓவியக் கவிஞர் அமுதபாரதி வெளியிட்டார். புத்த மதத்தின் கிளைப் பிரிவான சென் (Zen) தத்துவத்தைப் பரப்புவதற்கு ஒரு நல்ல ஊடகமாக ஐக்கூ கவிதையானது பயன்படுத்தப்பட்டது. ஜப்பானியக் கவிஞர்கள் மோரிடேகே (1473–1549), மற்றும் சோகன் (1465–1553) ஆகியோர் ஐக்கூ கவிதையின் முன்னோடிகள் என்றழைக்கப் படுகிறார்கள். ஐக்கூ முன்னோடிகளை அடுத்து மட்சுவோ பாஸோ (1465–1553), யோசா பூசன் (1716–1784), இசுசா (1763–1827), சிகி (1867–1902) ஆகிய ஐக்கூ நால்வர்கள் தோன்றிப் புகழ் ஈட்டினர். தமிழ் ஐக்கூ அல்லது தமிழ் ஹைக்கூ எனப்படுவது தமிழ் மொழியில் எழுதப்படும் ஹைக்கூ கவிதைகளைக் குறிக்கும். ஹைக்கூக் கவிஞர்கள்:தமிழில் 1980களில் ஹைக்கூக் கவிதைகள் பல எழுதப்பட்டன.அமுதபாரதியின் புள்ளிப் பூக்கள், ஐக்கூ அந்தாதி,அறிவுமதியின் புல்லின் நுனியில் பனித்துளி, ஈரோடு தமிழன்பனின் சூரியப் பிறைகள்,கழனியூரனின் நிரந்தர மின்னல்கள் ஆகியன குறிப்பிடத்தக்கன. மரபுக் கவிதைகளைப் போன்று உறுதியான நெறிமுறைகள் இல்லாததாலும், சிறிய எண்ணிக்கையிலான சொற்களைப் பயன்படுத்தியே எழுத முடியும் என்பதாலும் இக்காலத் தமிழர்கள், குறிப்பாக இணையத்திலும் வார இதழ்களிலும், ஹைக்கூ எழுதுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். உலக அளவில் ஹைக்கூ கவிதைகள் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டாலும் சப்பானில் ஹைக்கூ தந்தை பாஷோவின் ஹைக்கூ கவிதையே ஜென் தத்துவத்தில் எழுதப்பட்ட முதல் ஹைக்கூ என்று கூறலாம். இந்திய மொழிகளில் பலவாக ஹைக்கூ கவிதைகளை பெருவாரியான கவிஞர்கள் எழுதிவந்தாலும் தமிழில் ஹைக்கூ கவிதைகள் முத்திரை பதிக்கின்றன. பல்வேறு பரிமாணங்களில் தமிழ் ஹைக்கூ கவிதைகள் பண்பாடு, கலாச்சாரம், மனிதநேயம், இயற்கை என எழுதப்பட்டு வருகிறது. பல தமிழ் ஹைக்கூ கவிஞர்களின் கவிதைகள் ஆங்கிலம் உட்பட பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. இந்திய மொழிகளில் தமிழ் மொழியில் தான் ஹைக்கூ கவிதை நூல்கள் அதிகம் வந்துள்ளன. 1984 முதல் 2012 வரை சுமார் 450 நூல்கள் வந்துள்ளன. அதே போல் ஹைக்கூவின் கிளை வடிவங்களான சென்ரியு, லிமரைக்கூ. ஹைபுன், லிமர்புன், லிமர்சென்றியு போன்றவைகளும் வந்து கொண்டிருக்கின்றன. பிம்பங்களற்ற தனிமையில் ஒன்றிலொன்று முகம் பார்த்தன சலூன் கண்ணாடிகள் நிரூபிக்க எதுவும் இல்லை நிரூபிக்க எதுவும் இல்லை என்பது 2012 இல் பிரான்சில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு ஆர்.அன்ட்.பி மற்றும் கிப்கொப் தமிழ் இசைத்தட்டு ஆகும். இதனை ரி.எசு புரோட் இசைக்குழு வெளியிட்டுள்ளது. இதில் பதினான்கு பாடல்கள் உள்ளன. ஈ. சரவணபவன் ஈசுவரபாதம் சரவணபவன் ("Eswarapatham Saravanapavan", பிறப்பு: 15 டிசம்பர் 1953) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், பத்திரிகை வெளியீட்டாளரும் ஆவார். சரவணபவன் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் "உதயன்" மற்றும் சுடரொளி பத்திரிகைகளின் நிருவாகப் பணிப்பாளர் ஆவார். சரவணபவன் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். இலங்கை மீயுயர் நீதிமன்றம் இலங்கை மீயுயர் நீதிமன்றம் ("Supreme Court of Sri Lanka") என்பது இலங்கையின் உச்ச நீதிமன்றம் ஆகும். இலங்கையின் அரசியலமைப்பு விவகாரங்களுக்கு இந்த நீதிமன்றமே இறுதி மேன்முறையீட்டு அதிகாரவரம்பைக் கொண்டுள்ளது. இலங்கை மீயுயர் நீதிமன்றம் 1801 ஏப்ரல் 18 ஆம் நாள் பிரித்தானியரால் "மூன்றாம் ஜோர்ஜ் மன்னரின் அரச கட்டளை 1801" இற்கிணங்க நிறுவப்பட்டது. மீயுயர் நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர், மற்றும் ஆறு முதல் 10 வரையிலான நீதியரசர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் இலங்கை சனாதிபதியின் (அரசுத்தலைவர்) பரிந்துரையின் பேரில் அரசியலமைப்புப் பேரவையின் ஒப்புதலின் பிரகாரம் இலங்கை சனாதிபதியினால் நியமிக்கப்படுகின்றனர். கோச்சடையான் தூய சில்வேஸ்திரியார் வாசாப்பு தூய சில்வேஸ்திரியார் வாசாப்பு என்பது ஏப்பிரல் 2012 இல் மன்னாரில் அரங்கேற்றப்பட்ட ஒரு நாட்டுக்கூத்து ஆகும். சந்தான் பாவிலு அவர்கள் எழுதிய இந்த நாட்டுக்கூத்தை முருங்கன் தூய இயாகப்பர் ஆலய சபையினர் அரங்கேற்றினர். "இந்நாடகம் ஒரு இரவு முழுவதும் நடைபெறுகின்ற நிகழ்வாகும். நாடக நெறியாளர்கள், ஒழுங்கமைப்பாளர்கள், நடிகர்கள், வாத்தியக் கருவிகளை இசைப்போர், பிற்பாட்டுக்காரர் என 50 கலைஞர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்." கண்டி அரசன் (கூத்து) கண்டி அரசன் என்பது மே 2012 இல் கொம்மாதுறையில் அரங்கேற்றப்பட்ட ஒரு தென்மோடிக் கூத்து ஆகும். இதனை கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினர் அரங்கேற்றினர். இது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரங்க ஆற்றுகை நிகழ்வின் மூன்றாவது களரியாக அரங்கேற்றப்பட்டது. தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1986 தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1986 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 2,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1986 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது. தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1987 தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1987 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 2,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1987 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது. பொன்னகரம் (சிறுகதை) பொன்னகரம், புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதை. புதுமைப் பித்தனின் சிறுகதைகள் பொழுதுபோக்குப் புனைவு வகையைச் சேர்ந்தவை அல்ல. அவை ஒவ்வொன்றும் சமுதாயப் பிரச்சனைகளை முன்னிறுத்தி அவரது நகைச்சுவையானச் சாடலுடன் அமைந்தவை. இச்சிறுகதையும் அன்றாடம் காய்ச்சியான ’அம்மாளு’, அடிபட்டுக் கிடந்த தன் கணவனின் பால்கஞ்சி சாப்பிடும் ஆசைக்குப் பணம் சம்பாதித்த நிகழ்வைக் கருவாகக் கொண்டுள்ளது. ரயில்பாதையை ஒட்டி அமைந்திருக்கும் ஏழைகளின் ஒரு குடியிருப்புக் பகுதிக்குப் பெயர்தான் இக்கதையின் பொன்னகரம். அங்கு வசித்த பெண்கள் மில்லில் வேலை பார்ப்பவர்கள். அவர்களது அன்றாட வாழ்க்கையே போராட்டம்தான். இக்கதையின் கதாநயகி அம்மாளும் ஒரு மில் தொழிலாளி. அவள் கணவன் முருகேசன் சொந்தமாக ஜட்கா வண்டி (குதிரை வண்டி) வைத்திருப்பவன். அம்மாளு, முருகேசன், அவனது தாயார், அவனது தம்பி, குதிரையென மொத்தம் ஐந்துபேர் கொண்ட குடும்பம் அவர்களுடையது. சாப்பாட்டுச் செலவும் இன்ன பிறவும் இருவருடைய வருமானத்தில் தான். ஒருநாள் முருகேசனும் குதிரையும் குடித்துவிட்டு குஷியில் ரேஸ் விட்டதில் வண்டி கவிழ்ந்து இருவருக்கும் அடிபட்டது. அடிப்பட்ட முருகேசனின் வீக்கத்திற்கு எதையோ அரைத்துப் பூசினாள். முருகேசன் பால்கஞ்சி வேண்டுமென்று கேட்டான். கையிலோ காசில்லை; கூலி போடவும் இன்னும் இரண்டு நாள் ஆளாகும் என்ற நிலையில், புருஷனின் ஆசையை நிறைவேற்ற அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்ததுதான் இக்கதை. அடிமட்டத்து மக்களின் வாழ்வின் அவலமும், அறியாமையும். அதன் விளைவும் கேலியான நகைச்சுவையாகச் சொல்லப்பட்டுள்ளது போல மேலோட்டமாகத் தோன்றினாலும் சமுதாய நிலை குறித்த கருத்துக்கள் முன்னிலைப் படுத்தப்படுகின்றன. கதையின் சில பகுதிகள்: பொன்னகரம்' (1934), அன்றைய மதராஸ் பற்றியது. இக்கதையில் நோயாளி கணவனைப் பசியாற்ற அவன் மனைவி பாலியல் தொழிலில் ஈடுபடுவது பேசப்படுகிறது. இரவில் ஒளி வெள்ளத்தில் மிதக்கும் மதராஸ் பட்டினத்தின் இருண்ட சந்துகளில் கற்பு விலை போவதைப் பற்றிப் பேசும் புதுமைப்பித்தன் கதை முடிவில் ‘என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா பொன்னகரம்!' என்று விளாசுகிறார்! 2014ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் புதுமைப்பித்தனின் "துன்பக்கேணி", "பொன்னகரம்" ஆகிய இரு சிறுகதைகளை தனது பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியது. பல்கலைக்கழக ஆட்சிக்குழு இக்கதைகள் தலித்துகளை இழிவுபடுத்துகின்றன என்று கருதியதால் அவற்றை நீக்கியது. சூ. இன்னாசி சூ. இன்னாசி என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் முதுகலைத் தமிழ்த்துறை உயராய்வு மையத்தின் தலைவராகவும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் கிறித்தவத் தமிழ் இலக்கியத்துறைத் தலைவராகவும், திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.பேச்சாற்றல், எழுத்தாற்றல் மிக்கத் தமிழ்ப் பேராசிரியர், தலைசிறந்த ஆய்வறிஞர், இலக்கணவாதி, சமூகச் சீர்திருத்தவாதி, மொழிபெயர்ப்பாளர் என்ற பன்முகங்கள் சூ. இன்னாசிக்கு உண்டு. அகராதி, இலக்கணம், இலக்கியம், மொழியியல், திறனாய்வு, ஒப்பாய்வு போன்ற பல்துறைப் புலமை சான்ற இவர் எழுதிய "“திருத்தொண்டர் காப்பியம்”" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மரபுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. பதினெண்கீழ்க்கணக்கர் இன்னாசி கவிதைகள் அம்பலத்தாடிகள் கட்சி மாறிகள் சாதிவாதிகள் பட்டங்கட்டிகள் பொழுது போக்கிகள் தேசத்தியாகி நன்கொடை சிக்கனம் உபசாரம் உறவு காட்ட ஒருவன் ஏ ஜோக்ஸ் ஏமாற்றம் ஈயத்தைப்பார்த்து முன்யோசனை ஸ்டூடண்ஸ் ஆர்.. அன்னதானம் அதிர்ச்சி அதிகாரம் காரியமாகத்தான் இருபது காசு டிக்கட் ஓரே வடிவம் கிழிசல் வராதது வந்தது தூறல் நிற்கவில்லை 1.எழுத்தியல் 2.சொல்லியல் 3.இலக்கணச் சிந்தனைகள் 4.சிந்தனைக் களங்கள் (கிறித்துவச் சிந்துப் பாடல்களைப் பற்றி ஒரு கட்டுரையில் பேராசிரியர் விளக்குகிறார்.இக்கட்டுரையின் வாயிலாக விளக்கப்படும் சிந்து நூல்கள்) திரு இரட்சணியச் சிந்து பிளேக் சிந்து பிளேக் நொண்டிச் சிந்து கம்பம் தாத்தப்பன் குளச்சிந்து சல்லிக் கட்டுச்சிந்து புதுக்கால் சிந்து சிலுவைச் சிந்து விதைகிறவன் உவமை நொண்டிச் சிந்து 1.இரட்சணிய சிந்து 2.இலியட் துரை கட்டிடம் 3.இராபர்ட் கால்டு வெல் 4.பார்த்தலோமியோ சீகன் பால்க் 5.சுவாமிகக்கண்ணுப்பிள்ளை எ.டி. 6.சதுரகராதி 7.தனிநாயக அடிகள் 8.விவிலியம் 9.முத்துத்தாண்டவராயன் பிள்ளை 10.தேவியர் ஒழுக்கம் 11.வேத விளக்கம் 1.தேம்பாவணியும் தமிழ் மரபும், 1980 2.கிறித்தவத் தமிழ் இலக்கியப்பணி 1984 3.தவமும் வளனும், 1985 4.இலக்கியப் புதையல் 1989 5.இயேசு பிறப்பு 19990 6.செயல்பாடு 1990 7.யோனாக்கும்மி 1990 8.இயேசு நாதர் சரிதை 1990 9.துமிழில் கருவி நூல்கள் 1990 10.பண்பாட்டுப் பெட்டகம் 1990 11.மனம் 1990 12.வாக்கு 1991 13.காயம் 1991 14.ஒரு குரல் வள்ளுவன் வழி 1991 15.உண்மைப் புகழ் 1991 1.தமிழ் முனிவர் 1972 2.புரட்சிக்கவி 1972 3.வீரமாமுனிவர் உரைத்திறன் 1977 4.தத்துவப் போதகரின் உரைநடைத் திறன்1978 5.தோம்பாவணியும் தமிழ் மரபும் 1980 6.கிறித்தவச் சிந்துப் பாடல்கள் 1984 7.தேம்பாவணியில் அன்னைமரி 1984 8. பத்துக் கட்டுரை 9. தேம்பாவணியில் கீர்த்தனை 10.தமிழியல் கட்டுரை 11.வீரமாமுனிவர் ஆசிரியர் 12.அச்சுக்கலைச் சிக்கல்கள் 13.மொழி பயன்பாடு 14.தேம்பாவணியின் வாழ்க்கைப் பயன்பாடு 15.தமிழ் வரலாறு பண்பாட்டியலில் வைணவம் 16.வீரமாமுனிவரின் இலக்கிய நூல்கள் 17.கிறித்தவ இலக்கியத்தில் ஆராய்ச்சி 18.அகராதியில் பிரபஞ்சத் தொகைக் கோட்பாடு 19.சிலம்பும் வழக்கும் 20.சிந்தாமணியில் திருமணச் சிந்தனைகள் 21.தொல்காப்பியத்தில் ஒரு சொல் 22.பாவேந்தரின் குயில் 23.ஆய்வுத்திட்டமிடல் 24.வீரமாமுனிவரின் இலக்கண நூல்கள் 25.தமிழ் உரைநடை இலக்கியம் அ. வெண்ணிலா அ. வெண்ணிலா என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பிறந்த இவர் “ஆதியில் சொற்கள் இருந்தன”, “நீரிலலையும் முகம்”, “கனவிருந்த கூடு” உள்ளிட்ட ஏழு நூல்களை எழுதியுள்ளார். சென்னை புத்தகக் கண்காட்சி, நெய்வேலி புத்தகக் கண்காட்சிகளில் சிறந்த படைப்பாளி விருது, சிற்பி அறக்கட்டளை விருது, கவிப்பேரரசு - கவிஞர் தின விருது, ஏலாதி இலக்கிய விருது, தமுசெ விருது, சக்தி -2005 விருது போன்றவற்றைப் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய "“கனவைப் போல மரணம்”" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. ப. ஜீவகாருண்யன் ப. ஜீவகாருண்யன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் வசித்து வரும் இவர் எழுதிய "“நதியின் மடியில்”" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. எழில் வரதன் எழில் வரதன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் வசிக்கும் இவர் சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் உள்ளிட்ட ஐந்து நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய "“ஆலமர இடையழகு”" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. கா. மீனாட்சிசுந்தரம் கா. மீனாட்சிசுந்தரம் (11 சூலை 1925 - 18 நவம்பர் 2015) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளக்கிணறு எனும் ஊரில் பிறந்த இவர் தமிழாசிரியராகவும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதன்மை அலுவல் ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ், ஆங்கிலம் மொழிகளில் 18 நூல்களை எழுதியிருக்கிறார். இவர் பல்வேறு பட்டங்களையும், விருதுகளையும் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய "“சிலம்பில் பாத்திரங்களின் பங்கும் பண்பும்”" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் திறனாய்வு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. சாகித்திய அகாதமியின் பாஷா சம்மான் விருது 2013 ஆம் ஆண்டுக்குரிய விருதுக்கு மீனாட்சிசுந்தரம் தேர்வாகியுள்ளார்.பழங்கால, இடைக்கால இலக்கியங்கள் குறித்து இவர் வழங்கிய பங்களிப்புகள், திருக்குறள் பற்றிய இவருடைய கட்டுரைகள், கம்பர் பற்றிய இலக்கியப் படைப்புகள் ஆகியவற்றுக்காக இவ்விருது வழங்கப்படுகிறது என்று 24-06-2015 இல் அறிவிக்கப்பட்டது. மு. சுப்பிரமணி மு. சுப்பிரமணி (பிறப்பு: 1961) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் எனும் ஊரில் பிறந்த இவர் தற்போது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ளார். புதுவை வானொலியில் இவரது கவிதைகள், சிறுகதைகள் ஒலிபரப்பப்பட்டுள்ளன. “திசை எட்டும்” எனும் மொழிபெயர்ப்புக் காலாண்டிதழின் ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர் எழுதிய "“அடோல்ஃப் ஹிட்லரின் வாழ்வும் மரணமும்”" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. தேசிய தொழில்நுட்பக் கழகம் கர்நாடகம் தேசிய தொழில்நுட்பக் கழகம், சுரத்கல் ("National Institute of Technology Karnataka, NITK"), என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மங்களூரில் அமைந்துள்ள அரசுப் பொறியியல், மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகும். இது முன்னர் கர்நாடக மண்டலப் பொறியியல் கல்லூரி (Karnataka Regional Engineering College, KREC) என அழைக்கப்பட்டது. இக்கழகம் மங்களூரிலிருந்து, உடுப்பி செல்லும் NH-17 சாலையில் இருக்கும், சுரத்கல் என்னும் மங்களூரின் புறநகர் பகுதியில் உள்ளது. இக்கழகம் 1960 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. மு. ஸ்ரீனிவாசன் மு. ஸ்ரீனிவாசன் (பிறப்பு: 1929) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருநெல்வேலி மாவட்டம் ஆயக்குடியில் பிறந்த இவர் கல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கத்தின் செயலாளர், துணைத்தலைவர் மற்றும் தலைவராகப் பணியாற்றியுள்ளார். சென்னை, கொல்கத்தா வானொலியில் உரை நிகழ்த்தியுள்ளார். இவர் எழுதிய "கலை வரலாற்றுப் பயணங்கள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பயண இலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. கலிபோர்னியா பல்கலைக்கழகம் (இர்வைன்) கலிபோர்னியா பல்கலைக்கழகம் (இர்வைன்) ("University of California, Irvine") (சுருக்கமாக, யுசிஐ அல்லது க ப இர்வைன்) அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் இர்வைன் நகரில் அமைந்துள்ள ஓர் பொது ஆய்வு பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் 1965 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு ஐந்து நூலகங்கள் உள்ளன. ப்ரென் பள்ளியில் மூன்று பிரிவுகள் உள்ளன - கணிப்பொறி அறிவியல், புள்ளியியல் மற்றும் தகவலியல். இந்தியாவின் மாநிலங்கள் வாரியாகத் தெலுங்கு பேசும் மக்கள் இது 2001 இல் இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் நடுவண் ஆட்சிப்பகுதிகள் சார்ந்த தெலுங்கு மக்கள்தொகை பற்றிய புள்ளிவிவரங்களாகும். மக்கள்தொகை மதிப்பீடு 2001. மொத்த மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் இணையத்தில் உள்ளன. வாக்காளர்கள் அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல் இது மக்களவை தேர்தல்களில் (1951 - 2009) வாக்களித்தோர் அடிப்படையில் இந்தியாவின் மாநில மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் பட்டியலாகும். 2009இல் 71.4 கோடி வாக்காளர்கள் இருந்தாலும் 41.5 கோடி பேர் மட்டுமே வாக்களித்தனர். இமையம் (எழுத்தாளர்) இமையம் என்ற புனைப்பெயரில் எழுதும் வெ. அண்ணாமலை (பிறப்பு: மார்ச் 10, 1964) நன்கறியப்பட்ட தமிழக எழுத்தாளர். தனது முதல் புதினமான "கோவேறு கழுதைகள்" மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானார். 1964 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதியன்று கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், கழுதூரில் பிறந்த இவரது இயற்பெயர் வெ.அண்ணாமலை. இமையம் முதுகலைப் பட்டம் பெற்றுப் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி ச.புஷ்பவள்ளி - முதுநிலை ஆசிரியராக பணியாற்றுகிறார். குழந்தைகள் கதிரவன் மற்றும் தமிழ்ச்செல்வன். தமிழ் நாட்டுக் கிராமங்களுக்குள் நிலவும் மனிதநேயமற்ற வேறுபாடுகளைக் கவனப்படுத்துவதன் மூலம் தனது படைப்புகளில் பொருளாதார, சமூகப் பண்பாட்டுத் தளங்களில் நிலவும் முரண்பாடுகளையும் ஆதிக்கத்தின் குரூரங்களையும் முன் வைக்கிறார். இவை க்ரியா பதிப்பகத்தின் வெளியீடுகள். இமையம் - சிறுகதைகள் அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி (பிறப்பு: 1956) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருப்பூரில் வசித்து வரும் இவர் 10 நூல்கள் வரை எழுதியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளார். இவர் எழுதிய "“தமிழர் தந்தை வ.உ.சிதம்பரனார்”" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. மலையமான் (எழுத்தாளர்) முனைவர் மலையமான் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நா. இராசகோபாலன் எனும் இயற்பெயருடைய இவர் நூலகத்துறையில் பல ஆண்டு காலம் பணியாற்றி இருக்கிறார். சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்குமாக 70 நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய "“பெரும்புகழ் எறும்புகள்”" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கணிதவியல்,வானியல்,இயற்பியல்,வேதியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. உலோ. செந்தமிழ்க்கோதை உலோ. செந்தமிழ்க்கோதை (பிறப்பு: டிசம்பர் 22,1945) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார். திருவள்ளூர் மாவட்டம், புச்சிரெட்டிபள்ளி எனும் ஊரில் பிறந்த இவர் பொறியியல் துறையில் அறிவுநுட்பம் வாய்ந்தவர். கிண்டி பொறியியல் கல்லூரியில் மின் பொறியியல் இளவல் பட்டமும், கோவை பூ. ச. கோ. கல்லூரியில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். மின்வாரியத்தில் 33 ஆண்டுகள் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர். முனைவர் பட்டம் பெற்றவர். தமிழக அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி வரலாற்றில் அக்கறை கொண்டவர். இவர் எழுதிய "“மக்கள் அறிவியல் இலக்கியம் ; நோக்கும் போக்கும்”" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பொறியியல், தொழில்நுட்பம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. அறிவியல் தமிழ் ஆக்கத்தில் கவனம் செலுத்தி வரும் இவர் பல கலைச் சொற்களை உருவாக்கியவர். பொறியியல், அறிவியல், மக்கள் அறிவியல், அறிவியல் வரலாற்று வரைவியல், மெய்யியல், சமூகவியல் ஆகிய துறைகளிலும் கட்டுரை எழுதுபவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அறிவியல், தொழில்நுட்ப ஆய்விதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றிவரும் உலோ. செந்தமிழ்க்கோதை தமிழ் இணையக் கல்விக்கழகம் வெளியிட்ட 14 கலைச்சொல் அகராதி அமைப்பிலும் பங்காற்றியுள்ளார். க. மணிமாறன் க. மணிமாறன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருநெல்வேலியில் வசித்து வரும் இவர் பூமியியல் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருபவர். தாமிரபரணி அச்சன்கோவில் பாறை நகர்வு மண்டல ஆய்விற்காகக் கேரளப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டத்தைப் பெற்றவர். சுனாமி ஆய்வுக் கட்டுரைகளுக்காகத் தமிழ்நாடு அரசின் 2006 ஆம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் விருது பெற்றவர். இவரும் கி. ரேணுகாவும் இணைந்து எழுதிய "“பூகம்ப பூமியைப் புரிந்து வெல்வோம்”" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மானிடவியல், சமூகவியல், புவியில், நிலவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. (இந்த வகைப்பாட்டில் சு. இராசரத்தினம் எழுதிய "பண்பாடு வேரும் விழுதும்" எனும் நூலும் பரிசு பெற்றுள்ளதால் பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்பட்டது) சு. இராசரத்தினம் (கனடா) சு. இராசரத்தினம் (கனடா) என்பவர் ஒரு கனடா எழுத்தாளர். கனடாவில் 19 ஆண்டுகள் சமூக சேவையிலும், தமிழ் மொழி கற்பித்தலிலும் ஈடுபாடு கொண்டு விளங்குபவர். புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் பிள்ளைகளுக்காகப் பல்வேறு பாடநூல்களை எழுதியிருக்கிறார். இவரது “தமிழீழம் நாடும் அரசும்” மக்கள் வரவேற்பைப் பெற்ற நூல். இவர் எழுதிய "“பண்பாடு ; வேரும் விழுதும்”" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மானிடவியல், சமூகவியல், புவியில், நிலவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. (இந்த வகைப்பாட்டில் முனைவர் க. மணிமாறன் , கி. ரேணுகாவிடன் இணைந்து எழுதிய "பண்பாடு வேரும் விழுதும்" எனும் நூலும் பரிசு பெற்றுள்ளதால் பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் விதிகளின்படி, வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் பரிசு பெறும் நிலையில் அவர்களுக்குச் சான்றிதழ் மட்டுமே வழங்கப்பெறும். இதன்படி இவருக்கு சான்றிதழ் மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது.) ஜி. பாலன் ஜி. பாலன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். காஞ்சிபுரத்தில் வசிக்கும் இவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இவர் மருந்தாளுநராக, எழுத்தாளராக, பேராசிரியராக, கல்லூரி முதல்வராகப் பணியாற்றியவர். இவர் டி. தட்சிணாமூர்த்தி என்பவருடன் இணைந்து எழுதிய "“இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சியும் விடுதலை இயக்க வரலாறும்”" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சட்டவியல், அரசியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. டி. தட்சிணாமூர்த்தி டி. தட்சிணாமூர்த்தி என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னையில் வசித்து வரும் இவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இவர் பேராசிரியராகத் தன் பணியைத் தொடங்கித் தற்போது கல்லூரி முதல்வராகப் பணியாற்றி வருகிறார். இவர் ஜி. பாலன் என்பவருடன் இணைந்து எழுதிய "“இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சியும் விடுதலை இயக்க வரலாறும்”" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சட்டவியல், அரசியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. இரா. மாணிக்கவாசகம் இரா. மாணிக்கவாசகம் (பிறப்பு: 1943) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சித்த மருத்துவம் பயின்றவர். திருவருட்பா, திருமந்திர ஆராய்ச்சி மூலம் ஆய்வுப் பட்டம் (முனைவர்) பெற்றவர். சித்தர்கள் பற்றிய 10க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிப் பதிப்பித்தவர். இவர் எழுதிய "மாற்று மருத்துவங்கள் பகுதி 1, 2, 3, 4”" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மருந்தியல், உடலியல், நலவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. கே. ஏ. சிதம்பரகாங்கேயன் கே. ஏ. சிதம்பரகாங்கேயன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். 35 ஆண்டுக் காலமாக மருத்துவப் பணியாற்றி வருகிறார். நாட்டுப்பற்று மிக்கவர். உலக சமாதானத்திற்க்காப் புனிதப் பயணம் மேற்கொண்டவர். நாடி, நரம்பியல் மருத்துவத்தில் புகழ் பெற்றவர். இவர் எழுதிய "“உயிர்காக்கும் சித்த மருத்துவம்”" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. க. விநாயகம் க. விநாயகம் (பிறப்பு: 1951) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர் திண்டிவனம், மயிலம் கல்லூரியில் 33 ஆண்டுகள் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றியவர். 15க்கும் அதிகமான நூல்களையும், பற்பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய "“மாணிக்கவாசகரும் சிவப்பிரகாசரும்”" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமயம், ஆன்மீகம், அளவையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. சு. வசந்தி சு. வசந்தி என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கல்வியியல் கல்லூரி ஒன்றில் முதல்வராகப் பணியாற்றி வருகிறார். பொதுத்தொண்டில் ஈடுபாடுடையவர். ஒருங்கிணைந்த கல்வி, சிறப்புக் கல்வி, பெண் கல்வி போன்ற துறைகளில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். “நெருப்பில் பூத்த மலர்” எனும் நூலைப் படைத்துள்ளார். இவர் முனைவர் பி. இரத்தினசபாபதியுடன் சேர்ந்து எழுதிய "“கற்பித்தலில் புதிய அணுகுமுறை ( வரலாறு )”" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கல்வியியல், உளவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. பி. இரத்தினசபாபதி பி. இரத்தினசபாபதி (பிறப்பு: 1941) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் பிறந்த இவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். இவர் தமிழிலக்கியம், தமிழ் மருத்துவம் தொடர்பாக 15க்கும் அதிகமான நூல்களை எழுதியிருக்கிறார். தமிழ்ப் பாடநூல் குழுக்களில் தலைமையேற்றுள்ளார். இவர் முனைவர் சு. வசந்தியுடன் சேர்ந்து எழுதிய "“கற்பித்தலில் புதிய அணுகுமுறை ( வரலாறு )”" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கல்வியியல், உளவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. இரா. பசுமைக்குமார் இரா. பசுமைக்குமார் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் போன்றவற்றின் விழிப்புணர்வுப் பணிக்கான சாதனையாளர் விருது பெற்றவர். சிறந்த கவிஞர், பத்திரிகையாளர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். 15க்கும் அதிகமான நூல்களை எழுதியிருக்கிறார். இவர் எழுதிய "“தமிழகச் சுற்றுச் சூழல்”" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சுற்றுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. ஆறு. இராமநாதன் ஆறு. இராமநாதன் (பிறப்பு: ஆகஸ்ட் 3, 1950) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கடலூர் மாவட்டம் மஞ்சக் கொல்லையில் பிறந்த இவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இவர் நாட்டுப்புறவியல் துறைப் பேராசிரியர், மொழிப்புலத் தலைவர், தஞ்சாவூர், தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் பதிப்புத்துறை இயக்குநர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். பன்னாட்டு மாநாடுகள், கருத்தரங்குகள், செயலரங்குகள் போன்றவற்றில் பங்கேற்றிருப்பதுடன் அவற்றை பொறுப்பேற்று நடத்தவும் செய்திருக்கிறார். 34க்கும் அதிகமான நூல்களை எழுதியிருக்கிறார். இவர் எழுதிய "“தமிழர் வழிபாட்டு மரபுகள்”" எனும் நூல் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாட்டுப்புறவியல் எனும் வகைப்பாட்டிலும், இவர் எழுதிய "“தமிழர் கலை இலக்கிய மரபுகள்”" எனும் நூல் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாட்டுப்புறவியல் எனும் வகைப்பாட்டிலும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசினைப் பெற்றிருக்கின்றன. கே. ஜி. இராதா மணாளன் கே. ஜி. இராதா மணாளன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகேயுள்ள கண்டிநல்லூரில் பிறந்தவர். சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். எழுத்தாளர், பத்திரிகையாளர். மாலைமணி, சுதந்திர நாடு, நவ இந்தியா, எங்கள் நாடு போன்ற பல நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியவர். 25க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய "“திராவிட இயக்க வரலாறு”" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பிற சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. சாமுவேல் பால்ராஜ் சாமுவேல் பால்ராஜ் (பிறப்பு: 1951) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கன்னியாகுமரி மாவட்டத்தில் முத்தலகுறிச்சியில் பிறந்தவர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கழிவுச் சுழற்சித் துறையின் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். பல்வேறு கருத்தரங்குகளை நடத்தியுள்ள இவர் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். இவர் முனைவர் வெ. சுந்தரராஜ் என்பவருடன் சேர்ந்து எழுதிய "“ஜெட்ரோஃபா சாகுபடியும் பயோ டீசலும்”" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வேளாண்மையியல், கால்நடையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. வெ. சுந்தரராஜ் வெ. சுந்தரராஜ் (பிறப்பு: 1943) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுநராகப் பணியைத் தொடங்கியவர். முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர் பேராசிரியராக, ஆராய்ச்சி இயக்குநராக, கல்லூரி முதல்வராகப் பணியாற்றியவர். பல்வேறு கருத்தரங்குகளை நடத்தியுள்ளார். மீன், இறால் வளர்ப்புகளில் ஆராய்ச்சிச் சொற்பொழிவாற்றியதுடன் அறிவியல் விரிவாக்கக் கட்டுரைகளையும், ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், அறிவியல் நூல்களையும் எழுதியுள்ளார். இவர் முனைவர் சாமுவேல் பால்ராஜ் என்பவருடன் சேர்ந்து எழுதிய "“ஜெட்ரோஃபா சாகுபடியும் பயோ டீசலும்”" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வேளாண்மையியல், கால்நடையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. பெரிய நீலாவணை பெரியநீலாவணை கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் வடக்கு எல்லையில் அமைந்து உள்ள ஒரு தமிழ்க் கிராமம் ஆகும். நான்கு கிராம சேவகர் பிரிவுகள் இங்கே காணப்படுகின்றன. அம்பாறை மாவட்டத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் இடையிலான எல்லையில் ஏ-4 நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. எல்கின் சலவைக்கற்கள் எல்கின் சலவைக்கற்கள் (Elgin Marbles) என்பன, அதென்சின் அக்குரோபோலிசில் உள்ள பார்த்தினனிலும் பிற கட்டிடங்களிலும் இருந்து கழற்றி எடுக்கப்பட்ட ஒரு தொகுதி செந்நெறிக்காலக் கிரேக்கச் சிற்பங்கள், கல்வெட்டுக்கள், கட்டிடக் கூறுகள் போன்றவற்றைக் குறிக்கும். எல்கினின் ஏழாவது ஏர்ல், தாமசு புரூசு, 1799க்கும் 1803க்கும் இடைப்பட்ட காலத்தில் ஓட்டோமான் பேரரசில் பிரித்தானியாவுக்கான தூதராக இருந்தார். இவர் பார்த்தினனில் இருந்து கூறுகளைக் கழற்றி எடுப்பதற்கான சர்ச்சைக்கு உரிய அனுமதி ஒன்றை ஓட்டோமான் அதிகாரிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டார். 1801 ஆம் ஆண்டுக்கும் 1812 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் எல்கினின் முகவர்கள், பார்த்தினனில் அக்காலத்தில் எஞ்சியிருந்தவற்றில் அரைப்பங்களவு சிற்பங்களைக் கழற்றி எடுத்தனர். அத்துடன் புரொப்பிலாயா, இரெக்தியம் ஆகிய கட்டிடங்களிலிருந்தும் கட்டிடக் கூறுகளை அகற்றினர். இவை பின்னர் கடல் வழியாகப் பிரித்தானியாவுக்கு அனுப்பப்பட்டன. பிரித்தானியாவில் இப்பொருட்களை பெற்றுக்கொண்டதற்குச் சிலர் ஆதரவு தெரிவித்தனர். வேறு சிலர், என்கினின் நடவடிக்கை கலையழிப்புக்கு அல்லது கொள்ளைக்குஒப்பானது எனக் கண்டனம் தெரிவித்தனர். பிரித்தானிய நாடாளுமன்றில் நிகழ்ந்த பொது விவாதம் ஒன்றைத் தொடர்ந்து எல்கின் குற்றம் அற்றவர் எனத் தீர்மானிக்கபட்டதுடன், 1816 ஆம் ஆண்டில் இப் பொருட்களை பிரித்தானிய அரசாங்கம் எல்கினிடம் இருந்து விலைக்கு வாங்கிப் பிரித்தானிய அருங்காட்சியகத்துக்கு வழங்கியது. இப்பொருட்கள் இப்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் இதற்கொனக் கட்டப்பட்ட டுவீன் காட்சியகத்தில் உள்ளன. இவை அங்கேயே இருக்கலாமா அல்லது அதென்சுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டுமா என்பது தொடர்பில் இன்னும் விவாதம் நடந்துகொண்டுதான் உள்ளது. சித்தர் ஆருடம் சித்தர் ஆருடம் என்னும் நூலை நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார். சீவக சிந்தாமணி பதுமையார் இலம்பகம், பாடல் 122 சித்தர் ஒருவர் 13 ஆம் நூற்றாண்டில் எழுதிய நூல் இது. இது பாம்பு பற்றிய நூல். பதுமை என்பவளைப் பாம்பு கடித்துவிட்டது. நஞ்சு ஏறிய பதுமையின் உடலில் நாறும் மணத்தை வைத்துக்கொண்டு இது எந்த இன நாகம் எனச் சீவகன் அறிந்து கூறுகிறான். சித்தர் ஆருடப்படி இவன் கணித்தான் என்று நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார். நஞ்சு ஏறிய உடம்பிலிருந்து காய்ச்சும் ஆவின்பால் மணம் வருமாயின் தீண்டியது அந்தண நாகம். நந்தியாவிட்டைப் பூ நாற்றம் வரின் அரசநாகம், தாழைமலர் மணம் வந்தால் தீண்டியது வணிக நாகம், அரிதார மணம் வந்தால் தீண்டியது வேளாண்நாகம் - இப்படிச் சித்தர் ஆருடம் கூறுவதாக அவர் குறிப்பிடுகிறார். இந்த நூல் 312 நொண்டிச்சிந்து பாடலால் அமைந்துள்ளது. 5 பாடல் மட்டும் விருத்தம். இதன் ஆசிரியர் கௌசிக முனிவர். இவர் தம்மைப் தாமரைப் பொகுட்டில் உள்ள பிரம்மாவின் மகன் எனக் கூறிக்கொள்கிறார். பாம்பின் பிறப்பு, வளர்ச்சி, வகைகள், நஞ்சு, நஞ்சை முறிக்கும் மருந்து முதலானவை இந்த நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. நச்சினார்க்கினியர் கூறுகிறபடி இந்த நூல் பாம்பின் வகைகளைக் கூறுகிறது. நாவி என்னும் கஸ்தூரி மணம் வீசிவது அந்தணர்குல வகை. செந்தாழம் பூ மணம் அரசர்குல வகை. பாதிரிப்பூ மணம் வீசுவது வைசியர்குல வகை. இலுப்பைப்பூ மணம் வீசுவது சூத்திரர் வகை. யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதுகள், 2006 இலங்கை இலக்கிய பேரவையின்" 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான விருதுகள் யாழ் இலக்கிய வட்டத்தின்"' ஆதரவில் 2009 மே 17 இல் நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீன மண்டபத்தில் வழங்கப்பட்டன. இலக்கியப் பேரவையினால் சிறந்த நூல்களாக பரிசுக்குரியதாக தெரிவு செய்யப்பட்ட நூல்களின் விபரங்கள் வருமாறு: ஓம் சக்தி (திரைப்படம்) ஓம் சக்தி இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜயகாந்த், மேனகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 12-மே-1982. வெப்டாவ் வெப்டாவ் (WebDAV) என்று சுருக்கமாக அறியப்படும் வலையூடாகப் பரம்பிய ஆக்கமும் பதிப்பிடுதலும் (Web Distributed Authoring and Versioning (WebDAV) ) என்பது எச்.ரி.ரி.பி நெறிமுறையின் ஒரு நீட்சி ஆகும். இது வலை வழங்கிகளில் சேமிக்கப்படும் கோப்புக்களை பயனர்கள் தொகுக்கவும் மேலாண்மை செய்யவும் ஏதுவாக்கின்றது. வலையை வாசிப்பதற்கு மட்டும் இல்லாமல் எழுதுவதற்கும் பயன்படுத்த இந்த நெறிமுறை உதவுகிறது. தாரிக் இப்னு சியாத் தாரிக் இப்னு சியாத் ("Tariq ibn Ziyad", அரபு: طارق بن زياد), இறப்பு 720) பொ.கா. 711-718 இல் விசுகோத்திய எசுப்பானியா மீதான இசுலாமியப் படைகளின் வெற்றிக்கு வழி நடத்திய ஒரு முஸ்லிம், பர்பர் தளபதி ஆவார். ஐபீரியத் தீபகற்பத்தின் வரலாற்றிலேயே மிக முக்கியமான படைத்தளபதியாக அவர் கருதப்படுகிறார். உமையா கலீபா முதலாம் அல்வலீதின் கட்டளைப்படி, மொரோக்கோவின் வடகரையிலிருந்து பெரும் படையொன்றை வழிநடத்திச் சென்ற அவர், அதனைத் தற்போது ஜிப்ரோல்டர் எனக் குறிப்பிடப்படும் பெரும் மலையின் அடிவாரத்தில் குவித்தார். "ஜிப்ரோல்டர்" எனும் பெயர், இவரது பெயரைக் குறிக்குமுகமாக "தாரிக்கின் மலை" எனப் பொருள் படும் அரபு மொழிப் பெயரான "ஜபல் தாரிக்" (جبل طارق) என்பதன் எசுப்பானிய மருவலாகும். தாரிக் இப்னு சியாதின் தோற்றம் (குடும்பம்) அல்லது தேசியம் பற்றிப் பெரும்பாலான நடுக்காலத்திய வரலாற்றாளர்கள் மிகக் குறைந்தளவு தகவல்களையே வழங்குகின்றனர் அல்லது அறவே வழங்குவதில்லை. இப்னு அப்துல் ஹக்கம், இப்னுல் அதீர், அத்தபரீ, இப்னு கல்தூன் போன்றோர் இவரது பிறப்புப் பற்றி எதுவுமே கூறுவதில்லை. அதனையே தற்கால ஆக்கங்களான "இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்", "கேம்பிரிஜ் இஸ்லாமிய வரலாறு" எனபனவும் பின்பற்றுகின்றன. இவரது காலத்திலிருந்து 400 - 500 ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்ட ஆக்கங்கள் இவரது பின்னணி பற்றி வித்தியாசமான தரவுகளையே தருகின்றன. அவையாவன: அரபு மற்றும் எசுப்பானிய வரலாற்றாசிரியர் பலரும் இவர் ஓர் அடிமையாக இருந்தார் என்பதை ஏற்றுக் கொள்கின்றனர். அதாவது, இப்ரீகியாவின் (வட ஆபிரிக்கா), அமீர் மூசா இப்னு நுசைர் இவருக்கு விடுதலையளித்துத் தனது படையில் தளபதியாகவும் நியமித்தார். எனினும், சில நூற்றாண்டுகள் கழித்து இவரது வழிவாறுகள் இவர் ஒருபோதும் மூசாவின் அடிமையாக இருக்கவில்லையெனக் கூறி அதனை நிராகரித்தனர். இவரைப் பற்றிய மிக முந்திய குறிப்பு இலத்தீன் மொழியில் பொ.கா. 754 இல் எழுதப்பட்ட "மொசரப் வரலாற்றேட்டில்" காணப்படுகிறது. அது எசுப்பானிய வெற்றி நிகழ்ந்த காலத்திலேயே எழுதப்பட்டதாயினும், இவரது பெயரை "தாரிக் அபூசரா" எனத் தவறாகக் குறிப்பிடுகிறது. எப்படியாயினும், தாரிக்கின் பெயர் ஓர் இளம் அடிமைப் பெண்ணாகிய "உம்மு ஹக்கீம்" என்பவருடன் பொதுவாகத் தொடர்பு படுத்தப்படுகிறது. அப்பெண்ணும் இவருடன் எசுப்பானியாவை அடைந்தார் எனக் கூறப்படுகிறது; எனினும் அவர்களின் உறவின் தன்மை எதுவென்பதில் தெளிவில்லை. பொ.கா. 710-711 இல் தஞ்சா வெற்றி கொள்ளப்பட்ட பின்னர், அதன் ஆளுநராக தாரிக் இப்னு சியாதை மூசா இப்னு நுசைர் நியமித்தார். எனினும் விசிகோத்தியர்களின் புற எல்லைக் காவலரணான செயூத்தா, ஜூலியன் என்னும் தலைவனின் ஆணையின் கீழிருந்தது. எசுப்பானியாவில் ரொடரிக்கு ஆட்சிக்கு வந்த பின்னர், அப்போதைய மரபின் படி ஜூலியன் தன் மகளை விசிகோத்திய அரசவையிற் கல்வி பெற அனுப்பி வைத்தான். அப்போது ரொடரிக்கு அவளைக் கற்பழித்தமையினால் வெஞ்சினமுற்ற ஜூலியன், விசிகோத்திய அரசை இல்லாதொழிக்க அரபியருடன் ஒப்பந்தம் செய்து கொண்டான் எனக் கூறப்படுகிறது. அப்போது அவன் எசுப்பானியப் பெருநிலப் பரப்பில் தனக்கிருந்த கோட்டைகள் மற்றும் தன் வசமிருந்த வணிகக் கப்பல்களைப் பயன்படுத்தி முஸ்லிம் படையை ஜிப்ரோல்டர் நீரிணையைத் தாண்டிச் சென்று எசுப்பானியப் பெருநிலப் பரப்பில் இறக்குவதற்கு (மூசா கைரவான் நகருக்குத் திரும்பிச் சென்றிருந்த வேளையில்) தாரிக்குடன் ஒப்பந்தம் செய்து கொண்டான். இவ்வொப்பந்தம் மூசாவினால் அங்கீகரிக்கப்பட்டது. பொ.கா. 711 ஏப்ரல் 29 அளவில், அண்மையிலேயே இஸ்லாத்தைத் தழுவியோரைக் கொண்டிருந்த தாரிக்கின் படை ஜூலியனால் ஜிப்ரோல்டரில் இறக்கி விடப்பட்டது ("ஜிப்ரோல்டர்" எனும் பெயர் அரபு மொழியில் "தாரிக்கின் மலை" எனப் பொருள் படும் "ஜபல் தாரிக்" என்பதிலிருந்து தோன்றியதே). தாரிக்கின் படை 7000 பேரைக் கொண்டிருந்ததுடன், மூசாவினால் மேலும் 5000 பேர் கொண்ட உதவிப்படை அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக ரொடரிக்கு 100,000 பேர் கொண்ட படையைத் திரட்டினான். இவ்வெண்ணிக்கை வித்தியாசப்படலாம். ரொடரிக்கின் படையிற் பெரும் பகுதி அவனாற் படுமோசமாகப் பதவியிறக்கப்பட்ட விட்டிசா என்பவனின் மகன்மாரின் தலைமையிலும் அவர்களுக்கு நம்பகமானோராலுமே வழிநடத்தப்பட்டது. அத்துடன் அவர்கள் மிக முக்கியமான வேளையிற் பின்வாங்கிச் செல்வதாக தாரிக்குடன் அந்தரங்கமாக ஒப்பந்தம் செய்திருந்தனர். இது நிகழந்த பின்னர், விசிகோத்திய அரசனான ரொடரிக்கு அவ்வாண்டு ஜூலை 19 ஆம் நாள் குவாடலேட்டு போரில் கொல்லப்பட்டதுடன், தாரிக் இப்னு சியாத் மிகப் பெரும் வெற்றியடைந்தார். ஜூலியனின் அறிவுரையின் பேரில், தன்னுடைய படையைச் சிறு சிறு பிரிவுகளாகப் பிரித்து குர்துபா, கிரனடா மற்றும் ஏனைய இடங்களைக் கைப்பற்றுவதற்காக அனுப்பிய தாரிக், தான் ஏற்கனவே கைப்பற்றியிருந்த தொலடோவிலும் குவாடலஜாராவிலும் நிலை கொண்டிருந்த படைகளுக்குத் தலைமை தாங்கி நின்றார். ஓராண்டுக்குப் பின்னர் மூசா வந்து சேரும் வரையில் தாரிக் உண்மையிலேயே எசுப்பானியாவின் ஆளுநராக இருந்தார். பொ.கா. 714 இல் திமிஷ்கு நகருக்கு வருமாறு தாரிக், மூசா ஆகிய இருவருக்கும் அப்போதைய உமையா கலீபா முதலாம் அல்-வலீத் ஆணையிட்டார். அதன் பின்னர் இவ்விருவரும் அங்கேயே தம் இறுதி நாட்கள் வரை வாழ்ந்தனர். எசுப்பானிய வெற்றியைப் பற்றி எழுதியுள்ள அரபு வரலாற்று நூல்கள் பலவற்றிலும் தாரிக் இப்னு சியாத் மற்றும் மூசா இப்னு நுசைர் ஆகியோருக்கிடையிலான உறவு பற்றிக் குறிப்பான வேறுபாடுகள் காணப்படுகின்றன. தன்னால் விடுதலை செய்யப்பட்ட அடிமை ஒரு நாட்டையே வெற்றி கொண்டான் என்பதில் மூசா பொறாமையும் சினமும் கொண்டிருந்ததாக அவற்றிற் சில குறிப்பிடுகின்றன. எனினும், அவ்வாறான தீய நிகழ்வுகள் எதுவுமே நடைபெற்றதாக ஏனைய வரலாற்றேடுகள் குறிப்பிடவில்லை. இதைப் பற்றி ஆக மோசமாகக் குறிப்பிடும் அரபு வரலாற்றேடு இப்னு அப்துல் ஹகம் என்பவரால் (9 ஆம் நூற்றாண்டில்) எழுதப்பட்டதாகும். தாரிக்கின் மீது வெஞ்சினமுற்றிருந்த மூசா, தாரிக்கைச் சிறையில் அடைத்ததாகவும், பின்னர் தாரிக்கைக் கொன்று விடப் போகையில் கலீபா அல்-வலீதினால் விடுதலை செய்யப்பட்ட அடிமையாகிய முகீத் அர்-ரூமி என்பவரின் தலையீட்டினால் அது தவிர்க்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே தாரிக்கும் மூசாவும் கலீபாவினால் திமிஷ்கு நகருக்கு அழைக்கப்பட்டனர் என்றும் குறி்பபிடுகிறது. அத்துடன் 11 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "அக்பார் மஜ்மூஆ" என்னும் நூலில், மூசா எசுப்பானியாவுக்கு வந்து சேர்ந்த போது அவரை கண்ணியப்படுத்தும் வகையில் தாரிக் தன் குதிரையிலிருந்து இறங்கியதாகவும், அப்போது மூசா தன்னுடைய குதிரையின் சவுக்கால் தாரிக்கின் தலையில் அடித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மற்றொரு முற்கால வரலாற்றாசிரியரான அல்-பலாதுரீ (9 ஆம் நூற்றாண்டு), மூசா தாரிக்கிற்கு ஒரு "கடுமையான மடல்" எழுதியதாகவும், பின்னர் இருவரும் சமரசம் செய்து கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். தாரிக்குக்கும் மூசாவுக்கும் இடையிலான பகைமையைப் பற்றிக் கூறப்படும் மிகப் பரவலான கதையொன்று சுலைமான் நபி அவர்களுக்குச் சொந்தமாயிருந்ததாகக் கூறப்படும் ஒரு சிறந்த தளபாடம் பற்றியதாகும். தங்கத்தினால் வார்க்கப்பட்டும், விலைமதிக்க முடியாதளவு பெறுமதி மிக்க நன் மணிகளால் அலங்கரிக்கப்பட்டும் இருந்த அது இஸ்லாமியர்களுக்கு முன்னர் எசுப்பானிய விசிகோத்தியர்களின் வசம் இருந்ததாகக் கூறப்படுகிறது. ரொடரிக்கின் மருமக்களில் ஒருவன் சரணடைந்த பின்னர், தாரிக் அம்மேசைக்கு உரித்தாளியானார். அது மூசாவினால் தவறிழைக்கப்படலாம் என அஞ்சிய தாரிக் அதன் கால்களில் ஒன்றை அகற்றிவிட்டு, பெறுமதி குறைந்த பொருட்களினால் அப்பகுதியை மீளமைத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அம்மேசை மூசாவின் கொள்ளைப் பொருட்களுடன் சேர்க்கப்பட்டு திமிஷ்கு நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ்விருவரும் கலீபாவிடம் வந்து சேர்ந்த போது, தானே அம்மேசையைப் பெற்றுக் கொண்டதாகக் கூறி அதனை மூசா கலீபாவிடம் காட்டினார். அப்போது தாரிக் அதன் பெறுமதி குறைந்த காலை கலீபாவிடம் சுட்டிக் காட்டினார். அதற்கு மூசா கூறிய விளக்கம், தான் அதனைப் பெற்றுக் கொண்ட போது அது அப்படித்தான் இருந்தது என்பதாகும். அதன் பின்னர், தாரிக் அதன் உண்மையான காலைச் சமர்ப்பித்த போது, அது மூசாவிற்குச் சினமேற்படுத்தியது. எப்படியாயினும் மேற்படி கதை எதையும் கூறாமல், வெறுமனே "மேசை கலீபாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது" என்கிறார் அல்-பலாதுரீ. வீரபத்ர சிங் வீரபத்ர சிங் ("Virbhadra Singh", பிறப்பு:சூன் 23, 1934) தற்போதைய இமாச்சலப் பிரதேச மாநில முதலமைச்சரும் காங்கிரசு அரசியல்வாதியும் ஆவார். இமாச்சலப் பிரதேச முதல்வராக, 1983 முதல் 1990 வரையும், 1993 முதல் 1998 வரையும் 2003 முதல் 2007 வரையும் முன்னதாகப் பொறுப்பாற்றி உள்ளார். நடுவண் அரசிலும் பல்வேறு துறைகளில் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். 1962, 1967, 1972, 1980 மற்றும் 2009களில் மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். வீரபத்ர சிங் இராசபுத்திர குடும்பமொன்றில் சிம்லா மாவட்டத்தில் உள்ள சாரஹானில் சூன் 23,1934இல் பிறந்தார். புசாகிர் மன்னரான சேர் பதம் சிங்கிற்கு வாரிசாகப் பிறந்து 1947ஆம் ஆண்டில், தமது 13வது அகவையில், சமத்தானத்தின் மன்னராக பதவி ஏற்றார். சிங் தெகராடூனில் உள்ள கேனல் பிரவுன் கேம்பிரிட்ஜ் பள்ளியிலும் சிம்லாவிலுள்ள பிஷப் காட்டன் பள்ளியிலும் பயின்றார். பின்னர் தில்லியில் உள்ள செயின்ட் இசுடீபன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சூன் 2, 1954இல் இளவரசி இரத்னகுமாரியை திருமணம் புரிந்தார்.இவர்களுக்கு ஒரு மகனும் ஐந்து மகள்களும் பிறந்தனர். 1985இல் பிரதிபா சிங்கை மணந்து ஒரு மகனையும் மகளையும் பெற்றுள்ளார். குளக்கட்டாகுறிச்சி குளக்கட்டாகுறிச்சி (ஆங்கிலம் : ) இது இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோயில் வட்டம், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊர் ஆகும். ஈசுவரமுனி ஈசுவரமுனி என்பவர் வைணவ சமய ஆச்சாரியார். நாதமுனிகளின் மகன். ஆளவந்தாரின் தந்தை. நாதமுனிகள் இறக்குமுன் வைணவ மறையெழுத்து மந்திரத்தை ஓம் நமோ நாராயணாய தன் மாணவர்களான குறுக்கைக் காவலப்பன், உய்யக்கொண்டார் ஆகியோருக்குச் சொல்லிவைத்தார். தன் மகனாகிய ஈசுவர முனிக்குச் சொல்லவில்லை. ஈசுவரமுனி திருமந்திரத் திருவருள் பெறத் தகுதி இல்லாதவர் எனத் தந்தை கருதினார் போலும். ஈசுவரமுனி தமது தந்தைக்கும் முன்பே இளமையிலேயே இறந்தார். ஈசுவரமுனி செய்த தனியன் பாடல் நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழிக்கு உகந்த தனியனாக நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூலில் இடம் பெற்றுள்ளது. அது: இமாச்சலப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல் இந்தியாவின், இமாச்சலப் பிரதேச மாநில முதலமைச்சர்களின் பட்டியல்: தென் அமெரிக்காவின் சோழர்கள் (ஆராய்ச்சி நூல்) தென் அமெரிக்காவின் சோழர்கள் என்பது மீ. மனோகரன் என்பவரால் எழுதப்பட்ட சோழர் மற்றும் தென் அமெரிக்க இன்கா மன்னர்களுக்கும் உள்ள ஒப்புமைகளை ஆய்ந்து சோழர் வழித்தோன்றல்களே இன்கா மக்கள் என்று வாதிடும் தமிழாய்வு நூலாகும். இந்நூலின் படி முதல் மற்றும் இறுதி அத்தியாயங்கள் தவிர்த்து மற்ற ஐந்து அத்தியாயங்களும் சோழர்களும் இன்காக்களும் ஒரே இனத்தவர்களே என்று வரலாற்று ரீதியாக நிறுவ முற்படுகிறது. அந்த அத்தியாயங்களும் உட்தலைப்புகளும், வணங்காமுடி வணங்காமுடி என்ற பெயரில் உள்ள கட்டுரைகள்: 2012 தில்லி கும்பல்-வல்லுறவு வழக்கு 2012 தில்லி கும்பல்-வன்புணர்வு வழக்கு என்பது தில்லியில் இயங்குனர் மருத்துவம் பயிலும் மாணவி ஆறு நபர்களால் பேருந்து ஒன்றில் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதைக் குறிக்கிறது. அவரும் அவரது ஆண் நண்பரும் திரைப்படம் பார்த்துவிட்டு இரவு 9.30 மணியளவில் வீடு திரும்பும் போது இந்நிகழ்வு நடந்தது. இது திசம்பர் 16, 2012 அன்று தில்லியில் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் டாமினி, நிர்பயா, அமானத் எனும் புனைப்பெயர்களால் குறிக்கப்பட்டார்.. செயற்கைச் சுவாச எந்திர உதவியுடன் இருந்த அவர், மிகவும் ஆபத்தானக் கட்டத்தில் 2012 டிசம்பர் 26 அன்று சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். சிகிச்சை பலனளிக்காத நிலையில் 2012 டிசம்பர் 29 அன்று உயிரிழந்தார். இவரின் பெயர் சோதி சிங் என்று இவரது தாய் 2015 டிசம்பர் 16 அன்று கூறினார். இச்சம்பவம் எதிர்த்து நாடு முழுவதும் மக்கள் தெருக்களில் போராட்டங்களை நடத்தினர். தில்லியில் குடியரசு மாளிகை அருகில் நடைபெற்ற போராட்டத்தைக் கட்டுப்படுத்த வஜ்ரா வாகனத்தைக் கொண்டு போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. கண்ணீர்புகை குண்டுகளும் உபயோகிக்கப்பட்டன. இச்சம்பவத்தில் காவல்துறைக் காவலர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இப்பாலியல் வன்முறைக்குப் பிறகு கற்பழிப்பு வழக்குகளில் அதிகபட்ச தண்டனையான மரண தன்டனை வழங்கவேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின. என்ற ஆறு நபர்களும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். 11 மார்ச் 2013இல் ராம்சிங் திகார் சிறையில் தூக்குமாட்டி இறந்துவிட்டார். 31 ஆகத்து 2013 அன்று இளம் குற்றவாளிக்கு தண்டனை கிடைத்தது, 13 செப்டம்பர் 2013 அன்று மற்ற நால்வருக்கும் தூக்கு தண்டனை கிடைத்தது. 2014 மார்ச்-ஜீன் மாதம் மேல்முறையீடு செய்ததில் தூக்குதண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தில்லி காவல்துறை கூற்றுப்படி ராம்சிங்கும் இளம் குற்றவாளியும் ஜோதி சிங்கை மிக மோசமாக தாக்கினார்கள். வல்லுறவில் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்த இளம் குற்றவாளி மூன்று ஆண்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் தண்டனையாக இருந்தார். இளம் குற்றவாளிகள்(18 வயதுக்கு குறைவானவர்கள்) 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற முடியாது. குற்றம் நடந்த போது இவருக்கு 18 வயது முடியவில்லை. 2015 டிசம்பர் 20 ஞாயிறு அன்று விடுதலை செய்யப்பட்டார். பின் அவரின் பாதுகாப்பு கருதி அரசு சாரா அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டார். சிங்கப்பூரிலுள்ள மருத்துவமனையில் அந்த மாணவிக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடலில் முக்கிய உறுப்புகள், மூளை செயல் இழந்ததை அடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 29 டிச 2012 அன்று இந்திய நேரப்படி அதிகாலை 2.15 மணிக்கு அந்த மாணவியின் உயிர் பிரிந்தது. குற்றம் நடக்கும் போது 17 வயது உடையவர் சிறுவனாக கருதப்பட்டு 3 ஆண்டுகள் சீர்திருத்தப்பள்ளியில் இருக்கும்படி தண்டனை அளிக்கப்பட்டார். சிறுவர்கள் குற்றம் செய்தால் 3 ஆண்டுகள் என்பது தான் அதிகபட்ச தண்டனைஇராம் சிங் சிறையிலேயே தூக்கிட்டுக்கொண்டார் . தில்லி விரைவு உயர்நீதி மன்றத்தில் நடந்த வழக்கில் நால்வர் (முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா) தூக்கு தண்டனை பெற்றனர், பேருந்து உதவியாளர் அக்சய் குமார் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டார் .சில செய்தி தளங்கள் அக்சய் குமாருக்கும் தூக்கு தண்டனை கிடைத்தன என்கின்றன.அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 4 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து, தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர் . அந்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், 2015-ஆம் ஆண்டு 4 பேரின் தூக்கை உறுதிப்படுத்தியது.இதையடுத்து, நால்வரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு சென்றனர். அங்கு சுமார் ஓராண்டு காலமாக நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர். பானுமதி மற்றும் அசோக் பூஷண் அமர்வு இவ்வழக்கை விசாரித்தது . இறுதியாக 5 , மே 2017 இல் , தீர்ப்பு வழங்கப்பட்டது.அரிதினும் அரிதான வழக்காக இது கருதப்பட்டு தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது . இவரைப்பற்றி பிபிசி இந்தியாவின் மகள் (India's Daughter) என்ற பெயரில் ஓர் ஆவணப்படம் தயாரித்தது. லெசுலி உட்வின் என்பவர் இப்படத்தை எடுத்தார். அவர் குற்றவாளி ஒருவருடன் (முகேஷ் சிங்) எடுத்த பேட்டி மூலம் குற்றவாளியின் எண்ணமும் இதில் பதியப்பட்டுள்ளது. மற்ற குற்றவாளிகளுடனும் இவர் பேசி இவ்வாவணப்படத்தை தயாரித்துள்ளார். இவ்வாவணத்தை என்டிடிவி காட்டுவதாக இருந்தது. இந்தியா இவ்வாவணப்படத்தை தடை செய்துவிட்டது. ஆனால் இந்தியா தவிர மற்ற நாடுகளில் பிபிசு இவ்வாவணப்படத்தை ஓளிபரப்பியது. குற்றவாளிகள் வசித்த சேரிப்பகுதியில் இவ்வாவணப்படம் தனி நபரால் காட்டப்பட்டது. 2014இல் மாநில சுற்றுலா மந்திரிகள் மாநாட்டில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இதை 'ஒரு சிறிய சம்பவம்‘ என்றும், இதனால் சுற்றுலாப் பயணிகள் வராததால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது என்றும் கூறினார். பட்டணத்து ராஜாக்கள் பட்டணத்து ராஜாக்கள் இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜயகாந்த், சில்க் ஸ்மிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 05-மார்ச்-1982. தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2005 தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் ஆண்டுதோறும் 31 வகைப்பாடுகளின் கீழ் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 2005 ஆம் ஆண்டிற்காகப் பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 10,000 பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ், நூலை வெளியிட்ட பதிப்பகத்திற்கு ரூபாய் 2,000 மற்றும் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 2005 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது. குறிப்புகள் தாய் மூகாம்பிகை (திரைப்படம்) தாய் மூகாம்பிகை இயக்குனர் கே. சங்கர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கார்த்திக், சரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 09-சூலை-1982. யூதா பர்சபா யூதா பர்சபா என்பவர் புதிய ஏற்பாட்டில் காணப்படும் நபர் ஆவார். திருத்தூதர் பணிகள் 15:22இன் படி, எருசலேமில் இருந்த ஆதி கிறித்தவர்களிடையே முதன்மை இடம் பெற்றிருந்ததால் இவரையும் சீலாவையும், பவுலேடும் பர்னபாவோடும் அந்தியோக்கியாவுக்கு எருசலேம் சங்கத்தின் முடிவுகளை எடுத்துரைக்க கடிதம் கொடுத்து அனுப்பினர். திருத்தூதர் பணிகள் 15:32இன் படி இவரும் சீலாவும் இறைவாக்கினர்கள் எனவும் அதனால் அவர்கள் அங்கிருத்த கிறித்தவகளோடு அதிகம் பேசி ஊக்கமூட்டி அவர்களை உறுதிப்படுத்தினர் எனவும் குறிக்கின்றது. தி. ச. சாமண்டிதாசு தி. ச. சாமண்டிதாசு (பிறப்பு: 1936) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தேனி மாவட்டம் கோம்பை எனும் ஊரில் வசித்து வரும் இவர் தஞ்சை கரந்தைக் கல்லூரியில் புலவர் பட்டமும், அடுத்து இளங்கலை, முதுகலை, கல்வியியல் பட்டங்களைப் பெற்று, தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பொதுத்தொண்டில் ஆர்வலரான இவர் எழுதிய தமிழ்க் கட்டுரைக் கோவை எனும் நூல் எட்டு பதிப்புகள் அச்சிடப்பெற்று விற்பனையாகியுள்ளன. இவர் எழுதிய ""ஏலக்காயைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளலாமே"" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வேளாண்மையியல், கால்நடையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. எம். ராமச்சந்திரன் எம். ராமச்சந்திரன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தேனி மாவட்டம் சின்னமனூர் எனும் ஊரில் பிறந்து சென்னையில் வசித்து வரும் இவர் அரசியல், தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், ஆசிரியர் பயிற்சி, வங்கியாளர்களுக்கான பட்டமும் பெற்றவர். சென்னை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் 30 ஆண்டுகள் பணியாற்றி தலைமை அதிகாரியாக பணி நிறைவு பெற்றவர். “ஏற்றுமதி செய்து பணம் குவிப்பது எப்படி”” எனும் தலைப்பில் பல நகரங்களில் கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த ஆ. ப. ஜெ. அப்துல்கலாம் அவர்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய ""காசோலைகள்"" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பொருளியல், வணிகவியல், மேலாண்மை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. வாழ்வே மாயம் (திரைப்படம்) வாழ்வே மாயம் இயக்குனர் ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கிய தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 26-ஜனவரி-1982. அபூர்வ சகோதரிகள் அபூர்வ சகோதரிகள் இயக்குனர் ஆர். தியாகராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ராதா, சுஹாசினி, ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 04- நவம்பர்-1983. என் ஆசை உன்னோடு தான் என் ஆசை உன்னோடு தான் இயக்குனர் கே.நாராயணன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரேம், பூர்ணிமா ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 30-செப்டம்பர்-1983. ==வெளி இணைப்புகள்== என்னைப் பார் என் அழகைப் பார் என்னைப் பார் என் அழகைப் பார் இயக்குனர் என். எஸ். மணியம் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ஜெய்சங்கர், ஜெயமாலினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 19-ஆகத்து-1983. இன்று நீ நாளை நான் இன்று நீ நாளை நான் இயக்குனர் மேஜர் சுந்தரராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சிவகுமார், லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 12- ஆகத்து-1983. கண் சிவந்தால் மண் சிவக்கும் கண் சிவந்தால் மண் சிவக்கும் ("Kann Sivanthaal Mann Sivakkum") இயக்குனர் ஸ்ரீதர்ராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ராஜேஷ், பூர்ணிமா ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 04, மார்ச்சு 1983 ஆகும். இத்திரைப்படத்திற்கு 1983 ம் ஆண்டு சிறந்த அறிமுக இயக்குனரின் முதல் திரைப்படத்திற்கான இந்திராகாந்தி விருது வழங்கப்பட்டது. பாயும் புலி (1983 திரைப்படம்) பாயும் புலி இயக்குனர் எஸ். பி. முத்துராமன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரஜினிகாந்த், ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14- சனவரி-1983 . சட்டம் (திரைப்படம்) சட்டம் இயக்குனர் கே.விஜயன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கமல்ஹாசன், மாதவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 21-மே-1983. தங்க மகன் (1983 திரைப்படம்) தங்கமகன் இயக்குனர் ஏ. ஜெகந்நாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரஜினிகாந்த், பூர்ணிமா ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 04-நவம்பர்-1983. துடிக்கும் கரங்கள் துடிக்கும் கரங்கள் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரஜினிகாந்த், ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 04-மார்ச்சு-1983. அர்த்தமுள்ள ஆசைகள் அர்த்தமுள்ள ஆசைகள் இயக்குனர் பாபு மகாராஜா இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கார்த்திக், அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 27-செப்டம்பர்-1985. அவன் (1985 திரைப்படம்) அவன் இயக்குனர் சோழராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் அர்ஜூன், இளவரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 12-அக்டோபர்-1985. பந்தம் (திரைப்படம்) பந்தம் இயக்குனர் கே. விஜயன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சிவாஜி கணேசன், ஜெய்சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 26-சனவரி-1985. சாவி (திரைப்படம்) சாவி இயக்குனர் கார்த்திக் ரகுநாத் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சத்யராஜ், சரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 10-அக்டோபர்-1985. மூக்கணாங்கயிறு (திரைப்படம்) மூக்கணாங்கயிறு இயக்குனர் சி. சுப்பையா இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கார்த்திக், விஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 22-பிப்ரவரி-1985. நேர்மை (திரைப்படம்) நேர்மை இயக்குனர் ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரபு, ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 03-மே-1985. ஊஞ்சலாடும் உறவுகள் ஊஞ்சலாடும் உறவுகள் இயக்குனர் பரதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சக்கரவர்த்தி மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 12-சூலை-1985. சமயபுரத்தாளே சாட்சி சமயபுரத்தாளே சாட்சி இயக்குனர் எஸ். ஜெகதீசன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ராஜேஷ், நளினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கே. வி. மகேந்திரன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 11-நவம்பர்-1985. வேலி (திரைப்படம்) வேலி இயக்குனர் துரை இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ராஜேஷ், சரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 27-சூலை-1985. படிக்காதவன் (1985 திரைப்படம்) படிக்காதவன் இயக்குனர் ராஜசேகர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரஜினிகாந்த், அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 06-நவம்பர்-1985. குடும்பப்படம் விதிவசத்தால் தங்கள் அண்ணனை விட்டுப் பிரிகின்றனர் இரு தம்பிகள். ஒரு பெரியவரால் தத்து எடுக்கப்படும் அச்சிறுவர்கள் அவரின் பாதுகாப்பில் வளர்கின்றனர். இளைய அண்ணண் டாக்ஸி ஓட்டுனர் ஆகிறார். அவரின் கடின உழைப்பில் தம்பியைப் படிக்க வைக்கிறார். அண்ணனின் உழைப்பை மறந்து ஊதாரியாகவும் படிப்பில் அக்கறை இல்லாமலும் இருக்கிறார் தம்பி. அவரின் சதியால் ஒரு கொலை வழக்கில் சிக்குகிறார் இளைய அண்ணன். அந்த கொலை வழக்கை விசாரிக்கும் நீதிபதி தான் மூத்த அண்ணன். வழக்கின் முடிவு என்ன, பிரிந்த அண்ணன் தம்பிகள் இணைந்தார்களா என்பதே படத்தின் கதை. இத்திரைப்படம் அண்ணன் தம்பியின் பாசப் பிணைப்பைக் காட்டும் குடும்பச் சித்திரம் ஆகும். பூவே பூச்சூடவா பூவே பூச்சூடவா இயக்குனர் பாசில் இயக்கிய தமிழ்த் திரைப்படம். 1985 ஆம் ஆண்டு வெளியாகிய இந்தத் திரைப்படத்தில் பத்மினி, நதியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. சாட்சி (திரைப்படம்) சாட்சி இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜயகாந்த், விஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 16-செப்டம்பர்-1983. ஜோதி மலர் ஜோதி மலர் இயக்குனர் ராம நாராயணன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சுரேஷ், நளினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 27-சூன்-1986 . கைதியின் தீர்ப்பு கைதியின் தீர்ப்பு இயக்குனர் விஜயபாரதி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ஜெய்சங்கர், ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ராமானுஜம் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 30-மே-1986. கண்ணே கனியமுதே கண்ணே கனியமுதே இயக்குனர் கண்ணன் சக்தி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரகுமான், அமலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 07-சூன்-1986. குங்கும பொட்டு குங்கும பொட்டு இயக்குனர் ஆர். ரஞ்சித் குமார் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரஞ்சித்குமார், சரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 19-பிப்ரவரி-1986. மச்சக்காரன் மச்சக்காரன் இயக்குனர் ராஜ்பரத் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் தியாகராஜன், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 28-மார்ச்சு-1986. மருமகள் (1986 திரைப்படம்) மருமகள் இயக்குனர் கார்த்திக் ரகுநாத் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சுரேஷ், ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சந்திரபோஸ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 26-சனவரி-1986. முரட்டு கரங்கள் முரட்டு கரங்கள் இயக்குனர் ராஜசேகர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் தியாகராஜன், சுலோக்ஷனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 10-சனவரி-1986. நானும் ஒரு தொழிலாளி நானும் ஒரு தொழிலாளி இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கமல்ஹாசன், அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 01-மே-1986 . நம்பினார் கெடுவதில்லை நம்பினார் கெடுவதில்லை இயக்குனர் கே. சங்கர் இயக்கிய தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் விஜயகாந்த், ஜெயஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கே. எஸ். விஸ்வநாதன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 23-மே-1986. ரசிகன் ஒரு ரசிகை ரசிகன் ஒரு ரசிகை இயக்குனர் பாலு ஆனந்த் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சத்யராஜ், அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ரவீந்திரன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 21-பிப்ரவரி-1986. ஒளிப்பதிவு இயக்குனர் வேலுபிரபாகரன் ரேவதி (1986 திரைப்படம்) ரேவதி இயக்குனர் சுந்தர்விஜயன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சுரேஷ், ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 30-மே-1986. சிவப்பு மலர்கள் சிவப்பு மலர்கள் இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சுரேஷ், காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 21-நவம்பர்-1986. பதில் சொல்வாள் பத்ரகாளி பதில் சொல்வாள் பத்ரகாளி இயக்குனர் எஸ். ஜெகதீசன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-ஏப்ரல்-1986. அஞ்சாத சிங்கம் அஞ்சாத சிங்கம் இயக்குனர் விஜய் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரபு, நளினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 20-நவம்பர்-1987. கூலிக்காரன் (திரைப்படம்) கூலிக்காரன் இயக்குனர் ராஜசேகர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜயகாந்த், ரூபினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜயகாந்தின் முதல் பிரமாண்டமான இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் டி. ராஜேந்தர் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 04-சூன்-1987. இவர்கள் இந்தியர்கள் இவர்கள் இந்தியர்கள் இயக்குனர் எஸ். ஜெகதீசன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ராமராஜன், லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் மனோஜ் கியான் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 10-சூலை-1987. இவர்கள் வருங்காலத் தூண்கள் இவர்கள் வருங்காலத் தூண்கள் இயக்குனர் வெங்கட் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரபு, அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் டி. ராஜேந்தர் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 21-அக்டோபர்-1987. கதை கதையாம் காரணமாம் கதை கதையாம் காரணமாம் இயக்குனர் ஒய். ஜி. மகேந்திரன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ஒய். ஜி. மகேந்திரன், பல்லவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 18-செப்டம்பர்-1987. காதல் பரிசு (திரைப்படம்) காதல் பரிசு இயக்குனர் ஏ . ஜகந்நாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கமல்ஹாசன், ராதா, அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-சனவரி-1987. பருவ ராகம் பருவ ராகம் இயக்குனர் வி.ரவிச்சந்திரன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் வி.ரவிச்சந்திரன், ஜூஹி சாவ்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ஹம்சலேகா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-சனவரி-1987. சொல்லுவதெல்லாம் உண்மை (1987 திரைப்படம்) சொல்லுவதெல்லாம் உண்மை இயக்குனர் நேதாஜி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜயகாந்த், ரேகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தாயன்பன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 23-சனவரி-1987. வைராக்கியம் (திரைப்படம்) வைராக்கியம் இயக்குனர் கே. விஜயன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரபு, ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் மனோஜ் கியான் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 15-ஆகத்து -1987. விலங்கு (1987 திரைப்படம்) விலங்கு இயக்குனர் ஜெயதேவி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் அருண் பாண்டியன், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ஷியாம் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 27- பிப்ரவரி-1987. வீர பாண்டியன் (1987 திரைப்படம்) வீர பாண்டியன் இயக்குனர் கார்த்திக் ரகுநாத் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜயகாந்த், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-ஏப்ரல்-1987. என் ஜீவன் பாடுது என் ஜீவன் பாடுது இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கார்த்திக், சரண்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 23-சூன்-1988. இரண்டில் ஒன்று இரண்டில் ஒன்று இயக்குனர் வி. அழகப்பன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ராம்கி, நதியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 04-மார்ச்சு-1988. ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாண்டியராஜன் நடித்த இப்படத்தை ஜி. சேகரன் இயக்கினார். இதில் பாண்டியராஜன், பல்லவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜாடிக்கேத்த மூடி ஜாடிக்கேத்த மூடி இயக்குனர் உமேஷ் பிரபாகர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பாண்டியராஜன், அபிநயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ஹம்சலேகா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 09-செப்டம்பர்-1988. திராவிடன் (1989 திரைப்படம்) திராவிடன் இயக்குனர் ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சத்யராஜ், சுபர்ணா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 28-அக்டோபர்-1989. மாப்பிள்ளை (1989 திரைப்படம்) மாப்பிள்ளை இயக்குனர் ராஜசேகர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரஜினிகாந்த், அமலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 28-அக்டோபர்-1989. பொன்மன செல்வன் பொன்மன செல்வன் இயக்குனர் பி. வாசு இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜயகாந்த், ஷோபனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 15-ஆகத்து-1989. பொண்ணு பாக்க போறேன் பொண்ணு பாக்க போறேன் இயக்குனர் என். முருகேஷ் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரபு, சீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் பாக்யராஜ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 22-திசம்பர்-1989. பொறுத்தது போதும் பொறுத்தது போதும் என்பது மு. கருணாநிதி திரைக்கதை, உரையாட எழுத, இயக்குனர் பி. கலைமணி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜயகாந்த், நிரோஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 15-சூலை-1989. புதுமைப்பித்தன் (1998 திரைப்படம்) புதுமைப்பித்தன் இயக்குனர் ஜீவா இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பார்த்திபன், தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 20-அக்டோபர்-1998. தாய்நாடு (1989 திரைப்படம்) தாய்நாடு இயக்குனர் அரவிந்தராஜ் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சத்யராஜ், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர்கள் ஆபாவாணன்மனோஜ் கியான் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 16-பிப்ரவரி-1989. அம்மா பிள்ளை அம்மா பிள்ளை இயக்குனர் ஆர். சி. சக்தி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ராம்கி, சீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 25-மே-1990. ஆரத்தி எடுங்கடி ஆரத்தி எடுங்கடி இயக்குனர் கே. சந்தர்நாத் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரகுமான், குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 28-சூலை-1990. கல்யாண ராசி கல்யாண ராசி இயக்குனர் கே. சிவபிரசாத் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கார்த்திக், ரஞ்சனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் மனோஜ் கியான் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-ஏப்ரல்-1990. மௌனம் சம்மதம் மௌனம் சம்மதம் இயக்குனர் கே. மது இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் மம்முட்டி, அமலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 15-சூன்-1990. பாலைவன பறவைகள் பாலைவன பறவைகள் இயக்குனர் செந்தில்நாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் உதயன், தரணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 15-செப்டம்பர்-1990. மில் தொழிலாளி (1991 திரைப்படம்) மில் தொழிலாளி இயக்குனர் ஏ. ஜெகந்நாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ராமராஜன், ஐஸ்வர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 12-மே-1991. நாட்டுக்கு ஒரு நல்லவன் நாட்டுக்கு ஒரு நல்லவன் இயக்குனர் வி. ரவிச்சந்திரன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரஜினிகாந்த், குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ஹம்சலேகா. இத்திரைப்படம் 02-அக்டோபர்-1991 அன்று வெளியானது. சார் ஐ லவ் யூ சார் ஐ லவ் யூ இயக்குனர் ஜி. எம். ரங்கராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சிவகுமார், லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-பிப்ரவரி-1991. வணக்கம் வாத்தியாரே வணக்கம் வாத்தியாரே இயக்குனர் அமீர்ஜான் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கார்த்திக், சரண்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சம்பத் செல்வம் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 01-பிப்ரவரி-1991. ஆயுள் கைதி (திரைப்படம்) ஆயுள் கைதி இயக்குனர் கே. சுபாஷ் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரபு, ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 29-சூன்-1991. கஸ்தூரி மஞ்சள் (திரைப்படம்) கஸ்தூரி மஞ்சள் இயக்குனர் ஜே. பி. ராஜாரவி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ஜகதீஷ், ரூபிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 19-பிப்ரவரி-1992. நாடோடிப் பாட்டுக்காரன் நாடோடிப் பாட்டுக்காரன் ("Nadodi Pattukkaran") இயக்குனர் என். கே. விஸ்வநாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கார்த்திக், மோகினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 16-மே-1992. "முட நாயக்குடு" என்ற பெயரில் தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது. கார்த்திக், மோஹினி, ஜெய்சங்கர், மா. நா. நம்பியார், எஸ். எஸ். சந்திரன், ராக்கி, செந்தில், விவேக், சார்லீ, சின்னி ஜெயந்த், தியாகு, மண்ணாங்கட்டி சுப்பிரமணியம், செந்தாமரை, வி. கோபாலகிருஷ்ணன், பீலி சிவம், சுந்தர், கருப்பு சுப்பையா, குள்ளமணி, மாஸ்டர் கண்ணன், மாஸ்டர் அருண், காந்திமதி, விஜயா, பார்வதி, அன்னபூர்ணா, விஜிய சந்திரிகா, தளபதி தினேஷ். சுந்தரம், தேவர் அய்யா, பெரிய மதுரை, சீடன், வடிவேலு, அண்ணாமலை ஆகியோர் ஓர் இசை குழுவாக பணியாற்றி வந்தார். படித்த பட்டதாரியான சுந்தரத்திற்கு வேலை கிடைக்காததால், இசை குழுவில் சேர்ந்து பாடல்கள் பாடி வருமானம் ஈட்டினான். தங்களது குடும்பத்தை விட்டு, கிராமம் கிராமமாக சென்று கச்சேரி நடத்தினர். அவ்வாறாக ஒருநாள், இவர்கள் செல்லும் கிராமம் ஒன்றில், கொள்ளையர்கள் அச்சுறுத்தினர். அவர்களை போலீசில் இசைக் குழுவினர் பிடித்துக் கொடுத்தனர். அதனால், குறைந்த நாட்களிலேயே, அந்த இசைக் குழு மிகவும் பிரபலம் ஆனது. அந்த கிராமத் தலைவரின் மகள் கீதா (மோஹினி) சுந்தரத்தை விரும்பினாள். பின்னர், கீதாவின் காதலை ஏற்றுக்கொண்டான் சுந்தரம். ஆனால், கீதாவின் குடும்பம் அக்காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. கீதா - சுந்தரம் திருமணம் நடந்ததா என்பதே மீதிக் கதையாகும். ஏழு பாடல்களை கொண்ட ஒலித்தொகுப்பு 1992 ஆம் வெளியானது. இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்தார். வாலி, முத்துலிங்கம், கங்கை அமரன், காமராசன், பிறைசூடன், பரிணாமன் ஆகியோர் இப்படத்தின் பாடலாசிரியர்கள் ஆவர். இளையராஜாவின் சில பாடல்களும், இயக்கமும், கார்த்திக்கின் நடிப்பும் நன்றாக இருந்தது என்றும், ஒளிப்பதிவு சுமாராக அமைந்தது என்றும் விமர்சனம் செய்யப்பட்டது. நட்சத்திர நாயகன் நட்சத்திர நாயகன் இயக்குனர் செந்தில்நாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சரத்குமார், ரோகிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 04-திசம்பர்-1992. ஏர்போர்ட் (திரைப்படம்) ஏயாப்போர்ட் () அன்று வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். ஜோஷி இயக்கத்தில் ஜி. பத்மாதேவி இப்படத்தை தயாரித்துள்ளார். இதனை மது பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டது. இப்படத்தில் சத்யராஜ், கௌதமி, எம். ஜி. சோமன், மற்றும் சுசித்ரா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எஸ். பி. வெங்கடேஷ் ஆவார் துருவ நட்சத்திரம் (திரைப்படம்) துருவ நட்சத்திரம் இயக்குனர் ராஜா இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் அர்ஜுன், பல்லவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 15-அக்டோபர்-1993. கோகுலம் (திரைப்படம்) கோகுலம் இயக்குனர் விக்ரமன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் அர்ஜுன், ஜெயராம், பானுப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சிற்பி மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 11-மே-1993. மின்மினி பூச்சிகள் (திரைப்படம்) மின்மினி பூச்சிகள் இயக்குனர் ரகுவியாஸ் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பரத், யுவராணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ஆதித்யன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-ஏப்ரல்-1993. முதல் பாடல் முதல் பாடல் இயக்குனர் அருள்கிருஷ்ணன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் மது,மோனுஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எஸ். ஏ. ராஜ்குமார் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 19-பிப்ரவரி-1993. என் ராஜாங்கம் என் ராஜாங்கம் இயக்குனர் சிராஜ் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ஆனந்த்ராஜ், வினோதினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 18-மார்ச்சு-1994. கண்மணி (திரைப்படம்) கண்மணி () இயக்குனர் ஆர். கே. செல்வமணி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரசாந்த், மோகினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 31-சூலை-1994. பிரியங்கா (திரைப்படம்) பிரியங்கா இயக்குனர் நீலகண்டா இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரபு, ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 27-மே-1994. சிந்துநதிப் பூ சிந்துநதிப் பூ இயக்குனர் செந்தமிழன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரஞ்சித், ராஜகுமாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சௌந்தர்யன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-சனவரி-1994. அவள் போட்ட கோலம் அவள் போட்ட கோலம் இயக்குனர் கே. விஜயன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ராஜேஷ், அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சந்திரபோஸ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 08-ஆகத்து-1995. சந்திரலேகா (1995 திரைப்படம்) சந்திரலேகா இயக்குனர் நம்பிராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜய், வனிதா விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 23-அக்டோபர் -1995. பாட்டு வாத்தியார் பாட்டு வாத்தியார் இயக்குனர் டி. பி. கஜேந்திரன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரமேஷ் அர்விந்த், ரஞ்சிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 22-சூலை-1995. செல்வந்தர் பாண்டியன் (ஜெய்சங்கர்) அவர் வாழும் கிராமத்தின் தலைவர். கடந்த காலத்தில் அக்கிராமத்திற்கு பள்ளிக் கூடம் கட்டித் தந்தவர். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரை காட்டிலும், பாண்டியனின் மகள் தெய்வானைக்கு (ரஞ்சிதா) செல்வாக்கு அதிகம். அவள் கட்டளையின் படி தான் ஆசிரியர்கள் நடந்தனர். அந்த கிராமத்தில் சில கட்டுப்பாடுகள் உண்டு. உள்ளூரில் மட்டும் தான் திருமணத்திற்க்கு பெண் எடுக்க முடியும். கிராமப் பெண்கள் கிராமத்தை தாண்டி வெளியே செல்ல அனுமதி கிடையாது. பாண்டியனின் பள்ளிக் கூடத்தில், இசை கற்றுத்தர, ரமேஷ் (ரமேஷ் அரவிந்த்) நகரத்திலிருந்து வருகிறான். துவக்கத்தில், மாணவர்கள் கற்காமல் ரமேஷை கலாட்டா செய்தாலும், நாளடைவில் மாணவர்களை தன் வசப்படுத்துகிறான் ரமேஷ். அந்நிலையில், கருத்து வேறுபாட்டின் காரணமாக தெய்வானையுடன் மோதல் ஏற்படுகிறது. பின்னர், மோதல், ரகசிய காதலாக மாறுகிறது. அதே சமயம், பாண்டியனின் உறவினர் பேச்சிமுத்து (ரவிகாந்த்) சிறையிலிருந்து ஊர் திரும்புகிறான். கடந்த காலத்தில், ஊர் கட்டுப்பாட்டை மீறி கற்பகமும், வெற்றியும் காதலித்தனர். கிராம மக்களுக்கு தெரிய வந்த உடன், பேச்சிமுத்து வெற்றியை கொன்று சிறை சென்று விடுகிறான். கற்பகம் மனநிலை பாதிக்கப்படுகிறாள். நேரம் பார்த்து பேச்சிமுத்துவை பழி வாங்க காத்திருக்கிறான் கற்பகத்தின் அண்ணன் மாரப்பன். கிராமக் கட்டுப்பாட்டை மீறி வெளியூரைச் சேர்ந்த ரமேஷும், உள்ளூர் தெய்வானையும் காதல் செய்வது மாரப்பனுக்கு தெரியவந்து என்னவானது எனபதே மீதிக் கதையாகும். 8 பாடல்களைக் கொண்ட இசைத் தொகுப்பு 1995 ஆம் ஆண்டு வெளியானது. வாலி, புலமைப்பித்தன், ந. காமராசன், பிறைசூடன், இளையராஜா ஆகியோர் எழுதிய பாடல் வரிகளுக்கு இளையராஜா இசை அமைத்தார். விஷ்ணு (1995 திரைப்படம்) விஷ்ணு இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜய், சங்கவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 17-ஆகத்து-1995. வாரார் சண்டியர் வாரார் சண்டியர் (வர்றாரு சண்டியரு) இயக்குனர் என். கே. விஸ்வநாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரேம், குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.ஜெய்சங்கர், ஆனந்த் ராஜ் (நடிகர்), கே. ஆர். விஜயா, காந்திமதி (நடிகை), Senthil, வெண்ணிற ஆடை மூர்த்தி, சார்லி மற்றும் டி. கே. எஸ். சந்திரன் போன்றோர் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப் படத்தை தரங்கை வி. சுந்தர் மற்றும் தரங்கை வி. சந்திரசேகரன் தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் திசம்பர்-14, 1995. சத்தியமூர்த்தி (பிரேம் மேனன்) அவ்வூரின் ஊராட்சி மன்றத் தலைவனாக இருக்கிறான். அவன் நியாயமற்ற தீர்ப்புகளை அவ்வூர் மக்களுக்கு அளிப்பதோடு அல்லாமல் பயங்கரவாதத்தையும் பரப்புகிறான். அதனால் கிராமவாசிகள் அவனை சண்டியர் என அழைக்கின்றனர். கிராமவாசிகள் அவன் சாக வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால் அவனது தாய் அன்னபூரணி(கே. ஆர். விஜயா) அவன் திருந்தி நல்ல மனிதனாக வேண்டும் என எண்ணுகிறாள். கிராமவாசிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிய மருதுவுடன்(ஆனந்த் ராஜ் (நடிகர்)) சண்டியர் நெருக்கமாக இருக்கிறான். ஒரு நாள் மீனா(குஷ்பூ) சண்டியரின் கிராமத்திற்கு வந்து, சண்டியர் தன்னை ஏற்கனவே திருமணம் செய்து கொண்டதாக கிராம பஞ்சாயத்தில் முறையிடுகிறாள். இதை சண்டியர் மறுக்கிறான். ஆனால் மீனா தொடர்ந்து அக் கிராமத்தாரின் முன்னிலையில் தனது திருமணம் நடக்கவேண்டும் எனப் பல விதங்களில் நிர்பந்திக்கிறாள். சண்டியரின் தாய் அன்னபூரணியும் இதற்கு சம்மதிக்கிறாள். அதனால் சண்டியர் மீனாவை மணந்து கொள்கிறான். திருமணத்திற்குப் பிறகு சண்டியர் கொடுத்த நியாயமற்ற தீர்ப்பினால் தனது தாய் மற்றும் சகோதரி தற்கொலை செய்து கொண்டதால் தான் அவ்வாறு நடந்து கொண்டதாக மீனா சண்டியரிடம் தெரிவிக்கிறாள். சண்டியருக்கு ஒரு சோகமான பின்னணி இருப்பது மீனாவிற்கு தெரிய வருகிறது. சண்டியரின் தந்தை,ஜெய்சங்கர் நிலத் தகறாரில் குடும்ப நண்பனான மூக்கையாவினால் கொல்லப்பட்டார். அது சமயம் கிராமவாசிகளில் ஒருவர் கூட உதவ முன் வரவில்லை. இந்த நிகழ்வை சண்டியரால் மறக்க இயலவில்லை. அதனால் அன்றிலிருந்து கிராமவாசிகளைத் துன்புறுத்துவதை தன் வழக்கமாக்கிக் கொண்டான். இதுவரை சண்டியரைப் பழி வாங்கவேண்டும் என்று எண்ணிய மீனா தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டாள். அவனைத் திருத்தி நல்ல தலைவனாக்க வேண்டும் என முயற்சித்தாள். சண்டியரும் தனது மனைவியின் பேச்சைக் கேட்டு நல்ல மனிதனாகிறான். மூக்கையாவின் மகனாகிய மருது சண்டியரின் சொத்துக்களை அபகரிக்க முயலுகிறான். பிறகு என்ன நடந்தது என்பதே கதையின் முடிவாகிறது. சண்டியர் சத்தியமூர்த்தி - பிரேம் மேனன்
மீனா - குஷ்பூ
சண்டியரின் தந்தை - ஜெய்சங்கர்
மருது - ஆனந்த் ராஜ் (நடிகர்)
அன்னபூரணி - கே. ஆர். விஜயா
சண்முகசுந்தரி - காந்திமதி (நடிகை)
செம்பட்டை - செந்தில்
கணக்குப்பிள்ளை - வெண்ணிற ஆடை மூர்த்தி
சார்லி
மூக்கையா - டி. கே. எஸ். சந்திரன்
மருத்துவர் - ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
குள்ளமணி
காவல்துறை அதிகாரி - கிருஷ்ணமூர்த்தி
ஏ. ஒ. கே. சுந்தர்
கருப்பு சுப்பையா
மீனாவின் தாய் - பிரேமி
விநாயக் ராஜ்
சித்ரகுப்தன்
கையாள் - ராம்
கையாள் - லக்ஷ்மண் இப் படத்திற்கு இசை அமைத்தவர் தேவா. பாடல்களை பிறைசூடன் (கவிஞர்) மற்றும் பொன்னியின் செல்வன் எழுதியுள்ளனர்.
சுபாஷ் (1996 திரைப்படம்) சுபாஷ் இயக்குனர் ஆர். வி. உதயகுமார் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் அர்ஜுன், ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் வித்யாசாகர் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 21-செப்டம்பர்-1996. காலமெல்லாம் காத்திருப்பேன் காலமெல்லாம் காத்திருப்பேன் இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜய், டிம்பிள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-சனவரி-1997. காத்திருந்த காதல் காத்திருந்த காதல் இயக்குனர் விஜேஸ்வரன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் அருண்விஜய், சுவலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சிற்பி மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-சனவரி-1997. தர்மா (1998 திரைப்படம்) தர்மா இயக்குனர் கேயார் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜயகாந்த், ப்ரீத்தா விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 09-சூலை-1998. இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் சுகமே இயக்குனர் ஏ. ஆர். ரமேஷ் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் அப்பாஸ், சங்கவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சிற்பி மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 18-மார்ச்சு-1998. சின்ன ராஜா சின்ன ராஜா இயக்குனர் சித்ரா லட்சுமணன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கார்த்திக், ரோஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 12- பிப்ரவரி-1999. பூ வாசம் பூ வாசம் இயக்குனர் ஸ்ரீபாரதி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் முரளி, நளினி, புஷ்பலதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 19-மார்ச்சு-1999. உய்யக்கொண்டார் உய்யக்கொண்டார் நாதமுனிகளின் மாணாக்கர். இவர் தமது இளமைக் காலத்தில் ஆசிரியருக்குத் தொண்டு செய்வதிலேயே ஆர்வம் கொண்டிருந்தார். இறுதிக் காலத்தில்தான் ஆசிரியரிடம் திருவருள் பாடம் கற்றார். நாதமுனிகள், தன் மகன் ஈசுவரமுனிக்குப் பிறக்கும் குழந்தைக்கு யமுனைத்துறைவன் எனப் பெயர் சூட்டி அருளுரை புகட்டுமாறு உய்யக்கொண்டாரை வேண்டிக்கொண்டார். உய்யக்கொண்டார் தன் இறுதிக்காலத்தில் தனது மாணாக்கர் மணக்கால் நம்பியிடம் அப்பணியை ஒப்படைத்தார். மணக்கால் நம்பி தமது ஆசிரியரின் விருப்பப்படி ஈசுரமுனி மகனுக்கு யமுனைத்துறைவன் என முறைப்படி பெயர் சூட்டித் திருவருள் பாடம் புகட்டினார். யமுனைத்துறைவன், ஆளவந்தார் எனப் பெயர் பெற்றார். 1 2 மணக்கால் நம்பி மணக்கால் நம்பி உய்யக்கொண்டாரின் மாணாக்கர். ஆளவந்தாரின் ஆசிரியர். நாதமுனிகள், தன் மகன் ஈசுவரமுனிக்குப் பிறக்கும் குழந்தைக்கு யமுனைத்துறைவன் எனப் பெயர் சூட்டி திருவருள் புகட்டுமாறு தன் மாணாக்கர் உய்யக்கொண்டாரைக் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் உய்யக்கொண்டாரால் தமது காலத்தில் அதனை நிறைவேற்ற முடியவில்லை. அவர் திருநாடு அலங்கரிக்கும் முன்பு தம் ஆசிரியர் தமக்கு இட்ட பணியைத் தன் மாணாக்கர், மணக்கால் நம்பியிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார். நம்பியும் தனக்களிக்கப்பட்டப் பணியினை நிறைவேற்றினார். மணக்கால் நம்பி குலசேகர ஆழ்வார் இயற்றிய பெருமாள் திருமொழி பாடல்களைப் போற்றி எழுதியுள்ள கட்டளைக் கலித்துறையாலான தனியன் சத்ய பிரகாஷ் சத்ய பிரகாஷ் (மார்ச் 18, 1990 இல் பிறந்தவர்) விஜய் டிவியில் ஒளிபரப்பான இசை திறமை நிகழ்ச்சி, ஏர்டெல் சூப்பர் சிங்கரின் 3 வது பருவத்தில் பங்குபெற்று முதற்பரிசினைப் பெற்றவர். தற்போது இவர் ஒரு இந்தியப் பின்னணிப் பாடகர் ஆவார். நிகில் மேத்யூ நிகில் மேத்யூ (அக்டோபர் 23, 1983 இல் பிறந்தவர்) விஜய் டிவியில் ஒளிபரப்பான இசை திறமை நிகழ்ச்சி, ஏர்டெல் சூப்பர் சிங்கரின் 1 வது பருவத்தில் பங்குபெற்று முதற்பரிசினைப் பெற்றவர். தற்போது இவர் ஒரு இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஆவார். திருக்கண்ணமங்கையாண்டான் திருக்கண்ணமங்கையாண்டான் நாதமுனிகளின் சீடர்களில் ஒருவர். நாச்சியார் திருமொழிக்கு இவர் பாடிய இரண்டு தனியன் பாடல்கள் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூலில் இடம்பெற்றுள்ளன. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தந்த்தில் இடம்பெற்றுள்ள இவரது இருபாடல்களில் ஒன்று நேரிசை வெண்பாவாகவும் மற்றொன்று கட்டளைக் கலித்துறையாகவும் அமைந்துள்ளன. திருக்கண்ணமங்கை இவரது ஊர். நாதமுனிகளின் தமக்கை இவரது மனைவி. இவர் நாதமுனிகளிடம் திருமறையெழுத்துக் காப்பினைப் பெற்றார். தம்மூர்ப் பக்தவச்சலப் பெருமாளுக்குத் துளசிமாலை சாத்தித் தொண்டாற்றி வந்தார். ஒருநாள் வேடர் இருவரின் நாய்கள் சண்டையிட்டுக்கொண்டு இறந்தன. இதன்பொருட்டு வேடர் இருவரும் சண்டையிட்டுக்கொண்டு இறந்தனர். அங்கே வந்த இந்த ஆண்டான் தான் பெருமாளுக்காக இறக்கவேண்டும் என எண்ணிப் பல்லக்கிலிருந்து குதித்து, காலால் நடப்பதைக் கைவிட்டு, கைகளால் தவழ்ந்து, பசுவைப்போல் நீரில் விழுந்து, உடை துறந்து வகுளமரத்தடியில் மௌனியாய் இருந்தாராம். 2011 ஏஜி5 2011 ஏஜி ("2011 AG") என அழைக்கப்படுவது புவிக்கு அருகாக வந்துகொண்டிருக்கும் தூசுத் துகள்களைக் கொண்ட சிறுகோள் ஆகும். இது 140 மீட்டர்கள் (460 அடி) விட்டங் கொண்டதாகக் கணிக்கப்பட்டுள்ளது . ஏற்கனவே எதிர்வுகூறப்பட்டவாறு 2040 ஆம் ஆண்டு இது புவியுடன் மோதும் என்ற கருத்தை நாசா பின்வாங்கிக் கொண்டது. ஆதலால் இது புவிக்கு அருகாக வரும் வான்கற்கள் பற்றி தன்னியக்கமாக ஆய்வுசெய்யும் சென்றி கண்காணிப்பகத்தின் இடர்ப்பட்டியலில் இருந்து 21 டிசம்பர் 2012இல் அகற்றப்பட்டது. இது புவியில் இருந்து 890,000 கிலோமீட்டர் தூரத்தில் புவியைக் கடந்துசெல்லும் என தற்போது தெரிவிக்கப்படுகின்றது. இராசு. பவுன்துரை இராசு. பவுன்துரை (பிறப்பு: ஜனவரி 6, 1953 - மார்ச் 19 2014) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தேனி மாவட்டம் தேவாரம் எனும் ஊரில் பிறந்து தஞ்சாவூரில் தற்போது வசித்து வருகிறார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர் நூற்று முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியவர். ஐம்பதுக்கும் மேற்பட்ட கருத்தரங்குகளை நடத்தியவர். தமிழகப் பாறை ஓவியங்கள், அருங்காட்சியகவியல், கும்பகோணம் மகாமகத் திருவிழா முதலான 11 நூல்களை வெளியிட்டவர். அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, இந்தோனேசியா, சிங்கப்பூர், ஹாங்காங், தென்கொரியா, போர்ச்சுக்கல், இலங்கை போன்ற நாடுகளில் கல்வி மற்றும் ஆய்வுப் பயணங்களை மேற்கொண்டவர். இவர் எழுதிய ""தமிழக ஓவியக்கலை"" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நுண்கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2004 தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் ஆண்டுதோறும் 31 வகைப்பாடுகளின் கீழ் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 2004 ஆம் ஆண்டிற்காகப் பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூ 10,000 மற்றும் சான்றிதழ், நூலை வெளியிட்ட பதிப்பகத்திற்கு ரூ2,000 மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 2004 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது. குறிப்புகள் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் (சிறுகதை) கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதை. புதுமைப் பித்தனின் சிறுகதைகள் பொழுதுபோக்குப் புனைவு வகையைச் சேர்ந்தவை அல்ல. அவை ஒவ்வொன்றும் சமுதாயப் பிரச்சனைகளை முன்னிறுத்தி அவரது நகைச்சுவையானச் சாடலுடன் அமைந்தவை. இச்சிறுகதையும் ’கந்தசாமிப் பிள்ளை’ என்ற தனி மனிதரோடு, கடவுள் ஒருநாள் தங்கி வாழ்ந்த நிகழ்வுகளைப் புனைந்து எழுதப்பட்டுள்ளது. மே. க. ரா. கந்தசாமிப் பிள்ளை அவர்களின் முன் ஒருநாள் கடவுள் (சிவன்) சாதாரண மனிதராகத் தோன்றி, பூலோகத்தைப் பார்க்க வந்ததாகவும் கந்தசாமிப் பிள்ளையின் விருந்தாளியாகச் சிலநாள் தங்கப் போவதாகவும் கூறுகிறார். ஒரு சாதாரண மனிதனாகத் தான் தன்னோடு இருக்க வேண்டும், கடவுள் என்பதைக் காட்டக்கூடாது என்ற நிபந்தனையுடன் கந்தசாமிப் பிள்ளையும் ஒத்துக் கொண்டு தன் வீட்டுக்குக் கடவுளை அழைத்துச் செல்கிறார். வீட்டில் தன் மனைவியிடம் தனது பெரியப்பா எனக் கடவுளை அறிமுகப்படுத்தி வைக்கிறார். கந்தசாமிப் பிள்ளையின் மகள் வள்ளி, தாத்தா, தாத்தாவென பாசமாகக் கடவுளுடன் ஒட்டிக் கொள்கிறாள். அவ்வப்போது கடவுள் தனது சுயநிலைக் காட்டும்போது கந்தசாமிப் பிள்ளை சமயத்தில் தடுத்து விடுகிறார். கடவுளுக்குப் பூலோகத்தில் பிழைப்பு நடத்த சில ஆலோசனைகளைத் தருகிறார். இறுதியில் தானும் தேவியும் சேர்ந்து நடனமாடிப் பிழைக்க ஒத்துக் கொண்ட கடவுளைத் தனக்குத் தெரிந்த நிருத்திய கலாமண்டலி பிரெசிடெண்ட் திவான் பகதூர் பிரகதீசுவர சாஸ்திரிகளிடம் கந்தசாமிப் பிள்ளை அழைத்துச் செல்கிறார். அங்கு திவான் பகதூர், சபைக்கு தேவியின் கறுப்பு நிறம் எடுபடாது என்றும் அவர்களது நடனம் தெருக்கூத்தென்றும் கூறிவிடுகிறார். பூலோகத்தில் தன்னால் வாழ்வது சாத்தியமில்லை என்றுணர்ந்த கடவுள் மறைந்து விடுகிறார். கந்தசாமிப் பிள்ளை நடத்தும் மருத்துவ சஞ்சிகைக்கு அவர் அளித்த ஆயுள் சந்தா 25 ரூபாய் மட்டும் அங்கு இருக்கிறது. இக்கதையில் நடுத்தர மக்களின் வாழ்வின் சாதுர்யமான போராட்டங்களும் கடவுளின் நிலைப்பாடும் கேலியான நகைச்சுவையுடன் சொல்லப்பட்டாலும் சமுதாய நிலை குறித்த கருத்துக்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. கதையில் சில பகுதிகள்: குழந்தை வள்ளியுடன் கடவுள் செத்த காலேஜ், உயிர்காலேஜ் எனச் சுற்றிவிட்டு வந்த பின் கடவுளுக்கும் கந்தசாமிப் பிள்ளைக்கும் நடந்த உரையாடல்: கடவுளையும் தேவியையும் நிருத்திய கமண்டலியின் பிரெசிடெண்ட் திவான் பகதூரிடம் நடனநிகழ்ச்சிக்கு வாய்ப்புக் கேட்டு கந்தசாமிப் பிள்ளை அழைத்துச் சென்றபோது அந்த பிரெசிடெண்ட் தேவியின் கருப்பு நிறம் குறித்துச் சொன்னது: தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1988 தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1988 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 2,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1988 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது. இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2001 2001 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் இலங்கையின் 12வது நாடாளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 2001, டிசம்பர் 6 இல் இடம்பெற்றது. 11வது நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்று ஓராண்டுக்குள் அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அதனைக் கலைத்து புதிய தேர்தலுக்கான அறிவித்தலை விடுத்தார். மக்கள் கூட்டணி அரசில் இருந்து சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகியதை அடுத்து அரசு பெரும்பான்மையை இழந்தது. அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மக்கள் விடுதலை முன்னணியைக் கூட்டணியில் சேர்க்க முயன்றார். இதனை விரும்பாத 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியுடன் இணைந்தனர். அர்சுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முயன்றன. இதனைத் தவிர்க்கும் முகமாக சந்திரிக்கா பண்டாரநாயக்கா அரசைக் கலைத்து புதிய தேர்தலுக்கான தேதியை அறிவித்தார். தேர்தல் காலத்தில் மொத்தம் 1,300 தேர்தல் வன்முறை முறைப்பாடுகள் பதியப்பட்டன.. தேர்தல் வன்முறைகளில் 60 பேர் கொல்லப்பட்டனர். அரசுத்தலைவர் சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆளும் மக்கள் கூட்டணி தேர்தலில் தோல்வியடைந்தது. எதிர்க்கட்சிக் கூட்டணி ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார். இலங்கையின் அரசுத்தலைவரும், பிரதமரும் வெவ்வேறு கட்சியைச் சார்ந்திருந்ததால் அரசு பல முறை ஆட்டம் கண்டது. இறுதியில் அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்கா நாடாளுமன்றத்தை 2004 ஆம் ஆண்டில் கலைத்து புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். காரைக்குடி மணி காரைக்குடி மணி (பி. 1945) இந்தியாவைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர் ஆவார். காரைக்குடி ரெங்கு ஐயங்கார், டி. ஆர். ஹரி ஹர சர்மா மற்றும் கே. எம். வைத்யநாதன் இவர்களிடம் மிருதங்க இசையைக் கற்றார். தனது எட்டாவது வயதில், காரைக்குடியில் தனது முதல் மேடைக் கச்சேரியை வழங்கினார். தனது 18ஆவது வயதில் 'தேசிய விருதினை' அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனிடமிருந்து பெற்றார். இவர், கீழே குறிப்பிடப்பட்டுள்ள புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களுக்கு பக்க வாத்தியமாக மிருதங்கம் வாசித்திருக்கிறார்: சங்கீத நாடக அகாதமி விருது, 1999 காதல் கொண்டேன் காதல் கொண்டேன் ஒரு தமிழ் திரைப்படம். இத்திரைப்படம், 2003 இல் வெளிவந்தது. தனுஷ் இப்படத்தின் கதாநாயகன் ஆவார். சோனியா அகர்வால் இப்படத்தின் கதாநாயகி ஆவார். இதை இயக்கியவர் செல்வராகவன். தனுஷிற்கு இத்திரைப்படம் ஒரு திருப்பு முனையாக இருந்தது. நன்கு நடிக்க கூடியவர் என்ற பெயரைப் பெற்று தந்தது. அர்ஜென்டீனாவில் இந்து மதம் அர்ஜென்டீனாவில் இந்து மதம் அர்ஜென்டீனாவில் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் (1,200 மக்கள்) மற்றும் 400 இந்தியரல்லாதோராலும் பின்பற்றப்படுகிறது. அர்ஜென்டீனாவில் உள்ள இந்திய வம்சாவளி நபர்கள் (PIOs) பலர் இந்திய கலாச்சாரம் மற்றும் மரபுகள் மூலமாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் சூரிய ஆற்றல் துறை இந்தியாவில் சூரிய ஆற்றல் துறை ஆண்டின் பெரும்பாலான நாட்களில் விழுகின்ற சூரிய கதிர்வீச்சின் உயரிய அளவையும் நெருக்கமான மக்கள்தொகையையும் கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது. உலகில் உயர்ந்தளவில் நிலக்கரியால் மின்சாரம் பெறும் நாடுகளில் ஒன்றான இந்தியா கரியமில வளி வெளிப்பாட்டைக் குறைக்கும் வண்ணம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை பயன்படுத்துவதில் முனைப்புக் கொண்டுள்ளது. சூரிய ஆற்றலின் இன்றியமையாமையை அறிந்து இந்திய அரசு "சவகர்லால் நேரு தேசிய சூரியாற்றல் திட்டத்தை" (JNNSM) வரைந்து செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2022ஆம் ஆண்டிற்குள் 22,000 மெவா மின்சாரத்தை தயாரிக்க இலக்கு மேற்கொண்டுள்ளது. இந்த இலக்கினை அடையவும் தன்முனைவோரை ஊக்குவிக்கவும் நுகர்வுச் செலவினை மின்பிணைப்பு கட்டணத்திற்கு இணையாக்கவும் மானியங்கள் வழங்குகிறது. காற்றுத் திறன் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக விளங்கும் இந்தியாவின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் வெளியிட்டுள்ள இத்திட்டத்தின் இரண்டாம்கட்ட திட்டவரைவில் 10 கிகாவாட் மின்சாரம், நடுவண் துறைகளால் 4 கிகாவாட்டும் மாநில அமைப்புகளால் 6 கிகாவாட்டும், தயாரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. தார் பாலைவனத்தில் 35,000 கிமீ பரப்பளவில் 700 கிகாவாட் முதல் 2,100 கிகாவாட் வரையான சூரிய ஆற்றல் மின்சாரம் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 2020க்குள் ஆண்டில் 19 பில்லியன் செலவில் 20 கிகாவாட் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் அரசு கட்டிடங்களிலும் மருத்துமனை மற்றும் தங்குவிடுதிகளிலும் சூரிய ஆற்றல்வழி கருவிகளும் செயல்முறைகளும் கட்டாயமாக்கப்படுகின்றன. 2013ஆம் ஆண்டில் 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க நவம்பர் 2009இல் திட்டம் இயற்றப்பட்டது. இறங்குமுகமாய் இருக்கின்ற சூரியத் தகடுகளின் விலையும் ஏறுமுகமாய் இருக்கின்ற மின்பிணைப்பு கட்டணமும் இணைந்து அடுத்த ஐந்தாண்டுகளில் மிக உயர்ந்த வளர்ச்சி வீதத்தை 2011அல் வெளயிடப்பட்டுள்ள ஓர் ஆய்வறிக்கை மதிப்பிடுகிறது. அரசு ஆதரவும் மின் தட்டுப்பாடும் இதனை ஊக்குவிக்கின்றன. தமிழ்நாட்டில் 300 நாட்கள் உயர்ந்த சூரிய கதிர்வீச்சு (5.6-6.0 கிவாமணி/ச. மீ) கிடைக்கிறது. குறிப்பாக தென்தமிழ்நாடு சூரிய ஆற்றல் தயாரிப்பிற்கு மிகவும் பொருந்திய நிலப்பகுதியாக விளங்குகிறது. தமிழ்நாடு அரசு அக்டோபர் 2012இல் வெளியிட்ட "தமிழ்நாடு சூரிய சக்திக் கொள்கை 2012"யில் ஆண்டுக்கு 1000 மெகவாட்டாக மூன்றாண்டுகளில் மூவாயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிப்பு மற்றும் உள்நாட்டிலேயே சூரியாற்றல் கருவிகளை உருவாக்கிடும் வசதி ஆகியவற்றை உள்ளடக்கிய கொள்கையை முன்மொழிந்துள்ளது. 2007 நிலவரப்படி, மொத்த மின்சாரத் தேவையில் 1%க்கும் குறைவாகவே சூரிய ஆற்றலால் பெறப்படுகிறது. திசம்பர் 2010இல் மின் பிணையத்தில் (grid) இணைக்கப்பட்ட அளவு 10 மெகாவாட்டாக இருந்தது. இருப்பினும் 1,700 முதல் 1,900 வரையான திறனளவைக் கொண்டுள்ள இந்தியா சூரிய ஆற்றல் பயன்பாட்டில் முன்னணியில் உள்ளது 2010இல் 25.1 மெகாவாட்டும் 2011இல் 468.3 மெகாவாட்டும் கூட்டப்பட்டன. சூலை 2012இல் பிணையத்துடன் இணைக்கப்பட்ட சூரிய மின்கலம்|சூரிய மின்கலம் மூலம் பெறப்பட்ட திறனவு 1040.67 மெவாட்டாக உயர்ந்தது, 2017க்குள் கூடுதலாக 10,000 மெகாவாட்டாக உயர்த்தவும் 2020இல் மொத்த நிறுவப்பட்ட அளவாக 20,000 மெகாவாட்டாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த நிறுவப்பட்டத் திறனளவில் மூன்றில் இருபங்கு குசராத் மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப் பெரியதாகக் கருதப்படும் சரண்கா சூரியப் பூங்கா தற்போது 214 மெகாவாட் அளவிலான மின்சாரத்தை அளிக்கிறது. இதன் மொத்த திட்டமிடப்பட்ட திறனளவு 500 மெகாவாட்டாகும். பல முனைவாளர்களும் பல பயனாளர்களும் பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இப்பூங்காவிற்கு இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII) "மிகுந்த புதுமைமிக்கதும் சுற்றுச்சூழல் இயைந்ததுமான" திட்டமாக விருது வழங்கியுள்ளது. தலைநகர் காந்தி நகரை முற்றிலும் சூரிய ஆற்றலால் இயங்கும் நகராக மாற்றிட மாநில அரசு கூரை-மேற் சூரிய மின்கலத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின்படி, 50 மாநில அரசு கட்டிடங்கள் மீதும் 500 தனியார் கட்டிடங்கள் மீதும் சூரிய மின்கலங்களை அமைத்து 5 மெகாவாட் மின்சாரத்தை பெற்றிட விழைந்துள்ளது. இத்திட்டத்தை பின்னதாக ராஜ்கோட், சூரத், பாவ்நகர் மற்றும் வடோதரா நகரங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் நர்மதை ஆற்றின் கால்வாய்களில் சூரிய மின்கலங்களை அமைத்திடவும் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஆனந்த் தாலுகாவில் சந்திராசன் பகுதியில் நர்மதை ஆற்றுக் கால்வாய்க் கிளையில் சூரிய மின்கலங்களை அமைத்து 1 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கிறது. இத்தகைய மூடல் ஆற்றுநீர் வெப்பத்தால் ஆவியாகி வீணாவதும் தடுக்கப்படுகிறது. ஆண்டுக்கு 90,000 லிட்டர் நீர் தடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. குசராத்திற்கு அடுத்தநிலையில் இராசத்தான் மாநிலம் சூரிய ஆற்றல் பயன்பாட்டில் விளங்குகிறது. 40 மெகாவாட் திறனளவுள்ள திருபாய் அம்பானி சூரியப் பூங்கா ஏப்ரல் 2012இல் துவங்கப்பட்டுள்ளது. இரண்டு 125 மெகாவாட் அங்கங்களான 250 மெகாவாட் இறு நேரோட்ட பிரெசுனல் எதிரொளிப்பி (CLFR) நிலையமொன்றை நிறுவி வருகிறது. சீரடி சாயி பாபா தேவத்தானத்தில் உலகின் மிகப்பெரும் சூரிய ஆற்றல் நீராவி அமைப்பு இயங்கி வருகிறது. ரூ.1.33 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த அமைப்பின் மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக நாளொன்றுக்கு 50,000 சாப்பாடுகள் சமைக்கப்படுகின்றன. இதன் மூலம் ஆண்டொன்றுக்கு 100,000 கிலோ சமையல் எரிவளி மிச்சப்படுகிறது. மின்சாரம் இல்லாத நேரத்திலும் நீராவியால் தயாரிக்கப்படும் மின்சாரம் தண்ணீரை ஏற்றுவிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மே 2018 கணக்கின் படி, இந்தியாவிலேயே ஐந்தாவது அதிகம் சூரிய மின்னாற்றல் உற்பத்தி செய்யும் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. மொத்த மின்னுற்பத்தித் திறன் 1.8 கிகாவாட். கமுதியில் இந்தியாவின் பெரும் சூரிய மின் நிலையங்களுள் ஒன்று 2016-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஊட்டக்குறை ஊட்டக்குறை அல்லது ஊட்டச்சத்துக்குறைபாடு (Malnutrition) என்பது சமநிலையற்ற உணவு (சில ஊட்டச்சத்துக்களைப் பற்றாக்குறையுடனோ, அளவுக்கு அதிகமாகவோ, தவறான விகிதாச்சாரத்திலோ) உட்கொள்ளுவதால் ஏற்படும் நிலைமையைக் குறிக்கிறது. இது பொருத்தமற்ற, போதிய ஊட்டச்சத்து இல்லாத உணவினால் ஏற்படும் மருத்துவவியல் நிலையைக் குறிக்கும். இது பொதுவாக குறைந்த உணவு உட்கொள்ளுதலினாலும், உறிஞ்சும் தன்மைக் குறைவாலும், அளவுக்கதிகமாக ஊட்டம் இழத்தலாலும் ஏற்படும் ஊட்டக் குறைவைக் குறித்தாலும், இது கூடுதலாக உணவு உண்பதாலும், குறிப்பிட்ட ஊட்டச் சத்துக்களை அளவு மீறி உட்கொள்வதாலும் ஏற்படக்கூடிய மிகையூட்டத்தையும் உள்ளடக்குகிறது. ஒருவர் நீண்டகாலத்துக்கு உடல்நலத்துக்குத் தேவையான அளவிலும், தரத்திலும் உள்ள ஊட்டச்சத்துக்களை உட்கொள்ளத் தவறினாலும் ஊட்டக்குறை ஏற்படும். நீண்டகால ஊட்டக்குறை தொற்றுநோய்களையும், வேறு சில நோய்களையும் ஏற்படுத்தக்கூடியது. ஊட்டக்குறை பொதுவாக வளரும் நாடுகளில் காணப்படும் கடுமையான வறுமையுடன் தொடர்புப்பட்டது. இது பாதிக்கப்பட்ட பகுதிகளின் அறிவுத்திறன் குறைவுக்கு ஒரு காரணமாக உள்ளது. பொருத்தமற்ற உணவு, அதிக உணவு உண்ணல், சமநிலை உணவு இன்மை என்பவற்றால் வளர்ந்த நாடுகளிலும் ஊட்டக்குறை காணப்படுகிறது. இது அதிகரித்து வரும் உடற் பருமன் போன்றவற்றினால் வெளிப்படுகிறது. மிகப்பொதுவாக ஊட்டக்குறை உள்ளோரின் உணவில் போதிய கலோரிகள் இருப்பதில்லை அல்லது புரதம், உயிர்ச்சத்துக்கள், கனிமங்கள் என்பன பற்றாக்குறையாக இருக்கின்றன. பட்டினியால் நிகழும் கடும் ஊட்டச்சத்துக்குறையின் அறிகுறிகள், விளைவுகளாகக் குறையுணவுத் திறனிழப்பைக் கூறலாம். வளரும் நாடுகளில் ஊட்டச்சத்துக்குறை பொதுவாக காணப்படுகின்றது என்றாலும் தொழில்வளமிக்க நாடுகளிலும் ஊட்டச்சத்துக்குறை காணப்படுகின்றது. வளமுள்ள நாடுகளில், அதிகமான ஆற்றல் (சக்தி), கொழுப்புகள், அதிக அளவுத் துப்புரவாக்கப்பட்ட மாவுப்பொருட்களை உள்ளடக்கிய ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்ளும் பழக்கங்களினால் ஏற்படுவதாகும். உடற்பருமன் அதிகரித்தல் வளர்முனைப் போக்காக இருப்பது பல சமூகப்பொருளாதார மேம்பாடடையாத நாடுகளிலும், வளர்ந்த நாடுகளிலும் முதன்மையான பொதுநலகேடாகக் கருதப்படுகின்றது. ஊட்டக்குறையில் இருந்து உருவாகும் மருத்துவப் பிரச்சினைகள் பொதுவாக பற்றாக்குறை நோய்கள் எனப்படுகின்றன. இசுகேவி என்னும் நோய் மிகவும் அறியப்பட்ட ஒரு நோயாகும். உயிர்ச்சத்து சி குறைவினால் உண்டாகும் இந்த நோய், இப்போது மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. உலகின் பொதுநலத்திற்கு மிக பெரிய சவாலாக ஊட்டச்சத்தின்மை உள்ளதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஊட்டச்சத்து மேம்பாடு ஒரு சிறந்த பயனுள்ள உதவியாக பரவலாகக் கருதப்படுகிறது. ஊட்டச்சத்துக் குறைபாடுகளுக்கான உடனடி காரணிகளாக உள்ள சிலக் குறிப்பிட்ட ஊட்டச்சத்துகளைக் கொடுப்பது வளர்முகமானக் குறுக்கீடுகளில் சிறப்பானதொன்றாகக் கருதப்படுகின்றது. ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்குக் காரணமாக உள்ள நுண்ணூட்டச்சத்துக்களைச் செறிவூட்டிய பொடிப் பொட்டலங்களாகவோ அல்லது நேரடியாக உணவுக்குறை நிரப்பிகளாகவோக் கொடுப்பது நெருக்கடிநிலை நிவாரண நடவடிக்கைகளாகக் கருதப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் ஆகிய அமைப்புகள் சிகிச்சைக்குரிய பரிமாறத்தகு உணவுகளைச் சமூக அளவில் கொடுப்பது கடும் தீவிர ஊட்டக்குறைக்கு ஒரு நல்ல தீர்வாகப் பரிந்துரைக்கின்றன. இவ்வித முயற்சிகளால் நெருக்கடி நிலை உள்ள இடங்களில் வாழும் மனிதர்களில் நல்ல உடல் எடை முன்னேற்றம் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொடையளிக்கும் நாடுகளிலிருந்து உணவுப் பொருட்களை வாங்குவதற்கு பதிலாக, உள்ளூர் விவசாயிகளைப் பாதிக்காதவண்ணம், வணிகப் பொருள் குவித்தல் தடைச் சட்டத்திற்கேற்ப, பட்டினியால் வாடுபவர்களுக்கு பணமாகவோ அல்லது பண சான்றாவணமாகவோக் கொடுத்து உள்ளூர் உழவர்களிடமிருந்துப் பொருள்களைப் பெற்று கொள்ளும் பஞ்ச நிவாரண மாதிரியை உதவிக் குழுக்கள் அதிகமாகப் பரிந்துரைக்கின்றன. ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட விவசாய விளைப்பொருட்களின் மகசூலைக் குறைக்கும் எதிர்மறையான விளைவுகளை எதிர்காலத்தில் குறைத்து, இவ்வகை விளைப்பொருட்களின் மகசூலை அதிகரிப்பதை ஊக்குவிப்பது நல்லதொரு நெடுங்காலத் திட்டமாகக் கருதப்படுகிறது. உழவர்களுக்கு நேரடியாக நிவாரணமளிப்பது என்பது சமீபகால முயற்சிகளில் ஒன்றாகும். என்றாலும், உழவர்களுக்கான அரசாங்க நிதி உதவித்திட்டங்கள் உலக வங்கி கண்டனங்களால் கட்டுபடுத்தப்படுகின்றன. மேலும், விளைநிலங்களில் உரங்கள் அதிகமாக உபயோகிப்பதை விரிவாக்குவது சுற்றுசூழலையும், மனித நலத்தையும் கடுமையாகப் பாதிப்படைய செய்யலாம் எனவே, இது பல்வேறு தன்னார்வ சமூக அமைப்புகளால் எதிர்க்கப்படுகிறது. பெண்கள், குழந்தைகள், முதியவர்களில் ஊட்டச்சத்துகுறையானது முதன்மையாகக் கருதப்படுகிறது. கர்ப்பங்களாலும், குழந்தைகளுக்குப் பாலூட்டுவதாலும் பெண்களுக்கு அதிகப்படியான ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன. தாய்மார்களின் ஊட்டச்சத்து அளவுகளுடன் நேரடியாக தொடர்பிருப்பதால், பிறப்பதற்கு முன்பே குழந்தைகள் ஊட்டக்குறைவுக்கான இடரினை எதிர்கொள்ள நேரிடும். தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளின் ஊட்டக்குறை வீதத்தைக் குறைப்பதுடன், அவர்களின் இறப்பையும் குறைக்கிறது. மேலும், தாய்மார்களுக்கு தகுந்த கல்வித் திட்டங்கள் மூலமாக இதைக் குறித்த போதிய அறிவை அளிப்பது குழந்தைகளின் ஊட்டக்குறை வீதத்தைக் குறைப்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. பசி, ஆற்றல் நிலை, மென்று விழுங்குதல் ஆகியவற்றின் மாற்றங்களினால் ஏற்படும் தனித்தன்மை வாய்ந்த சிக்கல்களை முதியவர்கள் சந்திப்பதால் இவர்கள் ஊட்டக்குறைக்கான பெரும் இடரில் உள்ளார்கள். எனவே, தங்களைத் தாங்களேப் பார்த்துக்கொள்ள முடியாத நிலையிலுள்ள முதியவர்களில் ஊட்டக்குறையைத் தடுப்பதற்கு, போதிய பராமரிப்பினை வயது முதிர்ந்தவர்களுக்கு வழங்குவது அவசியமாகிறது. ஊட்டக்குறையானது தவறான அல்லது தேவைக்குக் குறைந்த உணவுகளை உட்கொள்ளுவதால் நிகழும் ஒரு மருத்துவ நிலையாகும். ஊட்டச்சத்துக்குறையானது (malnutrition) ஊட்டக்குறை (undernutrition), உடற் பருமன், எடை கூடுதலாக இருத்தல், நுண்ணூட்டக்குறைபாடு ஆகிய நோய்ப் பிரிவுகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. என்றாலும், போதுமானக் கலோரிகள் உள்ள உணவைச் சாப்பிடாமல் இருப்பதால் அல்லது எந்தவொரு காரணத்தினாலோ குறிப்பிட்ட உணவுப்பொருட்களைத் தேவையான அளவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பதால் விளையும் ஊட்டக்குறைபாட்டைக் குறிக்கவே இது அடிக்கடிப் பயன்படுத்தப்படுகிறது. ரூப் குமார் ரத்தோட் ரூப் குமார் ரத்தோட், ஒரு இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். அசாகான் சுல்தானகம் அசாகான் சுல்தானகம் என்பது பொ.கா. 1630 முதல் பொ.கா. 1946 வரை நிலைத்திருந்த ஒரு மலாய சுல்தானகம் ஆகும். இது சுமாத்திராவின் வடகிழக்கில், இன்றைய இந்தோனேசியாவின் அசாகான் மாவட்டத்தை உள்ளடக்கிய பகுதியில் அமைந்திருந்தது. இவ்வரசு அச்சே சுல்தானகத்தின் சுல்தான் இசுக்கந்தர் முடாவின் மகன் ராஜா அப்துல் ஜலீலினால் பொ.கா. 1630 அளவில் உருவாக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பகுதி வரை இது அச்சே சுல்தானகத்துக்குக் கட்டுப்பட்ட சிற்றரசாகவே இருந்தது. அசாகானின் சுல்தான் ராஜா மூசா ஷாஹ் 1808 இல் இறந்த பின்னரே அவரது மகன் பிறந்தான். எனினும், அசாகான் சுல்தானகத்தின் ஆட்சித் தொடர் விதிகளின்படி, முன்னைய ஆட்சியாளர் இறந்து ஒரு நாளைக்குள் அடுத்த ஆட்சியாளரை அறிவிக்க வேண்டியிருந்தது. அதன் விளைவாக, அவரது தம்பியாகிய ராஜா அலீ ஷாஹ் ஆட்சிக் கட்டிலேறினார். எனினும் அங்கிருந்த பிரமுகர்கள் பலர், குறிப்பாக அசாகான் பிராந்தியத்தில் வாழும் பதக் இனத்தைச் சேர்ந்தோர் இப்புதிய ஆட்சியாளரை ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் காரணமாக, ராஜா மூசா ஷாஹ்வின் கைக்குழந்தை ஆட்சியாளராக அறிவிக்கப்பட்டு, அப்போதைய பதில் ஆட்சியாளராக அங்கீகரிக்கப்பட்டது. பின்னர், ராஜா அலீ ஷாஹ்வின் மகன் அச்சே சுல்தானகத்திலிருந்து விடுதலை பெற்ற தனியரசாக அசாகான் சுல்தானகத்தை அறிவித்ததுடன், சுல்தான் முகம்மது ஹுசைன் ரஹ்மத் ஷாஹ் என்னும் பெயரில் ஆட்சியாளரானார். நாற்பத்தாறு ஆண்டுகள் நடைபெற்ற அவரது ஆட்சியின் போது ஐரோப்பியருடனான வணிகத் தொடர்புகள் கூடின. அப்போது அசாகான் சுல்தானகம் நெதர்லாந்து கிழக்கிந்தியத் தீவுகளின் அரசுடனும் வணிகத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டது. 1859 இல் அவர் இறந்தபோது ராஜா மூசா ஷாஹ்வின் சந்ததியினருக்கும் ராஜா அலீ ஷாஹ்வின் சந்ததியினருக்கும் இடையில் யார் ஆட்சியாளராவது என்பது தொடர்பில் சிக்கல் எழுந்தது. பின்னர் ஆட்சியாளரான சுல்தான் அஹ்மத் ஷாஹ் ஒல்லாந்தருடன் நல்லுறவைப் பேணாமல் இருந்தமை அவருக்குப் பாதகமாக முடிந்தது. அவர்கள் 1865 இல் அவரைப் பதவியிறக்கி விட்டு, ராஜா மூசா ஷாஹ்வின் பேரனான சுல்தான் நிஉமத்துல்லாஹ் ஷாஹ்வை ஆட்சியாளராக்கினர். எனினும், அது ஒல்லாந்தர்களுக்கும் நன்மையானதாக அமைந்து விடவில்லை. சுல்தான் நிஉமத்துல்லாஹ் ஷாஹ் தன்னுடைய தலைநகரை நாட்டின் உட்பகுதியை நோக்கி நகர்த்தி, ஒல்லாந்தர்களின் பீரங்கிப் படகுகளின் தாக்குதல் தொலைவுக்கு அப்பால் அமைத்துக் கொண்டார். அப்படியிருந்தும், சுல்தான் நிஉமத்துல்லாஹ்வால் தன்னுடைய அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள இயலவில்லை. 1868 இல் ஒல்லாந்தர்கள் அவரைப் பதவியிலிருந்து அகற்றினர். அப்போது சுல்தான் நிஉமத்துல்லாஹ்வுக்குக் கீழ்ப்பட்டிருந்த சிற்றரசுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து "குவாலுஹ் அரசு" என்னும் பெயரில் ஓர் அரசை நிறுவின. இருபத்து மூன்றாண்டுகளாகத் தொடர்ந்த சிறு சிறு சண்டைகளுக்கும், போர் நிறுத்தங்களுக்கும் பிறகு மூன்று தரப்பினரும் சேர்ந்து 1886 இல் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். நெதர்லாந்துக் கிழக்கிந்தியத் தீவுகளின் அரசாங்கம் சுல்தான் அஹ்மத் ஷாஹ்வை அசாகானின் ஆட்சியாளராக மீண்டுமொரு தடவை அலுவல் முறையாக அங்கீகரித்தது. அஹ்மத் ஷாஹ் இறந்து இரண்டு ஆண்டுகளின் பின்னர் சுல்தான் முகம்மது ஹுசைன் இரண்டாம் ரஹ்மத் ஷாஹ் ஆட்சியாளரானார். அவரது ஆட்சியின் போது அசாகான் சுல்தானகம் மிகச் சிறந்த பொருளாதார முன்னேற்றத்தைக் கண்டது. 1915 இல் அவர் இறந்ததும், அவரது மகன் சுல்தான் ஷாஇபுன் அப்துல் ஜலீல் ஆட்சியாளரானார். அப்போது அசாகான் சுல்தானகம் இறப்பர் ஏற்றுமதியில் கொடி கட்டிப் பறந்தது. அந்நிலை பெருங்காலம் நீடிக்கவில்லை. கிட்டத்தட்ட முப்பது ஆண்டு காலத்தினுள் இரண்டாம் உலகப் போர் ஏற்பட்ட போது அசாகான் சுல்தானகமும் பொருளாதாரப் பாதிப்புக்களைக் கொண்டிருந்தது. அப்போது இந்தோனேசியத் தீவுகளை ஆக்கிரமித்த யப்பானியர்கள் மிகக் கொடூரமாக நடந்து கொண்டனர். எங்கும் குருதி பெருக்கெடுத்தோடியது. அதன் காரணமாக, மக்களிடம் ஒரு "சமூகப் புரட்சி" தேவையெனும் உளப்பாங்கு கூடியது. அப்போதைய கொடுமைகள் விரைவாக நீங்கிவிடவில்லை. அச்சே மற்றும் சாவகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் குடியரசொன்றை நிறுவுவதற்காக ஒல்லாந்தரை வெளியேற்றிவிட முயன்று கொண்டிருந்த அதேவேளை, ஒல்லாந்தர்கள் தம் ஆதிக்கத்தை மீண்டும் நிறுவ முனைந்தனர். அதன் போது இந்தோனேசியத் தீவுகளெங்கிலும் ஏராளமான கொடுமைகள் அரங்கேறின. யப்பானியர் ஒரு பக்கமும் ஒல்லாந்தர் மறு பக்கமுமாக மக்களைக் கொடுமைப்படுத்தினர். எத்தனையோ சிற்றரசுகள் அதிகாரம் செலுத்த முடியாதளவு ஒடுங்கி விட்டிருந்தன. அவற்றின் இறுதியில், இந்தோனேசியத் தீவுகளைச் சேர்ந்த சுல்தானகங்கள் பலவும் மீளமைக்கப்படுவதற்குப் பதிலாக, இந்தோனேசியக் குடியரசினுள் உள்வாங்கப்பட்டன. அசாகானின் அப்போதைய சுல்தான் மேலும் முப்பத்து நான்கு ஆண்டுகள் உயிரோடிருந்தார். அவரது காலமே இவ்வரச மரபின் மிகக் கூடிய ஆட்சிக் காலமாகும். இந்தோனேசியாவின் ஏனைய பகுதிகளிலிருந்த மரபுவழி ஆட்சியாளர்களைப் போலன்றி, சுமாத்திராவின் சுல்தானகங்கள் மீளமைக்கப்படாத அதேவேளை, அவற்றின் ஆட்சியாளர்கள் தங்களது பதவி நிலைகளைப் பயன்படுத்துவதும் அனுமதிக்கப்பட்டதாக இருக்கவில்லை. எவ்வாறிருப்பினும், அவ்வரசுகளை மீண்டும் நிறுவுவதனால் தாம் பெறும் எண்ணெய் வருமானத்தில் பெரும் பகுதியை இழக்க வேண்டியேற்படுமென, இந்தோனேசிய அரசாங்கம் அச்சமுற்ற போதிலும், அவற்றை மீள நிறுவுவதற்காக மலாய சமுதாயத்தினர் பெரிதும் பாடுபடுகின்றனர். ஆஸ்திரேலியாவில் இந்து மதம் இந்துக்கள் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 276.000(2006 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பில் 148.119 இருந்து) ஆகும். இந்து மதம் ஆஸ்திரேலியாவில் மிக வேகமாக வளரும் ஒரு மதமாகும். இந்தன் புனித மரியாள் பதிகல் வேலை இந்தன் புனித மரியாள் பதிகல் வேலை என்பது, ஆங்கிலக் கவுன்ட்டியான டோர்செட்டில் உள்ள இந்தன் புனித மரியாள் என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஏறத்தாழ முழுமையான உரோமப் பதிகல்வேலை ஆகும். இவ்வலங்கார வேலைப்பாட்டின் மையப் பகுதியில் இயேசு கிறித்துவின் மார்பளவு படம் உள்ளது. பிரித்தானிய அருங்காட்சியகப் பணிப்பாளர் நீல் மக்கிரெகர் தொகுத்து வழங்கிய பிபிசி வானொலி 4 இன் 100 பொருட்களில் உலக வரலாறு நிகழ்ச்சியில் 44 ஆவது பொருளாக இப்பதிகல்வேலை இடம்பெற்றது. இப்பதிகல் வேலை, இரண்டு அறைகளை மூடி அமைந்துள்ளது. இது பெரும்பாலும், சிவப்பு, மஞ்சள், இளமஞ்சள் ஆகிய நிறங்களைக் கொண்டுள்ளது. 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கணிக்கப்படும் இது, டேர்னோவிய பதிகற் கலைப் பள்ளியின் பணியகத்தில் செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது. பெரிய அறையில் இருக்கும் பலகம் 17 அடிக்கு 15 அடி அளவு கொண்டது. இதன் நடுப்பகுதியில் அமைந்துள்ள வட்டத்துள் வெள்ளை உடை அணிந்த மனித உருவம், இரு புறமும் மாதுளம்பழத்துடன் கூடிய கிறித்தவ "சி ரோ" சின்னத்தின் முன்னர் உள்ளது. சிலர் இது பேரரசர் கான்சுட்டன்டைனின் உருவம் எனக் கூறினாலும், பொதுவாக இது யேசு கிறித்து எனவே அடையாளம் காணப்படுகின்றது. இதில் ஒரு பேரரசரைக் குறிப்பதற்கான அடையாளச் சின்னம் எதுவும் இல்லை. இவ்வட்டத்தின் நாற்புறங்களிலும் அரைவட்ட வடிவங்கள் காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும் நாய், மான் உருவங்களுடன் கூடிய காடு, வேட்டை ஆகியவற்றைக் குறிக்கும் சிறு படங்கள் உள்ளன. நாலுபக்க மூலைகளில் இருக்கும் கால்வட்டங்களுக்குள் காற்றை, அல்லது பருவகாலங்களைக் குறிக்கும் மார்பளவு உருவங்கள் உள்ளன. சிறிய அறையில் காணப்படும் பலகம் 16½ அடிக்கு 8 அடி நீள அகலங்களைக் கொண்டது. இதன் மையப் பகுதி வட்டத்துள் உரோமத் தொன்மங்களில் வரும் பெல்லரோபொன், சிமேராவைக் கொல்லும் காட்சி உள்ளது. சிலர் இதைக் கிறித்தவக் கருத்தியலின் அடிப்படையில் நன்மை, தீமையை அழிப்பதைக் குறிப்பதாக விளக்குகின்றனர். இதன் இருபுறமும் உள்ள நீள்சதுரக் கட்டங்களுக்குள்ளும் நாய் மானை வேட்டையாடும் காட்சிகள் காணப்படுகின்றன. இது 1963 ஆம் ஆண்டில் உள்ளூர்க் கொல்லரான (வால்ட்டர்) யோன் வைட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது டோர்ச்செசுட்டர் அருங்காட்சியகத்தினரால் அகழப்பட்டு பாதுகாப்பதற்காக உயர்த்தப்பட்ட போதும், கட்டிடத்தின் பிற பகுதிகள் எதுவும் ஆராயப்படவில்லை. இது பொதுவாக ஒரு இல்லமாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். இதன் பதிகல் அறைகள் உரோமரின் சாப்பாட்டு அறைகளை ஒத்துள்ளன. எனினும் இது ஒரு தேவாலயமாகவோ அல்லது ஏதாவது கிறித்தவக் கட்டிடமாகவோ இருப்பதுவும் சாத்தியமே. இங்கே கிபி 270க்கு முற்பட்ட பொருட்கள் எதுவும் அகப்படவில்லை. குருகை காவலப்பன் குருகை காவலப்பன் நாதமுனிகளின் மாணவர்களில் முதன்மையானவரான இவர் தை மாதம் விசாகம் நட்சத்திரத்தில் ஆழ்வார்திருநகரியில் பிறந்தார். நாதமுனிகளின் மாணவர் கூட்டத்துக்குத் தலைவர். நாதமுனிகள் இவருக்கு அட்டாங்க யோகத்தில் பயிற்சி அளித்தார். தன் மகன் ஈசுவரமுனிக்குப் பிறக்கப்போகும் மகனுக்கு அட்டாங்க யோகப் பயிற்சி அளிக்குமாறு இவரை வேண்டிக்கொண்டு காலமானார். ஈசுவரமுனிக்குப் பிறந்த குழந்தைக்கு மணக்கால் நம்பி யமுனைத்துறைவன் எனப் பெயர் சுட்டி, எட்டெழுத்து மந்திரத்தைப் புகட்டினார். அட்டாங்க யோக மறையைக் குருகை காவலப்பனிடம் கற்றுத் தெளியுமாறு அறிவுறுத்தினார். யமுனைத்துறைவனாகிய ஆளவந்தார் குருகை காவலப்பனை வேண்டியபோது வருகிற தை மாதம் இன்ன நாளில் தாம் பரமபதம் செல்லவிருப்பதாகவும், அதற்கு முன் வேறொரு நாளில் வரும்படியும் எழுதியிருந்த ஓலை ஒன்றைக் காப்பிட்டுக் கொடுத்து பின்னொரு நாளில் படிக்கும்படி கூறி அனுப்பிவிட்டார். ஆளவந்தார் காஞ்சிபுரத்தில் சிலநாள் தங்கிவிட்டுத் திருவரங்கம் வந்து ஓலைக் காப்பை விலக்கிவிட்டுப் பார்த்தபோது, அது குருகை காவலப்பன் பரமபதம் அடையும் காலமாக இருந்தது. இவ்வாறு குருகை காவலப்பன் ஆசிரியர் இட்ட கட்டளையை நிறைவேற்றாமலேயே காலமானார். அம்பிகா (நடிகை) அம்பிகா ஒரு திரைப்பட நடிகை. அவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.தற்போது நாயகி என்ற சீரியலில் நடித்து வருகிறார். அவரது சகோதரி ராதாவும் சமகாலத்தில் திரைப்பட நடிகையாகத் திகழ்ந்தார். கிரிஷ் கிரிஷ் ஒரு தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர். திரைத்துறையில் கிரிஷ் என அழைக்கப்படும் இவரது இயற்பெயர் விஜய் பாலகிருஷ்ணன் ஆகும். "வேட்டையாடு விளையாடு" (2006) திரைப்படத்தில் "மஞ்சள் வெய்யில்" எனும் பாடலுடன் கிரிஷ் ஒரு பின்னணி பாடகராக அறிமுகமானார். இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இவர் பாடிய பல பாடல்கள் இவருக்கு வெற்றியைத் தந்துள்ளன. வங்கிபுரத்தாய்ச்சி வங்கிபுரத்தாய்ச்சி மணக்கால் நம்பியின் சீடர்களில் ஒருவர். நாதமுனிகள் 10 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், ஆளவந்தார் 11 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பரமபதம் எய்தினர். எனவே இவரது காலம் 10 ஆம் நூற்றாண்டு. வங்கிபுரம் என்பது ஊரின் பெயர். வங்கிபுரத்து ஆய்ச்சி என்றும், வங்கிபுரத் தாய்ச்சி என்றும் கொள்ளும் வகையில் இந்தப் பெயர் அமைந்துள்ளது. இவர் நீண்ட கலிப்பா ஒன்றைப் பாடியுள்ளார். இதில் ஆழ்வார்களின் பெயர்களும், 108 திருப்பதிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த நூலின் பெயர் நூற்றெட்டுத் திருப்பதிக் கோவை. கடலலைகள் தோற்றும் கடும்பிறவி வெள்ளத் தொடரலைகள் தோன்றி நில் லாதே – மடநெஞ்சே ஆழ்வார்கள் பாயிரத்தால் அலங்கரித்த மால்பதிகள் மூவாறு முப்பத்து மூன்று – என்னும் வெண்பாப் பாடலுடன் இந்த நூல் தொடங்குகிறது. செய்யசுட ராழியான் சேவடிக்குச் சொன்மாலை சூட்டிய பொழ்கையார், நாரணற்கு ஞானச் சுடர்விளக் கேற்றிய ஞானமொழி பூதத்தார் – என்று தொடங்கி பாடல் வளர்கிறது. முன்னும் இராமனாய்த் தானே பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும் ஆனான் ஆனான் தன்னைக் கண்ணபுத் தடிகள் கலியன் கலியன் உரைசெய்யத் தேனார்ரும் சொல் தமிழ்மாலை செய்ய பாவம் நில்லாவே ஆர் வங்கிபுரத்தாய்ச்சி ஆழ்வார்கள் பாசுரத்தால் சேரும் திருப்பதிகள் நூற்றெட்டும் – சீராய் உரைப்பார் உரைசொல்வார் ஒருவார் உள் மகிழ்வார் தரைப்பால் தமக்குச் சரண். – என முடிகின்றது. நிசியோரிக்கா நிசியோரிக்கா ("nesiotica") என்பது "ஆக்ரைடே" ("arctiidae") குடும்பத்திலுள்ள ஒரு அந்துப்பூச்சி இனம் ஆகும். ஆஸ்திரியாவில் இந்து மதம் ஆஸ்திரியாவில் இந்து சமய சமூகம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 13 பாவமன்னிப்புக் கேட்கும் உரிமை கொண்ட சமூகங்களில் ஒன்றாகும். ஆஸ்திரியா நாட்டில் இந்தியாவிலிருந்து முதன் முதலாகக் குடியேறியவர்கள் கேரளாவைச் சேர்ந்த செவிலிகள் ஆவர். இவர்கள் தமது தாய்நாட்டுடன் தொடர்ந்து தொடர்புகளைக் கொண்டுள்ளனர். 2001 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் கணக்கெடுக்கின் படி, இந்து சமய சமூகத்தினரின் எண்ணிக்கை 3,629 ஆக இருந்தது. சித்தரந்தாதி சித்தரந்தாதி 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல். 22 கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் கொண்ட சிறு நூல். இது உரையுடன் வெளிவந்துள்ளது. உரையாசிரியர் இதனைச் சித்தர் பாடியதாகக் குறிப்பிட்டுள்ளார். பாடல்கள் நல்ல நடையில் உள்ளன. இதனை இயற்றியவர் இன்னார் எனத் தெரியவில்லை. இந்த நூல் அபிராமி அந்தாதி நூலுக்குக் காலத்தால் பிற்பட்டது. மு. செ. விவேகானந்தன் மு. செ. விவேகானந்தன் (சனவரி 10, 1943- சூன் 7, 1999) ஈழத்துக் கலைஞர்களில் ஒருவர். கவிஞர், பாடகர், மெட்டமைப்பாளர், நடிகர், நெறியாளர் என அறியப்பட்டவர். 1988 ஆம் ஆண்டு இலங்கை ரூபவாகினியில் ஒலிபரப்பாகிய காத்தவராயன் சிந்துநடைக்கூத்தும் ‘அழகுநிலா வானத்திலே’ என்ற மெல்லிசைப் பாடலும் இவரை ஒரு சிறந்த கலைஞராக அடையாளம் கண்டன. விவேகானந்தன் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டம், அல்வாயைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தந்தை கவிஞர் மு. செல்லையா, தாய் நாகமுத்து. கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரியில் ஆரம்பக்கல்வியையும், யாழ்ப்பாணம் பரமேசுவராக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் உயர்கல்வியையும் பெற்றார். தன் இளம் வயதிலேயே தன் தந்தையார் இயற்றிய பாடல்களை இனிமையாகப் பாடி வந்தார். பின்னர் இவர் இந்தியாவில் இசை கற்பதற்காக சென்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் வேளையில், தந்தையார் இறந்து விடவே படிப்பைத் தொடராமல் நாடு திரும்ப நேர்ந்தது. சிறந்த சங்கீத வித்வானாக வரவேண்டியவர் தொடர்ந்து நாடகத்துறையில் கால் பதித்தார். பத்து வயதில் லோகிதாசனாக பாத்திரமேற்று நடித்ததில் இருந்து இவரது கலைவாழ்வு ஆரம்பமானது. கலைப்போதனாசிரியர் மு.பொன்னையா குருவாகவும் அண்ணாவியாராகவும் அமைந்தார். மு.செ.விவேகானந்தன் தான் ஆரம்பித்த நாடகமன்றத்திறகு தந்தையாரின் ஞாபகமாக அல்வாயூர்க்கவிஞர் நாடகமன்றம் என்றே பெயரிட்டிருந்தார். இவருக்கு சோடியாக பெண் பாத்திரத்தில் நடிப்பது இவரது மனைவியே. அரிச்சந்திர மயான காண்டம், காத்தவராயன், நந்தனார், சத்தியவான் சாவித்திரி, நக்கீரர், பூதத்தம்பி, அசுவத்தாமன் ஆகிய இசைநாடகங்களிலும்; சகோதர பாசம், இதயத்துக்கு இதயம், ஆகிய சமூக நாடகங்களிலும்; வேடன், கண்ணப்பர், மார்க்கண்டேயர் ,ஆகிய பாத்திரங்களேற்று புராண நாடகங்களிலும் நடித்துள்ளார். நடிகமணி வைரமுத்துவுடன் பூதத்தம்பியாகவும், பக்தநந்தனாரில் நந்தனாராகவும் நடித்தார். பிரதேச ஆலயங்களிலும் நிகழ்வுகளிலும் இசைக்கச்சேரிகள் நிகழ்த்தியுள்ளார். இவரது ‘காத்தவராயன்’ சிந்துநடைக்கூத்து, வெளிமாவட்டங்களில், குறிப்பாக கொழும்பில் பலதடவைகள் மேடையேறியுள்ளன.1974ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டின்போது இவரது நாடகம் மேடையேற்றப்பட்டது. போர்க்காலச் சூழ்நிலையில் முல்லைத்தீவில் குடும்பத்துடன் இடம்பெயர்ந்து வாழ்ந்தபோதும் வன்னியிலும் தனது கலைப்பணியைத் தொடர்ந்துள்ளார். அங்கு புதுக்குடியிருப்பு சிவன் கோயில் மீது பாடப்பட்ட பாடல்களை ஒலிநாடா வடிவமாக்கினார். புதுக்குடியிருப்பு கிருஷ்ணன் ஆலயத்தின் மீது ஊஞ்சற்பாடலை இயற்றிப் பாடினார். 1971 முதல் 1988 வரை இலங்கை வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். திருமுறைப்பாடல்கள், பாமாலை, மெல்லிசைப்பாடல்கள், நாட்டுப் பாடல்கள், நாடகமேடைப்பாடல்கள் ஆகிய நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். ஆர். முத்துசாமியின் இசையில் கவிஞர் அக்கரை பாக்கியன் எழுதிய “அழகுநிலா வானத்திலே பவனிவரும் நேரத்திலே” என்ற மெல்லிசைப் பாடலைப் பாடினார். இதுவே விவேகானந்தனை ஒரு மெல்லிசைப் பாடகராக இனங்காட்டியது. “வேவிலந்தை பதியிலமர் முத்துமாரி” என்ற பக்திப் பாடலையும் பாடியுள்ளார். அரிச்சந்திர மயானகாண்டம், காத்தவராயன், சிறீவள்ளி, நந்தனார், சத்தியவான் சாவித்திரி மற்றும் சிறுவர்களுக்காக குமணன், சோழநாட்டான் நீதிகேட்டான் ஆகிய நாடகங்களை நெறிப்படுத்தினார். வேணு கோபால மேனன் வேணு கோபால மேனன் (Vanu Gopala Menon (பிறப்பு: செப் 8, 1960) சிங்கப்பூரின் சார்பாக ஐக்கிய நாடுகள் அவையை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்.. சிங்கப்பூர் பிரதமரின் தனிப்பட்ட பிரதிநிதியும் ஆவார். வேணுகோபால் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் பயின்றார். பின்னர் சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சில் இணைந்தார். விவேகானந்தன் விவேகானந்தர் அல்லது விவேகானந்தன் என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்: தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1989 தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1989 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 2,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1989 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது. ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (ஏப்ரல் 18, 1858 - நவம்பர் 2, 1917, மானிப்பாய், யாழ்ப்பாணம்) ஓர் ஈழத்து எழுத்தாளர், பதிப்பாளர். தமிழின் முதற் கலைக்களஞ்சியமான அபிதான கோசத்தை எழுதியவர். முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களின் தந்தை ஆறுமுகம். தாய் சீதேவி. தமது 25-ஆவது வயதில் சண்டிலிப்பாயைச் சேர்ந்த கந்தப்பர் என்பவரின் மூத்த மகளான தங்கம்மாவைத் திருமணஞ் செய்தார். பிள்ளையவர்களின் ஆரம்பக்கல்வி பி.எஸ். பேஜ் என்ற ஆசிரியரிடம் அவரின் வீட்டிலேயே ஆரம்பமானது. இந்த வீடு பின்னாளில் மானிப்பாய் மெமோறியல் கல்லூரியாக மாறியது. ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் உவெஸ்லியன் மத்திய வித்தியாசாலையில் படித்தார். ஆங்கிலம், தமிழ், வடமொழி ஆகியவற்றை நன்கு கற்ற பிள்ளையவர்கள், இலக்கணக் கொட்டர் எனப் புகழ் பெற்ற, குடந்தை வெண்பா முதலிய பாடல்கள் இயற்றிய சுன்னாகம் முருகேசப் பண்டிதரிடம் தமிழைச் சிறப்பாகக் கற்றார். தமது பதினெட்டாவது வயதில் நாவலப்பிட்டி சென்று இலங்கை கம்பெனித்தோட்டத்து (Ceylon Company Estates) அதிகாரிக்கு முன்ஷியாக (ஆசிரியராக) தொழில் புரிந்தார். இரு ஆண்டுகளின் பின் (1880இல்) தமிழகம் சென்று திருத்துறைப்பூண்டியில் அழகியநாதன் செட்டியாரின் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார். சில மாதங்களின் பின் நாகப்பட்டினத்திலுள்ள Anderson & Co என்ற கப்பற்றொழில் நிறுவனத்தில் இவர் இரண்டரை ஆண்டுகள் தலைமை எழுதுவினைஞராகத் தொழிலாற்றினார். அதன் பின்னர் தமிழார்வத்தால் பிள்ளையவர்கள் உந்தப்பட்டு 1884-ல் காரைக்கால் சென்றார். அங்கே திருவாங்கூர்ப் பகுதியைச் சேர்ந்த தவசிமுத்துநாடார் என்னும் செல்வந்தரின் வேண்டுகோளுக்கு இணங்கி சத்தியாபிமானி என்ற வார இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராகப் பணியேற்றார். 1885-ல் சென்னை சென்ற முத்துத்தம்பி அந்தர்சன் தெரு என்ற இடத்தில் யுபிலி அச்சுக்கூடம் என்ற பெயரில் ஓர் அச்சியந்திரசாலையை நிறுவினார். சி. வை. தாமோதரம்பிள்ளையின் தொல்காப்பியம் சொல்லதிகாரப்பதிப்பும், உ. வே. சாமிநாதையரின் சிலப்பதிகாரப் பதிப்பும் இதன் மூலமே வெளிவந்தன. 1893-ல் யாழ்ப்பாணம் திரும்பிய முத்துத்தம்பிப்பிள்ளை, வண்ணார்பண்ணையில் தவத்திரு ஆறுமுக நாவலர் குடியிருந்த வீட்டை வாங்கி அதற்கு 'நாவலர் கோட்டம்' எனப்பெயரிட்டு, அங்கிருந்து பல பணிகள் புரிந்தார். நாவலர் வழியில் பணியாற்றிய பிள்ளையவர்கள், நாவலர் அச்சுக்கூடம் என்ற ஒரு அச்சியந்திரசாலையையும் நிறுவினார். ஒரு புத்தகசாலையும், Ward & Davy என்ற பெயரில் பலசரக்கு மருந்துகள் விற்கும் ஒரு கடையும் அவரால் நிறுவப்பட்டன. 1898-இல் தமிழ் வைத்திய விசாரணி என்னும் சஞ்சிகை இவரால் பிரசுரிக்கப்பட்டது. 1898-இல் ஆறுமுகநாவலரின் மருமகனும், அவரின் பணிகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கு பற்றியவருமான த.கைலாசபிள்ளை அவர்களால் ஒரு தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது. இதில் ஈடுபட்டு ஒத்துழைத்த பிள்ளையவர்களுக்கு மதுரைத் தமிழ்ச் சங்கத்துடனும் தொடர்பு ஏற்பட்டது. மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய செந்தமிழ் மாத இதழில் பல ஆய்வுக் கட்டுரைகள் (1902-1917) எழுதி வந்தார். முத்துத் தம்பிப்பிள்ளையவர்கள் எழுதிய பல நூல்களில் இலங்கைச் சரித்திரச் சூசனம், அபிதான கோசம், ஆங்கில-ஆங்கில-தமிழ் அகராதி, யாழ்ப்பாணச் சரித்திரம் ஆகியவை குறிப்பிடத்தக்கன. அபிதானகோசம் 1902-இல் யாழ்ப்பாணம் நாவலர் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழகத்தில் சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி (1910) வெளிவருமுன் இது வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. கல்லாடம் (பாட்டியல் நூல்) கல்லாடர் பாட்டியல் என்பது ஒரு பாட்டியல் இலக்கண நூல் இதனைச் செய்தவர் கல்லாடர் எனும் புலவர். பன்னிரு பாட்டியல் என்னும் பாட்டியல் இலக்கண நூல், 15 பாட்டியல் புலவர்கள் செய்த பாட்டியல் நூல்களிலிருந்து சிலபல பாடல்களைத் திரட்டி உருவாக்கப்பட்ட ஒரு தொகைநூல். இந்த 15 புலவர்களில் கல்லாடர் என்பவரும் ஒருவர். இவர் ஒன்பதாம் நூற்றாண்டுப் புலவர். இந்தக் கல்லாடனார் பெயரைக் 'கல்லாடர்' எனச் சூட்டிக்கொண்ட பிற்காலப் புலவர் கல்லாடர். சைவத் திருமுறை கல்லாடம் பாடிய கல்லாடனாரும் வேறு. யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ் தமிழ், வேறு பல மொழிகளைப் போல பேச்சுத் தமிழ், எழுத்துத் தமிழ் என இருவேறு வடிவங்களைக் கொண்டுள்ளது. எழுத்துத் தமிழ், உலகில் தமிழ் வழங்கும் எல்லாப் பகுதிகளிலும் ஏறத்தாழ ஒன்றுபோலவே, வேறுபாடுகள் அதிகம் இன்றி இருந்தாலும், பேச்சுத் தமிழ், இடத்துக்கிடம் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளுடன் அமைந்திருப்பதை அவதானிக்க முடியும். இத்தகைய வேறுபாட்டுடன் கூடிய மொழி வழக்குகள் வட்டார வழக்குகள் எனப்படுகின்றன. இலங்கையின் வட பகுதியில் பெரும்பான்மையாகத் தமிழர் வாழும் பகுதியான யாழ்ப்பாணப் பகுதியில் பேசப்படும் தமிழே இக்கட்டுரையில் யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ் எனக் குறிப்பிடப்படுகின்றது. யாழ்ப்பாணத் தமிழர்கள் அடர்த்தியாக வாழுகின்ற சிறிய நிலப் பகுதியான யாழ்ப்பாணக் குடாநாடு, அதன் மக்கள் தொகையிலும், பல மடங்கு அதிக மக்கள் தொகை கொண்ட தமிழ் நாட்டுக்குச் சில மைல்கள் தொலைவிலேயே அமைந்திருந்தபோதும், குறிப்பிடத்தக்க தனித்துவமான அம்சங்களுடன் கூடிய பேச்சுத்தமிழ் வழக்கு யாழ்ப்பாணத்தில் உருவானதற்கு, அரசியல் மற்றும் வரலாற்று அம்சங்களே காரணமாகும். தமிழ் ஒலிகளைக் குறிக்கும் எழுத்துக்களுக்கான உச்சரிப்புகள் இன்னதுதான் என வரையறுக்கப்பட்டு இருந்தாலும், பேச்சுத் தமிழில் அவற்றின் உச்சரிப்புகள் பல வேறுபாடுகளை அடைவதை அவதானிக்கலாம். யாழ்ப்பாணத்துத் தமிழில் இந்த உச்சரிப்புகள் எந்த அளவுக்கு சரியான விதிகளுக்கு அமைய உள்ளன என்பதைக் கருதும்போது கவனத்துக்கு வரும் அம்சங்கள் சில பின்வருமாறு. பேச்சுத் தமிழில் சொற்களும் பல விதமான மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. சில சொற்களைக் குறுக்கி ஒலிப்பதும், சிலவற்றை நீட்டி ஒலிப்பதும், சிலவற்றின் ஒலிகளை மாற்றி ஒலிப்பதும் சாதாரணமாகக் காணக்கூடியதே. யாழ்ப்பாணத் தமிழும் இதற்கு விதிவிலக்கல்ல. எனினும் சொற்களை உச்சரிப்பதில் யாழ்ப்பாணத் தமிழில் ஒப்பீட்டு ரீதியில் குறைவான திரிபுகளே இருப்பதாகக் கூறலாம். தமிழ்நாட்டுப் பேச்சுத் தமிழுடன் ஒப்பிட்டு நோக்குவது இதனைப்புரிந்து கொள்ள உதவும். எடுத்துக்காட்டாக: எனினும் ஒலிகள் திரிபு அடைவது யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் இல்லாதது அல்ல. இதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. பல சொற்களில் ற கரம், ட கரமாகத் திரிபு அடைவதுண்டு. "ஒன்று" என்பது "ஒண்டு" என்றும், "வென்று" என்பது "வெண்டு" என்றும் திரியும். இது போலவே "கன்று, பன்றி, தின்று" என்பவை முறையே "கண்டு, பண்டி, திண்டு" என வழங்குவதை அவதானிக்கலாம். தன்மை, முன்னிலை, படர்க்கைப் பெயர்கள் தொடர்பில் யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழில் அதிக வேறுபாடுகள் இல்லாவிட்டாலும், சில சிறப்பம்சங்களை இங்கே காணலாம். படர்க்கையில், அண்மைச் சுட்டு, சேய்மைச் சுட்டுச் சொற்களுடன் சேர்த்து, முன்னிலைச் சுட்டுச் சொற்களும் (உவன், உது), யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழில் புழங்குகின்றன. இது பண்டைத் தமிழ் வழக்கின் எச்சங்கள் எனக் கருதப்படுகின்றது. இது தவிர, ஆண்பால், பெண்பால் இரண்டிலும் பன்மைப் பெயர்களும் (அவங்கள், அவளவை) பேச்சுத் தமிழில் உள்ளன. இது எழுத்துத் தமிழில் இல்லாத ஒரு பயன்பாடு ஆகும். யாழ்ப்பாணத்தில் புழங்கும், தன்மை, முன்னிலை, படர்க்கைப் பெயர்கள், எழுத்துத் தமிழ்ப் பெயருடன் கீழேயுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன. மேலே காணப்படும் முன்னிலைச் சுட்டுப் பெயர்கள் இன்னும் யாழ்ப்பாணத்தில் வழக்கில் உள்ளதாயினும், இன்று இச் சொற்கள் அண்மைச் சுட்டுப் பெயர்களுடன் ஒன்றுக்கொன்று மாற்றீடாகத்தான் பெரும்பாலும் பயன்படுத்தப் படுகின்றன. இவ்வாறு இவற்றுக்கான தெளிவான பயன்பாடு இல்லாமற் போனதனால் போலும் தமிழ் நாட்டில் இவற்றின் புழக்கம் இல்லாமல் போய்விட்டது. யாழ்ப்பாணத்திலும், பெரும்பாலும், பழைய தலைமுறையினரும், கிராமத்து மக்களும்தான் இச் சொற்களைக் கூடுதலாகப் பயன்படுத்துகிறார்கள். இங்கேயும் இது அருகிக் கொண்டு செல்லும் ஒரு வழக்கே. எனினும், முன்னிலைச் சுட்டுப் பெயர்களாக, "உவன், உவள், உது, உவை, உவடம் (உவ்விடம்), உங்கை (உங்கே), உந்தா" போன்ற பல சொற்கள் யாழ்ப்பாணத்தில் புழக்கத்தில் உள்ளன. யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழில் சொற்களுடன் வேற்றுமை உருபுகள் சேரும்போது எழுத்துத் தமிழிலிருந்து வேறுபடுவதை அவதானிக்கலாம். கீழேயுள்ள அட்டவணை இவ் வேறுபாடுகளை எடுத்துக் காட்டுகின்றது. இடம், பால், காலம் காட்டும் விகுதிகள் சொற்களுடன் சேரும்போதும் யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழ் பல வேறுபாடுகளைக் காட்டுகின்றது. "செய்" என்னும் வினைச் சொல்லுடன், மேற்படி விகுதிகள் சேரும்போது உருவாகும் பேச்சுத்தமிழ்ச் சொற்கள் கீழே தரப்படுகின்றன. யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் நான்கு வகையான பேச்சு வகைகள் உள்ளன. அவற்றை மரியாதை மிகு பேச்சு வகை, இடைநிலை பேச்சு வகை, சாதாரண பேச்சு வகை, மரியாதை அற்ற பேச்சு வகை என வகைப்படுத்தலாம். இதில் மரியாதை மிகு வகை என்பது "வாருங்கள் அல்லது வாங்கோ", "சொல்லுங்கள் அல்லது சொல்லுங்கோ" என்று பன்மையாக பேசப்படும் வகையாகும். இடைநிலை பேச்சு வகை என்பது "வாரும்", "சொல்லும்" என பேசப்படும் வகையாகும். சாதாரண பேச்சு வகை "வா", "போ", "இரு" போன்று பேசப்படும் வகையாகும். மரியாதை அற்ற பேச்சு வகை "வாடா", "சொல்லடா" என மரியாதையற்ற பயன்பாடாகும். இந்த மரியாதை அற்ற சொற்கள் நண்பர்களிடையேயோ, இளைய சகோதரர்களிடம் பெரியவர்களாலோ, குழந்தைகளிடம் பெற்றோராலோ, சிறியவர்களிடம் பெரியவர்களாலோ பயன்படுத்தப்படும். சிறியவர்களாக இருந்தாலும் பெரியவர்கள் அவர்களிடம், "வாங்கோ, சொல்லுங்கோ" போன்ற மரியாதையான சொற்களைப் பயன்படுத்தும் முறையும் உள்ளது. அதேவேளை கோபத்தில் பேசும்போதும் பேசப்படுவதுண்டு. இவற்றில் "இடை நிலை பேச்சு வகை" யாழ்ப்பாணத் தமிழரிடம் மட்டுமே காணப்படும் ஒரு தனிச்சிறப்பாகும். இந்த இடைநிலை பேச்சு வகை, தமிழ்நாட்டு பழங்கால அரசத் திரைப்படங்களில் காணப்பட்டாலும் தற்போது பெரும்பாலும் மறைந்து விட்ட நிலை என்றே கொள்ளக்கூடியதாக உள்ளது. இந்த இடைநிலை பேச்சு வகை நண்பர்களிடையேயும், சமவயதினரிடையேயுமே அதிக வழக்கில் உள்ளது. சிலவிடங்களில் வயதில் பெரியவர்கள் வயது குறைந்தவர்களையும், தொழில் நிலைகளில் உயர்நிலையில் இருப்போர் மக்களையும் பேசும் இடங்கள் உள்ளன. சிலநேரங்களில் இருவருக்கு இடையில் ஏற்படும் கருத்து முரண்பாட்டின் போது கோபத்தின் வெளிப்பாடாக மரியாதையை குறைத்து; "நீர்", "உமது", "உமக்கு" எனச் சுட்டுப்பெயர்கள் வடிவிலும், "இரும்", "வாரும்", "சொல்லும்" என வினைச் சொற்கள் வடிவிலும் பேச்சு வெளிப்படும் இடங்களும் உள்ளன. சில சுட்டுப்பெயர் சொற்களும் மூன்று வகையான பேச்சு வழக்கைக் கொண்டுள்ளன. யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழில் புழங்கும் சொற்கள் பல தமிழகத்துச் சொற் பயன்பாடுகளிலிருந்து வேறுபட்டவையாக உள்ளன. பல அன்றாடப் பயன்பாட்டுச் சொற்களும் இவற்றுள் அடக்கம். ஒரு சமுதாயத்தின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டையும் பிரதிபலிப்பதாகக் கூறப்படும் உறவுமுறைச் சொற்கள் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் எப்படி அமைகின்றன என்பதைப் பார்க்கலாம். எழுத்துத் தமிழில் கணவன், மனைவி என்ற சொற்களுக்கு ஈடாக, யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் "புருசன்", "பெண்சாதி" என்ற சொற்கள் பயன்படுகின்றன. 1707 ஆம் ஆண்டில் தொகுக்கப்பட்ட தேசவழமைச் சட்டத்திலும் இச்சொற்களே கையாளப்பட்டுள்ளன. பெற்றோரையும் பிள்ளைகளையும் கொண்ட தனிக் குடும்பம் ஒன்றில் உள்ள உறவுகள், தாய், தந்தை, ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் என்பவர்களாகும். இவர்களை அழைக்கப் பயன்படும் "விளிச் சொற்களும்", அவர்கள் பற்றிப் பிறருடன் பேசும்போது பயன்படுத்தும் "குறிப்புச் சொற்களும்" ஒரு பேச்சு மொழியின் அடிப்படையான சொற்களாகும். தற்காலத்தில் யாழ்ப்பாணத்துப் பிள்ளைகள் தந்தையை "அப்பா" என்றும், தாயை "அம்மா" என்றும் அழைக்கிறார்கள். இன்று வாழும் மூத்த தலைமுறையினரில் பலர், இவர்களை முறையே, "அப்பு", "ஆச்சி" என அழைத்தனர். இடைக் காலத்தில் தந்தையை "ஐயா" என்று அழைக்கும் வழக்கமும் இருந்தது. அக்காலத்தில், பெற்றோரின் பெற்றோரை, பெத்தப்பு, பெத்தாச்சி, அம்மாச்சி, அப்பாச்சி, ஆச்சி என்றார்கள். இன்று அவர்கள் அம்மம்மா, அப்பம்மா, அம்மப்பா, அப்பப்பா, (சில வீடுகளில் தாத்தா, பாட்டி எனவும்) என அழைக்கப்படுகிறார்கள். இதுபோலவே பெற்றோரின் உடன் பிறந்த ஒத்தபாலாரும், சில பத்தாண்டுகளுக்கு முன்வரை, பெரியப்பு, சின்னப்பு, பெரியாச்சி, சின்னாச்சி, குஞ்சையா, குஞ்சம்மா என்றும் பின்னர் பெரியையா, சின்னையா என்றும் அழைக்கப்பட்டு, இன்று, பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சின்னம்மா அல்லது சித்தி என்ற உறவுப்பெயரிட்டு அழைக்கப்படுகிறார்கள். பால் வேறுபாடின்றிப் பிள்ளைகளைக் குறிக்கும்போது, "பிள்ளை" என்ற சொல்லே பயன்படுகின்றது. ஆண்பிள்ளையை "ஆம்பிளைப் பிள்ளை" என்றும், பெண்பிள்ளையைப் "பொம்பிளைப் பிள்ளை" என்றும் குறிப்பிடுவது அங்குள்ள பேச்சுத்தமிழ் வழக்கு. "ஆம்பிளை" என்பது ஆண்பிள்ளை என்பதன் திரிபு. அதுபோலவே "பொம்பிளை" என்பது பெண்பிள்ளை என்பதன் திரிபு. எனினும் தற்காலத்தில் "ஆம்பிளை" என்பதும், "பொம்பிளை" என்பதும், ஆண், பெண் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டு வருவதால், பிள்ளைகளைக் குறிக்கும் போது, இன்னொரு "பிள்ளை" என்ற சொல்லையும் சேர்க்கவேண்டி ஏற்பட்டது. உறவுச் சொற்களாக வழங்கும்போது, ஆண்பிள்ளையை, "மகன்" என்றும் பெண்பிள்ளையை "மகள்" என்றுமே வழங்குவர். யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில், இச்சொற்களை விளிச்சொற்களாகவும் பயன்படுத்தி வந்தாலும், பல குடும்பங்களில், ஆண்பிள்ளையைத் "தம்பி" என்றும், பெண்பிள்ளையைப் "தங்கச்சி", அல்லது "பிள்ளை" என்றும் அழைப்பது வழக்கம். பிள்ளைகள் தங்களுக்குள் பயன்படுத்திக் கொள்ளும் உறவு முறைச் சொற்கள் "அண்ணன், அக்கா, தம்பி, தங்கச்சி" என்பனவாகும். மேற்சொன்ன உறவுகள் ஒன்றுக்கு மேற்பட இருக்கும்போது, "பெரிய, சின்ன, இளைய, ஆசை, சீனி" போன்றவற்றில் பொருத்தமான ஒரு அடைமொழியைச் சேர்த்து, "பெரியண்ணன்", "ஆசைத்தம்பி, சின்னக்கா" என்றோ, அவர்களுடைய பெயரைச் சேர்த்து, "சிவா அண்ணா, வாணியக்கா" என்றோ வேறுபடுத்தி அழைப்பது வழக்கம். தந்தையின் உடன் பிறந்தாளை, "அத்தை" என்று அழைக்கும் வழக்கம் யாழ்ப்பாணத்தில் மிகவும் குறைவு. தந்தையோடு பிறந்த பெண்களையும், தாயோடு பிறந்த ஆண்களின் மனைவியரையும், "மாமி" என்றே அழைப்பது இவ்வூர் வழக்கம். எனினும், பழைய தலைமுறையினர், தாயோடு பிறந்த ஆணை "அம்மான்" என்றும், தந்தையுடன் பிறந்த பெண்ணின் கணவரை "மாமா" என்றும் குறிப்பிட்டனர். இன்று "அம்மான்" என்ற சொல் கைவிடப்பட்டு, "மாமா" என்பதே இரு உறவுக்கும் பயன்படுகின்றது. மனைவி கணவனை 'இஞ்சாருங்கோ', அல்லது 'இஞ்சாருங்கோப்பா' என்றும், கணவன் மனைவியை பெயரைச் சொல்லியோ அல்லது 'இஞ்சாருமப்பா' என்றுமோ அழைத்து வந்தனர். தற்போது வாழும் மூத்த தலைமுறையினர் தற்போதும் இப்படி ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்வதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. இளம் வயதினரில்கூட, மனைவி கணவனை 'அப்பா' என்று அழைப்பது தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அனேகமாக குழந்தை பிறந்த பின்னர், குழந்தைக்கு 'அப்பா' என்று சொல்லிக் கொடுத்துக்கொண்டு வருவதனால் இம்முறை தோன்றியிருக்கலாம். தற்போது அனேகமாக கணவன் மனைவியை பெயரிட்டு அழைப்பதே வழக்கத்தில் உள்ளது. மனைவியும் கணவனை பெயரிட்டு அழைப்பதும் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. திருமணமான புதிதில் மனைவி கணவனை அத்தான் என்று அழைக்கும் வழக்கமும் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இவ்வழக்கம் தமிழகத்துப் பழைய திரைப்படங்களில் இருந்து பெறப்பட்டிருக்கலாம். அக்காவின் கணவரை "அத்தான்" அல்லது "மைத்துனர்" என்றும், தங்கையின் கணவரை "மச்சான்" என்றும், அண்ணாவின் அல்லது தம்பியின் மனைவியை "மச்சாள்" என்றும் அழைத்தனர். "அண்ணி" என்ற சொல் மிக அரிதாகவே யாழ்ப்பாணத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. மேலும் மாமா, மாமியின் மகனை மச்சான் என்றும், அவர்களின் மகளை மச்சாள் என்றும் அழைக்கும் வழக்கமும் இருந்து வந்தது. யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கில் பயன்படுகின்ற சொற்கள் பல அப்பகுதிக்கேயுரிய சிறப்பான பயன்பாடுகளாக அமைகின்றன. இவ்வாறான சொற்களில் சிலவற்றைக் கீழே காணலாம். யாழ்ப்பாணம், 1591 ஆம் ஆண்டிலிருந்து, 1620 வரை போத்துக்கீசரின் செல்வாக்கின் கீழும், 1620 தொடக்கம் 1658 வரை அவர்களின் நேரடி ஆட்சியிலும் இருந்தது. யாழ்ப்பாணத்துடன் தொடர்பு கொண்ட முதல் மேல் நாட்டவர் இவர்களே ஆனதால், பல மேல் நாட்டுப் பொருட்களும், கருத்துருக்களும் யாழ்ப்பாணத்தில் அறிமுகமானது இவர்கள் மூலமேயாகும். இவற்றுடன் போத்துக்கீச மொழிச் சொற்கள் சிலவும் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் கலந்துள்ளன. தமிழ் நாட்டில் போத்துக்கீசர் செல்வாக்கு மிகவும் குறைவாகவே இருந்தனால், யாழ்ப்பாணத்தைப்போல், தமிழ் நாட்டுப் பேச்சுத் தமிழில் போத்துக்கீச மொழிச் சொற்கள் அதிகம் ஊடுருவவில்லை. ஒல்லாந்தர் 138 ஆண்டுகள் யாழ்ப்பாணத்தை முழுமையாக ஆண்டபோதிலும், போத்துக்கீசக் சொற்களைப் போல், டச்சு மொழிச் சொற்கள் யாழ்ப்பாணத் தமிழில் அதிகம் இடம் பெறவில்லை. எனினும், சில டச்சுச் சொற்கள் இன்னும் இங்கே புழக்கத்தில் இருந்துதான் வருகின்றன. கக்கூசு (கழிப்பறை), கந்தோர் (அலுவலகம்), காமரா அல்லது காம்பறா (அறை), தேத்தண்ணி (தேநீர்) போன்ற சொற்கள் டச்சு மொழியிலிருந்து வந்தவையாகும். ஆங்கிலேயர் யாழ்ப்பாணத்தை 150 ஆண்டுகளுக்கு மேல் நேரடியாக ஆட்சி செய்தனர். பரந்த ஆங்கிலக் கல்வி வாய்ப்புக்களை அளித்ததன் மூலம் யாழ்ப்பாணச் சமுதாயத்தில் ஆங்கிலம் நிலையான ஒரு இடத்தைப் பெற வழி வகுக்கத்தனர். விடுதலைக்குப் பின்னரும், மேலைத்தேசப் பண்பாட்டுச் செல்வாக்கும், உலகமயமாதலும், ஆங்கிலத்தின் செல்வாக்கை யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி உலகம் முழுவதிலும் நிரந்தரமாக்கியுள்ளது. மேலும் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலம், அறிவியலிலும், தொழில் நுட்பத்திலும் ஐரோப்பா துரித வளர்ச்சியைக் கண்ட காலம். ஏராளமான புதிய பொருட்களும், கருத்துருக்களும் உருவாகி உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்கான ஊடகமாக அமைந்தது ஆங்கிலமே. இதனால் இவையனைத்தும் ஆங்கிலப் பெயர்களுடனேயே அறிமுகமாயின. ஆங்கிலத்தில் கல்வி கற்று அம்மொழியிலேயே சிந்திக்கத் தொடங்கிய ஒரு குழுவினர் யாழ்ப்பாணத்திலும் உருவாயினர். இவ்வாறான நிலைமை உள்ளூர் மொழியில் பெருமளவிலான ஆங்கில ஊடுருவலுக்கு வழி சமைத்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்கள் தொடர்பிலும், எல்லா மட்டங்களிலும் ஆங்கிலச் சொற்கள் பேச்சுத் தமிழில் பயன்படுத்தப்படுகின்றன. எழுத்து மொழியில் தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், பேசும்போது மக்கள் பெருமளவில் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தியே வருகின்றனர். "பஸ், ஐஸ்கிறீம், சைக்கிள், மோட்டார், சினிமா, கமரா, ஸ்ரூடியோ..." என நூற்றுக்கணக்கான ஆங்கிலச் சொற்களை யாழ்ப்பாண மக்கள் தமிழ்ச் சொற்கள் போலவே பயன்படுத்தி வருவதைக் காணலாம். முன் சொல்லப்பட்டவர்கள் தவிர்ந்த பிற வெளி நாட்டாருக்கு யாழ்ப்பாணத்துடன் நேரடித் தொடர்பு கிடையாது. எனினும், தமிழ் நாட்டில் தமிழுக்கு அறிமுகமாகிய பல திசைச் சொற்களில் சில யாழ்ப்பாணத்திலும் பயன்பாட்டிலுள்ளன. தமிழ் நாட்டில், பாரசீக மொழி, ஹிந்தி, உருது, அரபி ஆகிய மொழிகளிலிருந்து பல சொற்கள் பேச்சுத் தமிழில் புழங்குகின்றன. இவற்றுட் சில யாழ்ப்பாணத்தில், செய்தித்தாள்கள், வானொலிகள் ஊடாக எழுத்துத் தமிழில் புழங்கினாலும், பேச்சுத் தமிழில் மிகக் குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன. பதிலாகத் தமிழ்ச் சொற்களோ ஆங்கிலக் கடன் சொற்களோ பயன்படுகின்றன. இவ்வாறு தமிழ் நாட்டில் பயின்படுத்தப்படும் பிற மொழிச் சொற்கள் சிலவற்றையும் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் அவற்றின் நிலைமையையும் கீழ்வரும் அட்டவணை காட்டுகின்றது. தீவினை (பௌத்தநெறி) தீவினைகள் பத்து என்று பௌத்தநெறி குறிப்பிடுகிறது. மணிமேகலை நூலில், இவை என்னென்ன என்று அறவண அடிகள் மணிமேகலைக்கு விளக்குகிறார். இவற்றைப் "பாரமிதை" என்றும் வழங்குவர். அவை: சித்தாந்தத் தொகை சித்தாந்தத் தொகை மறைந்துபோன தமிழ்நூல்களில் ஒன்று. 9 ஆம் நூற்றாண்டினதாகக் கொள்ளத்தக்கது. பௌத்த சித்தாந்தம் முழுவதையும் தொகுத்துக் கூறும் ஒரு நூல் இது. அருள்நெறியால் பாரமிதை ஆறைந்தும் உடனடக்கி பொருள்முழுதும் போதிநிழல் நன்குணர்ந்த முனிவன்தன் அருள்மொழியான் நல்வாய்மை அறிந்தவரே பிறப்பறுப்பார் மருள்நெறியாம் பிறநூலும் மயக்கறுக்கு மாறுளதோ என்னும் அதன் பாடல் ஒன்று, திருவொற்றியூர் ஞானப்பிரகாசர் எழுதிய சிவஞான சித்தியார் நூலின் பரபக்க உரைநூலில் காட்டப்பட்டு, இது பௌத்தரின் சித்தாந்தத் தொகை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மருள்தரு மனம் வாய் மெய்யில் கொலை முதல் வினை பத்தாமே என்பது சித்தாந்தத் தொகை (இந்தப் பத்துப் பாரமிதைகள் உடலில் பாரமாக இருக்கும் கூறுபாடுகள் என மணிமேகலை காப்பியத்தில் காட்டப்பட்டுள்ளன.) அறவண அடிகள் அறவண அடிகள் மணிமேகலை காப்பியத்தில் வரும் பௌத்த துறவி. கோவலன், மாதவி ஆகியோரின் மகள் மணிமேகலைக்குப் புத்தநெறியைப் புகட்டியவர். புகார் நகரத்தில் வாழ்ந்தவர். புகார் நகரத்தைக் கடல் கொண்ட பின் கச்சிமாநகருக்கு வந்து அறமுறைத்தவர். தமிழின் முதல் தருக்கவாதி ‘அறவண அடிகள்’ உங்கள் நூலகம் - ஜூலை 2017 தி. ச. சின்னத்துரை தி. ச. சின்னத்துரை ("Thirugnana Sampanthar Sinnathuray", செப்டம்பர் 22, 1930 - சனவரி 16, 2016), சிங்கப்பூர் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார். இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் சட்டம் பயின்றார். சிங்கப்பூர் திரும்பிய பின், வழக்குரைஞராக பயிற்சி பெற்றார். சிங்கப்பூர் பிரதமர் இவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்தார்.. இவருடன் சேர்த்தே அன்றுவரை ஆறு நீதிபதிகளே பதவியில் இருந்தனர். பின்னர் நிலக் கையகப்படுத்தலுக்கான உயர் ஆணையராக நியமிக்கப்பட்டார். சிங்கப்பூர் இராணுவ நீதிமன்றத்தின் அதிபராகவும் இருந்துள்ளார். பொதுத் தொண்டு ஆர்வலர் விருதினை சிங்கப்பூர் பிரதமர் இவருக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. கொசு ஒழிப்பு கொசு ஒழிப்பு என்பது கொசுக்களால் மனித உடலுக்கு ஏற்படும் மலேரியா, டெங்கு காய்ச்சல் சிக்குன்குனியா நோய்களை தடுக்க கொசுக்களை கட்டுப்படுத்தும் முன் எச்சரிக்கை நடவடிக்கை ஆகும். கொசுக்கள் மக்களைக் கடிக்காமல் கொசு வலைகள் பாதுகாக்கின்றன. தூங்கும்போது கொசுவலை உபயோகிப்பது கடினமான சூழலில் கொசுக்கடிக்கு எதிரான களிம்பு, கொசுவர்த்திச் சுருள் போன்ற கொசுவிரட்டிகள் பயன்படுத்தல் என்பன கொசு கடிக்காமல் பாதுகாத்துக்கொள்ள உதவும். கொசுக்களை விரட்ட பயன்படுத்தும் பொருட்களில் கொசுக்களை அழிக்கும் இரசாயனம் அலெத்ரின்() சார்பு பொருட்கள் உள்ளன. இது கொசுக்களை மட்டும் அழிப்பதில்லை மனிதனின் சுவாசப்பையில் நச்சுப்பொருள் கலந்து நாளடைவில் மார்புச்சளி, தும்மல் தலைவலி போன்ற உடல்நலக்கேடுகள் விளைகின்றன. எட்விக் கண்ணாடிக் குவளை எட்விக் கண்ணாடிக் குவளை (Hedwig glass) என்பது, கிபி 10-12 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் மையக் கிழக்கில் அல்லது நோர்மன் சிசிலியில் தோன்றிய ஒருவகைக் கண்ணாடிக் குவளை ஆகும். இவ்வாறான மூன்று குவளைகளை வைத்திருந்தார் எனக் கருதப்படும் சிலேசிய இளவரசியான செயின்ட் எட்விக்கின் (1174–1245) பெயரைத் தழுவியே இக்குவளைக்குப் பெயரிடப்பட்டது. இது வரை முழுமையான 14 குவளைகளே இருப்பதாகத் தெரிய வருகிறது. இக்குவளை வகை தோன்றிய இடம் குறித்து எகிப்து, ஈரான், சிரியா என்பவற்றுக்கு இடையே சர்ச்சை நிலவுகிறது. இவை இசுலாமியத் தயாரிப்போ இல்லையோ இவற்றில் நிச்சயமாக இசுலாமியக் கண்ணாடிக் குவளைகளின் செல்வாக்கு உண்டு. முசுலிம் கைப்பணியாளர்களால் செய்யப்பட்டதாகக் கருதப்படும் இக் குவளைகளில் கிறித்தவப் படிமங்களைக் காணமுடிகிறது. இக்குவளைகள் ஏற்றுமதிக்காகச் செய்யப்பட்டதால் அல்லது கிறித்தவ வாடிக்கையாளர்களுக்காகச் செய்ய்பபட்டதால் இப்படிமங்கள் இடம்பெற்று இருக்கக்கூடும். இக் குவளைகள் நோர்மன் சிசிலியில் 11 ஆம் நூற்றாண்டில் உருவக்கப்பட்டவை என்னும் கருத்தை ரோசுமேரி லியார்க்கே என்பவர் தான் 2005 ஆம் ஆண்டில் எழுதிய நூலொன்றில் வெளியிட்டார். இக்கருத்துக்கு வல்லுனர்கள் மத்தியில் ஓரளவு ஆதரவு உண்டு. இது வரை அறியப்பட்ட 14 குவளைகளுமே ஏறத்தாழ ஒரே வடிவம் கொண்டவை. தடிப்பான சுவர்களையும், நேரான பக்கங்களையும் கொண்ட இக் குவளைகளின் அடிப்பகுதியில் விளிம்புப் பட்டைகள் உள்ளன. இவை ஏறத்தாழ 14 சமீ உயரமும், 14 சமீ விட்டமும் கொண்டவை. ஒன்றைத் தவிர ஏனையவை எல்லாம் சில்லுவெட்டு முறையில் செய்யப்பட்ட அலங்கார வேலைப்பாடுகளோடு கூடியவை. இக் குவளைகள் புகைத்தன்மையான உலோக நிறம் உடையவை. சில பச்சை, மஞ்சள் சாயல்கள் கொண்ட கண்ணாடியால் ஆனவையாகக் காணப்படுகின்றன. அலங்கார வேலைப்பாடுகள் இரண்டு விதமான பாணிகளைச் சேர்ந்தவை. நான்கு குவளைகள் சமாரா பாணி "சி" இலிருந்து பெறப்பட்ட பண்பியல் வடிவ அலங்காரங்கள் கொண்டவை. எட்டுக் குவளைகளில் அலங்காரத்துக்கு சிங்கம், கழுகு, புற்றாவர வகைகள் அடங்கிய தாவர விலங்கு உருவங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இக்குவளைகள், நடுக் காலத்தில் ஆடம்பரப் பொருட்களுள் ஒன்றாகக் கருதப்பட்டதும், பாத்திமிய எகிப்தில் செய்யப்பட்டதுமான பாறைப் பளிங்குச் செதுக்குப் பாண்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு செய்யப்பட்டிருக்கக்கூடும். மேற்படி பாறைப் பளிங்குச் செதுக்குப் பாண்டங்கள் பெரும்பாலும் தேவாலயப் பொக்கிசங்களிடையே காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக வெனிசின் புனித மார்க் பசிலிக்காவின் பொக்கிசங்களில் இப்பாண்டங்களும் உள்ளன. உலகத் தெலுங்கு மாநாடு உலகத் தெலுங்கு மாநாடு (ప్రపంచ తెలుగు మహాసభలు, பிரபஞ்ச தெலுங்கு மகாசபை, World Telugu Conference) தெலுங்கு மொழியின் பயன்பாட்டையும் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு நடத்தப்படுகிறது. உலகம் முழுதும் வாழும் தெலுங்கு மொழி ஆர்வலர்கள் இம்மொழியின் வளர்ச்சி தொடர்பான கருத்துகளை இம்மாநாட்டில் பகிர்ந்து கொள்வர். முதல் மாநாடு 1975 இல் ஐதராபாத்திலும், இரண்டாவது மாநாடு 1981 ஆம் ஆண்டில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலும், 1990 ஆம் ஆண்டில் மொரீசியசிலும், நான்காவது மாநாடு 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருப்பதியிலும் நடைபெற்றன. முதலாம் உலகத் தெலுங்கு மாநாடு ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரான ஐதராபாத்தில் ஏப்பிரல் 12-18 நாட்களில் நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 1500 ஆர்வலர்கள் பங்கேற்றனர் 28 துறைகளில் ஏறத்தாழ 100 கட்டுரைகள் படிக்கப்பட்டன. 1981 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 முதல் 18 வரை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தப்பட்டது. மலேசியாவில் உள்ள மலேசிய ஆந்திர சங்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்து உதவியது. மூன்றாம் மாநாடு மொரீசியசில் 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 8,9,10 ஆகிய நாட்களில் நடத்தப்பட்டது. தெலுங்கு பல்கலைக்கழகம், தெலுங்கு பண்பாட்டு அறக்கட்டளை, மொரீசியசு இந்திரா காந்தி பண்பாட்டு மையம், ஆந்திரப் பிரதேச அரசு ஆகியவற்றின் துணையுடன் மாநாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. 2012 ஆம் ஆண்டில் டிசம்பர் 28, 29, தேதிகளில் திருப்பதியில் நான்காவது மாநாடு நடத்தப்பட்டது. இந்நிகழ்வு திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வர கால்நடைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, நடிகர் சிரஞ்சீவி, தமிழக ஆளுனர் கோனியேட்டி ரோசைய்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஐந்தாவது மாநாடு தமிழகத் தலைநகர் சென்னையில் காமராஜர் அரங்கில், ஜூன் 1 தொடங்கி மூன்று நாட்கள் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இம்மாநாட்டில் தெலுங்கு மொழிக்கும், மராத்தி, தமிழ், ஒரிய மொழி ஆகியனவற்றிற்கும் உள்ள தொடர்பு ஆய்வு செய்யப்படும் என மாநாட்டு அமைப்பாளர் கூறியுள்ளார். கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தெலுங்கு மொழியின் நிலை குறித்தும் பிரதிநிதிகள் பேசுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். சென்னையில் தெலுங்கு பண்பாட்டு மையம் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழும் தெலுங்கும் திராவிட மொழிகள். இவை இந்திய அரசால் செம்மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளையும் திராவிடப் பல்கலைக்கழகத்தில் கற்கலாம். இவ்விரண்டு மொழிகளுக்கும் உலகளாவிய மொழி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. தமிழ்த் தாய் வாழ்த்தைப் போன்றே "மா தெலுகு தல்லிக்கி" என்ற தெலுங்குத் தாய் வாழ்த்தும் உள்ளது. தமிழுக்கு பல மாநாடுகள் நடைபெற்றதை சுட்டிக் காட்டிப் பேசிய மூத்த அறிஞர் தெலுங்கு மொழியின் வளர்ச்சிக்கு இது முக்கியம் எனக் கூறியிருக்கிறார். புத்தனைப் போற்றல் புத்தனைப் போற்றும் தொடர்கள் மணிமேகலை நூலில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன. மணிபல்லவத் தீவில் கோமுகி என்னும் பொய்கையில் புத்தர் பிறந்த நாளில், உணவு அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபியை மணிமேகலை பெற்றாள். பசிப்பிணி நீக்கும் பாத்திரம் அது. தீவதிலகை வாயிலாக அதனைத் தனக்கு அளித்த புத்தர் தெய்வத்தை, மணிமேகலை போற்றும் வரிகள் இவை: இந்தியாவில் காற்றுத் திறன் இந்தியாவில் காற்றுத் திறன் பயன்பாடு 1990களில் துவங்கி குறுகிய காலத்திலேயே உலகின் ஐந்தாவது இடத்தை எட்டி உள்ளது. 2009-10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிவீதம் ஏனைய முதல் நான்கு நாடுகளை விடக் கூடியதாகும். மார்ச்சு 31, 2011 நிலவரப்படி காற்றுத் திறனால் கிடைக்கும் மின்சாரத்தின் நிறுவப்பட்டத் திறனளவு 17967 மெகாவாட்களாக உள்ளது. இது பெருமளவில் தமிழ்நாட்டிலிருந்தும் (7134 மெ.வா), குசராத்திடமிருந்தும் (2,884 மெ.வா) கிடைக்கிறது. மேலும் மகாராட்டிரம் (2310.70 மெ.வா), கர்நாடகம் (1730.10 மெவா), இராசத்தான் (1524.70 மெ.வா), மத்தியப் பிரதேசம் (275.50 மெ.வா), ஆந்திரப் பிரதேசம் (200.20 மெ.வா), கேரளம் (32.8 மெ.வா), ஒரிசா (2 மெ.வா) மேற்கு வங்காளம் (1.1 மெ.வா) மாநிலங்களும் மற்றும் பிற மாநிலங்களும் (3.20 மெ.வா) வெவ்வேறு அளவுகளில் பங்கேற்கின்றன. 2012ஆம் ஆண்டில் கூடுதலாக 6,000 மெ.வா காற்றுத்திறன் மின்சாரம் நிறுவப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட மின்சார திறனளவில் 6% காற்றுத் திறனால் பெறப்படுகிறது. 7000 மெகாவாட் உயர்மட்ட காற்றுத்திறன் மின்னுற்பத்தியைக் கொண்ட தமிழ்நாடு தெற்காசியாவின் காற்றுத்திறன் மையங்களில் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. இந்தியாவின் மொத்த காற்றுத் திறன் உற்பத்தியில் 40% தமிழகத்திலிருந்து பெறப்படுகிறது. காற்றுப் பண்ணைகள் உள்ள முதன்மை மாவட்டங்களாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் திகழ்கின்றன. இனி வேண்டாம் இனி வேண்டாம் (Inni Vendham) புகழ்பெற்ற மலேசியத் தமிழ்ப் பாடல் ஆகும். இப்பாடல் உலகம் முழுதும் புகழ்பெற்ற தமிழ்ப் பாடல்களுள் ஒன்று. இப்பாடலை திவ்வியா பாடியுள்ளார். இதை யூடியூப் வழியாக 915,000 பேர் பார்வையிட்டனர்.. நீர்ம ஓட்ட வெப்பநிலை நீர்ம ஓட்ட வெப்பநிலை (ஆங்கிலம்: Pour point temperature) என்பது, ஒரு நீர்மம் எந்த குறைந்த வெப்பநிலையில் தன் நீர்ம நிலையை இழந்து அரைதிண்ம நிலைக்கு மாறுகின்றதோ அந்த வெப்பநிலையைக் குறிப்பதாகும். இது பொதுவாக கச்சா எண்ணெய் மற்றும் உயவு எண்ணெய்களின் பண்புகளில் ஒன்றாகும். தப்ரபேன் தப்ரபேன் அல்லது தப்ரொபானா ("Taprobana") என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஓர் தீவின் வரலாற்றுப் பெயராகும். கிரேக்கப் புவியியலாளரான மெகஸ்தெனஸ் என்பவர் கிட்டத்தட்ட கி.மு. 290 இல் ஐரோப்பியர்களுக்கு இது குறித்து முதன் முதலில் தெரியப்படுத்தினார். பின்னர் இது தொலெமியின் நூலில் ஆசியாக் கண்டத்துக்குத் தெற்கில் இருப்பதாகக் காட்டப்பட்ட ஒரு பெரிய தீவைக் குறிக்கப் பாவிக்கப்பட்டது. இப் பெயர் 1602 இல் எழுதப்பட்ட தொம்மாசோ கம்பனெல்லாவின் சிவிட்டாஸ் சோலிஸ் ("Tommaso Campanellas Civitas Solis") என்னும் நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பெயரால் தொலமியின் நிலப்படத்தில் குறிக்கப்படும் தீவு எது என்பது நீண்ட காலமாகத் தெளிவில்லாத ஒன்றாகவே இருந்து வந்தது. தற்காலத்தில் இது இலங்கையையே குறிப்பதாகப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது எனினும், அவ்வப்போது இது குறித்த ஐயங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. தப்ரபேன் என அடையாளம் காணப்பட்ட இடங்களுள் பின்வருவன அடங்கும்: தப்ரபேன், லூயிஸ் டி கமோஸ் (1524–1580) என்பவர் எழுதிய ஒஸ் லூசியாடாஸ் என்னும் போர்த்துக்கேய இதிகாசக் கவிதையின் முதற் பகுதியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தப்ரபேனை அடையாளம் காண்பதில், தொலமியின் நிலப்படத்தில் காட்டப்பட்டுள்ள அதன் அளவு ஒரு முக்கியமான பிரச்சினை. தப்ரபேன் மிகவும் பெரிதாகக் காட்டப்பட்டிருந்த அதே வேளை, இந்தியா அதன் உண்மையான அளவை விடவும் மிகவும் சிறிதாகக் காட்டப்பட்டிருந்தது. இப்பிரச்சினையைத் தீர்க்க முற்பட்ட பிரெஞ்சுப் புவியியலாளரான கொசீன் (Gosseinn) என்பவர், இந்தியாவின் தக்காணப் பகுதிகளை இந்தியாவில் இருந்து பிரித்து தப்ரபேனுடன் சேர்த்துக் காட்டியதாலேயே தப்ரபேன் இவ்வளவு பெரிதாகியது என்னும் கருத்தை அவர் முன்வைத்தார். பெரிய சிந்தனையாளனாக விளங்கிய இம்மானுவேல் கான்ட், தப்ரபேன் என்பது மடகாசுக்கர் தீவைக் குறிப்பதாகக் கூறினார். ஜியோவன்னி டொமினிக் கசினி என்பார், தப்ரபேனை இன்றைய மாலைதீவுகள் இருக்கும் இடத்தில் இருந்த ஒரு தீவாகக் காட்ட முற்பட்டார். இது அலைகளின் தாக்கம் காரணமாகக் கடலுள் மூழ்கி விட்டதாக அவர் கூறினார். இலங்கையின் மேற்குக் கரையில் இருந்த குதிரைமலை என்னும் பழங்காலத் துறைமுகம், அப்பகுதியின் மண்ணின் செப்பு நிறம் காரணமாகத் தம்பபண்ணி எனும் பெயரால் அழைக்கப்பட்டது என்பது மகாவம்சத்தின் விளக்கம். தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்துக்கு ஊடாகச் செல்லும் தாமிரபரிணி (சமசுக்கிருதம்: தாம்ரபர்ணி) ஆறு கடலில் கலக்கும் இடத்துக்கு எதிரே இருப்பதால் அப்பகுதியில் இருந்து குடியேறிய மக்கள் இதற்குத் தாமிரபரிணி எனப் பெயர் இட்டிருக்கலாம் என்றும் தாமிரபரிணியின் பாளி மொழி வடிவமே தம்பபண்ணி என்னும் பெயர் என்பதும் இன்னொரு கருத்து. தப்ரபேன் என்பது, "தாம்ரபர்ணி" என்பதன் கிரேக்க மொழிப்படுத்தலாக இருக்கக்கூடும். அதேவேளை, தொலமியின் தப்ரபேனின் நிலப்படத்தில் குறிக்கப்பட்டுள்ள பல இடப்பெயர்களையும் இலங்கையின் இடப்பெயர்களுடன் இலகுவாக அடையாளம் காண முடிகிறது. எடுத்துக்காட்டாக அனுரோக்ராமு, நாகதிபி, முன்டோட்டு போன்றவை பழங்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய இலங்கையின், அனுராதபுரம், நாகதீபம், மாதோட்டம் போன்ற இடங்களுடன் பொருந்தி வருகின்றன. தவிர, இலங்கை மிகப் பழைய காலம் தொட்டே கிரேக்கர்களுக்குப் பழக்கமானது. கிறித்துவுக்கு முற்பட்ட காலத்திலேயே கிரேக்க வணிகர்கள் தென்னிந்தியாவுடனும், இலங்கையுடனும் தொடர்பு கொண்டிருந்ததற்குச் சான்றுகள் உள்ளன. இந்தக் கருத்து 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஏற்பட்டது. இத்தாலியப் பயணியான நிக்கோலோ டி கொன்டி என்பவரே முதலில் தப்ரபேனும் இலங்கையும் வேறு வேறானவை என்ற கருத்தை முன்வைத்தார். தப்ரபேனை இவர் சுமாத்ராவுடன் அடையாளம் கண்டார். இதைத் தொடர்ந்து இவ்விடயத்தில் ஆர்வம் கொண்ட பலரும் பல்வேறு கருத்துக்களை முன்வைக்கலாயினர். கிரேக்கர்களின் தப்ரபேன் பற்றிய விபரிப்புகள் பெருமளவுக்கு சுமாத்திராவுக்கும் பொருந்தக்கூடியவை. தொலமியின் தப்ரபேனுக்கு யானைகள், வாசனைத் திரவியங்கள் போன்றவற்றின் ஏற்றுமதியோடு தொடர்பு கூறப்படுகிறது. இதுவும் இலங்கையைப் போலவே சுமாத்திராவுக்கும் பொருத்தமாக அமைகின்றது. 1580ல் செபாசுட்டியன் முன்சுட்டர் (Sebastian Munster) என்னும் நிலப்பட வரைவாளர் வரைந்த தப்ரபேனின் நிலப்படம், தப்ரபேனை சுமாத்திராவுடன் அடையாளம் காண்கிறது. இந்நிலப்படம் "Sumatra Ein Grosser Insel’(சுமாத்ரா, ஒரு பெரிய தீவு)" என்னும் செருமன் மொழித் தலைப்புடன் கூடியது. உன் கண்ணில் நீர் வழிந்தால் உன் கண்ணில் நீர் வழிந்தால் 1985 ம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படமாகும். இப்படத்தில் ஒய். ஜி. மகேந்திரன், மாதவி, வி. கே. இராமசாமி, செந்தாமரை, வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்துள்ளார்கள். இப்படத்தில் ரஜினிகாந்த், ஒய். ஜி. மகேந்திரன் ஆகியோர் பயிற்சி துணை மேற்பார்வையாளர்களாக (காவல்துறை) செந்தாமரைக்கு கீழ் பணி புரிவார்கள். வி. கே. இராமசாமி காவல்துறை காவலராக நடித்து இருப்பார். சிவா சின்னப்பொடி சிவா சின்னப்பொடி (பிறப்பு: டிசம்பர் 12, 1955) ஈழத்தின் மூத்த ஊடகவியலாளரும் எழுத்தாளரும் ஆவார். வடமராட்சியில் வல்லிபுரம் என்ற கிராமத்தில் சின்னப்பொடி-இலட்சுமி ஆகியோருக்கு மகனாகப் பிறந்த இவரது இயற்பெயர் சிவநேசமுர்த்தி. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய தனது தந்தையின் நினைவாக தனது பெயருடன் அவரது பெயரை இணைத்து சிவா சின்னப்பொடி என்று குறிப்பிடுகிறார். 1970களில் எழுத்துலகில் காலடி வைத்த இவர் சிங்கைத் திவாகரன் என்ற பெயரில் ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளை இலங்கையில் வெளிவந்த பத்திரிகைகளில் எழுதியுள்ளார். 1975 முதல் வானொலி, பத்திரிகை, சஞ்சிகை என்று பல துறைகளில் பணியாற்றினார். 1983 இல் ஈழப் போராளிகளால் முதன் முதலில் உருவாக்கப்பட்ட தமிழீத்தின் குரல் வானொலியின் பொறுப்பாளராக, ஒலிபரப்பாளராக 1985 வரை பணியாற்றினார். 1990 இல் பிரான்சுக்கு புலம் பெயர்ந்த பின்னர் ஊடகத்துறை கல்வியை கற்றதுடன் ஈழமுரசு, தாய்நிலம் ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகவும், ரிரிஎன் தொலைக்காட்சியின் முதன்மை செய்தி ஆசிரியராகவும் இருந்தார். தற்போது ஜிரிவி தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியராக பணியாற்றும் இவர் பல தொடர்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நினைவழியா வடுக்கள் என்ற தன் வரலாற்று நூல் தற்போது விடியல் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது தாமிரபரணி தாமிரபரணி என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்: நாட்டுத் தலைவர் நாட்டுத் தலைவர் ("Head of state") ஒரு இறையாண்மையுள்ள நாட்டின் மிக உயர்ந்த அரசு பதவி வகிப்பவரைக் குறிக்க பயன்படுத்தப்படும் பெயராகும். அரசமைப்புச் சட்டவியல், பன்னாட்டு சட்டவியல், அரசறிவியல், தூதரக நெறிமுறைகள் போன்ற துறைகளில் இத்தொடர் பயன்படுகிறது. இப்பதவி வகிப்பவர் பன்னாட்டு அரங்கில் அந்நாட்டின் தலைமைப் பொது பிரதிநியாகச் செயல்படும் அதிகாரம் பெற்றிருப்பார். உலகின் மிகப்பெரும்பான்மையான நாடுகளில் இப்பதவியை தனியொருவரே வகிக்கின்றார் எனினும் சுவிட்சர்லாந்து, பொசுனியா எர்செகோவினா, அண்டோரா, சான் மரீனோ ஆகிய நாடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர் கொண்ட குழுமங்கள் இப்பதவியை வகிக்கின்றன. ஐக்கிய நாடுகள் போன்ற பன்னாட்டு அவைகளிலும் பன்னாட்டு உடன்படிக்கைகளிலும் “நாட்டுத் தலைவர்” என்னும் பதவி அரசுத் தலைவர் ("Head of government") பதவியிலிருந்து வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. பல நாடுகளில் அரசுத் தலைவரும் நாட்டுத் தலைவரும் இரு வேறு நபர்களாக இருப்பர். எடுத்துக்காட்டாக நாடாளுமன்ற மக்களாட்சி முறைமைகளில் நாட்டுத் தலைவர் அரசராகவோ (ஐக்கிய இராச்சியம்) அல்லது குடியரசுத் தலைவராகவோ (இந்தியா) இருப்பார். நாட்டின் பிரதம அமைச்சர் அரசுத் தலைவராக இருப்பார். வேறு சில நாடுகளில் அரசுத் தலைவரே நாட்டுத் தலைவராகவும் செயல்படுகிறார். எடுத்துக்காட்டாக ஐக்கிய அமெரிக்கா, பிரேசில், இலங்கை போன்ற குடியரசுத் தலைவர் மக்களாட்சி முறைமைகளில் குடியரசுத் தலைவரே நாட்டுத் தலைவராகவும் அரசுத் தலைவராகவும் செயல்படுகிறார். முகப்புப் பக்கம் முகப்புப் பக்கம் (home page) ஒரு வலைதளப் பக்கமாகும். இப்பெயரில் அழைக்கப்படும் பக்கங்கள்: பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம் 2009-ல் பயணிகள் போக்குவரத்து மற்றும் மொத்த போக்குவரத்து இயக்கங்கள் அடிப்படையில் ஆசியாவில் பரபரப்பான விமான நிலையம் எனப் பெயர் பெற்றது. பெய்ஜிங் விமான நிலையம், ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு விமான நிலையத்தை அடுத்து பயணிகள் போக்குவரத்து எண்ணிக்கையின் அடிப்படையில் சர்வதேச அளவில் இரண்டாமிடத்தில் (2011-ன் படி) உள்ளது. இந்த விமான நிலையம் 517,584 விமான இயக்கங்களை (take-offs and landings) 2010ல் பதிவு செய்ததன் மூலம் சர்வதேச அளவில் எட்டாம் இடத்தில் உள்ளது. சரக்கு போக்குவரத்து அடிப்படையிலும் பெய்ஜிங் விமான நிலையம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2009-ல் 1,420,997 டன் சரக்குகளை கையாண்டு உலகிலேயே சரக்கு போக்குவத்தை கையாளும் விமான நிலையாங்களில் 14ஆம் இடத்தை பிடித்துள்ளது. இன்ஸ்கிரிப்டு தட்டச்சு முறை இன்ஸ்கிரிப்டு ("InScript") இந்திய மொழி எழுத்துருக்களை எழுத வடிவமைக்கப்பட்ட தட்டச்சு முறை ஆகும். இந்திய மொழிகளில் எழுத இம்முறையையே இந்திய அரசு பயன்படுத்துகிறது. இதைத் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்திய அரசு உருவாக்கியது. தேவநாகரி, வங்காள எழுத்து, குஜராத்தி எழுத்து, கன்னட எழுத்து, குருமுகி, மலையாள எழுத்து, ஒரிய எழுத்து, தமிழ் எழுத்து, தெலுங்கு எழுத்து ஆகியவற்றை இம்முறையில் எழுதலாம். இம்முறை லினக்சு, மேக் ஆகியவற்றிலும் விண்டோசு இயங்குதளத்தின் அண்மைய பதிப்புகள் அனைத்திலும் இயங்கும். சில கைபேசிகளிலும் இயங்கும் எனக் கூறப்படுகிறது. தமிழ் 99 மொழி இடைமுகப் பொதி மைக்ரோசாப்ட் ஆபிஸ் மொழி இடைமுகப் பொதி வின்டோஸ் மொழி இடைமுகப் பொதி மைக்ரோசாப்ட் ஆபிஸ் மைக்ரோசாப்ட் விண்டோசு =மேற்கோள்கள்= தெர்னாத்தே சுல்தானகம் தெர்னாத்தே சுல்தானகம் என்பது இந்தோனேசியாவின் ஆகப் பழைய முஸ்லிம் அரசுகளில் ஒன்றாகும். இது பாப் மசூர் மலாமோ என்பவரால் 1257 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சுல்தான் பாபுல்லாஹ் (1570–1583) என்பவரின் ஆட்சிக் காலமே இவ்வரசின் பொற்காலமாகத் திகழ்ந்தது. அக்காலத்தில் தெர்னாத்தே சுல்தானகம் இந்தோனேசியத் தீவுகளின் கிழக்குப் பகுதியின் பெரும் பாகத்தையும் பிலிப்பீன்சின் தென்பகுதியையும் தன்னகத்தே கொண்டிருந்தது. தெர்னாத்தே சுல்தானகம் அக்காலத்தில் உலகிலேயே ஆகக் கூடியளவு கிராம்பு உற்பத்தி செய்யும் இடமாகத் திகழ்ந்ததுடன், 15 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரையான காலப் பகுதியில் பிராந்திய வல்லரசாகவும் திகழ்ந்தது. தொடக்கத்தில் இவ்வரசின் பெயர் காப்பி இராச்சியம் என்றே இருந்தது. பின்னர் இதன் தலைநகரமான தெர்னாத்தே நகரின் பெயரால் பெயர் மாற்றம் பெற்றது. தெர்னாத்தே சுல்தானகமும் இதன் அண்டைய அரசாகிய திடோரே சுல்தானகமும் இணைந்த பகுதியே உலகின் மிக முக்கியமான கிராம்பு உற்பத்திப் பகுதிகளாக இருந்தன. அதன் காரணமாக, இவ்விரு அரசுகளின் ஆட்சியாளர்களே இந்தோனேசியத் தீவுகளிலேயே செல்வம் மிக்கோராயும் வல்லமை பொருந்தியோராயும் விளங்கினர். எனினும் இவ்விரு அரசுகளினதும் செல்வத்திற் பெரும் பகுதி ஒன்றுக்கொன்று போரிடுவதிலேயே வீணாகியது. 19 ஆம் நூற்றாண்டில் ஒல்லாந்தர் மலுக்கு தீவுகளைத் தமது குடியேற்றத்தின் கீழ்க் கொண்டுவந்த வேளையில் தெர்னாத்தே அரசின் சுல்தான்கள் அம்பொன், சுலாவெசி, பப்புவா ஆகியவற்றை உள்ளடக்கிய பேரரசைக் கொண்டிருந்தனர். வணிகம் சார் பண்பாட்டைக் கொண்டிருந்ததன் விளைவாக, இப்பகுதில் இசுலாமிய சமயம் பரவிய முதல் இடங்களுள் தெர்னாத்தே அரசும் ஒன்றாகும். சாவகத்திலிருந்தே இங்கு 15 ஆம் நூற்றாண்டில் இசுலாம் பரவியதெனக் கருதப்படுகிறது. தொடக்கத்தில் தெர்னாத்தே அரசின் ஆட்சியாளர் குடும்பத்தினரே இசுலாத்தைத் தழுவிக் கொண்டனர். அதன் பின்னரே சிறிது சிறிதாக ஏனைய மக்களிடம் பரவியது. தெர்னாத்தே அரச குடும்பம் மன்னர் மர்ஹூம் (1465–1486) ஆட்சி செய்த காலத்திலேயே இசுலாத்தைத் தழுவியது. அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அவரது மகன் சைனுல் ஆபிதீன் (1486–1500) இசுலாமிய சட்டத்தையே தெர்னாத்தேயின் சட்டமாக்கியதுடன், தன்னுடைய அரசை ஓர் இசுலாமிய சுல்தானகமாக மாற்றினார். அதுவரை "கொலானோ" (மன்னர்) என அழைக்கப்பட்ட அதன் ஆட்சியாளர், அப்போது முதல் "சுல்தான்" என அழைக்கப்பட்டார். தெர்னாத்தே சுல்தானகத்தின் அதிகாரம் மிக உச்ச நிலையில் இருந்த காலம், பதினாறாம் நூற்றாண்டில் சுல்தான் பாபுல்லாஹ் (1570–1583) ஆட்சி செய்த காலமாகும். அக்காலத்திலேயே இவ்வரசு சுலாவெசியின் கிழக்குப் பகுதியின் பெரும் பாகத்தையும், அம்பொன், செராம் பகுதி, திமோர் தீவு, மிண்டானாவோ தீவின் பெரும் பகுதி, பப்புவா தீவின் பகுதிகள் என்பவற்றைத் தன்னுடைய அதிகாரத்தின் கீழ்க் கொண்டிருந்தது. இவ்வரசு இதனை அடுத்திருந்த திடோரே சுல்தானகத்துடன் அடிக்கடி போரில் ஈடுபட்டது. வரலாற்றாளரான லியொனார்டு அண்டாயாவின் கூற்றின் படி, மலுக்கு தீவுகளின் வரலாற்றில் தெர்னாத்தே சுல்தானகம் திடோரே சுல்தானகத்துடன் "இரட்டைப்" போட்டியைக் கொண்டிருந்தது. தெர்னாத்தேயில் தங்கிய முதலாவது ஐரோப்பியக் குடியேற்றவாத இனத்தினர் போர்த்துக்கேயரான பிரான்சிசுக்கோ செராயோ என்பவரின் குழுவினர் ஆவர். மலாக்காவிலிருந்து அவர்கள் வெளிச் சென்றிருந்த போது செராம் என்னுமிடத்துக்கு அருகில் அவர்களது கப்பல் உடைந்து போயிருந்த வேளை, உள்ளூர் மக்களால் காப்பாற்றப்பட்டனர். அவர்கள் அவ்வாறு கரையொதுங்கியமையைக் கேள்விப்பட்ட அப்போதைய ஆட்சியாளரான சுல்தான் பயானுல்லாஹ் (1500–1522), அதிகாரம் மிக்க வெளிநாட்டு அரசொன்றுடன் கூட்டுச் சேரும் வாய்ப்பை உணர்ந்து, 1512 இல் அவர்களைத் தெர்னாத்தேவுக்கு வருமாறு அழைத்தார். அத்தீவில் ஒரு கோட்டையைக் கட்டுவதற்குப் போர்த்துக்கேயர் அனுமதிக்கப்பட்டனர். அதன் கட்டுமாணம் 1522 இல் தொடங்கியது. எனினும் அது முதலே தெர்னாத்தேவாசிகளுக்கும் போர்த்துக்கேயருக்கும் இடையில் சிக்கல்கள் எழத் தொடங்கின. ஐரோப்பாவிலிருந்து வெகு தொலைவில் அமைந்திருந்த ஒரு வெளிக் காவலரண் திக்கற்றிருந்தோரை மட்டுமே கவர்வதாக இருந்தது. அத்தகைய ஒரு மோசமான சூழ்நிலையில், போர்த்துக்கேயர்கள் அத்தீவைக் கிறித்தவமயப்படுத்த முனைந்தமையானது, தெர்னாத்தேவின் முஸ்லிம் ஆட்சியாளருடனான உறவை மோசமடையச் செய்தது. 1535 இல் தெர்னாத்தே சுல்தான் தபரீஜீ போர்த்துக்கேயரால் பதவியிறக்கப்பட்டு கோவாவுக்கு அனுப்பப்பட்டார். அதன் பின்னர் அவரைக் கிறித்தவராக மாற்றி டொம் மனுவேல் என்று பெயரிடப்பட்டது. அவருக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லையெனக் கூறிய போர்த்துக்கேயர் அதன் பின்னர் அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்காகத் தெர்னாத்தேவுக்கு அனுப்பி வைத்தனர். எனினும் அவரது பயணத்தின் இடைவழியில் 1545 ஆம் ஆண்டு மலாக்காவில் அவர் இறந்து விட்டார். எனினும் அவர் அம்பொன் தீவைப் போர்த்துக்கேயரிடம் தாரை வார்த்துவிட்டார். அதன் பின்னர், தெர்னாத்தேயில் ஆட்சியிலிருந்த அதன் சுல்தான் ஹைருன் என்பவரைப் போர்த்துக்கேயர்கள் கொலை செய்தமையைத் தொடர்ந்து, தெர்னாத்தேவாசிகளால் ஐந்து ஆண்டுகள் முற்றுகையிடப்பட்ட போர்த்துக்கேயர்கள் 1575 இல் இவ்வரசை விட்டு முற்றாக வெளியேற்றப்பட்டனர். எனினும் போர்த்துக்கேயர் வசமிருந்த அம்பொன் தீவு மலுக்குவில் போர்த்துக்கேயரின் செயற்பாடுகளுக்குக் களமமைத்தது. சுல்தான் பாபுல்லாஹ் (ஆட்சி 1570–1583) மற்றும் அவரது மகன் சஈது ஆகியோரின் கீழ் இசுலாமிய அரசாகிய தெர்னாத்தே சுல்தானகம் வல்லமை மிக்கதாகவும் போர்த்துக்கேயருக்கு எதிராக, மிகக் கடுமையானதாகவும் விளங்கியமையால் இப்பகுதியில் ஐரோப்பியரின் ஆதிக்கம் வலுவற்றிருந்தது. 1606 இல் எசுப்பானியப் படைகள் முன்னைய போர்த்துக்கேயக் கோட்டையைக் கைப்பற்றியதுடன், தெர்னாத்தே சுல்தானையும் அவரசு பரிவாரத்தையும் மணிலாவுக்கு நாடுகடத்தினர். 1607 இல் மீண்டும் தெர்னாத்தேவுக்கு வந்த ஒல்லாந்தர், தெர்னாத்தேயரின் ஒத்துழைப்புடன் மலாயோ என்னுமிடத்தில் ஒரு கோட்டையைக் கட்டினர். அத்தீவு இரண்டு வல்லரசுகளிடம் பிரிக்கப்பட்டது: எசுப்பானியர்கள் திடோரே அரசுடன் கூட்டுச் சேர்ந்திருந்த அதேவேளை, ஒல்லாந்தர் தெர்னாத்தேயினருடன் கூட்டுச் சேர்ந்தனர். தெர்னாத்தே ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில் ஒல்லாந்தர்கள் பயன் மிக்கோராகவும் அல்லது வரவேற்புப் பெறுவோராகவும், திடோரே அரசுக்கும் எசுப்பானியருக்கும் எதிராகப் படைத்துறை வலிமையை வழங்குவோராகவும் இருந்தனர். குறிப்பாகச் சுல்தான் ஹம்சா (1627–1648) என்பவரின் கீழ், தெர்னாத்தே தனது ஆள்புலத்தை விரிவாக்கியதுடன், எல்லைகளிலே தனது அதிகாரத்தை வலுக்கூட்டிக் கொண்டது. சில கலவரங்களை அடக்கியமைக்குப் பரிசாகத் தெர்னாத்தே சுல்தான் ஹம்சாவும், அவரைத் தொடர்ந்து ஆட்சியாளரான அவரது பேரர் சுல்தான் மந்தார் ஷாஹ் (1648–1675) என்பவரும் ஒல்லாந்து கிழக்கிந்தியக் கம்பனிக்குச் (VOC) சில தீவுகளைத் தாரை வார்த்துக் கொடுத்த போதிலும், இவ்வரசினுள் ஒல்லாந்தரின் அதிகாரம் மட்டுப்பட்டதாகவே இருந்தது. 1663 இல் எசுப்பானியர்கள் மலுக்கு தீவுகளைக் கைவிட்டு விட்டனர். தெர்னாத்தே அரசை அதன் முன்னைய சிறப்பில் விளங்கச் செய்யவும், மேற்கத்தியரை வெளியேற்றவும் விரும்பிய சுல்தான் சிபோரி (1675–1691) ஒல்லாந்தருடன் போர்ப் பிரகடனம் செய்தார். அதன் விளைவாக, சில ஆண்டுகளில் தெர்னாத்தேயின் அதிகாரம் சுருங்கியதுடன், அவரது அதிகாரத்துக்குட்பட்ட நிலங்களில் பல பகுதிகளை ஒல்லாந்தருக்குக் கொடுக்க வேண்டுமென்று கூறும் அநீதியான ஓர் ஒப்பந்தத்திற் கைச்சாத்திடுமாறு 1683 இல் அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார். அவ்வொப்பந்தத்தின் காரணமாக, ஒல்லாந்தருடன் சமநிலையில் இருந்த தெர்னாத்தே அரசு, ஒல்லாந்தரின் அதிகாரத்துக்கு உட்பட்ட சிற்றரசாகியது. எனினும், தெர்னாத்தே சுல்தான்களோ அதன் குடிமக்களோ ஒருபோதும் ஒல்லாந்தரின் முழுமையான கட்டுப்பாட்டிற்கு ஆட்படவில்லை. 18 ஆம் நூற்றாண்டில், தெர்னாத்தே அரசு ஒல்லாந்துக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆளுநரின் கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்தது. அப்போது ஒல்லாந்தர்கள் வடக்கு மொலுக்கா தீவுகளின் முழு வணிகத்தையும் தம் கட்டுப்பாட்டிற் கொண்டுவர முனைந்தனர். 19 ஆம் நூற்றாண்டாகும் போது, வாசனைத் திரவிய வணிகம் பெருமளவு வீழ்ச்சியடைந்தது. அதன் காரணமாக, இப்பகுதி நெதர்லாந்தின் குடியேற்றவாத அரசின் நடுநிலையமாக இருக்கும் தன்மை குறைந்தது. எனினும் வேறொரு குடியேற்றவாத வல்லரசு இப்பகுதியைக் கைப்பற்றுவதைத் தடுப்பதற்காக, ஒல்லாந்தர் தம் ஆதிக்கத்தைத் தக்க வைத்துக்கொண்டனர். 1800 ஆம் ஆண்டு ஒல்லாந்து அரசினால் ஒல்லாந்து கிழக்கிந்தியக் கம்பனி தேசியமயமாக்கப்பட்ட பின்னர், தெர்னாத்தேயானது மொலுக்கா அரசாங்கம் ("Gouvernement der Molukken") என்பதன் பகுதியாகியது. 1810 இல் தெர்னாத்தே பிரித்தானியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட போதிலும், 1817 இல் ஒல்லாந்தரிடம் கையளிக்கப்பட்டது. 1824 இல் ஹல்மாஹெரா, நியூகினித் தீவின் மேற்குப் பகுதி, சுலாவெசியின் கிழக்குப் பகுதி என்பவற்றை உள்ளடக்கிய குடியேற்றத்தின் (நிருவாகப் பகுதியின்) தலைநகராக இது விளங்கியது. 1867 ஆகும் போது, ஒல்லாந்தராற் கைப்பற்றப்பட்ட நியூகினித் தீவுப் பகுதிகள் அனைத்தும் இக்குடியேற்றத்துடன் இணைக்கப்பட்டன. பின்னர் இதன் பகுதிகள் அனைத்தும் படிப்படியாக அம்பொன் (அம்பொனியா) பகுதியுடன் சேர்க்கப்பட்டு, 1922 இல் அம்பொன் குடியேற்றத்துடன் முற்றாக இணைக்கப்பட்டது. சுல்தான் ஹாஜி முகம்மது உஸ்மான் (1896–1914) இப்பகுதியில் கலவரங்களைத் தூண்டி விடுவதன் மூலம் ஒல்லாந்தரை வெளியேற்றவிட ஓர் இறுதி முயற்சியை மேற்கொண்டார். அவர் அதில் தோல்வியுற்ற பின்னர் பதவியிறக்கப்பட்டு, அவரது உடைமைகள் ஒல்லாந்தரால் அபகரிக்கப்பட்டன. ஒல்லாந்தரால் பண்டுங் நகருக்கு நாடுகடத்தப்பட்ட அவர் 1927 இல் இறக்கும் வரை அங்கேயே வாழ்ந்தார். 1914 முதல் 1927 வரை தெர்னாத்தே அரியணையில் எவரும் ஆட்சியிலிருக்கவில்லை. அதன் பின்னர் அப்போதைய முடிக்குரிய இளவரசரான இசுக்கந்தர் முகம்மது ஜாபிர் என்பவரைத் தெர்னாத்தேவின் அடுத்த சுல்தானாக, ஒல்லாந்தரின் அனுசரணையுடன் தெர்னாத்தேவின் அமைச்சர்கள் அறிவித்தனர். தெர்னாத்தேவை ஆட்சி செய்த அரச மரபும், தெர்னாத்தே சுல்தானகமும் தற்போதும் இருந்தாலும், அவர்கள் தற்காலத்தில் ஆட்சி அதிகாரங்களைக் கொண்டோராக இல்லை. தெர்னாத்தேயின் முதலாவது மன்னர் பாப் மசூர் மலாமோ முதல், 13 ஆம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை ஒரே அரச மரபினரே தெர்னாத்தே ஆட்சியாளர்களாக இருந்து வருகின்றனர். சுல்தான் கலாநிதி ஹாஜி முளப்பர் II ஷாஹ் 1975 முதல் இதன் சுல்தானாக இருந்து வருகிறார். தற்போதிருக்கும் தெர்னாத்தே அரண்மனை 1796 இல் கட்டப்பட்டது. இதன் ஒரு பகுதி ஓர் அருங்காட்சியகமாகவும், மறு பகுதி சுல்தானின் இருப்பிடமாகவும் இருந்து வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் 1257 முதல் ஆட்சி செய்த தெர்னாத்தே அரச மரபினரின் பொருட்களும், போர்த்துக்கேய மற்றும் ஒல்லாந்தத் தலைக் கவசங்கள், வாட்கள், கவசங்கள், முன்னைய சுல்தான்களின் ஞாபகச் சின்னங்கள் போன்றவை காணப்படுகின்றன. மகாநகர் டெலிபோன் நிகம் மகாநகர் டெலிபோன் நிகம் லிமிடெட் ("Mahanagar Telephone Nigam Limited", MTNL) இந்தியாவில் மும்பை மற்றும் தில்லி பெருநகர்ப்பகுதிகளிலும் மொரிசியசிலும் தொலைதொடர்பு சேவைகளை வழங்கும் அரசுத்துறை நிறுவனமாகும். 1992ஆம் ஆண்டில் தொலைதொடர்புச் சேவைகளை பொதுப்பரப்பில் அனுமதிக்கும் வரை மும்பையிலும் தில்லியிலும் முழுநிறை உரிமை பெற்றிருந்தது. இந்திய அரசிற்கு இந்த நிறுவனத்தில் 56.25% பங்குகள் உள்ளன; ஏனையவை பங்குச் சந்தையில் பரவலாக்கப்பட்டுள்ளன. அண்மைய ஆண்டுகளில், இந்திய தொலைத்தொடர்புத் துறையில் நிலவும் போட்டிகளால், எம்டிஎன்எல் தனது சந்தைப் பங்கை இழந்து வருவதோடு நட்டத்திலும் இயங்கி வருகிறது. இந்திய அரசின் பொதுதுறை நிறுவனமான இது நலிவடைந்து வருவதால் மூடிவிட 2015ஆம் ஆண்டி அரசு முடிவெடுத்துள்ளது. அன்னா (புதிய ஏற்பாட்டு நபர்) அன்னா (, ) அல்லது இறைவாக்கினரான அன்னா என்பவர் விவிலியத்தின் லூக்கா நற்செய்தியில் மட்டும் வரும் நபர் ஆவார். அன்நற்செய்தியின் படி இவர் வயது முதிர்ந்த இறைவாக்கினர். யூத வழக்கப்படி குழந்தை இயேசு ஆலயத்தில் அர்ப்பணிக்கப்பட்ட போது இவர் அங்கு வந்து குழந்தையைப்பற்றிப் பேசினார். இந்நிகழ்வு லூக்கா 2:36-38இல் விவரிக்கப்பட்டுள்ளது. நற்செய்தியில் இவர் இடம்பெறும் நிகழ்வு பின்வருமாறு: இப்பகுதியிலிருந்து அன்னாவைப்பற்றிய பின்வரும் தகவல்கள் கிடைக்கின்றன கத்தோலிக்க திருச்சபையில் இவர் ஒரு புனிதராக ஏற்கப்படுகின்றார். இவரின் விழா நாள் ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழாவின் அடுத்த நாளான பெப்ருவரி 3 ஆகும். சாக்கோட்டை சாக்கோட்டை கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம் செல்லும் வழியில் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஊர். இவ்வூர் முற்காலத்தில் "திருக்கலயநல்லூர்" என்று அழைக்கப்பட்டது. இது புகழ்பெற்ற தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலம் அமைந்துள்ள ஊர் ஆகும். கும்பிடுபூச்சி கும்பிடுப்பூச்சி அல்லது தயிர்க்கடை பூச்சி என்பது வெட்டுக்கிளிகள் போன்ற இனத்தைச் சேர்ந்த ஒருவகை பூச்சியினமாகும். பிறப் பூச்சிகளைப் போலக் கும்பிடுப்பூச்சிகளுக்கும் மூன்று அடுக்கு உடலமைப்பு உள்ளது. அதாவது தலை, நெஞ்சுக்கூடு மற்றும் அடிவயிறு பகுதி. பெண் கும்பிடுப்பூச்சிகள் ஆண் கும்பிடுப்பூச்சிகளை விட உடலமைப்பில் பெரிதாகவும், வலிமையானதாகவும் காணப்படும். கும்பிடுப்பூச்சி தன் முன்னங்கால்களை நீட்டிக் கொண்டு நிற்பது வழக்கம். இதனால், அப்பூச்சி பார்ப்பதற்கு கும்பிடுவதைப் போல தோன்றும், எனவே அப்பூச்சியைக் கும்பிடுப்பூச்சி என்று அழைப்பது வழக்கம். மேலும், தமிழ் மக்களுக்கு இடையே அப்பூச்சியைப் பெருமாள் பூச்சி என்றழைப்பதும் வழக்கமான ஒன்றாகும். கும்பிடுபூச்சிகள் பொதுவாக பச்சை, பழுப்பு போன்ற நிறங்களில் தாவரங்களில் உருமறைப்புத் தோற்றத்துடன் காணப்படும். இது வேட்டையாடிப் பூச்சி ஆகும். இதன் வலுவான, முட்களைக் கொண்ட முன்னங்கால்களைக் கொண்டு, பிற பூச்சிகளை வேட்டையாடுகிறது. உட்கார்ந்தபடியும் பறந்தபடியும் இவை இரையைப் பிடிக்கும் திறன் கொண்டவை. இந்தப் பூச்சியில் சிறியது முதல் பெரியதுவரை பல்வேறு வகைகள் உண்டு. தோட்டப் பகுதிகள், புல்வெளிகள், காட்டுப் பகுதிகளில் தென்படும். தனியாகவே இருக்கும். இரவில் சுறுசுறுப்பாகக் காணப்படும், பகலிலும் தென்படக்கூடியன. ஒளியை நோக்கி ஈர்க்கப்படும். சில இளம் கும்பிடு பூச்சிகள் கறுப்பும் பச்சையும் கலந்ததாக இருப்பதுண்டு. இளமையாக இருக்கும்போது ஒரு நிறத்திலும் வளர்ந்த பிறகு வேறொரு நிறத்தை அடைவதும் பூச்சிகளில் இயல்பு. இளம்பூச்சிகளுக்குப் பொதுவாக இறக்கை இருக்காது. இதனால் இளம் பூச்சிகள் பார்ப்பதற்கு சற்றே நீண்ட கட்டெறும்பைப் போன்று இருக்கும். பச்சா கான் பன்னாட்டு வானூர்தி நிலையம் பச்சா கான் பன்னாட்டு வானூர்தி நிலையம் (), முன்பு பெஷாவர் சர்வதேச விமான நிலையம், ஆனது பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப் புற மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகரத்தில் அமைந்துள்ள சர்வதேச வானூர்தி நிலையம் ஆகும். இது பாகிஸ்தானில் உள்ள வானூர்தி நிலையங்களில் நான்காவது பரபரப்பான வானூர்தி நிலையம் ஆகும். இந்த வானூர்தி நிலையம் 27 ஜனவரி 2012 அன்று பஷ்தூன் தேசியவாத அரசியல் தலைவர் கான் அப்துல் காப்பார் கான் நினைவாக பச்சா கான் பன்னாட்டு வானூர்தி நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. டெலி சுல்தானகம் டெலி ("Deli") என்பது கிழக்கு சுமாத்திராவில் 1630 இல் வெறும் 1,820 km² பரப்பளவில் தாலிக் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட ஓர் அரசு ஆகும். 1630 முதல் 1814 வரை ஒரு சிற்றரசாக இருந்த இவ்வரசு, 1814 இல் சியாக் சுல்தானகத்திடமிருந்து விடுதலை பெற்று ஒரு தனி சுல்தானகமாகியது. 15 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அச்சேயின் ஆட்சியாளர் இசுலாத்தைத் தழுவிக் கொண்டார். அச்சே சுல்தானகத்தின் ஆட்சியாளர் அலீ முகாயத் ஷாஹ் 1520 இலிருந்து வடக்கு சுமாத்திராவில் தன்னுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தத் தொடங்கினார். பின்னர், அச்சே சுல்தான் இசுக்கந்தர் முடா பல்வேறு அரசுகளையும் வெற்றி கொண்டு தன் அதிகாரத்தை வலுப்படுத்தினார். 1612 இல், டெலி சுல்தானகத்தைப் படை வலிமையால் வென்ற அச்சே சுல்தானகம், டெலியைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. டெலியின் ஒரு பகுதி ஏற்கனவே சியாக் சுல்தானகத்தின் கட்டுப்பாட்டில் வந்திருந்தது. எனினும், 1861 இல் இது தொடர்பிற் தலையிட்ட ஒல்லாந்தர் அச்சே மற்றும் சியாக் சுல்தானகங்களிடமிருந்து விடுதலை பெற்ற அரசாக டெலியை அங்கீகரித்தனர். தற்காலத்தில் இது இந்தோனேசியாவின் ஒரு பகுதியாக உள்ளது. மறைஞான தேசிகர் மறைஞான தேசிகர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவசித்தாந்தப் பெரியார். இவர் குகை மறைஞான தேசிகன் என இவரது நூல் ஒன்றில் குறிப்பிடப்படுகிறார். சிதம்பரம் கண்கட்டி மறைஞான பண்டாரம் இவரது ஆசிரியர். அந்தப் பண்டாரம் இருந்த மடத்தின் தலைவராகச் சிலகாலம் இருந்தவர். சிவஞான சித்தியார் சுபபக்க உரை, தம்மாசிரியர் செய்த சிவதருமோத்தர உரை, பதிபசுபாசத் தொகை உரை என்னும் மூன்று உரை நூல்களைச் செய்தவர். சிவபுண்ணியத் தெளிவு என்னும் நூலும் இவர் செய்தாகத் தெரிகிறது. இந்திரகிரி அரசு இந்திரகிரி அரசு அல்லது இந்திரகிரி சுல்தானகம் என்பது தற்காலத்தில் இந்தோனேசியாவின் ரியாவு மாகாணத்தின் இந்திரகிரி ஹிலிர் மாவட்டம், இந்திரகிரி ஹுலு மாவட்டம் என்பவற்றை உள்ளடக்கிய பகுதியிலிருந்த ஒரு மலாய சுல்தானகம் ஆகும். இவ்வரசு ஒரு காலத்தில் பகாருயுங் அரசின் கீழ் ஒரு சிற்றரசாக இருந்தது. எனினும், பிற்காலத்தில் ஜம்பி சுல்தானகம், சியாக் சுல்தானகம், அச்சே சுல்தானகம் என்பவற்றுடன் ஆதிக்கப் போட்டியில் ஈடுபட்டது. இந்திரகிரி என்னும் பெயர் சமசுக்கிருத மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். இங்கே "இந்திரா" என்பதன் பொருள் மன்னர் என்பதாகும். "கிரி" என்பதன் பொருள் மலை அல்லது உயர் தகைமை என்பதாகும். எனவே "இந்திரகிரி" என்பதன் பொருள் "மலையரசன்" என்பதாகும். 1515 ஆம் ஆண்டு வரை இந்திரகிரி அரசும் அதன் துறைமுகப் பகுதியும் மினங்கபாவு மன்னரின் ஆளுகைக்குட்பட்ட சிற்றரசாகவே இருந்தது. பின்னர் இந்திரகிரியின் உள்ளேயும் வெளிநாட்டினருடனும் தொடர்புகளைப் பேணுவதற்குரிய அதிகாரம் வழங்கப்பட்டது. அதன் பின்னரேயே இந்திரகிரி ஓர் இறைமையுள்ள சுல்தானகமாக மாறியது. இவ்வரசு அமைந்த பகுதி குவாந்தான் அரசுடன் கடல் எல்லையைக் கொண்டிருந்தது. சுமாத்திராவின் உட்பகுதியில் அமைந்திருந்த மினங்கபாவு அரசின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்வதற்கான துறைமுகப் பகுதியாகவும் இது விளங்கியது. இதன் எல்லை சுமாத்திராவின் உள்ளே பத்தூர் ஏரி வரையும் கிழக்கு சுமாத்திராப் பகுதிகளும் உள்ளடங்கியதாகக் காணப்பட்டது. சித்தியார் சுபபக்க உரை சித்தியார் சுபபக்க உரை 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல் .திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான தேசிகர் செய்த மூன்று உரை நூல்களில் ஒன்று. உரைநூலுக்குத் தொடக்கமாக ஆனைமுகனைப் போற்றும் காப்புச்செய்யுள் ஒன்று உள்ளது. அவ்வாறே இறுதியிலும் 3 பாடல்கள் உள்ளன. இவை இவரது பாடல்கள். இறுதிப்பாடலைப் பிற்காலத்தவர் இவரைப் போற்றும் பாடலாகப் போற்றுகின்றனர். அந்தப் பாடல்: மறைஞான தேசிகர் தம் உரையில் வேறுபட்ட மொழிகள் சிலவற்றைக் குறிப்பிடுகிறார். வடமொழி, பிராகிருதம், சௌரசேனி மாகதம், பைசாசி, சூசிகா பைசாசி, அவப் பிரம்சம், தேசி – என்பன. வடமொழி ஆகமங்கள் 42, புராணங்கள் 15, பிற சைவ சாத்திரங்கள் 23, தூத்திரம் 2, தருக்கம் 1 ஆகியவை இவரது உரையில் குறிப்பிடப்படுவதால் இவர் வடமொழியிலும் வல்லவர் என்பது புலனாகிறது. தமிழிலுள்ள பல இலக்கண நூல்களையும் சைவ நூல்களையும் இவர் உரையில் சுட்டி எடுத்துக்காட்டியுள்ளார். "சித்தியார் பரபக்க உரை" என்னும் நூலை இவரது மாணாக்கர் நிரம்ப அழகிய தேசிகர் செய்துள்ளார். பிரேமலோகா பிரேமலோகா 1987 ஆம் ஆண்டு வெளியான கன்னடத் திரைப்படம். இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜூகி சாவலா, லீலாவதி ஆகியோர் நடித்துள்ளனர். பிரேமலோகா என்றால் காதல் உலகம் என்று பொருள். கன்னட மொழியில் வெளியாகி பெருவெற்றியடைந்த இத்திரைப்படம், தமிழில் "பருவ காலம்" எனவும் தெலுங்கில் "பிரேமலோகம்" எனவும் மொழிமாற்றம் செய்து வெளியானது. பொறியியல் துறைகளின் பட்டியல் பொறியியல் (ஆங்கிலம்:engineering) என்பது அறிவியல் கோட்பாடுகளைத் திறமுடன் பயன்படுத்தி தக்க முறையில் இயற்கை வளங்களை மனித பயன்பாட்டிற்காக மாற்றும் தொழிற் கலையாகும். சமகாலத்தில், பொறியியல் துறைகளான குடிசார் பொறியியல், இயந்திரவியல் பொறியியல், வேதிப் பொறியியல் மற்றும் மின்பொறியியல் போன்றவை முக்கிய அடிப்படை துறைகளை கொண்டுள்ளதாக கருதப்படுகிறது. பலதரப்பட்ட பொறியியல் துணை துறைகள் மற்றும் பலதுறை பாடங்கள் முக்கிய பொறியியல் கிளைகள் இருந்து செறிவு, சேர்க்கைகள் அல்லது நீட்டிப்புகளை மூலம் பெறப்பட்டுள்ளன. குடிசார் பொறியியல் வடிவமைப்பு, கட்டுமானம், இயல்பியல் மற்றும் இயற்கை கட்டுமான சூழல்களின் பராமரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இயந்திரவியல் பொறியியல் பௌதீக கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு கருவிகளை அல்லது இயந்திரங்களை வடிவமைத்தல், தயாரித்தல், பராமரித்தல், பயன்படுத்துதல் போன்றவை இத்த்துறையின் கீழ் அடங்கும். மின்சார் பொறியியல் என்பது மின்னியல், மின்னணுவியல், மின்காந்தவியல் ஆகியவற்றை பற்றி கற்க உதவும் பொறியியல் பிரிவாகும். அரசுத் தலைவர் அரசுத் தலைவர் ("Head of government") என்பவர் ஒரு நாட்டு அரசின் செயலாட்சிப் பிரிவின் தலைமை அதிகாரி ஆவார். நாடாளுமன்ற மக்களாட்சி முறைமைகளில் அரசுத் தலைவரும் நாட்டுத் தலைவரும் இரு வேறு நபர்களாக இருப்பர். நாட்டுத் தலைவர் அரசராகவோ குடியரசுத் தலைவராகவோ இருப்பார். அரசின் தலைவராக பிரதமர் இருப்பார். வேறு சில நாடுகளில் அரசுத் தலைவரே நாட்டுத் தலைவராகவும் செயல்படுகிறார். எடுத்துக்காட்டாக ஐக்கிய அமெரிக்கா, பிரேசில், இலங்கை போன்ற குடியரசுத் தலைவர் மக்களாட்சி முறைமைகளில் குடியரசுத் தலைவரே நாட்டுத் தலைவராகவும் அரசுத் தலைவராகவும் செயல்படுகிறார். டைட்டன் டைட்டன் என்ற தலைப்பில் பின்வரும் கட்டுரைகள் உள்ளன: துரு துரு என்பது இரும்பு துருப்பிடித்தலின் போது உருவாகும் சேர்மம் ஆகும். இரும்பானது நீர் மற்றும் ஒக்சிசனின் நிலவுகையின் போது துரு பிடிக்கும் (கபில நிறம்). சிலவகைத் துருவானது இரும்பு குளோரைட்டுடன் தாக்கமடையும் போது உருவாகும். இது பச்சை நிறத்தில் காணப்படும். துருவானது இரும்பு(மூன்று)ஒக்சைட்டாலும் இரும்பு(மூன்று) ஒக்சைட்-ஐதரொக்சைட்டாலும் ஆனது. ஏனைய உலோகங்களின் ஒக்சைட்டுகள் அவற்றிக்குக் கீழுள்ள உலோகத்தைப் பாதுகாக்கும்.உதாரணமாக செப்பு ஒக்சைட்டு அதன் கீழுள்ள செப்புப் படைகள் ஒக்சியேற்றப்படுவதிலிருந்து பாதுகாக்கும். எனினும் இரும்பின் துருவானது அதற்குக் கீழுள்ள இரும்பின் துரு பிடித்தலை மேலும் விரைவுபடுத்தும். எனவே சரியான காலம் வழங்கப்படின் துரு பிடிக்கும் இரும்பானது முழுமையாக அரிக்கப்பட்டு விடும். இரும்புத் துரு உருவாகும் வேதியற் தாக்கமானது அமிலம் அல்லது உப்புக்கள் நிலவுகையில் வேகமாக்கப்படும். சுத்தமான நீர் அல்லது ஈரப்பதமற்ற ஒக்சிசன் மாத்திரம் உள்ள போது இரும்பில் இருந்து துரு உருவாகாது. இரண்டும் உள்ள போது இரும்பு துருப்பிடிக்கும். ஒக்சிசனோடு மாத்திரம் இரும்பு தாக்கமடையும் போது உருவாகும் ஒக்சைட்டுப் படை இரும்பைப் பாதுகாக்கும். எனினும் நீர் மற்றும் ஒக்சிசன் இணைந்து இரும்புடன் தாக்கமடையும் போதே பாதிப்பை ஏற்படுத்தும் துரு உருவாகும். துரு உருவாகும் முதற் செயற்பாடாக இரும்பில் இருந்து பெறப்படும் எதிர்மின்னிகள் மூலம் ஒக்சிசன் தாழ்த்தப்படும்: மேலுள்ள தாக்கத்தின் விளைவாக ஐதரொட்சைட் அயன்கள் உருவாவதால் இச்செயற்பாடு அமிலங்களால் மாற்றுவிக்கப்படும். மேலும் பல உலோகங்கள் குறைந்த காரகாடித்தன்மைச் சுட்டெண்இல் (அமிலத் தன்மையில்) அரிமாணம் அடைவனவாகும். இவ்வாறு எதிர்மின்னிகள் வெளியேற்றப்படுவதால் இரும்பு ஒக்சியேற்றப்படும்: நீருள்ள போது உருவாகும் பின்வரும் தாக்கமானது துரு உருவாவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது: எனவே துரு உருவாகும் வேதியல் தாக்கங்களைப் பின்வாறு தொகுக்கலாம்: இரும்பு அன்றாட வாழ்வில் மிக முக்கியமான உலோகம் என்பதால் இரும்பு துருபிடித்தல் தடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். எனவே பல்வேறு முறைகள் இதில் பயன்படுத்தப்படுகின்றது. மன்னார் தீவு மன்னார் தீவு ("Mannar Island"), இலங்கையின் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி. இலங்கையின் பிற பகுதிகளுக்கு பாலம் ஒன்று இணைக்கிறது. 50 சதுர கி.மீ பரப்பளவு கொண்டுள்ளது. ராமர் பாலம் இலங்கையின் மன்னார் பகுதியையும் இந்தியாவின் பாம்பன் தீவையும் இணைக்கிறது. 1914 முதல் 1964 வரையில், தனுஷ்கோடி, தலைமன்னார் பகுதிகளை இணைக்க தொடருந்து-பயணப்படகு வசதி இருந்தது. ஆனால் 1964 ஆம் ஆண்டில் நிகழ்ந்த தனுஷ்கோடி புயலில் ஏற்பட்ட அழிவு காரணமாக இவ்வசதி நிறுத்தப்பட்டது. மன்னார் தீவு காய்ந்த, வறண்ட பிரதேசம் ஆகும். மீன்பிடித்தலே இங்கு முக்கியமான தொழிலாகும். மன்னார் தீவின் முக்கிய குடியேற்றப் பகுதிகள் கிழக்குக் கரையில் மன்னார் நகரம், எருக்கலம்பிட்டி, வடக்குக் கரையில் பேசாலை ஆகியவையாகும். இவை அனைத்தையும் ஏ14 நெடுஞ்சாலை பாலம் ஊடாக இலங்கையின் பெரும்பரப்பை இணைக்கின்றது. சுருவாசோ கல்வெட்டு சுருவாசோ கல்வெட்டு என்பது மலையபுர மன்னனான ஆதித்திய வர்மன் என்பவனின் கல்வெட்டுக்களில் ஒன்றாகும். இது வாப்பாகே கல்வெட்டு என்றும் அழைக்கப்படுகிறது. இது சுருவாசோ கல்வெட்டு என அழைக்கப்படக் காரணம் இதிற் குறிப்பிடப்பட்டிருக்கும் ஸ்ரீ சுருவாசோ என்னும் பெயர்தான். இப்பெயரே சுருவாசோ கிராமத்தின் பெயர்க் காரணமும் ஆகும். இக்கிராமம் இந்தோனேசியாவின் மேற்கு சுமாத்திரா மாகாணத்தின் தனாஹ் டத்தார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுருவாசோ கிராமத்திலிருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஒரு குன்றின் அடிப்பகுதியில், பத்தாங் செலோ குளக் கரையிலிருந்து இரண்டு மீற்றர் தள்ளி இக்கல்வெட்டு காணப்படுகிறது. மேற்படி குன்றிலிருந்து பார்த்தால் எப்பக்கமும் வயல்களும் வாய்க்கால்களுமே தென்படும். ஆங்காங்கே கல்வெட்டுக்கள் பல காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் இந்த "சுருவாசோ கல்வெட்டு" ஆகும். இக்கல்வெட்டின் ஒரு பகுதி பண்டைய மலாயு மொழி எழுத்துக்களாலும், மறு பகுதி தமிழ் எழுத்துக்களாலும் எழுதப்பட்டுள்ளது. ஆதித்திய வர்மன் வெறுமனே தனது காட்டு வளத்திலும் சுரங்கங்களிலும் தங்கியிருக்காமல், விவசாயத்தின் மூலம் மக்களை வளப்படுத்த வேண்டும் என்னும் நோக்கிலேயே அங்கு வாய்க்கால்களை அமைத்திருப்பது அவற்றின் மூலம் தெரிய வருகிறது. சுருவாசோ கல்வெட்டிலுள்ள மலாயு மொழி எழுத்துக்களின் மூலம் கூறப்படுவதாவது, எப்போதும் நெல் வளத்தில் குன்றாத நந்தன ஸ்ரீ சுராவாசாவுக்கு நீர் பாய்ச்சத் தேவையான கால்வாய்களை அமைப்பதை ஆதித்திய வர்மன் நிறைவு செய்தான் என்பதும், அவ்விடத்தில் கால்வாய்களை அமைப்பது அதற்கு முன்னர் ஆதித்திய வர்மனின் மாமாவான அகரேந்திர வர்மன் என்பவரால் செய்யப்பட்டது என்பதும் ஆகும். அக்கால மினங்கபாவு மரபின்படி மாமாவிடமிருந்து மருமகனுக்கோ அல்லது மருமகளுக்கோ வாரிசுரிமை ஏற்படுவது இருந்ததென்பதை "உலி கொசோக்" உறுதிப்படுத்துகின்றார். கன்னட இலக்கிய மாநாடு கன்னட இலக்கிய மாநாடு (; கன்னட சாகித்திய சம்மேளனம்) கன்னட மொழி எழுத்தாளர்களும், கவிஞர்களும் பங்கேற்கும் இலக்கிய மாநாடு ஆகும். கன்னட மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, இசை ஆகியவற்றின் வளர்ச்சிக்காக ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. முதல் மாநாடு, ஹெ. வே. நஞ்சுண்டைய்யாவின் உந்துதலால் 1915 ஆம் ஆண்டில் பெங்களூரில் நடைபெற்றது. 1915 முதல் 1948 வரை இம்மாநாடுகளை கன்னட எழுத்தாளர்களும் கவிஞர்களும் தொடங்கி வைத்தனர். அதற்குப் பின்னர், கருநாடக முதல்வராக இருப்பவர் விழாவைத் தொடங்கி வைப்பது வழக்கமாக மாறியது ஓவா அக்கனானையா ஓவா அக்கனானையா (Hoa Hakananai'a) என்பது, "மோவை" எனப்படும் ஈசுட்டர் தீவுகளைச் சேர்ந்த ஒரு சிலை. இது தற்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. "ஓவா அக்கனானையா" என்பது ராப்பா நுயி மொழிச் சொல். இது "திருடப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட நண்பன்" அல்லது "முதன்மை அலை தடுப்பு" என்னும் பொருள் கொண்டது. "எச்.எம்.எசு டொப்பாசு" என்னும் ஆங்கிலக் கப்பல் பணியாளர்கள் 1868 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி ஈசுட்டர் தீவுகளில் உள்ள ஓரொங்கோ என்னும் இடத்தில் இருந்து இதனை எடுத்துக்கொண்டு 1869 ஆகத்து 25 ஆம் தேதி போர்ட்சுமவுத்தை வந்தடைந்தனர். பெரும்பாலான "மோவை"கள் இலகுவாகச் செதுக்கக்கூடிய எரிமலைச் சாம்பற் பாறையில் செய்யப்பட்டவை. 16 "மோவை"கள் மட்டுமே கடினமான எரிமலைப் பாறைகளில் செய்யப்பட்டுள்ளன. முன் புறத்தில் இருந்து பின்புறம் வரை இதன் அளவு 55 சமீ. 2.42 மீட்டர்கள் உயரம் கொண்ட இதன் நிறை ஏறத்தாழ 4 தொன்கள். "ஓவா அக்கனானையா" மனிதரின் முண்டப்பகுதி, தலை என்பவற்றுடன் சுருங்கிச் சிறுத்த கைகளையும் கொண்டது. இதன் தலைக்கும் முண்டத்துக்குமான அளவு விகிதம் 3:5. இது "மோவை"களில் வழக்கமான அளவுமீறிப் பெருத்த தலையைக் குறிக்கின்றது. தற்போது வெறுமையாக இருக்கும் கண் குழிகளில் முன்னர் பவளப்பாறை அல்லது எரிமலைக் கண்ணாடியினாலான கண்கள் இருந்திருக்கக்கூடும். உடல் சிவப்பு, வெள்ளை நிறங்கள் தீட்டப்பட்டு இருந்தது. ஆனால், இதனை தீவில் இருந்து எடுத்து வரும்போது அகற்றப்பட்டுவிட்டது.